ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம் –
சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கடிமை-என்கிற-இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்து -என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினான் என்கிறார் –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்-
எம்பெருமான் பக்கலிலே ஜ்ஞான பக்திகளைப் பூரணமாக வுடைய வைதிகர்-
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தீ தேவா -என்கிறபடியே-வேதத்துக்கு பிராணனான பிரமேயம் (-இலக்கு -சார தமம் -)திருவாய்மொழி-திருவாய் மொழிக்கு பிரமேயம்-(-இலக்கு -சார தமம் -) பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-
பண்ணோடும் இசையோடும் பாடி என் நெஞ்சிலே பிரதிஷ்டிப்பித்தான்
கல்லைக் குழித்து நீரை நிறுத்துவாரைப் போலே கிடீர் செய்தது –
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு –
எல்லா மேன்மையும் சொன்னாலும் தகுதியான ஆழ்வார் எல்லாம் சொன்னாலும் அங்குத்தை பிரபாவத்தை-எல்லை காண ஒண்ணாத படி இ றே ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –
ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே-
இவர் திருவடிகளில் உண்டான பக்தி யன்றோ இவருக்கு அடியேன் ஆனதில் உண்டான பிரயோஜகம் –(நான் -அடிமை யானதால் பலன் பக்தி -அடியேன் ஆனதால் ருசி ஏற்பட்டது –ருசி வந்தால் தானே அடிமை ஆவோம் –பொருந்தாமை நாயனார் காட்டி அருளுகிறார் மேல் )
————————————————————————–
ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –
உமக்கு அருளின அருளுக்கு அவதி ஏது என்ன -என்னுடைய தண்மை பாராதே சகல வேதங்களினுடைய ரஹஸ்யார்த்தத்தை-எனக்கு உபகரித்தான் என்று -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் நம் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே என்று
ஆழ்வார் அருளிச் செய்தால் போலே இவரும் உபகார ச்ம்ருதியாலே ஆழ்வார் திருவடிகளிலே அருளிச் செய்கிறார் –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்-
பிரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தையே நிரூபகமாக உடையவர்கள் –
அநேக சாகை அத்யயனனம் பண்ணினவர்கள் என்றுமாம்
வேதத்தினுடைய பொருள் -சகல வேதங்களினுடைய ரகஸ்ய அர்த்தத்தை –
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
பிரதிபத்தி பண்ண அரிதாய் இருக்கிற வேத ரகஸ்ய அர்த்தத்தைக் கேட்டார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி பாடி-
மலையைக் குழித்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிஸ் ஸூ ஷிரமான என் நெஞ்சுக்கு இதுவே விஷயமாம் படி பண்ணினார் –
தக்க சீர் சடகோபன்-
சர்வேஸ்வரன் கவிகள் என்றால் தகுதியான கல்யாண குணங்களை யுடைய ஆழ்வார்
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றால் போரும்படி சர்வேஸ்வரன் இருக்குமா போலே
சர்வேஸ்வரன் கவிகள் என்றால் தகுதியாய்த்து ஆழ்வார் இருப்பது
ஏற்கும் பெரும் புகழ்வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வ ண் குருகூர்ச் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இ றே –
என்னம்பிக்கு –
என்னை விஷயீ கரிக்கைக்குத் தகுதியான பௌஷ்கல்யத்தை உடையவர்க்கு –
ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே –
அடிமையாக வேணும் என்று எனக்குப் பிறந்த ருசி –
அடிமையாகிற பிரயோஜனத்தொடே வ்யாப்தமாய் இருக்கும்
பகவத் விஷயத்தில் ருசி இவர்க்கு சரீர விச்லேஷம் பிறந்தால் அர்ச்சிராதி மார்க்கத்திலே ஒரு தேச விசேஷத்திலே-சென்றால் பெறக் கடவதே இ றே இருப்பது
ஆழ்வார் விஷயத்தில் பிறந்த ருசி அங்கன் அன்றிக்கே இச் சரீரத்தோடு ஆழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமைகளும்-செய்யலாம் படி பண்ணும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு
முனியே நான்முகனுக்கு அவ்வருகே இ றே பேறு ஆய்த்து
இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பம் இல்லை என்கிறது
அன்றே -என்றது ஆமே என்றபடி -அன்று எனக் கிளவியாம் எனத் தகுமே –
————————————————————————–
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்-அருளிச் செய்த வியாக்யானங்கள் –
கீழே ஆழ்வாருடைய குண கீர்த்தனம் பண்ணும்படி அவர் தமக்கு கிருபை பண்ணும் படியைச் சொல்லி
அதுக்குத் தண்ணீர்த் துரும்பான அநாதி கர்மங்களை ஆழ்வார் தம்முடைய பார்வையாலே பாறு படுத்தியத்தைச் சொல்லி
அப்படியான ஆழ்வாருடைய க்ருபா வைபவத்தை திக்குகள் தோறும் அறிவிக்கக் கடவேன் என்று தம்முடைய ஆதர விசேஷத்தைச் சொல்லி
கிருபா பர்யபாலயத் -என்றும் -அருளினன் -என்று தொடங்கி -ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -என்றது முடிவாக
ருஷிகளும் ஆழ்வார் தாமுமாக பகவத் கிருபையை ஆதரித்துப் போரா நிற்க
நீர் ஆழ்வாருடைய கிருபா பிரசித்தியிலே பிரவணர் ஆனபடி என் என்ன
பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபையே இந்த லோகத்தில் அபிவ்ருத்தம் ஆகையாலே என்றும் சொல்லி நின்றது கீழ் –
இதில் கீழே ஆழ்வாருடைய ஜ்ஞான பிரதானம் ப்ரஸ்துதம் ஆகையாலே அவர் சகல வேதாந்த தாத்பர்யமான அர்த்த விசேஷத்தை
தமக்கு அறிவித்த பிரகாரத்தைச் சொல்லி அதுக்கு ஈடான குணங்களை யுடையராகையாலே பூரணரான ஆழ்வார் விஷயத்தில்
சேஷ பூதன் பிரமமே யன்றோ அவர்க்கு அடிமை செய்கையிலே பிரயோஜனம் என்று உபகார ச்ம்ருதியாலே-அவருக்கு சேஷ பூதன் என்று பிரேம பூர்வகமாகப் பிறக்குமாதரம் அன்றோ அடிமையில் முடிந்த நிலம் என்கிறார் –(அன்பு -ஆதரவு -கைங்கர்யம் –மூன்று நிலைகள் –ஆதரவே ப்ரேமம் கைங்கர்யம் என்றுமாம் )
கீழ் நாலாம் பாட்டிலே ஆச்சார்ய விஸ்வாசம் சொன்னார்-
மேல் இரண்டு பாட்டாலே ஆச்சார்ய வைபவமும் அவனுடைய உபகார வைபவமும் சொன்னார்-
இதில் உபகார பிரகார உபபாதனம் பண்ணா நின்று கொண்டு தம்முடைய் க்ருதஜ்ஞதையைச் சொல்லுகிறார்-
ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு க்ருதஜ்ஞதையே வேஷமாய் இருக்கும் –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-
ஆழ்வார் தமக்கு அறிவித்த அர்த்தத்தின் சீர்மையை அருளிச் செய்கிறார் –
வேதியர்
வேதியர் ஆகிறார் -பாஹ்ய சாஸ்த்ரங்களை -காண்பரோ கேட்பாரோ தான் என்று கண்ணாலும் பாராதே செவியாலும் கேளாதே-நித்ய நிர்த்தோஷமான வேத பிரமாண நிஷ்டர் ஆனவர்கள்-
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை என்று இருக்குமவர்கள்-(பரம் -வேறு -உயர்ந்த இரண்டும் -இங்கு வேதம் தவிர வேறு சாஸ்திரம் இல்லை -கேசவனை தவிர தெய்வம் இல்லை )
மிக்க வேதியர்
அவ்வேதத்திலும் வேத வாதரதா -என்றும் த்ரை வித்யா மாம் சோமபா பூத பாபா -என்றும் சொல்லுகிறபடியே-
ஆபாத ப்ரதீதமாய் அல்ப அஸ்திரங்களான ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களான ஜ்யோதிஷ்டோமாதிகளையும்-புருஷார்த்த தத் சாதனங்களாக அறுதி இட்டிருக்கை அன்றிக்கே
உத்தம புருஷார்த்தமான பகவத் பிராப்தியே புருஷார்த்தம் என்றும் தத் சாதனமும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதி வாக்யோக்தமான வேதனம் ஆதல்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே என்கிற சரணாகதி ரூபமான சரம சாதனமாதல் என்று-வேதாந்த விஜ்ஞ்ஞானத்தாலே ஸூ நிச்சிதார்த்தராய் இருக்குமவர்கள்-(வேத ஞானம் -வேத விஞ்ஞனம் -வேதாந்த ஞானம் -வேதாந்த விஞ்ஞனம் -நான்கு நிலைகள் )
மிக்க வேதியர்
மிக்கார் வேதியர் என்று ஆழ்வார் பாடே கேட்கையாலே மிக்க வேதியர் என்கிறார் –
அன்றிக்கே மிக்க வேதியர் என்று சுடர் மிகு சுருதி என்கிறபடியே பிரதஷ்யாதிகளில் அதிகமான வேத பிரமாண நிஷ்டர் என்றுமாம்
வேதியர் வேதம்
ப்ரஹ்மணா நாம் தனம் வேத -என்றும்-அந்தணர் மாடு என்றும் சொல்லுகிறபடியே அவர்களுக்கு பரம தனமான வேதம்
வேதியர் வேதம்
வேதத்தை தங்களுக்கு நிரூபகமாகவும் தனமாகவும் உடையராய் இருப்பவர்கள்
வேதத்தின் உட்பொருள்
அந்த வேதத்தில் உண்டான அர்த்த விசேஷத்தை
வேதத்தின் பொருள்
அதாவது -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
வேதப் பொருளே என் வேங்கடவா -என்றும் -வேதாந்த விழுப் பொருள் -என்றும் சொல்லுகிறபடியே
சகல வேதங்களும் ஒரு மிடறாக ஓதித் தலைக் கட்டுவது பகவத் ஸ்வரூபாதிகளை இ றே
உட்பொருள்
அதில் தத் விஷய பிரதிபாதிதமான அம்சம் புறப்பொருளாய்-ததீய பிரதிபாதிதமான அம்சம் உட்பொருளாய் இருக்கும்
அதில் புறப் பொருளையே சொல்லி விடுகை அன்றிக்கே அதுக்கு ஹ்ருதயமான ததீய வைபவத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -இரண்டாலும் அருளிச் செய்தார்
நிற்கப் பாடி
1-துர்க்ரஹமான வேதார்த்தத்தை பிரதிபத்தி விஷயமாம் படி பாடி
நிற்கப்பாடி
2-கேட்டவர்கள் நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி பாடி என்றுமாம்
வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி
3-அது நிற்கும் நான்மறை யானாப் போலே அதில் அர்த்த ரூபமான இதுவும் சர்வ காலமும் அழிவின்றிக்கே நிற்கும் படியாகப் பாடி என்றுமாம்
வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி
4-வைதிகர் ஆனவர்கள் அதுக்கு ஹ்ருதயமான அர்த்த தாத்பர்யத்தை அறிந்து அதிலே நிஷ்டராம் படி பாடி
என்நெஞ்சுள் நிறுத்தினான்
அது தன்னை என் நெஞ்சிலே ஸூ பிரதிஷ்டிதமாம் படி பண்ணினார்
என் நெஞ்சுள் நிற்கப்பாடி நிறுத்தினான்
பாடுகிறபோதே என் நெஞ்சில் தங்கும் படிக்கு ஈடாக விரகிட்டுப் பாடி நிறுத்தினான்
நெஞ்சுள் நிறுத்தினான்-
அது தன்னிலும் மேல் எழச் சொல்லி விடுகை யன்றிக்கே அந்தரங்கமாக உபதேசித்தார்
என் நெஞ்சுள் நிறுத்தினான்
புன்மையே வேஷமான என் நெஞ்சிலே படுத்தினார்
நிறுத்தினான்
உபதேசித்தவர் தாமே குலைக்கிலும் குலையாத்படி திருட அத்யவசாயமாக உபதேசித்தார்
என் நெஞ்சுள் நிறுத்தினான்
தத் விஷயமும் உட்பட வூடு போகாத என் நெஞ்சிலே ததீய வைபவம் உட்பட நடையாடும்படி பண்ணினார் –
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
வேதார்த்தங்களை வகுத்து அதுக்குப் பாசுரம் இட்டுத் திருவாய் மொழி பாடினால் போலேயோ -அப்பரமார்த்தங்களை என் நெஞ்சிலே படுத்தின அருமை –
வேதார்த்தங்களைத் திருவாய் மொழியிலே சேர்த்து -அத் திருவாய் மொழியின் அர்த்தங்களை என் நெஞ்சிலே சேர்த்தார்
ஆசார்ய வைபவம் கைபட்டவனுக்கு ஆய்த்து சகல வேதார்த்தங்களும் வசப்படுவது
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
பிரமாண வைபவத்தையும்- ப்ரமேயமான தத் வைபவத்தையும்- ப்ரமாத்ரு வைபவத்தையும் -அபிமத வைபவத்தையும்-இவர் நெஞ்சிலே படும்படி பூர்ண உபதேசம் பண்ணினார் ஆய்த்து –
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு
இப்படி உபதேசிக்க வல்ல ஜ்ஞானாதி பூர்த்தியைக் காட்டி என்னுடைய சாட்யத்தைப் போக்கித் தம்முடைய பூர்த்தியிலே நிலை நின்றவர் –
குறைவாளரைக் குறை வறுக்கை இ றே ஒருவன் பூர்த்திக்கு மேல் எல்லை-(பட்டர் பிரான் ஆனா பின்பு -பொற் கிழி- வித்வான்களுக்கு அபகரித்த பின்பு பெரிய ஆழ்வார் -தத்வம் நிர்ணயம் பொழுது பிரான் -அவனை அனுபவித்து -பொங்கும் பிரிவால் -ப்ரீதி உண்ட அருளி பெரியாழ்வார் ஆனார் போலே இவரும்-சட கோபன் இவர் முதலில் அப்புறம் நம்பி ஆனார் என்றபடி –தம் விரோதி போக்கி என் விரோதியையும் போக்கி அருளினார் )நம்பி -விபூதிக்காக உபதேசித்தாலும் தம்முடைய ஜ்ஞானாதிக்ளைத் தரைக் காண ஒண்ணாதவர்-
என் நம்பி
அவர் உபதேசித்த அர்த்தங்களிலும் அவருடைய பூர்த்தியிலே யாய்த்து இவர் தோற்றது
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு
தக்க கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியான அவருடைய் நம்பி யன்று இவருடைய நம்பி
அப்பூர்த்தி என்னளவில் வந்தது இல்லையே-
ஆட்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே
அவருக்கு அடிமை புக்கத்தால் உண்டான ஆதரம்–அடிமையே பிரயோஜனமாக யுடையதன்றோ-
முற்பட அடிமை புக்கு –அநந்தரம் ஆதரம் நடந்து– பின்பு அடிமை செய்யுமதுவே அவருக்கு பிரத்யுபகாரம்-
முற்பட சேஷ பூதனாய் -பின்பு ப்ரேமம் நடந்து -ப்ரேம அனுரூபமான கிஞ்சித் காரமும் நடக்க வேணும்-
ஆசார்யபவ்யதையும் -ஆசார்ய ப்ரேமமும்– ஆசார்ய கிஞ்சித் காரமும் -இம்மூன்றும் அபேஷிதம் இ றே சிஷ்யனுக்கு
அவர் பகவத் சேஷத்வத்தையும் -பகவத் பிரேமத்தையும் -பவகச் சேஷ வ்ருத்தியையும் உபதேசித்தார்
இவர் ஆழ்வாருக்கு சேஷமாய் -அவருக்கே ஸ்நிக்தராய்- அவருக்கே கிஞ்சித் கரிக்கத் தேடுகிறராய் நின்றது-இவர் கற்றது இதிலே யாய்த்து-
அவர் புறப் பொருளை விட்டு உட்பொருளைக் கொடுத்தார்-
இவர் உட்பொருளான பகவத் விஷயம் தன்னை புறப் பொருள் ஆக்கி அதிலும் உட்பொருளான ஆழ்வார் திருவடிகளிலே-சேஷ பூதராய் ப்ரேம பூர்வகமான கைங்கர்யத்திலே இழிகிறார் யாய்த்து
அடிமைப் அயன் அன்றே
அடிமை பிரயோஜனம் என்னும் இடம் ஆழ்வார் ஸ்ரீ பாதத்திலே கற்றார்
அன்றே
அதுவே யன்றோ அர்த்தம்
அந்த வழுவிலா வடிமை செய்கிறதில் காட்டில் இது ஆட்புக்க காதல் அடிமைப் பயன் -வன்றோ உறுவது –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply