ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -31-40–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

அவதாரிகை
பகவத் விஷயத்தில் அவகாஹித்த இவருடைய நெஞ்சை அகல்விக்கும் இடத்தில்
ஸர்வ ஸக்தியான அவன் தனக்கும் ஸக்யம் இன்றிக்கே இருக்க
நம்மாலே செய்யலாமோ என்று
அவர்கள் விஹஸ்தரான (கை ஓய்ந்து ) படியை அறிந்து

திருமலையை நோக்கி உத்யுக்தராய்ப் போருகிறார்
சில உதார ஸ்வ பாவரைக் கண்டு
இவர்கள் நமக்கு கடகராகக் கூடுமே என்கிற அபி சந்தியை
மேகங்களைத் தூதாக விடத் தேடுகிற
நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார் –

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

பாசுரம் -31-இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் –
தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –
எம் கானல் அகம் கழிவாய் -9-7-

பதவுரை

அம்பொன்–அழகிய பொன்னும்
மா மணிகள்–சிறந்த ரத்னங்களும்
திசை–திக்குகள் தோறும்
மின் மிளிரும்–மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து–திருவேங்கட மலையினது
மேகங்கள்–மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால்–(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம்–(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை–வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான்–மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழிகொண்ட–பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால்-நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம்–(அவை அங்குச்) செல்லக் கூடுமோ?

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
தூத வார்த்தை சொல்லுங்கோள் என்று சொன்னால்
அனுமதி பண்ணக் காணகிறிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -திருவாய் -9-7-1-என்கிறபடியே
தலை மேல் சஞ்சரியுங்கோள் -என்று அபேக்ஷித்தால்
அது தான் செய்யக்கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான பொன்னும்
மஹார்க்கமான ரத்னங்களும்
திக்குகள் தோறும் ஒளியை மிளிரா நிற்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசை
வலிதான் அடி யுரத்தை யுடைத்தான சிகரத்தை நோக்கி

மின் மிளிரிய
மின்னைப் ப்ரகாசிப்பவனாய்
போவான் வழிக் கொண்ட
போகைக்கு வழிப்பட்ட

மேகங்களே
உபகார ஸ்வ பாவமான மேகங்களானவை

போவான் வழிக் கொண்ட மிளிரிய மேகங்கள்-என்று
அன்வயம்

இத்தால்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
கடகத்வத்தை நீங்கள் இசையை வேணும் என்றால்
இசையைக் கண்டிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நம்முடைய அபேக்ஷை தோன்ற
சிரஸா வஹித்து அனுவர்த்தித்தால்
அனுமதி பண்ணக் கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான ஸ்வரூபமும்
மஹார்க்கமான குண ரத்னங்களும்
ஸர்வோதிக்தமாகப் பிரகாசிக்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -திருவாய் -6-10-11- என்கிறபடியே
ஆஸ்ரயணீயமான திண் கழலை யுடைய
வண் புகழ் நாரணனாகிற -திருவாய் -1-2-10-
அஞ்சன சிகரத்தை நோக்கி உத்யுக்தராய்
உஜ்வலமான தீப்தியை யுடையரான
(போகும் பாகவதர்கள் ஞான ஒளி -மின்னல் )
உதார ஸ்வா பாவமானவர்கள்
(எங்கும் தீர்த்தகரராய் திரிந்து அருளுபவர் )
என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இசையிலம் -என்ற ஒரு பாடம்
இசைவலம் -என்ற ஒரு பாடம்

இசைவலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்களே
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
இப்படி நான் சொன்னால் இசையுமோ என்று அவற்றுக்குச் சொல்லும்படியை
ஸ்வ கதமாகச் சொல்லுகிறாள்

அங்கன் அன்றிக்கே
இசையிலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்கள் -என்று தேற்றமாக்கி
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
இசைகிறவன வில்லை
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்த்தால் இத்தைச் செய்ய வற்றே

வியாக்யானம்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
திருமலையைக் குறித்துப் போகையிலே ஓருப்பட்டுள்ள மேகங்களானவை
என்னுடைய தூத வாக்கியத்தை நீங்கள் போய்ச சொல்ல வேணும் என்று
நான் கால் கட்டினால்
அத்தைச் செய்கிறவன வில்லை

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்ந்தால்
திருமலையைக் குறித்துப் போகையில் ஓருப்பட்ட நீங்கள்
அப்படி என் தலையிலே உங்கள் காலை
நீங்கள் வையுங்கோள் என்று நான் சொன்னால் அப்படிச் செய்யலாம்
ஸ்வ கார்யம் செய்யாதாருக்கும்
பர ஹிதம் செய்ய வேண்டி இருக்கும் இறே
என் ஆர்த்தையைச் சென்று அறிவித்து
அவனையும் என்னையும் சேர்க்கை இறே கார்யம்
அங்கன்

———–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பிறக்கும்படி
நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டி
வைகுந்தவனோடே என் நெஞ்சினாரைக் கண்டால் -என்று
பரமபத நிலையன் அளவும் சென்றபடியால்
ஸத் வரராய் (துடிப்புடன்)
பரம ஸாம்யா பன்னரானாரை
பாவனையால் அபரோக்ஷித்துச் சொன்ன பாசுரத்தைப்
(முக்தர்களை )போலி கண்டு யுரைத்த
(ஆழ்வார் நெஞ்சு அங்கேயே முன்னமே சென்றதே )
தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-

பாசுரம் -32-மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
துறையடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –
வைகல் பூம் கழிவாய் -6-1-

பதவுரை

மேகங்களே–ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்–எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்–உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர்–சொல்லுங்கள்;
உயிர்–உயிர்களை
அளிப்பான்–பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து–நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து–பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம்–உங்களுடைய
ஆகங்கள் நோவ–உடம்புகள் நோகும்படி
வருந்தும்–(அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம்–தபஸ்ஸோ
அருள் பெற்றது–(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.

வியாக்யானம்

மேகங்களோ
கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் -திருவாய் -4-4-9- என்கிறபடியே
பிரிவு போலி கண்டு பதறப் பண்ணும் இறே
ஆகையால் மேகங்களை ஸம்போதிக்கிறாள்

உரையீர்
நான் கேட்கிற வார்த்தைக்கு மறு மாற்றம் சொல்லு கிறி லீர்

வார்த்தை கேட்பதற்கு முன்னே மறு மாற்றம் சொல்லும் வகை என் என்னில்
திருமால் திருமேனி யொக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்
ஸ்ரீ ராமனோடு திருமேனியோடு ஸாரூப்யம் பெறும்படியான
உபாயங்கள் காற்று வளத்திலே திரிகிற உங்களுக்கு
எப்பிராகாரத்தாலே லபிக்கப் பட்டது
உரையீர் என்று அந்வயம்
உரையுங்கோள் என்றுமாம்

உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து
பிராணிகளை ரஷிக்கைக்காகப்
பெரிய ஆகாசம் எல்லாம் ஸஞ்சரித்து

நன்னீர்கள் சுமந்து
ஸர்வ உப ஜீவ்யமாம் படி சரஸமான
ஜல ஸம்ருத்தியைத் தரித்து

நுந்தம் ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –
பர உபகார யுக்தமான உங்களுடைய காய கிலேசத்தையும் பாராதே
ஆயாஸிப்பித்த தபஸ்ஸாம் இத்தனை இறே
ஸாம்ய ஆகார பிரதமனானவனுடைய அருளைப் பெற்றது –

இத்தால்
ஸாம்யா பன்னரைக் குறித்து
உபாய ப்ரஸ்னம் பண்ணின விடத்து
மறு மாற்றம் பெறாமையாலே

பகவத் விபூதி பூதரான ஆத்மாக்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-என்கிறபடியே
(ஸ்வா தந்தர்ய லேசமும் இல்லாத
நெறி
நன்னெறி
தீதில் நன்னெறி )

ஸர்வ ப்ரதேசத்திலும் ஸஞ்சரித்து
சீலாதி குண ரஸ பூரத்தைத் தரித்து
ஸ்வ சரீர கிலேசம் பாராதே பரார்த்தமாக ஆயாஸித்த
பரம தபஸ்ஸூ இறே
பல ப்ரதமான அருளைப் பெறுவித்தது என்று
பாவநை யாலே பல சாதன பாவத்தைக் கல்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
வ்யாபார சீலருக்கு ஒழிய ஒரு பலம் கிடையாது
நிர் வ்யாபாரராய் இருப்பவருக்கு ஸித்தியாதோ என்று
விஷண்ணரானமை தோற்றுகிறது –

(மேம்பொருள் போக விட்டு –வாழும் சாம்பாரை அகத்தி போலும் என்பது பொய்யாயிற்றோ
தாபம் செய்தால் தான் ஸாரூப்யம் ஸித்திக்குமோ
உபாயம் என்றால் உழைப்பு இல்லை
கைங்கர்யம் என்றால் ஒய்வு இல்லை
இதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யும் ஈடே – )

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

————

அவதாரிகை
இப்படி இவருடைய விபாகத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள்
விஷாத ஹேதுவான ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்த பாசுரத்தை
நாயகி ஆற்றாமைக்கு உதவாத நாயகனான ஈஸ்வரனை நோக்கி
பாங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33

பாசுரம் -33-அருள ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் –
தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-
ஏறாளும் இறையோனும் -4-8-

பதவுரை

அரவு அணையீர்–ஆதிசேஷசயனத்தை யுடையவரே!
அருள் ஆர் திரு சக்கரத்தால்–கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு
அகல் விசும்பும்–பரந்த விண்ணுலகத்திலும்
நிலனும்–மண்ணுலகத்திலும்
இருள் ஆர்வினை கெட–இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி
(துஷ்ட நிக்ரஹஞ் செய்து)
செங்கோல் கடாவுதீர்–உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர்.
(அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
மாமை–மேனி நிறத்தை
சிதைக்கின்றது–அழிப்பதானது
ஈங்கு–‘இவ்வுலகத்தில்
ஓர் பெண்பால்–ஒரு பெண்ணைக் காப்பது
பொருளோ எனும்–புருஷோத்தமோ’ என்கிற
இகழ்வோ–அவதாரமோ?
(அல்லது)
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ–(உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண் மண்ணுலகங்களுக்கு
உள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ?
தெருளோம்–அறிகின்றிலோம்

வியாக்யானம்

அருளார் திருச் சக்கரத்தால்
ஆஸ்ரித ரக்ஷணார்த்தமான கிருபையாலே
பரிபூர்ணனான திருவாழி ஆழ்வானாலே

அகல் விசும்பும் நிலனும்
பரந்த விசும்பும் நிலனும்

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி
ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற் புதீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு அபலையை ரஷிக்கை புருஷார்த்தமோ என்கிற அநாதரமோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரக்ஷணீய விபூதிக்குப் புறம்பாய் இருப்பாள் ஒருத்தி என்கிற நினைவோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்கிற நீர்

இவள் மாமை சிதைக்கின்றதே –
இவளுக்கு இடம் கொடாமல்
இவள் நிறத்தை அழிக்கின்றது என்று வெறுக்கிறாள் –

இத்தால்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
ஸங்கல்ப மயமான திருவாழியாலே
விபூதி த்வயத்தையும் இருள் அகல நிர்வஹிக்கும் என்கையாலே
நித்ய விபூதியில்
அனுபவ விச்சேத ரூபமான இருள் நடையாடாதபடி பண்ணுகையும்
லீலா விபூதியில்
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய் -2-9- 3- என்கிறபடியே
அவித்யா காரிதமான விபரீத விருத்தம் நடையாடாமல் நோக்குகையும் தோற்றுகிறது

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் என்றதையே
இருளார் வினை )

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு விபூதி ஏக தேசத்தில் ஸ்வ காரியத்தில் அசக்தராய் பரதந்த்ரராய் இருப்பார்
ஒருவரை ரஷிக்கையில் சரக்கு அறுதியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
இந்த விபூதியிலும்
அந்த விபூதியிலும்
அந்தர்பவியாமல் இருக்கையாலே புறம்பு என்று நினைத்ததோ
(இங்குற்றேன் அல்லேன் அங்குற்றேன் அல்லேன் )

இது நிஷ்கரிஷிக்கலாய் இருக்கிறது இல்லை
அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு அல்லாமையாலும்
விபூதி த்வய வ்யாவ்ருத்தி வை லக்ஷண்யத்துக்கு உறுப்பாகையாலும்
அங்கீ கார ஹேது யுண்டு என்றபடி

அரவணையீர் -என்கையாலே
அந்த விபூதியில் உள்ளவரோடு
நித்ய ஸம்ஸ்லேஷம் நடக்கிறபடி சொல்லுகிறது

இவள் மாமை சிதைக்கின்றதே -என்கையாலே
அவிளம்பேந ஆதரியாமையாலே
அசாதாரண ஆகாரமும் குலையும் படியாகா நின்றது

இதுக்கு ஹேது அறிகிலோம் என்று
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து உரைத்த பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
போலி கண்டு தரிக்க ஒண்ணாத படி மேகங்களும் மறைந்தன
ஜீவனத்துக்கு எத்தனை யேலும் அவசாதம் வந்தாலும்
அவனுக்கு அறியாமைக்கு மேல் இல்லையே

ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ் விடையாட்டம் ஒன்றும் ஆராயா திருக்கிறது என்?’ என்ன,
பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ?
நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு, என்ன,
பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போக விட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திரு வுள்ளமாக,
இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய
எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்;
பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து நீர் வார்த்துக் கொடுத்தார்கள்.

காதுகன் செய்தவற்றை செய்தாய் 0மேக சஞ்சாரத்தையும் மாற்றி மோகம் பண்ணினாய்
திருத்தாயார் கங்குலும் பகலும் திருவாய் மொழி போல் –
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் என்கிறாள்

அருளார் திருச்சக்கரத்து
உபய விபூதியில் -உமக்கும் செல்லாதோர் மூலை உண்டாய் இவளுக்கு ரக்ஷணம்
நீர் செய்ய முடியாமல் இருந்ததோ
வேறே ஒருவர் ரஷணம் ஆவார் என்று ஆறி இருக்கவோ
உபய விபூதியிலும் உமது ஆஜ்ஜை அன்றோ நடக்கிறது
இவள் ஸ்த்ரீ மாத்ரம்-என்று இவளை ரக்ஷிப்பது நமக்கு பிரயோஜனம் அன்று என்று இருந்தாயோ
நமது எல்லைக்கு புறம்பு இவள் என்று இருந்தாயோ

ரக்ஷணத்துக்கு உமக்கு பரிகரம் இல்லாமல் போனதே என்று தான் ஆறி இருக்கவோ
அநாஸ்ரிதர் விஷயத்தில் திருவாழி ஆழ்வானுக்கு த்வேஷம் உறைத்து இருக்கும்
சமோஹம் சர்வ பூதேஷூ என்று அன்றோ அவன் இருப்பது
ஹிரண்யன் நெஞ்ஜையும் துழாவிப் பார்ப்பான் அவன் -அனுகூல்ய லேசம் உள்ளதோ என்று
அதே போல் ஆஸ்ரித விஷயத்தில் இவன் கை விட்டாலும் ஆழ்வான் கை விட்டு விட மாட்டான்
ஆச்ரித விஷயத்தில் அனுக்ரஹமும் அதிகம்

பிராட்டியை விடவும் இவனுக்கு ஊற்றம் அதிகம் உண்டே
அவளுக்கு ஒரு நிர்பந்தம் உண்டே
அவரது திரு உள்ளம் படியே நடக்க வேண்டுமே – -ஸஹ தர்ம சாரிணி அன்றோ
ராமஸ்ய விவசாயம் சங்கல்பம் -அறிபவள் அன்றோ
லஷ்மணஸ்ய தீ மான் அதுவும் இவள் அறிபவள்

இவர் பண்ணி இருபத்தொரு விவசாயம் -ரஷித்தே தீருவேன்
உன்னை விட்டாலும்
லஷ்மணனை விட்டாலும்
உயிரை விட்டாலும்
ப்ராஹ்மணர் ரக்ஷணம் விட மாட்டேன்
எவர்களை –
ப்ரஹ்மணேப்யோ –விசேஷித்த இவர்களுக்கு
அளவன்றிக்கே
ரஷக அபேக்ஷை உடையவர் பக்கலில் பற்று வைத்து இருப்பார்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் வளை வாய் நேமிப் படையாய்
கர்ப்ப பூதாஸ் தபோ -உன்னுடைய கர்ப்பத்துக்குள் உள்ளோம்
தபஸ் -சக்தி இருந்தாலும் -பிராப்தி இல்லையே
ஸ்வ ரக்ஷண சக்தரானாலும்
கர்ப்ப பூதர் -என்று இவனையே எதிர்பார்த்து இருக்கும் தண்டகாரண்ய ரிஷிகள் போல்வாரை
ரஷித்தே தீருவேன் என்ற விவசாயம் கொண்டவர் அன்றோ பெருமாள் –

விசுவாமித்திரர் சக்ரவர்த்தி இடம் -வார்த்தை சொல்லும் இடத்தில்
சாபம்-அம்பு பூண்ட பெருமாள் வேண்டும் -என்னால் சாபம் கொடுத்து அழிக்க முடியும்
யஜ்ஜம் செய்வதால் சாபம் கொடுக்கும் சக்தியைப் பயன் படுத்த மாட்டேன்
அதே அர்த்தம் இங்கும்
மாரீசன் ஸூபாஹூ வந்தாலும் நான் சாபம் பிரயோகிக்க மாட்டேன்
பிராண ஹானியாக இருந்தாலும் அனுஷ்டானம் மாறாதே
ரக்ஷணத்துக்கு சக்தி இருந்தாலும் -ரக்ஷகன் கையையே பார்த்து இருப்பேன்
ஜனனி தான் கைப்போடு புளிப்பு தவிருவாள்

இந்த ராமர் விரதம் அறிவாள்
அபயம் சர்வ பூதானாம் ஏதத் விரதம்
சர்வ பூதேப்யோ -என்று ராவணன் இடத்தில் மட்டும் ரக்ஷணம் அல்ல
யாரேனும் யாகிலும் ரஷிப்பேன்
இத்தனை வருஷம் அநாதி காலம் இருந்து கற்றவள் -நித்யைவேஷா -அந பாயிநி அன்றோ

லஷ்மணன் -விவசாயமும் அறிந்தவள் அன்றோ
பெருமாள் குழைச் சரக்கு -பிராட்டிக்காக எத்தையும் செய்பவராய் -அந்நிய பரராய் இருப்பார்
சீதாபிராட்டி அபிமதம் செய்ய மாரீச மாயமான் பின்னே போவார்
ராக்ஷஸ மாயை என்று அறிந்து அப்போதும் யுணர்ந்து நோக்குவார் இளைய பெருமாள் ஒருவரே அன்றோ
ராமனே விட்டாலும் -அப்போதும் ஆஸ்ரித ரக்ஷணம் ஒரு தலை லஷ்மணம் புண்ய லக்ஷணம் -வடிவிலே தெரியும்

ஆற்றாமைக்கு அனுரூபமாக பிராட்டி தளர்ந்து போக மாட்டாள்
பெருமாளை விட்டுப் பிரிந்தாலும் -முடியாமலும் -கலங்காமலும் -விவசாயம் அறிந்தவள்
தானே தெளிவாக இருப்பவள் மாயா சிரஸ்ஸால் கலங்க மாட்டாள்

இப்படி இளைய பெருமாளை நினைத்து இருப்பது போல்
அருளார் திருச் சக்கரம் நம்மை விட்டுக் கொடுக்காது என்று இருக்கும் பராங்குச நாயகி
ஆசிலே வைத்த கையும் சக்கரமும் கொண்டே ரஷிப்பான்
சங்கல்பத்தாலே ரஷிக்கும் சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும்
திருச்சக்கரத்தான்
ஈஸ்வர பிடாரி அஹங்காரம் ஒன்றே போதும்
அநாயாசேந ரஷிக்கும் சக்தன்
இருந்தாலும் கையார் சக்கரம் கை கழலா நேமியான்
தொட்ட படை எட்டும் தோலாத வீரன் அன்றோ –

உபய விபூதியையும் திருச்சக்கரமும் கையுமாய் இருந்தே நோக்கி அருளுபவன்
அசேதன கிரியா கலாபங்களால் -உபாயாந்தர பரர் இருக்க
சர்வ சக்தியின் -ரக்ஷண தீஷித உறைப்பைக் கொண்டு பிரபன்ன நிஷ்டர்கள்

அகல் விசும்பும்
திரிபாத் விபூதி அன்றோ –
நிலனும்
லீலா விபூதியும்
அந்நிய பரரோடு அநந்ய பரரோடு வாசி இல்லையே ரஷிக்கும் இடத்தில்
உபய விபூதியிலும் அஞ்ஞானம் போக்கி அருளும் திருச்சக்கரம்
தமஸ் அங்கு உண்டோ -என்னில்
அங்கு அதிசங்கை உண்டே
நித்ய கைங்கர்யத்துக்கு க்ஷணம் விச்சேதம் வந்து விடுமோ கலங்குவார்
பிராக பாவத்தால் அங்கு
இங்கு ப்ரத்வம்ச பாவம்
அழகைக் காட்டி அங்கு
‘இங்கு பிரதிகூத்தில நிரசனம் செய்து ரஷிப்பார்

அப்படி இருக்க அன்றோ இவள் விஷயத்தில் இங்கே ஸ்த்ரீ வதம் பிராப்தம் ஆயிற்றே
இவள் மாமை சிதைக்கின்றது
யாது ஓன்று உபேக்ஷிக்காமல் இருக்க ஹேதுவோ அதுவே சிஷிக்கக் காரணம் ஆகுமோ
அநந்ய கதியாயும் அபலை யாயும் இருந்தும் ரக்ஷிக்காமல் கை விட்டீரே
பெண்ணை ரஷித்து என்ன பிரயோஜனம் என்றோ
புறம்பாய் உள்ளாள் இவள் – அங்குள்ளார் நோக்கட்டும் என்று உள்ளீரோ
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் என்று அன்றோ விருதூதித் திரிகிறீர்
இவளுடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே
உம்முடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே

ஸ்ரீ கீதை -10-39- ஸ்லோகத்தில் லோக்கத்துக்கு பீஜம் நான்
என்னைத் தவிர்த்து யாரும் எங்கும் இல்லையே –

உன்னாலாயே அனைத்தும் ரஷிக்கபட இருக்க
உன்னால் ரக்ஷிக்கப் படா விட்டால் அது சூன்யம் ஆகுமே -வஸ்துவாகவே மாட்டாதே
இருக்கு என்றாலே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஆளாய் இருக்க வேண்டுமே

உம்முடைய சத்தையும் ஸ்வரூபமும் சர்வ ரக்ஷணம் அன்றோ
நெருப்பினால் நனைக்க முடியுமோ

திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ

இனி திரௌபதி பரிபவம்
இங்கு உள்ளார் யாரும் சரக்கு அல்ல
சா அஹம்
கேச க்ரஹம் ப்ராப்தனானேன் -பரிபவம் ப்ராப்தனானேன்
நீ இல்லை போலும் -கண்ணன் நீ இந்த விபூதியிலேயே இருக்க அன்றோ இவ்வாறு பட்டேன்
இதுக்கு என்ன சேர்த்தி உண்டு என்கிறாள்

என்னைப் போலே கையும் வளையலுமாயோ நீ உள்ளாய்
புருஷோத்தமன் அன்றோ ‘
உன்னுடைய புருஷோத்தமத்வம் சரணாகத ரக்ஷணத்துக்காக அன்றோ
சரணாகதை நான்
நீயோ சங்கு சக்ர கதா பாணி -என்கிறாள் திரௌபதி
அருளார் திருச்சக்கரத்தால் இங்கு

சங்க சக்ர -எப்பொழுதும் கை கழலா நேமியான் -ஆபரண மாத்திரமோ -ஆயுதம் அன்றோ

துவாரகா நிலையா –
பரமபதத்தில் உள்ளேன் என்று சொல்லிட்டு தப்ப முடியாதே
அவதரித்து சமீபத்தில் சன்னிஹிதனாய் இருக்க அந்நியனாய் மீளவும் போனாயோ

அச்யுத –
சன்னஹித்தனாய் இருந்து ஆஸ்ரிதரை எங்கு நழுவ விட்டாய்

கோவிந்தா
பசுக்களை ரஷிக்க மாட்டேன் -வசிஷ்டாதிகளை மட்டுமே ரஷிப்பேன் என்று இருந்தாயோ
குறைய நின்றார் ரக்ஷணத்துக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொண்டாயே

புண்டரீகாஷ
விடாயாருக்கு நோக்காமல் நித்ய ஸூரிகளுக்கு –
விண்ணோர் பரவும் தாமரைக் கண்ணனாய் மட்டுமே இருந்தாயோ
ஏலம் இட்ட தண்ணீரை தாகம் உள்ளாருக்கு அருளால்
கடாக்ஷம் கொண்டு நித்ய ஸூரிகளை மட்டுமே காப்பாயோ

மாம் ரக்ஷணம்
என்னுடைய ரக்ஷணத்துக்கு நீ என்று நான் அறிவித்த பின்பும் –
மாம் வ்ரஜ -என்னைப் பற்று என்றாயே
என்னைக் காப்பாத்து இவள் வார்த்தை

தீஷித்து உள்ள எனது பார்த்தாக்களும் உன்னால் ரக்ஷிக்கப் படுபவர்கள் அன்றோ
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலாயா கிருஷ்ண நாதாய என்று அன்றோ இருக்கிறோம்
இவர்களைக் கூப்பிடவில்லையே

ஆனாலும் கண்ணன் வாளா இருக்க
சரணாகதம் என்று சொல்லி
அவன் உருகின துயிலை நீயும் ஒரு கையால் பிடித்தாய் அன்றோ என்று அவன் நினைவாக
இரு கையும் விட்டேனா திரௌபதியைப் போலே

தன்னை வியாவர்த்திக்கிறது
நானும் ரக்ஷகன் அகில

தனித்தனியே நூற்றுவரும் சுழற்ற வல்ல பார்த்தா இருக்க
இங்கு இவனைக் கூப்பிட்டது என் என்று வினவ ஆளவந்தார்
பண்டே உபதேசம் பெற்றாளே
ஸ்மர்தவ்ய பகவான் ஹரி -பெரும் ஆபத்து வரும் பொழுது நினை என்று -வசிஷ்டர் சொல்லி வைத்து உள்ளார்
குறை ஒன்றுமே இல்லாத அக்காலத்திலும் குறை வந்தால் ஹரியை நினை என்று சொல்லி வைத்த மஹாநுபாவர்
மஹத் ஆபத்து வந்தால் தன்னோட்டை உள்ளார் போல்
ஞானாதி பூர்ணனான அவனை நினைக்க அடுக்கும் ஸ்ம்ருதி மட்டுமே கார்யகரம் ஆகும் என்றாரே
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -ஆழ்வார்

பிரார்த்தனா மதி சரணாகதி
உம்முடைய ஸ்வரூபம் -ஹேது கண்டிலோம்
இவள் ஆற்றாமை சொல்ல வந்த இடத்தில் உபய விபூதி நாதத்வம் சொல்வான் என் என்னில்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – திரு விருத்தம் 75-

நித்ய சித்தர் -முமுஷு போல் தவிக்கிறார்

அரவணையீர்
இவளை ரஷிக்காமல் உமக்கு படுக்கை பொருந்துவதே
உம்முடைய ஜீவனத்தை அன்றோ நீர் இழக்க உள்ளீர்
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இவளை பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளி
உண்டியிட்டாய் இனி உண்டு ஒழியாய்
இவளை மீளவும் உண்டாக்கலாம் என்று உள்ளீரோ
யதா பூர்வம் கல்பயத் -போல் இவளை போல் உருவாக்க முடியாதே
சங்கல்பத்தால் உண்டாக்க வல்லவள் அன்றே

இவளை சிதைக்கின்றது
இவளை நோவுபட வைத்து
பகுதியாக தான் காண முடியும்
ரஷ்யம் நோவு படுவது உமக்கு அவத்யமாம் என்று
பார்ஸ்வத்தர் பாசுரத்தால் அவனுக்கு அறிவிக்கிறான்

——————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
வியாக்யானம்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
ஆஸ்ரிதரில் பூர்ண கிருபை யுள்ள
திருவாழியாலே
அவ்விபூதியையும் நிர்வஹிக்கும் படி

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார மயமான இங்குள்ள பாப பரங்கள் போம்படி
திவ்ய ஆஜ்ஞா ப்ரவர்த்தகரான நீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
இவ்விடத்தில் உள்ள ஓர் அபலையை ரக்ஷிப்பது
நமக்கு ஒரு புருஷார்த்தமோ
என்று அநாதரித்த படியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரஷ்ய வஸ்து பஹிர் பூதை
இவள் என்று நினைத்தீரோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
இப்போதும் வாய்த்த படுக்கையிலே
கண் வளரா நின்றீர்

இவள் மாமை சிதைக்கின்றதே
இவள் அவசாதம் -இவள் நிறத்தை அழித்து விடா நின்றதே
நான் இத்தைப் பார்ப்பது எங்கனே என்று கூப்பிடுகிறாள் –

————-

அவதாரிகை
இப்படி அவசன்னரான இவர்
பகவத் ஸம்ஸ்லேஷம் உண்டாகைக்கு இத்தலையாலே கூடுவதொரு
ஹேது யுண்டோ என்று பார்த்து
அது கூடாமையாலே
பின்னும் ஸம்ஸ்லேஷ த்வரையாலே கிலேசிக்கிற பிரகாரத்தைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் கலங்கி யுரைத்த பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனைக் கூடுகைக்கு
கூடல் இழைத்து அது கலங்குகையாலே ஈடுபடுகிற
நாயகியைக் கண்டு
தோழி கலங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி –
கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –
மின்னிடை மடவார்கள் -6-2-

பதவுரை

மாலே–எம்பெருமானே
ஆழி–கூடல் வட்டமானது-கடலை என்று நம்பிள்ளை நிர்வாகம்
சிதைக்கின்றது–காரியத்தைக் கெடுக்கின்றது
என்று–என்ற காரணத்தினால்
ஆழியை–அக்கூடல் வட்டத்தை
சீறி–கோபித்து
தன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற–உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது–உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய் பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து–இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது–செய்யத்தக்கவை
அறியேன்–யான் அறிகின்றிலேன்.

வியாக்யானம்
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி
ஆழி என்று கூடல் வட்டம்
கூடல் வட்டமானது கார்யத்தைச் சிதையா நின்றது என்று
அந்த ஆழியை வெறுத்து

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடும்
தன்னுடைய சீரிய அடியாலே அழிக்கிற
மேனாணிப்போடும்

சீரடி என்று
சிவந்த அடி -என்றுமாம்
சீறடி -என்றும் சொல்வர்

மாலே
பெரியவனே
இவள் ஆவி அழித்த பெருமை
பெரிய நீ காணத் தகும் என்று கருத்து

அன்றியே
மாலே உனது தண்டார்-தண் தார் -என்று
மேலோடே கூட்டி
நீ தன் பக்கல் பண்ணின வ்யாமோஹம் அறிந்தவள் ஆகையாலே
உன் மாலையிலே நசை பண்ணினாள் என்றுமாம் –

உனது தண் தார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
உன்னுடைய செவ்வி மாறாத பூ தழைக்கிற
குளிர்ந்த
தர்ச நீயமான திருத்துழாயைச் சூடுகைக்கு
அதிலே நிரந்தர சித்தையாய்க் கொண்டு

தார் என்று
மாலை ஆகவுமாம்

பதைக்கின்ற
கிடந்த இடத்தில் கிடக்க மாட்டாமல்
கிலேசிக்கிற

கூடலைக் காலிட்டு அழிக்க வல்லவளாய் இருக்க
மாட்டு கிறிலள்

மாதின் திறத்து
கிலேச சஹமல்லாத மார்த்வத்தை யுடைய இவள் பக்கல்

அறியேன் செயற் பால் அதுவே
செய்யத் தக்கது அறிகிறிலேன்

இவளைப் பதைப்பிக்கிற நீயே
பரிஹாரம் அறியுமத்தனை என்று கருத்து –

இத்தால்
சிதைக்கின்ற தாழி என்று
தன் கையில் வியாபாரம்
ப்ராப்ய லாப ஹேதுவாகை அரிது என்றபடி

ஆழியை சீறி -என்று
ஸாத்ய உபாயத்தில் அனுபாதேயத்வ புத்தி பிறந்தபடி

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடு -என்று
அனுபாதேயத்வ புத்தி பிறந்தால்
அவ் வுபாயங்களைக் காற்கடைக் கொண்டு பரித்யஜிக்கும் இடத்தில்
இவ்வதிகாரியினுடைய ஸாமர்த்யம் சொல்லுகிறது

அதாவது
ஸ வாஸன தியாக ஸாமர்த்யம்

மாலே -என்று
விட்டுப் பற்றும் விஷயத்தினுடைய
வாத்சல்யாதியாயும்
ஞான சக்தியாதியாயும் யுள்ள
குணங்களின் பெருமை சொல்லுகிறது –

(மாமின் அர்த்தமும் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள்
அஹமின் அர்த்தமும் -ஆச்ரித கார்ய ஆபாத குணங்கள் )

உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் -என்று
இப்படி அவிளம்ப உபாய பரிக்ரஹத்துக்கு அடியான த்வரையை ஜநிப்பிக்கும்
விஷய போக்யதா அதிசயம் சொல்லுகிறது –

அதுவே மனமாய் பதைக்கின்ற -என்று
போக்ய விஷயத்தில் ப்ராவண்யம் விளம்பத்தைப் பாராமல்
ஆர்த்தியை ஜெநிப்பிக்கும் என்கிறது

மாதின் திறத்து -என்று
ஆர்த்தி விஞ்சினாலும்
ஸ்வரூபம் ப்ரவ்ருத்தி யோக்யம் அன்று என்றபடி

அறியேன் செயற் பால் அதுவே -என்று
ஏவம் விதமான அதிகாரம் யுடையாருக்கு
ஸாத்ய உபாயத்தில் ஞானமே பிடித்தில்லை என்றதாயிற்று –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழில் திருத்தாயார் வார்த்தையாகச் சொன்னதுவும்
ஆழ்வார் தமக்குப் பிறந்ததோர் விசேஷம் இறே
அவன் ரக்ஷகன் என்னும் இடம் தோற்றச் சொன்ன வார்த்தை இறே
இது தான்
அவனுடைய ரக்ஷகத்வத்தில் கண்ணழிவு அற்று இருக்க
அப்போதே வந்து உதவாமையாலே
இவருக்குப் பிறந்த பதற்றத்தைச் சொல்லுகிறது

கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரவு தாழ்த்து
ஆற்றாமை மீதூர்ந்து
பிரிந்தார் ஒதுங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே
கடற்கரையிலே இருந்து கூடல் இழைக்க பலகால் இழையா நின்றால்
ஒரு கால் அல்லா ஒரு கால் சிதறும் இறே

ததா கதாம் தாம் வ்யதிதா மனிந்தி தாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீன மானஸாம்
ஸூபாம் நிமித்தானி ஸூபானி பேஜிரே நரம் ஸ்ரியா ஜூச்ட மிவோ பஜீவின–ஸ்ரீ ஸூந்தர -29-1-
தன் தபஸ்ஸால் வந்த வெளிச்சிறப்பை யுடையனாய்
ப்ரஹ்மாவின் பக்கலிலே லப்த ஞானானுமாய்
அர்த்த தத்வம் இருந்தபடி பேசுவதாகப் புகுந்தவனுக்கும்
இன்னபடி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது
அவற்றால் ஐயத்தை இல்லாததும் ஐயத்தை சொல்லப் போகாது இறே
ஓடுகிற ஆற்றாமைக்கு எல்லாம் ஆஸ்ரயம் இல்லை
கருமுகை மாலையை வெய்யிலில் இட்டால் போலே இவளுக்கு இவ்வாற்றாமை

வ்யதிதாம் -ஆரண்ய -29-1-
இப்படிச் சொல்லிச் சொல்லும் அத்தனை

அநிந்திதாம்
அத்தலையால் வரில் வரும் அத்தனை
அவனை அறிந்தால் இருக்கக் கடவ படியிலே இருந்தாள்

வ்யபேத ஹர்ஷாம்
சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தால் போலே
இதுக்கு முன்பு ஹர்ஷம் புகுந்து போனமையும் இல்லையோ –

——–

அவதாரிகை
இப்படி அனுபவ த்வரையாலே ஆர்த்தரான இவருக்கு
அனுபவ யோக்ய காலம் ஆர்த்தி அதிசய ஜனகமாய்க் கொண்டு
ஸந்நிஹிதமான அளவிலே
ஸ்மாரகமான லௌகிக பதார்த்தம் பாதகத்வேந ஸஞ்சரிக்கிற படியைக் கண்டு ஈடுபட்டு
அனுசந்தித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாமையின் மேலே
வாடைக்கு இரங்கின தலைமகள் பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார்

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35-

பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –
மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –
வாயும் திரையுகளும் -2-1-

பதவுரை

பால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம்
பிறைச் சந்திரனாகிய பால் மாறத வாயையுடைய (தனது) இளங் குழந் தையை
ஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனை யிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும்–வருந்தி அழப் பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு–திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு–ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான்–கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து–வந்து
இது ஓர் பனி வாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது–(என்மேல்) தடவுகின்றது; அந்தோ!

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிய பால்வாய்ப் பிள்ளையைப் பக்கத்திலே கொண்டு
பகலாகிற நிர்வாஹகனை இழந்த மேலை இடத்து யுண்டான திக்காகிற பெண்
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்புதலை உற்றது
என்னலாம் படியான மாலைக் காலமானது

பால்வாய்ப் பிறைப்பிள்ளை என்று
தன்னிடத்து வாய்ந்த பிறைப்பிள்ளை என்றுமாம்

பிள்ளை ஓக்கலைக் கொண்டு என்று
பிள்ளையாகிய சுற்றத்தைக் கொண்டு என்றும் சொல்வர்

ஓக்கலாவது –
சுற்றம்

பகல் என்று
ஆதித்யனைச் சொல்லிற்றாகவுமாம்

இத்தால்
மாலைக் காலமானது நாயகனைப் பிரிந்த பெண் பிறந்தாரை வருத்தும் என்று
தோற்றுவித்ததாயிற்று

உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
தன்னதான லோகத்தை பராபிமான கிலேசம் புகுராமல்
எல்லை நடந்து
தன் கால் கீழே இட்டுக் காய்ந்த பெரியவனிடத்து
சேஷித்வ ஸூசகமான திருத் துழாய்க்கு ஆசைப்பட்ட நெஞ்சை யுடையவருக்கு
மாலை யுபகரித்த சத்தா மாத்ரத்தை ஒன்றும் சோராத படி

சோல்வான் புகுந்து
கொள்ளுவதாகப் புகுந்து

இது வோர் பனி வாடை
முன்பு வந்த வாடைகள் போல் அன்றியே
பெண் பிறந்தாரை நடுங்குவிக்கைக்கு அத்விதீயமாய் இருபத்தொரு வாடை –

துழா கின்றதே
துழாகின்றது

சத்தை கிடந்த இடம் தேடித் தடவா நின்றது என்று இரங்கி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
பால்வாய் -என்று தொடங்கி
மாலை -என்று காலத்தைச் சொல்லுகையாலே
அனுபவ யோக்ய காலம் ஸந்நிஹிதமானால்
தன் பக்கல் தோற்றின ஞான ஏக தேசமே அவசேஷிக்கும் படி
மஹா ப்ரகாசகமான விவேகமும் குலைந்து மேலான திக்காய் இருக்கிற
பாரதந்தர்யம் யுடையாருக்கும் ஆர்த்தி அதிசயிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

(பிள்ளை கையில் -கொஞ்சம் ஞானம் இவளுக்கு மிச்சம்
மேலைத்திக்கு -பாரதந்தர்யம் அறிந்த
விவேக ஞானம் குலைந்து புலம்புகிறாள் )

உலகளந்த என்று மேலுக்கு
அசாதாரண சர்வ சேஷியானவனுடைய போக்யதையிலே ஈடுபட்டார்க்கு
போக யோக்ய கால ஸந்நிதியால் வந்த ஆர்த்திக்கு மேலே
ஸ்மா ரகமான பாதக ஸந்நிதி சத்தையையும்
குலைக்கப் ப்ரவர்த்தியா நிற்கும் என்றதாயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
இங்கே சேஷித்துக் கிடந்ததாகத் தான் இது இப்படிப் படுகிறது
தவிர்ப்பதற்காக வந்து புகுந்தது

இதுவோர் பனிவாடை
இதுவோர் சந்த்ர உதயமும் ஒரு ஸந்த்யையும் ஒரு சமுத்திர கோஷமும் இத்தனை சமுதாயம் வேணுமோ
இது அடையச் செய்தது என் என்று வந்து புகுந்தது

துழா கின்றதே
இங்கு ஏதேனும் தொங்கிற்று யுண்டோ என்று
துழாவிக் கொண்டு வாரா நின்றது

ஸ்வா பதேசம்
இத்தால்
சந்த்ர உதயம்
அத்தால் வந்த பரிச்சேதம்
இவற்றை யுடைத்தான இந்நிலத்திலே பொருந்தாதே
இது இல்லாத அகால கால்யமான தேசத்தில் அல்லது பொருந்தாத படியைச் சொல்லுகிறது –

—————–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
மாலையும் வந்தது மாயன் வாரான் -திருவாய் -9-9-9-என்று
மாலைக்கு ஆற்றாமைப்படும் மகளைப் பரிதபிக்கிற வாடையால்
நலிவு படுகிற இவளைக் கண்ட
திருத்தாயார் பயப்படுகிறான்

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிற பிள்ளை பால்வாய்ப் பிள்ளை யாயிற்று
மேற்புறமான திக்கானது
பகலாகிற பர்த்தாவை இழந்த ஸ்திரீயானாள்
இவள் தனது முலைப்பால் உண்கிற பிறப்பிள்ளையைத் தன் ஒக்கலிலே வைத்துக் கொண்டவளாய்
தாத் காலிக பக்ஷி ஸமுத்ர கோஷத்தாலே புலம்பா நின்றாள்
என்னாலான மாலை -ஸந்த்யா காலம் நல்கிற்றை எல்லாம் என்று அந்வயம்

ஆர்க்கு என்ன
உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு
என்று அந்வயம்
உலகு எல்லாம் எனக்கே சேஷம் என்கிற வ்யாமோஹத்தாலே
அத்தைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்
இடத்தில் யுள்ள துழாய் வேணும் என்கிற மனஸ்ஸூ யுள்ளாருக்கு என்றபடி

இவர்கட்க்கு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
உபகரித்தது களை எல்லாம் அபஹரிக்குமதாய்

மாலை வந்த போதே மாயனும் வருவான் என்று பிராணங்களை தரிக்கவும்
கண் விழிக்கவும் பெற்றாள்
இத்தை அபஹரிக்குமதாய்

புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
முன்பு வந்த வாடை போல் அன்றிக்கே
பனி யாகிற நஞ்சோடே கலந்த வாடை
இவள் பிராணங்களை அபஹரிக்க வேணும் என்றே அதுகளுக்கு
இருப்பிடத்தை எல்லாம் தேடித்தடவா நின்றது என்று
அத்தைத் தான் பொறாமல் பயப்படுகிறாள் –

———–

அவதாரிகை
இப்படி கால சந்நிதியிலும்
போக ஸந்நிதி இல்லாமையாலே
மோஹ ஜனகமான விளம்ப அஷமத்வத்தால் உண்டான இவருடைய
ஆர்த்தி அதிசயத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
ஈஸ்வரனுடைய நைர் க்ருண்ய சங்கையைப் பண்ணி வெறுத்த பிரகாரத்தை
இருளுக்கு ஈடுபட்ட தலைமகள் ஆற்றாமை கண்ட தோழி
தலைமகனான ஈஸ்வரனுடைய கொடுமை கூறின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் –
துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –
ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

பதவுரை

துழா நெடு சூழ் இருள் என்று–(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட
வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த–(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும்–இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ–இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ–நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக
(துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக் கொண்டு)
வழா நெடு துன்பந் தன்–தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று–என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார்–(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ–அந்தோ!
இலங்கை–இலங்காபுரியிலுள்ள
குழாம்–கூட்டமான
நெடுமாடம்–பெரிய மாளிகைகளை
இடித்த–(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார்–தலைவருடைய
கொடுமைகளே–கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவும்படி கண்ணிட்டுப் பதார்த்தம் காண ஒண்ணாத படியான
முடிவின்றியே சூழ்ந்த இருள் என்று சொல்லப்படுவதாய்

தம் தண் தராது பெயரா
தன்னுடைய குளிர்ந்த மாலையைப் பேரிட்டுக் கொண்டு வியாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
இதுக்கு முன்பு தோற்றி அறியாத கல்பம் தோற்றின
இவ்வளவிலும்

ஈங்கு இவள்
இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாத இவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வழுவாத பெரிய துன்பத்தை உடையவள் என்று

இரங்கார்
பர துக்கம் பொறுக்க மாட்டாத இரக்கத்தைப் பண்ணுகிறிலர்

அம்மனோ
என்று கொடுமைக்கு அஞ்சி உரைத்தல்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
அரணை யுடைத்தான லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்தலாலே
பெண் பிறந்த ஜாதிக்காக உபகாரகராய் இருக்க
இவை சில கொடுமைகள் இருந்தபடி என் என்கிறது

நெடிய இருள் இறே என்றும்
இருள் பொறுக்க மாட்டாள் என்றும்
துக்கம் கனவிது என்றும்
இரங்குகைக்கு ஹேது பஹுளமாய் இருக்க
இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்றபடி –

இத்தால்
ப்ராப்ய விஷயத்தில் போக்யதையை வ்யாஜமாகக் கொண்டு
மோஹ அந்தகாரமாய் முழுக்க நடக்கும்படியான விளம்ப அஷமத் வத்தால் வந்த
கால தைர்க்யம் விஞ்சின அளவிலும்
இப்படி இருள் தரும் மா ஞாலத்திலே ஸ்வ துக்க நிவர்த்தனத்தில் அஸக்தரான இவர்
அலாப நிபந்தனை துக்கத்தாலே ஈடுபடுவர் என்று கிருபை பண்ணு கிறிலர்

தேவ்யா காருண்ய ரூபயா லஷ்ம்யா சஹா -ஸ்ரீ லஷ்மி தந்திரம் –28-14-என்று
கிருபை தனக்கு வருகிற துக்கமும் போக்கக் கடவ அவர்
இரங்காக் கொடுமைகள் இருந்தபடி என்
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

(கிருபை என்னும் பெயர் கொண்ட சீதாப் பிராட்டிக்கு –
காருண்யமே ரூபமாக வந்த பிராட்டி –
அவன் கிருபையையையே தூண்டுமவள் அன்றோ )

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழ்
ஸந்த்யா காலமும் வாடையும் நெளிந்தபடி சொல்லிற்று
அதுக்கும் மேலே
இருளும் வந்து தோற்றிற்று

வியாக்யானம்
துழா
இதுக்குத் தேடிப்பிடித்து நலிகைக்கு ஒரு ஸம்பந்தம் இல்லையீ
ப்ராணன்களோடே ஒரு ஸம்பந்தம் உண்டு இறே வாடைக்கு

நெடும் சூழ் இருள் என்று
எல்லை காண ஒண்ணாத படி இருப்பதாய்ப் பரந்து வருகிற இருள் என்று
ஒரு பேரையிட்டு
தார்மிக வேஷத்தைக் கொண்டு நலிவாரைப் போலே

ராத்ரியினுடைய வேஷம் தார்மிக வேஷமோ என்னில்
அதுக்கானால் ஒரு அவதி உண்டு இறே

வேறு ஒன்றினுடைய வடிவைக் கொண்டு நம்மை நலிகைக்கு நாம் செய்வது என் என்னில்
தன் தண் தராது பெயரா
வழி போவாரை யடைய
நீ காண் குதிரை கொண்டு போந்தாய் -என்று
சகர புத்திரர்கள் நலியத் தொடங்கினால் போலே

ஸ்வபாவமான படி என் -என்கிறாள்
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
அபிமத விஷயத்துக்காக அவ்வரணை அழித்து உள்ளே புக்கு உபகரித்தவர் இப்போது
பிறர் நோவு தமக்குப் போது போக்காகப் புத்தி பண்ணி இருந்தாராகாதே -என்று
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்யும் படி

அங்கன் அன்றிக்கே
வர பலத்தாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாத அரணை யுடைத்தான
லங்கையை அழித்தது ஒருத்திக்காக என்று இருந்தோம்
அது அங்கன் அன்றிக்கே
இங்கனே கட்டளைப்பட்டு தர்ச நீயமாய் இருக்கிறது என் என்னும் பொறாமையாலே
அழித்தார் இத்தனை
அப்படி நம்முடைய ஸ்த்ரீத்வத்தால் வந்த அரணை அழிக்கைக்காக வல்லது
நம்மோடே ஸ்நேஹம் யுண்டாய் அல்ல -என்று
ஸ்ரீ திருமலை நம்பி வார்த்தை

ஸ்வாபதேசம்
இத்தால்
போக்ய யோக்கியமான காலமும் ஸம்ஸ்லேஷ சமயத்தில் அனுகூலமாமவை
அப்போது அனுகூல ஆகாரத்தாலே இப்போது பிரதிகூலமாய் நலிய நலிவு பட்டு
ஏதேனும் திசையிலும் குலையாத பகவத் பக்தியில் யுண்டான ரக்ஷகத்வ விஸ்ரம்பமும் குலைந்து
ஆற்றாமை கரை புரண்ட படியைச் சொல்லுகிறது –

——-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியுள்ள இவளுடைய ஆர்த்தி அதிசயத்துக்கு மேல்
இருளும் ராத்திரியும் இவளை
நலியுமது கண்டும் இவர் இரங்கிற்றிலர்
இவர் கொடுமைகளுக்கு நான் எத்தைச் செய்வேன் என்று
திருத்தாயார் வெறுப்பால் இன்னாதாகிறாள்

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவிப் கொண்டும்
முடிவும் இல்லாததாய்ச் சூழ்த்துக் கொண்டு வந்த இருள் என்று சொல்லப்படுமதாய்

தம் தண் தராது பெயரா
தன் தோளில் இட்ட திருத்துழாய் மாலையை ஆசைப்பட்டதே வ்யாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
என்றும் இங்கனே எழுச்சியும் வளர்ச்சியும் இல்லாமலும்
இன்று உள்ளதான கல்பமாய் இக்காலம் தோற்றின வளவிலும்

ஈங்கு இவள்
இங்கனே தனிமை பொறாமல்
அத்யா பன்னை யானவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வலுவாத பெரிய துக்கத்தை யுடையவன் என்று

இரங்கார்
இரக்கத்தைப் பானு கிறிலர்

அம்மனோ
புலியைக் கண்டு அஞ்சினால் போல் இது
இந்தக்கொடுமை யுண்டோ இன்று என்கிறாள்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்து உபகரித்தாருடைய
கொடுமைகள் இருந்தபடி என்

ஏக தாரா வ்ரதர் படி இங்கனே யாகாதே என்பதான வெறுப்பு இதில் –

———

அவதாரிகை
இப்படி ஆப்தரான இவ்வாழ்வார்
பகவத் விஷயத்தில் தமக்குப் பிறந்த அபி நவையான பக்தி தசையைத்
தம்முடைய ஞான தசையாலே அநு சந்தித்து
துர்க்கதமான ஸம்ஸார மார்க்கத்தில் இந்த ப்ரேம தசையானது நடந்ததாகை
அரிது என்று நொந்த பிரகாரத்தை
புணர்ந்ததுடன் போன தலைமகளுடைய கரத்தருமை நினைந்து
நற்றாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-

பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர் –
நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –
மண்ணை யிருந்து துழாவி -4-4-

பதவுரை

அரு வினையேன்–அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும்–வெகு காலம்
கண்ணன்–கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம்–நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி–வழிபட்டு
பெற்ற–அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான்–தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்
இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற–நடந்துபோன
சூழ்கடம்–பரந்த பாலை நிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர்–வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர்–பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய–கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால்–நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர்–இளைய வீரர்களது
துடி–பறைகள்
படும்–ஒலித்தலாகிற
கவ்வைத்து–ஆரவாரமுடையது.

வியாக்யானம்

கொடும் காற் சிலையர்
கொடிதான கோலை யுடைத்தான சிலையை யுடையவர்கள்
கோடுதல்-வளைதல்
கால் என்று சிலைக்கோடி
கோடிய காற் சிலையர் -என்றுமாம்

நிரை கோள் உழவர்
நிரை கொள்ளுகையை உழவாக யுடையவர்கள்
நிரை என்று -காலித்திரள்
உழவானது -இதுவே க்ருஷியாய் இருக்கை

கொலையில் வெய்ய கடுங்கால்
மாற்றார் எதிர்ப்பட்ட விடத்து கொலைத் தொழிலில் வெவ்வியரான கடிய காலை யுடையவர்கள்
அதாவது
சீக்ர காமிகளாய் எதிரிகளை அழியச் செய்கை

விளைஞர்
இந்த ஸுர்யாதிகளுக்கு ஈடான
பருவத்தின் இளமையை யுடையவர்கள்

துடி படுங்கவ் வைத்து
இவர்கள் பறை அறைவால் யுண்டான ஆரவாரத்தை யுடைத்து

அருவினையேன் நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணனுடைய ஸர்வ சமாஸ்ரயணீயமாய்
நிரதிசய போக்யமான திருவடிகளைக் கீர்த்த நாதி முகத்தாலே
ஆஸ்ரயித்துப் பெறப்பட்ட

தொடுங்கால் ஓசியும் இடை
தொடும் அளவில் முறியும் என்னும்படி
மெல்லிதான இடையை யுடைய

இள மான்
பருவத்தாலும்
தனிமையால் யுண்டான நோக்காலும்
முக்தமான மான் போலே இருக்கிறவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடக்கிற சூழ்ச்சியை யுடைய வழியானது

சூழ்ச்சியாவது
வெம்மையால் துயரை விளைத்தல் –

இத்தால்
இளமான் -என்று
பருவத்தையும்
ஸ்த்ரீத்வத்தையும் சொல்லுகையாலே
அபி நவையாய்
தாஸ்ய ப்ரீதி ரூபையான பக்தியை ஸூசிப்பித்த படி

தொடுங்கால் ஓசியும் இடை -என்கையாலே
பக்தி கார்யமான வைராக்யத்தின் முதிர்ச்சியைத் தோற்றுவிக்கிறது
அன்றியே
அந்நிய ஸ்பர்சம் யுண்டாகில்
மத்யே அவிச்சின்னமாம் படி யான
பக்தியின் மேன்மை சொல்லிற்றாகவுமாம்

நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-என்கையாலே
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான ஸமாதிபிர் நராணாம் ஷீண பாபாநாம்
கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கிறபடியே
பக்தி பிறக்கைக்கு உடலான அருமை தோற்றுகிறது

சென்ற சூழ் கடமே –என்று
இந்த பக்தி வர்த்திக்கிறது
ஸம்ஸார காந்தார மார்க்கத்திலே என்றபடி

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய-என்று
இம் மார்க்கத்தினுடைய விரோதி பூயஸ்தையைச் சொல்லுகிறது –
இவ் விடத்து பக்திக்கு விரோதிகளாவன விஷய அர்த்திகளான இந்திரியங்கள்

கொடுங்கால் சிலையார் என்கையாலே
பாதக ஸாதனத்தினுடைய ஸாமர்த்யத்தைச் சொன்னபடி

இதில்
கால் கொடுத்தலாவது
அபிராப்த விஷய அவகாஹநம் ஆகிற வக்ர கதி

கொடுமையான போது
இந்த்ரியங்களினுடைய அநர்த்தா வஹத்வம்

நிரை கோள் உழவர் -என்று
இந்த்ரியங்களுக்குப் பிரதி நியதமாய்க் கொண்டு நிரை நிரையான
ஸப்தாதி விஷயங்களை
கிரஹிக்கையே வ்ருத்தியாய் இருக்கை

கொலையில் வெய்ய-என்கையாலே
இச் சேதனனை பகவத் விஷயத்தை விஸ்லேஷிப்பித்து நலியும் இடத்தில்
க்ரூரங்களாய் இருக்கை

கடுங்கால் என்று
சீக்ர காரிகளாய் இருக்கை

இளைஞர்-என்று
நலியும் இடத்தில் சக்தி குன்றாது இருக்கை

துடி படுங் கவ்வைத்து-என்கையாலே
பலவா திந்த்ரியக்ராவோ வித்வாம் ஸமபி கர்ஷதி -என்று
பறை அறைவாரைப் போலே உண்டான பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது

ஆக
இந்திரிய பலாக்ராந்தமான ஸம்ஸார மார்க்கத்திலே
பகவத் பக்தி தசையானது நடக்க அரிது என்னும் இடத்துக்கு
நொந்து அருளிச் செய்தார் ஆயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரும் அளவும் தரித்து இருக்க மாட்டாதே
ஆற்றாமை மிகுகையாலே தனி வழியே புறப்பட்டு குரூரமான காட்டிலே
துஷ்ட ஸத்வங்களும் –
துர்த்வனிகளும்
துர்க்கதியுமான
தேசத்திலே போனாளாய்
அவளைத் திருத்தாயார் படுக்கையிலே காணாமையாலே
எல்லாப் படியாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே போன இவள் என் செய்கிறாளோ என்று
இவள் போன வழியைப் பார்த்து சோகிக்கிறாள்
திருக்கோளூரிலே புக்க பெண் பிள்ளையுடைய திருத்தாயாரைப் போலே
ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே அவளிலும் இவளுக்கு சோகம் அதிசயித்து இருக்கும் –
அன்றிக்கே
புணர்ந்ததுடன் போக்கிலே இவளுக்கு இரங்குகிறாள் ஆகவுமாம்
இவளுடைய ஸுகுமார்யத்தையும்
இவள் தான் ஸ்லாக்யையாய் இருக்கிற பொடியையும்
வழியில் அருமையையும்
அது தனக்கு ஓர் எல்லை இன்றிக்கே இருக்கிற பொடியையும் சொல்லிக் கூப்பிடுகிறாள்

வியாக்யானம்
கொடும் காற் சிலையர்
அவ்வழி தான் இருக்கிற படியைச் சொல்லுகிறது

கொடும் காற் சிலையர்
கொடிதான காலை யுடைத்தான சிலையை யுடையராய் இருப்பர்கள்
எப்போதும் ஓக்கக் கால் வளைந்த படியே இருந்துள்ள வில்லை யுடையராய் இருப்பர்கள்
பர ஹிம்ஸா த்வரையாலே போஜன சமயத்தோடு நித்ரா சமயத்தோடு வாசியற
எப்போதும் ஓக்க நாண் ஏறிட்ட படியேயாய் இருக்குமாயிற்று வில்லு

இப்படி ஏறிட்ட நாணி இழிய விடாதே இருந்துள்ள வில்லைக் கொண்டு இவர்கள்
கொள்ளும் பிரயோஜனம் என் என்னில்
நிரை கோள் உழவர்
நிரை கோள் உண்டு -கோ க்ரஹணம்
அதுவே யாத்ரையாய் இருப்பர்கள்
ரக்ஷகனாய் இருக்குமவன் கோ ப்ராஹ்மண -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-25-
ஹிதனாய் இருக்குமா போலே
இவர்கள் இவற்றின் ஹிம்சையே தங்களுக்கு வெள்ளாண்மை யாய் இருப்பர்கள்

கொடுங்கால்
நான் ஏறிடுகையாலே வளைந்து இருக்கை

சிலையர்
அது நிரூபகமாய் இறுக்கியபடி
அவன் கையும் திருவாழியுமாய் இருக்கிறாப் போலே இறே
எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கும் இறே -பெரிய திரு -87-
அவன் பர ரக்ஷகனாய் இறே இருப்பது
நா ஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம்ஸ்ரிதா -அயோத்யா -60-20-என்னுமா போலே
பயம் கெட்டு இருக்கிறது அன்று இறே இங்கு

என்னும்படி நாயகனும் தொடக் கூசும்படியான இடையாள்
மிகவும் இளமை யுள்ளவள்
இளமான் போல் காதராஷி யானவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடந்து போன பெரும் காடு இவ்வகையாக ஆயிற்று
அதிலே இப்படி போனாள் என்று சோகிக்கிறாள் –

——–

அவதாரிகை
இப்படி ஸம்ஸாரத்தின் துர்கதியை அனுசந்தித்து அருளினவர்
ஆஸ்ரித விஷயத்தில் ஸாம்யாபத்தி ப்ரதனாய்
ஸர்வ ஸமாஸ்ரயணீயனான ஸர்வேஸ்வரனுடைய நீர்மையை அனுசந்தித்து
நாம் அவனை ஆஸ்ரயித்து இருக்கையாலே
நாம் அவனோடு பரம ஸாம்யா பன்னராகைக்குக் குறையில்லை என்று நினைத்த பிரகாரத்தை
தலைமகனான ஸர்வேஸ்வரனுடைய திரு நிறத்தில் போலி கண்ட -நெய்தலைக் கண்ட –
தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(போலி கண்டு அழிதல் என்றும் மகிழ்தல் என்றும் கொள்ளலாம் )

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-

பாசுரம் -38-கடம் ஆயினகள் கழித்து தன கால் வன்மையால் –
தலைவனைப் பிரிந்த தலைவி போலி
கண்டு மகிழ்தல் -சொன்னால் விரோதம் இது -3-9-

பதவுரை

கடன் ஆயினகள் கழித்து–காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு–தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால்–தமது கால்களின் வலிமையால்
பல நாள்–அனேக காலம்
நீர் நிலை நின்ற–நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல்–இத் தவத்தினாலேயோ
நீலங்கள்–நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி–(கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும்
(த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும்–இந்த மண்ணுவகமும்
விண்ணும்–விண்ணுலகமும்
குலுங்க–நெகிழும்படி
உலகு–உலகங்களை
அளந்து–அளவிட்டு
நடம் ஆடிய–(இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான்–எம்பெருமானுடைய
உரு ஒத்தன–திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.
இம் மண்ணும் விண்ணும் குலுங்க–இந்த பூ லோகமும் ஊர்த்வ லோகமும் ஆச்சர்யப்பட்டு அசையும்படியாக
குடமாடி -ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் குடக் கூத்தாடியும்
வுலகளந்த-லோகங்களை த்ரிவிக்ரம அவதாரத்தில் ஆக்ரமித்தும்
நடமாடிய பிரான் உரு ஒத்தன -சஞ்சரித்த சர்வேஸ்வரனுடைய திரு மேனியோடே சாம்யம் உடைத்தாய் இருக்கின்றன
இது -இதற்குக் காரணம்
கடமாயினகள் கழித்து -தேவ பித்ரு ருஷி ருணங்கள் நிறைவேற்றி
தன் கால் வன்மையால் -தனது காலின் உரத்தினால்
பல நாள் தடமாயின -அநேக காலம் தடாகம் என்ற பேர் பெற்றவைகளில்
புக்கு நீர் நிலை நின்ற தவம் கொல்-பிரவேசித்து ஜலத்தில் சிரகாலம் வாஸம் பண்ணின தபஸ்ஸாய் இருக்கலாம்

வியாக்யானம்

கடமாயினகள் கழித்து
தனக்கு அனுபவித்து அற வேண்டும்படியான பாபங்களைக் கழித்து

தன் கால் வன்மையால்
தான் நின்ற அடி யுரத்தாலே

பல நாள்
அநந்த காலம்
பலம் பெறும் அளவும் என்றபடி

தடமாயின புக்கு
அகாதமான தடாகங்களிலே அவகாஹித்து

நீர் நிலை நின்ற
நீரிலே நித்ய வாஸம் பண்ணின

தவமிது கொல்
இது தபஸ்ஸாகக் கூடும் இறே

குடமாடி
பஞ்ச லக்ஷம் குடியில் பிறந்த கோப கோபீ ஜனங்கள் எல்லாம்
காணும்படி குடக் கூத்தாடி

யிம் மண்ணும் விண்ணும் குலுங்க
இந்த பூமியோடு
தேவ லோகத்தோடு
வாசி யற
தன் செயலிலே வ்யாகுலமாம் படியாக

இது கீழோடே சேரவுமாம்

வுலகளந்த நடமாடிய
அளக்கிற இடத்திலே
அநாயாசத்தாலே வல்லார் ஆடினால் போலே இருக்கை

பெருமான்
அந்நிய சேஷத்வத்தையும்
ஸ்வ ஸ்வா தந்தர்யத்தையும்
கழித்துக் கொடுக்கையாலே ஸர்வாதிக சேஷி யானவனுடைய

பெருமான் உரு
ரூபமேவாஸ்யை தந் மஹி மாநம் வ்யாஸஷ்டே -யஜுர் -5-1-4-என்கிறபடியே
பெருமை சொல்லுவதாக நிறம்

ஒத்தன நீலங்களே
நீலங்களானவை அவன் திரு நிறத்தோடு ஒத்தன

ஆக
இந் நிலத்துக்கு ஸாம்யம் உண்டாயிற்று
தன்னுடைய உத்பத்தி ஸ்தானமான தேசத்திலே
நித்ய வாஸம் தானே தபஸ்ஸூ ஆகையால் என்றதாயிற்று

(திருஅயோத்யையில் இருந்ததே ஹேதுவாக அன்று
சராசரங்களை வைகுந்தம் ஏற்றி அருளினாரே பெருமாள்
தவம் க்ஷேத்ர வாசமே )

இதுக்கு கடங்கள் கழிக்கை யாவது –
தபஸ்ஸூ பாபத்தைப் போக்கும் என்கிற ஸாம் யத்தாலே

இத்தால்
யாவத்த்ரியதே ஸா தீஷா -தைத்ரியம் -என்கிறபடியே
அநந்ய ஸாதனனாகிற அதிகாரிக்கு சரீர ஸ்திதி தானே
சாதன அனுஷ்டானம் என்னலாம் படி இருக்கை

அதில் கடமாயின கழித்து -என்கையாலே
கடம் என்று ருணமாய்
நாயம் ருணீ -பாகவதம் -என்கிறபடியே
இவ் வதிகாரியினுடைய ருண த்ரய அபகரணம் சொல்லுகிறது

தன் கால் வன்மையால் -என்கையாலே
வ்யவசாய சக்தியை ஸூசிப்பித்த படி

பல நாள் தடமாயின புக்கு -என்கையாலே
சீதமிவஹ்ரதம் -மோக்ஷ -4-50- என்கிறபடியே
வாசத் தடமான பகவத் விக்ரஹங்களிலே அவகாஹித்து என்றபடி
(நீராடப் போதுவீர் -)

நீர் நிலை நின்ற -என்கையாலே
ஸ்வ பாவமான நீர்மையிலே நிலை நிற்கை

தவமிது கொல் -என்கையாலே
அநு பாவ்யம் தானே பல ஸாதனம் என்னும்படி
அவிசேஷிதமாய் இருக்கை

குடமாடி இத்யாதியாலே
கிருஷ்ணனுக்கும்
த்ரிவிக்ரமனுக்கும் யுண்டான ஸர்வ ஸமாஸ்ரயணீயதையாலே
வந்த நீர்மையின் ஐக்யம் தோற்றுகிறது

உரு வொத்தன நீலங்கள் -என்கையாலே
ஸாம்யா பன்னரானவர்கள்
புஷ்பவத் ஸ்லாக்ய ஸ்வ ரூபர் என்கை யாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நெடுநாள் ஸம்ஸாரத்திலே இருக்கச் செய்தேயும்
பகவத் விஷயத்திலேயே அவகாஹித்த படி இறே
கீழ்ச் சொல்லிற்று

இப்பாட்டில்
பகவத் விஷயத்தில் அவகாஹித்த நெஞ்சு மீண்டு தரிக்கைக்காக லோக யாத்திரையை அனுசந்திக்கப் புக்கார்
அதுவும் பகவத் விஷயத்துக்கே உடலாய் இருக்கும் இறே
ஸம்ஸாரிகளானவர்கள் இங்குத்தை வாஸனையாலே அத்தை இங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்
இவர்கள் பகவத் விஷய வாஸனையாலே இத்தையும் அங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்

நோ பஜனம் ஸ்மரந் -சாந்தோக்யம் -8-1-2- என்கிற
முக்தனில் காட்டில் முமுஷுவுக்கு வாசி இது விறே –

ஸம்ஸார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நிற்கச் செய்தே அதுவும் பகவத் அனுபவத்துக்கு உடலாய் இருக்கும்
முதலிலே இது தன்னில் ஸ்ம்ருதி தானும் பிள்ளையாய் இருக்கும் முக்தனுக்கு

குருகைக் காவல் அப்பனை
ஜகத் ஈஸ்வரர்களுக்கு ஸம்பந்தம் இருக்கும் படி என் என்று கேட்க
எஜ்ஜகத்துக்கும் எவ்வீஸ்வரனுக்கும் நீ கேட்க்கிறது -என்றான்
சரீரம் யாதவாப்நோதி யச்சாப் யுத்த க்ராம தீஸ்வர -ஸ்ரீ கீதை -15-8-என்று
இந்திரியாதிகளோடே கூடி உபசயாத்மகமாய் இருந்துள்ள இச்சரீரம் ஆகிற இஜ்ஜகத்துக்கு
ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச் சொல்லா நின்றது இறே
இச்சரீரத்துக்கும் ஈஸ்வரனான ஆத்மாவுக்கும் யுண்டான ஸம்பந்தம் யாதொன்று அப்படி
இச் சரீர சரீரீ பாவம் ஜகத் ஈஸ்வரர்களுடைய சம்பந்தம் என்று உத்தரம் சொன்னான்

அவன் தானே -எனக்கு எம்பெருமானை ஸ்மரிக்கைக்கு விரகு சொல்ல வேணும் என்ன
நான் உனக்கு அது சொல்லுகிறேன்
நீ எனக்கு மறக்க விரகு சொல் என்றான்

ஆவது என் என்னில்
ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதனுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன்
அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கு இல்லை இறே
விசேஷண அம்சம் தோற்றா நிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே என்றபடி

இப்படி பகவத் விஷயத்திலே அவகாஹித்து இருக்கிற இவர் லோக யாத்திரையில் கண் வைத்தார்
சில நீரிலே நிற்கிற நீலங்கள் வந்து கண்ணுக்கு இலக்காயிற்று
இவை அவனோடு ரூப ஸாம்யத்தை யுடையனவாய் இரா நின்றன
இவை நெடுநாள் நீரிலே நின்று பண்ணின தபஸ்ஸூ யுடைய பலமாகாதே -என்கிறார் –

குடக்கூத்தாடி ஸஹர்ஷ சீர கம்பம் பண்ணும்படியாக சர்வ லோக க்ரஹணத்தைப் பண்ணி
நடந்து அருளின பெருமை யுள்ளவருடைய திருமேனி போன்றி கோள் நிறத்தால்

நீலங்களே
கரு நெய்தல் பூக்கள்

——–

அவதாரிகை
இப்படி அதிகார சம்பத்தியான பல ஸித்தியை அனுசந்தித்தவர்
இதுக்கு அடியான
பகவத் கடாக்ஷத்தையும் அனுசந்தித்து
அவ்வனுசந்தானத்தின் முதிர்த்தியாலே ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண் அழகானது
ஏழையர் ஆவி -யில் போலே
உரு வெளிப்பாடாம் படி பிரகாசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் –
தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –
ஏழை யாராவி -7-7-

பதவுரை

நீலம்–நீலமணி மயமான
தடவரை மேல்–பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து–பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும்–எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை
(எவையென்னில்)
பொங்கு முந்நீர்–கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்
விசும்புக்கும் பிரான்–விண்ணுலகத்துக்குத் தலைவனும்
மற்றும் நல்லோர்பிரான்–மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்
கோலம் கரிய பிரான்–திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான
எம்பிரான்–எம்பெருமானுடைய
கண்ணின்–திருக்கண்களினுடைய
கோலங்களே–அழகுகளேயாம்.

வியாக்யானம்
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல
நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே
தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே

பொலிந்து
தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி
அழகு விஞ்சி

எமக்கு எல்லா இடத்தவும்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே
ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்
கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்

இத்தால்
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல்
முந்நீர் ஆனால் போலே
அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை
ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி
போக ப்ரதனாயக் கொண்டு
தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி

விசும்புக்கும் பிரான்
வெளி நாடான நித்ய விபூதிக்கும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே
தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

மற்றும் நல்லோர் பிரான்
முன் சொன்ன லீலா விபூதியிலும் அந்தர் பவியாதே
நித்ய விபூதியிலும் புகப் பெறாதே
தன் குணங்களில் ப்ரவணரான முமுஷுக்களுக்கு
பாஹிமாம் புண்டரீகாக்ஷ -ஜிதந்தே -8- என்கிறபடியே
தனது கடாக்ஷ விசேஷத்தாலே உபாய பூதனாய் ரக்ஷிக்குமவன்

கோலம் கரிய பிரான்
இக் கண் அழகுக்குப் பரபாக ரஸத்தை யுண்டாக்கக் கடவதான
திரு மேனியில் கருமையாலே உபகாரகனானவன்

எம்பிரான்
இக் கண் அழகையும்
வடிவு அழகையும்
காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய

கண்ணின் கோலங்களே –
கண்களின் அழகுகள் ஆனவை
அதாவது
1-பரபாக சோபையும்
2-மிளிர்த்தியும்
3-பெருமையும்
4-சிவப்பும்
5-குளிர்த்தியும்
தொடக்கமானவை

கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்கள்
நீலத் தடவரை மேல் நெடும் தடங்கள் போலப் பொலிந்து
எமக்கு எல்லா விடத்தவும்
என்று அந்வயம்

இப்பாட்டு
கிளவி மர்யாதையில் நாயகனான ஈஸ்வரனுடைய உரு வெளிப்பாட்டைத்
தோழிமார் தொடக்கமானார்க்கு நாயகி உரைத்ததாகையாலே
இவ்வாழ்வாருடைய ஸ்வ அனுசந்தானம் இன்றியே
ஸூஹ்ருத்துக்களை நோக்கிச் சொன்னதாகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சில நீலங்களைக் கண்டு
இவை பண்ணின தபஸ்ஸுக்குப் பலம் பெற்றன போலே இரா நின்றன
நம்முடைய விரஹ தாபத்துக்கே யாகாதே பலம் இன்றிக்கே ஒழிகிறது
என்று அவ்வழியாலே அவற்றோடு போலியான வடிவை நினைத்து
அவ்வழியாலே திரு முகத்திலே அழகை அனுசந்தித்து
அது தான் போய்
ப்ரத்யக்ஷ சாமானாகரமாய்
அத்தாலே அணைக்கக் கணிசித்துக்
கைக்கு எட்டாமையாலே நோவு பாடவும்
அவ்வழகு ஸ்ம்ருதி விஷயமாய் உரு வெளிப்பாடாய்
நோவு பட்டுக் கிடக்கிற படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

நீல இத்யாதி
ஒரு நீல கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது
ராம கமல பத்ராஷ -ஸூந்தர -35-8-
பெரு வெள்ளத்தில் சில சுழிகள் போலே யாயிற்று திருக்கண்கள்
ஸர்வாங்க ஸூந்தரராய் இறே இருப்பது
அதன் மேலே இறே கண் அழகு
விகாசம் செவ்வி குளிர்த்தி தண்ணளி இவற்றாலே தாமரை போலே யாயிற்று இருப்பது
கண் அழகுக்கு எல்லை எவ்வளவு என்னில்
ஸர்வ ஸத்வ மநோ ஹர -ஸூந்தர -35-8-
இடக்கை வலக்கை அறியாத திர்யக் ஜாதியிலே பிறந்த நாங்களும் அகப்படும் படியாயிற்று இதில் அழகு

எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -திருவாய் -3-3-5- என்றார் இறே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த -திருவாய் -3-3-4- என்னக் கடவது இறே
என்னில் குறைந்தார் இல்லை
நான் அகப்படத் தொழுதேன் என்று இருக்கிறேன்
நான் அகப்பட்ட பின்பு இனி யார் தான் என்று இருக்கிறார்
ரூப தாக்ஷிண்ய சம்பன்ன -ஸூந்தர -35-8-
அதுக்கு அவ்வருகு சில சுழிகளாய் ஆயிற்று இவை
வடிவு அழகும்
ஆனு கூல்யமும்
போக்தாக்கள் இல்லாமையாலே குமர் இருந்து போம் இத்தனை
ஸர்வ ஸத்வ மநோ ஹரத்வம் கண் அழகோடே அற்றது இறே

ஸம்பன்ன
இவை கூடு பூரித்துக் கிடக்கும் அத்தனை

ஸம்பன்ன ப்ரஸூத
இவை தான் ஒவ் பத்திகமாய் இருக்கை

பெருமாள் வடிவு அழகைக் கழியப் பேசினாய்
இன்னம் இப்படி இருபத்தொரு ஆஸ்ரயம் யுண்டோ இல்லையோ என்ன
ஓன்று உண்டு
ஜனகாத்மஜே
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -திருவாய் -10-10-6-என்கிறபடியே
தேவரீரும் உண்டு

எமக்கு எல்லா விடத்தவும்
இக்கண் அழகின் கீழே நாடு ஜீவித்துக் கிடவா நின்றது இறே
நமக்கே இறே பாதகம் ஆகிறது
கண்டு அனுபவிக்க இழிந்தால்
ப்ரத்யக்ஷ சாமானா காரமாய் அவ்வருகே சில பரிமாற்றத்தைக் கணிசித்துக் கை நீட்டுவது

முதலானவைகளில் பரபாக ஸ்ரீ யை உண்டாக்கி அவைகளை அனுபவிப்பிக்கும் உபகாரகன் –

எம் பிரான்
இவ்வெல்லா வகையிலும் என்னை அனுபவிப்பித்து என்னை அடிமை கொண்ட உபகாரகன்

ஏவம் பூதகனுடைய கண்ணின் கோலங்களே எமக்கு எல்லா விடத்த்வும் என்று
அந்வயம்
திருக்கண்களினுடைய அலகுகள் இப்போது எங்கும் அனுபாவ்யமாகா நின்றது –

———-

அவதாரிகை
இப்படி உரு வெளிப்பாட்டாலே வடிவு அழகை அனுபவித்தவர்
நேரே அனுபவிக்கப் பெறாமையாலே
தம்முடைய ப்ரகாஸம் அடையக் குலைந்து மோஹ அந்தகாரம் மேலிடும் அளவான படியாலே
இவ்வவஸ்தையில் ஆஸன்னரானார் தம்மை அத்தலைக்கு ப்ரஸாத பாத்ரமாக்கி
ஸமர்ப்பியாதே விளம்பிப்பதே என்று
ஸூஹ்ருத பூதரைக் குறித்து அருளிச் செய்த பாத்திரத்தை
பகல் பொழுது கழிந்து இருள் கண்டு இரங்கின தலைமகள்
உற்றார் விரைந்து கொடுப்பது என்றோ என்று
பாங்கிமாருக்கு உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-

பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –
இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –
மானேய் நோக்கு -5-9-

பதவுரை

கோலம்–அலங்காரத்தை யுடைய
பகல்–ஸூர்யனாகிய
களிறு ஒன்று–ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த–திரளாகப் பரந்த
நீலம்–நீலநிறத்தையுடை
கங்குல்–இரவாகிய
களிறு எல்லாம்–யானைகளெல்லாம்
நிறைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம்–பூ தேவிக்கும்
பொன் மாதின்–ஸ்ரீ தேவிக்கும்
மணாளன்–நாயகனான எம்பெருமான்
துழாய்–(தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து–தகுதியாகச் சூட்ட
என்னைமார்–எமது தாய்மார்
எம்மை நோக்குவது–என்னைப் பார்ப்பது
என்று கொலோ–என்றைக்கோ?

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
துவர் அணித்தால் போலே செக்கர் கோலத்தை யுடைத்தான ஆதித்யனாகிற களிறானது
அஸ்தமய பர்வதமாகிற கல்லிலே வாங்க

புய்த்தால்-வாங்குதல்
போக என்றபடி

இவ்விடத்து ஆதித்யனைக் களிறு என்றது
மேனாணிப்பாலும்
புகர் யுடைமையாலும்

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன
திரளாகப் பரந்த
நீல நிறத்தை யுடைத்தான
ராத்திரிகள் ஆகிற
ஆனை கள் எல்லாம் எதிர்பட்டன

கங்குழைக் களிறு என்றது
இருட்சியாலும்
திரட்சியாலும்

நேரிழையீர்
தகுதியான ஆபரணத்தை உடைத்தானவர்களே
மெல்லிய ஆபரணம் என்றுமாம்

ஞால பொன் மாதின் மணாளன்
ஞால மாதினுக்கும்
பொன் மாதினுக்கும்
மணாளன்

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து
திருத் துழாய் மாலையை நம்முடைய செறிந்த குழலிலே முற்படவே சூட்டி
தகுதியாகச் சூட்டி என்றுமாம்

என்னைமார்
என்னைமார் என்று மூத்தவர்களை சொன்னபடி

எம்மை நோக்குவது என்று கொலோ
எம்மை ரக்ஷிப்பது என்றாய் இருக்கிறது என்று
வரவை விரைவித்தல் வேண்டி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய -என்கையாலே
ராகோத்தரமான விவேக ப்ரகாஸம் மறையும்படியாக என்றபடி
(பக்தி பாரவஸ்யத்தாலே வந்த அஞ்ஞானம் -பேற்றுக்குத் த்வரிக்கப் பண்ணுமே )

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்-என்கையாலே
மோஹ அந்தகாரம் மேலிட்டமை தோற்றுகிறது

ஞால பொன் மாதின் மணாளன் -என்கையாலே
நாய்ச்சிமாரோபாதி
ஸம்பந்தம் அசாதாரணம் என்கிறது

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து -என்கையாலே
அத் தலையில் பிரசாத்துக்கு யோக்யமாய் இருக்கும் ஸ்வரூபம் என்கிறது

என்னைமார் எமமை நோக்குவது -என்கையாலே
பிரதமஜரான கௌரவ்யரே கடிப்பிப்பர் என்கிறது

என்று கொலோ -என்கையாலே
தத் விஷயமான அபேக்ஷையே இவ் வதிகாரிக்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று

(விருப்பமே நாம் செய்ய வேண்டியது
அடைவிப்பவன் அவனே
பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே )

இவ்விடத்தில்
நேரிழையீர் என்று
ஸூஹ்ருத் பூதருடைய ஆத்ம குண யோகத்தை ஸூசிப்பிக்கிறது –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
உரு வெளிப்பாடாய் நோவு படா நிற்கச் செய்தே
பகலும் கழிந்து ராத்திரியுமாய்
அது தான் அநேகம் வடிவுகளைக் கொண்டு நலிய நலிவுண்டு
நம்முடைய தசையைக் கண்ட பந்து வர்க்கத்தில் உள்ளார் நம்மை நோக்குவது என்றோ என்கிறாள்

இது பாங்கியரோடே கூடின தலைமகள் வார்த்தை யாதல்
அன்றிக்கே
தோழி வார்த்தை யாதல்
இவளுடைய தயநீய தசை இருந்தபடி ஒரு பகலை இரந்து கவிபாடும்படி யாயிற்று –

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
தர்ச நீயமான ஆதித்யனாகிற களிறு கல்லிலே போய்ப் புக
அஸ்தா சலத்திலே போய்ப்புக
வீர பத்நீ இறே
அவன் இருப்பில் புக்கிருந்து
த்வம் நீச -ஸூந்தர -21-16-என்னுமவள்
ராத்திரியிலே வந்தால் ஸர்வ இந்த்ரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே
வியசனம் அதிசயித்து ஆற்ற அரிதாய் இருக்கும்
பகலில் வந்தால் இந்திரியங்கள் பாளி பாய்கையாலே ஆற்றாமை ஆற்ற எளிதாய் இருக்கும் இறே

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம்
பகல் அனுகூலமாகையாலே ஒன்றாகச் சொல்லிற்று
ராத்திரி பாதகாதவத்தாலே அநேகமாகத் தோற்றா நின்றது இறே
ராக்ஷஸருக்கு ராம ஸஹஸ்ரமாய்த் தோற்றுமா போலே
குழாம் குழாமாகத் திரண்டு நீலமான நிறத்தை யுடைத்தான
கங்குல் யாகிற களிறு எல்லாம் எங்கும் பரம்பிற்றன
தான் என்னை யானை போலே விரும்பி வந்து இத்தனை யானைக்கு
இரையாக்கி இட்டு வைத்துப் போவதே –

நிறைந்தன நேரிழையீர்
இந்த ராத்திரி வியஸனத்துக்குத் தப்பி ஒப்பனை அழியாமை இருக்க
நினைத்து இருக்கிறார் நாலு மூன்று அபலைகள் ஆயிற்று
அதாவது என் எண்ணில்
மேலே எம்மை நோக்குவது என்று கொலோ -என்னா நின்றது இறே

இழை -என்று
ஆபரணமாய்
விலக்ஷணமான ஆபரணத்தை யுடையீர்

ஞால பொன் மாதின் மணாளன்
குற்றம் பொறுப்பிப்பார் இன்றிக்கே குற்றம் அறியாதார் வேணும் ஆயிற்று
இவளுக்கு இப்போது ஸா பராதராய் வர நின்றாரை ரக்ஷிக்கும் ஈஸ்வரன்
ஒரு ரக்ஷகனும் வேணும் இறே
ஒன்றும் கைம்முதல் இல்லாதாராயும் ரக்ஷிக்கும் பிராட்டி
குற்றம் கண்டு பொறுப்பிக்கும்
அதுவும் இல்லையாயிற்று இவளுக்கு
ஞாலம் ஆகிற ஸ்லாக்யமான நிருபாதிக ஸ்த்ரீத்வம்

மணாளன்
இக்குணங்களை யுடைய ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஓலக்கம் கொடுக்கும் போது தான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading