எம்மா வீட்டில் -ஆழ்வார் தாம் அபேக்ஷித்து -எம்பெருமானும் தந்து அருள கடவனாக இசைந்த புருஷார்த்தத்தை –
இங்கே இவ்வுடம்போடே பெற வேணும் -என்று தாம் அபேக்ஷிக்க -எம்பெருமானும் இவருக்கு அடிமையில் பிறந்த விடாய்க்கு ஈடாக –
அடிமை கொள்ளுகைக்காக ஈடாக -திரு மலையைக் காட்டி அருளக் கண்டு அதி ப்ரீதராய்
இனி அடிமை தான் வேணுமோ -திருமலை தானே எனக்கு பரம ப்ராப்யம் என்கிறார் –
——————————————————————————————————————
திருமலையை பிராபிக்கையே நிரதிசய புருஷார்த்தம் என்கிறார் –
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-
கரண பாடவம் கெடுவதற்கு முன்னே திருமலை யோட்டை சம்பந்தத்தால் பிறந்த அழகாலே ஆச்சர்ய பூதனானவன்
போக்யதையின் மிகுதியால் விடாதே இருக்கிற கோயிலாய் நில மிதியால் வளரா நின்று வைத்து
நாள் தோறும் இளகிப் பதியா நின்ற திருகி சோலை சூழ்ந்து இருந்துள்ள திரு மலையை
திருமலையை ஒழிய இருக்கும் இருப்பாகிற அநர்த்த பாகிகள் அன்றிக்கே அத்தை பிராபிக்கையே சதிர் –
———————————————————————————————————————
திருமலையில் காட்டிலும் அத்தோடு சேர்ந்த திருப்பதியை அனுபவிக்கையே பரம பிரயோஜனம் -என்கிறார் –
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-
ஆத்ம குணங்களையும் வடிவு அழகையும் உடைய ஸ்த்ரீகள் உங்கள் பக்கல் பண்ணும் ப்ராவண்யத்தை ஜென்ம பிரயோஜனமாக நினையாதே
கம்பீர த்வனியை உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஏந்தின அழகாலே -அழகர் -என்னும் திரு நாமத்தை உடையவர்க்கு ஸ்ப்ருஹணீயமான கோயில்
சந்திரனுக்கு வருந்திப் போக வேண்டும் படி யாய் உயர்ந்து இருக்கை
ஏத்தி உஜ்ஜீவிக்கை
மாலிரும் சோலை யாகிற பதியை-என்றுமாம்
————————————————————————————————————————
திருமலையைச் சார்ந்த அயன் மலையை பிராபிக்கையே செய்ய அடுப்பது என்கிறார் –
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-
வர்ஷூகமான மேகம் போலே ஜல ஸ்த்தல விபாகம் இன்றிக்கே சர்வ ஸ்வதானம் பண்ணி வர்த்திக்கிற அழகருடைய கோயில்
போக்யத்தையாலும் இருட்சியாலும் புக்கார் மிகவும் மதி மயங்கும் படியான திருச் சோலை –
————————————————————————————————————————
கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதர் ஆனவர்கள் அடிமை செய்து வாழ்கைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்தித்து
அருளுகிற திரு மலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசமான படி என்கிறார் –
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-
ஆஸ்ரித ஆபத் சகனான கிருஷ்ணன் தன ஐஸ்வர்யத்தோடே உறைகிற கோயில்
மேக பதத்தில் காட்டிலும் உயர்ந்து அறப் பெருத்துள்ள திருச் சோலையை உடைத்தான திருமலை –
——————————————————————————————————————–
திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார் –
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-
மிக்கு இருந்துள்ள பலத்தால் இதர புருஷார்த்த ப்ராவண்யமான பாபத்தை வர்த்திப்பியாதே
ஆஸ்ரித பரித்ராணமான பரம தர்மத்தில் மூளும் திரு வாழியை திவ்ய ஆயுதமாக உடையவனுக்கு ஸ்தானமாய்
ரமணீயமான சுனைகளாலே சூழப் பட்ட திரு மலையின் –
———————————————————————————————————————-
திருமலைக்கு போகக் கடவ மார்க்க சிந்தனை நல்லது என்கிறார் –
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-
இதர புருஷார்த்தங்களில் பிரவணர் ஆகாதே இதுவே நிரதிசய புருஷார்த்தம் என்று நினையுங்கோள் –
எட்டாத படி உறியில் இருந்த வெண்ணெய்யை அமுது செய்து அச் சுவடு அழியாமே வந்து நின்று அருளுகிற கிருஷ்ணனுடைய
கோயிலாய் நில மிதியாலே திர்யக்குகளும் கூட தம் தாமுடைய இனங்களை பிரியாத படியான திருமலைக்குப் போம் வழி
நெஞ்சிலே பட அத்தை நினையா நிற்கை
நெறி பட நினைகை-மிகவும் நினைக்கை என்றுமாம்-
———————————————————————————————————————-
திருமலை என்று அனுகூலிக்கையே வென்றி என்கிறார் –
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-
இது புருஷார்த்தம் என்று நினையுங்கோள் -இதர புருஷார்த்தம் ஆகிற நரகத்தில் புகாதே-
ஸ்ரீ வராஹமாய் ஜகத்தை எடுத்து அருளினவனைக் காணப் பெற்றிலோம் என்னாதே-அவன் நித்ய வாஸம் பண்ணுகிற கோயிலாய்
தன் கோடுகளில் தேய்ந்து களங்கம் போம்படி சந்திரன் வந்து சேருகிற திருமலையை அனுகூலனாய்க் கொண்டு சேர்ந்து –
——————————————————————————————————————-
திருமலையைச் சென்று நிரந்தரமாக வலம் செய்கையே வழக்கு என்கிறார் –
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-
நல்ல பலன்களை சம்பாதித்து ஷூத்ர விஷய ப்ராவண்யத்தாலே அந்த பலன்களை வ்யர்த்தம் ஆக்காதே
நம்மோடு ஓக்கத் திரு மலையை வலம் செய்யா நின்றுள்ள ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனுடைய கோயில்
வலம் செய்யும் பலதன் என்றுமாம்
எம்பெருமானோடு ஓக்க வலம் செய்யா நின்றுள்ள அயர்வறும் அமரர்களுடைய திருமலையை –
—————————————————————————————————————-
திருமலை யைத் தொழுவோம் என்று நினைக்கையே அமையும் என்று அத்யவசிக்கையே விஜய ஹேது என்கிறார் –
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-
இதுவே நியாயம் என்று நினையுங்கோள் -இதர புருஷார்த்தங்களில் பிரவணராய் தலை மடாதே –
பூதனையை முடித்தவனுக்கு போக்யத்தையால் விட ஒண்ணாத படியாய் அசங்குசிதமாக வர்த்திக்கலாம் கோயில்
அழகரைப் போலே முக்தமான கஜ யூதர்கள் சேர்ந்த திருமலை
———————————————————————————————————–
பல படிகளாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார் –
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-
நேர்பாடு என்று பார்த்து களவு காணுதல் -பஸ்யதோ ஹரத்தை யாதல் செய்யாதே
ஸ்ரீ கீதையாலே வேதார்த்தத்தை விரித்தவன் -வேதார்த்த பூதனான தன்னை ஆஸ்ரிதற்கு காட்டலாம் நிலம் என்று விரும்பின கோயில்
அங்கு உள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமாயே வர்த்திக்கும் படி இருக்கிற மாலிரும் சோலையாகிற நித்ய வசந்தமான திருமலையில் புகுகை பரம பிரயோஜனம்
மாதுறு மயில் -என்றது மார்த்த்வத்தை உற்ற மயில் என்னவுமாம் –
—————————————————————————————————————
நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் –
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-
பலகாலும் ஸ்ருஷ்டிக்க விததம் ஆகா நின்றாலும் என்றேனும் ஒரு நாள் பிரயோஜனப் படும் என்று கருதி இந்த லோகத்தை
உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்களிலே அஞ்ஞான கந்தம் இல்லாத ஆழ்வார் தம்மில் காட்டிலும்
கேட்டார்க்குத் தெளிவு பிறக்கும்படி அருளிச் செய்த ஆயிரத்திலும் இது திரு வாய் மொழி –
————————————————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply