Archive for January, 2014

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 29, 2014

மையார் -பிரவேசம்

இறைவனுடைய ஸ்வா தந்த்ர்யத்துக்கு அடி -அவன் தானே இருக்கும்
அவனுடைய சீலம் முதலான குணங்களுக்கு அடி -பிராட்டியே இருக்கும் –
சீலம் முதலான குணங்கள் வந்தவாறே
ஸ்வா தீனம் இன்றிக்கே ஒழிகிறதோ -என்னில்
நிரூபித்தால்
அந்த ஸ்வா தந்த்ரியத்தைப் போன்று
இவளுடைய சேர்த்தி
நித்தியமாய் இருக்கையாலே –
அங்கனமாய் இராது -காரணம் பற்றி வந்தது ஆனாலும் –
பாஷ்ய காரர் மேலே ஸ்ரீ வல்லப என்று நினைத்து
ஸ்வரூபத்தை நிரூபிக்கிற இடத்தில்
ஞானம் ஆனந்தம் இவற்றுக்கு முன்பு ஸ்ரீ ய பதி என்றாரே அன்றோ –
ஸ்ரீ ய பதி நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாநந்த
ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –
ஸ்வ அபிமத அநுரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ
ஐஸ்வர்ய சீலாத்ய
அநவதிக அதிசய அசங்கேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப-
இப்படி இருக்கிறவனுடைய
சீல குணத்தையும்
அதற்கடியான திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையையும் -அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் –
அருளிச் செய்தார் மேல் திருவாய் மொழியிலே –
கடுக பெற வேண்டும்படி
குணங்களால் மேம்பட்டவனுமாய்
பெறுவிப்பாரும் அருகிலே உளராய் இருக்கையாலே
இப்போதே பெற வேண்டும்படியான ஆசை பிறந்தது –
அப்போதே பெறக் காணாமையாலே
விஷயத்துக்கு தகுதியாக விடாய்த்தார்
பெற வேண்டும்படி குணங்களால் மேம்பட்டவனுமாய்
பெறுவிப்பாரும் அருகே உளராய்
இருக்கப் பெறாவிட்டால் ஆறி இருக்க போகாதே அன்றோ –
ஆகையாலே
முடியானே -என்ற திருவாய்மொழியின் வாசனையாலே
அறிவுடைப் பொருள்களைப் போன்று தனித் தனியே
கரணங்களும் விடாய்க்க -தாமும் விடாய்க்கிறார் -முதல் ஐந்து பாசுரங்களில்
வீற்று இருந்து ஏழ் உலகு -திருவாய்மொழி வாசனை 6-7-8-
என்றைக்கும் என்னை -திருவாய்மொழி வாசனை -9-
செஞ்சொற் கவிகாள் –திருவாய்மொழி வாசனை –10
இதுதான் எல்லா திருவாய் மொழி களோடும் கூடி இருப்பது ஒன்றாயிற்று -என்றது
முடியானே /வீற்று இருந்து ஏ ழ் உலகு /என்றைக்கும் என்னை /செஞ்சொற் கவிகாள்
என்னும் திருவாய் மொழிகளில் ஓடுகிற எண்ணங்களை உடைத்தாய் இருப்பது ஆயிற்று -என்றபடி
இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாய்க்க -கண்ணே -என் கருத்தே -உன்னை உள்ளும் என் உள்ளம் –
தாமும் விடாய்த படி தான் -நாம் அழைப்பேன் -பேதுறுவன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துயரத்துக்கு தோற்றின
அது தான் காலம் தாழ்த்து வந்தான் என்னலாம்படி
ஆற்றாமைக்கு காலம் தாழ்த்துத் தோற்றாமல்
தூணிலே வந்து தோற்றினால் போலே -நரசிங்கமாய் –
தோற்ற வேண்டும் படி ஆயிற்று –
இப்படிப் பட்ட
தம் நிலையையும்
அதற்கு அடியான விடாயையும்-
விடாய் அறிந்து அதற்கு உதவ வந்து அவன் முகம் காட்டின படியையும்
நினைத்து உவகையினராய்
நான் கிருதக் கிருத்தியன் ஆனேன்
அடிமை செய்யப் பெற்றேன்
வாழ்ந்தேன்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் எல்லாம் நான் உபகாரகனாம் படி ஆனேன்
இது ஒருவன் பெரும் பேறு இருந்தபடியே -என்று
தமக்கு பிறந்த லாபத்தை நினைத்து
இனியராய்
அதனைப் பேசித் தலைக் கட்டுகிறார் –

———————————————————————————————————————————————–

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே

———————————————————————————————————————————

திருமகள் கேள்வனானவனை
காண வேண்டும் -என்று
தம்முடைய கண்களுக்கு பிறந்த
அவாவினை
அருளிச் செய்கிறார்

மையார் கருங்கண்ணி –
அவனைப் பெற வேண்டும் என்று இருப்பார் ஆசைப்படுவதும் அவள் முன்னாகவாய் பெற்றால்
பின்னை கைங்கர்யம் செய்வதும் இருவருமான சேர்த்தியிலேயாய் இருக்கும் அன்றோ –
மையார் கருங்கண்ணி –
வேறு ஒரு பொருளைக் கொண்டு அழகு செய்ய வேண்டாதபடி
இயல்பான அழகினை உடையதாய்
ஆயிற்றுத் திருக் கண்கள் இருப்பன –
இனி மங்களத்தின் பொருட்டு தரிக்கும் இத்தனையேயாம் அஞ்சனம்
கருங்கண்ணி -என்னா நிற்கச் செய்தே -மையார் -என்னும் போது
மங்களத்தின் பொருட்டு தரிக்கப் படுத்தல் எனபது தானே போதரும் அன்றோ –

கமல மலர்மேல் செய்யாள் –
இது ஆயிற்று மிருதுத் தன்மை இருக்கும்படி –
மற்றை இடம் பொறாத -மலர் மேல் இருக்கையே-பொருந்தும் படியான மிருதுத் தன்மை –

திரு மார்வினில் சேர் திருமாலே –
தாமரைப் பூவில் வாசனையும் தாதும் அடிக் கொதித்தால்
உன் மார்வில் அடி மாறி இட வேண்டும்படி
மார்வு படைத்தவனே
இவள் இவ்வேற்றம் எல்லாம் கொண்டும் அம்மார்வுக்கு அவ்வருகே போக மாட்டாள்
அவ்வகலம் எல்லாம் இனிமையாக இருக்கையாலே
அவ்வருகு போக வேண்டாவே
அகலம் மார்வு -விரிந்து இருத்தல் சிலேடை-

திருமாலே
இவள் -மார்பில் படும் பாட்டினை –
இவளுடைய எல்லா உறுப்புகளிலும் பிச்சு ஏறி இருக்குமாயிற்று அவனும் –
அவனுடைய திருக் கண்கள் சிவந்தனவாய் அன்றோ இருப்பன
அவன் இவளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பதனால் –
அவன் கண்களின் சிவப்பு இவள் மேல் ஊறி இவள் திருமேனி சிவந்து இருக்கும் –
இவள் அவனை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கையாலே
இவள் கண்களின் கருமை அவன் திருமேனியில் பரந்து
அவன் திருமேனி கருமையாய் இருக்கும் –
இவளுக்கு திருக் கண்கள் குளிர்ந்து இருக்கும் -கருமை -குளிர்ச்சி கிருபை
அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருக்கும்
அவனுடைய சேர்க்கையால் ஆயிற்று இவளுக்கு தண்ணளி விஞ்சி இருப்பது
இவளுடைய சேர்க்கையால் ஆயிற்று அவனுக்கு வாத்சல்யம் விஞ்சி இருப்பது
ஆக
காதலாலே இருவருக்கும் இரண்டும் குறை அற்று இருக்கும்
வரவிட்ட ஆள் -மாருதி -அழியச் செய்யப் புக
பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யென ந கச்சித் ந அபராத்யதி -யுத்தம் -116-45
யார் குற்றம் செய்யாதவர் -என்னும் இவள்
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-
என்று இவளோடு மறுதலிக்கும் படி ஆயிற்று அவன் இருப்பது
ஆகையாலே
இருவருமான சேர்த்தியிலே இவை இருவருக்கும் குறை அற்று இருக்கும் -என்றுமாம் –
பிரிந்து இருக்கும் காலத்திலும் தனித் தனியே குறைவு அற்று
இருக்கும் என்றுமாம்-

-திரு மார்வினில் சேர் -என்றதனால்
எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
அகலகில்லேன் இறையும்-என்று இன்று வந்து கிட்டின புதியார்
படுவதனை எல்லாம் படா நிற்பாள்
என்பதனைத் தெரிவித்தபடி
சேர் திருமாலே -என்ற நிகழ்கால வினைத் தொகை இதனைக் காட்டுகிறது
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்ட மாதவா -திருவாய்மொழி -1-5-5-
வெருவும் ஆலமும் பிறையும் வெவ் விடையவற்கு ஈந்து
தருவும் வேறுள தகைமையும் சதமகற்கு அருளி
மருவு தொல் பெரு வளங்களும் வேறுற வழங்கி
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி -கம்பர் -பால -அகலிகைப் படலம் -26

வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் –
இவள் கையில் உள்ள விளையாட்டுத் தாமரைப் பூ அவனுக்கு
இனிதாக இருக்குமா போலே ஆயிற்று
அவன் கையில் திவ்ய ஆயுதங்கள் இவளுக்கு இனியவை இருக்கிறபடி
பிராட்டி யை கூறி திவ்ய ஆயுதங்களை அருளுவதால் –
ஸ்ரீ குணரத்ன கோசம் -47 ஸ்லோகம் -இது போலே
இவள் உகப்புக்காக அடியார்கள் உடைய பகைவர்களை அழியச் செய்கைக்கு காரணமாய்
காட்சிக்கு இனியதாய் இருக்கும் ஆயிற்று –
பகைவர்கள் மேல் மிக வெம்மையை உடைத்தாய்
புகரோடு கூடி இருக்கிற திரு ஆழி –
இருக்கும் தோற்றப் பொலிவே அமைந்து -வேறு ஒரு கார்யம் கொள்ள வேண்டாதே
வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கும் படியான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –

ஏந்தும் கையா –
வெற்று ஆயுதங்களையே அன்று –
வெறும் திருக் கரங்களையே அன்று –
இரண்டின் உடைய சேர்த்தியை யாயிற்று இவர் ஆசைப் படுகிறது
கூர் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1- என்னுமவர் அன்றோ

உனைக்-
பிராட்டி சம்பந்தத்தோடும்
திவ்ய ஆயுதங்களோடும்
திவ்ய விக்ரகத்தோடும்
கூடி இருக்கிற உன்னை –
இவருடைய உத்தேச்ய வஸ்து இருக்கிற படி இது காணும் –

காணக் கருதும் –
தமஸ பரமோ தாதா சங்க சகர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷ நித்ய ஸ்ரீ அஜய சாஸ்வத த்ருவ-யூத -115-15-மண்டோதரி -வார்த்தை
சங்கையும் சக்ரத்தையும் கதையும் தரித்து இருப்பவனே
பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ வத்சத்தையும் மார்பில் உடையவனே
என்கிற உன் வடிவைக் காண ஆசைப் படா நின்றது –
அவனை ஆசைப் படுவார் ஆசைப் படுவது ஒரு கார்யம் கொள்ள அன்று
காண ஆயிற்று
திரு வேங்கடத்தானைக் காண அன்றோ காரார் திரு மேனி காணும் அளவும் அன்றோ -சிறிய திரு மடல் -69-
சதா பஸ்யந்தி சூரைய-நித்ய சூரிகளும் இத்தனை -அன்றோ
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்று
இவ்வளவிலே தேக்கிட்டு விடுவர் இங்கு உள்ளார்
நவை தேவோ அச்நந்தி நபிபந்தி
ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம் –3-10-
தேவர்கள் உண்பது இல்லை
இந்த அமிர்தத்தை பார்த்தே திருப்தி அடைகிறார்கள் -என்று
இவ்வளவிலே தேக்கிட்டு விடுவர் அங்கு உள்ளார்

என் கண்ணே –
சம்சாரிகளில் தமக்கு உண்டான ஆசையோ பாதியும் பேருமாயிற்று
இவரைக் காட்டிலும் இவர் திருக் கண்களுக்கு
முக்கியமானவர்களாய் இருக்கும் ஏற்றம் உண்டே அன்றோ அவற்றுக்கு-

சம்பந்தம் காட்டிக் கொடுக்க
சீலத்தில் கால் தாழ்ந்தார்
ஆர்த்தி -மிக்கு -துக்கம் உடன் ஆரம்பம் -சந்தோசம் உடன் முடிய
சீலாதி குணங்களுக்கு அடி பிராட்டி
ஸ்வாதந்த்ர்யம் மேல் இட்டால் -இவை தலை எடுக்கும் படி –
சாய்வது புருஷகார பலத்தாலே
ஸ்வா பாவிகம் தாம் இரண்டும் -ஸ்வா தந்த்ர்யம் சீல குணங்களும் –
மருந்து குலுக்கி சாப்பிட -நீர்பாகம் மேலே மருந்து குலுக்க சிரப்பு- –
பிராட்டி திருத்தி -அருள
சீலாதி குணங்கள் அவள் ஆதீனம் -சுவாதீனம் இல்லையோ
அங்கன் இல்லை
ஸ்வா தந்த்ர்யம் –சீலம் –இவள் ஓட்டை சேர்த்தியும் –மூன்றும் நித்யம்
ஸ்ரீ வல்லபா -சொல்லும் முன் -ஸ்ரீ ய பதி நிகில ஹேய பிரத்ய நீக
கீதா பாஷ்யம் முதல் வாக்கியம் –
கதய த்ரயம் -சம்யோக -வாக்கியம்
ஸ்ரீ உடனே கூடி பதியாக உள்ளவன்
அத்தால் சீலம் எப்பொழுதும் உண்டே
அணியார் மலர் மங்கை தோள் -சீலம் இரண்டையும் அனுசந்தித்தார் கீழ் -நாளும் உன் புகழ்கோ சீலமே –
கார்ய கரமாக வில்லை –
இப்பொழுதே பெற சாபலம் பிறக்க –
வஸ்து குணாதிகம் சேர்விப்பவளும் அருகில் இருக்க
சேதன சமாதியாலே கண்கள் காண கருதும் -கரணங்களும் விடாய்த்து –
இந்த்ரியன்கலெ தனி தனியே –
தாமும் விடாய்த்தார் முனியானே வாசனை
ஓன்று ஒன்றின் செயல் விரும்ப –
ஆசை மிக்கு இருந்தது எல்லா திருவாய் மொழி
பாவ விருத்தி
செஞ்சொல் கவிகாள் -திருமேனி ஆசை
வீற்று இருந்த ஏழு உலகம்
என்றனைக்கும் -அடியார்க்கு பாட வைத்தான்
முடியான கரணங்கள் –
கஜேந்திர ஆழ்வான் ஆர்த்தி கொஞ்சம் குறைவு போலே
அந்த த்வரையும் போதாதே இவருக்கு
தூணிலே வந்து தோற்றும்படி வேண்டும்
தட்டின அடுத்த நொடி வந்து தோன்ற வேண்டும்
க்ரமத்தில் நிதானம் ஆகவந்தான் அங்கே-
ஆழ்வார் தசை
விடை -முகம் காட்டின படி -கண்டு கொண்டேன்
அனுபவித்து ஹிருஷ்டராய்
அடிமை செய்ய பெற்றேன்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் வாசிக கைங்கர்யம்
இப் பேறு இருந்த படியே
தம்முடைய லாபத்தை பேசி ஹிருஷ்டராய் தலைக் கட்டுகிறார்
ஆராயிர படி -அவசன்ன -பிரீதியாக முடிப்பதை காட்ட வில்லை
ஒன்பதாயிர படி -ப்ரீதராய் முடிக்க –
சபலம் -ஆசை –
பிறந்த ஆசையை வெளிப்படுத்துகிறார்

உன்னைக் காண கருதும் கண்கள்
மையார் கரும் கண்ணி
கமல மேல் மேல் செய்யாள் சிவந்த திருமேனி
திருமார்பில் சேரும் திருமால்
கையார் சக்கரம் –
அவனை பெற ஆசை படுவது அவளை முன்னிட்டு -த்வய பூர்வ வாக்கியம் –
சேர்த்தியில் கைங்கர்யம் -த்வய உத்தர வாக்கியம்
தனிப் பதம் இல்லை சமஸ்த பத விசேஷணம் ஸ்ரீ மத நாராயண பூர்வ வாக்கியம்
உத்தர வாக்கியம் ஸ்ரீ மன நாராயணா – சொல்லாமல்
ஸ்ரீ மதே -சதுர்த்தி விபக்தி உடன் தனிப் பதம் –
சமஸ்த பதம் அர்த்தம் -முதலில் –
மையார் கரும் கண்ணி
மங்கள அர்த்தம் அஞ்சனம்
ஆபரணம் சூட்டாத அவயவம் கண்கள்
சுயமாக அழகு உள்ள திருக் கண்கள்
கரும் கண்ணி -மை எதுக்கு -மங்கலம்
சௌகுமார்யம் பூ உறுத்தும் படி மென்மை
தாமரை பூவில் பரிமளமும் தாதும் அடி கொதித்தால் –
அதை விட மென்மை திரு மார்பில்
அதற்கு அவ்வருகு போகாமல்
அகலம் விசாலம் அகல் மார்பு எல்லாம் போக்கியம்
அகலகில்லேன் இரையும்
அவனும் இவன் மார்பில் படும் பாட்டு போலே
திரு மால் மையல் திருவின் இடத்தில் மால் மொத்த அவயவங்களில்
இவனுக்கு ஒரு அவயவம்
அவளுக்கு சர்வ அவயவங்கள்
கம்பர் -பட்டர் சமகாலம்
திருவடி சப்தம் பிற்காலம் நாத முனி காலம் இல்லை என்பர்
இரண்டு வித அபிப்ராயமும் உண்டே
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்
நங்கையை காணும் தோறும் -அன்னதேயாம் –
ஒவ்வொரு அவயவம் காண ஆயிரம் கண்கள் வேணும்
பிச்சேரி சர்வ அவயவன்கலிலும்
ராகவன் வைதேகி முழுக்க சொல்லி -இவள் அஸி தேஷணா
அவன் கண்கள் சிவந்து தாமரைக் கண்ணன்
இவள் மேலே ஊறி செய்யாள் -சிவந்த திருமேனி ஆனதாம் –
கண்ணில் கருப்பு -இவள் நித்ய கடாஷம் செய்வதாலே
குளிர்ந்து இருக்கும் இவளுக்கு
அவன் வாத்சல்யம் கண்கள் குதறி சிவந்து
செர்த்தியாலெ தண்ணளி
பிரணயித்வத்தால் -இருவருக்கும் இரண்டும் உண்டே குறைவற்று இருக்கும்
வரவிட்ட ஆள் ந கச்சின் ந அபராதி
திருவடி இடம் -பிராட்டி வார்த்தை -தண்ணளி
இவளை சீதை குறைத்தால் செய்தாரேல் நன்று செய்தார் வாத்ச்சல்யம்
கிருபை தண்ணளி -வாத்சல்யம் இருவருக்கும் குறை அற்று இருக்கும்

திரு மார்பினில் சேர் இன்று வந்து கிட்டினவர் படுவது படா நிற்கும்
அகலகில்லேன் இறையும் -தண்ணீர் தண்ணீர் -என்று சொல்ல வைக்கும் –
நித்ய அநபாயினி-இப்படி சொல்லும்படி
சேர் -வர்த்தமானம் -சேர்ந்த சொல்லாமல்
தொடர்ந்து வரும் -நிகழ காலம்
கையில் லீலா அரவிந்தம் அவனுக்கு போக்கியம்
அவன் கையில் திவ்ய ஆயுதங்கள் இவளுக்கு போக்கியம்
இவள் உகப்புக்காக ஆயுதங்கள்
பர்த்தாரம் அனைத்து
ஏந்தும் கையன்

வெம்மை மிக்க -சுடர் ஆழி பிரதி பஷம் மேல் –
சந்நிவேசமே -கண்டு கொண்டு இருக்கும் படி
விசேஷணம் ஒன்றும் இல்லை சுரி சங்கு -அதுவே அழகு
ஏந்தும் கையா
சேர்த்தி ஒன்றே ஆசைப்
கூரார ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்
உன்னை
லஷ்மி சம்பந்தம் திவ்ய ஆயுதம் திருமேனி உத்தேச்ய வஸ்து
நிர்விசேஷ சீன மாத்திர இல்லை
சங்கு சக்கர கதா
காண கருதம்
கண்டு வேற பிரயோஜனம் இல்லை கண்ணால் பார்த்தால்
அழைப்பன் திரு வேங்கடத்தானை –காண -திருமழிசை ஆழ்வார்
ஆசைப்படுவது வேறு கார்யம் கொள்ள இல்லை
காரார் திரு மேனி காணும் அளவும் –ஓராது ஒழியேன்
கண்டால் வேற
சதா பஸ்யந்தி சூரயா அங்கும் பார்த்து கொண்டே
கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா
அமிர்தம் த்ருஷ்ட்வா திருப்யந்தி
என்கண்ணே
சம்சாரிகள் விட ஆழ்வார் வாசி போலே
இவர் கண்கள் இவரை விட -என்கிறார்
நேத்ரா பூதமான ஏற்றம் உண்டு இ றே
முக்யஸ்தர் அக்ரேசர் நேத்ரா பூதர் –
சிரசே பிரதானம் அதிலும் கண் பிரதானம் –

———————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 28, 2014

நிகமத்தில்
இத் திருவாய் மொழி கற்றார்
பரம பதத்தே செல்லுதல்
ஆச்சர்யம் அன்று –
தக்கதே –
என்கிறார் –

————————————————————————————————————-

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே

——————————————————————————————————————–

சீலம் எல்லை இலான் அடிமேல் –
எல்லை இல்லாத சீல குணத்தை உடையவனுடைய
திருவடிகளிலே –
இதனால்
இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது -சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று
அதனை முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று

அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை-
அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரியை உடைய ஆழ்வார்
அன்றிக்கே
கோலம் நீள் என்ற சொற்கள் இருப்பதினாலே
அணி -என்பதனை
அடி மேல் அணி மாலை -என்று
மாலைக்கு அடையாகக் கோடலுமாம் –

ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் –
இப்பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது
இப்பாசுரங்களை ஒருகால் சொல்லுதல்
இவற்றைப் பாடம் செய்தல்
இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –
என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –

வைகுந்தம் ஏறுதல் பான்மையே –
பரம பதத்தில் செல்லுதல் இயல்பாகவே இருக்கும் –
யாங்கனம் -எனின்
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர் –
இப்பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு
பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும் என்பதாம் –
தமப்பன் செல்வம் மகனுக்கு
தாய பாகமாக அடைய வேண்டியதாகவே
இருக்கும் அன்றோ –

நிகமத்தில்
பரம பதம் செல்லுகி பிராப்தம் நிச்சயம் சங்கை இல்லை பலன்
சீலம் எல்லை இல்லாத
திருவடி மேல் சொன்ன இந்த திருவாய் மொழி
அமர்யாத சீலன் கட்டுப் படாத எல்லை இல்லாத சீலாதிக்யம்
அணி கோல நீள் குரு கூர் சடகோபன்
சப்தம் –
இப்பத்தின் பரிசரத்தின் உள்ளார்
உக்தி மாதரம்
பாட தாரணம்
அர்த்த அனுசந்தானம்
எந்த வித சம்பந்தம்
வைகுந்தம் ஏறுதல் பான்மை
மாக வைகுந்தம் போக ஆழ்வார் எண்ணினார்
பித்ரு தனம் புத்ரனுக்கு தாய பிராப்தம்

———————————————————————————————————————-

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் -பேருறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டிவிடும் நம் மனத்து மை–83

சாரம்
உள்ளது எல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான்
பேர் உறவைக் காட்ட
அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
மனத்து மை மாட்டி விடும்
அருள் நம்மை சேர்த்து விடும்

 

—————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 28, 2014

அடிமையின் இனிமையை அறியாத
பிரமன் முதலாயினோர்கட்கும்
பற்றப் படுமவனாய்
இருக்கிற உன்னுடைய சீலம்
என்னால் புகழ்ந்து முடிக்க ஒண்ணாது -என்கிறார்

———————————————————————————————————————-

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே

———————————————————————————————————————–

தாள தாமரையான் உனதுந்தியான்
தாமரைப் பூவினை பிறப்பிடமாக உடைய பிரமன்
உன் திரு நாபியைப் பற்றி வாழ்கிறான்
தாமரைப் பூவிலே பிறந்தோம் நாம் -எண்ணும் செருக்கினை உடையவனுக்கு
அன்றோ உடம்பினைக் கொடுத்தது –
என்கிறார்

வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஒளியை உடைத்தாய்
தொடங்கின கார்யத்தை முடிய நடத்த வற்றான மழுவினை உடைய சிவன்
உன் திருமேனியில் ஓர் இடத்தைப் பற்றிக் கொண்டு வாழாநின்றான்
வேறு ஒருவரையும் அடைகலமாகப் பற்றாமையை
தெரிவிக்கிற
தொடை ஒத்த துளவமும் கூடையுமாக -புகுந்து இருக்கிறான் அல்லனே –

ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் –
அடியாராய் அடைகின்ற தேவர்களும்
நித்ய சூரிகள் செய்யும் அடிமையை அன்றோ
மரணம் இல்லாத ஒப்புமையாலே
ஈச்வரோஹம் -என்று இருக்குமவர்கள் செய்கிறது –

நாளும் என் புகழ் கோ உனசீலமே –
காலத்தை முழுதும் ஒரு போகி ஆக்கி
புகழுகைக்கு எனக்கு உறுப்பு ஆக்கினால் தான்
என்னாலே புகழ்ந்து தலைக் கட்டலாய் இருந்ததோ
உன்னுடைய சீல குணம்
உன சீலம் -நாளும் -என் புகழ்கோ

தாஸ்ய சுவடு அறியாத ப்ரஹ்மாதிகளும்
உனது உந்தியான்
ஆகத்தான்
உன்ன சீலமே -எப்படி புகழ்வது
அவர்களுக்கும் இடம் கொடுக்கும் சீலம்
திரு நாபி பற்றி
துர்மானி -அஹங்காரம் கமல யோனி -என்ற
நீள் மழு வாளி-ஒளியை உடைய -தொடங்கின கார்யத்தை முடிய நடத்த மழு உடைய ருத்ரன் –
மழுவை ஆளுகின்ற்றவன்
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
ஏகதேசம் பிரளயம் பொழுது இடம் கொடுத்து
அநந்ய சரணத்வம் -தொடை ஒத்த துளபம் கொண்டு வராமல்
ஆயுதமும் கையுமாக வந்தாலும் இடம் கொடுக்கும் சேலம்
அமரர்கள் –
நித்ய சூரிகள் செய்யும் அடிமை
தாஸ்ய பாவம்
ஈச்வரோஹம் இவர்கள்
நாளும் உனது சீலம் எப்படி புகழ
புகழ்ந்து தலைக் கட்ட முடியாதே
சீல குணம் –

—————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 28, 2014

இப்படி சுலபனான உன் திருவடிகளிலே கிட்டப் பெற்றாலும்
அடைய வேண்டும் என்று நினைத்த அளவிலேயே
அதனைக் கொண்டு பேர் உவகையன் ஆகின்ற
உன் சீல குணத்தை நினைத்து
யாதாயினும் ஒரு அடிமை செய்வதற்கு இயலாதவனாய் இருக்கின்றேன் –
என்கிறார் –
அன்றிக்கே –
இங்கனே மூன்று திருப் பாசுரங்களாலே -8/9/10/
தம்முடைய தகுதி இல்லாமையைச் சொல்லுகிறார்
என்பாரும் உளர்
அது இல்லை அன்றோ -கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழி பாடிய பின்பு -இவர்க்கு
அன்றிக்கே –
இத் தலையாலே ஒன்றினை விரும்பி பெறுதல் மிகையாம்படி
இருக்கிரவனுடைய உபாயத் தன்மையைச் சொல்லுகிறார்
என்பாரும் உளர்
இவை எல்லாம் அல்ல –
அவன் திரு முன்னர் முறையாக அடிமை செய்ய
ஒண்ணாத படி அழிக்கும் அவனுடைய
சீல குணத்தைச் சொல்லுகிறது -என்று
நம் உடையவர்கள் அருளிச் செய்வார்கள் –

——————————————————————————————————————————————-

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே

————————————————————————————————————————

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுது மென்னுமிது மிகை –
சிறந்த பூக்கள் முதலான
சாதனங்களைக் கொண்டு
அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்றால்
இது மிகையாம் படி அன்றோ
உன் சீல குணம் இருப்பது
அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவனே ஜநாத்
அந்யத் குசல சம் பிரச்நாத் நசேச்சதி ஜனார்தனா -பாரதம் உத்தியோக பர்வம் -87-13-சஞ்சயன் கூற்று
நிறைந்து இருக்கிற தண்ணீர் உடைய பூர்ண கும்பத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றினையும் அவன் விரும்புவதில்லை -எண்ணப் படுமவன் அன்றோ அவன்

யாதலில் –
இப்படி சீல குணத்தால் மேம்பட்டவன் -ஆகையாலே –

பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்-
வருந்தி அரிதில் ஆராதிக்கத் தக்கவன் -என்கிற குற்றம் இன்றிக்கே
இயல்பாகவே அமைந்த எளிதில் ஆராதிக்க தக்க தன்மை உடையனாய்
அதற்கு அடியாக
திருவநந்த ஆழ்வான் உடன் கலந்து இருப்பவனே –

தழுவுமாறு அறியேன் உன தாள்களே-
உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிலேன் –
வலி இல்லாமையாலே முதலிலே கிட்டுதல் அரிது
கிட்டினாலும்
சீலத்தின் மேன்மையை நினைத்தால்
ஓர் அடிமை செய்ய இயலாதவனாக இருக்கிறேன் –

கிட்ட பெற்றாலும்
ஆபி முக்கியம் -நினைவே போதும் -சந்தோசம் படுவாய்
சீல குணம் அனுசந்தித்து
உருகி போக
பிரவ்ருத்தி செய்ய முடியாமல்
அன்றிக்கே
தம்முடைய அயொக்யதை 6/7/8/பாசுரம் சொல்வார் என்பாரும் உண்டே
வினையேன் -பாக்யசாலி –
அது இல்லை இ ரே கண்கள் சிவந்த -பின்பு
இத்தலையால் அர்த்தித்து செய்ய வேண்டுவது உபாய பாவம் என்பார் சிலர் -அதுவும் இங்கே சொல்ல வில்லை
சந்நிதியில் கிரமத்தில் பரிமாற்ற ஒண்ணாத
சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் –
கடல் -துயிலுமா கண்டு -என் செய்கேன் உலகத்தீரே போலே
அவர் சௌந்த்ர்யம் ஈடுபட்டு
இவர் சீல குணத்தில் ஈடுபட்டு
தழுவுமாறு அறியேன்
தொழுது -அடிமை செய்து உஜ்ஜீவிப்பது மிகை என்று நினைக்கும் சீல குணம்
திரு ஆராதானம் உபகரணம்
நீர் திருமஞ்சனம் -மா மலர் தோ மாலை -சுடர் -தூபம் -ஜீயர் கைங்கர்யம்
மிகை என்று நினைப்பான்
அந்ய பூர்ணாத் –
சீலாதிகன்
பழுது இல்லாதவன்
பெனிலும் வரம் தரா மிடுக்கு இல்லா மற்ற தேவர்
எளிமையான பரிவதில் ஈசனை பாடி
அதுக்கடியாக திரு அனந்த ஆள்வான் அங்கே சம்ச்லெஷிப்பது போலே நம் மேலும்
அறியேன் -நிச்சயம் இல்லை உபாயம் நீ சொல்கிறார் இல்லை
பல ஹானி சீல ஆதிக்யம் நினைத்து சக்தி இல்லை என்கிறார்

————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 28, 2014

இச் சரீர சம்பந்தம் அற்றால் சென்று அனுபவிக்கு
பரம பதம் வேண்டுமோ
இச் சரீரத்தோடு இருந்து கொண்டே அனுபவிக்கத் தகுந்த
திருமலை இம் மண் உலகிலே உள்ளது அன்றோ –
ஆனாலும் நமக்கு திருமலையோடு பரம பதத்தோடு
வாசி அற்றதே அன்றோ –
என்கிறார்

———————————————————————————————————————–

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே

————————————————————————————————————————

இன்றிப் போக இருவினையும் கெடுத்து –
இருவினையும்-இன்றிப் போக -கெடுத்து –
நல்வினை தீ வினைகளான-கருமங்களானவை
வாசனையோடு போகும்படி செய்து –
தானே போக்கிக் கொள்ளப் பார்க்கும் அன்றே அன்றோ
சிறிது கிடக்கப் போவது –

ஒன்றி யாக்கை புகாமை –
பின்னையும் ருசி வாசனைகள் கிடக்குமாகில்
அசித் தத்வத்தொடு சென்று கலசி
வேறு ஒரு சரீரத்தை அடைந்து
அதனால் வரும் துயரங்களை அனுபவிக்க வேண்டி வரும் அன்றோ –
அது செய்யாமை –

உய்யக் கொள்வான் -நின்ற வேங்கடம் –
உயிர் அளிப்பான் -திரு விருத்தம் -1- என்கிறபடி
எல்லாரையும் காப்பாற்றுவதற்காக காலத்தை
எதிர் நோக்கினவனாய்க் கொண்டு
நிற்கிற திருமலை –

நீணிலத் துள்ளத்து –
நீள் நிலத்து உள்ளது –
சிறப்பு பொருந்திய பூமியில் உள்ளது
திருமலையை உடைத்தது ஆகையாலே உளதாய
பெருமையை நோக்கி -நீள் நிலம் -என்கிறார் –

அத்தால் பெற்றது என் –
சென்று தேவர்கள் கை தொழுவார்களே-
சென்று கை தொழுவார்கள் தேவர்கள் –
அவ்வளவு தூரம் கால் நடை தந்து போக வல்லார்
புண்யம் மிக்கவர் அன்றோ
நதே மனுஷ்யா தேவா தேய சாரு சுப குண்டலம்
முகம் த்ருஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன -அயோத்யா -64-69-
ஸ்ரீராமபிரான் உடைய அழகு பொருந்திய குண்டலங்களோடு கூடின
திரு முகத்தை பதினைந்தாம் ஆண்டில் மீண்டும் எவர்கள் பார்ப்பார்களோ
அவர்கள் மனிதர்கள் அல்லர் -அவர்கள் தேவர்கள் -என்று சக்கரவர்த்தி கூறினால் போலே
அவனுடைய சீலம் முதலான குணங்களை நினைத்து சொல்கிறார்
அன்பினாலே மூடப் பட்டார்க்கு
இவ் உலகத்தோடு இவ் உலகத்தோடு
வாசி அற்றதே அன்றோ -எட்டாமைக்கு –

சரீரத்துடன் அனுபவிக்கும் திருமலை
நீள் நிலத்து உள்ளதே
வாசி அற்று -பரம பதம் போலே போக முடியாமல் இருக்க
பாக்ய சாலிகள் கை தொழுவார்கள்
வேம் கடதீதி -இரு வினையும் கெடுக்கும் திருமலை
இன்றி போக ஒன்றும் இல்லாமல்
ஆக்கை புகாமல்
உய்யக் கொள்வதற்காக நிற்கிற
சென்று தொழுவார்கள் தேவர்கள்
சவாசனமாக போகும் படி பண்ணி
தானே போக்கி கொள்ள பார்க்கும் பொழுது கொஞ்சம் இருக்கும்
ஒன்றி ஆக்கை புகாமை -சரீரம் புகாமல்
பிறவி தீர்த்து உய்யக் கொள்வான்
உயிர் அளிப்பான் அவசர ப்ரதீஷனாய்
நின்ற திருவேம்கடத்தான்
நீள் நிலம் உயர்ந்த பூமி திரு மழை இருப்பதால் உயர்த்தி
கால் நடை -சென்று கை தொழுவார் பாக்ய சாலி
தேவர் போலே தான்
சீலாதி குணம் அனுசந்தித்து
பிரேமம் அதிகரிக்க இதும் அது போலே செல்ல முடியாமல் இருக்க
ஆழ்வார் -உடை குலை பட்டு உருக சென்று தொழுவார் பாக்யசாலிகள் என்கிறார்

——————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 28, 2014

அவன் நித்ய வாஸம் செய்கிற
பரம பதத்தை சென்று காண வேண்டும்
என்னா நின்றது -என் நெஞ்சு
என்கிறது

———————————————————————————————————-

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே

———————————————————————————————————-

ஆகம் சேர் நரசிங்கமதாகி –
நர வடிவும் சிங்க வடிவும்
சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் போலே பொருந்திய
நரசிங்கமாய்
அன்றிக்கே
நரசிங்கத்தின் உடைய இவர் நெஞ்சிலே சேர்ந்த படி -என்னுதல் -என்றது –
ப்ரஹ்ம தண்ட பிரகாசானாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம்
ஸ்மான் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேச்வர-யுத்தம் -60-3-
இராகவன் உடைய பாணங்களை நினைத்துக் கொண்டு -என்கிறபடியே
மறக்க ஒண்ணாதபடி திரு உள்ளத்திலே சேர்ந்த படியை சொன்னவாறு
அன்றிக்கே
இரண்டு வடிவு களையும் சேர்த்துக் கொடு வந்து தோன்றின போது
இவர் மனத்துக்கு இனியதாய் சேர்ந்து இருந்த படியைச் சொன்னவாறுமாம் –

ஓர் -ஆகம் –
ஒப்பற்றதான
முரட்டு உடம்பு

வள்ளுகிரால் –
கூறிய நகத்தால் –
அன்றிக்கே
வளைந்த நகத்தால் -என்னுதல் –

பிளந்தான் உறை-
வருத்தம் இன்றியே கிழித்துப் போகட்டவன்
நித்ய வாஸம் செய்கிற –

மாகவைகுந்தம் காண்பதற்கு –
அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று
ஆசைப் படுகிறது
மா கம் -பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –

என் மனம் ஏகம் எண்ணும் –
என்னுடைய மனம் ஆனது
எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே
எண்ணா நின்றது –

இராப்பகல் இன்றியே –
இரவில் ஒரு காரியமும்
பகலில் ஒரு காரியமுமே அன்றோ உலகத்தார்க்கு இருப்பது
இவர்க்கு
எல்லா காலங்களிலும்
இதுவே ஆயிற்று –
ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே
புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17
நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய
மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று
பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று
இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி

நித்ய வாசம் செய்யும் பரம பதம் சென்று காண ஆசைப் பட்டது
ஏக்கம் என்னும் இராப்பகல்
நரசிங்கன் அங்கே
பொருந்தி செர்ப்பாலும் கண்ட சக்கரை கல்கண்டு
நன்றாக பொருந்தி
நரசிம்கன் வடிவு இவர் நெஞ்சில் சேர்ந்த படி எண்ணுதல்
மறக்க ஒண்ணாத படி
அவன் ஹிருதயத்தில்
ஹிரண்யன் கூட மறக்க முடியாமல்
ராகவன் பாணம்-மறக்க முடியாத ராவணன்
ஓர் ஆகம் -ஹிரண்யன் முரட்டு உடம்பு
வளைந்த உகிர்
மாக வைகுந்தம்
புரம் ஆகாசம் மாகம் மகா கம் பெரிய ஆகாசம் வைகுந்தம்
உச்சி வீடு விடாதே ஹிருதயம் என்ன
மழை உச்சி பொழுது நிற்கும் விடும்
இங்கு அப்படி கூட இடை விடாமல் மநோ ராதியா நின்றது
நாட்டார் இரவு பகல் வெவேற கார்யம்
பிராட்டி திரு அயொத்யை நினைத்தால் போ

—————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 28, 2014

தம்முடைய உபதேசம் பலித்து
இவ்விஷயத்தில் திரு உள்ளம் உருக் குலையா நின்றது –
என்று இனியர் ஆகிறார்

———————————————————————————————————————————————

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே

———————————————————————————————————————————-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் –
அணியார் மலர் மங்கை தோள் -அடைவதும்-
மிகவும் அழகியதான பெரிய பிராட்டியார் தோளோடு கலப்பதும் –
அடைவதும் தோள் -என்றதனால்
அவன் தான் உலகமே உருவமாய் இருக்கும் வடிவினை கொண்டு
இழிந்தாலும் தோளுக்கு அவ்வருகு போக மாட்டான் என்பதனைத் தெரிவித்தபடி –
அன்றிக்கே –
அணி ஆர் -என்பதனை மலர் மங்கைக்கு அடையாக்கி
மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2-என்கிறபடியே
திரு மார்புக்கு எல்லாம் தானே ஆபரணமாய் போரும்படி இருப்பாளாய்
இனிமையாலே குறைவற்று இருக்கிறவள் தோளோடு ஆயிற்று அணைவது என்று பொருள் கூறலுமாம் –

மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே –
அசுரர்க்கு வெம்போர்களே -மிடைவதும்-
இதனால் அவள் தோளை அணைவதற்கு இடும் பச்சையை
தெரிவித்த படி –
தம் த்ருஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீனாம் ஸூகா வஹம்
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பார்த்தாராம் பரிஷ்ச்வஜே-ஆரண்யம் -30-39-
பெருமாளை நன்றாக தழுவிக் கொண்டாள் சீதா பிராட்டி போலே

அடியார்கள் உடைய பகைவர்களுக்கு வெம்போர்களே நெருங்கச் செய்தும்
மிடைதல் -நெருங்குதல் -எண்ணுதல்
அன்றிக்கே
அவர்களை முடிக்கும் விரகினையே -எண்ணா நிற்கும் -என்னுதல்

கடைவதும் கடலுள் அமுதம் –
பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்கும் அமுதம் கொடுக்க கடைவதும் -என்னுதல்
பெரிய பிராட்டியாரை பெறுதல் நிமித்தம் கடையும்படியைச் சொல்லுகிறது -என்னுதல்
அழகோடு கலத்தலைச் சொல்லிற்று –
அதற்க்கு இடும் பச்சையை சொல்லிற்று –
அவளைப் பெருகைக்கு முயற்சி செய்த படி சொல்லிற்று –
இவர் திரு உள்ளம் உடைகுலைப் படுகைக்கு காரணங்கள் இவை –

என் மனம் உடைவதும் அவற்கே யொருங்காகவே –
என் மனம் ஒரு மடைப்பட
உடைகுலைப் படா நிற்பதும்
இந்தவிதமான செயல்களை உடையவனுக்கு –
அவன் பனிக் கடலை கடைய
இவர் மனக்கடல் உடையப் புக்கது
கடைவதும் கடல் –என் மனம் உடைவதும் –
விரகராய் இருப்பார் -கோழை களாய் இருப்பார் இடத்தில்
பொருளை வாங்க நினைத்தால்
முந்துற மிடுக்கராய் இருப்பாரை நெருங்கி வாங்கவே
இவர்கள் தாங்களே கொடு சென்று கொடுப்பார்கள் அன்றோ –
அப்படியே
அவனும் மிக பெரியதான கடலை
உலக்கை வீடு நகம் இட்டு நெருக்கி
அதன் நல் உயிரை வாங்க
இவருடைய திரு உள்ளம் உடையத் தொடங்கிற்று –

உபதேசம் பலித்து
திரு உள்ளம் சிதிலம் ஆகா நிற்க
ப்ரீதி அடைகிறார்
மலர் மங்கை தோள் அடைந்து -சம்ச்லேஷித்து
விஸ்வரூபம் எடுத்தாலும் இவள் தோளுக்கு ஈடு இல்லை
மார்பத்து மாலை
அணியார் மலர் மங்கை திரு மாலை நாய்ச்சியார்
தானே ஆபரணம் -அணியார்
பொக்யதையால் குறை அற்று
அசுரர்கள் -தோளை அணைக்க இடும் பச்சை
பர்த்தாரம் பரிஷச்
ஆஸ்ரித விரோதிகள் முடிக்கும் விரகை சிந்தியா நிற்கும் -மிடைவது
அமுதம் கடைந்து -கடலும் அமுதம் -பிரயொஜனாந்தர
பிராட்டி அடைய செய்த கார்யம்
மூன்றும் பிராட்டி சம்பந்த
சம்ச்லெஷம் -இவன் இடும் பச்சை -இவன் செய்த எத்தனம் மூன்றும் –
என் மனம் அவர்க்கே உடைவது
பிராட்டி இடம் வியாமோகம் கண்டு மனம் உடைய
பனிக் கடல் கடைய
இவர் மனம் கடல் உடைய
பலமான உள்ளவரை அடிக்க -தானே கோழைகள் த்ரவ்யம் கொடுப்பார்களே –
மகத்த தத்வம் கடலை கடைய -உலக்கை விடு நகம் இட்டு மத்து போல –
மனம்தானே உடைய தொடங்கிற்று -இது கண்டதும் –

————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 28, 2014

மனமே அவனை விடாதே காண் -என்றார் மேல்
அவ்வார்த்தையை ஒலக்க வார்த்தையாக
நினைத்திராதே காண்
என்கிறார் இப்பாசுரத்தில்

———————————————————————————————————————————

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே

————————————————————————————————————————————–

மனமே யுன்னை-
மோஷத்துக்கு காரணமாய் முற்பட நிற்கிற உன்னை அன்றோ –
பிற்பாடரைச் சொல்லுமாறு போலே இருக்க
நான் சொல்லுகிறது –
பகவான் இடத்தில் பக்தி உனக்கு இயல்பாக இருக்க
என் செல்லாமையாலே சொல்லுகிறேன் அத்தனை அன்றோ -என்றது –
உன்னை இரக்க வேண்டும் என்று இரக்கிறேன் அல்லேன் –
என் ஆசை மிகுதியினால் இரக்கிறேன் அத்தனை -என்றபடி –
முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -பெரிய திருவந்தாதி -1-என்று
நானும் காற்கட்ட வேண்டும்படி அனுபவத்திலே முற்பட்டு நிற்கிற உன்னை –

வல்வினையேன்-
பகவானை அடைவதை முறையாலே அடைவோம் என்று
இராதபடி பாவத்தைச் செய்தேன் –
உன்னை இரக்க வேண்டி இரக்கிறேன் அல்லேன் –
என் ஆசை மிகுதியினால் இரக்கிறேன் இத்தனை –

இரந்து கனமே சொல்லினேன் –
உன்னை கால் பிடித்து உறுதியாகச் சொன்னேன் –
இரந்து சொல்லுகைக்கு -மணக்கால் நம்பியோடு ஒப்பார் காணும் –
கனம் -பொன் -சீரிய பொருளைச் சொன்னேன் -என்றபடி –
உனக்கு மிக மேலான பொருளைச் சொன்னேன் என்க –

இது சோரேல் கண்டாய் –
இனி நானே -பகவான் இடத்தில் பக்தி கூடாது -இதனைத் தவிர வேண்டும் –
என்று சொன்னாலும் நீ நெகிழ விடாதே காண்
சாயல் கரியானை -பெரிய திருவந்தாதி -14-

எதனை தான் நீர் இப்படி சோரேல் என்று சொல்லுகிறது -என்ன
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் –
எல்லை இல்லாத இனியனாவனை பற்றுதலை சோரேல் என்கிறேன் -என்கிறார் –
புனத்தில் மேவி இருப்பதான அழகை உடைய திருத் துழாய் மாலையை
உடையவன் ஆகையாலே ஒப்பு இன்றிக்கே இருக்கிறவனை
அத் தோள் மாலையை உடையனாகை அன்றோ அறப் பெரியன் ஆகையாவது
ஒரு திரு முளைத் திரு நாளிலே -ப்ரஹ்மோஸ்தவம் – இப்பாட்டை அருளிச் செய்தது
முன்னாள் -கையார் சக்கரத்துக்கு -ஆழ்வார் திருநாள் –புறப்பட்டு அருளினபடி திரு உள்ளத்தில் கிடக்க
புனம் மேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனம் ஏதும் இல்லான் ஆகையாவது
நேற்றுப் புறப்பட்டு அருளின படி அன்றோ -என்று அருளிச் செய்தார் –
அடைவது சொல்லினேன் -இது சோரேல் கண்டாய் -என்று கூட்டி வினை முடிக்க –
அன்றிக்கே –
எதனை நீர் சொல்லுகிறது -என்ன
இனம் ஏதும் இலானை அடைவது -என்று முற்றாக முடிக்கவுமாம் –
இனமேதும் இலானை அடைவதுமே-

நெஞ்சே அவனை விடாதே கிடாய்
ஒலக்க வார்த்தை -சபை நடுவில்
ஏகாந்தமான வார்த்தை உண்மையான வார்த்தை என்கிறார்
வல்வினையேன் உன்னை இரந்து கனமே உறுதியாக சொன்னேன்
தோட்டம் புனம்
அலங்கல் மாலை மேவிய
இனம் ஏதும் இலான் ஒப்பற்றவன்
மோஷ ஹேதுவாக உன்னை
முன்புற்ற நெஞ்சே உனக்கு நான் சொல்ல வேண்டி உள்ளதே
ஸ்வாபாவிகமாக பகவத் பிராவண்யம் உனக்கு இருக்க
எனது செல்லாமையால் சொன்னேன்
தரித்து இருக்க சொன்னேன்
எனக்கும் கால் கட்ட வேண்டும்படி –
கிராம பிராப்தி பொறுக்காத வல்வினையேன்
ஆக்க பொறுத்தவன் ஆற்ற முடியாமல் துடிக்க
சாபலாதிசயத்தால் இரக்கிறேன் அத்தனை
கனம் திடமே சொன்னேன்
இரந்து -மணக்கால் நம்பி போலே
ஆச்சார்யன் தானே சென்று அருளி -சிஷ்யனை கெஞ்சி
மனசை ஆழ்வார் கெஞ்ச இங்கு மாறி உள்ளது
திரு உள்ளம் -ஆளவந்தார் போலே
சோரேல் கண்டாய்
நானே விட பிராட்டி சீதை குறைக்கும் போலே சொன்னாலும் கேட்க்காதே கொள்ள வேண்டும்
கனம் -பொன் -பரமார்த்தம் பொன் போலே வார்த்தை சொன்னேன்
இது சோரேல் –
கரியானை -தீ வினை -பெரிய திரு வந்தாதி பாசுரம் -பெயார் முலை கொடுக்க
ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்-பாம்பார் வாய் கை விட -வேண்டும்
விடாதே சொன்னது –
நிரதிசய போக்கியம் ஆனவன்
ஒப்பு இல்லாமல் திருத் துழாய் மாலை உடைய சர்வாதிகன்
நேற்று புறப்பட்டு -அருளிய
தோளும் தோள் மாலையும் -அழகை கண்ட
ஏகாந்த சேவை அழகு போலே –
சாத்து முறை பக்தி உலா எம்பெருமானார் திரு மேனி அழகு
திரு முளை திரு விழா -இப்பாட்டை அருளி செய்து
கையார் சக்கரத்து அன்று –
இதுக்கு ஒரு ஐதிகம்
சேனை முதலியார் புறப்பாடு
ஒப்பு இல்லா அழகுடன் எழுந்து அருளி -நஞ்சீயர் வார்த்தை காட்டி –
அடைவதை பற்றி சொன்னேன் -இனம் ஏதும் இலானை -சோரேல் கண்டாய் –

——————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 28, 2014

நித்ய சூரிகளுக்கு இனியனாய் வைத்து
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
நம்மையும் அவர்கள் நடுவே வைப்பானாய் இருக்கிறவனை
விடாதே காண் -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

————————————————————————————————————————————-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே

————————————————————————————————————————————-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று –
நங்கள் போக மகிழ்ச்சிக்கு-மருந்தே -என்று –
உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்தை
மேலும் மேலும் வளர்க்கின்றவனே என்று –

இப்படிச் சொல்லுகிறவர்கள் தாம் யார் என்னில் –
பெரும் தேவர் –
சம்சாரத்தின் சம்பந்தம் சிறிதும் இல்லாதாரான
நித்ய சூரிகள் –

குழாங்கள்-
அவர்கள்
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே
திரள் திரளாக ஆயிற்று இழிவது –

பிதற்றும் –
ஜன்னி ஜுரம் பிடித்தவர்களைப் போன்று
பலவாறாக கூப்பிடா நிற்ப்பார்கள் –
பிரான் –
அவர்களுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் உபகாரகன் –

கருந்தேவன் –
காள மேகம் போன்று கரிய திவ்யமான வடிவை உடையவன் –

எம்மான் –
அவ்வடிவினைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
நித்ய சூரிகளுக்கு படிவிடும் வடிவினைக் கண்டீர்
எனக்கு உபகரித்து -என்றபடி

கண்ணன் –
தன் நிலை குலையாமல் நின்று உபகரிக்கை
அன்றிக்கே
அவதரித்து வந்து உபகரிக்குமவன் –

விண்ணுலகம் தருந்தேவனை –
பரம பதத்தை தருவதாக இருக்கிற
சர்வேஸ்வரனை –

சோரேல் கண்டாய் மனமே –
அவனை உடம்பு வெளுக்க பண்ணாதே காண் -நெஞ்சே
இவன் விடுகையாவது
அவனுக்கு இழவு போலே காணும்
அவன் செய்த கிருஷி பலித்தது இல்லையாமே
இல்லையாகில்
உலகிற்கு வேறுபட்ட அவனுடைய சிறப்பினைநினையாதே
சுலபன் என்று காற்கடை கொள்ளாதே காண் –

திரு உள்ளத்தை குறித்து -நித்ய சூரிகளுக்கு இனியன்
அவதரித்து நம்மையும் அவர்கள் ஒக்க ஆக்க
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு -நித்ய சூரிகள் போக்கின்
கண்ணனாக வந்து
மோஷம் கொடுக்க அவதரித்து –
உன்னுடைய அனுபவத்தால் –
மருந்தே -ரகசியம் ஒரு வித வியாக்யானம் -இங்கு ஒரு வித வியாக்யானம்
நாங்கள் -பெரும் தேவர் குழாம் பிதற்றும்
மகிழ்ச்சியை உண்டாக்கும் மருந்து
ரகசியம் -மகிச்சியை போக்கும் மருந்து
இரண்டையும் சமன்வயப் படுத்தி திவ்யார்த்த தீபிகை
பசி எடுக்க வைக்கவும் -குறைக்கவும் மருந்து உண்டே –
இரண்டும் வெவேற மருந்து லோகத்தில்
இங்கே பகவான் -ஆனந்தம் அடக்கவும் உண்டாக்கவும்
உண்டாக்கும் ஆனந்தம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே பார்த்தோம்
கைங்கர்யம் -அசேதன வஸ்து போலே செய்து -அவன் ஆனந்தம் கண்டு மகிழ சைதன்யம் நமக்கு உண்டே –
பிரதி கிரியை பண்ணாமல் இருக்க முடியாதே சைதன்யம் இருந்தால் –
அவன் ஆனந்தத்துக்கு தான் சைதன்யம்
சக்கரை பொங்கல் -தளிகை –மேல் சாமான் வாங்கி போட்டு -விசேஷ தளிகை –
புனுகு சேர்த்து சந்தனம்-வாசனை மிக்கு –
அவன் ஆனந்தம் அதிகம் ஆக்க குழந்தை பொம்மை கொஞ்சும் வரும் ஆனந்தம் வாசி போலே –
நம் ஆனந்தம் தடுக்கும் சக்தி -இல்லை
நீயே
மற்றை நம் காமங்கள் மாற்று -நீ மாற்றி அருள வேண்டும் அடக்கும் -ரகஸ்ய பிரஸ்தானம்
இங்கே திவ்ய பிரபந்தம் -வியாக்யானம்
கோரக்பூர் பண்டிதர் சம்பளம் ப்ரோப் தப்பு ஒன்றுக்கும் விலை அதிகம் proof பார்க்க
தப்பே கிடைக்க வில்லை அதிகமாக பார்ப்பார்கள்
சம்பாவனை -அவர் மகிழ்ந்து பின் –
தப்பு மட்டும் கண்ணில் விழுமே சுவாமிக்கு –
முதல் ஆனந்தம் இல்லை -பதில் ஆனந்தம்
படியாய் கிடந்தது அசேதனம் போலே கைங்கர்யம்
முறுவல் கண்டு பவள வாய் காண்பேனே –
கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு
உன்னுடைய அனுபவத்தால் எங்கள் ஆனந்தம் வர்த்தகன் ஆனவனே -இங்கே அருளி
பெரும் தேவர் அச்ப்ருஷ்ட சம்சார கந்தர்
கிண்னகம் இழிவார் போலே திரள் திரளாக போக
பிதற்று ஜுர சந்நித்தார் போலே அகரமாக கூப்பிடா நிற்கும்
பிரான் -அனுபவிக்க கொடுத்த உபகாரகன்
கரும் தேவன் காள மேக சியாமளன்
எம்மான் எனக்கு காட்டி
கண்ணன் அவதரித்து உபகர்க்கும்
விண்ணுலகம் தருவான்
சோரேல் அவன் உடம்பு வெளுக்க பண்ணாதே
இவன் விடுகை அவனுக்கு இலவு
வைகுந்த -மணி வண்ணா மாசுசா சொல்லி அந்தாமத்து -ஆரா அமுதாம் அல்லாவி உள் கலந்த
துக்கம் மிக்கு அவனுக்கு போக
நீச புத்தி -இனிமேல் பண்ணாமல் சிக்கென பிடித்தேன் என்றார்
அவனை உடம்பு வெளுக்க பண்ணாமல்
கிருஷி பலித்தது இல்லையானால் துக்கம் அவனுக்கு தானே
அவதார முகத்தாலே பண்ணும் கிருஷி பலம்
சுலபன் -தானே -கால் கடை கொள்ளாதே
வை லஷ்ண்யம் புத்தி பண்ணாதே –
விட பிரசக்தி இரண்டும் இல்லையே
மேன்மை -நித்ய சூரிகள் பிதற்றும்
கண்ணன் -சௌலப்யம்
இரண்டும் கூடாதே –
சோரேல் கண்டாய் –

——————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

January 28, 2014

வேதங்களும்
வேதார்த்தங்களை அறிந்த முனிவர்களும்
அறிந்த அளவு அன்றிக்கே
நான் அவனை முழுதும் அறியும் படி
எனக்குத் திருவருள் புரிந்தான் –
என்று இனியர் ஆகிறார்-

———————————————————————————————————————————–

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே

————————————————————————————————————————————-

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் –
அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற
வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் –
அன்றிக்கே
அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதி இட்டு தரும்
ப்ரஹ்ம சூத்ரம் இதிகாசம் புராணங்கள் -முதலானவைகள் -என்னுதல் –

அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் –
அரும் பொருள் ஆதல் -அறிந்தன கொள்க-
அறிதற்கு அரியன்-என்னும் இவ்வளவே அறிந்தனவாகக் கொள்ள அமையும் –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி
தைத்ரியம் -என்றும்
யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி
வேத வாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆனந்த குணத்தின் நின்றும்மீண்டனவோ
அறியப் படாதது என்று இருப்பவன் எவனோ அவனுக்கு அறியப் பட்டது
அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப்படாதது
என்னும் இவ்வளவே அறிந்தது –

அறிந்தனர் எல்லாம் –
எல்லாம் அறிந்தனர் –
மற்றைய வற்றை அறிந்தாராய் இருக்கின்ற
பராசரர் வியாசர் வால்மீகி முதலான இருடிகளும் –

அரியை வணங்கி –
எல்லா துக்கங்களையும் போக்கு கின்றவனை அடைந்து –

அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
நோய்கள் அறுக்கும் மருந்து அறிந்தனர்
சம்சாரா சர்ப்பே சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்
க்ருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருதவா முக்தோபவேத் நர –
சம்சாரம் ஆகிற பாம்பினால் கடிக்கப் பட்டவர்களாய்
செயல் அற்று இருக்கும் மக்கள்
கிருஷ்ணன் என்ற மந்த்ரத்தை கேட்ட உடன்
விடுபட்டவர்கள் -ஆகிறார்கள் -என்கிறபடியே
பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள்
அவனுடைய இனிமையில் இழிந்திலர் கள்
அன்றிக்கே
வேறு ஒன்றையும் விரும்பாத அவனுடைய உபாய பாவத்தில் இழிந்திலர் கள்

வேதங்களும்
வேத வித்துக்களும் போலே அன்றிக்கே
தன்னை எனக்கு பூரணமாக அறியும் படி எனக்கு அருள் பண்ணினான்

அறிய முடியாதவன் என்று அறிந்தன வேதங்கள் இதிகாசம்
பிறவி நீக்கும் மருந்து என்று ரிஷிகள் அறிய
பூரணமாக உள்ளபடி -சீல குணத்தால் தானே தன்னை காட்டியதால் -அறிந்தேன்
அபௌருஷேயம் வேதம் -வேத வித்துக்கள் -அறியாமல்
நூல்களும் -இதிகாச புராணங்கள்
அறிந்த வேதம் -அறிய முடியாதவற்றை அறிந்தன —
ப்ரஹ்ம சூத்திரம் –இதிகாசம் புராணம் -இவற்றைக் காட்டி அருள –
சங்கை தீர்க்க சூத்தர காரர் மீமாம்சை –
16 அத்யாயம் ஜைமினி போல்வார் கர்ம மீமாம்சை தர்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா ப்ரஹ்ம மீமாம்சை -விளக்க -விசாரம் தீர்க்க –
அரும் பொருள் ஆதல் அறிந்தன -அறிவதற்கு அரியவன் என்றே அறிந்து கொண்டன என்று கொள்க
கொள்க -கொள்ளுங்கோள்-
துரஞ்ஞேயம் என்றே அறிந்தன -என்று கொள்க
எதோ வாசோ நிவர்த்தந்தே ஆனந்த குணம்
யஸ்ய மதம் தஸ்ய மதம் அமதம் -அறியப் பட முடியாதே
அவிஞ்ஞானம் –
அறிந்தனர் -என்று சொல்லி கொள்ளும் ரிஷிகள் -பராசாரர் வால்மீகி வியாசர் போன்ற மக ரிஷிகள்
ஹரியை வணங்கி அறிந்தனர் -என்னவாக
சம்சார துரித பேஷ்ஷம் -சம்சாரம் நோயை தீர்க்க
சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட ஏக பேஷ்ஷம் -என்றே அறிந்து
மருந்து -தான்
போக்யதையில் இலிய வில்லை
நிரபேஷ உபாயம் என்று அறிந்திலர்
கீழ் பாட்டில் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே –
நான் தான் அறிந்தேன் –
அவன் காட்டக் கண்டு அறிந்தன –
அனுபவிக்க அமுதிலும் ஆற்ற இனியன் என்று அறிந்து கொண்டேன் –

————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-