Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

May 17, 2023
ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்: நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார். “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம், அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.” தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை யறிவாரார் அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகரை யல்லால் பேதை மனமே உண்டோ பேசு   –உபதேச ரத்ன மாலை                                           திருநக்ஷத்ரம்: ஆனி அனுஷம் அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்) ஆசார்யன்–நம்மாழ்வார் ஶிஷ்யர்கள்: உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகர தாஸர், ஏறு திருவுடையார், திருக் கண்ண மங்கை ஆண்டான், வான மா மலை தெய்வ நாயக ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான், கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான். அவர் சீடர்கள்களில் முக்கியமானவர்கள் :- 1.உய்யக்கொண்டார்(திருவெள்ளறை புண்டரிகாட்சன்) 2. குருகைக் காவலப்பன் 3.கீழையகத்தாழவான் 4.மேலையகத்தாழ்வான் 5. திருகண்ணமங்கையாண்டான் 6. பிள்ளை கருணாகர தாசர் 7.நம்பி கருணாகர தாசர் 8. ஏறு திருவுடையார் 9 வான மா மலை தெய்வ நாயக ஆண்டான் 10. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை 11.சோகத்தூர் ஆழ்வான் . ஜ்யேஷ்டா மாஸே த்வநூராதே ஜாதம் நாத முநிம் பஜே| ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ: ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்ய ப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன் ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை: நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம் திருஅவதாரம்–முதலாசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகள், சேனை முதலியாரின் படைத் தலைவர் கஜாநனர் என்கிற யானை முக நித்ய ஸூரியின் அம்சமாக அவதரித்தார். சோழ நாட்டில் வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயிலில்) கி.பி. 823 இல் சோபக்ருத் வருடம், ஆனி மாதம் 7ஆம் தேதி, பௌர்ணமி, புதன் கிழமை, அனுஷ நட்சத்திரத்தில், ஈஸ்வர பட்டரின் புத்திரராக சொட்டைக் குலமெனும் சடமர்ஷண கோத்ரத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் யோக வித்தையில் ஈடுபட்ட பிறகு, நாதமுனிகள் ஆனார். ஸ்ரீமந் நாதமுனிகள், வீர நாராயணபுரம் (காட்டு மன்னார் கோவில்) என்ற திவ்ய தேசத்தில், ஈஶ்வர பட்டாழ்வார்க்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி, நாத ப்ரஹ்மர் என்றும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர் தான் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது. திருமணம்:- ஸ்ரீமந் நாதமுனிகள் அரவிந்தப்பாவை என்ற உத்தமியை மணந்து கொண்டு காட்டுமன்னார்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீர நாராயணப் பெருமாளுக்கு நித்திய கைங்கர்யம் (தொண்டு) செய்து வந்தார். நாதமுனிகள் அவருடைய திருத்தகப்பனார் மற்றும் அவருடைய திருக்குமாரருடன் (ஈஶ்வர முனி) வட மதுரை, வ்ருந்தாவனம், கோவர்தன கிரி, த்வாரகை, பதரிகாஶ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு) கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்பச் செல்கிறார். திரும்பும் வழியில் வாரணாசி, பூரி ஜகந்நாத், ஸிம்ஹாசலம், திருவேங்கடம், கடிகாசலம், காஞ்சிபுரம் (மற்றும் பல திவ்ய தேசங்கள்), திருவஹிந்திரபுரம், திருக்கோவலூர், திருவரங்கம் மற்றும் திருக்குடந்தை திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணிவிட்டுக் காட்டு மன்னார் கோவிலுக்குச் செல்கிறார். ஒரு நாள் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை திருநாராயணபுரம்) காட்டு மன்னார் கோயில் எம்பெருமான் மன்னனார் முன்பு திருவாய்மொழியில் உள்ள “ஆராவமுதே…” பதிகத்தை சேவித்தார்கள். அந்த பாசுரத்தின் அர்த்தத்தை அந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடம் நாதமுனிகள் கேட்க, அந்த 11 பாசுரத்தை தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டனர். திருக்குருகூருக்கு சென்றால் இந்த பாசுரங்களை பற்றி ஏதெனும் தெரிந்துகொள்ளலாம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் நாதமுனிகளிடம் சொல்ல, உடனே நாதமுனிகளும் மன்னனாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) சென்றார். ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் ஶிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார். பராங்குச தாசர், நாதமுனிகளுக்கு கண்ணிநுண்சிறுத்தாம்பு 11 பாசுரங்களை சொல்லிக் கொடுத்து, அதை 12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்திக்க சொன்னார். நாதமுனிகள் ஏற்கனவே அஷ்டாங்க யோகத்தில் வல்லவராக இருந்தமையால், உடனே நம்மாழ்வாரைத் தியானித்து 12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பை அனுசந்தித்து முடித்தார். உடனே நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி அஷ்டாங்க யோகம், நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினார். எப்படி எம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினானோ, அதே அர்த்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார். இதைத் தான் உபதேஶரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச் செய்தார். நாதமுனிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து காட்டு மன்னார் கோவிலுக்கு வந்து மன்னனார் முன்பு நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தைச் சேவித்தார். மன்னனார் மிகவும் மகிழ்ந்து நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை வகைப்படுத்தி உலகெங்கும் பரப்புமாறு நியமித்தார். நாதமுனிகள் அருளிச் செயலை (நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை) தேவ கானத்தில் இசைத்து, அதைத் தன் மருமகன்களான கீழை அகத்தாழ்வான் மற்றும் மேலை அகத்தாழ்வானுக்கு கற்றுக் கொடுத்து அவர்கள் மூலம் உலகமெங்கும் பரப்பினார். நாதமுனிகள் தேவகானத்திலும் வல்லவராக இருந்தார். ஒரு முறை ஒரு ராஜா   ஸாமான்ய கானம் இசைப்பவரையும், தேவ கானம் இசைப்பவரையும் வேறுபடுத்த முடியாமல் குழம்ப, நாதமுனிகள் தேவ கானம் இசைப்பவரை அடையாளம் காட்டினார். அந்த ராஜா அவருடைய திறமையைப் பற்றிக் கேள்வி கேட்க,  ஒரே சமயத்தில் 4000 தாளங்களை ஒலிக்கச் செய்து அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒவ்வொரு தாளத்தின் ஒலியையும் உணர்ந்து கூறினார். இதைக் கண்ட அந்த ராஜா, நாதமுனிகளுடைய திறமையை அறிந்து அவருக்குச் செல்வங்களைக் கொடுத்தார், ஆனால் நாதமுனிகளோ அந்தச் செல்வத்தில் ஆசை இல்லாமல் இருந்தார். நாதமுனிகள் கண்ணன் எம்பெருமான் மீது உள்ள ப்ரீதியினால் தன்னுடைய திருப் பேரனாருக்கு “யமுனைத் துறைவன்” என்று பெயர் சூட்டுமாறு ஈஶ்வர முனியிடம் (நாதமுனிகள் குமாரர்) கூறினார். பிறகு அனைத்து ஸம்ப்ரதாய விஷயங்களையும் யமுனைத் துறைவருக்குக் கற்றுக் கொடுக்குமாறு அவருடைய ஶிஷ்யர்களிடம் கூறினார். நாத முனிகள் எம்பெருமானை தியானித்துக்கொண்டிருக்கும் போது அனைத்தையும் மறந்து விடுவார். ஒருமுறை நாத முனிகள் யோகத்தில் இருக்கும் பொழுது ஒரு ராஜா தன்னுடைய மனைவிகளுடன் அவரைச் சந்திக்க வந்தார். அவருடைய யோகத்திற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்து அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் நாதமுனிகளோ அவருடைய பக்தி பாவத்தினால் அவர்களை “கிருஷ்ணர் மற்றும் கோபிகைகள்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். மற்றோரு முறை அந்த ராஜா வேட்டையாடி விட்டு, அவருடைய துணைவி, ஒரு வில்லாளன் மற்றும் ஒரு குரங்குடன் நாதமுனிகளைச் சந்திக்க வந்தார். மறுபடியும் நாதமுனிகளின் பக்தி பாவத்தினால் அவர்களை “ராமன், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமன்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். தன் பார்வையிலிருந்து மறைந்தவுடன் அங்கேயே மயங்கி விழுந்தார். எம்பெருமானுடைய பிரிவைத் தாங்க முடியாமல் உடனே இவ்வுடலை விட்டுப் பரமபதம் சென்று அடைந்தார். இதை அறிந்த ஈஶ்வர முனி மற்றும் நாதமுனிகளுடைய ஶிஷ்யர்கள் அந்த இடத்திற்கு வந்து அவருக்கு சரம கைங்கர்யங்களைச் செய்தார்கள். நாதமுனிகள் முயற்சியால் தான் நமக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ (அருளிச்செயல்) கிடைத்தது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் முதல் மூன்று ஶ்லோகத்தில் நாதமுனிகளுடைய பெருமைகளையே கூறுகிறார். ஶ்லோகம் 1 – முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந் நாதமுனிகளின் உண்மையான செல்வமான ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார். நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே | நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே || நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார். அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன். ————- ஶ்லோகம் 2 – இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது. அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது” என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார். தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே | நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் || மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

மதுகைடபர்கள் வேதங்களை அபகரித்தது போல ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு நீண்ட நெடுங்காலமாக தர்சன நிர்வாஹகர்களான ஆசார்யர்கள் ஒருவரும் இல்லாமல் போனதாலும், மேலும் அஸுரப்ரக்ருதிகளின் சூழ்ச்சியாலும் அஜ்ஞானம் என்னும் பேரிருள் இவ்வுலகத்தை சூழ்ந்து திராவிட வேதத்தில் மக்களுக்கு கலக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவற்றை மறந்து போனார்கள். மதுரமான தமிழ் பாசுரங்கள் மறைந்தும் போயின. அச்சமயத்தில் திருக்குடந்தை ஆராவமுதனின் காரூண்யத்தால் ஆழ்வார் திருநகரி சென்றடைந்து, மதுரகவியாழ்வாரின் சிஷ்ய பரம்பரையினர் மூலம் கண்ணிநுண் சிறுத்தாம்பைப் பெற்று அதனைப் பல்லாயிரம் முறை பாராயணம் செய்து ஆழ்வாரை ஸாக்ஷாத்கரித்து தமிழ் வேதங்களை மீட்டெடுத்து அவற்றைத் திரும்பவும் உலகில் நடையாடச் செய்தவர் ஸ்ரீமந் நாதமுனிகள்.

ஆகவே இவருக்கும் ஸ்ரீ ஹயக்ரீவனுக்கும் ஒப்புமை அதிகம். அதனாலேயே ஸ்ரீ ஆளவந்தார், எம்பெருமானின் மற்ற அவதாரங்கள் இருக்க ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரத்தை முதலில் இவர் விஷயத்தில் அருளிச் செய்தது இங்கு நன்கு சுவைக்கத்தக்கது.

“சடகோபமுனி” வழிவந்த முனி

ஜ்ஞானமும், வைராக்யமும், கண்ணனிடத்தில் கடலைப் போல கரைகாண முடியாத பக்தியும்  கொண்ட ஸ்ரீமந் நாதமுனிகள், ஆழ்வார் காட்டியபடி சரணாகதியை மோக்ஷத்திற்க்காக அநுஷ்டித்தவர். ஆயினும் எம்பெருமான் அநுபவத்தில் இருக்கும் த்வரையினால் ஸ்வயம் ப்ரயோஜனமாக பக்தியோகத்தை அநுஷ்டித்து அவனை ஸாக்ஷாத்காரம் பண்ணி ஸேவித்து வந்தவர். அதனாலேயே சடகோபமுனிக்குப் பிறகு நம் ஸம்ப்ரதாயத்தில் “முநி”(நாதேந முநி)என்ற ஏற்றத்தையும் பெற்றவர் இவரே.
நாதே₂ந முநிநா தேந ப₄வேயம் நாத₂வாநஹம் | யஸ்ய நைக₃மிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் க₃தம் ||-ஸ்ரீ யதிராஜசப்ததி – 5

“வேதத்தில் மறைந்து கிடந்த ஸகல ரஹஸ்யார்த்தங்களும் எம்பெருமான் மற்றும் ஆழ்வார் அநுக்ரஹத்தால் எவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் விளங்கிற்றோ அவரையே தலைவராகக் கொண்டவனாக நான் ஆகிறேன்”.

———— ஶ்லோகம் 3 – தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே, ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார். பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: | லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி யோகாய நாதமுநயே யமிநாம் வராய || பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள். அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள். ————— ஶ்லோகம் 65 – ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’ (ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும், என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும் ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்க, எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான். ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார். அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் | பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா || எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான, தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும். ——– மேலே கண்ட 4 ஶ்லோகங்களிலிருந்து நாதமுனிகளுடைய பெருமையை நாம் அறிகிறோம். அச்சுதன் மீதும் ஆழ்வார் மீதும் ப்ரீதி அபிவ்ருத்தி அடைய நாமும் நாதமுனிகளுடைய திருவடித் தாமரைகளை வணங்குவோம். ஆளவந்தார் அவதாரம்:- யமுனைத் துறைவனாகிய கண்ணபிரானது வாக்குபடி, ஸ்ரீமந் நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிக்கும்,  மருமகள் ஸ்ரீரங்கநாயகிக்கும் ,தாது வருடம் , ஆடி மாதம் , வெள்ளிக் கிழமை , பெளர்ணமி திதி கூடிய உத்ராட நட்சத்திரத்தில் , ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு “ யமுனைத் துறைவன்” என்று  பெயர் சூட்டி அழைத்தனர். யமுனைத் துறைவன், வித்யா கர்வமிக்க ஆக்கியாழ்வான் என்பவரை வேதாந்த வாதத்தில் வென்று, சோழ மன்னனிடம் பாதி இராஜ்யம்  பெற்று, ஸ்ரீ ஆளவந்தார் என்று அழைக்கப்பட்டார். பின் ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தால் , அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார். ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீமந் நாராயணன் திருவடியடைதல்:- இப்படி பல பெருமைகளை பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளை தன் இருப்பிடமான பரமபத்திற்கு அழைத்துக் கொள்ள எண்ணினான் நாராயணன். ஒருநாள் பெருமாளை சேவிக்க சன்னதிக்கு சென்றார் நாதமுனிகள். அப்போது வில்லுடன் இருவரும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு குரங்குடன் வந்து அவருடைய மகளிடம்,’ ஸ்ரீமந் நாதமுனிகள் எங்கே?’ என்று கேட்டனர்  அதற்கு அவள் தன் தகப்பனார் பெருமாளை சேவிக்க சென்றதாக சொன்னாள். வந்தவர்கள் சென்று விட்டனர். கோயிலுக்கு சென்று திரும்பியதும் நாதமுனிகளிடம் மகள் அவரைத் தேடிவந்தவர்களைப் பற்றிக்கூறினாள். ஸ்ரீமந் நாதமுனிகள் ,’சக்ரவர்த்தி திருமகனே தன்னை அழைக்க வந்திருப்பார். தன்னுடன் சேர்த்துக் கொள்ள பகவான் நடத்திய திருவிளையாடலே இது’  என்று சொல்லி  ’எனக்கு அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே’என்று கதறியவாறு அவர்கள் சென்ற வழியைக் கேட்டு ஓடினார். இவ்வாறு ஓட்டமும் நடையுமாய் சென்றவர், வழியில் பூச்சரம் ஒன்றை கணடார். அதைக் கண்டவர், “ஆகா! இது சீதாபிராட்டி அணிந்திருந்த தல்லவா, விழுந்திருக்கிறது” என்று சொல்லியவாறு சென்றார். தற்பொழுது அந்த இடமே “பூவிழுந்த நல்லூர்”  என்று அழைக்கப்படுகிறது.. இன்னும் சிறிது தூரம் சென்றபின் ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்ததைக் கண்டவர் ,  அவர்கள் இந்த வழியில் செல்கின்றனர்  என்று ஊர்ஜிதப்படுத்தினார். அந்த இடமே ’குரங்கடி’ என்று முன்பும் தற்பொழுது “குறுங்குடி” என்றும் அழைக்கப்படும். ஊர். இவ்வாறு பயணத்தை தொடர்ந்தவர் வழியில் எதிரே கண்டவர்களைப் பார்த்து தன்னைப் பார்க்க வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி ”அவர்களை இந்த வழியில் கண்டீர்களா?” என்று கேட்டார். அவர்களும் “ஆம்! கண்டோம்! கண்டோம்! அவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், முகம் பிரகாசமாகவும் இருந்தது “ என்றனர் . அந்த இடமே தற்பொழுது இருக்கும்“கண்ட மங்கலம்” என்ற ஊர். இவ்வாறு அவர்கள் சொன்ன உடன் மிக்க ஆர்வம் கொண்ட அவர் கங்கை கொண்ட சோழ புரத்தை நோக்கிச் சென்றார், இவ்வூருக்கு கிழக்கே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்றவர் எதிரே வந்தர்களிடம் தன்னை காண வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி “கண்டீர்களா? என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் ! என்று சொன்னார்கள்.. தன்னை காண வந்த பரமாத்மாவை  தான் காணவில்லை என்ற ஏக்கத்தில்  இருந்தார். கடவுளிடம் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அந்த நிமிஷமே பகவான் அழைத்துக் கொள்வார் என்பதற்கு இணங்க , கொளுத்தும் வெயிலில் ஸ்ரீஇராமபிரானைத் தேடிச்சென்ற  ஸ்ரீமந் நாதமுனிகள் , அப்பொழுது ஆசாரியரைத் தேடிவந்த சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் என்ற ஸ்ரீராமமிஸ்ரர் மடியில் தலைசாய்த்து “என்னை சக்கரவர்த்தித் திருமகன் அழைக்கிறான், நான் புறப்படப் போகிறேன்” என்றவர், “எனக்கு ஒரு அபிலாஷை . பேரன் ஆளவந்தாரை எப்படியாவது அழைத்து வந்து நம் ’குலதனத்தை’ (திருவரங்கநாதரை) காண்பித்து விடு” என்று கூறியவாறு எம்பெருமான்  திருவடிகளை அடைந்தார். ஸ்ரீராமனை தேடி போனவருக்கு  அவர் பெயர் தாங்கிய ஸ்ரீ இராம மிஸ்ரர் என்ற சீடரின் மடி கிடைத்தது. ஸ்ரீமந் நாதமுனிகளின் சீடர்களான உய்யக் கொண்டார், குருகைக்காவலப்பன், ஆகியோர் அடங்கிய் சீடர்கள் குழாம் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனியைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்தனர்.. பெருந்திரளான அடியார்கள் முன்னிலையில் அவ்விடத்திலேயே சரம விக்ரகத்தைப் பள்ளிப்படுத்தினர்.அவ்விடத்தில் “திருவரசு” அமைத்து அதன்மேல் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தனர். அந்த இடம்தான் “சொர்க்கப் பள்ளம்”என்று இப்போது அழைக்கப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள குருவாலப்பர் திருக்கோயிலில் வணங்கிவிட்டு வரும் போது ”நாதமுனிகள் திருவரசு செல்லும் பாதை” என்ற ஒரு புதிய அறிவிப்புப் பலகையைப் பார்க்கலாம் மீன்சுருட்டி கூட்டுச் சாலையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம் 200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’. ஸ்ரீமந் நாதமுனிகளின் “திருவரசு ”அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் வட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊருக்கு கிழக்கே 1கி.மீ தூரத்திலுள்ள சம்போடை என்ற ஊரின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னார்குடி, சிதம்பரம் மார்க்கத்தில் 12 கி.மீ தூரத்திலுள்ளது சம்போடை கிராமம். கும்பகோணம் சென்னை மார்க்கத்தில் சுமார் 30கி.மீ தூரத்துலுள்ள ஜெயங்கொண்டம் கூட்டுரோடு என்ற பிரிவிலிருந்து மேற்கே ஒரு கி.மீ சம்போடை கிராமம். நாதமுனிகளுடைய வாழி திருநாமம்: ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே ——— வைதிக மதங்கள் -வேதத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளுபவை வைணவம் சைவம் சாத்தமம் காணா பத்த்யம் ஸுரவம் கௌமாரம் வைதிக மாதமாய் இருந்தும் வேதத்தை மறைக்குமாக ஏற்றுக் கொள்ளுபவை நியாயம் வைசேஷிகம் சாங்க்யம் யோகம் மீமாம்ஸை வேதாந்தம் அவைதிக தத்வம் சாருவாகம் உலோகாயதம் புத்த ஜைன மதங்கள் ————– ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் மங்கள ஸ்லோகம் யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக ஸதா -எப்போதும் – ஸ்வத -இயல்பாகவே தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம் ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத் உவமானம் நான்காவதாக நையாயிகர் லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம் மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன் அபின்ன நிமித்த காரணம் நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள் வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா கட்டைப் போல் -நையாயிகன் தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார் நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார் ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை – கண்டிக்க ஸ்லோகங்கள் ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம் அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே   குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார் இரண்டாவது இல்லையே அஞ்ஞானம் அநிர் வசனீயம் ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும் கயிறு பாம்பு போல் ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால் ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும் ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும் இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே ப்ரஹ்மம் அனுபவம் அறிவு அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம் ஞானம் அஞ்ஞான விரோதி அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம் நாத முனி ஆதி முனி ஓதும் முனி கீதா முனி தாத முனி தூத முனி ரெங்க நாத முனி பாத முனி முனி போத முனி பேத முனி அபேத முனி மோத முனி வேத முனி ——————————————————— ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருநாம ஸங்கீர்த்தன மஹிமை -பிரமாணங்கள் –

May 17, 2023

தத் அஸ்ம-ஸாரம் ஹৃদயம் படேதம் ய
দ் গৃஹ்யமாநைர் ஹரி-நாம-தேயைঃ
ந விக்ரியேதথ யதா விகாரோ
நேத்ரே ஜலம் গத்ர-ருஹேஷு ஹர்சঃ(பக. 2.3.24)

“நிச்சயமாக அந்த இதயம் எஃகு கட்டமைக்கப்பட்டுள்ளது,
ஒருவர் இறைவனின் புனித நாமத்தை ஒருமுகத்துடன் உச்சரித்தாலும்,
அது மாறாது மற்றும் பரவசத்தை உணராது,
அந்த நேரத்தில் கண்களில் கண்ணீர் நிறைந்திருக்கும் மற்றும் முடிகள் முடிவடையும்.”

——————

தர்மா ப்ரோஜ்ஜித-கைதவோ ‘த்ர பரமோ நிர்மத்சரணம் ஸதம் வேத்யம் வஸ்தவம்
அத்ர வஸ்து சிவதம் தப-த்ரயோன்மூலானாம்
ஸ்ரீமத்-பகவதே மஹா-முனி-கৃதே கிம் வா பரைர் ஈஸ்வரঃ
ஸத்யோ ஹৃদி ஆவருத்யதே’ த்ர கிருதிபிঃ ஸ்ருத்ஸுபிঃ ஸுஸ்ருʼத்ஸுபிஹ் ஸ்.(SB 1.1.2)]

“உடல் உந்துதல் கொண்ட அனைத்து மதச் செயல்களையும் முற்றிலுமாக நிராகரித்து,
இந்த பகவத் புராணம் மிக உயர்ந்த உண்மையை முன்வைக்கிறது,
இது முழு மனத் தூய்மை உள்ள பக்தர்களால் புரிந்து கொள்ள முடியும்.
உயர்ந்த உண்மை என்பது மாயையிலிருந்து வேறுபடுத்தப்பட்ட உண்மை.
மும்மடங்கு துன்பங்கள்.மகா முனிவரான வியாசதேவரால் தொகுக்கப்பட்ட இந்த அழகான
பாகவதம் கடவுளை உணர போதுமானது,
வேறு எந்த வேதத்தின் தேவை என்ன?
பாகவதத்தின் செய்தியை ஒருவர் கவனமாகவும் பணிவாகவும் கேட்டவுடன்,
இந்த அறிவுப் பண்பாட்டின் மூலம் பரம பகவான் அவரது இதயத்தில் நிலை பெற்றுள்ளார்.”

—————-

பக்தி-யோகேன மனஸி
ஸம்யக் ப்ராணிஹிதே ‘ஆண்
அபஸ்யத் புருசம் பூர்ணம்
மயம் ச தத் அபாஸ்ரயம்(SB. 1.7.4)

“பக்தி-யோகத்தின் சக்தியால், ஸ்ரீல வியாசதேவர், தூய்மையான மனதுடன் தியானத்தில்
உறுதியாக ஒருமுகப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணரை முழுவதுமாக ஆன்மிகப் பிரகாசமும்,
முழுப் பகுதியும், மற்றும் ஸ்வரூப-சக்தியின் உள்ளார்ந்த ஆற்றலும் கொண்டதைக் கண்டார்.
அவரது வெளிப்புற ஆற்றல் மாயா, ஒரு கீழ்த்தரமான இயல்பு,
அவரது கட்டுப்பாட்டின் கீழ் பின்னணியில் காணப்பட்டது.”

————–

தக்தஸயோ முக்த-ஸமஸ்த-தத்-குணோ
நைவாத்மனோ பஹிர் அந்தர் விகாஸ்தே
பரத்மநோர் யத்-வ்யவதானம்
புரஸ்தத் ஸ்வப்நே யதா புருஷஸ் தத்-விநாஸே(SB 4.22.27)]

“ஒருவன் எல்லாப் பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, எல்லாப் பௌதிகக் குணங்களிலிருந்தும் விடுபடும்போது, ​​
அவன் வெளி மற்றும் அகச் செயல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து செல்கிறான்.
அப்போது ஆன்மாவிற்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு, சுய-உணர்தல் முன் இருந்த, அழிகிறது.
ஒரு கனவு முடிந்ததும், கனவுக்கும் கனவு காண்பவருக்கும் இடையே வேறுபாடு இருக்காது.

————-

ஸங்கேத்யம் பரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலநம் ஏவ வா
வைகுந்த-நாம-க்ரஹணம் அஸேசஹ-ஹரம் விதுঃSB 6.2.14)]

“ஒருவர் வேறு எதையாவது (சங்கேத), நகைச்சுவையாக (பரிஹாச), விரோதமாக (ஸ்தோபா)
அல்லது அவமரியாதையாக (ஹேல) குறிக்க ஸ்ரீ-கிருஷ்ண-நாமாவை உச்சரிக்கலாம்.
இந்த நான்கு வகையான நிழல் நாமபாசங்கள் வரம்பற்ற பாவங்களை அழிக்கும்
என்பதை கற்றறிந்தவர்கள் அறிவார்கள்.”

——–

யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சன
ஸர்வைர் ​​குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரஹ்
ஹரவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குண
மனோரதேநாசதி தவதோ பஹிஹ்–

[“அனைத்து தேவர்களும், மதம், அறிவு, துறவு போன்ற அவர்களின் உயர்ந்த குணங்களும்,
பரம புருஷ பகவானான வாசுதேவரிடம் கலப்படமற்ற பக்தியை வளர்த்துக் கொண்டவரின் உடலில் வெளிப்படுகின்றன.
மறுபுறம், பக்தித் தொண்டு இல்லாதவர் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் நல்ல குணங்கள் இல்லை.
அவர் மாய யோகப் பயிற்சியில் வல்லவராக இருந்தாலும் அல்லது குடும்பம் மற்றும் உறவினர்களைப் பராமரிக்கும்
நேர்மையான முயற்சியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர் தனது சொந்த ஊகங்களால் உந்தப்பட்டு
இறைவனின் சேவையில் ஈடுபட வேண்டும்.
‘வெளி ஆற்றல். அப்படிப்பட்ட ஒருவரிடம் எப்படி நல்ல குணங்கள் இருக்க முடியும்?

——

நௌமித்ய கே ப்ரா வபுஸே ததித் அம்பராய
குஞ்ஜவதம்ஸ-பரிபிச்ச லஸன் முகயா
வண்யா ஸ்ரஜே காவல வேத்ர விசானா வேணு
லக்ஷ்ம ஶ்ரீயே மৃது-பதே புஷ்பானங்கஜய (SB 10.14.1)

“ஓ ஆண்டவரே, முழு உலகிலும் எங்கள் பிரார்த்தனைகளுக்குத் தகுதியானவர் நீங்கள் மட்டுமே.
ஓ வ்ரஜேந்திரநந்தனா, உங்கள் உடல் ஒரு புதிய மழை மேகம் போன்றது,
மிகவும் நேர்த்தியாகவும், பீடம்பரத்தால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது
உங்கள் காதுகள் மற்றும் உங்கள் தலையில் ஒரு மயில் இறகு, உங்கள் தாமரை முகம் பிரகாசமான பிரகாசத்தை வெளியிடுகிறது,
மேலும் பல வண்ண வன மலர்கள் மற்றும் இலைகள் கொண்ட மாலை உங்கள் கழுத்தில் தொங்குகிறது.
மாடு மேய்க்கும் குச்சியும் எருமைக் கொம்பும் உங்கள் கமர்பண்டில் ஒட்டிக்கொண்டது.
உன்னுடைய மென்மையான தாமரை கையில் சாதம் மற்றும் தயிர் துண்டுகள் உள்ளன,
மாடு மேய்ப்பவரின் இந்த இனிமையான உடையில் தோன்றி, அனைவரையும் கவர்ந்திழுக்கிறாய்,
தாமரை மலர்களை விட மென்மையான உன்னுடைய மென்மையான தாமரை பாதங்கள், மங்கள சின்னங்களால் குறிக்கப்பட்டுள்ளன.
இந்த தாமரை பாதங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன் மீண்டும் மீண்டும் தண்டவத் பிராணங்கள்.” ]

———

தத் தே ‘நுகம்பம் ஸு-ஸமீக்ஸமாநோ
புஞ்ஜந ஏவாத்ம-கৃதம் விபாகம்
ஹৃத்-வாக்-வபுர்பிர் விததாந் நமஸ் தே
ஜீவேத யோ பக்தி-பதே ச தயா-பக்(SB 10.14.8)]

“உன் கருணையை நாடி, தன் கடந்தகால செயல்களின் கர்மாவின் காரணமாக அனைத்து
வகையான பாதகமான நிலைமைகளையும் பொறுத்துக்கொள்பவன்,
எப்போதும் உனது மனத்தாலும், வார்த்தையாலும், உடலாலும் உனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு,
எப்பொழுதும் உனக்கே வணக்கம் செலுத்துபவனே. உங்களின் அன்பற்ற பக்தராக
மாறுவதற்கு ஒரு நேர்மையான வேட்பாளர்.”

————-

தத் அஸ்து மே நாத ச பூரி-பாகோ பாவே ‘த்ர வன்யத்ர து வா திராஶ்சம் யேனாஹம்
ஏகோ ‘பி பவஜ்-ஜனனம் பூத்வா நிசேவே தவ பத-பல்லவம் (SB 10.14.30)

“என் அன்பான ஆண்டவரே, இந்த ஜென்மத்தில் பிரம்மாவாகவோ அல்லது வேறொரு பிறவியிலோ,
நான் எங்கு பிறந்தாலும், உமது பக்தர்களில் ஒருவனாக எண்ணப்படுவதற்கு நான்
மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
நான் எங்கிருந்தாலும், விலங்கு இனங்களில் கூட, உனது தாமரை பாதங்களுக்கு
நான் பக்தி சேவையில் ஈடுபட முடியும்.”

———–

அலব்தே வா விநஸ்தே வா பக்ஷ்யச்ছாதந-ஸா
ধநே அவிக்லவ-மதிர் பூத்வா ஹரிம் ஏவ தியா ஸ்மரேத்(பத்ம புராணம்)

“உணவும் வஸ்திரமும் எளிதில் கிடைக்காவிட்டாலும், அல்லது கிடைத்தாலும், தொலைந்தாலும்,
புனித நாமத்தை அடைக்கலம் புகுந்தவனின் மனம் கலங்குவதில்லை.
எல்லாப் பௌதிகப் பற்றுகளையும் விட்டு, கோவிந்தனிடம் பூரண தஞ்சம் அடைகிறான்.”

————

சோகமர்ஸாதிபிர் ভவைர் அக்ராந்தம் யஸ்ய

மாநஸம் கதம் தஸ்ய முகுந்தஸ்ய ஸ்பூர்த்திঃ ஸம்ভவநா ভவேத் ॥(பத்ம புராணம்)]

“கோபம் அல்லது பெருமை, அல்லது தனது மனைவி அல்லது மகன்களின் நிலையைப் பற்றிய
புலம்பல் நிறைந்த ஒருவரின் இதயத்தில், கிருஷ்ணர் வெளிப்படுவதற்கான சாத்தியம் இல்லை.”

————–

இடம் ஶரீரம் ஸத-ஸந்தி-ஜரிஜ்ஜரம்

படடி-அவஸ்யம் பரிணாம-பேசலம்
கிம்-ஔசதிம் ப்ருச்சஸி மூதா துர்மதே
நிராமயம் கிருஷ்ண-ரசாயனம் பிபா(முகுந்த-மாலா ஸ்தோத்ரம், 37, ஸ்ரீமத் குலசேகரரால்)]

“முட்டாள்! மந்தமான தலைப் பிராணியே! எண்ணற்ற பற்றுதல்களால் பீடிக்கப்பட்ட இடைவிடாமல்
மாறக்கூடிய இந்த உடல் நிச்சயம் ஒரு நாள் அழிந்துவிடும்.
இந்நிலையைப் போக்க என்ன மருந்து தேடுகிறாய்?
ஸ்ரீ என்ற திருநாமத்தின் மருந்தை இடைவிடாமல் குடியுங்கள்.
மற்ற எல்லா நோய்களுக்கும் மூலமான இந்த ஜட வாழ்வின் நோயை அழிக்கும் கிருஷ்ணர்.”(பத்ம புராணம்)]

———–

பக்திঃ பரேசாநுভவோ விரக்திர்

அந்யத்ர சைசா த்ரிகா ஏக-காலঃ
ப்ரபத்யமானஸ்ய யதாஸ்நாதঃ ஸ்யுஸ்
துஸ்திঃ புஸ்திঃ க்ஷுத்-அபயோ ‘நு-காசம்-(SB 11.2.42)]

“பக்தி, பரமாத்மாவின் நேரடி அனுபவம், மற்ற விஷயங்களிலிருந்து பற்றின்மை –
இவை மூன்றும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன,
பரம புருஷ பகவானிடம் அடைக்கலம் பெற்றவருக்கு, இன்பம், போஷாக்கு மற்றும் பசி நிவாரணம்
ஒரே நேரத்தில் வருவது போல. பெருகிய முறையில், உண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு ஒவ்வொரு கடிக்கும்.”

———-

அர்ச்சயம் ஏவ ஹரயே பூஜாம் யஹ் ஸ்ரத்தாயேஹதே
ந தத்-பக்தேஷு கன்யேஷு ச பக்தா ப்ரகரிதா ஸ்மிருதா (SB 11.2.47)]

“பகவானின் அர்ச்ச மூர்த்தியை ஸ்ரீ ஹரியாக ஏற்றுக்கொண்டு, அவரை நம்பிக்கையுடன் வணங்கினால்,
கிருஷ்ணரின் பக்தர்களையோ அல்லது பிற ஜீவர்களையோ உண்மையாக வழிபடாமல் இருந்தால்,
ஒருவன் ஜட பக்தன் (கனிஸ்த) ஆவான்.”

—————–

ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நமைவ கேவலம்

கலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ கதிர் அந்யதா

“சண்டை மற்றும் கபடம் நிறைந்த இந்த யுகத்தில், இறைவனின் சக்தி வாய்ந்த திருநாமங்களை உச்சரிப்பது
மட்டுமே விடுதலைக்கான ஒரே வழி. வேறு வழியில்லை; வேறு வழியில்லை; வேறு வழியில்லை

————-

நமঃ சிந்தாமணிঃ கிருஷ்ணஸ்

சைதன்ய-ரஸ விக்ரஹ
பூர்ணঃ ஸுத்தோ நித்ய முக்தோ
பிந்நத்வாந் நாம-நாமினோঃ

“கிருஷ்ணரின் புனித நாமம் ஆழ்நிலை பேரின்பமானது.
இது அனைத்து ஆன்மீக ஆசீர்வாதங்களையும் அளிக்கிறது, ஏனென்றால் அது கிருஷ்ணரே,
எல்லா இன்பங்களுக்கும் நீர்த்தேக்கம். கிருஷ்ணரின் பெயர் முழுமையானது
மற்றும் அது அனைத்து ஆழ்நிலை மெல்லிசைகளின் வடிவம். இது ஒரு பொருள் பெயர் அல்ல.
எந்த நிலையும், அது கிருஷ்ணரை விட சக்திக்குறைவானது அல்ல,
கிருஷ்ணரின் பெயர் ஜடக் குணங்களால் மாசுபடாததாலும், மாயாவுடன் தொடர்பு கொள்வதில்
எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதாலும்,
கிருஷ்ணரின் பெயர் எப்போதும் விடுதலை மற்றும் ஆன்மீகம்;
அது ஒருபோதும் பொருள் விதிகளால் மாசுபடுவதில்லை. ஏனெனில்,
கிருஷ்ணரின் பெயரும், கிருஷ்ணரின் பெயரும் ஒரே மாதிரியானவை.”

———–

நிகில-ஸ்ருதி-மௌலி-ரத்ன-மாலா-

த்யுதி-நிரஜித-பதா-பங்கஜந்த
ஆயி முக்த-குலைர் உபஸ்யமானம்
பரிதஸ் த்வம் ஹரி-நாம ஸம்ஸ்ரயாமி

“ஓ ஹரி-நாமா! அனைத்து வேதங்களின் மணிமகுடங்களான உபநிடதங்கள் என்று
அழைக்கப்படும் ரத்தினங்களின் சரத்திலிருந்து வெளிப்படும் ஒளிரும் பிரகாசத்தால்
உமது பாதங்களின் கால்விரல்களின் நுனிகள் தொடர்ந்து வணங்கப்படுகின்றன.
நீங்கள் முக்தியடைந்த ஆத்மாக்களால் நித்தியமாக வணங்கப்படுகிறீர்கள்.
நாரதர் மற்றும் சுகதேவர் போன்றவர்கள். ஓ ஹரி-நாமா! நான் உன்னிடம் முழு அடைக்கலம் பெறுகிறேன்.”

———–

தன்-நாம-ரூப-சரிதாதி-சுகிர்தநநு-

ஸ்ம்ருத்யோஹ் க்ரமேண ரஸந-மானஸி
நியோஜ்ய திஸ்தான் வ்ரஜே தத்-அநுராகி-ஜாநனுகாமி
கலாம் நயேத் அகிலம் இத்ய உபதேச-சாரம்

“ஸ்ரீ கிருஷ்ணர் மீது உள்ளார்ந்த தன்னிச்சையான அன்பைக் கொண்ட வ்ரஜாவின்
நித்திய குடியிருப்பாளர்களைப் பின்பற்றுபவர்களாக வ்ரஜத்தில் வசிக்கும் போது, ​​
ஒருவர் தனது முழு நேரத்தையும் நாக்கையும் மனதையும் வரிசையாக உன்னிப்பாக உச்சரிப்பதிலும்,
வ்ரஜந்திரநந்தனான ஸ்ரீ கிருஷ்ணரின் நாமங்களை நினைவு செய்வதிலும் பயன்படுத்த வேண்டும். ,
வடிவம், குணங்கள் மற்றும் பொழுதுகள். இதுவே அனைத்து அறிவுறுத்தலின் சாராம்சம்-

————–

மதுரம் அதாரம் ஏதன் மங்களம் மங்களம்

ஸகல-நிகம-வல்லி ஸத்-பலம் சித்-ஸ்வரூபம்
சக்ருத் அபி பரிகீதம் ஸ்ரத்தாய ஹேலய வா
ப்ருகுவரா! நர-மாத்ரம் தாராயேத் கிருஷ்ணாமா

“கிருஷ்ண நாமம் இனிமையானது மற்றும் மங்களகரமான அனைத்திலும் மிகவும் மங்களகரமானது.
இது செழித்து வளரும் கொடியும், பாகவதத்தின் நித்தியமான, முழுமையாக பழுத்த பழம்,
மற்றும் அறிவின் உருவகம், சிட்-சக்தி. ஓ சிறந்தது.
ப்ருகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள், நம்பிக்கையுடன் அல்லது அலட்சியத்துடன் (ஹேலா) புனித நாமத்தை
ஒருமுறை மட்டுமே உச்சரித்தாலும், அவர் இந்த பிறப்பு மற்றும் இறப்புக் கடலில் இருந்து
உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

—————

அனுகுல்யஸ்ய ஸங்கல்ப ப்ரதிகுலஸ்ய வர்ஜநம்
ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸோ கோப்த்வৃத்வே வாரணம் ததா

“சரணாகதியின் ஆறு பிரிவுகள்:
பக்தித் தொண்டிற்கு சாதகமானவற்றை ஏற்றுக்கொள்வது,
பாதகமான விஷயங்களை நிராகரிப்பது,
கிருஷ்ணர் பாதுகாப்பைத் தருவார் என்ற நம்பிக்கை,
இறைவனை ஒருவரின் பாதுகாவலராக அல்லது எஜமானராக ஏற்றுக்கொள்வது,
பணிவு மற்றும் முழு சுயம். -சரணடை

————

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!’

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மனமே தனம் —

May 17, 2023

செல்வ நாராயணன் -திரு நாராயணன் -திருவுக்கும் திருவாகிய செல்வா
தானம் மதீயம் தவ பாத பங்கஜம்
அவனும் அவளும் விட்டாலும் விடாத திண் கழல்கள் தனம்

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, – பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.–மூன்றாம் திருவந்தாதி –4-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -பசிக்கு விருந்தும் நோய்க்கு மருந்தும் இதுவே

வெங்கடாஜலா பாதி– காலோபதி வைத்தியம் —

அடி உதவுமாறு அண்ணன் தம்பியும் உதவ மாட்டானே -நம்பி மூத்த பிரானும் கிருஷ்ணனையும் விட திருவடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்தியும் அளிக்க வல்லது

உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாதமாநம் அவசாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ஆத்மைவ ரிபு ராத்மந –ஸ்ரீ கீதை
பற்றற்ற மனமாகிய செல்வத்தைப் பாதுகாக்க வேண்டுமே

உள்ளம் நெஞ்சம் அகம் மனம் சித்தம் சேதஸ் ஹ்ருதயம் ஸ்வாந்தம் ஹ்ருத் மாநஸம் மநஸ் பர்யாய சொற்கள்
ஆத்மா இதயம் உயிர் மூச்சு இவற்றை விட வேறுபட்டது
மந்யதே அநேந இதி மந –மனனம் நினைக்க உதவும் உபகரணம் கருவியே மனஸ்
அறிவுப்பதிவுகளைக் காட்டும் திரையே மனஸ்

மாயவனையே மனத்து வை -பொய்கையார்

மனஸா து விஸூத் தேந -பராக்கைப் பார்க்காமல் ப்ரத்யக்க்கை நோக்கித் திருப்பா எம்பெருமான் அருள் புரியட்டும்

———-

மனம் புத்தி ஆத்மா -சித்தம்-கடஉபநிஷத் தேர்
தேர் ஒட்டி பார்த்தசாரதி –

அந்தக் கரணம் இருப்பிடம் ஹ்ருதயம் ஆத்மா பரமாத்மாவைப் போலவே

பஞ்ச பிராணன் போல் மனத்தின் வெளிப்பாடு 10 வகை ராமானுஜர்
காமம் –ஆசை -விருப்பம் -தூண்டும் கருவி
சங்கல்பம் -செய்ய வேணும் என்னும் உறுதியைத் தூண்டும் கருவி
விஜிகித்சா –ஐயத்தை அறிய ஆவலைத் தூண்டும் கருவி
ஸ்ரத்தா -முனைப்பு ஆர்வம்
அஸ்ரத்தா -ஆர்வம் இன்மை
த்ருதி -உறுதி
அத்ருதி –உறுதி இன்மை
ஹ்ரீஹீ –வெட்கம்
தீ -புத்தி
பீ -பயம் நாளை வரும் பிரதிகூலம் பற்றிய எண்ணம் -முன்பு நடந்தது போல் நடக்குமோ என்ற எண்ணமே பயம்

நல்ல சங்கல்பம் எடுத்து
ஸ்ரத்தையுடன் தொடங்கி
உறுதியுடன் இறைவனை அடைய
நம் மனம் துணை நிற்க அவன் அருளட்டும்

தேவ ஹூதி -ஒன்பது பெண்கள் -ரிஷிகளுக்கு கல்யாணம் பிள்ளையான கபிலர் இடம் ஸாஸ்த்ர அர்த்தம் கேட்க ஆசை
மோக்ஷம் அறிய ஆர்வம் -ஸ்ரத்தை -த்ருதி -கடைப்பிடித்து பேறு பெற்றாள்

ஸூஷ்மம் -பஞ்ச பூதங்களால் செய்யப் பட்ட சரீரம்
இயற்க்கை யெய்தல் காரியப் பொருள்கள் காரணத்தில் லயம் அடைதல்
இந்திரியங்கள் -பாஹ்ய- அந்தக் கரண -ஜீவன் உடனே சென்று மீண்டும் சேரும்

பிராகிருதம் -ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்திரியங்கள் உருவானவை-த்ரிகுண மயம் -ஜடப்பொருள் –

ஹ்ருதயம் வேறே மனஸ் வேறே

அறிவு நித்யம் அப்ராக்ருதம் -முக்குணங்கள் பீடிக்காததே ஞானத்துக்கு -உருவாக்கப்படாதது -புத்தி

மனம் மொழி வாக்கு -பிரதானம் மூன்றுமே –
காரண கார்ய பாவம் -சங்கிலி தங்கம் போல் -காரணம் பிரதானம் -நினைத்தால் தானே பேசவும் செய்யவும் முடியும்

ஆத்மா கர்மா- வாசனா- மனசில் பதிக்கும்-மோக்ஷ பந்த ஏக ஹேது -மனமே -முந்துற்ற நெஞ்சே -நெஞ்சமே நல்லை நல்லை –

கர்த்தா -பிரதம வேற்றுமை -ஆத்மா
காரணம் -ஆசையால் செய்கிறான்
காரியம் -நடை
கரணம் -ஆல் -இத்தால் -கருவி -கால்
நான்கும் அறிய வேண்டும்
மனம் நினைவுக்கு கருவி -காரணமாக ஆகுமோ -மனமே பந்த மோக்ஷ காரணம் சொல்லலாமோ

கர்த்தா தனது தலையில் ஏற்றுக் கொள்ளாமல் இதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்

காமம் க்ரோதம் லோபம்  மோகம் மதம்  மாத்சர்யம்-அஸூயை-பொறாமை -மனதின் நிலைமைகள்

மயக்கம் ஸம்மோஹ-அஞ்ஞானத்தால் மனம் மயக்கம்
மனம் குழப்பம் -இதுவோ அதுவோ சந்தேகம்
தப்பானதை இது தான் முடிவு மன மயக்கம்
மயர்வு –
ஞானத்தால் மனத் தெளிவு —
மன அழுத்தம்-

மஹா கல்பம் தொடங்கி –இன்று வரை நம் மனம் அழியாமல் –
அடுத்தடுத்த பிறவியில் தொடர்கிறது
ஆனால் முன் பிறவிகளின் நினைவுகள் தொடராது
இறுதியில் அவன் அருளால் ஸ்ரீ வைகுந்தம் அடையும் போது தான் அப்ராக்ருதமான வேறு மனம் கிடைக்கும்
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து அருளுவான் –

இந்த்ரியங்களுக்குத் தலைவன் -மனம்
மனத்துக்குத் தலைவன் ஆத்மா
ஆத்மாவுக்குத் தலைவன் பரமாத்மா
அவன் அருளால் உட் புலனும் வெளிப்புலன்களும் சரியாக இயங்கட்டும்

மனஸ் த்ரவ்யம்-கண்ணுக்குத் தெரியாத ஓன்று -இருந்தாலும் நம்ப வேண்டும்
த்ரவ்யம் என்பது -அவஸ்தாச்ரயம் -வெவ்வேறே அவஸ்தைகளுக்கு இருப்பிடம்
விதை காய் பழம் போல் அவஸ்தைகள் மாறலாம்
விருப்பம் கோபம் பேராசை மயக்கம் ஆணவம் பொறாமை போன்ற தீட்ட அவஸ்தைகளையும்
அஹிம்ஸை ஸமத்வம் திருப்தி புலன் அடக்கம் போன்ற நல்ல அவஸ்தைகளையும் அடையும்

மனம் ப்ராக்ருதம் -அறிவற்ற ஓன்று
எனது மனம் சிந்திக்கிறது -விரும்புகிறது என்பது பொருந்தாது
ஆத்மாவின் செயல்களை இதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்
அறிவுக்கு இருப்பிடம் -ஆத்மா வாக்கிய வீட்டிலே தான்
மனஸ் வீட்டின் வாசல் தான்
கர்மத்தால் பாதிக்கப்பட்ட அறிவுப் -காமம் கோபம் போன்ற அழுக்குகளால் பாதிக்கப்பட்ட மனம்
நோயால் பாதிக்கப்பட்ட கண் போன்ற புலன்கள்
இவை ஒவ்வொன்றும் பொருளை பற்றிய உண்மை அறிவை ஏற்படுத்தாதே

ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட மத்தஸ் ஸ்ம்ருதி அபோஹநம் ச
நினைப்பதும் மறப்பதும்-அவனாலே தானே ஒழிய மனஸால் அல்லவே
மனம் வலிமையோடு இறைவனிடம் ஈடுபட்டு இருந்தால் அறிவும் நினைவும் வரும் -மறதி விலகும் –

யத் ஹி மனஸா த்யாயதி -தத் வாஸா வசதி
யத் வாஸா வததி -தத் கர்மணா கரோதி

மனஸ் ஏகம் வசஸ் ஏகம் கர்மண் ஏக்கம் மஹாத்மா நாம்
மனஸ் அந்யத் வசஸ் அந்யத் கர்மண் யன்யத் துராத்ம நாம்
முதலில் சிறிது சிந்தித்து -எதைச் செய்ய இயலுமோ அதை மட்டும் பேசி
எதைப் பேசினோமோ அதைப்பற்றி மட்டுமே தொடர்ந்து சிந்திக்க வேண்டும்
செய்ய இயலாததை பற்றித் தொடர்ந்து சிந்திக்கவோ பேசவோ கூடாது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுவோம்
இம்முறையை கடைப்பிடித்தால் பெருமானைப் பற்றி சிந்திக்கவும் பேசவும் நமக்கு நிறைய நேரம் கிட்டும்

கீழே மனசால் உயர்த்திக் கொள் -இங்கு மனசை வெல்வாய் -விஷயாந்தரங்களில் போகாமல் தடுப்பாய் என்கிறான்-அநாத்மா வெல்லப்படாத மனஸ் கொண்டவன் -புலன்கள் ஐந்தையும் வென்றிலேன் –அளப்பில் ஐம் புலன் அடக்கி -என் மனஸ் என்று கொள்ளாமல் பகவத் விஷயத்தைக் காட்டிக்கொடுக்கும் உபகரணம் என்று கொள்ள வேண்டுமே -ராமம் மே அனு கச்சதி-சக்ரவர்த்தி -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு உசாவ

பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷

யேந –எந்த மனத்தினால்
ஆத்மா -தன் மனம்
ஆத்மநா ஏவ -தன்னாலேயே
ஜித -விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ
தஸ்ய ஆத்ம ந -அம் மனிதனுக்கு
ஆத்மா பந்துர் -அம் மனம் உறவினன் ஆகும்
ராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்மநஸ் து -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ என்னில்
ஆத்மா ஏவ -தன் மனமே
ஸத்ருவத்-தனது எதிரியைப் போலே
ஸத்ருத்வே -நன்மைக்குத் தடையாய் இருப்பதில்
வர்த்தேத —ஈடுபடும்

எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு
அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில்
தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்

பற்று அற்ற மனசே ஒருவனை உயர்த்தும் –மனசே மோக்ஷ பந்து ஏக காரணம் -பந்துவும் விரோதியும் -மனசே –
நெஞ்சை வென்றவன் -ஆத்ம சப்தம் ஜீவாத்மாவுக்கும் நெஞ்சுக்கும் -இந்த்ரியங்களில் பட்டி மேயாமல் –
ஒரே மனசே மித்ரனாகவும் விரோதியாகவும்
சங்கம் பற்று தானே காமம் க்ரோதம் -சுகம் துக்கம் காரணங்கள் ஆகும்

மனம் மொழி காயம் மூன்றிலும் முதலான மனமே ஏக பந்த மோக்ஷ ஹேது வாகும்

நமது அறிவுக்கு முக்குண பாதிப்பு கிடையாது
ஆனால் அறிவு மனம் வழியாகவே பயணிக்கிற படியால்
மனத்தில் உயர்ந்து இருக்கும் குணம் அறிவையும் பாதிக்கும் –

உடலும் மனமும் முக்குண வசப்பட்டு இருக்கும்
தேவனாகப் பிறந்த உடலில் சத்வகுணம் அதிகமாயும்
அசுரனுக்கு ரஜோ குணமும்
அரக்கனுக்கு தமோ குணமும்
மனிதர்க்கு மூன்றும் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும்
மேலும்
க்ருத யுகத்தில் சத்வ குணமும்
த்ரேதா யுகத்தில் ரஜோ குணமும்
த்வாபர யுகத்தில் ரஜோ குண தமோ குணம் கலந்தும்
கலியுகத்தில் தமோ குணம் அதிகமாகவும் இருக்கும்
இவை பொது விதி
விதி விளக்குகள் -ப்ரஹ்லாதன் -ஜெயத்ரன் விபீஷணன் பாக்களில் பார்க்கிறோம்
மனத்தில் ஸத்வ குணத்தை வளர்க்க பெருமானைத் தியானித்தல் உதவும்
உடல் அளவில் இன்ன பிறவி எடுத்ததற்காக

பக்தியோ முக்தியோ கிடைக்காது என்று எந்த சாஸ்திரங்களும் சொல்ல வில்லை
மனத்தில் ஸத்வ குணம் வளர்ந்து பக்தி முற்றினால் யாருக்கும் முக்தி கிட்டும்

செய்யப்பட கர்மங்கள்
அதன் பதிவுகளாக வாஸனை
அதனால் மீண்டும் செய்யத் தூண்டும் ருசி
இவை தான் நாம் தொடர்ந்து பிறந்து கர்மங்களை செய்யக் காரணங்கள்

ஈஸ்வரன் ஆத்மாவுக்குள் கிடைக்கும் கர்ம வாஸனை ருசி ஆகியவற்றை மேல் எழுப்பி மனம் என்கிற திரையில் அதே ஆத்மாவுக்கு காட்டுகிறார்
ஆத்மச அவற்றைப் பார்த்து அதற்கு வசப்பட்டு நடக்கிறார்
அல்லது தனக்குள்ள புத்தியைப் பயன்படுத்தி அந்தக் காட்சிகளுக்கு வசப்படாமல்
அதைத் தாண்டி சாஸ்திரங்கள் காட்டும் நல்ல வழியில் நடக்கிறார்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணவே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்

இதனால் சிந்திக்கிறோம் -மனஸ்
இதனால் அறிகிறோம் -புத்தி -கட ஞானம் பட ஞானம் -போன்ற பலவற்றை அறிகிறோம்
ஒரே புத்தி பலவற்றை அறிகிறது –
ஞானம் வேறே ஸ்ம்ருதி வேறே -அறிந்தவற்றை ஸ்மரணம் பண்ணுகிறோம்

மன ஏவ ஹி மனுஷ்யா ணாம் காரணம் பந்த மோக்ஷயோ பந்தாய விஷயாங்கி முக்தியை நிர்விஷயம் மன –ஸ்ரீ விஷ்ணு புராணம்

நெஞ்சமே நல்லை நல்லை
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும் மனமே தந்தாய்

மனத்தைக் காட்டிலும் வலியது நம் புத்தி
ஆத்மா தனது புத்தியால் மனத்தைத் திருத்த வேண்டும்
அல்லது
பகவான் இடம் சரணாகதி செய்து வேண்டினால் தான் வசிக்கும் இடமாகிய மனத்தை பகவானே தூய்மை ஆக்குவார்

அறிவில்லாத மனம் பந்த மோக்ஷ ஹேது வாகாதது-
உண்மையில் அறிவுள்ள ஆத்மாவே தான் காரணமாக இருந்தாலும் அதன் மேல் ஏறிட்டுச் சொல்கிறோம்
அநாதி காலம் ஆர்ஜித்த கர்மம் வாஸனை ருசி ஆகியவையே
காமம்
கோபம்
லோபம் என்னும் பேராசை
மோகம் -தர்ம அதர்ம விபாகம் அறியாமை
மதம் -கர்வம்
மாத்சர்யம் -பொறாமை
டம்பம் –
தர்ப்பம் -கர்த்தவ்ய -அகர்தவ்ய விபாகம் பண்ண முடியாமல் ஆக்கும் சிற்றின்ப ஸூகம்
பாருஷம் -சாதுக்களையும் வருத்தும் நம் காடின்யம்
இவை தான் மனத்தின் அழுக்குகள்
நாம் மெது மெதுவே மனத்தை பகவான் இடம் ஈடுபடுத்தி தியானித்தால்
அழுக்குகள் நீங்கி
புடம் போட்ட தங்கம் போல் மனம் தூய்மையாகும்
விடா முயற்சியால் அநாதிகாலம் தொடர்ந்து செய்யவே இந்த நிலையை அடைவோம்

தானம்
யாகம்
தூ மலர் தூவித்தொழும் அர்ச்சனை
சமம்
தமம்
அஹிம்சை
த்ருதி -நிச்சய புத்தி
தேஜஸ் -உறுதியான நிஷ்டை
இவற்றை நாம் படிப்படியாகக் கடைப்பிடித்து -பகவத் பிரீதி கார்யங்கள் செய்வதே
இந்த அழுக்குகள் நீக்கும் வழிகளாகும்

பேதை மனமே பேசு
முந்துற்ற நெஞ்சே
மட நெஞ்சே
நெஞ்சே நீயும் நானும் நேற் நிற்கில்
பகவத் ப்ரஸாதத்தாலேயே ஆத்மாவின் ஆணைக்கு உட்பட்டு நெஞ்சம் நல்ல காட்சிகளையே காட்டும்
ஸத்வ குணத்தாலேயே மனத்திரையைத் துடைத்து சுத்தமாக வைத்துக் கொண்டு
நல்ல காட்சிகளையே காட்டும்படி செய்வோம்

மன மயக்கம் -அறிவுக் கோளாறு -தீருவதற்கு
உண்மை அறிவும்
மனத்தின் ஸத்வ குணமும் தேவை
ஆன்றோர்கள் அறிவுரைகளைக் கேட்டுத் தெளிவு படுத்திக்க கொள்ள வேண்டும்

மன அழுத்தம் அறிவின்மையாலே வரும்
உண்மை அரிவாள் விலகும்

ஆதி -மன நோய்
வியாதி -உடல் நோய்
லங்கநம் பரம ஒவ்ஷதம் –inter mittent fasting
கீழா நெல்லி கரிசலாங்கண்ணி ஏலக்காய் தேன் மிளகு வேப்பிலை மணத்தக்காளி சுண்டைக்காய் துளசி
போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து ஆரோக்யம் கொடுக்கும்
ருஷ்ட்டிக்கல் காற்றையும் நீரையும் மட்டும் புஜித்து -அதன் மூலம் சக்தி பெற்று நீண்ட காலம் நல் வாழ்வு வாழ்ந்தார்கள்

வயதாக உடல் உறுப்புக்கள் வலிமை இழக்கும்
மனமோ அனுபவத்தால் பக்குவம் அடைந்து வலுவடையும் –
மன வலிமையால் உடல் நோயை எதிர்த்து நீக்கலாம்

சோக ஸ்தாநே ஸஹஸ்ராணி பய ஸ்தாந ஸதாநி ச
திவஸே திவஸே மூடம் ஆவிசந்தி ந பண்டிதம் –மஹா பாரத ஸ்லோகம்
விவேக ஞானமும் பக்தியும் மனத்தெளிவை உண்டாக்கும்
ஸ்ரீ மத் பாகவதத்தில் -புரஞ்சந உபாக்யானத்தில்
ஜரா என்னும் பெண் ம்ருத்யு என்னும் ஆணை மணம் புரிய வேண்டுகிறாள்
அதை ஏற்காமல் ம்ருத்யு தன் தம்பியான ப்ரஜ்வாரனையும் தன் ஸேனையையும்
ஜாராவுக்குத் துணையாக மனிதற்குத் துன்பம் விளைவிக்க அனுப்புகிறார்
மூப்பைத் தடுக்க முடியாவிட்டாலும் மூப்புக்குத் துணையான உடல் நோயைக் கட்டுப்படுத்தி
மன நோயை நீக்கி ஆரோக்யமாக வாழ வேண்டும் என்பதையே இது காட்டும்

மானஸ ஸ்நாநம்
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கருவினை களைந்தடுகிற்கும்
த்ரிவிக்ரம பாதாரவிந்த தீர்த்தம் மம பஹிரந்தச் ஸூத்தி கரம்

யஜ தேவ பூஜாயாம்
ராத்ரு ப்ரீணன -தாதுப்படி திரு வாராதனமே பகவத் ப்ரீதி யர்த்தம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்துக் கைகளால் தூ மலர் தூவித் தொழுது –
இவ்வாறு மனம் மொழி மெய் ஆகிய முக்கரணங்களாலும் ஈடுபட்டு திருவாராதனம் செய்ய வேண்டும்
108 திவ்ய தேசப்பெருமாள்களையும் மானஸீகமாக எழுந்து அருளப் பண்ணி முக்கரணங்களாலும் ஈடுபட்டு
திருவாராதனம் செய்ய வேண்டும்

புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
பரமாபதம் ஆ பன்ன மனஸா சிந்த யேத் ஹரிம் –
கத்யர்த்த புத்த்யர்த்தம்
மானஸ சரணாகதி கண்டிப்பாகப் பலிக்கும்
பகவானையே நம்பும் அறிவும்
அவனையே நினைக்கும் மனமுமே
சரணாகதிக்குத் தேவை

ஜீவ காருண்யம் ஸத்யம் நேர்மை புலன் அடக்கம் -போன்ற உள் அடையாளங்கள் தான் முக்கியம்
வெளி அடையாளங்களும் வேண்டும்
கல்வியும் செயல்பாடும் வேண்டுமே
குதிரையும் வேண்டும் -கடிவாளம் சோணம் -ஆகியவையும் வேண்டுமே
கற்கக் கசடற –கற்றபின் நிற்க அதற்குத் தக

 

(கைங்கர்யம் பண்ணப் பண்ண
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
சுமந்து –சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
பெரும் பலன்களைப் பட்டியல் இடுகிறார்
மனம் மாசு அஞ்ஞானம் -காம க்ரிதாதிகள் போகும்
தீரா வினைகள் கிட்டாவே
பக்திச் செல்வம் தானாகவே வந்து சேரும்
கைங்கர்ய ரூபம் -சாதனமாக அல்ல )

பிராட்டிமார் அடியாக அவனைப் பற்றினார்க்கு போகத்தில் பிரதிபந்தகங்கள் போக வேணும் என்றும்
பக்த்யாதிகள் உண்டாக வேணும் என்றும் இவர்களுக்கு கரைய வேண்டா -என்கிறது –

திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் –
பிராட்டிமார் நித்ய சந்நிஹிதராய் இருக்கையாலே தங்கள் குற்றத்தை நினைத்து பிற்காலிக்க வேண்டியது இல்லை
இனி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயிக்கவே விரோதி வர்க்கம் தன்னடையே விட்டு நீங்கும் -என்கிறார் –

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -43–

பதவுரை

புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்

மனமாசு  தீரும் –மனஸ்ஸூ க்கு மாசாகிறது -ருசி வாசனைகள் -(வாசனை விட ருசி பிரபலம் )
அரு வினையும் சாரா–அவித்யாதி கர்மங்கள் (பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் )அணையா
தனமாய தானே கை கூடும் -இப்படியான அதிகாரிக்கு தனமான கைங்கர்ய பூர்வ பாவியான பக்த்யாதிகள் தானே யுண்டாம்

(குலம் தரும் செல்வம் தந்திடும் -கைங்கர்யம் பண்ண ருசி பக்தி வேண்டுமே -அது தானே உண்டாகும்)
புனமேய-பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி-
தாம் தொழா நிற்பார் தமர் —தமரானவர்கள் சர்வேஸ்வரன் திருவடிகளிலே தாங்களே தொழா நிற்பர்கள் –
இவர்களுக்கு அவனுடைய திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு தொழுவது அவனை அனுபவிக்கையிலே அந்வயம் –

(இவை சாதனம் அல்லவே
சூட்டு நன் மாலைகள் -அங்கு போல் இங்கும்
சாதனம் ஆக்குவது உபாயாந்தர பரர்கள் )

திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் -அவித்யாதிகள் போனார்க்கு வரும் தனம்-(பரபக்த்யாதிகள் -போஜனத்துக்கு சுத்தி போல் இவை )
அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –பூந்துழாயான் அடிக்கே–குடிக்கிற வேப்பங்குடி நீர் -போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் –இவன் வகுத்தது செய்ய அவன் வகுத்தது செய்யாது ஒழியுமோ –

(செல்வச் சிறுமீர்காள் -அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –நாகவர ஸ்ரீ மான் -ஈஸ்வரனே ரக்ஷகன் என்ற நினைவே -லஷ்மணோ லஷ்மீ சம்பந்தம்)

(நீ செய்ய வேண்டியத்தைச் செய்தால் -ஸ்வ தந்த்ரனாக நினைத்த்தால் சாதனம் ஆகுமே
நீ -அத்யந்த பரதந்த்ரனாக அறிந்து -ப்ராப்யத்தில் அன்வயித்து கைங்கர்யம்
ஸ்வாமி தனது கார்யம் உடைமைக்குச் செய்ய சொல்ல வேண்டுமோ)

(சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திரு விருத்தம் -20-
அதை இங்கேயே இவ்வு டம்புடனே இக்காலத்திலேயே
செய்யுமவர்கள் -விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -70-
ஸ்வரூப அனுரூபமான தனமாவது பரபக்தி பரஞானம் பரமபக்திகள் –
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் யுத்த -16-17-
ச து நாக வர ஸ்ரீ மான்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -பால-18-20-)

இதில் மன மாசு -அவித்யாதிகள் தொலைந்தாலும் -இவற்றுக்குக் காரணமான கர்மங்கள் இருக்கும் வரை மீண்டும் மேலைக்குமே
ஆகவே அரு வினையும் சாரா -கர்மங்கள் வாஸனை ருசி -போன்றவையும்
பகவத் ப்ரஸாதத்தாலேயே தொலைய வேண்டும்
தடங்கலான கர்மங்களும் -அதனால் வந்த மன மாசும் தீர்த்ந்தால் தானே தனமாயவை கைகூடும்
தனமாய் -ஆத்ம ஞானம் பக்தி போன்றவையும் அவற்றுக்குக் காரணமான புலன் அடக்கம் சாந்தி போன்ற நற் குணங்களும்
இவை தானே கைகூடும் என்பதால் நமது முயற்சி இல்லாமல் பகவத் ப்ரஸாதத்தாலேயே கிட்டும்
பகவத் ஆராதனம்
ஸாது சங்கம்
வர்ணாஸ்ரம அனுஷ்டானங்கள்
இவற்றை விடாமல் அனுஷ்ட்டிக்க மனமாசு தீரும்
மற்றனைத்துத் தோஷங்களும் நீங்கும்

இந்திரியாணி மநோ புத்தி அஸ்ய அதிஷ்டானம் உச்யதே
ஏதை விமோஹ யத் யேஷ ஞானமும் ஆவ்ருத்ய தேஹினம்

கர்மங்கள் முக்குணங்களைக் கூட்டும்
ரஜோ குணம் காமத்தைக் கூட்டும்
காமம் புலன்கள் மனம் புத்தி ஆகியவற்றைப் பீடித்து அறிவை மறைக்கும்
இவற்றுக்கு மாற்று பகவத் காமமே
இதற்காகவே கோயில்களில் நம்மைச் சூழ்ந்து அழகைக் காட்டி ஈர்க்கிறான்

யத் அக்நி உத்தத சிகஸ் கஷம் தஹதி ஸாநில ததா சித்தஸ்திதோ விஷ்ணு யோகிநாம் ஸர்வ கில்பிஷம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-7-4

ப்ரஹதாரண்யமும் -ஸ்ரவணம் மனனம் -த்யானம் -மூலம் சாஷாத்காரம் பெறலாம்
என்பவற்றைச் சொன்னாலும் எளிதாக

ஞான அக்னி தத்த கர்மாணாம் தமாஹ
எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹமே ஸூ பாஸ்ரயம்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் —
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்

ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம்
தன் பால் ஆதாரம் பெறுக வைப்பதும் அவனது அழகே

ஜாக்ரத்–விழித்து இருக்கும் முதல் நிலை –வெளிப்புலன்களும் மனமும் இயங்கும்
ஸ்வப்னம்
ஸூ ஷுப்தி -கனவைத் தாண்டி ஆழ்ந்த உறக்கம்
துரீயம்

பாலஸ் தாவத் க்ரீடா ஸக்த தருண ஸ்தாவத் தருணீ சக்த
வ்ருத்தஸ் தாவத் சிந்தா சக்த பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த
சிறுவன் விளையாட்டிலும் இளைய நிலையில் பெண்கள் இடமும்
கிழவனாய் வீணான கவலைகளிலும் ஈடுபட்டு பர ப்ரஹ்மத்திடம் ஈடுபடாமல் உள்ளார்கள்

ஆனாது மாயயா ஸூஅஸ்வப்னம் அத்வைதம் புத்யதே ததா –மாண்டூக்ய காரிகை
ஆத்மா உறங்காமல் அறிவு மலர்ந்தே இருந்து மனமும் உறங்காமல்
விழிப்போடு பெருமான் நினைவாகவே இருக்கும்

நமது கர்மங்களின் படியே கனவுக்காட்சிகளும்
புண்ணியத்தின் பலனாக இன்பக்காட்சிகளையும்
பாவத்தின் பலனாக துன்பக்காட்சிகையும்
கண்பாவில் எம்பெருமான் காட்டு அருளுகிறார்
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து தொடங்கி
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் -பத்துப்பாசுரங்களையும் பாடி அருளுகிறார் நாச்சியார்
கனவுகளைக் காணும் போதும் நமது கர்மங்களைத் தொலைக்கும் கருணை -இவை தான் பெருமானின் பெருமை –
ஸூ ஷுப்தி நிலையில் வெளிப்புலன்களும் மனமும் செயல் அற்று உறங்கி விடும்
மனம் ஜீவனின் வசத்தில் இருக்காது
ஆத்மா ப்ரஹ்மத்துடன் கூடி அனுபவிப்பார்
உத்ஸாஹம் மற்றும் சக்தியின் இருப்பிடம் பகவான்
அவனுடன் கூடுகிற படியால் ஜீவனும் சக்தியைப் பெறுகிறான்

துரீய தசை -மரண தசை –
ஆத்மா அநாதி கால கர்மாக்கள் பூத ஸூஷ்மங்கள் -மனம் ஆகியவை அவருடன் அடுத்த பிறவி அடையும்
கர்ப்ப கதி
யாம்ய கதி
தூமாதி கதி
அர்ச்சிராதி கதி

மாளும் ஒர் இடத்திலும் வணக்கொடு மாள்வது நலமே
அஹம் ஸ்மராமி மத் பக்தன் நயாமி பரமாம் கதிம்

ஆஹார நித்ரா பய மைதூ நாதி துல்யானி கல்வத்ர ஸமஸ்த ஐந்தோ
ஞானாத் விஸிஷ்டோ ஹி நர பரேப்ய ஞாநேந ஹீந பசுபி ஸமாந -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம்
கஜேந்திரன் ஜடாயு திருவடி -பிறவி எப்படி இருந்தாலும் முன் பிறவியில் செய்த புண்ய பலத்தால் ஸ்ரேஷ்டர்கள் ஆனார்கள்

உன்னுடைய விக்கிரமன் ஓன்று ஒழியாமல் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

சாளக்கிராமம் அடை நெஞ்சே

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான்

நல்ல நெஞ்சே நாம் தொழுதும்

இன்புருகு சிந்தை இது திரியா

முந்துற்ற நெஞ்சே

அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே

ஆகிலும் கொடிய என் நெஞ்சு அவன் என்றே கிடைக்கும் எல்லே

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என்ன செய்யோம் இனி என் குறைவினம்

இத்தகைய அருளிச் செயல்களை நினைந்து இருந்தே நம்முடைய நெஞ்சமும் நல் வழிப்பட்டு பெருமான் பின்னேயே செல்லட்டும்

ப்ரவஸித இவ கேஹே வர்த்ததே யஸ்ஸ முக்த –வீட்டில் இருந்த போதே ஸந்நியாசியாகலாமே

ரமணீயம் ப்ரஸன்னாம்பு ஸந் மனுஷ்ய மநோ யதா –
தமஸா ஆற்று நீர்
அஹிம்சை இரக்கம் அடக்கம் சாந்தி ஆகியவை நிரம்பி உள்ள
மஹான்களின் உள்ளம் போல் தெளிந்து உள்ளது –

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

கேவலம் ஸ்வ இச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன

நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து

ஸுஹார்த்தம் -சோபனம் ஹ்ருதயம்

ஸுஹார்த்தம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் சாந்திக்கு ருச்சதி –5-29-

உதாரண ஸர்வ ஏவைதே ஞானீத்வாத் மைவ மே மதம் –7-18-

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா பிரயச்சதி–9-26-

ஆத்மாநம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மநஸ் ப்ரக்ரஹ வான் நர –கட உபநிஷத்
உடல் ஒரு தேர்
ஆத்மா தேருக்கு உடையவன்
புலன்கள் குதிரைகள்
புத்தி உறுதி தேரோட்டி
மனம் கடிவாளம்
ஆத்மாவின் விருப்பட்டியே உடலும் புலன்களும் செயல்பட வேண்டும்
அதற்கு ஒரே வழி பார்த்த சாரதி எம்பெருமான் இடத்திலே தேரை ஒப்படைப்பது தானே –

சஞ்சலம் ஹி மநஸ் கிருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம்

அப்யாஸமும் வைராக்கியமும் தேவை
காந்தம் இரும்பை இழுப்பது போல் ஸ்ரீ காந்தன் இரும்பு போல் வலிய நெஞ்சை தன் பால் ஈர்த்து அருளுவார்

திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும் –உறையும் பிரான் –8-6-2-

அரவத்தமளியினோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்தான்

என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேடன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் ஏன் நெஞ்சுளே

இளம் கோயில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டி இருக்கும்

எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி
ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்தத்திற் பின் வணங்கும் சிந்தனைக்கு இனியாய்

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற என் மனதுக்கு இனியான்

நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே

என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்

சேஷியாய் இருந்துள்ள உன்னை உணர பிரதிபந்தகம் எல்லாம் போம் என்கிறது –

இப்படி ஈஸ்வர அபிமானிக்கு ரக்ஷகனான உன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதம் விட்டு நீங்கும் -நல்வழியே போகலுமாம் –என்கிறார் –

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி  ———–75-

பதவுரை

திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரமபுருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு-உன்னிப்பதுக்கு மேல் த்யானம்
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.

அநிஷ்டம் தொலையப் பெற்று இஷ்ட பிராப்தியும் பெறுவார்கள்

காப்புன்னைக்  யுன்னக் கழியும் –உன்னை உணர -காப்பு -காவல் -தேவதைகள் -கழியும் -( ஆதித்ய சந்திரன் பகல் இரவு அபிமான தெய்வங்கள் தர்மம் –14 தேவதைகள் )
காப்பு என்கிறது -ஈஸ்வரனுக்குப் புரவர் போலே இவ் வாத்மாக்கள் செய்த கர்மங்களை ஆராயக் கடவரான
சந்த்ராதித்யர்கள் தொடக்கமான பதினாலு பேருடைய சிறைகள் -கர்ம வஸ்யனாகை இறே இவர்கள் காக்கைக்கு அடி -(பெருமானுக்கு வஸ்யமானால் -யம தர்மராஜன் மது ஸூதன ப்ரப்ருதிகளை ப்ரபு என்றே கொள்வான் -இது உப லக்ஷணம் மற்ற தெய்வங்களுக்கு )
அரு வினைகள்-ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் –அக் காப்புக்கு அடியான அவித்யாதிகளால் யுண்டான பந்தம் உன்னை நினைக்க நெகிழும் –
மூப்புன்னைச்-சிந்திப்பார்க்கு இல்லை –காப்பும் அருவினைகளும் போன அதிகாரிகளுக்கு –மூப்பாவது -கைவல்யம் –
அன்றியே -ஷட்பாவ விகாரங்களுக்கும் உப லக்ஷணம் ஆகவுமாம்
திரு மாலே –ஈஸ்வரன் ஸ்வ தந்தர்யத்தாலே ஆராயப் புக்காலும் பிராயச்சித்த சாத்தியம் அல்லாத பாபம்
நாம் பொறுக்கும் அத்தனை அன்றோ என்று உணர்த்துவாள் ஒருத்தி அருகே உண்டு என்கிறது
தாசீ நாம் ராவண ஸ்யாஹம் மர்ஷய மீஹ துர்பலா —-ராஜ சம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞ்ஞயா –என்கிறபடியே
நின்னடியை-வந்திப்பார் காண்பர் வழி  ——–உன் திருவடிகளிலே விழுவார்கள் நல்ல வழி காண்பர் –
வழி -என்று அர்ச்சிராதி கதி என்றுமாம் -பரமபதம் போலே பரமபதத்துக்கு போம் வழி –நரகம் போலே பொல்லாதாய் இருக்கும் நரகத்துக்கு போம் வழி —
பிரபு –அந்யந்ருணாம் நவைஷ்ணவாணாம் தே வர்ஷி –இத்யாதி –(நாராயணனுக்கு அடிமைப் பட்டவன் தேவ ரிஷி பித்ரு கடன்களில் இருந்து மீட்கப்படுகிறான் )
அருவினை -அவித்யாதிகளால் பிறக்கும் புண்ய பாபங்கள் -சாரீரமான மூப்பு –
திருமாலே -யுவா குமாரா -யுவ திஸ்ஸ குமாரிணீ-(ருக் வேதம் )என்கிற உங்களை ஆஸ்ரயித்ததால் உங்களைப் போலே
பரமம் சாம்யம் உபைதி இறே -(திரு மாலைப் போலவே யுவா குமாரராயே இருப்பார் அன்றோ )–வந்தியாதார்க்கு முள்ளும் முடுக்குமான வழி —

(ஆதித்ய சந்த்ர அவநிலோ அநலஸ் ச த்யவ்ர் பூமிர் ஆபோ ஹ்ருதயம் யமஸ் ச
அஹஸ் ச ராத்ரிஸ் ச உபே ச ஸந்த்யே தர்மஸ் ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம் –14 தேவதைகளும் சாக்ஷி-

ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் ப்ரபுர் அஹம் அந்நிய ந்ரூணாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-4-

கமல நயன வாஸூ தேவ விஷ்ணோ தரணி தர அச்யுத சங்க சக்ர பாணே
பவ சரண மிதீர யந்தி யே வை த்யஜ பட தூர தரேண தான பாபான் –3-7-33-

தேவர் ரிஷி பூதாப்த்த ந்ரூணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மநா யஸ் சரணம் சரண்யம்
நாராயணம் லோக குரும் ப்ரபந்ந -பாகவதம் –11-5-41-)

மூப்பு -ஷட் விகாரங்களுக்கும் உப லக்ஷணம்
அஸ்தி -உளனாவது -ஜாயதே -பிறக்கிறான் -பரிணமதே-மாறுதல் அடைகிறான் -விவர்த்ததே -வளர்ச்சி அடைகிறான் -அபஷீயதே -கிழவன் ஆகிறான் -விநஸ்யதி -மரணம் அடைகிறான்

யுவா குமாரா –யுவதிஸ் ச குமாரிணீ -தங்களை ஓக்க அருள் செய்யும் மிதுனம் –
வழி காண்பர் -இவ்வுலகில் நல் வழி நடத்தை செய்வார் -அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் சென்று
பரம புருஷார்த்த ரூபமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் பெறுவர்

மன மாசு தீர்வதோடு அல்லாமல் மூப்பு கொடிய வினைகள் ஆகியவையும்
பகவானை மனத்தினால் நினைத்து இருத்தினால் கழியுமே

போதில் கமலா வன்னெஞ்சம் புகுந்து என்னுள்ளே ஏதங்கள் ஆயின வெல்லாம் இறங்க விடுவித்து

எப்பொழுதும் எதிராசர் வடிவு அழகு என் இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர்

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வந்து உனது அடிப்போதில்
ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி –

ஆத்மா குத்து விளக்கு
தர்மபூத ஞானம் அதன் வெளிச்சம்
மனம் இதய வாசல் -திரையும் அதுவே
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து

ஆச்சார்யர்கள் காட்டிய வழியில் மனத்தை உள்ளே இருக்கும் திருமாலை நோக்கித் திருப்பி
தியானித்து அச்சம் கவலை முதலிய அழுக்கு நீக்கி
தூய மனதில் அவரை ஆனந்தமாக எழுந்து அருளி இருக்கச் செய்வதே மனமன் படைத்த பயன்

முக்தி மோஷோ மஹா ஆனந்த -இன்பமே உருவான பரமபுருஷார்த்தம் பெற மனதார பகவானைப் பிராத்திப்போம்

——————————————————-—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஒப்பிலியப்பன் – திருவோண விரதம்–நல் வாழ்வருளும் ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ திருத் தலங்கள்

May 16, 2023

ஸ்ரீ  மார்க்கண்டேய முனிவர் தவியாய் தவித்தார். திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்றும், நாராயணனே தனக்கு மருமகனாக அமைய வேண்டும் என்றும் ஆவல் கொண்ட அவர், அந்த இரண்டாவது எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று தவித்தார். திருமகள் அவருக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையால், திருமாலுக்கு, தன்னுடைய சொந்த திட்டமும் நிறைவேற வேண்டியிருந்தது. முதலில் திருமாலின் திட்டம் என்ன என்று பார்ப்போம்.

துளசி, ஸ்ரீ மன் நாராயணனின் பாதங்களை அர்ச்சனைப் பொருளாக அலங்கரித்தாள். ஓர் இலையாக அவர் பாதத்தில் வீழ்ந்து கிடக்கும் தான் ஏறிட்டு அவர் திருமுக மண்டலத்தைக் காண இயலாது தவித்தாள். எத்தனை நாள் தான் பாத தரிசனம்! பரந்தாமனின் பேரெழில் முகத்தைக் காணத் தனக்கு எப்போது தான் கொடுத்து வைக்கும் என்று ஏங்க ஆரம்பித்தாள். தன்னுடைய இந்தக் குறையை வைகுந்த வாசனிடமே முறையிட்டாள். மெல்லச் சிரித்துக் கொண்டார் நாராயணன்.

தன் முகத்தை தரிசிக்க வேண்டும் என்பது தான் துளசியின் ஏக்கமா அல்லது திருமகள் மட்டும் மார்பில் நிரந்தரமாக வீற்றிருக்க தான் மட்டும் பாதத்திலேயே கிடக்க வேண்டியிருக்கிறதே என்ற பொறாமையா என்று யோசித்தார். ஆனாலும் அவளுக்கும் பெருமை சேர்க்க மனம் கொண்டார். ஆகவே, துளசியிடம், ‘‘மஹாலக்ஷ்மி, பல காலம் தவம் மேற் கொண்டு, என் அன்பை வென்று, பிறகுதான் என் மார்பில் இடம் கொண்டாள். அதேபோல நீயும் தவமியற்றினால் உனக்கு உரிய அங்கீகாரம் அளிப்பேன்,’’ என்று அறிவுறுத்தினார்.

அதோடு, திருமகள் மார்க்கண்டேய முனிவரின் மகளாக அவதரிக்கப் போகிறாள் என்றும், அவளை மணந்து கொள்ள தான் பூவுலகிற்கு வரப்போவதாகவும், அப்போது, அங்கே தவமியற்றக் கூடிய துளசிக்குத் தான் தரிசனம் தர முடியும் என்றும் வாக்களித்தார். அதுமட்டுமல்ல; ஸ்ரீதேவியை மணம் முடிக்குமுன், அதாவது தாங்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ளும் முன் துளசியையே தன் முதல் மாலையாகத் தான் தன் மார்பில் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி அவளை சந்தோஷப்படுத்தினார்.

மிகுந்த உற்சாகத்துடன் துளசி பூலோகம் வந்தாள். திருக்குடந்தையில் அமைந்திருந்த மலர்க் காட்டில், ஒரு செடி வடிவாக தவத்தை மேற் கொண்டாள். இதற்கிடையில் திருமகளே தனக்கு மகளாக வந்துதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் மேற்கொள்ள சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வந்த மார்க்கண்டேயர், இந்த மலர்க் காட்டை கண்டதும் மனம் ஈர்க்கப்பட்டு உட்புகுந்தார். வெறும் காய், கனிகள், கிழங்குகளை மட்டுமே உட்கொண்டு தவம் இயற்றினார்.

எல்லாம் கூடி வந்ததை, இதை யெல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டு காய் நகர்த்திய பரந்தாமன், ஸ்ரீதேவியிடம், திருக் குடந்தை மலர்க் காட்டில் துளசிச் செடிக்குக் கீழே ஒரு குழந்தையாய் வடிவெடுத்து மார்க்கண்டேயருக்காகக் காத்திருக்குமாறும், பின்னொரு நாளில், அவளைத் தானே மண முடிக்க பூவுலகம் வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, துளசிச் செடியின் அடியில் திருமகள் ஒரு குழந்தையாய் ஒளி வீசி, மலர்ச் சிரிப்பால் அந்த வனத்தையே மகிழ்வனமாக்கினாள். தவம் முடித்த மார்க்கண்டேயர் மெல்ல நடந்து வருகையில், துளசிச் செடிக்கு அடியில் ஒரு பேரொளி தன்னை ஈர்ப்பதைக் கண்டார். அங்கே பொன்னே உருவாக, பாரிஜாத மணமாக, தெய்வீகக் குழந்தை ஒன்று தனக்காகவே கிடப்பது கண்டு உள்ளம் பூரித்தார்.

துறவு, தவம், பற்றற்றத் தன்மை எல்லாம் அந்தக் கணத்தில் அவரிடமிருந்து விடைபெற்றன. அப்படியே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் விருப்பப்படியே ஸ்ரீதேவியே தனக்கு மகளாகக் கிடைத்து விட்டதை அவர் உணர்ந்தார். அவர் அப்படி உணர்ந்ததை, தானும் தென்றல் சிலுசிலுப்பில் மெல்ல அசைந்து துளசிச் செடியும் ஆமோதித்தது. திருமாலின் மார்பகத்தை அலங்கரிக்கப் போகும் அந்தத் திருநாளுக்காகக் காத்திருந்தது.

பூமியிலிருந்து கிடைத்தவள் என்பதால், மகளை பூமிதேவி என்றழைத்துக் கொண்டாடினார் முனிவர். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அவள் மணப் பருவம் எய்திய போது தன்னுடைய இரண்டாவது உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். என்ன வேடிக்கை! முற்றும் துறந்த துறவியின் உள்ளம் லௌகீகத்துக்குத் திரும்புகிறது! இதுவும் இறை சார்ந்த, பக்தி மேன்மையின் வெளிப்பாடுதானோ!

மருமகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார் முனிவர். அவரது குடில் நோக்கி ஒரு பெரியவர் வந்தார். தள்ளாடும் நடை, கிழிசல் உடை, நரை முடி, இடுங்கிய கண்கள் என்று முதிய தோற்றம். வந்தவர் மார்க்கண்டேயரிடம் நேரடியாகவே கேட்டார்: ‘‘வாசலில் பேரழகாக நின்று கொண்டிருக்கிறாளே, அவள் உன் பெண்ணா? அவளை எனக்கு மணமுடித்துக் கொடு!’’

அதிர்ந்து போனார் முனிவர். என்னக் கொடுமை இது! எந்த வயதில் எந்த ஆசை வருவது என்ற விவஸ்தையே இல்லையா? ‘நான் பெருமாளுக்காகக் காத்திருக்கிறேன், இங்கே பிச்சைக்காரர் வந்து திருமணப் பேச்சு நடத்துகிறாரே’ என்று மனசுக்குள் அங்கலாய்த்தார். ‘‘பெரியவரே, உங்கள் வயது என்ன, என் மகள் வயது என்ன? அதோடு, இவளால் உங்களுக்கு சரியாக உணவு படைக்கவும் தெரியாதே. சமையலில் உப்பு போட வேண்டும் என்ற பக்குவமும் அறியாத சிறு பெண் இவள்,’’ என்று மன்றாடினார்.

‘‘அடடா, என்ன பொருத்தம் பாருங்கள்! வயது காலத்தில் எனக்கு உப்பு போட்ட பண்டம் ஆகாது என்பதை உங்கள் மகள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைவிட வேறென்ன வேண்டும்? இப்படி என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள இவளைவிட வேறு யார் எனக்குக் கிடைப்பார்கள்!’’ என்று முதியவர் நடுங்கும் குரலில் சொன்னார். இந்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டார் முனிவர். தட்டிக் கழிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று குழம்பி நின்றார்.

‘‘நீ உன் பெண்ணை எனக்கு மண முடித்துக் கொடுக்க வில்லை யானால் நான் என் உயிரைத் துறப்பேன்,’’ என்று சொல்லி மேலும் மிரட்டினார் முதியவர். பரிதாபமாக மகளைப் பார்த்தார் மார்க்கண்டேயர். அவளோ, பளிச்சென்று, ‘‘இந்தக் கிழவருக்கு என்னை மணமுடித்தால் நான் என் உயிரைத் துறப்பேன்.’’ என்றாள்!

இது என்ன சோதனை என்று பரிதவித்தார் முனிவர். இனியும் இந்த பக்தரைத் தவிக்க விடுவது முறையல்ல என்று கருதியதால், அவர் முன் நின்றிருந்த முதியவர் மறைந்து சர்வாலங்கார பூஷிதனாக மஹா விஷ்ணு தோன்றினார். பூமி தேவியும் வெட்கப் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தாள். அப்போது தான் திருமாலும், மஹாலக்ஷ்மியும் தன்னிடம் நாடகமாடியிருக்கிறார்கள் என்று முனிவருக்குப் புரிந்தது. திருமால் முனிவரைப் பார்த்து, ‘‘மார்க்கண்டேயரே, உம் மகள் எப்படி சமைத்துப் போட்டாலும் அதை நான் விரும்பி உண்பேன்.

உப்பிடப் படாதது ஒரு குறையே அல்ல. அதுவே உடல்நலம் காக்கும்,’’ என்று ஆறுதலும் அளித்தார். நெகிழ்ந்துபோனார் முனிவர். உணவுச் சுவை தான் யாரையும் எளிதாக வீழ்த்தக் கூடியது. அதையும் தன் மகளுக்காகத் தியாகம் செய்ய முன்வந்திருக்கும் இந்த மருமகன், ஒப்பிலா அப்பன் தான் என்று நெஞ்சு விம்மினார். பிறகு திருமாலிடம், ‘‘தாங்களும் என் மகளும் திருமணக் கோலத்திலேயே இத் தலத்தில் அர்ச்சாவதாரம் கொள்ள வேண்டும்.

தங்களுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் உப்புச் சுவை இருத்தல் கூடாது,’’ என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டார் பெருமாள். அதன்படி, இப்போதும் இந்த ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லாமல்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன, பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

அது உப்பில்லாத பிரசாதம் என்பது தெரியாவிட்டால், அந்த பிரசாதம் அற்புதமான சுவை கொண்டதாக இருக்கும்; தெரிந்தாலும், கொஞ்சம் மனசளவில் தயக்கம் இருக்குமே தவிர, மற்றபடி ருசியில் உப்பிட்ட உணவைவிட பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அது மட்டுமல்ல, ‘இந்தக் கோயிலுக்குள் வருபவர்கள் உப்பையோ, உப்பிட்ட உணவுப் பொருளையோ கொண்டு வரக் கூடாது; அப்படிக் கொண்டு வந்தால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்’ என்று ஐதீகம் இருப்பதாகவும் சொல்லி அச்சுறுத்துகிறார்கள்! ஒப்பிலியப்பன் தரிசனத்தை விடவா உப்பில்லாத இந்த பிரசாதம் பெரிது!

நம்மாழ்வார் இந்தப் பெருமாளை பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் வாழ்த்திக் கொஞ்சி மகிழ்கிறார்.

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன் அப்பன், மணி அப்பன், முத்து அப்பன், என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் நிழலே– என்கிறார்

அவர். அதாவது, ‘பொன், மணி, முத்து போன்றவன் என் தலைவனான இந்தப் பெருமாள். தன் பக்தனுக்கு உதவி செய்வதில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தனித் தலைவன். என் தந்தை. மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்ய தேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல; என்னைப் பெற்ற தாய்; என்னை வளர்க்கும் தாய். தனது திருவடி நிழலால் என்னை என்றென்றும் காப்பான்,’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாசுரத்தை ஒட்டியே இந்தக் கோயிலில், என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரத்தான் என்று பெருமாள் ஐவராக கொலுவிருக்கிறார். தங்க விமானம் கொண்டு பரிமளிக்கிறார் ஒப்பிலியப்பன். நெடிதுயர்ந்த நின்ற கோலம். கண்களாலேயே மென்மையாக அழைக்கிறார். தங்கக் கவசம் பூண்டு ஜொலிக்கிறார். இவர் காலடியில் இடது பக்கம் மார்க்கண்டேயரும், வலது பக்கம் பூமிதேவியும் மண்டியிட்டு இவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

திருப்பதி வெங்க டேசப் பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனைகளை இவருக்கு நிறைவேற்றி, திருப்பதிக்குப் போக முடியாத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இந்தப் பெருமாளும் பார்ப்பதற்கு ஸ்ரீநிவாசன் போலவே இருக்கிறார். அதனால் தானோ என்னவோ இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. திருமண வரம் அளிக்கும் பரந்தாமன் இவர். இந்தக் கோயிலில் தனியே இருக்கும் திருமண மண்டபத்தில் ஒவ்வொரு முகூர்த்த நாளன்றும் நிறைய பக்த ஜோடிகளுக்கு பெருமாள் அருளுடன் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

பூமிதேவித் தாயார் பெருமாளுடனேயே அவர் கருவறையில் வீற்றிருப்பதால், இவருக்குத் தனி சந்நதி இல்லை. தரணிதேவி, வசுந்தரா என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். வழக்கம்போல அனுமன், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமர் முதலானோரும் தத்தமது சந்நதிகளில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராகாரச் சுற்றில் ராமாயண, தசாவதாரக் காட்சிகள், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆசார்யார்கள் ஆகியோர் பேரெழில் ஓவியங்களாக நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

108 திவ்ய தேச பெருமாள்களையும் இங்கே தரிசிக்கலாம். ஆமாம், அந்தத் தோற்றங்களையும் சுதை சிற்பங்களாக, கவினுற வடிவமைத்திருக்கிறார்கள். இங்குள்ள அஹோராத்ரி புஷ்கரிணி மிகச் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே எந்த நீர்நிலையிலும் இரவு நேரத்தில் நீராடலாகாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்தத் தலத்தின் அஹோராத்ரி திருக்குளத்தில் மட்டும் ஒரு நாளின் எல்லா நேரத்திலும், இரவு, பகல் என்று பாராமல் நீராடலாம் என்று சாஸ்திர விதி தளர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த தீர்த்தம் எல்லாவகையான தோஷங்களையும் போக்கவல்லது. தேவ சர்மா என்ற வேதம் அறிந்த அந்தணன் ஒருவன் தன் குல ஒழுக்கம் மீறி, புலன் அடக்கமில்லாமல் திரிந்தான். இந்த வகையில் ஜைமினி முனிவரின் மகளிடம் அவன் முறைகேடாக நடந்து கொள்ள முயன்ற போது, வெகுண்ட முனிவர் அவனை சக்கரவாகப் பறவையாக உருமாறுமாறு சபித்தார்.

அப்படியே பறவையான அவன் இந்த அஹோராத்ரி புஷ்கரணியின் கரையில் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென புயல் வீச, அந்த மரம் அப்படியே குளத்தில் சாய்ந்தது. அந்த குளத்து நீர் பறவையின் மீது தெளிக்கப்பட, தேவசர்மா தன் சுய உருவம் பெற்றான்; முக்தியும் அடைந்தான். அந்த அளவுக்கு இந்தத் திருக்குளம் சக்தி வாய்ந்தது. வேதசர்மா இவ்வாறு சாபவிமோசனம் பெற்றது ஓர் இரவில் என்பதால், இந்தக் குளத்தில் இரவு நேரத்திலும் நீராடலாம் என்ற வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

தியான ஸ்லோகம்

திருவிண்ணகரம் சென்று ஒப்பிலியப்பனை தரிசிக்கும் வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீமத் விஷ்ணௌ விமாநே ககந நகரகே பத்மினீ புண்ய பூர்ணா
(அ) ஹோராத்ராக்யா ஜநாநாமபி மதபலதோ வேங்கடேச ஸ்வரூப:
பூம்யா தேவ்யா ஸமேதஸ் த்வ லவணஹவிஷ: ப்ராசனப்ரீதிரேஷ:
புத்ரீ ப்ரீத்யை ம்ருகண்டோ: ஹரிதிகபிமுகோ த்ருச்யதே பீஷ்டதாயீ– ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்

பொதுப் பொருள்: ககந நகரம் என்ற திருவிண்ணகர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே நமஸ்காரம். விஷ்ணு விமான நிழலில், அஹோராத்ர புஷ்கரணிக் கரையில், வேண்டுவோர் வேண்டுவனவற்றை எல்லாம் அருளும் வேங்கடேசப் பெருமானாய், பூதேவி சமேதராய் திகழும் பெருமாளே நமஸ்காரம். தேவியின் மீதுள்ள பெரு விருப்பத்தால் உப்பு, இல்லாத அமுதை ஏற்பவராய் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் மார்க்கண்டேய முனிவருக்குக் காட்சி அருள்பவரே நமஸ்காரம். தன்னை சேவிப்பவர் விருப்பங்களை நிறைவேற்றும் எம்பெருமானே நமஸ்காரம்.

மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். அத்துடன் சந்திர தோஷமும் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி. 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் எம்பெருமானாருக்கு உரிய திருவாதிரை மற்றும் எம்பெருமானுக்கு உரிய  திருவோணம் இவ் விரண்டு நட்சத்திரங்கள் தான் ‘திரு’ என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.

தோஷங்களில் சந்திர தோஷமும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். தான் செய்வது சரியா? தவறா? என்கிற பதற்றம் நீடிக்கும். ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் உறுதியாக கூறுகிறது. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

திருவோண விரதம் எப்படி இருப்பது?

மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன் கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

மதியம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு சேர்க்காமல் உணவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து காலையில் வழிபாடு செய்யும் பொழுது நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அத்தனையும் பெருகும். மாலையில் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். இரவில் இறுதியாக நான்காம் ஜாம வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் அடையலாம்.

—————–

நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்

திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர் திருவரங்கம் பெரிய கோயிலில் தாயாரைச் சேவித்து விட்டு வெளியே வந்ததும், வடக்கு நோக்கியிருக்கின்ற, படியேறிச் செல்ல வேண்டிய, மாடக் கோயிலில் அழகிய சிங்கரான நரசிம்மப் பெருமாள் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி யிருக்கிறார். அதே சமயத்தில், வலது கையை மேலே உயர்த்தி ‘அஞ்சேல்’ என்று அபயம் வழங்கி அருள் பாலிக்கிறார். கம்பநாட்டாழ்வான் இம்மேட்டழகிய சிங்கர் முன்னிலையில், ஸ்ரீரங்கநாச்சியாரை (தாயாரை) நோக்கி அமர்ந்து இந்த மண்டபத்தில் தான், தம் ராமாயணத்தை அரங்கேற்றினார். இந்த இராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர் ‘இராமாவதாரம்’ ஆகும்.

திருவரங்கம் பெரிய கோயிலைச் சேர்ந்த காட்டழகிய சிங்கப் பெருமாள்

திருவரங்கம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவரங்க நகரின் கிழக்குப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கலி 4398-கி.பி 1297) பெரிய பெருமாளான அரங்கநகர் அப்பனிடத்தில் அன்பினால் மிக்க அடிமை பூண்டவன். இங்கே, பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உயர்ந்த விமானம், கர்ப்பக் கிரகம், அந்தராளம், முகமண்டபம், மஹா மண்டபம் மற்றும் கருடன் சந்நதியோடு இந்த கோயில்
உள்ளது.

‘கிழக்கில் காட்டழகிய சிங்கர் புராண ஸித்தம்’ என்று கோயிலொழுகுதலபுராணம் கூறுகிறது. பெரியாழ்வார் காலத்து மன்னனான அவருடைய சிஷ்யனான வல்லபதேவ பாண்டியன் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளான். மாதம்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். காட்டழகிய சிங்கரைத் தரிசிக்காமல் ஸ்ரீரங்க யாத்திரை நிறைவாகாது. இந்த பெருமாளைச் சேவித்தால் வேதாந்த ஞானம் ஸித்திக்கும்.

வழி: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்குக் கிழக்கில் மிக அருகிலேயே (நடக்கும் தொலைவிலேயே) இந்தச் சந்நதி அமைந்து உள்ளது. ‘சிங்கர் கோயில்’ என்று கேட்க வேண்டும்.

தேவர் மலை அழகிய சிங்கர்

கமலவல்லி நாச்சியாருடன் கதிர் நரசிங்கப் பெருமாள் அருள்புரியும் மிகப் பழமையான திருத்தலம்தான் தேவர்மலையாகும். கொங்கு நாட்டில் கரூர் – பாளையம் அருகிலுள்ள இத்திருத் தலத்தில் அழகிய சிங்கர் உக்கிர நரசிம்மராக கூறப்பட்டாலும், கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியிருப்பதால், அன்பர்களுக்கு லட்சுமி நரசிம்மராகவும், துஷ்டர்களுக்கு உக்கிர நரசிம்மராகவும், விளங்குகிறார். பாண்டியர்களாலும், விஜயநகர, நாயக்க மன்னர்களாலும், திருப்பணி செய்யப் பெற்ற பழமையான திருக்கோயில் இது.

கமலவல்லித் தாயாருக்கு மகாமண்டபம், அர்த்த மண்டபம், கொடிமரம் ஆகியவை பெருமாளுக்கு உள்ளவை போலவே, அமைக்கப் பெற்றுள்ளன. “மோட்ச தீர்த்தம்’’ எனும் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தம் இத்திருத் தலத்தின் முக்கியமான தீர்த்தமாகும்.

வழி : சென்னை – திருச்சி – கரூர் அல்லது சென்னை – ஈரோடு – கரூர் வழித்தடத்தில்செல்லும் ரயிலில் கரூரில் இறங்கி, சிந்தாலவாடி, தான்தோன்றி மலை கோயில்களை சேவித்து விட்டு தேவர்மலை கதிர் நரசிங்கப் பெருமாளைச் சேவித்து விடலாம்.

சிந்தலவாடி

திருக்காவிரியின் கரைகளிலிருக்கும் அழகிய திவ்ய க்ஷேத்ரங்களில் சிந்தாலவாடியும் ஒன்று. கொங்குநாட்டில், கரூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிந்தாலவாடி இருக்கிறது. மத்வ சம்பிரதாய வைஷ்ணவர்களின் நிர் வாகத்தின் கீழ் இத்திருக்கோயில் இயங்குகிறது. பானகம், ததியன்னம் (தயிர்சாதம்), பழப் பிரசாதங்கள் போன்றவற்றைப் பெருமாளுக்கு அமுதுசெய்விக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்). பகவானின் திருநாமம் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமாள். மிகவும் பழமையான திருக்கோயில் இது.

வழி : திருச்சி – கரூர் வழித்தடத்தில், ரயில் அல்லது பேருந்தில் சென்றால், லாலாப்பேட்டை என்னும் ஊரில் இறங்கி, அங்கிருந்து சிந்தலவாடிக்கு மாநகர பேருந்தில் செல்லலாம்.

தஞ்சை மாமணிக்கோயில் வீரநரசிம்மப் பெருமாள்
(தஞ்சையாளி நகர்)

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து ச ஸகாத்வமேவ
த்வமேவ வித்யாத் ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

(நீயே அன்னை, நீயே தந்தை, நீயே உறவு, நீயே நண்பன், நீயே வித்தை (கல்வி), நீயே செல்வம், நீயே எனக்கு எல்லாம் என் தேவதேவனே!)என்று நரசிம்மனை விளிப்போமாக! திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மணிக்குன்றப்பெருமாள், நீலமேகப் பெருமாள் ஆகிய பெருமாள்கள் இருவர் தனிக்கோயில்களில் அருகிலேயே எழுந்தருளியுள்ளனர். தஞ்சை மாமணிக்கோயில் எனும் திவ்யதேசம் மூன்று கோயில்களும் சேர்ந்ததே. திருத்தஞ்சை மாமணிக்கோயில், திருவையாறு தியாகராஜர் பிருந்தாவனம், திருக்கண்டியூர், கல்யாணபுரம், புது அக்ரஹாரம் ஆகியன அருகிலுள்ள திருத்தலங்களாம்.

வழி: தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்திலும் சென்று வரலாம்.

வல்லம்
(விக்கிரம சோழ விண்ணகரம்)

ஸ்ரீரங்கத்தில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரம சோழன் திருச்சுற்று, விக்கிரம சோழனின் கைங்கர்யம் என்று கோயிலொழுகு கூறுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ‘விக்கிரம சோழ விண்ணகரம்’ என்று ஒரு திருத்தலம் உண்டு. அதன் இப்போதைய பெயர் வல்லம் என்பதாகும். ‘வல்லம்’ எனில் ‘பெரியது, வலியது’ என்றும் பொருள் உண்டு. மலையாளத்தில் ‘வல்லிய’ என்னும் பிரயோகம் இன்றும் ‘பெரியது, வலியது’ என்ற பொருளில் வழங்கப்படுகிறது. வலிமை மிக்க இரணியனை வகிர்ந்து கொன்ற ஸ்ரீநரசிம்மரின் தலமாதலால் ‘வல்லம்’ என்று பெயர் வந்தது போலும். இங்கே பெருமானின் பெயர் தேவராஜன். தாயாரின் பெயர் கமலவல்லித் தாயார்.

இந்திரனுக்கு அகலிகையிடம் பெற்ற சாபம் நீங்கிய தலம் இதுவே என்று சொல்லப்படுகிறது. காவிரியும், கௌதம தீர்த்தம் என்னும் திருக்குளமும் இத்திருத்தலத்தின் தீர்த்தங்களாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் தெற்கு நோக்கி அருள்புரிகிறார். எனவே, இது யம பயம் நீக்கும் திருத்தலமாகும். இதய நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் கூட நீங்கி, அன்பர்கள் நலம் பெறும் பிரார்த்தனை ஸ்தலமாக இது விளங்குகிறது.

வழி: தஞ்சாவூர் – திருச்சி சாலை வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் வல்லம் திருத்தலம் இருக்கிறது.

கொண்டி ராஜபாளையம் அழகிய சிங்கர்

அஹோபில திவ்விய தேசத்தில் ஸ்ரீராமபிரான் தமது முந்தைய அவதாரமான நரசிம்ம மூர்த்தியை ஸ்ரீந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்திரத்தால் மங்களாசாஸனம் செய்தார் என்று ஹரிவம்சத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டும் விதமாக இவ்வாலயத்தில் மூலமூர்த்தியான நரசிம்மப் பெருமாளுக்கு எதிரில் ஸ்ரீகோதண்டராமரைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இத்திருக்கோயிலுக்கு அஹோபில திவ்யதேச ஸாம்யம் உண்டு எனலாம். மூலவர் யோக நரசிம்மர், சோழஸிம்ஹபுரத்தைப் போலே உற்சவர் பிராட்டியைத் தொடையில் தாங்கிய மாலோலர், அஹோபிலத்தைப் போலே. ‘மா’ என அழைக்கப்படும் பிராட்டியினிடத்திலேயே மண்டியிருப்பதால், பரமபுருஷனை, ‘மாலோலன்’ என்பார்கள்.

வழி: தஞ்சாவூர் நகருக்குள்ளேயே கிழக்கு ராஜவீதியிலிருந்து கிழக்கு வாயிலுக்குச்செல்லும் சாலைப் பகுதியே கொண்டிராஜபாளையம் அழகிய சிங்கர் கோயில் உள்ளது.

கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர நரசிம்மர்

மத்வ மகான் ஸ்ரீவிஜயீந்திரரை வாதத்தில் வென்று மாயாவாதத்தை நிலைநாட்ட முடியாது என்று உணர்ந்த கங்காதர பண்டிதர் என்ற வித்வான், தவறான வழிகாட்டுதலால் விஜயீந்திரரைக் கொன்று விடுவதற்காக கொடிய விஷத்தைக் கொண்டு வந்திருந்தார். வாதப்போர் தொடங்கும் முன்பு விஜயீந்திரரைக் கண்டதும் அவருடைய தேஜஸ்ஸால் வசீகரிக்கப்பட்டார். தம் தவறை உணர்ந்து எடுத்துச் சொல்லி கண்ணீர்விட்டார். விஜயீந்திரரோ, ‘நீர் எமக்காகவே கொண்டுவந்ததை மறுக்காமல் கொடும்’ என்று அவரிடமிருந்து விஷத்தைப் பறித்து அருந்திவிட்டார். கொடிய விஷமாதலால் உடனே விஜயீந்திரரின் திருமேனி கருக ஆரம்பித்து. ‘சுவாமி… சுவாமி….’ என்று கங்காதரர் முதற்கொண்டு அனைவரும் கதறினார்கள்.

விஜயீந்திரர், ‘அன்பர்களே! எம் ஆசார்யர் ஸ்ரீவியாஸ ராஜரும் அவருடைய பூர்வ ஜன்மமான பிரஹலாதரும் விஷத்தை உண்டு ஜீரணித்தவர்களே. இதோ எம் அப்பன் நரசிம்மனைப் பாடுகிறோம். எமக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஸ்ரீநரஸிம்ஹாஷ்டகத்தைக் கம்பீரமாகப்பாடலானார். அவையோர் கண் முன்னாலேயே அங்கிருந்த நரசிம்மரின் திருக்கழுத்து கறுத்தது. விஜயீந்திரரின் திருமேனியின் கருநீல நிறம் மாறி முன்போல் ஆனது. இவ்வரலாறை இன்றளவும் நமக்குக் காட்ட இம்மடத்திலுள்ள நரசிம்மரின் கழுத்து கருநீலமாகவே இருக்கிறது. ஸ்ரீநரசிம்மாஷ்டகம் மிகவும் சக்திவாய்ந்த பாராயணப் பாமாலையாக விளங்குகிறது.

வழி: கும்பகோணம் நகரில் காவிரிக் கரையில் ஸ்ரீவிஜயீந்திரரின் மூலப் பிருந்தாவனம் சோலையப்பன் தெருவில் இருக்கிறது.

அரியலூர்

அரியலூரின் மையப் பகுதியில் பழமையான ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில் இருக்கிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகவும் விரைவில் வரமளிக்கக் கூடிய பிரார்த்தனைப் பெருமாள் ஆவார். இந்த நரசிம்ம மூர்த்தி தசாவதார மண்டபத்திலே எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மகத்தான சக்திமிக்க அர்ச்சா மூர்த்தி.

வழி: அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

திருக்குறையலூர்
உக்கிர நரசிம்மப் பெருமாள்

வேதத்துக்குப் புறம்பானவர்களால் ஏற்படும் தொல்லைகள், வேதத்துக்குப் பகையானவர்களால் ஏற்பட்ட துர்வாதங்களால் ஏற்பட்ட மதிமயக்கங்கள் ஆகியவை இப்பெருமானால் அழிக்கப்படும். சிறிய ஆலயத்தில் தம் கருணையினால் உகந்து எழுந்தருளியிருக்கும் இப்பெருமாளின் கீர்த்தி பெரிதினும் பெரிது. நரசிம்ம புராணத்தில் வரும் ஸ்ரீநரசிம்ம ஸஹஸ்ர நாமத்தின் ஸ்வரூபம் இவர். ஸாத்விக வித்தைகள் (நற்கல்விகள்) அதாவது வேதம், திவ்யப் பிரபந்தம், தெய்வீக இசையாகிய திருநாம சங்கீர்த்தனம், ஜோதிடம், நாட்டியம், இலக்கணம், வைத்தியம் போன்ற இகபரசுகம் தரும் நற்கல்விகளை அருள்பவர் இவர்.

வழி: மங்கை மடத்திலிருந்து வண்டி அமர்த்திக்கொண்டு குறையலூர் போகலாம். சீர்காழியிலிருந்து, மயிலாடுதுறையிலிருந்தும் ‘மங்கை மடம்’ என்ற பெயர்ப்பலகையுடனேயே பேருந்துகள் செல்கின்றன.

திருவாலி லட்சுமி நரசிம்மர்

தூவிரிய மலருழக்கிக் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே (பெரிய திருமொழி 3-6-1)

திருவாலியில் உறையும் லட்சுமி நரசிம்மனை நோக்கி நம் பிரார்த்தனைகளைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்ட பாசுரத்தைப் பேசித் துதிக்கும் போது அவனே நம் நிலைமையைக் கண்டு, வேண்டியதைச் செய்து முடிப்பான். திருமணத் தடையால் வருத்தமுற்றிருப்பவர்களும், திருமணம் நடந்து துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இப்பெருமானை வணங்கினால் தனிமைத் துன்பம் மறையும். சத்ஸங்கமில்லாமல் வருந்தும் பாகவதர்கள், ஸத்ஸங்கம் கிடைக்கப் பெறுவார்கள். லட்சுமி தேவியை அருகில் தொடையிலேயே அமர்த்திக் கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்.

வழி: சீர்காழியில் இருந்து, சுமார் 10.கிமீ., தொலைவில் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோயிலை அடைந்துவிடலாம். திருநகரி உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர்திருவாலியும் திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கணக்கிடப்படுகின்றன. திருமங்கையாழ்வாரைத் தடுத்தாட்கொண்ட வயலாளி மணவாளனெனும் கல்யாண ரங்கநாதன் உறையும் திவ்ய தேசம் இது. இக்கோயிலிலுள்ள கல்கேணியில் ஊறும் தீர்த்தம் மிக்க சுவையையுடையது. திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக்க எம்பெருமானுக்கு உதவியாயிருந்த அவர் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாரும் அவருடன் எழுந்தருளியிருக்கிறார். திருநகரி கோயிலுக்குள்ளேயே உக்கிர நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மரும் கோயிலுக்குள்ளேயே எழுந்தருள்யுள்ளார்.

வழி: சீர்காழியிலிருந்து திருநகரிக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன சுமார் 7 கிலோ மீட்டரில் அடைந்துவிடலாம்.

மங்கை மடம் அழகிய சிங்கர்

திருமங்கையாழ்வார் பாகவதர்களுக்கு விசேஷமாக ததீயாராதனம் செய்த இடமே ‘மங்கை மடம்’ என்னும் இடமாகும். இங்குதான் தம் ராஜ்ஜியத்தை இழந்து, ஆழ்வார் அன்பர்களுக்கு அன்னமிட்டு வழிபட்டார் என்பதை நினைக்கும் போது நம் கல்நெஞ்சும் கரைவதை உணரமுடிகிறது. இங்கு பிராட்டிமார்களுடன் அழகிய சிங்கப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சிங்கவேள் குன்றமாகிய அஹோபில திவ்ய தேசத்தின் அபிமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.

வழி: திருநகரி – திருவெண்காடு – பார்த்தன்பள்ளி சாலைகள் யாவும் மங்கை மடத்தில்தான் சந்திக்கின்றன. சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

கடலங்குடி

திருநாங்கூர் திருப்பதிகள் எனும் 11 திவ்ய தேசங்களின் அருகில் கடலங்குடி இருக்கிறது. இன்று இது சிறிய கிராமம். ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், மணி மண்டபங்கள் மற்றும் மணவாள மாமுனிகள் தீர்த்தம், அனந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம், காவிரி என்று தீர்த்தங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.

இங்கு யோக நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தனிச்சந்நதியில் அருள் புரிகிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த வரப்ரசாதி. விஜயநகர மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப் பெற்ற இந்த அழகிய திருக்கோயில் திருஅத்தியூர் (காஞ்சி), சோழஸிம்ஹபுரம் (சோளிங்கர்), குலோத்துங்க சோழ விண்ணகரம் (இராஜ மன்னார்குடி) ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களின் மகிமையைக் கொண்டது.

வழி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் ‘மணல்மேடு’ கிராமம் வழியாக பந்தநல்லூர் செல்லும் பேருந்தில் சென்றால் ‘கடலங்குடி’ திருத்தலத்தை அடையலாம்.

முகாசாபரூர்

திருமால் நெறி விரிந்து பரந்திருக்கும் நடுநாட்டில், கடலூர் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமாக இன்று முகாசாபரூர் விளங்குகிறது.

இவ்வூரில் மிகவும் பழமையான பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் மிகுந்த சக்தி வாய்ந்த பிரார்த்தனைப் பெருமாள் ஆவார்.‘அனந்த சரஸ்’ எனும் அல்லிக் குளமே புஷ்கரணியாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்ட வாத்ஸல்யம் (குற்றத்தையும் குணமாகக்கொள்ளும் தாய்மைக் குணம் அதாவது, தாய்ப்பசு தன் கன்றின் உடலிலுள்ள அழுக்குகளை நாவால் வருடிச் சுத்தப்படுத்தும் உயர்ந்த குணம்) எனும் திவ்ய கல்யாண குணம் ததும்பும் அழகிய திருக்கோலம் இதுவாகும்.

வெல்லப் பானகம், கல்கண்டுப் பானகம், எலுமிச்சைப் பானகம், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்றவை இந்த மாலோல நரசிம்மருக்குப் பிரியமானவையாகும். ஸ்ரீவரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் ஒருமுறை சேவித்தவர்கள், மீண்டும் மீண்டும் சேவிக்க விரும்புவார்கள்.

வழி: சென்னை – விழுப்புரம் – திருச்சி- ரயில்- பேருந்துப் பாதையில் உளுந்தூர்ப்பேட்டையிலோ அல்லது விருத்தாசலத்திலோ இறங்க வேண்டும். பின்னர், இரு ஊர்களுக்கும் இடையில் இருக்கும் மங்கலம்பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முகாசாபரூர் உள்ளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸூந்தர காண்ட மஹிமை -ஸ்ரீ திருவடி ஏற்றம் –ஸ்ரீ அர்த்த பஞ்சக மஹிமை– 

May 3, 2023

பஞ்ச பூதங்கள்
பஞ்ச பிராணன்
பஞ்ச ஞான இந்திரியங்கள்
பஞ்ச கர்ம இந்திரியங்கள்
பஞ்ச பூதம்
பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள்
பஞ்ச வேதங்கள் பாரதம் பஞ்சமோ வேதம்
பஞ்ச நிலைகள் பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சா
பஞ்ச ஆயுதங்கள்
பஞ்ச -பாஞ்ச ராத்ர ஆகமம்
பஞ்ச ஸம்ஸ்காரம்
பஞ்ச கவ்யம் கோ மயம் பசும் சாணம் கோ மூத்திரம் பால் தயிர் நெய் -ஆநில் மேய ஐந்து

பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்

விக்ராந்தஸ் த்வம் ஸமர்த்தஸ் த்வம் ப்ராஞ்ஞஸ் த்வம் வாநரோத்தம
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம் –36-7-

விக்ராந்தஸ் த்வம் து -கருடனைப் போல் வீர்யம்
ஸமர்த்தஸ் நரசிம்மன் போல் ஸமர்த்தன்
ப்ராஞ்ஞஸ்தம் ஹயக்ரீவர் போல் ஞானவான் –
வாநரோத்தம–வானர தலைவன் -நடுவில்
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம்–৷வலிமை வராகன் போல்

பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்

—————-

அஞ்சைக் கேட்டால் அஞ்ச வேண்டாம்–அர்த்த பஞ்சகம்
ஐந்தாம் காண்டம் ஸூந்த்ர காண்டம் -ஐந்து விஷயம்
ஐந்திலே ஓன்று பெற்றான் -பாசுரத்தில் ஐந்து ஐந்துகள்
மேல் ஓட்டமாக ஐந்து பூதங்கள்
வாயு புத்ரன் -கடலைத்தாண்டி -ஆகாச மார்க்கம் ஆறு -பூமி பெற்ற பிராட்டி -நெருப்பை வைத்தவன் நம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்–பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் தரும் ஆஞ்சநேயர் துதி…

– இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும்,
ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.

முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது.
(ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் – இலங்கைக்கு
ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

ராம பக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து – அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப் பாடலின் பொருள்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம்.
ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர்.
அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!

ஆச்சார்ய பரமான அர்த்தம்
ஸம்ஸார சிறையில்
அஞ்சிலே ஓன்று பெற்றான் -பஞ்ச ஸம்ஸ்காரம் -மந்த்ர உபதேசம் பெற்று -திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்திலேயே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராக இருந்து
அன்று நான்  பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி -அர்த்த பஞ்சகத்தில் ஒன்றை -விரோதி -நீர் நுமது என்றவற்றை அகற்றி

அஞ்சிலே ஓன்று ஆறாக -கர்ம ஞான பக்தி யோகம் சரணாகதி மார்க்கம்தாண்டி -ஆச்சார்ய அபிமானம்
காலைப் பிடித்து திண்ணிய கழல்

ஆர் உயிர் காக்க -ஜீவாத்மாவை

அஞ்சிலே ஓன்று அணங்கை -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
மண்டினார் உய்யல் அல்லால் வேறே யார் உய்யலாகும்

அவனுக்கு பிராட்டி ஸ்தானம் ஜீவர்கள் எல்லாம்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் -பித்ரு லோகம் -ஸ்வர்க்க லோகம் நரக லோகம் -கைவல்யம் தாண்டி ஸ்ரீ வைகுண்டம் அடைந்து

அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்

ப- நெருப்பு –புண்டர பூமி –மந்த்ரம் காற்று திருவாராதனம் நீர் -பஞ்ச பூதங்களும் இவற்றிலே உண்டே

ஐந்து முகம் நம்மாழ்வார் –
தானான -தலைவி தாய் தோழி ஆச்சார்யர்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் 
வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்

ஆழ்வார் திருநகரியில் இருப்பவர்களுக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த
வீணையின் இசை போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் மிகவும் உயர்ந்தவனான எம்பெருமான்
ஸ்ரீமந் நாராயணனின் தன்மையையும்,
நித்யமாக இருக்கும் ஜீவாத்மாவின் தன்மையையும்,
ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயத்தின் தன்மையையும்,
அந்த எம்பெருமானை அடைந்து அனுபவிக்கும் நிலைக்கு விரோதியாய்ச் சேர்ந்து இருக்கும் முன்னை வினைகளின் தன்மையையும்,
வாழ்வாகிற உயர்ந்த புருஷார்த்தத்தின் தன்மையும் விளக்கிக் கூறும்.

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]

அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும்
உயர் திண் அணை ஒன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும்
எம்மா வொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (ஆச்சார்ய ஹ்ருதயம் –211)

————–

கூஜந்தம்  ராம  ராம  இதி மதுரம்  மதுராக்ஷரம் |

ஆருஹ்ய  ஹவிதா  சாகாம்  வந்தே  வால்மீகி  கோகிலம் ||
(குயில் ஒன்று கூவும்
மதுவாய்ச்  சொல்  மிழற்றிக்
கற்கண்டு  போல்  இனிதாய்
ராம  ராம  என  நித்தம்
கவிதையின்  கிளைமீது  வீற்ற
புவிபுகழ் முனி வால்மீகிப்
பதமலர்  பணிவதென் பேறே.)
வால்மீகேர்  முனி  ஸிம்ஹஸ்ய  கவிதா  வன  சாரிண: |
ச்ருண்வந்  ராமகதா  நாதம்  கோ  ந  யாதி  பராங் கதிம் ||  )
(கவிதையாம்  கானில்  திரியும்
தவமுனி  வால்மீகிச்  சீயம்
எழுப்பிடும்  ராம   நாதம்
கேட்டவர்   எவர்தான்  செல்லார்
கேடிலா  உயர்ந்த  மார்க்கம் )
ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்–
அழகான ஸூந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு;
அன்னை சீதா அழகு;
ஸூந்தர காண்டம் கதை அழகு;
அசோக வனம் அழகு;
வானரர்கள் அழகு;
ஸூந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு;
நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு;
காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு.
ஸூந்தர காண்டத்தில் எல்லாமே அழகு தான்
இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம்.
அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது.
ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்;
மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம்.
ராமா என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன்.
ஸூந்தரன் -அஞ்சனா தேவி சூட்டிய இயல் பெயர்
அஞ்சனை மைந்தன் வாயு புத்ரன் ஹனுமான் காரணப் பெயர்கள்
இவன் பெருமையை முழுவதுமாக சொல்லி –
திருவடி நடந்தவையும் திரிசடை கனவு வரப் போவதையும் சொல்லி மொத்த ஸ்ரீ ராமாயணமும் இதில் அடங்கும்
ராமா என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும்.
மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.
ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட
நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன்.
அனுமனுக்கு ஸூந்தரன் என்ற பெயரும் உண்டு
ஆகவே ஸூந்தரகாண்டம் .
அனுமனின் மகிமையை நன்கு விளக்கும் அழகு கொண்டதால் ஸூந்தர காண்டம் .
சீதையும் ராமனும்  ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அறிந்து கொள்ளும் மகிழ்ச்சியான பகுதி என்பதால் ஸூந்தரகாண்டம்.
அழகே உருவான அன்னை சீதையின் மனம் அனுமனைக் கண்டு மகிழ்ச்சி யடைவதால் ஸூந்தர காண்டம்
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்  .
அழகென்பதே மகிழ்ச்சி தானே?
கடல் தாவுப் படலம் .  காப்புச் செய்யுளுடன் தொடங்கியது
இலங்கை நகரை  தனது விஸ்வரூப வடிவில் கண்ட அனுமன் கால்கள் ஊன்றி யெழுந்ததால்  மகேந்திரமலையில் ஏற்படும் அதிர்வுகளை,’
வன் தந்த வரி கொள் நாகம், வயங்கு அழல் உமிழும் வாய,
பொன் தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான.’–என்று  வார்த்தைகளிலேயே
வீரம் தெறிக்க  கம்பன் அழகுற விளக்குவதை ரசிக்கும்பொழுதில்  …
மைநாக மலை  அனுமனிடம்  வேண்டிக் கொண்டது
‘என்னிடத்தில் தங்கி யான் செய்யும் விருந்தினை அங்கீகரிப்பாயாக’ என்று  .
அனுமன் அதற்கு  மந்தகாசசிரிப்பை உதிர்த்து விட்டு  சொல்கிறானாம் ….

வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்,
பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்த போதே,
இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன் மேல் இனி ஈவது என்னோ?

(வருந்தேன்,அருந்தேன்,பெருந்தேன்,இருந்தேன்! நுகர்ந்தேன்….சஹானா ராகத்தில் அமைந்த பழைய பிரபல திரைப் பாடல்  )

அன்பின்  வலிமையை அதே நேரம் தன பணியின் நோக்கத்தை  அழகாக சொல்கிறார் சொல்லின் செல்வன் அனுமன் .

 என் துணைவனான ராமன்  என் மீது   வைத்துள்ள அன்பு  என்னைக் களைப்படையச் செய்யாது
 என் ஆசை நிரப்பின் அல்லால் ..என் மனோ ரதம் நிறைவேற்றலல்லாமல்  இனி இப்பொழுது யான் யாதும் அருந்தேன் .
பெருந்தேன் பொழி சார நின் அன்பு  மிகுதியான தேனைச் சொரிகின்ற  சாரல்=பக்கங்களை (தாழ்வரைகளை)  உடைய உன் பிரியமானது என் மீது உண்டான போதே
இருந்தேன் நுகர்ந்தேன் மலையான உன் மீது தங்கி விருந்துண்டவனானேன்)

இதின் ஊங்கு –இந்த அன்பினைக் காட்டிலும்
இனி=இன்னமும் ,
ஈவது==நீ எனக்குக் கொடுக்கக் கூடியது  –
உண்டே —உண்டோ ?(இல்லை யென்கிறபடியாக)

‘ராமன் எனக்குக் கொடுத்திருக்கும் வேலையைக் கச்சிதமாக முடிக்கவேண்டும், ,
அந்த  வேலை தீர்ந்தால்தான் என்னுடைய வயிறு நிறையும்.
அதற்காக  சென்றுகொண்டிருக்கும் என்னை, உன்னுடைய அன்புதான் கட்டிப்போட்டு நிறுத்திவிட்டது.
பிழிந்த தேனைப்போல் இனிமையான உனது இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?
அந்த அன்பை ஏற்றுக்கொண்ட அந்தக் கணத்திலேயே நான் இங்கே தங்கி சாப்பிட்டு விட்டேன்  என்றாகிறதே ?”என்பதை
கம்பன் ,அனுமன் வாயிலாக சுந்தரத் தமிழில் பாடலாய்க்கொடுத்துள்ளது பாகாய் இனிக்கிறது அல்லவா?

அனுமான் ‘இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?’ என்று கூறுவது போலவே ராமரும் குகனுக்கு கூறுகிறார். ..

அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ? என்றான்.

‘’சுந்தர காண்ட சுருதி உரைத்திடும்
மந்திர  சக்திமிகு  மாருதியே, -எந்திர,
சம்சார  தன்னிலே, சந்தோஷம் காண ருத்ர,
அம்சாவ  தாரா அருள்’’….

‘’அனுமந்த ராயா, அசகாய சூரா,
தினமுந்தன் பாதம் தொழுவேன், -எனையிந்த,
பாழும் மனமென்ற, ஆழியைத் தாண்டிடத்,
தோழா கொடுத்திடு தோள்’’….கிரேசி மோகன்….

பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து – பத்தாம் திருமொழி –
‘நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன் விண்ணப்பம்’ என்று ஆரம்பிக்கும் பத்து பாசுரங்களும்
சுந்தர காண்டத்தில் அனுமன் பிராட்டியினிடத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு
இராமாயணம் முழுவதையும் சொல்லும் பாசுரங்கள்.
இந்தப் பத்துப் பாசுரங்களையும் எங்கள் அகத்தில் தினமும் சேவிப்போம்.
தேனான தமிழில் தித்திக்கும் பாசுரங்கள்.

—————–

ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ.

இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷

ஸம்ஸார சிறையில் மீட்க்கப்புறப்படும் ஆச்சார்யர் போல்
கணையாழி பகவத் பிரசாதம்
இதில் தான் ஸூஷ்ம அர்த்தங்கள்

காலால் அளந்தவனைப் போல் வாலை உயர்த்திப் பறந்தான்

ராவணன்   காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார்.
அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.
முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின்,
அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது,
அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.

அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது என ஹனுமான் கேட்க,
அதற்கு சீதாபிராட்டி, ‘மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும் தான்,
எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே, செந்தூரத்தை இட்டுக் கொண்டேன்.
ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை,எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.
அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே,
அதை இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி.
அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய், ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும்
என்ற மனதோடு,ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம்.
அதனால் தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோம்.

ஸிம்ஹிகா ராகுவின் அம்மா குடல் மாலை சாத்தி -proteen மிக்கு -ஆகவே வடை மாலை தெற்கும் -ஜாங்கிரி மலை வடக்கே யும்
ஆகவே ஹனுமான் ஸ்திதியால் ராகு கேது பீடைகளுக்கு பயப்பட வேண்டாம்
அன்பால் வந்த தடையை அன்பால் வென்று
அமரர்கள் அனுப்பிய தடையை அறிவால்
உண்மையாக வந்த தடையை உறுதியால் வென்று -மூன்றையும் கடைந்து

———————–

ஸ்ரீ திருவடியின் மஹிமை காட்டும் -ஸ்ரீ கம்பனின் கவி அமுதம் —

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இஃது இயம்புவது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே

——–

ஸூரியனை விழுங்கியவன்
வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று போற்றப் படுகின்ற அனுமன் தன் தாயிடம் இந்தக்
காட்டில் தான் எந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று கேட்க,
அதற்கு அஞ்சனை இந்தக் காட்டில் உள்ள சிவந்த நிறப் பழங்களை நீ உணவாகச் சாப்பிடு என்று கூறினாள் .
இதனை
“கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும் மெய் அஞ்சாதவன்”  என்ற பாடல் வரிகளில் அறியலாம் .

அனுமன் பிறந்த பொழுதே இளம் ஸூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல்,
அதனைப் பிடிக்கச் சென்றான் என்னும் போது அனுமானின் வீரத்தை அறிய முடிகிறது
கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –

பல வரங்களைப் பெற்றவன்
பிரம்ம தேவன், தேவர்களிடம் அஞ்சனையின் மகன் அனுமனுக்கு, பற்பல வல்லமைகளையும் ,
அரிய வரங்களையும், அளிப்பதோடு,
அனுமன் நிறைத்த உருவத்தை எடுத்து நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் திறமை ஏற்படவும்,
போரில் தோல்வி என்பதே கிடையாது என்றும்
இவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டு இவனைத் தடுக்க முடியாது என்றும்,
தன்னுடைய பிரம்ம தண்டத்தால் இவனுக்கு மரணம் ஏற்படாது என்றும்,
சிரஞ்சீவியாக வாழ்வான் என்று அருளி வரம் அளித்தான்.

இதனை
“ஒப்பு இறையும் பெறலரிய ஒருவன்”
“எவரினும் அதிகம் உயர்ந்தான்”
“ஊழி கடந்தீர்”
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என் இருத்தி”
என்ற பாடல் வரியில் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம்,
அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,
வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”-என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப் படுத்து கிறார்.

எந்த சூழலிலும் , யாராலும், அனுமனுக்கு அழிவில்லை என்பதை தனது படைப்புத் திறத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.

கல்வி கற்றல்
பல அரிய வரங்களைப் பெற்ற அனுமன், சூரிய பகவானிடம் இருந்து ரிக்வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்கள், அறுபத்தி நான்கு கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.

ஸூர்யனின் எதிரில் நின்று கொண்டே வேத சாஸ்திரங்களையும் அதன் ரஹஸ்யங்களையும்
உப ஸாஸ்த்ரங்களையும் அனுமன் கற்றுக் கொண்டான் இதனை
உலகு எங்கும் பேர் இருள் நீக்கும் பகலோன் முன் தேர் முன் நடந்தே
ஆரிய நூலும் தெரிவுற்றீர்  -என்ற வரிகளில் எடுத்து உரைக்கிறார் .

மதி நுட்பம் கொண்டவன் –
சீதையைத் தேடி இராமனும் இலக்குமனனும் சென்ற போது அனுமன் எதிர்படுகிறான்
அவர்களை பார்த்த கண நேரத்திலே அவர்களை நன்றாக எடை போடுகிறான்
அனுமன் அவர்களை பற்றி

தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் சுருதி அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்--என தனது மதி நுட்பத்தால் உணர்ந்து விடுகிறான்

அனுமனின் ஆற்றல் மூலம் தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையும்
அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கம்பர்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் என்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ -என்கிறார் –

பிலத்தைப் பிளந்தவன்
அனுமன் வானர வீரர்களின் பயத்தை நீக்கி ஆண் சிங்கம் போல் கைகளைத் தூக்கி பேர் உருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பதை கம்பர் –
நடுங்கன் மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
வெறும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் –என்ற பாடலில் அனுமனின் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் –

தோள் கொடுத்தவன்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏற நீ ஐய என்னுடைத் தோளின் மேல் என்றான்-என்றும்

ஏறினான் இளம் கோளரி இமையவனாகி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானவர் குழுவும்
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அவ்வனுமன் தன் தடம் தோள் -என்று அனுமானின் தோள் திறமும் வலிமையையும் எடுத்துக் காட்டுகிறான்

சொல்லின் செல்வன்
இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பாதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் என்றான் –
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவு என்றும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான்

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ -என்று பெருமாள் பாராட்டினார் –

தெற்கு திசையில் இருந்து வரும் போதே ராமனை வணங்காமல் பிராட்டி இருக்கும் தென் திசையை வணங்கி
நிலத்தில் வீழ்ந்து சீதாப் பிராட்டியின் நிலைமையைக் -கற்புத் திண்மையை -குறிப்பால் உணர்த்தினார்
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் –

கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

———————
அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்த பின் அவனிடம்
~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.
இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.
இராம அழகு
~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும்
கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான்.
இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.
திருவடிகள்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும்.
பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.
திருவடி விரல்கள்
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும்,
பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;.
ஸூரியனின் இளங்கதிர்; போன்று இராம பிரானின் கால் விரல்கள் ஒளி பெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.
திருவடி விரல்களின் நகங்களின் அழகு
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச் சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை.
விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.
திருவடிகளின் செய்கை
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின,
காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது.
இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞான நூல்கள் உரைக்கின்றன.
அவன் நில உலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும்.
ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?
இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர்.
இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்;
இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.
கணைக்கால்
கணைக்கால் அம்பறாத் தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள்.
அக் கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.
தொடைகள்
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும்.
அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.
திரு வுந்தி
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது.
மகிழம்பூவை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.
திரு மார்பு
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது.
அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம்.
இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.
கைத் தலங்கள்
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.
கைத்தல நகங்கள்
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன.
அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள்
ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.
திருப் புயங்கள்
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது.
ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல.
திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது.
இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.
திரு மிடறு
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது.
திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.
திரு முகம்
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது.
எனவே அது பொருந்தாது.
அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.
திருவாய்
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும்.
பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண் நகை புரியாது.
இனிய சொற்களைப் பேசாது.
பற்கள்
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம்
என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா?
அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.
திருமூக்கு
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.
திருப்புருவங்கள்
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன.
இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது.
அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள்.
இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு
ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.
திருநெற்றி
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல்,
இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில்
பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.
திருக்குழல்
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து,
நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது.
இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.
நடை
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும்
தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான்.
இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.
இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.
மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன்
அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.
மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும்.
பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர்.
ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார்.
இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.
ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராம பக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட
இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.
சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபது பாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை.
ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.
சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன்.
அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான்.
அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.
குடும்பப் பெருமை
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,
மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.
பொறுமை
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)-என்ற இப் பாடலில்
சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது.
இப் பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடி தோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.
குலப் பெருமை
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள்.
இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது.
வானவர் குலத்தையும் வாழ வைத்தாள்.
இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.
இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.
கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.
சீதையின் இருப்பிடம்
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம் பெற்று தவம் செய்த தவமாம் தையல் என்ற சொல் சேர்க்கை அழகுமிக்கது.
இராவணன் பெற்ற சாபம்
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.
சீதையை தீண்டாத இராவணன்
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.
தேவர் வியக்கும் கற்பு
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.
சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.
அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.
இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.
இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.
அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.
இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.
அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.
உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.
இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.
இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.
கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.
———————

“பஞ்சியொளிர் விஞ்சு  குளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீரடி பெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்.’–என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு

  • வெயின் முறைக் குலத் திறையவன் முதலிய மேலோர்
    உயிர் முதற் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
    மயில் முறைக் குலத் துரிமையை மனு முதன் மரபைச்
    செயிருறப் புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்–மந்தரை சூழ்ச்சி ‘ப் படலத்தில்–
  • இதில் ‘மயிலைப்போல முறை தவறாத குலம்’ என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை.
            • “பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
              பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!’
            • அதன் பொருள் : ‘கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.’ என்பதுகாட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ‘ என்பது” என்றார்.
        • ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை – மாட்டிவிட்டுப் பதிவு செய்து கொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
      • ———————–
      • விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பின்
        நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
        இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
        கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’
      • “வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய ராமா! பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற – ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை.-ஆனால் ‘குடிப் பிறப்பு’ என்று சொல்லப்படுகிற ஒன்றும், ‘பெரும் பொறுமை’ என்ற ஒன்றும், ‘கற்பு’ என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்,” என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்தது போலக் களிப்பினால் பூரிக்கலானான்.
          • பண்டார வளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிர தேசங்களின் சிகரமாகிய ‘நூவாரா எலியா ‘ என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது ’சீதைத் தடாகம்’ என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சல சலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை ‘சீதை ஓடை’ என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப் பால் இருந்த மலையைக் காட்டி அங்கே தான் அசோகவனம் இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார்.
          அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தைவிட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அது தான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர் நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார்.
      • ———————
    • மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய
      சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்த’ அந்தப்
      பாதங்கள் விராதனைச் சாப வீடு செய்தன. விராதன் சொல்கிறான்:
    • வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
      பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ‘உன் பாதங்கள் இப்படிப்பட்டவை என்றால், படிவங்கள் எப்படிப்பட்டவையோ’ என்று விராதன்
    • ————–
    • இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
    • நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
      மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
      வேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
      ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் –என்றான்.
    • ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!
    • —————–

மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.

வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.

இராமனின் தெய்வத் தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.

அவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில்

——–

‘புராரி மற்றி யானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’

மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான்.

——–

அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி
வெவ்விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல்
தவ்விட தனி அருளு தாழ்சடைக் கடவுள் என
இவ்விடத்து இனிது இருமின் அஞ்சல் என்று இடை உதவி….

சுக்ரீவனுடைய பதட்டத்திற்கும் அச்சத்திற்கும் அப்படியே எதிரானதொரு சித்திரம். பாற்கடலிலிருந்து ஆலகாலம் வெளிப்படவும், அதனைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களையும், அசுரர்களையும் ஒன்று போல ‘அஞ்சாதீர்’ என்று சொல்லி அதனைத் தானே உண்ட சிவபெருமானைப் போல் ‘எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்து வருகிறேன்’ என்று சொல்லி பிரமசரிய வேடம் புனைந்துகொண்டான்.

———–

என்பு எனக்கு உருகுகின்றது.’ என்னுள் ஊற்றெடுக்கும் அன்பு என்னை எப்படி நெகிழ்த்துகின்றது என்றால் வெறும் மனம் மட்டுமேயன்று; உடலும் நெகிழ்கின்றது. எலும்பு வரை நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘இவர்கின்றது அளவில் காதல்.’ அளவில்லாத நேயம் இவர்கள் மேல் எனக்குத்

தோன்றுகிறது. ‘அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’ எனக்கு விளங்கவில்லை.

———

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்றேன்.

என்ன சொல்கிறான்? ‘மேகத்தைப் போல வண்ணம் உடையவனே! உன்னைப் பார்க்கின்ற எந்தப் பெண்ணுக்கும் உடனடியாக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாமரையைப் போன்று மலர்ந்த கண்கைள உடையவனே!’ முதலில் தொலைவிலிருந்து பார்க்கும்போது அனுமனை அசைத்தது அவனுடைய மேனி வண்ணம். அப்படிப்பட்ட வண்ணம் உடையவனே என்று அழைத்தான். திருப்தியாகவில்லை. ‘இந்தக் கண்ணு என்னை என்னமோ செய்யுதய்யா! எனக்கே இப்படி இருந்தால், யாராவது பெண் உன்னைப் பார்த்தால் அவளுக்கு என்னதான் ஆகாது? தாமரைக் கண் ஐயா உன் கண்’ என்றான். அதுவும் போதவில்லை அனுமனுக்கு. தாமரை என்றால் என்ன ஆகும்? வெயில் இருந்தால் மலர்ந்திருக்கும்; பனி பெய்தால் வாடிப் போகும். அப்போதும் வாடாத கண்ணாம். ‘நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து’ இந்தக் கண் தாமரை இருக்கிறதே, எந்தக் கடுமையான பனிக்கும் வாடாத தாமரை ஐயா.’ அது சரி. ஆனால் மாலை ஆனதும் கூம்பிப் போகுமே! அதுவும் இல்லையாம். ‘அலர்ந்த கண்ண!’ ‘எப்போதும் மலர்ந்திருக்கும் கண்ணை உடையவனே!’

முதல் மூன்று அடிகள் முழுவதும் இராமனைப் பற்றிய வருணனை. மூன்றாவது அடியின் கடைசியில் இருந்து, நான்காவது அடியில் தன்னைப் பற்றிய விவரம். எங்க அப்பா வாயு; எங்க அம்மா பேரு அஞ்சனை. என் பெயர் அனுமன்.’

இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ, வினவிய வந்தேன் என்றான்
எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.

‘அப்பா பேரு வாயு. அம்மா பேரு அஞ்சனை. என் பேரு அனுமன். இந்த மலை இருக்கிறதே, இதற்கு
மேல் சூரியனுடைய பிள்ளை ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு நான் ஏவல் செய்கிறேன். வேலைக்காரன். சாமி! நீங்கள் வருவதைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டான். அவன் சொன்னதன் பேரில் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறேன்.’

மிகவும் சுருக்கமாகத்தான் சொல்கிறான் அனுமன். அதிக விவரங்கள் ஒன்றும் இல்லை. ‘சூரியனுடைய பிள்ளை’ என்ற உடனேயே இராமனுக்குப் புரிந்துவிட்டது. ஏனென்றால், அவனைத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறான் இவன். இந்த வார்த்தையக் கேட்ட இராமன் சொல்வதைக் கேளுங்கள்:

‘மாற்றம் அ·து உரைத்தலோடும்’ அனுமன் அப்படிச் சொன்னவுடன், ‘வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று,’ பெரிய கட்டமைந்த விலலை ஏந்திய தலைவனான இராமன் தெளிவடைந்தான். ‘இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,’ இவனை விடவும் மேலானவன் இன்னொருவன் இருக்க முடியாது என்பதை உறுதியாக உணர்ந்தான். ‘ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்’ இவனிடத்திலே எது அதிகம்? அறிவாற்றல் மற்றும் செயலாற்றலா? நிறைந்த குணங்களா? நிறைந்த கல்வியினாலே ஒருவனுக்கு இயல்பாகவே ஏற்படும் அடக்கமா? அல்லது அந்தக் கல்வியால் ஏற்படும் உள்ளளி நிறைந்த ஞானமா? எது அதிகம்? ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியவில்லையே! எல்லாம் சம அளவில் இருக்கிறதே!

இராமன் அனுமனைப் பற்றிச் சொல்கிறானே, ஆற்றலும் நிறைவும் கல்வி அமையதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்.

சொல்லிக்கொண்டே வருகிறான். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் இலக்குவன் கவனம் இன்னும் இவன் மேல் விழுந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அவனுடைய பார்வை எல்லாம் சீதை எங்காவது தட்டுப்படுகிறாளா என்பதிலேயே நிலைத்திருந்தது. அவனுடைய கவனைத்தை ஈர்க்கும் விதமாகச் சொல்கிறான் இராமன். ‘இவன் படிக்காத வேதம் இருக்காது; கற்காத கலை இருக்காது. இப்படி எல்லாம் எப்படிச் சொல்றேன் என்று நினைக்கிறாயா? இவன் பேசுகிற பேச்சே சொல்கிறது. ‘சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ இவன் சொல்லே இவனுடைய நிறைவை ஏந்தி வெளிவருகிறது. இவன் சொல்லே இவனுக்கு சாட்சி. ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’ பட்டமே கொடுக்கிறான் இராமன், முதல் பார்வையிலேயே. ‘ஆர்ரா இந்தச் சொல்லின் செல்வன்?’ ‘வில் ஆர் தோள் இளைய!’ ஆ ஊ என்றால் உடனே வில்லைத் தூக்கி நாண் ஒலி செய்யத் தயாராக நிற்கிற தம்பிப் பையா! ‘வீர் விரிஞ்சனோ?’ இது யார்ரா? பிரமனாக இருக்குமோ? ‘விடை வலானோ?’ இல்லாட்டி சிவனாக இருக்குமோ? (பிரமனாக இருக்குமோ, சிவனாக இருக்குமோ என்று கேட்டாலும், ‘நாராயணனாக இருக்குமோ’ என்ற கேள்வியை இராமன் எழுப்ப வைக்கவில்லை கம்பன். அங்கே உண்மையான சொல்லின் செல்வன் யார் என்பதற்கான விடை கிடைக்கிறது. சொல்லாமல் விட்டது எதுவோ அதுதான் அதிகம் சொல்லுகிறது. )

உடனே இராமனுக்கு இன்னொன்று தோன்றுகிறது. இந்தத் தம்பி சும்மா நிற்கிறானே, இவனுக்கு இன்னும் ஐயம் போகவில்லையோ என்னவோ? ஒருவேளை, இந்த அண்ணனுக்கு வேற வேலையில்லை, அந்த மானைப் பார்த்தவுடன் அப்படித்தான் அதன் பின்னாலேயே ஓடினான்; இத்தனைத் துன்பங்களையும் வரவழைத்தான். இப்போது இந்தப் பையனைப் பார்த்தவுடன் கிடந்து குதிக்கிறான்’ என்று நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது போலிருக்கிறது. இலக்குவனிடம் சொல்கிறான். ‘மாணி ஆம் படிவமன்று.’ இந்தப் பையன் உண்மையில் பையன் இல்லை. இவனுடைய பிரமச்சரிய வடிவத்தைப் பார்த்து இவனை ஒன்றும் அறியாதவன் என்று நினைத்துவிடக் கூடாது. ‘மற்று இவன் வடிவம், மைந்த, ‘ வேற என்ன வடிவம் என்று கேட்பாய் நீ. சொல்றேன்
கேள். ‘ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம்.’ இவன்தான் இந்த உலகத்துக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லலாம்.’ ‘ஆற்றலுக்கு ஏற்ற சேணுயர் பெருமை எல்லாம் சிக்கறத் தெளிந்தேன்.’ கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாமல் இவனுடைய ஆற்றலையும், அதற்கேற்ற மிகப் பெரிய பெருமைகளையும் எல்லாம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.

இலக்குவன் இன்னும் மாற்றம் ஏதுமின்றி நிற்கிறான். இராமனுக்குப் புன்னகை தோன்றுகிறது. ‘டேய்! இது மான் சமாச்சாரமில்லைடா! அப்பதான் நான் கொஞ்சம் விட்டுவிட்டேன். நீயே சொல்லியும் கேட்கவில்லை. இது அப்படியில்லை. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேன். இவனைப் பற்றி நான் சொல்வது இப்போது உனக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ‘பின்னர்க் காணுதி மெய்ம்மை’ நீயே பின்னால தெரிந்துகொள்வாய்.

மாணிஆம் படிவமன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணிஇவ் உலகுக் கெல்லாம் என்னலாம்; ஆற்றற் கேற்ற
சேண்உயர் பெருமைதன்னைச் சிக்கறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறி, கண்ணன்… … …

நாலு அடிக்குள் எத்தனைக் காட்சிகளைத் திணிக்க முடியும்? மிக அலட்சியமாக நுணுக்கி நுணுக்கி இழைக்கிறான் கவிஞன். அது இருக்கட்டும். அவன் என்னடா என்றால் இவனைப் பார்த்து, ‘நீல மேகம் போன்ற நிறத்தழகா, பெண்கள் மனத்துக்கெல்லாம் நேசத் துன்பத்தை உண்டாக்கக் கூடிய, பனியில் வாடாத, எப்போதும் மலர்ந்த தாமரைக் கண்ணா’ என்று கண்ணால் பார்க்கக் கூடியனவற்றைப் பார்த்து மனம் பறிகொடுத்துப் பேசுகிறான். இவன் என்னடா என்றால், கண்ணுக்குப் புலப்படாத அறிவையும், ஆற்றலையும், அகத்தையும், அகத்தின் தெளிவையும், உயர்வையும், அடக்கத்தையும் ஒரே நொடியில் அளந்து பார்த்தேன் என்கிறான். எப்படி அளந்தானாம்? ‘சொல்லினால் தோன்றிற்று அன்றே, யார்கொல் இச் சொல்லின் செல்வன்!’

அப்படி என்னதான்யா சொன்னான் அந்த அனுமன்? ‘எங்க அப்பா பேரு காத்து; எங்க அம்மா பேரு அஞ்சனை; என் பேரு அனுமன். இந்த மலை மேல சூரியனின் பிள்ளை(யான சுக்ரீவன்) இருக்கிறான். அவன் உங்களைப் பார்த்து பயந்து போய்விட்டான். நீங்க யாருன்னு கேட்டுட்டு வரச் சொன்னான். அதான் வந்திருக்கிறேன்.’ இதுல என்னய்யா அப்படி பெருசா தெரியுது அறிவு, ஆற்றல், அடக்கம் இன்ன பிற? எதுக்கு இப்படி ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரு இந்த இராமரு? எனக்கு ஒன்றே ஒன்றுதான் தட்டுப்படுகிறது. ‘கவ்வை இன்றாக நுங்கள் வரவு’ என்று அனுமன் சொன்னான் பாருங்கள், அதற்கான முழுப்பொருள் இப்போது விளங்கியிருக்க வேண்டும், இராமனுக்கு. ‘உங்களைப் பார்த்து பயந்துவிட்டான்’ என்று சொன்ன கணத்தில், ‘ஓகோ அதுக்குத்தான் அப்படிச் சொன்னாயா’ என்று அந்த வாக்கியத்தின் நயம் உணர்ந்திருக்கக் கூடும்.

இல்லை. இப்படி அளந்து பார்த்துவிட முடியாது இராமனை; அவன் இதயத்தை. ‘அடியனேன் உன் வேதநூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்’ என்று அனுமனே, பலகாலம் பழகியபின், வீடணன் அடைக்கலப் படலத்தின் போது சொல்லப் போகிறான். அனுமனே அறிய ஒண்ணாத வேத நூல் அன்ன திருவுளத்தின் குறிப்பை நாமா கண்டுவிடப் போகிறோம்? ஒன்றே ஒன்று தெரிகிறது. இங்கே அனுமனுடைய நிலை இனம் புரியாத அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவு அடங்கி நிற்கும், ஆனாலும் அடங்கிய நிலையிலும் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும் நிலை. இராமனுடைய நிலையோ, அறிவின் செயல்பாட்டைக் குறித்தே சற்றும் கவலைப்படாமல், ஒற்றைச் சொல்லால் உள்ளம் அளந்து, ஒரே பார்வையில் அன்பினுக்கு ஆட்பட்டுத் தன்னுடைய முழு மனத்தையும் ஒரேயடியாக அப்படியே கொடுத்துவிட்ட நிலை. Abundant love and unconditional acceptance. இவர்கள் இப்படி இருந்தால், நம் நிலை? இவர்களை அறிவுகொண்டு அளக்க நினைத்து முற்றிலும தோற்றுப போன நிலை. வேறு என்ன சொல்வது!

அறிவு வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலையைத் தாண்டிய சில கணங்கள் உண்டு. ‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி’ என்ற இரண்டைக் காட்டிலும் ‘அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்’ இன்னது என்று சொல்லத் தெரியாதபடி ஆட்கொள்ளும். அப்படிப்பட்ட அன்பிலே கட்டுண்டார்கள் ஆண்டவனும், அடியவனும். ஆனாலும், அடியவன் கொஞ்சம் அதிகம் சாமர்த்தியசாலிதான். ஆண்டவனுக்கு நடிக்க ஒரு பாத்திரம் இருந்ததென்றால், அடியவனுக்கு நடக்க ஒரு பாத்திரம் இருந்தது. அடியவன் மனத்தில் இப்போது ஓடுகிற எண்ணம் என்ன, அவன் இப்போது ஆண்டவன் முன்னால் பேசுகின்ற விதம் என்ன, அமைச்சனாக அவன் ஆற்றுகின்ற செயல் என்ன? செயலுக்குக் காரணம் இருந்ததா? அவன் உள்ளக் கிடக்கை இப்போது இராமனை நோக்கி
யதா அல்லது சுக்ரீவனை நோக்கியதா?

——————–

நஅன்-ரிக்வேத வினீதஸ்ய ந அ-யஜுர்வேத சாரிணா ந அ-சாம வேத விதூஷா ஷக்யமேவம் விபாஷிதம் (மேற்படி, சுலோகம் 28)

‘ரிக் வேதத்தைப் பொருள் உணர்ந்து ஓதினாலொழிய, யஜுர் வேதத்தை மனனம் செய்திருந்தாலொழிய, சாம வேதத்தை அறிந்திருந்தாலொழிய இப்படிப் பேசுவது இயலாத ஒன்று’

————-

எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தோம்
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தோனைக் காட்டுதி தெரிய’ என்றான்.

ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின்
தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே.

நீங்களே அவனைப் பார்க்க வந்திருக்கிறீர்களா! அப்படியானால், அவனுடைய துன்பம் கெடுமாறு அவன் செய்த தவம் மிகப் பெரியது

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்விய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ?

‘தன் குலத்தையே வேரறக் களைவதற்கான செயலைத் தொடங்கி, தனக்குப் பகைவனாக வந்திருக்கும் எமனைக் கண்டு (தன்னை அழிக்க எண்ணியிருப்பவனைக் கண்டு) நடுநடுங்கிக் கிடப்பவர்களுக்கு அபயம் அளிப்பதை விடவும் பெரிய அறம் ஒன்று உண்டா?’ எங்களைக் காப்பது உங்களுக்கு எளிதான செயல் அல்லவா? ‘இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்.’ தேவர்கள் முதற்கொண்டு இந்த அண்ட கோளத்தில் அசைகின்ற, அசையாத (சர, அசர) எல்லாவற்றையும் காக்க வல்லவர் நீங்கள். எம்மைக் காத்தல் உங்களுக்கு மிகவும் எளிய ஒன்று.

இவர்களை உற்று நோக்கியபடி நடந்து வந்தானே அப்போது,

காய் எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்
தூய செங்கமலப் பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்’

வெய்யிலில் கிடக்கின்ற காரணத்தால் நெருப்பைப் போல் சுடுகின்ற கற்கள், இவர்கள் பாதம் பட்டதும் (இவர்களுடைய பாதத்துக்கு) தேன் நிறைந்த மலர்களைப் போல் குழைந்து போகின்றனவே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டானல்லவா, இந்த இரண்டு தருணங்களிலும் தாளையும், தோளையும் கவனித்தான். இப்படி கவனித்ததை இங்கே சொல்லவில்லை. அடுத்த காட்சியில் சுக்ரீவனிடம் சொல்லப் போகிறான்.

சங்கு சக்கரக் குறி உள தடக் கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே.
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

அவர்களுடைய கையிலும், பாதத்திலும் சங்கு, சக்கரக் குறிகள் உள்ளன. இப்படி ஒரு இலக்கணத்தோடு வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. சிவந்த (தாமரை போன்ற) கண்களை உடைய இராமன் வேறு யாரும் இல்லை. அந்த நெடுமாலேதான். அறத்தை நிலை நிறுத்துவதற்காகப் பிறந்திருக்கிறான்.

ததா ச சுமஹாப்ராஞ்ஞா ஹனுமான் மாருதாத்மஜா
ஜகாம ஆதாயதெள வீரெள ஹரி ராஜாய ராகவவ்

(வா. இரா. கிஷ்கிந்த காண்டம், சர்க்கம் 4, சுலோகம்)
அதன் பிறகு மிகுந்த புத்திமானும், வாயுவின் மகனுமான அனுமன் அந்த இரண்டு இராகவர்களையும் (இராம இலக்குவர் இருவருமே இரகு குலத்தவர், ஆகவே இருவருமே இராகவர்கள்) குரங்குகளுக்கு அரசனிடத்தில் அழைத்துச் சென்றான்.

எப்படி அழைத்துச் சென்றான்?

பிக்க்ஷ¤ ரூபம் பரித்யஜ்ய வானரம் ரூபம் அஸ்திதா
ப்ரிஷ்டம் ஆரோப்ய தெள வீரெள ஜகாம கபிகுஞ்சரா.

தான் மேற்கொண்டு வந்த பிரமசரிய உருவத்தை விட்டுவிட்டு, தன்னுடைய குரங்கு உருவத்தோடு, அந்த இரண்டு வீரர்களையும் தன் முதுகிற் சுமந்தவாறு சுக்ரீவனை நோக்கிச் சென்றான் குரங்குளில் யானை போன்ற (பேருருவம் கொண்ட) அனுமன்.

கிம் அர்த்தம் த்வம் வனம் கோரம் பம்ப்பா கானன மந்திதம்?
ஆகத ஸானுஜொ துர்கம் நானா வ்யால ம்ருகாயுதம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 4, சுலோகம் 4)

என்ன காரணத்துக்காக பலவிதமான ஆபத்தான மிருகங்கள் உலவக் கூடியதும் பம்பைக் கரையில் இருப்பதுமான இப்படிப்பட்ட ஆபத்தான வனத்தில் உங்களுடைய தம்பியுடன் வந்திருக்கிறீர்கள்?
‘ஆபத்தான மிருகங்கள் நிறைந்ததும் பம்பைக் கரையில் உள்ளதுமான வனம். இந்த வனத்தில் உங்களுடைய தம்பியையும் கூட அழைத்துக்கொண்டு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்?

விதிதாநெள குணா வித்வான்! சுக்ரீவஸ்ய மஹாத்மனா
தமேவ சாவா மார்க்காவ சுக்ரீவம் ப்லவகேஷ்வரம்.
(மேற்படி, சர்க்கம் 3, சுலோகம் 37)

பண்டிதரே! சுக்ரீவன் என்ற அந்தப் பெருங்குணசாலியின் தன்மைகளை நாங்கள் அறிவோம். (விண்ணெங்கும்) தாவித் திரிவதான குரங்குகளின் அரசனான அவனைக் காணவே வந்திருக்கிறோம்.

யார் என விளம்புகேன் நான் எம் குலத் தலைவற்கு உம்மை,
வீர நீர் பணித்திர் என்றான் மெய்மையின் வேலி போல்வான்.

‘யார் வந்திருக்காங்கன்னு சொல்லட்டும் எங்க தலைவருக்கு? எனக்கு என்ன உத்தரவு?’ என்று கேட்டானாம், உலகத்தில் வாய்மையைக் காப்பதற்காக இட்ட வேலியைப் போன்றவனான அனுமன்.

தஸ்யஸ்ய வசதோ அரண்யே நியத்ஸ்ய மஹாத்மனா
ராவணேன ஹ்ரிதா பார்யா ஸ த்வம் ஷரணம் ஆகதா.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 6)

காட்டிலே நெறியான வாழ்க்கை மேற்கொண்டிருந்த இந்த மகாத்மாவின் மனைவியை இராவணன் கவர்ந்து சென்ற காரணத்தால், உன்னைச் சரண்புகும் பொருட்டு இங்கே வந்திருக்கிறான்.

யானும் என் குலமும் இவ் உலகும் உய்ந்தனம் எனா, மானவன் குணம் எலாம் நினையும் மதியினான்.’ நான் உய்ந்தேன்; என் குலம் உய்ந்தது; நாங்கள் மட்டுமில்லை இந்த உலகமே உய்ந்தது என்றவாறு மனிதனாகத் தோன்றிய இராமனின் நல்ல குணங்களை எல்லாம் சிந்தித்தவாறு சுக்ரீவன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான்.’ சூரியனின் மகனான சுக்ரீவனிடத்தில் சொன்னான். என்ன சொன்னான்? ‘விரைசெய் தார் வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்.’ மணமிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த, அளவில்லாத வலிமை உடையவனான வாலியைக் கொல்வதற்கான எமன் வந்திருக்கிறான். ‘இடர்க் கடல் கடந்தனம்.’ நாம் நம்முடைய துன்பக் கடலைக் கடந்தாகிவிட்டது.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரைசெய்தார்
வாலிஎன்ற அளவிலா வலியினான் உயிர்தெறக்
காலன் வந்தனன் இடர்க்கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.

‘நான் வாழ்ந்தேன்; என் குலம் வாழ்ந்தது, இந்த உலகமே வாழ்ந்தது’ என்று எண்ணியவாறு வந்தவன் என்ன காரணத்துக்காக அவ்வாறு எண்ணினான் என்பது முதல் மூன்றடிகளில் வெளிப்பட்டது. ஏன்? வாலியின் உயிர் கவர்வதற்கு எமன் வந்துவிட்டான். ‘நான் வாழ்ந்தேன், என் குலம் வாழ்ந்தது’ என்பதோடு நிற்காமல் ‘இந்த உலகமும் வாழ்ந்தது’ என்று எண்ணிய காரணத்தால் வாலியின் தன்மை என்ன என்பதும், என்ன காரணத்துக்காக அவன் கொல்லப்படத் தகுந்தவனே என்பதும் கோடிகாட்டப்படுகின்றன.

மண்உளார் விண்உளார் மாறுளார் வேறுளார்
எண்உளார் இயல்உளார் இசைஉளார் திசைஉளார்
கண்உளார் ஆயினார்; பகைஉளார், கழிநெடும்
புண்உளார் ஆருயிர்க்கு அமுதமே போல் உளார்.

அப்பா சுக்ரீவா! பயந்து போனாயே. இவர்கள் வாலி அனுப்பியவர்களோ என்று நடுங்கினாயே. இவர்கள் நீ நினைத்ததைப் போல் இல்லை. இவர்கள் யார் தெரியுமா? இந்த மண்ணில் இருப்பவர்கள், அந்த விண்ணில் இருப்பவர்கள், இந்த இரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்தில் இருப்பவர்கள், இந்த மூன்றையும் தவிர்த்த உலகங்களில் உள்ளவர்கள், அத்தனை பேர்களின் எண்ணத்திலும், செயலிலும், கண்களிலும் உள்ளவர்கள். யாரெல்லாம் பகைவரை உடையவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கெல்லாம் பகைவரால் துன்பம் நேர்ந்திருக்கிறதோ, யாரெல்லாம் பகையாலே உடலும் உள்ளமும் புண்பட்டிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களின் உயிர்களுக்குள் ஊற்றப்படும் அமுதம் போன்றவர்கள்.

சூழிமால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியாலர் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்.

அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவதைப் போல் செய்தியை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறான் அனுமன். அவர்கள் யார் தெரியுமா? பெரிய பெரிய யானைப் படையை உடைய அரசர்களெல்லாம் தொழுது வணங்கியவனான சக்ரவர்த்தி, தசரதன் தெரியுமில்லையா உனக்கு? இந்த உலகம் முழுவதையும் தன் வலிமையால், தன் குடைக் கீழ் வாழும்படிச் செய்த, ஆணைச் சக்கரத்தை உடையவன் இல்லையா அந்த தசரதன்? அவனுடைய மைந்தர்கள் இவர்கள். என்னா அறிவுள்ளவங்க தெரியுமா? எவ்ளோ அழகா இருக்காங்க தெரியுமா? சரி. அத விட்டுவிடுவோம். இவர்கள் நெறிப்படி நடப்பவர்கள். அறத்தைக் கைக்கொண்டவர்கள். மிக எளிதில் உனக்கு அரசைப் பெற்றுத் தருவார்கள்.

காதிசேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார்.’ விஸ்வாமித்திரர் பல தெய்வப்படைகளை இவர்களுக்குத் தந்திருக்கிறான். தவறாத சக்தி உடைய அத்திரங்கள் இவர்களிடத்தில் உண்டு

மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத்
தீயகான் நெறியின் உய்த்தனன்; அவள் தேடுவார்
நீஐயா தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்.

இவ்வளவு பேராற்றல் உடையவர்கள். சரிதான். அப்படியானால் எப்படி இந்த இராமன் தன் மனைவியைத் தொலைத்தான்? ‘மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன்.’ அது வந்து, இந்த இராவணன் இருக்கானே, புத்தி கெட்ட பய, அவன் மாயத்தோற்றம் ஒன்றை உண்டாக்கினான். மாரீசனை மாயமானாக அனுப்பினான். அவர்கள் இல்லாத சமயத்தில் சீதையைத் தன்னுடைய கொடிய வஞ்சனையால் இந்தக் காட்டு வழியில் தூக்கிச் சென்றுவிட்டான். அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

தனக்கு உவமை தானேயன்றி இன்னொருவன் இல்லாதவனின் சரணத்தை நாடி வந்து அடைந்தான். அப்படி நடந்து வரும்போது இவர்களைப் பார்த்தவாறே வந்தானில்லையா, அந்தத் தருணத்தில் உள்ளத்தின் அடி ஆழத்தில்
உணர்கிறான் சுக்ரீவன்:

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா.

இவனே தேவர்களுக்கு எல்லாம் தேவன். மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் ஆற்றைத் தரித்த உருத்திரன் முதலான எல்லா தேவர்களையும், இதோ, இந்த மானுடம் வென்றுவிட்டது.

பவான் தர்ம வினீதா ச சுதபா சர்வ வத்சலா
ஆக்யாதா வாயுபுத்ரேண தத்வதோ மே பவத் குணா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 9)

தாங்கள் தர்மங்களைப் பயின்றவர்; நற்செயல்களில் நாட்டம் உடையவர்; அனைவரையும் நேசிப்பவர். (அல்லது, ‘அனைவராலும் விரும்பப்படுபவர்’.) வாயு புத்திரனான அனுமன் எனக்கு உங்களுடைய குணநலன்களின் மெய்மையைச் சொல்லியிருக்கிறான்.

ரோசதே யதி மே சக்யம் பாஹ¤ ஏஸ ப்ரசாரிதா
க்ரிஹ்யதாம் பாணினா பாணி மர்யாதா பத்யதாம் த்ருவா
(மேற்படி, சுலோகம் 11)

என்னுடன் நட்பு கொள்வது உனக்குச் சம்மதமானால், இதோ உன் முன்னால் என் கரம் நீட்டப்பட்டிருக்கிறது. (நம்முடைய) இந்தத் தொடர்பு உறுதிப்படும் விதமாக உன் கரத்தால் இதைப் பற்று.

யாங்கள் உற்ற கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்
ஐய! நின் தீரும் என்ன … … … … … … … … … … … …

‘செயல்களற்று நாங்கள் நிற்கும் விதத்தில் எங்களைப் பீடித்துள்ள துயரத்தை உன்னால் (உன் துணையுடன்) கடப்பதற்காக வந்துள்ளோம். இந்தத் துயர் உன்னால் தீரும்’ என்று இராமன் சொன்னான்.

முரணுடைத் தடக்கை ஓச்சி முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகெங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர்உயிர் துறக்கல் ஆற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன். என்னைத் தாங்குதல் தருமம் என்றான்.

தடித் தடியான கைகளை ஓங்கியபடி எங்க அண்ணன் தம்பியாகிய என்னை இருள் நிறைந்த இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துரத்தினான். என்னைப் போட்டு அடித்தான் ஐயா. என்னைக் கொல்லத் துடிக்கிறான். ஏதோ இந்த மலைப் பிரதேசத்தில் அவன் நுழைய முடியாதபடி ஒரு சாபம் இருக்கிற காரணத்தால் இங்கே ஓடிவந்து ஒளிந்துகொண்டு உயிர் வாழ்கிறேன். ‘ஆருயிர் துறக்கல் ஆற்றேன்’. ஐயா, இப்படிப்பட்ட அச்சத்தோடு வாழ்வதை விடவும் உயிரை விட்டுடலாம்னு பாத்தேன். என்னால முடியல. சாகலாம்னாலும் முடியல. நான் என்ன பண்ணுவேன்! ஐயா, உங்களை நான் சரண் புகுந்தேன். என்னைக் காப்பாற்றுவதே உங்கள் தருமம்.’

விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி, நொந்து, இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.

விருந்துண்டு அமர்ந்திருந்த போது, தன் மீது பொழியப்பட்ட அன்பில் மனம் குளிர்ந்து, சுற்றிலும் (மறுமுறை) நோக்கினான். சிந்தித்தான். மனம் நொந்து சிந்தித்தான். ஏன் மனம் நொந்தான்? இங்கே பரிமாறியது முழுக்க முழுக்க ஆண்கள். சுக்ரீவனுடைய மனைவி இங்கே இருந்திருக்க வேண்டுமே! அவள் ஏன் கண்களில் தட்டுப்படவில்லை? கேள்வி உறைக்கிறது. ‘என்னப்பா சுக்ரீவா, உன் மனைவியைக் காணோமே, எங்கே அவர்கள்? இங்கே இருக்கிறார்களா? இல்லாவிட்டால் என்னைப் போல நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.

என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்றுபோல நின்று, இருகை கூப்பினான்.
‘நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்.
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா.

இராமன் அப்படிக் கேட்ட உடனே குன்று எழுந்து நிற்பது போல் எழுந்தான் மாருதி. இரண்டு கைகளையும் கூப்பினான். வணக்கமாகச் சொன்னான். ‘நிலைத்த நீதியை உடையவனே! நான் உனக்குச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. கொஞ்சம் நீளமான செய்தி அது. கேட்டருள வேண்டும்.’

மற்று இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்

இன்னும் வேறு என்ன சொல்வது? என்ன சொல்லவேண்டி இருக்கிறது? ஆகாயத்தில் என்றாலும் சரி, பூமியில் என்றாலும் சரி; உன் மீது பகைகொண்டு உன்னை வருத்தியவர்கள் யாரோ, அவரெல்லாம் என்னை வருத்தியவர்கள். உனக்கு உற்றவர் – அது எப்படிப்பட்ட கெட்டவர்களாக இருந்தாலும் சரி – எனக்கும் உற்றவர். உனக்கு யாரெல்லாம் (நேசமுடைய) உறவினர்களோ, அவர்களெல்லாம் எனக்கும் உறவினர்கள்தாம். என் மீது நேசம் பாராட்டும், நான் நேசம் பாராட்டும் என் உறவெல்லாம் உன்னுடைய உறவினரே. நீ என் இன்னுயிர்த் துணைவன். என் சகோதரன்.

உருமை என்று இவற்கு உரிய தாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்.
கருமம் இங்கு இது, எம் கடவுள்! என்றனன்.

இதோ இந்தச் சுக்ரீவன் இருக்கிறானே, இவனுக்கு உருமை (ருமா) என்ற பெயருடைய மனைவி உண்டு. அந்தப் பெண்ணையும் வாலி அபகரித்துக்கொண்டான். அரசன் என்ற நிலையில் கொஞ்ச காலம் இருந்தவனேனும், அரசை அண்ணனிடம் திருப்பினாலும் இளவல், இளவரசன் என்ற நிலையில் இருக்கவேண்டியவன் இவன். அதையும் இழந்தான். தன் வாழ்வின் ஆதாரப் பற்றுக்கோடான தன் மனைவியையும் அண்ணனிடத்தில் பறிகொடுத்தான். இதோ, காட்டில் வசிக்கிறான். சாமி! இதுதான் நடந்தது.

ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
பாரம் ஈந்தவன், பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உள்ளதோ?

கதிரவன் சிறுவன்ஆய கனக வாள் நிறத்தினானை
எதிர்உறத் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், நீண்ட
வெதிர் பொரு தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்.
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமையும் என்றார்.

ஒளிவிடும் பொன் போன்ற நிறத்தை உடையவனும் சூரியனின் புத்திரனுமான சுக்ரீவனுடைய நட்பைப் பெற்று, அவன் மூலமாகச் சீதையைத் தேடுவதே சிறந்தது என்று கபந்தன் என்ற பெயரில் சாபம் பெற்று வாழ்ந்தவனான தனு என்ற கந்தர்வன் சொன்னான். அப்படியே செய்கிறோம் என்று இருவரும் அவனுக்குச் சொன்னார்கள்.

வாலினோ மே மஹாபாக பய ஆர்தஸ்ய அபயம் குரு
கர்தும் அரஹசி காகுத்ஸ்தா பயம்மே ந பவேத் யதா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 23 பின்பாதி, 24 முன்பாதி)

‘வாலியால் துன்புறுத்தப்பட்டு, அவனை அஞ்சி வாழும் என்னுடைய இந்த அச்சத்தை மாற்று. எனக்கு அபயம் நல்கு. அவ்வாறு செய்வதே உனக்குப் பொருத்தமானதாகும்’ என்ற சுக்ரீவன் வாய்மொழிக்கு விடையாக,

உபகார பலம் மித்ரம் விதிதம் மே மஹாகபி
வாலினாம் தம் வதிஷ்யாமி தவ பார்யா அபஹாரிணம்
(மேற்படி, சுலோகம் 25 பின்பாதி, 26 முன்பாதி)

‘நட்புக் கொள்வதன் பலன் என்னவென்றால், (ஒருவருக்கொருவர்) உதவியாயிருத்தலே. வலிய வானரனே! உன் மனைவியை அபகரித்தவனான வாலியை நான் கொல்கிறேன்..’

உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்.

பதினான்கு உலகங்களில் வாழ்பவர்களும் ஒன்று கூடி, அவனுக்கு உதவியாக நின்று என்னைத் தடுத்தாலும், என்னுடைய வில்லில் அம்பு தொடுத்து, அவனைக் கொன்று, அரசையும் உன் மனைவியையும் ஒரு சேர உனக்கு மீட்டளிப்பேன். இன்று. இப்போது. இதே நிமிடத்தில் உனக்கு உன் அரசும், உன் மனைவியும் கிடைத்தாகிவிட்டது என்று கொள். அவன் எங்கே இருக்கிறான், அதை எனக்குக் காட்டு. அவன் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்.

எழுந்து பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலிதன் வலி என விரும்பா
மொழிந்த வீரற்கு, ‘யாம் எண்ணுவது உண்டு’ என மொழிந்தான்.

‘வாலியை இப்போதே அழிக்கிறேன். அவன் எங்கிருக்கிறான் காட்டு’ என்று இராமன் எழுந்த அளவில் மகிழ்ச்சியாகிய கடல் பெரிய அலைகளுடன் பொங்கி எழ, இது வரை வாடிக் கொண்டிருந்த துன்பக் கடலுக்கு அக்கரை கண்ணில் தென்பட்டவனாக, ‘வாலியின் வலிமை இத்தோடு தொலைந்தது’ என்றெண்ணி ஆர்ப்பரித்து, விரும்பி நிற்கும் அனுமன் முதலான வானர வீரருக்கும், இராமனுக்கும் ‘எனக்குக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது’ என்று சொன்னான்.

மாயாவீ நாம தேஜஸ்வீ பூர்வஜோ துந்துபே சுதா
தேன தஸ்ய மஹத் வைரரம் வாலினா ஸ்த்ரீ க்ரிதம் புரா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 9, சுலோகம் 4)

துந்துபிக்கு முன் தோன்றியவனான (அவனுடைய மூத்த சகோதரனான என்றும் பொருள் கொள்ளலாம்) மாயாவி என்றொரு அரக்கன் இருந்தான். அவனுக்கும் வாலிக்கும் ஒரு பெண் தொடர்பாகப் பகை இருந்தது.

கதம் ச தர்மம் ஜானீதே யேன ப்ராத்ரா துராத்மனா
யுத்தாய அபிநியுக்தேன பிலஸ்ய பிஹிதம் முகம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 55, சுலோகம் 4)

தன்னுடைய சகோதரனால் குகையின் வாயிலைக் காவல் காக்குமாறு ஆணையிடப்பட்டிருந்த இவன், எந்த அடிப்படையில் தான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்து, குகையின் வாயிலைப் பாறை கொண்டு அடைத்தான்? இவன் செய்தது எந்த தர்மத்தின்பாற் பட்டது? எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்?

சத்யாத் பாணி க்ரிஹீதா ச க்ரிதா கர்மா மஹாயஷா
விஸ்மிரிதோ ராகவோ யேன ச கஸ்ய சுக்ரிதம் ஸ்மரெத்
(மேற்படி, சுலோகம் 5)

இப்படிப்பட்வனைத்தான் இராமன் கைப்பற்றி நட்புப் பிரதிக்ஞை செய்தான். அண்ணனுக்கு இப்படி ஒரு தீங்கிழைத்தவன் இவன் என்பதை இராமன் கூட கருத்தில் கொள்ளவில்லை அல்லவா? (சொல்லுக்குச் சொல் செய்யப்பட்ட மொழிபெயர்பன்று; கருத்து இதுதான்.)

ஏதத் அஸ்ய அசமம் வீர்யம் மயா ராம ப்ரகாஷிதம்
கதம் தம் வாலினாம் ஹன்தும் சமரே ஷக்ஸ்யசே ந்ருப
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 11, சுலோகம் 68)

என்று இராமனைக் கேட்கிறான் சுக்ரீவன். ‘வாலியின் இணையற்ற வலிமை இத்தகையது. இப்படி இருக்கும்போது, இராமா, நீ எவ்வாறு அவனைப் போரிட்டுக் கொல்வாய்?’ இந்தக் கேள்வி காதில் பட்டதுதான் தாமதம், இலக்குன் சிரித்தான். கோபச் சிரிப்பு என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய சிரிப்பில் சினம் தெரிந்ததோ இல்லையோ, அவன் கேள்வியில் எரிச்சல் தெரிகிறது.

ததா ப்ருவாணம் சுக்ரீவம் ப்ரஹஸன் லக்ஷ்மணோ அப்ரவீத்.
கஸ்மின் கர்மணி நிர்வ்ரிதே ஷ்ரத்தத்ய வாலினம் வதம்?
(மேற்படி, சுலோகம் 69)

சுக்ரீவன் இவ்வாறு சொல்லவும் இலக்குவன் சிரித்தான். ‘என்ன காரியம் செய்து காட்டினால் (இராமனால்) வாலி வதம் சாத்தியம் என்று நம்புவாய்,’ என்று கேட்டான்.

என்று தானும் அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான்.’

‘அண்ணன் இறந்திருக்கத்தான் முடியும். இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் கழித்தும் வெளி வராமல் இருக்க மாட்டான். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நானும் இந்தக் குகைக்குள்ளே போகின்றேன். என் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பேன். அவனைக் கொன்றவனோடு நானும் போர் புரிவேன். என் அண்ணனையே வீழ்த்திய அவனை என்னால் வீழ்த்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு வேளை வெல்லலாம். அப்படி இல்லாவிட்டால் நானும் எங்க அண்ணனோட சேந்து செத்துப் போறேன்’ என்றவாறு குகைக்கு உள்ளே செல்லத் தொடங்கினான்.

தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு…….

அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து
இன்ன வாயிலூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கினேம்

அப்போதையின் அயர்வாறிய அனுமன் அழல் விழியா
பொய்ப்போர் சில புரியேல் இனி எனவந்திடை புகுந்தான்
கைப்போதகம் என முந்தவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
‘இப்போர் ஒழி. இனிப்போர் உள. இவைகேள்’என இசைத்தான்.

தளர்ச்சி நீங்கப் பெற்ற அனுமன் சினத்தால் நெருப்பெரியும் விழிகளோடு, (தரைமேல் நின்றிருந்த) இலக்குவனுக்கும் (தேரேறி நின்றிருந்த) இராவணனுக்கும் இடையில் வந்து குதித்தான். யானையைப் போல இராவணன் தேருக்கு எதிரில் நடந்து வந்தபடி, ‘ஏய் எல்லாம் போதும்டா! சும்மா பொய்யாட்டம் ஆடாதே,’ என்றான். ‘போங்காட்டம் ஆடாதே’ என்று சின்னப் பசங்க சொல்ல மாட்டாங்களா, அந்த மாதிரி. ‘பொய்ப்போர் சில புரியேல்.’ ‘அது கிடக்கட்டும். இந்தப் போரை விடு; இன்னும் எத்தனையோ போர் இருக்கிறது. அப்ப காட்டு உன் வீரத்தை. இப்ப நான் சொல்வதைக் கேள்.’

என்றாலும் இன்று இழிவு உன்வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்.

‘ஆனாலும் கூட, கண்ணு, இன்னிக்கு உனக்கு ஊதிட்டாங்க.’ ‘இன்று உனக்கு எல்லா இழிவும் ஒன்றாக வந்து சேரப் போகிறது,’ என்று சொல்லிக்கொண்டே உலகளந்த திரிவிக்கிரமனைப் போல் தன் பேருருவை எடுத்தான்

பரக்கப் பல உரைத்தென் படர் கயிலைப் பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறிக்கண் திசைக் கரிக்கும் சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய் உரன் உடையாய்.

நீள நெடுக பலவாறாகச் சொல்லவே தேவையில்லை. வலிமை என்பதன் குவியல் என்று சொல்லக் கூடிய வரிசையான பல தோள்களை உடையவன் நீ!

என்தோள்வலி அதனால்எடுத்து யான்எற்றவும் இறவா
நின்றாய்எனின் நீபின்எனை நின்கைத்தல நிரையால்
குன்றேபுரை தோளாய்மிடல் கொடுகுத்துதி குத்தப்
பொன்றேன்எனின் நின்னோடெதிர் பொருகின்றிலென் என்றான்.

ராகவஸ்ய வசஹ ஷ்ருத்வா ஸம்பரிஷ்வஜ்ய பூஜ்ய ச அபிவாத்ய ச ராமாய யயெள ஸெளமித்ரி ராகவே 51

ஸ ராவணம் வராண ஹஸ்தபாஹ¤ம் ததர்ஷ பீமோத்யததீப்த சாபம் ப்ரசாதயந்தம் ஷரவ்ருஷ்டி ஜாலைஸ்தான் வானரான் பின்னவிகீர்ண தேஹான் 52

தமாலோக்ய மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜஹ நிவார்ய ஷரஜாலானி விதுத்ராவ ச ராவணம் 53
ரதம் தஸ்ய ஸமாஸாத்ய பாஹ¤முத்யம்ய தக்ஷ¢ணம் த்ராசயன் ராவணம் பீமான் ஹனுமான் வாக்யம் அப்ரவீத் 54

தேவ தானவ கந்தர்வைர்யஷைஸ்ச சஹ ராக்ஷஸைஹி அவத்யத்வம் த்வயா ப்ராப்தம் வானரேப்யஸ்த்து தே பயம் 55

ஏஷ மே தக்ஷ¢ணோ பாஹ¤ஹ¤ பஞ்சஷாகஹ சமுத்யதஹ விதமிஷ்யதி தே தேஹே பூதாத்மானம் சிரோஷிதம் 56
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 59, சுலோகம் 51-56)

என்ன அறிவு! என்ன ஆற்றல்! என்ன கூர்த்த மதி! சுந்தர காண்டத்தில் சீதையை முதன் முதலாகப் பார்த்த போது, இவள்தான் தான் தேடி வந்திருக்கும் பெண்ணா என்று உறுதி செய்துகொள்வதற்காக எப்படியெல்லாம் கவனி க்கிறான் அனுமன்! தனிமை, அரக்கர் சூழ்ந்திருந்த தன்மை, கசங்கிய ஆடை, அழுக்கடைந்த மேனி, அழுத கண்கள் என்றிவற்றையெல்லாம் கவனித்த பின்னும் வேறு சில அடையாளங்களையும் கவனித்தான் என்று வால்மீகி சொல்கிறார்:

தாம் சமீக்ஷ்ய விசாலாக்ஷ¢ம் ராஜபுத்ரீம் அநிந்திதாம் தர்க்யாம் ஆச சீதா இதி காரணை உபபாதயன்

(வா. இரா. சுந்தர காண்டம், சருக்கம் 15, சுலோகம் 40)

தான் பார்க்கின்ற அந்தக் குற்றமற்ற (நிந்திக்கத் தக்க ஏதுமற்ற) அரச குமாரி, சீதையேதான் என்பதனை தர்க்க ரீதியாகச் சிந்தித்து, காரணங்களை ஆய்ந்துணர்ந்து அறிந்தான்.

உத்திஷ்ட நரஷார்த்தூல தீர்க்கபாஹோ! த்ருதவ்ரத கிமாத்மானம் மகாத்மானம் ஆத்மானம் நாவ புத்யதே

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 43)

நீண்ட வலிய கரங்களையும், கூர்த்த மதியையும் உடைய மனித வேங்கையே! நீயே எல்லா ஆன்மாக்களுக்கும் மகான்மா என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

சம்நிவார்ய பரானிகம் அப்ரவீத் தான் வநெள கசஹ

ஹனுமான் சம்நிவர்தத்வம் நஹ ஸாத்யம் இதம் பலம் த்யக்த்வா ப்ராணான் விசேஷ்டந்தோ ராமப்ரிய சிகீர்ஷவஹ

என்நிமிதம் ஹி யுத்யாமோ ஹதா சா ஜனகாத்மஜா இமம் அர்த்தம் ஹி விக்யாப்ய ராமம் சுக்ரீவமேவச

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 20 (பின் அரையடி), 21, 22 )

எதிர்த்து ஆர்த்தெழுந்து கொண்டிருந்த வானரப் படையை அடக்கினான் அனுமன். ‘திரும்பிச் செல்லுங்கள். இந்த அரக்க சேனை இனிமேல் வெல்லப்பட வேண்டிய ஒன்றன்று. யாருக்காக நாம் உயிரைப் பணயம் வைத்து, பெரும் அபாயங்களை மேற்கொண்டு தீவிரமாகப் போராடினோமோ, எந்த இராமனுடைய உள்ளம் மகிழ்வதற்காக இவற்றைச் செய்தோமோ, அவனுடைய மனத்துக்கினிய ஜனகபுத்ரி கொல்லப்பட்டுவிட்டாள். இதனைப் போய் இராமனிடமும், சுக்ரீவனிடமும் தெரிவிப்போம்; அதன் பின்னர் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வோம்.’

‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர்.

அந்தப் பொதிய மலையில் அகத்திய முனிவன் தமிழ்ச் சங்கம் வைத்திருக்கிறான். அந்த மலை என்றும் அவன் வாழ்வதற்கு உரிய இடம். ஆகையால் அந்த மலையை (தொலைவில் நின்றபடி) வணங்கிவிட்டுத் தொடர்ந்து செல்லுங்கள். பொன் துகள் நிரம்பிய பொருநை நதி வரும். அதையும் தாண்டியனால் யானைக் கன்றுகள் நி றைந்த மயேந்திர மலையை அடைவீர்கள்.

இராமன் முடி சூடும் சமயத்தில் நிகழ்கிறது இது.

இராமன் சற்று நேரத்துக்கு முன்னால்தான் சானகிக்கு ஒரு முத்து மாலையை அணிவித்திருக்கிறான். அந்த மாலையைக் கைகளால் நெருடியவண்ணம் காட்சியளிக்கிறாள் வைதேகி.

அவேக்ஷமாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸ¥னவே அவமுச்யாத்மனஹ கண்டாத்தாரம் ஜனகநந்தினி

அவைக்ஷத ஹரீன் ஸர்வான் பர்த்தாரம் ச முஹ¤ர்முஹ¤ஹ¤ தாமிங்திதக்னஹ ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜனகாத்மஜாம்

ப்ரதேஹி ஸ¤பகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி அத ஸா வாயுபுத்ராய தம் ஹாரமஸிதேக்ஷணா

தேஜோ த்ருதிர்யஷோ தாக்ஷ்யம் ஸாமர்த்யம் விநயோ நயஹ பெளருஷம் விக்ரமோ புத்திர்ய யஸ்மின்னே தானி நித்யதா

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 128, சுலோகம் 79-82)

அனுமன் தங்களுக்கு ஆற்றிய விலை மதிப்பிட முடியாத சேவைகளை எண்ணிய ஜனக புத்ரி, தன் கணவன் தனக்கு அணிவித்த முத்துமாலையைக் கழற்றி(க் கையில் வைப்பதா)னாள். (அவ்வாறு அந்த மாலையைக் கையில் வைத்தபடி) மீண்டும் மீண்டும் கூடியிருக்கும் வானரர்களைப் பார்ப்பதும், இராமனைப் பார்ப்பதுமாக நின்றாள். இராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். ஒருவரின் செயல்களைக் கொண்டு அவரின் உள்ளத்தை அளப்பதில் வல்லவனான அவன், ‘யாருக்கு இதனை அளிக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவருக்கே சந்தோஷமாகக் கொடு,’ என்று அவளிடம் சொன்னான். கரிய விழிகளைக் கொண்ட அவள், சக்தியும், உறுதியும், புகழும், திறமையும், தகுதியும், அடக்கமும், முன்னறிவும், வீர்யமும், வீரமும், விவேகமும் யாரிடத்தில் எப்போதும் ஒன்றாக உறைந்துளவோ, அந்த வாயு புத்திரனுக்கே அந்த முத்து மாலையை அணிவித்தாள்.

கம்பன் இந்தக் காட்சியை அப்படியே சுருக்கமாகப் படம் பிடிக்கிறான், ஒரே ஒரு விருத்த அளவில்.

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க, பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே.

தாமரைப் பூ ஆசனத்தை விட்டுவிட்டு, பொன்னால் பொதியப்பட்ட மதில்களை உடைய மிதிலை நகரத்தில் வந்து பூத்தவளான மைதிலியை இராமன் தன்னுடைய அருள் ததும்பும் முகத்தால் நோக்கினான். மறைகளுக்கு உரியவளான கலைமகள் தந்தான, பெரிய முத்துகள் கோக்கப்பட்ட மாலையைக் கையில் எடுத்து, அவள் மிக்க இன்பத்தை அடைந்தவளாகி, அந்தநாளில் தன் துன்பங்களை அறிந்து உதவிய அனுமனுக்கு அளித்தாள்.

விடை கொடுத்த படலத்தில், அனுமனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் இராமனுடைய சொல்லையும் செயலையும் உத்தரகாண்டத்தில் வான்மீகி இவ்வாறு சொல்கிறார்:

ஏவம் ப்ருவாணம் ராமஸ்து ஹநூமந்தம் வராஸநாத் உத்தாய ஸஸ்வஜே ஸ்நேஹாத் வாக்யமேத துவாச ஹ

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 20 – 24)

(‘உன்பால் எனக்குள்ள பேரன்பு என்றென்றும் நிற்கட்டும். உன்பால் எனக்குள்ள விசுவாசம் எப்போதும் நிலைக்கட்டும்.

உன்மீது எனக்கள்ள பிரேமை வேறு எந்தப் பக்கத்திலும் சிதறாமல் இருக்கட்டும். தேவதைகள் எல்லாம் எனக்கு உன் காதையைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் அதனைக் கேட்டபடியே, காற்றால் சிதறுண்ணும் மேகங்களைப் போல், (உன்னைப் பிரிந்திருக்கும்) என்னுடைய ஏக்கமெல்லாம் (உன் காதையால்) சிதறுண்டு போகட்டும்’ என்றெல்லாம் வேண்டிய அனுமனுடைய பேச்சைக் கேட்ட இராமன்,)

தன் சிறந்த ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அன்புடன் அனுமனைத் தழுவினான். தழுவியவாறு இதனைச் சொன்னான் என்று (பெரியோர்) சொல்கின்றனர்.

யாரை யார் தழுவினார்கள்? இராமன், அனுமனைத் தழுவினான் என்கிறார் வால்மீகி. இந்த உத்தர காண்ட நிகழ்வை, மேற்படி ‘முத்து மாலையைத் தரும் சீதையின்’ காட்சிக்கு இரண்டு விருத்தங்களுக்கு முன்னால் அமைத்தான் கம்பன். Master stroke எந்த இடத்தில் விழுகிறது என்பதைக் கவனியுங்கள்.

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, ‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான்.

இராமன், மாருதியை மகிழ்ச்சியோடும், அருள் நிறைந்த கண்களோடும் நோக்கினான். ‘நீ செய்திருக்கும் உதவிகளை வேறு யார் செய்திருக்க முடியும்? நீ செய்திருக்கும் உதவிகளுக்குப் பிரதியாக, ஈடாக, பதிலாக, நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் எதுவும் இல்லை. அழகிய ஆபரணங்களை அணிந்த, என் போரின்போது (கூட இருந்தும், என்னுடன் நின்று போரிட்டும், என்னைச் சுமந்தும்) உதவிய பெருந்தோள்களை உடையவனே, நீ என்னைத் தழுவிக்கொள்வாயாக.

இந்த, ‘நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை,’ என்பதற்கான விளக்கத்துக்கு நாம் வான்மீகத்துக்குத்தான் போக வேண்டும். மேலே நாம் காட்டியுள்ள இருபதாம் சுலோகத்தை அடுத்து வரும் நான்கு சுலோகங்கள் இவை.

ஏவமேதத் கபிஸ்ரேஷ்ட பவிதா நாத்ர ஸம்ஷயஹ சரிஷ்யதி கதா யாவதேஷா லோகே ச மாமிகா

தாவத்தே பவிதா கீர்த்திஹி ஷரீரேங்ப்ய ஸவஸ்ததா லோகாஹி யாவத்ஸ்தாஸ்யந்தி தாவத் ஸ்தாஸ்யந்தி மே கதாஹ

ஏகைகஸ்யோபகாரஸ்ய ப்ராணான் தாஸ்யாமி தே கபே ஷேஷஸ்யேஹோபகாரணாம் பவாம் த்ரிணினோ வயம்

மதக்னே ஜீரணதாம் யாது யத் த்வயோபக்ருதம் கபே நரஹ ப்ரத்யுபகாராணாமாபத்ஸ்வாயதி பாத்ரதாம்

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 21 – 24)

வானரரில் சிறந்தவனே! நீ நினைத்தபடியே நடப்பதாக. அப்படியே நடக்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த உலகில் என் காதை வழங்கிவருமளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும். என் காதை உலகுள்ள அளவும் இருக்கும்.

நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளில் ஒன்றே ஒன்றுக்குப் பிரதியாக ஏதேனும் தரவேண்டுமாயின் என் உயிரைத்தான் தரவேண்டியதிருக்கும். அப்படியே தந்தாலும், நீ செய்திருக்கும் மற்ற உதவிகளுக்கு எதுவும் ஈடாகத் தரமுடியாத கடனாளியாகவே நான் இருப்பேன். எனவே, உனக்கு என் இதயம் என்றென்றும் கடனாளியாகவே இருக்கட்டும். உனக்கு நான் எதையும் திரும்பச் செய்யும் நிலை தோன்றாமலே போகட்டும். (ஏனெனில், என் உதவி யாருக்குத் தேவைப்படும்? துன்பத்தில் ஆழ்பவனுக்கு. நீயோ துன்பங்களே என்றென்றும் நெருங்க ஒண்ணாதவன். உனக்கு நான் எந்தக் காலத்தில், எப்போது, என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே, நான் உனக்கு என்றென்றும் கடன்பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.)

இந்தப் பின்னணியில், கம்பனுடைய வாக்குக்குத் திரும்புவோம். இப்போது அனுமனை, இராமன் தழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அனுமனுடைய தராசு என்ன சொல்லும்? ‘உன் திருமேனியைத் தழுவுகின்ற பேறு ஒன்றே நான் செய்த(தாக நீ எண்ணும் – நான் அவ்வாறு எண்ணவில்லை) எல்லா உதவிகளுக்கும் ஈடாகிவிட்டதே! அதற்கும் மேலானது அல்லவா என்னை நீ பொருந்தத் தழுவியது!’ என்றல்லவா அனுமனுடைய பார்வை பேசும்? அதனால்தான், அந்தக் கடன் என்றென்றும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதனால்தான், இராமன், ‘நீ என்னைத் தழுவிக்கொள்,’ என்றான். இப்போது இராமனுடைய கடன் சுமைதான் ஏறுகிறதே தவிர, அவன் எதையும் திரும்பச் செலுத்தவில்லை.

‘கொடுப்பதற்குப் பொருளும் இல்லை, செய்வதற்குச் செயலும் இல்லை,’ என்றான பிறகு, தன் மேனியைத் தீண்டுதல் அடியவனால் எப்படிக் கொள்ளப்படுமோ, அந்தக் கணக்கின்படி கூட, ‘கணக்கு நேராகிவிட்டது,’ என்று யாராலும், எப்போதும் சொல்ல முடியாத ஒரு சித்திரம். நேர்த்தி என்றால் அது கம்பன்.

‘பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்’

என்று இராம-அனும முதல் சந்திப்பின்போது, அனுமன் தன்னுடைய பேருருவை எடுத்து நிற்கும் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பான் கம்பன். ‘பொன் மலையாகிய மேரு மலை, தன்னுடைய தோளுக்குக் கூட உவமையாகச் சொல்லப்படப் போதுமாயிராத அளவுடைய தன் பேருருவை எடுத்து நின்றான், தருமத்தின் தனிமையைத் தீர்ப்பதற்காக வந்தவனான அனுமன்.’

‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்,’ என்ற தொடரைப் பாருங்கள். பின்பற்றுவதற்கு யாருமே இல்லாமல், தன்னந் தனியே, கேட்பாரின்றி, நாடுவாரின்றிக் கிடந்ததான தருமம் தனிமையில் வாட விடாமல், அதனைப் பின்பற்றுவார் பல்கிப் பெருகுவதற்காகத் தோன்றியவனான அனுமன். என்ன பொருத்தமான சொற்கள்!

அயோத்தியின் அரியணையைத் தாங்கியவன் அனுமன். ‘அரியணை அனுமன் தாங்க,’ என்றுதான் இராமன் திருமுடி சூடும் காட்சியைச் சொல்லும் விருத்தம் தொடங்குகிறது. இராமன் திருமஞ்சனமாட ‘நான்கு கடல்களிலிருந்தும், ஏழு வகையான நதிகளிலிருந்தும்’ நீர் கொண்டு வந்தவன் அனுமன். ‘என்னை நீ தழுவுக,’ என்று இராமன் சொன்னதும், தன் நாயகன் தனக்குச் செய்கின்ற சிறப்பின் பெருமையை நன்குணர்ந்தவனான அனுமன் என்ன செய்தான்?

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி, பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும், வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான்.

இராமன் அவ்வாறு சொன்னது, வணங்கினான். வெட்கப்பட்டான். கை கொண்டு வாயை மூடியபடி, அவ்வளவு பெரிய சேனைக்கு முன்னால், பணிவோடு, தலை கவிழந்து நின்ற ஆற்றல் மிக்கவனை தலையோடு கால் முற்றும் நோக்கி, அவனுக்கு அணிகலன்களையும், ஆடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் வழங்கினான். (பதில் உதவியாக அன்று. பரிவின் காரணமாக.)

தன்னைத் தழுவுமாறு இராமன், தன்னைச் சொன்னதே அனுமனுக்குப் பேருவகையைத் தந்தது. ஏனெனில்,

உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவு, மதிப்பு, செய்யப்பட்ட செயலின் அளவையோ, கொடுக்கப்பட்ட தொகையின் அளவையோ வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. யாருக்கு அது செய்யப்பட்டதோ, அவருடை மன நிறைவின் அளவுதான் அந்த உதவியின் அளவைத் தீர்மானிக்கிறது.

அனுமன் தோன்றுகிற முதற் காட்சியிலிருந்து, கடைசிக் காட்சி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் தோன்றுவதையும், ஒவ்வொன்றும் தோன்றத் தோன்ற வெகு எளிதாக ஒவ்வொன்றையும் அனுமன் தீர்த்து வைப்பதையும் கண்டோம். தன்னுடைய ஆற்றல் தன் தலைவனால் போற்றப்பட்ட சமயம் ஒவ்வொன்றிலும் அவன் நாணம் கொண்டு நிற்பதையே காண்கிறோம்.

 ————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –33– அங்கம் உபாங்கம் மற்றும் வேறு மந்த்ரங்கள் — —

April 17, 2023

ஸ்ரீர் உவாஸ
ஸ்ருணு வத்ஸ ஸூரேசாந வித்யா யாஸ் தாரிகா க்ருதே
அங்கோ பாங்காநி மந்த்ராணி நாநா மந்த்ர மயாநி மே –1-

குழந்தாய் -தேவர்களின் தலைவனே –
தாருகா வித்யையில் உள்ள மந்த்ரங்களையும்
அங்க உப அங்க மந்திரங்களையும் இப்போது நான் கூறக் கேட்பாயாக-

கோபநம் பஞ்ச பிந்தும் சான் ஹி ஊர்ஜம் ஐராவணம் ததா
ஒவ்ர்வம் ச பஞ்சகம் சைதே ப்ரத்யேகம் வ்யாபிநாந் விதம் -2-
ப்ராண அலோ பரிஸ்தம் து க்ருத்வைதத் பிண்ட பஞ்சகம்
ஹ்ருதாநி நேத்ர பர்யந்தம் அங்க பீஜம் இதம் ஸ்மரேத் –3-

ப்ராண -ஹ -மற்றும் அநல -ர -அக்ஷரங்கள் இரண்டும்
கோபநம் -அ-என்றும் பஞ்ச பிந்து -ஈ -என்றும் -ஊர்ஜம் -ஊ-என்றும் -ஐராவணம்-ஐ -என்றும் ஒவ்ர்வம் -ஒவ் -என்றும்
உள்ள ஐந்து எழுத்துக்களுடன் தனித்தனியாக சேர்க்கப் பட்டு
இறுதியில் அநு ஸ்வரமும் இணைக்கப் படுகிறது
இவை பிண்டங்களை உருவாக்குகின்றன –
இவையே ஐந்து அங்கங்களில் ஐந்து பீஜங்களாக -ஹ்ராம் -ஹ்ரீம் -ஹ்ரூம் -ஹ்ரைம் -ஹரவ்ம் -கொள்ளப்பட வேண்டும்
இவை ஹ்ருதயம் தொடங்கி கண் முடிய உள்ளவை ஆகும்

மேலே கூறப்பட்ட ஐந்து பீஜங்கள்
ஓம் ஹ்ராம் ஹ்ருதயாய நம
ஓம் ஹ்ரீம் சிரஸே நம
ஓம் ஹ்ரூம் சிகாயை நம
ஓம் ஹ்ரைம் கவசாயை நம
ஓம் ஹரவ்ம் நேத்ராப்யாம் நம –

ஹ்ருத் பீஜாத் பரதோ யோஜ்யம் ஞான யேதி பதம் தத
ஹ்ருதயாய நமஸ் சைவ மந்த்ர அயம் தாரண பிரத –4-
ப்ரணவாதி நம அந்த அயம் மந்த்ர ஏகாதச அக்ஷர –5-1-

இதயத்தின் பீஜமான -ஹ்ராம் -என்பதைத் தொடர்ந்து -ஞானாய ஹ்ருதயாய நம -என்பதைச் சேர்க்க வேண்டும்
இந்த மந்திரமானது தாரணை நிலையை உண்டாக்குகிறது
பிரணவம் தொடங்கி -நம -முடிய உள்ள இந்த மந்திரமானது பதினோரு அக்ஷரங்களைக் கொண்டதாக உள்ளது –

பரம் ப்ரணவ பீஜாப்யாம் ஐஸ்வர்யாய பதம் ந்யசேத் –5-2-
சிரஸே ச ததா ஸ்வாஹா ஹி ஏஷ ஏகாதஸ அக்ஷர -6-1-

பிரணவம் மற்றும் இரண்டாவது பீஜத்துக்குப் பின்னர் -ஐஸ்வர்யாய–சிரஸே–ஸ்வாஹா-என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும்
இது பதினோரு அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரீம் ஐஸ்வர்யாய சிரஸே ஸ்வாஹா –

பரம் ப்ரணவ பீஜாப்யாம் சக்தயே ச பதம் ந்யசேத் -6-2-
சிகாயை வவ்ஷத் இதி ஏவம் சைக அயம் து தச அக்ஷர –7-1-

பிரணவம் மற்றும் மூன்றாவது பீஜத்துக்குப் பின்னர் -சக்தயே சிகாயை வவ்ஷத் -என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும் –
இது பத்து அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரூம் சக்தயே சிகாயை வவ்ஷத் –

பரம் ப்ரணவ பீஜாப்யாம் பலாயேதி பதம் ந்யசேத் –7-2-
கவசாய ஹும் இதி ஏவம் மந்த்ர அயம் ச தச அக்ஷர -8-1-

பிரணவம் மற்றும் நான்காவது பீஜத்துக்குப் பின்னர் -பலாய கவசாய ஹும் என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும்
இது பத்து அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரைம் பலாய கவசாய ஹும் –

பரம் ப்ரணவ பீஜாப்யாம் தேஜஸே ச பதம் ந்யசேத் -8-2-
நேத்ராப்யாம் வவ்ஷத் இதி ஏவம் நேத்ர மந்த்ர தச அக்ஷர –9-1-

பிரணவம் மற்றும் ஐந்தாவது பீஜத்திற்குப் பின்னர் தேஜஸே -என்பதைச் சேர்த்துக் கொண்டு -நேத்ராப்யாம் வவ்ஷத் என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும் –
இது பத்து அக்ஷரங்கள் கொண்ட நேத்ர மந்திரமாகும் -ஓம் ஹ்ரவம் தேஜஸே நேத்ராப்யாம் வவ்ஷத்-

ப்ராண அநல உபரிஸ்தம் து வின்யசேத் பரமேஸ்வரம் -9-2-
தஸ்மாத் ப்ரணவ பூர்வாத் து வீர்யாய வின்யசேத்
அத்ஸ்ராய ச பட் இதி ஏவம் மந்த்ர அயம் ச தச அக்ஷர -10-

பிரணவத்தை முதலில் நிறுத்தி -அஸ்த்ராய ச பட் -என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும்
இது பத்து அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரஸ் அஸ்த்ராய ச பட்

அங்க ஷட்கம் இதம் ப்ரோக்தம் உபாங்க த்ரி யுகம் ஸ்ருணு
தாரி காந்தே க்ரமாத் தத்யாத் பூர்வ வத் ஷட் குணம் பதம் -11-
ஞானாதி தேஜஸ் பர்யந்தம் ததந்தே ச க்ரமான் ந்யசேத்
உதாராய ச ப்ருஷ்டாய பாஹுப்யாம் இதி வை பதம் –12-
ஊருப்யாம் அத ஜானுப்யாம் சரணாப்யாம் இதி க்ரமாத்
நமச்ச பரதோ யோஜ்யம் உபாங்கா நாம் அயம் விதி -12-

ஆறு உப அங்க மந்த்ரங்களைக் குறித்து நான் கூறுகிறேன் -கேள்
ஒவ்வொரு மந்திரத்தின் முதலில் ஞானம் தொடங்கி தேஜஸ் முடிய ஆறு குணங்களை சேர்க்க வேணும்
இவற்றுடன் -உதாராய -ப்ருஷ்டாய -பாஹுப்யாம் -ஊருப்யாம்-ஜானுப்யாம் மற்றும் சரணாப்யாம் ஆகியவை சேர்க்கப் பட வேண்டும்
1- ஓம் ஹ்ரீம் ஞானாயா உதாராய நம –
2- ஓம் ஹ்ரீம் சக்தாய ப்ருஷ்டாய நம
3-ஓம் ஹ்ரீம் பலாய பாஹுப்யாம் நம
4-ஓம் ஹ்ரீம் ஐஸ்வர்யாய ஊருப்யாம் நம
5- ஓம் ஹ்ரீம் வீர்யாய ஜானுப்யாம் நம
6-ஓம் ஹ்ரீம் தேஜஸாய சரணாப்யாம் நம-

இதி ஏவம் அங்க உபாங்கா நாம் மந்த்ரா த்வாதஸ கீர்த்திநா
அலங்கார அஸ்த்ர மந்த்ராம்ஸ்து ப்ருவத்யா மே நிசா மய –14-

இது வரை 11 அங்கம் மற்றும் உப அங்க மந்த்ரங்கள் குறித்துக் கூறினேன்
அடுத்து ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்துக் கூறுகிறேன் -கேள் —

கௌஸ்துபோ வ்யோம ஸம் பின்னஸ் பரமாத்மா தத பரம்
ஊர்த்வ அதஸ் அநல ஸம் பின்ன ஊர்ஜேந அபி ஸமன்விதஸ்–15-
ஸ்ருஷ்டி க்ருதஸ் ஸம்யுதோ மூர்த்நி கௌஸ்துபோ வ்யாபி ஸம் யுத
நமஸ் க்ருதிஸ் ஸ்தநஸ் பச்சாந்ததஸ் பச்சாத் ப்ரபாத்மநே -16-
கௌஸ்துபாய ததஸ் ஸ்வாஹா ப்ரணவாத் யஸ்து கௌஸ்துப
மந்த்ர ஷோடஸ வர்ண அயம் ஸர்வ கர்ம ப்ரஸாதக–17-

முதலில் கௌஸ்துபம் பற்றிக் கூறுகிறேன் -இதனால் கூறப்படுபவன் பரமாத்மா ஆவான்
அதன் மேலும் கீழும் அக்னி சமநிலையில் உள்ளது –
இது ஸ்ருஷ்டியின் பொருட்டே உள்ளது
இதன் மந்த்ரம் -ஓம் தம் ஹ்ரூர்ஹ தம் நம ப்ரபாத்மநே கௌஸ்துபாய ஸ்வாஹா என்பதாகும் –

உத்தரேத் பிரதமம் தாரம் தரேசம் தத உத்தரேத்
தததஸ் திருப்தி ஸம்ஜ்ஞம் ஸ வராஹம் தததோ ந்யசேத் –18-
மாயயா பூஷயேத் பச்சாத் வயாபிநா ச அங்க யேதத்
பஞ்சாத்மா வர்ண பிண்ட அயம் நமஸ்காரம் ததஸ் பரம் –19-
ததஸ் ஸ்தல ஜலோத்பூத பூஷிதே பதம் உத்தரேத்
வந மாலே ததஸ் ஸ்வாஹா மந்த்ரஸ் ஸர்வார்த்த ஸாதக –20-
ஏகோந விம்சத் யர்ணஸ் அயம் வந மாலா மயோ மஹான்–21-1-

முதலில் தாரகமாகிய ஓம் என்பது உள்ளது
இதனைத் தொடர்ந்து ல் என்பதும் -தொடர்ந்து வ என்பதும் உள்ளது
இதனைத் தொடர்ந்து பிந்துவும் நமஸ்காரமும் வருகின்றன
தொடர்ந்து ஸ்தல ஜலோத் பூத பூஷிதே -என்பதும்
அதன் பின்பே வந மாலே என்பதும்
இறுதியாக ஸ்வாஹா என்பதும் சேர்ந்து -சாதகனுக்கு அனைத்தும் அளிக்க வல்ல மந்த்ரம் ஆகிறது
இது -ஓம் ல்ஸ்வீம் ஸ்தல ஜலோத் பூத பூஷிதே வந மாலா ஸ்வாஹா -என்பதாகும்

378-

ஆதாயாதவ் து வைகுண்டம் ரேபம் ததுபரி ந்யசேத்
ஆனந்தே நான்விதம் பஞ்சாத் வ்யாபிநா சாங்க யேத்ததா –24-
கஸ்த கஸ்த பதம் தத்யான் நேமி த்வந்த மத பரம்
வரபாசாய வை ஸ்வாஹா ப்ரணவாத் யஸ்து பாசராட் –25
மந்த்ர பஞ்ச தசார்ண அயம் காமி நாம் க்ஷிப்ர ஸித்தி க்ருத் –26-1-

முதலில் வைகுண்ட என்பதில் உள்ள ண -மற்றும் ர -ஆகியவற்றைச் சேர்த்து- ர்ண -என்பதைக் கொள்ளவும்
அதில் பிந்துவைச் சேர்த்து -ர்ணம் -என்பதாகும்
அதன் பின்னர் கஸ்த கஸ்த என்பதைச் சேர்க்கவும்
பின் த த என்பதை இணைக்கவும்
அதனைத் தொடர்ந்து வரபாசாய ஸ்வாஹா என்பதைச் சேர்க்கவும்
14 அக்ஷரங்கள் கொண்ட இந்த பாசராட் என்னும் மந்திரமானது வெகு விரைவாகப் பலன் அளிக்கும்
இதன் முழு வடிவம் -ஓம் ர்ணம் கஸ்த கஸ்த த த வரபாசாய ஸ்வாஹா-என்பதாகும்

ப்ரண வாந்தே விராட் ஸம்ஜ்ஞம் வ்யாபி நா மூர்தி ஸம் யுதம் –26-2-
த்வயம் பிண்ட தயா யோஜ்யம் கமல மங்குசம்
வ்யாபி நா ஸம் யுதம் மூர்திநி த்ருதீயம் இதம் அக்ஷரம் –27-
பதம் நிசித கோணாய ச அங்கு சாய சாகி ப்ரியா
இதி பஞ்சத சார்ணஸ் அயமாம் குச சீக்ர ஸித்தித –28-

பிரணவத்தின் இறுதியில் விராட் மூர்த்தியைக் குறிப்பதான -ல்ரு -சேர்க்கப் பட்டு அதன் தலைப்பகுதியில் பிந்து இடப்படுகிறது –
அதன் பின்னர்- ர -என்பதும்- க்ரு- என்பதும் அதன் பின்னர் பிந்துவும் உள்ளன -இதுவே மூன்றாம் அக்ஷரமாக உள்ளது
அதன் பின்னர் -நிசித கோணாய -மற்றும் -அங்குசாய -என்பதுவும் -அதன் தலைப்பகுதியில் -ஸ்வாஹா -என்பதும் உள்ளன
இதுவே 14 அக்ஷரங்கள் கொண்ட அங்குச மந்த்ரம் ஆகும் –
இது வெகு விரைவாக பலன் அளிக்க வல்லது
இதன் முழு வடிவம் -ஓம் ல்ரும் க்ரும் நிசித கோணாய அங்குசாய ஸ்வாஹா -என்பதாகும்

அலங்காராஸ்த்ர மந்த்ராணாம் ஏதத் பஞ்சக மீரிதம்
ஆதாரஸந மந்த்ராணாம் ஸ்ருணு ரூபம் புரந்தர –29-
யத்விநா தாரிகா யாஸ்து பூரணம் நைவ ஜாயதே –30-1-

அடுத்து அலங்கார அஸ்த்ர மந்த்ரங்கள் ஐந்தும் ஒன்றும் உள்ளன
இந்திரனே ஆதார ஆஸன மந்த்ரங்களினுடைய ரூபம் குறித்து இப்போது நான் கூறக் கேட்ப்பாயாக
ஆனால் இத்துடன் தாரிகாவின் மந்த்ரங்களினுடைய ஸ்வரூபமானது பூர்ணமாக உள்ளது என்று பொருள் அல்ல –

அநல த்வயம் அத்யஸ்தஸ் ப்ராணோ மாயீ ஸ பிந்துமான் –30-2-
தத ஆதார சக்த்யை ச ப்ரணவாதிர் நமஸ் அந்திமஸ்
ஆதார சக்தி மந்த்ர அயம் விஜ்ஜே யஸ்து நவ அக்ஷர –31-

அக்னியைக் குறிக்கும் -ர -என்பதை நடுவில் கொண்டதாகவும் ப்ராணனைக் குறிக்கும் -ஈ -என்பதையைப் புள்ளியுடன் கொண்டதாகவும் –
ப்ரணவத்தைத் தொடக்கத்தில் கொண்டதாகவும் -நம என்பதை இறுதியில் கொண்டதாகவும் ஆதார சக்தி மந்த்ரம் உள்ளது –
இது ஒன்பது அக்ஷரங்கள் கொண்டதாக அறியப்படுகிறது
இந்த மந்திரத்தின் முழு வடிவம் -ஓம் ஹ்ரீம் ஆதார சக்த்யை நம -என்பதாகும் –

அநல த்வயம் அத்யஸ்தோ பிந்த்வந்த அப் யூர்ஜ ஸம் யுதஸ்
ததஸ் காலாக்நி கூர்மாய நம அந்தஸ் ப்ரணவாதிகஸ் –32
மந்த்ர காலாக்நி கூர்மஸ்ய விஜ்ஜேயஸ் அயம் தசாஷர –33-1-

இரண்டு அக்னிகளை -அதாவது இரண்டு ர என்னும் அக்ஷரம் -உள்ளடக்கியதும்
ப்ராணனுடன் கூடியதும் -ஹ
இறுதியில் உ என்பது பிந்துவுடன் -புள்ளியுடன் -சேர்க்கப்பட்டதும்
தொடர்ந்து நான்காவதாக காலாக்நி கூர்ம என்பதுடன்
நம இறுதியில் கொண்டதும்
மற்றும் ப்ரணவத்துடன் கூடியதும் -பத்து அக்ஷரங்களைக் கொண்டதாக இந்த மந்த்ரம் அறியப்படுகிறது
இந்த மந்திரத்தின் முழு வடிவம்–ஓம் ஹ்ரூம் காலாக்நி கூர்மாய நம-

கோபநே நாங்கிதம் ப்ராணம் மூர்திநி ச வ்யாபிநா யுதம் -33-2-
ப்ரணவாந்தே ஸமுத்த்ருத்ய ஹ்ய நந்தாய நமஸ் தநஸ்
அஷ்டாக்ஷரோ ஹ்யம் மந்த்ரோ நாக ராஜஸ்ய கீர்த்திதஸ் –34

அடுத்து ஹ என்னும் பிராணனை பிந்துவுடன் கூடியதும்
பிரணவம் மற்றும் நம என்பதை தொடக்கத்திலும் முடிவிலும் கொண்டதும்
அநந்தாய -என்பதைக் கொண்டதும்
எட்டு அக்ஷரம் கொண்டதும்
நாக ராஜனான ஆதி சேஷனைக் கொண்டதுமாக இந்த மந்த்ரம் உள்ளது
இந்த மந்திரத்தின் முழு வடிவம்-ஓம் ஹாம் அநந்தாய நம –

கமலம் ச அக்னி ரூபம் ச ப்ரதாநம் புருஷேஸ்வரம்
பிண்டீ க்ருத்ய சதுஷ்கம் து கோபந வ்யாபி ஸம் யுதம் –35-

வஸூ தாயை நம பச்சாத் ப்ரணவாதிர் மநுஸ் த்வயம்
விஸ்வம் பராய விஜ்ஜேய ஆதார பரி கல்ப்யதே –36-

தாமரை மற்றும் அக்னி ஆகியவற்றைக் குறிக்கும் அக்ஷரங்கள் ஒன்றாக இணைந்தும்
புருஷேஸ்வரம் என்பதைக் குறிக்கும் அக்ஷரம் சேர்ந்தும்
இத்துடன் புள்ளியும் சேர்ந்தும்
என நான்கு இணைப்புகள் இந்த மந்திரத்தின் தொடக்கத்தில் உள்ளன
அதன் பின்னர் வஸூ தாயை என்பதும்
தொடக்கத்தில் பிரணவமும் உள்ளது
இது -விஸ்வம்பரத்தின் -விஸ்வம் என்ற உலகில் -ஆதாரமாக அறியப்படுகிறது –
இந்த மந்த்ரம் ஓம் ஷம்லாம் வஸூ தாயை நம -என்பதாகும்

அம்ருதம் வருணம் ச அர்ண த்வயம் பிண்டீ க்ருதம் ஸஹ
கோபந வ்யாபி ஸம் யுதம் ப்ரண வான்தே சமுச்சரேத் –37-

ஷீரார்ணவாய ச நம ஸ அயம் மந்த்ரோ நவ அக்ஷர –38-1-

அம்ருதத்தைக் குறிக்கும் ஸ -மற்றும் வருணனைக் குறிக்கும்வ -மற்றும் புள்ளியுடன் கூடி
தொடக்கத்தில் ப்ரணவம்
அடுத்து -ஷீரார்ணவாய – நம-ஆகியவை சேர்ந்து ஒன்பது அக்ஷரங்கள் கொண்ட இந்த மந்த்ரம்
ஓம் ஸ்வாம் ஷீரார்ணவாய ச நம-

பவித்ரம் ஸோ தய வ்யாபி ஸம் யுதம் ப்ரண வாந்தகம் –38-2-

ஆதார பத்மாய நம பத்மஸ் யாயம் தச அக்ஷர
இத்தம் ஆதார ஷட் கஸ்ய மந்த்ர ஷட்கம் ப்ரகீர்த்தி தம் –39-

பவித்ரத்தைக் குறித்தும் அக்ஷரமான -ப –என்பதுடன் உ என்பதும் -இணைந்து -புள்ளி யையும் சேர்த்து
தொடக்கத்தில் ப்ரணவமும் தொடர்ந்து ஆதார பத்மாய நம சேர்ந்து பத்து அக்ஷர மந்த்ரம்
ஓம் பும் ஆதார பத்மாய நம -என்பதாகும்

இப்படி ஆறு ஆதார மந்த்ரங்கள் தொகுப்பு உள்ளது –

—-384

ஸோதயம் ஸாம்ருதம் ஹ்ரஸ்வம் ப்ரணவோபரி வின்யஸேந்
அவ்யக்த பத்மாய நமஸ் ஸ மந்த்ரஸ் அவ்யக்த பத்மகஸ் –45-

ப்ரணவத்தைத் தொடர்ந்து ஹ்ரஸ்வம் என்னும் -ப -உதயம் என்னும் உ -அம்ருதம் என்னும் ஸ மற்றும் பிந்து -புள்ளி -ஆகியவை அமைக்கப்பட்டு
தொடர்ந்து அவ்யக்த பத்மாய -என்பது வைக்கப் படுகிறது –
இம்மந்த்ரமானது அவ்யக்த பத்மகம் எனப்படும் -ஓம் ப்ஸூம் அவ்யக்த பத்மாய நம –

ஸூர்யா இந்து அக்னி பதேப்யஸ்து ப்ரத்யேகம் மண்டலாய ஸ
நம அந்தே ப்ரண வச்சாதவ் தே மந்த்ராய மண்டல த்ரயே –46

ஸூர்யன் இந்து மற்றும் அக்னி ஆகியவற்றின் மண்டல மந்த்ரங்கள் அடுத்து உள்ளன
இவற்றின் இறுதியில் நம என்பதும் -தொடக்கத்தில் ப்ரணவமும் என்பதாக இம்மூன்று மந்த்ரங்கள் உள்ளன
ஓம் ஸூர்ய மண்டலாய நம
ஓம் இந்து மண்டலாய நம
ஓம் அக்னி மண்டலாய நம –ஆகியவை –

ப்ரத்யகாத்ம பரா மர்சி ஸப்த ஸோம அத சர்கவான்
சித் பாச நாக்ய மந்த்ரஸ் அயம் த்ர்ய அக்ஷரஸ் பரிகீர்த்தித –47-

ப்ரத்யகாத்மாவை -சரீரத்தில் உள்ள ஆத்மாவை -குறிக்கும் சப்தமாக -அஹம் -என்பது உள்ளது
இதனைத் தொடர்ந்து சோமனைக் குறிக்கும் ஸ உள்ளது
இப்படியாக மூன்று அக்ஷரங்களைக் கொண்டதாக சித் பாசன மந்த்ரம் உள்ளது
அஹம் ஸ என்பதே அந்த மந்த்ரம் ஆகும்

இதி ஆச நாக்ய மந்த்ராணாம் கதிதா த்வேக விம்சதி
இதி அயம் பீட பூஜாந்தோ மந்த்ர ப்ராணோ மயேரிதி–48-

இப்படியாக ஆஸன மந்த்ரங்கள் -21 வகைகள் -அதாவது
16 ஆதா ரேச மந்த்ரங்கள்
1-அவ்யக்த பத்ம மந்த்ரம்
3 மண்டல மந்த்ரங்கள்
1-சித் பாசன மந்த்ரம் –என்பதாக 21- மந்த்ரங்கள் குறித்து உரைத்தேன் –

ரஹஸ்யம் பரமம் க்ருஹ்யம் இதா நீம் பரமம் ஸ்ருணு
க்ஷேத்ர ஸாத்யம் மந்த்ர சயம் விக்ந நிர் மதந ஷமம் –49-

இவற்றின் பின்னர் இந்த மந்திரங்களிலும் பரம ரஹஸ்யமான மந்த்ரத்தை நான் கூறுகிறேன் கேள்
ஷேத்ரபாலர்கள் குறித்த இந்த மந்த்ரங்கள் அனைத்து தடைகளையும் அழிக்க வல்லவை யாகும்

கருடம் காலமநலம் பிண்டீ க்ருத்யாங்க யேத் தத
சவ்யாபி நாதி தேவேந க்ஷேத்ர பாலயா வை நம –50-
ப்ரணவாத்யோ முநஸ் சாயம் ஷேத்ரஸ்ய நவ அக்ஷர –51-1-

கருடன் என்பதைக் குறிக்கும் -ஷ
காலத்தைக் குறிக்கும் -ம்
அக்னியைக் குறிக்கும் -ர
இவற்றைத் தொடர்ந்து எங்கும் வியாபிக்கும் தேவர்களைக் குறிக்கும் புள்ளி
இதன் பின்னர் ஷேத்ர பாலாய வை நம
தொடக்கத்தில் பிரணவம்
ஓம் ஷ்ரமாம் க்ஷேத்ர பாலாய வை நம -முழு மந்த்ரம் ஒன்பது எழுத்துக்கள் கொண்டது –

அநு தாரா ஸ்ரியை பச்சாந் நமஸ் த்வாதவ் தாரக –51-2-
ஷடக்ஷரஸ் ஸ்ரியோ மந்த்ரஸ் சண்டாதீந பராஞ்ஸ்ருணு –52-1-

தொடக்கத்தில் தாரகமான ஓம்
அதைத் தொடர்ந்து தாரகமான ஸ்ரீ
அதனைத் தொடர்ந்து ஸ்ரியை நம
இப்படியாக ஆறு அக்ஷரங்கள் கொண்ட மந்த்ரம் உள்ளது
ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம

இதனைத் தொடர்ந்து சண்டாதி மந்த்ரத்தைக் கேட்ப்பாயாக

ஸ சஞ்சல அநலஸ் தாரஸ் கேவலஸ் த்வாதிநோ பவேத் –52-2-

சண்டாய நம இத்யேவ ஸப்த வர்ணோ மநூத்தம –53-1-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து சஞ்சலத்தைக் குறிக்கும் ச என்பது
அக்னியைக் குறிக்கும் ர என்பது உடன் இணைந்து
சண்டாய நம என்பது -ஏழு எழுத்து மந்த்ரம் -ஓம் ஸ்ரோம் சண்டாய நம

ஸ பவித்ர அநலஸ் தார கேவலஸ் த்வாதிதோ பவேத் –53-2-

ப்ரசண்டாய நமோ மந்த்ர ப்ரசண்ட அயம் சதுர் யுக –54-1-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து தூய்மையைக் குறிக்கும் ப என்பதும்
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
ப்ரசண்டாய -ஓம் ப்ரோம் ப்ரசண்டாய நம -நான்கு யுகங்களிலும் எனது தீவிடமான செயல்பாடுகளைக் குறிக்கும்

ஸ ஸாஸ்வத அநலஸ் தார கேவலஸ் த்வாதிதோ பவேத்–54-2-

ஜயாய நம இத்யேவம் ஜயஸ்ய முநி வர்ணக –55-3-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து சாஸ்வதத்தைக் குறிக்கும் ஜ என்பதும்
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
ஜெயத்தை குறிக்கும் மந்த்ரம் -ஓம் ஜ்ரோம் ஜயாய நம -என்று முனிவர்கள் வர்ணிக்கிறார்கள் –

வராஹ அநல ஸம் யுக்தஸ் தார சுத்தஸ் ததாதிக –55-2-

விஜயாய நம ஸோயம் விஜயஸ்ய சதுர் யுக –56-1-

வராஹம் மற்றும் அக்னி ஆகியவற்றைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
அதன் பின்னர் விஜயாய நம -ஓம் வ்ரோம் விஜயாய நம –விஜயத்தைக் குறிக்கும் மந்த்ரம்

கோவிந்த ஸ அநலோ மாயீ வ்யாபிமாந் ப்ரணவாந்தர –56-2-

கங்காயை நம இதி ஏவம் கங்காயா முனி வர்ணிக –57-2-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து கோவிந்தம் என்பதைக் குறிக்கும் க என்பதும்
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
தொடர்ந்து ஈ என்பது அமைந்து
ஓம் க்ரீம் கங்காயை நம -கங்கையைக் குறிப்பதாக முனிவர்கள் வர்ணிக்கிறார்கள் –

ஸமாய ஸ அநல ஸூஷ்மோ வ்யாபிமான் ப்ரணவாந்தர –57-2-

யமுனாய நமச்சாயம் யாமுனேயச் சதுர் யுக –58-1-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து மாயா என்பதைக் குறிக்கும் ய என்பது
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
ஓம் ய்ரீம் யமுனாயை நம-யமுனையைக் குறிப்பதாக முனிவர்கள் வர்ணிக்கிறார்கள் –

சங்கரஸ் ஸ அநலஸ் ச ஊர்ஜோ வ்யாபிமாந் ப்ரண வாந்தக ஸ் –58-2-

ததச்ச சங்க நிதயே நம சோயம் நவாக்ஷர –59-1-

ஓம் என்பதைத் தொடர்ந்து சங்கா என்பதைக் குறிக்கும் ச என்பது
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
தொடர்ந்து உ என்பது நெடிலாக அமைந்து
தொடர்ந்து அ என்பதும் புள்ளியும் சேர்ந்து
அதன் பின்னர் சங்க நிதயே நம என்பது ஒன்பது எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக
ஓம் ஸ்ரூம் சங்க நிதயே நம

பவித்ரஸ் ஸ அநலஸ் ச ஊர்ஜோ வ்யாபிமாந் ப்ரண வாந்தக ஸ் –58-2-

ததச்ச பத்ம நிதயே நம சோயம் நவாக்ஷர –59-2-
க்ஷேத்ரே சாத் பத்ம நியந்தம் மந்த்ராணாம் தசகம் த்விதம் –60-

ஓம் என்பதைத் தொடர்ந்து தூய்மையான அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
தொடர்ந்து உ என்பது நெடிலாக அமைந்து
அதன் பின்னர் பத்ம நிதயே நம என்பது ஒன்பது எழுத்துக்கு கொண்ட மந்திரமாக உள்ளது
ஓம் ப்ரூம் பத்ம நிதயே நம

இப்படியாக க்ஷேத்ரம் –
ஸ்லோகம் -49 தொடங்கி –
பத்ம நிதயே-ஸ்லோகம் -60 -வரை 10 மந்த்ரங்கள் கூறப்பட்டன

—–

கணே ஸாத்யாதி ஸித்தாந்த மத மந்த்ர கணம் ஸ்ருணு
ஊர்ஜ வ்யாபி ஸமா யுக்தோ கோவிந்த ப்ரணவாந்தக–61

அடுத்து கணேச மந்த்ரம் போன்ற ஸித்தாந்த மந்த்ரங்களுடைய தொகுப்பைக் கூறக் கேட்ப்பாயாக
ப்ரணவத்தைத் தொடர்ந்து கோவிந்த என்பதைக் குறிக்கும் க என்பதுடன்
ஊ என்பதையும் இணைந்து புள்ளி

ததோ கோவிந்த வைகுண்டவ் பவித்ர ஸ்ரக்தரஸ் ததா
ஜகத் யோநி கதஸ் சாங்கோ நர காலோ விஸர்க்க வான் –62-

அதன் பின்னர் கோவிந்த என்பதைக் குறிக்கும் க
வைகுண்ட என்பதைக் குறிக்கும் ண
பவித்ர என்பதைக் குறிக்கும் ப
ஸ்ரக்தா என்பதைக் குறிக்கும் த
இறுதியாக ஜகத் யோநி என்பதை விளக்கும் ஏ என்பதுடன் சேர்ந்த ய
தொடர்ந்து நர என்பதும்
காலத்தைக் குறிக்கும் விசர்க்கமும்

நவ அஷரோ ஹி அயம் மந்த்ரோ காண பத்ய ப்ரகீர்த்தித
ஷோடா ஸம் யோஜ்ய கோவிந்தம் யுகமாத்யைர் கோப நாதி பிர் –63-

அங்க ல்ருப்திர முஷ்ய ஸ்யாந் நம ஸ்வாஹாதி ஸம் யுதா -64-1-

இப்படியாக ஒன்பது எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக காண பத்ய என்பதும் உள்ளது
ஓம் கூம் கண பத்யே நம
மேலும்
ஓம் என்பது கோவிந்த என்னும் க என்பதுடன் பல வகைகளிலிம் இணைந்து
இறுதியாக ஹ்ருதயம் சிரஸ் சிகை ஆகியவற்றுடன் ஸ்வாஹ என்பதுடன் சேர்கிறது
இவை ஓம் காம் ஹ்ருதயாய நம –
ஓம் கீம் சிரஸே ஸ்வாஹா –
ஓம் க்ரூம் சிகாயை வஷட் -என்பது போன்றவை ஆகும்

ரேப ஸங்காதி தேவாட்யம் ஸோமம் வ்யாபி ஸமந்விதம் –65-2
சதுர்தம் ஸம்ஸ்மரேத் பீஜம் தத் இதம் பல ஸூதந
வைராஜ அநல சங்காட்யம் கோபநம் வ்யாபி ஸம் யுதம் –66-
ஸோம வர்ணம் ஸ்மரேச் சக்ர பஞ்சமம் பரம அத்புதம்
அப்ரமேயாதி தேவாதி யாவத் கருட வர்ணகம் –67-
யதா பாடம் சமுச்சார்ய வாகீஸ் வர்யை ததோ நம
ஏக ஷஷ்ட் யர்ணகோ மந்த்ரோ வாகீஸ் வர்யா அயம் ஸ்ம்ருத –68-

அதன் பின்னர் ர என்பதுடன் ய என்பதும்
ஆதி தேவனுடைய ஆகாய வர்ணமாகிய ஸ என்பது இணைகிறது
இத்துடன் பிந்துவும் இணைந்து மூன்றாவது பீஜம் உண்டாகிறது
இது -ஸ்ரயாம் -என்று ஆகிறது
பல ஸூதநா
அடுத்தது நான்காவது பீஜம் இவ்வாறு உண்டாகிறது
வைராஜம் மற்றும் அக்னியைக் குறிக்கும் ர உடன் ய -கோப நம் என்பதன் ஆதாரமாகிய பிந்து
சோம்னைக் குறிக்கும் வர்ணம் ஆகியவை சேர்ந்து
ஸ்த்ரயாம் -என்பது உண்டாகிறது
பின்னர் அ என்பது தொடங்கி ஷ என்பது முடிய உள்ள ஐந்தாவது பீஜம் உண்டாகிறது
இப்படியாக உள்ள அக்ஷரங்களுடன் அநு ஸ்வார உச்சாரணம் செய்யப்பட்டு
வாகீஸ் வர்யை நம -என்னும் மந்த்ரம் கூறப்படுகிறது
இப்படியாக 61 அக்ஷரங்களுடன் கூடிய வளாக வாகீஸ்வரி உள்ளாள் என்று அறிய வேண்டும்

ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஸ்ரயாம் ஸ்தரயாம் –ஆகிய ஐந்து பீஜங்கள் உள்ளன
இவற்றைத் தொடர்ந்து க முதல் ம முடிய உள்ள 25 ஸ்பர்ச எழுத்துக்கள் உள்ளன
அதன் பின்னர் அ தொடங்கி விஸர்க்கம் முடிய உள்ள 16 ஸ்வர எழுத்துக்கள் உள்ளன
அதன் பின்னர் ய தொடங்கி ஷ முடிய உள்ள 9 எழுத்துக்கள் உள்ளன
அதன் பின்னர் வாகீஸ் வர்யை நம என்பதில் 6 எழுத்துக்கள் உள்ளன
இப்படியாக -61- எழுத்துக்கள் -5+25+16+9+6அக்ஷரங்களுடன் கூடியவளாக
வாகீஸ்வரி உள்ளாள் என்று அறிய வேண்டும் –

குர்யாச் சதுர்த பீஜேந கோபநாதி விபேதிநா
அந்தர் ஜாதி யுதாம் ஸம்ய கங்க க்ல்ருப்திம் விசஷண–69-

கோப நாதி விபந்நஸ்ய பீஜஸ் ஆதி அந்தர் யோந்யே ஸேத்
பிரணவம் ச நமஸ் சைவ ததோ ஜாதிம் பிரகல்பயேத் –70-

அதைத் தொடர்ந்து நான்காக உள்ள ஸ்ரயாம் -என்னும் பீஜத்தின் பின்னர்
ஹ்ருதய -என்னும் அமைப்பு உள்ளது
கோபநம் என்பதற்கு ஆதாரமாகத் தனித்தனியே பிரிந்துள்ள -ஸ்ரயாம் -என்னும் பீஜத்தின் தொடக்கத்தில் பிரணவம் வைக்கப்பட்டு
இறுதியில் நம என்பதும் உள்ளது
ஒத்து ஓம் ஸ்ரயாம் ஹ்ருதயாய நம –என்னும் ஹ்ருதய மந்த்ரமாகிறது
இதன் பின்னர் சிரஸ் முதலான மந்த்ரங்கள் உள்ளன-

ப்ரணவ த்ரி தயம் வ்யாபி ஸம்யுத சோத யச்ச க
குரவே அத நம ஸ அயம் ப்ரதிதோ குரு பூஜநே –71-

அடுத்து மூன்று முறை பிரணவம் -எங்கும் வியாபித்து உள்ள பிந்து என்னும் புள்ளி –
க வர்ணத்தின் உகாரம் சேர்ந்து குரவே நம -என்பது உள்ளது
இது குருவைப் பூஜிக்கும் மந்த்ரம் ஆகிறது -ஓம் ஓம் ஓம் கும் குரவே நம

ப்ரணவ த்ரிதயஸ் யாந்தே பவித்ரோ வ்யாபி ஸம்யுத
பரம குரவே நம பிரதிதஸ்து குரோர் குரு –72-

அடுத்து மூன்று முறை பிரணவம்
எங்கும் வியாபித்துள்ள பிந்து -புள்ளி
பவித்ரத்தைக் குறிக்கும் பம் -என்பதன் பின்னர்
பரம குரவே நம -என்பது அமைகிறது
இது குருவின் குருவைப் பூஜிப்பதாகும் -ஓம் ஓம் ஓம் பம் பரம குரவே நம –

ப்ரணவ த்ரித யஸ் யாந்தே வ்யாப்ய ஆநந்த யுதஸ்து
பரமேஷ்டி மேநே அத ச நமோ மந்த்ரோ குரு குரோர் குரு –73-

அடுத்து மூன்று முறை பிரணவம் –
எங்கும் வியாபித்து உள்ள பிந்து புள்ளி
ஆனந்தத்தின் ஆகாரத்தைக் குறிக்கும் ப என்பதுடன்
பின்னர் பரமேஷ்டிநே நம -என்பது அமைகிறது
இதுவே குருவின் குருவைப் பூஜிப்பதாகும்
ஓம் ஓம் ஓம் பாம் பரமேஷ்டிநே நம

தார பஞ்சக மாஹ்ருதாம் வ்யோம ப்ராணோ பரி ந்யசேத்
கால அனலவ் து தததஸ் ஸர்வ லோகேஸ்வரோ பரி –74-
யதா க்ரம உதிதை வர்ணை பிண்டம் க்ருத்வா தத ஸ்வதா
பித்ருப்ய அத நம ஸ அயம் பித்ரு சங்கஸ்ய மந்த்ர ராட் –75-

அடுத்து
ஐந்து முறை பிரணவம்
தொடர்ந்து ஹ
அதன் முன்னாக ட
இவை இரண்டும் வ்யோம ஸூன்யத்தைக் குறிக்கும் பிந்துவுடன் அமைகிறது
அதனைத் தொடர்ந்து காலம் மற்றும் அக்னியைக் குறிக்கும் ம மற்றும் ர அமைகிறது
இது ஸர்வேஸ்வரனைக் குறிக்கும் உ என்பதுடனும்
பிந்துவுடனும் உள்ளது
இந்த வரிசையில் உத்பத்தியாகும் எழுத்துக்களின் பின்னே ஸ்வதா எண்பதுடனும்
தொடர்ந்து பித்ருப்ய நம -என்பது அமைகிறது
இது பித்ரு மந்திரங்களில் உயர்ந்ததாகும்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ட் ஹ்ம் ரூம் ஸ்வதா பித்ருப்ய நம –

ஷட் தாரா ஆதி தேவ அத வ்யோம வான் கேவல அத ஸ
ராமவான் தம நச்சாத சித்தேப்ய அத ததோ நாம –76-

மந்த்ர அயம் இதி ஸித்தா நாம் பகவத் பாவி தாத்ம நாம்
க்ஷேத்ரே ஸாத்யாதி சித்தாந்தான் வித்ந நிர்மத ந ஷமான் –77

அடுத்து ஆறு முறை பிரணவம்
அதன் பின்னர் எங்கும் வியாபித்துள்ள பிந்து புள்ளி –
ஆதிதேவனைக் குறிக்கும் ஆ என்பதுடன்
பிந்து இணைந்து
ஸித்தேப்யோ நம
இது பகவானை ஆத்மாவாகக் கொண்டு பூஜிப்பதாகும்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஆம் ஆதி ஸித்தேப்யோ நம

ப்ராண காலாதி தேவைச்ச வ்யாபி நாபி ச பிண்டகம்
அக்நேய நம இதி ஏவம் யமாய நம இதி அபி –71–

ப்ராணனைக் குறிக்கும் -ஹ
காலத்தைக் குறிக்கும் -ர
ஆதிதேவ ஆகாரத்தைக் குறிப்பதாக புள்ளி பிண்டகம் ஆகியவற்றுடன்
நம என்பது இணைந்து
ஓம் ஹ்ராம் அக்நேய நம மற்றும்
ஓம் ஹ்மாம் யமாய நம –ஆகிய மந்த்ரங்கள் உள்ளன –

நரஸ் ஸ பகவான் வ்யாபீ பிண்டோ நிர்ருதயே நம
யாது தாநேச மந்த்ரஸ் அயம் ஜலசஸ் யாவதாரய

நர என்பதைக் குறிக்கும் ந
பகவானைக் குறிக்கும் ல்ரு
தொடர்ந்து புள்ளி
தொடர்ந்து நிர் ருதயே நம –என்பது அமைகிறது
இது
ஓம் ந்ல்ரும் நிர் ருதயே நம –என்று ஜல அதிபதியான வருண மந்திரமாகும் –

ப்ராணம் வருணம் ஆனந்தம் வ்யாபிநம் பிண்டயேத் புத
வருணாய நம பச்சாத் வருணா அயம் மநூத்தம –73-

ப்ராணனைக் குறிக்கும் ஹ
வருணனைக் குறிக்கும் வ
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி
இதன் பின்னர் வருணாய நம -மிகவும் உத்தமமான மந்திரமாகும் -ஓம் ஹ்வாம் வருணாய நம

ப்ராணம் ஸூஷ்மம் தத் ஆனந்தம் வ்யாபிநம் பிண்டயேத் புத
வாயவே நம இதி ஏவம் வாயவீயோ மநூத்தம –74-

ப்ராணனைக் குறிக்கும் ஹ
ஸூஷ்மத்தைக் குறிக்கும் ய
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி -வாயவே நம -ஓம் ஹ்யாம் வாயவே நம

கர்மாம்சு வருண ஆனந்தான் வ்யாபிநா ஸஹ பிண்டயேத்
ஸோமாய நம இதி ஏவம் ஸும்யோ மநு ருதா ஹ்ருத –75

கர்மத்தின் அம்சமான த
வருணனைக் குறிக்கும் வ
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி -ஸோமாய நம -கொண்டாடத்தக்க மந்த்ரம் -ஓம் த்வாம் ஸோமாய நம

ஸூர்யம் ஊர்ஜம் ததா சக்ரிணம் பிண்ட யேத் க்ரமாத்
ஈஸாநாய நம பச்சாத் ஈஸா நஸ்ய மநூத்தமம் –76-

ஸூர்யனைக் குறிக்கும் ஹ
மேற்பாகத்தைக் குறிக்கும் உ
சக்ரியைக் குறிக்கும் ச
தொடர்ந்து புள்ளி -பின்னர் ஈஸா நாய நம -உத்தமமான மந்த்ரம் -ஓம் ஹ்ஸூம் ஈஸா நாய நம

ப்ராணம் வைகுண்டம் ஆனந்தம் வ்யாபி நா பிண்டயேத் க்ரமாத்
அநந்தாய நம பச்சாத் நாக ராஜம் அநுஸ் த்வயம் –77

ப்ராணனைக் குறிக்கும் ஹ
வைகுண்டத்தைக் குறிக்கும் ண
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி -அநந்தாய நம –நாகராஜனுக்கு அமைந்த உத்தமமான மந்த்ரம் -ஓம் ஹ்ணாம் அநந்தாய நம

ப்ராணம் கர்வம் தத் ஆனந்தம் வ்யாபி நா பிண்டயேத் க்ரமாத்
ப்ரஹ்மணே நம இதி ஏவம் ப்ரஹ்மணோ மநுத்தமம் -78

ப்ராணனைக் குறிக்கும் ஹ
கர்வத்தைக் குறிக்கும் க
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி ப்ரஹ்மணே நம -என்பது ப்ரஹ்மத்தின் பொருட்டு அமைந்த
உத்தமமான மந்திரமாகும் -ஓம் ஹ்காம் ப்ரஹ்மணே நம

ஸர்வேஷாம் ப்ரணவ பூர்வம் ஆயுதா நாமதோ ஸ்ருணு
அநலம் ஜந்ம ஹந்தாரம் ப்ரதாநம் அநலோர்ஜகவ் –79
சர்கேண பிண்டயேத் ஸம்ஜ்ஞானம் நமஸ் குசில மந்த்ராட் –80-1

அக்னியைக் குறிக்கும் ர
பிறவிகளைப் போக்குதலைக் குறிக்கும் ஐ
பிரதானத்தைக் குறிக்கும் ம
அக்னியைக் குறிக்கும் ர
மேலே எழும்புதலைக் குறிக்கும் ஊ
முதலிலே பிரணவம்
அதன் பின்னர் குசிலாய நம
இப்படியாக குசில மந்த்ர ராஜ மந்த்ரம் -ஓம் ஜ்ரூம் குசிலாய நம

ஊர்ஜம் விஹாய தத் ஸ்தாநே மாயயா பரி பூஷிதம் –80-2-
ததேவ பிண்டம் ஸம்ஜ்ஞா ச நம ஸக்தி மநுஸ் த்வயம் –81-1-

மேலே கூறப்பட்ட மந்திரத்தில் தொடக்கத்தில் உள்ள ஊ என்ற இடத்தில் மாயயைக் குறிக்கும் ஈ அமைகிறது
அதன் பின்னர் வருகின்ற நம என்பதுடன்
சக்தி மந்த்ரம் உள்ளது -ஓம் ஜ்ரீம் சக்த்யே நம

அகண்ட விக்ரமம் காலம் லோகேஸம் பரமேஸ்வரன் -81-2-
பிண்டீ க்ருத்ய தத ஸம்ஞ்ஞா நமோ தண்டம் அநுஸ் த்வயம் -82-1-

பூர்ணமான வீரத்தைக் குறிக்கும் ட
காலத்தைக் குறிக்கும் ம
லோகத்துக்கு ஈசனாக உள்ளதைக் குறிக்கும் ஊ
பரமேஸ்வரனைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் தண்டாய நம என்பது இணைந்து ஓம் ட்மூ தண்டாய நம -என்னும் தண்ட மந்த்ரம் உண்டாகிறது

விஸ்வாப் யாயகரம் காலம் க்லேசம் பரமேஸ்வரம் –82-2
பிண்டீ க்ருத்ய ததஸ் ஸம்ஜ்ஞா நமஸ் கட்கம் அநுஸ் த்வயம் –83-1-

விஸ்வம் உண்டானதைக் குறிக்கும் ல
காலத்தைக் குறிக்கும் ம
லோகத்துக்கு ஈசனாக உள்ளதைக் குறிக்கும் ஊ
பரமேஸ்வரனைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் கட்காய நம என்பது இணைந்து ஓம் ட்ரூம் கட்காய நம -என்னும் வாளைக் மந்த்ரம் உண்டாகிறது

சந்த்ரீ சாந்த ஆதி தேவவ் ச ஸ்ருஷ்ட்டி க்ருத பிண்டிதா இமே –83-2-
பாசாய நம இதி ஏவம் பாச மந்த்ர அயம் அத்புத –84-2-

சந்த்ரியைக் குறிக்கும் ட
சாந்தத்தைக் குறிக்கும் ச
ஆதி தேவனைக் குறிக்கும் ஆ
ஸ்ருஷ்ட்டியைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் ஓம் பாசாய நம இணைந்து ஓம் ட் சா பாசாய நம -என்னும் பாசத்தைக் குறித்த அற்புதமான மந்த்ரம் உண்டாகிறது

அஜிதோ வருண ஆநந்தவ ஸ்ருஷ்ட்டி க்ருத் பிண்டிதா இமே –84-2-
த்வஜாய நம இதி ஏவம் த்வஜ மந்த்ர உதீரதே –85-1–

வேறே யாராலும் வெல்ல இயலாததைக் குறிக்கும் -ஜ
வருணனைக் குறிக்கும் வ
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
ஸ்ருஷ்ட்டியைக் குறிக்கும் விசர்க்கம்
இத்துடன் த்வஜாய நம -என்பது இணைந்து -ஓம் ஜ்வா த்வஜாய நம -என்னும் வெற்றிக்கொடியைக் குறித்த மந்த்ரம்

பரமாத்மா அநல உத்தாமாந் பிண்டித ஸ்ருஷ்டி க்ருதான் –85-2-
முஸலாய நம பச்சான் மௌஸல அயம் மநூத்தம –86-1-

பரமாத்மாவைக் குறிக்கும் ஹ
அக்னியைக்குறிக்கும் ர
தொடர்ந்து ஊ
ஸ்ருஷ்ட்டியைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் முஸலாய நம இணைந்து -ஓம் ஹ்ரு முஸலாய நம என்னும் மந்த்ரம்

அநலம் ஜன்ம ஹந்தாரம் உதயம் ஸ்ருஷ்டி க்ருதம் –86-2
பிண்டீ க்ருத்ய ததஸ் ஸம்ஜ்ஞா நம சூலம் அநுஸ் த்வயம் –87-1-

அக்னியைக் குறிக்கும் ர
ஜென்மத்தை வெட்டுவதைக் குறிக்கும் ஜ
தொடர்ந்து ஊ-விசர்க்கம் -சூலாய நம இணைந்து ஓம் ர்ஜூ சூலாய நம -என்னும் உத்தமமான மந்த்ரம்

கராலம் அநலா ரூட மோத நம் ஸ்ருஷ்ட்டி க்ருதம் –87-2-
பிண்டீ க்ருத்ய தத ஸம்ஜ்ஞா நமஸ் ஸீரம் அநுஸ் த்வயம் –88-1-

அக்னியைக் குறிக்கும் ர -தொடர்ந்து க -ஊ-விஸர்க்கம் -ஸி ராய நம சேர்ந்து
ஓம் க்ரோ ஸி ராய நம -என்னும் உத்தமமான மந்த்ரம் உண்டாகிறது

வருணம் ச நரம் சைவ ஸ்ருஷ்டி க்ருதம் –88-2-
பிண்டீ க்ருத்ய தத் ஸம்ஜ்ஞா நம பத்மம் அநு ஸ்தவம் –89-1–

வருணனைக் குறிக்கும் வ -நரனைக் குறிக்கும் ந -ஆ -விஸர்க்கம் -பத்மாய நம இணைந்து
ஓம் ந்வா பத்மாய நம -உத்தமமான மந்த்ரம் உண்டாகிறது

ஸர்வேஷாம் ப்ரணவ பூர்வோ விஷ்வக் சேந மநும் ஸ்ருணு –99-2-

அநல ப்ராண லோகேஸாந் வ்யாபிநா பிண்டியேத் க்ரமான்
வருணம் பூதாம் சைவ வ்யாபிநா பிண்டியேத் க்ரமான்–100-

பிண்டி அயம் ஜ்ஞாநத பஸ்ஸாத் விஷ்வக் ஸேநஸ்ய மந்த்ர ராட்
ப்ரணவாதி ஸ்த்வயம் மந்த்ர ஸர்வார்த்த க்ருது தீரித–101

இதுவரை ப்ரணவத்தை முதலில் கொண்ட மந்த்ரங்களைக் கூறினேன்
இனி விஷ்வக் சேனர் குறித்த மந்த்ரங்களைக் கேட்ப்பாயாக
அக்னியைக் குறிக்கும் -ர –ப்ரணவத்தைக் குறிக்கும் ஹ -தொடர்ந்து உ -புள்ளி –
அடுத்து வருணனைக் குறிக்கும் வ பூதரமாகிய ஒவ் -புள்ளி -ஜ்ஞானதாய நம என்பது
மந்திரங்களில் அரசனான விஷ்வக் சேன மந்திரமாகும்
இந்த மந்த்ரம் அனைத்துப் பொருள்களையும் அளிக்க வல்லதாகும்
இதன் முழு வடிவம் -ஓம் ர்ஹும் வவ்ம் ஜ்ஞானதாய நம -என்பதாகும்

ஊர்ஜ ஹீநம் தும் யத் பூர்வம் தேந ஆனந்தாதி யோகிநா
அங்க க்லுப்தி அமுஷ்ய ஸ்யாஜ்ஜாதி முத்ரா ஸமந்விதா –102-

இதற்கு முன்பாக ஹ்ரூம் என்பது பற்றி நான் உரைத்தேன்
அதில் உள்ள ஊ என்பது ஹ என்பதுடன் இணைந்து ஆ -ஆனந்தத்தைக் குறிக்கும்
இது விஷ்வக் சேனருடைய அங்க ந்யாஸ மந்திரமாகும்
இதன் முழு வடிவம் -ஓம் ஹ்ராம் ஹ்ருதாய நம -என்பதாகும்

ஸோமம் வருணம் ஈகாரம் வ்யாபிநா பிண்ட யேத் க்ரமாத்
ஸூரப்யை நம இதி ஏவம் தார பூர்வோ மனுஸ் த்வயம் –103
ஸூ ரப்யாஸ் கதிதஸ் ஸர்வ போக ஸம் பூர்ணார்த்தக –104-1

சோமனைக் குறிக்கும் ஸ -வருணனைக் குறிக்கும் வ -தொடர்ந்து ஈ -புள்ளி -தொடக்கத்தில் ஓம் -இறுதியில் ஸூரப்யை நம என்பது ஸூரபி மந்திரமாகும்
இதன் முழு வடிவம் -ஓம் ஹ்ராம் ஸூ ரப்யை நம
இந்த ஸூரபி மந்த்ரம் அனைத்து போகங்களையும் பூர்ணமாக அளிக்கும் –

ப்ரணவ த்வித யஸ் யாந்தே தாரிகா த்வயம் உத்தரேத் –104-2
தத பரம தாமா ச அவஸ்திதே மத் அநுக்ரஹா
அபியோ கோத்யதே ச இஹ ததைவா வதரேதி ச –105
இஹம் அபிமத ஸப்தம் ச ஸித்தேதி இதி ச த்ரயம்
ததோ மந்த்ர சரீரே ச தாரஸ் தரா நமோ நம -106-
பஞ்ச ஸத் வாரிம் சதர்ணோ மந்த்ர ஆவாஹ நார்த்தக –107-1-

இரண்டு பிராணவங்கள் தொடர்ந்து இரண்டு தாரக மந்த்ரங்கள் -அதனைத் தொடர்ந்து
பரம தாமா ச அவஸ்திதே மத் அநுக்ரஹ–அபியோ கோத்யதே ச –இஹ அவதரேஹ அபிமத ஸித்ததே மந்த்ர சரீரே –என்பதும்
அதனைத் தொடர்ந்து ப்ரணவமும் -அதன் பின்னர் ஹ்ரீம் நமோ நம என்பதும் கூறப்படுகிறது
இது 45 அக்ஷரங்கள் கொண்ட ஆவாஹந மந்திரமாகும்
இதன் முழு வடிவம்
ஓம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் பரம தாமா ச அவஸ்திதே மத் அநுக்ரஹ–அபியோ கோத்யதே ச –இஹ அவதரேஹ அபிமத ஸித்ததே மந்த்ர சரீரே –ஹ்ரீம் நமோ நம -என்பதாகும்

ப்ரணவ தாரிகா ப்ராணஸ்த்ரய ஸவ்யாபி நஸ் ததஸ்–107-2-
தஸ் த்ரச்ச தாரிகா பச்சாத் இதம் ஸப்தம் த்ரி உச்ச ரேத்
ஸ்ருணு வஹ்னி ஜாயா ச போக தானம் அநுஸ் த்வயம் –108-

ஓம் என்னும் பிரணவம் -அதனைத் தொடர்ந்து ஹ்ரீம் என்னும் தாரிக மந்த்ரம் -தொடர்ந்து பிராணனைக் குறிக்கும் ஹ ஹ ஹ -இவற்றில் புள்ளிகள்
தொடர்ந்து மீண்டும் மூன்று தாரிக மந்த்ரம் ஹ்ரீம் -தொடர்ந்து ஹிதம் ஹிதம் ஹிதம் -தொடர்ந்து அர்க்யம் க்ரஹாண -அமைகிறது
இது அர்க்க்ய மந்திரமாகும் -இதன் முழு வடிவம்
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹம் ஹம் ஹம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹிதம் ஹிதம் ஹிதம் அர்க்யம் க்ரஹாண ஸ்வாஹா -என்பதாகும்

ஓங்காரம் உத்தரேத் பூர்வம் விஷ்ணு வ்யோம அந்விதம் ததஸ்
தாரிகாம் உத்தரேத் பச்சாத் அபயோ விஷ்ணும் ததாவிதம்–109-
ததோ வ்யோம அந்விதம் ப்ராணம் ஸோம நாம ஸமந்விதம்
பரே ச பரமேச ச ப்ரஸீத ப்ரணவம் ததஸ் –110-
தாரிகா ச நமஸ் அந்தே ப்ரஸாத நமஸ் த்வயம் –111-1

முதல் ஓம் -தொடர்ந்து வ்யோமம் ஆகாசம் சூன்யம் ஆகிய இரண்டும் இணைந்த விஷ்ணுவைக் குறிக்கும் ஈ
அதனைத் தொடர்ந்து தாரிகையைக் குறிக்கும் ஹ்ரீம் -அதன் பின்னர் மீண்டும் விஷ்ணுவைக் குறிக்கும் ஈ
அதன் பின்னர் பிராணனைக் குறிக்கும் ஹம் -சோம்னிக் குறிக்கும் ஸ அதன் பின்னர் பரே பரமேச ப்ரஸீத
அதன் பின்னர் ஓம் -ஹ்ரீம் -நம -சிறந்த ப்ரஸாத மந்திரமாகும்
இதன் முழு வடிவம்
ஓம் ஈம் ஹ்ரீம் ஈம் ஹம்ஸ பரே பரமேச ப்ரஸீத ஓம் ஹ்ரீம் நம -என்பதாகும் –

ப்ரணவ தாரிகா சைவ ததோ பகவத் இதி ச –111-2-
மந்த்ர மூர்த்தே அத ஸ்வ பதம் ஸமா சாதய தத் த்வயம்
க்ஷமஸ்வ இதி த்விருச்சார்ய தாரஸ் தாரா நமோ நம –112-

முதலில் ப்ரவணமாகிய ஓம் -பின் தாரிகையைக் குறிக்கும் ஹ்ரீம் -அதன் பின்னர்
பகவதி மந்த்ர மூர்த்தே ஸ்வ பதம் ஸமா சாதய ஸமா சாதய-அதன் பின்னர்
இரண்டு முறை க்ஷமஸ்வ -ஓம் -ஹ்ரீம் நமோ நம -இது விஸர்ஜ மந்திரமாகும்
இதன் முழு வடிவம்
ஓம் ஹ்ரீம் பகவதி மந்த்ர மூர்த்தே ஸ்வ பதம் ஸமா சாதய ஸமா சாதய க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஓம் ஹ்ரீம் நமோ நம –என்பதாகும்

வை சர்ஜ நம நுஸ் ஸ அயம் இதி ஏதே மந்த்ர நாயகா
கதிதா ஸூர சார்தூல ஸர்வ பாப மல அபஹா –113-

இந்திரனே இப்படியாக இந்த மந்த்ரங்களுடைய நாயகியாக உள்ள நான் அனைத்து மந்திரங்களையும் கூறினேன்
இவை அனைத்து தோஷங்களையும் பாபங்களையும் அபஹரிக்கும்

அபக்தாநாம் ச யே ந ஏவ ப்ரதேயோ க்ரூர கர்மணாம்
நாஸ்திகா நாம் அஸாதுநாம் தூர்தா நாம் வஞ்ச ஜூஷாம் –114

குரூரமான கர்மம் கொண்டவர்கள் -நாஸ்திகர்கள் -ஸாதுக்கள் அல்லாதவர்கள் -மற்றவர்களை தூஷிப்பவர்கள்
வஞ்சகர்கள் ஆகிய பலரும் பக்தர்கள் அல்லாதவர்களே ஆவர் -அவர்களுக்கு இதுவரை கூறியதை உபதேசம் செய்யக்கூடாது

பக்தாநாம் ஆஸ்திகா நாம் ச ஸ்ரத்தா ஸம்ய சேவிநாம்
மதீய க்ரம ஸக்தா நாம் ஸம்ஸ்க்ருதா நாம் விசேஷத –115
தத்வத ச உப ஸந்தா நாம் த்ருட ஸ்ரத்தா அவலம்பி நாம்
வைஷ்ணவா நாம் இதம் வாஸ்யம் அவாஸ்யம் இதரேஷு –116-

பக்தர்களாக உள்ளவர்கள் ஆஸ்திகர்களாகவும் வேதங்களை சிரத்தையுடன் கைக் கொள்ளுபவர்களாயும் வணங்கியவர்களாயும் உள்ளனர்
அவர்களுக்கு என் மீது பக்தியானது நிரந்தரமாக உள்ளது -அவர்கள் எப்போதும் என்னை சரியான முறையில் ஆராதிக்கும் விஷயங்களை அறிந்தபடி உள்ளனர்
சாஸ்திரங்களில் கூறப்பட்ட விதங்களில் எனது திருவடிகளை ஆடுகிறார்கள்
உறுதியும் ஸ்ரத்தையும் சேர்ந்துள்ள அவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று கூறப்படுகிறார்கள்
மற்றவர்கள் அவ்விதம் கூறப்படுகிறவர்கள் அல்லர்

அந்யதா வக்தி யோ மோஹாத் லோபாத் காமாத் அதாபி வா
அஞ்ஞாநாத் பால பாவாத் சா ஸ யாதி நரகான் பஹுன் –117–

மற்றவர்கள் மயக்கம் சுய நலம் காமம் அஞ்ஞானம் போன்ற பல தோஷங்களை அடைந்தவர்களாக
பலவிதமான நரகங்களிலும் புகுகிறார்கள்

தஸ்மாதா லஷ்யா வை ஸர்வம் குண ஜாதம் யதோதிதம்
ப்ரப்ரூயாத் உப சன்னாயா தர்மேண ந்யாய தஸ்ததா –118-

மற்ற சிஷ்யர்களுடைய குணங்களைக் குறித்து நான் கூறுகிறேன்
அவர்களுக்கு ஞானத்தின் மீது விருப்பம் -சரணம் புகும் பக்தி தர்ம நியாய வழியில் நிற்பது போன்றவை உள்ளன

ப்ரப்ரூ யாத்யோ ஹி அதர்மேண யோ வாதர்மேண ப்ருச்சதி
தாவுபவ் நரகம் கோரம் ருச்சத காலம க்ஷயம் –119-

சிலர் அதர்ம மந்திரங்களையும் அல்லது அதர்ம மார்க்கங்களையும் கைக் கொள்ளக் கூடும்
அவர்கள் காலம் முடிந்தவுடன் நரகம் புகுகிறார்கள்

ப்ருதிவீம் ரத்ன ஸம் பூர்ணம் தத்யாத் யத்யபி வாஸவ
நைவ தேயம் ஹி அபக்தாய நாப ரீக்ஷித சீலேந –120-

இந்திரனே இந்த உலகத்தில் உள்ள பக்தி அற்றவர்களுக்கு அவர்களைச் சோதிக்காமல் இந்த மந்த்ரங்களை உபதேசம் செய்தல் கூடாது

இதி மே பவதோ பக்திர் மயி சக்ர மஹீ யஸீ
தத்த்வதச் சோப ஸத் ரஸ்ய மயேஹ ப்ரீய மாணாய –121-

அங்க உப அங்காதி மந்த்ராணாம் மந்த்ர கோச ப்ரகாசித
முத்ரா கோசம் இதாநீம் த்வம் கதந்த்யா மே நிஸாமய –122-

இந்திரனே இதுவரை உனக்கு நான் மிகுந்த பக்தி தத்வம் உண்மையான ரூபம் உண்மையான அறிவதில் உள்ள ஆர்வத்தின் தன்மை
என்னைச் சரணம் புகுதல் போன்ற பலவற்றையும் கூறினேன் -அடுத்து அங்க உப அங்கத்துடன் கூடிய மந்த்ரங்களைக் கூற உள்ளேன்

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

நான்கு யுகங்கள் —

April 10, 2023

புராணங்களின் படி யுகங்கள் நான்கு.
கிருத யுகம்,
திரேதா யுகம்,
துவாபர யுகம்
மற்றும் கலியுகம்.
இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு யுகத்திலும் வாழ்பவர்களின் தோற்றமும்,குண நலன்களும் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

கிருத யுகம் – அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரிாக 9 அடி உயரமும், 1 லட்சம் ஆண்டுகள் வாழலாம்–இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

திரேதா யுகம் – நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள்.–மனிதர்கள் சராசரியாக 8 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10000 ஆண்டுகள் வாழலாம்.-இராமர் திரேதா யுகத்தில் திரு அவதரித்தார்

துவாபர யுகம் – சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள்.
மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் உள்ளவர்களாகவும், 1000 ஆண்டுகள் வாழலாம்.
கிருட்டிணர் மற்றும் பலராமர் ஆகியோர் துவாபர யுகத்தில்  திரு அவதரித்தார்கள் -.

கலியுகம் – நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள்.
மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 100 ஆண்டுகள் வாழலாம்.

இந்த யுகத்தில் மக்கள் அவரவர்தன் சுயநலத்திற்காக அதர்மவழியில் சென்று பாவங்களை செய்வதால்
பகை குணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர்.
இதன் காரணமாக திருமால் கல்கி அவதாரம் எடுத்து மனிதர்களை கொன்று குவித்து மீண்டும் இந்த உலகில்
சத்தியத்தினை நிலைநாட்டும் யுகமென்பதால் இது சத்திய யுகம் என்று கூறப்படுகின்றது.’
ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன.
இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது.
இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்று மடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன.
கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

பகுப்பு முறை
கால பிரிவு அளவு முறை
15 நுண் வினாடிகள் 1 காட்டை (3.2 வினாடிகள்)
30 காட்டை 1 கலை (96 வினாடிகள்)
30 கலை 1 முகூா்த்தம் (48 நிமிடங்கள்)
30 முகூா்த்தம் 1 அகோரத்திரம் ( நாள் )
15 அகோரத்திரம் 1 பட்சம்
2 பட்சம் 1 மாதம்
6 மாதம் 1 அயனம்
2 அயனம் 1 ஆண்டு

இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும்,

பெரும் பிரிவு
  1. கிருத யுகம் – 17,28,000 ஆண்டுகள்
  2. திரேதா யுகம் – 12,96,000 ஆண்டுகள்
  3. துவாபர யுகம் – 8,64,000 ஆண்டுகள்
  4. கலியுகம் – 4,32,000 ஆண்டுகள் [ கலியுகம் 3102 BCE இல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]

இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம்.
12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம்.
14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம்.
இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.

கல்பங்கள்
  1. வாமதேவ கல்பம்
  2. சுவேத வராக கல்பம்
  3. நீல லோகித கல்பம்
  4. ரந்தர கல்பம்
  5. ரெளரவ கல்பம்
  6. தேவ கல்பம்
  7. விரக கிருட்டிண கல்பம்
  8. கந்தற்ப கல்பம்
  9. சத்திய கல்பம்
  10. ஈசான கல்பம்
  11. தமம் கல்பம்
  12. சாரசுவத கல்பம்
  13. உதான கல்பம்
  14. காருட கல்பம்
  15. கெளரம கல்பம்
  16. நரசிம்ம கல்பம்
  17. சமான கல்பம்
  18. ஆக்நேய கல்பம்
  19. சோம கல்பம்
  20. மானவ கல்பம்
  21. தட்புருச கல்பம்
  22. வைகுண்ட கல்பம்
  23. லெச்சுமி கல்பம்
  24. சாவித்ரி கல்பம்
  25. கோர கல்பம்
  26. வராக கல்பம்
  27. வைராச கல்பம்
  28. கெளரி கல்பம்
  29. மகோத்வர கல்பம்
  30. பிதிா் கல்பம்

தற்போது நடந்து கொண்டிருப்பது சுவேத வராக கல்பம் ஆகும்.

மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம்.
இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர்.
மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன.
இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்
சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.
ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும்.
பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது.
எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும்.
எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.
பிரம்மனின் கல்ப காலத்தில் 14 மனுவந்தரங்கள் அடங்கும்.
ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள்.
(இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே.
ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார்.
இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும்.
இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”.
இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும்.
அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள்.
இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும்.
அதுவே பிரம்மனின் இரவு ஆகும்.
பிரம்மனின் ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள்
மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.

ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர் யுகங்கள்).
இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.
இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும்.
பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள்.
ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார்.
தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள்.
அதாவது தற்போது பிரம்மனின் வயது 51.
பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர, இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கி யுள்ளது.

அத்ரி ஜமதக்னி பங்க்திரத வ ஸூ நந்த ஸூ நுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ –
வ்யாசாதி வத் ஆவேசமோ –
மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ –
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ
என்று சங்கிப்பர்கள்
தத்தாரியன் பரசுராமன்-பிராமணர் -கிருத யுகம்
சக்கரவர்த்தி திருமகன் -ஷத்ரியர் -த்ரேதா யுகம்
ஸ்ரீ கிருஷ்ணன் -வைஸ்ய-த்வாபர யுகம்
இவர் -கலி யுகம் -தமிழ் வேதத்தை வெளியிட்டு அருள
நித்யரோ முக்தரோ ச்வேததீப வாசிகளோ
சம்சாரி – ஸூ க்ருத பலமாக திருந்தினவரோ
நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே -என்பர் சம்ப்ரதாயத்தில்
திரு வநந்த ஆழ்வான் -முன்பே திருப் புளிய மரமாக
மாறன்
சடகோபன்
வகுளாபரணர்
பராங்குசர்
நம்மாழ்வார் -நம் சடகோபனை பாடினாயோ என்று விஞ்சிய ஆதாரத்தால் நம் பெருமாள் கேட்டதால் –
பதினாறு கலைகளும் நிரம்பிய பூர்ண சந்தரன் போலே
செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்
அசித்தாகிய சரீரத்தில் ஆத்மா சம்பந்தித்தால் –
அதை சார்ந்த சுக துக்கங்களை அனுபவித்துக் கொண்டு
அதனையே ஆஸ்ரயித்து இருக்கும்
சிறியதன் வயிற்றில் பெரியது பிறந்தால்
ஆதாமில் ஞானம் உண்டானால்
அணு ரூபம் ஆத்மாவில் விபு ரூபம் ஞானம்
அகார வாச்யமான பர ப்ரஹ்மத்தை அனுபவித்து அதன் பக்கலிலே பற்றும்-என்றுமாம்

முந்திய யுகங்களில் த்யான யாக அர்ச்சனங்கள் போலே
ஸ்தோத்ர மாத்ரத்தில் கலி யுகம் என்பதால்
மதுரகவி ஆழ்வார் கைத் தாளம் எடுத்து பண் இசையோடு
தேவில் சிறந்த திருமாலுக்குத் தக்க தெய்வக் கவிஞர்
பாவில் சிறந்த திருவாய் மொழி பகர் பண்டிதர்

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

ஸ்ரீ திருவடி மஹாத்ம்யம்– –

March 14, 2023

ஸ்ரீ ஹநுமான் காயத்ரி

ஓம் அஞ்சனி சுதாயா வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ ஹநுமன் ப்ரசோதயாத்

ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் தத்புருஷாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்தோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ: ஹநுமத் ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்!

மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி.

————

தர்ப்போதேக்ரத சேந்த்ரியா ந நமநோ நக்தஞ்சரா திஷ்டிதே
தேஹேஸ்மின் பவ ஸிந்து நா பரிகதே தீ நாம் தசமாஸ்திதஸ்
அத்யத்வே ஹனுமத் ஸமேந குருணா சம்போதிதார்த்தஸ்
ஸூ தீ லங்காருத்த விதேஹ ராஜ தநயா ந்யாயேநலா லப்யதே —சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்
முதலியாண்டான் வார்த்தை -சிறை போல் சம்சாரம் -ஆச்சார்யனே திருவடி

அந்தத் திருவடியின் தன்மையும் ஆச்சார்ய லக்ஷணமும்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது,
பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் –
இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

ஐந்து–நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள்
ஐந்து(பஞ்ச)பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்,…
ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி,…..
ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாய வழியாக, ஸ்ரீராமனுக்காக,
ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு,…
ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பை அயல் தேசமான இலங்கையில் வைத்தான்,

அஞ்சிலே ஒன்று (*வாயு) பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்(*நீர்) தாவி
அஞ்சிலே ஒன்றாறாக(*ஆகாயம்) ஆரியர்க்காக(*இராமனுக்காக) ஏகி
அஞ்சிலே ஒன்று (*நிலம்) பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்(*இலங்கையில்)
அஞ்சிலே ஒன்று(*நெருப்பை) வைத்தான்.அவன் எம்மை அளித்துக் காப்பான்

அத்தகைய அனுமன், நமக்கு வேண்டியன எல்லாம் அளித்து காப்பான்-

பஞ்சபூத தத்துவம்
சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்திரன் என்பதால் காற்றை வென்றவர்
சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவர்.
பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர்
வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர்
வானத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர்.
இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை.
ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார்.

உள்ளுறை பொருள் –

முதல் அஞ்சு –பஞ்ச ஸம்ஸ்காரம்
இரண்டாம் அஞ்சு —அர்த்த பஞ்சகம்
மூன்றாம் அஞ்சு —உபாய பஞ்சகம்
நான்காம் அஞ்சு —பரத்வாதி பஞ்சகம்
ஐந்தாம் அஞ்சு —லோக பஞ்சகம்

பஞ்ச சம்ஸ்காரம் முதல் அஞ்சு -வித்யை- தாயாகப் பெற்ற -அன்று நான் பிறந்திலேன் -இவ்வாத்ம வஸ்துவை ஜனிப்பித்து

தாய் தந்தையர் உடலை மட்டுமே பிறப்பிக்கின்றனர்
ஆச்சார்யர் ஞானத்தினால் ஆத்மாவைப் பிறப்பிக்கின்றார் -அழுக்கை நீக்கி -ஸ்வரூப ஆவிர்பாவம் அடைவிக்கின்றார்

தாப ஸம்ஸ்காரத்துக்குப் பிறகே மந்த்ர ஸம்ஸ்காரத்துக்கு ப்ரஸக்தி யாதலால்
முதலான அந்த ஸம்ஸ்காரத்தையே கொள்ளுதல் தகும் –

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்

திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிரதராய் ஆவீர் -என்று அனுக்ரஹத்து அருளுவார் அன்றோ

வித்யைத் தாயாகப் பெற்று , பாலும் அமுதமுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த
தஞ்சமாகிய தந்தை மற்று ஒருவருக்கு பேச்சு உட் படாமல் விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை
நாலு இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்ர பந்ததோடே வரிப்பிக்க ,
பரம் புருடன் கைக் கொண்ட பின்
சதுர்த்தியுள் புக்கு இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து ஜன்ம பூமியை விட்டகன்று
சூழ் விசும்பிற் படியே உடன் சென்று குடைந்து நீராடி
வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப் பொடி பீதக ஆடை பல் கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்துப்
பல்லாண்டு இசைத்துக் கவரி செய்ய நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள
வைகுந்தம் புக்கிருந்து வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு
கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து
பரத அக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே
குருமா மணியாய் அணையும் வஸ்துவுக்கு மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று —

வித்யையைத் தாயாகப் பெற்று-
அதாவது —
சஹி வித்யாதஸ் தம் ஜனயிதி -ஆபஸ்தம்ப சூத்ரம்-16–17-என்கிற படியே
ஆசார்யன் திரு மந்திர முகேன ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது இவ் ஆத்மா சத்பாவம் ஆகையாலே ,
வித்தையை மாதாவாகக் கொண்டு இவ் ஆத்ம வஸ்துவை ஜனிப்பித்து-

பாலும் அமுதுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த –
அதாவது
தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திருநாமம் -பெரிய திருமொழி -6-10-6–என்கிற
போக்ய பதார்த்தமான திரு மந்த்ரத்தாலே
திரு மகள் போல் வளர்த்த-
அதாவது —
திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிற படி –
அனந்யார்ஹ சேஷத் வாதிகளாலே-(ஆறு குண சாம்யம் மேலே வரும்) ஸ்ரீ லஷ்மி சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த-

தஞ்சமாகிய தந்தை-
அதாவது
தேஹோத்பாதகனாய் -ச பித்ரா ச பரித்யக்த ஸூ ரைஸ்ச சமஹர்ஷபி த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய
தமேவ சரணம் கத –ஸூந்தர -38-32– -இத்யாதி படியே
ஆபத் தசைகளில் கை விடும் பிதாவை போல் அன்றிக்கே –
பூதாநாம் யோவ்யய பிதா -சஹஸ்ர நாமம் -என்கிறபடி
சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்க –
பவ மோஷண யோஸ் த்வ யைவ ஜந்து க்ரியதே–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -88- -என்னும் படி
சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் பிதாவைப் போலும் அன்றிக்கே –
ஸ்வரூப உத்பாதகனாய் (திரோதானமாய் இருந்ததை தெளிய விட்ட – தீர்க்க பந்து -தயாளுவான)-
ஒரு தசையிலும் கை விடாதே -ஹிதைஷியாய் –
உஜ்ஜீவன ஏக பரனாய்க் கொண்டு மோஷைக ஏக ஹேதுவாய் இருக்கையாலே
ஆபத் ரஷகனான ஆச்சர்யனான பிதா-

மற்று ஒருவருக்குப் பேச்சுப் படாமல் –
அதாவது –
மற்று ஒருவருக்கு என்னை பேசல் ஒட்டேன்–பெரியாழ்வார் -3-4-5- -என்றும் ,
மானிடவர்க்கு பேச்சுப் படில் –நாச்சியார் -1-5-என்கிற
அந்ய சேஷத்வ பிரசங்கம் வாராதபடி —

விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை -அதாவது –
பதிம் விஸ்வஸ்ய –புருஷ ஸூக்தம் -என்றும் ,
கௌசல்யா லோக பர்த்தாரம் –ஸூந்தர -38-55–என்று
பதி சப்ததாலும் -பர்த்ரு சப்தத்தாலும் (ரஷிக்கிற படியால் பதி– தரிக்கிற படியால் பர்த்தா)-
சர்வ லோக நாயகராகச் சொல்லப் படுகிற
மணவாளரை –
பணவாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை –நாச்சியார் -10-6-
என்கிற அழகிய மணவாளரை

நால் இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்திர பந்தத்தோடு வரிப்பிக்க –
அதாவது –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்திரம் போலே -(முமுஷுப்படி )
எட்டு அஷரமாய் – மூன்று பதமாய் ,ஈஸ்வர சம்பந்த பிரகாசமான திருமந்தரம் ஆகிற
மங்கள ஸூத்தர சம்பந்தத்தோடே
பாணிம் க்ருஹ்ணீஷ் வ பாணி நா -பால –73-26-என்கிறபடி வரிக்கும் படி பண்ண –

பரம் புருடன் கைக் கொண்ட பின்-அதாவது –
பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ்வார் -5-4-2–என்கிறபடியே
பரம புருஷனான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் –

சதுர்தியுள் புக்கு –
அதாவது –
விவாஹா அநந்தரம் சேஷ ஹோம பர்யந்தமான சதுர் திவசத்திலும் அகலுதலும் அணுகலும் அற்று,
அனந்யார்ஹ சேஷத்வ அனுகுணமாக பரிமாற்றத்துக்கு அர்ஹம் என்னும் அளவைப்
பிரகாசித்துக் கொண்டு இருக்குமோபாதி,பிரணவோக்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தில்
கண் அழிவு அற அங்கீகரிக்கையாலும் , தத் அனுகுணமாக கிட்டிப் பரிமாறப் பெறாமையாலும் ,
அகலுதலும் அணுகலும் அற்று கைங்கர்ய பிரார்த்தனையோடு செல்லும் (பிரார்த்தனா சதுர்த்தி) சரம சதுர்த்தியிலே உள் புக்கு –
(நான்கு பதிகம் கழித்து -2-9-எனக்கே ஆக -பிரார்த்தனை –
புகழும் என்கோ -3-3- நான்கு திருவாய் மொழி -சதுர்த்தி தானாகே அமைந்ததே)
நான்கு நாள் கழித்தே சேஷ ஹோமம் நடக்கும்
முதல் நாள் சோமன் -அடுத்து கந்தர்வர் -அடுத்து அக்னிக்கும் -அடுத்து இவனுக்கு
நாராயண ஆய -நடுவிலும் நான்கு அக்ஷரங்கள் உண்டே )

இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து –
அதாவது –
தம்பதிகள் இருவரும் -ஏக சய்யைலே வர்த்திக்கச் செய்தே -அந்யோன்ய ஸ்பர்ச யோக்யதை
இல்லாதபடி -இடையீடரான சோமாதிகள் நடுவே கிடக்கும் நாள் போலே –
சேஷத்வ ஞானமும் சேஷ வ்ருத்தி பிரார்த்தனையும் உண்டாகையாலே ,
இரண்டு தலைக்கும் அண்ணிமை உண்டாய் இருக்கவும் -சேர்ந்து பரிமாற ஒண்ணாதபடி –
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு-திருவாய் -5-1-5- -என்கிறபடியே
அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் –
நாள் கடலை கழிமின் -திருவாய் -1-6-7- – என்கிற படியே கழித்து –

ஜன்ம பூமியை விட்டு அகன்று –
அதாவது –
முற்றிலும் பைம் கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற
செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-என்கிறபடியே
ஒருவராலும் விட அரிதான ஜன்ம பூமியான சம்சார விபூதியை முன்பு
ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூடப் புரிந்து பாராமல் விட்டு நீங்கி ..
அன்றிக்கே-
(ஜென்ம பூமி ஞானம் பெற்ற பூமி என்ற நிர்வாகம்-மிகவும் சேரும் )
அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த –64-என்னும் படி கிடந்த தனக்கு
ஆசார்யன் திரு மந்தரத்தால் உண்டான ஜன்மம் பெற்றது இங்கே ஆகையாலே ஜன்ம பூமியான இவ் விபூதியை
பகவத் அனுபவ ப்ராவண்யத்தாலே – முற்றிலும் பைம் கிளியே -இத்யாதி படியே –
முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூட விட்டகன்று என்னவுமாம் ..
பிறந்தகம் விட்டு புக்ககத்துக்கு போகிறதாக சொல்லுகிற இந்த ரூபகத்துக்கு
இது மிகவும் சேரும் இறே-

சூழ் விசும்பிற் படியே உடன் சென்று-
அதாவது –
சூழ் விசும்பு-10-9-1–என்கிற திரு வாய் மொழியில் சொல்லுகிறபடியே
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் அடைய சத்கரிக்க –
அங்கு அவனோடும் உடன் சென்று -நாச்சியார் -6-10-என்கிறபடி-
நயாமி-ஸ்ரீ வராஹ சரமம்–என்கிற நாயகன் முன்பே போக -பின்னே போய் –

குடைந்து நீராடி- –
அதாவது –
குள்ளக் குளிர குடைந்து நீராடி -திருப்பாவை -13-என்கிறபடியே பர்த்ரு கிருஹத்துக்கு
போகிற பெண் அவ்வூர் எல்லையிலே சென்றவாறே அவர்கள் குளிப்பாட்ட குளிக்குமா போலே
அம்ருத வாஹிநியான விரஜையிலே -இப்பால் உள்ள அழுக்கு அறும்படி நீராடி –

வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்து –
அதாவது –
குளித்தேறின பெண்ணைப் பர்த்ரு பந்துக்களான ஸ்திரீகள் வந்து அலங்கரிக்குமா போலே –
வியன் துழாய் கற்பு என்று சூடும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் ,
ஆரார் அயிர் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து–சிறிய மடல் -10-என்றும் ,
மெய் திமிரு நானப் பொடி –பெரியாழ்வார் -1-4-9–என்றும் ,
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை-திருப்பல்லாண்டு -9-என்றும் ,
பல் கலனும் யாம் அணிவோம் -திருப்பாவை -27-என்கிறபடியே
அலங்கார உபகரணங்களான திவ்ய மால்ய -திவ்ய அஞ்சன -திவ்ய சூர்ண –திவ்ய வஸ்த்ர -திவ்ய ஆபரணங்களை –
தம் பஞ்ச சதான் யப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா –சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் சூரண ஹஸ்தா
-சதம் வாசோ ஹஸ்தா -சதம் பூஷண ஹஸ்தா –கௌஷீதகி-என்கிறபடியே ஏந்திக் கொண்டு –
மானேய் நோக்கியரான-5-8-1– திவ்ய அப்சரஸ் ஸூக்கள் எதிரே வந்து –
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி- கௌஷீதகி – என்கிறபடியே
போக்த்ரு பூத ஈஸ்வர போக்யமாம் படி அலங்கரித்து-

பல்லாண்டு இசைத்து கவரி செய்ய –
அதாவது –
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையரே –திருவாய் -7-6-11–என்கிறபடியே
இவ் விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற
திரள நின்று மங்களாசாசனம் பண்ணி சாமரம் பணிமாற-

நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள –
அதாவது –
அலங்குருதையாய் உபலால நத்தோடே செல்லுகிற பெண் -பர்த்ரு கிருஹத்தை அணுகச் சென்றவாறே –
அங்குள்ள ஸ்திரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே –
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் –10-9-10–என்கிறபடியே
மங்கள அவஹமான பூர்ண கும்பாதிகளைத் தரித்துக் கொண்டு ,
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள-10-9-10- என்கிறபடியே
நித்ய யவ்வன ஸ்வபாவைகளான வேறு சில திவ்ய அப்சரஸ்ஸூகள் எதிர் கொள்ள –

வைகுந்தம் புக்கிருந்து –
அதாவது –
உபலால நத்தொடு சென்ற பெண் பர்த்ரு க்ரஹத்திலே புகுருமா போலே –
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார் -நாச்சியார் -3-10–என்கிறபடியே –
ஸ்ரீய பதியானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை ப்ராபித்து -அவனோடு கூடி இருந்து –

வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு-
அதாவது –
பர்த்ரு க்ரஹத்திலே பெண் வந்த பின்பு , தம்பதிகளும்
மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே —
அடியார்கள் குழாங்களும்-2-3-10- அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே –
அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேன் -2-3-9–என்று பெரும் களிச்சியாக பெரும் முழு மிடறு செய்து –
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே –6-6-11–என்கிறபடியே –
நித்ய சூரிகள் புஜிக்கிற போகத்தை –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ராஹ்மணா விபிச்சதா –தைத்ரியம் –என்கிறபடியே புஜித்து –

கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து –
அதாவது –
பர்த்ரு சம்ச்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறுமா போலே –
கோப்புடைய சீரிய சிங்காசாசனம்-திருப்பாவை -23-என்றும்
கோட்டுக் கால் கட்டில் –திருப்பாவை 19-என்றும் சொல்லுகிற படி
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு சர்வ ஆஸ்ரயமான திவ்ய பர்வங்கத்திலே –
தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி -கௌஷீதகி -1-5-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு ஏறி –

பாரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே –
அதாவது –
தம் சமுதாப்ய காகுஸ்தஸ் சிரஸ்யாஷிபதம் கதம்
அங்கே பாரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே -என்றும்
சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜக்ருத சிஹ்நேன பாணினா
சம்ச்ப்ருஸ் யாக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே –யுத்த -130-39–என்றும் ,
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா
மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1–13– என்றும் சொல்லுகிறபடி ,
ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரரையும் திருவடியையும் ஆதரித்து அணைத்துக் கொண்ட –
மணி மிகு மார்பு-10-3-5– -என்று
ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெரும் படி அழகிய திரு மார்பிலே ..

குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு –
அதாவது –
குரு மா மணிப் பூண் –பெரியாழ்வார் -1-3-10-என்று ஸ்லாக்கியமாய் ஈஸ்வரத்வ சிஹ்நமான
ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி போக்யமாய் தேஜஸ்கரமாய்க் கொண்டு அணிகிற ஆத்ம வஸ்துவுக்கு
(திரு மார்பில் சம்பந்தத்தால் மணிக்கு ஏற்றம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ தேசிகன்)

மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல –
அதாவது –
வண் பூ மணி வல்லி –திருவிருத்தம் –9 -என்று
உதாரமாய் போக்யமாய் தனக்குத் தானே ஆபரணமாம் படி
அழகியதாய் கொள் கொம்பு பெறா விடில் தலை எடுக்க மாட்டாமை தரைப் பட்டு கிடக்கும்
கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் பேச்சு வந்தேறி அன்று —ஸ்வாபாவிகம் என்ற படி –
பெண் பேச்சு என்ன அமைந்து இருக்க மணி வல்லி பேச்சு என்றது –
மணி மிகு மார்பில் மணியாய் அணையும் -என்றதோடு ஒக்க -மணி வல்லி -என்றால்
சொற் கட்டளையால் வரும் ரசம் உண்டாகையாலே —

இத்தால் ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு ஸ்வபாவிகம் ஆகையாலே ,அத்தை
உள்ளபடி தர்சித்த இவர்க்கு தத் பிரயுக்தமான பேச்சு ஸ்வபாவிகம் என்று சொல்லிற்று ஆய்த்து-

—————————————-

இரண்டாவது அஞ்சு அர்த்த பஞ்சகம் -அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதுக்குள்ளே உண்டே -விரோதி ஸ்வரூபத்தை தாண்டி
ஸ்வரூப உபாய பிராப்ய விரோதிகளையும் -தாண்டி

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும்  வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்……பட்டர் அருளிய திருவாய்மொழித் தனியன்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்த்துச் ச ப்ரத்யகாத்மநா
ப்ராப்தயுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி ச
வதந்தி சகலா வேதா ச இதிஹாச புராண கா

மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேந நமஸா
அஹங்கார மமகார ஸ்பர்சம் அற்று
ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வய ரஹிதராய்
எம்பெருமானுடைய போகத்துக்கு காணியை விளைவிப்பாதவராய் -இருக்கும் இருப்பு

    • ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
        • நித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்
        • முக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்
        • பத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்
        • கேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்
        • முமுக்ஷுக்கள் –  ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.
    • புருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:
      • தர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்
      • அர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது
      • காமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்
      • ஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை
      • பகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்
    • விரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:
      • ஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.
      • பரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.
      • புருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.
      • உபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.
      • ப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம்  முதலியவை.

————–

மூன்றாவது அஞ்சு உபாய பஞ்சகம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –

  • உபாயம் – வழி –  ஐந்து வகை உண்டு:
    • கர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.
    • ஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.
    • பக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.
    • ப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும்  இதுவே நெறி.  இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.
    • ஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர்.  மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.

ஈஸ்வரனை பற்றுகை கையை பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி –
ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி–ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -427-

அது என் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அயநாய வித்யதே
பலமத உப பத்தே
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் ந து குணவ் அதஸ் த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரண மவ்யாஜமபஜம்-என்னும் இத்யாதி ஸகல ஸாஸ்த்ரங்களும்
ஸர்வேஸ்வரனே உபாய பூதனாவான் என்று உத்கோஷியா நிற்க
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே ஆஸ்ரயணீயனாய் -உபகாரகனான ஆச்சார்யனே உபாய பூதனாவான் என்னும் இடம்
கீழே பிரபந்தம் தன்னிலே பரகத ஸ்வீகார பர்யந்தமாக ப்ரதிபாதித்த உபாய யாதாத்ம்ய வேஷத்தோடே விரோதியாதோ என்ன
விரோதியாது என்னும் இடத்தை -ஈஸ்வரனைப் பற்றுகை -இத்யாதியாலே வெளியாக அருளிச் செய்கிறார் –
இங்கு ஈஸ்வரனைப் பற்றுகை என்றது -அர்ச்சாவதார விக்ரஹ விஸிஷ்டனைப் பற்றுகை -என்றபடி -அது எங்கனே என்னில்
நிகில வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மத்துக்கு உபாஸன அநுக்ரஹ அர்த்தமான ஸூபாஸ்ரய விக்ரஹத்வம் -பரத்வாதி பஞ்சகத்திலும் ப்ரதி பன்னமாகா நிற்க விசேஷித்து அர்ச்சாவதாரத்திலே அசரண்ய சரண்யத்வாதி குண பூர்த்தியை இட்டு
வேதங்களும் வைதிகரான மஹ ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் ஆதரித்து ஆஸ்ரயித்துப் போருகையாலே
நிரங்குச ஸ்வா தந்தர்யம் எல்லாம் பிரகாசிக்கும் படி அவாகித்வ ஸமாதியை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற அர்ச்சாவதார விஷயத்தில் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இதுவே இறே கீழில் பிரபந்தத்தில் நிச்சயித்த உபாய யாதாத்ம்ய வேஷமும் –
இத்தைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது -ஒருவன் ஒருவன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கும் இடத்தில் ததர்த்தமாக
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டால் அவனுடைய அபேக்ஷிதம் செய்யவுமாய் செய்யாது ஒழியவுமாய் இருக்குமா போலே
நிரங்குச ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்ய ப்ரகாசகமான அர்ச்சாவதாரத்தில் சமாஸ்ரயணமும்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை -என்றும்
நெறி காட்டி நீக்குதியோ

நின் பால் கரு மா முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே -என்றும்
சம்சயிக்க வேண்டும்படி இருக்கக் காண்கையாலே

இனி ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்றது அவன் தன்னுடைய காலை மீண்டும் அவன் கட்டிக் கொண்டு அபேக்ஷித்தால்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -என்கையாலே அவனுக்கு அக்காரியம் தலைக்கட்டிக் கொடுத்தல்லது நிற்க ஒண்ணாதாப் போலே
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்தமயீம் தநூம்-என்றும்
ஸர்வ ஜனாத் ஸூ கோப்தம் பக்தாத்மநா ஸமுத் பபூவ -என்றும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து – என்றும் சொல்லுகையாலே
இவ்வாச்சார்யன் தானும் ஸாஷாத் உபாய பூதனான பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸாதந த்வார விசேஷமாகையாலே
அநதி க்ரமண ஹேதுவான காலைப்பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி என்று
சதாச்சார்ய சமாஸ்ரயணத்தைச் சொல்லுகிறது –
இவ் வர்த்தம் தன்னையே ஆழ்வாரும் -சிறு புலியூர் சலசயனத்துள்ளும் எனதுள்ளத்துள்ளும் யுறைவாரை உள்ளீரே -என்று
இவ் விரண்டையும் ஸூ லபமான

ஆஸ்ரயணீய ஸ்தலமாக அருளிச் செய்தார் இறே
ஆக -விஷய பேதம் இல்லாமையாலே ப்ராப்ய ப்ராபகங்களினுடைய ஐக்யமும் ஸித்தம் என்று கருத்து –

ஆனால் சரண்யன் விஷயமான அர்ச்சாவதார விஷயமும் -ஆச்சார்ய விஷயமும் -கர சரண -அவயவங்களாகக் கற்பித்த பின்பு
அந்த அவயவி தான் ஆர் என்ன வேண்டா –
அவை ஸாஷாத் உபாய பூதனுடைய ப்ரஸாதந த்வார விசேஷங்களான விக்ரஹங்கள் ஆகையாலே
ஸ்ரீ மன் நாராயணனே உபாயமாம் இடத்திலும் -சரணவ் சரணம் -என்ன வேண்டா நின்றது இறே
அது போலே -காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோ பாதி -என்ற இதுவும்
அஞ்ஞாத ஞாபன முகத்தாலே அர்ச்சாவதாரத்தைப் பற்ற அதி ஸூ லபமுமாய் -அநதி க்ரமண ஹேதுவுமான ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட பகவத் ஸமாஸ்ரயணத்தை –
ஆனால் சதைக ரூப ரூபாயா -என்கிற அப்ராக்ருத விஸிஷ்ட வஸ்துவுக்கு அல்லது ஸூபாஸ்ரயத்வம் கூடாது என்று சொல்லுகிற ப்ரமாணங்களோடே விரோதியாதோ
ஆச்சார்ய விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவை ஸூபாஸ்ரயமாகக் கொள்ளும் இடத்தில் என்னில் -விரோதியாது -எங்கனே என்ன
நாநா ஸப்தாதி பேதாத் -என்கிற ஸூத்ர சித்தங்களான ப்ரஹ்ம பிராப்தி சாதன ரூப வித்யா விசேஷங்களில்
ப்ரதர்தன வித்யை
அந்தராதித்ய வித்யை -தொடக்கமானவற்றில்
இந்த்ராதி நியத விஸிஷ்ட விக்ரஹமாக உபாஸிக்கும் அளவில் அவ்வோ விஸிஷ்ட விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவுக்கு ஸூபாஸ்ரயத்வம் கொள்ளுகை ஸூசிதம் –
இனித்தான் திருவடி நிலைக்கு பரமாச்சார்ய லக்ஷணமான ஸ்ரீ சடகோப ப்ரஸித்தி யுண்டாகையாலும்
சரதீதி சரண ஆசரதீத் யாசார்ய -என்கிற வ்யுத்பத்தி ஸாம்யத்தாலும்
காலைப் பிடிக்க என்று பரதந்தர்ய ஏக ஸ்வரூபனாய்
தத் அனுரூப ஞான அனுஷ்டான யுக்தனான ஆச்சார்ய ஸமாஸ்ரயணத்தையே சொல்லுகிறது –
இனித்தான் ஸ்த நந்த்ய ப்ரஜைக்கு மாதாவினுடைய சரீரம் எங்கும் உபா தேயமானாலும் ஸ்த நத்திலே வாய் வையா விடில்
தாரக அலாபமே அன்றிக்கே சீற்றத்துக்கு விஷயமாய் விடுமாப் போலே -லோக மாதாவான ஸர்வேஸ்வரனுக்கு
நித்ய ஸ்தய நந்தங்களான ஸகல ஆத்மாக்களுக்கும் அடியார் என்னும் இடம் அவிநிஷ்டமாகையாலே
அடிவிடாமல் ஆஸ்ரயிக்கை ஸ்வரூப உஜ்ஜீவனமாய் அடிக்கழிவு செய்கை ஸ்வரூப ஹானி யாகையாலே அவ்வாச்சார்யனுடைய சமாஸ்ரயணமே அதி ஸங்க்ரஹமான உபாயம் என்னும் இடத்தை உப பாதித்தார் ஆயிற்று –

———-

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பல காலும் அருளிச் செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –சூரணை-443-

ஸ்வ அபிமானத்தாலே -இத்யாதியாலே தாம் அருளிச் செய்த பரமார்த்தத்தில் விசேஷத்தில் ப்ரதிபத்தி தார்ட்ய ஹேதுவாக ஆப்த வாக்கியத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அநாதி காலம் -அஹம் -மம – என்று போந்த தன்னுடைய துரபிமானத்தாலே
யத் த்வத் தயாம ப்ரதி கோச காரப்யாதசவ் நஸ்யதி -என்கிறபடியே
அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் அவ்வருகாம் படி பகவத் அபிமானத்தைப் பாறவடித்துக் கொண்ட இவனுக்கு
எத்தனையேனும் கதி ஸூந்யற்க்குப் புகலிடமான
ஸதாசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன ஹேது வில்லை என்று திருத்தகப்பனாரான வடக்கில் திருவீதிப்பிள்ளை அந்தரங்க தசையிலே பலகாலும் அருளிச் செய்ய
விட்டு சித்தர் கேட்டு இருப்பர் – என்கிறபடியே கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கிறார் –
அதுக்கு ஹேது பரமார்த்த உபதேஸ தத் பரங்களான வேதாந்தங்களும்
ப்ரஜாபதிம் பிதரம் உபஸ ஸார
வருணம் பித்தாராம் உபஸ ஸாரா என்று
அந்த பரமார்த்த உபதேசம் பண்ணும் அளவில் பிதாவுமான ஆச்சார்யனை ஆப்த தமத்வேந எடுக்கையாலே என்று கருத்து –

———–

—————-

நான்காவது அஞ்சு பரத்வாதி பஞ்சகம் –அர்ச்சாவதாரம் -கண்டு காணச் செய்து -அணங்கு தெய்வம்

  • ப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:
      • பரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை
      • வ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்
      • விபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)
      • அந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும்  இருத்தல்
      • அர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை
      • கண்டு -பிற வினையில் வந்த தன் விபினை -காணச் செய்து என்றபடி
        நாம் உஜ்ஜீவனம் அடைய தமர் உகந்த உருவம் கொண்டு இருக்கும் அர்ச்சாவதார எளிமையைக் காட்டிக் கொடுத்த படி

———————–

ஐந்தாவது அஞ்சு லோக பஞ்சகம் -மண் உலகம் நரக லோகம் ஸ்வர்க்க லோகம் கைவல்ய லோகம் பரமபதம்

இருள்தரும் மா ஞாலம் மண்ணுலகம் ஹேயம்
ஸ்வர்க்காதி போகமும் கைவல்யமும் வேண்டேன்
இனிப்பிறவி யான் வேண்டேன் என்றபடி
பரமபதத்துக்கு ஆளாக்கித் திருத்திப் பனி கொள்வதே ஆச்சார்ய க்ருத்யம் என்றபடி

ஆக பஞ்ச சம்ஸ்காரம் பெற்று -பிரதி பந்தகங்களைக் கடந்து சரம உபாயத்தைக் கடைப் பிடித்து அர்ச்சாவதாரத்தைக் காட்டிக் கொடுத்து
சம்சார உத்தீரணராக்கும் சதாசார்யனுடைய படிகளை வெளியிட்டார் யாயிற்று –

————–

பஷீ ச ஸாகா நிலய ப்ரஹ்ருஷ்ட புந புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸூஸ் வாகதாம் வாஸம் உதீரயாந புந புநஸ் சோத யதீவ ஹ்ருஷ்ட

ஸூ ப சகுனமாக ஆச்சார்யர் கிடைத்தமை பற்றிய ஸ்லோகம்

பஷீ
ஞான அனுஷ்டானம் இவை நன்குடைய குருவை அடைந்தக்கால் தானே வைகுந்தம் தரும்
உபாப்யாமேவ பஷாப்யாம் யதா கே பஷீணாம் கதி
ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -பிராமண வசனம்
சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஞான கர்மாக்களை சிறகு என்று
குரு ஸ ப்ரஹ்மசாரி புத்ர ஸிஷ்ய ஸ்தாநே பேசும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -3-1-

ஸாகா நிலய
சாகை என்று கிளைக்கும் வேத பாகத்துக்கும் பெயர்
யஜுஸ் ஸாகாத்யாயீ -ஸாம ஸாகாத்யாயீ
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
வேதம் ஓதாதவன் பரம புருஷனை அறியாதவனாவான்

ப்ரஹ்ருஷ்ட
ஆச்சார்யன் எப்போதும் பகவத் சிந்தையனாக இருப்பதால் மிக்க மகிழ்ச்சி யுடையவனாயே எப்போதும் இருப்பான்
ஆனந்த மயனான எம்பெருமானை அநவரதம் சிந்தை
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்க்கு எங்கே வரும் தீ வினையே -திரு விருத்தம்
தேஹ யாத்திரையிலும் ஆத்ம யாத்திரையிலும் கவலை அற்று ஆனந்தம் ஒன்றே கொண்டு இருப்பார்கள்

புந புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
சிறந்த ஹித உபதேசங்களுக்கு ஸாந்த்வ வாதம் என்று பெயர்
க்யாதி லாப பூஜா ஹேது அன்றிக்கே
சிஷ்யர்கள் பிரார்த்திக்காமலேயே
தனது பேறாக அடுத்து அடுத்து ஹித உபதேசம் பண்ணும்
கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் என்றதாயிற்று –

ஸூஸ் வாகதாம் வாஸம் உதீரயாந
ஸ் வாகதாம்-என்றது ஸ்வஸ்மை ஆகதாம் -என்றபடி
ஸூஷ்டு ஸ்வஸ்மை ஆகதாம்–ஸூஸ் வாகதாம்-
ஸ்வ கபோல கல்பிதமான அர்த்தங்களை மனம் போன படியே சொல்லுகை அன்றிக்கே
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவரே உத்தமமான ஆச்சார்யர் –

புந புநஸ் சோத யதீவ ஹ்ருஷ்ட
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -என்றபடிக்கும்
ஸ் காலித்யே ஸாசீ தாரம் -ந்யாஸ விம்சதி ஸூ க்தியின் படிக்கும்
நிர்தாஷிண்யமாக சிஷிப்பவரே ஆச்சார்யர்

 

ஆகவே இந்த ஸ்லோகம் உத்தம ஆச்சார்யர் படியைச் சொல்லிற்று ஆயிற்று –

———-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவடி மாலை–ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள்–

March 6, 2023

ஸ்ரீ திருவடி மாலை அண்ணாமலைப்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்‌ சேது சமத்தான மகாவித்துவான்‌ பாஷா கவிசேகரர்‌ ஸ்ரீ  ரா. இராகவையங்கார்‌

மகாவித்துவான்‌ ரா. இராகவையங்கார்‌ மாலையின்‌ தொடக்கத்தில்‌ உள்ள வாழ்த்தில்‌,
‘திருவினிய பொய்கை’ . என்று பொய்கையாழ்வார்‌
முதலாக குருகைமகிழ்‌ மாறன்‌ பெரிய சடகோபன்‌” ஆகிய குரவர் தாள்‌ சேர்குவர்‌ அடிமையானே’ என்று
குறித்தல்‌ அவர்‌ தம்‌ அடியார்க்கு அடியனாகும்‌ பத்தி நிலையைக்‌ காட்டும்‌.

திருவடிமாலையில்‌ சிலபாடல்கள்‌ திருமால்‌ திருவடி களைப்‌ போற்றுகின்றன. ௪ட கோபரைச்‌ சில பாடல்கள்‌ து.திக்கின்‌றன. பலபா டல்கள்‌ கிருஷ்ணாவதாரம்‌, இராமாவதாரம்‌, நரசிங்காவ வதாரம்‌ முதலிய அவதாரங்கள்‌ பற்றியவையே= திருவேங்கடம்‌, திருவரங்கம்‌, திருமாவிருஞ
சோலை, – திருப்புல்லாணி: முதலிய திருப்பதிகளில்‌ எழுந்தருளிருள்ள எம்‌ பெருமான்‌ களைப்‌ பற்றியவை பல.
திருமால்‌ அருள்‌ வேண்டும்‌ பாடல்கள்‌, மாயோனிடம்‌ முறையிடும்‌ பாடல்கள்‌ சிற்சில, இவ்வாறு திருவடி மாலை பத்தி ரசம்‌ கனிய அமைந்த இன்னிசைப்‌ பாடல்களாகும்‌.

திருவடிமாலையின்‌ இறுதியில்‌ இராமநாம மகமை உரைக்கும்‌ *சீராமநாமப்‌ பாட்டு என்னும்‌ பகுதி உள்ளது.
கல்லாரும்‌ கற்றாரும்‌ கற்கும்‌ நாமம்‌ கங்‌.கை முதல்‌ தீர்த்த பயன்‌ காட்டு நாமம்‌ வில்லாரும்‌ வீரர்‌ செயம்‌ வேண்டும்‌ நாமம்‌ மெய்ம்மைக்கே பரியாயம்‌ வேண்டும் நாமம்‌ என்று இவ்வாறு இராம நாம மகிமை பேசுதலை இப் பகுதியில்‌ காணலாகும்‌.
இந்தப்‌ பக்திப்‌ பனுவல்‌ மகாவித்துவான்‌ வாழ்  நாளி லேயே 1983ஆம்‌ ஆண்டு முதன்‌ முறையாக வெளிடப்‌ பெற்றது. 66 ஆண்டுகளுக்குப்‌ பின்‌ வெளியாகும்‌ இப்‌ பதிப்பினைத்‌ தமிழார்வலர்கள்‌ பெற்றுப்‌ பயன் பெறுவாார்களாக.

————–

வாழ்த்து
‘திருவினிய பொய்கை கருவினொளிர்‌ பூதன்‌
செகமுழுவ தும்பே யெனவகலு நன் பேய்‌
மருவினிய பாணன்‌ வளர்மழிசை பூரன்‌
மசிழ்புதுவை நாதன்‌ மதுரகவி கோதை
அரசினுயர்‌ கொங்கர்‌ மகிபகுல துங்கள்‌
அடியர் பத தூளி யணி குறைய லாளி
குருகைமகழ்‌ மாறன்‌ பெரியசட கோபன்‌.
குரவரிவர்‌ தாள்சேர்‌ குவரடிமை யானே,

விதியோர்தர வியலாத மு குந்தன் மிசை யன்பின்‌
விதுரற்கொரு சபரிக்கெழு பதினாயிர மதிகன்‌
மதியோர் புகழ்‌ குருகூர் மகிழ்‌ மாறன் சட கோபன்‌
மதுரத் தமி ழமிழ்தைப் பொரு மறையைப் பொழி முகிறாள்‌
துதியோர் குரு வழிபாடு செய்‌ கோளூர் மறை வாணன்‌
றுகடீர் மது ரகவீச னிணைச் செம்பத பதுமங்‌
கதியோர் தரு பூதூரெதி ராசன் பத கஞ்சங்‌
கலை தேர் வர வர யோகிகள்‌ கழலே தொழுவோமே.

நூல்

பொருள் கொடுத்து வசை கேட்கும்‌ புல்லர்க்‌ கேயும்‌
பொறுக்கரிதாய்ச்‌ செலிசுடும்வெம்‌ புன்சொல்‌ பெய்தாற்‌
கருள்கொடுத்து மீளாவீ டாங்கே நல்கு
மம்மானின்‌ திருவுளத்துக்‌ காகு மென்றே
தெருள்கொடுத்த பெரியவர்க்குந்‌ தெளிய லாகாத்‌
தெய்வங்கள்‌ தெய்வதமாஞ்‌ செம்மா லுன்னை
யிருள்கொடுத்த நெஞ்சினொடு மேத்து வேன்போ
லிழித்துரையிற்‌ பழித்துரைப்பா னெண்ணினேனே..–1–

மறை யெடுத்துன்‌ குணத்தொன்று வழுத்தப்‌ புக்கு
மனம் வாக்குக்‌ கெட்டாத மகிமைத்‌ தென்றே
யிறையெடுத்துச்‌ சொல மாட்டா தீண்டு மீண்ட
வேற்றமுள போற்றுமுளச்‌ சோதீ யுன்னைத்‌
துறையெடுத்த நெறி தோன்றா நாயேனெய்தச்‌
சொல்லாலே கூவுகின்ற தெல்லாம்‌ பாலர்‌
பிறையெடுத்து விளையாட வாவா வென்று
பிதற்றுகின்‌ற தன்மையினும்‌ புன்மைத்‌ தம்மா.–2-

ஏரி தான்‌ மாரியினுக்‌ கேது வாயி
னிருவிழிநோக்‌ கிரவிவரற்‌ கேது வாயிற்‌
சீரிதா நின்னருட்கு நாயேன்‌ செப்புஞ்‌
சிறுசொல்லு மேதுவெனச்‌ சிறக்கு மம்மா
பாரினீ யருள் செய்வாய்‌ செய்யா யானோ
பயன்கருதேன்‌ பருகுபவன்‌ பருகா துய்யா
னோரில்யா னவனாக வுன்னை யேத்தா
துய்யாமை யேத்தினே னுடைய கோவே.–3-

சொல்லாலே மேலாப்புச்‌ செய்து வானிற்‌
.றிகழ்சோலை மலை மேய தேவ தேவே
சொல்லாலே யுனை வழுத்தத்‌ துணிவ தெல்லாந்‌
துகிலாலே யெரிய விக்கத்‌ துணிவ தாகும்‌
வில்லாலே யாகாய மெய்வ தாகும்‌
விரலாலே வளி யளக்க. மேவ லாகுங்‌
கல்லாலே பெருங்கடனீர்‌ கடத்த லாகுங்‌
காலாலே வானேறக்‌ கற்ப தாமே.–4-

5. அவியாத்‌ தருப்பைவெஞ்‌ சாயக
மாஞ்சிலை யாரணங்காந்‌
தவியாக்‌ கரியர சாகுந்‌
தயிர்க்குடத்‌ தங்குமுத்தி செவியாற்‌ கனவினுந்‌ தெய்வக்‌
கவிகை தெரிந்திலெனைக்‌
கவியாக்கி யாண்ட முழுமுதற்‌று ஓன்மைக்‌ கடவுளுக்கே.

6. ஏழு லோகமும்‌ வாழ வென்று ஓரு
சோழ  மண்டல மீதுதன்‌
னிணையில் காவிரி நடுவி லேயர
வணையிலே வளர்‌ தெய்வதம்‌
மாழை மாதகலாது மின்னென
மார்பிலே யொளி ரருண் முகில்‌
வள மிகுந்தமிழ்‌ மறை மொழிந்துயர்‌
பதின்ம ராடு குணக் கடல்‌
வேழ மென்பதன் வாயினால் வெளி
யாகி வந்த விழுப்பரம்‌
வேத முள்ளன யாவையும் முத
லீறு மோதும்‌ வியன் சுடர்‌
ஊழி யின்னுயிர்‌ முழுதை யுந்தன துதரம்‌ வைத்த தனிப் பொருள்‌
உம்ப ரிம்பரெ லாமு நாபியி
தய மாமுழு முதலரோ.

7. கடன்மிசைக்‌ கிடந்த கருணை வா ரிதியைக்‌
கன் மழை தடுத்த கார்‌ முகிலை
யடன் மிசைத்‌ தேவர்க்‌ கமுது பெய்‌ யாரா
வமுதினை யலர் மகட்‌ கணியை
மடன் மிசைத்‌ தேன் பாய்‌ மாலிருஞ்‌ சோலை
மலை மிசை மரகத மலையை
யுடன் மிசைச்‌ சுழலும்‌ புன் பிறப்‌ பொழிவா
னுள்ளினே னெள்ளினே னுலகே.

8. பல்லா யிரம் பழி சூழ்கின்ற யானுன்‌ பதுமபத
மல்லாற்‌ றொழுது துதித்தறி யேனகி லாண்டமுத
லெல்லாம்‌ வயிற்றி னடக்கி யளிக்கின்ற வின்னருட்கு
நல்லார்‌ பொல்லாரென்‌ றிருகூறு செய்யு நவையுமுண்டே..

9. பிள்ளைப்‌ பருவத்‌ ‘தொரு குழவி
பெரியோர்‌ கையாற்‌ றொழது தொழுது பேணி யவர் தாமுரைத்த மொழி
பிதற்றி யிருக்கும்‌ பெற்றியைப்போ
லுள்ளத்‌ துருகு மன்பர் தொழி
லுதனை நடிக்க“வுவந்துன சீர்‌
உள்ள படி யொன்‌ றுணரும்வலி
யொழிந்த விழிந்த நாயடியேன்‌
எள்ளத்‌ தனையு மிளகாத
விருப்பு மனத்தாற்‌ பொய்ந் நாவா
லீயா திவறுங்‌ கொடுங்கையா
லெண்ணி யியம்பித்‌ தொழலெல்லாங்‌
கொள்ளத்‌ தினையுந்‌ திருவுளத்துக்‌ குறித்த லுளதோ கோகனகக்‌
கோயில்‌ வளர்ந்த கொடி படர்ந்த
கொடைக் கற்‌ பகமே குணக் கடலே.

10. வெருவித்‌ துயர் படு கடலைப்‌ பொரு பிற
வியினிற்‌ சுழல் வரும்‌ வினை தீர
மருவித்‌ தொழு மன மதனைத்‌ தருவதுன்‌
மகிமைத்‌ திருவரு ணெறியாமே
குருவிற்‌ பொலி குல முழுதுக்‌ கொருபதி
குருகைப்‌ பதி வளர்‌ தமிழ் மாறர்‌
பெருவிற்‌ பன மறை யமிழ்தைப்‌ பருகிய
பெருமைப்‌ புயலெனு நெடுமாலே.

17. கத்து கடல் சூழ்‌ புலி
கண்டா கருணன்‌ முனமெதிர்ந்து
செத்த வுடலை நிவேதனஞ்செய்‌
திறத்துக்‌ குகந்தே யவற்குமவன்‌
சித்த முவத்தல்‌ காரணமாத்‌
தீய தம்பி தனக்குமுயர்‌
முத்தி கொடுத்த திருவருளே
மூட னேனை யாண்டதுவே.

12. பத்தி செய்து பகைத்த கண்‌டா கர்‌ணன்‌
பாழி வெள்ளிப்‌ பருப்பத வாணனை
முத்தி யெய்த விழைந்து வணங்கவு
முகுந்த னன்றி யுகந்தது வல்லமோ
புத்தி செய்தரி பொங்கரு டங்குமா
புரிக வென்ற புராரி யிடத்துநீ
நத்தி யெய்தி மகப் பெறு மாயமென்‌
நான்முகப் பிர மற்கொரு தந்தையே.

13-. கூவத்தே வீழ்ந்த சிறு குழவியை நம்‌.
றாயெடுக்கக்‌ குதித்தாற்‌ போலப்‌
பாவத்தே மனக் கலம்போய்ப்‌ பவக் கடல் வாய்ப்‌
பட்டாரைப்‌ பரமன்‌ றானே
யாவத்தே யில்லாத பெருவீட்‌.டை.
யடைவிப்பா னருளா லிச்சை
மேவத்தே கம்படைத்துத்‌ தோன்‌ றுவனிம்‌
மெய்யுணர்ந்தோர்‌ வினைதீர்ந்‌ தோரே.

14, காயா மலருங்‌ கருவிளையுங்‌
காருங்‌ கடலுங்‌ கமழுமெழின்‌
மாயா மதுசூ தன முகுந்த
வர மாதவ வாமன வெனவா
யோயா தலற்றி யகங்கரைய
யுள்ளே ததும்பி யின்பவெள்ளம்‌
பாயா வழிந்து வினைக் கோடை.
பாற்று நாளு முளதேயோ.

15. மனைவிட்டிலன்‌ மகவிட்டிலன்‌
வலிவிட்டிலன்‌ மாலே
‘தனைவிட்டில னிலம்விட்டிலன்‌
றனம்விட்டில னாசை
‘தினைவிட்டிலன்‌ வினைவிட்டிலன்‌
திருவற்றவ னேனும்‌
உனைவிட்டில னெனின்‌ மற்றவ
னொளி பெற்றவ னாமே.

16. நின்ன தாகுமால்‌ விண்ணு மண்ணொடும்‌
நிலைய தாகிய வீடு மேயெனின்‌
என்ன தாக யாதுள்ளதோ தெரி
கிற்கிலே னுடற்‌ செனன மோடுயிர்‌
உன்ன தாகலானிற்கு நல்குதற்‌
கொன்று மில்லையா னேழை யேனுமென்‌
தன்ன தாக வென்‌ கையி லுள்ளதஞ்‌
சலி நினாதுகை தனிலி லாததே.

17. நெய்யிற்‌ றனியே யெரியாத
நெருப்புத்‌ திரியின்‌ மிசை யதையே
பெய்யிற்‌ சுடர் விட்‌ டொளி கிளரும்‌
பெற்றி யேய்ப்ப மலவுயிரை
மெய்யிற்‌ புகுவித்‌ திரண்டனையு.
மேவிப்‌ பொலியும்‌ விழுச்சுடர்‌ நீ
கையிற்‌ கனி போற்‌ காட்டினல்லாற்‌
காணா தெவர்க்கு மகக் கண்ணே.

18. காமாந்த காரமடுக்‌ காரிகையார்‌ வேட்கைக்‌
கராவாயிற்‌ கண்ணிழந்து கன்‌மனவெங்‌
றேமாந்து வீழ்ந்துகரை யேறவலி யில்லா களிறு ஓன்‌
தெந்தையுனை யுன்னாது நொந்தழிவ தருள்வாய்‌
பூமாந்து வண்டுலவு பொய்கையிடைப்‌ புக்குப்‌
போற்று கரி காத்ததினு மேற்றமிதற்‌ குண்டால்‌
தீமாந்து மெழுகு பொரத்‌ தினமுருகு மன் பர்‌
சிந்தை குடி கொண்டிருலகு முந்தை முழு முதலே.

19. பாபத்தாற்‌ காழ்த்தறிவு
பாழ்த்ததனான்‌ வெளிறியடுங்‌
கோபத்ததாற்‌ சிவப்புற்றுக்‌
கொடுஞ்செருக்கா னனியிருண்டே
யாபத்தா னிளைப் பெய்தி
யழுக்காற்றாற்‌ றடிக்கு மனம்‌
சாபத்தேற்‌ குயிர்ப் பிணியாய்த்‌
தழைப்பது காண்‌ டனி முதலே.

20. பழுவிருக்கத்‌ தோல் வேய்ந்த பாவை நெஞ்சப்‌
பாம்பிருக்கும்‌ பாழ்ங்குடங்கர்‌ பற்பல்‌ கோடிப்‌
புழுவிருக்கப்‌ போர்த்தமலப்‌ பொதியே யைந்து
புலப் பேய்கள்‌ குடியிருக்கும்‌ புக்கில்‌ புண்ணாய்‌
குழுவிருக்கத் தொக்கமுடை யிரைமெய்‌ யென்று
குறித்திருக்கப்‌ பெற்றபெருங்‌ குணத்தோர்க்‌ கல்லா
லெழுவிருக்க மொருகணையா ஸனெய்து பத்த
ரெழுபிறப்பு மறுப்பவனை யேத்த லாமே.

21. பணவாசைப்‌ பேய் கண்‌ டுயில விடா
தெனைப்‌ பாவையராம்‌
பிணவாசைப்‌ பூதங்‌ கனவும்‌
புகுந்து பிடித்துடற்று
முணவாசைக்‌ கூளி யெஞ்‌ ஞான்றுந்‌
தெறுமிவைக்‌ கோய்வுமுண்‌டோ
குணவாசைப்‌ பாநுவைப்‌ போன்றுள
னோங்மென்‌ குலதெய்வமே.

22. பொன்னினைக்கும்‌ புகழ் நினைக்கும்‌
பூமியெலா நினைக்கும்‌
பூணினைக்கு மூணினைச்கும்‌
பூவை மொழி யாரை
மன்னினைக்குந்‌ தன்னினைக்கும்‌ மற்றையர்க்குத்‌ தீது
வர நினைக்கும்‌ பழி மறைக்கும்‌
வழி நினைக்குந்‌ தன்ன
தின்னினைக்கு நென்னினைக்கு
மிருள் புகுத்த வல்ல தெது நினைக்க வென்றாலு
மதுநினைக்கு நெஞ்ச
நின்னினைக்க லாகாது
நீநினைத்தல்‌ வேண்டு
நீடொளிய சேடகிரி
நின்ற பெருமாளே.

23-மாட்டாலும்‌ மயக்காலும்‌ மகிழாலும்‌
புகழாலும்‌ வாட் கண்‌ மாதர்‌
கூட்டாலு முணைவாலுங்‌ குடியாக் கொண்
மடியாலுங்‌ கோபத்‌ தாலும்‌
பீட்டாலு மழுக்காற்றுப்‌ பேயாலு
நாயேன் செய்‌ பிழைக ளெல்லாம்‌
பாட்டாலு நிரம்பாது கேட்டாலும்‌
பாவபெனப்‌ பகர்வ ரெந்தாய்‌.

24-ஏழாலே அளந்திட்ட புன் பிறப்பின் எத் துணைக்கோ வினைவேன் எந்தாய் ே
ஊழாலே ஒரு கோடி உடலாலே யுரையாலே யுடறுங்‌ காமப்‌
பாழாலே கூழாலே பகையாலே பசியாலே பயத்தாற்‌ பாவச்‌
சாழாலே திணிந்த மனக்‌ கல்லாலே படுவல் எலாங்‌ கணிக்கலாமே.

25. சற்றேனு மிரங்கீரோ வெனப் பசித்தார்‌
தழங்குரைமுன்‌ றலைக் கேட்‌ டோர்கைத்‌
துற்றேனு மீவறியாச்‌ சுமடனேன்‌
சுடும்வறுமை தொலையத்‌ தம்மை
விற்றேனு முதவுகொடை வீரர்முன
மென்னாவேன்‌ வியாள மேய
புற்றேனு மொவ்வாவென்‌ புல்லுடலே
புவியினெடும்‌ பொறையா மெத்தாய்‌.

26. அருகிருக்கும்‌ புல்லாணி யமர்ந்திருக்கும்‌
வில்லாளிக்‌ கன்பு பூண்டு
பெருகிருக்கு முறையானே பேசறியே
னந்தணரிற்‌ பிறந்தேன்‌ வாளா
முருகிருக்குங்‌ குழலார்க்கு முனைந்திருக்குங்‌ காமத்தீ மூள நாளும்‌
வெருகிருக்கு மாறிருளை விழைந்திருக்கும்‌
வெய்யனருண்‌ மேவ லுண்டே.

27. அனைபடைத்த வுயிர்க்கெல்லா மயன் படைத்த
‘தில்லை யுட லடியார்க்‌ காக்க
முனை படைத்த வறவாழி முதல்வனடி.
முளரியினை முன்னு மெண்ணந் தினை படைக்க மாட்டாது தீ நரகு
படைப்பார்தாஞ்‌ செய்த முன்னை
வினை படைத்த தல்லாது வேறுண்டோ
மெய்யுணர்ந்து விள்ளுங்‌ காலே.

28-குழலோம்பு மினியவிசைக்‌ குயிலோம்பு
குரன் மடவார்‌ கொடிய காமத்‌
தழலோம்பி யேயபணி தலையோம்பிப்‌
பெற்றவற்ப சார மென்னும்‌
விழலோம்பி யதனானோய்‌ மிக வோம்பி
மெலிவெல்லாம்‌ வீடாண்‌ மாயன்‌
கழலோம்பு மாறறியாக்‌ கசடோம்பி
நின்ற வெய்ய காட்சி யாமே.

29-பாடு பட்டுத்‌ தேறி நிதிப்‌ பரப்பு நாளும்‌
பகை விளைக்கு நிலனும் பெண்‌ பாலார்‌ கொங்கைக்‌
கோடு பட்டுச்‌ சிதைந்த புல வுடம்பும்‌ வாழ் நாள்‌
குறை பட்டுப்‌ போம் வழிக்குத்‌ துணையோ சொல்லாய்‌
காடு பட்டுப்‌ போகாமே காக்குங்‌ கார் போற்‌
கருணை மழை பொழிகின்ற கமலக்‌ கண்ணந்‌
கீடுபட்டு வீடுபெற்று வாழ வெண்ணா
திரும்பிறவிக்‌ கடற்பட்ட வேமை நெஞ்சே.

30-எல்லணைத்த பிறைபோலு மெழிலணைத்த
இரு நுதலா ரிரண்டு கொங்கைக்‌
கல்லணைத்துக்‌ கண்ட சுகங்‌ கனவலைத்த
கனி சுவைத்த காட்சித்‌ தென்று
வில்லணைத்து நீல முகின்‌ மிளிர் பச்சைப்‌
பாயன் மிசை மேயினாற் போற்‌
புல்லணைக்கட்‌ சாய்ந்தவன் பேர்‌ புகன்‌ மிருப்பார்‌
பேர் புகன்று புகுவர்‌ வீடே

31-மலைபோ னிதியு மணுவா மதித்து வறுமை கொளுங்‌
கலையோ துளியுங்‌ கடலா நினைத்துக்‌ கருவமுறு
நிலையோ பெறாது நரகு படைக்கின்‌ற நெஞ்சிற்கியான்‌
விலையோ வருளு மிலையோ வடமலை மேலவனே.

32-குடி பிடிக்கு மானப் பேய்‌ குலம் பிடிக்கு
மகங்காரக்‌ கூளி யோடு
செடி.பிடி.க்கும்‌ பேராசைச்‌ செந்நாயு
மனக் குரங்குத்‌ தினமு மென்னை
மடிபிடிக்கும்‌ விடியலும்‌ வழி மறிக்கு
நரக நெறி வகுக்கு மூன்னை
யடி பிடிக்க வொட்டா விவ்‌ வல்லலெலாம்‌
வெல்ல வரு ளரங்கத்‌ தெந்தாய்‌.

33-பாட்டா னளி கண்‌ முரலுமெழிற்‌
பங்கே ருகத்தின்‌ மிசை யமர்ந்து
சூட்டா ரேகினம்‌ பெடைதிளைக்குந்‌
துறை சேர் மல்லி வளதாடி
தாட்டா மரைப்  போதுளப்போதிற்‌
றணவார்‌ பிறவச்‌ சலதி பட
மாட்டார்‌ முடிப்போ தவாவுமுதல்‌
வன்றாட்‌ பிணைந்‌ தெடுத்தலினே.

34-குலை யெடுத்த மரக் கொம்பிற்‌ குதித்துத்‌ தாவும்‌
குரங்கனைத்து நீ முன்னர்க்‌ குறித்த வாறே
மலை யெடுத்து மலை கடந்தும்‌ வாழ்ந்த வென்றன்‌
மனக்குரங்கு மட்டுமுனை வணங்க லில்லாத்
தலையெடுத்து நிமிர்‌ ந்திருளின்‌ வீழ்த லெல்லாத்‌
தயா வுளத்திழற் குறியாத தன்மை யென்னோ
சி லை யெடுத்த நீல முகில்‌ போற் புல்‌லாணித்‌
திருப்பதியின்‌ மேவி வளர்‌ தேவ தேவே,

35. செகத்துக்க ணவதரிக்குத்‌ தெய்வதச் சீர்‌
கேட்டுரையாச்‌ செவிட்டு மூங்கை
முகத்துக்கண்‌ விழித்திருக்க வகத்துக் கண்‌
குருடுபட்ட மூட னல்லா
லிகத்துக் கண்‌ வாழ் வனைத்து மிருங்கான
னீரனைத்தென்‌ றெண்ணா தேபெண்‌
அகத்துக் கண்‌ வந்துழல வாழ் நரக
மமிழப்போ மாதன்‌ யானே.

36. மருவேட்ட குழலார்க்கு மனம் வேட்ட
மயலானே வையத்‌ தென்றுங்‌
கருவேட்ட விடர்க்கடலிற்‌ சரைவே.ட்ட
வுடை கலம்போற்‌ கவிழ்கின்‌ றேற்குச்‌
செரு வேட்ட. தென்னிலங்கை தீ வேட்டஞ்‌
செயம் பொருத செல்வன்‌ கஞ்சத்‌
திருவேட்ட முழு முதல்வன்‌ சீர் வேட்ட
சேவடியே சேம மாமே.

37-ஆற்றைக் கடவா திருஞ்சழிவா
வாழ்த்த விரைவு மடு மரம் போன்
வாற்றைக் கடவா தீ குண முகில்
மாட்‌ட . விரையு மா மிவிடநீ .
றூற்றைக்‌ களைந்து வேர றுக்குத்‌
துகடீ ரருள்வா டருவை கொலோ
சேற்றைக்‌ கழுவ முடையளறு
திளைப்பேற்‌ கொருநாட்‌ டிருமாலே.

38. தெருளாசைப்‌ பட்டறிந்து செங்கண்மால்‌
சேவடிக்கே சேர்ந்த நெஞ்சா
லருளாசைப்‌ பட்டிருக்கு மடியார்முன்‌
செடிநாயேனவனிமீது பொருளாசைப்‌ பட்டிவறிப்‌ புன்பழியே
நனி யிட்டிப்‌ பொரு கண்‌ மானார்‌ மருளாசைப்‌ பட்டதனா னிருளாசைப்‌
பட்டெய்த வதிகின்‌ றேனே.

39-கறையடிக்குள்‌ வெதுப்பொழியக்‌ கலுழன்‌ மிசைக்‌
கார் மழைபோற் கடிது போந்த
விறை யடிக்குத்‌ தினை யுருகா விரும்புமன
மெமனெனும்பேர்‌ யார் சொற்‌ றாலும்‌
மறை படிக்கும்‌ பதைபததைக்கும்‌ பல்கோடி
நினை நினைந்து பரிவு கூரு
மறையடிக்கு முடிக்குமிக வழுத்து மரி
யெழுத்துமெண்ண மாட்டா தந்தோ.

40-தேக நிலை யாத நிலை செத்தபிண மோதுஞ்‌
செல்வ நிலை யாதபடி சொல்வரிர வாளர்‌
போக நிலை யாமை வலி போமுதுமை கூறும்‌
புத்திநிலை யாதமுறை பித்தர்மொழி வாரான்‌
மோக நிலை யாமைசொல மூடமன முண்டு
முற்று நிலை யாமை மறை கற்றவர்கள்‌ சொல்வார்‌
சோக நிலை யாத நிலை சொல்லி யருள்‌ வாரார்‌
சோலை மலை மேவி வளர்‌ நீல நெடு மாலே.

41-முடியிருக்கு நெடுமாலுக்‌ கடிமைசெய
முயலாத மூடமூர்க்கச்‌
செடியிருக்கு மனக்குரங்கு குடி.யிருக்கு முடையாக்கை சிதையா தேயிப்‌
படியிருக்கு மெனநினைக்கும்‌ பாமரர்க்குச்‌
செத்த பிணம்‌ பறை யாற்‌ சாற்றி
நொடியிருக்கு மெனக் கருதீர்‌ நுமக்குமிது
வழியென்று நுவலு மாலோ.

42. ‘குகை கண்டு தனி யிருந்து குல தெய்வம்‌
வரானாக்காக்‌ குருட்டு நெஞ்சாற்‌
பகைசண்டு சினந்துமுறு பணங்கண்டு
விழைந்தும் விழிப்‌ பான லார்புன்‌
னகை கண்டு மருண்டுமவர்‌ நடங்கண்டு
வியந்‌து மொழி நாள்க ளெல்லாந்‌
தொகை கண்டு துறவார்க்குச்‌ சுடுகாட்டிற்‌
புகை கண்டு சொல்லு மெய்யே.

43. மறி கேட்டு வாங்கியதை மலைக் கடவுட்‌ கென்று
வதைத்திட்டுக்‌ கொலை படை.த்து வருள் படைத்த வேலன்‌
குறி கேட்டுக்‌ களியாட்டுக்‌ குணக் கூத்து மாடிக்‌
கும்பிட்டுப்‌ பெற்ற பயன்‌ றுன்பத்தின்‌ வேறோ
செறி கேட்டுப்‌ பவக் கடலிற்‌ றிரையிடர்க்கு நொந்து
தீ வினைக்‌ கரா வாயிற்‌ சிக்குவது தீர்ந்து
நெறி கேட்டுப்‌ பெரு வீட்டி னிலைத்தினிது வாழ
நீர் நினைதி ராயினரி பேர் நினைதிர்‌ மாதோ.

44. தீவினைப்‌ பெருக்காற்‌ பொருடனைப்‌ பெருக்கிச்‌
சிறு புகழ்க்‌ கொரு சில விடுவீர்‌
கோவினைத்‌ தொலைத்துச்‌ செருப்பினைக்‌ கொடுக்குங்‌
கொள்கைநுங்‌ கொள்கையே யம்மா
காவினைச்‌ சயித்த கொடையினா லடியர்‌
கருதிய தன்னையு மளிக்குத்‌
தேவினைப்‌ பழிச்சி யாவையுங்‌ கழித்துச்‌
சிறப்பினை யுறப் பெறா தீரே.

45. மா கனக மேருவென நிதியி ௫ந்தென்
மகிழ் பெண்டிர்‌ மக்களொடு வாழ்விருந்தென்‌
றேக நக மெனவிருந்தென்‌ றெளித்த தாலென்‌
செக முழுது மடிமை புகுஞ்‌ செயத்தி னாலென்‌
போக நகராதிபதி யாயி னாலென்‌
பொல்லாத விரணியரா வணர் போன்‌ மாள்வர்‌
கோகனக மலர்ந்தருணீர்‌ கோத்த கொண்டல்‌
கோதண்ட கோளரியைக்‌ கூறா தோரே.

46-திரவியமொன்‌ றுறுமாயிற்‌ றிரைமேற்‌ செல்வர்‌
தீ மலையின்‌ மிசைச் சேர்வர்‌ சீயத்‌ துஞ்சா
‘திரவியல்வெங்‌ கான்சுரம்போ யிளைப்பர்‌ வையத்‌
தினைப்பிளந்து பாதாளத்‌ திடையும்‌ பார்ப்பர்‌
உரவிய கார்‌ வானத்தும்‌ பறப்பர்‌ பூத
மொன்றுக்கு மஞ்சார்த முயிரு மாய்ப்பர்‌
விரவிய விவ்‌ வினையினொரு தினையும்‌ தெய்வ
விழுப் பொருளைப்‌ பெறப்புரிய விழைவோர்‌ யாரே.

47-அன்புருக்கொ ளசோதைத்தாய்க்‌ கெளிய னாகி
யழனுருக்கொள் வஞ்சத்தாய்க்‌ கெமனே யாகித்‌
துன்புருக்கொள் பொரு களிற்றை மாய்த்துத்‌ தாய
தொழு களிற்றைத்‌ துயர்‌.தீர்த்துத்‌ துகடீ ருள்ளத்‌
தின்புருக்கொள்‌ சேடன் மிசை யினிது சாய்தந்தன்‌
றிடருருக்கொள்‌ காளியனை யடர்த்த லானே
வன் புருக்கொள்‌ கொடியார்க்கு மடியா ருக்கு
மன்னிறைவ னருண் முறைமை மதிக்க லாமே.

48-கங்கைக்‌ கரைக்குக்‌ குகப் பெருமான்‌
கருதும்‌ பம்பைக்‌ கரைக்கநுமான்‌
சங்கம்‌ கடலின்‌ பெருங்கரைக்குச்‌
சார்ந்த வொருவீ டணனிவரைப்‌
பங்கத்‌ துறையும்‌ பள்ள நிலம்‌
பாயும்‌ புனல் போற்‌ கலந்த விறை
துங்கத்‌ தினிய திருவருளே
தொலையாப்‌ புணையாந்‌ துயர்க் கடற்கே.

49-ஓலை கட்டித்‌ தூதேகிப்‌ பாண்டவர்க்கா
வூரிரந்தா னுவந்து சாத்த மாலை கட்டிக்‌ கருள் புரிந்‌தான்‌ மண்ணினுற்றார்‌
புண்ணியத்தின்‌ வாழச்‌ சேது
வேலைகட்டி வைத்த பிரான்‌ யருள் கடலிற்‌
குளித்தற்கு விரகி லாமே
சேலை கட்டி விழி வலைக்கொள்்‌ தெரிவையர்கா
தலின்மூழ்குஞ்‌ சிதடன்‌ யானே.

50-பிரமனை முன்‌ படைத்தவற்குப்‌ பெரு மறையைப்‌
பிறக்குவித்த பிரம மென்றே
பரமனை முன்‌ றுதிக்கறியாப்‌ பாழ்ம் பிறப்பு
மானிடமாய்ப்‌ பார்க்கப்‌ பட்ட
கரமனைத்துக்‌ கழுகனைத்துக்‌ கழுதனைத்துக்‌
கல்லனைத்துக்‌ கனியு நஞ்சா
மரமனைத்தென்‌ றெண்ணி விடா மதியுடையேற்‌
குவமையிந்த வையத்‌ துண்டே.

51-தனக்கு மே லொருவருள ரென வெறுக்குஞ்‌ _
சழக்குயிரின்‌ மமதையினைச்‌ சாற்றி னுற்றா
ருனக்குமேற்‌ கடவளுள னென்ற போதும்‌
உருத்தவரைக்‌ கொலை சூழு முதற்குச்‌ சான்று
சினக்குமே லுலகமெலா நடுங்கா நிற்குந்‌
,தீயவிர ணியனென்று தெளிவா ரன்னா
னெனக்குமே லில்லை யென வகங்கரிப்பி
னெல்லையினின்‌ றேற்கிறைவ வென்செய்‌ வாயே.

52-முற்றத்‌ துறந்த முனிவரரு முதல்வா நின்பான்‌ முறையிட்டுச்‌
செற்றக்‌ காம மயக்கமெலாந்‌
தீரு மாறு வரங்கிடப்பக்‌ குற்றக்‌ கலமா யுளவடியேன்‌
குறைவேண்‌ டுவது முறையோதான்‌
தெற்றத்‌ தெளிந்த சடகோபர்‌
தெவிட்டா தருந்துந்‌ தெள்ளமுதே.

53-அரனைப்‌ படைக்குந்‌ திசைமுகனை
யலரிற்‌ படைக்குந்‌ திரு நாபி
வரனைப்‌ படைக்கு மனப் பெரியார்‌
மலர்ந்த செழுந் தாமரைப் பதத்துச்‌
சிரனைப்‌ படைக்க மாட்டாத
தேகம்‌ படைக்குந்‌ தீய வினை
மரனைப்‌ படைத்து வளர்க்கின்‌ ற
மதியைப்‌ படை.த்தேற்‌ கருளுளதோ.

54-காலமெலாங்‌ கணிகையரிற்‌ கழித்து மூத்த
காரிகையாள்‌ காந்தனைப்பின காண லுற்றுச்
சீலமெலாஞ்‌ திறந்த குணத்‌ தெரிவை யொப்பச்‌
செய்த பிழை பொறுக்குவென்று செப்பல்‌ போல
வாலமெலாந்‌ திரண்டனையே னந்தோ வாசைக்‌
காளாகி நாடொலைத்தே னன்ப ரேய்ப்ப
வோலமெலா மிடுகின்றே னிதற்கு நீயு
முற்றருள்வையோ வறியேன்‌ பெற்ற தேவே.

55-கிளை யெலா நச்சுக்‌ கனி பழுத்‌ திருக்குங்‌
கெட்ட தீ மரத்தையும்‌ வித்து
முளையெலாங்‌ கெடுத்துப்‌ புனலெலாம்‌ வீணாய்‌
முடித்து நல்‌ லெருவெலாந்‌ தீத்துக்‌
களையெலாம்‌ விளைக்‌ குங்‌ களரையு மனையேன்‌
காண்பனோ நின்னையு மாயர்‌
அளையெலா மடிய ரன்புபோ லருந்து
மய்யனே தெய்வ நா யகனே.

56.மறப்பினுக்கோ ரறையா குமை யிருட்டுச்‌
சிறையாகு மயற்கூ டாகும்‌
இறப்பினுக்கும்‌ பிறப்பினுக்கும்‌ படியாகும்‌
நரகினுக்கோ ரேணி யாகுந்‌
துறப்பினுக்குப்‌ பகையாகுந்‌ துர்க் குணத்துக்‌
குறவாகுந்‌ துகடீ ரெந்தாய்‌ சிறப்பினுக்குச்‌ செல்லாது செய் சுவராந்‌
தீமனமென்‌ செயத்தத்‌ தாயே.

57-ஓழுக்கினா னீத்த வுயர் முனி வரரு
முள்ளமுக்‌ கறவுனை யுள்வா
ரிமுக்கினா னளறே யெனுங்குடும்‌ பத்தோ
டிரண்டறப்‌ பொருந்தழுக கிருநீர்‌ முழுக்கினாற்‌ போமோ வுன்‌ றிரு வருளின்‌
மூழ்கினா னல்லது வினையைப்‌
புழுக்கினான்‌ முளைக்கா வித்தெனப்‌ புரிந்து
போற்றினார்க்‌ காற்றுமா தவனே.

58-உடலிந்தே யிடரினுக்கொன்‌ றுன்ன லெல்லா
முரலிருந்தே யுலக்கையினுக்‌ கஞ்சல்‌ போலாங்‌
குடலிருந்த தொடக்கறுத்துக்‌ கோத்த சுற்றக்‌
கொடும்பாசப்‌ பிணிப்பவிழ்த்துக்‌ கொண்ட பெண்ட
மடலிருந்த பெரும்பேயி னாசை யோட்டி
யகப்பற்றும்‌ புறப்பற்று மனைத்தும்‌ வீட்டி
மடலிருந்த துளவலங்கன்‌ மாயன்‌ நூய
மலரடிக்கீ ழ்ப்‌ புக்கொடுங்கா மடமை நெஞ்சே.

59-சரிந்த குழ றாங்கிய கண்‌ கரமும்‌ பற்றத்‌
தளர்ந்த வுடை பிடித்த மலர்க்‌ கரமும்‌ விட்டுத்‌
தெரிந்த வுளத்‌ தொளிர்கின்ற தேவே யுன்னைத்‌
தேர்ந்தொருகாற்‌ கூப்புதலைச்‌ செய்யும்‌ போழ்‌தே விரிந்த குணப்‌ பாண்டவர்தம்‌ வென்றி போல
விளங்குதவக்‌ கொடிமான மெய்யே காத்துப்‌
புரித்தபெரும்‌ பாரதமும்‌ போதா தென்று
புலம்பியதுன்‌ றிருவருளின்‌ பொலிவே யம்மா.

60-துட்டவிரா வணனாவாற்‌ சுடுகென்‌ றோதத்‌
துனைந்தெழுந்து புகுந்தன்பாற்‌ றொழுது தீயர்‌ கிட்டவிரா முழு முதலே சரண மென்று
கிளத்திரங்கும்‌ வீடணனைத்‌ கய னென்னப்‌
பட்டவிராக்‌ கதன்றம்பி நம்பாற்‌ கொள்ளப்‌
படாதென்ற கவி வேந்தை மறுத்து நல்கி
யுட்டவிரா வன்பின்வரி விராவ ணற்கு
முற்ற பய மளிப்பலென்ற வுரையே தஞ்சம்‌.

61-பிரமாண்ட கோடியெலாம்‌ பெற்றுக்‌ காக்கும்‌ பிரமநீ யவரித்த பெற்றி தேறா
துரமாண்ட கவியளனத்து முவரிக்‌ கூலத்‌
துறுகணுனக்‌ கெய்தாமை யளிக்க வோர்ந்து
கரமாண்ட வால்பிணைத்துக்‌ கவிந்து கொண்டு
கடி மதில்போ னின்றிளைப்பாற்‌ கண்க டுஞ்சச்‌
சரமாண்ட வில்லினொடுத்‌ தம்பி யோடுத்‌
தாண்டியவை காத்தவரு டமியேன்‌ றஞ்சம்‌.

62-திசைக்கும்‌ வெப்ப வினைத் துயரைத்தெறு இடத்த வச்ச வரிப் பெ ணருத்திய
திருக்க னிக்கு மணித் துணை கட்டிய
செவிக்க சட்ட னளித்த மூடைச்சவக்‌
தசைக்கு மற்பி னுருக் கொளுத்தருள்‌
தழைத்த பத்த ருடற் புள கத்தொடு
தழற்கணுற்ற வரக்கை நிகர்த்துளன்‌
தனித்து ருக்க முறத்தமி மிற்பொழி
றிசைக்கும்‌ வெற்றி யுருக்கு மிணிக்குயி லெழிற் கை பற்றி யதற்கு வெறுத்தர வெனக் கொ தித்த செருக்க னிடைக் குலத்‌
‘திலச்சை யற்ற சழக்க னெனச்சொலும்‌
வசைக்கு முத்தி கொடுத்து மறைச்சிரம்‌
வழுத்த நிற்கு மடிப்பது மத்தலான்‌ மனத்தை வைக்க நினைப்ப கொல்‌ கற்றவர்‌
மயக்க மிக்க பவக்கடல்‌ வற்றவே.

63. விது வைத்த தலைச் சிவ னுக்குமலர்‌
மிசைவைத்த மறைந்பிர மற்குமிறை
புதுவைத்தல முற்ற முதுக் குறைவி புனை புத்தமிழ்‌ தத்தமி மிற்குமுடி மது வைத்த விதழ்த் தொடை யற்கு மகிழ்‌
மனம் வைத்து மணத்தைய ஸித்தபுயல்‌
பொது வைத்த நிதிக்கு நிகர்த்தவருள்‌
டொழியத்‌ தழைகிற்பது முற்றுமரோ.

64. சேப்படைத்த சவனயனே யெனலான
தெய்வதங்கள்‌ திகழ் மந்‌ தாரக்‌
காப்படைத்த விந்தரனே தலையாய
தேவர்நரர்‌ கனக மேரு
தேப்படைத்த பலகாடி யண்டமுதற்‌
பூதமெலாந்‌ திருமால்‌ நாபிப்‌
பூப்படைத்த தென்‌ றவன்பேர்‌ நாப்படைத்த
பயன்கொள்ளப்‌ புகல்வர்‌ மேலோர்‌ .

65. பரகாலனை முதலாகிய பழையோ ரருளானே
கரவாதுள மறவாதுன கழலே தொழு வேனே
நரநாரண வரிவாமன நளினாசனி நாதா
வரகாரண சகன்மோகன மதுசூதன மாலே.

66-துருவனுக்குயர்‌ நிலைகொடுத்தன
துருபதைக் கவிழ்‌ துகில் வளர்த்தன
சுமுக னுக்குள பயமொ ழித்தன வுலகாளும்‌
ஒருவ னுக்கெழில்‌ வளை தரித்தன
வுரைக ரிக்குயர்‌ கதி படைத்தன
வுலம ழைக்கொரும லையெ டுத்தன வுமை கேளவன்‌
சருவனுக்கிர வொழிய விட்டன
தசமுகற்கடு கணை தொ டுத்தன
சகல ருக்குநல்‌ வரம்விளைப்பன வடி நீழன்‌
மருவெனக்கிக பரம ளிப்பன
வடம லைக்குறு கடவு ணற்பொல
வரை யெனத் தரு தரு வெனப்படு புயமாதோ.

67-முறை க டந்து பிறர் ம டந்தை
முலை புணர்ந்த பழுதெலாந்‌
தறை கி டந்து புனல் படிந்து
தழலி னின்று மொழியுமோ
சிறை கி டந்த செனனம்‌ விஞ்சி
நரகு ழந்து தவிருமோ
மறை க டந்த வரமு குந்த மனமி ரங்கி யருள்வையே.

68-தானே வழங்க வறியாத
சலவா ரியையுன்‌ றயையினுக்கு
நானே யுவமை நவில்வதையு
நயந்துந்‌ தன்னை நல்கலிலா
வானே வளருங்‌ கற்பக மா
மரத்தை நினக்கொப்‌ புரைப்பதையுங்‌
கோனே நிளையுந்‌ தொறுமெனது
கொடிய மனமுங்‌ குலைவுறுமே.

69.மாறு பட்டுரிய கொழுந னுக்கியைய
வாழ்த லற்று மயல்‌ மனைகளில்‌
வயிறு பட்ட பசி தணிய லுற்றுவினை
வழியி யற்றிவரு கூலி கொண்‌
டூறு பட்டசிறு நிலையி னிற்குமவ
ளொருவ னுக்கென முன்‌ னாளினி
லுடைமை பட்டு மண முடிய லுற்றதனை
யுணர்வின்‌ வைத்து நிறை தன் மனம்‌
வேறு ட்டிலளு பட்‌ மாகி மற்ழெதையும்‌
விழைத லற்ற வளு மாயினால்‌
மெலியு மத் தெரிவை குணனை மெச்சிவரன்‌
மேவு காலமுள தாகுமால்‌
தூறு பட்டவினை யேனு னக்கடிமை
தொடர் விலிட்டுமுனை யல்லது
தொழ நி னைத்தவனு மிலையெ னத்தெரிவை
துளவு தொட்ட .முடி மாயனே.

70-தாயிருந்தும்‌ முலையினிற்பால்‌ தழைத்திருந்துந்‌ தரைக் கிடக்குந்‌ தருணந்‌ தானே
வாயருந்த மாட்டாத மகவினுக்கு
வாயின் முலை மடுக்குந்‌ தாய் போல்‌
நீயிருந்து நின் கணருள்‌ நிறைந்திருந்தும்‌
யானருந்தா நிலை கண்‌ டென்கண்‌.
மேயிருந்து நீயூட்டா வெளின்‌ மெலிவேன்‌
வசையுநினை மேவு மெந்தாய்‌.

71-அனும னுக்கு நளிர்க வென ச்சொலி
யழலின்‌ வெப்ப மகற்றி யளித்தவள்‌
அடல ரக்கர்‌ சிறையை யறுப்பதற்‌
கணுமு யற்சியு முற்றில எற்றென முனும யற்கு முதுமறை சொற்றவன்‌ முழுது யிர்க்கு முலகு படைத்தவன்‌
முதிரி ருட்கொர்‌ பரிதி யளித்தவன்‌
முகிலி டர்க்கு மலைமயை யெடுத்தவன்‌
தனுவெ வைக்கும்‌ நிறுவி வளர்ப்பவன்‌
தனய ருக்குண்‌ முலையை யமைப்பவன்‌
தழை. பயிர்க்கு மழையை விடுப்பவன்‌
தரணி துக்க மொழிய வுதிப்பவன்‌
இனும னுக்கு கொடிய பவக் கடல்‌
இழிய வைப்ப னெடுப்ப னெனக்கவன்‌
எழின்மி குத்த வருளின்‌ முறைப்படி .
இனிதி ருப்பதை யல்லது மொல்லுமே.

72. பொற்றை யுடலைப்‌ புறங்கழுவிப்‌
பொழுதே புசித்துப்‌ புனையர வப்‌
புற்றை விழைந்து புணர்ந்துறங்கும்‌ புன்மை யலது புவியினிடை
மற்றை யெதுவு மின்பமென
மதியேன்‌ பரமா வுனைத் துதியேன்‌
இற்றை நாளுன்‌ னடி யெண்ணி
யிருப்பேற்‌ கென்னீ யெண்ணுவதே.

73. கரியுந்‌ திருவீ டணனுமடத்‌
காகா சுரனுந்‌ துருபதையும்‌
பரியு மிடரா னு ளதநடுங்கிப்‌
பகவ னுனையே பற்றியபோ
துரிய தூய்மை முறை புரிய
வுணர்ந்து .மிலரா லன்னவர்க்கு
விரியு மரிய பெருங்கருணை
வினையேன்‌ தனக்கு முளதாமே.

74. பாந்தண்‌ மணிவாய்‌ விடமருத்திப்‌
படரு மழலி னிடைவீழ்த்திப்‌
படையி னறுத்து மலையுருட்டிப்‌
பதைக்க வதைக்கும்‌ படி.புரிந்துந்‌
தேந் தண்‌ டுளவத்‌ தொடைகமழுஞ்‌
செழுந்தாண்‌ மலரி னழுந்துமனந்‌
திறம்பாச்‌ சிறுவன்‌ மொழி காக்கத்‌
திருத் தூ ணுதித்துத்‌ தனைக்குவிக்குங்‌ காந்தண்‌ மெலியும்‌ விரற்கரத்தான்‌
கருத்தோன்‌ றிடங்காண்‌ டலைவேட்டுக்‌
கனக னுரங்கீண்‌ டுடற்றொடக்காற்‌
கரிய குடரு மெடுத்தணிந்து பூந்தண்‌ மாரி சுரருவந்து பொழிய வெல்லா வுயிர்க்குமளி
பொங்கி வழியுஞ்‌ சிங்கப்பிரான்‌
புகழே நினைவேற்‌ கிகழ்வுளதோ

75. எல்லா வுயிரு மெம்பெருமாற்‌
கினிய வுடலா யிருக்குமுடல்‌
பொல்லா தொருநோ யுறினதனைப்‌
போக்க முயற லுயிர்க்கன்‌ றித்‌
கல்லா வுடற்கு முளதாமோ
கடவுள்‌ கழற்கே யறத் தீர்ந்த
நல்லார்‌ தமக்குத்‌ தாமுயலார்‌
நங்கோ னருளி னடப்பாரே.

76. நம்பிரான்‌ காளிங்க நடன மாடி
நயந்ததனை யநுகரிக்க நயந்தார்‌ தம்மு
ளெம்பிரான்‌ றிருவேட மியைந்தா டன்னி
னிருங்காளி யன்வடிவ மெய்தி னாளே
அம்பிரா னடிக்கமலஞ்‌ சிரமேற்‌ றாங்கு
மருமையினாற்‌ பெருமை மிகப்‌ படைத்தாளன்னாள்‌
வெம்பிரா மனம் பழுத்த விழுத்த பத்தி வினையேற்குத்‌ இனையேனு மேவு மேயோ.

77–வாள் பிடித்த கண்ணியர் தம்‌ மயற்பேயின்‌
பேழ்வாயின்‌ மயங்கி வீழ்ந்து
தேள்பிடித்த கரப்பினுருச்‌ சிதைவேற்குச்‌
சேண்முழுதுஞ்‌ சென்று தாஅய
தாள்பிடித்து வழுத்தவிடாக்‌ கோள்பிடித்‌
சழக்குவிதி தணப்ப தெந்த நாள்பிடித்து நண்ணுறுமோ நண்ணாது
நரகிலெனை நாட்டு மேயோ.

78-ஆசையெலாம்‌ புகவல்ல மனமீ காம
னல்வழியிற்‌ செலவுய்க்கு மாக்கை நாவாய்‌
மாசையெலாம்‌ பண்டமெனச்‌ சுமந்தவாவாம்‌
வன்காற்றான்‌ மறுகுபவ வாரி யோடத்‌
தேசையெலா மிழந்ததன்கண்‌ வினையை யீட்டச்‌
சிறுநாய்க னெனநாயேன்‌ செறிந்தேன்‌ கண்டா
ரோசையெலா மிடவெமனாம்‌.பாறை தாக்கி
யுடையும்போ தென்னாவே னுடைய தேவே.

79-தாழியினுக்குமூயர்‌ வீடு கொ டுத்த முதல்‌ தாமரை யுற்ற திரு மா மகளுக் கழகன்‌
வேழ ம ழைக்குமுன மேவிய ளித்தவரன்‌
வேதமு தற்கலைகள்‌ யாவுமு யிர்த்தபரன்‌
ஏழும ரத்தினையு மூடுரு வச்சிலையின்‌
ஏவை விடுத்தபுய லீரடி யைப்பிடியார்‌
ஆழும்‌ வினைப்பிறவி யாகு மிடர்க்கடலில்‌
ஆவி திகைக்கவுழல்‌ வாரிது சத்தியமே,

80-ஒருகூற னுமை கேள்வ னொளிர்நாபி
யுறையாதி மறை வாண னொடு மாதவர்‌
புருகூதன்‌ முதலாய சுரர்யாரு
மறியாத பொருளாய தனிமாமுதல்‌
குருகூரர்‌ பரகாலர்‌ குளிர்கோதை
யதிராசர்‌ வரயோகி குருதாள்களின்‌
முருகூரு நறைவீசு தமிழோத ,
வெனையாள முனமே செய்‌ தவமேதரோ.

81-எய்தாலும்‌ வால்குழைக்கு மிருஞ்சுணங்கன்‌
பெருங்குணனு மில்லே னின்றேன்‌
பெய்தாலுங்‌ கைப்பறாப்‌ பேய்ச்சுரைக்காய்‌
போல்கின்றேன்‌ பெரு நூறம்மேற்‌
செய்தாலு மீவறியாச்‌ செல்வர்கடைக்‌
குழன்றிடர்கொ டீய னேற்கு
வைதாலும்‌ வீடளிக்கு மால் பதத்தை
முடிசூடி வழுத்த லாமே.

82-தூய நீயுயிர்‌, யாவும்‌ வீடு
துலங்கு மாறருள்‌. செய்யினுஞ்‌
சுத்த சத்துவ ருக்க.லாதொரு
துட்ட னேற்கது கிட்டுமோ
தீய ராவண னேனு நம்மொடு
சேர்க வென்ற தினத்திலே
சீல வீடண னன்றி மற்றெவர்‌
தேவ நின்னடி. சூடினார்‌
பாய மாமுகி லேழும்‌ வாழிய
பாரி லேமழை பெய்யினும்‌
பைந்த ருக்குல மல்ல தங்குள
பட்ட தாருத ழைக்குமே
ஆய யாவ முண்ண நல்குறு
மன்ன சாலையு ளாயினும்‌
அறப்ப சித்தவ ரன்றியேவ
ரருந்தி யின்புறு வாரரோ..

83–நீழலொன்று மிலாத பாலை
நெஞ்சு ரத்தி னிருந்ததோர்‌ நிறை குழைத்தரு வடிய டுத்தவர்‌ நெடு வெ யிற்றுயர்‌ தீர்பபோற்‌:
கேழ லென்றொரு ஞான மேனி
கிளர்ந்து கொண்டுல கங்களைக்‌
கீறு வெண்பிறை மாற மைந்தொளிர்‌
கேடில்‌ கொம்பிடை யேந்தினார்‌
வீழ லென்றும்‌ விழாமை யென்றுமிம்‌
மேதி னிக்கண்‌ மிடைந்த
தீ வினை ந ருங்கெடு குணமெ னுங்கறை
விரவு றாம லிருப்பரால்‌ –
தாழ லொன்றுமி லாது போயவர்‌
தாள்‌ டைந்தவர்‌ யாவருஞ்‌
சார்கொ டும்பவ நோயொ. ழித்துயர்‌
தணவி லின்படை வாரரோ.

84-‘திலத்தளவும்‌ பிறர்க்குதவாத்‌ தீயமன னாலே
சிதலைதின்‌ ற மதலையெனத்‌ இனமெலிந்து சாய்வேன்‌
சலத்தையடை தொறும்வேதத்‌ தனிக்கடவுள் யுன்னைத்‌
தயாவிலியென்‌ பேனென்றன்‌ சழக்குவினை யென்னேன்‌
நலத்த நெறி நடக்கறியா தடி யிழுக்கி வீழ்ந்து நனி துயரான்‌ முனி வெய்தி நடுங்குகர மோச்‌சத்‌
தலத்தை யறை குற்ற தளர்‌ நடைப் பருவக்‌ குழவி
தன்மதியென்‌ றுன்மதியிற்‌ சாலவழ கிற்றே.

85-தேனும்‌ பாலுங்‌ கன்னலும்போற்‌
றெவிட்டாச்‌ சுவைய தீந்தமிழின்‌
யானும்‌ பாட வல்லனென
ஞாலம்‌ புகழ்த னனிவிருப்போ
வானும்‌ பாரு மளந்தசெந்தா
மரைத்தாள்‌ விருப்போ நீயறிவை
மீனும்‌ பாழி யாமையுமாம்‌
விமலா நின்சீர்‌ விளம்புதற்கே.

86. தழலை நிகர்த்த துயர்ப் பிறவி
தழைக்கு நிலனா யயன்‌ றிருத்து
மழலை மொழிப்பெண்‌ மயிலனையார்‌
மயற்பேய்‌ பிடித்த மனக்குரங்குன்‌
கழலை வழுத்தி யமுது சுவை
காணா தினிய கரும்பிருக்க
விழலை வளர்க்கு மாத ரைப் போன்‌
மெலிதல்‌ விதியோ விழுப் பொருளே.

87. விள்ளற்‌ கரிய தொரு வீடும்‌
வேண்டா விறலின்‌ விழுப் பெரியார்‌
கொள்ளக்‌ குறையாப்‌ பெருங்கருணைக்‌
குவாலை முகந்து கொளவளிக்கும்‌
வள்ளல் கடவுள் திருவடிப்பூ மணக்காப் பனுவல் மாலை எலாம்
தள்ளப்‌ படுமா லீமம்சைத்‌
தயங்கு மாலை தனை நிகர்த்த

88-பவத்தைப்‌ புகுவேன்‌ பர மாயான்‌
பாவிற்‌ குழல் போ லுழல்‌வேனோ
தவத்தைப்‌ புகுவார்க்‌ குளதாமுன்‌
றயைதான்‌ றமியேற்‌ கிலதாமே.

89. நீயிருக்குங்‌ கோயிலென.நினையாம
லுடம்பிதனை நெடிய காலம்‌
பேயிருக்கும்‌ பாழ் மனையிற்‌ பெருங்கேடு
பெறவிகழ்ந்து பிறருக்‌ கச்ச
மாயிருக்குந்‌ இீயவினைத்‌ தூறுமண்டி
யழியவிட்டே னந்தோ சேய்க்குத்‌
தாயிருக்கு மாறிருக்குந்‌ தடங்கருணைப்‌
பெருங்கடலே தம்பி ரானே.

90. முத்த மிரங்கு முறுவனல்லார்‌
முலைக்கண்‌ மோத முரணழிந்து
நித்த மிரங்கும்‌ வகையுடைந்த
நெஞ்சப்‌ புணையே துணையாய்ப் போய்‌
நத்த மிரங்கும்‌ பவக்கடலி. னனிமூழம்‌ குவதொன்‌ றல்லாதுன்‌
சித்த மிரங்கும்‌ படிவேறென்‌
செயவ லேன் யான்‌.தெய்வதமே.

91. தேறா வொருவன்‌ றெங்கிளநீர்‌
செவ்வே நிறைந்த தீங்காயைச்‌
செங்கை வருந்த வசைத்த சைத்துச்‌
சிறிதுந்‌ தளும்பா வகையோர்ந்து
மாறா மிதுநீ ரிலதென்று
மருண்டு மாந்த முயலாது வறிதே யிகழ்ந்து விட்டாங்கு
வைய முழுது நிறைந்தெவர்க்கும்‌
பேறா யருளுக்‌ குருவான
பெருந்தே வூனப்‌ பேய்விழிக்குப்‌
பிறங்கா வியல்பா னிலையென்‌ று
பேணா திகழ்ந்து பெரும்பிறிதாய்‌
நீறாய்‌ நிலத்து விளிவேனை
நெடுமாற்‌ கேநீ யடிமையென
நினைவித்‌ தெடுத்தாண்‌ டதுஞான
நிதி போன்‌ மாற னெறித்தமிழே.

92. நெஞ்ச மென்ற கருங்கல்‌ கொண்டிடர்‌
நீர வெம்பவ வாரியி
னீடு செல்ல நினைந்து மூழ்குறு
நீச னேனகி லேசனே
தஞ்ச மென்றன னஞ்ச லென்‌ றரு
டந்தி டாயெனி னின்னையே
தந்தை தாய்கதி யென்று வேதம்‌
விதந்த துந்தவ றாகுமே கஞ்ச நாண்மல ரந்த ணன்றரு
கங்கை மோலிய ஸிந்திரர்‌
காசி லாதப ராச ராதியர்‌
காண வாசைகொள்‌ சேவடி
வஞ்ச னேனும வாவி னாலது
மாறெ னாநினை வாயெனின்‌
மாசு ளேற்கென வேறு பாதம்‌
வகுத்தி லாதென்‌ மாயனே.

93. முழுதுந்‌ தெளிந்து சலனங்கொ ளாது
முதுகுன்‌ றிருந்த சுனையிற்‌ பழுதின்‌ றிருந்த புனலின் கண்‌ வந்து படர்திங்க ணீழல்‌ படல்போற்‌று
ஓழுதொன்று தூய ருளமீது வந்து
சுடர்கின்ற சோதி யெனையே
கழுதென்று நின்ற கடையே னெனாது
கழறந்து வீடு தருமே.

94. வெருடருங்‌ கூற்ற மேற்றவெத்‌ நரகின்‌
விமுமமே கெழுமியும்‌ பல்கா
லுருட.ரும்‌ பிறவி யெனைப்பல கோடி
யுறுவதே பெறுவதாய்ப்‌ பொல்லா
இருடரு ஞாலத்‌ திடராலா முழந்து மிம்மியுங்‌ கழிந்திலா தந்தோ.
தெருடருந்‌ தேவுன்‌ னருளையு மறிக்குந்‌
திறத்‌த்‌ தென்‌ தீவினைத்‌ திரளே.

95. வான் மறந்த காலத்தும்‌ வழங்கு புனற்‌
பேராறு மான நின்னின்‌
றூன்மறந்த யோகியர் தமுளமறந்து
பருகவரு ளொழுகஈ நிற்ப: ,
தான்மறந்து நாவற்று நலிவெல்லா
முணர்ந்திலையே நற்றாய்‌ பி
‘தான்மறந்துந்‌ தான் மறவாள் எனல் பொய்யோ
தரைகடந்த சரணத்‌ தாயே.

96. உனக்குரிய வருட்கடலிற்‌ றிளைக்கும்‌ போதா
வொருதுளியிற்‌ றுளியெடுத்திங்‌ குரைக்கப்‌ புக்க
தெனக்கினிப்ப தென்னுமந்த வேது வன்றி
யாதுமோர்‌ பயன்கருஇ யில்லை கண்டாய்‌
‘தனக்கினிக்கு மெனத்தாய்ப்பா லுண்ப தல்லாற்‌
றன்னுடலம்‌ வளர்ப்பதெனச்‌ சற்றுப்‌ பிள்ளை ‘
மனக்கணினைப்‌ பில்லாத வாறு போல்வேன்‌
வரத்தவத்த ரமுதமென மடுக்குந்‌ தேவே.

97. மத்தேறு முதலாகப்‌ படாதனபட்‌
டுயிர்க்கருள வருமாத்‌ தெய்வம்‌
பித்தேறு மகவுக்கும்‌ பெரிதிடருற்‌
றுணவருத்தும்‌ பெற்றாண்‌ மான
தத்தேறு திருக்கரத்தான்‌ ஞாலமெலா நனியூட்டு நன்றி தேறார்‌ செத்தேறு பாடைமரஞ்‌ செய்பாவ
மென்னென்று செப்பு மாறே.

98-நலத்து மருந்தீங்கே நயக்கும் வெந்தீயேனாக
நாட்டமுதமே பெய்த கலத்துளும் கயப்பே சுவைக்குறும் இயல்பேன்
கண்ணநின்‌ கோயிலைச்‌ சூழும்‌
வலத்துளு நின்னை மதித்திடா துலக
வாழ்க்கையே மனக்கொள்வேன்‌ வைகு
நிலத்துளு மினிப்போ நீணர குளும்யா
னெடும்பொறை யாகுவே னம்மா.

99. மையோ மணியோ வெனுமேனி
மாயோனடித் தா மரை வாழ்த்தி
மெய்யோ புளக மரும்பவுளம்‌
வெந்தீ மெழுகின்‌ விரைந்துருகக்‌
கையோ தலைமேற்‌ குவித்தொருகாற்‌
கண்ணீர்‌ கலுழக்‌ கண்டறியேன்‌
ஐயோ வவன்ற னருட்பேரா
ற்ருந்த விழைந்தே னழகிதன்றே.

100. எள்ளற்‌ குரிய மனப்பேயார்க்‌
கேவற்‌ றொழில் செய்‌ திளைப்பேனைக்‌
கொள்ளக்‌ கருதிற்‌ -கொடும்பாவக்‌
கோட்டை யகத்தேன்‌ குணமிலென் று
தள்ளக்‌ கருதி னவன்றாளே
சரணம்‌ புகுந்தே னிவையிரண்டால்‌
விள்ளற்‌ கரிய விழுக்கடவுட்‌
கடியே னிடரே விளைத்தேனே.

101. தாய்வ யிற்றிடை வைத்த தார்கரு
தான ருத்தி வளர்த்ததார்‌ தலையி னிற்பொறி யிட்ட தார்நல
தரையி னிற்பெற விட்டதார்‌
பாய்வ யிற்றுயர்‌ போது தாய்முலை
பால்பி லிற்ற விழைத்ததார்‌
பளக றப்பயி றற்கெ னப்பல
பாடை மைப்புவி நட்டதார்‌
நோய்வ யிற்புக லுற்ற காலையி
னொய்தெ டுத்து நிறுத்ததார்‌  நுவலுக்கடை யுதரம்‌ வைத்துயிர்‌
நுதலி யற்பொ டணைத்ததார்‌
நாய்வ யிற்றிகழ்‌ குணமி லேனையும்‌
நன்னெறிச் செல  வுய்த்ததார்‌
நான்மு. கத்தொரு சேய்படைத்தொளிர்‌
நாபி மெய்ப்பொரு ளன்‌ றியே.

102. விழிவழியே தெரிகின்ற பேய்த்தேரை
நீரென்று விழைவுற்‌ நாரும்‌ குழிவழியாய்‌. வழிகுழியாங்‌ குருட்ருநல்‌ லொளியரெனக்‌ குறித்துக்‌ கூறப்‌
பழிவழியே யொழுகியிருட்‌ பாழ்ங்குழியில்‌
வீழ்கிற்பேன்‌ பரமா நிற்கே
வழிவழியா யுளவடியார்‌ மாந்துதிரு
வருட்காசை வைக்க லாமே.

103. பத்திச்‌ சுவையே பழுத்தமனப்‌
பகவ ரமுதப்‌ பழம்பாடல்‌
நத்திச்‌ சுவைதேர்‌. திருச்செவிக்கு
‘நவில்வார்‌ நாவுங்‌ கயக்கும்வெஞ்சொல்‌
வித்திச்‌ சுவையே நவையாக
விளைத்த வருத்த மித்தனைக்கு
முத்துச்‌ சுவைநல்‌ கருட்கடவுண்‌
முனியா யிதுவ முன்னருளே.

104. பீட்டைப்‌ புரிந்த பெருந்தமிழிற்‌
பிறவா நெறியே நனிகாட்டி
நாட்டைப்‌ புரிந்த தெருட்பெரியார்‌
நயந்த கடவுட்‌ பத்திமைதான்‌
கேட்டைப்‌ புரிந்தேற்‌ கணுவேனுங்
இடையா திவைகொண்‌் டுளதெனின்யான்‌
பாட்டைப்‌ புரிந்து படி.றியற்றிப்‌
பாரை மயக்கும்‌ பாதகனே.

105.– செகத்தைப்‌ புரக்கக்‌ கவித்த முடி
இருந்த வெழுதித்‌ தேசெழுதேன்‌
செந்தா மரைக்க ணெழுதியருட்‌
டேனார்‌ வெள்ளந்‌ தெரித்தெழுதேன்‌
முகத்தைப்‌ புதுக்கி யெழுதிமணி
மூறுவ னிலவை முகிழ்த்தெழுதேன்‌
மொய்யா ரகல மெழுதிமலர்‌
முதல்வி கோயின்‌ முடித்தெழுதேன்‌.

106. அகட்டைப்‌ புனைய வெழுதியூல
கனைத்து மடங்கு மாறெழுதேன்‌
அணியார்‌ நாபி யெழுதிமறை
வவனார்‌ வரவை யமைத்தெழுதேன்‌
இகத்தைப்‌ பரத்தை யளிககுமடி வயெழுதி யெமைக்காப்‌ பதையெழுதேன்‌
எழுதா மறைக்கு மரியவனை
யெழுதி யேமாந்‌ திருந்தேனே

707. தன்னையே தந்தையெனச்‌ சார்ந்தார்க்கோர்‌ தந்‌ தையையும்‌
பின்னையே நல்காப்‌ பெருங்கடவுள்‌–முன்னையே
தன்னையே தந்தையெனச்‌ சாரார்க்‌ கநந்தபிதா
என்னையோ நல்கு மியல்பு.

108, கொலைக்களிற்றிற்‌ கொண்ட குளிர்முத்தை யுப்பு
விலைக்குக்‌ கொடுத்த. விதமே–நிலைத்ததமிழ்ப்‌
பாவைப்‌ பிறர்க்குப்‌ பகர்ந்த பிழை, தீர
நாவைக்‌ கழுவினே னான்‌.

109. கற்ற நயித்துருவ காகுபனி. ராகவன்யான்‌.
சொற்ற தமிழ்க்குச்‌ *சுவைதேறார்‌–உற்ற
ஒருங்குலக மெல்லா மொருவாயி னுண்ட
பெருங்கடவுள் அல்லாற்‌*பிற்‌:

*கேள்வியாற்‌. செவிகண்முற்றுந்‌’ தோட்டவருணர்‌
வினுண்ணு மமுதத்தின்‌… சுவையாய்‌ நின்றான்‌” என்பது
கம்பநாடர்‌. . திருவாக்கு… (இராமாவதாரம்‌. ஆரணிய.சவரி பிறப்‌. 7)

——————-

ஸ்ரீ ராமப்பாட்டு

மதியிருக்குஞ்‌ சடைச்சிவனார்‌ மனைவியினுக்‌
குபதேசம்‌ வகுத்துக்‌ கங்கை
நதியிருக்குந்‌ தண்காசி நகர்மரிக்கு
மூயிர்க்கெல்லா நல்கக்‌ கஞ்சப்‌
பொதியிருக்கு மறைமுதல்வன்‌ பொறியழித்து
வீடளிக்கும்‌ பொற்பிற்‌ றென்று
விதியிருக்கு முடிவழுத்து மெய்ந்நாமம்‌
ராமவென விளம்பு வாயே.

2-தாதையார்‌ நாரதற்குத்‌ தந்த நாமம்‌
தவமுனிவன்‌ வான்மீகி சாற்று நாமம்‌
மேதையார்‌ ஞானியார் தாம்‌ விள்ளு நாமம்‌
விபீடணற்குப்‌ பேறருள மிக்க நாமம்‌
தீதையா ருற்றாலுந்‌ தீர்க்கு நாமம்‌
தேவரெலாஞ்‌ செபிக்கின்ற தெய்வ நாமம்‌
சதையா ருயிர் தளிர்க்கச்‌ செய்க நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

3. குரு வடிவ வசிட்டன் மகிழ்‌ கூர்ந்த நாமம்‌
கோசிகனார்‌ வழிபட்டுக்‌ கொண்ட நாமம்‌
கருவடியிற்‌ புகாநெறியே காட்டு நாமம்‌
கவந்தனொடு விராதனுயிர்‌ களிக்கு நாமம்‌
மருவடிய ரெல்லாரும்‌ வாழ்த்து நாமம்‌
மந்திரங்கட்‌ கரசெனவே வகுத்த நாமம்‌
திருவடிக்கின்‌ னமுதாத்தித்‌ திக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌.செப்பு வாயே.

4. இகத்துக்கும்‌ பரத்துக்கு மேற்ற நாமம்‌
* இருக்கனைத்து நாந்தியினி னியம்பு நாமம்‌
மகத்துக்குப்‌ புகல்கின்‌ற மகிமை நாமம்‌
மாதவயோ கியருளத்தே வரைந்த நாமம்‌
முகத்துக்கின்‌ சுவைத்தாக முளைத்த நாமம்‌
மூன்னொரு புள்‌ சிறை முளைக்க மொழிந்த நாமம்‌
செகத்துக்குந்‌ திவியினுக்குஞ்‌ சிறந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* – ராமபத்ரன்‌ விஷயமான “பத்ரங்கர்ணேபி’ என்னுஞ்‌
சுருதியே நாந்தியாதலால்‌ இங்ஙனங்‌ கூறியது.

5. உலகினிலெட்‌. டைந்தினுக்கு ளூயிரா நாமம்‌
உறங்காத வில்வியுளத்‌ துறைந்த நாமம்‌
பலகலைதேர்‌. சரபங்கர்‌ பன்னு நாமம்‌ பாய புகழ்க்‌ கவியரசர்‌ பாடு நாமம்‌
இலகலைவாமழ்‌ வருணன்மகிழ்ந்‌ தேத்து நாமம்‌
இத்திரசித்‌ தனை வதைக்க வெண்ணு நாமம்‌
சிலவிலங்குஞ்‌ செப்பவருள்‌ செய்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.–எட்டு -திருமந்திரம்-அஷ்டாக்ஷரம் ஐந்து சிவ பஞ்சாக்ஷரம்

6. கல்லாருங்‌ கற்றாருங்‌ கற்கு நாமம்‌
* கங்கை முதற்‌ நீர்த்தபலன்‌ காட்டு நாம
வில்லாரும்‌ வீரர் செயம்‌ வேண்டு நாமம்‌
மெய்ம்மைக்கே பரியாய மேய நாமம்‌
சொல்லாருஞ்‌ சொலவேட்குந்‌ தூய நாமம்‌
தோமரக்க ரளத்தச்சந்‌ தோற்று நாமம்‌
செல்லாரு மழையினருள்‌ சிறக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.—*-தீர்த்த ஸ்நாநம் அநந்த கோடி பலதம் ஸ்ரீ ராம நாம அம்ருதம்

7-அரிய குகப்‌ பெருமாளா தரித்த நாமம்‌
ஆயிர நா மப்பயனு மளிக்கு நாமம்‌
பெரியதிரு வடி.பரவும்‌ பெரிய நாமம்‌
பெரும் புண்ணி யப் பயனாப்‌ பிறங்கு நாமம்‌
உரியதந்தை யங்கதனுக்‌ கோது நாமம்‌
ஓன்னாரும்‌ வழுத்துபுக முற்ற நாமம்‌
தெரியவழற்‌ தடவுள் முனந்‌ தெளித்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* “நிற்கின்ற செல்வம்‌ வேண்டி நெறி நின்ற வுயிர்க ளெல்லாங்‌ கற்கின்ற திவன்ற னாமங்‌ கருதுவ திவனைக்‌
சுண்டாய்‌’” என்று அங்கதனுக்‌ குரைப்பது காண்க.

8.–இசையியற்கண்‌ வாயார-வேத்து நாமம்‌
இம்மையே நன்மை தரு மினிய நாமம்‌
தசையறச் சு தீக்கணற்கு நயக்கு நாமம்‌
நமபட.ரு மிறைஞ்சி யகல்‌ நல்ல நாமம்‌
பசையறுத்த பரதனுளம்‌ பதித்த நாமம்‌
பனிமொழியா ளகலிகைநற்‌ பயன்கொ ணாமம்‌
திசையனைத்துந்‌ தொழவுரைத்துத்‌ திருந்து நாமம்‌
ராம நாமமெனச்‌ செப்பு வாயே.–இசைக்கண்ணும்‌ இயற்கண்ணும்‌ என்க.

9. மலய முனி யுலகறிய வழுத்து நாமம்‌
மலரயனே முதற்றேவர்‌ வாழ்த்து நாமம்‌
அலையுமுயிர்க்‌ கெலாமபய மளிக்கு, நாமம்‌
அத்திரி மா முனியறித்த வமுத நாமம்‌
நிலையில் பிறுப்‌ யற வெருவை நினைந்த நாமம்‌
நீண் நகரம் புகுவார் தாம் நினையா நாமம்
சிலைவலவன்‌ சத்துகுக்கன்‌ தேறு தாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

10. எத்திக்கு மெழுமுனிவ ரேத்து நாமம்‌
எவ்வுயிர்க்குஞ்‌ சீவனமா வெண்ணு நாமம்‌
பத்திக்கு மூலமெனப்‌ பன்னு நாமம்‌
பரமசிவ னுமையவட்குப்‌ பகர்ந்த நாமம்‌ முத்திக்கு வித்தாக முன்னு நாமம்‌
முதியவரு மிளையவரு மொழியு நாமம்‌
சித்திக்கு மந்திரமாத்‌ தேர்ந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

17, * தாரணியிற்‌ கலிதெறுவே தாந்த நாமம்‌
சபரிநெடுங்‌ காலமுளஞ்‌ சமைத்த நாமம்‌
பேரணியி னவர்க்குநலம்‌ பேணு நாமம்‌
பிரிய வந சூயை புகழ்‌ பேசு நாமம்‌
ஏரணியுந்‌ திரிசடைக்கு மினிய நாமம்‌
யான்சொலவு மெளிவந்த வின்ப நாமம்‌
சீரணியு முமையவள்முன்‌ றெளிந்த நாமம்‌
சீராம நாமமென்று சேர்க வீடே.

காராரு மேனிக்‌ கருணாகர மூர்த்திசக்
காரா தனையிதுவா வாதரித்து–நாரானே
சீராம நாமத்‌ திருப்பாட்‌ டிவணுரைத்தான்‌-மாரா கவன் கவிஞர் மன்

வரி சிலை நெடியேபன் பேர் படைத்தவர்க்கு
அடியவர்க்கு அடியரும் பெறுவார்
வேர் படைத்த எம் பிறவி யாற்றுவக் குணா வீடு -கம்பர்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.