Archive for February, 2011

திரு நெடும் தாண்டகம்–2-பாருருவி நீர் எரி கால்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 22, 2011

பாருருவி நீர் எரி கால் விசும்புமாகிப்
பல் வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என நின்ற
இமையவர் தம் திரு வுருவே எண்ணும் போது
ஓர் உருவம் பொன் உருவம்  ஓன்று செந்தீ
ஓன்று மா கடல் வுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகில் வுருவம் எம் அடிகள்  உருவம் தானே–2

திரு மூர்த்தி சாம்யம் இல்லை என்கிறார்–
ஏர்-உயர்ந்த உரு–பொன் உருவம்-பிரமன் செந்தீ-சிவன் -கடல் உருவம்-விஷ்ணு–
கண்ட போது -பிரமாணங்கள் கொண்டு ஆராய்ந்த பொழுது —
சரீரத்தில் இருந்த உரு இவை சொல்லி–
ஐந்து பஞ்ச பூதங்களுமாய் நிற்கிறான்–
பல்வேறு சமயங்களுமாய் பரந்து வியாபித்து நிற்கிறான்–சகலமும் ப்ரஹ்மாத்மிகம் என்கிறார்–
அவற்றைப் படைத்தால் போல இவர்களையும் படைத்தான் என்கிறார்
ஆராய்ந்து பார்த்தால்-..பரம் சோதி ஒன்றாம்–அவன் எம் அடிகள்- நம் கண்ணன் -முகில் வண்ணன்-
ஜகத் காரணத்வம் சொல்லி -நிரூபிக்கிறார்–
தேக ஆத்மா விவேகம் சொல்லி பிராப்தி  பர்யந்தம் –
ஆறு விஷயங்கள்  -உபகரித்ததை  முன்பு சொல்லி
இதில்- திரு மூர்த்தி சாம்ய பிரமம் அறுத்து கொடுக்கிறாய் –

எண்ணும்  பொன் உருவாய் சொல்லி-ஸ்வரூப வைலஷண்யம் சொல்லி
அர்த்தம் மூலம் உயர்ந்தவனை -அர்த்ததகம் உள் உரை பொருள்–
சிம்கம் வெளியில் போகும் பொழுது நேராக பார்க்காமல் இடது வலது பார்த்து போகும் –சிம்க கதி–
உபகாரங்களை மறித்து பார்த்து -மற்ற உபகாரம் மறந்தாலும் இந்த சம்சயம் அறுத்து கொடுத்ததை மறக்கப் போகுமா –
உலகம் மயங்கிக் கிடக்கும் இதை தனியாக சொல்ல ஆசை கொண்டு அருளுகிறார் -ஆதிக்யத்தால் மறு படியும் சொல்கிறார் —
தேக ஆத்மா விவேகம் விஷயாந்தர பிராவண்யத்தில் இருந்து மீட்டதை விட கைவக்ல்ய ஆபத்தில்  மீட்டதை விட இது முக்கியம்–
இருவர் சேஷமாய் ஒருவர் சேஷயாய் — இருவர் காரியம் உத்பாதம் ஒருவர் காரணம் -இருவர் சரீரமாய் ஒருவன் சரீரி -இருப்பதை காட்டுகிறார் /

சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி சொல்லி-பஞ்ச பூதம்-வ்யக்தி ஸ்ருஷ்ட்டி அடுத்து –
பார் உருவி-ஆரிய சிதைவு – வுருவியை-பாருருவி- பார்=கடினமான உருவி =பிரத்வி//
விசேஷணம் பூமிக்கு மட்டும் -கடினம்– உருவில் பாட பேதம்-இடத்தில் –
அண்ட காரணமான பதார்த்தங்களில் என்று கொண்டு–அகங்காரம் மகான் பிரகிருதி உண்டே –பஞ்ச பூதங்களுக்கு முன்பே உண்டே–
அவற்றை விட ஸ்தூலம் இவை–அண்டத்துக்கு சாஷாத் நெருங்கிய காரணம் இவை-பக்கத்தில் நேர் காரணம்–
நித்ய சிருஷ்டிக்கு இவை தான் காரணம்-மூன்று வித காரணம் என்பதால் -இதை சொன்னார்–
பார் முதலா -ஆகாசம் தானே முதல்–அழிகிற க்ரமம் சொன்னார்–பிரத்வி தான் முதல்–ஆகி-ஆக்கி இல்லை–
ஜகத் காரண பூதன்–உண்டாக்கி -என்று காட்டும் -வேதாந்தி ஆகையால் ஆழ்வார்கள்–
பஹுஸ்யாம் -நானே ஆவேன் என்பதால்- அவன் உபாதான காரணம்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் ஆகிறான் என்றாரே–அதனால் ஆகி என்கிறார்–
சாஸ்திரம் ஆகாசாத் வாயு -வாயு-அக்னி- ஜலம்-பிர்த்வி- சொல்கிறதே -ஒவ் ஒன்றுக்கும் முன் தானே காரணம்–
ஈச்வரனே உத்பாதகம் என்னப் போமோ–கூடஸ்தர் –
ஈஷண கிரியை அசேதனத்துக்கு ஆகாது–சங்கல்ப சக்தி அவனுக்கு தானே–
உருவாக்க முடியாது ஆகாசம் உரு ஆகலாம் –தத் அவச்தாபண்ணன் -ஆகாசம் சரீரம் ஆக கொண்ட பரமன் சங்கல்பித்து ஆனான்–
வாயு சரீரத்துடன் பரமன் உரு ஆகிறான் –எதுவும் அவன் இடம் பிரியாது -சரீர ஆத்மா பாவம் அப்ருதக் சித்தம் —
ஈஷண கிரியை அனைத்தையும் விசிஷ்டாத்வைதம் ஒருங்கே விட்டு சொல்லும்–
அண்டம் சிருஷ்டித்த இவனை அண்டத்தில் ஒரு மூலையில் ஒரு ராஜ்யத்தில் உள்ளவர்களுக்கு சாம்யம் சொல்ல கூடாது —
சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி சொல்லி வ்யஷ்ட்டி  சிருஷ்டி–பல் வேறு சமயமும் ஆகி–
பக்த சேதனர் பூதங்களிலே-சமஷ்டி ரூபேண அன்வயித்து இருக்கும்  –
தேவாதி பேதம் இல்லாதது சமஷ்ட்டி/ பேதம் உள்ளவை வ்யக்ஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி–
பிரம தொடக்கம் பேதம் -பலவாய் வேறு பட்ட சமயத்தை உடைத்தாய் இருக்கும் –
அஸங்க்யேய -பல-சமஷ்ட்டி எண்ணிக்கைக்கு உட் பட்டது –24 தத்வம்–ஈரில வண்  புகழ் நாரணன்–
வேறு பட்டு இருக்கை – ஒன்றோடு ஓன்று தீண்டாமல் இருக்கும் -பிரிந்து – தேவர்-அன்யோன்யம் அத்யாந்தம் பின்னம்-
விரலை போல் வேறு விரல் இல்லை–சமயம்-விவஸ்தை–நிலைகள்-தேவதை -மனுஷ்யர் ஆராதகர் -அமிர்தம்- திர்யக் ஸ்தாவரம்
ஆராதன உபகரணம் பண்ணுபவை -இதை சமயமுமாய் என்றார் –
அல்லாதவை–புழு–பாகவதன் அபிமானத்தில் கிடந்தது உஜ்ஜீவனம் அடைய–
அணையை ஊற -புழு ஜன்மம் கேட்டார்களே தவ தாஸ்ய சுகம் அறிந்த பாகவதர் திரு மாளிகையில் புழுவாக பிறக்க ஆசை பட்டார்களே —
பரந்து நின்ற–அனு பிரவேசத்தால் வியாபித்து இருக்கிறான் –உள்ளே புகுந்து -ஸ்தூல சூஷ்ம ஆகாரம் –விசிஷ்ட்ட ப்ரஹ்மம் —
படைக்கப் பட்ட பொருள்களில் இவற்றுக்கும் பிரமன் சிவனுக்கும் வாசி இல்லை என்கிறார்–

ஏர் உருவில்-அழகிய உருவில்-வியாபித்து நிற்கிறான்–வியாபகன் இவன்- ஜகம் அடைய பரந்து விரிந்து நிற்கிறான்
கரந்து எங்கும் பரந்துளன் -உரு-ஜகம்–அழகு இதற்க்கு சொல்லலாமா –த்யாஜ்யம் தானே–
முமுஷுக்கு சம்சாரம் தான் பயச்தானம் உத்தேசமாயும் இருக்கும் —
கர்ம நிபந்தனமாக பார்த்தால் பயம்–அவனை சரீரம்  ஆக கொண்டவை என்று நினைக்கும் பொழுது உத்தேசமாக இருக்கும் —
கர்மம் பார்க்கும் பொழுது பயம் பிறந்து கிருபை பார்த்து பயம் விலகுமே —
இதில் ஏர் உரு என்றது அவனுக்கு சரீரம் என்பதால் அழகு என்கிறார்–இகழ்வில் இவ் அனைத்தும் என்கோ–உன் சரீரம் என்பதால் —
மூவருமே என்ன நின்றான்–அனைவருக்குள்ளும் நிற்கிறான்–வேதாந்திகள் மூவரை விசாரம் என்பதால்–
பகு நாயகம் ஜகத் -குருக வைத்து வைத்தார்கள்– ஆராதனாய்-முப்பத்து முக் கோடி -இன்றி மூவருமே —
545 சூதரங்கள்- 3 அத்வைத பர சூதரம் ஸ்ரீ பாஷ்யம் போல —
காரணம்து தேயக- காரணத்தை உபாசிக்க சொல்லி -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்காரம் கடவர்கள்-
மூவரைக் கொண்டு மற்றவரைத் தள்ளி இவர் ஆஸ்ரணீயர்கள் என்பார்கள்–
நிரூபித்தால் சாம்யம் இல்லை–
வெளி படையாக மேல் எழுந்தவாறு சமம் தோன்றினாலும் உள் புகுந்து பார்த்தால் சாம்யம் இல்லை தெரியும் —
பகவான் ஏககா ஒருவன்-ஜனார்த்தனன் ஒருவனே –பராசரர் விஷ்ணு புராணம்–பிரம விஷ்ணு சிவா ஆத்மிகாம் சப்தம் சரி படுத்த பட்டது –
மத்யே விரிஞ்ச -இணைவனாம் -இமையவர் தம் திரு உருவம்–தேவர்கள்-இவர்களுக்குள் என்ன தார தம்யம்-இதுவும் ப்ரம ஹேது —
தேவர்களுக்கு பரியாய  சப்தம் சுரர் -அநிமிஷா ஆகாரம் ஒத்து இருப்பதால் மட்டும்–கண் இமைக்காமல்-
வில்லை முறிக்கும் பொழுது கண் இமைக்காமல் பார்த்தார்களே —
தேவ சப்தம் அனைவருக்கும் சொல்வதாலும் சாம்ய ப்ரமம் ஏற்படும்–முழு முதல் கடவுள் -நிர்பாதுஹ தேவத்வம் -அவன் பிரசாதத்தால் பெற்றது —
தர்ம சனாதனம் த்வாரகா தீசன் மது சூதனன் சாஷாத்  தேவன்-மகா பாரதம்–பேட் துவாரகை- குசேலர் உடன் சேர்ந்த இடம்–

கால சக்கரத்தான் ஆமாறு அறியும் பிரான்–சாம்யம் இல்லை–தன் திரு உருவு வேறு என்னும் பொழுது —
அவர் அவர் வேறு படுத்தி எண்ண தொடங்கினால்-பிரித்து அனுசந்திக்கும் பொழுது –
தமக்கு நிஷேத்யர் ஆய் இருக்கும் இவர்கள் உருவை திரு உரு சொல்ல -ஸ்லாகித்து -காரணம்-
அவர்கள் சரீரம் ஈஸ்வரன் -ஜகமே சரீரம் தானே என்பதால் கொண்டாடுகிறார்

இருவர் சேஷமாய் ஒருவர் சேஷியாய் இருப்பது–
உணர்ந்து உணர்ந்து உணரிலும் ஸ்ரவண ஞானம் மனன ஞானம் யோக சாஷாத் காரம் இறை நிலை உணர்வு அரிது —
உயிர் காள்- உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து –அரி அயன் ஹரன் என்று இவரை-
பிரமாணங்கள் சொல்வதைக் கொண்டு–எம்பெருமானார் தரிசனம் நம் பெருமாள் நாட்டி வைத்தார்-
பழைய தரிசனம்–லிங்க புராணம் விஷ்ணு புராணம்-பிறந்த கதை–நம் பிள்ளை-
சூத பௌகார்நிகர்-இடம் கேட்கிறார் சிஷ்யர்–மைத்ர்யர் -எங்கு இருந்து எங்கு உண்டாகிறது விஷ்ணுவிடம் பிறந்து-
பொதுவாக கேட்டு பிறந்தது விஷ்ணு புராணம்–/லிங்கத்துக்கு பெருமை சொல்ல பிறந்தது விசேஷித்து கேட்டு பிறந்தது

அறிந்த மதங்களில் எது சிறந்தது -தர்மன் கேட்க பீஷ்மர் சொன்னான்/
அர்ஜுனன் கேட்க கண்ணன்/ மதுரகவி கேட்க நம் ஆழ்வார் சொன்னது–அரி அயன் அரன் என்னும் இவரை-
பாபம் அபகரிக்கும் -சமம் சொல்லும் பாவத்தையும் சேர்த்து போக்குவான்–
ஒன்ற நும் மனத்து வைத்து நான் முகன் -நன் எழில்  நாரணன் -சௌந்தர்யம் ஒன்றும் –
கண்டவாற்றால் தனதே உலகு என்று தோற்றும் படி தனதே உலகு —
அழகு ஒன்றே போதுமே–நாரணன் சப்தமே போதுமே அனைவரும் தன் உள் பிரகாரம் சரீரம் தோன்றுமே —
அரன் அதிகன் அயன் அதிகன் என்று பேசும் அறிவிலிகள் -கம்பர்-உலகு அளந்த அரி அதிகன் -விசேஷணம் வைத்தார் –
அளந்த அவன் திருவடி நீட்ட இவன் கழுவ அவன் தாங்க –ஒன்ற நும் மனத்தே வைத்து -ஆராய்ந்து -உள்ளி -நும் இருபசை அறுத்து —
சாஸ்திரம் சொன்னதை ஆராய்ந்து -நன்று என நலம் செய்யுங்கள்-பக்தி பண்ணுங்கோள்-ஆழ்வார்//

ஓர் உருவம்–இத்யாதி–ஸ்வாபம்-ஓர் உருவம் பொன் உருவம்–ஸ்ருஷ்ட்டிக்கு -சர்வ ஆபரணங்களுக்கு யோக்கியம் போல
சதிர் தச புவனம் சிருஷ்டிக்கு -பக்தன் இவன்/
ஓன்று செம் தீ அக்னி போல- அழியும் போட்டால் அது போல-தகிக்கும் -உபசம்கரிகைக்கு ஈடாகி இருக்கும் —
ஓன்று மா கடல் உருவம்–கண்டார்க்கு ஸ்ரம பரிகாரமாய் குளிர்ந்து –அனைவரையும் அடக்கி வைத்த கடல் போல/
தன் அபிமானத்தில் வைத்து ரஷிகிறான் –மூன்றும் சேர்ந்து ஜகத் காரணம் இருக்கும்–

ஒத்து நின்ற -சேர்ந்து -இருக்கிற ஸ்வாபம்–ப்ரமம் நிவ்ருத்தி -மூன்று உருவம் கண்ட பொழுது —
ஒன்றாம் சோதி–ஒன்றே ஆம்  ஜோதி–உத்பாதகமாயும்  -உருவாக்கும் -சரீரியாயும் சேஷியாயும்–இவன்/
மற்ற உத்பாத்யமாயும் சரீரமாயும் சேஷ பூதராயும் இருப்பார்கள் —
ஒன்றாம் ஜோதி சாஸ்திரம் -பிரளய காலத்தில் இவர்களும் சம்காரத்துக்கு விஷயம் ஆகும் –
அசித் உடன் -ராஜ்யச்த அஹம்ஸ் பரதன்-ராஜ்யமும் அடியேனும் உனக்கு சொத்து பரதன்-ச பிரம ச சிவா ச இந்திர —
பரமச்வராத் -ஷேத்ரக்ஜா சேஷத்வம் சொல்லும் –அவனே அவனும் அவனும் அவனும்–
சர்வ பூதாத்மா –தேவ ஏககா  நாராயணா –சத்தை இருக்கும் அனைத்தைக்கும் அந்தராத்மா -சர்வ-சப்தத்தில் இவையும் அடங்கும்–
அம்கண் ஞாலம்   உண்ட போது வெள்ளி வைப்பும் அகன்றதோ–

ஆம் சோதி –ஆகிய சோதி இல்லை அவன் காரணம் ஜோதி- நிர்வாக்யம் ஜாதிகளை-ஆத்மாவை உருவாக்கினான்–
ஆகிய சோதி இல்லை ஆம் சோதி–இவன்-சேதனரும் சுயம் பிரகாசம்  தானே —
தனக்கு தானே ஒளி விடும் பிரத்யகர்தம் –அதை விளக்குகிறார் ஆம் சோதி என்று –
நாராயண பரோ ஜோதி ஜோதிசாம் ஜோதி –தனித்து சேவை சாதிக்கிறான்–
ஏக த்ரவ்ய வாதம் இல்லை–அத்வீதியம் என்கிறார்–ஜோதிசுகளில்  மேம் பட்ட பரம ஜோதி–
பரன் திறம் அன்றி பல் உலகீர் தைவம்  மற்று இல்லை–காமரு மானை நோக்கியர்க்கே –
பலன் ஆரா அமுதம்- இவருக்கு தரிசனம்  இல்லை என்பதால் இந்த பஷம் இல்லை —
தத்வத்ரயம் அழகு அழகாகாமுன் இரு பின் உரு பொன் உரு சொன்னதால் இந்திரனுக்கும்  முதல்வன் அடுத்து சொல்வதாலும் –எம் அடிகள் முகில் உருவம்–

அந்த சாலு-கால மேக சியாமளன் -அங்கு கடல் உரு -ரஷணம் சொல்லி  இங்கு -முகில் உருவம் வடி அழகை சொன்னார்
ஜகத் காரணம் -ஸ்ரீய பதித்வம் காரணத்வம் எல்லாம் வேண்டாம் – -ஐயப் பாடு அறுத்து தோன்றும் அழகன் -தானே–
மணி உரு அங்கே சொன்னது -முந்தானையில் முடிந்து ஆளும் படி- பவ்யமாய்  இருக்கும் பிரகாசமாய் இருக்கும்
மதிப்பு உடன் இருக்கும் போக்கியம் இருக்கும் –
இங்கு அதே பகவான் முகில் உரு காட்டி கொடுத்தான் — இங்கு  மும் மூர்த்தி சாம்யம் நீக்கி இது தான் மகா உபகாரம் —
பேணிலும் வரம் தர மிடிகிலாத தேவர்கள் –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்-1–மின் உருவாய்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 22, 2011

மின் உருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய்  முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி  மூப்பு இல்லா
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது என்னும்
பொன்னுருவாய் மணி வுருவில் பூதம் ஐந்தாய்
புனல் வுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர் புரியும் திருவடி என் தலை மேலவே–1

தேக ஆத்மா அபிமான நிவ்ருத்தி தொடக்கமான –உபகார பரம்பரைகளை பேசுகிறார்–
திருவடிகளில் சம்பந்தம் ஈறாக –அருளி ப்ரீதிராகிறார் –க்ருதக்ஜை செய் நன்றி —
உயர்வற உயர் நலம் உடையவன் தொடங்கி-உடனே மயர்வற மதி நலம் அருளினவன் -சொல்லி —
மறுபடியும் அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கிறார்–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே–பெரியவன் உதவி புரிந்ததை சொல்லாமல் இருக்க முடியவில்லை-
அதனால் அதை அடுத்து சொல்கிறார்
மின் உரு அஸ்தரம் போல முன்னால் காண படுபவை—/அடுத்து பின் உரு—சித் ஜீவாத்மா / பொன் உரு–பரமாத்மா-தத்வ த்ரயமும்  – -/
வேதம் நான்கைக்   கொண்டு காட்டினான்–நிலை நில்லாமல் -அஸ்திரம்-மின்னலை விட–
முன் உரு-கண்ணால் பார்க்கிற படியால்–நின்ற படி நிற்காது–மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள்–
மின்னலை விட-போல இல்லை–ஸ்திரம் என்று பிரமிக்க வைத்து இருக்கும் அஸ்திரம் இவை–இதை தான் முதலில் காட்டினான்–
சரீர ஆசை விட–தாழ்ந்தது தெரிய வைத்து-பிரக்ருது பிராக்ருதங்களின் அஸ்திர தன்மை பிரகாசித்தான்–
சூழ்ந்து  அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ்–பிரகிருதி சேதனர்–சம்பந்தம் -இரண்டு காரணம்-கர்மத்தாலே பந்தம் –
நம் போல்வார்–கர்மம் தொலைக்க இருக்கிறோம் –பகவத் பிரசாதத்தால் பந்தம்–ஆழ்வார் போல்வார்–
திரு துழாய் அங்குளிக்கும் போலே பரிமளிக்கும் போல –இவரை வைத்து பிர பந்தம் அருளி நம் போல்வாரை திருத்த —
கர்மத்தாலே பந்தம் உண்டான போது -ஸ்வரூபம் சரிவர தெரியாமல் மறைத்து கொண்டு இருக்கும் –
தன் பக்கல் அஸ்திரம் அபோக்கியம் மறைத்து இருக்கும்–வேண்டியதை மறைத்து வேண்டாததை பிரகாசித்து இருக்கும்–
பகவத் பிரசாதத்தால் வந்த பொழுது -அஸ்திரம் அபோக்கியம்  பிரகாசித்து

சரீரம் த்யஜ்யம்-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்க வேண்டும்–
கண்ணா நீ உன்னை கண்ணாடியில் பார்த்தால் தான் தெரியும்  உன் அழகு என்னை படுத்தும் பாடு–புருஷார்த்த சாதனம் சரீரம் தானே —
இலை சாப்பிட்ட பின்பு தூர போடுவது போல–சரீரமும் அவனை பெரும் வரை தான்–
அபக்ருத ஸ்நானம் ஆன பின்பு ஹோம  குண்டங்கள் த்யாஜ்யம் போல–
சாமானாதிகரணம்–நீல வாய்  சிரித்து வயிறு பெருத்த  தண்ணீர் எடுக்க உபயோகமாய் இருக்கும் குடம் போல —
ஒரே குடம் -விசேஷணங்கள்–பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் -ஏக -ஒரே வேற்றுமையில் படிக்க பட்டவை–
அது போல வேதம் நான்காய் விளக்கு ஒளியாய்–பகவானை குறிக்கும்–இமே தேகம் -முன் உரு–பிரகிருதி சொல்லி –
அஹம் -சாஸ்திரம் கொடுத்ததை சொல்கிறார் நடுவில்– அதனால் தான் தத்வ த்ரயம் அறிந்தோம்–
இந்த்ரன் விலோசனன்-பிரதி பிம்பம் பார்த்து-பிரம தண்ணீர் கொப்பரை-பார்த்து தேகமே ஆத்மா –இந்த்ரியம் தான் ஆத்மா –
மூன்றாம்  தடவை கேட்க-மனசே–சொல்ல–ஆத்மா சொல்வதை மனசு கேட்க்கவில்லையே –
நினைப்பது வேற நடப்பது வேற-மறு படியும் கேட்டான்–பிராணனே ஆத்மா–அஸ்திரமே வாயு–சந்தேகம்–
புத்தி–எல்லா சமயமும் வேலை பண்ண வில்லையே–பகவானுக்கு தேகம் அறிந்தான்–யாதாஞானம் பிறக்க —
சாஸ்திர அபேஷையால் தானே–அதனால் வேதம் கொடுத்தான்-
அன்னமாய் அரு மறை பயந்தான் -சிங்காமை விரித்தான்- வேத பிரதான்– வேதம் நான்காய்–

சரீர ஆத்மா பாவமும் சாமானாதி கரணமும் புரிந்து கொள்ள வேண்டும்–
ஆத்மாவின் உண்மை நிலையை சொல்லும் வேதம்–த்யாஜ்யம் உபாயம் காட்ட தான் அசித்தும் பரமாத்வாவும்—
விட வேண்டியதை சொல்லி பற்ற வேண்டியதை சொல்ல தான் மற்ற இரண்டு தத்வங்களையும் சொன்னது —
அசித் ஞான சூன்யம்–ஜடம்-அவனுக்கு தெரிந்து கொள்ள  வேண்டியது இல்லை–
சர்வஞ்ஞன்–ஸ்வரூப அனுரூபமான -நிர்ணயம் பிரமாணம்–இயல்பு தன்மை அறிந்து —
விட வேண்டியதை சொல்லி பற்ற வேண்டியதை- சொல்ல – அவனுக்கு அடிமை என்பதால்–
புத்திரன் பசு வீடு களத்ரன் இவை விட்டு/—அவர் அவர் விதி படி அடைய நின்றனரே–சாஸ்திரம் வசப் பட்டவன் ஜீவாத்மா –
உபதேசம் நமக்கு தானே–வேதனம்-விளக்குதல்- ஸு அர்த்தம் பிரகாசம் பண்ணும்–அறிய ஆசை உள்ளவனுக்கு –
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய வித்தகன் -பிரமேய ஸ்வாபம் பிரமாணத்துக்கும் உண்டு–சாமானாதி கரண்யம் –
சொல்ல படுவதால் இல்லை–கொடுத்தவன் கொடுக்க பட்ட வஸ்து-உபகாரம் பண்ணியதால்–

ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தம் விளக்கும் பாசுரம்–தரிசனம் -அகில தமம்-வீறு கொண்டது -வேதம் வேதாந்தம் உரை கல் கொண்டு-
சாஸ்திர சம்பந்தம் உண்டு–தத்வ த்ரயம்–போக்தா போக்தம்   பிரேரிதா–முன் உரு பின் உரு பொன் உரு —
நிர்விசேஷ கூடச்த ப்ரஹ்மம்  அத்வைதம்-சஜாதீய  பேதம் விஜாதீய பேதம் சுகத பேதம்–மூன்றும் இல்லை–
த்ரி வித பேத ரகிதன் ப்ரஹ்மம் என்பர்–2-17 கீதை-நான் நீ இவர்கள் பிரித்து பல ஜீவாத்மா உண்டு அவாந்தர பேதம் உண்டு –
முதலிலே சொன்னாரே– உயர்வற உயர்நலம் -குணங்கள்  –
துயர் அறு சுடர் அடி-திரு மேனி உண்டு குணங்கள் உண்டு .விபூதி உண்டு -ஆழ்வாரும் தம் கருத்தை அருளினார்..-

அனந்தரம் சாஸ்திர ஞானம் கொடுத்ததை-விளக்கு ஒளியாய்-
ச்ரோதவ்ய -காதால் கேட்டு– முளைத்து-மந்தவ்யாக -ஆராய்ந்து நினைந்து பார்த்து –எழுந்த -ச்ரோதவ்ய –திங்கள் தானாய் ..
த்ருஷ்டவ்யாக -நிதியாசனம்-இடைவிடாமல்–விளக்கில் அஞ்ஞானம் விலக ஆரம்பிக்கும்/
மலை மேல் உள்ள சந்த்ரனால் கொஞ்சம் போய் எழுந்த -இன்னும் கொஞ்சம் திங்கள் தானாய்-
பரி பூர்ணம்-நான்கு நிலைகள்–கேட்பது முதல் நிலை–விளக்கு ஒளி போல–
ஆராய்ந்து படித்து பார்த்து கொஞ்சம் அதிகம் ஞானம் பெற்று சிந்தனையால்–அடுத்து அனவரதம் சிந்தனை–
அவன் உள்ளே வர வர இருட்டு போகும் மூன்றாவது நிலை —நிதித்யாசனம்-அப்புறம் தரிசனம்–
சாஸ்திர வாக்கியம் பரமாத்மாவை பற்றி–
இதில் ஆழ்வார் இந்த படி கட்டை ஜீவாத்மா அறிவதை சொல்கிறார்–
வேதத்தால் பிறந்த ஞானம் ஸ்ரவணம்–அஞ்ஞானம் போக்கி பகவத் விஷய ஞானம் பிறக்கும்

ஏற்றின விளக்கால் ஞானம் வராதே அதுவே அசித்–மறைகிற இருட்டை விலக்கி கொடுத்தது —
அது போல ஆத்மா பற்றிய ஞானம்–விளக்கு ஒளி யாய்- அவன் இருட்டை விலக்கினான்–தானே ஞானம் பிரகாசிக்கும் –
ஸ்வரூப -தீபம் இந்த்ரியங்கள் போல –அக்ஞானம் தமஸ் இருட்டு போல–ஸ்ரவண  ஞானம் -ஞான இந்த்ரியங்கள்–
சாஷுசா ஞானம் கண்ணால்  ஸ்பர்ச ஞானம் -ஐந்தும் உண்டு–வேதத்தை தீபம் போல கொடுத்தான்- —
ச்ரோதவ்யா சொலிற்று இத்தால்–மனன நிதித்யாசன தர்சன அடுத்த  மூன்று ஞான நிலைகள் –பிரகாசம் மனன திசை-முளைத்த திசை–மனனம்

கேட்பதற்கு அடுத்த நிலை–ஆராய்ந்து- –அடுத்து எழுந்து-ஆகாசத்தில் எழுந்த –
அநவரத பாவனை–நிதித்யாசன -அதி பிரகாசமான -நிலை–
ஸ்ரவணம் 10 படி கட்டு  தாண்டி மனனம் 1000 படி கட்டு தண்டு அநவரத பாவனை
அடுத்து திங்கள் தானாய்-தரிசனம்-சாஷாத் காரம் சொல்கிறது
6 அத்யாயம் கீதையில் சொன்னதை சுருக்கி ஒரே வார்த்தையில் ஒவ் ஒரு நிலை அருளினார்-திங்கள் தானாய்- என்றது —
நிஷ்க்ருஷ்ட்ட -உண்மையான சந்த்ரனாய்–களங்கம் இன்றி –திட்டு இன்றி–பூமியின் நிழல் தானே இது –நிஷ் களங்கம் அது —
அதனால் தான் திங்கள் தானாய் –ஆத்மா பேரில்- விசிஷ்ட  வேஷம் சரீரத்தில் இருப்பதால்–
சரீரம் தொலைத்த ஆத்மா =திங்கள் தானாய்–பிரபை தர்ம பூத ஞானம் -உபகார கெளரவம்-சொல்கிறார் அவன் காட்டிய நிலைகளை–
பண்டிதன் சம தர்சனன்–நிஷ்க்ருஷ்ட தன்மை தெரிந்தால் தானே ஏற்றம் புரியும்–
ஞானம் பிறக்க சந்தரன்-யதா சூர்யம் ததா ஞானம் சாஸ்திரம்–சொல்லுமே–
ஞாயிறு சொல்லி இருக்கலாமே –சுயம் பிரகாசத்வம்/ஆக்லாத ரூபம் தோற்றவும்–
சூர்யன் தபிக்க பண்ணும் சந்தரன் குளிர்ச்சி ஆனந்தம்- சரம பட்டு பெற்ற ஞானம் ரிஷிகள் இதை சொல்வார்கள்-
ஆழ்வார் பக்தி ரூபாபன்ன ஞானம் பெற பெற்றதால் ஸ்ரமம் படாமல் பெற்றதால் –
சாதகன் தம் ஸ்ரத்தை தோன்ற கிலிஷ்ட-அக்லிஷ்ட்ட- ஞானம் இவர்களுக்கு —
பின் உரு-ஜீவாத்மா -விசேஷணம் முன்பு சொல்லி -இங்கு சரீரம் பின் மறைந்து உள்ள –
பஞ்ச விம்ச 25 தத்வம்—அசித் தத்வங்கள் 24 வேறு பட்டு இது —

இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு—தேக இந்த்ரிய மனக பிராண -அநந்ய சாதனன் ஆத்மா —
வேறு சாதனம் தேவை இல்லை–சுயம் பிரகாசம் ஆத்மா -தானே ஞான ஸ்வரூபன்– நான் என்பது ஆத்மா – –
என் உடையது சப்தம் எல்லாம் அசித் இனி ஆத்மாவின் குணங்கள்–நித்ய- வியாபி-பிரதி ஷேத்திர பின்ன – –
நித்யம்–முழுவதும் வியாபித்து-ஒவ் ஒரு உடலில் வெவ் வேற ஆத்மா -சுத சுதி-ஆனந்த ஸ்வரூபம்–ஆனந்த மயன்–துக்கம் தட்டாமல்–
பரமாத்மாவுக்கு அடிமை தெரிந்து அவனை அனுபவிப்பதால்–தேகம் தோஷம் தட்டாது–பிரகிருதி பிராக்ருதங்களில் உண்டான-
பிணி =துக்கம்– மூப்பு பிறப்பு-ஷட் பாவ விகாரம்-இருக்கிறது பிறக்கிறது மாறுகிறது வளர்கிறது தேய்கிறது இறக்கிறது ஆறும்–
அஞானாதிகள்-இல்லை–இறப்பதற்கே எண்ணாது-தனியாக சொன்னது–துக்க அஞ்ஞான மலம் ஷட் பாவம்  கொண்ட தேகம் போல இல்லை —
சேற்றில்  விழுந்த மாணிக்கம் போல்–

பிரகிருதி உடன் சேர்ந்து இருப்பதால் -ஊமதன்காய் போல-இறக்கை-மரணம் எண்ணாமல்- ஸ்வரூபம்-கைவல்யம் எண்ணாமல்-
முன்பே ஷட் பாவம் சொன்னதால்  இங்கு -ஸ்வரூபம் மரணம்-ஆத்மாவுக்கு -பகவத் பிராப்தி ஏற்படாமல் —
அதை தான் பரமாத்மா எண்ணாது -இதை தவிர்த்தான்–ஆத்மா அனுபவம் மரணம் ஆகுமா–தேகம் போனால் மரணம்-ஆத்மா பிரிந்த உடன்–
அது போல ஜீவாத்மா விட்டு பரமாத்மா பிரிவது–ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்—நசியாதே இது -ஆத்மா – மரணம் சொல்லலாமோ–எனில்–
கீழ் உள்ளது மரணம் என்று கேட்டு கொள்ளலாம்-
ஒருத்தி -யசோதைக்கு மகன் சொல்லலாம் தேவகி மகனா  என்று கேட்கலாம் -போல-
ஸ்வரூப அனுரூபமான இன்பம் இல்லாமையாலே –அவனுக்கு அடிமை பரதந்த்ரன் என்கிற ஸ்வரூபத்துக்கு தகுந்த
இன்பம் அனுபவம் கிடைக்க வில்லை என்பதால்–பர ஹிருதயத்தால் மரணம்- நித்யர் முக்தர் இதை தான் மரணம் என்பார்
சம்சாரியாவது ஒரு நாள் வருவானே –நடை பிணம் சொல்வது போல – -அன் நாதனுக்கு இல்கல் என்பதால் –
அன்னாத-அஹம் அன்னாத- சொல்ல முடியாதலால்–
ஷர மரண மோட்ஷாய-கைவக்ல்யம் கொடுக்கிறேன் 7th  அத்யாயம் சொல்கிறான் கொடுக்க வல்லவன் கிடீர் இந்த படு குழியில் தள்ளாது போந்தான்-
எண்ணாது-தராது இல்லை–கொடுத்தல் கையால்- நினைக்கவே இல்லை– நினைவு பெரிதாகி அப்புறம் கொடுக்கலாமே –
எதை கொண்டு வாழ்கிறார் அவன் எண்ணம் கொண்டே உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் அவன் எண்ணமே முக்கியம் சங்கல்பம் –
பகவத் கைங்கர்ய ப்ரீதி கார்ய கைங்கர்யம் கொடுக்கிறான்–

கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன் –அரங்கனே-நிறைய நல்ல குணம் இருந்தாலும் அவலஷணம்-
கூனல்- ஜீவாத்மாவுக்கும் நிறைய குணங்கள் உண்டு–ஸ் வாதந்த்ர்யம்–துர் அபிமானம்-அகங்காரம் மம காரம்-கூன் -போக்கி —
அரங்கன் குனிய வைப்பான்–தலை குனிந்து விநயம்–ஏற்படுத்த–கைவல்யமும் தவிர்த்தான்

இவனும் முக்தன்–மோட்ஷம் விடுபடுதல் தானே முக்தி–சம்சாரத்தில் விடு பட்டவன் தானே கைவல்யம் பெற்றவனும்–
கதி த்ரய மூலச்தம் அவன் தான்– ஐஸ் வர்யாதி /கைவல்யார்த்தி/பரம பத வாசி -மூவருக்கும்–
அபிபிப்ராய பேதம் உண்டு-தேசிக இந்த லோகத்திலே –மீள வாய்ப்பு உண்டு-தொலைக்க வேண்டும் என்பதில் வாசி இல்லை /
முடிந்தே போவான் தென் ஆச்சர்ய சம்ப்ரதாயம்–
முமுஷுக்கு அறிய வேண்டிய ரகஸ்யங்கள் மூன்று –கைவல்யார்தியும் குறிக்கும் -மணவாள மா முனி -பகவத் லாபார்திக்கு  மட்டும் என்று விளக்கி காட்டினார்//–
எண்ணாது -என்பது அவன் எண்ணமே இவருக்கு ஜீவனம்–அசித் சொல்லி சித் சொல்லி பரமாத்மா சொல்கிறார்-
ஆள வந்தார் சித் சொல்லி அசித் சொல்லி ஈஸ்வரன் சொன்னார்–
உபதேசம் சொல்ல வர வில்லை இங்கு -உபகார வரிசைகளை சொல்லி வருகிறார் இங்கு–
அருந்ததி காட்ட பெரிசு காட்டி வருவது போல-இங்கும்
தத்வம் சொல்லிக் கொடுக்க வந்தவன் ஸ்தூலம் சொல்லி -ஐஸ்வர்யம் அனுபவித்து தாழ்வு சொல்லி-
அழகான ஸ்தூலம் காட்டி- நியமிக்கும் தன்னை-சூஷ்ம தமம் – காட்டி கொடுத்தான் —
எண்ணும் பொன் உருவாய்– ஆபத்துகளை நீக்கி-தன்னை வேற காட்டி கொடுத்தான்
தன் ஸ்வரூப ரூப குணம் காட்டி–திவ்ய ஆத்ம ஸ்வரூபம் பிரகாசித்தான்– நித்ய ஸ்ப்ரூஹணீயத்வம் –பொன் உரு —

உடல் தனித்து இருந்தால் சுகம் துக்கம் இல்லை-கருவி ஸ்தானம் தான் உடல்– அனுபவிக்கிறது ஆத்மா ஞானம் இருப்பதால்–
ஈஸ்வர ஸ்வரூபம் -தான் ஆன தன்மை– ரூபம் திரு மேனி குணங்கள் காட்டினான்–
எண்ணும் நினைக்க–நேதி நேதி என்று சொல்லி பார்க்கலாம்–பிரயத்ன படலாம் —
ஸ்வரூபத்துக்கு வரணம்  இல்லை–நினைத்து நினைத்து என்ன வைபவம் என்று விரும்ப படுவதாக இருக்கும்–
மனசில் பெருமை உயர்வு தோற்ற பொன் உரு–அது அது -இதம்-இவ்வளவு என்று சொல்ல முடியாது—
ஒவ்வொரு குணங்களும் அளவிட முடியாதவை- எல்லாம் ஆச்ரயித்து இருக்கும் ஸ்வரூபம்–
ஆனந்தம் அளக்க முற்பட-சாஸ்திரம்-மனுஷ்ய-யுவன்-ப்ரித்வி மண்டலம் முழுவதும் பொன்னால் நிரப்பி கொடுத்தாலும் –
அசன சீலன்–ஜரிக்க ஆஸ்ருத க்ருத்யத்வம்-ஆசீர் வசன பாத்திர பூதத்யம் உள்ளவன்–மூன்றும் கொண்டவன்-
நூறு மடங்கு தேவ இந்திர பிரகஸ்பதி பிரம -மீண்டது–இதை கீழ் வைத்து 100 பிரம வைத்தாலும் அவன் ஆனந்தம் அறிய முடியாதே —
இந்த ஒன்றே அபரிச்சின்னமாக இருக்க -அசங்க்யேய கல்யாண குணங்கள் உண்டே-
கை முதிக நியாயம் குச்சி வடை கதை–தண்டா பூப நியாயம்
பொன்- என்றது -விரும்ப படுவதாய்-உண்டு என்றால் உயிர் தரிக்கையும் இல்லை என்றால் தரிக்காமையும் —
சம்ச்லேஷ விச்லேஷங்கள் –இத்தை கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்து கொள்ளலாமே–
எழுவார் விடை கொள்வார் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்-ஞானி  தன் ஆத்மா மே  மதம் –அவனை பற்றினதும் எதுவும் கிட்டுமே –

அவனையும் பெறலாம்-இதை உடையவன் கையில் லோகம் எல்லாம் விழும்-
கிருஷ்ண த்ருஷ்ண தத்வம் ஆழ்வார் திருவடியில் இன்றும் நாம் தெற்கு திக்கு நோக்கி தொழு கிறோமே–
எண்ணும் பொன் உருவாய்- இங்கும் சாமானாதி கரணம் ..மணி உருவில் பூதம் ஐந்தாய்–உபாதான பூதம் –
மண் உருண்டை கொண்டு மண் பானை போல நம்  உடலும் ஐந்து பூதங்களால் பண்ணி–
இங்கோ அவன் ரூபம் தானே சொல்ல வந்தார்-உபாதான -காரண-அவன் திரு மேனி ஐந்து பூதங்களால் இல்லையே–
பஞ்ச உபநிஷத் பஞ்ச சக்தி மயம் பரமேஷ்ட்டி -போன்ற ஐந்தால்-அப்ராக்ருதம்–சுத்த சத்வ மயம்-
மணி உருவில்- திரு மேனியில்-மணியின் ஸ்வாபம் உடைத்தான வடிவில் தேஜோ மயமாய் இருக்கை–
மணி மாணிக்கமே/மாலே மணி வண்ணா –ஒளி விடுகை–பிரகாசம்–தேஜசாம் ராசி மூர்ததாம் –
ஒண் சுடர் கற்றை-ஆசாரம் தள்ளி சார கற்றை–சுட்டு உரைத்த நன் பொன் மேனி உன் திரு மேனி ஒளி ஒவ்வாது —
மாணிக்க செப்பிலே பொன் போலே–தனக்கு-ரூபத்துக்கு – ஆச்ரயமான ஸ்வரூபத்துக்கும்  –
ஸ்வரூப ஆச்ரயமான குணங்களையும் -சுத்த சத்வ மயம்–தத்வ சூன்யம்-காலம் இல்லை-ஞானத்தை வளர்க்கும்–
ஸ்வரூப குணங்களை விட போக்யமாய் இருக்கும் ரூபம் –எங்கு இருக்கு என்று அறிய முடியாதே ஸ்வரூபம்—
கண்ணை பார்க்கலாம் கிருபை பார்க்க முடியாதே–
மாஸூச அஞ்சேல் சொல்லும் கைகள்/ கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள்–
புன் சிரிப்பை காட்டி -அழகனூர் அரங்கன்–உபாதானமான -பஞ்ச உபநிஷத் பரமேஷ்ட்டி-/ஐந்திலும் இருக்கிறான்/ ஐந்து  பூதங்களிலும் இருக்கிறான்-

மணி உருவிலும்  இருக்கிறான்-பஞ்ச பூதங்களிலும் இருக்கிறான்–
பூ தரு புணர்ச்சி புனல் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி-தன்னை ரஷித்தவர்கனுக்கு தன்னைக் கொடுக்க –
ஆழ்வார் தன்னை ரஷித்துக் கொண்ட சேஷ்டிதங்களுக்கு  தங்களை கொடுப்பார்கள்-
பாரார்த்த்யம்-அவனுக்கே கொடுப்பார்கள்–எல்லாம் அடிமை யாக கொண்டவன்–
ஆளுகைக்கு–பக்தனும் கடை தேற்ற-சம்சாரம் வெட்டி விட சாமர்த்தியம் உடையவன்–தன்னையும் கொடுப்பான்-
அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் தருவான் -அதனால் இரண்டும் ஆளுகை அவன் இடம்–
பிரதான புருஷ ஈஸ்வரன்- அசித் ஜீவாத்மா இருவருக்கும் நியந்தா–இப்படி விலஷனமாய் இருகிறவன்–
புனல் உருவாய்-நீர்மை உடையவன்–துர் லபம் இல்லை -எளியவன்—கனிவார் வீட்டு இன்பம்–
வசிஷ்ட்ட சண்டாள விபாகம் அற ஒரு துறையிலே விநியோகம் கொள்ளலாம் படி -ஜலம் போல-இருக்கும் —
சமோகம் சர்வ பூதேஷு–பரம சுலபன்–
விரோதி போக்கும் சாமர்த்தியம் உள்ளவன் காட்ட அனல் உருவில்–சக்தன்–சர்வ சுலபன் என்று வயிறு பிடிக்க வேண்டாம் படி சக்தன்–
அக்னிக்கு அக்னி–ஆஸ்ரித சுலபன் போல வல்லவன்–கிட்ட முடியாதவன் பிரதி கூலர்களுக்கு —
அவனாக நெருங்க நினைத்தால்-நினையாத பொழுது-பரதனுக்கு கார்யம் நினையாத பொழுது -அந்தரங்கர்களும் கிட்ட முடியாதே —
தோஷமும் குணம் ஆகலாம் நன்மை தானே தீமை ஆனது இங்கு குகனுக்கு தீமையே நன்மை ஆனது —
பத்துடை அடியவர்க்கு எளியவன்- விலக்காமையே வேண்டும்-பிறர்க்கு அறிய வித்தகன்–

தத்வ த்ரயங்கள் காட்டிக் கொடுத்தான் -உபகாரன்–குண பிரவாகம் அவன்–
வயிறு பிடிப்பார் கொடியார் மாட -கொடி காட்டி கொடுக்குமே–பய நிவர்தனக்கு வயிறு பிடிப்பார்கள்–
அதிகிரமிக்க முடியாதவன் பிரதி கூலர்களுக்கு –அனவபயநீயன் –அப்ரேமேயன்-துராசதணன்–
அனல் உருவில் திகழும்–பரதன் இழந்தான்  போல- யாம் வந்த கார்யம் ஆராந்து அருள்-
எப் பொழுது கேட்க வேண்டும் என்பதை சிற்றம் சிறு காலையில் வைத்தாள்–
பரதன் போல அவன் உள்ளம் கனிந்த பின்பு சமயம் பார்த்து திரு உள்ளம் இசைந்து வரும் பொழுது –
ஆழ்வாருக்கும் முதல் நான்கு சரணாகதி பலிக்க வில்லை ஐந்தாம் தடவை தான் பலித்தது —
ஆழ்வாரைக் கிட்டியதும்—தளிர் புரையும்-சருகாய் உலர்ந்த திருவடிகள் ஆழ்வாரை பெற்றதும் தான் –
அவிகாராய -கர்மாதீனம் இல்லை காருண்யாதீனமாக- இச்சை அடியாக தான்–
விஜுரகன் பிரமோதகன்- ஹா   விபீஷணனை பட்டாபிஷேகம் பண்ணியதும்–வால்மீகி ஆச்சர்யம் பட்டாரே —
இவர் தலை மேல் அல்லாமல் இருந்த பொழுது சருகாய் இருந்தனவாம்–
விஷயாந்தர பிராவண்யத்தால் ஆழ்வார் சருகாய் இருந்தது போல–ஸ்வரூபம் சம்பந்தத்தால் தான் சிறக்கும் —
மாம் ஏகம் சரணம் விரஜ- தொட்டு காட்டினான்-வெளுத்து போய் இருந்ததாம் அர்ஜுனன் கூட சேராமல்-
மாம் என்று தொட்டு உரைத்த சொல்- சரணம் விரஜ சொன்னால்-வெளுப்பு இருந்து போக்கி கொள்வான்-
சர்வ பாபேப்யோ-அமரர் சென்னி பூ வான திருவடி–கண்ட பேர் உடைய கால் என் முடியில் பட -கிடீர் இதை பெற்றேனே–
திரு -பெரிய பிராட்டியார்-நித்யர் வணங்கும் திருவடி பெற பெற்றேனே–

யாரோ கால் இருந்த தலையிலே உன் திருவடி பெற பெற்றேன்-
பெற்ற பின் தான்-அவன் சத்தை-நின்ற சேஷித்வம்-எந்தை-விக்ரகம் பெற்றான் தளிர் புரியும் திருவடி–
அந்தாமத்து அன்பு ஆழி சேர்  ஆவி சேர் அம்மான்–அந்தாமத்து ஆழி நூல் உளதாக சத்தை பெற்றான்-அம்மான் ஆனான் சேர்ந்த பின்பு–
என் தலை மேலவே தளிர் புரியும் திருவடி–

ஆக -பிரகிருதி பிராகிருதி அஸ்திரம் காட்டி கொடுத்து //
ஸு ஸ்வரூபம் பிரகாசித்து ..//கைவல்யம் புகாத படி நோக்கி//
தன் ஸ்வரூபம் காட்டி மேலும்  ஸ்வரூப பிரகாசகமான விக்கிரகமும் காட்டி கொடுத்து //
த்யாஜ்யமான  என் சரீரத்தில் புகுந்து நின்று –திருவடிகளை தலை மேல் பொருத்தி வைத்து –உபகார படிகளை அடுக்கி காட்டுகிறார்–

ஆக இப் பாட்டால் தத்வ த்ரயம்/
மூன்றும் புருஷார்த்தம் என்றும் //
ஒன்றே ஸ்வரூப  அனுரூபமான முக்ய புருஷார்த்தம் என்றும்/
அல்லாதவை நிஹீனம் என்றும் //
ஸ்வரூப ரூப குண வைலஷன்யமும் அவற்றை  ஆஸ்ரிதர்க்கு காட்டும் பொழுது தன் பேறாக காட்டும் படியையும் —
எல்லாம் தன் கார்யம்–துயர் அறு  சுடர் அடி –தளிர் புரியும் திரு வடி
பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பவனும் அவன் அடைந்து ஆனந்தம் படுபவனும் அவனே–
அமலன்-குற்றம் போக்கி
விமலன்-அடியார்க்கு ஆட படுத்தி —
நிமலன் -கேட்காமல் தானே நிர்ஹேதுகமாக பண்ணி அருளி —
நின் மலன் -தன் பிரயோஜனமாக அருளினான்

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்-தனியன்-அவதாரிகை -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 21, 2011

ஸ்ரீ யபதி -ஆழ்வார்கள்-பிர மாதா வாழி –அருளி செயல்கள் வாழி -பிரமாணங்கள் வாழி —
குரவர்கள் தாம் வாழி –வ்யாக்யானங்கள் நிறைந்த -அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி —
செய்ய மறை தன் உடனே சேர்ந்து —

பரத்வம் திரு விக்ரமன் முதல் ஆழ்வார்கள் நோக்கம் –
திரு மழிசை ஆழ்வார் அந்தர்யாமி நோக்கு- உள் பொசிந்த வண்ணமே காட்ட சொன்னார் –
நம் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள்- கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-
குலசேகரர் ஆழ்வார் ராமன்-
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் கோவிலிலே திரு அரங்கத்திலே காதல்–
திரு மங்கை ஆழ்வார் அர்ச்சை யில் நோக்கு கார்த்திகை கார்த்திகை–திரு குறையலூரில் ஆறு அங்கம் கூற  அவதரித்தார் –
மாறன் பணித்த மறைக்கு -நீலன் இயற் பெயர்–குறு நில மன்னர் ஆலி நாட்டு அரசர் மங்கை நாட்டு மன்னன்–
திரு வெள்ள குளம் ஸ்வேத புஷ்கரணி-அண்ணன் கோவில்- குமுத வல்லி-ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் கொண்டு–பஞ்ச சம்ஸ்காரம் –
ததீயாராதனம் -ஆடல் மா குதிரை–தாபக புண்டரக தாஸ்ய நாமம் மந்த்ரம் யோகம் –
திரு நறையூரில் ஸ்ரீநிவாசன் நம்பிக்கை வல்லி வஞ்சுல நாச்சியார் -இன்றும் திரு ஆழி திரு சக்கரம் தன் மார்புக்கு முன் வைத்து சேவை —
நூறு பாசுரங்களும் மடலும் எடுத்தார் இவர் மேல்–

திரு அரங்கத்தில் நான்காவது மதிள் –
திருட நான்கு பேர் துணை– நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தாள் ஊதுவான் தோலா வழக்கன்–
திரு மணம் கொல்லை– வயலாலி மணவாளன் நாச்சியார் திரு கல்யாணம் –
பயந்தால் போல ஆபரணங்கள் கட்டி- வாயால் கடித்து பல்லால் இழுக்க கால் ஆபரணம் பிடுங்க– மிடுக்கு  -கலியன் –
என்ன மந்த்ரம் போட்டீர் –வாளால் கேட்டு -அரச மரத்தின் அடியில்-ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆனார் –
வளம் கொள் மந்த்ரம் பெற்றதும்  அணைத்த வேலும் தொழுத கையும் வாய் பொதித்த –
வாடினேன் வாடி ..நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்–
பங்குனி உத்திரம் முன் நாள் திரு  வேடு பரி உத்சவம் இரவு 11.55 மணிக்கு திரு மணம் கொல்லையில் -இன்றும் சேவிக்கலாம் –
ஆலி நாட்டுக்கு அரசு-தெய்வ அரசன்-மந்திர அரசினை அரச மரத்தின் அடியில்–ஸ்வாமி ராமானுஜரும் மகிழ மரத்தின் அடியில் பெற்றார் —
கலயாமி -அறிவின்மை போக்கும் லோக திவாகரன்-அஞ்ஞானம் போக்கும் -வாக்கின் பிர பந்தங்கள் கொண்டு –
ஒளி விளக்கால் -ஒழித்து ஒட்டி விட்டவரை வணங்குகிறேன் –சுவாமி ராமானுஜர் அருளிய -வாழி —-
தூயோன் சுவர் மான வேல்–11 கருட சேவை–கார்த்திகை கார்த்திகை உத்சவம் வாழி பர காலன்..

வாழி கலி கன்றி-கலி கன்றி தாசர்-நம் பிள்ளை-வாழி குறையலூர் வாள் வேந்தன் –குரு நில மன்னர்–
ராஜா கஜானா திருட -கையும் மெய்யுமாக  பிடி பட -தேவ பிரான் -வேகவதி நதி கரை வர சொல்லி ..-காட்டி கொடுக்க –
பெருமை கண்டு கொண்டான் ராஜாவும்–
வாழியரோ மாயோனை வாள் வலியால் மந்த்ரம் கொள் மங்கையர் கோன் தூயோன் -சுடர் மான வேல்–
வென்று பகை கெடுக்கும்  நின் கையில் வேல் போற்றி -போல/
கூரத் ஆழ்வான் அருளிய தனியன்–நெஞ்சுக்கு இருள் கடி தீபம் போல–அடங்கா  நெடும்  பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம் –
தமிழ நல்  நூல் துறைகள் ஐந்துக்கு இலக்கியம் –எழுத்து சொல் பொருள் யாப்பு  அலங்காரம்–ஆரண சாரம்
பர சமய பஞ்ச்சுக்கு பொறி –தலை அறுப்பதே கருமம்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் —
சாஸ்திர விரோதிகளே பரர்கள்–வேத குருஷ்டிகள் பாக்யர்கள்–தீ கங்கு நெருப்பு போல இவர் பாசுரங்கள்–
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன –ஸ்ரீ பாஷ்யம் அருள -கலி மிக்க –வலி மிக்க சீயம் ராமானுஜர் –பனுவல்கள் பெருமை சொன்னார் இதால் —

இரும் தமிழ்  புலவன் பனுவல் ஆரும் -வேத சதுஷ்டய அங்க உப அங்கங்கள் போல –
நான்கு மாறன் பிர பந்தங்கள் -இவரின் பிர பந்தம் அங்கம்- மற்றவர் அருளிய பிர பந்தங்கள் உப அங்கங்கள்-
எம்பார் அருளிய தனியன் -ராமானுஜரை கேட்டு இவர் பாசுரங்கள் தரிக்க -சட கோபன் வேதம் தரிக்கவும் சுவாமி அருள் வேண்டும்—
எங்கள் கதியே ராமானுச முனியே -மனனம் பண்ணி கொண்டே சாஸ்திர ரக்ஷணம் –
சங்கை கெடுத்து ஆண்ட தவராசா -சங்கை-ஐயம் சந்தேகம் இதி சர்வம் சமேசயம்-ஒருங்கி விட்டாரே –
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கும் மனம நீ எனக்கு தா

சோமாசி ஆண்டான்-மணவாள மா முனி அருளி யது என்பார் மாலை தனி வழியே பறிக்க வேண்டும் என்று கோலி
பதவி இருந்த கொற்றவனே -வேலை அனைத்து அருளும் கையால் வினைகளை துணித்து அருள வேண்டும் –
அருள் என்னும் ஒள வாள் உருவி கிட்டி –

யாப்பு -வெண்பா -ஆஸ்ரியப்பா-/திரு எழு கூற்றிருக்கை சித்ர கவி–
அந்தாதிகள்–திரு வாய் மொழி –முதல் சொல்லை கொண்டும் பெயர்-
பெரிய ஆழ்வார் திரு மொழி பெருமாள் திரு மொழி நாச்சியார் திரு மொழி -அருளியவர் பேரில்- –
தாண்டகம்–தண்டகம்-சமஸ்க்ருதம் உண்டு- நான்கு அடிகள் -சந்தம் 4-26 தாண்டகம் 27-47 /எழுத்துகள்-999 எழுத்துகள்வரை  சமஸ்க்ருதம் என்பர்–
திரு நெடும் தாண்டகம் 120 வரிகள் 24 வரிகள் மட்டும் தான் 27 எழுத்துகள் உண்டு/
நிதி இணை  பவள தூணை – திரு குறும் தாண்டகத்தில் எல்லா வரியிலும் உண்டு//
தொல்காப்பியம் படி -அறுசீர் ஆஸ்ரிய விருத்தம்–திரு மாலை–20 எழுத்துகள் மேல் இருந்தால் தாண்டகம் -என்பர்–
தாண்டகம் தனி சிறப்பு–முற்று இன்றி வினை எச்சம் உடன் இருக்கும் —
ஸ்ரீ பராசர பட்டர் ஈடு பட்ட பிர பந்தம்-நஞ்சீயரை- மாதவாச்சார்யர்–கை கொண்டார் இத்தால்–
நம் பெருமாளும் உகந்து ஸ்ரீ வைகுண்டம் அருளினார் இதை கேட்டதும்

ஆண் பாவனை முதல் 10  /நடு தாய் பாசுரம் 10/ மகள் பாசுரம்-10/
திவ்ய தேசம் பல அருளினார் பெரிய திருமொழி -38நம் ஆழ்வார்- 86திவ்ய -தனித்தே 47 திவ்ய தேசங்களை–
அடி தோறும் அர்ச்சை — அரசர்களுக்கு பிடி தோறும் நெய் சேர்ப்பது போல-
மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய் வட திரு வேம்கடம் போல -விபவமும் அர்ச்சையும் மாறி மாறி அருளுவார் —-
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே என்பார்–
விடாய்தவன் தண்ணீர் முகத்திலும் மேனி யிலும் வாரி கொள்வது போல – திரு குரும் தாண்டகம் அருளி–
திரு எழு கூற்று இருக்கை யில் வரும் இடர் அகல உன் அடி இணை பணிவேன் என்றார்–
கோபம் கொண்டு மடல் எடுத்தார்-விபவம் அழிக்க அர்ச்சை அழிக்க இரண்டு மடல்கள் –
-மாசறு சோதியில் யாம் மடல் ஊருதும் என்பர் நம் ஆழ்வாரும்–

தான் அழிவதை ஏற்று கொண்டாலும் ஆழ்வாரை பிரிய கூடாது என்று சேவை சாதிக்க –
வாடினேன் -சிரமத்துடன் பாட ஆரம்பித்து மகிழ்வாக முடிக்கிறார் இதை–
பன்னி பன்னி வியாக்யானம் அருளி இருக்கிறார் இதற்க்கு பெரிய வச்சான் பிள்ளை–

ஆழ்வார் -பெருமாள் மரத்தின் அடியில் ஆத்மாவை வைத்து சரீரத்தில் வைத்து திரு மங்கை ஆழ்வார்–
சர்வேஸ்வரன் விபூதி அடைய தம் சொத்து என்று-தொடைக்கு கீழ் இருப்பதாக -அகங்கரித்து  –
தேக ஆத்மா விவேகம் ஞானம் இன்றி– பெரிய திரு மொழி -6-3-4 சாந்து எனது மென் முலை–விஷய பிரவணராய் போந்து –
அளவில்லா சிற்று இன்பத்தில் திளைத்து -பரமாத்மா ஞானம் பிறக்க யோக்யதை இன்றி–வாடினேன் வாடினேன்–
இதில் நின்றும் மீட்க்கும் விரகு பார்த்து – விஷய பிரவணராய் இருக்கும் இவரை -சாஸ்திரம் காட்டி மீட்க்க ஒண்ணாது –
அழகை காட்டி திருத்த -சௌந்தர்யமே -கடைசி ஆயுதம்-
சுஷேணன்-தோள் அழகு-மல் ஆண்ட திண் தோள் மணி வண்ணன்–
பிள்ளை உறங்கா  வல்லி தாசரை ஸ்வாமி நம் பெருமாள் திரு கண் அழகை காட்ட சொல்லி –

நடுவே வந்து உய்ய கொள்கிற நாதன்–போதரே என்று  சொல்லி புந்தியுள் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்தான்-
தன் பக்கலில் ஆழம் கால் பட்டவர்–சம்பந்த ஞானம் உணர்த்தி–ஸ்வாமி பிதா -நித்யம் ஆக இருக்க –
கிழி சீரை உடன் -முடிச்சு-திரு மந்த்ரதோடு-தனம் போல -அர்த்தமும் -சர்வ அர்த்த பிரகாசம்–
சௌசீல்ய  ஆதி குணங்கள் ஏற்றமும் அருளி–விலகாமல் இருக்க–
திருப் பதிகளையும் காட்டி கொடுக்க -சீரார் திரு வேம்கடமே -ஆராமம் சூழ்ந்த அரங்கம்–
உகந்து அருளின திவ்ய தேசங்கள்-திரு மந்த்ரம் எல்லை நிலம்–
ஒரு நல் சுற்றம்- 9 பாசுரங்கள் 10-1 வரை 18 திவ்ய தேசங்கள் இந்த பதிகத்தில்–சாதனம் போக்கியம்–அனுபவித்தார் இதை கொண்டு

உகந்து அருளின நிலங்களே ஆஸ்ரனியம் சாதனம் போக்கியம் என்று கொண்டு இருந்தவரை—-
அவிச்சின்னமாக இருக்க–தேச விசேஷம்–அந்தமில் பேர் இன்பம் –நலம் அந்தமில் இல்லாதோர் நாடு–
சம்சார தண்மை காட்டி–அடி கொதிப்பு -அறிவிப்பிக்க —
திரு மந்திர அர்த்தம் -அறிந்து கொண்டு–பொய் நின்ற ஞானமும் -பொல்லா ஒழுக்கும் அழுக்கு   உடம்பும் -ஓட்டை மாடம் –
புறம் சுவர் -மின் நின் இலையில மன் உயிர் ஆக்கைகள் —யாம் உறாமை  -இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய்–
இல்லதும் உள்ளதும் அவன் உரு–உள்ளது வெளியது ஆனால் காக்கை ஓட்ட ஆள் இல்லை–பாம்பை போல —

ஒரே கூரையில் படுத்து இருந்தது போல-
யட்ஷன்-தர்ம புத்திரன்- ஒன்பது வாசல் கதவு திறந்து இருந்தும் வெளியில் போகாமல் இருக்கும் ஆத்மா–பரமாச்சர்யம்-
போகிறவர்களை பார்த்தும் நிரந்தரம் என்று நினைப்பதே–
மாற்றம் உளவிலே–இன்று என்னை பொருள் ஆக்கி  –நேற்று புறம் போக்க வைத்தாயே–
புது மண பெண் போல்  வெட்கி கால் கட்டை விரலை கொண்டு கொடு இட்டு கொண்டு இருந்தானாம்-பட்டர்–
பரம பதம் போக அர்ச்சிராதி மார்க்கம் காட்டி -அது போல பயம் பீதராக -இரு பாடு எரி கொள்ளி  உள் இருக்கும் எறும்பு போல–
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்–ஞானம் இருந்தும் அசித் போல தான்-
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல்–வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளில் மாய்ந்து மாய்ந்து

வாள்களாகி நாள்கள் செல்ல –தம் பயத்துக்கு பல திருஷ்டாந்தம் சொல்லி பெரிய திரு மொழி தலைகாட்ட–
அவன் முகம் காட்டாமல் -பிர பந்தங்கள் அருள வேண்டி–அஜீர்ணம் -குழந்தைக்கு-பிரதி ஒவ்ஷதம் இட்டு அன்னம் கொடுப்பது போல–
நாடு திருத்த -நச்சு பொய்கை ஆகாமல்–
விடாய் பிறக்க -நீரை குடித்து நீரை உடம்பில் இறைத்து கொள்வாரை போல –தாரகம்  போஷகம் போக்கியம் அவன் மட்டுமே –
வாக்கினால் ..வேட்கை மீதூர வாங்கி விழுங்கி னோர்க்கு இனிய வாறே —
கண்டவற்றை பெற்று இனிமை  அடைவது போல-உலகம் ஏத்தும் கண்டியூர்  அரங்கம் –என்று மன்னி–
பழைய அபிநிவேசர்க்கு -இதுவே உத்கம்பமாய்- அடி இணை பணிவன்-வரும் இடர் அகல மாற்றோ  வினையே –ஆடு அரவு -உச்வாசம் நிச்வாசம்–
மடி விரிந்து அடங்க ஊஞ்சல் போல கொண்டு -வினையே மாற்றோ–இடம் மாற்றி பரம பதம் கேட்டார்–
ரத பந்தம் போல சித்ர கவி அருளி–திரு குடந்தை ஆரா அமுதன் மேல்–
அடுத்து மடல் எடுத்தார் – சக்கரவர்த்தி திருமகன் கடல் அரசன் இடம் சரண் அடைந்தால் போல –
வழி அல்லா வழி–வில் எடுத்தார் பெருமாள் இவர் சொல் எடுத்தார் மடலில்–
கடல் என்ன காமத்தார் ஆகிலும் மடல் எடுக்க மாட்டார் மாதர்-இது தென் நெறி-மன்னு வட நெறியே வேண்டினோம்–
இவன் புருஷோத்தமன் என்பதால்–இரண்டு தலையையும் அழித்து ஆகிலும் அவனைக் கொள்ள –
பிர பன்னன் மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி -வாழும் சோம்பரை உகத்தி போலும் -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை–

சிறிய திரு மடலில் அவன்  பரத்வம்  தவிர விபவம் நீர்மையை அழிக்க முற்பட்டார்–இதற்க்கு முகம் காட்ட வில்லை–
அர்ச்சையில் உள்ள நீர்மை -எல்லை நிலம் -இதையும் அழிக்க –
விபவ நீர்மையே பரத்வம்  என்னும் படி நீர்மை உள்ள அர்ச்சையை-தமர் உகந்த உருவம் தம் உருவம் தமர் உகந்த பேர் தம் பேர் —
இவர் பிறந்ததே -அவனுக்கும் தனக்கும் வைப்பு-நிதி- இது தானே–
முகம் காட்டாது ஒழிந்தால் உபய விபூதியும் -போனாலும் ஆழ்வாரை இழக்க முடியாது என்று முகம் காட்ட–
இங்கு உளன் என்ற பிரகலாதனாதிகளுக்கு காட்டினால் போல – முகம் காட்டி -தானும் இவரும் ஜகத்தில் உள்ளலாம் படி பண்ணினான் —

சுகர் முதல் ஆழ்வார் -பரதவ, ஜனகாதிகள் திரு மழிசை அந்தர்யாமி/
வால்மீகி குலசேகரர் ராம அவதாரத்தில் ஊன்றி /
பராசர் வேத வியாசர் நம் ஆழ்வார் பெரி ஆழ்வார் ஆண்டாள் கிருஷ்ண அவதாரம்–
நாரதர் தொண்டர் அடி பொடி திரு பாண் ஆழ்வார் -கோவிலிலே பர வாசுதேவன்/சௌனக பகவானும் இவரும் அர்ச்சையில் ஊன்றி இருப்பார்கள்–

அல்லாத ஆழ்வார்களை போலேயும் / ஜனக ராஜன் திரு மகள்  போல அன்றி—
சம்ச்லேஷ -சௌகுமார்யம்–உம் அடியார்  எல்லோடும்  ஒக்க எண்ணி இருந்தீரோ –
ஷண கால விச்லேஷம் பொறுக்காமல்- வாழ்ந்தே போம்-ஆண் பாவனையிலே ஊடுகிறார்–திரு இந்தளூர் பரி மள ரெங்கன்–
போவான் போகாமல்–பாரிப்புடன் போனாரே–இம்மைக்கு இன்பம் பெற்றோம்–துன்பமே பெற்றோம் காட்டி இருந்தால் உய்யோமே –
சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே- இது போறாது–ஆலிங்கனம் வேண்டும் –
உம் அடியார் எல்லோரும் ஒக்க எண்ணி இருந்தீரே –மலையாள ஊட்டு போல -நம் ஆழ்வார் -பிரிந்து பல பாசுரங்கள் அருளுவார்–
தூது விட்டார் நாளே பாசுரம் -உடனே ஒ மண் அளந்த தாளாளா என்று நேராக இவனை பாட ஆரம்பித்தார்– வைலஷண்யம் உண்டு–
சேர்ந்து இருக்கும் பொழுதும் –ஆழி யோடும்  பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் —
அவா பெற்று வீடு பெற்றதை பேசி தலை கட்டுகிறார்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 20, 2011

திரு பாண் ஆழ்வார் கார்த்திகை ரோகிணி-லோக சாரங்க முனிவர்– நம் பாடுவான் போல்- –

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட் படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேம்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திரு
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–1-

விண்ணவர் கோன்-பரத்வம்-சொல்லி -விரையார் பொழில் வேம்கடவன்-எளிமை– மேன்மை சொல்லித்தான் எளிமை சொல்வார்கள்–
அரங்கனை பாட வந்தவர்– பிள்ளை திரு நறையூர் அரையர் -பட்டார் ஐதீகம்- பரம பதம் வாடா மாத்திரை -திரு ஆய் பாடி -வரத்து சொல்கிறார்-
பரத்வம்- திரு மலை- திரு அரங்கம்- வடக்கு வாசல் வழியாய் வந்தான்-அர்ச்சை அவதாரத்துக்கு பொன் கால் இட்ட இடம் –

கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும்–திரு வேம்கடம்- அர்ச்சை பொன் கால் இட்ட இடம் -ஸ்வாமி நிர்வாகம் —
அரங்கன் அனுபவம் ஆழ்ந்து போனார் -பிடிக்க தெப்ப கட்டை-பார்த்து திரு வேம்கடம் பாட– இது முலம் கால் அங்கு கழுத்து அளவு–
அந்தர்யாமி போய் இருக்க வேண்டும் -தவிக்கிறார் –நறுமணம் மிக்க–

சர்வ கந்தன்- தேசம் எல்லாம் பரவ-விரையார் பொழில்–ஈர்க்க போனவரை -சௌலப்ய  காஷ்ட்டை —
16 காஷ்ட்டையும் உண்டு இந்த பாசுரத்தில் -பாட்டினால் கண்டு வாழும் பாணர்–அந்தமில் பேர் இன்பம் கொடுக்கும் மேன்மை-
வானவர் காடும் நீசனான நமக்கும் அந்த இன்பம் கொடுகிறானே –திரு கமலா பாத கமலம் ஆடை உந்தி–கண்கள் மேனி–
கண்டதால் வாழ்ந்தார்–காட்ட கண்டார்–அவன் காட்ட இவர் கண்டார்–கண்ட பாதம்- கண்ட கால் என்று நாம் போல்வார் -வகுத்த சேஷி எம்பெருமான்

மந்தி பாய் வட வேம்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்த தோர் எழில்
உந்தி மேல் அதன்றோ அடியேன் உள்ளத்தின் இன் உயிரே–3–

ஆடை இழுக்க அடுத்து உந்தி இழுந்தது –தாவினத்தை மந்தி பாய் வட வேங்கட மா மலை –மந்தி -தன்னையே–
அவயவம் தோறும் தாவி- நம்மையும் பல பலன்களை கேட்டு அவன் இடம் போவதால்–திரு மலை- வட வேம்கடம்-
தமிழ் தேச வட எல்லை–அகஸ்தியரால் வாழ்வு பெற்றது–தமிழ் ஆழ்வார் களுக்கு தொண்டு–அடியாரின்புற-
பெரும் தமிழன் அல்லேன் பெரிது–மா -அனுபவத்தில் மிக்கு பெரிய -ரட்ஷகனுக்கும் ரட்ஷிக்க பட வேண்டியவனுக்கும்
மா -நித்யர்களும் வந்து அனுபவிக்க மா மலை–உபய விபூதியும் மலையில் மூலையில் அடைக்க —
உபய விபூதிமானை அடக்கி கொண்டதால்–சந்தி செய்ய -பரத்வம் அனுபவிக்கும்- -நித்யர்-வந்து சௌலப்யம் காட்டுபவனை அனுபவிக்க —
கைங்கர்யம் பண்ண நின்றான்- ராம அவதாரத்தில் நின்றான்-தேவர்கள் தானே வானரங்கள்- பழைய நினைவால்
குரங்குகளுக்கும் தேவர்களுக்கும் -வாசி இன்றி -அவன் திரு உள்ளத்தில் வாசி இல்லை–நின்று இருந்து கிடந்தது–
திவ்ய தேசம் போல வாலி கொன்று ராவணனை கொன்று நின்றான் கிஷ்கிந்தை இருந்து சமுத்ரத்தில் கிடந்தது //
சீதை பிராட்டி ஆபரணம் தீண்டி வானரங்களால் பேரு பெற்றார்கள்–நித்ய அனபாயினி —
வானவர்களை பார்க்காமல் குரங்குகளை மட்டுமே -குருடர் தண்ணீர் பந்தலுக்கு கண் தெரிந்தவன் வந்தால்- -//
நிற்கிறான்-கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான்–உத்தியோகத்துக்கு நின்றான்-
மேல் ஏதோ செய்ய போகிறான்–கிளம்பி கிடக்க அரங்கத்து அரவின் அணையான்–

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திரு விருத்தம் -16-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

February 20, 2011

(இப்பாசுரம் தொடர்ந்து ஸ்ரீ அப்பிள்ளை உரை கோசங்கள் கிடைக்க வில்லை
தலைமகள் பாசுரமாவது தோழி பாசுரமாவது கொள்ளலாம்
ஸம்ஸ்லேஷம் போதும் விஸ்லேஷம் வரும் என்று பயந்து கவலை
விஸ்லேஷித்தாலும் துன்பம்
இரவு பல வேஷங்கள்-ராவணன் சிசுபாலன் கொண்டு நலிகின்றனவே –
சூழல் கிருத்ரமத்துடன் நலிகின்றவே
வாழி -எதிர்மறை லக்ஷணம் )

(பயிலும் சுடர் ஒளி -3-7-இதன் விவரணம்

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-)

அவதாரிகை-
சில காலம் சம்ச்லேஷித்த தலை மகன் பிரிந்தான் ..
பிரிந்து முற்றினது  என்னவாம் ..பிரிந்து பிரதம தசை என்னவுமாம் ..
தோழி வார்த்தை என்னவுமாம் ..தலை மகள் வார்த்தை என்னவுமாம்–
அநேக காலம் கலந்து அல்ப காலம் பிரிந்தால் அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-

பாசுரம் -16-பல பல ஊழிகள் ஆயிடும் -தலைவனைப் பிரிந்த தலைவி தோழியை நோக்கி
இருள் வியந்து உரைத்தல் –
பயிலும் சுடர் ஒளி -3-7-

பதவுரை

கண்ணன் விண் அனையாய்–எம்பெருமானுடைய பரமபதம் போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம்–(நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி–அதுவல்லாமல்
(நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)
ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும்-ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;
அன்பர்-நாயகர்
பல பல நாள் கூடினாலும்-பல பல நாள் கூடிநின்றாலும்
(காலம் மிகச் சுருங்குதலால்)
யாம் மெலிதும்-யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)
(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும்–(நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்
(காலம் மிக வளர்தலால்)–
யாம் மெலிதும்–யாம் மிக வருந்துகிறோம்;
(ஆதலால்)
இ பாய் இருள்–இந்தப் பரந்த இருட்பொழுது
பல பல சூழல் உடைத்து–சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.
பல பல சூழல் உடைத்து–அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது)
அந்தோ! வாழ்க.

பல பல ஊழி கள் ஆயிடும் —
அநேக காலம் கலந்து -அல்ப காலம் பிரிந்தால் -அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி –

அன்றி –இத்தை ஒழிய –
யோர் நாழிகையை-பல பல கூறு இட்ட கூறாயிடும் –
ஒரு நாழிகையை அநேக கூறு ஆக்கினால் அதில்
ஒரு சிறு கூறாக நின்றது கலந்த காலம் கலக்கைக்கு இடம் இன்றியே
உபோத் காதத்துக்கு போந்து இருந்த படி–
போகத்துக்கு இன்றி இலே நோவு படுக்கைக்கு வேண்டும் கலவியாய் இருந்த படி

கண்ணன் விண் அனையாய்-
தலை மகள் வார்த்தை ஆன போது
பரம பதத்தில் இருப்பார்க்கு சம்சார வெக்காயம் தட்டாதால் போல
இவ் அவசசாதத்தோடே கூடி இருக்க செய்தேயும் சத்தை கிடக்கிறது உன் சந்நிதி ஆகை அன்றோ ..

தோழி வார்த்தை ஆன போது பரம பதத்தில் உள்ளார்க்கு புனர் ஆவர்த்தி இல்லாதா போல ,
உன்னோடு கலந்தார்க்கு உன்னை பிரிகை உண்டோ ?..
பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-

பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-
கால தத்வம் உள்ளத்து அத்தனையும் கலக்கிலும் ,அல்ப காலம் பிரியிலும் ,
நாம் ஒரு படி இட்டு இருக்க மாட்டோம் —

தன் வார்த்தை –
கலக்கிற போது வாய் புகு நீரும் அரு நிலையாய் (கால் பாவாது அகாத ஸ்தலம் )
ஆறி இருக்க மாட்டாது மெலிகையும் ,
பிரிந்தால் பிரிந்து ஆற்றாமையால்-மெலிகையும்

தோழி வார்த்தை- ,
நாயகிக்கு நாயகன் உடைய சம்ஸ்லேஷ அந்தத்திலே ,விஸ்லேஷம் ஆய் இருக்கும்
அத்தாலே சம்ஸ்லேஷத்தொடு விஸ்லேஷமும் வாசி அற மெலிகிற படி –
குழி அறியாது இருக்கைக்கு தம்மை போலே அல்லாமே யாம் –

இரண்டு திறத்தாரும் அங்கனே படுக்கைக்கு அடி-
அன்பர் பிரிகையாலே –

பல பல சூழல் உடைத்து-
நந்த கோபாலன் கடை தலைக்கே நள் இருள் கண் –நாச்சியார் திருமொழி 12-3-என்னுமா போலே,
கலவிக்கு முன்னிலையாய் ,
விஸ்லேஷத்தில் வந்தால் –
சுருங்கா இருளின் கரும் திணும்பை–திரு விருத்தம்-72-என்று
அஞ்ச வேண்டும் படி பாதகமாய் இருக்கும்

அம்ம .
அம்மே என்ற படி-

வாழி-
தன் வார்த்தை யான போதைக்கு —
வழி பறிப்பாரை-உடன் பிறந்தீர் ! நூறு பிராயம் புகுவீர் ! என்னுமா போலே —

தோழி வார்த்தை யான போது —
இவ் அவசாதம் நீங்கிடுக-

இப்பாய் இருளே –
பரந்த இருளே முன்னிலை யாக –

இத்தால்
ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-

தோழி வார்த்தையான போது
ஈஸ்வரன் பாகவத உத்தமர்களை விட்டுப்பிரிய மாட்டாரே எதனால் தவிக்கிறாய் என்றபடி

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் ஆழ்வார்
பாகவத விஸ்லேஷத்தில் தமக்கு பிறந்த வேறுபாட்டை
நெடும்காலம் பிரிந்த தலைவன் ஒரு இரவில் வந்து கலந்து அதே இரவில் –
பிரிந்த நாயகியின் வார்த்தையாக அருளிச் செய்கிறார்
ஓ தோழி இக்காலத்தின் கொடுமையைப் பார்
பிரிந்த காலத்தில் ஒரு துளி யாயே இருந்தாலும் அநேக கல்பமாய் நெருக்கி என்னைப் பாதியா நின்றது
தெய்வ சங்கல்பத்தால் வந்து கூடினால் இப்போதாகிலும் எனது மநோ ரதப்படி
சந்தோஷமாக இருக்க முடியாத படியே உள்ளதே
இப்படி இரவி குறுகியும் நெடுகியும் காலம் கோலோச்சும் சம்சாரம் படுத்தும் பாடு பொறுக்க அரிதாய் உள்ளதே
நான் இப்படி சர்வ காலத்திலும் பாதிக்கப்பட்டே இருந்தேன்
அந்த இரவே வாழட்டும்

——————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -15-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

February 20, 2011

(இங்கும் கண் -ஞானம்
தலைவியைப் பார்த்து கண் மீனோ
கலங்கி யானை வந்ததோ கேட்டு -உளறி
அயலார் கேட்டால் என்ன ஆகுமோ
கேலியாகவோ
வெறுப்போ
சந்தோஷமாகவோ
உண்மையே இல்லையே
நான்கிலும் சொல்லலாமே –
ஈது என்ன வார்த்தை -ஆச்சர்யம் கேலி வெறுப்பு கொண்டாட்டம் தக்க ஸ்வரம் மாறுமே
காதலனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டுமே
கடியன் கொடியன் நெடுமால் –ஆகிலும் என்நெஞ்சம் அவனே என்று கிடக்கும் -என்பர் அன்றோ )

(கொல்லை காக்கின்ற -திவ்ய தேசம் ரக்ஷணத்தைச் சொன்னபடி
ஸ்வ ரக்ஷண அந்வயம் கூடாதே
ஆழ்வாராதிகள் தானே திவ்ய தேசங்களை ரக்ஷிக்க வேண்டும்
ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழியும் தானே அரண்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் கால தாமதமாக வர –
அதற்குள்
திரு வாட்டாறு எம்பெருமான் இவரைக் கூட்டிப்போக விரைய
உபதேசம் பண்ண நேரம் இல்லையே என்று ஆழ்வார் கேட்பதாகவும் கொள்ளலாம்
நேரம் தாழ்ந்து வந்து அசங்கத பாஷணம் பண்ணுகிறார்கள் என்றுமாம் -வெறுப்பில் த்வனி ஈது என்ன வார்த்தை
இனி ஆச்சார்யர்கள் இடம் நாம் கால தாமதமாகப் போக –
இப்பொழுதாவது வந்தானே என்று பிரசாதம் தருவார்கள்
ஈது என்ன வார்த்தை -ஆச்சர்யம் என்றுமாம்
கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்கள் -ஆசை யுடையார்க்கு எல்லாம் -வரம்பு அறுத்தவர்கள்
இப்படி வெவ்வேறே ரசங்கள் இதில் உண்டே –
அயலோர் அறிய மாட்டார்கள் -அறிந்தாலும் -சங்கை -ஈது என்ன வார்த்தை
அந்தரங்கமான எனக்கே தெரியவில்லை
அறிந்தாலும் அசங்கத வார்த்தையை அறிய மாட்டார்களே
ஆழ்வார் படியைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் தடுமாறி பேசும் துறை
கிளைவித் தலை மகன் வார்த்தை -அங்கதமாக பேசும் ஈது என்ன வார்த்தை என்றபடி )

(கண்ணன் கழலினை -10-5-இதன் விவரணம்

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-களிறு இங்கும் உண்டே

எண்ணும் மனமுடையீர் -பெண்ணின் அழகைச் சொல்ல வந்து களிறு வினவி வந்தார் இங்கும் )

—-

அப்பிள்ளை உரை
தலைமைகளும் தோழிகளும் புனலைக் காக்க
தலைமகன் தங்கள் தர்சனத்தாலே கலங்கி
அடைவு கெ ட்ட படி பேசிய வார்த்தையைக்
கேட்டவர்களுக்கு அவனது வ்யாமோஹத்தை நிஷேதித்து
வியாகத பாஷணம் என்கிறார்கள்
தங்கள் ஆசையையும் ஆவிஷ்கரிக்கிறார்கள்
அயலோர் என்பதால் தங்கள் அந்தரங்கர் என்பது தோன்றுமே

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
முக்தமான உங்கள் கண்களோ என்று வினவத் தொடங்கி
அசங்கதமான அம்போடு ஒரு யானை போந்ததோ என்று வினவி
சொல்லத் தொடங்கினது இது -சொல்லி முடித்தது அது என்று அறியாதே மரம் போல் -ஸ்தப்ஸ்தமாக திகைத்து நின்றார்
இவள் பூ பரிக்க தோட்டத்தில் இருக்க அவன் வேட்டை யாட குதிரை நம்பிரானில் போவது பழக்க தோஷம் அன்றோ

நுமது கண்கள் என்று கண்டால் கயல் என்று சங்கை தீர்ந்து கயல் தான் என்று நிர்ணயம் பண்ணும் படி
ஸர்வதா ஸாத்ருஸ்யம் உண்டே

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
அந்நியர் என்றவாறே அற்றுத் தீர்ந்தார் ஆவார்
யுகாவாதார் என்றவாறே அவனுக்கே அநந்யார்ஹர் இவர்கள் அந்தரங்கை அன்றோ

ஈது என்ன வார்த்தை
அடிக்கழஞ்சு பெறலாம் என்று கொண்டாட்டம்

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும் பயலோ இலீர்
கடலை நிஸ்ஸேஷமாகப் பருகி -கரு உண்ட பெண் போல்
மந்தமாக சஞ்சரிக்கும் மேகம் போல் -உலாவி
திரு நிறம் உடைய அவனது-திருவேங்கடத்தானது வடிவு அழகே நீராக விளையும்
தோட்டம் உடைய தேசம் என்றவாறு
அங்கு உள்ள புனம் இல்லை -இதனால் விளைந்த தோட்டம் என்றவாறு
திவ்ய தேசம் ரக்ஷிக்கும் எங்கள் உடன் உமக்கு சேர்த்தி- அப்யாசம் இல்லையே

கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே
நாங்கள் கொல்லை நோக்கும் காலத்துக்கு ஒரு வரம்பு இல்லை
புனல் காக்கும் -நாங்கள் திவ்ய தேசம் காப்பது நீர் வருவீர் என்று வருந்தி இருந்தோம் பல காலமாக
ஆனால் நீரோ வரவில்லையே என்று வருந்தி சொல்லும் வார்த்தை என்றும்
நெடுநாள் பழகினாலும் முழுக்க கண்டு முடிக்க முடியாத ஸ்ப்ருஹணீயம் -அழகு உள்ள நீர்
என்று கொண்டாட்டமாகவும் –
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் –

ஸ்வாப தேசம்
ஆழ்வார் படியைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் தடுமாறிச் சொன்ன வார்த்தை

———-

அவதாரிகை-

இயற்கையிலே கலந்து பிரிந்த தலை மகன் ,இரண்டாம் கூட்டத்துக்காக புனத்திலே வந்து
கிட்ட கடவதாக குறி வர விட்டு போய்,
கால அதிக்கிரமம் பிறந்து பின்பு,அங்கே சென்று கிட்டினவன்
இவர்களை கண்டு கலங்கி,அசந்கத பாஷணம் பண்ண,
அவர்களும் அத்தை கொண்டு,
இவர் வருவதாக போன படிக்கும்,
வந்த படிக்கும்,
இப்போது ஆற்றாமை தோற்ற பேசுகிற பேச்சுக்கும்
ஒரு சேர்த்தி,கண்டிலோம் என்று சிரித்து கொண்டாடுகிறார்கள்

இவனும் வீரன் ஆகையாலே, என்றும் ஆனை வேட்டைக்கு போம் பழக்கத்தாலே
ஆனை  வேட்டையை வினவி கொண்டு,செல்ல  கடவதாக நினைக்கிறான்

பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே,
அமாணனை பட்டு (மன்மத விகாரம் ) திரியுமா போலே
இவர்களை இழந்து ,தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை
அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

பாசுரம் -15-கயலோ நும் கண்கள் என்று -தோழி தலைவன் எண்ணம் தெரிந்து அவனை நோக்கி உரைத்தல் –
கண்ணன் கழலினை -10-5-

பதவுரை

களிறு வினவி–யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி
கயலோ நும கண்கள் என்று நிற்றீர்;–‘உங்கள் கண்கள் கயல் மீன்கள் தாமோ?’ என்று
(எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்;
அயலோர் அறியிலும்–அயலார் அறிந்தாலும்
அறிய மாட்டார்கள் -அறிந்தாலும் -சங்கை -ஈது என்ன வார்த்தை
எனக்கே தெரியவில்லை -அறிந்தாலும் அசங்கத வார்த்தையை அறிய மாட்டார்களே
ஈது என்ன வார்த்தை–இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல் கவர்ந்த–கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும்-ஆழியுள் புக்கு
புயலோடு உலாம்–மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான-புயல்- நீர் என்றவாறு
கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணன்–(குளிர்ந்த) திருநிறத்தை யுடையனனான எம்பெருமானது
புனம் வேங்கடத்து–(பல) கொல்லைகளை யுடைய திருவேங்கட மலையிலே
கொல்லை காக்கின்ற நாளும் பல பல–(நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும்
எம்மோடும் பயலோ இலீர்–எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர்.

வியாக்யானம்

கயலோ நும் கண்கள் –
ஓர் ஆனை இங்கனே போந்ததோ என்று சொல்ல ,மனோ ரதித்து  கொண்டு,வந்த இவன்
இவர்களை கண்டு கலங்கி ,
உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போல,இக் கண்களை கயலோ என்கிறான்..

நோபஜனம் ஸ்மர்நிதம் சரீரம்—சாந்தோக்ய உபநிஷத்-8-12-9-என்று கொண்டு,
முக்தர் சம்சார யாத்திரையை நினையாதார் போல ,
இவனும் இவர்கள் கண்களை கண்ட பின் ,
வேறு ஒன்றை நினைக்க அறியாது இருந்த  படி..

(இது இவனுடைய மற்று ஒன்றைக் காணாவே )

யத் விஸ்மயஸ்தி மந்தஸ்மித அந்நிய பாவம் (மாலதி மாந்தவம்) –
என்று தன்னையும் அறியாதே
விஷயத்தையும் அறியாது இருப்பார்கள் என்று சொல்லுமா போல,

யத்ர நான்யத் பச்யத் நான்யச் ச்ருணோதி நான்யத் விஜாநாதி சபூமா-சாந்தோக்ய உபநிஷத்-7-23-1- –
யாது ஒன்றை கண்டால் வேறு ஒன்றை காணாது ஒழியும்,
யாது ஒன்றை கேட்டால் வேறு ஒன்றை கேட்க்காது ஒழியும்
யாது ஒன்றை அறிந்தால் வேறு ஒன்றை அறியாது ஒழியும் ,
அது நிரபேஷ விஷயம் என்கையாலே ,

(மூன்று பிரமாணங்கள்
முதலில் முக்தர்படி
அடுத்து சம்சாரி படி
அடுத்து நித்யர் படி
அதே போல் யானையை மறந்தான் இவன் )

கயலோ என்று
(கயல் போன்றதோ சொல்லாமல் )உபமானத்தாலே சொல்லாதே ,
பிரதான்யத்தாலே சொல்லுவான் என் என்னில்,
சர்வதா சாத்ருச்யத்தாலே,

த்ரவ்யாந்தரத்துக்கும் ,சாம்யம் உண்டோ என்னில் ,-
கேவலம் கண்ணை சொல்லிற்று ஆகில்-
இல்லை என்னலாம் ..
அது ஸ்வ தசையால் ஆகலாம் ..

(அறிவு அழிந்து சொன்ன வார்த்தை அன்றோ
இவள் மேல் பேர் அன்பால் தன்னை மறந்து சொன்ன வார்த்தை )

பஹு வசனத்தால் சொல்லுவான் என் என்னில் ,-
மை அமர் வான் நெடும் கண் மங்கைமார்-என்று
அவனுக்கு தன் ஓர் ஆயிரம் பிள்ளைகளோ பாதி ,
இவளுக்கும் அநேகர் உண்டாய் இருக்கையாலே ,
(வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்தான் அன்றோ அவனும் )

அவனோடு கிட்டினார்க்கு ,நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-என்னுமா போல இறே
இவர்களோடு கூடினாரும் இவளைப் போலே இறே இருப்பது ..

காணப் புகுகிற தன்னை மறந்ததோ பாதியும்
காண்கிறவர்கள் தன்னையும் மறந்தபடி

அவயவ பிரதி பத்தி யாதல்
அவயவாந்தர  பிரதி பத்தி யாதல் இன்றிக்கே
வெறும் கண்ணுக்கு மேற்பட அறியாது இருந்த படி

(அவயவம்- கண் -ஒன்றிலே இவனுக்கஇதுக்கு மேற்பட்ட அறியான்
கண்களிலும் இரண்டாவது அறியான்
கண்கள் -இரண்டு இவளுக்கு என்று அறியான் –
ஆகவே இரண்டாவது வியக்தியைச் சொன்னபடி
ஒரு கண்ணின் அனுபவம் தாண்ட வல்லன் அல்லனே )

களிறு வினவி நிற்றீர்–
அசங்கத பாஷனம் பண்ணுகிற இவர் ஆர் என்று முகத்தை மாற வைத்தார்கள்
நோக்கு பெறாத போது ,தன் சத்தை இலையாய் இருக்கும் இறே–
இவர்கள் பார்க்கும் படியாக ஓர் ஆனை இங்கே போந்ததோ என்கிறான் ..

இங்கனே சொன்னவாறே இவர்கள் பார்ப்பாரோ என்னில் –
அழிகிற இவரைப்   பாராது ஒழியிலும் அழியும் புவனத்தை பார்ப்பார்கள் என்னும் அத்தாலே
முன் மறந்ததை இப் போது சொல்லிற்று

(துணுக் என்று இவர்கள் பார்க்க -திவ்ய தேச ஆபத்தை சொன்னபடி
பகவானை விட உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கு ஏற்றம் உண்டே
திருவேங்கடத்தை வைத்தே அவனுக்குப் பெயர்
தோட்டம் அழிவதைப் பார்ப்பார்கள் அன்றோ )

பிரத்ய அபிக்ஜை உண்டாயோ என்னில்
அன்று
வாசனையால் கள்ளர்க்கும் காமுகர்க்கும்
முதல் பதம் தெரிந்து
இரண்டாம் பதம் தெரியாது இருக்க கடவர் ஆகையாலே

(நினைவு வர கண்ணில் இருந்து மனம் மாற வேண்டுமே
பழக்க வாசனை உந்த பேசுகிறான் )

இப்படி சேரா சேர்தியான வார்த்தைகள் சொல்லுகிறார்கள் என்ன
பார்த்தார்கள் —
அந் நோக்கிலே ஈடு பட்டு பேசவும் அறியாதே நின்ற படி —

முன்புத்தையுள் காட்டில் பிறந்த தசா  விபாகம் இப்படி நிற்கிற இவனைக் கண்டு
முதல் கெட ஒண்ணாது என்று பார்த்து
இரண்டு தலைக்கும் உஜ்ஜீவனத்துக்காக சொல்கிறாள்

(முதல் வார்த்தை கயலோ நும் கண்கள்
இரண்டாம் வார்த்தை களிறு வினவி
மூன்றாம் நிலை ஸ்தப்த்தோஸி -பேச முடியாத நிலை )

தானும் உள்ளான படி இதற்க்கு இணங்காதார் எல்லாரையும்
அயலார் என்கிறாள் —
பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள்
அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது

(தாத்பர்யத்தால் இவர்கள் அவனுக்கே அற்று அநன்யார்ஹை என்கிறார்கள் )

அறியிலும்
அறியக் கூடாது என்று இருக்கிறாள்-
இவள் விரஹம் தான்
அவகாகித்த பின்பும்
வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே ,
அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .

பண்டு இவரை  கண்டு அறிவது எவ் ஊரில் என்னா –
இன்னார் என்று அறியேன் என்பாரை போலே
கிட்டின போது சம்சயமாய் ,
உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–
பாஷிக  தோஷம் பரிகரிக்க வேணும்  இறே-

(பயில்கின்றாளால் -முதலில் தெரியும் என்பார் பின்பு தெரியாது என்பார்
ஸ்வரம் -பார்த்த போது பார்த்தவர் போல்
பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பாரே )

ஈது என்ன வார்த்தை –
1-(வெறுப்பில் )இச் சேராச் சேர்த்தியான வார்த்தை எங்கே உள்ள –

2-ஆற்றாமை தோற்ற இங்கனம் சொல்லில்
புறம்புள்ளார் என் நினைத்து இருப்பார்கள் –

1-(வெறுப்பில் )முகம் அறியாதார் ஒருவர் வந்து நின்று முகம் அறியாத வார்த்தைகளை சொல்லா நின்றீர்-

2-நாங்கள் பரண் இடுவது ஆயோ வென்பதாய் கோபிக்கிறதை எல்லாம் வெளியிடா நின்றீர் –

3-(கொண்டாட்டம் )தென்றலும் சிறு துளியும் போலே
உத்தேசியத்தோடே சேர்ந்ததொரு வார்த்தை இருந்தபடி என்-
(கலங்கி இருப்பவனைப் பார்ப்பதே காதலிக்கு உத்தேச்யம் )
வார்த்தையைக் கேட்டு எத்திறம் என்கிறாள் –

4-நீர் வார்த்தைக்கு பாவிகளோ என்கிறாள் –
உம்முடைய பாடு வார்த்தை இறே -அனுஷ்டானம் இல்லை என்கிறாள்

( ஷேபம் -கேலி -ஆச்சர்யம் -கொண்டாட்டம் -நான்கு நிர்வாகம் )

எங்கள் பாடு அனுஷ்டானம் இல்லையே யாகிலும் உங்கள் பாடு அனுஷ்டானம் உண்டோ என்ன –
(இது பகவான் வார்த்தை
எனது பக்கம் இல்லை என்றால் உங்கள் இடம் உண்டோ என்ன
திவ்ய தேசம் சேவை சாதிக்கா விட்டாலும் நாங்கள் ரக்ஷித்து உள்ளோமே )

கடல் கவர்ந்த-புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் –
உமக்காக வன்றோ -நாங்கள் குடில் கட்டிக் கொண்டு கிடக்கிறது என்கிறாள் –

கடல் நீரைத் தாரையாகப் பருகி அந்நீரோடே கூட கர்ப்ப கேதத்தாலே நெகிழ்வாரைப் போலே
சஞ்சரியா நின்றுள்ள மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடைய
திரு வேங்கடமுடையான் –
சமுத் வகந்தஸ் ஸலீலாதி பாரம்-என்னும் படியே

கொண்டல் வண்ணன் –
உபமானமாகச் சொல்லப்பட்ட மேகத்தில் உண்டான நீர் அன்றிக்கே
உபமேயத்தின் வடிவே இங்குள்ள பதார்த்தங்களை தாரகமாய் இருந்தபடி –

(அதில் நீர்
இவன் இடத்தில் நீர்மை
இதுவே தாரகம்-வண்ணம் -தன்மை -)

புன வேங்கடதெம்மாடும்-பயலோ இலீர் —
வேங்கடத்து புனத்து எம்மோடும் பயலோ இலீர் –
நீர் சேஷீ பூர்வஜர் என்னுமதுவும் தப்பிற்று இறே –
நாங்களும் வேணும்-காணும்
நாங்கள் பற்றி இருக்கிறது ப்ராப்ய பூமியை அன்றோ –

நிரபேஷரை சாபேஷர் பற்ற வேண்டாவோ –
(நீர் சா பேஷன் -எங்களைத் தேடி அன்றோ நீர் வந்தீர் )
எங்களுக்கு படி கடந்து புறப்படில் குற்றம் –
உமக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –
நீர் சேஷியும் ரக்ஷகரும் ஆகையால் உமக்கு குற்றம் –
நாங்கள் சேஷ பூதரும் ரஷ்ய வர்க்கமும் ஆகையால் எங்களுக்கு குற்றம் –

இவர்களுக்கு பரார்த்தமாகப் புறப்படலாம் –
தீதில் நன்னெறி காட்டி -என்னும் படியால் ஸ்வார்த்தமாக ஒன்றும் செய்யலாகாது
பாதி பதார்த்தமாக எல்லாம் செய்யலாம் என்றபடி

உபாயம் என்று ஒன்றுமே செய்யாமல்
கைங்கர்யமாக ஒழிவில் காலமாக அனைத்துமே செய்ய வேண்டுமே

கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே-
நாங்கள் கொல்லை நோக்கியோ இருக்கிறது -உம்மை நோக்கி யன்றோ –
(வாஸூ தேவா உன் வரவு பார்த்து இருந்தோம் )

நுனி பழுத்த வாறே தொடங்கிப் போகும் காலம் கூறுகிறது என்று அஞ்சுகிறபடி –
இத்தனை காலம் வழி பார்த்துக் கண் மறைந்தோம்-
இப்போது வந்தீரோ உம்முடைய ஆற்றாமை காட்ட –

நாங்கள் இருந்த காலம் எல்லாம் பொகட்டு
இன்றோ உமக்கு போது விடிந்தது என்கிறான் –

நீர் வேட்டைக்குப் போந்தால் போலே காணும் நாங்கள் கொல்லை நோக்கி இருந்தபடி –

அன்யார்த்தமாக நாங்கள் இருந்த இருப்பையும்
அன்யார்த்தமாக நீர் வந்த வரத்தையும் விபவிக்க பண்ணினீரே என்கிறாள்
(இரண்டுமே பலம் இல்லாமல் வீணாக்கப் போனதே )
நாங்கள் புனம் நோக்கி இருந்தோம் ஆகில் நீர் இருவியை (கதிர்கட்டை )நோக்கி இரும் என்கிறாள் –

புனம் கொய்து இற் செறியக் காலம் ஆயிற்று –
நீர் வழித் துணையாக வந்தீரோ –
நாங்கள் எங்களுக்கு  உரியவர்கள் என்று இருந்தீரோ –
சிலர் வைக்க இருந்தவர்கள் என்று இருந்திலீரோ –

(என் நான் செய்கேன் யாரே களை கண் என் செய்கின்றாய் —
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டோம் )

இத்தால்
ஆழ்வாருடைய வை லக்ஷண்யத்தைக் கண்டு
இப்படிப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு
தாம் ஈடுபடுகிறபடி –

அரும்பதம்
இத்தால்
பகவத் விஷயம் பிரசாதிக்கிறோம் இந்நாளில் வாரும் என்று குறித்த நாளில் வராமல்
காலம் விளம்பித்து வந்த ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து
நமக்குத் பிராப்தி அணித்தாய் விட்டது
இப்போது விளம்பி வந்தால் என்ன பயன்
என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறாராய் செல்லுகிறது

——–

அரும்பதம்
இத்தால் ஓர் ஆச்சார்யன் சிஷ்யருக்கு அர்த்த பிரகாசிக்கக் காலம் குறித்து விட
அவன் காலம் தப்பி வர
நமக்கு சரமகாலம் வந்து விட்டதே
ஆனால் காலம் போய் விட்டது என்று இல்லாமல் வந்தீரே
உம்முடைய ஆஸ்திக்த்வத்வம் இருந்த வாறு என்று வாழி என்ற வாறு

——-

தாத்பர்யம்
ஆழ்வாருக்கு பகவத் விஷய அவஹானத்துடைய வைலக்ஷண்யம் கண்ட பாகவதர்கள் இவருடைய
ஞானாதி குணங்களில் ஈடுபட்டு மக்நராய் இருக்க
அவர்கள் ஈடுபாட்டில் ஆழ்வார் தாம் ஈடுபட்டு அருளிச் செய்த பாசுரத்தை
ஈது என்ன வார்த்தை கேட்டாரே
சகிகளுடன் புனத்தில் இருந்த நாயகி
அங்கு தம்முடன் கலக்க வந்த நாயகன் தடுமாறி நிற்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
நாயகன் வரவைக் கண்ட போதே இவர்கள் கண்கள்
பரந்து நீண்டு மிளிர்ந்து இருக்க
அவற்றின் அழகைக் கண்ட போது தான் வந்த கார்யம் மறந்து இவை மத்ஸ்யமா என்று கேட்டு
அத்தை அவர்கள் கேட்டு
உனது வார்த்தை உன்மத்தர் வார்த்தை போல் பரிகசிக்க
இவ்வளவில்
அவன் மறந்தத்தை நினைத்துக் கொண்டு-இங்கி யானை போனதா என்று கேட்டான்
முன் பின் சங்கதி இல்லாமல் பேசுகிறீர் என்ன
ஸ்தாப்த்தனாய் இருக்க
அசங்கதத பாஷாணம் பேசி நின்ற இத்தை
அசலார் கேட்டால் என்ன நினைப்பார்கள் என்ன
அவன்
நீங்கள் செய்தது சரியா என்ன
திருவேங்கட நீர்மையே தாரகமே விளை நீராகக் கொண்ட இந்த பயிர் காக்கிறோம் என்று
வ்யாஜத்தால் உம்மை எதிர்பார்த்து இருந்தோம்
அப்போது எல்லாம் வராமல் இப்போது வந்தீர்
இப்படி உபேக்ஷித்து இருப்பது யுக்தம் அல்ல காணும்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 20, 2011

 திரு ஆடிப் பூரம்– -எமக்காக அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் –திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே –
14 பாசுரங்கள்-திரு வேம்கடம் உடையானுக்கு அருளி இருக்கிறாள் –
திரு துழாய் -புஷ்ப கைங்கர்யம்-கேசவ பிரிய=துளசி –மாநிடவர்க்கு  என்று பேசு படில் வாழ கில்லேன்-
கண்ணனுக்கே ஆம் அது காமம்–மல்லி நாடு ஆண்ட மட மயில்–
மெல் இயலாள் வேயர் பயந்த விளக்கு ஆயர் குல விளக்கு அடைந்தாள்–
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழ –பிராட்டி திருவடி காட்டி- திரு இட எந்தை –
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே–செல்வன் சொல்லுக்கு அஞ்சான்  -ஈன சொல் ஆயினும் ஆக –
யேனதுருவாய் இடந்த பிரான் –திரு பாவை- ராம கிருஷ்ண  திரு விக்ரமன் -விபவம் உண்டு-திவ்ய தேசம் இல்லை-
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் படி–கிள்ளி களைந்தான்–நரசிம்கன் என்று -ரசிகர் சொல்வார்கள்–

கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் !
தெண்ணீர் பாய் வேம்கடத்து என் திரு மலும் போந்தானே ?
கண்ணீர்கள் முலை குவட்டில் துளி சோர சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே 8-1

மா முத்த நிதி சொரியும் மாமுகில்காள்! வேம்கடத்து
சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே !
காமத் தீ உள் புகுந்து கதுவ பட்டு இடை கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்கை நான் இருப்பேனே–8-2

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை  எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடு அழிய போயின வால்
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் ! வேம்கடத்து
தன்னாக திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னாகத்து இளம் கொங்கை விரும்பித் தாம் நாள் தோறும்
பொன்னாகம் புல்குதற்க்கு என் புரிவுடைமை செப்புமினே–8-4

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்கள் வேம்கடத்து
தேன் கொண்ட மலர் சிதற திரண்டு ஏறி பொழி வீர்காள் !
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே -8-5

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில் காள் மாவலியை
நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள்
உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய  புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள்! வேம்கடத்து
செம் கண் மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மெல் கும்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்று உரையீரே –8-7

கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள்! வேம்கடத்து
போர் காலத்து எழுந்து அருளி பொருத வனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே–8-8

கொடியையே மாலையாக கட்டினாரே-மாலுக்கு -நாயகன்-அழகிய மணவாளன்-
ஒரு மகள் தன்னை உடையேன் திரு மகள் போல் வளர்த்தேன் செம் கண் மால் கொண்டு போனார் —
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே –கேசவ நம்பியை கால் பிடிக்க  -கற்பக கோடி-குல நந்தன –
எனக்கே தன்னை தந்த கற்பகம் -அவாக்யன்  அநாதரன்-ஒரு வார்த்தை கேளுன்கொள் மேகங்காள்—
தரிக்க போதும் ஒரு வார்த்தை–அனுபவிக்க நிறைய வேண்டும்–
மற்று எக்காலத்திலும் யாது   ஒன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும் அக்கார கனி —
என் உள் மன்னில்- -திரு மாலை ஆண்டான்-ஒரு தடவை வந்தால் ஆழ்வார் நிர்பந்திக்க மாட்டார்- -எம்பெருமானார் நிர்வாகம்–
எக்காலத்து எந்தையாய் என் உள் மன்னில் எக் காலத்திலும் -மற்று யாது ஒன்றும் -கூடினத்தை தவிர -வேண்டேன்-
ஒரு நாள் அவன் பட்ட பாடுக்கு -சீதை பிரிந்து -இன்று இவள் படுகிறாள்- கார் காலம்- சீரிய சிங்கம்–போர் காலம்-தோலாத தனி வீரன்-
ராமனை நினைந்தே அருளுகிறாள்–பேர் சொல்லி-நாம சங்கீர்த்தனம் சொல்லி -தரிக்க வழி தெரிந்து -சொல்லி இன்னும் தூண்டி விட –
ரட்ஷிக்காமல் பெயரை கெடுத்து கொண்டானே -இதுவே நீர் காலத்து எருக்கு இலை-தளர்ந்து ஒட்டி கொண்டு இருக்குமா போல–
விரக தாபம்-சருகாய் உலர்ந்து நாம சங்கீர்த்தனம் முதல் மழை–

மத யானை போல் எழுந்த மா முகில்காள்! வேம்கடத்தை
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே!
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9

 9 பாசுரம்-உயிர் ஆன பாசுரம்- யானை போன்ற மேகங்கள்–வேம்கடத்தான் ஆனந்தம்-
முக்தர் அங்கு பெரும் ஆனந்தம் இங்கு கிடைக்கும்–அசேதனம் -பெற்று போகுமாம் இங்கு–
அஹம் அன்னம் அஹம் அன்னம் –பத்தி-கதியாக -இருப்பிடம்–பிரம  உத்சவம் சேவித்து கிளம்பாமல் அங்கே இருப்பது போல–
மாசி வைகாசி ஆழ்வார்க்கு –பங்குனி சித்தரை பொலிந்து நின்ற பிரானுக்கு/
ஸ்ரீ ரெங்கத்தில் மாசி பங்குனி சித்தரை வைகாசி நான்கும்-மாசி மட்டும் தேர் இல்லை துவஜாராகோனும் இல்லை–
மேகம் பெற்ற பாக்கியம் நான் இழந்தேனே–பதியாக இருப்பீர்காள் -இல்லை- வாழ்வீர்காள்–இருக்கையே வாழ்வு —
தொழுது எழு– தொழுகையே எழுவது– ஆத்மா உஜ்ஜீவனம் கீழே விழும் பொழுது தானே–பாம்பணையான்-திரு வேம்கடத்தில் —
அந்தரங்கமாக ஒரே படுக்கை நினைவு வர–திரு கல்யாணம் பண்ணி கொள்கிறேன் என்று சொன்னானே –என்னே – 
சொன்ன விஷயம்  சொல்ல வில்லை–மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-வாசல் காப்பான் இடம்-
உம் ஸ்வாமி என் காலில் விழுந்த நாள் உண்டு–அது போல அந்தரங்கம்–இரண்டு ஆற்றுக்கு நடுவே இருக்கும் இருப்பு –
நல்லார் பலர் வாழும் நளிர் அரங்கம்–கதி-என்றும் தேவர் தானவர் அனைவருக்கும் நித்ய கதி-

தான் தான் கதி என்பதை கருதாமல்–என்னை விட்டானே–வதை செய்தானே–சேவை சாதிக்காமல் இருப்பதே வதை–
மீன் -ஜலம் விட்டால் வாழ்வு இல்லை போல -என் சினம் தீர்வன் நானே -ஆழ்வார்–கோபம் காட்டி தீர்த்து கொள்வேன்-அரையர்–
காலால் எட்டி உதைந்து கையால் அடிப்பது போல- ஆனந்தம் கொடுக்குமே -எம்பார் சொல்ல –முகம் திருப்பி–
துடிப்புடன் வருபவனை பார்க்காமல் இருப்பதே–வையகத்தார் மதியாரே-நம்ப மாட்டார்கள்-முதல் அர்த்தம்–
இனி மேல் மதிக்க தொடங்குவார்கள்–பிரி நிலை ஏ காரம்—அடுத்து -ஆழ்வார்கள் சொல்வதை மதித்து -ஏ காரம்-சொன்னது–
மழுங்காத -தொழும் காதல் — சுடர் ஜோதி மறை யாதே- போல காரணமே என்று அழைக்க மதி சக்கரம் நல வலத்தையாய்–
உண்டே -கேள்வி இல்லை- மறையும் -பிரி நிலை ஏ காரம்–மறையாமல் காத்தாய்–அது போல் இங்கும் –
மதிக்காமல் இருந்தால் நல்லது என்ற எண்ணம் ஆண்டாளுக்கு –பிரகிருதி சொரூபம்-தம் தம் அழிந்தாலும்
அத் தலைக்கு வரும் அவத்யம் பரிதவிக்கும் குடி- குறை வர விட மாட்டார்களே –விஞ்சி நிற்கும் தன்மை–பர்தா கேட்டவன் என்று நானே தேடி தருவேனோ–
ஞானம் பக்தி வைராக்கியம்- சொத்து பெற்ற -கிருஷ்ண பக்தி-ஐந்து குடிக்கு ஓர் சந்ததி இவள் தானே

நாகத்தின் அணையானை நன் நுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேம்கட கோன்  விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே  8-10–பல சுருதி சொல்லி தலை கட்டுகிறார்–

அவயவசோபை–நயந்து ஆசை கொண்டு–நாகத்தின் அனையான்–துடிப்பு உண்டு–அவனுக்கும் சேர்வதற்கு–
அறிவிக்கை ஒன்றே வேண்டுவது –படுக்கை தலை சாய்த்து இருகின்றான் நம் வரவை எதிர் பார்த்து -எழுந்தும் படுத்தும் –
திரு வேம்கடம் உடையான்- அரங்கன்–ரட்ஷிக்க அனுமதியே வேண்டும் -சத்யசங்கல்ப்பன்–நாரையை-
திரு கண்ண புரம் புக்கு–கீழே அணி அழுந்தூர் ஆ மருவி அப்பன்-இடம்
தூது  விட்டார்  திரு  நெடும்  தாண்டகம்
— வந்தவர்  தான்  தூது  விட்டார் – ஹனுமான் – அங்கே  மேகமும்  பதியாக  கொண்டு  இருந்தன  அதை  தான்  தூது  விட்டாள் —
திரு  வேம்கடத்தில்  நின்று  தூது   விடுவார்  யார்  என்று  தோதாக  இறங்கி  நித்ய  வாசம்  பண்ணுகிறான் —
மேகத்தை  வேம்கட  கோன்  விடு  தூதை —கொக்கு  நாரை  அங்கு  உயரமாக  போய்  இருக்காது  -உயரம்  இருவரும் —
திரு  அரங்கத்துக்கு  மேகம்  அனுப்ப  கூடாதே –அவசர  பிரதீஷனாக  இருக்கிறான் –பர்தா  மனைவி — சொல்லி  –
பெரியாழ்வார்  வயிற்றில்     பிறப்பை  நினைந்து  –ஜனன  பவன  -சமுத்ரம் – பெருமை  குறையாமல் – புக்ககம்  பெருமை  வளர்த்து  –
பரம  பதம்  பெருமை  சேர்கிறாய் –பட்டர் –போகத்தில்  வழுவாத  -கிருஷ்ண  அனுபவம் –ஒன்றும்  குறையாத  -அனைத்து  சேஷ்டிதங்கள் – நெஞ்சகம்  பால்  சுவர்  வழி  எழுதி  கொண்டேன் — அது  இது  உது  எல்லாம் — அடைய  பீஜம்  -புதுவையர்   கோன்  கோதை —
ஆகத்து  வைத்து  பாடுபவர்த்கள் — நெஞ்சில்  வைத்து  சொல்பவர்கள் —
ஆண்டாள்   பட்ட  பாட்டை மனசில்  வைத்து  -நிலையில்  -அடியார்  ஆகுவர் –நினைத்த பொழுதே இவள் போல தூது விடாமல் அனுபவிக்க பெறுவார்

பாடும் குயில்காள் ! ஈது என்ன பாடல்? நல வேம்கட
நாடார் நமக்கு ஒரு  ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருள கொடி வுடையார் வந்து அருள் செய்து
கூடுவர்  ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே–10-5-

அவனுக்கு நன்மை–இங்கு வந்ததால்–குயில்களை தான் குறை சொல்கிறாள் அவனை விட்டே கொடுக்க மாட்டாள்-
ஸ்ரீ வில்லி புத்தூர் வர காலம் பார்த்து இருக்கிறான்–சினை ஆறு பட்டால்போல –பெருக்காறு வரும் முன் —
வாழ்வு தந்தால்-இந்த்ரியங்களால் அவனை அனுபவிக்க -குயில்  பாடுவதை கேட்க்க காது இல்லையே –ஆடுகின்ற அசையும் –
கருட கொடு–வெற்றி –சூசுகம்–கருடனை பற்றி சொல்வது -இவள் இடம் கொண்டு சேர்க்க —
எப் பொழுதும்-சந்தோஷமாக இருக்கும் நித்யர்–எப் பொழுதும் துக்கம் சம்சாரிகள்- இரண்டும் வேண்டுமா —
யானை வரும் முன்னே -அவன் வருவதை– வந்து அருள் செய்ய வேண்டும்–அவனே வர வேண்டும் பர கத ச்வீகாரம்–
உகந்து வந்து அருளுவான் –ஆளவந்தார்- சிசுபாலனுக்கும் மோட்ஷம்–நமக்கும் –ஆசை ருசி உடன் பற்றினால் தான் மோட்ஷம் இனிக்கும்
இங்கு வைத்தால் இங்கு தாங்க மாட்டார்கள் என்று கொண்டு போனார்– ஐதீகம் பெரிய தேவ பிள்ளை- பட்டர் சிஷ்யர்-
வைத்து கொண்டே இருக்க கிழக்கே போக நஞ்சீயர் அகத்தில் உள்ளோர் பிழைத்தார்கள் –இங்கு இருந்து என் தலையே உருட்டலமே என்றார் பட்டர்

மழையே! மழையே! மண் புறம் பூசி உள்ளே நின்று
மெழுகுகூற்றினால் போல் ஊற்று நல் வேம்கடத்துள் நின்ற
அழகப்  பிரானார் தம்மை  என் நெஞ்சத்து அகப்பட
தழுவி நின்று என்னை தகைத்து கொண்டு ஊற்றவும் வல்லையே —10-8–

பெரிய திருமலை நம்பி இதையும் அடுத்த பாசுரமும் அநு சந்தித்து கண்ணும் கண்ணீருமாய் விச்தராய் இருப்பாராம்–
மண் குடம் போல சரீரம் இருக்கிறது –உள்ளே ஆத்மா கொண்டு போனான்- நெருப்பு அளித்தால் போல் அவன் அழகு–
ம்மை நெஞ்சத்து அகப்படை-கண்ணை திறந்தால்-தழுவு கொள்ளும் படி–கணையாழி- விரல்-கை -தோள்- ராமன்-கண்டு
சீதை பிராட்டி  ஆலிங்கனம் பண்ணி மகிழ்ந்தாள் போல -நெருக்கி–தகைத்து  கொண்டு–சேர்ந்து அனுபவிக்க-
உஷை-அநிருத்திரன் -சேர்த்து வைத்தால் போல மழையே சேர்த்து வை
மழையே மழையே– கேட்க்காது என்று இரண்டு தடவை கூப்பிடுகிறாள்

———————————–

1-3-/4-2-/-8- பதிகத்தில் -10-பாசுரங்கள் /–10-5-/ -10–8-/-14 / பாசுரங்கள்

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-

இவனே ஸ்ரீ உலகளந்த பெருமான்
மாவலியை நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள் உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய 
புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

திரு பல்லாண்டு –உண்டோ திரு பல்லாண்டுக்கு ஒப்பு–
வேதத்துக்கு ஒம் போல உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் தான் மங்களம் ஆதலால் –முதலிலும் முடிவிலும்–
இதன் விபரணமே மற்றவை எல்லாம்–தன்னை பார்க்காமல் அவனையே பார்த்து–
7 பாசுரங்கள்  திரு வேம்கடம் உடையான் மேல் அருளி இருக்கிறார்–
சீத கடலுள் அமுது அன்ன தேவகி பதிகம்–அவயவம் எல்லாம் அனுபவிக்க -பாத கமலங்கள் வந்து காணீரே-
தவழ்ந்த கண்ணன் -யசோதை பாவனை- அம்மம் ஊட்ட –
கண்ணன் வெண்ணெயோ பெண்ணையோ தானே எடுத்து கொள்வான் பிறர் ஊட்ட கொள்ளான் –

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பறந்து எங்கும்
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கட வாணன்  உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலி ! கடிதோடிவா 1-4-3-

தீர்த்தம் ஆடவும் கூப்பிட வேண்டும்–புளிதி அளைந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன்–
நப்பின்னை கானில் சிரிக்கும் -வா -என்பாள் யசோதை –அம்புலி காட்டி ஊட்டுகிறாள் —
நின் முகம் கண் உளவாகில் நோக்கி போ–கண் படைத்த பயன்–பார்த்த பின் போக முடியாதே —
தோகை கீதாசார்யன்-நடு பாகம் முக்கியம்-1 -10 வயசு வரை-அனைவரும் அனுபவிக்கும் பருவம் —
கை தலம் நோவாமே ஓடி வா–அவன் திரு முகம் ஒப்பு சொல்ல உன்னால் முடியாது–பிரயத்னம் எவ்வளவு செய்தாலும் முடியாது —
சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது–தேஜஸ் பதார்த்தங்கள் எல்லாம் அவன் திரு மேனியில் ஏக தேசம் கடன் வாங்கி-
ரசம் கந்தம் எல்லாமும் இப்படியே –பரம் ஜோதி –ஆஸ்ரித சேஷ்டிதங்கள் கொண்டவன்–வித்தகன்–
வேங்கட வாழ் நன் -வாணன் -நல்ல வாழ்வு-அனைவரையும் அவனை கூப்பிட இவன் உன்னை கூப்பிடுகிறான்
அவாக்யன்  அனாதரக –அவாத சமஸ்த காமன் –
நசிகேதஸ் -யமன் -இடம் கேட்டு-பரம பதம்-நலம் இல்லாதோர் நாடு–கால தத்வ்பம் இல்லை–சாம கான கோஷம்–

மோரைக் கண்டால் புருஷர்களையும் வயசான பெண் போல– ரஷணம் இவனே என்று இருக்கும் இளம் பெண்கள் போல–
ஆயர் சிறிமியறோம்– செல்வ ஸ்ரிமீர்கள்– சிறுவராக இருப்பதே செல்வம்–நெய் உண்ணோம் பால் உண்ணோம்-குடியோம் இல்லை–
எப்படி என்று பார்த்ததே இல்லை கண்ணன் பிறந்த பின்பு–ஏரார் இடைநோவ -கண்ணன் விட்டு பிறவாத இடை சீரார் வளை போல –
சங்கு தங்கு முன்கை நங்கை-பிரியாமலே இருப்பதால்–

————

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ  ! 1-8-9

தாடாளன்-ஓங்கி உலகு அளந்த உத்தமன்-நமுசி-பிள்ளை- பாணாசுரனும் பிள்ளை என்பர்–
மின்னு முடியன்–வேத அபகார குரு பாதக தைத்ய பீடா -பிரமன் ருத்ரன் இந்த்ரன் -ஆபத்துகள் போக்கி-இடர் கெடுத்த திருவாளன் –
ரமா பத்தி-நான்முகன் குறை கொண்டு குண்டிகை நீர் பேய்தான்-ஸ்ரீ பாத தீர்த்தம்–தானே பரத்வன்- முன்னும் முடி- இதனால்–
நிவந்த  நீள் முடியன்–அளந்த திருவடிக்கு பல்லாண்டு இல்லை –
சர்வாதிகன் என்பதால் திரு முடி–ஆதி ராஜ்ஜியம் அகில புவனானாம்–

———————

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற
மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா 2-6-9

கோல் கொண்டு  வா பதிகம்–திவத்திலும் பசு நிரை மெய்ப்பு உவத்தி -கன்று மேய்த்து உகந்த காளை–
கன்றுகளுக்கு நீர் குடிக்க குனிந்து கற்று கொடுப்பானாம்-மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா-
திரு வடி மதித்த  ஐஸ்வர்யம்–மின் இலங்கு பூண்-ஆபரணன் -அணிந்த விபீஷணன் நம்பி —
ராம பக்தி ப்ரேமம் கைங்கர்யம்-பூரணன்-நம்பி –

—————————-

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டை கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்! நீள் திரு வேம்கடத்து எந்தாய் !
பச்சைத்த மனகத்தொடு பாதிரி பூ சூட்ட வாராய் 2-7-3-

————–

போதார் கண்டாய் இங்கே போதார் கண்டாய்
போதரேன் என்னாதே போதார் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோது காலம் உடை குட்டனே! ஒ
குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா !
வேத பொருளே ! என் வேம்கடவா !
வித்தகனே ! இங்கே போதராயே  2-9-6-

———-

கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-

—————–

சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு
தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !
என்னையும் என் உடைமையும் உன் சக்கர பொறி ஒற்றி கொண்டு
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திரு குறிப்பே ? 5-4-1-

———————————————-

1-4-3-/1-8-9/2-6-9/2-7-3/ 2-9-6/ 3-3-4/5-4-1–ஆக ஏழு பாசுரங்கள் –

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ  ! 1-8-9-

————

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன்
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா — 2-6-9-

—————–

ஸ்ரீ கண்ணபிரான் இவன்
ஒ குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா ! வேத பொருளே ! என் வேம்கடவா ! வித்தகனே ! இங்கே போதராயே  2-9-6-
கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-
சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !– 5-4-1–

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்-ஸ்ரீ குலசேகரர் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

ஸ்ரீ குலசேகர பெருமாள்– ஸ்ரீ ராமன் பெயரை கொண்டார்-ஸ்ரீ ராமனுக்கே என்று இருந்தவர்—-
பெரிய பெருமாள்- கைங்கர்ய பாரிப்பு- ஒழிவில் காலம் எல்லாம் -ஏதேனும்  ஆவேனே —
நாம் சேற்றில் ஒரு கால் ஆற்றில் ஒரு கால்–குட பாம்பில் கை இட்டவர்–

ஞானம் கனிந்த நலம் கொண்ட பக்தி–ஸ்ரீ ராமாயணம் கேட்டு உதவிக்கு சேனைகளை கொண்டு போனார்–கர தூஷணர் விருத்தாந்தம் —
தோலாத தனி வீரர் தொழுத கோவில் -சீதை பிராட்டி ஆலிங்கனம் -சேர்த்தி சேவை காட்டி –வென்றான் சொல்லி மீட்டாரே —
ஸ்ரீ அனந்தாழ்வான் திரு முக் குளத்தில் மஞ்சள் கிழங்கு தேடினது போல–அவன் மேல் ஆசை– இதர விஷயத்தில் வைராக்கியம்–
அடியார் ஈட்டம் கண்டிட கூடுமேல்-அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை–
யதிவா ராவணச்யம் – ராவணனே வந்தாலும் கூட்டி வா என்றானே சுக்ரீவன்–மேல் விழுந்து ரட்ஷிப்பான் –
தேவர்கள் குரங்கு தன்மை அடைந்தார்கள்–அவனுக்கு கைங்கர்யம் பண்ண —
ருசி வளர்க்க இந்த ஷத்ரிய மனுஷ பிறவி மாற்றி ஏதேனும் ஆவதற்கு பாரித்தார்–
உரி அடி உத்சவம்-பட்டர் வித்வான் கோஷ்ட்டி விட்டு இடையர் உடன் சேர்ந்து அனுபவித்தார்–கிருஷ்ணா அனுக்ரகம் தான் எனக்கு முக்கியம்–
பகவத் சம்பந்தம் இருப்பதே சிறந்த ஜன்மம்–பிறப்பால் இல்லை-ப்ரக்ம ஞானமே வேண்டும்–
அணைய- ஊர  புனைய–ஆசை பட்டவர்–திரு அனந்தாழ்வான் அணைந்து -நித்யர் இதற்கே பாம்பு ஜன்மம்–ஊர்ந்து
புனைந்த கண்ணியாக ஆசை பட்டார்களே -அசித் ஆக இருக்கலாம்–அவனுக்கு என்று இருப்பதே குறிக் கொள் —
அடியும் பொடியும் பட–காழியன் கதம்பம் -சுகர் உத்தவர்-யமுனை தீரத்தில் பூத்த நீள் கதம்பு ஏறி-இந்த மரமாக பிறக்க ஆசை–
காமரு சீர் அவுணன்–மா பலியை கொண்டாடுகிறார்-வாமனனை நேராக பார்க்க பெற்றானே–திருவடி பட–போடி-சரண ரேணு-
ராச கிரீடை பொழுதும் கோபிமார்கள் உடன் -பர்வத பவனங்களில் பிறக்க ஆசை பட்டார்களே–
தவ தாஸ்ய ரசம் தெரிந்த அடியார்களின் வீட்டில் புழுவாக பிறக்க ஆசை–எதேனுமாக ஜனிக்க பெறுகிற —
சொல்லி சொல்லி பார்த்து அதுவும் நீயே -முடிவு செய்து கொள்–
உயர்ந்த பிறவி எடுத்த ஷத்ர்ய ராஜா -சொன்னால் தானே புரியும் என்று இவரை இப்படி அருள வைத்தார்–

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு    ஏழ்    வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்   பிறப்பேனே– 4-1

கோனேரி வாழும் குருகு-நாரை-சுவாமி புஷ்கரணி -விரஜை போல்–கோன்=சுவாமி –புஷ்கரினிகளுக்கு ஸ்வாமினி –தலைவி–
அவனுக்கு புஷ்கரணி– தீர்த்தம் ஆடுபவரை சுவாமி ஆக்கும் –ஊன் ஏறு செல்வம் -மாம்சம் ஏறும் உடல் பிறவி வேண்டாம்–
புஜ பலம் ஷத்ரியன்-வேண்டாம்–தேகம்-பேருக்கும் -வளரும்- சரீரம்-இளைக்கும் சுருங்கி கொண்டே வரும்–ஒரு படி பட இருக்காது–
யான் வேண்டேன்–யான் சொன்னது–பட்ட பாடு எனக்கு தெரியும்–ஷத்ரியன்-யான்-உசத்தி தெரியும் படி- நாவினால் நவிற்று —
வாயால் தான் மனசு சகாயம் இன்றி –நாக்கு மட்டும் சொல்லி –ஆண் -ரிஷபங்கள்– வென்றான் நப்பின்னைக்கு —
நம் விரோதிகளையும் முடித்து ஆட் கொள்வான்–கூன் வளைந்த -சங்கம்–விநயம்-அடிமை திறம் தெரிந்து கொண்டு–இடத்தான் வேம்கடத்தான்-
தனியாக இடம் சொன்னது–அத்வீதியம்—வல கை ஆழி திரு மார்பில் இருக்கும் மாதுக்கு பல்லாண்டு–
கோனேரி வாழும் குருகு– இருக்கும் இல்லை– இருப்பதே வாழ்வு–

அடுத்து சொர்க்க அனுபவமும் வேண்டாம்-தொழுது எழு -தொழுதாலே எழுந்து விடலாம்–
சிறகு முளைத்து பறக்குமே தோன்ற–பிறவி வேண்டாம் என்று ஆரம்பித்து குருகாய் பிறப்பேனே –
நாலாவது வரியில்–குலசேகர ஆழ்வார் ராஜ்ய பிறவி வேண்டாம்-கைங்கர்ய-சரீரமே நான் நினைக்க கூடாது தேக ஆத்மா விவேகம்..
நானே சரீரம் -ஜீவாத்மா ஆகிய நான் பகவானுக்கு சரீரம் சொல்லலாம்அடுத்து மீன்-சிறகு இல்லையே -பிறவி வளர்த்தல்  இறப்பு எல்லாம் இங்கு தானே —
சொர்க்கமும் வேண்டாம் –தலை குப்புற தள்ள -இன்று இல்லை புண்ணியம் தீர்ந்ததும் -ஆனாத செல்வம்-இளமை –தன்னை சூழ-வேண்டாம் என்று
சொன்னாலும் சூழ்ந்து கொள்ளும் -ஐஸ்வர்யம் வைராக்கியம் இன்றி கொஞ்சம் ஆசை -கொள் என்று பெரும் செல்வம்–
வந்தாய் போல் வாராதாய் வாராதாய் போல் வருவானே –இவனும் கொள் என்று மூடும் இவை என்ன உலகு இயற்க்கை–வைராக்கியம் வேண்டும் —
திருவடி விலகாமல்–வானை ஆளும் செல்வமும் மண்ணகமும் வேண்டாம்–குற்றம் சொல்ல வில்லை ஈஸ்வரன் படித்தவை-
எனக்கு வேண்டாம் சொரூபத்துக்கு விருத்தம் -என்கிறார்

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை  திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே — 4-2

-தேன் ஓடும் —சுனையில் மீன் –விதி என்கிறார் – பிறவி கூட வேண்டாம் -அடுத்த பிறவியில் கிட்டும் என்று விதித்தாலே போரும்
சுனையில் தண்ணீர் வற்றினால்-மீன் -பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன் ஆவேனே –படிக்கம்–கைங்கர பரராக–தூய பேரு நீர் யமுனை–
அதர அம்ர்தம்  பெற்ற தூய்மை–பின் இட்ட -பிரமனுக்கு  பின் /சடையும் பின்-/வைகுண்ட வாசல் வழியாக போகிறோம்–
இந்த பாசுரம் தான்- வைகுண்ட நீள் வாசல் பெயரை கொடுத்தது –பணிக்கு போகிறார் உள்ளே புக விட என்பார்கள்–

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3

ஒண் பவள வேலை வுலவு  தண் பாற் கடலுள்
கண் துயிலும்  மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே– 4-4

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
நம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே 4-5

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன்  ஆவேனே 4-6

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே 4-7

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய  பெரு  வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே 4-8

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே 4-10

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன்  இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும்  கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11

திரு பாற் கடல் போக ஆசை–வேலை-சமுத்ரம்-பவளம் கொண்டு போடும்–கண் துயிலும் மாயோன்–ஆயோன்–
காண்பதற்கு –நாயனம் ஒத்து ஊதுவது ஆலத்தி வைத்தல் போதல் சுருதி போட்டி போல –
வண்டுகள்–ஆழ்வார் பாட –செண்பகமாய் நிற்க ஆசை–ச்தாவரமாய் நிற்கவும் அமையும்–முன் குருகு மீன் சொல்லி–
செண்பகம்–வாசனை உடன் தலையில் வைத்து கொள்வார்- தம்பகம்-கள்ளி செடி போல –தவம் உடைவேன்–
ம்ப மத யானை -மேல் ராஜா போல -இவர் உண்மையாவே ராஜா–இது  வேண்டேன்–எம்பெருமான் ஈசன்–
ஸ்ரீ ரெங்க நாத மம நாத அரங்கம் ஆளி என் ஆளி போல–அகில ஜகத் சுவாமி அசமத் சுவாமி—
வெந்நீருக்கு விறகு உபயோகிப்பார்களே -மாற்றி-போர் குவடு- உச்சி -ஒரு பகுதி ஆனால் -நித்யம் ஆக இருக்கலாமே –
மேனகை போல்வார் -ஆடல் பாடல் ஆதரியாமல்—வண்டினங்கள் பாட்டு வேண்டும்–அதை போன்ற பொற் குவடி–
எதை போல அத்வீதியம்–சிகரம் ஆகி இருந்தால் ஏறுவார் பாத ஸ்பர்சம் கிட்டாதே– கானாறு ஆகலாம் என்றார் அடுத்து —
வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் போல்- வேண்டாம்–கோன் போல வீட்டரு இருந்து கொண்டாடும் செல்வம் வேண்டாம் —
அருவி ஓடி வரும் -நிலத்தில் இருக்கும் காட்டு ஆறு–வெள்ளம் வடிந்தால் நின்று போகும் –திரு வாடி பட்டு கிளம்புவார்களே –
வழியாகவே இருந்து விட்டால் அடியார் பாதம் கிட்டுமே –அதை பாரித்தார் –வெறி ஆர்ந்த -மணம் -வழியாக ஆக வேண்டும்–
செடியாய –படியாய் கிடந்தது உன் பவள வாய் பார்த்து இருக்க வேண்டும்–பாபம்-சம்சாரம்- திரு மாலே -புருஷகாரம் உண்டே–
நெடியானே-நினைமின் நெடியானே–நினைவு நீண்ட காலம் வைத்து கொள்வான்–என் அடியார் அது செய்யார்–செய்தாலும் நன்றே செய்தார் –
சேர்ப்பித்தார் கூட  வந்தாலும் பிரிக்க முடியாது —
பிரயோஜனாந்த அநந்ய அனைவரும் கிடந்தது -படியாக- அசித் போல பர தந்த்ரர்–
உன் ஆனந்தம் பட்ட உடன் சிரிக்கவும் வேண்டும் –இரண்டையும் கேட்கிறார்
செம் பவள வாயான்–நித்யன்-எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும்–ஆவேனே–
அனந்தாழ்வான்-திரு வேம்கடம் உடையானாக இருந்து –எது என்று எனக்கும் அவனுக்கும்  பக்தர்களுக்கும்
தெரியாமல் ரகஸ்யமாக இருக்கட்டும்– தெரிவது முக்கியம் இல்லை –அனுபவமே முக்கியம் –பல சுருதி சொல்லி தலை கட்டுகிறார்–
எடுத்து ஆளும் படி-பாங்காய பக்தர்கள்– கஷ்டம் இன்றி கைங்கர்யம் பெறுவார்கள் –பிராப்ய பிரதானம் ஸ்ரீமன் நாராயணனே –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குலசேகர பெருமாள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்-ஸ்ரீ திரு மழிசை–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

திரு மழிசை- மகீசார ஷேத்ரம்–மகி=பூ மண்டலம்–அதில் சாரமான இடம்–புலவர் புகழ் கோலால் தூக்க-ஆழ்வார் பிறப்பால்-வந்த ஏற்றம்–
அயோநிஜர் முதல் ஆழ்வார்கள் பூவில் தோன்றி– திரு மழிசை-பிறந்தது பிராமண குலம்- வளர்த்தோ –பங்கய செல்வி  வளர்த்த தாயார்-
திரு  வாளன்-வளர்த்த தந்தை- -பிரம்பு அறுத்து ஜீவனம் பண்ணினவர்கள்-ஒரு பிறவியில் இரு பிறவி ஆனார் கண்ணன் போல-
தாய் தந்தையர் இருவர்–சயனித்த பெருமாள் மேல் மிகவும் ஈடுபாடு இவருக்கு–
திரு குடந்தை–கனி கண்ணன்-சிஷ்யன்–திரு வெக்கா -யதோத்தகாரி-சொன்ன வண்ணம் செய்த பெருமாள்–
வாய் கொண்டு மானிடம் பாடேன்-என் நாவின்கவி ஒருவருக்கும் கொடுக்கிலேன்-நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே —
சில மானிடத்தை புயலே என கவி போற்றி செய்யேன் கனி கண்ணன் போகின்றான்—நாகணை பாயை சுருட்டி கொள்–
எவ்வாறு நடந்தாய் எம் ராமாவோ-ராமன்-சீதை-லஷ்மணன்-பிரணவம் கால் கொண்டு நடந்தால் போல அங்கு–
இங்கு ம காரம் சிஷ்யன் முதலில் ஆசார்யன் உ நடுவில் அடுத்து அ காரம்  —
பிரணவத்தின் பிரதி போல –ஓரிக்கை- ஓர் இரவு இருக்கை–இன்றும் தை மகம் உத்சவம்-

பை நாக பாயை விரித்து கொள்–ஆதரவு/ பாசம் கொண்டு சொன்ன வண்ணம் செய்த பெருமாள்–
த்வாபர யுகத்தில் அவதாரம்- நம் புவியில் -4700 இருந்தான் வாழியே–எழில் சந்த விருத்தம் 120 /நான் முகன் திரு அந்தாதி 96/
திரு குடந்தை-பெரும் புலியூர் அடிகள் சத் காரம் பண்ணி–பிரதட்ஷனம் கர்பிணி பெண் போல மெதுவாக செல்ல வேண்டும் குணம் நினைந்து கொண்டு–
ஆரா அமுத பெருமாள்-இவர் பிரதட்ஷனம் பண்ணும் பொழுது பக்கம் நோக்கி பார்க்க–ஆரா  அமுத ஆழ்வான்–
திரு மழிசை பிரான் தையில் மகத்தில் இங்கு உதித்தான் வாழியே -சக்கரம் அம்சம்–உறையில் இடாதவர்–நாவை–
உபாசனம்  பண்ண வேண்டியதை  யாரை என்பதை முதல் ஆழ்வார்கள் சொல்ல அதில் களை அறுக்கிறார் –

இவர்–20 பாசுரங்கள்-
சிவ வாக்யர் என்ற பெயர் உடன் இருந்தார் சங்கரம் சாக்கியம் எல்லாம் கற்று இங்கு வந்தார்–
தம்பு செட்டி  தெரு பக்கம் பவள கார தெருவில் வேணு கோபாலன் சந்நிதியில் அர்ச்சை ரூபத்தில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்தார்

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண்
ஓன்று சென்று அது  ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவன் அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே–திருச்சந்த -48

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்திருந்து   தேன் பொருந்து பூம் பொழில் தழை  கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே—60

நிற்பதுவும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நல் பெரும் திரை கடலுள் நானிலாதா முன் எல்லாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே–65

நிற்பதுவும்-வெற்பகத்து நிற்பதும் என் நெஞ்சு உள்ளே -முதல் பைத்தியம் பிராட்டி இடம் -திரு மால்- முடி சோதியாய் –திரு மாலே கட்டு உரையே–
திருவே மாலா — மாலே திருவா–திரு குடந்தை சாரங்க பாணி- கோமள வல்லி தாயார்- சாரங்க பாணி தளர் நடை நடவானோ–சக்கர பாணி அல்லையே –
ராம சுவாமி திரு கோவில்- அவனும் அவளும் சேர்த்தி உத்சவம்-  திரு கோலம் மாற்றி சாத்தி- சேவிக்கணும் —
கல்லும் கணை கடலும் வைகுண்ட மா நாடும் புள் என்று ஒழிந்தன கொள்—அன்று நன் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்-
ஞான பிறவி-நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சு உள்ளே -இளம் கோவில் கை விடேல்—திரு மலை-ஓர் -அத்வீதியமான –
கானமும் வானரரும் வேடம் உடை  –வேம்கடம்-சொவ்சீல்யத்தில் அத்வீதியம்–திரு மால் இரும் சோலை கள்ளருக்கு- போலி சொல்ல முடியாது –
நல் பெரிய -அவனை கொண்டதால்- திரை-அலை-ஆயாசம் தீர திருவடி வருட–நாம் சேவிக்க தாபம் தீர்க்கும் —
திருவடி தீண்டும்- -மன்னாத பெருமாள்-நீள் ஓதம்-வந்து அலைக்கும் மா மயிலை மா வல்லி கேணியான்–
நான்கு -அற்புதன் -ஆச்சர்ய சேஷ்டிதங்கள் உடையவன்– இவரையும் அருளி பாட வைத்தானே– அனந்த சயனன்- சர்வேஸ்வரன் —
ஆதி பூதன் -ஜகத் காரணன் -முழு முதல் கடவுள்–மாதவன்-பிராட்டிக்கு சுவாமி –இதனாலே மற்றவை–
தாளும் தோளும் சமன் இலாத பல பரப்பி- -மூன்று துவார சேவை-நித்யர் தேவர் அடியவர் சேவை என்பதால் சர்வேஸ்வரன்–
பரத்வம் காட்ட நான் அங்கு போக -போக்யதை காட்ட அங்கு போக வந்து சேர்ந்தான்-சுலபன் என்று போக அவனும் வந்தான் —
இன்று தன் நின்றான் இருந்தான் கிடந்தான் உகந்து –முன்பு நிர்பந்தம் நின்றது இருந்தது  சயநித்தது —
இப் பொழுது தான் பலன் பெற்றான் –சேர்தியால்–அந்தாமத்து அன்பு செய்து -ஆரம் உள -ஆழ்வார்

கடைந்து பால் கடல் கிடந்து  கால  நேமியை கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய்
மிடைந்த வேழ்  மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-திருச்சந்த -81-

அடைந்தாலே உய்யலாம்– நாளும் நாளும் அடைந்து –தனக்கு தானே வீடு கட்டி கொண்டான்- கோது  கழித்து தான் அமிர்தமாக கிடந்தான்–
இனி யாராவது வருவார் களா என்று  பார்த்து கொண்டு கிடக்கிறான்–கால நேமி கொன்றான்–தன் தனக்கு-தம்பி தனக்கு-
கடை குறைத்தல்-வாலிக்கும் உதவினான் –எம்பியை உம்பிமார்கள் இகழ் வரேல் தடுத்தி-வெற்று அரசு எம்பி எய்தி வீட்டு அரசு எனக்கு ஈந்தான்-
உதவி–ராம பாணத்தால் கிட்டியதே–தம்பி தனக்கே –தன் தனக்கே உதவ வந்த –மால்-அவன் பாதம் அடைந்து உய்ய வேண்டும்–

குறிப்பு எனக்கு கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ ?
வேம்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்—நான்முகன்-34-

அகிஞ்சனர் நிதி-ஸ்ரீநிவாசன் தயை–நிரஞ்சன ஹேயம் குற்றம் அற்ற தயை-அனுகம்பா–தயா சதகம் -தான் கடத்தும் தன்மையான்-ஸ்வாபம்–
மெய் வினை- சரீரத்தால்-சம்சாரம் கடத்தும் தாள்–தானே பண்ணுவான்–கேட்க்காமலே –தண்ணீர் குளிர்வதும் அக்னி சுடுவதும் போல இவனுக்கு ஸ்வாபம் இது —
மாதவ பெருமாள் கோட்டியூரில்– ஆசை உடையார்க்கு எல்லாம்ஆரியர்கள் கூறும் என்று  ..பேசி வரம்பு அறித்தார் பின்–மேயான்- நித்ய வாசம்-ஏத்துவது –
நன்மை பயக்க -ஆத்மாவுக்கு உஜ்ஜீவனம்–ஆத்மா தாஸ்யம் -ஹரி சுவாமி -சேஷத்வம் மறக்காமல்-மேல் விழுந்து -மெய் வினை-கர்ம-ஜன்ம-
மெய் வினை நோய்- வினையால் நோய் ஏற்படுவதுமே சத்யம்–சரீரத்தால் வந்த நோய்–வியாதி -பிறப்பு-அனைத்தும் தொலையும் –
தங்கள் தங்கட்கு நல்லனே செய்வார் ..அது சுமந்தார்கட்கே– வேம் கடன்கள் மெய் மேல் வினை முற்றவும்–பாபங்கள் எரிக்க படும்–
இதில் நன்மை பயக்க–அங்கு மெய் மேல் வினை முற்றவும் –இனி பிறவி இல்லை–வந்த சீதேவியை காலால் உதைப்பெனோ–வெறுப்பனோ

அழைப்பன் திரு வேம்கடத்தானை காண
இழைப்பன்  திரு கூடல் கூட மழை பேர்
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை
வெருவி அரவோடு ஓங்கும் வெற்பு–39

மணிகள்-ரத்னங்கள்-அருவி கொண்டு வர -வரன்றி-பேர் அருவி- அரித்து கொண்டு வர-பாம்பு மின்னல் யானை-நெருப்பு- பயம்–
இதை பார்த்து ஓட-இயற்க்கை அழகை அனுபவிகிறார்–மதம் பிடித்து ஓட-அரவு வாய் குகை போல யானை ஒடுங்கிற்றாம்-
மலை பெருமை காட்ட -கறிய மா –பெரிய மாசுணம் பெயர-திரு பிதிரி -மேகம் பார்த்து யானை என்று நினைந்து பாம்புகள் மலை போல நகர -ஜோஷி மட்-
அழைப்பன்-தர்சனத்துக்கு -வாய் வெருவி அவன் காது கேட்கும் படி-மோட்ஷம்  வேண்டாம்–கண்ணே உன்னை காண —
அதற்க்கு காட்சிக்கு கண்ணாக நீயே இருக்க வேண்டும்- கண் -வழி-உபாயம் உபேயம் அவனே–பாவியே என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே–
முன் சேவித்தால் ஹ்ருதய முடிச்சுகள் போகும் பாபங்கள் எரிக்க படும்–தாமரை அலர்ந்து குவிந்து-திரு முகம் -உன் பேச்சு கேட்பதே வேணும்–
அவன் திரு முகம் மலர்தலே மோட்ஷம்–கோவிந்த நாமம் சொல்லி அழைப்பன்-காணும் வரை-கூடிடு கூடலே-போல பார்ப்பேன்–

வெற்பு என்று வேம்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற
நூல் வலையில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டு இருந்தேன் காண்–40

அதுவும் அவனது அருளே- வெற்பு என்று –மலைகள் பெயரை சொல்ல-மனசு சகாயம் இன்றி-ஏனோ தானோ என்று–வீடு கொடுத்தானே–
மலை அப்பன் அவன் ஒருவன் தானே -எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெற்றது போல–
திரு மால் இரும் சோலை என்றேன்–திரு மால் வந்து புகுந்தான்- கெடும் இடையாரவன எல்லாம் கேசவா என்ன–நின்று நினைகின்றேன்–

ஈஸ்வரி ஜகத்துக்கு -தாய்-ஜகத்துக்கு-நியமன சாமர்த்தியமும் உண்டு—-ஜகன் மாதரம் வந்தே–சங்கல்பத்தால் திருத்த முடியும் சக்தி கொண்டவள்–
ஜகத்தில் அவனையும் -சேர்த்தால் விஷ்ணுவும்- அவன் சொல் படி கெடப்பான்-கற்கின்ற நூல் வலையில் பட்டு இருக்கும் நூலாடி கேள்வன்-
ஸ்ரீ வல்லபன்–அவள் கால் வலையில் படு கிடக்கிறான்-விசேஷ அர்த்தம்-நியமனத்தால் இல்லை-அவனே ஈஸ்வரன்–வல்லபன்-
அழகால்-புருவ நெறிப்பே   பிரமாணம்–உறை மார்பன்–அனுசூயை-சீதை-  ராமனின் குணம் பிரிக்க முடியாதே –
குண கிருத தாஸ்யம்–சொரூப கிருத தாஸ்யம்–நித்ய வாசம் இருந்து பொறுமை வளர்கிறாள்-பத்ம அலன்க்ருதம் பாணி பல்லவம் யுகம்-
மொட்டு விட்ட -திரு கைகள்-பத்ம ஆசனம்-அமர்ந்த அழகையும் திரு கைகள் அழகையும் காட்டி வளர்கிறாள் —
ஸ்ரியம்-வாட்சல்யாதி குணங்களை கிளப்பி விட்டு-குனோஜ்வலாம் பகவதீம்-இவளுக்கும் உண்டே–பகவதீம் ஸ்ரீயம் தேவீம்-கத்யம்–
ஆறு கல்யாண குணங்கள் ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ்–துல்யம்–அவள் குணங்களை கிளப்பி விட நம் இடம் காட்ட வேற உதவி வேண்டாம்-
இவளை கண்ட உடன் அவனுக்கு பிரசவிக்கும்–ச்வாதந்த்ர்யம் சாம்பல் போல பூசி இருக்கும் -இதை விலக்க அவள்–
தலை சாயும் ச்வாதந்த்ரம்-தலை எடுக்கும் கல்யாண குணங்கள்–நின்று நினைகின்றேன்-சஞ்சல மனசு–
குணத்தில் பொறாமை பட்டு உயர்த்தி கொள்ள வேண்டும் –இந்த்ரியங்கள் கொண்டு அவனை அடைய உபயோகிக்க வேண்டும்–
கற்கின்ற நூல் –கால் வலையில்- பட்டு இருந்தேன்–கற்கின்ற நூல் -வேதம் இதிகாசம் புராணம்-வலை ரட்ஷிக்கும்–அகப் படுத்தி கொள்ளும் நம்மை–
இதில் பட்டு இருந்த நூல் ஆட்டி- ஸ்ரீ தேவி நாச்சியார்–இவளுக்கு பரிகாரம் தான் சரஸ்வதி- சம்சாரி யில் ஒருத்தி –
நவராத்திரி 9 நாள் உத்சவம் ஸ்ரீ தேவிக்கு தான்//விஷ்ணு பத்னி–ஈஸ்வரி-நியமிகிறவள்–நூலாட்டி கேள்வனார்–இவர் வலையில் பட்டு இருக்க வேண்டும்–
வேதம் வேதாந்தம்–நூலாட்டி-மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு–சாரம்–நாராயணன் கேசவன் சொல்லாமல் மாதவன்-அவளின் சுவாமி என்பதால்–
இதனால் இந்த பாசுரத்துடன் துவய அர்த்தம் சேர்த்து அனுசந்திப்பது என்று வியாக்யானம்–அவனுக்கு இருப்பதால் பிரித்து பேசாது -அதனால் –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ் உலகத்துக்கு எவ் –நின் புகழின்–மாது வாழ் மார்பினை–உடனே சொன்னார்–ஸ்ரிய பத்தி திருவடி பிடித்து பெற்றேன்

கானல் உறுகின்றேன் கல் லருவி   முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர பேணி
வரு வேம்கடவா ! என் உள்ளம் புகுந்தாய்
திரு வேம்கடம் அதனை சென்று  –41-

காணல் உறுகின்றேன்-..-அங்கு போய்–கல் அருவி -பட்டு ஓடி வருகிறது– முத்து உத்திர– விழ ஒழி– பல்லாண்டு பாட நிறைய–
பேணி ஆசை உடன் நாடி வருகின்றார் –நீ வந்து ஏன் உள்ளம் வந்தாய்–இங்கு இருந்து தானே வந்தாய்–அதனால் சென்று காணல் உறுகின்றேன்–
வேட்டகத்தை விரும்பி பிள்ளையும் புக்ககத்தை பெண் விரும்புவது போல–ஆசை மாறாமல் இருக்கும்–உள்ளத்தில் -பாபத்துக்கு உற்பத்தி-
அங்கு வேம்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்– கல் அருவி முத்து -இங்கு ரத்தமும் சீழும்/அங்கு ஒண் விழாவின் ஒலி- திரு வோண திரு விழவு —
இங்கு நான் வைத்து கொண்டு இருக்கிறேன்– அங்கு பேணி வரும் வேங்கடவன் இங்கு வந்தவனை ஏன் வந்தாய் என்றுவிலக்கும்-என் உள்ளத்தில் –
வாத்சல்யம்-ஒரே குணம்–அங்கு ஸ்வாமித்வம் பரத்வம் காரணத்வம் போன்ற பல–நான் திரு வேம்கடம் விட்டு வர முடியாது

சென்று வணன்குமினோ சென் உயர் வேம்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் –என்றும்
கடி கமல நான் முகனும் கண் மூன்றத்தானும்
அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு–42-

அடி கமலம் இட்டு -அநிஷ்டம் போகும்–இஷ்டம் கிட்டும்-பிரமன்/முக் கண்ணான்–இரவில் தேவர் பூஜை/
பத்ரியில்- தீபாவளி- சித்தரை அஷய கிருத்திகை வரை தேவர்கள் பூஜை–நாரதர்-அர்ச்சகர் -ஏழு பேர் உண்டு கற்ப கிருகத்தில் —
குபேரன் கருத்மான் பத்ரி விசால்  உத்தவர்   நாரதர்  மேல் நர நாராயணன்வடக்கு திக்குக்கு அதிபதி -குபேரன்-காசாளர்-அகண்ட தீபம் –
திரு கதவு திறந்த பின் எரிந்து கொண்டு இருக்கிறது–சுமந்து மா மலர் நீர் சுடர் தீபம் கொண்டு அமர்ந்து வானவர் வானவர் கோன் உடன்–
ரஷைதிக தீஷை-கங்கணம்-கட்டி கொண்டு–சேன் உயர் வேங்கடம்–ஆகாசம் அளவு உயர்ந்து-இருக்கும் இடத்திலே கை கூப்பலாமே–
நீர்மையால்-நின்று வினை கெடுக்கும்–வேங்கடத்தில் நின்றுநம் வினை கெடுக்கும்–வந்கடத்தில் நாம் நின்றாள் வினை கெடுக்கும் –
நீங்காமல் நிற்கும் வினை கெடுக்கும்-கர்ம விட்டு பிரியாதே–நீர்மை-ச்வாபம்–நாம் பிரார்த்திக்காமல்-உன் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி–
சவாசனமாக போக்கி-அநிஷ்டம் போக்கி–கடி கமலா நான்முகன்–தாமரை மணத்தில்-இருந்து திரு வடி தாமரை யில் பரிமளம்-
சர்வ ரச சர்வ கந்த பார்த்து ஏத்த வந்தான்–ஸு பாஸ்ர்யமான திரு மேனி தான் கந்தம் ரசம்-ஒளி-தேஜஸ்- அனைத்துக்கும் இருப்பிடம்–
கடி கமலம் விட்டு–கண் மூன்றத்தான்–ஆரோக்கியம் பாஸ்கரன்-ஞானம் சங்கரன்–பிரதிநிதி மூன்றாவது  கண்–
இவனும் ஞானம் பெற்றது திரு வேம்கடத்தான் இடம்–முடவன் எழுந்து ஓடி குருடன் பார்க்க ஊமை பேச–இவர்களும் மோட்ஷம்-பெறுவான் என்பதே சப்ரதாயம்–
கர்ம ஆதீனம் பட்டே தீர்க்கணும்புஷ்ப மண்டபம்–அனந்தாழ்வான் தோட்டம்-திரு வேங்கடம் உடையவன் இரண்டு தடவை எழுந்து அருளி-
அப் பிரதட்ஷினமாக ஒரு தடவை-/கடப்பாறை–பச்சை கற்பூரம்  சாத்தி கொண்டு-பெருமை

மங்குல் தோய் சென்னி வட வேம்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் -திங்கள்
சடை ஏற  வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏற தாங்கு வித்துக் கொண்டு—43-

நித்யம் வந்து சேவிக்கிறார்கள் –சந்திர சேகரனும்—தாமரை மேலானும்–குடைகுவித்து கொண்டு– சத்திரம் சாமரம் கொண்டு —
ரட்ஷகனே வந்து சேவிக்க-வந்ததை சொல்கிறது–மேகங்கள் தோய்ந்து இருக்கும் சிகரம்–கங்குல்-இரவு–முதல் அர்த்தம்–
சாயம் கால பொழுதில்–நித்ய அனுசந்தானம்–அந்த வேளையில்– காப்பணிவான்–கப்பை அணிவிக்க– ஆராதனம் -பண்ணும் பொழுது –
காப்பு-பல்லாண்டு-மங்களா சாசனம்// திரு வந்தி காப்பு அணிவான்-ஹாரத்தி–பாசுரத்தின் மர்மம் அறிந்து வியாக்யானம்–கற்பூர நீராஞ்சனம்–
நெய் திரி –அக்னி தெய்வம்-என் ஒளியால் அவன் சேவை என்று நினைப்பதால் இதை சேவிக்க வில்லை ஸ்ரீ வைஷ்ணவர்கள்–
கும்ப ஹாரத்தி-ஜெய விஜயீ பவ–இதுவே மங்களா சாசனம்-

கொண்டு குடம் கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேம்கட மலைக்கே
போம் குமரர் உள்ளீர் ! புரிந்து–44-

குமரர் -இந்த்ரியங்கள் கட்டு படுத்தி-கிழார் ஒளி இளமை கேடுவதன் முன்-திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின்–
செல்ல பிள்ளை–விஸ்வ ரூபமே மெதுவாக–காலம் வீண் ஆவதற்கு முன்-சீக்கிரம்-ராவணன் தபஸ்-
சிறிய குழந்தை எம்பெருமான் பரமன் மடியில் இருந்து -தலையை கீறி-எண்ணி சிரித்தாராம்-எங்கும் –
உன் உடைய விக்கிரமம்–ஒன்றுஒளியாமல் எல்லாம்-எழுத்தி கொண்டேன்
தண்ட அரக்கன் -தண்டிக்க பட வேண்டிய அரக்கன்- -பண்டு-வரம் கேட்க்கும் காலத்தில்-எண்ணி போம்-எண்ணி விட்டுமறைந்தான் —
அவன் நிற்கும் இடம் திரு வேம்கடம்–இந்த சரித்ரம் முதல் ஆழ்வார்களும் அருளி இருக்கிறார்களாம்–
வயசு ஆவதற்கு முன்-மகா ஞானி குழந்தை போல் –பரம ஆத்மா ஞானம் உடையவர்கள் போக –ஆமே அமரர்க்கு அரிய –
பாதமத்தால் எண்ணினான் பண்பு பொய்கை ஆழ்வார் /வாய்ந்த குழவியாய் மூன்று ஏழு எண்ணினான்-பேய் ஆழ்வார்

புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம்
பரிந்து படு காடு நிற்ப –தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேம்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–45-

வானோர்க்கும்-நித்யர் மண்ணோர்க்கும் வைப்பு- நிதி- –வைத்த மா நிதி–திரு வடியில் தேன் கொட்ட அதை நிறுத்த புரிந்து மலர் இட்டு –
பல்லாண்டு  பாடி—பிரதி பலன் எதிர் பார்க்காமல்–பர துக்கம் சகியாமல் இருப்பதே ஸ்ரீ வைஷ்ணவர் லஷணம்–வேர் அற்ற மரம் போல விழுந்தான்-
செய்த உதவிக்கு வேற ஒன்றும் கொடுக்க முடியாதே-லவ குசர் ஸ்ரீ ராமாயணம் பாட ரிஷிகள் ஆசீர்வாதம்-தபஸ் வலிமை-
வேதத்துக்கு ஓம் போல உள்ளத்துக்கு எல்லாம் மங்களம் திரு பல்லாண்டு–எங்கும் தெரிந்து ஓங்கி நிற்கின்றான்–
மலை போல அவன்-அரு பட்ட மரம் போல் நாம்- தன் அருவி வேம்கடம்

வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று
எப் பொழுதும் கை நீட்டும் யானையை –எப்பாடும்
வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேம்கடமே
நாடுவளைத் தாடுது மேல் நன்று–46-

நாம சங்கீர்த்தனம்–தலை கீழாக ஆடி–யானை கை நீட்டி ஓடி-சந்த்ரனை விளக்காக வைக்க-பிடிக்க –
மா மதி மலையில் இருந்து கை கீட்டி- சேன் உயர் வேம்கடம்–மால்-பைத்தியம்–அவனால் ஆனைக்கு–எப் பொழுதும் நீட்டி கொண்டு–
ஆசையின் பாரிப்பால்–வேடர்  யானை பிடிக்க–நால் புறமும் சூழ்ந்து ரஜோ தமஸ் குணம் கொண்டு–வில் எடுக்கும் குறவர்–
ரட்ஷிக்க-எப்படி- ஒரே ஜாதி தானே–வேடு வளைக்க குறவர் வில் எடுக்க–வெளி வேடர் -திரு வேம்கடத்து குறவர்–மாற்றி–
கைங்கர்யம் பண்ணும் பொழுது ரஜோ தமஸ் குணம் இருந்தாலும் ரட்ஷிக்க தான் வருவார்–எப் பிறப்பு-
கைங்கர்யம் பண்ணனும் இல்லை கைங்கர்யம் பண்ணுபவரை ரட்ஷிக்க வேண்டும்–
சம்சார நோக்கு இன்றி இருப்பார் கைங்கர்யம் பண்ணுபவர் –அறிவு இல்லா யானையும் குறவரும் போல –

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோள் அரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் –பன் மணி
நீரோடு பொருது உருளும் கானமும் வானரமும்
வேடும் உடை வேம்கடம்–47-

ச சதுர முக ஷன் முக பஞ்ச முக பிர  முக அகில  தைவிக  மௌலி   மனே– சிரோ பூஷணம் –
சரணா கத வட்சல சார  நிதி பாலயமாம்-ரட்ஷிக்க வேண்டும்- -குற்றமே குணமாக கொள்பவன்  -இவன்–
எற்றே தன் கன்றின் வழு வை காதலிப்பது –வட்ச-கன்று குட்டி –சார தமம்–ரட்ஷனம்-கோ பாலன்- கோ ரட்ஷிகிரவன்-
விரிஷா  சைலம் வராக கிரி கருடாத்ரி க்ரீடாத்ரி-விளை யாடும் இடம்– அஞ்சனாத்ரி–யசோதை பாவனையில் அருளிய பெரி ஆழ்வார் திரு மொழி-
கிருஷ்ண அனுபவம் -ஆழ வைக்கும்–சீத கடலுள் அமுது-அன்ன -21 பாசுரம்-மூக்கு/ விரல்கள் இருந்தவாறு காணீரே –கண் எச்சில் வராதோ-
பேதை குழவி–பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம்-அவன் பேதை குழவி நாம் அழும் குழவி–இனிமை என்ன என்று பார்க்க–
உள் கை தளம் திருவடி சிவக்க- சேவிக்கும் கிரீடம் ரத்னம் ஒளி பட்டு –செய்யாள் வருடி -பராங்குச நாயகி திரு உள்ளம்-பகவத் காமம் ராகம் ஆசை-
சிவப்பு ஏறி-வி ராகம்-வைராக்கியம்–மாகம் மாநிலம் முழுவதும் வந்து இறைஞ்சும் மலர் அடி–அடியார் கோஷ்டியில் நானும் ஒருவன்–அனைவருக்குமாக நிற்கிறான்–
வேடர்களுக்கு முன் பார்த்தோம்–யானை குரங்கு–கூட்டம் கூட்டம் ஆக வரும்–குரங்குகள் மலையை நூக்க –
தேர் ஓட்டம்-அடியார் ஈட்டம் காணிட கூடுமேல் அது தானும் கண் பயன் ஆவதே -பறவை பறக்கும் பொழுதும் கூட்ட மாக –
குரு பரம்பரை—நல மணி வண்ணனூர்-ஸ்வாபம் வர்ணம்-முந்தானையில் முடிந்து கொள்ளும் படி சுலபன்–வசம்-வந்தால்- கொண்டாட்டம்-
சேர்ந்தால் ரட்ச்கனம் தொலைத்தால் தாங்க முடியாது–காண வாராய்-கூப்பிட வைக்கும்–நல்ல-விசெஷனம்–
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தான்-நல்ல அரக்கன்-விபீஷணன் உண்டே–சாதாரண மணி ரத்னம் ஊரில் உள்ள மணிகள்-
நமச்காரத்துக்கே வசம் இவன்–வைரத்தை வைரத்தாலே அறுக்க -கரடு முரடு-கடினம்-அந்த கடினம் இல்லை-இவன் நீர் பண்டமாக உருகிகிறான் —
ருக்மிணி-எழுதி அனுப்ப சந்தேசம் ஏழு ஸ்லோகம்–பிராமணரை-வைய ருக்மிணியையும் -நான் நினைக்கும் பொழுதே உருக –
அவள் உம்மையும் அனுப்பி இதையும் கொடுத்து குல தேவி பூஜைக்கு வருவேன்–மடுத்து ஊதிய சங்கொலி கொடு வந்தாய் என்று தெரிய –
மாலே மணி வண்ணா –ஒளி  மணி வண்ணன் என்கோ–ஊர்-காடும் மலையும்-ரட்ஷிக்க ஆள் இருப்பதால்–
ஆளும் சிங்கமும் பொன்னும் மணி பூ மரமும் உண்டு–சுமத்ரை- நடக்கிற ராமனை பார்க்காதே-கைங்கர்ய ஹானி–
ராமம் தசரதம் வித்தி-மாம் வித்தி ஜெனகாத் ஜனி அயோத்யாம் கானகம் வித்தி–ஸ்தாவரங்கள் திர்யக்-எல்லாம் –
நித்யர்கள் வந்து கைங்கர்யம் பண்ண-மறைத்து கொண்டு–இவை பண்ணும் கைங்கர்யம்-நித்யர் பண்ணும் கைங்கர்யத்துக்கு ஒப்பு-
சாண்டிலி-கருடன் கதை-விஸ்வாமித்ரர் குரு தட்சிணை 800குதிரை-தேட -சிறகு எறிந்த கதை —
அனந்தாழ்வான் கட்டு பிரசாதம்-எறும்பு-நித்யர்-எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே –விண்ணுளாரிலும் சீரியர்–

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேம்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் –வேம்கடமே
தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு
வானவரை காப்பான் மலை–48-

ஆழி படை தொட்டு- ரட்ஷிகிறான்-மெய்ம்மையால்-விகல்பம்-தர்க்கம்-பொய்மையால்-எது–வணங்கும் பொழுது –
கைங்கர்யம் செய்வதற்கு வணங்குவது மெய்மை–வணங்கி மோட்ஷம் கேட்பது பொய்மை- நித்யர் இங்கு வந்து பிராப்யமாக
கைங்கர்யம் செய்வது மெய்மை–வானவர்களை காக்க ஆழி படை தொட்டால் போதும் -பிரயோக சக்கரம்- திரு கண்ண புரம்–
சென்று நின்று ஆழி தொட்டானை-சுழற்றி பண்ண வேண்டியது இல்லை கரும் இடம் பொருத்தும்–கை நின்ற சக்கரத்தன்–
வேங்கடமே-மூன்று தடவை-பொலிக பொலிக பொலிக போல–பல்லாண்டு பல்லாண்டு பல் ஆயிரத்தாண்டு–தத்வ ரகஸ்ய மண்டப த்ரயம் போல–

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேம்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள்– மேல் திருந்தி
வாழ்வார் வரு மதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்–90-

பாகவத -அடியார்க்கு அடியார் வைபவம்-18 பாசுரம்-இதில் சொல்லி-வேறாக ஏத்தி  இருப்பாரை-
அடியார்களை -வெல்லுமே மற்று அவரை சார்த்தி இருப்பார் தவம்–கேசவ பக்தியோ-பக்தர் பக்தர் பற்றுவதே வேண்டும்
இது கிட்டா விடில் கேசவ பக்தி-ஸ்வாமி அருளுவார் கீறிய கோளரியை சார்த்தி இருப்பார்-பெரி ஆழ்வாரை போல்வார்–
அந்தி அம் போதிலரி உருவாய்- வில்லி புத்தூர் –வல்ல பரிசு-ஆண்டாள் போல/தாயாய்  தந்தையாய் கண்ணன் ஆழ்வார்/
அன்னையாய் அத்தனை சடகோபன் –மதுர கவி ஆழ்வார் –
அருள் பெறுவார் அடியார் –அடியார் தம் அடியினேர்க்கு–கண்ணன் கழலினை  முன் அருளி– ப்ரீதி அதிகம்–
மேல் விழுந்து பகத் பக்தரை ஆதரிப்பான்–வரும் மதி–அவன் திரு உள்ளம் பார்த்தே–தாழ்வு-சேஷம்-அடிமை தனம்–
அடியார் அபிமானத்தில் ஒதுங்கின அடியார்கள்–வீற்று இருந்து  விண் ஆழ -இங்கும் அங்கும் அரசர்–
அடியார்களுக்கு பல் மலர் வைத்து மேல் வாழ்வு பெறலாம்–இங்கும் கைங்கர்யம் அங்கும் கைங்கர்யம்–நித்யர் கொண்டாடுவார்கள்-
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன்–பசு மனுஷன் பட்ஷி-அடியான் நிழலில் ஒதுங்கி மோட்ஷம்–வாசி இல்லை–அவர்கள் ஏற்றத்தால் என்பதால் –

—————————————

திருச்சந்த–48–60–65–81–/நான்முகன்–34–39–40–41–42–43–44–45–46–47–48–90-/-ஆக -20-பாசுரங்கள் –

இவனே ஸ்ரீ வராஹன்
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் ஓன்று சென்று அது  ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்–திருச்சந்த -48-

இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய் மிடைந்த வேழ்  மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்-திருச்சந்த -81–

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
வேம்கடமே தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு வானவரை காப்பான் மலை–நான்முகன்–48

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.