Archive for the ‘Sri Bhashyam’ Category

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -முதல் பகுதி –பிரதிபக்ஷ நிரஸனம்-

July 14, 2024

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

——-

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: I
I–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

இனி மேலே கத்யமாகவே அருளிச் செய்கிறார் –

3–அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய -தத் பிராப்தி பல

(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னிட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத் யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)

உலகிலுள்ள அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் புரியும்படி நற் பொருளை நிலை நிறுத்து வதற்காக வேதக் கூட்டங்Thaliaதலை எனப்படும் உப நிஷத்துக்களில் நின்றும் இனி வரும் பொருள் நன்கு அறிவிக்கப் படுகிறது

ஜீவாத்மா அதன் மெய் நிலை பரமாத்மா அதன் மெய் நிலை இவற்றை அறிந்து வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்து அந்தப் பரம புருஷானின் இரு திருவடிthyaanaத்யானம் அர்ச்சனம் வணக்கம் இவைகளை அவனுடைய உகப்புக்காகச் செய்து அவனை அடைவதையே பலனாகக் கொள்ள வேண்டும் –

உபநிஷத்துக்களின்றும் இனி வரும் பொருள் நன்கு அறிவிக்கப்படுகிறது –
யாதாத்ம்ய ஞானமும் – வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப் பிடித்து பரம புருஷனின் திருவடித் தாமரைகளில் த்யானம் அர்ச்சனம் நமஸ்காரம் இவற்றை பகவத் ப்ரீதி அர்த்தமாகக் -கைங்கர்ய பரமாக -அவன் உகப்புக்காகச் செய்து இத்தையே ஸ்வயம் பிரயோஜனமாகக் கொள்ள வேண்டும்

அஸ்ய ஜீவாத்மநோ அநாத் யவித்யா ஸஞ்சித புண்ய பாப ரூப கர்ம ப்ரவாஹ ஹேதுக ப்ரஹ்மாதி ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மக சதுர்வித தேஹ ப்ரவேஸ க்ருத தத் தத் ஆத்மாபிமான ஜெனித அவர்ஜனீய பவபய வித்வம்ஸநாய தேஹாதி வ்யதி ரிக்த ஸ்வரூப -தத் ஸ்வ பாவ -தத் அந்தர்யாமி பரமாத்ம -தத் ஸ்வபாவ -தத் உபாஸன-தத் பல பூதாத்ம ஸ்வரூப ஆபிர்பாவ பூர்வக அனவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே ப்ரவ்ருத்தம் வேதாந்த வாக்ய ஜாதம்
தத்வமஸி
அயமாத்மா ப்ரஹ்ம
ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா ஸரீரம் ய ஆத்மான் அந்தரோ யமயதி ஸதே ஆத்ம அந்தர்யாம் யம்ருத
ஏஷ –ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண
தமேதம் வேத அநு வசனனேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஜேந தாநேந தபஸா நஸகேந
ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
தமேவம் வித்வானம் ருதமிஹ பவதி நான்யப்பந்தா அயனாய வித்யதே –
இத்யாதிகம்

இந்த ஜீவாத்மா உடன் தோன்றிய அசேதனப் பொருள்கள் அதன் ஆரம்பம் இல்லாத் தொடர்புகள் -புண்ய பாபங்கள் -அதன் அடியான ஜன்மங்கள் -ப்ரம்மா முதல் தேவர் மனிதர் விலங்கு ஸ்தாவரம் முதலான நான்கு விதப் பிறப்புக்கள்
அதனால் ஏற்பட்ட அந்தந்த சரீரங்களையே ஆத்மாவாக நினைத்து அதனால் ஏற்பட்ட பிறவிச் சுழல் பயத்தைப் போக்கி -உடலின் நின்றும் வேறுபட்ட ஆத்மா அதன் மெய் நிலை அதன் மெய்க்குணம் -அதற்க்கு உள்ளுறைவானாயுள்ள பரமாத்மா -அதன் மெய்நிலை குணம் இவற்றையும் அறிasthmஆத்ம மெய் நிலை எய்தி குறைவற்ற ப்ரஹ்மானந்தம் அடைதல் எனச் சொல்ல வந்தது வேதாந்தம்

ஆப்நோதி -ப்ரஹ்மத்தை அடைகிறான் -ஆனால் ப்ரஹ்மமாகவே ஆகிறான் என்ற அத்வைதிகளின் கொள்கை தவறாகக் கூறுகிறது

————–

4–ஜீவாத்மந ஸ்வரூபம்
தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷ ரூப நாநாவித பேத ரஹிதம்
ஞான ஆனந்த ஏக குணம்
தஸ்யை தஸ்ய கர்ம க்ருத தேவாதி பேத வித்வஸ்தே ஸ்வரூப பேதோ வாசா மகோசர ஸ்வ சம்வேத்ய
ஞான ஸ்வரூபம் இத்யேதாவ தேவ நிர்தேஸ்யம் தச்ச ஸர்வேஷாம் ஆத்மாநாம் சமாநம்

(மோக்ஷ தசையில் ஸ்வரூப பேதம் மட்டுமே இருக்கும் -எல்லா ஆத்மாக்களும் சமம் -தேவாதி பேத ஆகாரங்கள் போன பின்பும் வெவ்வேறே ஜீவன்)

(ஸ்வ சம்வேத்ய-ஸ்வயம் வேத்ய -ஸ்வயம் ப்ரகாஸம்)

ஜீவாத்ம மெய் நிலை–தேவ மனித விலங்கு ஸ்தாவரம் என்ற நான்கு பிறப்புகளில் தான் ஏற்று இருக்கும் அசேதன பொருளின் வேறுபாட்டுக்கு ஏற்ப பற்பல விதமாய் இருக்கும்
குணம் ஞானமும் ஆனந்தமும் எப்பொழுதும் கொண்டிருக்கும் -அந்த அப்படிப்பட்ட ஜீவாத்மாக்களுக்கு வினைகளால் ஏற்பட்ட புண்ய பாபங்களுக்கு ஏற்ப தேவர் முதலிய உருவ வேறுபாடு சொற்களுக்கு அடங்காது –
தானே அறியப்படுவது
ஆத்மாவுக்கு ஞானமும் ஆநந்தமுமே மெய் நிலை என்பது வெளிப்படை -இதனால் ஆத்மாக்கள் அனைத்தும் ஒருபடித்தானவை –

——

5-ஏவம் வித சித் அசித்தாத்மக பிரபஞ்சஸ்ய -(ஸ்ருஷ்டிக்கப்பட்ட ) உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்தன ஏக ஹேது பூத
ஸமஸ்த ஹேய பிரத்ய நீக தயா-அநந்த கல்யாணைக தான தயாஸ(ஏக தான தயா அனைத்துக்கும் ஏக ஆஸ்ரயம் இவனே )-(இரண்டாலும் விலக்ஷணன் )
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண
சர்வாத்ம
பர ப்ரஹ்ம
பரஞ்சோதி
பரமாத்மா
சதாதி சப்த பேதைர் நிகில வேதாந்த வேத்யோ பகவான் நாராயண புருஷோத்தம
இத் யந்தர்யாமி ஸ்வரூபம்

(ஸ்வரூபம் விளக்கி மேல் ஸ்வ பாவம்)

தஸ்ய ச வைபவ ப்ரதிபாதன பரா பேத ஸ்ருதய
ஸ்வ இதர ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாதாந்தர ஆத்ம தயா நிகில நியமனம்
தத் சக்தி -ததம்ச -தத் விபூதி -தத் ரூப -தத் சரீர -தத் தனு -ப்ரப்ருதிஸ் சப்தை தத் சாமாநாதி கரண்யேந ச ப்ரதிபாத யந்தி

(சக்தி ரூபம் -அகிலம் ஜகத்
அம்சம் -அம்சாதிகரணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம் -branch office போல்
விபூதி -விபூதிமான்
ரூப -சரீர -தனு)

இவ்வாறு சேதன அசேதன பொருள்கள் கலந்த பிரபஞ்சத்தின் படைப்பு காப்பு அழிப்பு ஆகிய பிறவிச் சூழலில் தள்ளும் தாழ்ந்த குணங்களுக்கு எதிர்த்தட்டாக முடிவற்ற குணங்களுக்கும் ஆனந்தத்திற்கும் இருப்பிடமாய்
தன்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பொருள்களிலும் சிறந்தவனாய்
அளவற்ற நற்குணங்கள் கூட்டங்கள் உள்ளவனாய்
ஸர்வாத்ம
பர ப்ரஹ்மம்
பரஞ்சோதி
பரதத்வம்
பரமாத்மா
ஸத்
என்று பலவகையான சொற்களால் எல்லா வேதங்களாலும் குறிப்பிடப் படுபவனாய் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீSakthiசக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்தவனாய் ஈர் ஏழு பதினான்கு உலகுகளையும் பரமபதத்தையும் உடையவன்
நாராயணன் புருஷோத்தமன் என்னும் சொற்களால் அறியப்படுபவன்

இப்படிப்பட்ட சிறப்புகளால் கூறப்படுவது ஜீவாத்மா பரமாத்மாவை வேறு படுத்திக் கூறும் வேதங்களுக்கு ஒத்து இருக்கும்
அவ்வாறே அந்த சக்தி -அந்த அம்சம் -அந்தச் செல்வம் -அந்த உருவம் அந்த உடல் என்று கூறும் சொற்கள் ஸாமா நாதி கரண்யத்தால் அவனுடைய ஆளுமையையே குறிக்கின்றன
ஆகவே எல்லாச் சொற்களும் அவனுடைய பெருமையைக் கூறுகின்றன என்பதில் முரண் இல்லை

————

6-தஸ்ய வைபவ ப்ரதிபாதன பராணாம் ஏஷாம் சாமாநாதி கரண்ய அதீநாம்

(ப்ரஹ்மம் வைபவம் காட்டும் சாமானாதிகார பரமான ஸ்ருதி வாக்கியங்கள் -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
சேஷ சேஷி -நியந்தரு நியாம்ய சரீரி சரீர- ஆதார ஆதியே பாவம்-ஒன்றும் ஒன்றியே இருக்கும்-
ஒன்றும் தேவும் யாதும் இல்லா அன்று –)

விவரணே ப்ரவ்ருத்தா கேசந(அநாதரணீயம் -ஐக்யம் சொல்லி மேல் மேல் )
நிர்விசேஷ ஞான மாத்ரமேவ ப்ரஹ்ம–(சின் மாத்ர -ஒன்றை விலக்க மாத்ர பத பிரயோகம் -சித் ஏவ -வேறே ஒன்றை விலக்கும்
சித் -ஞானம் ஒன்றே -ஞாதா -ஜேயமும் இல்லை )தச்ச நித்ய முக்த ஸ்வ பிரகாசம் அபி
தத்வமஸ்யாதி சாமாநாதி கரண் யவகத ஜீவ ஐக்யம்(தத் ஸப்த வாசியான ப்ரஹ்மம்- த்வம் ஸப்த வாசியான ஸம்ஸாரி ஜீவன் உடன் ஐக்யம் )
ப்ரஹ்மைவ அஞ்ஞம்  முச்யதேச (அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம் ப்ரஹ்மமே ப்ரஹ்மம் ஏவ பத்த ஜீவன் முக்த ஜீவன் ) நிர் விசேஷ சின்மாத்ராதி ரேகி
ஈஸ ஈஸிதவ்ய (பதார்த்த தாரதம்யங்களுக்கு உப லக்ஷணம் )அநந்த விகல்ப ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஜகத் மித்யா(கயிறு பாம்பு யாதாத்ம்ய ஞானத்தால் அறிவது போல் இதம் ப்ரஹ்மம்-ஞான நிவர்த்ய பதார்த்தம் மித்யா -ஞான மாத்திரம் மோக்ஷம் அவர் பக்ஷம் )
கஸ்சித் பத்த கஸ்சித் முக்த இதீயம் வ்யவஸ்தா ந வித்யதே(பந்தப்படுவதும் விடுபடுவதும் மித்யா-வ்யவஸ்தையும் மித்யா )
இத பூர்வம் கேசந முக்தா இத்யயம் அர்த்தோ மித்யா
ஏகமேவ சரீரம் ஜீவவத் நிர் ஜீவாநி தாராணி சரீராணி(ஓன்று மட்டுமே ஜீவன் உள்ள சரீரம் -மற்றவை ஜீவன் இல்லா சரீரங்கள்-நாநாவித தோற்றம் வாசனையால் -அநாதி )
தச்ச சரீரம் கிமிதி ந வ்யவஸ்திதம் ஆசார்யோ ஞானஸ் யோபதேஷ்டா மித்யா -ப்ரமாதா மித்யா –
ஸாஸ்த்ரம் ச மித்யா -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் ச மித்யா-
ஏதத் சர்வம் மித்யா- பூதேநைவ சாஸ்த்ரேணாவகதம் -இதி வர்ணயந்தி(இப்படி சிலர் வியாக்யானம் பண்ணுகிறார்கள் )

(ஞானம் -ஆச்சார்யன் இரண்டு இருக்க முடியாதே
ஞானத்துக்கு ஆஸ்ரயமான ஆச்சார்யன் -அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமான சிஷ்யன்-

ப்ரமாதா ப்ரமாணம் ப்ரமேயம் அனைத்தும் மித்யா-தத்வமஸி வாக்கியமும் ப்ரஹ்ம வ்யா வ்ருத்தி அதுவும் மித்யா )

அந்தப் பரமாத்மாவின் பெருமையைக் கூறுவதையே பொருளாக யுடைய ஸாமாநாதி கர்ணயத்தை விவரிக்க வந்த சிலர்
ப்ரஹ்மம் என்பது குணம் ரூபம் விபூதிகள் அற்ற தன்னொளி கொண்டது மட்டும் -அதற்கு நித்யர்கள் முக்தர்களைப் போல தன்னொளி கொண்டு இருந்தாலும் தத்வமஸி என்ற ஸாமாநாதி கரண்யத்தால் சொன்ன
ப்ரஹ்ம ஜீவ ஒருமை -ப்ரஹ்மமே அறியாமை நிறைந்தது -பிறவிச் சூழலில் கட்டுப்படுகிறது -அதினின்றும் விடுபடுகிறது -என்று பொருள் படுகிறது
குணங்கள் அற்ற ஞானம் மட்டுமே ப்ரஹ்மமானால் -ஆள்பவன் -ஆளப்படுபவன் -பிரபஞ்சம் முதலிய அநேக பிரிவுகளை யுடைய யுலகம் எல்லாம் பொய்
கட்டுப் பட்டவன் விடு பட்டவன் என்ற ஒழுங்கு இல்லை
இதற்கு முன் சிலர் முக்தி அடைந்தார்கள் iஎன்பது இல்லை
ஒரே சரீரத்தில் மட்டும் ஜீவன் இருக்கிறது -மற்றவை ஜீவன் அற்றவை -அந்த ஜீவனுடைய உடல் எது என்பது வரையறுக்கப் படவில்லை –
ஞானத்தை உபதேசிக்கும் ஆச்சார்யனும் அதை அறியும் சீடனும் பொய் -அறிய முயலுபவனும் பொய் -ஸாஸ்த்ரங்களும் அதனால் கிடைக்கும் அறிவும் பொய்
இது இவ்வாறு இருப்பது பொய்யான ஸாஸ்திரத்தாலேயே அறியப்படுகிறது -என்று வர்ணிக்கின்றனர்

——————–

அத பாஸ்கர பஷ சங்க்க்ஷேபம்
7-அபரே து–அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணோ பேதாமபி ப்ரஹ்ம -ஏதேனைவ ஐக்யாவ போதேந முச்யதே
நாநாவித அமல ரூப பரிணாம ஆஸ்பதம் ச இதி வ்யவஸ்திதா

(ப்ரஹ்மம் நிர் விசேஷம் அல்ல -ஜகத்தும் -மித்யை அல்ல -சத்யம் என்பர்-உபாதி -கல்பித்து -புண்ய பாப கர்மாவே உபாதி இவையும் சத்யம் மித்யை அல்ல
உபாதியால்  ப்ரஹ்மமே பரிணாமம் அடைந்து அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமாகி நாநா விதமாக தோன்றுகிறது என்பர்-ஏகமேவ அத்விதீயமாக இருக்க -உபாதி -ஸ்வா பாவிக தர்மத்துக்கு விபாகம் உண்டாக்கும் -முக்த தசையில் ஐக்யம் என்பர் -)

பாஸ்கரர் கொள்கைக்குச் சுருக்கம்

மற்றும் சிலர் -பாவங்கள் ஒட்டாத நற் குணங்களை யுடையது ப்ரஹ்மம் -என்று வேதம் சொல்லும் என்றாலும் -கூட உயிர் ப்ரஹ்ம பலன்கள் தொடர்பு முதலியவற்றோடு கட்டுப்படுதல் விடுபடுதல் முதலான பலவித குறைகளுடன் கூடி பரிணாமத்தை அடைகிறது என்று கூறுகிறார்கள்

பொருள் தன்மை குணம் வகை செயல் ஆகியவற்றைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளைக் காட்டினால்
சொற்கள் பலவாக இருப்பினும் பொருள் ஒன்றைக் கொள்வதாக ஸாமா நாதி கரணம் என்று வடமொழி இலக்கணத்துக்கு தமிழ் இலக்கணத்தில் அன் மொழித் தொகைக்கு நெருங்கியது –

————

அத யாதவ பிரகாச பஷ சங்க்க்ஷேபம்
8–அந்யே புந ஐக்யாவ போத யாதாத்ம்யம் வர்ணயந்த
ஸ்வாபவிக நிரதிசய அபரிமித உதார குண சாகரம் ப்ரஹ்மைவ -ஸூர நர திர்யக் ஸ்தாவர -நாரகி ஸ்வர்க்ய பவர்கி –
சேதனைக ஸ்வபாவம்– ஸ்வபாவதோ விலக்ஷணம் அவிலக்ஷணஞ்ச வியதாதி நாநாவித பரிணாம
ஆஸ்பதம்ச இதி ப்ரத்யவதிஷ்டந்தே

(நாரகி ஸ்வர்க்ய பவர்கி –நரகம்-ஸ்தான விசேஷம் இல்லை -நரக அனுபவம் செய்யும் ஆத்மா -நாரகி
பாப பல ரூப துக்க அனுபவம் செய்பவனாகவும் -புண்ய பல ரூப இன்ப அனுபவம் செய்பவனாகவும்

அபவர்க்கி -இதுவும் ஸ்தான விசேஷம் இல்லை -அனுபவத்தை சொன்னவாறு

ப்ரஹ்மமே ஸ்வரூபேண பரிணாமம் அடைகின்றது என்பர் )

யாதவ பிரகாசர் கொள்கைச் சுருக்கம்

வேறு சிலர் -தத்வமஸி போன்ற வாக்யங்கள் கலத்தலை எவ்வாறு உள்ளபடி சொல்வதாக வர்ணிக்கிறார்கள் என்றால்
இயற்கையாகவே ஒப்புயர்வற்ற அளவற்ற மேன்மையான குணங்களின் கடலாக இருக்கும் ப்ரஹ்மமே மனித விலங்கு ஸ்தாவர -நரகில் உழலும் -ஸ்வர்க்கத்தில் மகிழும் -முக்தியடைந்த அறிவின் தன்மையை அடைகிறது
இயற்கையாகவே சிறந்த தாழ்ந்த ஆகாயம் முதலானவைகளாக மாறுதலை அடைகிறது -என்று கூறுகிறார்கள் –

—————

அத சங்கர பஷ ப்ரதிஷேபம்
9–தத்ர பிரதம பக்ஷே ஸ்ருத்யர்த்த பர்யா லோசன பரா-துஷ் பரிஹராந் தோஷாந் உதாஹரந்தி

பிரகிருத பராமர்சி தச் ஸப்தாவக தஸ்ய ப்ரஹ்மண ஸ்வ சங்கல்ப கிருத ஜகத் உதய விபவ லயாதய
(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் வாக்கியம் )தத் ஐஷ்த பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாரம்ய
சந் மூலா (ஸத் ப்ரஹ்மமே மூலமாகக் கொண்டு )ஸோம்யேமாஸ் சர்வாஸ் ப்ரஜாஸ் சதாயதநாஸ் (ஆயதனம் இருப்பிடம் )சத் பிரதிஷ்டாஸ் (அதிலேயே லயம் )இத்யாதிபிஸ் பதைஸ்
ப்ரதிபாதிதாத் சம்பந்தி தயா பிரகாரணாந்தர நிர்திஷ்டா(இதே போல் வேறே பிரகரணங்களிலும் உண்டே )
சர்வஞ்ஞதா -சர்வ சக்தித்வ-(ஸங்கல்ப மாத்ரத்தால் செய்யும் சக்தி )சர்வேஸ்வரத்வ (நியந்த்ருத்வம் )-சர்வ பிரகாரத்வ -(சரீர சரீரீ பாவம் )சமாப்யதிக நிவ்ருத்தி -சத்ய காமத்வ -ஸத்ய ஸங்கல்பத்வ –
சர்வ அவபாசகத்வாத் (இவன் அதீனத்தாலே மற்ற தேஜஸ் பதார்த்தங்கள் )யநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா
அபஹதபாப்மா இத்யாதி அநேக வாக்யாவகத் நிரஸ்த நிகில தோஷதா ச சர்வே தஸ்மிந் பக்ஷே விஹன்யந்தோ –(நிர்விசேஷ ப்ரஹ்மம் ஸித்திக்காதே )

சங்கரர் கொள்கை சுருக்கம்

வேதப் பொருள்களை முன்னும் பின்னும் நன்கு ஆராய்ந்தவர்கள் –ஆளவந்தார் போன்றோர் -அந்த முதல் பக்ஷத்தில் உள்ள விலக்க முடியாத குற்றங்களை கீழ்க் கண்டவாறு எடுத்துக் காட்டுகிறார்கள்
இந்த இடத்தில் தத் என்று குறிப்பிடப் படும் சொல் ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது –
அந்தப் ப்ரஹ்மம் தானே செய்ய விரும்பியதாக உலகங்களின் தோற்றம் பாதுகாப்பு அழிவு முதலியவை ஆகின்றன –
நான் பலவாக ஆவேன் -என்று அது நினைத்தது -எனத் தொடங்கி -எல்லாம் அந்த ஸத் -தை ஆதாரமாகக் கொண்டவை அதனிடமே நிலை பெறுபவை -என்று பல சொற்களால் சுட்டிக் காட்டப்படும் -தத் -அது என்ற பதம் இவ்விடத்தில் அதனுடன் தொடர்புடைய எல்லாவற்றையும் அறியும் தன்மை யுடையது
எதையும் செய்யும் ஆற்றல் உடையது
எல்லாவற்றையும் ஆளும் தன்மை படைத்தது
எல்லாவற்றையும் சூழ்ந்து உள்ளது
தனக்கு ஒப்பும் மிக்கும் அற்றது
தன் ஒளியால் பிரகாசிப்பது போன்ற ஒப்பு மிக்கும் அற்ற -அளவற்ற கல்யாண குணங்களை யுடையது என்பது விளங்குவதாலும்
பாபங்கள் சிறிதும் அற்றது என்று பல இடங்களிலும் தாழ்ந்த குணங்கள் இன்மையைக் காட்டுவதாலும்
மேற்கூறிய பக்ஷம் அழிக்கப் படுகிறது –

ஸர்வ வேதாந்தப் ப்ரத்யயம் -ஸர்வ ஸாகாப் ப்ரத்யயம்
ஜகத் அஜகத் ஜகதா ஜகத் -விட்ட விடா விட்டு விடா
ஒன்றும் தேவும் -ஈடு வியாக்யானம் ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -ஸ்ருதி விளக்கம் உண்டு –

———–

10-அத ஸ்யாத் -(மேல் அத்வைதிகள் வாதம் )-உபக்ரமேபி (ப்ரகரண ஆரம்பத்தில் )ஏக விஞ்ஞாநேந-சர்வ விஞ்ஞான முகேன காரணஸ்யைவ சத்யதாம் ப்ரதிஜ்ஜாய(இது அனுப பன்னம் என்று சொல்ல மூன்று த்ருஷ்டாந்தங்கள்-ம்ருத் பண்டம் -நாம ரூபங்கள் அசத்தியம்-அழியுமே – மண் என்பதே ஸத்யம் -ஸ்வரூப மாத்ரம் ஸத்யம்- இதர ஸர்வம் மித்யா )
தஸ்ய காரண பூதஸ்யைவ சத்யதாம் விகார பூதஸ்ய ச அசத்தியதாம் ம்ருத் திருஷ்டாந்தேந தர்சியித்வா ஸத்ய பூதஸ்யைவ ப்ரஹ்மண
சதேவ ஸோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதி(சத்தாகவே இருந்தது விஜாதீயம் இல்லை -ஒன்றாகவே இருந்தது ஏகமேவ -சஜாதீயம் இல்லை -அத்விதீயம் ஸூவ கத பேதமும் இல்லை )
சஜாதீய விஜாதீய  நிகில பேத நிரசநேன–நிர்விசேஷ தைவ ப்ரதிபாதிதா –
ஏதச் சோதகாநி ப்ரகாராணந்தர வாக்ய அந்யபி
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
விஞ்ஞானம் -ஆனந்தம் -இத்யாதீனி சர்வ விசேஷ ப்ரத்யநீகைககாரதாம் போதயந்தி
ந ச ஏகாகார அவபோதநேபி பதாநாம் பர்யாயதா ஏகத்வேபி வஸ்துன சர்வ விசேஷ ப்ரத்ய
நிகாகாரத்வோபஸ்தாபநேந சர்வபதானாம் அர்த்வத்வாத் இதி

(ஞான ஸ்வரூபம்-ஸ்வயம் பிரகாசம் சேதனம் ஸஜாதீயம் -விஜாதீயம் அசேதனம் -ஸ்வ கத குணங்கள்-விசேஷணங்கள் இத்யாதி அனைத்துமே மித்யா

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-சத்யம் ப்ரஹ்மம் ஞானம் ப்ரஹ்மம் அநந்தம் ப்ரஹ்மம் -மூன்று ப்ரஹ்மம் ஆகும் என்பர் ஏகத்வம் போகும்
வேறுபட்டது என்று சொல்லவே வந்தது -என்பர்-விசேஷணமாகக் கொள்ளாமல் ஸ்வரூப பரமாகக் கொண்டு வியாக்யானம் செய்வர் –
நிர்விகாரம் சத்யம் -அஜடம் வேறுபட்டது -அளவு பட்டவையில் வேறு பட்டது -என்பர் )

(நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரவத்யம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
கள -அவயவம்- அவயவங்கள் இல்லாமல் -அதனால் கார்யங்கள் செய்யாமல் -ப்ரவ்ருத்தி இல்லாமல்-குணங்கள் இல்லாமல்
நிரவத்யம் -நிரஞ்சனம்-கர்ம சம்பந்தமும் பலமும் அற்ற குறை இல்லாமல் -திர்யக் கர்ம சம்பந்தம் இல்லாமல் கர்ம பல சம்பந்தம் மட்டுமே கொண்டது -)

அது அவ்வாறு அல்ல
துவங்குகையிலேயே எந்த ஒன்றை அறிவதால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ -அதைக் காரணமாகக் கொண்டு உறுதிப்பட்டு காரணப் பொருள் ஒன்றே உண்மை -அதின் நின்றும் வெளிப்படும் கார்யப் பொருள்கள் உண்மையல்ல -என்பதை
மண் -அதின் நின்றும் செய்யப்படும் குடம் காரணத்தைக் உண்மையானது ப்ரஹ்மம் மட்டுமே –
குழந்தாய் அந்த மெய்ப்பொருள் மட்டுமே முதலில் இருந்தது -தனியாக இருந்தது -இரண்டாவது ஒன்றும் இல்லை -என்று ஸஜாதீய பேதம் -ஒருபடிப்பட்ட மாறுபாடுகள் -பல தென்னை மரங்கள் இருப்பினும் ஒரு குறிப்பிட்ட மரத்தை மற்றைய தென்னை மரங்களில் நின்றும் வேறுபடுத்துவது –
விஜாதீய மாறுபாடான வேறுபாடு -பல மரங்கள் இருப்பினும் மா மரங்கள் இல்லை புளிய மரங்கள் உள்ள தோப்பு என்னுமா போல்
ஸ்வகத பேதம் -ஒரு பொருளின் உறுப்புக்கள் தம்முள் மாறுபடுவது -தலை கால் கண் போன்று அடிமரம் வேர் பூ போன்று -அனைத்து பேதங்களையும் நீக்கும் முகமாய் அது நிர் விசேஷம் குணங்கள் அற்றது என்று கூறப்பட்டு இருக்கிறது
இது போன்ற ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்லும் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்பதற்கு ப்ரஹ்மம் அஸத்யம் அற்றது அஞ்ஞானம் அற்றது அளவுபட்டது அன்று என்றும்
அவ யவம் அற்றது செயல் அற்றது குணம் அற்றது எதிலும் ஒட்டாதது என்றும்
அறிவு நிறைந்தது ஆனந்தம் உள்ளது போன்ற குணங்களைக் கூறும் பதங்களுக்கு எதிரிடையானது என்றும் பொருள் கூறப்பட்டு இருக்கிறது
இவ்வாறு கூறுகையில் நற் குணங்களைச் சொல்லி அதற்க்கு எதிரிடையான குணம் இல்லை என்று கூறுவதால் ஒரு பொருள் பன் மொழி ஆவதால் அவற்றைத் திரும்பத் திரும்பிச் சொல்லும் குற்றம் ஏற்படுகிறது
ஒரு முறை சொன்னால் நிறைவேறுமே என்ற வினாவிற்கு
பொருள் ஒன்றேயாயினும் குணங்கள் பலபட்டவை யாதலாலும் அவை யாவும் தனித் தனியே மறுக்கப் பட்டதாகிறது என்று அத்வைதிகள் ஸமாதானம் சொல்லுகிறார்கள்

ப்ரஹ்மத்தைப் பற்றிய ஸ்ருதி வாக்யங்கள் காரண வாக்யங்கள் என்றும் சோதக வாக்யங்கள் -அதன் குணங்களை ஆராயும் வாக்யங்கள் -என்றும் இருவகைப்பட்டு இருக்கும் –

———–

11-நைததேவம் (அவ்வாறு அல்ல )-ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞானம் ஸர்வஸ்ய மித்யாத்வே ஸர்வஸ்ய ஞாதவ்ய
ஸ்யாபாவாது நசேத்ஸ்யதி ஸத்ய மித்யாத்வயோ ஏகதா ப்ரஸக்திர்வா
அபிது ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிக்ஞா ஸர்வஸ்ய ததாத்மகத்வே நைவ சத்யத்வே சித்யதி –

(ஏவம் அஸ்தி விஞ்ஞானேந ஸர்வம் நாஸ்தி விஞ்ஞானேந அல்லவேஏக விஞ்ஞாநேன-கரண த்ருதியீ அல்ல -அபேதே த்ருதியீ -ஒன்றை அறிவதில் மற்றவற்றை அறிவது எல்லாம் அடங்கி இருக்கும் என்றவாறு )

இது இவ்வாறு இல்லை -ஒன்றை அறிந்து கொண்டு அந்த ஞானத்தினால் மற்ற ஒன்றுமே இல்லை என்று சொல்லப்படும் மற்றப் பொருள்களை எவ்வாறு அறிய முடியும் –
அல்லது உண்மை என்றே சொல்லும் பொய் என்ற சொல்லும் ஒரே பொருளைக் கொண்டு இருக்க வேண்டும் –
மாறாக இவ் வுலகம் உயிர் பொருள்களும் அவனுக்கு உடல் என்று கொண்டால் -உடல் உயிர் இவை தனித்தனியே இயங்காதவை யாகையால் -இவ்வுயிரை அறிவதால் அவ்வுடலை அறிந்ததாகும்

மீமாம்ஸம் அத்வைதத்தை உண்மையற்றது என்ற ஓலம் -அஸத்யப் பிரலாyenakkuஎனக் குறிப்பிடுகிறது –

————

12-அயமர்த்த-ஸ்வேத கேதும் ப்ரத்யாஹ
ஸ்தப்தோசி உததம ஆதேசம் பிராஷ்ய இதி
பரிபூர்ண இவ லஷ்யஸே தானாச்சார்யான் பிரதி தமப்ய ஆதேசம் ப்ருஷ்ட்வானசி
இதி ஆதிஸ்யதே அநேநேத்ய ஆதேச ஆதேச பிரசாசனம்

(ஆதேசம்-உபதேச விஷயம் -அத்வைத மதத்தில் -ஞானத்துக்கு விஷயம் மித்யை -ஞான பின்னம் ஜேயம்-
ஞான மாத்ரம் ஸத்யம் என்பர் -அறியப்படும் விஷயம் இல்லையே
ப்ரஹ்மம் தவிர மற்றவை மித்யை என்பதே உபதேச விஷயம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -தத்வமஸி -நீ த்வம் அல்ல -அந்த தத் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
அந்த விஷயத்தைக் கேட்டு அறிந்து கொண்டாயா –
ஏக விஞ்ஞானம் -இதர ஸர்வம் மித்யை
நாமோ ஆவேசம் -உபதேச அர்த்தம் இல்லை -ஆதேச கர்த்தா-சர்வ நியந்த்ருத்வம்-பகவத் பரமாகவே நாம் அர்த்தம்   -அவர்கள் கர்மணி –
நியமனம் ஏஷ ஆவேச -ஏஷ உபதேச -இரண்டும் சுருதி சொல்லும்
ஆ உப இரண்டும் -உபதேச பலம் சிஷ்யனுக்கு

(சதேவ -காரண ஸ்ருதி -ஸத்தில் இருந்தே உருவானது -ப்ரஹ்மம் ஒன்றும் மட்டுமே காரண அவஸ்தையில் -மற்றவை இதில் ஒன்றி –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று –
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -நாம ரூப ரஹிதம்-ஏகமேவ -அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மம் -அத்விதீயம் லோகத்தில் காண்பது போல் அல்லவே -ஸகல இதர விலக்ஷணம்-ஸர்வ ஸரீரத்வம் -ஸர்வ கல்யாண குணாத்மகம் அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமே -)

(அக்ரே இதற்கு முன்னால் -பூர்வ காலீத்வம் -சதேவ -ஸத் ஒரே பதார்த்தமாக இருந்து -அதுவே உபாதான காரணம்
சர்வஞ்ஞத்வ குண விஸிஷ்ட ப்ரஹ்மமே
ஏகமேவ -அதுவே நிமித்தமும் உபாதானமும் -அபின்ன நிமித்த உபாதான காரணம்
லோகத்தில் இது போல் இல்லையே என்ன இது அத்விதீயம்)

ஏதஸ்யவா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத இத்யாதிபிரை ததாச மாநவம் வச
பிரசாசிதாரம் ஸர்வேஷாம் இத்யாதி அத்ராபி ஏகமேவ இதி ஜகதுபாதாநதாம் ப்ரதிபாத்ய அத்விதீய –
பதேந அதிஷ்டாத்ரந்தர நிவாரணாத் அஸ்யைவ ப்ரதிபாத்யநே
அத -தம் பிரசாசிதாரம் ஜகத் உபாதான பூதமபி ப்ருஷ்ட்வானசி -யேந ஸ்ருதேந மதேந அஸ்ருதம மதம விஞ்ஞாதம்
ஸ்ருதம் மதம் விஞ்ஞாதம் பவதி -இத்யுக்தம் ஸ்யாத் -நிகில ஜகத் உதய விபவ விலயாதி காரண பூதம் ஸர்வஞ்ஞத்வ –
சத்ய காமத்வ-ஸத்ய ஸங்கல்பத்வாத்ய-அபரிமித உதார குண சாகரம் கிம் ப்ரஹ்ம த்வயா ஸ்ருதம் –இதி ஹார்த்தோபாவ —

ஸ்வேத கேதுவை -அவருடைய தந்தை வினவினார்
எல்லாம் அறிந்தவன் போல் காணப் படுகிறாயே –
அந்தக் கட்டளையின் -ஆதேசத்தின் -பொருளைக் கேட்டு அறிந்தாயா –
முழுமையாக்கும் இலக்கோடு உன்னுடைய ஆசானிடம் இருந்து அந்தக் கட்டளைப் பொருளை அறிந்து இருக்கிறாயா –
பரமாத்மாவால் நியமிக்கப் படுகிறது என்பதால் அதனை கட்டளை என்கிறோம் -ஆதேசம் என்றால் மீற முடியாத ஏவல்

அந்தப் பரமாத்மாவின் கட்டளைப் படி -ஹே கார்க்கி ஸூர்ய ஸந்த்ரர்கள் நிலை பெற்று இருக்கிறார்கள் -என்று ஒரே பொருளைக் கொள்ள வேண்டும்
அப்படியே மநு ஸ்ம்ருதியிலும் -எப்பொருளையும் உள்ளிருந்து நியமிப்பவன் என்று கூறப்பட்டு இருக்கிறது –
இங்கும் -ஸத் வாக்யத்திலும் -உலகின் உத்பத்திக் காரணம் ஒன்றே என்று காட்டி -இப்படி உள் புகுந்து நியமிப்பது வேறில்லை என்பதையும் எவன் உலகைப் படைப்பவனாய் இருப்பானோ –
எவனை அறிந்தால் -த்யானித்தால் -அறியப்படாதது அறியப்பட்டதாகவும் -கேட்கப்படாதது கேட்கப்பட்டதாகவும் ஆகுமோ -அவனை அறிந்தாயா என்பதே சரியான பொருளாகும் –
உலகின் படைத்தல் -காத்தல் -அழித்தல் -இவற்றுக்குக் காரணமானவனாயும் -எல்லாவற்றையும் அறிந்தவனாயும் -எந்த விருப்பங்களும் இல்லாதவனாயும் -எச் செயலையும் செய்ய வல்லவனாய் இருப்பவனாயும் –
ஆகிற குணக்கடலாய் இருப்பவனாகிய ப்ரஹ்மத்தை அறிந்து இருக்கிறாயா -கேட்டு இருக்கிறாயா -என்பதே அவருடைய மனப் பூர்வமான எண்ணம் –

————-

13–தஸ்ய நிகில காரணதயா காரணமேவ நாநா சமஸ்த்தான விசேஷ ஸம்ஸ்திதம் கார்யம் இதயுச்யத இதி காரண பூத
ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரக ப்ரஹ்ம விஞ்ஞாநேன கார்ய பூதம் அகிலம் ஜகத் விஞ்ஞாதம் பவதீதி ஹ்ருதி நிதாய –
யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம்-ஸியாத் இதி புத்ரம் பரதி ப்ருஷ்டவான் பிதா —

ஸ்வேத கேதுவின் கேள்வியும் உத்தாலகர் பதிலும்

அந்தப் ப்ரஹ்மம் உலகின் காரணமாகவும் பற்பல சிறப்பான நிலை வேறுபாடுகளை உடையதாகவும் இருப்பதால் உலகி காரணம் என்றும் கார்யம் என்றும் சொல்லப்படுகிறது –
சேதன அசேதனப் பொருள்களை உடலாக யுடைய கட்புலனாகாத காரணமான அவனை அறிவதால் கார்யமான பூத உலகை முழுமையாக அறிந்ததாகும் என்னும் கருத்தை மனத்தில் கொண்டு –
எதை அறிந்தால் கேட்கப்படாதது கேட்கப் பட்டதாகவும் அறியப்படாதது அறியப்பட்டதாகுமோ அதை அறிந்தாயா என்று தந்தை வினவினார்-

———-

14–ததேதத் சகலஸ்ய வஸ்து ஜாதஸ்ய ஏக காரணத்வம் பித்ரு ஹ்ருதி நிஹித மஜானன் புத்ர பரஸ்பர விலக்ஷணேஷு
அந்யஸ்ய ஞானேந ததந்ய ஞானஸ்ய கடமானதாம் புத்தா பரிசோத யதி –கதந்நு பகவஸ் ச ஆதேச இதி –

முன் சொல்லப்பட்ட ஒன்றை அறிவது எல்லாப் பொருள்களையும் அறிவதாகும் என்று ஒரே காரணமாய் இருக்கும் தன்மையை தந்தை மனதில் கொண்டிருக்கிறார் என்பதை அறியாத மகன்-ஒரே பொருளை அறிவதால் ஒன்றுக்கு ஓன்று மாறுபாடுடைய எண்ணற்ற பொருள்களை அறியும் நிலை எவ்வாறு ஏற்படும் என எண்ணி -அந்தக் கட்டளை எவ்வாறு உள்ளது தந்தையே -எனத் திருப்பிக் கேட்க்கிறான்

——–

15–பரிசோதித புந ததேவ ஹ்ருதி நிஹிதம் ஞானானந்த அமலத்வ ஏக ஸ்வரூபம் அபரிச்சேத்ய மஹாத்ம்யம் –
ஸத்ய சங்கல்பத்வ மிஸ்ரை அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணைர் ஜுஷ்டம் அதிகார ஸ்வரூபம்
பரம் ப்ரஹ்மைவ நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரம் -ஸ்வ லீலையைவ ஸ்வ சங்கல்பேந –
அநந்த விசித்ர ஸ்திரத் ரஸ ரூப ஜகத் சமஸ்த்தானம் ஸ்வாம் சேநாவஸ்தி தமிதி தத் ஞானேந அந்யஸ்ய
நிகிலஸ்ய ஞாததாம் ப்ருவன் லோக த்ருஷ்டம் கார்ய காரணயோர் அநந்யத்வம் தர்சயிதும் த்ருஷ்டாந்தமாஹ

இவ்வாறு வினவப்பட்ட தந்தை தனது மனக்கிடக்கையைத் தெளிவாகக் காட்டுவதற்காக -அளவிடற்கு அரிய ஞானம் மகிழ்ச்சி தூய்மை நிலை பெற்ற செயல்பாடுடைமை ஒப்பற்ற அளவற்ற நற் குணங்கள் தொகுப்பாய் மாறுபடாத உருவமுடைமை இவற்றுடன் கூடிய கட் புலனாகாத பிரிக்க இயலாப் பண்புள்ள ப்ரஹ்மமே தன் விளையாட்டில் தன் விருப்பப்படி அளவற்ற பலவகைப்பட்ட நிற்பன நடப்பன யாகிய பற்பல உயிர்களை தன் அம்சமாகப் படைக்கிறது என்ற அந்த அறிவினால் மற்றப் பொருள்களுடைய அறிவும் ஏற்படும் -என்பதை உலகியல் கார்ய காரண தொடர்பால் உணர்த்துகிறார் –

———-

16–யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந சர்வம் ம்ருண் மயம் விஞ்ஞாதம் ஸ்யாத் வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்
ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி ஏகமேவ ம்ருத் த்ரவ்யம் ஸ்வ ஏக தேசேந நாநா வியவஹாராஸ் பதத்வாய-
யதா கட சரா வாதி நாநா ஸமஸ்த்தாநா அவஸ்தா ரூப விகாரபந்நம் நாநா நாமதேயமபி ம்ருத்திகா சமஸ்த்தான விசேக்ஷத்வாத்
ம்ருத் த்ரவ்யமேவேதி வியவஸ்திதம் நவாஸ்த வந்தரம் இதி யதா ம்ருத் பிண்ட விஞ்ஞாநேன தத் சமஸ்த்தான விசேஷ

கட சராவாதி ரூபம் சர்வம் விஞ்ஞாதம் ஏவ பவ்தீத்யார்த்தா

குழந்தாய் -ஒரே மண்ணுருண்டையால் மற்று எல்லாம் மண்ணாலே ஆனது என்ற அறிவு ஏற்படுகிறது –
அது பல உருக்களாக மாறுபடும் போது பல பெயரிட்டு அழைக்கப் பட்டாலும் மண் என்னும் ஒரு பொருளே உண்மையாகிறது –
ஒரே மண் கட்டி அதன் ஒரு பகுதியால் பற்பல உருவங்கள் உள்ளதாகப் பேசப்படுகிறது
எப்படி குடம் வாணாய் போன்ற பல உருவ நிலை வேறுபாடுகளை உடைய வடிவ மாறுபாடுகளும் பற்பல பெயர்களையும் தன் நிலை வேறுபாட்டால் மண் கட்டி பெற்றாலும் மண் என்றே பேசப்படுகிறதோ -அந்த பற்பல பெயர்கள் அதற்கு நிலை வேறுபாட்டால் மட்டுமே ஏற்பட்டதோ -அப்படிப்பட்ட மண்ணுருண்டையை அறிவதால் அதன் பல வடிவ நிலை வேறுபாடுகளை குடம் வாணாய் என்று அறிந்ததாகும் என்பதே பொருள் –

———————

17–ததஸ் க்ருத்ஸ்ரஸ்ய ஜகதோ ப்ரஹ்ம ஏக காரண தாம ஜாநந் புத்ர ப்ருச்சதி -பகவாம்ஸ் த்வமேவ மே தத் ப்ரவீது-
இதி ததஸ் சர்வஞ்ஞம் சர்வசக்தி ப்ரஹ்ம ஏவ சர்வ காரணம் இத் யுபதிசந் சஹோவாச
சதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
இதி அக்ர இதம் இதி ஜகந் நிர்திஷ்டம்
அக்ர இதிச ஸ்ருஷ்டே பூர்வ கால தஸ்மிந் காலே ஜகத் சதாத்மகதாம்
சத் ஏவ இதி ப்ரதிபாத்ய தது ஸ்ருஷ்ட்டி காலே அப்யவிசிஷ்டம் இதி க்ருத்வா
ஏக மேவ இதி ஸ்தாபந் நஸ்ய ஜகத்-ததா நீம விபக்த நாம ரூபதாம் ப்ரதிபாத்ய தத் ப்ரதிபாத்தேநேந
ஏவ சதோ ஜகத் உபாதானத்வம் ப்ரதிபாதிதம் இதி ஸ்வ வ்யதிரிக்த நிமித்த காரணம் அத்விதீய பதேந ப்ரதிஷித்தம் இதி —

ஸத் -என்பது தான் ஜகத் காரணமாகிறது என்பதன் விளக்கம்

அளவில் அடங்கா உலகிற்கு ப்ரஹ்மமே ஒரே காரணமாகும் என்பதை அறிந்தால் மற்றவை எல்லாம் அறிந்ததாகும் என்பதை அறியாத மகன் -தேவரீரே எனக்கு அதைக் கற்ப்பிப்பீராக -என்று கேட்டான் –
அவர் -எல்லாம் அறிந்த -எல்லாம் வல்ல -ப்ரஹ்மமே உலகிற்கும் எல்லாக் காரணமும் ஆகிறது என்று உபதேசிக்கும் முகமாய்
ஒளி பொருந்திய முகமுடையவனே -அறிவுள்ள அறிவற்றவைகளால் நிறைந் த இவ்வுலகு படைப்புக்கு முன் -பிரளய காலத்தில் காரணப் பொருளாகிய ப்ரஹ்மத்துடன் வேறுபாடு இன்றி -கட் புலனாகாத நிலையில்-ஒன்றி பிறிது ஓன்று இல்லாமல் இருந்தது -என்றார்
அவ்வாறு காரணப் பொருளாகவே ஒன்றி இருந்ததால் -ஸதேவ -ஸத் ஆகவே -என்று குறிப்பிட்டு –
பிறகு படைப்புக் காலத்தில் அப் ப்ரஹ்மம் வெளிப்படையாக மட்டுமே இருந்ததால் ஏக மேவ -என்று கூறினார் –
இப்படிப் பின்பு பல உருவங்களோடு படைக்கப்பட்ட உலகிற்கு அந்த ஸத் என்பதே முதல் பொருள் ஆகையால் அதை ஒழிந்த வேறு ஒரு காரணம் இல்லை என்பதற்காக அத்விதீயம் என்னும் பதத்தால் நிலை நிறுத்துகிறார்

உபாதான காரணம்-மூலப்பொருள் -சித் அசித் விஸிஷ்ட பிரம்மா -அணு நிலையில் சேதன அசேதனப் பொருள்களுடன் சேர்ந்த ப்ரஹ்மம்
நிமித்த காரணம்-செய்வோன் -ஸூஷ்ம ப்ரஹ்மம் -அவற்றின் உயிராய் -உள்ளுறையும் -கட் புலனாகா செய்வோன் ப்ரஹ்மம்
ஸஹ காரி காரணம் -செய் கருவி -அதன் ஞான சக்திகள் -ப்ரஹ்மத்தின் -அறிவும் திறனும்

———–

18–தமாதேசம பிராஷ்யோ யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி -இதி ஆதாவேவ பிரசாசிதைவை ஜகத் உபாதானம் இதி
ஹ்ருதி நிஹிதம் இதாநீ மபிவ்யக்தம் ஏததேவோப பாதயதி–ஸ்வயமேவ ஜகத் உபாதானம் -ஜகந் நிமித்தம் ச சத்
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய –இதி ததேதத் ஸச் சப்த வாஸ்யம் பரம் ப்ரஹ்ம -சர்வஞ்ஞம்-சர்வசக்தி -ஸத்யஸங்கல்பம் –
அவாப்த ஸமஸ்த காமமபி லீலார்த்தம் -விசித்ர அநந்த சித் அசிந் மிஸ்ர ஜகத் ரூபேண காமேவ பஹுஸ்யாம் தளர்த்த ப்ரஜாயேய –
இதி ஸ்வயமேவ சங்கல்ப்ய ஸ்வாம்ஸைக தேசாதேவ வியதாதி பூதாநி ஸ்ருஷ்ட்வா புநரபி ஸைவ ஸச் சப்தா பிஹிதா பரா தேவதா
ஏவம் ஐஷத ஹந்தாஹா மிமா ஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்ம அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகர வாணி இதி –
அநேந ஜீவேந ஆத்மநா இதி ஜீவஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாத்ய ப்ரஹ்மாத்மக ஜீவ அநு ப்ரவேசாதேவ க்ருதஸ்நஸ்ய
அசித் வஸ்துநோ நாம ரூப பாத்தகம் இதிச தர்சயதி

பண்புடைப் ப்ரஹ்மத்தின் இருவகைக் காரணப் பொருத்தமும்
அது பல பெயர் உரு உடுப்பதன் விளக்கமும்

அந்தக் கட்டளையை அறிந்தால் கேட்க்கப் படாதது கேட்கப் பட்டதாகும் -என்று முன்பு நன்கு தீர்மானிக்கப் பட்ட உலகின் மூலப் பொருளையே தன் மனத்தில் கொண்டுள்ளார் என்பதை இங்கே வெளிப்படுத்துகிறார் –
உலகிற்கு மூலப் பொருள் காரணமான அந்த -ஸத் -செயலாற்ற நினைத்து
நான் பலவாக ஆகக் கடவேன் -பிரஜைகளைப் படைப்பேன் – என்று முனைந்தது
அப்படிப்பட்ட -ஸத் -என்பதால் விளக்கப்படும் பர ப்ரஹ்மம் தான் –
எல்லாம் அறிவதாகவும் –
எல்லாம் வல்லதாகவும் –
உண்மையான வினைத் திட்பம் யுடையதாகவும் –
வேறு பலன் எதையும் எதிர்பாராததாகவும்
அவா வற்று இருந்தும் தன் விளையாட்டு மகிழ்ச்சிக்காக மட்டுமே பல்வேறு வகைப்பட்ட எண்ணற்ற சேதன அசேதன பொருள்களோடு கூடிய உலகமாகத் தானே ஆவேன் என்று முடிவெடுத்து
தன் அம்சத்தில் ஒரு பகுதி -சேதன அசேதன பொருள்களை யுடைய தன் உடலின் ஒரு பகுதி -யால்
ஆகாயம் முதலான பூதங்களைப் படைத்தது
மீண்டும் அந்த ஸத் -நிலம் நீர் நெருப்பு என்பது போன்ற தேவதைகளாகி -பூதங்களாக ஜீவாத்மாக்களின் உட் புகுந்து
அவற்றுக்குப் பெயரும் உருவும் யுடையவைகளாக ஆக்குவேன் என்றது
ஜீவாத்மாக்கள் என்றதனால் ஜீவர்கள் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக யுடையவர்கள் என்பது காட்டப்படுகிறது –
ஜீவனை யுடலாகக் கொண்ட ப்ரஹ்மத்தினால் மட்டுமே எல்லா சேதனப் பொருள்களும் இருப்பைப் பெறுகின்றன –
இதனாலேயே எல்லாப் பொருள்களும் பெயர்களையும் குருக்களையும் அடைகின்றன –

————-

19–ஏதத் யுக்தம் பவதி (இவ்வாறு சொல்லப்பட்டது சாரம் )ஜீவாத்மாது ப்ரஹ்மண-சரீர தயா பிரகாரத்வாத் ப்ரஹ்மாத்மக
யஸ்ய ஆத்மா சரீரம் -இதி ஸ்ருத் யந்தராத்-ஏவம் பூதஸ்ய ஜீவஸ்ய சரீரதயா பிரகார பூதாநி
தேவ மனுஷ்யாதி ஸமஸ்த்தாநாநி வஸ்தூநி இதி ப்ரஹ்மாத்ம ஏகாநி தாநி ஸர்வாணி
அத தேவோ மனுஷ்ய யஷோ ராக்ஷஸ பஸூ ம்ருக பஷீ வ்ருஷோ லதா காஷ்டம் சிலா த்ருணம் கட பட இத்யாதயஸ்
சர்வே ப்ரக்ருதி ப்ரத்யய யோகேந அபிதாய கதயா பிரசித்தா ஸப்தா லோகே தத் த்ரவ்ய வாஸ்ய தயா பிரதீயமான
தத் தத் சமஸ்தான வஸ்து முகேந தத் அபிமாநி ஜீவ –
தத் அந்தர்யாமிப் பரமாத்மா பர்யந்தம் ஸங்காதஸ் யைவ வாசக –இதி –

இதை விவரிப்போம்
ஜீவாத்மா பரமாத்மாவுடன் பிரிக்க முடியாத உறவுடையதாக -ப்ரஹ்மத்துக்கு உடலாகிறது –
எதற்கு ஆத்மா உடலோ என்று வேதத்தில் கூறப்படுகிறது –
இப்படிப்பட்ட ப்ரஹமத்திற்கு ஜீவாத்மா உடலாய் இருப்பதால் -தேவன் மனிதன் போன்ற ஜீவாத்மாவின் உடலாகும் பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மத்திற்கும் உடலாகின்றன –
இவ்வுருக்கள் தேவர்கள் மனிதர்கள் யக்ஷர்கள் ராக்ஷஸர்கள் பசுக்கள் விலங்குகள் பறவைகள் மரங்கள் கொடிகள் கட்டை பாறைகள் புல் குடம் ஆடை என்று எல்லாம் பகுதி விகுதிகளால் குறிக்கப்படும் சொற்களாகி –
அவை சுட்டும் பொருளுக்கு உருவமாகி
அதனுள் உறையும் ஜீவாத்மாவையும்
அதை உடலாகக் கொண்ட பரமாத்மா வரை சுட்டிக் காட்டும் சொற்கள் ஆகின்றன –

ப்ருதக் ஸித்தம் -பிரிக்க முடியும் உறவு -விசேஷணம்
அப்ருதக் ஸித்தம் -பிரிக்க முடியாத உறவு -பிரகாரத்வம்

—————–

தத்வமஸி -ஸ்ருத்யர்த்தம்
20–ஏவம் சமஸ்தஸ்ய சித் அசித் ஆத்மகப் பிரபஞ்சஸ்ய சதுபாதாநதா -சந் நிமித்தா சத் ஆதாரதா –
சந் நியம்யதா-ஸச் சேஷதாதி சர்வம்ச -சந் மூலா ஸோம்யேமா சர்வா பிரஜா ஸதாயதநா சத் பிரதிஷ்டா -இத்யாதிநா
விஸ்தரேண ப்ரதிபாத்ய கார்ய காரண பாவாதி முகேந
ஏததாத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம்
இதி க்ருத்ஸ் நஸ்ய ஜகத்தை ப்ரஹ்மாத்மகத்வம் ஏவ சத்யம் இதி ப்ரதிபாத்ய க்ருத்ஸ் நஸ்ய ஜகத ச ஏவமாத்மா க்ருத்ஸ்நம்
சஜகது தஸ்ய சரீரம் தஸ்மாத் த்வம் சப்த வாஸ்யமபி ஜீவ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிஜ்ஞாதம்-
தத் த்வமாய் -இதி ஜீவ விசேஷ உப ஸம்ஹ்ருதம் -ஏதத் யுக்தம் பவதி
ஐதாத்ம்யம் இதம் சர்வம் -இதி சேதன அசேதன பிரபஞ்சம்
இதம் சர்வம்
இதி நிர்திஸ்ய-தஸ்ய பிரபஞ்சஸ்ய ஏஷ ஆத்மா இதி ப்ரதிபாதித பிரபஞ்ச உத்தேசேந
ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாதிதம் இத்யர்த்த —

(ஞானம் எல்லாம் அனுஷ்டான பர்யந்தமாக ஆக வேண்டும் அன்றோ -உபாசனத்துக்காக அளிக்கப்பட ஞானம் )

இவ்வாறு சேதன அசேதன பொருள்களின் திரளான பிரபஞ்சத்தின் ஆத்மாவான -ஸத்தையையே சொல்லுகிறது
ஸத்தாய் பொருள் காரணமாக யுடையதாயும் -அதுவே ஆக்குவோனாகவும் –அதனாலே தாங்கப்பட்டதாயும் -நிலை நிறுத்தப் பட்டதாயும் -அதனாலே ஏவப் படுவதாயும் -அதற்கு அடிமைப் பட்டதாயும் -இப்படி எல்லாவிதத் தொடர்புடையதாயும் -உள்ள அந்த ஸத்தை
குழந்தாய்
அதையே மூலமாக உடையவை யாவையும் மக்களும் அதையே இருப்பிடமாகக் கொண்டவை -அதிலேயே நிலை பெற்று இருப்பவை என்று பரக்கச் சொல்லி –
காரண கார்ய தொடர்பால் இங்குள்ள முழுமையான உலகு யாவையும் இதையே ஆத்மாவாகக் கொண்டு இருக்கின்றன –
அதுவே உண்மை என்று கூறி -இது ஒன்றே ஆத்மா உலகு முழுவதும் அதனுடைய உடல் –
உரையாடிக் கொண்டு இருக்கும் ஸ்வேத கேதுவைச் சுட்டிக் காட்டி –
அதனால் அது என்று குறிக்கப்படும் ஸத் உனக்கும் ஆத்மாவாக -நீ அதனின்றும் பிரிக்க முடியாத தொடர்புடையவனாக -பிரகாரமாக -இருக்கிறாய் என்பதை
தத்வமஸி என்று
உத்தாலகர் நிறுவுகிறார் –

———–

21–தத் இதம் ப்ரஹமாத் மகத்வம் கிம் ஆத்ம சரீர பாவேந –
உத ஸ்வரூபேண –
இதி விவேச நீயம்-ஸ்வரூபேண திசேத் ப்ரஹ்மண-ஸத்ய ஸங்கல்பத்வாதய
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத் யுபக்ரம அவகதா பாதிதா பவந்தி
சரீராத்ம பாவேந ச ததாத்மகத்வம் ஸ்ருத் யந்தராத் விசேஷதோ அவகதம் அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம்
சர்வாத்மா இதி பிரசாசி த்ருத்வ ரூபாத்மவேந ஸர்வேஷாம் ஜனாநாம்
ஆத்மா சர்வம் சாஸ்ய சரீரம் இதி விசேஷதோ ஞாயதே ப்ரஹமாத் மகத்வம்
ய ஆத்ம திஷ்டந் ஆத்மாநம் அந்தரோ யமயதி சதே ஆத்மா அந்தர்யாம் யம்ருத-இதிச –
அத்ராபி அநேந ஜீவேநாத்மநா இதி இதமேவ ஞாயத இதி பூர்வமே வோக்தம் —

(சரீராத்மா -என்பதால் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூபேணே இல்லை-ஸ்வரூபத்தால் ஒன்றானால் ஸ்ருதி வாக்கியங்கள் பாதகம் ஆகுமே )

இந்தப் ப்ரஹ்மம் ஆத்மாவாக இருப்பது எப்படி –
உடலுக்குள் உயிராய் உறைந்து இருக்கிறதா
அல்லது அதுவே மாறுபட்டு இந்த உருவாக ஆகியதா -என்று ஆராய்வோம் –
அது தானே மாறியது என்று கொண்டால் ப்ரஹ்மமானது -நான் பலவாக ஆகக் கடவேன்-மக்களைப் படைப்பேன் -என்று மெய்யான வினைத்திட்பம் கொண்டு அதனால் அது வினையாற்றியது எனத் துவக்கத்தில் சொல்லியது தவறாக ஆகும்
மாறாக உடை உயிர்த் தொடர்பு எனில் -அந்தப் ப்ரஹ்மத்தின் பொருள்களில் உள்ளுறையும் தன்மை மறைப் பொருள்களால் சிறப்பாக அறியப்பட்டு இருக்கிறது
உயிரிகளின் உள்ளுறைந்து ஆள்பவன் -எல்லாவற்றுக்கும் ஆத்மாவாகிறான் -என்றும்
நன்கு நிலை நிறுத்தப் பட்டவனாய் எல்லா உயிர்களுக்கும் உள்ளுறைந்து ஏவுகிறவனாய் இருக்கிறான் என்றும்
உள் நுழைந்து என்றும்
எல்லாவற்றுக்கும் ஆத்மா -என்றும்
எல்லா மக்களுக்கும் ஆத்மா -எல்லாம் அவனுடைசிறப்பாக அறியப்படும் ய உடல் -என்றும்
ப்ரஹ்மத்தின் உயிர் நிலைத் தொடர்பு சிறப்பாக அறியப்படும்
மேலும் ஆத்மாவில் ஆத்மாவாய் உள்ளிருந்து எவன் ஆள்கிறானோ -அந்த ஆத்மாவின் உள்ளுறைபவன் இனிமையானவர் -என்று
எல்லாம் சொல்லப்படுகின்றன

மேலும் இதே உபநிஷத்தில் -புறப்பாடு இன்று எல்லா உயிர்களிலும் என்றும் முன்பே சொல்லப்பட்டு இருக்கிறது –

——–

22–அத -ஸர்வஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம சரீரத்வாத் சர்வ சரீரம் சர்வ பிரகாரம் சர்வை சப்தை
ப்ரஹ்மைவாபி தீயத இதி-ததுத்வம் -இதி சாமாநாதி கரண்யே ந ஜீவ சரீரதயா ஜீவ பிரகாரம் ப்ரஹ்மை வாபிஹிதம் –
ஏவமபிஹிதே சதி அயமர்த்தோ ஞாயதே த்வம் இதிய பூர்வம் தேஹஸ் யாதிஷ்டாத்ருதயா பிரதித ச பரமாத்ம சரீரதயா
பரமாத்ம பிரகார பூத பரமாத்மா பர்யந்த ப்ருதக் ஸ்திதி -ப்ரவ்ருத்தி –அநர்ஹ—அத –த்வம்-இதி சப்த
தத் பிரகார விசிஷ்டம் தத் அந்தர்யாமிணமே வாசஷ்டே இதி அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வியகரவாணி –
இதி ப்ரஹ்மாத்மகதயைவ ஜீவஸ்ய சரீரிண ஸ்வ நாம பாக்த்வாத்
தது த்வம் இதி சாமா நாதி கரண ப்ரவ்ருத்தயோர் த்வயோரபி பதயோ ப்ரஹ்மைவ வாஸ்யம் -தத்ர -தது- பதம் –
ஜகத் காரண பூதம்-சர்வ கல்யாண குணாகரம் -நிரவத்யம்-நிர்விகாரமா சஷ்டே த்வம் இதிச -ததேவ ப்ரஹ்ம ஜீவ அந்தர்யாமி
ரூபேண ஸ்வ சரீர ஜீவ பிரகார விசிஷ்டமாசஷ்டே ததேவம் ப்ரவ்ருத்தி நிமித்த பேதேந ஏகாஸ்மின் ப்ரஹ்மணயேவ ததுத்வம் –
இதி த்வயோ பதயோர் வ்ருத்திருக்தா-ப்ரஹ்மணோ நிரவத்யத்வம் நிர்விகாரத்வம்
சர்வ கல்யாண குணாகரத்வம் ஜகத் காரணத்வம் ச அபாதிதம் –

தத்வமஸி -என்ற ஸ்ருதியின் பொருளை நிலை நிறுத்தல்

பிறகு ப்ரஹ்மத்திற்கு சேதன அசேதன வஸ்துக்கள் யாவும் உடலாய் -எல்லா வகையிலும் பிரிவற்ற தொடர்புடையதாய் இருப்பதால் எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்று கொள்ள முடியும்
அவ்வாறே அது -தது -நீ த்வம் -என்று ஸாமாநாதி கரண்யத்தால் -ஒரு பொருள் பன் மொழியால் -உயிரை உடலாக உயிருடன் பிரிவற்ற ப்ரஹ்மத்தையே காட்டுகிறது –

இவ்வாறு கூறப்படுவதால் கீழ்க்கண்ட விளக்கம் இதற்குப் பொருளாகக் கிடைக்கிறது
த்வம் -நீ -என்பதால் -எவன் முன்பே உடலுள் இருந்து ஏவுபவனாய் தோன்றுகிறானோ -இங்கு ஸ்வேத கேதுவின் ஆன்மா -அவன் பரமாத்மாவிற்கு உடலாதலால் -பரமாத்மாவின் நின்றும் பிரித்த நிலையற்றவனாய் -அவனைப் பிரிந்து இயங்க இயலாதவனாய் இருப்பதால் -அவனுடன் பிரிக்க இயலா தொடர்புடைமையால் அவனுள் இருக்கும் பரமாத்மாவையே இச்சொல் காட்டுகிறது

அது நீ -என்பது ஒரு பொருள் பன் மொழியால் பரமாத்மாவையே இரு சொற்களும் காட்டுகின்றன –
அது -தது -என்னும் பதம் உலகின் காரணமாய் -நற் குணங்கள் யாவும் கொண்டதாய் -இழி குணங்கள் அற்றதாய் -மாறுபாடு அடையாததாய் -இருக்கும் நிலையைக் காட்டுகிறது –
நீ-த்வம் -என்பதனால் -அதற்கு உடலாய் பிரிவற்ற நிலையை யுடைய ஜீவாத்மாவின் உயிராய் உள்ள பரமாத்மாவைக் காட்டுகிறது –
அதனால் அது என்னும் சொல் பொருள் காட்டும் தன்மையால் -ப்ரவ்ருத்தி நிமித்தம் -நீ என்னும் சொல்லுடன் ஒருபடிப்பட்டது

ஆகவே அது நீ என்னும் இரு சொற்களும் குறையற்றதும் மாறுபாடற்றதும் -நற் பண்புகள் யாவும் நிறைந்ததும் -உலகிற்குக் காரணமானதுமான ப்ரஹ்மமே என்று நிரூபிக்கப் பட்டது

ஸாமாநாதி கரணம்
பொருள் தன்மை குணம் வகை செயல் ஆகியவைகளைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளைக் காட்டினால்
சொற்கள் பலவாய் இருந்தாலும் பொருள் ஒன்றாகக் கொள்வது ஸாமாநாதி கரணம் என்று பெயர் –

————

23-அஸ்ருத வேதாந்தா புருஷா (சதாச்சார்ய உபதேசம் ஸ்ரவணம் பண்ணாதார்- )சர்வே பதார்த்தம் சர்வே ஜீவாத் மனஸ் ச ப்ரஹ்மாத்மகா இதி ந பஸ்யந்தி
சர்வ ஸப்தாநாம் ச கேவலஷு தத் தத் பதார்த்ததேஷூ வாஸ்யைக தேசேஷூ வாஸ்ய பர்யவஸாநம் மன்யந்தே
ஸ்ருத வேதாந்தஸ்து (கற்றார் அதயேவ நான்மறையாளர் ஆவார்)வேதாந்த வாக்ய ஸ்ரவணேன ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா
ச ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் சர்வ ஸப்தாநாம் தத் தத் பிரகார ஸம்ஸ்திதா ப்ரஹ்ம வாசித்வம் ச ஜாநந்தி —

(வாசக அர்த்தம் ப்ரஹ்மம் வரை பர்யவசிக்கும்-ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா-வேதத்தின் உட் பொருள் நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -பிரதான பரதந்தர அர்தம் )

வேதாந்தத்தைக் கேட்டு அறியாதவர்கள் ஆகையால் -பாமர மக்கள் எல்லாப் பொருள்களும் அதற்கு அபிமானியான ஜீவாத்மாவும் -அதை உடலாகக் கொண்ட பரமாத்மாவைக் காட்டும் என்று அறியார்கள்
அதனால் அவர்கள் சொற்கள் -அதனதனால் குறிப்பிடப்படும் பொருட்களை மட்டும் தனிப்பட்டுக் குறிக்கின்றன என்று கொள்கிறார்கள் –
வேதாந்தத்தைக் கேட்டு அறிந்தவர்கள் அதன் பயனாக பொருள்கள் ப்ரஹ்மத்தின் செயல் என்றும் ப்ரஹ்மத்தை உள்ளுறை பவனாக உடையது என்றும்
அதனால் சொற்கள் யாவும் அதனால் கொள்ளப்படும் பொருளையும் அதனுடன் பிரிவற்ற நிலையை யுடைய பரமாத்மாவையும் காட்டும் என்று அறிகிறார்கள்

———-

24–நந் வேவம் கவாதி ஸப்தாநாம் தத் தத் பதார்த்த வாசிதயா வ்யுத்பத்திர் பாதிதா ஸ்யாத்
நைவம் சர்வே ஸப்தா அசிஜ் ஜீவ விசிஷ்ட்ட பரமாத்மநோ வாசகர் இத்யுக்தம் நாம ரூபே வ்யாகரவாணி இத்யத்ர
தத்ர லௌகிகாஸ்து புருஷா சப்தம் வ்யவஹரந்தஸ் சப்த வாஸ்யே பிரதாநாம் சஸ்ய பரமாத்மன ப்ரத்யஷாத் யபரிசேத்யவாத்
வாஸ்யைகதேச பூதே வாஸ்ய சமாப்தி பர்யவசாதே வேதாந்த ஸ்ரவணேந ஹி வ்யுத்பத்தி பூர்யதே –
ஏகமேவ வைதிகாஸ் ஸப்தா சர்வே பரமாத்மா பர்யந்தாந் ஸ்வார்த்தாந் போத யந்தி —

அப்படி என்றால் பசு முதலிய சொற்கள் அந்த அந்த பொருட்களைக் குறிப்பதாகத் தானே உலகில் காணப்படுகிறது
அது அப்படி யல்ல –
பெயர் உருக்களைக் கொடுக்கக் கடவேன் என்று பரமாத்மா உள் நுழைந்து ஆக்குவதால் எல்லாச் சொற்களும் -சேதன அசேதன பொருட்களை உடலாகக் கொண்டு உள்ளுறையும் பரமாத்மாவைத் தான் காட்டுகின்றன –
ஆயினும் உலகில் உள்ள மாந்தர்கள் வழக்கில் உள்ள சொற்களைக் குறிக்கும் ஒரு பகுதியான கட் புலனாகும் பொருளை மட்டுமே கொண்டு கட் புலனாகாத ஜீவ பரமாத்மாக்களை நீக்கி
இதனாலேயே அச் சொற்களின் பொருள் முடிந்ததாகக் கருதுகிறார்கள்
இவ்வாறு மெய்ப்பொருள் அறியும் திறன் வேதாந்தஞானத்தாலேயே கிடைக்கும்
இவ்வாறே வேதச் சொற்கள் யாவையுமே பரமாத்மா வரையிலான பொருளைக் காட்டுகின்றன –

——-

25-வைதிகா ஏவ சர்வ ஸப்தா ஆதவ் வேதாதேவோத்ருத் யோத்ருத்ய பரேண ஏவ ப்ரஹ்மணா சர்வபதாதீந் பூர்வவத்
ஸ்ருஷ்ட்வா தேஷு பரமாத்ம பர்யந்தேஷு பூர்வவத் நாம தயா ப்ரயுக்தா ததாஹ மனு -1-21-
ஸர்வேஷாம் நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக் வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே இதி
சமஸ்தா சமஸ்தாநாநி ரூபாணீதி யாவது ஆஹ ச–பகவான் பராசர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-63-
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யா நாஞ்ச ப்ரபஞ்சனம் வேத சப்தேப்ய ஏவாதவ் தேவதீநாம் சகாரச -இதி ஸ்ருதிஸ் ச
ஸூர்ய சந்த்ர மசவ் ததா யதா பூர்வகமகல்பயத்-இதி
ஸூர்யாதீந் பூர்வவத் பரிகல்ப்ய நாமாநி ச பூர்வச் சகரேத் யர்த்த —

ஏவம் ஜகத் ப்ராஹ்மண ஓர் அநந்யத்வம் பிரபஞ்சிதம் -தேந ஏகேந ஞாநேந ஸர்வஸ்ய ஞாததா உபபாதிதா பவதி –
ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரியதா ப்ரதிபாதநேந ததாத் மகத்யைவ் சத்யத்வம் நான்யதேதி தத் சத்யம் –
இத் யுக்தம் யதா த்ருஷ்டாந்தே ஸர்வஸ்ய ம்ருத் விகாரஸ்ய ம்ருதாத்மநைவ சத்யத்வம் –

(தேவதாதிகரணம் இத்தையே விளக்கும்)

சொற்கள் யாவும் வேதத்தில் உள்ளவையே
ஏன் எனில் –
வேதத்தில் இருந்தே சொற்களைப் பொறுக்கி எடுத்து அதற்கு ஏற்ப முன் கல்பத்தில் இருந்தபடியே பிரம்மா படைத்தான் என்பதனால் அவைகள் பரமாத்மா வரை காட்டி பொருள் முடியும்
அப்படியே மனுவும் கூறுகிறார்
அந்தப் பகவான் பொருட்களுக்கு பலவகையான பெயர்களையும் உருக்களையும் முன்பு இருந்த படியே வேதச் சொற்களுக்கு ஏற்ப தனித் தனியாகப் படைத்தான் -1-21-
பராசரரும்
பெயரும் உருவம் யுடையதாயும் உயிர்களாலும் பொருட்களாலும் நிறைந்த உலகுகளை -பிரபஞ்சத்தை -தேவர்கள் முதலான வகைகளையும் -தத் தமக்குறிய செயல்களையும் வேதச் சொற்களைக் கொண்டே -அந்தப் ப்ரம்மா முதலில் படைத்தான் -என்கிறார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-63-
வேதமும்
முதலில் ஸூர்ய ஸந்த்ரர்களை -முன் -பூர்வ கல்பத்தில் -இருந்தபடியே பரமாத்மா படைத்தான் -என்கிறது
ஸூர்யன் முதலானவர்களும் முன்பு இருந்தபடியே படைக்கப்பட்டு அதன்படியே பெயரிடப் பட்டனர் என்று அறியலாம்

இவ்வாறே உலகும் ப்ரஹ்மமும் வேறுபட்டு இராமை நிரூபிக்கப் பட்டது-அதனால் ஒன்றை அறிவதால் மற்ற ஓன்று தானே அறியப் பட்டதாகிறது -எப்பொருளும் பரமாத்மாவின் செயல் என்று சொல்லப்படுவதால் -அதை ஆத்மாவாகக் கொண்டிருப்பதால் மட்டுமே அப் பொருளுக்கு இருப்பு -சத்யத்வம்-வஸ்துத்வம் -ஏற்படுகிறது-இவ் விருப்பு கொண்ட -அது உண்மை -உள்ளது -என்று கூறப்படுகிறது
அதையே இந்த எடுத்துக் காட்டால் இப்பொருள்கள் மண்ணின் மாறுபாட்டால் ஏற்படுபவை யாதலின் மண் என இருப்பது உண்மையே எனப் பேசப் படுகிறது

————-

26–சோதக வாக்ய அந்யபி (பரிசுத்தமாக ஸ்வரூபத்தை நிரூபிக்கும் வாக்கியங்கள் )நிரவத்யம் சர்வ கல்யாண குணாகரம் பரம் ப்ரஹ்ம சோதயந்தி

பண்புரைக்கும் சொற் தொடர்களும் -சோதக வாக்யம் -கூட குற்றமற்ற நற் பண்புகள் யாவும் கடலென நிறைந்துள்ள பரப் ப்ரஹ்மத்தையே ஆய்ந்து அமைகின்றன

———-

27–சர்வப் ப்ரத்யநீக ஆகாரதா போதநேபி தத் ப்ரத்யநீக ஆகாரதாயாம் பேதஸ்ய அவர்ஜனீயத்வாந்ந நிர்விசேஷத்வ ஸித்தி–

எல்லாக் குணங்களுக்கும் எதிர்த் தட்டான நிலையைச் சொன்னாலும் -அந்தவந்த மாறுதல்களைச் சொல்வதால் வெவ்வேறு பொருள்கள் கூறப்பட்டு விடும் -அதாவது குணங்கள் அற்றது என்பது விலக்கப்படும்

——–

அத்வைதப் பொருள்
ஒரு பொருளுக்கு இடப்படும் அடைமொழி அதை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்திக் காட்டும்
அவ்வாறே ப்ரஹ்மமும் -ஸத்யம் ஞானம் அநந்தம் -என்று குறிக்கப் படுகிறது
இதை அடைமொழிகள் என்று கொண்டால் ப்ரஹ்மமும் இவ்வடை மொழிகளுடைய ஒரு பொருள் என்று தோன்றுவதால் -அதனால் ப்ரஹ்மத்தின் இருப்பும் பண்புகளும் ஏற்படுவதால் அத்வைதிகள் இதை ஏற்பதில்லை
ஏன் எனில் அவர்கள் கருத்துப்படி ப்ரஹ்மம் குணமற்றது இருப்பற்றது உருவமற்றது
ஆகவே அவர்கள் இந்த மூன்று சொற்களுக்கும் பின்வருமாறு பொருள் கொண்டனர்
ஸத்யம் -அஸத்யம் அற்றது -இருப்பில்லாமை இல்லாதது
ஞானம் -அஞ்ஞானம் இல்லாதது -அறிவின்மை இல்லாதது
அநந்தம் -அளவு இல்லாதது

இதற்கு அபாவம் -இன்மை -என்பதே பொருளாவதால் மூன்று தனித் தன்மையான இன்மைகள் தேவையில்லை

இவ்வாறு கொள்வதால்
ப்ரஹ்மத்திற்குத் தனி உருவமும் குணங்களும் இல்லை என்றும்
அது ஞானம் மட்டுமே என்றும் கொள்கின்றனர்

விஸிஷ்டாத்வைதப் பொருள்
இங்கு இம் மூன்று பதங்களுக்கும் பின்வருமாறு பொருள் கொள்ளப் படுகிறது
1-ஸத்யம் –நிருபாதிக சத்தாயோதி -தன இருப்புக்கு வேறு ஒன்றின் துணை நாடாதது -என்றும்
நிர் விகார ஆஸ்பதம் -என்றும் மாறுபாடு அற்றது -என்றும்
மற்றைய உயிருள்-உயிரல் -பொருள்கள் பரமாத்மாவின் விருப்படி மாறுபாடு அடைபவை

2- ஞானம் -முக்காலங்களிலும் -எந்நிலையிலும் -அசங்குசித -குறைவடையாத அறிவு
ஆத்மாவுக்கும் ஞானம் குணமானாலும் -அது நித்யமானாலும் -குறைவுடையதாய் இருக்கும்
பத்தனுக்கு -எப்போதும் குறைபட்டது
முக்தனுக்கு -முன்பு குறைபட்டது
நித்யனுக்கு -பரமாத்மாவின் நினைவால் மட்டும் குறைவு படாது இருப்பது

3- அநந்தம் –அபரிச்சேத்ய -அளவிறந்தது -அளவு படுதல் இல்லாதது
இடம் காலம் பொருள்களால் -மூன்றாலும் அளவு படாதது
பரமாத்மா தவிர்ந்த மற்றவை இம்மூன்று வகையாலும் அளவு பட்டவை

அதாவது ப்ரஹ்மம்
தன் இருப்புக்கு வேறு ஒன்றின் துணை நாடாமலும்
என்றும் மாறுபாடு இல்லாமலும்
எக்காலத்தும் எந்நிலையிலும் குறைவடையாத ஞானத்தோடும்
இடம் காலம் பொருள்கள் எனும் மூன்று வகையாலும் அளவிட முடியாததாகவும் இருக்கிறது

————

28–நநு-
ஞான மாத்திரம் ப்ரஹமேதி ப்ரதிபாதிதே நிர் விசேஷ ஞான மாத்திரம் ப்ரஹமேதி நிஸ் ஸீயதே —
நைவம் ஸ்வரூப நிரூபண தர்ம ஸப்தா ஹி தர்ம முகேந ஸ்வரூபம் அபி ப்ரதிபாத யந்தி கவாதி சப்தவத்-ததாஹ ஸூத்ரகார
தத் குண சாரத்வாத் வ்யபதேச -ப்ராஞ்ஞவது -இதி
( ஞான குண சாரத்வாத் ஆத்மநோ ஞானம் இதி வியபதேச-யதா ப்ராஞ்ஜேந ப்ரஹ்மணா விபஸ்சிதா–யஸ் சர்வஞ்ஞ சர்வவித் –
இதி சர்வஞ்ஞ ஏவ ஞான குண சாரத்வாத் சத்யம் ஞானம் இதி வியபதிஸ்யதே )
யாவதாத்ம பாவித்வாச்ச ந தோஷ இதி ஞாநேந தர்மேன ஸ்வரூபம் அபி நிரூபிதம் நது ஞான மாத்ரம் ப்ரஹமேதி கதம்
இதமவகம்யத இதி சேத்-யஸ் சர்வஞ்ஞ ஸர்வவிது-இதி ஞாத்ருவத்வஸ்ருதே
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச
விஞாதாரம் அரே கேந விஜாநீயாத் –இத்யாதி ஸ்ருதி சதா சமதிகதமிதம்-ஞானஸ்ய தர்ம மாத்ரவாத் தர்ம மாத்ரஸ்ய
ஏகஸ்ய வஸ்துத்வ ப்ரதிபாதாந நுப பத்தேஸ் ச
அத ஸத்ய ஞாநாதி பதாநிஸ் வார்த்த பூத ஞானாதி விசிஷ்டமேவ ப்ரஹ்ம ப்ரதிபாத யந்தி

ப்ரஹ்மத்திற்கு பண்புகள் இல்லை என்பதை மறுத்தல்

மாறாக ஞானம் மட்டுமே ப்ரஹ்மம் எனில்
அடையற்ற ஞானமே ப்ரஹ்மம் என்று நிச்சயிக்கப் படும்
அறிவதும் அறியப்படுவதும் வேறு இல்லை என்றதாகும் –
அவ்வாறு இல்லை –
ஒரு பொருளை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்தும் அடைமொழிகள் அப்பொருளுக்கு உரிய பண்பு செயல் ஆகியவற்றால் அதை மற்றவற்றின் நின்றும் பிரித்துக் காட்டும் –
எடுத்துக் காட்டாக -பசு முதலியவை -மற்றைய நாலு கால் பிராணிகளின் நின்றும் அதன் பசுத்தன்மை-கோ தன்மை -அதை வேறு படுத்துகிறது –
இதைக் கூறும் இடத்து ப்ரஹ்ம ஸூத்ர காரரும் -எந்தக்குணம் ஒரு பொருளில் விஞ்சி இருக்குமோ அந்தக்குணத்தை யிட்டே அப்பொருளை அழைக்கலாம் என்கிறார்

ஞானத்தையே பண்பாக உடையதாதலின் ஆத்மாவுக்கு ஞானம் என்றே பெயர்
பரமாத்மா -வாலறிவன் -ஆனந்தம் -பரமாத்மா –
மேலும் எந்தக் குணம் ஒரு பொருள் உள்ள மட்டும் அதை விட்டு பிரியாமல் இருக்குமோ அதே குணத்தையிட்டு அதைக் குறிப்பதில் தவறில்லை –
அதனால் ஞானம் என்னும் பண்பினால் அதை யுடைய பரமாத்மாவும் குறிக்கப் படும்

அந்த ஞானமே பரமாத்மா என்பதில்லை -எப்படி எனில்
ஸர்வஞ்ஞ ஸர்வ வித் -எல்லாவற்றையும் அறிகிறான் -எல்லா விதத்தாலும் அறிகிறான் –

———–

29–தத் தவம் இதி த்வயயோர் அபி பதயோ -ஸ்வார்த்த ப்ரஹாணேந நிர்விசேஷ வஸ்து ஸ்வரூப உபஸ்தான
பரத்வே முக்கியார்த்த பரித்யாகச்ச-
நநு
ஐக்ய தாத்பர்ய நிஸ்ஸயாத் ந லக்ஷணா தோஷா ஸோயம் தேவ தத்த இதிவத் –
யதா ஸோ அயம் -இத்யத்ர ச இதி சப்தேன தேசாந்தர காலாந்தர சம்மந்தீ புருஷ பிரதீயதே
அயம் இதி ச சந்நிகித தேச வர்த்தமான கால சம்மந்தீ தயோ சாமாநாதி கரணேந ஐக்யம் பிரதீயதே
தத்ர ஏகஸ்ய யுகபாத் விருத்த தேச கால சம்பந்திதயா பிரதீதீர்ந கடத இதி த்வயோர் அபி பதயோ
ஸ்வரூப மாத்ரோப ஸ்தாபந பரத்வம் ஸ்வரூபஸ்ய ச ஐக்யம் ப்ரதிபாத்யதே இதி சேத் –

(தத் தவம் அஸி -அஹம் ப்ரஹ்மாஸ்மி -இது வரை நான் என்று பிரமித்தது இல்லை -இதுவே அத்வைதி வாதம்
கங்கா கோ சாலை லக்ஷணையால் கங்கைக் கரையில் –
இரண்டு பதங்களுக்கும் லக்ஷணையால் அமுக்கிய வாதம் கொள்ளக் கூடாதே)

(ஞானம் த்வி விதம்-முதலில் இந்திரியங்கள் மூலம் அறிந்த ஞானம் ஓன்று
ஸ்ம்ருதி -இந்திரிய ஸஹ காரம் வேண்டாம் இதுக்கு -ஸம்ஸ்காரம் -மனப் பதிவு ஒன்றுமே வேண்டும்
அனுபவம் பற்றிய நினைவு -ப்ரத்யக்ஷம் -விஷய சம்யோகத்தால் வந்தது
தேவ தத்தன் ஸகா தேவ தத்தா அயம் தேவ தத்தா -)

தத்வமஸி என்னும் வாக்கியத்திற்கு அத்வைதிகள் சொல்லும் பொருளுக்கு மறுப்பு
அது நீ -தத் த்வம் என்ற இரண்டு சொற்கள் அவை உண்மையாகக் குறிப்பிடும் பொருளை விட்டு -நேராகக் ஆட்டும் பொருளை மட்டும் கொண்டு அவை குணங்கள் அற்ற ஒரு பொருளைக் காட்டும் எனக் கொண்டால் அதன் மெய்ப் பொருளைத் தள்ள வேண்டி வரும்

மாறாக அத்வைதிகள் கூறுவது போல் -குணம் இன்மையால் இரண்டும் ஒன்றே என்று கொண்டால் இலக்கணை மீறும் குற்றம் ஆகிறது
எடுத்துக் காட்டாக
இவரே அந்த தேவதத்தன் என்று கூறுகையில்
இவர் என்பதனால் அப்பொழுது அவ்விடத்தில் காணப்படுபவரும்
அந்த என்பதனால் பிறிதொரு சமயத்தில் வேறொரு இடத்தில் காணப்பட்ட வரும் ஒருவரே என்பதாகிறது –
இங்கு தேவதத்தன் என்பவருக்கு கடந்த கால இடத் தொடர்புகளும் நிகழ் கால இடத் தொடர்புகளும் முக்கியமாகக் கொள்ளப் படாமல் தேவ தத்தன் என்னும் நபரே முக்கியமாகக் கொள்வது போல் பொருள் கொண்டு விட வேண்டும் என்பது அத்வைதிகள் முடிவு

இதம் ரஜதம் -ஒளி மிக்க பொருளைக் கண்ட வுடன் அது வெள்ளி என்று தோன்றுகிறது
அருகில் சென்று பார்த்த போது -ந இதம் ரஜதம் -இது வெள்ளி அல்ல சிப்பி -என்று முடிவாகிறது –
முதலில் அறிவு பாதிக்கப் பட்டு இருந்தது –
பிறகு மெய்யறிவு உண்டாகி அது இல்லை என்றதாயிற்று
இலக்கணைக் குற்றம் –எடுத்துக் காட்டு-மஞ்சாக்ரோதை -கட்டில்கள் சத்தம் போடுகின்றன -என்பதில் கட்டில்கள் என்பதற்கு அதில் அமர்ந்து இருக்கும் மனிதர்களை யென்றே கொள்ள வேண்டும் –
ஏன் எனில் தனியாகக் கட்டில்களுக்கு ஒலி எழுப்பும் திறனில்லை –
தச மத்வம் அஸி -அந்தப் பத்தாவது ஆள் நீ

————-

30–நைத வேதம்
சோயம் தேவதத்த-இத்யத்ராபி லக்ஷணா கந்தோ ந வித்யதே விரோத பாவாத் –
ஏகஸ்ய பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தோ ந விருத்த தேசாந்தர ஸ்திதி பூதா சந்நிஹித தேச ஸ்திதி வர்த்ததே
அத பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தி தயா ஐக்ய ப்ரதிபாதனம விருத்தம் தேச த்வய விரோதஸ் ச கால பேதேந பரிஹ்ருத
லக்ஷணாயாம் அபி ந த்வயோர் அபி பதயோர் லக்ஷணா ஸமாச்ரயணம் ஏகேநைவ லஷிதேந விரோதி பரிஹாராத் –
லக்ஷணாபாவ ஏவ உத்த தேசாந்தர சம்பந்தி தயா பூதஸ்யைவ அந்ய தேச சம்பந்தி தயா வர்த்தமானத்வா விரோதாத்
ஏவ மாத்ராபி ஜகத் காரண பூதஸ்யைவ பரஸ்ய ப்ரஹ்மண
ஜீவ அந்தர்யாமி தயா ஜீவாத்ம த்வம விருத்தமிதி ப்ரதிபாதிதம் -யதா பூதயோர் அபி ஹி த்வயோர் ஐக்யம்
சாமாநாதி கரண்யேந பிரதீயதே -தத் பரிந்யாகேந ஸ்வரூப மாத்ர ஐக்யம் ந சாமநாதி கரண்யஸ்யார்த்தா
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகஸ்மிந் நர்த்தே வ்ருத்திஸ் சாமாநாதி கரண்யம் (பதாஞ்சலி அருளிய லக்ஷணம் )-இதி ஹி
தத்வித ததா பூதயோர் ஏவ ஐக்யம் உபபாதிதம் அஸ்மாபி –

அது அவ்வாறு அல்ல
இவர் அந்த தேவதத்தன் என்பதில் இலக்கணைக் குற்றம் வராது -ஏன் எனில் இவர் அந்த என்ற சொற்களுக்கு மாறுபட்ட பொருளைக் குறிக்காமையால் ஒரு நபருக்கு -பொருளுக்கு -கடந்த காலத்தில் வேறொரு இடத்துடன் உள்ள தொடர்பு -நிகழ் காலத்தில் கண் முன் காணும் இடத்துடன் உள்ள தொடர்புக்கு மாறுபாடுடையதன்று
ஒருவருக்கு இரு வேறு பீடத்துடன் உள்ள தொடர்பின் கால மாறுபாட்டால் சமன் செய்யப்படுகிறது

இலக்கணையாகக் கொண்டாலும் இரண்டு பாதங்களும் இலக்கணையால் சுட்டிக் காட்டப்படும் ஒரே பொருளினால் அவ்விரண்டு சொற்களும் ஒன்றேயாக ஒரு பொருளுடையவையாக ஆகமாட்டா
இங்கு கடந்த காலத்தில் வேறோர் இடத்தில் தொடர்புடையதாக இருந்தமையும்
தற் சமயம் இங்கு காணப்படுதலும் ஒரு நபருக்கு இலக்கணைக் குற்றமாக முடியாது
அதே போல் உலகின் காரணமாய் இருக்கும் தன்மை யுடைய ப்ரஹ்மம் -தத் -ஆத்மாவின் உள்ளுறையாய் விளங்கி -அந்த ஆத்மாவின் நின்றும் வேறுபட்ட ஒரு ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது –
அவ்வாறு அந்த இரண்டு குணமுள்ள ப்ரஹ்மமும் ஒன்றே என்பதால் ஸாமாநாதி கரணம் –சமன் செய்து பொருள் கோடல் -கிடைக்கிறது
இப்படிக் கொள்வதைத் தவிர்த்து -தத் த்வம் -அது நீ என்ற இரு சொற்களும் தம் தம் பொருளைக் குறிக்காது –
தம்மின்றும் வேறுபட்ட ஒரே ஆத்மா -பரமாத்மா =ஜீவாத்மா -என்ற பொருளைத் தர இயலாது
வேறுபட்ட பொருள் காட்டும் இரு சொற்கள் தத் தம் நேர் பொருளை விட்டு ஒரே பொருளை -வஸ்துவை அடை மொழியினால் காட்டுதல் ஸாமா நாதி கரணமாகும் -சமன் செய்து பொருள் கோடலாகும் –
இதனால் இரு சொற்களாலும் ஒரே பொருள் -வஸ்து -குறிக்கப்படும் என்றே அறியப்பட்டது

இலக்கணை யாவது ஒரு சொல் தனக்குரிய நேர் பொருளைத் தவிர்த்து பழக்கத்தினாலோ -பண்பு மிகுதியினாலோ -அதினிலும் வேறுபட்ட ஒரு பொருளைக் கொள்வது
எடுத்துக் காட்டு
உலக வழக்கில் கம்பி நீட்டினான் என்று கூறுகையில் ஒரு கொல்லன் உலோகத்தைக் கம்பியாக நீட்டுவதைக் கொள்ளாது -ஒருவன் தப்பி ஓடி விட்டான் -என்பதையே கொள்கிறோம் –

இங்கு அது என்ற சொல் தொலைவில் இருக்கும் ஒன்றைக் காட்டும் –
நீ என்பது அண்மையில் கண் முன்னே காணப்படும் ஒருவனைக் குறிக்கும்
இவை இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பிட வேண்டுமானால் அவை இரண்டும் தத் தம் அடைமொழிகளால் மட்டும் காட்ட இயலும் –
இல்லை எனில் அது நீ என்ற இரண்டு சொல் ஒரு பொருள் பன் மொழி -ஆ -பசு -போலாகும்
அவ்வாறு கொள்வது தவறு –
அவற்றுக்கு அடை -விசேஷணம் -உண்டு என்றால் ப்ரஹ்மத்திற்குப் பண்புகள் உண்டு என்று ஏற்பட்டு தமது பண்பற்ற ப்ரஹ்மம் என்ற கொள்கை மாறுபடும் என்பதால் அத்வைதிகள் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் –

———

31–உபக்ரம விரோத உப சம்ஹாரே வாக்ய தாத்பர்ய நிஸ்ஸயஸ் ச ந கடதே உபக்ரமே ஹி
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத்யாதிநா
ஸத்ய ஸங்கல்பத்வம் ஜகத் ஏக காரணத்வம் அப்யுக்தம் தத் விரோதி ச அவித்யாஸ்ரயத்வாதி ப்ரஹ்மண

(ஸப்தம் -வாக்ய சேஷம் -அது பிரகரண சேஷம் – -அது ஸாஸ்த்ர சேஷம் –
லிங்கம் அடையாளங்கள் -1-உபக்ரமம் உபஸம்ஹாரம்-இதுவே பிரதானம் -2-அப்பியாசம் -3-அபூர்வ வத் -4-பலம் -5-அர்த்தவாதம் -6-உபபத்தி ஆறும் உண்டே
சரீராத்மா பாவத்துக்கு உபக்ரமம் உப சம்ஹாரம் ஏகார்த்தம்)

துவக்கத்தில் சொன்ன பொருளும் முடிவில் கொண்ட பொருளும் ஒன்றே என்பது முடியாது –
துவக்கத்தில் அது நினைத்தது பலவாகக் கடவேன் மக்களைப் படைப்பேன் என்று உண்மையான வினைத்திட்பம் கொண்டு இருந்ததே உலகிற்குக் காரணமாயிற்று என்பது வெளிப்படை
அதற்கு மாறாகக் கொண்டால் அந்த ப்ரஹ்மத்திற்கு மக்களைப் படைக்கும் திறனும் அதற்கான ஞானமும் இல்லை
அது அஞ்ஞானத்திற்கு இருப்பிடமானது என்றதாகும்

அத்வைதிகள் அறிவே ஞானமே ப்ரஹ்மம் என்று முதற் கொள்கையாய் கொண்டுள்ளனர்
அவித்யை என்பதனாலேயே அது தன்னை மற்றை உயிர்களாக நினைத்து மயங்குகிறது
அந்த மயக்கமே இந்தப் பொய்யான உலகு உண்மை போல் தோன்றும் காரணம் என்பது அவர்கள் முடிவு
உலகைப் படைக்கும் அறிவு ப்ரஹ்மத்திற்கு இல்லை என்றால் ப்ரஹ்மமே ஞானம் என்று கொண்டது பொருந்தாது
அதாவது அவர்களே தங்கள் முதற் கொள்கைக்கும் முடிவான இருப்புக்கும் மாறுபடுகின்றனர்-

———-

32–அபி ச அர்த்த பேத தத் சம்சர்க்க விசேஷ போதந க்ருத பத வாக்ய ஸ்வரூப லப்த பிராமண பாவஸ்ய சப்தஸ்ய
நிர் விசேஷ வஸ்து போதநா சாமர்த்யாத்ந நிர்விசேஷ வஸ்து நி சப்த பிரமாணம்
நிர் விசேஷ இத்யாதி சப்தாஸ்து கேந சித் விசேஷேண விஸிஷ்டதயா அபஹதஸ்ய வஸ்துநோ வஸ்த்வந்தராவகத விசேஷ
நிர்சேஷதக தயா போதகா இதரதா தேஷாமப்யநவ போதகத்வமேவ ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண பதஸ்யை அநேக விசேஷ
கர்பிதத்வாத் அநேக பதார்த்த சம்சர்க்க போதகதவாச்ச வாக்யஸ்ய-

(சப்தம் ப்ரக்ருதி ப்ரத்யாத்மகம் பகுதி விகுதி சேர்ந்தே இருக்கும் -பேத ப்ரதிபாத்யம் ஆகவே இருக்குமே -கடம் -வேறே ஒன்றை வியாவர்த்திக்கைக்காக சொல்கிறது-ஆத்மா ப்ரஹ்மம் -ஞான மாத்திரம் -ஞாத்ருத்வாதி விசேஷணங்கள் இல்லாமல் –
ஞானம் சப்தத்தால் வஸ்து நிர்த்தேசம் என்பர்)

மேலும் ஒவ்வொரு சொல்லும் பகுதி விகுதியாய் நின்று ஒரு குறிப்பிட்ட பொருளை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறது
அவ்வாறே பல சொற்களின் தொடையான சொல் தொடரும் தனக்கென ஒரு தனித்த பொருளையே காட்டும்
அவைகள் எக்காலத்தும் பண்புகள் அற்ற ஒரு பொருளைக் காட்டும் திறன் அற்றவை இவ்வாறு பொருள் காட்டும் தன்மையே நமக்குக் கொள்ளத் தக்கது

பண்புகள் அற்றது என்பது நாம் எடுத்துக் கொண்ட பொருள் மற்றவைகளுக்கு உள்ள பண்புகள் உடையதன்று என்று மறுதலிப்பதாகும்
சொற்கள் யாவும் தத் தமக்குரிய ஒரு குறிப்பிட்ட பொருளைக் காட்டும் என்பதும்
அப்பொருள் மற்றவற்றின் நின்றும் வேறுபட்டது என்பதால் பண்புகள் அற்ற சிறப்புற்ற பொருள் என்று எதுவும் சொற்களால் கிடைக்க முடியாது

உலகின் மொழிகள் யாவும் அவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குறிப்பிட்ட தன்மையையே காட்டுகின்றன –
அது பொருளாகவோ பண்பாகவோ வினையாகவோ இருக்கலாம்
அதனால் அச்சொல் தான் காட்டும் பொருளை மற்றச் சொற்களின் பொருள்களில் இருந்து வேறுபடுத்துகிறது
ஆதலால் பண்புகள் அற்ற பொருள் என்று ஓன்று இருக்க முடியாது –

————–

33–அத ஸ்யாத் -நாஸ்மாபி நிர்விசேஷ ஸ்வயம் பிரகாசேசே வஸ்துநி சப்த பிரமாண மித்யுச்யதே
ஸ்வதஸ் சித்தஸ்ய பிராமணன – பேக்ஷத்வாத் சர்வை சப்தை தது பராக விஷேஷா ஞாத்ருத்வாதய சர்வே நிவர்த்தயந்தே
சர்வேஷு விஷே சேஷு வஸ்து மாத்ரம் அநவச் சிந்நம் ஸ்வயம் பிரகாசம் ஸ்வத ஏவாவதிஷ்டதே -இதி –

பண்புகள் அற்ற ப்ரஹ்மத்தின் தன்னொனிர் தன்மை என்னும் வாதத்திற்கு மறுப்பு

அது அவ்வாறாயின் -நாங்கள் ப்ரஹ்மத்திற்கு சொற்கள் -ஸப்தம் -சாட்சி பிரமாணம்-என்று சொல்லவில்லை –
ப்ரஹ்மம் தானே வெளிப்படும் பொருள் என்பதால் அதனைப் பிற -சொற்கள் முதலியன -காட்டிக் கொடுக்க முடியாது –
ஸாஸ்த்ரங்களின் எல்லாச் சொற்களும் தங்களுக்குள்ள சிறப்பான போல் கூறும் தன்மையால் குணம் அற்ற ப்ரஹ்மத்தின் மீது ஏற்பட்டு இருக்கும் பண்புகள் யாவையும் விலக்குகின்றன என்கிறார்கள்

அது அவ்வாறு அல்ல -எந்தச் சொல்லால் அப்பொருள் -ப்ரஹ்மம் -சுட்டிக் காட்டப்பட்டு அதன் பண்புகள் விலக்கப் படுகின்றன –
ஞானம் மட்டும் என்ற சொல்லாலா
அதுவும் கூட பண்பு உள்ள பொருளையே காட்டுகிறது –
அச்சொல்லின் பகுதி விகுதிகளால் அது தனக்கு உரிய பொருள் கூறும் தன்மையால் பண்புகள் உள்ள பொருளையே காட்டுகிறது –
ஞா -அறிதல் என்ற பொருள் படுதலால் செய்கையைக் காட்டி -அதனால் செய்பவனையும் -செய்யப்படும் தொழிலையும் காட்டும் –
தி -இது பெண் பால் ஒருமை விகுதி

ப்ரஹ்மம் தானாகவே காட்டிக் கொடுக்கிறது என்றாலும் அதன் நிலைச் சிறப்பால் பண்பற்ற பொருளைக் காட்ட முடியாது
இங்கு ஞப் தே என்பதால் பிறர் துணை யன்றி இயற்கையாகவே ஞானமுடையது ப்ரஹ்மம் என்பது பெறப்படுகிறது –

———-

34–நைததேவம்
கேந சப்தேந தத் வஸ்து நிர்திஸ்ய தத் கதா விசேஷா நிரஸ்யந்தே –
ஞாப்தி மாத்ர சப்தேந -இதி சேத் –
ஸோபி ச விசேஷ மேவ வஸ்து அவலம்பதே ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண விசேஷ கர்ப்பித தத்வாத தஸ்ய –
ஞா -அவ போதநே இதி ச கர்மக-ச கர்த்ருதுக கிரியா விசேஷ க்ரியாந்தர வ்யாவர்த்தக-ஸ்வபாவ விசேஷஸ் ச
ப்ரக்ருதயா அவகம்யதே ப்ரத்யயேந லிங்க சங்க்யாதயா-
ஸ்வத ஸித்தாவபி ஏதத் ஸ்வபாவ விசேஷ விரஹே ஸித்திரே வநஸ்யாத் –
அந்ய சாதந ஸ்வ பாவதயா ஹி ஞப்தே ஸ்வதஸ் சித்தருஸ்யதே–

(ஞா -அவ போதநே-அறிதல் -ஏதாவது ஒன்றைப் பற்றியே இருக்க வேண்டும் -யார் அறிகிறான் -யாரை அறிகிறான் எதை அறிகிறான் கேள்வி வருமே
மாத்திரம் சப்தம் இவற்றை விவரிக்காதே -லிங்கம் அடையாளம் –)

பண்புகள் அற்றது -என்பது நாம் எடுத்துக் கொண்ட பொருள் மற்றவைகளுக்கு உள்ள பண்புகள் உடையதன்று என்று மறுதலிப்பதாகும் –
சொற்கள் யாவும் தத் தமக்கு உரிய ஒரு குறிப்பிட்ட பொருளைக் காட்டும் என்பதும் -அப்பொருள் மற்றவற்றின் நின்றும் வேறுபட்டது என்பதால் பண்புகள் அற்ற சிறப்பற்ற பொருள் என்ற எதுவும் சொற்களால் கிடைக்க முடியாது –

உலகின் மொழிகள் யாவும் அவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குறிப்பிட்ட தன்மையையே காட்டுகின்றன காட்டுகின்றன –
அது பொருளாகவோ பண்பாகவோ வினையாகவோ இருக்கலாம் -அதனால் அச்சொல் தான் காட்டும் பொருளை மற்றச் சொற்களின் பொருள்களில் இருந்து வேறுபடுத்துகிறது –
ஆதலால் பண்புகள் அற்ற பொருள் என்று ஓன்று இருக்க முடியாது –

—————

35–ப்ரஹ்ம ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஸர்வதா ஸ்வயமேவ ப்ரகாஸதே சேத் ந தஸ்மிந் அந்ய தர்மாத் யாச சம்பவதி –
ந ஹிரஜ்ஜூ ஸ்வரூபே அவபா சமாநே சர்ப்பத்வாதி அத்யஸ்யதே அத ஏவ ஹி பவத்பி
ஆச்சாதிகா அவித்யா -(ஆச்சாதிகா அவித்யா – பொருளை மட்டும் மறைத்தல் -விசேஷகா அவித்யா -பண்புகளை மறைத்தல் –
என்று இரண்டு வகை அவித்யா உண்டே – ) அப்யுபகம்யதே ததஸ் ச ஸாஸ்த்ரீய நிவர்த்தக ஞானஸ்ய ப்ரஹ்மணி திரோஹிதாம்ஸோ
விஷய அந்யதா தஸ்ய நிவர்த்திகத்வம் ச ந ஸ்யாத் -அதிஷ்டாநாதிரேகி ரஜ்ஜூத்வ ப்ரகாஸதேந ஹி சர்ப்பத்வம் பாத்யதே –
ஏகஸ்சேத் விசேஷோ ஞான மாத்ரே வஸ்துநி சப்தேந அபிதீயதே ச ச ப்ரஹ்ம விசேஷணம் பவதி இதி சர்வ ஸ்ருதி ப்ரதிபாதித
சர்வ விசேஷண விசிஷ்டம் ப்ரஹ்ம பவதி அத பிரமாணிகாநாம் ந கேநாபி ப்ரமாணே ந நிர்விசேஷ வஸ்து ஸித்தி —

(ஞானம் அந்நயாதீன ஸ்வயம் பிரகாசம்-ஸ்வ தர்மம் – -தன்னுடைய சம்பந்தத்தால் பிரகாசம் அற்ற சேதனப் பொருள்களை பிரகாசிக்கும்
ஒரு பொருளை விஷயீகரித்தால் தானே ஸ்வயம் பிரகாசம் ஆகும் –
நிர்விசேஷ வஸ்துவுக்கு ஸ்வயம் ப்ரகாஸத்வம் சாதிக்க முடியாதே
ஸ்வயம் பிரகாச வஸ்து மேல் பிரமம் உண்டாகவே முடியாதே)

(நான் வேடுவன் -நான் ப்ரம்மத்துக்கு விஷயம் அல்லவே -வேடுவன் தப்பாக அறிவதில் தானே பிரமம் ஆகலாம்
ஸ்வயம் பிரகாச வஸ்து பிரமத்துக்கு விஷயம் ஆகவே முடியாதே)

———–

36 —நிர்விகல்பக ப்ரத்யஷேபி ச விசேஷமேவ வஸ்து பிரதீயதே -அந்ய தா ச விகல்பகே ஸோயமிதி–
பூர்வாவகத பிரகார விஸிஷ்ட ப்ரத்யயா நுபபத்தே-
வஸ்து ஸமஸ்த்தாந விஷய ரூபத்வாத் கோத்வாதே -நிர்விகல்பக தசாயாமபி ச சமஸ்தானமேவ வஸ்து இத்தம்-இதி பிரதீயதே
த்விதீயாதி ப்ரத்யயேஷு தஸ்யைவ சமஸ்தாந விசேஷஸ்ய அநேக வஸ்து நிஷ்டதா மாத்ரம் பிரதீயதே சமஸ்தாந ரூப
பிரகாரக்யஸ்ய பதார்த்தஸ்ய அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து விசேஷணத்வம்
த்விதீயாதி ப்ரத்யயாவகம்ய மிதி த்விதீயாதி ப்ரத்யயா ச விகல்பகா இதயுச்யந்தே

பண்புகள் அற்ற மெய்ப்பொருட் காட்சி
பண்புகள் அற்ற பொருளைக் காட்ட முடியும் என்பதை மறுத்தல்

சிறப்புத் தன்மைகள் அற்ற மெய்ப்பொருள் காண் முறையும் -ஏதோ ஒரு பண்புடன் கூடிய பொருளையே காட்டும் –
இல்லையெனில் ஸ விகல்ப ஞானத்தில் சிறப்புள்ள மெய்ப்பொருள் காண் முறையில் -இவன் அதே தேவதத்தன் -என்று சொல்லும் போது முன்பு தேவதத்தனும் பின்பு அவனுடைய பண்புகளும் அறியப்பட்டன என்பது தவறாகும்
ஒருபடிப்பட்டதான பண்புகள் ஏதோ இருப்பதால் மட்டும் இவ்விதம் சொல்ல முடியும் –
ஒரு பிராணி அதன் உருவ அமைப்பு பண்புகள் முதலியவற்றால் -பசு -என்று அறியப்பட்டு பின்னர் அதைப்போன்ற பல பிராணிகளைக் காண்கையில் அவைகளும் பசுவே -என்று அறியப்படுகின்றன –
இரண்டாம் முறை அதே உருவ அமைப்புக் கொண்ட பல பொருள்கள் பார்க்கப்படுகின்றன –
இவ்வாறு உருவ அமைப்பு ஒற்றுமை கொண்ட பல பொருள்கள் சிறப்புக் குணமுடையதாய் இருத்தல் இரண்டாவது நோக்குதலில் ஆரியப் படுவதால் அது சிறப்புள்ள மெய்ப்பொருள் காண் முறை எனப்படுகிறது

ப்ருதக் ஸித்தம் –விசேஷணம் பிரிக்கப் படக் கூடியது
அப்ருதக் ஸித்தம் –குணம் -பிரகாரம் -பிரிவற்றது
நிர் விகல்பம் -ஒரு பொருளை மற்றவற்றில் நின்றும் பிரித்து அறிதல்
ஸ விகல்பம் -அதே போன்று பல பொருள்களை அறிதல்

ப்ரஹ்மத்தின் தனிப்பட்ட பண்புகள் உயர்வற உயர் நலம் உடைய நற் குணக்கடல்
தன்னை அடைந்தோரையும் அவ்வாறு ஆக்கும் வல்லமை படைத்தது
2-பசு என்னும் விலங்கு மற்ற விலங்கு வகைகளின் நின்றும் மாறுபடுவதை முதலாவதாகவும்
பல பசுக்கள் தமக்குள்ள சில வித்யாசங்களுடன் இருத்தலை அதன் பிறகும் அறிய முடியும்
3-இவன் அதே தேவ தத்தன் என்பது ப்ரத்யபிஞ்ஞா-நினைவு கூறுதல் –

————-

37–அத ஏவ ஏகஸ்ய பதார்த்தஸ்ய பின்னா பின்ன ரூபேண விருத்தம் வ்யத்யாத்மகத்வம் ப்ரத்யுக்தம் சமஸ்தானஸ்ய ஸம்ஸ்தானீன
பிரகாரதயா பதார்த்தாந்தரத்வம் பிரகாரத்வா -தேவ ப்ருதக் சித்யநர் ஹத்வம் -ப்ருதக் அநு பலம்பஸ் சேதிநத்வயாத் மகத்வ ஸித்தி –

பிறகு இந்த ஒன்றான பொருளின் மாறுபாடுள்ள மாறுபாடற்ற தன்மைகள் அவை உடைமை இன்மையாலேயே அறியப்படுகின்றன –
ஒரு அமைப்பும் அதை உடைய பொருளும் பிரிக்க முடியாமையால் ஓன்று மற்ற ஒன்றுக்கு அடையாகிறது-ஒன்றாகவே காணப்பட்டாலும் ஒரு பொருளும் அதன் அமைப்பும் தனித்து இயங்காமல் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தனிப்பட்டதாகும் -அதனால் ஸ விசேஷத்வம் பண்பு உடைமை வெளிப்படும்

எடுத்துக் காட்டு -குடமும் நிறமும்

———–

38–அபி ச நிர்விசேஷ வஸ்து வாதிநா ஸ்வயம் பிரகாச வஸ்துநி ததுபராக விசேஷா சர்வைஸ் சப்தை நிஷித்யந்தே
இதிவததா கே தே ஸப்தா நிஷேதகா -இதி வக்தவ்யம்-
வசாரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி விகார நாம தேயயோ வாசாரம் பண மாத்ரத்வாத்
யத் தத்ர காரண தயா உப லஷ்யதே வஸ்து மாத்ரம் ததேவ சத்யம் அந்யத சத்யமிதி இயம் ஸ்ருதிர் வததி இதி சேத்
நைததுப பத்யதே ஏகஸ்மின் விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஞாதம் பவதீதி ப்ரதிஞ்ஞாதே அந்ய ஞாநேந அந்ய ஞாநா சம்பவம்
மந்வாநஸ்ய ஏகமேவ வஸ்து விகாரத்ய வஸ்தா விசேஷண பாரமார்த்திகே நைவ நாநா ரூபமவஸ்திதம் சேத்
தத்ர ஏகஸ்மின் விஞ்ஞாதே தஸ்மாத் விலக்ஷண சமஸ்தானாந்தர மபி ததேவ வஸ்து இதி தத்ர த்ருஷ்டாந்தோயம் நிதர்சித–
நாத்ர கஸ்யசித் விசேஷஸ்ய நிஷேதக கோபி சப்த த்ருச்யதே வாசாரம்பண மிதி வாசா வ்யவஹாரேண-ஆரப்யதே இதி ஆரம்பணம் —
பிண்ட ரூபேண ஸம்ஸ்திதாயா ம்ருத்தி காயா நாமச அந்யத் வியவஹாரஸ் ச அந்ய கட சராவாதி ரூபேண அவஸ்தி தாயா
தஸ்யா ஏவ ம்ருத்திகாயா அந்யாநி நாமாநி வியவஹாரஸ் ஸ அந்யாத்ருசா தாதாபி ஸர்வத்ர ம்ருத்தி காத்ர வ்யமேகமேவ
நாநா சமஸ்தான நாநா நாமதேயாப்யாம் நாநா வ்யவஹாரேண ச ஆரப்யத இதி ஏததேவ சத்யம் -இத்யநேந
அந்ய ஞாநேந அந்ய ஞான சம்பவோ நிதர்சித நாத்ர கிஞ்சித் வஸ்து நிஷித் யத–இதி பூர்வமேவ அயமர்த்த பிரபஞ்சித

இங்கும் பொருள் குணங்கள் அற்றது என்று வாதிப்போர் கனமற்ற அப்பொருளின் மேல் ஏற்றிச் சொல்லப்படும் அடைகளினால் அதன் குணங்கள் விலக்கப் படுகின்றன என்று கூறும் நிலையில் தானே ஒளிரும் ப்ரஹ்மத்தில் அதில் ஏறிட்டுச் சொல்லப்படும் சொற்களால் அதன் குணங்கள் விலக்கப்படுகின்றன என்று கொண்டால் அவ்வாறு கூறப்படும் சொற்கள் யாவை என்று கேட்க்கிறோம்

மண்ணுருண்டை எடுத்துக் காட்டில் அது ஒன்றே உண்மை -அதனால் உண்டாகும் குடம் வாணாய் என்பவை உலகியலியல் பெயரிட்டு அழைப்பதற்கு மட்டுமே -என்று விடை அளிக்கப்படுகிறது –
ஏன் எனில் எந்தப் பொருளின் நின்றும் மற்றவை உருவாகின்றனவோ அப் பொருள் மட்டுமே உண்மை என்று கொள்வது நில்லாது -எப்படி என்றால் –
எந்த ஒன்றை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ -என்று கேட்கப்பட்டு இருப்பதால் ஒரே பொருள் -மாறுபாடு அடைந்து பல பொருள்களாக ஆகையில் -அந்த முதல் பொருளை அறிவதனால் அதன் மாறுபாடான மற்றப் பொருள்களையும் அறிய முடியும் என்று தான் பொருள் படும்
இங்கு எதிர்மறைச் சொற்கள் ஏதும் இல்லாமையாலே இவ்வாறு இல்லை என்று கொள்வது முடியாது
வாசம் -பேச்சு வழக்கில் ஆரம்பம் துவக்கப்படுத்தல் -அழைக்கப் படுதல் -மற்றையப் பொருள்களின் நின்றும் வேறுபடுத்தி என்பதற்காக பிண்டமாக இருந்த மண் பிண்டம் என்றும் மாறுதல் அடைகையில் குடம் வாணாய் என்றும் ஒவ்வொரு உருவுக்கும் தனிப்பெயர்களாக வருகின்றன –
இப்படி மண்ணின் நின்றும் வேறுபட்ட அமைப்பை யுடையவை யாயினும் இப்பொருட்கள் யாவ்ய்ம் மண்ணாலேயே ஆகி இருப்பதால் வை மண் என்பதும் உண்மை –
அவர் வேறுபொருட்களால் ஆக்கப்பட்டதல்ல என்றே ஆசானால் விளக்கப் படுகிறது -பிற பொருட்கள் எதுவும் இல்லை என்று எங்கும் கூறப்பட வில்லை

ஒரு பொருள் தான் இருக்கும் நிலையின் நின்றும் மாறுபட்டு மற்ற ஒரு நிலையை அடைவது விகாரம் எனப்படும் –

(ஏக பதார்த்த விஞ்ஞானம் காரண கார்ய பாவத்தால் சர்வ விஞ்ஞானம் என்பது அல்ல
ஏக விஞ்ஞானத்தில் அடங்கிய சர்வ விஞ்ஞானம் என்கிறார்
ஏக விஞ்ஞான பின்ன சர்வ விஞ்ஞானம் -அபி –
ஏகம் ம்ருத் பிண்டம் -ஸர்வ குடம் மடக்கு போல்வன-இவையும் ம்ருத் பண்டம் போல் ஸத்யம் தானே )

39–அபி ச யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இத்யாதிநா ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய மித்யாத்வம் ப்ரதிஞ்ஞாதம் சேத்
யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந –இத்யாதி த்ருஷ்டாந்த -ஸாத்யவிகலஸ்யாத் -ரஜ்ஜூ சர்ப்பாதிவத் ம்ருத்திகா விகாரஸ்ய
கட சராவத இதர சத்யத்வம் ஸ்வேத கேதோ ஸூஸ்ரூஷோ பிரமானாந்தரேண யுக்தயா ச அசித்தமிதி ஏததபிசிஷாத இஷிதமிதிசேத்
யதா இதி த்ருஷ்டாந்த தயா உபாதானம் ந கடதே-

இங்கும் எந்த ஒன்றைக் கேட்டால் கேட்கப்படாத மற்றவை கேட்டதாக ஆகுமோ -என்பதால் -வரஹ்மம் தவிர்த்த மற்றைப் பொருள்களின் இன்மை தெரிவிக்கப் படுகிறது என்று மாயா வாதிகள் கூறுவார்களானால் -எந்த மண்ணுருண்டையை அறிந்தால் குழந்தாய் மற்றவையும் அறிந்ததாகும் -என்ற எடுத்துக் காட்டால் அவர்கள் கூற்று பயன் அற்றதாகிறது
அதற்கு மாறாக பொய் என்று நன்கு அறியப்பட்ட கயிற்றில் பாம்பைக் காணுதல் போன்ற எடுத்துக் கட்டைத் தவிர்த்து மண்ணுருண்டையின் விகாரங்களே குடம் சாருவும் போன்றவை என்று காட்டப்பட்டு இருப்பதால் -அவை மண்ணாலேயே நிறைந்தவை -அவை யாவும் பொய் என்பது மறுக்கப் படுகிறது –

———-

40–சதேவ சோம்யா இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இத்யத்ர
சதேவ -ஏகமேவ -இதி அவதாரண த்வயேந-அத்விதீயம் -இத்யநேந-சந் மாத்ராதிரேகி -சஜாதீய -விஜாதீயா —
சர்வே விசேஷா நிஷித்யந்த இதி பிரதீயதே இதி சேத்
நைவ தேவம் -கார்ய காரண பாவா வஸ்தாத் வயாவஸ்தி தஸ்ய ஏகஸ்ய வஸ்துந ஏகா வஸ்தஸ்ய ஞாநேந அவசித்தாந்தர
அவஸ்தி தஸ்யாபி வஸ்த்வ ஐக்யேந ஞாததாம் த்ருஷ்டாந்தேந தர்சாயித்வா
ஸ்வேத கேதோரா பிரஞ்ஞாதம் ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரணத்வம் வக்தும்
சதேவ சோம்யேதம்–இத்யாரப்தம்-இதமக்ர சதேவா ஸீத் -இதி அக்ர இதி கால விசேஷ இதம் சப்த வாச்யச்ய பிரபஞ்சஸ்ய
சதா பத்தி ரூபம் க்ரியாம் சத்த்ரவ்யதாம் ச வததி
ஏகமேவ இதிச அஸ்ய நாநா நாம ரூப விகார ப்ரஹாணம்-ஏதஸ்மிந் ப்ரதிபாதிதே அஸ்ய ஜகத-சதுபாதநதா பிரதி பாதிதா பவதி-
அந் யாத்ரா உபாதான காரணஸ்ய ஸ்வ வ்யாதிரிக்தா திஷ்டாத்ரா பேஷா தர்சநேபி சர்வ விலக்ஷணத்வா தஸ்ய
சர்வஞ்ஞஸ்ய ப்ரஹ்மண சர்வசக்தி யோகோ ந விருத்த இதி
அத்விதீய-பதம் அதிஷ்டாத்ரந்தரம் நிவாரயதி சர்வ சக்தி யுக்தத் வாதேவ ப்ரஹ்மண-காஸ்சந ஸ்ருதய ப்ரஹ்மம் உபாதான காரணத்வம்
ப்ரதிபாத்ய நிமித்த காரணம் அபி ததேவேதி ப்ரதிபாத யந்தி யதேயம் ஸ்ருதி —

(ஜகத் காரணம் ப்ரஹ்மமே அறியாத ஸ்வேத கேதுவுக்கு அறிவிக்கும் வாக்யமே இந்த சுருதி வாக்கியம்)

சதேவ சோம்யா இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்-என்ற வாக்கியத்தில் -சதேவ-ஏகமேவ –என்ற இரு தெற்று ஏகாரங்களும் -அத்விதீயம்-இரண்டாவது அற்றது -என்பதாலும் -மற்ற எவையும் அற்ற -ஸத் -அதனுடன் ஒருபடிப்பட்ட-அதினின்றும் மாறுபட்ட -மற்ற குணங்கள் யாவற்றையும் விலக்குகிறது என்று கூறுவதாகவும் கொள்ள முடியாது –
செயல் விளைவு தொடர்பினால் ஒரே பொருளின் இரு வேறுபட்ட இரு நிலைகளில் ஒன்றை அறிவதால் மற்றது தானே அறியப்படும் என்பதைக் காட்ட
இந்த எடுத்துக் காட்டை ப்ரஹ்மம் ஒன்றே இவ்வுலகு அனைத்திற்கும் காரணம் என்பதை ஸ்வேத கேதுவிடம் -குழந்தாய் ஸத் ஒன்றே இருந்தது என்று தொடங்கி முதலில் ஸத் என்றே இருந்தது என்று கூறுகிறார்முதலில் என்பது ஒரு காலச் சிறப்பு -பிரளய நிலை –
இதம் என்பதற்குப் பொருள் இப்பிரபஞ்சம் -அதாவது படைப்புக்கு முன் இவ்வுலகு எல்லாம் ப்ரஹ்மத்துடன் ஒன்றி இருந்த நிலையையும் -ஸத் என்ற பெயருடனேயே இருந்ததையும் கூறுகிறது –
ஓன்றே என்பதால் இப்பொழுது காணப்படும் பற்பல பெயர்களும் உருவங்களும் அற்றும் இருந்தது என்று கூறி
இந்த உலகிற்கு அந்த ஸத் என்பதே மூலப்பொருள் காரணமாகவும் அதினின்றும் வேறுபட்ட ஒரு செய்வோன் எனும் நிமித்த காரணம் இன்றியும்
அதுவே தன்னுடைய எல்லாம் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாத் திறமைகளும் கை வரப் பெற்ற தன்மையால் அது ஒன்றாகவே -மற்றத் துணை ஏதும் இன்றி-உலகைப் படைத்தது என்பதைக் குறிக்க அத்விதீயம் -இரண்டாவது அற்றது – என்று கூறுகிறது –
எல்லாத் திறன்களும் இயற்கையாகவே உடையவன் என்பதால் ப்ரஹ்மமே மூலப்பொருளும் செய்வோனும் ஆயிற்று என்று கூறி சில ஸ்ருதிகளில் ப்ரஹ்மத்தை மூலப் பொருள் காரணமாகச் சொல்லி பிறகு செய்வோனாகவும் கூறப்படுவதையும் எடுத்துக் காட்டுகிறது

உலகில் மூலப்பொருள் ஒரு போதும் செய்வோன் ஆக முடியாது – இந்த வரையறை ப்ரஹ்மத்துக்குப் பொருந்தாது – ஏன் எனில் அது எல்லாத் திறன்களும் யுடையது

ஸதா பத்தி -ஸத் ஆபத்தி -உயிருள் -உயிரில் பொருள்களுடன் எப்போதும் கூடியிருக்கும் கட் புலனாகா நிலை –

———-

41-அந்யாஸ் ச ஸ்ருதய ப்ரஹ்மணோ நிமித்த காரணதாம நுக்ஞாய–தஸ்யைவ உபாதானதா தி கதமிதி பரிச்சோத்ய
சர்வசக்தி யுக்தத்வாத் உபாதான காரணம் ததிதரா சேஷோபகரணம் ச ப்ரஹ்மைவ இதி பரி ஹரந்தி
கிம் ஸ்வித்தனம்-க உ சவ்ருஷ ஆஸீத் –யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு-மனிஷினோ
மனசா ப்ருச்சேதேது தது யதத்ய திஷ்டத் புவநாநி தாரயந்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்மம் ச வ்ருஷ ஆஸீத் யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு மணீஷிநோ மனசாவிப்ரவீமி
வ ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயந் இதி சாமான்யதோ த்ருஷ்டேந விரோத மா சங்க்ய ப்ரஹ்மண
சர்வ விலக்ஷணத்வேந பரிகார யுக்த

வேறு சில ஸ்ருதிகள் ப்ரஹ்மத்தை செய்வோனாகவும் கொண்டு இதற்கு மூலப்பொருள் எது என ஆராய முற்பட்டு ப்ரஹ்மத்திற்கு திறமைகளும் உண்டு என அறுதியிட்டு அதனால் மூலப்பொருளாகவும் அதுவே ஆயிற்று என நிறுவின
ஞானிகளே இந்த பிரபஞ்சம் என்னும் மாளிகையை உருவாக்கியவர் யார் -அதற்கு மரம் எக்காட்டின் நின்றும் எடுக்கப் பட்டது -எந்த மரம் உபயோகிக்கப் பட்டது

ப்ரஹ்மாகிற காட்டில் ப்ரஹ்மமாகிற மரத்தால் இந்த மாளிகை ஆயிற்று
ஞானிகளே -நான் மனப் பூர்வமாகச் சொல்லுகிறேன் -ப்ரஹ்மம் உள் நுழைந்து யாவற்றையும் தாங்கிக் கொண்டு இருக்கிறது -பொதுவாக ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட மூலப் பொருள்கள் செய்வோன் காரணமாக ப்ரஹ்மம் இருக்க முடியுமோ-என்ற ஐயத்தை நீக்குகிறது –

———

42–அத சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் இத்யத்ராபி அக்ரே இத்யாத்யநேக விசேஷ ப்ரஹ்மண ப்ரதிபாதிதா-
பவதமிமத விசேஷ நிஷேத வாஸீ கோபி சப்த ந த்ருச்யதே ப்ரத்யுத ஜகத் ப்ரஹ்மணோ கார்ய காரண பாவ ஞாபநாய
அக்ர இதி கால விசேஷ சப்தாவ ஆஸீத் இதி கிரியா விசேஷ ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா
ச நிமித்த உபாதானயோர் பேத நிரசநேந தஸ்யைவ ப்ரஹ்மண சர்வ சக்தி யோகஸ்சேதி
அப்ரஞ்ஞாதா சஹஸ்ரஸோ விசேஷா ஏவ ப்ரதிபாதிதா

பிறகு -குழந்தாய் ஸத் ஒன்றே முதலில் இருந்தது என்ற இந்தவிடத்திலும் முதலில் போன்ற அடைமொழிகளால் ப்ரஹ்மம் நிரூபிக்கப் படுகிறது –
உங்கள் கருத்துப்படி ப்ரஹ்மத்தைக் குணங்கள் அற்றது என்று சொல்லி விளக்கும் சொற்கள் ஏதும் காணப்பட வில்லை -நேர் மாறாக ப்ரஹ்மத்திற்கும் உலகிற்கும் கார்ய காரணத் தொடர்பு உண்டு என்பதை முதலில் என்ற காலம் காட்டும் சொற்களாலும் –
இருந்தது என்ற சொற் சிறப்பாலும் உலகிற்கு மூலப் பொருளாகவும் செய்வோனாகவும் இருந்தது என்று கூறி -கார்ய காரணத்திற்கு உரிய மூலப்பொருள் செய்வோன் எனும் காரணங்களின் வேறு பாட்டை மறுத்து எல்லா சக்தியும் கைவரப் பெற்ற அந்த ப்ரஹ்மமே இரண்டுமாயிற்று என்று கூறி நாம் அறியாத ஆயிரக்கணக்கான சிறப்புகள் ப்ரஹ்மத்திடம் உள்ளன என்று நிரூபித்து இருக்கிறது

—————-

43–யதோ வாஸ்தக கார்ய காரண பாவாதி ஞாபநே ப்ரவ்ருத்தம் -அத ஏவ
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் -இதயாரப்ய அசத் கார்ய வாத நிஷேதஸ் ச க்ரியதே குதஸ்து கலுஸோம் யைவம் ஸியாத்
இதி பிராகஸத உத்பத்தி அஹேதுகா இத்யர்த்த ததேவ உபபாதயதி கதம்ம் சதஸ் சஜ்ஜாயதே
இதி அசத உப பந்நம் அசதாத்மகமேவ பவதி இத்யர்த்த யதாம்ருத உத் பந்நம் கடாதிகம் ம்ருதாத் மகம் –
சத உத்பத்திர் நாம வ்யவஹார விசேஷ ஹேது பூத அவஸ்தா விசேஷ யோக —

இங்கு கார்ய காரணத் தொடர்பைச் சுட்டிக் காட்ட வேண்டிய உண்மையான காரணம் என்ன என்னில்
இன்மையே முதலில் இருந்தது என்று துவங்கும் இன்மை வாதத்தை மறுத்து -குழந்தாய் இவ்வாறும் சிலர் சொல்லுகிறார்கள் இன்மையினின்றும் இன்மை தான் வர முடியும் என்று கூறுகிறார் –
எப்படி மண்ணின் நின்றும் பண்ணப்பட்ட குடம் முதலியவை மண்ணாகவே இருக்கின்றனவோ அப்படி அவற்றிற்கு பேச்சு வழக்கில் குறிக்கப் படுவதற்கு பெயர்கள் அம்மண்ணின் வேறுபட்ட நிலையில் ஏற்படுகின்றன என்று விளக்குகிறார் –

————

44–ஏதத் யுக்தம் பவதி -ஏகமேவ காரண பூத த்ரவ்யம் அவஸ்தாந்தர யோகேந கார்யமித்யுச்யத இதி
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞானம் ப்ரதிபாதயிஷிதம் தது அஸத்கார்யவாதே ந சேத்ஸ்யதி -ததாஹி நிமித்த சமாவாய்ய
சமாவாயி ப்ரப்ருதிபிஸ் காரணை அவயவ்யாக்யம் கார்யம் த்ரவ்யாந்தரமேவ ஆரப்யத இதி காரண பூதாத் வஸ்துந கார்யஸ்ய
வஸ்த்வந்த்ரத்வாத் ந தத் ஞாநேன அஸ்ய ஞாததா கதமபி சம்பவநீதி–கதம் அவயவி த்ரவ்யாந்தரம் நிரஸ்யதே
இதி சேத் காரணகதா வஸ்தாந்தர யோகஸ்ய த்ரயாந்தரோத்பத்திவாதிந சம்பிரதி பந்நஸ்யைவ ஏகத்துவ நாமாந்தர
வ்யவஹாராதே ரூப பாதகத்வாத் த்ரவ்யாந்தரா தர்சினாஸ் ச –
இதி காரணமேவ அவஸ்தாந்தரா பந்நம் கார்யம் இத்யுச்ய தே இத்யுக்தம் –

இதை விளக்குவோம் –
காரணமாகும் முதற் பொருள் -அதன் நிலை மாறு பாட்டால் -பிரிதொரு பொருளாக -காரியப் பொருளாக -மாறுகிறது –
அதனால் அக்காரணப் பொருளை நன்கு அறிவதன் மூலம் அதனடியாகப் பிறக்கும் கார்யப் பொருட்கள் அறியப்பட்டனவாகும் என்பது நிரூபிக்கப் படுகிறது –
முதற் பொருளான காரணப் பொருளே பொய்யானது எனில் அதினின்றும் கார்யாப் பொருட்கள் ஏதும் பிறப்பதில்லை
இங்கு ஒரு செயலுக்கு -உலகு படைத்த – செய்வோநின் அதன் இன்றியமையாக் காரணம்
பிரிக்க இயலும் காரணம் முதலியவை இன்மை என்பதினின்றும் எவ்வாறு உண்டாக முடியும்
பல உறுப்புக்களின் சேர்க்கையினாலேயே ஒரு முழுப்பொருள் உருவாகும் அந்நிலையில் அவ்வுறுப்புக்கள் அப்பொருள்களுக்குக் காரணமாகின்றன
உதாரணம் -நூலும் துணியும்
முழுமையான நிரையில் உறுப்புக்களின் தனிப் ர் பெய மறைந்து முழுப் பொருளின நிலைக்கும் ஆகவே காரணத்தை -உறுப்புக்களை -அறிவதால் -கார்ய முழுப்பொருள் அறியப்படும்

இன்மை என்பதின் நின்றே உலகு தோன்றியது என்னும் வைசேஷிகர்கள் கொள்கை இதனால் மறுக்கப் படுகிறது
அவர்கள் கொள்கைப்படி நூலே துணியாக மாறுகிறது என்று கொள்ளப் படும்

———

அசத் கார்ய வைசேஷிக வாத நிரசனம் –
45–நநு -நிரதிஷ்டானப்ரமா சம்பவ ஞாபநாய அஸத்கார்ய வாத நிராச க்ரியதே -ததாஹி -ஏகம் சித்ரூபம் சத்யமேவ
அவித்யாச்சாதிதம் ஜகாத் ரூபேண விவர்த்ததே இதி அவித்யாஸ்ரயத்வாய மூல காரணம் சத்யமித்யப் யுபகந்தவ்யம்
இதி அஸத்கார்யவாத நிராச
நை ததேவம் -ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த முகேந சத்காரியவாதஸ்யைவ ப்ரஸக்தத்வாத்
இத்யுக்தம் பவத் பக்ஷே நிரதிஷ்டான ப்ரமா சம்பவஸ்ய துரூப பாதத்வாச் சா யஸ்ய ஹி சேதநகதோ தோஷ
பாரமார்த்திக தோஷாஸ் ரயத்வம் ச பாரமார்த்திகம் தஸ்ய பாரமார்த்திக தோஷேண யுக்தஸ்ய
அபாரமார்த்திக கந்தர்வ நகராதி தர்சனம் உபபந்நம்
யஸ்யது தோஷஸ் ச அபாரமார்த்திக்க தோஷாஸ்ரயத்வம் ச அபாரமார்த்திகம் தஸ்ய அபாரமார்த்திகே
நாப்யாஸ்ரயேண தத் உப பந்நம் இதி பவத்பஷே நநிரதிஷ்டான ப்ரமா சம்பவ —

அல்ல -ஆதாரப் பொருள் ஒன்றி இன்றி அறிவு மயக்கம் உண்டாக முடியும் -என்ற இன்மை வாதம் -அத்வைதிகள் வைசேஷிகரோடு வாதிக்கையில் -மறுத்தல் செய்யப்படுகிறது
அவ்வாறே குணங்கள் ஏதுமற்ற ஞானம் ஓன்று மட்டும் -அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு உலகின் உருவில் காண்கிறது எனில்
அந்த அஞ்ஞானத்திற்கு ஆதாரமானது அந்த ஞானம் -ப்ரஹ்மம் -என்பதால் இன்மை வாதம் மறுக்கப் படுகிறது –
அவ்வாறு எனில் ஒன்றை அறிவதால் மற்ற எல்லாவற்றை அறிந்ததாகும் என்று கூறு முகத்தான் -உண்டு -என்னும் வாதமே சொல்ல வந்தது என்பதே சரி –
உங்கள் பக்கத்தில் ஆதாரமின்றி அறிவு மயக்கம் உண்டாக முடியும் எண்டு நிரூபிப்பது கடினம்
எந்தக் கொள்கையில் ஆதாரம் உண்மையானதாகவும் அதற்கு ஏற்பட்ட குறையும் அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பும் உண்மையானதாகவும் கொள்ளப்படுகிறதோ –அங்கு தான் அக்குறை பட்டால் -கந்தர்வ நகரம் -வானத்தில் மேகங்களின் அமைப்பு நகரம் போல் தோற்றுதல் – போன்ற பொய்த் தோற்றங்கள் உண்டாக முடியும் என்று அறிகிறோம் –
எங்கு குறைபாடும் பொய்யோ -அதற்கு ஆதாரமும் பொய்யோ – அங்கு பொய்யான பொருள்களில் பொய்த் தொடர்பால் -பொய்த் தோற்றம் ஆதாரம் இன்மையால் உங்கள் வாதத்தின் படி தோன்ற இயலாது –

————–

46–சோத கேஷ்வபி -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம —
ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி ஷு சாமாநாதி காரண்ய வ்யுத்பத்தி ஸித்தாநேக குண விசிஷ்டை கர்தாபிதாநம்
அவிருத்தமிதி சர்வ குண விசிஷ்டம் ப்ரஹ்ம அபிதீயத இதி பூர்வமேவோக்தம்

ப்ரஹ்மத்தின் குணங்களை ஆய்ந்து தெரிவிக்கும் வேத வாக்யங்களான -பரமாத்மா மட்டற்ற மகிழ்வே வடிவானது -ஸத்யம் ஞானம் -அநந்தம் –ஆனந்தோ ப்ரஹ்ம -என்றவைகளில் ஸமாநாதி கரண்யத்தால் பல அடைமொழிகளால் கூறப்படும் பரமாத்மா நற் குணங்கள் யாவும் யுடையவன் -என்பது முன்பே நிரூபிக்கப் பட்டு விட்டது –

—————

47–அதாத ஆதேஸோ நேதி நேதி இதி பஹுதா நிஷேதோ த்ருஸ்யத இதி சேத் கிமத்ர நிஷித்யத இதி வக்தவ்யம்
த்வேவாவ ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் சா மூர்த்த மேவச இதி மூர்த்தா மூர்த்தாத்மக பிரபஞ்ச ஸர்வோபி நிஷித்யத
இதி சேத் ப்ரஹ்மணோ ரூபதயா அப்ரஞ்ஞாதம் சர்வம் ரூபதயா உபதிஸ்ய புநஸ்ததேவ நிஷேத்தும யுக்தம் –
ப்ரஷால நாத்தி பங்கஸ்ய தூரதஸ்பர்சனம் வரம் இதி நியாயாத் கஸ்தர்ஹி நிஷேதக வாக்யார்த்த
ஸூத்ரகார ஸ்வயமேவ வததி -ப்ருகிருதை தாவத்வம் ஹி பிரதிஷே ததிததோ பரவீதி ச பூய –
இதி உத்தரத்ர அத நாமதேயம் சத்யஸ்ய சத்யமிதி பிராணாவை சத்யம் தேஷா மேஷ சத்யம்
இத்யாதிநா குண கணஸ்ய ப்ரதிபாதிதத்வாத் பூர்வ பிரகிருதை தாவந் மாத்ரம் ந பவதி ப்ரஹ்மேதி ப்ரஹ்மணா
ஏதாவாந் மாத்ரதா ப்ரதிஷித்யதே இதி ஸூத்ரஸ் யார்த்த–

ஆகையால் பிறகு கட்டளை இல்லை இல்லை என்று பலவிடங்களிலும் மறுக்கும் சொற்கள் காணப்படுகின்றனவே என்பீராகில் அவை எதை மறுக்கின்றன என்ற கேள்வி வரும் –
உருவமுள்ளது -கடினமானது -உருவமற்றது -கடினமற்றது -என்ற இரு உருக்கள் ப்ரஹ்மத்திற்கு உள்ளன என்று கடினமற்ற தன்மையுடைய ப்ரஹ்மத்தின் உருக்கள் மறுக்கப் படுகின்றனதா எனில் -இப் பிரபஞ்சத்திலுள்ள கடின கடினமற்ற பொருட்களுக்கு ப்ரஹ்மம் உயிராய் இருக்கிறது என்று கூறி பிறகு அப் பொருட்களே இல்லை -பொய் – என்று மறுப்பது சரியல்ல -கால் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சேற்றை மிதித்துச் செல்ல வேண்டும் என்பது போல் -இது நீதிக்குப் புறம்பானது அப்படியானால் அந்த மறுப்புகளுக்குப் பொருள் என்ன –
ஸூத்ரகாரர் -வ்யாஸர் – சொல்வது போல் ப்ரஹ்மம் காணப்படும் உலகின் அளவு மட்டுமே என்பதை அக்கட்டளை மறுக்கிறது
இவற்றின் பெயர்கள் உண்மை -உயிர்கள் உண்மை -இவற்றின் உள்ளிருக்கும் ப்ரஹ்மமும் உண்மை என்று மேலும் ஸூத்ரகாரர் கூறி ப்ரஹ்மத்தின் குணங்களை நிரூபித்தால் உலகளவு மட்டுமே ப்ரஹ்மம் என்பது மறுக்கப் படுகிறது –

———

48–நேஹா நா நாஸ்தி கிஞ்சன -இத்யாதிநா நாநாத்வ பிரதிஷேத ஏவ த்ருச்யதே இதி சேத்
அத்ராபி உத்ரத்ர ஸர்வஸ்ய வஸி ச்ரவஸ்யேசாந -இதி ஸத்ய ஸங்கல்பத்வ சர்வேஸ்வரத்வ ப்ரதிபாதநாத்
சேதன அசேதன வஸ்து சரீர ஈஸ்வர இதி ஸர்வ ப்ரகார ஸம்ஸ்தித சர்வேஸ்வர ச ஏக ஏவேதி தத் ப்ரத்யநீக
ப்ரஹ்மாத்மக நாநாத்வம் பிரதி ஷித்தம்–ந பவதபி மதம் சர்வாஸூ ஏவம் பிரகாராஸூ ஸ்ருதிஷு இயமேவஸ்திதி —
இதி நக்வசிதபி ப்ராஹ்மண ச விசேஷத்வ நிஷேத வாஸி கோபி சப்தோ த்ருச்யதே

இவ்வாறு பல சிறிதும் இல்லை -போன்று பலவாக இருப்பதை விளக்கும் சொற்கள் காணப்படுகிறதே என்பீராகில் அங்கும் இவ் வாக்கியத்தைத் தொடர்ந்து
எல்லோருக்கும் வசப்பட்டவன் எல்லோரையும் வசப்படுத்துவோனாகவும் என்று மெய்யான செயல் திறன் உடையவனாகவும் -எல்லாவற்றுக்கும் தலைவனாகவும் சொல்லப்படுவதால் உயிருள் உயிரில் பொருள்களை உடலாக உடைய தனிப்பெரும் தலைவன் அவன் ஒருவனே என்று கூறி அதற்கு எதிர்த் தட்டான அவனை நீங்கிய பல் பொருட்கள் இருப்பதாகக் கொள்வதைத் தான் மறுக்கிறது -உங்கள் கூற்றை அல்ல –
இவ்வாறே மற்ற வேதங்களிலும் இடங்களிலும் பொருள் கொள்ள வேண்டும்
இதனால் ப்ரஹ்மத்திற்கு குணம் ஏதும் இல்லை என்று கூறும் சொற்கள் ஏதும் வேதங்களில் இல்லை –

———

49–அபிச நிர்விசேஷ ஞான மாத்ரம் ப்ரஹ்மம் தச்ச ஆச்சாதிகா அவித்யா திரோஹித ஸ்வ ஸ்வரூபம்
ஸ்வகத நாநாத்வம் பச்யதி -இத்யயமர்த்தோம -ந கடதே-
திரேதாநம் நாம பிரகாச நிவாரணம் -ஸ்வ ஸ்வ ஸ்வரூபாதிரேகி பிரகாச தர்மா நப்யுபகமேந பிரகாசஸ்யைவ
ஸ்வரூபத்வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச பர்யாயம் ஞானம் நித்யம் ச ச பிரகாச -அவித்யா திரோஹித –
இதி பாலிச பாஷிதமிதம்-அவித்யா பிரகாச திரோஹித்த இதி பிரகாச உத்பத்தி பிரதிபந்தோவா வித்யமாநஸ்ய விநாஸோவா ?
பிரகாசஸ்யா நுத்பாத்யத் வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச நித்யோ நிர்விகாரஸ் திஷ்டதி -இதி சேத்
சத்யாயாமப்ய வித்யாயாம் ப்ரஹ்மணி ந கிஞ்சித திரோஹிதம் இதி நாநாத்வம் பாஸ்யதி
இதி பவதாமயம் வ்யவஹார சத்ஸூ அநிர்வசநீய ஏவ

மேலும் குணங்கள் சிறுதும் அற்ற ஞானம் மட்டுமேயாக உள்ள ப்ரஹ்மம் தன்னைச் சூழும் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு தன்னிடத்தில் இல்லாதவற்றை பலவாகப் பார்க்கிறது என்பது பொருந்தாது-
மறைப்பது என்பது ஒளியைத் தடுப்பது -அதினின்றும் -ப்ரஹ்மத்தின் நின்றும் -வேறுபட்ட ஒளியை மறைப்பது என்பதை -ஒளி ப்ரஹ்மத்தின் நின்றும் பிரிக்க முடியாத ஓர் அங்கம் -அத்வைதிகள் ஒத்துக் கொள்ளாததால் மறைப்பு என்பது ப்ரஹ்மத்துக்கே ஏற்பட்டு அது அழிந்து விடும் என்பதாகிறது
இங்கு ஒளி என்பது -ஒரு பொருள் பன் மொழியால் -ஞானம் -அது என்றும் அழியாதது -அந்த ஞானம் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டது எனக் கூறுதல் அறியாப் பிள்ளைப் பேச்சு
அவ்வாறே அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டது என்றால் -ஞானம் தோன்றுவதற்கு தடையாகிறதா -அன்றி முன்புள்ளது அழிக்கப் பட்டதா -ஞானம் நித்யம் -என்றும் உள்ளது -ஆக்க முடியாது என்பதால் அதன் அழிவு என்று கொள்ள வேண்டும் -ஞானம் என்றும் மாறு படாதது எனில் அஞ்ஞானம் அதை ஏறிட முடியாது -அதன் ஒளி மறைக்கப்படுவது இல்லை -அதனால் ப்ரஹ்மம் தானே பலவாறாகக் காண்கிறது என்னும் உங்கள் கூற்றை சான்றோர்கள் ஏற்க மாட்டார்கள் –

————–

இதுக்கு அத்வைதி வாதம்
50–நநு ச பவதாபி விஞ்ஞான ஆத்மா அப்யுப கந்தவ்ய -ச ச ஸ்வயம் பிரகாச –
தஸ்ய தேவாதி ஸ்வரூபாத்மாபிமாநே ஸ்வரூப பிரகாச திரேதாந மவஸ்யாஸ் ரயணீயம்-ஸ்வரூப ப்ரகாசே சதி
ஸ்வாத்மநி ஆகாராந்தராத்யசா யோகாதி அதோ பவதஸ்ச சமாநோ யம் தோஷ மிஞ்ச அஸ்மாக மேகஸ்மிந்நேவ ஆத்மநி
பவதுதீரிதும் துர்கடத்வம் வாதம் ஆத்மானந்த் யாப்யுபகமாத் சர்வேஷ்வயம் தோஷ பரிஹரணீய–

அன்று உங்கள் பக்கத்தில் நீங்கள் ஆத்மாவை விஞ்ஞான மயம் என்று கொள்கிறீர்கள் -அதுவும் தானே ஒளிருவது –அதற்கு தேவன் முதலான உடல்களில் இருந்து கொண்டு அவ்வுடலே தானாக மயங்கும் ஞான மறைப்பு ஏற்படுகிறது
தனக்குள் ஞானம் என்றும் குன்றாதவனாயின் ஆத்மா அது புகுந்து இருக்கும் உடலின் தன்மைகளை ஏறிட்டுக் கொள்ள முடியாது –
அது எங்கள் கொள்கைக்கு ஈடான குற்றமே -மேலும் நாங்கள் ஒரே ஆத்மா என்று கொண்டு இருப்பதால் இக்குறை அதன் மீது மட்டும் காணப்படும் -மாறாக உங்கள் கொள்கையில் அவை பலவாகையால் குறைகளும் பலவாக -அதிகமாக உள்ளதாகவே கொள்ளப்பட வேண்டும்
இதை எவ்வாறு மறுப்பீர்கள் -என்று அத்வைதி கிடக்கிறார் –

————-

இதுக்கு உத்தரம்
51—அதிர உச்யதே -ஸ்வ பாவத-மல ப்ரத்யநீக அநந்த ஞானாந்த ஏகம் ஸ்வரூபம்
ஸ்வாபாவிக அநவதிக -அதிசய அபரிமித உதார குண சாகரம்
நிமிஷ காஷ்டா கலா முஹுர்த்தாதி பரார்த்த பர்யந்த -அபரிமித வியவச்சேத ஸ்வரூப சர்வ உத்பத்தி ஸ்திதி விநாசாதி
சர்வ பரிணாம நிமித்த பூத கால க்ருத பரிணாமாஸ்ப்ருஷ்ட அநந்த மஹா விபூதி -ஸ்வ லீலா பரிகர ஸ்வ அம்ச பூத
அநந்த பத்த முக்த நாநாவித சேதன தத் போக்கிய பூத அநந்த விசித்ர விதித்த பரிணாமாஸ்பத சேதநே தர வஸ்து ஜாத
அந்தர்யாமித்வ க்ருத சர்வ சரீரத்வ சர்வ பிரகார வஸ்தாநாவஸ்திதம் பரம் ப்ரஹ்ம ச வேத்யம் தத் சாஷாத்கார ஷம
பகவத் த்வைபாயன -பராசர -வாலமீகி -மநு -யாஜ்ஞவால்க்ய -கௌதம–ஆபஸ்தம்ப -பரப்ருதி முனி கண பிரணீத-
வித்யர்த்தவாத மந்தரூப -வேத மூல -இதிஹாச புராண தர்ம சாஸ்த்ரோ உப ப்ரும்ஹண பரமார்த்த பூத அநாதி நிதந –
அவிச்சின்ன ஸம்ப்ரதாய -ருக் யஜுஸ் -சாம -அதர்வண ரூப அநந்த சாகம் வேதம்ச அப்யுகச்சதாமஸ்மாகம் கிம் நசேத்ஸ்யதி –

அது விளக்கப்படுகிறது
இயற்கையாகவே அழுக்குகளின் எதிர்த் தட்டாயும் -(மயக்கம் -ஞானம் -துக்கம் -ஆனந்தம் )அளவற்ற ஞான ஆனந்தத்தை தன் குணமாகவும் -இயற்கையாகவே உயர்வற உயர்ந்து -அளவற்று -ஈகையின் கடலாய் -நிமிடம் காஷ்டை கலை முஹூர்த்தம் பரார்த்தம் ஈறான காலக் கணக்குகளால் சிறிதும் அளவிட முடியாத நிலை யுடையனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல் காத்தல் அழித்தல் -இடையில் தோன்றும் வேறுபாடுகளுக்குக் காரணமான காலத்தின் தொடர்பு சிறிதும் அற்றவனாய் -அளவற்ற பெரும் செல்வம் யுடையவனாய் –
தனது விளையாட்டிற்கான தனது சாயலான அளவற்ற பக்த முக்த பலவித உயிர்ப் பொருள்களுடைய மகிழ்ச்சிக்கும் அவற்றுக்குத் தேவையான பொருள்களுக்கும் இடமும்
பலவகைப்பட்ட வேறுபட்ட உயிர் உயிரல் பொருள்களின் உள் நுழைந்து ஏவுகிறவனாய் -அவை யாவற்றையும் தனது உடலாகக் கொண்டு எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து விளங்குவது பர ப்ரஹ்மம் –
அதே நேராகக் கண்டு உணர்ந்த வ்யாஸர் வால்மிகி மநு யஜ்ஜ வல்க்யர் கௌதமர் ஆபஸ்தம்பர் போன்ற முனிவர்களால் இதிஹாஸங்கள் புராணங்கள் தர்ம ஸாஸ்த்ர துணை நூல்கள் போன்று உண்மையான வடிவான என்றும் நிலை பெற்ற ரிக் யஜுர் ஸாம அதர்வணம் ஆகிய பல சாகைகளை உள்ளடக்கிய வேதங்களையே மெய்யாகக் கொண்டும் தொடர்பு அறாத சான்றோர் நெறி ஒழுக்கம் எங்களுக்கு எது நிலைக்காமல் போகும் –

—————

52-யதோக்தம் -பாகவதர் த்வைபாயநேந -மஹா பாராதே
யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மஹேஸ்வரம்
த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அஷர ஏவச-ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த -அஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வ அந்ய
காலம் ச பசதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -ஏதேவை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந
அவ்யக்தாதி விசேஷாந்தம் பரிணாமர்த்தி சம்யுதம்-கிரீடா ஹரேரிதம் சர்வம் சாரம் இத்யாவதார்யதாம்-
கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாவ்யய–கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் –
இதி கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே இதி கிருஷ்ணஸ்ய சேஷ பூதம் இத்யர்த்த –

பகவதா பராசரேண-அப்யேவம் யுக்தம்
ஸூத்தே மஹா விபூத்யாக்யே பரே ப்ரஹ்மணி ஸ வ்த்யதே –
மைத்ரேய -பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸ் ய சேஷத-
பகவத் சப்த வாஸ்யாநி விநா ஹேயைர் குணாதிபி -ஏவமேஷ மஹா சப்தோ-மைத்ரேய பகவான் இதி பரம ப்ரஹ்ம பூதஸ்ய
வாஸூ தேவஸ்ய நாந்யக -தத்ர பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா சமந்வித -சப்தோயம் நோநசாரேண -த்வந் யத்ரஹ்யுபசாரத-
ஏவம் பிரகாரம் அமலம் நித்யம் வியாபகம் அஷயம்-ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண் வாக்யம் பரமபதம்

கலா முஹுர்த்தாதி மயஸ் ச காலோ நயத்வியூதே-பரிணாம ஹேது -கிரீடதோபாலகஸ் ஏவ சேஷ்டா -தஸ்ய நிசாமய -இத்யாதி மநூநாபி
பிரசாசி தாரம் ஸர்வேஷாம் அணீ யாம்சம் அணீயசாம் -இத்யாதி யுக்தம் யாஜ்ஞ வால்க்யேந அபி
ஷேத்ரஞ்ஞஸ் யேஸ்வர ஞாநாத் வி ஸூத்தி -பரமா மதா-இத்யாதி
ஆபஸ்தம்பேநாபி பூ பிராணிநஸ் சர்வ குஹாசயஸ்ய இதி சர்வே பிராணிந குஹாசயஸ் ச பரமாத்மந
பூ புரம் சரீரம் இத்யர்த்த பிராணிந இதி ஜீவாத்மக பூத ஸங்காத —

மேலும் கிருஷ்ண த்வைபாயனர்-வ்யாஸர் -மஹா பாரதத்தில் எவன் என்னை முதலும் முடிவும் அற்றவனாக உலகின் தனிப்பெரும் தலைவனாக அறிகிறானோ-ஸ்ரீ கீதை -15-16-17-என்று கூறுகிறார்
அழியும் ஷரன் என்னும் பத்தாத்மாவும் அழிவற்ற அஷரன் என்னும் முக்தாத்மாவும் புகழ் பெற்றவர்கள் என்றும்
இவர்களில் ஷர புருஷன் எல்லா பிராணிகளும் குடியிருப்பவன் அக்ஷர புருஷன் அத்தொடர்வு அற்றவன் என்றும்
இவர்களின் நின்றும் வேறு பட்டவனான தலை சிறந்த புருஷன் ஒருவன் இருக்கிறான்
அவன் காலத்தை மாறுபாடு அடையச் செய்பவனாயும்
தான் காலத்தால் மாறுபடுத்த முடியாதவனாகவும் இருக்கிறான் என்றும்
பரமாத்மாவின் அந்த சிறந்த இடமானது காலத்தின் இயல்பு செல்லாததாகவும் -அதனுடன் ஒப்பிடுகையில் இந்த்ர லோகம் முதலியவை நரகங்கள் என்னும் படி இருக்கும்
இவைகள் மூலப் பிரகிருதி தொடங்கி மஹான் போன்ற மாற்றங்களை யடைந்து வளர்ச்சி தாழ்ச்சி யாகிற மாறுபாடுகளை யுடைத்தாய் இருக்கும்
கிருஷ்ணன் இடத்திலேயே இவ்வுலகங்கள் தோன்றுகின்றன
கிருஷ்ணனுக்காகவே இவ்வுயிர்களும் உலகுகளும் படைக்கப் பட்டு இருக்கின்றன என்றும்
கிருஷ்ணனுக்காகவே செய்யப்பட்டது -என்றும்
ஸாஸ்திரங்களில் சொல்லப்படுவதால் இவை யாவும் கிருஷ்னனுக்கே அடிமைத் தொழில் பூண்டவை

பகவான் பராசரரும் -தூய்மையானவனாயும் பெரும் செல்வம் உள்ளவனாகவும் பர ப்ரஹ்மம் சொல்லப்படுகிறது
மைத்ரேயா எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமாய் இருப்பவனே பகவான் என்ற சொல்லால் குறிக்கப் படுபவன்
ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம்-அதாவது தன்னைத் தவிர பிற அனைத்தையும் -ஆன்மாக்கள் உட்பட தன் உடைமையாகப் பெற்று இருத்தல் -வீர்யம் தேஜஸ் ஆகிய குணங்களை யுடையவன் பகவான் என்ற சொல்லால் குறிக்கப்படுபவன்
தீக்குணங்கள் சிறிதும் அற்றவன் –
இந்த சிறந்த சொல்லல் குறிக்கப் படுபவன்
வாஸூ தேவன் ஆகிற பர ப்ரஹ்மத்தைத் தவிர மற்ற ஒருவர் இல்லை
பூஜிக்கத் தகுந்த சிலருக்கு உபசாரமாக இச்சொல் உயர் அடைமொழியாக வழங்கப் படுகிறது
அழுக்குகள் அற்ற என்றும் உள்ள எங்கும் இருப்பவனான விஷ்ணுவிற்கு மட்டுமே இப்பதம் பொருந்தும்
கலை முஹூர்த்தம் என்னும் அளவுகளை அளக்கப்படும் காலம் -இந்தப் பரமபதத்தில் மாறுபாடு அற்றது
பாலகன் விளையாடுவது போன்ற இந்த கிருஷ்ணனைப் பார் என்று கூறுகிறார்
மநுவும் எல்லோரையும் உள்ளிருந்து ஆள்பவன் அணுவான பொருள்களுக்குள்ளும் நிறைந்து இருப்பவன் என்று கூறுகிறார்
யஞ்ஞ வல்கியரும் ஜீவாத்மாவுக்குள் உள்ளுறைபவன் ஈஸ்வரன் என்ற ஞானத்தால் மேலான தூய்மை ஏற்படுகிறது என்று கூறுகிறார்
ஆபஸ் தம்பரும் புரம் எனப்படும் ஜீவாத்மாக்களின் ஹிருதயக் குகையில் இருப்பவன் -பரமாத்மா -என்று கூறுகிறார்
இதனால் எல்லாப் பிராணிகளிலும் வசிக்கிறேன் பரமாத்மா என்று அறியப்படுகிறது –

—————

53–நநு ச கிம் அநேந ஆடம்பரேண-சோத்யம் து ந பரிஹ்ருதம்
உச்யதே -ஏவம் அப்யுகச்சதாம் அஸ்மாகம் ஆத்ம தர்ம பூதஸ்ய சைதன்யஸ்ய ஸ்பாவிகஸ்யாபி கர்மணா
பாரமார்த்திகம் சங்கோசம் விகாசம் ச ப்ருபதாம்-ஸர்வமிதம் பரிஹ்ருதம்
பவதஸ்து பிரகாச ஏவ ஸ்வரூபமிதி பிரகாசோ ந தர்ம பூத தஸ்ய சங்கோஸோ -விகாசோ வா ந அப்யுகம்யதே
பிரகாச பிரஸ்ர அநுத் பத்திமேவ திரோதாந பூதா கர்மதயா குர்வந்தி-அவித்யா சேத் திரோதாநம் திரோதாந பூதயா தயா
ஸ்வரூப பிரகாச பூத நாச பூர்வமேவ யுக்த அஸ்மாகம் து அவித்யா ரூபேண கர்மணா ஸ்வரூப
நித்ய தர்ம பூத ஞான பிரகாச சங்குசித தேந தேவாதி ஸ்வரூப ஆத்ம அபிமாநோ பவதீதி விசேஷ —

இப்படிப் பல வகையான ஆடம்பர வர்ணனை எதற்கு -மறுப்புக்குப் பதில் ஏதும் இல்லையே ஏன் என்று கேட்பீராகில் முன்பு விளக்கப்பட்ட கொள்கைகளைக் கைக்கொள்ளும் எங்களுக்கு ஆத்மாவும் அதினின்றும் பிரிவற்ற குணமான ஞானமும் தன்னடையாக தன் வினைப்பயனாய் சுருக்கம் விரிவு ஆகியவற்றை அடைகிறது என்பதால் மேற் சொன்னவை யாவும் பதில் அளிக்கப் படுகிறது –
தங்களால் சொல்லப்படுகிற பொருளே ஒளிரும் -ஒளிர்வது அதன் குணமல்ல -அதற்கு குறை நிறைகள் ஏற்படுவதில்லை என்று தங்கள் சொல்வதனால் மறைப்பு என்பது அஞ்ஞானத்தால் ஆத்மாவே அழிக்கப் படுகிறது என்று பொருள் ஆகிறது –
இதற்கு மாறாக அதன் இயல்பான ஞானம் குன்றும் போது அவ் வாத்மா தன்னை யறியாது ஆத்மாவும் உடலும் ஓன்று என்று மயங்குகிறது
ஆனாலும் ஆத்மாவின் தான் எனும் தனித்தன்மை அழிவதே இல்லை –

———

54–யதோக்தம் -அவித்யா கர்ம சமஞாந்யா-த்ருதீய சக்திரிஷ்யதே–
யயாக்ஷேத்ர சக்திஸ் சா வேஷ்டித அந்ரூப சர்வகா -சம்சார தாபந் அகிலாந் அவாப்நோத்யதி சந்ததாத்தயா திரோஹித
த்வாச் சா சக்தி ஷேத்ரஞ்ஞ சம்ஜிதா சர்வ பூதே ஷுபூ பாலா தாரதம்யே நவர்த்ததே –
இதிநா ஷேத்ரஞ்ஞாம் ஸ்வ தர்ம பூத ஞாநஸ்ய கர்ம சம்ஞயா அவித்யயா சங்கோசம் விகாசம் ச தர்சயதி-

எவ்வாறு எனில் -ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது போல் -மேலான ஸக்தியான ஆத்மா மற்ற ஒரு ஸக்தியான ப்ரக்ருதி மூன்றாவது ஸக்தியான வினைப் பயன் என்பவை மூன்றும் விஷ்ணுவின் சக்திகள்
இந்த ஆத்மாவின் சக்தியால் எல்லாப் பிராணிகளும் சூழப்பட்டு இருக்கின்றன -இதனால் சூழப்பட்ட ஆத்மா பிறப்புச் சூழலில் கட்டுண்டு உழலுகிறான் -எல்லா உயிர்களிலும் இச்சக்தி ஏற்றத் தாழ்வுகளுடன் -வினைகளுக்கு ஏற்ப -விளங்குகிறது
இதனால் ஆத்மாவின் இயல்பான குணமான ஞானம் -குறைவு நிறைவு அடைந்ததாகக் காணப்படுகிறது –

————

55–அபி ச -ஆச்சாதிகா அவித்யா ஸ்ருதிபிஸ் ச ஐக்ய உபதேச பலாச் ச ப்ரஹ்ம ஸ்வரூப திரோதாந ஹேது தோஷ ரூபா
ஆஸ்ரீயதே தஸ்யாஸ் ச மித்யா ரூபத்வேந பிரபஞ்ச வத்-ஸ்வ தர்சன மூல தோஷாபேஷத் வாத் ந சா மித்யா தர்சன மூல
தோஷஸ்யாதிதி ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத்

தஸ்யாஸ் ச அநாதித்வேபி மித்யா ரூபத்வாதேவ-ப்ரஹ்ம த்ருஸ்யத்வேந ஏவ அநாதத்வாத் தத் தர்சன மூல
பரமார்த்த தோஷா நப்யுபகமாச் ச ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத் தஸ்ய நித்யத்வாத் நிர்மோஷ ஏவ ப்ரஸஜ்யதே

உங்கள் கொள்கையின் படி அஞ்ஞானத்தால் சூழப்பட்டு ப்ரஹ்மம் தன்னைப் பலவாகக் கண்டு திகைக்கிறது
இதற்கு வேதங்களில் வரும் அபேத வாக்கியங்களை-(எடுத்துக் காட்டு -கயிறு -பாம்பு -) துணை கொள்கிறீர்கள் –
அதாவது பொய்யான பிரபஞ்சம் எனப்படுவது -பொய்யான அல்லது இல்லாத அஞ்ஞானம் என்பதைக் கொண்டே நிரூபிக்கப் பட வேண்டும்
அப்படியானால் பொய்யான அஞ்ஞானத்தை வேறு எதைக் கொண்டு நிரூபிப்பது

இந்த அஞ்ஞானம் -அவித்யை -என்பது மிகப் பழமையானது -அதற்கு இன்மை என்பது கிடையாது என வாதிட்டால் அதன் பழமை ப்ரஹ்மத்துடன் ஓன்று எனக் கொள்ள வேண்டும்
அந்நிலையில் இந்த அஞ்ஞானத்திற்கு ப்ரஹ்மமே காரணமாகும் –
ஆகவே ப்ரஹ்மம் இருக்கும் வரை அஞ்ஞானம் இருக்கும்
ஆகவே அஞ்ஞானம் அழிய ப்ரஹ்மமும் அழிய வேண்டும் -இது ஏற்புடையது அல்ல –
ஆகவே அஞ்ஞானம் அழிக்க முடியாத ஓன்று என்றும்
ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்ட இரண்டாவது என்றும் ஒப்புக் கொள்ள வேண்டும் –

——-

56–அத ஏவ -இதம் அபி நிரஸ்தம் –
ஏக மேவ சரீரம் ஜீவவத் -நிரஜீவாநி இதராணி சரீராணி -யதா ஸ்வப்ந த்ருஷ்ட-நாநாவித சரீராணாம் நிர்ஜீவத்வம்-
தத்ர ஸ்வப்நே த்ருஷ்டு சரீரம் ஏவ ஜீவவத் -தஸ்ய ஸ்வப்ந வேலாயாம் த்ருஸ்ய பூத நாநாவித அநந்த சரீராணாம் நிர்ஜீவத்வமேவ –
அநேந கேநைவ அந்யேஷாம் ஜீவாநாம் சரீராணாம் ச பரிகல்பிதத்வாத் ஜீவா மித்யா பூதா இதி ப்ரஹ்மண-
ஸ்வ ஸ்வரூப வ்யதிரிக்தஸ்ய ஜீவ பாவஸ்ய சர்வ சரீராணாம் ச கல்பிதத்வாத் ஏகஸ்மிந்நபி சரீரே சரீராவத்
ஜீவ பாவஸ்ய ச மித்யா ரூபத்வாத் ஸர்வாணி சரீராணி மித்யா ரூபாணி தத்ர ஜீவ பாவஸ்ய மித்யா ரூப
இதி ஏகஸ்ய சரீரஸ்ய தத்ர ஜீவ ஸத்பாவஸ்ய ச ந கஸ்சித் விசேஷ அஸ்மாகம் து ஸ்வப்நேரு த்ருஷ்ருஸ் சரீரஸ்ய
தஸ்மிந் ஆத்ம ஸத்பாஸ்ய ச ப்ரபோத வேலாயாமபாதி தத்வாத் அந்யேஷாம் சரீராணாம் தத் கத ஜீவாநாம்
ச பாதி தத்வாத் தே சர்வே மித்யா பூதா ஸ்வ சரீர மேகம் தஸ்மிந் ஜீவ பாவஸ்ய பரமாத்த இதி விசேஷ —

(சரீரத்தில் ஒரே ஜீவன் -மற்றவை நிர்ஜீவ -அவற்றுக்கும் ப்ரவ்ருத்தி உண்டே -ஸுபரி 50 சரீரம் எடுத்தாலும் ஒரே ஜீவன் தானே –
சுக துக்க அனுபவம் எவ்வாறு –
தர்ம பூத ஞானம் இரண்டாவது ஒத்துக் கொள்ள மாட்டார்களே அத்வைதி –
ஸ்வப்னம் நித்யம் -ஒரே ஜீவன் -மற்றவை நிர் ஜீவன் உள்ள சரீரம் –
தர்ம பூத ஞானம் கொண்டே இவற்றை நிர்வஹிக்க முடியும்)

இக்காரணத்தாலேயே கீழ் வரும் ஒரே உடல் வாதமும் மறுக்கப் படுகிறது
ஒரே உடல் மட்டும் உயிருடன் கூடியிருக்கிறது -மற்றவை உயிர் அற்றவர்கள் -கனவில் பலரைக் கண்டாலும் அவர்கள் உயிர் அற்று பொய்யாகவும் அங்கு கனவு காண்பவன் ஒருவனே உயிருடன் இருப்பது போல் அவனால் கனவு காணப்படும் பல பிராணிகள் உயிர் அற்றவை
இவ்வாறு கனவில் தோன்றும் உயிர்களும் உடல்களும் கனவு காண்பவனுடைய கற்பனையே -யாவும் பொய்யானவை என்பது போல் ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை யாவும் பொய்யே -கற்பனையே -என்று சொன்னால் உலகில் ஒரு ஜீவாத்மாவும் அதன் உடலும் பொய்யாகத் தானே ஆகும்
அதனால் ஒரே உடலில் மட்டும் உயிர் இருக்கிறது என்ற உங்கள் கொள்கை எவ்வகையிலும் சிறப்புப் பெற்றதல்ல
கனவு காணும் உடலும் உயிரும் பாதிக்கப் பட்டவை யாகவும் மற்றைய உடல்களும் உயிர்களும் அஞ்ஞானத்தால் பாதிக்கப் படாதேவை யாகவும் மற்றைய உடல்களும் உயிர்களும் அஞ்ஞானத்தால் பாதிக்கப்பட்டவை யாகவும் இருப்பதால் கனவு காண்பவன்
அவனுடைய உடல் உயிர் ஆகியவை உண்மை என்று சொல்லும் எங்கள் கொள்கையே சிறப்பாகும்

———–

57–அபி ச கேநவா அவித்யா நிவ்ருத்தி ? சா ச கீத்ருஸீ-இதி விவேச நீயம்-
ஐக்ய ஞானம் நிவர்த்தகம் -நிவ்ருத்திஸ் ச அநிர் வசநீய ப்ரத்யநீக ஆகாரா இதி சேத் அநிர் வசநீய ப்ரத்ய நீகம் நிர்வசநீயம்-
தச்ச சத்வா ? அசத்வா ? த்வி ரூபம் வா ? கோட்யந்தரம் ந வித்யதே –

ப்ரஹ்ம வ்யதிரேகேண ஏததத்ப்யுகபமே புநரப்ய வித்யா ந நிவ்ருத்தா ஸ்யாத் ப்ரஹ்ம ஏவ சேந் நிவ்ருத்தி
ததுப்ராகப்ய விசிஷ்டமிதி வேதாந்த ஞாநாத் பூர்வ மேவ நிவ்ருத்திஸ்யாத் ஐக்ய ஞானம் நிவர்த்தகம்
ததபாவாத் சம்சார இதி வாத தர்சனம் விஹந்யேத –

(சத்தான ப்ரஹ்மமோ அசத்தான முயல் கொம்பு-ஆகாசத் தாமரை -மலடி மகன் – போல்வன துக்கம் தராதே
அநிர் வசன நீயமான மற்றவையே துக்கம் தருமவை
ப்ரஹ்மத்தை நிரூபிக்கும் பிரமாணங்களும் மித்யை என்றால் -ஸர்வ சூன்ய வாதிகளுக்கு ஒப்பர் ஆவாரே

அனைத்தும் அந்த அந்த தேச காலத்தில் சத்தியமே -அலைகள் இப்பொழுது இல்லை என்றாலும் முன்பு இருந்தது மித்யை அல்லவே )

அறியாமையின் நின்றும் நீங்குதல் எவ்விதம் இருக்கும் -அது எவ்வாறு காணப்படும் -என்பது ஆராயத் தக்கது
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலத்தல் -நீக்கம் -என்னும் விடுதலை நிலை சொற்களுக்கு அப்பால் பட்ட நிலைக்கு எதிர்த்தட்டானது எனில் சொற்களால் விவரிக்கப் படுகிறது என்றதாகும்
அப்படியாயின் அது உயிர்ப்பொருளா உயிரல் பொருளா -இரண்டும் கலந்ததா -பலபடிப்பட்டதா என அறிய முடியாதது

ப்ரஹ்மம் தவிர்ந்த மற்ற ஓன்று ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலக்கின்றது எனின் ப்ரஹ்மத்தின் நின்று வேறு பட்ட ஓன்று உள்ளது என ஒத்துக் கொள்ள வேண்டும் –
அப்போதும் அத்வைதம் நில்லாது
ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டு ஒன்று இருக்குமாயின் அது அறியாமை யுடனேயே கூடி இருக்க வேண்டும் -அதாவது அறியாமை அழியவில்லை என்றாகும்
மாறாக நீக்கம் என்பது ப்ரஹ்மத்தின் நின்றும் மாறுபட்டது அல்ல என்று கொண்டால் அது தான் ஓன்று என்ற அறிவு ஏற்படுவதற்கு முன்பும் இருப்பது -எனவே நீங்கும் அறிவு என்று ஓன்று கிடையாது என்பதாகவும் நீங்கும் அறிவு கிட்டா விட்டால் பிறவிச் சுழலே என்ற கூற்றுக்கு விரோதமாகவும் ஆகிறது
அவ்வாறு அன்றி நீக்கம் உண்மை யல்ல என்று கொண்டால் அது ப்ரஹ்மத்தின் நின்றும் மாறு பட்டதா அல்லவா எனக் கேள்வி வரும்
அப்படி யானால் முன்பே கூறியது போல் அதற்கு வேறொரு அஞ்ஞானம் துணை வேண்டும் -ஆகவே எந் நிலையிலும் அஞ்ஞானத்துக்கு நீக்கம் இல்லை என ஆகிறது –

———–

58–கிஞ்ச நிவர்த்தக ஞாநஸ்யாப்ய வித்யா ரூபாத்வாத் -தந் நிவர்த்தக ஞானம் ஸ்வேத ஸமஸ்த பேதம் நிவர்த்ய
க்ஷணிகத்வாதேவ ஸ்வயமேவ விநஸ்யதி -தாவாநல விஷ நாசந விஷாந்தரவத் இதி சேத் ந –
நிவர்த்தக ஞாநஸ்ய ப்ரஹ்ம வ்யாதிரிக்தத்வேந தத் ஸ்வரூப தத் உத்பத்தி விநாசாநாம் மித்யா ரூபத்வாத்
தத் விநாச ரூபா அவித்யா திஷ்டத்யேவேதி தத் விநாச தர்சனஸ்ய நிவர்த்தகம் மந்தவ்யமேவ –
தாவாக்ந்யா தீநாமபி பூர்வா வஸ்தா விரோதி பரிணாம பரம்பரையா அவ்ரஜ நீயைவ

ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை பொய் எனக் கொண்டால் வேத ஸாஸ்த்ரங்களால் ஏற்படும் -சான்றுகளால் ஏற்படும் -அறிவும் பொய்யாகும்
மற்ற ஒன்றான கட் புலனாதலால் ஏற்படும் அறிவும் என்றும் அழிவதில்லை
ஆகவே அஞ்ஞானம் தோன்ற வழியில்லை

இவ்விரண்டில் எந்த ஞானத்தால் -இந்த அஞ்ஞானத்தின் நின்றும் விடுதலை கிடைக்கிறது என ஆராய்வோம்
இந்த விடுதலை ஞானம் எல்லா அஞ்ஞானங்களையும் ஒரே கணத்தில் நீக்கி -தானும் அழிந்து விடுகிறது
காட்டுத்தீ விஷ முறிவு மருந்து போல் தன் தொழில் முடிந்தவுடன் தானும் அழிந்து விடுகிறது என்பீராயின் அது அவ்வாறு அல்ல
இந்த விடுதலை அறிவும் ப்ரஹ்மத்தின் நின்று மாறுபட்டு இருப்பதால் அதன் நிலை தோற்றம் அழிவு ஆகியவையும் பொய்யானவையே
ஏன் எனில் -அந்த விடுதலை அறிவு அழிந்த பின்பு அது அழிந்தது என்று கொள்ள வேண்டுமாகையால் அவ்வழிவு மெய் என்றதாகிறது
எடுத்துக் காட்டிய காட்டுது தீயும் விஷ முறிவும் தங்களது முந்தைய நிலையின் நின்றும் வேறுபட்டு வேறொரு நிலையை அடைந்து இருக்கின்றனவே ஒழிய அவைகளுக்கு அழிவு ஏற்படவில்லை

பிரமாண ஜன்ய ஞானம் –சான்றுகளால் ஏற்படும் அறிவு
ஸ்வரூப ஜன்ய ஞானம் –கட் புலனாதலால் ஏற்படும் அறிவு
அஞ்ஞானம் அவித்யை -பல் பொருள் காட்சி -பொய் யறிவு -பிறவிச் சூழல் -நீங்க வேண்டிய அறிவு

————–

59–அபி ச சிந் மாத்ர ப்ரஹ்ம வ்யதிரிக்த க்ருத்ஸ்ந நிஷேத விஷய ஞாநஸ்ய கோயம் ஞாதா ?
அத்யாச ரூப இதி சேத் -ந தஸ்ய நிஷேத்யதாயா நிவர்த்தக ஞாந கரமத்வாத் தத் கர்த்ருத்வ அநுப பத்தே
ப்ரஹ்ம ஸ்வரூபமேவ இதி சேத் ந ப்ரஹ்மண-நிவர்த்தக ஞானம் பிரதி ஞாத்ருத்வம் கிம் ஸ்வரூபம் உத அத்யஸ்தம் ?
அத்யஸ்தம் சேத் அத்யத்யாச தந் மூல அவித்யாந்தரம் ச நிவர்த்தக
ஞான விஷய தயா திஷ்டத்யேவ -தந் நிவர்த்தகாந்தராப்யுபகமே தஸ்யாபி த்ரி ரூபதயா அநவஸ்த்தைவ
ஸர்வஸ்ய ஹி ஞானஸ்ய த்ரி ரூபத்வ விரஹே ஞானத்வமேவ ஹீயதே -கஸ்ய சித் கஞ்சன அர்தவிஸேஷம் ப்ரதி ஸித்தி ரூபத்வாத்
ஞானஸ்ய த்ரி ரூபத்வ விரஹே பவதாம் ஸ்வரூப பூத ஞானவத் நிவர்த்தக ஞானமபி அநிவர்த்தகம் ஸ்யாத்
ப்ரஹ்ம ஸ்வரூபஸ் யைவ ஞாத்ருத்வாத் யப் யுபகமே அஸ்மதீய பக்ஷ ஏத பரி க்ருஹீதஸ்யாத்
நிவர்த்தக ஞான ஸ்வரூப ஞாத்ருத்வம் ச ஸ்வநிவர்த் யந்தர்கதம் –இதி வசனம்
பூதல வ்யதிரிக்தம் க்ருத்ஸ்னம் சின்னம் தேவ தத்தேன –இத் யஸ்யாமேவ சேதன க்ரியாயாம் அஸ்யா சேதன
க்ரியாயா சேத்ருத்வஸ்ய ச சேத் யாந்தர் பாவ வசனவத் உபஹாஸ்யம்

மேலும் ப்ரஹ்மம் ஞானமே வடிவானது -அது நீங்கிய யாவையும் பொய்யே என்றால் அறிபவன் என்பவன் யார் –
அந்த ப்ரஹ்மம் தானே ஜீவாத்மாவில் ஏறிட்டுக் கொள்கிறது எனில் -அவ்வாறு இருக்க முடியாது
ஏன் எனில் இந்த விடுதலை அறிவுக்கு அறிபவனாக எழுவாயாக -அவன் இருக்க முடியாது -ப்ரஹ்மத்தின் நின்றும் அவன் வேறுபடாமையால் –
ப்ரஹ்மமே இவ் வறிவைப் பெறுகிறது என்பதுவும் சரியில்லை -ஏன் எனில் இவ் வறிவு ப்ரஹ்மத்துக்கு இயல்பானதா அல்லது அதன் மேல் ஏற்றிச் சொல்லப் பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க இயலாது –
அது இயல்பானது எனில் அஞ்ஞானம் வர வழியில்லை –
ஏறிடப் பட்டது எனில் ப்ரஹ்மத்திடம் அதின் மேல் ஏறிடப் பட்ட அஞ்ஞானமும் அதனால் நான் அறிகிறேன் -என்ற நினைவும் இருக்கும்
ப்ரஹ்மம் ஒன்றே உண்மை யாதலால் இவை எப்பொழுதும் ப்ரஹ்மத்துடன் இருக்கும் –
இந்நிலையில் இவ்விரண்டும் வேறொரு ஞானத்தால் போக்கப்படும் எனில் அதற்கு காரணமானவன் யார்
அவ்வறிவு எத்தகையது
அதனால் அறியப்படுவது எது
என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது

இதற்கு மாறாக அறிதல் என்பது ப்ரஹ்மத்திற்கு இயல்பாகவே இருக்கிறது எனில் நீங்கள் எங்களுடைய கொள்கைகளை ஒத்துக் கொண்டதாக ஆகிறது
இந்த விடுதலை ஞானத்தால் எவை எல்லாம் அழிக்கப் படுமோ அதில் அந்த ஞானமும் அடங்கி யுள்ளது என்று கூறுவது நகைப்புக்கு இடமாகும்
இந்த பூமியைத் தவிர எல்லாவற்றையும் தேவதத்தன் தோண்டினான் என்ற கூற்றில் அவன் தோண்டக் கூடிய பூமியை விட்டு விட்டு தேவதத்தன் முடியாத பிறவற்றைத் தோண்டியதாக தோண்டினான் என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் கொள்வது போல் –

——–

60–அபி ச நிகில பேத நிவர்த்தகம் இதம் ஐக்ய ஞானம் கேந ஜாதம் இதி விவேசநீயம் ஸ்ருத்யைவ இதி சேத்
ந தஸ்யா ப்ரஹ்ம வ்யதிரக்த்தாயா அவித்ய பரிகல்பிதத்வாத் பிரபஞ்ச பாதக ஞான உத்பாதகத்வம் ந சம்பவதி –
ததாஹி துஷ்ட காரண ஜன்யமபி ரஜ்ஜூ சர்ப்ப ஞானம் துஷ்ட காரண ஜன்யேந -ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப –
இதி ஞாநேன நபாத்யதே ரஜ்ஜூ சர்ப்பயே வர்த்தமநே -கேநசித் ப்ராந்தேந புருஷேண ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப
இதி யுக்தேபி அயம் பிராந்த இதி ஞானதே சதி தத் வசனம் ரஜ்ஜூ சர்ப்ப ஞானஸ்ய பாதகம் ந பவதி –
பயம்ச ந நவர்த்ததே-ப்ரயோஜனவத் ஸ்ரவண வேலாயாமே வஹி ப்ரஹ்ம வ்யதிரிக்தத்வேந
ஸ்ருதே ரபி பிராந்தி மூலத்தவம் ஞாதம் இதி

(ஞானம் ஒருவருக்கு உண்டாக வேணுமே
ஞானம் போல் ஞானம் பெற்ற ஜீவனும் அழியும் -நிவர்த்தகம் யாருக்கு -நிவர்த்தக ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே)

இந்த ஜீவாத்மாவிற்கு உலகம் பரமாத்மாவினின்றும் வேறு பட்டு தோன்றும் அறிவைத் தவிர்த்து தான் ப்ரஹ்மத்துடன் ஒன்றிய ஓன்று என்ற அறிவு எதனால் ஏற்படுகிறது என ஆராய்வோம்
வேதத்தால் ஏற்படுகிறது என்றும் கொள்ள முடியாது –
ஏன் எனில்
வேதம் ப்ரஹ்மத்தின் நின்றும் வேறு பட்டது -அதனால் அது பொய் -அவித்யா -அதினின்றும் ப்ரபஞ்சம் பொய் என்றும் அறிவு ஏற்பட வாய்ப்பில்லை
எப்படி எனில்
பொய்யறிவினால் உண்டான கயிற்றில் பாம்பைக் காண்பதை மற்றொரு பொய்யறிவினால் உண்டான இது கயிறு இறே -பாம்பு அல்ல -என்ற எண்ணத்தினால் போக்கடிக்க முடியாதது போல் கயிற்றைப் பாம்பு என மயங்கி அச்சம் கொண்ட ஒருவனுக்கு அவனைப் போன்றே மயங்கிய அறிவுடைய ஒருவனால் வழங்கப்படும் பாம்பல்ல -கயிறு தான் -என்ற அறிவுரை முந்தையனவால் –
இவனும் நம் போல் மயங்கியவன் -இவனுடைய அறிவு கொள்ளத்தக்கது அல்ல என்ற எண்ணத்தால் -அவனுக்கு முன்பு தோன்றிய பாம்பு என்ற அறிவும் அதனடியாகப் பிறந்த பயமும் மாறாதது போல்
உலகம் பல படித்தானது என்று ஞானம் அழிவதற்காக வேதம் சொல்லும் சொற்களும் கேட்க்கப்படுகையிலேயே
இவை ப்ரஹ்மத்தின் நின்றும் வேறு பட்டன -ஆகவே மயக்கத்தை ஊட்டுவன என்ற அறிவு மாறாது

கிஞ்ச -நிவர்த்தக ஞானஸ்ய ஞாது தத் சாமக்ரீ பூத சாஸ்த்ரஸ்ய ச ப்ரஹ்ம வ்யதிரிக்த தயா யதி பாத்யத்வமுச்யதே
ஹந்த ஹந்த தர்ஹி பிரபஞ்ச நிவ்ருத்தே மித்யாத்வ மாபததீதி பிரபஞ்சஸ்ய ஸத்ய தாஸ்யாத்-
ஸ்வப்னந த்ருஷ்ட புருஷ வாக்யாவகத பித்ராதி மரணஸ்ய மித்யாத்வே ந பித்ராதி சத்யதாவத்
கிஞ்ச தத்வமஸ்யாதி வாக்யம் ந பிரபஞ்சஸ்ய பாதகம் பிராந்தி மூலத்வாத் ப்ராந்தப்ர யுக்த ரஜ்ஜூ சர்ப்ப பாதக வாக்யவத்

எந்த தெளிவுறுத்தும் அறிவும் அதை யுடையவனும் அதை அறிவதற்குத் துணையான கருவிகளும் ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டவை யாகையால் பொய் என்று கொள்ளப் படுகின்றனவோ அவ்வறிவு எவ்வாறு உண்டாக முடியும்
அதனால் ப்ரபஞ்சம் பொய் என்று காட்டும் அறிவே பொய்யாவதால் பிரபஞ்சம் மெய்யே என்றாகி விடும்
எடுத்துக் காட்டாகக் கனவில் ஒருவன் தனது தந்தையின் இறப்பை ஒருவர் மூலம் அறிந்து பிறகு விழித்த போது தந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு கனவில் வந்த நிகழ்ச்சி பொய் -பொய்யான தகவலால் உண்மை மாறுபடுவது இல்லை என்று அறிகிறான்
இவ்வாறே
தத்வமஸி -போன்ற சொற்களும் ப்ரபஞ்சத்தின் உண்மையை மறுப்பது இல்லை
அவைகளும் பொய்யான ஸ்ருதியால் சொல்லப்படுவதால்

ந நுச ஸ்வப்நே கஸ்மின் சித்பயே வருத்தமாநே ஸ்வப்நசாயாமேவ் -அயம் ஸ்வப்ந –
இதி ஞாதேஸ்தி பூர்வ பய நிவ்ருத்தி த்ருஷ்ட்வா தத்வ தத்ராபி சம்பவதி இதி நைவம் ஸ்வப்ந வேலாயாமேவ
ஸோ பி ஸ்வப்ந -இதி ஞாதே சாதி புனர் பய நிவ்ருத்திரேவ த்ருஷ்டேதி ந கஸ்சித் விசேஷ ஸ்ரவண
வேலாயாமேவ ஸோ அபி ஸ்வப்ந இதி ஞாத மேவேத் யுக்தம்

இல்லை எனில் கனவு காண்கையில் ஏற்பட்ட பயத்தை ஒருவன் தன் கனவில் தோன்றியது உண்மை யல்ல என்ற எண்ணத்தைக் கனவிலேயே கொண்டாலும் இரண்டாவதும் கணவாகையாலே கொள்ளத் தக்கதல்ல என்ற உணர்வால் அச்சம் விலகாது
அது போல் இச்சொற்களைக் கேட்பதால் மட்டும் ப்ரபஞ்சம் பொய் என்ற அறிவு எப்படி ஏற்படும் –

—————

61–யதபி சேத முக்தம் -ப்ராந்தி பரிகல்பிதத்வேந மித்யா ரூபமபி சாஸ்திரம் – சத் அத்விதீயம் ப்ரஹ்ம –
இதி போதாயதி-தஸ்ய சதோ ப்ரஹ்மணோ விஷயஸ்ய பஸ்ஸாத் ந பாத ந தர்சந நாத் ப்ரஹ்ம ஸூஸ்திதமேவ
இதி ததயுக்தம் -ஸூந்ய மேவ தத்வம் -இதி வாக்யேந தஸ்யாபி பாதிதத்வாத் இதம் ப்ராந்தி மூலம் வாக்யம்
இதி சேத் -சத் அத்விதீயம் ப்ரஹ்ம -இதி வாக்யமபி ப்ராந்தி மூலமிதி த்வயைவ யுக்தம் பஸ்ஸாத்த
ந பாத்தா தர்சனம் து சர்வ ஸூந்ய வாக்ய ஸ்யைவவேதி விசேஷ –

மயக்கத்தோடு கூடி இருந்தும் பொய் அவித்யை வடிவமாயினும் ஸாஸ்த்ரம் போதிக்கிற ப்ரஹ்மம் தவிர்த்த ஏதும் இல்லை -என்ற கொள்கை பிறகு அதற்கு மாறுபட்ட கருத்துக்கள் ஏதும் இல்லை யாதலால் அது ஏற்புடையதே
ஆயினும் இன்மையே சூன்யமே மெய்ப்பொருள் என்றும் ஒரு சொல் அதற்குப் பின் மாத்யமிக புத்த சமயிகளால் சொல்லப் பட்டு இருப்பதால் அது உண்மையாக முடியாது அவ்வாறு அல்ல
மாத்யமிகர் வாக்கியம் மயக்கத்துடன் கூடியது என்பீராயின் நீங்களும் ஸாஸ்த்ரம் மயக்கத்துடன் கூடியது என்றே கொள்கிறீர்கள்
ஒரு பொருள் இருக்கிறது என்று சொல்லி பிறகு அது இல்லாத போது அது இல்லை என்று எடுத்துக் கழிக்கும் சொல் வலுவானது
அதன் படி இன்மையே மெய்ப்பொருள் என்பது வலுவுடையதாகிறது

———-

62–சர்வ ஸூந்ய வாதிந ப்ரஹ்ம வ்யதிரிக்த வஸ்து மித்யாத்வ வாதிநஸ் ச ஸ்வ பஷ சாதனா பிரமாண பாரமார்த்யா
நப்யுபகமேந அபியுக்தை பாதாநதிகார ஏவ ப்ரதிபாதித –ஸர்வதாசது பாயாநாம் பாதமார்க்க ப்ரவர்த்ததே
அதி காரோ அநுபாயத்வாத் ந பாதே ஸூந்ய வாதிந இதி –

(ந சத் ந அஸத் ந ஸத்அஸத் -மாத்மிகன்-ஸர்வ சூன்ய வாதம் கண்டிக்க விரும்பாமல் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் -பிரசன்ன பவுத்தர் )

(விஷ நிவ்ருத்தி மருந்து விஷத்தை நிவர்த்தித்து தானும் நிவர்த்தியாவது போல்
ஞானம் அவித்யயை நிவர்த்தத்த பின்பு தானும் அழிந்து -ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் என்பர்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பட்டதா கேள்வி வராதே -)

யாவும் இன்மையே என்பருக்கும்
ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை யாவும் பொய்யே என்போர்க்கும்
தங்கள் வாதத்தை நிலை நிறுத்தக் காட்டுகின்ற சான்றுகள் யாவும் பொய்யாகவும்
யாவும் பாதிக்கப் பட்டவை யாகவும் ஆகி விடுகின்றன
உண்மையான சான்று உடையவர்களுக்கே வாதத்தில் -வாதம் செய்வதில் -எப்பொழுதும் அதிகாரம் உண்டு
யாவும் பொய் என்பவர்களுக்கு வாதத்தை அதிகாரம் இல்லை -என்றவாறு
(குமாரில பட்டர் சொன்னது )

———–

63–அபி ச ப்ரத்யக்ஷ த்ருஷ்டஸ்ய பிரபஞ்சஸ்ய மித்யாத்வம் கேந ப்ரமாணேந சாத்யதே-
ப்ரத்யக்ஷஸ்ய தோஷ மூலத்வேந அந்யதா ஸித்தி சம்பவாத் -நிர்தோஷம் சாஸ்திரம் அநந்யதா சித்தம் ப்ரத்யக்ஷஸ்ய பாதகம்
இதி சேத் கேந தோஷேண ஜாதம் ப்ரத்யக்ஷம் அநந்த பேத விஷயம் இதி வக்தவ்யம் –
அநாதி பேத வாசநாக்ய தோஷ ஜாதம் ப்ரத்யக்ஷம் இதி சேத் -ஹந்த-தர்ஹி அநேந ஏவ தோஷேண ஜாதம் ஸாஸ்த்ரம பீதி
ஏக தோஷ மூலத்வாத் ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷயோ -ந பாத்ய பாதக பாவ ஸித்தி
ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம்
சாஸ்திரம் து பிரத்யஷாத் யபரிச்சேத்ய சர்வாந்தராத்மத்வ சத்யத்வாத் அநந்த விசேஷேண விஸிஷ்ட ப்ரஹ்ம ஸ்வரூப
தத் உபாஸநாத் யாராதன பிரகார -தத் பிராப்தி பூர்வக தத் பிரசாத லப்ய பல விசேஷ ததநிஷ் கரண மூல நிக்ரஹ விசேஷ விஷயம் –
இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத
அநதி நிதன -அவிச்சின்ன பாட ஸம்ப்ரதாயதாத் யநேக குண விஸிஷ்டஸ்ய சாஸ்த்ரஸ்ய பலீயஸ்த்வம் வததா ப்ரத்யக்ஷ
பாரமார்த்ய மவஸ்யம் அப்யுப கந்தவ்யம் இதி அலமநேந ஸ்ருதி சத விததிவாத வேக பராஹத
குத்ருஷ்ட்டி துஷ்ட யுக்தி ஜால தூல நிரசநேன இத் யுபகம்யதே

(யாருக்கு உண்டாகிறது என்று கொண்டால் கூட நிவர்த்தக ஞானம் எதனால் உண்டாகிறது -அடுத்த கேள்வி
ப்ரத்யக்ஷத்தாலயா ஸ்ருதியாலாயா கேள்வி வருமே-ஸ்வயம் பிரகாசம் இல்லையே –
ஆகவே ப்ரமாணத்தால் தானே உண்டாகி இருக்க வேண்டும்
இதுக்கு ஸ்ருதி பிரமாணம் சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் அஹம் ப்ரஹ்மாஸ்மி ஐக்யம் போதக வாக்கியங்கள் என்பர்

ப்ரத்யக்ஷத்தால் பலவாக காண்கிறோமே என்னில்-தேக வாசனை -இந்திரியங்கள் குறையே காரணம் என்பர்-ஸ்ருதி ஒருவர் சொல்ல காதால் நாம் கேட்க்கிறோமே அதுவும் மித்யை -துஷ்ட இந்திரிய பலம் அர்த்த பிரதிபத்தி புத்தி மாறலாம் -ஸாஸ்த்ரம் நிர்தோஷமாக இருந்தாலும்- ஸ்வ பாவ தோஷங்கள் உண்டாகும் அன்றோ-ப்ரத்யக்ஷத்துக்கும் தோஷம் சொல்லக் கூடாது என்பதே நம் சம்ப்ரதாயம்  -ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம் -இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத-)

(பேதம் ப்ரத்யக்ஷம் நிரூபிக்கும் அபேதம் ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம்
சரீராத்மா பாவம் ஒன்றே சுருதி விஷயம் ஆகும் -பிரதிதந்தரம் நம் சம்பிரதாயத்துக்கு)

மேலும் நமக்குக் கண் கூடாய் இருக்கும் இப்பிரபஞ்சத்தின் பொய்மையை எந்த ப்ரமாணங்களைக் கொடு நிரூபிக்க முடியும்
நாம் நேரே காணும் இவ்வுலகில் காணப்படும் பல வேறுபாடுகள் குறைபாடுகளுக்கு நாம் தக்க காரணம் காட்ட முடியும்
ப்ரஹ்மம் ஒன்றே உண்மை -மற்றவை யாவும் பொய்யே என்று கூடும் ஸாஸ்த்ரத்தின் கூற்று நாம் நேரில் காண்பதை விட வலிது எனில் எக்குறை பாட்டால் நாம் காணும் பல் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறதே
மோக்ஷம் அடைய 32 ப்ரஹ்ம வித்யைகளைக் கூறுகிறதே
அப்படியாயின் அதுவும் உலகியலோடு ஒத்த குறைபாடுள்ள தாகையால் அதன் கருத்து நேரில் கட் புலனாவதை எவ்வாறு வெல்லும்
ஆகாயம் காற்று போன்ற பஞ்ச பூதங்களும்
அவைகளால் விளைந்த ஒலி தொடு உணர்வு போன்றவைகளும்
மனிதர்கள் முதலான பல் வேறு உடல் அமைப்புக் கொண்ட பிராணிகளும் கண்களால் காணப் படுகின்றன -உணரப் படுகின்றன
எல்லாவற்றையும் உள்ளிருந்து இயக்கல் உண்மையாக இருத்தல் போன்ற எண்ணற்ற நற் குணங்களோடு கூடிய பரமாத்ம நிலையும்
அதை ஆராதனம் மூலம் கொடை நல்லறம் ஆகியவை செய்து வழி பட்டு அதன் கருணையால் கிடைக்கும் வீடு பேறு போன்ற நான்கு பேறுகளும்
ப்ரஹ்மத்துக்கு உகப்பு அல்லாததைச் செய்து அதனால் வரும் கேடுகளும் தண்டனைகளும் ஸாஸ்த்ரங்களால் விளக்கப் படுகின்றன
ஆகவே இவை இரண்டும் வெவ்வேறு வகையான பொருள்களைக் கூறுவன வாகையால் ஒன்றால் மற்ற ஒன்றை எவ்வாறு பாதிக்கப் படும்
மேலும் கட் புலனாவது என்ற சான்றை நீங்களும் ஒத்துக் கொள்ள வேண்டும்
ஏன் எனில்
காதுகளால் கேட்டு
மனத்தில் நிறுத்திக் கொள்வதால் தான் ஸாஸ்த்ரங்கள் உள்ளவை என்ற நிலையைப் பெறுகின்றன

முதலும் முடிவும் அற்று தொடர்பு அறாது உபதேசத்தால் வந்த பல நலன்களோடு கூடிய ஸாஸ்த்ரம் வலுவுள்ளது என்று ஒப்பிய உங்களால் கண் கூடாகத் தெரியும் உலகமும் ஒத்துக் கொள்ளப் பட வேண்டும் –
முடிவாக நேர் அற்ற நோக்கு உடையோரால் அவர்களால் வாதிக்கப்படும் உக்திகளால் செப்பிடு வித்தை போல் காணப்படும் இப்பொய்மை வாதமாகிற பஞ்சு பல வேத வாக்யங்களால் நன்கு விளக்கப்பட்ட புயல் காற்றால் அடித்துச் செல்லப்படும் எனக் கூறி அமைகிறேன்

—————–

பாஸ்கர மத கண்டனம்
64–த்விதீயே து பக்ஷே உபாதை ப்ரஹ்ம வ்யதிரிக்த -வஸ்த்வாந்தராந் ப்யுபகமாத் ப்ரஹ்மண்யேவா உபாததி
சமசர்க்காத் ஓவ்பாதிகாஸ் சர்வே தோஷா ப்ரஹ்மண்யேவாபவேயு
ததஸ் ச அபஹதபாப் மத்வாதி நிர்தோஷ ஸ்ருத யஸ் சர்வா விஹந்யந்தே -யதா கடாகாசதே
பரிச்சின்னதயா மஹா ஆகாசாத் வை லக்ஷண்யம் பரஸ்பர பேதஸ் ச த்ருச்யதே -தத்ரஸ்தா தோஷாவா குணா வா
அநவச் சிந்நே மஹா ஆகாஸே ந சம்பந்யந்தே -ஏவம் உபாதை க்ருத பேத வ்யவஸ்தித ஜீவ கதா தோஷா
அநு பஹிதே பரே ப்ரஹ்மணி ந சம்பந் யந்தே இதி சேத் நைததுபத்யதே நிரவயவஸ்ய ஆகாசஸ்ய அநவச் சேத் யஸ்ய கடாதிபி –
சேதா சம்பவாத் -தேநை வாகாசேந கடாதயஸ் ஸம்யுக்தா இதி ப்ராஹ்மண உபாயச்சேத் யத்வாத் ப்ரஹ்ம ஏவ உபாதி ஸம்யுக்தம் ஸ்யாத் –
கட ஸம்யுக்தாகா ச பிரதேச அந்யஸ் மாதாகாச ப்ரதேசாத் பித்யதே-இதி சேத் ஆகாசஸ்யை கஸ்யைவ பிரதேச பேதேநே
கடாதி ஸம்யோகாத்-கடாதவ் கச்சதி தஸ்ய ச பிரதேசஸ்ய அநியம இதி ப்ரஹ்மண்யேவ
உபாதி ஸம்சர்க்க ஷணே ஷணே பந்தோ மேஷஸ் ச பவதீதி சந்த பரிஹஸந்தி–

(உபாதி சம்சர்க்கம் -ப்ரஹ்மத்துக்கு அபஹத பாப்மத்வாதிகள் சுருதி விருத்தம்
அபரிச்சின்ன ஆகாசம் -நடுவில் கடம் வைத்தால் கடாகாசம் -தோற்ற -இதன் குறைகள் மஹா ஆகாசத்தில் காணப்பட வில்லை
ஜீவர்கள் கடாகாசம் போல் -சேதிக்க முடியாதே -ஆகாசம் ஸூஷ்மம் -கடம் ஸ்தூலம் சேதிக்க முடியாதே -அதே போல் ப்ரஹ்மம் ஸூசமம் -உபாதி – ஸ்தூலம்

கர்மாக்கள் தர்ம பூத ஞான த்வாரா ஆத்மாவில் -ப்ரஹ்மத்துக்கு சங்குசித ஞானம் இல்லையே-விகார அநர்ஹம் -)

பாஸ்கரர் கொள்கைக்கு மறுப்பு
இரண்டாவது மதத்திலும் சூழலின் தாக்கம் -ப்ரஹ்மம் தவிர்த்த வேறு பொருள்கள் -ஒப்புக் கொள்ளப் படாமையால் ப்ரஹ்மத்தின் இடத்திலேயே சூழலின் தாக்கத்தால் வரக்கூடிய எல்லாக் குறைபாடுகளும் ப்ரஹ்மத்திலேயே ஏற்படுகின்றன
அதனால் பாபமற்ற தன்மை முதலான குறைகள் அற்றதாகப் ப்ரஹ்மத்தைக் கூறும் மறை வாக்கியங்கள் அழிக்கப்படும் -பொருள் அற்றவை யாகும் –
அவ்வாறே குடத்தினுள் உள்ள வெளி அளவு பட்டதாகவும் மற்றைப் பெரு வெளி அளவு படாததாகவும் ஒன்றுக்கு ஓன்று மாறுபட்டுத் தோன்றுகின்றன
அதனால் அளவு பட்ட வெளியின் நிறை குறைகள் பெரு வெளியின் தொடர்பு அற்றவை யாகின்றன
அது போலவே சூழலின் தாக்கத்தால் ஜீவனிடம் தோன்றும் குறை நிறைகள் ப்ரஹ்மத்தின் தொடர்பு அற்றது என்பீராகில் அது கொள்ளத் தக்கது அல்ல

அவயவங்கள் அற்ற பெரு வெளி குடம் போன்றவற்றால் பிளவு படுத்தக் கூடியது அல்ல
அது எப்போதும் குடத்தின் வெளியோடு கூடியே இருக்கும்
அது போல் ப்ரஹ்மமும் அவயவங்கள் அற்றதால் பிளக்கப்பட முடியாதலால் ஜீவனுடைய நிறை குறைகளையும் கொண்டு இருக்கும் –
குடத்தின் உள்ளிருக்கும் சிறு வெளியும் அது தவிர்த்த கூடத்திற்கு வெளியில் உள்ள பெரு வெளி எனக் கருதப் படுகிறது என்பது போல் இங்கும் கொள்ளலாம் எனில்
ஒரே வெளி குடத்தின் தொடர்பால் இரண்டாகக் கருதப் படுகையில் அக்குடம் உருண்டு செல்கையில் அதற்கு ஒவ்வோர் நிலையிலும் வெளியின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் தொடர்பும் தொடர்பின்மையும் ஏற்படுகிறது
இதனால் குடத்திலுள்ள சிறு வெளி இது என்று பிரித்துக் காண இயலாது
அதே போல் ப்ரஹ்மத்தின் எப்பகுதி சூழலை தயக்கத்துடன் தொடர்புடையது எப்பகுதி தொடர்பு அற்றது எனப் பிரித்துக் காண முடியாது
ஆகவே ஜீவனுக்கு உள்ள குறை நிறைகள் ப்ரஹ்மத்திலும் காணப்பட வேண்டும்
அதாவது உடல் புலன்கள் தொடர்பால் வரும் கட்டும் அது நீங்கினால் வரும் வீடும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நகைப்புக்கு இடமான நிலை ஏற்படும் –

உபாதி -சூழலின் தாக்கம் -அருகில் உள்ள ஒரு பொருளின் தொடர்பால் மற்றதில் ஏற்படும் மாறுதல்
எடுத்துக் காட்டு -வெள்ளை நிறப்பொருள் அருகில் உள்ள செம்பருத்திப் பூவினால் சிவப்பாகக் காணப்படுதல்

————–

65–நிரவயவஸ் யாகாசஸ் யைவ ஸ்ரோத்ர இந்த்ரியத்வேபி இந்திரிய வ்யவஸ்தாவத்
ப்ரஹ்மண்யபி வ்யவஸ்தா உபபத்யதே இதி சேத்
ந வாயு விசேஷ ஸம்ஸ் க்ருத கர்ண பிரதேச ஸம்யுக்தஸ்யைவ ஆகாச பிரதேசஸ்ய ஸஸ்ய இந்த்ரியத்வாத்
தஸ்ய ச பிரதேசாந்த்ராத் பேதா நியமேபி இந்திரிய வ்யவஸ்தா உபபத்யதே-
ஆகாசஸ்யது ஸர்வேஷாம் சரீரேஷு கச்சத்ஸூ அநியமேந சர்வ பிரதேச ஸம்யோக இதி
ப்ரஹ்மண்யாபி உபாதி ஸம்யோக பிரதேசா நியம ஏவ

(ஆகாசம் -சப்த குணகம் -காதில் நுழைந்து -ஸ்தோத்திரிய இந்திரியம் உணரும் -ஸம்யுக்த-ஸம்யோக)

அவயமற்ற ஆகாயம் செவிப்புலன் எனப்படுவது போல் ப்ரஹ்மத்திற்கும் புலன்கள் அற்று கட்டுப்பட்டு இருக்கும் நிலை ஏற்படலாம் எனில்
அது இயலாது
காற்றுடன் தொடர்புடையதாய் காதின் உள்ளிருக்கும் சிறு வெளி ஒலிகளை அறியக் காரணமாவதால் செவிப்புலன் எனப் பெயர் பெறுகிறது
அதை ஒழிந்த ஆகாயம் இவ்வாறு பகுதிகளாக பிரிக்கப்படாதது
மேலும் ஆகாயத்திற்கு காது மட்டும் அன்றி உடலின் எல்லாப் பகுதிகளுடன் தொடர்பு இருக்கிறது
அதனால் ஒரு குறிப்பிட்ட ஆகாயப் பகுதி ஒரு குறிப்பிட்ட புலனுடன் எப்பொழுதும் தொடர்பு கொண்டு இருக்கிறது என வரை யறுக்க முடியாது
ஆயினும் அது உடல்களின் தொடர்பால் எப்பொழுதும் இயங்கிக் கொண்டு இருப்பதால் அத் தொடர்பு நிலையுடையதாய் இருக்கிறது
இந்த செவிப் புலன் வெளியை மற்ற வெளியின் நின்றும் தனியாக பிரிக்கவோ குறிப்பிடவோ முடியாது
இவ்வாறு ப்ரஹ்மத்திற்குக் கொண்டால் ப்ரஹ்மம் எப்பொழுதும் சூழலின் தயக்கத்தோடு தொடர்பு யுடையதாக மட்டுமே இருக்க முடியும் –

66–ஆகாசஸ்ய ஸ்வரூபேண ஏவ ஸ்ரோத்ரிந்த் ரியத்வம் அப்யுபகம்யாமபி இந்திரிய வ்யவஸ்தா யுக்தா பரமார்த்த
தஸ்து ஆகாச நஸ்ர இந்திரியம் –
வைகாரிகாத் அஹங்காராத் ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஹி வைதிகா யதோக்தம்

செவிப்புலன் என்பது ஆகாயத்தின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்ற உங்கள் கருத்தை ஒத்துக் கொண்டு அதற்கு மேற்கூறியபடி பதில் அளித்தோம்
உண்மையில் ஆகாயம் செவிப்புலன் அல்ல
வைகாரிகம் போன்ற அஹங்காரங்களில் நின்றும் பதினோரு இந்திரியங்கள் உண்டாகின்றன என்பது வைதிகர்கள் கருத்து
உங்கள் கருத்து அதற்கு முரணானது –

பகவதா பராசரரேண-
தைஜசாநி இந்த்ரியாண்யாஹு -தேவா வைகாரிகா தச ஏகாதசம் மனஸ் ஸாத்ர தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி அயமர்த்த வைகாரிக தேஜச பூதாதி இதி த்ரிவிதோ அகங்கார -ச ச க்ரமாத் சாத்விக ராஜஸ தமசஸ் ச
தத்ர தாமஸாத் பூதாதே ஆகாசாதீநி பூதாநி ஜாயந்தே இதி ஸ்ருஷ்ட்டி க்ரம முக்த்வா -தைஜஸாத் ராஜஸ அஹங்காராத்
ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஸ்வ மத முச்யதே -தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி தேவா இந்திரியாணி ஏவம் ஆஹங்காரி காணாம்
இந்திரியாணாம் பூதைஸ் சாப்யாயநம் மஹா பாராதே உச்யதே

பராசரர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்
தைஜஸத்தின் நின்றும் -அதாவது ராஜஸ அகங்காரத்தின் நின்றும் -புலன்கள் உண்டாயின என்று சிலர் சொல்லுவர்
ஆயின் அவை பதினொன்றும் வைகாரிகத்தின் நின்றும் -அதாவது ஸாத்விக அஹங்காரத்தின் நின்றும் -உண்டாயின என்றும்
அதனால் அவற்றுக்கு வைகாரிகங்கள் என்று பெஅர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறோம்
இதன் பொருள் -வைகாரிகம் தைஜஸம் பூதாதி என்பவை மூன்று அஹங்காரங்கள்
இவைகள் முறையே ஸாத்விக ராஜஸ தாமஸங்களாகும்
இவற்றில் தாமஸ த்தின் நின்றும் ஆகாயம் முதலிய பூதங்கள் பிறக்கின்றன என்று படைப்பின் ஒழுங்கைக் கூறுகையில்
தைஜஸமாகிற ராஜஸ அகங்காரத்தின் நின்றும் பதினோரு புலன்கள் பிறக்கின்றன என்றும் கூறி
தனது கொள்கையாக புலன்கள் வைகாரிகத்தின் நின்றும் பிறக்கின்றன என்று நிறுவுகிறார்
தேவா என்பது புலன்கள்
இதையே அஹங்காரத்தின் நின்று புலன்கள் தோன்றி பஞ்ச பூதங்களால் வளர்க்கப் படுகின்றன என்று மஹா பாரதமும் சொல்கிறது –


பவ்தீகத்வேபி இந்திரியாணாம் ஆகாசாதி பூத விகாரத்வதேவ ஆகாசாதி பூத பரிணாம விசேஷா –
வ்யவஸ்திதா ஏவ சரீரவத் புருஷானாம் இந்திரியாணி பவந்தி இதி -ப்ரஹ்மணி அச்சேத்யே நிரவயவே-
நிர்விகாரேது அநியமேந அநந்த ஹேயோபாதி ஸம் சேர்க்க தோஷா துஷ் பரிஹர ஏவ இதி –
ஸ்ரத்ருதாநாநாமேவ அயம் பஷ இதி ஸாஸ்த்ர விதோ ந பஹுமந்யந்தே –
ஸ்வரூப பரிணாம அப்யுகமாத் அதிகார ஸ்ருதி பாத்யதே நிரவத்யதா ச ப்ரஹ்மண-சக்தி பரிணாம –
இதி சேத் கேயம் சக்திரித் யுச்யதே ? கிம் ப்ரஹ்ம பரிணாம ரூபா ? உத ப்ரஹ்மணோ அநந்யா கா அபி ?
இதி உபய பக்ஷே அபி ஸ்வரூப பரிணாம அவர்ஜனீய ஏவ —

பஞ்ச பூதங்களைப் பிறப்பிக்கிற பூதாதியின் மாறுபாடான இந்தப் புலன்கள் ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களின் துணையால் உடலை அடைந்து செயல்படுகின்றன என அறியப்பட்டது
மாறாக ப்ரஹ்மத்தின் பொறிகள் அற்ற மாறு பாடற்ற தன்மை பொறிகளின் தொடர்பால் பழுது படுகிறது என்னும் வாதம் சான்றோர்கள் முன்பு பாஸ்கரர் கொள்கையாக வைக்கப் படுகிறது

ப்ரஹ்மமே மாறுபாடு அடைந்து இவ்வாறாகிறது என்பீராகில் அதன் மேற்கூறிய தன்மைகள் பாதிக்கப்படும்
அவ்வாறு அன்றி தன் ஆற்றலால் ப்ரஹ்மம் மாறுபடுகிறது என்றால் அவ்வாற்றல் என்பது என்ன
அது ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டதா –
எவ்வாறு
இக் கேள்விகளுக்கு பதில் எதுவானாலும் ப்ரஹ்மத்தின் நிரையில் மாறுபாடு தோன்றுவதை ஒத்துக் கொள்ள முடியாது
ஏன் என்றால்
இவர்களுடைய ப்ரஹ்மத்துக்குத் தனியான குணங்கள் ஏதுமில்லை
ப்ரஹ்மம் தவிர்த்து மற்ற எப்பொருளும் இல்லை -என்னும் கொள்கையை இவர்களே மறுக்க நேரிடும் –

—————

யாதவ பிரகாச பக்ஷம் மறுப்பு
67–த்ருதீயே அபி பக்ஷே ஜீவ ப்ரஹ்மணோ பேதவதபேதஸ்ய சாப்யுபகமாத்-தஸ்ய ச தத் பாவாத்
ஸுவ்பரி பேதவத் ஸ்வ அவதார பேதவச் ச ஸர்வஸ்ய ஈஸ்வர பேதத்வாத் சர்வே ஜீவ கதா தோஷா தஸ்யைவ ஸ்யு —

(இவரும் பரிணாம வாதி -கீழ் உபாதியால் பரிணாமம் -இவர்கள் ஸ்வரூபத்தால் பரிணாமம் என்கிறார்கள்
நாமோ ஸ்வ பாவ -சரீரம் மாத்திரம் பரிணாமம்)

மூன்றாவது கொள்கை -ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் வேறுபாடின்மையையும் ஒருங்கே ஒத்துக் கொள்கிறது
ப்ரஹ்மத்துக்கு ஜீவ பாவத்தில் ஸுவ்பரி முனிவரின் ஈடுபாடு போன்றும் -(உயிர் ஒன்றாய் இருக்கச் செய்தே பல உடல்களைக் கொள்ள முடிவது போல் ஆகும் என்றவாறு )
ஈஸ்வரனுக்கு தன் அவதாரங்களில் ஈடுபாடு போன்றும்
(ஏற்பட்டு ப்ரஹ்மத்துடன் ஒன்றியவுடன் அது நீங்கி விடுகிறது ) தோன்றும் யாவையும் ப்ரஹ்மத்தின் வேறுபாடுகளே
இவ்வாறு கூறினால் ஜீவனுக்குள்ள குறைபாடுகள் ப்ரஹ்மத்திற்கும் ஏற்படும்

இதற்கு முன் கூறிய பாஸ்கரர் மற்றும் யாதவப் பிரகாசர் கொள்கைகளின் படி ஈஸ்வரனும் பிரபஞ்சமும் உண்மை
முற் கூற்றில் ஈஸ்வரனுக்கு உயிரல் பொருட்களின் தொடர்பால் ஜீவன் என்ற ப்ரமை ஏற்படுகிறது என்றும்
இரண்டாவதில் ஈஸ்வரனே ஜீவனாகவும் அசேதனமாகவும் மாறுகிறது என்றும் கொள்ளப் பட்டு இருக்கிறது
ராமானுஜர் அக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறார் –

—————

68–ஏகத் யுக்தம் பவதி –
ஈஸ்வர ஸ்வரூபேண ஏவ ஸூர நர திர்யக் ஸ்தாவராதி பேதேந அவஸ்தித இதி ஹி ததாத்மகத்வ வர்ணனம் க்ரியதே ?
ததா சதி ஏக ம்ருத் பிண்டாரப்த கட சராவாதி கதாந் யுதகாஹரணாதீதி சர்வ கார்யாணி யதா தஸ்ய ஏவ பவந்தி
ஏவம் சர்வ ஜீவ கத ஸூக துக்காதி சர்வம் ஈஸ்வர கதமேவ ஸ்யாத் இதி கட கரகாதி சமஸ்தாநா நுப யுக்த
ம்ருத்ரவ்யம் யதா கார்யாந்தராநந் விதம் ஏவ மேவ ஸூர பஸூ மனுஜாதி-ஜீவத்வ அநுப யுக்தேஸ்வர
சர்வஞ்ஞ ஸத்ய ஸங்கல்பத்வாதி குணாகர இதி சேத் சத்யம் -ச ஏவ ஈஸ்வர ஏகாநாம் சேந கல்யாண குணாகரக
ச ஏவ ச அந்யே நாம் சேந ஹேய குணாகர இத்யுக்தம் த்வயோரம் சயோ ஈஸ்வரத்வா விசேஷாத் —

(கடத்தால் தீர்த்தம் கொண்டு வரலாம்
ம்ருத் பண்டத்தால் முடியாதே
காரிய பதார்த்த குணங்கள் எல்லாம் காரணத்தில் இருக்க வேண்டியது இல்லையே
ஜீவ இன்ப துன்பங்கள் ஈஸ்வரனுக்கு இருக்க வேண்டியது இல்லை
ஆகார பேதம் -பிண்ட ஆகாரம் குட அகாரம்
ப்ரஹ்மம் நிர் அவயவம் -ஸ்வரூபமே பரிமாணம் என்பர் -ஆகவே இந்த த்ருஷ்டாந்தம் இதுக்கு சரி இல்லை என்பர்)

இத்தை விளக்குவோம்
ஈஸ்வரன் தானாகவே தேவ மனித மிருக ஸ்தாவரங்களாக பரிணாம அடைகிறான் என்றும்
அதே ப்ரஹ்மம் ஆத்மாவையும் இருக்கிறது என்றும் சொல்லப் படுகிறது
அப்படி என்றால் ஒரே மண் உருண்டையால் ஆன குடம் வாணை ஆகியவற்றுக்குள்ள நீர் கொணரும் தன்மை அந்த மண் உருண்டைக்கும் காரியமாக வேண்டும்
அதே போல் எல்லா ஜீவ காரியங்களும் அதன் இன்ப துன்பங்களும் ஈஸ்வரனுக்கு ஏற்பட வேண்டும்
ஆனால் ஈஸ்வரன் குறைபாடு அற்றவன் என்று வேதம் சொல்லி இருப்பதால் இக் கருத்து ஒப்புக் கொள்ளத் தக்க தல்ல

த்வாவம் ஸவ்யவஸ்திதவ் இதி சேத் கஸ்தேந லாப ? ஏகஸ்யைவ ஏகாநாம்சேந நித்ய துக்கித்வாத் அம்சாந்தரேண
ஸூகித்வமபி ந ஈஸ்வரத்வாய கல்பதே-யதா தேவதத்தஸ்ய ஏகஸ்மிந் ஹஸ்தே சந்தந பங்காநுலேப-
கேயூர கடக அங்குலீயக அலங்கார ஏதஸ்யை வாந் யஸ்மிந் ஹஸ்தே முத்கராபிகாத காலாநலஜ் வாலாநு பிரவே சஸ்ஸ
தத்வதேவ ஈஸ்வரஸ்ய ஸ்யாத் இதி ப்ரஹ்ம ஞான பஷாதபி பாபீயாநயம் பேதாபேத பஷ அபரிமித துக்கஸ்ய
பாரமார்த்திகத்வாத் ஸம்ஸாரிணாம் அநந்தத்வேந துஸ்தரத்வாச் ச தஸ்மாத் விலக்ஷனோயம் ஜீவாம் ச-
இதி சேத் ஆகதோ சி தர்ஹி மதீயம் பந்தாநம்
ஈஸ்வரஸ்ய ஸ்வரூபேண தாதாம்ய வர்ணநே ஸ்யாத் அயம் தோஷ ஆத்ம சரீர பாவேந து தாதாம்ய ப்ரதிபாதநே
நகஸ்சித் தோஷ -ப்ரத்யுத நிகில புவந நியமநாதி மஹாந் குண கண ப்ரதிபாதிதோபவதி சாமநாதி கரண்யம் ச முக்ய வ்ருத்தம்

இக்குறையை நீக்கும் முகமாய் ப்ரஹ்மம் இரண்டு பகுதிகளாய் -ஜீவனாக ஆவதாகவும் ப்ரஹ்மமாக ஆதலுமாக இருப்பதாகக் கொள்வீர்களாயின் அதனாலும் பயன் ஏதும் இல்லை
அவ்வாறு கொள்வதால் ஒரு பகுதி எப்போதும் துயரத்துடனும் மற்றொரு பகுதி எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் ஒன்றுக்கு ஓன்று கலவாததாயும் உள்ளது என்றதாகும்
இது ஈஸ்வரத் தத்துவத்துக்கு முரணானது
எப்படி தேவ தத்தன் என்று ஒரே மனிதனுக்கு ஒரு கையில் சந்தனக்காப்பு அணிவித்து அணிகள் பூண்டு இருத்தலும்
மற்றொரு கையில் உலக்கையால் இடித்தலும் தீயில் நுழைத்தலும் ஏற்படின் அவன் நிலை எவ்வாறு இருக்குமோ
அது போலவே ஒரு பக்கத்தில் அளவற்ற இன்பம் கிடைத்தாலும் உடலின் மறு பகுதி துன்புறும் போது அந்த இன்பம் நிலை நிற்காமல் போவது போலே ஈஸ்வரனுக்கு நீங்காத துயரமே உணர்வாகும்
இக்கொள்கை சங்கரரின் ப்ரஹ்ம அஞ்ஞானக் கொள்கையினின்றும் மாறுபட்ட பேதாபேதம் -பிரிவு பட்டும் பிரிவு ப்டாதுமாய் இருப்பது என்ற நிலையைக் கொள்வதால் உலகியலாரின் துன்பங்கள் யாவும் அளவற்றதாய் ப்ரஹ்மத்துக்கு ஏற்படும்
அவ்வாறு இன்றி இந்நிலையைத் தவிர்க்க ஈஸ்வரனின் ப்ரஹ்மப் பகுதி வேறு ஜீவப்பகுதி வேறு என்பீராயின் நீங்கள் எங்கள் கொள்கையைக் கைக்கொள்வீர்கள்

இக்கொள்கைகள் ஈச்வரனுடன் ஆத்மா உயிர் ஒன்றிய நிலையில் உள்ளது என்று கொள்வதால் இக்குற்றங்கள் ஏற்படுகின்றன
அஃதன்றி ஈசன் உயிராகவும் ஜீவாத்மா அதன் உடலாகவும் மாறி ஒரு நிலையில் இருக்கின்றன என்ற எங்கள் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்னும் கொள்கையைக் கொண்டால் இக்குற்றங்கள் யாவும் வாராது
மாறாக அண்டங்கள் யாவையும் ஆட்சி செலுத்தும் சிறப்பான கல்யாண குணங்களே வெளிப்படும்
இதனால் ஸாமா நாதி கரணமும் நன்கு பொருந்தும் –

——–

69–அபிச ஏகஸ்ய வஸ்துநோஹி பிந்நாபிந்நத்வம் விருத்தத்வாத் ந சம்பவதீதி யுக்தம்
கடஸ்ய படாதி பிந்நத்வே சதி தஸ்ய தஸ்மிந் ந பவா -அபிந்நத்வே சதி தஸ்ய ச பாவ -இதி ஏகஸ்மிந்தேசே ச ஏகஸ்ய ஹி
பதார்த்தஸ்ய யுகபத ஸத்பாவ-அ சத் பாவச் ச விருத்த ஜாதயாத்மநா பாவ வ்யக்தாத்மநா ச அபாவ இதி சேத்
ஜாதே முண்டேந வ்யக்தயா சா பேத சதி கண்டே முண்டஸ் யாபி ஸத்பாவ பிரசங்க கண்டேந சஜாதேஸ்ய பிந்நத்வே
ஸத்பாவ பிந்நத்வே அசத் பாவ அஸ்வே மஹிஷதஸ்யேவேதி விராதோ துஷ் பரிகார ஏவ

மேலும் ஒரே பொருளில் குறையும் நிறையும் இருத்தலும் -இன்மையும் இருக்கிறது என்பது ஒவ்வாதது –
குடத்தில் துணியின் தொடர்பின்மையால் துணியின்மை என்ற நிலை ஏற்படுகிறது
ஆயின் அவ்வாறில்லை என்று மறுக்கப்படுமானால் குடமும் துணியும் ஒரே பொருள் என்ற கிடைக்கும்
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே பொருளில் இருப்பும் இன்மையும் ஏற்பட முடியாது –
தொகுப்புக்கு ஜாதிக்கு -இருக்கும் குணங்கள் உறுப்புக்கு இல்லை எனில் தொகுத்துப் பார்க்கும் நிலையும் பகுத்துப் பார்க்கும் நிலையும் -ஜாதி வேறு -வ்யக்தி வேறு -என்று அறிந்தால் அன்றி கொம்புள்ளதும் மோழையும் ஓன்று எனவாகும்
கோமனுள்ளத்து எனில் தொகுப்புடன் ஜாதியுடன் -பிரிவற்ற தன்மையும் மோழை எனில் தொகுப்பினின்றும் ஜாதியினின்றும் பிரிவுறுதலும் தோன்றும்
ஆகவே பிரிவின்மையும் பிரிவும் ஒரே இடத்தில் இருக்கலாம் என்பது தவறான பாதமாகும்
குதிரையும் எருமையும் -கால்நடைகள் என்ற தொகுப்பில் இருந்தாலும் -அவைகள் தனித்த குணங்கள் உள்ளவை யாதலால் ஒரே ஜாதியில் பேதாபேதம் உண்டு என்று கொள்வதால் இரண்டும் ஒன்றாக ஆக முடியாது

ஜாதி -ஒரே ஒருபடித்தான அமைப்பும் பண்புகளும் உள்ள பொருள்களின் தொகுப்பு
வியக்தி -மேற்படி தொகுப்பில் உள்ள ஒரு பொருள் -தொகுப்பின் உறுப்பு

————–

70–ஜாத்யாதே வஸ்து சமஸ்தாந தயா வஸ்துந பிரகாரத்வாத் -பிரகாரப் பிரகாரினோச் ச பதார்த்தாந்தரத்வம்
பிரகாரஸ்ய ப்ருதக் சித்ய நர்ஹத்வம்-ப்ருதக் கநு பலம் பஸ் ச தஸ்ய ச சமஸ்தாநஸ்ய ச
அநேக வஸ்துஷு பிரகார தயா அவஸ்திதிஸ் ச இத்யாதி பூர்வமேவ யுக்தம்

ஒருபடித்தான உருவ குண அமைப்புடைய பொருள்களின் தொகுப்பு ஜாதி எனப்படுவதால் பொருளும் ஜாதியும் பிரகார பிரகாரி சம்பந்தம் உடையன எனப்படுவதால் பொருளும் ஜாதியும் பிரிவும் பிரிவற்ற தன்மையும் -பேத அபேத -உடையன என்று கூறுதல் தகாது
ஒரு பொருள் அதன் ஜாதியினின்றும் தனித்துப் பேசப்படுகையில் இந்த வாதம் பயன் அற்றது
இது முன்பே விளப்பட்டுள்ளது

பிரகாரம் -ஒரு பொருளினின்றும் வேறுபட்டதாயும்
அதினின்றும் தனித்து இயங்கும் தன்மை அற்றதாயும்
அப்பொருளை சிறப்பான அடையாகவும் இருத்தல்

பிரகாரி -அப்பண்பை யுடையது

உதாரணம் -நீலத்துணி என்னும் பொருளுக்கு நீலம் பிரகாரம் –

———————-

71–சோயம் இதி புத்தி பிரகார ஐக்யாத் அயமபி தண்டீ இதி புத்தி வத் -அயமேவ சஜாத்யாதி பிரகாரோ வஸ்துநோ பேத
இத் யுச்யதே தத் யோக ஏவ வஸ்துந பிந்நம் இதி வ்யவஹார ஹேது ரித்யர்த்த ச ச வஸ்து நோ பேத வ்யவஹார ஹேது
ஸ்வஸ்ய சம்வேதந வத் யதா சம்வேதநம் வஸ்துநோ வ்யவஹார ஹேது -ஸ்வஸ்ய வ்யவஹார ஹேதுஸ் ச பவதி –
அத ஏவ சந் மாத்ர க்ராஹி ப்ரத்யக்ஷம் பேத க்ராஹி இத்யாதிவாதா நிரஸ்தா ஜாத்யாதி சம்ஸ்தி ததஸ்யைவ
சமஸ்தாந ரூப ஜாத்யாதே பிரதியோக்ய பேஷயா பேத வ்யவஹார ஹேதுத்வாச் ச ஸ்வரூப பரிணாம தோஷஸ் ச
பூர்வமே வோக்த இதி மதாந்தரக் கண்டநாக்ய பூர்வ பாக ஸமாப்த —

அவனே இவன் என்ற அறிவு -பண்பு ஒருபடிப்பட்டு இருத்தலால் இவனும் தடியை யுடையவன் என்று அறிகிறது
இந்த ஜாதிப் பண்பினால் பொருள்களுள் பேதம் ஏற்படுகிறது
இவ்வாறு உலகில் காணப்படும் பொருள்கள் யாவும் ஜாதிவாரியாகப் பிரிக்கப் பட்டு இருப்பது கண் கூடு
ஒரு பொருளை அறிய ஜாதி காரணமாகிறது
ஞானம் தன் இருப்பையும் காட்டி -மற்றப் பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையுடன் காட்ட காரணமாகிறது –
ஒரு பொருளைப் பார்க்கையில் அப்பொருளை மட்டும் அறிவு அறிகிறது
அதன் அமைப்பு பண்புகளை அறிவதில்லை என்ற அத்வைதியின் வாதம் தள்ளப்படுகிறது
ஜாதிப் பிரிவுகள் உள்ள பொருள்களைத் தான் கண் அறிகிறது
பார்க்கப்படும் பொருள்களின் அமைப்பைக் கொண்டே அதின் ஜாதியும் -அது மற்றதின் நின்றும் வேறுபட்டது என்ற அறிவும் ஏற்படுகிறது –
இதனாலேயே ப்ரஹ்மம் தானே பரிணாமம் அடைகிறது என்பது மறுக்கப் பட்டது –

இத்துடன் பிற கொள்கை மறுப்பு என்னும் முதற் பகுதி முற்றுப் பெறுகிறது

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -சதுர்த  பாதம் –

March 6, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார தீப உத்த்ரியதே

——————————

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச–
ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஆநு மாநிகம் ப்ரதானமபி ஜகத் காரணத்வேந மஹத பரமவ்யக்தம் இத்யுச்யத இதி சேத் ந பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி இத்யாதிஷுபாஸநோபாயேஷு வஸீ கார்யத்வாய ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு சரீராக்ய ரூபக விந்யஸ்தஸ்யாத்ராவ்யக்த சப்தேந க்ருஹீதே –இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா இத்யாதிநா ஹி வஸீ கார்யத்வேந ஹி பரா உச்யந்தே ததா சோத்த ரத்ர ஸ்ருதி ரேவ தர்சயதி யச்சேத் வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதி நா –1-

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச
-கடவல்லீஷு இந்த்ரியேப்யஸ் பரா ஹ்யர்தா அர்த்தேப் யஸ்ச பரம் மனஸ் –மநஸஸ் ச பரா புத்திர் புத்தேர் ஆத்மா மஹான் பர மஹதஸ் பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான்ன பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதி -இத்யத்ர
கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் அவ்யக்த சப்தாபிதேயமுத நேதி ஸம்சய -ப்ரதாநம் இதி பூர்வ பக்ஷ -மஹத பரம் இத்யாதி தத் தந்தர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாநாத் புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி பஞ்ச விம்சக புருஷ அதிரிக்த தத்த்வ நிஷேதாச் ச –ராத்தாந்தஸ்து
ந அவ்யக்த ஸப்தேந ப்ரதாநம் இஹ க்ருஹ்யதே -பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச இத்யாதி நா உபாஸநா நிர்வ்ருத்தயே வஸ்யேந்த்ரியத்வா பாதாநாய யே ஆத்ம சரீர புத்தி மந -இந்திரிய விஷயா -ரதி ரத சாரதி ப்ரக்ரஹ ஹய கோசரத்வேந ரூபிதா தேஷு வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதி நோச்யந்தே -தத்ர சேந்த்ரி யாதய ஸ்வ ஸப்தேநைவ க்ருஹ் யந்தே ரதத்வேந ரூபிதம் ஸரீரம் இஹ அவ்யக்த -பரிணாமத்வேந அவ்யக்த ஸப்தேந க்ருஹ்யத இதி நேஹ தத்தந்த்ர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாந கந்த அவ்யக்தாத் புருஷ பர இதி ச ந பஞ்ச விம்சக –அபி து ப்ராப்ய பரமாத் மைவ அந்தர்யாமி தயோபாஸநஸ் யாப் யுபாய பூத இதி ஸ இஹ வஸீ கார்ய காஷ்டாத்வேந புருஷாந்ந பரம் கிஞ்சித் இத் யுக்த
ஸூத்ரார்தஸ்து – ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் -ஆநுமாநிகம் ப்ரதாநம் ஜகத் காரணத்வேந மஹத-பரம் அவ்யக்தம் இத்யாம் நாயதே இதி சேத் தந்ந அவ்யக்த ஸப்தேந சாரீராக்ய ரூபகவிந்யஸ் தஸ்ய க்ருஹீதே பூர்வத் ராத்மாதிஷு ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு ரதத்வேந ரூபி தஸ்ய சரீரஸ்யாத்ராவ்யக்த ஸப்தேந க்ருஹீதேரித் யர்த -அதோ வஸீ கார்யத்வே பரா இஹ உச்யந்தே –தர்சயதி சைநமர்தம் வாக்ய சேஷ இந்திரியாதீநாம் நியமன பிரகாரம் ப்ரதிபாதயன் யச்சேத் வாங்மநஸீ இத்யாதி –1-

111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்–ஸூஷ்மம் -அவ்யக்த மேவ ஸரீராவஸ்தம் கார்யார்ஹாமித் யவ்யக்த சப்தேந சரீரமேவ க்ருஹ்யதே –2-

கதம் அவ்யக்த ஸப் தஸ்ய சரீரம் வாஸ்யம் பவதீத்யா சங்க்யாஹ
111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்
 –து ஸப்தோ அவதாரணே –ஸூஷ்மம் அவ்யக்தம் ஏவ அவஸ்தாந்தரா பன்னம் சரீரம் பவதி தத் அவஸ்தஸ் யைவ கார்யார் ஹாத் வாத் -யதி ரூபக விந்யஸ்தா ஆத்மாதய ஏவ வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதிநா க்ருஹ் யந்தே –2-

யதி ரூபக விந்யஸ்தாமேவ க்ரஹணம் கிமர்த்தம் அவ்யக்தாத் புருஷ பர இத்யத ஆஹ

112–தத் அதீநத்வ அதர்தவத் –புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் உபாஸந நிர் வ்ருத்தயே பவதி –புருஷோ ஹ்யந்தர்யாமீ ஸர்வமாத்மாதிகம் ப்ரேரயந் உபாஸந உபாயத்வேந வஸீ கார்ய காஷ்டா ப்ராப்யஸ் சேதி ஸா காஷ்டா ஸா பரா கதி இத்யுச்யதே –3-

தர்ஹி அவ்யக்தாத் புருஷ பர புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி புருஷ க்ரஹணம் கிமர்த்த மித்யத ஆஹ
112–தத் அதீநத்வ அதர்தவத் 
-அந்தர்யாமி ரூபேண அவஸ்தித புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் –ப்ரயோஜநவத் பவதி –அத உபாஸந நிர் வ்ருத்தவ் வஸீ கார்ய காஷ்டா பரம புருஷ இதி ததர்தம் இஹ ரூபக விந்யஸ்தேஷு பரிக்ருஹ்யமாணேஷு பரஸ்யாபி புருஷஸ்ய க்ரஹணம் –உபாஸன நிர்வ்ருத்த யுபாய காஷ்டா புருஷ ப்ராப்யஸ் சேதி -புருஷாந்ந பரம் கிஞ்சித் சா காஷ்டா ஸா பரா கதி இத்யுக்தம் –பாஷ்ய ப்ரக்ரியயா வா நேய மிதம் ஸூத்ரம் –பரம புருஷ சரீர தயா தத் அதீனத்வாத் பூத ஸூஷ்மம் அவ்யாக்ருத மர்தவதிதி ததிஹாவ்யக்த ஸப்தேந க்ருஹ்யதே நா ப்ரஹ்மாத்மகம் ஸ்வ நிஷ்டம் தந்த்ர ஸித்தம் இதி –3-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச—அத்ராவ்யக்தஸ்ய ஜ்ஜேயத்வா வசநாச் ச ந காபில மவ்யக்தம் –4-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச –யதி தந்த்ர ஸித்த ப்ரக்ரியே ஹாபி ப்ரதோ ததா அவ்யக்தாஸ் யாபி ஜ்ஜேயத்வம் வக்தவ்யம் -வ்யக்த அவ்யக்தஜ்ஞ விஞ்ஞாநாத் இதி ஹி தத் ப்ரக்ரியா -ந ஹ்யவ்யக்த மிஹ ஜ்ஜேயத்வேநோக்தம் அதஸ் சாத்ர ந தந்த்ர ப்ரக்ரியாகந்த –4-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத்யாரப்ய நிசாய்ய தம் இதி வததீதி சேந்ந தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே இத்யாதி நா பிராகிருத ப்ராஜ்ஜோ ஹி நிசாப்ய தம் இதி ஜ்ஜேய உச்யதே –5-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத் யுபக்ரம்ய மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யத இதி ப்ரதாநஸ்ய ஜ்ஜேயத்வம் அந்தர மேவ வததீயம் ஸ்ருதிரிதி சேத் தந்ந அஸப்தம் அஸ்பர்சம் இத்யாதி நா ப்ராஞ்ஞ–பரம புருஷ ஏவ ஹ்யத் ரோச்யதே ஸோ அத்வேந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே –இதி ப்ராஜ்ஞஸ் யைவ ப்ராக்ருதத்வாத் –5-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச–உபாஸ்யோபாஸகாநாம் த்ரயாணாமேவாஸ்மிந் ப்ரகரணே ஜ்ஜேயத்வேந உபந்யாஸ ப்ரஸ்நஸ் ச ந ப்ரதாநாதே –அத்யாத்ம யோகாதிகமேந தேவம் மத்வா இத்யாதி ரூப ந்யாஸ யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே அஸ்தித்யேகே இத்யாதி கஸ்ச ப்ரஸ்ந –6-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச –அஸ்மின் ப்ரகரணே யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே–இத்யாரப்யா ஸமாப்தே பரம புருஷ தத் உபாஸன உபாஸகா நாம் த்ரயாணாம் ஏவைவம் ஜ்ஜே யத்வேந உபந்யாஸ ப்ரஸ் நஸ் ச த்ருஸ்யதே ந ப்ரதானாதேஸ் தாந்த்ரிகஸ்யாபி –அதஸ் ச ந ப்ரதான மிஹ ஜ்ஜேயத்வேந யுக்தம் –6-

116–மஹத் வச் ச – புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்தாத் யதா ந தாந்த்ரிகோ மஹாந் ததா அவ்யக்தமபீதி -—7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

116–மஹத் வச் ச –யதா புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்த ஸாமாநாதி கரண்யாந் மஹச் சப்தேந ந தாந்த்ரிகம் மஹத் தத்த்வம் க்ருஹ்யதே ஏவம் அவ்யக்த சப்தேநாபி ந தாந்த்ரிகம் ப்ரதாநம் —7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
 -அஜா மேகாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் இத்யத்ர ந தந்த்ர ஸித்தா ப்ரக்ருதி காரணத்வேநோக்தா -ஜன்மா பாவ யோக மாத்ரேண ந தஸ்யா ஏவ ப்ரதீதி அர்வாக்பிலஸ் சமஸ இதிவத் ப்ரகரணே விசேஷ காபாவாத் -யதேதம் தச்சிர இதி ஹி சமஸோ விசேஷ்யதே யவ்கிக ஸப்தாத் விசேஷ ப்ரதீதிர் ஹி விசேஷ காபேஷா –8-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
 –ஸ்வேதாஸ் வதரே அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் ஸ ரூபா –அஜோ ஹ்யேகோ ஜூக்ஷமாணோ அநுஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய இத்யத்ர கிமஜா சப்தேந தந்த்ர சித்தா ப்ரக்ருதிரபி தீயதே உத ப்ரஹமாத் மிகேதி ஸம்சய –
தந்த்ர ஸித்தேதி பூர்வ பக்ஷ அஜாமேகா மித்யஸ்யா அகார்யத்வ ப்ரதீதே பஹ்வீநாம் ப்ரஜாநாம் ஸ்வா தந்தர்யேண காரணத்வ ஸ்ரவணாச் ச –ராத்தாந்தஸ்து -ந தந்த்ர ஸித்தாயா ப்ரக்ருதே ரத்ர க்ரஹணம் ஜனன விரஹஸ்ரவண மாத்ரேண தந்த்ர சித்தாயா ப்ராக்ருதே ப்ரதீதி நியமாபாவாத் -ந ஹி யவ்கிகாநாம் ஸப்தாநாம் அர்த ப்ரகரணாதிபிர் விசேஷ்யவ்யவஸ்தாபகைர் விநா விஸேஷே வ்ருத்தி நியம ஸம்பவ ந சாஸ்யாஸ் ஸ்வாதந்தர்யேண ஸ்ருஷ்டி ஹேதுத்வமிஹ ப்ரதீதிம் அபி து ஸ்ருஷ்டி ஹேதுத்வ மாத்ரம் தத் ப்ரஹமாத்மிகாயாஸ் ச ந விருத்தம் -அத்ர து ப்ரஹ்மாத் மிகாய ஏவ ஸாகாந்தர ஸித்தயா ஏதத் ஸ ரூப மந்த்ரோதிதயா ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸைவேதி நிஸ்ஸீயதே –
ஸூத்ரார்தஸ்து –நாயமஜா ஸப்தஸ் தந்த்ர ஸித்த ப்ரதான விஷய –குத –சமஸவத விசேஷாத் யதா அர்வாக்பிலஸ் சமஸ இதி மந்த்ரே சமஸ சாதனத்வ யோகேந ப்ரவ்ருத்தஸ்ய சமஸ சப்தஸ்ய சிரஸி ப்ரவ்ருத்தவ் –யதேதம் தச்சிர ஏஷ ஹ்யர்வாக்பிலஸ் சமஸ இதி வாக்ய சேஷ விஸேஷோ த்ருஸ்யதே ததா அஜாமேகாமித்யஜாஸப்தஸ்ய தந்த்ர ஸித்த ப்ரதாநே வ்ருத்தவ் விஸேஷா பாவான்ந தத் க்ரஹணம் ந்யாய்யம் –8-

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம ப்ரஹ்ம காரணிகா இயமஜா ததா ஹி ப்ரஹ்ம காரணிகயா ஏவ ப்ரதிபாதக மேதத்ஸ ரூப மந்த்ரம் ச தைத்திரீயா அதீயதே –அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் இத்யாரப்ய அதஸ் ஸமுத்ரா கிரயஸ் ச இத்யாதி நா ஸர்வஸ்ய ப்ரஹ்மண உத் பத்த்யா ததாத் மகத்வ ப்ரதி பாதந ஸமயே அஜாமேகம் இதி படந்தி –அதஸ் தத் ப்ரத்யபிஜ் ஞாநாதியம் ப்ரஹ்ம காரணிகேதி நிஸ்ஸீயதே –9-

அஸ்தி து ப்ரஹ்மாத் மிகாயா ஏவ க்ரஹணே விஸேக்ஷ இத்யாஹ

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம யஸ்யா உபக்ரம –காரணம் ஸா ஜ்யோதி ரூப க்ரமா –து சப்தோ அவதாரணே –ப்ரஹ்ம காரணிகைவைஷா –அஜா –ததா ஹ்ய தீயத ஏகே யதா ரூபோ அயம் அஜாயா ப்ரதி பாதகோ மந்த்ர ததா ரூபமேவ மந்த்ரம் ப்ரஹ்மாத் மிகாயா தஸ்யா ப்ரதிபாதக மதீயத ஏகே ஸாகிந –அணோர் அணீயான் மஹதோ மஹீயான் இத்யாதி நா ப்ரஹ்ம ப்ரதிபாத்ய ஸப்த ப்ராணா -ப்ரபவந்தி தஸ்மாத் சப்தார் சிக்ஷஸ் ஸமித ஸப்த ஜிஹ்வா -ஸப்த இமே லோகா பேஷு சரந்தி ப்ராணா குஹாஸ யாந்தி ஹிதாஸ் ஸப்த ஸப்த –அதஸ் ஸ முத்ரா கிர யஸ்ச ஸர்வ இத்யாதி நா ப்ரஹ்மண உத் பன்னத்வேந ப்ரஹ்மாத்ம கதயா ஸர்வ அநுசந்தான விதாந ஸமயே -அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் இதி ப்ரதி பாத்யமாநா ப்ரஹ்மாத்மிகை வேதி தத் ப்ரத்யபிஜ் ஞாநாதி ஹாப்யஜா ப்ரஹ்மாத் மிகை வேதி நிஸ்ஸீயதே –9–

119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத –கல்பநா –ஸ்ருஷ்டி யதா ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இதி -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதியாதி நா ஸ்ருஷ்ட் யுபதேஸாத் அஜாத்வ ப்ரஹ்ம கார்யத்வேயோர விரோதஸ் ச ப்ரலய காலே நாம ரூபே விஹாய அசித் வஸ்த்வபி ஸூஷ்ம ரூபேண ப்ரஹ்ம சரீர தயா திஷ்டதீத் யஜாத்த்வம் ஸ்ருஷ்டி காலே நாம ரூபே பஜமாநா ப்ரக்ருதி ப்ரஹ்ம காரணிகா –யதா ஆதித்யஸ்ய ஸ்ருஷ்டி காலே வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் கார்யத் வஞ்ச தஸ்யைவ ப்ரலய காலே மதவாதி வ்யபதேஸா நர்ஹ -ஸூஷ்ம ரூபேண அவஸ்தாநம கார்யத் வஞ்சமது வித்யாயாம் ப்ரதீயதே அசவ் வா ஆதித்யோ தேவமது நைவோதேதா நாஸ்தமேதா ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இதி தத் வத் —10-இதி சமஸ அதி கரணம் –2-

அஜாத்வம் ஜ்சோதி ரூப க்ரமாத்வம் ச கதமுப பத்யதே இத்யத ஆஹ
119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத
 –கல்பநா –ஸ்ருஷ்டி ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இத்யாதி தர்சநாத் -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதி ஹி ஸ்ருஷ்டிரி ஹோபதிஸ்யதே –ப்ரலய வேலாயா மேஷா ப்ரக்ருதி பரம புருஷ ஆஸ்ரயா காரண அவஸ்தாதி ஸூஷ்மாவயவா ஸக்தி ரூபேண அதிஷ்டதே தத் அவஸ்தாபி பிராயேண அஸ்யா அஜாத்வம் -ஸ்ருஷ்டி வேலாயாம் புநஸ் தச் சரீராத் ப்ரஹ்மண ஸ்தூல அவஸ்தா ஜாயதே தத் அவஸ்தா ஜ்யோதி ரூப க்ரமேதி ந கஸ்ஸித் விரோத மத்வாதிவத் –யதா ஆதித்யஸ் யைகஸ் யைவ கார்ய அவஸ்தாயாம் -அசவ் வா ஆதித்யோ தேவமது இதி வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் தஸ்யைவ –அத தத ஊர்த்வம் உதேத்ய நைவோதேதர நாஸ்த மேதைகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா நாம ரூப ப்ரஹாணேந காரண அவஸ்தாயாம் ஸூஷ்மஸ் யைகஸ் யைவ அவஸ்தா நாம் ந விருத்யதே தத் வத் –10-இதி சமஸ அதி கரணம் –2-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
 –வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா இத்யத்ர பஞ்ச விம்சதி சங்க்யோப சங்க்ரஹாதபி ந தாந்த்ரி காண்யேதாநி யஸ்மின் இதி யச் ஸப்த நிரதிஷ்ட ப்ரஹ்மா தாரதயா தேப்ய ப்ருதக் பாவாத் ஏதேஷாம் தத்த்வாதி ரேகாச் ச யச் ஸப்த நிர் திஷ்டமாகாஸஸ் சேதி த்வயமதிரிக்தம் -ஸம் க்யோப ஸம் க்ரஹாதபி இத்யபி ஸப்தான் நாத்ர பஞ்ச விம்சதி ஸம் க்யா ஸம் க்ரஹ திக் ஸம்க்யே ஸம்ஜ் ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷயோ அயம் பஞ்ச ஜநா இதி –பஞ்ச ஜநா நாம கேசித் தே பஞ்ச பஞ்ச ஜநா இத் யுச்யந்தே –ஸப்த ஸப்தர் க்ஷய இதிவத் –11-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
 –வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித –தமேவ மந்ய ஆத்மாநம் வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இத்யத்ர கிம் சாங்க்யோக்தாநி பஞ்ச விம்சதி தத்தவாநி ப்ரதிபாத்யந்தே உத நேதி ஸம்சய –தாந்யே வேதி பூர்வ பக்ஷ
பஞ்ச பஞ்ச ஐநா இதி ஹி பஞ்ச ஸங்க்யாவிஸிஷ்டா -பஞ்ச ஐநா பஞ்ச விம்சதிஸ் ஸம்பத் யந்தே -கதம் -பஞ்ச ஐநா இதி ஸமாஹார விஷயோ அயம் ஸமாஸ பஞ்ச பூல்ய இதிவத் –பஞ்சபிர் ஜனைரா ரப்தஸ் ஸமூஹ -பஞ்ச ஜன பஞ்ச ஜனீத்யர்த லிங்க வ்யத்யய சாந்தஸ பஞ்ச ஐநா இதி பஹு வஸனாத் ஸமூஹ பஹுத்வம் சாவகம்யதே -தே ச கதீத்ய பேஷாயாம் பஞ்ச பஞ்ச ஐநா இதி பஞ்ச சப்த விசேஷிதா -பஞ்ச ஜன ஸமூஹா இதை பஞ்ச விம்சதிஸ் தத்தவாநி பவந்தி மோஷாதிகாராத் தாந்த்ரி காண் யேவேதி நிஸ்ஸீயந்தே -ஏவம் நிஸ்ஸிதே சதி தமேவ மன்ய ஆத்மாநம் -வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி பஞ்ச விம்சக மாத்மாநம் ப்ரஹ்ம பூதம் வித்வான் அம்ருதோ பவதீதி –ராத்தாந்தஸ்து –யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஐநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித -இதி -யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரத்வாத் ததாதேயாநாம் தத்த்வாநாம் ப்ரஹ்மாத்மகத்வ மவகம்யதே
யச்சப்த நிர் திஷ்டம் ச தமேவ மன்ய ஆத்மாநம் -இதி தச்சப்தேந பராம்ருஸ்ய ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி நிர்தேசாத் ப்ரஹ்மேதி நிஸ்ஸீயதே -அதோ ந தாந்த்ரிக ப்ரசங்க –ஸூத்ரார் தஸ்து –
பஞ்ச பஞ்ச ஐநா இத்யத்ர பஞ்ச விம்சதி ஸங்க்யோப ஸங்க்ரஹா தபி ந தாந்த்ரி காணீமாநி தத்தவாநி யஸ்மின் நிதி யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரதயா தாந்த்ரிகேப்யோ நாநா பாவாத் -ஏஷாம் தத்தவாநாம் ப்ருதக் பாவாதித்யர்த -அதி ரேகாச் ச -தாந்த்ரி கேப்யஸ் தத்வாதி ரேக ப்ரதீ தேஸ் ச யஸ்மிந் நிதி நிர் திஷ்ட மதிரிக்த மஹாஸஸ் ச -ந ஸங்க்யோப ஸங்க்ரஹாத பீத்யபி சப்தேன ஸங்க்யோப ஸங்க்ரஹோ ந ஸம்பவ தீத்யாஹ –ஆகாஸஸ் ய ப்ருதங் நிர்தேசாத் –அத பஞ்ச ஐநா இதி ந ஸமாஹார விஷய அபி து திக் ஸங்க்யே ஸம்ஜ்ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷய பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா கேசித் தே ச பஞ்சை வேதி ஸப்த ஸப்தர்க்ஷய இதிவத் –11-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா ப்ராணாதய -பஞ்ச இந்த்ரியாணீதி ப்ராணஸ்ய பிராணமுத சஷுஷஸ் சஷுஸ் இத்யாதி வாக்ய சேஷா தவ கம்யதே சஷுஷஸ் ஸ்ரோத்ர ஸாஹ சர்யாத் ப்ராணான் ந ஸப்தா வபி ஸ்பார்ஸநா தீந்த்ரிய விஷயவ் –12-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா பஞ்ச பதார்த்த ப்ராணாதய இதி வாக்ய சேஷாதவ கம்யதே –பிராணஸ்ய பிராணமுக சஷுஷஸ் சஷு ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரமந்நஸ் யான்நம் மனஸோ யே மநோ விது இதி ப்ரஹ்மாத்மகா நீந்திரியாணி பஞ்ச பஞ்ச ஜனா இதி நிர் திஷ்டாநி ஜநநாச் ச ஜநா –12-

122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்ய பஞ்ச ந்தே –ஏகேஷாம் ஸாகிநாம் -காண்வா நாம் அந் நஸ் யாந்தம் இத்யஸதி தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரித் யுபக்ரம கதேந ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி ஜ்ஞாயந்தே ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி -ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேத் யுக்த்வா அநந்தரம் பஞ்ச பஞ்ச ஜநா இத் யுக்தே ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி கம்யதே-—13-இதி ஸம் க்யோப ஸங்க்ரஹாதி கரணம் –3-

காண்வ பாடே அந்த வர்ஜிதாநாம் சதுர்ணாம் நிர்தேசாத் பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா நீந்த்ரியாணீதி கதம் ஞாயத இத்யத் ராஹ
122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்யந்தே
 –ஏகேஷாம் -காண்வா நாம் வாக்ய சேஷே அஸத்யன்ன சப்தே வாக்யோபக்ரம கதேந தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரிதி ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி விஞ்ஞாயந்தே –கதம் -ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி ப்ரஹ்மணி ப்ரதீயதே –நிர் திஷ்டே ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேதி கே தே ப்ரகாஸகா இத்ய பேஷாயாம் –பஞ்ச பஞ்ச ஜநா –இத்ய நிர்ஜ் ஞாதா விசேஷா பஞ்ச ஸம்க்யா ஸம்க்யாதா ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி அவகம்யதே –அத யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித இதீந்த்ரி யாணி பூதாநி ச ப்ரஹ்மணி ப்ரதிஷ்டிதா நீதி ந தாந்த்ரி கதத் த்வ கந்த —13-இதி ஸம் க்யோப ஸம் க்ரஹாதி கரணம் –3-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
 –ஆகாஸாதி ஷு கார்ய வர்கேஷு காரணத்வேந ஸர்வத்ர வேதாந்த வாக்யேஷு அஸத்வா இதமக்ர ஆஸீத் தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இத்யாதிஷ்வ நிர்ஜ்ஞாத விஸேஷே ஷு ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் ஸ ஈஷத லோகாந்து ஸ்ருஜை இதி விசேஷ வாசி வாக்ய நிர் திஷ்டஸ்யைவோக்தே ந தாந்த்ரிகா வ்யாக்ருதாதி காரணவாத ப்ரசங்க –14-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
 –ஜகத் காரணவா தீநி வேதாந்த வாக்யாநி கிம் ப்ரதான காரண தாவதைகாந்தாநி -உத ப்ரஹ்ம காரண தாவதைகாந்தாநீதி ஸம்சய –ப்ரதான காரண தாவாதை -காந்தா நீதி பூர்வ பக்ஷ -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் இதி க்வசித் ஸத் பூர்விகா ஸ்ருஷ்டிராம் நாயதே அந்யத்ர அசதேவேதே மக்ர ஆஸீத் -அஸத்வா இதமக்ர ஆஸீத் ததா தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இதி -அவ்யாக்ருதம் ஹி ப்ரதாநம் –அத ப்ரதான காரணதாவாத நிஸ்ஸயாத்ததே காந்தான்யேவ –ராத்தாந்தஸ்து –ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இத் யுபக்ரம்ய தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத இத்யாதிஷு சர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாத நாத்தஸ் யைவ ப்ரஹ்மண காரண அவஸ்தாயாம் நாம ரூப விபாக சம்பந்தி தயா ஸத் பாவா பாவாதஸத வ்யாக்ருதாதி சப்தேந வ்யபதேஸ இதி ப்ரஹ்ம காரண தாவாதை காந்தான்யேவ-ஸூத்ரார்தஸ்து-ஆகாஸாதி பத சிஹ்நிதேஷு தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இத்யாதிஷு ஸர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாதநாத் ஸர்வேஷு ஸ்ருஷ்டி வாக்யேஷு யதா வியபதிஷ்டஸ் யைவ காரணத்வே நோக்தே ப்ரஹ்ம காரண தாவாதை காந்தாநி –யதா வியபதிஷ்டம் –ஸார்வஜ்ஞயாதி -யுக்ததயா அஸ்மாபிர் வ்யபதிஷ்டம் –14-

124-ஸமா கர்ஷாத் –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பூர்வநிர்திஷ்டஸ் யைவ ஸர்வஜ்ஞஸ்ய அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாச் ச ஸ ஏவேதி கம்யதே –தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இதி நிர் திஷ்டஸ் யைவ ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்யஷு இத்யத்ர ஸமா கர்ஷாத் ஏஷ ஏவா வ்யாக்ருத இதி நிஸ்ஸீயதே-அஸத வ்யாக்ருத சப்தவ் ஹி ததா நீம் நாம ரூப விபாகாபாவாதுப பத்யேதே –15–இதி காரணத்வ அதி கரணம் –4-

ததா ஸதி -அஸத்வா இதமக்ர ஆஸீத் இதி கிம் ப்ரவீதீத்யத ஆஹ
124-ஸமா கர்ஷாத்
 –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பஹுபவந ஸங்கல்ப பூர்வகம் ஜகத் ஸ்ருஜதோ ப்ரஹ்மணஸ் ஸர்வஞ்ஞஸ்ய-அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாத் காரண அவஸ்தாயாம் நாம ரூப சம்பந்தி த்வா பாவேந அஸதிதி ப்ரவீதி –ஏவம் தத்தேதம் தர்ஹ்யவ்யாக்ருதம் ஆஸீத் இத்யாதிஷு -ஸ ஏஷ இஹாநு ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்ய சஷு இத்யாதி பூர்வாபரபர்யா லோசநயா தத்ர தத்ர சர்வஞ்ஞஸ்ய ஸமாகர்ஷோ த்ரஷ்டவ்ய —15–இதி காரணத்வ அதி கரணம் –4-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத் 
-ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர கர்ம சப்தஸ்யை தச் சப்த ஸாமாநாதி கரண்யேந க்ரியத இதி வ்யுத்பத்த்யா ஜகத் வாசித்வாத் பரமேவ ப்ரஹ்ம வேதி தவ்யதயோபதிஷ்டம் -16-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத்
 –கௌஷீதகி நாம் ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர வேதி தவ்ய தயோபதிஷ்ட –சாங்க்ய தந்த்ர ஸித்த புருஷ உத பரமாத்வேதி ஸம்சய -புருஷ ஏவ ப்ரக்ருதி வியுக்த இதி பூர்வ பக்ஷ –யஸ்ய வைதத் கர்ம இதி கர்ம சப்தஸ்ய க்ரியத இதி வ்யுத் பத்த்யா ஜகத் வாசித்வாத் க்ருத்ஸ்னம் ஜகத் யஸ்ய கார்யம் ஸ பரமபுருஷ ஏவ வேதிதவ்யதயோப திஷ்டோ பவதீதி –ஸூத்ரமபி வ்யாக்யாதம் –16-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் ––ஏதைராத்ம பிர் புங்க்தே அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி இதி ச ஜீவாதி லிங்காந் ந பர இதி சேத் ஏதத் ப்ரதர்தன வித்யாயா மேவ பரிஹ்ருதம் -பூர்வாபர பர்யா லோசநயா ப்ரஹ்ம பரத்வே நிஸ்ஸிதே ததநு குண தயா நேயமந் யல்லிங்கமிதி –17-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் –ஏவமே வைஷ ப்ரஜ்ஞாத்மைதைராத்ம பிர் புங்க்தே -இத்யாதி போக்த்ருத்வ ரூப ஜீவ லிங்காத் –அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இதி முக்ய ப்ராண லிங்காச் ச நாயம் பரமாத்மேதி சேத் –தஸ்ய பரிஹார ப்ரதர்தன வித்யாயாமேவ வ்யாக்யாத –பூர்வாபர ப்ரகரண பர்யா லோசநாய பரமாத்ம பரமிதம் வாக்யமிதி நிஸ்ஸிதே சத்யன்ய லிங்காநி தத் அநுகுணதயா நேதவ்யாநீத் யர்த –
நநு -தவ் ஹ ஸூப்தம் புருஷ மீயது மாஜக்மது இதி ப்ராண நாம பிரா மந்த்ரணா ஸ்ரவண யஷ்டிகா தோத்தாபநாதிநா சரீர இந்த்ரிய ப்ராணாத்யதிரிக்த -ஜீவாத்ம ஸத்பாவ ப்ரதி பாதந பரமிதம் வாக்யமித்யவகம்யத இத்யாதி உத்தரம் படதி–17-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே-தவ் ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது இத்யாதி நா தேஹாதி ரிக்த ஜீவ ஸத்பாவ ப்ரதிபாதநம் ததரிக்த பரமாத்மா ஸத் பாவஜ்ஞாப நார்தமிதி க்வைஷ ஏதத் பாலகே புருஷோ அஸ யிஷ்ட இதி ப்ரஸ்நாத் அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி ஸதா ஸோம்ய ததா ஸம் பன்னோ பவதி இதி வாக்ய ஸமாநார்தகாத் ப்ரதி வசநாச் சாவகம்யதே–ஏகே வாஜஸநேயிநோ அபி ஏதத் ப்ரதி வசன ரூபம் வாக்யம் ஸ்பஷ்ட மதீயதே ச க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ் தஸ் மிஞ்சேதே இத் யந்தம் –—18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே -து ஸப்தஸ் சங்கா நிவ்ருத்த் யர்த –ஜீவ ஸங்கீர்த்தந மந்யார்தம் –ஜீவாதிரிக்த ப்ரஹ்ம ஸத்பாவ ப்ரதி போதநார்த மிதி ப்ரஸ்ன ப்ரதி வசநாப்யாமவ கம்யதே -ப்ரஸ்னஸ் தாவஜ் ஜீவ ப்ரதி பாதநாநந்தரம் க்வைஷ ஏதத் பாலாகே புருஷோ அசயிஷ்ட இத்யாதிக –ஸூஷுப்த ஜீவ ஆஸ்ரய விஷய தயா பரமாத்ம பர இதி நிஸ்ஸித–ப்ரதி வசநமபி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இத்யாதி கம் பரமாத்ம விஷயமேவ -ஸூப்த புருஷ ஆஸ்ரய தயா ஹி ப்ராண ஸப்த நிர் திஷ்ட பரமாத்மைவ ஸதா ஸோம்ய ததா ஸம்பன்னோ பவதி இத்யாதிப்ய -ஜைமிநி க்ரஹண முக்தஸ்யார் தஸ்ய பூஜ்யத்வாய -அபி சைவ மேகே -ஏகே வாஜஸநேயிந இதமேவ பாலாக்ய ஜாத ஸத்ரு ஸம் வாத கதம் ப்ரஸ்ன ப்ரதி வசன ரூபம் வாக்யம் பரமாத்ம விஷயம் ஸ்பஷ்ட மதீயதே க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ்தஸ் மிஞ்சேத இத்யே ததந்தம் —18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 -ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதியாதி நோபதிஷ்ட பரமாத்மா அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந இத்யாரப்ய –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஜ்ஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் இத்யாதி யேநேதம் ஸர்வம் விஜாநாதி இத்யந்தஸ்ய க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் –19-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 –ப்ருஹ தாரண்யகே மைத்ரேயீ ப்ராஹ்மணே ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே
ஸ்ரோ தவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸி தவ்ய இத்யாதவ் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட புருஷ தந்த்ர ஸித்த உத பரமாத்மேதி ஸம்சய –தந்த்ர ஸித்த பஞ்ச விம்சக ஏவேதி பூர்வ பக்ஷ பதி ஜாயா புத்ரவித்த மித்ர பஸ்வாதி ப்ரிய சம்பந்த்யாத்மா ந பரமாத்மா பவிதுமர்ஹாதி –ஸ ஏவ ஹி ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே –ராத்தாந்தஸ்து –ந பத்யாதீ நாம் காமாய பத்யாதய ப்ரியா பவந்தி ஆத்மநஸ்து காமாய இத்யுக்த்தவா -ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி நிர் திஷ்ட ஆத்மா ஜீவாதிரிக்தஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -யத் ஸங்கல்பாயத்தம் பத்யாதீ நாம் ஸ்வ சம்பந்திந ப்ரதி ப்ரியத்வம் ஸ ஹி ஸத்ய ஸங்கல்ப பரமாத்மா -ஆத்மஜ் ஞாநேந ஸர்வஞ்ஞாநாதயோ அபி வஹ்யமாணா பரமாத்மந்யேவ சம்பவந்தி
ஸூத்ரார்தஸ்து –வாக்யஸ்ய க்ருத்ஸ் நஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட ஆத்மா பரமாத்மைவ –அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -இதம் ஸர்வம் யதயமாத்மா -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய நிஸ்வஸிதமேதத்யத் ருக்வேத -யேநேதம் ஸர்வ விஜாநாதி தம் கேந விஜா நீயாத் –இதி ஹி க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யந்வயோ த்ருஸ்யதே -19-

அஸ்மின் ப்ரகரணே ப்ரகாரணாந்தர ச ஜீவ வாசி சப்தேந பரமாத்மநோ அபிதாநே தத் ஸாமாநாதி கரண்யே ச காரணம் மதாந்தரேணாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
 –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே இத்யாதி நா பரமாத்ம ஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய தத் கார்ய தயா தஸ்மாதநதி ரிக்தத்வம் ஞாபயிதும் ஜீவ சப்தேந பரமாத்மாபி தாந மிதி யாஸ்ம ரத்ய -மதம் -20-

ஏதேப்யோ பூதேப்யஸ் சமுத்தாய தாந்யே வாநுவிநஸ்ய தீதி ஜீவ லிங்கஸ்ய மதாந்தரேண நிர்வாஹமாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
 –ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய பரமாத்ம கார்ய தயா பரமாத்மநோ அநந்யோ ஜீவ இதி ஜீவ சப்தேந பரமாத்மநோ அபி தாநம் இத்யாஸ்ம ரத்ய -மதம் -20-

130-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –உத் க்ரமிஷ்யத முஃதஸியை பரமாத்மா ஸ்வரூப 

130-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யத இதி சரீராத் உத் க்ரமிஷ்யத அஸ்ய ஜீவஸ்ய பரமாத்ம பாவாஜ் ஜீவ சப்தேந பரமாத்மநோ அபிதானம் இத் ஒவ்டு லோமி ஆசார்யோ மேநே –21-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தர இத்யாதிநா ஜீவாத்மநி பரமாத்மந ஆத்ம தயா அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ மதம் ஸூத்ர காரஸ் ஸ்வீக்ருதவாநிதி மதத்யவ முபயந் யஸ்ய தத் விரோத்யேததபிதாநாதன்யஸ்யாநபிதா நாச்ச நிஸ்ஸீயதே – –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் இத்யாதி பிர் ஜீவாத்மன் யந்தராத்ம தயா பரமாத்மநோ அவஸ்திதே -ஜீவாத்ம சப்தஸ்ய பரமாத்மநி பர்யவஸாநாஜ் ஜீவாத்ம சப்தேந பரமாத்மந அபிதாந மிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ ஸூத்ர காராபிமத மித்யவ கம்யதே த்ரயாணாம் அந்யோன்ய விரோதாத் இத பரம வசநாச் ச –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச 
-ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஜகத் உபாதாந காரணம் அபி பரம் ப்ரஹ்ம ந நிமித்த மாத்ரம் ஸ்தப்தோ அஸ்யுத தமாதேஸம ப்ராஷ்ய யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இதி யேநா தேஷ்ட்ரா நிமித்த பூதேந விஜ்ஞ்ஞாதேந சேதன அசேதநாத் மகம் க்ருத்ஸ்நம் ஜகத் விஜ்ஞாதம் பவதீதி ஆதேஷ்ட்ரு விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞா ததுபபாதந ரூபம்ருத் கார்ய த்ருஷ்டாந்தாநு பரோதாத் ஆதிஸ்யதே அநேநே த்யாதேஸ இத்யாதேச சப்தே நாதேஷ்டாபி தீயதே –ஆதேஸ ப்ரஸாஸநம் ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ இத்யாதி ஸ்ருதே –23-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச -ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் 
–பரம் ப்ரஹ்ம கிம் ஜகதோ நிமித்த காரண மாத்ரம் உதோ பாதான காரணமபீதி ஸம்சய –நிமித்த காரண மாத்ரமிதி பூர்வ பக்ஷ -ம்ருத் குலாலாதவ் நிமித்த உபாதாநயோ பேத தர்ச =நாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி பிர் பேத ப்ரதி பாதநாத் ப்ரஹ்மணோ அவிகாரத்வ ஸ்ருதி விரோதாச் ச –ராத்தாந்தஸ்து –யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி ப்ரஹ்ம விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதி ஞானான் யதாநுப பத்த்யா யதா ஸோம்யைகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண் மயம் இதி ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தேந ததுப பாத நாச்ச ஜகத் உபாதான காரணம் அபி ப்ரஹ்மைவேதி விஞ்ஞாயதே –ப்ரமாணாந்தரா வசித ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம் யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணஸ் சர்வஞ்ஞஸ்ய ஸர்வ சக்தே கார்ய காரண உபயா அவஸ்தாயாம் அபி ஸ்வ சரீர பூத சித் அசித் பிரகார தயா அவஸ்திதஸ்யைகஸ்யைவ நிமித்தத்வம் உபாதாநத்வம் சாவிருத்தம்
சரீர பூதா சித் வஸ்து கதோ விகார இதி கார்ய அவஸ்தா வஸ்திதஸ்யாபி சரீரண பரமாத்மந அவி காரித்வம் ஸித்த மேவ -சித் அசித் வஸ்து சரீரஸ்ய ப்ரஹ்மண ஏவோ பாதா நத்வே அபி ப்ரஹ்மண்ய புருஷார்த்த விகாராஸ்பர்ஸ ப்ரதர்சனாய ஹி அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் தஸ்மிம்ஸ் சான்யோ மாயயா சந்நிருத்த இதி வ்யபதேஸ ப்ரதிஞ்ஞாத்ருஷ்டாந்தாநு ப ரோதாத் உபா தாநம் ச ப்ரஹ்மைவேதி ஸூத்ரார்த –23-

133-அபித்யோபதேஸாச் ச –ததைஷத பஹுஸ்யாம் பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி நிமித்த பூதஸ்யேக்ஷிது விசித்ர சித் அசித் ரூபேண ஜகதாகாரே ணாத்மநோ பஹு பவந சங்கல்போப தேஸாச் ச உபாதாநம பீதி விஜ்ஞாயதே –24-

133-அபித்யோபதேஸாச் ச –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி ஸ்ரஷ்டுர் ப்ரஹ்மணஸ் ஸ்வஸ்யைவ ஜகதா காரேண பஹு பவந சிந்தநோபதேஸாச் ச ஜகத் உபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி நிஸ்ஸீயதே –24-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயன் இதி யுபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி ஸ்வ சப்தேந உபயாம்நா நாச் ச -25-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –கிம்ஸ் வித்வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் இத்யாதி நா ஜகத் உபாதாந நிமித்தாதவ் ப்ருஷ்டே ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் இத் யுபாதாநம் நிமித்தம் சோபயம் ப்ரஹ்மைவேதி ஹி ஸாஷாதாம் நாயதே -அதஸ் சோபயம் ப்ரஹ்ம -25-

135-ஆத்ம க்ருதே–ஸோ அகாமயத இதி நிமித்த பூதஸ்ய ஸ்வ ஸ்யைவ ஜகதாகாரேண க்ருதே ததாத்மாநம் ஸ்வயம குருத இத்யுபதிஸ்யமாநாயா பரம புருஷோ ஜகந்நிமித்தம் உபாதாநம் சேதி விஜ்ஞாயதே –26-

135-ஆத்ம க்ருதே -ததாத்மாநம் ஸ்வயமகுருத இதி ஸ்ரஷ்டுராத்மந ஏவ ஜகதாகாரேண க்ருதிருபதிஸ்யதே -அதஸ் சோபயம் ப்ரஹ்மைவ –நாம ரூப பாவாப்யா மேகஸ்ய கர்ம கர்த்ரு பாவோ ந விருத்த –26-

பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத்ய ஸத்ய ஸங்கல்பத் வாதே தத் விபரீத அநந்த அபுருஷார்த்த ஆஸ்ரய ஜகதாகாரேண ஆத்ம க்ருதேஸ் ச அவிரோத கதமித்யா சங்க்யாஹ
136-பரிணாமாத் -அத்ரோபதிஸ்ய மாநாத் பரிணாமாத் ததவிரோத ஏவ 
-அவிபக்த நாம ரூபாதி ஸூஷ்ம சிதசித் வஸ்து சரீரக காரண அவஸ்த பரம புருஷஸ் ஸ்வய மேவ ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயே இது விபக்த நாம ரூப சிதசித வஸ்து சரீரகோ பவேயம் இதி சங்கல்ப இதம் ஸர்வ மஸ்ருஜத யதிதம் கிம்ச இதி ஸ்வ சரீர பூத மதி ஸூஷ்மாம் சித் அசித் வஸ்து ஸ்வஸ்மாத விபஜ்ய தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் இதி ஸ்வஸ்மாத விபக்தே சிதசித வஸ்துநி ஸ்வய மேவாத்மதயா அநு ப்ரவிஸ்ய ஸச்ச த்யச்சா பவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச அநிலயநம் ச விஞ்ஞானம் ச அவிஞ்ஞானம் ஸத்யம் சாந்ருதம் ச ஸத்ய மபவத் இதி ஹி ஸ்வஸ்ய பஹு பவந ரூப பரிணாம உபதிஸ்யதே -அதோ ந கஸ்ஸித் விரோத -அவிபாகா வஸ்தாயாமபி ஜீவஸ் தத் கர்மா ச ஸூஷ்ம ரூபேண திஷ்டநீதி வஹ்யதி ந கர்மா விபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யுபலப்யதே ச இதி –27-

யத் யாத்மாந மேவ ப்ரஹ்ம ஜகதாகாரம் கரோதி தர்ஹி ப்ரஹ்மணோ அபஹத பாப்மத்வாதிகமநவதிகாதிஸய –ஆனந்த ஸ்வரூபத்வம் ஸர்வஞ்ஞத்வம் இத்யாதி ஸர்வம் விருத்யதே அஞ்ஞத்வ அஸூகித்வ கர்ம வஸ்யத்வாதி விபரீத ரூபத்வாத் ஜகத இத்யத உத்தரம் படதி

136-பரிணாமாத் –அஜ்ஞ ப்ரஹ்ம விவர்தவாதே -ஹி தத் பவத்யேவ -அஜ்ஞாநஸ்ய தத் கார்ய ரூபா நந்தா புருஷார் தஸ்ய ச வேதாந்த ஜன்யஜ் ஞான நிவர்த்யஸ்ய ப்ரஹ்மண்யேவா ந்வயாத் ததா ஸாஸ்த்ரஸ்ய ப்ராந்த ஜல்பிதத் வாபாதாச் ச -அவி பக்தா நாம ரூப ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கஸ்ய ப்ரஹ்மணோ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரத்வேந பரிணாமோ ஹி வேதாந்தேஷுபதிஸ் யதே -தத்தேதம் தர்ஹ்யயாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இத்யேவ மாதிபி -அபுருஷார்த்தாஸ் ச விகாராஸ் சரீர பூத சித் அசித் வஸ்து கதா –காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச ஆத்மபூதம் ப்ரஹ்ம அபஹத பாப்மத்வாதி குணகமேவ -ஸ்தூல ஸூஷ்ம அவஸ்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மத்வம் ய ப்ருதிவ்யாம் திஷ்டன் யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாரப்ய யஸ்யாவ்யக்தம் சரீரம் யஸ்யாஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யுஸ் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ இத்யேவமாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் அதஸ் ஸர்வம் அநவத்யம் –27-

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் இத்யாதி ஷு யோநிஸ்ஸகீயதே அத்ஸ் ஸ்சோபாதாநமபி –-28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் பரி பஸ்யந்தி தீரா கர்தாரம் ஈஸம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் இத்யாதிஷு ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய பரம புருஷ யோநித்வேந கீயதே -ஹி ஸப்தோ ஹேதவ் யஸ்மாத் யோநிரிதி கீயதே தஸ்மாச் சோபாதாநமபி ப்ரஹ்ம –யோநி ஸப்தஸ் சோபாதாந காரண பர்யய –28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
–ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நா ஏததந்தேந ந்யாயேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா த்விருக்திரத்யாய பரிஸமாப்தித்யோதநாய -29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
 –யதோ வா இமாநி –இத்யாதிஷுதா ஹ்ருதேஷு வாக்யேஷு ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நோக்த ந்யாய கலாபேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா –பதாப்யாஸோ அத்யாய –பரி ஸமாப்தித்யோத நார்த –29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம் –

March 6, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார தீப உத்த்ரியதே

——————————

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர –த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம்-ஆதார பரம புருஷ தமே வைகம் ஜாநதாத்மாநம் இத்யாத்ம ஸப்தாத் -நிருபாதிக ஆத்மத்வம் ஹி பரம புருஷஸ்யைவ –அம்ருதஸ்யைக்ஷ ஸேதுரிதி ததேவ த்ரடயதி –பஹுதா ஜாயமாந இதி பரத்வம் ந நிவாரயதி அஜாயமாநோ பஹுதா விஜாயதே இதி கர்ம பிரஜாயமாநஸ்யைவ ஆஸ்ரித வாத்சல்யாத் சந்ததோ ஜனனம் தஸ்ய ஹி ஸ்ரூயதே –1-1-3-

1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம் கிம் ஜீவ உத பரமாத்வேதி ஸம்சய ஜீவ இதி பூர்வ பக்ஷ மந ப்ரப்ருதீ ந்த்ரியாதார்த்தவ ஸ்ருதே உத்தரத்ர நாடீ சம்பந்தாத் ஜாயமாநத்வ ஸ்ருதேஸ் ச –ராத்தாந்தஸ்து -நிருபாதிக ஆத்மத்வ அம்ருத சேது த்வயோ -பரமாத்ம தர்மயோ ஸ்ரவணாத் பரமாத்மை வாயம் –ஸர்வம் நியந்தருதயா ஆப்நோ தீதி ஹ்யாத்மா –அம்ருதஸ்ய ப்ராபக தயா சேதுஸ் ச ஸ ஏவ நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வஞ்ச — ஸந்ததம் ஸிராபிஸ் து லம் பத்யாகோஸ ஸந்நிபம் அஜாயமாநோ பஹுதா விஜாயதே இத்யாதி ஷு ஸர்வ சமாஸ்ரயணீயத்வாய அஜஹத் ஸ்வ பாவஸ் யைவ பரமாத்ம நோ அபி த்ருஸ்யதே இதி ஸூத்ரார் தஸ்து –த்யு ப்ருதிவ்யாதீநாமாயதநம் பரமாத்மா ஸ்வ ஸப்தாத் –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச புண்ய பாப விநிர் முக்தாநாம் ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பர –2-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச பந்தான் முக்தஸ்ய ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பரமாத்மா –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –யதா ந பிரதாநமதச் ஸப்தாத் –ததா ந ப்ராண ப்ருத பீத் யர்த –3-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –ஆநு மாநம் –அநுமாந கம்யம் ப்ரதாநம் யதா தத் வாசி ஸப்தா பாவாத் ததிஹ ந க்ருஹ்யதே –ததா ப்ராண ப்ருத பீத் யர்த –அதஸ் சாயம் பரமாத்மா –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ப்ரத்யகாத்மநோ பேதேந வ்யபதேசாச் சாயம் பர –4-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ஜீவாத் பேதேந வ்யபதேசாச் சாயம் பரமாத்மா –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி பரஸ்ய ஹீதம் ப்ரகரணம் –5-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி நா பரமாத்மந ஏவ ப்ரக்ருதத்வாத் -5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி ஜீவஸ்ய கர்மபலாதந மபிதாய -அநஸ்நதோ தீப்யமா நஸ்ய ஸ்தித்யபிதா நாச்சாயம் பரமாத்மா- 6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1–

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி கர்மபலமநஸ்நத -பரமாத்மநோ தீப்ய மாந தயா ஸ்திதே -ஜீவஸ்ய கர்ம பரவசதயா தத் பலாதநாச்ச பரமாத்மநோ ஜீவாத் பேதாவகமாத் அம்ருத ஸேதுர்த் யுப்வாத்யாயதநம் ந ஜீவ -அத்ருஸ்யத்வாதி குணக இத்யநேந பரமாத்மத்வே ஸ்தாபிதே அபி நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வ லிங்காத் யா அவாந்தர ப்ரகரண விச்சேதா சங்கா ஸா நிராக்ருதா -த்யுப் வாத்யாயதநமிதி வைஸ்வா நரஸ்ய த்ரை லோக்ய சரீரத்வாதிநா பரமாத்மத்வ நிர்ணய இதி மத்யே வைஸ்வாநர வித்யா நிரூபிதா —6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
 –ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம் பூமைவ ஸூகம் இத் யுக்த்வா பூம்நஸ் ஸ்வரூபமாஹ யத்ர நான்யத் பஸ்யதி நாந்யஸ் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூமா இதி –யஸ்மின் ஸூகே அநு பூயமாநே தத் வ்யதிரிக்தம் கிமபி ஸூகத்வேந ந பஸ்யதி ந ஸ்ருணோதி ந விஜாநாதி ஸ பூமேத் யுச்யதே அத யாத்ரான் யத் பஸ்யதி அந்யஸ் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி ததல்பம் இதி வசநாத் –ததா ச மஹா பாரதே
திவ்யாநி காம சாராணி விமாநாநி சபாஸ் ததா
ஆ க்ரீடா விவிதா ராஜன் பத்மின்யஸ் சாம லோதகா
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந –இதி
ஏஷ து வா அதி வததி

ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதிவததி இதி ப்ரஸ்து தஞ்சாதி வாதித்வம் ஏவமேவ ஸமஞ்ஜஸம் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்ய புருஷார்தாதிக்ய வாதித்வம் -ததல்பம் இத்யல்ப ப்ரதியோகித்வேந பூமா இத்யுக்த பிரகார வைபுல்யாஸ்ரய ஸூக ரூப வாஸீ –அயம் பூம ஸப்த வ்யபதிஷ்ட பரமாத்மா ஸம் ப்ரஸாதாதத் யுபதேஸாத் ஸம் ப்ரஸாத -பிரத்யகாத்மா அத யா ஏஷ ஸம் ப்ரஸாத இத்யாதி ஸ்ருதே -ஏஷ து வா அதி வததி யஸ் சத்யேந இத்யாதி நா ப்ராண ஸப்த நிர் திஷ்டாத் ப்ரத்யகாத்மந ஊர்த்வமர் தாந்தரத்வேநாஸ்யோபதேஸாத் –7-

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத் 
–சாந்தோக்யே -யத்ர நான்யத் பஸ்யேதி நானயச் ஸ்ருணோதி நான்யத் விஜாநாதி ஸ பூமா இத்யத்ர பூம ஸப்த நிர்திஷ்டோ நிரதிசய வை புல்ய விஸிஷ்ட ஸூக ஸ்வரூப கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாத்மேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ –தரதி ஸோகமாத்மவித் இதி ப்ரக்ரம்ய நாமாதி பரம் பர யோத்தரோத்தர பூயஸ்த்வேந ப்ரஸ்ன பிரதி வசனாப்யாம் ப்ரவ்ருத்தஸ் யாத்ம யுபதேஸஸ்ய ப்ராண ஸப்த நிர் திஷ்டே ப்ரத்யகாத்மநி ஸமாப்த்தி தர்சநாத் ப்ரத்யகாத்மந ஏவ பூமஸம் ஸப்த நமிதி நிஸ்ஸீயதே –ராத்தாந்தஸ்து -யத்யபி ப்ரஸ்ன பிரதிவசநாப்யாம் உத்தர உத்தர பூயஸ்த்தவ வசனம் ப்ராணே பர்யவஸ்திதம் ததாபி பிராணாவேதிநோ அதிவாதித்தவம் உக்த்வா -ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதி வததி இதி து சப்தேன உபாஸக பேதம் ப்ரதிபாத்ய -தஸ்ய ஸத்ய உபாஸகஸ்ய பூர்வஸ்மாதாதிக்ய உபதேசாத் ஸத்ய சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ பூம விசிஷ்டம் இதி –ஸூத்ரார்தஸ்து -பூம குண விசிஷ்டம் பரம் ப்ரஹ்ம ஏவ ஸம் ப்ரசாதாதத் யுபதேசாத் –ஸம் ப்ரஸாத –ப்ரத்யகாத்மா ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத்ஸமுத்தாய பரம் ஜ்யோதி ரூப ஸம் பத்ய இத்யாதி உபநிஷத் ப்ரஸித்தே –ஏஷ து வா அதி வததி இதி ப்ரத்யகாத்மநோ அதிகதய உபதேசாத் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்யாதிக்ய வாதித்வம் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ ––ஸ பகவ கஸ்மின் ப்ரதிஷ்டித ஸ்வே மஹிம்நி இத்யாதா வுபதிஷ்டாநாம் ஸ்வ மஹிம ப்ரதிஷ்டித்தடவ -ஸர்வ காரணத்வ ஸர்வாத்மகத்வாதி தர்மாணாம் பரஸ்மின் நேவ உப பத்தேஸ் ச பூமா பர –8-இதி பூமாதி கரணம் –2-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ –ஸ்வ மஹிம ப்ரதிஷ்டிதத்வ -ஸர்வாத்மத்வஸர்வ உத்பத்தி ஹேதுத்வா தீநாம் பூம்நி ஸ்ரூய மாணாநாம் தர்மாணாம் பரஸ்மின் நேவ ப்ராஹ்மண் யுப பத்தேஸ் ச பூமா பரம் ப்ரஹ்ம ஏவ -8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–ஏதத் வை ததஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு இத்யாதிநா அபிஹித மக்ஷரம் பரம் ப்ரஹ்ம அக்ஷரம் அம்பராந்த த்ருதே யதூரத்வம் கார்கி திவ இத்யாரப்ய ஸர்வ விகாராதாரதயா நிர் திஷ்ட ஆகாஸ கஸ்மின் நோதஸ் ச ப்ரோதஸ் ச இதி ப்ருஷ்டே ஏதத்வை ததஷரம் இதி நிரதிஷ்டஸ் யாஷரஸ்ய வாயு மதம் பராந்த த்ருத ஸர்வ விகாராதாரோ ஹ்யய மஹாஸ வாயுமதம் பராந்த காரணம் ப்ரதாநம் தத் தாரகம் பரம் ப்ரஹ்ம –9-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
 –வாஜிநாம் கார்கி ப்ரஸ்நே ஸ ஹோவாசைதத்வை தத் அக்ஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்த்ய ஸ்தூல மநண் வஹ்ரஸ்வம தீர்கமலோஹிதமஸ் நேஹ மச்சாயம் இத்யத்ர அக்ஷர ஸப்த நிர் திஷ்டம் ப்ரதாநம் -ஜீவோ வா உத பரமாத்மா இதி ஸம்சய ப்ரதாநம் ஜீவோ வா ந பரமாத்வேதி பூர்வ பக்ஷ –கஸ்மின் து கல்வாகாச ஓதஸ் ச கல் வாகாச ஓதஸ் ச ப்ரோதஸ் ச இத் யுக்தே ஆகாசாதார தயோச்ய மாந மக்ஷரம் ப்ரதாநம் ஜீவோ வா ப்ரதா நஸ்ய விகாரா தாரத்வாஜ் ஜீவஸ்யா சித்வஸ்த்வாதாரத்வாத் ந பரமாத்வேதி –ராத்தாந்தஸ்து -யதூர்த்வம் கார்கி திவ இத்யாரப்ய காலத்ரய வர்திந க்ருத்ஸ்னஸ் யாதார தயா நிர் திஷ்ட ஆகாஸோ அவ்யாக்ருதமேவ ந வாயுமாநாகாஸ –தத பஸ்ஸாத் கஸ்மின்நு கல் வாகாச ஓதஸ்ஸ ப்ரோதஸ்ஸ இதி ப்ருஷ்டே ததா தராத யோஸ்யமாநமேதத் அக்ஷரம் ந ப்ரதாநம் பவிதும் அர்ஹாதி –நாபி ஜீவ -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ர மஸவ் வித்ருதவ் திஷ்டத இத்யாரப்ய ப்ரஸாஸ நாத் சர்வாதாரத்வ ஸ்ருதே –ஸூத் ரார் தஸ்து -ஏதத் வை ததஷரம் கார்கி இதி நிர்திஷ்டம் அக்ஷரம் பரமாத்மா அம்பராந்தத்ருதே –அம்பரம் வாயுமாநாகாஸ அம்பராந்த அம்பர பார பூதம் அம்பர காரண மிதி யாவத் காரணாபத்தி ரேவ ஹி கார்யஸ் யாந்த ஸ சாம்பராந்த அவ்யாக்ருதம் ப்ரதாநம் தஸ்ய த்ருதே –தாரணாத் –அவ்யாக்ருத்ஸயாபி த்ருதே ரக்ஷரம் பரமாத்மைவேத் யர்த –9-

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி –இத்யாதிநா -ப்ரக்ருஷ்டாஜ்ஞயா க்ரியமாணா ஸ்ரூயதே அத இதமக்ஷரம் ப்ரத்யமாத்மா ச ந பவதீத் யர்த –10-

ஏவம் தர்ஹி ஜீவோ பவிதும் அர்ஹாதி தஸ்ய ப்ரதான த்ருத் யுப பத்தேர் இத்யா ஸங்க்யாஹா

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் இதி ப்ரஸாஸ நாச்ச் ரூயதே -ப்ரஸாஸநம் -ப்ரக்ருஷ்டம் ஸாஸனம்அப்ரதிஹதாஜ்ஞா –ந சா ப்ரதி ஹதாஜ்ஞயா க்ருத்ஸ் நஸ்ய சித் அசித் ஆத்மகஸ்ய ஜகதோ த்ருதிர் ஜீவே உப பத்யதே –அதோ ந ஜீவ –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா பரமாத்மந அந்யத்வம் ஹ்யஸ்யா ஷரஸ்ய வ்யாவர்தயதி வாக்ய சேஷ -அதஸ் ச பர ஏவ —11-அக்ஷர அதிகரணம் –3-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அஸ்ய அக்ஷரஸ்ய பரம புருஷாதன் யத்வம் வ்யாவர்தயதி வாக்ய சேஷ –அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா ஸர்வைரத்ருஷ்ட மேததக்ஷரம் ஸர்வஸ்ய த்ரஸ்ட்ரித்யாதி ப்ரதான ஜீவா ஸம்பாவ நீயார்த ப்ரதிபாதநாத் —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
 –ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய-ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர -உத்தரத்ர தமோங்காரேணைவாயநே நாந்வேதி இதி வித்வான் யத் தச் சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி பரம புருஷ அசாதாரண தர்ம வ்யபதேஸாத் யத் தத் கவயோ வேத யந்தே இதி ததீயஸ் தாநஸ்ய ஸூரிபிர் த்ருஸ்யத்வ வ்யபதேஸாச் ச 12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
 –ஆதர்வணிகாநாம் ஸத்ய காம ப்ரஸ்நே ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய –ஸ ஸாம பிருந்நீயதே ப்ரஹ்ம லோகம் ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர த்யாதீ ஷதி கர்மதயா வ்யபதிஷ்ட பரம புருஷ கிம் ஹிரண்ய கர்ப –உத பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம இதி ஸம்சய –ஹிரண்ய கர்ப இதி பூர்வ பக்ஷ -பூர்வத்ரைக மாத்ரம் ப்ரணவம் உபாஸீநஸ்ய மனுஷ்ய லோக ப்ராப்திம் பலம் த்விமாத்ரம் உபாஸீநஸ் யாந்தரிக்ஷ லோக ப்ராப்திம் ச பலமபிதாயா நந்தரம் ய புந ரேதம் த்ரி மாத்ரேண இதி த்ரி மாத்ரம் ப்ரணவம் உபாஸீ நஸ்ய பலத்வே நோச்யமாந ப்ரஹ்ம லோகஸ்த புருஷே க்ஷண கர்ம பூதஸ் சதுர்முக ஏவேதி விஞ்ஞாயதே மனுஷ்ய லோகாந்தரிக்ஷ லோக ஸாஹசர்யாத் ப்ரஹ்ம லோகோ அபி ஷேத்ரஞ்ஞ லோக இதை நிஸ்ஸயாத்
ராத்தாந்தஸ்து –பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷதே இத் ஈஷதி கர்மதயா நிர் திஷ்ட புருஷ விஷயேஸ் லோகே –தமோங்காரேணை வாய நேநாத்வேதி வித்வான் யத் தச்சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி நிருபாதிக சாந்தத்வ அம்ருதத்வாதி வ்யபதேசாத் பரமாத்மை வாயமிதி நிஸ்ஸீயதே -ஏவம் பரமாத்மத்வே நிஸ்ஸிதே ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தத் ஸ்தானமேவ அபிததாதி இத்யவகம்யதே
தத் விஷய தயோதாஹ்ருதே ச ஸ்லோகே யத் தத் கவயோ வேதயந்த -தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய –இத்யேவமாதிபிஸ் ஸூரிபிர் த்ருஸ்யத்வ வசனம் ததேவ த்ரபயதி -ஸூத்ரார் தஸ்து –ஈஷதி கர்ம ஸ பரமாத்மா த்யாய தீஷத்யோ ரேக விஷயத்வேந த்யாயதி கர்மா அபி ஸ ஏவேத் யர்த -வ்யபதேசாத் -தத் விஷய கதயா சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரம் சேதி பரமாத்ம தர்மாணாம் வ்யபதேசாத் —12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய 
–-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர தஹராகாஸ நிர் திஷ்ட பரமாத்மா –உத்தரேப்ய வாக்யகதேப்ய தத் அசாதாரண தர்மேப்ய உத்தரத்ர தஹர ஆகாஸஸ்ய ஸர்வாதார தயா -அதி மஹத் த்வமபிதாய ஏதத் ஸத்யம் ப்ரஹ்மாக்யம் புரம் இதி நிர் திஸ்ய தஸ்மிந் ப்ரஹமாக்யே தஹர ஆகாஸே காமாஸ் ஸமாஹிதா இத் யுக்தே கோ அயம் தஹராகாஸ கே ச காமா –இத்யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப இத்யந்தேந தஹாராகாஸ ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத்வாதய தத் விசேஷண பூத குணா இதி ஹி ஜ்ஞாபயதி
தஹரோ அஸ்மின் நந்தராகாஸஸ் தஸ்மிந் யதந்த ததன்வேஷ்டவ்யம் இத்யத்ர தஹாராகாஸ தத் அந்தர் வர்தி ச யத் ததுபயம் அன்வேஷ்டவ்யமித் யுக்த மிதி விஞ்ஞாயதே அத ய இஹாத்மாநமநுவித்ய வ்ரஜந் த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் இதி ஹி வ்யஜ்யதே –13-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய –
-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர ஹ்ருதய புண்டரீக மத்ய வர்தீ தஹர ஆகாஸஸ் ஸ்ரூயமாண கிம் பூதகாச -உத ஜீவ அத பரமாத் வேதி ஸம்சய –ப்ரதமம் தாவத் பூதாகாஸ இதி யுக்தம் ஆஸ்ரயிதும் இதி பூர்வ பக்ஷ
ஆகாஸ சப்தஸ்ய பூதாகாஸோ ப்ரஸித்தி ப்ராசுர்யாத் ஆகாஸ அந்தர்வர்த்திநோ அந்யஸ்ய அன்வேஷ்ட வ்யதா ப்ரதீதேஸ் ச –ராத்தாந்தஸ்து –கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ்டவ்யம் இதி சோதிதே யாவான் வா அயமாகாச இத்யாராப்ய ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் இத் யந்தேந தஹர ஆகாஸஸ் யாதி மஹத்த்வ ஸர்வ ஆஸ்ரயத்வ அஜரத்வ சத்யத்வாத்ய பி தாய அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா இத்யாகாஸ அந்தர் வர்திநோ அன்வேஷ்டவ்யா காமா இதி ப்ரதிபாத்ய கோ அயம் தஹர ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட -கே தத் ஆஸ்ரயா காமா இத் யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய ஸங்கல்ப இத் யந்தேந ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத் வாதயஸ்தத் விசேஷண பூதா இதி ப்ரதிபாத யத் வாக்யம் அபஹத பாப்மத்வாதி விஸிஷ்ட பரமாத்மாநமாஹ –உபக்ரமே ச அன்வேஷ்ட வ்யதயா ப்ரதிஜ்ஞாத ஆகாஸ ஆத்மா ஏதத் விசேஷண பூதா அபஹத பாப்மத் வாதய காமா இதி வாக்யம் ஞாபயத் அத ய இஹாத்மாந மநுவித்ய வ்ரஜந்த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி இத் யுப ஸம்ஹரதி -அதோ அயம் தஹர ஆகாஸ அபஹத பாப்மத் வாதி விஸிஷ்ட பரமாத் மேதி நிஸ்ஸீயதே ந பூத ஆகாசாதிரிதி -ஏவம் தர்ஹ் யஸ்மிந் வாக்யே அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இதி ப்ரத்யகாத்ம ப்ரதீதே -தஸ்ய சோத்தரத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணகத்வாவகமாத் ப்ரத்யகாத் மைவ தஹராகாச இதி பூர்வ பஷீ மன்யதே –ராத்தாந்தீ து ப்ரத்யகாத்மா கர்ம பரவசதயா ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் த்யாத் யவஸ்தாபி திரோஹித அபஹத பாப்மத்வாதிக பரமாத்மநம் உப ஸம்பந்த தத் ப்ரஸாதாதாவிரர்பூத குணக பிரஜாபதி வாக்யே ப்ரதிபாதிந தஹர ஆகாஸஸ்த்வ திரோஹித நிருபாதிக அபஹத பாப்மத்வாதிக பிரத்யாகாத்மன்ய ஸம்பாவ நீய ஜகத் விதரண ஸமஸ்த சித் அசித் வஸ்து நியமநாத் யநந்த குணக பிரதிபன்ன இதி நாயம் ப்ரத்யகாத்மா தஹராகாஸ அபி து பரமாத்மை வேதி மன்யதே —
ஸூத்ரார்தஸ்து -தஹராகாச பரம் ப்ரஹ்ம உத்தரேப்ய –உத்தர வாக்யக தேப்ய அபஹத பாப்மத் வாதி பரமாத்மா அசாதாரண தர்மேப்யோ ஹேதுப்ய –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –ஏவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி இத்யஹரஹஸ் ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் தஹர ஆகாஸோ பரி கத்தி வர்தனம் தஹர ஆகாஸ ஸமாநாதி கரணோ ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சதஹர ஆகாஸ பரம் ப்ரஹ்மேதி ஞாபயதி -ததா ஹ்யன்யத்ர ஸர்வாஸாம் பரமாத்மோ பரிவர்த மாநத்வம் த்ருஷ்டம் தஸ்மிந் லோகாஸ்ஸ்ரிதாஸ் ஸர்வே ததஷரே பரமே ப்ரஜா இத்யாதவ் -ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சஏஷ ப்ரஹ்ம லோக இத்யாதவ் –அந்யத்ர தர்சன அபாவியாபி இதமேவ பர்யாப்த மஸ்ய பரமாத்மத்வே லிங்கம் யத் தஹராகாஸோபரி ஸர்வஸ்ய வர்தமாநத்வம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச –14

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –அஸ்மின் தஹாராகாஸே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் அஹரஹர்யா கதிஸ் ஸ்ரூயதே யஸ் ச தஹராகாஸாவமர்ஸ ருபை தச் ஸப்த ஸாமாநாதி கரண தயா ப்ரயுக்தோ ப்ரஹ்ம லோக ஸப்த தாப்யாம் தஹராகாச பரம் ப்ரஹ்மேத் யவகம்யதே -தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஞ்ஞா உபர்யுபரி சஞ்ச ரந்தோ ந விந்தே யுரேவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்த்ய ந்ருதேன ஹி ப்ரத்யூடா இதி ததா ஹி த்ருஷ்டம் –ததா ஹ்யன்யத்ர பரஸ்மின் ப்ராஹ்மண் யேவம் ரூபம் கமநம் த்ருஷ்டும் ஏவமேவ கலு சோம்யேமாசர்வா ப்ரஜாஸ் ஸதி சம்பத்ய ந விதுஸ் ஸதி ஸம்பத்ஸ் யாமஹ இதி –ததா ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச பரஸ்மின் ப்ரஹ்மண் யேவ த்ருஷ்ட –ஏஷ ப்ரஹ்ம லோகஸ் ஸம்ராடிதி ஹோவாச இதி லிங்கம் ச –மா பூதன்யத்ர தர்சனம் அஸ்மின் ப்ரகரணே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் ஸ்ரூயமாண மஹரஹர் கமநம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தஹராகாச ஸஸ்ய பரமாத்மத்வே பர்யாப்தம் லிங்கம் -ச ஸப்தோ அவதாரணே -ஏததேவ பர்யாப்தமித் யர்த –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அத ய ஆத்மா ஸ சேதுர்வித்ருதி இதி ஜகத் த்ருதே -பரமாத்மநோ ம்ஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேஸ் சாயம் பர ஸா ஹி பரமாத்ம மஹிமா ஏஷ ஸேதுர் விதரண இத்யாதி ஸ்ருதே –15-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அஸ்ய

த்ருத்யாக் யஸ்ய பரமாத்மநோ மஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேரயம் பரமாத்மா –த்ருதி -ஜகத் விதரணம் பரமாத்மநோ மஹிமேத் யன்யத்ராவகம்யதே –ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதிரேஷ பூத பால ஏஷ ஸேதுர் விதரண ஏஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –ஸா ச அஸ்மிந்தஹராகாஸ உப லப்யதே –அத் ய ஆத்மா ஸ ஸேதுர்வி த்ருதி ரேஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –15-

81-ப்ரசித்தேஸ் ச--ஆகாஸ சப்தஸ்ய யதேஷ ஆகாஸ ஆனந்த இதிபரமாத்மன்யபி ப்ரஸித்தேஸ் சாயம் பர ஸத்ய சங்கல்பத்வாதி குண ப்ருந்தோப ப்ரும்ஹிதா ப்ரஸித்தி பூதாகாஸ பிரஸித்தேர் பலீய ஸீத்யர்த –16-

81-ப்ரசித்தேஸ் ச –கோ ஹ்யேவாந் யாத்க ப்ராண்யாத் யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸாதேவ ஸமுத்பத்யந்தே இத்யாதிஷ் வாகாஸ சப்தஸ்ய பரஸ்மின் ப்ரஹ்மணி ப்ரஸித்தே ஆகாஸ ஸப்த ஏவ பரமாத்ம தர்ம விசேஷிதோ பூதகாச சங்காம் நிவர்த்தய தீத் யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ இதீ தரஸ்ய ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ப்ரக்ருதாகாஸஸ் இதி சேத் நைதத் உக்த குணாநாம் தத்ரா சம்பவாத் –17-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –பரமாத்மந

இதர ஜீவ அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இத ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ஏவ தஹாராகாச இதி சேத் தன்ன பூர்வோக்தாநாம் குணாநாம் தஸ்மிந் ந சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தரத்ர ய ஆத்மா அபஹத பாப்மா இதி ஜீவஸ்ய அபஹத பாப்மத்வாதி ஸ்ரவணாந் நா ஸம்பவ –ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் யாத்ய வஸ்தாஸூ வர்தமாநத்வாத் ஸ ஹி ஜீவ இதி சேத் நைதத் ஆவீர் பூத ஸ்வரூபஸ்து –கர்ம ஆரப்த சரீர சம்பந்தித் வேந திரோஹித அபஹத பாப்மத் வாதிக பஸ்ஸாத் பரஞ்ஜ்யோதி ரூப ஸம்பத் யாவிர் பூத ஸ்வரூப தத்ர அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவ ப்ரதிபாதித தஹாராகாஸஸ்து அதி ரோஹித கல்யாண குண சாகர இதி நாயம் ஜீவ –18-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தராத் –பிரஜாபதி வாக்யாத் அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவோ அவகம்யத இதி சேத் தன்ன ஜாகரி தாத்ய வஸ்தாபிர நாதி கால ப்ரவ்ருத்தாபி புண்ய பாப ரூப கர்ம மூலாபி திரோஹித குணக பர ப்ரஹ்மோபாஸ ஜெனிததுப ஸம்பத்த்யா ஆவீர் பூதஸ்வ ரூபோ அசவ் ஜீவஸ் தத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணக கீர்தித தஹராகாசஸ் த்வதி ரோஹித ஸ்வரூப அபஹத பாப் மத்வாதி குணக இத்யஸ்மிந்தஹராகாஸே ந ஜீவ சங்கா –18-

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-ஜீவாத்மநோ தஹராகாஸோப ஸம்பத்த்யா ஸ்வரூப ஆவீர் பாவா பாத்தன ரூபம் ஆஹாத்ம்ய ப்ரதிபாத நார்த அத்ர ஜீவ பராமர்ச –19-

தஹர வாக்யே ஜீவ பரா மர்ஸ கிமர்தமிதி சேத் தத்ராஹ

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-பரம் ஜ்யோதிஸ் ஸ்வரூப தஹராகாஸோப ஸம்பத்த்யா அஸ்ய ஜீவஸ்யா ந்ருத திரோஹித ஸ்வரூபஸ்ய ஸ்வரூப ஆவிபாவோ பவதீதி தஹராகாசஸ்ய ஜகத் விதரணாதிவஜ் ஜீவ ஸ்வரூப ஆவீர் பாவாபாதந ரூப ஸம்பத் விசேஷ ப்ரதி பாதநார்தோ ஜீவ பராமர்ஸ –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –அல்ப ஸ்தாநத்வ ஸ்வரூப அல்பத்வ ஸ்ருதேர் நாயம் பரமாத்மேதி சேத் -தத்தரோத்தர முக்தம் நிசாய்யத்வா தேவம் வ்யோமவச்ச இதி –20-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –தஹரோ அஸ்மின் நித்யல்ப பரிமாண ஸ்ருதி ராராக்ரப மிதஸ்ய ஜீவஸ்யைவோப பத்யதே ந து ஸர்வஜ் மாஜ் ஜ்யாயஸோ ப்ரஹ்மண இதி சேத் தத்ர யதுத்தரம் வக்த்வயம் தத் பூர்வமேவோக்தம் -நிசாய்யாத் வாதித்யநே ந –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச –அநு க்ருதி –தஸ்ய தஹராகாஸஸ்ய பரஞ்ஜ்யோதிஷ அநு கரண ஸ்ரவணாச் ச ஜீவஸ்ய ந ஜீவோ தஹராகாஸ ஸ தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடன் ரமமாண இத்யாதி ததுப ஸம்பத்த்யா ஸ்வச் சாந்த வ்ருத்தி ரூப தத் அநு காரஸ் ஸ்ரூயதே –21-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச -அநு க்ருதி –அநு கார தஸ்ய பரமாத்மநோ அநு காராத்தி ஜீவஸ்ய ஆவீர் பூத ஸ்வரூபஸ்ய அபஹத பாப்மத்வாதி குணகத்வம் அதோ அநு கர்து ஜீவாத் அநு கார்ய பர ப்ரஹ்ம பூதோ தஹாராகாச அர்த்தான்தர பூத ஏவ –தத் அநு காரஸ் ச தத் ஸாம்யாபத்திஸ் ஸ்ரூயதே யதா யஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் கார்தாரமீசம் புருஷன் ப்ரஹ்ம யோநிம் –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி இதி –21-

87-அபி ஸ்மர்யதே –இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

87-அபி ஸ்மர்யதே –ஸ்மர்யதே ச தத் உபாஸநாத் தத் ஸாம்யா பத்தி ரூபாநுக்ருதிர் ஜீவஸ்ய இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித 
– அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய இத்யாதவ் அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி சர்வேஸ்வரத்வ வாசி ஸப்தா தேவ –23-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித –
-கட வல்லீஷ்வாம் நாயதே —

அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே -ஏதத் வைதத் -உத்தரத்ர ச அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக -ததோ பரிஷ்டாத் அங்குஷ்ட மாத்ர புருஷோ அந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹ்ருதயே சந்நிவிஷ்ட இதி அத்ராங்குஷ்ட ப்ரமிதோ ஜீவாத்மா உத பரமாத்மேதி ஸம்சய -ஜீவாத் மேதி பூர்வ பக்ஷ –அந்யத்ர ஸ்வீக்ருத ஸ்பஷ்ட ஜீவ பாவே புருஷே அங்குஷ்ட ப்ரமிதத்வஸ்ருதே -ப்ராணாதி பஸ் ஸஞ்சரதி ஸ்வ கர்மபிர் அங்குஷ்ட மாத்ரோ ரவிதுல்ய ரூப இதி -ராத்தாந்தஸ்து –தத்ர ஸ்வ கர்ம பிர் இதி ஜீவ பாவ நிஸ்ஸயவதத்ராபி ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பூத பவ்யேஸித்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி -ஸூத்ரார்தஸ்து –ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி பூத பவ்யேஸி த்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி
ஸூத்ரார்தஸ்து ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பரமாத்ம வாசி ஸப்தாத்

89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் –அநவச் சிந்நஸ் யாபி உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வா பேஷ மங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸந ஸம்பாவ நயா தத் விக்ஷயத்வாச் ச சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

கதமநவச் சின்னஸ்ய பரமாத்மநோ அங்குஷ்ட ப்ரமிதத்வ மித்யா சங்க்யாஹ
89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் 
–உபாஸ நார்த்தம் உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வாத் உபாஸக ஹ்ருதயஸ்ய அங்குஷ்ட மாத்ரத்வாத் ததபேஷயேதம் அங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸ கத்வ ஸம்பாவநயா மனுஷ்யாநதி க்ருத்ய ப்ரவ்ருத்தத் வாச்சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்–
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத்
 –தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ் வப்யஸ்தி அர்த்தித்வ சாமர்த்யா சம்பவாத் –இதி பகவான் பாதராயண மேந –சம்பவஸ் ச பூர்வோபார்ஜிதஜ் ஞாநாவிஸ்மரணாத் மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹாதி மத்தயா ஸ்துதி தர்சநாத் ததுப பத்தயே தத் சம்பவே தேஷாமேவ ப்ராமாண்யேந விக்ரஹாதி மத்த்வாச் ச –25-

1-3-7-தேவாதி கரணம்
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத் –மனுஷ்யாதிகாரம்

ப்ரஹ்ம உபாஸந ஸாஸ்த்ரமித்யுக்தம் –தத் ப்ரசங்கேந தேவாதீ நாமபி ப்ரஹ்ம வித்யாயாம் அதிகாரோ அஸ்தி நவேதி சிந்த்யதே ந தேவாதீநாம் அதிகார அஸ்தீதி பூர்வ பக்ஷ –பரி நிஷ் பன்னே ப்ரஹ்மணி சப்தஸ்ய ப்ராமாண்ய சம்பவே அபி தேவாதீநாம் விக்ரஹாதி மத்த்வே ப்ரமாணா பவாத் மந்த்ரார்த்தவாதாநாம் -அபி விதி சேஷ தயா விக்ரஹாதி ஸத் பாவபரத்வா பாவாத் விக்ரஹவந் நிர் வர்த்யாஹரஹரநுஷ்டீயமாந விவேகாதி சாதன ஸப்தக ஸம்ஸ் க்ருதமநோ நிஷ் பாத்யோபாஸந நிர் வ்ருத்தவ் தேஷாம் ஸாமர்த்யா பாவாத்
ராத்தாந்தஸ்து –ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகரணேஷு நாம ரூப வ்யாகரண ஸ்ருத்யைவ தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வம் ஸித்யதி -தேவாதீ நாம் தேஹ இந்த்ரியாதி கரணமேவ ஹி நாம ரூப வ்யாகரணம் மந்த்ரார்த்த வாத யோஸ் ச ததுபலப்தே –தயோர் அநுஷ்டேய-ப்ரகாஸந ஸ்துதி பரத்வே அபி ததுப பத்தயே தத் ஸத் பாவே பிரமாணத்வாத் தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வ ஸித்தி -நஹி விக்ரஹாதி மத்தயா ஸ்துதி ப்ரகாஸநம் ச ததபாவே சம்பவதி —
அதஸ் ஸாமர்த்ய ஸம்பவாதஸ் த்யேவாதிகார –ஸூத்ரார்தஸ்து ததுபர்யபி தேப்ய –மனுஷ்யேப்ய உபரி வர்த்தமாநாநாம் தேவாதீநாமப்யதிகாரோ அஸ்தி
யத்வா தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ்வபி சம்பவதி தேஷாம் அபி ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாசன ப்ரகாரஜ் ஞாந தத் அர்த்தித்வதது பாதாந ஸாமர்த்ய சம்பவாத் –பூர்வோபார் ஜிதஜ் ஞாநா விஸ்மரணாத் ஞான ஸம்பவ தாபத்ரய அபிஹதி பூர்வக ப்ரஹ்ம குணஜ் ஞாநாச் சார்தித்வ ஸம்பவ –ஸ்ருஷ்டி வாக்ய மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹவத்த்வாதி தர்சநாத் ஸாமர்த்ய ஸம்பவஸ் சேதி பகவான் பாதராயணோ மன்யதே –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –விக்ரஹாதி மத்த்வே ஏகஸ்யாநே கத்ர யுகபத்ஸாந் நித்யா யோகாத் கர்மணி விரோத இதி சேந்ந ஸக்திமத்ஸூ ஸுபரி ப்ரப்ருதி ஷு யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –கர்மணி யாகாதவ் விக்ரஹ வத்த்வே ஸதி ஏகஸ்ய யுகபதநேகயாகேஷு ஸந்நிதான அநுப பத்தேர் விரோத ப்ரஸஜ்யதே இதி சேத் தன்ன ஸக்தி மதாம் ஸுபரி ப்ரப்ருதீநாம் யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –வைதிகே து ஸப்தே விரோத ப்ரஸக்தி தேஹஸ்ய சாவயத்வேநோத் மத்த்வாத் இந்த்ராதி தேவோத் பத்தே ப்ராக் விநாஸா தூர்த்வம் ச வைதிகேந்த்ராதி ஸப்தாநாம் அர்த ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாத் இதி சேந்ந –அத வைதிகா தேவேந்த்ராதி ஸப்தாதிந்த்ராத் யர்தஸ்ருஷ்டே -நஹீந்த்ராதி ஸப்தா வ்யக்தி வாஸகா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி வாசிந –பூர்வஸ் மின்னிந்த்ராதவ் விநஷ்டே வைதிகேந்த்ராதி ஸப்தாதேவ ப்ரஹ்மா பூர்வேந்த்ராத் யாக்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரம பராமிந்த்ராதிகம் குலாலாதிரிவ கடாதிகம் ஸ்ருஜதீதி ந கஸ்ஸித் விரோத -குத இதமவகம்யதே -ஸ்ருதி வேதேந ரூபே வ்யகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிமஸ்ருஜத இத்யாதி ஸ்ம்ருதிரபி
ஸர்வேஷாம் து ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்-வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே –இத்யாதி –27-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –விரோத இதி வர்ததே –மா பூத் கர்மணி விரோத -ஸப்தே து வைதிகே விரோத ப்ரஸஜ்யதே விக்ரஹத்த்வே ஹி தேஷாம் ஸாவ யவத்வே நோத்பத்தி விநாஸ யோகா துத்பத்தே ப்ராக் விநாஸா தூரத்வம் ச வைதிகாநாம் இந்த்ராதி ஸப்தாமாமர்தா ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாதிதி சேத் தன்ன அத ப்ரபவாத் அத வைதிகா தேவ ஸப்தாத் இந்த்ராதே ப்ரபவான் -பூர்வ பூர்வேந்திராதவ் விநஷ்டே வைதிகாதிந்ராத்யாக்ருதி -விசேஷ வாசிந ஸப்தா திந்ராத்யாக்ருதிவிசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரமபரமிந்த்ராதிகம் ஸ்ருஜிதி பிரஜாபதிரிதி வைதிகஸ்ய சப்தஸ்ய ந கச்சித் விரோத –
ந ஹி தேவதைத்தாதி ஸப்தவத் இந்த்ராதி ஸப்தா வ்யக்தி விசேஷ சங்கேத பூர்வகா ப்ரவ்ருத்தா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி விசேஷ வாசிந இதி தேஷாமபி நித்ய ஏவ வாஸ்ய வாசக பாவ வைதிகாதிந்த்ராதி சப்தாத் ததர்த்த விசேஷம் ஸ்ம்ருத்வா குலாலாதிரிவ கடாதிகம் பிரஜாபதிஸ் ஸ்ருஜதீதி குதோ அவகம் யதே -ப்ரத்யக்ஷ அனுமானாப் யாம் -ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமித்யர்த்த -ஸ்ருதிஸ் தாவத் வேதேந ரூபே வ்யாகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி –ததா ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிம ஸ்ருஜத இத்யாதிகா
ஸ்ம்ருதிரபி ஸர்வேஷாம் ச ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதுக் ப்ருதுக் வேத சப்தேப்ய ஏதாதவ் ப்ருதுக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே -நாம ரூபம் ச பூதாநாம் க்ருத்யா நாம் ச ப்ரபஞ்ச நம் -வேத சப்தேப்ய ஏவாதவ் தேவாதீ நாம் சகார ச இத்யாதிகா –29-

93-அத ஏவ ச நித்யத்வம் –யதோ ப்ரஹ்மா வைதிகாச் சப்தா தர்தாந் ஸ்ம்ருத்வா ஸ்ருஜதி அத ஏவ மந்த்ர க்ருதோ வ்ருணீதே விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதி இதி விச்வாமித்ராதீநாம் மந்த்ராதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டதி –அநதீத மந்த்ராதி தர்சந ஸக்தான் பூர்வ விச்வாமித்ராதீந் தத் தத் வைதிக சப்தை ஸ்ம்ருத்வா ததாகாராநபராந் தத் தச் சக்தி யுக்தான் ஸ்ருஜதி ஹி ப்ரஹ்மா நைமித்திக பிரளயானந்தரம்-தே சாநதீத்யைவ தாநேவ மந்த்ராதீந கலிதாந் படந்தி –அதஸ் தேஷாம் மந்த்ராதி க்ருத்த்வம் வேத நித்யத்வம் ச ஸ்திதம் –28-

93-அத ஏவ ச நித்யத்வம் –யத ப்ரஜாபதி வைதிகாச் சப்தா தர்தாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸர்வம் ஸ்ருஜதி -அதஸ் ச வஸிஷ்ட விஸ்வா மித்ராதீ நாம் மந்த்ர ஸூக்தாதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மயஸ்ய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டத்யேவ–ப்ரஜாபதிர் ஹி நைமித்திக பிரளயாந்தரம் மந்த்ர க்ருதோ வ்ருணீதே -விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதீத்யாதி வேத ஸப்தேப்யோ அநதீத மந்த்ராதி தர்சன சக்த வசிஷ்டாத்ய க்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா வசிஷ்டத்வாதி பத ப்ராப்தே அனுஷ்டித கர்ம விசேஷ அம்ஸா ஸ் அநு ஸ்ம்ருத்ய தத் ஆகார விசேஷான் தான் வஸிஷ்டாதீன் ஸ்ருஜதி -தே சாநதீத்யைவ வேதைகதேஸ பூத மந்த்ராதீன் ஸ்வரதோ வர்ணதஸ் சாஸ்கலிதான் படந்தி -ததேஷாம் மந்த்ராதி க்ருத்வே அபி வேத நித்யத்வம் உப பத்யதே –28-

ப்ராக்ருத பிரலயே து சதுர் முகே வேதாக்ய சப்தே ச விநஷ்டே கதம் வேதஸ்ய நித்யத்வமித்யத ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச -அத ஏவ ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாத் பிராகிருத பிரலயா வ்ருத்தாவபி ந விரோத -ஆதி கர்தா பரம புருஷோ ஹி பூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஜகத் ஸ்ம்ருத்வா ததாகாரமேவ ஜகத் ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வாநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருத்ய சதுர் முகாய ததாதீதி ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமாதி கர்தா பூர்வ வத் ஸ்ருஜதீத் யவகம்யதே-ஸ்ருதி ஸ்தாவத் ஸூர்யா சந்த்ர மஸவ் தாத்தா யதா பூர்வமகல் பயத் இத்யாதிகா யோ ப்ரஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச -ஸ்ம்ருதிரபி
யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே
த்ருஸ்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதி ஷு -இதி -வேதஸ்ய நித்யத்வம் ச பூர்வ பூர்வோச் சாரண க்ரம விஸிஷ்டஸ் யைவ ஸர்வதோச சார்ய மாணத்வம் ––29-இதி தேவதாதி கரணம் –7-

ப்ரஜாபதி ப்ரப்ருதிஷுஸர்வேஷு தத்த்வேஷ்வ வ்யாக்ருத பர் யந்தேஷு அவ்யாக்ருத பரிணாம ரூபேஷு சப்தமயேஷி வேதேஷு ச விநஷ்டேஷ்வ வ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தவ் கதம் வேதஸ்ய நித்யத்வ மித்யத்ர ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச –அவ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தா வபி ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாதேவ ந கஸ்ஸித் விரோத ஆதி சர்கே அபி ஹி பரம புருஷ பூர்வ ஸம்ஸ்தாநம் ஜகத் ஸ்மரன் ததைவ ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வ அநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருதயா ஹிரண்ய கர்ப்பாய ததாதீதி -பூர்வ ஸம்ஸ்தான மேவ ஜகத் ஸ்ருஜதீதி கதமவகம்யதே -தர்சநாத் ஸ்ம்ருதேஸ் ச –தர்சனம் ஸ்ருதி அஹோ ராத்ராணி விததத் விஸ்வஸ்ய மிஷதோ வஸீ ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வ மகல்பயத் திவம் ச ப்ருத்வீம் சாந்தரிஷமதோ ஸூவரிதி யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச ஸ்ம்ருதிராபை யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே –த்ருஸ்யந்தே தாநி தாந்யேவ ததா பாவா யுகாதிஷு -இதி ஏததேவ வேதஸ்ய நித்யத்வம் யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேணோச் சார்யத்வம் பரம புருஷோ அபி ஸ்வரூப ஸ்வா ராதன தத் பலயாதாத்ம்யாவ போதி வேதம் ஸ்வ ஸ்வரூபவந் நித்யமேவ பூர்வ அநு பூர்வீ விசிஷ்டம் ஸ்ம்ருத்வா ஆவிஷ்கரோதி -அதோ தேவாதீநாம் ப்ரஹ்ம வித்யாதி காரே ந கஸ்சித் விரோத –29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–மது வித்யாதி ஷு வஸ்வாதி தேவாநாமேவ உபாஸ்யதவாதத் ப்ராப்யத்வாச் ச தத்ர வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதேந உபாஸ்யத்வா சம்பவாத் -வஸூநாம் ஸதாம் வஸூ த்வம் ப்ராப்தமிதி ப்ராப்யத்வா ஸம்ப வாச்ச தத்ர வஸ்வாதீ நாமநதிகாரம் ஜைமிநிர்மேநே –30-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
 –சாந்தோக்ய அசவ் வா ஆதித்யோ தேவ மது இத் யுபக்ரம்ய –தத் யத் பிரதமம் அம்ருதம் தத்வஸவ உப ஜீவந்தி இத்யுக்த்வா ஸ ய ஏததேவம் அம்ருதம் வேத வஸூநாமேவைகோ பூத்வா அக்னி நைவ முகேநைத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யதி இத்யாதிநா ருக் யஜுஸ் ஸாமாதி வேதோதித கர்ம ஸம்பாத்ய ரஸாதாரதயா மதுமயஸ் யாதித் யஸ்ய பூர்வ தக்ஷிண பஸ்ஸிமோத்தரோர்த்வாம் ஸாந் வஸூ ருத்யாதித்ய மருத் ஸாத்யநாம்நாம் தேவ கணாநாம் போக்யத்வேந அபிதாய தைர்புஜ்யமாநாகாரேணாதித்யாம் ஸாநு பாஸ்யாநு பதிஸ்ய தாநேவாதித்யாம் ஸாம்ஸ் ததா பூதான் ப்ராப்யஅநு பதி ஸதி –ஏவமாதிஷு பாஸ நேஷுவஸ்வாதீநாம் உபாஸ்யாந்தர் கதத்வேந கர்ம கர்த்ரு பாவ விரோதாத் ப்ராப்யஸ்ய வஸூத் வாதே ப்ராப்தத் வாச்ச –ராத்தாந்தஸ்து –ப்ரஹ்மண ஏவ ததவஸ் தஸ்யோ பாஸ்யாதீநாம் ஸதாம் ஸ்வா வஸ்த ப்ரஹ்ம அநு ஸந்தாநா விரோதாத் கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்தத்வா விரோதாஸ் ச வஸ்வாதீநாம் அதிகார சம்பவதீதி –ஸூத்ரார் தஸ்து மது வித்யாதிஷு வஸ் வா தீநாம் அநதிகாரம் ஜைமிநிர் மன்யதே -அசம்பவாத் -வஸ்வாதீநாம் ஏவ உபாஸ்யாநாம் உபாஸகத்வ அசம்பவாத் வஸூத் வாதே ப்ராப்தத்வாதேவ ப்ராப்யத்வா சம்பவாச் ச –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணிதேவாநாம் ஸாதாரண்யேந ப்ராப்தத்வே அபி அதிகார மாத்ர பாவ வசநாத் அந்யத்ர வஸ்வாத் யுபாஸநே அநதிகாரோ ந்யாய ஸித்தோ கம்யதே–31-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணி தேவ மனுஷ்ய யோரதிகார ஸாதாரண்யே ஸத்யபி ஜ்யோதிஷாம் ஜ்யோதி —பரம் ப்ரஹ்ம தேவா உபாஸதே இதி விசேஷ வசனம் வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதாத்தேஷு தேஷாம் அநதிகாரம் த்யோதயதி -தேவா இதி ஸாமான்ய வசனம் ச -வஸ்வாதி விசேஷ விஷய மித்ய வகம்யதே -அந் யேஷாம விரோதாத் –31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –மது வித்யாதிஷ்வபி வஸ்வாதீ நாமதிகார பாவம் பகவான் பாதராயணோ மன்யதே –அஸ்தி ஹி வஸ்வாதீநாம் ஸதாம் ஸ்வாவஸ்த ப்ரஹ்மண உபாஸ்யத்வ ஸம்பவ கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்யத்வ சம்பாவஸ் ச –ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா ஆதித்யஸ்ய காரணா வஸ்தாம் ப்ரதிபாத்ய ய ஏதா மேவம் ப்ரஹ்மோப நிஷதம் வேத இதி மது வித்யா ப்ரஹ்ம வித்யாத்வமாஹ –அத கார்ய காரணோ பயாவஸ்தம் தத்ரோபாஸ்யம் -கல்பாந்தரே வஸ்வாதித்வ மநு பூய அதிகாராவஸாநே ப்ரஹ்ம ப்ராப்திர்ந விருத்தா –32–இதி மத்வதிகரணம்–8-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –து -ஸப்த பக்ஷம் வ்யாவர்த்தயதி –வஸ்வாதீ நாம் மது வித்யாதிஷு அதிகார ஸத் பாவம் பகவான் பாதராயணோ மன்யதே -அஸ்தி ஹி வஸ்வாதீ நாமேவோபாஸ் யத்வம் ப்ராப்யத்வம் ச இதாநீம் வஸூ நாமேவ ஸதாம் கல்பாந்தரே வஸூத் வஸ்ய ப்ராப்யத்வ சம்பவாத் ப்ராப்யத்வம் சம்பவதி -ஸ்வாத்மநாம் ப்ரஹ்ம பாவ அநு ஸந்தான ஸம்பவாது பாஸ்யத்வம் ச சம்பவதி -ய ஏதா மேவம் ப்ரஹ்ம உப நிஷதம் வேத இதி ஹி க்ருத்ஸ்நாயா மது வித்யாயா ப்ரஹ்ம வித்யாத்வ மவகம்ய தே –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ஆஜஹாரமாஸ் ஸூத்ர இத்யாதவ் ப்ரஹ்ம உபதேஸே ஸிஷ்யம் ப்ரதி ஸூத்ரேத்யா மந்த்ரணேந சிஷ்யஸ்ய ப்ரஹ்ம ஞானா ப்ராப்த்யா ஸூ க்சஞ்ஜாதேதி ஸூஸ்யதே –ஸோச நாச் சூத்ர -ந ஜாதி யோகேந குத –ததநாதர ஸ்ரவணாத் ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஸ்வாத்மா நம் ப்ரதி ஹம்ஸோக்தாநாதர வாக்ய ஸ்ரவணாத் ததைவாசார்யம் ப்ரதி ஆத்ரவணாத் –ஹி சப்தோ ஹேதவ் –யதஸ் ஸ்ரூத்ரேத்யா மந்த்ரணம் ந ஜாதி யோகேந அதஸ் ஸூத் ரஸ்ய ப்ரஹ்ம உபாஸநாதிகாரோ ந ஸூஸ்யதே –33-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி 
-ப்ரஹ்ம வித்யாயாம் ஸூத்ரஸ் யாப்யதிகாரோ அஸ்தி -நேதி ஸம்சய –அஸ்தீதி பூர்வ பக்ஷ –அர்தித்வ ஸாமர்த்ய சம்பவாத் –ஸூத்ரஸ்யாநக்நி வித்யத்வே அபி மநோ வ்ருத்தி மாத்ரத்வாத் உபாசனநஸ்ய சம்பவதி ஹி ஸாமர்த்யம் -ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாஸந ப்ரகாரஜ் ஞானம் சேதிஹாஸ புராண ஸ்ரவணாதேவ நிஷ்பத்யதே
அஸ்தி ஹி ஸூத்ரஸ் யா பீதிஹாஸ புராண ஸ்ரவணாநுஜ்ஞா -ஸ்ராவயேச் சதுரோ வர்ணாந் க்ருத்வா ப்ராஹ்மண மக்ரத இதி –ததா தத்ரைவ விதுராதீ நாம் ப்ரஹ்ம நிஷ்டத்வம் த்ருஸ்யதே -உபநிஷத் ஸ்வபி -ஆஜஹாரமாஸ் ஸூத்ரா நேநைவ முகே நாலாப யிஷ்யதா இதி ஸூத்ர சப்தேநா மந்த்ர்ய ப்ரஹ்ம வித்யோபதேஸ தர்சநாச் ஸூத்ரஸ்ய அபீ ஹாதிகாரஸ் ஸூஸ்யதே –ராத்தாந்தஸ்து –உபாஸநஸ்ய மநோ வ்ருத்தி மாத்ரத்வே அபி அநதீதவே தஸ்ய ஸூத் ரஸ்ய உபாஸநோபாய பூதஜ் ஞாநா சம்பவாத் ந சார்மத்ய ஸம்பவ -கர்ம விதிவத் உபாஸநா விதயோ அபி
த்ரை வர்ணிக விஷயாத்யயநக்ருஹீதஸ் வாத்யாயோத் பன்ன ஞாந மேவ உபாஸநோபாய தயா ஸ்வீ குர்வதே —
இதிஹாஸா தயோ அபி ஸ்வாத்யாய ஸித்த மேவ ஞானம் உப ப்ரும்ஹ யந்தீதி ததோ அபி நாஸ்ய ஞான லாப –ஸ்ரவாணானுஜ்ஞா து பாப ஷயாதி பலா -விதுராதீ நாம் து பவாந்தர வாஸநய ஞான லாபாத் ப்ரஹ்ம நிஷ்டத்வம் -ஸூத்ரேத்யா மந்த்ரணம் அபி ந சதுர்த்தி வர்ணத்வேந அபி து ப்ரஹ்ம வித்யா வைகல் யாச்சு கஸ்ய ஸம்ஜா தேதி –அதோ ந ஸூத்ரஸ் யாதிகார –ஸூத்ரார் தஸ்து -ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஹம்ஸோக்தா நாதர வாக்ய ஸ்ரவணாத்ததை வாசார்யம் ப்ரத்யாத்ரவ ணாச்சார்யே தஸ்ய ஸூஷ்ரூ ஷோர் வித்யா அலாப க்ருதா ஸூக் ஸூஸ்யதே –ஹி சாப்தோ ஹேதவ் –யஸ்மா தஸ்ய ஸூகே ஸூஸ்யதே அதஸ் ஸோச நாச் ஸூத்ர இதி க்ருத்வா ஆசார்யோ ரைக்வ ஜான ஸ்ருதிம் ஸூத்ரேத்யா மந்த்ரயதே ந ஜாதி யோகே நேத்யர்த –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்–உபக்ரமே பஹு தாயீ இத்யாதிநா தாந பதித்வ பஹு பக்வாந் நதாயித்வ பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஹி ஷத்ரியத்வம் கம்யதே –34-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –-அஸ்ய ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்வாவக தேஸ் ச ந ஜாதி யோகேந ஸூத் ரேத்தயா மந்த்ரணம் ப்ரகரண ப்ரக்ரமே ஹி பஹு தாயீ இத்யாதி நா தாந பதித்வ பஹு தர பக்வாந் நதாயித்வக்ஷத்த்ருப்ரேக்ஷண பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஜாந ஸ்ருதேஸ் ஸூஸ்ரூஷோ ஷத்ரியத்வம் ப்ரதீதம் –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகஞ்ச காபேய மபிப்ரதாரிணஞ்ச இத்யாதவ் –
அபி ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணாந்தரே ஹி காபேய ஸஹஸரிணஸ் சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதத்வம் ஷத்ரியத்வம் சாவகதம் ஏதேந சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச க்ஷத்ர பதிர ஜாயத இதி ச அதஸ் சாயம் சிஷ்ய ந சதுர்த –35-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகம் ச காபேய மபிப்ரதாரிணம் ச இத்யாதி நா –
அப் ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணா ந்தரே ஹி காபேய ஸஹஸரிண சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச
அதோ அஸ்யாம் வித்யாயாம் அந்விதோ ப்ராஹ்மண அதிதரோ ஞான ஸ்ருதி பிர் அபி ஷத்ரியோ பவிதும் அர்ஹாதி –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபக்ரமே உப த்வா நேஷ்யே இத் யுப நயன பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ அபிலாபாச்ச -ந ஸூத்ரஸ்ய ப்ரஹ்ம வித்யாதிகார ந ஸூத்ரே பாதகம் கிம்சித் ந ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஸம்ஸ்காரோ ஹி நிஷித்யதே –36-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபதேஸே உப த்வா நேஷ்யே இத் யுப நயன ஸம்ஸ் கார பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ சநாச்சாநதிகார -ந ஸூத்ர பாதகம் கிஞ்சிந்த ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேஸ் ச நாதிகார –37-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூஸ்ரூஷோர் ஜாபாலேஸ் ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேர் நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி நிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி ப்ரதிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத–39- இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தாண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ரமிதாதிகரண சேஷ
ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் அனுசரதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் இத்யாதி நா அபிஹிதாங்குஷ்ட ப்ரமித பிராண ஸப்த நிர்திஷ்ட ஜெனித பயாத் வஜ்ராதி வோத்யதாத் அக்நி வாயு ஸூர்ய இந்த்ர ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ இதி நிஸ்ஸீயதே –40-

ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் பரி ஸமா பயதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் மிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் -மஹத் பயம் வஜ்ரமுத்யதம் பயாதஸ்யாக்நிஸ்தபதி இத்யாதவ் ப்ராண ஸப்த நிர் துஷ்டாங்குஷ்ட ப்ரமித ஜெனித பய நிமித்தாக்நி வாயு ஸூர்ய ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் ஸ்ரூயமாணாதங்குஷ்ட ப்ரமித பரமாத்மை வேதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –தத் ப்ரகரணே ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய அநவதிக அதிசய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ –41—இதி ப்ரமித அதி கரண சேஷ

106-ஜ்யோதிர் தர்சநாத் –அஸ்மின்நேவ ப்ரகரணே தத் சம்பந்தி தயா ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி ஸர்வேஷாம் சாதகஸ்யா நவதிகாதி ஸயஸ்ய பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய ப்ரஹ்ம பூதஸ்ய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா –41—இதி ப்ரமித அதி கரணம்

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
 –சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம இத்யாதிநா நிர்திஷ்ட ஆகாஸ தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா இதி ப்ரக்ருதாத் ப்ரத்யமாத்மந பரி ஸூத்தாதரதாந்தர பூத பரம புருஷ நாம ரூபயோ நிர்வோட் ருத்வ தத ஸ்பர்ச ரூபார் தாந்தரத்வாம்ருதத்வாதி வ்யபதேஸாத் –42-

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத் 
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம ததம்ருதம் ஸ ஆத்மா இத்யத்ர ஆகாஸ ஸப்த நிர்திஷ்ட கிம் முக்தாத்மா உத பரமாத்மேதி ஸம்சய –முக்த இதி பூர்வ பக்ஷ -தூத்வா சரீர மக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவாமி இதி முக்தஸ்யாநந்தர ப்ரக்ருதத்வாத் –ராத்தாந்தஸ்து –நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா இதி ஸ்வயம் அஸ்ப்ருஷ்ட –நாம ரூப தயா நாம ரூபயோர் நிர்வோட்ருத்வேந ரூயமாணோ அயம் ஆகாசோ பக்த முக்தோபயா வஸ்தாத் ப்ரத்யகாத்மந அர்த்தாந்தரத் வாத் பரமாத்மைவ
ஸூத்ரார்த்தஸ்து –ஆகாஸ பரமாத்மா தஸ்ய நாம ரூபாயோர் நிர்வோட்ருத்வதத ஸ்பர்ச லக்ஷணார்த் தாந்தரத்வ வ்யபதேசா-ப்ரத்யகாத்மநோ ஹ்யர்த்தாந்தர பூத ஏவ நாம ரூபயோர் நிர்வோடா-பாத்தாவஸ்தஸ்தாவன் நாம ரூபாப்யாம் ஸ்ப்ருஷ்டஸ் தத் பரவஸஸ் சேதி ந நிர்வோடா முக்தஸ்யாபி ஜகத் வியாபார ரஹிதத் வான்ந நிரவோட் ருத்வம் –ஆதி சப்தேந நிருபாதிக ப்ரஹ்மத்வ அம்ருதத்வாத்மத்வா தீதி க்ருஹ்யந்தே தாநி நிருபாதிககாநி முக்தஸ்யாபி ந சம்பவந்தி –42-

தத்வமஸ்யாதிநா ஐக்ய வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ நார்தாந்தர பூத பரம புருஷ இத்யா சங்க்யாஹ

108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் ப்ராஜ்ஜே நாத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் பாஹ்யாந்தர விஷயா நபிஜ்ஞாத் ப்ரத்யகாத்மந ததாநீ மேவ ப்ராஜ்ஞ தயா பேதேந வ்யபதேஸாதர் தாந்தர பூத ஏவ –43-

நநு தத்வமஸ்யாதி நைக்ய வ்யபதேஸாத் நேஹ நாநாஅஸ்தீதி பேத ப்ரதிஷே தாச்ச ந ப்ரத்யகாத்மந அர்த்தாந்தர பூத பரமாத்மேத்யா சங்க்யாஹ
108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –வ்யபேதசாதிதி வர்த்ததே –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்த ப்ராஜ்ஜேநா ஆத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் லுப்த ஸகல விசேஷ விஞ்ஞாநாத் ப்ரத்யகாத்மநஸ் ததாநீ மேவ ஸர்வஞ்ஞதயா பேத வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத எவ் பரமாத்மா –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் அர்த்தாந்தர பூத- ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே
ஐக்யோபதேஸோ அபி அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இத்யநேந ஜீவஸ்ய சரீர பூதஸ் யாத்ம தயா அவஸ்தி தேரிதி ஸ்வய மேவ பரி ஹரிஷ்யதி –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத பரமாத்மா ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இத்யாதவ்
ஐக்யோபதேஸ பேத ப்ரதிஷேதவ் து ப்ரஹ்ம கார்யத்வ நிபந்தநா விதி –தஜ்ஜ லான் இதி -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதி ஸ்ருதி பிரேவ வ்யக்தவ் –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -பிரதம  பாதம் –

March 5, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே
–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே
–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார- மூலஉத்த்ரியதே

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம்

ஸ்ரீ யகாந்தோ அநந்தோ வர குண கணைகாஸ் பத வபுஸ்
ஹதா சேஷாவத்ய பரகமபதோ வாங் மனஸயோ
அபூமிர் பூமிர்யோ நதஜந த்ருஸாம் ஆதி புருஷோ
மனஸ் தத் பதாப்ஜே பரி சரண ஸக்தம் பவது மே
ப்ரணம்ய சிரஸா ஆச்சார்யாம்ஸ் ததா திஷ்டேந வர்த்தமநா
ப்ரஹ்ம ஸூத்ர பதாந்தஸ்த வேதாந்தார்த ப்ரகாஸ்யதே

அத்ரேயம் ஏவ ஹி வேத விதாம் ப்ரக்ரியா –
அசித் வஸ்துநஸ் ஸ்வரூப தஸ் ஸ்வ பாவதஸ் ஸாத்யந்த விலக்ஷண -தத் ஆத்ம பூதஸ் -சேதனஸ் ப்ரத்யகாத்மா
தஸ்மாத் பத்தான் முக்தான் நித்யாச்ச –
நிகில ஹேய ப்ரத்ய நீக தயா -கல்யாண குணைக தாந தயா ச
ஸர்வ அவஸ்த சித் அசித் வ்யாபகதயா தாரக தயா -நியந்த்ரு தயா சேஷி தயா ஸாத்யந்த விலக்ஷண பரமாத்மா
யதோக்தம் பகவதா -த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச
ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத யோ லோக த்ரயம் ஆவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர யஸ்மாத் ஷர மதீதோ அஹம் அஷராத் அபி சோத்தம அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம இதி

ஸ்ருதிஸ் ச
ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம்
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்திதஸ் -இத்யாதிகா
கூடஸ்த -முக்த ஸ்வரூபம் யேத்வஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்த்யம் ச கூடஸ்தம் அசலம் த்ருவம் இத்யாதி வ்யபதேசாத்
ஸூத்ர காரஸ் சைவமேவ வததி நேதரோ அநு பபத்தே பேத வ்யபதேசாத் அநு பபத்தேஸ் து ந சாரீர கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் ச ஸப்த விசேஷாத் ஸம் போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத்
ந ச ஸ்மார்தமதத் தர்மாபிலாபாச் சாரீரஸ் ச உபயே அபி ஹி பேதேநைந மதீயதே விசேஷண பேதே வ்யபதேஸாபப்யாம்

ச நேதரவ் முக்தோபஸ்ருப்ய வ்யபேதஸாச் ச ஸ்தித்யத நாப்யாம் ச
இதர பரமர்ஸாத் ஸ இதி சேந்நா சம்பவாத் உத்தராச்சேதாவிர் பூத ஸ்வரூபஸ் து ஸூஷுப்த் யுத்க்ராந்த்யோர் பேதேந பத்யாதி ஸப்தேப்ய -அதிகம் து பேத நிர்தேசாத் அதி கோபதே ஸாத்து பாதாரயணஸ் யைவ தத் தர்சநாத் ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச இத்யாதிபி
ந ஸாவித்யா க்ருத முபாதி க்ருதம் வா பேதம் ஆஸ்ரித்யைதே நிர்தேஸா -இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா–சர்கே அபி நோப ஜயந்தி ப்ரலயே ந வ்யதந்தி ச ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி -முக்தோபஸ்ருப்ய வ்யபதாஸாச் ச உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூபஸ்து

ஸம்பத்ய ஆவீர்பாவஸ் ஸ்வேந ஸப்தாத் ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத் வாச் ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச இதி ஸர்வ அவித்ய உபாதி விநிர் முக்த மதி க்ருத்யைவ பேத உபபாதநாத்
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரேஷு ஸர்வத்ர பேதே நிர்திஷ்டே -சித் அசித் ஈஸ்வர ஸ்வரூப பேதஸ் ஸ்வா பாவிகோ விவஷித இதி நிஸ் சீயதே
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம –தஜ்ஜலா நிதி சாந்த உபாஸீத -வாசா ரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –
ஸ தேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமே அத்விதீயம் –ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத –சந் மூலாஸ் சோம்யேமாஸ் ஸர்வா ப்ரஜாஸ் ஸதாயதநாஸ் ஸத் ப்ரதிஷ்டா
ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்-

தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி ஸ்வேத கேதோ ஷேத்ரஞ்ஞம் ஷாபி மாம் வித்தி தத் அந்யத் வமாராம்பண ஸப்தாதிப்ய இதி பரஸ்ய ப்ரஹ்மண -காரணத்வம் க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய கார்யத்வம் காரணாத் கார்யஸ்ய அநந்யத்வம் சோஸ்யமாந மேவமேவோப பத்யதே
ஸர்வ அவஸ்தஸ்ய சித் அசித் வஸ்துந பரமாத்ம ஸரீரத்வம் பரமாத்மானஸ்சாத்மத்வம் யஸ் ப்ருதிவ்யாம் திஷ்டன்யஸ்ய ப்ருத்வீ ஸரீரம் -யஸ் ஆத்மநி திஷ்டன்யஸ்ய யாத்மா ஸரீரம் யஸ் ஆத்மநம் அந்தரோ யமயதி –யஸ்ய அவ்யக்தம் ஸரீரம் -யஸ்ய அக்ஷரம் சரீரம் –யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் -ஏஷ ஸர்வம் பூதம் அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -அந்த ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்ம இத்யாதி ஸ்ருத்ய ஏவ உப திஷ்டமிதி
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட பரமாத்மா காரணம் -ஸ ஏவ பரமாத்மா ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கார்யமிதி -காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச சித் அசித் வஸ்து சரீர கதயா தத் ப்ரகார பரமாத்ம ஏவ ஸர்வ ஸப்த வாஸ்ய இதி பரமாத்ம சப்தேந ஸர்வ ஸப்த சாமானதி கரண்யம் முக்ய மேவ உப பன்நதரம்
அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சாபவத் இத்யாதி ஸ்ருதி ரேவ மமர்த்தம் உப பாதயதி
ஸர்வம் ஆத்மதயா அநு ப்ரவிஸ்ய தச் சரீரத்வேந ஸர்வ ப்ரகார தயா ஸ ஏவ ஸர்வ ஸப்த வாஸ்யோ பவதீத் யர்த
பஹுஸ்யாம் இதி பஹு பவந சங்கல்போ அபி நாம ரூப விபாகா நர்ஹாதி ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கதயைகதா அவஸ்தி தஸ்ய விபக்த நாம ரூப சித் அசித் சரீர கதயா பஹு ப்ரகாரதா விஷய இதி வேதவித் ப்ரக்ரியா -யே புநர் நிர்விசேஷ கூடஸ்த ஸ்வ ப்ரகாஸ நித்ய சைதன்ய மாத்ரம் ப்ரஹ்ம ஞாதவ்யத யோக்தமிதி வதந்தி தேஷாம்
ஜந்மாத் யஸ்ய யத
ஸாஸ்த்ர யோநித்வாத்
தத் து சமன்வயாத்
ஈஷதேர் நா ஸப்தம் –இத்யாதே
ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத ஸ நந் நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
அநா வ்ருத்திஸ் ஸப்தாதந அநா வ்ருத்திஸ் ஸப்தாத் இத்யந் நஸ்ய ஸூத்ர கணஸ்ய ப்ரஹ்மணோ ஜகத் காரணத்வ பஹுபவந ஸங்கல்ப ரூபேஷணாத் யநந்த விசேஷ ப்ரதிபாதன பரத்வாத் ஸர்வம் ஸூத்ர ஜாதம் ஸூத்ர காரோதாஹ்ருதா
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இத்யாத்யா -ஸர்வ ஸ்ருதயஸ் ச ந சங்கச்சந்தே
அதோச்யேத யேநாஸ்ருதம் ஸ்ருதம் இத் யேக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞானம் ப்ரதிஜ்ஞாய -யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இத்யேகம் ம்ருத் பிண்டாரப்த கட ஸராவாதீநாம் தன் ம்ருத் பிண்டாத் அநந்ய த்ரவ்ய தயா தஜ் ஞாநேந தேஷாம் ஞாததேவ ப்ரஹ்ம ஞாநேந ததாரப் தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்ம கஸ்ய ஜகதஸ் தஸ்மாதநதிரிக்த வஸ்து தயா ஞாததா ஸம்பவ தீத் யுப பாத்ய
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதீதம் ஸப்த வாஸ்யஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய ஸ்ருஷ்டே பிராங் நிகில பேத ப்ரஹாணேந ஸச் ஸப்த வாஸ்யேநைகதா பத்திம் கட சராவாத் யுத்பத்தே ப்ராக் உத்பாதக ம்ருத் பிண்ட ஏகதா பத்திவத் அபிதாய ததைக்ஷத பஹுஸ் யாம் இதி ததேவ ஸச் ஸப்த வாச்யம் ப்ரஹ்ம சித் அசித் ஆத்மக ப்ரபஞ்ச ரூபேண ஆத்ம நோ பஹு பவநம் ஏக ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி ரூபேண பஹு பவந வத் சங்கல்ப்ய ஆத்மாந மேவ தேஜஸ் ப்ரப்ருதி ஜகத் ஆகாரேண அஸ்ருஜதேதி சாபிதாய ஐததாம் யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா தத்வமஸி இத்யபிதா நாத் ப்ரஹ்மைவா வித்யா க்ருதேந பாரமார்த்திகேந வோபாதிநா ஸம்பத்தம் தேவாதி ரூபேண பஹு பூத மதி வேதவித் ப்ரப்யுவ கந்தவ்யமிதி தத யுக்தம் ஞாஜ்ஜவ் த்வாவஜாவீ சனீஸவ் நித்யோ நித்யோநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் இத்யபி ஸ்ருதி பி
ஜீவா நாமஜத்வ நித்யத்வ பஹத்வ வசநாத் யதி கட சராவாதேருத் பத்தே ப்ராகேகீ பூதஸ்யைவ ப்ரஹ்மணஸ் ஸ்ருஷ்ட் யுத்தர காலீநம் நாநாவித ஜீவ ரூபேண பஹுத்வம் உச்யதே ததா ஜீவானாம் அஜத்வ நித்யத்வ பஹுத்வாதி விருத்யதே
ஸூத்ரவிரோதஸ் ச இதர வ்யபதேசாத் ஹிதா கரணாதி தோஷ ப்ரஸக்தி இதி ப்ரஹ்மைய தேவ மனுஷ்யாதி ஜீவ ஸ்வரூபேண பஹு பூதம் சேதாத்மநோ ஹித கரணாதி தோஷ ப்ரஸக்திரித் யுக்த்வா அதிகம் து பேத நிர்தேசாத் இதி ஜீவாத் ப்ரஹ்மணோ அர்த்தாந்தரத்வம் யுக்தம் –
ததா ச வைஷம்ய நைர்க்கருண்யே ஜீவா நாம் பூர்வ பூர்வ கர்ம அபேக்ஷத்வாத் விஷம ஸ்ருஷ்டே இதி பரிஹ்ருதே –
ததா ந கர்மாவிபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யு பலப்யதே ச இதி ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதி ஸ்ருஷ்டே பிராக விபாக வஸனாத் ஸ்ருஷ்டே ப்ராக் ஜீவா நாம பாவாத் தத் கர்ம ந ஸம்பவதீதி பரிசோத்ய ஜீவா நாம் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வாதிதி பரிஹ்ருதம் -நாத்ம ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இத்யாத்மந உத்பத்த்ய பாவஸ் சோக்தோ நித்யத்வம் ச ஸ்வாப் யுபகம விரோதஸ் ச
ஆமோஷாஜ் ஜீவ பேதஸ்யாநாதித்வம் ஸர்வை ரேவ ஹி வேதாந்தி ப்ரப்யுப கம்யதே -அதஸ் ஸ்ருதி விரோதாத் ஸூத்ர விரோதாத் ஸ்வாப்யுபக விரோதாஸ் ச ஸ்ருஷ்டே பிராகே கத்வாவதாரணம் நாம ரூப விபாகாபாவாபிப்ராயம் நாம ரூப விபாகா நர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து ஸக்தி பேத ஸஹம் சேதி ஸர்வைரப்யுப கம்யதே –இயாம்ஸ் து விசேஷ அவித்யா பரி கல்பநே அப்யுபாதி பரி கல்பநே அபி ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்யா வித்யா சம்பந்தி நஸ் சோபாதி சம்பந்தி ந சேதனஸ் யா பாவாத வித்யோபாதி ஸம்பந்தவ் தத் க்ருதாஸ் ச தோஷா ப்ரஹ்மண ஏவ பவேபுரிதி சந் மாத்ர ப்ரஹ்ம வாதே அபி ப்ராக் ஸ்ருஷ்டேஸ் சந் மாத்ரம் ப்ரஹ்மைக மேவ ஸ்ருஷ்ட் யுத்தர காலம் போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண த்ரிதா பூதம் சேத்
கட சராவ மணிக வஜ் ஜீவேஸ்வரயோர் உத்பத்தி மத்த்வம நித்யத்வம் ச ஸ்யாத் -அதை கத்வா பத்தி வேலாயாமபி போக்த்ரு போக்ய நியந்த்ரு ஸக்தி த்ரயம் அவஸ்திதம் இதி சேத் கிமிதம் ஸக்தி த்ரய ஸப்த வாஸ்யமிதி விவேச நீயம் –
யதி சந் மாத்ரஸ்யைகஸ் யைவ போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண பரிணாம ஸாமர்த்யம் ஸக்தி த்ரய -ஸப்த வாஸ்யம் ஏவம் தர்ஹி ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி பரிணாம சமர்த்தஸ்ய தத் உத்பாதகம் இவ ப்ரஹ்மண ஈஸ்வர அதீநாம் உத்பாதகத்வம் இதி தேஷாம நித்யத்வ மேவ அதேஸ் வராதீ நாம் ஸூஷ்ம ரூபேண அவஸ்திதி ரேவ ஸக்தி ரித் யுச்யேத தர்ஹி ததரிக்தஸ்ய சந் மாத்ரஸ்ய ப்ரஹ்மண ப்ரமாணா பாவாத் ததப் யுபகமே ச தத் உத்பாத்ய தய ஈஸ்வர அதீனாம் அநித்யத்வ பிரசங்காச் ச த்ரயாணாம் நாம ரூப விபாகா நர்ஹ -ஸூஷ்ம தஸா பத்திரேவ ப்ராக் ஸ்ருஷ்டே ரேகத்வா வதாரணாவ ஸேயேதி வக்தவ்யம்
ந ததா தேஷாம் ப்ரஹ்மாத்ம கத்வ அவதாரணம் விருத்யதே
அதஸ் ஸர்வ அவஸ்தா வஸ்தி தஸ்ய சித் அசித் வஸ்துந ப்ரஹ்ம சரீரத்வ ஸ்ருதேஸ் ஸர்வதா ஸர்வ சப்தைர் ப்ரஹ்மைவ கார்ய பூதம் ஜகத் நாம ரூப விபாகாநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம காரண மிதி ததேவ ம்ருத் பிண்டஸ்தாநீயம் -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இத்யுச்யதே -ததேவ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம கார்யமிதி ஸர்வம் சமஞ்ஜஸம்
ஸ்ருதி நியாய விரோதஸ்து தேஷாம் பாஷ்யே ப்ரபஞ்சித இதி நேஹ ப்ரதன்யதே -பாஷ்போதித அதிகரணார்த்த ச ஸூத்ரார்த்த விவரண ஸூக க்ரஹணாய ஸம் ஷேபண உபன்யஸ்தே

சாரீரக அத்யாய பதார்த்த ஸங்க்ரஹ
தத்ர ப்ரதமே பாதே -ப்ரதான புருஷா வேவ ஜகத் காரண தயா வேதாந்தா ப்ரதிபாத யந்தீத்யா சங்க்ய ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரவத்யம்-ஸமஸ்த கல்யாண குணாகரம் ப்ரஹ் மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யந்தீத் யுக்தம் –
த்விதீய த்ருதீய சதுர்த பாதேஷு காநிசித் வேதாந்த வாக்யாநி ப்ரதாநாதி ப்ரதிபாதன பராணீதி தன் முகேந ஸர்வ அசேஷபமா சங்க்ய தான்யபி ப்ரஹ்ம பராணீத் யுக்தம்
தத்ர அஸ் பஷ்ட ஜீவாதி லிங்க காநி வாக்யாநி த்விதீயே நிரூபிதாநி -ஸ்பஷ்ட லிங்ககாநி த்ருதீயே -சதுர்தே து ப்ரதாநாதி ப்ரதிபாதநச் சாயாநு ஸாரீணீத விசேஷ
அத பிரதம அத்யாயே ஸர்வம் வேதாந்த வாக்ய ஜாதம் -ஸார்வஞ்ய-ஸத்ய சங்கல்பத்வாதி யுக்தம் ப்ரஹ்மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யதீதி ஸ்தாபிதம்

த்வதீயே து ஸாங்க்யாதி வேத பாஹ்ய பக்ஷ ப்ரதிக்ஷேப முகேந தஸ்யை வாதரணீ யதா ஸ்திரீக்ருதா

த்ருதீய சதுர்த்யோ வேதாந்த வாக்யாநாமன்யோன்ய விப்ரதிஷேதாதி தோஷ கந்தாபாவக்யாபநாய வியதாதீநாம் ப்ரஹ்ம கார்யதா ப்ரகாரோ விசோத்யதே

தத்ர த்ருதீய பாதே ச சித் அசித் பிரபஞ்சஸ்ய ப்ரஹ்ம கார்யத்வே ஸத்யப்யசிதம் ஸஸ்ய ஸ்வரூபான் யதா பாவேந கார்யத்வம் சிதம்ஸஸ்ய ஸ்வ பாவான் யதா பாவேந ஞான சங்கோச விகாஸ ரூபேண கார்ய தோதிதா

சதுர்தே

து ஜீவ உபகரணாநாம் இந்த்ரியாதீநாம் உத்பத்தி ப்ரகார இதி ப்ரதமேநாத்யா யத்வயேந முமுஷுபிர் உபாஸ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிஸய அசங்க்யேய கல்யாண குண கணம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்மேதி ப்ரதிபாதிதம்
உத்தரேண த்வயேந ப்ரஹ்ம உபாஸன ப்ரகாரஸ் தத் பல பூத மோக்ஷ ஸ்வரூபம் ச சிந்த்யதே

தத்ர த்ருதீயஸ்தே பிரதம பாதே ப்ரஹ்ம உபாஸிஸிஷ உத்பத்த்யே ஜீவஸ்ய ஸம் ஸரதோ தோஷா கீர்திதா

த்விதீயே சோபாஸிஸிஷ உத்பத்த்யேஏவ ப்ரஹ்மணோ நிரஸ்த நிகில தோஷதா கல்யாண குணாகரதா ரூப உபய லிங்கதா ப்ரதிபாத்யதே

த்ருதீயே து ப்ரஹ்ம உபாஸன ஏகத்வ நாநாத்வ விசார பூர்வகம் உபாஸநேஷு உப ஸம்ஹார்ய அநுப ஸம்ஹார்யகுண விசேஷா பிரபஞ்சிதா

சதுர்த்தே து உபாசனஸ்ய வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாகத்வம் யுக்தம்

சதுர்த்த அத்யாயே ப்ரஹ்ம உபாஸனபல சிந்தா க்ரியதே

தத்ர ப்ரதமே பாதே ப்ரஹ்ம உபாசன பலம் வக்தும் உபாசன ஸ்வரூப பூர்வக உபாசன அநுஷ்டான ப்ரகாரோ வித்யா மஹாத்ம்யம் சோஸ்தே

த்விதீய து ப்ரஹ்ம உபாஸீநாநாம் ப்ரஹ்ம ப்ராப்தி கத் யுபக்ரமே பிரகார சிந்தித

த்ருதீயே த்வர்ச்சிராதிகதி ஸ்வரூபம் அர்ச்சிராதி நைவ ப்ரஹ்ம ப்ராப்திரிதி ச ப்ரதிபாத்யதே

சதுர்தே து முக்தஸ்ய ப்ரஹ்ம அநுபவ பிரகாரஸ் சிந்த்யதே –
அதோ முமுஷு பிர் ஞாதவ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா கரம் நிகில ஜகத் ஏக காரணம் பரம் ப்ரஹ்ம தஜ் ஞானம் ச மோக்ஷ சாதனம் அஸக்ருதாவ்ருத்த ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் உபாஸனாத்மகம் உபாஸன பலம் ச அர்ச்சிராதிநா பரம் ப்ரஹ்ம உபஸம்பத்ய ஸ்வ ஸ்வரூப பூத ஞானாதி குண ஆவிர்பாவ பூர்வக அநந்த மஹா விபூத்ய அநவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவோ அபுனரா வ்ருத்தி ரூப இதி சாரீரிக ஸாஸ்த்ரேண யுக்தம் பவதி

1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

அதிராயம் அத ஸப்த ஆனந்தர்யே வர்த்ததே -அதஸ் ஸப்த சிரஸ்கத்வாத் -அதஸ் ஸப்தஸ் ச பூர்வ வ்ருத்தஸ்ய ஹேதுபாவே -பூர்வ வ்ருத்தம் ச கர்மஜ் ஞானம் இதி விஞ்ஞாயதே ஆரிப்ஸிதஸ்ய ப்ரஹ்ம ஞானஸ்ய வேதார்த்த விஸாரைகதேஸத்வாத் –அதீத வேதஸ்ய ஹி புருஷஸ்ய கர்ம ப்ரதிபாதநோபக்ர மத்வாத் வேதாநாம் கர்ம விசார ப்ரதமம் கார்யம் இதி -அதாதோ தர்ம ஜிஜ்ஞாசா -இத்யுக்தம் -கர்மணாம் ச ப்ரக்ருதி விக்ருதி ரூபாணாம் தர்மார்த்தகாம ரூப -புருஷார்த்த சாதனதா நிஸ்ஸய -ப்ரபுத்வாதார்த்விஜ்யம் இத்யந்தேந ஸூத்ர கலாபேந ஸம் கர்ஷேணேந க்ருத –ஏவம் வேதஸ்யார்த –பரத்வே கர்மணாம் ச ததர்தத்வே தேஷாம் ச கேவலாநாம் த்ரிவர்க பலத்வே நிஸ்ஸிதே சதி வேதைகதேஸ பூத வேதாந்த பாகே கேவல கர்மணாம் அல்ப அஸ்திர பலத்வம் ப்ரஹ்ம ஞானஸ்ய ச அநந்த ஸ்திர பலத்வம் ஆபாததோ த்ருஷ்ட்வா அனந்தரம் முமுஷோ ரவதாரிதபரி நிஷ்பன்ன வஸ்து போத ஜனந ஸப்த சக்தே -புருஷஸ்ய ப்ரஹ்ம புபுத்ஸா ஜாயத இதி அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா இதி கர்ம விசார அநந்தரம் தத ஏவ ஹேதோர் ப்ரஹ்ம விசார கர்தவ்ய இத் யுக்தம் பவதி –ததிதமாஹ ஸ்ருதி –
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந்நாஸ்த்யக்ருத க்ருதேந தத் விஞ்ஞா நார்தம் ஸ குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் பிரசாந்த சித்தாய சமான்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாஸதாம் தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம் இதி
ப்ராஹ்மண -வேத அப்யாஸ ரத -கர்ம சிதான் –கர்மணா ஸம்பாதிதான் லோகான் –ஆராத்யக்ஷயிஷ்ணுத்வேந க்ஷயஸ்வபாவான் கர்ம மீமாம்ஸயா பரீஷ்ய அக்ருத -நித்ய பரம புருஷ க்ருதேந -கர்மணா ந ஸம்பாத்ய இதி யோ நிர்வேத மாயாத் ஸ தத் விஞ்ஞானார்தம் குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணி -ஸ்ரோத்ரியம் -வேதாந்த வேதிநம் ப்ரஹ்ம நிஷ்டம் -சாஷாத் க்ருத பரம புருஷ ஸ்வரூபம் -ஸ -குரு -ஸம்யகுபஸந்நாய தஸ்மை யேந வித்யா விஸேஷேண அக்ஷரம் –ஸத்யம் பரம புருஷன் வேத வித்யாத் -தாம் ப்ரஹ்ம வித்யாம் ப்ரோவாஸ –பரப்ரூயாத் இத்யர்த –ஸ குருமேவ அபி கச்சேத் –தஸ்மை ஸ வித்வான் ப்ரோவாஸ இத்யன்வயாத் அப்ராப்தத்வாச் ச விதாவபி லிடோ விதாநாத் –சந்தஸி லங் லிட் இதி –-1- இதி ஜிஜ்ஞாஸ அதிகரணம் –1-

க -க- க 1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-ஓம் அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா 

ப்ரஹ்ம மீமாம்ஸா விஷய ஸா கிம் ஆரம்பணீயா உத அநாரம்பணீ யேதி ஸம்சய -ததர்தம் பரஷ்யதே -வேதாந்தா கிம் ப்ரஹ்மணி ப்ரமாணம் உத நேதி
ததர்தம் பரி நிஷ்பந்நே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்ய அவதாரணம் சம்பவதி நேதி ந சம்பவதி இதி பூர்வ பக்ஷ
ஸம்பவதீதி ராத்தாந்த -யதா ந சம்பவதி -ததா பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்யா பாவாத் ஸித்த ரூப ப்ரஹ்மணி ந வேதாந்தா ப்ரமாணம் இதி தத் விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆராம்பணீயா யதா சம்பவதி ததா ஸித்த்யேப்யர்த்தே சப்தஸ்ய போதனா ஸாமர்த்ய சம்பவாத் வேதாந்தா ப்ரஹ்மணி பிரமாணம் இது சா சாரம்பணீயா ஸ்யாத் -அத்ர பூர்வ பக்ஷ வாதீ மன்யதே –வ்ருத்த வ்யவஹாராத் அந் யத்ர வ்யுத்பத்த்ய சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி பூர்வகத்வேந கார்ய ஏவார்த்தே ஸப்த சக்த்வ தாரணாத் பரி நிஷ் பன்னே அர்தே ப்ரஹ்மணி ந வேதாந்தா பிரமாண மிதி தத் விசாரரூபா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆரம்பணீயேதி -ஸித்தாந்தஸ்து பாலா நாம் மாதா பித்ரு ப்ரப்ருதி -அம்பாதாத மாதுல ஸிஸூ பஸூ பக்ஷி ம்ருகாதி ஷு அங்குல்யா நிர்திஸ்ய-தத் தத் அபிதாயிநஸ் ஸப்தான் ப்ரயுஞ்ஞாநை -க்ரமேண பஹுஸஸ் ஸிஷிதாநாம் தத் தச் ஸப்த ஸ்ரவண சம நந்த்ரம் ஸ்வாத்மநா மேவ ததர்த்த புத்தி யுத்பத்தி தர்சநாத் சப்தார்த்தயோ ஸம்பந்த அந்தரா தர்சநாத் சங்கே தயித்ரு புருஷாஜ் ஞாநாச் ச போத்ய போதக பாவ ஏவ சப்தார் தயோஸ் ஸம்பந்த இதி நிஸ் சின்வாநாநாம் பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதகத்வ அவதாரணம் ஸம்பவ தீதி ப்ரஹ்மணி வேதாந்த வாக்யா நாம் ப்ராமாண்யாத் ததர்த்த விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ஆராம்பணீயேதி
ஸூத்ரரார் தஸ்து –அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா –அத இத்யா நந்தர்யே-அத இதி ச வ்ருத்தஸ்ய ஹேதுபாவே ப்ரஹ்மணோ ஜிஞ்ஞாஸா ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–ஞாதும் இச்சா ஜிஞ்ஞாஸா=இச்சாயா இஷ்ய மாண ப்ரதாநத்வாதிஷ்ய மாணம் ஞானம் இஹாபிப்ரேதம்
பூர்வ வ்ருத்தாத் அல்ப அஸ்திர பல கேவல கர்மாதிகமாத நந்தரம் தத ஏவ ஹேதோர் அநந்த ஸ்திர பல ப்ரஹ்மாதிகம கர்தவ்ய –க —ஜிஞ்ஞாஸாதி கரணம் –க –

1-1-2-
2-ஜந்மாத் யஸ்ய யத
 -அஸ்ய விசித்ர சித் அசித் மிஸ்ரஸ்ய வ்யவஸ்தித ஸூக துக்க உப போகஸ்ய ஜகத- ஜன்ம ஸ்திதி லயா யத தத் ப்ரஹ்மேதி ப்ரதிபாதயதி ஸ்ருதிரித் யர்த –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி ஸம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இதி –ஸூத்ரே யத இதி ஹேதவ் பஞ்சமீ ஜனி ஸ்திதி லயாநாம் ஸாதாரணத்வாத் -ஜநி ஹேதுத்வம் ச நிமித்த உபாதான ரூபம் விவஷிதம் -யத இதி ஹி ஸ்ருதி -இஹ உபய விஷயா கதமிதி சேத் -யதோ வா இமாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் ச உபய விக்ஷயத்வாத் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -ததைஷத பஹுஸ் யாம் ப்ரஜாயேயேதி –தத் தேஜோ அஸ்ருஜத இத்யத்ர ஸதேவ இதம் அக்ர ஏகமேவ ஆஸீதிதி உபாதாநநாம் ப்ரதிபாத்ய –அத்விதீயம் இதி அதிஷ்டாத் ரந்த்ர நிவாரணாத் ஸச் ஸப்த வாஸ்யம் ப்ரஹ்மைவ நிமித்தம் உபாதாநம் சேதி விஞ்ஞாயதே –ததா ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாத்மந ஏவ விசித்ர ஸ்திரத்ரஸ ரூபேண பஹு பவநம் ஸம் கல்ப்ய ததைவ ஸ்ருஷ்டி வசநாச் ச –அதஸ் ஸ்ருதா வபி யத இதி ஹேதவ் பஞ்சமீ –அத் ரைவ ப்ரஹ்மணோ ஜகன் நிமித்த தத்வம் உபாதாநத்வம் ச ப்ரதிபாதநம் -அர்த விரோதாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி விசேஷ ஸ்ருத்யா சாஷிப்ய ப்ரக்ருதிஸ் ச ப்ரதி ஞாத்ருஷ்டாந்தாநு பரோதாத் அபித்ய உபதேஸாச் ச ஸாஷாச் சோபாயாம்நாநாத் ஆத்ம க்ருதே இத்யாதி பிர் ஸூத்ரை பரி ஹரிஷ்யதே –2–

நநு ச ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி ஸத்ய ஸங்கல்பம் நிரவத்ய தயா நிரஸ்த ஸமஸ்தா புருஷார்த்த கந்தம் ப்ரஹ்மைவாத்மாநம் விசித்ர சித் அசித் மிஸ்ரம் ஜகத் ரூபமிதம் ஸர்வமஸ்ருஐதேதி கதமுப பத்யதே –ததேதத் ஸூத்ர கார ஸ்வயமேவ பரி சோத்ய பரி ஹரிஷ்யதி –அபீதவ் தத்வத் ப்ரசங்காத ஸமஞ்ஸம் இதர வ்யபதேசாத்திதா கரணாதி தோஷ பிரசித்தி -இதி சோத்யம் -பரிஹாரஸ்து ந து த்ருஷ்டாந்த பாவாத் அதிகம் து பேத நிர்தேசாத் இதி ச –ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்ய ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந சாதிப க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷராத்மாநாவீஸதே தேவ ஏக அசித் வர்கம் ஸ்வாத்மநோ போக்யத்வேந ஹரதீதி போக்தா ஹர இத்யுச்யதே

த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச –ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத –யோ லோக த்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர

யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அக்ஷராதபி சோத்தம –அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம –இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி கணை ப்ரத்யகாத்மநோ அதிகமர்த்தாந்தர பூதம் ப்ரஹ்ம தச்ச ப்ரத்யகாத்ம சரீர கதயா தத் ஆத்ம பூதம் ப்ரத்யகாத்மநஸ் தச் ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மவத் வஞ்ச யா ஆத்மநி திஷ்டன் யஸ்ய ஆத்மா ஸரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் ஸ சரீரஸ் யாத்மந கார்ய அவஸ்தா ப்ராப்தா வபி குண தோஷ வ்யவஸ்திதே ர் த்ருஷ்டாந்த பாவாத் ப்ரஹ்மணி ந தோஷ ப்ரஸக்தி இதி நா ஸாமஞ்ஜஸ்யம் வேதாந்த வாக்யஸ்யே தி ந து த்ருஷ்டாந்த பாவாத் இத்யுக்தம் த்ருஷ்டாந்தஸ் ச தேவ மனுஷ்யாதி ஸப்த வாஸ்யஸ்ய ஸ சரீரஸ் யாத்மந மனுஷ்யோ பாலோ யுவா ஸ்தவிர இதி நாநாவஸ்தா ப்ராப்தா வபி பாலத்வ யுவத்வ ஸ்தவிரத் வாதய-சரீர கதா தோஷா நாத்மாநம் ஸ்ப்ருசந்தி ஆத்ம கதாஸ் ச ஞான ஸூகாதய ந சரீரமிதி -அத கார்யா வஸ்தாம் காரணா வஸ்தம் ச ப்ரஹ்ம ச ப்ரஹ்ம ப்ரத்யகாத்ம சரீர தயா தத் ஆத்ம பூதமிதி ப்ரத்யகாத்ம வாசிநா சப்தேந ப்ரஹ்ம அபிதாநே தச் ஸப்த ஸாமாநாதி கரண்யே ச ஹேதும் வக்தும் நிரஸ நீயம் மதத்வயம் ப்ரதிஞ்ஞா ஸித்தே லிங்கமாஸ்மரத்ய -உத்க்ர மிஷ்யத ஏவம் பாவாதித் யவ்டுலோமி இத் யுபந்யஸ்ய அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இதி ஹேதுருக்த தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் ஸச் ச த்யச்சா பவத் இத்யாதிநா ப்ரத்யகாத்மா ஆத்ம தயா அவஸ்தாநாத் ப்ரஹ்மணஸ் தச் சப்தேநாபிதாநம் –தத் ஸாமாநாதி கரண்யேன வ்யபதேசாச் சேத் யுக்தம் –ததா வைஷம்ய நைர் க்ருண்யே ந ஸாபேஷத்வாத் ந கர்மா விபாகா திதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப் யுபலப்யதே ச இதி தேவ மநுஷ்யாதி விஷம ஸ்ருஷ்டேர் ஜீவ கர்ம நிமித்தத்வம் ஜீவாநாம் தத் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வம் ச ப்ரதிபாத்ய ததநாதித்வம் ச நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஜ்ஞாஜ்ஜவ் த்வவ் இத்யாதி -ஸ்ருதி ஷுபலப்யத இத் யுக்த்வா தத நாதித்வ அபி ப்ரலய காலே சித் அசித் வஸ்துநோர் போக்த்ரு போக்யயோர் நாம ரூப விபாகா பாவாத் ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் – நான்யத் கிஞ்சந மிஷத் இத்யாதாவே கத்வாவதாரண முப பத்யதே இதி ஸூத்ர காரேண ஸ்வயமேவ யுக்தம் –ததா ச நாத்மா ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இதி ப்ரத்யகாத்மநோ நித்யத்வாதநுத் பத்தி முக்த்வா ஜ்ஜோ அத ஏவ இதி தஸ்ய ஞாத்ருத்வ மேவ ஸ்வரூப மித்யுக்தம் –
உத் க்ராந்திகத்யாகதீநாம் இத்யாதிநா அனுத்வம் சோக்தம் –தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேஸ ப்ராஜ்ஞவத் யாவதாத்ம பாவித் வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் இதி ஜ்ஞாது சப்தேந வ்யபதேஸோ ஞான குண சாரத்வாத் ஞாநைக நிரூபணீய ஸ்வ பாவத் வாச்சேத் யுக்தம்
நித்யோபலப்த்யநுபலப்தி பிரசங்கோ அந்நிய தர நியமோ வான்யதா இதி ஞான மாத்ர ஸ்வரூபாத்ம வாதே ஹேத்வாந்தராயத் தஜ் ஞாநவாதே ஸர்வ கதாத்மவாதே ச தோஷ உக்த –கர்தா ஸாஸ்த்ரார்த்த வத்த்வாத் உபாதாநாத் விஹாரோபதேஸாச் ச வ்யபதேஸாச் ச க்ரியா யாம் ந சேந்நிர்தேஸ விபர்யய உப லப்திவத நியம சக்தி விபர்யயாத் ஸமாத்ய பாவாச் ச -யதா ச தஷோ அபயதா இத்யாத்மந ஏவ ஸூபாஸூபேஷு கர்ம ஸூ கர்த்ருத்வம் ப்ரக்ருதேர கர்த்ருத்வம் ப்ரக்ருதேஸ் ச கர்த்ருத்வே தஸ்யாஸ் சாதாரணாத்வேந ஸர்வேஷாம் பல அநுபவ பிரசங்காதி ச ப்ரதிபாதிதம் –பராத்து தச் ஸ்ருதே –க்ருத ப்ரயத்நாபேஷஸ்து விஹித ப்ரதிஷித்தா வையர்த் யாதிப்ய -இத்யாத்மந ஏவ கர்த்ருத்வம் பரம புருஷாநுமதி ஸஹ க்ருத மித்யுக்தம்
அம்ஸோ நாநா வ்யபதேஸாத் அந்யதா சாபி தாஸகித வாதித்வ மதீயத ஏகே மந்த்ர வர்ணாத் அபி ஸ்மர்யதே ப்ரகாசாதி வத்து நைவம் பர ஸ்மரந்தி ச இதி அநீஸயா ஸோசதி முஹ்யமாந –ஜுஷ்டம் யதா பஸ்யத்யன்யமீஸமஸ்ய மஹிமாநமிதி வீத ஸோக -ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்நிய ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிம்ச ந வேத நாந்தரம் தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந் நந்யோ அபிசாக ஸீதி ஜ்ஞாஜ்ஜவ் த்வாவஜாவீஸ நீசவ் பிருதகாத்மாநம் ப்ரேரி தாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ்தேநாம்ருதத்வமேதி யதா பஸ்யஸ் பஸ்யதே ருக்ம வர்ணம் கர்தார மீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சந பரமம் ஸாம்யம் உபைதி -ஸ காரணம் கரணாதிபாதியோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந ஸாதிப -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் இத்யாதி ஷு ப்ரத்யகாத்மந -பரமாத்மநஸ் ச கர்ம வஸ்யத்வேந ஸோசித்ருத்வேநா ஸர்வஜ்ஞத்வேந உபாஸநாயத்த முக்தித்வேந நிர்வத்யத்வேந ஸர்வஞ்ஞத்வேந ஸத்ய சங்கல்பத்வேந சர்வேஸ்வரத்வேந ஸமஸ்த கல்யாண குணா கரத்வாதிநா ச ஸ்வரூபஸ்ய ஸ்வ பாவஸ்ய நாநத்வ வ்யபதேஸாத் –தயோரேவ தத்வமஸி அயமாத்மா ப்ரஹ்ம யோ அசவ் ஸோ அஹம் யோ அஹம் ஸோ அசவ் அத யோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்யோ அஸா வந்யோ அஹமஸ் மீதி ந ஸவேத அக்ருத்ஸ்நோ ஹ்யேஷ ஆத்மேத்யேவோபா ஸீத ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மேமே கிதவா இதி ச ஸர்வ ஜீவாத்ம வ்யாபித்வேநா பேத வ்யபதேஸாச் ச உபய வ்யபதேஸா விரோதேந பரமாத்மாம்ஸோ ஜீவாத்மேத் யப்யுப கந்தவ்யம்

ந கேவலம் ந்யாய ஸித்த மிதம் ஸ்ருதி ஸ்ம்ருதி ப்யாம் சாம்ஸத்வ முக்தம் ஜீவாத்மந -பாதோ அஸ்ய விச்வா பூதாநி மமைவ அம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூதஸ் ஸநாதந இதி -அம்சத்வம் நாம ஏகவஸ்த்வேகதேஸத்வம் –ததா ஸத் யுபயோ ரேக வஸ்துத்வேநா விரோதோ ந ஸ்யாதித்யா சங்க்ய ப்ரகாசாதி வத்து நைவம் பர இதி பரி ஹரதி
அந்நிய விஸேக்ஷணதைக ஸ்வபாவ ப்ரகாஸ ஜாதி குண சரீர விஸிஷ்டாநக்நிவ்யக்தி குண் யாத்மந -ப்ரதி ப்ரகாஸ ஜாதி குண ஸரீராணாம் யதா அம்சத்வம் ஏவம் பரமாத்மாநம் ப்ரத்யகாத்ம ஸரீரகம் ப்ரதி ப்ரத்யகாத்மநோ அசம்த்வம் ஏவமம்சத்வே யத் ஸ்வ பாவ அம்ச பூதோ ஜீவ நைவ மம்ஸீ பரமாத்மா ஸர்வத்ர விஸேக்ஷண விஸேஷ்ய யோஸ் ஸ்வரூப ஸ்வ பாவ பேதாத் –ஏவஞ்ச கர்தா சாஸ்த்ரார் தவத்வாத் பராத்து தச் ஸ்ருதி இத்ய நந்த ரோக்தம் ச ந விருத்யதே

ஏவம் ப்ரகாஸ சரீரவஜ் ஜீவாத்மநா மம்ஸத்வம் பராஸராதய ஸ்மரந்தி ச
ஏக தேச ஸ்திதஸ்ய அக்நேர் ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண ஸக்திஸ் ததேயமகிலம் ஜகத்
யத் கிம்சித் ஸ்ருஜ்யதே யேந சத்த்வ ஜாதேந வை த்விஜ
தஸ்ய ஸ்ருஜயஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரேஸ்தநு
தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோரம்ஸ ஸமுத்பவா இதி

அந்யதா பாரமார்த்திகா பாரமாத்திகோபாதி சமாஸ்ரயணேந ப்ரத்யகாத்மநோ அஸம்த்வே ப்ரஹ்மண ஏவ வேதாந்த நிவர்த்யா ஸர்வே தோஷா பவேயுரிதி ஆபாசா ஏவ ச இத்யாதி ஸூத்ரைருக்தம் -அதஸ் ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா ததாத்ம பூதமேவ ப்ரஹ்ம கதாசித விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் காரண அவஸ்தம் கதாசிச் ச விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் கார்ய அவஸ்தம் ப்ரஹ்ம -ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா தத் விஸிஷ்டத்வேத்மபி ப்ரஹ்மண பரிணாமித்வா புருஷார்த்த ஆஸ்ரயத்வே சரீர பூத சேதன அசேதன வஸ்து கதே ஆத்ம பூதம் ப்ரஹ்ம ஸர்வதா நிரஸ்த நிகில தோஷ கந்த அநவதிக அதிசய அஸங்க்யேய ஞான ஆனந்தாத் யபரிமித உதார குண சாகரம் அதிஷ்டத இதி ப்ரஹ் மைவ ஜகன் நிமித்தம் உபாதாநம் சேதி யதோ வா இமாநி இத்யாதி வாக்யம் ப்ரதிபாதயத்யேவேதி ஜந்மாத் யஸ்ய யத தத் ப்ரஹ்மேதி ஸூஷ்டூக்தம்

ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யஸ்ய சாயமர்த -யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய அவ்யக்தம் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதே -ப்ரஹ்மண ஸர்வதா சித் அசித் வஸ்து சரீரகத்வாத் சதேவேதமீதாநீம் ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கத்வேந விபக்த நாம ரூபம் அக்ரே ப்ரலய காலே ஸூஷ்ம தஸா பன்ன சித் அசித் வஸ்து சரீரகதயா நாம ரூப விபாக அநர்ஹாமேவ ஆஸீத் -ஸ்வயமேவ ப்ரஹ்ம ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி நிமித்தாந்தராநபேஷமத்விதீயம் சாதிஷ்டத்

ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி தன்நாம ரூப விபாகாநர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரகதயா ஏகமேவாவஸ்திதம் நாம ரூப விபாகார்ஹா ஸ்தூல தசாபத்த்யா பஹு ப்ரகாரம் ஸ்யாமிதி ஐக்ஷத –ஸ்யாம் ப்ரஜாயேய இதி வ்யஷ்டி சமஷ்டி வ்யபதேஸ –சித் அசிதோ பரஸ்ய ச ப்ரலய காலே அபி வ்யவஹாரா நர்ஹா ஸூஷ்ம பேத ஸர்வைர் வேதாந்தி ப்ரப்யுபகத அவித்யா க்ருத பேதஸ்ய உபாதி க்ருத பேதஸ்ய ச அநாதி த்வாப் யுபகமாத் இயாம்ஸ்து விசேஷ -ப்ரஹ்மைவாஜ்ஞம் உபாதை ஸம்பத்தம் சேதி ஸர்வ ஸ்ருதி ந்யாய விராதோ அந்யேஷாம் –ததபாவாத விரோதஸ் ச அஸ்மாகம் இதி —2-இதி ஜந்மாத் யதி கரணம் –2-க க உ –1-1-2-


உ -2- ஜந்மாத் யஸ்ய யத –
தைத்தரீயகே –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் ப்ரயந்த் யபி ஸம் விஸந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இத்யேதத் வாக்யம் விஷய
கிமேதஜ் ஜிஜ்ஞாஸ்ய தயா ப்ரதிஞ்ஞாதம் ப்ரஹ்ம ஜகஜ் ஜன்மாதி காரண தயா லக்ஷண தஸ் ப்ரதிபாத யிதும் சக்நோதி ந வேதி ஸம்சய -ந சக்நோ தீதி பூர்வ பக்ஷ —
குத -ஜகஜ் ஜன்மாதீநாம் உப லக்ஷண தயா விசேஷணதயா வா ப்ரஹ்ம லக்ஷணத்வா சம்பவாத்
உப லக்ஷணத்வே ஹ்யுபலஷ்யஸ் யாகாராந்தர யோகோ அபேக்ஷித -ந சேஹ ததஸ்தி அத உப லக்ஷணத்வம் ந சம்பவதி விசேஷணத்வே அபி அநேக விசேஷண விசிஷ்டதயா அபூர்வஸ்யை கஸ்ய ப்ரதிபாத கத்வம் ன் சம்பவதி விசேஷணாநாம் வ்யாவர்த்தகத்வேந விசேஷண பஹுத்வே ப்ரஹ்ம பஹுத்வ ப்ரஸக்தே
-ராத்தாந்தஸ்து ஏகஸ்மின் ந விருத்தா நாம் விசேஷணாநாம் அநேகத்வ அபி ஸ்யாமத்வ யுவத்வாதி விஸிஷ்ட –தேவ தத்தவஜ் ஜகஜ் ஜன்மாதி விசிஷ்டம் ப்ரஹ்மைக மேவ விசேஷ்யம் பவதி
உப லக்ஷணத்வே ஜன்மாதி பிருப லஷ்யஸ்ய ப்ரஹ்ம ஸப்தாவகத ப்ருஹத் த்வாத் யாகாராஸ் ச சந்தீதி ஜகஜ் ஜன்மாதி –காரணம் ப்ரஹ்மேதி லக்ஷணத ப்ரதிபாதயிதம் சக்நோ தீதி –ஸூத்ரார்த்த -அஸ்ய விவித விசித்ர போக்த்ரு போக்ய பூர்ணஸ்ய ஜகத யதோ ஜன்மாதி தத் ப்ரஹ்மேதி பிரதிபாதயிதும் சக்நோத்யே தத் வாக்யமிதி –உ–இதி ஜந்மாத் யதிகரணம் —

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வ அதி கரணம்
3 ஸாஸ்த்ர யோநித்வாத் –

ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விஸிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதாநத்வம் நிமிதத்வம் ச நாநுமாந கம்யமிதி ஸாஸ்த்ர ஏக ப்ராமாணகத் வாத்தஸ்ய யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயத்யேவேதி ஸித்தம் –3-இதி ஸாஸ்த்ர யோநித்வதி கரணம்

1-1-3- -ஸாஸ்த்ர யோநித்வாத்
யதோ வா இமாநி –இத்யாதி வாக்யமேவ விஷய
தத் கிம் ஜகாத் காரணே ப்ரஹ்மணி ப்ரமாணம் -உத நேதி ஸம்சய -நைதத் பிரமாணம் இதி பூர்வ பக்ஷ -அநுமான ஸித்த ப்ரஹ்ம விக்ஷயத்வாத்–பிரமாணாந்தரா விஷயே ஹி ஸாஸ்த்ரம் பிரமாணம் -ஜகதஸ் சாவ யத்வேந கார்யத்வாத் –கார்யஸ்ய ஸ்வ உபாதான உப கரண ஸம் ப்ரதான ப்ரயோஜனாத் யபிஜ்ஞ கர்த்ருகத்வாத் ஜகந் நிர்மாண கார்ய சதுர -கர்ம பரவஸ பரிமித ஸக்த்யாதி ஷேத்ரஞ்ஞ விலக்ஷணஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ ஸக்தஸ் ஸர்வேஸ்வர அநுமான ஸித்த இதி தஸ்மிந் யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் பிராமணம் இதி -ராத்தாந்தஸ்து -ஜகத கார்யத்வே -அப்யேகதைவைகேநைவ க்ருத்ஸ்னம் ஜகத் நிர்மித மித்யத்ர ப்ரமாணா பாவாத் -ஷேத்ரஞ்ஞாநா மேவ விலக்ஷண புண்யா நாம் ஞான ஸக்தி வைசித்ர்ய ஸம்பாவ நயா காதாசித் கஸ்ய சிஜ் ஜகத் ஏகதேச நிர்மாண ஸாமர்த்ய சம்பவாத் தததிரிக்த புருஷ அநுமானம் ந சம்பவதீதி ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மணஸ் தத் ப்ரதிபாதகத்வேந தஸ்மிந் -யதோ வா இமாநி பூதாநி –இத்யாதி வாக்கியம் -ப்ரமாணம் இதி —
ஸாஸ்த்ரம் யோநி -யஸ்ய காரணம் பிரமாணம் தத் ப்ரஹ்ம ஸாஸ்த்ர யோநி -பிரமாணாந்தர அவிஷயத்வேந ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மண தஸ்மிந் யதோ வா இமாநி இத்யாதி -வாக்யம் பிரமாணம் இதி ஸூத்ரார்த்த –3-இதி -ஸாஸ்த்ர யோநித்வாதி கரணம் –3

1-1-4-சமன்வய அதி கரணம்
4-தத் து சமன்வயாத் –

புருஷார்த தயா அந்வய ஸமன்வய சாஸ்த்ராக்ய ப்ரமாணஸ்ய புருஷார்த்த பர்யவசாயித்வே அபி ப்ரஹ்ம ஸ்வஸ்ய பரஸ்ய சாநுபவிது -அவிஸேஷேண ஸ்வரூபேண குணை விபூத்யா ச அநுபூயமாநம் அநவதிக அதிசய அநந்த ரூபமிதி புருஷார்தத்வேநாபி தேயதயா அந்வயாத் ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வ முபபந்ந தரமிதி நிரவத்யம் நிகில ஜகதேக காரணம் ப்ரஹ்ம வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுக்தம்-தஸ்யை கஸ்யை கதைவ க்ருத்ஸ்ன ஜகன் நிமித்தத்வம் தஸ்யைவோபாதாநதயா ஜகத் ஆத்மகத்வம் ச நாநுமாநாதி கம்யமிதி ஸாஸ்த்ரக பிரமாண கத்வாத் தஸ்ய ச அநவதிக அதிசய அநந்த ரூப தயா பரம புருஷார்தத்வாத் வேதாந்தா ப்ரதிபாத யந்த்யேவ இதி ஸ்திரீக்ருதம் –-4-இதி ஸமன்வய அதி கரணம் –4-

4- தத் து சமன்வயாத் 
ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி நேதி விசார்யதே –ந ஸம்பவ தீதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரவ்ருத்தி நிவ்ருத்த் யன்வய விரஹிணோ ப்ரஹ்மணி ஸ்வரூபேணா புருஷார் தத்வாத் புருஷார்த்த அவ போதகத்வேந ச ஸாஸ்த்ரஸ்ய ப்ராமாண்யாத்-மோக்ஷ சாதன ப்ரஹ்ம த்யான விதி பரத்வே அபி அஸத்யபி ப்ரஹ்மணி தத் த்யான விதாந சம்பவாத் ந ப்ரஹ்ம ஸத்பாவே தாத்பர்யமிதி ப்ரஹ்மண -ஸாஸ்த்ர ப்ரமாணகத்வம் ந சம்பவதி
ராத்தாந்தஸ்து அதிசயித குண பித்ரு புத்ராதி ஜீவனஜ் ஞானவத் அநவதிக அதிசய அநந்த ஸ்வரூப ப்ரஹ்ம ஞானஸ்ய நிரதிசய புருஷார் தத்வாத் தஸ்ய ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி -ஆனந்தோ ப்ரஹ்ம -யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இத்யாதிபிர் அநவதிக அதிசய அநந்தஸ்வரூபம் ப்ரஹ்மேதி ஹி ப்ரதிபாத்யதே –
அதோ ப்ரஹ்ம ஸ்வேந பரேண வா அப் யநுபூயமாநம் நிரதிசய அனந்த ஸ்வரூப மேதி தத் ப்ரதிபாதன பரஸ்யைவ ஸாஷாத் புருஷார்த்த அன்வய -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரஸ்ய து தத் ஸாத்ய பல சம்பந்தாத் புருஷார்த்த அந்வய இதி
ஸூத்ரார்த்த -து ஸப்த ப்ரஸக்தா சங்கா நிவ்ருத்யர்த்த –தத் பூர்வ ஸூத்ர உதிதம் ப்ரஹ்மண ஸாஸ்த்ர யோநித்வம் சமன்வயாத் ஸித்த்யதி –ஸம்யக் புருஷார்த்த தயா அந்வய ஸமன்வய -வேதி துர் நிரதிசய அநந்த ஸ்வரூபத்வேந பரம புருஷார்த்த ரூபே பரே ப்ரஹ்மணி வேதகதயா ஸாஸ்த்ரஸ்ய அந்வயாத் ப்ரஹ்மண ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சித்த்யத்யே வேதி —4- இதி சமன்வய அதிகரணம் -4-

———–

அத பரம் பாத ஸேஷேண ஜகத் காரண தயா ப்ரதான புருஷ ப்ரதிபாதநா நர்ஹாதயா ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரஸ்தாவித்யாதி -ஸமஸ்த தோஷ கந்தமபரிமிதோதார குண சாஹரம் ப்ரஹ்மைவ வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுச்யதே –தத்ர தாவத் ப்ரதாநம் வேதாந்த பிரதிபாதநா நர்ஹாமித்யாஹ

1-1-5-ஈஷத் யதி கரணம்
5- ஈஷதேர் நா ஸப்தம்
 –அஸப்தம் ஆநு மாநிகம் ப்ரதாநம் ந தத் வேதாந்த வேத்யம் –குத –ஈஷதே –ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் இதி ப்ரஸ்துத ஜகத் காரண வ்யாபாரவாசிந –ஈஷதேர்தாதோ ஸ்ரவணாத் ததைஷத பஹு ஸ்யாம் இதி –5-

1-1-5-ஈஷத் அதிகரணம்
5-ஈஷதேர் நா ஸப்தம்

யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி -ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் விஷய
தத் கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் –உத அநவதிக அதிசய அநந்தம் ப்ரஹமேதி ஸம்சய –ப்ரதானமிதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அன்வயேநாநுமாநாகார வாக்ய வேத்யத்வாத் –
யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதிநா -ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாநம் ப்ரதிஞ்ஞாய -யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இதி த்ருஷ்டாந்தேந ஹ்யுபபாத்யதே -ஏவம் அநு மானிகம் ஏவ ஏதத் வாக்ய வேத்யமிதி நிஸ் சீயதே –
ஸதேவ சோம்யேதம் இதி சச்சப்த ப்ரதான விஷய -ததைஷத பஹுஸ்யாம் இதி ச கௌணம் ஈஷணம் பவிதுமர் ஹாதி தத்தேஜ ஐஷத -இத்யாதி கௌணேக்ஷண ஸாஹசர்யாச் ச -ராத்தாந்தஸ்து –ததைக்ஷத பஹுஸ்யாம் இதி பஹு பவந ஸங்கல்ப ரூபேக்ஷண அந்வயாத் -ஸதேவ சோம்ய இதி காரண வாசி ஸச் ஸப்த விஷயோ நா சேதநம் ப்ரதாநம் -அபி து ஸார்வஜ்ஞய ஸத்ய சங்கல்பாதி யுக்தம் பர ப்ரஹ்மை வேதி நிஸ் சீயதே -ந ச அநு மானாகார மேதத் வாக்யம் ஹேதுத்வநு பாதாநாத்
அந்ய ஞாநேநாந்யஜ் ஞாநா ஸம்பவ பரிஜிஹீர்க்ஷயா து த்ருஷ்டாந்த உப பாதாநாம் –ந ச முக்யேக்ஷண சம்பவே கௌண பரிக்ரஹ ஸம்பவ –தேஜஸ் ப்ரப்ருதி சரீரகஸ் யாந்தர் யாமிணோ வாசகத்வாதிதி பரமேவ ப்ரஹ்ம ஜகத் காரண வாதி வேதாந்த வேத்யம் –இதை –
ஸூத்ரார்த்தஸ் ச –ஈஷதேரிதி ஈஷதிதாத்வர்தஸ் ஈஷணம் –ஸப்த ப்ரமாணம் யஸ்ய ந பவதி தத ஸப்தம் -பரோக்தமாநுமாநிகம் ப்ரதாநம் –
ஸதேவ சோம்யேதம் இதி ஜகத் காரண தயா ப்ரதிபாதித அந்வயிந ஈஷண வ்யாபாராந்நா சேதனம ஸப்தம் தத் அபி து ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் ப்ரஹ்மைவ ஜகத்காரணமிதி நிஸ் சீயதே –இதி –5-

6-கௌணஸ் சேந்நாத்ம ஸப்தாத் —
தத் தேஜ ஐஷத இத்யாதிஷ்வ சேதநே அபி வஸ்துநி ஈஷதிஸ் ஸ்ரூயதே தத்ர கௌண =ஏவமத்ராபி ப்ரதான ஏவேக்ஷதிர் கௌண இதி சேத் நைததுப பத்யதே ப்ரஸ்துதே ஸச் ஸப்த வாஸ்யே ஸ்ரூயமாணாச் சேதன வாசிந ஆத்ம ஸப்தாத் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேத கேதோ இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே -தேஜ ப்ரப்ருதிஷ்வபி ந கௌணமீ க்ஷணம் –தேஜ ப்ரப்ருதி ஸப்தைரபி தத் தச் சரீரகம் ப்ரஹ்மைவாபி தீயதே அநேந ஜீவேநாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ப்ரஹ்மாத்மக ஜீவ அநு பிரவேசா தேவ ஸர்வஸ்ய வஸ்துநோ நாம ரூப பாக்த்வாத் –தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய-ஸச் சத்யாச்சாபவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச –விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச –ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமபவத் இதி சேதனமசேதநம் ச ப்ருதங் நிர்திஸ்ய ததுபயமநு ப்ரவிஸ்ய சத்யச் ஸப்த வாஸ்யோ அபவதிதி ஹி ஸமாந ப்ரகரணே ஸ்பஷ்டமபிஹிதம்

6-கௌணஸ் சேந் நாத்ம ஸப்தாத்
தத்தேஜ ஐக்ஷத -இத்ய சேதனகத கௌணேக்ஷண சாஹசர்யாத் -ததைக்ஷத இத்யர்த ஈஷதிர் கௌண இதி சேந்ந ஆத்ம சப்தாத் –
ஸச் ஸப்தாபிஹிதே ஈஷிதரி ஐ ததாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா இதி ஸ்ரூயமாணாச் சேதன வாசிந –
ஆத்ம ஸப்தாதயமீக்ஷதிர் முக்ய ஏவேதி ப்ரதீயதே –ஐததாத்ம்யமிதம் ஸர்வம் இதி தேஜ ப்ரப்ருதீ நாமபி ததாத்மகத்வாவகமாத் தேஜ ப்ரப்ருதீ ஷணமபி முக்யமே வேத்யபி ப்ராய –6-

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேஸாத் –இதஸ் ச ப்ரதாநாதர் தாந்தர பூதம் ப்ரதாநாதர் தாந்தர பூதம் ஸச் ஸப்தாபி ஹிதம் ஜகத் காரணம் -ஸச் ஸப்தாபிஹித தத்த்வ நிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத் –தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஹி தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதிஸ்யதே -ப்ரதான காரணவாதி நாமபி ஹி ப்ரதான நிஷ்டஸ்ய மோஷோநாபிமத-7-

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத்
இதஸ் ச ஸச் ஸப்தாபி ஹிதம் ந ப்ரதாநம் அபி து பரமேவ ப்ரஹ்ம –தத்த்வமஸி இதி ஸதாத்மகதயா ப்ரத்யகாத்ம அநு ஸந்தான நிஷ்டஸ்ய தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யே அத ஸம்பத்ஸ்ய இதி மோக்ஷ உப தேசாத் தத் காரணம் பரமேவ ப்ரஹ்ம -7-

8-ஹேயத்வா வசநாச் ச –யதி ப்ரதானமத்ர விவஷிதம் ததா தஸ்ய ஹேயத்வாத் அத்யேயத்வமுச்யேத ந த்துச்யதே -மோக்ஷ சாதநதயா த்யேயத்வமே வாத்ரோச்யதே தத்த்வமஸி ஸ்வேத கேதோ இத்யாதிநா –8-

8-ஹேயத்வா வசநாச் ச —
யதி ப்ரதாநம் இஹ காரண தயா விவஷிதம் ததா தஸ்ய மோக்ஷ விரோதித்வாத்தே யத்வம் உச்யதே -ந சோஸ்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் –8-

இதஸ் ச ந ப்ரதாநம்
9-ப்ரதிஜ்ஞா விரோதாத் —

ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா விரோதாத் -ஸச் ஸப்த வாஸ்ய தத்த்வ ஞாநேந தத் கார்ய தயா சேதன அசேதன ஸர்வ வஸ்து ஞானம் யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி நா ப்ரதிஞ்ஞாதம் தத்தி ப்ரதான காரண வாதே விருத்யதே-சேதநஸ்ய ப்ரதான கார்யத்வாபாவாத் -ப்ரதாநாதர்தாந்தர பூத ப்ரஹ்ம காரண வாதே சித் அசித் வஸ்து சரீரம் ப்ரஹைவ நாம ரூப விபாகா விபாகாப்யாம் கார்யம் காரணம் சேதி ப்ரஹ்ம ஞாநேந க்ருத்ஸ்நஸ்ய ஞாததோப பத்யதே –9-

9-ப்ரதிஞ்ஞா விரோதாத்
ப்ரதான வாதே ப்ரதிஞ்ஞா ச விருத்யதே யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி வஹ்யமாண காரண விஞ்ஞாநேந சேதன அசேதன மிஸ்ர க்ருத்ஸ்ன ப்ரபஞ்ச ஞானம் ஹி ப்ரதி ஞாதம் -சேதன அம்சம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் தஜ் ஞாநேந சேதன அம்சோ ந ஞாயத இதி ந ப்ரதாநம் காரணம் -9-

இதஸ் ச ந பிரதானம்
10-ஸ்வாப்யயாத் –
-ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய விஜாநீஹி இதி –யத்ரை தத் புருஷஸ் ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி -ஸ்வம பீதோ பவதி தஸ்மாதேநம் ஸ்வபிதீத்யாசக்ஷதே -ஸ்வம் ஹ்யபீதோ பவதிஇதி ஜீவஸ்ய சேதனஸ்ய ஸூஷுப்தஸ்ய ஸதா சம்பந்நஸ்ய ஸ்வாப்யவசநாத் ப்ரதாநாதர்தாந்தர பூதம் ஸச் ஸப்த வாஸ்யமிதி விஞ்ஞாயதே –ஸ்வம பீதோ பவதி–ஆத்மாந மேவ ஜீவோ அபீதோ பவதீத்யர்தா -சித் வஸ்து சரீரகம் ததாத்ம பூதம் ப்ரஹ்மைவ ஜீவ சப்தேநாபி தீயத இதி நாம ரூப வ்யாகரண ஸ்ருத் யுக்தம் -தஜ் ஜீவ சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ ஸூஷுப்தி காலே அபி ப்ரலய கால இவ நாம ரூப பரிஷ்வங்காபாவாத் கேவல ஸச் சப்தாபிதேயமிதி ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வமபீதோ பவதி இத்யுச்யதே –ததாஸமாந ப்ரகரணே நாம ரூப பரிஷ்வங்காபாவேந ப்ராஜ்ஜேநைவ பரிஷ்வங்காத் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் இத்யுச்யதே -ஆமோஷாஜ் ஜீவஸ்ய நாம ரூப பரிஷ்வங்கதேவ ஹி ஸ்வ வ்யதிரிக்த விஷய ஞான உதய –ஸூஷுப்தி காலே ஹி நாம ரூபே விஹாய ஸதா ஸம் பரிஷ் வக்த -புநரபி ஜாகரதஸாயாம் நாம ரூபே பரிஷ் வஜ்ய தத் தன்நாம ரூபோ பவதீதி ஸ்ருத் யந்தரே ஸ்பஷ்டமபிதீயதே யதா ஸூ ப்த ஸ்வப்நம் ந கதஞ்சன பஸ்யதி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி -ஏதஸ்மாதாத்மந ப்ராணா யதாயதநம் விப்ரதிஷ்டந்தே ததா த இஹ வ்யாக்ரோ வா ஸிம்ஹோ வா வ்ருகோ வா வராஹோ வா யத் யத் பவந்தி இதி –10-

10-ஸ்வாப்யயாத்
ஸ்வம் அபீதோ பவதி -ஸதா சோம்ய ததா ஸம்பந்நோ பவதி இதி ஜீவஸ்ய ஸூஷுப் தஸ்ய ஸ்வாப்யயஸ் ஸ்ரூயதே -ஸ்வ காரணே ஹ்யப் யய ஸ்வாப்யய–ஜீவம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் ஸ்வாப்யய ஸ்ருதி விருத்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் அபி து ப்ரஹ்மைவ –10-

11-கதி சாமான்யாத் –ஸகல உபநிஷத் கதி ஸாமாந்யாதஸ் யாமப் யுப நிஷதி ந ப்ரதாநம் காரணமிதி ஞாயதே ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் ஸ ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி ஸ இமால் லோகாநஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்ஸிஜ் ஜநிதா ந சாதிப இத்யாதி ஸகல உப நிஷத்ஸூ ஸர்வேஸ்வர ஏவ ஹி ஜகத் காரணமிதி ப்ரதி பாத்யதே –11-

11-கதி சாமான்யாத்
இதர உப நிஷத் கதி சாமான்யா தஸ்யாம் சோபநிஷதி ந ப்ரதாநம் காரணம் விவஷிதம்
இதராஸூ சோபநிஷத்ஸூ -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித்–தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச ஸ காரணம் கரணாதிபாதிப ஆத்மநி கல்வரே விதிதே ஸர்வமிதம் விதிதம் -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய விஸ்வ ஸிதமேதத்யத்ருக்வேத புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் தஸ்மாத் விராட ஜாயத ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத்
ஸ இமான் லோகந ஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் =ஸ ஏகாகீ ந ரமேத இதி ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஏவ காரணதயா ப்ரதிபாத்யதே -அஸ்யாஸ் ச தத் கதி சாமான்யா தத்ராபி ஸ ஏவ காரண தயா ப்ரதிபாதன மர்ஹா தீதி ந ப்ரதாநம் –11–

12-ஸ்ருதத்வாச் ச –ஸ்ருதமேவ ஹ்யஸ்யாம் உப நிஷதி -ஆத்மத ப்ராண –ஆத்மந ஆகாஸ இத்யாதவ் ஆத்மந ஏவ ஸர்வ உத்பத்தி -அத ப்ரதாநாத சேதநாதர்தாந்தர பூதஸ் ஸர்வஞ்ஞ-புருஷோத்தம ஏவ ஜகத் காரணம் ப்ரஹ்மேதி ஸ்திதம் —12-இதி ஈஷத் யதி கரணம் –5-

12-ஸ்ருதத் வாஸ் ச
ஸ்ருதமே வாஸ்யாம் உப நிஷதி ஆத்மத ஏவேதம் ஸர்வம் இதி -அதஸ் ச ஸதேவ சோம்ய இத்யாதி ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் ந ப்ரதாநம் -ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் பரம் ஏவ ப்ரஹ்ம இதி ஸ்திதம் —இதி -ஈஷத் யதிகரணம் –5-

—————–

1-1-6-ஆனந்த மய அதி கரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸாத் 
–யத்யபி ப்ரதாநாதர்தாந்தர பூதஸ்ய ப்ரத்யகாத்மநஸ் சேதநஸ்ய ஈஷண குண யோக ஸம்பவதி ததா அபி ப்ரத்யகாத்மா பத்தோ முக்தஸ் ச ந ஜகத் காரணம் -தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாராப்ய தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யஸ்ய ஆனந்த மயத்வ ப்ரதி பாதநாத் காரண தயா வ்யபதிஷ்டோ அயம் ஆனந்த மய ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -குத அப்யாஸாத் ஆனந்த மயஸ்ய நிரதிசய தயா ஸிரஸ்காநந்த மயத்வேநாப்யாஸாத் தே யே சதம் ப்ரஜாபதேர் ஆனந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த யதோ வாஸோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ் சந இதி ஹி வேத்யத்வேநாயமாநந்த மயோ அநவதிக அதிசயோ அப் யஸ்யயதே –13-

1-1-6- ஆனந்த மய அதிகரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸத்

தைத்திரீயகே –தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இதி -ப்ரக்ருத்ய தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யத்ர ஜகத் காரண தயா அவகத -ஆனந்தமய -கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாதமேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ -குத -தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா இத் யாநந்த மயஸ்ய சாரீரத்வ ஸ்ரவணாத் –ஸாரீரோ ஹி சரீர சம்பந்தீ -ச ச ப்ரத்யகாத்ம ஏவ -தஸ்ய சேதநத்வேநேஷா பூர்விகா ஸ்ருஷ்டி ரூப பத்யத இதி -ராத்தாந்தஸ்து -ஸ ஏஷ ஆனந்தஸ்ய மீமாம்ஸா பவதி இத்யாராப்ய-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இதி நிரதிசய தஸா சிரஸ்கோ அப்யஸ்யமாந ஆனந்த ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய பரஸ்யைவ ப்ரஹ்மண இதி நிஸ் சீயதே -சாரீராத்மத்வம் ச பரமாத்மந ஏவ தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாகாஸாதி ஜகாத் காரண தயா அவகத ஏவான் நமயஸ்ய சாரீர ஆத்மேதி ப்ரதீயதே ஆத்மாந்தர நிர்தேசாத்
ஸ்ருத் யந்த்ரேஷு -ப்ருதிவ் யக்ஷராதீநாம் சரீரத்வம் பரமாத்மந ஆத்மத்வம் ச ஸ்ரூயதே யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாராப்ய-ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி
அன்னமயஸ் யாத்மைவ ப்ராண மயாதிஷு தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இத் யநுக்ருஷ்யத இதி ப்ரத்யகாத்மநோ விஞ்ஞான மயஸ்ய ச ஸ ஏவ சாரீர ஆத்மா -ஆனந்த மயே து தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இதி நிர்தேச -ஆனந்தமயஸ்யாநன்யாத்மத்வ ப்ரதர்சநார்த்த -அதோ ஜகத் காரண தயா நிர்திஷ்டம் ஆனந்தமய பரமாத்மைவேதி —
ஸூத்ரார்தஸ்து –ஆனந்த மய ஸப்த நிர் திஷ்ட ஆகாசாதி ஜகாத் காரணபூதஸ் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ் பரமாத்மா –
குத
தஸ் யாநந்தஸ்ய நிரதிசய ப்ரதீதி பலாத் -ஸ ஏகோ மாநுஷ ஆனந்த -தே யே சதம் இத்யாத் யப் யாஸாத் தஸ்ய ச ப்ரத்யகாத்மந்ய ஸம்பாவிதஸ்ய தததிரிக்தே பரமாத்மன்யேவ சம்பவாத் –13-

14-விகார ஸப்தாந்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஸ வா ஏஷ புருஷோ அந்நர ஸமய இதி விகாரார்த மயப் ப்ரகரணாத் ஆனந்த மய இத்யஸ்யாபி விகாரார்தத்வம் ப்ரதீயதே -அதோ அயம் ஆனந்த மய நா விகார ரூப பரமாத்மா இதி சேந்ந அர்த விரோதாத் பிராசுர்யார்த ஏவாயம் மயடிதி விஞ்ஞாயதே தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத இதி ஹ்ய விகார ஆத்மா ப்ரக்ருத –ப்ரகரணே ச விகாரார்தத்வம் ப்ராண மய ஏவ பரித்யக்தம் –உக்தேந ந்யாயேந ஆனந்த ப்ராசுர்யாத் பரம புருஷா ஏவாயமாநந்த மய –14-

14-விகார ஸப்தான்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஆனந்த மய -இதி விகாரார்த்தான் மயட் ஸப்தான்நாயம விக்ருத பரமாத்மா -அஸ்ய ச விகாரார்தத்வமேவ யுக்தம் அன்னமய இதி விகார உபக்ரமாதிதி சேந்ந-ப்ரத்யகாத்மநோ அபி ந ஜாயதே ம்ரியதே வா இத்யாதி விகார ப்ரதி ஷேதாத் ப்ராசுர்யார்த்த ஏவாயம் மயடிதி நிஸ்ஸயாத் -அஸ்மிம்ஸ் சா நந்தே யதோ வாசோ நிவர்த்தந்தே இத்யாதி வஹ்யமாணாத் பிராசர்யாதயமாநந்த ப்ரசுர பரமாத்மைவ -நஹ் யநவதிக அதிசய ரூப ப்ரபூதாநந்த ப்ரத்யகாத்மநி ஸம்பவதி –14-

15-தத் தேது வ்யபதேஸாச் ச –ஏஷ ஹ்யேவா நந்தயாதி இதி ஜீவான் ப்ரத்யா நந்த ஹேதுரயமா நந்தமயோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாயம் ந ப்ரத்யகாத்மா –15-

15-தத்தேது வ்யபதேசாச் ச -ஏஷ ஹ்யேவா ஆநந்தயாதி இதி ஜீவான் ப்ரதி ஆனந்த யித்ருத் வ்யபதேசாதயம் பரமாத்மைவ –15-

16-மாந்த்ர வர்ணிகமேவ ச கீயதே–ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதமேவ தஸ்மாத் வா ஏதஸ்மாத் இத்யாதி நா ஆனந்த மய இதி கீயதே –அதஸ் ச ந ப்ரத்யகாத்மா –16-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதம் ப்ரஹ்மைவ தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந இத்யாரப்ய ஆனந்தமய இதி ச கீயதே –ததஸ் சா ஆனந்த மயோ ப்ரஹ்ம -16-

17-நேதரோ அநுப பத்தே –இதர –ப்ரத்யகாத்மா மந்த்ர வர்ணோதித இதி நாசங்க நீயம் ஸோ அஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா இதி ப்ரத்யகாத்மநோ பத்தஸ்ய முக்தஸ்ய ச ஈத்ருஸ விபஸ்சித்த்வாநுப பத்தே –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி விசித்ர ஸ்திரத்ரஸ ரூப பஹு பவந ஸங்கல்ப ரூபமிதம் விபஸ்சித்த்வமிதி ஹ்யுத்தரத்ர வ்யஜ்யதே -முக்தஸ்ய ஸர்வஞ்ஞஸ்யாபி ஜகத் வ்யாபாராபாவாதீத்ருஸ –விபஸ்சித்த்வா ஸம்பவ –17–

ப்ரத்யகாத்மந பரி ஸூத்தம் ஸ்வரூபம் மந்த்ர வர்ணோதித மித்யா சங்க்யாஹ
17-நேதரோ அநுப பத்தே
 –பரஸ்மாத் ப்ரஹ்மண -இதர ப்ரத்யகாத்மா ந மந்த்ர வர்ணோதித -தஸ்ய விபஸ்சிதா ப்ரஹ்மணா இதி விபஸ்சித்வ அநுப பத்தே –விவிதம் பஸ்யச் சித்த்வம் ஹி விபஸ் சித்த்வம் தச்ச ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேய இத்யாதி வாக்யோதித நிருபாதிக பஹு பவந ஸங்கல்ப ரூபம் ஸர்வஞ்ஞத்வம்
தத்து ப்ரத்யகாத்மந பரி ஸூத்தஸ் யாபி ந சம்பவதி ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச இதி வஹ்ய மாணத்வாத் –அத பரம் ப்ரஹ்மைவ மாந்த்ர வர்ணிகம் –17-

இதஸ் ச
18-பேத வ்யபதேஸாச் ச
 –தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி ஹி விஞ்ஞாந மயாத் ப்ரத்யகாத்மநோ பேதே நாயமா நந்த மயோ வ்யபதிஸ்யதே –ந ச விஞ்ஞாந மய விஷய தயா உதாஹ்ருதஸ் லோகே விஞ்ஞானம் யஞ்ஞம் தநுதே இதி வ்யபதேஸாத் விஞ்ஞாந மயோ புத்தி மாத்ர மித்யா சங்க நீயம் -யதஸ் ஸூத்ரகார ஏவ இமாம் ஆசங்காம் பரி ஹரிஷ்யதி வ்யபதேசாச் ச க்ரியாயாம் ந சேந்நிர்தேஸ விபர்யயய இதி -விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே இதி யஜ்ஞாதி க்ரியாயாம் ஜீவஸ்ய கர்த்ருத்வ வ்யபதேஸாச் ச ஜீவ கர்தா –விஞ்ஞான சப்தேந ஜீவஸ்யா வ்யபதேஸே புத்தி மாத்ர வ்யபதேஸே ச விஞ்ஞாநேநேதி நிர்தேச விபர்யயஸ் ஸ்யாத் புத்தே கரணத்வாதிதி –18-

18-பேத வியபதேஸாஸ் ச –-பீஷாஸ்மாத் வாத பவதே இத்யாதிநா -அக்னி வாயு ஸூர்யாதி ஜீவ வர்கஸ்ய ஆனந்த மயாத் ப்ரஸாஸிது -ப்ரஸாஸி த்வயத்வேந பேதோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாநந்தமய பரமாத்மேதி –
யோஜனாந்தரம் -தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி விஞ்ஞாந மயாஜ் ஜீவாதா நந்த மயஸ்ய பேதோ வ்யபதிஸ்யதி –விஞ்ஞான மயோ ஹி ஜீவ ஏவ ந புத்தி மாத்ரம் -மயட் ச் சுருததே –அதஸ் சா நந்த மய பரமாத்மா –18-

இதஸ் ச
19-காமாச்ச நாநுமாநாபேஷா
 –ஸோ அகாமயத பஹுஸ்யாம் இதி ஸ்வ காமாதேவாஸ்ய ஜகத் ஸர்கஸ் ஸ்ரூயதே ப்ரத்யகாதமநோ ஹி யஸ்ய கஸ்ய சித் ஸர்கே ஆநு மாநாபேஷா த்ருஸ்யதே –அநு மாந காம்யம் ப்ரதாநம் ஆநு மாநம் –19-

19-காமாச் ச நாநுமாநாபேஷா –ஸோ அகாமயத இத்யாரப்ய இதம் ஸர்வமஸ்ருஜத இதி காமாதேவ ஜகத் ஸர்கஸ்ரவணாத் அஸ்ய ஆனந்த மயஸ்ய ஜகத் சர்கே நாநுமாந கம்ய ப்ரக்ருத்யபேஷா ப்ரதீயதே
ப்ரத்யகாத்மநோ யஸ்ய கஸ்ய சிதபி சர்கே ப்ரக்ருத் யபேஷாஸ்தி -அதஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அந்ய பரமாத்மா –19-

இதஸ் ச
20- அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி-
– அஸ்மின் ஆனந்த மயே அஸ்ய ப்ரத்யகாத்மந ஆனந்த யோகம் ஸாஸ்தி ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அத ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஜகத் காரண பூத ஆனந்த மய –20- இதி ஆனந்த மய அதி கரணம் –6-

20-அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி -ரஸோ வை ஸ -ரஸம் ஹ்யே வாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அஸ்மின் -ஆனந்த மயே ரஸ ஸப்த நிர்திஷ்டே அஸ்ய அயம் ஸப்த நிர்திஷ்டஸ்ய
ஜீவஸ்ய தல்லாபாதா நந்த யோகம் ஸாஸ்தி ஸாஸ்த்ரம் -ப்ரத்யகாத்மநோ பல்லாபாதா நந்த யோக -ஸ தஸ்மாதன்ய பரமாத்மை வேத்யா நந்த மய -பரம் ப்ரஹ்ம –20- இதி ஆனந்த மயாதிகரணம்–7-

————

1-1-7-அந்தராதிகரணம்
21-அந்தஸ் தத் தர்ம உபதேஸாத் –அயம்

ஜகத் காரண பூத விபஸ் சிதாநந்த மய கஸ்சிதுபசித புண்ய விஸேஷோ ஜீவ விஸேக்ஷ தேஹ யோகாத் விஞ்ஞாயதே நாயம் பரமாத்மேதி நா சங்க நீயம் -ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ இத்யாதவ் ஸ்ரூயமாண புருஷாகார பரமாத்மைவ –குத -தத் தர்ம உபதேஸாத் –ஸ ஏஷ ஸர்வேஷாம் லோகாநாமீஸ ஸர்வேஷாம் காமாநாம் தஸ்யோதிதி நாம ஸ ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உசித இதி நிருபாதிக ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வம் ஸ்வத ஏவா கர்மவஸ்யத்வம் ச ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய ஹி பரம புருஷஸ் யைவ தர்ம வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு த்ரி குணாத் மக ப்ரக்ருத்யநந்தர் கத அப்ராக்ருதஸ்வ அசாதாரண ரூப வத்த்வம் ச ஞானாதி குணவத்த்ஸ்யைவ ஹி ஸ்ரூயதே
ஞானாதயோ அபி -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச இத்யாதிஷு ஸ்ருதத்வாத் தஸ்ய குணா விஞ்ஞா யந்தே –ததா ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு அப்ராக்ருத ஸ்வ அசாதாரண ரூப ஸ்ரவணாத் தத்வத்தா ச விஞ்ஞாயதே -ததே தத் வாக்யகாரஸ் சாஹ -ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே இதை ப்ராஞ்ஞஸ் ஸர்வ அந்தரஸ் ஸ்யாத் லோக காமேஸோபதேஸாத் ததோதயாத் பாப்மநாம் இத்யுக்த்வா-தத் ரூபஸ்ய கார்யத்வம் மாயா மயத்வம் வேதி விசார்ய ஸ்யாத்ரூபம் க்ருதகமநுக்ர ஹார்தம் தச்சேத ஸாமைஸ் வர்யாத் இதி நிரஸ நீயம் மதமுபந்யஸ்ய ரூபம் வாதீந்த்ரியம் அந்தக்கரண ப்ரத்யக்ஷ நிர்தேசாத் இதி –வ்யாக்யாதம் ச த்ரமிடா சார்யை ந வா மாயா மாத்ரம் அஞ்ஞஸைவ விஸ்வஸ்ருஜோ ரூபம் தத்து ந சஷுஷா க்ராஹ்யம் மநஸா த்வ கலுஷேண சாதனாந்தர வதா க்ருஹ்யதே –ந சஷுஷா க்ருஹ்யதே நாபி வாஸா மநஸா து விஸூத்தேந இதி ஸ்ருதே –ந ஹ்யரூபாயா தேவ தாயா ரூபமுபதிஸ்யதே –யதா பூதவாதி ஹி ஸாஸ்த்ரம் –யதா மாஹார ஜனம் வாஸ –வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் இதி ப்ரகாரணாந்தர நிர்தேசாத் இதி -ஸாஷிண இதி ஹிரண்மய இதி ரூப ஸாமான்யாச் சந்த்ர முகவத் இதி ச வாக்யம் –தச்ச வ்யாக்யாதம் தைரேவ –ந மயடத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே அநாரப் யத்வாதாத்மந இத்யாதிநா –அத ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் சார்தாந்தர பூதோ நிருபாதிக விபஸ்சித் அநவதிக அதிஸய அநந்தோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்ய ரூப புருஷோத்தம பரம் ப்ரஹ்ம ஜகத் காரமும் இதி வேதாந்தை ப்ரதிபாத்யத இதி நிரவத்யம் –21-

1-1-7-அந்தராதிகரணம்
20-அந்தஸ் தத் தர்ம உபதேசாத் –சாந்தோக்யே ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே இத்யஷ் யாதித்யாதாரதயா ஸ்ரூயமாண புருஷ
கிம் ஜீவ விசேஷ உத பரம புருஷ இதி ஸம்சய–ஜீவ விசேஷ இதி பூர்வ பக்ஷ
குத -ஸ சரீரித் வாத் -சரீர ஸம் யோகோ ஹி கர்ம வஸ்யஸ்ய ஜீவஸ்ய ஸ்வ கர்ம பல போகாயேதி -ராத்தாந்தஸ்து –ஸ ஏஷ ஸர்வேப்ய பாப்மப்ய உதித இத்யாதிநா அபஹத பாப்மத்வ பூர்வக ஸர்வ லோக காமே ஸத்வ உபதேசாத் -தேஷாம் ச ஜீவேஷ்வ சம்பவாத் அயமஹ்யாதித் யாதார புருஷோத்தம ஏவ -ஸ்வ அசாதாரண விலக்ஷண ரூப வத்த்வம் ச ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண வத்தஸ்ய சம்பவதி -ஸ்ரூயதே ச தத் ரூபஸ்ய அப்ராக்ருதவம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் து பாரே இத்யாதவ் –ஸூத்ரார்தஸ்து –ஆதித்யாத் யந்தஸ் ஸ்ரூயமாண புருஷ பரம் ப்ரஹ்ம –தத் அசாதாரண அபஹத பாப்மத்வாதி தர்ம உபதேசாத் –21–

22-பேத வ்யபதேஸாச் சாந்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தரோ யமாதித்யோ ந வேத யஸ்ய யாதித்யஸ் ஸரீரம் ய ஆதித்ய மந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர் யாம் யம்ருத இத்யதி தைவதம் யஸ் சஷுஷி திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் இத்யத் யாத்மம் -யஸ் ஸர்வேஷு லோகேஷு திஷ்டன் நித்யதி லோகம் யஸ் ஸர்வேஷு பூதேஷு திஷ்டன் நித்யதி பூதம் யஸ் ஸர்வேஷு வேதேஷு திஷ்டன் நித்யதி வேதம் யஸ் ஸர்வேஷு யஜ்ஜேஷு திஷ்டன் நித்யதி யஜ்ஞம் இத் யந்தர்யாமி ப்ராஹ்மணே ஸூபாலோப நிஷதி ச ய பிருத்வீ மந்தரே ஸஞ்சரன் இத்யாரப்ய யோ அவ்யக்தம் அந்தரே ஸஞ்சரன் யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரன் யோ ம்ருத்யும் அந்தரே ஸஞ்சரன் யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் யம் ம்ருத்யுர் ந வேத ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி ஸர்வே தேவ ஸர்வ லோக ஸர்வ பூத ஸர்வ வேத ஸர்வஞ்ஞ ஸர்வாத்மோ பரிவர்தமாந தயா தத் தச் சரீர தயா தத் தத் அந்தராத்ம தயா தத் ததவேத்ய தயா தத் தன் நியந்த்ருதயா சைப்யஸ் சர்வேப்ய பேத வ்யபதேஸாச் சாயம் அபஹத பாப்மா நாராயண ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ்சார் தாந்தர பூதோ நிகில ஜகதேக காரணமித்தி ஸித்தம் –22-

22-பேத வியபதேசாச் சான்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தர –ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தர –இத்யாதிபிர் -ஜீவாத் பேத வியபதேசாச் சாயம் ஜீவா தன்ய பரமாத்மைவ –-22–இதி அந்தர் அதிகரணம் –

1-1-8-ஆகாஸ அதி கரணம்
1-1-9-ப்ராண அதி கரணம்
23-ஆகாஸஸ் தல்லிங்காத்
24-அத ஏவ ப்ராண

ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ்தம் யந்தி ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ அபி ஸம் விஸந்தி ப்ராண மேவ அப்யுஜ்ஜிஹதே இத்யாதவ் –ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் இத்யாதிநா சாமாந்யேன நிர் திஷ்டஸ்ய ஜகத் காரணஸ்ய பூதாகாஸ ப்ராண ஸஹசாரி ஜீவ வாசி ஸப்தாப்யாம் விசேஷ நிர்ணய சங்காயாம் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்திஸ்யமாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் பூதாகாஸ ஜீவாப்யாமர் தாந்தர பூத பரம புருஷ ஏவாத்ர ஆகாஸ ப்ராண ஸப்த நிர்திஷ்ட இதி நிஸ்ஸீயதே –தத் ப்ரஸித்திஸ் து –பஹு பவந ரூபேக்ஷண அநவதிக அதிசய அநந்த ஜீவ அநந்த ஹேதுத்வ விஞ்ஞாந மய விலக்ஷணத்வ நிகில புவந பயாபய ஹேதுத்வ -ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வ ஸர்வ பாப்மோதயா ப்ராக்ருத -ஸ்வ அசாதாரண ரூப விஸிஷ்டஸ்ய ரவிகர விகஸித புண்டரீக நயனஸ்ய ஸர்வஞ்ஞஸ்ய ஸத்ய ஸங்கல்பஸ்ய கரணாதிபாதி பஸ்ய பரம புருஷஸ்யைவ நிகில ஜகத் ஏக காரணத்வாதிதி ஸ ஏவ ஆகாஸ ப்ராண ஸப்தாப்யாம் ஜகத் காரணத்வேநாபி தீயதே இதி நிர்ணயோ யுக்த ஏவ —23-24-ஆகாஸாதி கரணம் -ப்ராண அதிகரணம் ச –8-9-

1-1-8-ஆகாஸாதி கரணம்
23-ஆகாஸஸ் தல் லிங்காத்
 –சாந்தோக்ய –அஸ்ய லோகஸ்ய கா கதி இத்யாகாஸ இதி ஹோவாஸ ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ் தம் யந்தி இத்யத்ர ஆகாஸ ஸப்த -நிர்திஷ்டம் -ஜகத் காரணம் -கிம் ப்ரஸித்த ஆகாஸ –உத ஸமஸ்த சித் அசித் வாஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ஆகாஸ -இதி பூர்வ பக்ஷம் –குத
ஆகாஸ சப்தஸ்ய லோகே தத்ரைவ வ்யுத்பத்தே -யதோ வா இமாநி பூதாநி இத்யாதி ஸாமான்ய லக்ஷணஸ்ய ஸதாதி ஸப்தாநாம் அபி சாதாரணத்வேந ஆகாஸதேவ ஸமுத்பத்யந்தே இதி விஸேஷே பர்யவஸாநாத் -ஈஷா –க்ஷணா தயோ அப்யாகாச ஏவ ஜகத் காரணமிதி நிஸ்சிதே ஸதி கௌணா வர்ணநீயா இதி –ராத்தாந்தஸ்து -ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் சேஷா பூர்வகத்வாத் சித் அசித் வஸ்து விலக்ஷணம் ஸர்வஞ்ஞம் ப்ரஹ்ம ஆகாஸ ஸப்த நிர்திஷ்டமிதி
ஸூத்ரார்தஸ்து –ஆகாஸ ஸப்த நிர்திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ப்ரஸித்த வந் நிர்திஸ்ய மாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் —23-இதி ஆகாஸாதி கரணம் –1-1-8-

1-1-9-ப்ராண அதிகரணம்
24-அத ஏவ ப்ராண –சாந்தோக்ய -ப்ரஸ்தோதர்யா தேவதா ப்ரஸ்தாவமந்வாயதா இதி பிரஸ்துத்ய கதமா ஸா தேவதேதி –ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராணமேவாபி ஸம் விஸந்தி -ப்ராண மப்யுஜ் ஜிஹதே ஸைஷா தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தர இத்யத்ர நிகில ஜகத் காரண தயா ப்ராண ஸப்த நிர் திஷ்ட-கிம் ப்ரஸித்த பிராண உதோக்த லக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ப்ராண இதி பூர்வ பக்ஷ –
குத -ஸர்வஸ்ய ஜகத ப்ராணாயத்தஸ்திதி தர்சநாத் ச ஏவ நிகில் ஜகதேக காரண தயா நிர்தேச மர்ஹாதீதி –ராத்தாந்தஸ்து ஸிலா காஷ்டாதி ஷு அசேதநேஷு சேதன ஸ்வரூபேஷு ச ப்ராணாயத்த ஸ்தித்யபாவத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்த வன்னிர்தேசா தேவ ஹேதோ ப்ராண ஸப்த நிர் திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ஸூத்ரமபி வ்யாக்யாதம் —24-இதி ப்ராண அதிகரணம் –1-1-9-

1-1-10-ஜ்யோதிர் அதி கரணம்
25-ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் 
–அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வ தத்யதி தமஸ்மிந் நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஸர்வஸ்மாத் பரத்வேந நிர்திஸ்யமாந தயா ஸகல காரண பூதஜ்யோதிக்ஷ -கௌஷேய ஜ்யோதி ஷைக்யாபிதாநாத் ஸ்வ வாக்யே விரோதி லிங்கா தர்ச நாச்ச ப்ரஸித்தமேவ ஜ்யோதிர் ஜகத் காரணத்வேந ப்ரதிபாத்யத இதி ஸங்காயாம் யத்யபி ஸ்வ வாக்யே விரோதி லிங்கம் ந த்ருஸ்யதே –ததா அபி பூர்வஸ்மின் வாக்யே பாதோ அஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி ப்ரதிபாதி தஸ்ய ஸர்வ பூத சரணஸ்ய பரம புருஷஸ்யைவ த்யு சம்பந்தி தயா அத்ராபி ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸ ஏவ ஜ்யோதிஸ் சப்தேந ஸர்வஸ்மாத் பரத்வேந ஸகல காரண தயா அபீதீ யதே -அஸ்ய ச கௌஷேய ஜ்யோதிஷைக்யாபிதாநம் பலாயோபதிஸ் யத இதி ந கஸ்ஸித் விரோத –அகில ஜகதேக காரண பூத பரம புருஷோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்யோ வர்ணோ திவ்ய ரூபஸ் தமஸ பரஸ்தாத் வர்தத இதி தஸ்யைவ நிரதிசய தீப்தி யோகாத் ஜ்யோதிஸ் ஸப்தாபிதேயத்வம் விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு வாஸஸ் ச யுஜ்யதே –25-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம்
25-ஜ்யோதிஸ் சரண அபிதாநாத்
 –சாந்தோக்ய அத யத்த பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வதா ப்ருஷ்டேஷ்வ நுத்தமேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வத்யதிதமஸ்மிந்நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஜகத் காரணத்வ வ்யாப்த நிரதிசய தீப்தி யுக்த தயா ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம்
கிம் ப்ரசித்த ஆதித்யாதி ஜ்யோதி உத பரமேவ ப்ரஹ்மேதி ஸம்சய -ப்ரஸித்த ஜ்யோதிரிதி பூர்வ பக்ஷ –குத
இதம் வாவ தத்யதி தமஸ்மின் நந்த புருஷ ஜ்யோதி இதி கௌஷேய ஜ்யோதிஷா பிரஸித்தே நைக்யாவகமாத் ஸ்வ வாக்யே
தததிரிக்த பர ப்ரஹ்ம அசாதாரண லிங்கா தர்ச நாச்ச -ராத்தாந்தஸ்து -ப்ரஸித்த ஜ்யோதிஷோ அந்ய தேவ பரம் ப்ரஹ்மேஹ நிரதிசய தீப்தி யுக்தம் ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் –குத –
பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்ய த்யு சம்பந்தி தயா நிர் திஷ்டஸ் யைவ சதுஷ் பதோ ப்ரஹ்மண -அத யதத பரோ திவோ ஜ்யோதி இத்யத்ர ப்ரத்யபிஜ் ஞாநாத் –தச்ச பரமேவ ப்ரஹ்மேதி விஞ்ஞாதம் ஸர்வேஷாம் பூதா நாம் தஸ்ய பாதத்வேந வியபதேசாத்
ஏவம் பர ப்ரஹ்மத்வே நிஸ்சிதே கௌஷேய ஜ்யோதிக்ஷ ததாத்மகதவ அநு சந்தானம் பலயோபதிஸ் யத இதி ஞாயதே –
ஸூத்ரார்த்தஸ்து -ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் பரம் ப்ரஹ்ம அஸ்ய ஜ்யோதிஷ பூர்வ வாக்யே ஸர்வ பூத் பாதத்வம் –ஸர்வ பூத பாதத்வம் ச பரஸ்யைவ ப்ரஹ்மண உப பத்யதே –25-

26-சந்தோபிதா நாந்தேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத் ததா ஹி தர்சனம் –பூர்வத்ர காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர் யாக்யச் சாந்த பிரஸ்துத மிதி நாத்ர பரம புருஷாபிதாநமிதி சேத் நைதத் பரம புருஷஸ் யைவ காயத்ரீ ஸாத்ருஸ்யஸ்யாநு ஸந்தாநோபதேஸத்வாத் தஸ்ய சந்தோ மாத்ரஸ்ய ஸர்வ பூதாத்மகத்வாநுப பத்தேரேவேதி நிகம்யதே –அந்யத்ராபி ஹ்யன்யஸ்ய சந்தஸ் சாத்ருஸ்யாத் சந்தோ நிர்தேஸா த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே இத்யாரப்ய சைஷா விராட் இத்யாதவ் –26-

26–சந்தோ அபிதாந் நாந்நேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத்ததாஹி தர்சனம் —காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர்யாக்யச் சந்தஸ ப்ராக்ருதத்வாத் ஸர்வ பூத பாதத்வேந காயதர்யா ஏவாபிதா நான்ந ப்ரஹ்மேதி சேத் நைதத் –
ததா சேதோ அர்பண நிகமாத் –காயத்ரீ யதா பவதி ததா ப்ரஹ்மணி சேதோ அர்பணோபதேஸாத் -காயத்ரீ ஸாத்ருஸ்யம் சதுஷ் பாத்த்வம்
ப்ரஹ்மண்யநு ஸம்தேயமித் யுபதிஸ்யதே -காயத்ர்யாஸ் ஸர்வாத்மகத்வ அநுப பத்தேரித் யர்த –ததா ஹி தர்சனம் ததா ஹ்யன் யத்ராபி ப்ய சந்தஸ ஏவ சாத்ருஸ் யாச் சந்தஸ் சப்தே நாபிதாநம் த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே தச சம்பத்யந்த இத்யாரப்ய சைஷா விராடன்னாத் இதி –26-

27-பூதாதி பாத வ்யபதேஸாப பத்தேஸ் சைவம் –பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயைஸ் சதுஷ்பதேதி வ்யபதேஸஸ் ச பரம புருஷ காயத்ரீ ஸப்த நிர் திஷ்டே ஹ்யுப பத்யத இதி பூர்வோக்த ப்ரகார ஏவ சமஞ்ஜஸா–27-

27-பூதாதி பாத வ்யபதேசோப பத்தைஸ் சைவம்- பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயாநி நிர்திஸ்ய சைஷா சதுஷ்பதா இதி பூதாதீ நாம் -பாதத்வ வ்யபதேஸோ ப்ரஹ்மண்யேவோப பத்யத இதி ப்ரஹ்மைவ காயத்ரீ ஸப்த நிர் திஷ்ட மிதி கம்யதே–27

28-உபதேஸ பேதான்நேதி சேந்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பூர்வத்ர த்ரி பாதஸ்யாம்ருதம் திவி இதி பரம புருஷோ வ்யபதிஸ் யதே –அத்ர அத யதத பரோ திவ இதி பஞ்சம்யா நிர் திஷ்ட த்யு சம்பந்தி ஜ்யோதிரிதி ந ப்ரத்யபிஜ்ஜேதி சேத் நைதத் உபயஸ்மிந் நபி வ்யபதேஸே விரோதா பாவாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரதஸ் ஸ்யேந இதி வ்யபதேஸ –அத்ர திவ பரத்வமேவ உபயத்ர விவஷித மித்யர்த —28-இதி ஜ்யோதிர் அதி கரணம் –10-

28-உபதேஸ பேதான்நேதி சேன்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பாதோ அஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்யோதிதம் பரம் ப்ரஹ்மை வாஸ்து –ததாபி அத யதத பரோ திவோ ஜ்யோதி –இதி த்யு ஸம்பந்த மாத்ரேண நேஹ தத் ப்ரத்யபிஜ் ஞாயதே தத்ர ஸாத்ர சவ்ய உபதேச பிரகார பேதாத் தத்ர ஹி திவி இதி த்யா ஸப்தம்யா நிர் திஸ்யதே இஹ ச திவ பரோ ஜ்யோதி இதி பஞ்சம்யா ததோ ந ப்ரதி ஸந்தானமிதி சேந்ந உபயஸ்மிந்நபி வ்யபதேஸ உபரிஸ்திதி ரூபார்தைக் யேந ப்ரதிஸம்தாநா விரோதாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரத ஸ்யேந இதி —28-ஜ்யோதிர் அதிகரணம் –1-1-10-

1-1-11-இந்த்ர ப்ராண அதி கரணம்-29-ப்ராணஸ் ததாநுகமாத் –ஆத்ம நாம் ஹித தம ரூப மோக்ஷ சாதநோபாஸந கர்ம தயா ப்ரஞ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்ய ப்ராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமா யுரம்ருதமித் யுபாஸ்ஸ்வ இதி விதாநாத் ஸ ஏவ ஜகத் காரணம் -காரணோபாஸநம் ஹி மோக்ஷ ஸாதனம் –தஸ்ய தாவமேவ சிரம் யாவன்ன வி மோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஸ்ருதேரிதி நா சங்க நீயம் –ப்ராண ஸப்த ஸமாநாதி கரணேந்த்ர ஸப்த நிர் திஷ்டோ ஜீவா தர் தாந்தர பூத யுக்த லக்ஷண பரமாத்மைவ–குத ததா அநு கமாத் -பரமாத்ம அசாதாரணாநந்தாஜராம்ருதாதிஷ் வஸ்ய இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ்யாநுகமோ ஹி த்ருஸ்யதே ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்ம அஜரோ அம்ருத இதி –29-

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம்
29-ப்ராணஸ் ததாநுகமாத்
 –கௌஷீதகீ ப்ராஹ்மணே ப்ரதர்தந வித்யாயாம் த்வமேவ வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ப்ரதர்தந யுக்த இந்த்ர பிராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இத்யாஹா –அத்ர ஹிததம உபாஸன கர்மதயா நிர் திஷ்ட இந்த்ர ப்ராண ஸப்தாபிதேய
கிம் ஜீவ –உத பரமாத் மேதி ஸம்சய –ஜீவ இதி பூர்வ பக்ஷ -குத
இந்த்ர சப்தஸ்ய ஜீவ விஸேஷே ப்ரஸித்தே –ப்ராண ஸப்தஸ் யாபி தத் ஸமாநாதி கரணஸ்ய -ஸ ஏவார்த இதி தம் மாமாயு ரம்ருதம் இத் யுபாஸ்வ இதி தஸ்யைவ உபாஸ்யத்வ உப தேஸா திதி –ரத்தாந்தஸ்து
இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டம் ஜீவாதர் தாந்தர பூதம் பரம் ப்ரஹ்ம ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஞ்ஞாத்மா ஆனந்தோ அஜரோ அம்ருத இதீந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் யைவ ஜீவேஷ்வ ஸம்பாவித அனந்தத்வ அஜரத்வ அம்ருதத்வ ஸ்ரவணாத்
ஸூத்ரார்தஸ்து –உபாஸ்யதய உபதிஷ்டம் இந்த்ர ப்ராண ஸப்த அபிதேயம் பரம் ப்ரஹ்ம -ததேதி பிரகார வசன பர ப்ரஹ்ம ப்ரகார பூதேஷ்வா நந்தாதிஷு அஸ்ய அநுகமாத் –29-

30-ந வக்துராத்மோப தேஸாதிதி சேதத் யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மிந் –உபக்ரமே ஹி மாமேவ விஜாநீஹி இதி த்வாஷ்ட்ரவதாதிநா பிரஜ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்யோபதேஸாத் உப ஸம்ஹாரஸ் ததநு குணோ வர்ண நீய இதி சேத் நைதத் அத்யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மின் –அத்யாத்மம் -பரமாத்ம தர்ம பரமாத்ம தர்ம ஸம்பந்த -பஹு த்வமஸ் மிந்த்ர ஸப்தாபிதேயே
வாக்யோபக்ரம ப்ரப்ருத்யோப ஸம் ஹாராத்த்ருஸ்யதே –யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ஹித தமோபாஸநம் ப்ராரப்தம் –தச்ச ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி -நா ஸர்வஸ்ய காரயித்ருத்வம் –ஏவமேவைதா பூத மாத்ரா இத்யாரப்ய பரஜ்ஞா மாத்ரா ப்ராணேஷ்வர்பிதா இதி ஸர்வாதாரத்வம் ததா ஆனந்தாதயஸ் ச ஏஷ லோகாதிபதி இத்யாதிநா சர்வேஸ்வரத்வம் ச –30-

30-ந வக்துர் ஆத்ம உபதேஸாதிதி சேதத் ஆத்ம ஸம்பந்த பூமாஹ் யஸ்மிந் –நாயம் உபாஸ்ய பரமாத்மா மாமேவ விஜாநீஹி தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இதி ப்ரஞ்ஞாத ஜீவஸ் யேந்த்ரஸ்ய வக்துஸ் ஸ்வாத்மந உபாஸ்யத்வ உபதேசாத் உபக்ரமே ஜீவ பாவ நிஸ்சயே ஸத் யுப ஸம்ஹாரஸ்ய தத் அநு குணதயா நேயத்வாதிதி சேந்ந —
அத்யாத்ம ஸம்பந்த தஸ்ய பூமா பஹுத்வம்
ஜீவாதர் தாந்தர பூதாத்மா அசாதாரண தர்ம ஸம்பந்த பஹுத்வம் அஸ்மின் ப்ரகரணே உபக்ரம ப்ரப்ருத்யோப ஸம்ஹாராது பலப்யதே –உபக்ரமே தாவத் யம் த்வம் மனுஷ்யாய ஹிததமம் மன்யஸே இதி ஹ்யநே நோச்யமானம் உபாஸனம் பரமாத்ம உபாசன மேவ தஸ்யைவ ஹித தமத்வாத் ததா ஈஷா ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி ஸாத்வ ஸாது கர்மணோ காரயித்ருத்வம் பரமாத்மந ஏவ தர்ம தத்யதா ரதஸ்யா ரேஷு நேமி ரர்பிதா நாபாவரா அர்பிதா ஏவமேவைதா பூத மாத்ரா ப்ரஞ்ஞா மாத்ராஸ் வர்பிதா ப்ரஞ்ஞா மாத்ரா ப்ராணோ அர்பிதா இதி ஸர்வா தாரத்வம் ச தஸ்யைவ தர்ம ஆனந்தாத யஸ் ச ஏஷ லோகாதி பதிரேக்ஷ ஸர்வேச இதி ச ஹீதி ஹே தவ் அத பர ப்ரஹ்மை வாயமித் யர்த –30-

31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தூபதேஸே வாம தேவவத் –நாம ரூப வ்யாகரணாதி சாஸ்த்ராத் ஸர்வ ஸப்தை பரமாத்மைவாபி தீயத இதி த்ருஷ்ட்யா தஜ் ஞாபநாயாய மிந்த்ரா சப்தேந பரமாதமோபதேஸ –ஸாஸ்த்ரஸ்தா ஹி வாமதேவாதய –ததைவ வதந்தி –தத்தை தத் பஸ்யந் ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர் யஸ் ச இதி –31-

பரமாத்மைவோ பாஸ்யஸ் சேத் கதமிந்த்ரோ மாம் உபாஸ்வ இத் யுபாதிதேஸேத்யத ஆஹ
31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாத் உப தேசோ வாமதேவவத்
 –இந்த்ரஸ்ய ஜீவஸ் யைவ ஸத -ஸ்வாத்மத்வேந உபாஸ்ய பூத பரமாத்ம உபதேஸோ அயம் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா –அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா –தத்த்வமஸி -ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா ஸரீரம் ய ஆத்மாநாம் அந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதீதி ஹி சாஸ்த்ராணி பரமாத்மாநம் ஜீவாத்மந ஆத்மதயோ பதிதிஸூ -அதோ ஜீவாத்ம வாசிநஸ் ஸப்தா -ஜீவாத்ம சரீரிகம் -பரமாத்மாநமேவ வதந்தீதி ஸாஸ்த்ர த்ருஷ்டார்தஸ்ய தஸ்ய மாமேவ விஜாநீஹிமாம் உபாஸ்ஸ்வ இதி ஸ்வாத்ம சப்தேந பரமாத்ம உபதேசோ அயம் ந விருத்த்யதே –யதா வாமதேவ ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா ஸ்வாத்ம சரீரிகம் பரமாத்மாநம் பஸ்யன்னஹமிதி பரமாத்மா நமவோசத்
தத்தை தத் பஸ்யன் ந்ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்ய்யஸ் சாஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர இதி –31

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சே ந்நோபாஸா த்ரை வித்யாதாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் த்ரி ஷீர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநம் யாவத் தயஸ்மின் சரீரே ப்ராணோ வஸதி தாவதாயு இத்யாதி ஜீவ லிங்கம் முக்ய ப்ராண லிங்கம் ஸாஸ்மின் த்ருஸ்யதே இதி நைவமிதி சேந்ந –உபாஸாத் த்ரை வித்யாத் ஹேதோ ஜீவ சப்தேந ப்ராண சப்தேந ச பரமாத்மநோ அபி தாநம் –அந்யத்ராபி பரமாத்மந ஸ்வரூபேணோபாஸநம் போக்த்ரு சரீர கத்வேந போக்ய போகோபகரண சரீர கத்வேந இதி த்ரி விதம் பரமாத்மோபாஸந மாஸ்ரிதம் –யதா ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி ஸ்வரூபேண -தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சா பவத் இத்யாதி –ஸத்யம் சாந்ரு தஞ்ச சத்யமபவத் இதி போக்த்ரு சரீரகத்வேந போக்ய போக உபகரண சரீரகத்வேநச இஹாபி தத் ஸம்பவாதேவமுபதேஸ -ஜந்மாத யஸ்ய யத இத்யாதிஷு ஸத் ப்ரஹ் மாத்மேதி ஸாமாந்ய ஸப்தைர் ஹி ஜகத் காரணம் ப்ரக்ருதி புருஷாப்யா மர்தாந்தர பூதமிதி ஸாதிதம் ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் இத்யஸ்மின் ஸூத்ரே புருஷ ஸூக்தோதிதோ மஹா புருஷோ ஜகத் காரணமிதி விசேஷதோ நீர்ணீதம்–ஸ ஏவ பரஜ்ஞாத ஜீவ வாசிபிரிந்த்ராதி ஸப்தைரபி க்வசித் க்வசித் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தத் தச் சரீர கதயா சோபாஸ்யத்வாயோபதிஸ் யத இதி ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூப தேஸோ வாம தேவவத் இதி உபாஸா த்ரை வித்யாத் இதி ஸாதிதம் —32- இதி இந்த்ர ப்ராண அதி கரணம் –11-

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சேந்நோபாஸா த்ரைவித்யா தாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் -த்ரி ஸிர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநமருந் முகான்யதீன் ஸாலா வ்ருகேப்ய ப்ராயச்சம் –யாவத் த்யஸ் மிஞ்சரீரே ப்ராணோ வசதி தாவதாயு இதி ஜீவ முக்ய ப்ராண லிங்காத் நாத்யாத்ம ஸம்பந்த பூம்நா பரமாத்மத்வ நிஸ்சய இதி சேந்ந -பரமாத்மந ஏவ ஸ்வா காரேண ஜீவ சரீரீகத்வேந ப்ராண சரீரீகத்வேந சோபாஸா த்ரை வித்யாத்தேதோ தத் தச் சப்தேநாபிதாந மிதி நிஸ்ஸீயதே -அந்யத்ராபி ப்ரஹ்ம உபாஸனே த்ரை வித்யஸ் யாஸ்ரிதத்வாத் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –ஆனந்தோ ப்ரஹ்ம இதி -ஸ்வா காரேண உபாஸ்யத்வம் ஸச்ச த்யச்சா பவத் இத்யாதிநா போக்த்ரு சரீரகத்வேந போக்ய சரீரகத்வேந ச
இஹ ப்ரதர்தன வித்யாயாமபி தஸ்ய த்ரை வித்யஸ்ய சம்பவாத் அத இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் பரமாத்மா —32-இதி இந்த்ர ப்ராண அதிகரணம் -1-1-11-

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த ஸாரம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -சதுர்த பாதம்

March 5, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச–
ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஆநு மாநிகம் ப்ரதானமபி ஜகத் காரணத்வேந மஹத பரமவ்யக்தம் இத்யுச்யத இதி சேத் ந பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி இத்யாதிஷுபாஸநோபாயேஷு வஸீ கார்யத்வாய ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு சரீராக்ய ரூபக விந்யஸ்தஸ்யாத்ராவ்யக்த சப்தேந க்ருஹீதே –இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா இத்யாதிநா ஹி வஸீ கார்யத்வேந ஹி பரா உச்யந்தே ததா சோத்த ரத்ர ஸ்ருதி ரேவ தர்சயதி யச்சேத் வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதி நா –1-

111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்–ஸூஷ்மம் -அவ்யக்த மேவ ஸரீராவஸ்தம் கார்யார்ஹாமித் யவ்யக்த சப்தேந சரீரமேவ க்ருஹ்யதே –2-

யதி ரூபக விந்யஸ்தாமேவ க்ரஹணம் கிமர்த்தம் அவ்யக்தாத் புருஷ பர இத்யத ஆஹ

112–தத் அதீநத்வ அதர்தவத் –புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் உபாஸந நிர் வ்ருத்தயே பவதி –புருஷோ ஹ்யந்தர்யாமீ ஸர்வமாத்மாதிகம் ப்ரேரயந் உபாஸந உபாயத்வேந வஸீ கார்ய காஷ்டா ப்ராப்யஸ் சேதி ஸா காஷ்டா ஸா பரா கதி இத்யுச்யதே –3-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச—அத்ராவ்யக்தஸ்ய ஜ்ஜேயத்வா வசநாச் ச ந காபில மவ்யக்தம் –4-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத்யாரப்ய நிசாய்ய தம் இதி வததீதி சேந்ந தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே இத்யாதி நா பிராகிருத ப்ராஜ்ஜோ ஹி நிசாப்ய தம் இதி ஜ்ஜேய உச்யதே –5-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச–உபாஸ்யோபாஸகாநாம் த்ரயாணாமேவாஸ்மிந் ப்ரகரணே ஜ்ஜேயத்வேந உபந்யாஸ ப்ரஸ்நஸ் ச ந ப்ரதாநாதே –அத்யாத்ம யோகாதிகமேந தேவம் மத்வா இத்யாதி ரூப ந்யாஸ யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே அஸ்தித்யேகே இத்யாதி கஸ்ச ப்ரஸ்ந –6-

116–மஹத் வச் ச – புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்தாத் யதா ந தாந்த்ரிகோ மஹாந் ததா அவ்யக்தமபீதி -—7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
-அஜா மேகாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் இத்யத்ர ந தந்த்ர ஸித்தா ப்ரக்ருதி காரணத்வேநோக்தா -ஜன்மா பாவ யோக மாத்ரேண ந தஸ்யா ஏவ ப்ரதீதி அர்வாக்பிலஸ் சமஸ இதிவத் ப்ரகரணே விசேஷ காபாவாத் -யதேதம் தச்சிர இதி ஹி சமஸோ விசேஷ்யதே யவ்கிக ஸப்தாத் விசேஷ ப்ரதீதிர் ஹி விசேஷ காபேஷா –8-

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம ப்ரஹ்ம காரணிகா இயமஜா ததா ஹி ப்ரஹ்ம காரணிகயா ஏவ ப்ரதிபாதக மேதத்ஸ ரூப மந்த்ரம் ச தைத்திரீயா அதீயதே –அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் இத்யாரப்ய அதஸ் ஸமுத்ரா கிரயஸ் ச இத்யாதி நா ஸர்வஸ்ய ப்ரஹ்மண உத் பத்த்யா ததாத் மகத்வ ப்ரதி பாதந ஸமயே அஜாமேகம் இதி படந்தி –அதஸ் தத் ப்ரத்யபிஜ் ஞாநாதியம் ப்ரஹ்ம காரணிகேதி நிஸ்ஸீயதே –9-

119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத –கல்பநா –ஸ்ருஷ்டி யதா ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இதி -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதியாதி நா ஸ்ருஷ்ட் யுபதேஸாத் அஜாத்வ ப்ரஹ்ம கார்யத்வேயோர விரோதஸ் ச ப்ரலய காலே நாம ரூபே விஹாய அசித் வஸ்த்வபி ஸூஷ்ம ரூபேண ப்ரஹ்ம சரீர தயா திஷ்டதீத் யஜாத்த்வம் ஸ்ருஷ்டி காலே நாம ரூபே பஜமாநா ப்ரக்ருதி ப்ரஹ்ம காரணிகா –யதா ஆதித்யஸ்ய ஸ்ருஷ்டி காலே வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் கார்யத் வஞ்ச தஸ்யைவ ப்ரலய காலே மதவாதி வ்யபதேஸா நர்ஹ -ஸூஷ்ம ரூபேண அவஸ்தாநம கார்யத் வஞ்சமது வித்யாயாம் ப்ரதீயதே அசவ் வா ஆதித்யோ தேவமது நைவோதேதா நாஸ்தமேதா ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இதி தத் வத் —10-இதி சமஸ அதி கரணம் –2-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
–வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா இத்யத்ர பஞ்ச விம்சதி சங்க்யோப சங்க்ரஹாதபி ந தாந்த்ரி காண்யேதாநி யஸ்மின் இதி யச் ஸப்த நிரதிஷ்ட ப்ரஹ்மா தாரதயா தேப்ய ப்ருதக் பாவாத் ஏதேஷாம் தத்த்வாதி ரேகாச் ச யச் ஸப்த நிர் திஷ்டமாகாஸஸ் சேதி த்வயமதிரிக்தம் -ஸம் க்யோப ஸம் க்ரஹாதபி இத்யபி ஸப்தான் நாத்ர பஞ்ச விம்சதி ஸம் க்யா ஸம் க்ரஹ திக் ஸம்க்யே ஸம்ஜ் ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷயோ அயம் பஞ்ச ஜநா இதி –பஞ்ச ஜநா நாம கேசித் தே பஞ்ச பஞ்ச ஜநா இத் யுச்யந்தே –ஸப்த ஸப்தர் க்ஷய இதிவத் –11-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா ப்ராணாதய -பஞ்ச இந்த்ரியாணீதி ப்ராணஸ்ய பிராணமுத சஷுஷஸ் சஷுஸ் இத்யாதி வாக்ய சேஷா தவ கம்யதே சஷுஷஸ் ஸ்ரோத்ர ஸாஹ சர்யாத் ப்ராணான் ந ஸப்தா வபி ஸ்பார்ஸநா தீந்த்ரிய விஷயவ் –12-

122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்ய பஞ்ச ந்தே –ஏகேஷாம் ஸாகிநாம் -காண்வா நாம் அந் நஸ் யாந்தம் இத்யஸதி தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரித் யுபக்ரம கதேந ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி ஜ்ஞாயந்தே ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி -ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேத் யுக்த்வா அநந்தரம் பஞ்ச பஞ்ச ஜநா இத் யுக்தே ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி கம்யதே-—13-இதி ஸம் க்யோப ஸங்க்ரஹாதி கரணம் –3-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
–ஆகாஸாதி ஷு கார்ய வர்கேஷு காரணத்வேந ஸர்வத்ர வேதாந்த வாக்யேஷு அஸத்வா இதமக்ர ஆஸீத் தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இத்யாதிஷ்வ நிர்ஜ்ஞாத விஸேஷே ஷு ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் ஸ ஈஷத லோகாந்து ஸ்ருஜை இதி விசேஷ வாசி வாக்ய நிர் திஷ்டஸ்யைவோக்தே ந தாந்த்ரிகா வ்யாக்ருதாதி காரணவாத ப்ரசங்க –14-

124-ஸமா கர்ஷாத் –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பூர்வநிர்திஷ்டஸ் யைவ ஸர்வஜ்ஞஸ்ய அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாச் ச ஸ ஏவேதி கம்யதே –தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இதி நிர் திஷ்டஸ் யைவ ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்யஷு இத்யத்ர ஸமா கர்ஷாத் ஏஷ ஏவா வ்யாக்ருத இதி நிஸ்ஸீயதே-அஸத வ்யாக்ருத சப்தவ் ஹி ததா நீம் நாம ரூப விபாகாபாவாதுப பத்யேதே –15–இதி காரணத்வ அதி கரணம் –4-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத்
-ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர கர்ம சப்தஸ்யை தச் சப்த ஸாமாநாதி கரண்யேந க்ரியத இதி வ்யுத்பத்த்யா ஜகத் வாசித்வாத் பரமேவ ப்ரஹ்ம வேதி தவ்யதயோபதிஷ்டம் -16-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் ––ஏதைராத்ம பிர் புங்க்தே அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி இதி ச ஜீவாதி லிங்காந் ந பர இதி சேத் ஏதத் ப்ரதர்தன வித்யாயா மேவ பரிஹ்ருதம் -பூர்வாபர பர்யா லோசநயா ப்ரஹ்ம பரத்வே நிஸ்ஸிதே ததநு குண தயா நேயமந் யல்லிங்கமிதி –17-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே-தவ் ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது இத்யாதி நா தேஹாதி ரிக்த ஜீவ ஸத்பாவ ப்ரதிபாதநம் ததரிக்த பரமாத்மா ஸத் பாவஜ்ஞாப நார்தமிதி க்வைஷ ஏதத் பாலகே புருஷோ அஸ யிஷ்ட இதி ப்ரஸ்நாத் அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி ஸதா ஸோம்ய ததா ஸம் பன்னோ பவதி இதி வாக்ய ஸமாநார்தகாத் ப்ரதி வசநாச் சாவகம்யதே–ஏகே வாஜஸநேயிநோ அபி ஏதத் ப்ரதி வசன ரூபம் வாக்யம் ஸ்பஷ்ட மதீயதே ச க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ் தஸ் மிஞ்சேதே இத் யந்தம் –—18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 -ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதியாதி நோபதிஷ்ட பரமாத்மா அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந இத்யாரப்ய –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஜ்ஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் இத்யாதி யேநேதம் ஸர்வம் விஜாநாதி இத்யந்தஸ்ய க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் –19-

அஸ்மின் ப்ரகரணே ப்ரகாரணாந்தர ச ஜீவ வாசி சப்தேந பரமாத்மநோ அபிதாநே தத் ஸாமாநாதி கரண்யே ச காரணம் மதாந்தரேணாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
–ஆத்மநி கல்வரே த்ருஷ்டே இத்யாதி நா பரமாத்ம ஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய தத் கார்ய தயா தஸ்மாதநதி ரிக்தத்வம் ஞாபயிதும் ஜீவ சப்தேந பரமாத்மாபி தாந மிதி யாஸ்ம ரத்ய -மதம் -20-

30-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –உத் க்ரமிஷ்யத முஃதஸியை பரமாத்மா ஸ்வரூப பாவாதாத்ம சப்தேந பரமாத்மாபிதாந மிதி ஒவ்டு லோமி –21-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தர இத்யாதிநா ஜீவாத்மநி பரமாத்மந ஆத்ம தயா அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ மதம் ஸூத்ர காரஸ் ஸ்வீக்ருதவாநிதி மதத்யவ முபயந் யஸ்ய தத் விரோத்யேததபிதாநாதன்யஸ்யாநபிதா நாச்ச நிஸ்ஸீயதே – –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச
-ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஜகத் உபாதாந காரணம் அபி பரம் ப்ரஹ்ம ந நிமித்த மாத்ரம் ஸ்தப்தோ அஸ்யுத தமாதேஸம ப்ராஷ்ய யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இதி யேநா தேஷ்ட்ரா நிமித்த பூதேந விஜ்ஞ்ஞாதேந சேதன அசேதநாத் மகம் க்ருத்ஸ்நம் ஜகத் விஜ்ஞாதம் பவதீதி ஆதேஷ்ட்ரு விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞா ததுபபாதந ரூபம்ருத் கார்ய த்ருஷ்டாந்தாநு பரோதாத் ஆதிஸ்யதே அநேநே த்யாதேஸ இத்யாதேச சப்தே நாதேஷ்டாபி தீயதே –ஆதேஸ ப்ரஸாஸநம் ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ இத்யாதி ஸ்ருதே –23-

133-அபித்யோபதேஸாச் ச –ததைஷத பஹுஸ்யாம் பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி நிமித்த பூதஸ்யேக்ஷிது விசித்ர சித் அசித் ரூபேண ஜகதாகாரே ணாத்மநோ பஹு பவந சங்கல்போப தேஸாச் ச உபாதாநம பீதி விஜ்ஞாயதே –24-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயன் இதி யுபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி ஸ்வ சப்தேந உபயாம்நா நாச் ச -25-

135-ஆத்ம க்ருதே–ஸோ அகாமயத இதி நிமித்த பூதஸ்ய ஸ்வ ஸ்யைவ ஜகதாகாரேண க்ருதே ததாத்மாநம் ஸ்வயம குருத இத்யுபதிஸ்யமாநாயா பரம புருஷோ ஜகந்நிமித்தம் உபாதாநம் சேதி விஜ்ஞாயதே –26-

பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத்ய ஸத்ய ஸங்கல்பத் வாதே தத் விபரீத அநந்த அபுருஷார்த்த ஆஸ்ரய ஜகதாகாரேண ஆத்ம க்ருதேஸ் ச அவிரோத கதமித்யா சங்க்யாஹ
136-பரிணாமாத் -அத்ரோபதிஸ்ய மாநாத் பரிணாமாத் ததவிரோத ஏவ
-அவிபக்த நாம ரூபாதி ஸூஷ்ம சிதசித் வஸ்து சரீரக காரண அவஸ்த பரம புருஷஸ் ஸ்வய மேவ ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயே இது விபக்த நாம ரூப சிதசித வஸ்து சரீரகோ பவேயம் இதி சங்கல்ப இதம் ஸர்வ மஸ்ருஜத யதிதம் கிம்ச இதி ஸ்வ சரீர பூத மதி ஸூஷ்மாம் சித் அசித் வஸ்து ஸ்வஸ்மாத விபஜ்ய தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் இதி ஸ்வஸ்மாத விபக்தே சிதசித வஸ்துநி ஸ்வய மேவாத்மதயா அநு ப்ரவிஸ்ய ஸச்ச த்யச்சா பவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச அநிலயநம் ச விஞ்ஞானம் ச அவிஞ்ஞானம் ஸத்யம் சாந்ருதம் ச ஸத்ய மபவத் இதி ஹி ஸ்வஸ்ய பஹு பவந ரூப பரிணாம உபதிஸ்யதே -அதோ ந கஸ்ஸித் விரோத -அவிபாகா வஸ்தாயாமபி ஜீவஸ் தத் கர்மா ச ஸூஷ்ம ரூபேண திஷ்டநீதி வஹ்யதி ந கர்மா விபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யுபலப்யதே ச இதி –27-

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் இத்யாதி ஷு யோநிஸ்ஸகீயதே அத்ஸ் ஸ்சோபாதாநமபி –-28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
–ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நா ஏததந்தேந ந்யாயேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா த்விருக்திரத்யாய பரிஸமாப்தித்யோதநாய -29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதாந்த ஸாரம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம்

March 4, 2024

—————————————————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர –த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம்-ஆதார பரம புருஷ தமே வைகம் ஜாநதாத்மாநம் இத்யாத்ம ஸப்தாத் -நிருபாதிக ஆத்மத்வம் ஹி பரம புருஷஸ்யைவ –அம்ருதஸ்யைக்ஷ ஸேதுரிதி ததேவ த்ரடயதி –பஹுதா ஜாயமாந இதி பரத்வம் ந நிவாரயதி அஜாயமாநோ பஹுதா விஜாயதே இதி கர்ம பிரஜாயமாநஸ்யைவ ஆஸ்ரித வாத்சல்யாத் சந்ததோ ஜனனம் தஸ்ய ஹி ஸ்ரூயதே –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச புண்ய பாப விநிர் முக்தாநாம் ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பர –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –யதா ந பிரதாநமதச் ஸப்தாத் –ததா ந ப்ராண ப்ருத பீத் யர்த –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ப்ரத்யகாத்மநோ பேதேந வ்யபதேசாச் சாயம் பர –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி பரஸ்ய ஹீதம் ப்ரகரணம் –5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி ஜீவஸ்ய கர்மபலாதந மபிதாய -அநஸ்நதோ தீப்யமா நஸ்ய ஸ்தித்யபிதா நாச்சாயம் பரமாத்மா- 6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1–

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
–ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம் பூமைவ ஸூகம் இத் யுக்த்வா பூம்நஸ் ஸ்வரூபமாஹ யத்ர நான்யத் பஸ்யதி நாந்யஸ் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூமா இதி –யஸ்மின் ஸூகே அநு பூயமாநே தத் வ்யதிரிக்தம் கிமபி ஸூகத்வேந ந பஸ்யதி ந ஸ்ருணோதி ந விஜாநாதி ஸ பூமேத் யுச்யதே அத யாத்ரான் யத் பஸ்யதி அந்யஸ் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி ததல்பம் இதி வசநாத் –ததா ச மஹா பாரதே
திவ்யாநி காம சாராணி விமாநாநி சபாஸ் ததா
ஆ க்ரீடா விவிதா ராஜன் பத்மின்யஸ் சாம லோதகா
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந –இதி
ஏஷ து வா அதி வததி

ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதிவததி இதி ப்ரஸ்து தஞ்சாதி வாதித்வம் ஏவமேவ ஸமஞ்ஜஸம் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்ய புருஷார்தாதிக்ய வாதித்வம் -ததல்பம் இத்யல்ப ப்ரதியோகித்வேந பூமா இத்யுக்த பிரகார வைபுல்யாஸ்ரய ஸூக ரூப வாஸீ –அயம் பூம ஸப்த வ்யபதிஷ்ட பரமாத்மா ஸம் ப்ரஸாதாதத் யுபதேஸாத் ஸம் ப்ரஸாத -பிரத்யகாத்மா அத யா ஏஷ ஸம் ப்ரஸாத இத்யாதி ஸ்ருதே -ஏஷ து வா அதி வததி யஸ் சத்யேந இத்யாதி நா ப்ராண ஸப்த நிர் திஷ்டாத் ப்ரத்யகாத்மந ஊர்த்வமர் தாந்தரத்வேநாஸ்யோபதேஸாத் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ ––ஸ பகவ கஸ்மின் ப்ரதிஷ்டித ஸ்வே மஹிம்நி இத்யாதா வுபதிஷ்டாநாம் ஸ்வ மஹிம ப்ரதிஷ்டித்தடவ -ஸர்வ காரணத்வ ஸர்வாத்மகத்வாதி தர்மாணாம் பரஸ்மின் நேவ உப பத்தேஸ் ச பூமா பர –8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–ஏதத் வை ததஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு இத்யாதிநா அபிஹித மக்ஷரம் பரம் ப்ரஹ்ம அக்ஷரம் அம்பராந்த த்ருதே யதூரத்வம் கார்கி திவ இத்யாரப்ய ஸர்வ விகாராதாரதயா நிர் திஷ்ட ஆகாஸ கஸ்மின் நோதஸ் ச ப்ரோதஸ் ச இதி ப்ருஷ்டே ஏதத்வை ததஷரம் இதி நிரதிஷ்டஸ் யாஷரஸ்ய வாயு மதம் பராந்த த்ருத ஸர்வ விகாராதாரோ ஹ்யய மஹாஸ வாயுமதம் பராந்த காரணம் ப்ரதாநம் தத் தாரகம் பரம் ப்ரஹ்ம –9-

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி –இத்யாதிநா -ப்ரக்ருஷ்டாஜ்ஞயா க்ரியமாணா ஸ்ரூயதே அத இதமக்ஷரம் ப்ரத்யமாத்மா ச ந பவதீத் யர்த –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா பரமாத்மந அந்யத்வம் ஹ்யஸ்யா ஷரஸ்ய வ்யாவர்தயதி வாக்ய சேஷ -அதஸ் ச பர ஏவ —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
–ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய-ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர -உத்தரத்ர தமோங்காரேணைவாயநே நாந்வேதி இதி வித்வான் யத் தச் சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி பரம புருஷ அசாதாரண தர்ம வ்யபதேஸாத் யத் தத் கவயோ வேத யந்தே இதி ததீயஸ் தாநஸ்ய ஸூரிபிர் த்ருஸ்யத்வ வ்யபதேஸாச் ச 12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய
–-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர தஹராகாஸ நிர் திஷ்ட பரமாத்மா –உத்தரேப்ய வாக்யகதேப்ய தத் அசாதாரண தர்மேப்ய உத்தரத்ர தஹர ஆகாஸஸ்ய ஸர்வாதார தயா -அதி மஹத் த்வமபிதாய ஏதத் ஸத்யம் ப்ரஹ்மாக்யம் புரம் இதி நிர் திஸ்ய தஸ்மிந் ப்ரஹமாக்யே தஹர ஆகாஸே காமாஸ் ஸமாஹிதா இத் யுக்தே கோ அயம் தஹராகாஸ கே ச காமா –இத்யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப இத்யந்தேந தஹாராகாஸ ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத்வாதய தத் விசேஷண பூத குணா இதி ஹி ஜ்ஞாபயதி
தஹரோ அஸ்மின் நந்தராகாஸஸ் தஸ்மிந் யதந்த ததன்வேஷ்டவ்யம் இத்யத்ர தஹாராகாஸ தத் அந்தர் வர்தி ச யத் ததுபயம் அன்வேஷ்டவ்யமித் யுக்த மிதி விஞ்ஞாயதே அத ய இஹாத்மாநமநுவித்ய வ்ரஜந் த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் இதி ஹி வ்யஜ்யதே –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –ஏவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி இத்யஹரஹஸ் ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் தஹர ஆகாஸோ பரி கத்தி வர்தனம் தஹர ஆகாஸ ஸமாநாதி கரணோ ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சதஹர ஆகாஸ பரம் ப்ரஹ்மேதி ஞாபயதி -ததா ஹ்யன்யத்ர ஸர்வாஸாம் பரமாத்மோ பரிவர்த மாநத்வம் த்ருஷ்டம் தஸ்மிந் லோகாஸ்ஸ்ரிதாஸ் ஸர்வே ததஷரே பரமே ப்ரஜா இத்யாதவ் -ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சஏஷ ப்ரஹ்ம லோக இத்யாதவ் –அந்யத்ர தர்சன அபாவியாபி இதமேவ பர்யாப்த மஸ்ய பரமாத்மத்வே லிங்கம் யத் தஹராகாஸோபரி ஸர்வஸ்ய வர்தமாநத்வம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அத ய ஆத்மா ஸ சேதுர்வித்ருதி இதி ஜகத் த்ருதே -பரமாத்மநோ ம்ஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேஸ் சாயம் பர ஸா ஹி பரமாத்ம மஹிமா ஏஷ ஸேதுர் விதரண இத்யாதி ஸ்ருதே –15-

81-ப்ரசித்தேஸ் ச--ஆகாஸ சப்தஸ்ய யதேஷ ஆகாஸ ஆனந்த இதிபரமாத்மன்யபி ப்ரஸித்தேஸ் சாயம் பர ஸத்ய சங்கல்பத்வாதி குண ப்ருந்தோப ப்ரும்ஹிதா ப்ரஸித்தி பூதாகாஸ பிரஸித்தேர் பலீய ஸீத்யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ இதீ தரஸ்ய ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ப்ரக்ருதாகாஸஸ் இதி சேத் நைதத் உக்த குணாநாம் தத்ரா சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தரத்ர ய ஆத்மா அபஹத பாப்மா இதி ஜீவஸ்ய அபஹத பாப்மத்வாதி ஸ்ரவணாந் நா ஸம்பவ –ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் யாத்ய வஸ்தாஸூ வர்தமாநத்வாத் ஸ ஹி ஜீவ இதி சேத் நைதத் ஆவீர் பூத ஸ்வரூபஸ்து –கர்ம ஆரப்த சரீர சம்பந்தித் வேந திரோஹித அபஹத பாப்மத் வாதிக பஸ்ஸாத் பரஞ்ஜ்யோதி ரூப ஸம்பத் யாவிர் பூத ஸ்வரூப தத்ர அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவ ப்ரதிபாதித தஹாராகாஸஸ்து அதி ரோஹித கல்யாண குண சாகர இதி நாயம் ஜீவ –18-

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-ஜீவாத்மநோ தஹராகாஸோப ஸம்பத்த்யா ஸ்வரூப ஆவீர் பாவா பாத்தன ரூபம் ஆஹாத்ம்ய ப்ரதிபாத நார்த அத்ர ஜீவ பராமர்ச –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –அல்ப ஸ்தாநத்வ ஸ்வரூப அல்பத்வ ஸ்ருதேர் நாயம் பரமாத்மேதி சேத் -தத்தரோத்தர முக்தம் நிசாய்யத்வா தேவம் வ்யோமவச்ச இதி –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச –அநு க்ருதி –தஸ்ய தஹராகாஸஸ்ய பரஞ்ஜ்யோதிஷ அநு கரண ஸ்ரவணாச் ச ஜீவஸ்ய ந ஜீவோ தஹராகாஸ ஸ தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடன் ரமமாண இத்யாதி ததுப ஸம்பத்த்யா ஸ்வச் சாந்த வ்ருத்தி ரூப தத் அநு காரஸ் ஸ்ரூயதே –21-

87-அபி ஸ்மர்யதே –இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித
– அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய இத்யாதவ் அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி சர்வேஸ்வரத்வ வாசி ஸப்தா தேவ –23-

89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் –அநவச் சிந்நஸ் யாபி உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வா பேஷ மங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸந ஸம்பாவ நயா தத் விக்ஷயத்வாச் ச சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்–
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத்
–தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ் வப்யஸ்தி அர்த்தித்வ சாமர்த்யா சம்பவாத் –இதி பகவான் பாதராயண மேந –சம்பவஸ் ச பூர்வோபார்ஜிதஜ் ஞாநாவிஸ்மரணாத் மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹாதி மத்தயா ஸ்துதி தர்சநாத் ததுப பத்தயே தத் சம்பவே தேஷாமேவ ப்ராமாண்யேந விக்ரஹாதி மத்த்வாச் ச –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –விக்ரஹாதி மத்த்வே ஏகஸ்யாநே கத்ர யுகபத்ஸாந் நித்யா யோகாத் கர்மணி விரோத இதி சேந்ந ஸக்திமத்ஸூ ஸுபரி ப்ரப்ருதி ஷு யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –வைதிகே து ஸப்தே விரோத ப்ரஸக்தி தேஹஸ்ய சாவயத்வேநோத் மத்த்வாத் இந்த்ராதி தேவோத் பத்தே ப்ராக் விநாஸா தூர்த்வம் ச வைதிகேந்த்ராதி ஸப்தாநாம் அர்த ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாத் இதி சேந்ந –அத வைதிகா தேவேந்த்ராதி ஸப்தாதிந்த்ராத் யர்தஸ்ருஷ்டே -நஹீந்த்ராதி ஸப்தா வ்யக்தி வாஸகா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி வாசிந –பூர்வஸ் மின்னிந்த்ராதவ் விநஷ்டே வைதிகேந்த்ராதி ஸப்தாதேவ ப்ரஹ்மா பூர்வேந்த்ராத் யாக்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரம பராமிந்த்ராதிகம் குலாலாதிரிவ கடாதிகம் ஸ்ருஜதீதி ந கஸ்ஸித் விரோத -குத இதமவகம்யதே -ஸ்ருதி வேதேந ரூபே வ்யகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிமஸ்ருஜத இத்யாதி ஸ்ம்ருதிரபி
ஸர்வேஷாம் து ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்-வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே –இத்யாதி –27-

93-அத ஏவ ச நித்யத்வம் –யதோ ப்ரஹ்மா வைதிகாச் சப்தா தர்தாந் ஸ்ம்ருத்வா ஸ்ருஜதி அத ஏவ மந்த்ர க்ருதோ வ்ருணீதே விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதி இதி விச்வாமித்ராதீநாம் மந்த்ராதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டதி –அநதீத மந்த்ராதி தர்சந ஸக்தான் பூர்வ விச்வாமித்ராதீந் தத் தத் வைதிக சப்தை ஸ்ம்ருத்வா ததாகாராநபராந் தத் தச் சக்தி யுக்தான் ஸ்ருஜதி ஹி ப்ரஹ்மா நைமித்திக பிரளயானந்தரம்-தே சாநதீத்யைவ தாநேவ மந்த்ராதீந கலிதாந் படந்தி –அதஸ் தேஷாம் மந்த்ராதி க்ருத்த்வம் வேத நித்யத்வம் ச ஸ்திதம் –28-

ப்ராக்ருத பிரலயே து சதுர் முகே வேதாக்ய சப்தே ச விநஷ்டே கதம் வேதஸ்ய நித்யத்வமித்யத ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச -அத ஏவ ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாத் பிராகிருத பிரலயா வ்ருத்தாவபி ந விரோத -ஆதி கர்தா பரம புருஷோ ஹி பூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஜகத் ஸ்ம்ருத்வா ததாகாரமேவ ஜகத் ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வாநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருத்ய சதுர் முகாய ததாதீதி ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமாதி கர்தா பூர்வ வத் ஸ்ருஜதீத் யவகம்யதே-ஸ்ருதி ஸ்தாவத் ஸூர்யா சந்த்ர மஸவ் தாத்தா யதா பூர்வமகல் பயத் இத்யாதிகா யோ ப்ரஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச -ஸ்ம்ருதிரபி
யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே
த்ருஸ்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதி ஷு -இதி -வேதஸ்ய நித்யத்வம் ச பூர்வ பூர்வோச் சாரண க்ரம விஸிஷ்டஸ் யைவ ஸர்வதோச சார்ய மாணத்வம் ––29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–மது வித்யாதி ஷு வஸ்வாதி தேவாநாமேவ உபாஸ்யதவாதத் ப்ராப்யத்வாச் ச தத்ர வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதேந உபாஸ்யத்வா சம்பவாத் -வஸூநாம் ஸதாம் வஸூ த்வம் ப்ராப்தமிதி ப்ராப்யத்வா ஸம்ப வாச்ச தத்ர வஸ்வாதீ நாமநதிகாரம் ஜைமிநிர்மேநே –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணிதேவாநாம் ஸாதாரண்யேந ப்ராப்தத்வே அபி அதிகார மாத்ர பாவ வசநாத் அந்யத்ர வஸ்வாத் யுபாஸநே அநதிகாரோ ந்யாய ஸித்தோ கம்யதே–31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –மது வித்யாதிஷ்வபி வஸ்வாதீ நாமதிகார பாவம் பகவான் பாதராயணோ மன்யதே –அஸ்தி ஹி வஸ்வாதீநாம் ஸதாம் ஸ்வாவஸ்த ப்ரஹ்மண உபாஸ்யத்வ ஸம்பவ கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்யத்வ சம்பாவஸ் ச –ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா ஆதித்யஸ்ய காரணா வஸ்தாம் ப்ரதிபாத்ய ய ஏதா மேவம் ப்ரஹ்மோப நிஷதம் வேத இதி மது வித்யா ப்ரஹ்ம வித்யாத்வமாஹ –அத கார்ய காரணோ பயாவஸ்தம் தத்ரோபாஸ்யம் -கல்பாந்தரே வஸ்வாதித்வ மநு பூய அதிகாராவஸாநே ப்ரஹ்ம ப்ராப்திர்ந விருத்தா –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ஆஜஹாரமாஸ் ஸூத்ர இத்யாதவ் ப்ரஹ்ம உபதேஸே ஸிஷ்யம் ப்ரதி ஸூத்ரேத்யா மந்த்ரணேந சிஷ்யஸ்ய ப்ரஹ்ம ஞானா ப்ராப்த்யா ஸூ க்சஞ்ஜாதேதி ஸூஸ்யதே –ஸோச நாச் சூத்ர -ந ஜாதி யோகேந குத –ததநாதர ஸ்ரவணாத் ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஸ்வாத்மா நம் ப்ரதி ஹம்ஸோக்தாநாதர வாக்ய ஸ்ரவணாத் ததைவாசார்யம் ப்ரதி ஆத்ரவணாத் –ஹி சப்தோ ஹேதவ் –யதஸ் ஸ்ரூத்ரேத்யா மந்த்ரணம் ந ஜாதி யோகேந அதஸ் ஸூத் ரஸ்ய ப்ரஹ்ம உபாஸநாதிகாரோ ந ஸூஸ்யதே –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்–உபக்ரமே பஹு தாயீ இத்யாதிநா தாந பதித்வ பஹு பக்வாந் நதாயித்வ பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஹி ஷத்ரியத்வம் கம்யதே –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகஞ்ச காபேய மபிப்ரதாரிணஞ்ச இத்யாதவ் –
அபி ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணாந்தரே ஹி காபேய ஸஹஸரிணஸ் சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதத்வம் ஷத்ரியத்வம் சாவகதம் ஏதேந சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச க்ஷத்ர பதிர ஜாயத இதி ச அதஸ் சாயம் சிஷ்ய ந சதுர்த –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபக்ரமே உப த்வா நேஷ்யே இத் யுப நயன பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ அபிலாபாச்ச -ந ஸூத்ரஸ்ய ப்ரஹ்ம வித்யாதிகார ந ஸூத்ரே பாதகம் கிம்சித் ந ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஸம்ஸ்காரோ ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேஸ் ச நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி நிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத–39- இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ரமிதாதிகரண சேஷ
ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் அனுசரதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் இத்யாதி நா அபிஹிதாங்குஷ்ட ப்ரமித பிராண ஸப்த நிர்திஷ்ட ஜெனித பயாத் வஜ்ராதி வோத்யதாத் அக்நி வாயு ஸூர்ய இந்த்ர ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ இதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –தத் ப்ரகரணே ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய அநவதிக அதிசய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ –41—இதி ப்ரமித அதி கரண சேஷ

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம இத்யாதிநா நிர்திஷ்ட ஆகாஸ தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா இதி ப்ரக்ருதாத் ப்ரத்யமாத்மந பரி ஸூத்தாதரதாந்தர பூத பரம புருஷ நாம ரூபயோ நிர்வோட் ருத்வ தத ஸ்பர்ச ரூபார் தாந்தரத்வாம்ருதத்வாதி வ்யபதேஸாத் –42-

தத்வமஸ்யாதிநா ஐக்ய வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ நார்தாந்தர பூத பரம புருஷ இத்யா சங்க்யாஹ

108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் ப்ராஜ்ஜே நாத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் பாஹ்யாந்தர விஷயா நபிஜ்ஞாத் ப்ரத்யகாத்மந ததாநீ மேவ ப்ராஜ்ஞ தயா பேதேந வ்யபதேஸாதர் தாந்தர பூத ஏவ –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் அர்த்தாந்தர பூத- ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே
ஐக்யோபதேஸோ அபி அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இத்யநேந ஜீவஸ்ய சரீர பூதஸ் யாத்ம தயா அவஸ்தி தேரிதி ஸ்வய மேவ பரி ஹரிஷ்யதி –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சாரம் -மூலம்–பிரதம அத்யாயம் -த்வதீய பாதம் –

March 3, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-2-1-ஸர்வத்ர ப்ரஸித்தி யதிகரணம்
33-ஸர்வத்ர ப்ரஸித்தி உபதேசாத்
-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி நிர் திஷ்டேந ஸாமாநாதி கரண்யேந நிர் திஷ்டம் ப்ரஹ்ம பரமாத்மா -குத –ப்ரஸித்த உபதேஸாத் –தஜ் ஜலாநிதி ஹேதுத ஸர்வாத்ம கத்வ உபதேஸாதித் யர்த -ப்ரஸித்தம் ஹி ஹேதுதயா வ்யபதிஸ்யதே -ஸகல உபநிஷத்ஸூ ப்ரஹ்மைவ ஹி ஜகஜ் ஜன்ம லய ஜீவன ஹேது தயா ப்ரஸித்தம் யதோ வா இமாநி இத்யாதிஷு –1-

34–விவஷித குண உபபத்தேஸ் ச –மநோ மயத்வாதிகாஸ் ஸத்ய ஸங்கல்பத் வாதயோ விவஷித குணா ப்ரஹ்மண்யேவோப பத்யந்தே –2-

35-அநுப பத்தேஸ் து சாரீர–துக்க மிஸ்ர பரிமித ஸூக லவபாகிநி ஸாரீரே த்வேஷாம் குணாநாம் அநுப பத்தேர்ந ஸாரீரோ அயம் -3-

36-கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் -ச ஏதமித ப்ரேத்யாபி சம்ப விதாஸ்மி இதி அபி ஸம்பாவ்யாபி ஸம்பவித்ருத்வேந ப்ரஸ்துத பிரம்மா ஜீவயோர் வ்யபதேஸாத் அபி ஸம்பாவ்யம் ப்ரஹ்ம ஜீவாதர்தாந்தரம் –4-

37-ஸப்த விசேஷாத் –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி சாரீரஷ் ஷஷ்ட்யா ப்ரதமயா ச ஜீவோ ப்ரஹ்ம ச வ்யபதிஸ்யதே ததஸ் சார்தாந்தரம் -5-

38-ஸ்ம்ருதேஸ் ச -அத்ராபி ப்ரதமயா நிர் திஷ்ட புருஷோத்தம இதி நிஸ்ஸீயதே -ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹனம் ச இதி ஸ்ம்ருதேஸ் ச –6-

39-அர்ப் கௌகஸ்த்வாத் தத் வ்யபதேசாச் ச நேதி சேந்ந நிஸாய்யத்வா தேவம் வ்யோமவச்ச –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே அணீயான் வ்ரீஹே –இத்யாதிநா அல்ப ஆயதநத்வாத் ஸ்வரூப அல்பத் வஸ்ய வ்யபதேஸாச் ச நாயம் பர இதி சேந்ந உபாஸ்யத்வாத்தேதோ –ததா வ்யபதேஸ ந து ஸ்வரூப அல்பத்வேந வ்யோமவத் ஸ்வரூப மஹத்வம் சாத்ரைவ வ்யபதேஸ் யதே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் இத்யாதி நா –7-

40-ஸம்போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத் –பரோ அப்யந்தஸ் ஸரீரே வசதி சேத் ஜீவவத் ஸூக துக்க உப போக ப்ராப்திஸ் ஸ்யாதிதி சேந்ந ஹேதுவை சேஷ்யாத்-பரஸ்ய ஹி சந்ததோ ஜீவ ரஷாயை ஸரீராந்தர்வாஸ –8-இதி ஸர்வத்ர பிரஸித்தி யதிகரணம் –1-2-1-

1-2-2-அத்த்ரதிகரணம்
41-அத்தா சராசர க்ரஹணாத்
–யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சோபே பவத ஓதந ம்ருத்யுர்யஸ்ய உபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ இதி –இத்யத்ர ஓதந உபஸேசந ஸூசிதோ அத்தா பரம புருஷ –ப்ரஹ்ம ஷத்ரோ பலஷி தஸ்ய சராசரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய ம்ருத்யூபஸேசநத்வேந அதநீய தயா க்ரஹணாத் –9-

42-ப்ரகரணாச் ச –மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந சோசதி நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா இதி பரஸ்யைவ ஹீதம்-இத்யாதிநா பரஸ்யைவ ப்ரக்ருதத்வாத் ஸ ஏவாயம் –10-

43-குஹாம் ப்ரவிஷ்டா வாத்மாநவ் ஹி தத் தர்சநாத் –அநந்தரம் ருதம் பிபன்னவ் ஸூக்ருதஸ்ய லோகே -குஹாம் ப்ரவிஷ்டவ் பரமே பரார்த்யே -இத்யாதிநா
ஜீவ பரமாத்மா நாவேவ ப்ரயோஜ்ய ப்ரயோஜக பாவேந கர்ம பலாஸநே அந்வயாதுப திஷ்டவ் –தயோரேவாஸ்மிந் ப்ரகரணே குஹா ப்ரவேஸ தர்சநாத் தம் துர்தர்ஸம் கூடமநு ப்ரவிஷ்டாம் குஹா ஹிதம் இதி பரஸ்ய குஹாம் ப்ரவிஸ்ய யா ப்ராணேந ஸம்பவத்யதிதிர் தேவதாமயீ திஷ்டந்தீ இதி ஜீவஸ்ய கர்ம பலாத நாததிதிர் ஜீவ –11-

44-விசேஷணாச் ச –ஜீவ பரா வேவ ஹி ஸர்வத்ர அஸ்மின் ப்ரகரணே விசேஷ்யேதே -ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித் இத்யாதவ் ஜீவ அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் மஹாந்தம் விபுமாத்மாநம் நாயாமாத்மா ப்ரவசநேந -விஞ்ஞாந சாரதிர் யஸ்து மந ப்ரக்ரஹ வாந்தர ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் இத்யாதி ஷு பர –த்ரிபாதஸ் யாம்ருதம் தீவி அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்தமேஷு உத்தமேஷு லோகேஷு இதி விஸ்வத -ப்ராக்ருதாத் ஸ்தாநாத் பரம் விஷ்ணோ பரஸ்தாந மேவ ஹி ஸம்ஸாராத்வந பாரபூதம் முமுஷுபி ப்ராப்யம் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய ததஷரே பரமே வ்யோமன் க்ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே விஸ்வம் புராணம் தமஸ பரஸ்தாத் தே ஹ நாகம் மஹிமாநஸ் ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா இத்யாதி ஸகல உப நிஷத் ப்ரஸித்தம் –-12-அத்த்ரதிகரணம் –2–

1-2-3-அந்தராதிகரணம்
45-அந்தர உப பத்தே
–சாந்தோக்யே -ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே ஏக்ஷ ஆத்மேதி ஹோவாசைத தம்ருதமபய மேதத் ப்ரஹ்ம இத்யத்ர அஷ்யாதார
பரம புருஷ நிருபாதிக அம்ருதத்வ அபயத்வ ஸம்பத்வாமத்வாதீநாம் அஸ்மின் நேவோப பத்தே –13-

46-ஸ்தாநாதிவ்ய தேசாச் ச--யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாததி நா ஸ்திதி நியம நாதீ நாம் வ்யபதேஸாச் சாயம் பர –14-

47-ஸூக விஸிஷ்டாபிதாநா தேவ ச -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இதி பூர்வத்ராஸ் யைவ ஸூக விஸிஷ்ட தயா அபிதாநாச் சாயம் பர –15

48-அத ஏவ ச ஸ ப்ரஹ்ம -யதஸ் தத்ர பவ பய பீதா யோபகோஸலாய ப்ரஹ்ம- ஜிஜ்ஞாஸவே கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இத்யுபதிஷ்ட யத்வா யதேவ கம் ததேவ கம் இதி ஸூக ரூப அதஸ் ஸூக சப்தாபிதேய ஆகாஸ பரமேவ ப்ரஹ்ம — -16-

49-ஸ்ருதோபநிஷத்க கத்யபிதா நாச்ச–ஸ்ருத ப்ரஹ்ம ஸ்வரூபாணாம் அதி கந்தவ்ய தயா அர்ச்சிராதி கதேரஷி புருஷம் ஸ்ருதவதே தேஅர்சிக்ஷமேசபை சம்பவந்தி இத்யாதி நா -அபிதாநாச் சாயம் பரம புருஷ –17-

50-அந வஸ்தி தேர ஸம் பவாச் ச நேதர–பரஸ்மாதிதரோ ஜீவாதிர் நாஷ்யாதார –சஷுஷி நியமேந அனவஸ்திதே அம்ருதத்வாத்ய சம்பவாச் ச —18-அந்தராதிகாரணம்–3-

1-2-4-அந்தர்யாம் யதிகரணம்
51-அந்தர்யாம் யதிதைவாதி லோகாதிஷு தத் தர்ம வ்யபதேஸாத்
–ப்ருஹ தாரண்யகே ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோ யம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயத்யேக்ஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –இத்யாதிஷு அதி தைவாதி லோகாதி பத சிஹ்நிதேஷு வாக்யேஷு ஸ்ரூயமாணோ அந்தர் யாமீ பரம புருஷ –ஸர்வ அந்தரத்வ ஸர்வ அவிதத்வ ஸர்வ ஸரீரகத்வ ஸர்வ நியந்த்ருத்வாதி பரமாத்ம தர்ம வ்யபதேஸாத் –19-

52-ந ச ஸ்மார்தம தத் தர்மாபி லாபாச் சாரீரஸ் ச –நாயம் ப்ரதாநம் ஜீவஸ் ச தயோர ஸம்பாவித ஸர்வ அவ்விதத்வாதி-தர்ம அபி லாபாத் –அஸம்பாவநயா யதா ந ஸ்மார்தம் ததா ஜீவோ அபீத்யர்த –20-

53-உபயே அபி ஹி பேதே நைந மதீயதே –உபயே காண்வா மாத்யந்திநாஸ் ச யோ விஞ்ஞாநே திஷ்டன் -ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா ஸரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி இதி பிரத்யாகாத்மநோ பேதே நைநம் -அந்தர் யாமிண மதீயதே அத பர ஏவாயம் —21-இதி அந்தர்யாம் யதிகரணம் –1-2-4-

1-2-5-குணக அதிகரணம்
54-அத்ருஸ்யத்வாதி குணகோ தர்மோக்தே –ஆதர்வணே அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம்யதே யத் தத் அத்ரேஸ்யம் இத்யாராப்ய யத் பூத யோநிம் பரிபஸ் யந்தி தீரா -அஷராத் பரத பர இத்யாதவ் ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் ச அர்த்தாந்தர பூத பரமாத்மா ப்ரதிபாத்யதே –யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் இத்யாதி தர்மோக்த –22-

55–விசேஷண பேத வ்யாபதேசாப்யாம் ச நேதரவ் –ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞான ரூப விசேஷண வ்யபதேஸாந்ந ப்ரதாநம் –அக்ஷராத் பரத பர இதி ப்ரதாநாத் பரத -ப்ரத்யகாத்மநோ அபி பர இதி பேத வ்யபதேஸாத் ந ப்ரத்யகாத்மா ச -அதவா ஸாமாநாதி கரண்யேந பரதோ அக்ஷராத் பஞ்ச விம்சகாத் பர இதி பேத வ்யபதேஸ –23-

56-ரூபோ பந்யா ஸாச் ச –-அக்னிர் மூத்தா இத்யாதி நாத்ரை லோக்ய ஸரீரோபந்யாஸாச் ச பரமாத்மா –—24-இதி அத்ருஸ்யத்வாதி –குணக அதிகரணம் –5-

1-2-6–வைஸ்வாநர அதிகரணம்
57-வைஸ்வாநரஸ் ஸாதாரண ஸப்த விசேஷாத்
–சாந்தோக்ய ஆத்மாந மேவேமம் வைஸ்வாநரம் இத்யாதவ் வைஸ்வாநர பரமாத்மா ஜாடராக்ந்யாதிஷு ஸாதாரணஸ்யாபி வைஸ்வாநரஸப்தஸ் யாஸ்மிந் ப்ரகரணே பரமாத்ம அசாதாரணை ஸர்வ ஆத்மகத்வ ப்ரஹ்ம ஸப்தாபி விசேஷ்யமாணத்வாத் –25-

58-ஸ்மர்யமாணம் அநு மானம் ஸ்யாதிதி–த்யு லோக ப்ரப்ருதி ப்ருதி வ்யந்தம் ரூபம் அக்னிர் மூர்தா இத்யாதி ஷுக்தம் அத்ர ப்ரத்யபிஜ் ஞாயமாநமஸ்ய பரமாத்மத்வே அநு மாநம் லிங்கமித் யர்த –26-

59-ஸப் தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்ச நேதி சேந்ந ததா த்ருஷ்ட் யுபதேசாத சம்பவாத் புருஷமபி சைநம தீயதே –ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநர இதி அக்னி ஸப்த ஸாமாநாதி கரண்யாத் ப்ராணா ஹூத் யாதாரத்வாதிபி –புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் இத்யாதேஸ் ச நாயம் பரமாத்மேதி சேத் நைதத் ஜாடராக்னி சரீர கத்வேநோபாஸ் யத்வோபதேஸாத் கேவல ஜாடராக்நே த்ரை லோக்ய சரீரகத்வாத்ய சம்பவாச் ச –ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநரோ யத் புருஷ இத்யேநம் வைஸ்வாநரம் புருஷமப்யதீயதே வாஜிந –நிருபாதிக புருஷ ஸப்தஸ் ச பரமாத்மநி நாராயணே ஏவ ஸஹஸ்ர ஸீர்ஷம் இத்யாரப்ய விஸ்வமேவேதம் புருஷ இத்யாதி ஷு ப்ரஸித்த –27-

60-அத ஏவ ந தேவதா பூதம் ச –யதோ அயம் வைஸ்வாநர த்ரை லோக்ய சரீர புருஷ ஸப்த நிர் திஷ்டஸ் ச ததோ அயம் நாக்ந்யாக்ய தேவதா த்ருதீய மஹா பூதம் ச –28-

61-சாஷாதப்ய விரோதம் ஜைமினி-நாவஸ்ய மக்னி சரீரகத்வேந உபாஸ்யத்வாயேத மக்நி ஸப்த ஸாமாநாதி கரண்யம் அக்ர நயநாதி யோகேந பரமாதமந்யே வாக்நி சப்தஸ்ய ஸாஷாத் வ்ருத்தேஸ் ஸாமாநாதி கரண்ய அவிரோதம் ஜைமிநி ராசார்யோ மன்யதே–29-

62-அபி வ்யக்தேர் இத்யாஸ் மரத்ய-யஸ்த்வேதமேவம் ப்ராதேஸ மாத்ரம் இத்யநவச் சிந்நஸ்ய த்யு ப்ரப்ருதி பரிச்சின்னத்வம் உபாஸகாபி வ்யக்த்யர்த மிதி ஆஸ்மரத்ய –30-

63-அநு ஸ்ம் ருதேர் பாதரி –த்யு ப்ரப்ருதி வ்யந்தாநாம் மூர்தாதி பாதாந்தாவயவத்வ கல்பநம் ததாநுஸ்ம்ருத்யர்தம் –ப்ரஹ்ம ப்ரதிபத்தய இதி பாதரி –31-

64-ஸம்பத்தேரிதி ஜைமினிஸ் ததா ஹி தர்சயதி–உர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹா பத்ய இத்யாதிநா உபாஸக ஹ்ருதயாதீநாம் வேத்யாதித்வ கல்பநம் வித்யாங்க பூதாயா ப்ராணா ஹுதே அக்னி ஹோத்ராத்வ ஸம்பாதா நார்த மிதி ஜைமினி –தர்சயதி ச ஸ்ருதி ய ஏததேவம் வித்வாநக்நி ஹோத்ரம் ஜூஹோதி இதி –ஏதே பஷாஸ் ஸ்வீக்ருதா பூஜார்தமா சார்யக் க்ரஹணம் –32-

65-ஆம நந்தி சைந மஸ்மின் –ஏநம் பரமாத்மாநம் அஸ்மின் உபாஸித்ரு ஸரீரே ப்ராணாஹுதி –வேலாயாம் அநு ஸந்தா நார்தம் தஸ்ய ஹ வா ஏதஸ்ய மூர்தைவ ஸூ தேஜா இத்யாதி அமநந்தி ச உபாஸகஸ்ய மூர்தாதி ரேவாஸ்ய பரமாத்மநோ மூர்தாதிரித்யர்த- 33-இதி வைஸ்வாநர அதிகரணம் –1-2-6-

இதி ஸ்ரீ பகவத் ராமானுஜ விரசிதே ஸ்ரீ வேதாந்த சார -பிரதம அத்யாயம் -த்விதீய பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதார்த்த சாரம் -மூலம்–பிரதம அத்யாயம் -பிரதம பாதம் –

February 29, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————–

1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

அதிராயம் அத ஸப்த ஆனந்தர்யே வர்த்ததே -அதஸ் ஸப்த சிரஸ்கத்வாத் -அதஸ் ஸப்தஸ் ச பூர்வ வ்ருத்தஸ்ய ஹேதுபாவே -பூர்வ வ்ருத்தம் ச கர்மஜ் ஞானம் இதி விஞ்ஞாயதே ஆரிப்ஸிதஸ்ய ப்ரஹ்ம ஞானஸ்ய வேதார்த்த விஸாரைகதேஸத்வாத் –அதீத வேதஸ்ய ஹி புருஷஸ்ய கர்ம ப்ரதிபாதநோபக்ர மத்வாத் வேதாநாம் கர்ம விசார ப்ரதமம் கார்யம் இதி -அதாதோ தர்ம ஜிஜ்ஞாசா -இத்யுக்தம் -கர்மணாம் ச ப்ரக்ருதி விக்ருதி ரூபாணாம் தர்மார்த்தகாம ரூப -புருஷார்த்த சாதனதா நிஸ்ஸய -ப்ரபுத்வாதார்த்விஜ்யம் இத்யந்தேந ஸூத்ர கலாபேந ஸம் கர்ஷேணேந க்ருத –ஏவம் வேதஸ்யார்த –பரத்வே கர்மணாம் ச ததர்தத்வே தேஷாம் ச கேவலாநாம் த்ரிவர்க பலத்வே நிஸ்ஸிதே சதி வேதைகதேஸ பூத வேதாந்த பாகே கேவல கர்மணாம் அல்ப அஸ்திர பலத்வம் ப்ரஹ்ம ஞானஸ்ய ச அநந்த ஸ்திர பலத்வம் ஆபாததோ த்ருஷ்ட்வா அனந்தரம் முமுஷோ ரவதாரிதபரி நிஷ்பன்ன வஸ்து போத ஜனந ஸப்த சக்தே -புருஷஸ்ய ப்ரஹ்ம புபுத்ஸா ஜாயத இதி அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா இதி கர்ம விசார அநந்தரம் தத ஏவ ஹேதோர் ப்ரஹ்ம விசார கர்தவ்ய இத் யுக்தம் பவதி –ததிதமாஹ ஸ்ருதி –
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந்நாஸ்த்யக்ருத க்ருதேந தத் விஞ்ஞா நார்தம் ஸ குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் பிரசாந்த சித்தாய சமான்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாஸதாம் தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம் இதி
ப்ராஹ்மண -வேத அப்யாஸ ரத -கர்ம சிதான் –கர்மணா ஸம்பாதிதான் லோகான் –ஆராத்யக்ஷயிஷ்ணுத்வேந க்ஷயஸ்வபாவான் கர்ம மீமாம்ஸயா பரீஷ்ய அக்ருத -நித்ய பரம புருஷ க்ருதேந -கர்மணா ந ஸம்பாத்ய இதி யோ நிர்வேத மாயாத் ஸ தத் விஞ்ஞானார்தம் குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணி -ஸ்ரோத்ரியம் -வேதாந்த வேதிநம் ப்ரஹ்ம நிஷ்டம் -சாஷாத் க்ருத பரம புருஷ ஸ்வரூபம் -ஸ -குரு -ஸம்யகுபஸந்நாய தஸ்மை யேந வித்யா விஸேஷேண அக்ஷரம் –ஸத்யம் பரம புருஷன் வேத வித்யாத் -தாம் ப்ரஹ்ம வித்யாம் ப்ரோவாஸ –பரப்ரூயாத் இத்யர்த –ஸ குருமேவ அபி கச்சேத் –தஸ்மை ஸ வித்வான் ப்ரோவாஸ இத்யன்வயாத் அப்ராப்தத்வாச் ச விதாவபி லிடோ விதாநாத் –சந்தஸி லங் லிட் இதி –-1- இதி ஜிஜ்ஞாஸ அதிகரணம் –1-

1-1-2-
2-ஜந்மாத் யஸ்ய யத
-அஸ்ய விசித்ர சித் அசித் மிஸ்ரஸ்ய வ்யவஸ்தித ஸூக துக்க உப போகஸ்ய ஜகத- ஜன்ம ஸ்திதி லயா யத தத் ப்ரஹ்மேதி ப்ரதிபாதயதி ஸ்ருதிரித் யர்த –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி ஸம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இதி –ஸூத்ரே யத இதி ஹேதவ் பஞ்சமீ ஜனி ஸ்திதி லயாநாம் ஸாதாரணத்வாத் -ஜநி ஹேதுத்வம் ச நிமித்த உபாதான ரூபம் விவஷிதம் -யத இதி ஹி ஸ்ருதி -இஹ உபய விஷயா கதமிதி சேத் -யதோ வா இமாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் ச உபய விக்ஷயத்வாத் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -ததைஷத பஹுஸ் யாம் ப்ரஜாயேயேதி –தத் தேஜோ அஸ்ருஜத இத்யத்ர ஸதேவ இதம் அக்ர ஏகமேவ ஆஸீதிதி உபாதாநநாம் ப்ரதிபாத்ய –அத்விதீயம் இதி அதிஷ்டாத் ரந்த்ர நிவாரணாத் ஸச் ஸப்த வாஸ்யம் ப்ரஹ்மைவ நிமித்தம் உபாதாநம் சேதி விஞ்ஞாயதே –ததா ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாத்மந ஏவ விசித்ர ஸ்திரத்ரஸ ரூபேண பஹு பவநம் ஸம் கல்ப்ய ததைவ ஸ்ருஷ்டி வசநாச் ச –அதஸ் ஸ்ருதா வபி யத இதி ஹேதவ் பஞ்சமீ –அத் ரைவ ப்ரஹ்மணோ ஜகன் நிமித்த தத்வம் உபாதாநத்வம் ச ப்ரதிபாதநம் -அர்த விரோதாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி விசேஷ ஸ்ருத்யா சாஷிப்ய ப்ரக்ருதிஸ் ச ப்ரதி ஞாத்ருஷ்டாந்தாநு பரோதாத் அபித்ய உபதேஸாச் ச ஸாஷாச் சோபாயாம்நாநாத் ஆத்ம க்ருதே இத்யாதி பிர் ஸூத்ரை பரி ஹரிஷ்யதே –2–

நநு ச ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி ஸத்ய ஸங்கல்பம் நிரவத்ய தயா நிரஸ்த ஸமஸ்தா புருஷார்த்த கந்தம் ப்ரஹ்மைவாத்மாநம் விசித்ர சித் அசித் மிஸ்ரம் ஜகத் ரூபமிதம் ஸர்வமஸ்ருஐதேதி கதமுப பத்யதே –ததேதத் ஸூத்ர கார ஸ்வயமேவ பரி சோத்ய பரி ஹரிஷ்யதி –அபீதவ் தத்வத் ப்ரசங்காத ஸமஞ்ஸம் இதர வ்யபதேசாத்திதா கரணாதி தோஷ பிரசித்தி -இதி சோத்யம் -பரிஹாரஸ்து ந து த்ருஷ்டாந்த பாவாத் அதிகம் து பேத நிர்தேசாத் இதி ச –ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்ய ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந சாதிப க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷராத்மாநாவீஸதே தேவ ஏக அசித் வர்கம் ஸ்வாத்மநோ போக்யத்வேந ஹரதீதி போக்தா ஹர இத்யுச்யதே

த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச –ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத –யோ லோக த்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர

யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அக்ஷராதபி சோத்தம –அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம –இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி கணை ப்ரத்யகாத்மநோ அதிகமர்த்தாந்தர பூதம் ப்ரஹ்ம தச்ச ப்ரத்யகாத்ம சரீர கதயா தத் ஆத்ம பூதம் ப்ரத்யகாத்மநஸ் தச் ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மவத் வஞ்ச யா ஆத்மநி திஷ்டன் யஸ்ய ஆத்மா ஸரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் ஸ சரீரஸ் யாத்மந கார்ய அவஸ்தா ப்ராப்தா வபி குண தோஷ வ்யவஸ்திதே ர் த்ருஷ்டாந்த பாவாத் ப்ரஹ்மணி ந தோஷ ப்ரஸக்தி இதி நா ஸாமஞ்ஜஸ்யம் வேதாந்த வாக்யஸ்யே தி ந து த்ருஷ்டாந்த பாவாத் இத்யுக்தம் த்ருஷ்டாந்தஸ் ச தேவ மனுஷ்யாதி ஸப்த வாஸ்யஸ்ய ஸ சரீரஸ் யாத்மந மனுஷ்யோ பாலோ யுவா ஸ்தவிர இதி நாநாவஸ்தா ப்ராப்தா வபி பாலத்வ யுவத்வ ஸ்தவிரத் வாதய-சரீர கதா தோஷா நாத்மாநம் ஸ்ப்ருசந்தி ஆத்ம கதாஸ் ச ஞான ஸூகாதய ந சரீரமிதி -அத கார்யா வஸ்தாம் காரணா வஸ்தம் ச ப்ரஹ்ம ச ப்ரஹ்ம ப்ரத்யகாத்ம சரீர தயா தத் ஆத்ம பூதமிதி ப்ரத்யகாத்ம வாசிநா சப்தேந ப்ரஹ்ம அபிதாநே தச் ஸப்த ஸாமாநாதி கரண்யே ச ஹேதும் வக்தும் நிரஸ நீயம் மதத்வயம் ப்ரதிஞ்ஞா ஸித்தே லிங்கமாஸ்மரத்ய -உத்க்ர மிஷ்யத ஏவம் பாவாதித் யவ்டுலோமி இத் யுபந்யஸ்ய அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இதி ஹேதுருக்த தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் ஸச் ச த்யச்சா பவத் இத்யாதிநா ப்ரத்யகாத்மா ஆத்ம தயா அவஸ்தாநாத் ப்ரஹ்மணஸ் தச் சப்தேநாபிதாநம் –தத் ஸாமாநாதி கரண்யேன வ்யபதேசாச் சேத் யுக்தம் –ததா வைஷம்ய நைர் க்ருண்யே ந ஸாபேஷத்வாத் ந கர்மா விபாகா திதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப் யுபலப்யதே ச இதி தேவ மநுஷ்யாதி விஷம ஸ்ருஷ்டேர் ஜீவ கர்ம நிமித்தத்வம் ஜீவாநாம் தத் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வம் ச ப்ரதிபாத்ய ததநாதித்வம் ச நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஜ்ஞாஜ்ஜவ் த்வவ் இத்யாதி -ஸ்ருதி ஷுபலப்யத இத் யுக்த்வா தத நாதித்வ அபி ப்ரலய காலே சித் அசித் வஸ்துநோர் போக்த்ரு போக்யயோர் நாம ரூப விபாகா பாவாத் ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் – நான்யத் கிஞ்சந மிஷத் இத்யாதாவே கத்வாவதாரண முப பத்யதே இதி ஸூத்ர காரேண ஸ்வயமேவ யுக்தம் –ததா ச நாத்மா ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இதி ப்ரத்யகாத்மநோ நித்யத்வாதநுத் பத்தி முக்த்வா ஜ்ஜோ அத ஏவ இதி தஸ்ய ஞாத்ருத்வ மேவ ஸ்வரூப மித்யுக்தம் –
உத் க்ராந்திகத்யாகதீநாம் இத்யாதிநா அனுத்வம் சோக்தம் –தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேஸ ப்ராஜ்ஞவத் யாவதாத்ம பாவித் வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் இதி ஜ்ஞாது சப்தேந வ்யபதேஸோ ஞான குண சாரத்வாத் ஞாநைக நிரூபணீய ஸ்வ பாவத் வாச்சேத் யுக்தம்
நித்யோபலப்த்யநுபலப்தி பிரசங்கோ அந்நிய தர நியமோ வான்யதா இதி ஞான மாத்ர ஸ்வரூபாத்ம வாதே ஹேத்வாந்தராயத் தஜ் ஞாநவாதே ஸர்வ கதாத்மவாதே ச தோஷ உக்த –கர்தா ஸாஸ்த்ரார்த்த வத்த்வாத் உபாதாநாத் விஹாரோபதேஸாச் ச வ்யபதேஸாச் ச க்ரியா யாம் ந சேந்நிர்தேஸ விபர்யய உப லப்திவத நியம சக்தி விபர்யயாத் ஸமாத்ய பாவாச் ச -யதா ச தஷோ அபயதா இத்யாத்மந ஏவ ஸூபாஸூபேஷு கர்ம ஸூ கர்த்ருத்வம் ப்ரக்ருதேர கர்த்ருத்வம் ப்ரக்ருதேஸ் ச கர்த்ருத்வே தஸ்யாஸ் சாதாரணாத்வேந ஸர்வேஷாம் பல அநுபவ பிரசங்காதி ச ப்ரதிபாதிதம் –பராத்து தச் ஸ்ருதே –க்ருத ப்ரயத்நாபேஷஸ்து விஹித ப்ரதிஷித்தா வையர்த் யாதிப்ய -இத்யாத்மந ஏவ கர்த்ருத்வம் பரம புருஷாநுமதி ஸஹ க்ருத மித்யுக்தம்
அம்ஸோ நாநா வ்யபதேஸாத் அந்யதா சாபி தாஸகித வாதித்வ மதீயத ஏகே மந்த்ர வர்ணாத் அபி ஸ்மர்யதே ப்ரகாசாதி வத்து நைவம் பர ஸ்மரந்தி ச இதி அநீஸயா ஸோசதி முஹ்யமாந –ஜுஷ்டம் யதா பஸ்யத்யன்யமீஸமஸ்ய மஹிமாநமிதி வீத ஸோக -ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்நிய ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிம்ச ந வேத நாந்தரம் தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந் நந்யோ அபிசாக ஸீதி ஜ்ஞாஜ்ஜவ் த்வாவஜாவீஸ நீசவ் பிருதகாத்மாநம் ப்ரேரி தாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ்தேநாம்ருதத்வமேதி யதா பஸ்யஸ் பஸ்யதே ருக்ம வர்ணம் கர்தார மீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சந பரமம் ஸாம்யம் உபைதி -ஸ காரணம் கரணாதிபாதியோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந ஸாதிப -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் இத்யாதி ஷு ப்ரத்யகாத்மந -பரமாத்மநஸ் ச கர்ம வஸ்யத்வேந ஸோசித்ருத்வேநா ஸர்வஜ்ஞத்வேந உபாஸநாயத்த முக்தித்வேந நிர்வத்யத்வேந ஸர்வஞ்ஞத்வேந ஸத்ய சங்கல்பத்வேந சர்வேஸ்வரத்வேந ஸமஸ்த கல்யாண குணா கரத்வாதிநா ச ஸ்வரூபஸ்ய ஸ்வ பாவஸ்ய நாநத்வ வ்யபதேஸாத் –தயோரேவ தத்வமஸி அயமாத்மா ப்ரஹ்ம யோ அசவ் ஸோ அஹம் யோ அஹம் ஸோ அசவ் அத யோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்யோ அஸா வந்யோ அஹமஸ் மீதி ந ஸவேத அக்ருத்ஸ்நோ ஹ்யேஷ ஆத்மேத்யேவோபா ஸீத ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மேமே கிதவா இதி ச ஸர்வ ஜீவாத்ம வ்யாபித்வேநா பேத வ்யபதேஸாச் ச உபய வ்யபதேஸா விரோதேந பரமாத்மாம்ஸோ ஜீவாத்மேத் யப்யுப கந்தவ்யம்

ந கேவலம் ந்யாய ஸித்த மிதம் ஸ்ருதி ஸ்ம்ருதி ப்யாம் சாம்ஸத்வ முக்தம் ஜீவாத்மந -பாதோ அஸ்ய விச்வா பூதாநி மமைவ அம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூதஸ் ஸநாதந இதி -அம்சத்வம் நாம ஏகவஸ்த்வேகதேஸத்வம் –ததா ஸத் யுபயோ ரேக வஸ்துத்வேநா விரோதோ ந ஸ்யாதித்யா சங்க்ய ப்ரகாசாதி வத்து நைவம் பர இதி பரி ஹரதி
அந்நிய விஸேக்ஷணதைக ஸ்வபாவ ப்ரகாஸ ஜாதி குண சரீர விஸிஷ்டாநக்நிவ்யக்தி குண் யாத்மந -ப்ரதி ப்ரகாஸ ஜாதி குண ஸரீராணாம் யதா அம்சத்வம் ஏவம் பரமாத்மாநம் ப்ரத்யகாத்ம ஸரீரகம் ப்ரதி ப்ரத்யகாத்மநோ அசம்த்வம் ஏவமம்சத்வே யத் ஸ்வ பாவ அம்ச பூதோ ஜீவ நைவ மம்ஸீ பரமாத்மா ஸர்வத்ர விஸேக்ஷண விஸேஷ்ய யோஸ் ஸ்வரூப ஸ்வ பாவ பேதாத் –ஏவஞ்ச கர்தா சாஸ்த்ரார் தவத்வாத் பராத்து தச் ஸ்ருதி இத்ய நந்த ரோக்தம் ச ந விருத்யதே

ஏவம் ப்ரகாஸ சரீரவஜ் ஜீவாத்மநா மம்ஸத்வம் பராஸராதய ஸ்மரந்தி ச
ஏக தேச ஸ்திதஸ்ய அக்நேர் ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண ஸக்திஸ் ததேயமகிலம் ஜகத்
யத் கிம்சித் ஸ்ருஜ்யதே யேந சத்த்வ ஜாதேந வை த்விஜ
தஸ்ய ஸ்ருஜயஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரேஸ்தநு
தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோரம்ஸ ஸமுத்பவா இதி

அந்யதா பாரமார்த்திகா பாரமாத்திகோபாதி சமாஸ்ரயணேந ப்ரத்யகாத்மநோ அஸம்த்வே ப்ரஹ்மண ஏவ வேதாந்த நிவர்த்யா ஸர்வே தோஷா பவேயுரிதி ஆபாசா ஏவ ச இத்யாதி ஸூத்ரைருக்தம் -அதஸ் ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா ததாத்ம பூதமேவ ப்ரஹ்ம கதாசித விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் காரண அவஸ்தம் கதாசிச் ச விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் கார்ய அவஸ்தம் ப்ரஹ்ம -ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா தத் விஸிஷ்டத்வேத்மபி ப்ரஹ்மண பரிணாமித்வா புருஷார்த்த ஆஸ்ரயத்வே சரீர பூத சேதன அசேதன வஸ்து கதே ஆத்ம பூதம் ப்ரஹ்ம ஸர்வதா நிரஸ்த நிகில தோஷ கந்த அநவதிக அதிசய அஸங்க்யேய ஞான ஆனந்தாத் யபரிமித உதார குண சாகரம் அதிஷ்டத இதி ப்ரஹ் மைவ ஜகன் நிமித்தம் உபாதாநம் சேதி யதோ வா இமாநி இத்யாதி வாக்யம் ப்ரதிபாதயத்யேவேதி ஜந்மாத் யஸ்ய யத தத் ப்ரஹ்மேதி ஸூஷ்டூக்தம்

ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யஸ்ய சாயமர்த -யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய அவ்யக்தம் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதே -ப்ரஹ்மண ஸர்வதா சித் அசித் வஸ்து சரீரகத்வாத் சதேவேதமீதாநீம் ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கத்வேந விபக்த நாம ரூபம் அக்ரே ப்ரலய காலே ஸூஷ்ம தஸா பன்ன சித் அசித் வஸ்து சரீரகதயா நாம ரூப விபாக அநர்ஹாமேவ ஆஸீத் -ஸ்வயமேவ ப்ரஹ்ம ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி நிமித்தாந்தராநபேஷமத்விதீயம் சாதிஷ்டத்

ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி தன்நாம ரூப விபாகாநர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரகதயா ஏகமேவாவஸ்திதம் நாம ரூப விபாகார்ஹா ஸ்தூல தசாபத்த்யா பஹு ப்ரகாரம் ஸ்யாமிதி ஐக்ஷத –ஸ்யாம் ப்ரஜாயேய இதி வ்யஷ்டி சமஷ்டி வ்யபதேஸ –சித் அசிதோ பரஸ்ய ச ப்ரலய காலே அபி வ்யவஹாரா நர்ஹா ஸூஷ்ம பேத ஸர்வைர் வேதாந்தி ப்ரப்யுபகத அவித்யா க்ருத பேதஸ்ய உபாதி க்ருத பேதஸ்ய ச அநாதி த்வாப் யுபகமாத் இயாம்ஸ்து விசேஷ -ப்ரஹ்மைவாஜ்ஞம் உபாதை ஸம்பத்தம் சேதி ஸர்வ ஸ்ருதி ந்யாய விராதோ அந்யேஷாம் –ததபாவாத விரோதஸ் ச அஸ்மாகம் இதி —2-இதி ஜந்மாத் யதி கரணம் –2-

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வ அதி கரணம்
3 ஸாஸ்த்ர யோநித்வாத் –

ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விஸிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதாநத்வம் நிமிதத்வம் ச நாநுமாந கம்யமிதி ஸாஸ்த்ர ஏக ப்ராமாணகத் வாத்தஸ்ய யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயத்யேவேதி ஸித்தம் –3-இதி ஸாஸ்த்ர யோநித்வதி கரணம்

1-1-4-சமன்வய அதி கரணம்
4-தத் து சமன்வயாத் –

புருஷார்த தயா அந்வய ஸமன்வய சாஸ்த்ராக்ய ப்ரமாணஸ்ய புருஷார்த்த பர்யவசாயித்வே அபி ப்ரஹ்ம ஸ்வஸ்ய பரஸ்ய சாநுபவிது -அவிஸேஷேண ஸ்வரூபேண குணை விபூத்யா ச அநுபூயமாநம் அநவதிக அதிசய அநந்த ரூபமிதி புருஷார்தத்வேநாபி தேயதயா அந்வயாத் ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வ முபபந்ந தரமிதி நிரவத்யம் நிகில ஜகதேக காரணம் ப்ரஹ்ம வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுக்தம்-தஸ்யை கஸ்யை கதைவ க்ருத்ஸ்ன ஜகன் நிமித்தத்வம் தஸ்யைவோபாதாநதயா ஜகத் ஆத்மகத்வம் ச நாநுமாநாதி கம்யமிதி ஸாஸ்த்ரக பிரமாண கத்வாத் தஸ்ய ச அநவதிக அதிசய அநந்த ரூப தயா பரம புருஷார்தத்வாத் வேதாந்தா ப்ரதிபாத யந்த்யேவ இதி ஸ்திரீக்ருதம் –-4-இதி ஸமன்வய அதி கரணம் –4-

அத பரம் பாத ஸேஷேண ஜகத் காரண தயா ப்ரதான புருஷ ப்ரதிபாதநா நர்ஹாதயா ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரஸ்தாவித்யாதி -ஸமஸ்த தோஷ கந்தமபரிமிதோதார குண சாஹரம் ப்ரஹ்மைவ வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுச்யதே –தத்ர தாவத் ப்ரதாநம் வேதாந்த பிரதிபாதநா நர்ஹாமித்யாஹ

1-1-5-ஈஷத் யதி கரணம்
5- ஈஷதேர் நா ஸப்தம்
–அஸப்தம் ஆநு மாநிகம் ப்ரதாநம் ந தத் வேதாந்த வேத்யம் –குத –ஈஷதே –ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் இதி ப்ரஸ்துத ஜகத் காரண வ்யாபாரவாசிந –ஈஷதேர்தாதோ ஸ்ரவணாத் ததைஷத பஹு ஸ்யாம் இதி –5-

6-கௌணஸ் சேந்நாத்ம ஸப்தாத் —
தத் தேஜ ஐஷத இத்யாதிஷ்வ சேதநே அபி வஸ்துநி ஈஷதிஸ் ஸ்ரூயதே தத்ர கௌண =ஏவமத்ராபி ப்ரதான ஏவேக்ஷதிர் கௌண இதி சேத் நைததுப பத்யதே ப்ரஸ்துதே ஸச் ஸப்த வாஸ்யே ஸ்ரூயமாணாச் சேதன வாசிந ஆத்ம ஸப்தாத் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேத கேதோ இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே -தேஜ ப்ரப்ருதிஷ்வபி ந கௌணமீ க்ஷணம் –தேஜ ப்ரப்ருதி ஸப்தைரபி தத் தச் சரீரகம் ப்ரஹ்மைவாபி தீயதே அநேந ஜீவேநாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ப்ரஹ்மாத்மக ஜீவ அநு பிரவேசா தேவ ஸர்வஸ்ய வஸ்துநோ நாம ரூப பாக்த்வாத் –தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய-ஸச் சத்யாச்சாபவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச –விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச –ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமபவத் இதி சேதனமசேதநம் ச ப்ருதங் நிர்திஸ்ய ததுபயமநு ப்ரவிஸ்ய சத்யச் ஸப்த வாஸ்யோ அபவதிதி ஹி ஸமாந ப்ரகரணே ஸ்பஷ்டமபிஹிதம்

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேஸாத் –இதஸ் ச ப்ரதாநாதர் தாந்தர பூதம் ப்ரதாநாதர் தாந்தர பூதம் ஸச் ஸப்தாபி ஹிதம் ஜகத் காரணம் -ஸச் ஸப்தாபிஹித தத்த்வ நிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத் –தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஹி தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதிஸ்யதே -ப்ரதான காரணவாதி நாமபி ஹி ப்ரதான நிஷ்டஸ்ய மோஷோநாபிமத-7-

8-ஹேயத்வா வசநாச் ச –யதி ப்ரதானமத்ர விவஷிதம் ததா தஸ்ய ஹேயத்வாத் அத்யேயத்வமுச்யேத ந த்துச்யதே -மோக்ஷ சாதநதயா த்யேயத்வமே வாத்ரோச்யதே தத்த்வமஸி ஸ்வேத கேதோ இத்யாதிநா –8-

இதஸ் ச ந ப்ரதாநம்
9-ப்ரதிஜ்ஞா விரோதாத் —

ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா விரோதாத் -ஸச் ஸப்த வாஸ்ய தத்த்வ ஞாநேந தத் கார்ய தயா சேதன அசேதன ஸர்வ வஸ்து ஞானம் யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி நா ப்ரதிஞ்ஞாதம் தத்தி ப்ரதான காரண வாதே விருத்யதே-சேதநஸ்ய ப்ரதான கார்யத்வாபாவாத் -ப்ரதாநாதர்தாந்தர பூத ப்ரஹ்ம காரண வாதே சித் அசித் வஸ்து சரீரம் ப்ரஹைவ நாம ரூப விபாகா விபாகாப்யாம் கார்யம் காரணம் சேதி ப்ரஹ்ம ஞாநேந க்ருத்ஸ்நஸ்ய ஞாததோப பத்யதே –9-

இதஸ் ச ந பிரதானம்
10-ஸ்வாப்யயாத் –
-ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய விஜாநீஹி இதி –யத்ரை தத் புருஷஸ் ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி -ஸ்வம பீதோ பவதி தஸ்மாதேநம் ஸ்வபிதீத்யாசக்ஷதே -ஸ்வம் ஹ்யபீதோ பவதிஇதி ஜீவஸ்ய சேதனஸ்ய ஸூஷுப்தஸ்ய ஸதா சம்பந்நஸ்ய ஸ்வாப்யவசநாத் ப்ரதாநாதர்தாந்தர பூதம் ஸச் ஸப்த வாஸ்யமிதி விஞ்ஞாயதே –ஸ்வம பீதோ பவதி–ஆத்மாந மேவ ஜீவோ அபீதோ பவதீத்யர்தா -சித் வஸ்து சரீரகம் ததாத்ம பூதம் ப்ரஹ்மைவ ஜீவ சப்தேநாபி தீயத இதி நாம ரூப வ்யாகரண ஸ்ருத் யுக்தம் -தஜ் ஜீவ சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ ஸூஷுப்தி காலே அபி ப்ரலய கால இவ நாம ரூப பரிஷ்வங்காபாவாத் கேவல ஸச் சப்தாபிதேயமிதி ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வமபீதோ பவதி இத்யுச்யதே –ததாஸமாந ப்ரகரணே நாம ரூப பரிஷ்வங்காபாவேந ப்ராஜ்ஜேநைவ பரிஷ்வங்காத் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் இத்யுச்யதே -ஆமோஷாஜ் ஜீவஸ்ய நாம ரூப பரிஷ்வங்கதேவ ஹி ஸ்வ வ்யதிரிக்த விஷய ஞான உதய –ஸூஷுப்தி காலே ஹி நாம ரூபே விஹாய ஸதா ஸம் பரிஷ் வக்த -புநரபி ஜாகரதஸாயாம் நாம ரூபே பரிஷ் வஜ்ய தத் தன்நாம ரூபோ பவதீதி ஸ்ருத் யந்தரே ஸ்பஷ்டமபிதீயதே யதா ஸூ ப்த ஸ்வப்நம் ந கதஞ்சன பஸ்யதி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி -ஏதஸ்மாதாத்மந ப்ராணா யதாயதநம் விப்ரதிஷ்டந்தே ததா த இஹ வ்யாக்ரோ வா ஸிம்ஹோ வா வ்ருகோ வா வராஹோ வா யத் யத் பவந்தி இதி –10-

11-கதி சாமான்யாத் –ஸகல உபநிஷத் கதி ஸாமாந்யாதஸ் யாமப் யுப நிஷதி ந ப்ரதாநம் காரணமிதி ஞாயதே ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் ஸ ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி ஸ இமால் லோகாநஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்ஸிஜ் ஜநிதா ந சாதிப இத்யாதி ஸகல உப நிஷத்ஸூ ஸர்வேஸ்வர ஏவ ஹி ஜகத் காரணமிதி ப்ரதி பாத்யதே –11-

12-ஸ்ருதத்வாச் ச –ஸ்ருதமேவ ஹ்யஸ்யாம் உப நிஷதி -ஆத்மத ப்ராண –ஆத்மந ஆகாஸ இத்யாதவ் ஆத்மந ஏவ ஸர்வ உத்பத்தி -அத ப்ரதாநாத சேதநாதர்தாந்தர பூதஸ் ஸர்வஞ்ஞ-புருஷோத்தம ஏவ ஜகத் காரணம் ப்ரஹ்மேதி ஸ்திதம் —12-இதி ஈஷத் யதி கரணம் –5-

1-1-6-ஆனந்த மய அதி கரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸாத்
–யத்யபி ப்ரதாநாதர்தாந்தர பூதஸ்ய ப்ரத்யகாத்மநஸ் சேதநஸ்ய ஈஷண குண யோக ஸம்பவதி ததா அபி ப்ரத்யகாத்மா பத்தோ முக்தஸ் ச ந ஜகத் காரணம் -தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாராப்ய தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யஸ்ய ஆனந்த மயத்வ ப்ரதி பாதநாத் காரண தயா வ்யபதிஷ்டோ அயம் ஆனந்த மய ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -குத அப்யாஸாத் ஆனந்த மயஸ்ய நிரதிசய தயா ஸிரஸ்காநந்த மயத்வேநாப்யாஸாத் தே யே சதம் ப்ரஜாபதேர் ஆனந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த யதோ வாஸோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ் சந இதி ஹி வேத்யத்வேநாயமாநந்த மயோ அநவதிக அதிசயோ அப் யஸ்யயதே –13-

14-விகார ஸப்தாந்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஸ வா ஏஷ புருஷோ அந்நர ஸமய இதி விகாரார்த மயப் ப்ரகரணாத் ஆனந்த மய இத்யஸ்யாபி விகாரார்தத்வம் ப்ரதீயதே -அதோ அயம் ஆனந்த மய நா விகார ரூப பரமாத்மா இதி சேந்ந அர்த விரோதாத் பிராசுர்யார்த ஏவாயம் மயடிதி விஞ்ஞாயதே தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத இதி ஹ்ய விகார ஆத்மா ப்ரக்ருத –ப்ரகரணே ச விகாரார்தத்வம் ப்ராண மய ஏவ பரித்யக்தம் –உக்தேந ந்யாயேந ஆனந்த ப்ராசுர்யாத் பரம புருஷா ஏவாயமாநந்த மய –14-

15-தத் தேது வ்யபதேஸாச் ச –ஏஷ ஹ்யேவா நந்தயாதி இதி ஜீவான் ப்ரத்யா நந்த ஹேதுரயமா நந்தமயோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாயம் ந ப்ரத்யகாத்மா –15-

16-மாந்த்ர வர்ணிகமேவ ச கீயதே–ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதமேவ தஸ்மாத் வா ஏதஸ்மாத் இத்யாதி நா ஆனந்த மய இதி கீயதே –அதஸ் ச ந ப்ரத்யகாத்மா –16-

17-நேதரோ அநுப பத்தே –இதர –ப்ரத்யகாத்மா மந்த்ர வர்ணோதித இதி நாசங்க நீயம் ஸோ அஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா இதி ப்ரத்யகாத்மநோ பத்தஸ்ய முக்தஸ்ய ச ஈத்ருஸ விபஸ்சித்த்வாநுப பத்தே –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி விசித்ர ஸ்திரத்ரஸ ரூப பஹு பவந ஸங்கல்ப ரூபமிதம் விபஸ்சித்த்வமிதி ஹ்யுத்தரத்ர வ்யஜ்யதே -முக்தஸ்ய ஸர்வஞ்ஞஸ்யாபி ஜகத் வ்யாபாராபாவாதீத்ருஸ –விபஸ்சித்த்வா ஸம்பவ –17–

இதஸ் ச
18-பேத வ்யபதேஸாச் ச
–தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி ஹி விஞ்ஞாந மயாத் ப்ரத்யகாத்மநோ பேதே நாயமா நந்த மயோ வ்யபதிஸ்யதே –ந ச விஞ்ஞாந மய விஷய தயா உதாஹ்ருதஸ் லோகே விஞ்ஞானம் யஞ்ஞம் தநுதே இதி வ்யபதேஸாத் விஞ்ஞாந மயோ புத்தி மாத்ர மித்யா சங்க நீயம் -யதஸ் ஸூத்ரகார ஏவ இமாம் ஆசங்காம் பரி ஹரிஷ்யதி வ்யபதேசாச் ச க்ரியாயாம் ந சேந்நிர்தேஸ விபர்யயய இதி -விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே இதி யஜ்ஞாதி க்ரியாயாம் ஜீவஸ்ய கர்த்ருத்வ வ்யபதேஸாச் ச ஜீவ கர்தா –விஞ்ஞான சப்தேந ஜீவஸ்யா வ்யபதேஸே புத்தி மாத்ர வ்யபதேஸே ச விஞ்ஞாநேநேதி நிர்தேச விபர்யயஸ் ஸ்யாத் புத்தே கரணத்வாதிதி –18-

இதஸ் ச
19-காமாச்ச நாநுமாநாபேஷா
–ஸோ அகாமயத பஹுஸ்யாம் இதி ஸ்வ காமாதேவாஸ்ய ஜகத் ஸர்கஸ் ஸ்ரூயதே ப்ரத்யகாதமநோ ஹி யஸ்ய கஸ்ய சித் ஸர்கே ஆநு மாநாபேஷா த்ருஸ்யதே –அநு மாந காம்யம் ப்ரதாநம் ஆநு மாநம் –19-

இதஸ் ச
20- அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி-
– அஸ்மின் ஆனந்த மயே அஸ்ய ப்ரத்யகாத்மந ஆனந்த யோகம் ஸாஸ்தி ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அத ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஜகத் காரண பூத ஆனந்த மய –20- இதி ஆனந்த மய அதி கரணம் –6-

1-1-7-அந்தராதிகரணம்
21-அந்தஸ் தத் தர்ம உபதேஸாத் –அயம்

ஜகத் காரண பூத விபஸ் சிதாநந்த மய கஸ்சிதுபசித புண்ய விஸேஷோ ஜீவ விஸேக்ஷ தேஹ யோகாத் விஞ்ஞாயதே நாயம் பரமாத்மேதி நா சங்க நீயம் -ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ இத்யாதவ் ஸ்ரூயமாண புருஷாகார பரமாத்மைவ –குத -தத் தர்ம உபதேஸாத் –ஸ ஏஷ ஸர்வேஷாம் லோகாநாமீஸ ஸர்வேஷாம் காமாநாம் தஸ்யோதிதி நாம ஸ ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உசித இதி நிருபாதிக ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வம் ஸ்வத ஏவா கர்மவஸ்யத்வம் ச ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய ஹி பரம புருஷஸ் யைவ தர்ம வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு த்ரி குணாத் மக ப்ரக்ருத்யநந்தர் கத அப்ராக்ருதஸ்வ அசாதாரண ரூப வத்த்வம் ச ஞானாதி குணவத்த்ஸ்யைவ ஹி ஸ்ரூயதே
ஞானாதயோ அபி -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச இத்யாதிஷு ஸ்ருதத்வாத் தஸ்ய குணா விஞ்ஞா யந்தே –ததா ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு அப்ராக்ருத ஸ்வ அசாதாரண ரூப ஸ்ரவணாத் தத்வத்தா ச விஞ்ஞாயதே -ததே தத் வாக்யகாரஸ் சாஹ -ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே இதை ப்ராஞ்ஞஸ் ஸர்வ அந்தரஸ் ஸ்யாத் லோக காமேஸோபதேஸாத் ததோதயாத் பாப்மநாம் இத்யுக்த்வா-தத் ரூபஸ்ய கார்யத்வம் மாயா மயத்வம் வேதி விசார்ய ஸ்யாத்ரூபம் க்ருதகமநுக்ர ஹார்தம் தச்சேத ஸாமைஸ் வர்யாத் இதி நிரஸ நீயம் மதமுபந்யஸ்ய ரூபம் வாதீந்த்ரியம் அந்தக்கரண ப்ரத்யக்ஷ நிர்தேசாத் இதி –வ்யாக்யாதம் ச த்ரமிடா சார்யை ந வா மாயா மாத்ரம் அஞ்ஞஸைவ விஸ்வஸ்ருஜோ ரூபம் தத்து ந சஷுஷா க்ராஹ்யம் மநஸா த்வ கலுஷேண சாதனாந்தர வதா க்ருஹ்யதே –ந சஷுஷா க்ருஹ்யதே நாபி வாஸா மநஸா து விஸூத்தேந இதி ஸ்ருதே –ந ஹ்யரூபாயா தேவ தாயா ரூபமுபதிஸ்யதே –யதா பூதவாதி ஹி ஸாஸ்த்ரம் –யதா மாஹார ஜனம் வாஸ –வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் இதி ப்ரகாரணாந்தர நிர்தேசாத் இதி -ஸாஷிண இதி ஹிரண்மய இதி ரூப ஸாமான்யாச் சந்த்ர முகவத் இதி ச வாக்யம் –தச்ச வ்யாக்யாதம் தைரேவ –ந மயடத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே அநாரப் யத்வாதாத்மந இத்யாதிநா –அத ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் சார்தாந்தர பூதோ நிருபாதிக விபஸ்சித் அநவதிக அதிஸய அநந்தோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்ய ரூப புருஷோத்தம பரம் ப்ரஹ்ம ஜகத் காரமும் இதி வேதாந்தை ப்ரதிபாத்யத இதி நிரவத்யம் –21-

22-பேத வ்யபதேஸாச் சாந்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தரோ யமாதித்யோ ந வேத யஸ்ய யாதித்யஸ் ஸரீரம் ய ஆதித்ய மந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர் யாம் யம்ருத இத்யதி தைவதம் யஸ் சஷுஷி திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் இத்யத் யாத்மம் -யஸ் ஸர்வேஷு லோகேஷு திஷ்டன் நித்யதி லோகம் யஸ் ஸர்வேஷு பூதேஷு திஷ்டன் நித்யதி பூதம் யஸ் ஸர்வேஷு வேதேஷு திஷ்டன் நித்யதி வேதம் யஸ் ஸர்வேஷு யஜ்ஜேஷு திஷ்டன் நித்யதி யஜ்ஞம் இத் யந்தர்யாமி ப்ராஹ்மணே ஸூபாலோப நிஷதி ச ய பிருத்வீ மந்தரே ஸஞ்சரன் இத்யாரப்ய யோ அவ்யக்தம் அந்தரே ஸஞ்சரன் யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரன் யோ ம்ருத்யும் அந்தரே ஸஞ்சரன் யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் யம் ம்ருத்யுர் ந வேத ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி ஸர்வே தேவ ஸர்வ லோக ஸர்வ பூத ஸர்வ வேத ஸர்வஞ்ஞ ஸர்வாத்மோ பரிவர்தமாந தயா தத் தச் சரீர தயா தத் தத் அந்தராத்ம தயா தத் ததவேத்ய தயா தத் தன் நியந்த்ருதயா சைப்யஸ் சர்வேப்ய பேத வ்யபதேஸாச் சாயம் அபஹத பாப்மா நாராயண ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ்சார் தாந்தர பூதோ நிகில ஜகதேக காரணமித்தி ஸித்தம் –22-

1-1-8-ஆகாஸ அதி கரணம்
1-1-9-ப்ராண அதி கரணம்
23-ஆகாஸஸ் தல்லிங்காத்
24-அத ஏவ ப்ராண

ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ்தம் யந்தி ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ அபி ஸம் விஸந்தி ப்ராண மேவ அப்யுஜ்ஜிஹதே இத்யாதவ் –ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் இத்யாதிநா சாமாந்யேன நிர் திஷ்டஸ்ய ஜகத் காரணஸ்ய பூதாகாஸ ப்ராண ஸஹசாரி ஜீவ வாசி ஸப்தாப்யாம் விசேஷ நிர்ணய சங்காயாம் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்திஸ்யமாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் பூதாகாஸ ஜீவாப்யாமர் தாந்தர பூத பரம புருஷ ஏவாத்ர ஆகாஸ ப்ராண ஸப்த நிர்திஷ்ட இதி நிஸ்ஸீயதே –தத் ப்ரஸித்திஸ் து –பஹு பவந ரூபேக்ஷண அநவதிக அதிசய அநந்த ஜீவ அநந்த ஹேதுத்வ விஞ்ஞாந மய விலக்ஷணத்வ நிகில புவந பயாபய ஹேதுத்வ -ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வ ஸர்வ பாப்மோதயா ப்ராக்ருத -ஸ்வ அசாதாரண ரூப விஸிஷ்டஸ்ய ரவிகர விகஸித புண்டரீக நயனஸ்ய ஸர்வஞ்ஞஸ்ய ஸத்ய ஸங்கல்பஸ்ய கரணாதிபாதி பஸ்ய பரம புருஷஸ்யைவ நிகில ஜகத் ஏக காரணத்வாதிதி ஸ ஏவ ஆகாஸ ப்ராண ஸப்தாப்யாம் ஜகத் காரணத்வேநாபி தீயதே இதி நிர்ணயோ யுக்த ஏவ —23-24-ஆகாஸாதி கரணம் -ப்ராண அதிகரணம் ச –8-9-

1-1-10-ஜ்யோதிர் அதி கரணம்
25-ஜ்யோதிஸ் சரணாபிதாநாத்
–அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வ தத்யதி தமஸ்மிந் நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஸர்வஸ்மாத் பரத்வேந நிர்திஸ்யமாந தயா ஸகல காரண பூதஜ்யோதிக்ஷ -கௌஷேய ஜ்யோதி ஷைக்யாபிதாநாத் ஸ்வ வாக்யே விரோதி லிங்கா தர்ச நாச்ச ப்ரஸித்தமேவ ஜ்யோதிர் ஜகத் காரணத்வேந ப்ரதிபாத்யத இதி ஸங்காயாம் யத்யபி ஸ்வ வாக்யே விரோதி லிங்கம் ந த்ருஸ்யதே –ததா அபி பூர்வஸ்மின் வாக்யே பாதோ அஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி ப்ரதிபாதி தஸ்ய ஸர்வ பூத சரணஸ்ய பரம புருஷஸ்யைவ த்யு சம்பந்தி தயா அத்ராபி ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸ ஏவ ஜ்யோதிஸ் சப்தேந ஸர்வஸ்மாத் பரத்வேந ஸகல காரண தயா அபீதீ யதே -அஸ்ய ச கௌஷேய ஜ்யோதிஷைக்யாபிதாநம் பலாயோபதிஸ் யத இதி ந கஸ்ஸித் விரோத –அகில ஜகதேக காரண பூத பரம புருஷோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்யோ வர்ணோ திவ்ய ரூபஸ் தமஸ பரஸ்தாத் வர்தத இதி தஸ்யைவ நிரதிசய தீப்தி யோகாத் ஜ்யோதிஸ் ஸப்தாபிதேயத்வம் விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு வாஸஸ் ச யுஜ்யதே –25-

26-சந்தோபிதா நாந்தேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத் ததா ஹி தர்சனம் –பூர்வத்ர காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர் யாக்யச் சாந்த பிரஸ்துத மிதி நாத்ர பரம புருஷாபிதாநமிதி சேத் நைதத் பரம புருஷஸ் யைவ காயத்ரீ ஸாத்ருஸ்யஸ்யாநு ஸந்தாநோபதேஸத்வாத் தஸ்ய சந்தோ மாத்ரஸ்ய ஸர்வ பூதாத்மகத்வாநுப பத்தேரேவேதி நிகம்யதே –அந்யத்ராபி ஹ்யன்யஸ்ய சந்தஸ் சாத்ருஸ்யாத் சந்தோ நிர்தேஸா த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே இத்யாரப்ய சைஷா விராட் இத்யாதவ் –26-

27-பூதாதி பாத வ்யபதேஸாப பத்தேஸ் சைவம் –பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயைஸ் சதுஷ்பதேதி வ்யபதேஸஸ் ச பரம புருஷ காயத்ரீ ஸப்த நிர் திஷ்டே ஹ்யுப பத்யத இதி பூர்வோக்த ப்ரகார ஏவ சமஞ்ஜஸா–27-

28-உபதேஸ பேதான்நேதி சேந்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பூர்வத்ர த்ரி பாதஸ்யாம்ருதம் திவி இதி பரம புருஷோ வ்யபதிஸ் யதே –அத்ர அத யதத பரோ திவ இதி பஞ்சம்யா நிர் திஷ்ட த்யு சம்பந்தி ஜ்யோதிரிதி ந ப்ரத்யபிஜ்ஜேதி சேத் நைதத் உபயஸ்மிந் நபி வ்யபதேஸே விரோதா பாவாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரதஸ் ஸ்யேந இதி வ்யபதேஸ –அத்ர திவ பரத்வமேவ உபயத்ர விவஷித மித்யர்த —28-இதி ஜ்யோதிர் அதி கரணம் –10-

1-1-11-இந்த்ர ப்ராண அதி கரணம்-29-ப்ராணஸ் ததாநுகமாத் –ஆத்ம நாம் ஹித தம ரூப மோக்ஷ சாதநோபாஸந கர்ம தயா ப்ரஞ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்ய ப்ராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமா யுரம்ருதமித் யுபாஸ்ஸ்வ இதி விதாநாத் ஸ ஏவ ஜகத் காரணம் -காரணோபாஸநம் ஹி மோக்ஷ ஸாதனம் –தஸ்ய தாவமேவ சிரம் யாவன்ன வி மோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஸ்ருதேரிதி நா சங்க நீயம் –ப்ராண ஸப்த ஸமாநாதி கரணேந்த்ர ஸப்த நிர் திஷ்டோ ஜீவா தர் தாந்தர பூத யுக்த லக்ஷண பரமாத்மைவ–குத ததா அநு கமாத் -பரமாத்ம அசாதாரணாநந்தாஜராம்ருதாதிஷ் வஸ்ய இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ்யாநுகமோ ஹி த்ருஸ்யதே ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்ம அஜரோ அம்ருத இதி –29-

30-ந வக்துராத்மோப தேஸாதிதி சேதத் யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மிந் –உபக்ரமே ஹி மாமேவ விஜாநீஹி இதி த்வாஷ்ட்ரவதாதிநா பிரஜ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்யோபதேஸாத் உப ஸம்ஹாரஸ் ததநு குணோ வர்ண நீய இதி சேத் நைதத் அத்யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மின் –அத்யாத்மம் -பரமாத்ம தர்ம பரமாத்ம தர்ம ஸம்பந்த -பஹு த்வமஸ் மிந்த்ர ஸப்தாபிதேயே
வாக்யோபக்ரம ப்ரப்ருத்யோப ஸம் ஹாராத்த்ருஸ்யதே –யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ஹித தமோபாஸநம் ப்ராரப்தம் –தச்ச ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி -நா ஸர்வஸ்ய காரயித்ருத்வம் –ஏவமேவைதா பூத மாத்ரா இத்யாரப்ய பரஜ்ஞா மாத்ரா ப்ராணேஷ்வர்பிதா இதி ஸர்வாதாரத்வம் ததா ஆனந்தாதயஸ் ச ஏஷ லோகாதிபதி இத்யாதிநா சர்வேஸ்வரத்வம் ச –30-

31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தூபதேஸே வாம தேவவத் –நாம ரூப வ்யாகரணாதி சாஸ்த்ராத் ஸர்வ ஸப்தை பரமாத்மைவாபி தீயத இதி த்ருஷ்ட்யா தஜ் ஞாபநாயாய மிந்த்ரா சப்தேந பரமாதமோபதேஸ –ஸாஸ்த்ரஸ்தா ஹி வாமதேவாதய –ததைவ வதந்தி –தத்தை தத் பஸ்யந் ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர் யஸ் ச இதி –31-

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சே ந்நோபாஸா த்ரை வித்யாதாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் த்ரி ஷீர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநம் யாவத் தயஸ்மின் சரீரே ப்ராணோ வஸதி தாவதாயு இத்யாதி ஜீவ லிங்கம் முக்ய ப்ராண லிங்கம் ஸாஸ்மின் த்ருஸ்யதே இதி நைவமிதி சேந்ந –உபாஸாத் த்ரை வித்யாத் ஹேதோ ஜீவ சப்தேந ப்ராண சப்தேந ச பரமாத்மநோ அபி தாநம் –அந்யத்ராபி பரமாத்மந ஸ்வரூபேணோபாஸநம் போக்த்ரு சரீர கத்வேந போக்ய போகோபகரண சரீர கத்வேந இதி த்ரி விதம் பரமாத்மோபாஸந மாஸ்ரிதம் –யதா ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி ஸ்வரூபேண -தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சா பவத் இத்யாதி –ஸத்யம் சாந்ரு தஞ்ச சத்யமபவத் இதி போக்த்ரு சரீரகத்வேந போக்ய போக உபகரண சரீரகத்வேநச இஹாபி தத் ஸம்பவாதேவமுபதேஸ -ஜந்மாத யஸ்ய யத இத்யாதிஷு ஸத் ப்ரஹ் மாத்மேதி ஸாமாந்ய ஸப்தைர் ஹி ஜகத் காரணம் ப்ரக்ருதி புருஷாப்யா மர்தாந்தர பூதமிதி ஸாதிதம் ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் இத்யஸ்மின் ஸூத்ரே புருஷ ஸூக்தோதிதோ மஹா புருஷோ ஜகத் காரணமிதி விசேஷதோ நீர்ணீதம்–ஸ ஏவ பரஜ்ஞாத ஜீவ வாசிபிரிந்த்ராதி ஸப்தைரபி க்வசித் க்வசித் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தத் தச் சரீர கதயா சோபாஸ்யத்வாயோபதிஸ் யத இதி ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூப தேஸோ வாம தேவவத் இதி உபாஸா த்ரை வித்யாத் இதி ஸாதிதம் —32- இதி இந்த்ர ப்ராண அதி கரணம் –11-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த தீபம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம்

February 26, 2024

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத்
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம் கிம் ஜீவ உத பரமாத்வேதி ஸம்சய ஜீவ இதி பூர்வ பக்ஷ மந ப்ரப்ருதீ ந்த்ரியாதார்த்தவ ஸ்ருதே உத்தரத்ர நாடீ சம்பந்தாத் ஜாயமாநத்வ ஸ்ருதேஸ் ச –ராத்தாந்தஸ்து -நிருபாதிக ஆத்மத்வ அம்ருத சேது த்வயோ -பரமாத்ம தர்மயோ ஸ்ரவணாத் பரமாத்மை வாயம் –ஸர்வம் நியந்தருதயா ஆப்நோ தீதி ஹ்யாத்மா –அம்ருதஸ்ய ப்ராபக தயா சேதுஸ் ச ஸ ஏவ நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வஞ்ச — ஸந்ததம் ஸிராபிஸ் து லம் பத்யாகோஸ ஸந்நிபம் அஜாயமாநோ பஹுதா விஜாயதே இத்யாதி ஷு ஸர்வ சமாஸ்ரயணீயத்வாய அஜஹத் ஸ்வ பாவஸ் யைவ பரமாத்ம நோ அபி த்ருஸ்யதே இதி ஸூத்ரார் தஸ்து –த்யு ப்ருதிவ்யாதீநாமாயதநம் பரமாத்மா ஸ்வ ஸப்தாத் –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச பந்தான் முக்தஸ்ய ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பரமாத்மா –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –ஆநு மாநம் –அநுமாந கம்யம் ப்ரதாநம் யதா தத் வாசி ஸப்தா பாவாத் ததிஹ ந க்ருஹ்யதே –ததா ப்ராண ப்ருத பீத் யர்த –அதஸ் சாயம் பரமாத்மா –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ஜீவாத் பேதேந வ்யபதேசாச் சாயம் பரமாத்மா –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி நா பரமாத்மந ஏவ ப்ரக்ருதத்வாத் -5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி கர்மபலமநஸ்நத -பரமாத்மநோ தீப்ய மாந தயா ஸ்திதே -ஜீவஸ்ய கர்ம பரவசதயா தத் பலாதநாச்ச பரமாத்மநோ ஜீவாத் பேதாவகமாத் அம்ருத ஸேதுர்த் யுப்வாத்யாயதநம் ந ஜீவ -அத்ருஸ்யத்வாதி குணக இத்யநேந பரமாத்மத்வே ஸ்தாபிதே அபி நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வ லிங்காத் யா அவாந்தர ப்ரகரண விச்சேதா சங்கா ஸா நிராக்ருதா -த்யுப் வாத்யாயதநமிதி வைஸ்வா நரஸ்ய த்ரை லோக்ய சரீரத்வாதிநா பரமாத்மத்வ நிர்ணய இதி மத்யே வைஸ்வாநர வித்யா நிரூபிதா —6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
–சாந்தோக்யே -யத்ர நான்யத் பஸ்யேதி நானயச் ஸ்ருணோதி நான்யத் விஜாநாதி ஸ பூமா இத்யத்ர பூம ஸப்த நிர்திஷ்டோ நிரதிசய வை புல்ய விஸிஷ்ட ஸூக ஸ்வரூப கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாத்மேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ –தரதி ஸோகமாத்மவித் இதி ப்ரக்ரம்ய நாமாதி பரம் பர யோத்தரோத்தர பூயஸ்த்வேந ப்ரஸ்ன பிரதி வசனாப்யாம் ப்ரவ்ருத்தஸ் யாத்ம யுபதேஸஸ்ய ப்ராண ஸப்த நிர் திஷ்டே ப்ரத்யகாத்மநி ஸமாப்த்தி தர்சநாத் ப்ரத்யகாத்மந ஏவ பூமஸம் ஸப்த நமிதி நிஸ்ஸீயதே –ராத்தாந்தஸ்து -யத்யபி ப்ரஸ்ன பிரதிவசநாப்யாம் உத்தர உத்தர பூயஸ்த்தவ வசனம் ப்ராணே பர்யவஸ்திதம் ததாபி பிராணாவேதிநோ அதிவாதித்தவம் உக்த்வா -ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதி வததி இதி து சப்தேன உபாஸக பேதம் ப்ரதிபாத்ய -தஸ்ய ஸத்ய உபாஸகஸ்ய பூர்வஸ்மாதாதிக்ய உபதேசாத் ஸத்ய சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ பூம விசிஷ்டம் இதி –ஸூத்ரார்தஸ்து -பூம குண விசிஷ்டம் பரம் ப்ரஹ்ம ஏவ ஸம் ப்ரசாதாதத் யுபதேசாத் –ஸம் ப்ரஸாத –ப்ரத்யகாத்மா ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத்ஸமுத்தாய பரம் ஜ்யோதி ரூப ஸம் பத்ய இத்யாதி உபநிஷத் ப்ரஸித்தே –ஏஷ து வா அதி வததி இதி ப்ரத்யகாத்மநோ அதிகதய உபதேசாத் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்யாதிக்ய வாதித்வம் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ –ஸ்வ மஹிம ப்ரதிஷ்டிதத்வ -ஸர்வாத்மத்வஸர்வ உத்பத்தி ஹேதுத்வா தீநாம் பூம்நி ஸ்ரூய மாணாநாம் தர்மாணாம் பரஸ்மின் நேவ ப்ராஹ்மண் யுப பத்தேஸ் ச பூமா பரம் ப்ரஹ்ம ஏவ -8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–வாஜிநாம் கார்கி ப்ரஸ்நே ஸ ஹோவாசைதத்வை தத் அக்ஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்த்ய ஸ்தூல மநண் வஹ்ரஸ்வம தீர்கமலோஹிதமஸ் நேஹ மச்சாயம் இத்யத்ர அக்ஷர ஸப்த நிர் திஷ்டம் ப்ரதாநம் -ஜீவோ வா உத பரமாத்மா இதி ஸம்சய ப்ரதாநம் ஜீவோ வா ந பரமாத்வேதி பூர்வ பக்ஷ –கஸ்மின் து கல்வாகாச ஓதஸ் ச கல் வாகாச ஓதஸ் ச ப்ரோதஸ் ச இத் யுக்தே ஆகாசாதார தயோச்ய மாந மக்ஷரம் ப்ரதாநம் ஜீவோ வா ப்ரதா நஸ்ய விகாரா தாரத்வாஜ் ஜீவஸ்யா சித்வஸ்த்வாதாரத்வாத் ந பரமாத்வேதி –ராத்தாந்தஸ்து -யதூர்த்வம் கார்கி திவ இத்யாரப்ய காலத்ரய வர்திந க்ருத்ஸ்னஸ் யாதார தயா நிர் திஷ்ட ஆகாஸோ அவ்யாக்ருதமேவ ந வாயுமாநாகாஸ –தத பஸ்ஸாத் கஸ்மின்நு கல் வாகாச ஓதஸ்ஸ ப்ரோதஸ்ஸ இதி ப்ருஷ்டே ததா தராத யோஸ்யமாநமேதத் அக்ஷரம் ந ப்ரதாநம் பவிதும் அர்ஹாதி –நாபி ஜீவ -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ர மஸவ் வித்ருதவ் திஷ்டத இத்யாரப்ய ப்ரஸாஸ நாத் சர்வாதாரத்வ ஸ்ருதே –ஸூத் ரார் தஸ்து -ஏதத் வை ததஷரம் கார்கி இதி நிர்திஷ்டம் அக்ஷரம் பரமாத்மா அம்பராந்தத்ருதே –அம்பரம் வாயுமாநாகாஸ அம்பராந்த அம்பர பார பூதம் அம்பர காரண மிதி யாவத் காரணாபத்தி ரேவ ஹி கார்யஸ் யாந்த ஸ சாம்பராந்த அவ்யாக்ருதம் ப்ரதாநம் தஸ்ய த்ருதே –தாரணாத் –அவ்யாக்ருத்ஸயாபி த்ருதே ரக்ஷரம் பரமாத்மைவேத் யர்த –9-

ஏவம் தர்ஹி ஜீவோ பவிதும் அர்ஹாதி தஸ்ய ப்ரதான த்ருத் யுப பத்தேர் இத்யா ஸங்க்யாஹா

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் இதி ப்ரஸாஸ நாச்ச் ரூயதே -ப்ரஸாஸநம் -ப்ரக்ருஷ்டம் ஸாஸனம்அப்ரதிஹதாஜ்ஞா –ந சா ப்ரதி ஹதாஜ்ஞயா க்ருத்ஸ் நஸ்ய சித் அசித் ஆத்மகஸ்ய ஜகதோ த்ருதிர் ஜீவே உப பத்யதே –அதோ ந ஜீவ –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அஸ்ய அக்ஷரஸ்ய பரம புருஷாதன் யத்வம் வ்யாவர்தயதி வாக்ய சேஷ –அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா ஸர்வைரத்ருஷ்ட மேததக்ஷரம் ஸர்வஸ்ய த்ரஸ்ட்ரித்யாதி ப்ரதான ஜீவா ஸம்பாவ நீயார்த ப்ரதிபாதநாத் —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
–ஆதர்வணிகாநாம் ஸத்ய காம ப்ரஸ்நே ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய –ஸ ஸாம பிருந்நீயதே ப்ரஹ்ம லோகம் ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர த்யாதீ ஷதி கர்மதயா வ்யபதிஷ்ட பரம புருஷ கிம் ஹிரண்ய கர்ப –உத பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம இதி ஸம்சய –ஹிரண்ய கர்ப இதி பூர்வ பக்ஷ -பூர்வத்ரைக மாத்ரம் ப்ரணவம் உபாஸீநஸ்ய மனுஷ்ய லோக ப்ராப்திம் பலம் த்விமாத்ரம் உபாஸீநஸ் யாந்தரிக்ஷ லோக ப்ராப்திம் ச பலமபிதாயா நந்தரம் ய புந ரேதம் த்ரி மாத்ரேண இதி த்ரி மாத்ரம் ப்ரணவம் உபாஸீ நஸ்ய பலத்வே நோச்யமாந ப்ரஹ்ம லோகஸ்த புருஷே க்ஷண கர்ம பூதஸ் சதுர்முக ஏவேதி விஞ்ஞாயதே மனுஷ்ய லோகாந்தரிக்ஷ லோக ஸாஹசர்யாத் ப்ரஹ்ம லோகோ அபி ஷேத்ரஞ்ஞ லோக இதை நிஸ்ஸயாத்
ராத்தாந்தஸ்து –பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷதே இத் ஈஷதி கர்மதயா நிர் திஷ்ட புருஷ விஷயேஸ் லோகே –தமோங்காரேணை வாய நேநாத்வேதி வித்வான் யத் தச்சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி நிருபாதிக சாந்தத்வ அம்ருதத்வாதி வ்யபதேசாத் பரமாத்மை வாயமிதி நிஸ்ஸீயதே -ஏவம் பரமாத்மத்வே நிஸ்ஸிதே ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தத் ஸ்தானமேவ அபிததாதி இத்யவகம்யதே
தத் விஷய தயோதாஹ்ருதே ச ஸ்லோகே யத் தத் கவயோ வேதயந்த -தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய –இத்யேவமாதிபிஸ் ஸூரிபிர் த்ருஸ்யத்வ வசனம் ததேவ த்ரபயதி -ஸூத்ரார் தஸ்து –ஈஷதி கர்ம ஸ பரமாத்மா த்யாய தீஷத்யோ ரேக விஷயத்வேந த்யாயதி கர்மா அபி ஸ ஏவேத் யர்த -வ்யபதேசாத் -தத் விஷய கதயா சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரம் சேதி பரமாத்ம தர்மாணாம் வ்யபதேசாத் —12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய –
-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர ஹ்ருதய புண்டரீக மத்ய வர்தீ தஹர ஆகாஸஸ் ஸ்ரூயமாண கிம் பூதகாச -உத ஜீவ அத பரமாத் வேதி ஸம்சய –ப்ரதமம் தாவத் பூதாகாஸ இதி யுக்தம் ஆஸ்ரயிதும் இதி பூர்வ பக்ஷ
ஆகாஸ சப்தஸ்ய பூதாகாஸோ ப்ரஸித்தி ப்ராசுர்யாத் ஆகாஸ அந்தர்வர்த்திநோ அந்யஸ்ய அன்வேஷ்ட வ்யதா ப்ரதீதேஸ் ச –ராத்தாந்தஸ்து –கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ்டவ்யம் இதி சோதிதே யாவான் வா அயமாகாச இத்யாராப்ய ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் இத் யந்தேந தஹர ஆகாஸஸ் யாதி மஹத்த்வ ஸர்வ ஆஸ்ரயத்வ அஜரத்வ சத்யத்வாத்ய பி தாய அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா இத்யாகாஸ அந்தர் வர்திநோ அன்வேஷ்டவ்யா காமா இதி ப்ரதிபாத்ய கோ அயம் தஹர ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட -கே தத் ஆஸ்ரயா காமா இத் யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய ஸங்கல்ப இத் யந்தேந ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத் வாதயஸ்தத் விசேஷண பூதா இதி ப்ரதிபாத யத் வாக்யம் அபஹத பாப்மத்வாதி விஸிஷ்ட பரமாத்மாநமாஹ –உபக்ரமே ச அன்வேஷ்ட வ்யதயா ப்ரதிஜ்ஞாத ஆகாஸ ஆத்மா ஏதத் விசேஷண பூதா அபஹத பாப்மத் வாதய காமா இதி வாக்யம் ஞாபயத் அத ய இஹாத்மாந மநுவித்ய வ்ரஜந்த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி இத் யுப ஸம்ஹரதி -அதோ அயம் தஹர ஆகாஸ அபஹத பாப்மத் வாதி விஸிஷ்ட பரமாத் மேதி நிஸ்ஸீயதே ந பூத ஆகாசாதிரிதி -ஏவம் தர்ஹ் யஸ்மிந் வாக்யே அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இதி ப்ரத்யகாத்ம ப்ரதீதே -தஸ்ய சோத்தரத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணகத்வாவகமாத் ப்ரத்யகாத் மைவ தஹராகாச இதி பூர்வ பஷீ மன்யதே –ராத்தாந்தீ து ப்ரத்யகாத்மா கர்ம பரவசதயா ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் த்யாத் யவஸ்தாபி திரோஹித அபஹத பாப்மத்வாதிக பரமாத்மநம் உப ஸம்பந்த தத் ப்ரஸாதாதாவிரர்பூத குணக பிரஜாபதி வாக்யே ப்ரதிபாதிந தஹர ஆகாஸஸ்த்வ திரோஹித நிருபாதிக அபஹத பாப்மத்வாதிக பிரத்யாகாத்மன்ய ஸம்பாவ நீய ஜகத் விதரண ஸமஸ்த சித் அசித் வஸ்து நியமநாத் யநந்த குணக பிரதிபன்ன இதி நாயம் ப்ரத்யகாத்மா தஹராகாஸ அபி து பரமாத்மை வேதி மன்யதே —
ஸூத்ரார்தஸ்து -தஹராகாச பரம் ப்ரஹ்ம உத்தரேப்ய –உத்தர வாக்யக தேப்ய அபஹத பாப்மத் வாதி பரமாத்மா அசாதாரண தர்மேப்யோ ஹேதுப்ய –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –அஸ்மின் தஹாராகாஸே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் அஹரஹர்யா கதிஸ் ஸ்ரூயதே யஸ் ச தஹராகாஸாவமர்ஸ ருபை தச் ஸப்த ஸாமாநாதி கரண தயா ப்ரயுக்தோ ப்ரஹ்ம லோக ஸப்த தாப்யாம் தஹராகாச பரம் ப்ரஹ்மேத் யவகம்யதே -தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஞ்ஞா உபர்யுபரி சஞ்ச ரந்தோ ந விந்தே யுரேவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்த்ய ந்ருதேன ஹி ப்ரத்யூடா இதி ததா ஹி த்ருஷ்டம் –ததா ஹ்யன்யத்ர பரஸ்மின் ப்ராஹ்மண் யேவம் ரூபம் கமநம் த்ருஷ்டும் ஏவமேவ கலு சோம்யேமாசர்வா ப்ரஜாஸ் ஸதி சம்பத்ய ந விதுஸ் ஸதி ஸம்பத்ஸ் யாமஹ இதி –ததா ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச பரஸ்மின் ப்ரஹ்மண் யேவ த்ருஷ்ட –ஏஷ ப்ரஹ்ம லோகஸ் ஸம்ராடிதி ஹோவாச இதி லிங்கம் ச –மா பூதன்யத்ர தர்சனம் அஸ்மின் ப்ரகரணே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் ஸ்ரூயமாண மஹரஹர் கமநம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தஹராகாச ஸஸ்ய பரமாத்மத்வே பர்யாப்தம் லிங்கம் -ச ஸப்தோ அவதாரணே -ஏததேவ பர்யாப்தமித் யர்த –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அஸ்ய

த்ருத்யாக் யஸ்ய பரமாத்மநோ மஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேரயம் பரமாத்மா –த்ருதி -ஜகத் விதரணம் பரமாத்மநோ மஹிமேத் யன்யத்ராவகம்யதே –ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதிரேஷ பூத பால ஏஷ ஸேதுர் விதரண ஏஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –ஸா ச அஸ்மிந்தஹராகாஸ உப லப்யதே –அத் ய ஆத்மா ஸ ஸேதுர்வி த்ருதி ரேஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –15-

81-ப்ரசித்தேஸ் ச –கோ ஹ்யேவாந் யாத்க ப்ராண்யாத் யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸாதேவ ஸமுத்பத்யந்தே இத்யாதிஷ் வாகாஸ சப்தஸ்ய பரஸ்மின் ப்ரஹ்மணி ப்ரஸித்தே ஆகாஸ ஸப்த ஏவ பரமாத்ம தர்ம விசேஷிதோ பூதகாச சங்காம் நிவர்த்தய தீத் யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –பரமாத்மந

இதர ஜீவ அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இத ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ஏவ தஹாராகாச இதி சேத் தன்ன பூர்வோக்தாநாம் குணாநாம் தஸ்மிந் ந சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தராத் –பிரஜாபதி வாக்யாத் அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவோ அவகம்யத இதி சேத் தன்ன ஜாகரி தாத்ய வஸ்தாபிர நாதி கால ப்ரவ்ருத்தாபி புண்ய பாப ரூப கர்ம மூலாபி திரோஹித குணக பர ப்ரஹ்மோபாஸ ஜெனிததுப ஸம்பத்த்யா ஆவீர் பூதஸ்வ ரூபோ அசவ் ஜீவஸ் தத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணக கீர்தித தஹராகாசஸ் த்வதி ரோஹித ஸ்வரூப அபஹத பாப் மத்வாதி குணக இத்யஸ்மிந்தஹராகாஸே ந ஜீவ சங்கா –18-

தஹர வாக்யே ஜீவ பரா மர்ஸ கிமர்தமிதி சேத் தத்ராஹ

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-பரம் ஜ்யோதிஸ் ஸ்வரூப தஹராகாஸோப ஸம்பத்த்யா அஸ்ய ஜீவஸ்யா ந்ருத திரோஹித ஸ்வரூபஸ்ய ஸ்வரூப ஆவிபாவோ பவதீதி தஹராகாசஸ்ய ஜகத் விதரணாதிவஜ் ஜீவ ஸ்வரூப ஆவீர் பாவாபாதந ரூப ஸம்பத் விசேஷ ப்ரதி பாதநார்தோ ஜீவ பராமர்ஸ –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –தஹரோ அஸ்மின் நித்யல்ப பரிமாண ஸ்ருதி ராராக்ரப மிதஸ்ய ஜீவஸ்யைவோப பத்யதே ந து ஸர்வஜ் மாஜ் ஜ்யாயஸோ ப்ரஹ்மண இதி சேத் தத்ர யதுத்தரம் வக்த்வயம் தத் பூர்வமேவோக்தம் -நிசாய்யாத் வாதித்யநே ந –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச -அநு க்ருதி –அநு கார தஸ்ய பரமாத்மநோ அநு காராத்தி ஜீவஸ்ய ஆவீர் பூத ஸ்வரூபஸ்ய அபஹத பாப்மத்வாதி குணகத்வம் அதோ அநு கர்து ஜீவாத் அநு கார்ய பர ப்ரஹ்ம பூதோ தஹாராகாச அர்த்தான்தர பூத ஏவ –தத் அநு காரஸ் ச தத் ஸாம்யாபத்திஸ் ஸ்ரூயதே யதா யஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் கார்தாரமீசம் புருஷன் ப்ரஹ்ம யோநிம் –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி இதி –21-

87-அபி ஸ்மர்யதே –ஸ்மர்யதே ச தத் உபாஸநாத் தத் ஸாம்யா பத்தி ரூபாநுக்ருதிர் ஜீவஸ்ய இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித –
-கட வல்லீஷ்வாம் நாயதே —

அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே -ஏதத் வைதத் -உத்தரத்ர ச அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக -ததோ பரிஷ்டாத் அங்குஷ்ட மாத்ர புருஷோ அந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹ்ருதயே சந்நிவிஷ்ட இதி அத்ராங்குஷ்ட ப்ரமிதோ ஜீவாத்மா உத பரமாத்மேதி ஸம்சய -ஜீவாத் மேதி பூர்வ பக்ஷ –அந்யத்ர ஸ்வீக்ருத ஸ்பஷ்ட ஜீவ பாவே புருஷே அங்குஷ்ட ப்ரமிதத்வஸ்ருதே -ப்ராணாதி பஸ் ஸஞ்சரதி ஸ்வ கர்மபிர் அங்குஷ்ட மாத்ரோ ரவிதுல்ய ரூப இதி -ராத்தாந்தஸ்து –தத்ர ஸ்வ கர்ம பிர் இதி ஜீவ பாவ நிஸ்ஸயவதத்ராபி ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பூத பவ்யேஸித்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி -ஸூத்ரார்தஸ்து –ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி பூத பவ்யேஸி த்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி
ஸூத்ரார்தஸ்து ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பரமாத்ம வாசி ஸப்தாத்

கதமநவச் சின்னஸ்ய பரமாத்மநோ அங்குஷ்ட ப்ரமிதத்வ மித்யா சங்க்யாஹ
89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத்
–உபாஸ நார்த்தம் உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வாத் உபாஸக ஹ்ருதயஸ்ய அங்குஷ்ட மாத்ரத்வாத் ததபேஷயேதம் அங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸ கத்வ ஸம்பாவநயா மனுஷ்யாநதி க்ருத்ய ப்ரவ்ருத்தத் வாச்சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத் –மனுஷ்யாதிகாரம்

ப்ரஹ்ம உபாஸந ஸாஸ்த்ரமித்யுக்தம் –தத் ப்ரசங்கேந தேவாதீ நாமபி ப்ரஹ்ம வித்யாயாம் அதிகாரோ அஸ்தி நவேதி சிந்த்யதே ந தேவாதீநாம் அதிகார அஸ்தீதி பூர்வ பக்ஷ –பரி நிஷ் பன்னே ப்ரஹ்மணி சப்தஸ்ய ப்ராமாண்ய சம்பவே அபி தேவாதீநாம் விக்ரஹாதி மத்த்வே ப்ரமாணா பவாத் மந்த்ரார்த்தவாதாநாம் -அபி விதி சேஷ தயா விக்ரஹாதி ஸத் பாவபரத்வா பாவாத் விக்ரஹவந் நிர் வர்த்யாஹரஹரநுஷ்டீயமாந விவேகாதி சாதன ஸப்தக ஸம்ஸ் க்ருதமநோ நிஷ் பாத்யோபாஸந நிர் வ்ருத்தவ் தேஷாம் ஸாமர்த்யா பாவாத்
ராத்தாந்தஸ்து –ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகரணேஷு நாம ரூப வ்யாகரண ஸ்ருத்யைவ தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வம் ஸித்யதி -தேவாதீ நாம் தேஹ இந்த்ரியாதி கரணமேவ ஹி நாம ரூப வ்யாகரணம் மந்த்ரார்த்த வாத யோஸ் ச ததுபலப்தே –தயோர் அநுஷ்டேய-ப்ரகாஸந ஸ்துதி பரத்வே அபி ததுப பத்தயே தத் ஸத் பாவே பிரமாணத்வாத் தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வ ஸித்தி -நஹி விக்ரஹாதி மத்தயா ஸ்துதி ப்ரகாஸநம் ச ததபாவே சம்பவதி —
அதஸ் ஸாமர்த்ய ஸம்பவாதஸ் த்யேவாதிகார –ஸூத்ரார்தஸ்து ததுபர்யபி தேப்ய –மனுஷ்யேப்ய உபரி வர்த்தமாநாநாம் தேவாதீநாமப்யதிகாரோ அஸ்தி
யத்வா தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ்வபி சம்பவதி தேஷாம் அபி ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாசன ப்ரகாரஜ் ஞாந தத் அர்த்தித்வதது பாதாந ஸாமர்த்ய சம்பவாத் –பூர்வோபார் ஜிதஜ் ஞாநா விஸ்மரணாத் ஞான ஸம்பவ தாபத்ரய அபிஹதி பூர்வக ப்ரஹ்ம குணஜ் ஞாநாச் சார்தித்வ ஸம்பவ –ஸ்ருஷ்டி வாக்ய மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹவத்த்வாதி தர்சநாத் ஸாமர்த்ய ஸம்பவஸ் சேதி பகவான் பாதராயணோ மன்யதே –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –கர்மணி யாகாதவ் விக்ரஹ வத்த்வே ஸதி ஏகஸ்ய யுகபதநேகயாகேஷு ஸந்நிதான அநுப பத்தேர் விரோத ப்ரஸஜ்யதே இதி சேத் தன்ன ஸக்தி மதாம் ஸுபரி ப்ரப்ருதீநாம் யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –விரோத இதி வர்ததே –மா பூத் கர்மணி விரோத -ஸப்தே து வைதிகே விரோத ப்ரஸஜ்யதே விக்ரஹத்த்வே ஹி தேஷாம் ஸாவ யவத்வே நோத்பத்தி விநாஸ யோகா துத்பத்தே ப்ராக் விநாஸா தூரத்வம் ச வைதிகாநாம் இந்த்ராதி ஸப்தாமாமர்தா ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாதிதி சேத் தன்ன அத ப்ரபவாத் அத வைதிகா தேவ ஸப்தாத் இந்த்ராதே ப்ரபவான் -பூர்வ பூர்வேந்திராதவ் விநஷ்டே வைதிகாதிந்ராத்யாக்ருதி -விசேஷ வாசிந ஸப்தா திந்ராத்யாக்ருதிவிசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரமபரமிந்த்ராதிகம் ஸ்ருஜிதி பிரஜாபதிரிதி வைதிகஸ்ய சப்தஸ்ய ந கச்சித் விரோத –
ந ஹி தேவதைத்தாதி ஸப்தவத் இந்த்ராதி ஸப்தா வ்யக்தி விசேஷ சங்கேத பூர்வகா ப்ரவ்ருத்தா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி விசேஷ வாசிந இதி தேஷாமபி நித்ய ஏவ வாஸ்ய வாசக பாவ வைதிகாதிந்த்ராதி சப்தாத் ததர்த்த விசேஷம் ஸ்ம்ருத்வா குலாலாதிரிவ கடாதிகம் பிரஜாபதிஸ் ஸ்ருஜதீதி குதோ அவகம் யதே -ப்ரத்யக்ஷ அனுமானாப் யாம் -ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமித்யர்த்த -ஸ்ருதிஸ் தாவத் வேதேந ரூபே வ்யாகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி –ததா ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிம ஸ்ருஜத இத்யாதிகா
ஸ்ம்ருதிரபி ஸர்வேஷாம் ச ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதுக் ப்ருதுக் வேத சப்தேப்ய ஏதாதவ் ப்ருதுக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே -நாம ரூபம் ச பூதாநாம் க்ருத்யா நாம் ச ப்ரபஞ்ச நம் -வேத சப்தேப்ய ஏவாதவ் தேவாதீ நாம் சகார ச இத்யாதிகா –29-

93-அத ஏவ ச நித்யத்வம் –யத ப்ரஜாபதி வைதிகாச் சப்தா தர்தாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸர்வம் ஸ்ருஜதி -அதஸ் ச வஸிஷ்ட விஸ்வா மித்ராதீ நாம் மந்த்ர ஸூக்தாதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மயஸ்ய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டத்யேவ–ப்ரஜாபதிர் ஹி நைமித்திக பிரளயாந்தரம் மந்த்ர க்ருதோ வ்ருணீதே -விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதீத்யாதி வேத ஸப்தேப்யோ அநதீத மந்த்ராதி தர்சன சக்த வசிஷ்டாத்ய க்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா வசிஷ்டத்வாதி பத ப்ராப்தே அனுஷ்டித கர்ம விசேஷ அம்ஸா ஸ் அநு ஸ்ம்ருத்ய தத் ஆகார விசேஷான் தான் வஸிஷ்டாதீன் ஸ்ருஜதி -தே சாநதீத்யைவ வேதைகதேஸ பூத மந்த்ராதீன் ஸ்வரதோ வர்ணதஸ் சாஸ்கலிதான் படந்தி -ததேஷாம் மந்த்ராதி க்ருத்வே அபி வேத நித்யத்வம் உப பத்யதே –28-

ப்ரஜாபதி ப்ரப்ருதிஷுஸர்வேஷு தத்த்வேஷ்வ வ்யாக்ருத பர் யந்தேஷு அவ்யாக்ருத பரிணாம ரூபேஷு சப்தமயேஷி வேதேஷு ச விநஷ்டேஷ்வ வ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தவ் கதம் வேதஸ்ய நித்யத்வ மித்யத்ர ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச –அவ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தா வபி ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாதேவ ந கஸ்ஸித் விரோத ஆதி சர்கே அபி ஹி பரம புருஷ பூர்வ ஸம்ஸ்தாநம் ஜகத் ஸ்மரன் ததைவ ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வ அநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருதயா ஹிரண்ய கர்ப்பாய ததாதீதி -பூர்வ ஸம்ஸ்தான மேவ ஜகத் ஸ்ருஜதீதி கதமவகம்யதே -தர்சநாத் ஸ்ம்ருதேஸ் ச –தர்சனம் ஸ்ருதி அஹோ ராத்ராணி விததத் விஸ்வஸ்ய மிஷதோ வஸீ ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வ மகல்பயத் திவம் ச ப்ருத்வீம் சாந்தரிஷமதோ ஸூவரிதி யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச ஸ்ம்ருதிராபை யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே –த்ருஸ்யந்தே தாநி தாந்யேவ ததா பாவா யுகாதிஷு -இதி ஏததேவ வேதஸ்ய நித்யத்வம் யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேணோச் சார்யத்வம் பரம புருஷோ அபி ஸ்வரூப ஸ்வா ராதன தத் பலயாதாத்ம்யாவ போதி வேதம் ஸ்வ ஸ்வரூபவந் நித்யமேவ பூர்வ அநு பூர்வீ விசிஷ்டம் ஸ்ம்ருத்வா ஆவிஷ்கரோதி -அதோ தேவாதீநாம் ப்ரஹ்ம வித்யாதி காரே ந கஸ்சித் விரோத –29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–சாந்தோக்ய அசவ் வா ஆதித்யோ தேவ மது இத் யுபக்ரம்ய –தத் யத் பிரதமம் அம்ருதம் தத்வஸவ உப ஜீவந்தி இத்யுக்த்வா ஸ ய ஏததேவம் அம்ருதம் வேத வஸூநாமேவைகோ பூத்வா அக்னி நைவ முகேநைத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யதி இத்யாதிநா ருக் யஜுஸ் ஸாமாதி வேதோதித கர்ம ஸம்பாத்ய ரஸாதாரதயா மதுமயஸ் யாதித் யஸ்ய பூர்வ தக்ஷிண பஸ்ஸிமோத்தரோர்த்வாம் ஸாந் வஸூ ருத்யாதித்ய மருத் ஸாத்யநாம்நாம் தேவ கணாநாம் போக்யத்வேந அபிதாய தைர்புஜ்யமாநாகாரேணாதித்யாம் ஸாநு பாஸ்யாநு பதிஸ்ய தாநேவாதித்யாம் ஸாம்ஸ் ததா பூதான் ப்ராப்யஅநு பதி ஸதி –ஏவமாதிஷு பாஸ நேஷுவஸ்வாதீநாம் உபாஸ்யாந்தர் கதத்வேந கர்ம கர்த்ரு பாவ விரோதாத் ப்ராப்யஸ்ய வஸூத் வாதே ப்ராப்தத் வாச்ச –ராத்தாந்தஸ்து –ப்ரஹ்மண ஏவ ததவஸ் தஸ்யோ பாஸ்யாதீநாம் ஸதாம் ஸ்வா வஸ்த ப்ரஹ்ம அநு ஸந்தாநா விரோதாத் கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்தத்வா விரோதாஸ் ச வஸ்வாதீநாம் அதிகார சம்பவதீதி –ஸூத்ரார் தஸ்து மது வித்யாதிஷு வஸ் வா தீநாம் அநதிகாரம் ஜைமிநிர் மன்யதே -அசம்பவாத் -வஸ்வாதீநாம் ஏவ உபாஸ்யாநாம் உபாஸகத்வ அசம்பவாத் வஸூத் வாதே ப்ராப்தத்வாதேவ ப்ராப்யத்வா சம்பவாச் ச –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணி தேவ மனுஷ்ய யோரதிகார ஸாதாரண்யே ஸத்யபி ஜ்யோதிஷாம் ஜ்யோதி —பரம் ப்ரஹ்ம தேவா உபாஸதே இதி விசேஷ வசனம் வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதாத்தேஷு தேஷாம் அநதிகாரம் த்யோதயதி -தேவா இதி ஸாமான்ய வசனம் ச -வஸ்வாதி விசேஷ விஷய மித்ய வகம்யதே -அந் யேஷாம விரோதாத் –31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –து -ஸப்த பக்ஷம் வ்யாவர்த்தயதி –வஸ்வாதீ நாம் மது வித்யாதிஷு அதிகார ஸத் பாவம் பகவான் பாதராயணோ மன்யதே -அஸ்தி ஹி வஸ்வாதீ நாமேவோபாஸ் யத்வம் ப்ராப்யத்வம் ச இதாநீம் வஸூ நாமேவ ஸதாம் கல்பாந்தரே வஸூத் வஸ்ய ப்ராப்யத்வ சம்பவாத் ப்ராப்யத்வம் சம்பவதி -ஸ்வாத்மநாம் ப்ரஹ்ம பாவ அநு ஸந்தான ஸம்பவாது பாஸ்யத்வம் ச சம்பவதி -ய ஏதா மேவம் ப்ரஹ்ம உப நிஷதம் வேத இதி ஹி க்ருத்ஸ்நாயா மது வித்யாயா ப்ரஹ்ம வித்யாத்வ மவகம்ய தே –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ப்ரஹ்ம வித்யாயாம் ஸூத்ரஸ் யாப்யதிகாரோ அஸ்தி -நேதி ஸம்சய –அஸ்தீதி பூர்வ பக்ஷ –அர்தித்வ ஸாமர்த்ய சம்பவாத் –ஸூத்ரஸ்யாநக்நி வித்யத்வே அபி மநோ வ்ருத்தி மாத்ரத்வாத் உபாசனநஸ்ய சம்பவதி ஹி ஸாமர்த்யம் -ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாஸந ப்ரகாரஜ் ஞானம் சேதிஹாஸ புராண ஸ்ரவணாதேவ நிஷ்பத்யதே
அஸ்தி ஹி ஸூத்ரஸ் யா பீதிஹாஸ புராண ஸ்ரவணாநுஜ்ஞா -ஸ்ராவயேச் சதுரோ வர்ணாந் க்ருத்வா ப்ராஹ்மண மக்ரத இதி –ததா தத்ரைவ விதுராதீ நாம் ப்ரஹ்ம நிஷ்டத்வம் த்ருஸ்யதே -உபநிஷத் ஸ்வபி -ஆஜஹாரமாஸ் ஸூத்ரா நேநைவ முகே நாலாப யிஷ்யதா இதி ஸூத்ர சப்தேநா மந்த்ர்ய ப்ரஹ்ம வித்யோபதேஸ தர்சநாச் ஸூத்ரஸ்ய அபீ ஹாதிகாரஸ் ஸூஸ்யதே –ராத்தாந்தஸ்து –உபாஸநஸ்ய மநோ வ்ருத்தி மாத்ரத்வே அபி அநதீதவே தஸ்ய ஸூத் ரஸ்ய உபாஸநோபாய பூதஜ் ஞாநா சம்பவாத் ந சார்மத்ய ஸம்பவ -கர்ம விதிவத் உபாஸநா விதயோ அபி
த்ரை வர்ணிக விஷயாத்யயநக்ருஹீதஸ் வாத்யாயோத் பன்ன ஞாந மேவ உபாஸநோபாய தயா ஸ்வீ குர்வதே —
இதிஹாஸா தயோ அபி ஸ்வாத்யாய ஸித்த மேவ ஞானம் உப ப்ரும்ஹ யந்தீதி ததோ அபி நாஸ்ய ஞான லாப –ஸ்ரவாணானுஜ்ஞா து பாப ஷயாதி பலா -விதுராதீ நாம் து பவாந்தர வாஸநய ஞான லாபாத் ப்ரஹ்ம நிஷ்டத்வம் -ஸூத்ரேத்யா மந்த்ரணம் அபி ந சதுர்த்தி வர்ணத்வேந அபி து ப்ரஹ்ம வித்யா வைகல் யாச்சு கஸ்ய ஸம்ஜா தேதி –அதோ ந ஸூத்ரஸ் யாதிகார –ஸூத்ரார் தஸ்து -ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஹம்ஸோக்தா நாதர வாக்ய ஸ்ரவணாத்ததை வாசார்யம் ப்ரத்யாத்ரவ ணாச்சார்யே தஸ்ய ஸூஷ்ரூ ஷோர் வித்யா அலாப க்ருதா ஸூக் ஸூஸ்யதே –ஹி சாப்தோ ஹேதவ் –யஸ்மா தஸ்ய ஸூகே ஸூஸ்யதே அதஸ் ஸோச நாச் ஸூத்ர இதி க்ருத்வா ஆசார்யோ ரைக்வ ஜான ஸ்ருதிம் ஸூத்ரேத்யா மந்த்ரயதே ந ஜாதி யோகே நேத்யர்த –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –-அஸ்ய ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்வாவக தேஸ் ச ந ஜாதி யோகேந ஸூத் ரேத்தயா மந்த்ரணம் ப்ரகரண ப்ரக்ரமே ஹி பஹு தாயீ இத்யாதி நா தாந பதித்வ பஹு தர பக்வாந் நதாயித்வக்ஷத்த்ருப்ரேக்ஷண பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஜாந ஸ்ருதேஸ் ஸூஸ்ரூஷோ ஷத்ரியத்வம் ப்ரதீதம் –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகம் ச காபேய மபிப்ரதாரிணம் ச இத்யாதி நா –
அப் ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணா ந்தரே ஹி காபேய ஸஹஸரிண சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச
அதோ அஸ்யாம் வித்யாயாம் அந்விதோ ப்ராஹ்மண அதிதரோ ஞான ஸ்ருதி பிர் அபி ஷத்ரியோ பவிதும் அர்ஹாதி –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபதேஸே உப த்வா நேஷ்யே இத் யுப நயன ஸம்ஸ் கார பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ சநாச்சாநதிகார -ந ஸூத்ர பாதகம் கிஞ்சிந்த ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூஸ்ரூஷோர் ஜாபாலேஸ் ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேர் நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி ப்ரதிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தாண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் பரி ஸமா பயதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் மிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் -மஹத் பயம் வஜ்ரமுத்யதம் பயாதஸ்யாக்நிஸ்தபதி இத்யாதவ் ப்ராண ஸப்த நிர் துஷ்டாங்குஷ்ட ப்ரமித ஜெனித பய நிமித்தாக்நி வாயு ஸூர்ய ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் ஸ்ரூயமாணாதங்குஷ்ட ப்ரமித பரமாத்மை வேதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –அஸ்மின்நேவ ப்ரகரணே தத் சம்பந்தி தயா ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி ஸர்வேஷாம் சாதகஸ்யா நவதிகாதி ஸயஸ்ய பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய ப்ரஹ்ம பூதஸ்ய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா –41—இதி ப்ரமித அதி கரணம்

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம ததம்ருதம் ஸ ஆத்மா இத்யத்ர ஆகாஸ ஸப்த நிர்திஷ்ட கிம் முக்தாத்மா உத பரமாத்மேதி ஸம்சய –முக்த இதி பூர்வ பக்ஷ -தூத்வா சரீர மக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவாமி இதி முக்தஸ்யாநந்தர ப்ரக்ருதத்வாத் –ராத்தாந்தஸ்து –நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா இதி ஸ்வயம் அஸ்ப்ருஷ்ட –நாம ரூப தயா நாம ரூபயோர் நிர்வோட்ருத்வேந ரூயமாணோ அயம் ஆகாசோ பக்த முக்தோபயா வஸ்தாத் ப்ரத்யகாத்மந அர்த்தாந்தரத் வாத் பரமாத்மைவ
ஸூத்ரார்த்தஸ்து –ஆகாஸ பரமாத்மா தஸ்ய நாம ரூபாயோர் நிர்வோட்ருத்வதத ஸ்பர்ச லக்ஷணார்த் தாந்தரத்வ வ்யபதேசா-ப்ரத்யகாத்மநோ ஹ்யர்த்தாந்தர பூத ஏவ நாம ரூபயோர் நிர்வோடா-பாத்தாவஸ்தஸ்தாவன் நாம ரூபாப்யாம் ஸ்ப்ருஷ்டஸ் தத் பரவஸஸ் சேதி ந நிர்வோடா முக்தஸ்யாபி ஜகத் வியாபார ரஹிதத் வான்ந நிரவோட் ருத்வம் –ஆதி சப்தேந நிருபாதிக ப்ரஹ்மத்வ அம்ருதத்வாத்மத்வா தீதி க்ருஹ்யந்தே தாநி நிருபாதிககாநி முக்தஸ்யாபி ந சம்பவந்தி –42-

நநு தத்வமஸ்யாதி நைக்ய வ்யபதேஸாத் நேஹ நாநாஅஸ்தீதி பேத ப்ரதிஷே தாச்ச ந ப்ரத்யகாத்மந அர்த்தாந்தர பூத பரமாத்மேத்யா சங்க்யாஹ
108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –வ்யபேதசாதிதி வர்த்ததே –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்த ப்ராஜ்ஜேநா ஆத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் லுப்த ஸகல விசேஷ விஞ்ஞாநாத் ப்ரத்யகாத்மநஸ் ததாநீ மேவ ஸர்வஞ்ஞதயா பேத வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத எவ் பரமாத்மா –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத பரமாத்மா ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இத்யாதவ்
ஐக்யோபதேஸ பேத ப்ரதிஷேதவ் து ப்ரஹ்ம கார்யத்வ நிபந்தநா விதி –தஜ்ஜ லான் இதி -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதி ஸ்ருதி பிரேவ வ்யக்தவ் –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்ய மூல ஸ்ரீ ஸூக்திகள் –ஜிஞ்ஞாஸ அதிகரணம் -1-1-1—-மஹா ஸித்தாந்தம்-

January 20, 2024

மஹா ஸித்தாந்தம்

பரோக்தாநாம் உபாய உபேய நிவர்த்தாயாம் ப்ராமண தர்க ஆபாஸ மூலத்தவம் அநாதரணீயதா ச
தத் இதம் ஓபிநக்ஷத -1-பரம புருஷ வரணீயதா ஹேது குண விசேஷ விரஹிணாம்-2-அநாதி
பாப வாஸநா தூஷித அசேஷ ஷேமுஷி காணாம் -3-அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய- 4-ப்ரத்யஷாதி ஸகல பிரமாண வ்ருத்த -தத் இதி கர்தவ்யாத ரூப ஸமீஸீந ந்யாய மார்காணாம் -விகல்ப அஸஹ விவித குதர்க கல்க கல்பிதம் இதிந்யாயா நுக்ருஹீத ப்ரத்யஷாதி ஸகல பிரமாண வ்ருத்த யாதாத்ம்யவித்பி அநாத ரணீயம்

நிர் விசேஷஸ்ய வஸ்துந பிரமாணத அஸித்தி
ததா ஹி -நிர் விசேஷ வஸ்து வாதிபிர்- நிர் விசேஷ வஸ்து நீதம் பிரமாணம் இதி ந ஸக்யதே வக்தும் ஸ விசேஷ வஸ்து விக்ஷயத்வாத் ஸர்வ பிரமாணாநாம்
யஸ்து ஸ்வ அனுபவ ஸித்தம் இதி ஸ்வ கோஷ்டீ நிஷ்டஸ் ஸமய –ஸோ அப்யாத்ம ஸாக்ஷிக ஸ விசேஷ அநுபவாத் ஏவ நிரஸ்த- இதம் அஹம் அதர்சம் இதி
கேநி சித் விஸேஷேண விஸிஷ்ட விக்ஷயத்வாத் ஸர்வேஷாம் அநுபவாநாம்(இதனை இப்படி நான் கண்டேன் -ஸ விசேஷமாகவே அறியப்படும் பொருள் அறிவு அறிபவன் என்றே சொல்கிறோம் )

நிர் விசேஷத்வ வ்யவஸ்தாபகத்வாபி மத யுக்த்தை -ஆபாஸதா
ஸ விசேஷ அப்யநு பூயமாநோ அநுபவ கேநசித் யுக்த் யாபாஸேந நிர்விசேஷ இதி நிஷ் க்ருஷ்ய மாண சத்த அதிரேகிபி
ஸ்வ அசாதாரணைஸ் ஸ்வ பாவ விசேஷைர் நிஷ் க்ருஷ்டவ்ய இதி நிஷ் கர்ஷ ஹேது பூதை சத்த அதிரேகிபி
ஸ்வ அசாதாரணைஸ் ஸ்வ பாவ விசேஷைஸ் ஸ விசேஷ ஏவா வதிஷ்டதே
அதஸ் கைசித் விசேஷைர் விஸிஷ்டஸ்யைவ வஸ்துநோ அன்யே விசேஷா நிரஸ்யந்த இதி- ந க்வசின் நிர்விசேஷ வஸ்து ஸித்தி

நிர் விசேஷத்வ அநுமானஸ்ய பாதித்வம்
தியோ ஹி தீத்வம் ஸ்வ ப்ரகாஸதா ச ஞாதுர் விஷய ப்ரகாஸந ஸ்வபாவதய உபலப்தே- ஸ்வபாமத மூர்ச்சா ஸு ச விசேஷ ஏவ அநுபவ இதி ஸ்வ அவஸரே நிபுணதரம் உபபாதயிஷ்யாம
ஸ்வ அபி யுபகதாஸ் ச நித்யத் வாதயோ ஹி அநேக விசேஷா சந்த்யேவ –(அனுபூதிக்கு நித்யத்வம் போன்ற தன்மைகள் உண்டு என்றே நீங்களும் விசேஷம் உண்டு என்று தானே சொன்னீர்கள் )
தே ச ந வஸ்து மாத்ரம் இதி சக்ய உபபாதநா
வஸ்து மாத்ர அபி யுபகமே ஸத்யபி விதா பேத விவாத தர்சநாத் ஸ்வ அபிமத தத் விதா பேதைஸ் ச ஸ்வ மத உபபாத நாத்
அத பிராமாணிக விசேஷைர் விஸிஷ்டம் ஏவ வஸ்து இதி வக்தவ்யம்

(பிரமாணங்கள் -ஸப்தம் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -மூன்றுமே நம் ஸித்தாந்தம் -மற்றவை
4-உபமானம் -5-அர்த்தா பத்தி சூழ்நிலையால் அனுமானத்தல் –6-அநுப லப்தி -அதாவது எதிர்மறைச் சான்று -குதிரை இல்லை -அங்கு இல்லாததால்)

நிர் விசேஷத்வம் வஸ்து நி ந ஸப்த கம்யம்
சப்தஸ்ய து விஸேஷேண ஸ விசேஷ ஏவ வஸ்துநி அயபிநா ஸாமர்த்யம்–பத வாக்ய ரூபேண ப்ரவ்ருத்தே -ப்ரக்ருதி ப்ரத்யய யோகேந ஹி பதத்வம்(சொல் என்பது பகுதி விகுதி சேர்ந்தே -அரசன் அரசு-அன் அரசி பெண் பால்-வேறு பாடு சொல்லவே இவை சேர்ந்தன -)
ப்ரக்ருதி ப்ரத்யய யோர் அர்த்த பேதேந பதஸ்யைவ விசிஷ்டார்த்த ப்ரதிபாதனம் அவர்ஜனீயம்-
பத பேதஸ் ச அர்த்த பேத நிபந்தன பத ஸம் காத ரூபஸ்ய வாக்யஸ்ய -அநேக பதார்த்த ஸம் சர்க்க விசேஷ அபிதாயித்வேந
நிர் விசேஷ வஸ்து ப்ரதிபாதநா ஸாமர்த்யாத் ந நிர்விசேஷ வஸ்துநி ஸப்த ப்ரமாணம்)

நிர் விசேஷத்வம் ந ப்ரத்யக்ஷ கம்யம்
ப்ரத்யக்ஷஸ்ய நிர் விகல்பக ஸ விகல்பக பேத பின்னஸ்ய- ந நிர்விசேஷ வஸ்துநி பிரமாண பாவ
ஸ விகல்பகம் ஜாத்யாத் யனேக பதார்த்த விஸிஷ்ட விக்ஷயத்வாத் ஏவ ஸ விசேஷ விஷயம் –நிர் விகல்பம் அபி ஸ விசேஷ விஷயமேவ ஸ விகல்பகே
ஸ்வஸ்மிந் நநுபூத பதார்த்த விஸிஷ்ட ப்ரதி ஸம்தாந ஹேதுத்வாத்

(பொருளைப் பார்த்த உடனே வந்த அறிவு -இது –ரூபம் நிறம் வடிவு ஆகாரம் -இப்படிப்பட்டது -நிர்விகல்பகம் –
அதே ஜாதியில்-தன்மையில் உள்ள -மாட்டுத்தன்மை போல்வன -மற்ற ஒன்றைப் பார்க்கும் பொழுது -ஏற்படும் அறிவு ச விகல்பகம் -முன் பார்த்த ஒன்றையும் இத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து -அந்த ஜாதியுடைய பொதுவான தன்மைகளைப் பற்றிய அறிவு உண்டாகும்)

நிர் விகல்பக ஸ விகல்பகயோ நிஷ் க்ருஷ்டம் ஸ்வரூபம்
நிர் விகல்பகம் நாம கேநசித் விஸேஷேண வியுக்தஸ்ய க்ரஹணம்- ந இதமித்தமிதி ஸர்வ விசேஷ ரஹிதஸ்ய
ததா பூதஸ்ய கதா சித் அபி க்ரஹணா தர்சநாத் அநுபபத்தேஸ் ச
கேந சித் விஸேஷேண இதமித்தமிதி ஹி ஸர்வா ப்ரதீதி ரூப ஜாயதே -த்ரி கோண-ஸாஸ்நாதி ஸம்ஸ்தாந (உருவ அமைப்பு )விஸேஷேண விநா கஸ்யசித் அபி பதார்த்தஸ்ய க்ரஹணா யோகாத்
அதோ நிர் விகல்பக மேக ஜாதீய த்ரவியேஷு பிரதம பிண்ட க்ரஹணம் -த்விதீயாதி பிண்ட க்ரஹணம் ச விகல்பகம் இத்யுச்யதே

யுக்த விவித ஆகாரஸ்ய ஸமர்த்தநம்
தத்ர பிரதம பிண்ட க்ரஹணே கோத்வாதேர அநுவ்ருத்த ஆகாரதா ந ப்ரதீயதே –த்விதீயாதி பிண்ட க்ரஹணேஷு ஏவ அநு வ்ருத்தி ப்ரதீதி
ப்ரதம ப்ரதீத் யநு ஸம்ஹித வஸ்து ஸம்ஸ்தாந ரூப கோத்வாதே –அநு வ்ருத்தி தர்ம விசிஷ்டத்வம் த்விதீயாதி பிண்ட க்ரஹண அவஸேயமிதி த்விதீயாதி க்ரஹணஸ்ய ஸ விகல்பகத்வம்
ஸாஸ்நாதி வஸ்து ஸம்ஸ்தான ரூப கோத்வாதே அநு வ்ருத்திர் ந பிரதம பிண்ட க்ரஹண க்ருஹ்யத இதி பிரதம பிண்ட க்ரஹணஸ்ய நிர் விகல்பகத்வம்– ந புநஸ் ஸம்ஸ்தாந ரூப ஜாத்யாதேர க்ரஹணாத்– ஸம்ஸ்தான ரூப ஜாத் யாதே அப் யைந்த்ரிய கத்வா விசேஷாத்(பொருளைப் பார்க்கும் பொழுது இருப்பு மட்டும் இல்லாமல் ஆகாரத்தையும் உள்ளே வாங்கிக் கொள்கிறோம் )ஸம்ஸ்தாநேந விநா ஸம்ஸ்தாநிநா
ப்ரதீத் யநுபபத்தஸ் ச பிரதம பிண்ட க்ரஹாணே அபி ஸ ஸம்ஸ்தாநமேவ வஸ்த்வித்த மிதி க்ருஹ்யதே–அதோ த்விதீயாதி பிண்ட க்ரஹணேஷு கோத்வாதேர் அனுவ்ருத்தி தர்ம விசிஷ்டதா ஸம்ஸ்தாநிவத் ஸம்ஸ்தாநவத் அச ஸர்வ தைவ க்ருஹ்யத இதி தேஷு ஸ விகல்பகத்வமேவ-
அத ப்ரத்யக்ஷஸ்ய கதாசிதபி ந நிர் விசேஷ விஷயத்வம்

பேத அபேத வாதி நிரசன(பாஸ்கர மத நிரஸனம்)
அத ஏவ (ப்ரத்யக்ஷம் விசேஷத்துடன் உள்ள பொருளை மட்டுமே காட்டுவதால் )ஸர்வத்ர பின்ன அபின்னதவ மபி நிரஸ்தம்இதமித்தமிதி ப்ரதீதாவித மித்தம் பாவயோர் ஐக்யம் கதமிவ ப்ரத்யேதும் ஸக்யதே
தத் ரேத்தம் பாவஸ் ஸாஸ்நாதி ஸம்ஸ்தாந விசேஷ –தத் விசேஷ்யம் த்ரவ்யமிதமம் ஸ இத்யநயோர் ஐக்யம் ப்ரதீதி பராஹதமேவ
ததாஹி ப்ரதமமேவ வஸ்து ப்ரதீயமாநம் சகலேதர வ்யாவ்ருத்த மேவ பிரதீயதே –வ்யாவ்ருத்திஸ் ச கோத்வாதி ஸம்ஸ்தாந விசேஷ விஸிஷ்டதய இத்தமிதி ப்ரதீதே
ஸர்வத்ர விசேஷண விசேஷ்ய பாவ ப்ரதிபத்தவ் தயோரத் யந்த பேத ப்ரதீத் யைவ ஸூவ்யக்த
தத்ர தண்ட குண்டலாதய ப்ருதக் ஸம்ஸ்தாந ஸம்ஸ்திதா -ஸ்வ நிஷ்டாஸ் ச கதாசித் க்வசித் த்ரவ்யாந்தர விசேஷண தயா அவதிஷ்டந்தே
கோத்வாதயஸ்து த்ரவ்ய ஸம்ஸ்தாந தயைவ பதார்த்த பூதா ஸந்தோ த்ரவ்ய விசேஷண தயா அவஸ்திதா
உபயத்ர விசேஷண விசேஷ்ய பாவல் ஸமான –தத ஏவ தயோர் பேத ப்ரதிபத்திஸ் ச
இயாம்ஸ் து விசேஷ ப்ருதக் ஸ்திதி பிரதிபத்தி யோக்யா தண்டாதய –கோத்வாத யஸ்து நியமேந தத் அநர்ஹா இதி
அதோ வஸ்து விரோத ப்ரதீதி பராஹத இதி ப்ரதீதி பிரகார நிஹ்ந வாதே வோச்யதே
ப்ரதீதி ப்ரகாரோ ஹி இதமித்த மித்யேவ ஸர்வ ஸம்மத –ததே தத் ஸூத்ர காரேண நைகஸ்மின் ந சம்பவாத் (ப்ரஹ்ம ஸூத் -2-2-31) இதி ஸூவ்யக்தம் உப பாதிதம்

நிர் விசேஷஸ்ய ப்ரமாணா விஷயத்வ நிகமனம்
அத ப்ரத்யஷஸ்ய ஸ விசேஷ விஷயத்வேந ப்ரத்யஷாதி த்ருஷ்ட ஸம்பந்த விஸிஷ்ட விஷயத்வாத் அநுமாநமபி ஸ விசேஷ விஷய மேவ
பிரமாண சங்க்யா விவேதா அபி ஸர்வாப் யுபகத ப்ரமாணாநாம் அய மேவ விஷய இதி ந கேநாபி ப்ரமாணேந நிர் விசேஷ வஸ்து ஸித்தி
வஸ்து கத ஸ்வ பாவ விஸேஷைஸ் ததேவ வஸ்து நிர் விசேஷ மிதி வதன் ஜநநீ வந்த்யாத்வ ப்ரதிஞ்ஞாயா மிவ ஸ்வ வாக் விரோதம் அபி ந ஜாநாதி(என்னுடைய தாய் மலடி என்று சொல்லுமவன் தன்னுடைய வார்த்தை அறியாதவன் போல் விசேஷணமே இல்லாத வஸ்து என்பவன்)

ப்ரத்யக்ஷஸ்ய சந் மாத்ர க்ராஹிதா நிர் யுக்திகீ
யத் து ப்ரத்யக்ஷம் சந் மாத்ர க்ராஹித்வேந ந பேதி விஷயம் பேதஸ் ச விகல்ப்ப அஸஹத்வா துர் நிரூப –இத்யுக்தம்
ததபி ஜாத்யாத் விஸிஷ்டஸ் யைவ வஸ்து ந –ப்ரத்யஷ விஷயத்வாஜ் ஜாத்யா தேரேவ பிரதியோக் யபேஷயா வஸ்துநஸ் ஸ்வஸ்ய ச பேத வ்யவஹார ஹேதுத் வாச்ச தூரோத் சாரிதம்
ஸம் வேதநவத் ரூபாதி வச்ச பரத்ர வியவஹார விசேஷ ஹேதோஸ் ஸ்வஸ் மின் நபி தத் வியவஹார ஹேதுத்வம் யுஷ்மாப்ரப்யுபேதம் பேதஸ்யாபி ஸம்பவத் யேவ

அத ஏவ நாநா வஸ்தா அந்யோன்ய ஆஸ்ரயணம் ச -ஏக க்ஷண வர்த்தித்வே அபி ப்ரத்யக்ஷ ஞானஸ்ய தஸ்மிந் நேவ க்ஷணே
வஸ்து பேத ரூப தத் ஸம்ஸ்தாந ரூப கோத்வாதேர் க்ருஹீ தத்வாத் ஷாணாந்தர க்ராஹ்யம் ந கிஞ்சிதிஹ திஷ்டதி

ப்ரத்யக்ஷஸ்ய சந் மாத்ர க்ராஹி தாயாம் பிரதிபத்தி வ்யவஹார ஸப்த விரோதா–
அபி ச சந் மாத்ர க்ராஹித்வே கடோ அஸ்தி படோ அஸ்தி இதி விஸிஷ்ட விஷயா ப்ரதீதிர் விருத்யதே –யதி ச சந் மாத்ர அதிரேகி வஸ்து ஸம்ஸ்தான ரூப ஜாத்யாதி லக்ஷணோ பேத ப்ரத்யஷேண ந க்ருஹீத கிமத் யஸ்வார்தீ மஹிஷ தர்சநே நிவர்த்ததே-
ஸர்வாஸூ ப்ரதிபத்திஷு சந் மாத்ர மேவ விஷயஸ் சேத் தத் தத் பிரதிபத்தி விஷய ஸஹ ஸாரிணேஸ் ஸர்வே ஸப்தா ஏகைக ப்ரதிபத்திஷு கிமிதி ந ஸ்மர்யந்தே

சந் மாத்ர க்ரஹணே ப்ரதீத்ய வாந்தர ஜாதி விரோத–
கிஞ்ச அஸ்வே ஹஸ்திநி ச ஸம் வேதனயோர் ஏக விஷயத்வேந உபரிதநஸ்ய க்ருஹீத க்ராஹித்வாத் விசேஷா அபாவாச்ச ஸ்ம்ருதி வைலக்ஷண்யம் ந ஸ்யாத்
ப்ரதி ஸம் வேதநம் விசேஷாப் யுபகமே ப்ரத்யஷஸ்ய விசிஷ்டார்த்த விஷயத்வம் ஏவ அப்  யுபகதம் பவதி –ஸர்வேஷாம் ஸம் வேதநாநாம் ஏக விஷய தாயாம் ஏகேநைவ ஸம் வேதநேந அசேஷ க்ரஹணாத் அந்தபதி ராத்ய பாவாஸ் ச ப்ரஸஜ்யேத

கரண வ்யவஸ்தார்தம் விஷய பேதோப பாதநம்-
ந ச சஷுஷா சந் மாத்ரம் க்ருஹ்யதே தஸ்ய ரூப ரூபி ரூபைகார்த்த ஸமவேத பதார்த்த க்ராஹித்வாத்
நாபி த்வசா ஸ்பர்ச வத் வஸ்து விஷயத்வாத் –ஸ்ரோத்ராதீன் யபி ந சந்மாத்ர விஷயாணி –கிந்து ஸப்த ரஸ கந்த லக்ஷண விசேஷ விஷயாண்யேவ
அதஸ் சந் மாத்ரஸ்ய க்ராஹகம் ந கிஞ்சிதிஹ த்ருஸ்யதே(இருப்பு மட்டுமே உணரும் பிரமாணம் ஏதும் இல்லையே )

சந் மாத்ர க்ராஹித்வே ஸாஸ்த்ர அநுத்தாநம்
நிர் விசேஷ சந் மாத்ரஸ்ய ச ப்ரத்யஷேணைவ க்ரஹணே தத் விஷயாக மஸ்ய ப்ராப்த விஷயத்வேந அநுவாதகத்வ மேவ ஸ்யாத்
சந் மாத்ர ப்ரஹ்மண ப்ரமேய பாவஸ் ச ததோ ஜடத்வ நாஸித்வாத யஸ் த்வயை வோக்தா
அதோ வஸ்து ஸம்ஸ்தான ரூப ஜாத்யாதி லக்ஷண பேத விஸிஷ்ட மேவ ப்ரத்யக்ஷம்

ஸம்ஸ்தான மேவ ஜாதி பேதஸ் ச–
ஸம்ஸ்தாந அதிரேகிணோ அநேகேஷு ஏவ ஆகார புத்தி போத்யஸ்யா தர்சநாத் தாவதைவ கோத்வாதி ஜாதி வ்யவஹார உபபத்தே
அதிரேகவாதே அபி ஸம்ஸ்தாநஸ்ய ஸம் பிரதிபன்னத் வாச்ச -ஸம்ஸ்தான மேவ ஜாதி –ஸம்ஸ்தாநம் நாம ஸ்வ அசாதாராணம் ரூபமிதி யதா வஸ்து ஸம்ஸ்தானம் அநு ஸந்தேயம்- ஜாதி க்ரஹணே நைவ பின்ன இதி வ்யவஹார சம்பவாத் பதார்த்தாந்தர அதர்சநாத் அர்த்தாந்தர வாதிநா அபி அப்யுக தத்வாச் ச கோத்வாதி ரேவ பேத(மாட்டுத் தன்மை போன்ற ஜாதி -பொதுத்தன்மைகள் -தானே பேதம் -என்றவாறு)

பேத வ்யவஹாரஸ்ய பிரதியோகி ஸாபேஷத்வ உபபத்தி
நநு -ச ஜாத்யாதி ரேவ பேதஸ் சேத்தஸ்மின் க்ருஹீதே தத் வ்யவஹாரவத் பேத வ்யவஹாரஸ் யாத் -ஸத்யம்- பேதஸ் ச வ்யவஹ்ரியத ஏவ கோத்வாதி வ்யவஹாராத்-
கோத்வாதிரேவ ஹி சகலேதர வ்யாவ்ருத்தி –கோத்வாதவ் க்ருஹீதே சகலேதர ஸஜாதீய புத்தி வ்யவஹார யோர் நிவ்ருத்தே(இது காங்கயம் காளை என்றதும் மற்ற விலங்குகள் மற்ற மாடுகள் மற்ற காளைகள் அல்ல என்று தோற்றும் )
பேத க்ரஹணேநைவ ஹ்ய பேத நிவ்ருத்தி –அயம் அஸ்மாத் பின்ன இதி- து வியவஹார பிரதியோகி நிர்தேஸஸ்ய தத் அபேக்ஷத்வாத் பிரதியோக் யபேஷயா பின்ன இதி வ்யவஹார இத்யுக்தம்

பாரமார்த்யா பாரமார்த்ய ஸாதகாநுமாந தூஷணம்
யத் புநர் கடாதீ நாம் விஸேஷாணாம் வ்யாவர்த்தமாநத்வேந அபாரமர்த்ய முக்தம் தத் அநாலோசித பாத்ய பாதக பாவ வ்யாவ்ருத்தி யநுவ்ருத்தி விசேக்ஷஸ்ய ப்ராந்தி பரிகல்பிதம்–த்வயோர் ஞானயோர் விரோதே ஹி பாத்ய பாதக பாவ பாதிதஸ்யைவ வ்யாவ்ருத்தி –அத்ர கட படாதிஷு தேச கால பேதேந விரோதி ஏவ நாஸ்தி-
யஸ்மிந் தேசே யஸ்மிந் காலே யஸ்ய ஸத்பாவ பிரதி பன்ன -தஸ்மிந் தேசே தஸ்மிந் காலே தஸ்ய அபாவ பிரதி பன்னஸ் சேத் தத்ர விரோதாத் பலவதோ பாதகத்வம் பாதிதஸ்ய ச நிவ்ருத்தி -தேசாந்தர காலாந்தர சமபந்தி தயா அநு பூதஸ்ய அந்ய தேச கால யோரபாவ ப்ரதீதவ் (பிரதிபத்தவ்) ந விரோதி இத கதமத்ர பாத்ய பாதக பாவ-
அந்யத்ர நிவ்ருத்தஸ்ய அந்யத்ர நிவ்ருத்திர் வா கதமுச்யதே -ரஜ்ஜு சர்பாதிஷு து தத் தத் தேச காலே சம்பந்தி தயைவா பாவ ப்ரதீதே -விரோதோ பாதகாத்வம் வ்யாவ்ருத்திஸ் சேதி தேச காலாந்தர வ்யாவ்ருத்த மாநத்வம் (தேச காலாந்தர த்ருஷ்டஸ்ய தேசாந்தர காலாந்தர வ்யாவ்ருத்த மாநத்வம் )மித்யாத்வ வ்யாப்தம் ந த்ருஷ்டமிதி ந வ்யாவ்ருத்த மாநத்வ மாத்ரம் அபாரமார்த்ய ஹேது-

யத் து அநு வர்த்த மாநத்வாத் ஸத் பரமார்த்த –இதி தத் சித்தமேவேதி ந சாதன மர்ஹாதி –அதோ ந சந் மாத்ர மேவ வஸ்து

ஸத் அநு பூத்யோ நாநாத்வம்
அநு பூதி ஸத் விசேஷயோஸ் ச விஷய விஷயி பாவேந பேதஸ்ய ப்ரத்யக்ஷ சித்தத்வாத் அபாதிதத்வாத் அச அநு பூதி ரேவ ஸத் இதி ஏதத் அபி நிரஸ்தம்(விஷயம் விஷயீ வேறே வேறே என்பதால் அநுபூதி தான் ஸத் என்பது தள்ளப்படுகிறது )

அநு பூதேஸ் ஸ்வயம் ப்ரகாஸத்வ பரிமிதி
யத்து அநுபூதேஸ் ஸ்வயம் ப்ரகாஸத்வம் யுக்தம் -தத் விஷய ப்ரகாஸந வேளாயாம் ஞாதுராத்மநஸ் ததைவ —-ந து ஸர்வேஷாம் ஸர்வதா ததைவேதி நியமோ அஸ்தி
பரானுபவஸ்ய ஹாநோ பாதாநாதி லிங்க காநுமாந ஞான விக்ஷயத்வாத் ஸ்வ அநுபவஸ் யப்யதீ யஸ்ய அஞ்ஞா ஸிக்ஷம் இதி ஞான விக்ஷயத்வா தர்ச நாச்ச –அதோ அநு பூதிஸ் சேத ஸ்வதஸ் ஸித்தேதி வக்தும் ந ஸக்யதே

அநு பூதித்வ அநு பாவ்யத்வ யோர விரோத-
அநு பூதேர் அநு பாவ்யத்வே அநநு பூதித்வமித்யபி துருக்தம் -ஸ்வ கதாதீத அநுபவாநாம் பரகத அனுபவாநாம் ச அநுபாவ்யத்வேந அநநுபூதித்வ பிரசங்காத்
பர அனுபவ அநுமாந அநப்யுகமே ச ஸப்தார்த்த சம்பந்தி க்ரஹணா பாவேந ஸமஸ்த ஸப்த வ்யவஹார உச்சேத ப்ரசங்க
ஆச்சார்யஸ்ய ஞானவத்த்வம் அனுமாய தத் உபசத்திஸ் க்ரியதே ஸா ச ந உபபத்யதே

வேத்யத்யவ அநுபூதித்வயோ ந வியாப்தி
ந ச அன்ய விஷயத்வே அநநுபூதித்வம் -அநுபூதித்வம் நாம வர்த்தமான தசாயாம் ஸ்வ சத்தயைவ ஸ்வ ஆஸ்ரயம் ப்ரதி ப்ரகாஸமாநத்வம் -ஸ்வ சத்தயைவ ஸ்வ விஷய சாதனத்வம் வா-
தே ச அநுபவாந்தர அனுபாவ்யத்வே அபி ஸ்வ அனுபவ ஸத்தே ந அபகச்சத இதி ந அநுபூதித்வம் அப கச்சேத்
கடாஸ்தேத் வநநுபூதித்வ மேதத் ஸ்வபாவ விரஹாத் ந அநுபாவ்யத்வாத் -ததா அநு பூத ரேவநநு பாவ்யத்வே அபி அநநு பூதித்வ பிரசங்கோ துர்வாரா
ககந குஸூமாதேர நநுபாவஸ்ய அநநுபூதித்வாத்

ககநகுஸூமாதேர நநுபூதி தத்வ மசத்த்வ ப்ரயுக்தம் நாநநு பாவ்யத்வ ப்ரயுக்தம் இதி சேத் ஏவம் தர்ஹி கடாதேரப் யஜ்ஞாநா விரோதித்வ மேவா நநு பூதித்வ நிபந்தநம்
நாநு பாவ்யத்வ மித்யாஸ் தீயதாம்

அநு பூதேரநு பாவ்யத்வே அஞ்ஞாநா விரோதித்வமபி தஸ்யா கடாதேரிவ பரஸஜ்யத இதி சேத்
அநநு பாவ்யத்வே அபி ககந குஸூமா தேரிவ அஜ்ஞாநா விரோதித்வமபி ப்ரஸஜ்யத ஏவ
அதோ அநு பாவ்யத்வே அநநு பூதித்வம் இத் யுபு ஹாஸ்யம்

ஸம்வித பராபிமத நித்யத்வ நிராஸ-
யத்து ஸம்விதஸ்  ஸ்வதஸ் ஸித்தாயா ப்ராக பாவத் யபாவாத் உத்பத்திர் நிரஸ்யதே– தத் அந்தஸ்ய ஜாத் யந்தேன யஷ்டி ப்ரதீயதே
ப்ராக பாவஸ்ய க்ராஹக அபாவாத் அபாவோ ந ஸக்யதே வக்தும் அநு பூத்யைவ க்ரஹணாத்

கதம் அநு பூதிஸ் ஸதீ ததாநீ மேவ ஸ்வா பாவம் விருத்தம் அவகமய தீதி சேத் ந
ஹ்யனுபூதிஸ் ஸ்வ சம கால வர்திந மேவ விஷயீ கரோதித் யஸ்தி நியம
அதீத அநாகதயோர விஷயத்வ பிரசங்காத்

க்ராஹ்ய விசேஷஸ் யாபி அநு பூதி யவ்க பத்யா நியம
அத மன்யஸே அநு பூதி ப்ராக பாவாதேஸ் ஸித்த்யே தத் தஸ் சம காலே பாவ நியமோ அஸ்தீதி கிம் த்வயா க்வசி தேவம் த்ருஷ்டம் -யேந நியமம் ப்ரவீஷி-
ஹந்த -தர்ஹி தத ஏவ தர்சநாத் ப்ராக பாவாதி ஸித்த இதி ந தத் அபஹ்நவஸ் 
தத் ப்ராக பாவம் ச தத் சம கால வர்த்திந மனுந்மத்த கோ ப்ரவீதி(உன்மத்தர் போல் அநு பூதிக்கு ப்ராக் பாவமும் சம காலத்திலும் உள்ளதாக்ச் சொல்கிறீர்களே )
இந்திரிய ஜன்மந ப்ரத்யக்ஷஸ்ய ஹ்யேக்ஷ ஸ்வபாவ நியம யத் ஸ்வ சம கால வர்திந
பதார்த்தஸ்ய க்ராஹ கத்வம் ந ஸர்வேஷாம் ஞானா நாம் ப்ரமாணா நாம் ச
ஸ்மரண அநுமாந ஆகம யோகி ப்ரத்யஷாதிஷு காலாந்தர வர்திநோ அபி க்ரஹண தர்சநாத்

பிரமாண அப்ரமாண ஞானயோர் வைஷம்யம்-
அத ஏவ ப்ரமாணஸ்ய ப்ரமேய அவிநா பாவ –ந ஹி ப்ரமாணஸ்ய ஸ்வ சம கால வர்திநா அவிநாபாவ அர்த்த ஸம்பந்த அபி து யத் தேச காலாதி சம்பந்திதயா யோ அர்தோஸ் அவபாஸதே தஸ்ய ததாவித ஆகார மித்யாத்வ ப்ரத்யநீகதா —
அத இதமபி நிரஸ்தம் ஸ்ம்ருதிர்ந பாஹ்ய விஷயா நஷ்டே அப்யர்த்தே ஸ்ம்ருதி தர்சநாத் இதி

ஸம்வித் ப்ராக பாவே ப்ரமாணா பாவ நிரஸனம்-
அதோச்யேத ந தாவத் ஸம்வித் ப்ராக பாவ ப்ரஸ்யஷாவ ஸேய அவர்தமாநத்வாத் –ந ச ப்ரமாணாந்தர அவஸேய லிங்காத் யபாவாத்-
ந ஹி ஸம்வித் பிராக பாவ வ்யாப்தமிஹ லிங்க முப லப்யதே -ந அனுபபத்தி அபி கஸ்யசித் வித்யதே -(முன்பு இல்லை என்பது இல்லை -அதாவது நித்யம் என்கிறீர்கள் )-ந சா அகமஸ்தா வத்தத் விஷயோ த்ருஷ்ட சர-
அதஸ் தஸ் ப்ராக பாவ பிரமாண அபாவாதேவ ந சேத்ஸ்யதி இதி யத் ஏவம் ஸ்வ தஸ் ஸத் தத்வ விபவம் பரித்யஜ்ய ப்ரமாண அபாவே அவரூடஸ் சேத் -யோக்யாநுபலத்யைவா பாவஸ் சமர்த்தித இத் யுபசாம் யது பவான்

ஞான நித்யத்வ ஸாதனம்
கிஞ்ச (மேலும்)ப்ரத்யக்ஷ ஞானம் ஸ்வ விஷயம் கடாதிகம் ஸ்வ சத்தா காலே சந்தம் ஸாதயத் தஸ்ய ந ஸர்வதா சத்தா மவகமயத் த்ருஷ்யத இதி கடாதே பூர்வோத்தர கால சத்தா ந ப்ரதீயதே
தத் ப்ரதீதிஸ் ஸம் வேதநஸ்ய கால பரிச்சின்ன தயா ப்ரதீதே
கடாதி விஷயமேவ ஸம் வேதநம் ஸ்வயம் காலாநவச்சின்ன பிரதீயேதேதி நித்யஸ் ஸ்யாத்
நித்யம் சேத் ஸம் வேதநம் நித்ய மித்யேவ பிரதீயேத -ந ச ததா பிரதீயதே

ஏவ மநுமாநாதி ஸம்விதோ அபி காலாந விச்சின்ன பிரதீதாஸ் சேத் ஸ்வ விஷயா நபி காலா நவச்சின்னா நித்யாஸ் ஸ்யு ஸம்விதநு ரூபத்வாத் விஷயாணாம்

நிர் விஷய அனுபவ நித்யத்வ பக்ஷ தூஷணம்
ந ச நிர்விஷயா காசித் ஸம் விதஸ்தி அநுப லப்த –விஷய ப்ரகாஸ நதையைவோப லப்தே ரேவ ஹி ஸம் விதஸ் ஸ்வயம் ப்ரகாசத ஸமர்த்திதா– ஸம் விதோ விஷய ப்ரகாஸ நதா
ஸ்வ பாவ விரஹே சதி ஸ்வம்ய ப்ரகாஸத் வா ஸித்தே -அநு பூதே அநுபவாந்தர அநநுபாவ்யத் வாச்ச ஸம் விதஸ்த் துச்சதைவ ஸ்யாத்

ஸ்வாபாதிஷு அநு பூதே அஸ் புரணம்
ந ச ஸ்வாப (ஆழ்ந்த உறக்க நிலை)மத மூர்ச்சாதி ஸர்வ விஷய ஸூந்யா கேவலைவ ஸம்வித் பரிஸ்புரதீதி வாஸ்யம் யோக்ய அநுப லப்தி பராஹ தத்வாத்
தாஸ்வபி தஸாஸ்வநு பூதி ரநு பூதா சேத் தஸ்யா –ப்ரபோத ஸமயே அநு ஸம்தாநம் ஸ்யாத் ந ச ததஸ்தி(உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்த நிலையில் அநுபூதி உண்டாய் இருக்க வேண்டும் -அப்படிக் காண்பது இல்லையே)

அஸ்மரண நியம அநு பவா பாவ ஸாதக
நன்வ பூதஸ்ய பதார்த்தஸ்ய ஸ்மரண நியமோ ந த்ருஷ்ட சர -அதஸ் ஸ்மரண அபாவ கதம் அநுபவ அபாவம் சாதயேத்
உச்யதே –நிகில ஸம்ஸ்காரா திரஸ்க்ருதி கர தேஹ விகமாதி ப்ரபல ஹேது விரஹே அப் யஸ்மரண நியம அநுபவ அபாவம் ஏக ஸாதயதி
ந கேவலம் அஸ்மரண நியமாத் அநுபவ அபாவ ஸூப்தோத்தி தஸ்ய இயந்தம் காலம் ந கிஞ்சித் அஹம் அஞ்ஜாஸிஷம் இது ப்ரத்யவ மர்ஸே நைவ ஸித்தே
ந ச சத் யபி அனுபவே தத் அஸ்மரண நியமோ விஷய அவச்சேத விரஹாத் அஹங்கார விகமாத்வ இதி ஸக்யதே வக்தும்
அர்த்தாந்தர அநனுபவஸ்ய அர்த்தாந்தரா அபாவஸ்ய ச அநுபூத அர்தாந்த்ர அஸ்மரண ஹேதுத்வ அபாவாத்
தாஸ்வபி தஸாஸூ அஹம் அர்தோ அநு வர்த்த இதி ச வஹ்யதே

பூர்வோக்தர் தவ்யா காத சங்கா பரி ஹாரவ்
நநு ஸ்வா பாவித ஸாஸ்வபி ஸ விசேஷோ அநுபவோ அஸ்தீதி பூர்வமுக்தம் -ஸத்ய முக்தம்- ஸ த்வாத்ம அநுபாவ -ஸ ச ஸ விசேஷ ஏவதி ஸ்தாபயிஷ்யதே-
இஹ து ஸகல விஷய விரஹிணீ நிராஸ்ரயா ச ஸம்விந் நிஷ்யதே –கேவலைவ ஸம்வித் ஆத்மானுபவ இதி சேத் ஸா ச ஸாஸ்ரயேதி ஹ்யுபாதயிஷ்யதே

உக்தார்த்த நிகமனம்
அதோ அநு பூதிஸ் ஸதீ ஸ்வயம் ஸ்வ ப்ராக பாவம் ந ஸாத்ய தீதி ப்ராக பாவ அசித்திர் ந ஸக்யதே வக்தும்
அநு பூதே ரநு பாவ்யத்வ ஸம்பவோ பாத நேந அந்யதோ அப்ய ஸித்திர் நிரஸ்தா
தஸ்மான்ந ப்ராக பாவாத் யஸித்தயா ஸம்விதோ அநுத் பத்திர் உப பத்திமதீ

ஸம் வித உத்பத்தேர பாவாத் தத் க்ருத விகாரஸ்யாப்ய பாவ இத்யேத் தூஷணம்
யதப் யஸ்யா அநுத்பத்த்யா விகாராந்தர நிரஸனம் ததப் யநுபபன்னம்– ப்ராக பாவே வியபிசாராத் –தஸ்ய ஹி ஜன்ம அபாவே அபி விநாஸோ த்ருஸ்யதே-(ப்ராகபாவம் -உத்பத்திக்கு முன்பு இல்லை என்னும் இல்லாமை இருக்கின்ற ஒரு தன்மை யாகிறது -அபாவம் உள்ளது -உத்பத்தி ஆகாமலேயே அபாவம் உள்ளது –குடத்தின் அபாவம் குடத்தின் உத்பத்தியால் அழியும் -ஆகவே உத்பத்தி ஆகாமலேயே குடத்தின் அபாவம் அழிகிறது )
பாவேஷ் விதி விஸேக்ஷணே தர்ககுஸ லதா ஆவிஷ்க்ருதா பவதி –ததா ச பவதபிமதா அவித்யா அநுத்பன்னவை விவித விகாராஸ்பதம் தத்வ ஞாநோதயா நந்த வதீ சேதி தஸ்யா மநை காந்த்யம் -தத் விகாராஸ் ஸர்வே மித்யா பூதா இதி சேத்-
கிம் பவத பரமார்த்த பூதோ அப்யஸ்தி விகார – யேநை தத் விசேஷணம் அர்த்தவத் பவதி –ந ஹ் யஸாவப் யுப கம்யதே

அஞ்ஞஸ் வஸ்ய நாநாத்வா பாவ வியாப்யதா தூஷணம்
யதபி அநுபூதிர்  அஜத்வாத் ஸ்வஸ் மின் விபாகம் ந ஸஹதே இதி –ததபி நோப பத்யதே அஜஸ் யைவா ஆத்மநோ தேஹ இந்த்ரியாதிப்யோ
விபக்தத்வாத அநாதித்வேந ச அபி யுபகதாயா அவித்யாயா ஆத்மநோ வ்யதிரேகஸ் யாவஸ்ய ஆஸ்ரயணீயத்வாத்
ஸ விபாகோ மித்யா ரூப இதி சேத் ஜன்ம ப்ரதிபத்த பாரமார்த்திக விபாகா பாவே வஸ்துதோ ஹி அவித்யைவ ஸ்யாத் ஆத்மா –
அபாதித ப்ரதிபத்தி ஸித்த தருஸ்ய பேத ஸமர்த்தநேந தர்சன பேத அபி சமர்தித ஏவ சேத்ய பேதாத் சேதன பேதவத் 

த்ரு சித்வ –த்ருஸ் யத்வ ஹேதுக அநுமாந தூஷணம்
யதபி நாஸ்யா த்ருசேர் த்ருஸிஸ்வ ரூபாயா த்ருஸ்ய கஸ்சிதபி தர்மோ அஸ்தி த்ருஸ்யத்வா தேவ தேஷாம் ந த்ருஸி தர்மத்வம் இதி ச
ததபி ஸ்வாப் யுபகதை பிரமாண சித்தைர் நித்யத்வ ஸ்வயம் ப்ரகாஸத்வாதி தர்மை ருபயம் அநை காந்திகம்
ந ச தே ஸம்வேதந மாத்ரம் ஸ்வரூப பேதாத் -ஸ்வ சத்தயைவ ஸ்வாஸ்ரயம் ப்ரதி கஸ்ய சித் விஷயஸ்ய ப்ரகாஸ நம் ஹி ஸம் வேதநம்
ஸ்வயம் ப்ரகாஸதா து ஸ்வ சத்த யைவ ஸ்வாஸ்ரயாய ப்ரகாஸமாநதா –ப்ரகாஸஸ் ச சித் அசித் சேஷ பதார்த்த ஸாதாரணம் வ்யவஹார அநு குண்யம்

ஸர்வ கால வர்த்த மாநத்வம் ஹி நித்யத்வம் –ஏகத்வம் ஏக ஸம் க்யா வச்சேத இதி -தேஷாம் ஜடத் வாத் யபாவ ரூப தாயாமபி ததா பூ தைரபி
சைதன்ய தர்ம பூதைஸ் தைர நை காந்த்யம பரி ஹார்யம் –ஸம்விதி து ஸ்வரூபாதி ரேகேண ஜடத்வாதி ப்ரத்ய நீகத்வ மித் யபாவ ரூபோ பாவ ரூபோ வா தரமோ நாப்யுபேதஸ் சேத் தத்திந் நிஷேதோக்த்யா கிமபி நோக்தம் பவேத்

ஸம் வித ஆத்மத்வ நிராகோப க்ரம
அபி ஸம் வித் ஸித்த்யதி வா ந வா –ஸித்த்யதி சேத் ஸ தர்மதா ஸ்யாத் -ந சேத் துச்சதா ககந குஸூமாதிவத்–ஸித்தி ரேவ ஸம் விதிதி சேத்
கஸ்ய கம் ப்ரதீதி வக்தவ்யம் யதி ந கஸ்ய சித் கிஞ்சித் ப்ரதி -ஸா தர்ஹி ந ஸித்தி –ஸித்திர் ஹி புத்ரத்வமிவ கஸ்ய சித் கிஞ்சித் ப்ரதி பவதி —
ஆத்மந இதி சேத் -கோ அயமாத்மா- நநு ஸம்விதே வேத் யுக்தம் –ஸத்ய முக்தம் -துருக்தம் து தத்
ததாஹி கஸ்ய சித் புருஷஸ்ய கிஞ்சித் அர்தஜாதம் ப்ரதி ஸித்தி ரூபதயா தத் சம்பந்தி நீ சா ஸம்வித் ஸ்வயம் கதம் இவ ஆத்ம பாவம் அநுபவேத்

ஸம்வித அநாத்மத்வ நிஷ் கர்ஷணம்-
ஏததுக்தம் பவதி –அநு பூதி ரிதி ஸ்வ ஆஸ்ரயம் ப்ரதி ஸ்வ ஸத்பாவே நைவ கஸ்யசித் வஸ்துநோ வ்யவஹார அநுகுண்யா பாதந ஸ்வபாவோ ஞான அவகதி ஸம்விதாத்ய பரநாமா ஸ கர்மக அநுபவிதுர் ஆத்மநோ தர்ம விஸேஷோ
கடம் அஹம் ஜாநாமி இமம் அர்தம் அவ கச்சாமி படம் அஹம் ஸம் வேத்மி இதி ஸர்வேஷாம் ஆத்ம ஸாக்ஷிக ப்ரஸித்த
ஏதத் ஸ்வபாவ தயா ஹி தஸ்யாஸ் ஸ்வயம் ப்ரகாஸதா பவதா அப்யுபாதிதா
அஸ்ய ஸ கர்ம கஸ்ய கர்த்ரு தர்ம விசேஷஸ்ய கர்மத்வத் கர்த்ருத்வமபி துர்கடமிதி(துணியைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது -அறிவு அறிவதில்லை -ஆத்மாவுக்குத்தான் ஏற்படுகிறது-ஸம்வித் கர்த்தா அல்ல-அறிவு வேறே ஒன்றுக்கும் இலக்காகவாது அல்ல )

ஸ்திரத்வாஸ்தி ரத்வே அபி ஸம்வித நாத்மத்வ ஸாதகே
ததாஹி அஸ்ய கர்துஸ் ஸ்திரத்வம் கர்த்ரு தர்மஸ்ய ஸம்வேத நாக்யஸ்ய ஸூக துக்காதேரிவ உத்பத்தி ஸ்திதி -நிரோதாஸ் ச ப்ரத்யக்ஷ மீஷ் யந்தே
கர்த்ருஸ் தைர்யம் தாவத் ஸ ஏவ அயமர்தஸ் பூர்வம் மயா அநுபூத இதி ப்ரத்யபிஞ்ஞா ப்ரத்யக்ஷ ஸித்தம்
அஹம் ஜாநாமி அஹம் அஞ்ஞாஸிக்ஷம் ஞாது ரேவ மமேதா நீம் ஞானம் நஷ்டம் இதி ச
ஸம்வித் உத்பத்த்யாதய ப்ரத்யக்ஷ ஸித்தா இதி குதஸ்த தைக்யம் -(அறிபவன் நிலையாகவும் ஞானத்துக்கு தோற்றமும் அழிவும் ப்ரத்யக்ஷ சித்தம் -ஆகவே இரண்டும் ஓன்று என்று சொல்ல முடியாதே )-ஏவம் க்ஷண பங்கி ந்யாஸ் ஸம்வித ஆத்மத் வாப்யுகமே பூர்வேத் யுர்த்ருஷ்ட மபரேத்யு இதஹம தர்சம் இதி ப்ரத்யபிஞ்ஞா ச ந கடதே அன்யேந அநுபூதஸ்ய ந ஹ்யந் யேன ப்ரத்யபிஞ்ஞாந ஸம்பவ(நொடி தோறும் மாறும் ஸம்வித்தே ஆத்மா என்றால் ஆத்மாவும் மாறுமே -நேற்று பார்த்த இத்தைப் பார்த்தேன் சொல்ல முடியாதே -ஆகவே இரண்டும் வேறே வேறே தான்)

ஸம் வித ஸ்திரத்வே அபி அநாத்மதா
கிஞ்ச அநு பூதே ராத்மத் வாப் யுபகமே தஸ்யா நித்யத்வே அபி -ப்ரதி ஸந்தாந அசம்பவஸ் ததவஸ்த-
ப்ரதி சந்தானம் ஹி பூர்வ அபரகால ஸ்தாயிநம் அநுபவிதாரம் உபஸ்தா பயதி ந அநு பூதி மாத்ரம் -அஹமே வேதம் பூர்வ மப்யன்வ பூவமிதி –பவதோ அப் யநு பூதேர்ந ஹ்யனுபவித்ருத்வ மிஷ்டம்

க்ரியாயா அகர்த்ருத்வாத் ஸம்வித அநாத்மத்வம்
அநு பூதிர் அநு பூதி மாத்ர மேவ –ஸம்விந் நாம காசின் நிராஸ்ரயா நிர்விஷயா வாத் யத்யந்த அநுபலப்தேர் ந ஸம்பவ தீத் யுக்தம்
உபய அப்யுபேதா ஸம்விதேவா அத்மேத்யுப லப்தி பரா ஹதம் –அநு பூதி மாத்ர மேவ பரமார்த்த இதி நிஷ் கர்ஷக ஹேத்வாபாஸாஸ் ச நிராக்ருதா

ஆத்மந அஹமர்தத்வம் ப்ரத்யக்த்வா பாதகம்
நநு ச அஹம் ஜாநாமி இத் யஸ்மத் ப்ரத்யயே யோ அனிதமம் ஸ ப்ரகாஸ ஏக ரஸம் சித் பதார்த்தஸ் ஸ ஆத்மா
தஸ்மிம்ஸ் தத் பல நிர்பாஸி ததயா யுஷ்மத் அர்த லக்ஷணோ அஹம் ஜாநா மீதி சித்யன்னஹ மர்தஸ் சின் மாத்ராதிரேகீ யுஷ்ம தர்த ஏவ
நைத தேவம் அஹம் ஜாநாமி இதி தர்ம தர்மி தயா ப்ரத்யக்ஷ ப்ரதீதி விரோதா தேவ

ப்ரத்யக்த்வாத் அஹமர்த்த ஏவாத்மா
கிஞ்ச
அஹமர்தோ ந சேதாத்மா ப்ரத்யக்த்வம் நா ஆத்ம நோ பவேத்
அஹம் புத்த்யா பராகர்த்தாத் ப்ரத்யகர்தோ ஹி பித்யதே

முமுஷோஸ் அபி சந்தி
நிரஸ்த அகில துக்கோ அஹம் அநந்த ஆநந்த பாக் ஸ்வராட் –பவேயமிதி மோஷார்த்தீ ஸ்ரவணாதவ் ப்ரவர்த்ததே

ஸாஸ்த்ர பிராமாண்ய அந்யதா அநு பபத்த்யா அஹமர்த்த ஆத்மா
அஹமர்த்த விநாஸஸ் சேந் மோக்ஷ இத்யத்ய வஸ்யதி -அபஸர் பேதசவ் மோக்ஷ கதா ப்ரஸ்தாவ கந்தத(ஆத்மாவின் அழிவே மோக்ஷம் என்றால் மோக்ஷத்துக்கு முயலவே மாட்டானே )மயி நஷ்டே அபி மத்தோ அந்யோகாஸிஜ்ஜ் ஞப்திர வஸ்திதா –இதி தத் ப்ராப்தயே யத்ந கஸ்யாபி ந பவிஷ்யதி
ஸ்வ சம்பந்தி தயா ஹ்யஸ் யாஸ் சத்தா விஞ்ஞப்தி தாதி ச -ஸ்வ சம்பந்த வியோக து ஜ்ஞப்தி ரேவ ந ஸித்த்யதி
சேத்துஸ் சேத் யஸ்ய ஸ அபாவே சேதநா தேர் அசித்திவத்
அதோ அஹமர்தோ ஞாதைவ ப்ரத்யகாத் மேதி நிஸ் சிதம்விஞ்ஞா தார மரே கேந ஜாநாத்யே (ப்ரு -2-4-15-எதன் உதவியால் ஒருவன் அறிபவனை அறிகிறானோ )வேதி ச ஸ்ருதி –ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹூ ஷேத்ரஞ்ஞ(கீதை -13-1-யார் இதனை அறிகிறானோ அவன் ஷேத்ரஞ்ஞன் ) இதி ச ஸ்ம்ருதி
நாய மாத்மா ஸ்ருதே (ப்ரஹ்ம -2-3-18)இத்யாரப்ய ஸூத்ர காரோ அபி வஹ்யதி
ஜ்ஜோ அத ஏவ (ப்ரஹ்ம -2-3-17)இதயதோ நாயமாத்மா ஞப்தி மாத்ர மிதி ஸ்திதம்

(ஆத்மா அறிவு ஞானம் மட்டும் அல்ல அறிபவன் என்பது உறுதியாகிறது)

யுஷ்ம தஸ்ம தர்தயோ ஐக்யம் வ்யாஹதம்-
அஹம் ப்ரத்யய ஸித்தோ ஹ்யஸ் மதர்த்த –யுஷ்மத் ப்ரத்யய விஷயோ யுஷ்ம தர்த –தத்ராஹம் ஜாநா மீதி ஸித்தோ ஞாதோ
யுஷ்மத தர்த இதி வசநம் ஜநநீ மே வந்த்யேதி வத் வ்யாஹதார்த்தம் ச —
நா ஸ அஸவ் ஞாதா அஹமர்த்தோ அன்யா தீன ப்ரகாஸ ஸ்வயம் ப்ரகாஸத் வாத் –சைதன்ய ஸ்வ பாவதா ஹி ஸ்வயம் ப்ரகாஸதா
ய ப்ரகாஸ ஸ்வ பாவ ஸோ அநந்யா தீந ப்ரகாஸ -தீபவத்

தீ பஸ்ய ஸ்வயம் ப்ரகாஸதா பங்க பரி ஹாரவ்
ந ஹி தீபாதேஸ் ஸ்வ ப்ரபா பல நிர் பாஸி தத்வேநா ப்ரகாஸத்வ மன்யாதீந ப்ரகாஸத்வம் ச
கிம் தர்ஹி -தீபஸ் ஸ்வயம் ப்ரகாஸ ஸ்வயமேவ ப்ரகாஸதே அன்யா நபி ப்ரகாஸ யதி ப்ரபயா

தர்மி தர்மிணோ த்வயரோபி ஞான ரூபதா
ஏததுக்தம் பவதி  –யதைகமேவ தேஜோ த்ரவ்யம் ப்ரபா ப்ரபாவத் ரூபேண அவதிஷ்டதே -யத்யபி ப்ரபா ப்ரபாவ த்ரவ்ய குண பூதா ததாபி தேஜோ த்ரவ்யமேவ-(தேஜஸ் ஒளியாகவும் ஒளியைக் கொண்ட பொருளாகவும் உளது -தீபம் தீப ஒளி – )ந மவ்க்ல்யாதிவத் குண(வெண்மை போல் அல்லவே-தனியாக வெண்மையைப் பிரிக்க முடியாதே -ஒளி அப்படி அல்லவே )
ஸ்வாஸ்ரயா தன்யாத்ராபி வர்த்தமாநத்வாத் ரூபவத் வாச்ச மவ்க்ல்யாதி வை தர்ம்யாத் ப்ரகாஸ வத் வஞ்ச ஸ்வ ஸ்வரூபஸ் யான்யேஷாம் ச ப்ரகாஸ கத்வாத்

அஸ்யாஸ்து குணத்வ வ்யவஹாரோ நித்ய ததாஸ்ரயத்வ தச் சேஷத்வ நிபந்தன -ந ச ஆஸ்ரய அவயவா ஏவ விசீர்ணா -பிரசரந்த
ப்ரபேத் யுச்யந்த -மணி-த்யுமிண ப்ரப்ரூதி நாம் விநாஸ பிரசங்காத் 

தீபே அப்யவயவி ப்ரதி பத்தி கதாசிதபி ந ஸ்யாத்ந ஹி விசரண ஸ்வ பாவ அவயவா தீபாஸ் சதுரங்குல மாத்ரம் நியமேந பிண்டீ பூதா ஊர்த்வ முத் கம்ய தத
பஸ்சாத் யுகபதேவ திர்ய கூர்த்வ மதஸ் சைக ரூபா விஸீர்ணா ப்ரஸரந்தீதி ஸக்யம் வக்தும்
அதஸ் ஸ ப்ரபாகா ஏவ தீபா ப்ரதி க்ஷண முத்பந்தா விநஸ்யந்தீதி புஷ்கல காரண க்ரமோப நிபாதத் தத் விநாஸே விநாஸாச்ச அவகம்யதே
ப்ரபாயாஸ் ஸ்வாஸ்ரய ஸமீபே ப்ரகாசாதிக்ய மவ்ஷ்ண் யாதிக்ய மித்யாத் யுபலப்தி வ்யவஸ்தாப்யம்
அக்ன்ய அதீநா மவ்ஷ்ண்யாதி வத் –ஏவமாத்மா சித் ரூப ஏவ சைதன்ய குண இதி

சித் ரூபதா ஸ்வயம் ப்ரகாஸதா ரூபா-
சித் ரூபதா ஹி ஸ்வயம் ப்ரகாஸதா –ததாஹி ஸ்ருதய -ஸ யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸநோ ரஸ கந ஏவ ஏவம் வா
அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸ்ந ப்ரஞ்ஞாந கந ஏவ (ப்ரு-4-5-13 )விஞ்ஞான கந ஏவ (ப்ரு-2-4-12 )அத்ராயம் புருஷஸ் ஸ்வயம் ஜ்யோதிர் பவதி (ப்ரு-4-3-9 )
ந விஞ்ஞா துர் விஞ்ஞா தேர் விபரி லோபோ வித்யதே (ப்ரு-4-3-30- )அத யோ வேதேதம் ஜிக்ராணீதி ஸ ஆத்மா (சாந்தோக்கியம்-8-12-4- )
கதம ஆத்மா யோ அயம் விஞ்ஞாந மய ப்ராணே ஷு ஹ்ருத் யந்தர் ஜ்யோதி புருஷ (ப்ரு-4-3-7 )
ஏஷ ஹி த்ரஷ்டா ஸ்ரோதா ரஸியதா க்ராதா மந்த போத்தா கர்தா விஞ்ஞாநாத்ம புருஷ (ப்ரஸ்ன-4-9 )
விஞ்ஞா தார மரே கேந விஜா நீயாத் (ப்ரஸ்ன-2-4-44 )
ஞானாத் யே வாயம் புருஷ ந பஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி ந ரோகம் நோத துக்கதாம்(சாந்தோ-7-26-2- ) ஸ உத்தம புருஷ  நோ பஜநம் ஸ்மரந்திநம் ஸரீரம் (சாந்தோ-8-12-3)
ஏவமே வாஸ்ய பரி த்ரஷ்டுரி மாஷ் ஷோடஸ கலா புருஷாயணா புருஷம் ப்ராப்யாஸ் தம் கச்சந்தி (ப்ர-6-5-பிராணன் ஸ்ரத்தை ஆகாசம் வாயு தேஜஸ் நீர் பூமி மனம் பத்து இந்திரியங்கள் அன்னம் வீர்யம் தவம் மந்த்ரங்கள் யாகங்கள் லோகங்கள் மற்றும் பெயர்கள் ஆகிய 16 கலைகளும் புருஷனை அடைந்த பின்பு முடிகின்றன )
தஸ்மாத் வா ஏதஸ்மாந் மநோம யாதன்யோ அந்தர ஆத்மா விஞ்ஞான மய (தைத்-2-4-1 )–இத்யாத்யா
வஹ்யதி ச ஜோ அத ஏவ (ப்ர-2-3-19) இதி அதஸ் ஸ்வயம் ப்ரகாஸோ அயமாத்மா ஞாதைவ ந ப்ரகாஸ மாத்ரம்

ஸம் வித அநாத்மத் வோப பாதகா தர்கா-
ப்ரகாஸத் வாதேவ கஸ்யசிதேவ பவேத் ப்ரகாஸ தீபாதி ப்ரகாஸ வத் –தஸ்மாந் நா ஆத்மா பவிது மர்ஹாதி ஸம்வித்
ஸம் வித அநு பூதி ஞானாதி ஸப்தாஸ் சம்பந்தி ஸப்தா இதி ச ஸப்தார்தவித
ந ஹி லோக வேதயோர் ஞானாதீத்யாதேர் அகர்மகஸ்யா கர்த்ருகஸ்ய ச ப்ரயோகா த்ருஷ்டசர

ஸம் விதாத் மத்வே அஜடத்வம் ந ஹேது-
யச்சோக்தம் அஜடத்வாத் ஸம் விதேவா அத்மேதி –தத்ரேதம் ப்ரஷ்டவ்யம் -அஜடத்வம் இதி கிம் அபிப்ரேதம்
ஸ்வ சத்தா ப்ரயுக்த ப்ரகாஸத்வமிதி சேத் ததா சதி தீபாதிஷ்வநை காந்த்யம்(தீபாதிகளுக்கும் பொருந்தும் அன்றோ இவையும் சம்வித் அஜடம் சொல்லலாமா )-ஸம் வித திரிக்த ப்ரகாஸ -தர்மாந ப்யுகமே நா சித்திர் விரோதஸ் ச
அவ்யபிசரித ப்ரகாஸ சத்தா கத்வமபி ஸூகாதிஷு வ்யபிசாராந் நிரஸ்தம்

யத்யுச்யேத –ஸூகாதி ரவ்யபிசரித ப்ரகாஸோ அப்யன் யஸ்மை ப்ரகாஸ மாந தயா கடாதி வஜ் ஜடத்வேந அநாத்மா -இதி –(ஸூகம் தானே தன்னை பயன் படுத்திக் கொள்ளும் தன்மை அல்லவே என்ற வாதம்)ஞானம் ந கிம் ஸ்வஸ்மை ப்ரகாஸதே
ததபி ஹ்யன்யஸ்யை வாஹ மர் தஸ்ய ஞாது ரவ பாஸதே அஹம் ஸூ கீதி வஜ்ஜா நாம் யஹமிதி -அதஸ் ஸ்வஸ்மை ப்ரகாஸமா நத்வ ரூப மஜடத்வம் ஸம் வித்ய ஸித்தம்
தஸ்மாத் ஸ்வாத்மாநம் ப்ரதி ஸ்வ சத்தயைவ சித்த் யன்ன ஜடோ அஹமர்த்த ஏவாத்மா

ஞானஸ்ய ப்ரகாஸ ரூப தாயாம் ஹேது
ஞானஸ் யாபி ப்ரகாஸதா தத் சம்பந் தாயத்தா –தத் க்ருதமேவ ஹி ஞானஸ்ய ஸூகா தேரிவ ஸ்வாஸ்ரய சேதநம் ப்ரதி ப்ரகடத்வ மிதரம்(ஞானமும் ஆஸ்ரயம் தனக்கு மட்டுமே வெளிப்படும் -மற்றவருக்கு பிரகடனம் பண்ணாமல் -சுகம் போலவே தானே )
அதோ ந ஞப்தி மாத்ர மாத்மா அபி து ஞாதை வாஹ மர்த்த(ஞானம் மட்டுமே ஆத்மா அல்ல அறிபவனும் ஆத்மாவேதான் )

அஹமர்த்த ந ப்ராந்தி ஸித்த
அத யதுக்தம் அநு பூதி பரமர்த்ததோ நிர்விஷயா நிராஸ்ரயா ச ஸதீ ப்ராந்த்யா ஞாத்ரு தயா அவ பாஸதே ரஜத தயேவ ஸூக்தி நிரதிஷ்டாநா ப்ரமாநு பபத்தே இதி –ததயுக்தம் ததா ஸத்யனுபவ ஸாமா நாதி கரண்யேந அநுபவிதா அஹமர்த்த ப்ரதீயேத அநுபூதி ரஹம் இதி(நானே அனுபவம் இல்லையே நான் அறிகிறேன் என்றே தான் சொல்கிறோம் )
புரோ அவஸ்தித பாஸ்வரத் ரவ்யா கார தயா ரஜதா திரிவ
அத்ர து ப்ருதக் அவபாஸமாநைவேய மநு பூதிரர் தாந்த்ர மஹமர்த்தம் விஸி நஷ்ட்டி- தண்ட இதி தேவதத்தம்
ததா ஹி அநுபவ யாப்யஹம் இதி ப்ரதீதி –ததேவ மஸ்மதர்த்த மநுபூதி விஸிஷ்டம் ப்ரகாஸ யன் னநுபவாம் யஹமிதி ப்ரத்யயோ தண்ட மாத்ரே தண்டீ தேவதத்த
இதி ப்ரத்யய வத் விசேஷண பூதா நு பூதி –மாத்ரா வலம்பந கதமிவ ப்ரதிஞ்ஞா யேத

ஞாத்ருத்வம் மித்யேத் யேதத் நிர் யுக்திகம்
யதப் யுக்தம் ஸ்தூலோ அஹமித்யாதி தேஹாத்ம அபிமானவத ஏவ ஞாத்ருத்வ ப்ரதி பாஸநாத் ஞாத்ருத்வம் அபி மித்யா இதி(நான் பருமனாக உள்ளேன் சரீராத்மா பிரமம் போல் நான் அறிபவன் என்பதும் என்று சொல்வீர்களானால் )
ததயுக்தம் (அது சரியல்ல )-ஆத்மதயா அபிமதாயா அநு பூதேரபி மித்யாத்வம் ஸ்யாத் தத்வத ஏவ ப்ரதீதே(அனுபூதி என்ற ஆத்மாவும் மித்யை ஆகுமே )
சகலேதரோப மர்த்தி தத்வ ஞானாபாதி தத்வேநாநு பூதேர் ந மித்யாத்வமிதி சேத் ஹந்தைவம் சதி தத பாதா தேவ ஞாத்ருத்வம் அபி ந மித்யா(ஆத்மாவை அறிபவன் என்பதை எந்த பிரமாணமும் தள்ளவில்லையே )

ஞாத்ருத்வஸ்ய விக்கிரியாத்மகத்வ அநு வாத
யதப்யுக்தம் அவிக்ரியஸ்ய ஆத்மநோ ஞான க்ரியா கர்த்ருத்வ ரூபம் ஞாத்ருத்வம் ந சம்பவதி -அதோ ஞாத்ருத்வம் விக்ரியாத்மகம் ஜடம்
விகாராஸ்பத அவ்யக்த பரிணாம அஹங்கார க்ரந்திஸ் தமித ந ஞாத்ருத்வ மாத்ம நா அபி த்வந்தகரண ரூபஸ்ய அஹங்காரஸ்ய
கர்த்ருத்வாதிர்ஹி ரூபாதி வத்த்ருஸ்ய தர்ம– கர்த்ருத்தவே அஹம் ப்ரத்யய கோசரத்வே ச ஆத்மநோ அப்யுகம்யமாநே தேஹஸ் யேவ அநாத்மத்வ பராக்த்வ ஜடத்வாதி பிரசங்கஸ் சேதி

அநூதிதார்த்த தூஷணம்
நைதது பபத்யதே
தேஹஸ்யேவ அசேதநத்வ ப்ரக்ருதி பரிணாமத்வ த்ருஸ்யத்வ பராகத்வ பரார்தத்வாதி யோகாத் -அந்தக்கரண ரூபஸ்ய அஹங்காரஸ்ய சேதந அஸாதாரண ஸ்வ பாவத் வாச்ச ஞாத்ருத்வஸ்ய
ஏதத் யுக்தம் பவதி யதா
தேஹாதிர் த்ருஸ்யத்வ பராக்த்வாதி ஹேது பிஸ் தத் ப்ரத்யநீக திருஷ்ட்ருத்வ ப்ரத்யக்த்வா தேர்வி விச்யதே
ஏவம் அந்தக்கரண ரூப அஹங்காரோ அபி தத் த்ரவ்யத்வா தேவ தைரேவ ஹேது பிஸ் தஸ்மாத் விவிச்யதே -இதி
அதி விரோதா தேவ ந ஞாத்ருத்வம் அஹங்காரஸ்ய த்ருசித்வவத் –யதா த்ருசித்வம் தத் கர்மணோ அஹங்காரஸ்ய நாப்யுகம்யதே
ததா ஞாத்ருத்வம் அபி ந தத் கர்மணோ அப்யுகந்தவ்யம்

ஞாத்ருத்வம் ந விக்ரியாத்மகம்
ந ச ஞாத்ருத்வம் விக்ரியாத்மகம் ஞாத்ருத்வம் ஹி ஞான குண ஆஸ்ரயத்வம் –ஞானம் சாஸ்ய நித்யஸ்ய ஸ்வா பாவிக தர்மத்வேந நித்யம்
நித்யத்வம் சா ஆத்மநோ ந ஆத்மா ஸ்ருதே (ப்ரஹ்ம -2-3-18)இத்யாதி ஷு வஹ்யதி
ஜோ அத ஏவ (ப்ரஹ்ம -2-3-19)இத்யத்ர ஞ இதி வ்யபதேஸந ஞான ஆஸ்ரயத்வம் ச ஸ்வாபாவிகிமிதி வஹ்யதி
அஸ்ய ஞான ஸ்வரூபஸ் யைவ மணி ப்ரப்ருதீ நாம் ப்ரப ஆஸ்ரயத்வ மிவ ஞான ஆஸ்ரயத்வ மப்ய விருத்த மித்யுக்தம்

ஸ்வ பாவதோ ஞானவா நபி ந ஸர்வஞ்ஜோ ஜீவ
ஸ்வயம் அபரிச்சின்ன மேவ ஞானம் சங்கோச விகாஸ அர்ஹா மித் யுபபாத யிஷ்யாம –அத ஷேத்ரஞ்ஞ அவஸ்தாயாம் கர்மணா சங்குசித ஸ்வரூபம் தத் தத் கர்ம அநு குணம் தார தம பாவேந வர்த்ததே
தச்ச இந்த்ரிய த்வாரேண வ்யவஸ்திதம் –தமிமம் இந்த்ரிய த்வாரா ஞான பிரசரம் அபேஷ்ய உதய அஸ்தமய வ்யபதேஸ ப்ரவரத்தே

ஆத்மந ஞான சங்கோச விகாஸாத்மக விகாரித்தவ சம்மதி
ஞான பிரஸரேது கர்த்ருத்வம் அஸ்த் யேவ –தச்ச ந ஸ்வா பாவிகம் -அபி து கர்ம க்ருத மிதி -அவிகரிய ஸ்வரூப ஏவ ஆத்மா
ஏவம் ரூப விக்ரியாத்மகம் ஞாத்ருத்வம் ஞான ஸ்வரூபஸ்ய ஆத்மந –ஏவ இதி ந கதாசிதபி ஜடஸ்ய அஹங்காரஸ்ய ஞாத்ருத்வ ஸம்பவ

சிச்சாயா பத்த்யா ஞாத்ருத்வ நிர்வாஹ நிராச
ஜட ஸ்வரூபஸ் யாபி அஹங்காரஸ்ய சித் ஸம் நிதாநேந தச் சாயா பத்த்யா தத் ஸம்பவ இதி சேத் –கேயம் கிச்சாயா பத்தி –கிம் அஹங்காராச் சாயாபத்திஸ் ஸம்வித -உத ஸம்விச் சாயாபத்தி ரஹங்காரஸ்ய-
ந தாவத் ஸம்வித ஸம்விதோ ஞாத்ருத்வா நப் யுகமாத் –நாப் யஹங்காரஸ்ய உக்தரீத்யா தஸ்ய ஜடஸ்ய ஞாத்ருத்வ அயோகாத்
த்வயோ ரப்ய ச அஷுஷத்வாச் ச –ந ஹ்ய ச அஷுஷாணாம் சாயா த்ருஷ்டா

சித் ஸம் பர்கேண ஞாத்ருத்வ நிர்வாஹ நிராச
அத அக்னி ஸம்பர்காதய பிண்ட ஒவ்ஷண்ய வச்சித் ஸம்பர்காஜ் ஜ்ஞாத்ருத்வோப லப்தி –இதி சேத் -நைதத் ஸம்விதி வஸ்துதோ ஞாத்ருத்வா நப்யுகமா தேவ ந தத் ஸம்பர்காத ஹங்காரே ஞாத்ருத்வம் ததுப லப்திர்வா
அஹங்காரஸ்ய த்வ சேத நஸ்ய ஞாத்ருத்வா ஸம்பவா தேவ ஸூ தராம் ந தத் ஸம் பர்காத் ஸம் விதி ஞாத்ருத்வம் தது பலப்திர் வா

அபி வியக்தி பக்ஷஸ்ய தூஷணம்
யதப்யுக்தம் –உபயுத்ர ந வஸ்துதோ ஞாத்ருத்வம் அஸ்தி -அஹங்காரஸ் த்வநுபேதேரபி வ்யஞ்ஜக -ஸ்வாத்மஸ்தா மேவ அநுபூதி மபி வ்யநக்தி ஆதர்ஸாதி வத் இதி
ததயுக்தம் ஆத்மநஸ் ஸ்வயம் ஜ்யோதிஷோ ஜட ஸ்வரூப அஹந்கார அபிவ்யங்க்யத்வ அயோகாத் -ததுக்தம்
சாந்தாங்கார இவ ஆதித்யம் அஹங்காரோ ஜடாத்மக–ஸ்வயம் ஜ்யோதிஷ மாத்மாநம் வ்ய நக்தீதீ ந யுக்திமத்(ஆத்மசுத்தி ஆளவந்தார் பிரமாணம் இது-எரிந்து போன கரித்துண்டு ஸூர்யனைப் பிரகாசப்படுத்துவது போல் உள்ளதே )
ஆத்ம ஸித்தி இதி ஸ்வயம் ப்ரகாஸ அநு பவ அதீன ஸித்தயோ ஹி ஸர்வே பதார்த்தா
தத்ர ததா யத்த ப்ரகாஸோ அசித் அஹங்கார-அநுதித அநஸ்தமித ஸ்வரூப ப்ரகாஸம் அசேஷார்த்த ஸித்தி ஹேது பூதம்
அநுபவம் அபி வ்யக்நக் தீத் யாத்மவித பரிஹ சந்தி

உக்த வ்யங்க்த்ரு வ்யங்க்ய பாவ தயோர் மிதோ அநுப பன்ன
கிஞ்ச அஹங்கார அநுபவயோஸ் ஸ்வபாவ விரோதாத் அநுபூதேர நநு பூதித்வ பிரசங்காச் ச ந வ்யங்க்த்ரு வ்யங்க்ய பாவ
யதோக்தம் -வ்யங்க்த்ரு வ்யங்க்த்வம் அந்யோன்யம் ந ச ஸ்யாத் பிராதி கூல்யத
வ்யங்க்யத்வே அநநுபூதித்வ மாத்மநி ஸ்யாத் யதா கடே –(ஆத்ம ஸித்தி-குடம் போல் ஆத்மாவுக்கும் ஜடத்தன்மை ஆகுமே )இதி
ந ச ரவிகர நிகராணாம்
ஸ்வாபி வ்யங்க்ய கரதலாபி வ்யங்க்யத்வ வத் ஸம்விதபி வ்யங்க்ய அஹங்கார -அபி வ்யங்க்யத்வம் ஸம்விதஸ் ஸாதீய
தத்ராபி ரவிகர நிகராணாம் கர தலாபி வ்யங்க்யத்வா பாவாத் -கரதல ப்ரதிஹத கதயோ ஹி ரஸ்மயோ பஹுலாஸ் ஸ்வயமேவ
ஸ்புட தர முப லப்யந்த இதி தத் பாஹுல்ய மாத்ர ஹேதுத்வாத் கரதலஸ்ய ந அபி வியஞ்சகத்வம்

அபி வ்யக்தி கல்பா நாம் தூஷணம்
கிம் சாஸ்ய ஸம்வித் ஸ்வரூபஸ்ய ஆத்மநோ அஹங்கார நிர்வர்த்யா அபி வ்யக்தி கிம் ரூபா -ந தாவதுத்பத்தி –
ஸ்வதஸ் ஸித்த தயா அநந்யோத் பாத்யத் வாப்யுபகமாத் –நாபி தத் ப்ரகாஸநம் தஸ்ய அநுபவ அந்தர அநநுபாவ்யத்வாத்
தத ஏவ ச ந ததனுபவ சாதன அநுக்ரஹ –ஸ ஹி த்விதா ஜேயஸ்ய இந்த்ரிய ஸம்பந்த
வ்யக்தி தர்பணாதி நாம் நயனாதி இந்த்ரிய ஸம்பந்த ஹேதுத்வேந போக்த்ரு கத கல்மஷாப நயநேந வா யதா
பரதத்தவா வபோதந ஸாதனஸ்ய ஸாஸ்த்ரஸ்ய சம தமாதி ந
யதோக்தம் கரணா நாம பூதித்வான் ந தத் ஸம்பந்த ஹேதுதா (ஆத்மஸித்தி-அஹங்காரம் இந்த்ரியங்களால் அறிய முடியாதே -அது எப்படி ஞானத்தை வெளிப்படுத்த இயலும் )-இதி

அநு பூதே அநு பாவ்யத்வ மப்யுபகம்ய அநுக்ரஹ பக்ஷ தூஷணம்
கிமஞ்ச அநு பூதேர் அநு பாவ்யத்வாப்யுபகமே  அப்யஹமர்தேந ந ததநு பவ சாதந அநு க்ரஹ ஸூவச ஸ ஹ்யனுபாவ்ய அநு பவோத் பத்தி ப்ரதிபந்த நிரஸநேந பவேத்
யதா ரூபாதி க்ரஹண உத்பத்தி நிரோதி ஸம் தமஸ நிரஸநேந சஷுஷோ தீபாதி நா
ந சேஹ ததாவிதம் நிரச நீயும் ஸம் பாவ்யதே –ந தாவத் ஸம் விதாத்மகதம் தஜ் ஞான உத்பத்தி நிரோதி கிஞ்சி சத ப்யஹங்கார அபநேய மஸ்தி
அஸ்தி -ஹ்யஞ்ஞான மிதி சேத்- ந அஞ்ஞானஸ்ய அஹங்கார அபநோத் யத்வா நப்யுகமாத் –ஞான மேவ ஹ்யஞ்ஞானஸ்ய நிவர்த்தகம்

அஞ்ஞாநஸ்ய ஸம்விதாஸ்ரயத்வா பாவ
ந ச ஸம் விதாஸ்ரயத்வம் அஞ்ஞாநஸ்ய ஸம் பவதி ஞான ஸமாந ஆஸ்ரயத்வாத் தத் ஸமாந விஷயத்வாச் ச–ஞாத்ரு பாவ விஷய பாவ விரஹிதே
ஞான மாத்ரே சாக்ஷிணி ந அஞ்ஞானம் பவிது மர்ஹதி -யதா ஞான ஆஸ்ரயத்வ ப்ரஸக்தி ஸூந்யத்வேந கடாதேர் ந அஞ்ஞான ஆஸ்ரயத்வம்
ததா ஞான மாத்ரே அபி ஞான ஆஸ்ரயத்வ அபாவேந நாஞ்ஞா நாஸ்ரயத்வம் ஸ்யாத்

ஸம்வித ஆஸ்ரித த்வமப் யுபகம்யா அபி தூஷணம்
ஸம்விதோ அஞ்ஞானாஸ்ர யத்வா ப்யுபகமே அபி ஆத்ம தயா அப் யுபகதாயாஸ் தஸ்யா ஞ்ஞான விஷயத்வ அபாவேந ஞானேந ந தத் கத அஞ்ஞான நிவ்ருத்தி
ஞானம் ஹி ஸ்வ விஷய ஏவ அஞ்ஞானம் நிவர்த்தயதி–யதா ரஜ்ஜ் வாதவ் அதோ ந கேநாபி கதாசித் ஸம்விதாஸ்ரயம் அஞ்ஞானம் உச்சித்யேத

அஞ்ஞானம் ந அநிர்வச நீயம் நாபி ஞான பிராக பாவ
அஸ்ய ச ஸத் அஸத் அநிர்வச நீயஸ்ய அஞ்ஞாநஸ்ய ஸ்வரூப மேவ துர் நிரூப மித் யுபரிஷ்டாத் வஹ்யதே(இத்தை மேலே விவரிப்போம் என்றவாறு)
ஞான பிராக பாவ ரூபஸ்ய ச அஞ்ஞாநஸ்ய ஞான உத்பத்தி விரோதித்வ அபாவேந ந தன் நிரஸநே தஜ் ஞான ஸாதந அநுக்ரஹ
அதோ ந கேநாபி ப்ரகாரேண அஹங்காரேண அநுபூதே ரபிவ் யக்தி

ஸ்வாத்மஸ்த தயா அபி வ்யக்தே தூஷணம்-
ந ச ஸ்வாஸ்ரய தயா அபி வ்யங்க்ய அபி வ்யஞ்ஜன மபி வ்யஞ்ஜகாநாம் ஸ்வ பாவ –ப்ரதீ பாதிஷ்வ தர்சநாத் –யதா வஸ்தித பதார்த்த ப்ரதீத்யநு குண ஸ்வாபாவ்யாச்ச
ஞான தத் சாதன யோர் அநுக்ராஹ கஸ்ய ச –தச்ச ஸ்வத ப்ராமாண்ய நியாய ஸித்தம் –ந ச தர்பணாதிர் முகாதேரிப வ்யஞ்ஜக
அபி து சாஷுக்ஷ தேஜஸ் ப்ரதிபலந ரூப தோஷ ஹேது –தத் தோஷ க்ருதஸ் ச தத்ரான் யதாவ பாஸ -அபி வ்யஞ்ஜகஸ் த்வா லோகாதி ரேவ
ந ஸேஹ தத் அஹங்காரேண ஸம் விதி ஸ்வ ப்ரகாசாயாம் தாதருச தோஷா பாத நம் ஸம் பவதி
வ்யக்தேஸ்து ஜாதிராகார இதி ததாஸ்ரய தயா ப்ரதீதி -ந து வியக்தி வ்யங்க்யத்வாத்

அதோ அந்தக்கரண பூத அஹங்காரஸ் ததயா ஸம் விது பலப்த்தேர் வஸ்துதோ தோஷதோ வா ந கிஞ்சிதிஹ காரணமிதி ந அஹங்காரஸ்ய ஞாத்ருத்வம் ததோ பலப்திர்வா
தஸ்மாத்ஸ் வத ஏவ ஞாத்ரு தயா சித்த் யன்நஹ மர்த ஏவ ப்ரத்யகாத்ம ந ஞப்தி மாத்ரம் அஹம் பாவ விகமே து ஞப்தேரபி ந ப்ரத்யக்த்வ ஸித்தி ரித் யுக்தம்

ஸூ ப்தவ் அஹமர்த்தஸ்ய அவி ஸத ஸ்புரணம்
தமோ குணாபி பவாத் பராகர்த்த அநுபவ அபாவாச்ச அஹமர்த்தஸ்ய விவிக்தஸ்புட ப்ரதி பாஸா பாவே அப்யா ப்ரபோதாத்
அஹமித்யேகாகாரேண அத்மநஸ் ஸ்புரணாத் ஸூ ஷுப் தா வாபி நாஹம் பாவ விகம
பவ தபிமதாயா அநு பூதேரபி ததைவ ப்ரதேதி வக்தவ்யம்

ஸ்வ பக்ஷே ப்ரமாண அநு ரோத பர பக்ஷே ததநநு ரோதஸ் ச
ந ஹி ஸூ ஷுப் தோத்தித கச்சித ஹம்பாவவியுக்தார் தாந்தர ப்ரத்யநீகா காரா ஞப்திரஹ மஜ்ஞாந ஸாக்ஷி தயா அவ திஷ்டத இத்யேவம் விதாம் ஸ்வாப சம காலாம் அநு பூதிம் பராம்ருஸதி
ஏவம் ஹி ஸூப் தோத்தி தஸ்ய பராமர்ஸ ஸூக மஹமஸ்வாப் ஸமிதி
அநேந ப்ரத்யவமர்ஸேந ததாநீ மப்யமர்தஸ் யைவா ஆத்மநஸ் ஸூ கித்வம் ஞாத்ருத்வம் ச ஞாயதே

உக்தே பரா மர்ஸே பரோக்த்தாயா அன்யா ஸித்தே பரிஹார
ந ச வாஸ்யம் யதேதா நீம் ஸூகம் பவதி -ததா ததாநீமஸ் வாப்ஸ மித்யேஷா ப்ரதி பத்திரிதி -அதத் ரூபத்வாத் ப்ரதிபத்தே
ந சாஹமர்தஸ்யா ஆத்மநோ அஸ்திரத்வேந ததா நீ மஹ மர்த்தஸ்ய ஸூகித்வ அநு சந்தான அநுப பத்தி
யதஸ் ஸூஷுப்தி தஸாயா ப்ராக் அநு பூதம் வஸ்து ஸூப் தோத்திதோ மயேதம் க்ருதம் மயே தமநு பூதம் அஹமேத தவோசம் இதி பராம் ருஸதி

அஹமர்த்த அநநுபவ ஸாதக நிஷேத ஸாமான்ய விஷய பராமர்ச மாதாய சங்கா ஸமாதாநே
ஏதா வந்தம் காலம் ந கிஞ்சிதஹம் அஞ்ஞாஸிக்ஷம் இதி ச பராம் ருச நீதி சேத் -தத கிம் -ந கிஞ்சிதிதி க்ருத்ஸ்ந ப்ரதிஷேத இதி சேத்
ந நாஹ மவேதிஷம் இதி வேதி துரஹ மர்தஸ்யை வாநு வ்ருத்தே -வேத்ய விஷயோ ஹி ஸ ப்ரதிஷேத
ந கிஞ்சிதிதி நிஷே தஸ்ய க்ருத்ஸன விஷயத்வே பவதபிமதா அநு பூதிரபி ப்ரதி ஷித்தா ஸ்யாத்

அநு பூதே ந நிஷேத கிந்து ததநு வ்ருத்தே இத்யா சங்கா பரி ஹாரவ்
ஸூஷுப்தி ஸமயேத்வநு சந்தீயமாந மஹமர்தமாத்மநம் ஞாதார மஹமிதி பராம் ருஸ்ய ந கிஞ்சித வேதிஷமிதி வேதநே தஸ்ய
ப்ரதி ஷித்யமாநே தஸ்மிந் காலே நிஷித்த மாநாயா வித்தேஸ் ஸித்தி மநு வர்த மாநஸ்ய ஞாதுர் அஹமர்த்தஸ்ய சா ஸித்தி மநே நைவ
ந கிஞ்சிதஹமவே திஷம் இதி பரா மர் ஸேந சாதயம் ஸ்த மிம மர்தம் தேவா நா மேவ சாதயது

நிஷேத விசேஷ விஷய பராமர்ஸ மாதாய சங்கா ஸமாதாநே
மாமப்யஹம் ந ஞாதவான் இதி அஹமர்தஸ்யாபி ததாநீ மநநு சந்தானம் ப்ரதீயதே இதி சேத் –ஸ்வ அநுபவ ஸ்வ வசந யோர் விரோதமபி ந ஜாநந்தி பவந்த
அஹம் மாம் ந ஞாதவான் இதி ஹ்யனுபவ வசநே –மாமிதி கிம் நிஷித்யத இதி சேத் –ஸாது ப்ருஷ்டம் பவதா
ததுச்யதே அஹமர்த்தஸ்ய ஞாது ரநு வ்ருத்தே -ந ஸ்வரூபம் நிஷித்யதே –அபி து ப்ரபோத ஸமயே அநு சந்தீய மாநஸ் யாஹமர்தஸ்ய வர்ணாஸ்ரமாதி விஸிஷ்டதா

அஹம் மாம் இதி பதயோ விஸிஷ்ட விதயதா
அஹம் மாம் ந ஞாதவான் இத் யுக்தே விஷயோ விவேச நீய –ஜாகரிதா வஸ்தாநு ஸம் ஹித ஜாத்யாதி –விஸிஷ்டோ அஸ்மதர்தோ மாமித்யம் ஸஸ்ய விஷய
ஸ்வாப்யயா வஸ்தா ப்ரஸித்தா விஸத ஸ்வாநுபவைகதா நஸ்ச –அஹமர்தோ அஹமித்யம் ஸஸ்ய விஷய
அத்ர ஸூப்தோ அஹமீத்ருஸோ அஹமிதி ச மாமபி ந ஞாதவாநஹ மித்யேவ கல்வநுபவ ப்ரகார

உக்தாம் ஸஸ்ய பரம தேந உப பாதன்
கிஞ்ச ஸூஷுப்தா வாத்மாஅஞ்ஞாந ஸாக்ஷித்வேநா அஸ்த இதி ஹி பவதீய ப்ரக்ரியா -ஸாஷித்வம் ச ஸாஷாஜ் ஜ்ஞாத்ருத்வ மேவ
ந ஹ்யஜா நதஸ் ஸாக்ஷித்த்வம் –ஞாதைவ ஹி லோக வேதயோஸ் ஸாஷீதி வ்யபதிஸ்யதே -ந ஞான மாத்ரம்
ஸ்மரதி ச பகவான் பாணிநி ஸாஷாத் த்ரஷ்டரி ஸம் ஞாயாம் (அஷ்டா -5-2-71-)இதி ஸாஷாஜ் ஜ்ஞாதர் யேவ ஸாக்ஷி ஸப்தம்
ஸா சாயம் ஸாஷீ ஜாநா மீதி ப்ரதீய மாநோ அஸ்த மர்த்த ஏவேதி குதஸ் ததாநீ மஹமர்தோ ந ப்ரதீயதே
ஆத்மநே ஸ்வயமவபாஸமாநோ அஹமித்யே வாவ பாஸத இதி ஸ்வா பாத்ய வஸ்தாஸ் வப்யாத்மா ப்ரகாஸமா நோ அஹமித்யே வாவ பாஸத
இதி ஸ்வாபாத்ய வஸ்தாஸ் வப்யாத்மா ப்ரகாஸமா நோ அஹமித்யே வாவ பாஸத இதி ஸித்தம்

முக்தவ் அஹமர்த்த அநு வ்ருத்தே அநூத்ய தூஷணம்
யத்து மோக்ஷ தஸாயா மஹ மர்தோ நாநு வர்த்ததே -இதி தத பேசலம் –ததா ஸத்யாத்ம நாஸ ஏவா பவர்க்க பிரகாராந்தரேண ப்ரதிஞ்ஞாத ஸ்யாத்
ஸாஹமர்தோ தர்ம மாத்ரம் யேந தத்விகமே அப்யவித்யா நிவ்ருத்தா விவ ஸ்வரூபம் அதிஷ்டதே
ப்ரத்யுத ஸ்வரூப மேவ அஹமர்த்த ஆத்மந –ஞானம் து தஸ்ய தர்ம காம் ஜாநாமி -ஞானம் மே ஜாதம் இதி ஸாஹமர்த தர்ம தயா ஞான ப்ரதீதேரேவ

ஸ்ருத் யர்த்தா பத்த்யா யுக்தார்த்த ஸமர்த்தநம்
அபி ச ய பரமார்த்ததோ ப்ராந்த்யா வா அத்யாத்மிகாதிது கைர்து கிதயா ஸ் வாத்மா நமநு சந்தத்தே அஹம் து கீ இதி
ஸர்வ மேதத்து கஜாதம புநர் பவம போஹ்ய கதமஹ மநாகுலஸ் ஸ்வஸ்தோ பவேயம் இது யுத் பன்ன மோக்ஷ ரக ச ஏவ தத் சாதநீ ப்ரவர்த்ததே
ஸ சாதன அநுஷ்டாநேந யத்யஹமேவ ந பவிஷ்யா மீத்யவகச்சேத்
அப ஸர்பே தேவா சவ் மோக்ஷ கதா ப்ரஸ்தாவத் –ததஸ்த அதிகாரி விரஹா தேவ ஸர்வம் மோக்ஷ ஸாஸ்த்ரம ப்ரமாணம் ஸ்யாத்
அஹமு பலஷிதம் ப்ரகாஸ மாத்ரம பவர்க்கே அவதிஷ்டத இதி சேத் கிமநேந -மயி நஷ்டே அபி கிமபி ப்ரகாஸ மாத்ரம பவர்க்கே அவ திஷ்டத இதி மத்வா ந ஹி கச்சித புத்தி பூர்வ காரீ ப்ரயத்தே
அஹோ அஹமர்த்தஸ் யைவ ஞாத்ரு தயா சித்த்யத ப்ரத்யகாத்மத்வம்

உக்தார்த்தே அநுமாநம்
ஸ ச ப்ரத்யகாத்மாமுக்தா வப் யஹம் இத்யேவ ப்ரகாஸதே ஸ்வஸ்மை ப்ரகாஸ மாநத்வாத் யோ ய -ஸ்வஸ்மை ப்ரகாஸதே ஸ ஸர்வோ
அஹமித்யேவ ப்ரகாஸதே யதா ததாவ பாஸமா நத்வே நோபயவாதி சம்மதஸ் ஸம்ஸார் யாத்மா
ய புநரஹமிதி ந ஸகாஸ்தி நாசவ் ஸ்வஸ்மை ப்ரகாஸதே சாயம் முக்தாத்மா தஸ்மா தஹ மித்யேவ ப்ரகாஸதே

உக்த அநு மாநே ஹேதோ ஸாத்ய விசேஷ விருத்தத்வா சங்கா பரிஹாரவ்
ந ஸாஹமிதி ப்ரகாஸமா நத்வேந தஸ்ய அஞ்ஞத்வ ஸம் ஸாரித்வாதி ப்ரசங்க மோக்ஷ விரோதாத் அஞ்ஞாத் வாத்ய ஹேதுத்வாச்சா ஹம் ப்ரத்ய யஸ்ய
அஞ்ஞானம் நாம ஸ்வரூப அஞ்ஞானம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் வா
அஹிமத்யே வாத்மநஸ் ஸ்வரூப மிதி ஸ்வரூப ஞான ரூபோ அஹம் ப்ரத்யயோந அஞ்ஞத்வ மா பாதயிதி குதஸ் ஸம்ஸாரித்தவம்-அபி து தத் விரோதித்வாந் நாஸயத்யேவ

நிவ்ருத்த அவித்யா நாமபி அஹம் ப்ரத்யய
ப்ரஹ்மாத்ம பாவா பரோஷ்ய நிர்த்தூத நிரவசேஷ அவித்யாநாமபி வாம தேவாதி நாமஹ மித்யேவ ஆத்ம அநுபவ தர்சநாச்ச
ஸ்ரூயதே ஹி– தத்தை தத் பஸ்யன் ந்ருஷிர் வாமதேவ -ப்ரதிபேத அஹம் மநுரபவம் ஸூர் யச்ச (ப்ரு-1-4-10-ஸூர்யனை தர்சித்த வாமதேவ ரிஷி நானும் நானும் மனுவும் ஸூர்யன் ஆவேன் என்கிறார் )
இதி அஹமேக ப்ரதம மாசம் வ்ரதாமி ச பவிஷ்யாமி ச (அதர்வ-சாந்தோக்யம் -6-3-3- நான் மட்டுமே உள்ளேன் -நான் மட்டுமே இருப்பேன் )இத்யாதி

ப்ரஹ்மணோ அப்யஹம் ப்ரத்யய ஸ்ருதி ஸ்ம்ருதிஷு
ஸகல இதர அஞ்ஞான விரோதிந ஸச் ஸப்த ப்ரத்யய மாத்ர பாஜ பரஸ்ய ப்ரஹ்மணோ வ்யவஹாரோ-அப்யேவமேவ –ஹந்தாஹமி மாஸ்திஸ்ரோ தேவதா (சாந்தோ-6-3-2- நீர் தேஜஸ் பூமி ஆகிய இம் மூன்று தேவதைகளுக்கும் புகுந்து )
பஹுஸ்யாம் ப்ரஜாயேய (தைத்-6-2-3- நான் பலவாகக் கடவேன் -அனைத்தையும் உண்டாக்குவேன் )
ஸ ஈஷதே லோகாந்து ஸ்ருஜா இதி (ஐதர -1-1-உலகங்களை படைப்பேன் என்று அவன் ஸங்கல்பித்தான் )
ததா யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அக்ஷராதபி சோத்தம –அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதீத புருஷோத்தம (கீதை -15-18)
அஹமாத்மா குடாகேஸ(கீதை -10-20)
ந த்வேவாஹம் ஜாது நாஸம் (கீதை -2-18)
அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா (கீதை -7-9)
அஹம் ஸர்வஸ்ய பிரபவோ மத்தஸ் ஸர்வம் ப்ரவர்த்ததே (கீதை -10-8)
தேஷா மஹம் சமுத்தர்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத் (கீதை -12-7)
அஹம் பீஜ பிரத பிதா (கீதை -14-7)
வேதாஹம் சமதீதாநி (கீதை 7-29)–இத்யாதி ஷு

உக்தார்த்தே கீதோக்தி விரோத சங்கா பரிஹாரவ்
யத்யஹ மித்யே வாத்மநஸ் ஸ்வரூபம் கதம் தர்ஹ் யஹங்காரஸ்ய க்ஷேத்ர அந்தர் பாவோ பகவதோ பதிஸ்யதே
மஹா பூதான் யஹங்காரோ புத்திர் அவ்யக்தமேவ ச (கீதை -13-5)இதி உச்யதே -ஸ்வரூபோ பதேசேஷு ஸர்வேஷ் வஹமித்யே வோப தேஸாத் ததைவாத்ம ஸ்வரூப ப்ரதிபத்தேஸ் சாஹமித்யேவ ப்ரத்யகாத்மநஸ் ஸ்வரூபம்
அவ்யக்த பரிணாம பேதஸ்ய அஹங்காரஸ்ய க்ஷேத்ர அந்தர் பாவோ பகவதை வோப திஸ்யதே
ஸ த்வ நாத்மநி தேஹே அஹம் பாவே கரண ஹேதுத்வேந அஹம் காரே இத்யுச்யதே
அஸ்ய த்வ ஹம்கார சப்தஸ்ய அபூத தத்பாவே அர்த்த ஸ்வி ப்ரத்யய முத் பாத்ய வ்யுத்பத்திர் த்ரஷ்டவ்யா
அயமேவ த்வ ஹம்கார உத் க்ருஷ்ட ஜநாவ மாந ஹேதுர் கர்வாபரநாமா ஸாஸ்த்ரேஷு பஹுஸோ ஹேயதயா ப்ரதிபாத்யதே
தஸ்மாத் பாதகா பேதா அஹம் புத்திஸ் ஸாஷ தாத்மா கோசரைவ –சரீர கோசார த்வஹம் புத்திர் அவித்யை வா
யதோக்தம் பகவதா பராஸரேண ஸ்ரூயதாம் சாப்ய வித்யாயா ஸ்வரூபம் குல நந்தன –அநாத்மன் யாத்ம புத்திர் யா (ஸ்ரீ விஷ்ணு புராணம் )இதி

அஹமர்த்தாத்மத்வோப ஸம்ஹார
யதி ஞப்தி மாத்ர மே வாத்ம ததா அநாத்மன் யாத்மாபிமாநே ஸரீரே ஞப்தி மாத்ர ப்ரதிபாஸஸ் ந ஞாத்ருவ ப்ரதிபாஸ
தஸ்மாத் ஞாதா அஹமர்த்த ஏவாத்மா ததுக்தம்

அத ப்ரத்யக்ஷ சித்தத்வாத் யுக்த நியாயாக மான்வயாத்

அவித்யா யோகாதஸ் சா ஆத்மா ஞாதா அஹமிதி பாஸதே –இதி

ததா ச

தேஹ இந்த்ரிய மந ப்ராண தீப்யோ அந்யோ அநந்ய சாதன

நித்யோ வ்யாபீ ப்ரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னஸ் ஸ்வதஸ் ஸூ கீ –ஆத்ம சித்தவ -இதி

அநந்ய சாதன ஸ்வ ப்ரகாஸ –வ்யாபீ -அதி ஸூஷ்ம தயா ஸர்வ அசேதனாந்த ப்ரவேசன ஸ்வ பாவ

ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷ விரோதே ஸாஸ்த்ர ப்ராபல்யஸ்ய அநூத்ய நிராச
யதுக்தம் தோஷ மூலத்வே நான்யதா ஸித்தி ஸம்பாவ நயா ஸகல பேதா வலம்பி ப்ரத்யக்ஷஸ்ய ஸாஸ்த்ர பாத் யத்வம் இதி

கோயம் தோஷ இதி வக்தவ்யம் யன் மூல தயா ப்ரத்யக்ஷஸ்ய அந்யதா ஸித்தி –அநாதி பேத வாஸநைவ ஹி தோஷ இதி சேத்
பேத வாஸனா யாஸ்திமிராதி வத்யதாவஸ்தித வஸ்து விபரீத ஞான ஹேதுத்வம் கிமன்யத்ர ஞாதா பூர்வம்
அநேநைவ ஸாஸ்த்ர விரோதேந ஞாஸ்யத இதி சேத் -ந அந்யோன்ய ஆஸ்ரயணாத் ஸாஸ்த்ரஸ்ய நிரஸ்த நிகில விசேஷ வஸ்து
போதித்வ நிஸ்சயே ஸதி பேத வாஸா நாயா தோஷத்வ நிஸ் சய -பேத வாஸா நாயா தோஷத்வ நிஸ் சய ஸதி ஸாஸ்த்ரஸ்ய நிரஸ்த நிகில விசேஷ வஸ்து போதித்வ நிஸ் சய இதி
கிஞ்ச இதி பேத வாஸனா மூலத்வேந ப்ரத்யக்ஷஸ்ய விபரீ தார்தத்வம் ஸாஸ்த்ரம் அபி தன் மூலத்வேந ததைவ ஸ்யாத்

அதோச்யேத தோஷ மூலத்வே அபி ஸாஸ்த்ரஸ்ய ப்ரத்யக்ஷ அவகத ஸகல பேத நிரசன ஞான ஹேதுத்வேந பரத்வாத் தத் ப்ரத்யக்ஷஸ்ய பாதகம் இதி
தந்ந தோஷ மூலத்வ ஞாதே சதி பரத்வம கிஞ்சித்கரம் –ரஜ்ஜூ ஸர்பஜ் ஞாந நிமித்த பயே சதி ப்ராந்தோ அயமிதி பரிஜ்ஜாதேந கேநசித் நாயம் சர்ப்போ மா பைஷீ இத் யுக்தே அபி பாயா நிவ்ருத்தி தர்சநாத்
ஸாஸ்த்ரஸ்ய ச தோஷ மூலத்வம் ஸ்ரவண வேலாயா மேவ ஞாதம் –ஸ்ரவணா வகத நிகில பேதோப மர்தி ப்ரஹ்மாத் மை கத்வ விஞ்ஞா நாப்யாஸ ரூபத்வாத் மநநா தே

அபி ச இதம் ஸாஸ்த்ரம் ஏதச் சா ஸம்பாவ்ய மாந தோஷம் ப்ரத்யக்ஷம் து ஸம்பாவ்ய மாந தோஷமிதி கேநா வகதம் த்வயா
ந தாவத் ஸ்வதஸ் ஸித்தா நிர் தூத நிகில விசேஷா அநு பூதிரி மமர்த மிவ கமயதி தஸ்யாஸ் ஸர்வ விஷய விரக்தத்வாத் ஸாஸ்த்ர பக்ஷபாத விரஹாச் ச
நாப் யைந்த் ரியுகம் ப்ரத்யக்ஷம் தோஷ மூலதவேந விபரீதத்வாத்
தன் மூலத்வா தேவ நான்யான்யபி பிரமாணாநி –அதஸ் ஸ்வ பக்ஷ சாதன பிரமாணா நப்யுபக மான்ன ஸ்வ அபிமதார்த்த ஸித்தி

நநு வ்யாவஹாரி க பிரமாண ப்ரமேய வ்யவஹாரோ அஸ்மாகப் யஸ்த் யேவ கோ அயம் வ்யவஹாரிகோ நாம ?
ஆபாத ப்ரதீதி ஸித்தோ யுக்தி பிர் நிரூபிதோ ந ததா அவஸ்தித இதி சேத் -கிம் தேந பிரயோஜனம் ?
பிரமாண தயா பிரதிபன்னே அபி ஒவ்திக்க பாதா தேவா பிரமாண கார்யா பாவாத் —
அதோச் யேத ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷயோ த்வயோரபிய வித்யா மூலத்வே அபி ப்ரத்யக்ஷ விஷயஸ்ய ஸாஸ்த்ரேண பாதோ த்ருஸ்யதே ஸாஸ்த்ர விஷயஸ்ய ஸதத்விதீய ப்ரஹ்மண
பஸ்ஸாத்தந பாதா தர்சநேந நிர்விசேஷ அநு பூதி மாத்ரம் ப்ரஹ்மைவ பரமார்த்த -இதி
தத யுக்தம் அபாதிதாஸ்யாபி தோஷ மூலஸ்யாபார மார்த்ய நிஸ்ஸயாத்

ஏதத் யுக்தம் பவதியதா ஸகல இதர காஸாதி தோஷ ரஹித புருஷாந்தரா கோசர கிரி குஹா ஸூ வஸதஸ்தைமிரி கஜ நஸ்ய அஞ்ஞாதஸ்வதி மிரஸ்ய ஸர்வஸ்ய
திமிர தோஷா விசேஷேண த்வி சந்த்ர ஞானம விஸிஷ்டம் ஜாயதே –ந தத்ர பாதக ப்ரத்யயோ அஸ்தீதி ந தன் மித்யா ந பவதீதி தத் விஷய பூதம் த்வி சந்த்ரத்வமபி மித்யைவ
தோஷோ ஹ்யயதார்த்த ஞாந ஹேது
ததா ப்ரஹ்ம ஞானம் அவித்யா மூலத்வேந பாதக ஞான ரஹிதம் அபி ஸ்வ விஷயேண ப்ரஹ்மணா ஸஹ மித்யைவ -இதி

ஸாஸ்த்ரஸ்ய அவித்யா மூலத்வாப்யுபகமே தோஷ ப்ரஸஞ்ஜனம்
பவந்தி ஸாத்ர ப்ரயோகா விவாதாத்யா ஸிதம் ப்ரஹ்ம மித்யா அவித்யாவத உத் பன்ன ஞான விக்ஷயத்வாத் ப்ரபஞ்சவத்
ப்ரஹ்ம மித்யா ஞான விக்ஷயத்வாத் ப்ரபஞ்சவத்
ப்ரஹ்ம மித்யா அஸத்ய ஹேது ஜன்ய ஞான விக்ஷயத்வாத் ப்ரபஞ்சதேவ

அஸத்யாத் ஸத்ய பிரதிபத்தி நிதர் ஸநை ப்ரத்யஷாத் ஸாஸ்த்ர பிராபல் யோக்தே தூஷணம்
ந ச வாஸ்யம் ஸ்வாப்நஸ்ய ஹஸ்த்யாதி விஞ்ஞானஸ் யா ஸத்யஸ்ய பரமார்த்த ஸூபாஸூப ப்ரதிபத்தி ஹேது பாவபத்
அவித்யா மூலத்வே நா ஸத்யஸ்யாபி ஸாஸ்த்ரஸ்ய பரமார்த்த பூத ப்ரஹ்ம விஷய பிரதிபத்தி ஹேது பாவோ ந விருத்த இதி -ஸ்வாப்ந ஞானஸ்யா ஸத்யத்வா பாவாத் —
தத்ர ஹி விஷயாணாமேவ மித்யாத்வம் -தோஷமேவ ஹி பாதோ த்ருஸ்யதே
ந ஞானஸ்ய ந ஹி மயா ஸ்வப்ந வேலாயா மநு பூதம் ஞாநமபி ந வித்யத இதி கஸ்ய சிதபி ப்ரத்யயோ ஜாயதே
தர்சனம் து வித்யதே அர்தா ந சந்தீதி ஹி பாதக ப்ரத்யய -மாயாவி நோ மந்த்ர ஒவ்ஷதாதி ப்ரபவம் மாயா மயம் ஞானம் ஸத்யமேவ ப்ரீதேர் பயஸ்ய ச ஹேது –தத்ராபி ஞானஸ்யா பாதி தத்வாத்
விஷய இந்த்ரியாதி தோஷ ஜன்யம் ரஜ்ஜ் வாதவ் சர்பாதி விஞ்ஞானம் ஸத்யமேவ பயாதி ஹேது
ஸத்யை வாதஷ்டே அபி ஸ்வாத்மநி ஸர்ப்ப ஸன்னிதானாத் தஷ்ட புத்தி –ஸத்யைவ சங்கா விஷ புத்திர் மரண ஹேது பூதா
வஸ்து பூத ஏவ ஜலாதவ் முகாதி ப்ரதி பாஸோ வஸ்து பூத முககத விசேஷ நிஸ் சய ஹேது
ஏஷாம் ஸம் வேதநாநா முத்பத்தி மத்த்வா தர்த்த க்ரியா காரித்வாச்ச ஸத்யத்வமவ ஸீயதே

ஞான ஸத்யத்வம் விஷய ஸத்யதா வ்யாப்தமிவி தன் நிவ்ருத்தயா தன் நிவ்ருத்திரிதி சங்கா தத் பரிஹாரஸ் ச
ஹஸ்த்யாதீ நாம்  அபாவே அபி கதம் தத் புத்தய ஸத்யா பவந்தீதி சேத் நைதத் புத்தீ நாம் ஸா லம்பநத்வ மாத்ர நியமாத்

அர்த்தஸ்ய ப்ரதி பாசமா நத்வ மேவ ஹ்யா லம்ப நத்வே அபேக்ஷிதம் ப்ரதி பாசமாநதா சாஸ்த்யேவ தோஷ வஸாத்
ஸ து பாதிதோ அஸத்ய இத்ய வஸீயதே –அபாதிதா ஹி புத்திஸ் சத்யை வேத் யுக்தம்

ரேகயா வர்ண ப்ரதீபத்தா வபி நா ஸத்யாத் ஸத்ய புத்தி ரேகாயாஸ் ஸத்யத்வாத்

அஸத்யாத் ஸத்ய புத்தே ஆபாத்ய நிராச
நநு வர்ணாத்மநா ப்ரதி பன்னா ரேகா வர்ண புத்தி ஹேது வர்ணாத்மதா த்வ ஸத்யா –நைவம் வர்ணாத்ம தாயா அஸத்யாயா உபாயத்வா யோகாத்
அஸதோ நிருபாக் யஸ்ய ஹ்யுபா யத்வம் ந த்ருஷ்ட மநுபபன்னம் ச
அத தஸ்யாம் வர்ண புத்தேருபாயத்வம் –ஏவம் தர்ஹ்ய ஸத்யா ஸத்ய புத்திர் ந ஸ்யாத் புத்தேஸ் ஸத்யத்வா தேவ
உபாயோ பேயயோரே கத்வ–ப்ரஸக்தேஸ் ச உபயோர் வர்ண புத்தித்வா விசேஷாத்
ரேகாயா அவித்ய மாந வர்ணாத்ம நோ பாயத்வே சைகஸ்யா மேவ ரேகாயாம வித்யமாந சைவ வர்ணாத் மகத் வஸ்ய
ஸூலபத்வா தேக ரேகா தர்சநாத் ஸர்வ வர்ண ப்ரதிபத்திஸ் ஸ்யாத் -அத பிண்ட விஸேஷே தேவ தத்தாதி ஸப்த ஸம் கேதவத் சஷுர் க்ராஹ்ய ரேகா விஸேஷே வர்ண விசேஷ புத்தி ஹேது ரிதி
ஹந்த தர்ஹி ஸத்யா தேவ ஸத்ய ப்ரதிபத்தி ரேகாயாஸ் ஸம் கேதஸ்ய ச ஸத்யத்வாத் ரேகா கவயாதபி ஸத்ய கவய புத்திஸ் ஸாத்ருஸ்ய நிபந்தநா ஸாத்ருஸ்யம் ச ஸத்யமேவ

ஸ் போட வாதா வலம்பி உதா ஹரண மாதாய சங்கா பரிஹாரவ்
ந சைக ரூபஸ்ய சப்தஸ்ய நாத விசேஷண அர்த்த பேத புத்தி ஹேதுத்வே அப்ய ஸத்யா ஸத்ய ப்ரதிபத்தி –
நாநா நாதாபி வ்யக்தஸ்யை கஸ்யைவ சப்தஸ்ய தத் தன் நாதாபி வ்யங்க்ய ஸ்வரூபேண அர்த்த விசேஷைஸ் ஸஹ சம்பந்த க்ரஹண வஸாத் அர்த்த பேத புத் யுத்புத்தி ஹேதுத்வாத்
ஸப்தஸ்யைக ரூபத்வமபி ந ஸா தீய ககாராதேர் போதகஸ் யைவ ஸ்ரோத்ர க்ராஹ் யத்வேந ஸப்தத்வாத்
அதோ அஸத்யாத் சாஸ்த்ராத் ஸத்ய ப்ரஹ்ம விஷய ப்ரதி பத்திர்து ருப பாதா

ஸாஸ்த்ரேஷு அஸத்யதா ந அத்யந்த அஸத்ய ரூபா கிந்து விலக்ஷணா இத்யா சங்கா பரிஹாரவ்
நநு ந ஸாஸ்த்ரஸ்ய ககந குஸூமவத ஸத்யத்வம் ப்ராக் த்வைத ஞானாத் ஸத் புத்தி போத்யத்வாத் –உத் பன்னே தத்துவ ஞானே ஹ்ய ஸத்யத்வம் ஸாஸ்த்ரஸ்ய
ந ததா ஸாஸ்த்ரம் நிரஸ்த நிகில பேத சின் மாத்ர ப்ரஹ்ம ஞான உபாய –யதா உபாயஸ் ததா அஸ்த்யேவ ஸாஸ்த்ரம் அஸ்தீதி புத்தே
நைவம் அஸதி ஸாஸ்த்ரே அஸ்தி ஸாஸ்த்ர மிதி புத்தேர் மித்யாத்வாத் –தத கிம் இதம் தத மித்யா பூத ஸாஸ்த்ர ஜன்ய ஞானஸ்ய மித்யாத்வேந தத் விஷயஸ் யாபி ப்ரஹ்மணோ மித்யாத்வம்
யதா தூம புத்த்யா க்ருஹீத பாஷ்ப ஜன்யாக்நி ஞானஸ்ய மித்யாத்வேந தத் விஷயஸ் யாக்னேரபி மித்யாத்வம்
பஸ் சாத்தந பாதா தர்சநஞ்சா ஸித்தம் ஸூந்யமேவ தத்தவமிதி வாக்யேந தஸ்யாபி பாத தர்சநாத்
தத்து ப்ராந்தி மூலமித சேத் ஏததபி ப்ராந்தி மூலமிதி த்வயைவ யுக்தம் -பாஸ் சத்த்ய பாதா தர்சனம் து தஸ்யை வேத்யலம ப்ரதிஷ்டித குதர்க பரிஹஸநேந

ஸ்ருதி கட்ட

நிர்விசேஷ பரதயா பராபி மதா நாம் ஸ்ருதி நாமபி ஸ்வ ரஸ தயா ஸ விசேஷ பரதா ப்ரதி பாத நம்
யதுக்தம் வேதாந்த வாக்யாநி நிர்விசேஷ ஞான ஏக ரஸ வஸ்து மாத்ர ப்ரதி பாதந பராணி -ஸ தேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் -இத்யேவமாதீநி
இதி ததயுக்தம் ஏக விஞ்ஞாநேந  ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஜ்ஜோ ப பாதந முகேந ஸச் ஸப்த வாஸ்யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ ஜகத் உபாதநத்வம்
ஜகந்நிமித்தத்வம் –ஸர்வஞ்ஞதா –ஸர்வ ஸக்தி யோக -ஸத்ய ஸங்கல்பத்வம் -ஸர்வ அந்தரத்வம் —ஸர்வ ஆதாரத்வம் –
ஸர்வ நியமன மித்யாத் யனேக கல்யாண குண விஸிஷ்ட தாம் -க்ருத்ஸ் நஸ்ய ஜகதஸ் ததாத்மகதாம் ச ப்ரதிபாத்ய
ஏவம் பூத ப்ரஹ்மாத்மகஸ் த்வம ஸீத் ஸ்வேத கேதும் ப்ரத் யுபதேசாயா ப்ரவ்ருத்தத்வாத் ப்ரகரணஸ்ய
பிரபஞ்சிதஸ் சாய மர்த்தோ வேதார்த்த ஸங்க்ரஹ அத்ராப் யாரம்பணாதி கரணே நிபுண தர முபபாதி யஷ்யதே

பர வித்யாயாஸ் ஸ விசேஷத்வ வ்யவஸ்தாபநம்
அத பர யயா ததஷரம் (முண்டக )இத்யத் ராபி ப்ராக்ருதான் ஹேய குணான் ப்ரதி ஷித்ய நித்யத்வ விபுத்வ ஸூஷ்மத்வ
ஸர்வ கதத்வ அவ்யயத்வ பூத யோநித்வ ஸார்வஞ்ஞாதி கல்யாண குண யோக ஊ பரஸ்ய ப்ரஹ்மண ப்ரதிபாதித

ஸோதக வாக்யாந்தர் கத ஸத்யாதி வாக்யா நாம் ஸ விசேஷ பரதா
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம (தைத்ரியம் )இத்யத்ராபி ஸாமாநாதி கரண்யஸ்ய அநேக விசேஷண விஸிஷ்ட
ஏகார்த்தாபிதாந வ்யுத்பத்த்யா ந நிர்விசேஷ வஸ்து ஸித்தி
ப்ரவ்ருத்தி நிமித்த பேதேந ஏகார்த்த வ்ருத்தித்வம் ஹி ஸாமாநாதி கரண்யம்
தத்ர ஸத்ய ஞானாதி பத முக்யார்த்தைர் குணைஸ் தத் தத் குண விரோத் யாகார ப்ரத்ய நீக ஆகாரைர் வா ஏகஸ்மின் நே வார்த்த பதா நாம் ப்ரவ்ருத்தவ் நிமித்த பேதோ அவஸ்ய ஆஸ்ரயணீய
இயாம்ஸ் து விசேஷ ஏகஸ்மின் பக்ஷே பதா நாம் முக்யார்த்தா அபரஸ் மிம்ஸ் ச தேஷாம் லக்ஷணா
ந ச அஞ்ஞானாதீ நாம் ப்ரத்ய நீகதா வஸ்து ஸ்வரூபமேவ ஏகே நைவ பதேந ஸ்வரூபம் ப்ரதி பன்னமிதி பதாந்த்ர ப்ரயோக வையர்த்யாத்
ததா சதி ஸாமா நாதி கரண்யா ஸித்திஸ் ச ஏகஸ்மின் வஸ்துநி வர்த்த மாநாநாம் பதாநாம் நிமித்த பேதாநாஸ் ரயணாத்
ந ச ஏகஸ்யை வார் தஸ்ய விசேஷண பேதேந விஸிஷ்டதா பேதாத் அநேக அர்த்தத்வம் பதாநாம் ஸாமா நாதி கரண்யா விரோதி ஏகஸ்யைவ வஸ்துநோ அநேக விசேஷண விஸிஷ்டதா பேதாத் அநேக அர்த்தத்வம் பதாநாம் ஸாமா நாதி கரண்ய விரோதி
ஏகஸ்யைவ வஸ்துநோ அநேக விசேஷண விஸிஷ்டதா –ப்ரதி பாதந பரத்வாத் ஸாமா நாதி கரண்யஸ்ய
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தா நாம் ஸப்தா நாம் ஏகஸ்மின்நர்தே வ்ருத்திஸ் ஸாமாநாதி கரண்யம் (கையடே வ்ருத்தி யாஹ் நிகே )இது ஹி சாப்திகா

காரண வாக்ய ஏகார்த்யாத் ஸ்ருதீ நாம் நிர்விசேஷ பரதயா அனூத்ய நிராச
யதுக்தம் ஏகமேவ அத்விதீயம் இத்யத்ராத்விதீய பதம் குணதோ அபி ஸத்வி தீயதாம் ந ஸஹதே –அதஸ் ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயேந
காரண வாக்யாநாம் அத்விதீய வஸ்து ப்ரதி பாதந பரத்வம் அப்யுக மநீயம் -காரண தயோபலி ஷதஸ்ய அத்விதீயஸ்ய ப்ரஹ்மணோ லக்ஷணம் இதம் உச்யதே ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி
அதோ லிலக்ஷயிஷிதம் ப்ரஹ்ம நிர்க்குணம் ஏவ அந்யதா நிர்குணம் (மந்த்ரீக உபநிஷத் ) -நிரஞ்சனம் (ஸ்வேதாஸ் )இத்யாதி பிர் விரோதஸ் ச இதி தத் அநுப பன்னம்
ஜகத் உபாதா நஸ்ய ப்ரஹ்மணஸ் ஸ்வ வ்யதிரிக்த அதிஷ்டாத் ரந்தர நிவார ணேந விசித்திர ஸக்தி யோகம் ஏவா வகமயதி
ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத (சாந்தோக்யம் )இத்யாதி
அவிசேஷணாத்விதீய மித்யுக்தே நிமித்தாந்தர மாத்ர நிஷேத கதம் ஞாயத இதி சேத் சிச்ருஷோர் ப்ரஹ்மண உபாதாந காரணத்வம் ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ இதி ப்ரதி பாதிதம்
கார்ய உத்பத்தி ஸ்வாபாவ்யேந புத்திஸ் தம் நிமித்தான்தரம் இதி ததேவ அத்விதீய பதேந நிஷித்யத இதயவகம்யதே
ஸர்வ நிஷேதே ஹி ஸ்வாப் யுபகதாஸ் ஸிஷாதாயிஷிதா நித்யத்வதா யஸ் ச நிஷித்தாஸ் ஸ்யு

ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயஸ்ய நிர்விசேஷ வாத விபரீதத்வம்
ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயஸ் ஸாத்ர பவதோ விபரீத பல ஸர்வ ஸாகா ஸூ காரண அந்வயிநா ஸர்வஞ்ஞத் வாதீநாம் குணா நாமத் ரோப ஸம்ஹார ஹேதுத்வாத்
அத காரண வாக்யஸ்வ பாவாதபி ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இத் யநேந ஸ விசேஷமேவ ப்ரதிபாத்யத இதி விஞ்ஞாயதே

சோதக வாக்யாந்தரைகார்த் யஸ்ய நிர்விசேஷ பரத்வ ஞாபகதா நிராச
ந ச நிர்குண வாக்ய விரோத

ப்ராக்ருத ஹேய குண விக்ஷயத்வாத் தேஷாம் நிர்குணம் நிரஞ்சனம் நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் இத்யாதீ நாம்
ஞான மாத்ர ஸ்வரூப வாதிந்யோ அபி ஸ்ருதயோ ப்ரஹ்மணோ ஞான ஸ்வரூப தாம தாம பிதததி
ந தாவதா நிர்விசேஷ ஞான மாத்ர மேவ தத்துவம் ஞாது ரேவ ஞான ஸ்வரூபத்வாத்
ஞான ஸ்வரூபஸ் யைவ தஸ்ய ஞான ஆஸ்ரயத்வம் மணி த்யுமணி தீபாதி வத் யுக்தமேவேத் யுக்தம்
ஞாத்ருத்வம் ஏவ ஹி ஸர்வாஸ் ஸ்ருதயோ வதந்தி -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் (முண்டக )
ததைக்ஷத ஸேயம் தேவதைஷத (சாந்தோக்யம் )
ஸ ஈஷத லோகான் நு ஸ்ருஜா இதி
நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான் (கட் )
ஞாஜவ் த்வா வஜாவீஸ நீஸவ்(ஸ்வேதாஸ் )
தமீஸ் வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமம் ச தைவதம் –பதில் பதீ நாம் பரமம் பரஸ்தாத் விதாம தேவம் புவநேச மீட்யம் (ஸ்வேதாஸ் )
ந தஸ்ய கார்ய கரணம் ச வித்யதே ந தத் ஸமஸ்சாப்யித கஸ் ச த்ருஸ்யதே –பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச (ஸ் வேதாஸ் )
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விமிருத்யுர் விசோகோ விஜி கத்ஸோ அபி பாசஸ் ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப (சாந்தோக்யம் )
இத்யாத் யாஸ் ஸ்ருதயோ ஞாத்ருத்வ பிரமுகான் கல்யாண குணான் ஞான ஸ்வரூபஸ் யைவ ப்ரஹ்மணஸ் ஸ்வா பாவிக அந்வதந்தி ஸமஸ்த ஹேய ரஹித தாம் ச

ஸ்ருத் யைவ ஸ குண நிர்குண வாக்யயோ விஷய விபாக ஸித்தி
நிர்குண வாக்யா நாம் ஸ குண வாக்யா நாம் ச விஷயம் அபஹத பாப்மா இத்யாதி அபி பாஸ இத்யந்தேந ஹேய குணான் ப்ரதி ஷித்த்ய
ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப இதி ப்ரஹ்மண கல்யாண குண அன்வித ததீயம் ஸ்ருதி ரேவ விவி நக்தீதி
ஸ குண நிர்குண வாக்யயோர் விரோதா பாவா தன்ய தரஸ்ய மித்யா விஷய தாஸ்ரயணமபி நா சங்க நீயம்

ஸ்ருத்யா ப்ரஹ்மணி வாங் மநோ நிவ்ருத்தி ஞாப நாத் நிர்விசேஷ ஸித்தி இத்யஸ்ய நிராச
பீஷாஸ்மாத் வாத பவதே (தைத்ரியம் )இத்யாதி நா ப்ரஹ்ம குணா நாரப்ய தே யே சதம் (தைத்ரியம்)இத் அநு க்ரமேண ஷேத்ரஞ்ஞா நந்தாதிஸ முக்த்வா
யதோ வாசோ நிவர்த்தந்தே -அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் (தைத்ரியம் )இதி
ப்ரஹ்மண கல்யாண குணா நந்த்யமத் யாதரேண வததீயம் ஸ்ருதி

ஸ்வ வாக்யை கதேஸே நாபி ப்ரஹ்மண ஸ விசேஷ தா
ஸோ அஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபிஸ் ஸதா (தைத்ரியம் )இதி ப்ரஹ்ம வேதந பலம் அவகமயத் வாக்யம் பரஸ்ய விபீஸ் ஸதோ ப்ரஹ்மணோ குணா நந்த்யம் பிரவீதி
விபஸ் சிதா ப்ரஹ்மணா ஸஹ ஸர்வான் காமான் ஸமஸ்நுதே –காம்யந்த இதி காமா -கல்யாண குணா
ப்ரஹ்மணா ஸஹ தத் குணான் ஸர்வாநஸ்நுத இத்யர்த்த
தஹர வித்யாயாம் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் (சாந்தோக்யம் )இதி வத் குண ப்ரதான்யம் வக்தும் ஸஹ ஸப்த
பலோபாஸநயோ பிரகார ஐக்யம் யதா க்ரது ரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி (சாந்தோக்யம் )இதி ஸ்ருத் யைவ ஸித்தம்

ஜேயத்வ நிஷேத பர ஸ்ருதயா நிர்விசேஷதா ஸித்தி ரித் யஸ்ய நிராச
யஸ்யா மதம் தஸ்ய மதம்–அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்(கேந )இதி ப்ரஹ்மணோ ஞான விஷயத்வம் யுக்தம் சேத்
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் (தைத் )
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி (முண்டகம் )
இதி ஞானான் மோக்ஷ உபதேசோ ந ஸ்யாத்
அசன்னேவ ச பவதிஅஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததா விது (தைத்)
இதி ப்ரஹ்ம விஷய ஞானா ஸத் பாவ ஸத் பாவாப் யாத்மநாஸ மாத்ம சத்தாம் ச வததி –அதோ ப்ரஹ்ம விஷய வேதந மேவாபவர்கோபாயம் ஸர்வாஸ் ஸ்ருதயோ விதததி

உபாஸநாத்மக ஞான விஷயத்வ பக்ஷ தூஷணம்
ஞானம் ஸ உபாஸ நாத்மகம் –உபாஸ் யஞ்ச ப்ரஹ்ம ச குணம் இத் யுக்தம்
யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ(தைத் ) இதி ப்ரஹ்மணோ அனந்தஸ்ய அபரிச்சின்ன குணஸ்ய வாங் மனஸயோரேதாவதிதி
பரிச்சேதா யோக்யத்வ ஸ்ரவணேந ப்ரஹ்மைதா வததி ப்ரஹ்ம பரிச்சேத ஞான வதாம் ப்ரஹ்ம அவிஞ்ஞாத மம்தமித் யுக்தம் அபரிச்சின்னத்வாத் ப்ரஹ்மண
அந்யதா யஸ்ய மதம் தஸ்ய மதம் விஞ்ஞாதம் அவிஜா னதாம் இதி மதத்வ விஞ்ஞாதத்வ வசனம் தத்ரைவ விருத்யதே

ஞாத்ருத்வ நிஷேத சங்கா பரிஹார
யது ந த்ருஷ்டேர் த்ரஷ்டாரம் ந மதேர் மந்தாரம் (ப்ரு )இதி ஸ்ருதிர் த்ருஷ்டேர் மதேர் வ்யதிரிக்தம் த்ரஷ்டாரம் மந்தாரம் ச ப்ரதிஷேததி -இதி
ததா கந்தக சைதந்ய குண யோகி தயா ஞாதுர் அஞ்ஞாந ஸ்வரூப தாம் குதர்க்க சித்தாம் மத்வா ந ததா ஆத்மா நம் பஸ்யே ந மன்வீதா
அபி து த்ருஷ்டாரம் மந்தாரம் அப்யாத்மாநம் த்ருஷ்டிம் அதி ரூபமேவ பஸ்யேர் இத்யபிததா தீதி பரி ஹ்ருதம்
அதவா த்ருஷ்டேர் திருஷ்டாரம் மதேர் மந்தாரம் ஜீவாத்மநாம் ப்ரதி ஷித்ய ஸர்வ பூதாந்தர் ஆத்மா நம் பரமாத்மான மேவோ பாஸ்வேதி வாக்யார்த்த –அந்யதா விஞ்ஞா தாரமரே கேந விஜா நீயாத் (ப்ரு )இத்யாதி ஞாத்ருத்வ ஸ்ருதி விரோதஸ் ச

ஆனந்தத்வா நந்தித்வ யோர விரோதத்வ பேத தந்தி ஷேத ஸ்ருதீ நாம விரோதத்வ ஸமர்த்தநம்

ஆர்த குண நிஷே தாந்த்ர பரிஹார
ஆனந்தோ ப்ரஹ்மோ(தைத் -ப்ரு )இதி ஆனந்த மாத்ர மேவ ப்ரஹ்ம ஸ்வரூபம் ப்ரதீயதே இதி யதுக்தம் –தத் ஞான ஆஸ்ரஸ்ய ப்ரஹ்மணோ ஞானம் ஸ்வரூப மிதி வததீதி பரிஹ்ருதம் –ஞானமேவ ஹ்யநு கூலமாநந்த இத்யுச்யதே -விஞ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம (ப்ரு )இத்யாநந்த ரூபமேவ ஞானம் ப்ரஹ்மேத் யர்த்த —
அத ஏவ பவதா மேக ரஸதா –அஸ்ய ஞான ஸ்வரூபஸ்யைவ ஞாத்ருத்வம் அபி ஸ்ருதி சத சமதிகதமித் யுக்தம் —தத்வதேவ ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த (தைத் )-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் (தைத் )இதி வ்யதிரேக நிர்தேஸாச் ச நா ஆனந்த மாத்ரம் ப்ரஹ்ம அபி த்வா நந்தி –ஞாத்ருத்வ மேவ ஹ்யா நந்தித்வம்

பேத நிஷேத பரதயா சங்கிதா நாம் ஸ்ருதீ நாம் ஸமீஸீ நா யோஜநா
யதிதமுக்தம் யத்ர ஹி த்வைதமிவ பவதி (ப்ரு )நேஹ நாநா அஸ்தி கிஞ்சன (ப்ரு )
ம்ருத்யோஸ் ஸ ம்ருத் யுமாப்நோதி ய இஹ நா நேவ பஸ்யதி யத்ரத் வஸ்ய ஸர்வ மாத்மைவா பூத் தத் கேந கம் பஸ்யேத் (ப்ரு )
இதி பேத நிஷேதோ பஹுதா த்ருஸ்யத இதி -தத் க்ருத்ஸ் நஸ்ய ஜகதோ ப்ரஹ்ம கார்ய தயா தத் அந்தர்யாமி கதயா ச ததாத் மகத்வே நைக்யாத் தத் ப்ரத்ய நீக நாநாத்வம் ப்ரதி ஷித்யதே
ந புந பஹு ஸ்யாம் ப்ரஜாயேய இதி பஹு பவந ஸங்கல்ப பூர்வகம் ப்ரஹ்மணோ நாநாத்வம் ஸ்ருதி ஸித்தம் ப்ரதி ஷித்யத இதி பரிஹ்ருதம்
நாநாத்வ நிஷேதாதியம பரமார்த்த விஷயேதி சேத் ந ப்ரயஷாதி ஸகல ப்ரமாணா நவ கதம் துரா ரோஹம் ப்ரஹ்மண
ப்ரதிபாத்ய ததேவ பாத்யத இத் யுபஹாஸ்யமிதம்

யதா ஹ்யேவைக்ஷ ஏதஸ்மிந் நுதர மந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி (தைத் )இதி ப்ரஹ்மணி நாநா த்வம் பஸ்யதோ பய ப்ராப்திரிதி யதுக்தம்
ததஸத் ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ் ஜலாநிதி சாந்த உபா ஸீத(சாந்தோக்யம் )இதி தன் நாநாத்வ அநு ஸந்தா நஸ்ய சாந்தி ஹேதுத்வ உபதேசாத்
ததா ஹி ஸர்வஸ்ய ஜகதஸ் தத் உத்பத்திஸ்திதி லய கர்ம தயா தத் ஆத்மகத்வ அநு ஸம் தாநேந அத்ர சாந்திர் விதீயதே
அதோ யதா வஸ்தித தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதி பேத பின்னம் ஜகத் ப்ரஹ்மாத் மகம் இத் அநு ஸம்தா நஸ்ய சாந்தி ஹேது தயா அபய ப்ராப்தி
ஹேதுத்வேந ந பய ஹேதுத்வ ப்ரசங்க -ஏவம் தர்ஹி அத தஸ்ய பயம் பவதி இதி கிமுச்யதே
யதா ஹ்யைவைக்ஷ ஏதஸ்மிந் ந த்ருஸ்யதே அநாத்ம்யே அனிருக்குதே அனிலயநே அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே
அத ஸோ அபயம் கதோ பவதி (தைத் )இத் யுபய ப்ராப்தி ஹேதுத்வேந ப்ரஹ்மணி யா ப்ரதிஷ்டா அபி ஹிதா தஸ்யா விச்சேத பயம் பவதீதி –
யதோக்தம் மஹரிஷி அபி

யன் முஹூர்த்தம் க்ஷணம் வா அபி வாஸூ தேவோ ந சிந்த்யதே

ஸா ஹா நிஸ் தன் மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸா ச விக்ரியா (கட ) இத்யாதி ப்ரஹ்மணி ப்ரதிஷ்டாயா அந்தரம் அவகாஸோ விச்சேத ஏவ

கீத யுக்தி விரோத சங்கா பரிஹாரவ்
யதுக்தம் ந ஸ்தானதோ அபி (ப்ரஹ்ம ஸூத் -3-3-11)இதி ஸர்வ விசேஷ ரஹிதம் ப்ரஹ்மேதி ச வஹ்யதீதி -தன் ந ஸ விசேஷம் ப்ரஹ்மேத் யேவ ஹி தத்ர வஹ்யதி
மாயா மாத்ரம் து ( (ப்ரஹ்ம ஸூத் -3-3-3)இதி ச ஸ்வாப்நாநா மப்யர்த்தா நாம்
ஜாக்ரத அவஸ்த அநு பூத பதார்த்த வை தர்ம் யேண மாயா மாத்ரத்வம் உச்யத இதி ஜாக்ரத அவஸ்த அநு பூதாநாம் இவ பாரமார்த்திகத்வ மேவ வஹ்யதி

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-