Archive for the ‘Divya desams’ Category

ஸ்ரீரெங்க ராஜ சரிதபாணம் –ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரும்‌ ஸ்ரீ பங்குனி உத்தரமும்‌ —

October 23, 2023

ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரைப் பற்றி இது வரையில்‌ கிடைத்த ஆதாரங்கள்‌ ஐந்து
இவைகளில்‌ ஸ்ரீ ரங்க நாதனுடைய பங்குனி உத்ஸவம்‌ முழுவதும்‌, அவர்‌ ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரைக்‌ கல்யாணம்‌ பண்ணிக் கொண்ட விவரமும்
நன்றாய்ச்‌ சொல்லப்‌ படுவதால்‌ அவை உள்ளபடியே இங்கு எழுதப்படுகன்‌றன.–

1. நிசுளாபுரி மாஹாத்மியம்‌
இந்த மாஹாத்மியம்‌ காகிதத்தில்‌ எழுதிய பிரதி ஒன்று தான்‌ கிடைத்தது
சென்னையிலும்‌ தஞ்சாவூரிலுமுள்ள ராஜாங்க புஸ்‌தக சாலைகளில்‌ இது கிடைக்கவில்லை. மூன்று அத்தியாயமாயுள்ள இது பரீதாவி வருஷத்தில்‌ ஸ்ரீரங்கம்‌ கீதா பாஷ்யம்‌ ரங்காசாரியரால்‌ தமிழில்‌ எழுதி அச்சிடப்பட்‌டிருக்கிறது. -இதிலுள்ளபடி. நாச்சியாரின்‌ சரித்திரம்‌ பின்வருமாறு-

1-ம்‌ அத்‌யாயம் –
திரி சரனுடைய திரிசிர பர்வதமென்னும்‌ திருச்சி மலைக் கோட்டையைச்‌ சுற்றியுள்ள ப்ரதேசம்
கரன் என்னும்‌ ராக்ஷஸனுடைய வாஸஸ் ஸ்தானமாய்‌ காரண்யமாயிருக்தது —
அகஸ்‌தியர்‌ கரனை வடக்கே அனுப்பி அவ்விடத்தை ரிஷிகளின்‌ தபஸ்‌ஸுக்கு விரோதமில்லாமல்‌ செய்தார்‌.

2-ம்‌ அத்‌,–
பிரம்மா, விஷ்ணு, சிவன்‌–இம்‌ மூவரில்‌ யார்‌ பெரியவர்‌–என்று அறிவதற்காக பிருகு மஹரிஷி காலையில்‌ சிவனிடம்‌ போனார்‌.
அவர்‌ பார்வதியோடு கிரீடித்துக் கொண்டு ரிஷிக்குத் தரிசனம்‌ கொடுக்க: வில்லை.
ரிஷி பிரம்மாவினிடம்‌ போய்‌, அவர்‌ கர்மானுகுணமாக ஸ்ருஷ்டி செய்து கொண்டே யிருப்பது கண்டு
அவரும்‌ பரவஸ்‌து வல்லவென்று நிச்சயித்து,ஸாயங்‌ காலம்‌ விஷ்ணுவினிடம்‌ போனார்‌.
விஷ்ணு பிருகுவை உபசரித்து, வந்த காரியம்‌ வினவுகையில்‌, தனியாய்த்‌. தெரிவிக்க வேண்டுமென்றார்‌ ரிஷி.
எல்லாரும்‌ அப்பால்‌ செனறார்கள்‌. காந்தனோடு எகாந்தமாயிருக்கும்‌ ஸமயம்‌ ௮து தானென்று கண்ட லக்ஷ்மி பிருகுவை அப்பால்‌ போகச்‌ சொன்னாள்‌.
பிருகு கோபித்துக்கொண்டு, மனுஷிய ஜாதியில்‌ பிறப்பாய்‌ என்று சபித்து, விஷ்ணுவே பர தத்வம்‌ என்று சொல்லிக் கொண்டு. போனார்‌,
லக்ஷ்மி ரிஷியின்‌ சாப்த்தினால்‌ மிகவும்‌ கவலைப்‌. பட்டாள்‌,

விஷ்ணு–பிருகு சாபம்‌ தப்ப முடியாது, பூலோகத்தில்‌ பிறந்திரு, நானும்‌ அங்கே வந்து உன்‌ னைக்‌ கலியாணம்‌ செய்துகொள்கிறேன்‌.
கொஞ்ச நாள்‌ பூலோகத்திலிருர்து இங்கே வருவோம்‌.

லக்ஷ்மி கேவலமான மனுஷ்யனுக்கு நான்‌ எவ்‌விதம்‌ பிறப்பது

விஷ்ணு–கராஸூரனை அகஸ்தியர்‌ வடக்கே அனுப்பிக்‌ கராரண்யத்தை ரிஷி வாஸத்துக்குத்‌ தகுதி யாக்கிய பிறகு,
சோழ. ராஜனான தர்மவர்மா என்னும்‌ பக்தன்‌ கும்ப கோணத்தை விட்டுக்‌ காவேரியின்‌ தென்‌ கரையில்‌ நகரம்‌ ஸ்தாபித்து
தன்‌ பத்தினி நிசுளையின்‌ பெயரால்‌ நிசுளாபுரி எனப்‌ பெயரிட்டு அரசு செலுத்துகிறான்
அவனும்‌ மனைவியும்‌ ஸந்ததி யில்லாக்‌ குறையினால்‌ லக்ஷிமீ தந்த்ரம்‌ என்னும்‌ சாஸ்‌திரத்‌தின்படி உன்னைப்‌ பூஜிப்பார்கள்‌,
நீ அவர்களுக்குப்‌ பெண்ணாய்‌ப் பிற–நானும்‌ அங்கே வருகிறேன்‌.

3-ம்‌ அத்‌–அப்படியே நிசுளாதேவியின்‌ கர்பத்‌தில்‌ சித்திரை, சுக்ல துவாதசி , உத்தரம்‌-கூடிய வெள்‌ளிக்‌ கிழமையில்‌ லக்ஷ்மி அவதரித்தாள்‌.
அவளுக்கு வாஸ லக்ஷ்மி எனப்‌ பெயரிடப்பட்ட, .பிறகு சந்திர திலகன்‌ என்ற புத்திரன்‌ பிறந்தான்‌.
தர்ம வர்மா ரங்ககாதனிடம்‌ உத்தமமான பக்தனாயிருக்தான்‌.
வாஸ லக்ஷ்மி ரங்க நாதனையே விரும்பிக்‌ கலியாணம்‌ செய்து கொண்டாள்

மீனாக்ஷி ஸூந்தரம்‌ பிள்ளை எழுதிய உறையூர்ப் புராணம்‌
உறையூர்‌ நாச்சியாரைப் பற்றியதல்ல வாகையால்‌ இங்கு சேர்க்‌கப் பட வில்லை.
அது பஞ்சவர்ண ஸ்வாமி காந்திமதி யம்மன்‌ விஷயம்‌.

2. திவ்ய ஸூரி சரிதம்‌
தர்ம வர்மாவின்‌ வம்‌ஸத்தவனான நந்த சோழனுக்கு உறையூர்‌ நாச்சியார்‌ கிடைத்ததாகக்‌ கோயிலொழுகு ;
தர்ம வர்மாவுக்குக்‌ கிடைத்ததாக திவ்ய ஸூரி சரிதம்‌-7-ம்‌ ஸர்கம்‌. மற்றை விவரம்‌ கோயிலொழுகு போலே.
உடையவர் காலத்தில்‌ உத்தம நம்பி வம்சத்தில் இருந்து கருட வாஹன பண்டிதரால்‌ ஆழ்வார்‌ ஆசார்யர்களின்‌
சரித்ரம்‌ இந்தக்‌ காவ்யமாக எழுதப் பட்டது.

3- கோயிலோழுகு
“ நிகளாபுரியிலே தர்ம வர்மாவின்‌ வம்சரான நந்த சோழன்‌ ராஜ்யம்‌ பண்ணுகிற காலத்தில்‌ பகுகாலம்‌ அநபத்யனாயிருந்து
ஸ்ரீரங்க நாயகரிடத்தலே ௮திப்‌ பிரவணனாய்‌ தபஸ்ஸைப்‌ பண்ணி, அந்த தபோ பலத்‌தினாலே ஒருநாள்‌ தாமரை ஓடையில்‌
தாமரைப் பூவிலே ஒரு சிசுவாக ஸ்திரீ ப்ரஜை இருக்கக் கண்டு, அந்த ராஜா ஹ்ருஷ்டனாய்‌, அந்தக்‌ குழந்தையைத்
தம்முடைய கிருஹத்திலே கொண்டு வந்து கமல வல்லி யென்று நாம கரணம்‌ பண்ணி வளர்க்குமிடத்தில்‌,
அந்தக் குழந்தையும்‌ வளர்ர்து பெரியவளாய்‌ ஒத்த பெண்களுடனே விளையாடும்‌ காலத்‌திலே,
ஒருநாள்‌ தோழிகளுடனே லீலோத்யாநத்தில்‌ புஷ்பாப௪யம்‌ பண்ணுகிற ஸமயத்‌திலே,–
ஸ்ரீரங்கராஜர்‌ குதிரை நம்பிரான் மேலே ஏறி யருளி பலாச தீர்த்தத்துக்கு (சியர் புரத்‌துக்கு) வேட்டை எழுந்தருளாகிறவர்‌.
அந்தக்‌ கமல வல்லிக்கு அதி ஸுந்‌தரராய்‌ விபவாவதாரமாக ஸேவை சாதிக்க, கமலவல்லி கண்டு மோஹித்து
மஹா பிரயத்னத்தினாலே தோழிமார்‌ தேற்றத் தேர்ந்து , தன்‌ விடுதியிலே வந்து உன்மத்தை போலேயிருக்க,
அந்த ராஜாவும்‌ கமல வல்லியைக் கண்டு மன்மத விகாரம்‌ என்று கணிசித்து ,
* உனக்கு ஆர் மேலே மனஸ்ஸு இருக்கறது *– என்‌று கேட்க ,கமலவல்லி தனக்கு * ஸ்ரீரல்கராஜன்‌ அன்றியிலே ஒருத்தரிடத்‌திலேயும்‌ மனஸ்ஸூ இல்லை;
தன்னை * ஸ்ரீரங்கராஜருக்குப்‌ பாணி கிரஹணம்‌ பண்ணுவியும்‌’–என்று சொல்ல,
ராஜாவும்‌ ஸந்துஷ்டனாய் தனது மந்திரிகள் உடனே ஆலோசித்து , தம்முடைய குமாரத்தி கமல வல்லியை ஸ்ரீரங்க.ராஜருக்கு கன்னிகா ப்‌ரதானம்‌
பண்ணுவித்து பெண்ணைக்‌ கோயிலுக்கு அனுப்பும்‌ போது, ஸ்திரீ தனமாக முன்னூற்றுப் பதின்கலம்‌ தங்க
அமுதுபடியும்‌, அதுக்கு வேண்டின பருப்பமுதும்‌, கொம்பஞ்சு கொடியஞ்சு கறியமுதும்‌, அதுக்கு வேண்‌டின சம்பாரங்களெல்லாம்‌
தங்கக்தாலே பண்‌ணுவித்‌து அது களையும்‌, ஸ்‌த்ரீகளுக்கு ஸமங்களமான நூறு பரிசாரிகைகளையும்‌ கொடுத்தனுப்பி வைக்க,–
அத்தக் கமல வல்லியும்‌ கோயிலிலே வந்து திரு மண்ணுக்குள்ளே-(திரு மணத் தூணுக்குள்ளே ) புகுந்து அத்ருத்யை யாக, -அத்தைக் கண்டு ராஜாவும்‌ அதி ஸந்துஷ்டனாய்‌
அநபத்யனாகையாலே தம்முடைய ஸர்வஸ்வத்தையும்‌ பெருமாளதீனம்‌ பண்ணி,–
திரு மா மணி மண்டபங்களும்‌, திருமதிள்களும்‌, திருக் கோபுரங்களும்‌, திரு தந்தவனங்கள்‌ முதலானதுகளையும்‌ கட்டிவைத்து
தம்முடைய பட்டணமான உறையூரிலேயும்‌ தம்முடைய குமாரத்தியையும்‌ அதி ஸுந்தர ரூபத்‌தினாலே
வஸீ கரித்தபடி யாலே அழகிய மணவாளப் பெருமாளையும்‌ பிரதிஷ்டிப்பிக்து,
விமான கோபு மண்டப பிரகாராதிகளையும்‌ விஸ்த்ருதமாகக்‌ கட்டி வைத்து அனைத்து அழகும்
கண்டருளப் பண்ணிக் கொண்டி ருந்தான்‌.”

4. லக்ஷ்மீ காவ்யம்‌
இது உறையூர்‌ நாச்சியார்‌ விஷயமாயும்‌ ரங்கநாதன்‌ விஷயமாயும்‌ ஏற்பட்ட காவ்யம்‌. இது உத்தமநம்பி திரு மலாசாரியரால்‌ எழுதப்பட்டது.
இவர்‌ தன்‌ பெயரையும்‌ வம்சத்தையும்‌ ஒவ்வொரு ஸர்கத்தின்‌ முடிவில்‌ முத்ரையாகச்‌ சொல்லுவது தவிர இரண்டு மூன்று இடங்களிலும்‌ சொல்லுகிறார்‌.

ஸ்ரீரங்கத்திலிருந்த பூர்வாசாரியர்களையும்‌, கைங்கர்ய பரர்களையும்‌ சொல்லும்‌ கவி தன்‌ வம்சத்தில்‌
தனக்கு முன்‌ தன்னைப் போலொரு காவியம்‌ எழுதின திவ்ய ஸூரி சரித்‌ர காரைச்‌ சொல்லவேயில்லை. உறையூர்‌ திருப்பாணாழ்வார்‌ அவதரித்த இடமென்றும்‌ இவர்‌ சொல்ல வில்லை.
இதில்‌ கந்தாடை ராமானுஜ அய்யங்காரைப் பற்றிச்‌ சொல்லுவதால்‌ கவி ௮வர் காலத்துக்குப்‌ பிற்பட்டவராவார்‌.
இந்தக்‌ காவியம்‌ இருப்பதாக குரு பரம்பரையிலிருந்து தெரிந்து சேடினதில்‌ பிராசீன வித்யா பிருஹஸ்பதி
கும்ப கோணம்‌ காலேஜ்‌ தமிழ்ப் பண்டிதர்‌ சடகோப ராமானுஜாசாரியாரிடத்திலும்‌, சென்னையிலும்‌, அடையாரிலும்‌ இருப்பதாகத் தெரிந்தன,.
இதையே வெகு நாளாகச்‌ தேடிக் கொண்டிருந்த திவான்‌ பஹதூர்‌ ஸ ர்‌. டி. தேசிசாரியாரிடம்‌ தெரிவித்ததும்‌,
அவர்‌ சடகோப ராமானுஜாசாரியாருடைய புஸ்தகத்தை வர வழைத்து எழுதுவதற்கும்‌, சென்னையிலுள்ள
புஸ்‌தகங்களோடு ஒத்துப் பார்ப்பதற்கும்‌ வேண்டிய செலவைக்‌ கொடுத்து சேகாம் செய்து அச்சிட்டுக் கொண்டிருக்கிறார்‌.
உறையூர்‌ நாச்சியார்‌. சரித்திரமூம்‌ ரங்க நாதனுடைய ஆதி ப்ரம்மோத்ஸவமும்‌ லஷ்மீ காவ்யகத்தில்‌ வர்ணித்‌திருக்கும்‌
கிரமத்திலேயே சுருக்கமாய்‌ எழுதப்படுகின்றன.

1-ம்‌ ஸர்‌–
நித்ய ஸூரிகள்‌, வியாஸர்‌, ஆழ்வார்‌கள்‌, பெருமாள்‌ நாச்சியார்‌, ஊர்‌, கோபுரம்‌ மண்டபம்‌,
கோயில்‌, பூர்வாசாசியர்கள்‌, கைங்கரிய பரர்கள்‌—வர்‌ணிக்கப் பட்டிருக்கிறார்கள் ,
[ விஷ்வக்ஸேனர்‌, ஸுூத்ரவதி, கஜானனன்‌, ஜயத்‌ஸேனன்‌, ஸிம்மவக்தரன்‌, காலன்‌, ஆதிசேஷன்‌, கருடன்‌,
ருத்ரை ஸூகீர்த்கிகள்‌, பஞ்சாயுதங்கள்‌, கெளஸ்‌துபம்‌,ஸரஸ்வதி , ஹயக்ரீவன்‌, வியாஸர்‌, நம்மாழ்வார்‌,
திருமங்கை யாழ்வார்‌, உடையவர்‌, பெருமாள்‌, நாச்சியார்‌, கிருஷ்ணார்‌ ஜுனர்கள்‌, துவஜ கருடன்‌, கோபுர நர ஸிம்ஹன்‌, கோபுர விநாயகர்‌,
கங்கை யமுனை, நான்முக கோபுரம்‌, தாமோதர கோபுரம்‌, ராமாயண மண்டபம்‌, ஆயிரம் கால்‌ மண்டபம்

சந்‌திரபுஷ்கரிணி, பார்த்தஸாரதி , சக்காத்தாழ்வான்‌, வீர ஹனுமான்‌, ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌, பராசர வியாஸ பட்டர்‌கள்‌,
பெரியநம்பி, மணவாளமாமுணி, வாதூல தேசிகர்‌, எம்‌பார்‌, திருவேங்கட தாதாசாரியார்‌, பிரதிவாதி பயங்காம்‌ அண்ணா,
கந்‌தாடை ராமானுஜ அய்யங்கார்‌, உத்தம நம்பி,திருப்பணி செய்வார்‌, பாகவத நம்பி, ஹரித கோத்ரிகளான பாரிகர்கள்‌?,
அரையர்‌, திருமஞ்சனக் கரரர்‌, புரோஹிதர்கள்‌,ஆரியபடர்கள்‌, வைத்தியர்கள்‌, புண்டரீக தாஸர்கள்‌, கணக்‌குப்பிள்ளை,
சேர்வைகாரன்‌, உறையூர்‌ வல்லி கூட்டத்தாரான தாஸிகள்‌–இவர்கள்‌ வர்ணிக்கப்பட்டிருக்கறார்கள்‌.]

2-ம்‌ ஸர்‌–
ஆலிலையில்‌ பள்ளிகொண்டவனும்‌ கிருஷ்ணன்‌ வரையுள்ள எல்லா அவதாரங்களையும் எடுத்‌தவனுமான
ஸர்வேஸ்வரனே ரங்கநாதனாக வந்து ஜகம்‌ முழுவதையும்‌ ஆனத்திப்பிக்கிறான்‌.
ரங்க நாதனுக்கு லக்ஷ்மி, பூமி, நீளை, ஆண்டாள்‌–நால்வர்‌ தவிர, சேர சோழ பாண்டியர்‌–முதலான ராஜ புத்திரிகளும்‌ பத்‌னிகளாயிருந்தார்கள்‌,
ரங்கநாதன்‌ வஸந்த ருதுவில்‌ காவேரி முதலிய இடக்களிலும்‌, கிரிஷ்ம ருதுவில்‌ குளங்களிலும்‌,
வருஷ ருதுவில்‌ சயன கிருஹத்‌திலும்‌ பத்னிகளோடு வினோதமாய்க்‌ காலம்‌ கழித்தார்‌;–
கார்த்திகை பூர்ணிமையில்‌ திபோத்ஸவம்‌ கண்டருளினார்‌;
ஹேமந்தத்தில்‌ மார்கழி முதல் நாள்‌ திவ்ய ஸூக்‌தியான திருப்பள்ளி யெழுச்சியினால்‌ பள்ளியுணர்ந்து , ஆராதனம்‌ கண்டருளி,
பிராம்மணர்களுக்கு நித்ய தானம்‌ பண்ணி வேத பாராயணம்‌ சேட்டு, சகீத ந்ருத்யங்களோடு மண்டபம்‌ போய்‌,
நம்மாழ்வார்‌ முதலானோர்‌ களால்‌ ஸேவிக்கப்பட்டு அவர்களின்‌ ஸூக்‌திகளையும்‌,
அவற்றிலுள்ள சரித்ரத்தின் ௮பி நயத்தையும்‌ ௮னுபவித்து ஸாயங்காலம்‌–நின்ற போது நாட்டியமும்‌ போகும்
போது வாத்யமுமாய் உள்ளே எழுந்து அருளினார்

ஓன்பது நாளும்‌ இப்படியே நடந்தது; பத்‌தாம்‌ நாள்‌ மாயா நாராயணீ ரூபம்‌ தரித்தார்‌, பதினோராம் நாள் வேத பாராயணம்‌ கேட்டருளி,
வடக்குவாசல்‌ வழியாகப்போய்‌, நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌, உடையவர்‌ மூவரையம் பாதுகைகளால்‌ அனுக்ரஹித்து
மண்டபத்திலிருந்து நம்மாழ்வாருடைய பிரபந்தத்தையும்‌ ந்ருத்த கீதங்களையும்‌ கேட்டருளி, கடைசி நாள்
அவருடைய சரணாகதியையும்‌ அங்கீ கரித்தார்‌–
தை முதல்‌ நாளின்‌ உத்வைத்தையும்‌ ஆயிரம் கால்‌ மண்ட. பத்தில்‌ உபய நாயகி மாரகளோடு மத்தியானம்‌ வரையில்‌
அனுபவித்து உள்ளே எழுந்தருளினார்‌;- சிசிர ருதுவிலும்‌ தகுந்த ஸுகங்களை அனுபவித்தார்‌,

[ திருக்கார்த்‌திகையன்‌று திருமுகப் பட்டையம்‌ அனுப்புவதைக்‌ கவி எழுதவில்லை.
மார்கழித் திருகாள்‌ முதல்‌ தேதி ஆரம்பமானது போலே எழுதப்பட்டிருக்கிறது ]

3-ம்‌ ஸர்‌–
பெருமாள்‌ சயனித்‌ இருக்கையில்‌ பாடகர்கள்‌ வந்து–
தாமோதரன்‌ கோபுரத்தில்‌ வெயில்‌ வந்து விட்டது; சந்தன மண்டபத்தில்‌ வெயில்‌ வந்து: விட்டது .” என்று பாடி. எழுப்பினார்கள்‌,
பெரு.மாள்‌ எழுந்திருந்து காலைக்‌ காரியங்களை நடத்‌தினார்‌,
பிரம்மா, சிவன்‌, ஸுப்‌ரம்மணியன்‌, இந்திரன்‌, கணே
சன்‌–எல்லா தேவர்களும்‌ வந்து பெருமாளை ஸ்தோத்‌திரம்‌ செய்தார்கள்‌,

4-ம்‌ ஸர்க்கம்
ரங்கநாதன்‌ ஸந்தோஷித்து வந்த காரியம்‌ வினவினார்‌. உம்முடைய ஆஜ்ஞையினால்‌. நான்‌ ஸ்ருஷ்டித்த இந்த பரபஞ்சத்தின்‌ ஷேமத்துக்காக.
சுபமான இந்தப்‌ பங்குனியில்‌ துவஜாரோஹண பூர்‌வகமாக யாத்ரோத்ஸவத்தை நீர்‌ அனுபவிக்க வேண்‌டும்‌.
சோழ ராஜனக்குத்‌ தபஸ்ஸினால் பிறந்த லக்ஷ்மியின்‌ ௮ம்சமான லக்ஷ்மியை நீர்‌ கலியாணம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.
நீலீ வனத்திலிருக்கும்‌ வியாக்ரா ஸுரனையும்‌ வதம்‌ செய்ய வேண்டும்‌.” என்று பிரார்த்‌தித்தார்பிரம்மா, பெருமாள்‌ அங்கீ கரித்தார்‌.
எல்லாரும்‌ அனுமதி பெற்றுக்கொண்டு சந்திர புஷ்கரிணியில்‌ மாத்யாந்ஹிகம்‌ பண்ணி, நாச்சியாரைத் தர்சித்துப் போனார்கள்‌.
பெருமாளுடைய ஆஜ்ஜையின் பேரில்‌ விஷ்வக்ஸேனர்‌ பங்குனி பரணியில்‌ ௮ங்குரார்ப்பணம்‌
செய்து, கார்த்திகையில்‌ ஹோமம்‌, பலி, கருட பிர திஷ்டை முதலியவற்றை நடத்தி, பரிவாரங்களோடு நகர சோதனை செய்தார்‌.
[இப்பொழுது நகர சோதனை முன்னும்‌ கருட ப்‌ரதிஷ்டை பின்னுமாக நடக்கிறது .]

5-ம்‌ ஸர்‌–
முதல்‌ திருநாள்‌–ரோஹிணியன்று நல்ல முஹுர்‌த்தத்தில்‌ உத்ஸவத்தை ஆரம்பிப்பதற்‌காக ரங்கநாதன்‌ புறப்பட்டு,
அன்னமூர்த்தி இருக்கும்‌ மண்டபத்‌திலிருந்து ஸங்கீதங்களைக் கேட்டுக் கொண்டே த்வஜாரோஹணம்‌ நடத்தி, மத்தியானம்‌ உள்ளே போனார்‌ ;
ஸாயங்கால்ம்‌ உபய நாச்சி மார்களோடு பூச்‌சப்பரத்தில்‌ எழுந்தருளி, உத்ஸவத்துக்கு வந்த ராஜாக்‌களோடும்‌ சைன்யங்களோடும் புறப்பட்டு,
மூலை தோறும்‌ ந்ருத் யங்களை அனுபவித்‌துக் கொண்டே வீதி வலம்‌ வந்து, ஆரியபடாள்‌ வாசலில்‌ ராஜாக்கள்‌ முதலானோரை நிறுத்தி உள்ளே போய்‌,
திருவந்திக்‌ காப்பு கண்டருளி, யாகசாலையில்‌ திரு மஞ்சனம்‌ செய்து கொண்டு, ஹோமம்‌ முதலியன ஆனதும் உள்ளே போனார்‌.
[அன்னமூர்த்தி துவஜாரோஹண மண்டபத்திலேயே இப்பொழுது பின்னமாய்க்‌ கிடக்கிறார் .
பெருமாள்‌ கண்ணாடி. யறை எழுந்தருளின தாகச்‌ சொல்லப்படவில்லை.
கண்ணாடி. யறை பின்காலத்தில்‌ சேர்க்கப்பட்டதென்று அந்தக்‌ கட்ட டமே தெரிவிக்‌கிறது ]

இரண்டாம்‌ திருநாள்‌–மிருகசீர்ஷத்தன்று காலையில்‌ ரங்கநாதன்‌ மேலூர்‌ புன்னாக தீர்த்தத்துக்கருகே யுள்ள மண்டபத்துக்குப்‌ புறப்பட்டு,
வழியே பத்ர காளி கோயிலையும்‌ பயங்கரமான ஷுத்ர தேவதைகளையும்‌ பார்த்துக்கொண்டே போய்‌ சாயங்காலமம் திரும்பினார்
சந்திரசேகரன்‌ :சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமத்‌துக்கு வந்து ௮னுக்ர ஹிக்கவேண்‌டும்‌ என்று பிரார்த்‌தித்தான்‌.
பெருமாள்‌ அங்கீ கரித்து ஸன்னிதிக்குள்‌ எழுந்தருளினர்‌.[ சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமம் கிளியனூராயிருக்கலாம்‌.]

6-ம்‌ ஸர்‌. மூன்றாம்‌ திருகாள்‌–திருவாதிரையன்று காலையில்‌ ரங்கநாதன்‌ குதிரையேறி வீரர்களோடும்‌,
அரசர்களோடும்‌, பக்தர்களோடும்‌ புறப்பட்டு மூங்கில்‌காடு வழியாகவும்‌ காவேரிக் கரை வழியாகவும்‌
ஸு*ப்‌ரமண்யன்‌ தபஸ்‌ செய்த ஈசானமங்கலம்‌ என்னும்‌ கிராமம்‌ போய்‌, அங்கே தென்கரையிலுள்ளவர்களரல்‌ உபசரிக்கப்பட்டார்
[ஸுப்ரம்மண்யன்‌ சீயர்புரத்தில்‌ தபஸ்‌ செய்த விருத் தாந்தம் நம்மால் வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்ம்யத்தில் பார்க்க.
சீயர் புர கிராமத்துக்கே ஏற்பட்ட ஈசானமங்கலம்‌ என்னும்‌ பெயர்‌ இப்பொழு ஈசான்ய மண்டபம்‌ என்னு
மண்டபத்தின்‌ பெயராக மாறியிருக்கிறது.
இங்கு அம்மையார்‌ தண்ணீர்ப்பந்தல்‌ விருத்தாந்தம் கவியினால்‌ சொல்லப்பட வில்லை]

பிறகு, ஸ்நானம்‌ செய்‌து கொண்டிருக்த உறையூர்‌ நாச்சியாரின்‌ கூந்தவிலிருந்து பூக்கள்‌ விழும்‌ காவேரியின்‌ தென் கரை வழியாக
ரங்க நாதன்‌ கொஞ்சதூரம்‌ வந்து .காவேரியிலிறங்‌கி வடகரை போனார்‌. அவர்‌ கையிலிருந்த மோதிரம்‌ ஜலத்தில்‌ வீழ்ந்த்து ; அதை அவர்‌ கவனிக்கவில்லை ;வடகரை போய்‌, வடக்கு முகமாகவே நெடுந்தூரம் வினேதமாக சவாரி” செய்து, நேற்று அழைத்த சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமத்தில்‌ சிறிது நேரம் தங்கித்‌ திருவெள்ளறை வரையிலும்‌ போய்‌ நீலிவனம்‌ (திருப்பைங்‌கிலி) சென்றார்
அங்கு இருந்த வியாக்‌.ராஸுரன்‌ ரங்க நாதனைக் கண்டு ஒளிந்தான் -அங்கே வெகுநேரம்‌ வேட்டையாடி,
கந்தஸ்தம்பேசருடைய ளெளம்ய ஜாமாத்ருமங்கலம்‌ (திருமணத் தூண்‌ நம்பிவசமுள்ள அழகிய மணவாளம்‌ கிராமம்‌) ,
காவேரி தீரத்‌திலுள்ள வகுள தீர்த்தம்‌ (திருவாசி), இவற்றைப்‌ பார்வையிட்டுக்கொண்டே. ஊருக்குள்‌ பிரவேசித்து மேல வாசல்‌ வந்ததும் மழை வெகு
கடுமையாகப்‌ பெய்தது .
மழை ஓயும்‌ வரையில்‌ பெருமாள்‌ உத்தம நம்பி திருமாளிகையில்‌ தங்கி உபசாரங்களைப்‌ பெற்றுக் கொண்டு சந்நிதிக்குள் போய்‌ வாஹனத்தை விட்டு இறங்கினார்
(பங்குனி மூன்றாம்‌ திரு நாள் குகிரைவாஹனம்‌ இந்த மழைக்குப்பிறகு உத்தமநம்பியால்‌ பல்லக்காக மாறின
விவரம்‌ கோயிலொழுகு 124-ம்‌ பக்கத்தில்‌ இருக்கிறது

7-ம்‌ ஸர்‌. நாலாம்‌ திரு-புனர்வஸூ -*வன்று காலையில்‌ ரங்கராசன்‌ புறப்பட்டு உத்தம நம்பி பிராமணர்களுக்குக்‌
கொடுத்த ௮க்ரஹா.ரத்தின்‌ வழியாக காவேரிக்கரையிலுள்ள கருட வாஹன மண்டபம்‌ போய்‌ உல்லாஸமாயிருந்தார்‌.
மத்தியானம்‌ ஒரு தாஸி லஷமிக்குப்‌ பெருமாளிடமுள்ள காதலை லக்ஷ்மீ நாடகத்திலுள்ளபடி.யே அபிநயித்‌தாள்‌.
அப்பொழுது ஸூர்ய வம்சத் வனான உறையூர்‌ ராஜாவினால்‌ அனுப்பப்பட்ட புரோஹிதர்‌
பெருமாளிடம்‌ வந்து விக்ஞாபனம்‌ பண்ணினார்‌ :–

தர்மவர்மாவின்‌ வம்சத்தவனான நிசுளாபுரி” ராஜா கரிகால்‌ சோழன்‌ சந்திரவம்௪த்தில்‌ பிறந்த
தர்மதை என்னும்‌ மனைவியோடு ஸந்தானத்துக்காக நெடுநாள் லக்ஷ்மியை தியானித்து தபஸ்‌ செய்தான்‌.
லக்ஷ்மி பிரத்யகூமாகி * நானே உனக்குப்பெண்ணாய்‌ பிறக்கிறேன்‌… – என்று அனுக்ரஹித்தாள்‌.
அப்‌:படியே கொஞ்சநாளில்‌ பெண்‌ குழந்தை பிறக்து லஷ்கி யெனப் பெயரிடப்பட்டஅு. லஷ்மி இப்பொழு கல்‌யாணப்‌ பருவத்‌தில் இருக்கிறாள்‌,
அவளுடைய ஸ்வயம்‌ வர த்துக்காக தேவர்களும்‌ ராக்ஷஸர்களும்‌ வந்‌து .இருக்‌கிறார்கள் –
ஸ்வயம்வரத்துக்கு உம்மை அழைத்து வருமாறு நான்‌ ராஜனால்‌ அனுப்பப்பட்டு வந்தேன்‌.
லஷ்மியும்‌ தன்னுடைய தோழி ஹரிலேகையை- அனுப்பியிருக்கறாள்‌. அவள்‌ எல்லா விஷயங்களையும்‌:
சொல்லுவாள்‌, ”–என்று சொல்லி விடையெற்றுச்‌ சென்றார்‌ புரோஹிதர்‌.

6-ம்‌ ஸர்‌–ஹரிலேகை வந்தாள்‌. அவன்‌ விரும்‌பியபடி எல்லாரும்‌ வெளியே அனுப்பப்பட்டார்கள்‌…-
அவள்‌ ரங்கநாதனுக்கெதுரில்‌ உட்கார்க்து ஏகாந்தமாய்ச்‌ சொல்லுகிறாள்‌.
” சோழ ராஜ புத்ரியான லஷ்மி தோழிகளோடு
,காவேரியில்‌ விளையாடிக் கொண்டி ருக்கையில்‌, நீர்‌ ஸைனயங்களோடு குதிரை மேலேறிப்‌ போய்க் கொண்டி.ருந்தீர்‌,
உம்முடைய அழகைப் பார்‌த்து அவள்‌ மோஹித்துக்‌ இடக்கிறாள்‌. உம்முடைய மோதிரம்‌ காவேரி ஜலத்தில்‌ அகப்பட்டது.
இந்த மோதிரத்தை உமக்குக்‌ கொடுக்‌கச் சொன்னாள்‌. ”–என்று . சொல்லி மோதிரத்தைக்‌ கொடுத்தாள்‌.
அதில்‌ லஷ்மி என்று எழுதி யிருந்தது கண்டு ரங்கநாதனுக்கு மோஹமமும்‌ மகிழ்ச்சியும்‌ மிகுந்தது
ஹரிலேகை–நான்‌ லஷ்மியினிடம்‌. என்ன “சொல்லுகிறது ?
ரங்கநாதன்‌–புஷ்யத்தன்று அவளுடைய ராஜ தானிக்கு வருகிறேன்‌.
ஹரிலேகை விடைபெற்று லஷ்மியினிடம்‌ போனாள்‌.

9-ம்‌ ஸர்‌-.-ரக்கநாதன்‌ கருடவாஹனத்‌தில் ஏறிப்‌ புறப்பட்டு வீதி வலம்‌ வந்து ஸன்னிதிக்குள்‌ சென்றார்‌.

10-ம்‌ ஸர்‌–5-ம்‌ திருநாள் –புஷ்யத்தன்று காலையில்‌ நான்காம்‌ ஜாமத்தில்‌ ரங்கநாதன்‌ ஸைன்யத்தோடும்‌
௮ரசர்களோடும்‌ பல்லக்கிலேறிப்‌ புறப்பட்டுக்‌ காவேரிதாண்டி உறையூர்‌ சேர்ந்தார்‌.
கரிகால்‌ சோழன்‌ வந்து அடி.பணிந்து ரங்கநாதனுக்கு உடத்தியானத்தில்‌ இடம்‌ கொடுத்து உபசரித்தான்‌,
ஸ்வபம் வரத்துக்கு தில்லை நடராஜன்‌, ஜம்பூபதி, ஏகாம்பர நாதன்‌, மத்யார்ஜுனேசன்‌ முதலான எல்லா சைவ மூர்த்திகளும்‌ வந்திருந்தார்கள்‌.

11-ம்‌ ஸர்‌–ரங்கநாதன்‌ ஸ்வயம்வர மண்டபத்‌துக்குப்போக சித்தமாயிருக்கையில்‌ சோழ ராஜா வந்து அழைத்தான்‌.
ரங்கநாதன்‌ யானை மேலேறிப் புறப்பட்டு வந்து எல்லா தேவர்களுக்குமிடையே ஆஸனத்‌திலமர்ந்தார்‌,i

12-ம்‌ ஸர்‌–ராஜா மஹோதயன்‌ என்னும்‌ மந்திரியை அனுப்பி, பெண்ணை ஸ்வயம்வர மண்டபத்‌துக்கு வரவழைத்து,
ஒவ்வொரு க்ஷேத்திரத்திலிருந்து வந்திருக்கும்‌ சிவா மூர்த்தி விஷ்‌ணு மூர்த்திகளின்‌ பெயர்‌ இருப்பிடம்‌, வைபவம்‌ முதலியவற்றைச்‌ சொன்னான்‌.
[ஆண்டாள்‌ ஸ்வயம்வரத்தில்‌ திவ்ய ஸூரி சரிதக்‌காரர்‌ 108 திருப்பதியிலுள்ள விஷ்ணு மூர்த்‌திகளை மட்டுமே வர்ணித்திருக்கறார்‌.
இந்தக் கவி சிவ மூர்த்திகளையும்‌ சேர்த்து வர்ணிக்கிறார்‌. ]

சோழராஜன்‌ கடையில்‌ ரங்க நாதனிடம்‌ வந்து
அவருடைய பெருமையை வர்ணித்தான்‌.
லக்ஷ்மி எல்‌லாருக்கும்‌ மத்தியில்‌ ரங்க நாதனுக்கே மாலையிட்டாள்‌,

13-ம்‌ ஸர்‌– ராஜா முறைப்படி உறையூர்‌ வல்லிக்‌ கும்‌ ரங்கநாதனுக்கும்‌ அக்னி ஸாக்ஷிகமாகக்‌ கலியாணம்‌ செய்து வைத்தான்‌.
அந்த ஸ்வயம் வரத்தில்‌ அத்தனை மூர்‌த்திகளுக்கு இடையில்‌ ரங்கநாதனையே அழகான மாப்‌பிள்ளையாக
உறையூர்‌ வல்லி தீர்மானித்ததால்‌ அவரும்‌ அழகிய மணவாளனானார்‌.
ராஜா அநேக விதமான சீர்களையும்‌ ௮னேகம்‌ சேடிகளையும்‌ கொடுத்து , ரங்கநாதனையும்‌ உறையூர்‌ வல்லியையும்‌ ஊருக்கு அனுப்‌பினான்‌,
வழியில்‌ வியாக்ராஸூரன்‌ ஸைன்யத்தோடு சூழ்ந்து கொண்டான்‌. விஸ்வக்ஸேன பரிகரமான கஜானனன்‌ வியாக்ராஸுரனிடம்‌ பேரய்‌ “இரண்டு நாள்
முன்னரே உன்னை நீலி வனத்தில்‌ வேட்டையாட வேண்டி யிருந்தது. நீ ஒளிந்துசொண்டாய்‌, இப்போது
கலியாணமாகி பட்டணப் ப்ரவேசம்‌ சேய்வதற்கு உன்னை பலியிடுகிறேன்‌.” என்று சொல்லி,
ரங்க நாதனை ஸாக்ஷியாக வைத்துக் கொண்டு, ராஷஸ ஸைன்யத்தோடு கோரமாக யுத்தம் பண்ணி, வியாக்ராஸூரனையும்‌ அவ னுடைய ஸைந்யத்தையும்‌ வதம்‌ செய்து ஒழித்தான்‌.

(ரங்கநாதன்‌ ‘ வியாக்ராஸுரனை வதம்‌ செய்ததால்‌ அவருக்கு ** வ்யாக்ராஸூர நிஷுதந – என்ற பெயர்‌ ஏற்பட்டிருக்கிறது .
ரங்கநாகன்‌ ராமாவதாரதத்துக்கும் முன்‌னமே வியாக்ராஸுரனை வதம்‌ செய்வதற்காகக்‌ காவேரி வந்து
ரிஷிகளுக்கு தரிசனம்‌ கொடுத்துத்‌ திரும்பிய விவரம்‌ நம்மால்‌ வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்மியத்தில்‌ காண்க, நெடுநாள் முன்‌ நடந்த வியாக்ராஸுரன் வதத்தை உறையூர்‌ நாச்சியார் கல்யாணத்தோடு சேர்த்தது யுத்த வர்ணனத்துக்கு அவகாசம கொடுப்பதற்கான கவி சாதுர்யம.
இந்து மதியைக்‌ கல்யாணம்‌ செய்‌து கொண்டு புறப்படும்‌ ௮ஜ மஹா ராஜாவுக்கும்‌ ஸ்வயம் வரத்துக்கு வந்த ராஜாக்களுக்கும்‌
யுத்தம் நடந்ததாக ரகு வம்‌ஈத்தில்‌ காளிதாஸ கவி வர்ணித்திருக்‌கிறார்‌.
ரகுவம்சத்தையே அனுஸரித்து எழுதப்பட்ட திவ்ய ஸுூரி சரித்ரத்திலும்‌ ஆண்டாள்‌ ஸ்வயம்வரத்‌துக்குப்‌ பிறகு
திருமங்கையாழ்வார்‌ வேடர் பறியாக வந்து அ ரங்கநாதனை எதிர்த்ததாக வர்ணிக்கப்பட்டிருக்டுறது .
ஸ்வயம்வரத்துக்கு வந்த மூர்த்திகளை திவ்யஸூரி சரிதத்திலும்‌ லக்ஷ்மீ காவியத்‌திலும்‌ வாணித்தது கூட
இந்துமதி ஸ்வயம்வரத்தில்‌ காளிதாஸ கவி ஒவ்வொரு ராஜாவையும்‌ வர்ணித்ததை அனுஸரித்ததாகும்‌.

14-ம்‌ ஸர்‌ – ரங்க நாதன்‌ பல்லக்கோடு வந்து சக்கரத்தாழ்வான்‌ ஸன்னிதிக்கருகிலுள்ள வாஹன மண்ட
பத்தில்‌ இறங்கி வேறு ஆஸனத்திலேறி உள்ளே போனார்‌.
[4-ம்‌ திருநாள் கருட வாஹனம்‌ வாஹன மண்டபத்தில்
இறங்கினதாகக்‌ கவி சொல்லாமல்‌ இன்று பல்லக்கு இறங்கினதாகச்‌ சொல்லுறார்‌.
புஷ்யத்தில்‌ கலியாணமெனறு கவி -வியக்‌தமாகச்‌ சொல்லுவதால்‌ பெருமாள்‌ உறையூர்‌ எழுந்‌தருள வேண்டியது 5-ம்‌ திருநாள் .
இப்பொழுது 6-ம்‌ திரு நாள்‌ ஆயில்யத்தன்று எழுந்தருளுகிறார்‌. உறையூர்‌ நாச்சியார்‌ பிறகு யாதாயினள்‌ என்று கவி சொல்லவில்லை.]

15-ம்‌ ஸர்‌–ஆறாம்‌ திரு நாள் –ஆயில்யத்தன்று காலையில்‌ பெருமாள்‌ புறப்பட்டு தாமோதர கோபுரத்தின்‌
வழியாகப்‌ பல்லவராஜன்‌ தோட்டம்‌ போய்‌,
ஸாயம் காலம்‌ யானை வாஹனத்‌துக்கேற்ற உடைகளோடு வந்‌து யானையேற்று மண்டபத்தில்‌ யானையேறி வீதி வலம்‌ வந்து,
வாஹனத்திலிருந்கவாறே திருவந்திக்காப்பு கண்டருளி, யானையை விட்டிறங்கி உள்ளே போய்‌
திருமஞ்சனம்‌ செய்து கொண்டார்‌.
[பெருமாளோடு யானை மேல்‌ அர்ச்சகர்‌ உட்காருவதும்‌, யானையை விட்டிறங்கி ஆண்டாளும்‌ பெருமாளும்‌ மாலை
மாற்றிக் கொள்வதும்‌ இங்கு சொல்லப்படவில்லை.
மணவாள மாமுனி ஸன்னிதிக்குப்‌ பல்லவராயன்‌ மடம்‌ என்று பெயர்‌.
கோயிலை ஆஸ்ரயித்திருக்கும்‌ தேசாந்தரி ஜியர்களுக்காக ௮து பல்லவ ராயனால்‌ கட்டப் பட்டதென்று அங்குள்ள சிலா சாஸனமே சொல்லுகிறது .
இவனே கிழக்கே பல்லவ ராஜன்‌ தோட்டம்‌ என்று பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாகத் தெரிகிறது. ]

16-ம்‌ ஸர்‌—ஏழாம்‌ திரு நாள் –மகத்தன்று ரங்க நாதன்‌ .வஸந்த வேஷம்‌ தரித்துக்கொண்டு உபய நாச்சிமாரோடு-சூர்ணாபிஷேகம்‌ செய்து கொண்டார்‌.
எல்லோரும்‌ ஒருவர்மேலொருவர்‌ மஞ்சள்‌ பொடியைக்‌ தூவி விளையாடினர்‌.
Iரங்க நாதன் ஸாயங்காலம்‌ புறப்பட்டுக்‌ கொட்டார வாசலில்‌ நெல்‌ அளவு கண்டருளி, ப்ர தஷிணமாக நாச்சியார்‌ கோயில் போய்‌,
இரு புறமும்‌ வரிசையாய்‌ நிற்கும்‌ தாஸிகள்‌ மூலம்‌ திருவந்திக்காப்பு செய்து கொண்டு, ஸிம்ஹா ஸனத்தில்‌ வீற்றிருந்து
திரு மஞ்சனம்‌ முதலியவற்றை அனுபவித்து, பூந் தேரில்‌ புறப்பட்டு, மூலை தோறும்‌ நர்த்தனங்களைப்‌ பார்த்துக்‌
கொண்டே விதி வலம்‌ வந்து உள்ளே போனார்‌,

[இப்பொழுது .பூந்தேர்‌ முன்னும்‌ திருமஞ்சனம்‌ பின்னுமாக நடக்கிறது. கவியின்‌ காலத்தில்‌ நடந்த விதம்‌ எப்‌பொழுது மாறினதோ?
பாஞ்சராத்‌திரப்படி நடக்கிற ஜல க்ரீடை இங்கு சொல்லப்படவில்லை:]

எட்டாம்‌ திரு நாள் –பூரத் தன்று காலையில்‌ ரங்கநாதன்‌ ஸ்ரீரங்கத்தின்‌ எல்லையைப்‌ பார்ப்பதற்காகப்‌ புறப்பட்டு
பத்‌ர . ஸுபத்ரர்கள்‌ உள்ள (நாழிகேட்ட)) வாசல்‌ வந்து, பஞ்ச கோபுரங்களையும்‌ தாண்டி. வாமனாஸ்ரமத்தைப்‌
பார்‌த்துக் கொண்டே தென்‌ திருக் காவேரியின்‌ ௨டகரை சென்றார்‌.
[வாமனப்‌ பெருமாளுக்கு ஸ்ரீரங்கத்தில்‌ உபநயனம்‌ நடந்ததாக பாஞ்சராத்‌ர பாரமேஸ்வர
ஸம்‌ஹிதையிலிருக்கும்‌ விவரம்‌ நம்முடைய ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில்‌ காண்க.
கவி பஞ்ச கோபுரங்களுக்கும்‌ வேளியே என்று கணக்கிட்ட ரீதியில்‌ தெற்கு ராயகோபுரத்துக்கு உள்பட்ட
திருக் குறளப்பன்‌ ஸன்னிதியே வாமனாஸ்ரமம்‌ என்று தெரிகிறது .
இந்த ஸன்னிதி புராண ப்ர ஸித்தம் என்று கோயிலொழுகிலும்‌ ‘சொல்லப் பட்டிருக்கிறது .]

ரங்கநாதன்‌ காவேரிக்‌ கரையிலிருந்து கிழக்கே போய்‌, வடக்கே திரும்பி, ஸ்ரீரங்கத்துக்கும்‌ மாதங்க
வனத்துக்கும்‌ (திருவானைக் காவலுக்கும்‌)  உள்ள எல்லைக்‌ கல்லையும்‌, வழியிலிருந்த ஜம்பூபதி ஸைன்யத்தையும்‌, தாமோதர கோபுரத்தையும்‌ பார்த்துக் கொண்டே கின்னர .கிம் புருஷ கந்தர்வர்கள்‌ வஸிக்கும்‌ ச்வேதாங்‌கணம்‌ என்னும்‌ பில்வ தீர்த்தம் போய்‌, வடதிருக்‌ காவேரி தாண்டி,
கதம்ப தீர்த்தத்தின்‌ வழியாகத்‌ திரு மங்கையாழ்வாருடைய மண்டபம்‌ போனார்‌;
ஸாயங்‌ காலம்‌ குதிரை யேறிப்‌ புறப்பட்டு, காவேரியில்‌ விளையாடி, வடக்கு வாசல்‌ வழியாக ப்‌ரவேசித்து, மூலை
களில்‌ .ந்ருத்தங்களை அனுபவித்துக் கொண்டே விதி வலம்‌ வந்து உள்ளே எழுந்தருளினார்‌.
[கதம்ப தீர்த்தம்‌ திருமங்கை யாழ்வாருடைய ஸ்தானம்‌.-இன்னும்‌ அவர்‌ பேரிலேயே பட்டா இருக்றது .
எல்லைக்‌ கரை ஆஸ்தான மண்டபம்‌ லஷ்மீ காவ்யத்துக்குப் பிறகு கொள்ளிடத்தின்‌ தென்‌ கரையில்‌ ஏற்பட்டதால்‌
பெருமாள்‌ கதம்ப தீர்த்தத்‌துக்கு மாசி உத்ஸவத்தில்‌ எழுந்தருளுகிறார்‌.
ஸ்ரீ ரங்கத் தாருக்கும்‌ திருவானைக் காவலாருக்கும்‌ நேர்ந்த எல்லைச்‌ சண்டை இங்கு சொல்லப்படவில்லை யாகையால்‌
இந்தக்‌ காவியத்துக்குப் பிறகு ௮து நேர்ந்து இருக்க வேண்டும்‌.]

நாள் 17-ம்‌ ஸர்‌–9-ம்‌ திரு –உத்தரத்தன்று காலையில்‌
பெருமாள்‌ ரத யாத்திரை செய்து நாச்சியார் கோயிலுக்குப்‌ போனார்‌.
[இப்பொழுது நாச்சியார் கோயிலுக்குப்‌ போவது முன்‌னும்‌ ரத யாத்திரை பின்னுமாய்‌ நடக்கிறது,
நாச்சியார்‌ கோயிலில்‌ பிரணய கலஹம கத்யத்ரய கோஷ்டி முதலியன்‌ இங்கு சொல்லப்படவில்லை. |

16-ம்‌ ஸர்‌–ரங்கநாதன்‌ திர்த்தவாரிக்காக வட திருக் காவேரி போய்‌ வருண ஸூக்தம்‌ சொல்லும்‌ ரித்‌ விக்குகளோடு ஸ்நானம்‌ செய்தார்‌.
கூட வந்தவர்கள்‌ எல்லாரும்‌ ஸ்நானம்‌ செய்தார்கள்‌.–ரங்கநாதன்‌ ஸன்னிதிக்கு எழுந்தருளினார்‌. ;
[இப்பொழுது பெருமாள்‌ நாச்சியார் கூடவே இருந்து விடுவதால்‌ தீர்த்‌த வாரிக்கு செல்வர்‌ மட்டும்‌ வட திருக் காவேரி எழுந்தருளுகிறார்‌.]

10-ம்‌ திரு நாள் –ஹஸ்தத்தன்று மத்தியானத்‌து க்கு
மேல்‌ பெருமாள்‌ மண்டபத்தில்‌ திருமஞ்சனம்‌ செய்து
கொண்டு பாஞ்சராத்ர முறைப்படி புஷ்பயாகம்‌ செய்தார்‌.
பிறகு மேள வாத்தியங்களோடு ஸப்‌த ஆவரணங்களையும்‌ பிர,தஷிணம்‌ செய்வதற்காக வெளியே போய்‌
ஐந்து பிரகாரங்களை ப்ரதக்ஷிணம் செய்து, ஆர்ய
படாள்‌ கோபுரத்துக்கு நேராக வடக்கே பார்த்து
நின்று,
பூர்வ ராஜாக்களாலும்‌ வர்த்தமான ராஜாக்களாலும் செய்யப்பட்ட கைங்கரியங்களைப் பற்றிய ஸ்ரீஸூக்‌தியைக்கேட்டு,
தீர்த்தம்‌, துளஸி, சந்தனம்‌, மாலை முதலியன அனுக்ரஹித்து தேவதை முதலானோரை உத்வாஸனம்‌ பண்ணி,
பத்ர ஸுபத்ரர்கள்‌ உள்ள கோபுரம்‌ (நாழி கேட்ட வாசல்‌) தாண்டி, கருட விஷ்வக்‌ஸேனர்கள்‌ இருக்கும்‌ பிரகாரத்தையும்‌, துர்கை கஜானனர்களிருக்கும்‌ பிராகாரக்தையும்‌ பிர தக்ஷிணம் செய்து கொண்டு ரங்கநாதன்‌ உள்ளே எழுந்தருனினார்‌.
[பெருமாள்‌ திருவிண்ணாழியையும்‌ பீரதஷிணம்‌ செய்த தாகவும்‌ ஸப்த ப்ராகாரங்களிலும்‌ மேள வாத்தியங்களோடும்‌ எழுந்தருளினதாகவும்‌ தெரிகிறது .
ராமானுஜ நூற்றந்தாதிக்காக மேளமில்லாமல்‌ எழுந்து அருளுவதும்‌, உடையவர்‌ ஸன்னிதிக்கு எழுந்தருளுவதும்‌ இங்கு சொல்லப்படவில்லை.
ஸப்த ஆவரணத்தோடு காவியம்‌ பூர்த்தியாகிறது. ஆடும்‌ பல்லக்கு சொல்லப்படவில்லை.]

————

5. ஸ்ரீரங்கராஜ சரித பாணம்‌

[பாணம்‌ என்பது நாடகம் போலுள்ள ஒரு ரசனை, இது கெளண்டின்ய கோத்ரியான ஸ்ரீனிவாஸ கவியால்‌ எழுதப்‌ பட்டது .
இவருடைய காலம்‌ தெரியவில்லை. இந்தப்‌ புஸ்‌தகம்‌ 1881, 1891-ம்‌ வருஷங்களில்‌ கிரந்த எழுத்தில்‌ அச்சு இடப் பட்டிருக்கிறது.
ரங்கநாதன்‌ ஒவ்வொரு நாயகியோடும்‌ கிரீடித்துக் கொண்டு உறையூர்‌ நாச்சியாரிடம்‌ போய்‌, அவளைக் கலியாணம்‌ செய்‌து கொள்வதையும்‌,
அவளுக்குப்‌ பெருமாளிடம்‌ காதல்‌ உண்டான விவரத்தையும்‌, பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உண்டாகும்‌ பிரணய ரோஷத்தையும்‌ இந்தக்‌ கவி வெகு ரஸமாகச்‌ சொல்லுகிறார்‌.
இந்த கிரந்தத்தில் உள்ள கடைசி இரண்டு விஷயங்கள்‌ மட்டும்‌ இங்கு அவஸ்யமாதலால்‌ எழுதப்படுகின்‌றன-

[ரங்க நாதன் உறையூர்‌ வல்லியைக்‌ கலியாணம்‌ செய்து கொண்டு அவளை மடியில்‌ வைத்து விளையாடிக் கொண்டிருக்‌கிறார்‌.
அப்பொழுது அவளுடைய தாய்‌ நிசுளையும்‌ பெரு மாளும்‌ இவ்வாறு பேசுகிறார்கள்‌.]

நிசுளை–உம்முடைய கருணையினாலேயே நீர்‌ எங்களுக்கு மணவாளப்‌ பிள்ளையாக வாய்த்தீர்‌, இவளுடைய செய்தியைச்‌ செல்லுகிறேன்‌ ; கேளும்‌ :–
பதினெட்டாம்‌ பெருக்கன்ரூ காவேரிக்குப்‌ பொட்‌டும்‌ புடவையும்‌ விடுத்துக்‌ கரையில்‌ நின்ற உம்மழகைப்‌ பார்த்து இவள்‌ ஆசைப்பட்டாள்‌.

நீர்‌ குறுத்‌துக்களால்‌ அலங்கரிக்க பல்லக்கிகே ஏறி ஒரே மூச்சிலோடி, ஆண்டாளிடம்‌ போய்‌ அவளுடைய
மாலையை வாங்கிச்‌ சூடியது கண்டு_-
**இவர்‌ எனக்கு என்ன மாகக்‌ கிடைப்பார்‌”,–என்று என்‌ பெண்‌ கவலை கொண்டாள்‌.

ரங்கநாதன்‌–இதற்கு முன்னேயே இவ்ளுடைய ஆசையை நான்‌ தெரிந்து கொண்டேன்‌, எப்போ என்‌றால்‌–
௮னேக கலச தீர்த்‌தங்களினால்‌ நான்‌ ஜேஷ்டாபிஷேகம்‌ செய்து கொண்டு உபய நாச்சியாரோடு திருப்‌ பாவாடை யன்று
ஏராளமான ப்‌ரஸாதங்களைப்‌ பார்த்‌துக் கொண்டிருக்கையில்‌ இவள்‌ என்‌ மனதைக்‌ கவர்ந்து விட்டாள்‌.

நிசுளை–பவித்ரோச்ஸவத்தில்‌ 360 தரம்‌ திருவாராதனம்‌ செய்து கொண்டு ஆச்‌சரியமான முக காந்தி யோடு
நீர்‌ பவிதர உத்ஸவ மண்டபத்தில் இருந்த படியே இவள்‌ மனதில்‌ பிரவேஸித்து விட்டீர்‌.
[பவித்ர உத்ஸவத்தன்௮ பெருமாள்‌ யாக சாலையி லிருந்து உள்ளே எழுந்தருளுகிறார்‌.
கவியின்‌ காலத்தில்‌ மண்டபம்‌ எழுந்தருளினார் போலத்‌ தோன்று கிறது .]

ரங்கநாதன்‌–அந்த மாஸத்திலேயே உறியடி. யன்று நான்‌ நாச்சிமார்களோடு வீதி வருகையில்‌ இவள்‌
அடிக்கடி என்னை ஸந்தோஷ்மாகப்‌ பார்த்தாலும்‌ ஓரோர்‌ ஸமயத்தில்‌ பார்வை கோபத்துடனிருந்தது

நிசுளை–அடுத்த மாஸம்‌ நவ ராத்ரியில்‌ நாச்சியார்‌ பூஜித்த குதிரைமேலேறி நீர்‌ சமீ விருஷ்த்தினிடம்‌
போனதைப்‌ பார்த்து இவள்‌ மெய்‌ மறந்தாள்‌
ஐப்பசி மாஸத்தில்‌ தாஸிகளின்‌ பாடலைக்‌ கேட்டுக்‌ கொண்டே ஊஞ்சலாடும்‌ உம்முடைய பக்கத்‌திலிருந்த
நாச்சிமார்களைப்‌ போலிருக்க இவள்‌ ஆசைப்பட்டாள்‌,

ரங்கநாதன்‌–இத்தளையும்‌ என்னுடைய பெருமையைக் கண்டு உண்டான ஆசை தானே!
நிசுளை–கார்த்திகை யன்று நீர்‌ தீப ஸ்‌தம்பத்தைப்‌ பார்த்து விட்டு, திரும்பவும்‌ ஆஸ்தானத்‌திலிருந்‌து
கலியன்‌ பாட்டுக்‌ கேட்ட களிப்பால்‌ ஆழ்வாருக்கு எல்லாவற்றையும்‌ கொடுத்து ஒன்றுமேயில்லாமல்‌ :
உள்ளே கடந்‌து போனதை நினைத்து நினைத்து இவள் தூங்கவேயில்லை.

ரங்கநாதன்‌–இக்த மாஸத்திலேயே உன்‌ பெண்‌ செய்த காரியத்தைச்‌ சொல்லுகிறேன்‌
கைசிகத்‌தன்று நான்‌ போர்வை சாத்திக்கொண்டு கைசிக புராணம்‌ கேட்கையில்‌ இவளைப்‌ பார்த்தேன்‌ ;
உடனே எனக்கு எல்லாம்‌ நூதனமாகிப்‌ புராணமென்பதே இல்‌லாமல்‌ போயிற்று 1 .

நிசுளை–இன்னொரு ௮திசயம்‌ கேளும்‌. மரர்கழி
மாஸத்தில்‌ நீர்‌ சித்திர மண்டபத்தில்‌ ஆழ்வார் ஆசாரியர்களோடு விற்றிருந்து
பெரியாழ்வார்‌ பிரபந்தம்‌ முதலாக பத்து நாளும்‌ பானம்‌ பண்ணின அமிருதத்தை எல்லாருக்கும்‌ கொடுப்பகற்காக
தரித்துக் கொண்ட மோஹினி ரூபத்தைக் கண்டு இந்தப்‌ பெண்‌ வெட்டுப்‌ போனாள்‌.
முக்த சேதனன்‌ அர்ச்சிராதி மார்க்கமாய்ப்‌ போவதை ஏகாதசி முதல்‌ அனுகரித்து பக்தர்களை அநுக்ரஹிப்பதற்காக நீர்‌
ஆயிரக்கால்‌ மண்டபம்‌ போய்‌ ஆழ்வாருடைய பிரபந்தத்தைக் கேட்டு அவரை ஆனந்‌திப்‌ பித்த குணத்தையே இவள்‌ பாடிக்கொண்டிருக்கிறாள்‌.

இதிலேயே நீர்‌ எட்டாம்‌ திரு நாள் குதிரை மேலேறி வையாளி விளையாடுகையில்‌ கூட்டமாய்‌ வந்து
எதிர்த்து வழிப்பறி செய்த கலியனை அனுக்ரஹித்ததைக் கண்டு இவள்‌ ஆச்சரியப்படுகிறாள்‌,

இந்த உத்ஸவத்திலேயே நீர்‌ நித்தியம்‌ ராத்திரி ஏகாந்தத்தில்‌ ஸங்கீதம் கேட்பதற்காகக்‌ கூட்டமில்லாமல்‌ உள்ளே போய்‌,
வீணை வாத்‌தியத்தைக்‌ கேட்டுக்‌ கொண்டே. படியேற்றம்‌ கண்டருளினதைப்‌ பார்த்து இவள்‌ திகைத்துப் போனாள்

தை மாஸத்‌தில்‌ முதல்‌ திருநாள் நீர்‌ உபய நாச்சியாரோடிருந்‌து மற்றை நாளில்‌ ஹம்ஸம்‌, ஸிம்மம்‌, ௧ருடன்‌, ஹனுமான்‌, யானை–வாஹனங்களேறி,
ஏழாம்‌ நாள்‌ உபய நாச்சிமாரோடு சூர்ணாபிஷேகம்‌ செய்து கொண்டு, எட்டாம்‌ நாள்‌ குதிரையேறி விளையாடி,
ஒன்பதாம்‌ நாள்‌ நாச்சிமாரோடு தேரிலிருந்ததைப்‌ பார்த்து இவள்‌ மோஹித்துப்‌ போனாள்‌,

இந்தச்‌ தேரன்று ராத்‌ரி நாச்சியார் கோயிலில்‌ உபசாரங்களைப்பெற்று, உபய நாச்சியாரைத் தனித்தனியாகப்‌ பல்லக்கில்‌ வைத்து
நீர்‌ வீதி வலம்‌ வந்த வைபவத்தைக்‌ கண்டு இவள்‌ பூரித்துப்‌ போனாள்‌.

கனுவன்று நீர்‌ முத்து நகை பூண்டு மாலைப்‌ போதில்‌ குதிரை யேறி வேட்டை. விளையாடினதைப்‌ பார்த்து இவள்‌ மகிழ்க்தாள்‌.

மாசி மாஸக்தில்‌ கதம்பம்‌,வகுளம்‌, ஆம்ரம்‌ முதலிய: தீர்த்தங்களில்‌ உத்ஸவம்‌ பண்ணிக்‌ கடைசி நரள்‌
பெரிய தெப்பத்தில்‌ நாச்சிமாரோடு நீர்‌ விளையாடினது கண்டு இவளும்‌ விளையாட விரும்பினாள்‌.”
[க,தம்பம்‌ ஆம்‌சம்‌-இவ்விரண்டு தான்‌ இப்பொழுது மாசி உத்ஸவத்தில்‌ நடக்கின்றன.
தீர்தங்களில்‌ உத்ஸவம்‌ கடக்கும்‌ விவரத்தை ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில்‌ காண்க.]

பங்குனி உத்தரத்‌தில்‌ நீர்‌ உபய நாச்சிமார்களை கர்ப க்ருஹத்திலேயே விட்டு பெரிய பிராட்டியாரோடு
ஏக ஆஸனத்தில் இருப்‌பதைப் பார்த்து இவள்‌ தானும்‌ உம்‌ மோடு வீற்றிருக்க விரும்பினாள்‌.

[கவி இங்கு பிரணய கலஹத்தைச்‌ சொல்லாதது . இவளுடைய கல்யாணம்‌ பூர்த்தியாகாததால்‌.]
இன்னொரு விஷயம்‌ நினைவுக்கு வந்தது :–இந்த உச்ஸவத்திலேயே மூன்றாம்‌ திருநாள்‌ சத்‌ர சாமராதிகளோடும்‌, ஸைன்யங்களோடும்‌,
பெரிய கூட்டத்‌தோடும்‌, மஹா வைபவத்துடன்‌ புறப்பட்டு அகண்ட. காவேரியில்‌ நீர்‌ அம்மையாரை நினைத்துக் கொண்டு அவளுடைய தண்ணீர்ப் பந்தலில்‌ போய்‌ உட்கார்ந்ததைப் பார்த்து.-
*இவ்வளவு இறு பிள்ளையாயிருப்பவர்க்கு அம்மையாரிடம்‌ ஆசை உண்டாயிற்றே,”.- என்று சொல்லி என்‌ பெண்‌ சிரித்தாள்‌.
[லக்ஷ்மீ காவ்யக்காரர்‌ சொல்லாத அம்மையார்‌ தண்ணீர்ப்‌ பந்தலை இந்தக் கவி சொல்லுகிறார்‌,]

சித்திரை மாஸத்தில்‌ நீர்‌ த்வஜ ஆரோஹணம்‌ பண்ணி, நாளுக்கு மண்டபமாகப்‌ போய்‌, வித:விதமான
நைவேத்தியங்களை அனுபவித்து உச்ஸவம்‌ செய்து கொண்ட அழகையும்‌ என்‌ பெண்‌ பார்த்தாள்‌.

ரங்கநாதன்‌–௮ம்மா- நான்‌ ஒன்று சொல்லுகிறேன்–இந்த மாஸத்திலேயே பச்சைக்‌ கர்ப்பூரம்‌ குங்குமப்பூ, கஸ்தூரி,
முதலிய வாஸனை த்ரவியங்‌களாலும்‌ பூக்களாலும்‌ சைத்யோபசாரம்‌ செய்து சொண்டு, பானகம்‌ முதலியவற்றால்‌
நான்‌ ஸந்‌தோஷப்‌படுகையில்‌ இவள்‌ தினங்தோறும்‌ என்னெதிரிலிருந்து எனக்கு நேத்ர ஆநந்தத்தைக்‌ கொடுத்தாள்‌,

நிசுளை-வைகாசி மாஸத்தில்‌ ஜலம்‌, நிறைந்த: அகழி நடுவே மண்டபத்தில்‌ நாச்சிமாரோடு ஊஞ்சலில்‌
நர்த்தனம்‌ செய்யும்‌ தாஸிகள் சூழ நீர்‌ உட்கார்ந்‌து இருப்‌பதைப் பார்த்து மெச்சினாள்‌.
ஒவ்வொரு உத்ஸவத்திலும்‌ சந்த்ர புஷ்கரணியில்‌ – நீர்‌ தீர்த்வாரி நடத்துவதையும்‌,

பத்தாம்‌ திரு நாள் .
புஷ்ட யாகத்துக்குப் பிறகு வீதி வந்து. உபகார ஸ்மிருதியாக உடையவர்‌ ஸன்னிதி த்வாரத்துக்குப்‌ போவதையும்‌, படிப்புக்‌ கேட்பதையும்‌, கொடி யிறக்குவதையும்‌- பார்தது இவள்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ சொரிந்தாள்‌,
[உடையவர்‌ ஸன்னிதி விஷயம்‌ வக்ஷ்மீ காவியக்காரரால்‌ சொல்லப் படவில்லை.]

ஸ்லாமி ! ஒவ்வொரு உத்ஸத்திலும்‌ ஏழாம்‌ திரு நாள் உபய நாச்சிமார்களோடு நீர்‌ நெல்‌ அளவிட்டு
இவ்வளவென்று சொல்வதற்குப்போல நாச்சியார் கோயில்‌ போனதைக் கண்டு இவள்‌ மோஹித்தாள்‌..

ஒவ்வொரு உத்ஸவத்திலும்‌ எட்டாம்‌ திருநாள்‌ நீர்‌ எல்லையெல்லாம்‌ சுற்றி.மண்டபத்திலிருக்து
குதிரை யேறிக்‌ காவேரி வழியாய்த் திரும்பும் போது இவளும்‌ கூட வந்தாள்‌,
[இத்தால்‌ எல்லைக் கரை எழுந்து அருளுவது இப்போது
போலப்‌ பங்குனியில்‌ மட்டுமில்லாமல்‌ ஒவ்வொரு யாத்ர உத்ஸவச்திலும்‌ உண்டென்று தெரிகிறது -.
கோயிலுக்கு “வெளியே உள்ள்‌ மண்டபத்துக்கு எழுந்து அருளுவது கூட இப்‌பொழுது கோயிலுக்குள்ளேயே ஏற்பட்டுவிட்டது .]

ஒவ்வொரு உத்ஸவத்துலும்‌ முதல்‌ நாள்‌ ராத்திரி நீர்‌ யாக சாலையிலிருந்து வந்து பெரிய பெருமாளுக்கெதிராக உட்கார்ந்து பிரதி ஸரம்‌ கட்டிக்கொண்டு, வெகு வேகமாகத்‌ திரும்பி எழுந்தருளின அழகைக்‌ கண்டு இவள்‌ ஆச்சரியப்பட்டாள்‌,
மத்தளம்‌, தாளம்‌, எக்காளம்‌ முதலிய கோஷத்‌தோடும்‌, ஸ்‌துதி பாடகர்கள்‌ சொல்லும்‌ கட்டியத்தோடும்‌, கைகூப்பி நிற்கும்‌ ஜனங்களினிடையில்‌,
சாமரங்‌களுக்கு நடுவே, திருமுகத்துக்‌ குடையின்‌ கீழ்‌ நீர்‌ திருவந்திக்‌ காப்பு கண்டருளும்போது உம்முடைய முக
ஜோதியைப்‌ பார்க்கப்‌ பார்க்க இவளுக்கு அலுக்கவே யில்லை,
தீபாவளியன்றும்‌ யுகாதியன்றும்‌ நீர்‌ சந்தன மண்‌டபத்‌திலிருந்து நம்மாழ்வார்‌ முதலானோரை வெகுமதி யளித்‌.து அனுப்பி,
ஷண நேரம்‌ தங்கி விட்டு உடனே உள்ளே எழுந்தருளின அழகையே இவள்‌ பாடிக்‌ கொண்டிருக்கிறாள்‌,

ஸங்கிராந்தி முதலான தினங்களில்‌ மேனி முழும்‌ நீர்‌ சந்தனம்‌ பூசிக்கொண்டு ஸஹஸ்‌ர தாரைத் தீர்த்தத்தினால்‌
திருமஞ்சனம்‌ செய்துகொள்ளும்‌ போது உம்மூடைய கன்னத்தின்‌ அழகைக் கண்டு இவள்‌ முத்தமிடப்‌ புறப்பட்டாள்‌.

ரங்க நாதன்‌–உன்‌ பெண்‌ தன்னுயிராலேயே
என்னை அங்கீ கரித்து விட்டாள்‌.

நிசுளை–ஒன்று மாத்திரம்‌ பெண்‌ புத்தியால்‌ கேட்டுக் கொள்கிறேன்‌ : உம்முடைய மற்றை மஹிஷிகளைப் போல இவளையும்‌ பாவிக்க வேண்டும்‌,

ரங்ககாதன்‌–இந்த ஸபையில்‌ இப்படி. ப்‌ரதிக்ஞை பண்ணித்‌ தருகிறேன்‌ : இவள்‌ எனக்கு லக்ஷ்மியைப்‌ போல பிரியாத பத்தினி,
லக்ஷ்மியைப்‌ போல இவளையும்‌ தனிக் கோயிலில்‌ வைத்‌து இவளுக்கு ஸகல போகம்‌களையும்‌ கொடுக்கிறேன்‌.
வருஷத்துக்‌கு ஓருமுறை இந்த நகரம்‌ வந்து ஒரு நாள்‌ ‘இவளோடிருக்கிறேன்‌.

[ரங்க நாதன்‌ ஸ்ரீரங்கம்‌ வந்து நாச்சியார் கோயிலுக்குப்‌ போய்‌ கதவைக்‌ தட்டிக்‌ கூப்பிடுகிமுர்‌.] ்‌
கண்ணே யார்‌ அங்கே? ரங்க ரஸிகன்‌ ;
இங்கென்ன போம்‌ 1] நான்‌ உன்னுடைய காந்தன்‌;
அவர்‌ இங்கில்லை–விளையாடப்‌ போயிருக்கிறார்‌ ;
உன்னை விட்டு அவர்‌ எங்கே விளையாடுவது ?
பாக்யசாலியான ப்ரியை எங்‌கே யிருக்கிருளோ 7
உன்னைவிட அவருக்கு ப்ரியை யார்‌?
நிசுளைக்கு நாதனுடைய கன்யா ரத்னம்‌ இருக்‌கிறாளே]|

[ரங்க நாதன்‌ கதவைத் திறந்து உள்ளேபோய்‌ நாச்சியாரிடம் உட்கார்ந்து . ௮வளை ஸமாதானப்படுத்‌தி னார்‌. ]
நாச்சியார்‌–உம்முடைய மேனி மிக்க மிருது வென்று நான்‌ கெட்டியாகக் கூட கட்டி யணைந்த தில்லை;-அழுத்தமாயும்‌ முத்தமிட்ட தில்லை,
கொஞ்சம்கூட தயவேயில்லாமல்‌ யார்‌ உம்மை இப்படிக்‌ காயப்‌ படுத்தியது?

ரங்கநாதன்‌–அப்படி நினையாதே, நேற்று ராத்‌ரியே நான்‌ ஊரைவிட்டு நீலீவனம்‌ போய் ராக்ஷஸனைக்‌
கொன்று ரிஷிகளை ஸந்தோஷப்படுத்தி , இப்போது தான்‌ வருகிறேன்‌.
சத்துரு புலியாயிருந்தாலும்‌ இடம்‌ காடாயிருந்தாலும்‌ யுத்தத்‌தில்‌ உடம்பெல்லாம்‌: காயமாயிற்று,
நான்‌ நிஜத்தைச் சொல்லுகிறேன்‌.-பொய்‌ சொன்னதுமில்லை ண: சொல்லட் போகிறதுமில்லை,

நாச்சியார்‌–(கடகடவென்று சிரித்‌துக் கொண்டு):
வியாக்ராஸூரனை இன்று கொன்றதும்‌ நிஜம்‌ ! நீலீ வனத்தில்‌ முள்‌ இருப்பதும்‌ நிஜம்‌ |

ரங்கநாதன்‌–நம்பிக்கை யில்லையானால் தேவர்களின்‌
முன்னால்‌ ஸத்தியம்‌ பண்ணுகிறேன்‌; நெருப்பைக்‌ கையிலேந்துகிறேன்‌.
கொடிய பாம்பையும்‌ கையில்‌ பிடிக்கறேன்‌; ஸ்ரீயான நீதான்‌ எனக்கு ப்ரியமானவள்‌.

நாச்சியார்‌–நீரே ஸத்யமான பரம புருஷன்‌.-
தேவர்கள்‌ உம்முடைய துளி மாயையாலும்‌ வஞ்சிக்கபடுவார்கள்‌.
உம்முடைய முகமே நெருப்பு, பாம்பே உமக்குப்‌ படுக்கை, நீர்‌ ஸ்ரீ ய : ஸ்ரீ -ஸ்ரீ க்கும் ஸ்ரீ யாய் இருப்பவர்யிருப்பவர்‌).

ரங்கநாதன்‌–பதில்‌ சொல்ல இடமில்லாமல்‌ பேசுகிறாளே ! குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக்‌ கேட்க வேண்டியது தான்‌. “
(என்று மன்னிப்புக்‌ கேட்‌கிறார்‌. நாச்சியாரும் மன்னித்தாள்‌.)

————-

6–ஆதி ப்ரஹ்ம உத்ஸவம்

விபீஷணன்‌ ரங்க விமானத்தை அயோத்தியில் இருந்து லங்சைக்குக்‌ கொண்டு போகையில்‌ மாத்யாந்ஹிகத்துக்‌காக புஷ்கரிணிக்‌ கரையில்‌ வைத்தான்‌.
அப்பொழுது உறையூரில்‌ ராஜாவாயிருந்த தர்மவர்மா விபிஷணனை உபசரித்து இங்கேயே சில நாள் இருக்கும் படியாகப்‌.ப்‌ரார்த்தித்தான்‌.
மறுநாள்‌ பிரம்மா ஏற்படுத்தின உத்ஸவத்தை நடத்த வேண்டிய தினமாகையால்‌ லங்கைக்குப்‌ போக விரும்பின விபீஷணன்‌ தர்மவர்மாவின்‌ பிரார்த்தனையினால்‌ இவ்விடமே உச்ஸவத்தை நடத்தினான்‌.
(ஸ்ரீரங்க மாஹாத்மியம்‌ பார்க்க) ஸ்ரீ ரங்கமாஹாத்மியத்திலும்‌ லக்ஷ்மீ காவ்யத்திலும்‌ சொன்ன
ப்ரகாரமே பங்குனி ரோஹிணியில்‌ த்வஜ ஆரோஹணம் ஆகி பத்து நாள் உத்ஸவம்‌ இப்பொழுதும்‌ நடக்‌கிறது
இந்த உத்ஸவத்தின்‌ விவரம்‌ ஈருக்கமாகப்‌ பின்வருமாறு,

1-ம்‌ திரு–த்வஜாரோஹணம்‌, பேரி தாடனம்‌,
உபய நாச்சியாரோடு திருவீதி , யாக சாலையில்‌ பெருமாளுக்குத் திரு மஞ்சனம்‌,
பஞ்சகுண்டஹோமம்‌, ஸன்‌னிதி வாசலில்‌ யாத்ரா தானம்‌,

2-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில் வீதி எழுந்து அருளுவதில்லை. அம்பட்ட மண்டபத்துக்கு எழுந்தருளுவதாக ஐதிஹ்யம்‌.
ஆனால்‌ கருட மண்டபத்திலேயே மண்டபப்படியாகி சீக்கிரம்‌ உள்ளே எழுந்தருளுவார்‌.
இன்றைய மண்ட பப்படி.செலவு மட்டும்‌ திருச்சி பரியாரி’களுடையது.

3-ம்திகு–சீயர்‌ புரத்துக்காக ராத்ரியே பெருமாள்‌ பல்லக்கில்‌ புறப்பட்டு ப்‌ரதக்ஷிணமாய்‌ வடக்கு வாசல்‌ வழியாக மேலூர்‌ போய்‌,
விருஷி தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து, கொள்ளிடத்திலிறங்கி -சிலையாத்தி போய்‌, மீண்டும்‌ கொள்ளிடத்‌ திலிறங்‌கி, காவேரியையும்‌ தாண்டி
இரவெல்லாம்‌ வழி நடந்து, உதயம்‌ சீயர் புரம் அம்மையார்‌ தண்ணீர்ப் பந்தலில்‌ தத்யோகனமும்‌ மாங்‌காய்‌ ஊறுகாயும்‌ அழுது செய்து, மண்டபத்தில்‌ ஆராதன நைவேத்தியம்‌ : கண்டருளி,ஸாயங்காலம்‌ புறப்பட்‌டுக்‌ காவேரி தாண்டி,
மேலூர்‌ வழியாக வந்து வடக்கு வாசல்‌ பிரவேசித்து, வீதி எழுந்தருளி உள்ளே போவார்‌,

4-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ பல்லக்கில்‌ புறப்‌பட்டு கொள்ளிடம்‌ இறங்கி , நொச்சியத்துக்கு மேற்கில்‌
ஸ்ரீரங்கராஜ புரத்திலுள்ள செட்டி ராயர்‌ மண்டபத்திலிருந்து ஸாயங்காலம்‌ கருட வாஹனகத்தில்‌ புறப்பட்டு.
விதி யெழுந்தருளி உள்ளே போவார்‌.

5-ம்‌ திரு–காலை சேஷ வாஹனத்தில்‌ வீதி யெழுந்தருளி, மத்தியானம்‌ சேஷ ராய மண்டபத்திலிருந்து
ஸாயங்காலம்‌ கல்ப விருக்ஷத்தில்‌ வீதி யெழுந்தருளி உள்ளே போய்‌, விடியற்காலையில்‌ புறப்பட்டு உறையூர் எழுந்தருளுவார்‌.

6-ம்‌ திரு–உறையூருக்குப்‌ பெருமாள்‌ எழுந்தருளும்போது 10 மணியாகும்‌. பெருமாள்‌ பல்லக்கோடு சந்தன மண்டபத்தில்‌ எழுந்தருளுவார்‌.
திருக்காப்பு சேர்த்து வெளியே தாஸிகள்‌ பாட்டும்‌ மேள வாத்தியமும்‌ முழங்கும்‌.
ஸன்னிதிக்‌கெதிரில்‌ பல்லக்கோடு எழுந்தருளின பெருமாள்‌ பல்லக்கிலேயே நாச்சியாருக்கு நேராக எழுந்தருளி,
புது வஸ்திரம் . சந்தனம்‌, திலகம்‌, மாலை முதலியன சாத்திக் கொண்டு, களைந்த மாலையை நாச்சியாருக்கு அனுப்புவார்‌.
நாச்சியார்‌ மாலை யணிந்து கொண்ட பிறகு, ஏகாந்த ப்ரஸாதம்‌ நிவேதனமாகும்‌.
முதலில்‌ பெருமாளும்‌ பிறகு நாச்சியாரும்‌ வெளி மண்‌ டபத்தில்‌ எழுந்தருளி, திருவாராதனம்‌ முதலியன ஆகும்‌.
ராத்திரி 10 மணி வரையில்‌ பெருமாள்‌ எல்‌லாருக்கும்‌ ஸேவை ஸாதித்து, நாச்சி யாரை உள்ளே அனுப்பிப்‌ புறப்பட்டு, ஸ்ரீரங்கம்‌ வந்து வெளியாண்டாளோடு மாலை மாற்றிக் கொண்டு உள்ளே எழுந்தருளுவார்‌.

7-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ வீதி எழுந்தருளுவதில்லை; ,ஸாயங்காலம்‌ உபய நாச்சிமாரோடிருந்து
ஜலக்ரீடை,, சூர்ணாபிஷேகம்‌, நெல்‌அளவு–இவை ஆனதும்‌ வீதி யெழுந்தருளி, நாச்சி யார் கோயிலில்‌ திருமஞ்‌சனம்‌ செய்து கொண்டு உள்ளே போவார்‌,

8-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ திரு வீதி எழுந்‌தருளாமலே தெற்கு வாசல்‌ வழியாகக்‌ கிழக்கே போய்‌,
அசுவத்த தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து-வேலேந்து தாஸருக்கு ஆனை ஏற்றம் அனுக்ரஹித்து வழியில் அவ்வோ இடங்களில்‌
ஸ்தலத்தார்களையும்‌ அனுக்ரஹித்து , பில்வ தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து எல்‌லைக் கரை மண்டபம்‌ போய்‌, எல்லைக் கரை ராமானுஜனையும்‌ ஸ்ரீரங்க நாரயண ஜீயரையும்‌ ௮நுக்ரஹிப்பார்‌;
ராத்திரி குதிரை வாஹனத்‌தில்‌ புறப்பட்டுக்‌ கொள்‌ளிடம்‌ இறங்கி வடக்கு வாசல்‌ வழியாக ஊருக்குள்‌
பிரவேசித்து , கோரதத்தினடி.யில்‌ வையாளி யாகி உள்ளே எழுந்தருளுவார்‌.

9-ம்‌ திரு. பங்குனி உத்தரம்‌–பெருமாள்‌ காலையில்‌ பல்லக்கில்‌ புறப்பட்டு சித்திரை வீதி உள்‌ திரு வீதிகளில்‌ வலம்‌ வந்து
நாச்சியார்‌ ஸன்னிதிக்குள்‌ போகையில்‌ கதவுகள்‌ சாற்றப் பட்டு, தாஸிகள்‌ புஷ்பங்களையும்‌ பழங்களையும்‌ எறிந்து பெருமாளைத்‌ தடுக்து வெளியே நிறுத்தி வைப்பார்கள்‌.
கதவு திறக்கும் போது பெருமாள்‌ உள்ளே போவதும்‌ கதவு சாற்றும் போ.து பெருமாள்‌ பின்னால்‌ ஒதுங்குவதுமாயிருக்கும்‌.
பெருமாள்‌ நாச்சிமார்களுக்கு ஸமாதானம்‌ பண்ணி வைப்பதற்‌காக நம்மாழ்வார்‌ வருவார்‌.
பெருமான்‌ தான்‌ சொல்ல வேண்டியவைகளை அரையரிடம்‌ சொல்லி ஆழ்வாரை மத்தியஸ்‌தமாகக்‌ கொண்டு நாச்சியாரிடம்‌ தெரிவிப்‌பதற்காக இருவரையும்‌ அனுப்புவார்‌,
அரையர்‌ ஆழ்‌வாரோடு உள்ளே போய்‌ நாச்சியாருடைய பரிகரமான பண்டாரியினிடம்‌ பெருமாள்‌ சொன்னதைச்‌ சொல்லி
பண்டாரி சொல்லும்‌ நாச்சியார் வார்த்தையைப்‌ பெருமாளிடம்‌ – ஆழ்வாரோடு வந்து சொல்லுவார்‌,
பெருமாள்‌ சொல்லுவது அஞ்சு வார்த்தை, நாச்சியார்‌ சொல்லுவது அஞ்சு வார்த்தை,
இந்தப்‌ பத்து வார்த்‌தைக்குப்‌ பத்து பாட்டு வெகு ௮ழகாக முன்னோரான அரையர்களால்‌ செய்யப்பட்டு இப்பொழுதும்‌ சொல்லப்‌ படுகிறது.
பாட்டு அரையர்களிடமே இருக்கிறது,–வார்த்தை மட்டும்‌ * மட்டையடி” என்னு விகாரமாகப்‌ பெயர் பெற்ற புஸ்தகமாய்‌ வெளியாயிற்று, அத்த வார்த்தை பின்‌ வருமாது :—

நாம்‌ உத்ஸவார்த்தமாகப்‌ புறப்பட்டருளி, திரு வீதிகளெல்லாம்‌ வலம்‌ வந்து தேவதைகள்‌ புஷ்ப வர்ஷம்‌ வர்ஷிக்க,
ப்‌ராம்மணர்களெல்லாரும்‌ ஸ்தோத்‌திரம்‌ பண்ண,—இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்தில்‌ வந்தால் ,
தாங்களெப்போதும்‌ எதிரே விடை கொண்டு திருக் கை கொடுத்து, உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு போய்‌, திவ்ய ஸிம்மாஸனத்திலேறி யருளப் பண்ணி, திருவடி விளக்‌க, திரு வொத்து வாடை சாத்தி, திருவால வட்டம்‌ பரிமாறி, மங்களாலத்தி கண்டருளப் பண்ணி, சுருளமுது
திருத்தி ஸமர்ப்பித்‌து , –இப்படி ௮னேக உபசாரங்களெல்லாம்‌ நடக்குமே.
இன்றைக்கு நாமெழுந்தருளின விடத்திலே திருக் காப்பு சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத்‌ திருப்பிக் கொண்டு, திருச் சேவடிமார்‌கள்‌ கைகளாலே
பந்துகளாலும்‌ பழங்களாலும்‌ விட்டெ.றிவித்‌து , இப்படி யொரு நாளும்‌ : பண்ணாத ௮வமானங்களை யெல்லாம்‌ இன்றைக்குப்‌ பண்ண வந்த காரியம்‌
ஏதென்று. கேட்டு வரச்‌ சொல்லிப்‌–பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாரம்‌,

தாம்‌ எப்போதும் போல எழுந்தருளினதே மெய்‌யானால்‌—திருக் கண்களெல்லாம்‌ சிவந்து இருப்பானேன்‌?
திருக் குழல்‌ கற்றைகளெல்லாம்‌ கலைந்திருப்பானேன்‌ ?
கஸ்தூரி திருமண்‌ காப்பு கரைந் திருப்பானேன்‌ ? திருவதரம் வெளுத்திருப்பானேன்‌ ? திருக் கழுத்தெல்லாம்‌
நக க்ஷதங்களா யிருப்பானேன்‌ ? திருமேனியெல்லாம்‌ குங்குமப்பொடிகளாக யிருப்பானேன்‌ ?
திருப்பரிவட்‌டங்களெல்லாம்‌ மஞ்சள்‌ வர்ணமா யிருப்பானேன்‌ ?திருவடிகளெல்லாம்‌ செம்மஞ்சக்‌ குழம்பா யிருப்பானேன்‌?
இப்படிப்பட்ட அடையாளங்களைப்‌ பார்த்து . நாச்சியாருக்கு மிகவும்‌ திருவுள்ளம்‌ கலங்கி யிருக்கிறது,
ஆன படியினாலே , உள்ளே யிருக்கிறவர்களை வெளியிலே விட வேண்டாமென்றுல்‌, வெளியிலே யிருக்கிறவர்களை
உள்ளே விட வேண்டாமென்றும்‌– இப்படி, கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற ஸமயத்திலே உள்ளே விண்‌ணப்பம் செய்ய ஸமயமில்லை, ஆன படியினாலே நேற்றைக்‌ கெழுக்தருளின விடத்திலே தானே இன்றைக்கும் எழுந்து அருளச் சொல்லி– நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

திருக் கண்‌ சிவந்து இருப்பான் என் என்றால்‌ நாம்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வரானபடியினாலே
கவிரி முடித்து, கல்கச்சை சட்டி, வல்லய மேந்தி,குதிரை நம்பிரான்‌ மேலே ராத்திரி முழுவதும்‌ நித்திரை
யின்‌றி ஜகத்‌ ரக்ஷணார்‌த்தமாக ஜாக ரூகனாயிருந்த படியினாலே திருக்கண்‌ சிவந்து போச்சுது .,
திருக் குழல்‌ கற்றைகளெல்லாம்‌ கலைந்திருப்பானேனென்றால்‌–காற்‌றடித்து கலைந்து போச்சுது -, கஸ்தூரி திருமண்‌ காப்பு கரைந்திருப்பானேனென்றால்‌–௮தி கடோரமான ஸுரிய கிரணத்தால்‌ கரைந்து போச்சுது –திருவதரம்‌ வெளுத்திருப்பானேனென்றால்‌-௮ஸூர நிரசனார்த்தம்‌
தேவதைகளுக்காக சங்கத் வானம்‌ பண்ணின படியினாலேவெளுத்துப்‌ போச்சுது .
திருக் கழுத்தெல்லாம்‌ நக க்ஷதமாயிருப்பானே னென்றால்‌—௮தி ப்ரயாஸமான காடுகளிலே போகிற போது பூ முள்ளு கிழித்தது.
திருமேனி யெல்லாம் குங்குமப் பொடிகளா யிருப்பானேனென்றால்‌- தேவதைகள்‌ புஷ்ப வர்ஷம்‌ வர்ஷித்த படியினாலே புஷ்ப ரேணு படிந்தது. திருப் பரிவட்டங்களெல்லாம்‌ மஞ்சள்‌ வர்ணமா யிருப்பானேனென்றால்‌-ஸந்த்யா ராகம்‌ போலே யிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள்‌ கண்ணுக்கு மஞ்சள்‌ வர்ணமாகசத் தோன்றுகிறது ,
திருவடி.கனெல்லாம்‌ செம்மஞ்‌சக் குழம்பாயிருப்பானேனென்றால்‌–குதிரை நம்பிரான்‌
மேலேறி ௮ங்கவடிவமேல்‌ திருவடிகளை வைத்துக் கொண்டு போனபடியினாலே திருவடிகள்‌ சிவந்து போயின.
இப்படிப்பட்ட அடையாளமே யொழிய வேறில்லை.–ஆனால் போது கழித்து வருவானேனென்‌றால்‌–வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே திருமங்கை யாழ்வானென்பவன்‌ ஒருவன்‌ வந்து ஸர்வ ஸ்வாபஹாரத்தையம்‌ பண்ணிக் கொண்டு போனான்‌,
அவனைச்‌ சில நல்ல வார்த்தைகளைச்‌ சொல்‌லித்‌ திருவாபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு
போய்‌ கருகூலத்தில்‌ எண்ணிப்‌ பார்க்குமிடத்தில்‌ ௧னையாழி மோதிரம்‌ காணாமல்‌ போச்சுது.
அதற்காக விடிய பத்து நாழிகைக்குப்‌ புறப்பட்டருளி திருவீதிகளெல்லாம்‌ வலம் வந்து, கணையாழி மோதிரத்தைக் கண்டு
எடுத்துக் கொண்டு  மீள வாரா நிற்கச் செய்தே,௮ப்‌பொழுது தேவதைகள்‌ பாரிஜாத புஷ்பங்கள்‌ கொண்டு ஸேவிக்க வந்தார்கள்‌,
நாம்‌ நம்முடைய பெண்டுகளன்‌றியிலே சூடுகிறது இல்லை யென்று நமக்கு முன்னமே வரக்காட்டி. நாமும்‌ பின்னே எழுந்தருளினோம்‌.
ஆன படியினாலே நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிக்‌ கொண்டு நம்மையும்‌ உள்ளே அழைக்கச்‌ சொல்லிப்‌ பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாரம்‌

கணையாழி மோதிரம்‌ காணாமல் போனதே மெய்‌யானால்‌–விடிய’ பத்து நாழிகைக்குப்‌ புறப்பட்டருளி உறையூரிலே போய்‌,
மின்னிடை மடவார்‌ சேரியெல்‌லாம்‌ புகுந்து யதா மநோ ரதம் அனுபவித்து உண்டாயிருக்கிற அடையாளங்களெல்லாம்‌
திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்‌தேயும்‌, அவ் வடையாளங்களையும்‌ அந்யாதவாகக்‌ கொண்டு, நாங்கள்‌ ஏழைகளானபடி.யினாலே
இப்படிப்பட்டிருக்கிற வஞ்சந உக்‌திகளை யெல்லாம்‌ நேற்றைக்‌ கெழுந்தருளின விடத்தில்‌ தானே
சொல்லிக் கொண்டு இன்றைக்கும்‌ அங்கே. தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

நாமானால்‌ உறையூரைக்‌ கண்ணாலே கண்டது மில்லை; காதாலே கேட்டதுமில்லை. துஷ்டர்களா யிருக்கிறவர்களும்‌
மனதுக்குச்‌ சரிப்போனபடி சொன்‌னால்‌ நீரும்‌ அந்த வார்த்தைகளைத் தானே கேட்டுக்‌ கொண்டு நம்மையும்‌ ஒரு நாளும்‌ பண்ணாத அவமானன்‌களெல்லாம்‌ பண்ணலாமா ?
நீங்கள்‌ ஸ்‌த்ரீகளானபடி.யினாலே முன்பின்‌ விசாரியாமல்‌ பண்ணினீர்களாமென்ற அவமானம்‌ உங்களுக்கே யொழிய நமக்குத்‌ தேவை யில்லை.
ஆனபடியினாலே, நாம்‌ கொடுத்த புஷ்‌பத்தையும்‌ வாங்கிக் கொண்டு நம்மையும்‌ உள்ளே யழைக்‌கச் சொல்லிப்‌ பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாசம்‌.

முந்தா நாள் அழகிய மணவாளப் பெருமாள்‌ வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள்‌ அதி ப்ரீதியுடனே
எதிரே விடைகொண்டு, திருக்கை கொடுத்து, உள்ளே யெழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு போய்‌, திவ்ய ஸிம்ஹாசனத்திலே
ஏறி யருளப் பண்ணி, திருவடி விளக்கி , திரு வொத்து வாடை. சாத்தி, திருவாலவட்டம்‌ பரிமாறினோம்‌.
அப்‌போது ௮தி௧ ஸிரமத்தோடே எழுந்தருளி யிருந்தார்‌.
ஆனால்‌, இளைப்போ வென்று வெந்நீர்த்‌ திருமஞ்சனம்‌ சேர்த்து ஸமர்ப்பித்தோம்‌.
அதை நீராடினது பாதியும்‌ நீராடாதது பாதியுமாக எழுந்தருளி யிருந்தார்‌,
ஆனால்‌, இளைப்போவென்று திருவறைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம்‌ கொண்டு வந்து ஸமர்ப்பித்‌தோம்‌, அதையும்‌ எப்போதும்‌ போல சாத்‌திக் கொள்‌ ளாமல்‌ ஏதோ ஒரு விதமாக சாத்தியருளினார்‌.
ஆனால்‌, இளைப்போவென்று கஸ்தாரித்‌ திருமண் காப்பு சேர்த்து ஸமமர்ப்பித்தோம்‌. அதையும்‌ எப்போதும்‌
போல சாத்திக் கொள்ளாமல்‌ திரு வேங்கடமுடையான்‌
திருமண்காப்பு போல கோணாமாணாவாய்ச்‌ சாத்தியருளினார்‌.
ஆனால்‌, இளைப்போவென்று தங்கப் பள்ளயத்தில்‌ அப்பம்‌ கலந்த சிற்றுண்டி யக்காரம்‌ பாலில் கலந்து,
வர்க வகைகள்‌ முதலானதுகளைச்‌ சேர்தது ஸமர்ப்பித்‌தோம்‌.
அதையும்‌ அமுது செய்தது பாதியும்‌ அமுத செய்யாதது பாதியுமாய்‌ எழுந்தருளியிருந்தார்‌. ஆனால்‌ இளைப்போவென்று
சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்‌தோம்‌. அசையும்‌ ௮முது செய்யாதபடி தானே எழுந்தருளியிருந்தார்‌. ஆனால்‌, இளைப்போவென்று
திருவநந்தாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன்‌ மேலே திருக் கண்‌ வளரப் பண்ணி அடியோங்கள்‌ திரு வடிகளைப்‌ பிடித்துக்கொண்டிருந்தோம்‌.
தாம்‌ வஞ்‌சகரான படியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை யுண்டாக்‌கி , எங்கள்‌ கருகூலம்‌ திறந்து, எங்கள்
ஸ்த்ரீ தனங்களான அம்மானை பந்து கழஞ்சி பீதாம்பரங்களையும்‌ கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. எழுந்தருளுகிறோமென்றும்‌ சொல்லாதபடி. எழுந்தருளினார்‌.
அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள்‌ ௮ச்சமுடன்‌ திடுக்கிட்டெழுந்திருந்து, திருப்படுக்கையைப்‌ பார்க்கு மிடத்தில்‌,
பெருமாளைக்‌ காணாமையாலே கை நெரித்து வாயடித்து ௮ணுகவிடும்‌ வாசற்‌ காப்பாளரை யழைத்‌துக் கேட்குமளவில்‌,–
அவர்கள் வந்து , அம்மானை பந்து கழஞ்சு பீதாம்பாமான ஸ்திரீ தனத்தையும்‌ கைக்‌ கொண்டு, இன்ன இடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. யெழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள் –அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க
பரிஜனங்களாயிருக்கிற திருச்சேவடி.மார்களை யழைப்‌பித்தோம்‌.
அவர்கள்‌ வந்து அடிபிடித்து அடிமிதித்‌துக் கொண்டு போனவிட த்‌ திலே, உறையூரிலே கொண்டு போய் விட்டது .
௮ங்கே மச்சனியென்று ஒருத்‌திக்கு முறைமை சொல்லி, மற்றொருத்தியை மடியைப் பிடித்தும்
கச்சணி பொன்‌ முலை கண்ணா லழைத்ததும்‌, கனி வாய்‌ கொடுத்ததும்‌,
கையில்‌ நகக் குறி மெய்யங்கமானதும்‌, கார் மேனி யெங்கும்‌ பசுமஞ்சள்‌ பூத்ததுமாகக்‌
கரும்புத்‌ தோட்டத்தில்‌ யானை ஸஞ்சரிக்கிறாப் போலே,. தேவரீர்‌ ஸஞ்சரிக்கிறிர் என்று நாங்கள்‌ உசிதமாகப்‌
போக விட்ட தூதியோடி அங்கே உள்ளபடி. வந்து சொன்னாள்‌.
உம்மாலே எங்கள்‌ மனது உலை மெழுகாயிருக்றது -ஒன்‌றும்‌ சொல்லாதே போம்‌ போமென்று நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

ஒருவருக்கொருவர்‌ ஸம்சயப்பட்டால்‌, அந்த ஸம்சயம்‌ ஒரு ப்ரகாரத்திலுல்‌ தீராமற்போனால்‌, ப்‌ரமாணத்தாலே தீர்த்‌துக் கொள்வார்கள்‌.
அந்தப்படி ப்‌ரமாணம்‌ பண்ணித்‌ தருகிறோம்‌. நாம்‌ தேவாதி தேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்‌.
ஸமுத்திரத்திலே முழுகுகிறோம்‌. அக்நி ப்ரவேசம்‌ பண்ணுறோம்‌. பாம்புக்‌ குடத்‌திலே கையிடுகிறோம்‌,
மழுவேந்துகிறோம்‌. நெய்க்‌ குடத்திலே கையிடுகிறோம்‌. இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும்‌ வாங்கிக்
கொண்டு, நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிச்‌ சூட்‌டிக் கொண்டு, நம்மையும்‌ உள்ளே யழைக்கச்‌ சொல்லிப்‌
பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்‌.

ஒருவருக்கொருவர்‌ ஸம்சயப்பட்டால்‌ அந்த ஸம்சயம்‌ ஒரு ப்ரகாரத்தாலும்‌ தீராமற் போனால்‌: ப்‌ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்‌.
லோகத்திலே ப்ராம்மணனுக்கும்‌ ப்‌ராம்மணனுக்கும்‌ வாக்‌கு வாதம் வந்தால்‌ ப்ராம்மணன்‌ ப்ராம்மணனைத் தாண்டிக் கொடுப்பான்‌.
தாம்‌ தேவாதி தேவனான படியினாலே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்தீரே !
அந்த தேவகைகள்‌ தம்முடைய திருவடிகளை எப்போ காணப் போகிறோம்‌ ! எப்போ காணப் போகிறோம்‌ ! –என்று ஸதா பிரார்த்தித்துக்‌ கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோம் என்றால்‌ வேண்டா மென்பார்‌களா –
ஸமுத்‌ரத்திலே முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே !ப்‌ரளய காலத்திலே ஸகல லோகங்களையும்‌ திரு வயிற்றிலே வைத்‌து ரக்ஷித்து
ஒரு ஆலிலைத்‌ தளிரிலே கண்வளர்ந்த உமக்கு ஸமுத்திரத்தலே முழுகிறது அருமையா ?
அக்நி ப்‌ரவேசம்‌ பண்ணுகிறோமென்று சொல்ல வந்தீரே ! ப்‌ரம்மாவுக்காக உத்தர வேதியில்‌ ஆவிர்ப்பவித்‌த தமக்கு அக்நியில்‌ முழுகுகிறோமென்‌றால்‌ அக்நி சுடுமா ?
பாம்புக்குடத்‌திலே கையிட்டுத் தருகிறோம் என்று சொல்ல வந்தீரே ! சென்றாற்‌ குடையாம் இருந்தால் சிங்காதனமாம்
என்று ஸதா ஸர்வ காலம்‌ திரு வானந்தாழ்வான் மேலே திருக் கண்‌ வளர்ந்து இருக்கிற
தமக்குப்‌ பாம்புக்‌ குடத்திலே கையிட்டால்‌ பாம்பு கடிக்குமா
மழுவேந்துகிறோ மென்று சொல்ல வந்தீரே! கோடி ஸூர்ய ப்‌ரசாசமான திருவாழியாழ்‌வானை ஸதா திருக்கையிலே தரித்‌துக் கொண்டி.ருக்கிற
தமக்கு ௮ப்ரயோஜகமான இரும்பு மழு வேந்துகிறது அருமையா?
நெய்க்‌ குடத்திலே கையிடுகிறது அருமையா? இப்படிப் பட்டிருக்கிற பரிஹாஸ ப்‌.ரமாணங்களை யெல்லாம்‌ சரிப் போன விடத்திலே தானே
பண்‌ணிக் கொண்டு இன்றைக்கும்‌ ௮ங்கே தானே யெழுந்த ருளச்‌ சொல்லி நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்‌.

நாம்‌ உச்ஸவார்‌த்தமாகப்‌ புறப்பட்டருளி திரு வீதிகளெல்லாம்‌ வலம்‌ வந்து, தேவதைகள்‌ புஷ்பவர்‌ஷம்‌ வர்ஷிக்க,
ப்ராம்மணர்க ளெல்லாரும்‌ ஸ்தோத்‌திரம் பண்ண, இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்‌தில்‌ வந்தால்
தங்கள் எப்போதும் போலே ஆதரியாமல் படிக்கு அபராதங்களைப்‌ பண்ணினோம் என்‌றீர்கள்‌.
நாமானால்‌ உறையூரைக்‌ கண்ணாலே கண்டதுமில்லை, காதாலே கேட்டதுமில்லை யென்று சொன்னோம்‌.
அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்‌.
ஆனால்‌, ப்‌ரமாணம்‌ பண்ணித் தருகிறோம் என்று சொன்‌னோம்‌. -அத்தைப்‌ பரிஹாஸ ப்ரமாணமென்று சொன்‌னீர்கள்‌.
இப்படி நாம்‌ எத்தனை சொன்ன போதிலும்‌ அத்தனையும்‌ அந்யதாவாகக்‌ கொண்டு சற்றும்‌ திருவுள்‌ளத்தில்‌ இரக்கம்‌ வராமல்‌,
கோபத்தாலே திருவுள்ளம்‌ கலங்கத் திருமுகமண்டலம்‌ கறுத்துத்‌ திருக்கண்கள்‌ சிவந்து இப்படி. யெழுந்தருளியிருந்தால்‌ நமக்கென்ன கதி யிருக்கிறது?
௮ழகிய மணவாளப்‌ பெருமாள்‌ ஸ்ரீரங்க நாச்சியார்‌ ஸந்நிதி வாசலிலே தள்ளுபட்டுக்‌ கொண்டிருக்கிறாராம் என்ற அவமானம்‌ உங்களுக்கே யொழிய நமக்குத் தேவை யில்லை.
ஆன படியினாலே, நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிக் கொண்டு நம்மையும்‌ உள்ளே யழைச்கச் சொல்லிப்‌ பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்‌.

நாம்‌ வருஷா வருஷம்‌ அடமாயெழுந்தருளியிருந்து தமக்குச்‌ சரிப் போன படி நடந்து போட்டு, பின்னும்‌ இங்கே வந்து
நாமொன்று மறியோமென்றும்‌, ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்றும்‌–பரிஹாஸங்‌களைப்‌ பண்ணி இப்படிப் பட்டிருக்கிற
அக்ருத்யங்‌களைப்‌ பண்ணிக் கொண்டு வருகிறீர்‌.-நாமானால்‌ பொறுக்‌கிறதில்லை. நம்முடைய அய்யா நம்மாழ்வார்‌ வந்து
மங்களமாகச்‌ சொன்ன வாய்‌ மொழியினாலே பொறுத்‌தோம்‌. உள்ளே எழந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்‌ரகாரம்‌.

முதல்‌ ஏகாந்தம்‌–நாச்சியாரால்‌ அனுமதிக்கப்‌ பட்டு பெருமாள்‌ ஸன்னிதி வாசலில்‌ எழுந்தருளி ஆழ்வாரை மரியாதை செய்து அனுப்புவார்‌.
உறையூரில்‌ நடந்தது போலவே ஏகாக்தம்‌, தளிகை நிவேதனம்‌ நடந்து பெருமாள்‌ பங்குனி உத்தர மண்டபம்‌
எழுந்து அருளுவார்‌.-நாச்சியாரும்‌ பெருமாளிடம்‌ போய்‌ வீற்றிருப்பாள்‌,

இரண்டாம்‌ ஏகாந்தம்‌– செல்வர்‌ பெரிய கோயிலி.லிருந்து புறப்பட்டு வட திருக் காவேரியில்‌ தீர்த்தம்‌ ஸாதித்துப்‌ பெருமாளிடம்‌ வந்ததும்‌,
கத்ய த்ரயம்‌.ஸேவிக்கப்படும்‌. -கத்ய த்ரயம்‌ என்னும்‌ கிரந்தம் இன்றைய தினமே அவதரித்தது,
கத்ய த்ரய சாற்று முறைக்காக இரண்டாம்‌ ஏகாந்தத் தளிகை நிவேதனம்‌ ஆனதும்‌ செல்வர்‌ பெரிய கோயில்‌ எழுந்தருளுவார்‌.

மூன்றாம்‌ ஏகாந்தம்‌. பெருமாள்‌ நாச்சியார்‌ இருவருக்கும்‌ பதினெட்டு ஆவ்ருத்தி திருமஞ்சனம்‌ ஆகும்‌.
மூன்றாம்‌ ஏகாந்தத்‌ தளிகை நிவேதனம்‌ முதலியவை ஆனதும்‌ நாச்சியார்‌ உள்ளே எழுந்து அருளுவாள்‌,
பெருமாள்‌ கோரதத்தில்‌ திரு விதி எழுந்தருளி: உள்ளே போய்‌ கண்ணாடி யறையில்‌ திருமஞ்சனம்‌: செய்து கொள்வார்‌.

10-ம்‌ திரு–பெருமாள்‌ திருமஞ்சனம்‌ செய்து ‘கொண்டு ஸாயங்காலம்‌ மேளமில்லாமல்‌ உலாப்பாட்டும்‌
ராமானுஜ நூற்றந்தாதியும்‌ கேட்டுக் கொண்டே வீதி யெழுந்தருளி, உடையவர்‌ ஸன்னிதி வாசலில்‌ உடை யவரை அனுக்ரஹித்து,
அவர்‌ செய்‌து வைக்கும்‌ சைத்யோபசாரங்களையும்‌ பெற்றுக் கொண்டு, துவஜ ஸ்தம்பத்‌தினடியில்‌
படிப்புக்‌ கேட்டு ஸன்னிதிக்குள்‌ எழுந்தருளுவார்‌. பிறகு ரக்ஷா விஸர்ஜனமும்‌ துவஜ அவரோஹணமும்‌ ஆகும்‌.
மறு நாள் ராத்திரி விடாயாற்றியாக ஆடும்‌ பல்லக்கில் பெருமாள்‌ வீதி எழுந்தருளுவார்‌.
பெருமாள்‌ பங்குனி உத்தரத்தன்று நாச்சியார்‌ ஸன்‌னிதிக்கு எழுந்தருளச்‌ காரணம்‌ என்ன? ஸ்ரீரங்கத்தில்‌
பங்குனி உத்தரம்‌ என்பது தந்த்ரோத்ஸவம்‌ -அதாவது-இரண்டு உத்ஸவம்‌.
உத்ஸவம்‌ அவ.வர்களுடைய நக்ஷத்‌திரத்தில்‌ ஆரம்பமாக வேண்டும்‌ ; ௮ல்லது , முடிய வேண்டும்‌.
பெருமாளுக்கு ரோஹிணி நக்ஷத்‌திரமாகையால்‌ அன்று இந்த உத்ஸவம்‌ ஆரம்பமாகி உத்தரத்தில்‌ முடிகிறது;
நாச்சியாருக்கும்‌ ரோஹிணியில்‌ ஆரம்பமாகி அவளுடைய நக்ஷத்ரமான உத்தரத்தில்‌ முடிகிறது -.
பெருமாளுக்கு காலை யிலும்‌ ராத்‌திரியிலும்‌ உத்ஸவம்‌ நடக்க வேண்டி யிருப்பதால்‌ நாச்சியார் உத்ஸவம்‌ தனியாக
நடக்க முடியாமல்‌ பாவனையாக நடக்கிறது .-உத்தாம்‌ இருவருடைய உத்ஸவத்துக்கும்‌
கடைசி நாளாதாகையால் நாச்சியாருடைய சேர்த்‌தியில் இருப்‌பதற்காகப்‌ பெருமாள்‌ இன்று அங்கெ போகிறார்‌.
பிரளய கலஹ உத்ஸவம்‌ பண்ண வேண்டுமென்ற ஆகம விதிப்படி. அதற்கும்‌ உறையூர்‌ நாச்சியார்‌ ஸம்பந்தம்‌ அனுகூலமான ஸந்தர்பமாய்‌ வாய்த்தது.

77- உறையூர்ச் சரித்திரம்

உறையூர்‌ சோழர்களின்‌ ராஜ தானியாயிருக்தது — திருச்‌சினாப்பள்ளி கெஜடீர்‌ 27, 30, 49 பக்கங்களில்‌ பார்க்க,
உறையூர்‌ ராஜாவான பராந்தகன்‌, திரிசிர மலையில்‌ ஸரம முனி பயிராக்கின சிவந்திப்பூவை அபஹரித்த தோட்டக்‌.காரனை மன்னித்ததால்‌
சிவன்‌ கோபித்துக் கொண்டு உறையூரை மண்‌ மாரியால்‌ அழித்தார்‌.கெஜடீர்‌ 337-ம்‌ பக்கத்தில்‌ காண்க. கலி யுகத்திலே_ பகுகாலம்‌ சென்ற அனத்தரம்‌,. ஒரு கால விசேஷத்திலே ஒரு சோழனுடைய பாப விசேஷத்தினாலே மண் மாரி பெய்து பட்டணம்‌ முழுகிப் போயிற்று,
அநந்தரம் , ௮து முதலாக சோள தேசாதி பதிகள்‌ கங்கை கொண்டானிலே வாஸம்‌ பண்ணுகையில்‌,
கால விசேஷச்திலே உறையூரிலே கொஞ்சமாகக்‌ கோயில்‌ கட்டி பெருமாளையும்‌ நாச்சியாரையும்‌ ஒரு சோழன்‌ பிரதிஷ்டிப்பித்‌தான்‌, என்று கோயிலொழுகு 5-ம்‌ பக்கத்தில்‌ இருக்‌கிறது
இது எந்த சோழனுடைய என்ன பாபத்‌தினாலே : மண் மாரி பெய்தது என்றும்‌, எந்தச் சோழன்‌ ஊரைப்‌ புனருத்‌தாரணம்‌ பண்ணினான்‌ என்றும்‌ தெரியவில்லை .
ஸுந்தர பாண்டியன்‌ சோழ ராஜாக்களை ஐயித்‌து அவர்‌களுடைய பட்டணங்களான தஞ்சாவூர்‌ உறையூர்‌ இரண்‌டையும்‌ எரித்த பிறகு
அவர்களுக்கே கொடுத்து விட்டதாக தன்னுடைய ஸ்ரீரங்கம்‌ சாஸனத்தில்‌ சொல்லும்‌ விவரம்‌ கெஜடீர்‌ 45 ஆம் பக்கத்திலிருக்கிறது .
உறையூர்‌ 1820ம்‌ வருஷத்துக்கு முன்பு துருப்புக்கள் தங்குமிடமாயிருந்தது ..–கெஜடீர்‌ 336 ம்‌ பக்கம்‌,

இப்படிப்‌ பல தடவை உறையூருக்கு ஆபத்து வந்த காலத்தில்‌ கோயிலை ரக்ஷிக்க முடியாமல்‌
நாச்சியாரை மட்டும்‌ ஸ்ரீ ரங்கத்தில்‌ எழுந்தருளப்‌ பண்ணினதாகச்‌ சொல்லப்படுகிறது .
உறையூர்‌ கமல வல்லித்‌ தாயாரை ஸ்ரீரங்கத்திலேயே கூர நாராயண ஜீயர்‌ பிரதிஷ்டிப்பித்த விவரம்‌ கோயிலொழுகு 112ம்‌ பக்கம்‌,
உறையூர்க் கோயிலைச்‌ சேர்ந்த இடங்கள்‌ இப்பொழுது குடிகளாலும்‌ அன்ய மதத்தினராலும்‌ ஆக்‌ரமிக்கப்பட்டு விட்டன.
கோயிலுக்‌ கெதிரிலிருந்த தெப்பக் குளம்‌ இப்‌பொழுது அன்னியர்களால்‌ ஆக்ரமிக்கப்பட்டதாய்த்‌ தெரிகிறது இப்படி ஸ்தலங்கள்‌ “பறி கொடுக்கப் பட்டதால்‌
நாச்சியாருக்குத் தெப்பம்‌ நடத்த இடமில்லாமல்‌ கோயிலுக்‌குள்ளே யிருக்கும்‌ சிறு புஷ்கரிணிக்குள்ளேயே தெப்பம்‌ நடந்து கொண்டிருக்கிறது
நம்முடையதை அன்யர்களுக்கு அபஹரித்துக்‌ கொடுக்கும்‌ விஷயத்‌தில்‌ சட்டமும்‌ அதிகாரமும்‌ செல்லுன்றனவே யன்றி
அன்யர்களால்‌ ஆக்ரமிக்கப்‌பட்ட நம்முடைய ஸ்தலத்தை நமக்கு மீட்டுக் கொடுக்க எதுவும் பயன்படுகிறது இல்லை.
அன்யர்களுக்குள்‌ மதாபிமானமும்‌ நமக்குள்‌ ௮து இல்லாததுமே இம்மாதிரி துர்கதிக்குக் காரணம்‌.
தெப்பத்தன்று கோயில்‌ கிணற்றில்‌ தெப்பம்‌ சுற்றின பிறகு மற்றை நாளில்‌ வெளி வராத நாச்சியார்‌
அன்றும் அடுத்த நாள்‌ பந்தக் காட்சி யன்றும்‌ வீதி வருவதைக்‌ கொண்டே ஆதியில்‌ தெப்பக்குளம்‌ வெளியே இருந்ததாகத்‌ தீர்மானிக்கலாம்‌.
உறையூர்க் கோயிலில்‌ மணவாளப்‌ பிள்ளை யாக நின்ற திருக் கோலமாய்‌ ரங்க நாதனும்‌ அவருக்கு அருகில்
உறையூர்‌ நாச்சி யாரும்‌ த்ருவ பேரங்களாக எழுந்தருளி ‘ யிருக்கிறார்கள்‌.
நாச்சியாரின்‌ உத்ஸவ மூர்த்தி முன்னால்‌ பெருமாளுடைய திருவடி. நிலைகளுக்குக் கீழ்‌ பிரதிஷ்டிக்கப்‌ பட்டிருக்கிறது ஸ்ரீரங்கத்‌துக்கு அபி முகமாயிருக்க வேண்‌டியதால்‌ இந்த ஸன்னிதி வடக்குப்‌ பார்த்திருக்கிறது
எதிரில்‌ குளமும்‌ அப்பால்‌ காவேரியுமாய்‌ வெகு அழகாயுள்ள ஸன்னிவேசத்தை எதிரில் வீடுகள்‌ சூழ்ந்து விகாரப்படுத்தி விட்டன

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ திருக்குறுங்குடி. அழகிய நம்பியுலா

October 23, 2023

காப்பு
பூமாலை சேர் குறுங்கைப்‌ பொன்மேனி நம்பியெங்கள்‌
மாமால்‌ பவனியுலா மாலைக்கு–நாமேவு
பூவற்‌ கருடனே பொன்னுலகத்‌ தார்பரவுங்‌
காவற்‌ கருடனே காப்பு.

நூல்‌
கார்கொண்ட மேனியான்‌ கைகொண்ட நேமியான்‌
பார்கொண்ட பாதப்‌ பரந்தாமன்‌ சீர்கொண்ட
பூமகளும்‌ பார்மகளும்‌ போற்றியிரு பாலிருப்ப
மாமலரோன்‌ கைகுவித்து வந்திப்ப நேமியுடன்‌
சங்கமுத லைம்படையுந்‌ தானிலங்கப்‌ புள்ளரசு
புங்கவனாஞ்‌ சேனையர்கோள்‌ போற்றிசைப்ப—எல்குங் நிறை
தேவர்‌ குழாம்நெருங்கிச்‌ சேவிப்பச்‌ செங்கமலப்‌
பூவலரும்‌ நிலவரை போலவே–யாவருக்கு ––5-

மிஞ்சிய வைகுண்ட வீட்டிருக்கும்‌(வீட்டிருக்க ) நாளவுணன்‌
நெஞ்சிற்‌ கெறுவம்‌ நிறுத்த வெண்ணிக்‌–கொஞ்சவுரு
வாமனமாய்‌ வேள்விபுரி மண்டபத்திற்‌ சென்றிரந்து
தாமன தால்‌ மூவடிமண்‌ தாவென்ன—ஒமெனவே
வெள்ளி தடுப்ப விழியொன்று போக்கிமுன்னே
யள்ளியநீர்‌ கையேற்ற வந் நாளில்‌–உள்ளமகிழ்ந்
தோரடியிற்‌ கீழே ழுலகளந்து(யுலகளந்து ) மேல்நின்ற
வோரடியில்‌’ மேலே ழுலகளந்தும்‌(யுலகளந்தும் )–ஓரடிக்கும்‌
எங்கே யிடமென்‌ றெதிர்மா வலிசிரசிற்‌
பங்கே ருகப்பொற்‌ பதம்வைத்தே— துங்கத்‌–10-

திரிவிக்‌ கிரமத்‌ திருவவதா ரஞ்செய்‌
தருள் முக் கியதலமென்‌றாகும்‌–ப.ரவரிய
வாமனச்‌ சேத்ரமென வாழுங்‌ குறுங்குடியான்‌
தேமருவு சித்தாச்‌ சிரமத்தான்‌–மாமறையோன்‌
கோர முகத்திற்‌ குறுங்கண் பிறந்திந்தத்
தாரணியிற்‌ றீதிழைக்கக்‌ தான்கண்டே—நேரெதிர்ந்து
( வென்றி தரு )வென்று திரு வைகுண்டம்‌ விற்றிருந்த கோலமும் பொற்
குன்று தனில்நின்‌ற கோலமும்பால்‌–துன்று கடற்‌
பள்ளி கொண்ட கோலமும்பண்‌ பாய்ச் சேவை சாதித்து
விள்ளுமவ னாமம்‌ விளங்குமூர்‌–உள்ள மகிழ்‌–15

கோடி மகர தீர்ததங்‌ குலவு, தல மென்‌ றுவிண்ணோர்‌
நாடியிறைஞ்‌ சுங்குறுங்கை நன்னகரான்‌– வீடு பெற.
நேசித் தலர் சொரிந்து நின்றெழுபத்‌ தெண் பிரமர்‌
பூசித்‌ தினிதேத்தும்‌ பொற் பதத்‌தான்‌ -தேசிகமாஞ்‌
செக்கச்‌ சிவந்த செழுஞ்சுடரைப்‌ பேத மறப்
பக்கத்தில்‌ வைத்த பரிவினான்‌—மிக்க தமிழ்ச்‌
சீரன்‌ புறவே தெரிந்து பா டும்பறைச்சிக்‌
காரங் கொடுத்தருளு மன்பினான்‌—நாரதனார்
நன்றுதரு மெஞ்ஞான்றும்‌ ஞானம்‌ “விளங்குமென
நின்று தவம்புரிய நேசித்தோன்‌– வென்‌ றிதரு–20-

மாக்களிற்று வேக்தன்‌ மனப்பூ ரணமாக :
நாக்கறுக்க வுண்மையாய்‌ நாக்களித்தோன்‌–ஆக்கமது
மிச்ச நமக்குக்கீழ்‌ வீட்டுவர மங்கையெனப்‌ ்‌
பிச்சனுக்குப்‌ பேறுதவும்‌ பெற்றியான்‌–இச்செகத்தில்‌
வந்தித்த காரி மதலை யெனப்புளிக் கீழ்ச்
சந்தத்து (சந்தித்து ) வேதந் தமிழ்செய்தோன்‌–சிந்‌திக்குந்‌
தெற்குவீ டென்று திருமங்கை மன்னன் வர
நற்கதியன்‌ றீந்தருளும்‌ நம்பெருமாள்‌ சொற்கிசைந்த
பாடற்‌ குருகிப்‌ பரவு மரையர் துழாய
மாடத்திற்‌ போயிருந்த வாரத்தான்‌–நாடிக்‌–25–

குழனார்‌ கழனிக்‌ குளத்திற்‌(குழத்திற் ) றிருவாய்‌
மொழியா லடகுகொய்த மூர்த்தி–வழுவால்‌
வருராக்‌ கதனும்‌ மதங்கனும்வீ டெய்தக்‌
கருணா கடாட்சமருள்‌ கண்ணன்‌—அருள் கூரும்‌
எம்பெருமா னார்சீட னென்னச்சோ மன்றுவைத்த (மன்றோய்த்த )
நம்பெருமா னாயிர நாமத்தான்‌–தம்பமினி. ‘
யாரெனக்கு நானுன்‌ னடைக்கலமென்‌ றேயிறைஞ்சுஞ்‌
சேரனுக்குப்‌ பிள்ளையாய்ச்‌ சென்மித்தோன்‌–வார்புனலிற்‌
காரண்ட மூழ்கிக்‌ கரும்பனையைச்‌ சுற்றி வரப்‌
பேரண்ட வீடளித்த பெற்‌றியான்‌—சீர்தங்கு–30-

பிள்ளைதர வேணுமென்றே (வேணுமென்று )பேராசை யாற்றவஞ்செய்‌
வள்ள முலைப்‌ பாடக வல்லிபால்‌–உள்ளறிவாய்ச்‌
சென்மித்துத்‌ திக்களைத்துஞ்‌ சென்றுரா மேசுரத்திற்
றன்மத்தால்‌ செப்பேடு தான்கண்டே–நன்மைபெறுஞ்‌
சீவல மாறனுக்குச்‌ சித்த மகிழ்ந் தேயருள்செய்‌
காவலவன்‌ செங்கமலக்‌ கண்ணினான்‌–மேவு
முறைகேத்‌ திரபால மூர்த்தி வட கீழ்‌
புறமேவ வன்பு (புற மேவி யன்பு )புரிந்தோன்‌–நிறமான
பச்சைப்‌ பரியேறிப்‌ பாரறியச்‌ சேரனுக்காய்‌
(மெச்சு )மெய்ச்சப்‌ படைவெட்டும்‌ வீர த்தான்‌—உச்சி தமாம்‌ –35–

நீல வரையருவி நேராகச்‌ செவ்வந்தி
மாலை புனையு மணிப்புயத்‌தான்‌–சால
மழைதடுத்து முன்னாள்‌ வசந்தன்கொண்‌ டாடுங்‌
‘குழகனம்பி ராயனெங்கள்‌ கோமான்‌–விழைவாகத்‌
தேசிக விலாசச்‌ சிகரந் தெரிசித்த
கோசிகனுக் கன்பு கொடுத்த பிரான்‌–விசலைசூழ்‌
பாருண்‌ டுமிழ்ந் தளந்து(தமர்ந்து ) பன்‌.றியாய்க்‌ கீண்டெடுத்த
நீருண்ட மேக நிஐத்தினான்‌–பேரண்ட
௮ண்டமு மண்டத்‌ தலகிலுயி ரும்படைக்கப்‌
பண்டயனை யீன்ற பரந் தாமன்‌ விண்ட –40–

முதலை நிருதன்‌(கிருதன் ) முனியை யடர்ந்து
மதலை மதலையாய்‌ வந்தோன்‌–இதமுடனே
அன்றெதிர்ந்த தாடகையை யாதி யிராவணனை
வென்று செயங்கொண்ட வீரத்‌தான்‌–துன்று
மருது ௪கடு வளர்தொட்டிற்‌ பேய்ச்சி
யெருது குதிரை யிளங்கன்‌–றுருகியபுள்‌
ளானை முதல்மல்ல ராவியுண்டு கஞ்சனையும்‌
வானி லனுப்பு மருகனார் –ஆனிரைக்காய்க்‌
குன்றெடுத்து மாய்ச்சியர்கள்‌ கூறையெடுத்‌ தும்மனைக்‌குள்‌
சென்றெடுத்து வெண்ணெய்‌ திருடியும்‌–அன்றெடுத்த–45–

தாம்போ டசோதைமுன்னே தாழ்ந்து நின்றோன்‌ தாமரைத்தாள்‌
பாம்போடுமாடும்பர தத்தான்‌–மேம்பாடி த்‌
தென்றுபதி னாறா யிரங்கோ பியர் மகழ
மன்‌ றல்‌ புரிந்தருளு மாயத்தான்‌—வென்‌ றிபுனை
ஐவருக்குத் தூதுரைத்தும்‌ அர்ச்சுன ற்குத்‌ தேரூர்ந்தும்‌
தையலுக்குத்‌ தானை தனைக்காத்தும்‌- செய்ய ்‌
பகலில்‌ இரவழைத்தும்‌ பாரதப்போர்‌ மூட்டிச்‌
செக மகிழப்‌ பூபாரந்‌ தீர்த்தோன்‌-.-இகழ்வான
வாணன்‌ கரமறுத்தோன்‌ வானோர்‌ பணிந் (பரிந்)தேத்தும்‌
சேணிந் திரற்கிளைய செங்கண்மால்‌–காணும்‌–50-

மதுகை டபர்ச்செற்றோன்‌ மாமதவா னைக்காய்‌
முதலை தனையடர்ந்த மூர்த்தி–முதியதிரைப்‌
பாலுததி யிற்பகுவாய்ப்‌ பாம்பிற்‌ பசுத்துரத்துங்
கோலிலா லிற்றுயிலுங் கோவிந்தன்‌–மேலடியார்‌
தன்னெஞ்சும்‌ வைகுந்தத்‌ தானமுந் தாழ்ந் திறைஞ்சும்‌
என்னெஞ்சும்‌ நீங்கா தினி திருந்தோன்‌–முன்னமொரு:
மாவானை முன்னு மதுரத்‌ தமிழ்பாடு
நாவாணன்‌ பின்னும்‌ நடந்த பிரான்‌–தேவான
ஈசனார்‌ பக்கத்தும்‌ ஏத்துமறை யுச்சியினும்‌
நேசமா யெப்போதும்‌ நின்றமால்‌–காசினியாந்–55-

தான மடிதீண்டத்‌ தாரகைக்கு மேலான
வானமுடி தீண்ட வளர்ந்‌த பிரான்‌. ஆன தவம்‌
நம்புருஷ நாராயணப்பேரே ரிச்சிறப்புந்
தும்பிநின்‌ றுலாவிய பூஞ்‌ சோலையும்‌–பைம்புனல்சேர்‌
காலடியி லாற்றின்‌ (லிரற்றினக் )கவர்த்தலையிற்‌ பொன்விளையச்‌
சாலி விளையு்‌ந் தடம்பணையும்‌–மேலான
சித்திர கோபு ரமுஞ்‌ சேர்ந்ததென்னஞ்‌ சோலைகளும்‌
வர்த்‌தனையாந் தென் குறுங்கை மாநகரான்‌–இத்தரையில்
முத்தொழிற்கு மூவுருவாய்‌ மூல நடு வீறாகி
வித்தகஞ்செய்‌ பேரின்ப வீட்டினான்‌– ௮த்திபடி (அத்தியடி )–60-

மீனாமை பன்றி யரி மிக்க குறள் பரசுக்
கோன்வார்‌ சிலைராமன்‌ கூன்கலப்பை— தானே
விசயபெல்‌ ராமன்‌ விளங்கு கிட்ண மாவாந்‌
தெசவவதா ரம்புரியுந் தேவன்‌—உசி தமறைக்‌
காரணத்தா னார்க்குமடங் காரணத்தா னேந்தி யகை
வாரணத்தான்‌ காத தருள்கை வாரணத்தான்‌.. கார் வரை போல்
ஆகத்தான்‌ பூமகள்சே ராகத்தா னன்றெடுத்த
நாகத்தான்‌ பள்ளிகொண்ட காகத்தான்‌–கோகனக
வுந்தியா னீள்‌ சகட வுந்தியான்‌ கன்றெறிந்த
வந்தியான்‌ தாரணிசெவ்‌ வந்தியான்‌–சிந்தியார்‌–65-

உண்ணத்தான்‌ பார்முழுது முண்ண த்தான்‌ நீண்டகடல்‌
வண்ண த்தான்‌ வாமகர வண்ணத்‌ தான்‌–எண்ணுமன்‌பால்
வாரத் தான்‌ முன்பாரா வாரத்‌ தான்‌ அஞ்சவெய்த
தீரத்தான்‌ சிந்துநதி தீரத்தான்‌.-பாரிரந்த
வாமத்தான்‌ சங்கரன்சேர்‌ வாமத் தான்‌ ஆயிரமா
நாமத்தான்‌ கஸ்த்தூரி நாமத்தான்‌–கோமளப்பால்‌
வேலையான்‌ முத்தொழில்செய்‌ வேலையா னெல் லழைத்‌த(வளைத்த )
மாலையான்‌ பூந் துளப மாலையான்‌–ஞாலத்‌
திடர்செய்‌ கனகன் எதிர வவன் தன்
குடாலங்க லாயணிந்த கொண்டல்‌… கடல்சார்‌ (கடல் அரசர் )–70-

அலகில்‌ தரணி யடியி லடைய (லடையு )
மலரு மிருதாள்‌ மலரான்‌. -குலவுநெறி
நின்று முனிவர்‌ நெருங்‌கித்‌ தவம்புரியு
மன்றல்‌ மயேந்திர மால்வரையும்‌– நன்று தருஞ்‌,
சிந்து நதியுந் திருப்பாற்‌ கடல்வளமும்‌
நந்து தவழ்‌ வைகுந்த நன்னாடும்‌—முந்துங்
குறுங்கா புரியுங் குலவுபுது வாச
மருங்கா துளப மலரும்‌–நெருங்கும்‌
கருட துவசமும் கைமதங்கள்‌ சிந்த
மருடருநாற்‌ கோட்டுமத மாவும்‌— தரணியிலே.–75-

வென்றி தருங்கவன மேவு துரகதமும்‌.
மன்‌ றலொலி மாறா மணி முரசுந்‌-.. துன்‌று
மருவு தசாங்கமென வாழ்வோன்‌ சிறந்த
உருவு தசாங்க முடையோன்‌–அருமறைதேர்‌
அயயன்‌ குழகன்‌ அழகிய நம்பியலர்‌
கொய்யுந் துளபக்‌ குறுங்குடிமால்‌–பையா
டராவணை வாசன்‌ அறிவி லரிய
பிரான் எனை யாளும்‌ பெருமாள்‌–விராவுமலை
நம்பிதிருப்‌ பாற் கடலில்‌ நம்பிபள்ளி கொண்டருளும்‌
நம்பி யிருந்த நம்பி நானிலத்தில்‌–உம்பர்தொழ–80-

நின்ற கரு மேகம்போல்‌ நீண்டபொன்‌ மேனிநம்பி
வென்றிபுனை நாத வினேதநம்பி-என்றும்‌
தரணிபுக ழாபற்‌ சகாய நம்பி செம்பொன்‌
மருவிய செங்கனி வாய்‌ நம்பி-.- கருணை
பரவுதய மார்த்தாண்டப்‌ பந்தற்கீ ழுண்மை
வரு. ராம தேவ மக ராசன்‌–தருபீடத்‌
துற்பனமாய்ப்‌ பூமகளும்‌ ஓங்கு (ஒங்க )நிலமகளும்‌
விற்பனமாய்‌ நீங்காத மேன்மையான்‌– அற்புதமாம்‌
நங்கையெனையாளும்‌ நம்பிக்கு நாச்சியார்‌
மங்கை குறுங்குடி வல்லியார் பங்கிலே-85-

சீராக வீற்றிருக்கச்‌ சித்த மகிழ்ந்து திரு
வாரா தனங் கொண் டருளுநாள்‌–பாரோர்‌
பரவு திருப்பங் குனித்‌திருவி ழாவிற்‌
கருட துவசமேற்‌ கட்டிச்‌ -சுருதி முறை
கேட்டு முதற்.றிருநாள்‌ (கேடகத்து மிரண்டா நாள் )கேடகத்தி ரண்டாம்நாள்‌
தீட்டு திறல்விசைய சிங்கத்‌துஞ்‌—சூட்டுநாள்‌
மூன்றி லனுமார்‌ முதபுயத்தும்‌ நாலாம்நாள்‌
நான்‌ றமுடி யைந்தலை நாகத்துந்‌- தோன்‌ றிவரும்‌
அஞ்சாம்நா ளிற்கருட னம்புயத்தும்‌ ஆறாம்நாள்‌
எஞ்சாத வானையினும்‌ ஏழாம்நாள்‌—மிஞ்சவே-90-

வேண்டியபள்‌ ளிச்சிவியார்‌ மேவு சிவிசையினுங்‌
கூண்டவெட்டாம்‌ நாளிற் குதிரையினும்‌–பூண்டுங்‌
குலவொன்ப தாம்நாள்‌ குருந்தேறி வீதி
வலம்வந்து பத்தாம்நாள்‌ வானில்‌–௮லருதைய
காலத்தில்‌ நித்யல்படிக்‌ கட்டளையாந் தாரையுட்ணஞ்‌(தாரையுட்டிணஞ்‌)
சீலத்‌ துடனமுது செய்தபின்பு–பாலாழிச்‌
சீரார்‌ திருமஞ்‌ சனஞ்செய்‌து வாய்த்ததிரு
வாரா தனங்கொண்‌ டருளியே- நேராய்
இசைந்தமணி ரத்னாபி ஷேகத்துக்‌ கேற்க
அசைந்த குழைக்கா தழகும்‌–பசுந் துளபத்‌-95-

தாரும்‌ கவுஸ்த்‌ துவமுஞ்‌ சங்குசக்‌ரக்‌ கையுமியல்‌(கையுமேல்)
தேருங்கஸ்த்‌ தூரித்‌ திரு நுதலும்‌–காரில்மின்போற்‌
பிதாம்‌ பரமும்‌ பிறவிப்‌ பிணியறுக்கும்‌
பாதாம்‌ புயமும்‌ பலபணியுஞ்‌–சோதிதரு
மாணிக்க மாலை வயிரவொளி யுஞ்சூழ்ந்த
காணிற்பொன்‌ (கானிற்பொன்‌)பூத்ததொரு கார்வரைபோல்‌—பூணிலகப்
பூவுலகும்‌ பாதலமும்‌ பொன்னகரத்‌ திந்‌ த்ரன்முதல்‌
தேவர்‌ முனிவர்‌ செயசெயென–மேவரிய
காளமுதற்‌ பல்லியமுங் கார்முழக்க மென்னவண்ட
கோளமட்டும்‌ நின்று குமிறவே–ஆழ்வார்கள்‌--100-

பன்னிருவ ரோதியப்ர பந்தமும்‌ நான்மறையும்‌
முன்னம்‌ மறையோர்‌ மொழிந்து செல்ல–உன்னரிய
பேரருளா ளச்சீயர்‌ பேராம்‌ வயிணவர்கள்‌
சார்வுறுதா னத்தார்‌ தலத்தார்கள்‌–வாரமுறுங்
கோயில்‌ வள ரனைத்துக்‌ கொத்தும்‌ புடைசூழ
ஏய திருத்‌ தேரி லெழுந்தருளி–நாயகனார்‌
சீலப்‌ பவனி வரச்‌ சேனையர்கோ னின்றுதிரு
வோலக்கஞ்‌ சேவித்‌ துடன்போத– மேலான

குழாங்கள்‌

காத லரம்பையருங்‌ காகோ தரநாட்டு
மாதரும்பர்‌ மங்கையரும்‌ வந்தீண்டிச்‌–சிதக்‌–105-

களமுங்க கவானுங் கன தனமேற்‌று ஓய்யில்‌
வளமும்‌ விழியும்‌ வதனத் .-தழகும்‌
கமுகு கதலி கரும்பிளநீர்‌ வாசங்‌
குமுகுமெனுங்‌ காவிகஞ்சங்‌ கொண்டே–சமுகமாய்‌
வீதி வளமைசெய்யு மேன்மைபோலே நெருங்கி
நீதி. யிருமருங்கும்‌ நின்றேற்றி-(நின்றேத்தி )-மாதரீர்‌
வாரிர்‌ பவனிதொழ வாரீ ரிவ.ரழகைப்‌
பாரீர்‌ எனவே பகருவார்‌ தார்குழலீர்‌(கார் குழலீர் )
முன்னானை காத்தார்‌ முலையானைக்‌ சன்புசெய்யார்‌
என்னா மிவர் நீதி யென்றுசொல்வார்‌…..நன்னுதலீர்‌–110-

நாடறிய வேழுன்‌ நர சிங்க மாயானைக்‌
கோடுபிளந் தாரென்.று கூறுவார்‌. ஆடை தனை
அன்றொருத்திக்‌ கீந்த தவராகி மாதர்கலை
இன்றுகொள்வ தேதென்‌றி யம்புவார்‌–நன்றுநன்று
கூடுகின்‌ற கோபியர்‌ தங் கூறைகவர்ந் தேதுளபஞ்‌
சூடுகின்றார்க் குள்ள தொழிலி தென்பார்‌ ஆடல்மதன்‌.
வாதை பொறாமல் வளை சோர்வார் வார் சோர்வார்
கோதைமலர்‌ சோர்வார்‌ குழாத் தொருத்‌தி பேதையடர்

பேதை

காலம்வரு மட்டும்‌ கரை கடவா வேலைபோல்‌
வேலைவிடம்‌ போலும்‌ விழியினாள்‌–மாலை–115–

வனைகுழலார்‌ தமமுடனே வண்டலயர்‌ போதில்‌
எனையடிமை கொண்டநம்பி ராயர்‌-புனைதேர்ப்‌
பவனி தொழுந் தாயரைப்பின்‌ பற்றி நடந் தோடி. ‘யவர்கள்சொன்ன வண்ணமுரைத்‌ தன்னே–இவர்மெய்‌யில்‌
மாலை தனைவாங்கும்‌ வண்டல் மக வுக்கெனவே
சேவைநிகர்‌ கட்கடைநீர்‌ சிந்‌தினாள்‌-..-ஆலை
மதன் பைங் கழைகுழையான்‌ வார்கணையும்‌ பூட்டான்‌
விதஞ்செய்மறு வீதி போம்‌ வேளை- பெதும்பை ரத்ன

பெதும்பை

வார்புனைய முத்து வடம்புனையச்‌ சிந்தையருள்‌
கூரவடிக்‌ (கூர்வடிக் )கொண்டரும்புங் கொங்கையாள்‌–.ஆர்வமுடன்‌-120-

வெற்றிசெய்யுங்‌ காமா (காம)விகாரங்‌ கொழுந்து விட்டுப்‌
பற்றிப்‌ படரும்‌ பருவத்தாள்‌–பொற்று ஒடியார்‌
கூடுங்‌ கலவி குறித்தெழுதுஞ்‌ சித்திரத்தை
மேடையிற்போய்ப்‌ பார்த்‌து நிற்கும்‌ வேளை தனில்‌ சூடும்‌
மருத்தேர்‌ குழற்பாங்கி வந்து நம்பி ராயன்‌
திருத்தேர்ப்‌ பவனியென்று செப்பக்‌–கருத்துருகி
மாதருடன்‌ வந்து வணங்கி நம்பி ராயன்மேல்‌
காத லரும்பவிழும் காட்சிபோல்‌-.ஓதீர்(ஆதீர்)
மருக்குலவு மார்பிலொரு மாதல்லால்‌ தோள்மேல்‌
இருக்குமிவள் ஒருத்தி யென்றாள்‌–விரைக்குழலார்‌–125-

பூவில்வளர்‌ மாது புவிமா திருவரிவற்‌
காவசிய மென்ப தறியாயோ(தறியாயே )–பாவாய்‌
எனவுரைத்த போதில்‌ இணைவிழியால்‌ நோக்கி
மனமுருகி னாள் பின்‌ மறந்தாள்‌–பனிமதியைக்‌
காண விளகுசந்த்ர காந்தமொத்தாள்‌ மாரன்வர்மம்‌
பூணவயல்‌ வீதிப்‌ புறம்போந்தாள்‌–வாணுதலாள்‌

மங்கை

மங்கை யொருத்தி மதனாபி ஷேகமிரு
கொங்கைமயில்‌ காமக்‌ குலதெய்வம்‌—இங்கி தமாஞ்‌
சீரார் துணைவி நம்பி தேர்ப்பவனி பார்க்கமின்னே
வாரா யெனவே மகிழ்ந்துபோய்‌–நேராய்ப்‌–130-

பணிந்தே மயலாய்ப்‌ பரிபவங்க ளெல்லாந்
துணிந்தே யெதிராடிச்‌ சொன்னாள்‌–மணந்தருளிச்‌
செய்யவிருந்‌ தாவனத்திற்‌ சென்றொருத்திக் காக் நீர்
மையல்கொண்ட செய்தி மறந்தீரோ –பொய்யலவே
மோகம்‌ பொறாமலொரு மொய்குழலுக்‌ கும்மைப்போல்‌
ஆகங்‌ கொடுத்தார்கள்‌ ஆர்சொல்வீர்‌–சோகமாய்ப்‌
பேராசை யானானும்‌ (யாய் நானும்)பெண்ணென்றோ பூந் துளபத்
தாராசை தீரவே தாருமென்று–தேரிற்
தொடர்ந்தாள்வே ளம்பு சொரியவயல்‌ வீதி
நடந்தார்பொற் றேருடனே நம்பி–மடந்தை--135-

மடந்தை

வடுவும்‌ பிணையும்‌ வளர்சேலும்‌ வேலும்‌
கடுவுமமு துங்கலக்த கண்ணாள்‌–நடுவாம்‌
எழுபருவத்‌ துள்ளு மிவள் பருவ மென்று
தொழுது மதன்‌ போற்றுந் துரைப்பெண்‌– அழகான
பொன்னூச லாடும்‌ பொழுது குழை யிரண்டும்‌
மின்னூச லாட விறலிபோய்‌—உ ன்னழகு
நன்றென்று கொண்டாடி. நம்பிதிருத்‌ தேர்ப்பவனி
யின்றென்றாள்‌ சென்றாள் இறைஞ்சினாள் –நின்று உருகிச்
செங்கனகத்‌ தேர்விருப்பஞ்‌ செய்‌தீர்‌ மயலான
வெங்களல்குற்‌ றேருமுமக்‌ கேலாதோ-.-பைங்கமலக்--140-

கைச்சங்கங்‌ கொண்டீர்‌ கருத்தில்‌ விரும்புமெங்‌கள்‌
மெய்ச்சங்கம்‌ நிர்விரும்ப வேண்டாவோ–நச்சரவம்‌
ஏறுபுள்ளோ டின்புற்‌ றிருந்ததுபோ லெங்கள்மேற்‌
சீறுமதி நட்பாச்சோ தீண்‌ டாதோ—கூறீர்‌
எனாமுன்மத னெய்தான்‌ இருகாலி லிட்டாள்‌(விட்டான் )
மனாவையல்கு லேந்தினாள்‌ வாரைத் –தனமேற்
கரிய குழல்மறைப்பக்‌ காதல்கொண்டாள்‌ மற்றோர்‌
தெருவில்‌ மதனொடுதேர்‌ செல்ல—அரிவை

அரிவை

இலவுகுமிழ்‌ முல்லை யிதழ்க்குவளை வள்ளை
மலருமொரு தாமரையில்‌ வாய்ப்பக் –கலவியிலே–145-

மேனகையுங்‌ கொல்லிமலை மேனகைசெய்‌ தாளும்வெடகத்‌
தானகைசெய்‌ காமசுர தானியாம்‌-(தனியாம்‌)-மானனையாள்‌
பாங்கினாற்‌ செம்பொற்‌ படாமும்‌ வனைகோலும்‌(பரமும் வளை கோலும் )
வாங்கினாள்‌ நம்பி வடிவெழுத–ஓங்குபொற்றேர்‌
மன்னும்‌ குறுங்‌கை நம்பி வந்தார் வந்தாரென்று [த்தி
சின்னத் தொனிகேட்பச்‌ சென்‌ நிறைஞ்சி-முன்னொரு
மெய்க் கரும்பி னாசையால்‌ (கரும்பு மாசையால் )வில்லொடித்தீர்‌ போர் மாரன்‌
கைக்கரும்பை வில்லைசெய்யக்‌ காணேனான்‌–மைக்கடலின் ‘
வீறடைத்து மேவுமணை மீது சென்‌றீர்‌ என்னிருகண்‌
ணாறடைத்து மேவு மணை காணீர்‌–மாறுபடும்‌–150

புள்வாய்‌ கிழித்தநீர்‌ பூங்குபிலோ டன்‌றிலெனும்‌
புள்வாய்‌ கிழிக்கவின்‌று போகாதோ–உள்ளம்‌
பரிபவமென்‌ றாள்கடைக்கண்‌ பாலித்து மற்றோர்‌
தெருவில்‌ மதனொடுதேர்‌ செல்ல த்‌–தெரிவை

தெரிவை

நிலவுமுடித்‌ தோன்முடிக்க நீறுபட்ட காமன்‌
இலகுமுயிர்‌ பெற்றுலக மெங்குஞ்‌–சிலையேந்திச்‌
சென்றுபோர்‌ வென்று செயஸ்தம்பம்‌ நாட்டியே
நின்றநாள்‌ தேடுகின்ற நிட்சேபந் –துன்‌று மலர்‌
வாவிப்‌ புனலாடி மாதருடன்‌ தேர்ப்பவனி
சேவித்தாள்‌ நம்பி திருமுன்போய்‌–மேவீர்‌–155-

வளையாழி கைக்கிருக்க மையலா மெங்கள்‌
வளையாழி கொள்ள வழக்கோ–இளையார்கள்‌
காணவளைத்‌ தாளிவளைக்‌ கைக்கொளவே நல்கீரேல்‌
பூணமலர்த்‌ தாரளித்தாற போதுமே–வாணுதலார்‌
ஆந்தரங்க மாமிருவர்க்‌ காட்சி புய மார்பல்லாற்‌
பூந் துளப மார்க்கும்‌ பொதுவன்றோ–பூந் துளபத்‌
தாரே தரீரேற்‌ (தாரேதீ ரீரேற் )றகுந்தகா தென்பதொன்றும்‌
பாரேன்கை தொட்டும்‌ (தொட்டுப் )பறிப்பேனான்‌–சேருமென்றாள்‌
புன்முறுவல்‌ செய்து நம்பி போனா ரயல் வீதி(போனார் பல வீதி )
மன்மதனும்‌ நின்று வளைக்கின்றான்‌–கன்னற் -160–

றனுவிற்‌ சரந் தொடுத்தான்‌ தையலின்மெய்‌ (தையலும் மெய்)யென்னத்‌
தனுவிற்‌ சரக்கூட (சரக்கூடத்)தானாள்‌–வனிதையப்பாற்‌

பேரிளம்பேண்‌

காரார்‌ கருங்கூந்தற் செங்கனிவாய்‌ வெண்முறுவற்
பேரான சிற்றிடைசேர்‌ பேரிளம்பெண்‌–மாரனுக்கு
வீறு தரு விற்று எழிலு மிக்ககலைக்‌ கியானமுமே
கூறவருந்‌ (கூறு வருந்)தீட்சா குருபீடம்‌–தேறிமறை
தேடுகின்ற நம்பி திருப்பதி நூற்‌ றெட்டிலொன்று
பாடகமென்‌ றேயணியாப்‌ பாதத்தாள்‌–நாடறிய
எல்கள் நம்பிக்‌ கொப்பாக யான்வனையே னென்றிகழ்ந்து
சங்கவளை பூட்டாத்‌ தடக்கையாள்‌–௮ங்கொருத்தி
மா அக்கு மாலானாள்‌ மாத்றவள்பே ரென்றுசொல்லிக்‌–165–

மாலுக்கு மாலானாள்‌ மாத்றவள்பே ரென்றுசொல்லிக்‌
கோலக்‌ திருவணியாக்‌ கூந்தலாள்‌—மேலுலகத்‌
தோரைவென்று தானே உபயசொர்க்க மாய்ச்சினந்து
பாரைவெல்லப்‌ பார்க்கும்‌ பயோதரத்தாள்‌–நேரான
கீதம்வளர்‌ வச்ரச்‌ சிலா தலத்திலே பகவற்‌
கீதை பிர சங்கிக்கக்‌ கேட்டிருக்கும்‌ போது
விரும்பவனி போற்று நம்பி மேவுதிருத்‌ தேரில்‌
வரும்பவனி சேவிக்க வந்தாள் -கரும்புயல்போல்‌
நீண்டபொன்‌ மேனி நம்பி நின்‌ற வடிவழகைக்‌
காண்டலுமே மட்டுமிஞ்சும் காதலாய்‌–வேண்டுகின்‌றாள்–170-

(சாந்தளிவர் மீது )சந்ததமும்‌ நீர்விரும்புஞ்‌ (நீ இருப்பச் )சந்திரபா கைக்குதவும்‌
ஜந்தருவந் தாலு மதுகொள்ளேன்‌–சிக்தா
மணிமகத்வ மார்புமது மார்புக்‌ கணியாய்‌
அணிகவுதக்வ மீதுமில்லை யாசை–பணிவோர்க்குச்‌
சாந்தணியு மார்பிற்‌ சவாது மணம்வீசும்‌
பூந் துளப மாலை தந்தாற்‌ போதுமே–ஈந்தருள்‌ வீர்‌
என்றாள் இது ௪மய மென்று மதன்‌ வில் வளைத்தான்
வென்றாள் .இனியெனவே மெய்‌தளர்ந்தாள்‌–தென்‌றல் வரச்
சாலகங்கள்‌ தாழ்‌ திறந்தார்‌ தாரை யுட்ண சாந்திகள் மென்‌
மேலுமமைத்‌தார் தளிரால்‌ மெத்தையிட்டார்‌–ஆலவட்‌டம் .–175-

வீசினார்‌ மல்லிகைவி தானித்தார்‌ சாந்து பன்னீர்‌
பூசினார்‌ நேர்ந்‌ தாரப்‌ போதொருத்தி–நேசமுள்ள
மூதறிவாம்‌ பாங்கி வந்து மொய்குழலாரை விலக்கிக்‌
காத லொருவர்‌ கருத்த.றியிர்‌–வே.தனையே
செய்‌தீர்‌ இவட்கு இதங்கள்‌ செய்வதுபோலே யிடர்கள்‌
செய்தீர்‌ இனியென்ன செய்குவீர்‌–வெய்துயிர்க்க
வார்த்தபன்னீர்‌ நம்பி மகிழும் திருப்படிக்கத்‌
தீர்த்த நிக ராகுமோ செப்புவீர்‌– போர்த்த
குளிரு முலைமேற்‌ குறுங்கேச ஈம்பி |
துளப நிக ராகுமோ சொல்லீர்‌… .குனிர்மையென்‌தீர்‌-180-

ஏந்து களபநம்பி யிட்டபட்ட வர்த்தனம்போல்‌
போக்தமயல்‌ போக்கவிது புத்தியோ. சாந்தாற்றி
வட்ட விசிறி நம்பி வாழ்கோ புரவாச
லிட்டமுள்ள தென்‌ றலொப்போ வீதெல்லாம்‌–விட்டுவிடுவீர்
என்றுபோய்‌ நம்பிக்‌கு இதமுரைத்து வாங்கி வந்து
மன்‌ றல்மலர்‌ சூட்ட மனமகழ்ந்தாள்‌—நின்‌று கிளி
பேசுகின்ற தென்னவரும்‌ பேதைமுதற்‌ பேரிளம்பெண்‌
ணாசைகொண்டு போற்ற வருள்செய்தே–தேசமகிழ்‌–184

நம்பிகுறுங்‌ காபுரியில்‌ நாத விநோத நம்பி
யும்பர் தொழப்‌ போந்தான்‌ உலா.

ஸ்ரீ அழகிய நம்பி உலா முற்றும்

————-

அனுப பந்தம்

பரவுதய மார்த்தாண்டப்‌ பந்தற்கீ ழுண்மை
வரு. ராம தேவ மக ராசன்‌–தருபீடத்‌–82- என்று

இவ்வுலாவில்‌ வரும்‌ அடிகள்‌ சரித்திரத்‌ தொடர்புடையன.
“உதயமார்த்தாண்டர்‌ என்ற அரசர்‌ தம்பெயராற்‌ சமர்ப்பித்த பந்தலின்‌ கீழாக இராமதேவர்‌ என்ற அரசர்‌
தம்பெயார்ல்‌ அமைத்தளித்த பீடத்திலே’ என்பது பொருள்‌.

கொல்லம்‌ ஆண்டு 630-ல்‌ (கிபி. 1455) எழுதப்பெற்ற தாமிர சாஸன மொன்றிலும்‌ காட்டாற்றுப்‌ போக்கு வைகுண்ட வளநாட்டுத்‌ திருக்குறுங்குடியில்‌
உதய மார்த்‌தாண்டப்‌ பந்தலின்‌ கீழ்ப்‌ புஜபல வீரசெளந்தர ராமவர்மன்‌ பீடத்தில்‌
ஸ்வாமி அழகிய நம்பி எழுந்தருளியிருந்ததாகக்‌ காணப்படுகின்றது.-(Rangacharya’s I. M. P. vol. tii. p. 1472, no. 285).
இங்கே கூறப்பெற்ற உதய மார்த்தாண்டர்‌ சேர – உதய மார்த்தாண்ட வர்மவாக இருத்தல்வேண்டும்‌. ஏனெனின்‌,
இவமே திருநெல்வேலிக்குத் தெற்கிலுள்ள நாட்டுப் பகுதியை வென்றடிப்படுத்து வள்ளியூரிலும்‌,
சேரன்‌ மாதேவியிலும்‌ அடிக்கடி தங்கி வசித்து வந்தார்
இவருக்கு முன்‌ உதயமார்த்தாண்டர்‌’ என்ற பெயருடையராக இருவர்‌ திருவிதாவ்‌ கோட்டுச்‌ சரித்திரத்திற்‌ காணப்படினும்‌,
இவ்விருவருக்கும்‌ திருக் குறுங்குடிப்‌ பிரதேசத்‌திற்கும்‌ யாதோரியைபும்‌ இருந்ததாகத்‌ தெரிய வில்லை.
இவர்‌ தமது 16-வது . ஆண்டில்‌ பட்டத்திற்கு வந்தார்‌; 78-வது
ஆண்டில்‌, கொல்லம்‌ 619-ம்‌ வருடத்‌தில்‌, தேகவியோகமாயினர்‌.
(திரு விதாங்கூர்‌ ஸ்டேட் மானுவல்‌, முதல் வால்யம்‌, பக்‌. 262).
ஆகவே, .கி பி. 15-ம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்பத்தில்‌ உதயமார்த்தாண்டப்‌ பக்.தல்‌ அமைக்கப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
அழகிய நம்பி கோயிலிலுள்ள மணியின்‌ மேற்புறத்‌தில்‌,

செயதுங்க நாட்டுச்‌. சிறை வாய் மன்‌னாதித்தன்‌ தென் வஞ்சியான்‌
வியலொன்‌ றகில கலையாளன்‌ கன்னி விசாகம் வந்தோன்‌
நயமொன்று கொல்ல மறுதூற்று நாற்பத்‌து நாலினண்பால்‌
அயனும்‌ பணிய மணியளித்‌ தானம்பிக்‌ கன்புகொண்டே –. என்ற செய்யுள்‌ பொறிக்கப்பட்டுள்ள.து.
இதனால்‌ திருவிதாங்கோட்டு: அரசர்கள்‌ பலர்‌. திருக்குறுங்குடி ஸ்வாமி அழகிய நம்பியின்‌ பக்தர்‌களாய்‌ விளங்கினர்‌ என்பது உணரலாம்‌.

இப் பந்தரின் கீழுள்ள பீடத்தை இயற்றியவர்‌ இன்னாரென அறிந்து கொள்வது எளிதன்று.
ராமவர்மன்‌ என்ற ஓர்‌ அரசர்‌ கொல்‌லம்‌ 646 முதல்‌ 659 வரை அரசு புரிந்தவரெனச்‌ ‘ சிலா ஸாஸன ஆராய்ச்சியாற்‌ புலனாகின்றது.
இவ்வரசர்‌ கொல்லம்‌ 640 – லும்‌, 654-லும்‌ சாஸனங்கள்‌ செய்திருக்கின்றார்‌. இவர்‌ ௮ரசாவதற்கு முன்‌
தமது மூத்த சகோதரர்‌ ஆதித்திய வர்மரின்‌ பிரதி நிதியாகப்‌ பல விடங்களில்‌ ஆட்‌சி புரிந்திருக்கிறார்‌.
இவருக்குச்‌ “செண்பகராமன்‌’ என்ற பட்டப் பெயரும்‌ உளதாகத்‌ தெரிகிறது .
செண்பகராமச்‌ சதுர்‌’வேதி மங்கலம்‌ எனவொன்று திருக்குறுங்குடியில்‌ கொல்லம்‌ 646-ல்‌ இருந்ததென்பதும்‌, செண்பகராம மண்டபம்‌ எனவொன்று திரு
நெல்வேலியில்‌ கொல்லம்‌ 653 ல்‌ இருக்ததென்பதும்‌ சாஸனங்களால்‌ அறியலாவன.

புஜபல வீர செளச்தர ராமவர்மன்‌ என்பதும்‌ இவரது பெயராகவே கருதத்தக்கது .
நூலிற்‌ குறிக்கப் பெற்ற சாஸ னத்திற்‌ காணும்‌ புஜபல வீரசெளச்தர ராமவர்மன்‌ பீடமாக: இருத்‌தல் கூடும்‌. இவ்வூகம்‌ சரியாயின்‌, உத்தேசம்‌ கிபி. 1450-ல்‌ இப்பீடம்‌ அமைக்கப் பெற்றதாகலாம்‌.
ஆனால்‌ நூலில்‌ வந்துள்ள தொடர்‌ இம்‌ முடிபை அத்துணை ஆதரிப்பதாகத்‌ தோன்றவில்லை.
* ராமதேவ மகராசன்‌ ‘ என்றே அது கூறுகின்றது .
கொல்லம்‌ 7608-ல்‌ உதய மார்த்தாண்டப் பந்தரின்‌ கீழ்ப்‌ புஜபல வீர வசந்த வேங்கடதேவ மகா ராஜர்‌ பீடத்தில்‌ ஸ்வாமி அழகிய நம்பி வீற்றிருந்ததாக வேறொரு தாமிர சாஸனம்‌ தெரிவிக்கின்றது. (1. நந. 1. 114. ஐ. 172, 00. 986).
இங்கே குறித்த வேங்கடதேவ மகாராஜர்‌ விஜய நகரத்து அரசர்களுள் ஒருவர்‌.
இவரைப்போன்று, ராமதேவ மகராசனும்‌ விஜய நகரத்து அரசரில்‌ ஒருவராயிருத்தல்‌ மிகப்‌ பொருத்தமானதாகும்‌.
இஃது உண்மையாயின்‌, இவர்‌ மேற்குறித்த வேங்கடதேவ மகாராஜாவின்‌ பின் இ. பி. 619 முதல்‌ 680 வரை அரசு புரிந்த ராமதேவ மகாராஜாவாக இருத்தல் வேண்டும்‌.
சாலிவாகன சகாப்தம்‌ 1551-ல்‌ பொறிக்கப்பட்ட சாஸனமொன்நில்‌ ராஜாதி ராஜ ராஜ பரமேஸ்வர
ராமதேவ மஹாராயர்‌’ என்று இவர்‌ குறிக்கப்படுகிறார்‌. (5. 1.1. v . no . 291).
எனவே, இப்பீடம் தோன்றியது இவரது காலமாகிய கி பி. 17-வது நூற்றாண்டின்‌ தொடக்கமாதல் வேண்டும்‌.

பீடம்‌ அமைத்ததைச்‌ குறிக்கும் தொடர்‌ அத்‌ திருப் பணி நிகழ்ந்த காலத்தில்‌ இருந்தார் ஒருவரது கூற்றுப் போலத்‌ தோன்றுகிறது.
ஆதலால்‌ இந் நூல்‌ இயற்றப் பெற்ற காலமும்‌ 17-ம்‌ நூற்றாண்டின்‌ முற்‌ பகுதியே யாதல்‌ வேண்டும்‌.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஒப்பிலியப்பன் – திருவோண விரதம்–நல் வாழ்வருளும் ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ திருத் தலங்கள்

May 16, 2023

ஸ்ரீ  மார்க்கண்டேய முனிவர் தவியாய் தவித்தார். திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்றும், நாராயணனே தனக்கு மருமகனாக அமைய வேண்டும் என்றும் ஆவல் கொண்ட அவர், அந்த இரண்டாவது எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று தவித்தார். திருமகள் அவருக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையால், திருமாலுக்கு, தன்னுடைய சொந்த திட்டமும் நிறைவேற வேண்டியிருந்தது. முதலில் திருமாலின் திட்டம் என்ன என்று பார்ப்போம்.

துளசி, ஸ்ரீ மன் நாராயணனின் பாதங்களை அர்ச்சனைப் பொருளாக அலங்கரித்தாள். ஓர் இலையாக அவர் பாதத்தில் வீழ்ந்து கிடக்கும் தான் ஏறிட்டு அவர் திருமுக மண்டலத்தைக் காண இயலாது தவித்தாள். எத்தனை நாள் தான் பாத தரிசனம்! பரந்தாமனின் பேரெழில் முகத்தைக் காணத் தனக்கு எப்போது தான் கொடுத்து வைக்கும் என்று ஏங்க ஆரம்பித்தாள். தன்னுடைய இந்தக் குறையை வைகுந்த வாசனிடமே முறையிட்டாள். மெல்லச் சிரித்துக் கொண்டார் நாராயணன்.

தன் முகத்தை தரிசிக்க வேண்டும் என்பது தான் துளசியின் ஏக்கமா அல்லது திருமகள் மட்டும் மார்பில் நிரந்தரமாக வீற்றிருக்க தான் மட்டும் பாதத்திலேயே கிடக்க வேண்டியிருக்கிறதே என்ற பொறாமையா என்று யோசித்தார். ஆனாலும் அவளுக்கும் பெருமை சேர்க்க மனம் கொண்டார். ஆகவே, துளசியிடம், ‘‘மஹாலக்ஷ்மி, பல காலம் தவம் மேற் கொண்டு, என் அன்பை வென்று, பிறகுதான் என் மார்பில் இடம் கொண்டாள். அதேபோல நீயும் தவமியற்றினால் உனக்கு உரிய அங்கீகாரம் அளிப்பேன்,’’ என்று அறிவுறுத்தினார்.

அதோடு, திருமகள் மார்க்கண்டேய முனிவரின் மகளாக அவதரிக்கப் போகிறாள் என்றும், அவளை மணந்து கொள்ள தான் பூவுலகிற்கு வரப்போவதாகவும், அப்போது, அங்கே தவமியற்றக் கூடிய துளசிக்குத் தான் தரிசனம் தர முடியும் என்றும் வாக்களித்தார். அதுமட்டுமல்ல; ஸ்ரீதேவியை மணம் முடிக்குமுன், அதாவது தாங்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ளும் முன் துளசியையே தன் முதல் மாலையாகத் தான் தன் மார்பில் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி அவளை சந்தோஷப்படுத்தினார்.

மிகுந்த உற்சாகத்துடன் துளசி பூலோகம் வந்தாள். திருக்குடந்தையில் அமைந்திருந்த மலர்க் காட்டில், ஒரு செடி வடிவாக தவத்தை மேற் கொண்டாள். இதற்கிடையில் திருமகளே தனக்கு மகளாக வந்துதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் மேற்கொள்ள சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வந்த மார்க்கண்டேயர், இந்த மலர்க் காட்டை கண்டதும் மனம் ஈர்க்கப்பட்டு உட்புகுந்தார். வெறும் காய், கனிகள், கிழங்குகளை மட்டுமே உட்கொண்டு தவம் இயற்றினார்.

எல்லாம் கூடி வந்ததை, இதை யெல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டு காய் நகர்த்திய பரந்தாமன், ஸ்ரீதேவியிடம், திருக் குடந்தை மலர்க் காட்டில் துளசிச் செடிக்குக் கீழே ஒரு குழந்தையாய் வடிவெடுத்து மார்க்கண்டேயருக்காகக் காத்திருக்குமாறும், பின்னொரு நாளில், அவளைத் தானே மண முடிக்க பூவுலகம் வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, துளசிச் செடியின் அடியில் திருமகள் ஒரு குழந்தையாய் ஒளி வீசி, மலர்ச் சிரிப்பால் அந்த வனத்தையே மகிழ்வனமாக்கினாள். தவம் முடித்த மார்க்கண்டேயர் மெல்ல நடந்து வருகையில், துளசிச் செடிக்கு அடியில் ஒரு பேரொளி தன்னை ஈர்ப்பதைக் கண்டார். அங்கே பொன்னே உருவாக, பாரிஜாத மணமாக, தெய்வீகக் குழந்தை ஒன்று தனக்காகவே கிடப்பது கண்டு உள்ளம் பூரித்தார்.

துறவு, தவம், பற்றற்றத் தன்மை எல்லாம் அந்தக் கணத்தில் அவரிடமிருந்து விடைபெற்றன. அப்படியே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் விருப்பப்படியே ஸ்ரீதேவியே தனக்கு மகளாகக் கிடைத்து விட்டதை அவர் உணர்ந்தார். அவர் அப்படி உணர்ந்ததை, தானும் தென்றல் சிலுசிலுப்பில் மெல்ல அசைந்து துளசிச் செடியும் ஆமோதித்தது. திருமாலின் மார்பகத்தை அலங்கரிக்கப் போகும் அந்தத் திருநாளுக்காகக் காத்திருந்தது.

பூமியிலிருந்து கிடைத்தவள் என்பதால், மகளை பூமிதேவி என்றழைத்துக் கொண்டாடினார் முனிவர். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அவள் மணப் பருவம் எய்திய போது தன்னுடைய இரண்டாவது உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். என்ன வேடிக்கை! முற்றும் துறந்த துறவியின் உள்ளம் லௌகீகத்துக்குத் திரும்புகிறது! இதுவும் இறை சார்ந்த, பக்தி மேன்மையின் வெளிப்பாடுதானோ!

மருமகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார் முனிவர். அவரது குடில் நோக்கி ஒரு பெரியவர் வந்தார். தள்ளாடும் நடை, கிழிசல் உடை, நரை முடி, இடுங்கிய கண்கள் என்று முதிய தோற்றம். வந்தவர் மார்க்கண்டேயரிடம் நேரடியாகவே கேட்டார்: ‘‘வாசலில் பேரழகாக நின்று கொண்டிருக்கிறாளே, அவள் உன் பெண்ணா? அவளை எனக்கு மணமுடித்துக் கொடு!’’

அதிர்ந்து போனார் முனிவர். என்னக் கொடுமை இது! எந்த வயதில் எந்த ஆசை வருவது என்ற விவஸ்தையே இல்லையா? ‘நான் பெருமாளுக்காகக் காத்திருக்கிறேன், இங்கே பிச்சைக்காரர் வந்து திருமணப் பேச்சு நடத்துகிறாரே’ என்று மனசுக்குள் அங்கலாய்த்தார். ‘‘பெரியவரே, உங்கள் வயது என்ன, என் மகள் வயது என்ன? அதோடு, இவளால் உங்களுக்கு சரியாக உணவு படைக்கவும் தெரியாதே. சமையலில் உப்பு போட வேண்டும் என்ற பக்குவமும் அறியாத சிறு பெண் இவள்,’’ என்று மன்றாடினார்.

‘‘அடடா, என்ன பொருத்தம் பாருங்கள்! வயது காலத்தில் எனக்கு உப்பு போட்ட பண்டம் ஆகாது என்பதை உங்கள் மகள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைவிட வேறென்ன வேண்டும்? இப்படி என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள இவளைவிட வேறு யார் எனக்குக் கிடைப்பார்கள்!’’ என்று முதியவர் நடுங்கும் குரலில் சொன்னார். இந்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டார் முனிவர். தட்டிக் கழிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று குழம்பி நின்றார்.

‘‘நீ உன் பெண்ணை எனக்கு மண முடித்துக் கொடுக்க வில்லை யானால் நான் என் உயிரைத் துறப்பேன்,’’ என்று சொல்லி மேலும் மிரட்டினார் முதியவர். பரிதாபமாக மகளைப் பார்த்தார் மார்க்கண்டேயர். அவளோ, பளிச்சென்று, ‘‘இந்தக் கிழவருக்கு என்னை மணமுடித்தால் நான் என் உயிரைத் துறப்பேன்.’’ என்றாள்!

இது என்ன சோதனை என்று பரிதவித்தார் முனிவர். இனியும் இந்த பக்தரைத் தவிக்க விடுவது முறையல்ல என்று கருதியதால், அவர் முன் நின்றிருந்த முதியவர் மறைந்து சர்வாலங்கார பூஷிதனாக மஹா விஷ்ணு தோன்றினார். பூமி தேவியும் வெட்கப் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தாள். அப்போது தான் திருமாலும், மஹாலக்ஷ்மியும் தன்னிடம் நாடகமாடியிருக்கிறார்கள் என்று முனிவருக்குப் புரிந்தது. திருமால் முனிவரைப் பார்த்து, ‘‘மார்க்கண்டேயரே, உம் மகள் எப்படி சமைத்துப் போட்டாலும் அதை நான் விரும்பி உண்பேன்.

உப்பிடப் படாதது ஒரு குறையே அல்ல. அதுவே உடல்நலம் காக்கும்,’’ என்று ஆறுதலும் அளித்தார். நெகிழ்ந்துபோனார் முனிவர். உணவுச் சுவை தான் யாரையும் எளிதாக வீழ்த்தக் கூடியது. அதையும் தன் மகளுக்காகத் தியாகம் செய்ய முன்வந்திருக்கும் இந்த மருமகன், ஒப்பிலா அப்பன் தான் என்று நெஞ்சு விம்மினார். பிறகு திருமாலிடம், ‘‘தாங்களும் என் மகளும் திருமணக் கோலத்திலேயே இத் தலத்தில் அர்ச்சாவதாரம் கொள்ள வேண்டும்.

தங்களுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் உப்புச் சுவை இருத்தல் கூடாது,’’ என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டார் பெருமாள். அதன்படி, இப்போதும் இந்த ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லாமல்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன, பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

அது உப்பில்லாத பிரசாதம் என்பது தெரியாவிட்டால், அந்த பிரசாதம் அற்புதமான சுவை கொண்டதாக இருக்கும்; தெரிந்தாலும், கொஞ்சம் மனசளவில் தயக்கம் இருக்குமே தவிர, மற்றபடி ருசியில் உப்பிட்ட உணவைவிட பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அது மட்டுமல்ல, ‘இந்தக் கோயிலுக்குள் வருபவர்கள் உப்பையோ, உப்பிட்ட உணவுப் பொருளையோ கொண்டு வரக் கூடாது; அப்படிக் கொண்டு வந்தால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்’ என்று ஐதீகம் இருப்பதாகவும் சொல்லி அச்சுறுத்துகிறார்கள்! ஒப்பிலியப்பன் தரிசனத்தை விடவா உப்பில்லாத இந்த பிரசாதம் பெரிது!

நம்மாழ்வார் இந்தப் பெருமாளை பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் வாழ்த்திக் கொஞ்சி மகிழ்கிறார்.

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன் அப்பன், மணி அப்பன், முத்து அப்பன், என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் நிழலே– என்கிறார்

அவர். அதாவது, ‘பொன், மணி, முத்து போன்றவன் என் தலைவனான இந்தப் பெருமாள். தன் பக்தனுக்கு உதவி செய்வதில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தனித் தலைவன். என் தந்தை. மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்ய தேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல; என்னைப் பெற்ற தாய்; என்னை வளர்க்கும் தாய். தனது திருவடி நிழலால் என்னை என்றென்றும் காப்பான்,’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாசுரத்தை ஒட்டியே இந்தக் கோயிலில், என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரத்தான் என்று பெருமாள் ஐவராக கொலுவிருக்கிறார். தங்க விமானம் கொண்டு பரிமளிக்கிறார் ஒப்பிலியப்பன். நெடிதுயர்ந்த நின்ற கோலம். கண்களாலேயே மென்மையாக அழைக்கிறார். தங்கக் கவசம் பூண்டு ஜொலிக்கிறார். இவர் காலடியில் இடது பக்கம் மார்க்கண்டேயரும், வலது பக்கம் பூமிதேவியும் மண்டியிட்டு இவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

திருப்பதி வெங்க டேசப் பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனைகளை இவருக்கு நிறைவேற்றி, திருப்பதிக்குப் போக முடியாத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இந்தப் பெருமாளும் பார்ப்பதற்கு ஸ்ரீநிவாசன் போலவே இருக்கிறார். அதனால் தானோ என்னவோ இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. திருமண வரம் அளிக்கும் பரந்தாமன் இவர். இந்தக் கோயிலில் தனியே இருக்கும் திருமண மண்டபத்தில் ஒவ்வொரு முகூர்த்த நாளன்றும் நிறைய பக்த ஜோடிகளுக்கு பெருமாள் அருளுடன் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

பூமிதேவித் தாயார் பெருமாளுடனேயே அவர் கருவறையில் வீற்றிருப்பதால், இவருக்குத் தனி சந்நதி இல்லை. தரணிதேவி, வசுந்தரா என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். வழக்கம்போல அனுமன், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமர் முதலானோரும் தத்தமது சந்நதிகளில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராகாரச் சுற்றில் ராமாயண, தசாவதாரக் காட்சிகள், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆசார்யார்கள் ஆகியோர் பேரெழில் ஓவியங்களாக நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

108 திவ்ய தேச பெருமாள்களையும் இங்கே தரிசிக்கலாம். ஆமாம், அந்தத் தோற்றங்களையும் சுதை சிற்பங்களாக, கவினுற வடிவமைத்திருக்கிறார்கள். இங்குள்ள அஹோராத்ரி புஷ்கரிணி மிகச் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே எந்த நீர்நிலையிலும் இரவு நேரத்தில் நீராடலாகாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்தத் தலத்தின் அஹோராத்ரி திருக்குளத்தில் மட்டும் ஒரு நாளின் எல்லா நேரத்திலும், இரவு, பகல் என்று பாராமல் நீராடலாம் என்று சாஸ்திர விதி தளர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த தீர்த்தம் எல்லாவகையான தோஷங்களையும் போக்கவல்லது. தேவ சர்மா என்ற வேதம் அறிந்த அந்தணன் ஒருவன் தன் குல ஒழுக்கம் மீறி, புலன் அடக்கமில்லாமல் திரிந்தான். இந்த வகையில் ஜைமினி முனிவரின் மகளிடம் அவன் முறைகேடாக நடந்து கொள்ள முயன்ற போது, வெகுண்ட முனிவர் அவனை சக்கரவாகப் பறவையாக உருமாறுமாறு சபித்தார்.

அப்படியே பறவையான அவன் இந்த அஹோராத்ரி புஷ்கரணியின் கரையில் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென புயல் வீச, அந்த மரம் அப்படியே குளத்தில் சாய்ந்தது. அந்த குளத்து நீர் பறவையின் மீது தெளிக்கப்பட, தேவசர்மா தன் சுய உருவம் பெற்றான்; முக்தியும் அடைந்தான். அந்த அளவுக்கு இந்தத் திருக்குளம் சக்தி வாய்ந்தது. வேதசர்மா இவ்வாறு சாபவிமோசனம் பெற்றது ஓர் இரவில் என்பதால், இந்தக் குளத்தில் இரவு நேரத்திலும் நீராடலாம் என்ற வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

தியான ஸ்லோகம்

திருவிண்ணகரம் சென்று ஒப்பிலியப்பனை தரிசிக்கும் வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீமத் விஷ்ணௌ விமாநே ககந நகரகே பத்மினீ புண்ய பூர்ணா
(அ) ஹோராத்ராக்யா ஜநாநாமபி மதபலதோ வேங்கடேச ஸ்வரூப:
பூம்யா தேவ்யா ஸமேதஸ் த்வ லவணஹவிஷ: ப்ராசனப்ரீதிரேஷ:
புத்ரீ ப்ரீத்யை ம்ருகண்டோ: ஹரிதிகபிமுகோ த்ருச்யதே பீஷ்டதாயீ– ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்

பொதுப் பொருள்: ககந நகரம் என்ற திருவிண்ணகர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே நமஸ்காரம். விஷ்ணு விமான நிழலில், அஹோராத்ர புஷ்கரணிக் கரையில், வேண்டுவோர் வேண்டுவனவற்றை எல்லாம் அருளும் வேங்கடேசப் பெருமானாய், பூதேவி சமேதராய் திகழும் பெருமாளே நமஸ்காரம். தேவியின் மீதுள்ள பெரு விருப்பத்தால் உப்பு, இல்லாத அமுதை ஏற்பவராய் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் மார்க்கண்டேய முனிவருக்குக் காட்சி அருள்பவரே நமஸ்காரம். தன்னை சேவிப்பவர் விருப்பங்களை நிறைவேற்றும் எம்பெருமானே நமஸ்காரம்.

மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். அத்துடன் சந்திர தோஷமும் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி. 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் எம்பெருமானாருக்கு உரிய திருவாதிரை மற்றும் எம்பெருமானுக்கு உரிய  திருவோணம் இவ் விரண்டு நட்சத்திரங்கள் தான் ‘திரு’ என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.

தோஷங்களில் சந்திர தோஷமும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். தான் செய்வது சரியா? தவறா? என்கிற பதற்றம் நீடிக்கும். ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் உறுதியாக கூறுகிறது. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

திருவோண விரதம் எப்படி இருப்பது?

மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன் கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

மதியம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு சேர்க்காமல் உணவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து காலையில் வழிபாடு செய்யும் பொழுது நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அத்தனையும் பெருகும். மாலையில் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். இரவில் இறுதியாக நான்காம் ஜாம வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் அடையலாம்.

—————–

நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்

திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர் திருவரங்கம் பெரிய கோயிலில் தாயாரைச் சேவித்து விட்டு வெளியே வந்ததும், வடக்கு நோக்கியிருக்கின்ற, படியேறிச் செல்ல வேண்டிய, மாடக் கோயிலில் அழகிய சிங்கரான நரசிம்மப் பெருமாள் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி யிருக்கிறார். அதே சமயத்தில், வலது கையை மேலே உயர்த்தி ‘அஞ்சேல்’ என்று அபயம் வழங்கி அருள் பாலிக்கிறார். கம்பநாட்டாழ்வான் இம்மேட்டழகிய சிங்கர் முன்னிலையில், ஸ்ரீரங்கநாச்சியாரை (தாயாரை) நோக்கி அமர்ந்து இந்த மண்டபத்தில் தான், தம் ராமாயணத்தை அரங்கேற்றினார். இந்த இராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர் ‘இராமாவதாரம்’ ஆகும்.

திருவரங்கம் பெரிய கோயிலைச் சேர்ந்த காட்டழகிய சிங்கப் பெருமாள்

திருவரங்கம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவரங்க நகரின் கிழக்குப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கலி 4398-கி.பி 1297) பெரிய பெருமாளான அரங்கநகர் அப்பனிடத்தில் அன்பினால் மிக்க அடிமை பூண்டவன். இங்கே, பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உயர்ந்த விமானம், கர்ப்பக் கிரகம், அந்தராளம், முகமண்டபம், மஹா மண்டபம் மற்றும் கருடன் சந்நதியோடு இந்த கோயில்
உள்ளது.

‘கிழக்கில் காட்டழகிய சிங்கர் புராண ஸித்தம்’ என்று கோயிலொழுகுதலபுராணம் கூறுகிறது. பெரியாழ்வார் காலத்து மன்னனான அவருடைய சிஷ்யனான வல்லபதேவ பாண்டியன் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளான். மாதம்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். காட்டழகிய சிங்கரைத் தரிசிக்காமல் ஸ்ரீரங்க யாத்திரை நிறைவாகாது. இந்த பெருமாளைச் சேவித்தால் வேதாந்த ஞானம் ஸித்திக்கும்.

வழி: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்குக் கிழக்கில் மிக அருகிலேயே (நடக்கும் தொலைவிலேயே) இந்தச் சந்நதி அமைந்து உள்ளது. ‘சிங்கர் கோயில்’ என்று கேட்க வேண்டும்.

தேவர் மலை அழகிய சிங்கர்

கமலவல்லி நாச்சியாருடன் கதிர் நரசிங்கப் பெருமாள் அருள்புரியும் மிகப் பழமையான திருத்தலம்தான் தேவர்மலையாகும். கொங்கு நாட்டில் கரூர் – பாளையம் அருகிலுள்ள இத்திருத் தலத்தில் அழகிய சிங்கர் உக்கிர நரசிம்மராக கூறப்பட்டாலும், கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியிருப்பதால், அன்பர்களுக்கு லட்சுமி நரசிம்மராகவும், துஷ்டர்களுக்கு உக்கிர நரசிம்மராகவும், விளங்குகிறார். பாண்டியர்களாலும், விஜயநகர, நாயக்க மன்னர்களாலும், திருப்பணி செய்யப் பெற்ற பழமையான திருக்கோயில் இது.

கமலவல்லித் தாயாருக்கு மகாமண்டபம், அர்த்த மண்டபம், கொடிமரம் ஆகியவை பெருமாளுக்கு உள்ளவை போலவே, அமைக்கப் பெற்றுள்ளன. “மோட்ச தீர்த்தம்’’ எனும் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தம் இத்திருத் தலத்தின் முக்கியமான தீர்த்தமாகும்.

வழி : சென்னை – திருச்சி – கரூர் அல்லது சென்னை – ஈரோடு – கரூர் வழித்தடத்தில்செல்லும் ரயிலில் கரூரில் இறங்கி, சிந்தாலவாடி, தான்தோன்றி மலை கோயில்களை சேவித்து விட்டு தேவர்மலை கதிர் நரசிங்கப் பெருமாளைச் சேவித்து விடலாம்.

சிந்தலவாடி

திருக்காவிரியின் கரைகளிலிருக்கும் அழகிய திவ்ய க்ஷேத்ரங்களில் சிந்தாலவாடியும் ஒன்று. கொங்குநாட்டில், கரூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிந்தாலவாடி இருக்கிறது. மத்வ சம்பிரதாய வைஷ்ணவர்களின் நிர் வாகத்தின் கீழ் இத்திருக்கோயில் இயங்குகிறது. பானகம், ததியன்னம் (தயிர்சாதம்), பழப் பிரசாதங்கள் போன்றவற்றைப் பெருமாளுக்கு அமுதுசெய்விக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்). பகவானின் திருநாமம் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமாள். மிகவும் பழமையான திருக்கோயில் இது.

வழி : திருச்சி – கரூர் வழித்தடத்தில், ரயில் அல்லது பேருந்தில் சென்றால், லாலாப்பேட்டை என்னும் ஊரில் இறங்கி, அங்கிருந்து சிந்தலவாடிக்கு மாநகர பேருந்தில் செல்லலாம்.

தஞ்சை மாமணிக்கோயில் வீரநரசிம்மப் பெருமாள்
(தஞ்சையாளி நகர்)

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து ச ஸகாத்வமேவ
த்வமேவ வித்யாத் ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

(நீயே அன்னை, நீயே தந்தை, நீயே உறவு, நீயே நண்பன், நீயே வித்தை (கல்வி), நீயே செல்வம், நீயே எனக்கு எல்லாம் என் தேவதேவனே!)என்று நரசிம்மனை விளிப்போமாக! திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மணிக்குன்றப்பெருமாள், நீலமேகப் பெருமாள் ஆகிய பெருமாள்கள் இருவர் தனிக்கோயில்களில் அருகிலேயே எழுந்தருளியுள்ளனர். தஞ்சை மாமணிக்கோயில் எனும் திவ்யதேசம் மூன்று கோயில்களும் சேர்ந்ததே. திருத்தஞ்சை மாமணிக்கோயில், திருவையாறு தியாகராஜர் பிருந்தாவனம், திருக்கண்டியூர், கல்யாணபுரம், புது அக்ரஹாரம் ஆகியன அருகிலுள்ள திருத்தலங்களாம்.

வழி: தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்திலும் சென்று வரலாம்.

வல்லம்
(விக்கிரம சோழ விண்ணகரம்)

ஸ்ரீரங்கத்தில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரம சோழன் திருச்சுற்று, விக்கிரம சோழனின் கைங்கர்யம் என்று கோயிலொழுகு கூறுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ‘விக்கிரம சோழ விண்ணகரம்’ என்று ஒரு திருத்தலம் உண்டு. அதன் இப்போதைய பெயர் வல்லம் என்பதாகும். ‘வல்லம்’ எனில் ‘பெரியது, வலியது’ என்றும் பொருள் உண்டு. மலையாளத்தில் ‘வல்லிய’ என்னும் பிரயோகம் இன்றும் ‘பெரியது, வலியது’ என்ற பொருளில் வழங்கப்படுகிறது. வலிமை மிக்க இரணியனை வகிர்ந்து கொன்ற ஸ்ரீநரசிம்மரின் தலமாதலால் ‘வல்லம்’ என்று பெயர் வந்தது போலும். இங்கே பெருமானின் பெயர் தேவராஜன். தாயாரின் பெயர் கமலவல்லித் தாயார்.

இந்திரனுக்கு அகலிகையிடம் பெற்ற சாபம் நீங்கிய தலம் இதுவே என்று சொல்லப்படுகிறது. காவிரியும், கௌதம தீர்த்தம் என்னும் திருக்குளமும் இத்திருத்தலத்தின் தீர்த்தங்களாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் தெற்கு நோக்கி அருள்புரிகிறார். எனவே, இது யம பயம் நீக்கும் திருத்தலமாகும். இதய நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் கூட நீங்கி, அன்பர்கள் நலம் பெறும் பிரார்த்தனை ஸ்தலமாக இது விளங்குகிறது.

வழி: தஞ்சாவூர் – திருச்சி சாலை வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் வல்லம் திருத்தலம் இருக்கிறது.

கொண்டி ராஜபாளையம் அழகிய சிங்கர்

அஹோபில திவ்விய தேசத்தில் ஸ்ரீராமபிரான் தமது முந்தைய அவதாரமான நரசிம்ம மூர்த்தியை ஸ்ரீந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்திரத்தால் மங்களாசாஸனம் செய்தார் என்று ஹரிவம்சத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டும் விதமாக இவ்வாலயத்தில் மூலமூர்த்தியான நரசிம்மப் பெருமாளுக்கு எதிரில் ஸ்ரீகோதண்டராமரைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இத்திருக்கோயிலுக்கு அஹோபில திவ்யதேச ஸாம்யம் உண்டு எனலாம். மூலவர் யோக நரசிம்மர், சோழஸிம்ஹபுரத்தைப் போலே உற்சவர் பிராட்டியைத் தொடையில் தாங்கிய மாலோலர், அஹோபிலத்தைப் போலே. ‘மா’ என அழைக்கப்படும் பிராட்டியினிடத்திலேயே மண்டியிருப்பதால், பரமபுருஷனை, ‘மாலோலன்’ என்பார்கள்.

வழி: தஞ்சாவூர் நகருக்குள்ளேயே கிழக்கு ராஜவீதியிலிருந்து கிழக்கு வாயிலுக்குச்செல்லும் சாலைப் பகுதியே கொண்டிராஜபாளையம் அழகிய சிங்கர் கோயில் உள்ளது.

கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர நரசிம்மர்

மத்வ மகான் ஸ்ரீவிஜயீந்திரரை வாதத்தில் வென்று மாயாவாதத்தை நிலைநாட்ட முடியாது என்று உணர்ந்த கங்காதர பண்டிதர் என்ற வித்வான், தவறான வழிகாட்டுதலால் விஜயீந்திரரைக் கொன்று விடுவதற்காக கொடிய விஷத்தைக் கொண்டு வந்திருந்தார். வாதப்போர் தொடங்கும் முன்பு விஜயீந்திரரைக் கண்டதும் அவருடைய தேஜஸ்ஸால் வசீகரிக்கப்பட்டார். தம் தவறை உணர்ந்து எடுத்துச் சொல்லி கண்ணீர்விட்டார். விஜயீந்திரரோ, ‘நீர் எமக்காகவே கொண்டுவந்ததை மறுக்காமல் கொடும்’ என்று அவரிடமிருந்து விஷத்தைப் பறித்து அருந்திவிட்டார். கொடிய விஷமாதலால் உடனே விஜயீந்திரரின் திருமேனி கருக ஆரம்பித்து. ‘சுவாமி… சுவாமி….’ என்று கங்காதரர் முதற்கொண்டு அனைவரும் கதறினார்கள்.

விஜயீந்திரர், ‘அன்பர்களே! எம் ஆசார்யர் ஸ்ரீவியாஸ ராஜரும் அவருடைய பூர்வ ஜன்மமான பிரஹலாதரும் விஷத்தை உண்டு ஜீரணித்தவர்களே. இதோ எம் அப்பன் நரசிம்மனைப் பாடுகிறோம். எமக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஸ்ரீநரஸிம்ஹாஷ்டகத்தைக் கம்பீரமாகப்பாடலானார். அவையோர் கண் முன்னாலேயே அங்கிருந்த நரசிம்மரின் திருக்கழுத்து கறுத்தது. விஜயீந்திரரின் திருமேனியின் கருநீல நிறம் மாறி முன்போல் ஆனது. இவ்வரலாறை இன்றளவும் நமக்குக் காட்ட இம்மடத்திலுள்ள நரசிம்மரின் கழுத்து கருநீலமாகவே இருக்கிறது. ஸ்ரீநரசிம்மாஷ்டகம் மிகவும் சக்திவாய்ந்த பாராயணப் பாமாலையாக விளங்குகிறது.

வழி: கும்பகோணம் நகரில் காவிரிக் கரையில் ஸ்ரீவிஜயீந்திரரின் மூலப் பிருந்தாவனம் சோலையப்பன் தெருவில் இருக்கிறது.

அரியலூர்

அரியலூரின் மையப் பகுதியில் பழமையான ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில் இருக்கிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகவும் விரைவில் வரமளிக்கக் கூடிய பிரார்த்தனைப் பெருமாள் ஆவார். இந்த நரசிம்ம மூர்த்தி தசாவதார மண்டபத்திலே எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மகத்தான சக்திமிக்க அர்ச்சா மூர்த்தி.

வழி: அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

திருக்குறையலூர்
உக்கிர நரசிம்மப் பெருமாள்

வேதத்துக்குப் புறம்பானவர்களால் ஏற்படும் தொல்லைகள், வேதத்துக்குப் பகையானவர்களால் ஏற்பட்ட துர்வாதங்களால் ஏற்பட்ட மதிமயக்கங்கள் ஆகியவை இப்பெருமானால் அழிக்கப்படும். சிறிய ஆலயத்தில் தம் கருணையினால் உகந்து எழுந்தருளியிருக்கும் இப்பெருமாளின் கீர்த்தி பெரிதினும் பெரிது. நரசிம்ம புராணத்தில் வரும் ஸ்ரீநரசிம்ம ஸஹஸ்ர நாமத்தின் ஸ்வரூபம் இவர். ஸாத்விக வித்தைகள் (நற்கல்விகள்) அதாவது வேதம், திவ்யப் பிரபந்தம், தெய்வீக இசையாகிய திருநாம சங்கீர்த்தனம், ஜோதிடம், நாட்டியம், இலக்கணம், வைத்தியம் போன்ற இகபரசுகம் தரும் நற்கல்விகளை அருள்பவர் இவர்.

வழி: மங்கை மடத்திலிருந்து வண்டி அமர்த்திக்கொண்டு குறையலூர் போகலாம். சீர்காழியிலிருந்து, மயிலாடுதுறையிலிருந்தும் ‘மங்கை மடம்’ என்ற பெயர்ப்பலகையுடனேயே பேருந்துகள் செல்கின்றன.

திருவாலி லட்சுமி நரசிம்மர்

தூவிரிய மலருழக்கிக் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே (பெரிய திருமொழி 3-6-1)

திருவாலியில் உறையும் லட்சுமி நரசிம்மனை நோக்கி நம் பிரார்த்தனைகளைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்ட பாசுரத்தைப் பேசித் துதிக்கும் போது அவனே நம் நிலைமையைக் கண்டு, வேண்டியதைச் செய்து முடிப்பான். திருமணத் தடையால் வருத்தமுற்றிருப்பவர்களும், திருமணம் நடந்து துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இப்பெருமானை வணங்கினால் தனிமைத் துன்பம் மறையும். சத்ஸங்கமில்லாமல் வருந்தும் பாகவதர்கள், ஸத்ஸங்கம் கிடைக்கப் பெறுவார்கள். லட்சுமி தேவியை அருகில் தொடையிலேயே அமர்த்திக் கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்.

வழி: சீர்காழியில் இருந்து, சுமார் 10.கிமீ., தொலைவில் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோயிலை அடைந்துவிடலாம். திருநகரி உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர்திருவாலியும் திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கணக்கிடப்படுகின்றன. திருமங்கையாழ்வாரைத் தடுத்தாட்கொண்ட வயலாளி மணவாளனெனும் கல்யாண ரங்கநாதன் உறையும் திவ்ய தேசம் இது. இக்கோயிலிலுள்ள கல்கேணியில் ஊறும் தீர்த்தம் மிக்க சுவையையுடையது. திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக்க எம்பெருமானுக்கு உதவியாயிருந்த அவர் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாரும் அவருடன் எழுந்தருளியிருக்கிறார். திருநகரி கோயிலுக்குள்ளேயே உக்கிர நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மரும் கோயிலுக்குள்ளேயே எழுந்தருள்யுள்ளார்.

வழி: சீர்காழியிலிருந்து திருநகரிக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன சுமார் 7 கிலோ மீட்டரில் அடைந்துவிடலாம்.

மங்கை மடம் அழகிய சிங்கர்

திருமங்கையாழ்வார் பாகவதர்களுக்கு விசேஷமாக ததீயாராதனம் செய்த இடமே ‘மங்கை மடம்’ என்னும் இடமாகும். இங்குதான் தம் ராஜ்ஜியத்தை இழந்து, ஆழ்வார் அன்பர்களுக்கு அன்னமிட்டு வழிபட்டார் என்பதை நினைக்கும் போது நம் கல்நெஞ்சும் கரைவதை உணரமுடிகிறது. இங்கு பிராட்டிமார்களுடன் அழகிய சிங்கப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சிங்கவேள் குன்றமாகிய அஹோபில திவ்ய தேசத்தின் அபிமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.

வழி: திருநகரி – திருவெண்காடு – பார்த்தன்பள்ளி சாலைகள் யாவும் மங்கை மடத்தில்தான் சந்திக்கின்றன. சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

கடலங்குடி

திருநாங்கூர் திருப்பதிகள் எனும் 11 திவ்ய தேசங்களின் அருகில் கடலங்குடி இருக்கிறது. இன்று இது சிறிய கிராமம். ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், மணி மண்டபங்கள் மற்றும் மணவாள மாமுனிகள் தீர்த்தம், அனந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம், காவிரி என்று தீர்த்தங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.

இங்கு யோக நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தனிச்சந்நதியில் அருள் புரிகிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த வரப்ரசாதி. விஜயநகர மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப் பெற்ற இந்த அழகிய திருக்கோயில் திருஅத்தியூர் (காஞ்சி), சோழஸிம்ஹபுரம் (சோளிங்கர்), குலோத்துங்க சோழ விண்ணகரம் (இராஜ மன்னார்குடி) ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களின் மகிமையைக் கொண்டது.

வழி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் ‘மணல்மேடு’ கிராமம் வழியாக பந்தநல்லூர் செல்லும் பேருந்தில் சென்றால் ‘கடலங்குடி’ திருத்தலத்தை அடையலாம்.

முகாசாபரூர்

திருமால் நெறி விரிந்து பரந்திருக்கும் நடுநாட்டில், கடலூர் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமாக இன்று முகாசாபரூர் விளங்குகிறது.

இவ்வூரில் மிகவும் பழமையான பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் மிகுந்த சக்தி வாய்ந்த பிரார்த்தனைப் பெருமாள் ஆவார்.‘அனந்த சரஸ்’ எனும் அல்லிக் குளமே புஷ்கரணியாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்ட வாத்ஸல்யம் (குற்றத்தையும் குணமாகக்கொள்ளும் தாய்மைக் குணம் அதாவது, தாய்ப்பசு தன் கன்றின் உடலிலுள்ள அழுக்குகளை நாவால் வருடிச் சுத்தப்படுத்தும் உயர்ந்த குணம்) எனும் திவ்ய கல்யாண குணம் ததும்பும் அழகிய திருக்கோலம் இதுவாகும்.

வெல்லப் பானகம், கல்கண்டுப் பானகம், எலுமிச்சைப் பானகம், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்றவை இந்த மாலோல நரசிம்மருக்குப் பிரியமானவையாகும். ஸ்ரீவரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் ஒருமுறை சேவித்தவர்கள், மீண்டும் மீண்டும் சேவிக்க விரும்புவார்கள்.

வழி: சென்னை – விழுப்புரம் – திருச்சி- ரயில்- பேருந்துப் பாதையில் உளுந்தூர்ப்பேட்டையிலோ அல்லது விருத்தாசலத்திலோ இறங்க வேண்டும். பின்னர், இரு ஊர்களுக்கும் இடையில் இருக்கும் மங்கலம்பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முகாசாபரூர் உள்ளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்டோம் ஸ்ரீ அழகர்.. கண்டோம் மகிழ்வு.. கொண்டோம் மதுரை வாழியவே’ பச்சை பட்டில் வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர்!

May 5, 2023

கண்டோம் ஸ்ரீ  அழகர்.. கண்டோம் மகிழ்வு.. கொண்டோம் மதுரை வாழியவே’ பச்சை பட்டில் வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர்!

விண்ணதிர எழுந்த ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே மக்கள் வெள்ளத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

பச்சை பட்டுத்தி ஜொலித்த ஸ்ரீ கள்ளழகர் ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு கிடையே வைகை ஆற்றில் இறங்கினார்.

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. விண்ணதிர எழுந்த ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே மக்கள் வெள்ளத்தில் ஸ்ரீ அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதையடுத்து அங்கு திரட்டிருந்த மக்கள் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

சர்க்கரை தீபம் ஏந்தி ஸ்ரீ கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு ஸ்ரீ கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

இந்த-ஸோபக்ருத் ஆண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆவது நிகழ்வாக நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி தொடங்கி புதூர், டிஆர்ஓ காலனி, ரிசரவ்லைட், அவுட்போஸ்ட் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.

ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.

வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.

அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா கோவிந்தா என விண் அதிரும் வகையில் பக்தி கோசங்களின் மத்தியில் காலை 5.45 மணிக்கு பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்..

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறிநிலையத்துறை மற்றும் வீர ராகவ பெருமாள் கோவில் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.

பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையோடு பக்திகோஷம் எழுப்பினர்

இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார்.

முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரம் காவல்துறையினர் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

மேம்பாலங்களிலும், கட்டிடங்களில் மேல் அமர்ந்து பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

வைகையாற்றில் பக்தர்கள் இறங்குவதற்காக வைகை ஆறு ஒட்டிய தடுப்பு சுவர்களின் அருகே 4 இடங்களில் தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத் துறையினர்,மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர்.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து பல்லாயிரக்கணக்காணோர் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.

கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.

பச்சை பட்டு

கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கியது விவசாயம் பெருகும், நாடு செழிக்கும் என்பதை கோடிட்டு காட்டுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 6-ம் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி அளிக்கிறார். 7-ம் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது. வரும் 8-ம் தேதி காலை அதே பரிவாரங்களுடன் கள்ளழகர் அழகர் கோயிலுக்கு புறப்பாடாகிறார். அன்று இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறவுள்ளது.

9ம் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக கள்ளழகர் கோயிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும்.

ஏன் கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் என்று தெரியுமா? அதற்கு புராணக்கதைகள் உள்ளது.

மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண்பதற்காக சீதனத்தோடு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு வருகிறார். ஆனால், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விடுகிறது.

இத்தகவல் கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது அவருக்கு தெரியவருகிறது. இதனால் கோபமடைந்த கள்ளழகர் மதுரை மாநகருக்கு வராமல் வண்டியூர் வழியாக மீண்டும் அழகர் மலைக்கே திரும்பிச் சென்று விடுகிறார்.

ஆனால், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு இன்னொரு கதையும் உள்ளது. புகழ்பெற்ற நூபுர கங்கையில் ஒரு நாள் சுதபஸ் முனிவர் தண்ணீரில் மூழ்கி தவம் செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வருகை வந்தார். ஆனால், இவர் வருவதை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. இதனால், கோபமடைந்த துர்வாச முனிவர் இன்றிலிருந்து நீ தவளையாக மாறுவாய் என்று சுதபஸ் முனிவருக்கு சாபமிடுகிறார். தன் தவறை உணர்ந்த சுதபஸ் முனிவர் மன்னிப்பு கேட்டார்.

அப்போது, மனமிறங்கிய துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று மறுநாள் வரும் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் உமக்கு சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ் முனியவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருக்கிறார்.

சுதபஸ் முனியவர் செய்த தவத்தால், மனம் மகிழ்ந்த சுந்தரராஜப்பெருமாள் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் என்று புராணக் கதை சொல்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் என்று தனித்தனியாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலைநாயக்கர் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார்.

இவையே அன்று முதல் இன்று வரை சித்திரை திருவிழாவாக மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழா தினத்தன்று, மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ அதேபோன்று, அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையில் திரண்டு நின்றுக்கொண்டிருப்பார்கள். அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் என பல வர்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டியை திறந்து கைவிட்டு ஒரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த புடவை சிக்குகிறதோ அந்தப் புடவையைத்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அணிவிப்பார்கள்.

கள்ளழகர் பச்சை திறத்தில் புடவை கட்டி வந்தால் அந்த வருடத்தில் நாடு செழிப்பாக இருக்குமாம். சிவப்பு புடவை கட்டி வந்தால் அந்த வருடம் நாட்டில் அமைதி குலைந்து, பேரழிவு ஏற்படுமாம். வெள்ளை நிறத்தில் புடவை கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்குமாம். மஞ்சள் திறத்தில் புடவை கட்டி வந்தால் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் அந்த வருடம் நடக்கும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சித்ரா பவுர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோவிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோவிலை விட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கி வைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்கார நல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப் போனதாகச் சொல்கிறார் கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டி யூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கி அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப் படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்று மாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி களை கட்டுகிறது. நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப்பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.

இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா…என பல வண்ணங் களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோவிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’ எனப்பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஐந்தாம் நாள் பவுர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப் போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோவிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவானகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்த ராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும். எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலை நோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோவிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை. இதே போல ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது

மதுரை, மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி மதுரை வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நேற்று விடிய விடிய நடந்தது. அதை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்வர்.

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 1-ம் தேதி மாலையில் அழகர்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து  திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பின்னர் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகராக கோலம் கொண்டு பெருமாள் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

அப்போது 18-ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வழி நெடுகிலும் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்களில் அழகர் எழுந்தருளினார்.  தொடர்ந்து நேற்று காலையில் மூன்று மாவடி பகுதியில் காலை 6 மணிக்கு சுவாமி அதே பல்லக்கில் எழுந்தருளினார்.  அப்போது பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து இரவு  தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாள் திருமஞ்சனமாகி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுடைய திருமாலையை சாற்றி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதை தொடர்ந்து இன்று(5-ம் தேதி) அதிகாலையில் 2.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் எழுந்தருளல் நடைபெற்றது.

அதை தொடர்ந்து இன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள்.  நாளை 6-ம் தேதி தேனூர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருள்வது நடைபெறுகிறது. அதை தொடர்ந்து  அன்று இரவு தசாவதார காட்சி நடைபெறுகிறது.  இந்த வருடம் 480 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

விழாவையொட்டி மதுரை புறநகர் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சீருடை அணியாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முத்துக்கள் முப்பது-வாராரு வாராரு… அழகர் வாராரு…

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும், கோயில்களும் முக்கியமானவை. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானவை. அவற்றில்,  மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா”. ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்  முக்கிய நிகழ்வான கள்ளழகர்  ‘‘வைகை ஆற்றில் இறங்குதல்” நிகழ்வினை  பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது. இந்த சித்திரைத் திருவிழாவைப் பற்றி பல்வேறு தகவல்களை “முப்பது
முத்துக்களாகக்” காண்போம்.

1. மதுரையின் சிறப்பு

மதுரை என்றாலே தமிழ். தமிழ் என்றாலே மதுரை. தமிழ் நாடு என்று நினைத்தால், முதலில் நினைவுக்கு வருவது மதுரை தான். சங்கம் வளர்த்த மதுரை சுமார் 2,500  ஆண்டுகள் பழமையானது. கடம்ப மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால்  `கடம்பவனம்’ என்றும், மருத மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதால் `மருதை’ என்றும், அனைவரும் கூடி இலக்கியக் கலந்துரையாடல் செய்தமையால் கூடல் மாநகர் என்றும், நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்தமையால் ஆலவாய் என்றும், கோட்டையின்  நான்கு வாயில்கள் சங்கமிப்பதால் நான்மாடக் கூடல் என்றும், அழைக்கப்படும் பெருமைகளைக் கொண்டது.

2. வீதிகளில் தமிழ் மணம்

மதுரைக்குத்  தான் எத்தனை பெயர்கள்? 1.மல்லிகை மாநகர், 2.கூடல் நகர், 3.மதுரையம்பதி,  4.கிழக்கின் ஏதென்ஸ், 5.நான் மாடக்கூடல், 6.மீனாட்சி பட்டணம், 7.ஆலவாய்,  8.கடம்பவனம், 9.அங்கண் மூதூர், 10.தூங்கா நகரம், 11.கோவில் நகரம் 12. பூலோக  கயிலாயம் என பல பெயர்கள் உண்டு. சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி என தமிழ் மாதங்களின் பெயராலேயே தெருப்பெயர்கள் அமைந்திருக்கும் சிறப்பு  மதுரைக்கே உரியது. மாடக்குளம், ஆத்திகுளம், கரிசல்குளம் என நீர் நிலைகளின்  பெயராலேயே கிராமங்களுக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதை செய்யும் வழக்கமும் அதிகம்.

3. அன்னை மீனாட்சி அருளாட்சி செய்யும் இடம்

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய  மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. அன்னை மீனாட்சி அவதரித்து,  வளர்ந்து, ஆட்சி செய்யும் தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் ஒவ்வொன்றும் வரலாறு, கலாச்சாரம், மொழி, கலைகள் என தொடர்புடையது. மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சியம்மன்  தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. மேலும்  இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

4. ஆற்றைப் பார்த்தாயா? எம் அழகரைப் பார்த்தாயா?

மதுரை  என்றாலே “விழாக்களின் நகரம்” என்று சொல்லுவார்கள். வருடம் முழுக்க ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். அப்படி நடக்கின்ற விழாக்களில் மிக  முக்கியமான விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழா மற்றும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா. அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணுவதற்கு உலகமெங்கும்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ‘‘ஆற்றைப் பார்த்தாயா, எம் அழகரைப் பார்த்தாயா” என்கின்ற கூற்று இந்த விழாவின் சிறப்பினை  எடுத்துரைக்கும்.

5. பெண்ணைப் பார்த்தால் மீனாட்சி, ஆணைப் பார்த்தால் அழகர்

மதுரை  என்றாலே மீனாட்சி பெயரும், அழகர் பெயரும் பிரசித்தம். மேலூர் அழகர் கோயில் பக்கம், வீட்டில் ஒரு அழகர் இருப்பார். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள  ஊர்களில் இருந்து குடும்பத்துடன் சித்திரை திருவிழாவுக்கு புறப்பட்டு வந்து  சேருவார்கள். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவில், அழகருக்கு ஆயிரம்  பாட்டு இருந்தாலும் “வாராரு வாராரு அழகர் வாராரு” பாட்டு தான் ஊரில் எந்த  பக்கம் திரும்பினாலும் கேட்கும்.

6. வைகை நதியின் சிறப்பு

சித்திரை  விழாவில் மூன்று சிறப்புகள் உண்டு. ஒன்று மதுரை. இரண்டாவது அழகர் மலை. மூன்றாவது வைகை நதி. வைகை நதிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? மீனாட்சி  அம்மனின் திருமணத்திற்கு வந்த குண்டோதரன் என்ற அசுரன், தாகத்தால் சிவனை  வேண்டினான். அப்போது சிவபெருமான், `வை…கை’ என்று குண்டோதரனுக்கு  உத்தரவிட, வைகை பிறந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன.

7. சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு பெயர்

ஸ்வாரஸ்யமாக இன்னொருசெய்தி. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் `வை’யும்  சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் `கை’யும் இணைந்து  சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக `வைகை’ அமைந்திருக்கிறது.  வைகுதல்=தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் உண்டு.

8. சமயம், தமிழ் சேர்ந்ததால்…

மதுரையில்,  சமயமும் தமிழும் சேர்ந்து நிலை பெறச் செய்வதால் வைகை என்று பெயர். “அவள் வைகுவதால், வைகையும் ஆகிறாள்” என்பார்கள் சான்றோர்கள். வைகைக்கு வேகவதி என்று பெயரும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது. ‘‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி”, ‘‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்  நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை” என்பன போன்ற தொடர்கள்  வைகை நதியின் பெருமையைச் சொல்லும். சிவ பெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறுவர். வடமொழி நூல்கள் வைகையை ‘‘க்ருதமாலா”  நதி என்று குறிக்கின்றன.

9. வைகை ஏன் கடலை அடையவில்லை?

பெரும்பாலும் ஆறுகள் மலைகளில் தோன்றி சமவெளிகளில் பாய்ந்து கடலை அடையும். ஆனால், வைகை  கடலை அடையாத ஆறு. அது ஏன் கடலை அடையவில்லை என்பதற்கு கவிஞர் ஒரு கற்பனையான  காரணத்தைப் பாட்டாகக் கூறினார். பெருந்தொகை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள  அப்பாடல், ‘நாரி இடப்பாகர்க்கு நஞ்சளித்த பாவி’ என்று வாரி இடம் போகாத வையையே நதி  பெண். கடல் ஆண். தேவர்கள் பாற்கடலை கடைந்தார்கள்.

அப்போது ஆலகால நஞ்சு  வந்தது. கடலில் வந்த அந்த நஞ்சை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். வைகை  நினைத்ததாம். “ஏ கடலே..எங்கள் அன்னை மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு  கொடுத்த உன்னைச் சேர என் மனம் ஒப்பவில்லை. எனவே, உன்னை அடைய மாட்டேன்.”  மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த கடலை அடைதல் பாவம் என்பதால் வையை  கடலை அடையவில்லை!

10. அற்புதமான ஆறு வைகை

தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும். இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது.

சுருளியாறு, தேனியாறு,  வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு  முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி  கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது. பின்னர் முல்லையாறாக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு  இதனுடன் கலக்கிறது. பின்னர், வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாறாக வைகை அணையைச் சென்று அடைகிறது.

11. அழகர் மலை

மதுரையின்  சிறப்பையும், வைகையின் சிறப்பையும் பார்த்த நாம், மதுரைக்கு வந்து சித்திரை முழு நிலா நாளில் ஆற்றில் இறங்கும் அழகரின் சிறப்பையும், அவர் நின்று அருள் புரியும் அழகர் மலையின் சிறப்பையும் அறிய வேண்டும். அழகர் கோயில் 108  வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
இதற்கு வைணவத்தில் திருமாலிருஞ்சோலை  என்கின்ற திருநாமம் உண்டு. சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம், சோலைமலை, குலமலை குளிர்மலை, தென்திருப்பதி, உத்யான சைலம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகிரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது  கிழக்கு மேற்காக, 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன.

12. ஆழ்வார்களால் பாடப்பெற்ற அழகர் மலை

மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்புறம்  அடிவாரத்தில், அமைந்துள்ள இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. பலவகை  மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து  பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக காட்சி தரும் இப்பகுதியில் இயற்கையாகவே சோலைகள் பல அமைந்திருகின்றன. சோலைகளில் பூக்களும் காய்களும்,  கனிகளும் மிகுதியாக உண்டாகி கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டும் இம்  மலையைப் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுதியாக உண்டு.

13. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டும் அழகர் கோயிலின் சிறப்பு

‘‘அவ்வழி  படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு  தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து  செல்குவிர் ஆயின் ”என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோயிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

14. இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமை

சிலப்பதிகார ஆசிரியர் ‘விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம், பவகாரணியோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு’ என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும்  கூறுகிறார். ஆனால், நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு  பொய்கை. இதன், மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே அழகர் கோயில் அமைக்கப்பட்டது என தெரிய வருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும்  கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

15. சொக்கத் தங்கத் திருமேனி

அழகரின்  திருமேனி பொன்மயமானது. அபரஞ்சி தங்கம் என்கின்ற சுத்தமான தங்கத்தால் ஆன திருமேனி. இங்கும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர் ஆலயத்திலும் மட்டுமே அபரஞ்சி தங்க உற்சவ மூர்த்திகள் உள்ளனர். திருமாலிருஞ்சோலையில் மூலவரும் உற்சவரும் பஞ்ச ஆயுதங்களுடன் காட்சி தருகின்றார்கள் என்பது ஒரு சிறப்பு. இங்குள்ள பெருமாள் கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம். தாயார் சுந்தரவல்லி  என்ற திருநாமத்தோடு காட்சி தருகின்றார். தேவி என்ற பெயரும் இவருக்கு  உண்டு.

16. மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள்

மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள் இருக்கிறார்கள். ஒன்று மாலிருஞ் சோலை அழகர். இன்னொன்று  திருமோகூர் அழகர். மூன்றாவது மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர்.  திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர். கருவறையில் பெருமாள் பரமசுவாமி எனப்படுகிறார். ஆண்டாள்,

‘‘எழில் உடைய அம்மனைமீர்! என்
அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார்
என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே
என்று வர்ணிக்கும் அழகு இவர்க்கு அப்படியே பொருந்தும்.

17. நூபுரகங்கை நீரூற்று

அழகர்மலை  அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் அமைந்த ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது. எம்பெருமான் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தான். அவருடைய ஒரு பாதம் உலகத்தை அளந்து கொண்டே அப்பாலுள்ள உலகங்களுக்குச் சென்றது.
இந்திரலோகம் கடந்து சத்தியலோகம் சென்ற பொழுது இறைவனுடைய திருவடிகளுக்குப் பாத பூஜை செய்ய வேண்டும் என்று நினைத்த  நான்முகன், தன்னுடைய கமண்டல நீரால் எம்பெருமானின் திருவடிகளை அபிஷேகம் செய்தான். அந்த கமண்டல நீரானது எம்பெருமானின் திருவடியில் அணிந்திருந்த  பொற்சிலம்பு மீது பட்டு சிதறி பெருகி ஜீவநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

18. பாவங்கள் தீர்க்கும் பவ நாசினி

எல்லா  நீர் நிலைகளுக்கும் ஒரு உற்பத்தி இடம் உண்டு. ஆனால், சிலம்பாறு எங்கே  உற்பத்தி ஆகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. திருமாலிருஞ்சோலையில்  ஆயிரக்கணக்கான தீர்த்தங்கள் இருந்தாலும் அழகர் நீராட்டம் காண நூபுர கங்கை தீர்த்தம் தான் வேண்டும்.
கற்கண்டு போன்ற சுவையுடன் இருக்கக்கூடிய இந்த  தீர்த்தம் தவிர வேறு தீர்த்தத்தால் அழகருக்கு திருமஞ்சனம் செய்தால்,  அவருடைய மேனி கறுத்து விடுகிறது. சகல நோய்களையும் தீர்க்கக்கூடிய அற்புதமான  மூலிகை தீர்த்தம் இது. பகவானுடைய திருவடியில் இருந்து தோன்றி நம்முடைய உடல் அழுக்கை மட்டும் அல்லாது மன அழுக்கையும் அகற்றுவதால் “புண்ணிய சுருதி” என்றும் “பாவ நாசினி” என்றும் சொல்வார்கள். ஐப்பசி துவாதசியில் இங்கு  நீராடி அழகரை தரிசிப்பது பெரும் புண்ணியம். பாதகங்கள் தீர்த்து பரமனடி  காட்டும்.

19. ஆலயத்தில் எங்கும் அழகு, கலை நயம்

இங்கு  பெருமான் மட்டும் அழகரல்ல. மலை அழகு, மண்டபங்கள் அழகு, சிலை அழகு, சோலைகள்  அழகு. கண்ணதாசன் ஒரு பாடலில் இந்த அழகை  ‘‘மலை அழகா? அழகர் சிலை அழகா”  என்று வர்ணிப்பார். மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம்  வட்ட வடிவமானது. ஆரியன் மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சந்நதியும் கலைநயத்துடன் உள்ளது. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த  நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.

20. எத்தனை மண்டபங்கள்? எத்தனை சிற்பங்கள்?

திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், லட்சுமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட  கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும். வசந்த  மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும்  அழகிய ஒவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.

இந்தச்  சந்நதியும் இங்கு ஒரு சிறப்புதான். மக்கள் திரளாக வருகிறார்கள். பெருங்கதவு  முன் நிற்கிறார்கள். பிரமாண்டமான இரட்டைக் கதவு. கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது. அதில் சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியன பூசி  மாலையும் மலர்களும் சாத்தி கதவையே தெய்வமாக எண்ணி வணங்குகிறார்கள்.
தலையில்  உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை,  கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி,  காலில் சல்லடம் என்று கம்பீரமாகக் காட்சி தருபவராம் கருப்பசாமி. சித்திரைத்  திருவிழாவுக்குப் புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நதிக்குதான் அழகர் வருகிறார்.

அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல்  வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும்  முன்பு, கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு  வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும். அழகருக்கு அபிஷேகம்  செய்ய கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம்  காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.

21. அழியா அழகுடையான்

ஆழ்வார்கள்  பலர், பெருமானை அழகர் என்றே மங்களாசாசனம் செய்கின்றனர். அழகன் என்ற சொல் வைணவத்தில் பிரசித்திபெற்ற சொல். இராமனை அழியா அழகுடையான் என்று கம்பன் வர்ணிக்கின்றார்.

வெய்யோனொளி தன்மேனியி (ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.
திருமங்கையாழ்வார் திருநாகைப் பெருமானை ‘‘அச்சோ ஒருவர் அழகியவா”
என்று வர்ணிக்கின்றார்.

22. கள்ளழகர் என்ற திருநாமம் ஏன்?

இந்த  அழகு எவரையும் வசப்படுத்தும். எல்லோர் உள்ளத்தையும் அவர் அறியாமலேயே எடுத்துக் கொள்ளும் என்பதால் கள்ளழகர் என்று பெயர். ‘‘கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லாது ஓரெழில், நீல மேனி ஐயோ. நிறை கொண்டது என் நெஞ்சினையே.” என்றும், “வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை”  என்றும் திருப்பாணாழ்வார் பாடுகிறார். இந்த அழகைக் காணத்தானே சித்திரை  விழாவில், 20 லட்சம் பேர் மதுரையில் கூடுகிறார்கள். அவ்வளவு பேரும்  கூடுவதால் மதுரைக்கு கூடல் என்று பெயர்.

23. இன்னொரு காரணம்

கள்ளர்  கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார்  கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என  மாறியது.

24. அடைந்தால் இவனையே அடைய வேண்டும்

சித்திரை  விழாவில் தங்கக் குதிரையில் அழகர் கம்பீரமாக வைகையில் இறங்கும் போது காண ஆயிரம் கண் வேண்டும். இந்த அழகுக்கு ஒரு வர்ணனை. கண்ணன் நடந்து செல்கிறான்.  ஆயர் பெண்கள் பார்க்கிறார்கள். “ஆஹா அடைந்தால் இவனை அல்லவா அடைய வேண்டும்” என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல் வாய்விட்டும் சொல்கிறார்கள்.  கண்ணன் காலத்தில் அவன் அழகு சரி, இப்போது அர்ச்சசையில் எந்த பெருமானின்  அழகை, கண்ணனின் அக்கால அழகுக்கு இணையாகப் பாடுவது என்று ஆழ்வார்  நினைக்கிறார். அவருக்கு இந்த திருஅழகர் உருவம் தான் நினைவுக்கு வருகிறது.

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்  சுருள்
பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
பாடவும் ஆடக் கண்டேன்  அன்றிப் பின்-
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.

‘‘மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்” என்ற வரியைப் பாருங்கள். பெரியாழ்வாருக்கு கள்ளழகர் அழகின் மீது உள்ள ஈடுபாடு புரியும். அந்த அழகைக் காணத்தான் கடைசிக் காலத்தில் இங்கேயே தங்கி விட்டார் பெரியாழ்வார். அவர் திருவரசு அழகர் மலை அடிவாரத்தில் கோயிலை ஒட்டி  உள்ளது.

25. ஸுந்தர பாஹு

அழகன் என்பதற்கு வடமொழியில்
சுந்தரராஜன் என்று பெயர். “சுந்தரத் தோளுடையான்”(ஸுந்தர பாஹு)  என்று அவரை
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்கின்றனர்.

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ்
சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.

கூரத்தாழ்வான் 132 ஸ்லோகங்களால் இவர் மீது ஸுந்தர பாஹுஸ்தவம் என்ற அருமையான நூலை இயற்றியுள்ளார். அதில் இப்பெருமானை “வன கிரீஸ்வர” என்றும், “சத்ய ரூபா” என்றும், “காருண்ய ருத வாரிதே” என்றும், “உத்சார் சத் வத்சலா” என்றும் பல  படியாக அழைக்கிறார்.

26. திருமலை மன்னர் செய்த ஏற்பாடு

16ஆம் நுாற்றாண்டு வரை, அழகரின் சித்திரை உற்சவம் (சைத்ரோத் சவம்) சித்திரை மாதத்திலும், மீனாட்சி அம்மனின் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது.  மீனாட்சி அம்மன் உற்சவத்தின் மிக முக்கியமான நிகழ்வு திருத்தேர், மாசி  மாதத்தில் நடைபெற்றது. இந்த திருத்தேர் ஓடும் வீதிகளுக்கு மாசி வீதி என்றே பெயர். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனூர் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், வெவ்வேறு மாதங்களில் நடைபெறும் இந்த விழா ஒரே மாதத்தில் நடைபெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று, கள்ளழகரை “மதுரை வைகையாற்றில்” எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தினார்.

27. வைணவ தல புராணம் கூறும் கதை

சைவத்தில்  தங்கை மீனாட்சி திருமணம் காண, மதுரை வரும் அழகர், திருமணம் முடிந்ததால், வைகை ஆற்றுக்கு வந்து திருப்புவதாக சொல்கிறார்கள். ஆனால், வைணவ தலபுராணம்  கூறும் கதை வேறு. சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும்  சிலம்பாற்றில் நீராடும்போது துர்வாச முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர், சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் தவமியற்றி திருமாலால் சாபம்  நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று  வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.

28. ஆரம்ப நாள் நிறைவு நாள்

சித்திரைத் திருவிழா 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை திருமஞ்சனத்தோடு திருவிழா  நிறைவு பெறுகிறது. சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, அழகர் ஆற்றில் இறங்குவதை காணும் பாக்கியம் பெற முடியாமல் செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று குறைந்த பின் இவ்விழா  நடைபெறுவதால், மக்கள்  ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். ஏப்ரல் 14 ஆம் தேதி அழகர் மலையில்  இருந்து, ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி  மதுரைக்கு பல்லக்கில் புறப்படுகிறார். அதிர்வேட்டு முழங்க அழகர்  கிளம்புவார். ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை  நடைபெறும்.

29. பக்தர்களின் ஆரவாரம்

16 ஆம் தேதி  சனிக்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை  வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  வந்திருக்கும் ஆண்டாளின் மாலையைச் சூடிக்கொள்வார்.
 ஸ்ரீஅழகர், ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். தல்லா குளத்தை விட்டு தங்கக்குதிரை கள்ளழகர்  கிளம்பியதுமே வைகை ஆற்றில் காத்திருக்கும் பக்தர்களின் ஆரவாரம் ஆரம்பமாகிவிடும். வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் போது  “கோவிந்தா…கோவிந்தா…” என்ற சரணகோஷமும், வேட்டுச்சத்தமும் விண்ணைப் பிளக்கும்.

மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம்  ஏற்றி எதிர் கொண்டு அழைப்பார்கள். ஆற்றில் இறங்கிய அழகர் ஆற்றின் வழியாகவே வண்டியூர் போய்ச் சேருகிறார். கூடவே பக்தர்களும் அழகருடன் செல்வார்கள். வண்டியூரில் பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக் கொள்ளும் கள்ளழகர், அங்குள்ள பெருமாள் கோயிலை வலம் வந்து, அதன் பிறகு  சர்ப்பவாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார்.

பிறகு, தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவில் வந்து சேருகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் தல்லா  குளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். வழியெங்கும் மக்கள் சுக்கும் வெல்லமும், தந்து அழகரின் வருகையை பக்தியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவார்கள்.

18 ஆம் தேதி திங்கட்கிழமை மோகனாவதாரத்திலும், இரவில் கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில் அழகர் கோவிலுக்கு திரும்புகிறார். 19 ஆம் தேதி அதிகாலையில், பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தவாரே அழகர் கோயிலைச் சென்றடைவார். மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து  மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ, அதேபோல அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையான புதூர், மூன்றுமாவடி பகுதிகளில் திரண்டிருப்பார்கள்.

30. அழகர் என்ன பட்டு உடுத்தப் போகிறார்?

அழகர்  ஆற்றில் இறங்கும் போது என்ன வண்ணத்தில் பட்டு உடுத்துவார் என்ற  எதிர்பார்ப்பு மக்களிடம் உண்டு. முதல் நாள் அர்ச்சகர் கனவில் இன்ன வண்ண பட்டு என்று சொல்லி, அர்ச்சகர் அந்த வண்ணம் சாற்றுவார் என்று சொல்கிறார்கள். இன்னொரு விதமாகவும், அழகரின் பட்டு  தேர்ந்தெடுக்கப்படுகிறது. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள்  அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை வருகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.

அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி  ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும்  என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக  இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி  வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால்,  அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன நிறத்தில் பட்டுடுத்தி வரப் போறாரோ? எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மதுரை ஆற்றில் கள்ளழகர் விழா  காண்பது போலவே, மானா மதுரையில் சுந்தரவரதரும், பரமக்குடியில் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாளும் ஆற்றில் இறங்குகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் விழா என்பதால், சித்திரை விழா கோலாகலமாக நடைபெறும் என்று மக்கள்  உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஸூந்தர வல்லி ஸமேத ஸூ ந்தர ராஜ பரம ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜோதிர் மடம்–ஸ்ரீ தொட்டகாச்சார்யாவின் கதை–

April 28, 2023
ஸ்ரீ ஜோஷி மடம் (Joshi Mutt) அல்லது ஸ்ரீ ஜோதிர் மடம் (Jyotirmath) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் ,
இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி பகுதியாகும்.
இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும்
ஜோஷி மடம் நுழை வாயிலாக அமைந்துள்ளது.
இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று.சமயச் சிறப்புகள்
அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக ஆதிசங்கரர் ஜோஷி மடத்தை நிறுவினார்.
ஜோஷி மடத்தில் குடிகொண்டுள்ள முக்கிய இறைவன் நரசிம்மர் ஆவார்.
பத்ரிநாத் கோயில், குரு கோவிந்த் கோயில், பூக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் தேசிய பூங்கா
ஆகிய இடங்களுக்கு ஜோஷி மடத்திலிருந்துதான் செல்ல வேண்டும்.

பார்க்க வேண்டிய இடங்கள்
சங்கராச்சாரியர் மடம்
ஜோசி மடம் ஆதிசங்கரரால் இமயமலையில் நிறுவப்பட்டது.
இங்குள்ள புனித குகையில் ஆதிசங்கரர் தவமியற்றியதாகக் கருதப்படுகிறது.
பத்ரிநாத் கோயில், சங்கரர் நிறுவிய ஜோஷி மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

நரசிம்மர் கோயில்
பனிக்காலத்தில் பத்ரிநாத் கோயில் மூடப்படும் போது, கோயிலிலுள்ள முக்கிய தெய்வச் சிலைகளை
தீபாவளி நாள் முதல் ஜோஷி மடத்தில் உள்ள நரசிம்மர் கோயிலினுள் வைத்து வழிபடுவர்.

தபோவனம்
ஜோஷி மடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் தபோவனம் எனும் அமைதியான இடம் அமைந்துள்ளது.
இங்கு இயற்கையாக அமைந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க இதமானது.
தௌலி கங்கை ஆறு அமைதியாக இவ்விடத்தை கடக்கிறது.

பவானி கோயில்
அழகிய பவானி கோயில் ஜோஷி மடத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பத்ரிநாத் கோயில்
ஜோஷி மடத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஸ்ரீகிருஷ்ணரின் பத்ரிநாத் கோயில் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதிகள்
ஜோஷி மடத்திற்கு 293 கி.மீ தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம், டேராடூனில் உள்ளது.

மிக அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம், அரித்வார் அருகே உள்ள ரிஷிகேஷில் அமைந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண் 58 ஜோஷி மடத்தை புதுதில்லி, மற்றும் இந்திய-திபெத் எல்லைகளை சாலை வழியாக இணைக்கிறது.

புதையும் ஜோஷி மத் நகரம்
சனவரி 2023ஆம் ஆண்டில் நிலவெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜோஷி மடம் நகரத்தில் நூற்றுக்கணக்கான
வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு, புதையும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த இயற்கை பேரிடருக்கு எந்தவித திட்டமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள்தான்
காரணம் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் வரைமுறையற்ற கட்டுமானங்கள் மட்டுமின்றி தேசிய அனல் மின் கழகத்தின் தபோவன் விஷ்ணுகாட்
நீர் மின் திட்டத்தாலும் இந்தப் பகுதி இந்த நிலையை எதிர்கொள்ள காரணம் எனக்கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் இதே போல இயற்கை பேரழிவு சம்பவங்கள் நடந்துள்ளன.
பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே
நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் இமயமலை மலைகளில் ஜோஷிமத் (அல்லது ஜோதிர்மத்) என்ற சிறிய நகரம் உள்ளது.
பத்ரிநாத் செல்லும் யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் ராணுவ நிலையமாகவும், நிறுத்துமிடமாகவும்
செயல்படுவதைத் தவிர, ஜோஷிமத் மதம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
ஜோஷிமத்தில் உள்ள நரசிங் மந்திர் (நரசிம்ம கோயில்) 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்,
மேலும் குளிர்கால மாதங்களில் பத்ரிநாத்தின் இல்லமாகும்.
ஜோஷிமத் உத்தராம்னய பீடத்தின் அல்லது வடக்கு இருக்கையின் இடமாகவும் உள்ளது ,
இது சங்கர பகவத்பாதாவால் நிறுவப்பட்ட நான்கு மடங்களில் ஒன்றாகும்,
மற்ற மூன்று துவாரகா , பூரி மற்றும் சிருங்கேரியில் உள்ளன.

ஆதி சங்கராச்சாரியார் இந்த நான்கு மடங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவருக்கு நான்கு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்.
ஒவ்வொரு மடங்களுக்கும் உபநிடதங்களின் நான்கு வேதங்களில் ஒன்றையும்
நான்கு மகாவாக்கியங்களில் ஒன்றையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஜோஷிமத்தில் உள்ள மடத்திற்கு ‘அயம் ஆத்ம பிரம்மம்’ ( அயம் ஆத்மா பிரம்மம்’ ) என்ற மகாவாக்கியம்
ஒதுக்கப்பட்டு அதர்வ வேதத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த கணிதத்தின் முதல் தலைவராக ஆதி சங்கராச்சாரியார் தனது சீடரான தோடகாச்சாரியாரைத் தேர்ந்தெடுத்தார்.

உத்தரகண்ட் ஜோஷிமத்தில் உள்ள தொட்டகாச்சார்யா குகையின் நுழைவு உள்ளது 

துரதிர்ஷ்டவசமாக, ஆதி சங்கராச்சாரியாரின் வாழ்க்கை வரலாற்றில் அவரைப் பற்றிய குறிப்புகளைத் தவிர,தொட்டகாச்சாரியாரின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.

சித்விலாச சங்கர விஜய விலாசத்தில் இவரது பெயர் காலநாத என்றும், விஸ்வநாதத்வாரின் மகன் என்றும் குறிப்பிடுகிறது.
மாதவ சங்கரர் திக்விஜயாவின் கூற்றுப்படி, அவர் ‘கிரி’ என்ற சிறுவன் மற்றும் ஆதி சங்கராச்சாரியாரின் பக்தியுள்ள சீடர் ஆவார்.
கிரி, ஆதி சங்கராச்சாரியாரின் மற்ற சீடர்களைப் போல் சாஸ்திரங்களில் நிபுணராக அறியப்படவில்லை.
ஆனால் அவர் தனது குருவின் அர்ப்பணிப்பு முழுமையடைந்து, குருவின் சொற்பொழிவுகளை மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கேட்பார்.

கிரிக்கு தொட்டகாச்சாரியார் என்ற பெயர் எப்படி வந்தது?
மாதவ சங்கர திக்விஜயம் இதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை விவரிக்கிறது.
ஆனால் அதற்கு முன் சமஸ்கிருதத்தில் ஒரு சிறிய பாடம்.

ஆறு வேதாங்கங்கள் அல்லது வேதங்களுடன் இணைக்கப்பட்ட துணைத் துறைகளில் சந்தஸ் (छन्दः) என்று அழைக்கப்படும் ஒரு பொருள் உள்ளது.
சந்தஸ் என்பது உரைநடை அல்லது வசனத்தில் உள்ள அளவீட்டு அமைப்புகளைப் பற்றிய ஆய்வு ஆகும்.
சிக்கல்களில் சிக்காமல், விரதம் (वृत्तम् ) எனப்படும் அக்ஷர சந்தஸின் (अक्षरछन्दः) சில எளிமையான கருத்துக்கள்
இந்தக் கட்டுரையின் சூழலில் பயனுள்ளதாக இருக்கும்.

  1. ஹ்ரஸ்வ ஒலிகளைக் கொண்ட அக்ஷரங்கள் “லகு” அல்லது ‘U’ குறியீட்டால் குறிக்கப்படுகின்றன (அதாவது ஹ்ரஸ்வ ஸ்வரங்களான अ, इ, उ, ऋ, लृ ஹ்ரஸ்வ ஸ்வரங்கள் மற்றும் க், द, ल, போன்ற ஹ்ரஸ்வ ஸ்வரங்களைக் கொண்ட வியஞ்சனங்கள். क्त, स्व, முதலிய ஹ்ரஸ்வ ஸ்வரங்கள்)
  2. திர்கா ஒலிகளைக் கொண்ட அக்ஷரங்கள் “குரு” அல்லது ‘_’ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகின்றன க்தா, ஸ்வா போன்ற தீர்க ஸ்வரங்களுடன் கூட்டு வியஞ்சனங்கள் உட்பட.)
  3. ஒரு அனுஸ்வரம் அல்லது விசாரம் கொண்ட ஆகாஷரங்கள் ஒரு குருவால் குறிக்கப்படுகின்றன (எ.கா. तं, किं, सः, कः, முதலியன)
  4. வ்யஞ்சனா கலவைக்கு முந்தைய அக்ஷரங்கள் ஹ்ரஸ்வா அல்லது திர்கா என்பதைப் பொருட்படுத்தாமல் குருவால் குறிக்கப்படுகின்றன.
  5. ஒவ்வொரு பாதத்தின் முடிவிலும் உள்ள அக்ஷரங்கள் (ஒவ்வொரு வசன வரிகள்) குருவால் குறிக்கப்படுகின்றன
  6. மூன்று அக்ஷரங்களின் வரிசையை லகு / குருவின் வடிவத்தைப் பொறுத்து வெவ்வேறு கணங்களாக ( गणः) வகைப்படுத்தலாம் . நாம் மூன்றின் வரிசைகளைப் பார்ப்பதால், சாத்தியமான மொத்த வடிவங்களின் எண்ணிக்கை 2  ஆகும் . எனவே 8 கானாக்கள் உள்ளன .

சங்கர திக்விஜயம் பக்கத்துக்குத் திரும்பு. ஒரு நாள் காலையில் ஆதி சங்கராச்சாரியாரும் அவருடைய சீடர்களும்
சொற்பொழிவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​கிரி தாமதமானார்.
மற்ற சீடர்கள், கிரியால் எப்படியும் பாஷ்யத்தின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்ள முடியாது என்று கூறி,
பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றிய பாடத்தைத் தொடங்கும்படி தங்கள் குருவை வற்புறுத்தினார்கள்.
ஆதி சங்கராச்சாரியார் பதிலளித்தார் “நாயமாத்மா பிரவசனேன் லப்யோ ந மேதயா” ( நாயமாத்மா பிரவசனேனா லாபியோ ந மேதயா ) –
ஆன்மாவை அறிவுரைகள் மூலமாகவோ அல்லது எனது அறிவின் மூலமாகவோ அடைய முடியாது.

ஆதி சங்கராச்சாரியார் தனது சீடன் மீது கொண்ட அன்பினால், அவரிடம் உள்ள உன்னத அறிவை எழுப்பினார்,
கிரி அவரிடம் ஓடி வந்து அவரது காலில் விழுந்தார்.
குரு தனது அன்பான சீடனைப் பார்த்து “த்வம் பிரம்மவிதிவ் பாஸி போঃ. உத்திஷ்டத்.” ( tvaṁ brahmavidiva bhāsi bhōḥ . uttiṣṭhata .)
“இதோ! அன்பே, நீ அறிவொளியைப் போல் ஒளிர்கிறாய்! இப்போது எழுந்திரு.”
கிரி எழுந்தார், கண்கள் கண்ணீரால் வீங்கி, அவர் தன்னிச்சையாக இயற்றிய ஒரு பாடலைப் பாடினார் :

இப்போது ஸ்ரீ ஷங்கரதேசிகாஷ்டகத்தின் முதல் வசனத்தைப் பார்த்து , அதன் உரைநடையைப் பகுப்பாய்வு செய்வோம்:

மூன்று குழுக்களாகப் பார்க்கும்போது மேற்கண்ட வசனத்தில் உள்ள லாகுகள் மற்றும் குருக்களின் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கும்:
இரண்டு லகுகள் மற்றும் ஒரு குரு. இந்த வரிசை (UU _ ) ‘स gaṇa ‘ என்று அழைக்கப்படுகிறது.
மேலும் स gaṇa வடிவங்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு வசனம் தோடக வர்த்தம் ( தோடக விருத்தம் ) அல்லது தோடக மீட்டரில் இருப்பதாகக் கூறப்படுகிறது
இதனால் ஷங்கரதேசிகாஷ்டகம் பொதுவாக தோடகாஷ்டகம் என்று அறியப்படுகிறது .

சொற்பொழிவு முடிந்ததும், ஆதி சங்கராச்சாரியார் கிரியிடம் அதுவரை கற்றுக்கொண்ட அனைத்தையும் விளக்குமாறு கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அத்வைத வேதாந்தத்தின் முக்கிய கருத்துக்களை சுருக்கமாக 179 வசனங்களில்
உள்ள ஷ்ருதிசாரஸமுத்தாரணம் ( ஸ்ருதிசாரசமுத்தாரணம் ) என்ற படைப்பை கிரி இயற்றினார்.
தொடக்கத்தில் ஒரு ஆசீர்வாத வசனம் மற்றும் முடிவில் இரண்டு வசனங்கள் தவிர அனைத்து வசனங்களும் மீண்டும் தொட்டக் ( தொடகா ) மீட்டருக்கு அமைக்கப்பட்டன.

இதற்குப் பிறகு, ஆதி சங்கராச்சாரியார் கிரிக்கு சன்யாசம் அளித்து, அவருக்கு தோடகாசார்யா என்று பெயரிட்டார் .
ஸ்கிரி எப்படி தொட்டகாச்சாரியார் ஆனார் என்ற கதை, உங்கள் குருவிடம் உள்ள நம்பிக்கை மற்றும்
பக்தியின் முக்கியத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,–வெறும் சாஸ்திரங்களின் அறிவு அல்ல.

ஸ்ரீ தோடக பகவத்பாதாவின் ஸ்ருதி-சார-சமுத்தாரணம்: டாக்டர். மகேஷ் ஜி ஹம்பிஹோலி, ஸ்ரீவித்யாபிரகாஷனம்,
ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சார்யா சம்ஸ்தானம் ஷகதபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஆகியோரால் திருத்தப்பட்டது.

————-

ஸ்ரீ பெருமாளின் கல்யாண குணங்கள் -ஸ்ரீ கூரத்தாழ்வான்–ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்–ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம– —

February 24, 2023

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

————

ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்

உபய விபூதியிலும் அடியேனுக்கு நன்மை அருளிச் செய்ய வேணும் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
உடனாய் மன்னி வழு இல்லாமல் செய்யப் பெற வேணும் என்று தாத்பர்யம் –

திந் நாகைர் அர்ச்சிதஸ் தஸ்மிந் புரா விஷ்ணுஸ் சநாதந –
ததோ ஹஸ்தி கிரிர் நாம க்யாதி ராஸீத் மஹாகிரே –ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம்
திக் கஜங்கள் ஆராதித்த படியால் ஸ்ரீ ஹஸ்தி கிரி திரு நாமம் –

சேகர -சிரஸ்ஸுக்கு அலங்காரம்-அலங்கார மாத்ரத்தை சொல்லா நிற்கும் –
மஸ்த சப்தம் தனியாக சிரஸ்ஸை சொல்வதால் –
சந்த நோது-சம்யக் விஸ்தாரயது -என்றபடி
நிஸ் சமாப்யதிகம் -ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருச்யதே -உபநிஷத்
ஓத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றான்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ககநம் ககநாகாரம் சரஸ் சாகர உபம –

——————-

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்

————–

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

—————-

அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-

அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –

கீழே தம்முடைய தோஷ பூயஸ்த்தையை பரக்க வெளியிட்டு –பரியாப்தி பெறாமல் –
சரண வரண சம காலத்தில் தோஷ பிராசர்ய அனுசந்தானம் அவசியம் என்னும் இடத்தை
வெளி இடுகைக்காகவும்
ஸ்வ தோஷ பூயிஷ்டத்வ அனுசந்தான சகிதமாக பிரபத்தி பண்ணுகிறார்
ஸக்ருத் ஏவ ஹி சாஸ்த்ரார்த்த –என்னும் அளவில் இருப்பவர் அன்றே –
பிரபத்தி தேஹ யாத்ரா சேஷமாக அன்றோ நம்மவர்கள் கொண்டு இருப்பர்கள்

இப்படிப்பட்ட அடியேன் -பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமானாய்
மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய் கச்சியிலே வரம் தரும் மா மணி வண்ணனாய் எழுந்து அருளி இரா நின்ற
தேவரீரை அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணித் தர வல்ல
உபாயமாகப் போற்றுகிறேன் என்கிறார் ஆயிற்று

—–

அயே தயாளோ வரத ஷமாநிதே விசேஷதோ விஸ்வ ஜநீந விஸ்வத
ஹிதஜ்ஜ சர்வஜ்ஞ சமக்ர சக்திக ப்ரஸஹ்ய மாம் ப்ராபய தாஸ்யமேவ தே –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -93-

தயாளோ -ஷமாநிதே-பேர் அருளாளனே பொறுமைக்கு நிதியே
சரீரத்துக்கு வரும் துக்கம் சரீரிக்கு -பர துக்க துக்கி அன்றோ தயாளு

விசேஷதோ விஸ்வ ஜநீந –மிகவும் சகல ஜனங்களுக்கும் ஹிதனே
இவற்றின் புறத்தாள்-விஸ்வத்தில் பஹிர் பூதனோ அடியேன் -ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா என்றது கழிந்தால்
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய என்கிற ஊர் பொதுவும கழிய வேணுமோ
அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் அன்றோ நீர்

விஸ்வத–எல்லா வற்றையும் தந்து அருள்பவனே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ

ஹிதஜ்ஜ -அடியோங்களுக்கு ஹிதமானவற்றை அறியுமவனே
உண்ணிலாய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலியப்
பார்த்து இருக்கையோ அடியேனுக்கு தேவரீர் அறிந்து வைத்த ஹிதம்

சர்வஜ்ஞ –எல்லாவற்றையும் அறிபவனே
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து விளங்குகின்ற என் ஆர்த்தியை அறியீரோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவீர் ஆயினும் பாசுரம் கேட்டவாறே
திரு உள்ளம் உகக்கும் என்று அன்றோ அடியேன் பிதற்றுவது

சமக்ர சக்திக –பரி பூர்ண சக்தி உடையவனே
இரும்பை பொன்னாக்க வல்லீரே -பொருள் இல்லாத என்னைப் பொருள் ஆக்கி -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்

அயே வரத –வரம் தரும் பெருமாள் என்ற திரு நாமம் உடையவனே
அடியேனுக்கு இத்தனையும் செய்ய திரு உள்ளம் இல்லையாகில் தேவருடைய வரதத்வம் என்னாவது –

மாம்பழ உண்ணி போலவோ திரு நாமம் வஹிப்பது
மாம் தே தாஸ்யமேவ –அடியேனுக்கு உன் அடிமைத் திறத்தையே
ப்ரஸஹ்ய ப்ராபய–எப்படியாவது பிராப்தம் ஆக்கி அருள்

நிரீஷிதம் வ்ருணே –92-என்று கீழே சாஷாத்கார மாத்ரம் அபீஷ்டம் என்றார்
கண்டேன் கமல மலர்ப் பாதம் என்றால் அடுத்த படியாக
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக -என்பார் –
ஆகவே இவரும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
ஷூத்ர பலாந்தரங்களிலே ருசியைத் தவிர்த்து தேவரீர் திறத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்தையே
பெறுவித்து அருள வேணும் என்கிறார் ஆயிற்று –

——————-

12 குணங்கள் ஒவ்வொருவருக்கும் காட்டி

1-தயா -தயா சதகம் -கல்கண்டு போல் திருமலை -ஞானாதிகள் அப்ரயோஜனம் தயை இல்லாமல் –
பிரதானம் இதுவே -ராமானுஜரை விந்தியா மலையில் இருந்து மிதுனமாக அழைத்துச் சென்றார்களே

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

விந்தியக் காடு, இருள் சூழ, திகைத்திருந்து, ‘ஆவாரார் துணை?’ என்று கலங்கி நின்றபோது,
தேவாதி ராஜன் –காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும், வேடுவனும் வேடுவச்சியுமாக வந்து காத்து,
மறுநாள் விடியலில் காஞ்சிக்கருகில் கொண்டு வந்து சேர்த்தனர்.
தாயார், “நீர் வேண்டும்” என்று கூற, அருகில் உள்ள (சாலைக்) கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து தர, உடன் அவர்கள் மறைந்தனர்.
உடையவர் தம்மைக் காத்தவர் யார் என்ற உண்மை உணர்ந்து, தினமும்
அக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்து வரலானார்.
கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே.
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
இவன் அருளால் பெற்ற ஸாம்யா பத்தி ஸ்வாமிக்கும் உண்டே

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

———-
2-ஷாந்தி ஸகல மனுஷ நயன விஷயதாங்கனாக -பொறுமை யுடன் நமக்காக
காஞ்சி பிரம்மாவால் தொழப்பட்டவர்
ஹஸ்திகிரி
ஹஸ்த திரு நக்ஷத்ரம்
சரஸ்வதி -வேகவதி -பல திவ்ய
திருவெஃகா வேகா சேது
ஒரு ஆஸ்ரிதனான ப்ரம்மனுக்காக
ஹஸ்திகிரி மத்த சேகரன்
அத்திகிரியான்-த்யாகேசன்

————-

3-ஓவ்தார்ய –
ஆர்த்திதார்த்த பரிபால தீக்ஷிதன்
வரம் ததாதி
வரதம் அளிப்பவர்களுக்குள் ஈஸ்வரன்
வரத ஹஸ்தம் இல்லாமல் அபய ஹஸ்தம்
வரதராஜனாகவே பிரசித்தமாக இருக்க ஹஸ்தமும் காட்ட வேண்டுமோ

கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் !
கொள்ள குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ –3-9-5-
திருமங்கை ஆழ்வாருக்கு காட்டிக்கொடுத்த உதார வள்ளல்-மண்ணை அளந்து பொன்னாகி -இஹ லோக ஐஸ்வர்யம்
தன்னையே கொடுக்கும் கற்பகம்
ராமாநுஜரையே அரங்கனுக்கு கொடுத்த உதார குணம்
சேராது உளவோ பெரும் செல்வருக்கு—அரையர் ஸ்துதிக்க -ஸ்த்வயன் -ஸ்தவ ப்ரியன் – ஸ்துதி பிரியன்
ஞானம் வழங்கிய உதாரம் -யஜ்ஞ மூர்த்தி -அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பிள்ளை லோகாச்சார்யாராக -இவரே
ஏடு படுத்தச் சொல்லி
——–
4-பிரதிம ஸ்வ பாவம் -மென்மையான -திருமேனியும் -திரு உள்ளவும் மார்த்தவம்
ஞானிகள் பிரிவை அஸஹம்
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -திரு மூழி க்களத்தில்
ஆலவட்டம் -கைங்கர்யம் -ஆறு வார்த்தை
——-
5-சமதா -பக்தனை எனது அளவாவது
வேறுபாடு மட்டும் அல்ல
தன்னையும் அவர்களுக்கு கீழ்
அஷ்ட வித பக்தி மிலேச்சசன் இடம் இருந்தாலும்
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் பெயரிலே சாம்யம்
———–
6-ஸுஹார்த்தம்
கிருபை இதன் அடிப்படையால்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதா நாம்
முனியே -மனன சீலன் –
உறங்குவான் போல் யோகு செய்து
நாலூரானுக்கும் முக்தி
——–
7-த்ருதி
ஊற்றம் உடையார்
ஆஸ்ரித ரக்ஷணம்
ராமானுஜர் அவதாரம் தொடங்கி உபகார பரம்பரைகள்
நம்மாழ்வார் திரு உள்ளத்திலும் பட அருளி
——
8-பிரசாதம்
பேர் அருளாளன் அருளாத நீர் அருளி வீதி வழியாக ஒரு நாள்
———-
9-ப்ரேம
சேர்த்தி புறப்பாடு பிரசித்தம்
கஜேந்திர ரஷணம் -அகில காரணமத்புத காரணம்
நடாதூர் அம்மாள்
அம்மாள் ஆச்சார்யன் எங்கள் ஆழ்வான்
————
10ஆஜ்ஞா
ஆறு வார்த்தைகள் பிரசித்தம்
ராமானுஜரை ஆக்கி அருளி
ஆளவந்தார் ஆ முதல்வன் கடாக்ஷிக்க சரண் அடையும் பொழுதும் அருளி
விந்திய மலையில் இருந்து காத்து அருளி
ஸந்யாஸ ஆஸ்ரமும் அநந்த ஸரஸ்ஸில் செய்து அருளி
அரங்கனுக்கு அரையர் மூலம் கொடுத்து அருளி
ஸ்ரீவசன பூஷணம் ஏடு படுத்த
ஈட்டை வெளியிட்டு அருளி
————
11-ஆஸ்ரித சுலப
தொட்டாச்சார்யார் ஸேவை பிரசித்தம்
——–
12 கல்யாண
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸுந்தர்யம் லாவண்யம் மிக்கு
ஆதி ராஜ்யம்
திவ்ய மங்கள விக்ரஹம்
நாபி சுழி
வலித்ரயம் உதர பந்தம் பட்டம் கட்டி -தாமோதரன்
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-
(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )
————-
காஷ்மீர் பக்தி மண்டபம் சாரதா பீடம் -வித்வான்கள் மலிந்த இடம்
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்

—————————————————————————————

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.
திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம். -கொடையும் விசேஷம் பேர் அருளாளன் அன்றோ
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.

கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற
இந்த நான்கு திவ்யதேசங்ககளுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.

———————-

ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம

ஹரே அகில ஹேய ப்ரத்ய நீகன்
ராம -கல்யாண ஏக குண நிதி -ஏக ஸ்தானம்
சீதா ராம -மிதுனமே ப்ராப்யம்
ஜய ஜய ராம -பேற்றுக்கு உகப்பானும் அவனே
ஆஸ்ரித நிரஸனம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் -போக்யம் பசும் கூட்டம்

ஸத்ய வாக்யனாகி -சத்யம் நேர்மை உறுதி மூன்றும் சேர்ந்தவன் -நம்மையும் அப்படி ஆக்கி அருளுவான் அன்றோ

ஹரே ராம-நன்மை செய்யும் ஸுஹார்த்தம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி — தாரகம் –வாழ் முதல்
ஜய ராம்-போஷகம் -வளர் முதல்
சீதா ராம -ஸீயாராம் -அயோத்தியில் கோஷம் –பிராகிருத வீட்டுப்பேச்சு -போக்யம்-ஸ்ரீ யபதித்தவம் – -மகிழ் முதல்

ராதே கிருஷ்ணா ராதே ராதே பிருந்தாவனம் இதே போல்-

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் மிதுனமே

திருவுக்கும் திருவாகிய செல்வன்

ஸுர்ய -வீர்ய -பராக்ரமம்
வெளியில் இருந்து தான் கலங்காமல் ஸுர்ய
புகுந்தும் கலங்காமல் பராக்ரமம் சின்னா பின்னம்
தனக்கு விகாரம் இல்லாமல் மற்றவை விகாரம் செய்வது வீரம்
ஜய ஜய மஹா வீரா

ஜய ஜய மஹா வீர
மஹா தீர தவ்ரேய
தேவாஸூர சமர சமய சமுதித
நிகில நிர்ஜர நிர்த்தாரித நிரவதிக மஹாத்ம்ய
தச வதன தமித தைவத பரிஷதப் யர்த்தித தாசரதி பாவ
தி நகர குல கமல திவாகர
திவிஷ ததிபதி ரண ஸஹ சரண சதுர தசரத சரமருண விமோசன
கோசல ஸூதா குமார பாவ கஞ்சுகித காரணாகார –7-

விகாரம் தனக்கு கொஞ்சமும் இல்லாமல் மற்றவர்க்கு -வீரம் சூரம் பராக்ரமம் -கலங்காமல் –
உள்ளே புகுந்து சின்னாபின்னம் ஆக்கி– தான் கிஞ்சித்தும் மாறாமல் -மூன்றும் உண்டே
மஹா வீரன் – பூஜிக்க தக்கவன் மஹான்-
ரகு -இஷுவாகு குலம் -சூர்ய குலம் மனுவின் பிள்ளை இஷுவாகு -ரகு குலம் என்பதால் ராகவன் –
குணம் ஒவ் ஒன்றுமே விகாரம் அடைவிக்குமே -வில் கொண்டு மட்டும் இல்லை -அது சாதாரணம்
அழகில் ஆழ்ந்து –நேர்மையில் ஆழ்ந்து –ஆர்ஜவத்தில் ஆழ்ந்து போவோமே
திருவடி கொண்டாடும் துறை -வீரம் -பக்திஸ்ஸ நியதா வீர–பாவோ நான்யத்ர கச்சதி —
வீரத்தை தவிர வேறு ஒன்றிலும் செல்லாதே –
கோன் வஸ்மி-குணவான் -கஸ்ய வீர -16-கல்யாண குணங்களில் -ஸுசீல்யத்துக்கு அடுத்து –
நேர்மையுடன் கூடிய வீரன் பெருமாள் -ஆயுதம் எடுக்காத வெறும் கை வீரன் கீதாச்சார்யன் –

ஸத்ய வாதி பிரிய வாதி த்ருட வாதி -மே விரதம் -அசைக்க முடியாத திடம்-சரணாகத வாத்சல்யம் -அபய பிரதான சாரம்

ஸத்ய வாதி -ஹரே ராம
பிரிய வாதி -சீதா ராம
த்ருட வாதி-ஜய ஜய ராம

ஸத்ய பாஷா ராகவா பிரிய பாஷா ராகவா மிருது பாஷா ராகவா பூர்வ பாஷா ராகவா மஞ்சு பாஷா ராகவா –
சொல்லின் செல்வன் இவனே கொண்டாடும்படி திருவடி

விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-

மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-

விபீஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவணஸ்வயம்*

—————-

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
“ஹரிர் ஹரி ஹரிர் ஹரி”என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
“கேசவா”என்று சொல்ல வேண்டும். “கேசவா” என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
“கோவிந்தா”என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
“மாதவா”என்று கூற வேண்டும்.

கஜேந்திர மோக்ஷம் செய்து அருளினை அவதாரம்
துஸ் ஸ்வப்னம் போக்கும்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -361-656-ஹரி நாமம்

நாராயணா மணி வண்ணா -ஆர் இடரை நீக்காய்
கபிஸ்தலம்
சென்று நின்று ஆழி தொட்டானை
புண்யோ துஸ் ஸ்வப்ன நாசநா
அஜிதன் -அம்ருத மதனன் –கூர்மம் தங்கி -மோஹினி -அவதாரங்களும் உண்டே

பச்சை வர்ணத்தையும் ஹரி குறிக்கும்
பச்சை வண்ணன் பவள வண்ணன்
கரும் பச்சை
நீல மேக ஸ்யாமளன் -கறுத்தே -முகில் வண்ணன் -பச்சையும் மரகத பச்சை ஆழ்ந்து
ஸம்ஸ்திதா பூஜித -கோவர்த்தன மலையில் இன்றும் எழுந்து அருளி இருக்கிறவன் ஹரி திரு நாமம் -பட்டர்
கோவர்த்தன தாரியும் ஹரி -குன்று எடுத்து குளிர் மழை காத்தவன் –

ஓம் பிரணவத்தையே தாங்கும் ஹரி திரு நாமம்-திரு மணத் தூண்கள் ஹரி-த்வய அக்ஷரங்களே –

ரமயதீ ராம –கண்டவர் தம் மனம் வழங்கும் -திருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு அறிவோமே

ரூபம் குணம் இரண்டுமே வசீகரிக்கும்
நடத்தை -இன்றும் பாஷ்யகாரர் உத்சவம் நடை அழகை ராமர் பிரகாரத்தில் நடை பெறுமே
ரம்யதி-மகிழ்ச்சி கொடுப்பதில் ஸ்ரேஷ்டம் –
ராம நாமமே ஜென்ம ரஷக மந்த்ரம்

ரம்யதே அஸ்மின் –தோள் கண்டார் தோளே கண்டார் –
பூமா -ஒவ்வொன்றும் –
வேறே எங்கும் போகவோ கேட்கவோ அனுபவிக்கவோ போக முடியாதே
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
அபி ராமம் -நீலோத் புஷ்பம் -ஸரத்கால முழு நிலா -பிருந்தாவனத்தில் பெரிய ஸமூஹம்
குணாபி ராமன் ராமஞ்ச –

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம் -ஹரே ராம் அர்த்தம்

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாசனம்
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீ சாப பாண தரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண:
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய:
கண்டிதாகில தைத்யாய ராமாயா ஆபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
அக்ரத: ப்ருஷ்டத ச்’சைவ பார்ச்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தன்வானௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணொ…
அச்யுதாநந்த கோவிந்த.நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே
வேதாச்சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந்தைவம் கேசவாத்பரம் //
 
சரீரே ஜர்ஜரி பூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே
ஒளஷதம் ஜாஹ்நவி தோயம் வைத்யோ .நாரயணோ ஹரி:
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புந: புந:
இதமேகம் ஸுநிஷ்பநம் த்யேயோ .நாரயணோ ஹரி :
 
காயே.ந வாசா ம.நஸா இந்த்திரியைர் வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாரயணாயேதி ஸமர்ப்பயாமி //
 
யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீநந்து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷ்ம்யதாம் தேவ.நாரயண .நமோஸ்துதே
விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம://
ராம நாமமே தாரக ம்ந்த்ரம். கஷ்டங்களை விலக்குபவர். பீடைகளை ஒழிப்பவர். பயங்களை போக்குபவர். ஸர்வ மங்களங்களையும் தருபவர். ஒரு நாள் ஒரு தரம் சொன்னால் போதும்.

ஹரே ராம
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -ஹரி சொன்னாலே ராம புண்யம் கிட்டும்
ராம ஹரே
கிட்டி அனுபவிக்க போக -ஸம்ஸார உழன்று இருக்க -யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே-அணைவிக்கும் முடித்தே
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

கஷ்டங்களை நீக்கி ஆனந்தம் தருவதே ஹரே ராம்

வேத ஸ்வரூபமே ஸ்ரீ ராமாயணம்-“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே! வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!”

வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு.

ராம நாமம் ஒரு வேதமே! ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம் இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன் அவதாரம் அருள்சேர் ஜானகி அவன்தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான் கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான் (ராம நாமம் ஒரு வேதமே)

யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரிதஸ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி–(வால்மீகி ராமாயணம் 1.2.36)

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராம காதை உலகில் நிற்கும்.

காலங்களைக் கடந்த பெருமை
லோகங்களைக் கடந்த -கோடி கோடி அண்டங்களிலும் பெருமை பெற்ற ஸ்ரீ ராமாயணம்
கால தேச பரிச்சேதய ரஹிதம்
இரண்டு அரண் ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழி

1. நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச்  சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார் .ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

2. நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான்.
தர்மம் நான்கு வகைப்படும்.

1.சாமானிய தர்மம், 2.சேஷ தர்மம் ,3.விசேஷ தர்மம், 4.விசேஷதர  தர்மம் . இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.
இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது  “விசேஷ தர்மம்”.
இறைவனுக்குத்  தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத்  தொண்டு செய்வதே முதன்மையானது என்று  பாகவத சேஷத்வத்தைக்  காட்டினான் சத்ருக்கனன்.இது “விஷேதர” தர்மம்.

‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா”என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

3. இராமாயணம் கதையா? தத்துவமா?

அறத்தின்  நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது .அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப்  படிக்காமல்,  தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும்.  அத னால் தான் நம்மாழ்வார், “கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ” என்று சொல்லாமல்,  “கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று பாடினார்.

4. 18 முறை நடந்து கேட்டார் ராமானுஜர்

ராமாயணம் வெறும் கதையாக இருந்தால், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய ராமானுஜர் போன்ற மகான்கள் அதை எளிமையாக தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் ராமாயணம் என்பது வேத சாஸ்திரத்தின்  சாரமான தொகுப்பு என்பதால்தான், திருமலைக்கு பதினெட்டு முறை நடந்து, ஒரு வருட காலம், ராமாயண சாரத்தை, தன்னுடைய தாய் மாமனும் ,தன்னுடைய  ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் ஆகிய பெரிய திருமலை நம்பிகளிடம்   பாடம் கேட்டார்.

5. காயத்ரி மந்திரமும்,  ஸ்ரீ ராமாயணமும்.

சகல வேதங்களின் சாரமான  காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு  அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள்  என்ற வகையில்   24 ஆயிரம் ஸ்லோகங்களை வால்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயண சாரத்தைச் சொல்வதால்,அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

6. ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச்  சொல்வது ராமாயணம். ஒரு வருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக்  கொண்டால்  என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச்  சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச்  சொல்லுகின்றது மகாபாரதம். அதனால் தான் “இதிகாசங்களில்  சிரேஷ்டமானது  ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசன பூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

7. சீதையின் பெருமையா?ராமனின் பெருமையா?

ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக்  கூறுவதாகச் சொன் னாலும், அது சீதையின் பெருமையை  பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று  மகரிஷிகள் கருதுகின்றார்கள். “ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை,) என்றுதான்  ரிஷிகள் சொல்லுகின்றார்கள்.ஆழ்வாரும்  தேவ மாதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள். அந்த சிறையில் இருந் தவளின்  பெருமையைச்  சொல்றதுதான் ராமாயணம் என்று பாசுரம் பாடுகின்றார்.

தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே-என்பது திருவாய்மொழி.

தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள்  கருத்து.

8. முத்தி நகரங்களில் தலை அயோத்தி

ஸ்ரீராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தார்.எனவே அயோத்தியையும் ஸ்ரீராமரையும் நினைத்தாலே புண்ணியம்  வரும்.முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது.
முக்கியமான க்ஷேத்திரமும் கூட.‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவ திஸ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

9. அயோத்தி ஏன் புனிதத்தலம்?

பகவான் நித்ய வாசம் செய்யும்  வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி.யுத்தங்களால்  வெல்லப்படாத பூமி. மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார் என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் விபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமபிரான்  வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின்  அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத் தினுள், சுவர்களில் ஸ்ரீ ராம்சரித் மானஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

10. சரயு நதி

குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல,
உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி  சரயு.
இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்.–(பால-ஆற்றுப்படலம் -24) என்று

நதியின் பெருமையை கம்பன் வர்ணிப்பான். சரயு நதி அயோத்தியில் அற்புதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.சரயு நதியின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது. அதன் பெயர் ஹரிருத் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சரயு நதியுடன் இரண்டு நதிகள் கலக்கின்றன.கர்னால் மற்றும் மகாகாளி என்பவை அவை.-இராமரின் அவதாரதினமான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுகிறார்கள். ராம்காட் என்னு மிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.இராமர் இந்த உலக வாழ்வை முடித்துத்  கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது. இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது.

11. தங்கச் சிலைகள்

சீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.

கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும் வெகு நேர்த்தியாகவும். பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதைக்கு, கைகேயி உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.

12. பிரணவம் நடந்தது

ராமபிரான் லட்சுமணன் சீதை மூவரும் காட்டிற்குச் செல்லுகின்றார்கள். இதை விவரிக்க கூடிய பெரியவர்கள், அவர்கள் மூவரும்  பிரணவம் போல நடந்து சென்றார்கள் என்று உவமை கூறி விவரிக்கிறார்கள். வேதத்தின் சாரம் தான் பிரணவம். அதாவது ஓம்காரம்.ஓங்காரத்தில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. ‘‘அ” எழுத்து இறைவனையும் அதாவது ராமரையும், உ  என்கின்ற எழுத்து பிராட்டியையும், ‘‘ம” என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய லட்சுமணனையும் குறிக்கும்.

இந்த மூன்று எழுத்தும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும்  எப்பொழுதும் பிரியாமலே இருக்கும். அப்படி மூவரும் ஒருவரைத்  தொடர்ந்து ஒரு வராக காட்டில் நடந்து சென்றார்கள் என்பதை, பிரணவம் சென்றது என்று சுவாரசியமாகக்  குறிப்பிடுகின்றார்கள். பிரணவத்தை ஒரே அட்சரமாக நினைப்பது போல நாம் சீதா ராம லஷ்மணர்களை இணைத்து தியானம் செய்ய வேண்டும்.

13. ஸ்ரீ ராமனும், ஸ்ரீ ராமானுஜரும்

ஸ்ரீ ராமபிரானுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன “சைத்ர மாஸே  ஸிதே  பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு”  என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம். அதாவது சித்திரை நவமியில் புனர் பூசத்தில் அவதரித்தார்   என்பதை இந்த ஸ்லோகம் சொல்லுகின்றது. “மேஷார் த்ராஸ ம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம்” என்று மேஷ மாதமான சித்திரையில் ராமானுஜர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்லோகம் குறிக்கிறது.

1.இருவரும் உலகை ரமிக்கச் செய்தவர்கள்.
2.இருவர் பெயரி லும் “ராம” என்ற நாமம் உண்டு.
3.இருவருக்கும் பல ஆச்சாரியர்கள்.
4.இருவருமே சரணாகதி சாஸ்திரத்தின் மகிமையை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.
5.இருவருமே திருவரங்கநாதரிடத்தில் பெரும் அன்பு  கொண்டவர்கள்.

14. ஏன் ராம அவதாரம்?

ராமபிரான் தமது உலகமான வைகுண்டத்துக்குச் செல்லுகின்றபோது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது.மேல் நிலைக்குச் செல்வது.இதை வள்ளுவரும் “வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்று சொல் லுவார்.எல்லோரையும் உயரே ஏற்ற ,கீழே இறங்க வேண்டும்.கீழே இறங்குதல்தான் “அவதாரம்.” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச்செல்வதுதான்.

மோட்சம் என்பது மறுஉலகம் என்று சொல்வதைப் போலவே விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு.எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன் பங்களிருந்து விடுதலை பெறுதல்.அதனால் தானே  இராமன் கட்டிற்குச் செல்லும்போது அயோத்தி மக்கள்  அழுதார்கள்.

கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்- (நகர் நீங்கு. 100)
என்று இந்தக் காட்சியின் மாட்சியை திரைப்படம் போல வர்ணிப்பான் கம்பன்.

15. ஏழு மராமரம்
இராமாயணத்தில் நம் கவனத்தை கவர்ந்தது மராமரம்.
“மரா” “மரா” என்ற உபதேசம் “ராம ராம” எனும் மந்திரம் ஆகி வான் மீகியைப்  பதப்படுத்தியது.  இராமாயணத்தை எழுத வைத்தது.
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே- என்பார் கம்பர்.

அது சரி மராமரம் என்பது என்ன? இங்கே மராம் என்பது யா மரம் (ஆச்சா/சாலம்). மரா என்ற தமிழ்ச் சொல், ராம என்ற தெய்வப்பெயரை வால்மீகிக்குத் தந்துள்ளது.
ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்.

இராமனால் செலுத்தப்பட்ட அம்பு, தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட ஏழு மராமரங்களையும் துளைத்து, ஏழு உலகங்களையும் துளைத்து, ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களையும் துளைத்தது, இனி துளைப்பதற்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் இராமனிடம் திரும்பி வந்தது.

16. ஏழும் இராமனும் ராமபிரான் வாழ்வில் ஏழு என்கிற எண் மிகப் பொருந்தி வருவதைக் காணலாம்.

1. ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.
2.ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.
3.இராமன் எழுபது வெள்ளம் வாநர சேனைகளோடு இலங்கை மீது படை யெடுத்தான்.
4.ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.
5.ஏழு  பிராகாரங்கள் உள்ள ஸ்ரீரங்கநாதரை அவன் குலதெய்வமாக அடைந்திருந்தான்.
6.ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).
7.ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது காண்டம் உத்தர காண்டம்.
8.அனுமன் வீணையை வைத்து கொண்டு ஏழு ஸ்வரங்களால்  இராமா யணம்   பாடிக்கொண்டிருக்கிறார்.

17. தோல்வியே இல்லை

1.அவன் ஜெயராமன்.
2.ஸ்ரீ ராமாயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.
3.ராமன் அம்பு பழுதுபட்டு திரும்பியது இல்லை.
4.“ஒக பாணமு” என்று தியாகய்யர் ராம பாணத்தின் பெருமையைப் பாடுவார்.
5.‘‘தோலா வீரன்”  என்று வேதாந்த தேசிகர் ராமனின் வீரத்தைப் பாடுவார்.
6.எல்லா இடங்களிலும் வெற்றிதான். ஆகையினால்தான் ஸ்ரீராமஜெயம் எழுதுபவர்களுக்கும், ஸ்ரீ ராமஜெயம் சொல்பவர்களுக்கும் தோல்வி என்பது வருவது இல்லை.

18. ஏன் ராமன் பெயர் இல்லை ? ஒரு அருமையான பாட்டு.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
இந்த பாட்டிலே ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. ராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.சரி.

இதில் ராமர் பெயர் இல்லையே? என்ன காரணம்?

இதற்கு சுவையான விளக்கம் சொன்னார்கள் பெரியவர்கள்.பட்டாபிஷேகம் என்கின்ற அந்த  கிரீடம் ராமர் தலையில் வைக்கப்பட்டது  ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், வெகுஜனங்களின் அபிப்ராயம், மகிழ்ச்சி ஆகிய கிரீடத்தை, அதாவது மக்களின் அபிமானத்தை ராமபிரான் சூட்டிக் கொண்டான்.
ஒவ்வொருவர் இதயத்திலும் ஆட்சி செய்தான்,ராமர் சூடிய கிரீடம் தங்கள் தலைமேல் வைத்ததாகவே மக்கள் கருதினார்கள், எல்லா மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ராமன் இருந்ததால், ராமன் பெயர் இதில் கம்பன் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது பெரியவர்கள் நிர்வாகம்.

19. வேதங்கள் ஏன் ராமனைத் தொடர்ந்தன?

வேதம்தான் ராமன். வேதம் காட்டும் மறைபொருள் தான் ராமாயணம்.
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I
வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II
இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.

“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயண மாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.
அதாவது இராமாயணத்தில் தூல வடிவம் ராமன் என்கிற அவதாரம். தன் அவதார  காலம் நிறைவு பெற்றவுடன் ராமன் சரயு நதியில் இறங்கி உடனடியாக வைகுண்டத்திற்குச் செல்லத்  தொடங்க, வேதங்களும் அவனைத் தொடர்ந்து சென்றன. அதைத்தொடர்ந்து முனிவர்களும் மக்களும் ராமன் பின்னால் சென்றார்கள்.இதன் மூலம் பிரமாணமும் பிரமேயமும் (வேதமும் ,வேதப் பொருளும் ஒன்று என்பதை காட்டுகிறார்.

20. குலசேகர ஆழ்வார் வர்ணிக்கும் காட்சி இது

ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.அவர் ராமாயணம் பாடவும், அந்த காட்சிகளை அனுபவிக்கவும் விரும்புகிறார்.பகவான், “நீ திருச்சித்ர கூடம் வா, அங்கு இதை அநுபவிக் கலாம்” என, ஆழ்வார் தில்லை திருச்சித்ரகூடத்தில்  (வடக்கேயும் ஒரு சித்ரகூடமுண்டு) இக்காட்சிகளை கண்டு, ராமாயணத்தை பூரணமாக ஒரு பதிகத்தில் அருளிச் செய்கிறார். அதில் 10 வது பாசுரம் இது. தன்னுடன் சரா சரங்களை வைகுண்டம் ஏற்றினான் என்று பாடுகிறார்.

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி

சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே.
இப்பொழுதும் இந்த காட்சியை, நாம் தில்லை திருச்சித்ரகூடத்தில் (சிதம்பரம்) காண முடியும்.

21. ஏன் சித்திரையில் ஸ்ரீராமநவமி?

ஸ்ரீராமநவமி யானது சித்திரை மாதத்தில் வருகின்றது. இராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பதுபோல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே, ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது அவதரித்தான்.

22. வசந்த ருதுவும் ராம நவமியும்பகவான் கீதையில்,
ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும் ,  சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும் ,மாதங்களில் நான் மார்கழியாகவும் , பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத்  தனிச்  சிறப்பு உண்டு.

23. ஏன் மறுபடி மறுபடி சீதையைப் பிரிந்தான் இராமபிரான் ?

இராமாயணத்தில் பலகாலம் சீதையை ராமன் பிரிந்து இருப்பதாகப் பார்க்கின்றோம். முதலில் காட்டில் சீதையைப் பிரிகின்றான். ராவணன் சீதையை அசோகவனத்தில் சென்று மறைத்து வைக்கிறான். அதற்குப் பிறகு சீதையை மீட்ட பிறகு மறுபடியும் பிரிவு ஏற்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால், ஒருமுறை பிருகு மகரிஷியின் பத்தினியை மகாவிஷ்ணு தன்னுடைய சக்கரத்தால் தலையை துண்டித்து விட்டதாகவும், அதனால் பிருகு மகரிஷி, நீ உன் மனைவியை பிரிந்து துன்பப்படுவாய் என்று சாபம் விட்டதாகவும், முனிவரின் சாபத்தை மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டு, உம்முடைய சாபத்தின் பலனை நாம் ராமா வதாரத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதி கொடுத்ததாகவும் பெரியவர்கள் சொல்லுகின்றார்கள்.

முனிவரின் வாக்கு பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக சாட்சாத் பகவானே இந்தத் துன்பத்தை ஏற்றுக் கொண்டான். இந்த சாபத்தின் மூலம் தேவர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தான். இங்கே (முனிவரின் சாபம் (தேவர்களுக்கு) வரமாகியது.

24. ஸ்ரீராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்

சித்திரை மாதத்தில் ஸ்ரீராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . ஸ்ரீராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு சில சுலோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு “ராம கோடி” என்று பெயர்.
தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம்  எழுதி  பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

25. மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?
அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதி தேவிக்குச்  சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும். அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது.

எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. “ர” என்ற எழுத்துக்கு எண் 2ம், “ம” என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத்தில் “ராம” என்ற நாமம் மூன்று முறை வருகின்றது. அதாவது 2X5 2×5 2×5. என்றால் 2X5 =10×2=20×5=100×2=200×5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்று சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்:  சிறப்புப் பாயிரம் 14)

26. யார் இவ்வுலகில் பாக்கியவான்?

ராமனின்  குணங்கள் பற்றி அழகான தமிழ் பாடல் ஒன்று உண்டு. இராமா யணத்தின் சாரமே இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இவ்வுலகில் பாக்கியவான் என்ற கேள்விக்கு விடையாக இப்பாடல் உள்ளது.

1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
2. காம க்ரோதத்தை கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்.
3. பொய் உரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் வாழ்பவன் பாக்கி யவான்.
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை மனத்தவன் பாக்கியவான்.
5. நண்பர்களுடைய நலத்தின் கோரும் பண்புடையவனே பாக்கியவான்.
6.துன்பம் வந்தாலும் துக்கமில்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்.
7. யாதொரு ஸ்திரீயையும் மாதா என்று எண்ணிடும் நேர்மையானவனே பாக்கியவான்.
27. ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?
ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)
1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிடம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிடம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

28. இதிகாசம் என்பதன் பொருள் இதுதான்இராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பரவி இருக்கக்கூடிய ஒரு உன்னதமான இதிகாசம். இதி என்றால் “இவ்வாறு, இப்படி, இப்படியிப்படி, இப்படியாக, இவ்வாறாக” என்றெல்லாம் இடம் சார்ந்து பொருள்படும். (ஹ) என்பது வலியுறுத்தும் ஓர் அசைச்சொல். தமிழில் இப்படித்தான், இவ்வாறாகத்தான் என்பதில் வரும் ‘தான்’ என்னும் சொல் போல.கடைசி பகுதியாகிய  (ஆஸ) என்பதன் பொருள் “இருந்தது”.

அஸ் என்றால் “இரு” (நிகழ்காலம்), இதன் இறந்தகால வடிவம் ஆஸ. இதிகாசம் என்றால் “இப்படி நடந்தது” என்று பொருள்.அந்த ஆசிரியரே அதிலே ஒரு கதாபாத்திரமாக வருவார். அப்படிப்பட்ட இதி காசங்கள் இரண்டு. ஒன்று. இராமாயணம். இன்னொன்று மகா பாரதம்.வேதத்தில் அர்த்தத்தை தெளிவாக கதை போல் விளக்குவது இந்த இதி காசங்கள். மகாபாரதத்தில் வேத வியாசர் கதைக்குள் வருவார். இராமாயணத்தில் வால்மீகி  முனிவரே வருகிறார். அவர் தான் சீதையை தன் ஆசிர மத்தில் வளர்க்கிறார்.

29. இராமாயணம் முதலில் அரங்கேறியது எப்போது?

இராமாயணதிற்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இது இராமர் காலத்திலேயே அரங்கேறியது. அதுவும் அவர் ராஜ மண்டபத்திலேயே அரங்கேறியது. அதை இராமன் மக்களோடு மக்களாக அனுபவித்தான். இதை குலசேகர ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்

செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம்
ஒன்றே மிதிலைச் செல்வி (சீதை) உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் (லவ குசர்கள்) செம்பவளத் திரள்வாய்த் திறந்து இனிமையாகப் பாட இராமன் தன் சரிதை(கதையை) கேட்டான் என்பது பொருள். அடுத்த வரியில் இந்த கதையைக் கேட்கும்போது அமுதம் கூட சுவையாய்த் தெரியாது. இதன் மூலம் இராமாயணம் கேட்க இனிமையானது என்பதும் தெரிகிறது. அதனால் தானே யுகம் யுகமாக இந்தக் கதையை மக்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள்.

30.வேதத்தின் சூட்சுமம் சொல்வதுதான் இராமாயணம்

வேதத்தில் உள்ள சாரமான செய்திகளை நேரடியாக வேதம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், வேதம் என்ன தான் சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இராமாயணத்தைப்  படிக்க வேண்டும் என்பதால்,
கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

என்று நம்மாழ்வார் பாடினார். வேதத்துக்கு உரை செய்தவருமான ஸ்ரீ பாஷ்யம் எழுதியவருமான ஸ்ரீ ராமானுஜர்  இராமாயணத்தில் மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் கொண்டு இருந்தார். இராமாயணத்தில் சொல்லப்பட்ட சூட்சும தத்துவங்களைக்  கொண்டுதான்  ஸ்ரீ பாஷ்யத்தை அவர் எழுதினார் என்பார்கள். அதனால்தான் அமுதனார்,” படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி  வெள்ளம்  குடிகொண்ட கோயில் எம் ராமானுஜன்” என்று பாடியிருக்கிறார். அதாவது எப்போதும் இராமாயணம் இராமானுஜர் நெஞ்சத்தில் இருக்குமாம். அதுதான் அவரை வழி நடத்தியதாம்.

இப்படி நம்மையும் வழி நடத்தி நல்வழி காட்ட இந்த ராம நவமியில் ஸ்ரீ ராமாயணத்தை பாராயணம் செய்வோம். ஸ்ரீ ராமனின் குணங்களைக் கொண்டாடுவோம்.ஸ்ரீ ராம நாமம் ஜெபம் செய்வோம்.உலகம் சர்வ சகோதர ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தனை செய்வோம். செயலிலும் முனைவோம். அது தான் நிஜமான ஸ்ரீ ராமநவமி.

—————-

பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் |

ரகு குலத்து ராமனை த்யானிக்கிறேன், அவன் தெய்வீக நற்குணங்களின் உருவானவன்(தோட்டம்).

பாவுக விதரணபரா பாங்கலீலா லசிதம் ||

ஒளிரும் தன் கடைக் கண்களாலேயே மகிழ்ச்சியும், வளமும் எல்லாருக்கும் தருவதில் மேலானவன்

தினகரான்வயதிலகம், திவ்யகாதி சுதசவனா
வன, ரசித சுபாஹுமுக வத, மஹல்யா பாவனம்,
அனக மீச சாப பங்க, ஜனகசுதா ப்ரானேசம்,
கன குபித ப்ருகுராம கர்வஹர, மிதசாகேதம்

சூர்ய குலத்திலகம், காதியின் மகன் யக்ஞம் காக்க
சுபாஹுவின் தலைமையிலான அரக்கர்களை அழித்தவன், அஹல்யைக்கு விமோசனம் அளித்தவன்,
தெய்வீகமான ஈஶனின் வில்லை முறித்து ஜனக புத்ரியின் உயிர் நாதனானவன்,
பெருங்கோபத்தோடு வந்த ப்ருகுராமனின் செறுக்கை அடக்கி, அயோத்தி திரும்பியவன்

விஹிதாபிஷேகம் அத விபின கதம் ஆர்யவாசா
சஹித சீதா சௌமித்ரீம், ஶாந்ததம ஶீலம்,
குஹநிலையகதம், சித்ரகூடாகத, பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம், மதனசுந்தராங்கம்

பட்டாபிஷேகம் தடைபட்ட பின் தந்தை சொற்படி வனம் சென்று, ஸீதை, ஸௌமித்ரியுடன் வசித்தவன். அமைதியே உருவானவன்.
குஹன் இருக்குமிடம் சென்றவன், சித்ரகூட பர்வதத்தில் வந்து, பரதனுக்கு தன் மஹிமை பொருந்திய ரத்ன பாதுகைகளை தந்தவன், மன்மதனின் அழகிய அங்கங்கள் உடையவன்.

விதத தண்டகாரண்ய கத விராத தலனம்,
சுசரித கடஜ தத் தானுபம் இதவைஷ்ணவாஸ்த்ரம்,
பதக வர ஜடாயு நுதம், பஞ்சவடீ விஹிதவாசம்,
அதிகோர சூர்ப்பணகா வசனாகத கராதி ஹரம்

அடர்ந்து விரிந்த தண்டகாரண்யத்தில் செல்லும் போது விராதனை அழித்தவன்,
சிறந்த குடமுனி(அகஸ்த்யர்) தந்த ஒப்பற்ற வைஷ்ணவாஸ்த்ரத்தைக் கொண்டவன்,
பக்ஷி ராஜனான ஜடாயுவால் பூஜிக்கப்பட்டு, பஞ்சவடீயில் வாசம் கொண்டவன்,
அதி கோர சூர்ப்பணகையின் சொல் கேட்டு வந்த கரன் முதலானோரைக் கொன்றவன்.

கனக மிருக ரூபதர கல மாரீச ஹர, மிஹ
ஸுஜன விமத தஶாஸ்ய ஹ்ருத ஜனகஜா ன்வேஷணம்,
அனகம், பம்பாதீர சங்கதா ஞ்சனேய, நபோமணி
தனுஜ ஸக்யகரம், வாலீ தனு தலன, மீஶம்

பொன்மானின் ரூபம் தரித்த வஞ்சக மாரீசனை வதைத்தவன்,
இங்கு உத்தமர்களை மதிக்காத (உற்றவர் சொல்கேளாத) தசமுகன் திருடிய ஜனகன் மகளை தேடி அலைந்தவன்,
பரிசுத்தமானவன், பம்பா நதிக்கரையில் ஆஞ்சநேயருடன் சேர்ந்தவன், விண்ணில் ஒளிரும் சூர்யபுத்ரனுடன் ஸ்னேஹம் கொண்டவன்,
வாலீயின் உடலை சாய்த்தவன், உயர்ந்தவன்

வானரோத்தம ஸஹித வாயுஸூனு கரா ர்ப்பித
பானுஶத பாஸ்வர பவ்ய ரத்னாங்குலீயம்,
தேன புன ரானீதா ன்யூன சூடாமணி தர்சனம்,
ஸ்ரீநிதி முததி தீரே ஶ்ரித விபீஷணா மிலிதம்

ஸுக்ரீவனுடன் இருந்தபோது, வாயு புத்ரன் கரங்களில், நூறு ஸூர்ய ஒளி பொருந்திய, தெய்வீகமான தன் ரத்ன மோதிரத்தைத் தந்தவன்,
பின்னர் அவனால் கொண்டுவரப்பட்ட குறையற்ற சூடாமணியைப் பெற்றவன்,
பொக்கிஷங்கள் உறையும் கடற்கரையில் அண்டின விபீஷணனை நண்பனாக்கிக் கொண்டவன்

கலித வரசேது பந்தம், கல நிஸ்ஸீம பிஶிதாஶன
தலனம், உரூ தஶகண்ட விதாரணம், அதி தீரம்,
ஜ்வலன பூத ஜனக ஸுதா ஸஹிதம் யாத சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம், விஸ்வபாலம், பத்மநாபம்

சிறந்த கடல் பாலத்தைக் கட்டினவன், வஞ்சகர்களான எல்லையற்ற நரமாமிசம் உண்ணும் அரக்கர்களை அழித்தவன்,
பத்து கழுத்துக்களுடன் உருக்கொண்டவனை அழித்தவன்,  எதற்கும் அஞ்சாதவன்,
நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட ஜனகபுத்ரியுடன் சேர்ந்தவன், அயோத்தி திரும்பியவன்,
ஒளிரும் பட்டாபிஷேகம் கொண்டவன், உலகைக் காப்பவன், பத்மநாபன்.

——————

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே (ஜகம்)
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும் (ஜகம்)
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வ வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான் (ஜகம்) 
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமதைக் கேட்டாள் 
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான் 
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடனென போவதென தடுத்தனர் சென்று 
ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே (ஜகம்) 
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான் 
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான் 
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான் 
வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான் 
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து ஐயன் வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான் 
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே 
ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகு குலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி
————————————————————————————————————————–

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்ய தேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறு மதிநலம் அருளப் பெற்ற திவ்ய ஸூரிகள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷிதங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.
இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கப் பெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.

தாமாஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருத யுக முகே தாதுரிச்சாவசேந |
யத்வீதீநாம் கரிகிரி பதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்ரிதச பதயோ தாரயந்த்யுத்தமாங்கை: || என்று.

தேவப்பெருமாளின் உத்ஸவம் விமரிசையாக நடக்கிறது.
அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பரி முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.
ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன்
கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.
அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது.
அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக் கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள
தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள்.
அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
வந்தே ஹஸ்தி கிரீசஸ்ய வீதீ சோதக கிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.

‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.
அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள்
நம் ஆசார்யர்கள். அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.

இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து
திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.
இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.

வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி?
ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது.

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள்
இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது.
அத்தி யூரான் பபுள்ளை யூர்வான் அணிமணியின்
துத்தீ சேர் நாகத்தின் மேல் துயில்வான். முத்தீ
மறையாவான், மா கடல் நஞ்சுண்டான். தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான், என்பது பூதத்தாழ்வார் பாசுரம்.
இப்படி மங்களாசாஸனாத் ஹிமயமலை முதல் கடல் வரையில் தேசவரை கருடோத்ஸவ விசேஷம்
தேவப்பெருமாளுக்கே.
இவர் இரவில் நாகத்தின் மேல் சயனித்துக் கொள்கிறார்.
காலையானதும் எழுந்து விடுகிறார்.
பணிபதிசயனீயாத உத்தித: த்வம் ப்ரபாதே என்பது தேசிக ஸ்ரீஸூக்தி.

இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டே

இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்துநான்கு சாண் கொண்டது.
வாணவெடிகள் இருபத்துநான்கு வகைகள்.
த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.
இவையும் இருபத்துநான்கே.
இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.

ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக
அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு
இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்,
ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்
தேவப் பெருமாளே’ என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.

இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்;-ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக
இந்த அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –

ஸம்ஸாரவாரி நிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தர விம்சதிர் யா |
தாமேவ தத்வ விதிதம் விபுதோதிலங்க்ய
பச்யந் பவந்த முபயாதி கரீச நூநம் ||

வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்திரியம் ஐந்து,
ஜ்ஞாநேந்திரியம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா.
தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்து கொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்து விடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி
ஸ்ரீ வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது
மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள
பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.
இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும்
வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

நான்முகனே உத்தமமான இந்த திவ்ய தேசத்தில் அச்வமேத யாகம் செய்தான்.
அதில் இந்திரன் முதலான மந்திரங்களைச் சொல்லி யாகம் நடந்தது.
இந்திராதிகளைச் சொல்லியும் ஹவிர்பாகத்தைப் பெற வரவில்லை. ஏன் என்றால்
இந்திரனைக் குறித்தா இவர் யாகம் செய்தது. பகவானைக் குறித்து அல்லவா.
ஆனால் இந்த ஹவிர்பாக ரஸத்தை அவர்கள் நாக்கால் பருக வில்லை. பின் கண்ணால் பருகினார்கள்.

எம்பெருமான் பிரஹ்மாவினுடைய தவத்துக்கு வசப்பட்டு நேராக ஸேவை ஸாதித்தான்.
எல்லோரும் கண்டு ஆநந்தித்தனர் என்றார் ஸ்வாமி தேசிகன்.
இந்த வேள்வியை தடுக்க பிரமன் பத்நியான ஸர்ஸ்வதி வேகவதி நதியாக வந்தாள்.
அது ஸமயம் பகவான் யதோக்தகாரியாக அவளை வர வொட்டாமல் தடுத்தான்.
யாகம் நடந்தது பலமும் கிட்டியது. ஒரே பகவான் தன்னை இரண்டுப் பிரிவாகச் செய்து ஸேவை ஸாதித்தான்.
ஒன்று யதோக்தகாரி.
இரண்டாவது தேவப் பெருமான்.

ஆக இவரே உபாயம். ப்ராப்யம் என்பதை தெரியப் படுத்தினார்.
ஸ்வாமி தேசிகன் இதை
ஏகம் வேககதீ மத்யே ஹஸ்தி சைலே சத்குச்யதே.
உபாயப் பல பாவேன ஸ்வயம் வ்யக்தம் பரம்மஹ: என்றார்.

அப்பய தீக்ஷிதரின் வரதராஜ ஸ்தோத்திரத்தில் இன்னும் ஒரு ஸ்லோகத்தை பார்ப்போம்.
இவர் யாதவாப்யுதயம் என்னும் காப்பியத்துக்கு உரை எழுதினார் என்பது மாத்திரமில்லை.
வ்யாஸஸூத்ரத்துக்கும்
ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தை அநுஸரித்து நயமயூகமாலிகா என்னும் நூல் எழுதியுள்ளார்.

அவரது மற்றொரு ஸ்லோகம் .
தேவாதிராஜனே நான் உன்னிடம் இரண்டு குற்றம் செய்துள்ளேன்.
அதைப் பொருத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

அதற்கு தேவப் பெருமாள் பலகுற்றங்கள் உள்ளனவே
ஆக இரண்டே என்று எப்படி என்ன இது விசேஷ குற்றம் என்கிறார்.

முன் பிறவியில் நான் உன்னை வணங்காதது ஒன்று. அதெப்படி தெரியும் என்றார்.
இப்பொழுது அழுக்குடல் வந்ததைக் கொண்டே இதை அறியலாம் என்றார்.

மற்றொன்று இப்பொழுது உன்னை வணங்கியதால் அடுத்த பிறவி இல்லை.
ஆக அப்பொழுது வணங்க ப்ரஸக்தி இல்லையே.

ஆக இந்த இரண்டையும் பொருத்துக் கொள் என்று ரஸகனமான பத்யம் பாடினார்.
அந்த ஸ்லோகம் இதோ –

வபூ: ப்ராதுர் வாவாத் அநுமிதம் இதம் ஜன்மநீ புரா முராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் |
நமன் முக்த: ஸ்ப்ரதி அதநு: அக்ரேபி அநதிமான் கரீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி ||

—————————

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நாம :
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத பேர் அருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த -ஸ்ரீ அம்ருத பலா வளி என்னும் ஸ்ரீ கடிகாசல ந்ருஸிம்ம ஸ்தோத்ரம் —

February 14, 2023

ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன் :

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸெளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர – அழகிய மணவாளமாமுனிகளின்‌, சரணாம் புஜ ஷட்பதம்‌ – திருவடித்‌ தாமரைகளில்‌ வண்டு போல்‌ படிந்து ரஸாநுபவம்‌ செய்பவரும்‌, திவ்ய ஜ்ஞாந ப்ரதம்‌ – தம்மை யண்டினவர்க்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை அளிப்பவரும்‌, சுபம்‌ – அறிவினாலும்‌ அனுஷ்டாநத்தாலும்‌ சோபிப்பவருமான, தேவராஜ குரும்‌ – தேவராஜ குருவென்னும்‌ எறும்பி யப்பாவை.

இவர் சர்வலோக சரண்யரின் திருக்குமாரர் -தேவராஜன் இயல் பெயர் –

ஆராதன பெருமாள் சக்ரவர்த்தி திரு மகன்

இப்பொழுது நம் கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருமாளிகையில் சேவிக்கலாம்

திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி

அவதார ஸ்தலம்: எறும்பி

ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான்

நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம்

கனு அன்று இன்றும் பக்தலோசனன் எறும்பி க்ராமத்துக்கு எழுந்து அருளி சேவை சாதிக்கிறார்
மா முனிகள் இங்கே எழுந்து அருளி இருந்து கால ஷேபம்செய்து அருளினார்
எறும்பி க்ராமத்தையே வட திருவரங்கம் என்றும்
இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களை -அழகிய மணவாள தாசர்கள் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்

இவ் வெறும்பியப்பா மணவாள மா முனிகளின்‌ சிஷ்யாக்ர கண்யர்களான அஷ்டதிக்கஜாசார்யர்களில்‌ ஒருவராவர்‌. இவர்‌ ‘ “தேவராஜகுரு ‘வென்றும்‌ ‘வரதராஜ கவி” என்றும்‌ வழங்கப்படுகிறார்‌. வானமாமலைஜீயர்‌ திருவேங்கடஜீயர்‌, பரவஸ்துபட்டர்பிரான்‌ ஜீயர்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌, எறும்பியப்பா , அப்பிள்ளை, அப்பிள்ளார்‌, ப்ரதிவாதி பயங்கரமண்ணா ஆகிய இவர்கள்‌ “அஷ்டதிக்கஜங்கள்‌ ‘ என்று ப்ரஸித்தர்களாயிருப்பர்‌. “பாராரு மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்‌ ஆராமம்‌ சூழ் கோயிற்‌ கந்தாடையண்ணன்‌ எறும்பியப்பா ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார்‌ வாதீபயங்கரரென்‌ பேரார்ந்த திக் கஜஞ் சூழ்‌ வர யோகியைச்‌ சிந்தியுமே‘ – யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்

(“முனி என்பதனை முன்னும்‌ பின்னும்‌ கூடக்கூட்டி, பாராரு மங்கை (சிரீவரமங்கல) முனி, திருவேங்கட முனி, பட்டர்பிரான்முனி என்று கூட்டிப்‌ பொருள்‌ கொள்க. “எறும்பியப்பா (எம்பெருமானா।:ககு) வடுக நம்பியைப்‌ போலே தேவுமற்றறியாதே, ஜீயருக்கு (மணவாளமாமுனிகளுக்கு) அத்யந்தம்‌ அபிமதராயிருப்பர்‌” என்று யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ க்ரந்தம்‌ இவர் பற்றிக் கூறுவது காண்க.
இவர்‌ தாமும்‌, தாம்‌ மணவாளமா, . னிகளின்‌ சிஷ்யரென்பதை, இந்த அம்ருதபலாவளி என்ற ஸ்தோத்திரத்தின்‌ இறுதியான ஸ்லோகத்தில்‌ “பக்த்யா சவ்ம்ய வர கிங்கரோ பஹிதாம்‌ அம்ருதபலாவளிம்‌” (பக்‌தியுடன்‌ மணவாள மாமுனிகளின்‌ தாஸனான அடியேனால்‌ ஸமர்ப்பிக்கப்பட்ட அம்ருதபலாவளி என்ற ஸ்தோத்ரத்தை) என்று அருளிச் செய்துள்ளார் –

————

ஸ்ரீ அம்ருத பலா வளி என்னும் ஸ்ரீ கடிகாசல ந்ருஸிம்ம ஸ்தோத்ரம்-

ஸ்ரீ வேங்கடேச சரணவ் சிரஸீ கரோமி ஸ்மிதாப்ஜ ஸூஹ்ருதவ் தவ்
ப்ருது தரம் அபி பவ ஜலதிம் பிப்தி தராம் யத் ப்ராக ப்ரமாணு–1-மங்கள ஸ்லோகத்துடன் உபக்ரமிக்கிறார்

யத் பராக பரமாணு:- எந்தத் திருவடிகளால்‌ ஒட்டிக்‌ கொண்டிருக்கிற ஒரு சிறு மண் துகள்‌ கூட, ப்ருதுதரம்‌ – மிகப்பெரிதான-. பவ ஜலதிம்‌ – பிறவிக்‌ கடலையும்‌, பிபதிதராம்‌ – அடியோடு குடிக்க (வற்றச்‌ செய்ய) வல்லதோ, தெள – அத்தகைய, ஸ்மிதாப்ஜ ஸுஹ்ருதெள – மலர்ந்த தாமரைகளோடு ஒத்த- ஸ்ரீவேங்கடேச சரணெள திருவேங்கடமுடையானுடைய திருவடிகளை, சிரஸி – (எனது) தலையில்‌, கரோமி வைத்துக்‌ கொள்ளுகிறேன்-

ம முனிகள் திரு உள்ள உகப்புக்காக அவர் கைங்கர்யம் செய்த திரு வேங்கடத்தானையே –
இவர் தான் மா முனிகள் திரு நாமம் கேட்டுக்கொண்டே திருக்கண் விழித்து அருளுகிறார் நித்யமாகவே –

எறும்பியப்பா தாம்‌ இயற்ற நினைத்த “அம்ருதபலாவளி” என்ற கடிகாசல நரஸிம்ஹ ஸ்தோத்ரம்‌ இடையூறேதுமின்றி இனிதே முடிவடைவதற்காகத்‌ தமக்கு இஷ்ட தெய்வமான திருவேங்கடமுடையானுக்கு மங்கள ஸ்லோகமாக முதல்‌ ஸ்லோகத்தை அமைக்கிறார்‌.
நீரைத்‌ தூர்ப்பதற்கு நீரைவிட அதிகமான அளவுடைய மண்‌ தேவைப்படுவது உலகவியல்பு. திருவடியிலுள்ள மிகச்சிறிய மண்துகள்‌ தனது மகிமையினால்‌ ஸம்ஸாரமென்னும்‌ பெருங்கடலையும்‌ தூர்த்து விடுஃன்றதென்பது மிக ஆச்சரியமாகும்‌.

—–

ஸ்ரீத கடிகாசல ஸ்ருங்கம் ஸ்ரீ தல கருணா தரங்கித அபாங்கம்
மனஸி மம உல்லஸ தங்கம் வஸதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்–2-

ஸ்ரிதகடிகாசலஸ்ருங்கம்‌ – திருக்‌ கடிகைமலையின்‌ சிகரத்தை அடைந்ததும்‌, சீதள கருணாதரங்கித – அபாங்கம்‌ குளிர்ந்த கருணை யலை யெறிகிற கடைக்‌ கண்ணோக்கத்தை யுடையதும்‌, வாஸஸாபிங்கம்‌ – வஸ்த்ரத்தினால்‌ பொன்னிறங்‌ கொண்டதும்‌, உல்லஸத்‌ அங்கம்‌ – மிகவும்‌ விளங்குந்‌ திருமேனியைப்‌ பெற்றதுமான, கிமபி மஹ: – ஒப்பற்ற தேஜஸ்ஸானது, மம மநஸி வஸதி – எனது மனதில்‌ உறைகின்றது.

திருக்கடிகை யெம்பெருமானாகிய ஒளி எனது மனதில்‌ உறைவதனால்‌ அஜ்ஞானமெனும்‌ இருள்‌ அகலப் பெற்றேன்‌. நன் ஞானமும்‌ பெற்றேன்‌. இனி அப்பெருமானை உள்ளபடி அறிந்து இந்த ஸ்தோத்ரத்தைச்‌ செய்து முடிக்க என்னால்‌ முடியுமென்று தமது ஆற்றலைக்‌ குறிப்பிட்டாராயிற்று இதனால்

—————-

வ்யத்யஸ்த சரண கமலாம் விநிஹித புஜ யுகல மித்ர ஜாநு யுகாம்
விலஸித ரதாங்க சங்காம் வ்யக்திம் உபாஸே விருத்தி ஜாதி மதீம்–3-

வ்யத்யஸ்தசரண கமலாம்‌ – -யோக நிலையில் அமர்ந்த திருக்கோலம்-(வீற்‌று இருந்த திருக்கோலத்தில்‌ இடது திருவடியை வலப் பக்கமாகவும்‌ வலது திருவடடியை இடப்பக்கமாகவும்‌) மாறுபட அமைத்த திருவடித் தாமரைகளை யுடையதும்‌, விநிஹீத புஜயுகள மித்ர ஜாநுயுகாம்‌ – வைக்கபட்ட இரண்டு திருக் கைகளுக்குத்‌ தோழர்களாக இரண்டு முழுந்தாள்களைக்‌ கொண்டதும்‌ (இரண்டு முழந்தாள்களின்‌ மேல்‌ சார வைக்கப்பட்ட இரண்டு திருக்கைகளைக்‌ கொண்டதும்‌)-திருக்கரங்கள் முழங்கால் பர்யந்தம் நீண்டு -, விலஸித ரதாங்க சங்காம்‌ – மிகவும்‌ விளங்கும்‌ சக்கர சங்குகளைப்‌ பெற்றதும்‌,-திருவாழி பாஞ்ச ஜன்ய ஆழ்வார்களுடன் விளங்கி -ஆழி யம் கை பிரான் அச்சோ ஒரு அழிகிய வா –விருத்த ஜாதிமதீம்‌ – ஒன்றோறு ஓன்று முரண்பட்ட “நரத்வம்‌ ஸிம்ஹத்வம்‌” என்னும்‌ இரண்டு ஜாதிகளை ஒருங்‌கே கொண்டதுமான, வ்யக்திம்‌ – வ்யக்தியை (தோன்றும்‌ ஓர்‌ உருவத்தை) உபாஸே -த்யானம் செய்கிறேன்-அழகியான தானே அரி உருவான தானே -அவனையே உபாஸிப்போம்

கடிகைத்தடங்குன்றின்‌ மிசையிருந்த அக்காரக்கனி யெனப்படும்‌ யோக நரஸிம்ஹ மூர்த்தியை நம்‌ கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த ஸ்லோக ரத்னம்

——————–

கலித தநு தநய பங்கம் கர கமலா ப்ரண வாரிஜ ரதாங்கம்
க்ருத கடிகாசல சங்கம் கிமபி மஹோ ஜயதி கேதந விஹங்கம் –4-

கலித தநு தநய பங்கம்‌ – தநுவின் தனயனா இரணியனைப் பிளந்ததும்‌, கர கமல ஆபரண – திருக்கைத்‌ தாமரைகளுக்கு ஆபரணமாகிய, வாரிஜரதாங்கம்‌ – -திரு சங்கு ஆழி ஆழ்வார்கள்-சங்கு சக்கரங்களை யேந்தியதும்‌, க்ருத கடிகாசல ஸங்கம்‌ – திருக் கடிகை மலையில்‌ பற்று வைத்துள்ளதும்‌, கேதந விஹங்கம்‌ – கொடியில்‌ கருடனைக்‌ கொண்டதுமான,-விநதா ஸூதனுக்கும் பல்லாண்டு பாடுகிறார் கிமபிமஹ: – ஒப்பற்ற தேஜஸ்ஸூ , ஜயதி – மேம்பட்‌டு விளங்குகிறது.-ஜய கோஷம் —கை வண்ணம் தாமரை -வடிவார் சோதி வலத்துறையும் ஆழியும் பல்லாண்டு-தேஜஸ் நிறைந்த திவ்ய தேசம்

கச்யப ப்ரஜாபதியின்‌ மனைவிகளில்‌ “தநு ” என்பவளுக்குப்‌ பிறந்த பிள்ளைகள்‌ தநுஜர்கள்‌ ( தானவர்கள்‌), “திதி” என்பவளுக்குப் பிறந்தவர்கள்‌ தைத்யர்கள்‌. இவர்கள்‌ இரு திறத்தாரும்‌ அசுரர்கள்‌. திதியின்‌ பிள்ளையான இரணியனை இங்கு தநுஜனாகக்‌ குறிப்பிட்டது அசுரத்துவம்‌ என்ற பொதுச்‌ தன்மையானது இரணியனுக்கும்‌ பொருந்துகையால்‌ ஆகும்‌. இங்ஙனம்‌ நூல்கள்‌, தைத்யர்களை தானவர்களாகவும்‌, தானவர்களை தைத்யர்களாகவும்‌ பல விடங்களில்‌. கூறப்பட்டுள்ளமை காணத் தக்கது

——————-

ஸர்வ ரஸ கந்த பரிதம் சங்க தமே கமபி ஸகல ஸாகாஸூ
அம்ருத பலம் அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி கடிகாத்ரவ் –5-

ஏகமபி – ஒன்றே யாயினும்‌, ஸர்வ ரஸ கந்த பரிதம்‌ – எல்லா வகையான சுவைகளாலும்‌ எல்லாவித நறு மணங்களாலும்‌ நிறையப் பெற்றது –ஸகல சாகாஸு ஸங்கதம்‌ – பல கிளைகளில்‌ தொடர்பு கொண்டதும்‌, அகில பும்ஸாம்‌ – ஆத்மாக்களனைவர்க்கும்‌, ஆஸ்வாத்யம்‌ – சுவைத்து உண்ணத் தக்கதுமாய்‌. சித்ரம்‌ – (இங்ஙனம்‌) விசித்திரமான, அம்ருத் பலம்‌ – அம்ருதம் போல்‌ தித்திக்கும்‌ பழம்‌ ஒன்‌று –கடிகாத்ரெள அஸ்தி – திருக்கடிகை மலையில்‌ உள்ளது.
இங்கு ஒரே பழம்‌ பலவகைச் சுவை நறு மணங்கள்‌ நிறையப் பெற்றதும்‌, பல கிளைகளில்‌ தொடர்பு கொண்டதும்‌, அனைவரும் சுவைத்துண்ண வுரியதுமாக இராதாகையால்‌ முரண்பாடு தோன்றும்‌. இதில்‌ அம்ருதம் போல்‌ தித்திக்கும்‌ பழமாக உருவகித்துக் கூறப்பட்ட கடிகை நரஸிம்ஹப் பெருமானாகிய திருமால்‌ ஒருவனே – சாந்தோக்யோபநிஷத்தில்‌ ஸர்வகந்த: ஸர்வரஸ: என்று எல்லா நறு மணங்களும்‌ எல்லா நற் சுவைகளும்‌ அமையப் பெற்றவனாகக்‌ குறிக்கப்‌ பட்டுள்ளமையினாலும்‌, வேதமாகிய மரத்தின்‌ கிளைகளாகிய ருக்‌ யஜுஸ்‌ ஸாம அதர்‌வணங்களென்னும்‌ எல்லாப் பிரிவுகளிலும்‌ பரம் பொருளாகக்‌ கூறப்படுவதனாலும் எல்லாரும்‌ தஞ்சம்‌ பற்றி அநுபவிக்கலாம்படி இருக்கையாலும்‌ முன்‌ தோன்றிய முரண்பாடு நீங்குதல்‌ காண்க. அதாவது உலகிலுள்ள எப்பழமும்‌ முற் கூறியபடி இராதாகிலும்‌ நரஸிம்ஹனாகிய பழம்‌ அப்படி யிருப்பதில்‌ தடை யொன்றுமில்லை என்றபடி.
இந்த ஸ்லோகத்தில்‌ அமுதம்‌ போல் இனிக்கும்‌ பழமென்று திருக் கடிகை யெம்பெருமான்‌ குறிக்கப்பட்டுள்ளான்‌. ஆழ்வார்கள்‌ இப் பெருமானை – அக்காரக்கனி என்று அழைத்துள்ளார்கள்‌. எறும்பியப்பா அம்‌ருதபலம்‌ என்று பணித்தருளுகிறார்‌. அக்காரக்கனி என்பதற்கு இரண்டு பொருள்கள்‌. 1. –ஸஹகாரக்‌ (ஒட்டு மாங்கனி, ஸஹகார மென்னும்‌ ஸம்ஸ்க்ருத பதம்‌ தமிழில்‌ அக்காரமென்‌று ஆகும்‌. ஸந்த்யா என்பது அந்தியென்று ஆனது போல்‌ இதைக் கொள்க. 2. அக்காரம்‌ – சர்க்கரை. இது தமிழ்ச் சொல்‌. சர்க்கரையே மரமாக முளைத்து அம்மரம்‌ முதன்‌ முதலாகப்‌ பழுத்த பழத்தை அக்காரக்கனி என்பர்‌ வ்யாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்‌ பிள்ளை. இவ் விரண்டு வகையிலும்‌, கடிகை யெம்பெருமான்‌ ஒட்டு மாங்கனி போன்றும்‌ சர்க்கரை மரக்கனி போன்றும்‌ மிகமிக இனியவனாகையால்‌ – அம்ருதம்‌ போல் தித்திக்கும்‌ பழம்‌ என்றும் அருளிச் செய்தது மிகவும்‌ பொருந்தும்‌.

ஸர்வ ரஸ கந்த பரிதம்-ஸர்வ கந்த ஸர்வ ரஸ  -குழந்தைகளுக்கு ஏற்ற தம்மை அமைத்து அனுபவிக்குமவன் அன்றோ-ஏகமபி –ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் ஏக மேவ அத்விதீயம்
சங்க தம் ஸகல ஸாகா ஸூ-ஸகல உபநிஷத்துக்கள் சாகைகளும் இவ்வாறே கோஷிக்குமே
அம்ருத பலம் -அக்கார கனி என்றவாறு –ஸ்வயம் ப்ரயோஜன பக்தர்களுக்கு இருக்கும் இருப்பு-கறந்த பால் நெய்யே- நெய்யின் இன் சுவையே -கடலினுள் அமுதமே -அமுதினில் பிறந்த இன் சுவையே – பேர் ஆயன்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியும் காலே ஸ்ரீ நரஸிம்ஹா -நர லோக மநோபிராமம் என்றாளே
அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவனையே முதலில் கூப்பிடுகிறார்கள்
அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி –நல்லை நெஞ்சே –நாம் தொழும் நம் பெருமான் அன்றோ இவன்

கறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில்

பிறந்தவின் சுவையே! சுவையது பயனே! பின்னைதோள் மணந்தபே ராயா!–8-1-7-

கறந்தபால்! என்பது தனிப்பட்ட விளி. கறந்தபோதே இயற்கையான ரஸத்தையுடைத்தான பால்போல் பரமபோக்யனே! என்றபடி.பாலின் ஸாரமான நெய்யே! நெய்யினுடைய இனி சுவைதானே வடிவெடுத்த தென்னலாம்படி. யுள்ளவனே!,கடலிடைத் தோன்றிய அமுதமே! அவ்வமுதத்தின் இனிமைதானே வடிவெடுத்ததென்னலாம்படியள்ளவனே! என்று இத்தனை சொல்லியம் த்ருப்தி பிறவாமையாலே பின்னைதோள் மணந்த பேராயா! என்று அவன் தன்னையே சொல்லித் தலைக்கட்டுகிறார்.

நப்பின்னைப் பிராட்டியும் நீயுமான சேர்த்திதானே ஸ்வயம் போக்யமன்றோ? இந்த போக்ய வமையிட்டுக் கூறவேணுமோ? என்றவாறு.நப்பின்னையை மணந்ததுபோல என்னையும் மணக்க ப்ராப்தியில்லையோ வுனக்கு என்ற கருத்துக் கொள்ளலாம்.

——————-

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக கோபி புண்ய க்ருது உபேய –6-

ஆரண்யக ஆப்த வாக்யை: – ஆ.ண்யகமென்கிற நம்பத் தக்க வேத புருஷனுடைய வாக்கியங்களால்‌, அவகம்ய: – உண்டென்று அறியப் படுவதும்‌, க்ராம்ய ஜந த்ருசாம்‌ (கிராம) பாமர மக்களின்‌ பார்வைகளுக்கு , அபதம்‌ – இலக்காகாததும்‌, புண்ய க்ருத்‌ உபேய: – புண்ணியம்‌ செய்தவர்களால்‌ அடையத் தக்கதுமான கோஃபி- ஒரு, பூருஷ ம்ருக: நர ம்ருகமானது (நரஸிம்ஹமானது). கடிகாசல அக்ரே – கடிகை மலையின்‌ உச்சியில்‌, ஸ்புரதி – பளபளவென்று விளங்குகிறது -இதிலிருந்து – கிராம மக்களால்‌ க்ராமத்தில்‌ காண முடியாத காட்டில் திரிகிற நம்பத் தக்க வேடர்‌ முதலியோர்களின்‌ பேச்சுக்களைக்‌ கொண்டு காட்டிலிருக்கிறதென்று அறிய வெளிய – புண்ணியம்‌ செய்தவர்களுக்குப்‌ பிடிபட்டு அடைய-தக்கதொரு ஆண்‌ சிங்கம்‌ கடிகை மலைச்‌ சிகரத்தில்‌ விளங்குகிறதென்று சாதாரணமானதோர் பொருளும்‌ அறிய இயலும்

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம் -வேடர்கள் க்ராம மக்களைப் பார்த்து சொன்னதாகவும்-பாமர மக்களுக்கு வேத புருஷன் காட்டிக் கொடுத்ததாகவும் கொள்ளலாம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக –ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாள் ஒளி விஞ்சி உள்ளாரே
கோபி புண்ய க்ருது உபேய —புண்யம் யாம் உடையோம் என்று ஆய்ச்சிகள் மகிழ்வார்கள் அன்றோ

———–

மஹதி கடிகாத்ரி விஷயே மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம்
தே தீப்யதே ஸ்திரோ அயம் திவ்யைர் முனிபி ப்ரவர்த்தித்தோ தீப –7-

மஹதி – பெரிய, கடிகாத்ரி விஷயே – கடிகை மலையாகிய இடத்தில்‌(அகலில்‌) மஹதா ஸ்நேஹேந – அதிகமான பக்தியுடன்‌ (நெய்யுடன்‌)… நிர்மல தசாயாம்‌ – மிகவும்‌ சுத்தமான ஸமயத்தில்‌ (அழுக்கற்ற திரியில்‌), திவ்யை: முநிபி: -மிகவுயர்ந்த ஸப்தருஷிகளால்‌, ப்ரவத்தித: – தோற்றுவிக்கப்‌ பட்டதாய்க்‌ (ஏற்றப்பட்டதாய்க்) கொண்டு, அயம்‌ தீப: – இந்த நரஸிம்ஹப்‌ பெருமானாகிய விளக்கு, ஸ்திர:தேதீப்யதே – நிலையாக ஜ்வலித்துக்‌ கொண்டிருக்கிறது.-சாதாரணவிளக்கு ஒரு மனிதனால்‌ அளவு பட்டதோர்‌ அகலில்‌ அளவான நெய்யிட்டுச் சில சாணளவுள்ள திரியில்‌ ஏற்றப்‌பட்டு நெய்யும்‌ திரியும்‌ மாண்டு போனால்‌ அணைந்து விடும்‌. அங்ஙனல்லாமல்‌, ஆற்றல்‌ மிக்க அத்திரி முதலிய முனிவர்களால்‌; கடிகை மலையாகில்‌ பெரிய அகலில்‌ மாளாத தமது பக்தியாகிய நெய்யை இட்டு, தமது நல்ல மனநிலையில்‌ அல்லது நல்ல நேரத்தில்‌ ஏற்றப்டட  நரஸிம்ஹப் பெருமானாகிய விளக்கு அணையாமல்‌ நிலை பெற்று எப்போதும்‌ ஜ்வலித்துக்‌ கொண்டிருக்கிறதென்க. ஸ்நேகம்‌ பக்தியும்‌ நெய்யும்‌, தசா – நேரமும்‌ திரியும்‌

மஹதி கடிகாத்ரி விஷயே –கடிகைத்தடம் குன்றமே அகலாக-மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம் —ஆர்வமே நெய்யாக -பக்தி -நீராய் அலைந்து உடலையும் உருக்குமே –
ஸூத்தமான மனஸே த்ரியாகவும்-திவ்யைர் முனிபி –ஆழ்வார்கள் தானே திவ்ய முனிகள்
தே தீப்யதே ஸ்திரோ அயம் -ஏற்றி வைத்த தீபத்தாலே-ப்ரவர்த்தித்தோ அயம் தீப–ஸ்ரீ அக்காரக்கனியே ஒளி விஞ்சி காட்சி தந்து அருளுகிறார்

———–

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத
ஆலோகதோ அகிலார்தன் அவகமயதி நித்யம் அச்யுதோ தீப –8-

கடிகாசலஸ்ய மூர்த்தி – கடிகை மலையின்‌ உச்சியில்‌, ஸம்பூத: – உண்டான, அச்யுத:தீப: – அச்யுதனென்று சொல்லப்பட்ட – அணையாத விளக்கானது, ஆலோகத: – தன்‌ பார்வையாலே – தன்‌ வெளிச்சத்தினாலே, ஜநாநாம்‌- மக்களுடைய, தம:– அஜ்ஞானத்தை-இருட்டை, முஷ்ணந்‌ – போக்குவதாய்க் கெண்டு, அகில அர்த்தாந்‌ -எல்லாப் புருஷார்த்தங்களையும்‌, நித்யம்‌ — போதும்‌, அவகமயதி – அனுபவிப்பிக்கிறது அறிவிக்கிறது.
விளக்கு தன் வெளிச்சத்தாலே புற விருளைப்‌ போக்கித்‌ தானிருக்குமிடத்திலுள்ள பொருள்களை நம்‌ கண்களுக்கு அறிவிக்கிறது. எம்பெருமானகிய விளக்கு தன்‌ கடாக்ஷத்தாலே தமோ குணம்‌ முதல்‌ அக விருளைப்‌ போக்கி (தன்னை தஞ்சமடையச்‌ செய்து) நமக்கு வேண்டிய ஸகல புருஷார்த்தங்களையும்‌ அனுபவிப்பிக்கிறது. தம: அக விருளும்‌ புறவிருளும்‌. அர்த்த:.புருஷார்த்தமும்‌ பொருளும்‌, ஸ்வயம்‌ ப்ரகாச ஸ்வரூபனான பகவான்‌ இவ்விரண்டு ஸ்லோகங்‌களிலும்‌ விளக்காக உருவகிக்கப்பட்டான்‌ என்கை. ‘நந்தா விளக்கே” என்றார்‌ கலியன்‌-

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் -அஞ்ஞானம் போக்கி அருளி-மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத -நித்தியமாக எழுந்து அருளிய-ஆலோகதோ -கடாக்ஷ மஹிமையாலே-அகிலார்தன் அவகமயதி –வேண்டிய புருஷார்த்தங்களையும் அருளி நித்யம் -எப்பொழுதுமாக நிலை நிற்கும் படி அச்யுதோ தீப –நந்தா விளக்கு

———

ரஸ்யம் ஸக்ருது பஸேவ்யம் லப்யம் அபத்ய ஸஹம் அஸூஹித மமோகம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் ஸூத்தம் கடிகாத்ரி மௌலிஜம் மூலம் –9-

கடிகாத்ரி மெளளிஜம்‌ – கடிக மலைச்‌ சிகரத்தில்‌ உண்டான, ஸூத்தம்‌ மூலம்‌ நரஸிம்ஹப்‌ பெருமானாகிய தூய்மையான மூலிகையானது. ரஸ்யம்‌ – சுவைக்கத் தக்கது. லப்யம்‌ – கிடைக்கத்‌ தக்கது. அபத்யஸஹம்‌ – பாபமாகிய அபத்யம்‌ எவ்வளவு செய்தாலும்‌ பொறுத்துக் கொள்வது, அஸுஹிதம்‌ – எவ்வளவு உட் கொண்டாலும்‌ போது மென்று தோன்றாதபடி மேன்‌ மேலும்‌ உட் கொள்ளத்‌ தக்கது. அமோகம்‌ – வ்யர்த்தமாகாதது. ( பயனை யளித்தே தீருமது). ஸக்ருத்‌ உப ஸேவ்யம்ஸத்‌ – ஒரு தடவை மட்டுமே உட்கொள்ளப் பட்டதாய்க்‌ கொண்டு . பவார்த்திம்‌ – பிறவி யென்னும்‌ நோயை, த்வரிதம்‌ ஸரதி- விரைவில்‌ போக்குகிறது சாதாரணமாய்‌ மூலிகை – சுவை யுடையதன்று, எளிதில்‌ கிடைக்காது, அபத்யம்‌ செய்தால்‌ வேலை செய்யாது. ஒரு தடவை யுட்கொண்டால்‌ போதும்‌ போதுமென்ற எண்ணத்தை யுண்டாக்குமது. சில சமயத்தில்‌ பயனளிக்காமலும்‌ போமது. பல நாட்கள்‌ உட் கொண்டால் தான்‌ நோயைத்‌ தீர்க்குமது. எம்பெருமானாகிற மூலிகை இதற்கு நேர்‌ முரணானதென்று இதனால்‌ காட்டப்‌ பட்டதாயிற்று.ஸுஹிதம்‌த்ருப்தம்‌, அஸூஹிம்‌ – அத்ருப்தம்‌ – த்ருப்திக்கு விஷயமாகாதது. மூலம்‌-மூலிகை, மருந்து. “மருந்தும்‌ பொருளும்‌ அமுதமும்‌ தானே” என்று பேயாழ்வார்‌ அமுதமென்று ரஸ்யமாகவும்‌, மருந்தென்று மூலிகையாகவும்‌ எம்பெருமானைக்‌ குறித்தருளினார்‌.

ஸூத்தம்-ஸூத்த ஸத்வ மயம்-கடிகாத்ரி மௌலிஜம் மூலம் ரஸ்யம் –மருத்துவனாய் நின்ற மா மணி -பேஷஜம் பிஜக் –விருந்தாகவும் போக்யமாகவும்-ஸக்ருது பஸேவ்யம் -ஒரே தடவை கிருபா கடாக்ஷம் பட்டாலே போதுமே-லப்யம் -எளிதாகவே லபிக்குமே
அபத்ய ஸஹம் -பாபங்களை பாற்றி உரு மாய்ந்து போக வைக்கும்
அஸூஹித மமோகம் –ஆராவமுதம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் –ஸம்ஸாரம் உடனே அறுக்குமே

————-

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் விச்சின்ன குசல சந்தானம்
ஸஞ்ஜீவனம் அபி கடிகாசைலஜ மூலம் கரோதி ஸாரூப்யம் –10-

கடிகாசைலஜ மூலம்‌ – கடிகைமலை யிலுண்டாகிய நரஸிம்மனென்னும்‌ மூலிகையானது, ஜகதாம்‌ – உலகிலுள்ளவர்களுக்கு, ஸ்திர சோகசல்யஹரணம்‌ நிலைநின்ற துன்பமாகிய – அம்பு தைத்த விரணத்தை ஆற்றுமதாய்‌, விச்சிந்நகுசல ஸந்தானம்‌ – முறிந்து போன க்ஷேமமாகிய எலும்‌பை ஒட்ட வைக்குமதாய்‌, ஸஞ்ஜீவநம்‌ நசிக்க விருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபமாகிய உயிரை நசியாமல்‌ பாதுகாக்குமதாய்‌ இருந்து, ஸாரூப்யம்‌ அபி கரோதி – (இறந்த பிறகு) பரம பதத்தில்‌ தன்னோடு ஒத்த திருமேனியை யுடைமையாகிய அழகிய உருவத்தையும்‌ உண்டாக்குகிறது.
சில மூலிகை அம்புபட்ட புண்ணை மட்டும்‌ மாற்றும்‌. இன்னும்‌ சில முறிந்து போன எலும்பைச்‌ சேர்த்து வைக்கும்‌. மற்றும்‌ சில போகுமுயிரை மீட்டுத் தரும்‌. வேறு சில அழகில்லாத உடலை அழகுடையதாக்கும்‌. அக்காரக் கனி யென்னும்‌ ஒரே மூலிகை இவை யெல்லாவற்றையும்‌ செய்யுமென்றார்‌ இதனால்‌. இவை முறையே “விசல்ய கரணீ ஸந்தாந கரணீ ஸஞ்ஜீவ கரணீ ஸாரூப்ய கரணீ’ எனப்படும்‌. இவ்விரண்டு ஸ்லோகங்களாலும்‌ எம்பெருமான்‌ மிக மிக வுயர்ந்த மூலிகையாக உருவகிக்கப் பட்டான்

விகல்ய கரணி -சாதாரண நோய்களுக்கு மருந்து
சந்தான கரணி -எலும்பு முறிவு போன்றவற்றுக்கு மருந்து
சஞ்ஜீவ கரணி -உயிர் போவதையும் மீட்டுக் கொடுக்கும் மருந்து
சாரூப்ய கரணி -கோர ரூபம் மாற்றி -அழகு ரூபம் கொடுக்கும் மருந்து
ஆயுர் வேதத்தில் லோகத்தில் நான்கு விதங்கள் உண்டு

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் -சோகம் ஆகிய அம்பால் துன்புறும் லோக மக்களின் அனிஷ்டங்களைப் போக்கி அருளும்
விச்சின்ன குசல சந்தானம் -எலும்பு முறிந்த மக்கள் -செல்வம் இழந்த மக்களைக் காத்து அளிக்கும்
ஸஞ்ஜீவனம் அபி -உயர் போகும் நிலையில் நுகர்ந்தால் -ஆத்ம ஸ்வரூபம் நசிந்தாலும் -மீட்டுக் கொடுக்கும்
கடிகாசைலஜ மூலம்
கரோதி ஸாரூப்யம் —ஸாம்யாபத்தி -சாரூப்யம் சாலோக்யம் சாமீப்யம் ஸாயுஜ்யம் அளிக்கும்

————————–

அதி பல பவாஹி தஷ்டான் அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான்
கடிகா சிகரி நரேந்த்ர கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண –11-

கடிகா சிகரி நரேந்த்ர: – கடிகை மலையிலுள்ள நரஸிம்ஹனென்னும்‌ விஷ வைத்தியன்‌, அதிபல பவ அஹி தஷ்டாந்‌ வலிமைமிக்க – ஸம்ஸாராமாகிய பாம்பினால்‌ கடிக்கப் பட்டவர்களாய்‌, அபிலாஷ விஷ அக்நி மூர்ச்சநா நஷ்டாந்‌ ஆசை யென்னும்‌ நெருப்புப்‌ போன்ற விஷம்‌ ஏறியதனால்‌ மாய்ந்தவர்‌களான மனிதர்களை, கடாக்ஷ மாத்ரேண – தனது கடாக்ஷ மாத்திரத்தினால் , அஸுபி : – பிராணன்களோடு, கடயதி – சேர்த்து விடுகிறான்‌ (பிழைக்கச்‌ செய்கிறான்‌).
உலகில்‌ பிரசித்தரான விஷ வைத்தியர்கள்‌ பாம்பு கடித்து விஷமேறி மாயவிருக்கும்‌ அவர்களை, கடித்த விடத்தில்‌ மருந்து தடவியும்‌ உள்ளுக்கும்‌ மருந்து கொடுத்தும் உயிர்ப்பிக்கிறார்கள்‌. எம்பெருமானோ எனில்‌ பிறவி யென்னும்‌ பாம்பு தீண்டி ஆசையாகிய விஷமேறி ஆத்ம நாசமடையுமவர்களை மருந்தொன்றுமின்றித்‌ தன்‌ திருக் கண்‌ நோக்கத்தினால்‌ மட்டும்‌, உயிர்களுக்கு ப்ராணனாகிய தன்னோடும்‌, தனக்கு ப்ராணன்களாகிய நித்ய ஸுரிகளோம்‌ சேர்த்து உஜ்ஜீவிப்பிக்கிறான்‌. லெளகிக விஷ வைத்தியனுக்கும்‌ எம்பெருமானுக்‌கும்‌ இதுவே வாசி. நரேந்த்ர: – விஷ வைத்தியன் –

அதி பல பவாஹி தஷ்டான் -மிக்க பலமுள்ள ஸம்ஸார சர்ப்பம் கடியில் ஆழ்ந்த நம்மை
அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான் -அதுக்கும் மேல் விஷயாந்தர அபிநிவேச அக்னியாலும் தவிக்கும் நம்மை காமம் அடிப்படை -க்ரோதம் லோபம் போல் மேல் மாறுமே
கடிகா சிகரி நரேந்த்ர -இங்குள்ள அக்காரக்கனி எம்பெருமான்-கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண -கடாக்ஷ லேசத்தாலேயே போக்கி அருளி நித்யர்களுடன் ஒரு கோவை யாக்கியும் அருளுகிறார் அன்றோ

நஷத்ர மாலிகை ஜீயர் நாயனார் ஆழ்வாரையும் இதே போல் ஸ்துதிக்கிறார் அன்றோ

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்-விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதாயும் இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை) என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

—————-

சோரம் ஸ்வதஸ் ச்யுதம் மாம் ஸ்வாமீ கடிகாத்ரிபோ விசின்வான
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத த்ருப்தம் அபத்நாத் தயா குணேந த்ருடம் –12-

ஸ்வாமீ கடிகாத்ரிப: – தலைவரான கடிகை மலை யரசன்‌, சோரம்‌ – தனது சொத்தான என்னை, எனது சொத்‌தென்று நினைத்துத்‌ திருடியவனாய்‌, த்ருப்தம்‌ கொழுப்புடையவனாய்‌, ஸ்வத:ச்யுதம்‌ தன்னிடமிருந்து நழுவிய, மாம்‌ – என்னை, விசிந்வாந: ஸந்‌ – ஒயாமல்‌ தேடிக்கொண்டே யிருந்து, குதோ5பி உபாயாத்‌ – ஏதோவொரு தந்திரத்தினால்‌, த்ருஷ்ட்வா – கண்‌டு கொண்டு, தயா குணேந – தயை யென்னும்‌ நற்பண்பாகிய கயிற்றால்‌, த்ருடம்‌ அபத்நாத்‌ – இறுக்கிக்‌ கட்டி விட்டான்‌.
அரசன்‌ தன்‌ சொத்தைத்‌ திருடிக்‌ கொண்டு ஓடியவனை ஏதோவொரு சூழ்ச்சி செய்து கண்டு பிடித்துக்‌ கயிற்றால்‌ கம்பத்தில் கட்டுவான்‌. எம்பெருமான்‌, ஸ்வதந்த்ரனாய்த்‌ தன்னை விட்டு அகன்ற கொழுத்த திருடனான ஜீவாத்மாவை, அஜ்ஞாத ஸுஹ்ருதமாகிய ஒரு தந்திரத்தைக்‌ கற்பித்து அவனைக் கடாக்ஷித்து, தனது தயையாகிய கயிற்றால்‌ தன்னோடு சேர்த்துக்‌ கட்டிக் கொண்‌டு விடுகிறான்‌. அவனைப்‌ பின்பு ஒரு காலும்‌ விடுவதில்லை.
அஜ்ஞாத ஸுஹ்ருதமாவது – பொல்லாத ஜீவாத்மா ஒருவன்‌ தனக்கும்‌ தெரியாமல்‌ செய்த நல்ல காரியம்‌. அதாவது பசுவைக் கொல்லுவதற்காக அதனைத்‌ துரத்திக் கொண்டு போய்‌, அப்பசு ஒரு கோயிலை வலம்‌ செய்‌து கொண்டு ஓடிப் போக, அதனைப்‌ பிடிக்கத் தானும்‌ அக் கோயிலை வலம்‌ செய்து கொண்டு செல்லுதல்‌ முதலியவை. எம்பெருமான்‌ இவனை இப்படியே விட்டு விட்டால்‌ மேலும்‌ இப்படியே கொடுந்தொழில்‌ புரிந்து கொண்டு தானும்‌ கெட்டு உலகையும்‌ அழித்து விடுவானென்று நினைத்துத்‌ தனது அபார கருணையினால்‌, இவன்‌ அக் கோயிலை வலம்‌ செய்ததை நல்ல காரியமாக – புண்ணியமாகக்‌ கணக்கிட்டு இவனைக்‌ கடாக்ஷித்து இவனுக்கு மோக்ஷம் அளித்துத்‌ தன்னோடு சேர்த்துக்‌ கொண்டு மறுபடியும்‌ அவனை இப்பூமண்டலத்தில் ஒரு நாளும்‌ திருப்பி யனுப்புவதில்லை என்னும்‌ விஷயம்‌ இந்த ஸ்லோகத்தில்‌ நூலாசிரியரால்‌ அருளிச் செய்யப்பட்டிருத்தல்‌ நோக்கத் தக்கது

சோரம் ஸ்வதஸ்ச்யுதம் மாம் த்ருபதம் -கள்வன் நானே அன்றோ -பிறர் நன் பொருளை அபகரித்தவன்-ஸ்வாமீ கடிகாத்ரி போ விசின்வான –உடையவன் அக்காரக்கனி -ஸர்வஞ்ஞன் அன்றோ
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத –அப்போது ஒரு சிந்தை செய்து -என்னுள் புகுந்தான் –
ஆச்சார்யர்களைக் காட்டிக்கொடுத்து திருத்திப் பணி கொண்டு அருளினானே
அபத்நாத் தயா குணேந த்ருடம் —தயை என்னும் குணத்தாலே நன்றாக அவன் இடம் விலகாமல் கட்டி வைத்து-கைங்கர்யமும் கொண்டு அருளினானே-

——————

விமல கபி ஸேவ்ய மாநா விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா
கா அபி கடிகாத்ரி சிகரே கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ –13-

விமல கபி ஸேவ்யமாநா – (கிழக்கில்‌) அழுக்கற்ற மனமுடைய ஆஞ்ஜநேயனென்னும்‌ குரங்காகிய – பளிச் சென்ற ஸூரியனாலே ஸேவிக்கப்‌ பெற்றதாய்‌ – (ஒளி வீசப் பெற்றதாய்‌) அதனாலே, விலஸித ஸந்நிஹித சங்க சக்ர அப்ஜா – மலர்ச்சி யடைந்த, தன்னிடமுள்ள சங்கு சக்கரங்களென்னும்‌ தாமரை மலர்களை யுடையதாய்‌, கருணா ரஸ பூர நிர்ப்பரா கருணை யென்னும்‌ நீர் வெள்ளம்‌ நிறையப்பெற்றதுமான, கா$பி ஸரஸீ – ஒரு குளம்‌, கடிகாத்ரி சிகரே – கடிகை மலைச்‌ சிகரத்தில்‌, அஸ்தி – இருக்கிறது.
குளத்தில்‌ நீர்‌ நிறைந்திருக்கும்‌ ஸூரிய க்‌ரணம்‌ பட்டு அதன்‌ கண்‌ உள்ள தாமரை மலரும்‌. எம்பெருமானிடம்‌ தயை நிறைந்திருக்கும் கிழக்கே சிறிய மலையில்‌ விளங்குகிற அனுமானாலே ஸேவிக்கப் பட்டு, எம்பெருமான்‌ கையில்‌ விளங்குகின்ற சங்கு சக்கரங்கள்‌ புத்துயிர்‌ பெற்று ஜ்வலிக்கும்‌ என்றபடி. இதில்‌ சிங்கப் பெருமான்‌ தாமரைத் தடாகமாக உருவகிக்கப்பட்டான்‌. கபி: – குரங்கும்‌, ஸூரியனும்

விமல கபி ஸேவ்ய மாநா —ஆச்சார்யர் போன்ற திருவடி யோக ரூப ஆஞ்சநேயர் -ஸேவை –
கிழக்கு புறம் இருந்து நரஸிம்ஹனை மங்களா ஸாஸனம் செய்து கொண்டே ஸேவை ஸாதித்து அருளுகிறார்
விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா –அதனாலேயே மலர்ந்த ஆழ்வாராதிகள் இவர் திருக்கரங்களில்
கா அபி கடிகாத்ரி சிகரே –அக்காரக்கனி எம்பெருமானே
கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ –கருணை வெள்ளம் தடாகம்-நீர்ப்பண்டமாக வருகிறதே
கபி -ஸூர்யன் என்று கொண்டு-கதிரவன் கிழக்கு திசையில் ஸேவிக்க வர தாமரைகள் மலரும் -சங்கு சக்கர ஆழ்வார்கள் விகசிதம் அடைந்தன என்றுமாம் –

————-

நிர் முக்த போக ஸூத்தான் நித்ய மஹீநாந் வஹந் நிஜா சக்தான்
பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ கோ அபி பரிமளீ ஸாகீ –14-

கடிகாத்ரி சிகரே – கடிகை மலையின்‌ சிகரத்தில்‌, (1) பரிமளீ – நறுமணம்‌ நிறைந்து, பத்ர ஸ்ரீ: – மங்கள கரையான ஸ்ரீமஹாலக்ஷமியை உடைய, ஸாகீ – வேத சாகைகளை ப்ரமாணமாகக்‌ கொண்ட, கோரூபி – ஒப்பற்ற எம்பெருமானாகிற, (2) பரிமளீ பரிமளம் மிக்கு, பத்ரஸ்ரீ: – சந்தன மரமாகிய கோபி ஸாகீ – ஒரு மரமானது (1) நிர்முக்த போக சுத்தாந்‌ – இஹுலோக பரலோக ஸூகங்களை விட்டதனால்‌ பரிசுத்தர்களாம்‌, நிஜஆஸக்தாந்‌ – தன்னிடம்‌ மிக்கபற்றுள்ளவர்களாய்‌, அஹீநாந்‌ – அவ்விரண்டும்‌ காரணமாகத்‌ தன்னால்‌ விடப்படாத பக்தர்களாகிய – (2) நிர்முக்த போக சுத்தாந்‌ தோலை யுரித்ததனால்‌ அழுக்கற்ற உடலைக்‌ . கொண்டவைகளாய்‌, நிஜ ஆஸக்தாந்‌ -தன்னோடு சேர்ந்தே யிருக்கிற (தன்னைச்‌ சுற்றிக்‌ கொண்டிருக்கிற) அஹி இநாந்‌ ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்களை, நித்யம்‌ வஹந பாதி – (1) எப்போதும்‌ பரம பதத்துக்கு அனுப்பிக்‌ கொண்டே விளங்குகிறது. (2) எப்பே தும்‌ சுமந்து கொண்டே விளங்குகிறது.
எம்பெருமானாகிய ஒரு மரம்‌ பக்தர்களாகிய ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்களை வஹித்துக் கொண்டே விளங்குகிறதென்று அந்வயித்துக்‌ கொள்க. எம்பெருமானுக்கும்‌ மரத்துக்கும்‌ பொதுவாக இடப்பட்ட விஸேஷணங்கள்‌ சிலேடை வகையில்‌ அமைந்துள்ளமை காண்க. போகம்‌ – அனுபவமும்‌ பாம்பின் உடலும்‌, அஹீநா: – தன்னால்‌ விடப் படாதவர்களும்‌ உயர்ந்த பாம்புகளும்‌, வஹந்‌ – அனுப்புபவனும்‌ சுமப்பதும்‌, பத்ரஸ்ரீ: – மங்களமான லக்ஷ்மியை உடையவனும்‌, சந்தன மரமும்‌, ஸாகீ – வேதத்தின்‌ பிரிவுகளாகிய ருக்‌ முதலியவைகளை ப்ரமாணமாகக்‌ கொண்டவனும்‌, கிளைகளையுடைய மரமும்‌. மற்றவை விளங்குமவையே –

நிர் முக்த போக ஸூத்தான் -போகி -அநந்தன் -போகீந்த்ர ஸாயி -அவன் -தோலை உரித்த பாம்புகள் -ஆச்சாரம் மிக்கு உள்ளன ப்ரபன்னர்கள் -ஸம்ஸார போகம் நீங்கினவர்கள் உள்ளார்கள்
நித்ய மஹீநாந் வஹந் -நிறைய பாம்பு இனங்கள் உள்ளன
நிஜா சக்தான் பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ –அக்காரக்கனி மேல் பற்றுதலை வைத்துள்ளார்கள் -இங்கு உள்ளார் அனைவருமே ப்ரபன்னர்கள்
அனைவரையும் வாழ வல்ல தாயார் -பத்ர ஸ்ரீ எழுந்து அருளி ஸேவை சாதிக்கிறாள்
கோ அபி பரிமலீ ஸாகீ –நறுமணம் மிக்க சந்தன மரங்களும் உள்ளன –அனைத்து கலைகளுமே மங்களா ஸாஸனம் பண்ணுமே -என்றவாறு –

—————-

கருண அம்ருத ரஸ வர்ஷைர் கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்
ஸம் சரணி தரணி தப்தம் ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் –15-

ஹே! கடிகாசல கடித க்ருஷ்ண மேக – வாராய்‌ கடிகை மலையில்‌ (வந்த) சேர்ந்த அல்லது ஸப்த ரிஷிகளால்‌ (கொண்டு) ஈர்க்கப்பட்ட கார் மேகமாகிய பெருமானே ! நிஜை: உனக்கு இயற்கையாக அமைந்த கருணா அம்ருத வர்ஷை: – கருணையாகிய அமுத மழையினால்‌ – ஸம்ஸரண தரணி தப்தம்‌ – ஸம்ஸாரமாகிய ஸூரியனால்‌ கொளுந்திச்‌ சாவியாகப் போன, இதம்‌ – இந்த, விநதஸஸ்யஜாலம்‌- (உனது) பக்தர்களாகிய பயிர்களின்‌ தொகுதியை, ஸஞ்ஜீவய – உயிர்ப்பிக்‌க வேண்டும்‌.
இதில்‌ எம்பெருமானை மேகமாவும்‌ அவனது கருணையை அமுத மழையாகவும்‌ பிறவித்‌ தொடர்ச்சியாகிய ஸம்ஸாரத்தை ஸூரியனாகவும்‌ பக்தர்களைப்‌ பயிராகவும்‌ உருவகித்துள்ளார்‌. ஸூரியன்‌ பயிர்களை வாட்ட, அப்போது அவை சாவியாகப்‌ போகாமல்‌ மேகம்‌ வந்து தோன்றி ஒரு பாட்டம் மழையைச்‌ சொரிந்து அப் பயிர்களை நனைத்து உயிர்ப்பிக்குமாப் போலே, எம்பெருமானே உன்னை வணங்கிய பக்தர்களாகிய அடியேன்‌ போன்றவர்கள்‌ ஸம்ஸாரத்தினால்‌ தபிக்கப் பெற்று ஸ்வரூப நாசமடையா நிற்க, நீ வந்து தோன்றி உனது இயற்கையான கருணை மழையைப்‌ பெய்வித்து உன்‌ பக்தர்களை உஜ்ஜீவிப்பித்தருள வேண்டும்‌ என்ற இதனால்‌ ப்ரார்த்தித்த படி

கருண அம்ருத ரஸ வர்ஷைர் –கருணா ரஸ பொய்கை கீழ் இங்கு மழை -கருணை பொங்கிய கண்ணினை வாழியே -இவர் மூலமே மா முனிகளுக்கு-கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்-அக்காரக்கனி கறுத்த மேகம்-ஸம் சரணி தரணி தப்தம் –தாபத்ரயங்களால் தபிக்கும் -ஸம்ஸார ஸூர்யன்-ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் —வாடி வதங்கி இருக்கும் பயிர் போல்வாரை இவற்றில் இருந்து காத்து அருளும் –

————

விமல தர பக்தி பூரே வ்யபகத பங்கே விகஸ்வராம்புருஹே
மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் –16-

ஹே! கடிகாத்ரி ராஜஹம்ஸ – கடிகை மலையிலுள்ள ராஜ ஹம்ஸமாகிய எம்பெருமானே ! பவாந்‌ – தேவரீர்‌, வ்யபகத பங்கே காமம்‌ குரோதம்‌ (ஆசை, கோபம்‌) முதலிய அழுக்காகிய சேறு நீங்கப் பெற்றதும்‌, விமலதர பக்திபூரே – மிகவும்‌ நிர்மலமான பக்தியாகிய நீர்‌ வெள்ளத்துக்கு இடமானதும்‌, விகஸ்வர அம்புருஹே – மலர்ந்த ஹ்ருதய கமலமாகிய தாமரை மலரை யுடையதுமாகிய, முநீநாம்‌ மானஸ ஸரஸி – முனிவர்களுடைய மனஸ்ஸாகிய மாநஸ ஸரஸ்ஸில்‌, ரமதே – விளையாடுகிறீர்‌.
ஹம்ஸம்‌, சேற்றுத்‌ தூய நீரை யுடையதாய் தாமரைகள்‌ மலரப் பெற்றதான மாநஸ ஸரஸ்ஸில்‌ விளையாடும்‌. எம்பெருமான்‌ காம க்ரோதாதிகள்‌ நீங்கப் பெற்றுத்‌ தூய்மையான பக்தியை யுடையதாம்‌ – ஹ்ருதய கமலம் மலரப் பெற்ற – முனிவர்களுடைய மனஸ்ஸில்‌ ஆசையோடு இருப்பான்‌ என்றதாயிற்று-மாநஸ ஸரஸ்: – (1) மனமாகிய ஸரஸ்ஸு (தடாகம்‌) (2) ஹிமய மலையிலுள்ள மாநஸ மென்கிற ஸரஸ்ஸூ , ராஜ ஹம்ஸம்‌- ஹம்ஸ ராஜம்‌ உயர்ந்த ஜாதி ஹம்ஸம்‌. அதன்‌ மூக்கும்‌ கால்களும்‌ சிவந்து உடல்‌ வெளுத்திருக்குமாம்

விமல தர பக்தி பூரே –நீராய் அலைந்து கரைய உருக்கும் பக்தி -உடல் எனக்கு உருகுமாலோ
வ்யபகத பங்கே -காமக்ரோதாதிகள் சேறு நீங்கப்பெற்ற-விகஸ்வராம்புருஹே -மலர்ந்த தாமரை-மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே –ஹ்ருதய ஸரோவரத்திலே கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் —அக்காரக் கனியே ஹம்ஸ ராஜா -தேவரீர் விளையாடுகிறீர்

—————–

ஸ்தம்போஹி விக்ந காரீ சந்த்ருஷ்டோ ஜகதி ஸர்வ கார்யேஷு
தாநவ விதாரணே தே தஸ்யைவ ஹரே கதம் நு ஸாசிவ்யம் –17

ஹரே ! – சிங்கப்பிரானே ! ஜகதி – உலகில்‌, ஸ்தம்ப: – கம்பமானது, ஸர்வ கார்யேஷு – எல்லாக்‌ காரியங்களிலும்‌, விக்நகாரீ ஹி – தடை செய்யுமதாக அல்லவா, ஸந்த்ருஷ்ட: காணப் பட்டுள்ளது. தே – உனக்கு, தாநவ விதாரணே – தானவனான ஹிரணியனைப்‌ பிளக்கும்‌ காரியத்தில்‌, தஸ்ய ஏவ – எல்லோருக்கும்‌ தடை செய்யும்‌ கம்பத்திற்கே, ஸாசிவ்யம்‌ – ஸஹாயமாக இருக்கும்‌ தன்மை, கதம்‌ நு ஜாதம்‌ – ௭ப்படித்தான்‌ உண்டாயிற்று.
எல்லோருக்கும்‌ தடை செய்யும்‌ கம்பம்‌ நரசிங்கப்பெருமாளுக்கு ஹிரண்யனைக்‌ கொல்வதற்காக முன்பே ஒளிந்துகொள்ளும்படி இடங்கொடுத்து உதவி செய்ததே அது எப்படி என்று கேட்டாராயிற்று. “ஸ்தம்ப்‌ – ப்ரதிகாசே ‘ என்ற தாதுவிலிருந்து உண்டான “ஸ்தம்பம்‌ என்ற சொல்‌, தடை செய்வது என்ற பொருளைத்‌ தெரிவிக்கும்

ஜகதி ஸர்வ கார்யேஷு ஸ்தம்போஹி விக்ந காரீ -உலகில் அனைத்து கார்யங்களையுமே தடைப்படுத்தும் -ஸ்தம்பம் -கம்பம் -என்று ப்ரஸித்தம்-சந்த்ருஷ்டோ–எங்கும் உளன் கண்ணன் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -கரந்து எங்கும் பரந்துளன்
-நன்றாகக் கண்டான் ப்ரஹ்லாதாழ்வான்
தாநவ விதாரணே தே -ஹிரண்யனை நிரசிக்கவே நீர் திரு அவதரித்தீர் –ஜய தபாவர பாலகன் அன்றோ –பக்தனுடைய அனைத்துமே என்னைச் சேர்ந்ததே என்று காட்டி அருளவே உனது மடியில் அவனைப் போட்டுக் கொண்டாய்-அந்தியம் போதில் அழிக்கவே அரி யுருவாய் காத்துக் கொண்டு இருந்தாய் போலும் அந்தத் தூணில்
தஸ்யைவ ஹரே கதம் நு ஸா சிவ்யம் —தடையாகி உள்ள தூணே உனக்கு சஹாயம் பண்ணிற்றே -எவ்வாறு –

—————-

தேவத்வமாக மாத்தே ஸித்தம் திர்யக்த்வம் அபி நரத்வேந
ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் –18-

கடிகா ஸ்தாவர – கடிகைமலையில் ஸ்தாவரமாய்‌ அசையாது உறையும்‌ பெருமானே ! தே – உனக்கு, தேவத்வம்‌ – தேவராக இருக்கும்‌ தன்மை, ஆகமாத்‌ ஸித்தம்‌ வேதத்திலிருந்து அறியப்பட்டுள்ள; நரத்வேந ஸஹ திர்யக்த்வம்‌ அபி மனிதத் தன்மையோடு விலங்கின்‌ (சிங்கத்தின்‌) தன்மையும்‌, அத்ய – இப்போது, (உனது உருவத்தில்‌) த்ருஷ்டம்‌ – காணப் பட்டிருககிறது. ஸர்வாத்மகஸ்ய – தேவர்‌ விலங்கு மனிதர்‌ தாவரம்‌ ஆகிய எல்லாமுமாக (எல்லாவற்றையும்‌ சரீரமாகக்‌ கொண்டு) இருக்கிற, தே உனக்கு, கிம்‌அயுக்தம்‌– எது தான்‌ பொருந்தாதது.
இவ் வண்டத்திலுள்ள தேவ திர்யகே மநுஷ்ய ஸ்தாவரங்களெல்லாவற்றிலும்‌ உட்புகுந்து நின்று அவை யெல்லாம்‌ தானே என்னும் படியுள்ள திவ்யாத்ம ஸ்வரூபத்தை யுடைமையாகிய ஆச்சரியமான தன்மையை யுடைய நர சிங்கப் பெருமானுக்குத்‌ தன்‌ திருமேனி யொன்றில்‌ மட்டும்‌ முற்கூறிய நான்கு விதமான தன்மைகளைக்‌ காட்டிக்‌ கொண்டிருப்பது ஆச்சரியமானதன்று, பொருத்தமுடையதே என்றாராயிற்று

தேவத்வமாக மாத்தே ஸித்தம் -தேவாதி தேவனாக இருப்பது ஸித்தம் -ஆகமம் வேதங்கள் காட்டி அருளும்-திர்யக்த்வம் அபி நரத்வேந -அப்படிப்பட்டவர் திர்யக்க்காகவும் நர ஸிம்ஹமாகவும் உள்ளீர்-ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர -ஸ்திரமாக இங்கேயே ஸேவை சாதித்து அருளுகிறீர்-ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் —-அனைத்துக்குள்ளும் இருந்து அனைத்துமாகவும் உள்ளீரே -மிகவும் பொருந்துமே

————

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ அஸி கதஞ்ச விஸ்வ சாஷீதி –19-

பகவந்‌ – பரமபூஜ்யனான எம்பெருமானே, த்வம்‌ – தேவரீர்‌, பஞ்சாஸ்ய: ஏவ ஹி– ஐந்து முகமுடையவராகவே யன்றோ, ப்ரதித: – பிரசித்தராயிருப்பது, (அப்படி யிருக்க) ஸஹஸ்ர ஆஸ்ய: (இதி ஏதத்‌) ஆயிரமுகமுடையவர்‌ என்னுமிது, கதம்‌ – எப்படி ? – மேலும்‌, கடிகாத்ரி பக்ஷபாதீ த்வம்‌ – கடிகைமலையின் கண்‌ பக்ஷபாதம்‌ (ஒரு தலையில்‌ மட்டும்‌ வைக்கும்‌ அன்பு) உடைய தேவரீர்‌, விஸ்வஸாக்ஷீ இதி ஏதத்‌ – எல்லோரிடமும்‌ ஸமமான அன்பு வைத்து ஸாக்ஷி சொல்லுமவர்‌ என்னுமிது, கதம்‌ – எப்படி பொருந்தும்
ஐம்முக முடையவன்‌ ஆயிரமுக முடையனாவதில்‌ முரண்பாடு தோன்றும்‌. பஞ்சாஸ்ய: என்பதற்கு விசாலமான முகமுடைய ஸிம்ஹம்‌ என்று பொருள்‌. ஸிம்ஹமாக அவதரித்த விஷ்ணு ஆயிரமுக முடையவராக இருப்பதில்‌ முரண்பாடு ஏதுமில்லையென்று பரிஹாரம் -கடிகாசலத்தில்‌ பக்ஷபாதமுடையவன்‌, அதற்கு மட்டுமன்றோ ஸாக்ஷியாக இருக்க வேண்டும்‌ ? எல்லோருக்கும்‌ ஸாக்ஷியாக இருப்பது எங்கனமென்று விரோதம்‌ தோன்றும்‌, விஸ்வஸாக்ஷி என்பதற்கு எல்லாவற்றையும்‌ நேராகப்‌ பார்ப்பவர்‌ என்று பொருள்‌. கடிகை மலையில்‌ மட்டும்‌ பற்றுடைய பெருமான்‌ எல்லாவற்றையும்‌ நேராகப்‌ பார்க்க முடியுமாகையால்‌ விரோத பரிஹாரம்‌. சிலேடையுள்‌ள சொற்களை யமைத்து வேடிக்கையாகக்‌ கேள்வி கேட்டபடி இது

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ -ஐந்து தலைகளைக் கொண்ட தேவரீர் -விசாலமான திருமுகம் கொண்ட நீர் –பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய -ஆயிரம் தலைகளாகக் கொண்டவராக வேதம் எவ்வாறு சொல்ல முடியும்-ஆயிரம் தலைகள் வேண்டுமோ உமக்கு
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ -இங்கு அக்காரக் கனியாக ஒரு தலைப் பக்ஷ பாதம் செய்து
அஸி கதம் ச விஸ்வ சாஷீதி –லோகங்களுக்கு பதியாக இருப்பது எவ்வாறு -ஜகன் நிர்வாஹம் பண்ணுகிறீர்-ஸங்கல்ப மாத்திரத்திலே அனைத்தும் செய்து அருளி இங்கு பிரியமாக உகந்து அருளி இருக்கிறீர் என்றவாறு –

————-

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாத் அத ஸ்திதம் பும்ஸ்த்வம்
மூர்த்தெள தாவத்ர ந்ரூ ஹரே முக்ய கோ வா அவகம்யதே அந்யேந–20-

ந்ருஹரே – நரசிங்கப் பெருமானே ! தவ அத்ர மூர்த்தெள – தேவரீருடைய இந்தத்‌ திருமேனியில்‌, அல்ப தேசாத்‌ – குறைந்த இடத்தில்‌ (தலையில்‌ மட்டும்‌) உள்ள, ஸிம்ஹத்வாத்‌ அபி – சிங்கத்தின்‌ தன்மையை விடவும்‌, அத:ஸ்திதம்‌ – தலையின்‌ கீழ்‌ (உடல்‌ முழுதும்‌) உள்ள, பும்ஸ்த்வம்‌ – புருஷனது தன்மை, பஹு தேசம்‌ – அதிகமான இடத்தில்‌ உள்ளது. (இப்படியிருக்க) அந்யேந – வேறொருவனால்‌, அத்‌ – இவ் விரண்டு தன்மைகளில்‌, கோ வா – எது தான்‌, முக்ய: – முக்கியமென்று அவகம்யதே -. – அறியப் படுகின்றது.
இக்கேள்விக்கு விடை:- தலையில்‌ மட்டும்‌ உள்ள ஸிம்ஹத்வத்தை விட உடல்‌ முழுதுமுள்ள புருஷத்வமே முக்கியமென்று தோன்றும்‌. ஆனால்‌ முக்யம்‌ என்பது முகத்திலுள்ளது என்று பொருள் பட்டு, முகத்திலுள்ளது ஸிம்ஹத்வமே யன்றிப்‌ புருஷத்வமன்று. அதனால்‌ ஸிம்ஹத்வமே முக்யம் என்று ஆராய்ந்தால்‌ தோன்றும்‌. மேலுள்ள ஸ்லோகத்தில்‌ இது தலைகீழாவது காணலாம் –

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாதத ஸ்திதம் பும்ஸ்த்வம் -ஸிம்ஹ தன்மை அல்பம் -மிக பெரிய பகுதி பும்ஸத்வம்-மூர்த்தவ் தாவத்ர -நேராகப் பார்க்கும் திவ்ய மங்கள விக்ரஹம் ந்ரூ ஹரே முக்ய கோவா அவகம்யதே அந்யேந -முக்கியம் எது என்று யாரால் அறிய முடியும்-பதிலும் இதிலேயே உள்ளதே-ஹிரண்யன் -பயந்தது ஸிம்ஹம் என்பதால் அன்றோ –

———–

பும் ஸூக்த பூர்வகைஸ்தை புருஷத்வம் முக்யமேவ தே விதிதம்
கதமியம் அமுக்யதா அஸ்மின் கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ -21-

கடிகாத்ரி மநுஜ ம்ருகராஜ – கடிகை மலை யிலுள்ள நரசிங்கப்‌ பெருமானே ! தை: -பிரசித்தமான, பும் ஸூக்த பூர்வகை: – புருஷ ஸூக்தி முதலிய வேத பாகங்களாலே, தே புருஷத்வம்‌ – தேவரீருடைய புருஷத்வமானது. முக்யமேவ – முக்கியமானதாகவே அறியப்பட்டுள்ளது. (இப்படியிருக்க) அஸ்மிந்‌ – இந்தப்‌ புருஷத்வத்தில்‌, இயம்‌ அமுக்யதா – இந்த அமுக்யத்வமானது, கதம்‌ – எப்‌படி, கடதே – பொருந்தும்‌ ?
முக்யத்வமானது – பிரதானமாயிருக்குந்‌ தன்மையென்றும்‌, முகத்திலுள்ளமை என்றும்‌ இரு வகைப்படும்‌. கீழ் ஸ்லோகத்தில்‌ முகத்திலுள்ளமை என்ற பொருளைக்‌ கொண்டு ஸிம்ஹத்வமே முகத்திலுள்ள படியால்‌ அதுவே முக்யமாயிருக்கத்‌ தகுமென்று குறிப்பாகக்‌ காட்டினார்‌. இந்த ஸ்லோகத்தில்‌ ப்ரதானத்வம்‌ என்ற பொருளை கைக் கொண்டு, புருஷ ஸூத்தாதிகளில்‌ கூறியபடியினால்‌ புருஷத்வமே முக்கியமென்று ஸ்பஷ்டமாகக்‌ காட்டினார்‌. ப்ரதானமான புருஷத்வமாவது – பக்த – முக்த – நித்யர்களிடமுள்ள புருஷத்வத்தைக்‌ காட்டிலும்‌ உயர்ந்த புருஷத்வம்‌ என்றபடி, புருஷோத்தமனிறே எம்பெருமான்‌. புருஷத்வத்திற்குப்‌ புருஷ ஸூக்தாதிகளில்‌ ப்ரதானத்வ ரூபமான முக்யத்வம்‌ கூறப்பட்ட போதிலும்‌ முகத்திலுள்ளமையாகிய முக்யத்வம்‌ ஸிம்ஹத்வத்திற்கே என்பதை இங்குக்‌ குறிப்பாகக்‌ காட்டியபடி. இவ்விரண்‌டு ஸ்லோகங்களிலும்‌ கவியின்‌ சமத்காராதிசயம்‌ தோன்றுவது காணலாம் –

பும் ஸூக்த பூர்வகைஸ்தை -புருஷ ஸூக்தாதிகள் புகழும்
புருஷத்வம் முக்யமேவ தே விதிதம் –பரத்வம் தானே முக்யம்-கதமியம் அமுக்யதா அஸ்மின் -புருஷத்வம் முக்கியம் அல்ல என்று எப்படி சொல்ல முடியும்
கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ – நீரே அருளிச் செய்ய வேண்டும்
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் -நம்முடைய எம்பெருமான் -ஸர்வமும் முக்கியம் அன்றோ –

—————

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலா ஸாத்த விக்ரியா மநுஜா
ஸ்ரவண அம்ருதேஷு கடிகாஸைல வந ப்ரிய வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –22-

கடிகாசைல வன ப்ரிய – கடிகை மலைக்‌ காட்டை விரும்பி யுறையும்‌ பெருமானே ! பாக்ய லக்ஷ்மீ விரஹ – அத்ருவடமென்னும்‌ செல்வமில்லாமையின்‌, விலாஸ ஆத்த விக்ரியா: மநுஜா: – திருவிளை யாடலால்‌ மன வேறுபாடு கொண்ட மனிதர்கள்‌, ஸ்ரவண அம்ருதேஷு – செவிக்கு அமுதம்‌ போல்‌ இனிய, தே வசஸ்ஸு – தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகளில்‌, ஸ்ரத்தாம்‌ – நம்பிக்‌கயை, ந விதததி – வைப்பதில்லை.
பாக்யமற்றவர்கள்‌ மேன்மேலும் ஸம்ஸாரத்திலேயே வருந்துவதற்கு உறுப்பாகக்‌ காமம்‌ குரோதம்‌ முதலிய மாறுபட்ட எண்ணங்களையே எண்ணி நசித்துப் போகிறார்கள்‌. நரசிம்மப்‌ பெருமாளுடைய சரம ஸ்லோககத்தில்‌ நம்பிக்கை வைத்து அதன்படி நடந்து மோக்ஷம்‌ பெறுகிறார்களில்லை என்று கவி தம்முடைய வருத்தத்தைத்‌ தெரிவிக்கிறார்‌. இதனால்‌ “ஸத்யம்‌ ப்ரவீமி மநுஜா: ஸ்வய மூர்த்வ பாஹு: | யோ மாம்‌ முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தநேதி, ஜீவந்‌ ஜபத்யநுதிநம மரணே ருணீவ | பாஷாணகாஷ்ட ஸத்ருயாய ததாமி முக்திம்‌” என்பது நரஸிம்ஹப் பெருமானருளிய சரம ஸ்லோகம்‌.
மனிதர்களே ! நான்‌ கையை உயர்த்தித் தூக்கி ஸத்யமாகச்‌ சொல்லுகிறேன்‌. (ஊக்கமாகக்‌ கேளுங்கள்‌) யாவனொருவன்‌ ஜீவித்திருக்கும்‌ போது, என்னை – முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தந (மோக்ஷ பூமியைத்‌ தருமவனே, நரஸிம்ஹனை, துஷ்ட ஜநங்களை யழிப்பவனே) என்று, தினந்தோறும்‌ ஜபம்‌ செய்கிறானோ அவன்‌ திறத்தில்‌ நான்‌ கடன்‌ பட்டவன்‌ போல்‌ இருந்து, அவன்‌ மரணமடையும் போது, கல்லைப்‌ போன்றும்‌ கட்டையைப்‌ போன்றும்‌ நினைவற்றுக்‌ கிடக்கிற அவனுக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்‌, என்பது இதன்‌ பொருள்‌. வசஸ்ஸு என்ற பஹு வசனத்தினால்‌ வராஹ சரம ஸ்லோகம்‌, ஸ்ரீராமசரம ஸ்லோகம்‌, ஸ்ரீக்ருஷ்ண சரம ஸ்லோகம்‌ ஆகியவற்றையும்‌ கொள்ளக்‌ குறையில்லை –

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலாஸ -விசுவாசம் இல்லாமல் ஸந்தான லஷ்மி ஸுபாக்யம் கிட்டாமல் இழந்தே போகிறார்களே
ஆத்த விக்ரியா மநுஜா -அவனைப் பற்றிய த்யானம் இல்லாமல் ப்ரயோஜனாந்தர பரர்களாக
ஸ்ரவண அம்ருதேஷு -செவிக்கு இனிய செஞ்சொல்லாக
கடிகாஸைல வந ப்ரிய -தேவரீரே
வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –தேவரீரே அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் நம்பிக்கை கொள்ளாமல்
சத்யம் ப்ரவீத் மனுஷா ஸ்வயம் மூர்த்த பாஹு -திருக்கைகளை மேலே தூக்கி சத்யம் பண்ணினீரே
தே யோ மாம் முகுந்த ஜனார்த்தன அபி -இவ்வாறு திரு நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு
புத்தி சுவாதீனம் இருக்கும் பொழுதே -அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -அனுதினம் யாவதாத்மா பாவி சொல்லிக் கொண்டு இருந்தால்
பாஷாண காஷ்டாம் ஸத்ருசாயா தாதாமி முக்திம் -பிராண பிரயாண சமயம் -கட்டை போல் கிடைக்கும் பொழுது முக்தி அளிக்கிறேன் என்று அருளிச் செய்தீரே-

———–

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த கம்ஸ ஹரணம் வா
அஹரஸ் த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம கிலாந்ய நர்த்த ஜாலாநி–23-

கடிகாசல லுப்த – கடிகை மலையில்‌ பற்றுள்ள பெருமானே ! கார்யம்‌ – உன்‌ காரியம்‌, ஹிரண்ய ஹரணம்‌ – ஹிரண்யனை அழிப்பது. அதவா – அல்லது, கம்ஸ ஹரணம்‌ கம்ஸனை மாய்ப்பது, இங்ஙனமிருக்க, த்வம்‌ – நீ, ஆஸ்ரிதாநாம்‌ – உன்‌னைத்‌ தஞ்ச மடைந்தவர்களுடைய, அநர்த்த ஜாலாநி அகிலாநி – துக்க ஸமூஹங்கள்‌ அனைத்தையும்‌, கிம்‌அஹர: – ஏன்‌ போக்கினாய்‌. ஹந்த – கஷ்டம்‌. ஹரணம்‌ – அழித்தல்‌.
உருவமுடைய அசுரரை மாய்ப்பது தகுதியுடையது. உருவற்ற துக்கத்தை மாய்ப்பது தகுதி யுடையதன்றே என்பது கேள்வி. உருவமுடையது உருவமற்றது என்பதில்‌ வாசியில்லை எம்பெருமானுக்கு, தன்னை யடைந்தவர்களுக்கு விரோதியான கம்ஸ ஹிரண்யாதிகளை அழித்தாப்‌ போல்‌, அவர்களுக்கு விரோதியான ஸம்ஸார துக்கத்தையும்‌ அழித்தானென்பது விடை. தஞ்சம்‌ பற்றிய பக்தர்களை மோஷமடைய வோட்டாமல்‌ தடை செய்கின்றதன்றோ அவர்கள்‌ அனுபவிக்கிற ஸம்ஸார துக்கம்‌.
இங்கு, லுப்தன்‌ – பேராசை கொண்டவன்‌, ஹிரண்யன்‌ – பொன்‌, கம்ஸம்‌ – வெண்கலம்‌, ஹரணம்‌ – திருடுதல்‌ என்று பொருள்‌ கொண்டால்‌. அடே பேராசை கொண்டவனே ! உன்‌ வேலை பொன்னைத்‌ திருடுதல்‌ அல்லது வெண்கலத்தைத்‌ திருடுதலாயிருக்க, ஐயோ துக்கத்தை ஏனப்பா திருடுனாய்‌ அதனால்‌ உனக்கு ஒரு லாபமுமில்லையே என்று வேடிக்கையாக மற்றொரு பொருளும்‌ தோன்றுதல்‌ காணலாம்

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு
தங்கம் வெங்கலம் -உயர்ந்த ரிஷிகளுக்கு மட்டும் அனுக்ரஹம் செய்வதற்கா மட்டும் அல்ல
காலே நரஸிம்ஹ -ருக்மிணித் தாயார் ஸந்தேஸம் – இவனே கண்ணன்-ஹரி -அரித்தல் –
கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு கம்ஸ ஹரணம் வா
அஹரஸ்த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம் அகிலாந் யநர்த்த ஜாலாநி -ஆஸ்ரிதர்களுடைய அனைத்து துக்க ஸமூஹங்களையும் போக்கி அருளி-கண்ணுக்கு தெரிந்தே அசுரர்களை போக்கிய மாத்திரம் அல்ல -ஆஸ்ரிதர் ஹிம்ஸை பண்ணும் பிராக்ருதியையும் போக்கி அருளினீர்-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் போன்ற அடியேன் போல்‌வாரையும் ரக்ஷித்து உனது திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவே அன்றோ இங்கு நித்ய வாஸம் உகந்து செய்து அருளுகிறீர் -என்றவாறு

——–

தோஷா மமாந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா
ததபி குணைஸ் த்வது பக ஸ்தாநே ஹீநாஸ்ரிதா ஜிதா தோஷா –24-

கடிகேந்த்ர – கடிகை மலை யரசனான, ஸ்வாமிந்‌ – ஸ்வாமியே, மம தோஷா: என்னுடைய குற்றங்கள்‌, அந்தரஹிதா – எல்லை யில்லாதவை. தாவகா: குணா: ச உன்னுடையவைகளான குணங்களும்‌ அந்த ரஹிதா: – எல்லை யில்லாதவை. தத்‌அபி ஆயினும்‌, த்வத்‌ உபகதை: – பெரியவனான உன்னை யடைந்த, குணை: – குணங்களால்‌, ஹீந ஆஸ்ரிதா: – தாழ்ந்தவனான ௭ன்னை யடைந்த, தோஷா: – குற்றங்கள்‌, ஜிதா:வெல்லப்பட்டன. ஸ்தாநே – இது யுக்தம்‌ தான்‌.
குணங்களும்‌ குற்றங்களும்‌ ௭ல்லை யற்றவை யென்றால்‌ ஒன்றை மற்றொன்று வெல்ல முடியாது. ஆயினும்‌ குணங்கள்‌ உன்னை அண்டை கொண்ட வலிமையால்‌ என்‌ தோஷங்களை வென்றன என்றபடி, அல்‌லது குணங்கள்‌ குற்றங்கள்‌ என்று சாதாரணமாக எடுத்துக்‌ கொண்டால்‌ குணங்களைக்‌ குற்றங்களே வலிமையுடையன. ஆகிலும்‌ குணங்கள்‌ உன்னைப்‌ பற்றி யிருக்கிற பெருமையினாலே வலிமை பெற்று, என்னைப்‌ பற்றி யிருக்கிற சிறுமையினாலே வலிவிழந்த குற்றங்களை வென்று விட்டன என்றும்‌ கொள்ளலாம்‌.

தோஷா மம அந்த ரஹித -எல்லை இல்லா தோஷங்கள் கொண்ட அடியேன்
அந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா –ஸகல குண பரிபூர்ண ஸம்பன்னன்

அடியேனின் ஸ்வாமி -சொத்து நான் என்று உணர்ந்து கொண்டேன்
ததபி -இப்படி இருந்தாலும்-குணைஸ் த்வது பகை ஸ்தாநே ஹீநா ஸ்ரிதா ஜிதா தோஷா —குணங்கள் போட்டி போட்டிக் கொண்டு உம்மை அணுகி ஆஸ்ரயம் பண்ண அனைத்து தோஷங்களும் தன்னடையே போயினவே

———–

பாதாம் புஜேந லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந
ஸ்ரயதாம் சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநாஸ் ஸகலா–25-

கடிகாசைலப – கடிகை மலைத் தலைவனே ! ப்ரஸ்ருமர மதுநா – பெருகுகின்ற தேனை யுடையதும்‌,  பரார்த்ய கந்தேந – சிறந்த நறுமணமுடையதும்‌ ஆகி, லஸதா விளங்குகிற, பாதஅம்புஜேந – திருவடித்‌ தாமரையினால்‌, ஸ்ரயதாம்‌ – உன்னைத்‌ தஞ்சமாகப்‌ பற்றியிருப்பவருடைய, ஸகலா: விபரீத வாஸநாஸ்– எல்லா வகையான – மாறுபட்ட விஷயப்‌ பற்றுகளையும்‌, சமயஸி– தணியச் செய்கிறாய்‌.
எம்பெருமான்‌, தேன்‌ வெள்ளமிடுவதும்‌ கம கம வென்று பரிமளிப்பதுமான தனது திருவடியை பக்தர்கள்‌ அனுபவிக்கும்படி செய்து அதில்‌ பற்றை யுண்டாக்கி, அப்பற்றுக்கு விரோதியாய்‌ இதற்கு முன்பிருந்த அவர்களுடைய துர் விஷயப்‌ பற்றாகிய துர்க் கந்தத்தைத்‌ தணிக்கிறான்‌ என்றபடி

பாதாம் புஜேந -திருவடித்தாமரைகளிலே-லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந -நறு மணம் மிக்க தேன் பிரவஹிக்க-ஸ்ரயதாம் -ஆஸ்ரிதர்களுடைய-சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநா ஸகலா –காம க்ரோதாதிகள் துர்கந்தங்களைப் போக்கி அருளி
தன்னிடமே வைத்து அனுபவிப்பிக்கிறான் அன்றோ

—————

ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா நிபுணே ந பதவிதா க்ரதிதா
ஸூதராம் த்வயைவ கடிகா நாயக ஸோபேத ஸூக்தி ஹாரலதா –26-

கடிகா நாயக – கடிகை மலையில்‌ எழுந்தருளியுள்ள நாயகனே ! (தலைவனே )!) ப்ரகுண உதயம்‌ – சிறந்த (1) மென்மை, செவிக்கினிமை முதலிய (2) குளிர்த்தி, பளபளப்பு முதலிய – குணங்களின்‌ தோற்றத்தைப்‌ பெற்று: ப்ரஸாதம்‌ – (1) எளிமையாகப்‌ பொருள்‌ புரிதலை (2) அழுக்கற்றுத்‌ தெளிவாயிருத்தலை. ப்ராப்தா – அடைந்ததும்‌, நிபுணேந ஸமர்த்தனான, பதவிதா – (1) வ்யாகரண சாஸ்த்ர மறிந்தவனாலே (2) கோக்குமிடமறிந்தவனாலே, க்ரதிதா – (1) சொல்லோடு சொல்‌ (2) முத்தோடு முத்து சேர்க்கப்பட்டதுமான, ஸக்தி ஹாரலதா – அடியேனுடைய (நல் வார்த்தைகள்‌ பொருந்திய) (1) ஸ்லோக வரிசையாகிய (2) முத்து மாலையானது. த்வயா ஏவ – உன்னாலேயே, சோபேத – ஒளி பெறுவதாகும்‌.
கவி தாம்‌ இயற்றும்‌ ஸ்லோக வரிசையை முத்து மாலையாக உருவகம்‌ செய்கிறார்‌ இதனில்‌. இரண்டிற்கும்‌ உரிய அடைமொழிகளை சிலேடை வகையில்‌ அமைத்திருக்கிறார்‌. பதவுரையில்‌ (1) என்று குறித்தவற்றை ஸ்லோகங்களுக்கும்‌, (2) என்று குறித்தவற்றை முத்து மாலைக்கும்‌ தொடர்பு படுத்துக. ஸ்லோகத்திற்கு குண மாவன – கடகட வென்றிராமல்‌ மெத்தென்றிருத்தலும்‌ இனிமையும்‌ சப்தாலங்காரமும்‌ அர்த்தாலங்காரமும்‌ பிறவும்‌ ஆம்‌. முத்துக்குக்‌ குளிர்த்தியும்‌ அணியுமவர்‌ கழுத்தில்‌ உறுத்தாமல்‌ ம்ருதுவாயிருத்தலும்‌ பிறவும்‌ ஆம்‌. ப்ரஸாதமாவது தெளிவு. அது *லோகத்திற்கு எளிதில்‌ பொருள்‌ புரிந்து கொள்ளும்படி அமைந்திருத்தலும்‌, முத்துக்கு அழுக்கின்மையும்‌ ஆம்‌. அவை யிரண்டும்‌ பதவிதாக்ரதிதமாயிருக்கும்‌. ஸ்லோகம்‌ வியாகரண சாஸ்த்ர மறிந்தவனால்‌ தொகுக்கப்பட்டிருக்கும்‌. பதம்‌ வ்யாகரண சாஸ்த்ரம்‌. இனி முத்து மாலை கோக்குமிடமறிந்தவனாலே கோக்கப்பட்டதாய இருக்கும்‌. அதாவது முத்துக்களில்‌ சில பெரிதாயும்‌ சில சிறிதாயும்‌ சில நடுத்தரமாயும்‌ இருக்கும்‌. மாலையிலும்‌ முதல்‌ முடிவு நடு முதலிய சில இடங்கள்‌ இருக்குமல்லவா ? அதில்‌ எத்தகைய முத்தை எந்த இடத்தில்‌ வைத்துக் கோத்தால்‌ மாலை சோபையைப்‌ பெறுமோ அந்த இட மறிந்தவனாலே கோக்கப்பட்டதாயிருக்கு மென்றபடி. பதம்‌ – காக்குமிடம்‌. ஸூக்தி: நல் வார்த்தைகள்‌ அமைந்த ஸ்லோகம்‌. ஹாரலதா – முத்து மாலை. ஹாரம்‌ – முத்து. முத்து மாலை மெல்லியதாக லதை (கொடி) போன்றிருத்தலால்‌ “ஹாரலச ” எனப்பட்டது. இங்கு நாயக சப்தம்‌ பாட்டுடைத்‌ தலைவனையும்‌, ஹாரத்தில்‌ பத்ய மணியையும்‌ குறிக்கும்‌. சிறந்த பாட்டுத் தலைவனாகிய நரசிங்கப்‌ பெருமாளாலே இவ் வம்ருத பலாவளி என்னும்‌ ஸ்தோத்ரம்‌ சோபிக்கிறது. உயர்ந்த – நடுவில்‌ பதித்த மணியினால்‌ முத்து மாலை சோபிக்கிறது-

கடிகா நாயக-ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா -மென்மை பொருந்திய பா மாலை -எளிமையாக பொருள் சொல்லும் ஸ்ரீ ஸூக்திகள்-குளிர்த்தி -பள பளத்து -ஸூத்தியையும் அளிக்கும்-மா முனிகள் ஆச்சார்யர் ஆணையால் செய்யப்பட்டதால் தாமே மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்-நிபுணேந பதவிதா க்ரதிதா-வியாகரண சாஸ்திரத்தில் நிபுணரான தன்னால் சேர்க்கப்பட்ட முத்து மாலை போல் கோக்க ஸாமர்த்யம் மிக்கவரால் செய்யப்பட்டதே ஸூதராம் த்வயைவ -உம்மைப் பற்றிய இது உம்மாலேயே
ஸோபேத ஸூக்தி ஹாரலதா —சோபனம் ஒளி மிக்கு விளங்குகிறதே -அப்படியே விளங்கட்டும் நாயகனாய் -நடு நாயக எம்பெருமானாரே கடிகா நாயகர் என்றுமாம் –
இவரையே திரு உள்ளத்தில் வைத்து குரு பரம்பரா ஹாரத்துக்கு மங்களா ஸாஸனம் என்றுமாம் –

—————

ஸரஸ ஸூமநோ அபி ராமோ ஸாது ச ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸா
ஸமுபைதி ஸூக்தி லதிகா சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் –27-

அம்ருதபல – அம்ருதம் போல்‌ இனிக்கும்‌, அழியாத பழமாகிய அக்காரக் கனிப்‌ பெருமானே ! தவ ஸங்காத்‌ – உன்னுடைய ஸம்பந்தத்தாலே, ஸூக்தி லதிகா அடியேனுடைய (1) ஸூக்தியாகிற (2) கொடியானது, ஸாது – நன்றாக, ஸம்ஸ்கார ஸம்ப்ருத உல்லாஸா – (1) அடிக்கடி கவித்வம்‌ செய்வதால்‌ உண்டான பழக்கத்தாலே நிறைந்த ப்ரகாசத்தை யுடையதாகவும்‌ (2) நீர் விடுதல்‌ எருஇடுதல்‌ முதலிய சீர்படுத்துதலாலே நிறைந்த விளக்கத்தை யுடையதாகவும்‌, ஸரஸஸுமந:அபிராமா ச – (1) ரஸிகர்களான வித்வான்‌௧ளுக்கு இன்ப மூட்டுவதாகவும்‌ (2) தேனோடு கூடிய புஷ்பங்களாலே, பார்ப்பவர்க்கு இன்ப மூட்டுவதாகவும்‌ இருந்து, ஸாபல்யம்‌ – (1) மோக்ஷமாகிய பலத்தோடு புருஷார்த்தத்தோடு கூடியிருத்தலையும் (2) இனிமையான பழத்தோடு கூடியிருத்தலையும்‌, ஸமுபைதி ஹி – அடைகின்றதல்லவா ?
இது தன்னில்‌ தம்முடைய ஸ்ரீஸூக்தியை ஒரு கொடியாக உருவகப் படுத்துகிறார்‌. ஸ்ரீஸூக்தியானது கவித்வம்‌ செய்து பழகிய ஒரு கவியால்‌ செய்யப்பட்டதாகில்‌ மிகவும்‌ விளக்கம்‌ பெற்று ரஸிகர்களான வித்வான்களுக்கு உகப்பை யூட்டி, இறுதியில்‌ எம்பெருமானுடைய ஸம்பந்தத்தாலே, கவித்வம்‌ செய்தவனுக்கும்‌, அதைப் படிப்பவர்க்கும்‌ மோக்ஷமாகிய பலத்தைப்‌ பெறுவிக்கும் கொடியானது நீர்‌ விட்டு எருவிட்டுத்‌ திருத்தம்‌ செய்யப்பட்டால்‌ தேன்‌ நிறைந்த மலர்களோடு கூடியிருந்து கடைசியில்‌ நல்ல பழங்களையும்‌ நமக்குத்‌ தருமென்றபடி. இங்கும்‌ (1) என்று குறிப்பிட்டவற்றை ஸ்ரீஸூக்திக்கும்‌ (2) என்று குறிப்பிட்டவற்றைக்‌ கொடிக்கும்‌ பொருத்திக் கொள்க. இதிலும்‌ சிலேடையுள்ளமை காணலாம்

ஸரஸ ஸூ மநோ அபி ராமோ ஸாது ச –மனங்களை ஈர்க்கும் வண்ணமாயும் -லலிதமான பதங்களைக் கொண்டும் -ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸூ –அர்த்த கௌரவமும் உல்லாஸமாக ஸ்துதி பண்ணவும்-ஸமுபைதி ஸூக்தி லதிகா -இந்த ஸ்லோகமும்
சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் —-அக்காரக் கனியே -உமது சம்பந்தத்தால் இந்த ஸ்ரீ ஸூக்தியும் அம்ருதமானதே-அனுசந்திப்போர்க்கு உமது திருவடி இணைகளையே கொடுக்கும் என்பது திண்ணம் என்றவாற-சம்ஸ்காரம் -கொடி போல் படரும் –நீர் உரம் போல்-சேர்த்து ஆகர்ஷகமாக இருக்கும் -அம்ருத கனிகளையும் கொடுக்கும் அன்றோ -பொதுவான அர்த்தமும் உண்டே

————–

ஸத் பக்ஷ பாத ஸூபகம் ஸந் மாநஸ ஸரஸிகாம்புஜா ஸக்தம்
புவநாஸ்ரயம் விஸூத்தம் புத்யே கடிகா வநெள ஸம் ஹம்ஸம் –28-

ஸத்பக்ஷபாத ஸுபகம்‌ – (1) நல்லோர்களிடம்‌ பக்ஷபாதம்‌ – ஒரு தலையில்‌ பற்று உள்ளமையினால்‌ மனத்தைக்‌ கவருமவனும்‌, (2) அழகிய சிறகடித்தலாலே மனத்தைக் கவருமதும்‌, ஸந்மாநஸ ஸரஸிகா அம்புஜ ஆஸக்தம்‌ (1) நல்ல மனமுடையவர்களென்னும்‌ தடாகத்தில்‌ உள்ள ஹ்ருதய கமலத்தில்‌ மிக்க பற்றுடையவனும்‌ (2) நல்ல மானஸ ஸரஸ்ஸில்‌ முளைத்த தாமரை மலர்களிடம்‌ மிக்க பற்றுடையதும்‌, புவந ஆஸ்ரயம்‌- (1) பூமியை ஆதாரமாக உடையவனும்‌. (2) நீரை ஆதாரமாகவுடையதும்‌, விசுத்தம்‌ – (1) மிகவும்‌ பரிசுத்தனானவனும்‌, (2) மிகவும்‌ வெண்மை நிறமுடையதுமான, கடிகாவந ஓகஸம்‌ – (1) கடிகை மலைக் காட்டை இருப்பிடமாகவுடையவனுமான எம்பெருமானை, ஹம்ஸம்‌ – (2) ஹம்ஸமாக, புத்யே – கருதுகிறேன்‌.
இதில்‌ கடிகை மலை நாயகனை ஹம்ஸமாக உருவகிக்கிறார்‌. விசேஷணங்களை முன்பு போல்‌ எம்பெருமானுக்கும்‌ ஹம்ஸத்துக்கும்‌ பொருந்தும்படி அந்வயித்துக்‌ கொள்க. இது தன்னிலும்‌ சிலேடை காணத்தக்கது. புவனம்‌ – பூமி ஜலம்

ஸத் பக்ஷ பாத ஸூபகம் -நீர் நிலையைக் கண்டதும் சிறகு அடித்து மகிழ-அத்தைக் கண்டவர் மனம் வழங்குவார்கள் அன்றோ –ஆஸ்ரிதர் பக்கல் பக்ஷ பாதி எம்பெருமான் -மனத்தைக் கொள்ளை கொள்வான் -ஸந் மாநஸ ஸரஸி ஜாம்பு ஜா ஸக்தம் –நீர் நிலையில் தாமரை மேல் அபி நிவேசத்துடன் –நீராய் அலைந்து கரைந்து உருக்கும் மானஸ தாமரையில் மகிழ்ந்து இருப்பான்-புவநாஸ்ரயம் வி ஸூத்தம் புத்யே –நீரையே ஆச்ரயமாகக் கொண்டு வெண்மையாக –ஸம்ஸார கந்தமே இல்லாமல் -அமலன் ஆதி பிரான் -இச்சா க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -கடிகா வநவ் ஸம் ஹம்ஸம் –இந்த ஹம்சத்தையே ப்ரத்யஷிக்கிறோமே இங்கு –

—————

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம்
கமலாலய யாந்தரங்கம் கலய கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம் –29-

ஸுமநஸ்‌ ரஸ க்ருத ஸங்கம்‌ – (1) ஞானிகளுடைய பக்தியாகிற ரஸத்தில்‌ பற்று வைத்தவனும்‌, (2) புஷ்பத்தின்‌ ரஸமான தேனில்‌ பற்று வைத்துள்ளதும்‌. ஸ்வரண விசேஷேண – (1) தனது பேச்சாகிய ஒலியினாலே (2) தனது ரீங்காரமாகிய ஒலியினாலே, தோஷித அநங்கம்‌ – (1) மகிழ்விக்கப்பட்ட – ப்ராக்‌ருத சரீரமற்ற முக்தர்களை யுடையவனும்‌, (2) மகிழ்விக்கப்பட்ட மந்மதனை யுடையதும்‌, கமலாலயா அந்த ரங்கம்‌ – தாமரையை இருப்பிடமாகவுடைய பிராட்டியிடம்‌ மனத்தைச்‌ செலுத்துமவனுமான. கமல ஆலய அந்த: அங்கம்‌ – தாமரை மலராகிய வீட்டினுள்ளே தனது உடலை வைத்துள்ளதுமான, கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம்‌ – கடிகை மலையில்‌ முளைத்த கற்பகத் தரு போன்று அனைத்தையும்‌ அனைவர்க்கும்‌ வழங்கும்‌ (1) பெருமானாகிய (2) வண்டை, கலயே – த்யானம்‌ செய்கிறேன்‌.
இதில்‌ கடிகைக் கற்பகமரமாக எம்பெருமானைக்‌ குறிப்பிட்டு அப்பெருமானையே வண்டாக உருவகித்துள்ளார்‌ அல்லது கடிகை மலையையே கற்பக மரமாகவும்‌ எம்பெருமானை அதில்‌ படிந்த வண்டாகவும்‌ உருவகிக்கிறாரென்றலும்‌ பொருந்தும்‌.
ஸுமநஸ: (1) புஷ்பங்கள்‌ (2) ஞாநிகள்‌. உலகிலுள்ள மக்களுக்குக்‌ காமத்தை யுண்டு பண்ணும்‌ மந்மதனுக்கு வண்டுகளின்‌ ரீங்காரவொலி உதவுகின்றமையால்‌, வண்டுகள்‌ மன்மதனுக்கு மகிழ்ச்சி யூட்டுவனவாம்‌. பரம பதத்தில்‌ எம்பெருமானுடைய பேச்சுக்கள்‌ முக்தி பெற்றவர்களுக்கு ஸந்தோஷத்தை விளைவிக்கும்‌. கதா மாம்‌ பகவாந்‌ ஸ்வகீயயா ஸ்நிக்த கம்பீர மதுரயா கிரா பரிசர்யாயாம்‌ ஆஜஞாபயிஷ்யதி (எப்போது அடியேனை)-பகவான்‌ தன்னுடையதான – அன்‌பு ததும்பி, கம்பீரமாய்‌ இனிமையான பேச்சாலே கைங்கர்யங்களில்‌ ஆணை யிடப்‌ போகிறார்‌ என்கிற ஸ்ரீவைகுண்ட கத்யம்‌ (சூர்‌ 4) காணத்தக்கது. அநங்க: (1) சிவனால் உடலழியப்‌ பெற்ற-மந்மதன்‌ (2) இந்த ஊன வுடல்‌ கழியப்பெற்ற முக்தன்‌. கமலாலயா – அந்தரங்கம்‌ என்று எம்பெருமான்‌ விஷயத்தில்‌ பிரிக்க. வண்டு விஷயத்தில்‌ கமலாலய – அந்த அங்கம்‌ என்று பிரிக்க –

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் –ஆஸ்ரித ஹ்ருதயத்தில் பக்தி வெள்ள ரசத்தில் ஆழ்ந்து
வண்டு மதுகரம் -ரீங்காரம் -ஹரி சப்தம் -ஆச்சார்ய புருஷர்கள் –
ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம் -இருப்பதையே கேட்டு -சரீரம் கழித்து
மன்மதன் அநங்கன் -உடல் அழிந்து -கரும்பு வில் மலர் பாணம்-அவனுக்கும் ஆனந்தம் கொடுக்கும்
கமலாலய யாந்தரங்கம் கலய –ஸ்ரீ அந்தரங்க பரிகரமாக தியானித்து அடைவோம்
வந்து தாமரையையே இருப்பிடமாக கொள்ளுமே-வண்டை த்யானம் பண்ணுவோம்
இவரே வண்டு -மா முனிகள் திருவடித் தாமரைகளையே பற்றி இருப்பாரே –
கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம்-நம்மை ஆக்கி தன்னையே தரும் கற்பகம்-

——————

துர்கதி துக்கித சித்தா துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸே வ்யாம்
பிராஜ்ஞா ப்ரயாந்தி நித்யாம் பூதிம் கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–30-

துர்கதி து:கித சித்தா: (1) ஸம்‌ஸாரமென்னும்‌ நரகத்தில்‌ வசிப்பதனால்‌ துன்புற்ற மனத்தையுடைய (2) வறுமையினால்‌ இன்புற்ற மனத்தை யுடைய, ப்ராஜ்ஞா: – (1) ஞானிகள்‌ (2) புத்தி சாலிகள்‌, துஷ்கர யோகாந்‌ – வருந்திச்‌ செய்ய வேண்டிய (1) கரும யோகம்‌ ஞான யோகம்‌ பக்தி யோகம்‌ முதலிய மோக்ஷோபாயங்களை, (2) உடலுழைப்பு வாணிபம்‌ முதலான பணம்‌ சம்பாதிக்கும்‌ ௨பாயங்களை, விமுச்ய – அறவே விட்டு விட்டு, கடிகாத்ரி பூபம்‌ – கடிகை மலை யரசனை, ஆலம்ப்ய – தஞ்சமாகப் பற்றி, ஸுகஸேவ்யம்‌ வருத்தமின்றி அனுபவித்தற்கு உறிய நித்யாம்‌ பூதிம்‌ – (1) நித்ய விபூதி யென்னும்‌ பரமபதத்தை (2) அழியாத செல்வத்தை. ப்ரயாந்தி– அடைகின்றனர்‌.
வறுமையினால்‌ வாடியவர்கள்‌ பணமீட்டும்‌ – வாணிபம்‌ முதலிய வருத்தந்தரும்‌ வழிகளை விட்டு கடிகைமலை யரஸை த்‌ தஞ்சமாகப் பற்றி நீண்ட நாள்‌ நீடித்திருக்கக் கூடிய செல்வத்தைப்‌ பெறுகிறார்கள்‌-இறப்பிறப்புத் தொடர்ச்சி யென்னும்‌ இவ் வுலக வாழ்க்கையினால்‌ வருந்தியவர்கள்‌ மோக்ஷத்திற்கு உரிய வருத்தம்‌ தருகின்ற கரும யோகாதிகளான உபாயங்களை விட்டு ஸித்தோபாயமான கடிகை மலை யரசனைச்‌ சரணமாகப் பற்றி, வருத்தமே யில்லாத ஸுகமே வடிவமான பரம பதத்தை அடைகிறார்கள்‌. இதனால்‌ கடிகை யெம்பெருமான்‌ ஐஸ்வர்யார்த்திகளாலும்‌, மோக்ஷார்த்திகளாலும்‌ சேவிக்கப் படுகிறான்‌ என்று, இரண்டு வகைப்பட்ட கருத்துக்களும்‌ ஒரே வகைச்‌ சொற்களால்‌ சிலேடை வகையில்‌ காட்‌டப்பட்டுள்ளமை காணத் தக்கது.
இங்கு ஸுக ஸேவ்யம்‌ என்று பாடமிருந்தால்‌ அது கடிகாத்ரி பூபம்‌ என்பதற்கு விசேஷணமாய்‌, கஷ்டமான உபாயங்களை விட்டு ஸுக ஸேவ்யனான எம்பெருமானைப்‌ பற்றி என்று பொருள்‌ தந்து சிறப்பைப்‌ பெறும்‌. மற்றை உபாயம்‌ கஷ்ட ஸாத்யம் எம்பெருமானாகிய உபாயம்‌ ஸுக ஸாத்யம்‌ என்‌றதன்றோ ஆசிரியருக்குக்‌ கருத்தாக இருக்க அடுப்பது. ப்ராஜ்ஞா:– (1) ஸுஃலபமான உபாயத்தை யறிந்த புத்திசாலிகள்‌ (2) ஞானிகள்

பிராஜ்ஞா துர்கதி துக்கித சித்தா –-நந்தா நரகம் -வெந்நரகம் -ஸம்ஸாரம் வெறுத்து இருக்கும் ஞானிகள்-ஐஸ்வர்யம் இழந்த துக்கம்-துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸேவ்யாம்–உபயாந்தரங்கள் துஷ்கரம் –அப்ராப்யம் -என்று விட்டு —ப்ரீதி காரித கைங்கர்யம் செய்ய வழியாக ப்ரயாந்தி நித்யாம் பூதிம் -நித்ய விபூதி அளிக்கும்
புத்தியாசாலியாக இருந்தவர் செல்லும் வழியான பிரபத்தி மூலம் பெறலாமே
கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–பூ பாலன் இங்கே நித்ய வாஸம் செய்ய -அவனை ஆஸ்ரயித்து –

—————–

கலயந்தி நைவ சந்தஸ் கா புருக்ஷத்வாரி காரணாத் கதநம்
கடிகா ஸிகரி முகுந்தம் கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா –31-

ஸந்த: – எம்பெருமானுடைய பெருவள்ளல்‌ தன்மையை அறிந்த புத்திசாலிகள்‌. கடிகா ஸிகரி முகுந்தம்‌ – கடிகைமலையில்‌ எழுந்தருளியுள்ள முகுந்தனென்கிற, ஸுலபம்‌ எளிதில்‌ கிடைக்கத் தக்க, அநவதிம்‌ – எடுக்க எடுக்கக் குறையாத, கமபி – ஒப்பற்ற, நிதிம்‌ நிதியை – புதையலை, லப்த்வா – அடைந்து. (அதன் பிறகு) காபுருஷ த்வாரி இழிந்தவனுடைய வீட்டு வாசலில்‌, காரணாத்‌ – செல்வம்‌ காரணமாக, கதனம்‌ – (அவனைப்‌ பற்றிக் )கவி சொல்லுவதை, நைவ கலயந்தி – எண்ணவே மாட்டார்கள்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ – துஷ்கர யோகமென்னும்‌ – வருந்திச்‌ செய்யும்‌ உபாயத்தைக்‌ கூறியபடியால்‌ அதில்‌ சேர்ந்த உபாயமான – நீசர் தம் வாசல்‌ பற்றித் துதி சொல்லுதலையும்‌ புத்திமான்கள்‌ விட்டுவிட்டார்கள்‌ – எம்பெருமானைப்‌ பற்றிய பிறகு என்று இது தன்னில்‌ கூறி யருளினார்‌. முகுந்த:- (முஞ்ச, குஞ்ச, ததா )-மோக்ஷத்தையும்‌ இவ் வுலக வாழ்வையும்‌ கொடுப்பவன்‌ என்று பொருள்படும் –

கலயந்தி நைவ சந்தஸ் -நல்ல புத்தி சாலிகள் -அவனே உபாயம் உபேயம் என்று அறிந்தவர்கள்-கா புருக்ஷத்வாரி காரணாத் கத நம் -செல்வத்துக்கு கா புருஷன் வாசலில் நிற்காதவர் -விரும்பாவதவர்-கடிகாதி ஸிகரி முகுந்தம் -இவனே முக்தி தருபவன் -மோக்ஷமும் இஹ லோக பலன்களையும் அளிப்பவன்-கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா –ஆராதனைக்கு எளியவன் –அள்ள அள்ள குறையா வைத்த மா நிதி இவனே –
இவனே நவ நிதி என்று மேல் ஸ்லோகம்

காரா காரே வரவரமுநே வர்த்தமானஸ் சரீரே |
தாபைரேஷத்ரிபிரபி சிரம் துஸ்தரைஸ் தப்யமாந: ||
இச்சந் போக்தும் ததபி விஷயானேவ லோக: க்ஷுதார்த்தோ |
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர்த்வாரி ப்ருத்வீ பதீநாம் ||-வர வர முனி சதகம் 68–மறந்தும் அஸேவ்ய ஸேவை செய்யேன் –மானிடம் கவி பாட வந்தேன் அல்லேன் –

ஹே வரவரமுநியே! உடல் என்னும் சிறையில் இருந்து கொண்டு தாண்ட முடியாத மூவகையான தாபங்களால் வெகு காலமாகத் தடுக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் இந்த ஜனம் விஷயங்களை அநுபவிப்பதிலே ஆசை கொண்டு பசியால் பீடிக்கப் பட்டவனாக உம்மை விட்டு அரசர்களுடைய வெளி வாயிற்படிகளில் புரளுகிறான்.

————————-

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் பத்ம மபி மஹா பத்மம்
குந்தம் அஸிதம் முகுந்தம் கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -32–

மகரம்‌ – மீனாக அவதரித்தவனும்‌, அத – மேலும்‌, கூர்ம ரூபம்‌ – ஆமை யுருவம்‌ கொண்டவனும்‌, வர சங்கம்‌ – உயர்ந்த சங்கை யுடையவனும்‌, பத்மம்‌ – தாமரை மலரைக்‌ கையிலேந்தியவனும்‌, மஹா பத்மம்‌ – பூஜிக்கத் தக்க ஸ்ரீமஹா லஷ்மியை (மனைவியாக) உடையவனும்‌, குந்தம்‌ – பாபத்தைப்‌ போக்குமவனும்‌, அஸிதம்‌ – நீல வர்ணமுடையவனும்‌, முகுந்தம்‌ – மோக்ஷ பூமியைத் தருமவனுமாகிய, கடிகாத்ரி நவநிதிம்‌ – கடிகாத்ரி எம்பெருமானென்னும்‌ – (மகரமும்‌ கூர்மமும்‌ உயர்ந்த சங்கமும்‌ பத்மமும்‌ மஹா பத்மமும்‌ குந்தமும்‌ அஸிதமும்‌ (நீலமும்‌) முகுந்தமும்‌ கர்வமுமாகிய) புதிய – அபூர்வமான நிதியை, கோ வா – எவன் தான்‌, ந பஜேத்‌ – அடையமாட்‌டான்‌.
இந்த ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை ஒன்பது வகையான நிதியாக அருளிச் செய்கிறார்‌. மஹா பத்மம்‌, சங்கம்‌, மகரம்‌, கச்சபம்‌, முகுந்கம்‌. குந்தம்‌, நீலம்‌, கர்வம்‌ என்று நிதிகள்‌ ஒன்பது. இவற்றில்‌ ஒன்று மற்றொன்றாக இராது. இவை யெல்லாமாகவும்‌ எம்பெருமானிருக்கிறானென்று அவனை நவநிதி (புதிய – எங்கும்‌ காணாத நிதி) என்கிறார்‌. ஒன்பது வகைப்பட்ட நிதியால்‌ கிடைக்கும்‌ பயனெல்லாம்‌ எம்பெருமானொருவனால்‌ கிடைக்குமென்றபடி. இந்த இரண்டு ஸ்லோகங்களிலும்‌ கடிகை மலை யரசனை நிதியாகக்‌ குறிப்பிடுகின்றமை காணத்தக்கது. இந்த ஸ்லோகத்தில்‌ எட்டு வகை நிதிகளையே குறித்துள்ளார்‌ அபி என்றதனால்‌, கர்வம்‌ என்ற நிதியையும்‌ சேர்த்துக்கொள்க. எம்பெருமான்‌ பக்ஷத்தில்‌ கர்வமென்பது வாமனனுக்கு வாசகமாகும் –

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் -மீன் =மத்ஸ்ய மேல் கூர்மமாகவும் -உயர்ந்த சங்கு ஆழ்வானைக் கொண்டவனும்-பத்ம மபி மஹா பத்மம் -தாமரை மலரைக் கொண்டவனும்
திருவையும் திரு மார்பில் கொண்டவனும்
குந்தம் -பாபம் போக்கும் -பரசுராமன்-அஸிதம் -நீல மேக ஸ்யாமளன்
முகுந்தம் -மோக்ஷம் அளிக்கும் -ஸாஷாத் ஸ்ரீ மன் நாராயணன்
கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -புதியதாக அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமும்-மஹா பத்ம பத்ம சங்க மகர சத்கப முகுந்த குந்த நீளா கர்வ –நவ நதிகள் புராணங்கள் சொல்லும்=ஒன்றுடன் வேறே நிதியைச் சேர்க்க முடியாது
இந்த தசாவதாரங்களை சேர்த்தாலும் அக்காரக்கனிக்கு ஒப்பு ஆகாதே இவனே சீரிய நிதி என்றவாறு –

———-

காஞ்சன மயே ஸ்புரந்தம் கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே
கிருஷ்ண மணி மர்க ரஹிதம் கேவா ந விதந்தி க்ருத்ஸ்நதஸ் ஸ்லாக்யம் –33-

கடிகா மஹீப்ருத: – கடிகை யென்னும்‌ மலையினுடைய, காஞ்சந மயே பொன் மயமான, ஸிகரே – கொடு முடியில்‌, ஸ்புரந்தம்‌ – விளங்குகின்றதும்‌, அர்க்க ரஹிதம்‌– விலை மதிப்பற்றதுமான, ஞ்சந – ஒரு க்ருஷ்ணமணிம்‌ – கரு மணியை, க்ருத்ஸ்நத: எல்லா மணிகளைக்‌ காட்டிலும்‌, ஸ்லாக்யம்‌ – உயர்ந்ததாக, கே வா – அறிவு படைத்த யார் தான்‌, ந விதந்தி – அறிய மாட்டார்கள்‌.
இதில்‌ எம்பெருமானை நீல மணியாக வருணிக்கிறார்‌. தங்கத்தில்‌ அழுத்திய நீல மணி மிகவும்‌ சோபிக்கும்‌. அது போல தங்க மயமான கடிகைக் கொடு முடியில்‌ எழுந்தருளியுள்ள நீல மணி வண்ணனான எம்பெருமானும்‌ சோபிக்கிறான்‌. க்ருத்ஸ்நத: என்பதற்கு ஜாதியாலும்‌ ப்ரகாசத்தாலும்‌ பொன்னோடு சேர்ந்திருப்பதனாலும்‌ – என்றும்‌ பொருள்‌ கொள்ளல்‌ தகும்

காஞ்சன மயே -பொன் வண்ணமாக-ஸ்புரந்தம் -விளங்கும் கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே -கனக கிரியில் காள மேகம்-கிருஷ்ண மணி மர்க ரஹிதம் -நீல மேக ஸ்யாமள ரத்ன மணி-கேவா ந விதந்தி க்ருத்ஸ் நதஸ் ஸ்லாக்யம் –உயர்ந்த ஒப்பற்ற இந்த செல்வத்தை அறிவாளிகள் யார் தான் அறிய மாட்டார்கள்
கீழ் நவ நிதி -இங்கு ஒப்பார் மிக்கார் இலையாய நீல மணி

சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியனவே நவநிதிகள் ஆகும்.-குபேர சம்பத்துக்களாக அவனருகில் இந்த நவநிதிகளும் திகழ்வதாகச் சொல்கின்றன புராணங்கள்-அரிசி, கோதுமை துவரை, பயறு, கொள்ளு, உளுந்து, எள், காராமணி, கடலை என்பவை நவ தானியங்கள் எனப்படும்.-கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சரயூ, குமாரி, பயோஷ்னி என்பவை நவ நதிகள் எனப்படும்.-சூரியன் சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு கேது என்னும் நவக்கிரகங்களும் முறையே சிவன் உமை முருகன், திருமால், பிரம்மா, குரு, இந்திரன், எமன், பத்திரகாளி சித்திரகுப்தன் ஆகியோரே நவக்கிரகங்களின் நவ சக்தியாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.-கோமேதகம், நீலம், பவளம், முத்து, புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், வைடூரியும் என்பவை நவ மணிகள் எனப்படும்.

—————-

ஸம் ஸரண ஸரணி பாந்தா தாப த்ரய தரணி கிரண சந்தப்தா
ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீதளச்சாயம் –34-

ஸம் ஸரண ஸரணி பாந்தா:- ஸம்ஸாரமாகிய வழியில்‌ எப்போதும்‌ திரியும்‌ வழிப் போக்கர்களாய்‌, தாப த்ரய தரணி கிரண ஸந்தப்தா: – தாபத்ரய மென்கிற ஸூர்ய கிரணங்களினால்‌ மிகவும்‌ தபிக்கப்பெற்ற மனிதர்கள்‌, கடிகாத்ரெள – கடிகை மலையில்‌ (உள்ள), ஸீதளச்சாயம்‌ – குளிர்ந்த நிழலை யுடைய, ஹரி சந்தனம்‌ – ஹரி சந்தன மென்கிற தேவ லோக வ்ருக்ஷத்தை (எம்பெருமானை) ஏத்ய – அடைந்து, ஆஸ்வஸிதா:பவந்தி இளைப்பாறுகின்றனர்‌.
தாப த்ரயம்‌- ஆத்யாத்மிகம்‌ ஆதிபெளதிகம ஆதிதைவிகம்‌ என்ற மூன்று தாபங்கள்‌. மன வருத்தமும்‌ உடல்‌ நோயும்‌ ஆத்யாத்மிகம் . தேள்‌ பாம்பு புலி சிங்கம்‌ மனிதன்‌ ஆகியவற்றால்‌ உண்டாகும்‌ கஷ்டம்‌ ஆதி பெளதிகம்‌. மழை வெயில்‌ காற்று முதலியவற்றால்‌ பிறக்கும்‌ வருத்தம்‌ ஆதிதைவிகம்‌. இவற்றை ஸம்ஸாரமாகிற வழியில்‌ செல்லும்‌ வழிப் போக்கர்களுக்குத்‌ தாபமாகச்‌ சொன்னார்‌. ஸூரிய வெப்பத்தினால்‌ துக்கமடைந்தவன்‌, நிழல்‌ செய்யும்‌ மரத்தை அணுகித்‌ தாபந்தீரப்‌ பெறுவது போல்‌, இம்மூவகைத்‌ தாபங்களினால்‌ வருந்துமவன்‌ “வாஸுதேவ தரு” என்று ப்ரஸித்தமான எம்பெருமானை யடைந்து தாபந்தீரப்பெற்று மகிழ்கிறான்‌ என்கிறார்

ஸம் ஸரண ஸரணி பாந்தா –ஸம்ஸார சாகரம் பாலை வனம் -கொடு வெந்நரகம்
தாப த்ரய தரணி கிரண சந்தப்தா –தாபத்ரயங்களால் -ஆத்யாத்மிகம் -ஆதி பவ்திகம் -ஆதி தெய்விகம் -இவற்றால் நன்றாக தவிக்கும் நமக்கு-ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீத லச்சாயம் –ஆஸ்வாஸம்-குளிர்ந்த சாயை -இங்கு தானே —ஹரி சந்தன வ்ருஷம் போல் கடிகாத்ரி அக்காரக்கனி எம்பெருமான்

—————-

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் சகடி காத்ரவ்
ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம்-35-

முக்தம்‌ – இயற்கையாகவே ஸம்ஸாரத்த்லிருந்து விடுபட்டதும்‌, நிஜ ஜந பத்தம்‌ தன்னுடைய பக்த ஜனங்களுக்குக்‌ கட்டுப்பட்டதும்‌, ஜகதாம்‌ – உலகங்களுக்கு, மூலம்‌ வேரானதும்‌ (காரணமானதும்‌) பலம்‌ ச – பழமானதும்‌ – பயனான புருஷார்த்தமானதும்‌, ஆகண்டம்‌ மநுஜம்‌ – காலிலிருந்து கழுத்த வரையிலும்‌ மனிதவுருப்‌ பெற்றதும்‌, ஆநநே ஸிம்ஹம்‌ – முகத்தில்‌ சிங்கமுமாகிய, மஹத்‌ அத்புதம்‌ – பெரிய ஆச்சரியமானதொரு பொருளை, கடிகாத்ரெள – கடிகைமலையில்‌, ஆகலயத– (சென்று) கைப் பற்றுங்கள்‌ அல்லது தியானியுங்கள்‌.
உலகில்‌ ஒரே சமயத்தில்‌ ஒரே வஸ்து, விடுபட்டதும்‌ கட்டுப்பட்டதுமாக இராது. ஒன்றே வேராகவும்‌ பழமாகவும்‌ இராது. ஒரே பொருள்‌ மனிதனாகவும்‌ சிங்கமாகவும்‌ இராது. அப்படி இங்கு அமைந்துள்ளதனால்‌ எம்பெருமானை மஹத்‌ அத்புதம்‌ என்றார்‌.

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் –வேர் பழம் முக்தன் பத்தன்
கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
மூலம் காரணமாகவும் -அக்காரக்கனி யாகவும் உள்ளாயே
சகடி காத்ரவ் ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம் -நர ஸிம்ஹ ரூபம்
அகடி கடநா சமர்த்தன் வழியாகவும் ப்ராப்யமாகவும் உள்ளாயே

——————–

பஸ்யந்தி நயந ஹரிணா ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்தகம் யாவத்
பரிசர சரைஸ்து தாவத் பாதக பதகை பலாயிதம் க்வாபி –36-

நயன ஹரிணா: – (அடியேனுடைய ) கண்களென்னும்‌ மான்கள்‌, கடிகாத்ரி லுப்தகம்‌ – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிய வேடனை, யாவத்‌ – எது வரையிலும்‌, ஸ்பஷ்டம்‌ – தெளிவாக, பஸ்யந்தி – பார்க்கின்‌றவோ, தாவத்‌ – அதுவரையிலும்‌, பரிஸர சரை: (அடியேனுடைய) பக்கத்தில்‌ திரிந்து . கொண்டிருந்த, பாகத பதகைஸ்து – பாவங்களாகிய பறவைகளாலோ எனின்‌, க்வாபி -எங்கேயோ, பலாயிதம்‌ – ஒடிப் போதல்‌ ஆயிற்று. மஹத்‌ அத்புதம்‌ – (இது) பெரிய ஆச்சர்யம்‌.
முன்‌ ஸ்லோகத்திலிருந்து மஹத்‌ அத்புதம்‌ என்ற சொற்களை வருவித்துக்‌ கொள்க. எம்பெருமானை ஸேவித்தேன்‌, பாவங்கள்‌ பறந்தோடின – என்பதனை ஒரு சமத்காரமாகக்‌ கூறுகிறார்‌. வேடனை மான்கள்‌ பார்‌த்துக்‌ கொண்டிருந்தனவாம்‌. பறவைகள்‌ ஒடினவாம்‌. பார்த்த மான்கள்‌ ஓடவில்லை, பாராதவைகள்‌ ஓடின – என்பது பெரிய ஆச்சரியமன்றோ –

பஸ்யந்தி நயந ஹரிணா -மான்கள் -அடியேன் கண்கள்-ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்த கம் யாவத்-ஸ்பஷ்டமாக கண்டு-பரி சர சரைஸ்து தாவத் பாதகப்தகை பலாயிதம் கவாபி — பாபங்கள் ஆகிய பறவைகள் ஓடியே போயினவே-வேடுவனைப் பார்த்து மான் ஓடாது -பறவைகளோ ஓடுமே -அதே போல் இங்கு –-ஆனால் இவன் வேடுவன் போல் கொடியவன் அல்லவே என்று அடுத்த ஸ்லோகம்-

————

விமல மணி ஹேம கடகம் விலஸித வநமால யோல்ல சந் மௌலிம்
கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே காஞ்சந பீதாம் ஸூகா வ்ருதம் ப்ராம் ஸூம் –37-

விமலமணி ஹேமகடகம்‌ குற்றமற்ற ரத்தினங்கள்‌ அழுத்தப்பெற்ற பொன் வளையல்களை அணிந்தவனும்‌, விலஸித வநமாலயா – விளங்குகின்ற வனமாலையினால்‌, உல்லஸத்‌ மௌலிம் – ப்ரகாசிக்கின்ற திருமுடியை யுடையவனும்‌, காஞ்சந பீதாம்சுக ஆவ்ருதம்‌ – பொன் மயமான பீதாம்பர மணிந்தவனும்‌, ப்ராம் ஸூம்‌ உயரமானவனுமாகிய, கடிகாத்ரி ஸூஹ்ருதம்‌ – கடிகை மலையிலுள்ள நன் மனம்‌ படைத்த தோழனை, ஈடே – ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌.
முன் ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை வேடனென்றார்‌. வேடனாகில்‌ கொடியவனாக
இருப்பானோ என்று ஐயமெழ , கொடியவனல்லன்‌, நன் மனம்‌ படைத்த தோழனாகி யிருப்பவனென்று இதனால் ஐயத்தைப்‌ போக்கினாராயிற்று. ஸுஹ்ருத்‌ சோபநா சம் ஸிஹ்ருதயவாந்‌ –நன்மையை வேண்டும்‌ மனம்‌ படைத்தவன்‌-எம்பெருமானுடைய அகத்தின்‌ அழகை ஸுஹ்ருதம்‌ என்பதனாலும்‌, திருமேனியழகை மற்றுள்ள எல்லாப்‌ பதங்களாலும்‌ குறிப்பிட்டருளினார்‌. ஆபாதபத்மம்‌ யா மாலா வனமாலேதி ஸா மதா (தோளிலிருந்து பாதகமலம் வரை தொங்குகின்ற மாலை வனமாலையென்று கருதப்பட்டது) என்ற களிங்கரின் வாக்கின்படி வனமாலையாவது திருமேனியில்‌ சாத்தும்‌ மாலையாகக்‌ கூறியதற்குக்‌ காரணம்‌ அறிய முடியவில்லை. கண்டு கொள்வது. இவரிப்படி அருளுகின்றமையால்‌ இங்ஙனமும்‌ இருக்கத் தகும் –

விமல மணி ஹேம கடகம் -நிர்மல -தூ மணி பொன் வளையல்கள் அணிந்து
விலஸித வந மால-யோல்ல சந் மௌலிம் -ஜ்வலிக்கும் திரு அபிஷேகம்
காஞ்சந பீதாம் ஸூக ஆவ்ருதம் ப்ராம் ஸூகம் —முடிச் சோதி -கடிச் சோதி -அடிச் சோதி -பரஞ்சோதி மயம்-பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள் கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே -ஸூஹ்ருத தேவரை சரணம் அடைந்து ஸ்தோத்ரம் பண்ணுவோம்-

—————–

ஸத்பி பரிகதம மலை ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் ஹிரண்ய க்ருதம்
கடிகாத்ர் யுபரி ஸூமேரும் கலயே ஸத் வோத்தரம் ஸூரைஸ் ஸேவ்யம் –38-

அமலை: குற்றமற்ற, ஸத்பி: – முனிவர்கள்‌ முதலிய நல்லோர்களாலே, பரிகதம்‌ சூழப் பெற்றதும்‌, ஸம்ஸ்ரித ஸர்வம் ஸஹம்‌ – (1) அடைய பட்ட பூமியை உடையதும்‌ (பூமியில்‌ இருப்பதும்‌) (2) தன்னை யடைந்தவரின்‌ குற்றமெல்‌லாவற்றையும்‌ பொறுக்க வல்லதும்‌, ஹிரண்ய க்ருதம்‌ – (1) பொன்னால்‌ செய்யப்பட்டதும் (2) ஹிரண்யனைக்‌ கிழித்ததும்‌, ஸத்த்வ உத்தரம்‌ – அதிகமான ஸத்துவ குணம்‌ படைத்ததும்‌, ஸூரை: ஸேவ்யம்‌ – (1) தேவதைகளால்‌ ஸேவிக்கப்பட்டதும்‌, (2) தேவதைகளால் வசிக்கப் பெற்றதுமான, ஸுமேரும்‌ – மேரு மலையை, கடிகாத்ரி உபரி – கடிகை மலையின்‌ மேலே, கலயே – காண்கிறேன்‌.
இதில்‌ கடிகை யெம்பெருமானை மேரு மலையாக ரூபணம்‌ செய்கிறார்‌. மேருமலைக்கு இடப்பட்ட ஐந்து விசேஷணங்களில்‌ மூன்று சிலேடையினால்‌ இரண்டு பொருள்களைத் தருவன. மற்ற இரண்டும்‌ ஒரே பொருள் தந்து பிரசித்தமான மேருவுக்கும்‌ எம்பெருமானாகிய மேருவுக்கும்‌ பொதுவாய்‌ நிற்பன. ஸம்‌ஸ் ரிதா – ஸர்வம்‌ ஸஹா யேந ஸ: – என்கிற வ்யுத்பத்தியால்‌ பூமியில்‌ இருக்கும்‌ : மேருமலையைக்‌ குறிப்பிடுகிறது ஸம்ச்ரிதஸர்வம்‌ ஸஹ: என்பது. அதுவே – ஸம்‌ ச்ரிதாநாம்‌ ஸர்வம்‌ (தோஷம்‌) ஸஹதே என்னும்‌ வ்யுத்பத்தியாலே ஆஸ்ரிதர்களுடைய குற்றங்கள்‌ அனைத்தையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிற எம்பெருமானாகிய மேருமலையைக்‌ குறிக்கிறது. ஹிரண்ய க்ருதம்‌ என்பது ஹிரண்யேந க்ருத: என்ற வ்யுத்பத்தியாலே பொன்னாலான மேருவைக்‌ குறிக்கிறது. ஹிரண்யம்‌ க்ருந்ததி இதி – ஹிரண்யக்ருத்தம்‌, ஹிரண்ய க்ருதம்‌ என்ற வ்யுத்பத்தியால்‌ ஹிரணியனைக்‌ கிழித்த எம்பெருமானாகிய மேருமலையைக்‌ குறிக்கிறது; க்ருதீ – ஸ்சேதநே என்பது தாது.-ஸுரைஸ்ஸேவ்யம்‌ என்பதில்‌ “ஸேவ்யம்‌” என்பது வசிக்கத்தக்கது என்ற பொருளைத் தந்து மேருவைக்‌ காடடிகிறது. தேவர்கள்‌ மேருமலையில்‌ வசிப்பதனால்‌. அதுவே ஸேவிக்கத்தக்கது என்னும்‌ பொருளைக்‌ காட்டி தேவர்களால்‌ ஸேவிக்க (வணங்கத்தக்க எம்பெருமானைக்‌ காட்டுகிறது. பிரசித்தமான மேரு பூமியில்‌ இருக்கிறது. எம்பெருமானாகிய மேரு கடிகைமலையில்‌ விளங்குகின்றது என்பது இரண்டு மேருக்களுக்கும்‌ வாசி

ஸத்பி பரிகதம் அமலை –சாத்விகர் களால் சூழப்பட்ட
ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் -பூமியை அடைந்து -நன்றாக ஆஸ்ரயம் அடைந்தவர்கள் அகம் பொறுத்து
ஹிரண்ய க்ருதம் -பொன் மயமான -ஹிரண்ய அசுரனைக் பாக்கியவான்
கடிகாத்ர் யுபரி -கடிகாத்ரி மலைக்கு மேல் உள்ள அக்காரக்கனியை –
ஸூ மேரும் கலயே -காண்கின்றேன்
ஸத் வோத்தரம் -ஸாத்விக குணம் மிக்கு
ஸூ ரைஸ் ஸேவ்யம் –தேவர்கள் இருப்பிடம் -ஸாத்விக குணம் உள்ள மலை –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
அடுத்த ஸ்லோகத்தில் திருப் பாற் கடலுடன் ஸாம்யம் அருளிச் செய்கிறார் –

———–

ஸரஸம் ஸம்ப்லுத வேலம் சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம்
கம்பீரம் அமிதம் அமலம் காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் –39-

ஸரஸம்‌ – (1) ஆனந்தத்தோடு கூடியவனும்‌ (2) சுவையோடு கூடியதும்‌, ஸம்ப்லுத வேலம்‌ – (1) கரை போல்‌ மேட்டு மடையான நீசர்களிடமும்‌ (அருள்‌ செய்வதற்காக) செல்லுமவனும்‌ (2) கரையையும்‌ மூழ்கடிப்பதும்‌, ஸந்த்ருத மணிராஜ ஸரஸிஜா சங்கம்‌ (1) நன்றாக தரிக்கப்பட்ட கெளஸ்து மணி, ஸ்ரீமஹாலக்ஷ்மி, சங்கு இவற்றை உடையவனும்‌ (2) இவற்றை யுடையதும்‌, கம்பீரம்‌ (1) ஆழமான திருவுள்ளமுடையவனும்‌, (2) ஆழமுடையதும்‌, அமிதம்‌ – (1) தேச கால வஸ்துக்களால்‌ அளவுபடாதவனும்‌ (எல்லா தேசத்திலும்‌ எல்லாக்‌ காலத்திலும்‌ எல்லாப்‌ பொருளாகவும்‌ இருப்பவனும்‌) (2) பரந்ததும்‌ (விசாலமானதும்‌) அமலம்‌ – (1) குற்றமற்றவனும்‌, (2) அழுக்கற்றதும்‌ ஆகிய, கடிகாசலேச கலசாப்திம்‌ (1) கடிகைமலைத் தலைவனாகிய (2) திருப்பாற்‌ கடலை, காஹே – (1) அனுபவிக்கிறேன்‌ (2) குடைந்தாடுகிறேன்‌.
இதில்‌ எம்பெருமானைத்‌ திருப் பாற்கடலாக அருளிச் செய்கிறார்‌. ஸந்த்ருதமணிராஜ ஸரஸிஜா சங்கம்‌ என்பது, பாற்கடலைக்‌ கடைந்து கெளஸ்துபத்தையும்‌ ஸ்ரீமஹா லக்ஷ்மியையும்‌ எம்பெருமான்‌ கைப்பற்றியதனால்‌ கடைவதற்கு முன்பு பாற்கடலிலும்‌, கடைந்த பின்பு எம்பெருமானிடமும்‌ அவையிரண்டு முள்ளமையும்‌, எம்பெருமானிடமும்‌ பாஞ்சஜந்யமாகிய சங்கு உள்ளமையினாலும்‌, பாற்கடலில்‌ சங்குகள்‌ இருப்பதனாலும்‌, சங்குள்ளமையும்‌ எம்பெருமானிடமும்‌ பாற்கடலிலும்‌ பொருந்தும்‌. மற்றவை ஸ்பஷ்டம்

ஸ ரஸம் ஸம் ப்லுத வேலம் -பாற் கடல் -ரஸம் மிக்கு -கரை இருக்குமே
ஆனந்த ப்ரஹ்மம் -ஸம்ஸாரிகளுக்கும் ஆஸ்ரயிக்கும் படி
சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம் -கௌஸ்துப -ஸிந்து கன்யா சங்கங்கள் தரித்து
கௌஸ்துப மணியையும் திருவையும் மார்பில் கொண்டவன் சங்கு ஆழ்வான் அனைத்தையும் தரித்து
கம்பீரம் -தேஜஸ் மிக்கு
அமிதம் -எல்லை அற்ற -கல்யாண குண ஏக ஸ்தானம்
அமலம் -நிர்மலம்
காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் —குடைந்து நீராடும் படி அக்காரக்கனி பாற் கடல் போல் உள்ளானே –

————-

விகத தமோ க்ரஹம் அசலம் வ்ருத்தி க்ஷய ரஹிதம் அநு தயாஸ்த மயம்
விலஸித மாநஸ கமலம் வீஷே கடிகாத்ரி விதும் அஹோ விமலம் -40-

விகத தமோ க்ரஹம்‌- (1) தமோ குணத்தினால் பிடிக்கப்படாதவனும்‌ (2) ராகுவினால்‌ உண்டாகும்‌ கிரஹணமில்லாதவனும்‌, அசலம்‌ (1) அழி வற்றவனும்‌ (2) அசைவில்லாதவனும்‌, வ்ருத்தி க்ஷய ரஹிதம்‌ – (1,2) வளர்வும்‌ தேய்வும்‌ இல்லாதவனும்‌, அநுதயாஸ்தமயம்‌ – (1,2) பிறப்பும்‌ இறப்புமற்றவனும்‌, விலஸித மாநஸ கமலம்‌ (யோகிகளின்‌) ஹ்ருதய கமலத்தை மலரச்‌ செய்பவனும்‌ (2) மாநஸ ஸரஸ்ஸிலுள்ள தாமரை மலரை மலரச் செய்பவனும்‌, விமலம்‌ – (1) குற்றமற்றவனும்‌ (2) களங்கமற்றவனுமாகிய. கடிகாத்ரி விதும்‌- கடிகை மலையிலுள்ள (1) (எம்பெருமானாகிய) (2) சந்திரனை, வீக்ஷே – ஸேவிக்கிறேன்‌. அஹோ – ஆச்சரியம்‌.
எம்பெருமானாகிய சந்திரன்‌ உலகிலுள்‌- சந்திரனுக்கு முரண்பட்டவனாக இருப்பதனால்‌, இப்படிப்பட்ட சந்திரனைக்‌ காண்‌பதில்‌ ஆச்சரியமடைகிறார்‌.
சந்திரனுக்கு – ராஹுக்ரஹணமும்‌ வளர்வும்‌, தேய்வும்‌, பிறப்பும்‌, இறப்பும்‌, களங்கமும்‌, தாமரை மலரைக்‌ கூம்பச்‌ செய்தலும் உண்டு. இவையில்லாத சந்திரன்‌ கடிகைமலை யெம்பெருமான்‌. எம்பெருமான்‌ பத்தில்‌ விசேஷணங்களுக்கு வேறு பொருளும்‌ காட்டப்பட்டமை காணத்தக்கது

விகத தமோ க்ரஹம் -தமோ குணங்கள் கிட்டாவே
அசலம் -ஸ்திரமாக
வ்ருத்தி க்ஷய ரஹிதம் -வளருதல் தேய்தல் இல்லையே
அநு தயாஸ்த மயம்-பிறப்பு மறைவு இல்லையே
விலஸித மாநஸ கமலம் வீஷே -ஹ்ருதய கமலத்தை விகஸிக்கும்
கடிகாத்ரி விதும் –அக்காரக்கனி சந்திரன் களங்கம் தீர்க்கும் -துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன்
அஹோ விமலம் –

————

நிரவதிக நித்ய மஹஸா நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா மம மநஸி வாரிதம் திமிரம்–41-

நிரவதிக நித்ய மஹஸா – எல்லை யற்ற அழியாத ஒளியை உடையதும்‌, நிர்மல முக்தா அநுபந்த ஸுபகேந – சுத்தமான முத்துக்களே சேர்ந்ததனால்‌ அழகுடையதும்‌, கடிகாத்ரிமகுடபாஜா – கடிகை மலையின்‌ சிகரத்தை அடைந்ததுமான, மணிநா எம்பெருமானாகிய ரத்தினத்தினொளியினால்‌. மம மநஸி – எனது மனஸ்ஸில்‌, திமிரம்‌ அறியாமையாகிய இருள்‌, வாரிதம்‌ – போக்கடிக்கப்பட்டது.
ரத்தினத்தினொளியினால்‌ புறவிருள்‌ நீங்கும் எம்பெருமானாகிய ரத்தினத்தினால்‌ அகவிருளாகிய அஜ்ஞானம்‌ நீங்கும்‌ ஜ்ஞானம்‌ உண்டாகும்‌. “மயர்வற மதிநலமருளினன்‌”, என்றாரிறே ஆழ்வார்‌. நிரவதிக நித்ய மஹஸா நிர்மல முக்த அநுபந்த ஸுபகேந என்ற இரண்டு விசேஷணங்களாலே – எல்லை யில்லாத நித்ய ஸூரிகளாலே ஒளிபெறுபவன்‌ என்றும்‌, ஸம்ஸார ஸம்பந்தமாகிய மலமறப்பெற்று முக்தியடைந்தவர்களோடு தொடர்பினால்‌ அழகுடையவன்‌ என்றும்‌ எம்பெருமான்‌ கூறப்படும்‌ பாங்கும்‌ அறியத் தக்கது –

நிரவதிக நித்ய மஹஸா –எல்லை அற்ற மஹத்வ தேஜஸ் -நித்ய ஸூரிகள் ஸமூஹம்
நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந –அழகிய முத்துக்கள் -முக்தாத்மாக்கள் சேர்ந்து
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா –அக்காரக்கனி யான ரத்ன தேஜஸ் ஸூ
மம மநஸி வாரிதம் திமிரம் -அஞ்ஞானம் போக்கி அருளட்டும் –சாஷாத்காரம் பெற்று அனுபவிக்கிறார்-அடுத்த ஸ்லோகம் மரகத அனுபவம் –

————–

அவிரள விஸ்ருமர க்ருணிநா ஹரி மணிநா சதத மாஹித ஒவ்ஜ்வல்ய
கநக நக கல்பிதோயம் கடகோ கடிகா மஹீ ப்ருதோ பாதி –42-

அவிரள விஸ்ருமர க்ருணிநா – இடைவிடாமல்‌ பரவுகிற ஒளியை யுடைய, ஹரிமணிநா – பச்சைநிறமுள்ள மரகத ரத்தினத்தினால்‌, ஸததம்‌ – எப்பொழுதும்‌, ஆஹித ஒளஜ்ஜ்வல்ய: – உண்டு பண்ணப்பட்ட பிரகாசத்தை யுடையதாக, கநகநக கல்பித: கட்டிப் பொன்னால்‌ செய்யப்பட்ட, அயம்‌ – இந்த, கடிகாமஹீப்ருத: கடக: – கடிகை மலை யரசனுடைய கை வளையல்‌, பாதி – விளங்குகிறது.
அவிரள விஸ்ருமர க்ருணிநா – நெருக்கமாகப்‌ பரவுகிற ஒளியை யுடைய, ஹரிமணிநா – ஹரியாகிற எம்பெருமானாகிற ரத்தினத்தினால்‌, ஸததம்‌ ஆஹித ஒளஜ்ஜ்வல்ய: – எப்போதும்‌ உண்டாக்கப்‌பட்ட பளபளப்பை யுடையதாக, கநகநக கல்பித: கட்டிப் பொன்னால்‌ செய்யப் பெற்ற (பொன் வர்ணமுள்ள) அயம்‌ – இந்த, கடிகாமஹீப்ருத: – கடிகையென்னும்‌ மலையினுடைய, கடக. – தாழ்வரை, பாதி – விளங்குகிறது.
ஹரி: – (1) எம்பெருமான்‌ (2) பச்சைநிறமுள்ளது. கடக: – (1) வளையல்‌ (2) தாழ்வரை. மஹீப்ருத்‌ – (1) அரசன்‌ (2) மலை.

அவி ரல விஸ்ரு மர க்ருணிநா –இடைவிடாத ஒளி பரவி-ஹரி மணிநா -மரகத ரத்னம் –நெருக்கமான ஒளி-சதத மாஹித ஒவ்ஜ்வல்ய —எப்பொழுதும் தேஜஸ் மின்னி
கிருபை கடாக்ஷம் வர்ஷம் பொழிந்து கொண்டே உள்ளான்
கநக நக கல்பிதோயம் கடகோ –தங்க -மயமான கட்டிப் பொன்னால் செய்த வளையல்
தாழ்வரை எங்கும் பரவி மின்னிக்கொண்டு உள்ளதே
கடிகா மஹீ ப்ருதோ பாதி —எம்பெருமானது -அக்காரக்கனி யுடைய திருக் கரங்களில் சாத்தி அருளுகிறார்

————–

ஸூ மநோ வ்ருதேந மதுநா ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா
மம கடிகாசல ஜநுஷா மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க –43-

ஸுமநஸ்‌ வ்ருதேந – (1) மலர்களிலிருந்து ஸ்வீகரிக்கப்பட்டதும்‌ (2) பண்டிதர்களாலே உபாயமாகவும்‌ உபேயமாகவும்‌ வரிக்கப் பட்டதும்‌, ஸுதராம்‌ மதுரேண – மிகவும்‌ இனிமை யானதும்‌, சுத்தி குண பாஜா – (1) கசண்டற்றுத்‌ தூய்மையானதும்‌ (2) பரிசுத்தமானதும்‌, கடிகாசல ஜநுஷா – கடிகை மலையில்‌ தோன்றியதுமான, மதுநா (எம்பெருமானாகிய) தேனாலே, மம அடியேனுடைய, மாநஸ நாமா ப்ருங்க: மனமென்னும்‌ வண்டானது, ஸமுத் ஸுக: ‘பவதி) மிகவும்‌ ஆசை யுடையதாகிறது. அந்தத்‌ தேனைப் பருக என்‌ மனம்‌ ஆசைப் படுகிறது என்றபடி.
தமது மனதை வண்டாகவும்‌ எம்பெருமானைத்‌ தேனாகவும்‌ வருணித்தாராயிற்று.
முதற் பொருள்‌ தேனுக்கும்‌ இரண்டாம்‌ பொருள்‌ எம்பெருமானுக்கும்‌ இயையும்‌. ஸுமநஸ: — மலர்களும்‌ பண்டிதர்களும்‌. ஆழ்வார்கள்‌ இப் பெருமானை அக்காரக்கனி என்றார்கள்‌. இவர்‌ அம்ருத பலம்‌ என்றும்‌ திருப்பாற்கடல்‌ என்றும்‌ தேனென்றும்‌ கூறுகிறார்‌. இவையனைத்தும்‌ மதுர தமமான வஸ்துக்களிறே

ஸூ மநோ வ்ருதேந மதுநா –சாத்விகர்களுக்கு- -உபாய உபேயம் இவனே அறிந்தவர்களுக்கு தேன்-ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா -மிகவும் இனிமையான -ஸூத்தமான -ஸாத்விக குணம்-கடிகாசல ஜநுஷா -இங்கு தான் உத்பத்தி ஆகிறது
மம மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க —மனசாகிய வண்டு மிகவும் அபி நிவேசம் மிக்கு உள்ளதே-நம்மாழ்வார் தீர்க்க சிந்தயந்தி —எறும்பி அப்பா ஸ்வாமியோ பரம தீர்க்க சிந்தயந்தி -மா முனிகள் விஸ்லேஷத்தில் தரியாமல் திருவடித் தாமரையில் படியும் ப்ருங்கம் இவர் தானே-

———-

தீனே பூர்ணாம் பவதநுசரே தேஹி த்ருஷ்டிம் தயார்த்ராம் |
பக்த்யுத்கர்ஷம் வரவரமுநே தாத்ருசம் பாவயந்தீம் ||
யேந ஸ்ரீமந் த்ருத மஹமித: ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம் |
த்வத் விஶ்லேஷே தநு விரஹித: தத்ர லீனோ பவேயம் ||–ஸ்ரீ வர வர முனி சதகம் – 75

ஹே வரவரமுநியே உமது கருணை தோய்ந்த கடாக்ஷத்தைப் பூர்ணமாக எளியவனான
உமது பணியாளனான அடியேனிடத்தில் வைப்பீராக. அந்தக் கடாக்ஷமே உம்மிடத்தில் மேலான பக்தியைத் தரவல்லது.
அந்தக் கடாக்ஷத்தாலேயே இங்கிருந்து உமது திருவடித் தாமரையை அடைந்து
உமது பிரிவு ஏற்படும்போது சரீரமற்றவனாக அங்கேயே மறைந்தவனாவேன்.

—————

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத சததம் ஆப்து காமேந
கடிகாசல பிரணயிநா விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ–44-

அணுதரமபி – மிகச் சிறியதாயிருந்த போதிலும்‌, ஸ்வம்‌ – பொருளை ( பணத்தை) அர்ப்பயத: – தனக்குக்‌ கொடுக்கிற, அந்யாந்‌ மற்றவர்களை, ஸததம்‌ – எப்போதும்‌, ஆப்துகாமேந – அடைய விரும்பித்‌ தேடுகிற. கடிகாசல ப்ரணயிநா – கடிகை மலையில்‌ அன்பு மிக்க எம்பெருமானாகிற யாசகனாலே, விபுலம்‌ – மிகப் பெரிதான, ஹிரண்ய தாநம்‌ – ஸ்வர்ண தாநமானது, விஹிதம்‌ – செய்யப்பட்டது. அஹோ – ஆச்சரியம்‌.
தனக்குச்‌ சிறிதாவது பொருள்‌ கொடுப்பாருண்டா என்று தேடித் திரியுமவன்‌ ஸ்வர்ண தாநம்‌ செய்தானென்பது முரண்‌பட்ட விஷயம்‌. இதற்குப்‌ பரிஹாரம்‌ ஹிரண்ய தானமாவது -ஸ்வர்ணதானமன்று. ஹிரண்யனைப்‌ பிளத்தலே யாகும்‌ என்று பொருள்படுதலால்‌ காண்க. தாநம்‌ என்னும்‌ சொல்‌ தாஞ்‌- தாநே- என்ற தாதுவிலிருந்தும்‌, தோ – அவகண்டநே – என்ற தாதுவிலிருந்தும்‌ உண்டாகக்‌ கூடியது. முதலது கொடுத்தலென்னும்‌ பொருளையும்‌, பின்னது பிளத்தலென்னும்‌ பொருளையும்‌ குறிப்பதாகும்‌.

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத -கிஞ்சித் சமர்ப்பித்தாலும் –பத்ரம் பலம் தோயம்
சததம் ஆப்து காமேந -எப்போதும் எதிர்பார்த்து இருக்கும்
அவாப்த ஸமஸ்த காமனும் நமது ஆபி முக்யம் எதிர்பார்த்து இருப்பானே
கடிகாசல பிரணயிநா -ஆசையுடன் உகந்து
விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ –ஸ்வர்ண தானம் -ஸ்லேடை -ஹிரண்யனைப் பிளந்த –நமது அஹங்காராதிகளைப் போக்கித் தன் தாளிணைக் கீழ் -இசைவித்து -இருத்தும் அம்மான் அன்றோ –

————–

அநநு குண விஷய தீஷாம் அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா
கடிகாசல ப்ரணயிநா கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் –45-

அநிதம்‌ ப்ரதமா – அநாதியான. ஸரஸ்வதீ – வேத வாக்கானது,-அநநுகுண விஷய தீக்ஷாம்‌ – (பகவத் சேஷமாகிய ஆத்ம ஸ்வரூபத்துக்குத்‌) தகாத சப்தாதி விஷய(அநுபவதித்தில்‌ உள்ள விரதத்தை (நான் சப்தாதி விஷயங்களை யனுபவிப்பேனே தவிர எம்பெருமானை அனுபவிக்க மாட்டே( னென்னும்‌ ப்ரதிஜ்ஞையை) முக்த்வா -விடுவித்து, கடிகாசல ப்ரணயிதா – கடிகைமலையில்‌ பற்றுமிக்க எம்பெருமானோடே, கன அநுராகமமீம்‌ த்ருஷ்டிம்‌ – நிறைந்த பக்தி மயமான எண்ணத்தை, கடயதி – சேர்ப்பிக்கிறது
வேத வாக்கியங்களை அர்த்தத்தோடு தெரிந்து கொண்டால்‌, விஷயாநுபவத்தில்‌ ஆசை நசிக்கப் பெற்றுப்‌ பரம புருஷனிடத்தில்‌ பக்தி ரூபமான ஞானமுண்டாகி பகவதனுபவம்‌ கிடைக்குமென்றபடி. அநிதம்ப்‌ரதமா இது தான்‌ வேதம்‌ தோன்றிய முதற்காலம்‌ என்பதில்லாதது – அதாவது எப்டோது வேத வாக்குக்குமுள்ள வேறுபாடு. முக்த்வா அந்தர்ப்பாவிதணிஜந்தம்‌- 

அநநு குண விஷய தீஷாம் – –யாதானும் பற்றி நீங்கி விரதம் –
அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா –வேத புருஷன் வேத மாதா -திரு உள்ளத்தில் வந்ததும் அநாதி
ஸரஸ்வதி -வேத வாக்கு என்றபடி -முக்த்வா விடுதலை தருகிறாள்
கடிகாசல ப்ரணயிநா –இங்கு உகந்து இருந்து அருளும் அக்காரக்கனியின் மேல்
கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் —நிறைந்த அபி நிவேசம் -பக்தியை யுண்டாக்க்கும் அன்றோ –

———–

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –46-

ஜராஆதிஅதீதேந – கிழத்தனம்‌ மரணம்‌ முதலியவற்றைக்‌ கடந்தவனும்‌, த்ருப்யந் மநஸா – அது காரணமாக மகிழ்ச்சி மிக்க மனமுடையவனும்‌, தைவ யோகாத்‌ த்ருஸ்யேந – அதிர்ஷ்ட யோகத்தினால்‌ காணத் தக்கவனுமான, கடிகாத்ரி யோகி புருஷேணே – கடிகை மலையிலுள்ள – யோக ஸித்தி பெற்ற பரம புருஷனோடு, ஸங்க: – ஸம்பந்தமானது, அகிலாம்‌ ஸித்திம்‌ – எல்லாவிதமான செல்வங்களையும்‌, ஸாதயதி – சாதித்துக்‌ கொடுக்கும்‌.
செல்வங்களாவன – இவ் வுலகிலும்‌, ஸ்வர்க்கம்‌ முதலிய உலகங்களிலும்‌ அனுபவிக்கும்‌ இன்பமும்‌, பரம பதத்கில்‌ அநுபவித்தற்குரிய பகவதனுபவ கைங்கரியங்களும்‌ ஆகும்‌. பகவானோடு ஸம்பந்தம்‌ பகவத் க்ருபையினால்‌ கிடைக்கும்‌. அந்த பகவத்‌ க்ருபை தான்‌ இங்கு அத்ருஷ்ட மெனப்பட்டது. அத்ருஷ்டமும்‌ விதியும்‌ ஒன்றே, விதி வாய்க்கின்று காப்பாரார்‌ பகவத்‌ க்ருபை பலிக்கும்போது தடுப்பார்‌ ஆர்‌ (திருவாய்‌ 5.1.1) என்றவிடத்தில்‌ விதி சப்தம்‌ பகவத் க்ருபா வாசகமாக ப்ரஸித்தமிறே. பகவத்‌ க்ருபையினால்‌ பகவத்‌ ஸம்பந்த மேற்பட்ட பிறகு, அகில ஸித்திகளும்‌ அந்த பகவத் க்ருபையினால்‌ தான்‌ உண்‌டாகும்‌. ஆக பகவத் க்ருபையினால்‌ பகவத் ஸம்பந்த முண்டாகி, அதனால்‌ பகவத் க்ருபை மேன்மேலும்‌ பெருகி அதன்‌ பிறகு ஸகல ஸித்திகளும்‌ ஏற்படுமென்றபடி. ஸங்கம்‌ – ஸம்பந்தம்‌- அன்பு என்றபடி “அன்புக் கடியானதுவே – (பகவத்‌ க்ருபையே) அடி சேருகைக்கும்‌ (பலத்திற்கும்‌ ஸாதனம்‌” என்றாரிறே -.நலமருளினன்‌ என்கொல்‌ என்று ஆமூலசூட.ம்‌ அருளால்‌ மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கு ஸாதநம்‌.-அழகியமணவாளப்பெருமாள்‌ நாயனார்‌ (ஆசார்ய ஹ்ருதயம்‌ 114)-“அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும்‌, ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர்‌ வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந -ஜரா கொடியது –கிளர் ஒளி கிளமை கெடுவதன் முன்னம்-இவற்றை அதீதேந -கடந்து -மகிழ்ந்த திரு உள்ளத்துடன் இருக்க-அவன் தர்சனம் பெறுவதற்கும் திரு உள்ளத்தில் ஸங்கல்பிக்க வேண்டுமே
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –அவன் உடன் ஸம்ஸ்லேஷித்து-யோக நரஸிம்ஹன் அன்றோ –ஸகல பல பிரதன் -அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளுவான் அன்றோ

———-

பிரபலைர் மம இந்த்ரியாஸ் வை பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே
பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ கடிகாத்ரி பார்த சாரதி நா –47-

மம – அடியேனுடைய, மந: – மனமென்கிற, ரத: – தேரானது, (முதலில்‌) ப்ரபலை: அதிக பலமுள்ள, இந்த்ரிய அஸ்வை: – செவி வாய்‌ கண்‌ முதலிய இந்த்ரியங்களாகிற குதிரைகளினால்‌, விஷம விஷய காந்தாரே – கொடிய சப்தாதி விஷயங்களாகிற காட்டு வழியில்‌, பரிக்ருஷ்ட: – நன்றாக இழுத்து” செல்லப்பட்டதாய்‌, (பின்பு) கடிகாத்ரி பார்த்த ஸாரதிநா – கடிகைமலையிலுள்ள நரஸிம்மப் பெருமாளாகிற பார்த்த ஸாரதியினால்‌, அக்ர்யாம்‌ பதவீம்‌ – உயர்ந்த பகவத்‌ பாகவதாசார்யர்களாகிற வழியை, ப்ராப்த: – அடைந்தது.
ஸாரதி யில்லாத தேரைப்‌ பொல்லாத குதிரைகள்‌ கல்லும்‌ முள்ளும்‌ மிக்க காட்டு வழியில்‌ இழுத்துச்‌ சென்றன-ஸமர்த்தனான ஸாரதி தேருள்ள இடமறிந்து சென்று அதின் கண்‌ ஏறிக் கொண்டு குதிரைகளை அடக்கி, அக் குதிரைகளின்‌ வாயிலாகவே உயர்ந்த வழியில்‌ இழுத்துச்‌ செல்லுவது உலகவியல்பு. அது போன்று பகவத்‌ க்ருபை யில்லாத போது பொல்லாத இந்த்ரியங்களால்‌ கொடிய விஷயங்களில்‌ இழுத்துச்‌ செல்லப்பட்ட மனமானது பகவானால்‌ க்ருபையோடு அவ்விந்த்ரியங்களின்‌ மூலமாகவே நல்ல வழியை அடைவிக்கப்‌ படுகிறதென்றபடி. நரஸிம்மப்‌ பெருமாளே பார்த்த ஸாரதி யாகையால்‌ கடிகாத்ரி பார்த்தஸாரதி என்று நரஸிம்மப்‌ பெருமாளைக்‌ குறிப்பிட் டருளினார்‌. மனம்‌ ஏதாவதொரு விஷயத்தைப்‌ பற்றியே நிற்கும்‌. இது வரையில்‌ நிக்ருஷ்ட விஷயத்தை பற்றிக்‌ கொண்டு அலைந்த மனஸ்ஸு பகவத்‌ க்ருபையினால்‌ உத்க்ருஷ்ட விஷயத்தைப்‌ பற்றி நிலைத்து நின்றதென்றார்‌ இதனால் –

பிரபலைர் மம இந்த்ரிய அஸ்வை -நமது பிரபல இந்த்ரியங்களே குதிரை-பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே -விஷயாந்தரங்களை நோக்கி -காட்டு வழி -நன்று இழுத்துச் செல்ல-பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ -அவற்றை அடக்கி தனது பக்கம் இழுத்துச் செல்லும்-அக்ர -உயர்ந்த நிலைக்குக் கூட்டிச் செல்கிறார் -என்றபடி-கடிகாத்ரி பார்த சாரதி நா —அக்காரக்கனியே பார்த்த சாரதி – நக்ஷத்ர மாலிகை முதல் ஸ்லோகம் -ஞான முத்திரை காட்டி அடக்கி ஆளும் -ஆழ்வார் ஜீயாத் –

————

அதி வேல விலஸிதோர்மே அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ
ப்ராப்தோ அஸ்மி பவ பயோதே பாரம் கடிகா நியாமகே நாஹம் –48-

அதிவேல விலஸித ஊர்மே: – கரையைக்‌ கடந்து வீசுகிற அலைகளை யுடையதும்‌,
(அதனால்‌) அவகாஹவதாம்‌ – மூழ்கியவர்களை . அத:நயனஹேதோ: – அடியில்‌ இழுத்துச்‌ செல்வதற்குக்‌ காரணமானதுமான, பவ பயோதே: – ஸம்ஸாரமாகிற கடலினுடைய-பாரம் –– அக்கரையை, கடிகாநியாமகேந – கடிகை மலை யரசனாகிய படகோட்டியினாலே, அஹம்‌ ப்ராப்த: அஸ்மி – அடியேன்‌ அடைந்‌தவனானேன்‌.
நீச விஷயங்களை அனுபவித்து அனுபவித்து ஸம்ஸாரமாகிற கடலில்‌ மூழ்கிக்‌ கொண்டிருந்த அடியேனை, எம்பெருமான்‌ படகோட்டியாக எழுந்தருளி க்ருபை செய்து அக் கடலின்‌ அந்தண்டைக்‌ கரைய அடைவித்தானென்றார்‌. நியாமக: – (1) ஆணையிடுமரசன்‌ (2) படகோட்டி –

அதி வேல விலஸிதோர் மே -அளவு கடந்த -கடலின் அலைகள் -ஸம்ஸார சாகர அலைகள்
அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ -மூழ்கினவர்களை-ப்ராப்தோ அஸ்மி பவ பயோ தே பாரம் -அக்கரைப்படுத்தி அடைய வைத்து அருளும்-கடிகா நியாமகே நாஹம் –கடத்தடம் குன்றின் அரசன் என்னும் படகோட்டி -நாவாய் முகுந்தன் அன்றோ -இவனும்

——–

கடிகா யதி குண கடிதா கடிகாசல சக்ரி கல்பிதா நஸ்யு
பவ கூபதோ ஜடாநாம் பவ்ய கோ வா ஸமுத்தரண ஹேது -49-

கடிகா: – (அறிவிலிகளின்‌ வாழ் நாட்களில்‌) சில நாழிகைகள்‌-குணகடிதா-தன்னுடைய க்ருபை முதலிய குணங்களோடு சேர்க்கப் பட்டவைகளாக, கடிகாசல சக்ரி கல்பிதா: ந ஸ்யு யதி – கடிகை மலையிலுள்ள சக்ர தாரியான எம்பெருமானால்‌ ஆக்கப் படாவிட்‌டால் , ஜடாநாம்‌ – அறிவற்ற ஜனங்களை, பவ கூபத: -ஸம்ஸாரமாகிற கிணற்றிலிருந்து. பவ்ய:ஸமுத்தரண ஹேது: – நல்லதான – மேலே தூக்குவதற்குக்‌ காரணம்‌, கோ வா .அஸ்தி – என்ன இருக்கிறது.
அறிவும்‌ ஆற்றலுமுடையவர்கள்‌ பக்தி யோகம்‌ முதலியவற்றை அநுஷ்டித்து ஸம்ஸாரமென்னும்‌ கிணற்றிலிருந்து மேல்‌ செல்லுகிறார்கள்‌. அறிவாற்றல்‌ இல்லாதவர்களுக்கு பகவானுடைய கிருபை முதலிய குணங்களே அக் கிணற்றிலிருந்து மேலெழுவதற்குக்‌ காரணம்‌ என்ற படியாம்‌. “நாஸெள புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம்‌ க்ருபயைவாஹம்‌ ப்ரேக்ஷே கஞ்சித்‌ கதாசந” (முற்கூறப்பட்ட நான்‌ புருஷகாரமான பிராட்டி காரணமாகவோ , பக்தி ப்ரபத்தி முதலிய வேறு காரணமாகவோ ஒருவனைக்‌ கடாக்ஷிப்பதில்லை; ௭ன்னுடைய நிர்ஹேதுகமான க்ருபையினால்‌ மட்டுமே யாரோவொருவனை ஏதோவொரு காலத்தில்‌ கடாக்ஷிக்கிறேன்‌ – லக்ஷமீ தந்த்ரம்‌) என்று பகவான்‌ கூறியபடி – அறிவற்ற வர்களை ஏதோவொரு காலத்தில்‌ க்ருபையால்‌ கடாக்ஷிக்கிறேன்‌ என்ற பொருளையே கடிகா: குணகடிதா: சக்ரி கல்பிதா: (சில நாழிகைகளில்‌ சக்ர தாரியானவன் அறிவிலிகள்‌ விஷயத்தில்‌ தனது க்ருபையை உபயோகப் படுத்துகிறான்‌) என்றார்‌. எம்பெருமான்‌ அறிவிலிகள்‌ வாழ்நாளில்‌ ஏதோவொரு ஸமயத்தில்‌ தன்‌ க்ருபையை ௨பயோகிக்காதிருந்தால்‌, அவர்கள்‌ ஸம்ஸாரமாகிய அக்கிணற்றிலிருந்து மேலே வருவதற்கு மோக்ஷம்‌ பெறுவதற்கு வேறொரு உபாயமில்லை என்பது கருத்து. இங்கு வேறொரு பொருளும்‌ தோன்றுகிறது.
சக்ரி கல்பிதா: கடிகா: குணகடிதா: யதி நஸ்யு: ஜட(லா)நாம்‌ கூபத: ஸமுத்தரண ஹேது: கோ வா அஸ்தி? என்று அந்வயித்தால்‌, குயவனால்‌ செய்யப்பட்ட பானைகள்‌ தாம்புக் கயிறோடு சேர்க்கப்படாவிட்டால்‌ கிணற்றிலிருந்து ஜலத்தை மேலே தூக்குவதற்கு வேறு உபாயம்‌ என்ன இருக்கிறது – என்பதே அப்பொருள்‌. டலயோ; அபேத: – (ட, ல என்ற இரண்டும்‌ ஒன்றே) என்ற ந்யாயத்தைக்‌ கொண்டு, ஜடாநாம்‌ என்பது இப்பொருளில்‌ ஜலாநாம்‌ பானைகள்‌. சக்ரீ – (1) சக்ரதாரியான எம்பெருமான்‌, (2) பானை செய்வதற்காகச்‌ சுழற்றப்படும்‌ சக்கரத்தையுடைய குயவன்‌. குண: -(1) நல்லகுணம்‌, (2) கயிறு-முன்‌ ஸ்லோகத்தில்‌ ஸம்ஸாரத்தைக்‌ கடலென்றார்‌. இதில்‌ கிணறென்றார்‌. நீஞ்சத்‌ தெரியாதவனுக்கு இவை யிரண்டும்‌ உயிரை மாய்ப்பனவே யாகும்

கடிகா யதி குண கடிதா நஸ்யு-கருணாதி குணங்களால் சில நாழிகை காட்டா விடில்
கடிகா சல சக்ரி கல்பிதா -சக்ரம் ஏந்திய அக்காரக்கனி என்றும் குயவன் என்றும்
பவ கூபதோ ஜடா நாம் பவ்ய -அறிவிலிகள் ஸம்ஸார பவக்கடலில் இருந்து
கடா நாம் -என்று கொண்டு குடாதிகள் கொண்டு கிணறு முதலியவற்றில் எடுக்க முடியாதே
கோவா ஸமுத்தரண ஹேது -உஜ்ஜீவனம் ஹேது ஒன்றுமே இல்லையே

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —ஆர்த்தி பிரபந்தம் -9-

———

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைத்ய கல்பிதேந பதா
பவ ரோகதோ அசிராத் தே முக்தா ஸ்நாநம் சரந்தி விரஜாயாம் -50-

யே- யார்‌, ஸ்வயாத்ராம்‌ – தமது தேஹ யாத்ரையை (ஜீவ தசையை) கடிகாசல வைத்ய கல்பிதேந பதா – கடிகை மலையிலுள்ள வைத்‌யனாகிற எம்பெருமானால்‌ கற்பிக்கப்பட்ட வழியாலே, கலயந்தி– செய்கிறார்களோ (நடத்துகிறார்களோ) தே- அவர்கள்‌, பவரோகத: – ஸம்ஸாரமாகிய வியாதியிலிருந்து, அசிராத்‌ – விரைவிலேயே, முக்தா: விடுபட்ட வர்களாய்க்‌ கொண்டு, விரஜாயாம்‌ – விரஜா நதியில்‌, ஸ்நாநம்‌ சரந்தி – ஸ்நாநம்‌ செய்கிறார்கள்‌.
மனிதர்‌ தம்‌ வாழ்நாள்களில்‌ எம்பெருமான்‌ கீதை முதலிய நூற்களில்‌ மோக்ஷ உபாயமாக விதித்த – தன்னையே ௨பாயமாகப்‌ பற்றும்படி விதித்த வழியில்‌ செல்வார்களாகில்‌ விரைவிலேயே (இப்பிறவியின்‌ இறுதியிலேயே) ஸம்ஸாரமென்னும்‌ நோயிலிருந்து விடுபட்டுச்‌ சென்று விரஜையாற்றில்‌ நீராடித்‌ தூய்மை பெற்றுப்‌ பரமபதம்‌ செல்லுகிறார்கள்‌ என்றபடி. ஸம்ஸாரத்தை இதில்‌ வியாதியாகக்‌ குறிப்பிட்டார்‌.
வைத்யன்‌ சொல்லும்‌ வழியில்‌ நடப்பவர்கள் வியாதி தீரப் பெற்று – இத்தனை நாட்கள்‌ ஸ்நாநம்‌ செய்யாத குறை தீரும்படி ஸ்நாநம்‌ செயகிறார்ளென்பதும்‌ காண்க-

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைதய கல்பிதேந பதா -தேக யாத்ரையை இவன் வழி நடத்தி-உபதேசங்கள் பலவும் அருளிச் செய்தானே-பவ ரோகதோ அசிராத் தே முக்தா -சம்சார ரோகம் அதி சீக்கிரமாகத் தீர பெற்று-ஸ்நாநம் சாந்தி விரஜாயாம் -குள்ளக் குளிர்ந்து விரஜையிலே நீராடலாம் அமானவன் கர ஸ்பர்சம் கிட்டும்-மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-கீழே 22 ஸ்லோகம் நரஸிம்ஹ சரம ஸ்லோகம் பார்த்தோம்
மஹா விஸ்வாசமே வேண்டும்-வடிவாய மா மகளும் நில மகளும் நடுவாக வீற்று இருந்த அவனைக் கிட்டி அனுபவித்து -அனுபவ ஜனித கைங்கர்யமும் செய்யப்பெற்று நித்யர்கள் உடன் ஒரு கோவையாகப் பெறுவோமே

———–

தததோ ஜகத் யுதாரான் ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ரா ஹு
ஆதத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –51-

ஜகதி – உலகில்‌, அர்த்திந: – யாசகர்கள்‌, ஸ்வாபேக்ஷிதம்‌ அர்த்தம்‌ – தமக்கு வேண்டிய பொருளை, ததத: – கொடுப்பவர்களை, உதாராந்‌ – கொடையாளிகளாக, ப்ராஹு: – சொல்லுகிறார்கள்‌. கடிகாசலார்த்திநா புந: – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற யாசகனாலோ வெனறால்‌, (இதற்கு மாறாக) (தன்னிடமிருந்து) அர்த்தாந்‌ – பொருளை (புருஷார்த்தங்களை) ஆததத: – யாசித்துப்‌ பெறுமவர்கள்‌ உதாரா: கொடையாளிகளாக, உக்தா: – சொல்‌லப்பட்டார்கள்‌.
உலகில்‌ கொடுப்பவர்களே கொடையாளிகளாகச்‌ சொல்லப் படுகின்றனர்‌. “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜஞாநீ ச பரதர்ஷப’, “உதாரா: ஸர்வ ஏவைதே’ (கீதை – அத்‌. 7.16) இழந்த செல்வத்தை விரும்பும்‌ அர்த்தார்த்தியும்‌, ஆத்மாநுபவரூபமான கைவல்யத்தை விரும்பும்‌ ஜிஜ்ஞாஸூம்‌. என்னுடைய அநுபவத்தை விரும்பும்‌ ஜ்ஞாநியும்‌ ஆகிய இவர்களனைவரும்‌ (இவற்றை என்னிடமிருந்து யாசித்துப்‌ பெற்றாலும்‌ யாசகர்களல்லர்‌, பின்னையோ வென்றால்‌) கொடையாளிகளே யாகிறார்கள்‌ என்று எம்பெருமான்‌ யாசகர்களைக்‌ கொடையாளிகளென்றது காணத் தக்கது. பொருளைக்‌ கொடுப்பவர்கள்‌ கொடையாளிகள் அல்லர்‌, பொருளைக்‌ கொடுப்பவர்களுக்குக்‌ கொடையாளியாகுந் தன்மையைக்‌ கொடுப்பவர்களே (யாசகர்களே) கொடையாளிகள்‌ என்பது பரமோதாரனான எம்பெருமானுடைய திருவுள்ளம்‌. கர்ணனிடம்‌ பிறர் யாசித்துப்‌ பெற்ற பொருள்‌ அப்பொழுதே அழிந்து விட்டது. கர்ணனுடைய கொடையாளியாகுந்‌ தன்மை (கொடையாளி என்னும்‌ பெயர்‌) என்றும்‌ அழியாமல்‌ நிற்கிறது என்பது ஈண்டு நினைக்கத் தக்கது. பொருள்‌ அநித்யம் – புகழ்‌ நித்யமிறே –

தததோ ஜகத் யுதாரான் -கொடுப்பவர்களை உலகம் உதாரர் என்பர் -கர்ணன் பெற்ற பெயர்
ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ராஹு -கேட்டதைக் கொடுப்பவர் களுக்கு முன்பு இவ்வாறு உலக வழக்கு-ஆதத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –இங்கு அக்காரக்கனியே யாசகன்-தன்னைக் கொடையாளியாக்கும் அனைவருமே உதாரர்
உதார -ஸர்வ கீதையில் அனைவரையும் -கொடையாளி யாக்கியவர்கள் –
அனைத்தையும் அருளி இன்னும் ஒன்றுமே செய்யாதவனாகவே ருணம் ப்ரவர்த்தம் என்று சென்றவன் அன்றோ-அந்தமில் பேர் இன்பம் கேட்டு இருப்பார்களே மம ஆத்மா என்பான் -அன்றோ –

————

தாதே ஹிதாதி கார்த்தான் ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம்
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா –52-

(உலகில்‌) தாதா – கொடையாளி ஸ்வ ஸம்ஸ்ரிதேப்ய: – தன்னை யண்டினவர்களுக்கு, ஸ்வ வ்யதிரிக்தாந்‌ – தன்னைவிட வேறான, ஈஹித அதிக அர்த்தாந்‌ – (அவர்கள் )விரும்பியதைக்‌ காட்டிலும்‌ அதிகமான பொருள்களை, ததாதி – கொடுக்கிறான்‌. கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா(து) – கடிகை மலை நரசிங்கப்‌ பெருமானாகிற கொடையாளியாலோ வென்றால்‌, ஸ்வஸம்‌ஸ்ரிதேப்ய: – தன்னை யடைந்தவர்களுக்கு,ஸ்வ:அபி – தானும்‌, தத்த: – கொடுக்கப்பட்‌டான்‌.

‘யாசகர்களே உதாரர்கள்‌, கொடுப்பவர்கள்‌ உதாரரல்லர்‌” என்பது எம்பெருமான்‌ திருவுள்ளமானாலும்‌, உண்மையை ஆராய்ந்தால்‌ எம்பெருமானே உதாரன்‌ என்பது இக் கவியின்‌ திருவுள்ளமென்பது இந்த ஸ்லோகத்தில்‌ விளங்குகிறது. உலகில்‌ கொடையாளிகள்‌, யாசிப்பவர்‌ விரும்பியவற்றையோ அவற்றைக்‌ காட்டிலும்‌ அதிகமாகவோ கொடுப்பார்களே யன்றித்‌ தன்னைக்‌ கொடுக்க மாட்டார்கள்‌. எம்பெருமான்‌ தன்னையும்‌ கொடுப்பான்‌. ஆகையால் எம்பெருமானாகிய கொடையாளியே உயர்ந்தவ னென்றதாயிற்று.
எம்பெருமான்‌ யாசிப்பவர்களுக்குத்‌ தன்‌னைக்‌ கொடுப்பதாவது, அவர்கள்‌ சொன்ன காரியத்தையெல்லாம்‌ தான்‌ செய்யுமளவுக்கு அவர்களுக்குத்‌ தன்னை இட்ட வழக்காக்கி வைப்பது. கண்ணபிரான்‌ அர்ச்சுநனுக்குத்‌ தேரோட்டியதும்‌ தூது நடந்ததும்‌, யதோக்தகாரி யெம்பெருமான்‌ திருமழிசைபிரான்‌ பின்னே சென்றதும்‌ திரும்பி வந்ததும்‌, திருக் குடந்தை ஆராவமுதாழ்வார்‌ திருமழிசை பிரானுக்கு எழுந்திருந்து பேசியதும்‌ முதலிய சரித்திரங்களே, பக்தர்களுக்கு எம்பெருமான்‌ தன்னைக்‌ கொடுத்தற்குப்‌ போதுமான சான்றுகளாகும்‌. “ஸோ5பி” என்று பாடம்‌ காணகிறது. அதைவிட ஸ்வோ$பி என்ற பாடமே சிறக்கும்‌. எம்பெருமானால்‌ அவனும்‌ கொடுக்கப்பட்டான்‌ என்பதை விட, எம்பெருமானால்‌ தானும்‌ கொடுக்கப் பட்டானென்பதன்‌றோ ஸ்வரஸமாவது. பூர்வார்த்தத்தில்‌ “தத்வ்யதிரிக்தாந்‌” என்னாமல்‌, “ஸ்வவ்யதிரிக்தாந்‌’ என்றது இதை வலியுறுத்தும்

தாதே ஹிதாதி கார்த்தான் -தாதா -கொடையாளி கேட்டதைக் கொடுப்பான்-ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம் –-என்னையும் ஆக்கி தன்னையும் தரும் கற்பகம் அன்றோ
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா —நன்றாக ஆஸ்ரயிப்பவர்களுக்கு-தன்னையே தனது பேறாகக் கொடுக்குமவன் அன்றோ

—————-

ஹிம்ஸித தாநவ கரிணே ஹ்ருதய குஹா விஹித பஹுவிஹாராய
விக்ரமவதே ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய –53-

விக்ரமவதே- பராக்ரமமுடையதாய்‌, ஹிமஸித தாநவ கரிணே – ஹிரண்யாஸுரனாகிய யானையைக்‌ கொன்றதும்‌, ஹ்ருதய குஹா விஹித பஹு விஹாராய – (ஞானிகளின்‌) ஹிருதயங்களாகிய குகைகளில்‌ பல விதமான விஹாரங்களைச்‌ செய்வதுமான, கடிகாத்ரி வீரஸிம்ஹாய – கடிகைமலையிலுள்ள வீரசிங்கத்திற்கு ஸபர்யாம்‌ விததே பணி விடைகளைச்‌ செய்கிறேன் –
பக்தர்களுக்குத்‌ தன்னையே கொடுப்பவனுக்கு, நீர்‌ என்ன செய்யப் போகிறீர்‌ என்ன, நான்‌ என்னையே அவனுக்குக்‌ கொடுககிறேனென்கிறார்‌. இதனால்‌ இவர்‌ தம்மையே அவனுக்குக்‌ கொடுத்தலாவது – தமது மனத்தையும்‌ வாக்கையும்‌ உடலையும்‌ அவனுக்கு ஸ்வாதீனமாக்கி, அவனை த்யானம்‌ செய்வதும்‌ அவனைப்‌ புகழ்வதும்‌, அவனை வணங்குவதுமாய்‌ அவனுக்குத்‌ தொண்‌டு செய்வதேயாகும்‌.
சிங்கம்‌ பராக்ரமமுடையது – யானைகளைக்‌ கொல்லுமது – குகையில்‌ ஸஞ்சரிப்பது. அது போல்‌ கடிகை மலை வீர சிங்கமும்‌ உள்ளமை காண்க. எம்பெருமான்‌ ஞானிகளின்‌ ஹிருதய குகையில்‌ விஹாரம்‌ செய்வது “நின்றதும்‌ இருந்ததும்‌ கிடந்ததும்‌ என்நெஞ்சுளே” (திருச்சந்தவிருத்தம்‌ 54) “தாமரைக்கண்ணன்‌ என்‌ நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக்‌ காணீர்‌” (திருவாய்‌ 7.3.1) முதலிய விடங்களில்‌ காணத் தக்கது.

ஹிம்ஸித தாநவ கரிணே -ஹிரண்ய கசிபு யாகிய யானையை நிரஸித்து-ஹ்ருதய குஹா விஹித -ஹ்ருதய விசால குஹையில் மன்னி-பஹுவிஹாராய -நிறைய அனுபவம் கொடுத்துக் கொண்டு அருளி-விக்ரமவதே -வீர தீர பராக்ரமங்கையும் காட்டி அருளி பரிவர் இல்லை என்ற அதிசங்கை போக்கி அருளி-ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய —இந்த அக்காரக் கனிக்கு அனைத்து வித கைங்கர்யங்களும் செய்யப் பெறுவேனாக வேண்டும்

—————

ஸ்ருதி பாரகாய வித்யா ஸூதி க்ருஹாய ஸ்வ தர்ம நிரதாய
ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே கடிகாத்ரி பூமி தேவாய –54-

ஸ்ருதிபாரகாய – வேதங்களைச்‌ கரை கண்டவனும்‌, வித்யா ஸூதி க்ருஹாய சாஸ்திர ஜ்ஞானத்திற்குப்‌ பிறப்பிடமானவனும்‌, ஸ்வ தர்ம நிரதாய – தனது வர்ணாஸ்ரம தருமங்களில்‌ ஊன்றியவனும்‌, ஸூதியே (இச் செயற்கை யறிவேயன்றி) இயற்கையாகவே நல்லறிவு படைத்தவனுமாகிய, கடிகாத்ரி பூமிதேவாய – கடிகை மலையிலுள்ள ப்ராஹ்மணனுக்கு, ஸ்வ உசிதம்‌ – எனக்குத்‌ தகுந்த, ஸ்வம்‌ – சொத்தை, ப்ரதாஸ்யே கொடுக்கக் கடவேன்‌
ப்ராஹ்மணனுக்குத்‌ தானம்‌ செய்ய வேண்டுமென்று சாஸ்த்ரம்‌ சொல்லுகிறது. “வேங்கட வேதியனை?” (பெரியதிருமொழி – 1.10.10) என்றும்‌, “உலகளப்பான்‌ அடி நிமிர்த்த அந்தணனை” (பெரிய திருமொழி 5.6 7) என்றும்‌ எம்பெருமானை ப்ராஹ்மணனாக ஆழ்வார்கள்‌ அருளியது காண்க. ப்ராஹ்மணன்‌ – வேதத்தைக்‌ கண்டவன்‌, சாஸ்த்ர அறிவுக்குப்‌ பிறப்பிடமானவன்‌, தனது தருமங்களில்‌ ஊன்றியவன்‌, புத்திமான்‌ இவை யெல்லாம்‌ எம்பெருமானுக்கும்‌ ஒக்கும்‌. மேலும்‌ எம்பெருமான்‌ தனது தருமமான ஆஸ்ரித ஸம்ரக்ஷணத்தில்‌ ஊன்றியவனென்பதும்‌ இங்குக்‌ கருதுக. கவிக்குத்‌ தனக்குரிய சொத்தாவது ஸ்லோகங்களேயாகும்‌. இதுமேல்‌ ஸ்லோகத்தில்‌ விளங்கும்

ஸ்ருதி பாரகாய –-வேதம் வெளியிட்டு அருளிகரை காண அரிதான வேதக்கடலை அன்னமாய் அங்கு அரு மறை பயந்து அருளி-வித்யா ஸூதி க்ருஹாய -ஸாஸ்த்ர ஞானம் -ப்ரஹ்ம வித்யைகளை அருளிச் செய்து-ஸ்வ தர்ம நிரதாய –-சரணாகத வத்ஸலன் -ஆஸ்ரித பரதந்த்ரன் -பக்த உசிதன் -ரக்ஷணத்தில் நிலை நின்று-ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே -தீ -ஞானம் -கடிகாத்ரி பூமி தேவாய –ப்ரஹ்மணோத்தமனாக –ஸகல மனுஷ நயன விஷய தாங்கனாக அவனுக்கு கைங்கர்யம் -இந்த ஸ்ரீ ஸூ கத்தியை கன்னிகா தானமாக அருளி

மஹநீய வ்ருத்த வர்ணா மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா
ஸூக்தி ஸூதநு ப்ரதேயா ஸூத்தா கடிகாத்ரி பூ ஸூர வராய –55-

மஹநீய வ்ருத்த வர்ணா – (1) பூஜிக்கத்தக்க சந்தஸ்ஸும்‌ எழுத்துக்களும்‌ உடையதும்‌, (2) பூஜிக்கத்தக்க நடத்தையும்‌ மேனி நிறமும்‌ உடையவளும்‌, மஹித அந்வயவதீ – (1) உயர்ந்த – சொற்களின்‌ அந்வமுடையதும்‌, (க்லிஷ்டாந்வயமில்லாமல்‌ ஸுலபாந்வயமுடையதும்‌, (2) உயர்ந்த குடிபிறப்பை யுடையவளும்‌, அலங்க்ருதா – (1) சப்தாலங்காரங்களும்‌ அர்த்தாலங்காரங்களும்‌ உடையதும்‌. (2) வஸ்த்ராபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்டவளும்‌, ஸூத்தா – (1) காவியக் குற்றமின்றி சுத்தமாயும்‌, (2) நாண் மடம்‌ அச்சம்‌ முதலிய குணங்களினால்‌ சுத்தையாயும்‌ இருக்கிற, ஸூக்தி ஸுதநு: ஸ்ரீஸூக்திகள்‌ (ஸ்லோகங்கள்‌) என்கிற கந்யகை யானவள்‌, கடிகாத்ரி பூஸுரவராய- கடிகை மலையிலுள்ள ப்ராஹ்மணோத்தமனான எம்பெருமானுக்கு, க்ருதிநா – (1) பண்டிதனாலே (2) புண்ணியம்‌ செய்தவனாலே, ப்ரதேயா – கொடுக்கத் தக்கவளாகிறாள்‌.
தம்முடைய ஸ்ரீஸூக்தியைக்‌ கந்யகையாகக் கூறி, கடிகை மலை யெம்பெருமானை ப்ராஹ்மண உத்தமனாகக்‌ குறிப்பிட்டு, அவனுக்குத்‌ தம்‌ காவியமாகிய பெண்ணைத்‌ தானம்‌ செய்வது உசிதமென்கிறார்‌ இதனால்

மஹநீய வ்ருத்த வர்ணா -உயர்ந்த சந்தஸ் ஸூக்களைக் கொண்ட -பூஜிக்கப்பட்ட நல்ல நடத்தை யுடைய கன்னிகை போல்-மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா –உயர்ந்த அந்வயங்கள் -ஸப்த அலங்காரங்களைக் கொண்டும்-உயர்ந்த ஆபி ஜாதியம் -அலங்காரம்
ஸூக்தி ஸூத அநு ப்ரதேயா ஸூத்தா -பரிசுத்தம் -தீர்த்தம் -கன்னிகையை
கடிகாத்ரி பூ ஸூர வராய –இந்த அக்காரக்கனி அழகிய மணவாளனுக்கு தகுதியாக
வேதியர் கோன் -விளக்கு – தனது குழந்தையான பா மாலையை சூட்டி -பெரியாழ்வார் போல் மாமனார் ஆகிறார் எறும்பி அப்பா ஸ்வாமியும்

———-

காம்யோ ததாதி ஸார்த்தம் தவளம மதி ப்ரேம தாரயா ஸஹிதம்
கடிகாசல பிரணயிநே கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் –56-

கடிகாசலப்ரணயிநே – கடிகை மலையில்‌ பற்றுவைத்த யாசகனுக்கு, ஸார்த்தாம்‌ – (1) பொன்னோடு கூடிய (கொம்புக்கும்‌ குளம்புக்கும்‌ பொன்‌ கட்டு கட்டிய) (2) நல்ல அர்த்தத்தோடு கூடிய, காம்‌ – (1) பசுவை (2) ஸ்ரீ ஸூக்தியை (ஸ்லோகங்களை), தவள மதி ப்ரேம தாரயா ஸஹிதாம்‌ – (1! சுத்தமான எண்ணமும்‌ ப்ரதீயுமாகிற நீர்த் தாரையோடு கூடியதாக, (2) சுத்த ஜான ஞானமும்‌ பக்தியுமாகிறவற்றின்‌ தொடர்ச்சியோடு கூடியதாக, ய: – எவன்‌, ததாதி – கொடுக்கிறானோ, தஸ்ய – அவனுக்கு, காங்க்ஷிதம் பலம்‌ – விரும்பிய பயன்‌, கிம்‌ ந கடதே – எதுதான்‌ கை கூடாது
இதில்‌ தனது ஸ்ரீஸக்தியைப்‌ பசுவாகக்‌ கூறி அதனை எம்பெருமானுக்குத்‌ தானம்‌ செய்தால்‌ எல்லா விருப்பங்‌களும்‌ நிறைவேறுமென்று கூறினாராயிற்று. இவ்விரண்டு ஸ்லோகங்களினாலும்‌,-கீழ் ஸ்லோகத்தில்‌ தனக்குரிய சொத்து என்றதை விவரித்து அத்தகைய சொத்தான ஸ்ரீ ஸூக்தியை எம்பெருமானுக்குக்‌ கொடுக்கக்‌ கடவதாகவும்‌, கொடுத்தால்‌ எல்லா விருப்பமும்‌ நிறைவேறுவதாகவும்‌ அருளிச்‌ செய்தாராயிற்று. ப்ரணயீ – (1) பற்றுடையாவன்‌ (2) யாசகன்

காம்யோ ததாதி ஸார்த்தம் –பொன் கட்டிய பசு தானம் பண்ணுகிறார் இதில்
அர்த்தங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூ க்திகள் என்றுமாம்-தவல மதி ப்ரேம தாரயா ஸஹிதம் -ஸூத்தமான -வெண்மை -பிரேமை மிக்கு –நீராய் அலைந்து கரைந்து உருகும் திரு உள்ளம்
அனுபவ ஜெனித ப்ரீதி உள் அடங்காமல் வெளிவந்தவை அன்றோ
கடிகாசல பிரணயிநே -உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளும் அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க-கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் —கோ தானம் -வாக்கு -தானம் செய்த பின்பு அபீஷ்டங்கள் அனைத்துமே அருளுவான் அன்றோ
இந்த ஸ்துதியை நாவினால் நவிலவே நமக்கும் அருளிச் செய்வான் அன்றோ

————

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித வைமுக்ய கல்மஷா திஷணா
ப்ருது குண வதீ மதீயா ஸ்ப்ருஹயதி கடிகாசல ப்ரியாய ப்ருசம் –57-

கலுஷ ஆதி கடித வாக்யை – மனத்தின் கண்‌ (உள்ள) அழுக்கைப்‌ போக்கடிப் பவைகளாகத்‌ தானே சேர்ந்த வேத வாக்கியங்களாலே, அல்லது மஹர்ஷிகளாலே சேர்க்கப்பட்ட இதிஹாஸ புராண வாக்கியங்களாலே, க்ஷாளிதவைமுக்யகல்மஷா கழுவப்பட்ட – எம்பெருமானிடம்‌ பராமுகமா யிருத்தலாகிற அழுக்கை யுடைய, மதீயா திஷணா – என்னுடைய புத்தியானது. ப்ருது குணவதீ – அதிகமான – எம்பெருமானுக்கு நேர்‌ முகமாக இருத்தலென்னும்‌ குணத்தை யுடையதாய்க்‌ கொண்டு, கடிகாசலப்ரியாய கடிகைமலைநாயகன்‌ பொருட்டு, ப்ருசம்‌ மிகவும்‌, ஸ்ப்ருஹயதி – ஆசைப் படுகிறது.
மனதின்கண்‌ உள்ள அழுக்காவன – நான்‌ ஸ்வதந்த்ரன்‌ என்னும்‌ அஹங்காரமும்‌, உலகிலுள்ள பொருள்கள்‌ யாவும்‌ என்னுடையவையே என்னும்‌ மமகாரமுமாகும்‌. இப்படிப்பட்ட அழுக்குக்களை – எம்பெருமானொருவனே ஸ்வதந்த்ரன்‌, மற்ற ஜீவாத்மாக்கள்‌ மற்றுமுள்ள ஜடப் பொருள்களனைத்துமே அப் பெருமானுக்குப்‌ பரதந்திரமானவையே என்ற கருத்துக்களைக்‌ கொண்ட வேத வாக்கியங்கள்‌ அல்லது இதிஹாஸ புராண வாக்கியங்கள்‌ போக்கடிக்கின்றன. இக்கருத்து மனதின்‌ கண்‌ ஊறவூற மனிதர்களின்‌ எண்ணத்தில்‌ பகவத்‌ வைமுக்யம்‌ நசிக்கப் பெற்று செவ்முக்யமென்னும்‌ குணம்‌ அதிகமாக உண்டாகும்‌. அக் குணமுண்டாகவே பகவானிடம்‌ மிக்க ஆசை உண்டாகும்‌ என்பதைக்‌ கவி தம்மோடு தொடர்பு படுத்திக் கூறினாராயிற்று. இகனால்‌ வைமுக்யம்‌- எம்பெருமானிடம்‌ பாரமுகமாக இருத்தல்‌. ஸெளமுக்யம்‌ – நேர்முகமாக இருத்தல்‌. அதாவது சிறிது ஆசை யுண்டாகப்‌ பெறுதல்‌. அந்நிலமை நீடிக்கப் பெற்றால்‌ சில நாட்களில்‌ அதிகமான ஆசையாகிய பக்தி உண்டாகு மென்றபடி. கலுஷம்‌ – காலுஷ்யம்‌ – அழுக்கு. கலுஷம்‌ அதந்தீதி – கலுஷாநீதி கடிதாநி – கடிதாநிச தாநி வாக்யாநிச என்று விக்ரஹவாக்யம்‌. அத பக்ஷணே என்ற தாதுவின்‌ மேல்‌ ணிநிப்ரத்யயம்‌ சேர்ந்தால்‌ ஆதி என்ற ரூபம்‌ நிஷ்பந்நமாகும்‌. இதுநபும்ஸகலிங்க சப்தம்‌. நாசம்‌ பண்ணுமது என்பது அதன்‌ பொருள்‌. கடித வாக்யாநி – தாமே சேர்ந்த வேத வாக்கியங்கள்‌ – வேதம்‌ அபவ் ருஷேயமாகையாலே, கடித வாக்யாநி மஹர்ஷிகளாலே சேர்க்கப்பட்ட இதிஹாஸ புராண வாக்யங்கள்‌-கடிதமென்பதில்‌ முந்தின பக்ஷத்தில்‌ கர்த்தரியிலும்‌ பிந்தின பக்ஷத்தில்‌ கர்பணியிலும்‌ “க்த” ப்ரத்யயம்‌ வந்துள்ளது

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித -அஹங்கார மமகாரா தூஷித
வைமுக்ய கல் மஷாதிஷ ணா -பாராமுகமாக அடியேன் திரு உள்ளம்
ப்ருது குண வதீ மதீயா ஸ் ப்ருஹயதி -அவன் மேலே இழுத்துக் கொண்டு
கடிகாசல ப்ரியாய ப்ருசம் -அக்காரக்கனி உகந்து அருளின திவ்ய தேச மஹாத்ம்யத்தாலேயே நாம் அனுசந்திக்க தாம் நைச்ய அனுசந்தானம் செய்து அருளுகிறார்

—————

அந் விஷ்யதாம் ஸ்வம் அதவா தூஷ்ணீ மாத்வம் ஸூரர்ஷி பித்ரு முக்யா
தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை கடிகாத்ரி பூபுஜே ச சிவை –58

ஸுர ருஷி பித்ருமுக்யா: – தேவதைகள்‌ ருஷிகள்‌ பித்ருக்கள்‌ முதலியவர்களே ! ஸ்வம்‌ அந்விஷ்யதாம்‌ – உங்களுடைய சொத்து தேடப்படட்டும்‌, அதவா – அல்லது (சொத்தே வேண்டா மென்றால்‌) தூஷ்ணீம்‌ ஆத்வம்‌ – : வெறுமனே இருங்கள்‌. (எங்களுடைய சொத்தாக நீ இருக்க நாங்கள்‌ தேடுவதும்‌, வேண்‌டா விடில்‌ வெறுமனே இருப்பதும்‌ எதற்கு என்றால்‌ பதில்‌ கூறுகிறார்‌ – நான்‌ பகவானுடைய சொத்தாக ஆகிவிட்டேனென்று) அஹம்‌ – நான்‌, கடிகாத்ரிபூபுஜே – கடிகைமலை யரசரான எம்பெருமானுக்கு, தத்ஜ்தை;: அவனைப்‌ பற்றி அறிந்த – தத்வ ஜ்ஞாநிகளான , ஸசிவை: – மந்த்ரிகளாலே பாகவதர்களாலும்‌ ஆசார்யர்களாலும்‌, தத் கிங்கர: – அவ்வெம்பெருமானுடைய தொண்டனாக, அர்ப்பித: -ஸமர்ப்பிக்கப்பட்டேன் –
53ம்‌ ஸ்லோகத்தில்‌ – பகவானுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வேனென்றார்‌. 54,55,56ம்‌ ஸ்லோகங்களில்‌ வாசிக கைங்கர்யம்‌ செய்வதா௧க் கூறினார்‌. 57ல்‌ இங்ஙனம்‌ கைங்கர்யம்‌ செய்வதற்குக்‌ காரணமான பக்தி தமக்கு எம்‌பெருமானிடம்‌ உண்டானதாகச்‌ சொன்னார்‌. இதைக்‌ கேட்ட தேவர் ரிஷி பித்ருக்கள்‌ – இது வரையில்‌ எங்களுக்குத்‌ தொண்டு செய்து கொண்டிருந்த நீ எப்பொழுது இப்படி மாறிவிட்டாய் என்று கேட்க விடை யிறுக்கிறார்‌ இதனால்‌. பகவத்‌ க்ருபையால்‌ பாகவதர்களோடு ஸஹ வாஸம்‌ உண்டாக, இவர்கள்‌ என்னை ஸதாசார்யனோடு சேர்க்க, அவ்வாசார்யர்‌ என்னை பகவத் தாஸனாகச்‌ சேர்த்து விட்டார்‌. இனி உங்களுக்கும்‌ எனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை. உங்களுக்கு சொத்து வேண்டுமென்றால்‌ வேறுயாரையாவது தேடிப் பிடித்துக்‌ கொள்ளுங்கள்‌, இல்லையேல்‌ வாளா விருங்களென்று அவர்களிடம் அறை கூவுகிறார்‌ இதனால்‌ என்க.
தேவர்ஷிபூதாப்த ந்ருணாம்‌ பித்ரூணாம்‌ ந கிங்கரோ நாயம்ருணீச ராஜந்‌ | ஸர்வாத்மநா ய: ஸரணம்‌ ஸரண்யம்‌ நாராயணம்‌ லோக குரும்‌ ப்ரபந்ந: |!-(ஸ்ரீ பாகவதம்‌ 11.5.41) – அரசே எவனொருவன்‌ சரணமடையத் தக்கவனாய்‌ (க்ருபையும்‌ சக்தியுமுடையவனாய்‌) லோக பிதாவான நாராயணனை எல்லா விதத்தாலும்‌ சரணமடைந்தானோ, அவன்‌ – தேவர்களுக்கும்‌ ரிஷிகளுக்கும்‌ பூதங்களுக்கும்‌ பந்துக்களுக்கும்‌ பித்ருக்களுக்கும்‌ அடிமைப்பட்டவனல்லன்‌, கடன்பட்டவனுமல்லன்‌ என்ற ஸ்லோகம்‌ இங்கு நினைக்கத் தக்கது . இது கரபாஜந முனிவர்‌ நிமியரசனுக்கு உபதேசித்தது.

உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்-ஸூரர்ஷி பித்ரு முக்யா -ஸூரர் ரிஷிகள் பித்ருக்கள் முதலியவர்அந் விஷ்யதாம் ஸ்வம் -உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்-அதவா தூஷ்ணீ மாத்வம் -வெறுமனே உட்க்கார்ந்து இருங்கள்
கடிகாத்ரி பூபுஜே ச சிவை –அக்காரக்கனி -கடிகாத்ரி அரசன் பற்றிய பூர்ண ஞானம் கொண்ட மந்திரிகள் –மாச முனிகளை ஆஸ்ரயித்த பின்பு-தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை -கைங்கர்ய பரனாக அடியேன் சமர்ப்பிக்கப் பட்டேன்-ஆச்சார்யர்கள் நம்மை விற்கவும் பெறுவார்கள் அன்றோ-சூடகம் -கங்கணம் -தோள் வளை சங்கு சக்கர லாஞ்சனை தோடே செவிப்பூவே -மந்த்ர உபதேசம் -பாடகம் கால் கட்டு -பஞ்ச ஸம்ஸ்காரம்-சாஷாத் பல ஏக லஷ்யம் -மங்களா ஸாஸனம் -ஆஸாசித்தல் –

———-

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே
மன்யே மந்த தீயஸ் தான் மாதங்கா நேவ மத ஜூஷ கலுஷான் –59-

கடிகாமஹீப்ருத: கோப்த்ரே – கடிகைமலையின்‌ அரசனாகிய, ஹரயே (நர)ஸிம்ஹத்தின்‌ பொருட்டு, யே– யார்‌. அநர்த்தகம்‌– வ்யர்த்தமாக – (பயனின்றி) ந்ருத்யந்தி – கூத்தாடுகின்றார்களோ, தாந்‌ – அத்தகைய, மந்ததிய: – புத்தி குறையப் பெற்றவர்களை, கலுஷாந்‌ – அறிவு கலங்கிய, மதஜுஷ: மதம் பிடித்த, மாதங்காந்‌ ஏவ – யானைகளாகவே, மந்யே – கருதுகிறேன்‌.
கடிகைமலை யெம்பெருமானுக்குத் தொண்டராகிய தமக்கு விபரீதரானவர்களை பகவத்‌ த்வேஷிகளை நிந்திக்கிறார்‌ இதனால்‌, மதம்‌ பிடிக்காத யானை சிங்கத்தின்‌ எதிரில்‌ செல்லவே செல்லாது. மதம்‌ பிடித்த யானை அறிவு கலங்கிச்‌ சிங்கத்தின்‌ எதிரே சென்று
ஆடுவதும்‌ பிளிறுவதுமாக இருந்தால்‌ அது சிங்கத்தினால்‌ கொல்லப்படுவது உறுதி. அது போலவே நரசிங்கப்‌ பெருமானெதிரி. வந்து அவனை மதியாமல்‌ கூத்தாடுவர்களேல்‌ அவர்கள்‌ ஸ்வரூப நாசம்‌ பெறுவது உறுதி என்று இதனால்‌ குறித்து அருளினார் –

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே -அநர்த்த நாட்டியம் –ஈஸ்வரோஹம் -அகங்கார மமக தூஷித்தராய் ஆட –கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே –அக்காரக்கனி அரசே-மன்யே மந்த தீ யஸ்தான் -அஞ்ஞானம் தலை எடுத்து-மாதங்கா நேவ மத ஜூஷ் கலுஷான் –கலங்கிய அறிவால் மதம் பிடித்த யானை போல் – காட்டில் ஸிம்ஹ அரசன் முன் ஆடும் யானை மாள்வது போல் அன்றோ இவர்கள் –

———

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே
ஸ்வஸ்தி ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை கடிகாத்ரி பூபுஜே பூயாத் –60-

துஷ்டாந்‌ – துஷ்டர்களை, தரஸா விரைவிலேயே, நிக்ருஹ்ய – தண்டித்து, சிஷ்டாந்‌ அகிலாந்‌ – நல்லோர்கள்‌ அனைவரையும்‌. சிரேண – வெகு நாட்களாகவே, பாலயதே காப்பாற்றி வருமவனும்‌, ஸுஹ்ருதே நல்ல மனமுடையவனும்‌, குணாநாம்‌ பூத்யை நற்குணங்களுக்கு இருப்பிடமானவனுமான-கடிகாத்ரி பூபுஜே – கடிகைமலை யரசனுக்கு, ஸ்வஸ்தி பூயாத்‌ – க்ஷேமம்‌ உண்டாயிடுக.
58ம்‌ ஸ்லோகத்தில்‌ தாம்‌ பகவத் கிங்கரரானமையத்‌ தெரிவித்து மகிழ்ந்து, 59ல்‌ பகவத்‌ த்வேஷிகளை நிந்தித்து, இப்படி துஷ்டர்களை யழித்தலையும்‌ சிஷ்டர்களைக்‌ காத்தலையும்‌ தொழிலாகக்‌ கொண்ட எம்பெருமான்‌ தன்மைக்குத்‌ தோற்று, அவனுக்குப்‌ பல்லாண்டு பாடினாராயிற்று இதனால்

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா -அனிஷ்டங்களைப் போக்கி அருளி –தரஸா-விரைவில்
ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே-ஸமஸ்த இஷ்ட ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை -நல்ல குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடம்-ப்ரதானங்களையும் எப்பொழுதும் அருளி
ஸ்வஸ்தி கடிகாத்ரி பூ பஜே பூயாத் –அக்காரக்கனி தெய்வத்துக்கு அரசுக்கு பல்லாண்டு பாடுவோம்

————

ம்ருதுளம் பவாக்நி பாகாத் வ்யாப்தம் குணதோ வி ஸூத்தம் அஹம் அன்னம்
போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –61

பவஅக்நி பாகாத்‌ – ஸம்ஸாரமென்னும்‌ அக்நியால்‌ சமைக்கப்பட்டதனால்‌, ம்ருதுளம்‌ – (1 மெத்தென்றிருப்பதும்‌ (2) மனம்‌ கனியப் பெற்றவனும்‌, குணத: – (1) சுவையாகிற குணத்தினால்‌ நிறைந்ததும்‌ (2) சம தமாதி குணங்களினால்‌ நிறைந்தவனும்‌, விசுத்தம்‌ – (1) மிகவும்‌ சுத்தமானதும்‌ (2) மிகவும்‌ பரிசுத்தமான வனும்‌, போஜ்யம்‌ – உண்ணத் தக்கதுமான, அந்தம்‌ – அந்நமாக, போஜ்யம்‌ ஸ்வம்‌ – அனுபவிக்கத் தக்கவனுமான தன்னை (என்னை) கடிகாசலஸ்ய போக்த்ரே – கடிகை மலையில் வுள்ள (1) உண்ணுமவன்‌ பொருட்டு (2) அனுபவிப்பவன்‌ பொருட்டு, ஸஸ்நேஹம்‌ – (1) நெய்யோடு கூட (2) பக்தியோடு கூட, ஸமர்ப்பயே – ஸமர்ப்பிக்கிறேன்‌.
இதில்‌ எறும்பியப்பா கடிகை மலை யெம்பெருமானுக்குத்‌ தம்மை அந்நமாக ஸமர்ப்பிக்கிறார்‌. (1) என்று குறிக்கப்பட்ட விசேஷணங்கள்‌ அந்நத்துக்கும்‌, (2) என்று குறிக்கப்பட்ட விசேஷணங்கள்‌ – ஸ்வம்‌ என்‌பதனால்‌ சொல்லப்பட்ட தமக்கும்‌ (எறும்பி அப்பாவுக்கும்‌) பொருத்துக.
அந்நம்‌ சமைக்கப்பட்டு மெத்தென்றிருக்கும, சுவைக் குணம்‌ நிறைந்திருக்கும்‌, தூய்மை பெற்றிருக்கும்‌, நெய் சேர்ந்திருக்கும்‌. இப்படிப்பட்ட அந்நமே உண்பவனுக்கு உண்ணத் தக்கது. அங்ஙனமே அப்பாவும்‌ ஸம்ஸாராக்நியினால்‌ சமைக்கப்பட்டு முரட்டுத்தனம்‌ நீங்கி மெத்தென்றிருப்பர்‌. மனவடக்கம்‌ பொறியடக்கம்‌ முதலிய குணங்கள்‌ நிறையப் பெற்றிருப்பர்‌. அதனால்‌ தூய்மை பெற்றிருப்பர்‌. பகவானிடம்‌ பக்தியுடனிருப்பர்‌. இப்படிப்பட்ட இவர்‌ அனுபவிக்கின்ற பகவானுக்கு அனுபவிக்கத் தக்கவராயிருப்பர்‌ என்றபடி.

மருதலம் -வெந்து குழைந்து –நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற
பவாக்நி பாகாத் -அக்னியால் பக்குவப்பட்டு -சம்சார பாவாக்னி
வ்யாப்தம் குணதோ -ருசி மிக்கு சமதமாதி குணங்கள் நிறைந்து
வி ஸூத்தம் -பரி ஸூத்தம் –நெய் சமஸ்க்ருதம் அன்ன ஸூத்தி நிறைந்து
அஹம் அன்னம் போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் -அடியேனை சமர்ப்பிக்கிறேன் -சொத்து தானே-போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –இஷ்டமாக அனுபவித்து -ஸ்வாமி சொத்தை -நெய் -மிகுந்த பக்தி -நிறைந்த அன்னம் -அடியேன் பல்லாண்டு கீழே அருளி –அம்மம் உண்ண இதில் -பெரியாழ்வார் போல் இவரும் இதில்

————–

நித்ய ஸ்ரீ யே குணா நாம் நிதயே நிஷ்ட யூத நிகில தோஷாய
ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –62-

நித்ய ஸ்ரியே – பிராட்டியோடு எப்போதும்‌ கூடியிருப்பவனும்‌, (அது காரணமாக) நிஷ்ட்யூத நிகில தோஷாய – காரி யுமிழப்பட்ட எல்லாக்‌ குற்றங்களை யுமுடையவனும்‌, குணாநாம்‌ நிதயே – நற்குணங்களுக்கு நிதி போன்றவனுமான, கடிகாசலஸ்ய பர்த்ரே கடிகாசலத்தில்‌ வாழும்‌ எம்பெருமானாகிய கணவனுக்கு, பாக்ய வசாத்‌ – (என்னுடைய) அத்ருஷ்ட வசத்தில்‌, மயா – என்னால்‌. எஷா ப்ரஜ்ஞா – இந்த ப்ரஜ்ஞை என்னும்‌ கன்னிகை, அர்ப்பிதா – ஸமர்ப்பிக்கப் பட்டாள்‌.
இங்கு ப்ரஜ்ஞையாவது இடையறாமல்‌ எம்பெருமானை நினைத்தலாகிய ஜ்ஞான விசேஷம்‌. இதுவே பக்தி யெனப்படும் -இது தன்னை அவனுக்குக் கொடுத்தலாவது அவனையே எப்போதும்‌ நினைத்தல்‌ என்றபடி -அல்லது தத்வ ஹித புருஷார்த்த விஷயமான புத்தியும்‌ ப்ரஜ்ஞையாகலாம்‌. இதை நாயகனுக்கு ஸமர்ப்பித்தலாவது எம்பெருமானையே பர தத்துவமாகவும்‌ மோஷ உபாய ரூபமான ஹிதமாகவும்‌ புருஷார்த்தமாகவும்‌ அறுதி யிட்டிருக்கையாகும்‌. எம்பெருமானை பர்த்தா என்று குறித்துள்ளதற்கேற்ப, ப்ரஜ்ஞை கன்னிகையாகக்‌ கருதப்பட்டது. ஆக “ பிராட்டியின்‌ நித்ய யோகத்தினால்‌ குற்றமாகிய ஸ்வாதந்த்ரியம்‌ தலை மடிந்து, அதனால் தலை யெடுத்த வாத்ஸல்யாதி குணங்களை யுடைய எம்பெருமானாகிய மணவாளப்‌ பிள்ளைக்கு தமது ப்ரஜ்ஞையாம்‌ கன்னிகையைக்‌ கைப்பிடிக்கும்படி ஸமர்ப்பித்தார் ஆயிற்று -இதனால்‌. “ஓண் தாமரையாள்‌ கேள்வ னொருவனையே நோக்குமுணர்வு’ தான்‌ உணர்வாவது அதுவே இங்கு ப்ரஜ்ஞையாகக்‌ குறிப்பிடப்பட்டது என்க –

நித்ய ஸ்ரீ யே –கூடவே பிரியாமல் -ஸ்ரீ யபதி புருஷார்த்தம் இருப்பதால் பயப்படவே வேண்டாமே-காகாசுரன் இவள் சந்நிதியால் உஜ்ஜீவித்தான் -ராவணன் இவள் அஸந்நிதியால் மாண்டான்
குணா நாம் நிதயே-அதுக்கும் மேல் குணக்கடலாகவும்
என்னடியார் அது செய்யார் என்பவனும் ந கச்சின் ந அபராதயதி என்பாளும் உண்டே
நிஷ்ட யூத நிகில தோஷாய-காரி உமிழும் படி தோஷங்கள் அனைத்துக்கும் இருப்பிடமான நம் போல்வாரும்-ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே -ப்ரஞ்ஞா -தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள்-இவற்றை உணர்ந்து -ஸமர்ப்பிக்கப் பட்டாள்
கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –அதிர்ஷ்ட வசமாகப் பெற்ற மணவாளன் அக்காரக்கனி அன்றோ -திரிபுவன -உபய விபூதி நாயகன் அன்றோ
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -பிரதம மத்யம சரம பர்வதங்கள் -பெருமாள் -ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர் -ஆச்சார்யர் —கன்னிகையாக உருவகம் –தாயார் கூடவே இருப்பதால் பெற்ற பலன் அன்றோ –

—————

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் சாத்ரே ஸத் புருஷ வித் விஷாம் ஸததம்
தாத்ரே ஸகல பலா நாம் நேத்ரே ஜகதாம் நமோ ந்ருஸிம்ஹாய –63-

ஸததம்‌ – எப்போதும்‌, ஸமாஸ்ரிதாநாம்‌ – தன்னை யடைந்தவர்களை, பாத்ரே காப்பவனும்‌, ஸத் புருஷ வித்விஷாம்‌ – தன்னை யடைந்த ஸத்புருஷர்களின்‌ பகைவர்களை, சாத்ரே – மெலிவுறச்‌ செய்பவனும்‌-அழிப்பவனும்‌, ஸகல பலாநாம்‌ – எல்லா விதமான பலன்களையும்‌, தாத்ரே – (தன்னை யடைந்தவர்களுக்குத்‌, தருமவனும்‌ (இங்ஙனமாக) ஜகதாம்‌ – உலகத்திலுள்ளோர்க்கு, நேத்ரே – நாயானாகிய, ந்ருஸிம்ஹாய – நரஸிம்ஹப்‌ பெருமாளுக்கு, நம: – நமஸ்காரம்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எம்பெருமானே தத்வமும்‌ ஹிதமும்‌ புருஷார்த்தமும்‌ என்றறுதி யிடுதற்குரிய ப்ரஜ்ஞையை உடையவராகத்‌ தம்மைக்‌ குறிப்பிட்டவர்‌, அந்த ப்ரஜ்ஞைக்குத்‌ தக்கபடி எம்பெருமானுக்கு நமஸ்காரம் செய்கிறார்‌ இது தன்னில்‌. அவனே பர தத்துவம்‌ (சேஷி) என்றறிந்தாலும்‌, அவனே ஹிதம்‌ (மோக்ஷோபாயம்‌) என்றறிந்தாலும்‌, அவனே புருஷார்த்தம்‌ (ப்ராப்யம்‌) என்றறிந்தாலும்‌ அவனுக்கு நமஸ்காரம்‌ செய்யவேணுமிறே. அதனாலன்றோ திருமந்‌திரத்தில்‌ நடுவிலுள்ள நம: பதத்தை ஆவ்ருத்தி செய்து- சேஷியைச்‌ சொல்லும்‌ ப்ரணவத்தோடும்‌ உபாயத்தைச்‌ சொல்லும்‌ ‘நம:” பதத்தோடும்‌, ப்ராப்யத்தைச்‌ சொல்லும்‌ நாராயணாய என்னும்‌ பதத்தோடும்‌ ஆசார்யர்கள்‌ கூட்டி அர்த்தம்‌ அருளிச் செய்வது.

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதர் அனைவரையும் கை விடாமல் காத்து அருளி
சாத்ரே ஸத் புருஷ வித்விஷாம் ஸததம் –ஸத் புருஷர் -ஸாத்விகர் -ஆக்கி அருளி -தமோ ரஜோ குணம் தலை தூக்க விடாமல் பண்ணி அருளி
தாத்ரே ஸகல பலா நாம் -ஸமஸ்த அபீஷ்டங்களையும் அருளி
நேத்ரே ஜகதாம்அனைவருக்கும் கண்ணாவான் -நாயகன் ஆவான் –
நமோ ந்ருஸிம்ஹாய-அடியேன் உம்மை நமஸ்கரிக்கிறேன்
மந்த்ர ராஜ -திருமந்திரம் -திரு அஷ்டாக்ஷரம் -அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் அவனே தத்வம் -அவனே உபாயம் -அவனே உபேயம்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
பர கத ஸ்வீ கார நிஷ்டர் -இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
பொருள் அல்லாத அடியேனை பொருளாக்கி அடிமை கொள்வான்
ஓம் நம -ஸ்வரூப விரோதி அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளி
நமோ நம -உபாய விரோதி கழித்து அருளி
நாராயணாயா நம -ப்ராப்ய விரோதி கழித்து அருளி
நரஸிம்ஹ -நாராயணா போல் சதுர் அக்ஷரீ தானே –

———–

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் ஸூக முக ஸேவ்யாத் ஸூ ஸீதலச் சாயாத் –
கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத கஸ்யா காங்ஷிதம் ந பலம்–64-

ஸுமநஸ் ஸமூஹ பவ்யாத்‌ – (1) தேவதா ஸமுஹத்திற்கு க்ஷேமமளிப்பவனும்‌, (2) புஷ்ப ஸமூஹத்தினால்‌ மங்களமானதும்‌, சுக முக ஸேவ்யாத்‌ – (1) சுக முனிவர்‌ முதலியவர்களாலே ஸேவிக்கத் தக்கவனும்‌, 2) கிளி முதலிய பஷிகளாலே அடையப் பெற்றதும்‌, ஸுசீதள ச்சாயாத்‌ – மிகக்‌ குளிர்ந்த காந்தியை உடையவனும்‌ (2) மிகக்‌ குளிர்ந்த நிழலை யுடையதும்‌, கடிகாத்ரி தட நிசநடாத்‌ – கடிகைமலைத் தாழ்வரையில்‌ (1) தோன்றியவனுமான (2) முளைத்ததுமான. கல்பகத: – (1) எம்பெருமானாகிய (2) கற்பக மரத்தினிடமிருந்து, கஸ்ய – யாருக்கு, காங்க்ஷிதம்‌ பலம்‌ (1) விரும்பிய பலன்‌ (2) விரும்பிய பழம்‌, ந(லப்யதே) கிடைக்காது.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எல்லாப்‌ பலன்களையும்‌ தருமவன்‌ என்று அந்வயத்தினால்‌ (உடன்‌ பாட்டினால்‌) அருளிச்‌ செய்தவர்‌, அது தன்னை திடப் படுத்துவதற்காக இந்த ஸ்லோகத்தில்‌, யாருக்கு என்ன பலன்‌ கிடைக்காது என்று “வ்யதி ரேகத்தினால்‌” (எதிர் மறையினால்‌) அருளிச் செய்கிறார்‌. மேலும்‌ எம்பெருமானை எல்லாப் பயன்களையும்‌ எல்லாப்‌ பழங்களையும்‌ கொடுக்கும்‌ கற்பக மரமாக ரூபணம்‌ செய்கிறார் இதில் எம்பெருமானுக்கும்‌ கற்பகத்‌ தருவுக்கும்‌ பொருந்தும்படி சிலேடையில்‌ விசேஷணங்களை யமைத்துள்ளமை காண்க-

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் –வ்ருக்ஷத்தில் புஷ்ப ஸமூஹம் இருக்குமே-தேவதா ஸமூஹங்களுக்கு-ஸூக முக ஸேவ்யாத் -கிளி போன்றவை தங்கும் இடம்-ஸூக பிரமுகர்கள் பலரால் ஸேவிக்கப் பட்டவர்-ஸூ ஸீதலச் சாயாத் –குளிர்ந்த நிழல் பரவி இருக்குமே00சம்சார தாப த்ரயங்களைப் போக்கி அருளி-கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத -தாழ்வரையில் -கற்பக வ்ருக்ஷம்-கஸ்யா காங்ஷிதம் ந பலம் –யாருக்குத் தான் ஆசைப்பட்டவை கிடைக்காமல் போகும்-வியதிரேகத்தில் என்ன பலம் தான் கிட்டாது என்று இதில் திடமாக புத்திக்கு உபதேசம் –எனக்கே தந்தைத் தந்த கல்பகம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான்

————–

அவிரத ஹித ப்ரவ்ருத்தே ஆபதி ஸஹிதாத் அக்ருத்ரிம ஸ்நேஹாத்
மம கடிகாசல பந்தோ மான்யா தன்யேந கேந கிம் கார்யம் –65-

அவிரதஹித ப்ரவ்ருத்தே – இடைவிடாமல்‌ நமக்கு நன்மை செய்வதில்‌ முயலுமவனும்‌, ஆபதி – ஆபத்து வரும் போது, ஸஹிதாத்‌ – நம்மை விடாமல்‌ கூடவே இருப்பவனும்‌, (அவ்விரண்டிற்கும்‌ உதவியாக) அக்ருத்ரிம ஸ்நேஹாத்‌ – இயற்கையான (கபடமற்ற) நட்புடையவனும்‌, மாந்யாத்‌ – (அதனால்‌) கெளரவிக்கத் தக்கவனுமாகிய கடிகாசல பந்தோ: – கடிகை மலைபிலுள்ள பந்துவான எம்பெருமானை விட, அந்யேந வேறான, கேந – யாராலே, மம – எனக்கு, கிம்‌ கார்யம்‌ – எந்த காரியம்‌ (ப்ரயோஜனம்‌), பவேத்‌ உண்டாகக்‌ கடவது.
உண்மையான பந்துவுக்கு லக்ஷணம்‌ – கபடமற்ற நட்பும்‌, எப்போதும்‌ தன்‌ நண்பனுக்கு நன்மை செய்யும்‌ முயற்சி யுடைமையும்‌, ஆபத்து வந்தால்‌ கூடவே இருந்து உதவி செய்வதுமாகும்‌. அத்தகைய லக்ஷணம்‌ எம்பெருமான்‌ தவிர வேறு யாரிடமும்‌ இல்லாமையால்‌ அவனைத்‌ தவிர்ந்த யாரால்‌ எனகக என்ன காரியம்‌ ஆக வேண்டியிருக்கிறதென்றார்‌ இதனால்‌. எம்பிரானெந்தை என்னுடைச்‌ சுற்றம்‌ (பெரியதிருமொழி 1.1.6) என்று தொடங்கிக்‌ கலியன்‌, ஸர்வேஸ்வானே எல்லா வித பந்துவுமாவான்‌ என்றருளிச்‌ செய்தார் இறே –

அவிரத ஹித ப்ரவ்ருத்தே -நன்மையே செய்யும்-ஆபதி ஸஹிதாத் –ஆபத்துக்களில் துணையாக-அக்ருத்ரிம ஸ்நேஹாத் -இயற்கையாகவே நண்பன்-ஸக்யம் நவ வித பகுதிகளில் ஸ்நேஹ பாவமும் உண்டே-மம கடிகாசல பந்தோ –உற்ற நண்பனே விளிச் சொல்-மான்யாத் –மதிக்க வேண்டுமே-அன்யேந கேந கிம் கார்யம்--இவரை விட வேறே யாரால் என்ன வேண்டும்

—————

கந கருண அம்ருத பூரை கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநி தை
பாப அடாவீ ப்ரதக்தா பஜதே சித்ரம் பவ அம்புதி ஸோஷம் –66-

கடிகசால க்ருஷ்ண மேகத. – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிய கறுத்த மேகத்தாலே, ஜநிதை: – உணடு பண்ணப்பட்ட, கந கருணா அம்ருதபூரை: பெருங் கருணையாகிற அம்ருத ப்ரவாஹங்களினால்‌, பாப அடவீ – எனது பாவங்களாகிய காடு, ப்ரதக்தா – நன்றாகக்‌ கொளுத்தப்பட்டது; பவஅம்புதி:- (எனது) ஸம்ஸாரமாகிய கடல்‌, சோஷம்‌ பஜதே – வற்றுதலை அடைகிறது. சித்ரம்‌ – இது ஆச்சரியம்‌.
கொளுத்தும்‌ சக்தியும்‌ வற்றச்‌ செய்யுமாற்றலும்‌ நெருப்புக்கிருக்க, இதில்‌ கருணாம்ருத ப்ரவாஹத்திற்குப்‌ பாவங்கொளுத்து மாற்றலும்‌, பிறவிக் கடலை வற்றச்‌ செய்யும்‌ சக்தியும்‌ உண்டானதாகச்‌ சொல்லியதனால்‌ இது ஆச்சரியமென்றார்‌. குளிர்ந்த கருணையை
நெருப்பென்ன மாட்டாமல்‌ அம்ருத ப்ரவாஹம் என்றார்‌ என்க. இதில்‌ எம்பெருமானை கைம்மாறு கருதாமல்‌ மழை பொழியும்‌ கார்மேகம் என்றார்

கந கருண அம்ருத பூரை –அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அம்ருத ப்ரவாஹம் பொழிந்து
கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநிதை -இன்னும் கார் வண்ணனே
பாப அடாவீ ப்ரதக்தா -காட்டுத்தீயையும் அணைக்க வல்ல மேகம் அன்றோ
பவ அம்புதி ஸோஷம் –சம்சாரக்கடலை வற்ற வைக்கும் மேகம் அன்றோ
சித்ரம் பஜதே –என்ன ஆச்சர்யம் -ஆஸ்ரயிக்க வேண்டாவோ

————

கோபி பிரகாசி தார்த்தாத் கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத்
ஜாகர்தி ஸதத நித்ரம் ஸ விதுர் ஜகதாம் மனஸ் ஸரோஜம் மே –67-

கோபி: (1) தனது கிரணங்களினால்‌ (2) (கீதை சரமச்லோகம்‌ முதலிய) தனது ஸ்ரீஸூக்திகளினால்‌, ப்ரகாசித அர்த்தாச்‌ – (1) உலகிலுள்ள பொருள்களைக்‌ கண்களுக்குக்‌ காட்டுபவனும்‌ (2) சாஸ்த்‌ரார்த்தங்களை விளங்கச் செய்பவனும்‌, கடிகாஅபிதாநவதி கோத்ரே – கடிகை யென்னும்‌ பெயர்‌ பெற்ற மலையில்‌, உதிதாத்‌ தோன்றியவனுமான, ஜகதாம்‌ ஸவிது: – (1) உலகங்கட்கு ஸூர்யனானவனிடமிருந்து, ஸதத நித்ரம்‌ (1) எப்போதும்‌ கூம்பியே இருக்கிற (2) எப்போதும்‌ அறியாமையாகிய தூக்கங் கொண்டிருக்கிற, மே – என்னுடைய, மந: ஸரோஜம்‌ – தாமரை போன்ற மனஸ்ஸானது, ஜாகர்த்தி – (1) மலர்ச்சியை அடைகிறது (2) அறிவாகிய மலர்ச்சியைப்‌ பெறுகிறது.
கெள: – கிரணமும்‌ வாக்கும்‌. கோத்ரம்‌ – மலை. ஸவிதா – ஸூர்யனும்‌,-உலகங்களைப்‌ பெற்ற எம்பெருமானும்‌. இதில்‌ எம்பெருமானை ஸூரியனாகப்‌ பேசி யனுபவித்தார்‌

கோபி பிரகாசி தார்த்தாத் -தனது கிரணங்களால் பொருள்களை விளக்கும் ஆதித்யன்
கருணை ப்ரவாஹ -ஸ்ரீ ஸூக்திகளால் -சரம ஸ்லோஹாதிகள் -இவற்றால் ஸாஸ்த்ர சாரங்களை அருளிச் செய்து விளக்கி
கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத் –மலையிலே -உதித்து –
கீழே 13 ஸ்லோகம் கபி சூர்யன் உதித்து அக்காரக்கனியை ஸேவித்து பார்த்தோம்
எம்பெருமான் தானே உகந்து அருளி நித்யவாஸம் செய்து அருளி
ஜாகர்தி சதத நித்ரம் ஸ விது ஜகதாம் -உறக்கத்தில் இருந்து எழுப்பி
ஆதித்ய உதயம் முன்பே எழும் சாத்விகர் -காணாமல் கண்டு கொண்டு திரிகால சந்த்யா வந்தனம்
அஞ்ஞானம் அந்தகாரம் -உழன்று இருக்கும் சம்சாரிகள் விடுபட்டு ஞான மலர்த்தியை
மனஸ் ஸரோஜம் மே -மானஸ தாமரையை அலர்த்தும் அக்காரக்கனியே
தானே புகுந்து அகற்றி-விகஸித்து அருளுகிறார் -என்று ஸ்லாகிக்கிறார்

————

ருஷ்டேந யேந ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி
கந துரித தந்திநோ அஸ்மாத் கடிகாத்ரி ஹரே கதம் ந பிப்யது மே –68-

ருஷ்டேந யேந – கோபமடைந்த எம் பெருமானாலே, ருத்ர: – சிவபெருமான்‌, சரப:அபி – சரப வுருக்‌ கொண்ட போதிலும்‌, ருக்ண: – தோற்றுப்போய்‌, தரணீம்‌ ஜகாம – பூமிக்குள்ளே புகுந்து கொண்டானோ, அஸ்மாத்‌ கடிகாத்ரிவரே: – அத்தகைய இந்த கடிகாசலச் சிங்கப்‌ பெருமானிடமிருந்து, மே – என்னுடைய. கந துரித தந்திந: – மஹா பாதங்களாகிய யானைகள்‌, கதம்‌ – எப்படி, ந பிப்யது – அஞ்ச மாட்டா,
இக் கடிகை மலைச்சிங்கம்‌ சரபத்தை.. அச்சுறுத்துவதாக இருக்க, இதனிடம்‌ யானைகள்‌ அஞ்சுவதைப்‌ பற்றித்‌ தனியே சொல்ல வேண்டுமா ? என்றபடி
சரபம்‌ – இரண்டு தலைகளையும்‌ சிறகுகளையும்‌ கூரிய நகமுள்ள எட்டுக் கால்களையும்‌ மேல்‌ நோக்கி. கண்களை யுமுடைய மிருக விசேடம்‌. இதனைப்‌ பறவை யென்றலுமுண்டு. இது சிங்கத்தை எளிதிற்‌ கொல்லுந்‌ திறமுடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்கமாதலாலும்‌, ஸாமாந்ய ஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலுடைய புருஷோத்தமனது அவதாரமான திவ்ய ஸிம்ஹமாதலாலும்‌ இது சரபத்தைக்‌ கொன்று விட்டது-
ஹே! மர்த்ய ஸிம்ஹவ புஷஸ்தவ தேஜஸோஃம்ம ஸம்புர்‌ பவந்ஹி ஸரப: ஸலபோ பபூவ” சரப வுருக்‌ கொண்ட சிவன்‌ நரஸிம்ஹ ரூபங்கொண்ட உனது தேஜஸ்ஸில்‌ ஒரு மூலையில்‌ விட்டில்‌ பூச்சி போலே அகப்பட்டு மாண்டானன்றோ ? இது ஆச்சரியம்‌ – என்று கூரத் தாழ்வான்‌” (அதிமாநுஷ ஸ்தவ ‘ – 12) அருளிச் செய்தது ஸேவிக்கத் தக்கது –

ருஷ்டேந யேந -கொண்ட சீற்றம் ஓன்று இருக்க
ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி –சரப உருவாக வந்த பொழுதும் கூட
தோற்று கீழே ஒளிந்து போகப் பண்ணினாய் அன்றோ-
இவ்வளவு வைபவம் கொண்ட அக்காரக்கனி அழகிய ஸிம்ஹர் முன்னால்
பாப மூட்டையாகிய பெரிய யானைகள் பயந்து நடுங்கச் சொல்லவும் வேணுமோ

கிரீடா விதேஸ் பரிகரஸ் தவ யா து மாயா சா மோஹிநீ ந கதமஸ்ய து ஹந்த ஐந்தோ ஹை மர்த்ய ஸிம்ஹ வபுஷஸ் தவ தேஜஸ் சா அம்சே சம்புர் பவந் ஹி சரபச் சலபோ பபூவ –12-யாதொரு மாயையானது-தேவரீருடைய லீலா வியாபாரத்துக்கு ஸாமக்ரியையாய் இருக்கிறதோ அந்த மாயை யானது எந்தப் பிராணிக்குத் தான் அவி விவேகத்தை உண்டு பண்ணுகிறது இல்லை சரப உருக் கொண்ட சிவனானவன் நரஸிம்ஹ வடிவு கொண்ட தேவரீருடைய தேஜஸ்ஸின் ஏக தேசத்திலே வீட்டில் பூச்சி போலே பட்டு ஒழிந்தான் இறே–என்ன ஆச்சர்யம் –சலபோ பபூவ-லகாரம் -ரகாரம் -சரபம் சலபம் ஆனதே என்ன ஆச்சர்யம் –ஸ்ரீ நரஸிம்ஹ பிரதாபா அக்னிஸ் புலிங்கத்திலே வீட்டில் பூச்சி பட்டது பட்டான் என்பது மாயையின் காரியமே-இத்தை கண்ட ருத்ரன் உனது பரத்வம் அறிந்து போனான் வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும் அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த சிங்கவேள் குன்றத்தினார்க்கு –சிங்க வேள் குன்றம் நூற்று எட்டு அந்தாதி -97-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்-சரபத்தை பிளந்தாயே -மன்மதனை எரித்த சிவனையே பிளந்தாயே

————–

அவ்யாஹத ப்ரஸாராத் அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் ஸஹஸ்ராஸ்யாத்
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் கடிகாத்ரி போகிந கோஹி –-69-

அவ்யாஹத ப்ரசாராத்‌ – தடை யற்ற ஸஞ்சாரத்தை யுடையதும்‌, அபஹத மந்த்ர ஒளஷதாத்‌ – தூரத்தில்‌ துரத்தப்பட்ட மந்த்ரமென்ன மருந்தென்ன இவற்றை யுடையதும்‌ (மந்திரத்திற்கும் மருந்துக்கும்‌ கட்டுப்படாததும்‌), ஸஹஸ்ரஆஸ்யாத்‌ ஆயி ரவாய்களுடையதுமான, கடிகாத்ரி போகிந: – கடிகை மலையிலுள்ள போக மனுபவிக்கும்‌ எம்பெருமானாகிய ஸர்ப்பத்தைக்‌ காட்டிலும்‌, கோ ஹி – வேறு யார் தான்‌, பாதக மூஷிக நிவஹாத்‌ – பாபமாகிய எலிக் கூட்டத்திலிருந்து, பாயாத்‌ (நம்மைக்‌) காப்பாற்றக் கடவர்‌.
இதில்‌ எம்பெருமானை ஸர்பமாக “ரூபணம்‌” செய்தார்‌. ஆயிர முகமுடைய எம்பெருமானாகிற ஸர்ப்பம் தான்‌ நம்முடைய எண்ணற்ற பாதகமாகிய எலிகளை விழுங்க வல்ல தென்றபடி. போகீ – பாம்பும்‌, போகமனுவிப்பவனும்‌, மந்திரமும்‌ மருந்தும்‌ தானிட்ட வழக்காகப்‌ பெற்ற எம்‌பெருமானாகிற பாம்பு, மந்திர – மருந்துகளுக்குக்‌ கட்டுப்படாமல்‌ தடையற்று பக்தர்களுள்ள விடந்தோறும்‌ திரிந்து அவர்களுடைய பாதக மூஷிகங்களை விழுங்குமென்பது கருத்து –

அவ்யாஹத ப்ரஸாராத் -தனக்கு தடை இல்லாமல் எங்கும் புகுந்து -சஞ்சரிக்கும் அரவம்
ஸர்வ வ்யாபி -அண்டம் அகத்தும் புறத்தும் உள்ளான்
அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் -மந்த்ரத்துக்கும் ஒவ்ஷதத்துக்கும் கட்டுப்படாமல்
வேதமோ தபஸோ ஹோமமோ -கட்டுப்படுத்த முடியாமல் -பக்தி ஒன்றாலே –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ
ஸஹஸ்ராஸ்யாத் -ஆயிரம் தலை கொண்ட –ஸஹஸ்ரம் பல பலவே ஸர்வேஸ்வரேஸ்வரனையே சொன்னவாறு
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் –எலி பயல்கள் போல் -துஷ்ட பாபங்களையே எலி கூட்டமாக –கடிகாத்ரி போகி ந கோஹி -அக்காரக் கனியைத் தவிர வேறே யாரால் போக்க முடியும்

———–

கலித புருஷார்த்த ஸார்தாத் கடிகா கடிதாத் ஸநாதநாத் தர்மாத்
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –70 –

கலித புருஷார்த்த ஸார்த்தாத்‌ – உண்டு பண்ணப்பட்ட புருஷார்த்த ஸமூஹத்தை யுடைய உபாயமாயும்‌, கடிகா கடிதாத்‌ – கடிகை மலையில்‌ (மஹிரிஷிகளால்‌) சேர்க்கப் பட்டதுமான, ஸநாதநாத்‌ தர்மாத்‌ . நம்மால்‌ முயன்று உண்டாக்கப்படுகின்ற கரும யோகாதி தருமங்கள்‌ போலன்றிககே) நித்ய ஸித்தமான தருமமாகிய கடிகை யெம்பெருமானிடமிருந்து, ப்ரமாத்யதாம்‌ – தவறின, பும்ஸாம்‌ – புருஷர்களுக்கு, அத்ர அமுத்ர வா – இம்மையிலோ மறுமையிலோ, கிம்‌ வா க்ஷேமம்‌ ஸ்யாத்‌ – எந்த நன்மை தான்‌ உண்டாகும்‌ ?
புருஷார்த்தங்கள்‌ – இம்மை மறுமைகளல்‌ இன்பமும்‌, கைவல்ய மோக்ஷ ஸூகமும்‌ பரம பதத்தில்‌ பகவதநுபவ ஸூகமுமாம்‌, தருமம்‌ – ஸூகத்தைச்‌ சாதித்துத்‌ தரும்‌ உபாயம்‌ – முன்‌ ஸ்லோகத்தில்‌ ஸுகாநுபவத்திற்குத்‌ தடையாக வுள்ள பாவங்களை நீக்குதலாகிய அநிஷ்ட பரிஹாரம்‌ கூறினார்‌. இதில்‌ (இஷ்டமாகிய) ஸூகத்தைத்‌ தருவதாகிய இஷ்ட ப்ராபணம்‌ கூறினார்‌. இவை யிரண்டுமன்றோ உபாயத்தின காரியம்‌; ஹி ஹி – பாத பூரணம்‌.

கலித புருஷார்த்த ஸார்தாத் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -இங்கும் அங்கும் -தந்து அருளும்
கடிகா கடிதாத் ஸநாத நாத் தர்மாத் -அக்காரக்கனி -தர்ம நிஷ்டையில் -ததாமி ஏதத் விரதம் மம -என்னுமவன் அன்றோ
அநாதி தர்மம் ராமாவதாரத்தில் வெளிப்படுத்தி அருளி -அவனைப் போல் அநாதி
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –இவ்வாறு இருந்தும் நாம் இடறி விழுகிறோமே
பும்ஸாம் -மானிடர்கள் –
அத்ர அமுத்ர-இங்கும் அங்கும்
க்ஷேமம் பெறாமல் இழப்பது ஆச்சார்யம் அன்றோ -ஹி –

———

கந ஸமய நிர் வ்யபேஷாத் மேகாத் கடிகாத்ரி பர்த்ரு ருத்பூதா
ஷாள யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –71-

கந ஸமய நிர் வ்யபேக்ஷாத்‌ – கார் காலததை எதிர் பார்க்காத, கடிகாத்ரி பர்த்து: கடிகைமலைத் தலைவன்‌ என்கிற, மேகாத்‌ – மேகத்தினிடமிருந்து, உத்பூதா – உண்டான, காசந – ஒப்பற்ற, கருணா தரங்கிணீ – கருணையாகிய ஆறானது, கலுஷ மலிநம்‌ பாபத்தினால்‌ அழுக்கடைந்த, புவநம்‌ – உலகத்தை (உலகிலுள்ளோரை) க்ஷாளயதி சுத்தி செய்கிறது.
இதில்‌ எம்பெருமானை மேகமாகவும்‌, அவனிடமிருந்து பெருகுகிற கருணையை
நதியாகவும்‌ வருணிக்கிறார்‌. உலகில்‌ வெளி யழுக்கைக் கழுவித்‌ தூய்மை யாக்கும்‌ ஆறானது கார் காலத்திலுண்டாகும்‌ மேகத்தை எதிர் பார்க்கும்‌. உள்ளழுக்காகிய பாபத்தைக் கழுவிச் சுத்தமாக்கும்‌ கருணை யென்னும்‌ ஆறு கார் காலத்தை எதிர்பாராமல்‌ எப்போதும்‌ பெருகும்‌. எம்பெருமான்‌ நித்யனாகையால்‌ அவனது கருணையும்‌ நித்யமாய்ப்‌ பாபிகளுக்கு உபயோகப் படுகிறது. அதை நாம்‌ உபயோகித்துக்‌ கொள்ள வேணுமென்றபடி. தரங்கிணீ அலைகளை உடைய ஆறு.

கந ஸமய நிர் வ்யபேஷாத் -நதி தேவதை -மழை கால ருதுவை விரும்புமே -அசுத்தங்களை தள்ளிக் கொண்டு போகும் அன்றோ –ஆனால் சரத்காலம் அபேக்ஷை இல்லாத அக்காரக்கனி காள மேகம்
மேகாத் கடிகாத்ரி பர்த்ரு –தலைவன் -கணவன் -இவனே மேகம்
ருத்பூதா -உத்பத்தி செய்து அருளும்
ஷாள யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –பாப அழுக்கு கூட்டங்களை உடனே சுத்தம் பண்ணும் –கருணை அலைகள் மிக்கு உள்ள நதி-எப்பொழுதுமே -எத்தையும் எதிர்பார்க்காமலேயே செய்து அருளும் அன்றோ

————–

ஸந் நிஹித சங்க பத்மாத் ஸர்வ ஸகாத் ஸகல புண்ய ஜன ஸேவ்யாத்
கடிகாத்ரி ராஜ ராஜாத் கா வா ந ஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத் –72-

ஸமாஸ்ரிதாத்‌ – (நம்மால்‌) தஞ்சமடையப்‌ பெற்றவனாய்க்‌ கொண்டு, ஸந்நிஹித சங்க பத்மாத்‌ – (1) தன்னருகில்‌ இருக்கப்‌ பெற்ற சங்கையும்‌ தாமரை மலரையும்‌ அல்லது பிராட்டியையும்‌ உடையவனும்‌ (2) தன்னிடமுள்ள சங்க நிதி பத்ம நிதிகளை யுடையவனும்‌, ஸர்வ ஸகாத்‌ – (1) எல்லோருக்‌கும்‌ தோழனானவனும்‌, (2) சிவ பெருமானுக்குத்‌ தோழனானவனும்‌, ஸகல புண்ய ஜந ஸேவ்யாத்‌ – (1) எல்லாப் புண்யசாலி ஜனங்களாலும்‌ ஸேவிக்கத் தக்கவனுமான, (2) எல்ல புருக்ஷர்களாலும்‌ ஸேவிக்கத் தக்கவனுமான, கடிகாத்ரி ராஜ ராஜாத்‌ – கடிகை மலையிலுஎஃள குபேரனிடமிருந்து, கா வா ஸம்பத்‌ – எந்தச்‌ செல்வந்தான்‌, ந ஸ்யாத்‌ – உண்டாகாது.
இதில்‌ எம்பெருமானைக்‌ குபேரனாக வருணிக்கிறார்‌. பிரசித்தனான குபேரன்‌ – தநத: என்று பேர் பெற்றவனாய்ப்‌ பணமென்னும்‌ செல்வத்தை மட்டுமே அளிக்க வல்லவன்‌. இக் கடிகை மலைக்‌ குபேரனோ வன்னில்‌ – இப் பணமாகிய செல்வத்தோடு கூட ஆயுட் செல்வம்‌ மக்கட் செல்வம்‌ முதல்‌ இம்மைச்‌ செல்வமும்‌, சொர்க்க போகமாகிய மறுமைச்‌ செல்வமும்‌ மோக் ஷபோகமாகிய அழியாச் செல்வமும்‌ ஆகிய எல்லாவற்றையும்‌ கொடுக்குமாற்றல்‌ படைத்தவனென்பார்‌ – கா வா ஸம்பத்‌ ந ஸ்யாத்‌ – செல்வமென்று பெயர்‌ பெற்றவற்றில்‌ எது தான்‌ (இவனிடமிருந்து) உண்டாகாது என்றார்‌.
ஸந்நிஹிதெள சங்க; பத்ம: ச . அல்லது ஸந்நிஹிதே சங்க: பத்மா ச யேந ஸ: ஸந்நிஹித சங்க பத்ம: தஸ்மாத்‌ ௭-று பஹு வ்ரீஹி ஸமாஸம்‌ கொள்க. ஸர்வஸ்ய ஸகா – ஸர்வ ஸக: – ஸர்வ:- என்பது எல்லாரும்‌ என்ற பொருளையும்‌, சிவனையும்‌ குறிக்கும்‌. எல்லோருக்கும்‌ தோழன்‌ எம்பெருமான்‌, சிவனுக்குத்‌ தோழன்‌ குபேரன்‌, குபேரஸ்‌ த்ர்யம்பகஸக: என்பது அமர கோச… – குபேரன்‌ முக் கண்ணனுக்குத்‌ தோழன்‌ என்பது அதன்‌ பொருள்‌. புண்ய ஜந: – புண்யம் செய்தவனும்‌, யக்ஷனும்‌. ராஜ ராஜ: யக்ஷராஜனாகிய குபேரன்-

ஸந் நிஹித சங்க பத்மாத் -சங்க நிதி பத்ம நிதிகளைக் கொண்ட குபேரன்
சங்கம் தாமரை -அம்ருத பல வல்லித் தாயார் விட்டுப் பிரியாமல்
ஸர்வ ஸகாத் -ஸர்வேஸ்வரன் ஒருவனே -அனைவருக்கும் தோழன் -மங்களகரம் –
வைஷ்ணவானாம் யதா ஸம்பத் -அதுவே சம்பு சிவனுக்கு மங்களம் –
கீழே 68 ஸ்லோகம் சகாவாக முன்பே அருளிச் செய்தார் -ஆபத்து ரக்ஷகன்
அநந்யார்ஹம் இருக்க வேண்டியதாலும் -மற்றவரை வெறுக்கக் கூடாதே –
ஸகல புண்ய ஜன ஸேவ்யாத் -அனைவரும் ஆஸ்ரியத் தக்கவர்
கடிகாத்ரி ராஜ ராஜாத் -ராஜாதி ராஜன் -அக்காரக்கனி –
காவா நஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத்-எந்த செல்வம் தான் கிட்டப் பெறார்கள் -எல்லா செல்வங்களும்-அதுக்கும் மேலே பரம புருஷார்த்தமும் கிடைக்கப் பெறுவார்கள் அன்றோ –

————-

ப்ரஐந விஷாநல மூர்ச்சா விமுஷித சித்தான் பவோரக க்ரஸ்தான்
குர்வீத லப்த சத்தான் கோ வா கடிகாத்ரி காருடி கதோ அந்ய –73-

பவ உரக க்ரஸ்தாந்‌ – ஸம்ஸாரமென்னும்‌ சபர்ப்பத்தினால்‌ விழுங்கப்பட்டவர்களாய்‌, ப்ரஜந விஷாநல மூர்ச்சா விமுஷித சித்தாந்‌ பெண் கலவி யாகிற விஷக் காற்றின்‌ வளர்ச்சியினால்‌ கவரப்பட்ட மனத்தை யுடையவர்களை, கடிகாத்ரி காருடிகத: கடிகை மலையிலுள்ள விஷ வைத்தியனாகிய எம்பெருமானைத்‌ தவிர, அந்ய: கோ வா வேறு யார்‌ தான்‌, லப்த ஸத்தாந்‌ – ப்ராணனை யுடைபவர்களாக – ஸத்தை பெற்றவர்களாக ஸத்தையின்‌ பயனான மோக்ஷத்தை யடைந்தவர்களாக, குர்வீத – ஆக்க வல்லார்‌.
இதில்‌ எம்பெருமானை விஷம் போக்கும்‌ வைத்தியனாக வருணிக்கிறார்‌. பாம்பு தீண்டி விஷமேறிச்‌ சாகக் கிடக்கிறவனை விஷ வைத்தியன்‌ பிழைக்க வைப்பான்‌. இவ் வுலக வாழ்க்கை யென்னும்‌ அரவம்‌ தீண்டி விஷய போகமாகிய விஷமேறித்‌ தன்‌ பிறப்பிற்குப்‌ பயனாகிய மோக்ஷமென்னும்‌ உயர்ந்த ஜீவனத்தை (பிராணனை)ப் பெறாமல்‌ ஸத்தா நாசமடைய விருக்கும்‌ மனிதனை. எம்பெருமானாகிய விஷ வைத்தியன்‌ மோக்ஷமளித்துப்‌ பிராணனை உண்டு பண்ணுகிறான்‌ என்றபடி. காருடிக:– விஷ வைத்தியன் –

ப்ரஐந விஷா நல -காம மோஹத்தால் –
மூர்ச்சா விமுஷித சித்தான் -சித்தம் முழுவதும் மூழ்கி
பவோ ரக க்ரஸ்தான் -ஸம்ஸார –உரக-க்ரஸ்தான் –நம்மை விழுங்கும் சர்ப்பம் –
கீழ் 11 ஸ்லோகத்திலும் நரேந்திரன் விஷ வைத்யனாக அருளிச் செய்தார்
குர்வீத லப்த சத்தான் கோவா -அத்தை மீட்டு உஜ்ஜவிப்பிக்க வல்லவன்
கடிகாத்ரி காருடி கதோ அந்ய –அக்காரக்கனி மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணனை விட வேறே யார்-நல்ல பிராணன் –அம்ருத பலமான தன்னையே அளிப்பவர் அன்றோ –
வாடினேன் வாடி –ஓடினேன் ஓடி –நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் -என்றாரே –

——-

நித்யாந் நிரஸ்த தோஷாத் நியதபதாத் புண்ய கீர்தன ஸ்ரவணாத்
விநதோ சிதாபி தாநாத் ப்ரஹ்மண ஏவாதி கம்யதே சகலம் –74-

நித்யாத்‌ – எக்காலத்திலும்‌ அழியாமல்‌ நூலை பெற்றிருப்பவனும்‌, நியதபதாத்‌ நித்யமான பரமபதமென்னும்‌ ஸ்தானத்தையுடை பவனும்‌, நிரஸ்த தோஷாத்‌- துரத்தப்பட்ட குற்றங்களை யுடையவனும்‌, புண்ய கீர்த்தன ஸ்ரவணாத்‌ – புண்ணியத்தை உண்டாக்குகின்ற – தன்னைப்‌ பற்றிய கீர்த்தனத்தையும்‌ ஸ்ரவணத்தைமுடையவனும்‌ (எவனைத்‌ ஸ்துதித்தாலும்‌, பிறர் ஸ்துதிக்கக் கேட்டாலும்‌ அவை புண்ணியத்தை யுண்டாக்குமோ அப்படிப்பட்டவனும்‌) விநதோசித அபிதாநாத்‌ (தன்னை வணங்கிய பக்தர்களுக்குக்‌ கருணை செய்யத் தக்கவன்‌ என்று பொருள்‌ படுகின்ற) பக்தோசிதன்‌ என்ற திருநாமமுடையவனுமான, ப்ரஹ்மண: ஏவ – ப்ர ப்ரஹ்ம மமாகிய ஸ்ரீமந்‌ நாராயணனிடமிருந்தே, ஸகலம்‌ – விரும்பிய எல்லாப் பயனும்‌, அதிகம்யதே – அடையப்படுகிறது

கீழ்‌ 72ம்‌ ச்லோகத்தில்‌ கடிசை.॥லைக்‌ குபேரனிடத்தில்‌ எல்லாச்‌ செல்வங்களும்‌ கிடைக்குமென்றார்‌. அவனை வெற ॥ குபேரனென்று நினைக்க வேண்டாம்‌. அவன்‌ பரப்ரஹ்ம மென்னும்‌ ஸாக்ஷாத்‌ விஷ்ணுவேயாவான்‌. அவனிடமிருந்து எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ பெறலாம்‌ என்கிறார்‌ இதனால்‌. ஸகல பல ப்ரதோ ஹி விஷ்ணு: (விஷ்ணு எல்லாப்‌ பலன்களையும்‌ _உளிக்கவல்லவரல்லவா) என்றாரிறே வேதவ்யாஸ பகவான்‌ விஷ்ணு தர்மத்தில்‌ (43-47: விநத சப்தமும்‌, பக்த சப்தமும்‌ பரியாயமாகையால்‌, ‘பக்தோசிதன்‌” என்பதை “விரதோசிதன்‌

நித்யாந் –-ஸ நாதன் -நித்தியமாக –
நிரஸ்த தோஷாத் -அகில ஹேய ப்ரத்ய நீகன் அன்றோ
நியதபதாத் –பரமபதமும் நித்யம் அன்றோ
புண்ய கீர்தன ஸ்ரவணாத்-அது இது உது என்னாலாவது என கேனா அபி -அனைத்தும் புண்யம்
விநதோ சிதாபி தாநாத் -பக்தி பிரிய மாதவன் -பக்தி உசிதன் -கருணை பொழிபவன்
ப்ரஹ்மண ஏவ–சதேவ -ஏகமேவ அத்விதீயம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
அதி கம்யதே சகலம் –சகல அபீஷ்டங்களையும் பெற்று மகிழ்வார்கள் அன்றோ
கரந்து எங்கும் பரந்துளன் -தான் ஏற நாள் பார்த்து உள்ளானே

————–

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் ஸ்வ ஆலோகேந ஏவ வ சஷுஷோ ஜகதாம்
கடிகாத்ர மித்ரதோ அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –75-

ஸ்வ ஆலோ கேந ஏவ – (1) தன்னுடைய ஒளியினாலேயே (2) தனது கடாக்ஷத்தாலேயே, அக்ர்யாம்‌ சுத்திம்‌ – உயர்ந்த தூய்மையை, உபஜநயத: – உண்டாக்குமவனும்‌, ஜகதாம் சக்ஷுஷ: – உலகங்களுக்குக் கண்‌ போன்றவனுமான, கடிகாத்ரி மித்ரத: – கடிகை மலையிலிருக்கும்‌ ஸூரியனைக் காட்‌டிலும்‌, அந்யம்‌ – வேறொருவனை, அஹம்‌ – நான்‌, அகிலலோக பாந்தவம்‌ – எல்லா வுலகங்களுக்கும்‌ பந்துவான ஸூரியனாக, ந கலயே எண்ண மாட்டேன்‌.
இதில்‌ எம்பெருமானை ஸூரியனாக ரூபணம்‌ செய்கிறார்‌. எம்பெருமானென்கிற ஸூரியனை விட – வேறான ஆகாயத்தில் தோன்றும்‌ ஸூரியனை ஸூரியனாகக்‌ கருத மாட்டேன்‌ என்கிறார் இதனால்‌.

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் -முதன்மை -பவித்ரம்-சரீரத்துக்கு ஆத்ம உஜ்ஜீவனத்துக்கும் –
ஸ்வ ஆலோகேந ஏவ – சஷுஷோ ஜகதாம் -கண் போன்ற ஸூர்யன் -புற இருள் போக்க –கண்ணாவான் -ரக்ஷகன் அவனே-தன்னையே காட்டக் காணலாம்
கடிகாத்ர மித்ரதோ -மித்ரன் ஸூர்யன் –
அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –ந கலயே-ஸூர்ய நமஸ்காரம் செய்யாமல்
அவனுக்கும் அந்தர்யாமியான அக்காரக்கனியையே தொழுவேன்

——–

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை ஆலோகைர் அம்ருத ஸீதலை ஸ்நபிதா
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –76-

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை: – அமுத வெள்ளத்தோடு ஸமானமானவைகளும்‌, அம்ருத சீதளை: – அமுதம் போல்‌ குளிர்ந்தவைகளுமான, கடிகாத்ரி விலஸிதஸ்ய விதோ: ஆலோகை: – கடிகை மலையில்‌ மிகவும்‌ விளங்குகிற சந்திரனுடைய நிலவினாலே கடாக்ஷங்களாலே, ஸ்நபிதா: – நனைக்கப்ட்டவர்கள்‌, விவிதாந்‌ பவ தவ தாஹாந்‌ பலவகைப்பட்ட – ஸம்ஸாரமாகிய காட்டுத் தீயனால்‌ உண்டான எரிச்சல்களை, விஜஹதி விட்டு விடுகிறார்கள்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை ஸூரியனாக வருணித்தவர்‌, இதில்‌ சந்திரனாக வருணிக்கிறார்‌. காட்டுத் தீயினால்‌ உடம்புக்கு உண்டாகும்‌ எரிச்சல்‌ சந்திரனுடைய குளிர்ந்த நிலவு உடம்பின்‌ மேல்‌ பட்டால்‌ நீங்கும்‌. எம்பெருமானாகிற சந்திரனுடைய நிலவு – அதாவது குளிர்ந்த கடாக்ஷங்கள்‌ நம்‌ மேல்‌ பட்டால்‌ ஆத்மாவுக்கு ஏற்படும்‌ ஸம்ஸார தாபங்கள்‌ நீங்கி விடுமென்றபடி. ஆத்யாத்மிகம்‌ ஆதிபெளதிகம்‌ ஆதிதைவிகம்‌ என்று ஸம்ஸார தாபங்கள்‌ மூன்று. தவ:- காட்டுத் தீ

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை –அம்ருத வெள்ளம் -இயற்கையாகவே –கீழே ஸூர்ய துல்ய -இங்கு சந்த்ர துல்ய-ஆலோகைர் அம்ருத ஸீதலை -குளிர்ந்து-ஸ்நபிதா -நனைக்கும்
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி -சம்சார காட்டுத்தீயில் இருந்து விடுவித்து அருளும்
கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –அக்காரக்கனி சந்திரனே

——————

தர்மோத்தரம்‌ த்விபாத்ரே: ஸங்கே கடிகாத்ரி மத்பத விவாதம்‌ | கேநாப காரிணாரூஸ்மிந்‌ க்ருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம்வாஸ-77-

த்விபாத்ரே: – ஹஸ்தி கிரிக்கு, கடிகாத்ரி மத்பத விவாதம்‌ – கடிகைமலை யென்கிற நான்‌ வசிக்கும்‌ இடத்தோடு (உண்டான) வாய்ப் போரை – சண்டையை, தர்மோத்ரம்‌ உயர்ந்த தருமமுடையதாக (மிகவும்‌ நியாயமானதாக) ங்கே – ஊஹிக்கிறேன்‌. (அச் சண்டை எப்படிப்பட்ட தென்றால்‌) கேந அப காரிணா – எந்த அபகாரியினால்‌, அஸ்மிந்‌ – இங்கு (நானிருக்கும்‌ இடத்தில்‌) க்ருஷ்ண ம்ருக வரஸ்ய – கிருஷ்ணனாய்‌ அவதரித்த ம்ருக ராஜனான ஸிம்ஹத்திற்கு, நியத ஸம்வாஸ: – என்னோடு கூட நித்ய வாஸமானது. கல்பித: – ஏற்படுத்தப்பட்டது ? (என்பதேயாகும் )
கடிகைமலை தன்னிடம்‌ எழுந்தருளிடள்ள ஸிம்ஹத்தை ஹஸ்தி கிரிக்கு அனுப்பி அதனை நித்யம்‌ வஸிக்கும்படி செய்து விட்டதனால்‌, ஹஸ்தியான (யானையான) தனக்கு ஆபத்து நேரிட்டதென்று நினைத்து, ஹஸ்திகிரி – கடிகை மலையோடு சண்டை போடுவதாக, இக் கவி தாம்‌ கல்பித்து, அந்த சண்டையைத்‌ தாம்‌ மிகவும்‌ நியாயமாகக்‌ கருதுவதாகவும்‌ கூறுகிறாரிது தன்னால்‌. “எந்தத்‌ துரோஹி நானிருக்குமிடத்தில்‌ ஸிம்ஹத்தை ஸ்திர வாஸமாக இருக்கும்படிச்‌ செய்திருப்பான்‌. நீயே அப்படிச்‌ செய்திருப்பாய்‌” என்பது ஹஸ்திகிரி கடிகைமலையோடு புரிந்த வாய்ப்போரின்‌ அனுவாதமாகும்‌. இத்தகைய சண்டையை மிகவும்‌ நியாயமனதாகத்‌ தாம்‌ கருதுகிறாராம்‌ கவி. கடிகைமலைசெய்த காரியத்தினால்‌ ஹஸ்திகிரிக்கு ஆபத்து வந்து விட்டதனால்‌ ஆபத்தை யடைந்தவர்கள்‌ ஆபத்துக்குக்‌ காரணமாயிருப்பவர்‌ மேல்‌ கோபித்துச்‌ சண்டை யிடுவது நியாயந்தானே என்பது இக் கவியின்‌ கருத்தாகும்‌. கடிகாத்ரிக்கு மத்பத (என்னுடைய வாஸஸ்தானம்‌) என்று அடைமொழி யிட்டதற்கு- கடிகைமலை எனது மலையாயிருந்தாலும்‌, அது செய்த காரியத்தை நான்‌ நியாயமுடையதாகக்‌ கருத மாட்டேன் – அது செய்த துரோஹத்திற்காக, ஹஸ்திகிரி (வேறுமலை) அது தன்னோடு புரிந்த போரையே நான்‌ நியாயம்‌ மிக்கதாகக்‌ கருதுவேன்‌ என்பது கருத்து.
இங்ஙனமன்றி, பூர்வார்த்தத்தின்‌ இறுதியிலுள்ள மத்பதவிவாதம்‌ என்பதை மத்பதவிவாஸம்‌ என்பதாகக்‌ கொண்டும்‌. கேநாபகாரிணா என்ற விடத்திற்கு – வேறொரு பிரதியில்‌ “கேநாபிகாருணா” என்றுள்ள பாட பேதத்தை ஏற்றுக்‌ கொண்டும்‌, சுவை மிக்க பொருளொன்றும் உண்டு
த்விபாத்ரே: – ஹஸ்திகிரியினுடைய. க்ருஷ்ணம்ருக வரஸ்ய – க்ருஷ்ணனாகிய ஸிம்ஹத்திற்கு, அஸ்மிந்‌ – இந்த ஹஸ்திகிரியில்‌, நியத வாஸ: – நித்ய வாஸமானது. காருணா – லோகசிற்பியான, கேந – நான்முகக்‌ கடவுளினால்‌, ஆபி – அடைவிக்கப்பட்டது. (அது தருமமுடையதுதாள்‌) த்விபாத்ரே: – அந்த ஹஸ்திகிரியைவிட (ஹஸ்திகிரியில்‌ அப்பெருமான்‌ வாஸம்‌ செய்வதைவிட) க்ருஷ்ணம்ருகவரஸ்ய – அந்த க்ருஷ்ணனாகிய ஸிம்ஹத்திற்கு (உண்டான), (1) கடிகாத்ரி மத்பத விவாஸம்‌ – கடிகைமலையென்னும்‌ நானிருக்குமிடத்தில்‌ விசேஷ வாஸத்தை. தர்மோத்தரம்‌ – என்னுடைய உயர்ந்த தருமத்தின்‌ (புண்யத்தின்‌) பயனாக, சங்கே – கருதகிறேன்‌. அல்லது – (2) கடிகாத்ரி – மத்‌ – பத விவாஸம்‌ – கடிகை மலையையும்‌ என்னையும்‌ ஸ்தானமாகக்‌ கொண்டு செய்த விசேஷ வாஸத்தை, தர்மோத்தரம்‌ – “ஆந்ருசம்ஸ்யம்‌ பரோ தர்ம: (ராமாயணம்‌, ஸுந்தரகாண்டம்‌ 38.41) கருணையே உயர்ந்த தருமம்‌ – என்கிறபடியே அப்பெருமானுடைய உயர்ந்த கருணையின்‌ பயனாகவே, சங்கே – கருதுகிறேன்‌. என்றும்‌ கொள்ளலாம்‌

தர்மோத்தரம் த்வி பாத்ரே சங்கே -ஹஸ்திகிரிக்கும் கடிகாத்ரிக்கும் போட்டி -ஹஸ்திகிரிக்கே நியாயம்
கடிகாத்ரி மத்பத விவாதம்-அடியேன் வசிக்கும் கடிகாத்ரி யாக இருந்தாலும்
இரண்டு கிரிக்கும் பெருமாளையே தாங்கி இருந்தாலும்
கேநாப் காரிணா அஸ்மின் கிருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம் வாஸ–கரும் தெய்வங்கள் இருவரும் -முகில் வண்ணன் -கரிய கோலத் திரு உரு
தன்னிடம் இருந்த ஸிம்ஹம் ஹஸ்திகிரிக்கு அனுப்பி -அஸ்மின் நான் இருக்கும் இடத்தில் –
யார் அபவாதம் செய்தார் -நன் தர்மம் வழியே முடிவு -நீயே தப்பு செய்தாய்
கவி சாதுர்யம் -அபூத கற்பனை -இல் பொருள் உவமை -சண்டையை கல்பிதம் செய்து அருளிய ஸ்லோகம்

————–

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் அபி துர ரஸநத்வம் ஆர்ஜவம் கமநே
கதமிவ ச கருட ஸக்யம் கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே –78-

கடிகாசல க்ருஷ்ண போகிந: – கடிகை மலையில்‌ உள்ள க்ருஷ்ண ஸர்ப்பத்திற்கு, ஸ்ரிதாநாம்‌ அம்ருதார்ப்பணம்‌ – தன்னைக் கிட்டுபவர்க்கு அம்ருதத்தைக்‌ கொடுப்பதும்‌ அபிதுர ரஸநத்வம்‌ – பிளவு படாத நாக்குடைமையும்‌, கமநே – செல்லும் போது, ஆர்ஜவம்‌ நேர்மையும்‌, கருடஸக்யம்‌ ச – கருடனோடு தோழமையும்‌, கதமிவ கடதே – எப்படித் தான்‌ பொருந்துகிறது.
இதில்‌ வேடிக்கையாக – எம்பெருமானைக்‌ கரு நாகமாகக்‌ கூறி, அதற்கு விஷங்கொடுப்பதும்‌, பிளவு பட்ட நாக்குடைமையும்‌, செல்லும் போது வளைந்து வளைந்து கோணலாய்ச்‌ செல்லுவதும்‌, கருடனோடு பகைமையுமே இயற்கை யாகையால்‌, அதனோடு முரண்பட்ட -பதவுரையில்‌ கூறிய -தன்மைகள்‌ எங்ஙனம்‌ பொருந்துமென்று விரோதத்தைத்‌ தோன்ற வைத்தார்‌. க்ருஷ்ண போகீ – கருநாகம்
அவ் விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ வருமாறு க்ருஷண போகீ என்றால்‌ கருநாகமன்று, க்ருஷ்ண போகீ – க்ருஷ்ணனாய்‌ அவதரிததுப்‌ பல போகங்களை அனுபவித்த எம்பெருமானாகிய நரஸிம்ஹப் பெருமாள்‌. அவனுக்கு ஆஸ்ரிதர்‌ பொருட்டுக்‌ கடல்‌ கடைந்து அம்ருதம்‌ கொடுப்பதும்‌, முன்னுக்குப் பின்‌ முரணாகப்‌ பேசுகை யாகிற பிளவு பட்ட நாக்கில்லாமையும்‌, தனது நடத்தையில்‌ கோணல் இல்லாமையும்‌, கருடனோடு தோழமையும்‌ பொருந்தாமை யில்லை, மிகவும்‌ அவை பொருந்துமென்று விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ காண்க.

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதற்கு ஆரா அமுதம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான் -தன்னையே கொடுக்கும் கற்பகம்
அபி துர ரஸநத்வம் -பிளவு படாத ஜிஹ்வா -நாக்கு –ஸத்ய வாக்யன் அன்றோ –இரட்டை நாக்கு இல்லாமல்-ஆர்ஜவம் கமநே –நேர்மையாக நடந்து -நடப்பித்து
கதமிவ ச கருட ஸக்யம் –கீழே 4 ஸ்லோகம் கருடக்கொடி -மின்னி விளங்கியதை அருளினார் அன்றோ –கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே —அக்காரக்கனியை -உகந்து கைங்கர்யம் செய்ய தானே வந்தார் அன்றோ பெரிய திருவடி

———

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞஸ் யாத்மநோ அம்ருதஸ் யாஹம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் கடிகாத்ரி பூமி பாலஸ்ய –79-

ஸம்ஸ்ரிதாநாம்‌ ஆகஸ்ஸு – தன்னை யடைந்த பக்தர்களின்‌ குற்றங்களின்‌ திறத்தில்‌, அநபிஜ்ஞஸ்ய – அறியாமையை யுடையவனும்‌. அம்ருதஸ்ய ஆத்மந: – மரணம்‌ முதலிய விகாரங்கள்‌ இல்லாத பரமாத்மாவுமான கடிகாத்ரி பூமிபாலஸ்ய – கடிகை மலை யரசனான நரஸிம்ஹப்‌ பெருமானுக்கு, அஹம்‌ – அடியேன்‌, நித்யம்‌ – எப்பொழுதும்‌, நியமேந – எல்லா நிலைகளிலும்‌ தவறாமல்‌, ஸேவக: ஸ்யாம்‌ – தொண்டு செய்பவனாக ஆகக் கடவேன்‌.
எம்பெருமான்‌ அடியார்கள்‌ செய்த குற்றங்களைக்‌ காணாக்‌ கண்ணிட்டிருப்பவன்‌. ‘அவிஜ்ஞாதா” (விஷ்ணு ஸஹஸ்ர நாமம்‌ 483) என்பது காண்க. “ஸ தே ஆத்மா அந்தர்யாமீ அம்ருத:” (ப்ருஹ தா-ண்யகம்‌ 5.7.22) என்று, அந்தர்யாமியான எம்பெருமானை அம்ருத: ஆத்மா என்பதும்‌ நோக்கத் தக்கது. இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு “ஒழிவில்‌ காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை” செய்யக்‌ கடவேனென்றாராயிற்று இதனால்

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞ ஸ்யாத் -ஆஸ்ரிதர்கள் குற்றம் பாராமுகமாகவே இருந்து அருளி-யாத்மநோ அம்ருதஸ் யாஹம் –அக்காரக்கனி -ஆராவமுதம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை கொண்டு அருள வேண்டும்-கடிகாத்ரி பூமி பாலஸ்ய –பூ பரிபாலனம் செய்து அருளும்

———–

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ கடிகாத்ரி பூப்ருதோ யுக்தம்
ஸூதராம் பாப்ரதாநாம் யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –80

கடிகாத்ரி பூப்ருத: – கடிகை மலையரசனான எம்பெருமானுக்கு, ஸத்ப்ய: ஸத்துவ குணமுள்ள புண்யசாலிகளான நல்லோர்களுக்காக, ஸத்த்வோத்தர ஸ்வதாநாம்‌ – ஸத்துவ குணம்‌ அதிகமாகப்‌ பெற்ற தன்னை அனுபவிக்கும்படி கொடுப்பதென்பது, ஸுதராம்‌ யுக்தம்‌ – மிகவும்‌ தகுந்த செயலாகும்‌. பாபரதாநாம்‌ ஸுர த்விஷாம்‌ – பாபம்‌ செய்வதிலேயே பற்றுடைய அஸுரர்கள்‌ பொருட்டு, தாநம்‌- தன்னைக்‌ கொடுப்பதென்பது, கதம்‌ யுஜ்யேத்‌ – எப்படிப்‌ பொருந்தும்‌. ஸத்துவ குணமுடையவர்களுக்கு ஸத்துவ குணமுடைய தன்னைக்‌ கொடுப்பது தகுந்தது. ரஜோ குணமும்‌ தமோ குணமுடைய அசுரர்களுக்குத்‌ தன்னைத்‌ தருவது பொருந்தாது. ஆகையால் தான்‌ எம்பெருமான்‌ அவர்களுக்குத்‌ தன்னை யனுபவிக்கத்‌ தருவதில்லை என்றபடி.

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ —ஸாத்விகர் அனைவரைக்கும் தன்னையே கொடுத்து அருளும்-வேங்கடேச பிரபத்தி ஸ்தோத்ரம் -இதே போல் உண்டே –திருவேங்கடத்தானை சொல்லியே இந்த ஸ்தோத்ரம் உபக்ரமித்தார்
கடிகாத்ரி பூப்ருதோ –அக்காரக்கனி அரசன்
யுக்தம் -இதுவே தகுந்த செயல்
ஸூதராம் பாப்ரதாநாம் -நாநா விதம் பாபமே செய்து உள்ள அசுரர்களுக்கு
யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –-இவ்வாறு அருள முடியாதே –

————-

கடிகாத்ரி காம ஸூரபே காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம்
மாதுர் கவாம் மயி ஸ்யாத் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –81-

கவாம்‌ மாது: – பசுக்களுக்குத் தாயாரான, கடிகாத்ரி காமஸுரபே: கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற காமதேனு வினிடமிருந்து, ஜகதாம்‌ உலகிலுள்ளவர்களுடைய, காங்க்ஷாபத ஸகல பலம்‌ – விருப்பத்திற்கு இலக்கான எல்லாப் பலன்களும்‌, மயி – என்னொருவனிடத்தில்‌, ஸ்யாத்‌ – உண்டாகும்‌. அஹோ ஆச்சரியம்‌. வத்ஸே – தன் கன்றினிடத்தில்‌, மாது: – தாய்ப் பசுவுக்கு, வாத்ஸல்யம்‌ – மிக்க அன்பு, கதம்‌ ந ஸ்யாத்‌ – ஏன்‌ இராது ?
காமதேனு அவரவர்கள்‌ ஆசைப்பட்டுக்‌ கேட்டவற்றை மட்டும்‌ அவரவர்களுக்குக்‌ கொடுக்கும்‌, தன் கன்றுக்கோ வெனில்‌ கேட்காமலேயே எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌. பிறரை விடக்‌ காமதேனுவுக்குத்‌ தன் கன்றினிடம்‌ மிக்க வாத்ஸல்யம்‌ இருப்பது இயற்கை யன்றோ என்றபடி. இதனால்‌ முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறியபடியே தன்‌ கன்று போன்று அடியேனுக்குத்‌ தன்னையும்‌ கொடுக்கும்படியான வாத்ஸல்ய மிகுதி கூறியபடி

கடிகாத்ரி காம ஸூரபே -அக்காரக்கனி தன்னையே தரும் -காமதேனு –
மாதுர் கவாம்-ஈன்ற கன்றுக்கு கொடுக்கச் சொல்ல வேண்டுமோ
காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம் – ஸமஸ்த லோக மக்களுக்கும் ஸமஸ்த அபீஷ்டங்களை அளிக்கும் அவன்-மாதுர் கவாம் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –அஹோ –என்ன ஆச்சர்யம் இவன் ஈன்று எடுத்த குழந்தையான அடியேனுக்கு கிருபை பண்ணுவதில் என்ன ஆச்சர்யம்

————

ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா
கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-82-

ஹந்த ந ஐஹத்ய மோகாமா ஸிஷமாப்ய ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: | கடிகாசல ஹரி சந்தந பார்ஸ்வ மஹீநா: ஸுபாவநா ஹாரா: |! 82

அஹீநா: – ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்கள்‌, ஸுபாவந ஆஹாரா: – நல்ல காற்றை ஆஹாரமாக உடையவைகளாய்‌, அமோகாம்‌ ஆசிஷம்‌ ஆப்ய – வ்யர்த்தமாகாத விஷப்‌ பற்களை யுடையவைகளாய்‌, ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: – விஷத்தைக்‌ கக்குகின்றவைகளாய்‌, கடிகாசல ஹரி சந்நத பார்ஸ்வம்‌ – கடிகைமலையிலுள்ள எம்பெருமானாகிற, சந்தன மரத்தின்‌ ஸமீபத்தை, ந ஜஹதி – விட்டுப்போகிறதில்லை. ஹந்த – கஷ்டம்‌.
இப்பொருளின்படி கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற சந்தன மரத்தை விட்டு அகலாமல்‌ விஷப் பாம்புகள்‌ இருப்பதனால்‌ அவற்றுக்கு அஞ்சி எம்பெருமானை நாம்‌ அணுகி வணங்க முடியாமலிருக்கிறது. ஐயோ கஷ்ட! – என்ற கருத்துத்‌ தோன்றும்‌. இதற்குப்‌ பரிஹாரம்‌ மேலே காண்க.
அஹீநா: – மிகவும்‌ உயர்ந்த மஹரிஷிகள்‌ ஸுபாவந ஆஹாரா: – நல்ல காற்றையே ஆஹாரமாக வுடையவர்களாய்த்‌ (தவஞ்செய்து), அமோகாம்‌ ஆசிஷம்‌ ஆப்ய வ்யர்த்தமாகாத தமது விருப்பத்தை யுடையவர்களாய்‌ (தமது விருப்பம்‌ நிறைவேறப்‌ பெற்றவர்களாய்‌) ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: – தம்மை யண்டினவர்களுக்குச்‌ செல்வத்தை அளிப்பவர்களாய்க்‌ கொண்டு, கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம்‌ ந விஜஹதி – கடிகை மலை யிலுள்ள எம்பெருமானாகிற ஹரி சந்தன (கற்பக) வ்ருக்ஷத்தின்‌ பக்கத்தை விடாமலிருக்கிறார்கள்‌. ஹந்த – ஆச்சர்யம்‌.
இப்பொருளின்படி மகரிஷிகள்‌ தவஞ்செய்து எம்பெருமானிடம்‌ தாம்‌ விரும்பிய வரங்களைப்‌ பெற்று, அதனால்‌ எம்‌பெருமானையும்‌ தம்மையும்‌ அணுகினவர்களுக்கு வேண்டிய செல்வத்தை யளித்துக்‌ கொணடு பகவானை விடாமலிருக்கிறார்கள்‌. எல்லோரும்‌ எம்பெருமானையும்‌ அவனடியார்களான அம் மகரிஷிகளையும்‌ ஸேவிக்கக்‌ கடிகை மலைக்குச்‌ செல்லலாம்‌ என்று முன்‌ கூறிய விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ காண்க.
ஆசீ: – (1) விஷப்பல்‌ (2) விருப்பம் –ஸ்ரீ: (1) விஷம்‌ (2) செல்வம்‌ (1) அஹீநாம்‌ இநா: அஹீநா: – ஸர்ப்பங்களின்‌ ஸ்ரேஷ்‌டங்கள்‌. (2) நஹீநா: – அஹீநா: – நீசர்களுக்கு முரண்பட்ட உத்க்ருஷ்டர்கள்‌. பவநஏவ பாவந:- சோபந: பாவந: – ஸுபாவந: ஸுபாவந:ஆஹார: யேஷாம்‌ தே – ஸுபாவநாஹாரா

ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா -அமோகமான விஷப் பற்கள் கொண்டு இருந்தாலும்-மஹரிஷிகள் புருஷகாரமாக இருந்து நம்மையும் அவன் இடம் சேர்த்து அருளுகிறார்கள்-இதுவே அவர்கள் விரும்பும் கைங்கர்யம் -அது அமோகமாக நிறைவேறும் படி அருளிச் செய்கிறான் —பரம பக்தியுடன் இருந்து -தீங்கு விளைக்காமல்-கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-பக்கம் -சுற்றி என்றும் கொண்டு –அருகில் உள்ள பாம்புகளும் காற்றையே ஆகாரமாகக் கொண்டு இவனையே உண்ணும் சோறு என்று இருக்கும் மகரிஷிகளையும் சொன்னவாறு காற்றையே ஆகாரமாகக் கொண்டு மனனம் பண்ணி இருப்பவர்

 
—————-
 
சத அம்ருத பலஸ்ய கடிகா ஸைல ரஸா லஸ்ய ஸவித கஸ்யாபி
ஸப்தாதி நிம்ப ஸேவாம் ஸந்த்ய ஜதி ந ஹந்த ஹ்ருதய காகோ மே –83-
 
ஸத்‌ அம்ருத பலஸ்ய – நல்ல அம்‌ருதம் போல்‌ தித்திக்கும்‌ மோக்ஷமாகிய பழத்தை யுடைய, கடிகாசைல ரஸாலஸ்ய – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற ஒட்டு மா மரமானது, ஸவிதகஸ்ய அபி – என் பக்கத்தை அடைந்திருக்கச்‌ செய்தேயும்‌ அதனை விட்டுவிட்டு, மே – என்னுடைய, ஹ்ருதய காக: – மனமாகிய காக்கை யானது, சப்தாதி நிம்ப ஸேவாம்‌ சப்தாதி விஷயங்களாகிற வேப்பம்‌ பழத்தை உண்ணுதலை, ந ஸந்த்யஜதி விடுவதே யில்லை. ஹந்த – கஷ்டம்‌.
இதில்‌ கடிகை யெம்பெருமானை ஓட்டு மா மரமாகவும்‌ அவன்‌ கொடுக்கும்‌ அம்ருதத்தை – மோக்ஷத்தை அதில்‌ பழுத்த பழமாகவும்‌ பணம்‌ செய்து, அம் மரம்‌ கடிகை மலையில்‌ எனக்கு அண்மையில்‌ இருக்கச்‌ செய்தேயும்‌ அதை விட்டு விட்டு, என்‌ மனமாகிய காக்கை தான்‌ உண்டு பழகிய வேப்பம்‌ பழமாகி சப்தாதி விஷயத்தையே அனுபவிக்க எண்ணி, வெகு தூரம்‌ வருந்திச்‌ செல்கிற- ஐயோ கஷ்டம்‌ என்று கவி தம்மைப் பற்றி நைச்யாநுஸந்தானம்‌ செய்கிறார்‌. அதனால்‌ அவருடைய நைச்யாநுஸந்தானம்‌ நமக்குப்‌ பாடம்‌ கற்பிக்கிறது – நீச விஷயாநுபவத்தைவிட்டு மோக்ஷமாகிய பலம்‌ கிடைக்க கடிகை மலை எம்பெருமானைச்‌ சேவிக்கச்‌ செல்லுங்கள் என்பதாக –
 
சத அம்ருத பலஸ்ய –ஸாத்விக அம்ருத பலம் –அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளும்
கடிகா ஸைல ரஸா லஸ்ய —அக்காரக்கனி -கட்டடங்க அம்ருத ரஸம் மிக்கு -அன்றோ -தன்னையே அளித்து அருளும் –
ஸவித கஸ்யாபி -கூப்பிடு தூரத்தில் இருக்க
ஸப்தாதி நிம்ப ஸேவாம் -ஸப்தாதி -வேம்பை விரும்பிப் போகுவதே –
நெஞ்சம் உனது தாள் ஒழிந்தவற்றையே உகக்க -மா முனிகள் போல் இங்கு இவரும் நைச்யம் பாவிக்கிறார்
நாம் அனுசந்திக்கவே இருவரும் இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
ஸந்த்ய ஜதி ந –ஐந்தில் அறியாதார் ஐம்பதிலும் அறியாரே -இதுவே தேஹ யாத்திரை ஆவதே –
ஹந்த -என்ன ஆச்சர்யம் -ஐயோ
ஹ்ருதய காகோ மே -காகம் போல் –பறந்து கண்டதையும் கவ்விப் போவதே -ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
 
—————
 
அமல அநு ராக ஸலிலை அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம் கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –84-
 
அமல அநுராக ஸலிலை: – நிர்மலமான. அன்பென்கிற (பகவத் பக்தி யென்கிற) தீர்த்தத்தினாலே, அபிலாஷ மலாநி ஸகலாநி – நீசமான சப்தாதி விஷயங்களில்‌ ஆசையாகிற அழுக்குகள்‌ அனைத்தையும்‌, அபோஹ்ய – என்‌ மனத்திலிருந்து அகற்றி, அஹிம்ஸந ஆத்யை: புஷ்பை: – அஹிம்ஸை முதலிய எட்டுப்‌ புஷ்பங்களாலே, கடிகாத்ரி தைவதஸ்ய – கடிகை மலைத்‌ தேவதையாகிய நரஸிம்ஹப்‌ பெருமானுக்கு, அர்ச்சாம்‌ பூஜையை, குர்யாம்‌ – செய்யக் கடவேன் –
பகவானைப்‌ பற்றிய நிர்மலமான பக்தி உண்டானால்‌ நீச விஷயங்களில்‌ ஆசை அகன்று விடும்‌. அவை அகன்றால்‌ மனத்தில்‌ எட்டு வகையான எண்ணங்கள்‌ பிறக்கும்‌ அவற்றால்‌ எம்பெருமானுக்கு ஸந்தோஷமுண்டாகும்படி அவனுக்குப்‌ பூஜை செய்கிறேனென்கிறார்‌. முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறிய மோக்ஷத்திற்கு எம்பெருமானிடம்‌ பக்தி யுண்டாக வேணும்‌. அதனால்‌ கெட்ட ஆசைகள்‌ அகலும்‌. நல்லெண்ணங்கள்‌ உண்டாகும்‌. அவை பகவானுக்கு உகப்பை யுண்‌டு பண்ணுவன என்பது கருத்து.
பகவானை அர்ச்சிக்கும்‌ புஷ்பங்கள்‌ எட்‌டு -வெளிப் புஷ்பங்கள்‌ “ஆனிரை மேய்க்க நீ போதி” என்று தொடங்கும்‌ திருமொழியில்‌ பெரியாழ்வார்‌ அருளுகின்ற செண்பகம்‌, மல்லிகை, பாதிரி, செங்கழுநீர்‌, புன்னைப் பூ, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை – என்பவை எட்டு. உள்ளத்தில்‌ உண்டாகும்‌ புஷ்பங்களாவன – அஹிம்ஸை, பொறியடக்கம்‌, தயை, பொறுமை, தத்துவ ஜ்ஞானம்‌, தவம்‌, த்யானம்‌, ஸத்யம்‌ என்பவை. இவை யெட்டும்‌ விஷ்ணுவுக்கு ப்ரீதியை உண்டாக்குவனவாம் –
 
அமல அநு ராக ஸலிலை –குற்றங்கள் அற்ற ப்ரேமை -பக்தி -விரும்பி -நீர்ப் பண்டமாக உருகும் படி-பக்திக்கும் அமல –நீர்ப்பண்டத்துக்கும் அமல விசேஷணம்
பர கத ஸ்வீ காரம் -உதாராஸ் ஸர்வை என்னுமவன் அன்றோ
அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி -ஆசை காமம் -ஆறு பகைவர்கள் -காமம் க்ரோதம் இத்யாதிகளைபப் போக்கி-மதம் அபிமானம் அற்ற அந்திம உபாய நிஷ்டர்கள் அன்றோ மா முனிகள் ப்ருத்யைர்கள் -அவர்களில் ஸ்ரேஷ்டர் அன்றோ இவர்
நமக்காகவே இவ்வாறு அருளிச் செய்கிறார் -நிர்மலமான பக்தி நீர் கொண்டு அகற்றி அருள வேண்டும்
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம்--ஸாத்விக அஷ்ட புஷ்பங்களைக் கொண்டு
கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –அக்காரக்கனி அர்ச்சனை செய்யும் அருள வேண்டும்

அஹிம்ஸா பிரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:-சர்வபூத தயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத: சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம் ஞானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்

அபகத மத மாநைர் அந்திமோபாய நிஷ்டை-அதி கத பரமார்த்தைர் அர்த்த காம அநபேஷை –நிகில ஜன ஸூஹ்ருத்பிர் நிர்ஜித க்ரோதா லோபை வர வர முனி ப்ருத்யைர் அஸ்து மே நித்ய யோக –10-

விஷய போகக் களிப்பும் செருக்கும் அற்றவர்களாயும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம உபாயமாக நிஷ்கர்ஷிக்கப் பட்ட அந்திம உபாயத்தில் ஊற்றம் உடையவர்களாயும் சகல சாஸ்த்ர சாரார்த்தங்களும் கை வந்தவர்களாயும் -தர்ம மோக்ஷங்கள் தவிர அர்த்த காமங்களில் விருப்பம் அற்றவர்களாயும் -ஒருவர் இடத்திலும் மாத்சர்யம் கொள்ளாதே சர்வ பூத ஸூஹ்ருத்துக்களாயும் க்ரோதம் லோபம் இரண்டையும் வென்றவர்களாயும் இருக்கின்ற மா முனிகளின் அடியாரோடு அடியேனுக்கு நித்ய சகவாசம் உண்டாகக் கடவது -என்று விஞ்ஞாபனம் செய்வார் சில பக்தர்கள்-

—————

தந தாத்யைர் அபி ந பரஸை ஸாத்யம் ஸூ மஹத் ஹிரண்ய தாநம் தத்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் துல்யோ கடிகாத்ரி பூ ப்ருத கோ வா |!—85-

(கடிகைமலையரசனான எம்பெருமானாலே ) பரை: – பிறராகிய, தந தாத்யைரபி குபேரன்‌ முதலியவர்களாலும்‌, யத்‌ ந ஸாத்யம்‌ – எது ஸாதிக்க முடியாததோ –தத் -அத்தகைய -ஸுமஹத்‌ – மிகப் பெரியதான, ஹிரண்ய தாநம்‌ – (1) ஸ்வர்ண தானமானது -(2)ஹிரண்யனைப்‌ பிளத்தலானது(தாநம்‌ – கொடுத்தலும்‌ பிளத்தலும்‌) ஸு+கரேண – நல்ல கையினால்‌, க்ருதம்‌ – செய்யப் பட்டது. அத: – அக் காரணத்தினால்‌, கடிகாத்ரி பூப்ருத: – கடிகை மலையரசனுக்கு, கோ வா துல்ய: ஸ்யாத்‌ – எவன்‌ தான்‌ ஸமாநமாக ஆக முடியும்‌ ?

தந தாத்யைர் அபி –குபேரன் முதல் கொண்டு –
ந பரஸை ஸாத்யம் -வேறே எவராலும் செய்ய முடியாததாய்
ஸூ மஹத் ஹிரண்ய தாநம் தத் -பெரிய-மஹாத்ம்யம் மிக்க இரண்ய தானம் -ஹிரண்ய வதம் -மோக்ஷ பிராப்தி என்றுமாம்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் -ஸூ குமாரமான திருக் கரங்களால் செய்து அருளிய
துல்யோ கடிகாத்ரி பூ ப்ருதகோ –அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஓத்தார் மிக்கார் இல்லையே-மோக்ஷ பிரதன் இவன் ஒருவனே -என்றவாறு –

———–

ஐநயத்வதி ச சகலாந் ஞாப்யதி ச யோ ஹிதாஹிதே சாஸ்த்ராத்
நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய –86-

ய: – எவன்‌, ஸகலாந்‌- எல்லோரையும்‌, ஜநயதி அவதி ச – பிறப்பிக்கிறானோ, மேலும்‌ காப்பாற்றுகிறானோ, சாஸ்த்ராத்‌ – வேதாதி சாஸ்த்ரங்களின்‌ வாயிலாக, ஹிதஅஹிதே நன்மையையும்‌ தீமையையும்‌, ஜ்ஞாபயதி ச – அறிவிக்கின்றானோ, தஸ்ய – அந்த, கடிகாத்ரி ஸர்வஜநகஸ்ய – கடிகை மலையிலுள்ள -எல்லோர்க்கும்‌ தந்தையான எம்பெருமானை, கோ வா ஜ்ஞாநீ – எந்த அறிவாளிதான்‌, ந அத்யேதி – கற்றறிய மாட்டான்‌.
இத்தனை யுபகாரங்களைச்‌ செய்த எம்பெருமானை எல்லோரும்‌ வேதாதி சாஸ்த்ரங்களின்‌ மூலமாகக்‌ கற்றறிவார்கள்‌ என்றபடி. அத்யேதி தஸ்ய கோ வா என்று பாடமானால்‌ அவன்‌ சொல்லை யார் தான் மீறுவார்கள்‌ என்று பொருள்‌ கொள்க. பித்ரு வாக்ய பரிபாலனம்‌ பிள்ளைகளுக்குப் பணி யன்றோ ? பித்ரு வாக்யமானது ஸ்ருதி ஸ்ம்ருதீ மமைவாஜ்ஞா (விஷ்ணு தர்மம்‌ 76-31) என்கிறபடியே பகவதாஜ்ஞா ரூபமான ஸ்ருதிகளும்‌ ஸ்ம்ருதிகளுமாகும்

ஐநயத்வதி ச சகலாந் -ஸமஸ்த சேதனங்களையும் ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து அருளி
ஞாபயதி ச யோஹிதாஹிதே சாஸ்த்ராத் ஹிதமாக ஸாஸ்த்ர பிரதானங்களையும் அருளி
கோவிந்தா நாமம் வாயாலே சொல்வாருக்கும் ரக்ஷித்து அருளும் தீஷையும் கொண்டு அருளி-நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய -ஜனிக்கும் காரணம் —அகில லோக தந்தை அன்றோ அக்காரக்கனி-இவற்றை அறிந்து -அத்யயனம் பண்ணி -கற்று அறிந்து தேறி -யார் தான் செய்ய மாட்டார்கள் –

———–

தோஷா கரே வி ராகம் ஸூர்யா லோகே விகாஸ மா மோதம்
பத்ம்யாக்யாம் அபி வஹதோ யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –87-

தோஷாகரே – (1) இரவை விளங்கச் செய்யும்‌ சந்திரனிடத்தில்‌ (2) குற்றங்களுக்கு நிதியான மனிதனிடத்தில்‌, விராகம்‌ ஆசை யில்லாமையையும்‌ (வெறுப்பையும்‌), ஸூர்ய ஆலோகே (1) ஸூர்யனைப்‌ பார்க்கும் போதும் , ஸூரி ஆலோகே (2) தத்வ ஜ்ஞானியான பண்டிதனைக்‌ காணும்‌ போது, விகாஸம்‌ ஆமோதம்‌ – (1) மலர்ச்சியையும்‌ நறு மணத்தையும் (2) முகம் மலர்தலையும்‌ ஸந்தோஷத்தையும்‌, பத்ம ஆக்யாம்‌ அபி (1) (2) பத்ம: என்கிற பெயரையும்‌, வஹத: – வகிக்கிற, கடிகாத்ரியஸ்ய – கடிகை மலையரசனுக்கு, கேஸரிதா (7) பூந் துகளை யுடைமை (2) பிடரி மயிருடைமை, யுக்தா – பொருந்தியதேயாகும்‌.
இதில்‌ எம்பெருமானை – பூந் துகளையுடை . தாமரை மலராந் தன்மையையும்‌, பிடரி மயிருடைய ஸிம்ஹமாம்‌ தன்மையையும்‌, அவை யிரண்டு தன்மைகளுக்கும்‌ ஏற்கும்‌ விசேஷணங்களை சிலேடை வகையில்‌ அமைத்துச்‌ சமத்காரமாகப்‌ பேசுகிறார்‌.
தோஷாம்‌ கரோதி – இரவை அலங்கரிப்பதால்‌ சந்திரனுக்கும்‌, தோஷாணாம்‌ ஆகர: – குற்றங்களுக்கு இருப்பிடமாகையால்‌ துஷ்டனுக்கும்‌, தோஷாகரனாந்‌ தன்மை ஒக்கும்‌. பத்ம: என்பது தாமரை மலருக்கும்‌, பத்ம: அஸ்மிந்‌ அஸ்த, பத்மா அஸ்மிந்‌ அஸ்தி என்ற வ்யுத்பத்திகளால்‌ – தாமரை மலரைக் கையிலுடைமையாலும்‌, தாமரையாளான பிராட்டியைத்‌ திருமார்பில்‌ உடைமையாலும்‌ பெருமாளுக்கும்‌ பெயராகும்‌.

தோஷா கரே வி ராகம் -தோஷம் கரோதி –சந்திரனுக்கு தோஷாகரன் -அவனைப் பார்த்து கூம்பிப் போகுமே-குற்றங்களையே பண்ணிக் கொண்டு இருக்கும் ஸம்ஸாரிகளை பார்த்து திருமுகம் வாடுமே
ஸூர்ய ஆலோஸி விகாஸ மா மோதம் -கதிரவனைப் பார்த்ததும் விகசிக்கும்
ஸூரி ஆலோக்ய-நித்ய ஸூரிகளை -அவர்களிலும்  பிரதானரான ஆதி சேஷனைப் பார்க்கும் க்ஷணம் தோறும் அதி விகாஸம் அடையுமே
பத்ம்யாக்யாம் அபி வஹதோ -பத்மம் தாமரை -பத்மம் திருக் கையில் வைத்து இருப்பதால் பிராட்டிக்கும் அக்காரக்கனிக்கும் பத்மக யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –கேஸரி -மகரந்த சுவை இருப்பதால் தாமரைக்கும் ஸிம்ஹ பிடரிக்கும்-இவ்வளவு ஒற்றுமைகள் உண்டே –நீரே தாமரை -என்கிறார்

நித்யாநாம் யத் ப்ரதம கணநாம் நீயஸே ஷாஸ்த்ர முக்யை: |
க்ருத்யாSSக்ருத்யா பவஸி கமலா பர்துரேகாந்த மித்ரம் ||
தேவ:ஸ்வாமீ ஸ்வயமிஹ பவந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ |
போகீஷத்வத் விமுகமபிமாம் பூயஸா பஷ்யசி த்வம் ||-ஸ்ரீ வர வர முனி சதகம் –24

எந்த நீர் சாஸ்த்ரமறிந்தவர்களால் நித்யர்களுக்குள் முதல்வராக எண்ணப் படுகிறீர்,
செய்கையாலும் உருவத்தாலும் கமலாபதியின் ரஹஸ்யத் தோழனாகிறீர் —
தேவனாகவும் உடையவனாகவும் உள்ள தாமே இங்கு வரவர முநியாகி ஹே அநந்தனே!
உம்மைப் பாராதிருந்தும் என்னை நிறையக் கடாக்ஷிக்கிறீர்.

————————

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்
பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா–88–

மயா – என்னாலே, விபுலேந தபஸா – பெரிய தபஸ்ஸின்‌ மூலமாக, அத்ய லப்தா இப்போது அடையப்பட்ட, இயம்‌ – இந்த, தந்வீ – சிறிய அளவுள்ள (2) மெல்லிய மேனியை உடைய, பக்தி கந்யா – (1) பக்தியாகிற (2) கன்‌னிகையானவள்‌, ப்ரெளடா ஸதீ – (1) பரிபக்குவமடைந்ததாய்‌ (2) ருதுவானவளாய்க்‌ கொண்டு, கடிகாத்ரி பர்த்தரி – (1) கடிகை மலை யரசனான, (2) கணவனிடத்தில்‌, அவ்யபிசாரம பாவம்‌ – (1) வேறொரு தேவதையிடம்‌ பிளவுபடாத தன்மையை (2) வேறொரு புருடனிடத்தில்‌ செல்லாத மனதை, பஜதாம்‌ அடைந்திடுக.

இதில்‌ எம்பெருமானிடம்‌ பக்தியானது தமக்கு நீண்ட காலம்‌ தவம்‌ செய்து உண்டானதாகவும்‌, அது நாளடைவில்‌ வளர்ந்து பெருகி எம்பெருமானை விட்டு மற்றோர்‌ வ்யக்தியில்‌ அகலாதிருக்க வேணுமென்பதாவும்‌ பேசுகிறார்‌. இந்த பக்தியின்‌ நிலைமைக்கேற்ப, ஒரு பெண்ணின்‌ பருவத்தையும் குறித்திருப்பது அநுபவிக்கத் தக்கது. இப்படிபட்ட பக்திக்கு ப்ரயோஜநம்‌ மோக்ஷமடையத்‌ தகுதி பெறுதலாகும்‌. மாஞ்‌ ச யோஃவ்யபி சாரேண பக்தியோகேந ஸேவதே, ஸ குணாந்‌ ஸமதீத்யைதாந்‌ ப்ரஹ்ம பூயாய கல்பதே (கீதை 14-26) (என்னை எவனொருவன்‌ அவ்யபிசரிதமான-பிறரிடத்தில்‌ பிளவு பட்டுச்‌ செல்லாத பக்தி யோகத்தினால்‌ ஸேவிக்கிறானோ, அவன்‌ முற்கூறிய ஸத்த்வ ரஜஸ்‌ தமோ குணங்களைக் கடந்து, ப்ரஹ்ம ஸாம்யமாகிற மோக்ஷத்தை யடைவதற்குத்‌ தகுதி பெறுகிறான்‌ என்று கண்ணபிரான்‌, அருளியது காண்க. அல்லது உணவுக்கு அவச்யம்‌ முன்பு வேண்டிய பசி போலே, எம்பெருமானை அனுபவிக்கைக்கும்‌ அவனுக்குத்‌ தொண்டு செய்வதற்கும்‌ முன்பு உண்டாக வேண்டிய ஸ்வயம் ப்ரயோஜனமாகிய பக்தியை இங்குச்‌ சொல்லிற்றாகவும்‌ கொள்ளலாம்

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்-அடியேனால் விபுலமான தபஸ்ஸாலே இப்பொழுது அடையப்பெற்ற -பக்தி -என்னும் கன்னிகை -தந்வீ-இப்பாலையை –பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா—பிஞ்சிலே பழுத்து ஆசை விஞ்சி -பிரவிடாகி-அக்காரக்கனி எம்பருமானையே வரித்து-செய்த்தலை நாற்று போல் செய்வன செய்து கொள்ளட்டும் என்று அவனுக்கே அநந்யார்ஹை ஆகி-மற்று ஒரு தெய்வத்துக்கு ஆளாவதையும் -பேச்சும் கூட பொறுக்க மாட்டாமல் ஆனாள்-இந்த ஸ்தோத்ரம் ஸ்வாமியுடைய தபஸ்ஸாகும்-இதன் பலமாகவே பெற்ற பரம பக்தி நிலை என்று அருளிச் செய்கிறார்

—————-

பாஸ்வதி ஸூராஸூர குரவ் போகிநி வந்தாரு சவும்ய மந்தாரே
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி விதவ் கதம் க்ரஹை பீடா –89-

ஹே கடித ஆத்மகாய – வாராய்‌!, பொருந்தாத – ஸிம்ஹத்தின்‌ தலையையும்‌ மனிதனின்‌ உடலையும்‌ பொருத்தித் தனது திருமேனியாகக்‌ கொண்ட எம்பெருமானே, பாஸ்வதி – விளங்குமவனும்‌, ஸூர அஸுர குரெள – தேவர்களுக்கும்‌ அசுரர்களுக்கும்‌ பூஜிக்கத் தக்கவனும்‌, போகிநி போகங்களை அனுபவிக்கின்றவனும்‌, வந்தாரு ஸெளம்ய மந்தாரே – துதிப்பவர்க்கு நல்ல கற்பகம்‌ போல்‌ எல்லாவற்றையும்‌ அளிப்பவனும்‌ ஆகிய, கடிகாத்ரி விதெள – கடிகை மலையிலுள்ள எம்பெருமாளாகிய சந்திரனாகிய, த்வயி – உன்னிடத்தில்‌, க்ரகை: பீடா – க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ துக்கமானது, கதம்‌ எப்படி, கடதே – பொருந்தும்‌.

பாஸ்வதி –ஸூர்யன் -ஆச்சார்யமான தேஜஸ்
ஸூராஸூர குரவ் -ப்ருஹஸ்பதி சுக்ரன் -தேவாசுரர்களும் பூஜிக்கும்
போகிநி -ராகு கேது -போகங்களை அனுபவிக்கும் -பாற் கடல் எம்பெருமான்
வந்தாரு சவும்ய -புதன் -வாங்கியவர்களுக்கு கற்பகம்
மந்தாரே -அனைத்துக்கும் அந்தர்யாமி
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி –அக்காரக்கனி -சேராச் சேர்க்கை ந்ருஸிம்ஹம்
விதவ் கதம் க்ரஹை பீடா ––க்ரஹங்களால் என்ன பீடை வரும் –ஸந்த்ரன் விட ஆஹ்லாத கரம்-நீரே குளிரச் செய்து அருளிய பின்பு -ஆச்சார்யர் அநு க்ரஹமே -பலிக்கும் ‘
க்ரஹங்களால் அணுகவும் ஒண்ணாதே

இதில்‌ எம்பெருமானைச்‌ சந்திரனாகக்‌ குறிப்பிட்டு, சந்திரனுக்கு இயல்பாக உண்டாகும்‌ க்ரஹ பீடைகள்‌ உண்டாகாதென்கிறார்‌ – உண்டாகாமைக்குக்‌ காரணம்‌ – அவன்‌ வெறும்‌ சாதாரண சந்திரன்‌ அல்லால்‌ பற் பல பெருமைகளைப்‌ பெற்ற சந்திரன்‌ ஆகையாலே ஆகும்‌. அப் பெருமைகளே – பாஸ்வதி முதலிய விசேஷணங்களினால்‌ சொல்லப்பட்டனவாகும்‌-மேலும்‌ இந்த சந்திரன்‌ எல்லா க்ரஹங்களாகவும்‌ உள்ளமையால்‌ – க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ துக்கம்‌ இவனுக்கு உண்டாகாதென்கிறார்‌. எல்லா க்ரஹங்களுக்கும்‌ இவ்வெம்பெருமான்‌ அந்தர்யாமியாகையால்‌ எல்லா க்ரஹங்களாகவும்‌ இவனே யாகைக்குத்‌ தட்டில்லையாகையால்‌, க்ரஹ பீடை இவனுக்கு உண்டாகைக்கு இடமேயில்லை. தன்னால்‌ தனக்குப்‌ பீடை உண்டோ ?
(1) பாஸ்வாந்‌ – சூரியன்‌ (2) ஸுரஅஸுரகுரு (1) ஸுர குருவான ப்ருஹஸ்பதி (3) அஸூர குருவான சுக்ரன்‌ (4) ஸெம்யன்‌ – புதன்‌ (5) விது: – சந்திரன்‌, போகீ – பாம்பு (6)பாம்புத் தலையுடைய கேது, (7) பாம்பு உடலையுடைய ராகு. அங்காரகனும்‌ சனியுமாகிய மற்றுமுள்ள இரண்டு க்ரஹங்களையும்‌ உபலக்ஷண வகையால்‌ கூட்டிக்‌ கொள்க. ஆக இந்த க்ரஹங்களுக்குகெல்லாம்‌ அந்தர்யாமியாகை காரணமாக இந்த கிரஹங்களுக்கெல்லாம்‌ இவனுக்குச்‌ சரீரமாகையால்‌, இவ்வெம்பெருமானாகிற சந்திரனுக்கு இவனிட்ட வழக்காக இருக்கும்‌ க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ பீடை இல்‌லை யென்றாராயிற்று.
கடிதாத்மகாய: – கடிதெள – ஆத்மகாயெள யேந ஸ:- கடிதாத்மகாய: என்று விக்ரஹம்‌. காய சப்தம்‌ சரீரத்தைக்‌ குறிப்பதாய்‌ – இங்கு சரீர அவயவங்களாகிய தலையையும்‌ மற்றுமுள்ள கீழுடலையும்‌ குறிப்பிடுகின்றது. பொருந்தாத – சிங்கத்தின்‌ தலையையும்‌ மனிதனது உடலையும்‌ நன்றாகப்‌ பொருத்திக்‌ கொண்டானே எம்பெருமான்‌. ஸிதாக்ஷீரந்யா யேந ஸங்கமிதாங்கம்‌ _. ரங்கேந்த்ர ஸிம்ஹ முபாஸ்‌ மகே (ஸ்ரீரங்க உத்தர – 64) சர்க்கரையையும்‌ பாலையும்‌ சேர்க்கிற கணக்கிலே – ஸிம்ஹத்தம்‌ தலை மனிதனின்‌ உடல்‌ ஆகிய இரு திருவுருவங்களைச்‌ சேர்த்துக்‌ கொண்ட (பரம போக்யமாக) ஸ்ரீரங்கநாதனாகிய நரஸிம்ஹப்‌ பெருமாளைச்‌ சிந்திக்கிறோம்‌ என்று அருளிச்‌ செய்தாரிறே ஸ்ரீபராசரபட்டர்‌. பட்டர்‌ ஸங்கமிதாங்கக: என்றதனையே இவர்‌ இங்க கடிதாத்மகாய: என்ற சொல்லால்‌ குறிப்பிட்டருளுகிறார்-அழகியான் தானே அரி யுருவன் தானே

ந்ருஹரி தசயோ பஸ்யன் ஓவ்பத்திகம் கடநா அத்புதம்
நரம் உத ஹரிம் த்ருஷ்ட்வா ஏகைகம் சமுத்விஜதே ஜந
இதி கில சிதாஷீர ந்யாயேந சங்கமித அங்கம்
ஸ்புட சட மஹா தம்ஷ்ட்ரம் ரங்கேந்திர சிம்மம் உபாஸ்மஹே —64-

நரத்வ ஸிம்ஹத்வ அவஸ்தைகளுடைய உத்பத்தி ஸித்தமான விசித்திரமான ஸுவ் கட்யத்தை அனுபவித்து பிரத்யேக நரனையும் சிம்மத்தையும் பார்த்து பயப்படுக என்று போலே பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போல் சேர்க்கப்பட்ட அவயவங்களை உடையவராய் ஸ்பஷ்டங்களான பிடரி மயிரையும் பெரிதான கோரப் பல்லையும் உடையரான ஸ்ரீ பெரிய பெருமாளாகிற ஸ்ரீ நரசிம்மத்தை அந்த அழகுக்குத் தோற்று எப்போதும் அனுபவிக்கிறோம்

—————–

ஸம வர்த்திநி புவநேஸே புண்ய ஜநே பாவகே ஜகத் ப்ராணே
ஸ்ரீதே ஸிவே அபி கடிகா ஸைல ஹரவ் சதி கிமன்ய திக் பாலை –90-

கடிகாசைல ஹரெள – கடிகை மலையிலுள்‌ள நரஸிம்ஹப் பெருமான்‌, ஸமவர்த்திநி (1) எல்லோரிடம்‌ ஸமமாக நடந்து கொள்பவனாகவும்‌ (2) யமனாகவும்‌, புவநேசே – (1) உலகங்கட்குத்‌ தலைவனாகவும்‌, (2) அத்தகைய இந்கிரனாகவும்‌, (3) நீருக்குத்‌ தலைவனான வருணனாகவும்‌, புண்யஜநே – (1) புண்யர்களாகிய பக்த ஜனங்களை யுடையவனாகவும்‌ (2) நிர்ருதி என்கிற ராக்ஷஸனாகவும்‌, பாவகே- (1) பத்தியை உண்டு பண்ணுகிறவனாகவும்‌ (2) அக்நியாகவும்‌, ஜகத் ப்ராணே – (1) உலகுக்கெல்லாம்‌ உயிராகவும்‌ (2) ப்ராணனான வாயுவாகவும்‌, ஸ்ரீதே – (1) செல்வத்தையளிப்பவனாகவும்‌ (2) குபேரனாகவும்‌, சிவேஃபி (1) மங்களத்தை உண்டு பண்ணுமவனாகவும் (2) சிவ பெருமானாகவும்‌, ஸதி இருக்கும் போது, அந்ய திக்‌ பாலை:- வேறான யமா: இந்திரன்‌ முதலிய திக் பாலகர்களாலே, கிம்‌- எனக்கு என்ன பயன்‌ ?

ஸம வர்த்திநி -யம தேவன் –தர்ம ராஜன் –
புவநேஸே-இந்த்ரன் -வருணனையும் சொல்வார் -வர்ஷித்து ரக்ஷணம்
புண்ய ஜநே -நிருதி –
பாவகே –அக்னி தேவன் -பரம பாவனன்
ஜகத் ப்ராணே -வாயு பகவான்
ஸ்ரீதே -சுவையான திருவின் மணாளன் -குபேரன்
ஸிவே அபி -சிவன் உட்பட -பரம சிவன் –வைஷ்ணவாணாம் யதா சம்பு அன்றோ
இயற்கையான மங்களம் இவன் திருவடி தீர்த்தம் தாங்கி
கடிகா ஸைல ஹரவ் சதி -அனைவருக்கும் அந்தர்யாமி அக்காரக்கனி எம்பெருமானே தானே
கிமன்ய திக் பாலை –இவர்களால் ப்ரபன்னருக்கு என்ன வேண்டும் –

இந்திரன், அக்னி தேவன், எமதருமன், வருண பகவான், நிருதி பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள்
கிழக்குத் திசைக்கு அதிபதி, இந்திரன்
தென்கிழக்கு அக்னி தேவன்
தரும தேவன் -காலதேவன் – அவர் தான் எம தருமன். தென் திசைக்காவலன்
வருண பகவான், மேற்குத் திசையின் நாயகன். காவலன்
நிருதி பகவான் தென்மேற்கு திசையின் அதிபதி. –
இவரை வழிபட்டு வந்தால், மனோபலம் பெருகும். மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் பற்றிய பயமும் நீங்கும்.
வடமேற்கு திசைக்குக் காவலன் வாயு பகவான்
குபேரன் வடக்குத் திசையின் நாயகன்
வடகிழக்கு திசையின் அதிபதி, நாயகன்… ஈசானன்.-சிவனாரின் ஐந்து முகங்களில், ஈசானமும் ஒன்று

————–

யஸ் யோதய பரார்த்த யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம்
காலேந போதயதி ய கடிகா மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் –91-

யஸ்ய – எவனுடைய, உதய: (1) ௨தயமானது (2) தோற்றமானது (அவதாரமானது), பரார்த்த: – (1) பிறர்‌ தூக்கம்‌ விட்‌டு எழுந்து நல்ல காரியம்‌ செய்து சுகப்படுவதற்காக ஏற்படுகிறதோ (2) நல்லோர்கள்‌ வாழ்‌வு பெறுவதற்காக ஏற்படுகிறதோ, யஸ்ய ஆலோகேந – (1 எவனைக்‌ காண்பதனால்‌ (2) நல்லோர்கள்‌ வாழ்வு பெறுவதற்காக ஏற்படுகிறதோ, யஸ்ய ஆலோகேந – (1) எவனைக்‌ காண்பதனால்‌ (2) எவனுடைய கடாக்ஷத்தினாலே, அகம்‌ பாபமானது, விலயம்‌ யாதி – நாசத்தை யடைகிறதோ, ய: – எவன்‌, காலேந – (1) உரிய காலத்தில்‌ (இரவு முடியும்‌ ஸமயத்தில் ) (2) அஜ்ஞானம்‌ நீங்க வேண்டிய நல்ல காலம்‌ கிட்டும்போது, போதயதி – (1) விழிப்பை உண்டு பண்ணுகிறானோ (2) தானாகவோ அல்லது ஆசாரியர்கள்‌ வாயிலாகவோ ஜ்ஞானைத்தை உண்டாக்குகிறானோ, அத்ர கடிகாமித்ரே அத்தகைய இந்த கடிகை மலை ஸூரியனிடத்தில்‌, க: – எவன்‌, விராகீ ஸ்யாத்‌ ஆசையற்றவனாக இருப்பான்‌.

யஸ் யோதய பரார்த்த –யாருடைய உதயத்தால் பரர்களுக்கு நன்மை விளைகிறதோ
ஞானம் –அந்தமில் பேர் இன்பம் பிராப்தி பர்யந்தம் கிட்டுமோ
யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம் –யாரைக் காண்பதினாலேயே அகம் -அழுக்கு இருட்டு -அஞ்ஞானம் நீங்குகின்றதோ
கடாக்ஷத்தால் பிரதிபந்தங்களைப் போக்கி அருளி
காலேந போத யதிய கடிகா –சரியான காலத்தில் ஒளி உண்டாக்கி -விழிப்பு உண்டாக்கி -ஞானம் உண்டாக்கி
காலம் தாழ்த்தாமல் கிருபை அருளி
மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் —அப்பேர் பட்ட ஸூர்யன் மேல் யார் தான் விருப்பம் கொள்ளாமல் இருப்பார் –
அக்காரக்கனி திவாகரன்-அச்யுத பானு – மேல் ஆர் தான் ஆசை கொள்ளாமல் இருக்க இயலும்

—————

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே ஸரஸி ஜாலயே மோஹாத்
விரஸேஷு சித்த நாமா விஷயேஷுர கேஷு விஹரதே ப்ருங்க –92-

கடிகாஸைலகதே – (1) கடிகை மலையை அடைந்ததும்‌ (2) கடிகை மலையை அடைந்தவனும்‌, ஸரஸே – (1) நீர்‌ நிறைந்ததும்‌ (2) ஆஸ்ரிதரிடம்‌ அன்புடையவனும்‌, ஸரஸிஜ ஸரஸிஜா ஆலயே – (1) தாமரை மலர்களுக்கு இருப்பிடமுமான தடாகம்‌, (2) பிராட்டிக்கு இருப்பிடமுமான எம்பெருமான்‌, ஜாக்ரதி – (1) தன்னிடம் மலர்ந்த மலர்களால்‌ விழித்திருக்கச்‌ செய்தேயும்‌, (2) நம்மிடம்‌ யாராவது வரப்போகிறார்களா என்று கவனமாயிருக்கச்‌ செய்தேயும்‌, (1) அதனை (2) அவனை (அலக்ஷ்யம்‌ பண்ணி), சித்தநாமா ப்ருங்க: – எனது (1) மனமென்னும்‌ (2) அன்பற்ற, விஷய இக்ஷுர கேக்ஷ – (2) ஸ்த்ரீ முதலிய (1) முள்ளி மலர்களில்‌, விஹரதே – அலைந்து திரிகிறது.

தாமரைக் குளத்தில்‌ தேன்‌ நிறைந்த தாமரை மலர்கள்‌ மலர்ந்து கிடக்க, அதை விட்டுச்‌ சுவையற்ற முள்ளி மலரில்‌ அலையும்‌ மதியற்ற வண்‌டு போலே என் மனமானது – பிராட்டிக்கு வாஸஸ்தானமாய்‌ அவள்‌ காரணமாக ஆஸ்ரிதர்களிடத்தில்‌ அன்பு நிறைந்த எம்பெருமான்‌ கடிகை மலையில்‌ நம்மை எதிர்பார்த்திருக்க, அவனை அநாதரம்‌ பண்ணி, அன்பு சிறிதுமின்றிக்கே யிருக்கும்‌ பெண்களிடத்தில்‌ அலைந்து திரிகின்றது என்றாராயிற்று. இதுவும் நைச்ய அனுசந்தானம் -நம்மை திருத்து வதற்காகவே அருளிச் செய்துள்ளார்

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே -நீர் நிரம்பிய ஸரோவரம் இங்கே உள்ளது -நன்றாக மலர்ந்த
கருணா ரஸம் பொழியும் அக்காரக்கனி -கடிகைத்தடம் குன்றத்திலே நீர்ப்பண்டமாக
ஸரஸி ஜாலயே மோஹாத் -ஸரஸி ஜா- தாமரை மலர்களுக்கு இருப்பிடம் -பிராட்டி அம்ருத பல வல்லித் தாயாரும் இங்கே எழுந்து அருளி இருக்க
விரஸேஷு சித்த நாமா விஷயே ஷுர கேஷு விஹரதே ப்ருங்க — ரீங்காரம் இட்டு வரும் வண்டு
இங்கே வராமல் முள்ளு மலரிலே சென்று தன்னை வருத்திக் கொள்கிறதே ஐயோ
மிதுனமாக இங்கே நமக்காகவே உகந்து எழுந்து அருளி நித்ய வாஸம் பண்ணி நிற்க
புருஷாந்தரங்களை வேறே எங்கு எங்கோயே போகுமோ
ஹரீ ஹரீ என்று அன்றோ ரீங்காரம் இட்டுக் கொண்டு மங்களா ஸாஸனம் பண்ண அன்றோ அடுப்பது
கீழ் அச்யுத பானு ராம திவாகரன் அக்காரக்கனி பாஸ்கரன்
இங்கு தாமரை விகஸிப்பதும் பொருந்துமே

————-

பிப்ரதி ஸதைவ லக்ஷ்மீம்‌ விப்ராஜதி மித்ர மண்டலே விதுஷாம்‌ | கடிகாத்ரி ஸார்வ பெளமே கிம்‌ வா கடதே ந ஸம்ஸ்ரிதாபிமதம்‌ |! 93

ஸதைவ ! – எப்போதும்‌, லக்ஷ்மீம்‌ – (1) ஸ்ரீ மஹாலக்ஷமியை (2) செல்வத்தை, பிப்ரதி (1) திரு மார்பில்‌ தரித்துக்‌ கொண்டிருப்பவனும்‌ (2) வளர்த்து வைத்திருப்பவனும்‌, மித்ர மண்டலே விதுஷாம்‌ விப்ராஜதி (1) ஸூர்ய மண்டலத்தில்‌ ஞானிகள்‌ த்யானம்‌ செய்வதற்காக விளங்கிக்‌ கொண்டிருப்பவனுமாகிய (2) தோழர்களான சிற்றரசர்கள்‌ மந்திரிகள்‌ புரோகிதர்கள்‌ ஆகிய இவர்களின்‌ நடுவே வித்வான்‌௧ளை கெளரவிப்பதற்காகக்‌ கொலுவில்‌ விளங்குமவனாகிய, கடிகாத்ரி ஸார்வ பெளமே – திருக்கடிகை மலையிலுள்ள (1) எம்பெருமானாகிய (2) சக்ரவர்த்தியினிடத்தில்‌, ஸம்ஸ்ரித அபிமதம்‌ – (1) தன்னை ஆஸ்ரயித்த ஞானிகளின்‌ விருப்பமானது (2) வித்வான்‌௧ளின்‌ விருப்பமானது, கிம்‌ வா எதுதான்‌, ந கடதே – நிறைவேறாது.

இதில்‌ எம்பெருமானைச்‌ சக்கரவர்த்தியாக ரூபணம்‌ செய்தார்‌. லஷ்மீ: – (1) பிராட்டி (2) செல்வம்‌. மித்ர: – ஸூரியன்‌, மித்ரம்‌ – தோழன்‌, ஸார்வ பெளமன்‌ பூமண்டலமனைத்துக்கும்‌ பேரரசனான சக்ரவர்த்ததி விசேஷணங்களின்‌ பொருள்களைப்‌ பிரித்துக்‌ காண்க.

பிப்ரதி சதைவ லஷ்மீ -எப்பொழுதும் செல்வங்கள் மிக்கு இருக்கும் சக்ரவர்த்தி
அம்ருத பல வல்லி தாயார் இறையும் அகலகில்லேன் என்று இருக்க
விப்ரா ஜதி மித்ர மண்டலே விதுஷாம் -தோழர்கள்-வேத விற்பன்னர்கள் பண்டிதர்கள் மந்திரிமார்கள் புடை சூழ்ந்து –
ஓலக்கத்தில் சாதனர்களை கௌரவித்து –
ஞானிகள் தபஸ்ஸூ செய்யும் படி ஸூர்ய நாராயணனாக இருக்க
கடிகாத்ரி ஸார்வ பவ்மே -ஸர்வேஸ்வரேஸ்வரன் அக்காரக்கனி எம்பிரான் நித்ய ஸந்நிதியாய் எழுந்து அருளி இருக்க
நம் போல்வார் கூட சகல மனுஷ நயன விஷய தாங்கனாக உகந்து எழுந்து அருளி இருக்க
கிம் வா கடதே ந ஸம் ஸ்ரித அபி மதம் –அபீஷ்டங்கள் எவை தான் யாருக்குத் தான் கிட்டாமல் போகும் –

—————–

ஸ்ரித கடிகாசல ஸிகரே ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –94-

ஸ்ரித கடிகாசல ஸிகரே – கடிகை மலை யுச்சியை அடைந்ததும்‌, ஸ்திர கருணாபூர நிர்ப்பரே – நிலைத்திருக்கிற (1) கருனை யாகிற (2) நீர் வெள்ளத்தால்‌ நிறைந்ததும்‌, ஸிஸிரே – குளிர்ந்ததும்‌, திவ்யே – (1) அப்ராக்ருதமான (2) அழகுடையதுமான கமல ஆலயே – (1) பிராட்டிக்கு இருப்பிடமான பெருமானாகிற (2) கமல மலர்களுக்‌ க இருப்பிடமான தாமரைத்‌ தடாகத்தில்‌, விமல பக்ஷா: – : 1) குற்றமற்ற ஜ்ஞாநம்‌ அநுஷ்டான மென்கிற (2) இரண்டு இறகுகளையுடைய, ஹம்ஸா: ‘1) யோகிகளாகிற (2) அன்னப் பறவைகள்‌, சிரம்‌ வெகு காலம்‌, தீவ்யந்தி -விளையாடுகின்றன.

இதில்‌ எம்‌பருமானைத்‌ தாமரைத் தடாகமாகவும்‌ யோகிகளை ஹம்ஸங்களாகவும்‌ கூறுகிறார்‌. அன்னப்‌ பறவைகளுக்கு ஆகாசத்தில்‌ பறந்து செல்வதற்கு துணை செய்கின்ற இரண்டு இறகுகள் போல, யோகிகளுக்‌குப் பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்துக்குப்‌ பறந்து செல்வதற்கு உறுப்பாகிய ஞானமும்‌ அநுஷ்டானமும்‌ இரண்டு சிறகுகளாகக்‌ கருதப்பட்டன.

ஹம்ஸா: – (1) யோகிகள்‌ (2) அன்‌னப் பறவைகள்‌. திவ்யம்‌ (1) அப்ராக்ருதமானது (2) அழகுடையது. அன்னங்கள்‌ தடாகத்கில்‌ விளையாடுகின்றன, அதுபோல்‌ யோகிகள்‌ எம்பெருமானிடம்‌ ரமிக்கின்றனர்‌

ஸ்ரித கடிகாசல ஸிகரே -அடைந்த -உகந்து அருளி
ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே -குளிர்ந்த தடாகம் -கருணை வெள்ளம் நிரம்பிய
ஆச்சார்ய புருஷர்கள் கூடி -கிருபா கடாக்ஷம் -பெற்று ஆழ்ந்து –
லோக ஹிதம் ஒன்றே இவர்கள் க்ருத்யம் -59 சதகம் -நம் போல்வாரை கரை சேர்க்கவே
நம்போல்வாரை மிதுனத்துக்கு சேஷமாக்கி அருளவே இவர்கள் இங்கே மண்டி உள்ளார் அன்றோ
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –பாவனத்வம் -நிறைய நாளாக விளையாடிக் கொண்டு இருக்கும்
உலாவும் பெருமாள் -ஞான தீபம் ப்ரஸாதம் -ஸஜாதீய மனுஷ்யர் என்று எண்ணினால் யானையைக்குளிப்பாட்டிய பின்பு தன் மேல் புழுதி போட்டுக் கொள்ளுமா போலே அன்றோ
ஆச்சார்யர் திவ்ய மயம் என்று உணர வேண்டுமே –
திவ்யமான தடாகத்தில் மிதுன கருணா கடாக்ஷத்தில் விளையாடும் பரம ஹம்ஸர்
தூவி சேர் அன்னம் சூழ் புனல் குடந்தையே தொழுது
ஆச்சார்யர் -ஞானம் அனுஷ்டானம் -இரண்டு சிறகுகள் -பரம ஹம்ஸர் –
ப்ரயோஜனாந்தர பரர் இல்லாமல் -மங்களா ஸாஸனம் முதல் பாசுரம் கலியன்

அஸ்மாத் பூயாந் த்வமஸி விவிதா நாத்மந: சோதயித்வா |
பத்மா பர்த்து: ப்ரதி திநமிஹ ப்ரேஷயந் ப்ராப்ருதாநி ||
தஸ்மிந் திவ்யே வரவரமுநே தாமநி ப்ரஹ்ம ஸாம்யாத் |
பாத்ரீ பூதோ பவது பகவந் நைவ கிஞ்சித் தயாயா: ||–ஸ்ரீ வர வர முனி சதகம் –59

பிராட்டியின் கணவனான ஸ்ரீமந் நாராயணனுக்குப் பரிசாக இங்கு தினந்தோறும் பல ஜீவன்களைச் சுத்தி செய்து எங்களை அனுப்பிக் கொண்டு நீர் மதிக்கத் தக்கவராக இருக்கிறீர்.ஹே வரவரமுநியே! அந்தப் பரமபதத்தில் பரப்ரஹ்ம ஸமமாக இருப்பதால்
உமது கருணைக்குப் பாத்திரமாக ஒரு வஸ்துவும் ஆகிறதில்லை.

———————-

விஹரதி பஹு குண ஜாலே வீரே கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே
விஜஹதி ஸமஸ்த தாபான் விஜயந்தே கில மமாபி மோஹ மஹோ –95-

பஹுகுண ஜாலே – சுத்தி, நல்‌ நிறம்‌ முதலிய நற்குணங்களின்‌ ஸமூகங்களை உடையவனும்‌, வீரே – எரிக்கும்‌ பராக்ரமுடையவனுமான, கடிகாத்ரி க்ருஷ்ண வர்த்மநி – கடிகை மலையிலுள்ள அக்நி யானவன்‌ விஹரதி ஸதி – ஸஞ்சாரம்‌ செய்யும் போது, தே -முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறப்பட்ட ஹம்ஸங்கள்‌, ஸமஸ்த தாபாந்‌ – எல்லாத்‌ தாபங்களையும்‌, விஜஹதி – விட்டு விடுகின்றன, (மேலும்‌) மம – என்னுடைய, மோஹமபி அஜ்ஞானத்தையும்‌, விஜயந்தே – வெல்லுகின்றன. அஹோ – ஆச்சரியம்
ஹம்ஸங்கள்‌ அக்நியினிடம்‌ சென்று தமது தாபத்தைத்‌ தீர்த்துக்‌ கொள்வதும்‌, இக் கிரந்த கர்த்தாவின்‌ அஜ்ஞானத்தை வெற்றி கொள்வதும (போக்குவதும்‌) ஆச்சரியமாகையால்‌ விரோதம்‌ தோன்றும்‌, பரிஹாரம்‌ மேலே காண்க.

பஹு குண ஜாலே – க்ருபை வாத்ஸல்பம்‌ முதலிய குளிர்ந்த பல குண ஸமூகங்களை யுடையவனும்‌, வீரே – ஸம்ஸார தாபம்‌ போக்கும்‌ பராக்ரமமுடையவனுமான, கடிகாத்ரி க்ருஷ்ண வர்த்மநி – கடிகை மலையில்‌ வசிக்கும்‌ க்ருஷ்ணனாகிய ஸித்தோபாயமான பெருமான்‌, விஹரதி – விஹாரம்‌ செய்யும் போது, (அவனை யாஸ்ரயித்து) தே – ஹம்ஸர்கள்‌ என்று கூறப்பட்ட யோகிகள்‌, ஸமஸ்த தாபாந்‌ – ஆத்யாத்மிகம்‌ ஆதி பெளதிகம்‌ ஆதி தைவிகமாகிய எல்லாத்‌ தாபங்களையும்‌ (கஷ்டங்களையும்‌) விஜஹதி – விட்டு விட்டுச்‌ சுகமாக இருக்கிறார்கள்‌. (இதுவே யன்றி), மம – என்னுடைய, மோஹமபி – அவிவேகத்தையும்‌, விஜயந்தே – தமது உபதேசத்தாலே வெற்றி கொள்கிறார்கள்‌. இப்படிப் பொருள்‌ கொண்டால்‌ முற் காட்டிய விரோதம்‌ தோன்ற இடமில்லாமை காண்க.

க்ருஷ்ணவர்த்மா – (1) கறுத்த வழியை உடையது (தன்‌ வழியைக்‌ கறுப்பாக்குவது ) ஆகையால்‌ இது அக்நிக்குப்‌ பெயர்‌ (2) க்ருஷ்ணனாகிய வர்த்ம – மார்க்கம்‌ உபாயமென்றபடி. அதாவது க்ருஷ்ணனாகிய மோக்ஷோபாயம்‌. யோகிகள்‌ எம்பெருமானை யணுகி, தாம்‌ ஸம்ஸார தாபம்‌ தீரத்துக் கொள்வதோடு தம்மை யடைந்த வர்க்கும்‌ ஸம்ஸார தாபம்‌ தீர்த்து, மோக்ஷம்‌ பெறுவதற்குரிய ஞானம்‌ உண்டாவதற்காக, அஜ்ஞானம்‌ தீரும்படி உதவுகிறார்களென்றவாறு.

விஹரதி பஹு குண ஜாலே -கல்யாண குண கணங்கள் மிக்கு
வீரே -தாப த்ரயங்களைப் போக்கி அருளும் வீரனே
கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே –மார்க்கம் உபாயம் –அக்காரக்கனி கண்ணன் என்னும் கரும் தெய்வமே ஸித்த உபாயம்
விஜஹதி –ஆஸ்ரயித்து- கைங்கர்யமே யாத்ரையாகக் கொண்டு
ஸமஸ்த தாபான் விஜயந்தே -கீழே பரம ஹம்சர்கள் -தாபத் த்ரயங்கள் விடுபட்டுப்போய்
கில மமாபி மோஹம் அஹோ — அடியேனுக்கும் மோஹம் விலகிற்றே -என்ன ஆச்சார்யம் –
நீயே உபாயம் உபேயம் -அறியும்படி அருளினாயே
நாம் அனுசந்திக்க வேண்டியதற்காக அருளிச் செய்த ஸ்லோகம் அன்றோ

————–

கநக மய கடக ஸோபாம் கலயதி கடிகா மஹீ ப்ருதோ ருசிரே
தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே த்ராஸ லவம் அநு பவேத் கோ வா -96-

கநக மய கடக ஸோபாம்‌ – ஸ்வர்ண மயமான மலைச்‌ சரிவின்‌ சோபையை, கலயதி உண்டு பண்ணுவதும்‌, தீப்திமதி – ப்ரகாசமுடையதும்‌, ருசிரே – அழகுடையதுமான, கடிகா மஹீ ப்ருத க்ருஷ்ண வர்ணே – கடிகை மலையினுடைய கரு நிறமானது, த்ருஷ்டே ஸதி – பார்க்கப்பட்ட வளவில்‌, கோ வா – எவன் தான்‌, த்ராஸ லவம்‌ – பயத்தின்‌ சிறு பகுதியையும் கூட, அநுபவேத்‌ – அநுபவிப்பான் –

கநக மய கடக ஸோபாம் கலயதி –பொன் மயமான ஜ்வலிக்கும் சோபை மிக்க
கடிகா மஹீ ப்ருதோ ருசிரே தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே -ப்ரகாஸம் -அழகு -கருமை வண்ணம் -பொன் வண்ணமும் சேர்ந்து
த்ராச லவம் அனு பவேத் கோவா -ஸம்ஸார பயம் லவலேசமும் கீழே இருந்து தரிசித்தாலே போதுமே
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் இங்கும் –

முன்‌ ஸ்லோகத்தில்‌ மஹான்கள்‌ கடிகை யெம்பெருமானை ஆஸ்ரயித்து ஸம்ஸார தாபம்‌ தீரப் பெறுகிறார்களென்று அருளியவர்‌ இந்த ஸ்லோகத்தில்‌ அவ்வெம்பெருமானை ஆஸ்ரயிக்கவும்‌ வேண்டாம்‌, வெகு தூரத்திலிருந்தே கடிகை மலையைத் தர்ஸித்தாலே போதும்‌. சிறிதும்‌ ஸம்ஸாரத்திற்கு அஞ்ச வேண்‌டாம்‌ என்கிறார்‌. மலையின்‌ அழகு – கநகமயகடக சோபாம்‌ கலயதி தீப்திமதி க்ருஷ்ண வர்ணே – என்றதனால்‌ குறிக்கப்படுகிறது. மரங்கள்‌ அடர்ந்திருப்பதால்‌ மலையின்‌ கீழ்ப்பகுதி கறுத்துத்‌ தோன்றுகிறது. அக் கருநிறமானது சிவப்புப் பாறை மயமாகையால்‌ தங்க நிறமுள்ள சரிவுக்குச்‌ சோபையை யுண்டாக்கித் தானும்‌ அத்தங்க நிறப்‌ பாறைகளால்‌ சோபயை அடைகிறது. இங்ஙனம்‌ அத் திருமலையின்‌ கருநிறமே நம்முடைய அச்சமனைத்தையும்‌ அகற்றவல்ல தென்றாராயிற்று. இருள்‌ பேய்‌ முதலியவற்றின்‌ கருநிறம்‌ அச்சத்தை உண்டாக்கும்‌. இம்மலையின்‌ கருநிறம்‌ அச்சத்தைப்‌ போக்குமென்றபடி. திருவேங்கட மாமலை யொன்றுமே தொழ நம்‌ வினை ஓயுமே (திருவாய்மொழி 3.3.8) என்று நம்மாழ்வார்‌ அருளியது போலவே இங்கும் அருளிச் செய்கிறார்

—————-

ஸப்தரிஷி ஸேவ்ய மாநே சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே
ரமதாம் மநோ ஹரெள மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே –97-

ஸப்தர்ஷி ஸேவ்யமாநே – ஸப்த ரிஷிகளால்‌ ஸேவிக்கப்பட்டவனும்‌, ஸந்தத ஸுமநஸ்‌ ஸ்துதே – எப்போதும்‌ தேவர்களால்‌ துதிக்கப்பட்டவனும்‌, ஸஹஸ்ராஷே ஆயிரங்‌ கண்ணுடையவனும்‌. கடிகாத்ரி ரத்நஸாநு தடே – கடிகைமலை யென்கிற மேருமலையின்‌ சரிவில்‌, ப்ராஜதி -விளங்குமவனான, ஹரெள – (1) இந்திரனிடத்தில்‌ (2) நரஸிம்மப் பெருமாளிடத்தில்‌, மே மந: – என்னுடைய மனஸ்ஸானது, ரமதாம்‌ – ப்ரீதியை அடைந்திடுக.

ஹரி: என்பது இந்திரனுக்கும்‌, திருமாலுக்கும்‌, சிங்கத்துக்கும்‌ பெயர்

ஸப்த ரிஷிகள்‌ ஆவார்‌ – வஸிஷ்டர்‌, காஸ்யபர்‌, அத்ரி, ஜமதக்நி, கெளதமர்‌, விஸ்வாமித்ரர்‌, பரத்வாஜர்‌ என்ற எழுவர்‌ என்று விஷ்ணு புராணம்‌ (3.1.32) கூறும்‌. மரீசி, அங்கிரஸ்ஸு, அத்ரி, புலஸ்த்யர் . புலஹர்‌, க்ரது, வஸிஷ்டர்‌ ஆகிய எழுவரென்றும்‌– மரீசி அத்திரி, வசிஷ்டர், காஸ்யபர், கௌதமர், பரத்வாஜர், அங்கீரஸ் .ஆகிய எழுவரென்றும்‌–
சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே-– -புருஷ ஸூக்தம் கொண்டு ஸ்துதிக்கும் ஸத் புருஷர்கள்
ரமதாம் மநோ ஹரவ் மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே -நரஸிம்ஹன் இடம் மனஸ்ஸூக்கு ப்ரீதி உண்டாக்கி அருள வேண்டும்-மேரு போன்ற குன்றம் கீழேயே அருளிச் செய்தார் அன்றோ –

—————

பாத ஸ்பர்சந விபவாத் பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –98–

பாத ஸ்பர்சந விபவாத்‌ – (1) தனது கிரணங்களின்‌ ஸம்பந்தமாகிற பெருமையினால்‌ (2) தனது திருவடிகளின்‌ ஸம்பந்தமாகிற பெருமையினால்‌, பாலித புவநே – உலகங்களைக்‌ காப்பவனும்‌, ப்ரபோதித ஆத்ம குணே – (1) தூங்கும் போது கூம்பிய – ஆத்மாவின்‌ குணமாகிய அறிவை மலரச் செய்பவனும்‌, (2) மோக்ஷ உபாயமாகிய தத்‌ வஜ்ஞானத்தை மிகவும்‌ உண்டாக்குமவனுமாகிய, கடிகாத்ரி மித்ரே பகவதி – கடிகை மலையிலுள்ள (1) சூரியனாம்‌ (2) எம்பெருமானிடத்தில்‌, மே மநஸ்‌ ஸரோஜம்‌ – என்னுடைய மனமாகிய தாமரை மலரானது, பாவம்‌ – (1) ப்ரீதியை (2) பக்தியை, பஜது- அடைந்திடுக

பாத ஸ்பர்சந விபவாத் -தீண்டி -கிரணங்களை பரப்பி –திருவடி சடாரி சம்பந்தத்தால் -ப்ருத்ய -அடியார் அடியார்
பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே-பரிபாலனம் -இருள் நீக்கி -பயிர்களை விளைவித்து –
தத்வ ஞானம் அறிவித்து -அஞ்ஞானங்களைப் போக்கி-ஆத்ம குணம் வளர்த்து —
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –மித்ரன் சூரியனுக்கும் இன்னும் ஓரு பெயர் –
கடிகைத்தடம் குன்றம் மேல் உள்ள அக்காரக்கனி தானே ஹிருதய கமலத்தை இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

————-

துஷ்டே அல்பத ஸூ ஸீலே ஸூ குண க்ருஹீத ஸூ லக்ஷணே ஸூ த்ருடே
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார –99

அல்பத:துஷ்டே – (1) சிறிது கொடுத்தாலும்‌ அதனால்‌ ஸந்தோஷிப்பவனும்‌ (2) சிறிது ஆஹாரமிட்டாலும்‌ மகிழ்ச்சியடைவதும்‌, ஸுசீலே – (1) பக்தர்களோடு பேதமில்லாமல்‌ கலந்து பழகுதலை – சீலத்தை மிகவுமுடையவனும்‌ (2 )தன்னண்டையில்‌ வந்தவர்களைக்‌ கொம்பிலும்‌ குளம்பிலும்‌ ஏற்காமல்‌ ஸாதுவாக இருப்பதும்‌, ஸுகுண க்ருஹீதே- (1) ஜ்ஞாநம்‌ பக்தி சாந்தி வைராக்யம்‌ முதலிய நற்குணங்களையுடையவர் கட்கு வசப்படுபவனும்‌ (2) நல்ல கயிற்றால்‌ கட்டி வைத்தால்‌ அதற்கு அடங்கியிருப்பது… ஸூ லக்ஷணே – (1) நல்ல உத்தம புருஷ லக்ஷணங்களை யுடையவனும்‌ (2) எருதுக்கு இருக்க வேண்டிய நல்ல ஸாமுத்ரிக லக்ஷணங்களை யுடையதும்‌, ஸுத்ருடே – (1) பிராட்டி போல்வார்‌ குற்றங்களை யுரைத்தாலும்‌ ஆஸ்ரிதர்களைக் காப்பதில்‌ மிகவும்‌ மனத்திண்மை யுடையவனுமான (2) மிகவும்‌ பாரமேற்கத்தக்க பலமுடையதுமான, கடிகாத்ரி தூர்வஹே – கடிகாத்ரியில்‌ எழுந்தருளியிருந்து எல்லோருடைய ரக்ஷண பாரத்‌தையும்‌ வஹிக்கிற (1) எம்பெருமானாகிற பத்ரே – (2) எருதினிடத்தில்‌, மதீய: – என்னுடைய, பார: – ரக்ஷணமாகிய பாரமானது (சுமையானது) ஆரோபித: – ஏற்றப்ட:._து. பத்ர: – எருது.

துஷ்டே அல்பத ஸூ ஸீலே -எருது அல்ப தீனி கொடுத்தாலும் ஸந்தோஷம் அடைந்து –
அஞ்சலி பரமாம் முத்ரா -ஸக்ருத் -பக்தி ஒன்றையே எதிர்பார்த்து –
ஆச்சார்யர் ஸுலப்யமே உருவாகி
என் பேரைச் சொன்னான் ஊரைச் சொன்னான் இத்யாதி
ஸூ குண க்ருஹீத –கழுத்தில் காட்டியதும் அடங்கி இருக்கும்
கல்யாண குணங்கள் -ஞான பக்தி வைராக்யம் -பக்த ஆஸ்ரித வத்சலன் -பக்த உசிதன்
ஸூ லக்ஷணே ஸூ த்ருடே –அங்க அடையாளங்கள் பூர்த்தி -மல்லாண்ட திண் தோள்
திண் கழல் -ஊற்றம் உடையாய் -நெடுமால்
ஞானம் அனுஷ்டானங்கள் நிறைந்த ஆச்சார்ய ஸமூஹம் -நம்மைக் கரை யேற்றவே விரதம் தீக்ஷயாகக் கொண்டு
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார —இங்கே அன்றோ உள்ளது –
என்னுடைய பாரங்களை சமர்ப்பிக்க ஏற்றவாறு –
காளை புகுதக் கனாக் கண்டேன்
ரிஷபம் -ரிஷ அபம் -தீப பிரகாசம் இவனே
இவனையே பார்த்த சாரதி என்றும் முன்பே அருளிச் செய்தார்
பத்ரம் -மங்களம் -ஆச்சார்யர் திருவடிகளே மங்களகரம் -மங்களா ஸாஸனம் பண்ண நம்மை ஆக்கி அருளும் காளைகள் –

இதில்‌ எம்பெருமான்‌ பத்ரமாக எருதாக உருவகிக்கப்பட்டான்‌. ஒருவன்‌ தன்னுடைய பொருள்‌ பாரத்தை எருதினிடம்‌ ஏற்றுமா போலே, தம்மைக்‌ காப்பாற்றுதலாகிய பாரத்தை எம்பெருமானாகிய எருதினிடம்‌ ஏற்றினார்‌. இந்த பரஸமர்ப்பணம்‌ ஸித்தோபாய நிஷ்டர்க்குத்‌ தன்னடையே உண்டாகும்‌ ஸ்வபாவமிறே

———–

மேல் மூன்றும் பிரார்த்தனா ரூபமாக அங்கீ கரித்து அருள வேண்டி அருளுகிறார்

அநநு குணாம் அபி வாணீம் ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்
அங்கீ கரோது பகவான் ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –100-

ஆஸ்ரித தோஷ அவலோகந அகல்ய: – தன்னை யடைந்த பக்தர்களின்‌ குற்றங்களைக்‌ காண்பதில்‌ திறமை யற்றவனான, பகவாந்‌– ஜ்ஞாநம்‌, சக்தி, பலம்‌, ஐஸ்வர்யம்‌, வீர்யம்‌, தேஜஸ்‌ என்கிற ஆறு குணங்களை யுடைய எம்பெருமான்‌, ஆகஸ்‌ ஸந்தோஹ மந்தமதி கலிதாம்‌ – குற்றங்களின்‌ திரட்சிக்கு இருப்பிடமான – அல்ப புத்தியான அடியேனால்‌ சொல்லப்பட்ட. வாணீம்‌ – இந்த ஸ்தோத்ரமாகிய வாக்கை, அநநுகுணாம்‌ அபி – (தன்னுடைய பெருமைக்குத்‌) தக்கதாக இல்லாவிட்டாலும்‌, அங்கீகரோது – (தனது ஸ்தோத்ரமாக) ஏற்றுக்‌ கொள்வானாக

அநநு குணாம் அபி வாணீம் -உனது பெருமைக்குச் சேராத வாக்கு –
ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்-மந்த மதிகளான -ப்ருத்யர்களின் கடைசில் நிலையானதாக ஆக்கி அருள் என்றார் அன்றோ
அங்கீ கரோது -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனிய வாறே அன்றோ
பகவான் –ஸ்வா பாவிக ஷட் குண -பகவான்
ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –குற்றங்கள் எல்லாம் பார்க்காமல் -வாத்சல்யம் மிக்கு உள்ள அக்காரக்கனி எம்பெருமான் அன்றோ

———–

ஸ்வாமிந ஏவ க்ருதிர் மே ஸுக்திஸ் தோஷாய ததபி தஸ்யைஷா |! ஸ்வோக்தி மநு வததி பாலே ஸுதராம்‌ தாதோ அபி தோஷமுபயாதி--101-

மே க்ருதி: – என்னுடைய இந்த க்ரந்தமானது, ஸ்வாமிந: ஸூக்தி: ஏவ திருக்கடிகை யெம்பெருமானுடைய ஸ்ரீஸூக்தியே ஆகும்‌. ததபி – அத்தகையதாயினும்‌, ஏஷா – இந்த ஸ்ரீஸூக்தியானது, தஸ்ய தோஷாய – அவனுடைய ஸந்தோஷத்தின்‌ பொருட்டு ஆகிறது. (எப்படியென்னில்‌) பாலே – தன்‌ குழந்தையானது, ஸ்வ உக்திமபி (தகப்பனாரான) தனது சொல்லாயிருந்தாலும்‌ அதை, அநுவததி ஸதி – அப்படியே அநுவதித்துப்‌ பேசுமளவில்‌, தாத: – தகப்பன் ஸுதராம்‌ – மிகவும்‌, தோஷம்‌ ஸந்தோஷத்தை, உபயாதி(கலு) – அடைகிறான்‌ அல்லவா

இளைய புன் கவிதை
தன் சொல்லால் என்னைப் பாடுவித்த அப்பன்
பாலன் அநு வாதம் -தப்பாகவே பின்னால் சொன்னாலும்
தாதா-அப்பனுக்கு சந்தோசம் ஆகுமே
ஆர்த்தி பிரபந்தம் -முக்த ஜல்பிதம் என்று மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை திருவடி அடைந்த வஸ்துவின் உளறல்

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து—57-

தேசிக குல கூடஸ்தரான ஸ்ரீ ஆழ்வார் உடைய அசேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
அதுவே யாத்ரையாகச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான திருவடிகளை ஆஸ்ரயித்து

சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற ஸ்நேஹத்தால்-அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே அதில் அவிஞ்ஞாதா வாய் இருக்கிற தேவர் அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும்

———-

பக்தோசித அப் யுக்தாம் பக்த்யா சவ்ம்ய வர கிங்கர உப ஹிதாம்
அம்ருத பலா வளிம் அநகா ம்ருது ளாமஸ் வாத்ய ம்ருத்யு மதி யாந்தி –102-

பக்த்யா – பக்தியோடு கூடி, ஸெளம்யவா கிங்கர உபஹிதாம்‌ – மணவாள மாமுனிகளின்‌ அடியவனாகிய அடியேனால்‌ ஸமர்‌ப்பிக்கப்பட்டும்‌, பக்தோசித உபயுக்தாம்‌ – தக்கானாலே செவிசாத்தப்பெற்றும்‌, ம்ருதுளாம – பக்தியினால்‌ மெத்தென்றுள்ள கனிந்துள்ள, அம்ருதபல ஆவளிம்‌ – அமுத. பால்‌ தித்திக்கும்‌ பழங்களாகிய ஸ்லோகங்களின்‌ வரிசையை, ஆஸ்வாத்ய – சுவைத்து அனுபவித்து, அநகா: – பாவம்‌ தொலையப்‌ பெற்றவர்களாய்க்‌ கொண்டு (மக்கள்‌) ம்ருத்யும்‌ – ஸம்ஸாரத்தை, அதியாந்தி கடந்து பரமபதம்‌ செல்லுகிறார்கள்

பக்தோசித அப யுக்தாம் -பக்த வத்சலன் -தக்கான் திருச்செவி சாத்தும் படி அருளி -அங்கீ கரித்து அருளி
பக்த்யா ஸெளம்ய வர கிங்கர உப ஹிதாம் -அடையாளம் காட்டிக்கொள்கிறார் –ஷட் பதம் -திருவடித் தாமரைகளில் அமர்ந்த வண்டு
திவ்ய ஞான பிரதர் -தனியனிலே உண்டே-ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||
மா முனிகள் நியமிக்க அருளிச் செய்த திவ்ய கிரந்தம்
அம்ருத பலா வளிம் -ஸ்வாமியே திரு நாமம் -ஆவளி -தொடர்
ஒவ்வொன்றுமே அம்ருதம் -தொகுத்து அருளிய திவ்ய மாலை –
அநகா-குற்றங்களைப் போக்கி அருளும்
ம்ருது லாம் -மிருதுவாக
ஆஸ்வாத்ய -தாபத் த்ரயங்களுக்கு ஆஸ்வாஸ கரம்
ம்ருத்யு மதி யாந்தி –ஸம்ஸாரத் தடைகளைப் போக்கி நிரதிசய பரம புருஷார்த்தம்
ஆச்சார்யர் திருவடிகளிலே சேர்த்து அருளும்

—————————————————————————————————————————–

வித்தகனே வேந்தே மணவாள மா முனியே
சுத்தனே சோதிச் சுடர் முடியே -முத்தே
கரும்பின் சுவையே கடலில் அமுதமே
அரும்பின தாள் நீயே அருள் —ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் குண வகுப்பு

————-

மல்லிகைகள் வகுள மலர் மணி முடியில் நாறும்
வண் பவள வாய் அலரில் மறைகள் மிகு நாறும்
நல்லிசை சேர் பதின்மர்களின் நற் கலைகள் எல்லாம்
நலமுடைய கருணை விழி நாள் தோறும் மணக்கும்
சொல்லரிய பாதம் அபிஷேக மணம் நாறும்
தொல்லை எதிராசன் என இவ்வுலகில் வந்தோன்
செல்வன் மணவாளன் லோக குரு எங்கோன்
திருவடிகள் அல்லது ஒரு தெய்வம் அரியேனே–ஸ்ரீ ஸ்வாமி எறும்பி அப்பாவின் ஸ்ரீ மணவாள மா முனிகள் அகவல்

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஒப்பிலியப்பனுக்கு பங்குனி பிரம்மோற்சவம்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள்

January 23, 2023

ஸ்ரீ வஸூ மதி இடம் பிரார்த்தித்து வ காரம் நீ வைத்துக் கொண்டு-வா என்று அடியேனை அழைத்து அருளி
சேஷமான -ஸூ மதி- எனக்கு அருளி உன்னைப் பாட அருள வேண்டும்

சுத்த ஆனந்த விமானம் இங்கு தான்
அநந்தன் -தனக்கும் திருமலைக்கும் இருந்தாலும் ஸ்ரீ தேவிக்கு இல்லையே
நிகண்டு படி அநந்த -பூமி தேவிக்குத் தான்
ஆகவே அவனே இங்கு வந்து அந்த குறையும் நீங்கப் பெற்றான்
ஆகவே இவனே அவனுக்கும் அண்ணா ஆனான்

மார்க்கண்டேயர் -பெருமாள் ஸம்வாதம்
கஸ் த்வம் –புராண புருஷ -புரா அபி நவி -கிழவன் -பெரிய பெருமாள் -நாமம் கிம் -தத்தே து -அதுவே -ஆளும் கிழவன் பேரும் கிழவன் -பிதா மஹானுக்கும் பிதா இவன் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —மூன்றாம் திருவந்தாதி–61-

நிஷ் துலா -ஒப்பில்லா கல்யாணம் இங்கு-ஐப்பசி திருவோணத்தில் திருக் கல்யாணம் உத்சவம் –

——–

“தபஸ்யே பால்குனே மாஸே ஏகாதச்யாம் திதௌ முனே
புண்யே ச்ரவண நக்ஷத்ரே முஹூர்த்தே அபிஜித் ஆஹ்வயே
ஆஜகாம வஹாயோகீ ஸாக்ஷாத் நாராயணோ ஹரி:
ஸ தேவ: ஸ்ரீநிவாஸாக்யோ பூமிதேவ்யா: பதி: விபு:
வஸுந்தரா விவாஹார்த்தம் லோகாநுக்ரஹ காம்யயா”- என்கிறது ஒப்பிலியப்பனின் தல புராணம்.

இதன் பொருள்: “பங்குனி மாதம் ஏகாதசி திதியில், திருவோண  நட்சத்திரத்தில் அபிஜித் முகூர்த்தத்தில், திருவிண்ணகரம் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவில் திருத்தலத்தில், பூமி தேவியை மணந்து கொள்வதற்காகவும், தன்னை நாடி வரும் அடியார்களுக்கு அனைத்து வரங்களும் அருட்வதற்காகவும் நிவாசன் என்ற பெயரோடு திருமால் அவதாரம் செய்தார்!”

எனவே வருடந்தோறும் பங்குனி மாதத் திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, கும்பகோணத்துக்கு 5 கி.மீ. கிழக்கில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவோணத்துக்கு ஒன்பது நாள் முன் தொடங்கும் இந்த உற்சவம், பங்குனி திருவோணத்தன்று நிறைவடையும்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் ஒப்பிலியப்பனுக்கும் பூமிதேவித் தாயாருக்கும் புறப்பாடு நடைபெறும். அந்தப் புறப்பாடுகளுக்கான பின்னணிகளை ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் வசுமதி சதகம் என்னும் காவியத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றை  அவரது ஸ்லோகங்களோடு இணைத்து இக்கட்டுரையில் காண்போம்:

1. முதல் நாள் – இந்திர விமானம்:

“ஐந்த்ரம் விமானம் அதிருஹ்ய ஸமுஜ்ஜ்வலந்தீம்
இந்த்ரேண ஸர்வ ஜகதாம் தயிதேன ஸாகம்
இந்த்ராதி தேவ வினுதாம் அவலோக்ய மாத:
இந்த்ரப்ரியா இதி பவதீம் நிஜகாத வேத:”

பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் ஒப்பிலியப்பனோடு இந்திர விமானத்தில் பூமி தேவி காட்சி தருகிறாள். இதற்கான காரணம் என்ன? அனைத்துலகுக்கும் இந்திரனாகத் (தலைவனாக) திகழும் திருமாலுக்கு மனைவியாக பூமிதேவி இருக்கிறாள். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பெருமாளையும் பூமிதேவியையும் வந்து பணிகிறார்கள். வேதமும் பூமிதேவியை ‘இந்திரப் பிரியா’ என்று அழைக்கிறது. இந்தக் கருத்துகளை நமக்கு உணர்த்தவே பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் இந்திர விமான வாகனத்தில் தன் கணவனோடு பூமிதேவி வலம் வருகிறாள்.

2. இரண்டாம் நாள் – சந்திரப்பிரபை வாகனம்:

“ஓஷதீச ப்ரபா வாஹ மத்யக: ஸூன பூஷித:
நிஷ்கலங்கம் யசோ தத்தே ஸுவம்ச கர பங்கஜ:”

இரண்டாம் நாள் மாலை பெருமாளும் தாயாரும் சந்திரப் பிரபை வாகனத்தில் வலம் வருவார்கள். சந்திரனில் சில களங்கங்கள் தெரிகின்றன அல்லவா? ஆங்கிலத்தில் அவற்றை ‘craters’ என்று சொல்வார்கள். வெண்ணிலவைக் களங்கமற்றதாக ஆக்க நினைத்த ஒப்பிலியப்பன், அதையே தனக்கு வாகனமாக்கி அதன் நடுவே பூமிதேவியோடு எழுந்தருளினார். அதனால் சந்திரன் களங்கமில்லாததாக ஆனது! தூய்மை பெற்றது!

3. மூன்றாம் நாள் – சேஷ வாகனம்:

“த்வாம் யோ வஹேத பஹவ: கில தம் வஹந்தி
தத்ர ப்ரமாணம் இஹ மே புஜகாதிபோஸௌ
யஸ்த்வாம் நிஜேன சிரஸா வினதோ ததான:
ஸர்வை: அமீபி: அதுனா த்ரியதே மஹே தே”

யார் ஒருவர் பூமிதேவியைத் தலையால் தாங்குகிறாரோ, அவரை மக்கள் அனைவரும் தலையால் தூக்கிக் கொண்டாடுவார்களாம். அதற்குச் சான்றாகத் தான், உலகத்தைப் (பூமிதேவியை) பாதாளத்தில் இருந்தபடி தலையாலே தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை உற்சவத்தின் மூன்றாம் திருநாளன்று பலர் தூக்கிக் கொண்டாடுகிறார்களாம். அந்த ஆதிசேஷன் மேல் மூன்றாம் நாள் மாலையில் பூமிதேவியும் ஒப்பிலியப்பனும் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்பாலிப்பார்கள்.

4. நான்காம் நாள் – கருட,ஹம்ச வாகனங்கள்:

“த்விஜேஷு ஹம்ஸோ பவதீம் ததாதி
த்விஜேஷு ய: குண்டலினாம் நிஹந்தா
நாதம் த்வதீயம் யுவயோ: ப்ரதீதம்
ஸ்புடம் ஹி லோகே ப்ருது தாரதம்யம்”

நான்காம் திருநாளன்று மாலையில் பெருமாள் கருட வாகனத்திலும் பூமிதேவி அன்ன வாகனத்திலும் (ஹம்ச வாகனத்திலும்) புறப்பாடு கண்டருளுவார்கள். பரமஹம்சர்கள் என்று போற்றப்படும் ஞானியர்கள் பூமிதேவியை எப்போதும் தம் உள்ளத்தில் தாங்குகிறார்கள் என்பதை உணர்த்தவே, அந்தப் பரமஹம்சர்களுக்குப் பிரதிநிதியான ஹம்சத்தின் மேல் பூமிதேவி புறப்பாடு கண்டருளுகிறாள். அடியார்களின் துன்பத்தை அழிப்பவராகத் திருமால் திகழ்வதால், பாம்புகளை அழிக்கும் கருடனின் மேல் அவர் புறப்பாடு கண்டருளுகிறார். இப்படித் தாயார் ஹம்ச வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும் புறப்பாடு கண்டருளுவதில் இருந்து இருவரின் தன்மைகளையும் நாம் அறிய முடிகிறது.

5. ஐந்தாம் நாள் – ஹநூமந்த,கமல வாகனங்கள்:

“லங்கா புர்யாம் கில ஆஸீத் அதிகமலம் அலம் ஸ்வாமினீ யா ஸதீனாம்
தஸ்யா மாதா ஹி ஸேயம் ஸ்வயம் இதி ஹநுமான் தர்சயதி ஆதரேண”

ஐந்தாம் திருநாளன்று பெருமாள் ஹநூமந்த வாகனத்திலும், பூமிதேவி கமல (தாமரை) வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். இலங்கையில் பூமிதேவியின் மகளான சீதையை ஆஞ்ஜநேயர் முதன்முதலில் கண்ட போது, கலைந்த கூந்தலோடும், கிழிந்த ஆடையோடும், மெலிந்த மேனியோடும், வாடிய முகத்தோடும், கண்ணீரில் தோய்ந்த கண்களோடும் அவள் இருப்பதைக் கண்டு அவர் மிகவும் வருந்தினாராம்.

அந்தக் குறை தீரும் படியாக, பட்டாபிஷேகக் கோலத்தில் ஆஞ்ஜநேயருக்குக் காட்சி தர விழைந்தாளாம் பூமிதேவி. அதனால் தான் ஐந்தாம் திருநாளன்று பெருமாள் அனுமனின் மேல் (ஹநூமந்த வாகனத்தில்) உலா வருகையில், பூமிதேவி தாமரையின் மேல் (கமல வாகனத்தில்) பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் காட்சி தந்து அனுமனை மகிழ்விக்கிறாளாம்.

6. ஆறாம் நாள் – யானை வாகனம்:

“ராஜதே கஜவரே விராஜதே
ராஜ ராஜ நத பாத பங்கஜே
நாயகோ கஜ கதி: ஸுஹம்ஸகா:
த்வம் து ஹம்ஸ கமனேதி ஸாம்ப்ரதம்”

ஆறாம் திருநாள் மாலையில் பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் யானை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். யானையைப் போன்ற நடையை உடைய திருமால் யானை வாகனத்தில் வருவதில் வியப்பில்லை. ஆனால் அன்னம் போல் நடக்கும் அன்னை பூமிதேவியும் ஏன் யானை வாகனத்தில் உலா வருகிறாள்? வில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்த பூமிதேவி, திருமால் வந்து தன்னை மணந்து கொள்வதாகக் கனவு கண்டாள். அதில்,

“அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!”

என்று, யானையில் திருமாலோடு சேர்ந்து எழுந்தருள விழைந்தாள். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவே பூமிதேவி பெருமாளோடு சேர்ந்து யானை வாகனத்தில் எழுந்தருளிப் புறப்பாடு கண்டருளுகிறாள்.

7. ஏழாம் நாள் – சூர்ணாபிஷேகம், புன்னை மர வாகனம், தோளுக்கு இனியான்:

“ஆந்தோலிகாந்த: அவனீ ரமணம் யுவானம்
ஆஸாத்ய ஸாது திஷணா ஸமயம் ச ஸாயம்
த்ருஷ்ட்வா ரதிம் கலயிதும் க்ருத கௌதுகேயம்
தத்ர க்ஷமேதி பவதீம் அவலோக்ய த்ருத்யா”

ஏழாம் திருநாள் பொன்மாலைப் பொழுதில், பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் சூர்ணாபிஷேகம் நடைபெறும். வடநாட்டில் நடைபெறும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப் பொடிகளை மக்கள் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்வதைக் காண்கிறோம். அதற்கெல்லாம் வித்திட்டது வண்ணப் பொடியால் இறைவனுக்குச் செய்யும் அபிஷேகமான சூர்ணாபிஷேகம். அந்த சூர்ணாபிஷேகம் நிறைவடைந்தவாறே, பூமிதேவியோடு இளங்குமரனாய்த் தோளுக்கு இனியானில் பெருமாள் புறப்பாடு கண்டருளும் அழகைக் காண்கையில், அடியார்களின் மனம் ஒரு பெண்ணின் நிலைக்கு மாறி இறைவன் மேல் காதல் கொள்கிறது.

“புந்நாகம் அம்ப புருஷே புரத: அதிரூடே
ஸந்நாகம் அம்ஸ மதுரே பவதீ ததாதி
கிந்நாம தேன ஸஹ வாஹனதா கதா ஸ்யாத்
யந்நாம கோப வனிதாஸு ததா க்ஷமாவான்”

அதன் பின் ஏழாம் திருநாள் இரவில் பெருமாள் புன்னை மர வாகனத்திலும், தாயார் தோளுக்கு இனியானிலும் புறப்பாடு கண்டருள்வார்கள். கோபிகைகளின் ஆடைகளை அபகரித்துக் கொண்டு புன்னை மரத்தின் மீதேறிக் கண்ணன் அமர்ந்த வரலாற்றை நாம் அறிவோம் அல்லவா? அதை நினைவூட்டவே புன்னை மர வாகனத்தில் பெருமாள் வருகிறார்.

புன்னை மரத்தில் அமர்ந்திருந்த கண்ணன், சாஸ்திர விதிகளை மீறி ஆடையின்றி நீராடிய கோபிகைகளைத் தண்டிக்காமல் அவர்களிடம் பொறுமையையும் கருணையையும் காட்டினான் அல்லவா? அதை உணர்த்தவே புன்னை மரத்தில் செல்லும் பெருமாளைப் பின் தொடர்ந்து, பொறுமை, கருணை இவற்றின் வடிவாய்  இருக்கும் பூமிதேவி தோளுக்கு இனியானில் செல்கிறாள்.

8. எட்டாம் நாள் – குதிரை வாகனம், தோளுக்கு இனியான்:

“ஸுபக துரக வாஹே நாயகே அஸ்மின் த்வதீயே
த்வம் அஸி நனு புரஸ்தாம் அம்ஸ ரம்யே நிவிஷ்டா
துரக முக தவ ஏதத் யுஜ்யதே யுஜ்யதே அதோ
துரக வதன பேத்து: ச இதி மந்த ஸ்மிதாஸ்யா”

எட்டாம் நாள் மாலையில் பெருமாள் குதிரைவாகனத்திலும் பூமிதேவி தோளுக்கு இனியானிலும் காட்சி தருவது வழக்கம். “குதிரை முகத்தோடு ஹயக்ரீவராக அவதரித்த நீங்கள் குதிரை வாகனத்தில் வருவது பொருத்தமாகவே உள்ளது!” என்று பெருமாளைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி தோளுக்கு இனியானில் புறப்பாடு கண்டருளுகிறாள் பூமிதேவி.

9. ஒன்பதாம் நாள் – திருத்தேரோட்டம்:

“ரதஸ்யாந்த: ஸ்தாயாம் த்வயி ஜனனி பவ்யே தவ பதேயயௌ தஸ்யாம் வீத்யாம் ரத இதி லஸன் வர்தத இதி”

நிறைவு நாளான பங்குனி திருவோணத்தன்று காலை திருத்தேரில் பெருமாளும் பூமிதேவியும் எழுந்தருளும் போது, “இறைவன் நம்மைத் தேடி நம் வீதிக்கு வந்துள்ளாரே!” எனப் பரவசப்பட்டு பக்தகோடிகள் பேசும் வார்த்தைகளைக் கேட்டுப் பெருமாளும் பூமிதேவியும் ஆனந்தம் கொள்கிறார்கள்.

10. காலை பல்லக்குப் புறப்பாடு:

“ஆந்தோலிகாஸு பவதீம் ஜனதா வஹந்தீ
சாகாச பத்தன கதாம் தரணீம் ஸ்மரந்தீ
ஆனந்தம் அம்ப நியதம் ஹ்ருதயே பஜந்தீ
சாரோஹயந்தீ அத ச பாதி அவரோஹயந்தீ”

உற்சவத்தின் இரண்டாம் திருநாள் தொடங்கி எட்டாம் நாள் வரை காலையில் பெருமாளும் தாயாரும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளுவார்கள். மண்மடந்தையான பூமிதேவி, விண்ணகரம் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் கோவில் கொண்டிருக்கிறாள் அல்லவா? இது (அதாவது விண்ணகரத்தில் மண்மடந்தை குடியிருப்பது) விண்ணிலே மண் குடி இருப்பது போல் உள்ளதாம்! விண்ணிலே மண் குடியிருப்பதைக் காட்ட, மண்மடந்தையான பூமிதேவியைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து விண்ணை நோக்கி உயர்த்திப் பிடிக்கிறார்களாம். பெருமாளோடு பூமிதேவி பல்லக்கில் வலம் வந்தபின், மண்மடந்தை மண்ணில் இருப்பதே பொருத்தம் என்று கருதி பல்லக்கைக் கீழே இறக்கி வைக்கிறார்களாம்.

“டோலாயமானம் கோவிந்தம் மஞ்சஸ்தம் மதுஸூதனம்
ரதஸ்தம் கேசவம் த்ருஷ்ட்வா புனர்ஜன்ம ந வித்யதே”

– என்ற ஸ்லோகம் பிரம்மோற்சவக் காலத்தில் திருமகளையும் திருமாலையும் தரிசிப்போர் மறுபிறவி இல்லாத பேரானந்தமாகிய முக்தியை அடைவார்கள் என்று சொல்கிறது.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வடமதுரா என்னும் மதுரா—ஸ்ரீ விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம்–ஶ்ரீமது⁴ராபுரீஸ்துதி:–ஸ்ரீ வல்லபாச்சார்யர் -அருளிச் செய்த ஸ்ரீ மதுராஷ்டகம் ––

January 16, 2023

ஸ்ரீ வடமதுரா என்னும் மதுரா

ஸ்ரீ வடமதுரை மஹாத்ம்யம்
மதுரா நாம நாகரீ புண்யா பாபஹரீ சுபா -புராண ஸ்லோகம் -யுகம் தோறும் சம்பந்தம் -மன்னு வடமதுரை –

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சீ ஹ்யவந்திகா |. புரீ த்வாரவதீ சைவ ஸப்தைதா மோக்ஷதாயிகா:

க்ருத யுகத்தில் த்ருவன் யமுனையில் நீராடி நாரதர் இடம் உபதேசம் பெற்று தவம் புரிந்து பகவானை தரிசித்தான் இங்கேயே
த்ரேதா யுகத்தில் -மது என்னும் அசுரனின் மகன் லவணாசுரன்-துன்புறுத்த –தம்பி சத்ருக்னணனை அனுப்பி அழித்தான்-
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் இதற்கு மதுரா என்று பெயரிட்டு தானே ஆண்டு வந்தான் என்பதை உத்தர காண்டம் சொல்லும் –
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி -பெருமாள் திருமொழி –
அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா புரீ த்வாரவதீ சைவ ஸப்த தைதா மோக்ஷதா யகா -ஸ்லோகம் படி முத்தி தரும் க்ஷேத்ரம் –

நம்மாழ்வார் -பத்து -7 -10-4–/-8–5–9-/-9–1–3-தொடங்கி -10-வரை குலசேகரர் -1-/
பெரியாழ்வார் -நான்கு–திருப்பல்லாண்டு -10-/பெரியாழ்வார் திருமொழி -3–6—3 /—4-7–9-/–4–10–8-/
ஆண்டாள் -ஏழு -திருப்பாவை -5-/ நாச்சியார் திருமொழி -4–5-/ -4–6-/-6-5-/-7–3-/-12–1-/ -12–10-/
திருமங்கை ஆழ்வார் -நான்கு -6-7-5-/ -6–8–10-/-9-9–10-/ சிறிய திருமடல் -40 கண்ணி-/
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -ஓன்று -திருமாலை 45-ஆகிய ஆறு ஆழ்வார்களால் -27-பாசுரங்களால் மங்களா சாசனம் –

வளவெழும் தவளமாட மதுரைமா நகரந் தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை, துவளத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல், இளைய புன் கவிதை யேலும் எம்பிறார்க்கு இனிய வாறே. (45)

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து, கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல் சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே. (பெரிய திருமொழி 6.7.5)

மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை நன் நறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார், கன்னவிலும் தோளான் கலியன் ஓலி வல்லார் பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே. (பெரிய திருமொழி 6.8.10)

நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான், வாச மலர்ப் பொழில் சூழ் வட மாமதுரைப் பிறந்தான், தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற, கேசவ நம்பி தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ. (பெரிய திருமொழி 9.9.6)

பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த் தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப் (சிறிய திருமடல், 74)

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற, வாய்க்கும் கரும்பும் பெருஞ் செந் நெலும் வயல் சூழ் திருவாறன்விளை, வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த, வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே. (திருவாய்மொழி 7.10.4)

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறும் இரும் சிறைப் புள், அதுவே கொடியா உயர்த்தானே! என்று என்று ஏங்கி அழுதக்கால், எதுவேயாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான், மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே? (திருவாய்மொழி 8.5.9)

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்றே எழுவர், இருள் கொள் துன்பத்து இமை காணில் என்னே என்பாரும் இல்லை, அருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு அருள் கொளாளா உய்ய வல்லால் இல்லை கண்டீர் அரணே.(திருவாய்மொழி 9.1.3)

அரணம் ஆவார் அற்ற காலைக்கு என்று அமைக்கப் பட்டார், இரணங் கொண்ட தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அஃதே, வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சரண் என்று உய்யப் போகில் அல்லால் இல்லை கண்டீர் சதிரே. (திருவாய்மொழி 9.1.4)

சதிரமென்று நம்மைத் தாமே சம்மதித்தின் மொழியார் மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்று உறுவர் அதி கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு எதிர் கொள்ளா உய்யுய்ய ல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே.(திருவாய்மொழி 9.1.5)

இல்லை கண்டீ ர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே தொல்லை யார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே. (திருவாய்மொழி 9.1.6)

மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ்வுயிருக்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றமன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றிமில் சீர் கற்று வைதல் வாழ்தல் கண்டீர் குணமே . (திருவாய்மொழி 9.1.7)

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு வாழ் துணையா வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போம் இதனில் யாதுமில்லை மிக்கதே. (திருவாய்மொழி 9.1.8)

யாதுமில்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் மா துகிலின் கொடிக் கொள் மாட வட மதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே. (திருவாய்மொழி 9.1.9)

கண்ணன் இல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் திண்ணமா அம் உடைமை உண்டேல் அவனடி சேர்த்து உய்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே. (திருவாய்மொழி 9.1.10)

ஆதுமில்லை மற்றவனில் என்றதுவே துணிந்து தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்கள் இவை ஆயிரத்துளிப் பத்தும் ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே. (திருவாய்மொழி 9.1.11)

மதுரையார் மன்னன் என்று பெயர் இடச் சொல்லி ஸ்வப்னத்தில் சாதித்த ஐதிஹ்யம் –
அஹோ மது புரீ தன்யா வைகுண்டாச்ச கரீயஸீ தினமேகம் நிவாஸேன ஹரவ் பக்தி ப்ரஜாயதே -வாயு புராணம் -பக்தி பிறக்கும் ஒரு நாள் தங்கினாலேயே
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகாதோ மதுராம் பூரிம்-

மதன ஆதார பூமி -அதாவது கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி
ப்ருது மஹா ராஜன் இவ்விடத்திலேயே பூமா தேவியிடம் இருந்து மக்கள் வாழ வேண்டிய சிறந்த பொருட்களை எல்லாம் கடைந்து எடுத்த படியால் இப்பெயர்
மத்யதே பாப ராசி யயா இ தி -எதனாலே மக்களின் பப்பட் கூட்டங்கள் கடைந்து அகற்றப் படுகிறதோ அதுவே மதுரா
இங்கு வசித்தாலும் -கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும் சம்சாரத் தளைகள் வஸூ தேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போலே விலகிப் போகும் –

தர்சன ஸ்தலங்கள் –
1–அக்ரூர காட் -அக்ரூரர் கண்ணனையும் பலராமனையும் தேரில் அழைத்துக் கொண்டு மதுரை வரும் போது கண்ணன் லீலை புரிந்து நதிக்கு உள்ளே சேவை சாதித்தான்
வெளியே ரத்தத்திலும் சேவை -இப்படி மாறி மாறி சேவை சாதித்து -தானே சர்வ வ்யாபி சர்வ நியாந்தா -என்று புரிய வைத்தான் –
இங்கு அக்ரூரருக்குஒரு கோயில் உள்ளது -யமுனை தற்காலத்தில் சற்று தள்ளி ஓடுகிறது –இந்த சரித்திரம் -ஸ்ரீ மத் பாகவதம் -10-39-/-40-விவரிக்கும்
2–ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி -சிறைச்சாலை -தந்தை காலில் விலங்கு அவிழ நான்கு தோளோடு எட்டாவது கர்ப்பமாய் பிறந்து ஜென்ம ரஹஸ்யம் வெளியிட்டு அருளி
அவர்கள் அதை மறக்கும் படி செய்தான் -பிறந்த அன்றே கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டு யோகமாயையை எடுத்து வந்தார்
இங்குள்ள புராதனமான திருக் கோயில் கண்ணனுடைய கொள்ளுப் பேரனான வஜ்ர நாபனாலே ஸ்தாபிக்கப் பட்டது
பல படை எடுப்புக்களுக்கு ஆட்பட்டு தற்போதுஉள்ள நிலை –
3–கேசவஜீ மந்திர் -ஜென்ம பூமிக்கு அருகில் உள்ள இக்கோயில் புராதனம் -கம்சனின் சிறை இவ்விடம் இருந்ததாக சொல்லுவார்கள்
இங்கு இருக்கும் மூர்த்தி பகவானுடைய -24-அவதாரங்களாலும் அலங்கரிக்கப் பட்டு இருக்கிறார்
4–போத்ரா குண்ட் -ஜென்ம பூமிக்கு அருகில் வஸூ தேவரும் தேவகியும் துணி துவைத்த இடம் –
பவித்ரா குண்டம் என்னும் சொல் சிதைந்து போத்ரா குண்ட் என்று கூறப்படுகிறது
5–கம்ச டீலா / ரங்க பூமி -முஷ்டிக சாணூரர்கள் இடம் பொருத ஸ்தலம் -கம்சனையும் கீழே இழுத்துத் தள்ளி கொன்ற ஸ்தலம் –
அஞ்சலகத்துக்கு அருகே இவ்விடம் தற்போது அமைந்துள்ளது-
6— ஆதி வராஹர் சந்நிதி -புராதனமான மதுரா ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் -இங்கு இருக்கும் ஸ்ரீ வராஹ மூர்த்தி கபில முனிவரால் இந்திரனுக்கு அளிக்கப்பட்டு
பின்பு திரு அயோத்தியில் இருந்து ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது
7–த்வரகாதீசன் சந்நிதி -150-ஆண்டுகளுக்கு முன்பு வல்லபாசார்ய ஸம்ப்ரதாயத்தாரால் கட்டப்பட்டது -ருக்மிணீ சத்ய பாமையோடு எழுந்து அருளி இருக்கும் கண்ண பிரான் –
ஸ்ரவண மாதத்தில் மிகப் பெரிய உத்சவம் –
8—சமயமன தீர்த்தம் -ஸ்வாமி காட் என்றும் சொல்லுவார் -இவ்வழியாகத் தான் கண்ணனைச் சுமந்து கொண்டு யமுனையை வஸூ தேவர் கடந்தார்
யமுனையில் உள்ள -24-துறைகளில் ஒன்றாகும்
9–விஸ்ராம் காட் –இதுவே நடுவாக விழுங்கும் காட் –
கண்ணன் கம்சனை முடித்து அந்திம கிரியைகளை துருவ காட்டில் நடத்தி வைத்து இங்கே வந்து நீராடி ஓய்வெடுத்தான்
கார்த்திகை ஸூக்ல பஷ த்விதீயை -எம த்விதீயை -அன்று தான் யமனின் தங்கை யமுனை பிறந்த நாள் –
அன்று நீராடினால் சம்சார நிவ்ருத்தி கிடைக்கும் -முன்பு ஸ்ரீ வராஹ பெருமாளும் இங்கே ஓய்வெடுத்ததாகச் சொல்லப்படுகிறது
10–துருவ டீலா -யமுனையின் மற்றொரு கரையில் இருக்கும் இதில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான் –
இத்தலத்தை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளலாம்
இது மது வனத்துக்குள் மஹாலி கிராமத்தில் பாதை சரியில்லாத இடத்தில் அமைந்துள்ளது –
11–தாள வனம் -தேனுகாசுரன் கழுதை வடிவு கொண்ட அசுரனை பலராமன் இங்கு தான் கொன்றார் -இக்காடு கிரைய பனை மரங்கள் நிறைந்து உள்ளன
ஞானம் அற்ற சம்சாரியே கழுதை -சுக துக்கங்கள் பொதி -சுமந்து பக்தி இல்லாமல் இருக்க -பகவான் அறிவின்மையை அழித்து நற்கதி அளிக்கிறான்
மதுரைக்கு தெற்கே -6-மைல் தொலைவில் உள்ள இவ்விடத்தில் பலராமன் கோயிலும் பலராமன் குண்டமும் உள்ளன –ஸ்ரீ மத் பாகவதம் -10-15-இதை விவரிக்கும்
12–மதுவனம் -மதுரைக்கு தேன் மேற்கே உள்ள இங்கு தான் க்ருத யுகத்தில் மது என்னும் அசுரனைக் கொன்று பகவான் மது சூதனன் என்ற பெயர் பெற்றான்
த்ரேதா யுகத்தில் மதுவின் மகனான லவணாசுரனை இங்கு தான் சத்ருன ஆழ்வான் கொன்றான் -அவனே வராஹ பெருமானுக்கு கோயில் அமைத்து ஆண்டு வந்தான்
இங்கு சத்ருக்ன ஆழ்வானுக்கு சந்நிதியும் மது குண்டமும் உள்ளன
த்வாபர யுகத்தில் கண்ணன் கற்றுக் கறைவைகளோடு இங்கு வந்து நாட்டியமாடி மகிழ்வான்
இங்கு த்ருவன் தவம் பண்ணிய சிறு குன்று கோயிலும் உள்ளன -லவணாசுரன் ஒளிந்து இருந்த குகையையும் காணலாம்
13–குமுதவனம் -தாளவானத்தில் இருந்து மேற்கே -2-மைல் தொலைவில் உள்ள இங்கு கோபிகளுக்கு குமுத மலர்களை கண்ணன் சூட்டி விடுவபானாம்
இங்கு தாமரை மலர்கள் நிறைந்த பத்ம குண்டத்தின் கரையில் கபில முனிவர் பல காலம் தவம் புரிந்தார் –

———————————————–

வடமதுரை என்னும் மதுரா

. “மதுரா நாம நகரி புண்யா பாபஹரி சுபா”
என்னும் புராண ஸ்லோஹத்தின் படி மதுரா நகரம் பாபங்களைத் தொலைத்து புண்ணியத்தை தரக்கூடியதாகவும்,மங்கலங்களுக்கு இருப்பிடமாகவும் உள்ள ஊர் ஆகும். இதுவே கண்ணனின் பிறப்பிடமாகும்

இந்நகரம் யுகம்தொரும் பாகவத சம்மந்தம் பெற்ற ஊர் என்கிறார்கள். க்ருத யாகத்தில் துருவன் யமுனைக்கரையில் தவம புரிந்து பகவானை தரிசித்தான். த்ரேதா யுகத்தில் இதே ஊரில் லவனாசுரன் என்ற அரக்கனைக்கொன்று சத்துருக்க்ணன் மதுரா எனப் பெயரிட்டு ஆண்டு வந்தான் என குலசேகர ஆழ்வார் தனது பெருமாள் திருமொழியில் கூறுகிறார்.

ஏழு முக்தி தரும் ஷேத்திரங்களில்

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரித்வாரவதீ சைவ ஸப்ஸத்தா மோக்ஷதாயகா ……

என்று ,கொண்டாடப்படும் ஊர்  மதுரா நகரமாகும்.

பெரியாழ்வார், தனது திருமொழியில்

வடதிசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்ற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்
கண்டமென்னும் கடிநகரே.

ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில்,

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழி நான்

அன்று மதுரை மன்னனைப் பற்றி கூறுகிறார்.

நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழியில்

மண்ணின் பாரம் நீக்குவதற்கு வடமதுரையில் கண்ணன் வந்து பிறந்தான், கண்ணன் அல்லால் மற்றொரு தெய்வம் இல்லை என்று உணருவீர், அவனைச் சரண் அடைந்து உய்ம்மின்
என்று, கூறு கிறார்.
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே மதன ஆதார பூமி அன்று, கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி, அதாவது ப்ருது மகராஜன் இந்த இடத்தில் புமாதேவியிடம் இருந்து மக்கள் வாழ்வதற்கு வேண்டிய சிறந்த பொருட்களையெல்லாம் கடைந்து எடுத்தபடியால் இந்த இடம் மதுரா என்று பெயர் பெற்றதாம்.
மதுராவில் வசித்தாலும், கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும், வசுதேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போல் நம் பாவங்கள் விலகி போகுமாம்.
ஆதாரம்:
திவ்யதேச மாஹாத்ம்யம்— தொகுத்தவர்; வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள். மூன்றாம் பதிப்பு, கிஞ்சித்காரம் டிரஸ்ட், 6, பீமசேனா கார்டன் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
கண்ணன் பிறந்த இடத்தையும் மற்றும் மதுராவில் கண்ணனுக்கு வேண்டிய இடங்களையும் காண்போம்.
க்ருஷ்ண ஜன்ம பூமி யின்  முகப்பு

1. ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமி.
கம்சனின் அரண்மனையில் ஒருகாட்சி::
தேவகிக்கும் வசுதேவருக்கும் மாங்கல்யதாரணம் நடத்துவது என்று கம்சன் தீர்மானிக்கிறான். உரிய நாளில் திருமணம் செய்து அவர்களை ரதத்தில் ஏற்றி பாசத்துடன் வழியனுப்ப தயாராகிறான். அந்த சமயம், வானத்தில்
“கம்சா, தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் உனக்கு எமன்”
என்று அசரரி கேட்கிறது. கம்சன் திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு வழியனுப்புவதை நிறுத்திவிட்டு,
“இவர்கள் இருவரையும் உடனே கொல்லுங்கள்”
என தனது ஆட்களுக்கு ஆணை இடுகிறான். அதிர்ச்சி அடைந்த வசுதேவர், கம்சனிடம்,
” கம்சா,எங்களுக்கு பிறக்கும் எட்டாவது மகன் தானே உனக்கு எமன். நாங்கள் என்ன பாவம் செய்தோம்.எங்களுக்கு பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் உன்னிடம் கொடுத்து விடுகிறோம். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எங்களைக் கொன்று அந்தப் பாவத்தை வேறு நீ ஏன் பெறவேண்டும்”, என்று பலவாறு அவனுக்கு அறிவுரை சொல்கிறார். ஒருவாறு சமாதானம் அடைந்த கம்சன்,
“இவர்கள் சொல்வதும் சரிதான். “இவர்களை சிறையிலடையுங்கள். இவர்களுக்கு தக்க பாதுகாப்புப் போடுங்கள்.இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்”,
என்று தனது ஆட்களுக்கு ஆணையிடுகிறான்.
நாட்கள் சென்றன. தேவகியும் கருவுற்றாள்.குழந்தை பிறந்த செய்தி கேட்டு,கம்சனும் அந்தக் குழந்தையை உடன் பெற்று கொன்றான்.இது மாதிரி ஆறு குழ்ந்தைகளிக் கம்சன் தொடர்ச்சியாகக் கொன்றான். தேவகி ஏழாவது கர்ப்பம் தரித்தாள்.அந்த சமயத்த்தில் விஷ்ணு பகவான் தன் யோகமாயையை கூப்பிட்டு
“ரோகிணி கோகுலத்தில் வாழ்கிறாள். நீ தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை வெளியே இழுத்துக்கொண்டு போய் ரோஹினியின் கர்ப்பத்தில் வைத்து விடு. தேவகிக்கு கர்ப்பச் சிதைவு என்று கம்சனிடம் சொல்லிவிடுவார்கள்”
என்று ஆணையிடுகிறான். இந்தக் குழந்தைதான் பலராமன்.
“மேலும் நீ போய் கோகுலத்தில் யசோதையின் கர்ப்பத்தில் பெண் குழந்தையாக பிற.நான் தேவகியின் எட்டாவது மகனாக மதுரையில் பிறந்து, என்னை வசுதேவர் யமுனையைத் தாண்டி கோகுலத்தில் கொண்டு விட்டு, உன்னை எடுத்துக் கொண்டு வந்து கம்சனிடம் எட்டாவது குழந்தையாகக் கொடுப்பார்.உன்னைக் கம்சன் கொள்ள முற்படும்போது நீ நடந்ததைச் சொல்லி விட்டு மறைந்து விடு”,
என்று ஆணை இடுகிறார்.
அந்தக் கண்ணன் அவதரித்த சிறைச்சாலை. இங்கேதான் வசுதேவரும்,தேவகியும்அடைக்கப்பட்டு இருந்தார்கள். இங்கு தான் எட்டாவது குழந்தையாக கண்ணன், தந்தையின் காலில் விலங்குகள் அவிழ, நான்கு தோள்களோட சகல ஆயுதங்களுடன்,ஆபரங்களுடன் பிறந்தான்.தனது ஜன்ம ரகசியத்தை பெற்றோர்களுக்கு வெளியிட்டு பின்னர் அதை மறக்கும்படி செய்தான்.எனவே வசுதேவர் கண்ணனைக் கொண்டுபோய் கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டுவிட்டு அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைச்சாலைக்கு அடுத்துச் சென்றார்.
இவைகள் நடந்த இடம்தான் நாம் பார்க்கும் சிறைச்சாலை. புராதனமான கோயில் கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரனாபன் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. பல படை எடுப்புக்களால் தற்போது உள்ள நிலையில் உள்ளது. பக்கத்திலேயே முகமதியர்களின் மஸூதி உள்ளதால் பாதுகாப்பு அதிகம் உள்ளது.கைபேசி,காமிராக்களைக் கொண்டு போகவேண்டாம்.

2.கேசவ்சி மந்திர்:

ஜன்ம பூமிக்கு அருகில் உள்ளது.புராதனமான கோயில்.கம்சனின் சிறை முன்னொரு காலத்தில் இங்கு வரை இருந்ததாகச் சொல்வார்கள்.இங்குள்ள மூர்த்தியை 24 அலங்காரகளாலும் அலங்கரித்து உள்ளார்கள்.மேலும் தேவகியும் வசுதேவரும் வணங்கிய மூர்த்தியாகும்.

போதரா குண்டம்

3.போத்ரா குண்டம்:
ஜன்ம பூமிக்கு அருகில் மிக அழகான குளம்.”பவித்ர குண்டம்” என்ற சொல் மருவி “போத்ரா குண்டம்” என்று அழைக்கப்படுகிறது. சிறைச்சாலையில் உள்ளபோது,வசுதேவரும்,தேவகியும் நீராடி துணி துவைப்பார்களாம்.
4.கம்சா டீலா ,ரங்கா பூமி:
அஞ்சலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இங்கு தான் கண்ணன் முஷ்டிக மற்றும் சாணுரர்களை சண்டை இட்ட இடம்.இங்கே இருந்த குன்றின்மேல் அமர்ந்து இருந்த கம்சனையும் கீழே தள்ளி கொன்றானாம்.

ஆதி  வராஹ முர்த்தி

5.ஆதிவராஹ மூர்த்தி:
முன்னொரு காலத்தில் மதுரா வராஹ ஷேத்திரமாக இருந்ததாம் அயோத்திலிருந்து சத்ருக்க்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
6.த்வாரகா தீசன் சந்நிதி:
த்வாரகா தீசன் சந்நிதி ,விஸ்ராம் காட், த்ருவ டீலா ஆகியவை யமுனை நதிக்ரைக்கு அருகாமையில் உள்ளன. எனவே வாகனத்தில் சென்று பார்ப்பவர்கள் வாகனத்தை பெங்கால் காட் அருகே நிறுத்தி வைத்துக் கொண்டு தரிசிப்பது நலம். த்வாரகா தீசன் சந்நிதி 150 ஆண்டுகளுக்கு முன்னர் வல்லபாசார்யா சம்பிரதாயத்தில் கட்டப்பட்டது. ருக்மிணி சத்யபாமா சமேத கணணன் எழுந்தருளி உள்ளான்.

விஸ்ராம் காட் மதுரா

7.விஸ்ராம் காட்:
கண்ணன் கம்சனை முடித்து அவனுடைய அந்திமகிரியைகளை “த்ருவ காட்டில்” செய்து விட்டு நீராடி ஓய்வேடுத்தான் என்பர்.இது 24 தீர்த்தங்களுள் முக்கியமானது ஆகும்.யமுனைக் கரையில் உள்ளது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்விதீயை “யமத்விதீயை”, அன்று இங்கு நீராடினால் சம்சாரத்தில் இருந்து ஒய்வு கிடைக்குமாம்.
8.த்ருவ டீலா:
யமுனையின் மற்றொரு கரையில் உள்ள இந்த இடத்தில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான்.பாதை சரியில்லாமல் உள்ளதால், இதனை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளவேண்டும்.
தாள வனம்  மதுரா

9.தாள வனம்:
மதுரைக்குத் தெற்கே 6 மைல் தொலைவில் உள்ளது.இங்கு பலராமன் கோயிலும் குண்டமும் உள்ளன.

10.மது வனம்: மதுரைக்கு தென்மேற்கே உள்ளது. இங்கு மது என்ற அசூரனைக் கொன்றதால் மதுவனம் எனப்பட்டது இதைத் தவிர இன்னும் பல இடங்கள் பாதை சரியில்லாமல் இருக்கின்றன.

————–

ஶ்ரீமது⁴ராபுரீஸ்துதி:

ஶ்வேதத்³வீபமதி⁴ஷ்டி²தா ஸுவிபுலா ஸா ஸத்யலோகஸ்தி²தா
சாயோத்⁴யா ச குஶஸ்த²லீ மது⁴புரீத்யத்யுஜ்ஜ்வலா நிஸ்துலா: ।
பஞ்ச ஶ்ரீகமிது: ப்ரபஞ்சகுஹரே புர்ய: ஸ்பு²ரந்தி ஸ்பு²டம்
தாஸாம் மத்⁴யக³தா விபா⁴தி மது⁴ரா ஸா ஹந்த ஸர்வோத்தரா ॥ 1॥
காஞ்சீ காஶிபுரீ ச ஸா புநரயோத்⁴யா ஸாபி சாவந்திகா
மாயாக்²யா ச குஶஸ்த²லீ மது⁴புரீத்யத்யந்தபுண்யோத்தரா: ।
புர்ய: ஸப்த ஸமுல்லஸந்தி பரித: க்ஷோணீதலே தாஸ்வஹோ
மத்⁴யஸ்தா² மது⁴ரா விராஜதி ஸரோமத்⁴யே யதா²ம்போ⁴ருஹம் ॥ 2॥
வ்ரு’ந்தா³ரண்யப்³ரு’ஹத்³வநம் மது⁴வநம் தாலாடவீ ஶ்ரீவநம்
ப⁴த்³ராக்²யம் குமுதா³டவீ ச ப³குளாரண்யஞ்ச லோத்⁴ராடவீ ।
மாண்டீ³ராக்²யவநம் ததை²வ க²தி³ராரண்யஞ்ச காத்யாடவீத்யேதைர்த்³வாத³ஶபி⁴ர்வநை: பரிவ்ரு’தா ஜேஜேதி ஸா பூ⁴தலே ॥ 3॥
யோகீ³ந்த்³ராத்³ரு’தபுண்யதோயமரிதா பா⁴கீ³ரதீ²ஸங்க³தா
காளிந்தீ³ பரிகே²வ யத்ர ஸரிதாமக்³ரேஸரீ பா⁴ஸதே ।
ஶ்ரீகோ³வர்த⁴நரோஹிதாதி³பி⁴ரக³ஶ்ரேஷ்டை²ஶ்ச கோ³ஷ்டை²ர்வ்ரு’தா
ஸா கோ³பாலபுரீ விபா⁴தி மது⁴ரா நாம ப்ரபஞ்சோத³ரே ॥ 4॥
நிர்மாந்தி ஸ்மாதிரப்⁴யாமஹஹ தி³விஷதோ³ யாம் புரைவாதி³காலே
த⁴ர்மாஸக்தாந்தராத்மா ப³ஹுயுக³மவஸத்³யத்ர மத்⁴வாக்²யதை³த்ய: ।
நிர்மாயைர்மாநவௌகை⁴ஸ்ஸததபரிக³தா நிர்மலா ஶர்மதா³த்ரீ
ஸேயம் நிர்வாணபூ⁴மிர்ஜயதி மது⁴புரீ ஸர்வகீ³ர்வாணஸேவ்யா ॥ 5॥
தி³வ்யாம் தி³வ்யைகபோ⁴க்³யாம் மணிக³ணகிரணாபூரிதாஶேஷலோகாம்
மர்த்யாநாம் து³ர்விலோகாம் மது⁴ஸுதமத²நே யாம் புரா கோஸலேந்த்³ர: ।
கீ³ர்வாணாநாம் ப்ரஸாதா³த³க்ரு’த நிஜபுரீம் தி⁴க்க்ரு’தஸ்வர்க³லோகாம்
தாம் ஸாக்ஷாத்³ ப்³ரஹ்மகோ³பாலகத³யிதபுரீமீக்ஷிதாஹே கதா³ நு ॥ 6॥
யத்ராவிர்பூ⁴ய பூ⁴யஸ்தரநிஜகலயா கூ³ட⁴மத்⁴யாஸ்த கோ³ஷ்டம்
யாமேவாப்⁴யேத்ய பூ⁴ய:க்ஷிதிபதிமகரோது³க்³ரஸேநம் முராரி: ।
யாமக்³ரே ஶூரஸேநஶ்சிரமநுபு³பு⁴ஜே வஜ்ரமுக்²யாஸ்ததா²ந்தே
ஸேயம் வ்ரு’ஷ்ணீஶ்வரஸ்ய ப்ரியதமநக³ரீ லாலஸீதி த்ரிலோக்யாம் ॥
ஹ்ரு’ஷ்டாத்மா முஷ்டிகாரிப்ரமுக²யது³வரைர்த்³வ்யஷ்டஸாஹஸ்ரயோஷாஜுஷ்ட: ஸம்ம்ரு’ஷ்டஶக்ரோபலதுலிதருசிர்யத்ர சிக்ரீட³ சக்ரீ ।
சக்ராத்³யைஶ்ஶஸ்த்ரஜாலைரபி⁴தநிஜமஹஶ்சக்ரவித்³யோதிதாஶாசக்ரைராபாலிதா ஸா ஜயதி மது⁴புரீ ஶக்ரமுக்²யைர்நிஷேவ்யா ॥ 8॥
யஸ்யாம் யத்ஸந்நிதௌ⁴ வா க்வசித³பி விபிநே யாம் பரீத்ய ஸ்தி²தாஸு
த்³வார்வத்யாத்³யாஸு வாபி ப்ரதி²தஹரிஹரக்ஷேத்ரதீர்தா²ங்கிதேஷு ।
ப்ரேதா ஜாதா: ஸ்தி²தா வா ந க²லு ஶமலவந்தோऽபி பஶ்யந்தி கோ⁴ராந்
ப்ரேதாதீ⁴ஶஸ்ய தூ³தாநபி ப³த மது⁴ராம் தாம் வ்ரஜேமாஶுபா⁴ந்தாம் ॥ 9॥
வ்யுஷ்ட்யாம் தி³ஷ்ட்யாபி யஸ்யா: ஸ்ம்ரு’திரகி²லந்ரு’ணாம் ஹந்த நக்தந்தி³வாந்தர்ஜாதம் ஸர்வாக⁴ஜாதம் க்ஷபயதி தரஸா மங்க³ளஞ்சாதநோதி ।
ஸேயம் ஶ்ரேயஸ்ஸ்வரூபா தி³நகரது³ஹிது: பஶ்சிமே தீரபா⁴கே³
கா³ட⁴ம் பா³பா⁴தி ப்ரு’த்²வீகுசப⁴ரகலிதா சந்த்³ரலேகே²வ ப்ரு’த்²வீ ॥ 10॥
நித்யம் யத்ர பரிஸ்பு²ரத்ஸு நிதராம் புண்யேஷ்வரண்யேஷ்வஹோ
ராமாத்³யா நிவஸந்தி தை³வதக³ணோபாஸ்யா ஹரேர்மூர்தய: ।
ந்ரு’த்யந்த்யப்ஸரஸ: ஸஹாமரக³ணைரத்யந்தஹர்ஷோத³யாதி³த்த²ம்பூ⁴தமஹோத³யா மது⁴புரீ ஜேஜேதி ஸா பூ⁴தலே ॥ 11॥
த்³ரு’ஶ்யா விஷ்ணுபதோ³ஜ்ஜ்வலா ஸுவிமலா நிஶ்ஶேஷதாபார்தி³நீ
ஶஶ்வத்³விஶ்வஜநேஷு சித்³ரஸஸுதா⁴நிஷ்யந்த³ஸந்தோ³ஹிநீ ।
காளிந்தீ³ஸரித³ம்பு³பி³ம்பி³தகலாநாதா²ர்த²பி³ம்போ³பமா
மௌகுந்தோ³ பரிலாலஸீதி நக³ரீ ஸேயம் த⁴ரித்ரீதலே ॥ 12॥
யா கு³ப்தா மது⁴நா புரா மது⁴புரீத்யாக்²யாமவாப ஸ்பு²டாம்
ஸத்³ய: பாபநிமந்த²நேந மது²ரேத்யாக்²யாயதே யா பு³தை:⁴ ।
யாம் லோகே மது⁴ரேதி சாபி⁴த³த⁴தே மாது⁴ர்யஸர்வங்கஷாம்
வ்ரு’ஷ்ணீநாம் நியதா புரீ விஜயதே ஸேயம் த⁴ராமண்ட³லே ॥ 13॥
உத்³யாத்³விரு’மஶாலிநாம் நிஜயஶ:ப்ரத்³யோதஶௌர்யோஷ்மபி:⁴
க²த்³யோதீக்ரு’தலோகபாலமஹஸாம் சக்ராயுதா⁴லம்பி³நாம் ।
ஆவாஸாத்கில ஶூரஸேநந்ரு’பதீநாம் ஶௌரஸேநீதி ஸா
விக்²யாதா பு⁴வநே விகுண்ட²ப⁴வநப்ரக்²யா விஜேஜீயதே ॥ 14॥
யஸ்யாம் த்⁴யாதுர்முகுந்த:³ ப்ரதி³ஶதி ப⁴க³வாநாஶு முக்தி விஶேஷாத்³யஸ்யாமஷ்டச்ச²தா³ட்⁴யா விகஸதி விலஸச்சித்தபத்³மம் த்ரிலோக்யா: ।
யஸ்யாம் திஷ்ட²ந்தி ஹ்ரு’ஷ்டாஸ்ஸததமபி ஹரிம் த்³ரஷ்டுமஷ்டௌ தி³கீ³ஶா
விஶ்வோத்க்ரு’ஷ்டா ஸுபுஷ்டா விலஸதி மது⁴ரா நாம ஸா ராஜதா⁴நீ ॥ 15॥
அஶ்ராந்தாநந்தஶக்தே: பஶுபகுலஶிஶோர்நித்யலீலாநிகேதைர்விஶ்ராந்த்யாத்³யை: பவித்ரைர்ஹரிஹரகி³ரிஜாமந்தி³ரைரங்கிதாயாம் ।
அஶ்ராந்தம் ஹந்த விஶ்வேஶ்வரமஹிதமஹாவிஷ்ணுபுர்யாமமுஷ்யாம்
விஶ்ராந்திம் ஸ்வாந்த! குர்யாஸ்த்வமிஹ ப⁴வபதே² மா வ்ரு’தை²வ வ்யதே²தா:² ॥16॥
யஸ்யாம் பீ⁴மோர்மிசக்ராஹதிமதிபருஷாம் தூ³ரதோ வாரயந்த்யாம்
ஶ்ரீமத்³வைகுண்ட²நாமா பஶுபகுலஶிஶு: கோऽபி ஸத்கர்ணதா⁴ர: ।
காளிந்தீ³தீரநிஷ்டா²ம் யது³பதிநக³ரீநாமதே⁴யாம் க³ரிஷ்டா²ம்
ஸம்ஸாராப்³தே⁴ஸ்தரீம் தாமதுலஸுக²கரீம் கா³ட⁴மத்³யாவலம்பே³ ॥ 17॥
யஸ்யாம் ஹா ஹந்த விஶ்வாத்³பு⁴தமநுஜகிஶோராக்ரு’தேஶ்சக்ரபாணேர்லீலாவம்ஶீரவாஸ்வாத³நபரமசிதா³நந்த³ஸித்³தா⁴ நிமக்³நா: ।
யோகீ³ந்த்³ராஸ்தாத்³விகுண்டா²ஸ்பத³மபி⁴லஷிதம் நாதி⁴ரோடு⁴ம் க்ஷமந்தே
தஸ்யௌँகோ³பாலபுர்யா: ஶிவ ஶிவ ! மஹிமோத்³ரேகஸீம்நே நமோऽஸ்து ॥18॥
கா³டோ⁴த்³பா⁴ஸிகுஶஸ்த²லீமுக²ஜக³ந்நாதா²தி⁴வாஸஸ்த²லீ
மத்⁴யஸ்த²ம் நிஜரோசிஷைவ ஹரிதாமாபூரயந்மண்ட³லம் ।
ஶ்ரீமந்மாது⁴ரமண்ட³லம் விஜயதே மத்⁴யேத⁴ராமண்ட³லம்
ஜ்யோதிர்மண்ட³லமத்⁴யக³ம் தி³வி யதா² தாராபதேர்மண்ட³லம் ॥ 19॥
ஶ்ரீகோ³பாலகமலமூர்திரமலா ஸாரா ஸலீலோத்ஸுகா
தாருண்யோத³யராமணீயகஹடா²க்ரு’ஷ்டத்ரிலோகீமநா: ।
யஸ்மிந் கே²லதி வேணுநாத³லஹரீ நிர்மஜ்ஜிதாஶாமுகா²
தஸ்மிந் மாது⁴ரமண்ட³லே ப⁴வது மே கு³ல்மாதி³ஜந்மாபி வா ॥ 20॥
இத்யேதாம் மது⁴ராபுரீஸ்துதிகதா²ம் ஶ்ருத்யந்தஸாரோதி³தாம்
ப்ரத்யூஷே ப்ரதிபு³த்⁴ய ஶுத்³த⁴மநஸா நித்யம் பட²ந் மாநவ: ।
ம்ரு’த்யோர்மஸ்ததடார்பிதாஙக்⁴ரிரகி²லாந் பு⁴க்த்வேஹ போ⁴கோ³த்கரா
நத்யுத்க்ரு’ஷ்டமகுண்ட²தா⁴ம தத³ஹோ வைகுண்ட²தா⁴ம வ்ரஜேத் ॥ 21॥
இதி ஶ்ரீமது⁴ராபுரீஸ்துதி: ஸமாப்தா ।
——–
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலசோபிகௌஸ்துபம்
பீதாம்பரம் ஸாந்த்ரபயோதஸௌபகம் |மஹார்ஹ வைடூர்ய கிரீடகுண்டல-
த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ரகுந்தலம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி:
விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத ||
( சங்கு, சக்கரம், கதை, பத்மம் தாங்கிய நான்கு திருக்கரங்கள் , திருமறு,
கவுத்துவம், வனமாலை தாங்கிய மார்பு, பீதகவாடை, மின்னும் முடி-
குண்டலங்கள், மேகலையும் கங்கணமும். தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம்.
வசுதேவர் கண்ணிமைக்காமல் பார்த்தார்)ஏன் அற்புதம் என்னும் அடைமொழி?அவதரிக்கும்போதே ‘தர்ஹி மாம் கோகுலம் நய’ (என்னை கோகுலம் எடுத்துச்
செல்) என்று தகப்பனுக்கு ஆணையிட்டதால். அம்புலிப்பருவத்தில் அசுரரை
மாய்த்ததால், காளியன் செருக்கை அடக்கியதால், குரவை கோத்ததால்,
மதுரையில் காட்டிய மாவீரத்தால், வெஞ்சொல் தந்தவனுக்கும் வீடு தந்ததால்,
பஞ்சவரைப்பல வகையிலும் காத்ததால், போர்க்களத்தில் ப்ரம்மவித்தை
பகர்ந்ததால், பகல் நடுவே இரவழைத்ததால், இன்னும் பல ஆனைத்தொழில் களால்,
துவாரகை என்ற பொன்னகர் பொங்கும் கடலினுள் புகுந்ததையும் ஒட்டுதல்
இல்லாமல் புன்முறுவலோடு ஏற்றதால்—————-‘அவதாரம்’ என்றால் என்ன ?ஸ்ரீமத் பகவத்கீதை பாஷ்யத்தின் முன்னுரையில் ஸ்ரீ ஆதி சங்கர
பகவத்பாதர் அவர்கள் எழுதியிருப்பது –

“ப்ரபஞ்சம் முழுதும் ‘அவ்யக்தம்’ என்னும் மூலப்ரக்ருதியாகிய மாயைக்குள்
வசப்பட்டிருக்க, பரம புருஷனாகிய நாராயணன் மட்டும் அம்மாயைக்கு
அப்பாற்பட்டவனாகத் திகழ்கிறான்”

”ஆதி கர்த்தாவாகிய ‘நாராயணன்’ எனும் நாமத்தை உடைய (ஆதிகர்த்தா
நாராயணாக்ய:) விஷ்ணுவானவன், ஸநாதந தர்மத்தைப் பேணும் பொருட்டு தேவகி
தேவிக்கும், ஸ்ரீவஸு தேவருக்கும் ‘க்ருஷ்ணன்’ என்னும் திரு நாமத்துடன்
மகனாக அவதரித்தான். ஞானம், ஐசுவர்யம், பலம், வீர்யம், சக்தி, தேஜஸ்
ஆகியவற்றை எப்பொழுதும் தன்னிடம் இயல்பாகவே பெற்றுள்ள பகவான் பிறப்பு-
இறப்பு அற்றவனாக, அனைத்துயிர்களையும் ஆளும் தன்மை உடையவனாக, நித்ய.
சுத்த,புத்த, முக்த னாகவே எப்பொழுதும் விளங்குவதால் தன் ஒப்பற்ற
ஆற்றலால் ஓரழகிய வடிவம் பூண்டு (சாமானிய ஜீவர்களைப் போல்
ப்ரக்ருதிக்கு வசப்பட்டுப் பிறப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி )
ஜீவகோடிகளுக்குப் பேரருள் புரிகிறான். ”

கண்ணன் பிறந்த தினம்

ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப்
பிரகாசத் திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில்,
உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்
என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம்
தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலை வனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும்
நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின்
மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயநத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீகிருஷ்ண பக்ஷ
அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு
நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு ஓர்
இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது.
இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது
சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ண பக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ
கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பக்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது. அஷ்டமி
பக்ஷத்தின் நடுவில் வருவதால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ
கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது ஸ்ரீ
கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள்
எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம்.
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ
கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.

அவனுடைய பெயரும் கிருஷ்ணன். ‘கிருஷ்ண’ என்றால் கருப்பு என்று பொருள்.
அவனது மேனியும் கறுப்பு.

இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்பவித்தாலும் அவனே
ஞான ஒளி. நல்ல காளமேகங்களாகளிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு
நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்னும்
என்றும் ஜ்வலித்துக் கொண்டி ருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும்
உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின்
பெருமை பிரகாசிக் கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக்
கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந் திருக்கும் ’ஸ்ரீமத்
பாகவதம்’ புராண சிரேஷ்டமாக விளங்குகிறது.

உடலுக்கு ஒளியளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக
உயிர்களுகெல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம்
தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகி விட்டான்.
அகக்ண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம்
அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும், உபதேச
சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்திக் குளிர வைக்கும் அந்தக் கண்ணனே
நம் உலகுக்குக் கண்.

ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து
நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு
மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அநுபவிக்கும்
ரஸிகன், (சாணூரன், முஷ்டிகன் என்ற கம்ஸனைச் சேர்ந்த மகாமல்லர்கள்
ஜயித்தபோது) மல்யுத்தத்தில் தேர்ந்தவன், ( நக்நஜித் என்ற ராஜாவின்
பெண்ணான ஸத்யை என்பவளைக் கலியாணம் செய்து கொள்வதற்கு நிபந்தனையாக ஏழு
காளைகளை அடக்க வேண்டும் என்ற போது) காளை மாடுகளை அடக்கிக் காட்டுபவன்,
ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, த்ரௌபதி போல் தீர்க்க முடியாத
கஷ்டத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவன், குசேலர் போன்ற
அநாதர்களை ரக்ஷிக்கும் பக்த வத்ஸலன், பீஷ்மருக்கு முக்தியே அளித்தவன்.
பீஷ்மருக்கு மாத்திரமல்ல – தன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகித்த
வேடனுக்கும் முக்தி கொடுப்பவன் – இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான்.

உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாகிய அநேக விதமான மனப்போக்கை உடையவர்களாக
ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும் சூரனும், திருடனும்
ஸ்த்ரீலோலனும், பேதையும் உழைப்பாளியும், கிழவனும் குழந்தையும்,
இறுமாப்புடையவனும் பரோபகாரியும், மனமுருகியவனும் கல்நெஞ்சக்காரனும்,
கஞ்சனும் ஊதாரியும், மூடனும் கல்விமானும், யோகியும் ஞானியுமாகப் பலவிதமான
மன நிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம்
உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களாகக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ
அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு
திருடனைப் பற்றிய கதையே ரஸமாயிருக்கும். ஒர் உல்லாஸ புருஷனுக்கு இன்னோர்
உல்லாஸ புருஷனின் கேளிக்கைகளே சுவாரஸ்யமாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன்
நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவரவேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக,
கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். பற்பல
போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்
தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும்
பாத்திர மாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூர்ணாவதாரம்.

சிவராத்திரிக்கும் கிருஷ்ணாஷ்டமிக்கும் இடையே சரியாக 108 நாள் இடை வெளி
இருக்கும். ஒன்றிலே ஞான ஜோதியான லிங்கங்கள் உதித்தது. அதுவேதான்
இன்னொன்றில் வெளியிலே எல்லாம் கருமையாக வைத்துக் கொண்டாலும், உள்ளே
ஞானத்திலும் கருணையிலும் ஜோதியான கண்ணனாக வந்தது.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இந்த க்ஷேத்திரமும் ஒன்று. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

இந்த `விரஜ பூமி’ சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா’ எனப்படும். கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர் சிலர் அது கோவர்தன பரிக்ரமா எனப்படும். சிலர் மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. இப்படி பரிக்ரமா பல உள்ளன. நேர, கால, தேக சௌகர்யங்களுக்கு ஏற்ப மக்கள் இவற்றை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் என்பதை இன்றும் நாம் கண்கூடாக காணலாம்.

கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி’யில் உள்ளன. `பிருந்தா’ என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவன நகரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன. அவை, மகாவனம், காம்யவனம், மதுவனம், தாளவனம், குமுத வனம், பாண்டிரவனம், பிருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், பஹுளாவனம், பில்வவனம்.

மதுராவில் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் ஜென்மபூமி என்ற பெயரில் ஒரு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, கேசவ தேவ் கோயில் என்று பெயரிட்டுள்ளனர்.  தற்பொழுது பாதுகாப்பு படையினரால் காக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்குள் சென்று விட்ட பின் மிகவும் அருமையாக அனுபவிக்க வேண்டிய இடம். எல்லாவற்றையும் அடைந்த கண்ணன், நமக்காக இந்த சிறைச்சாலையில் வந்து பிறந்து பற்பல லீலைகள் புரிந்ததை நினைத்தால் நம் கண்களில் கண்ணீர் குடிகொண்டுவிடும்.

கிருஷ்ணனின் அவதார ஸ்தலமான கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் தரிசிப்பதற்கு ஏற்றவாறு பெரிய மண்டபங்களும், மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பிருந்தாவனத்தில் தமிழ்நாட்டு முறைப்படி அமைக்கப்பட்ட ரங்கமந்திர் என்று அழைக்கப்படும் விசாலமான கோவில் அல்லது ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. இதில் ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள், திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர் களுக்கு சன்னதிகள் உண்டு.

கோகுலாஷ்டமி அல்லது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் இங்கே ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்

இத்திருத்தலம் பற்றி பற்பல நூல்கள் உள்ளன, உதாரணத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் சேர்த்து பாடப்பட்டுள்ளது. கண்ணன் பிறப்பிற்கு முன், வசுதேவர் சிறை வைக்கப்பட்டது, தன்னுடைய தங்கையான தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தனக்கு மரணம் விளைவிக்கும் என்பதை அறிந்த கம்சன், தேவகியின் கணவன் வசுதேவர் மற்றும் தேவகியை சிறை வைப்பது, பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றது, கண்ணன், ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதி ரோஹிணி நட்சத்திரத்தில் திரு அவதாரம் செய்தவுடன் / பிறந்தவுடன், அன்று இரவே யமுனையை கடந்து ஆயர்பாடிக்கு/ஆய்ப்பாடிக்குக்கு கொண்டு செல்லப்பட்டது, வசுதேவரின் நண்பர் நந்தகோபாலன் வீட்டில் அவள் மனைவி யசோதையின் மகனாக வளர்ந்தது, அங்கு பலவித லீலைகளை / விளையாட்டுக்களை நடத்தியது, கோபிகைகளுடன் ஆடியது, அதன் பின் வாலிபனாகி, மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான பல வரலாறுகளுடன், துவாரகையில் கண்ணன் புதிய நகரத்தை நிர்மாணித்து, அரண்மனை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறன.

இந்த மதுரா நகரம் எல்லா யுகங்களிலும் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரமாகும். ஸ்ரீவாமனனாய் எம்பெருமான் திருஅவதாரம் செய்த போது, இங்கு தவம் புரிந்து இருந்தார்.

பின்பு, த்ரேதா யுகத்தில், மது என்னும் பெயரில் சிறந்து விளங்கியது. ஒரு சமயம், அந்நகரை அரசாண்டு வந்த லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும் கொடியவனாக இருந்து, ரிஷிகள் நடத்தும் யாகங்களை அழித்து அவர்களுக்கு துன்பம் கொடுத்து வந்தான். இதனால் சில ரிஷிகள் இராமபிரானிடம் சென்று விசுவாமித்திரருக்கு உதவியது போல, லவணாசுரனை கொன்று தங்களை காத்திட வேண்டும் என்று வேண்டினர். ராமன் தன் தம்பி சத்ருக்னனை அனுப்பி லவணாசுரனை அழித்தான். சத்ருக்னன் மாத்ரா நகரத்தை விரிவாக்கி நெடுங்காலம் ஆண்டு வந்தான் .

கிருஷ்ணனாய் இங்கு அவதரித்ததாலும், இப்படி பல யுகங்களில் திருவடமதுரைக்கு பகவத்ஸம்பந்தம் தொடர்ந்து வருவதால், ஆண்டாள் மன்னு வடமதுரை என்று கூறுகிறார்.

கண்ணன் ஆயர்பாடியில் வாழ்ந்த சமயம், அங்கு இந்திர பூஜை நடப்பது வழக்கம். அதன்படி இந்திரனுக்கு, ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழையை வேண்டுவார்கள். கண்ணன், இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுஇருந்த போது, என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக, இந்திரனுக்குப் பிடித்தமான
உணவு வகைகளைச் செய்து அவனுக்கு படைப்போம், அதனைக்கொண்டு அவன் மழை கொடுப்பான் என்று சொன்னார்கள். அதற்கு கண்ணன், மழையை கொடுப்பது இந்த கோவர்த்தன மலை தான் என்றும், இந்திரனுக்கு படைக்க வேண்டாம் என்று சொன்னான். அந்த ஊரில், கண்ணன் சொன்னதை மறுப்பவர் கிடையாது, அவன் அந்த மக்களுக்கு மிக பிரியமானவன். கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை கொடுக்க சொல்லி, தானே கோவர்த்தன மலையாக இருந்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டான்.

இதனால் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி, அங்கிருந்த ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் தொல்லை கொடுத்து ஏழு நாட்கள் கடுமையான மழையால் அவதிக்குள்ளாக்கினான். மனிதர்களும், ஆடுமாடுகளும் கஷ்டப்படுவதை கண்ட கண்ணன், அந்த அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினான். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர். அந்த மலை கோவர்தன மலை என்றும், அதனை குடையாக பிடித்து அவர்கள் அனைவரையும் காப்பாற்றினான் என்பது குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் வரலாறு என்றும் கூறப்படும். கண்ணனின் இச்செயலைக் கண்டு வியந்த இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார் . அந்த மலை, அவர்களை காத்ததால், கோவர்த்தன மலை என்றும், அதைத் தாங்கிய கண்ணன்,  கோவர்தனன் என்றும் பெயர் பெற்றார். அந்த கோவர்த்தன மலை இன்றும் கொண்டாப்பட்டு, மக்கள் பரிக்ரமா என்ற கால்நடையாக அந்த மலையை சுற்றி வருகிறார்கள்; இது சுமார் 26 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணர் கன்று வடிவில் இருந்த வத்சாசுரனை வதம் செய்த பிறகு, அவருடைய தோழர்கள் கங்கையில் நீராடி புனிதப்படுத்திக் கொள்ளும்படி கிருஷ்ணரை அறிவுறுத்தினர். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது.

ஹரிதேவரின் கோயில் என்ற இடத்தில கிருஷ்ணர் நாராயண ரூபத்தில் வீற்று இருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே.  இக்கோயிலுக்கு அருகில் பிரம்ம குண்டம் அமைந்துள்ளது. இந்திரன், ஸ்ரீ கிருஷ்ணரை நீராட்டிய பிறகு, அனைத்து தேவர்களும் புனித நதிகளும் சாதுக்களும் கிருஷ்ணரை நீராட்டினார்கள். அப்போது பிரம்மாவும் கிருஷ்ணரை நீராட்டினார். அந்த நீரே குளமாக மாறி பிரம்ம குண்டம் என்று அறியப்படுகிறது.

லக்ஷ்மி நாராயண கோயில்: ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இருக்கும் விக்ரஹங்கள் கோவர்தன மலையின் உற்சவ விக்ரஹங்களாக கருதப்படுகின்றனர்.

இதற்கு அருகில் இருக்கும், தான கடி என்னுமிடத்தில் கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கோபியர்களிடம் வரி வசூல் செய்தனர். அதாவது, கோபியர்கள் சுமந்து சென்ற பால், தயிர் போன்ற பொருட்களில் சிலவற்றை வலுக்கட்டாயமாக வரியாக பெற்று கொண்ட லீலை இவ்விடத்தில்தான் நடைபெற்றது.

அடுத்து, அனியோர், இங்கு சாதம், இனிப்புகள், காய்கறிகள், பால் பதார்த்தங்களை மலைபோல அமைத்து கோவர்தன மலைக்கு அன்னப் படையல் அர்ப்பணிக்கப்பட்ட இடம். இஃது அன்னகூட க்ஷேத்திரம் என்றும் அறியப்படுகிறது.

கதம்ப வனத்தில், சுரபி குண்டம், இந்திர குண்டம், ஐராவத குண்டம், ருத்ர குண்டம், உத்தவ குண்டம் அமைந்துள்ளன. ராதா குண்டம், இப்பிரபஞ்சத்தில் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது. ராதாராணியின் பிரேமையின் ஸ்வரூபத்தை இங்கு திரவ நிலையில் காணலாம். ராதாராணிக்கும் ராதா குண்டத்திற்கும் வித்தியாசமில்லை. கிருஷ்ணர் அரிஸ்டாசுரனை வதம் செய்த பிறகு, எல்லா புனித நதிகளையும் ஓரிடத்திற்கு வரவழைத்தார். அதன்படி உருவான குளம், சியாம குண்டம் என்று அழைக்கப்படுகிறது. சியாம குண்டமும் ராதா குண்டமும் அருகருகில் அமைந்துள்ளன.

குசும சரோவர் என்ற இடத்தில், கோபியர்கள் கிருஷ்ணருக்காக மலர்களை எடுத்துச் செல்வர். இதற்கு அருகில் உத்தவரின் கோயிலும் உள்ளது. கோபியர்களின் உயர்ந்த பக்தியை கண்ட உத்தவர், விருந்தாவனத்தில் ஒரு புல்லாகப் பிறக்க வேண்டும் என்றும், கோபியர்களின் பாதங்கள் தன்மீது பட வேண்டும் என்றும் பிரியப்பட்டார். இங்கே உத்தவர் புல்லின் வடிவில் வசிக்கிறார். இவ்விடத்திற்கு அருகில் நாரத வனம் இருக்கிறது. இங்கு நாரத முனிவர் நாரத பக்தி சூத்திரத்தை இயற்றியதோடு, விருந்த தேவியின் உபதேசத்தை ஏற்று இவ்விடத்தில் தவமும் புரிந்தா

————-

ஸ்ரீ விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம்-
சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை. டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் வழியில் உள்ள இத்திருத்தலத்தை சேவித்தவரை சேவித்தாலே பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பதை ஆதி வராஹ புராணத்தில் காண்கிறோம். 168 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட விரஜ மண்டலத்தில்137 காடுகள் உள்ளபோதிலும், பன்னிரண்டு காடுகள் மிகவும் முக்கியமானவை: மதுவனம், தாலவனம், குமுதவனம், கதிரவனம், மஹாவனம், பத்ரவனம், பாண்டீரவனம், பில்வவனம், லௌஹவனம், பஹுலாவனம், காம்யவனம், மற்றும் விருந்தாவனம். மொத்த விரஜ மண்டலமும் விருந்தாவனம் என்று அழைக்கப்படும்போதிலும், விருந்தாவனம் என்று குறிப்பிட்ட ஒரு வனமும் உண்டு.
🌺உத்தரை மற்றும் பரீக்ஷித் மஹாராஜனின் உதவியுடன் கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபரால் விருந்தாவனத்தில் கிருஷ்ணரின் பல்வேறு திருவுருவங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. காலப்போக்கில், அவையாவும் வனத்தினுள் மறைந்தும் புதைந்தும் போயின. சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஆலோசனையின் பேரில் அவற்றைக் கண்டெடுத்த கோஸ்வாமிகள், பிரம்மாண்டமான கோவில்களை நியமித்து முறைப்படி பூஜையைத் தொடங்கினர்.
⭕பின்னர், முகலாய மன்னனான ஔரங்கசீப் காலத்தில், இந்துக் கோவில்களின் மீதான அதிரடித் தாக்குதல்களின் காரணத்தினால், பகவானின் திருவுருவங்களை விருந்தாவன வாசிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றினர்; மதன-மோஹனர், கோவிந்தர், கோபிநாதர் என பலரும் இராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய லீலா ஸ்தலங்கள் அனைத்தையும் இங்கே முழுமையாக விவரிக்க இயலாது என்பதால், பகவத் தரிசன வாசகர்களுக்காக முக்கிய ஸ்தலங் களின் அடிப்படைக் குறிப்பினை மட்டும் இங்கு வழங்குகிறேன்.
⭕விரஜ மண்டல யாத்திரையானது ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த மதுராவிலிருந்து தொடங்குகின்றது. மதுராவில் கிருஷ்ணர் அவதரித்த இடத்தில் வஜ்ரநாபரால் எழுப்பப்பட்ட திருக்கோவில் காலப்போக்கில் முகலாயர்களால் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு எழுப்பப்பட்ட கோவில்களும் தகர்க்கப்பட்டு, பெரிய மசூதி ஒன்று கட்டப்பட்டது. தற்போது அம்மசூதிக்கு அருகில், பிரம்மாண்டமான கோவிலும் அதனுள் சிறை போன்ற ஓர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
⭕விஷ்ராம் காட்: கம்சனை வதம் செய்த பின்னர், கிருஷ்ணர் ஓய்வெடுத்த யமுனைக் கரை, இன்று விஷ்ராம் காட் (ஓய்வெடுத்த படித்துறை) என்று அழைக்கப்படுகிறது. ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியை மீட்ட பின்னர், வராஹரும் இங்கு ஓய்வெடுத்ததாக மதுரா மஹாத்மியத்தில் காண்கிறோம். கம்சனின் கோட்டையான கம்ச திலா, கிருஷ்ணர் கம்சனைக் கொன்ற ரங்க பூமி, வியாசர் தோன்றிய வியாச திலா, அம்பரீஷ மன்னர் விரதம் மேற்கொண்ட அம்பரீஷ திலா உட்பட பல்வேறு பிரசித்தி பெற்ற இடங்கள் மதுராவில் அமைந்துள்ளன.
⭕விருந்தாவனம், விருந்தாதேவி என்று அழைக்கப்படும் துளசிதேவியின் வனமாகும். இதனை அவர் ஸ்ரீமதி ராதாராணிக்கு பரிசளித்தபோது, இராதை இதற்கு விருந்தாவனம் என்று பெயர் சூட்டினார். இராதா கிருஷ்ணரின் ராஸ லீலை நடைபெறும் இடம் என்பதால், விருந்தாவனம் விரஜ மண்டலத்தின் மிக முக்கிய பகுதியாகும்.
⭕நிதுவனம், ஸேவா குஞ்சம்: கிருஷ்ணர் ராஸ லீலை புரிந்த இவ்விரண்டு இடங்களும் விருந்தாவனத்தில் முக்கியமானவை. நிதுவனத்தினுள் ராஸ லீலை நித்தியமாக நடைபெறுவதால், இன்றும் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் தங்குவதில்லை, இங்கு அதிகமாக இருக்கும் குரங்குகள்கூட வெளியே வருவதைக் காணலாம்.
⭕கோவில்கள்: நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களைக் கொண்ட விருந்தாவனத்தில் ஏழு கோவில்கள் மிகவும் முக்கியமானவை: (1) ஸநாதன கோஸ்வாமியினால் வழிபடப்பட்ட இராதா மதன-மோஹனர் திருக்கோவில், (2) ரூப கோஸ்வாமியின் இராதா கோவிந்தர் திருக்கோவில், (3) மதுபண்டிதரின் இராதா கோபிநாதர் திருக்கோவில், (4) ஜீவ கோஸ்வாமியின் இராதா தாமோதரர் திருக்கோவில், (5) கோபாலபட்ட கோஸ்வாமியின் இராதா ரமணர் திருக்கோவில், (6) ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரின் இராதா கோகுலானந்தர் திருக்கோவில், மற்றும் (7) சியாமானந்த பண்டிதரின் இராதா சியாமசுந்தரர் திருக்கோவில்.
⭕இஸ்கான்: கிருஷ்ண பலராமர் தமது நண்பர்களுடன் விளையாடும் ரமண ரேதி என்னும் இடத்தில் ஸ்ரீல பிரபுபாதரால் கிருஷ்ண பலராமர் திருக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டது. இங்குள்ள விக்ரஹங்களின் கொள்ளை அழகாலும் அற்புதமான வழிபாட்டினாலும், கிருஷ்ண பலராமர் திருக்கோவில் இன்று விருந்தாவனத்தில் அதிக மக்கள் வரக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகத் திகழ்கிறது. கோவிலுக்குச் சற்று தொலைவில், நந்த மஹாராஜர் பிராமணர்களுக்கு பசுக்களை தானம் வழங்கிய இடத்தில், சுமார் 350 பசுக்களுடன் இஸ்கானின் கோசாலை அமையப் பெற்றுள்ளது.
⭕காளிய காட்: யமுனை நதியின் நீரை விஷமாக்கிய ஆயிரம் தலைகளைக் கொண்ட காளியன் என்ற பாம்பிற்கு பாடம் புகட்ட ஒரு கதம்ப மரத்தின் மீது ஏறி கிருஷ்ணர் யமுனையினுள் குதித்தார். காளியனின் கர்வத்தை அடக்கி, அவன்மீது நடனமாடினார். யமுனையின் இப்படித்துறை காளிய காட் (காளியனை அடக்கிய படித்துறை) என்று அறியப்படுகிறது. கிருஷ்ணரின் திருப்பாதம் பட்ட அந்த கதம்ப மரத்தினை 5,000 வருடங்கள் கடந்து இன்றும் தரிசிக்கலாம்.
🍎 *துவாதச-ஆதித்ய திலா:* குளிர்ந்த யமுனையில் காளியனுடன் நீண்ட நேரம் இருந்ததால், குளிர்ச்சியுற்ற தனது திருமேனிக்கு சிறிது உஷ்ணத்தை விரும்பிய கிருஷ்ணர் அருகிலிருந்த குன்றின் மீது அமர்ந்தார். அப்போது உலகின் பன்னிரண்டு ஆதித்தியர்களும் (சூரியதேவர்களும்) அங்கு ஒன்றுகூடி, பகவான்மீது சூரிய ஒளியைப் பொழிந்ததால், இவ்விடம் துவாதச-ஆதித்ய திலா (பன்னிரண்டு ஆதித்தியர்கள் தோன்றிய குன்று) என்று பெயர் பெற்றது. ஸநாதன கோஸ்வாமி இராதா மதன-மோஹனரை இங்குதான் வழிபட்டு வந்தார். மதன-மோஹனரின் அருளைப் பெற்ற ராம்தாஸ் கபூர் எனும் உப்பு வியாபாரி இவ்விடத்தில் பிரம்மாண்டமான கோவிலைக் கட்டினார். இதுவே விருந்தாவனத்தில் முதன்முதலில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோவிலாகும்.
⭕பிரம்ம குண்டம்: கிருஷ்ணரின் நண்பர்களைக் கடத்திச் சென்றது தவறு என்பதை உணர்ந்த பிரம்மதேவர் கண்ணீருடன் பகவானிடம் வேண்டினார். அக்கண்ணீரால் உருவான குளம், பிரம்ம குண்டமாகும்.
⭕ *கோபேஷ்வர மஹாதேவர்* : ராஸ லீலையைக் காண விரும்பிய சிவபெருமான், விருந்தாவனத்தினுள் நுழைந்தபோது கோபியர்கள் அவரையும் கோபியாக மாற்றினர். கோபேஷ்வர மஹாதேவர் என்று அழைக்கப்படும் இவருக்கு விருந்தாவனத்தில் ஒரு தனிப்பட்ட ஆலயம் உள்ளது.
⭕அக்ரூரர் காட்: அக்ரூரர் நந்த கிராமத்திலிருந்து கிருஷ்ண பலராமரை அழைத்துச் சென்றபோது, ரதத்தை யமுனையின் ஒரு கரையில் நிறுத்திவிட்டு நீராடச் சென்றார். அப்போது கரையில் இருந்த கிருஷ்ண பலராமர் இருவரும், நீரினுள் நாராயணராகவும் ஆதிஷேஷராகவும் அக்ரூரருக்கு காட்சி கொடுத்தனர். இதனால் அக்ரூரர் காட் (அக்ரூரரின் படித்துறை) என்று அறியப்படும் இவ்விடம், விருந்தாவனத்திற்கும் மதுராவிற்கும் இடையில் உள்ளது.
*#கோகுலம் (மஹாவனம்)*
⭕மதுராவிலிருந்து வசுதேவரால் யமுனையைக் கடந்து கொண்டு செல்லப்பட்ட கிருஷ்ணர், கோகுலத்தில் நந்த மகாராஜரின் பாதுகாப்பில் அவரது மகனாக வளர்ந்தார். நந்தபவன் என்று அழைக்கப்படும் நந்த மகாராஜரின் இல்லத்தினை இங்கு செல்வோர் இன்றும் காணலாம். பகவான் இங்குதான் நந்த-லாலாவாக (நந்தரின் செல்லப் பிள்ளையாக) தவழ்ந்து விளையாடி தனது பால்ய லீலைகளை அரங்கேற்றினார். பூதனா, திருணாவ்ருதன் போன்ற அசுரர்களை கிருஷ்ணர் கொன்றதும், வெண்ணெய் பானைகளை உடைத்ததால் அன்னை யசோதையினால் விரட்டிப் பிடிக்கப்பட்டு உரலில் கட்டப்பட்டதும் இங்குதான். அந்த உரல் இன்றும் பக்தர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
⭕பிரம்மாண்ட காட்: கோகுலத்தில் இருக்கும் மற்றொரு முக்கிய இடம் பிரம்மாண்ட காட். யமுனைக் கரையில் அமைந்துள்ள இப்படித்துறையின் அருகில்தான், பகவான் கிருஷ்ணர் சிறு குழந்தையாக இருந்தபோது மண்ணை உட்கொண்டு, அன்னை யசோதைக்கு பிரபஞ்சம் முழுவதையும் தமது திருவாயினுள் காட்டினார். மிகவும் மென்மையான மண்ணைக் கொண்ட இவ்விடம் பிரம்மாண்ட காட் (பிரபஞ்சத்தைக் காட்டிய படித்துறை) என்று அறியப்படுகிறது.
⭕வைகுண்டத்தைவிட உயர்ந்தது மதுரா, மதுராவைவிட உயர்ந்தது விருந்தாவனம், விருந்தாவனத்தைவிட உயர்ந்தது கோவர்தன மலையாகும். ஆரம்பத்தில் 115 கிமீ நீளமும் 72 கிமீ அகலமும் 29 கிமீ உயரமும் கொண்டிருந்த கோவர்தன மலையானது, புலஸ்திய முனிவரின் சாபத்தினால் தினமும் கடுகளவு குறைந்து, தற்போது வெறும் 80 அடி உயரமாக மட்டும் காணப்படுகிறது. கலி யுகம் 10,000 வருடத்தை எட்டும்போது கோவர்தன மலை மறைந்து விடும் என்று கர்க ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.
⭕கோவிந்த குண்டம்: இந்திரனின் கொடிய மழைத் தாக்குதலிலிருந்து விரஜவாசிகளைக் காப்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஏழு வயதில் இடது கை சுண்டு விரலால் கோவர்தன மலையை ஏழு நாள்கள் குடையாகத் தூக்கிப் பிடித்தார். தனது அபராதத்தை உணர்ந்த இந்திரன், சுரபிப் பசு, ஐராவத யானை, மற்றும் தேவர்களுடன் வந்து மன்னிப்பை வேண்டினார். அப்போது பகவானுக்கு அபிஷேகம் செய்ததால் தேங்கிய அபிஷேக நீரானது கோவிந்த குண்டம் என அழைக்கப்படுகிறது.
#மானஸ_கங்கை: கன்றின் வடிவில் வந்த வத்ஸாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததால், அவர் கங்கைக்குச் சென்று புனித நீராட வேண்டும் என்று அவரது நண்பர்கள் கூறினர். கங்கையை கிருஷ்ணர் மனதால் நினைக்க, கோவர்தனத்தின் ஒரு பகுதியில் கங்கை ஓர் ஏரி போன்று தோன்றியது. கிருஷ்ணரின் மனதிலிருந்து தோன்றியதால், இதற்கு மானஸ கங்கா என்று பெயர்.
⭕ஒருமுறை கங்கையின் மகத்துவத்தைக் கேள்வியுற்ற விரஜவாசிகள் கங்கைக்குச் சென்று நீராட விரும்பினர். கங்கைக்குச் செல்ல வேண்டாம், கோவர்தனத்திலேயே கங்கை உள்ளது,” என்று கூறி அவர்களை கிருஷ்ணர் மானஸ கங்கைக்கு அழைத்து வந்தார். கரையில் கிருஷ்ணரைப் பார்த்த மாத்திரத்தில் அங்கு தோன்றிய கங்கா தேவியைக் கண்டு வியந்த விரஜவாசிகள் கங்கைக்கு தங்களது வந்தனங்களை செலுத்தி புனித நீராடினர்.
#குஸும்_ஸரோவர்: கோவர்தன பகுதியில் அமைந்திருந்த ஒரு தோட்டத்தில் கோபியர்கள் பறித்திருந்த மலர்களை தோட்டக்காரரின் வடிவில் வந்த கிருஷ்ணர் தட்டிவிட, இவர் கிருஷ்ணர் என்பதை அறிந்து கொண்ட இராதை பூக்களை நீரினால் தூய்மைப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். கிருஷ்ணரோ உடனடியாக தனது புல்லாங்குழலால் தரையை இருமுறை குத்தினார், அதனால் ஏற்பட்ட இரண்டு துவாரங்கள் பாதாள லோகம் வரை சென்றன. அதிலிருந்து வந்த நீரினால் பூக்கள் தூய்மை செய்யப்பட, அந்த நீரானது குஸும் ஸரோவர் (பூக்களின் ஏரி) என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் வனபிஹாரி (வனத்தில் திரிபவர்) என்ற பெயரில் கிருஷ்ணருக்கு ஒரு கோவில் உள்ளது.
⭕கோவர்தனத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் ராதா குண்டம் (ராதாராணியின் குளம்). காளையின் வடிவில் வந்த அரிஷ்டாசுரனை கிருஷ்ணர் கொன்ற காரணத்தினால், அவரைக் களங்கம் தொற்றிக் கொண்டதாகவும் மூவுலகிலுள்ள எல்லா புனித நீர்நிலைகளிலும் அவர் நீராட வேண்டும் என்றும் ராதாராணி கூறினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோ தனது திருப்பாதங்களால் பூமியை அழுத்தி அங்கு ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்கினார். பின்னர், மூவுலகிலுள்ள புனித தீர்த்தங்கள் அனைத்தையும் அழைத்து, அவற்றின் நீரால் அப்பள்ளத்தை நிரப்பினார், இது சியாம குண்டம் எனப்படுகிறது.
⭕இதைக் கண்ட ராதாராணி தானும் ஒரு குளத்தை உருவாக்குவதாகக் கூறி தமது திருக்கரங்களில் அணிந்திருந்த வளையல்களைக் கொண்டு தனது தோழியருடன் இணைந்து பூமியைத் தோண்ட ஆரம்பித்தார். சற்று நேரத்தில் அங்கு உருவான பள்ளத்தினை மானஸ கங்கையின் நீரினால் நிரப்ப கோபியர்கள் ஆயத்தமானபோது, சியாம குண்டத்தில் இருந்த புனித நதிகள் அனைத்தும் இராதையினால் உருவாக்கப்பட்ட குளத்தினுள் நுழைய அனுமதி வேண்டி, புதிய பள்ளத்தையும் நிரப்ப, அந்த குளம் ராதா குண்டம் என்று பெயர் பெற்றது.
⭕வளையல்களைக் கொண்டு உருவானதால் இதற்கு #கங்கன்_குண்டம் (வளையலால் உருவாக்கப்பட்ட குளம்) என்ற பெயரும் உண்டு. இந்த ராதா குண்டமானது ஸ்ரீமதி ராதாராணிக்கு மிகவும் பிரியமானது மட்டுமின்றி, ராதா குண்டத்தின் நீருக்கும் ஸ்ரீமதி ராதாராணிக்கும் வேறுபாடில்லை என்பதால், ராதா குண்டத்தை தரிசிப்பதற்கும் ராதாராணியை தரிசிப்பதற்கும் வேறுபாடில்லை.
⭕நந்த மகாராஜரின் தந்தையான பர்ஜன்யர், கேசி என்ற அரக்கனின் தொல்லையினால், தான் வாழ்ந்து வந்த நந்தீஷ்வர மலையை விட்டு கோகுலத்திற்குச் சென்றார். கிருஷ்ணரை கோகுலத்தில் வளர்த்து வந்த நந்த மகாராஜர், கம்ஸனால் அனுப்பப்பட்ட அசுரர்களின் தொல்லையினால், மீண்டும் நந்தீஷ்வர மலைக்கு இடம் பெயர்ந்தார். அன்றிலிருந்து இன்றுவரை நந்தீஷ்வர மலையைச் சுற்றியுள்ள பகுதி நந்த கிராமம் என்று அறியப்படுகிறது.
⭕கிருஷ்ணரின் இளமைப் பருவ லீலைகள் நந்த கிராமத்தில் நிகழ்ந்தவை. நந்தமகாராஜரால் வழிபடப்பட்டு வந்த வராஹ தேவர், சாலகிராமத்தினாலான லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோரை மட்டுமின்றி, நந்த மகாராஜரின் இல்லம், மற்றும் யசோதை தயிர் கடைந்த பானையையும் இங்கு செல்வோர் இன்றும் தரிசிக்க இயலும்.
⭕கிருஷ்ணர் கோகுலத்திலிருந்து நந்த கிராமத்திற்கு இடம்பெயர்ந்தபோது, ராவல் என்னும் இடத்திலிருந்து ஸ்ரீமதி ராதாராணி பர்ஸானாவிற்கு இடம்பெயர்ந்தார். பர்ஸானா, ராதாராணியின் தந்தையான மன்னர் விருஷபானுவின் தலைநகரமாகும். ராதா கிருஷ்ணரின் பல்வேறு லீலைகள் பர்ஸானாவில் நிகழ்ந்துள்ளன. விருந்தாவன லீலைகளில் பங்குகொள்ள விரும்பிய பிரம்மதேவர் பர்ஸானாவிற்கு வந்து மலையாக மாறினார். இங்குள்ள இரண்டு மலைகளில் ஒன்றான பிரம்ம கிரியின் மீது விருஷபானு தனது இல்லத்தினை அமைத்தார்; ஸ்ரீமதி ராதாராணி வாழ்ந்த இந்த இடத்தில் தற்போது ஒரு கோவில் உள்ளது.
⭕கிருஷ்ணர் பசுக்களை மேய்க்கச் செல்லும் இந்த வனத்தின் ஓர் பகுதியிலுள்ள பாறை ஒன்றில், கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் அமர்ந்து உணவருந்தியதற்கு அடையாளமாக, உணவுப் பாத்திரங்கள், மற்றும் இலைகளின் அச்சு பதிந்திருப்பதைக் காண முடியும். இங்கிருந்துதான் பிரம்மதேவர் கோபர்களைக் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
#வியோமாசுர_குகை: கிருஷ்ணர் தனது கோபர்களுடன் கோவர்தன மலையில் ஒளிந்தும் மறைந்தும் விளையாடி மகிழ்ந்த சமயத்தில், வியோமாசுரன் எனும் அசுரன் கோபர்களைக் கடத்திச் சென்று ஒரு குகையினுள் அடைத்து குகையை மூடினான். கிருஷ்ணரின் பிடியிலிருந்து தப்பிக்க பாறையாக மாறினான். பகவானோ ஆகாயமார்கமாக பறந்து அப்பாறையின் மீது மோதி அவனை வதைத்தார். அப்போது, பகவானின் கைவிரல்கள், தாமரை பாதங்கள், கௌஸ்துப மாலை, மற்றும் குண்டலங்களின் அச்சு அப்பாறையில் பதிந்தது. மேலும், அருகிலுள்ள மற்றொரு பாறையில் பலராமரின் தாமரை பாதங்கள் பதிந்துள்ளதையும் காணலாம்.
#சரண்_பாரி__பாரி_என்றால்_மலை; சரண் பாரி என்றால் கிருஷ்ணரின் திருவடிகள் பதிக்கப்பட்ட மலை என்று பொருள்படும். இச்சிறிய மலை சிவபெருமானின் தோற்றம் என்றும், இங்கு அவர் கிருஷ்ணரின் திருவடிகளைத் தாங்கியுள்ளார் என்றும் அறியப்படுகிறது.
#பிச்சல்_பாரி: கிருஷ்ணர் தனது சகாக்களுடன் சறுக்கி விளையாடிய பாறை.
வஜ்ரநாபரால் ஸ்தாபிக்கப்பட்ட விருந்தாதேவி, மற்றும் காமேஸ்வரர் கோவிலும் இவ்வனத்தில்தான் உள்ளன.
விரஜ மண்டலத்தின் இதர காடுகள்
⭕ஸத்ய யுகத்தில் துருவ மஹாராஜர் தவம் செய்து விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்ற இடம். திரேதா யுகத்தில், மது என்னும் அசுரனின் மகனான லவனாசுரனை பகவான் ஸ்ரீ இராமரின் தம்பியான சத்ருகணர் இங்கு வதம் செய்தார். துவாபர யுகத்தில் கிருஷ்ணர் தமது பசுக்களை இங்குதான் நீர் அருந்துவதற்காக அழைத்து வருவார்.
🌳 தால (#பனை) மரங்களால் நிறைந்துள்ள இக்காட்டில்தான் கழுதை வடிவில் வந்த தேனுகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார். கதிரவனம்: கொக்கு வடிவில் வந்த பகாசுரனை வதம் செய்த இடம். லௌஹவனம்: லௌஹன் என்னும் அசுரனை வதம் செய்த இடம். பத்ரவனம்: கன்றுக் குட்டியின் வடிவில் வந்த வத்ஸாசுரனை வதம் செய்த இடம்.
#🌳கோகிலவனம்:
🍒குயில் போன்று கூவி, ஸ்ரீமதி ராதாராணியை கிருஷ்ணர் அழைக்கக்கூடிய இடம். குமுதவனம்: கிருஷ்ணர் தனது சகாக்களுடன் விளையாடும் இடம். இங்கு பிரகாசமான சிவப்பு நிற குமுத பூக்கள் இருந்ததால், குமுதவனம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள பத்ம குண்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
🌳 பஹுலாவனம்:
🍒சிங்கத்தினால் தாக்கப்பட விருந்த ஒரு பசு, தனது கன்றுக் குட்டியை சந்திப்பதற்கு அவகாசம் கேட்டு, அதன் பின்னர் சிங்கத்திடம் வந்தபோது, பசுவின் நேர்மையை சிங்கத்தின் வடிவில் வந்திருந்த தர்மராஜன் பாராட்டினார். அப்போது அங்கு தோன்றிய கிருஷ்ணர் அப்பசுவிற்கு தாயின் ஸ்தானத்தை வழங்கினார்.
🌳 பாண்டிரவனம்:
🍒நண்பர்களுடன் நண்பனாக வந்த பிரலம்பாசுரன் எனும் அசுரனை பலராமர் வதம் செய்த வனம். பில்வவனம்: கோபியர்களுடனான கிருஷ்ணரின் ராஸ நடனத்தில் கலந்துகொள்ள விரும்பிய மஹாலக்ஷ்மி தாயார் தவம் புரிந்த இந்த வனத்தின் யமுனைக் கரையில் லக்ஷ்மிதேவியின் திருக்கோவில் ஒன்று உள்ளது.
—————

ஸ்ரீ மதுராஷ்டகம்

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

வேணூர் மதுரோ ரேணூர் மதுர: பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||

———–

அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்   ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம்

ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்  ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்
உன்
இதழும் இனியது; முகமும் இனியது; கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
வசனம் மதுரம் சரிதம் மதுரம்   வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்  மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
சொல்லும் இனியது; குணமும் இனியது; உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
வேணுர்மதுரோ ரேணுர்மதுர:     பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்   மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது; கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
கீதம் மதுரம் பீதம் மதுரம்     புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்   மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
பாடல் இனியது; பட்டாடை இனியது; உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
கரணம் மதுரம் தரணம் மதுரம்     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
குறும்பு இனியது; வெற்றி இனியது; கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
குஞ்சா மதுரா மாலா மதுரா     யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம்   மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
மணிகள் இனியது; மாலை இனியது; யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
கோபி மதுரா லீலா மதுரா     யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்  மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது; கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
கோபா மதுரா காவோ மதுரா     யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர்மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்   மதுராதிபதேரகிலம் மதுரம்
ஆயர் இனியது; ஆக்கள் இனியது; செண்டை இனியது; பிறவி இனியது;
வீழல் இனியது; ஆழல் இனியது;மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
இதி மதுராஷ்டகம் சம்பூர்ணம்.! இங்ஙனம் இனியவை எட்டும் நிறைவே!

——————————————

ஸ்ரீ வல்லபாச்சார்யர் -அருளிச் செய்த ஸ்ரீ மதுராஷ்டகம் –

ஸ்ரீ நாத் –முதலில் பிரதிஷ்டை செய்து அருளியவர்
ஸ்ரீ வல்லபாச்சார்யர்-1479–1530-புஷ்ட்டி மார்க்க வைஷ்ணவ சம்ப்ரதாயம் – ஆந்திர -முன்னோர்
ஸ்ரீ பால கிருஷ்ணன் புஷ்டியான அனுக்ரஹம் –

ஸ்ரீ மதுராதிபதியே அகிலம் மதுரம் -புண்யா பாப ஹரி ஸூபா -வடமதுரை மன்னு-யுகங்கள் தோறும் -வாமன ஆஸ்ரமம் –
சத்ருக்கனன் -லவணாஸூரன்/ஸ்ரீ கிருஷ்ண கா ஜென்ம பூமி -பெயரிலே மதுரம் –
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுரக் கானாக் கண்டேன் –மிகவும் விரும்பிய திரு நாமம் –
விதி வாக்கியம் -அநு வாதம் வாக்கியம் இரண்டும் உண்டே
ஸ்ரவணம்-விதி இல்லை -ஆசை வந்தால் தான் கேட்க வருகிறான் -மனனம் அவனே பண்ணுவான் –
கேட்பதும் மனனம் பண்ணுவதும் விதி இல்லை
அடுத்து அனவ்ரத சிந்தனம் ஒழுக்கம் த்யான மாத்திரம் -நிதித்யாஸனம் -விதி வாக்கியம் –
ஆசை -உண்ண பசி போலே –இத்தை வளர்க்கவே இது போன்ற ஸ்லோகங்கள் –
அவன் -பிரிய தமரானவர்களை தானே வரித்து -தன்னைக் காட்டுகிறான் -சததம் கீர்த்த யந்த –தாதாமி புத்தி பூர்வகம்
தேஷாம் நிதயாபி யுக்தாம் -பஜதாம் ப்ரீதி பூர்வகம் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டவர் –
தாதாமி புத்தி யோகம் -கொடுக்கும் பொழுது ப்ரீதி உடன் கொடுக்கிறான் -பக்தி என்றாலே ப்ரீதி தானே –
ஆகையால் இப்படி கொண்டு கூட்டுப் பொருள்
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி –
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ வைகுண்டம் -நினைவே அமுதம்-நனைந்த சிந்தனையால் மோக்ஷம் பெறுவோம் –

அதரம் மதுரம் –
திருவாய் -திரு உதடுகள் -உபதேசம் -இனிமை -பவள வாய் -பார்த்து நம் உதடு பாட துடிக்கும்
வாலியதோர் கனி கொல்—கோலம் திகழ் திரள் பவளம் –7-7-3-அபூத உவமை —
நீல நெடு முகில் போல் –திரு மேனி அம்மான் -தொண்டை வாய் –திசைகள் எல்லாம் –
வாய் அழகர் -சம்பாஷ மான இவ–நம்பெருமாள் புன்சிரிப்பால் குழி -ஈர்க்கும் –
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே –அபயம் ஹஸ்த முத்திரை புரியாமல் இருந்தால்
குவிந்த உதடால் மாஸூச சொல்ல –செங்கனி வாய் –நெஞ்சம் நிறைக்கும் – -கோவை வாயாள் -அபிமத அநு ரூபம் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -அஷ்ட புஜத்து எம்பெருமான் –
கழுத்தை உதட்டாட்டம் கண்டு -மயங்கினது போலே -/
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து –/
ஸ்மித புல்ல அதர பல்லவம் -கொழுந்து போலே அன்றோ –
வதனம் மதுரம் –
மையல் ஏற்றி மயக்க வல்ல மாய மந்த்ரம் கொலோ –புண்டரீகம் தடாகம் -திரு முகம் செங்கமலம் —
குண்டலம் தோடு -ஆண் பெண்- -/ தாமரை தாதுக்கள்-நீண்டு நுனியில் உருண்டு -கிரீட மகுட -சூடா வதம்ச –
பெரியவன் –ஆதி ராஜ்ய ஜல்பிகா /
வண்டுகள் ஒத்த திருக் குழல்கள் -மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ-மதுவை உண்ண /
கபோலம்–யசோதை அன்பு கையால் ஸ்பர்சம் பருத்து -அழகர் இடம் இன்றும் சேவிக்கலாம் –
நயனம் மதுரம் –
கருணை வெள்ளம் அகப்படாமல் இருக்க திரு மணத் தூண்கள் -கருணா பிரவாஹம் -குண பிரவாஹம் பெருமாள் இடம் இருந்து –
நவ ரசம் -ஸ்திரம் –பெறும் கேழலார் தம் பெறும் கண் மலர் புண்டரீகம் -நம் மேல் ஒருங்கே பிறழ வைத்து –
எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
குருகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் – சொட்டை குலத்தில் உதித்தார் இங்கே வந்தார் உண்டோ -ஐதிக்யம்-
ஆ முதல்வன் -என்று கடாக்ஷம் -ஸ்திரம் தானே –
எழில் கொள் தாம்பு –அழுத கையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் -நம்பி ஹனுமந்த தாசர் -திருவாராதன கிராமம் -ராமானுஜர் -ஐதிக்யம் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடே நீண்ட அப்பெரியவாய கண்கள் -பக்த ஸூர்யனால் மலரும் தாமரைக் கண்கள் –
கப்யாசம் புண்டரீக அக்ஷிணீ/ ராஜீவ லோசனன் -ந யுத்த யோக்யதாம் –
இணைக் கூற்றங்களோ அறியேன் -க ஸ் ஸ்ரீ சரியா கஹா புண்டரீகாஷா /கோபம்-நரசிம்ஹன் – தயை அனைத்தும் காட்டுமே /
செங்கண் சிறிச் சிறிதே எம் மேல் விழியாவோ
எம் பச்யதே புருஷோத்தமன் -ஜெயமான மது ஸூதன கடாக்ஷம்
சிரமணி –நெடு நோக்கு கொள்ளும் பத்த விலோசனத்துக்கு என்னை உய்த்திடுமின் -சபரி -விதுரன் -ரிஷி பத்தினிகள் -அனுக்ரஹம் உண்டே
பரிகாசமும் -கோபிகள் -சிற்றில் -முற்றத்தூடு புகுந்து -முகம் காட்டி முறுவல் செய்து -சிந்தையும் சிதைக்கக் கடவையோ –
எதிர்பார்த்து காத்து இருக்கும் -ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -கடல் கிடக்கும் மாயன் –
சிக்கென செங்கண் மாலே ஆவியே -நான் உன்னை விடேன்-
ஹசிதம் மதுரம்
புன்முறுவல் -பிரகசன்னிவே பாரத -அர்ஜுனன் விசாகம்–சிரித்து கொண்டே ஸ்ரீ கீதா உபதேசம் –
கன்றினை வால் ஓலை கட்டி —
ஹ்ருதயம் மதுரம்
திரு மார்பே -என்றும் -திரு உள்ளம் என்றும் -ஸுஹார்த்தாம் ஸர்வ பூதானாம் -முதல் படி ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கோர மாதவம் செய்தனன் –திரு ஆர
மார்பு அதன்றோ-
தாராய வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் -வக்ஷஸ்தலம் திருத் துளசி மாலை -ஸ்ரீ கௌஸ்துபம் -ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ கமலா -விமலம் விசாலம் –
கமனம் மதுரம்
நடை -வ்யாக்ர சிம்ம கஜ ரிஷப சர்ப்ப கதிகள்/ நம் பெருமாள் பக்கலிலே காணலாம்,
கோபம் தேஜஸ் கர்வம் பெருமிதம் -இங்கனே போந்து அருளி -சீரிய சிங்கம் –
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு திருவடிகள் வந்து ரஷிக்கும் -எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ -சீதா மத்யே -அக்ர பிரதயோ ராமா –
நடந்த கால்கள் நொந்தவோ –பேசி வாழி கேசனே -சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -வருக வருக நம்பி வாமன நம்பி
வா போ வந்து ஒருகால் கண்டு போ –கச்சதி ப்ராதரத்தி -நடை அழகில் மயங்கி கைங்கர்யம் கெடாமல் -ராகவ ஸிம்ஹம்–
நம்மாழ்வார் நாச்சியார் திருக் கோலம் -இராப்பத்து ஏழாம் திரு நாள் திருக் கைத் தலை சேவை இன்றும் சேவிக்கலாம்
மதுராதிபதயே அகிலம் மதுரம்

———————-

வசனம் மதுரம்
திரு வாக்கு –பேச்சு வார்த்தை சொல் -மூன்றும் உண்டே –
திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-பேச்சு ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
சொல்லும் பொய்யானால் -நானும் பிறந்தமை பொய்/
ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -சொல்
மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் -வார்த்தை
பாவி நீ என்று ஓன்று நீ சொல்லாய் என் முன்னால் காண வந்தே -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே –
வாக்மீ ஸ்ரீ மான் -கொண்டாடுகிறார் வால்மீகி -அபயப்ரதானம் -மஞ்சு பாஷீ மிருத பாஷீ பூர்வ பாஷீ ராகவா –
உனக்கு ஒரு வார்த்தை எங்களுக்கு வாழ்வு மாஸூச –
அர்ச்சா சமாதி குலைத்து வசனம் மதுரம் –திரு விளக்கு பிச்சன் -தொண்டமான் சக்ரவர்த்தி -திருக் கச்சி நம்பி –
சரிதம் மதுரம் -சேஷ்டிதங்கள்
அது இது உது என்னாலாவன -நைவிக்குமே/-சாரித்ரேன கோ யுக்தா -இஷுவாகு வம்ச பிரபவா /
ஜென்ம கர்ம மே திவ்யம் /அவதார ரஹஸ்ய ஞானம் -அதே பிறவியிலே மோக்ஷம் -பக்தனுக்கும் /
வசனம் மதுரம் –
வஸ்திரம்
அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே /செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஓர் சிவலிகை — கச்சு என்கின்றாளால்/
ஐயோ அச்சோ ஒருவர் அழகிய வா -/பவ்வ நீர் உடை ஆடை யாக சுற்றி –பவனம் மெய்யா -அண்டம் திருமுடி /திரு மாலே கட்டுரையே –
கைலி –நம் பெருமாள் -மாற்றுவதே அழகு –துலுக்க நாச்சியாருக்காக சாத்திக் கொள்கிறார்
வலிதம் மதுரம் —
மூன்று மடிப்புக்கள் கழுத்திலும் வயிற்றிலும் உண்டே
யா தாமோதர -உதர பந்தம் –சேஷி திரு இலச்சினை –
திரு வயிற்று உதர பந்தம் -பெற்ற வயிற்றுக்கு பட்டம் –
வரத வலி த்ரயம் -பிரதான திரு ஆபரணம் –
நஞ்சீயர் திரைக்குள்ளே -ஏகாந்த தழும்பு சேவிக்க ஆசை -பிரதம விபூஷணம் / தாமோதரனை ஆமோ தரம் அறிய –
தத்வ த்ரயம்-ஞான பக்தி வைராக்யம் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -முக்குணம் தாண்டி -ரஹஸ்ய த்ரயம் –
மூன்று பாதங்கள் -மூன்று அக்ஷரங்கள் -மண்டப த்ரயம் காட்டும் –
தேசிகன் -பெறும் தேவி தாயார் ஸ்வர்ண -கனக வளைய முத்ரா –
சலிதம் மதுரம் –
அசைவே மதுரம் –ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
முன் இருந்த தானத்தே -தாளால் உலகம் அளந்த அசைவே கொல்/
கிடந்த நாள் கிடந்தாய் –உன் திரு உடம்பு அசைய / எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -ஆராவமுத ஆழ்வார் – திரு மழிசை பிரான் -/
அசைவில் அமரர் தலைவா -அசையா நீ எழுந்து இருப்பதா வாழி –உத்தான சயன -உத்யோக சயனம் /
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -அசைந்து -காட்டி அருளி -இங்கிதம் நிமிஷ தஞ்சை தாவகம்–நீ பண்ணுவதே ரம்யம் அத்புதம் அதி பிரிய கரம்
தவழ்ந்து போய் என் மகன் கோவிந்தன் புழுதி அழைக்கின்றான் -நீ இங்கே நோக்கி போ -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –
கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
பிரமிதம் மதுரம்
சுழற்சி மதுரம் -ராஸக்ரீடை -/ அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவா -கோபிகள் கண்ணன் -/தோளுடன் தோள் கோத்து-
கோபிகா கீதம் -குரவை கூத்து -கோப வேஷ பரிகம்மிதா -பஞ்சாவதம்ச -மயில் பீலி சூடி —
ஒருவர் இருவர் ஓர் மூவர் என உருவு கரந்து -சுழன்று –
ஆடி ஆடி அகம் கரைந்து —
மதுராதிபதயே அகிலம் மதுரம்

————————————————

வேணூர் மதுரா
விசித்திர வேஷம் –செவி ஆட்ட கில்லாவே – /அத்புதம் கேளீர் -/உபதேசம் ஆச்சார்யர் மூலம் போலே புல்லாங்குழல் -கானம் -சப்த ஸ்வரம் –
சஜாதீயர் ஆச்சார்யர் –விஜாதீயர் அவன் /
வெள்கி மயங்கி ஆடல் பாடல் மறந்தனர் தாமே -/எழுது சித்ரங்கள் போல் நின்றன /
ரேனூர் மதுரா
ஸ்ரீ பாத ரேனு-சித்ரா கல்பா லாங்கனி-வலம் காதில் மேல் தோன்றி பூ அணிந்து –
புழுதி அளந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் -விளையாடு புழுதியும் கொண்டு – -நப்பின்னை காணில் சிரிக்கும் -/புனிதனோடு காப்பு நான் கட்ட -இதுவே இவன் ஆச்சாரம்
தவழ்ந்து எழுந்து ஓர் தளர் நடையால் — மண்ணில் செம்பொடி ஆடி வந்து என் தன் மார்பினில் –பெற்றிலேன் அந்தோ –
கோபால வேஷம் -கற்றுத் தூளி –தூசரிதமான திருக் குழலும் —
ஸைன்ய தூசி -சேனா -தூளி தூசரிதம் -பாரத சாமரம்
பாத தூளி படித்தலால் இவ்வுலகம் பாக்யம் -தொண்டர் அடிப் பொடி
பாணீர் மதுரா
கைத்தலங்கள் வந்து காணீரே –சங்கும் நேமியும் நிலாவிய -ரேகைகள் -யசோதை வளர்க்கும் பிள்ளை -நாராயணன் இல்லை –
அத்புதம் பாலகம் -/ கராவிந்தேனே –பால முகுந்தம் -/உந்தை யாவன் –நிஷ்காரணம் ஜகத் பிதா –
விரலாலே காட்ட -நந்தன் பெற்றனர் -வஸூ தேவன் இழந்தான் -எடுத்த பேராளன் –
முழுதும் வெண்ணெய் அலைந்து அலைந்து தொட்டு உண்ணும் –தாமரைக் கை —
கொட்டாய் சப்பாணி -பிளந்திட்ட கைகளால்
பாணி சிவந்தது ஊன்றி தவழ்ந்ததாலா -சாட்டை ஒட்டியா -தேரோட்டி கடிவாளத்தாலா –
திதியோதனம் ஊறுகாய்-கண் எச்சி படும்படி
செந்தாமரை கை விரல்கள் கோலம் அழிந்தில -வாடிற்றல –திரு உகிர் நொந்தும் இல –
கை வண்ணம் தாமரை -வாய் கமலம் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே பாணி கிரஹணம் -முறை –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அஞ்சேல் என்ற திருக் கைகள்
பாதவ் மதுரா
திருவடி தாமரைகள் -தானே சுவைத்து பார்ப்பான் -/பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே
கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -எடுத்துக் கொள்ளில் மருங்க இருத்திடும் / ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் அன்றோ –
சகடாசூர -சகடத்தை சாடிப் போய் -சாடுதைத்த திருவடி -உலகளந்த திருவடி -அவனுக்கும் ரஷகம்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்தால் போல் –
கதா புன -சக்ர சங்க த்வஜம் அங்குசம்
திருப் பொலிந்த சேவடி / தேருக்கு கீழே நாட்டிய
உலகம் அளந்த பொன்னடி -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
ந்ருத்யம் மதுரம்
குடமாடு கூத்தன் –குரவை கூத்து -கும்ப நாட்டியம் -காளிங்க நர்த்தனம் -சாரீ ந்ருத்தம் எண்ணிக்கை –
ஹல்லீ ந்ருத்தம் –வண்ண புஷ்ப்ப மாலை / கோஷ்ட்டி ந்ருத்தம் ராஸ க்ரீடை
மன்றமர கூத்தாடும் மைந்தன் -மன்றம் அமரும் படி -மயங்கி அங்கேயே அமர்ந்து
சக்யம் மதுரம்
நட்ப்பு -குகன் ஸூ க்ரீவன் விபீஷணன்
கோபி -பிரசாதம் -சுகர் ஆச்சர்யம் / உத்தவர் -ஸூ தாமா –
விதுரர் / மாலா காரர் / அக்ரூரர் / சஞ்சயன் -18-நாடார் கூட்டம்
ஆத்ம ஸஹர் -அறிவார் உயிரானார் -யாம் பெறும் ஸம்மானம் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

—————————–

ஐயப்பாடு அறுத்ததும் ஆதாரம் பெறுக வைப்பதும் அழகன் -அழகையே ஸைன்யமாக கொண்டு -கட்டுப்படுத்துவானே
மால் பால் மனம் சுழித்து மங்கையர் தோள் கை விட வேண்டுமே –
கீதம் மதுரம்
பாட்டு -ஸ்ரீ கீதா ஸூ கீதா -மதுரம் -தத்வ விவேக –இத்யாதி -பார்த்தன் அன்று ஓதிய –கீதாம்ருதம் மஹத் -ஸர்வ உபநிஷத் -சாரம் –
புல்லாங்குழல் கானம் -சங்க நாதமும் கீதமே -168-mile தூரம் —84-இடங்களில் ஸ்ரீ பாகவதம் சப்தாகம்
ஸ்ரீ வல்லபாச்சார்யர் அருளி-84- க்ரோஸம் தூரம் என்பதால்
ஆ நிரை இனம் மீளக் குறித்த சங்க ஒலி -7-லக்ஷம் பசுக்களை இத்தைக் கொண்டே
நைவளமும் –கொண்டு பெண்ணை -நோக்கா –இது அன்றோ எழில் ஆலி என்பான் –
நாணினார் போலே –இறையே –தாசன் -என்று அபிமதம் விஞ்சி –
கான பிரியன் -முடங்கு கேள்வி இசை என்கோ–சாம வேத கீதனே –
பீதம் மதுரம்
குடித்தது -எதுவாய் இருந்தாலும் -அருகிருந்த மோரார் குடம் உருட்டி –கன்றுக் குட்டிக்கு நீர் குடிக்க –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –
இது முதலில் -உண்பது அப்புறம் -மாறி -பருகி விட்டே உண்பான் -இரண்டுக்கும் வாசி அறியான் என்றுமாம்
பால் உண்ணோம் -நெய் உண்ணோம் -போலே
புக்தம் மதுரம்
உண்டது –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் —என்னை முற்றும் பருகினான் -உண்டு பருகினான்
அப்பம் கலந்த சிற்றுண்டி –அக்காரம் பாலில் கலந்து-சொப்பட நான் சுட்டு வைத்தேன் –
வெண்ணெய் விழுங்கி –ஆராத வெண்ணெய் -வெள்ளி மலை இருந்தது ஒத்த -முப்போதும் கடைந்த வெண்ணெய் –
ஏரார் இடை நோவ- தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி –
கை விரல் அனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசில் மிச்சல் உண்ணப் பெற்றிலேன் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
குடத்தோடு சாய்த்துப் பருகி -குடத் தயிர் சாய்த்து பருகி —சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு -வளையலும் காணேன் –
கன்னல் -இலட்டு வத்தோடும் -சீடை கார் எள்ளின் உண்டை -என்னகம் என்று வைத்துப் போந்தேன்–இவன் புக்கு அவற்றை பெருக்கிப் போனான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி வெண்ணெயும் சோதிக்கின்றான் -உன் மகனைக் கூவிக் கொள்ளாய் –
சுக்தம் மதுரம்
தூக்கமே மதுரம் -பையத் துயின்ற பரமன் -/உறங்குவான் போல் யோகு செய்து -கிடந்தவாறும் நினைப்பு அரியன
அன்று வெக்கணை கிடந்தது –என் நெஞ்சுள்ளே –
புளிங்குடி கிடந்தது –தெளிந்த என் நெஞ்சம் அகம் கழியாமல் /
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடப்பாய் -அரவின் அணை மிசை கிடந்த மாயனாய் /
ஸ்படிக சிலை -பெருமாள் –சிறு காக்கை முலை தீண்ட -ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தபன்/ ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று/
ஸ்வரூப த்யானம் -/டோலத்சவம்-
ரூபம் மதுரம்
காந்தா –அத்தியாச்சார்யம்-சாஷாத் மன்மத மன்மதன்-அவனும் மடல் எடுக்க வேண்டும்படி -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபராஹினாம்-
கண்டவர் தம் மனம் வழங்கும் -மின்னு மா மகர குண்டலங்கள் -ஆடினால் தானே ஓளி வீசி -முக காந்தி குழல் காந்தி வாசி –
முத்துப்பல் ஓளி யாலே வா ஸூ தேவர் -தேவகி –/ மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் /
நீல தோய்த்த மத்யஸ்த -மேகம் மின்னல் வெட்டு -சந்திரன் ஓளி -வானவில் நினைத்து உபாஸிக்க -உபநிஷத் சொல்லுமே –
திகழ்கின்ற –திரு மார்பில் -திகழும் மங்கையோடும் -/முடிச்சோதியாய் –உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திருமாலே கட்டுரையே
நிறைந்த சோதி வெள்ளம் -சூழ்ந்த பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே ஒழிந்தான்-
அருவமும் எண்ணிறந்த உருவங்களில் ஒன்றே -வாரா வருவாய் –வாரா அருவாய்
ஆதாயம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
பஞ்ச உபநிஷத் சக்தி மயம் -/
திலகம் மதுரம்
ஊர்த்வ புண்டர திலகம் -பஹு மாணாத்-உத்தர உபரி பக்த ஜனாதி -நம்மை மேலே தூக்கி செல்லவே / இனிமை அறியவே –
தன் திரு நாமத்தை தானே சாத்தி -கம்பர் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

—————————————-

கரணம் மதுரம்
லாவண்யம் ஸுந்தர்யம்–கொள்கின்ற கோள் இருளை –அன்று மாயன் குழல் –
சுட்டுரைத்த பொன் ஒவ்வாதே –கரும்பு வில் போன்ற திருப் புருவம் –
ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் –/அப்ராக்ருதம் -/ எழு கமலா பூ அழகர் /ஸுந்தர்ய அருவி சுழி -திரு நாபீ-உந்தித் தாமரை –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -கோல திருக் குறுங்குடி நம்பியை -என் சொல்லி நான் மறப்பேனோ /
ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச
தரணம் மதுரம்
தாண்டுவிக்கிறார் / வழுக்குப் பாறை –ஸூ கர்- திருவடி படும்படி பாக்யம் –ஸிம்ஹம் புழு மலை தாண்டிய கதை –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
வைதிக புத்ரன் கதை -ஒரு நாள் ஒரு பொழுதில் உடலோடு கொண்டு கொடுத்தவனைப் பெற்று இனி என் குறை
கண்ணன் ரூபம் சேவிக்க ஆசை கொண்ட ஸ்ரீ மஹா லஷ்மீ
அத்யயன உத்சவம் -நம்மாழ்வார் திருவடி சேவை -எங்கும் உண்டே -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
ஹரணம் மதுரம்
அவன் திருட்டே மதுரம் -வெண்ணெய் உடம்பு முழுவதும் பூசிக் கொண்டே –
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -வெள்ளி மலை ஒத்த வெண்ணெய்
திருட்டு ஒரு நாள் இல்லையே -கச்வம் பால –பாலானுஜன் -மன் மந்த்ர சங்கையா-
ஸ்ரீ கௌஸ்துபம் தேஜஸ் கொண்டே திருட்டு / வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்ட ஆளு கூத்து அப்பன் —
துன்னு படல் திறந்து புக்கு –திருமங்கை ஆழ்வார் போட்டி -ஸ்வர்ண விக்ரஹம் -எந்திரத்துக்கு உள்ளே -மதிள் கைங்கர்யம்
ரமணம் மதுரம்
விளையாட்டு –கண்ணை புரட்டு விழுந்து களகண்டு செய்யும் பிரான் – -அப்பூச்சி காட்டுகின்றான்
விளக்கில் வீட்டில் பூச்சி போலே ஆஸிரர்கள் -ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு -பால் குடிக்க உயிரும் சேர்ந்து
ரமண ரேடி -இன்றும் மணலில் உருண்டு வெட்கம் இல்லாமல்
வமிதம் மதுரம்
தாம்பூல ஸ்ரவணம் / தூய பெரு நீர் யமுனை / உமிழும் பொன் வட்டில் பிடித்து புகப் பெறுவேன் /
சமிதம் மதுரம்
பிரளய ஆபத்தில் -வையம் எழும் கண்டாள் பிள்ளை வாய்க்குள்ளே / ப்ரஹ்மாண்டம் ஜிஹாத் -மண் பிரசாதம்
நெய்யூண் மாற்று மருந்து /
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -மஞ்சாரா -எஞ்சாமல் வயிற்றில் அடக்கி -உண்டும் உமிழ்ந்து –
மதுராதிபதியே அகிலம் மதுரம்

—————————-

மதுரா பெண் பால் /மதுரம் ஆண்பால் மதுரம் வரும் -சப்தத்துக்கே லிங்கம் சமஸ்க்ருதம் /
உஞ்சா மதுரம்
பறை வாத்யம் -இடுப்பில் கட்டி குடக் கூத்து-குரவைக் கூத்து ராஸ க்ரீடை -ஜல க்ரீடை மூன்றாவது
விளையாட்டு –ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு —வாராயோ –சென்றேன் என் வல் வினையால்
பறை -திருப்பாவை -/ புருஷார்த்தம் –தாத்பர்யம் அறியாமல் -சீதை -திரும்பி இங்கு /
ஜாம்பவான் பறை -சாலப் பெறும் பறை -தான் கட்டின பறை –
கோவிந்தன் வருகின்ற கூட்டம் -தளைகளும் தொங்கலும் -மயில் பீலி கொடை–
தண்ணுமை எக்கம் மத்தளி – -தாள் பீலி குழல்கள் கீதமும் ஆகி எங்கும்
மலை கொலோ வருகிறது என்று –
பாலா மதுரா
மாலா -பாட பேதம் -கோப கோபி மேலே வரும் -அதுவே பருவ பரம்
புஷ்பங்கள் தொடுக்கப் பட்ட -காட்டுப் பூ மல்லிகைக்கு பாலா என்று பெயர்
ரமணம் -ஸ்மரணம் -கீழே பாட பேதம் /
செண்பகப் பூ சூட்ட வாராய் -/ ப்ராத கால புஷ்ப்பம் செண்பகம் -/
அனந்தாழ்வான் -மாலாகாரர்/ சுமந்து மா மலர் தீபம் கொண்டு -பாசுரம் ஐதிக்யம் /
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -குறும்பு அறுத்த நம்பி /தொண்டைமான் சக்கரவர்த்தி ஸ்வர்ண புஷ்ப்பம் /
மல்லிகை பூ -சாயங்கால பூ / பாதிரிப் பூ -பச்சை தமனகம் சேர்த்து -தவன உத்சவம் -/
மருவும் தவனமும் சேர்த்து -அடுத்து -/ செங்கழு நீர் ஐந்தாவது -விடிந்தால் வாய் நெகிழும் /
பின்னை பூ -பின்னை மர வாஹனம் உண்டே /குருக்கத்தி பூ அடுத்து /
இருவாட்சி கடைசியில் -நம்பெருமாள் மாலை பிரசாதம் தனியாக தெரியுமே –விருட்சி பூ /
சூடிக் கொடுத்த சுடர் கொடியையும் சேர்த்து அவனுக்கு சூட்டினார் -/
யமுனா மதுரா
தூய பெரு நீர் யமுனை –திருவடி தீண்ட பெருகி பின் வற்றிக் கொடுத்ததே -ஜானு மாத்திரம் /
மன்றமர கூத்தாடியே -வட திருவேங்கட மைந்தன் /
யமுனாச்சார்யர் -யமுனைத் துறைவன் -/பலராமன் -ராம் காட் -ஷீர் காட் வஸ்திர லீலை /கோவர்த்தன கிரி -21-மைல் சுற்றளவு -/
வீஸீ மதுரா
அலைகள் –தரங்கம் -சம்சார சுக துக்கம் மாறுவது போலே -ஆவாரார் துணை
சலிலம் மதுரம்
தண்ணீர் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -/பிள்ளை கார்யம் இடம் கண்டு -காரணத்தில் இருக்குமே /
யுத்த பூமியில் மோ ழை எழுவித்தான் / இட்டமான பசுக்களை இனிது மருத்து நீராட்டி -/
தெளிவில்லா கலங்கல் காவேரி -தெண்ணீர் பொன்னி–மாப்பிளை பார்க்க வரும் கலக்கம் -பிரிந்து போகும் கலக்கம் /
கமலம் மதுரம்
அடித்தலமும் தாமரை –அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் / ஆசன பத்மம் -தோற்று தாங்கும் திருவடித் தாமரை /
ஒப்பாகா –/கை வண்ணம் தாமரை வாய் கமலம் -போலும் கண் இணையும் அரவிந்தம் –அடியும் அஃதே -/ஆரோகணம் அவரோகணம் இல்லாமல் –
திருக் கல்யாணம் -பாணி கிரஹணம் -மந்த்ரம் வாயால் சொல்லி -கண்ணால் இவளையே நோக்கி -தோற்று விழுந்த திருவடி –
சப்த பதிக்கு திருவடி -கையைப் பிடித்து -வாயால் மந்த்ரம் சொல்லி -கண்ணால் முகத்தை பார்த்து தான் சொல்ல வேண்டும்
ஸர்வ லோக மகேஸ்வரன் வெட்கப்படாமல் -கண்டு -அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
பா மருவு மூ உலகம் படைத்த பத்ம நாபாவோ—அளந்த -பத்ம பாதாவோ –தாமரைக் கண்ணாவோ –தனியேன்
கரை புரண்டு –அரவம் சுமப்பது அஞ்சன மலை -அம்மலை பூத்தது அரவிந்த வனம் –அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே -/
கண்ணை தனியாக -அடியேனை பாட வைத்ததால் –
கமலக் கண் என்னும் நெடும் கயிறு -அமலங்களாக விழிக்கும்
மதுராதிபதியே அகிலம் மதுரம்

———————————–

கோபீ மதுரா
-5-லக்ஷம் -காத்யாயினி நோம்பு -சொல்லும் அவிடு ஸ்ருதியும் / கண்ணனை கையிலே வைத்துள்ளார்கள்
த்வதீய -கம்பீர -மநோ அநு சாரீ -வேதம் பின் செல்லுமே -வ்ரஜை ஸ்த்ரீகள் கண் அடி படவே அவதாரம் /
உத்தவர் ஞான உபதேசம் செய்ய வந்து பக்தி கற்று வந்தார் -ஞானம் அக்னியால் எல்லாம் போக்கலாம் -முயல வந்து –
காளியனாக அநு காரம் / கோவிந்தா வாங்கலையோ -/ மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் /
ஆண் உடையுடன் எப்படி நுழைந்தீர் -கோகுலத்துக்குள் –
லீலா மதுரா
சேஷ்டிதங்கள் அனைத்தும் மதுரம் -அவதரித்ததே மதுரம் -வண்ண மாடங்கள் சூழ் -/ ஒருத்தி மகனாய் பிறந்து
விளையாட்டாக பூதனை முதல் கேசி வரை -மிச்சம் இல்லாமல் அனைவரையும் முடித்து /அரவம் அடல் வேழம்-10- சேஷ்டிதங்கள் ஒரே பாசுரம் -/
யுக்தம் மதுரம்
அவர்கள் உடன் கூடியதும் ஆடியதும் -சம்யோகம் -யோகம் -சேர்க்கை – மதுரம்
பரீக்ஷித் -தர்ம ஸ்தாபனம் -பண்ண வந்த -இப்படி செய்யலாமோ -அக்னி -அனைத்தையும் புனிதமாக்கும் –
சர்வதவசாகம் -சர்வாந்தராமி -உடல் மிசை உயிர் என எங்கும் பரந்துளன் -சரீராத்மா பாவம் -சரீர த்வாரா ஆடினால் என்ன நேராக —
சரீர சம்பந்தமே இல்லையே -ஆத்ம சம்பந்தம் தானே
முக்தம் மதுரம்
பிரிவும் மதுரம் -கோபீகா கீதம் –விரஹம்-குடில குந்தளம்–நீண்டு சுழன்று செறிந்துன் நேத்து கடை சுருண்டு கரு நீலம் –
இரட்டை திருவடி –அஹங்காரம் -தூக்கி கொள்ளச் சொல்ல -ஆழ்ந்த ஒரு திருவடி இணை -ஒருத்தி அழ-
பூ கொத்து பறித்து வைத்து -குனிய -காண வில்லையே
சுரத்துடன் அழுது-
த்ருஷ்டம் மதுரம்
கடாக்ஷம் -செங்கண் சிறுச் சிறிதே -ஜெயமான புருஷன் எம் பச்யதி -சாத்விக சிரத்தை -நெடு நோக்கு புண்டரீகாக்ஷன்
வேண்டாத துரியோதனனுக்கும் -பீஷ்ம த்ரோண -கிம் அர்த்தம் புண்டரீகாஷா -புக்தம் விதுர போஜனம் –
அழல விழித்தான் அச்சோ அச்சோ -பார்வையால் துச்சோதனனை-இத்யாதிகளை – நிரசித்து –
அஹம் காலோஸ்மி நிமித்தம் தான் அர்ஜுனா நீ —
சிஷ்டம் மதுரம்
மிச்சல் -போனகம் செய்த சேடம் –நிவேதனம் பண்ணிய மிச்சல் -இல்லை என்றால் பாப உருண்டைகள் –
பரமன் உண்ட எச்சில் நச்சினேன் -லஷ்மணன் -தாரை இடம் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

——————————————

கோபா மதுரா
கோபர்கள் -கோப குமாரர்கள் -தன்னேராயிரம்-கை கலந்து –திருட்டுக்கு துணை -பொத்த உரலை கவிழ்த்து- –
பிரசாதம் கை கலந்து -பிரமனுக்கு கற்றுக் கொடுத்த பாடம் -சென்று செருச் செய்யம் குற்றம் ஓன்று இல்லாத கோபர் -/
நல் செல்வன் -இருவரும் உண்டே -சாமான்ய விசேஷ தர்மங்கள் /லஷ்மணன் அக்னி கார்யம் செய்யும் அன்று தான் இவன் பால் கறப்பான்
தோழன்மார் கண்டதே –செண்டு கோல் மேலாடை இத்யாதி -ஒரு கையால் ஒருவன் தன் தோள் ஊன்றி
ஸத்ய பாமை -பின்பு -தோள் கொடுப்பாள்
காவோ மதுரா
பசுக்களும் கன்றுகளும் -ஏற்ற கலங்கள் எதிர் கொண்டு மீதளிக்கும் -வள்ளல் பெறும் பசுக்கள் –
கணங்கள் பல -கற்று கறவை -கறவைகள்–பல பன்மை
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -இட்டமான பசுக்களை –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –
ஆ மருவி அப்பன் -கோ சகன் -தேர் அழுந்தூர் -நிரை மேய்த்து அமரர் கோமான் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தான் -நெருஞ்சி முள் காட்டை மேய்ச்சல் நிலம்
யஷ்ட்டிர் மதுரா
கையில் கோல் -கொள்ளா மாக் கோல் -பார்த்தசாரதி -கையிலே பிடித்த -கோபால வேஷம் –
ஸ்ருஷ்ட்டிர் மதுரா
இயல்பு -குழந்தைகள் / ப்ரத்யும்னன் -அநிருத்தினான் -16008-ஒவ் ஒருவருக்கும் -10-அஷ்ட மஹிஷிகள்
குழந்தை பேறுக்கு ராம மந்த்ரம் -சொத்துக்கு கிருஷ்ண மந்த்ரம் –
கைலாச யாத்திரையில் -கள்வா –ருக்மிணி தேவி உடன் -சென்று -/
தலிதம் மதுரம்
உடைந்த மண் பாத்திரம் கண்ணன் கை ஸ்பர்சம் -இதுவும் மதுரம் -வெறும் கலத்தை வெற்பிடை இட்டு
அதன் ஓசை கேட்க்கும் உய்க்கும் கண்ணபிரான் கற்ற கல்வி
ஆத்மாவை ஸ்வா கருத்து சரீரம் விடுவதை
ததீ பாண்டன் -வ்ருத்தாந்தம் -இங்கு இல்லை என்றேனோ -ததி பாண்டனைப் போலே –
ததி பாண்டன் பிரகலாதன் இருவர் இடம் உள்ள பக்தியே முக்கியம்
முக்தி பெற்றது அன்றோ தயிர் தாழி யும்-
பலிதம் மதுரம்
பழம் -காய்-கண்ணன் அமுத செய்த சேஷம் -பலமும் சொல்லி நிகமிக்கிறார்
அவன் உண்ட மிச்சலே பலம் -முக்தி -மோக்ஷம் அங்கு காவு காவு தானே -இதுவே பரம புருஷார்த்தம் -உண்டதும் உமிழ்ந்ததுமே
என் அமுதினைக் கண்டா கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -போலே இங்கும் பல ஸ்ம்ருதி இல்லாமல் –
இந்த ஸ்லோகம் சொல்வதே கேட்பதே பலம் பூமாதிகரணம் -போலே இதுவே பூமா –
மதுராதிபதியே அகிலம் மதுரம் –

48-மதுரங்கள் -அனைத்தும் மதுரம் அஷ்ட 8-தடவை சொல்லி -நிகமிக்கிறார்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வல்லபாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கண்ணன் பிறந்தான்… எங்கள் கண்ணன் பிறந்தான்!–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்–ஸ்ரீ கண்ணன் கழலிணையே ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ அத்திகிரி 24 படிகள் விவரணம் —

January 16, 2023

ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாளில் நள்ளிரவில், தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாக, மதுரா நகரில் சிறைச்சாலையில் அவதரித்தான் கண்ணன். அவன் அவதரித்த நாளையே கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீஜயந்தி உள்ளிட்ட பல பெயர்களால் அழைத்து, நாம் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.

இத்திருநாளில் கண்ணன் பிறந்ததை அக்கால ரிஷிகள் தொடங்கி, இக்காலக் கவிகள் வரை எப்படி எல்லாம் அநுபவித்தார்கள் என்பதன் தொகுப்பே இக்கட்டுரை.

ஸ்ரீபராசர முனிவர் – விஷ்ணு புராணம்:
“ததோ அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானுனா
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத் மனா”

வாடிய தாமரை மலர வேண்டும் என்றால், சூரியன் உதிக்க வேண்டும். அதுபோல் இவ்வுலகம் என்னும் தாமரை வாடிக் கிடந்த போது, சூரியனைப் போல் அவதாரம் செய்தான் கண்ணன். கண்ணன் என்ற சூரியன் உதித்ததாலே, உலகம் என்னும் தாமரை மலர்ந்தது, அதாவது உலக மக்களுக்கெல்லாம் முகமலர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டானது.

சூரியன் கிழக்குத் திக்கில் உதிக்கும். கண்ணன் என்னும் சூரியன், தேவகியின் கர்ப்பத்தையே தான் உதிக்கும் கிழக்குத் திக்காகக் கொண்டு அவளது கருவிலிருந்து உதித்தான் என்றும் இந்த ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார் பராசர முனிவர்.சூரியனோடு கண்ணனை ஒப்பிட்ட பராசர முனிவர், கண்ணனுக்கும் சூரியனுக்கும் உள்ள வேறுபாட்டையும், இந்த ஸ்லோகத்தில் உள்ள ‘அச்யுத பானு’ என்னும் அடைமொழியால் காட்டுகிறார்.
சூரியன் காலையில் உதித்தாலும், மாலையில் அஸ்தமித்து விடுவதால், அதற்கு ‘ச்யுத பானு’ (மறையும் சூரியன்) என்று பெயர். ஆனால் கண்ணனோ, அஸ்தமிக்காமல், மறையாமல் எப்போதும் ஒளிவீசும் சூரியனாக இருப்பதால், ‘அச்யுத பானு’ (மறையாத சூரியன்) என்று கண்ணனைக் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி, கர்மவினையால் நாம் பிறப்பது போல் அவன் பிறப்பதில்லை. தனது கருணையால் கீழே இறங்கி வந்து அவதரிக்கிறான். இதைத் தெளிவு படுத்தவே ‘ஆவிர்பூதம்’ (கண்ணன் ஆவிர்பவித்தான்) என்று இந்த ஸ்லோகத்திலே கூறுகிறார் பராசர முனிவர்.

இவ்வாறு கண்ணன் அவதாரம் செய்த போது, கடல்கள் வாத்திய கோஷம் போன்ற ஒலியை எழுப்பின. தேவ லோகத்துக் கந்தர்வர்கள் தேவ கானங்களைப் பாடினார்கள். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். அப்ஸரஸ் பெண்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். உலகிலுள்ள தீ எல்லாம் சாந்தமாக எரியத் தொடங்கியது. மேகங்கள் முழங்கின.

குழந்தை கண்ணன் எப்படி இருந்தான்?

“புல்ல இந்தீவர பத்ர ஆபம் சதுர் பாஹும் உதீக்ஷ்ய தம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் ஜாதம் துஷ்டாவானக துந்துபி:” என்கிறார் பராசர முனிவர்.

அதாவது, நன்கு மலர்ந்த கருநெய்தல் பூப்போன்ற நிறத்தோடும்,
நான்கு கரங்களோடும், திருமார்பில் திருமகள் அமரும் வத்சம் என்ற மறுவோடும் குழந்தை கண்ணன்
விளங்கினான் என்பது இதன் பொருள்.

ஸ்ரீ சுக முனிவர் – ஸ்ரீ மத் பாகவத புராணம்:
“தேவக்யாம் தேவரூபிண்யாம் விஷ்ணு: ஸர்வகுஹாசய: ஆவிராஸீத் யதா ப்ராச்யம் திசி இந்துரிவ புஷ்கல:
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
ஸ்ரீ வத்ஸலக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம்
மஹார்ஹ வைதூர்ய கிரீட குண்டல த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ர குந்தலம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி: விரோசமானம் வஸுதேவ ஐக்ஷத”

“எல்லார் இதயத்திலும் ஒளிந்திருக்கும் திருமால், இருளடைந்த நள்ளிரவில், தேவப் பெண் போல் திகழ்ந்த தேவகியிடத்தில், கிழக்குத் திக்கில் பௌர்ணமி நிலவு உதிப்பது போல் வந்துதித்தார்.
தாமரைக் கண்களோடும், சங்கு சக்கரம் கதை போன்ற சிறந்த ஆயுதங்களோடும், நான்கு தோள்களோடும், மார்பில் வத்சம் எனும் மறுவோடும்,
கழுத்தில் கௌஸ்துப மணியோடும், இடையில் மஞ்சள் பட்டாடையோடும், வைடூரியத்தாலான கிரீட குண்டலங் களோடும்,
அவற்றின் பிரகாசத்தால் ஒளிவீசும் குழல் கற்றைகளோடும், ஒளிவீசும் அரைநூல், தோள்வளை, கங்கணம் ஆகியவற்றோடும்
விளங்கிய அந்த அற்புத இளங்குழந்தையை வசுதேவர் கண்டார்!” என்பது இந்த ஸ்லோகங்களின் திரண்ட பொருளாகும்.

நம்மாழ்வார் – திருவிருத்தம்:
“சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபந்தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்திமிலேற்று வன்கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே”

“கண்ணா! வைகுண்டத்தில் உள்ள நித்திய சூரிகள் உனக்கு நன்றாக அபிஷேகம் செய்து, மணம்மிக்க மலர்மாலைகளைச் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபம் காட்டிய போது, அந்தப் புகை உன்னை முழுவதுமாக மறைத்த நிலையில், நீ ஒரு மாயம் செய்து, இப்பூமியில் கண்ணனாக அவதாரம் செய்து, வெண்ணெயைத் திருடி உண்டு, ஏழு காளைகளை அடக்கி, நப்பின்னையைத் திருக்கல்யாணம் செய்து கொண்டு, கூத்தாடி விட்டு, புகை அடங்குவதற்குள் மீண்டும் வைகுண்டத்துக்கே எழுந்தருளி விட்டாயே! உனது மாயத்தை என்னவென்று சொல்வேன்?” என்று இப்பாடலில் வினவுகிறார் நம்மாழ்வார்.

பெரியாழ்வார் திருமொழி:
திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டிருக்கும் சௌமிய நாராயணப் பெருமாளையே கண்ணனாகக் கண்டு, அந்தப் பெருமாளே ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்ததாகப் பெரியாழ்வார் பாடுகிறார்:

“வண்ணமாடங்கள் சூழ்த் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தளராயிற்றே”

திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டுள்ள சௌமிய நாராயணப் பெருமாள், (மதுராவில் இருந்த கம்சனிடம் இருந்து தப்பி வந்து) ஆயர்பாடியில் நந்தகோபனின் திருமாளிகையில் குழந்தையாகத் தோன்றினான். அப்போது ஆயர்பாடியைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் எண்ணெயையும்
மஞ்சள் பொடியையும் மகிழ்ச்சியோடு ஒருவர் மீது ஒருவர் தூவிக் கொண்டு, கண்ணனின் அவதாரத்தைக் கொண்டாடினார்கள்.
அதனால் நந்தகோபனுடைய வீட்டின் பெரிய முற்றம் முழுவதும் சேறாகி விட்டது.

“உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே”

கண்ணன் பிறந்த சந்தோஷத்தில், ஆயர்கள் எல்லோரும் பால், தயிர் சேமித்து வைத்த உறிகளை முற்றத்தில் உருட்டி விட்டுக் கூத்தாடினார்கள். நெய், பால், தயிர் உள்ளிட்டவற்றை வறியவர்க்குத் தானம் செய்தார்கள். ஆய்ச்சியர்கள் தங்கள் கூந்தல் அவிழ்ந்து போனது கூடத் தெரியாமல் நடனம் ஆடினார்கள். பித்துப் பிடித்தவர்கள் போல் அனைவரும் கூத்தாடினார்கள்.
வேதாந்த தேசிகன் – யாதவாப்யுதயம்:

கண்ணனின் முழு வரலாற்றை யாதவாப்யுதயம் என்னும் இருபத்து நான்கு சர்கங்கள் கொண்ட மகாகாவியமாக வடித்துத் தந்தார் வேதாந்த தேசிகன். அதில்,

“புக்தா புரா யேன வஸுந்தரா ஸா ஸ விச்வ போக்தா மம கர்ப பூத:”–என்கிறார்.

தேவகி எட்டாவது முறையாகக் கருவுற்றிருந்த நிலையில், மண்ணை உண்டாளாம். மண்ணை உண்டதன் மூலமாக, இந்த மண்ணுலகத்தை எல்லாம் உண்ட கண்ணன் என் வயிற்றுக்குள் தான் இருக்கிறான் என்பதை உலகுக்குச் சூசகமாகத் தெரிவித்தாள் தேவகி என்று இந்த ஸ்லோகத்தில் வேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார்.

மேலும், கண்ணன் அவதரித்த காலத்தை ஜோதிட ரீதியில் துல்லியமாகத் தெரிவிக்கிறார் வேதாந்த தேசிகன்:
“அத ஸிதருசி லக்னே ஸித்த பஞ்ச க்ரஹோச்சே
வ்யஜனயத் அனகானாம் வைஜயந்த்யாம் ஜயந்த்யாம்
நிகில புவன பத்ம க்லேச நித்ரா அபனுத்த்யை
தினகரம் அனபாயம் தேவகீ பூர்வ ஸந்த்யா” என்ற ஸ்லோகத்தில்,

“சந்திரோதயம் ஆனபின், ரோகிணி நட்சத்திரத்தோடு கூடிய ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியில் (ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியோடு ரோகிணி நட்சத்திரம் இணைந்து வந்தால் அந்நாளை ஜயந்தி என்று அழைப்பார்கள்), ரிஷப ராசியில் சந்திரனும், மகர ராசியில் செவ்வாயும், கன்னி ராசியில் புதனும், கடக ராசியில் குருவும், துலா ராசியில் சனியும் என ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், சந்திரனுக்கு உகந்த ரிஷப லக்னத்தில், பூமியாகிய தாமரையைத் துயில் எழுப்புவதற்காக, தேவகி என்னும் கிழக்குத் திக்கில், கண்ணன் என்னும் சூரியன் தோன்றினான்!” என்று வர்ணித்துள்ளார்.

நாராயண பட்டத்ரி – நாராயணீயம்:
“ஆனந்த ரூப பகவன்னயி தே அவதாரே
ப்ராப்தே ப்ரதீப்த பவத் அங்க நிரீயமாணை:
காந்தி வ்ரஜை: இவ கனாகன மண்டலை: த்யாம்
ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷ வேலா”

“ஆனந்த வடிவமான குருவாயூரப்பா! உன் அவதாரக் காலம் நெருங்கிய போது, உன் திருமேனியில் இருந்து வெளிக்கிளம்பிய கதிர்ப் படலங்கள் போல் மேகங்கள் பெரிதாக வானில் தோன்றின. அவை வானையே மறைத்துக் கொண்டிருந்தன. இவ்வாறு கார்காலம் விளங்கிற்று.”

“ஆசாஸு சீதலதராஸு பயோத தோயை:
ஆசாஸிதாப்தி விவசேஷு ச ஸஜ்ஜனேஷு
நைசாகரோதய விதௌ நிசி மத்யமாயாம்
க்லேசாபஹ த்ரிஜகதாம் த்வம் இஹ ஆவிராஸீ:”

“மேகங்கள் பொழிந்த மழையால் திசைகள் எல்லாம் குளிர்ந்தன. நல்லோர் விரும்பிய அனைத்தும் கைகூடின. மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். நள்ளிரவில் சந்திரன் தோன்றும் வேளையில், மூவுலகின் துன்பத்தை அழிப்பவனான நீ தோன்றினாய்!”

“பால்யஸ்ப்ருசா அபி வபுஷா ததுஷா விபூதீ:
உத்யத் கிரீட கடகாங்கத ஹார பாஸா
சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேன
மேகாஸிதேன பரிலேஸித ஸூதி கேஹே”

“குழந்தை போல் தோற்றமளித்தாலும் வல்லமை மிக்க திருமேனி கொண்டவன் அல்லவோ நீ? கிரீடம், கைவளை, தோள்வளை, முத்து மாலை முதலியவற்றின் ஒளியோடும், சங்கு சக்கரம், தாமரை, கதை போன்றவற்றோடும் நீ விளங்கினாயே! கருமேகம் போல் நீல நிறத்தோடு நீ
விளங்கினாயே!”

ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள்:
மன்னார்குடியில் கோவில் கொண்டிருக்கும் வித்யா ராஜகோபாலனைக் குழந்தை கண்ணனாக அநுபவித்து,
அவனது தோற்றத்தை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வடமொழியில் வர்ணித்துப் பாடுகிறார்
“லீலா யஷ்டி மனோஜ்ஞ தக்ஷிண கரோ பாலார்க்க துல்ய ப்ரப:
பாலாவேசித மௌலி ரத்ன திலகோ மாலாவலீ மண்டித:
சேலாவேஷ்டித மௌலி மோஹித ஜன: சோலாவனீ மன்மத:
வேலாதீத தயா ரஸார்த்ர ஹ்ருதயோ மே லாலிதோ மௌலினா”

வலக்கையிலே செண்டை ஏந்திக் கொண்டு, இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ என்று வியக்கும்படி, இளஞ்சூரியனைப் போன்ற பொலிவுமிக்க வடிவுடன், திவ்யமான ரத்தினத் திலகத்தை நெற்றியில் அணிந்து கொண்டு, செண்பகம் போன்ற பூமாலைகளை அணிந்து கொண்டு, அழகிய தலைப்பாகைக் கட்டால் அனைவரையும் மயக்கும் சோழநாட்டு மன்மதனும், கருணைக் கடலுமான ராஜகோபாலனைத் தலையால் வணங்குகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

மகாகவி பாரதியார்:
கண்ணன் பிறந்தான்! – எங்கள் கண்ணன் பிறந்தான்! – இந்தக் காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான்! – மணி வண்ணம் உடையான்! – உயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்!
பண்ணை இசைப்பீர்! – நெஞ்சில் புண்ணை ஒழிப்பீர்! – இந்தப் பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர்! – நன்கு கண்ணை விழிப்பீர்! – இனி ஏதும் குறைவில்லை! வேதம் துணையுண்டு!

இதைத் தழுவிக் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய புதுக்கவிதையும் நோக்கத் தக்கது:
கண்ணன் பிறந்தான் – எங்கள் கண்ணன் பிறந்தான் – புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் – எங்கள் மன்னன் பிறந்தான் – மனக் கவலைகள் மறந்ததம்மா

அயோத்தியில் ராமன் அவதரித்த போது, அதைத் தசரதச் சக்கரவர்த்தி கோலாகலமாகக் கொண்டாடினார். ஆனால் மதுராவில் சிறைச்சாலையில் கண்ணன் அவதரித்த வேளையில், விலங்குகளால் கட்டப்படிருந்த தேவகியாலும் வசுதேவராலும் பெரிதாக அவனது பிறப்பைக் கொண்டாட முடியவில்லை.
அக்குறை தீரவே, இன்று ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை நமது இல்லங்களில் எல்லாம் வெகு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். பல்வகை இனிப்புகளை வீட்டில் செய்து, கண்ணன் நம் இல்லத்துக்குள் நுழைவதன் அடையாளமாக அவனது திருப்பாத வடிவில் இழைகோலம் இட்டு, பஜனைகள், பாடல்கள்,

பாராயணம் எனப் பலவிதமான முறைகளில், நம்வீட்டில் குழந்தை பிறந்தது போல் மகிழ்ச்சியோடு ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாளைக் கொண்டாடுகிறோம்.

கிருஷ்ணஜயந்தி நாளில் விரதம் இருப்போர்க்கு, ஒரு வருடத்தில் உள்ள அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிட்டும். இந்நாளில் கண்ணனை வழிபடுவோர்க்குக் கண்ணனைப் போலவே ஒரு குழந்தை பிறக்கும் என்பதில் ஐயமில்லை!

—————–

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

—————-

உகாரம் -ம் -அகாரம் -துக்காராம் -உமது -சொத்தாகவே அனுசந்தேயம் உபக்ரமத்தில்
உப சம்ஹாரத்திலும் என் என்பது என் -யான் என்பது என் -என்று ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களையும் நிரஸித்து அருளினார் –
ஸாது -சந்திம் இச்சந்தி ஸாத்வ -ஸத் ஸந்தாதா -சந்திமான் -பரதனுக்கும் திரு நாமங்கள் –
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்து

——————

ஸ்ரீ அத்திகிரி 24 படிகள் விவரணம் –

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்யதேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறுமதிநலம் அருளப் பெற்ற திவ்ய தேசங்கள் எனப்படும்
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷதிங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக் கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

அதிலும் நம் முன்னோர் நான்கு திவ்ய தேசங்களுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.
கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களைக்
காலை பகல் மாலை மூன்று வேளைகளிலும் ஸந்த்யாவந்தனம் செய்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஸந்தானம் செய்யாமலிருப்பதில்லை.

ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீவேங்கடாத்ரி சிகராலய காளமேகம் |
ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்ஜ்வல பாரி ஜாதம்,
ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

என்று, ஸந்தியாவந்தனம் செய்ததும் இந்த ச்லோகத்தை நம் எல்லாரும் அநுஸந்திப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
மேலும், இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.  திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம்–கொடை என்றுமாம் -அபீஷ்ட வரதன் அன்றோ -.
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.
இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.  இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கபெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.

தாமாஸீதந் ப்ரணம நகாரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருதயுகமுகே தாதுவச்சாவசேந |
யத்வீதீநாம் கார்கிபதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்வதசபதயோ தாரயந்த்யுத்தமாங்கை: ||   என்று.–தேவப்பெருமாளின் உத்ஸவம் விமா¢சையாக நடக்கிறது.

அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.  ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன் கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவை ஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.  அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது. -அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக்கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள். -அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
“வந்தே ஹஸ்திகிரீ சஸ்ய வீதீசோதககிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.
‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.  அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள் நம் ஆசார்யர்கள்.
அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.

இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து திகைத்து நின்றபோது,
தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.  இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.

வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி? ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது.  மறைக்கவும் முடியாது.

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள் இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது,

இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டு
இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்து நான்கு சாண் கொண்டது.
வானவெடிகள் இருபத்து நான்கு வகைகள்.
த்வஜ ஸ்தம்பத்தில் இருபத்து நான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்து நான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.  இவையும் இருபத்து நான்கே.
இப்படி இருபத்து நான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.

ஸ்ரீமத் ராமாயணம் இருபத்து நான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக அந்த மகா காவியம் அவதாரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு இருபத்து நான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம், ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம் தேவப் பெருமாளே’
என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.

இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.
அப்பைய தீக்ஷ¢தர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸ கனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்; ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்து நான்கு படிகள் விஷயமாக இந்த அப்பைய தீஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –
ஸம்ஸாரவாரிநிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தரவிம்சதிர் யா |
தாமேவ தத்வவிதிதம் விபுதோதிலங்க்ய
பஸ்யந் பவந்த முபயாதி காரிச நூநம் ||
வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்தி¡¢யம் ஐந்து, ஜ்ஞாநேந்தி¡¢யம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம்
ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரம சேதனன் பரமாத்மா.

தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்துகொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்துவிடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்து நான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி வைகுண்ட லோகம் போல் உள்ள
அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.

இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே
கீழிருந்து மேலுள்ள பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.

இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்ய தேங்களைக் காட்டிலும் வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.