Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ லஷ்மீ ஹய வதன மந்த்ர மாலிகா ஸ்துதி -ஸ்ரீ கஸ்தூரி ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் —

August 13, 2023

ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் விஷயமான மந்த்ரம்

ஓம் ரிக் யஜுஸ் ஸாம ரூபாய வேதா ஹரண கர்மணே
ப்ரணவ உத்கீத வபுஷே மஹா ஸ்வ ஸ்ரஸே நம–

ஓம்–ரிக்–ய–ஜுஸ்–ஸா –ம–ரூ–பா–ய–வே–தா–ஹ–ர-ண
கர்–ம–ணே–ப்ர–ண–வ–உத்–கீ–த– வ–பு–ஷே -ம–ஹா-ஸ்வ
ஸ்ர-ஸே-ந-ம-32- அக்ஷரங்கள் -அநுஷ்டுப் சந்தஸ்ஸில் ஸ்லோகம் –

ரிக் யஜுஸ் ஸாம வேதங்களைத் தன்னுடைய வடிவமாகக் கொண்டவனும்
வேதத்தை மீட்டு பிரமனுக்கு கொடுத்து அருளியவனும்
பிரணவம் என்றே குறிப்பிடப்படும் -ஸாம அவயவங்கள் ஒன்றான -உத்கீதமே வடிவு எடுத்தவனுமாகிய
அந்தப்பெரிய பரி முகனுக்கு நமஸ்காரங்கள்

இந்த அஷரங்களை முதல் எழுத்தாகாக் கொண்டு ஸ்ரக் தரா -சொல் மாலையாக -21 அக்ஷரங்கள் கொண்ட ஸ்லோகங்கள் கொண்ட மாலை

——-

ஓம் இத் யாத்மானம் அந்தர் நியமித கரணைர் த்யாயதாம் த்யாய தீ ஹாம்
ஓம் இத்யேவ ஸ்வயம் யஸ் பரிஹ்ருத விஹிதம் சித்திம் ஆதாது காம
வக்த்ரே வாஹஸ்ய தஸ்ய ஸ்துதி மதிமிதவாக் ப்ரஸ்துவே தன் மநூத்யத்
வர்ணாத்ய ஸ்ரக் தரா பிர் விம்ருதித விவிதாவத்ய தாராபிரத்ய –1-

புலன்களை அடக்கி ஓம் என்ற மா பெரும் மந்த்ரத்தைக் கொண்டு எம்பெருமானைத் த்யானம் செய்வர் பெரியோர் –
அவர்களுடைய தியானத்தினால் மகிழ்ந்து அவர்களுக்கு குதிரை முகனான எம்பெருமான்
தடைகள் எல்லாவற்றையும் நீக்கி -அவர்கள் ஸித்தி பெற்றிட விரும்பி -ஓம் என்று தானே ஸங்கல்பம் செய்து அருள்கிறான்
ஓம் -ஆமாம் -அப்படியே ஆகுக -ஸத்ய ஸங்கல்பன் அன்றோ –
அத்தகைய குதிரை முகப்பெருமானை மிகவும் குறுகிய சொல் வளமுடைய அடியேன் ஸ்ரக் தரா என்னும் வகையில் பாட விரும்புகிறேன்
இந்த ஸ்லோகங்கள் அவனைப் பற்றியவையே என்பதால்
இதில் சொல் குற்றம்- பொருள் குற்றம்- சொல்பவர் பால் உள்ள குற்றம் -சொல்லும் முறையில் உள்ள குற்றம்
இவை போன்றவை எல்லாம் வலிமையுடன் அணி வகுத்து இருந்தாலும் அவைகளை பொடி செய்து விளங்கக் கூடியவை ஆகுமே

————

ரிக்பி ஸாஸஸ்ய மானோ மஹி மஜூஷி யஜுஸ் யேஷு ஜோ குஹ்யமானோ
ஸாம் நா தோஷ் டூய மானோ முனி ஜன ஹ்ருதயாப் ஜேஜூ ராராஜ்ய மான
நீஹாரோர் வீத ராபா ப்ரதிபட ருசிபிர் கிஞ்சி பாபாஸ்ய மான
ஸ்ரேயஸ் ஸ்தேயோ விதத்தாம் மம ஹித வதன அபிக்யயா க்யாய மான –2-

குதிரை முகன் என்ற திரு நாமத்தால் குலவப்படும் பெருமான் எத்தகையவன் தெரியுமோ என்னில்
அவன் ரிக் வேத மந்திரங்களால் பல இடங்களில் சிறப்பான வகையில் போற்றப்படுபவன்
பெருமையுடைய யஜுர் வேதத்தால் அடிக்கடி சிறப்பான முறையில் பலமுறை ஸ்துதிக்கப் படுபவன்
ஸாம வேதத்தால் நன்கு ஸ்தோத்ரம் செய்யப்படுபவன்
முனிவர்களின் ஹிருதயத் தாமரையில் சிறப்பாக இடம் பெற்றுத் திகழும்படி த்யானம் செய்யப்படுபவன்
அவன் வெள்ளைப் பரி முகன்
அவன் திருமேனி பனிமலையில் ஒலியுடன் போட்டி போடும் கதிர்களை வீசுகிறது
அக்கதிர்களினால் அவன் மிகவும் சிறப்பாக ஒளிர்கிறான்
நம்பிக்கைக்கு உரியனான அவன் நமக்கு நீங்காத செல்வதை அருளும்படி செய்து அருள வேண்டும் –

———–

யச் சத்வச் சாச்ச போத ப்ரஸ்ரமிஹ ஸ நஸ் சந்த மாத்ர ப்ரக் லுப்தா
சிச் சிச் சித்ர ப்ரபஞ்சஸ் திதி கதிர் நியதிர் மூர்த்தி துங்கஸ் துரங்க
பங்க வ்யாஸங்க தூர ப்ரஸ்ரு மரஸர துத் பூதராகா ஸூ தாம் ஸூ
ஜ்யோத்ஸ் நா சச்சாய வித்யா விசர விதரணஸ் தூல லஷோ வலஷ–3-

வெள்ளைக்குதிரை முகமான உயர்ந்த தெய்வமான ஹயக்ரீவப் பெருமாள் ஞானத்தை வாரி வழங்குகிறார்
பனி அற்ற ஸரத்கால பூர்ண சந்திரன் தனது தடையில்லாத கிரணங்களை எங்கும் பரவச் செய்து அமுதை பொழிவது போல் –
உலகை உய்விக்கும் அவன் வாரி வழங்கும் ஞானச் செல்வத்தாலே
தனது நித்தியமான ஸத்ய சங்கல்பத்தினாலே ஸமஸ்த சித் அசித் நிறைந்த ப்ரபஞ்சத்தைக் காத்து அருளி
செயல்படச் செய்து அனைத்தையும் ஆள்பவன்
அப்படிப்பட்ட வள்ளலான வெள்ளைப் பரி முகன் நமக்குத் தெளிவான ஞானப் பரப்பை அளித்து அருள வேணும் –

அ பங்குர கலா தானஸ் தூல லக்ஷத் வமீயுஷே
துங்காய மஹஸே தஸ்மை துரங்காய முகே நம–நடாதூர் அம்மாள் அருளிச் செய்த ப்ரபந்ந பாரிஜாத ஸ்லோகத்தை அடி ஒற்றி அருளிய ஸ்லோகம்

——————–

ஜூஷ்டோ தேவ்யா தயா வ்யாந்தி கமஸ முதய த்ரோஹ ஸம் ரம்ப கர்ஜத்
தைதே யாரண்ய வாஹ த்விஷது திதர வன்யக் சிகீர்ஷாஸ் அகுலஸ்ய
வக்த்ரே வாஹஸ்ய ஹேஷா ஹல ஹல நிநிதே அபூத பூர்வே ப்ரவ்ருத்தே
ப்ராந்த் வோரஸ்தோ அவதீர்ய த்ருத தரம முமாஸ்விஷ்யயா விஸ்மிதாஸ் அஸ்தே –4-

அகலகில்லேன் இறையும் என்று திருமார்பில் நித்ய வாஸம் செய்யும் பிராட்டி
இவர் திருமடியிலே அமர்ந்ததுக்கு ஹேது அருளிச் செய்கிறார் இதில்

வேதங்களுக்கு சிதைவு உண்டாக்கி த்ரோஹம் செய்யும் காட்டு எருமைகளை அடக்க இவனது கனைக்கும் த்வநியே போதுமே
ஹேஷா என்றும் ஹல ஹல ஹல -என்றும் கனைக்கும் த்வநி
அதைக் கேட்டு திருமார்பில் அமர்ந்த பிராட்டி அச்சமுற்று அதிர்ந்து போனாள்
திரு மார்பில் இருந்து இறங்கி அவனை அணைத்துக் கொண்டு வியப்புடன் விளங்குகிறாள்
அனைத்துக் கொண்டே மடி மீது அமர்ந்து உள்ளாள்
இந்த மிதுன சேஷி தம்பதி நம்மை ரக்ஷித்து அருள வேண்டும் –

—————

ஸார ஸாம்நாம் உதார ஸர ஸதர ருசாம் ருத்தி ரந்திர்தி தூரா
பத்ரா வஷ்டம் பயஷ்டிர் விதி நிதி யஜுஷாம் பாக்ய மாதர்வணாநாம்
அங்காநாம் துங்க ஸ்ருங்கம் ஸகது மம துரங்கோத்த மாங்கோ அந்தரங்கே
ஸத்யோ ஹ்ருத் யாநி பத்யான் யபி பரி கலயன் விஸ்வ வித்யா நிஷத்யா –5-

உலகில் உள்ள பல கலைகளும் அளிக்கும் அங்காடி இவனே
இவனே சாம வேதத்தின் கவர்ச்சியான ஸாரம் -ரிக் வேதங்களின் செழிப்பு –
மறப்பு இல்லாதபடி யஜுர் வேதம் ஓதுவது எளிவது அல்ல –
பல இடங்களில் ஒரே மாதிரியான சொல் தொடர்கள் வரும் –
யஜுர் வேதத்தில் இப்படிச் செய்ய வேண்டும் என்னும் கட்டளைகள் நிறைந்ததாகவும் இருக்கும்
இவற்றை குறையின்றி ஓத பரி முக்கண் அருள் வேண்டும்
அவனே பாதுகாப்பான மறையாத கைத்தடி போன்றவன்
அதர்வண வேதத்தின் பாக்கியமே வடிவு எடுத்தவன்
வேதங்களை உள்ளபடி உணர
வியாகரணம் நிருத்தம் சந்தஸ்ஸாஸ்த்ரம் சீக்ஷை கல்பம் ஜ்யோதிஷம்
ஆகிய ஆறு அங்கங்களிலும் பயிற்சி வேண்டும்
வெறும் பயிற்சி போதாது -இமயமலை ஏற வேண்டிய பயிற்சியுடன் பயில வேண்டும்
இவற்றுக்கும் பரிமுகனின் அருள் வேண்டும்
எனவே இவற்றுக்கும் அவனே வான் அளாவிய முகடு என்பர்

ஸ்மாஹாரஸ் ஸாம்நாம் -என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்லோகத்தை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோகம் இது –

ஸ்மாஹாரஸ் ஸாம்நாம் ப்ரதிபதம் ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலாஹல பவம்
ஹரத் வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹல ஹல –3-

சாம வேதங்களின் தொகுதி ஆகவும் -எல்லாக் கிளைகளும் ஓன்று கூடிய வடிவாகவும் – –
ருக் வேதங்களுக்கு ஒரு பொருள் கிளவி யாகவும் -மந்திரங்களின் பொருளைக் கூறும் மற்று ஒரு சொல்லோ என்னும் படியாயும் —
யஜுர் வேதங்களுக்கு உறைவிடம் ஆகவும்-மந்திரங்களின் கருத்துக்கள் அனைத்தும் தன்னுள் அடங்கப் பெற்றதோ என்னும்படியாகவும் –
இப்படி மூன்று வேத சாரமாயும் -கல்வி கற்பதற்கு வரும் -தடைகளின் அழிவுக்குக் காரணம் ஆகவும் –
ஞானக் கடலின் அலை வரிசையாகவும் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவனுடைய ஹல ஹல என்னும் கனைப்பு ஒலி த்வனி
வாதம் புரிவதில் உண்டான செருக்கினால் கலங்கி நிற்கும் பிற மத வாதிகளின் கூட்டத்தின் ஆரவாரத்தால் உண்டான
அஞ்ஞான இருளை ஒழிக்க வேண்டும் –

இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –
ச கோஷ–ஸ்ரீ பாஞ்ச ஜன்ய -ஹிருதயாநி உளுத்து போகும் படி பண்ணிது போலே-
அனுகூல பிரதிகூல -ப்ரீதி பய ஹேது வாகுமே –
யஜுர் வேதம் தாரணம் -சாம வேதம்-பகவத் விஷய அனுபவ போகம்-வாக் சக்தி –
ரிக் வேதம் விநயம் —ஆராதன பொருள்
த்ரையந்தம் -வேதாந்தம் -அர்த்த அனுசரித்து பாதம் முடிந்து ரிக் வேதம் –முடியாமல் யஜுர் வேதம் —
கான ரூபம் சாமம் -மிஸ்ரமம் அதர்வண –என்றுமாம் –
ஹல அஹல -அச்சு எழுத்து அல் எழுத்து சேர்ந்த வேதம் –
லய ப்ரத்யூ ஹாநாம்–தடங்கலை போக்கி அருளி –ஸ்ரேஷ்டர் செய்யும் கார்யங்கள் தடங்கல் -நிறைய –
ராமன் -ராவணன் -கார்யங்கள் மூலம் அறிவோம் —

————-

மத்யே பிம்பம் ஸூதாம் ஸோர் த்யுமணி நிப மணிஸ்ரேணி பாராஜி ராஜத்
ஹாரைஸ் தாரை ருதாரை ரபஹஸித ஸூதா சாகரோத் ஸாரி பூரை
வா மாங்கவாஸ லீலா குதுகுல விதயா அப்யங்கித பங்கஜாஷ்யா
சங்கா தங்கம் ச பங்கம் திரயது கருணா பங்கில கஸ்சி தர்வா –6-

அமுதக்கடல் –பொங்கும் வெள்ளம் -வெண்மையாய் இருந்து நகையாடுவது போல் உள்ளது
இனிய முத்து மாலைகள் பல அணிந்து கொண்டு ஒளி கற்றைகளால் திகழ்கின்றன
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரிந்தால் ஒத்து அணிமணிகளை உடைய பெருமான்
ஸூர்யனே சந்த்ர மண்டலத்தில் இருப்பது போல் அமர்ந்து இருக்கிறான் –
அவன் திருமார்பில் வசிக்கும் பிராட்டியும் இடது தொடையில் வீற்று இருந்து விளையாடும் ஆர்வத்தால்
அங்கே அமர்ந்து பேர் அழகுடன் பொலிகிறாள்
இப்படி ஒப்பற்ற ஹரி வதன பிரான் எவ்வித கலக்கமும் இல்லாமல்
நம் மீது கருணை கொண்டு ஸம்சயங்கள் துயரங்கள் போன்ற அழுக்கை எல்லாம் போக்கி அருளட்டும்

———

ரூடா ப்ரவ்டாஸூ புருஷ மதி வ்யாப்ருதி வ்யாப்த்ய போடா ஸூ
ஆதா தாந்தாஸூ தாஸூ ப்ரதிஹத கதிதா த்வந்து தாவான னேர்வன்
இத்தம் ஸத்ய ப்யஹம் யத் தவ குண கண னாரம்ப ஸம் ரம்ப நீக்ன
ஸ்தானே தத் யேன பாலோப்யதி விதத புஜோ விஸ்த்ருதிம் வக்தி ஸிந்தோ-7

யதோ வாஸோ நிவர்த்தந்தே -வேதத்துக்கும் எட்டாத வைபவம் கொண்டவனே
அவற்றாலும் ஸ்துதி பண்ணி முடிக்க முடியாதே-அப்படிப்பட்ட உன்னை ஸ்துதிக்க இழிந்தேனே
கடலை அளவிட்டுக் காண இயலாது என்றாலும் ஒரு குழந்தை இரண்டு கைகளாலும் அகல விரித்துக் காட்டி
கடல் இவ்வளவு அகலம் கொண்டது என்று சொல்வது உண்டு அல்லவா –

————-

பாதா பாதால பூம் யம்பர தல நிலயா வாஸ ஜாயாஸ ஸாராத்
யாதா யாதாநு பூர் வ்யாத விகத ஜனனீ கர்ப்ப வி ப்ராந்தி யோகாத்
வேத்யா வேத்யா வமர் ஸாஸ் கலிதக தியதீ ஸான ராஜ்யா ஸ பாஜ்ய
சாந்தா சாந்தம் ஸம் ருத்திம் விதரது ஸ மம வ்யாஜ வாஜீ விராஜீ –8-

பக்தனான பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது கைடபர்கள் பறித்துக் கொண்டு போன போது
மீட்டுத் தரும் வ்யாஜத்தில் ஹயக்ரீவ வடிவம் கொண்ட எம்பெருமான் நமக்கு கருணை பொழியட்டும்
ப்ரயோஜனாந்த பரத்தைத் தவிர்த்து -நிரதிசய ஆனந்தம் பெற அருள வேண்டும்
நீ ரக்ஷிக்க இருக்கும் போது வேறே யாரும் வேண்டாமே –
பிறவிச் சுழலில் இருந்து மீட்டு அருளும் உனது பெருமையை அறிந்து –வேதி -கலைமகளும் போற்றுவாள்
வேதி -உபா தேய த்யாஜ்யங்களை பகுத்து அறிந்த யதிகளின் தலைவரான எம்பெருமானுடைய
சிஷ்யர்கள் அனைவரும் – -பரகால ஜீயர் -போன்றோரும் ஆராதிப்பார்கள் அன்றோ –

—————–

யஸ்மின் விஞ்ஞான வார் தாவதி ஜகதி புரோ ஜ்ரும்ப மாணே அஷ்ட மூர்த்தே
மூர்த்திஸ் ஸா தக்ஷிணாக்யா த்ரி தச பரீஷதா பிந்துரா லஷ்ய தஷா
வாணீ ஸ பத்ம சத்ம ப்ரிய தம க்ருஹணீ கா அப்ய பாணீ ஹ வேணீ
பாராசர்ய ப்ரதானோ அப்ய கணி முனி கண பல் வலம் பாது ஸோ அர்வா –9-

ஹயக்ரீவர் ஞான சாகரம் -அந்தக்கடல் தேவர்களின் சமூகத்துக்கு முன்னர் பொங்கிப் பொலியும் போது
அவர்கள் இந்தப் பரிமுக பரமனின் பெருமையை உணர்ந்தார்கள்
ஞானத்தில் சிறந்த ருத்ரன் -தக்ஷிணா மூர்த்தி ஆலமரத்துக்கு அடியில் இவனின் ஞான லவலேசம் கொண்டு உபதேசித்தார்
தாமரை மலரில் இருக்கும் பிரமனின் பத்தினியான கலைமகள் இந்தக்கடலை ஒப்பிடும் பொழுது சிறிய வாய்க்கால் போன்றவளே
வ்யாஸாதி முனிவர் குழாங்களும் சிறிய குட்டை போலவே ஆவார்கள்
அவர் நம்மைக் காத்து அருளட்டும்

இந்த ஸ்லோகம் தாஷிண்யரம்பா -என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்லோகத்தின் அடிப்படியில் வந்தது

தாக்ஷிண்ய கிரி ஸஸ்யரம்யா மூர்த்தி
தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச
ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-

சிவனுடைய தெற்கு நோக்கி அமர்ந்த தக்ஷிணா மூர்த்தியும் -ஆல மலர்த்தின் நிழலில் இருந்து
அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் நான்கு முனிவர்களுக்கும் உபதேசித்தார் —
தாமரையில் அமர்ந்த பிரமனுடைய தர்ம பத்னியான சரஸ்வதி தேவியும் மிகப் போற்றுதலுக்கு உரிய
பேச்சை உடைய வியாசர் பராசரர் வால்மீகி முதலிய அனைவரும் உன்னுடைய
சக்தியின் திவலையால் உயர்ந்து விளங்குகின்றனர் –

தக்ஷிணா ரம்ய மூர்த்தி –தாக்ஷிண்யம் -அழகே வடிவு கொண்ட தக்ஷிணா மூர்த்தி -கிருபையால் கொடுக்கும் மூர்த்தி
கிரி ஸஸ்யரம்யா மூர்த்தி -கைலாச மூர்த்தி -வாக்குக்கு மூர்த்தி -பேச்சு வன்மை ஞானம்
தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ–சரஸ்வதி –தாமரை ஆசனமாக கொண்ட நான்முகனுக்கு தர்ம பத்னி –
இவள் அனுக்ரஹம் பிரம்மன் அனுக்ரஹம் அடியாகவே என்று காட்ட –
வால்மீகி –மச்சந்தா தேவ -சங்கல்பம் அடியாகவே சரஸ்வதி உம வாக்கில்
ஆரோக்யம் பாஸ்கரன் -செல்வம் அக்னி -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் நாராயணன் -கலியுகம் பாஷாண்டிகள் நிறைந்து –
வாக் தேவி -சரஸ்வதி -தக்ஷிணா மூர்த்தி -இவன் அனுக்ரஹம் அடியாகவே –
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச -வ்யாஸாதிகளும் கூட
ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை–ஒளி விடுவது தேவரீர் சக்தியினொரு துளியாலேயே –
அந்தராத்மதயா –சர்வமும் இவன் அம்சம் -சர்வ ரஸ சர்வ கந்த

———-

வேத உத்தர ரோத்யதம் தத் ப்ரதி ஸது மிதுனம் ஸர்வ ஸர்வாதி மானாம்
சேவாஹேவாக பூ மோத்ய தஹ மிஹ மிகா குஞ்ச தன் வேஷி மூர்த்னாம்
ஸ்ரீர் ஷேஷ்வா பாந்தி யஸ்ய த்வி குண மணி லதா பாவ பாஜ கடாஷா
கல்யோத் புல்லாம் புஜாத ப்ரமத பர நிராகார நிஸ் தந்த்ர த்ருஷ்டே–10-

ஸ்ரீ லஷ்மீ சமேத ஹயக்ரீவ மிதுனம் நமக்கு மங்களங்கள் அருள வேண்டும்
வேதத்தை மீட்டு அருளியதால் தேவர்கள் நான் முன்னே நான் முன்னே என்று
இத்தைக் கண்ட மிதுன தம்பதிகள் அவர்களைக் கடாக்ஷித்து அருள்கிறார்
மிதுன கடாக்ஷமாகிற ரத்ன லதா கொடி அவர்கள் தலைகளை அலங்கரிக்கிறது –
இந்த கடாக்ஷ தேஜஸ்ஸு காலைக் கதிரவன் ஒளியால் மலர்ந்த தாமரைகள் ஒளியை விஞ்சி பீடு பெற்றவை
இந்த மிதுன திவ்ய தம்பதிகள் நமக்கு அருளட்டும் –

———

தாஷ்யம் லஷ்யதே தாது க்வ னு கலு ஜததீ ஜால நிர்மாண லீலா
ரம்பே சஞ்ஞா விதா வாப்யதே ச ததுசி தானேக மூர்த்தி ப்ரக்லுப்தவ்
தத் தத் க்ருத்ய ப்ரபஞ்சேஷ் வபி ச திவிஷதாம் தைத்ய பாஸா ஹ்ருதானாம்
ஆம்னா யாயாம் தயார்த்ரோ யதி ஹய வதனோ நோத் த்ருதிம் ஸம் விதத்யாத் –11-

நான்முகன் ஸ்ருஷ்ட்டி செய்யும் பொழுது நாம ரூபங்களைக் கொடுத்து அமைக்கத் துணை செய்யும் கையேடு வேதமே
இதே போல் இந்திராதி தேவர்களும் அவர் அவர்கள் செயல்களைச் செய்வதற்கும் வேதமே கையேடு –
இந்த வேதங்களை அபஹரித்துப் போன மது கைடபர்களை நிரஸித்து மீட்டு வந்து அருளியதும் பரி முகப் பெருமானே
இவரது அருள் இல்லாமல் எவருமே தங்கள் தங்கள் பணிகளை செய்ய முடியாதே

இந்த ஸ்லோகம் மந்தோஸ் பவிஷ்யன் -என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்லோகத்தின் அடிப்படையிலே அமைந்தது-

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ
வாசம் நிதே வஞ்சித பாகதேய
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி
அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-

கலைகளுக்கு உறைவிடம் ஆனவனே -நீ -மது கைடவர் ஆகிய அசுரர்களால் கவரப்பட்ட வேதங்களை
கருணையாலேயே மறுபடியும் பிரமனுக்கு உபதேசிக்கா விட்டால் பிரம தேவன் பாக்யத்தை இழந்து
நிச்சயமாக மூடனாக ஆகி இருப்பான் –
மது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது தயா குணம் அடியாக அன்றோ
மீண்டும் வழங்கினாய் –

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ –விரிஞ்சன்-மந்த புத்தியுடன் -நிச்சயமாக இருந்து இருப்பர்
மந்த -விவேக ஞானம் இல்லாமல் -சம்சயம் விபர்யயம் –சாஸனாத் சாஸ்திரம் -க்ருத்யமும் அக்ருத்யமும் -விதிக்கும்
வாசம் நிதே வஞ்சித பாகதேய–வாக்குக்கு நிதியே -வஞ்சிக்கப்பட்டவராய் -பாக்யம் இல்லாமல் இருப்பவராய்
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி -அசுரர்களால் திருடி செல்லப்பட்ட –
பூயோபி –மறு படியும் -கீழே ஸ்ருஷ்ட்டி காலத்தில் அருளிச் செய்ததும் உண்டே
அத்யா பயிஷ்யோ –ப்ரஹ்மாவுக்கு சொல்லிக் கொடுத்தீர்
நிகமான் ந சேத் த்வம்–கொடுக்காமல் போயிருந்தால்
வேத அபகார குரு பாதக தைத்ய பீடா -பிரஜாபதி -பசு பதி -சசி பதி-மூவருக்கும் ஆபன் நிவாரகன் நீ அன்றோ
கபாலீத்வம் -பவிஷ்யஸி -சாபம் -ப்ரஹ்ம கபாலம் -பிண்டியார் மண்டை ஏந்தி —
இடர் கெடுத்த மணவாளன் -ஹர சாப விமோசனம் -மார்பில் விலங்கு அமுத நீர் தெளித்து

———

ஹஸ்தா லம்பாய பூயாத் ஸ மம பதி ஸதாம் ஸ்ரஸ் தவ் வ்ருத்தஸ்ய நித்யம்
ந்யஸ்தா சேஷாக மாப்தேரதி கமபி சமம் வஸ்துணீ யஸ்ய ந ஸ்த
ஸஸ்தா மஸ்தோகதீ ஸம் ஸ்துதி மபி ஜனயன் யோ நயந்மோஹ மஸ்தம்
ந்யஸ்தம் யஸ் சவ்ய ஹஸ்தே கலயதி ச முதா புஸ்தகம் மஸ்தகே அர்வா –12-

பரிமுகப்பெருமாள் இடது திருக் கையில் புஸ்தகத்தை மகிழ்ச்சியுடன் ஏந்தி உள்ளான்
புகழ் பெறக்கூடிய பரந்த ஞானம் கொண்டு ஸ்துதிகளைப் படைக்கும் திறமையை அடியோங்களுக்கு அருளுகிறான்
வேதங்களை மீட்டு பிரமனுக்கு அளித்த இவனுக்கு ஓத்தார் மிக்கார் இல்லையே
நல்ல வழியில் பயணம் செய்ய விரும்பும் அடியோங்களுக்கு இவனே கைத் தாங்கலாக இருந்து வழி நடத்துகிறான்
அடியோங்களின் பிரதிபந்தங்களைப் போக்கி அருளி அற நெறிகளில் நடத்தி அருள்கிறான்

இந்த ஸ்லோகத்தில் ஸ் -அக்ஷரம் 15 தடவை வருகிறதே
இத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தம் பெருகுமே –

———-

ரத்னம் யத் ப்ரத்ந வாஸாம் நிருபம ஸூஷமா காந்த ஸீமந்தி நீநாம்
ஸீ மந்தே நித்ய லால்யம் ஹ்ருதய ஸரஸிஜே அஜஸ்ர தார்யம் புதானாம்
துக் தோத வத்தனூன் ஜாகர ஜல ஜயுகீ லாலநோத் யந்ம்ருஜாதோ
நித்யம் தூத்னம் ஹ்யாஸ்யம் மம கலயது தந்நிஸ்ஸ பத்னம் ப்ரயத்னம் –13–

இந்த பரிமுக ப்ரஹ்மம் ஒப்பற்ற ரத்னம் –
வேதாந்தங்கள் இடையறாது கொஞ்சிச் சூட்டப்படும் ரத்னம்
ஸாத்விகர்கள் த்யானம் செய்து ஹ்ருதயத்தில் வைத்துக் கொள்ளும் ரத்னம் –
திருப்பாற் கடலில் பிறந்த பெண்ணமுதம் தனது திருக்கைத் தாமரைகளால் திருவடிகளை வருடி விடும் ரத்னம்
தடங்கல் அற்ற முயற்ச்சிகளைச் செய்து ஸ்தோத்ரம் பண்ணி சமர்ப்பிக்கும் படி அருள வேண்டும்

——–

ணத்வம் யத் பின்ன விருத்தாவ கடிதம் உபலப் யோத்ய மாத்ராத்ரக் விரேமு
தே தே நாராயணா க்யாம் இதர விபுத ஸாதாரணீம் கர்த்து காமா
யஸ்மின் ஸ்தன் யோக ரூட்யோர் குண மணி ஜலதவ் புஷ்கலம் வர்த்தனம் ஸ்யாத்
தேவோ மாயா தயோ அசவ் தயதி ஹ்ருதி ருஜாம் சைந்தவோ பாந்தவோ ந –14-

நமக்கு ஒழிக்க ஒழியாத நல் சுற்றம் இந்தப் பரி முகப் பெருமான்
நாராயண பர ப்ரஹ்மம் தத்வம் நாராயண பர நாராயண பரோ ஜ்யோதி ஆத்மா நாராயண பர
ண த்வம் இருப்பதால் வீர சைவர்கள் பின் வாங்கும் படி ஆனதே
இந்த நாராயண பதம் யோக அர்த்தமாகவும் ரூடி அர்த்தமாகவும் இவன் இடமே பொருந்தும்
இவனே ஸ்ரீ யபதி -நம்முடை நல் சுற்றம் –
நம்முடைய நல்ல சிந்தனைகளை வளர்த்து அருள வேண்டும் –
வடமொழியில் ண அக்ஷரம் இல்லாவிடில் ணத்வம் பத பிரயோகம் செய்யும் படி ஹயக்ரீவர் ஸ்வாமிக்கு அருள் செய்துள்ளார்
பக்தர்களின் அபீஷ்டங்களை அருளுவான் என்பதற்கு இதுவே நல்ல த்ருஷ்டாந்தம் –

———-

கர்ணா வர்ணோ ஜராஜன் முகுலதல ஸமா வர்த்தோ அனர்வணோ மே
ப்ரோர் ணூயாஸ்தம் லலாடே குடில விதிசம் உத்கீர்ண ஸங்கீர்ண வர்ணாந்
வர்ண்யேதே யாவமுஷ்ய த்ரி புவன வபுஷோ வ்யோம பாதாள ரூபவ்
பர்ணைர் வா அப்யர்ணஸா வா ஸததமபி ருசிம் பூர்ண யத்பிர் மஹத்பிர்–15-

யாராலும் வெறுக்க முடியாத ஹயகிரீவப் பெருமாள் உடைய இரண்டு காதுகளும் தாமரை மொட்டுக்கள் போல் உள்ளன
இல்லை நீர் இவற்றையே உண்டு தவம் செய்யும் மஹான்கள் மூ உலகையும் வடிவாக யுடைய
இவனுடைய ஒரு காதை வானமாகவும் மற்ற ஒன்றை பாதாளமாகவும் வர்ணிக்கிறார்கள் –
அந்தக் காதுகள் அவனை அணுகத் தயங்கி இருக்கும் அடியோங்கள் அளவும் நீண்டு
என்னுடைய தலையினிலே துரதிருஷ்ட வசமாகக் கோணலாக எழுதப்பட்டவை அனைத்தையும் அழித்து அருள வேண்டும் –
அடியோங்கள் தலை எழுத்தை நல்லதாக மாற்றி அமைத்து அருள வேண்டும்

———–

மண்டல்யா மண்டனானாம் மணி கண க்ருணி பிர் கூர்ணி தத்யோ மணிநாம்
நீரந்த்ரம் மண்டி தாங்கஸ் ஸிதகர ருசிரே புண்டரீகே நிஷண்ண
ஆம்னா யானாம் ஸிகண்டை ரவகதகரிமா கண்டிதா கண்ட லாரி
தண்டம் பாஷண்ட ஷண்டே ஷிபது ஸ தரஸா வாஜி துண்ட ப்ரகாண்ட –16–

இவன் பல திவ்ய அணிகலன்கள் அணிந்துள்ளான்
அந்த அணிகக மண்டலங்களில் இருந்து ஒளிவரும் ரத்தினங்கள் பல பல-
இவற்றின் கதிர்களினால் ஆயிரம் ஸூர்யர்களின் ஒளிகள் குன்றிப் போகின்றன-
சந்திரனைப் போன்ற குளிர்ச்சி கவர்ச்சி வெண்மை -இவைகளால் நிறைந்த வெண் தாமரைப் பூவில் அவன் வீற்று இருக்கிறான் –
அவனுடைய பெருமைகளை உபநிஷத்துக்கள் மூலமே உணர முடிகிறது –
அஸூர சக்திகளை நிரஸித்து அருள்பவன் –
பாஷண்ட சமூகங்களை நிரஸித்து உலகை ரக்ஷித்து அருள்பவன்

மணே –மண் ஏ என்று பிரித்து இதில் மண் தொடங்கி அடுத்த ஸ்லோகம் என்பதில் தொடங்கும்

ணே-தொடங்கும் எழுத்து வடமொழியில் கிடையாது என்பதால் இப்படிப் பிரித்து அருளும்படி செய்வித்து அருளுகிறார்

————

ஏகோ அக்ரே லோக மாத்ரா ஸஹ மஹித விஹ்ருத் யுன்மனாஸ் தன்முதே யோ
நாபீ பத்மே விதாதுர் ஜனி மபி கலயன் யோ நயத்யாக மாம்ஸ்தம்
லோகாம் நாயைக மூலாக்ஷர ருசிர கலா மாத்ருகா ஸா யதீயா
ஸோ அஸாவிஷ்டம் ப்ரக்ருஷ்டம் கடயிது திதி ஐஸ் போடகோ கோடகோ ந –-17–

மது கைடபர்களை சிதைத்து ஓட வைத்தவன் -ஒப்பற்றவன்
ஆதியில் திருமகளும் தானுமாக இருந்து அவளது மகிழ்ச்சிக்காக ஸ்ருஷ்ட்டியை லீலையாகச் செய்து அருள எண்ணி
தன்னுடைய கொப்பூழில் ஒரு தாமரைப் பூவை எழுவித்தான்
அதில் இருந்து நான்முகனைப் படைத்தான்
அவனுக்கு வேதங்களை உபதேசித்து அருளினான்
உலக இலக்கியங்கள் வேதம் அனைத்துக்கும் முதல் படிவம் அவன் தான்
இவன் நமக்கு அனைத்து அபீஷ்டங்களையும் அருளிச் செய்து
அதற்கும் மேல் அவனுக்கு நித்ய கைங்கர்ய பரர்களாக ஆக்கி அருளட்டும் –

————

ப்ரண்யா யேநாத் வராணாம் மனு மய தனு மாதாய விஷ்வக் வி நிர்யத்
ஜ்வாலா மாலா ஜடாலான லஹுத ஹவிஷாம் ஸாரமா ஆஸ்வாத்ய சாரும்
கீர் வாணாந் வார வாணாந் நியமித கரணாம்ஸ் தூர்ண மாப் யாய்ய காம
கல்ப்யந்தே யாஜ மானா கலயது ஸ முதம் கோ அப்யனர்வாஸ் அந நேர்வா –18-

மந்த்ரங்களாலான வடிவு யுடையவன்
பல பக்கங்களிலும் ஜ்வாலைகள் ஆகிய பின்னல்கள் நிறைந்து கொழுந்து விட்டு எரியும் அக்னியில்
அம் மந்த்ரங்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் யாகங்களை அவனே செய்விக்கிறான்
அதில் சாரமான ஹவிர்பாகத்தை தேவர்கள் சுவைத்து மகிழச் செய்கிறான்
அவர்களுக்கு இவனே அந்தர்யாமி -அவர்கள் இவனுக்கு சட்டைகள் போன்றவர்
அவர்கள் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் எல்லாமே இவனது நியமம் படியே
இப்படி அனைவருக்கும் நன்மைகளை அளித்து அருளும் இவன் நமக்கும் ஆனந்தம் அருளிச் செய்ய வேண்டும்

போக்தாராம் யஜ்ஞ தபஸாம் -கீதா ஸ்லோகம் அடிப்படியில் அமைந்த ஸ்லோகம்

-தொடங்கும் எழுத்து வடமொழியில் இல்லாததால்
இதில் ப்ரண் -அடுத்த ஸ்லோகம் -என்று தொடங்குகிறது

———–

அவ்யா தவ்யாஹ தார்த்தோ தியமுப ஜனயன் அவ்யயோ வ்யாஜ வாஜீ
பவ்யா பவ்யா க்ருதாத் யாக்ருதி மதனுத யோ நாம ரூபத்வயஸ்ய
யோ யந்தர் யந்தம் ச மந்தம் வ்யது சிது மதி ஸஜ் ஐந்து ஜாதஸ்ய யோ வா
கல்பாந்தே அல்பான்ய லோக க்ரஸனஸ முதி தாபீனதா நந்தி துந்த –19-

தடைபடாத ஞான பிரதானம் செய்து அருளுபவர்
உலகில் பெயர் வடிவம் இரண்டிலும் மங்களமும் அமங்களமும் -ஆகிய இரண்டு நிலைகளும் உண்டு
அவற்றை அமைத்தவனும் இவனே –
அனைவரும் கட்டுப்பாடுடன் இருக்கவும் தவறுகளை அகற்றவும் ஏற்றவகையில் நெறிகளை அருள் செய்தவனும் இவனே
கல்ப காலம் முடிவில் உலகங்களை விழுங்கி மகிழ்பவன் இவனே -இதனால் பெரு வயிற்றன் -நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

——–

ஒதன்வந் மேகலாந்தாத் பலி நிலய யுதாத்ஷ் மாத லாதா லோகாத்
நாலீ காவாஸ வாஸா தவஹி தமன ஸா அபீஷிதே ஸ்தாஸ்னு ஜாதே
யாத் ருங்னாலஷி கஸ்சித் ஸக்ருதபி நமதாம் ஸாத்வ ஸத்வ ம் சதஷ
பக்த அனுக்ரோச லஷ்மா ஷபயது மம ஹ்ருத் ஷோபமஷ்ணா வா வாஜீ –-20-

பக்தர்களுக்கு இரங்கி அருளும் தன்மையையே இயல்பாகக் கொண்டவன் –
பாதாளத்துடன் கூடிய பூ லோகத்தில் இருந்து பிரமன் உலகம் வரை எங்கு தேடிப் பார்த்தாலும்
இவனைப் போல் அடியார்களின் அச்சத்தைப் போக்கி அருளும் ஒருவன் காணக்கிடைக்காது
அவனது கடாக்ஷம் நமது மனக் கவலைகளையும் தீர்த்து அருள வேண்டும் –

—————–

கீதே தைதேய மோஹம் கலயிது மனஸோ யஸ்ய ஹேஷா நு ஷக்தே
ப்ரக்யாதோத் கீத பக்திம் ஸ்ரீரிதவதி ஜனிதே ரோதஸீரோதகே த்ராக்
தேவாஸ் ஸம் ப்ராந்த பாவா திதிஜகுல மலம் வ்யாகுலம் தூதகர்வா
கந்தர்வா மோஹ சேஷம் சம ஜனி ஜகதீ சேஷ மேஷோ அவதான் மாம் –21-

அரக்கர்களை மயக்க இவன் கனைப்பு உண்டு
அதன் ஒலியுடன் கூடியதே உத்கீதம் என்னும் சாமம் –
அதன் அவயவங்கள் -பக்தி -பல பகுதிகளைக் கொண்டவை
அவற்றில் இரு பகுதிகள் இணைந்து வாசனையையும் பூமியையும் ஆக்கிரமிக்கும் கானம்
உண்டாகும் போது தேவர்கள் பரவசம் அடைவார்கள்
அசுரர் கூட்டம் துயரத்தால் அலைக்கழிப்பு அடையும்
கந்தர்வர்களுடைய கர்வம் பறந்தோடும்
மிஞ்சியவர்கள் மோஹம் அடைவார்கள்
இத்தகைய ஹயக்ரீவப்பெருமாள் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

———

தம் கிம் சப்தஸ்ய மூர்த்தி க்வசி துதித முபஸ்ருத்ய யத் தத் பதா திஷு
அப்யேதத் யோஜயித்வா கடுர டனபடு ஸ்வைர வாஸோ அபி ஐந்தோ
ஸத்யஸ் ஸித்த்யந்தி வாண்யோ நமதமஸி ரஸ் சத்ம யத் பாத பத்ம
த்யாநாத் த்ராஷா ஸத்ருஷா கலித குரு ஸிர கம்பனா பாது ஸோ அர்வா –22-

தம் என்பது கிம் என்பதுடன் இணைந்து -கிதம் -எப்படி என்னும் பொருள்
வாதங்களில் இந்தப் பதம் அடிக்கடி பயன்படுத்தப்படும்
இது காதில் பட்டு அது எப்படியோ இது அப்படி –யதம் ததம் –
என்று உருவாக்கி வாதம் செய்பவர்களும் உண்டு
யதா ததா என்று ஆர்வத்தையும் அறியாமல் யதம் ததம் என்பார்கள்
இப்படி இலக்கண வரம்பை கருவாக உடைப்பார்கள்
இத்தகைய அரை குறை அறிவாளிகள் கூட
இவனைத் த்யானம் செய்வார்களாகில் ப்ருஹஸ்பதி கூடாது தலையாட்டிக் பாராட்டும்படி
திராட்ச்சையிலும் இனிய சுவையுடன் பேசும் திறனைப் பெறுவார்கள்
இவனைப் பல தேவர்களும் பணிந்து வணங்குகிறார்கள்
அவர்கள் முடியே இவன் இருப்பிடம் ஆகிறது
அவன் அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும் –

———–

வக்தும் ஸூக்தம் ஸூ தாக்தம் ப்ரதீக தக வஸோ வீசி வேகம் ச ஹர்தும்
கர்தும் காவ்யம் ச பவ்யம் ஹிதமயீ புருஷார்த்தம் ச தத்வம் ச வேத்தும்
வாஞ்சா சேன்மான சாஞ்ச ஸ்படிக மணி மயஷ் மாதார பாதரீ க்ருத்
ரோசிர் வீசி பிராராத கீலமபி ஜகாத் ப்லா வயந்தம் ஹயம் தம்–23-

மனமே உனக்கு அமுத்தினாள் நனைந்த ஸூக்தங்களைச் சொல்ல விருப்பமா
எதிரிகளின் வாத வேகத்தை எதிர்த்து வாதிட விருப்பமா
மங்களகரமான காப்பியங்களை இயற்றிட ஆசையா
தத்வ ஹித புருஷார்த்த யாதாத்ம்ய ஞானம் பெற ஆசையா
ஸ்படிக்கக் கல்லிலான மலையை வென்றிடும் வெண்மையான திருமேனியின் தேஜஸ்ஸு அலைகளினால்
சுற்றி உள்ள அனைத்தையும் வெண்மையாக்கும் வெள்ளைப் பறிமுகனைச் சரண் அடைய வேண்டும் –

——–

புஷ்ணன் ஹர்ஷம் ஸூராணாம் ஜனி மய மயதி ஸ்மேதிநோ வக்துமீஸே
ப்ராகே வாஸீத் பிரமத்தாஸூர க்ருஹ நிகரே யத் ஸூ ராணாம் ப்ரஹர்ஷ
ஸ்ருதியாவிர் பூதி ஹேது ஸ்ரவண சமுத யானந்த ரேஸ்மின் து யுக்த
தஸ்மா தஸ்மாத னன்யான் த்ருவமவிது மஸாவி விராஸ அஸ்வ பாஸா –24-

மது கைடபர் வேதங்களைக் கவர்ந்து செல்ல
ஹயக்ரீவர் அவற்றை மீட்க திரு அவதரித்தார் என்னும் செய்தி அசுரர் கூட்டங்களுக்கு எட்டியது
இவர் அவற்றை மீட்டு தேவர்களை மகிழ்ச் செய்ய வல்லரோ என்ற சங்கை அவர்களுக்கு வந்தது
இவரால் மீட்க முடியாது என்று இறுமாந்து இருந்தனர்
ஆனால் ஸ்ரவணத்தில் அவதரித்து வேதங்களை மீட்டு தேவர்களை மகிழச் செய்தார்
ஸ்ரவணம் -காதால் கேட்பது என்ற பொருளும் உண்டே
ஸ்ருதி -எழுதா மறை -ஒருவர் ஓத கேட்டு அறியுமது
ஸ்ருதியை மீட்டும் பணியை ஸ்ரவணத்தில் அவதாரம் செய்த இவன் மிக்கப் பொருத்தமாய் இருந்ததே
அநந்ய கதிகளான அடியோங்களை ரக்ஷித்து அருளவே இப்படி குதிரை ஒளியுடன் ஆவிர்பவித்தான் –
அஸ்வ பாஸா -உடனடி தேஜஸ்ஸு என்றும் குதிரை தேஜஸ்ஸு என்றும் பொருள்கள் உண்டே

பு -24 எழுத்தாய் இருக்க -இங்கு புஷ் -என்று தொடங்கி-அடுத்த ஸ்லோகம் -ஏ -தொடங்கி –புஷே -ஆகும்
-எழுத்தில் தொடங்குவது அரிது என்பதால் -இங்கு புஷ் 

———

ஏஷ ஸ்வேதோ அபி ராஜத் ரஜத கிரி வராகாரா திக்கார காரீ
வித்யுத் வித்யோதிபா ஸோத்ய தருண கிரணோன் நித்ர பத்மம் வஹந்த்யா
காவிந்தீ மந்திரேன் தீவர ருசி ருசிரா பாங்க தாராபி ராதாத்
சிஞ்சந் த்யாங்கானி தேவ்யா சதத க்ருத பரிஷ்வங்கதோ அவ்யாத் துரங்க -25-

இவன் வெள்ளி மலையின் வெண்மையையும் ஒளி மங்கத் செய்யும் தேஜஸ்ஸு கொண்டவன்
இவன் திரு மடியில் ஸ்ரீ மஹாலஷ்மீ பிராட்டி அமர்ந்து இருக்கிறாள்
அவள் மின்னலை வென்றிடும் பொன்னிறத்தனள்
அவள் தனது திருக்கையிலே அருணோதய வேளையில் மலர்ந்த செந்தாமரையை வைத்து இருப்பள்
அவளது விழிகள் மை இடாமலேயே இயற்கையாக கறுத்தவை –
அவள் மைய கண்ணாள் -அவள் கரும் தடம் கண்ணி அன்றோ –
பண்பாட்டுக்காக மையும் இட்டுக் கொண்டாள் -மைத்தடம் கண்ணி யாகி விட்டாள்
இவளது கரு விழிகளின் கடாக்ஷம் கருத்த யமுனையில் மலர்ந்த கரு நெய்தல் மலர்கள் போல் ஆயின
இவள் பார்வைகளால் ஹயக்ரீவப்பெருமானை நீராட்டுகிறாள்
மேலும் இடையறாது அணைத்துக் கொண்டும் இருக்கிறாள்
எனவே வெள்ளி மலையை வெல்லும் வெண்மையில் சில மஞ்சள் கோடுகளும் சில கரு நீலக் கோடுகளும் படிந்து இருந்தன
இத்தகைய பரிமுகப்பெருமாள் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

——-

மஞ்ஜீரம் மஞ்ஜூலம் தே ஹய முக மம ஸஞ்சீவனா யாஸ்து சிஞ்ஜா
வ்யாஜேநாம் னாய வாஸாமநி தர பரதாம் வ்யஞ்ஜ யத்த்வத் பதோர்யத்
லக்னம் தத் தாரணாஸூ த்வி குண முனி ஜன ஸ்தோம ஹ்ருத் பத்ம நித்யோல்
வாஸாதி தாத்மத் வயமிவ ஸவிதே ஜாக்ரதர் கஸ்ய பிம்பம் —26-

இவருடைய இனிய சதங்கைகள் எனக்கு உயிர்ப்பளிப்பவையாக இருக்க வேண்டும்
அவை கல கல இனிய ஒலியினை எழுப்புகின்றன அல்லவா
இவை உனது திருவடிகளில் ஒட்டிக் கொண்டு அன்றோ இவ்வாறு சப்திக்கின்றன –
இவை வெறும் சதங்கை ஒலிகள் அல்ல
கல கல ஒலியால் -வியாஜ்யமாக -வேதங்களே பேசுகின்றன என்னும் கருத்தையே மொழிகின்றன –
உனது திருவடிகளைத் த்யானம் செய்யும் முனிவர்கள் ஸமூஹங்களின்
ஹ்ருதயத் தாமரைகளை நாள் தோறும் இரு மடங்காக மலர்த்திட வேண்டும் என்று ஆவல் கொள்வார்களுக்கு
இரு வடிவங்கள் ஏற்றுக்கொண்டு திருவடிகளின் மேல் ஸூர்யன் பிம்பம் படிந்தது போல் சதங்கைகள் விளங்குகின்றன –

———-

ஹாரித்ரம் கின்னு ஸூத்ரம் கருதிததி ஸூததி கண்ட பூஷார்த்த க்லுப்தம்
ஹ்ரோதஸ் சாரஸ்வதம் வாங்மய ஜனன கிரேர் நிஸ் ஸ்ருதம் வேதி சங்க்யம்
வக்த்ரே வாஹஸ்ய வாம ப்ரஸ்ருதி தலல சத்தைம ஸத் புஸ்த காந்த
தீவ்யத் ஸூத்ரம் பவித்ரம் மம கலயது ஸம் பானு பானோஸ் ஸ கோத்ரம்--27-

இடது கீழ்க் கை விரல்கள் நீட்டப்பட்ட நிலையில் உள்ளன
கைத்தலத்தில் பொன் போன்ற புஸ்தகம் உள்ளது –
அதில் சுவடிகளில் கோர்க்கும் கயிறு உள்ளது
மஞ்சள் வெயிலின் பொன் கிரணங்களை போல் -அதன் உடன் பிறப்பு போல் இருக்குமே அந்தப்பொன் கயிறு
வேதக்கூட்டங்களே ஒரு மங்கையாகவும் -அவள் கழுத்தில் கட்டுவதற்கு ஏற்ற அணியான
மஞ்சள் படுத்தின திரு மாங்கல்யக் கயிறு தான் இந்தப் பொற் கயிறோ ஏற்று ஐயம் படும்படி இருக்குமே
அன்றிக்கே
சரஸ்வதியின் வெள்ளமே மொழிகள் உண்டாகும் மலையில் இருந்து தோன்றி நூல் பிடித்தால் போல் ஓடுகின்றதோ என்று ஐயம் வரும்படியும் இருக்குமே
அத்தகைய சுவடிக் கயிறு அடியோங்களுக்கு நலன்களை அளித்து அருள வேண்டும்

———–

ஸ்வ ப்ரேஷ்வப்ரே அபி யாதாத் திதி தனு ஜனுஷோ ப்ராமயித்வா விபந்தன்
ஸீர்ணாங்காத் கீர்ண கேஸான் ப்ருஸமதிர பஸம் பாதயன் நிர்ஜராணாம்
ஸ்வா ராஜ்யம் ப்ராஜ்ய யந்யோ மிஹிர இவ ஹிமஜ் யாதாரா துஜ் ஜிஹான்
பாபாத் யஸ் வாஸ்ய வாமே தரகர வித்ருதஸ் சாகராஜஸ் ஸ தோ அவ்யாத்–28-

இவனுடைய வலது திருக்கரங்களில் உள்ள சக்ரராஜன் அசுரர்களை வானத்தில் உள்ள பள்ளங்களில் அலைக்கழித்து அவர்களை நிரஸிக்கிறார்
அவர்கள் கை கால் முதலிய அவயவங்கள் சிதைந்திட மிகுந்த விரைவில் வீழ்த்தப்படுகின்றனர்
பனிமலையில் இருந்து புறப்படும் கதிரவன் போலே அவ்வெள்ளைப் பரிமுகன் தோளில் இருந்து சக்ரராஜன் புறப்படுகிறான்
அசுரர்களை வீழ்த்தி தேவலோகத்தை பரப்பி தேவர்களுக்கு அளித்து மகிழ்கிறான்
அத்தாலேயே மிகுந்த தேஜஸ்ஸூ டன் திகழ்கிறான்
அத்தகைய சக்ரராஜன் அடியோங்களைக் காத்து அருள வேண்டும்

—————-

சிஷ்யாணாம் சித்த பூமவ் ப்ரசுர தர தம கண்ட கானி வ்யபோஹ்ய
ஆஸிஸ் யாத்யர்தம் கடாஷாம் ருதர ஸவிஸ ரைஸ் ஸாஸ்த்ர பீஜானி வப்தும்
நிர் நித்ரோ ஞான முத்ரா ருசிர கர தலே தஷிணே யோ அஷ மாலாம்
பிப்ரத் பாத்யஸ் வவக்த்ரே ஸ ஹரது நிதரா மம்ஹஸாம் ஸம் ஹதிம் மே–29-

வலது கீழ்க்கரம் ஞான முத்திரையுடன் இருந்து அழகுடன் திகழ்கிறது
அந்த ஞான முத்திரை யுடன் கூடிய கையில் அக்ஷ மாலையும் உள்ளது
ஜெப மணிக் கொட்டைகளாலான மாலை அன்றோ அந்த மாலை –
ஞான முத்திரையில் ஆள் காட்டும் விரலும் கட்டை விரலும் இணைந்து இலங்குகின்றன –
ஆக இந்த பீஜங்களால் -கொட்டைகளால் -விதைகளாலான -மாலை இரு விரல்களால் தாங்கப் பட்டுத் தொங்குகிறது –
இந்த ஹயக்ரீவப் பெருமாள் ஏதோ ஒரு விதையை விதைப்பது போல் உள்ளது –
ஆம் -சீடர்களின் நெஞ்சில் படர்ந்த அறியாமை என்னும் முட் புதர்களாகிய இருளை அகற்றி
அந்த நிலத்தைப் பண் படுத்துகிறான் பரிமுகனாம் இந்தப் பக்தி உழவன்
பிறகு வர்ணனைக்கு அப்பால் பட்ட தனது கடாக்ஷம் என்னும் அமுத நீரைப்பாய்ச்சி
ஸாஸ்த்ர ஞானப்பயிர் செழிப்பாக வளர்ந்திடும் என்று அங்கே அவர்கட்க்கு விதையை விதைக்க விளைகிறான்
விதை எடுக்க விதை மாலையை வலது கரத்தில் வைத்துள்ளான்
இரு விரல்களால் மண்ணில் புதைப்பதற்கு ஏற்ற நிலையில் விதையை எடுத்துக் கொண்டு இருக்கும்
ஹயக்ரீவன் என்னும் இந்தப் பக்தி உழவன் சோம்பாது திகழ்கிறான்
அவன் அடியோங்களின் பாபக் கூட்டங்களை அபஹரித்து அருள வேண்டும் –

——–

ரம்யம் ஸ்யாத் பிம்ப விந்தோ சர துதி தரு சேரம்பான் நிர்யதேதத்
கிம் வா டிண்டீர கண்டம் கலச ஜல நிதே கிம் வா து புண்டரீகம்
வாக் ப்ரம்மோத்தா மலீலா க்ருஹமிதி விபுதை ரூஹ்யை மானோ ஹ்யாஸ்யே
நோ பாத்த ஸவ்ய ஹஸ்தே மம பவது ஸூபா லம்பனம் கம்புராஜ--30-

பரி முகப் பெருமான் இடது மேற் கரத்தில் சங்க ராஜன் விளங்குகிறான் –
சரத்கால மேகம் போல் வெளுத்து இருக்கிறான்
சரத்கால வெண் மேகக்குவியலின் பின்னணியில் உதித்த சந்திரனோ இவன் என்று என்னும்படி இருந்தது –
வெள்ளையான பாற்கடலின் நுரை திரண்டு இப்படித் தோன்றுகிறதோ என்னலாம் படி இருக்கிறான் –
கலைமகள் ப்ரம்மா இரண்டும் குடியிருந்து நன்கு லீலை செய்ய அழகியதோர்
வெள்ளைத் தாமரைப்பூவோ என்னலாம் படியாய் இருக்கிறான்
இப்படிப்பலவிதமாகப் புலவர்கள் ஊகிக்கலாம் படியாய் உள்ள இந்தப் பாஞ்ச ஜன்யம் எனக்கு
ஹயமுகனின் வடிவைத் த்யானம் பண்ணப் பிடித்துக் கொள்ளும் துணையாக
நல்லதோர் பிடியாக இருந்து அருள வேண்டும் –

———-

ஸேவ்யா ஸர்வாதி ஸர்வத்ரி தச பரிஷதா ஸஸ்வதா ஸாஸ்வினீ ஸ்ரீ
அஸ்மாகம் யா ஸ பத்னீ லஸதி பத ஸிரோ அஸ்யதி ரூடேதி ஸேர்ஷ்யம்
ஜேதும் தாம் ஸந்ததோ தித் வர வர மஹஸா பாதி நக்ஷத்ர மாலா
தேவஸ் கந்தே ஸ்தி தேயம் ஸததமபி சாமாராத யந்தீவ ஸா அவ்யாத்–31-

வேதத்தில் நக்ஷத்திரங்கள் கிருத்திகை முதல் நக்ஷத்ரமாகப் படிக்கப் படுகிறது
அஸ்வினி -இருபத்தாறாம் நக்ஷத்ரம்
பரணி இருபத்தேழாம் நக்ஷத்ரம்
ஆனால் உலக வழக்கில் அஸ்வினி முதலாகவும் பரணி இரண்டாகவும் கார்த்திகை மூன்றாகவும் படிக்கப்படுகிறது
எப்படி அஸ்வினி முதல் இடம் பெற்றது
அது ஹயக்ரீவப் பெருமானை வழி பட்டது போலும்
அவன் அருளுடன் தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்டான் போலும் –

அவன் தலையில் அஸ்வினி ஸ்ரீ உள்ளது -அதாவது குதிரையின் அழகு எல்லாம் நிறைந்த அந்தப் பெரும் ஸ்ரீ -திரு –
அவன் திரு முகத்தில் உள்ளதே =ஆம் அஸ்வினீ ஸ்ரீ
குதிரைத் திருவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டான் ஆயிற்றே
இதனால் சிவன் முதலிய தேவர் ஸமூஹம் பணிந்து இவனை வணங்குகிறது
எனவே அஸ்வினி முதல் இடம் பெற்றது போலும்

இத்தைப் பார்த்த மற்ற நக்ஷத்திரங்கள் -நம்மில் ஒன்றான இது நம்மை எல்லாம் விஞ்சி விட்டதே என்று வியந்தன
ஹயக்ரீவப் பெருமாளுக்கு அவன் உகக்கும் படி கைங்கர்யம் செய்தால் நமக்கும் இத்தகைய
பேறு ஸித்திக்கும் என்று உணர்ந்து அவன் விருப்பப்படி இயங்குகின்றன
இப்படி நக்ஷத்திரங்கள் மாலையாக அவனைப் போற்றுகின்றன
ஹயக்ரீவப் பெருமாளுடைய இந்த மாலை நம்மை ரக்ஷித்து அருள வேண்டும்

———-

நந்துஸ் ஸந்த்ரா ஸஹாரீ தததபி ஹரிதாம் சச்வதாத் மன்ய நூநாம்
யஸ்தாம் மூர்த்ன்யேவ நித்யம் ப்ரகடயதி ஹரே புருஷஸ் யாபி ஸத்யம்
ஸ்ரவ்தீம் முக்யே தரத்வாவ கதிமபி விசிஷ்டாத்வி தீயத்வ த்ருஷ்டிம்
ஸ்பஷ்டீ கர்த்தும் ஜகத்யாம் ஸ்புடயதுஸ ஜடித்யஸ்ம திஷ்டம் விஸிஷ்டம்–32-

ஹயக்ரீவன் ஹரி நாராயணனே அன்றோ
அடி பணிந்தவர்களின் அம்சங்களை எல்லாம் அபஹரிக்கிறான்
இப்படி ஹரித்தன்மை கொண்டு இருந்தாலும் குதிரை முகத்தை ஏறிட்டுக் கொள்கிறான்
மனித உடலைத் தலைக்கு கீழ் கொண்டுள்ளான்
குதிரைக்கும் ஹரி என்ற பெயர் உண்டே
ஆக இவன் தலையில் ஹரித்தன்மை உள்ளது
திருமேனியில் மனிதத்தன்மை உள்ளது
இதன் மூலம் -நமக்கு தலை வஹிக்கும் பரமாத்மா ஒருவன் உள்ளான்
அவன் ஒருவனே -தலையானவன் –
அதன் கீழ் ஜீவாத்மாக்களும் சேஷ பூதர்களாக உள்ளார்கள் என்று உணர்த்தி அருள்கிறான்
ஸத் ஏகம் ஏவ அத்விதீயம்
விஸிஷ்ட அத்வைதம்
தெளிவாக உணர்த்திய புற மத வாதங்களை தனது உருவத்தாலேயே நிரஸித்து அருள்கிறான்

————–

மஸ்தே அர்வன் விஸ்தரை கிம் விஹர மம மநோ மந்துராயா மமந்தம்
கல்பந்தே அநு ப்லவாஸ்தே மம சததமிமே ஹீந்த்ரியாஸ்வா தஸா அபி
கிம் சாத்ரா நல்ப கல்பா வஸரவி சர துச்சாவ சாகர மூர்த்தி
ஸ்பூர்த்திஸ் பீதோரு கர்ம ப்ர குணத் குண கணஸ் ச வர்ணாய ப்ரணீத--33-

பரிமுகப்பெருமாளே இனி மேல் என்ன சொல்ல இருக்கிறது
எனது மனம் என்னும் லாயத்திலே நித்ய வாஸம் செய்து அருள்வாயாக
இங்கே உனக்குத் துணையாக உன்னையே தொடர்ந்து இருக்க விரும்பும் மனத்தின்
தொண்டர்களாக பத்து குதிரைகள் உள்ளன –ஞான கர்ம இந்திரியங்கள்
இவைகள் உன்னையே தொடர இருக்கும் பாஸிடி நீயே அருள் புரிய வேண்டும்
இங்கு உனக்கு புல்லும் நிறைய உண்டு -பாலக்கோடு கல்பமாக வலிமையுடன் புஷ்டியாக செழுமையுடன்
உள்ள உயர் ரகப் புல்லான எனது கர்மாக்கள் இங்கே மண்டி உள்ளன
அவைகளே நீ மேய்த்து ஒழித்திட்டு அருள வேண்டும்

————

வஸ்தூரீ கர்து மர்சா விதிஷு சமுசிதம் நான்ய தஸ்யேதி ஜாநந்
கஸ்தூரீ ரெங்க நாதஸ் ஸ்தவம் இமம் உபதாமாதி மாஸ் வஸ்ய தத்தே
யஸ் தூனோ யோ அதிரிக்தஸ் சகலமபி ச தம் ஹ்ருத்யந்தர் தமஸ்மின்
ஸ்வ ஸ்தூலீ கார தீராம் விதரது படதாம் வாகாதீச ஸ புத்திம் –34-

ஆதியாம் ஹயக்ரீவப்பெருமாளுக்கு பூசனை செய்யப் பயன்படுத்திய இந்தச் சொல் மாலையைத் தவிர
வேறே எந்தப் பொருளும் கிஞ்சித்தும் தன்னிடம் இல்லை என்று தேறி கஸ்தூரி ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் இதனைக் காணிக்கை யாக்கினார்
இதில் குறையோ நீரையோ இருக்கலாம்
அவற்றைக் கணிசியாதே அனைத்தையும் தனது திரு உள்ளத்துக்கு உகப்பாகவே ஏற்று அருளுவான்
இதனைப் படிப்பவர்களுக்கு இஹ பர லோக ஐஸ்வர்யங்கள் பெரும் ஞான பிரகாசம் அருள்வான்
ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா அடிமை கொண்டு அருள்வான் என்று பலம் சொல்லி இந்த ஸ்துதி நிகமனம்

———

வாஜி மஸ்தக ஸ்ரீ மனூத் த்ருத ஸ்வாதி மாரக்ஷ ஸ்லோக மாலிகாம்
தர்க்க தீர்த்த ஜாம் கும்பஜ ப்ரியாம் ஸாஸ்த்ர ஸாஹி தீ வல்லபோ அகரோத்

ஸ்ரீ தர்க்க தீர்க்க ஸ்வாமி அருளிச் செய்த இந்த மாலையை
அகஸ்தியருக்கு அன்புக்கு உரித்தான தமிழில்
ஸாஸ்த்ர சாஹீத வல்லபன் என்ற விருதுடைய கருணாகர தாஸன் அருளினான்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கஸ்தூரி ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ ஸமேத ஸ்ரீ ஹய வதன  பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கமலாலயோ பல கருட சதகம் -ஸ்ரீ ஷேம காரி சதகம் –ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் —

August 9, 2023

ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் கார்த்திகையில் கார்த்திகையில் திருவவதரித்து அருளிச் செய்த
ஸ்ரீ நாச்சியார் கோயில் ஸ்ரீ கல் கருடன் மேல் 102 ஸ்லோகங்கள் கொண்ட   பிரபந்தம் இது

விஹாரம் என்ற பகுதிகளாகப் பிரித்து அருளிச் செய்துள்ளார்-விஹாரம் ஸஞ்சாரம் என்றவாறு –

கவிதா ஜித கல்லோலி கன்யகா காந்த வக்ஷஸே
கருணாதி குணடாட்யாய கமலா நிதயே நம-

பாற் கடல் கொதிக்கின்றது என்று அத்தை விட்டு திருமார்பில் அமர்ந்து
அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாஸம் செய்பவள்

தம்முடைய கவிதையினால் அலை மகளை மார்பில் கொண்டுள்ள எம்பெருமானை வென்றவர் என்றபடி

அவனைத் தனது கவிதைகளால் வசப்படுத்தியவர்
கருணாதி குண் டாட் யாய –கருணை முதலிய குணங்கள் நிறைந்தவர்
கமலா நிதயே நம-இவர் திரு நாமம் ஸ்ரீ நிதி -அவருக்கு பிரணாமங்கள் என்றவாறு

வைராக்ய -விஜித -ஸ்வாந்தை ப்ரபத்தி விஜி தேஸ்வரை
அநு க்ரோஸ ஏக விஜிதை இத் உபாதேஸி தேசிகை –வைராக்யம் மூலம் மனதை வெற்றி கொண்ட ஆச்சார்யர்கள்

ஆனு மானித அதிகரணத்தில் யமன் நசிகேதஸத்துக்கும் உபதேசம்
தஸ்ய ச வசீகரணம் தச் ஸரணாகதி ரேவ -சரணாகதி மூலம் அவனையும் நம் வசப்படுத்தலாம் என்கிறார்

ப்ரபத்தி விஜி தேஸ்வரை-இப்படி பிரபத்தி செய்து வெற்றி கொண்டவர்கள் நம் ஆச்சார்யர்கள்

அநு க்ரோஸ ஏக விஜிதை-
புகழ் புண்ணியம் பொருளுக்கும் வசப்படாத ஆச்சார்யர்கள் இரக்கத்தின் வசப்பட்டு உபதேசிக்கிறார்கள்

——-

ஸூபர்ணன்
தார்ஷ்யன்
வைநதேயன்
வாயு வாஹனன்
நாகாந்தகன்
ஸூதா ஹரன் –
ஸூதா கரன்
ககேஸ்வரன்
ககநேஸ்வரன்
பக்ஷி ராஜன்
ஷேம காரீ -போன்ற திரு நாமங்கள் பெரிய திருவடிக்கு உண்டே

———–

முதல் விஹாரம் -மஹா ப்ராஸ விஹாரம் –12 ஸ்லோகங்கள்
ஒவ்வொரு அடியிலும் முகப்பில் உள்ள தொடர்கள் ஒரே மாதிரியாக இருக்கும்

ஸ்ரீ லஷ்மீ ஸதநே ஸ்திதம் கலயதே ஸ்ரீ பக்ஷி ராஷாய தே
ஸ்ரீ லஷ்மீ பகவத் விவாஹ விதயே ஹேதுத்வ மாதஸ் துஷே
ஸ்ரீ லஷ்மீ பகவத் ஸூவாஹ மணயே வேதவ்க பூர்ணாத்மநே
ஸ்ரீ லஷ்மீ ஸதநாதி வாஞ்சித வராந் ஸத்யஸ் ப்ரதாத்ரே நம -1-

ஸ்ரீ நாச்சியார் கோயிலில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்ரீ நாச்சியாருக்கு ஸ்ரீ நம்பிக்கும் திருக் கல்யாணம் நடக்கக் காரணமானவரும்
இருவருக்கும் வாஹனமாக விளங்குபவசரும்
வேதமே வடிவு எடுத்தவரும்
செல்வம் வேத ஞானம் இல்லம் போன்ற அனைத்து அபீஷ்டங்களையும் அருளும் ஸ்ரீ கருட பகவானுக்கு வணக்கம் –

———-

இரண்டாம் விஹாரம் —ப்ராஸ விஹாரம்
இதில்  15 ஸ்லோகங்கள் உள்ளன
ஒவ்வொரு ஸ்லோகத்திலும் எதுகை அணி அமைந்துள்ளது
இதில் முதல் ஸ்லோகம்
ரஷஸஸ் தநு பவேந பாதிதம் ரக்ஷதஸ்தவ ததா ரகூத் வஹம்
பக்ஷ பாத விபவோ அஸ்து தாதருசஸ் ஸ ஷணாய பதகேந்த்ர மே ஸதா –இரண்டாம் எழுத்து

கருட பகவானே ராக்ஷசனான ராவணன் மகனால் வீழ்த்தப்பட்ட ராமனைக் காத்த இறக்கைகள்
உடைய கருட பகவானே அந்த வீச்சு எனக்கு எப்பொழுதும் விழாக் காலமாகவே இருக்கும்படி அருள்வதாகுக

——-

மூன்றாம் விஹாரம் –அநு ப்ராஸ விஹாரம்
இதில் 26 ஸ்லோகங்கள் -மோனை நயம் -ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்து ஒன்றாகவே இருக்கும்
இதில் முதல் ஸ்லோகம்

பரஸ்ய பும்ஸ ப்ரணய ஏக பாத்ரம் பயோதிஜா பத்தன க்லுப்த வாஸ
பதோ தர ப்ராண கணாப ஹாரீ பதங்க ராஜ பரிதஸ் ஸ பாது

பரமபுருஷனின் அன்புக்குப் பாத்ரமானவரும்
திருமகளின் திரு நகரான நாச்சியார் கோயிலிலே வஸிப்பவரும்
வயிற்றையே காலாக யுடைய பாம்புகளின் உயிரை அபஹரிப்பவருமான
பக்ஷி ராஜன் அடியோங்களை எல்லாப் புறங்களிலும் இருந்து கொண்டு ரக்ஷித்து அருள வேண்டும் –

————-

நான்காம் விஹாரம் –சமத்கார விஹாரம்
இதில் 34 ஸ்லோகங்கள் -பலவிதப் பொருள் அணிகள் கொண்டது –
இதில் முதல் ஸ்லோகம்

சஷுஸ் ஸ்ருதிநாம் சரமாம் தஸாம் யந் நாஸா நிஜாக்ரேண ஸ்ருஜத்ய ஜஸ்ரம்
ஸ வைநதேயஸ் ஸ்ருதி ப்ருந்த ரூப ஸ்ருதீ ருதைஸ் ஸ்வை பரித புனாது

கருட பகவான் கண்ணையே காதாக யுடைய பாம்புகளுக்கு தனது மூக்கினாலேயே இறுதி நிலையைத் தருகிறார்
அவர் வேதமே வடிவெடுத்தவர்
நமது காதுகளை அவர்   தனது ஒலிகளால் புனிதமாக்க வேண்டும்
இந்த ஸ்லோகத்தில் கண் காது மூக்கு பற்றிய குறிப்புக்கள் உள்ளன

————-

இதில் 27 ஸ்லோகம் உரையாடல் வடிவில் அமைந்துள்ளது -எல்லே இளங்கிளி போல்

ஸ்வாமின் வஞ்சுள வல்லி -கேந பவதா நாவிஷ் க்ருதா பாஹவ
ஸத் வாரோ அத்ர புஜ த்வயம் புனரிதம் சங்காய சக்ராய ச
காந்தே பக்த தமோ மம ப்ரிய ஸூஹ்ருத் மத் வாஹநேந்த்ரோ வரோ
பாஹு த்வந்த்வ யுதோ மமாபி ததலம் –ஸ்வாமின் நமஸ்தே நம

வஞ்சுள வல்லி -பகவானே
ஸ்ரீ நிவாஸன் -வஞ்சுள வல்லி
வஞ்சுள வல்லி –நான்கு கரங்களையும் காட்டாமல் சங்கு சக்கரங்களோடு இரண்டு திருக்கைகளுடன் மட்டும் நீர் எழுந்து அருளி இருப்பது எதனால்
ஸ்ரீ நிவாஸன் -எனது சிறந்து பக்தனும் நண்பனுமான கருடன் இரண்டு திருக்கைகளோடே தானே இருக்கிறான்
எனவே நானும் அவனைப் போலவே இரண்டு கைகளோடு இருக்கிறேன்
வஞ்சுள வல்லி –எம்பெருமானே அடியார்களுக்கு ஏற்றபடி தன்னை அமைத்துக் கொள்ளும் தன்மை யுடைய உனக்கு நமஸ்காரங்கள்

நிறம் வெளிது செய்து பசிது கரிது-யுகம் தோறும் அவரவர் விரும்பியபடியே தன்னை அமைத்துக் கொள்ளுமவன்

—————

ஐந்தாம் விஹாரம் – பிரார்த்தனா விஹாரம்
இதில் 15 ஸ்லோகங்கள் -இதில் 11 வது ஸ்லோகம்

ஸ்வாமின் பஷீஸ் வராஸ்மின் குருமயி கருணா மீஷேதே தன்ம மாலம்
யேந ஸ்யுஸ்தே புஜங்க ப்ரமுக விஷ தரா கோசார நாஷி மார்கே
ஷேமோ பூய குடும்பே ஸ்வய மதி மஹிதோ வர்தமானோ மம ஸ்யாத்
ஸ்ரீ மன் நாராயணோ அபி ஸ்வய மதி குதுகீ ஸ்வைர் மமாத்கே ஸதா ஸ்யாத்

ஸ்வாமியே -பறவைகளின் தலைவனே -பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களும் தீயவர்களும் அடியேனுடைய பார்வையில் படாமலும்
அடியேனுடைய குடும்பத்தில் நன்மையும் செல்வமும் சிறப்பும் செழிப்பும் ஏற்பட்டு
ஸ்ரீ மன் நாராயணன் அவனுடைய ஸமஸ்த பரிவாரங்களோடு வந்து எப்போதும்
அடியோங்களுக்குத் துணையாகும்படி நீ கருணை கூர்ந்து அநுக்ரஹிக்க வேண்டும் இதுவே போதும்

இதில் 15 வது ஸ்லோகத்தில் கருடனிடம் சரணாகதி செய்கிறார்

ஸரோஜ வாஸா ஸதநே வஸந்தம்
ஸரோஷா மாச்சின்ன ஸரீ ஸ்ரு பவ்கம்
ஸரோக மேதம் ஸூகி நம் விதாதும்
ஸரோ மஹர்ஷ சரணம் ப்ரபத்யே

நாச்சியார் கோயிலில் வசிப்பவரும்-சினத்துடன் பாம்புகளை துவம்சம் செய்பவருமான கருடன்
வியாதியுடன் கூடிய அடியோங்கள் நலம் பெறும்படி அருள் புரிய வேண்டும்
என்று பிரார்த்தித்து மயிர்க்கூச்சு எரிய அவரிடம் சரணாகதி செய்கிறேன்
ஸ்வாமி சரணாகதி செய்தவுடன் ஆம் என்று கருடன் கூறி அருளியதால் விளைவாக மயிர்க்கூச்சு எரிகிறார்

இதன் பல ஸ்ருதி ஸ்லோகம்

ஸ்ரீ நிவாஸ கவி தல்ல ஜக் லுப்தம்
ஸ்ரீ நிவாஸ வஸதே பதகேந்தோ
ஸ்ரீ நிவாஸ சதகம் படிதம் சேத்
ஸ்ரீ நிவாஸ சதகம் ப்ரததாதி

ஸ்ரீ நிதி கவி எழுதிய நாச்சியார் கோயில் கல் கருடன் பற்றிய இந்தச் செல்வம் நிறைந்த ஸ்துதியைப் படிப்பவர்கள்
செல்வம் நிறைந்த நூற்றுக் கணக்கான வீடு செல்வம் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்வார்கள்

———–

முதல் விஹாரம் -மஹாப்ராஸ விஹாரம் –12 ஸ்லோகங்கள்
ஒவ்வொரு அடியிலும் முகப்பில் உள்ள தொடர்கள் ஒரே மாதிரியாக இருக்கும்

ஸ்ரீ லஷ்மீ ஸதநே ஸ்திதம் கலயதே ஸ்ரீ பக்ஷி ராஷாய தே
ஸ்ரீ லஷ்மீ பகவத் விவாஹ விதயே ஹேதுத்வ மாதஸ் துஷே
ஸ்ரீ லஷ்மீ பகவத் ஸூவாஹ மணயே வேதவ்க பூர்ணாத்மநே
ஸ்ரீ லஷ்மீ ஸதநாதி வாஞ்சித வராந் ஸத்யஸ் ப்ரதாத்ரே நம -1-

மேதாவி மஹரிஷியின் மகளாக அவதரித்த ஸ்ரீ நாச்சியார் கோயிலில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்ரீ நாச்சியாருக்கு ஸ்ரீ நம்பிக்கும் திருக் கல்யாணம் நடக்கக் காரணமானவரும்
இருவருக்கும் வாஹனமாக விளங்குபவரும்
வேதமே வடிவு எடுத்தவரும்
செல்வம் வேத ஞானம் இல்லம் போன்ற அனைத்து அபீஷ்டங்களையும் –ஸத்யஸ்-விரைந்து அருளும் ஸ்ரீ கருட பகவானுக்கு வணக்கம் –

நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.

——-

அம்ருத கலச சிந்தோர் அந்தரங்கே சயாநம்
அம்ருத கலச ஸிந்தோ கன்யகா முத் வஹந்தம்
அம்ருத கலச ஸிந்தும் கஞ்சித் அம்ஸே வஹந்தம்
அம்ருத கலச ஹஸ்தம் பாவயே பக்ஷி ராஜம் –2-

அம்ருத கலச சிந்தோர் அந்தரங்கே சயாநம்
அம்ருத மயமான பாற் கடலில் பள்ளி கொண்டு இருப்பவனும்
வ்யூஹ மூர்த்திகள் போலவே நறையூரிலும்
வாஸூ தேவன்
ப்ரத்யும்னன்
அநிருத்தன்
புருஷோத்தமன்
ஸங்கர்ஷணன் -என்ற ஐவராக சேவை சாதித்து அருளுவதால் இந்த பதங்கள் பிரயோகம்

அம்ருத கலச ஸிந்தோ கன்யகா முத் வஹந்தம்
வக்ஷஸ்தலத்திலும் வஞ்சுள வல்லி நித்ய வாஸம் இங்கும் உண்டே-உத் வஹந்தம்-மணந்து கொண்டவர்
சனிக் கிழமை இங்கு சேவித்தால் 16 முறை திருமலை அப்பனை சேவித்த பலம் உண்டு என்பார்கள்

அம்ருத கலச ஸிந்தும் கஞ்சித் அம்ஸே வஹந்தம்
அம்ருதம் அமரர்கட்க்கு ஈந்த மிளிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதினும் ஆற்ற இனியான் நிமிர் திரை நீள் கடலானே என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடியே
ஆராவமுதமான எம்பேருமானைத் திருத் தோள்களில்-அம்ஸே- வஹிப்பவனும்

அம்ருத கலச ஹஸ்தம் பாவயே பக்ஷி ராஜம்
அம்ருத கலச பிரசாதம் வியாழக்கிழமை தோறும் இங்கு உண்டே

———-

இந்த ஸ்லோகத்தைக் கேட்டவுடனே -அமுதம் போல் உள்ளதே -என்று சொல்லி ரசித்தான் புள்ளரையன்
இதே போல் அமுத மயமான ஸ்லோகங்களை மேலும் இயற்ற அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்

பாக ஸாஸன சிலா மய ஆக்ருத 
பாக ஸாஸன ஸஹோதர ப்ரிய
பாக ஸாஸன திசேஹ பக்ஷிணாம்
பாக மஸ்ய கவிதாஸூ கஞ்சன –3-

பாக ஸாஸன சிலா மய ஆக்ருதே
இந்த்ர நீலக் கல் போன்ற கல்லான வடிவத்தை யுடையவனே

பாக ஸாஸன ஸஹோதர ப்ரிய
இந்திரனின் ஸஹோதரனான உபேந்த்ரனான எம்பெருமானின் நண்பனே

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||–ஸ்தோத்ர ரத்ன ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

பாக ஸாஸன திசேஹ பக்ஷிணாம்
பறவைகளின் இந்திரனே -அரையனே –
இன்றும் நாச்சியார் கோயில் வெளிப்பிரகாரத்தில் மாலை வேளையில் அமர்ந்தால் பறவைகள் கூட்டமாக
ஒலி எழுப்பிக் கொண்டு அவ்வழியாகச் செல்வதைக் காணலாம்
அவைகள் ஸ்தோத்ரம் செய்யும் ஒலியே இது –

பாக மஸ்ய கவிதாஸூ கஞ்சன
அடியேனுடைய கவி அனைவரும் மகிழும்படியான பாகத்தில் -நடையில் -இருக்கும்படி நீ அருள வேண்டும் –

———-

கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன்.
அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும்
ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.

விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

பரிஷ்கார வர்ணக–

வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -ஸ்ரீ கருட பஞ்சாசத் —36-

ஆதி சேஷனே கையில் கங்கணம் -வாஸூகி பூணூல் -தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் -பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் -குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –

நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது
அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். ”
ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று
ஸ்வாமி தேசிகன் இவ் வைபவத்தை பாடுகின்றார்.

————

கலச ஜலதி கந்யா கேஹ கேஹ லஸந்தம்
கலச ஜலதி கந்யா காந்த காந்தம்
கலச மம்ருத பூர்ணம் ஹஸ்த பத்மே ததாநம்
கலச ஜலதி கந்யா வீக்ஷிதம் ஸந் நமாமி –4-

கலச ஜலதி கந்யா கேஹ கேஹ லஸந்தம்
ஆவிர்பாவ கலச ஜலதவ் -என்று ஸ்வாமி தேசிகன் சாதித்தபடி
பாற் கடலில் தோன்றிய மஹா லஷ்மியின் திருக் கோயிலான நாச்சியார் கோயிலில்
தனிக்கோயில் ஸந்நிதியில் எழுந்து அருளி இருப்பவரை-லஸந்தம்-ஒளி வீசுகிறவரே 

கலச ஜலதி கந்யா காந்த காந்தம்
அந்தப்பிராட்டியாரின் அழகான கணவனான எம்பெருமானைத் தாங்குபவரை
க்ரீடேயம் கலு நான்ய தாஸ்ய ரஸதா ஸ்யாத் ஐகரஸ்யாத்தயா -ஆழ்வான் ஸ்ரீ ஸூக்தியின் படி
அந்யோன்ய திவ்ய தம்பதி
கொடியைத் தாங்கும் கொம்பு -அழகிய கேள்வன்
வைகுண்ட பீடி க்ருத்ஸகந்தம் –கருட தண்டகத்தில் ஸ்வாமி தேசிகன் –

கலச மம்ருத பூர்ணம் ஹஸ்த பத்மே ததாநம்
அம்ருதம் நிறைந்த கலசத்தைத் தனது கரங்களிலே ஏந்தியவர்
தோள்களிலோ ஆராவமுதம்
கரங்களிலோ தேவாம்ருதமான உப்புச் சாறு

கலச ஜலதி கந்யா வீக்ஷிதம் ஸந் நமாமி
பிராட்டியின் கடாக்ஷத்துக்கு இலக்கானவரை வணங்குகிறேன்

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்–ஸ்ரீ குணரத்ன கோஸம்–18-

மஹா லக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?

—————-

பத்மாலயே அதி மதுரே க்ருத நித்ய வாஸ
பத்மா பிராம மதுநாசந க்லுப்த சித்த
பத்மா பிஜாத சுப வாஹன ஹம்ஸ ஸேவ்ய
பத்ம அஸி தேஷண நிப பரிபாது பத்ரீ –5-

பத்மாலயே அதி மதுரே க்ருத நித்ய வாஸ
இங்கு நித்ய வாஸம் செய்து அருள்பவர்
சிற்பி ஒரே கல்லில் வடிக்க -தத்ரூபமாக இருந்த அது பறக்கத் தொடங்க
உளியால் சிற்பி கருடனை அடிக்க மூக்கில் அடிபட்டு விழ
மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறை யார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூரில் எழிலைக் கண்டதும்
வேத ஸ்வரூபி அங்கேயே நித்ய வாஸம் செய்து அருளுகிறார் என்பர்

பத்மா பிராம மதுநாசந க்லுப்த சித்த
பிராட்டிக்கு ஆனந்தம் தந்து அருளுபவரும்
மதுவை நிரஸித்து அருளிய எம்பெருமா-ஹயகிரிவர் – இடத்திலேயே சித்தம் வைத்து விருப்பவர்
விஷ்ணு சித்தரும் பெரிய திருவடியின் அம்சமே அன்றோ
ஹயக்ரீவருக்கு பெரிய திருவடிக்கு வியாழக்கிழமை குருவாரம் மிகவும் உகந்தது
கருட மந்த்ரம் ஜபித்து யாரும் தவம் செய்த ஸ்வாமி தேசிகனுக்கு ப்ரத்யக்ஷமாக வந்து
ஹயக்ரீவ விக்ரஹத்தையும் வழிபட அருளி
ஹயக்ரீவ மந்திரத்தையும் உபதேசித்து அருளினார் அன்றோ

பத்மா பிஜாத சுப வாஹன ஹம்ஸ ஸேவ்ய
தாமரையில் தோன்றிய நான்முகனின் வாகனமான அன்னப் பறவையால் வணங்கப்படும் புள்ளரையன்
அன்னப் பறவை மற்ற எல்லாப் பறவைகளுக்கும் உப லக்ஷணம்

பத்ம அஸி தேஷண நிப பரிபாது பத்ரீ
மைத்தடம் கண்ணி என்றும் மைய கண்ணாள் என்றும் கொண்டாடப்படும் பிராட்டியுடைய திருக் கண்களைப் போல் திரு மேனி கொண்டவர்
கருடன் பொன் வண்ணத்தவரானாலும் இங்கு கல் கருடனாக ஸேவை சாதித்து அருளுவதால் இவ்வாறே கொள்ள வேண்டும்
பிராட்டி எம்பெருமானை ஸதா பஸ்யந்தி பண்ணுவதால் பெற்ற மை வண்ணம் போல்
இவரது திருமேனியும் ஸதா பஸ்யந்தி யாலேயே வந்த வர்ணம்

இப்படிப்பட்ட பெரிய திருவடி நம்மை ரக்ஷிக்கட்டும்

————

ஜகன் மாதுர் கேஹே நகர வ்ருஷபே பூர்ண விபவே
ஜகன் மாதுர் கேஹேம் பஜ யுகள மத்யம் நிஜமயம் 
ஜகன் மாதா கிருஷ்ணாஜிந பிஹி தமாஹோ ச கலயன்
ஜகன் மாநம் த்ருஷ்ட்வா பதக பதிமாநந்த மயதே –6-

ஜகன் மாதுர் கேஹே நகர வ்ருஷபே பூர்ண விபவே
வைபவ வளங்கள் நிறைந்த திவ்ய தேசம்-

ஒரே ஆழ்வார் 110 பாசுரங்கள் -பெற்ற திவ்ய தேசம் -வேறே எந்த திவ்ய தேசத்துக்கும் இந்தப்பெருமை இல்லையே

பொன் முத்தும் அரி யுகிரும் புழைக் கைம்மா கரிக்கோடும்
மின்னத்தன் திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியளைத் திரு மார்பில்
மன்னித்தான் வைத்துகந்தான் மலரடியே அடை நெஞ்சே

ஜகன் மாதுர் கேஹேம் பஜ யுகள மத்யம்
திருமார்பில் பிராட்டியைக் கொண்டவன்

ஜகன் மாதா கிருஷ்ணாஜிந பிஹி தமாஹோ ச கலயன்
மான் தோலால் மறைத்துக் கொண்டு வாமனனாய் யாசகம் கேட்டுச் சென்றான்

மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே

ஜகன் மாநம் த்ருஷ்ட்வா பதக பதிமாநந்த மயதே
ஓங்கி உலகளந்த பெரிய தோற்றத்தோடு பெரிய திருவடி ஸேவை
நான்கு எட்டு பேர் என்று கூட்டிக் கூட்டி 128 பேர் எழுந்து அருளச் செய்ய வேண்டும் படியான விஸ்வ ரூபம் அன்றோ

இந்தப் பெருமையை கண்டு மிதுன தம்பதிகள் மகிழ்வார்கள் அன்றோ-

————-

ஆஸ்லேஷா தார தேவான் ஹ்ருதி பய பரிதான் ஸந்ததம் குர்வதஸ்தான்
ஆஸ்லேஷா தாத்ம தார த்வயகர கலி தாத் ஆதி மூலஸ்ய பும்ஸஸ்
ஆஸ்லேஷா தூரு ஜாதத் அதிகத மஹித அநந்த யோகஸ்ய வீந்தோ
ஆஸ்லேஷம் புத்திர் ஏஷா மம சமதிகதா மோஹ மம்ஹோ ப்ரயாதி –7–

ஆஸ்லேஷா தார தேவான்–ஆயில்யம் என்ற நக்ஷத்திரத்துக்கு தேவர்களானவர்களை-நாகங்கள் நக்ஷத்ரம் -லஷ்மணன் -ஆயில்யம்
ஹ்ருதி பய பரிதான் ஸந்ததம்  குர்வதஸ்தான்–மனதில் பயத்துடன் நிரம்பினவர்களாக எப்போதும் செய்பவரும்

ஆஸ்லேஷா தாத்ம தார த்வய கர — தமது இரு மனையாளான தேவிமார் களின் இருவரின் கைகளால்
கலி தாத் –தழுவுதலாலும்
ஆதி மூலஸ்ய பும்ஸஸ் ஆஸ்லேஷாத் ஊரு ஜாதத் அதிகத மஹித -உலகிற்கு எல்லாம் ஆதி காரணமான பரம புருஷனான புருஷோத்தமனின் தொடையில் இருந்து தோன்றிய ஐந்தவான ஊர்வசியின் அணைப்பை விட பெரிய இன்பம் அடையும்
அநந்த யோகஸ்ய வீந்தோ –அடையப்பட்ட பெருமை பொருந்திய சேர்க்கையை யுடைய பஷிகளின் தலைவனான கருடனின்-வீ -பறவை
ஆஸ்லேஷம் புத்திர் –தழுவுதலே அடைந்த அடியேனது புத்தியானது
ஏஷா மம சமதிகதா மோஹம் அம்ஹோ ப்ரயாதி –மோஹத்தை அடைகிறது -இது என்ன பெரிய வியப்பு

ஊரு ஜாதர் -ஒவ்ரவர் என்னும் மகரிஷி -ஸ்ரீ வத்ஸ கோத்ரத்து ப்ரபவர் பற்றி அருளிச் செய்ததாகவுமாம்

———

கமலஸ்தித தேவதா க்ருஹே
கமல ஸ்ரீ ஹரி நேத்ர வாஹனம்
கமலம் கலயந்தம் ஆஸ்ரயே
கமல ஸ்ரீ கர ஸூத சோதரம் –8-

கமலஸ்தித தேவதா க்ருஹே-நாச்சியார் கோயிலிலே
கமல ஸ்ரீ ஹரி-தாமரைக்கண்ணன்

மிதுன திவ்ய தம்பதியை எழுந்து அருளப் பண்ணும் திருத்தேர் போன்ற வாஹனமானவர்
அனைவருக்கும் கமலாந்தமான ஐஸ்வர்யத்தை அருள்பவர்-கம் அலம் போதுமான மகிழ்ச்சி
தாமரையை மலரச் செய்யும் ஸூர்யனின் தேரோட்டியான அருணனுக்கு ஸஹோதரர்
இவரை அடியேன் ஆஸ்ரயிக்கிறேன்

————-

பத்மம் கர்ணே வஹதி ச பவான் பத்ம நாபம் ததாம்ஸே
பத்மம் கர்ணே பதக நிரூபதே தம் மஹாந்தம் பரஸ்மின்
பத்மகார ஸ்த்வமிதி யததஸ் ஸ்வ அநுரூபே பவித்ரே
பத்மா காரே நனு புரவரே ஸாதரோ வர்த்தஸே அஸ்மின் –9-

பத்மம் கர்ணே வஹதி ச பவான் -நீங்கள் பத்மம் பாம்பு அணிகலன்
பத்ம நாபம் ததாம்ஸே–தோளில் பத்ம நாபன்
பத்மம் கர்ணே பதக நிரூபதே தம் மஹாந்தம் பரஸ்மின்-இடது காதில் மஹா பத்மம் பாம்பு அணிகலன்
பத்மகார ஸ்த்வமிதி -பத்மத்துக்கு இருப்பிடமாகவே உள்ளீர்
யததஸ் -அதனாலேயே
ஸ்வ அநுரூபே பவித்ரே பத்மா காரே நனு புரவரே -இந்த ஷேத்ரத்தில்
ஸாதரோ வர்த்தஸே அஸ்மின்-உகந்து அருளி உள்ளீர்

பாம்புகளுக்கும் கருடனுக்கும் பகை மூண்டு –பாம்புகளை பூண்டோடு அழிக்க கருடன் முற்பட்டார்
இதைக் கண்ட சர்ப்ப ராஜன் கருடனிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு
தினம் ஒரு பாம்பை ஆஹாரமாக அனுப்பி வைக்கிறேன் -வம்சம் முழுவதையும் அழிக்காதீர் என்று சொல்ல
கருடனும் அதுக்கு ஸம்மதித்தாராம்

தோளில் பத்ம நாபனைத் தங்கி இருக்கிறார் -அதற்குத் தக்கபடி பரிசுத்தமான திவ்ய தேச வாஸம்

கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

———–

கமடம் கரடிம் ச பஷயன்
கமலம் ஹந்த ஸதாம் விவர்த்தயன்
கமலாலய பூஷணம் ஸ மே
கமலா காந்தா தர கரோது ஸம்

கமடம் கரடிம் ச பஷயன் -கருடன் யானையையும் ஆமையையும் உண்ட சரித்ரம்

சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் ஸரஸி நகமுகே பாதபே கண்ட சைலே
துண்டாக்ரே கண்ட ரந்த்ரே ததனு ச ஜடரே நிர்விசேஷம் யுயுத்ஸூ
அவ்யாதஸ்மாந் அப்வ்யாத விதித நகர ஸ்ரேணி தம்ஷ்ட்ரா பிகாதவ்
ஜீவக்ராஹம் க்ருஹீத்வா கமட கரடிநவ் பக்ஷயன் பஷிமல்ல –ஸ்ரீ கருட பஞ்சாசத்-18-

விபாவசு சுப்ரதீகா -இருவரும் சகோதரர்கள் -சொத்துக்காக சண்டை போட்டு ஒருவர் ஒருவர் மேல் சாபம் –
யானை-கமட — ஆமை-கரடிநவ்–யாக பிறக்க -கோபம் தொடர -சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் –
இந்த பிறவியிலும் சண்டை போட ஸரஸி -சரஸுக்கு கொண்டு செல்ல அங்கும் சண்டை போட
நகமுகே பாதபே கண்டசைலே -நகத்தால் மரத்துக்கு மேலே கொண்டு செல்ல அங்கும் சண்டை போட
வாயால் கவ்வி -வயற்றில் விழுங்க அங்கும் சண்டை போட்டார்கள்
பஷிமல்ல-புள்ளரையன் -நம்மை ரக்ஷிக்கட்டும்-

கமலம் ஹந்த ஸதாம் விவர்த்தயன்
கம் -அலம் -போதுமான அளவு ஆனந்தம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்று அறிந்து
அசன்னேவ ச பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விதுரதி
சத்துக்களுக்குப் போதுமான ஆனந்தத்தைப் பக்ஷிராஜன் வளர்த்துக் கொடுக்கிறான் –

கமலாலய பூஷணம்
நாச்சியார் கோயிலுக்கே ஆபரணம் அன்றோ பெரிய திருவடி

ஸ மே கமலா காந்தா தர கரோது ஸம்
எம்பெருமானுக்கு வாஹனமாக விளங்கும் கருடாழ்வார் அடியேனுக்கு –கரோது ஸம்-மங்களத்தை உண்டாக்கட்டும் –

————

ஸூர ஸம் ஸரஸிஜால யவத்யா
ஸூர ஸம் ச தத ஏவ ஜகத்யாம்
ஸூர ஸந் நயநம் அத்ர வஹந்தம்
ஸூர ஸாரதி ஸஹோதரம் பஜே –11-

ஸூரஸம் ஸரஸிஜால யவத்யா
தாமாரையாளான வஞ்சுள வல்லித் தாயாரை ஏந்தி இருக்கும் திரு மார்பு
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமால்
கழற்ற ஒண்ணாத திரு ஆபரணம் அன்றோ இவள்

ஸூரஸம் ச தத ஏவ ஜகத்யாம்
ஸூரஸம்–ஸூ உ ரஸம் -நல்ல ரஸத்தோடு கூடியவள்
உகாரம் பிராட்டிக்கு வாசகம்
அக்ரதவ் ப்ரயயவ் ராம ஸீதா மத்யே ஸூ மத்யமா
ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மணோ ஆஜுஹாவ ஹ -ப்ரணவமே நடந்து சென்ற காட்சியின் விவரணம்
சுவையன் திருவின் மணாளன் -இவளுடன் சேர்ந்து இருப்பதாலேயே நல்ல ரஸத்தை யுடையவனாக எம்பெருமான் விளங்குகிறான்

ஸூர ஸந் நயநம் அத்ர வஹந்தம்
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
ஸூர -ஸூர்யன் –
ஸத் -நக்ஷத்ரங்களின் தலைவனான சந்திரன்
தனது கண்களாக யுடைய எம்பெருமானுக்கு வாஹனம்

அநாதி மத்ய அந்தம் அநந்த வீர்யம் அநந்த பாஹும் சசி ஸூர்ய நேத்ரம்
பஸ்யாமி த்வாம் தீப்த ஹுதாச வக்த்ரம் ஸூவ தேஜஸா விஸ்வ மிதம் தபந்தம் –
இந்த கீதா ஸ்லோக பாஷ்யத்தில் –சசி ஸூர்ய நேத்ரம் -என்பதற்கு
சசிவத் ஸூர்யவத் ச ப்ரஸாத ப்ரதாப யுக்த ஸர்வ நேத்ரம்
தேவாதீந் அநு கூலான் நமஸ்காராதி குர்வான் ப்ரதி ப்ரஸாதவ்
தத் விபரீதான் அஸூர ராக்ஷஸாதீன் ப்ரதி ப்ரதாபவ்

அனுக்ரஹத்தையும் நிக்ரஹத்தையும் கருடாரூடனாய் இருந்தே செய்து அருள்கிறான் என்கிறார்

ஸூர ஸாரதி ஸஹோதரம் பஜே —
ஸூர்யனின் சாரதியான அருணனின் ஸஹோதரன்
இவரைப் போற்றுகிறேன் -வணங்குகிறேன் –

———–

பஷீந்த்ர ரஷேதி வதந்தி லோகா
பஷீந்த்ர பஸ்யேதி வதந்தி கேசித்
பஷீந்த்ர லஷீ க்ருத பக்தி பாவ
பஷீ க்ருதோ ரக்ஷஸி பவ்ய ஸப்த –12- 

பஷீந்த்ர ரஷேதி வதந்தி லோகா
உலகில் பல பக்தர்கள் ரக்ஷணத்துக்கு உம்மைப் பிரார்த்திக்கிறார்கள்

பஷீந்த்ர பஸ்யேதி வதந்தி கேசித்
வேறே சிலர் உமது கடாக்ஷத்தைப் பிரார்த்திக்கிறார்கள்

பஷீந்த்ர லஷீ க்ருத பக்தி பாவ
அப்படிப்பட்ட பக்தர்களுக்கு இலக்காக விளங்கும் புள்ளரையன்

பஷீ க்ருதோ ரக்ஷஸி பவ்ய ஸப்த —
தன்னுடைய மங்களமான ஒலிகளாலே அனைத்து மங்களங்களும் அருள்கிறாய்
பக்தரின் பிரார்த்தனையில் உமது திரு நாம சங்கீர்தன குரலால் மங்களங்கள் உண்டாகின்றன என்றுமாம் –

மதுரா தரணி கிரஸ்தே மது ஜிதபி ஸ்ரோதும் உத்ஸூகோ நிரதாம்
ஸ்ரவணே ஜநிமத ஸூர பத நகரீ நாதத்வ மப்யாய –வஸூ மதி ஸதக ஸ்லோகம்
பூமா தேவியின் பேச்சு தேனைப் போல் மதுரமாக உள்ளது
அது மதுவை வென்ற எம்பெருமானையே ஈர்த்து விட்டது
அந்த மதுரமான பேச்சை ஸ்ரவணம் செய்யவே ஸ்ரவண நக்ஷத்திரத்தில் திருவவதரித்தான்
ஆகாசம் ஒலிகளை நன்றாக ஊடுறவச் செய்வதால் ஆகாச நகரான திரு விண்ணகரிலே வந்து அவதரித்தான்

அதே போலவே வேத யோ விஹ்ருதம் ததங்க மதவா தத்தே ஸ தே ப்ரீதயே -என்றபடியே
வேத ஸ்வரூபியான கருடனின் மங்கள ஒலிகளைக் கேட்பதற்காகவே நம்பி இங்கு வந்து நித்ய வாஸம் செய்து அருள்கிறான்
தனது மங்கள ஒலிகளாலே உலகுக்கு மங்களங்களை அருளுகிறார் –

——————-

இரண்டாம் விஹாரம் —ப்ராஸ விஹாரம்
இதில்  15 ஸ்லோகங்கள் உள்ளன
ஒவ்வொரு ஸ்லோகத்திலும் எதுகை அணி அமைந்துள்ளது
இதில் முதல் ஸ்லோகம்
ரஷஸஸ் தநு பவேந பாதிதம்
ரக்ஷதஸ்தவ ததா ரகூத் வஹம்
பக்ஷ பாத விபவோ அஸ்து தாதருசஸ்
ஸஷணாய பதகேந்த்ர மே ஸதா -13–இரண்டாம் எழுத்து

கருட பகவானே ராக்ஷசனான ராவணன் மகனால் வீழ்த்தப்பட்ட ராமனைக் காத்த இறக்கைகள்
உடைய கருட பகவானே அந்த வீச்சு எனக்கு எப்பொழுதும் விழாக் காலமாகவே இருக்கும்படி அருள்வதாகுக

பதகேந்த்ர–ஓ கருட பகவானே
ரஷஸஸ் தநு பவேந–ராக்ஷசனான ராவணனின் மைந்தனான இந்த்ரஜித்தினால்
பாதிதம்–விழும்படி செய்த நாக அஸ்திரத்தினால் கட்டுண்ட இளைய பெருமாள் படுத்த நிலையில் இருந்தார்
ரகூத் வஹம்–ரகு குலத்தில் பிறந்த லஷ்மணரை
ததா –அப்பொழுது
ரக்ஷதஸ் தவ-ரஷிப்பதற்கு உன்னுடைய
பக்ஷ பாத விபவோ –இறக்கைகளின் வீசல் ஆகிய லீலை ஏற்படுகிறது
தாதருசஸ்–அது போன்ற லீலை
அஸ்து ஸ ஷணாய மே ஸதா–என்னுடைய பிரதிபந்தங்கள் கழிந்து நிரதிசய ஆனந்தம் பெற இருக்கட்டும் –

இராமாயண ஸ்லோகத்தில் உள்ள அதே பத பிரயோகம் இங்கும்
கம்பர் மாண்ட தீஷித புத்ரனை எழுப்பிய வ்ருத்தாந்தம்

என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய்
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிரச்
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினன் இவ் வுலகு ஏழும் மூடு சிறையான்

வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை -மழை என்று
ஆ சங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சர ராமன் வெண்ணெய் அணுகும்
நேசம் கலந்த மறை வாணர் செஞ்சொல் அறிவாளர் என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசி போல் அகன்ற பதகன் துரந்த உரகம்

இந்த ஸ்லோகத்தில் கருடனின் இறக்கை வீச்சுப் போலவே –மந்த்ர அக்ஷரங்கள் அமைந்து உள்ளன

இந்திரஜித் புத்தி
லஷ்மணன் ஜீவாத்மா
வேத கோஷம் கேட்டு அறிந்து புத்தியை அவன் இடம் செலுத்தி உஜ்ஜீவிப்போம்

———-

சிலா மயீ தே தனு ரத்ர பக்ஷின்
கலாபி காந்தா கவ சோஜ் ஜ்வலேயம்
மலானி மன் நேத்ர கதானி நித்யம்
விலாஸ லேசேந வினா கரோது–14-

ஓ பக்ஷி ராஜனே உம்முடைய இத் திருமேனி இவ் விடத்திலே மயில் போல் காந்தி உடையதாகவும்
கருங்கல் மயமாகவும் பிரகாசமான கவசத்தைத் தரித்துக் கொண்டும் விளங்குகிறது
என்னுடைய கண்ணில் உண்டாகிற அழுக்கை -விஷயாந்தர ப்ராவண்யத்தை –
உமது இறக்கைகளின் விலாஸத்தின் துளியால் இல்லாமல் செய்து அருள்வாய்

————-

அம்ஸா ஸ்ரயம் கஞ்சன காள மேகம்
கம்ஸாந்தகம் ரஞ்ஜயதோ நிநாதை
ஸம்ஸாஸ் பதம் விக்ரம வைகரீஸா
த்வம்ஸாய பூயாத் அக சந்த தேர்ந –15-

கருட பகவான் தனது முதுகை இருப்பிடமாகக் கொண்ட ஒரு காள மேகம் போல் விளங்குகிற
எப்பொழுதும் ப்ரசம்ஸை செய்து கொண்டு வரும் கம்சனை அழித்த பகவான் கண்ணனை
தனது சப்தங்களால் ஆனந்தப் படுத்திக் கொண்டு இருக்கிறார்
அந்தப் பராக்ரம வீர தீரச் செயல் எங்களுடைய பாப கூட்டங்களை ஒழிக்க விளங்கட்டும் –

———–

பணிதிபிர் அமலாப் ருத்தி தாங்க
மணி ரபி பாதுஸ பக்ஷிணா மயம் ந
குணி வர புருஷோத்தமஸ்ய வாஹ
பணி ரமணீ ரமணீ யதா நிராஸ–16–

அர்த்த சம விருத்தம் புஷ்பி தாக்ரா விருத்தம் – -12-13-12-13-கண்ணி நுண் சிறுத்தாம்பு -அவிதித –தனியன் போல் இதுவும்

வேதங்களால் எழுந்த வடிவம் பெற்றவனும்
பறவைகளும் சிறந்தவனும்
நற் பண்புகள் நிறைந்த புருஷோத்தமனுக்கு வாஹனம் ஆனவனும்
பாம்புகளின் மனைவிகளின்  ஸுபாக்யத்தை -அந்தப் பாம்புகளைக் கொல்வதன் மூலம் நீக்குபவனுமான
இந்த கருடன் அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும் –

பணிதிபி ரமலா–அமல பணிதிகளால் -தூய வாக்கான வேதம் –விசுத்தானாம் வாசாம் -தேசிகன் தயா சதகத்தில்

வேதங்களால் எழுந்த வடிவம் பெற்றவன்
ஸூபர்ணோஸி கருத்மான் த்ரி வ்ருத்தே சிரஸ் காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூ
வாமதேவ்யம் ப்ருஹத் ரதந்த்ரே பஷவ் யஜ்ஞாயஜ் நியம் புச்சம் சந்தாம்ஸி அங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம
காயத்ரி சந்தஸ்ஸு வேத அங்கங்களால் ஆனது என்றும்
கருடன் வேத அங்கங்களால் ஆனவன் என்றும் கொள்ளலாம் –

யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்-கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.

குணி வர புருஷோத்தமஸ்ய வாஹ
கருடன் அம்ருத கலசம் கொண்டு வந்ததை பாராட்டி வேண்டிய வரம் கேட்க்கச் சொன்ன விஷ்ணு
வாஹனம் த்வஜமாக ஆக்கி அருளிய
வரம் அருளிய குணம்

தனது தாயான விநதைக்கு கொடுமை செய்த கத்ருவின் சந்ததியான பாம்புகளைக் கோரைப்பதால் கிழித்து
சித்தரவதை பண்ணி இரையாக்கிக் கொண்டதையே –
பக்ஷி தோரக என்ற பதத்தால் அடுத்த ஸ்லோகத்திலும்
இதில் –பணி ரமணீ என்று தொடங்கும் வரியாலும் குறிப்பிடுகிறார்

வக்ர யுக்தி-
பாம்புகளைக் கொல்லுபவன் என்று சொல்லாமல்—பாம்புகளின் மனைவிகளின்  ஸுபாக்யத்தை – நீக்குபவன்-என்று அருளிச் செய்தது –

——–

பக்ஷி ராஜ பவமே அஷி கோசர
பக்ஷி தோரக சுப  ஷிதாவிஹ
ரஷித அனக முனீஸ்வர ப்ரபோ
சிஷி தாமித தனூதி தோத்தம –17-ரதோத்ததா விருத்தம் -12-எழுத்துக்கள் அடி தோறும்

பறவைகளின் அரசனே
பாம்புகளைச் சாப்பிடுபவனே
குற்றமற்ற முனி ஸ்ரேஷ்டர்களை ரக்ஷிப்பவனே
பிரபுவே
நிறைய அஸுரர்களைத் தண்டித்தவனே
உத்தமனே
இந்த மங்களமான பூமியில் என் கண்ணுக்குப் புலப்படு

தேசிகருக்கு ப்ரத்யக்ஷமாகி ஹயக்ரீவ மந்த்ர உபதேஸம் அருளியது போலவே
தனக்கும் ப்ரத்யக்ஷமாக வேண்டுகிறார் –பக்ஷி ராஜ பவமே அஷி கோசர–என்ற வரியால்

கருடன் பாரசாலி -பார வாஹி –
இரையாக யானையையும் ஆமையையும் தூக்கிக் கொண்டு நைமிசாரண்யத்தில் மரக்கிளை மேல் அமர
அது முறிய ஆரம்பிக்க -அதன் கீழே வைகாசனர்கள் -வாலகில்யர்கள் -என்னும் முனிவர்கள் யாகம் செய்ய அந்த மரக்கிளையில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருக்க
தனது அலகால் மரக்கிளையை எடுத்துக் கொண்டு யானையையும் ஆமையையும் கால் இடுக்கிலே பிடித்துக் கொண்டு வெகு தூரம் பறந்து வேறு ஓர் இடத்தில் போட்டு முனிவர்களை காத்த வ்ருத்தாந்தம்
இத்தையே ரஷிதாநக முனீஸ்வர -பதம் காட்டும்

வலகில்ய முனிவர்களின் குட்டை உருவத்தை ஏளனம் செய்ததால் அவர்களின் கோபத்துக்கு ஆளானான் தேவேந்திரன்
இன்னோர் இந்திரனை ஸ்ருஷ்ட்டி செய்ய யாகம் செய்தார்கள்
இந்திரன் காஸ்யப முனிவரின் உதவியை நாடினான் –
யாகத்தின் பலனை காஸ்யபருக்கு வழங்க அவரது மனைவி விநதைக்கு பிறந்த கருடனை பக்ஷிகளுக்கு இந்த்ரனாக்க பயன் படுத்திக் கொண்டதால் பஷீந்திரன் ஆனான்
இதையே பக்ஷி ராஜா -பஷீணாம் மணி என்று குறிப்பிடுகிறார் –

ப்ரஹ்லாதனின் குமாரன் விரோசனன் பாற் கடலில் பையத் துயின்ற பரமனின் கிரீடத்தைத் திருடி பாதாளத்துக்கு கொண்டு போக
முனிவர்களின் ஆணைப்படி கருடன் அங்கு சென்று அவனுடன் யுத்தம் செய்து கிரீடத்தை மீட்டு கண்ணன் இடம் சமர்ப்பித்த
விருத்தாந்தம் –சிஷி தாமித தனூதி தோத்தம-என்கிற வரியால் குறிப்பிடப் படுகிறது
இங்கு தானவோத்தமன் -விரோசனன் என்று கொள்ள இடம் உண்டு –

ரஷி தானக முனீஸ்வர ப்ரபோ –நாக பாசம் விடுவித்த விருத்தாந்தம் –அநகர்-சக்ரவர்த்தி திருமகனுக்கு ஸஹஸ்ர நாமங்களில் ஓன்று
அநகர்-முனிவர்களை ரக்ஷித்ததாகவுமாம்

சுப ஷிதவ் -ஒரே பதமாகக் கொண்டால் -மங்கள பூமியிலே -திரு நறையூரிலே -என்றவாறு
இரண்டு பதங்களாகக் கொண்டால் கருடன் மங்களமானவன் –
கருடனைப் பார்த்தாலும் கருட த்வனியைக் கேட்டாலும் மங்கள கரம் அன்றோ

இதே போல் தனூதி தோத்தம -ஒரே பதமானால் அசுர உத்தமனான விரோசனன்
இரண்டு பதங்களாகக் கொண்டால் -தானவர்களைத் தண்டித்தவனே உத்தமனே என்றவாறு

சிஷி தாமித தனூதி தோத்தம–சிஷித அமித தனூதித உ த்தம-மால்யவான் – மாலி -போன்ற தானவ நிரஸனம்
தானவர்கள் ராக்ஷஸர்களுக்கும் உப லக்ஷணம்

———

வருணாலய ஜா க்ருஹே ஸ்திதம்
தருணா ஸ்வர்க்க ஸதாம் ஸமக்ரமம்
அருணா வ்ரஜம் தமாஸ்ரயே
கருணா பூரித ஸுத்த மானஸம் –-18-அர்த்த சம விருத்தம் -ஸூந்தரீ என்ற பெயர் -10-11-10-11

நாச்சியார் கோயிலிலே இருப்பவனும்
வானவரின் மரத்தோடு -கற்பக மரத்தோடு -ஸமமான முறை கொண்டவனும்
அருணனுக்குத் தம்பியும்
கருணை நிரம்பிய தூய மனஸ்ஸூ உள்ளவனுமான கருடனை ஆஸ்ரயிக்கிறேன்

வருணாலய ஜா க்ருஹே ஸ்திதம் தருணா ஸ்வர்க்க ஸதாம் ஸமக்ரமம் –வரியால் -கற்பக மரம் விரும்பியதை அளித்து வியத்தற்கு உரியது ஆனால் போல்
கல் கருடனும் தனது பாரத்தால் அதிகரித்தும் குறைத்தும் வியப்பூட்டி அருளுகிறார் என்றும்
அபீஷ்ட பல அளிப்பதாலும் சமம் என்றவாறு

வக்ர யுக்தி
நாச்சியார் கோயிலில் என்று சொல்லாமல்-வருணாலய ஜா க்ருஹே ஸ்திதம் வருணனின் ஆலயமான சமுத்திரத்தில் உண்டான லஷ்மியின் க்ருஹம்-என்று அருளிச் செய்தது

———–

மருணா பவ நாம தாரிணா
குருணா தப்தம் அமும் ஜனம் ப்ருசம்
வருணாலய ஜா க்ருஹே அர்ச்சித
கருணா நிர்வ்ருதம் ஆதநோது மாம்--19-

ஸம்ஸாரமாகிய -பவம் என்னும் பெயரை ஏந்திய பாலைவனத்தில் வெகுவாகக்
கொளுத்தப்பட்டு இருக்கும் அடியேனை
கடலின் புதல்வியான திருவின் இல்லத்தில் -நாச்சியார் கோயிலில் வழி படப்படும்
புள் இறையான கருடன் தனது தகவால் வாட்டம் நீங்கி மகிழ்ச்சி பெறுவேனாகச் செய்து அருள வேண்டும் –

இந்த நெருப்புப் போன்ற பவத்தை அணைக்க கடலே தேவைப்படும் என்று குறிப்பால் உணர்த்தவே வருணாலயம் பத பிரயோகம்
கரை புரண்ட கருணைக் கடலான எம்பெருமானாலே இது சாத்தியம் என்று காட்டப்படுகிறது

———-

பயோதி கன்யா பவனே வஸந்தம்
வயோ அதிகம் கஞ்சன பாவயாமி
ரயோத்தரம் வேத மயம் யமா ஹு
ஜயோதயம் யேந ஜனா லபந்தே –20-

வேதத்தில் நிகர் இல்லாதவனாகவும் -மறைகளின் உருவகமாகவும் கூறப்படும் எவன் இடம் இருந்து
மக்கள் வெற்றியையும் எழுச்சியையும் பெறுகிறார்களோ
அப்படிப்பட்ட பாற் கடலின் மைந்தளான திருவின் இல்லத்தில் நாச்சியார் கோயிலில் வஸிக்கும்
ஓர் உயர்ந்த மிக மூத்த பறவை இறையைத் தொழுகிறேன் –

வயோதிகன்
பஞ்சவடியில் பெரிய உடையார் சீதாபிராட்டியை ரக்ஷிக்க முயன்றது போல்
இங்கும் பெரிய திருவடி மிதுன ரக்ஷணத்துக்காக -அடியார் ரக்ஷணமே மிதுனத்துக்கு உகப்பு
வயஸ் -ஆயுளையும் பறவையையும் குறிக்கும் -பறவைகளுக்கு இறைவன் என்றுமாம்
வேதமயம் தொன்மையானது முதியது
வயோ அதிகம் -வாயு போல் விரைவில் மோக்ஷம் அளிப்பவன் என்பதால் இந்தப் பத பிரயோகம்
ஜயோதயம்-ஜனங்கள் -த்ரை வர்ணிகர் என்ற நிர்பந்தம் இல்லையே -ஜெனித்தவர் அனைவருக்கும் அருள்பவர்

————

நாராயணம் யோ வஹதே ஸ ராகம்
ஸாராதிகம் யம் ஸூதியோ வதந்தி
ஆராதி தோய ஸத நேர மாயா
பாராயணம் தஸ்ய கரோமி நாம்நாம் –21-

எம்பெருமானான நாராயணனை உகப்புடன் யார் சுமக்கிறானோ
கற்றவர்கள் யாரை மிக வலிமை யுடையவனாகக் கூறுகின்றனரோ
மறைப்பொருளான யார் நாச்சியார் பி கோயிலிலே வழி படப்படுகிறானோ
அந்தக் கல் கருடனின் திரு நாமங்களை பாராயணம் செய்கிறேன் -எப்பொழுதும் படிக்கிறேன்

ஸாரம் -வலிமை -கருத்து பொருள்களில் வந்தது

மறையோனும் –மறைப்பொருளும் -மறை யுருவனும் இந்த ஸ்லோகங்களைக் கேட்டு உகந்து அருள்வார்கள் அன்றோ –

——–

பயோதி கன்யா ஸதனே விபாந்தம்
வயோ அதிகம் கஞ்சன பாவயாமி
அயோதிகோ யேந பவேத் பவே அஸ்மின்
பயோதய கோ அபி கதா அபி நஸ்யாத் –22-

பயோதி கன்யா ஸதனே விபாந்தம்
பாற் கடலில் தோன்றியவளான நாச்சியாரின் இருப்பிடமாகிய நாச்சியார் கோயிலில் பொலிவுடன் திகழும் கல் கருடன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே
திர்யக்குகளும் மனிதர்களும் செழிப்புடன் விளங்கும் நாச்சியார் கோயிலிலே
நாச்சியாருடைய பூர்ண கடாக்ஷத்துக்கு இலக்காக வைநதேயர் விளங்குகிறார்

வயோ அதிகம் கஞ்சன பாவயாமி
வய -பறவைகளைக் குறிக்குந் சொல் –
அனைத்துப் பறவைகளைக் காட்டிலும் மேம்பட்டவர் -புள்ளரையன் –
அந்தக் கருடனைத் த்யானித்துப் போற்றுவோம்

அயோதிகோ யேந பவேத் பவே அஸ்மின்
யாருடைய அருளால் நமக்கு உயர்ந்த அனைத்து மங்களங்களும் உண்டாகின்றனவோ

பயோதய கோ அபி கதா அபி நஸ்யாத்
வருடைய அருளால் நமக்கு ஏந்திய பயமும் ஏற்படுவது இல்லையோ

சைகாம் பஞ்சா சதம் யா மதநுத விநதா நந்தனம் நந்தியிஷ்யன்
க்ருத்வா மவ்சவ் ததாஜ்ஞாம் கவி கதக கடா கேஸரீ வேங்கடேச
தாமே தாம் சீல யந்த சமித விஷதர வியாதி தைவாதி பீடா
காங்ஷா பவ்ரஸ்த்ய லாபா க்ருத மிதர பலைஸ் தார்ஷ்ய கல்பா ப வந்தி -கருட பஞ்சாசத் –52–பல ஸ்ருதி

பெரிய திருவடி அருள் பெற்ற ஸ்வாமி -ஹயக்ரீவர் பிரசாதம் -அருளிய இந்த பிரபந்தம்
நமக்கு பரம புருஷார்த்தம் பெறுவிக்கும்

——–

வாதஸ்ய ஜேதுர் விஹகேஸ்வரஸ்ய
தாதஸ்ய வாசா கரி கூர்ம போக்து
யாதஸ்ய நாகம் த்வம்ருதா பஹர்து
மா தஸ்ய கோ அப் யஸ்தி ஸமோ ஜகத்யாம் –23-

வாதஸ்ய ஜேதுர் –
தம்முடைய வேகத்தில் காற்றைப் போன்றவர்
சை லீம் நஸ் ஸப்த ஸைலீ லகிமத ரபஸஸ் சவ்து ஸாத்வீம் ஸூ பர்ண -கருட பஞ்சாசத்
கருடன் பறந்து செல்லும் வேகத்தில் மலைகளின் எடைகளே குறைந்து விடுகின்றனவாம்
அசையாத மலைகள் கூட நரையும் படியான வேகம்
காற்று வீச மரங்கள் மட்டுமே நகரும்
ஆகவே வேகத்தில் காற்றை வென்றவர்

விஹகேஸ்வரஸ்ய-பறவைகளின் அரசனான புள்ளரையனான கருடன்

தாதஸ்ய வாசா கரி கூர்ம போக்து
தனது தந்தையின் கூற்றை ஏற்று யானையையும் ஆண்மையையும் உண்டவர்
அமுதம் அபகரிக்கச் சென்ற போது வேடர் கூட்டத்தையே உண்டாபின்பும் பசி ஆறாது இருக்க
கஸ்யபர் ஆலோசனைப்படி யானையையும் ஆண்மையையும் உண்டு பசி ஆற்றினார்
ஜீவ க்ராஹம் க்ருஹீத்வா கமடம் கரடிம் ச பக்ஷயன் பக்ஷி மல்ல -கருட பஞ்சாசத்

யாதஸ்ய நாகம் த்வம்ருதா பஹர்து
தாயான விநதையை மீட்க்கும் பொருட்டு அம்ருதத்தை அபகரித்து வந்தவர்
ஹரித்வார் பிரயாகை நாசிக் உஜ்ஜயினி நான்கு இடங்களிலும் சிந்த கும்பமேளா நடப்பது ப்ரஸித்தம்

மா தஸ்ய கோ அப் யஸ்தி ஸமோ ஜகத்யாம்
ஒப்பார் மிக்கார் இலையாய -ந கச்சித் ஸமஸ்தே -கருட பஞ்சாசத் என்றபடி நிகரானவர் யாரும் இல்லையே

———

காரா க்ருஹாந்த கலிதாவ தாரம்
வாரா ணஸீ தாஹக சக்ர பாணிம்
தாரா தரம் கஞ்சன ஸம் வஹந்தம்
ஸாரா திகம் பக்ஷி பதிம் ப்ரபத்யே –24-

காரா க்ருஹாந்த கலிதாவ தாரம்
சிறைச்சாலையில் திரு அவதாரம் செய்த கண்ணபிரான்
நமது சம்சாரக் கட்டுக்களை உடைக்கவே உரலில் கட்டுண்டான்

வாரா ணஸீ தாஹக சக்ர பாணிம்
தன்னுடைய சக்ராயுதத்தால் காஸ்ட்டி நகரை எரித்தவன்
ஜய! பஞ்சாயுதீமுக்ய! நிர்தக்த காசீபுர! – ஹேதி புங்கவ ஸ்தவம் -2–நடாதூர் அம்மாள்

திருமாலின் ஐந்து ஆயுதங்களுள் முதன்மையானவனே! காசீ நகரத்தை எரித்தவனே! –

ஸ்யந்தநத் விரத வாஜி பதாதி ப்ராஜ்ய ஸுத பரி பாடி ஸம்ருத்தயா
சக்ர வஹ்னி விபேவேன ததா பூத் சந்த்ர சேகர விலேபந பூமா –யாதவாப்யுதம்
சாம்பலுக்கு பஞ்சம் ஏற்படாதபடி காசியை எரித்த வ்ருத்தாந்தம்

தாரா தரம் கஞ்சன ஸம் வஹந்தம்
கார் மேகங்களைப் போல் கரிய நிறத்தை யுடைய எம்பெருமானை வாஹனமாக இருந்து தாங்குபவர்

ஸாரா திகம் பக்ஷி பதிம் ப்ரபத்யே
பலம் நிறைந்தவராக பக்ஷி ராஜரை சரண் அடைகிறேன்
யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷம் ஓதம் மனஸ் ஸஹ பிராணைஸ் ச சர்வை –முண்டகம்
அவனையே தங்கி கைங்கர்யம் செய்பவர்

——–

காரா க்ருஹான் தர்ஜனி மாப்த வந்தம்
தாரா தரம் ஸ்வாம் ஸகதம் விதன்வன்
காரா க்ருஹான் மாம் பவ நாம தேயாத்
வீ ராஜ ராட் விஷ்ணு பதே விதத்தாம் –25-

காரா க்ருஹத்தினுள் பிறப்பை அடைந்த மேகத்தை ஒத்த ஸ்ரீ கிருஷ்ணனை முதுகில் சுமந்து செல்லும்
பக்ஷிகளின் ராஜாவாக விளங்கும் கல் கருடன்
அடியேனை சம்சாரம் என்னும் காரா க்ருஹத்தில் இருந்து எடுத்துச் சென்று ஸ்ரீ வைகுண்டத்தில் வைக்கட்டும்

காரா தாரா காரா வீரா -ப்ராஸம் ரமணீயம்

———-

வஸ்யோ விஷ்ணுர் யஸ்ய குணவ்கை
நஸ்யத் யம்ஹோ யஸ்ய த்ருஸா ந
பிரஸ்யன் த்யஸவோ யேனா ஹீனாம்
பஸ்யத் வஸ்மான் ஏஷஸ் கடாஷை –26-

எவருடைய குண கூட்டங்களால் ஸ்ரீ விஷ்ணுவானவர் வசியப்பட்டு உள்ளாரோ
எவருடைய கடாஷப் பார்வையினால் நமது பாபக் கூட்டங்கள் நசிக்கின்றனவோ
மேலும் பாம்புகளின் உயிர்கள் எவரால் பிரிந்து செல்கின்றனவோ
அப்படிப்பட்ட கருடாழ்வார் நம்மை குளிரக் கடாக்ஷித்து அருளட்டும்

இதிலும் வஸ்யோ -நஸ்யத் -பிரஸ்யன் -பஸ்யத் -ப்ராஸம் ராமணீயம்
பாபம் பாம்பின் விஷம் போல் சித்தரிக்கப்பட்டதும் மிக அழகு

——-

வஞ்சுள வல்லீ நாயக வாஹம்
அஞ்சன ஸம்மித விக்ரஹ வர்ணம்
மஞ்ஜூல ராஜத கவசம் வந்தே
ரஞ்ஜித சேவக மானஸ நேத்ரம் –27-

வஞ்சுலம் என்ற கொடியின் நடுவில் ஆவிர்பவித்ததால் வஞ்சுள வல்லி திரு நாமம்
வஞ்சுள வல்லி நாயகரான எம்பெருமானுக்கு வாஹனமானவரும்
எம்பெருமான் வர்ணமான கறுப்புக் கல்லான விக்ரஹமாதலால் கவசத்தால் அலங்கரிக்கப் பட்டவரும்
சேவார்த்திகளின் மனத்தையும் கண்ணையும் மகிழ்விப்பவரான கருடாழ்வாரை வணங்குகிறேன்

இங்கும் வஞ்சுள -அஞ்சன ம்-மஞ்ஜூல-ரஞ்ஜித–ப்ராஸம் -மிக ரஞ்சகம்

——————-

மூன்றாம் விஹாரம் -அநு ப்ராஸ விஹாரம்

பரஸ்ய பும்ஸஸ் ப்ரணய ஏக பாத்ரம்
பயோதி ஜாபத்தந க்லுப்த வாஸஸ்
பதோ தர ப்ராண கண அபஹாரீ
பதங்க ராஜ பரிதஸ் ஸ பாது –28-

பரஸ்ய பும்ஸஸ் ப்ரணய ஏக பாத்ரம்
பரம புருஷனான நறையூர் நம்பியின் அன்புக்குப் பாத்திரமானவர்
அவனது அன்பையும் அருளையும் பெற்று ஸம் ப்ரஸாதனாக விளங்கும் கருடன்
ஸர்வ காலத்திலும் ஸர்வ அவஸ்தைகளிலும் கைங்கர்யம் செய்யும் பேறு பெற்றுத் திகழ்கிறார்

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-ஸ்தோத்ர ரத்னம் -41-

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

வேகோத்தாநாம் விதாநம் வ்யஜனமநு குணம் வைஜயந்தீ ஜயந்தீ
மித்ரம் நித்யாப்ய மித்ரம் யுதி விஜயரதோ யுக்ய யோகா நபேஷ
தாஸோ நிஷ் பர்யு தாஸோ தநு தநய பிதோ நி ஸஹாய ஸஹாய
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -கருட பஞ்சாசத் -46-

வேகோத்தாநாம் விதாநம் -விதானமாகவும் கைங்கர்யம் –
வ்யஜனமநு குணம் -விசிறியாகவும் கைங்கர்யம்
வைஜயந்தீ ஜயந்தீ -வெற்றிக்கு கொடி யாகவும்
மித்ரம் நித்யாப்ய மித்ரம் -நண்பன் -விரோதி நிரசனத்துக்கு உதவி
யுதி விஜயரதோ யுக்ய யோக அநபேஷ-குதிரை வேண்டாத ரதமாகவும் கைங்கர்யம் –
தாஸோ நிஷ் பர்யு தாஸோ -விட்டு விட மாட்டாத சேஷ பூதர்
தநு தநய பிதோ நிஸஹாய ஸஹாய -வேறே சகாயம் வேண்டாத சகாவாகவும்
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -பக்ஷங்களை கொண்டு விரோதி நிரசனம்
பண்ணுவது போலே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
இதில் -வைஜயந்தி ஜெயந்தி –நிஸ் ஸஹாய ஸஹாய –பர்யு தாச தாச – சப்த பிரயோகங்கள் அனுபவிக்கத்தக்கன

பயோதி ஜாபத்தந க்லுப்த வாஸஸ்
பாற் கடலில் தோன்றிய பெரிய பிராட்டியாரின் தேசமான நாச்சியார் கோயிலிலே நித்ய வாஸம் செய்து அருளி
மிதுனத்தின் அருளை வெகு விரைவில் நமக்குத் பெற்றுத்தர வல்ல கருடன்

பதோ தர ப்ராண கண அபஹாரீ
வயிற்றையே காலாக யுடைய பாம்புகளின் உயிரை அபஹரிப்பவர்

பதங்க ராஜ பரிதஸ் ஸ பாது —
புள்ளரையன் நம்மை எல்லாப் புறங்களிலும் இருந்து கொண்டு ரக்ஷிக்க வேண்டும்
அடியார்களை நாற் புறங்களிலும் இருந்து ரக்ஷிப்பதற்காகவே
வாஸூ தேவன் -ப்ரத்யும்னன் -அநிருத்தன் -சம்கர்ஷணன் -புருஷோத்தமன் -ஐந்து உருவங்களுடன் இங்கு ஸேவை சாதித்து அருளுவது போல்
பெரிய திருவடியும் -ஸத்யன் ஸூ பர்ணன் -கருடன் -தாஷ்யன் -விஹ கேஸ்வரன் -என்று ஆகமம் சொல்லுவது போல்
ஐந்து வடிவங்களுடன் இருந்து நம்மை ரக்ஷித்து அருளுகிறார்-

————-

பதே பயோதே ப்ரிய கன்யா காயா
பதாப்ஜ ஸஞ்சார பவித்ரிதே அஸ்மின்
பதோ தரா மோத விஹார ஹாரி
பதே பதே ஸம் பதமாத நோது –29-

பதே பயோதே ப்ரிய கன்யா காயா
பாற் கடலின் அன்பு மகளான மஹா லஷ்மியின் தேசமான நாச்சியார் கோயிலிலே
பிராட்டி பாற் கடலில் நின்றும் அவதரிக்கையில்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ஸ்ரீய
ஸூதா ஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா —ஸ்ரீ குணரத்ன கோசம் -17என்னும்படி
அவள் கடாக்ஷம் தேவர்களுக்கு மட்டுமே கிட்டியது
இங்கு வந்து நித்யவாஸம் செய்து நம் போல்வாருக்கும் கிட்டியதால் பாற் கடலை விட இது அதி விலக்ஷணம்

பதாப்ஜ ஸஞ்சார பவித்ரிதே அஸ்மின்
பிராட்டி திருவடி ஸ்பர்சத்தால் மேன்மை பெற்ற திவ்ய தேசம்

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–39-

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பதோ தரா மோத விஹார ஹாரி
வயிற்றையே காலாக யுடைய பாம்புகளின் உத்ஸாஹ விளையாட்டுக்களை அபஹரித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் கருடன்

பதே பதே ஸம் பதமாத நோது —
நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வளங்களை அருளட்டும்-

————

பத்ம நிவாஸ ஸதந பரமஸ்ய வாஹ
பஷா நில ஷபித பன்னக ராஜ ராஜி
பா காரி ஸைன்ய பரி பாவுக வீர்ய லேச
பத்யானி மே திசது பத்ர ரதாவ தம்ச -30-

பத்ம நிவாஸ ஸதந
நாச்சியார் கோயிலிலே நித்யவாஸம் செய்து அருளும் கருடன்
பிராட்டி ஸ்தானம் -சாடு -இவரும் புருஷகார பூதர்
கருட மந்த்ரம் ஜெபித்து அவர் புருஷகாரத்தால் ஹயக்ரீவருடைய லாலாம்ருதம் பெற்றார் அன்றோ நம் தேசிகர் ஸ்வாமி –

பரமஸ்ய வாஹ
பரம புருஷனான நம்பிக்கு வாஹனம்

பஷா நில ஷபித பன்னக ராஜ ராஜி
தனது இறக்கை களின் காற்று அசைவாலேயே பாம்புகளின் கூட்டங்களை எல்லாம் வென்றார் –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி -என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
சிறகு ஒலியே ஸாம கானம்

பா காரி ஸைன்ய பரி பாவுக வீர்ய லேச
இந்திரனுடைய ஸேனையை தனது வீரத்தின் லவ லேசத்தாலேயே வென்றவர்
ஸ்தம்பிதே ஜம்ப ஸத்ராவ் –ஸ்வாமி தேசிகன்

பத்யானி மே திசது பத்ர ரதாவ தம்ச –
அந்த புள்ளரையன் அடியோங்களுக்கு நன்மைகளை செய்து அருளட்டும்

—————–

பாதாளாந்த ப்ரவிஷ்ட பயபரமதிகம் வர்தயன் பன்ன கானாம்
பத்மா காந்தம் வஹந்தம் பதி சதி மருதாம் பஸ்யதாம் அஷி ஜாதே
பாதோ மோதாபி ஜாதம் கிமபி விகலிதம் ஷாலி தாகம் விதன்வந்
பத்மா சத்மா பிராம பதிக பரிப்ருடஸ் பாது பாஷாணா வர்ஷ்மா –31-பகாரத்தில் ஆரம்பிக்கும் பதங்கள் நிறைந்த ப்ராஸம்

பத்மா சத்மா பிராம -நாச்சியார் கோயில் திவ்ய தேசத்தில் தனது வாசத்தால் இனியதாக ஆக்கியவரும்-மிதுன ஸம்பந்தத்தால் அழகு அடைந்தவர் -என்றுமாம் –காலசோபி கௌஸ்துபம் -ஸ்ரீ மத் பாகவதம் -கழுத்தில் பிரகாசிக்கும் கௌஸ்துபம் என்றும் கொழுத்தால் பிரகாசிக்கும் கௌஸ்துபம் என்றும் கொள்ளுமா போல்
பதிக பரிப்ருடஸ்-பக்ஷிகளுக்குத் தலைவரும்
பாது பாஷாணா வர்ஷ்மா-கல்லாலான -கல்லைப் போன்ற திருமேனியை யுடையவரும்-கல்லைப் போன்று நிச்சலமான பக்தி கொண்டவர் –

பாதாளாந்த –பாதாளத்தின் முடிவில்- எல்லையில்
ப்ரவிஷ்ட –ப்ரவேசித்து
பன்ன கானாம்–பாம்புகளின்
பயபரமதிகம் வர்தயன் –பயத்தின் பாரத்தை அதிகமாக வளர்ப்பவரும்
தம் –அந்த அத்தகைய பெருமை பெற்ற
பத்மா காந்தம் -ஸ்ரீ லஷ்மீ காந்தனான எம்பெருமானை
பதி -வழியில்
வஹந்தம் –தாங்கிக் கொண்டு செல்பவரும்
சதி -நல்ல
பஸ்யதாம்–அதனைப் பார்க்கும்
மருதாம் –தேவர்களுடைய
அஷி ஜாதே சதி –கண்களின் கூட்டத்தில்
மோதாபி ஜாதம் –சந்தோஷத்தால் ஏற்பட்டதும்
கிமபி –ஒப்பற்றதும்
ஷாலி தாகம்–பாபத்தை நீக்கிய
பாத -ஆனந்தக் கண்ணீரை
விகலிதம் -விழுந்த
விதன்வந்-செய்பவருமான பெரிய திருவடி
பாது–காக்கட்டும்

பத்மா காந்தம் வஹந்தம் பதி சதி மருதாம் பஸ்யதாம் அஷி ஜாதே-என்று சேர்த்துப் பார்த்தால்
அம்ருதம் பானம் செய்தும் நாம் இவ்வாறு கைங்கர்யம் செய்யப்பெற வில்லையே
த்யாகேன ஏக ந அம்ருதத்வ மானஷு –தியாகத்தாலேயே எம்பெருமானை அடைய முடியும் என்று உணர்ந்து
பெரிய திருவடியைக் கொண்டாடி ஆனந்தக் கண்ணீர் பெருகினர் தேவர்கள் –

வஜ்ராதபி கடோராணி ம்ருதூநி குஸூமாதபி –உடல் கல்லானாலும் உள்ளம் கருணை மிக்கு
வரப்பிரஸாதி யாக திகழும் பெரிய திருவடி அடியோங்களை ரக்ஷிக்க வேண்டும்

————

பாரம்யஸ் யைக பாத்ரம் பசகதி ஜூஷாம் பன்னக ப்ராண ஹாரீ
பாரா பேதாக மாத்மா ப்ரணத ஜன மனச் சிந்திதார்த்த ப்ரதாதா
பாதோஜா க்ஷஸ்ய வாஹஸ் பதக பரிப்ரூட பாதுமாம் பாப ப்ருந்தாத்
பாரா வராத்மஜாதா சதந புர வரஸ்ரீ க்ருஹே ராஜ மாந–32-

பசகதி ஜூஷாம்-மிகவும் வேகம் யுடையவர்களுக்குள்
பாரம்யஸ் யைக பாத்ரம் –முதல் ஸ்தானம் வஹிப்பவரும்
பன்னக ப்ராண ஹாரீ–பாம்புகளின் பிராணனை அபஹரிப்பவரும்
பாரா பேதாக மாத்மா –கரையில்லா முடிவில்லா -அநந்தமான வேத வடிவானவரும்
ஸந்தோ மயேந கருடேந -ஸ்ரீ மத்பாகவதம்
ஸ்ருதி சத சிகர அபிஷ்டு தாத்ம கருத்மான் என்றும்
ஸ்ருதி ஸிந்து ஸூதோத்பாத மந்தராய -என்றும் தேசிகரும்
யஸ்ய நிஸ் ஸ்ர வஸிதம் வேதா -எம்பெருமானின் மூச்சுக்காற்றே கருடாழ்வார்
ப்ரணத ஜன மனச் சிந்திதார்த்த ப்ரதாதா–தன்னை வணங்கும் ஜனங்களின் மனத்தால் நினைக்கப் பெற்ற ஐஸ்வர்யம் அனைத்தையும் அளிப்பவரும்
பாதோஜா க்ஷஸ்ய வாஹஸ் –தாமரைக் கண்ணனின் வாஹனமானவரும்
பதக பரிப்ரூட –பக்ஷிகளின் தலைவரும்
பாரா வராத்மஜாதா சதந புர வரஸ்ரீ க்ருஹே –ஸமுத்ர கன்னிகையாய் ஆவிர்பவித்த பெரிய பிராட்டியார் யுடைய திவ்ய க்ஷேத்ரமான நாச்சியார் கோயிலிலே
ராஜ மாந–பிரகாசிப்பவரான பெரிய திருவடி
பாது மாம் பாப ப்ருந்தாத்-அடியேனை பாபக் கூட்டங்களில் இருந்து ரக்ஷிக்கட்டும்

—————–

ஜாதோ வாதோ அநு கந்தம் யமிஹ கதி பதே நோ மனாகப் யலம் ஸ
ஜாயே ருத்ரா ஸூ கீர்த்தீ கடித விகடிதே ஹ்ருஷ்யதோ யேன சீக்ரம்
ஜாலம் பாபஸ்ய மே அஃலம் ஹரது ஸ பகவானண்ட ஜானாம் ப்ரதான
ஜாநக்யா நந்தத ஸ்ரீ ரகு குலஜ மணே ஜீவிதஸ்ய ப்ரதாதா –33-

அநு கந்தம் யம் –எவரைப் பின் தொடர்ந்து
ஜாதோ வாதோ இஹ –தோன்றிய காற்றும் கூட இங்கு
கதி பதே நோ மனாகபி யலம் ஸ–வேக விஷயத்தில் லவ லேசமும் கூட ஈடு கொடுக்க முடியவில்லையோ
யேன கடித விகடிதே-எவரால் பிரிந்து சேர்ந்தால்
ஜாயே ருத்ரா ஸூ கீர்த்தீ ஹ்ருஷ்யதோ சீக்ரம்–ருத்ரா ஸூ கீர்த்தீ என்னும் அவருடைய இரண்டு பத்னிகளும் சீக்கிரமாக ஸந்தோஷப்படுகிறார்களோ
ஜாநக்யா நந்தத ஸ்ரீ ரகு குலஜ மணே ஜீவிதஸ்ய ப்ரதாதா–சீதாப்பிராட்டிக்கு ஆனந்தம் கொடுத்த சக்ரவர்த்தி திருமகனுக்கு உயிரைக் கொடுத்தவரும்
அண்ட ஜானாம் ப்ரதான ஸ பகவான–பக்ஷிகளில் முக்யமானவருமான அந்தப்பெரிய திருவடி
ஜாலம் பாபஸ்ய மே அஃலம் ஹரது –என்னுடைய பாபத்தின்–என்னைத் தாக்குவதற்குத் தேவையான கூட்டமான வலையை அபஹரிக்கட்டும்

யதா தாதம் தசரதம் யதாஜம் ச பிதா மஹம்
ததா பவந்த மாஸாத் ஹ்ருதயம் மே ப்ரஸித்தி -யுத்த -50-43-பெருமாளுக்கும் திருவடியின் தரிசனத்தால் மிக ஆனந்தம்

ந ஹி தம் பரி பஸ்யாமி யஸ் தரேத மஹோததிம்
அந்யத்ர கருடாத் வாயோர் அந்யத்ர ச ஹனுமத -யுத்த -1-3- பெருமாள் கூற்றில் கருடனே முதலில்

த்ராயண மேவ பூதா நாம் சங்ரஸ் யாஸ்ய லங்கேந
ஸக்திஸ் ஸ்யாத் வைநதேயஸ்ய தவ வா மாருதஸ்ய வா -ஸூந்தர –68-9- பிராட்டி கூற்றிலும் கருடனுக்கே முதல் ஸ்தானம்

ஹரது -பத பிரயோகம் அம்ருதம் அநாயாசேன அபஹரித்தது போல் நமது பாபங்களையும் அபஹரிக்க வல்லவர்
யதா ராஜா ததா ப்ரஜா -நியாயப்படியும் ஹரியின் செயல் போல் பெரிய திருவடியின் செயல்களும்

——————-

வஸூமதி சதகத்தில் –ம -எழுத்து 18 தடவை வரும்படி
மாந்யே மாநிதி மாரகேலிதயிதே மாராரி மாந ப்ரதே
மாயா வாரிணீ மதுரி போஸ் ஸம் மோஹிநீ ஸ்வாமிநீ
மாலா லாலித மூர்த ஜாத மஹிதே மந்தார வாஸைர்நதே
மாதர் மாதவி மஞ்ஜூளா தர தலே மந்தம் தயேதா மயி–இதே போல் வார்த்தை விளையாட்டு இதிலும் உண்டே

உபலவ புஷமீடே நாயகம் பஷ பாஜாம்
உபல முபல மஸ்மின் இந்திரா மந்திரே ந
உப லலித நிதாநம் ஸ்ரீ பவர்காத்ரு தாக்யம்
கமபி பஹு விசித்ரம் ஸ்வா பவர்க ப்ரதம் தம் –34-

உபலவ புஷமீடே நாயகம் பஷ பாஜாம்
அழகிய கல்லாலான திருமேனியோடு விளங்கும் பறவைகளின் அரசனான
கல் கருடனை வணங்குகிறேன்

உபல முபல மஸ்மின் இந்திரா மந்திரே ந
நாச்சியார் கோயிலிலே எழுந்து அருளி இருந்து நமக்கு நற் பயன்களை உறுதியாக அளிப்பவரும்
என்பது ஏவ பொருளில் வந்துள்ளது
உபாசகர்களுக்கு இவர் பலம் அளிப்பது உறுதி என்பதால் இவரை உபலர் என்கிறார்
-நாச்சியார் -இவரைப் பலமாகக் கொண்டவரும் -அவரே யாருக்குப் பலமோ அவரே உபலர் என்றபடி

உப லலித நிதாநம்
-சந்திரனையும் குறிக்கும்
ஷோடச கலாத்கமக –சந்த்ர மண்டல ரூபேண உகாரஸ்ய த்யேயத்வ உக்த்யா அபேதா உபசாராத் ஷோடச கலாத்மகே சந்த்ரே –வாசஸ்பதியை கலைக்களஞ்சியப்படி
உகாரம் பூர்ண சந்த்ரனைக் குறிக்கும் –
பா என்னும் சொல் ஒளியைக் குறிக்கும்
சந்திரனுக்கு யாரால் ஒளியோ அவர் உபர் ஆகிறார்
சந்த்ர மண்டலத்தில் கோயில் கொண்டு ஒளிரச் செய்யும் ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவனே உபர்
அவருடைய லலிதம் லீலை -அதற்க்கு காரணமானவர் உப லலித நிதானம் –
ஸ்வாமி தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் செய்து அருளி அவர் மூலம் ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் உடைய லீலையாக
பல பிரபந்தங்கள் வரக்காரணமாக இருந்தவர் ஆதலால் கருடன் உப லலித நிதானம் –என்றபடி –
அன்றிக்கே
உப -இரண்டு விபூதிகளிலும் எம்பெருமான் லீலைகள் செய்து அருள வாஹனமாக -துணையாக இருப்பதால்
இவரை உப லலித நிதானம் என்கிறார்
உப என்னும் சொல் ஸமாஸங்களில் உபய என்கிற வடிவத்தில்
வ்ருத்தி மாத்ரே நித்யம் வ்யவச் -இலக்கண நெறியின் படியே உப வேதாந்தம் உப விபூதி என்னாமல்
உபய வேதாந்தம் என்றும் உபய விபூதி என்றும் கூறும் மரபு உண்டே

ஸ்ரீ பவர்காத்ரு தாக்யம்
இப்படி உபல -ப வர்க்கத்தை ப வரிசையில் உள்ள நான்கு எழுத்துக்களுடைய சொற்களால் போற்றப்படுபவர்

கமபி பஹு விசித்ரம் ஸ்வா பவர்க ப்ரதம் தம் —
பவர்க்கத்தால் போற்றப்படுபவராய் இருந்தாலும் அபவர்க்கம் என்னும் மோக்ஷத்தையும் அளிக்க வல்லவர்
அப்படி புகழ் பெற்ற ஒப்பற்ற ஆச்சார்யமான ஒருவரை

ஈடே –வணங்குகின்றேன்

————

விநதாத்மபவோ விநதா தரவாந்
விஹ்ருதம் தத்தே ததிதம் யுக்தம்
ஸூரஸஸ் ஸூதராம் ஸூர ஸாத்ம பவான்
ஹரதீத் யேதத் பாதி விசித்ரம் –35-

விநதாத்மபவோ விநதா தரவாந் விஹ்ருதம் தத்தே ததிதம் யுக்தம்
விநதை –விநயத்துடன் வணங்கியவள்
அவள் மகனான கருடன் வணக்கத்துடன் வந்து அவன் அடி பணியும் வினதர்கள் இடம் ஆதாரம் காட்டிப் பல லீலைகளை புரிவது சரியானதே

ஸூரஸஸ் ஸூதராம் ஸூர ஸாத்ம பவான் ஹரதீத் யேதத் பாதி விசித்ரம் –
ஆனால் பல ரசங்களை மிகுதியாக உடையவனாக –ஸூ ரசனாக -சுவையன் திருவின் மணாளன் -திருமாலுக்கு
அந்தரங்கனாக இருப்பதால் ஸூ ரசனாக இருந்த போதும்
நாக மாதாவாகிய ஸூரஸா வினுடைய பிள்ளைகளான பாம்புகளை வதைக்கிறாரே
இது மிகவும் விசித்திரமாக அன்றோ உள்ளது –

இதே போன்ற சமத்காரத்தை கஜேந்திர மோக்ஷம் விஷயமாக அருளிச் செய்த
குஞ்சரா ரத்னத்தின் பல ஸ்லோகங்களில் ஸ்வாமி அருளிச் செய்துள்ளார்-மாதிரிக்கு ஓன்று

விபதா ஸ்வ பத அவலம்பயா
விநதந் நார்த்தமநாஸ் ஸரோகத
விபதம் புநரா ஜூஹாவ ஹா
விரஜாதீர புவோ கஜாதிப

விபத்து ஏற்பட்ட உடன் விபத்தாகிய எம்பெருமானை -வி கருடன் -திருவடியாகக் கொண்டு விளங்குவதால் இவனே விபத்து –

குண்டு நீருரை கோளரீ மதயானை கோள் விடுத்தாய் –யானையைக் காத்த சிங்கமே –
பொதுவாக யானையைப் பகையாகக் கருதும் ஸிம்ஹமே அதனை ரக்ஷித்து அருளிற்றே

இதே போல் ஸூ ரசனாக விளங்கும் கருடனே
ஸூ ரசனாவின் பிள்ளைகளைக் கொல்கிறானே என்று
கவி நயத்துடன் முரண்பட்டு காட்டி அருள்கிறார்

————

பதங்க ராஜ பலதோ நதாநாம்
பலிஷ்ட துர்யோ பகவான் மஹாத்மா
பவர்க ஹ்ருத்யோபி விபாப வர்க
விபாப வர்கோ அப்ய வரக தாயீ--36-

பதங்க ராஜ பலதோ நதாநாம்
வரப்ரசாதியாக அடியார்களுக்கு அபீஷ்டங்களை தந்து அருளுபவர்
ஏழு வியாழக்கிழமைகள் தொடர்ந்து அர்ச்சனை செய்வோர் பெறும் பலன்கள் இன்றும் கண் கூடாகக் காண்கிறோம்

பலிஷ்ட துர்யோ பகவான் மஹாத்மா
பலசாலிகளில் சிறந்தவர் -ஷாட் குண்ய ஸ்மேர -அவனைப் போலவே பகவானாகவும் மஹாத்மாவாகவும் விளங்குபவர்

பவர்க ஹ்ருத்யோபி விபாப வர்க
ப வர்க்கத்தில் வரும் அணைத்தாலும் போற்றப்பட்டவராய் இருந்தும்
பாப வர்க்கங்கள் தீண்டப்படாமல் தூய்மையாக அபஹத பாப்மாவாக விளங்குபவர்

விபாப வர்கோ அப்ய வரக தாயீ
பாப வர்க்கங்களால் தான் தீண்டப்படாமல் இருப்பதற்கும் மேலே அபவர்க்கமான மோக்ஷத்தை அளிக்க வல்லவர்

————-

விநாத நந்தன விநாத நந்தன
ஸூரஸா பூ ஹர ஸூரஸா பூ ஸூக
கமலா வேஸ்மணி கமலா வேஸ்மச
வசதா வஹதா பவதா அஸ்மி ஸூகி –37-

விநதையின் மைந்தனே
வணங்குபவர்க்கு மகிழ்ச்சியை அளிப்பவனே
நாகங்களை அழிப்பவனே
சிறந்த ஆனந்தத்தை அளிக்கும் பூமிப்பிராட்டியாருக்கும் ஆனந்தம் அளிப்பவனே-பூமியில் உள்ள மக்களுக்கும் ஆனந்தம் அளிப்பவரும்
நாச்சியார் கோயிலில் வசிப்பவனும்
பெரிய பிராட்டியாரின் இருப்பிடமான எம்பெருமானை தாங்குபவனுமான
உன்னால் அடியேன் ஆனந்தமுடையவனாக இருக்கிறேன் –

———-

சம்பா ரமா யஸ்ய ஸ கால மேக
ஸம் ஸத்ய ஜஸ்ரம் யமிமம் வஹந்தம்
சங்காகுலம் ஸர்ப குலம் ஸ தன்வன்
ஸத் நச்சு குந்த பரமஸ் தநோது–38-

எவனுக்குப் பெரிய பிராட்டியார் மின்னல் போன்றவளோ
நீருண்ட மேகம் போன்றவனான அந்தப் பகவான்
தன்னை எழுந்து அருளப் பண்ணும்
எந்த இப்பஷி ராஜனைப் பெருமையாகக் கூறுகிறானோ
அந்தப் பக்ஷி ராஜன் பாம்புகளின் ஸமூஹத்தை ஸம்சயத்தினால் கலங்கியதாகச் செய்து கொண்டு
நமக்கு மங்களத்தைப் பரவச செய்ய வேண்டும்

———–

சகுந்தலா யத் குல லாலிதா ஸா
ச ஸாங்க தர்பம் முகதோ ஹரந்தீ
சசாங்க வம்சஸ்ய ததவ் ப்ரகாஸம்
சகுந்த ராஜஸ் ஸ தநோது சம்ந–39-

சந்திரனின் கொழுப்பினை முகத்தின் வாயிலாக போக்குபவளான
எந்த சகுந்தலை சந்த்ர வம்சத்தின் ஒளியை கொடுத்தாளோ அவள்
எந்த பக்ஷிராஜனின் குலத்தால் பேணப்பட்டாளோ
அந்தப் பக்ஷி ராஜன் நமக்கு மங்களங்களைக் கொடுக்க வேண்டும் –

————-

ஸ்ருதி ஸ்வரூபே த்வயி சந்நிவிஷ்ட
ஸ்ருதீ நிநாதை ஸூ கய த்யுதாரை
ஸ்ருத்யேக கம்யான் கலயன் அராதீந்
ஸ்ருத்யேக கம்யஸ் ஸ்வ சமான் விதத்தே–40-

தாராளமான ஒலிகளால் கேட்ப்போரின் இரு காதுகளையும் –காதுகளிலும் -இன்பம் பெருக்குபவரான
ஸ்ருதி ஸ்வரூபே -வேதாத்மா விஹகேஸ்வர -வேதத்தை சரீரமாகக் கொண்ட வேதாத்மாவான உம்மிடத்தில் உம்மை –
சந்நிவிஷ்டர் -நன்கு உறைந்தவன் -த்ருட பிராமண ஸித்தி உள்ளவன் -வேதத்தின் சுவைப் பயன் -எழுந்து அருளி இருப்பவராக -ஏறி அலங்கரிப்பவராக வேதத்தால் மட்டுமே அறியப்படுபவரான-க்ருத்ய ஏக கம்யரான -எம்பெருமான்
விரோதிகளையும் தனக்கு ஸமமாக ஸ்ருதி ஏக கம்யர்களாக
காதால் மட்டுமே கேட்கப்படும் முடிவு எய்தியவர்களாக
வேத ஸப்தங்கள் ஆஸ்திகர் செவிகளுக்கு இனிமையாய் இருக்கும் –
வேத வடிவமான கருத்மானின் த்வனியும் பக்தர்கள் செவிகளுக்கு இனிமையாகவும்
எம்பெருமான் விஸ்லேஷத்தால் வாடும் பக்தர்களுக்கு அவனது
வரவைப் பறை சாற்றும் உயிர்க்காப்பாகவும் இருக்குமே-

கண்களால் காண வரும் கொல் என்ற ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்துத்
திண் கொள் ஒர்க்கும் கிடந்து என் செவிகளே-

ஸ்ருதி என்ற சொல் -மறை என்னும் பொருளில் முதல் கடைசி வரிகளிலும்
காது என்னும் பொருளில் இரண்டாம் அடியிலும்
கேட்டல் என்னும் பொருளில் மூன்றாம் அடியிலும் பிரயோகிக்கப் பட்டுள்ளது

———-

அம்ஸே ஸ்திதஸ்ய புருஷஸ்ய பரஸ்ய காந்த்யா
அம்போத வத் கிமிஹ பாஸி சிலா கருத்மான்
அஸ்ய அங்க்ரிஜா சரிதுபா வ்ருதவத் கிமேவம்
அத்ராசி தத் ரஜத கஞ்சுக ஸம் வ்ருதாங்க –41-

ஓ கல் கருட ஸ்வாமியே -இந்த திரு நறையூர் தேஸத்தில் தோளில் இருக்கிற புருஷோத்தமனான
விஷ்ணுவுடைய திருமேனியின் கறுத்த ஒளியாலே கார் மேகம் போல் கறுத்தவனாக ஒளிர்கிறீரோ
எம்பெருமானுடைய திருவடியில் தோன்றிய கங்கையினால் சுற்றப்பட்ட -மறைக்கப்பட்டவர் போல்
இவ்வாறு அப்படிப்பட்ட வெள்ளிக் கவசத்தினால்
சாற்றப்பட்ட திருமேனி யுடையவராக வெண்மையாக இங்கே இருக்கிறீரோ

கங்கா நதியே கவசமாக ஆனாளோ
ஸாரூப்யம் அருளியது தோன்றுமே
தேவதைகளும் எம்பெருமான் அடியார்களுக்கு ஸேவை புரிவார்கள் அன்றோ –

—————

வாராசி கன்யா சதனே அதி மான்யம்
வாஸம் பஜந்தம் விஹகாதி நாதம்
வாஸாம் பரை தேஹி நமாமி ஹீனை
வாஹம் ஹரே ரத்ன ரஹம் வஹாமி –42-

அடியேன் கொண்டாடத்தக்க நாச்சியார் கோயிலிலே நித்ய வாஸம் செய்பவரும்
பக்ஷிகளுக்குத் தலைவரும்
வாஹனமாகவும் உள்ள கருடாழ்வாரை
ப்ரயோஜனாந்தரர் போல் இன்றிக்கே அநந்ய ப்ரயோஜனராய்
சொற்களின் சுமைகளால் -ஸ்துதிகளால் மனதுக்குள்ளே த்யானிக்கிறேன்

எனது உள்ளத்துக்குள்ளே பறக்கும் அவனும் நிலையாக வீற்று இருக்க
அவனுடன் மிதுன தம்பதிகளும் நித்ய வாஸம் செய்து அருளப் பெற்றேனே
கருட வாஹனனாகிய எம்பெருமான் திரு உள்ள உகப்புக்காகவே கருட தண்டகம் அருளிச் செய்ததாக
ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார்
ஹரியின் வாகனத்தையும் நான் வஹிக்கிறேன் என்கிறார் இவர் இங்கு

————-

சசாங்க ஸஹஜா க்ருஹே சமித ஸர்ப லீலா ரஸ
சடாரி முக ஸூக்திபிர் சதச ஆதராத் கீர்த்தித
சத க்ரது ஸரேஷ் வஹோ சலபதாம் திசன் தேஜஸா
சமத்ர மயி சன்னதே சரணமாகதே புஷ்யது –43-அனைத்துப் பாதங்களிலும் சகாரம் முதல் எழுத்து

ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸந்நிதியில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ கருடாழ்வார்
நாகங்களின் சேஷ்டிதங்களை அடக்கியவர்
ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாரால் கொண்டாடப்பட்டவர்
தேவேந்த்ரனுடைய ஆயுதங்களை வீட்டில் பூச்சி ஆக்கியவர்
அவரை நமஸ்கரித்து சரணாகதி அடைந்து அவர் அநுக்ரஹம் பெற்றதை அருளிச் செய்கிறார்

சந்திரன் பிறப்பிடமும் பெரிய பிராட்டியார் பிறப்பிடமும் சீதளமான சமுத்ரமே
ஆஹ்லாத கரமான குணம் -அநுக்ரஹ மயீம் நித்யம் அஞ்ஞாத நிக்ரஹாம் –
அவள் அடியவரான கருடாழ்வார் குணமும் அப்படியே
கர்மங்களுக்கு அடிமைப்பட்டு இருப்பதை -பாம்புகளை நிரஸித்து அருளியது போல் -போக்கி அருள்பவர்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம பராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம் -என்று பாதுகா ஸஹஸ்ரத்தில்
திருவாய் மொழி கண்டு அருளிய ரிஷியான நம்மாழ்வார்
ப்ரதம சதகே வீஷ்ய வரதம்
அருளாழி புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்றும்-ஓடும் புள் ஏறி சூடும் தண் துழாய் நீடு நின்றவை ஆடும் அம்மானே என்றும்
கருடாரூடனாக வரதன் தனக்கு அருள் செய்வதை அருளிச் செய்கிறார்
————-

சசி பகிநீ சரணாகதம் சரணமமும் தமஹ மகாம்
சமித மஹா பணி லலிதம் சத முக பூ சுப விஜயம்--44-அனைத்துப் பாதங்களிலும் சகாரம் முதல் எழுத்து

சந்திரனுடைய ஸஹோதரி பெரிய பிராட்டியார்
அவர் சரணம் -இருப்பிடம் -நாச்சியார் கோயிலில் வீற்று இருப்பவர் கருடாழ்வார்
பெரிய சர்ப்பங்கள் கொட்டங்களை எல்லாம் அடக்கியவர்
தேவ லோகத்தை வென்றவர்
அப்படிப்பட்ட பராக்ரமத்துடனும் ஆஸ்ரிதர் மேல் கருணையுடனும் இருக்கும்
கருடாழ்வாரை சரண் அடைகிறேன்

———–

ஸர்வ மௌலி தடிநீ தட ந்ருத்யத் சர்வரீ ச பகினீ சரணஸ்தம்
ஸர்வ வாஞ்சித கரம் விஹகேந்த்ரம் ஸர்வ லோகபதி வாஹம் ஆஸ்ரயே–45-

சிவனின் முடியில் கங்கை வீற்று இருந்து நடனம் ஆடுவதை போலவே இருக்கிறாள் கங்கை
பிறை சூடி -அவள் பக்கத்திலே சந்திரனும் உள்ளான்
அவன் இரவின் தலைவன் ஆவான்
அவனுடன் பிறந்தவள் பிராட்டி
அவளுடைய கோயிலிலே இருப்பவர் ஸ்ரீ கருடாழ்வார்

பாதோதகேந வித்ருதேந சிவா பவந்தி -ருத்ரன் எம்பெருமான் திருவடி தீர்த்த ஸ்பரிசத்தால் சிவன் ஆனான்
அதே போல் சந்திரனும் அதன் அருகில் இருப்பதால் மங்களம் அடைந்தான்
மங்களம் மங்களானாம் -என்ற திருமாலுக்கும் மங்களமான பிராட்டியாருக்கு சகோதரன் ஆனதால் சந்திரன் மேலும் சிறப்பை அடைகிறான்
மிதுன தம்பதிகளுக்கு வாஹனமாய் இருக்கும் பெரிய திருவடியை ஆஸ்ரயிக்கிறார்

—————-

ஸூ பர்ணம் ஸூ சாகம் ஸூ ரௌகாபி நந்த்யம்
ஸூ பஷம் ஸூ ப்ருஷ்டம் ஸூ மேரோஸ் ஸ பக்ஷம்
ஸூ தாயாஸ் ஸூ தாப்தே ஸூ கேஹே வஸந்தம்
ஸூ கம் ப்ராப்து மாப்தாஸ் ஸூதம் கஸ்ய பஸ்ய--46-

சிறந்த இறகுகளை உடையவனும் –
அவனைக் கூட்டி வரும் போது அஞ்சிறைப்புள் –
விலக்கி அழைத்துச் செல்லும் பொழுது வெஞ்சிறைப் புள்
சிறந்த கை கால்கள் யுடையவனும்
பொரு சிறைப்புள் உவந்து ஏறும் -இருவருக்கும் உகப்பு
தன்னை வணங்க வைத்த கரணம் இவை
தங்கள் கார்யங்களை நடத்துகிறபடியால் ஸூரர்கள் எனப்படும் தேவர் கூட்டங்களால் பாராட்டத் படுபவன்
கொற்றப்புள் ஓன்று ஏறி மன்னூடே வருகின்றான்
சிறந்த பின்புறத்தை யுடையவனும்
தாஸஸ் ஸஹா ஆஸனம் வாஹனம் -என்பதற்கு ஏற்ற திருமேனி அமைப்பை யுடையவன் –
மேரு மலையின் தோழனும்
மேரு மலை போன்ற திருமேனி அளவும் அழகும் பொன்னிறமும்
பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல்
பாற் கடலின் புத்ரியான பிராட்டியாருடைய நாச்சியார் கோயிலிலே நித்ய வாசம் செய்து அருள்பவனும்
கஸ்யப மஹரிஷியின் மைந்தனான அணுக்கத் தொண்டன்
இப்படிப்பட்ட பெருமைகளை யுடைய கருடாழ்வாரை சரணம் அடைகிறோம்

————

ஸரஸ்வதீ பிர் ஸததம் ஸ்திதாபி
ஸம் பூர்ண ஸர்வா வயவம் ஸூ பர்ணம்
ஸரோஜ வாஸா சதனே வஸந்தம்
ஸமாஸ்ரயே ஸாராஸ நேத்ர வாஹம்–47-

வேதத்தின் உரு -கண்ணாடி போல் தன்னையே காணும் படி எதிரில் எழுந்து அருளி இருக்கிறார்
ஸூ பர்ணோஸி கருத்மான் -சிறந்த இறக்கைகள்
வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவான்
குளத்தில் தோன்றிய தாமரையை இருப்பிடமாகக் கொண்ட பிராட்டியுடைய இல்லத்தில் வசித்து
மிதுனமே சேஷி என்று உணர்ந்து
பிராட்டி நிழலில் ஒதுங்கி கைங்கர்யங்களை உகப்புடன் செய்து அருள்கிறார்
ஸாரஸம் -தாமரை ஒத்த திருக்கண்கள் கொண்ட திருமால்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற வாற்றைக் காணீர்-ஆழ்வார் திரு உள்ளத்தில் ஏசல் கண்டு அருள்கிறான்
இப்படிப்பட்ட கருடாழ்வாரைப் புகலாகப் பற்றுகிறேன்

———

ஸூர பதி ப்ருதநா தூனன படுனா
ஸூத நோர் விநதா ஸம்ஞாவத்யா
ஸூத இதி ஜகதி ப்ரதி தேனா அஹம்
ஸூக மிஹ நிகிலம் ப்ராப்தஸ் ஸத்யம்--48-

இந்திரனுடைய படைகளை ஆட்டி வைக்க வல்லவனும்
கொடியா வடு புள்ளுயர்த்தான்
கருடப்புட் புட் குடி சக்கரப்படை வான நாட
பகைவர்களை எதிர்த்த போதும் -அடியார்களே அஹங்காரத்தால் எதிர்த்த போதும்
அவர்களுக்குத் தக்கபடி வ்யாபாரித்துத் திருத்துபவரும்
விநதா மைந்தனும் -யன் மங்களம் ஸூ பர்ணஸ்ய விநதா கல்பயத் புரா -என்று
கௌசல்யா தேவி பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்ததும் த்ருஷ்டாந்தம்
இப்பெருமைகளை யுடைய கருடாழ்வாரது அனுக்ரஹத்தாலேயே
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்னும்படி
அங்குபோய் செய்யும் நித்ய கைங்கர்யங்களை இங்கேயே செய்யப் பெறுகிறோமே

———

ஸூரா ஸூரா நந்தித விக்ர மௌனம்
ஸூ கீர்தி லீலா ரஸ நிர் வ்ருதாங்கம்
ஸூதாப்தி கன்யா சதநாங் கணஸ்தம்
ஸூதம் ப்ரபத்யே விநதாங் கனாய--49-

தேவர்களும் அசுரர்களும் வணங்கும் பராக்கிரமத்தை உடையவர்
த்ரிதாம் நஸ் த்ரி தச ரிபு சமூ மோஹநோ வாஹ நேந்த்ர கருட பஞ்சாசத் -51–அசுரர்கள் அழித்து -இதனால் இவர்களுக்கு –
மூன்று அவஸ்தை -த்ரி தச-இளைமை -பால்யம் -யவ்வனம் -மட்டுமே –
த்ரை கால்யோபஸ்திதாத்-முக்கால பிரதிபந்தகங்களையும் போக்கி அருளுவார்
ஸூ கீர்த்தியுடன் ஸம்ஸ்லேஷ லீலா ரசத்தினால் மகிழ்பவர்
நாச்சியார் கோயிலிலே நித்யவாஸம் செய்து அருளும் விநதையின் குமாரரான சேஷியை வணங்குகிறேன் –

————

ஸூதாம்புதி ஸூத க்ருஹே ஸூர பதச்சேமூ த்ராச
ஸூதா கலச ஹாரக ஸூம சரஸ்ய வாஹ பிது
ஸூதீ மணிபி ரர்சித ஸூபக நீலமேக ப்ரபு
ஸூ பர்ண இஹ மானஸே ஸூகத ஏது வாஸம் ஸதா –50-

திருமக்களுடைய நாச்சியார் கோயிலிலே வசிப்பவரும்
இந்திரனுடைய சேனையை வென்றவரும்
அம்ருதகலசத்தை பலாத்காரமாக எடுத்து வந்தவரும்
மன்மதனுடைய தந்தைக்கு வாஹனமாயும்
சான்றோர்களால் போற்றப்படுபவரும்
மிக்க தேஜஸ்ஸை யுடையவருமான
கருடாழ்வார் எனது மனதில் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வஸிக்க வேண்டும்
இதே கருத்துக்களை கருட பஞ்சாசத் -24-25 ஸ்லோகங்களில் உண்டே

யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே ஜம்ப சத்ரவ்
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி பவயே பஷ லேசம் திதேச
சோஸ்மாகம் சம்விதத்தாம் ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-24-

யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே
ஜம்ப சத் ர்ரவ்-இந்திரன் ஜம்பாசுரனை வென்றதால் ஜம்பை சத்ரு என்று இந்திரனைச் சொல்லி
-வஜ்ராயுதம் இவன் சிறகு அசைவிலே சக்தி அற்று இருக்க
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி-இந்திரன் பிரார்த்தித்தவாறே சிறகின் ஒரு லேசம் அருளி
பவயே பஷ லேசம் திதேச–தேவ வஜ்ராயுத பலம் பெற்று இழந்த மதிப்பை மீண்டும் பெற அருளினான்
சோஸ்மாகம் சம்விதத்தாம்
ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல–இந்திரனுடைய தேவ கணங்களுடன் யுத்தத்தில்
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-வால கில்யாஸ் காஸ்யபருடைய
யாகத்துக்கு உதவி கைங்கர்யம் செய்ய
இந்திரன் அவர்கள் சிறு உருவை ஏளனம் பண்ண -அவர்கள் சபிக்க –
அவர்களில் வெறுப்பற்ற மிக பெரிய உருவத்துடன் -விவர்த்த மூர்த்த -வந்து இந்திரனுடைய கர்வத்தை அழித்தார்

ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ருஹீத்வா
காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ–25-

ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் -இந்திரன் ருத்ரன் போன்றோர் ஓட
ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ரு ஹீத்வா காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா–
ஹுதவஹ என்று அக்னி -கந்த வாஹ என்று வாயு -யமன்-
பவ்சிக என்று வருணன்- வருண பாசக்கயிற்றை ஆயுதமாக கொண்டதால் – குபேரன் -போன்றோரை வென்று
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப–சர்ப்பங்கள் வினைதை தாயை
அடிமையை இருந்து விடுவிக்க அமிர்தம் எடுத்து வந்து
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ-அதுக்கும் மேலே வாஹனமாகவும் ஆகி

————

ரமா ரமண வாஹனம் ரண ஜய ஸ்ரியா ஸேவிதம்
ரவே ரதக ஸோதரம் ரகு பதே ரணே ரக்ஷகம்
ரமா சதன வாஸினம் ரயஜித அஞ்ஜனார் அஞ்ஜனம்
ரவணே க்ருத மங்கலம் ரதமனா அஹம் பாவயே –51-

ரமா தேவியான திருமகளின் பிரிய நாயகனுடைய வாஹனமாயும் –குதிரை பூட்ட வெண்டாதே திருத்தேர் அன்றோ இவன்
வேகோத்தாநாம் விதாநம் வ்யஜனமநு குணம் வைஜயந்தீ ஜயந்தீ
மித்ரம் நித்யாப்ய மித்ரம் யுதி விஜயரதோ யுக்ய யோகா நபேஷ
தாஸோ நிஷ் பர்யு தாஸோ தநு தநய பிதோ நி ஸஹாய ஸஹாய
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -46-

வேகோத்தாநாம் விதாநம் -விதானமாகவும் கைங்கர்யம் –
வ்யஜனமநு குணம் -விசிறியாகவும் கைங்கர்யம்
வைஜயந்தீ ஜயந்தீ -வெற்றிக்கு கொடி யாகவும்
மித்ரம் நித்யாப்ய மித்ரம் -நண்பன் -விரோதி நிரசனத்துக்கு உதவி
யுதி விஜயரதோ யுக்ய யோக அநபேஷ-குதிரை வேண்டாத ரதமாகவும் கைங்கர்யம் –
தாஸோ நிஷ் பர்யு தாஸோ -விட்டு விட மாட்டாத சேஷ பூதர்
தநு தநய பிதோ நிஸஹாய ஸஹாய -வேறே சகாயம் வேண்டாத சகாவாகவும்
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -பக்ஷங்களை கொண்டு விரோதி நிரசனம்
பண்ணுவது போலே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
இதில் -வைஜயந்தி ஜெயந்தி / நிஸ் ஸஹாய ஸஹாய / பர்யு தாச தாச –
சப்த பிரயோகங்கள் அனுபவிக்கத்தக்கன
வெற்றித்திருமகளால் பூர்ணமாக அருளப்பெற்றவர்
ஸூர்யனுடைய தேர் போட்டியான அருணனுக்கு சகோதரர்
பெருமாளுக்கு நாகபாசம் விடுவித்து கைங்கர்யம் செய்தவர்
வாயு புத்ரனுடைய வேகத்துக்கு காரணமானவர்
பஷிகளால் மங்களா சாசனம் செய்யப்படும் புள்ளரையனை மகிழ்ச்சியுடன் எனது மனத்தால் வணங்குகிறேன்
வெஞ்சிறைப்புள்ளாய் அநிஷ்ட நிவ்ருத்தியும்
அம் சிறைப்புள்ளாய் இஷ்ட பிராப்தியும் அளிப்பவர் அன்றோ

————-

சத தல சரணாயா சத்ம ஸம் பூஷ யந்தம்
சத தல கு ஸூ மாஷம் சார்ங்க பாணிம் வஹன் ந
சத மக மணி நீல ஸார்வ பவ்ம க கானாம்
சத மக ஸஹ ஜாத ஸ்ரீ ஸூஹ்ருத் பாது பாபாத்–52-

சத தல சரணாயா சத்ம ஸம் பூஷ யந்தம்–நாச்சியார் கோயிலுக்கு பூஷணமாக இருப்பவர்
சத தல கு ஸூ மாஷம் சார்ங்க பாணிம் வஹன் ந-தாமரைக்கண்ணன சக்ரபாணிக்கு வாஹனமாயும் இருப்பவர்

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–40-

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

சத மக மணி நீல ஸார்வ பவ்ம க கானாம்
மணி வண்ணன-மன்னு மரகதக்குன்றான நம்பியை நித்தியமாக அனுசந்தித்து சா ரூப்யம் பெற்று
நீல நாயக கல் நிறத்தை எய்தினாரே
சத மக ஸஹ ஜாத ஸ்ரீ ஸூஹ்ருத் பாது பாபாத்
வாமனனுக்கு சஹா-மிக்க சீலத்துடன் -இரந்தும் நம்மை உஜ்ஜீவித்து அருள்பவர் –
இதனாலேயே வாமனனுக்கு பிரியமானவர்

—————

கல்லோலினீ காமுக கன்யகாயா
காந்தே நிசாந்தே கலயன் நிவாஸம்
காகோதர த்ராஸத கூஜிதோ ந
கரோது கம் கஸ்யப புத்ர ரத்னம் –53-

கல்லோலினீ காமுக கன்யகாயா
அமுதினில் வந்த பெண்ணமுதமான -சீதக்கடலுள் அழுத்தமான –
பாற் கடல் புத்ரியான வஞ்சுள வல்லித்தாயாருடைய
காந்தே நிசாந்தே கலயன் நிவாஸம்
அந்தப்புரமாக விளங்கும் நாச்சியார் கோயிலிலே நித்ய வாசம் செய்பவரும்
ஸ்ரீ தேவி இங்கும் -பூமா தேவி விண்ணகரிலும் -ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீ வில்லுபுத்தூரிலும் ஒரே ஸந்நிதி -அந்தப்புரம் போல் உண்டே
காகோதர த்ராஸத கூஜிதோ ந
தன்னுடைய திருமேனி தேஜஸ்ஸாலே பாம்புகளுக்கு அச்சம் உண்டாக்குபவர்
நாக பாசத்தால் கட்டுண்ட போது
ததோ முஹுர்த்தாத் கருடம் வைநதேயம் மஹா பலம்
வானரா தத்ருசு ஸர்வே ஜ்வலந்தம் இவ பாவகம்
தமா கதமபி ப்ரேஷ்ய நாகாஸ்தே விப்ரது த்ருவு –தேஜஸ்ஸைக் கண்டதும் நாகங்கள் அஞ்சி ஓடுனவே
கரோது கம் கஸ்யப புத்ர ரத்னம்
கஸ்யபர் பெற்று எடுத்த ரத்னம் அடியேனுக்கு கம் -ஆனந்தம் அளித்து அருளட்டும்

கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம –சாந்தோக்யம் -ஸுகம் ஆகாசம் -ஸ்ரீ வைகுண்டம்

———-

அத சதுர்த்த சமத்கார விஹார

விஹாரம் ஸஞ்சாரம் என்றவாறு -லீலை வேடிக்கை என்றுமாம்
ப்ராஸம்
அநு ப்ராஸம்
மஹா ப்ராஸம் –காவ்யா நடை அழகுடன் முதல் மூன்று விகாரங்கள்
ஸமத்காரம் -பொருள் சுவை பதிந்த விஹாரம்
பிரார்த்தனை -பக்தி பாவம் ததும்பும் விஹாரம்

சஷுஸ் ஸ்ருதீநாம் ஸரமாம் தஸாம் யத்
நாஸா நிஜாக்ரேண ஸ்ரு ஜத்ய ஜஸ்ரம்
ஸ வைந தேய ஸ்ருதி ப்ருந்த ரூப
ஸ்ருதீ ருதைஸ் ஸ்வை பரித புநாது –54-

சஷுஸ் ஸ்ருதீநாம் ஸரமாம் தஸாம் யத் நாஸா நிஜாக்ரேண ஸ்ரு ஜத்ய ஜஸ்ரம்
யாருடைய மூக்கு நுனியானது பாம்புகளுக்கு எல்லாம் முடிவு ஏற்படுத்துகிறதோ
பாம்புகளை வெல்லும் திறமையால்
தத்வீ கராரி
நாக ஹந்தா
ஆஸீ விஷாரி
ஸர்ப சந்தான ஹந்தா
காத்ரவே யாந்தகன்
புஜக குல ரிபு
வ்யாலா ஹாரன்
என்ற திரு நாமங்களால் ஸ்வாமி தேசிகன் கருட பஞ்சாசத்தில் அருளிச் செய்கிறார்
ஸ வைந தேய ஸ்ருதி ப்ருந்த ரூப
வேத ஸ்வரூபி
ஸ்ருதீ ருதைஸ் ஸ்வை பரித புநாது
தன்னுடைய ஒலிகளால் எனது காதுகளைப் புனிதம் ஆக்கட்டும்
முடியானே போல் ஸ்வாமியுடைய கரணங்களும் அபிநிவேசம் மிக்கு உள்ளன –

————

வட தரு மஹா ஸாகா லக்னான் முனீன ப்ரஷிதம்
கருட பவதா ஷுத் ஷுண்ணேனா அப்யஹோ யதனுஷ்டிதம்
ததிஹ பகவத் பக்த ப்ராந்தே மாமோதித மாகசாம்
நிசய மகிலம் தூரீ கர்தும் சரித்ர மலம் ப்ருசம்–55-

கருடனே பசியால் பீடிக்கப்பட்ட நிலையிலும் உம்மால் ஆலமரத்தின் பெரும் கிளையில் தொங்கிய
மஹா முனிவர்களை ரக்ஷிக்க எது செய்யப்பட்டதோ அந்த ஆச்சார்யமான சரிதமே
அடியேனுடைய பாகவத அபசாராதிகளாகிய
பெரிய பாபக் கூட்டங்களைப் போக்கி அருளப் போதுமானது
அல்லது
பாகவத கோஷ்ட்டியில் புகழப்படும் இந்த சரித்திரமே எனது பாபக் கூட்டத்தைப் போக்கப் போதுமானது என்றுமாம்
ஸ்ரீ மத் பாகவதத்தில் இறுதியில் -படதே வா த்விஜ கண முக்ய ஸம்ஸதி -இங்கு கருத்மான் ஸந்நிதியில் என்றவாறு

————-

உபரோ பகவானிஹ பாதி ஹரி
கமலா சதேந ச பவான்ஹி தத்
உபலா க்ருதிதாம் அதி கத்ய பராம்
உபகார ரதிம் குருதே நிதராம்–56-

நம்பியும் நீரும் உபரர்கள்-உ பெரிய பிராட்டியாரை தனக்கும் மேல் பெருமை உடையவராக ஆக்கிக் கொண்டு உள்ளீர்கள்
ஆகவே உபலமாக -கல்லாக ஆனீர் -உபரன் உபலன் -ரகாரமும் லகாரமும் -மாறலாம்
உ ப உபகாரம் செய்து அருளுகிறீர்கள் இருவரும் என்றுமாம்
கமலா குசஸூ –ஸ்லோகம் போல் இதுவும் இனிமையான ஸ்லோகம்

——–

சவ்ஷ்ம்யாத் பஸ்யதி ஸர்வமத்ர பரிதஸ் ஸ்ரீ மான் முனிஸ் கஸ்யப
தஸ்யாயம் தநயோ அநகோ விநதயா ஸத்யா ஸ்வ குஷவ் த்ருத
தஸ்மாத் ஸுஷ்ம்ய விலோகனே அதி நிபுண ஸ்ரீ வாஹகோ அயம் ஹரே
ஸுஷ்ம்யம் ஸுது மனஸ்ய முஷ்ய ஸததம் தர்மஸ்ய பஷீஸ்வர –57-

விநதையின் திரு வயிறு வாய்த்த இந்த வைநதேயன் -காஸ்யபரின் புதல்வர்
கஸ்யபர் சுற்றிலும் பார்க்க வல்லவர் -ஸூஷ்மமாகப் பார்க்க வல்லவர்
ஹரியின் வாஹனமாக ஆகும் பக்ஷி ராஜர் அடியேன் மனத்தில் தர்மங்கள் ஸூஷ்மங்களை அருளிச் செய்ய வேண்டும்
கழுகுப் பார்வை விசேஷணம் அன்றோ -கழுகை விட உயரமாக பறந்து ஸூஷ்மமாகப் பார்க்க வல்லவர்
வைநதேய கதி பரா -ஸம்பாதி கூற்று
காஸ்யப பஸ்யகோ–ஸ்ருதி
பஸ்யகர் மருவி கஸ்யபர் ஆனது –ஹிம்ஸம் என்றது ஸிம்ஹம் ஆனது போல் –
த்ருஸ்யதே த்வ க்ரியா புத்த்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி -என்னும்படி
ஸூஷ்ம ஸித்த அர்த்தமான பகவானைக் காணும் ஸூஷ்ம ஞானம் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் –
கஸ்யபர் போலவே விநதையும் ஸூ பர்ணீ என்ற பெயரில் வேதப் புகழ் பெற்றவள்

——–

ஆகாஸே கிரணைர் நவை ஸமுதிதை ஸூர்யஸ்ய ஹேமாயிதே
வ்ருஷாக்ரைர் ம்ருதுனா அநிலேந சலிதை ஸம்வீ ஜிதே சாமரே
மேகானாம் சகலை கதாகதி யுதை ஸம் பூஷிதே ராஜதை
அம் சாக்ரே கலையன் கனம் கமபி தம் பஷீஸ் வராக்ரே பவ –58-

இதில் தன் முன் ஆவிர்பவித்து ஸேவை சாதித்து அருளப் பிரார்த்திக்கிறார்
ஸூர்ய உதய காலத்தில் கருடனையும் கருடாரூடனான எம்பெருமானையும் தியானிக்க வேண்டும்
ஸ்வர்ண மயமான கிரணங்கள் மரங்களின் நுனியில் விழ மரங்கள் தங்கமயமாக விளங்க
காற்றும் மெதுவாக வீச -இயற்கையே -தங்க சாமரம் வீசுவது போல் இருக்குமே கருடாழ்வாருக்கு
மேகங்களும் வெண்மையாக -கருடாழ்வாருடைய திருத் தோள்களுக்கு வெள்ளித்துண்டுகள் அலங்கரிப்பது போல் இருக்குமே
இப்படிப்பட்ட கருடாழ்வார் ஸேவை சாதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் –

——–

யத் பாதால கதாஹி ஸஞ்சய பணாஸம் பேதிநாஸாக்ரத
நிர் தூதாநத பாபராசி நிகம ஸ்தோ மஸ்ய திவ்யாக்ருதி
ஸந்தோ தாம ஸூ தாம சாரதி மணே யத் ப்ராத்ருதா மாஸ்திதம்
தல் லஷ்மீ சதனே சமர்ச்சித பதம் தேஜோ மமாஸ்து ஸ்ரீ யை-59-

தேஜோ ராஸியாக அனுபவிக்கிறார்
ஜ்யோதிஷம் ஜ்யோதிஸ்ஸு
கருத்மானும் வ்யூஹ சம் கர்ஷணனே -ஆவணி ஸ்வாதி திரு நக்ஷத்திரத்தில் திருவவதாரம்

——–

ஸூகந்த கிரி மஸ்தகே மதுர வஞ்ஜூலா ஸம் யுதம்
விலோசன விநோததம் விநம திஷ்ட ஸந்தா யினம்
ஸதா மனஸி சாதரம் நயன யோச்ச குர்வன் ஸ்ருதவ்
ஸஹஸ்ர நயனோ பலாக்ருதி ரயம் ஜயத் யண்டஜ –60-

ஸூ கந்த கிரி கருடாழ்வாருக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார்

———

அம்ஸே கம்ஸ ரிபும் வஹந்தம் அம்ருதம் ஹஸ்தே ப்ரசஸ்த அம்ருதம்
நாஸ அக்ரேண ஸதா வி பின்ன புஜகம் ஸ்ரீ கேஹ கேஹஸ்திதம்
இஷ்டா நாநதா சஞ்சயேஷு தததம் தம் பஷீணாம் ஈஸ்வரம்
ஸ்வாந்தே சந்தத மாதரேண கலயே வேதவ்க ஸத் விக்ரஹம் –61-

அம்ஸே கம்ஸ ரிபும் வஹந்தம் அம்ருதம்
ஆராவமுதனை திருத்தோள்களில் ஏந்தியவர்
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே
கம்ஸ -கொள்கலனையும் குறிக்கும் -ஆராவமுதனை ஒரு கொள்கலத்துக்குள் அடக்க முடியாதே
கம்ஸ -வெண்கலத்தையும் குறிக்கும்
கம்ஸ ரிபு இங்கு இருந்தாலும் வெண்கலப் பாத்திரங்களுக்கு பிரசித்தம் இந்த திவ்ய தேசம்
நறையூரில் செண்பகப் பூக்களின் வாசனையைக் கண்டு வண்டுகள் புகுவதாக கலியனின் அனுபவம்
ஹஸ்தே ப்ரசஸ்த அம்ருதம்
ஆராவமுத்துக்கு நிகராகாத உப்புச்சசாற்றை கையில் ஏந்தி உள்ளவன்
துவாதச அக்ஷர மண்டபத்தில் ஆராவமுதனைக் கண்களால் பருகிக் கொண்டே உள்ளான் -என்பதை அம்ருத சார்தூல ஸ்லோகத்தில்

ஸ்வர்க்கே பாத்யம்ருதம் யதர்த்தம் யதபவம் யோத்தும் ச யத் நான்வித
திங்மாம் யத் ரஸநா கதம் விதநுதே கிஞ்சித் ருசிம் ஸாரூஜ
நிர் யுத்தம் ச நியத் நம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்
தத்பாதீதி க்ருதாஞ்ஜலிர் யதம்ருதம் பஷீஸ்வரஸ் சேவதே-

நாஸ அக்ரேண ஸதா வி பின்ன புஜகம்
தனது அலகின் நுனியால் பாம்புகளைத் துண்டாக்குபவரை
ஸ்ரீ கேஹ கேஹஸ்திதம்
நாச்சியார் கோயிலிலே கோயில் கொண்டுள்ளவரை
இஷ்டா நாநதா சஞ்சயேஷு தததம் தம் பஷீணாம் ஈஸ்வரம்
தனது அடியார்களின் அபீஷ்டங்களை வழங்கும் கருடாழ்வாரை
ஸ்வாந்தே சந்தத மாதரேண கலயே வேதவ்க ஸத் விக்ரஹம் —
வேத ஸ்வரூபியாய் விளங்கும் கருடாழ்வாரை எப்போதும் உள்ளத்தில் வைத்துப் போற்றுகிறேன்

———–

ஆகாஸ ஆஸ்தே ஸ யதம்ஸ தேஸே
சாகாஸ் சமா யஸ்ய வஹந்தி தேஹே
பஷீஸ் வரோயம் பரமாத்புதாத்மா
கரோது கல்யாண பரம்பராம் ந –62-

ஆகாஸ ஆஸ்தே ஸ யதம்ஸ தேஸே
ஆகாசம் –அகில உலகுக்கும் ஆதாரமான பரமாத்மாவையே குறிக்கும் –
அஸ்ய லோகாஸ்ய கா கதிரித் யாகாச -சாந்தோக்யம்
ஆகாஸஸ் தல் லிங்காத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
சாகாஸ் சமா யஸ்ய வஹந்தி தேஹே
யாருடைய திருமேனியில் வேதத்தின் அனைத்து சாகைகளும் வசிக்கின்றனவோ
பஷீஸ் வரோயம் பரமாத்புதாத்மா
அத்தகைய அத்புதமான திருமேனியை யுடைய பக்ஷி ராஜர்
கரோது கல்யாண பரம்பராம் ந —
அடியேனுக்கு அனைத்து மங்கள வரிசைகளும் அளிக்கட்டும்

இதில் உள்ள சமத்காரம் பறவை வாலில் இருக்கும் -ஆகாசத்தில் இருக்கும் –
இங்கு ஆகாசம் பறவை வாலில் உள்ளது -பறவை சாகையில் இருக்கும் -இங்கு சாகைகள் பறவையின் உடலில் உள்ளன

———

கமலா பவேந கமநீ யதமே
மணி முக்தாபித தடிநீ தடகே
மணி ராஜ நிபம் மஹ நீய தமம்
பதக ப்ரவரம் வரதம் வரயே-63-

கமலா பவேந கமநீ யதமே
அழகான திவ்யதேசமான நாச்சியார் கோயிலிலே
மணி முக்தாபித தடிநீ தடகே
மணி முக்தா நதிக்கரையில்
விரோசனனை வீழ்த்தி வைரமுடியைக் கொண்டு வரும் பொழுது அந்தக்கரீடத்தில் இருந்து
செவ்வக வடிவில் ரத்னாக்கள் விழுந்ததால் இந்த திருநாமம்
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை -கலியன் புஷ் காரணிக்கு மங்களா ஸாஸனம்
மணி ராஜ நிபம் மஹ நீய தமம்
மணிகளில் ஸ்ரேஷ்டமான இந்திரா நீலக்கல் போன்ற திருமேனி
பதக ப்ரவரம் வரதம் வரயே
வரப்ரஸாதியாய் திகழும் பக்ஷி ராஜரை வணங்குகிறேன்

————

துரகான் ஸ விதுர் நயதஸ் ஸஹஜம்
உதரா துதிதம் விநதா ஸூதநோ
உரகா நுதரே கலயந்த மஹம்
பதகாதிபதிம் சதயம் கலயே–64-

துரகான் ஸ விதுர் நயதஸ் ஸஹஜம்
ஸூர்யனின் குதிரைகளை எளிதாக ஒட்டிச் செல்லும் அருணனின் உடன் பிறப்பே
ராகு விழுங்கும் போது தன்னை யாரும் ரக்ஷிக்க வில்லை என்று கோபம் கொண்ட ஸூர்யன் உலகை தவிக்கச் செய்ய அருணன் கவசமாக இருந்து காத்தார்
அதே போல் ஸம்ஸார தாபத்தில் இருந்து கருடாழ்வார் நம்மைக் காத்து அருளுகிறார்
உதரா துதிதம் விநதா ஸூதநோ
அழகிய விநதையின் திரு வயிற்றில் உதித்தவனே
தாயாரை அடிமைச் சிறையில் இருந்து மீட்டது போல் நம்மையும் சம்சாரச் சிறையில் இருந்து மீட்டு அருளுகிறார்
உரகா நுதரே கலயந்த மஹம்
சர்ப்பங்களை விழுங்கி வயிற்றில் வைத்து இருப்பவனே
அதே போல் நமது பாபங்களையும் பயத்தையும் வேதனைகளையும் விழுங்க வல்லவராகத் திகழ்கிறார்
பதகாதிபதிம் சதயம் கலயே
இத்தகைய பெருமை பெற்ற பக்ஷிகளின் அதிபதியே உன்னை எப்போதும் நினைக்கிறேன்

———–

பஷீ கோபி வராத ஏஷ வதது ஸ்வைரம் ருதைஸ் ஸோபநம்
யத்வா ஸோபந மத்ர காநு கணநா சிந்தாதவா காமம
லஷ்மீ மந்த்ர மந்திரேதி மஹிதே ஸம் பூஜிதே ஸந்ததம்
பஷீந்த்ரே த்வயி மங்கள ஏக நிலயே மன்மா நஸே ஜாக்ரதே–65-

மிகவும் பூஜிக்கத்தக்க பிராட்டியின் கமலாலயத்தில் இருப்பவனும்
எப்பொழுதும் மங்களங்களுக்கு உறைவிடமாகப் போற்றப்படும் நீர்
எனது மனக்கடலில் உறைவதால் பறவைகளின் குரல் மங்கலமோ அமங்களமோ என்ற சிந்தனை சிறிதும் இல்லையே
சில பக்ஷிகளின் குரல் அப சகுனம் என்றும் நல்ல சகுனம் ஸாஸ்த்ர வல்லுநர் சொல்வார்கள்

——–

ரஷாம் பக்ஷிபதே கஜஸ்ய கலயன் அம்சே த்வதீயே ஸ்தித
தேநே கர்ஷண மத்ர தத்ர பவத கோதாய கிம் நா பவத்
மோதா யைவ யதார் தர க்ஷண க்ருதே வேகோஸ்ய மான்யோ குண
தேநை வாஸ்ய பதாம் புஜேஸ்மி நிதராம் தாஸ்யம் கதோ நிவ்ருத–66-

பக்ஷிகளின் தலைவனே -கஜேந்திராழ்வானை ரக்ஷிக்க உனது தோளில் அமர்ந்து விரைந்ததனால்
சற்றும் ஆயாஸம் தோன்றவில்லையா என்ற கேள்விக்கு
அடியார் ரக்ஷணத்துக்காக விரைந்த வேகம் போற்றத்தக்கதே-கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவதஸ் த்வராய நம –பட்டர் –
விரைந்து வந்து ரஷித்த எம்பெருமான் திருவடிகளை பற்றி மனத்துயர் நீங்கியவனாக உள்ளேன்

உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி
க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந –-கருட பஞ்சாசத் -47-

க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திராழ்வான்
உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி -பெரிய திருவடி வேகம் ருத்ரன் வாகனமான ரிஷபம் வேகம் ஒன்றுமே இல்லையாம் படி –
வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி -இந்திரா வாஹனம் ஐராவதம் -நொண்டி போலே என்று என்னும் படி –
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி -ப்ரஹ்மனின் வாஹனம் அன்னம் தளர்ந்து நடப்பது போலே –
தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா -அவன் சங்கல்பத்துக்கு தக்க வேகம் -தடை இல்லாமல் –
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந -கருட வாகன எம்பெருமான் நம்மை உஜ்ஜீவிக்கட்டும்

———-

ப்ராலேயா ஹார்யா கன்யா பரி ப்ருட தனுஷி ஜ்யா விமுக்தே ருஜுத்வம்
ப்ராப்தே பாணே த்வயாதோ பத்தி பகவத பாத மூலே முராரே
பக்தே ஸக்தே ம்ருதங்கே நத சிரஸி ததோ ஹந்த கங்காதர அஸ்மின்
அஸ்மத் ஸ்வாமின் கருத்மன் த்வமஸி யதுபதே ஸஸ்மித ப்ரேம பாத்ரம் –67-

பாணாசூர யுத்தத்தில் சிவ வில்லில் நாணாகிய வாஸூகி தங்களைக் கண்டவுடன் அஞ்சி ஓடி விட்டது
நாண் அற்ற வில் நேராக வளைவு அற்றதாக விளங்கி விட்டது
ஆகவே சிவன் தொடுத்த பாணம் தங்கள் திருவடிகளில் சரணம் அடைந்தது போல் விழுந்து விட்டது
பாணனும் சரண் அடைந்தவன் போல் திருவடிகளில் விழுந்தான்
பாணன்-அம்பு என்றும் பாணாசூரன் என்றும் பொருளில் வந்துள்ளது –
பாணன் தலை குனிந்து நிற்பது கண்டு சிவனும் தலை குணியுந்து நின்றான்
அந்நிலையில் யதுபதியான கண்ணனின் அன்புக்கு இலக்காக நீர் அல்லவோ திகழ்ந்தீர்

———–

ஸ்ரீ மான் வஞ்சுள வல்லிகா பரி ப்ருட ஸுகந்தி காத்ரே பதி
திஷ்டன் ஸ்ரீ மணி மௌத்திகா பரி சரே ரம்யே விசித்ரே அத்ர வை
பஸ்யன் ஸ்த்வாம் சதுரா னனேன சதுரோ வேதான் முதா அதீ தினா
தாதும் கிம் யுவயோ உதீத ஹ்ருதய பாஹு த்வயம் தத் ததவ்–68-

கருட பகவானே இந்த நாச்சியார் கோயிலிலே ஸுகந்திகா என்னும் ஸூ கந்த மலையில்
மணி முத்தா நதி என்னும் புஷ் கரணியின் கரையில் வஞ்சுள வல்லி மணாளன் ஸேவை சாதித்து அருள்கிறான்
மூலவர் இரண்டு திருக்கரங்களுடன் மட்டுமே ஸேவை சாதிக்கிறான்
இரண்டு கரங்களுடன் திகழும் உங்களுக்கும் தாயாருக்கும் வேதம் கற்றுக் கொடுத்து
தன் அருள் பெற்று அதன் மூலம் படைக்கும் ஆற்றல் பெரும் பிரமனாகிய கருவியின் மூலம் தந்து அருள எண்ணியே
இரண்டு திருக்கரங்களுடன் திகழ்கிறான்
கைகளில் சங்கு சக்கரங்கள் வைத்துக் கொண்டு அருள்கிறான் –

———-

ஆனீதே பவதா விரோசன கராத் வாஜ்ரே கிரீடே ததா
முக்திம் மௌத்திக மேக மக்ர ஸரிதி ஸ்ரீ பாஸூரம் மார்கிதம்
ஹஸ்தவ் த்வவ் ப்ர ஸ்ருதவ் விதாய சபலவ் ஸம் சாதிதும் தன் மணிம்
ஹஸ்தா வேவ ந ஹீதி கிம்நு கதயன் ஸ்வாமீ த்வி ஹஸ்தோ அபவத்–69-

இங்கு மணி முக்தா ஸரஸ்ஸில் விழுந்த மணியைத் தேடவோ
அல்லது கிடைத்த மணியை கைகளால் மறைத்துக் கொள்பவன் போல் ஸேவை சாதிக்கிறான்
தன்னிடம் கைகள் இரண்டு மட்டுமே உள்ளது
அவற்றிலும் சங்கு சக்கரங்கள் வைத்துள்ளேன்
மணி எங்கே இருக்க முடியும் என்னிடம் இல்லையே என்று காட்டுபவன் போல் உள்ளான்

———

உபலா க்ருதம் உத் பலேந துல்யம்
ரஜதாச் சத பூஷி தாங்க ஜாதம்
நபஸா ஸித மேக ஜால பாஜா
சமதா மேயுஷம் ஆஸ்ரயே அண்ட ஜாதம்–70-ஸூந்தரீ வ்ருத்த ஸ்லோகம்

உபலா க்ருதம் –கல்லிலான சரீரத்தை யுடையவரை
உத் பலேந துல்யம்-அதனாலேயே கரு நெய்தல் பூவினை ஒத்தவரை
ரஜதாச் சத பூஷி தாங்க ஜாதம்–வெள்ளியிலான கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட அவயவங்களை யுடையவரை
ஸித மேக ஜால பாஜா-அதனாலேயே வெளுத்த மேகங்களோடு கூடிய
நபஸா-ஆகாயத்தினோடு
சமதா மேயுஷம் -ஒப்புமையை அடைந்தவரை
அண்ட ஜாதம்-பறவையான -முட்டையில் இருந்து பிறந்தவரான கருடனை
ஆஸ்ரயே–சரணம் அடைகிறேன்
ஆகாசம் பூமியில் இல்லை அண்டத்தில் உள்ளது -அதே போல் கருடனும் அண்டத்தில் முட்டையில் தோன்றியவர்

——-

த்ரயீ மூர்தி ஸ்த்வம் மமச ஸ பகவ னம்பர மணி
த்ரி தாம்னோ தாம த்வம் மமச ஸ ரதீ நாம ஸதனம்
ததாபி த்வத் ப்ராப்தவ் சகித சகித துர்ய குண தீ
இதி ப்ராத்ரா மந்தஸ்மித மதிகத பாது ககராட்–71-சிகிரிணீ வ்ருத்த ஸ்லோகம்

தவம் -நீ
த்ரயீ மூர்தி -வேத உருவானவன்
மம அபி ச -எனக்கும்
ஸ-அந்த வேத உருவான
அம்பர மணி-ஸூர்யனும்
பகவான் -ஸ்வாமி -எஜமானன் ஆனவன் –
த்வம் –நீ
த்ரி தாம்னோ –பரமபதம் ஸூர்ய மண்டலம் திருப்பாற் கடல் -என்ற மூன்று இடங்களை சிறப்பாகக் கொண்ட விஷ்ணுவுக்கு
மூன்று உலகங்களையும் இருப்பிடமாகக் கொண்ட விஷ்ணுவுக்கு
தாம -இருப்பிடமானவன் –வாஹனமானவன்
மமச-என்னுடையவரான
ஸ –அந்த ஸூர்யனும்
ரதீ–தேருக்கு உரிமையாளரான
நாம ஸதனம்–விஷ்ணுவுக்கு இருப்பிடம் ஆனவரே
ததாபி –ஆயினும்
துர்ய குண தீ–தேர்க் குதிரைகளின் கடிவாளத்தில் புத்தியை உடையவராக அவர்
சகித சகித –நீ என்னைப் பார்க்க வரும் போது எல்லாம் மிகவும் பயந்தவராக இருக்கிறார்
இதி -இவ்வாறு
ப்ராத்ரா -சகோதரரான அருணானாலே
மந்தஸ்மிதம் -புன் சிரிப்போடு
அதிகத–நெருங்கப்பட்ட
பாது ககராட்-பறவைகளின் தலைவனான கருத்மான் நம்மைக் காப்பாற்றட்டும் –
உனக்கும் ஸூரியனுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் நீ எண்ணெய் பார்க்க வரும் பொழுது எல்லாம் ஸூர்யன்
நடுங்கி விடுகிறான் –
பாம்புகள் தானே அவனது தேரின் கடிவாளங்கள் -அதனால் தான் என்று அருணன் சொல்கிறான்

இதே காட்சி முதல் பாதத்தில் ஸ்வாமி தேசிகன்-

அர்யம்ணா துர்ய யோக்த்ர க்ரசந பய ப்ருதா சாந்த்விதோ அனுருபந்தாத்
கோதண்ட ஜ் யாம் ஜிக்ருஷேதி தி ஸஹித தியா சங்கீத சங்கரேணா
தல்பே கல்பேதே மா தே மதிரிதி ஹரீனா அப் யாதரேணானுநீத
பஷீந்த்ரஸ் த்ராயதாம் ந பணதரே மஹிஷீ பத்ர பங்கா பஹாரீ -27-

அர்யம்ணா-ஸூர்ய பகவான்
துர்ய யோக்த்ர–வில்லின் நாண் கயிறு
கோதண்ட ஜ்யாம்-கோதண்ட த்வனி
பத்ர பங்கா–திருமாங்கல்யம் –

———

சாகா பங்காத் வட பரி ஹ்ருதிம் க்லுப்தவான் கிம் த்வமேவத்
ஜ்ஞாத்வா ருத்ரோ வட தரு தலே நர்தனம் ஸம் விதத் தே
யத்ர பூவன் உரக நிவஹா நிர்பயா அங்க லக்னா
ந்ருத்தா நூத்யன் மணி யுத பணா லோக தூதாந்த காரா –72-மந்தாக்ராந்தா வ்ருத்த ஸ்லோகம்

சாகா பங்காத் –கிளையின் முறிவாலே
வட பரி ஹ்ருதிம் –ஆலமரத்தின் விடுகையை
த்வம் -நீ
க்லுப்தவான் -செய்தனை
ஏதத்-இதை
ஜ்ஞாத்வா கிம் -அறிந்தபடியால் தானோ
ருத்ரோ வட தரு தலே நர்தனம் ஸம் விதத் தே
-ஆலமரத்தின் அடியிலே பரமசிவன் நாட்டியத்தை செய்கிறான்
யத்ர ந்ருத்தா நூத்யன் -எங்கு நாட்டியத்தை அனுவதித்திக் கொண்டு
மணி யுத பணா லோக தூதாந்த காரா-மணியுடன் சேர்ந்த படங்களுடைய பிரகாசத்தாலே இருட்டைப் போக்கடிக்கும்
அங்க லக்னா–ருத்ரனுடைய சரீரத்தோடு சேர்ந்து இருக்கும்
உரக நிவஹா–பாம்புகளின் கூட்டங்கள்
அபூவன் நிர்பயா -பயம் அற்றவையாய் ஆயின
உத்ப்ரேஷ அலங்காரம் –

————

லஷ்மீ ஸத்ம பவான் வஹன் விஹரத ஸ்ரீ மான் பதங்க ப்ரபோ
லஷ்மீ சத்ம ச ஸதத்வம் வஹதி யத் த்வாம் தேன வித்யோ ததே
யஸ் ஸ்வம் நாம வஹத் யஹோ புவி ஜன தம் சா வஹன் யோஜன
லஷ்மீ ஸத் மச ஏவ ஸர்வ புவன ஸ்லாக்யோ பவேன் மானவ –73-

லஷ்மீ ஸத்ம பவான் வஹன் விஹரத ஸ்ரீ மான் பதங்க ப்ரபோ
அகலகில்லேன் இறையும் -என்பதையே இங்கு லஷ்மீ சத்மன்
கருடா வா குரலைக்கேட்டு உகந்து வரும் கருடாழ்வார்
இப்படிப்பட்ட சேஷ பூதன் கிட்டினானே என்று சேஷியும் மகிழ்ந்து ஏறுவான்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக்கேள்வன் –
லஷ்மீ சத்ம ச ஸதத்வம் வஹதி யத் த்வாம் தேன வித்யோ ததே
இங்கு நாச்சியார் கோயிலை லஷ்மீ சத்மம் என்கிறார்
ஸத்வ குணத்தை வளர்க்கும் திவ்ய தேசம் என்றவாறு
வேத ஸ்வரூபி இங்கேயே நித்யவாஸம் செய்வதால்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் நாளும் நறையூர்
யஸ் ஸ்வம் நாம வஹத் யஹோ புவி ஜன தம் சா வஹன் யோஜன லஷ்மீ ஸத் மச ஏவ ஸர்வ புவன ஸ்லாக்யோ பவேன் மானவ
லஷ்மீ சத்மனைத் தாங்கும் உம்மை லஷ்மீ சத்மம் தூங்குவதில் இருந்தே
தம்மைத் தாங்குபவரைப் பிரதியாகத் தாமும் தாங்குபவர்கள் லஷ்மீ சதமர்களாக விளங்குவார்
அதாவது அவர்கள் இடம் மஹா லஷ்மீ எப்போதும் நித்ய வாஸம் செய்து அருள் புரிவாள்
நம்மாழ்வார் —புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி உள் புகுந்து என்னுள்ளாய் -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு

———-

புராண பும்ஸோ வஹனம் விதன்வந்
வயோதிகஸ் ஸன் விந தாத்ம ஜாத
த்ருஷன் மயோ தண்ட தரோ ஸ்த்ய ஹீனாம்
ஸ்திதிம் கதஸ் ஷீரதி பூக்ர ஹான்த–74-

புராண பும்ஸோ வஹனம் விதன்வந்
தங்களுடைய முன்னோர்களை யார் தாங்குகிறார்களோ
வயோதிகஸ் ஸன் விந தாத்ம ஜாத
அவர்களுடைய வயதான காலத்திலும் கூட அவர்களுடைய பிள்ளைகள் அவர்களிடம்
பணிவுடன் இருந்து பணி விடை செய்வார்கள்
த்ருஷன் மயோ
அவர்கள் கல் போல் இருக்கலாம்
அதாவது ஓடி ஆடி வேலைகள் செய்யாமல் நிம்மதியாக ஒய்வு எடுக்கலாம்
தண்ட தரோ ஸ்த்ய ஹீனாம்
அவர்கள் கையில் தண்டம் ஏந்தி இருப்பார்கள்
தண்டத்தைப் போல அவர்களுடைய வாரிசுகள் அவர்களை
உடன் இருந்து தாங்குவார்கள்
ஸ்திதிம் கதஸ் ஷீரதி பூக்ர ஹான்த
அவர்கள் கடல் போன்ற வீட்டில் பால் பொங்கப் பொங்க வாழ்வார்கள் –
ஸ்லேஷ அலங்காரம்
கருடனுக்கும் பொருந்தும் படி அமைந்த ஸ்லோகம்
புராண பும்ஸோ வஹனம் விதன்வந்
புராண புருஷன் ஊழி முதல்வனைத் தாங்கும் கருடன்
வயோதிகஸ் ஸன் விந தாத்ம ஜாத
சிரஞ்சீவியாக நீண்ட ஆயுள் கொண்டுள்ளார்
வயம் என்னும் பறவைகளின் தலைவர்
விநதையின் மகன் –விந தாத்ம ஜாதன்
த்ருஷன் மயோ
கல்லாலான திருமேனி கொண்டவர்
தண்ட தரோ ஸ்த்ய ஹீனாம்
பாம்புகளைத் தண்டிக்கும் தண்டத்தைத் திருக்கையில் எனது உள்ளார்
ஸ்திதிம் கதஸ் ஷீரதி பூக்ர ஹான்த
பாற் கடலின் மகளான பிராட்டியின் தேசமான நாச்சியார் கோயிலிலே
சீரோடும் சிறப்போடும் எழுந்து அருளி உள்ளார்
——–

ஸஹோ தராய சதனே ஸூதாம்ஸோ
ஸூர்யஸ்ய ஸூ தஸ்ய ஸஹோ தரோ அயம்
சர்பேந்த்ர ஸந்தான ஸமாப்தி ஸாச
ஸ மே சமாம் ஸம்பத மாதநோது –75-

ஸஹோ தராய சதனே ஸூதாம்ஸோ
அமுதைப் பொழியும் சந்திரனின் சகோதரியான மஹா லஷ்மியின் இருப்பிடமான நாச்சியார் கோயிலில்
முழு நிலவைக் கண்டு கடல் பொங்குவது போல்
பிராட்டியைப் பார்த்ததும் எம்பெருமானான கருணைக்கடல் பொங்கும்
ஸ்மேரேண வர்த்தித ரஸஸ்ய முகேந்து நா தே நிஸ் பந்த தாம் விஜஹதோ நிஜயா ப்ரக்ருதியா -பூ ஸ்துதி ஸ்லோகம்
ஸூர்யஸ்ய ஸூ தஸ்ய ஸஹோ தரோ அயம்
அருணனின் ஸஹோதரன்
துர்யயோக்தா என்றபாம்பு ஸூர்யனுடைய தேருக்கு கடிவாளம் -சேணம்
கருடனால் பயந்த ஸூர்யன் அருணன் ஸஹோதரன் என்று பயம் தெளிந்தான்
இத்தையே –அர்யம்ணா துர்ய யோக்த்ர க்ரசந பய ப்ருதா சாந்த்விதோ அனுருபந்தாத்
கோதண்ட ஜ் யாம் ஜிக்ருஷேதி தி ஸஹித தியா சங்கீத சங்கரேணா
தல்பே கல்பேதே மா தே மதிரிதி ஹரீனா அப் யாதரேணானுநீத
பஷீந்த்ரஸ் த்ராயதாம் ந பணதரே மஹிஷீ பத்ர பங்கா பஹாரீ -27-

அர்யம்ணா-ஸூர்ய பகவான்
துர்ய யோக்த்ர–வில்லின் நாண் கயிறு
கோதண்ட ஜ்யாம்-கோதண்ட த்வனி
பத்ர பங்கா–திருமாங்கல்யம் –
சர்பேந்த்ர ஸந்தான ஸமாப்தி ஸாச
பாம்புகளின் தலைவனான வாஸூகி உடைய சந்ததியை முடிப்பதில் ஆசை கொண்ட கருடாழ்வார்
அஹீ நாந்தகன் -கருடனுடைய திரு நாமங்களில் ஓன்று
ஸ மே சமாம் ஸம்பத மாதநோ
அவர் அடியேனுக்கு அனைத்து சம்பத்துக்களையும் அருளட்டும்

———

ருத்ரேண ஸத்யம் பகிநீ ஹி தத்தா
நிஜங்கா பூஷா கண ரக்ஷணார்த்தம்
ருத்ரா ஹி சேயம் தவ நாயிகா யத்
விஹங்கரா ஜேதி விதர்க யாமி –76-

கருத்மானுக்கு ருத்ரா ஸூ கீர்த்தி இரண்டு தேவிமார்கள்
ருத்ரனின் இளைய சகோதரி ருத்ரா
உத்ப்ரேஷ அலங்காரத்தில்
ருத்ரன் தனது சரீரத்தில் அலங்காரமாகக் கொண்ட சர்ப்பங்களை ரக்ஷிப்பதன் பொருட்டு
தனது உடன் பிறந்தவளே உமக்கு திருமணம் செய்வித்தானோ என்கிறார்
பாற்கடலில் உண்டான விஷத்தை உண்டதும் தான் பட்ட வேதனையைத் தீர்க்க தனது உடலில்
உள்ள சர்ப்பங்களை தன்னைக் கடிக்கச் சொன்னார் -முள்ளை முள்ளால் எடுப்பது போல்
வீர்யம் அதிகமாக ஆராவமுதனைப் பருகவே கும்பேஸ்வரராக பருகி வேதனையைத் தீர்த்துக் கொண்டார்
இத்தை அம்ருத சார்தூலத்தில்
பித்வா ஹந்த விஷம் பயோதி குஹராத் ஜாயம் புராரி புரா
நாகைர் ஆபரணைச் ச ஸம் வ்ருதஸ் தநுஸ் தப்தோ நிதாந்தம் தத
பர்யாப்த்யா விதுரம் பிபன் நிஹ த்ருஸா கும்பஸ்ய கோணே ம்ருதம்
கும்பம் ஸ்வயமிதீவ ஸம் பிரகதயந் கும்பேஸ்வரோ வர்த்ததே –
ஸ்வாமி தேசிகன் கருட பஞ்சாசத்தில்
கருடன் ருத்ராவை ஆலிங்கனம் செய்த போது அவர் விடும் மூச்சுக்கு காற்றால் அவர் திருமேனியில் உள்ள பாம்புகள் எல்லாம் இறுகுவதாக
ருத்ரா காடோப கூடோச் ச்வஸநதி பிடத ஸ்தநா யோகாத் இவ -என்று அருளிச் செய்துள்ளார்

———

புஞ்ஐன் புஜங்க அநுபவீதா பூதம்
புக்தவ் து தேஷாம் அபவீத பூதம்
தம் ப்ரஹ்ம ஸூத்ரம் து ஸமீஷ்ய சர்பம்
மந்தா நசைல ஸ்மரணம் விதத்ஸே –77-

கருடனுக்கு வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ரமாக உள்ளது
அது வயிற்றைச் சுற்றி உள்ள நிலையைப் பார்த்தால் திருப்பாற் கடலைக் கடையும் சமயத்தில் மத்தாக இருந்த
மந்த்ரமலையின் நினைவு கருடனுக்கு ஏற்படுகிறது
திண்ணியதாக இருப்பதை சமத்காரமாக வெளியிடுகிறார் –
இந்திரஜித்தின் நாகபாசத்தால் வானர முதலிகள் மயங்கிக்கிடந்த நிலையில்
நன்பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம் பொன் முதலாத்
தன் பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ
மின் பால் இயன்ற தொரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன்
தென் பால் எழுந்து வடபால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய -என்று
மின்னலான ஒரு பெரிய மலை ஆபரணங்களும் மாலைகளும் அணிந்து கொண்டு வானில் வருவது போல்
வந்ததாக கம்பர் கூறுகிறார் –
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த
வஷஸ் பீடா திரூடோ புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண
அஸ்ராந்த ஸ்வைர நித்ரா விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக
ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார —கருட பஞ்சாசத் -42-

புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண-வாஸூகி -பூணூல் –
புஜகத மயிதுர்-என்று பெரிய திருவடி -சர்ப்பங்களை அடக்கியவர் என்றபடி
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண -இடது தோளில் இருந்து மாலை போலே
பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த -சஸ்திரம் பந்தம் தானே –
வஷஸ் பீடா திரூடோ அஸ்ராந்த ஸ்வைர நித்ரா -நன்றாக நிர்ப்பயமாக நிர்ப்பரமாக தூங்கும்
விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார –உஸ்வாஸ
நிஸ்வாசங்களால் -திருமேனி விரிந்தும் சுருங்கியும்
கத்ரூ குமார-வாஸூகி –

அந்த வாஸூகி கருடன் சர்ப்பங்களை உண்ணத் தொடங்கும் நிலையில் உபவீதமாகவும்
புசித்து முடித்து வயிறு பெருத்த நிலையில் அரை நாண் போல் அபவீதமாகி விடுகிறது
ஸ்வாமி தேசிகரும்
நம பன்னக நத்தாய வைகுண்ட வச வர்த்தினே ஸ்ருதி ஸிந்து ஸூ தோத் பாத மந்தராய கருத்மதே

பாற் கடல் பிராட்டி அவதரித்த இடம் -திரு நறையூர் அவள் ஆட்சி செய்யும் இடம்
நீள் நாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடந்து அமுதம் கொண்ட உகந்த எம்பெருமான்
இங்கே வயிறாற உண்ட கருடன் என்னும் மலையைச் சுற்றி வா ஸூ கையை வைத்து
மணி முஃதா தீர்த்தத்தைக் கடைந்து வஞ்சுள வல்லி என்னும் பெண்ணமுதத்தைப் பெற்றான்

——–

கார் கோட ஹார கபலீ க்ருதா நாம்
குஷி ஸ்திதா நாம் புஜ கோத்த மாநாம்
ஆஸ்வாஸ நார்த்தம் தவ நாபி ரந்த்ரம்
விசந் நிவா பாதி ததந்தி காஸ்ய–78-

கார்கோடன் கருடனுக்கு ஹாரமாக இருப்பதால் அதன் தலை கருடனின் நாபி தேசத்தில் வரும்
கருத்மான் விழுங்கிய சர்ப்பங்கள் வயிற்றில் உள்ளன
அவைகளுக்கு ஆஸ்வாஸம் கூறுவதன் பொருட்டு கருடனின் தொப்புள் வழியாக உள்ளே புகுவது போல்
நாபியின் சமீபத்தில் தலை உள்ளது என்கிறார்
உலகம் உண்ட பெரு வாயன் அயனைப் படைத்ததோர் எழில் உந்தியில் இருந்து உதிக்கும் தாமரையின் வாயிலாகப் படைப்பது போல்
உங்களை உண்டு தொப்புள் வழியாக வெளிக் கொண்டு வருவான் என்று ஆஸ் வாஸம் பண்ணுகிறானாம்

——–

சரதி ககநே த்வய் யம் ஸஸ்தம் விதாய ரமாதவம்
தபதி தபநே தச் சத்ரத்வம் கதஸ் தவ பாணித
தவ கடகதாம் யாதச் சேஷ பணாகணா விஸ்துத-(விஸ்த்ருத )
தவ ச ஹ்ருதயம் நஸ் ஸர்வேஷாம் திநோதி பணீஸ்வர–79-

சரதி ககநே த்வய் யம் ஸஸ்தம் விதாய ரமாதவம்
திருவின் மணாளனான எம்பெருமானைத் தோள்களில் சுமந்தபடி
வானில் நீ ஸஞ்சரிக்கிறாய்
தபதி தபநே தச் சத்ரத்வம் கதஸ் தவ பாணித -தவ கடகதாம் யாதச் சேஷ பணாகணா விஸ்த்ருத
அந்த சமயத்தில் ஸூர்யனின் வெப்பம் படாதபடி சென்றால் குடையாம் இத்யாதிப்படியே ஆதி சேஷன் குடை பிடிக்கிறான்
தவ ச ஹ்ருதயம் நஸ் ஸர்வேஷாம் திநோதி பணீஸ்வர
இத்தால் அஞ்சும் குடியான உன்னுடைய உள்ளத்துக்கும்
அடியோங்களுடைய உள்ளத்துக்கும் ஆனந்தம் தருகிறார்
ஸூர்யனுக்கு ஒளி தரும் உனக்கு வெப்பம் தாங்காது என்று பொங்கும் பரிவால் அஸ்தானே பய சங்கை பண்ணும் குடி –

——

ஸ்வாமின் வஞ்சுள வல்லி கேந பவதா நாவிஷ் க்ருதா பாஹவா
ஸத்வா ரோத்ர புஜ த்வயம் புநரிதம் சக்ராய சங்காய ச
காந்தே பக்த தமோ மம ப்ரிய ஸூஹ்ருத் மத்வாஹ நேந்த்ரோ வர
பஹு த்வந்த்வயுதோ மமாபி ததலம் ஸ்வாமின் நமஸ்தே நம–80-

இது பிராட்டிக்கு நம்பிக்கும் உரையாடல்

ஸ்வாமின் -பிராட்டி உடைய விளிச்சொல்
வஞ்சுள வல்லி -சொல்லு என்று நம்பி கூற்று
கேந பவதா நாவிஷ் க்ருதா பாஹவா ஸத்வா ரோத்ர புஜ த்வயம் புநரிதம் சக்ராய சங்காய ச
நான்கு திருக்கரங்களுடன் இல்லாமல் இரண்டு மட்டுமே எதற்க்காக
காந்தே பக்த தமோ மம ப்ரிய ஸூஹ்ருத் மத்வாஹ நேந்த்ரோ வர பஹு த்வந்த்வயுதோ மமாபி ததலம்
எனது பக்தன் கருடனுக்கு இரண்டு இருப்பதால்
ஸ்வாமின் நமஸ்தே நம
தமர் உகந்த படி அமைத்துக் கொள்ளும் உமக்கு நமஸ்காரங்கள் –

———

புஜகா பரணே ந தூர் ஐடி
கமலா வாஸ கதோ ந விஸ்வ த்ருக்
நவமேக நிபோ ந மாதவ
க இதிஹாஸ்மி ந வக்தும் ஈஸ்வர–81-

புஜகா பரணே ந தூர் ஐடி
கருடன் பரமசிவனைப் போலவே பாம்புகளை ஆபரணமாகக் கொண்டுள்ளார்
ஆனால் ஜடாமுடி கொண்டு தவம் சாதனை பண்ண வேண்டாதபடி கிங்கரனாக அவனே கொண்டானே
கமலா வாஸ கதோ ந விஸ்வ த்ருக்
கமலா ஆலயம் -நாச்சியார் கோயில் -நான்முகனும் நாபி கமலாலயத்தில் இருந்தாலும்
இவர் படைப்புத் தொழில் செய்ய வேண்டாமே
ப்ரஹ்ம ஏக நிஷ்டை இவருக்கு -உபய நிஷ்டை அவனுக்கு
நவமேக நிபோ ந மாதவ
நீல மேக ஸ்யாமளானைப் போல் திருமேனி
ஆனால் இவர் மிதுன சேஷி கொண்டவர்
க இதிஹாஸ்மி ந வக்தும் ஈஸ்வர
இப்படி மும்மூர்த்திகளை போல் இல்லாதவராக மேம்பட்டு உள்ள உம்மை எவ்வாறு ஸ்துதிப்பேன்
மூவரும் இணைந்தாலும் இவருக்கு நிகராகாதே

———–

கமலாலய மாதந நோத்யத்
வஹதே தம் கமலாலயம் நத
புஜகாபரண ப்ரமோ தேத
புஜகாந் ஹந்தி ச கோன் வயம் புமான்-82-

பிராட்டியின் நித்ய வாசஸ்தானமான ஸ்ரீ நிவாசனையே அத ஆநோதி -கீழ் ஆக்குகிறான்
த்வஜமாகவும் மேல்கட்டு விதானமாகவும் இவர் தானே மேல் உள்ளார்
வினதை சிறுவன் என்னும் மேலாப்பின் கீழ் என்னும்படி உள்ளான்
அதே சமயம் அலர் மேல் மங்கை உறை மார்பனை விநயத்தோடு வணங்கி எழுந்து அருளப் பண்ணுகிறான்
நாகங்களையே ஆபரணமாகக் கொண்டு ஆனந்தம் அடையும் கருடன்
பாம்புகளையும் கொல்கிறானே
புஜம் கச்ச தீதி புஜக –விஷ்ணு கருடன் திருத்தோளில் ஆரோஹணித்தவர் -தோள்களில் உள்ள ஆபரணத்தைக் காட்டுவது போல் மிதுனத்தையும் தாங்கிக் காட்டி அருள்கிறான்

யோ யம் தத்தே ஸ்வ நிஷ்டம் வாஹநம் அபி வர ஸ்பார்சிதோ யேன யஸ்மை
யஸ்மாத் யஸ்மை ஆஹவஸ்ரீ விததாதி பஜனம் யத்ர யத்ரேதி சந்த
பிராயோ தேவ ச இத்தம் ஹரி கருட பிதா கல்பித ஆரோஹ வாஹ
ஸ்வாபாவ்ய ஸ்வ ஆத்ம பவ்ய ப்ரதிசாது சகுனிர் ப்ரஹ்ம ச ப்ரஹ்மதாம் ந —கருடபஞ்சாசத் 4–அவன் பிரசாதத்தாலே த்வஜமாகவும் வாகனமாக

கருடம் ச ததர்ஸோ ச் சை ரந்தர்தாநகதம் த்விஜ
க்ருதச்சாயம் ஹரேர் மூர்திநி பஷாப்யாம் பஷி புங்கவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-12-4-

பெருமாள் திருப்பாதங்கள் கருடனுக்கு கண்ட ஆபரணமாக விளங்கும்
சிலேடை நயம் -ஆலயம் -ஆசனம் -தாம் வஹதே -புஜக ஆபரணம் புஜகஸ்ய ஆபரணம்
விலக்ஷணமான கருடாழ்வாரைக் கொண்டாடுகிறார் –

————-

புஜகாபரண கமலாலயக
நவ மேக நிபோ யதயம் நதயம்
த்ரி பிரிபி தேவை ஸ்வய முதிதோ பூத்
த்ரி பிரிபி தேவை கோபி புமாந்த–83-கீழ் போல் திரிமூர்த்தி ஸாம்ய சிலேடை இதிலும்

பாம்புகளை ஆபரணமாக அணிந்தவன்
கமலாலயமான நாச்சியார் கோயில் தாமரையை அடைந்தவன்
நீருண்ட மேகம் போன்ற காந்தி உடையவன்
யதயம் ததயம் –அவன் இவ்விதம் உள்ளானோ அக்காரணங்களிலாயே
மூன்று வேதங்களாலும் எங்களுடைய ஒப்பற்ற புருஷோத்தமன் தானே போற்றுதலுக்கு உரித்தாகிறான் –
தனித்தனியே மும்மூர்திகளுடைய குணங்கள் இவனிடம் காணலாய் இருப்பதால்
அவர்களும் இவனைப் போற்றுகின்றனர்
தேவ வேத சமத்கார பிரயோகமும் ஸ்வாரஸ்யம்

———

கேது வாஹன தயைவ மித்ர தா
ஸா அவ யோத திஹ சாஸ்ய ஹீநமா
தேந சேஷ பணிராஜ மித்ரதா
வைநதேய தவ பாது ஸந்ததம்–84-

நீ எனக்கு கேது த்வஜமாகவும் -மேலானவனாகவும்-வாஹனம் -கீழானவனாகவும்
விஷ்ணுவான எனக்கும் வாகனமான உனக்கும் உள்ள இத்தகைய நட்பு மிகவும் மேலானது
இத்தகைய சங்கீதத்தின் நட்ப்பின் காரணமாகவே பணி ராஜனான -ஆதிசேஷனிடம் உனது ஸ்நேஹம்
ஸந்ததம் பாத்து -எப்போதும் விளங்கட்டும் –
அரவும் கருடனும் அன்புடன் ஏந்தும் அடி இரண்டும் -அம்ருதாஸ்வாதினீ –32-
ஸ்லிஷ்யத் போகீந்தர போக -என்று கருட பஞ்சாசத் ஸ்லோகத்திலும் இவ்விருவருடைய சேர்க்கையை அருளிச் செய்கிறார்
அஹீன மித்ரா -அஹீநதா -அஹீ நம் என்ற புண்ய யாகம் போன்றது நமது ஸ்நேஹம்
அவநம் ஸ்ரயநாம் அஹீந மாகம்–பரமார்த்த ஸ்துதி

———-

இத்ய வேத்ய பகவன் மதம் ஸ்திதம்
சேஷ தாம் வஹதி சேஷ வத் பவான்
சேஷ ஏஷ தவ ஸோ அஹமித்யதஸ்
மாம சேஷ பத கேஸ்வரோ அவதாத்–85-

இவ்வாறு பகவானுடைய அபிப்ராயம் இருக்கையில் -கருடனிடம் நட்பு உடன்படிக்கை காரணமாக –
சேஷத்வ அனுரூப கைங்கர்யத்தை நடத்தி வரும் பொழுது
சேஷ பூதர்களான அசேஷ அடியோங்களை
புள்ளரைரே நீரே ரஷித்து அருள வேண்டும்
உம்மிடம் சேஷத்வமும் அசேஷத்வமும் பொருந்தி இருக்கின்றனவே

————

புஜாந்தர விபூஷணம் பகவதீ பயோ தேஸ் ஸூதா
பவனாபி ச வாஹனம் பகவதோ அஸ்ய விஷ்ணோரிதி
வதன் கில பதே பதே வகுல பூஷண ஸ்ஸாதரம்
பஜத்யமித பக்திதை நிஜ வசஸ் ஸூதா ராஸிபி--86-

பகவானான மஹா விஷ்ணுவின் திரு மார்பிலே திரு ஆபரணமாக பாற்கடலின் திரு மகளையும்
வாஹனமாக உம்மையும் சேர்த்து அடிக்கடி நம்மாழ்வார் அன்புடன் பல பாசுரங்களால் மங்களா சாசனம் செய்து அருளி உள்ளார்
இவற்றை அனுசந்திக்கவே நமக்கு பகவத் பக்தி உண்டாகும் அன்றோ –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்ந்து பேர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே

———

விஷ்ணும் வஹன் விஷ்ணு பதைக லோல
ருத்ரா னுகூல கமலாலயே அபி
பக்த்யா மஹத்யா ஸததம் நிவிஷ்ட
த்ரி மூர்த்தி ஹ்ருதய ஸ்ருதி மூர்த்தி ரிந்தே–87-

வேதாத்மாவான கருட பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணுவை வைத்துக் கொண்டு விஷ்ணு பதத்தை ஆசையுடன் அனுபவிக்கிறார் –
விஷ்ணு பதம் என்பதை பரமாகாசம் என்றும் திருவடிகள் என்றும் கொள்ளலாம்
பகவானின் பாதத்தை அனுபவித்துக் கொண்டு எப்பொழுதும் இருப்பதால் ஸாயுஜ்யம் அடைந்து விஷ்ணுவைப் போலவே ஆனார்
அடியார் விரோதிகளை நிரஸித்து அருளும் பொழுது அனுகூலராக விளங்குகிறார்
பகவத் பக்தியுடன் திகழும் ருத்ரனுக்கும் அனுகூலர் என்றுமாம்
பிராட்டிக்கு வாசஸ்தானமான எம்பெருமானுக்கு வாஹனமாயும்
கமலாலயம் என்று திரு நாபி கமலத்தை வாசஸ்தானமாகக் கொண்ட நான்முகனையும் கொள்ளலாம்
இப்படிப்பத பிரயோக சாதுர்யத்தால் மும்மூர்த்திகளுக்கும் சமத்காரமாக இவரது ஒப்பீடு சொல்லப்படுகிறது

—————

அத பஞ்சம ப்ரார்த்தனா விஹார

பக்ஷி ராஜ விநாதாத் மஜ ஸேவா
விஷி பத்யக ததிம் விந தானாம்
ஸூஷிதி ஸ்ஸூஹ்ருத பூரி பாலனாம்
அஷி மத் ஸூத மணே ஸூகி குர்யாத்–88-

பறவை அரசனானவனும் -வினதாவின் மகனுமான -கருடனின் பணி புரிதலானது
ஸேவிப்பவர்களின் பாபக் கூட்டங்களை ஒழித்து விடும்
நிறையும் புண்ணிய பலன்களின் ஸ்ரேஷ்ட இருப்பிடமான அவர் எனது திருக்குமாரர்
கண்ணைக் குணப்படுத்தி அருள வேண்டும்

இரு சக்கர வண்டியில் விபத்தில் கண் பார்வை இழந்த கருணாகர ஸ்வாமிக்காக இது முதல் மூன்று ஸ்லோகங்களில் பிரார்த்தனை
அத்தை நிறைவேற்றி அருளினார் கருத்மானும்

————

பக்ஷி ராஜ புஜ கேஸ்வராலயே
பக்ஷி தாமித புஜங்க சந்ததே
ரஷி தாநக வடஸ்த சன்முநே
ஸ்வ ஷிமத் வரமமும் ஸூதம் குரு–89-

பறவை அரசனே
பாம்பின் லோகமான பாதாளத்தில் அளவற்ற பாம்புக்கு கூட்டங்களை உண்டவரே
வட வ்ருஷத்தில் அமர்ந்து இருக்கும் குற்றமற்ற வாலகில்ய முனிவர்களை ரக்ஷித்து அருளியவரே
இந்த எனது பிள்ளையை நல்ல கண் பார்வை உடையவனாக ஆக்கி அருள வேண்டும்

—————

நேத்ரம் ஹி காயத்ர முஸந்தி யஸ்ய
நேத்ரம் ககானாம் பரமம் யமா ஹு
காத்ரம் யதீயம் கனகாப த்ருஸ்யம்
நேத்ரம் ஸ புத்ரஸ்ய ஸூகீ கரோது–90-

எவருடைய கண்ணை காயதரம் என்னும் ஸாமம் என்று கூறுகிறார்களாய்
எவரை புள்ளரையன் என்று போற்றுகிறார்களோ
எவரின் திருமேனி தங்கம் போல் திகழ்கிறதோ
அவர் எனது பிள்ளையின் கண் பார்வையை முழுமையாக அருள வேண்டும்

———–

அஷவ்ஹிணீ யேன ஹதா ஸூராணாம்
குஷவ் க்ருதே பேஸ்வர கச்ச பேன
ஸ ஷவ்ம ஸம்வீத தனுர் கருத்மான்
அஷவ்க மஸ்மாகம் அகாத் புநாது–91-

அம்ருதம் கொண்டு வர தேவ லோகத்துக்கு எழுந்து அருளும் பொழுது பசியைப் போக்கிக் கொள்ள
இடையில் பரஸ்பர சாபத்தால் யானையும் குதிரையுமாகிய விபாவஸூ ஸூ ப்ரிதீர் என்கிறவர்களை அமுது செய்து அருளினார்
தம்மை எதிர்த்து வந்த தேவப்படைகளை நிரஸித்து அருளினார்
திருப்பீதாம்பரத்தால் அலங்க்ருதமான திருமேனியை யுடைய அவர் நமது இந்திரிய வசியதையைப் போக்கி அருள வேண்டும்

இதில் -அஷவ்ஹிணீ -குஷவ் க்ருதே -ஸ ஷவ்ம -அஷவ்க –ப்ராஸம் நோக்கத் தக்கது

———-

பஷீந்த்ர லஷ்மீ சதனோ பலாட்ய
பக்ஷேண நிர் தூத விபக்ஷ ஜாத
பக்ஷம் மதீயம் விஜயேன யுக்தம்
அஷீண தர்மம் தயயா விதேயா–92-

வாரீர் பெரிய திருவடி நாயனாரே -மிகுந்த பலம் பொருந்தியவரே –
நாச்சியார் திருக்கோயிலில் எழுந்து அருளி இருக்கும் தேவரீர் தயையுடன் அடியேனுடைய பக்ஷத்தை வெற்றியுடன் கூடியதாகவும்
குறைவற்ற தர்மம் உடையதாகவும் ஆக்கி அருள வேண்டும்
இதில் நான்கு பாதங்களிலும் ககார ஷகாரங்கள் ப்ராஸமாக வந்துள்ளமை காணலாம் –

————–

அதி குடிலகதிஸ் ஸன் ஆத்மனச் சாதனார்த்தம்
விசதி கிமபி ரந்த்ரம் ஹந்த வக்த்ரேண கோரம்
வமதி விஷமபி ஸ்வம் ஸர்வதா கூட வ்ருத்தி
விமத இஹ மமாயம் சிஷயே மம் ககேந்த்ர--93-

இதில் தமது எதிரிகளை சிஷித்து அருள வேண்டுகிறார்
இவருக்கு எதிரி வேத பாஹ்ய குத்ருஷ்டிகளே
வைதிக போர்வை கொண்டு வேதத்தில் ஆபாத தத -தனக்குச் சாதகமாகத் தோன்றும் சில வாக்யங்களாகிற
ரந்தரத்துக்குள் -பொந்துகளுக்குள் -நுழைந்து
எம்பெருமானுக்கு குணம் இல்லை விபூதிகள் இல்லை
போன்ற கொடிய விஷம் போன்ற வாக்கியங்களை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்
வெளிப்படையாகச் சொன்னால் வைதிகர்கள் தங்களை நிரசிப்பார்கள் என்று மறைந்தே
கார்யங்களை செய்கிறார்கள் என்று முதல் மூன்று பாதங்களால் அருளிச் செய்கிறார்

குடிலமான போக்கு
தன்னை மறைத்துக் கொள்வதற்காக பொந்துக்குள் நுழைத்தாள்
வாயினால் கொடிய விஷத்தைக் கக்குதல்
எப்பொழுதும் மறைத்தே உறைதல்
போன்றவை பாம்புகளுக்கும் உண்டாகையாலே
தமது எதிரிகளான குத்ருஷ்டிகளை பாம்புகள் என்கிறார்

பாம்புகளை சிஷிக்க வல்ல பெரிய திருவடி நாயனாரை இவர்களை வெல்லுவதற்கு
வேண்டிய சக்தியை அருளிச் செய்யும் படி பிரார்திக்கிறார்

—————

பத்மா நிதிம் வஹஸி பத்ம பலாச நேத்ரம்
பத்மா நிதவ் விஹரஸே நகரே அப்யமுஷ்மின்
பத்மா நிதவ் மயி விதாய ததா ப்ரஸாதம்
பத்மாப்த ஸூத ஸஹஜா வஹ சாதரஸ் த்வம்--94-

தாமரையை வளர்த்தும் ஸூர்யனுக்கு சாரதியான அருணனுடன் பிறந்தவரே
தாமரை இதழ் போன்ற திருக்கண்களுடைய எம்பெருமானுக்கு வாஹனமாய் உள்ளீர்
நாச்சியார் கோயில் திவ்ய தேசத்தில் மகிழ்ந்து விளையாடவும் செய்கிறீர்
ஸ்ரீ நீதியான அடியேன் இடம் அப்படியே அருள் புரிந்து ஆதாரத்துடன் இருந்து அருள வேண்டும் –

அந்த பத்மா நிதியைத் தாங்குவது போல்
இந்த பத்மா நிதியையும் அருளி கைக்கொள்ள வேண்டும்
வேதாத்மா விஹாகேஸ்வரரானபடியாலே
வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழு நடையால் வல்ல அந்தணர் வாழும் நறையூரிலே (பெரிய திருமொழி -6-10-7)உகந்து
அருளி நித்ய வாஸம் செய்வதில் வியப்பில்லையே
அருணன் தேரை ஒட்டி வந்து தாமரையை மலர்த்துவது போல்
நீரும் எம்பெருமானுடைய தாமரைக் கண்களை மலர்த்தி அவனுடைய பூர்ண கடாக்ஷங்களை
அடியோங்கள் பெற்று உஜ்ஜீவிக்கும் படி அருள வேண்டும்

இதில் பத்மம் -பதம் ஐந்து முறை வந்த அழகு நோக்கத்தக்கது –

——

பத்மாலயே புரவரே பதகேந்த்ர திஷ்டன்
பத்மாலயம் ஸ்ருதி யுகம் ஸ்ருதி ரூப தன்வன்
பத்மாலயம் வஹஸி பத்ம பலாச நேத்ரம்
பத்மாலயே மயிஸ மந்த மத்வ ப்ரஸீத--95-

வாரீர் பெரிய திருவடி நாயனாரே
நாச்சியார் திருமாளிகையில் நித்ய வாஸம் செய்து அருளி வேதாத்மாவான தேவரீர்
எல்லாருடைய காதுகளையும் மங்களத்துக்கு இருப்பிடமாகச் செய்யும் படி
மங்களகரமான வேத ஒலிகளை உடையவராய் இருந்து கொண்டு தாமரைக்கண்ணனா ஸ்ரீ யபதியைத் தாங்கி அருள்கிறீர்
இப்படிப்பட்ட தேவரீர் மந்தமாதியாய் இருக்கும் அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும்

பெரிய திருமடலில் இங்குள்ள தாயாரின் திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை உண்டு
விஷ்வக் சேனர் இங்கு மட்டுமே இரண்டு திருக்கரங்களுடன் ஸேவை ஸாதிக்கிறார்
செண்பகப்பூவின் வாசனையை வெறுக்கும் வண்டுகளும் கூட இங்கு
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி வண்டு வகுலத்தின் மலர் மேல் வைகு -6-6-1-
கந்தத்வாரம் என்று போற்றப்படும் பிராட்டியுடைய பரிமளம் இந்த க்ஷேத்ரம் முழுவதும்
பரவி இருப்பதால் நறையூர் -ஸூகந்த வனம் என்ற திரு நாமம் பெற்ற க்ஷேத்ரம்

இதில் பகாரம் பத்து முறையும்
பத்மம் பதம் ஐந்து முறையும் வரும் அழகு அனுபவிக்கத் தக்கது

———

பத ந்யாஸ க்ராந்த த்ரி புவன மிமம் வேங்கட பதிம்
பத ந்யாஸம் குர்யா மமகர யுகே சேஷகிரி ராட்
பதான் யேயம் மந்த்ரே பரி விரஸயன் பத்ர ரத ராட்
பதம் சேஷாத் ரேர் மே வ்ரண விர ஹிதம் தத் ஸூக யது–96-

தன் திருவடி வைப்புகளாலே மூவுலகையும் கடந்த திருவேங்கடத்து எம்பெருமானைக் குறித்து
ஸ்ரீ திருமலைக்கு அரசே
எனது இரு கரங்களிலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அந்தப்பேற்றைப் பெற்ற பக்ஷி ராஜரே
என்னுடைய புதல்வனான சேஷாத்ரியின் காலில் உள்ள புண்ணை அற்றதாக்கி அத்தை ஸ்வஸ்தம் ஆக்கி அருள வேண்டும்

மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –நம்பியே -உலகு அளந்த திருவேங்கடமுடையான்

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலைத் துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுள்ளானை நறையூரில் கண்டேனே –கஜேந்த்ரனுடைய காலில் ரணம் போக்கி அருளியது போல் தமது குமாரனுடைய ரணம் ஆற்ற பிரார்த்தனை

———

ஸ்ரீ மன் பன்னக ஸார்வ பவ்ம நகரே ஸ்ரீ தேவ நாதாந்திகே
நாஸா க்ரேண நதீம் ஹிதாத்ருஸ ரஸாம் யத்வத் பவான் நிர்மமே
தத்வத் மத் ஸூ ஹ்ருதோ ஹ்ருதோ ஹித ரஸாம் வாஸம் கரோ தூன்ன தாம்
யேனோ பைதி முதம் மதீய க்ருஹிணீ தத் தாத பாதா அபி--97-

ஸ்ரீ மானான கருடனே
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஸ்ரீ மான் -22-180-222- மூன்று தடவைகள் வரும்
22-திரு நாமத்துக்கு –விருத்தா காரத்வ அபி ஸ்ரீ மான் ஸர்வ மநோ ஹர -ஸ்ரீ பட்டர் வியாக்யானம்
வ்ருத்த ஆகாரமுடைய ஸ்ரீ நரஸிம்ஹ பாரமான திரு நாமம்
அவ்வாறே நம் கல்கருடனும் அழகிய தோற்றத்தோடு ஸ்ரீ மானாக திகழ்கிறார்
180 திரு நாமத்துக்கு திவ்ய பூஷண ஸம்பத் பிர் யுக்த –பாம்புகளை ஆபரணமாக அணிந்து திகழ்கிறார்
222 திரு நாமத்துக்கு மத்ஸ்ய ரூப அவதாரேபி -ஸ்ரீ மான் கமல நேத்ர –
இவரும் நேத்ரம் காயத்ரமூஸே -காயத்ரி மந்திரமே கண்களாகக் கொண்டவர்
பன்னக ஸார்வ பவ்ம நகரே –
ஆதி சேஷன் நகரம் –திரு அஹீந்த்ர புரம் -அவ் வூரிலே
ஸ்ரீ தேவ நாதாந்திகே
தேவ நாதன் -அடியார்க்கு மெய்யன் -அவனுக்கு அருகில்
நாஸா க்ரேண நதீம் ஹிதாத்ருஸ ரஸாம் யத்வத் பவான் நிர்மமே
உன்னுடைய அலகால் நதியை உருவாக்கினாய்
கருட நதி தீர்த்தம் சமர்ப்பித்து எம்பெருமானுடைய தாக்கத்தை தீர்த்து அருளினார் புள்ளரசன்
தத்வத்
அந்தக்கல்லில் இருந்து தண்ணீரைப் பெருகி வரச் செய்தது போல்
மத் ஸூ ஹ்ருதோ ஹ்ருதோ ஹித ரஸாம் வாஸம் கரோ தூன்ன தாம்
கல் நெஞ்சம் கொண்ட என் நண்பனின் வாயில் இருந்து நல்ல உன்னதமான வார்த்தைகளாகிய நதியைப் பெருகி வரச் செய்தாயாகில்
யேனோ பைதி முதம் மதீய க்ருஹிணீ தத் தாத பாதா அபி
அதனால் என்னுடைய மனைவியும் அவளுடைய தந்தையும் ஆனந்தப்படுவார்கள்

———–

ஸ்வாமின் பஷீஸ் வராஸ்மின் குரு மயி கருணா மீஷதே தன் மமாலம்
யேன ஸ்யுஸ்தே புஜங்க ப்ரமுக விஷதரா கோஸரா நாஷி மார்கே
ஷேமோ பூயஸ் குடும்பே ஸ்வய மதி மஹிதோ வர்தமானோ மமஸ்யாத்
ஸ்ரீ மான் நாராயணோ அபி ஸ்வயமதி குதுகீ ஸ்வைர்ம மாத்கே ஸதா ஸ்யாத்–98-

ஸ்வாமின்
தான் ஸ்வம் சொத்து சேஷபூதன் என்று உணர்ந்து ஸ்வாமின் என்று விளிக்கிறார்
மேல் 101 ஸ்லோகத்தில் ஸரணாகதி செய்கிறார்
பஷீஸ் வர
நீர் பக்ஷிகளுக்கு மட்டும் ஈஸ்வரர் அல்லர் –
அடியோங்களுக்கும் தேவரீரே ஈஸ்வரர்
அஸ்மின் குரு மயி கருணா மீஷத்
தம்மை ஸமர்ப்பித்து கருணை கூர்ந்து அருள் புரிய வேண்டும் என்கிறார்
ஏதன் மமாலம் யேன ஸ்யுஸ்தே புஜங்க ப்ரமுக விஷதரா கோஸரா நாஷி மார்கே
பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களும் தீயவர்களும் அடியேனுடைய பார்வையில் படாமல்
எப்போதும் எம்பெருமானுடைய அடியவர்களுடன் கூடியே இருக்க அருள் செய்ய வேண்டும்
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லை யான் –
ஷேமோ பூயஸ் குடும்பே ஸ்வய மதி மஹிதோ வர்தமானோ மமஸ்யாத்
அடியேனுடைய குடும்பத்தில் நன்மையையும் ஏற்றமும் செழிப்பும் உண்டாகும்படியும்
ஸ்ரீ மான் நாராயணோ அபி ஸ்வயமதி குதுகீ ஸ்வைர்ம மாத்கே ஸதா ஸ்யாத்
அவனுடைய ஸமஸ்த பரிவாரங்களோடு
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -என்றபடி
வந்து அடியேனுக்குத் துணையாகும்படி அனுக்ரஹம் பண்ணி அருள வேண்டும் –

கல் கருடன் -கற்ற கருடன் என்றும் – கற்கின்ற கருடன் என்றும் –கற்கப் போகும் கருடன் என்றும் முக்காலத்திலும் கற்று
நமக்கும் கல்வி வரத்தை அருள்பவராக விளங்குகிறார்

——–

புஜங்கா பாஸம் கில மோசயித்வா
புஜா யுகீ பஞ்ஜ ரக கராரே
புஜா ஸ்வ துண்டேன புஜங்க மானாம்
புஜாதிகம் ரக்ஷது மாமகீனம்–99-

புஜங்கா பாஸம் கில மோசயித்வா
நாக பாசத்தால் கட்டுண்ட பெருமாள் இளைய பெருமாள் வானர முதலிகள் -அனைவரையும் விடுவித்து அருளியவர்
புஜா யுகீ பஞ்ஜ ரக கராரே
கரரின் விரோதியான பெருமாளின் இரு தோள்களையும் ஆராத் தழுவிக் கொண்டார்
புஜா ஸ்வ துண்டேன புஜங்க மானாம்
தன்னுடைய அலகால் பாம்புகளை உண்ணும் கருடன்
திரிபுர சம்ஹாரத்தின் போது செவ்வனே தேரோட்டி க என்னும் பிரமனின் புதல்வர் கஸ்யபர்
அவர் புதல்வர் கருடாழ்வார்-ஆகவே இவர் -க என்ற தேரோட்டியின் மகனின் மகன்
புஜாதிகம் ரக்ஷது மாமகீனம்
இப்படிப் புகழ் பெற்ற தேரோட்டிகளின் சம்பந்தம் பெற்ற தானே பகவானின் தேராகவும் தேரோட்டியாகவும் திகழ்ந்து
நம் மனதில் எழும் சிந்தனைகளையும் ஆசைகளையும் செவ்வனே நடத்திச் சென்று
நல்ல ஆசைகளையும் நிறைவேற்றும்படி பிரார்த்திக்கிறார்

நாச்சியார் கோயிலில் நித்ய வாசம் செய்து அருளும்
கோபத்துடன் பாம்புகளை கிள்ளி எறியும் கருடாழ்வாரை
பிணியுடன் இருக்கும் நான் ஸுகம் பெற மயிர்ச்சுழிப்புடன் சரணம் அடைகிறேன்

புஜாதிகம் ரக்ஷது மாமகீனம்
அடியேனுடைய கைகள் உள்ளிட்ட அனைத்து அவயவங்களை ரக்ஷித்து அருள்வாய்

இதில் புஜ -பத பிரயோகம் ஐந்து தடவைகள்

———-

ஸூ தஸ்ய வாஹஸ் ஸூர நாத ஸூநோ
ஸூ தஸ்ய ஸூ ரஸ்ய ஸஹோதரோய
ஸூ தஸ்ய கஸ்யா அபி ஸூ தஸ்ய ஸூநு
ஸூ தஸ்ய மே பாது மனோ தரஸ்ய–100-இந்த்ர வஜ்ரா விருத்தம் -ஸூத பதம் பாதங்கள் தோறும் அமைந்த ப்ராஸ அலங்காரம் இதில்

எவன்
தேவாந்தனுடைய மகனான அர்ஜுனனுக்குத் தேரோட்டியின் வாஹனமோ
ஸூர்யனுடைய தேரோட்டியாக அருணனுக்கு ஸஹோதரனோ
க என்ற பெயருடைய தேரோட்டியாக பிரமனுக்கு மகனான காஸ்யபருக்கு மகனோ
அவன்
என்னுடைய மனதில் தோன்றும் எண்ணத்தின் -ஆசைகளின் -தேரோட்டியாக விளங்கி நல் வழியில் செலுத்தி அருளட்டும்

———

சரோஜ வாஸா சதனே வஸந்தம்
ஸரோஷ மாச்சின்ன ஸரீ ஸ்ரு பவ்கம்
ஸரோக மேதம் ஸூ கினம் விதாதும்
ஸரோ மஹர்ஷ சரணம் ப்ரபத்யே--101-

நாச்சியார் கோயிலில் நித்ய வாஸம் செய்யும் கருடாழ்வார்
சினத்துடன் பாம்புகளைக் கிள்ளி எறியும் அவர்
பிணியுடன் இருக்கும் என்னை சுகம் பெறச் செய்யுமாறு
மயிர்க்கூச்சத்துடன் சரண் அடைகிறேன்

———-

ஸ்ரீ நிவாஸ கவி தல்லஜ க்லுப்தம் ஸ்ரீ நிவாஸ வசதே பத கேந்தோ
ஸ்ரீ நிவாஸ சதகம் படிதம் சேத் ஸ்ரீ நிவாஸ சதகம் பிரததாதி--102-

ஸ்ரீ நிவாஸன் என்ற பெயருடைய கவியால்
ஸ்வாமியின் முழுப்பெயர் ஸ்ரீ நிவாஸ ராகவன்
நாச்சியார் கோயிலில் வசிக்கும் பறவை அரசரைப் பற்றிய
திருவுடைய -மங்களங்கள் உடைய நூறு ஸ்லோகங்களைப்
படிப்பவர்கள்
நூற்றுக்கணக்கான செல்வங்களுடைய ஐஸ்வர்யம் பெற்று இனிது வாழ்ந்து மோக்ஷ சாம்ராஜ்யமும் பெறுவார்கள்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

யக்ஷ ப்ரஸ்னம்

July 15, 2023

யக்ஷ ப்ரஸ்னம் (யுதிஷ்டிரன், இறந்த தன் தம்பிகளை மீட்க யக்ஷனின் பரிக்ஷைக்கு ஆளாகும் படலம்) தர்ம பாடம்

யஷ பிரஷணத்தைக் குறித்து நான் அறிந்த கதை கொக்கு யுதிஷ்டிரனைக் கேள்வி கேட்பது (அல்லது) அசிரீரி (யஷனின் குரல்) கேட்பதாக. மஹாபாரதத்தில் இதை யக்ஷ பிரச்ணம் என்ற படலமாக விவரிப்பார்கள்

‘ப்ரஸ்னம்’ என்பது சரியான சொல். தமிழில் ‘பிரச்னை ஆரூடம்’ என்பார்கள். ‘ப்ரஸ்னம்’ என்பது கேள்வியைக் குறிக்கும்.

மகாபாரத்தில் எட்சன் ஒருவன் அருவமாக இருந்துகொண்டு யுதிஷ்டிரரிடம் கேள்விகள் கேட்டான். தர்மரும் அதற்கெல்லாம் ஏற்ற பதில்களைச் சொன்னார். அந்தக் கேள்வி பதில் சம்பவத்தை ‘யக்ஷ ப்ரஸ்ஸன்னம்’ என்று அழைப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் ‘ப்ரஸ்ன தந்த்ரம்’ என்பது ஒரு பிரிவு. இதிலே பலவகைகள் இருக்கின்றன. சோவிகளைக் குலுக்கிப்போட்டு அந்த எண்ணிக்கைகளை வைத்துக் கட்டம்கட்டி பதில் சொல்வதும்
உண்டு. ‘தேவதா ப்ரஸ்னம்’ என்னும் முறையில் கன்னிப்பெண் அல்லது அதற்கும் குறைந்த வயதுள்ள பெண்ணின்மீதுகுறிப்பிட்ட தேவதையை உச்சாட்ணத்தின்மூலம் வரவழைத்து அதனைவைத்துக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வார்கள்.

ஒரு முறை ஜயத்ரதன் பாஞ்சாலியை அபகரிக்க, பாண்டவர்கள் அவனை கொன்று அவளை மீட்டனர். களைப்பினால் நீர் குடிக்க ஒரு ஏரி அருகில் செல்ல,அது ஒரு யக்ஷனுக்கு சொந்தமானதால், அதன் நீரை குடிக்க சென்ற, நகுலன், சஹதேவன் ,பீமன், அர்ச்சுனன், என பலரும் மயக்கமுற, கடைசியில் தருமர் செல்ல, அவரிடம் யக்ஷன் பல கேள்விகள் கேட்க அவர் அவைகளுக்கு பதில் சொல்ல, எல்லோரும் உயிர் பெற்றனர். தருமருக்கும் ய்க்ஷனுக்கும் நடந்த விவாதமே” யக்ஷ ப்ரஸ்னம்”என புகழ் பெற்றது. யக்ஷன் யமனின் அவதாரமே.

————

யட்சனின் கேள்விகளும் தருமரின் பதில்களும்.

சூதாட்டத்தில் தோற்று வனவாசம் மேற்கொண்டிருந்த பஞ்ச பாண்டவர்கள் துவைத வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு பிராமணன் தருமரிடம் வந்து ஒரு வேண்டுகோள் விடுத்தான்.

அந்தப் பிராமணன் தன்னுடைய யாகத்துக்காக வைத்திருந்த அரணிக் கட்டை ஒரு மானின் கொம்பில் மாட்டிக் கொண்டதால் மான் ஓடிய போது அதுவும் மானுடனேயே சென்றுவிட்டதாகவும், எப்படியாவது அந்த மானிடமிருந்து மீட்டுதருமாறும் வேண்டினான்.

உடனே ஐவரும் வில்லம்புகளோடு மானைத் துரத்திக்கொண்டு சென்றனர். மான் இழுத்தடித்து அவர்களை மிகவும் களைப்புறச் செய்யவே தாகம் மேலிட்டவர்களாய் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தனர்.

தண்ணீர் கொண்டுவரச் சென்ற தம்பிகள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று திரும்பியே வரவில்லை. தருமர் சென்று பார்க்கையில் ஒரு மடுவின் அருகில் நால்வரும் இறந்துகிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டார். இவர்கள் இறந்த காரணம் என்னவென்று தெரியவில்லையே என்று எண்னியவாறே, குளத்தில் இறங்கித் தண்ணீரைக் கையில் அள்ளவும் ஒரு அசரீரி ஒலித்தது.

“நில்தர்மா! எனது கேள்விகளுகுப் பதில் கூறாது அலட்சியப்படுத்திய உன்தம்பியர் இறந்துபட்டனர். நீயாவது என் கேள்விகளுக்குப் பதில் கூறிய பின்னர் தண்ணீர் குடிப்பாயாக”

உடனே தருமர், ” நீ யார் மலைகளுக்கு நிகரான என் இளவல்களைக் கொன்றது யார்? என்று கேட்டார். உடனே அசரீரியாய் தோன்றிய யமன் முன்வந்து நின்று தன் கேள்விகளுக்கு சரியான பதில்இறுக்காமல் நீர் அருந்தவேண்டாம் என்றான்..

“சரி உன் கேள்விகளைக் கேள். பதில் கூறிய பிறகே அருந்துகிறேன்” என்றார் தருமர்.

———————————————————————-
கேள்விகளும் பதிலும்
———————————————————————-
யஷன் கேள்வி கேட்கிறான். தருமன் பதிலளிக்கிறார். இவை ஆத்ம ஞானத்தைத் தருபவை.-136 கேள்விகள் உண்டு -124 என்பாரும் உண்டு

இந்த யக்ஷ ப்ரஸ்னத்தில் ஒரு வரியில் இரண்டு மூன்று கேள்விகளை யக்ஷன் கேட்டுக்கொண்டே போக அதற்கிணையாக யுதிஷ்டிரர் பதில் சொல்லிக்கொண்டே போகிறார். இதை விரித்து எழுதினால் ஒவ்வொரு வார்த்தையும் பலபக்கங்களுக்கு எழுதக்கூடும்.

(1) சூரியனை உதிக்கச் செய்பவர் யார்?

ப்ரஹ்ம ஆதித்யம் உன்னதி –நான்முகன் உபதேசம் இது -சூரியனை உதிக்கச் செய்வது ப்ரஹ்ம. இங்கு சூரியன் என்பது ஞான ஒளியுடன் கூடிய ஆத்ம சூரியன். அதாவது ஜீவன். அதை அறிய உதவுவது வேதம். ஆகவே வேதமே பிரும்மம் என்று கூறப்பட்டது.

ப்ரஹ்மம் -காயத்ரி சந்தஸ்ஸுக்களில் மாதா -ப்ரஹ்ம உபதேசம் -காயத்ரி மந்திரமே ப்ரஹ்மம் உயர்ந்தது

மந்தேகர் அரக்கர் உதிக்க விடாமல் தடுக்க -சந்த்யா வந்தனம் அர்க்ய பிரதானம் -செய்ய -காயத்ரி மந்திரத்தால் அஸ்திரமாக -தீவில் தள்ளுமாம்
இவ்வாறு தினமும் நடக்கும்

ஆதித்யே இதி ஆதித்யன் -ஜீவாத்மா
ஜீவர்களை உயர்த்துவது யார் என்றுமாம்
ப்ரஹ்மமே உயர்த்தும்-ப்ரஹ்மம் வேதத்தையும் சொல்லும் -ஞானத்தால் உயர்த்தும்

————

(2)சூரியனுக்கு இரண்டு பக்கங்களிலும் சஞ்சரிப்பவர் எவர்?–அதி கச்சதரா –

தேவர்களே அவனுக்கு இரு புறங்களிலும் சஞ்சரிக்கின்றனர். சமம், தமம் என்ற ஒழுக்கங்கள் ஆன்ம அறிவு பெற உதவுகின்றன. எனவே அவை தேவர்களாகக் குறிப்பிடப்பட்டன.

12 ஆதித்யர்கள் -கேசவாதி துவாதச -மார்கழி கேசவன் -தேவாதி தேவன் -கார்த்திகை -தாமோதரன்-இதனால் தான் ஸந்த்யாவந்தனத்தில் கேசவாதி தர்ப்பயாமி -பண்ணுகிறோம்

உடன் செல்பவர்–ஜீவருடன் -தேவர் -இந்திரியங்கள் -புலன்களைக் குறிக்கும்-தேவர் போல் இஷ்டப்படி நடக்கும்

——-

(3) ஏநம் அஸ்தம் நயதி -சூரியனை அஸ்தமிக்கச் செய்பவர் யார்?

தருமம். இங்கே தருமம் என்பது முக்தி, செய்வினை, வழிபாடு எனும் உருவில் இருக்கும் தருமமே ஆன்ம விடுதலைக்கு உதவுகிறது.

ஜீவரின் பிறவி முடிப்பவர் யார்-தர்மம் இங்கு சாதனங்களைக் குறிக்கும் -பக்தி பிரபத்தி போல்வன-

——–

(4) சூரியன் நிலை பெறுவது எதில்?-ப்ரதிஷ்டதி –

சத்தியதில் சூரியன் நிலை பெறுகின்றான். அதுவே பரமாத்மா.. வருவதும், இருப்பதும்,போவதும் பரமாத்மாவிலேயே என்பதால் அதில் ஆன்மனாகிய ஜீவன் நிலை பெறுகிறான்.

சத்யம் உண்மை -மாறாமல் இருப்பதே சத்யம்-நிலவு போல் வருவதோ தெய்வதோ இல்லையே –

சத்யம் -ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-ப்ரஹ்மமே சத்யம் -எப்போதும் மாறாமல் -தோற்றமோ அழிவோ இல்லையே
ஜீவாத்மாக்களை தாங்குவதும் ப்ரஹ்மமே–உள்ளே இருந்து தாங்கி நியமித்து-இல்லை சொல்வாருக்கும் சத்தை ப்ரஹ்மமே

உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்

——-

(5) மனிதன் ஸ்ரோத்திரியனாவது எதனால்?

வேதம் ஓதுவதனால். அதாவது வேதப் பொருளான பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை, ஆசிரியனிடம் கேட்டு அறிபவனே ஸ்ரோத்திரியன் எனப்படுகிறான்.

ஸ்ரோத்தரியன் – என்பது ஸ்ருதி எனப்படும் அந்த வேதத்தை அறிந்தவன் என்று பொருள் படுகிறது.

யக்ஷன்: கேனஸ்வி ஸ்ரோத்தரியோ பவதி?
யுதிஷ்டிரன்: ஸ்ருதேன ஸ்ரோத்தரியோ பவதி.

முக்தி அடைவது எப்போது எதனால் –
ஆச்சார்ய உபதேசத்தால் மனாஸ் பக்குவம் பெற்று சரணாகதி செய்து முக்தி

——

(6) ‘மஹத்தை’த்தை அடைவது எதனால்?

தவத்தினால்.-விந்ததே மஹத் -கடின முயற்சியை தவம் -there is no substitute fir hard work

ஆன்மிகத்திலுயர்வு தபஸ் -அனுஷ்டானங்களால்-கீழ் உபதேசம் பெற்றதை அனுஷ்ட்டித்து உயரலாம்

—-

(7) மனிதனுக்கு எது துணை?

துணிவு.–துணிவே துணை -த்ருதி -துணிவு என்றும் மஹா விஸ்வாசம் –

ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை

—-

(8) புத்திசாலி ஆவது எப்படி?

அறிவில் சிறந்த பெரியவர்களைச் சேர்ந்து இருப்பதால் மனிதன் புத்திசாலி ஆகிறான்.

கீழே ஸ்ரோத்ரியன் வேத ஞானம் உள்ளவன் பற்றி
இங்கு வ்ருத்த சேவாவன்–பணிவிடை செய்து-அனுபவ ஞானம் பெறலாம்

வ்ருத்த சேவை நல்ல சதாச்சார்ய ஸுஸ்ரூஷை செய்து-

வாழ்வியல் விஷயம் பற்றி இந்த நான்கு கேள்விகள்–ஆன்மிக விஷயங்களும் இவற்றில் உண்டே -இரண்டுக்கும் பதிலில் உண்டு

———-

அடுத்த நான்கும் அந்தணர் பற்றிய கேள்விகள்

(9) பிராமணரின் தேவத் தன்மை எது?-பூ ஸூரர் -நிலத்தேவர்– -plus point

ஸ்வாத்யாயமே ஏஷ தேவத்வம் –ஓவாதே இருப்பது பட்டினி நாள் —வேதமோதுதலே! அதுவே தேவத் தன்மையான சொர்க்க லோக வாசத்தைத் தருகின்றது.

ப்ரஹ்மத்தை அடைய சரணாகதி செய்த பிரபன்னர்களையே பிராமணன் இங்கு-ரஹஸ்ய த்ரய அனுசந்தானம் வேண்டுமே

————

(10) துறவிகளுக்கு இருப்பது போன்று இவர்களின் தர்மம் எதூ?

தவமே. –தபஸ் -தன்னை வருத்திக் கொள்ளுதல் -ஸ்ரத்தையாக ஸாஸ்த்ர நியமங்களை அனுஷ்டானம் செய்தல்

அதாவது சமமும், தமமுமாகும். அதாவது, உடல்,மன, உள், வெளி அடக்கமே தவமாகவும், வேதம் ஓதுதலுடன் தர்மமாகவும் இருக்கிறது.

பிரபன்னர்களுக்கு தபஸ் -ஆலோசனை அர்த்தம் இங்கு-திருமேனி த்யானம் -அவனை அடைய அவனே வழி சிந்தித்து இருப்பதே

——-

(11) ஏஷாம் மானுஷோ பவ –மனிதத் தன்மை அவர்களுக்கு எது?

மரணம். –மரணம் இயற்க்கை உண்மை என்பதை உணர வேண்டும்

அதாவது, ஜனன- மரணத்தைத் தரும் கருமங்கள். அவற்றின் அடிப்படையான ‘நான்’, ‘எனது’ என்ற அகங்காரம். இதுவே மானுஷோ பாவம் ஆகும்.

மரணம் அடையும் உடலையும் அழியாத ஜீவனும் ஓன்று என்று எண்ணுவதே மனிதத்தன்மை

———–

(12) அவர்களை அஸத்து என்றாக்கும் ‘அதர்மம்’ எது?

பரிவாதம் செய்வதே இவர்கள் தோஷம்-negative points

பிறரை நிந்திப்பது, அதாவது, தெய்வங்களை, பெரியவர்களை, சாதுக்களைப் பழித்துரைப்பது.

பல்லையும் அந்தணரையும் த்விஜ -குறிக்கும்-பல் பல்லும் உண்டே
துரும்பு மாட்டினால் நாக்கு வெளியில் தள்ளாமல் விடாது
வம்பு பேசினால் வேறே ஒருவர் இடம் சொல்லாமல் இருக்க மாட்டார்
நுமர்களைப் பழிப்பராகில் -தோஷம்

பாகவத அபசாரம் பிரபன்னனுக்கு தோஷம்

——–

அடுத்த நான்கும் க்ஷத்ரியர் பற்றி-இங்கும் அனைவர்க்கும் பொதுவாக -க்ஷத்ரியர் -அர்ச்சாவதாரப் பெருமாள் பற்றி கேள்விகள்

(13) ஷத்திரியர்களின் தேவத் தன்மை எது?

இஷு அஸ்திரம் –மந்த்ர பூர்வகமாக ஆயுதங்கள் செலுத்துதல் அம்பு, வில் போன்ற ஆயுதங்களே1

அரசர்கள் ஆயுதங்களின் சிறப்பாலே, தருமத்தையும் நாட்டையும், தங்களையும் காத்துக் கொள்கின்றனர்.

இஷு அஸ்திரம்-திவ்ய ஆயுதங்கள் ஏந்தியதே அர்ச்சாவதார தெய்வத் தன்மை
ஞான சக்தியாதிகளைக் காட்டும்

——

(14) துறவிகளைப் போல இவர்களின் தர்மம் எது?

யாகங்கள். அசுவ மேதம், ராஜ சூயம் போன்றவை. கள வேள்வி எனப்படும், நியாய வழியில் நேரும் போரும் இவர்களின் தருமம்.

அந்தணர் யாகங்கள் பண்ணி வைக்கலாம் -செய்வதற்கு ஷத்ரியர்களுக்கே அதிகாரம்

பக்தர்களுக்கு திருவாராதனம் செய்வதே தர்மம்

——–

(15) சத்திரியர்களின் மனிதத் தன்மை எது?

அச்சம். அரச குலத்தினர் அஞ்சுவதே இழுக்கு.-அச்சம் என்பது மடமையடா

மனிதத் தன்மை -பக்தி மிக்கு -பொங்கும் பரிவால் ரஷ்ய ரக்ஷக பாவம் மாறுமே
பல்லாண்டு பாடுவோமே

கட்டுண்ணப்பண்ணிய பெரு மாயன் -அவனும் பாவிப்பான்

நாகப்பழம் தயிர் சாதம் சேர்த்து -கஷாயம் -தன்வந்திரி சந்நிதி ப்ரதிஷ்டை

——–

(16) அவர்களின் அதருமம் எது?

அஞ்சி அடைக்கலம் புகுந்தவனைக் காப்பாற்றாதது அதருமம்.

பரித்யாகம் -சரணாகதி -பண்ணும் யாருக்கும் அடைக்கலம் செய்ய வேண்டும் –
கை விடுவது பெரிய தோஷம்

பக்தன் பகவானை விட்டு -நம்மூர் பெருமாள் விட்டுப் போவதே தோஷம் –எத்தனை திவ்ய தேசம் போனாலும் இது தோஷமாகவே முடியும்

——–

17, 18, 19, 20 ஆகியவற்றில் மூலத்திலிருந்து:

யக்ஷன்:
கிமேகம் யக்ஞாயாம் சாம கிமேகம் யக்ஞாயாம் யஜு:
கா சைசாம் வ்ருணுதே யக்ஞம் காம் யக்ஞோ நாதிவர்ததே

சாமவேதத்திற்கு சமமான ஆத்ம த்யாகம் (அர்ப்பணிப்பு – spiritual sacrifice) எது? யஜுர் வேதத்திற்கு சமமானது எது? ருக்வேதத்திற்கு சமமானது எது? ஆத்ம அர்பணிப்பிற்கு மிகவும் அவசியமானது எது? அது இல்லாமல் முடியாது என்பது எது?

தர்ம புத்திரன்:
ப்ராணோ வை யக்ஞாயாம் சாமா
மனோவை யக்ஞாயாம் யஜு:
ருகேக வ்ருணுதே யக்ஞாம்
தம் யக்ஞோ நாதிவர்ததே.

ஆத்ம அர்ப்பணிப்பில் சாம வேதத்தைப் போன்றது உயிர். மனமே யஜுர் வேதத்துக்கு சமமானது. பக்தியே (prayerfulness) ருக் வேதத்திற்கு சமம். அந்த வகையான பக்தியே ஆத்ம அர்ப்பணிப்பிற்கு மிகவும் தேவையான ஒன்று.

————-

திரு ஆராதனம் பற்றி அடுத்த நான்கு கேள்விகள்-இதற்கு இரண்டாம் அர்த்தம் இல்லை
ஆகவே கீழும் தர்மபுத்ரரை பரிசாய் பண்ண மறைத்து கேட்டான்
இனி நேராகவே கேள்வி

(17) அவர்களின் யாகத்திற்கான ஹோமம் எது?

உயிர், அது தான் முக்கிய ஹோமம்(கீதம்).-சாம வேதம் -கீதத்துடன் கூடியது

பிடித்த இசை -பிராணன் தான் அவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் -மூச்சுக்காற்று இசையாக சமர்ப்பிக்க வேண்டும் -பிராண வேள்வி
பூசும் சாந்து என் நெஞ்சமே –புனையும் கண்ணி வாசகம் செய் மாலையே —
அணிகலனும் கை கூப்புச் செய்கையே

—-

(18) யாக யஜு எது?–உரைநடை வேதம் எத்தைச் சொல்ல வேண்டும்

மனம் தான் முக்கிய யஜு.(ஹோமம்)

யாகத்தில் ஓமத்தால்(பாட்டால்) தேவதைகளை அழைப்பர். யஜுர் வேதத்தால் ஹோமம் செய்வர். ருக்வேதத்தால் துதிப்பர். இதில் பிராணனும், மனமும் அடக்கப் படுவதே யாகமாகிறது.

உரைநடைக்கு எல்லை வரம்பு இல்லையே –அளவில்லாமல் சமர்ப்பிக்கலாம் –
நூறு தடா அக்கார வடிசில் பாவம் வேண்டுமே
மனசில் பக்திக்கு வரம்பு இல்லையே
மனஸு தான் உரைநடையாக சமர்ப்பிக்க வேண்டும்

(19) யாகத்தை வரிப்பது எது?-யஜ்ஜம் ஆகிய நாராயணனை எது ஈர்க்கும்

ரிக்கு, அதாவது வாக்கு, ஆக வாக்கு, மனம், பிராணன் என்ற மூன்றும் ஆன்ம ஞானம் அல்லது, ஆன்ம வித்தை என்னும் யாகத்தில் உதவவே உண்டாகி உள்ளன.

ஏகா ரிக் -ஒரு -அத்விதீயம் -காயத்ரிக்கு நிகர் இல்லையே –
ப்ரஹ்ம உபதேசம் என்றே இதற்குப் பெயர்
குமார போஜனம் நிறைந்த வயிற்றுடன்
வத்ஸலையான தாய் போல் காயத்ரி மந்த்ரம்

நாராயணன் திருமேனி ஒளி ஈர்க்கும் -அந்தர்யாமி -உள்ளத்தில் வைத்து போற்றினால் புத்தியை நல்ல வழியில் செலுத்தும்-இது செய்த பின்பே திரு ஆராதனம்

——-

(20) எதை யக்ஞம் மீறாமல் உள்ளது?–எந்த மந்த்ரம் கடந்து போக மாட்டான்

‘ரி’க்கை, வேத வாக்கை மீறாமலுள்ளது.

அதே காயத்ரி மந்த்ரத்தை கடக்க மாட்டான்
கானத்துடன் காயத்ரியை கானம் பண்ணுபவனை காத்தே தீருவான்

———

பொது அறிவு பற்றிய நான்கு கேள்விகள்

(21) விவசாயிக்கு எது சிறந்தது?மேல் இருந்து கீழ் விழுபவற்றுள் சிறந்தது எது

வர்ஷம் ஆபவதாம் ஸ்ரேஷ்டம் -மழை! –வானம் அழுதால் பூமி சிறக்கும் -கருணை மலையை நினைவூட்டும்

நன்று பெய்யும் மழையைக் காணில் நாரணன் வந்தான் -ஆழ்வார்

யாகம் செய்பவருக்கும் அதுவே சிறந்தது. மழையால் பொருள்கள் விளைந்து யாகம் செய்வர். மழை இல்லா விட்டாலும் அதைவேண்டி யாகம் செய்வர்.

——–

(22) விதைப்பவருக்கு எது சிறந்தது?-புதைத்து வைக்கும் பொருள்களில் சிறந்தது எது

விதை, (நிலம், தோட்டம்) விதையிருந்தாலேயே விதைக்க முடியும்.. நிலம் இல்லாவிட்டால் விதைக்க முடியாது.

பீஜம் -வ்ருஷமாக பலன் கொடுக்கும்
வித்து -முதல் தனி வித்தேயோ
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்தில் கொன்ப்து பக்தி மரம் வளரும்

———

(23) இன்ப வாழ்வு நிலைக்கத் தேவையானது எது?

பசுக்கள், நிம்மதியான மன நிலைக்கு ஏற்ற சாத்வீக ஆகாரத்தை, பால், வெண்ணெய்,தயிர், என்று தருவன.

நிலைத்த செல்வம் பசுக்கள் தானே
விழுச் செல்வம் கல்வி –மாடல்ல மற்றவை-மாடு -செல்வம் -அந்தணர் மாடு

கோ ஆச்சார்யர் உபதேசங்கள் என்றுமாம்-இதுவே நிலைத்த மோக்ஷ சாம்ராஜ்யம் கொடுக்கு

———-

(24) வமிசா வழிக்கு எது சிறந்தது?-ப்ரஸவம் -உருவா வதுவதில் ஸ்ரேஷ்டம் -புத்ரன் -குழந்தைச் செல்வமே

பிள்ளை, அதாவது ஆன்சந்ததியே சிறந்த பரம்பரையாகும் எனப்பட்டது. மகள் வழி ஒருவனது பரம்பரையாகாது.

——–

ஒரே கேள்வி இங்கு -பொது அறிவில்

(25) கண், காது, மூக்கு, நாக்கு,தோல் ஆகிய ஐம்பொறிகள் மூலம் , ஒளி, ஒலி, மணம், சுவை, தொடுகை எனும் ஐந்து புலனுணர்வு உடையனவாகவும், நல்ல நிலையிலுள்ள புத்திமானாகவும், உலகில் எல்லாராலும் பணக்காரன் என்று பாராட்டப் படுபவனாகவும், எல்லா ஜீவன்களும் மனிதன் என்று ஒப்புக் கொள்ளும்படி யுமுள்ளவனாகவும், மூச்சு விட்டுக் கொண்டு உயிருடன் இருப்பவனாகவும், ஒருவன் இருந்தும் எந்த மனிதன் உயிரில்லாதவன் ஆவான்? (அதாவது நடைப் பிணமாவான்?)

தேவதைகள். அதிதிகள், வேலைக் காரர்கள், முன்னோர்கள் (பித்ருக்கள்)அல்லது நீத்தார், தான் ஆகிய ஐந்து பேருக்கும் எவன் ?-எதுவும் சமர்ப்பிக்காமல் இருந்தால் அவனே நடைப் பிணமாவான்..

திருவாராதனம் செய்து பிரசாதம் தானே உண்ண வேண்டும்-இந்த ஐந்து கடைமைகள் செய்யாமல் இருக்கக் கூடாது-பிறருக்குப் பயன் இல்லாத வாழ்வு வீணாகுமே

———-

மேல் நான்கு கேள்விகள் பொது அறிவு பற்றி

(26) பூமியை விடக் கனமானது -மதிப்பு மிக்கது -எது?

தோண்டுவாரையும் பொறுக்கும் பூமி இகழ்வார் பொறுத்தல் தலை -தாய்! பிறந்த பின்பே பூமி தாங்குகிறது. பிறக்கும் முன் சிசு கருவாக பூமியில் விடப்பட்டால் இறந்து விடும். ஆனால், அந்நிலையிலுள்ள தாய் சிசுவை அருமையாகப் பேணுகிறாள். அனைத்துயிரும் தாயின் கர்ப்பத்திலிருந்தே பூமிக்கு வருகின்றன. ஆகவே தாய் பூமியை விட மதிப்பிலுயர்ந்த கனமானவள்.மதிப்பு மிக்கவள்

‘பிரிதிவி மாதா’ என்கிறது வேதம்

———-

(27) ஆகாயத்தை விட உயர்ந்தது எது?

கம் -ஆகாசம் -பிதா உச்ச தர –தந்தை! வானத்தை விடப் புகழ் உயர்ந்தது. அந்தப் புகழ் தந்தையாலேயே உண்டாகிறது. நேரடியாகவோ, அவரளிக்கும் கல்வி மூலமாகவோ புகழ் உண்டாகிஅது. ‘தந்தையோடு கல்வி போம்’ என்பது பழமொழி. குலப் பெருமை என்பதும் தந்தையால் வருவதே!

——

(28) காற்றை விட -சீக்ர தரம் -வேகமானது எது?

மனம்! மனோ வேகம் அதிகமானது. ஏற்கனவே மனம் எல்லாவற்றிலும் பரவியுள்ளது; மனத்திலேயே அனைத்தும் உள்ளது.

நின்றவா நில்லா நெஞ்சு அன்று-

————-

(29) புல்லை விட அற்பமானது எது?-பஹு தரம் -மட்டமானது எது –

சிந்தா -கவலை! எவரும் பொருட்படுத்தாததே ‘அற்பம்’ என்பது. புல்லை எவரும் பிரமாதமாக நினைக்க மாட்டார். அதே போலக் கவலையை எவரும் பொருட்படுத்திப் பெரிதாக நினைக்கக் கூடாது என்பது பொருள்.

தேவை இல்லாமல் புல் தானே முளைக்கும் -அதே போல் கவலை -வெட்டி எறிந்தால் தான் நல்ல பயிர்கள் எண்ணங்கள் விளையும்
களை களையவே பயிர் விளையும்

———–

உள் கருத்து வைத்து அடுத்த நான்கு கேள்விகள்

(30) தூங்கும் போதும் கண்ணை மூடாதிருப்பது எது?

மீன்!
அதாவது ஜீவன் எப்போதும் விழிப்பு நிலையிலிருக்கிறான். எப்போது எனில் கவலைகள் முற்றும் ஒழிந்த பின்னர். கவலைகளைப் பெரிதாக நினைத்தால் அவற்றிற்கு இசைந்து ஆசைகளை நிறைவேற்ற அலைய வேண்டி வரும்.

மத்ஸ்யம் -கண் இமைகள் கிடையாது-மீனம் -பத பிரயோகம் இல்லாமல் மத்ஸ்யம் பத பிரயோகம்
அக்னி நாம் தேவர்களுக்கு கொடுப்பதை கொண்டு போய் சேர்ப்பான்
முதலில் இந்த வேலை பிடிக்காமல் நீரில் ஒளிந்து கொண்டானாம்
மீன் கோள் சொல்லிற்றாம்
அப்புறம் வேலை பிடித்ததாம்
அந்த ஸமயத்தில் கோபம் கொண்டு உன்னை வலை வீசிப் பிடிப்பார்கள் சாபம் கொடுத்தான் -யஜுர் வேதம் சொல்லும்
மத்ஸ்யம் என்பது கோள் சொன்னவனைக் காட்டும் —
மத் -என்னுடைய -குறைகளை அறியாமல் தூங்கி -அடுத்தவர் குறைகளைக் காண கண்ணைத்திறந்து கொண்டே இருப்பானே கோள் சொல்பவன்

———-

(31) எது பிறந்தாலும் அசைவின்றி உள்ளது ?

முட்டை தான்.

அது பிறந்தும் அப்படியே இடப்பட்டபடி இருக்கிறது. அண்டம் ஆகிய பிரபஞ்சமே முட்டை எனச் சொல்லப்பட்டது. அண்டம் பிரக்ருதி ஜடமானது. அதைப் புருஷனைச் சேர்த்து பரமாத்மாவே இயங்கச் செய்கிறார்.

உடனே அசையாது–பொறுத்தார் பூமி ஆள்வார்
காத்து இருந்தால் காலம் கனிய வைக்கும் -பலத்தில் கண் வைக்காமல் பொறுமையுடன் அவனுக்கு அர்ப்பணித்து செய்ய வேண்டும்

————

(32) எதற்கு இருதயம் இல்லை?

கல்லுக்கு! அப்படி இயங்கினாலும் பிரக்ருதி கல் போன்றே சுக துக்க அனுபவம் இல்லாதது என்பதால் இதயமற்றது என்று கூறப்பட்டது..

உடம்பை கல் போலும் மனதை பஞ்சு போலும் வைத்துக் கோலா வேண்டும்
மனம் கல்லாய்ப் போன மனிதர்களால் கடவுள் கல்லானார்

—————

(33) எது சொந்த வேகத்தால் வளருகிறது?

நதி வேகத்தால் வளர்ந்து போகிறது. புலனுகர்ச்சியை விரும்பும் ஆசை வேகத்தால் f£வனுக்கு நதி வளர்வது போல உலக வாழ்க்கை (சம்சாரம்) பற்பல பிறவிகளாக நீண்டு வளர்கின்றது.

தனது சொந்த திறமையால் முயற்சியால் வளர வேண்டும்
ஆசீர்வாதம் பெறலாம் recommendation மூலம் பெற்றால் நிலையாதே-

————-

மேல் நண்பன்–மித்ரன் -பத பிரயோகம் -ஆபத்தில் உதவும் நண்பன் – பற்றிய நான்கு கேள்விகள்
உடுக்கை இழந்தவன் கை போல்

(34) ஊர் ஊராகச் சுற்றப் போகிறவனுக்கு தோழன் யார்?

கற்ற வித்தையே! போகிற இடங்களில் பிழைப்புத் தேடிக் கொள்ளவும், ஆபத்தின்றிக் காத்துக் கொள்ளவும், வழிப் போக்கர்களின் கூட்டத்தில் அனைவரும் விரும்பும்படித் துணையாகக் கொண்டு பேசிச் செல்லவும் கல்வியும், வித்தையும் கை கொடுத்து தோழனாகின்றன.

கற்றவனுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு-ஆன்மிகப் பயணம் -பரமாத்மா நோக்கி -ப்ரஹ்ம வித்யைகளே உதவும்

————-

(35) வீட்டிலிருப்பவனுக்குத் துணை யார்?

பார்யா -மனைவி
அறிவை உரைப்பதில் அமைச்சன் அன்றோ

———

(36) நோயாளிக்குத் துணைவன் யார்?

பிஷக் -மருத்துவன்! அவனாலேயே நோய்க்குச் சிகிச்சை யளிக்க முடியும் என்பதால்.

வாளால் அறுக்கும் மருத்துவன் பால் காதல் வைக்க வேண்டுமே
பகவானும் நம்மைப் பக்குவப படுத்தவே ஆபத்துக்கள்
நாம் எல்லாரும் பிறவிப்பிணியில் இருக்க
வைத்யோ நாராயனோ ஹரி
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்

———-

(37) இறக்கிறவனுக்குத் தோழன் யார்?

சாகப் போகிறவன் -மரணம் சமயம் மட்டும் இல்லை
அனைவருமே மரணம் இன்றியமை யாழ் -ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தானம்! புண்ணிய பலனை உண்டாக்கி மறுமைக்கும் நலம் சேர்ப்பதாலும், இம்மையில் அவனப் பலர் புகழ்ந்து பேச ஏது ஆவதாலும், அவன் விட்டுச் செல்லும் பணிகள், சந்ததி உறவினர், பொருள்களைக் கவனித்துப் பார்க்க அவன் செய்து சென்ற தானங்கள் உதவும்.

———–

தர்ம ஸாஸ்த்ர விஷய நான்கு கேள்விகள்

(38) அனைத்துயுரின் விருந்தாளி யார்?

அக்னியே! அனைத்துயிரின் உடலிலும் அக்னியே இருந்து உண்ணும் உணவுகளைச் சீரணிக்கிறது.

விருந்தோம்பல் -அதிதி தேவோ பவ -க்ருஹஸ்தனுக்கு முதல் விருந்தாளி அக்னி தேவன்
ப்ரதிஷ்ய ஹோமம் -அந்த அக்னியைப் பாத்து காத்து -வாழ் நாள் முழுவதும் உணவு அளிக்க வேண்டும்
அக்னி ஹோத்ரம் -கண் எதிரே வாங்கி உண்ணுவார்-அந்திம சம்ஸ்காரம் இந்த அக்னியைக் கொண்டே செய்ய வேண்டும்

அக்னி -ஆச்சார்யரைக் குறிக்கும் இங்கு -அக்ரம் நியதி -முன்னே வழி நடத்தி செல்பவர்
ஒளி காட்டி அஞ்ஞானம் போக்கி -அறியாக் காலத்து அடிமைக் கண் வைத்து அருளுகிறார் நம் மேல் அன்பு வைத்து

——–

(39) சனாதன தர்மம் -எது நிலையான தருமம்?

முக்திக்கான வழிகளே நிலையான தருமம். மற்ற தருமங்கள் பிறவிகளைத் தருவனவாகும்.

தர்மம் -ஸாதனம் -ப்ரஹ்மம் அடைய -ஸாஸ்த்ரம் அருளியபடி –
சனாதனம் -தொன்று தொட்டு -அநாதியாக இருப்பது
அம்ருதம் -ஆராவமுதே –வேதமும் ஏஷ அந்தர்யாமி அம்ருதம் சொல்லும்

சா காஷ்டா ச பராங்கதி கட உபநிஷத் -1-4- ஆனுமானிகா அதிகாரணம் –
அவனே அவனை அடையும் வழி -ஸ்ரீ பாஷ்யத்தில் சரணாகதியும் உண்டே-ஆறும் அவனே பேறும் அவனே –ஸித்த உபாயம்

————-

(40) எது அமிருதம்?

பசுவின் பால் ஆகிய ‘அமிருதம்’ எனப்படுவதே. மோட்சத்தில் இச்சையை உண்டாக்கும் சாத்வீக குணத்தைத் தருவதால் பசும்பால் அமுதம் எனப்பட்டது.

இங்கு பெருமாளைப் பற்றிக் கேட்கவில்லை
பசுமாடு பால் கைம்மாறு கருதாமல் பால் கொடுக்கும் அன்றோ

இதுவே உலகில் காணும் பொருள்களில் ஸ்ரேஷ்டம்
கவாம்ருதம் =பசு ஆச்சார்யர் சுரபிகள் போல் சொல் அமுதம் சுரப்பார்கள்
உபதேசம் பால்

———–

(41) இவ் வுலகம் முழுவதும் எப்படி உள்ளது?

பிராணனாகவே உள்ளது (வாயு)

வாயு சர்வம் இதம் ஜகத்
வாயு பத பிரயோகம் -நகர்ந்து கொண்டே இருப்பத்தைச் சொல்லும் -ஓட்டம் -movement -அசைந்து கொண்டே இருக்கும்
வாழ்வே பயணம் தானே

பெருமாளை 415 ஹிரண்ய கர்ப்ப –வாயு -சஹஸ்ர நாமம்

415–வாயு
செல்பவன் -அடியார் உள்ள இடம் தானே -குகன் பரத்வாஜர் சபரி

சோபியகச்சத் மஹா தேஜா சபரீம் சத்ரு ஸூதந -பால
எதிரிகளை அழிக்கும் ராமன் சபரியின் இடத்துக்குச் சென்று பெருமை அளித்தான்

பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா–பால
பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றான்

குஹம் ஆஸாத்ய தர்மாத்மா–பால
குகனை மேன்மைப் படுத்தினான் –

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
சென்று நின்று ஆழி தொட்டான் –

தம்மைத் தியானிப்பவர் இருக்குமிடம் தேடி ஆங்காங்கு செல்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

———-

அடுத்த நான்கு கேள்விகளும் பதிலும் வேதத்தில் உள்ளதை அப்படியே கேட்க்கிறான்

(42) எவன் தனியாக சஞ்சரிக்கிறான்?

ஸூரியனே! யாருதவியின்றி சுய ஒளியுடன் சூரியன் பிரகாசிக்கிறான். உலகப் பொருள் இருந்தாலும் இல்லா விட்டாலும் அவன் பிரகாசித்துக் கொண்டிருப்பான்.

ஸூர்ய ஏகோ விசரதே
கீழ் ஏழு தேவர்கள்–கந்தர்வாதிகள் கூடப் போகிறார்கள்
இங்கு தனியாக -தனித் தன்மையாக என்ற அர்த்தங்கள்
இவன் ஒளியால் மற்றவை மங்கி இருப்பார்கள்

இதே போல் நாமும் ஆட்டு மந்தை போல் இல்லாமல் தனித் தன்மையுடன்
ஸூர்யன் நாராயணனுக்கு பெயர் உண்டே
புறப்பாடு -முன்னும் பின்னும் பலர்-இருந்தாலும் -இவன் அசாதாரணம் தானே –
அழகர் உடன் பலர் வந்தாலும் ஆற்றில் இறங்குபவர் அழகர் என்கிறோம்

———-

(43) எவன் பிறந்தும் மீண்டும் பிறக்கிறான்?

சந்திரன்! சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ‘சந்திரன்’ எனப் பிறக்கிறான். அவ் வொளியைப் பூமியில் வீசி பூமியிலுள்ளோருக்கு மீண்டும் ‘சந்திரன்’ பிரகாசிக்கிறான். சந்திரனே மனS தத்துவமாகி அந்த மனத்தாலேயே ‘சந்திரன்’ என்று அறியப்படுகிறான்.

சந்த்ரமா ஜாயதே புந
புதிதாகப் பிறந்து போல் -இனிமையுடன் குளிர்ந்து -அமுதை பொலியும் நிலவு அன்றோ
பார்க்கப் பார்க்க சலிக்காமல் இருக்கும்
அன்று வந்ததும் அதே நிலை -இன்று வந்ததும் அதே நிலா-பார்த்துப் பார்த்து சலித்த நிலா பாதி தேய்ந்தது –

————–

(44) பனிக்கு மருந்து எது?

அக்னி தான்! சூரியன் சந்திரன் இரண்டும் அப்படி இருப்பது அக்னியாலேயே. அக்னி வித்தை எனப்படுவது பிறவிப் பிணியையே பனி போலப் போக்க வல்லது.

ஹிமம் -நெருப்பு தான் மருந்து
ஸூர்யனைக் கண்ட பனி என்றாலும் அக்னியையே பதிலாகச் சொல்ல வேண்டும்
நான் யார் -அறியாமை மூடும் -ஹிமம் அறியாமைச் சொல்லும் -அக்னியான ஆச்சார்யர் போக்குவார்

————

(45) எல்லாவற்றையும் அடக்கக் கூடிய பெரிய பாத்திரம் எது?

பூமி! பூவுலக வாழ்க்கையை வைத்தே கடவுள், தேவர், மனிதர், வேதம் பற்பல வித்தைகளும் இருக்கின்றன. இதனால் பூமியில் எல்லாம் அடக்கம்.

பூமியில் எத்தைப் போட்டாலும் வாங்கிக் கொள்ளும்
பூமி -பிறவிப்பிணி -ஸம்ஸாரமே பெட்டி -கர்ம வினை பூட்டு
அருள் என்னும் சாவியால் வெளியே வர வேண்டும்

————

எதுக்கு எது ஆதாரம் பற்றி நான்கு கேள்விகள்

(46) தர்மம் முக்கியமாக எதில் நிலை பெறுகிறது?

செயல் திறனில் உள்ளது. ஏனெனில் சூட்சுமமான தருமத்தைச் செய்தல், காப்பாற்றுதல், அதருமத்தைத் தவிர்த்தல் எல்லாம் சாமர்த்தியமாகச் செயப்படுவதிலேயே இருக்கிறது.

————–

(47) முக்கியமாகப் புகழ் எதில் நிலை பெறுகிறது?

தானம் செய்வதில் தான். கொடுப்பவனையே உலகம் புகழ்கிறது.

———-

(48) சொர்க்கம் எதில் உள்ளது?

உண்மையில் தான் சொர்க்கம் உள்ளது. கனவில் எதை அனுபவித்தாலும் விரைவில் போய் விடுவதால் உண்மை நல்வாழ்வே சொர்க்கமாக உள்ளது. தற்காலிக சுகமும், பயமும் இருப்பதால் உண்மையில்தவிர சொர்க்கம் இராது.

நிம்மதியே சுவர்க்கம்
வாய்மை தீமை இல்லாத சொல்
உண்மை அப்படியே சொல்லுதல்
நன்மை செய்யும் உண்மையே வாய்மை

———–

(49) சுகம் எதில்,நிலைத்து நிற்கிறது?

நல்லொழுக்கத்தில்தான். ஒழுக்கமில்லாத வழியில் வரும் சுகம் நிலைக்காதது. அந்த சுகமே துக்கமாகி விடும்.

நிம்மதி வேறே சுகம் வேறே -நல்ல ஒழுக்கம் சீலம் சுகம் தரும்
சீலம் -பணிவு humility-வித்யா ததாதி விநயம்

———–

வாழ்வு பற்றி நான்கு கேள்விகள்

(50) மனிதனுக்கு ஆத்மா எது?

புத்திரனே மனிதனின் ஆன்மா. வேதம் ஆத்மாவை புத்ர நாமாஸீ -சொல்லுகிறது -ஆப் நோதி இதி ஆத்மா -அடைய முடியாத ஒன்றை அடைவதற்கும் ஆத்மா என்கிறோம்-mankind போல் புத்ரன் பொதுச்சொல்

————–

(51) மனிதனுக்கு தெய்வம் உண்டாக்கித் தந்த துணை யார்?

மனைவி. மனைவி என்பவள் தெய்வத்தால் படைக்கப் பட்டவள்.

தெய்வம் தரும் சஹா இங்கு
கீழ் -35 கேள்வியில் மித்ரன் -ஆபத்தில் உதவும் நண்பனின்
சஹா இன்பம் துன்பம் சமமாகப் பங்கு எடுக்கும் நண்பன்

———-

(52) மனிதனுக்குப் பிழைக்க வழி எது? (சாதனம்)-எத்தை நம்பி வாழ்வு -உப ஜீவனம் -எத்தை அண்டி பிழைக்கிறான்

மழையே எல்லாவற்றின் அடிப்படை சாதனமாகும்.-ஏரி கட்டி காத்து இருக்க வேண்டும் -மாரி யார் பெய்கிற்பார் மற்று
அருள் மழை பொலிந்து பிரபன்னரை ரக்ஷிக்கிறான் அன்றோ -தீது இன்றி மும்மாரி பெய்ய ஆண்டாள் கட்டளை

———

(53) மனிதனின் சிரேயஸ் ஸூக்குச் சாதனம் எது?– பராயணம் -நல்ல வழி போக

மனிதனின் மேலான நிலைக்குத் தானம் தான் சிறந்த சாதனம். கொடுப்பது தியாக புத்தியைத் தரும். தியாகம் அகங்காரத்தை விடும் வழி. அதுவே துறவாகி முக்திக்கு வழிவிடுகிறது.

———-

ஒவ்வொன்றிலும் மிக உயர்ந்தது உத்தமம் -பத பிரயோகம் -பற்றி நான்கு கேள்விகள்

(54) செல்வதைக் கொடுப்பதில் எது சிறந்தது?-பணம் சம்பாதிக்கும் வழிகளில் சிறந்தது -தனவான் பற்றி இது -தனம் பற்றி அடுத்தது

திறமையான முயற்சியே! முயற்சி திருவினையாக்கும்.

தாரஷ்யம் சொந்த திறமை
விரல்கள் பத்தும் மூல தனம்
youth are used less -புத்தகப் புழு ஆக்குகிறோம்-திறமையை வெளியே கொண்டு வருவதே சிறந்த பாடம் கற்றுக் கொடுப்பது

————-

(55) பொருள்களுள் சிறந்தது எது?

ஸாஸ்த்ர ஞானம். ஸாஸ்த்ர ஞானம் இன்றி எதையும் செய்து அனுபவிக்க முடியாது.போகமோ, யோகமோ, பந்தமோ, மோட்சமோ சாத்திர ஞானமின்றிக் கிட்டாது.

செல்வத்துள் செல்வன் செவிச் செல்வம் அச் செல்வம் செல்வத்துக்குள் எல்லாம் தலை -திரு வள்ளுவர்
நீ எனது செவியின் வழி புகுந்து -என்னை பெரியவனாக்கினாய் -ஆழ்வார்

—————-

55) ஒருவனது உடைமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்பு மிக்கது எது?
உடைமைகள் அனைத்திலும் சிறந்தது ஞானம்
——–
56) லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது?
லாபங்கள் அனைத்திலும் சிறந்தது உடல் நலமே {ஆரோக்கியம்}
when wealth is lost nothing is lost-when health is lost all is lost
————-
57) அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் எது சிறந்தது?
அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் சிறந்தது மன நிறைவே-துஷ்டி -போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
தர்மம் பற்றி நான்கு கேள்விகள்
58) உலகத்தில் உயர்ந்த கடமை {அறம்} எது?
ஊறு இழைக்காமையே {அஹிம்சையே} {தீங்கு செய்யாமையே} கடமைகளில் உயர்ந்தது {அறம்}
ஆன்ரு சம்சயம் பரோ தர்மம் பெருமாள்–ராமோ விக்ரஹவான் தர்மம் -அவரே சொன்ன பதில்
——-
59) எப்போதும் கனியைக் {பலனைக்} கொடுக்கும் அறம் எது?
மூன்று வேதங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் எப்போதும் கனி {பலன்} கொடுக்கின்றன
த்ரேதா தர்மம்
மூன்று அக்னி ஹோத்ரம் -இஹ பர பலன்களைக் கொடுக்கும் -சஹா பாலன் எப்பொழுதும்
மூன்று வித தர்மமாக இருக்கும் நாராயணன் -ஒருவனே எப்பொழுதும் பலன் அளிப்பவன் அன்றோ -அவனே த்ரேதா தர்மம்
இவனே தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
ராமனே த்ரேதா தர்மம் -த்ரேதா யுக அவதார புருஷன் -ராமோ விக்ரஹவான் தர்மம் -ராமனே எப்பொழுதும் ரக்ஷகன்
———–
60) அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழி வகுக்காதது எது?-கிம் நியமய -யாரை அடக்கினால்  துக்கம் இல்லாமல் இருக்கலாம்
மனமானது அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழி வகுக்காது-அகந்தை வழியில் போகும் மனதை அடக்க வேண்டுமே
———-
61) கூட்டணியை {நட்பை} உடைக்காதவர்கள் (முறிக்காதவர்கள்) யார்?-யார் உடன் நடப்பு நிலைத்து இருக்கும்
நல்லோருடன் கூட்டணி {நட்பு} எப்போதும் உடையாததாகும் (முறியாததாகும்)
ஸத் சங்கம் -நிலைத்து நிற்கும் -எப்பொழுதும் துணை –
ஸத் -கல்யாண குணங்களை அறிந்தவனே ஸத்
அஸ்தி ப்ரஹ்மணே சேத் வேத சந்தமென்னும் பவதி
இந்த நடப்பு ந ஜீயதே -அழியாதே ஸ்ரீ வைகுண்டத்திலும் வழி நடத்திச் செல்வார்கள்
—————
 
விடவேண்டியவற்றைப் பற்றி நான்கு கேள்விகள் மேல்
62) எது துறக்கப் படுவதால், ஒருவன் மற்றவர்களால் ஏற்கப் படுகிறான்?-பிரியமானவன் ஆகிறான்
ego-மானம் -அபிமானம் -அஹங்காரம் -கர்வத்தைத் துறப்பதால், அது ஒருவனை {மற்றவருக்கு} ஏற்புடையவனாக மாற்றுகிறது
அஹங்காரம் விடுவதே சரணாகதி
காம்பற தலை சிறைத்து –கடைத்தலை வாழும் சோம்பர்
அவனுக்கே பிரியவனாகி -அனைத்தும் பெறலாம்
———
63) எது துறக்கப் பட்டால், வருத்தத்துக்கு வழி வகுக்காது?
க்ரோதம்–கோபத்தைத் துறந்தால், அது வருத்தத்துக்கு வழி வகுக்காது
தரையை ஓங்கி அடித்து வலி பெறுவது போல் சினப்பட்டால் வருத்தம் வந்தே தீரும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
————
64) எது துறக்கப் பட்டால், ஒருவன் -அர்த்த வான் -செல்வன் -வளமானவன் ஆகிறான்?
ஆசையைத் துறந்தால், அது ஒருவனை வளமானவனாக்குகிறது
தேவை இல்லாத பேராசை -தேவை இல்லாவற்றுக்கு செலவழித்து செல்வம் இழப்பான்
ஆசை அடக்கினால் எல்லாம் காலடியில் கிடைக்கும்
money not spend is money earned-
———-
65) எது துறக்கப் பட்டால் ஒருவன் மகிழ்ச்சி யடையலாம்?–ஸூகீ பவேத்
பேராசையைத் துறந்தால், அது ஒருவனை மகிழ்ச்சியடையச்  செய்கிறது
கர்மாதீனம் படி வேண்டியதை பகவான் அளிக்கிறான்
கிடைத்தவற்றைக் கொண்டு நிம்மதியாக இருக்க வேண்டுமே
பகவான் சொத்தை எனது நினைப்பதே பெரிய கள்ளத்தனம்
தாஸ்யம் உணர வேண்டுமே
பெரிய பெருமாள் சொத்தை ஆசைப்படுவதே பேராசை
——-
தானம் பற்றிய நான்கு கேள்விகள்
66) ஒருவன் வேதம் கற்ற அந்தணர்களுக்கு எதற்காகக் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்?
அறத் தகுதிக்காக ஒருவன் அந்தணர்களுக்குத் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்.-வேதம் விதித்ததே தர்மம் -விதி அடிப்படையில் புண்யம் பெற
———
67) நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் எதற்காகக் கொடுக்க வேண்டும்}?
நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் புகழுக்காகக் கொடுக்க வேண்டும்
கலையை வளர்க்க சம்பளம் வேறே சிலர் கொடுப்பார்
இங்கு யஸஸ் -விளம்பரம் பெறவே கொடுக்கிறார்கள் -விளம்பரம் வருமே
———-
 
68) பணியாட்களுக்கு {வேலைக்காரர்களுக்கு} எதற்கா-tips-bonus {கொடுக்க வேண்டும்}?
பணியாட்களுக்கு அவர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுக்க வேண்டும்
சங்க்ரஹ அர்த்தம் -உடனே இருக்கச் செய்யவே tips
——–
69) மன்னனுக்கும்-ராஜ சபையில் பணி செய்பவர்களுக்கும் -எதற்காக {கொடுக்க வேண்டும்}?
பயார்த்தம்-அச்சத்தில் இருந்து நிவாரணம் பெற ஒருவன் மன்னர்களுக்குத் தானமளிக்க வேண்டும்
——-
உலகம் பற்றிய நான்கு கேள்விகள்
70) உலகத்தை மூடியிருப்பது எது?
உலகம் இருளால் மூடியிருக்கிறது-ஆவிருத்தோ -அஞ்ஞானத்தாலே -அறியாமையால் சூழப் பட்டுள்ளது -லீலா விபூதி
உப யுக்தேஷூ வை ஷம்யம் –எல்லாக்கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது
அவனைப் பற்றிய கேள்விகளை கேட்டு அறிந்து-அங்கு சென்ற பின்-இவற்றுக்கு எல்லாம் தானே பதில் கிட்டும்
அஞ்ஞானம் இங்கு -கர்ம ரூபமான அவித்யை -முன்பு செய்த இரு வினைகள் –
லீலா விபூதி கர்மத்துக்கு உட்பட்டே செயல்படும்
———-
 
71) தன்னைத் தானே ஒரு பொருள் கண்டறிய முடியாததற்குக் காரணமாக இருப்பது எது?-ந ப்ரகாஸதே
ஒரு பொருள் தன்னை வெளிப் படுத்திக் கொள்ள இருள் அனுமதிக்காது
தமஸ் -மூடி உள்ளது
சோம்பலாலே -தானே கடமை செய்யாமல்
தூங்கி -நாட்டையும் தம்மையும் கெடுத்துக் கொண்டான் –
பொன்னான வேலைகள் எல்லாம் தூங்குதப்பா
திரோதான கரீ–ஆத்மாவின் ஞான ஒளியை மறைக்கும் ப்ரக்ருதி -அங்கே ஸ்வரூபம் ஆவிர்பாவம்
————
 
72) நண்பர்கள் கைவிடப்படுவதற்குக் காரணம் எது?
லோபா -பேராசையின் காரணமாகவே நண்பர்கள் கைவிடப்படுகிறார்கள்-
அடியார் அடியார் கூட்டங்களைக் கைவிட்டால் மேல் மேல் தீங்கு விளையும் அன்றோ
———
73) சொர்க்கம் செல்வதில் ஒருவனைத் தோல்வி யுறச் செய்வது எது?
உலகத்துடனான இத் தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வி யுறுகிறான்
பாபம் செய்பவர்களுடன் சங்காத்
ஐம் பெரும் பாவங்கள் பொய் சொல்வது -பிறர் மனைவி மேல் ஆசை -போதை ஹேது இல்லாமல் வெறுப்பது -இவர்களுடன் நட்பு
நல்ல மணம் –தீய கந்தம் –குணமும் அதுவே யாகுமே
———–
74) ஒருவன் எதனால் இறந்தவனாகக் கருதப்படலாம்?
செல்வமற்ற மனிதன் இறந்தவனாகக் கருதப்படலாம்
தரித்ரன் -இங்கு -அறிவுச் செல்வம் இல்லாதவன் -அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவு இல்லாதவர் எதுவுமே இல்லாதவன் -வள்ளுவர்
ஒன்பது வாசல் கோட்டைக்கு விளக்கு அறிவு என்னும் விளக்கு –
———
75) ஒரு நாடு எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்?
அராஜகம் –மன்னனற்ற நாடு இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்–ராஜதே இதி ராஜா ஆளுமை மிக்க மன்னன் –
———–
 
76) சிராத்தம் எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்?
அஸ்ரோத்தியம் –வேதம் கல்லாத -கல்லாத புரோகிதன் துணை கொண்டு செய்யப்படும் சிராத்தம் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்
———
77) ஒரு வேள்வி எதனால் இறந்ததாகக் {அழிந்ததாக} கருதப்படலாம்?
அந்தணர்களுக்குத் தானம் -தஷிணை-இல்லாத வேள்வி இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்
———
அடுத்து ஐந்து கேள்விகள் சேர்த்து
78) வழி என்பது எது?-கா திக் எது திசை -எந்த திசையில் போக வேண்டும் என்பதைக் கேட்டவாறு
சந்தோ சான்றோர்களே திக்கு –எது நன்மையோ அதுவே வழி-சான்றோர்கள் பயணித்த வழியே திசையே நமக்கும் போக வேண்டிய வழி திசை -மேலையார் செய்வனகள்
——
 
79) நீராகப் பேசப்படுவது எது?–எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது
வெளியே {ஆகாயமே} நீராகப் பேசப்பட்டு வருகிறது
வானம் பார்த்த பூமி
நீ பூமி நான் வானம் கல்யாண வேத மந்த்ரம் -பூமி -விதை -வானத்தில் இருந்து வரும் மழையையே எதிர்பார்க்கும்-அநந்யார்ஹம் அன்பை சொன்னவாறு
——–
80) உணவு எது?-கிம் அன்னம் -எது உணவு தருகிறது
பசுவே உணவு –பசுவின் பாலே அம்ருதம் -இதில் இருந்தே தயிர் நெய் வெண்ணெய்
ஸாளக்கிராம கல்லைக் கழுவியே சாப்பிடு என்பர் -யாகம் திருவாராதனத்தையும் கௌ சப்தம் குறிக்கும் -ப்ரஸாதமே உணவு
——-
81) நஞ்சு எது?–கிம் சவை விஷம்
அந்தணர் விஷம்
வேதம் படித்தவன் செல்வம் அபகரித்தல் விஷம் போல்
வேண்டுகோளே {யாசிப்பது; பிச்சை கேட்பது} விஷம்
———
82)  சிராத்தத்துக்கான உகந்த நேரம் எது?–பதில் சொல்லிய பின்னர் தண்ணீர் குடிக்கலாம் சேர்த்து சொன்னான்
ஒரு அந்தணனே சிராத்தத்துக்கான உகந்த நேரம்
அபரான்ன காலம் மதியம் 12 மணிக்கு மேலே பண்ண வேண்டும்
நல்ல வேதம் வல்ல அந்தணர் கிடைத்தால் -அப்போதே பண்ணலாம்-திதிக்குப் பண்ணுவதும் வேண்டும் -இதுவும் சிறப்பான ஸ்ரார்த்தம்
———
யக்ஷன் நீ பதில்களை பற்றி என்ன நினைக்கிறாய் கேட்டான்
இதுவரை சரி -இன்னும்-29- கேள்விகள் உண்டு-rapid fire rounds -definition பற்றிய கேள்விகள் -சொல்லிய பின்பு தண்ணீர் கொண்டு போகலாம்
இங்கும் நான்கு நான்கு -ஓன்று மட்டும் ஐந்து கேள்விகள்
83) தவத்தின் குறி {குறியீடு} எனச் சொல்லப்படுவது எது?
தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பது தவம் {தவத்தின் குறியீடு};ஸ்வ வர்ணாஸ்ரம தர்மமே தபஸ் –
——-
 
84) உண்மையான அடக்கம் {தமம்} எது?
மனதின் அடக்கமே, அடக்கங்கள் அனைத்திலும் உண்மையானது-புலன் அடக்கத்தில் பிரதானம் மன அடக்கமே -புலன்களை விட விஷயாந்தரங்கள் பிரபலம்
———-
85) பொறுமை எனப்படுவது எது?
பகையைச் சகிப்பதே பொறுமை
இரட்டைகளை சகிப்பதே பொறுமை -புகழுக்கும் மயங்காமல் -பேணும் கால் நாணமும் வேண்டும் -த்வந்த்வம் ஸஹித்வம்
அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
———
86) வெட்கம் என்பது எது?
தகாத செயல்கள் அனைத்திலும் இருந்து விலகுவதே வெட்கம்
———–
87) ஞானம் என்று சொல்லப்படுவது எது?
தெய்வீகமே {உண்மைப் பொருளை அறிவதே} உண்மையான ஞானமாகும்.
ஒண் கேள்வன் ஒருவனை உணர்வதே ஞானம்–உண்மைப் பொருளை ஆராய்ந்து -அறிவு
அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு -வள்ளுவர்
தத்துவார்த்த சம்போதகமே ஞானம்
————–
88) அமைதி எது?-இங்கு மனம் அடக்கம் பற்றி கீழ் புலன் அடக்கம் பற்றி
இதய {மன} அமைதியே உண்மையான அமைதி
சமம் மன அடக்கம் -தமம்-புலன் அடக்கம்
சமம் –தமம் பழகி பழகி மனம் சாந்தமாகி இருக்கும் நிலை -ஆசாபாசங்கள் விலகி –
———
89)  கருணை எது?
அனைவருக்கும் மகிழ்ச்சியை விரும்புவதே கருணை
தயை -ஸர்வ ஸூகமாக இருக்க நினைப்பதும் முயல்வதும்
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ
பாம்பின் நாக்கில் உள்ள முள்ளை எடுத்த எம்பார் -கடிப்பது பாம்பின் வேலை கருணை காட்டுவது நம் வேலை
———-
90–கிம் ச ஆர்ஜவம்
சமமாக அனைவரையும் பார்ப்பதே நேர்மை
சொந்த விருப்பை கொண்டு பார்க்கக் கூடாதே
———–
91-கஸ் சத்ரு துர்ஜய
க்ரோதமே -வெல்வதற்கு கஷ்டமான எதிரி -கோபமே வெல்லப்பட முடியாத எதிரி
கோபத்தின் வேகம் தணிந்த பின்பே உணர்வோம்
தன்னைத்தான் காக்க சினம் காக்க -இல்லையேல் தன்னையே கொள்ளும் சினம்
ஆசை நிறைவேறாமல் கோபமாக மாறும் -இதுவே துர்ஜயம் கீதையிலும் உண்டே
————————
 
92) வெல்லப்படமுடியாத எதிரி எது?—மனிதனின் தீராத நோய் எது?கஸ் ய வியாதி முடிவே இல்லாத வியாதி
ஸம்ஸார வியாதியும் முடியும்
லோபம் -பேராசைக்கு மட்டும் மனுடிவே இல்லையே
பேராசையே தீர்க்கப்படமுடியாத நோய்
———
 
93) எவ்வகை மனிதன் நேர்மையானவன்?-93-சாது சான்றோர் யார்
சர்வ பூத ஹித சாது
அனைத்துயிர்களின் மகிழ்ச்சியை விரும்புபவனே நேர்மையானவன்
தயை சுகமாக இருக்க முயல்பவன்
இங்கு சர்வ பூத ஹிதம் மிகச்சிறந்த நன்மையை அடைய
மோக்ஷம் -நிரந்தர நன்மை பெற முயல்பவன்
———
 94) எவ்வகை மனிதன் நேர்மையற்றவன்?-அஸாது–கீழ் மகன் -யார்
கருணயற்றவன் நேர்மையற்றவனாவான்
நிர்தயை -கருணை இல்லாதவன்-simpathy மேல் yemnpathi பிறர் கஷ்டம் தனது கஷ்டம் போல் பார்ப்பவன்
———–
95) அறியாமை என்பது எது?-மோஹம் மயக்கம்
தர்ம மூடஸ்தம் -பகுத்தறிவு இல்லாதவன் -தர்ம அதர்ம வியாகுலம் -தன் கடமைகளை அறியாததே உண்மையான அறியாமை
——–
96) கர்வம்-மானம் என்பது எது?
ஒருவன் தன்னைச் செயல்படுபவனாகவோ {actor = நடிகனாகவோ} வாழ்வில் பாதிக்கப்பட்டவனாகவோ உணர்வதே கர்வம் ஆகும்
தன்னை உயர்ந்தவனாக நினைக்கும்
அனைவரும் ஞான ஆனந்த மயன் என்று உணராமலும்
ஆத்ம அபிமானம் கர்வம் -வித்யை தனம் குளம் அழகு கீர்த்தியால் செருக்கி நிறுத்தல்
———
 
97) சோம்பலெனப் புரிந்து கொள்ளப்படுவது எது?-ஆலஸ்யம்
தர்ம நிஷ் க்ரியதா -ஒருவன் தனது கடமைகளைச் செய்யாதிருப்பதே சோம்பலாகும்
———-
98) துன்பமெனப் பேசப்படுவது எது?
ஜீவாத்மாவின் யாதாத்ம்யம் அறியாததே -ஒருவனது அறியாமையே துக்கமாகும்-உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
—————-
99) முனிவர்களால் நிலைமாறா உறுதி –ஸ்தைர்யம் -எனச் சொல்லப்பட்டுள்ளது எது?
ஒருவன் தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பதே நிலைமை மாறா உறுதியாகும்.
இதுவே மன உறுதி-கீழே தபஸ் இதே -அங்கு தனது தர்மத்தை சரியான நேரத்தில் பண்ணுவது
இங்கு மன உறுதி -அதற்க்கு தடை வந்தாலும் செய்வது
———
100) பொறுமை எது?-தைர்யம் எது
புலன்களை அடக்குவதே உண்மையான பொறுமையாகும்-தைர்யம்-ஐந்து குதிரைகள் மனம் கடிவாளம்
——–
101) உண்மையான சுத்தம் என்பது எது?-உயர்ந்த நீராட்டம் ஸ்நாநம்
மனம் மாசடையாமல் கழுவுவதே உண்மையான நீராடலாகும் {சுத்தமாகும்}.
——–
102) தானம் என்பது எது?
அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே தானமாகும்
பூத ரக்ஷணம் -சரணாகத ரக்ஷணமே மிக சிறந்த தானம்-யதி வா ராவணன் -அபய பிரதானம்
புறா கதை
குரங்கு புலி மனிதன் கதை
———
103) எந்த மனிதன் கற்றவனாகக் {பண்டிதனாகக்} கருதப்பட வேண்டும்?
தன் கடமைகளை அறிந்தவன் கற்றவன் {பண்டிதன்} என்று அழைக்கப்பட வேண்டும்.
———
104)  எவன் நாத்திகன் என்று அழைக்கப்பட வேண்டும்?
 ஞானமற்றவனே நாத்திகன்.
———
105)  எவன் ஞானமற்றவன் {அறியாமையில் இருப்பவன்} என்று அழைக்கப்பட வேண்டும்?
 நாத்திகனே ஞானமற்றவன்
———
106) எது ஆசை என்று அழைக்கப்படுகிறது? மற்றும் ஆசையின் ஊற்றுக்கண் எது?
உடைமைகளுக்குக் காரணமே ஆசை (ஆசைகளின் ஊற்றுக்கண் பொருள் உடைமைகள்)
———–
107)  பொறாமை எது?
 இதய {மன} துக்கமே பொறாமை
————
 
108) கர்வம் {அகங்காரம்} எது?
எழுச்சியற்ற அறியாமையே கர்வம் {அகங்காரம்}
ஆகும்{அஞ்ஞானமே அகங்காரம்}.
——
109) பேடிசம் {டம்பம்}{#} எது?
அறநிலை நிறுவுதலே பேடிசம் {டம்பம்} ஆகும் {தான் அறம் கடைப்பிடிப்பதாகப் பிறருக்குத் தெரிவிப்பது டம்பமாகும் [போலித்தனமாகும்]}.
——–
110) தேவர்களின் அருள் எது?
தானங்களின் கனியே {பலனே} தேவர்களின் அருளாகும்
 
111) பொல்லாங்கு {தீய குணம்} எது?
பிறரைக் குறித்துத் தவறாகப் பேசுவதே பொல்லாங்கு {தீய குணம்} ஆகும்
——-
தனிப் பெரும் கேள்வி
112) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்படி ஒன்றுக்கொன்று பகையானவை எப்படி இணைந்து இருக்க முடியும்?
மனைவியும் அறமும் ஒருவருக்கொருவர் ஏற்புடன் செயல்படும்போது, நீ சொன்ன மூன்றும் {அனைத்தும்} இணைந்து இருக்க முடியும்
தர்ம சிந்தனை உள்ள வாழ்க்கைத்துணை கிடைத்தால் -இல்லறம் நல்லறம் ஆகும்
பொருளையும் சம்பாதித்து தர்மம் செய்வான்
இருவரும் சாஸ்திரம் வழியில் இருந்து இன்பமும் பெறுவார்கள்-அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும் அது வள்ளுவர்
———
தனிப் பெரும் கேள்வி-ப்ரச்னம் சீக்ரம் பதில் சொல்லு-என்று இதற்குச் சொல்லி கேட்க நீண்ட மூன்று பதில்கள்
113) அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடையும் மனிதன் எவன்?
“ஏழை அந்தணனுக்குத் தானமளிப்பதாக உறுதியளித்து அவனை அழைத்து, பிறகு, கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்பவன் அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடைகிறான்.
வேதங்களிலும், சாத்திரங்களிலும், அந்தணர்களிடமும், தேவர்களிடமும், பித்ரிக்களுக்கு மரியாதை அளித்துச் செய்யப்படும் விழாக்களிலும் பொய் கூறுபவனும் அழிவில்லா நரகத்தை அடைய வேண்டும்.
செல்வத்தின் உடைமையாளன், தானமளிக்காமலோ, பேராசையின் காரணமாகத் தானே அனைத்தையும் அனுபவித்து மற்றவர்களுக்கு இல்லை என்று சொன்னாலோ அவனும் அழிவில்லா நரகத்தை அடைகிறான்.
————-
 
தனிப் பெரும் கேள்வி–எங்கே ப்ராஹ்மணன் சோ –நிச்சயித்து சொல் என்று -குலத்தாலோ வகுத்த வேதம் கற்பதாலா ஆச்சார்யர் மூலம் அறிவதாலா நல்ல ஒழுக்கத்தாலா -என்று choice கொடுத்து கேள்வி –
114)  எந்தப் பிறவி, நடத்தை, {வேத} படிப்பு அல்லது {சாத்திர}
கல்வி ஆகியவற்றால் ஒரு மனிதன் பிராமணனாகிறான் {அந்தணனாகிறான்}?
பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மை}.
ஒருவனது நடத்தை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஓர் அந்தணரால் {பாதுகாக்கப்பட வேண்டும்}.
ஒருவன் தனது நடத்தையைக் கெடா நிலை யுடையதாகப் பராமரித்தால், அவன் எப்போதும் கெடு நிலையை அடைவதில்லை.
பெரும் ஆசிரியர்கள், மாணவர்கள் கற்றும் தீய ஒழுக்கம் இருந்தால் கூடாதே,-ஞானம் அனுஷ்டானத்திலும் வர வேண்டுமே -அறக் கடமைகளைச் செய்பவனே கற்றவன்.
நான்கு வேதங்களைப் படித்தும், இழிந்த தீயவனாக இருந்தால் அவன் சூத்திரனில் இருந்து வேறுபட்டவனல்ல என்று (அவனது நடத்தை சரியில்லாததாக) கருதப்பட வேண்டும்.
நல்ல ஒழுக்கம் அனுஷ்டானம் காத்து -அந்தணர் என்பர் அறவோர் -கல்வியில் குறைபாடு இருந்தாலும் வாழ்வான்
படித்தாலும் பாடம் சொல்லிக் கொடுத்தாலும் சதாசிசில் ஆராய்ந்து பேசினாலும் தீய ஒழுக்கம் உள்ளவன் மூர்க்கனாகவே ஆவான்
கற்றபின் நிற்க அதற்குத் தக-சாதி அந்தணர்களே யாகிலும் நுமர்களைப் பழிப்பர் ஆகில்
அக்னி ஹோத்ரம் செய்து, புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் {அந்தணன்} என்று அழைக்கப்படுகிறான்.
————
நான்கு கேள்விகள் -யார் யார் ஏற்றைப் பெறுகிறார்கள்
115) ஏற்புடைய {இனிமையான} வார்த்தைகளைப் பேசும் ஒருவன் அடையும் லாபம் என்ன?-பயன் உள்ள வார்த்தை சொல்லாமல் பிடித்ததை- பேசும் ஒருவன்
ஏற்புடைய வார்த்தைகளைப் {இனிமையாகப்} பேசும் ஒருவன் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான் {அன்பனாகிறான்}
—————
116) எப்போதும் தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் அடையும் லாபம் என்ன?
தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் தான் முயற்சிப்பதை {தேடுவதை} {வெற்றியை} அடைகிறான்-அதிக வெற்றியைப் பெறுவான் -சிந்தித்து செயல்பட வேண்டுமே
————-
117) நிறைய நண்பர்களை உடையவன் அடையும் லாபம் என்ன?
பல நண்பர்களை உடைய ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.
————-
118) அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு {அவன் அடையும் லாபம்} என்ன?
அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் (அடுத்த உலகில்) இன்ப நிலையை அடைகிறான்
————-
மேல் நான்கு கேள்விகள்–யார் மகிழ்ச்சியுடன் -இத்யாதி –
119) உண்மையில் மகிழ்ச்சியானவன் எவன்?
கடனுக்கு ஆட்படாமல், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டிய தேவை இல்லாமல், {வாழ்வுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவன்} ஒரு நாளின் {ஒரு பகலை எட்டுப் பகுதிகளைப் பிரித்து அதில் வரும்} ஐந்தாவது அல்லது ஆறாவது பகுதியில், சொற்ப காய்கறிகளைத் தன் இல்லத்தில் {தன் சொந்த வீட்டில்} சமைப்பவன் {சமைத்து உண்பவன்} உண்மையில் மகிழ்ச்சியுடைவனாவான்
திருவாராதனம் -காலம் -பகவத் ப்ரஸாதம் –உண்டு -தேவர் ரிஷி வேதம் ஓதி பித்ரு-பிள்ளைகளை பெற்று அற வழியில் செலுத்தி -மூன்று கடனையும் கழித்து நிம்மதி யாக வாழலாம்
———-
 120) மா பெரும் அதிசயமானது எது?
நாளுக்கு நாள் எண்ணிலடங்கா உயிரினங்கள் யமனின் வசிப்பிடம் செல்கின்றன. இருப்பினும், மீந்திருப்பவை {உயிரோடு இருக்கும் உயிரினங்கள்} தங்களை இறவாத் தன்மை கொண்டவை என்று நினைத்துக் கொள்கின்றன. இதை விட வேறு எது அதிசயமானதாக இருக்க முடியும்?
——–
121) பாதை எது?-முக்தி அடைய வழி
வாதம் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட முடிவுக்கும் வழிவகுக்காது. சுருதிகள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கின்றன; {இவரது} கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு ஒரு முனிவர் கூட இல்லை; தர்மம் {அறம்} மற்றும் கடமை சம்பந்தமான உண்மை {சத்தியம்} குகைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; எனவே, பெருமை மிக்கவர்கள் {பெரியோர்} நடந்து சென்ற பாதையே நமக்கான பாதை.
ஸ காஷ்டா ஸ பரா கதி -பரம குஹ்யம் -அவனை அடைய அவனே வழி-மேலையார் செய்வனகள் -பெரியவராகிய மஹா ஜனமாகிய நம்மாழ்வார் பிரபன்ன ஜன கூடஸ்தர் -புகல் இன்று இல்லா அடியேன் உனது அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
——–
122) {தினமும் நடை பெறும்} செய்தி எது?hot current news
அறியாமை நிறைந்த இந்தப் பூமி {சமையற் செய்யத்தக்க} ஒரு பெரிய கடாய் ஆகும். -ஆகாசம் மூடியாக்கி -காலன் சமையல் காரன் -உயிர்கள் உணவுப் பண்டங்களை -பகல்களையும், இரவுகளையும் எரி பொருளாய்க் கொண்டிருக்கும் சூரியன் நெருப்பு ஆகும். மாதங்களும், பருவங்களும் மரக் கரண்டிகளாகும். {உலகம் என்ற அந்தக் கடாயில்} காலம் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே {தினமும் நடைபெறும்} செய்தி ஆகும்.
———–
123) உண்மையில் யார் மனிதன்?
ஒருவனது நற்செயலின் அறிக்கை சொர்க்கத்தை அடைந்து, பூமி எங்கும் பரவுகிறது. அந்த அறிக்கை நீடிக்கும் வரை, {அவன் மனிதன் எனப்படுகிறான்.}
வாழ்பவர்களில் “புருஷன் (மனிதன்)” என்று அழைக்கப்படுபவர் யார்?கனிகளில் ஆர்வம் இல்லாமல் அல்லது அதன் பலன்களில் ஆர்வம் இல்லாமல் செய்யும் நற்செயல்கள், ஒருவரின் பெயரை வானத்திலும் பூமியிலும் பரவச் செய்கின்றன. அவரது புகழ் நிலைத்திருக்கும் வரை, அவர் “புருஷா” என்று அழைக்கப்படுகிறார்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் -புகழ் ஒலித்துக் கொண்டே இருந்தால் புருஷன்
இரட்டைகளையும் சமமாகப் பார்ப்பவன் -கடந்த காலம் எதிர் காலம் சமமாக நினைப்பவன்
நேற்று உடைந்த பானை -நாளை மதிள் மேல் பூனை -இன்று கையில் உள்ள வீணை-strike the rod when it is hot
————
124) அனைத்து வகைச் செல்வங்களையும் உண்மையில் கொண்டிருக்கும் மனிதன் யார்?
ஏற்புடையதும் ஏற்பில்லாததும், இன்பமும் துன்பமும், கடந்த காலமும் எதிர்காலமும் {என உள்ள அனைத்து இரட்டைகளும்} எந்த மனிதனால் சமமாகக் கருதப்படுகிறதோ, அவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்
எல்லாவற்றிலும் வியாபித்திருப்பவர் யார்?ஆசை, வெறுப்பு, இன்பம், துன்பம், வருவது, தொலைந்து போவது போன்றவற்றைச் சமமாக எண்ணுபவன் “ பிரம்ம ஞானி ( பிரம்மத்தை அறிந்தவன் )” என்று அழைக்கப்படுபவன்.
ஸதா பகவத் ஸ்மாரணம் செய்பவனே உயர்ந்த செல்வம் உடையவன்
———–
வ்யாஸ பாரதத்தில் 124 கேள்விகள்-

வில்லி பாரதத்தில் 11 கேள்விகள் அதிகம் உண்டே

125-சொல்லும் நூல்களின் பெரியது எது
அரிய மெய் ஸ்ருதி -கேட்டு கேட்டு -வேதமே கருணையால் அர்த்தம் உணர்த்தும்
மெய் -மாறாதது -உண்மை மட்டும் அல்ல -யுகம் தோறும் மாறாமல் இருக்குமே
எழுதாக் கிளவி
———-
126- இல்லறத்துக்கு உரியது எது
எண்ணுடை இல்லாள் —நல்ல வாழ்க்கைத் துணை -life patner
——
127-ஜாதிப்பூ மாலை வாசனை மிக்கு இருக்கும்
——–
128—-முன்னோர் வழியில் செய்வது
129-மொய் துழாய் முகுந்தன் பரதெய்வம்
130-இயற்க்கை குழல் மணம் -பெண்ணுக்கு நாணம்
131-தனவானுக்கு அரண் தானமே -பண்ணப்பண்ண பெருகும்
132- இனியது செவிக்கு இளம் குழந்தை மழலைச் சொல் –
133-நிலையாய் நிற்பது -நீடு இசை புகழ் ஒன்றுமே நிற்கும்
134-கற்பது -கசடு அற -சங்கை இல்லாமல் கற்பதே கல்வி
135-அற்பம் அனைத்திலும் -அயல் கையை ஏற்று வாழ்தல்
——-

136-புருஷன் -நினைத்த புருஷன்-பதில் நன்றாக சொன்னீர் -உனது தம்பிக்கு உயிர் கொடுப்பேன்
எந்தத்தம்பிக்கு சொல்
நகுலனுக்கு கொடு

பீமன் பிடித்தவன் அர்ஜுனன் வேண்டியதவன் மாற்றாந்தாய் பிள்ளை எதனால் கேட்டாய்

தர்மோ ரஷித்த ரஷணம் -தர்மம் கைவிடாமல் இருந்தால் அது காக்கும்
ஆந்ரு சம்சயம் பரா தர்மம்
குந்தீ சைவ–நானாவது உள்ளேன் -மாத்ரீ -தாயும் யாருமே இல்லையே

யஷன் உருகி -தஸ்மாத் நான்கு சகோதர்களும் உயிர் எழுவார்கள்

நீங்கள் யார் கேட்டான்
உண்மையான வடிவம் -யம தர்ம ராஜன் -அவனே
என்னுடைய மகனைப் பார்க்க வந்தேன்
ஸத்யம் புகழ் வாய்மை புலன் அடக்கம் நேர்மை உறுதி தானம் தபஸ் ப்ரஹ்மசர்யம் இருக்கும் இடத்தில் உள்ளேன்
அஹிம்சா-ஷாந்தி தபஸ் மனத்தூய்மை உடல் தூய்மை பொறாமை இல்லாமை ஆறு வாசல்கள் தர்மம் நிலைத்து இருக்க
ஐந்தில் சிறந்தவன் -திருப்தி ஷாந்தம் தாந்தம் போதும் என்ற எண்ணம்  ஆசை வென்றாய்
பசி தாகம் ஆசை மயக்கம் மூப்பு மரணம்
வரம் என்ன கேட்க
அரணிக்கட்டை தேடி வந்தோம்
வைதிகருக்கு கிடைக்க வேண்டும்
அப்பொழுதும் மற்றவரை நினைத்து தர்ம புத்ரன்
மான் வடிவத்தில் நானே வந்தேன்
வேறே வரம்
வனபர்வம் நிறைவு
12 வருஷம்
மறைந்து இருக்க வழி சொல்லு
அஞ்ஞா வாஸம்
வேறே வரம்
மனதில் -பேராசை மயக்கம் கோபம் இல்லாமல் இருக்க வேண்டும்
தானம் தபஸ் ஸத்யம் நிலைத்து இருக்க வரம்
இல்லாதவற்றை வரமாக கேள் என்றான்
பல ஸ்ருதி -இம்மையிலும் மேலும் நல்ல வாழ்வு –

———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நியாய ஸித்தாஞ்சனம்–நியாய பரிசுத்தி-நியாய சாஸ்திரம் –சம்பிரதாய பரிசுத்தி-

July 9, 2023

உலகில் உள்ளவை அனைத்துமே நான்கு பிரிவுக்குள்ளே அமையும்
1-பிரமாணம்
2-பிரமேயம்
3-பிரமாதா
4-பிரமிதி -என்ற பிரிவுக்குள்ளே அமையும்

நியாய பரிசுத்தி -பிரமாணம் பற்றியும்
நியாய சித்தாஞ்சனம் -ப்ரமேயம் பற்றியும் அருளிச் செய்யப்பட்டவை

ஸ்ருதி சிரஸ் தாத்பர்ய பத தீ லப்தர்தோ வரதார்ய பாத ரசிகாத் ராமாநுஜார் யதா
பாலாநாம் அதி வேல மோஹ பத லாபஷ்டம்ப ஸீத த்ருஸம்
ஸம் யக்த தத்வ நிரீக்ஷணாய தநுதே ஸத் தர்க ஸித்தாஞ்சனம்–மங்கள ஸ்லோகம் 

1-ஜட த்ரவ்ய பரிச்சேதம்
2-ஜீவ பரிச்சேதம்
3-ஈஸ்வர பரிச்சேதம்
4-நித்ய விபூதி பரிச்சேதம்
5-புத்தி பரிச்சேதம்
6-அத்ரவ்ய பரிச்சேதம்
ஆகிய ஆறு அதிகாரங்கள் நியாய சித்தாஞ்சனத்தில் உண்டு

ஸ்ரீ ஸூ க்திகளின் ஏற்றங்கள்
1-ப்ரவிட கம்பீர பரிமித ஸ்ரீ ஸூக்தி
2-யுக்தி பிரமாண கர்ப்ப ஸ்ரீ ஸூக்தி
3-மதாந்திர விவேச்சன பூர்வக ப்ரமேய நிஷ் கர்ஷ வாஸா ஸ்ரீ ஸூக்தி
4-ஸகல சங்கா நிராச பூர்வகம் வாஸா ஸ்ரீ ஸூக்தி

——————-

விவாதத்தின் போக்கில் உள்ள நிலைகள்) பதினாறு படிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது:

  • 1) பிரமாணம் (அறிவின் வழிமுறைகள்);
  • 2) பிரமேய (சரியான அறிவின் பொருள்);
  • 3)  சம்சயா (சந்தேகம் அல்லது தவறான தீர்ப்பை உருவாக்குதல்);
  • 4) பிரயோஜனா (நோக்கம்);
  • 5) த்ருஷ்டாந்தம்   (பழக்கமான உதாரணம்);
  • 6) சித்தாந்தா (நிறுவப்பட்ட கோட்பாடு அல்லது கொள்கை);
  • 7) அவயவ (சிலஜிசத்தின் ஒரு உறுப்பு);
  • 8) தர்கா ( நியாயமான வாதம்);
  • 9) நிரணயா (கேள்வியின் துப்பறிதல் அல்லது தீர்மானம்);
  • 10) வாத (காக்க அல்லது உண்மையை அடைய விவாதம்);
  • 11) ஜல்பா (ஒரு வெற்றியைப் பெறுவதற்கான சண்டை அல்லது தகராறு);
  • 12) விதாண்டா (விளக்கம் அல்லது வெறும் தாக்குதல்);
  • 13) ஹெத்வபாசா (தவறு, ஒழுங்கற்ற எதிர்நிலை , தவறான நேர சவால்கள்);
  • 14) சாலா (தவறாக வழிநடத்துதல் அல்லது வேண்டுமென்றே வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொள்வது);
  • 15) ஜாதி (ஒற்றுமைகள் அல்லது வேறுவிதமாக நிறுவப்பட்ட வீண் ஆட்சேபனைகள்) ;மற்றும்
  • 16) நிக்ரஹஸ்ல்ஹானா (கொள்கையில் கருத்து வேறுபாடு அல்லது மேலும் வாதிடுவதில் எந்த நோக்கமும் இல்லை அல்லது தோல்வியை நெருங்கும் புள்ளி).

————

இந்த பதினாறு படிகள் ‘உண்மை என்ன’ ( யதார்த்தம் ) கண்டறிவதற்கும் நிறுவுவதற்கும் ஆகும் . முதல் நான்கு படிகள் முக்கியமாக தர்க்கத்துடன் தொடர்புடையவை; பிந்தைய ஏழு பிழைகளைத் தடுக்கும் மற்றும் நீக்கும் செயல்பாட்டைச் செய்கிறது. 

துஷ்க-ஜன்ம-ப்ரவ்ருத்திதோஷ-மித்யாஜ்ஞானம் உத்தரோத்தரபாயே ததானந்தரா பயத் அபவர்க: (1.1.2: )

சம்வதா ஒரு தீவிரமான உண்மையைத் தேடுபவருக்கும் அறிவொளி பெற்ற ஆசிரியருக்கும் இடையே அனைத்து ஆர்வத்துடன் நடக்கும் உன்னதமான உரையாடலாகக் கருதப்படுகிறது. பண்டைய இந்திய நூல்களில் பெரும்பாலானவை இந்த வடிவத்தில் உள்ளன.

சம்வதா ஒரு சொற்பொழிவு அல்லது போதனையை வழங்கும்போது, ​​மற்ற மூன்று – வாத , ஜல்ப் அ மற்றும் விட்டண்டா – புத்திசாலி மற்றும் கட்டமைக்கப்பட்ட ( தந்திரம் – யுக்தி ) போட்டியாளர்களிடையே விவாதங்கள் மற்றும் வாதங்கள்.

நியாயா (மனித அறிவின் பொருள்கள் மற்றும் பொருள்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்கான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தர்க்க வழிகள்) மற்றும் ஒரு பகுதியில் சம்வாதத்தைப் பற்றி பேசலாம் ; மற்றும், மற்ற விவாதங்கள்/வாதங்கள்.

நியாய சூத்திரம் முக்கியமாக ஐந்து பாடங்களைக் கையாளுகிறது:
1-பிரமாணம்  (சரியான அறிவின் கருவிகள் அல்லது வழிமுறைகள்);
2-பிரமேயம்  (சரியான அறிவின் பொருள்);
3-வாத (விவாதம் அல்லது விவாதம்);
4-அவயவ (சிலஜிசத்தின் கூறுகள் அல்லது படிகள்);
5- அன்யா-மதா-பரிக்ஷா (பிற பள்ளிகளின் கோட்பாடுகளின் மதிப்பாய்வு அல்லது ஆய்வு).

சம்வதா என்பது ஆசிரியருக்கும் கற்பித்தவருக்கும் இடையே உள்ள ஒரு உரையாடலாகும்.
ஆசிரியரை அணுகுபவர் சீடராக இருக்கலாம்;
மாணவர்; நண்பர் (கிருஷ்ணர்-அர்ஜுனா அல்லது கிருஷ்ணர்-உத்தவர் போல) ;
மகன் (சிவன்-ஸ்கந்தா அல்லது உத்தாலக-ஸ்வேதகேதுவைப் போல);
அல்லது மனைவி (சிவன்-பார்வதி அல்லது யாக்ஞவல்கியா-மைத்ரேயியைப் போல);
அல்லது பெற்றோர் (கபில முனிவர் தனது தாய் தேவஹூதிக்கு கற்பிப்பது போல);
அல்லது அறிவைத் தேடும் வேறு எவரேனும் (நச்சிகேதா-யமாவைப் போல
அல்லது பிரஸ்ண உபநிஷத்தில் பிப்பலாத முனிவரை அணுகும் ஆறு நபர்கள் ).

அத்தகைய சந்தர்ப்பங்களில் சம்வாதத்தின் சிறப்பியல்பு என்னவென்றால்,
கற்பவரின் நேர்மையும் ஆர்வமும் ஆகும்;
அவன்/அவள் அணுகுமுறையில் உள்ள பணிவு;
மற்றும் ஆசிரியர் மீது பூரண நம்பிக்கை.
புத்திசாலியான ஆசிரியர், முழு கருணையுடன், உண்மையைத் தேடுபவர் மீது
மிகுந்த அன்பினால் அறிவுரைகளை வழங்குகிறார்.

ஒரு சம்வதா என்பது ஒரு சொற்பொழிவு அல்லது உரையாடலாகும்,
இது உண்மையுள்ள உண்மையைத் தேடுபவருக்கு கற்பிக்கிறது,
அறிவுறுத்துகிறது அல்லது அறிவைக் கடத்துகிறது.

உபநிஷத் போதனைகளின் பெரும்பகுதி சம்வாத வடிவில் நமக்கு வந்துள்ளது ,
இது பல்வேறு சூழல்களில் நிகழ்ந்தது.
ஒரு ஒளிமயமான ஆசிரியர் ஒரு ஆர்வலருக்கு அறிவுரைகளை வழங்கும் நெருக்கமான அமர்வுகளைத் தவிர,
பல்வேறு வகையான நிகழ்வுகள் உள்ளன, சொல்லுங்கள்:
ஒரு மனைவி தன் கணவனிடமிருந்து அழியாமையின் ரகசியங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறாள்;
ஒரு டீனேஜ் பையன் வாழ்க்கை மற்றும் மரணத்தின் உண்மையை அறிய மரணத்தை அணுகுகிறான்;
ஒரு அரசன் தன் அனுபவத்தில் இருந்து பேசும் ஒரு துறவு முனிவரிடம் அறிவுரை கேட்கிறான்;
வயது மற்றும் ஞானத்தில் முன்னேறிய பிராமணர்கள் ஒரு க்ஷத்திரிய இளவரசனின் காலடியில் அமர்ந்து உத்வேகமாக அறிவுறுத்துகிறார்கள்;
மற்றும் , சில சமயங்களில் முனிவர்கள் அரசர்களால் அணுகப்படும் பெண்களாக இருக்கும்போது .
வேறு வகையான உரையாடல்கள் உள்ளன ,
ஜபாலா காளைகள் மற்றும் பறவைகளால் கற்பிக்கப்படும் போது ( அதி. அப் 4.4-9) ,
புனித நெருப்புகளால் உபகோசலை ( சி. அப். 4.10-15 ),
மற்றும் பாகா ஒரு நாய் (சி. அப். 1.12 ).

ஒரு மாணவனுக்கும் அவனது வழிகாட்டிக்கும் இடையே உள்ள உறவை விட உபநிடதங்களில் எதுவும் இன்றியமையாதது.
ஆசிரியர் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி, உலகின் இயல்பு,
உண்மை போன்றவற்றைப் பற்றிய தனது கருத்துக்களைப் பற்றி அல்லது நினைவகத்தில் பதிந்திருக்கும் மனப் படிமங்கள்
மூலம் காட்சிப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறார்.

உங்கள் ஆழ்ந்த, உந்துதல் ஆசை என்னவோ அதுதான் நீங்கள்; உங்கள் விருப்பம் போல், உங்கள் விருப்பமும் உள்ளது ச யதா காமோ பவதி தத் க்ருதுர் பவதி 

உங்கள் விருப்பம் போல், உங்கள் செயல் ( யத்-க்ரதுர்-பவதி தத்-கர்ம குருதே) ;

உங்கள் செயல் எப்படி இருக்கிறதோ, அதே போல் உங்கள் விதியும் உள்ளது ( யத்-கர்ம குருதே தத்-அபி-ச ṃ பத்யதே ”- ( ப்ரு. அப். 4.4.5 ).

ச யதாகாமோ பவதி தத்-க்ரதுர் பவதி | யத்-க்ரதுர் பவதி தத் கர்ம குருதே | யத் கர்ம குருதே தத் அபி-ஸம்பத்யதே || BrhUp_4,4.5 |

இறுதியில், அனைத்து சாதனைகளும்  எரியும் ஆசையால் தூண்டப்படுகின்றன .

பகவத் கீதை, உண்மையின் தீவிர தேடுபவர், ஒரு கற்றறிந்த ஆசிரியரை பணிவுடன் அணுகி, அவரிடம் அறிவுரைகளைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறது; அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்விகள்:

தத் வித்தி ப்ரணிபதேன பரிப்ரஸ்நேன ஸேவயா I உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினாஸ் தத்வ-தர்சினா II (பி ஜி.; சா.4; வசனம் 34)  

———

சம்பிரதாய பரிசுத்தி
தம் பரம் என்று இரங்கித் தளரா மனம் தந்து அருளால்
உம்பர் தொழும் திருமால் உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்
நம் பிறவித் துயர் மாற்றிய ஞானப் பெரும் தகவோர்
சம்ப்ரதாயம் ஒன்றிச் சத்திற்கும் நெறி சார்ந்தனமே

கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமாலடி நம் தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே

ஸாஸ்த்ர ஞானம் பஹு கிலேசம் புத்திஸ் சலேந காரணம்
உபதேசாத் ஹரிம் புத்வா விரமேத் ஸர்வ கர்மாஸூ

ஸாஸ்த்ர மூலத்வ ஸம் பிரதிபத்தி உண்டான ஸம் ப்ரதாயமே உப ஜீவ்யம்
தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந சேவயா –வேத்ய உபா தேயங்கள்

அத்யந்த அதிந்தரிய விஷயத்தில் ஸாஸ்த்ர மூலம் இல்லாத ஸம் ப்ரதாயமும்
ஸம் பிரதிபன்ன ஸாஸ்த்ரார்த்த விருத்தமான ஸம் ப்ரதாயமும்
ப்ரஹ்ம விப்ரலம்ப ஸம் பாவனை உண்டானால் பாஹ்ய துல்யமாகையாலே

யதார்த்த அபேக்ஷித அர்த்த நிர்ணயம் உபதேசத்தால் பெறலாம்
ஸத் ஸம் ப்ரதாய ரஹிதமான ஸாஸ்த்ரத்தால் அர்த்த நிர்ணயம் துஷ் கரம் –
ஸூ கரம் தான் ஆகிலும் உப யுக்தம் ஆகாது

ஸதஸ்யம் -ரஹஸ்யம் இரண்டு வகைப்படும்
கீதா சரம ஸ்லோகம் ஸதஸ்யம்
ஸம் ப்ரதாய-உபதேசத்தால் அர்த்த விஷயங்கள் பெற்ற சரம ஸ்லோகம் ரஹஸ்யம்

விரோசனன் இந்திரன் இருவரும் பிரம்மாவிடம் ஆத்ம ஞானம் பெற வர
சரீரமே ஆத்மா என்ற உடன் விரோசனன் போக
இந்திரன் மேல் கேள்விகள் கேட்டு சரீர விலக்ஷணன் ஆத்மா என்ற உபதேசம் பெற்றான் அன்றோ

வ்யாஸ பகவான் -போதாயனர் -டங்கர் -டிராமிடர் -குஹ தேவர் -ஆச்சார்ய பரம்பரை
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் நம்மாழ்வார் -மதுர கவி ஆழ்வாருக்கு உபதேசம்
விதுரர் தர்மபுத்ரனுக்கு பொது தர்ம உபதேசம் செய்தார் ஒழிய ப்ரஹ்ம வித்யையோ மந்த்ரங்களோ உபதேசம் செய்யவில்லையே

ஸ்ரீ ஆளவந்தாருடைய நியோகத்தாலே
ஸ்ரீ பாஷ்யகாரரை அங்கீ கரித்த பூர்ணரான பெரிய நம்பி
அவரை தமக்கு ச ப்ரஹ்மச்சாரிகளான
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த சிஷை பண்ணவும்
ஸ்ரீ திருமாலை ஆண்டான் பக்கலிலே திருவாய் மொழி கெடுக்கவும்
ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பக்கலிலே நாலாயிரத்தைக் கேட்கவும்
நியோகித்ததும்
பஹுப்ய ஸ்ரோதவ்யம்-பஹுதா ஸ்ரோ தவ்யம் ஞான விருத்த மயாராஜன் பகவ
பரி உபாஸித இத் யாதி களையும் ஸூகாதி விருத்தங்களையும் பார்த்து
சிஷ்ய பூதரை பஹு முகமாக திருத்த வேண்டுமாகிற அபி சந்தியாலே உப பன்ன தமம்
இப்படி ஆச்சார்ய அபிமத விஷயத்தில் ஆச்சார்ய ஆஞ்ஜை யாலேயே அபேக்ஷிதா ஞானம் உப ஜீவிதம் பண்ணுவது
ஸாஸ்த்ரார்த்தம் என்னும் இடம்
அந்திம தச அவதியாக அத்யந்த அவஹிதராகக் கொண்டு சதாச்சார்ய அநு பாலநம்
பண்ணின ஸ்ரீ பாஷ்யகாரருடைய அனுஷ்டானத்தாலே ஸித்தம்

ஆசர்வஞானாத் அஸ்மத் ஆச்சார்ய பங்க்தே
அப்ரத் யுகம் ஸத் பதம் ஸ்தா பயந்தீ
ஸைஷா நித்யம் ஸம் ப்ரதாயஸ்ய ஸூத்தி
ஸ்ரத்தாத் வ்யா ஸாதக ந்யாநிஷ் தை-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ (ஜகன்நாத்- புரி)ரத யாத்திரை —

July 7, 2023

சலபேகாவின் கதை: அன்பு மற்றும் பக்தியின் ஒரு உருவகம்

பக்த் சலபேகா 17 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்
மற்றும் ஒடிசாவில் வாழும் ஒரு புகழ்பெற்ற மத ஒரியா கவிஞரானார்.
அவரது தாயார் ஒரு இந்து பிராமணர் மற்றும் அவரது தந்தை ஒரு பெங்காலி முஸ்லீம்.
வங்காள நவாப் ராணுவத்தில் சுபேதாராக இருந்த லால்பேக் ஒடிசாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
ஒருமுறை லால்பேக், பூரியில் உள்ள தண்டமுகுந்தபூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​
ஒரு அழகான பிராமண விதவை ஒருத்தி குளித்தலை விட்டு திரும்பி வருவதைக் கண்டார்.
அவளுடைய இளமை மற்றும் அழகில் மயங்கிய அவன் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டான்.
பின்னர் அவர் பாத்திமா பீவி என்று அறியப்பட்டார்.

அவரது குழந்தை பருவத்திலிருந்தே, அவரது தாயார் அவருக்கு விஷ்ணுவின் புராணக் கதைகளை விவரித்தார்.
இறைவன் மீது மிகுந்த பக்தியை வளர்த்துக் கொண்டார்.
சலாபேகா வளர்ந்தவுடன், அவர் தனது தந்தையுடன் பிரச்சாரங்களில் பங்கேற்றார்.
ஒருமுறை அவர் பலத்த காயம் அடைந்தார்,
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பதை நிராகரித்தனர்.
சில பக்தர்கள் கிருஷ்ணர் மற்றும் ஜகந்நாதரைப் பற்றி பஜனைப் பாடுவதை அவர் கேட்டார்.
அவரும் பகவானின் திருநாமங்களை உச்சரிக்கத் தொடங்கினார்,
யானைகளின் அரசனான கஜேந்திரனை முதலையிடம் சிக்கியபோது விஷ்ணு காப்பாற்றியதைத்
தன் தாயார் கூறியதை நினைவு கூர்ந்தார்.
துருவ மகாராஜா மற்றும் ஸ்ரீ பிரஹலாதாவைப் போலவே, சலபேகாவும் இறைவனின் கருணையில்
தீவிர குழந்தை நம்பிக்கை கொண்டிருந்தார்.
பிரபஞ்சத்தின் அதிபதியான ஜகன்னாதர் தன்னை குணப்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.
அவர் ஜெகநாதரிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து இறுதியாக குணமடைந்தார்.

சலபேகாவின் அற்புதமான மீட்பு அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணமாக மாறியது.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் ஜெகநாதரின் தீவிர பக்தரானார்.
இந்த காரணத்திற்காக அவரது தந்தை அவரை நிராகரித்தார்.
எப்பொழுதும் ஜகந்நாதரின் நாமத்தை உச்சரித்துக்கொண்டே சுற்றித் திரிந்த அவர் இறுதியாக பூரியை அடைந்தார்.
ஜெகநாதரை மகிமைப்படுத்தும் வகையில் அவர் பல பிரார்த்தனைகளை எழுதினார்,
ஆனால் அவர் பிறப்பால் முஸ்லீம் என்பதால் பூரியில் உள்ள ஜெகநாதரின் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இருப்பினும், இது இறைவனை தியானிப்பதில் இருந்து அவரைத் தடுக்கவில்லை.
பகவான் ஜெகந்நாதர் தனது பக்தர்களைச் சந்திக்க ஊர்வலமாகச் செல்லும்போதும்,
அவரது அருளால் அவர்களை ஆசீர்வதிப்பதற்காகவும் அவர் வருடாந்திர ரத யாத்திரையை
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்.

ரத யாத்திரை (ஜகன்நாத் புரி)
768px-நந்திகோச_ரத்திருவிழா ரத யாத்ரா, கார் திருவிழா, குண்டிச்சா யாத்ரா, கோசா யாத்ரா, நவதீன யாத்ரா, தசாவதார யாத்ரா மற்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ரத யாத்திரை கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு மிகவும் முன்னதாகவே தொடங்குகிறது, ஏனெனில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் தேர்களை கட்டுவதற்கும் அலங்கரிப்பதற்கும் மூதாதையர் உரிமைகளைக் கொண்ட தச்சர்களால் ரதங்கள் அல்லது தேர்களை நிர்மாணித்து அலங்காரம் செய்வது. மூன்று தேர்களும் யாத்திரையின் சிறப்பம்சங்கள் மற்றும் கயிறுகளால் இழுக்கப்படுகின்றன.
ஜகந்நாதரின் தேர் 18 சக்கரங்களைக் கொண்ட 45.6 அடி உயரம் கொண்டது, நந்திகோசா என்று அழைக்கப்படுகிறது.ஜகந்நாத பகவான் கிருஷ்ணருடன் அடையாளம் காணப்படுகிறார், அவர் பீதாம்பரர் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் தங்க மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருப்பார், எனவே இந்த தேரின் விதானத்தில் மஞ்சள் கோடுகள் வேறுபடுகின்றன. பாலபத்ரரின் தேர் 44 அடி உயரத்தில் 16 சக்கரங்களுடன் தலத்வஜா என்று அழைக்கப்படுகிறது .
தலத்வஜ_ரத்

அதன் கொடியில் பனை மரத்துடன் சிவப்பு மற்றும் நீல நிற துணியால் மூடப்பட்டிருக்கும்.

பத்மத்வஜ_ரத்சுபத்ராவின் தேர் துவாரபடலனா என்று அழைக்கப்படுகிறது , அதாவது “பெருமையின் மிதி”, பன்னிரண்டு சக்கரங்களுடன் நாற்பத்து மூன்று அடி உயரம் கொண்டது.

இந்த தேர் சிவப்பு மற்றும் கருப்பு துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது – கருப்பு பாரம்பரியமாக சக்தி மற்றும் தாய் தெய்வத்துடன் தொடர்புடையது.

ரத யாத்திரைரத யாத்திரை என்பது ஜகந்நாதர் தனது உடன்பிறந்த சகோதரிகளான பலபத்ரா மற்றும் சுபத்ராவுடன் ராணி குண்டிச்சா கோவிலுக்கு வருகை தந்ததைக் குறிக்கும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். ஜெகநாத் பூரி ரத யாத்திரையுடன் தொடர்புடைய மிகவும் பிரபலமான சடங்கு செரா பஹாரா. திருவிழாவின் போது, ​​கஜபதி மன்னன் தெய்வங்களையும் தேர்களையும் சுற்றி துடைப்பார். துடைப்பம் (தங்கம் கைப்பிடி) கொண்டு சாலையை சுத்தம் செய்து சந்தன நீரையும் பொடியையும் தூவி விடுகிறார். ஜகந்நாதரின் பார்வையில் அரசராக இருந்தாலும் சரி, சாமானியராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பக்தரும் சமம் என்பதை இந்த வழக்கம் காட்டுகிறது. இந்த சடங்கு இரண்டு நாட்களில் நடைபெறும், முதலில் ரத யாத்திரை தொடங்கும் போது முப்பெரும் தெய்வங்கள் செல்லும் போது மற்றும் கடைசி நாளில் மீண்டும் பூரி கோவிலுக்கு சம்பிரதாயமாக கொண்டு வரப்படும்.

மூன்று தேர்களும் படா தண்டா எனப்படும் பூரியின் பிரதான வீதிக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பயணத்தின் போது, ​​பகவான் ஜகந்நாதர் தனது வான வட்டுடன் இருக்கிறார், சுதர்சன சக்கரம் குண்டிச்சா கோயிலுக்கும் அவர்களின் அத்தையின் வீட்டிற்கும் (மௌசிமா கோயில்) கொண்டு செல்லப்படுகிறது, அங்கு தெய்வங்கள் ஒன்பது நாட்கள் தங்கி மகிழ்ந்து இனிப்பு அப்பத்தை ( போடா பிதா ) பரிமாறுகிறார்கள். ஜெகநாதருக்குப் பிடித்த உணவு.

பூரி ரத யாத்திரை திருவிழாவின் கொண்டாட்டம் மற்றும் கவனிப்பு புராணங்களின் காலத்திற்கு முந்தையது. பூரியை சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக மாற்றும் முக்கிய காரணிகளில் ஒன்று, இது சார் தாம் கோவில்களில் ஒன்றாகும். பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் மகத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு “juggernaut” என்ற ஆங்கில வார்த்தை உருவாக்கப்பட்டது!

ரத யாத்திரையின் விவரணைகளை பிரம்ம புராணம், பத்ம புராணம், மற்றும் ஸ்கந்த புராணம் மற்றும் கபில சம்ஹிதையில் காணலாம். தேரின் கருத்து கதா உபநிடதத்தில் பின்வரும் வார்த்தைகளில்
விளக்கப்பட்டுள்ளது : “ஆத்மானம் ரதினம் வித்தி ஷரீரம் ரதமேவது புத்திம் து சாரதிம் வித்தி மனஹ் ப்ரக்ரஹமேவ ச” – உடலே தேர், ஆன்மாவே தேரில் நிறுவப்பட்ட தெய்வம். மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தும் தேரோட்டியாக ஞானம் செயல்படுகிறது. ஸ்கந்த புராணம் ரத யாத்திரையின் புனிதத்தன்மையை பின்வரும் வார்த்தைகளில் மகிமைப்படுத்துகிறது:

“குண்டிச்ச மண்டபம் நாமம் யத்ரஹமஜனம் புர அஸ்வமேத ஸஹஸ்ரஸ்ய மஹாபேதி ததத்வபத்” – தேர் ஊர்வலத்தின் இறுதித் தலமான குண்டிச்சா கோயிலில் உள்ள ஸ்ரீமந்திர மூர்த்திகளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் குதிரைகளைப் பலியிட்டதன் பலனைப் பெறுகிறார்கள்.

2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய் ஜெகநாத்ஜகந்நாதர் பகவான் கிருஷ்ணருடன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஜகந்நாதரின் பிரசன்னத்தின் காரணமாக புனித நகரமான பூரி – ஸ்ரீக்ஷேத்திரத்தில் மரணத்தின் கடவுளான யமனின் செல்வாக்கு குறைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது, எனவே இது “யமனிகா தீர்த்தம்” என்றும் அழைக்கப்படுகிறது .

தேரின் மீது ஜகந்நாதரின் ஒரு பார்வை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் புனிதர்கள், கவிஞர்கள் மற்றும் புனித நூல்கள் இந்த சிறப்பு திருவிழாவின் புனிதத்தன்மையை மீண்டும் மீண்டும் போற்றியுள்ளன. திருவிழாவின் புனிதத்தன்மை என்னவென்றால், தேர் அல்லது கயிறுகள் இழுக்கப்படும் ஒரு தொட்டு கூட பல புண்ணிய செயல்கள் அல்லது பல ஆண்டுகளாக தவம் செய்த பலன்களை வழங்க போதுமானதாக கருதப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தேர், சக்கரங்கள், பிரமாண்ட வீதிகள் அனைத்தும் பகவான் ஜகந்நாதருடன் ஒன்றிவிடுகின்றன என்பதை வலியுறுத்தும் புகழ்பெற்ற ஒரியப் பாடல் ஒன்று உள்ளது.

ஒலிம்பஸ் டிஜிட்டல் கேமராபக்த சலபேகா கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், இறைவனை அருகில் இருந்து பார்க்க நினைத்தார். அவர் ஸ்ரீமந்திரத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில், இறைவனின் தரிசனம் பெறுவதற்காக வசித்து வந்தார். ஜகந்நாதரின் தேர் அவரது வீட்டிற்கு அருகில் வந்ததும், அவர் அழத் தொடங்கினார். திடீரென்று, தேர் அங்கே நின்றது, சாலபேகா ஜெகநாதரைக் கண்டார். அன்றிலிருந்து அவருக்கு இறைவனை தரிசனம் செய்ய அனுமதித்த அர்ச்சகர்களுக்கு இந்த அதிசயம் தெரிந்தது.

சலபேகாவின் பக்திப் பாடல்கள் அனைத்திலும் பொதுவான கருப்பொருள் ஒன்று உள்ளது. அவர் தனது பிறப்பு மற்றும் இந்து அல்லது முஸ்லீம் அல்லாத அவரது பரம்பரை குறித்து தன்னைத்தானே தண்டிக்கிறார். சுருக்கமாக, அவர் கூறுகிறார், ‘என் தந்தை முகலாயரின் மகன், என் தாய் ஒரு பிராமணர், ஓ என் ஆண்டவரே, நீங்கள் எனக்கு ஒரு தாழ்ந்த பிறப்பைக் கொடுத்தீர்கள்.’ இருண்ட ஜகந்நாதரைப் போற்றிப் பாடிய அவர், காட்டு யானை கிராண்ட் அவென்யூவில் வந்து தேரில் ஏறிச் செல்வது போல் அசைந்து அசைந்து, தன் பக்தர்களின் பாவங்கள் எல்லாம் கொடியதாயினும், நொடிப்பொழுதில் அழித்துவிடுகிறார் என்று கூறுகிறார். அல்லது மன்னிக்க முடியாதது.

ஜகன்னாத் - நகல்ஒருமுறை ரத யாத்திரை திருவிழாவின் போது, ​​சலபேகா வெளியூர் சென்றதால், ஊர்வலத்தின் போது அவரை அடைய முடியவில்லை. அவர் வரும் வரை தனது தேரில் காத்திருக்குமாறு ஜெகநாதரை வேண்டிக் கொண்டார், அதைத்தான் இறைவன் செய்தார்!

ரதம் சலபேகாவின் வீட்டை அடைந்ததும் நின்றது. அர்ச்சகர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் ஜெகநாதரின் தேர் நகரவில்லை என்று புராணங்கள் கூறுகின்றன. சலபேகா அந்த இடத்தை அடைந்து இறைவனுடன் உறவாடி, அதன் பிறகுதான் தேர் நகர்ந்தது!

தேர் நிலையாக இருந்த இடம் பின்னர் ஜகந்நாதரின் நினைவாக பல பஜனைகளை இயற்றுவதற்காக சாலபேகாவால் பயன்படுத்தப்பட்டது.

சலபேகாஅவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது மற்றும் அவரது சமாதி பூரியில் உள்ள கிராண்ட் சாலையில் உள்ளது. அவர் ஜெகநாதரின் பக்தர்களால் நினைவுகூரப்படுகிறார் மற்றும் அவரது பஜனைகள் இன்றுவரை பாடப்படுகின்றன.

அவர் ஜெகநாதரின் ஆசீர்வாதத்தைப் பெற்றார் மற்றும் ஒரு சிறந்த பக்தராகக் கருதப்படுகிறார்.

சலபேகாவைக் கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்திரையின் போது, ​​ஜகந்நாதரின் தேர் அவரது சமாதிக்கு அருகில் சிறிது நேரம் நிலைத்திருக்கும்.

பக்த சலபேகாவின் மற்றொரு கதை:
சாலபேகா தனது அருளை அவர் மீது பொழிந்தபோது மற்றொரு நிகழ்வு இருந்தது. சலாபேகா டெல்லியில் இருந்து பாலசோர் வழியாக பூரிக்கு வந்து ஷியாம்சுந்தர் கோவில் அருகே தங்கியிருந்தார். மாலை தொழுகையின் போது, ​​சலபேகா இறைவனை உள்ளே பார்க்க விரும்பினார், ஆனால் அவர் ஒரு முஸ்லீம் என்பதால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாள் மாலைப் பூசாரி தனது சிம்மாசனத்தில் இறைவன் காணாமல் போனதைக் கண்டு அரசனிடம் தெரிவித்தார். அன்றிரவே பாலசோரின் அரசன் ஒரு கனவில் இறைவனின் பெரும் பக்தர் ஒருவர் கிருஷ்ணரை தரிசனம் செய்வதற்காக வெளியில் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சலபேகா இறைவனைக் காணும்படி சுவரில் துளையிடுவதற்கு மன்னர் ஏற்பாடு செய்தார். சாலபேகா துளை வழியாக பார்த்தவுடன், தெய்வங்கள் அதிசயமாக மீண்டும் தோன்றின.

பகவான் தனது தீவிர பக்தர்களுக்கு அக்ரனியாக இருந்து அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

குண்டிச்சா கோயிலில் இருந்து திரும்பும் வழியில் , மூன்று தெய்வங்களும் மவுசி மா கோயில் (அத்தையின் இருப்பிடம்) அருகே சிறிது நேரம் நின்று , கடவுளுக்கு விருப்பமானதாகக் கருதப்படும் ஒரு சிறப்பு வகை பான்கேக் என்ற போடா பிதாவை பிரசாதமாக வழங்குகிறார்கள். ஏழு நாட்கள் தங்கிய பிறகு, தெய்வங்கள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றன.

ஜகன்னாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய மூன்று தேர்களும் ஒவ்வொரு ஆண்டும் பாசி, தௌசா போன்ற குறிப்பிட்ட மரங்களைக் கொண்டு புதிதாகக் கட்டப்படுகின்றன. அவை பரம்பரை உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளைக் கொண்ட தச்சபல்லாவின் முன்னாள் அரசர்களின் சிறப்புக் குழுவால் கொண்டு வரப்படுவது வழக்கம் . அதற்கு. மரக்கட்டைகள் மகாநதி ஆற்றில் மரக்கட்டைகளாக மிதப்பது வழக்கம். இவை பூரி அருகே சேகரிக்கப்பட்டு பின்னர் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. [4]

மூன்று தேர்களும் கிராண்ட் அவென்யூவான படா தண்டாவில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் தனித்துவமான திட்டத்தின்படி அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிங்கத்வாரா அல்லது சிம்ம வாசல் என்றும் அழைக்கப்படும் அதன் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கோவிலின் முன் பரந்த அவென்யூ முழுவதும் தேர்கள் வரிசையாக நிற்கின்றன

ஒவ்வொரு தேர்களையும் சுற்றி ஒன்பது பார்ஸ்வ தேவதைகள், தேர்களின் பக்கங்களில் வெவ்வேறு தெய்வங்களைக் குறிக்கும் மரப் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேருக்கும் ஒரு தேரோட்டியும் (சாரதி) நான்கு குதிரைகளும் உள்ளன.

தேர் விவரங்கள் ஜகந்நாத் பாலபத்ரா சுபத்ரா
தேரின் பெயர் நந்திகோஷா (ନନ୍ଦିଘୋଷ) தலத்வாஜா (ତାଳଧ୍ୱଜ) தர்படலானா (ଦର୍ପଦନ)
தேரின் மாற்றுப் பெயர் கருடத்வஜா, கபித்வஜா லங்காலத்வஜா தேவதாலனா, பத்மத்வஜா
படம்
Lord Shri Jagannath on His Chariot Nandighosha.jpg
Chariot Taladhwaja of Lord Balabhadra.jpg
Chariot Devidalana of Goddess Subhadra.jpg
சக்கரங்களின் எண்ணிக்கை 16 14 12
பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை 832 763 593
உயரம் 44′ 2″ 43′ 3″ 42′ 3″
நீளம் மற்றும் அகலம் 34’6″ x 34’6″ 33′ x 33′ 31’6″ x 31’6″
விதானங்களின் நிறங்கள் சிவப்பு, மஞ்சள்(விஷ்ணுவுடன் தொடர்புடைய மஞ்சள்) சிவப்பு, நீல பச்சை சிவப்பு, கருப்பு(தெய்வத்துடன் தொடர்புடைய கருப்பு)
பாதுகாவலர் கருடன் வாசுதேவா ஜெயதுர்கா
தேரோட்டி தாருகா மாதலி அர்ஜுனா
கொடி பெயர் த்ரைலோக்யமோஹினி உன்னனி நாதாம்பிகா
கொடி சின்னம் பனை மரம்
குதிரைகளின் பெயர்
  1. சங்கா
  2. பலஹாகா
  3. ஸ்வேதா
  4. ஹரிதாஷ்வா
  1. திப்ரா
  2. கோர
  3. திர்காஷர்மா
  4. ஸ்வர்ணனவ
  1. ரோச்சிகா
  2. மோச்சிகா
  3. ஜிதா
  4. அபராஜிதா
குதிரைகளின் நிறம் வெள்ளை கருப்பு சிவப்பு
தேர் கயிற்றின் பெயர் சங்கசூடா நாகினி பாசுகி நாகா ஸ்வர்ணசூடா நாகினி
பரிவார தெய்வம் மதன்மோகன் ராமகிருஷ்ணா சுதர்சன
கேட் கீப்பர்கள் ( துவாரபால )
  1. ஜெயா
  2. விஜயா
  1. நந்தா
  2. சுனந்தா
  1. கங்கை
  2. ஜமுனா
ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்)
  1. பஞ்சமுகி மகாபீர் ( ஹனுமான் )
  2. ஹரிஹர
  3. மதுசூதனன் ( விஷ்ணு )
  4. கிரிதர் ( கிருஷ்ணா )
  5. பாண்டு நரசிங்க
  6. சித்தமணி கிருஷ்ணா
  7. நாராயண (விஷ்ணு)
  8. சத்ர பங்கா ரபனா (ராம)
  9. ராமர் அனுமன் மீது அமர்ந்தார்
  1. விநாயகர்
  2. கார்த்திகேயா
  3. சர்வமங்களா
  4. பிரலம்பரி (பலராமன்)
  5. ஹலாயுதா (பலராமன்)
  6. மிருத்யுஞ்சயா ( சிவன் )
  7. நாதம்வர (சிவன்)
  8. முக்தேஸ்வர் (சிவன்)
  9. ஷேஷதேவா
  1. சண்டி
  2. சாமுண்டா
  3. உக்ரதாரா
  4. பனதுர்கா ( துர்கா )
  5. சுலிதுர்கா (துர்கா)
  6. வாராஹி
  7. ஷ்யாமகாலி
  8. மங்கள
  9. விமலா

சந்தன யாத்திரை–

சந்தன் யாத்திரை அல்லது “சந்தன மர விழா” என்பது 42 நாட்கள் நடைபெறும், இது தேர்களுக்கான கட்டுமானப் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காலம் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் 21 நாட்கள் கொண்டது. முதல் பாதி பஹர் சந்தன் என்று அழைக்கப்படுகிறது , இதன் மூலம் தலைமை தெய்வங்களின் பிரதிநிதித்துவ படங்கள் வண்ணமயமான ஊர்வலங்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு நாளும் நரேந்திர தொட்டியில் ஒரு சடங்கு படகு சவாரி வழங்கப்படுகிறது. இந்த தெய்வங்களில் மதன் மோகன் (ஜகன்நாத்), ராம-கிருஷ்ணா, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பஞ்ச பாண்டவர் – ஐந்து முக்கிய சிவன் கோவில்களின் தலைமை தெய்வங்கள். பிதார் சந்தன் என்று அழைக்கப்படும் பிந்தையது , பொதுமக்களுக்குத் திறக்கப்படாத பல்வேறு சடங்குகளைக் கொண்டுள்ளது. [5]வைசாகத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் மூன்றாவது நாளான அக்ஷய திருதியை அன்று சடங்கு தீ வழிபாட்டுடன் தேர்களின் கட்டுமானம் தொடங்குகிறது. இது பூரி மன்னரின் அரண்மனைக்கு முன்பாகவும், பூரி கோவிலின் பிரதான அலுவலகத்திற்கு எதிரேயும் நடைபெறுகிறது. பின்னர், தேவர்கள் தொட்டியின் நடுவில் உள்ள ஒரு சிறிய கோவிலில், தண்ணீர், சந்தனப் பசை, வாசனைகள் மற்றும் மலர்களால் நிரப்பப்பட்ட கல் தொட்டிகளில் சடங்கு ஸ்நானம் செய்கிறார்கள்.இந்த சந்தன விழாவானது ஸ்னான யாத்திரை அல்லது “ஸ்நான திருவிழாவில்” முடிவடைகிறது, இது ஜ்யேஷ்ட மாதத்தின் முழு நிலவு நாளில் நடைபெறுகிறது. ஜகன்னாதர், பால்பத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் 108 பானை நீரில் குளித்து, பின்னர் இரண்டு வாரங்களுக்கு அடையாள மற்றும் சடங்குகளுடன் குணமடைகின்றன. அவை பொதுமக்களின் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளன. [6]மூன்று சிறப்பு பட்டா சித்திரங்கள், அனாசரா பட்டீஸ் எனப்படும் ஸ்டார்ச் இறுகிய துணியில் இயற்கை வண்ணங்களின் பாரம்பரிய ஒரியா ஓவியங்கள், பொது மக்களின் பார்வையில் இருந்து தெய்வங்களை மறைக்கும் மூங்கில் திரையில் கட்டப்பட்டுள்ளன, பொதுமக்களால் பார்க்க முடியும். இந்த காலகட்டத்தில், தெய்வங்களுக்கு அவர்களின் நோய் தீர்க்க வேர்கள், இலைகள், பெர்ரி மற்றும் பழங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த சடங்கு ஜெகன்னாத வழிபாட்டு முறையின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியில் வலுவான பழங்குடி கூறுகளை நினைவூட்டுகிறது. அசல் பழங்குடி வழிபாட்டாளரான பிஸ்வபாசுவின் மகள் லலிதா, வேட்டையாடுபவர்களின் தலைவன் மற்றும் பிராமண பாதிரியார் வித்யாபதி ஆகியோரின் சந்ததியினர் தைதாபதிகள் அல்லது தைதாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குணமடையும் காலத்திலும், ரத ஜாத்ரா அல்லது தேர் திருவிழாவின் முழு காலத்திலும் தெய்வத்திற்கு சேவை செய்யும் பாக்கியம் அவர்களுக்கு உள்ளது.

ஒவ்வொரு தேர்களையும் சுற்றி ஒன்பது பார்ஸ்வ தேவதைகள், தேர்களின் பக்கங்களில் வெவ்வேறு தெய்வங்களைக் குறிக்கும் மரப் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேருக்கும் ஒரு தேரோட்டியும் (சாரதி) நான்கு குதிரைகளும் உள்ளன.

தேர் விவரங்கள் ஜகந்நாத் பாலபத்ரா சுபத்ரா
தேரின் பெயர் நந்திகோஷா (ନନ୍ଦିଘୋଷ) தலத்வாஜா (ତାଳଧ୍ୱଜ) தர்படலானா (ଦର୍ପଦନ)
தேரின் மாற்றுப் பெயர் கருடத்வஜா, கபித்வஜா லங்காலத்வஜா தேவதாலனா, பத்மத்வஜா
படம்
Lord Shri Jagannath on His Chariot Nandighosha.jpg
Chariot Taladhwaja of Lord Balabhadra.jpg
Chariot Devidalana of Goddess Subhadra.jpg
சக்கரங்களின் எண்ணிக்கை 16 14 12
பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை 832 763 593
உயரம் 44′ 2″ 43′ 3″ 42′ 3″
நீளம் மற்றும் அகலம் 34’6″ x 34’6″ 33′ x 33′ 31’6″ x 31’6″
விதானங்களின் நிறங்கள் சிவப்பு, மஞ்சள்(விஷ்ணுவுடன் தொடர்புடைய மஞ்சள்) சிவப்பு, நீல பச்சை சிவப்பு, கருப்பு(தெய்வத்துடன் தொடர்புடைய கருப்பு)
பாதுகாவலர் கருடன் வாசுதேவா ஜெயதுர்கா
தேரோட்டி தாருகா மாதலி அர்ஜுனா
கொடி பெயர் த்ரைலோக்யமோஹினி உன்னனி நாதாம்பிகா
கொடி சின்னம் பனை மரம்
குதிரைகளின் பெயர்
  1. சங்கா
  2. பலஹாகா
  3. ஸ்வேதா
  4. ஹரிதாஷ்வா
  1. திப்ரா
  2. கோர
  3. திர்காஷர்மா
  4. ஸ்வர்ணனவ
  1. ரோச்சிகா
  2. மோச்சிகா
  3. ஜிதா
  4. அபராஜிதா
குதிரைகளின் நிறம் வெள்ளை கருப்பு சிவப்பு
தேர் கயிற்றின் பெயர் சங்கசூடா நாகினி பாசுகி நாகா ஸ்வர்ணசூடா நாகினி
பரிவார தெய்வம் மதன்மோகன் ராமகிருஷ்ணா சுதர்சன
கேட் கீப்பர்கள் ( துவாரபால )
  1. ஜெயா
  2. விஜயா
  1. நந்தா
  2. சுனந்தா
  1. கங்கை
  2. ஜமுனா
ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்)
  1. பஞ்சமுகி மகாபீர் ( ஹனுமான் )
  2. ஹரிஹர
  3. மதுசூதனன் ( விஷ்ணு )
  4. கிரிதர் ( கிருஷ்ணா )
  5. பாண்டு நரசிங்க
  6. சித்தமணி கிருஷ்ணா
  7. நாராயண (விஷ்ணு)
  8. சத்ர பங்கா ரபனா (ராம)
  9. ராமர் அனுமன் மீது அமர்ந்தார்
  1. விநாயகர்
  2. கார்த்திகேயா
  3. சர்வமங்களா
  4. பிரலம்பரி (பலராமன்)
  5. ஹலாயுதா (பலராமன்)
  6. மிருத்யுஞ்சயா ( சிவன் )
  7. நாதம்வர (சிவன்)
  8. முக்தேஸ்வர் (சிவன்)
  9. ஷேஷதேவா
  1. சண்டி
  2. சாமுண்டா
  3. உக்ரதாரா
  4. பனதுர்கா ( துர்கா )
  5. சுலிதுர்கா (துர்கா)
  6. வாராஹி
  7. ஷ்யாமகாலி
  8. மங்கள
  9. விமலா

சந்தன யாத்திரைதொகு

சந்தன் யாத்திரை அல்லது “சந்தன மர விழா” என்பது 42 நாட்கள் நடைபெறும், இது தேர்களுக்கான கட்டுமானப் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காலம் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் 21 நாட்கள் கொண்டது. முதல் பாதி பஹர் சந்தன் என்று அழைக்கப்படுகிறது , இதன் மூலம் தலைமை தெய்வங்களின் பிரதிநிதித்துவ படங்கள் வண்ணமயமான ஊர்வலங்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு நாளும் நரேந்திர தொட்டியில் ஒரு சடங்கு படகு சவாரி வழங்கப்படுகிறது. இந்த தெய்வங்களில் மதன் மோகன் (ஜகன்நாத்), ராம-கிருஷ்ணா, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பஞ்ச பாண்டவர் – ஐந்து முக்கிய சிவன் கோவில்களின் தலைமை தெய்வங்கள். பிதார் சந்தன் என்று அழைக்கப்படும் பிந்தையது , பொதுமக்களுக்குத் திறக்கப்படாத பல்வேறு சடங்குகளைக் கொண்டுள்ளது. [5]வைசாகத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் மூன்றாவது நாளான அக்ஷய திருதியை அன்று சடங்கு தீ வழிபாட்டுடன் தேர்களின் கட்டுமானம் தொடங்குகிறது. இது பூரி மன்னரின் அரண்மனைக்கு முன்பாகவும், பூரி கோவிலின் பிரதான அலுவலகத்திற்கு எதிரேயும் நடைபெறுகிறது. பின்னர், தேவர்கள் தொட்டியின் நடுவில் உள்ள ஒரு சிறிய கோவிலில், தண்ணீர், சந்தனப் பசை, வாசனைகள் மற்றும் மலர்களால் நிரப்பப்பட்ட கல் தொட்டிகளில் சடங்கு ஸ்நானம் செய்கிறார்கள்.இந்த சந்தன விழாவானது ஸ்னான யாத்திரை அல்லது “ஸ்நான திருவிழாவில்” முடிவடைகிறது, இது ஜ்யேஷ்ட மாதத்தின் முழு நிலவு நாளில் நடைபெறுகிறது. ஜகன்னாதர், பால்பத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் 108 பானை நீரில் குளித்து, பின்னர் இரண்டு வாரங்களுக்கு அடையாள மற்றும் சடங்குகளுடன் குணமடைகின்றன. அவை பொதுமக்களின் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளன. [6]மூன்று சிறப்பு பட்டா சித்திரங்கள், அனாசரா பட்டீஸ் எனப்படும் ஸ்டார்ச் இறுகிய துணியில் இயற்கை வண்ணங்களின் பாரம்பரிய ஒரியா ஓவியங்கள், பொது மக்களின் பார்வையில் இருந்து தெய்வங்களை மறைக்கும் மூங்கில் திரையில் கட்டப்பட்டுள்ளன, பொதுமக்களால் பார்க்க முடியும். இந்த காலகட்டத்தில், தெய்வங்களுக்கு அவர்களின் நோய் தீர்க்க வேர்கள், இலைகள், பெர்ரி மற்றும் பழங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த சடங்கு ஜெகன்னாத வழிபாட்டு முறையின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியில் வலுவான பழங்குடி கூறுகளை நினைவூட்டுகிறது. அசல் பழங்குடி வழிபாட்டாளரான பிஸ்வபாசுவின் மகள் லலிதா, வேட்டையாடுபவர்களின் தலைவன் மற்றும் பிராமண பாதிரியார் வித்யாபதி ஆகியோரின் சந்ததியினர் தைதாபதிகள் அல்லது தைதாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குணமடையும் காலத்திலும், ரத ஜாத்ரா அல்லது தேர் திருவிழாவின் முழு காலத்திலும் தெய்வத்திற்கு சேவை செய்யும் பாக்கியம் அவர்களுக்கு உள்ளது.

குண்டிச்சா கோவிலில் இருந்து தேர்களின் தேர்கள் பிரதான கோவிலுக்கு திரும்பிய பிறகு, தெய்வங்கள் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தேர்களில் வழிபடப்படுகின்றன. இந்த கொண்டாட்டம் சுனா பேஷா என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு முதன்முதலில் 1460 இல் மன்னர் கபிலேந்திர தேவாவால் தொடங்கப்பட்டது என்று பாரம்பரியம் கூறுகிறது, போரில் வெற்றிபெற்று திரும்பிய பிறகு அவர் ஜெகநாதருக்கு தங்கத்தை தானம் செய்தார்.  தெய்வங்கள் கிட்டத்தட்ட 208 கிலோ எடையுள்ள தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வை கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் பக்தர்கள் கண்டுகளித்தனர் 

ஹேரா பஞ்சமி–

ஹேரா பஞ்சமி என்பது பூரியின் பிரமாண்ட ஜெகநாதர் கோயிலில் ரத யாத்திரையின் போது அனுசரிக்கப்படும் ஒரு சடங்கு . இது லட்சுமி தேவியின் சடங்கு என அறியப்படுகிறது . ரத யாத்திரையின் ஐந்தாவது நாள், அதாவது பிரகாசமான பதினைந்து நாட்களில் ஐந்தாவது நாள்ரத யாத்திரையின் ஐந்தாவது நாள், அதாவது, ஆஷாடத்தின் ஹேரா பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. ரத யாத்திரையின் போது, ​​பகவான் ஜகந்நாதர் தனது மனைவி மகாலட்சுமியை விட்டுவிட்டு, தனது தெய்வீக ஆயுதமான ஸ்ரீ சுதர்சனத்துடன் தனது சகோதரர் ஸ்ரீ பாலபத்ரா மற்றும் சகோதரி மா சுபத்ராவுடன் தெய்வீக வெளியீடாக வெளியே வருகிறார். தெய்வத்தின் மீதான கோபத்தை தேவி வெளிப்படுத்துகிறாள். அவள் குண்டிச்சா கோயிலுக்கு செல்கிறாள், அடப்பா மண்டபம் ஒரு சுவர்ண மஹாலக்ஷ்மி வடிவில் பல்லக்கில் உள்ளது மற்றும் அவரை சீக்கிரம் கோவிலுக்கு வருமாறு அச்சுறுத்துகிறது. அவளை மகிழ்விப்பதற்காக, தெய்வம் அவளுக்கு ஆக்யன் மாலையை (சம்மத மாலை) வழங்குவதன் மூலம் ஒப்புக்கொள்கிறது. தேவி கோபமடைந்ததைப் பார்த்து, சேவகர்கள் குண்டிச்சாவின் பிரதான கதவை மூடுகிறார்கள். மகாலட்சுமி நாகச்சனா வாசல் வழியாக பிரதான கோயிலுக்குத் திரும்புகிறார். ஒரு தனித்துவமான சடங்கில், நந்திகோச தேரின் ஒரு பகுதியை சேதப்படுத்தும்படி தேவி தனது உதவியாளர்களில் ஒருவருக்கு கட்டளையிடுகிறார். இதைத் தொடர்ந்து அவள் குண்டிச்சா கோயிலுக்கு வெளியே ஒரு புளிய மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஹெரா கோஹ்ரி லேன் [17] எனப்படும் தனிப் பாதை வழியாக, ரகசியமாகத் தன் வீட்டுக் கோவிலுக்குத் தப்பிச் செல்கிறாள் .

ஸ்ரீமந்திரத்தின் முக்கியமான செயல்பாடாக ஹேர பஞ்சமியின் சடங்குகள் ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன . கோயிலின் வரலாற்றின் படி, இந்த “உத்சவ்” மகாராஜா கபிலேந்திர தேப் காலத்தில் தொடங்கியது. அவரது ஆட்சிக்கு முன், ஹீரா பஞ்சமி விழா மந்திரங்களை ஓதுவதன் மூலம் ஒரு குறியீட்டு வழியில் அனுசரிக்கப்பட்டது. மதலா பஞ்சியில் கூறப்பட்டுள்ளபடி , ராஜா கபிலேந்திர தேப் இந்த நடைமுறைக்கு பதிலாக தங்கத்தால் செய்யப்பட்ட மகாலட்சுமியின் சிலையை அறிமுகப்படுத்தி கொண்டாட்டத்தை மிகவும் யதார்த்தமாக்கினார். 

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்–ஸ்ரீ எஸ்.கோகுலாச்சாரி ஸ்வாமிகள்-

July 7, 2023

1. ஸ்ரீஸூதர்சன ஜெயந்தி

ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீசக்கரத் தாழ்வார் அவதாரத் திருநாள்,
ஸ்ரீஸூதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும்.
இவரை தரிசித்தாலே பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும்.
ஸூ என்றால் நன்மை, புனிதம் என்று பொருள்.
தரிசித்தால் நன்மையும் செல்வமும் தரக் கூடியவர்
என்பதால் இவருடைய திருநாமமே ஸூ +தர்சனம் = ஸூ தர்சனம் ஆயிற்று.
ஆயுதங்களில் திருக்கையில் இருந்து நீங்கி, எதிரியை வீழ்த்திவிட்டு திரும்பவும்
பெருமாள் திருக்கரம் வந்து சேரக்கூடிய ஒரே ஆயுதம் இந்த சக்கரமே.

2. ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர்

பெருமாளின் ஐந்து ஆயுதங்களில் முக்கியமானவர் ஸ்ரீசக்கரம் என்னும் ஸ்ரீஸூதர்ஸனர்.
எம்பெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்!
அவர் தம் வலத் திருக் கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீசுதர்ஸனர், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறார்.
அவர் அருளால் சித்திக்காதது எதுவுமில்லை.
பெருமாளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், சக்கரத்தாழ்வாரின் பெயரை,
தன்னுடைய திருநாமமாகக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். ‘
‘ஆழியான்’’ என்று பெருமாளுக்குப் பெயர்.

சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்குகளான எண்ணிக்கையில் 6,12,24,48 என்று வலம் வருதல் நலம்.
சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தீயவர்களை அழிக்கும் போது மறச் சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்),
நல்லவர்களுக்கு அறச் சக்கரமாகவும் (தர்மச் சக்கரம்) இருப்பது, இதன் சிறப்பு.

3. ஸ்ரீஸூதர்சனருக்கு தனிச் சந்நதி

சில கோயில்களில் ஸ்ரீஸூதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு.
திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோஹூர் திருத்தலங்களில் ஸ்ரீஸூதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு.
திருமோகூரில் எழுந்தருளியுள்ள காள மேகப் பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர்.
சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம்.
அனைத்து பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர்
இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார்.

மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது
இங்கு மட்டுமே. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும்,
மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதிதேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று நேத்ரங்களுடன்,
சிரசில் அக்னிக்ரீடம் தாங்கி, பதினாறு கரங்கள்-பதினாறு திவ்யாயுதங்களுடன்
ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.
சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மர் காட்சி தருகிறார்.

4. திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் தம்முடைய முதல் பதிகத்திலேயே,
‘‘ஆழியான் அருளால், எனக்கு நாராயண நாமம் கிடைத்தது.
அந்த நாராயண நாமத்தால் மற்ற எல்லாம் கிடைத்தன’’ என்று பாடுகின்றார்.

வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெ விசும்பணவும்,
பன்றியா யன்று பாரக கீண்ட பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

5. ஸூதர்சன ஆழ்வார்

எம்பெருமானிடத்திலே ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை ஆழ்வார்கள் என்று அழைப்போம்.
ஸூ தர்சனர் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அகலாத பக்தி கொண்டு ஆழ்ந்து இருப்பதால்
இவரை ஸூதர்சன ஆழ்வார் என்று அழைப்பார்கள்.
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு.
அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள்
சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை
இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்
சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.
இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது.
இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர்.
ஸ்ரீமகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை
ஸ்ரீஸூதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார்.
உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா ஸூதர்ஸனமே’ என்கின்றனர்.
எவ்வித அழுத்தமும் இல்லாத ஸூன்யப் பாதையில் செல்வதால் ஸூதர்சன சக்கரத்தால்
எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறதுஸ்ரீ விஷ்ணு புராணம்.

6. வெற்றி வீரர்

ஆயிரம் கோடி ஸூரிய பிரகாசம் உடையவர். வெற்றி வீரர்.
பெருமாள் நினைத்ததை நிறைவேற்றிக் கொடுப்பவர்.
அடியார்களை அனவரதமும் ரஷிப்பவர்.
சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர,
ஸூதர்ஸனர்,
சக்கர பாணி,
சக்கர ராஜன்,
நேமி,
திகிரி,
ரதாங்கம் என்றும் போற்றுவர்.
சக்கரத்தானை திருவாழி யாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.
இவருக்கு ‘‘ஹேதி ராஜன்” என்ற திரு நாமமும் உண்டு.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் இவரை “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்று போற்றுகிறார்.
அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

7. பெரியாழ்வார்

ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார்.
திருமழிசையாழ்வார் சங்கு சக்கரத்தோடு பெருமாள் நிற்கக் கூடிய அழகை,
‘‘வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்” என்ற பாடலில் குறிப்பிடுகின்றார்.
தமது திருச்சந்த விருத்தத்திலும் நான்முகன் திருவந்தாதியிலும் சக்கரத்தாழ்வாரைப் போற்றுகின்றார்.

தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்
ஆருமறியார் அவன் பெருமை, – ஓரும்
பொருள் முடிவு மித்தனையே எத் தவம் செய் தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால்.

“அருள் முடிவது ஆழியான் பால்” என்று பாடி,
அப்படிப்பட்ட “ஆழியான் பெருமையை யார் அறிவார்?” என்றும் போற்றுகின்றார்
ஆழி என்கின்ற சொல்லுக்கு சக்கரம் என்று ஒரு பொருள்.
கடல் என்று ஒரு பொருள்.
இரண்டுமே எம்பெருமானுக்கு சேர்த்தியாக இருப்பது.
பெரியாழ்வார் ‘‘வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’’ என்று இவரை வாழ்த்துகிறார்.
மேலும் “என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு” என்று குறிப்பிடுகிறார்.
ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில், “சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’’ என்றே பெருமாளை பாடுகிறார்.
நம்மாழ்வார் ‘‘சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” என்று பாமாலை சூட்டுகிறார்.
ஸ்ரீ தேசிகன் ‘‘ஸூதர்ஸந அஷ்டகம்’’ என்ற ஸ்தோத்ர மாலையிலும் இவரை போற்றி யுள்ளார்!

8. ஒவ்வொரு அவதாரத்திலும்…

எம்பெருமானுடைய ஒவ்வொரு அவதாரத்திலும் ஏதோ ஒருவகையில் இவரும் அவதாரம் செய்து
நேரடியாகவோ மறைமுகமாகவோ எம்பெருமானுடைய சங்கல்பத்தை நிறைவேற்றுபவர்.
மகா விஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து ஸூதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது,
எதிரிகளை அழித்ததும் தெரியாது,
மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்து கொள்வதும் தெரியாது.
எல்லாமே கணப் பொழுதில் அரங்கேறி விடும்.
ஒரு வேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால்,
ஸூதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்.
அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்!
இதை ‘ரன்ஸகதி’-ரதாங்கதி என்பர்.

ஸூதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை
ஸூதர்சனச் சக்கரத்தின் வடிவம் சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக் கூடியது.
அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.
மத்ஸ அவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாக இருந்தவர்.
கூர்மாவதாரத்தில் மந்திர மலையை ஸூதர்ஸனம் கொண்டே பெயர்த்தெடுத்தனர்;
எம்பெருமானுடைய
வராக அவதாரத்தில் அவருடைய கோரைப் பற்களாக அவதரித்தவர்.
நரஸிம்ஹ அவதாரத்தில் திரு நகங்களாக இருந்தவர்

9. இரணியனை சம்ஹாரம் செய்தவர்

நரசிம்ம அவதாரத்தில் பகவான் இரு கைகளில் கூர்மையான நகங்களாக இருந்து இரணியனை சம்ஹாரம் செய்தவர்.
வாமனாவதாரத்தில் சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்திய தர்பையாக இருந்தவர்.
இதை பெரியாழ்வார் இப்படி உறுதி செய்கிறார்.

‘‘மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்,
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய,
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே என்று பாடுகிறார்

பரசுராம அவதாரத்தில் கூர் மழுவாக இருந்தவர்.
ராமாவதாரத்தில் ஜுவாலா மூர்த்தியாகி பாணங்களில் புகுந்து எதிரிகளை சுட்டெரித்தவர்.
துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து, விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி,
துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சக்கரமே.

10. சிசுபாலன் வதம்

பூரணமான அவதாரமான கண்ணன் அவதாரத்தில் நினைத்தபோது வந்து நின்றவர்.
பிரத்யட்சமாகவே காட்சி தந்தவர்.
எட்டாம் நாள் போரில் கண்ணன் வகுத்தும்
13-ம் நாள் போரில் துரோணர் வகுத்ததும்
சகட சக்கர வியூகங்களே.
மகாபாரதத்தில் சிசுபாலன் வதம் சக்கரத்தால் தான் நடந்தது.
பீஷ்மரின் வேண்டுகோளுக்கிணங்க சக்கரக் கையனாக யுத்த களத்தில் காட்சி தந்தார்.
அதைப் போலவே ஜெயத்ரதனை அழித்திட, சக்கரத்தால் ஸூரியனை மறைத்தார்.
இப்படி கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யட்சமாக எம்பெருமானோடு இருந்தவர் சக்கரத்தாழ்வார்.

11. கஜேந்திரனைக் காக்க

ஆதி மூலமே என்றழைத்த கஜேந்திரனைக் காக்க
எம்பெருமான் திருக் கரத்திலிருந்து சீறிக் கிளம்பி காத்தது
சக்கரத் தாழ்வார் தான்!

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கரா வதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப் புள் ளூர்ந்து சென்று நின்றாழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே.

மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே, புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு போய்
ஒரு நீர் நிலையில் இறங்கியது கஜேந்திரன் என்கிற யானை. தனது துதிக்கையை உயரத் தூக்கிக்
கூச்சலிடும்படியாக முதலையானது அவ்யானையின் காலைத் கௌவிக்கொண்டது.
அந்த யானையினுடைய மன வருத்தம் தீரும்படி கருடனை வாகனமாகக் கொண்டு,
பொய்கைக் கரையிலே எழுந்தருளி, அங்கே சக்கரத்தை முதலையின் மீது பிரயோகித்த பெருமா
தேன் மாறாத சோலைகளை யுடைய திருவல்லிக்கேணியில் கண்டேன்-என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

12. அம்பரீஷனை

துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து விஷ்ணு பக்தனான அம்பரீஷனை காப்பாற்றி
துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சுதர்சன சக்கரம்தான்!
`நாராயணீயம்’ முப்பத்து மூன்றாவது தசகம் அம்பரீஷ மன்னரின் வரலாற்றைக் கூறுகிறது.
அம்பரீஷன். நாராயணனின் பரம பக்தனாகவும், சிறந்த அரசனாகவும் இருந்தான்.
ஏகாதசி விரதத்தைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்து வந்தான்.

ஒருமுறை, ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள் துவாதசி யன்று, துர்வாச முனிவர் அம்பரீஷனைச் சந்திக்க வந்தார்.
துர்வாசரை தன்னோடு உணவு உண்ண அழைத்தான் அம்பரீஷன்.
நீராடி விட்டு வருவதாகச் சென்றார் துர்வாசர்.
வெகு நேரம் அவர் திரும்பவில்லை.
உரிய நேரத்தில் விரதத்தை முடிக்காவிட்டால், தெய்வக் குற்றம் ஆகிவிடுமே என்று அம்பரீஷன் தவித்தான்.
மற்ற முனிவர்கள் அறிவுரைப்படி சிறிது துளசி தீர்த்தத்தை பருகி துர்வாசருக்காகக் காத்திருந்தான்.

அந்த வேளையில் வந்த துர்வாசர், தான் வரும் வரை பொறுக்காமல் விரதத்தை
முடித்துக் கொண்ட அம்பரீஷனைப் பலவாறு ஏசினார்.
கோபத்தின் தலையில் ஏற தன்னிலை மறந்து, தன்னுடைய தலைமுடியில் ஒன்றை எடுத்து
அம்பரீஷனை நோக்கி வீசி எறிந்தார் துர்வாசர்.
அந்த முடி கொடிய பூதமாக மாறி, அம்பரீஷனை கொல்லப் பாய்ந்து வந்தது.
தன்னுடைய பக்தனைக் கொல்லவரும் சக்தி வாய்ந்த பூதத்தை அழிக்
தன்னுடைய ஸூதர்சன சக்கரத்தை ஏவினார் ஸ்ரீமந் நாராயணர்.

ஸ்ரீசக்கரம் பூதத்தையும் கொன்று துர்வாசரையும் துரத்தியது.
இதனால் பயந்து போன அவர் வைகுண்டத்தை அடைந்து, திருமாலின் பாதத்தைப் பற்றினார்.
‘போட்ட இடத்தில தேடு. அம்பரீஷன் மன்னித்தால் மட்டுமே ஸ்ரீசக்கரம் சாந்தியாகும்’ என்று திருமால் கூறினார்.
அதன்படி அம்பரீஷனை சரண் அடைந்தார் துர்வாசர்.

13. எந்த தீய சக்தியையும் அழிக்க வல்லவர்

ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் சேவித்து சந்நதி வலம் செய்தால்,
நமக்கு நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்டலட்சுமிகளையும், எட்டு திக்குகளையும்
வணங்கிய பலனுடன், பதினாறு வகையான பேரருளும் கிட்டும்.
உலகில் உள்ள எந்த தீயசக்தியையும் எதிர்த்து அழிக்கவல்லவர் இந்த மஹாசுதர்ஸனர்!
மந்திர, தந்திர, யந்திர, அஸ்திர, சஸ்திர ஆகிய அனைத்தையும் அழித்து
நல்லோரை துயரிலிருந்து காக்கவல்லவர் மஹாசுதர்ஸனர்.
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும்.
அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால்,
அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார்.

14. நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும்

ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால்,
நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
அவர் அவதார தினத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும்.
அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம்
தரிசிக்கும் போது அவருடைய காயத்திரி மந்திரம் சொல்வது சிறப்பு.

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்னோ: சக்ர ப்ரசோதயாத்

15. பல்வேறு தத்துவங்களை எடுத்துக் காட்டுகின்றது

இந்தச் சக்கரம் என்பது பல்வேறு தத்துவங்களை எடுத்துக் காட்டுகின்றது.
யோக சாஸ்திரத்தில் நம் உடம்பில் ஆதாரமாக ஆறு சக்கரங்கள் இருப்பதாக சொல்லுகின்றார்கள்.
இதிலே ஆன்ம உணர்வு பெற்று எம்பெருமானை சாட்சாத்காரம் செய்ய வேண்டும் என்று சொன்னால்,
இந்த சகஸ்ராரம் என்கின்ற சக்கரத்திற்குச் செல்ல வேண்டும்.
சக்கரம் என்பது ஒரு புள்ளியில் தொடங்கி அதே புள்ளியில் முடிவது.
சக்கரத்தைப் பொருத்தவரை அதனுடைய மையத்திலிருந்து சக்கரத்தின் தூரம் (ஆரம்)
எல்லா இடங்களிலும் ஒரே தூரத்திலே இருக்கும்.
தொடங்கிய புள்ளியே முடிவாகும்.
முடிவான புள்ளியே தொடக்கமாகவும் இருப்பது சக்கரத்தின் தத்துவம்.
ஆனால், எங்கே தொடக்கம் எங்கே முடிவு என்பதுதான் யாருக்கும் தெரியாது.

இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன்.
வாழ்க்கைப் பயணத்தின் ஒரே மாதிரி எதுவும் இருந்தது இல்லை.
எந்த சரித்திரமும் ஒரு உச்சிக்குச் சென்று பிறகு வீழ்ச்சி அடைந்து விடும்.
எந்த வீழ்ச்சியும் அதுல இருந்து ஒரு உச்சிக்குச் சென்று விடும்.
சக்கரத்தின் புள்ளிக்கு கீழேதொட்டு மறுபடி சுழலும்போது அது உச்சிக்குச் சென்று மறுபடி இறங்கும்.
சகட யோகம் என்பார்கள். நிலையற்ற நிலை.
அது தானே பெரும்பாலானவர்க்கு வாழ்க்கை.
உச்சிக்குச் செல்வதும் கீழே இறங்குவதுமாக இருந்தால் தான் சக்கரம் சுழல்வது என்று பொருள்.

16. ஜோதிடத்தில் சுதர்சனர்

12 ராசிகள் இருக்கட்டும், கிழமைகள் இருக்கட்டும், ஒரு நாளின் நேரமாக இருக்கட்டும்,
எது முடியுமோ அங்கே இருந்துதான் தொடக்கம்.
அந்த நாளின் முடிவும் அடுத்த நாளின் தொடக்கமும் ஒரே புள்ளிதான்.
நம்முடைய உடம்பும் அப்படித்தான்
ஒவ்வொரு நிமிடமும் செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன.

இவை இரண்டும் நடந்தால்தான் ஒரு மனிதன் உயிரோடு இருக்கின்றான்; இயங்குகின்றான் என்று பொருள்.
ஆனால் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை
அதைப் போலவே சக்கரம் வேகமாகச் சுழலுகின்ற பொழுது நீங்கள் சக்கரத்தை உற்று கவனித்தால்
அதனுடைய சுழற்சி உங்கள் கண்களுக்கு தெரியாது
அது நிற்பது போலவே தெரியும்
அதைப் போலவே இந்த வாழ்க்கையும் வேகமாக சுழல்வதை நாம் உணர்வதில்லை.

17. சக்கரத்தின் தத்துவம்

ஜனனமும் மரணமும்கூட ஒரு சக்கரத்தைப் போலத்தான்.
ஆதிசங்கரர் புனரபி ஜனனம் புனரபி மரணம் பாடினார்.
ஒரு மனிதன் தூங்கப் போகும் போது அவன் விழித்து இருப்பதில்லை விழித்திருக்கும் பொழுது அவன் தூங்குவதில்லை
ஆனால் இவை இரண்டுமே அவன் வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன
அவன் கனவு காண்கின்ற பொழுது அது நினைவாக இருப்பதில்லை.
அவன் நினைவில் இருக்கின்ற பொழுது அவன் கனவு காண்பதில்லை.

இவை இரண்டும் இரண்டு புள்ளிகள் என்று சொன்னாலும்கூட,
ஒரு புள்ளியின் தொடக்கத்திலேயே அடுத்த புள்ளியும் பொருந்தி இருக்கிறது,
அதுதான் சக்கரத்தின் தத்துவம்.
உறக்கத்தின் முடிவு விழிப்பு. விழிப்பின் முடிவு உறக்கம்.
திருவள்ளுவர் இதை மிக அழகாகச் சொல்லுவார்.
மரணம் கூட தத்துவத்திற்கு உட்பட்டதுதான்.
உறங்குவது போல சாக்காடு
உறங்கி விழிப்பது போல பிறப்பு என்று மிக அழகாகச் சொல்லுவார்.
இந்த சக்கரத்தின் உடைய தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் வாழ்க்கை குழப்பமின்றி இனிதாக இருக்கும்.

18. சுழலச் செய்பவன் இறைவன்

எல்லாவற்றையும் இயக்குபவன் எம்பெருமான்.
சக்கரம் எப்பொழுதும் தானாகச் சுற்றுவதில்லை.
அதைச் சுழலச் செய்வதற்கு ஒரு ஆற்றல், ஒரு மையப்புள்ளி, ஒரு அச்சாணி, வேண்டும்.
அதை சுழலச் செய்பவன்தான் இறைவன்.
அண்ட சராசரங்கள் அனைத்தும் சுழன்று கொண்டே இருக்கின்றன என்றுதான் விஞ்ஞானமும் சொல்லுகின்றது.
இயக்கம் சுழற்சி இல்லாது போனால் அவை இல்லை என்று பொருள்.
நட்சத்திரங்களை எடுத்துக் கொ
ஸூரியனை எடுத்துக் கொள்ளுங்கள்.
அண்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
எதை எடுத்துக் கொண்டாலும் அந்தரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கின்றன.
காரணம் அதற்கென்று ஒரு விசையை எம்பெருமான் கொடுத்திருக்கின்றான்.

19. லயம், பிரளயம்

விசை குறைகின்றபோது மறுபடியும் அவன் விரலிலே வந்து அமர்கின்றது.
மறுபடியும் இருக்கும் வரை அது காத்திருக்கிறது.
இதைத்தான் நாம் தத்துவத்தில் லயம், பிரளயம் என்று சொல்லுகின்றோம்.
சக்கரத்தின் சுழற்சி வேகம் குறைகின்ற போது ஏதோ ஒரு புள்ளியில் – ஆதாரத்தில் போய் தான் இறங்க வேண்டும்.
அப்பொழுதுதான் மறுபடியும் அது இயங்க முடியும். சொல்ல முடியும்.
அந்த ஆதாரம்தான் ஸ்ரீமன் நாராயணன்.

20. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே

ஸ்ரீமன் நாராயணன் கையில் இருக்கக்கூடிய சக்கரம்தான் சக்கராயுதம்.
அவன் ஆட்டுவிக்கும் போது அது ஆடுகிறது.
அது ஆடுகின்றபோது உலக உயிர்கள் ஆடுகின்றன; இயங்குகின்றன.
இது சக்கரத்தின் இயக்கம்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளுகின்ற பொழுது நம்முடைய ஆன்மா விழிப்பு அடைகிறது.
எவன் சுழற்றினானோ அவனைக் கண்டு கொள்ளுகின்றது. அவன் யார் என்பதை உணர்ந்து விடுகின்றது.
அந்த ஞானத்தை தருவதுதான் இந்த சக்கரம்.
தர்சனம்-ஞானம்–.-ஸூதர்சனம் என்றால் நல்ல ஞானம் அதாவது மெய்ஞ் ஞானம் அல்லவா?

21. ஆழியான் அவனே…

பெருமாளும் சக்கரமும் ஒன்றே.
சக்ரத்தாழ்வார் நிற்கும் நிலைக்கு… ‘‘ப்ரத்யாலீடம்’’ என்று பெயர்!!
இடது திருவடியை முன்புறம் நீட்டி, வலது திருவடியை பின்புறம் சுருக்கி வைத்துக் கொண்டு நிற்கும் நிலையைப் ஆர்த்திருக்கலாம்.
அதற்காகத்தான் பின்புறம் கண்ணாடி வைத்திருக்கிறார்கள்.
சக்ரத்தாழ்வாரின் பின்புறத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி இருப்பார்.!
முன்புறம் சக்கரத்தாழ்வார் மனித உருவத்தில் இருப்பர்.
பின்புறம் நரஸிம்ஹராக இருப்பர்.
முன்னே. நின்ற திருக்கோலம் அல்லது வேகமாக ஓடும் கோலத்தில் இருப்பார்.

பின்னே வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இருப்பார்.
இரண்டும் ஒரே தத்துவமே!
நரசிம்மர் தமது நான்கு திருக்கரத்திலும் சக்ரமே வைத்திருப்பார்.!
இருவரும் நமக்கு வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுப்பதிலும்,
துன்பங்களைப் போக்குவதிலும் ஒருவராக இருப்பார்கள்.
ஈருருவம் ஒன்றை இசைந்து என்று இந்தக் கோலத்தைச் சொல்லலாம்.

22. பிரளயத்தில் உலகைத் தாங்குகிறார்

ஸ்ரீமந் நாராயணனுக்கு இரண்டு சக்திகள் உண்டு.
1. இச்சா சக்தி (விருப்பம்)
2. க்ரியா சக்தி (செயல்)
இச்சா சக்தியாகத் திகழ்பவள் அகலகில்லேன் என்று அவன் மார்பில் உறையும் ஸ்ரீமஹாலட்சுமி தாயார்!
க்ரியா சக்தியாகத் திகழ்பவர் தான் ஸ்ரீசுதர்சனத்தாழ்வார்!
எம்பெருமானின் நினைப்பதை நிறைவேற்றுபவர் சக்கரத்தாழ்வார்!
ஸூதர்சனமே எல்லாவற்றிற்கும் ஆதாரம்!
பிரளய காலத்தில் எம்பெருமான்
இதனை லயம் என்பார்கள்.
உயிர்கள் அழியாத அந்த நிலையில் இந்த சித்தும் அசித்தும் மஹாராத்ரி என்ற ஸங்கல்பத்தால் தாங்கப்படுகிறது!
மஹாராத்ரி தரம் தான் ஸூதர்சனர்.

23. ஸூதர்சன சக்கரத்தில் பல வகைகள்

ஸூதர்சன சக்கரத்தில் பல வகைகள் உண்டு.
இரண்டு அரங்கள் கொண்டது. உஷஸ் சக்ரம்!
மூன்று ஜ்ஞான ஸ்வரூபமாக இருப்பது உதய சக்ரம்.
ஆறு அரங்கள் கொண்டது விஷ்ணு சக்ரம்!
எட்டு அரங்கள் கொண்டது நாராயண சக்ரம்!
32, 100 ஆரங்களும் உண்டு!
இது தவிர ஐச்வர்ய சக்ரம், மஹாசக்ரம், மஹா சுதர்சன சக்ரம், ஸஹஸ்ரார சக்ரம் என்றெல்லாம் உண்டு!
இந்த மஹா ஸூதர்சன சக்ரமானது, 12 அரங்களுடன் இருக்கும்!
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் வீற்றிருக்கும் இடமானது ஆயிரம் அரங்களுடன் கூடிய
எம்பெருமானின் சங்கல்பமான ஸ்ரீ ஸூதர்சனத்தால் தாங்கப் படுகிறது!!!

24. ஸூதர்சன ஜ்வாலா

சக்கரம் கோடி ஸூரிய பிரகாசமாக ஜொலிக்கும்.
அதன் ஜிவாலைக்கு “சௌதர்ஸ்ரீநி ஜ்வாலா!” என்று பெயர்!
சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்பு போல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
பாதங்கள் சக்கரத்தைப் போல சுழன்று அருள் செய்ய எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கும்.
ஸூதர்சன ஜ்வாலையை த்யானித்தாலே நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும்
இவரது அவயவங்கள்… அரம்! அக்ஷம்! நாபி! நேமி!
சக்ரத்தாழ்வாரை ஆராதனை செய்யலாம். த்யானம் செய்யலாம்.
அவரை. ஹோமங்களினாலும், பீஜாக்ஷரங்களினாலும் துதிக்க நம் கொடுமையான துயர்கள் எல்லாம் போய்விடும்!

சக்ரத்தாழ்வாரின் கிரணங்கள் அஜ்ஞானமாகிய நம் பாவத்தைப் போக்கி விடும்!
குடைகளில் கம்பிகள் போல சக்ரத்தில் இருக்கும் அரங்களை தியானிக்க
நமக்கு வாக்கு பலிதமும் கவி கேள்விகளில் பாண்டித்துவமும் கிடைக்கும்.
எதிர்மறை எண்ணங்களை அகற்றி, நம் மனதை நல்ல விஷயங்களில் ஈடுபடச் செய்வர்!
அடியார்களோடு இருக்கும்போது….எம்பெருமானைத் தவிர வேறு சிந்தனைகள் நம்மை அண்டாது!
அவரது ஆராதனைகள் நம் ஸம்ஸாரத்தில் உள்ள பாபங்களை எல்லாம் போக்கி விடும்!
ஞானத்தைக் கொடுக்கும்!
ஸூதர்சன வழிபாடு நல்ல வம்ச வ்ருத்தியையும், ஆயுள் ஆரோக்ய அஷ்ட ஐச்வர்யங்களையும்,
நோயற்ற வாழ்வையும் கொடுக்கும்!

25. சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்?

ஸூதர்ஸனரின் பின்புறம் யோக நரசிம்ம மூர்த்தியைக் காணலாம்.
இவரை ஸூதர்ஸன நரசிம்மம் என்பர்.
பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததாலும்
கருடருடன் வராத காரணத்தாலும்
இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்ப
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லி விட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.

அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.
நாளையென்பது நரசிம்மருக்கு கிடையாது என்பர்.
துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய
சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது மிகச் சிறப்பு.
இதன் அடிப்படையில் தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.

26. சக்ரத்தாழ்வார் ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்வதன் மூலம் சக்கரத்தாழ்வாரின் பரிபூரண அருளைப் பெறலாம்.

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜன வல்லபாய ஓம் பராய பரம புருஷாய பரமாத்மனே!
மம பர கர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாத ப்ரதி வாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா ஸூதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரி வ்ருதாய ஸர்வ திக் க்ஷோபன
கராய ஹும் பட் பர ப்ரஹ்மணே ஸ்வாஹா

மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும்
எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.
நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து
நமக்கான தடைகளை யெல்லாம் தகர்த் தருள்வார் சக்கரத்தாழ்வார்.

27. சக்கரத்தாழ்வார் பற்றி ஜோதிட ரகசியங்கள்!

பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார்
திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார்.
சங்கு, சக்கர, கதா பாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக் கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார்.
ஆனால், சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு.
ஸ்ரீ பெரியாழ்வார் வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்றும்
ஸ்ரீ தேசிகனும் ஸூதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றி யுள்ளார்.

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தின் போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து
சுக்கிரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் ஸூதர்சனர்.
ராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி என்ற கொடுமையான அரக்கர்களை தண்டிக்க
கருடாரூடனாய் இலங்கை சென்ற பகவான், ஸூதர்சன சக்கரத்தால் அவர்களை அழித்தார்.

ஸூதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார்.
காசி நகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, `நானே உண்மையான வாஸூ தேவன்’ என்று
பௌண்டரக வாஸூதேவன் என்ற வலிமை மிக்க மன்னன் கூறி வந்தான்.
கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தா
கருடன் மேல் ஏறிச் சென்ற கண்ணன் ஆழியினால் அவனை வென்றான்.

28. ஜோதிடத்தில் சக்கரத்தாழ்வார்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும்.
செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும்
செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார்
சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரத்தினை குறிக்கும் செவ்வாயின் சக்கரத்தாழ்வாருக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.

செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட ஸ்ரீசக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம்
மற்றும் ஸ்வரூபம் என்பதால் புதனின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார்.
ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால்
நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைகளை
சந்தித்து வருபவர்கள் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபடுவது,
ஸூதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது,
ஸூதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும்.
மேலும் புற்று நோய் போன்ற உயிர்க் கொல்லி நோய் உடையவர்கள்
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரண பயம் போகும்.

29. ஸூதர்சன உபாசனை

ஸூதர்ஸன உபாஸனை மிகவும் சக்தி வாய்ந்தது.
இவரை எந்திர ரூபத்தில் வழிபடும் முறையும் உள்ளது.
ஸூதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும்.
போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும்.
எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது.
பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர்.
பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தைப் போக்கிக் காப்பவர் ஸூதர்சனர்.

ஸ்வாமி தேசிகன் இயற்றியுள்ள ஸூதர்ஸன அஷ்டகம் பலராலும் ஜபிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூர நாராயண ஜீயரின் ஸுதர்ஸன சதக பாராயணமும் மிகவும் சக்தி வாய்ந்தது.
இவற்றைப் பாராயணம் செய்தும்,ஸூதர்சனர் சந்நதியில் நெய் விளக்கேற்றியும்,
பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின் அருளைப் பெறலாம்.
சிவன் கோயில்களில் சிவாம்சமான பைரவரை போன்றே விஷ்ணுவின் அம்சமான சக்கரத்தாழ்வார்
நமது சகல துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

30. நவக்கிரகங்களின் அனுக்கிரகம்

பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்களுக்குப் பதிலாக, பெருமாளையும் சக்கரத்தாழ்வாரையும்
தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களின் அனுக்கிரகம் கிடைத்துவிடும் என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை.
செவ்வாயின் சித்திரை நட்சத்திரம்
புதனின் வீடான கன்னி மற்றும் துலா ராசியில் வருவதால்
சக்கரத்தாழ்வாரை வணங்குபவர்களுக்கு நோய், எதிரி, விரயம், மரணம் ஆகிய பயம் நீங்குவதோடு
சகல செல்வங்களும் அளிக்கும் என்பது நிதர்சனம்.
ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில்,
சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக் கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ அருளிச் செயல்களில் ஸ்ரீ காவேரி –ஸ்ரீ காவேரி ஆற்றின் பெருமையைப் போற்றும் சங்க காலப் பாடல்கள் —

June 16, 2023

ஸ்ரீ அருளிச் செயல்களில் ஸ்ரீ காவேரி

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன் – நாலாயி:212/1

கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம் பொழில் காவிரி தென் அரங்கம் – நாலாயி:245/1

தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – நாலாயி:408/4

கை பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர் – நாலாயி:612/1

காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:728/3

அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே – நாலாயி:805/4

கடந்த கால் பரந்த காவிரி கரை குடந்தையுள் – நாலாயி:812/3

கங்கையில் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டு – நாலாயி:894/1

கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி – நாலாயி:1246/2

சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1378/3,4

வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1380/3,4

திளைக்கும் செல்வ புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1381/4

அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1383/4

வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1386/3,4

இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று – நாலாயி:1571/2,3

காரகத்தாய் கார் வானத்து உள்ளாய் கள்வா காமரு பூம் காவிரியின் தென்-பால் மன்னு – நாலாயி:2059/3

———-

ஸ்ரீ காவேரி ஆற்றின் பெருமையைப் போற்றும் சங்க காலப் பாடல்கள்

மக்கள் காவிரி ஆற்றைப் பெண்ணாகவும் தீர்த்தமாகவும் போற்றி வந்ததும்
காவிரிக்கு உயர்ந்த மதிப்பளிப்பதும் மரபாக இருந்து வருகிறது.
பழந்தமிழ் இலக்கியத்தில் காவிரியின் வளம், செழிப்பு, சிறப்பு பற்றிப் புலவர்கள் பலரும் பல பாடல்கள் பாடி யுள்ளனர்.
சங்க இலக்கியத்தில் ஒன்றான பட்டினப் பாலையில்,
வான் மழை பொழியாமல் பொய்த்து விட்டாலும் காவிரி பொன் கொழிக்கும் அளவிற்கு வளம் செய்யும் என்பதினை,

“வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி புனல் பரந்து பொன்கொழிக்கும்” (பட்டினப் – 17) என்று இப்பாடல், செழிப்பினை விளக்குவதாக அமைந் துள்ளது.

“வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும்

தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும்

தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி”—(பட்டினப்பாலை:1-6)

எட்டுத்தொகை நூல்களான அகநானூற்றிலும் புற நானூற்றிலும் பெரும்பாலான பாடல்கள் காவிரியின் செழிப்பு வளம் இவற்றை எடுத்துக் கூறுவதாக அமைந் துள்ளன.

“கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுருள் போல

நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் ஆகம் அடைதந்தோளே” (அகம். 62: 9-12)

நீர்ப்பெருக்கு அதிகம் கொண்ட காவிரி பல சுழிகளைக் கொண்டுள்ளது என்று வெள்ளப் பெருக்கைக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

“தலை நாள் மாமலர் தண் துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று (அகம் : 126.4-5)

மலையில் பிறந்து கடலின் கரையினைக் கரைத்திடும் அளவிற்குக் காவிரி விரைந்து செல்லும் நீர்ப்பெருக்கைக் கொண்டது என அதன் வளமையைப் பறைசாற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சங்ககாலத்தில் காவிரி வளமாக இருந்ததை விளக்குகிறது இப்புறநானூற்றுப் பாடல்,

“புனிறு தீர் குழவிக்கு இலிந்து முலை போலச் சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்

மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்” (புறம் : 68-8-10)

குழந்தை பிறந்து பல திங்கள் கடந்த பின்னும் பால் சுரக்கும் தாயைச் சான்றாக்கிக் காவிரி தாயாகவும் அதனால் உலக உயிர்கள் காக்கப்படுவதாகவும் இப்பாடல் கூறுவது சிறப்பானதாகும்.

“அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும்

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த்

ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்…”—புறநானூறு (பாடல் 35)

காப்பிய இலக்கியமான சிலப்பதிகாரத்தில் காவிரி பற்றி உயர்வாகப் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

“பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாடக்

காமர் மாலை அருகு அசைய நடந்தாய்! வாழி காவேரி” (சிலம்பு 7-8)

பூக்கள் மலிந்த சோலையில் மயில்கள் ஆடும்;
குயில்கள் விரும்பி இனிதாக இசை பாடும்:
விருப்பம் விளைவிக்கும் மாலைகள் அருகிலே அசையும்;
இவற்றி னூடே காவிரியும் நடந்ததாகவும்,
காவிரி நெடுநாள் வாழ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்பாடலில் காவிரி பாயும் பகுதி செழிப்பாக இருந்துள்ளதை விளக்குகிறது.

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும்

சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப

குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு

கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்

காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை”—சிலப்பதிகாரம் (காதை 10:103-108)

“வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி

ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.

ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்

ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி”—சிலப்பதிகாரம் கானல்வரி 152-55

“பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி

கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை” (மணிமேகலை: 5.25)

————-

காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.

அது கருநாடக மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த
தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.
இதன் நீளம் 800 கிமீ. கருநாடகத்தில் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம், சாமராசநகர் மாவட்டங்கள் வழியாவும்
தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப்பெயர் பெற்றது.

(கா- காடு, சோலை. பூ+ கா= பூங்கா- பூக்கள் நிறைந்த சோலை)
தமிழ் இலக்கியங்களில் பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் பிற பகுதிகள் போலவே தமிழகத்திலும் ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன.
அவை காரணமாகவே ‘பொன்னி’ என்ற பெயர் காவிரிக்கு வந்திருக்கக்கூடும் எனலாம்.
அந்த ஆறு சோழ நாட்டை செழிக்கச் செய்கிறது..
பொன்படு நெடுவரையில் (குடகு மலை) தோன்றிப் பாய்வதாலும் பொன்னி என்னும் பெயர் வந்தது.

துணை ஆறுகள்
கபினி, ஏமாவதி, ஆரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி
ஆகியவை கருநாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள்.
பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.

இவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது.
‘பொன்படு நெடுவரை’ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர்.
சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடல் (புறநானூறு 166) இதனைத் தெளிவுபடுத்துகிறது.

அணைகள்
மேட்டூர் அணை, கிருட்டிணராச சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை
ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும்.
பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.

அருவிகள்
கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும்
தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்.
ஒகேனக்கல் அருவியை தாண்டி செல்லும் காவிரி
தீவுகள்
கருநாடக மாநிலத்தில் சிரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும்
தமிழகத்தில் சிரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது.
இந்த மூன்றில் சிரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது,
இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது.
இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்குக் கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு.
சிரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும்
சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும்
திருவரங்கத்தில் (சிரீரங்கம்) உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.

மேகதாது என்னும் ஆடுதாண்டு காவிரி
குடகு மாவட்டத்திலுள்ள
பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது.
ஆரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து
மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருட்டிணராசசாகர் அணையை அடைகிறது.
கிருட்டிணராச சாகர் அணை மைசூருக்கு அருகில் உள்ளது.
ஏமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் அணையால்
ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன.
கிருட்டிணராச சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி சிரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது.
பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன.
பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது.
இங்கு இரு பிரிவுகளாகப் பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி அருவியாகவும்
மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது.
வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் ஆசியாவின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம்
அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
பின் காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன.
அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாகப் பாய்ந்து தமிழகத்தை அடைகிறது.
பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால்,
இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர்.

தமிழகத்தில் காவிரியின் போக்கு

பூம்புகார் கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது
பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது.
பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து சிடான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது.
இங்கிருந்தே தமிழகக் காவிரிப் பாசனம் தொடங்குகிறது.
மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது.
ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது.
அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.
கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்குப் பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர்.
முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது.
இங்குக் காவிரி இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.
வடகிளை கொள்ளிடம் என்றும் தென்கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது.
வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது.
கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும்.
கொள்ளிடம், காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே சிரீரங்கம் (திருவரங்கம்) தீவை
உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது.
கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாகப் பிரிந்து
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.
காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன.
தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை நாகப்பட்டிணம் மாவட்டங்கள்,
புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை.

காவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி
கருநாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாகப் பாய்கிறது.
நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம்
காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும்,
கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும்
அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.

கருநாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
கருநாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பல சதுர் விதமான அர்த்த விசேஷங்கள் —

May 30, 2023

சதுர்-விதா பஜந்தே மாம்mஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ க்ஞானி ச பரதர்ஷப

பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.

————

அபிவ்ருத்தியர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித பல புருஷார்த்த

——–

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-16-

இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி
ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன்
வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-

கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் -என்று அருளிச் செய்தார்
அந்த கலைகளில் சொல்லப்படும் பொருள்கள் இன்னவை இன்னவை என்று இதில் விவரித்து
அதுக்கு மேலே அக்கலைகளை கற்பதற்கு வேண்டிய தகுதிகளை விவரித்து
அதுக்கு மேலே அத்தகுதிகள் இருந்து கற்க முயன்றாலும் -அல்ப வாழ் நாள்-பல் பிணி -சிற்று அறிவினர் ஆகையால்
அக்கலைகளைக் கற்று அறிந்து தெளிதல் அரிது என்று காட்டி அருளி
ஆகையினாலே பக்தி யுடையார் எல்லாரும் அதிகாரிகளாம் படி
எளிதான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினமையையும்
அந்த திருமந்திரத்தின் பெருமையையும்
அது தேனும் பாலும் அமுதமுமாய் திருமால் திரு நாமம் ஆகையால் அத்தை வேதத்தின் நின்றும் எடுத்த வகையையும்
அருளிச் செய்கிறார் இதில் –

சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி
பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
கிரியாதிகளை அறிவிக்கிற
பாட்டுப் பரப்புக்கு
பெரிய தீவினில்
ஒன்பதாம் கூறும்
மானிட பிறவியும்
ஆக்கை நிலையும்
ஈரிண்டில் ஒன்றும்
இளைமையும்
இசைவும் உண்டாய்
புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
விக்னமற
நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே

வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும்
ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக
வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-

சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது

அதாவது
1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16- -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
(சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்தா லோகம் தன்னை அகற்றுவித்து -கந்தர் கலி வெண்பா )
7-கர்ம ஞான பக்தி பிர பத்திகள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
கலவ் சங்கீர்த்திய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன
த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து
வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா -நாலு வகைப் பட்ட ரூபம்
13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
ஆதி சப்தத்தாலே மற்றும் சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
-சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண
நாலு வகைப் பட்ட வியூக ஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே
ஆக இப்படி -பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற-

பாட்டுப் பரப்புக்கு
அதாவது-
பாட்டும் முறையும் படுகதையும் பல பொருளும் ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும்
மாயன் தன் மாயையில் பட்டதற்பு–நான்முகன் -76- -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-

பெரிய தீவினில் –
அதாவது –
நாவலம்பெரிய தீவு -பெரியாழ்வார் -3-6-1-என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே
த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில்-

ஒன்பதாம் கூறும்
அதாவது
நவ கண்டத்திலும் வைத்து கொண்டு
வர்ஷாந்தரங்களை போலே-மற்ற கண்டங்களைப் போலே -இவ்வுலகோடு சம்பந்தப்பட்டு இருக்கிற –
ப்வ்மமான -ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமியாய் இராதே
ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்
காயந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே
ஸ்வர்க்க அபவர்க்க ஆஸ்பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் ஸூரத்வாத்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-3-24-
என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான பாரத வர்ஷமும்
பாரத கண்டத்தில் பிறக்கும் பிறப்பும்-

மானிட பிறவியும்
அதாவது
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-
என்றும் சொல்லுகிற படியே
மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-

ஆக்கை நிலையும்-
அதாவது –
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே
மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் -திருவாய் -1-2-2- -என்று அஸ்திரமாக சொன்ன
சரீரத்தின் உடைய ஸ்தர்யமும் –

ஈரிண்டில் ஒன்றும்-
அதாவது –
நிலையுள்ள சரீரத்தைப் பெறினும்
சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில்
பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று–திருச்சந்த -90- என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்-

இளைமையும்
அதாவது
அந்தணர் குலத்திலே பிறப்பினும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-75- -என்கிற படியே
புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை-திருவாய் -2-10-1- -என்கிற பால்யமும்-

இசைவும் உண்டாய்
அதாவது –
இளமைப்பருவத்தோடு இருப்பினும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- என்கிறபடியே
எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே
இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-

புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
அதாவது –
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும்–திருமாலை -3- என்று
சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்
மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே –

விக்னமற
அதாவது
அனந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே
சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று-

நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே
அதாவது
நின்றவா நில்லா நெஞ்சு–பெரிய திருமொழி -1-1-4- என்றும்
சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி
ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்
மனசை கொண்டு அறக் கற்கை
-கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி
சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை
ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று
தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ
என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-

அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் பஜேத் சார தாமம் சாஸ்திரம் ரத்நாகார இவாம்ருதம் –
ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம் -என்கிறபடியே என்று சார தமமான சாஸ்த்ரத்தை
பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை -தான் மேலே அருளிச் செய்யப் புகும்
திரு மந்திரத்தின் சீர்மையை -தர்சிப்பிக்கிறார் மேல்-

(ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை –
சொல்லாமல் விட்டது ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு
நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –
வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்
அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்
-சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார்)

வேத சார உபநிஷத் என்றது
பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி
அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய
சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும்
சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக
ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்
சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும்
சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும்
மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்

அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் —
தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே
உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்-

சார தர அநுவாகம்
அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற
பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும்
விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும்
பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக
பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்-

சார தம காயத்ரியில்
அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான
அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய்
அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற
வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்-

முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை – இப்படி உள்ள காயத்ரியிலே
வியப்யாத்யா ஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில்-விஷ்ணு வாஸூ தேவன் – வ்யாவிருத்தம் ஆகையாலே –
(எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் –
வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே)
நாராயணாய வித்மஹே–புருஷ ஸூக்தம்- என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற –
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -இரண்டாம் -39-என்கிற படியே
வேதாந்த தாத்பர்யமாய் –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா அதர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தஸ்தம்–பாஞ்சராத்ரம் –என்கிற படியே
சகல வேத ஸங்க்ரஹமுமான திரு மந்த்ரத்தை-

வேதங்களின் சாரமாய் —
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்-பெரிய திருமொழி -6-10-6-
என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது
கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார் மேல் –

தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும்
தேனும் பாலும் அமுதமாக வெடுத்து –
பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-என்பதை
1-தெய்வ வண்டானவன் சாகைகளிலே தேனாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது -என்றும்
2-அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
3-அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
பிரித்து நிரல் நிறையாக பொருள் கொள்ள வேண்டும் –

தெய்வ வண்டாய் சாகைகளிலே தேனாக எடுத்து –
அதாவது
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-ஆகையாலே -ஷட் பதமானது
சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,
(விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து
திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி )
சார பூத சமஸ்தார்த்த போதக தயா-எல்லாப் பொருள்களையும் அறிவிக்கின்ற காரணத்தால்
எல்லா சாஸ்திரங்களின் ரசமாய் – சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் –

அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து
அதாவது –
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி -5-7-3-என்கிற படி
ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற
பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -பெரிய திருமொழி -6-10-6-என்னும் படி இருக்கையாலே-
(ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை )
இன்னார் இனியார் என்னாது எல்லாரும் உட் கொள்ளும்படி -சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10-பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து
அதாவது –
அமுதம் கொண்ட பிரான்-பெரிய திருமொழி -6-10-3-என்கிற படியே
அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக
விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை
நால் வேத கடலிலே அமிர்தத்தை—பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து
கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது -எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தான்
அதாவது –
ஆக
இப்படி வேத சாராமான இத்தை
ஸ்வயமேவ எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரி யாஸ்ரமத்து உள்ளானே- பெரிய திருமொழி -1-4-4–என்கிற படியே
நித்ய சூரிகளுக்கு போக்யமாய்
பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
நிர்ஹேதுக கிருபையால்
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்திரம்
சங்குசிதம் ஆகாமல்-சிங்காமை -சுருங்கி விடாமல்- உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று-

அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது-

சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
இவர்கள் தன்னை அறிந்து கரைமரம் சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான்
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக –
சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜிதம் போலே
திருமந்த்ரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –முமுஷுப்படி

——————————————-

ஸ்ரீ சதுர் வேத விளக்கம் –

ஸ்ரீ ரிக் வேதத்தில் – அதாவது ஸம்ஹிதையில் – பத்தாயிரத்து சொச்சம் [10170] ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்] .
ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது.
அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடேயே அது முடிகிறது.
வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம்.
அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால்,
அக்னி உபாஸனைதான் (Fire worship) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு.
அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால், இதுவும் சரிதான்.

‘யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன.
‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான
வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது.
இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில்
பொருத்திக் கொடுப்பதே ( practical application ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது.
ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரை நடையில்) யக்ஞம்
முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது.
காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.

ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே
நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர்.
‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. ‘கிருஷ்ணம்’ என்றால் கறுப்பு.
சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு.
“வாஜஸநி” என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை
உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.

கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதத்தின் பெருமை.
தர்ச பூர்ண மாஸம், ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேத யக்ஞங்களைப் பற்றியும்,
பலவிதமான ஸத்ர யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.
அதோடு கூட ரிக் வேதத்தில் இல்லாத சில உயர்ந்த ஸ்தோத்திர பூர்வமான மந்திரங்களும் இதில்தான் வருகின்றன.
உதாரணமாக, இப்போது பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீருத்ரம் யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான்.

ஸூத்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது.
பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை.
இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.

தசோபநிஷத்துக்கள் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில்
முதலாவதான ‘ஈசாவாஸ்யம்’, முடிவான ‘ப்ருஹதாரண்யகம்’ இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தில்
உள்ளவையே என்பதும் இந்த வேதத்துக்கு ஒரு பெருமை.

‘ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம்.
ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக்
கொள்வதற்கு ‘ஸாமம்’ என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு
அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி?
ஸ்தோத்திரம் செய்தால் அது சந்தோஷப்படுத்துகிறது. அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது.
ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செய்து விட்டால் இரட்டிப்பு ஸந்தோஷம் உண்டாக்கும் அல்லவா?
இம்மாதிரிதான் ரிக் வேதத்தில் ஸ்துதிகளாக இருக்கப்பட்ட மந்திரங்களில் பலவற்றையே ஸாம கானமாக
ஆக்கித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரமேதான்.
ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க
ஸாமத்திலோ கானமாகவே அவற்றை நீட்டி நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது.
பிற்பாடு உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம்தான்.
ஸாமகானத்தினால் ஸகல தேவதைகளும் பிரீ்தி அடைந்து விடுகிறார்கள்.
யக்ஞங்களில் ஆஹூதி தருவது மட்டுமின்றி, உத்காதா என்பவர் ஸாம கானம் பண்ணுவதாலேயே
தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது .

ஸோம யக்ஞங்கள் என்பதாக, ஸோம ரஸத்தைப் பிழிந்து ஆஹூதி கொடுத்துப் பண்ணுகிற
யக்ஞங்களுக்கு ஸாமகானம் ரொம்ப முக்கியமாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் “வேதானாம் ஸாமவேதோஸ்மி” என்கிறார்:
“வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்கிறார்.

அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார்.
அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம்.
அதிலே பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன.
ப்ரோஸ், பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்த பிரயோஜனம் உண்டு.
ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும்
மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன.
மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.

ரொம்ப உயர்ந்த தத்வங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன.
லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் தான் வருகிறது.

யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை.
இதன் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய்
தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும் பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள்,
‘பிரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான சாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்று வசனம் இருக்கிறது.
அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.

மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது.
மூன்று வேதம் என்பதால் இங்கே அதர்வத்தைச் சேர்க்கவில்லை என்றாகிறது.
இதனால் அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ணுமுன் புனருபனயனம் (இரண்டாம் முறை பூணூல் கல்யாணம்)
பண்ணவேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது.
பொதுவாக பிரம்மோபதேசத்தில் உபதேசிக்கப்படும் காயத்ரிக்கு “த்ரிபதா காயத்ரி” என்று பெயர்.
அது மூன்று பாதம் உடையதாக இருப்பதால் இப்படிப் பெயர். ஒவ்வொரு பாதமும் ஒரு வேதத்தின் ஸாரமாகும்.
அதர்வ வேதத்துக்கு வேறு காயத்ரி உண்டு. இப்போது அதர்வ வேதிகள் என்று யாரும் இல்லாதபோது,
அந்த வேதத்தை மற்ற வேதக்காரன் அத்யயனம் பண்ண வேண்டுமானால் இன்னொரு முறை உபநயனம் செய்து கொண்டு
அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு, பிறகு அந்த வேதத்தைக் கற்க வேண்டும்.
மற்ற மூன்று வேதங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மூன்றில் மற்ற இரண்டை அத்யயனம் பண்ண வேண்டுமானால்,
இப்படி புனருபனயனம் செய்து கொள்ள வேண்டியதில்லை.
ஏனென்றால், இந்த த்ரிவேதிகளுக்கும் பொதுவாக ஒரே காயத்ரி இருக்கிறது.

நான்கு வேத ஸம்ஹிதைகளும் சேர்ந்து 20,500 மந்திரங்கள்.

ஸாமவேத ஸம்ஹிதையில் ரிக் வேத ஸ்தோத்திரங்கள் உள்ள ‘அர்ச்சிக’ என்ற பாகமும்,
‘கானம்’ என்ற பாகமுமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.
கானங்களில் க்ராம கானம், அரண்ய கானம், ஊஹ கானம், ஊஹ்ய கானம் என்ற நாலுவகை உள்ளன.

———————-

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-2-வ்யூஹ நிலை திரு நாமங்கள் -123-146-

ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-

சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14

லோகாத்யஷஸ் ஸூராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்ப்புஜ–15

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-

———————————————————-

இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது

கிமேகம் தைவதம் லோகே-எது உயர்ந்த ஒரே தெய்வம் -என்றும் கிம் வாபி ஏகம் பாராயணம் –எது அடையப்பட வேண்டிய ஒரே உயர்ந்த இலக்கு -என்றும் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன

இனி ஸ்துவந்த கம் –யாரை ஆராதிப்பது -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
அதில் வாஸூதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது –

அடுத்து வரும் மஹா தப என்பதன் மூலம் ஸங்கர்ஷணன் பற்றிக் கூறப்படுகிறது
இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந –சாந்தி பர்வம்-பீஷ்மர் யுதிஷ்டரன் இடம் கூறுவது
பரமாத்மாவின் ஸ்ரீ வைகுண்டத்தை ஒப்பிடும் போது ஸ்வர்க்காதிகளும் தாழ்வான நரகம் போன்றவையே யாகும்

பர வ்யூஹ விபவ ஆத்மநா த்ரிவிதம்
பரம் ப்ரஹ் மேதி பாகவத ஸித்தாந்த -தத்ர பரம் நாம அகார்யம் கார்யாந வச்சிந்ந பூர்ண ஷாங்குண்ய மஹா ஆர்ணவோ த் கலிகை காதபத் ரீக்ருத
நிஸ் ஸீம நித்ய போக விபூதிகம் முக்தோபஸ் ருப்யம் அநவ்பாதிகம் அவஸ்தா நாம்
வ்யூஹஸ் ச
முமுஷு ஸிஸ்ருஷயா ப்ரதேய ஸ்ருஷ்டி ஸ்திதி லய
ஸாஸ்த்ர ததர்த்த தத் பலாநி
த்யாந ஆராதநே லீலா சேதீத் ருஸ
கார்ய உப பக்த விபக்த பர குண ரூப வ்யாபார ஸீகர வ்யூஹ நிர்வாஹித லீலா விபூதிகம்
முக்தி ஸாதகம் சதுர் கா அவஸ்தா நாம்

விபவஸ் ச
தச்சாய ஸூர நர திர்யக்காதி
ஸ்வ விபவ ஸஜாதீய ஐச்ச ப்ராதுர் பாவ வர்க

ததா ச ஸ்ரீ ஸாத்வதே

ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா க்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் – சாத்துவத சம்ஹிதை
ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே

தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதிவி ஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா
அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா

நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் தத பேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-

சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது

புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்

நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநா ஸ்வ பரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்
ப்ராதுர் பாவ விசேஷாதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே
அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்

ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்

இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்

இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் சைதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத

அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்

ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதீதரஸ்ய

யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அலைசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்

அத்ராந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்

ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்

ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்

அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச
புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வதா காராந்தர மாக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம் 

ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக் யைஸ்து கௌண முக்யை ஸூ ரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே

ததா முமுஷு பிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நஷேதஸ் ச

ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸா கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-

ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போம் கோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்

இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீ நம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந்தி யந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக
முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீ முதாச்சா அகிலா நாமா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ரார்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச

அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி பண்டிதந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே

———–

இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

———-

139-சதுராத்மா –
நான்கு ரூபங்கள் –

இத்தம் சதுராத்மா
வாஸூ தேவ -ஸங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்த -இதி –வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் சூஷ்மாயும் விளங்குபவன்

வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுராத்மா நம

——————-

140-சதுர்வ்யூஹ –
நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்

கதமேகஸ்ய சாதுராத்ம்யம் –தத்ராஹ
சதுர்வ்யூஹ
யத் யுக்த ப்ரயோஜன -ஏப்யோத்யே -ஆராத்யா -வ்யக்தயே –
ச ஸமஸ்தவ் யஸ்தேந குண ஷட்கந -தத் வ்யஞ்ஜகவ்ய அவஸ்தித
அவயவ- வர்ண-பூஷண- ப்ரஹரண -வாஹந -த்வஜாதி பிர்ஜா
கரா க்ரதாத்ய வஸ்தா சதுஷ்டய விஸிஷ்ட அபி மூர்த்திபிஸ்
சதுர்த்தா வ்யூஹத இதி

த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் ஸூ ஷுப்தி
வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை

மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஜாக்ரத் -விழிப்பு நிலை / ஸ்வப்னம் கனவு நிலை /ஸூஷூப்தி-ஆழ்ந்த நிலை உறக்கம் /தூரியம்-மயக்க நிலை -நான்கும்

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் வ்யூஹயா நம

———————

141-சதுர்த்தம்ஷ்ட்ர-
நான்கு முன் பற்களை உடையவன் -முத்துக்கள் போலே

வ்யூஹ மூலேந பரேண ரூபேண
சதுர் தம்ஷ்ட்ர
சதுர் தம்ஷ்ட்ரத்வம் மஹா புருஷ லக்ஷணம்
யதா

சதுர்தச சம த்வந்த்வ சதுர் தம்ஷ்ட்ர சதுர் கதி –ஸூந்தர-35-19-
14-உறுப்புக்கள் -4-பற்கள் -4-நடைகள் கொண்டவன்

வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

சிங்கம் புலி யானை காளை நடைகள் -சிம்ம கதி வ்யாக்ர கதி கஜ கதி ரிஷப கதி
14-உறுப்புக்கள் -புருவங்கள்- நாசி துவாரம் -கண்கள்- காதுகள்- உதடுகள் -திரு மார்புகள் -கை முஷ்டிகள்-
இரண்டு பட்ட இடுப்புக்கள் -கால் முஷ்டிகள் -மணிக்கட்டுகள்- திருக்கரங்கள் -திருவடிகள் -கால்கள் –

நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் தம்ஷ்ட்ராய நம

—————–

142-சதுர் புஜ –
நான்கு திருக்கைகள் உடையவன்

ததா சதுர்புஜ-ததா ஹி பரம் ரூபம் ஆஹ 

சதுர் புஜம் உதாராங்கம் சக்ராத்யாயுத முஷ்ணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
நான்கு திருத்தோள்களோடே கம்பீரமான திவ்ய மங்கள விக்ரஹத்துடன்
திருச் சக்ரம் போன்ற திவ்ய ஆயுதங்களைத் தரித்தவன்

தமச பரமோதாதா சங்க சக்ர கதா தர –யுத்த -114-15-
அப்பால் உள்ள பரமபதத்தில் சங்கு சக்ரம் கதை போன்ற திவ்ய ஆயுதங்களை ஏந்தியபடியே உள்ளவன்

புஜைஸ் சதுர்பி சம்மதம் -மஹா பாரதம்-நான்கு புஜங்களுடன் கூடியவன்

ஈரிரண்டு மால் வரைத் தோள்
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் புஜாய நம
தாமரை -பரம புருஷார்த்தம்
நான்கு புருஷார்த்தங்கள் -அறம் பொருள் இன்பம் வீடு

————

139 வது திருநாமம் சதுராத்மா – பெருமான் தன்னையே வாஸீ தேவன் ப்ரத்யும்னன், ஸங்காஷணன் அநிருத்தன் என நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ராமாயணத்தில் பகவான் ஒருவர் தான் தன்னை ராம லஷ்மணர் பரத சத்ருக்கன் என பிரித்துக் கொண்டார் என்கிறது . பிதரம் ரோஜயா மாஸ்ய எனது வங்கும் ப்ரமாணத்தின் படி பகவான் தசரதனை தனக்கு தந்தையாக வரித்தார். ராமன் என்பது ஒரு நாமம் தானே என்றால் அவரவர் செய்வதை பொறுத்து நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார் என்றார். லக்ஷமணன் செய்வது ஒன்று. பரதனின் அவதார நோக்கமே வேற . அது போல் சத்ருக்கன் அவதார நோக்கமே வேற. அது போல் இப்போது பார்க்கும் நான்கு பேரும் தன்னை வெவ்வேறு தொழிலுக்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைத்தும் ஒருவரே பண்ணலாம் என்றாலும் நாம் அனுபவிக்க ஹேதுவாய் 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவருக்கு படைப்பது பிடிக்கும், மற்றெருவருக்கு அழிப்பு தொழில் பிடிக்கும். ஆக ஆஸ்திரிகர்களின் விருப்பப்படி சேவை சாதிக்க தகுந்தார் போல் அந்தந்த ரூபத்தில் வணங்கத்தக்கவராய் தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டார்கள் என சாதித்தார். ராமனின் அவதார நோக்கமே லோகத்தில் தர்மம் சீர்குலைந்து போயிற்று. பெரியவர்கள் சொன்னால் சிறியவர்கள் கேட்பதில்லை என ஆயிற்று இது போல க்ருத த்ரேதா யுகத்தில் தாய் சொல்வதை மகள் கேட்பது கிடையாது . ஆச்சராயன் சொன்னால் சிஷ்யன் கேட்பது கிடையாது. இந்த மாறுபட்ட கருத்தை சரி பண்ணத்தான் இராமன் அவதரித்தார் என்றார். தந்தை சொல்மிக்க மந்தரமில்லை என தந்தை சொன்னார் என்பதற்காக காட்டிற்கு ராமன் சென்றனர். ஆதிசேஷன் அவதாரமான லக்ஷ்மணன் பகவானுக்கு கைங்கரியம் சேஷத்துவம் புரியவே இருந்தார். ஸ்வயம்புது. எனது வங்கும் ப்ரமாணப்படி நீ ஆணையிடு ராமா அதை நான்பின் தொடர்ந்து கைங்கரியம் புரிவேன். ஆக ஜீவாத்மாக்கள் அனைவரும் பரமாத்வாவின் சேஷர்கள். ஆக கைங்கர்யம் புரிவதல் லக்ஷ்மணன் நோக்காக கொண்டுள்ளார். பரதனின் அவதார நோக்கம் நிறைய கைங்கரியம் செய்வார். ஆனால் ராமனுடன் கூட செல்லவில்லை. ஆனால் ஆச்சார்யர்கள் பரதனையே லக்ஷ்மணனை விட உயர்நதவன் என கொண்டாடுகிறார்கள் . லக்ஷ்மணன புரிந்த கைங்கர்யத்திற்கு சேஷத்துவம். என்று பெயர் பரதன் ராமன் இட்ட வழக்காய் கைஙகர்யம் புரிந்ததற்கு பாரதந்திரியம் என்று பெயர். சேஷத்துவத்தை விட பாரதந்திரிய மே போற்றத் தகுந்தது . பரதனுக்கு மட்டும் நாட்டில் இருக்க விருப்பமா? ராமன் கூறினான் என்பதற்காக நாட்டில் இருந்தார். நாமும் பகவானுக்கு கைங்கரியம் பண்ணும் போது அவர் திருவுள்ளம் கோணாதபடி நடக்க வேண்டும் என அறுதியிட்டார். பகவானுக்கு கைங்கர்யம் புரிவதைவிட அவர் அடியார்களான பாகவதோத்தமர்களுக்கு அத்யந்த பார தந்திரியனாய் கைங்கர்யம் புரிவதை வெளிக்காட்டவே சத்ருக்கன் அவதாரம். ராமனின்றி இருந்த பரதன். பரதன் அன்றியிருந்த சத்குக்கனன். இதைத்தான் அடியார்க்கு அடியார்- தம் அடியார்க்கு அடியார் – தமக்கு அடியார்க்கு அடியர் – தமக்கு அடியோங்களே ஆக அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியன் என்பதையை சத்ருக்கன் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். சதுராத்மா – 4 ஆக பிரிந்தார் போல் வாஸுதேவன் முழுவதுமாய் இருந்து பின் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என நான்காக இருக்கிறார்

140 வது திருநாமம் – சதுர்வியூ ஹ : வியூகம் என்றால் பிரித்தல் வகுக்கிறது என அர்த்தம். துவாபரயுகம் வரை மொத்த வேதமும் ஒன்றாக இருந்தது. வேதவியாசர் பிறந்த பின் தான் மொத்த வேதத்தையும் பிரித்தார். வேதங்கள் 4 ராம லக்ஷணாதிகள் – 4 ஆக எதிலும் 4. இங்கு வாஸுதேவன் ஸங்கர்ஷணன் ப்ரத்யும்னன், அநிருத்தன் என 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ததம் ஏகஸ்ய ….என பட்டர் சாதித்தபடி எதற்காக ஒருவரே தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். த்யேய ஆராத்ய … குணஷட் கேண..6 குணங்களாய் தன்னைப் பிரித்துக் கொண்டு ஞான பலம் – சங்கர்ஷணன் ஐஸ்வர்யம் வீர்யம் – ப்ரத்யும்னன் சக்தி தேஜஸ் – அநிருத்தன் என்றும் தலா ஒவ்வொருவரும் 2 குணங்களை கொண்டுள்ளார். அப்போது அநிருத்தனுக்கு ஞானம் கிடையாதா என கேள்வி எழ எல்லோர்க்கும் எல்லா குணங்களும் உண்டு. ஆனால் அந்தந்த 2 குணங்கள் ப்ரதானமாய் மேலோங்கி இருக்கும் என சாதித்தார். திருவேங்கடமுடையான் எளிமையின் நீர்மையின் ஸ்வரூபமாய் திகழ்கிறார் என்றால் ஸ்ரீரங்கநாதனுக்கு எளிமை கிடையாது என்று அர்த்தமில்லை அவரவர்கள் செய்யும் தொழிலுக்கேற்ப முக்கியமான 2 குணங்களை எடுத்துக் கொள்கிறார். தத்வியஞ்ச விவஸ்தித… எனது வங்கும் ப்ரமாணத்தின் படி அவரவர் கையில் வைத்திருக்கும் ஆயுதம், அவரவர்கள் திருமேனி வர்ணம், அவரவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள், வாகனங்கள் எல்லாம் வேறாக இருக்கும். இதற்கு சான்றாய் நிறைய ஹோம குண்டங்கள் கொண்டுள்ள யாகசாலையில் நிறைய படங்கள் இருக்கும். அந்த ஒவ்வொரு படங்களிலும் இந்த 3 பேர்களின் படம் தான் வரையப்பட்டிருக்கும். சங்கம், கதை சக்கரம் என ஒவ்வொருவரும் தரித்துக் கொண்டு இருப்பர். இதை பாஞ்சராத்ர ஆகமத்தில் விவரித்து கூறப்பட்டு இருக்கிறது. முன் குறிப்பட்டது போல் கையில் பிடித்திருக்கும் ஆபரணம், திருமேனி வர்ணம் ஒவ்வொன்றும் மாறி இருக்கும். விசாக வியூக ஸ்தம்பம் என்று ஒன்று உள்ளது. இதே போல் ஸ்ரீரங்கத்திலும் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. அந்த இடத்தில் நீளமாய் தூணை கட்டி வைத்துள்ளார்கள். அந்த தூணில் கீழே 4 கிளை. நடுவில் 4 கிளை மேலே 4 கிளை – 4.4-4-4 என 16 கிளைகள் இருக்கும். இதை ஒவ்வொரு கிளையாக பிரித்திருப்பதின் நோக்கம் – கீழ் களையிலிருந்து அடுத்த களைக்கு போகும் போது ஒரு தெளிவு பிறக்கும். இப்போது எல்லாம் முழித்துக் கொண்டு இருக்கோம். இந்த தசைக்கு பெயர் ஜாக்ரதா தசை. (விழித்திருக்கும் தசை) மனசு வேலை பார்க்கிறது. கண் காது போன்ற இந்த்ரியங்கள் வேலை பார்க்கிறது. இதற்கு அடுத்த தசை தூங்குவது. தூங்கி விட்டோம் என்றால் ஸ்வப்னம் காணும் நிலை . இதை யே ஸ்வப்னதசை என்கிறார்கள். மனது மட்டும் வேலை பார்க்கும். கண்காது எல்லாம் மூடிக்கொண்டு விடும். ஆனால் உள்ளே இருக்கும் உலகம் தெரிகிறது. மனது வேலை செய்கிறது. இது ௨வது தசை. ஸ்வாபதசை . 3வது தசைக்கு ஸீஸுக்தி என்று பெயர். நல்ல ஆழ் நிலை உறக்கம். மனசு, கண் காது எல்லாம் தூங்கிவிட்டது நன்றாக தூங்கின தசை .3வது .அடுத்து 4வது தசை துரியதசா. துரிய தசா என்பது மயக்க தலை இப்போது மயக்கநிலை அந்த தூரத்தில் ஒன்று உள்ளே வரப்போவது தெரியும். சுமாராகத் தெரியும். இன்னும் அருகில் வந்தால் நேற்று பார்த்தது போல் தோன்றும். அதன் பின் சற்று அருகாமையில் மேலும் வரும் போது இவர் தான் என ஊர்ஜிதமாகிறது. வந்து உட்கார்ந்தவுடன் அங்க அடையாளங்கள் தெரிந்து விட்டது. தள்ளி இருக்கும் போது சுமாராக காட்சி அளித்தது எல்லாம் கிட்டக்க அருகாமையில் வர வர தெளிவாய் தெரியும். அது போல் ப்ரஹ்மத்தை நோக்கி போக போக தெளிவு பிறக்கும். ஆக படிப்படியான எல்லா தசைகளையும் அடைந்து முடிவில் நன்றாக தூங்கிவிட்டால் நன்றாக பெருமானை ஒன்றி அனுபவிக்கிறோம். அதாவது பெருமானுடன் ஒன்றிவிடுகிறோம். இதைத்தான் விசாக வியூக ஸ்தம்பம் என அழைப்பர்

———

தசரதனின் நான்கு பிள்ளைகளை மணந்த நாலு பெண்கள்
ராமர்-சீதை
லெட்சுமணர்-ஊர்மிளை
பரதர் – மாண்டவி
சத்ருக்னன் -ஸ்ருதகீர்த்தி

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் நாலு
ரிஷிக்களிடம் அவைகளைப் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்
ருக் – பைலர்
யஜூர் – ஜைமினி
சாம – வைசம்பாயன
அதர்வண – சுமந்து

மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை கடந்து செல்ல வேண்டிய நாலு நிலைகள்
பிரம்மசர்யம் (மாணவன்)
கிருஹஸ்தன் (இல்லறத்தான்)
வானப்ரஸ்தம் (கடவுளை வணங்க கானக வாழ்வு)
சந்யாசம் (துறவு)

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
வெண்பா (4 வரிகள் உடையது),
இரண்டு வரிகளை உடையது குறள்.

பிரம்மாவின் நாலு மானச
புத்திரர்கள் யாவர்?
சநகர்
சநாதனர்
சநந்தனர்
சனத் குமாரர்

நான்கு வகைப் பூக்கள் யாவை
கோட்டுப் பூ, கொடிப் பூ,
நிலப் பூ, நீர்ப் பூ

க’ வர்க்கத்தில் துவங்கும் நாலு புண்ய சொற்களைத் தியானிப்போற்கு புனர் ஜன்மம் இல்லை
கங்கை
கோவிந்தன்
கீதா
காயத்ரி

கும்பமேளா நடைபெறும் நாலு இடங்கள்
ஹரித்வார்
அலகாபாத் (பிரயாகை திரிவேணி
த்ரிவேணி
சங்கமம்)
நாசிக்
உஜ்ஜையினி.

ரத, கஜ, துரக, பதாதி
(தேர், யானை, குதிரை,
காலாட் படைகள்)

உபநிஷத்தில் கூறப்படும் நாலு
மஹா வாக்யங்கள்
அஹம் ப்ரஹ்மாஸ்மி
தத்வம் அஸி
ப்ரஹ்ஞானம் ப்ரஹ்ம,
அயமாத்ம ப்ரஹ்ம

———————–———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்தோத்திரம்–பிரபத்தி–மங்களாசாசனம்–மூலமும் பொருளும் —

May 24, 2023

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாசனம் (14 பாடல்கள்)
ஆகிய நான்கு பகுதிகள்

———–

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்–1-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு–2-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்-3-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே-4-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13–

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்-14–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15–

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-16-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17–

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–19-

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!–20-

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-22–

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-23–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25–

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

கலவேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

***

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்-1-

கௌசல்யா தேவி திருக்குமாரா -ஸ்ரீ ராமா -புருஷோத்தமா –
காலைப் பொழுது புலர்கிறது –
நாம் செய்ய வேண்டிய நித்ய வர்ணாஸ்ரம கர்மங்களை செய்ய வேண்டும்
எழுந்திராய்

———-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருட த்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரை லோக்யம் மங்களம் குரு–2-

ஆநிரை மேய்த்து மகிழ்பவனே
கருடக்கொடியை யுடையவனே
எழுந்திராய்
செந்தாமரையில் வளர் ஸ்ரீ லஷ்மீ தேவியின் நாயகனே
எழுந்திராய்
மூ உலகங்களிலும் -நித்ய முக்த பத்த -க்ருத்ய -அக்ருத்ய -க்ருத்யக்ருத்ய -ஸமஸ்த உலகங்களுக்கும்
நன்மைகள் -மங்களம் நிலவும்படியாகச் செய்வதற்காக
எழுந்திராய்

———-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்–3-

ஸமஸ்த உலகங்களுக்கும் தாயைப் போன்றவளே
மது கைடபர் என்னும் அரக்கர்களை அளித்த ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திரு மார்பில் விளையாடுபவளே
மனம் கவரும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவளே
தெய்வத் தாயே
ஆஸ்ரிதர்களின் ஸமஸ்த அபேக்ஷித்ங்களையும் அளித்து மகிழ்பவளே
ஸ்ரீ வெங்கடேசப்பெருமாளின் தயா தேவியே
உனக்கு நல்ல காலைப் பொழுதாகுக –

———-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே–4-

தாமரை மலர்களை போன்ற குளிர்ந்த திருக்கண்களை யுடையவளே
பூர்ண சந்திரன் போல் பொலியும் திரு முக விலாஸம் யுடையவளே
ப்ரஹ்மாதி தேவர்களின் பத்னிகளால் பூஜிக்கப்படுபவளே
கருணையின் உறைவிடம் போன்றவளே
விருஷாசல பதியான ஸ்ரீ திருவேங்கட நாதனின் அன்புக்கு உரியவளே
உனக்கு நல்ல காலைப் பொழுது ஆகுக

————–

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

அத்ரி முதலான ஸப்த ரிஷிகளும் காலைக்கடன்களை ஸந்த்யாவந்தனாதி நித்ய கர்மங்களையும்
முடித்துக் கொண்டு நின் திருப்பாத கமலங்களை அரசிப்பதற்காக
மனத்தைக் கவரக் கூடிய ஆகாச கங்கையில் மலர்ந்த தாமரை மலர்களை
சேகரித்துக் கொண்டு வந்து நிற்கின்றனர்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

தேவர்களில் சிறந்த ப்ரஹ்மாதிகளும் சுப்பிரமணியனும் ஞானிகளுமானவர்கள்
ஓங்கி உலகளந்த சரித்திரங்கள் முதலான உனது திவ்ய சேஷ்டிதங்களைப் புகழ்ந்து நிற்கின்றனர்
பாஷா பதி -சொல்லுக்கு அரசனான -தேவ குருவாகிய ப்ரஹஸ்பதி
தூரத்தில் வணக்கத்துடன் நின்று கொண்டு நாட்களுக்குப் பறி ஸூத்தி அளிக்கக் கூடிய
பயன்களைக் கூறும் பஞ்சாங்கம் படிக்கிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

சற்றே மலர்ந்த தாமரை மலர்கள் -தென்னை பாக்கு மரங்களின் மிகவும் மனத்தைக் கவரும்
இளம் பாளைகளுடைய திவ்யமான நறு மண வாசனையை எடுத்துக் கொண்டு
குளிர்ந்த காலைக் காற்று மெதுவாக வீசுகிறது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8–

இரு கண்களையும் திறந்து
கலசங்களில் வைக்கப்பட்டுள்ள வாழைப்பழம் பாயாசம் முதலிய சுவை அமுதுகளை புஜித்து விட்டு
சிறந்த கூண்டுகளில் இருப்பவையும்
கேளிக்கையான விளையாட்டு இன்பத்தை உண்டு பண்ணக் கூடியவையுமான
கிளிகள் மனக்களிப்புடன் உன்னுடைய திரு நாமங்களைப் பாடுகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

நல்ல தந்திகளை உடையபடியால் இனிய நாதமுடைய வீணையுடன் நாரதரும்
அழிவற்ற வனான உன்னுடைய திவ்ய சரிதங்களை
காவிய நயம் மிக்க மொழி வண்ணம் தோன்றும்படியாக
வேகமாக மீட்டிப் பாடுகிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

இரவு முழுவதும் மகரந்த ரஸம் கலந்த தேனைப் பருகிவிட்டு ரீங்காரம் இடும் வண்டுகள்
அருகில் உள்ள பூம் புனல்களில் இருந்து தங்கள் மது அருந்திய தாமரை மலர்களின்
உள் புறத்தில் இருந்து வெளிப்பட்டு உன்னைத் தொழுவதற்காக வருகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

இடையர்களின் குடிசைகளில் ஆய்ச்சிகள் மத்தினால் பானைகளில் சிறந்த தயிரைக் கடையும் போது
உண்டாகும் உரத்த ஒலியை எண் திசைகளும் பொறுக்க மாட்டாமல் எதிர் ஒலிக்கின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

——-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸூர்யனிடம் அன்புடைய தாமரை மலர்களில் தங்கி இருந்த வண்டினங்கள்
தங்களுடைய கருமையான அங்கங்களில் அழகினால் செருக்கடைந்து
கரிய நிறம் படைத்த பூக்களின் அழகை எதிர்பார்ப்பது போல் உரத்த ரீங்காரம் செய்வது முரசு கொட்டுவது போல் உள்ளது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13-

திருமகள் கேள்வனே
பக்தர்கள் விரும்பிய பலன்களை அளிக்கும் பேர் அருளாளனே
ஸர்வ லோகத்தார்களுக்கும் ஸமஸ்த பந்துவாக உள்ளவனே
அழகிய ஸ்ரீ நிவாஸப் பெருமானே
உலகத்தோர் இடம் கருணை ஒன்றையே கொண்ட பெருமானே
இரண்டு தோள்களின் நடுவில் மஹா லஷ்மியின் வாஸஸ் ஸ்தானமாய் அமைந்த அழகிய திரு மார்பை யுடைய அழகிய பெருமானே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–14-

அழகிய ஸ்வாமி புஷ்கரணியில் நீராடியதால் உள்ளும் புறமும் அழுக்கு நீங்கிய மேனி உடையவர்களாய்
உலகில் சிறந்து விளங்கும் மேன்மையை விரும்பும் அரனும் அயனும் ஸநகாதி முனிவர்களும்
உனது திருக்கோயிலின் வாசலிலே வாசல் காப்பவர்களால் அடி பட்ட சிற்பங்களுடன் காத்து நிற்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15-

அழகிய
சேஷ மலை
கருட மலை
வேங்கட மலை
நாராயண மலை
விருக்ஷ மலை
என்று நீ வஸிக்கும் திருமலையின் முக்கியமான திரு நாமங்களை எப்பொழுதும் கூறியபடி
அத் தேவர்களும் ரிஷிகளும் ஸ்துதி பாடி நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–16-

சிவ பெருமான்
தேவர்கள் தலைவனான இந்திரன்
அக்னி
எமன்
நிருதி
வர்ணன்
வாயு ன் குபேரன்
என்ற அஷ்ட திக் பாலர்களும் பக்தியுடன் கர மலர்கள் சிரம் மிசைக் கூப்பி
அஞ்சலி செய்தவர்களாய் உனது ஸேவைக்காகக் காத்து இருக்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17-

புள்ளரையனான கருடனும்
மிருக ராஜாவான ஸிம்ஹமும்
நாக ராஜாவான ஆதி சேஷனும்
யானைகளுக்கு அரசனான ஐராவதமும்
குதிரைகளுக்கு அரசனான உச்சைஸ் சிரவஸூம்
உனது திருக்கோயில் நடை பாதைகளில் தம் தம் தகுதிக்கு ஏற்ற பெருமையைக் காட்டிலும்
அதிகமாக விரும்புபவர்களாய் உன்னைத் தரிசிக்க நான் முந்தி நீ முந்தி என்று
போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

ஸூர்யன்
ஸந்த்ரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
இராகு
கேது
என்று தேவ சபையில் முக்யம் பெற்ற வர்களான நவக்ரஹங்களும்
உன்னுடைய அடியார் அடியார் அடியார் என்று மிகவும் கீழ் நிலையில் உள்ள அடியவர்களாய் நிற்கும்
விருப்பம் யுடையவர்களாய் உனது திருக்கோயிலின் வாசலில் நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-19-

ஸூர்யன் முதலான நவக்ரஹ நாயகர்கள் உன்னுடைய திருப்பாத தூளிகள் பட்டு
நிறைந்து விளங்கும் சிரங்களை யுடையவர்களாய்
ஸ்வர்க்கம் மோக்ஷம் முதலான பேற்றுக்களையும் விரும்பாதவர்களாய்
இந்த யுக கல்பங்கள் முடிந்து விட்டால் தங்களுடைய வாழ்வு முடிந்து விடும் என்ற எண்ணத்தால்
மனம் கலங்கி நிற்கின்றனர்
அவ்வாறு வேறு கல்பம் வந்து விட்டால் உனது திருப்பாத ஸேவையை இழந்து
உனது திருப்பாத தூளியைத் தலையால் தரிக்கும் பாக்கியமும்
இழந்தே போவோமே என்ற பயத்துடன் இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!-20-

உனது திருக்கோபுர முனையில் உள்ள கலசங்களைக் கண்டவுடன் வாழ்வின் இறுதி
லஷ்யமான ஸ்வர்க்கம் மோக்ஷம் பதவி அடைந்து மேல் உலகம் செல்பவர்களும்
அவ்வின்பங்களை வெறுத்தவர்களாய் மீண்டும் மனித லோகத்தில் வாழ்ந்து
உன்னைத் தரிசித்து இருப்பதையே விரும்புகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

திருமகள் நில மகள் நாயகனே
அருள் முதலான கல்யாண குணங்கள் எனும் அமுதம் விளையும் கடல் போன்றவனே
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவனே
சர்வ லோகங்களுக்கும் ஒரே புகலிடமாக விளங்குபவனே
பெருமானே
ஆதி சேஷன் கருடன் விஷ்வக் சேனர் போல்வரால் மலர்கள் தூவி
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் அர்ச்சிக்கப்பட்ட திருவடிகள் யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–22-

ஸ்ரீ பத்மநாப
புருஷோத்தம
வாசுதேவ
வைகுண்ட வாஸீ
மாதவ
ஜனார்த்தன
சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸம் என்னும் திரு மறு அடையாளம் சிஹ்னம் உள்ளவனே
சரணாகதர்களுக்கு பாரிஜாதம் போல் ஸமஸ்த அபீஷ்ட ப்ராதனானவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–23-

மன்மதனின் செருக்கை ஒடுக்கக் கூடிய மிக அழகிய திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவனே
திருமகள் மருவும் ஆசை மிக்க திருக்கண்களை யுடையவனே
மங்கள கரமான குற்றம் அற்ற குணங்களுக்கு உறைவிடம் போன்றவனே
நல்ல பெருமை வாய்ந்த புகழை யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24-

ஸ்ரீ மத்ஸ்ய
ஸ்ரீ கூர்ம
ஸ்ரீ வராஹ நாயகனாக
ஸ்ரீ நரசிம்ஹ வபுவாக
ஸ்ரீ வாமனனாக
ஸ்ரீ பரசு ஏந்திய ரிஷி புத்திரனாக
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாக
ஸ்ரீ ஆதி சேஷ அம்சமான ஸ்ரீ பலராமனாக
யாதவ குலத்தில் உலகோர் அனைவரையும் மகிழ்விக்கும் ஸ்ரீ கிருஷ்ணனாக
திரு அவதரித்தவனே
ஸ்ரீ கல்கியாக திரு அவதரிக்கப் போகும் இறைவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25-

ஏலக்காய் -லவங்கம் -பச்சைக் கற்பூரம் முதலியவற்றின் நறு மணம் கலந்ததும்
மிகச்சிறந்ததுமான ஆகாஸ கங்கையின் தீர்த்தத்தைத் தங்கக்குடங்களில்
நிரப்பிக் கொண்டு தங்கள் தலைகளில் சுமந்தபடி வைதிக நெறிகளில் சிறந்தவர்கள்
மன மகிழ்ச்சியுடன் உனது திருக்கோயில் திருவாசலில் இப்பொழுது நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———-

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26-

கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான்
மது விரிந்து ஒழுகின மா மலர்கள் எல்லாம் -கமல மலர்கள் விகசிக்கின்றன
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்கள் உனக்கு எப்பொழுதும் நன்மை தரும் மங்களங்களை வேண்டிக் கொண்டு
உன்னுடைய திருக்கோயில் திருவாசலை வந்து அடைகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27-

ப்ரஹ்மாதி தேவ ஸ்ரேஷ்டர்களும்
மிகச் சிறந்த முனிவர்களும்
ஸாதுக்களான சநந்தர் முதலான யோகிகளும்
மங்கள உபகரணங்களைக் கையில் ஏந்திக் கொண்டு
உனது திருக்கோயில் திருவாசலிலே வந்து நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

ஸ்ரீ லஷ்மீ தேவிக்கு நிவாஸமானவனே
குற்றம் அற்றவனே
நற்குண சாகரம் போன்றவனே
பிறவிக்கடலைக் கடக்க நிகரற்ற பாலம் போன்றவனே
வேத வேதாந்தங்களால் அறியத்தக்க உண்மையான சிறப்பை யுடையவனே
பக்தர்களுக்கு இனியவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

இந்த வ்ருஷாசல நாதனான திருமலை நாதனைப் பற்றிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை
தினம் தோறும் அதிகாலை வேளையில் பாராயணம் செய்பவர்கள்
தங்களைப் பற்றிய நினைவு துன்பம் அகன்றவர்களாய்
பரம் பொருளையே பரம புருஷார்த்தமாகக் கருதும் பரம பக்தர்கள்
மாத்ரமே அடையக்கூடிய நல்ல அறிவை -பர ஞானத்தை -அடைவார்கள் –

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

——

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூக்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

———–

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேலம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இறே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

———

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட ஸ்ரீ லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ

ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

——————

கல வேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ஸ்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு ஏத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புள்ளின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வாஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூஹ்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ஸ்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
ஸ்ரீ லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆக வேணும்-

—————————

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மணவாளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் ஸூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

———————

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூஹ்ருதம் –
சர்வ பூத ஹூஹ்ருத்தானவனும்

ஸூலபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூகதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூகுணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

———————

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

——————

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத் திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூக்தியாகுமே-

—————————

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூக்திக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் ஸ்ரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலகுக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக் கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

——–

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில்
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –
எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —
ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-
பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் –
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ
செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர
சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–

ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –
நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து
அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யமான குணம் இவை நான்கும்
கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –
சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்
தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்
பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்
ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்
ஆக ஒன்பது குணங்கள்
கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து

ஸர்வஞ்ஞன்  சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —
சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்
ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்
அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு
ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு
சர்வ சேஷின்-கைங்கர்யம் கொள்
முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு –
அவரே தீண்டி கேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்
மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே –
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே
உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை –
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி -கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்
சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே
சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்
கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்
ஸ்ரீ ய பதியாய் –அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்-
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —
கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்

பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்
படிக் கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்
——-

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்
தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை
என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு —
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்

தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —

குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்

தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்–
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –
புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –ஸூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்
————-

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்
சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய -அப் பொழுதே அலர்ந்த –
ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்
மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்–நன் பொன் -சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது —
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது
திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே –
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்
திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —

———–

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

இலச்சினை -லஷணம் சொல்கிறார்-
ஆள வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்
படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்-
கொடி-அமிர்த கலசம்-குடை-வஜ்ரம்-அம்குசம் -சங்கு -சக்கரம் -கல்பக
ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –
பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-
காட்டவே கண்டார் -ரேகை சொல்கிறார் தேசிகன்
அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்
————–

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும்
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள்
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது
அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —
சத்வம் வெள்ளை   வென்றது
கரு நீலம்
சிகப்பு
பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்
சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத
கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்
பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-

——————

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

சாஸ்திரம்–சிஷ்டாசாரம் -பிரபத்யே -மனசில் உறுதி பாடு
உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்
பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே
சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்
மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்
ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்
வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அடி இணை வந்து அடைந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்
காலில் விழ சொல்ல மாட்டான்
மித்திரன் போல் கை பிடி -நண்பன் என்று பிராட்டி அருளியது போல்
பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்
அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்
கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை
மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்
பிரார்த்தனா மதி சரணாகதி —

குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்
களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –
திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –
வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை
வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்
பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –
திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்
சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –
பாரதந்த்ர்யம்
திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்
ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்
மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்
அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்
சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்
சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்
பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்
திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு
நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்
அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்
திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்
தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க
பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-
வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்
நம் ஆசை ஆணை
முகம் கன்னி போக கூடாது என்று அமர
திருஅடி பற்றி விட
பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே
அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்
அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–
தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே
பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –
இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே –அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –தயிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்
மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –
இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் -கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் -திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்
அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் -மகுட -ஸூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிறதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் ஸூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது
அடுத்து அருளுகிறார்
உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்
திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-
காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்
சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–
கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்
சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான்
———————

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி

உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-

தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய்

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–
மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –
அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் ..
அடியேன் தலையில்-காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்-ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்-ஸ்ருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-கூரத் ஆழ்வான் வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்-வேத சிரஸ் -கமல- தாமரை மேல் -நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்
முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —
சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா
பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா
காடு நடந்த பொன் அடி
கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே
குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்
நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே
வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் ஸ்வாமி புஷ்கரணி
வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

அம்லாந ஹ்ருஷ்ய த³வநீதல கீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரி ஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²ல மநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ஸ்ரீ வேங்கடேசா -வாடா மலர்களாகத் தரை மேல் கிடக்கும் மற்ற மலர்களின் இடையே காணப்படுகின்றவையும்
திருவேங்கட மலைச்சிகரம் பெற்ற சிறந்த அணிகலன்களாக விளங்குபவையும்
சகல ஜீவன்களுடைய கண்களையும் மனங்களையும் களிப்படையச் செய்கின்றவையுமான
இந்த உன்னுடைய திருவடிகளே சரணம் என்று அடைகிறேன்

————

ப்ராய꞉ ப்ரபந்ந ஜநதா ப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸ்ரீ வேங்கடேசா -உன்னை வந்து அடைக்கலம் வந்து புகுந்த அநேகம் ஜனங்களுக்கு
முக்கியமாக அனுபவிக்கத்தக்க சொத்துப் போலே உள்ளவையும்
குழந்தைகளுக்குத் தாயின் மார்பகம் போல் அமுதாகின்றவையும்
ஒன்றுடன் ஓன்று இணையாக அமையப்பெற்றவையும்
தனக்கு நிகராக வேறே ஓன்று இல்லாதவையுமான
உனது திருவடிகளே சரண் என்று அடைகிறேன் –

—————

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸ்ரீ வேங்கடேசா நற்குணம் நிறைந்தவர்களால் ஸதா காலம் வணங்கத் தக்க பாத கமலங்களை யுடையவரும்
பிறவிக்கடலைத் தாண்ட உதவும் கருணையால் குளிர்ந்த
திருக்கண்களை யுடையவருமான
ஸ்ரீ மணவாள மா முனிகளால் எனக்கு காண்பிக்கப்பட்ட
எனது திருவடிகளே சரணாக அடைகிறேன் –

———

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

ஸ்ரீ விருக்ஷ மலைக்கு இறைவனே
ஸ்ரீ யப்பதியே
நீ இறங்கும் பொழுது நின் திருவருள் கிடைக்கும்படி செய்து அருளுபவளும்
பிறவிக்கடல் கடந்து நான் அடையத்தக்க பயனாக நீ மாறும் காலத்து உன்னுடன் சேர்த்து
வைத்தும் அருள்பவளுமான திருமகளால் அடையப்பட்டவனும்
குற்றமற்ற குணங்களை உடையவனுமான உனக்கு நான் பணி செய்வதையே விரும்புபவனே தவிர
என்னையே நான் பெரிது என்று எண்ணி எனக்கு -என்னுடைய ஆனந்துக்காகவே
பணி செய்வேனாக இருக்க மாட்டேன் –

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     -1-

திருமகள் விரும்பும் நாதனும்
ஸர்வ மக்களுக்கும் நிதி போன்றவனும்
யாசிப்பவர்களுக்கு வரையாது வழங்கும் பொற் குவை போன்றவனும்
திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளுபனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்

———

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

திருமகளும் வியந்து நோக்கத்தக்க அழகிய புருவங்கள் இணைந்து விளங்கும் திருக்கண்கள் யுடையவனும்
கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் என்றபடியே
ஸகல லோகங்களுக்கும் கண் போன்றவனுமாகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———-

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்    3-

திரு வேங்கட மலைச் சிகரத்துக்கு மங்கள திரு ஆபரணமாக விளங்குகின்ற திருவடிகளை யுடையவனும்
ஸர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமானவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———–

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

அங்கங்கள் யாவுமே அழகு என்னும் செல்வத்தால் அனைவருடைய உள்ளங்களையும்
எப்பொழுதுமே மயங்கிப்போய் இருக்கும்படிச் செய்யக் கூடிய அழகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———————

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்   5-

அழிவற்றவனும்
அழுக்கு அற்றவனும்
ஆனந்த ஸ்வரூபனும்
ஞான ஸ்வரூபனுமாக
எல்லார் உள்ளத்திலும் உயிராக விளங்கும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————-

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்        –6-

தானாகவே எல்லாமும் அறிந்தவனுக்கு
ஸர்வ சக்திகளும் பெற்றவனும்
ஸமஸ்த இதர வைலக்ஷணம் கொண்டவனும்
நல்ல ஒழுக்கம் உடையவனும்
எளிதில் சென்று அடையும்படி பின்னானார் வணங்கும் ஜோதியுமுமானவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————–

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்      -7-

எங்கும் நிறைந்த பரம் பொருளும்
எண்ணியவை யாவையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவனுமான
பரமாத்மாவாகவும்
எல்லாமே தம் தம் பணிகளில் இயங்கக் காரணமாய் இருப்பவனுமான
பரதத்வ உண்மைப் பொருள் அனைத்திலும் உயர்ந்தவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்    -8

காலம் உள்ளவரை அயராமல் ஸேவிக்கும் பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய
ஆரா வமுதமாய் இருக்கக் கூடிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————-

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்     –9-

தனது திருவடிகளே சரணம் என்று சகல ஜீவன்களுக்கும்
தனது திருக்கரத்தால் அன்புடன் காட்டிக் கொடுத்து அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————

தயாம்ருத் தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்     -10-

கருணை என்னும் அமுதக்கடலினுடைய அலைகளைப் போலே
குளிர்ந்த திருக் கடைக் கண்களால் உலகத்தை நினைக்கின்ற
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரக்பூஷாம் பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்    –11

தான் அணியும் மாலைக்கும்
அணி மணிகள் உடை ஆயுதம் இவைகளுக்கும்
அழகை யுண்டு பண்ணி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவனும்
சகல துக்கங்களையும் போக்கி அருள் செய்பவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்    12-

ஸ்ரீ வைகுண்டத்தில் பற்று நீங்கி
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி தடாகத்தின் கரையில்
திருமகளோடு விளையாடி அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

——–

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே

ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     –13

ஸ்ரீ மணவாள மா முனிகள் போன்ற பக்தர்களின் திரு உள்ளங்களில் நித்ய வாஸம் செய்து அருள்பவனும்
எல்லா உலகங்களில் எல்லாப் பொருள்களிலும் கன்னுக்குத் தெரியாமல்
கரந்து எங்கும் பரந்துள்ளவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்    -14-

எம்பெருமானுக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று
என்னுடைய ஆச்சார்யர்களாலும்
மற்றும் உள்ள ஆச்சார்யர்களாலும்
பூஜிக்கப் பட்டவருமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

***

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நர நாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாஶல நாயகாய நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:
ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:
ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம:
ஓம் யஜ்ஞேஶாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தாநதர்மபராய நம:
ஓம் யாஜிநே நம:
ஓம் கநஶ்யாமள நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யதுகுலாக்ரணயே நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:
ஓம் தத்வஸந்நிதயே நம:
ஓம் த்வமர்த்த லக்
ஓம் பாவநாய நம
ஓம் ஸர்வேஶாய நம:
ஓம் கமலாகாந்தாய நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:
ஓம் யாதவாசலவாஸிநே நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:
ஓம் ரம்ய விக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:
ஓம் ஜாக்ரதே நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம:
ஓம் யதிஶேகர பாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசநாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் கணவேங்கடாய நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:
ஓம் ஸ்வாமிநே நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

May 17, 2023
ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்: நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார். “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம், அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.” தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை யறிவாரார் அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகரை யல்லால் பேதை மனமே உண்டோ பேசு   –உபதேச ரத்ன மாலை                                           திருநக்ஷத்ரம்: ஆனி அனுஷம் அவதார ஸ்தலம்: காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்) ஆசார்யன்–நம்மாழ்வார் ஶிஷ்யர்கள்: உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகர தாஸர், ஏறு திருவுடையார், திருக் கண்ண மங்கை ஆண்டான், வான மா மலை தெய்வ நாயக ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான், கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான். அவர் சீடர்கள்களில் முக்கியமானவர்கள் :- 1.உய்யக்கொண்டார்(திருவெள்ளறை புண்டரிகாட்சன்) 2. குருகைக் காவலப்பன் 3.கீழையகத்தாழவான் 4.மேலையகத்தாழ்வான் 5. திருகண்ணமங்கையாண்டான் 6. பிள்ளை கருணாகர தாசர் 7.நம்பி கருணாகர தாசர் 8. ஏறு திருவுடையார் 9 வான மா மலை தெய்வ நாயக ஆண்டான் 10. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை 11.சோகத்தூர் ஆழ்வான் . ஜ்யேஷ்டா மாஸே த்வநூராதே ஜாதம் நாத முநிம் பஜே| ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ: ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்ய ப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன் ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை: நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம் திருஅவதாரம்–முதலாசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகள், சேனை முதலியாரின் படைத் தலைவர் கஜாநனர் என்கிற யானை முக நித்ய ஸூரியின் அம்சமாக அவதரித்தார். சோழ நாட்டில் வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயிலில்) கி.பி. 823 இல் சோபக்ருத் வருடம், ஆனி மாதம் 7ஆம் தேதி, பௌர்ணமி, புதன் கிழமை, அனுஷ நட்சத்திரத்தில், ஈஸ்வர பட்டரின் புத்திரராக சொட்டைக் குலமெனும் சடமர்ஷண கோத்ரத்தில் பிறந்தார். இவர் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் யோக வித்தையில் ஈடுபட்ட பிறகு, நாதமுனிகள் ஆனார். ஸ்ரீமந் நாதமுனிகள், வீர நாராயணபுரம் (காட்டு மன்னார் கோவில்) என்ற திவ்ய தேசத்தில், ஈஶ்வர பட்டாழ்வார்க்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி, நாத ப்ரஹ்மர் என்றும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர் தான் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது. திருமணம்:- ஸ்ரீமந் நாதமுனிகள் அரவிந்தப்பாவை என்ற உத்தமியை மணந்து கொண்டு காட்டுமன்னார்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீர நாராயணப் பெருமாளுக்கு நித்திய கைங்கர்யம் (தொண்டு) செய்து வந்தார். நாதமுனிகள் அவருடைய திருத்தகப்பனார் மற்றும் அவருடைய திருக்குமாரருடன் (ஈஶ்வர முனி) வட மதுரை, வ்ருந்தாவனம், கோவர்தன கிரி, த்வாரகை, பதரிகாஶ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு) கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்பச் செல்கிறார். திரும்பும் வழியில் வாரணாசி, பூரி ஜகந்நாத், ஸிம்ஹாசலம், திருவேங்கடம், கடிகாசலம், காஞ்சிபுரம் (மற்றும் பல திவ்ய தேசங்கள்), திருவஹிந்திரபுரம், திருக்கோவலூர், திருவரங்கம் மற்றும் திருக்குடந்தை திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் பண்ணிவிட்டுக் காட்டு மன்னார் கோவிலுக்குச் செல்கிறார். ஒரு நாள் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை திருநாராயணபுரம்) காட்டு மன்னார் கோயில் எம்பெருமான் மன்னனார் முன்பு திருவாய்மொழியில் உள்ள “ஆராவமுதே…” பதிகத்தை சேவித்தார்கள். அந்த பாசுரத்தின் அர்த்தத்தை அந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடம் நாதமுனிகள் கேட்க, அந்த 11 பாசுரத்தை தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டனர். திருக்குருகூருக்கு சென்றால் இந்த பாசுரங்களை பற்றி ஏதெனும் தெரிந்துகொள்ளலாம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் நாதமுனிகளிடம் சொல்ல, உடனே நாதமுனிகளும் மன்னனாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) சென்றார். ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் ஶிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார். பராங்குச தாசர், நாதமுனிகளுக்கு கண்ணிநுண்சிறுத்தாம்பு 11 பாசுரங்களை சொல்லிக் கொடுத்து, அதை 12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்திக்க சொன்னார். நாதமுனிகள் ஏற்கனவே அஷ்டாங்க யோகத்தில் வல்லவராக இருந்தமையால், உடனே நம்மாழ்வாரைத் தியானித்து 12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பை அனுசந்தித்து முடித்தார். உடனே நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி அஷ்டாங்க யோகம், நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினார். எப்படி எம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினானோ, அதே அர்த்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார். இதைத் தான் உபதேஶரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச் செய்தார். நாதமுனிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து காட்டு மன்னார் கோவிலுக்கு வந்து மன்னனார் முன்பு நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தைச் சேவித்தார். மன்னனார் மிகவும் மகிழ்ந்து நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை வகைப்படுத்தி உலகெங்கும் பரப்புமாறு நியமித்தார். நாதமுனிகள் அருளிச் செயலை (நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை) தேவ கானத்தில் இசைத்து, அதைத் தன் மருமகன்களான கீழை அகத்தாழ்வான் மற்றும் மேலை அகத்தாழ்வானுக்கு கற்றுக் கொடுத்து அவர்கள் மூலம் உலகமெங்கும் பரப்பினார். நாதமுனிகள் தேவகானத்திலும் வல்லவராக இருந்தார். ஒரு முறை ஒரு ராஜா   ஸாமான்ய கானம் இசைப்பவரையும், தேவ கானம் இசைப்பவரையும் வேறுபடுத்த முடியாமல் குழம்ப, நாதமுனிகள் தேவ கானம் இசைப்பவரை அடையாளம் காட்டினார். அந்த ராஜா அவருடைய திறமையைப் பற்றிக் கேள்வி கேட்க,  ஒரே சமயத்தில் 4000 தாளங்களை ஒலிக்கச் செய்து அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒவ்வொரு தாளத்தின் ஒலியையும் உணர்ந்து கூறினார். இதைக் கண்ட அந்த ராஜா, நாதமுனிகளுடைய திறமையை அறிந்து அவருக்குச் செல்வங்களைக் கொடுத்தார், ஆனால் நாதமுனிகளோ அந்தச் செல்வத்தில் ஆசை இல்லாமல் இருந்தார். நாதமுனிகள் கண்ணன் எம்பெருமான் மீது உள்ள ப்ரீதியினால் தன்னுடைய திருப் பேரனாருக்கு “யமுனைத் துறைவன்” என்று பெயர் சூட்டுமாறு ஈஶ்வர முனியிடம் (நாதமுனிகள் குமாரர்) கூறினார். பிறகு அனைத்து ஸம்ப்ரதாய விஷயங்களையும் யமுனைத் துறைவருக்குக் கற்றுக் கொடுக்குமாறு அவருடைய ஶிஷ்யர்களிடம் கூறினார். நாத முனிகள் எம்பெருமானை தியானித்துக்கொண்டிருக்கும் போது அனைத்தையும் மறந்து விடுவார். ஒருமுறை நாத முனிகள் யோகத்தில் இருக்கும் பொழுது ஒரு ராஜா தன்னுடைய மனைவிகளுடன் அவரைச் சந்திக்க வந்தார். அவருடைய யோகத்திற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று நினைத்து அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் நாதமுனிகளோ அவருடைய பக்தி பாவத்தினால் அவர்களை “கிருஷ்ணர் மற்றும் கோபிகைகள்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். மற்றோரு முறை அந்த ராஜா வேட்டையாடி விட்டு, அவருடைய துணைவி, ஒரு வில்லாளன் மற்றும் ஒரு குரங்குடன் நாதமுனிகளைச் சந்திக்க வந்தார். மறுபடியும் நாதமுனிகளின் பக்தி பாவத்தினால் அவர்களை “ராமன், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமன்” என்று நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார். தன் பார்வையிலிருந்து மறைந்தவுடன் அங்கேயே மயங்கி விழுந்தார். எம்பெருமானுடைய பிரிவைத் தாங்க முடியாமல் உடனே இவ்வுடலை விட்டுப் பரமபதம் சென்று அடைந்தார். இதை அறிந்த ஈஶ்வர முனி மற்றும் நாதமுனிகளுடைய ஶிஷ்யர்கள் அந்த இடத்திற்கு வந்து அவருக்கு சரம கைங்கர்யங்களைச் செய்தார்கள். நாதமுனிகள் முயற்சியால் தான் நமக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ (அருளிச்செயல்) கிடைத்தது. ஸ்தோத்ர ரத்னத்தில் ஆளவந்தார் முதல் மூன்று ஶ்லோகத்தில் நாதமுனிகளுடைய பெருமைகளையே கூறுகிறார். ஶ்லோகம் 1 – முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந் நாதமுனிகளின் உண்மையான செல்வமான ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார். நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே | நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே || நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார். அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன். ————- ஶ்லோகம் 2 – இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது. அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது” என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார். தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே | நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் || மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

மதுகைடபர்கள் வேதங்களை அபகரித்தது போல ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு நீண்ட நெடுங்காலமாக தர்சன நிர்வாஹகர்களான ஆசார்யர்கள் ஒருவரும் இல்லாமல் போனதாலும், மேலும் அஸுரப்ரக்ருதிகளின் சூழ்ச்சியாலும் அஜ்ஞானம் என்னும் பேரிருள் இவ்வுலகத்தை சூழ்ந்து திராவிட வேதத்தில் மக்களுக்கு கலக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவற்றை மறந்து போனார்கள். மதுரமான தமிழ் பாசுரங்கள் மறைந்தும் போயின. அச்சமயத்தில் திருக்குடந்தை ஆராவமுதனின் காரூண்யத்தால் ஆழ்வார் திருநகரி சென்றடைந்து, மதுரகவியாழ்வாரின் சிஷ்ய பரம்பரையினர் மூலம் கண்ணிநுண் சிறுத்தாம்பைப் பெற்று அதனைப் பல்லாயிரம் முறை பாராயணம் செய்து ஆழ்வாரை ஸாக்ஷாத்கரித்து தமிழ் வேதங்களை மீட்டெடுத்து அவற்றைத் திரும்பவும் உலகில் நடையாடச் செய்தவர் ஸ்ரீமந் நாதமுனிகள்.

ஆகவே இவருக்கும் ஸ்ரீ ஹயக்ரீவனுக்கும் ஒப்புமை அதிகம். அதனாலேயே ஸ்ரீ ஆளவந்தார், எம்பெருமானின் மற்ற அவதாரங்கள் இருக்க ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரத்தை முதலில் இவர் விஷயத்தில் அருளிச் செய்தது இங்கு நன்கு சுவைக்கத்தக்கது.

“சடகோபமுனி” வழிவந்த முனி

ஜ்ஞானமும், வைராக்யமும், கண்ணனிடத்தில் கடலைப் போல கரைகாண முடியாத பக்தியும்  கொண்ட ஸ்ரீமந் நாதமுனிகள், ஆழ்வார் காட்டியபடி சரணாகதியை மோக்ஷத்திற்க்காக அநுஷ்டித்தவர். ஆயினும் எம்பெருமான் அநுபவத்தில் இருக்கும் த்வரையினால் ஸ்வயம் ப்ரயோஜனமாக பக்தியோகத்தை அநுஷ்டித்து அவனை ஸாக்ஷாத்காரம் பண்ணி ஸேவித்து வந்தவர். அதனாலேயே சடகோபமுனிக்குப் பிறகு நம் ஸம்ப்ரதாயத்தில் “முநி”(நாதேந முநி)என்ற ஏற்றத்தையும் பெற்றவர் இவரே.
நாதே₂ந முநிநா தேந ப₄வேயம் நாத₂வாநஹம் | யஸ்ய நைக₃மிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் க₃தம் ||-ஸ்ரீ யதிராஜசப்ததி – 5

“வேதத்தில் மறைந்து கிடந்த ஸகல ரஹஸ்யார்த்தங்களும் எம்பெருமான் மற்றும் ஆழ்வார் அநுக்ரஹத்தால் எவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாய் விளங்கிற்றோ அவரையே தலைவராகக் கொண்டவனாக நான் ஆகிறேன்”.

———— ஶ்லோகம் 3 – தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே, ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார். பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: | லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி யோகாய நாதமுநயே யமிநாம் வராய || பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள். அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள். ————— ஶ்லோகம் 65 – ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’ (ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும், என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும் ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்க, எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லி இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான். ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார். அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் | பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா || எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான, தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும். ——– மேலே கண்ட 4 ஶ்லோகங்களிலிருந்து நாதமுனிகளுடைய பெருமையை நாம் அறிகிறோம். அச்சுதன் மீதும் ஆழ்வார் மீதும் ப்ரீதி அபிவ்ருத்தி அடைய நாமும் நாதமுனிகளுடைய திருவடித் தாமரைகளை வணங்குவோம். ஆளவந்தார் அவதாரம்:- யமுனைத் துறைவனாகிய கண்ணபிரானது வாக்குபடி, ஸ்ரீமந் நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிக்கும்,  மருமகள் ஸ்ரீரங்கநாயகிக்கும் ,தாது வருடம் , ஆடி மாதம் , வெள்ளிக் கிழமை , பெளர்ணமி திதி கூடிய உத்ராட நட்சத்திரத்தில் , ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு “ யமுனைத் துறைவன்” என்று  பெயர் சூட்டி அழைத்தனர். யமுனைத் துறைவன், வித்யா கர்வமிக்க ஆக்கியாழ்வான் என்பவரை வேதாந்த வாதத்தில் வென்று, சோழ மன்னனிடம் பாதி இராஜ்யம்  பெற்று, ஸ்ரீ ஆளவந்தார் என்று அழைக்கப்பட்டார். பின் ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தால் , அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார். ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீமந் நாராயணன் திருவடியடைதல்:- இப்படி பல பெருமைகளை பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளை தன் இருப்பிடமான பரமபத்திற்கு அழைத்துக் கொள்ள எண்ணினான் நாராயணன். ஒருநாள் பெருமாளை சேவிக்க சன்னதிக்கு சென்றார் நாதமுனிகள். அப்போது வில்லுடன் இருவரும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு குரங்குடன் வந்து அவருடைய மகளிடம்,’ ஸ்ரீமந் நாதமுனிகள் எங்கே?’ என்று கேட்டனர்  அதற்கு அவள் தன் தகப்பனார் பெருமாளை சேவிக்க சென்றதாக சொன்னாள். வந்தவர்கள் சென்று விட்டனர். கோயிலுக்கு சென்று திரும்பியதும் நாதமுனிகளிடம் மகள் அவரைத் தேடிவந்தவர்களைப் பற்றிக்கூறினாள். ஸ்ரீமந் நாதமுனிகள் ,’சக்ரவர்த்தி திருமகனே தன்னை அழைக்க வந்திருப்பார். தன்னுடன் சேர்த்துக் கொள்ள பகவான் நடத்திய திருவிளையாடலே இது’  என்று சொல்லி  ’எனக்கு அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே’என்று கதறியவாறு அவர்கள் சென்ற வழியைக் கேட்டு ஓடினார். இவ்வாறு ஓட்டமும் நடையுமாய் சென்றவர், வழியில் பூச்சரம் ஒன்றை கணடார். அதைக் கண்டவர், “ஆகா! இது சீதாபிராட்டி அணிந்திருந்த தல்லவா, விழுந்திருக்கிறது” என்று சொல்லியவாறு சென்றார். தற்பொழுது அந்த இடமே “பூவிழுந்த நல்லூர்”  என்று அழைக்கப்படுகிறது.. இன்னும் சிறிது தூரம் சென்றபின் ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்ததைக் கண்டவர் ,  அவர்கள் இந்த வழியில் செல்கின்றனர்  என்று ஊர்ஜிதப்படுத்தினார். அந்த இடமே ’குரங்கடி’ என்று முன்பும் தற்பொழுது “குறுங்குடி” என்றும் அழைக்கப்படும். ஊர். இவ்வாறு பயணத்தை தொடர்ந்தவர் வழியில் எதிரே கண்டவர்களைப் பார்த்து தன்னைப் பார்க்க வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி ”அவர்களை இந்த வழியில் கண்டீர்களா?” என்று கேட்டார். அவர்களும் “ஆம்! கண்டோம்! கண்டோம்! அவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், முகம் பிரகாசமாகவும் இருந்தது “ என்றனர் . அந்த இடமே தற்பொழுது இருக்கும்“கண்ட மங்கலம்” என்ற ஊர். இவ்வாறு அவர்கள் சொன்ன உடன் மிக்க ஆர்வம் கொண்ட அவர் கங்கை கொண்ட சோழ புரத்தை நோக்கிச் சென்றார், இவ்வூருக்கு கிழக்கே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்றவர் எதிரே வந்தர்களிடம் தன்னை காண வந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி “கண்டீர்களா? என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் ! என்று சொன்னார்கள்.. தன்னை காண வந்த பரமாத்மாவை  தான் காணவில்லை என்ற ஏக்கத்தில்  இருந்தார். கடவுளிடம் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அந்த நிமிஷமே பகவான் அழைத்துக் கொள்வார் என்பதற்கு இணங்க , கொளுத்தும் வெயிலில் ஸ்ரீஇராமபிரானைத் தேடிச்சென்ற  ஸ்ரீமந் நாதமுனிகள் , அப்பொழுது ஆசாரியரைத் தேடிவந்த சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் என்ற ஸ்ரீராமமிஸ்ரர் மடியில் தலைசாய்த்து “என்னை சக்கரவர்த்தித் திருமகன் அழைக்கிறான், நான் புறப்படப் போகிறேன்” என்றவர், “எனக்கு ஒரு அபிலாஷை . பேரன் ஆளவந்தாரை எப்படியாவது அழைத்து வந்து நம் ’குலதனத்தை’ (திருவரங்கநாதரை) காண்பித்து விடு” என்று கூறியவாறு எம்பெருமான்  திருவடிகளை அடைந்தார். ஸ்ரீராமனை தேடி போனவருக்கு  அவர் பெயர் தாங்கிய ஸ்ரீ இராம மிஸ்ரர் என்ற சீடரின் மடி கிடைத்தது. ஸ்ரீமந் நாதமுனிகளின் சீடர்களான உய்யக் கொண்டார், குருகைக்காவலப்பன், ஆகியோர் அடங்கிய் சீடர்கள் குழாம் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனியைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்தனர்.. பெருந்திரளான அடியார்கள் முன்னிலையில் அவ்விடத்திலேயே சரம விக்ரகத்தைப் பள்ளிப்படுத்தினர்.அவ்விடத்தில் “திருவரசு” அமைத்து அதன்மேல் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தனர். அந்த இடம்தான் “சொர்க்கப் பள்ளம்”என்று இப்போது அழைக்கப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள குருவாலப்பர் திருக்கோயிலில் வணங்கிவிட்டு வரும் போது ”நாதமுனிகள் திருவரசு செல்லும் பாதை” என்ற ஒரு புதிய அறிவிப்புப் பலகையைப் பார்க்கலாம் மீன்சுருட்டி கூட்டுச் சாலையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம் 200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’. ஸ்ரீமந் நாதமுனிகளின் “திருவரசு ”அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் வட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊருக்கு கிழக்கே 1கி.மீ தூரத்திலுள்ள சம்போடை என்ற ஊரின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னார்குடி, சிதம்பரம் மார்க்கத்தில் 12 கி.மீ தூரத்திலுள்ளது சம்போடை கிராமம். கும்பகோணம் சென்னை மார்க்கத்தில் சுமார் 30கி.மீ தூரத்துலுள்ள ஜெயங்கொண்டம் கூட்டுரோடு என்ற பிரிவிலிருந்து மேற்கே ஒரு கி.மீ சம்போடை கிராமம். நாதமுனிகளுடைய வாழி திருநாமம்: ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே ——— வைதிக மதங்கள் -வேதத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ளுபவை வைணவம் சைவம் சாத்தமம் காணா பத்த்யம் ஸுரவம் கௌமாரம் வைதிக மாதமாய் இருந்தும் வேதத்தை மறைக்குமாக ஏற்றுக் கொள்ளுபவை நியாயம் வைசேஷிகம் சாங்க்யம் யோகம் மீமாம்ஸை வேதாந்தம் அவைதிக தத்வம் சாருவாகம் உலோகாயதம் புத்த ஜைன மதங்கள் ————– ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் மங்கள ஸ்லோகம் யோ வேத்தி யுகபத் -உள்ளூர் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக ஸதா -எப்போதும் – ஸ்வத -இயல்பாகவே தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம் ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத் உவமானம் நான்காவதாக நையாயிகர் லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம் மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன் அபின்ன நிமித்த காரணம் நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள் வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா கட்டைப் போல் -நையாயிகன் தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார் நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார் ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை – கண்டிக்க ஸ்லோகங்கள் ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம் அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே   குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார் இரண்டாவது இல்லையே அஞ்ஞானம் அநிர் வசனீயம் ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும் கயிறு பாம்பு போல் ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால் ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும் ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை தன்னைத்தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும் இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே ப்ரஹ்மம் அனுபவம் அறிவு அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம் ஞானம் அஞ்ஞான விரோதி அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம் நாத முனி ஆதி முனி ஓதும் முனி கீதா முனி தாத முனி தூத முனி ரெங்க நாத முனி பாத முனி முனி போத முனி பேத முனி அபேத முனி மோத முனி வேத முனி ——————————————————— ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் – ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –