திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நித்ய சூரிகளுக்கு இனியனாய் வைத்து
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
நம்மையும் அவர்கள் நடுவே வைப்பானாய் இருக்கிறவனை
விடாதே காண் -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

————————————————————————————————————————————-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே

————————————————————————————————————————————-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று –
நங்கள் போக மகிழ்ச்சிக்கு-மருந்தே -என்று –
உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்தை
மேலும் மேலும் வளர்க்கின்றவனே என்று –

இப்படிச் சொல்லுகிறவர்கள் தாம் யார் என்னில் –
பெரும் தேவர் –
சம்சாரத்தின் சம்பந்தம் சிறிதும் இல்லாதாரான
நித்ய சூரிகள் –

குழாங்கள்-
அவர்கள்
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே
திரள் திரளாக ஆயிற்று இழிவது –

பிதற்றும் –
ஜன்னி ஜுரம் பிடித்தவர்களைப் போன்று
பலவாறாக கூப்பிடா நிற்ப்பார்கள் –
பிரான் –
அவர்களுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் உபகாரகன் –

கருந்தேவன் –
காள மேகம் போன்று கரிய திவ்யமான வடிவை உடையவன் –

எம்மான் –
அவ்வடிவினைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
நித்ய சூரிகளுக்கு படிவிடும் வடிவினைக் கண்டீர்
எனக்கு உபகரித்து -என்றபடி

கண்ணன் –
தன் நிலை குலையாமல் நின்று உபகரிக்கை
அன்றிக்கே
அவதரித்து வந்து உபகரிக்குமவன் –

விண்ணுலகம் தருந்தேவனை –
பரம பதத்தை தருவதாக இருக்கிற
சர்வேஸ்வரனை –

சோரேல் கண்டாய் மனமே –
அவனை உடம்பு வெளுக்க பண்ணாதே காண் -நெஞ்சே
இவன் விடுகையாவது
அவனுக்கு இழவு போலே காணும்
அவன் செய்த கிருஷி பலித்தது இல்லையாமே
இல்லையாகில்
உலகிற்கு வேறுபட்ட அவனுடைய சிறப்பினைநினையாதே
சுலபன் என்று காற்கடை கொள்ளாதே காண் –

திரு உள்ளத்தை குறித்து -நித்ய சூரிகளுக்கு இனியன்
அவதரித்து நம்மையும் அவர்கள் ஒக்க ஆக்க
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு -நித்ய சூரிகள் போக்கின்
கண்ணனாக வந்து
மோஷம் கொடுக்க அவதரித்து –
உன்னுடைய அனுபவத்தால் –
மருந்தே -ரகசியம் ஒரு வித வியாக்யானம் -இங்கு ஒரு வித வியாக்யானம்
நாங்கள் -பெரும் தேவர் குழாம் பிதற்றும்
மகிழ்ச்சியை உண்டாக்கும் மருந்து
ரகசியம் -மகிச்சியை போக்கும் மருந்து
இரண்டையும் சமன்வயப் படுத்தி திவ்யார்த்த தீபிகை
பசி எடுக்க வைக்கவும் -குறைக்கவும் மருந்து உண்டே –
இரண்டும் வெவேற மருந்து லோகத்தில்
இங்கே பகவான் -ஆனந்தம் அடக்கவும் உண்டாக்கவும்
உண்டாக்கும் ஆனந்தம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே பார்த்தோம்
கைங்கர்யம் -அசேதன வஸ்து போலே செய்து -அவன் ஆனந்தம் கண்டு மகிழ சைதன்யம் நமக்கு உண்டே –
பிரதி கிரியை பண்ணாமல் இருக்க முடியாதே சைதன்யம் இருந்தால் –
அவன் ஆனந்தத்துக்கு தான் சைதன்யம்
சக்கரை பொங்கல் -தளிகை –மேல் சாமான் வாங்கி போட்டு -விசேஷ தளிகை –
புனுகு சேர்த்து சந்தனம்-வாசனை மிக்கு –
அவன் ஆனந்தம் அதிகம் ஆக்க குழந்தை பொம்மை கொஞ்சும் வரும் ஆனந்தம் வாசி போலே –
நம் ஆனந்தம் தடுக்கும் சக்தி -இல்லை
நீயே
மற்றை நம் காமங்கள் மாற்று -நீ மாற்றி அருள வேண்டும் அடக்கும் -ரகஸ்ய பிரஸ்தானம்
இங்கே திவ்ய பிரபந்தம் -வியாக்யானம்
கோரக்பூர் பண்டிதர் சம்பளம் ப்ரோப் தப்பு ஒன்றுக்கும் விலை அதிகம் proof பார்க்க
தப்பே கிடைக்க வில்லை அதிகமாக பார்ப்பார்கள்
சம்பாவனை -அவர் மகிழ்ந்து பின் –
தப்பு மட்டும் கண்ணில் விழுமே சுவாமிக்கு –
முதல் ஆனந்தம் இல்லை -பதில் ஆனந்தம்
படியாய் கிடந்தது அசேதனம் போலே கைங்கர்யம்
முறுவல் கண்டு பவள வாய் காண்பேனே –
கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு
உன்னுடைய அனுபவத்தால் எங்கள் ஆனந்தம் வர்த்தகன் ஆனவனே -இங்கே அருளி
பெரும் தேவர் அச்ப்ருஷ்ட சம்சார கந்தர்
கிண்னகம் இழிவார் போலே திரள் திரளாக போக
பிதற்று ஜுர சந்நித்தார் போலே அகரமாக கூப்பிடா நிற்கும்
பிரான் -அனுபவிக்க கொடுத்த உபகாரகன்
கரும் தேவன் காள மேக சியாமளன்
எம்மான் எனக்கு காட்டி
கண்ணன் அவதரித்து உபகர்க்கும்
விண்ணுலகம் தருவான்
சோரேல் அவன் உடம்பு வெளுக்க பண்ணாதே
இவன் விடுகை அவனுக்கு இலவு
வைகுந்த -மணி வண்ணா மாசுசா சொல்லி அந்தாமத்து -ஆரா அமுதாம் அல்லாவி உள் கலந்த
துக்கம் மிக்கு அவனுக்கு போக
நீச புத்தி -இனிமேல் பண்ணாமல் சிக்கென பிடித்தேன் என்றார்
அவனை உடம்பு வெளுக்க பண்ணாமல்
கிருஷி பலித்தது இல்லையானால் துக்கம் அவனுக்கு தானே
அவதார முகத்தாலே பண்ணும் கிருஷி பலம்
சுலபன் -தானே -கால் கடை கொள்ளாதே
வை லஷ்ண்யம் புத்தி பண்ணாதே –
விட பிரசக்தி இரண்டும் இல்லையே
மேன்மை -நித்ய சூரிகள் பிதற்றும்
கண்ணன் -சௌலப்யம்
இரண்டும் கூடாதே –
சோரேல் கண்டாய் –

——————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading