ஸ்ரீ வடமதுரா என்னும் மதுரா
ஸ்ரீ வடமதுரை மஹாத்ம்யம்
மதுரா நாம நாகரீ புண்யா பாபஹரீ சுபா -புராண ஸ்லோகம் -யுகம் தோறும் சம்பந்தம் -மன்னு வடமதுரை –
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சீ ஹ்யவந்திகா |. புரீ த்வாரவதீ சைவ ஸப்தைதா மோக்ஷதாயிகா:
க்ருத யுகத்தில் த்ருவன் யமுனையில் நீராடி நாரதர் இடம் உபதேசம் பெற்று தவம் புரிந்து பகவானை தரிசித்தான் இங்கேயே
த்ரேதா யுகத்தில் -மது என்னும் அசுரனின் மகன் லவணாசுரன்-துன்புறுத்த –தம்பி சத்ருக்னணனை அனுப்பி அழித்தான்-
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் இதற்கு மதுரா என்று பெயரிட்டு தானே ஆண்டு வந்தான் என்பதை உத்தர காண்டம் சொல்லும் –
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி -பெருமாள் திருமொழி –
அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா புரீ த்வாரவதீ சைவ ஸப்த தைதா மோக்ஷதா யகா -ஸ்லோகம் படி முத்தி தரும் க்ஷேத்ரம் –
நம்மாழ்வார் -பத்து -7 -10-4–/-8–5–9-/-9–1–3-தொடங்கி -10-வரை குலசேகரர் -1-/
பெரியாழ்வார் -நான்கு–திருப்பல்லாண்டு -10-/பெரியாழ்வார் திருமொழி -3–6—3 /—4-7–9-/–4–10–8-/
ஆண்டாள் -ஏழு -திருப்பாவை -5-/ நாச்சியார் திருமொழி -4–5-/ -4–6-/-6-5-/-7–3-/-12–1-/ -12–10-/
திருமங்கை ஆழ்வார் -நான்கு -6-7-5-/ -6–8–10-/-9-9–10-/ சிறிய திருமடல் -40 கண்ணி-/
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -ஓன்று -திருமாலை 45-ஆகிய ஆறு ஆழ்வார்களால் -27-பாசுரங்களால் மங்களா சாசனம் –
வளவெழும் தவளமாட மதுரைமா நகரந் தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை, துவளத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல், இளைய புன் கவிதை யேலும் எம்பிறார்க்கு இனிய வாறே. (45)
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து, கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல் சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே. (பெரிய திருமொழி 6.7.5)
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை நன் நறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார், கன்னவிலும் தோளான் கலியன் ஓலி வல்லார் பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே. (பெரிய திருமொழி 6.8.10)
நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான், வாச மலர்ப் பொழில் சூழ் வட மாமதுரைப் பிறந்தான், தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற, கேசவ நம்பி தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ. (பெரிய திருமொழி 9.9.6)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த் தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப் (சிறிய திருமடல், 74)
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற, வாய்க்கும் கரும்பும் பெருஞ் செந் நெலும் வயல் சூழ் திருவாறன்விளை, வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த, வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே. (திருவாய்மொழி 7.10.4)
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறும் இரும் சிறைப் புள், அதுவே கொடியா உயர்த்தானே! என்று என்று ஏங்கி அழுதக்கால், எதுவேயாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான், மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே? (திருவாய்மொழி 8.5.9)
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்றே எழுவர், இருள் கொள் துன்பத்து இமை காணில் என்னே என்பாரும் இல்லை, அருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு அருள் கொளாளா உய்ய வல்லால் இல்லை கண்டீர் அரணே.(திருவாய்மொழி 9.1.3)
அரணம் ஆவார் அற்ற காலைக்கு என்று அமைக்கப் பட்டார், இரணங் கொண்ட தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அஃதே, வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சரண் என்று உய்யப் போகில் அல்லால் இல்லை கண்டீர் சதிரே. (திருவாய்மொழி 9.1.4)
சதிரமென்று நம்மைத் தாமே சம்மதித்தின் மொழியார் மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்று உறுவர் அதி கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு எதிர் கொள்ளா உய்யுய்ய ல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே.(திருவாய்மொழி 9.1.5)
இல்லை கண்டீ ர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே தொல்லை யார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே. (திருவாய்மொழி 9.1.6)
மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ்வுயிருக்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றமன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றிமில் சீர் கற்று வைதல் வாழ்தல் கண்டீர் குணமே . (திருவாய்மொழி 9.1.7)
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு வாழ் துணையா வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போம் இதனில் யாதுமில்லை மிக்கதே. (திருவாய்மொழி 9.1.8)
யாதுமில்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் மா துகிலின் கொடிக் கொள் மாட வட மதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே. (திருவாய்மொழி 9.1.9)
கண்ணன் இல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் திண்ணமா அம் உடைமை உண்டேல் அவனடி சேர்த்து உய்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே. (திருவாய்மொழி 9.1.10)
ஆதுமில்லை மற்றவனில் என்றதுவே துணிந்து தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்கள் இவை ஆயிரத்துளிப் பத்தும் ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே. (திருவாய்மொழி 9.1.11)
மதுரையார் மன்னன் என்று பெயர் இடச் சொல்லி ஸ்வப்னத்தில் சாதித்த ஐதிஹ்யம் –
அஹோ மது புரீ தன்யா வைகுண்டாச்ச கரீயஸீ தினமேகம் நிவாஸேன ஹரவ் பக்தி ப்ரஜாயதே -வாயு புராணம் -பக்தி பிறக்கும் ஒரு நாள் தங்கினாலேயே
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன் நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகாதோ மதுராம் பூரிம்-
மதன ஆதார பூமி -அதாவது கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி
ப்ருது மஹா ராஜன் இவ்விடத்திலேயே பூமா தேவியிடம் இருந்து மக்கள் வாழ வேண்டிய சிறந்த பொருட்களை எல்லாம் கடைந்து எடுத்த படியால் இப்பெயர்
மத்யதே பாப ராசி யயா இ தி -எதனாலே மக்களின் பப்பட் கூட்டங்கள் கடைந்து அகற்றப் படுகிறதோ அதுவே மதுரா
இங்கு வசித்தாலும் -கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும் சம்சாரத் தளைகள் வஸூ தேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போலே விலகிப் போகும் –
தர்சன ஸ்தலங்கள் –
1–அக்ரூர காட் -அக்ரூரர் கண்ணனையும் பலராமனையும் தேரில் அழைத்துக் கொண்டு மதுரை வரும் போது கண்ணன் லீலை புரிந்து நதிக்கு உள்ளே சேவை சாதித்தான்
வெளியே ரத்தத்திலும் சேவை -இப்படி மாறி மாறி சேவை சாதித்து -தானே சர்வ வ்யாபி சர்வ நியாந்தா -என்று புரிய வைத்தான் –
இங்கு அக்ரூரருக்குஒரு கோயில் உள்ளது -யமுனை தற்காலத்தில் சற்று தள்ளி ஓடுகிறது –இந்த சரித்திரம் -ஸ்ரீ மத் பாகவதம் -10-39-/-40-விவரிக்கும்
2–ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி -சிறைச்சாலை -தந்தை காலில் விலங்கு அவிழ நான்கு தோளோடு எட்டாவது கர்ப்பமாய் பிறந்து ஜென்ம ரஹஸ்யம் வெளியிட்டு அருளி
அவர்கள் அதை மறக்கும் படி செய்தான் -பிறந்த அன்றே கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டு யோகமாயையை எடுத்து வந்தார்
இங்குள்ள புராதனமான திருக் கோயில் கண்ணனுடைய கொள்ளுப் பேரனான வஜ்ர நாபனாலே ஸ்தாபிக்கப் பட்டது
பல படை எடுப்புக்களுக்கு ஆட்பட்டு தற்போதுஉள்ள நிலை –
3–கேசவஜீ மந்திர் -ஜென்ம பூமிக்கு அருகில் உள்ள இக்கோயில் புராதனம் -கம்சனின் சிறை இவ்விடம் இருந்ததாக சொல்லுவார்கள்
இங்கு இருக்கும் மூர்த்தி பகவானுடைய -24-அவதாரங்களாலும் அலங்கரிக்கப் பட்டு இருக்கிறார்
4–போத்ரா குண்ட் -ஜென்ம பூமிக்கு அருகில் வஸூ தேவரும் தேவகியும் துணி துவைத்த இடம் –
பவித்ரா குண்டம் என்னும் சொல் சிதைந்து போத்ரா குண்ட் என்று கூறப்படுகிறது
5–கம்ச டீலா / ரங்க பூமி -முஷ்டிக சாணூரர்கள் இடம் பொருத ஸ்தலம் -கம்சனையும் கீழே இழுத்துத் தள்ளி கொன்ற ஸ்தலம் –
அஞ்சலகத்துக்கு அருகே இவ்விடம் தற்போது அமைந்துள்ளது-
6— ஆதி வராஹர் சந்நிதி -புராதனமான மதுரா ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் -இங்கு இருக்கும் ஸ்ரீ வராஹ மூர்த்தி கபில முனிவரால் இந்திரனுக்கு அளிக்கப்பட்டு
பின்பு திரு அயோத்தியில் இருந்து ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது
7–த்வரகாதீசன் சந்நிதி -150-ஆண்டுகளுக்கு முன்பு வல்லபாசார்ய ஸம்ப்ரதாயத்தாரால் கட்டப்பட்டது -ருக்மிணீ சத்ய பாமையோடு எழுந்து அருளி இருக்கும் கண்ண பிரான் –
ஸ்ரவண மாதத்தில் மிகப் பெரிய உத்சவம் –
8—சமயமன தீர்த்தம் -ஸ்வாமி காட் என்றும் சொல்லுவார் -இவ்வழியாகத் தான் கண்ணனைச் சுமந்து கொண்டு யமுனையை வஸூ தேவர் கடந்தார்
யமுனையில் உள்ள -24-துறைகளில் ஒன்றாகும்
9–விஸ்ராம் காட் –இதுவே நடுவாக விழுங்கும் காட் –
கண்ணன் கம்சனை முடித்து அந்திம கிரியைகளை துருவ காட்டில் நடத்தி வைத்து இங்கே வந்து நீராடி ஓய்வெடுத்தான்
கார்த்திகை ஸூக்ல பஷ த்விதீயை -எம த்விதீயை -அன்று தான் யமனின் தங்கை யமுனை பிறந்த நாள் –
அன்று நீராடினால் சம்சார நிவ்ருத்தி கிடைக்கும் -முன்பு ஸ்ரீ வராஹ பெருமாளும் இங்கே ஓய்வெடுத்ததாகச் சொல்லப்படுகிறது
10–துருவ டீலா -யமுனையின் மற்றொரு கரையில் இருக்கும் இதில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான் –
இத்தலத்தை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளலாம்
இது மது வனத்துக்குள் மஹாலி கிராமத்தில் பாதை சரியில்லாத இடத்தில் அமைந்துள்ளது –
11–தாள வனம் -தேனுகாசுரன் கழுதை வடிவு கொண்ட அசுரனை பலராமன் இங்கு தான் கொன்றார் -இக்காடு கிரைய பனை மரங்கள் நிறைந்து உள்ளன
ஞானம் அற்ற சம்சாரியே கழுதை -சுக துக்கங்கள் பொதி -சுமந்து பக்தி இல்லாமல் இருக்க -பகவான் அறிவின்மையை அழித்து நற்கதி அளிக்கிறான்
மதுரைக்கு தெற்கே -6-மைல் தொலைவில் உள்ள இவ்விடத்தில் பலராமன் கோயிலும் பலராமன் குண்டமும் உள்ளன –ஸ்ரீ மத் பாகவதம் -10-15-இதை விவரிக்கும்
12–மதுவனம் -மதுரைக்கு தேன் மேற்கே உள்ள இங்கு தான் க்ருத யுகத்தில் மது என்னும் அசுரனைக் கொன்று பகவான் மது சூதனன் என்ற பெயர் பெற்றான்
த்ரேதா யுகத்தில் மதுவின் மகனான லவணாசுரனை இங்கு தான் சத்ருன ஆழ்வான் கொன்றான் -அவனே வராஹ பெருமானுக்கு கோயில் அமைத்து ஆண்டு வந்தான்
இங்கு சத்ருக்ன ஆழ்வானுக்கு சந்நிதியும் மது குண்டமும் உள்ளன
த்வாபர யுகத்தில் கண்ணன் கற்றுக் கறைவைகளோடு இங்கு வந்து நாட்டியமாடி மகிழ்வான்
இங்கு த்ருவன் தவம் பண்ணிய சிறு குன்று கோயிலும் உள்ளன -லவணாசுரன் ஒளிந்து இருந்த குகையையும் காணலாம்
13–குமுதவனம் -தாளவானத்தில் இருந்து மேற்கே -2-மைல் தொலைவில் உள்ள இங்கு கோபிகளுக்கு குமுத மலர்களை கண்ணன் சூட்டி விடுவபானாம்
இங்கு தாமரை மலர்கள் நிறைந்த பத்ம குண்டத்தின் கரையில் கபில முனிவர் பல காலம் தவம் புரிந்தார் –
———————————————–
வடமதுரை என்னும் மதுரா
. “மதுரா நாம நகரி புண்யா பாபஹரி சுபா”
என்னும் புராண ஸ்லோஹத்தின் படி மதுரா நகரம் பாபங்களைத் தொலைத்து புண்ணியத்தை தரக்கூடியதாகவும்,மங்கலங்களுக்கு இருப்பிடமாகவும் உள்ள ஊர் ஆகும். இதுவே கண்ணனின் பிறப்பிடமாகும்
இந்நகரம் யுகம்தொரும் பாகவத சம்மந்தம் பெற்ற ஊர் என்கிறார்கள். க்ருத யாகத்தில் துருவன் யமுனைக்கரையில் தவம புரிந்து பகவானை தரிசித்தான். த்ரேதா யுகத்தில் இதே ஊரில் லவனாசுரன் என்ற அரக்கனைக்கொன்று சத்துருக்க்ணன் மதுரா எனப் பெயரிட்டு ஆண்டு வந்தான் என குலசேகர ஆழ்வார் தனது பெருமாள் திருமொழியில் கூறுகிறார்.
ஏழு முக்தி தரும் ஷேத்திரங்களில்
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரித்வாரவதீ சைவ ஸப்ஸத்தா மோக்ஷதாயகா ……
என்று ,கொண்டாடப்படும் ஊர் மதுரா நகரமாகும்.
பெரியாழ்வார், தனது திருமொழியில்
வடதிசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்ற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்
கண்டமென்னும் கடிநகரே.
ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில்,
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழி நான்
அன்று மதுரை மன்னனைப் பற்றி கூறுகிறார்.
நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழியில்
மண்ணின் பாரம் நீக்குவதற்கு வடமதுரையில் கண்ணன் வந்து பிறந்தான், கண்ணன் அல்லால் மற்றொரு தெய்வம் இல்லை என்று உணருவீர், அவனைச் சரண் அடைந்து உய்ம்மின்
என்று, கூறு கிறார்.
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே மதன ஆதார பூமி அன்று, கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி, அதாவது ப்ருது மகராஜன் இந்த இடத்தில் புமாதேவியிடம் இருந்து மக்கள் வாழ்வதற்கு வேண்டிய சிறந்த பொருட்களையெல்லாம் கடைந்து எடுத்தபடியால் இந்த இடம் மதுரா என்று பெயர் பெற்றதாம்.
மதுராவில் வசித்தாலும், கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும், வசுதேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போல் நம் பாவங்கள் விலகி போகுமாம்.
ஆதாரம்:
திவ்யதேச மாஹாத்ம்யம்— தொகுத்தவர்; வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள். மூன்றாம் பதிப்பு, கிஞ்சித்காரம் டிரஸ்ட், 6, பீமசேனா கார்டன் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
கண்ணன் பிறந்த இடத்தையும் மற்றும் மதுராவில் கண்ணனுக்கு வேண்டிய இடங்களையும் காண்போம்.
க்ருஷ்ண ஜன்ம பூமி யின் முகப்பு
1. ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமி.
கம்சனின் அரண்மனையில் ஒருகாட்சி::
தேவகிக்கும் வசுதேவருக்கும் மாங்கல்யதாரணம் நடத்துவது என்று கம்சன் தீர்மானிக்கிறான். உரிய நாளில் திருமணம் செய்து அவர்களை ரதத்தில் ஏற்றி பாசத்துடன் வழியனுப்ப தயாராகிறான். அந்த சமயம், வானத்தில்
“கம்சா, தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் உனக்கு எமன்”
என்று அசரரி கேட்கிறது. கம்சன் திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு வழியனுப்புவதை நிறுத்திவிட்டு,
“இவர்கள் இருவரையும் உடனே கொல்லுங்கள்”
என தனது ஆட்களுக்கு ஆணை இடுகிறான். அதிர்ச்சி அடைந்த வசுதேவர், கம்சனிடம்,
” கம்சா,எங்களுக்கு பிறக்கும் எட்டாவது மகன் தானே உனக்கு எமன். நாங்கள் என்ன பாவம் செய்தோம்.எங்களுக்கு பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் உன்னிடம் கொடுத்து விடுகிறோம். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எங்களைக் கொன்று அந்தப் பாவத்தை வேறு நீ ஏன் பெறவேண்டும்”, என்று பலவாறு அவனுக்கு அறிவுரை சொல்கிறார். ஒருவாறு சமாதானம் அடைந்த கம்சன்,
“இவர்கள் சொல்வதும் சரிதான். “இவர்களை சிறையிலடையுங்கள். இவர்களுக்கு தக்க பாதுகாப்புப் போடுங்கள்.இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்”,
என்று தனது ஆட்களுக்கு ஆணையிடுகிறான்.
நாட்கள் சென்றன. தேவகியும் கருவுற்றாள்.குழந்தை பிறந்த செய்தி கேட்டு,கம்சனும் அந்தக் குழந்தையை உடன் பெற்று கொன்றான்.இது மாதிரி ஆறு குழ்ந்தைகளிக் கம்சன் தொடர்ச்சியாகக் கொன்றான். தேவகி ஏழாவது கர்ப்பம் தரித்தாள்.அந்த சமயத்த்தில் விஷ்ணு பகவான் தன் யோகமாயையை கூப்பிட்டு
“ரோகிணி கோகுலத்தில் வாழ்கிறாள். நீ தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை வெளியே இழுத்துக்கொண்டு போய் ரோஹினியின் கர்ப்பத்தில் வைத்து விடு. தேவகிக்கு கர்ப்பச் சிதைவு என்று கம்சனிடம் சொல்லிவிடுவார்கள்”
என்று ஆணையிடுகிறான். இந்தக் குழந்தைதான் பலராமன்.
“மேலும் நீ போய் கோகுலத்தில் யசோதையின் கர்ப்பத்தில் பெண் குழந்தையாக பிற.நான் தேவகியின் எட்டாவது மகனாக மதுரையில் பிறந்து, என்னை வசுதேவர் யமுனையைத் தாண்டி கோகுலத்தில் கொண்டு விட்டு, உன்னை எடுத்துக் கொண்டு வந்து கம்சனிடம் எட்டாவது குழந்தையாகக் கொடுப்பார்.உன்னைக் கம்சன் கொள்ள முற்படும்போது நீ நடந்ததைச் சொல்லி விட்டு மறைந்து விடு”,
என்று ஆணை இடுகிறார்.
அந்தக் கண்ணன் அவதரித்த சிறைச்சாலை. இங்கேதான் வசுதேவரும்,தேவகியும்அடைக்கப்பட்டு இருந்தார்கள். இங்கு தான் எட்டாவது குழந்தையாக கண்ணன், தந்தையின் காலில் விலங்குகள் அவிழ, நான்கு தோள்களோட சகல ஆயுதங்களுடன்,ஆபரங்களுடன் பிறந்தான்.தனது ஜன்ம ரகசியத்தை பெற்றோர்களுக்கு வெளியிட்டு பின்னர் அதை மறக்கும்படி செய்தான்.எனவே வசுதேவர் கண்ணனைக் கொண்டுபோய் கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டுவிட்டு அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைச்சாலைக்கு அடுத்துச் சென்றார்.
இவைகள் நடந்த இடம்தான் நாம் பார்க்கும் சிறைச்சாலை. புராதனமான கோயில் கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரனாபன் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. பல படை எடுப்புக்களால் தற்போது உள்ள நிலையில் உள்ளது. பக்கத்திலேயே முகமதியர்களின் மஸூதி உள்ளதால் பாதுகாப்பு அதிகம் உள்ளது.கைபேசி,காமிராக்களைக் கொண்டு போகவேண்டாம்.
2.கேசவ்சி மந்திர்:
ஜன்ம பூமிக்கு அருகில் உள்ளது.புராதனமான கோயில்.கம்சனின் சிறை முன்னொரு காலத்தில் இங்கு வரை இருந்ததாகச் சொல்வார்கள்.இங்குள்ள மூர்த்தியை 24 அலங்காரகளாலும் அலங்கரித்து உள்ளார்கள்.மேலும் தேவகியும் வசுதேவரும் வணங்கிய மூர்த்தியாகும்.
போதரா குண்டம்
3.போத்ரா குண்டம்:
ஜன்ம பூமிக்கு அருகில் மிக அழகான குளம்.”பவித்ர குண்டம்” என்ற சொல் மருவி “போத்ரா குண்டம்” என்று அழைக்கப்படுகிறது. சிறைச்சாலையில் உள்ளபோது,வசுதேவரும்,தேவகியும் நீராடி துணி துவைப்பார்களாம்.
4.கம்சா டீலா ,ரங்கா பூமி:
அஞ்சலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இங்கு தான் கண்ணன் முஷ்டிக மற்றும் சாணுரர்களை சண்டை இட்ட இடம்.இங்கே இருந்த குன்றின்மேல் அமர்ந்து இருந்த கம்சனையும் கீழே தள்ளி கொன்றானாம்.
ஆதி வராஹ முர்த்தி
5.ஆதிவராஹ மூர்த்தி:
முன்னொரு காலத்தில் மதுரா வராஹ ஷேத்திரமாக இருந்ததாம் அயோத்திலிருந்து சத்ருக்க்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
6.த்வாரகா தீசன் சந்நிதி:
த்வாரகா தீசன் சந்நிதி ,விஸ்ராம் காட், த்ருவ டீலா ஆகியவை யமுனை நதிக்ரைக்கு அருகாமையில் உள்ளன. எனவே வாகனத்தில் சென்று பார்ப்பவர்கள் வாகனத்தை பெங்கால் காட் அருகே நிறுத்தி வைத்துக் கொண்டு தரிசிப்பது நலம். த்வாரகா தீசன் சந்நிதி 150 ஆண்டுகளுக்கு முன்னர் வல்லபாசார்யா சம்பிரதாயத்தில் கட்டப்பட்டது. ருக்மிணி சத்யபாமா சமேத கணணன் எழுந்தருளி உள்ளான்.
விஸ்ராம் காட் மதுரா
7.விஸ்ராம் காட்:
கண்ணன் கம்சனை முடித்து அவனுடைய அந்திமகிரியைகளை “த்ருவ காட்டில்” செய்து விட்டு நீராடி ஓய்வேடுத்தான் என்பர்.இது 24 தீர்த்தங்களுள் முக்கியமானது ஆகும்.யமுனைக் கரையில் உள்ளது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்விதீயை “யமத்விதீயை”, அன்று இங்கு நீராடினால் சம்சாரத்தில் இருந்து ஒய்வு கிடைக்குமாம்.
8.த்ருவ டீலா:
யமுனையின் மற்றொரு கரையில் உள்ள இந்த இடத்தில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான்.பாதை சரியில்லாமல் உள்ளதால், இதனை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளவேண்டும்.
தாள வனம் மதுரா
9.தாள வனம்:
மதுரைக்குத் தெற்கே 6 மைல் தொலைவில் உள்ளது.இங்கு பலராமன் கோயிலும் குண்டமும் உள்ளன.
10.மது வனம்: மதுரைக்கு தென்மேற்கே உள்ளது. இங்கு மது என்ற அசூரனைக் கொன்றதால் மதுவனம் எனப்பட்டது இதைத் தவிர இன்னும் பல இடங்கள் பாதை சரியில்லாமல் இருக்கின்றன.
————–
ஶ்ரீமது⁴ராபுரீஸ்துதி:
சாயோத்⁴யா ச குஶஸ்த²லீ மது⁴புரீத்யத்யுஜ்ஜ்வலா நிஸ்துலா: ।
பஞ்ச ஶ்ரீகமிது: ப்ரபஞ்சகுஹரே புர்ய: ஸ்பு²ரந்தி ஸ்பு²டம்
தாஸாம் மத்⁴யக³தா விபா⁴தி மது⁴ரா ஸா ஹந்த ஸர்வோத்தரா ॥ 1॥
காஞ்சீ காஶிபுரீ ச ஸா புநரயோத்⁴யா ஸாபி சாவந்திகா
மாயாக்²யா ச குஶஸ்த²லீ மது⁴புரீத்யத்யந்தபுண்யோத்தரா: ।
புர்ய: ஸப்த ஸமுல்லஸந்தி பரித: க்ஷோணீதலே தாஸ்வஹோ
மத்⁴யஸ்தா² மது⁴ரா விராஜதி ஸரோமத்⁴யே யதா²ம்போ⁴ருஹம் ॥ 2॥
வ்ரு’ந்தா³ரண்யப்³ரு’ஹத்³வநம் மது⁴வநம் தாலாடவீ ஶ்ரீவநம்
ப⁴த்³ராக்²யம் குமுதா³டவீ ச ப³குளாரண்யஞ்ச லோத்⁴ராடவீ ।
மாண்டீ³ராக்²யவநம் ததை²வ க²தி³ராரண்யஞ்ச காத்யாடவீத்யேதைர்த்³வாத³ஶபி⁴ர்வநை: பரிவ்ரு’தா ஜேஜேதி ஸா பூ⁴தலே ॥ 3॥
யோகீ³ந்த்³ராத்³ரு’தபுண்யதோயமரிதா பா⁴கீ³ரதீ²ஸங்க³தா
காளிந்தீ³ பரிகே²வ யத்ர ஸரிதாமக்³ரேஸரீ பா⁴ஸதே ।
ஶ்ரீகோ³வர்த⁴நரோஹிதாதி³பி⁴ரக³ஶ்ரேஷ்டை²ஶ்ச கோ³ஷ்டை²ர்வ்ரு’தா
ஸா கோ³பாலபுரீ விபா⁴தி மது⁴ரா நாம ப்ரபஞ்சோத³ரே ॥ 4॥
நிர்மாந்தி ஸ்மாதிரப்⁴யாமஹஹ தி³விஷதோ³ யாம் புரைவாதி³காலே
த⁴ர்மாஸக்தாந்தராத்மா ப³ஹுயுக³மவஸத்³யத்ர மத்⁴வாக்²யதை³த்ய: ।
நிர்மாயைர்மாநவௌகை⁴ஸ்ஸததபரிக³தா நிர்மலா ஶர்மதா³த்ரீ
ஸேயம் நிர்வாணபூ⁴மிர்ஜயதி மது⁴புரீ ஸர்வகீ³ர்வாணஸேவ்யா ॥ 5॥
தி³வ்யாம் தி³வ்யைகபோ⁴க்³யாம் மணிக³ணகிரணாபூரிதாஶேஷலோகாம்
மர்த்யாநாம் து³ர்விலோகாம் மது⁴ஸுதமத²நே யாம் புரா கோஸலேந்த்³ர: ।
கீ³ர்வாணாநாம் ப்ரஸாதா³த³க்ரு’த நிஜபுரீம் தி⁴க்க்ரு’தஸ்வர்க³லோகாம்
தாம் ஸாக்ஷாத்³ ப்³ரஹ்மகோ³பாலகத³யிதபுரீமீக்ஷிதாஹே கதா³ நு ॥ 6॥
யத்ராவிர்பூ⁴ய பூ⁴யஸ்தரநிஜகலயா கூ³ட⁴மத்⁴யாஸ்த கோ³ஷ்டம்
யாமேவாப்⁴யேத்ய பூ⁴ய:க்ஷிதிபதிமகரோது³க்³ரஸேநம் முராரி: ।
யாமக்³ரே ஶூரஸேநஶ்சிரமநுபு³பு⁴ஜே வஜ்ரமுக்²யாஸ்ததா²ந்தே
ஸேயம் வ்ரு’ஷ்ணீஶ்வரஸ்ய ப்ரியதமநக³ரீ லாலஸீதி த்ரிலோக்யாம் ॥
ஹ்ரு’ஷ்டாத்மா முஷ்டிகாரிப்ரமுக²யது³வரைர்த்³வ்யஷ்டஸாஹஸ்ரயோஷாஜுஷ்ட: ஸம்ம்ரு’ஷ்டஶக்ரோபலதுலிதருசிர்யத்ர சிக்ரீட³ சக்ரீ ।
சக்ராத்³யைஶ்ஶஸ்த்ரஜாலைரபி⁴தநிஜமஹஶ்சக்ரவித்³யோதிதாஶாசக்ரைராபாலிதா ஸா ஜயதி மது⁴புரீ ஶக்ரமுக்²யைர்நிஷேவ்யா ॥ 8॥
யஸ்யாம் யத்ஸந்நிதௌ⁴ வா க்வசித³பி விபிநே யாம் பரீத்ய ஸ்தி²தாஸு
த்³வார்வத்யாத்³யாஸு வாபி ப்ரதி²தஹரிஹரக்ஷேத்ரதீர்தா²ங்கிதேஷு ।
ப்ரேதா ஜாதா: ஸ்தி²தா வா ந க²லு ஶமலவந்தோऽபி பஶ்யந்தி கோ⁴ராந்
ப்ரேதாதீ⁴ஶஸ்ய தூ³தாநபி ப³த மது⁴ராம் தாம் வ்ரஜேமாஶுபா⁴ந்தாம் ॥ 9॥
வ்யுஷ்ட்யாம் தி³ஷ்ட்யாபி யஸ்யா: ஸ்ம்ரு’திரகி²லந்ரு’ணாம் ஹந்த நக்தந்தி³வாந்தர்ஜாதம் ஸர்வாக⁴ஜாதம் க்ஷபயதி தரஸா மங்க³ளஞ்சாதநோதி ।
ஸேயம் ஶ்ரேயஸ்ஸ்வரூபா தி³நகரது³ஹிது: பஶ்சிமே தீரபா⁴கே³
கா³ட⁴ம் பா³பா⁴தி ப்ரு’த்²வீகுசப⁴ரகலிதா சந்த்³ரலேகே²வ ப்ரு’த்²வீ ॥ 10॥
நித்யம் யத்ர பரிஸ்பு²ரத்ஸு நிதராம் புண்யேஷ்வரண்யேஷ்வஹோ
ராமாத்³யா நிவஸந்தி தை³வதக³ணோபாஸ்யா ஹரேர்மூர்தய: ।
ந்ரு’த்யந்த்யப்ஸரஸ: ஸஹாமரக³ணைரத்யந்தஹர்ஷோத³யாதி³த்த²ம்பூ⁴தமஹோத³யா மது⁴புரீ ஜேஜேதி ஸா பூ⁴தலே ॥ 11॥
த்³ரு’ஶ்யா விஷ்ணுபதோ³ஜ்ஜ்வலா ஸுவிமலா நிஶ்ஶேஷதாபார்தி³நீ
ஶஶ்வத்³விஶ்வஜநேஷு சித்³ரஸஸுதா⁴நிஷ்யந்த³ஸந்தோ³ஹிநீ ।
காளிந்தீ³ஸரித³ம்பு³பி³ம்பி³தகலாநாதா²ர்த²பி³ம்போ³பமா
மௌகுந்தோ³ பரிலாலஸீதி நக³ரீ ஸேயம் த⁴ரித்ரீதலே ॥ 12॥
யா கு³ப்தா மது⁴நா புரா மது⁴புரீத்யாக்²யாமவாப ஸ்பு²டாம்
ஸத்³ய: பாபநிமந்த²நேந மது²ரேத்யாக்²யாயதே யா பு³தை:⁴ ।
யாம் லோகே மது⁴ரேதி சாபி⁴த³த⁴தே மாது⁴ர்யஸர்வங்கஷாம்
வ்ரு’ஷ்ணீநாம் நியதா புரீ விஜயதே ஸேயம் த⁴ராமண்ட³லே ॥ 13॥
உத்³யாத்³விரு’மஶாலிநாம் நிஜயஶ:ப்ரத்³யோதஶௌர்யோஷ்மபி:⁴
க²த்³யோதீக்ரு’தலோகபாலமஹஸாம் சக்ராயுதா⁴லம்பி³நாம் ।
ஆவாஸாத்கில ஶூரஸேநந்ரு’பதீநாம் ஶௌரஸேநீதி ஸா
விக்²யாதா பு⁴வநே விகுண்ட²ப⁴வநப்ரக்²யா விஜேஜீயதே ॥ 14॥
யஸ்யாம் த்⁴யாதுர்முகுந்த:³ ப்ரதி³ஶதி ப⁴க³வாநாஶு முக்தி விஶேஷாத்³யஸ்யாமஷ்டச்ச²தா³ட்⁴யா விகஸதி விலஸச்சித்தபத்³மம் த்ரிலோக்யா: ।
யஸ்யாம் திஷ்ட²ந்தி ஹ்ரு’ஷ்டாஸ்ஸததமபி ஹரிம் த்³ரஷ்டுமஷ்டௌ தி³கீ³ஶா
விஶ்வோத்க்ரு’ஷ்டா ஸுபுஷ்டா விலஸதி மது⁴ரா நாம ஸா ராஜதா⁴நீ ॥ 15॥
அஶ்ராந்தாநந்தஶக்தே: பஶுபகுலஶிஶோர்நித்யலீலாநிகேதைர்விஶ்ராந்த்யாத்³யை: பவித்ரைர்ஹரிஹரகி³ரிஜாமந்தி³ரைரங்கிதாயாம் ।
அஶ்ராந்தம் ஹந்த விஶ்வேஶ்வரமஹிதமஹாவிஷ்ணுபுர்யாமமுஷ்யாம்
விஶ்ராந்திம் ஸ்வாந்த! குர்யாஸ்த்வமிஹ ப⁴வபதே² மா வ்ரு’தை²வ வ்யதே²தா:² ॥16॥
யஸ்யாம் பீ⁴மோர்மிசக்ராஹதிமதிபருஷாம் தூ³ரதோ வாரயந்த்யாம்
ஶ்ரீமத்³வைகுண்ட²நாமா பஶுபகுலஶிஶு: கோऽபி ஸத்கர்ணதா⁴ர: ।
காளிந்தீ³தீரநிஷ்டா²ம் யது³பதிநக³ரீநாமதே⁴யாம் க³ரிஷ்டா²ம்
ஸம்ஸாராப்³தே⁴ஸ்தரீம் தாமதுலஸுக²கரீம் கா³ட⁴மத்³யாவலம்பே³ ॥ 17॥
யஸ்யாம் ஹா ஹந்த விஶ்வாத்³பு⁴தமநுஜகிஶோராக்ரு’தேஶ்சக்ரபாணேர்லீலாவம்ஶீரவாஸ்வாத³நபரமசிதா³நந்த³ஸித்³தா⁴ நிமக்³நா: ।
யோகீ³ந்த்³ராஸ்தாத்³விகுண்டா²ஸ்பத³மபி⁴லஷிதம் நாதி⁴ரோடு⁴ம் க்ஷமந்தே
தஸ்யௌँகோ³பாலபுர்யா: ஶிவ ஶிவ ! மஹிமோத்³ரேகஸீம்நே நமோऽஸ்து ॥18॥
கா³டோ⁴த்³பா⁴ஸிகுஶஸ்த²லீமுக²ஜக³ந்நாதா²தி⁴வாஸஸ்த²லீ
மத்⁴யஸ்த²ம் நிஜரோசிஷைவ ஹரிதாமாபூரயந்மண்ட³லம் ।
ஶ்ரீமந்மாது⁴ரமண்ட³லம் விஜயதே மத்⁴யேத⁴ராமண்ட³லம்
ஜ்யோதிர்மண்ட³லமத்⁴யக³ம் தி³வி யதா² தாராபதேர்மண்ட³லம் ॥ 19॥
ஶ்ரீகோ³பாலகமலமூர்திரமலா ஸாரா ஸலீலோத்ஸுகா
தாருண்யோத³யராமணீயகஹடா²க்ரு’ஷ்டத்ரிலோகீமநா: ।
யஸ்மிந் கே²லதி வேணுநாத³லஹரீ நிர்மஜ்ஜிதாஶாமுகா²
தஸ்மிந் மாது⁴ரமண்ட³லே ப⁴வது மே கு³ல்மாதி³ஜந்மாபி வா ॥ 20॥
இத்யேதாம் மது⁴ராபுரீஸ்துதிகதா²ம் ஶ்ருத்யந்தஸாரோதி³தாம்
ப்ரத்யூஷே ப்ரதிபு³த்⁴ய ஶுத்³த⁴மநஸா நித்யம் பட²ந் மாநவ: ।
ம்ரு’த்யோர்மஸ்ததடார்பிதாஙக்⁴ரிரகி²லாந் பு⁴க்த்வேஹ போ⁴கோ³த்கரா
நத்யுத்க்ரு’ஷ்டமகுண்ட²தா⁴ம தத³ஹோ வைகுண்ட²தா⁴ம வ்ரஜேத் ॥ 21॥
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலசோபிகௌஸ்துபம்
பீதாம்பரம் ஸாந்த்ரபயோதஸௌபகம் |மஹார்ஹ வைடூர்ய கிரீடகுண்டல-
த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ரகுந்தலம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி:
விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத ||
கவுத்துவம், வனமாலை தாங்கிய மார்பு, பீதகவாடை, மின்னும் முடி-
குண்டலங்கள், மேகலையும் கங்கணமும். தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம்.
வசுதேவர் கண்ணிமைக்காமல் பார்த்தார்)ஏன் அற்புதம் என்னும் அடைமொழி?அவதரிக்கும்போதே ‘தர்ஹி மாம் கோகுலம் நய’ (என்னை கோகுலம் எடுத்துச்
செல்) என்று தகப்பனுக்கு ஆணையிட்டதால். அம்புலிப்பருவத்தில் அசுரரை
மாய்த்ததால், காளியன் செருக்கை அடக்கியதால், குரவை கோத்ததால்,
மதுரையில் காட்டிய மாவீரத்தால், வெஞ்சொல் தந்தவனுக்கும் வீடு தந்ததால்,
பஞ்சவரைப்பல வகையிலும் காத்ததால், போர்க்களத்தில் ப்ரம்மவித்தை
பகர்ந்ததால், பகல் நடுவே இரவழைத்ததால், இன்னும் பல ஆனைத்தொழில் களால்,
துவாரகை என்ற பொன்னகர் பொங்கும் கடலினுள் புகுந்ததையும் ஒட்டுதல்
இல்லாமல் புன்முறுவலோடு ஏற்றதால்—————-‘அவதாரம்’ என்றால் என்ன ?ஸ்ரீமத் பகவத்கீதை பாஷ்யத்தின் முன்னுரையில் ஸ்ரீ ஆதி சங்கர
பகவத்பாதர் அவர்கள் எழுதியிருப்பது –
“ப்ரபஞ்சம் முழுதும் ‘அவ்யக்தம்’ என்னும் மூலப்ரக்ருதியாகிய மாயைக்குள்
வசப்பட்டிருக்க, பரம புருஷனாகிய நாராயணன் மட்டும் அம்மாயைக்கு
அப்பாற்பட்டவனாகத் திகழ்கிறான்”
”ஆதி கர்த்தாவாகிய ‘நாராயணன்’ எனும் நாமத்தை உடைய (ஆதிகர்த்தா
நாராயணாக்ய:) விஷ்ணுவானவன், ஸநாதந தர்மத்தைப் பேணும் பொருட்டு தேவகி
தேவிக்கும், ஸ்ரீவஸு தேவருக்கும் ‘க்ருஷ்ணன்’ என்னும் திரு நாமத்துடன்
மகனாக அவதரித்தான். ஞானம், ஐசுவர்யம், பலம், வீர்யம், சக்தி, தேஜஸ்
ஆகியவற்றை எப்பொழுதும் தன்னிடம் இயல்பாகவே பெற்றுள்ள பகவான் பிறப்பு-
இறப்பு அற்றவனாக, அனைத்துயிர்களையும் ஆளும் தன்மை உடையவனாக, நித்ய.
சுத்த,புத்த, முக்த னாகவே எப்பொழுதும் விளங்குவதால் தன் ஒப்பற்ற
ஆற்றலால் ஓரழகிய வடிவம் பூண்டு (சாமானிய ஜீவர்களைப் போல்
ப்ரக்ருதிக்கு வசப்பட்டுப் பிறப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி )
ஜீவகோடிகளுக்குப் பேரருள் புரிகிறான். ”
கண்ணன் பிறந்த தினம்
ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப்
பிரகாசத் திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில்,
உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்
என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம்
தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலை வனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும்
நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின்
மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயநத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீகிருஷ்ண பக்ஷ
அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு
நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு ஓர்
இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது.
இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது
சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ண பக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ
கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பக்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது. அஷ்டமி
பக்ஷத்தின் நடுவில் வருவதால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ
கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது ஸ்ரீ
கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள்
எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம்.
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ
கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.
அவனுடைய பெயரும் கிருஷ்ணன். ‘கிருஷ்ண’ என்றால் கருப்பு என்று பொருள்.
அவனது மேனியும் கறுப்பு.
இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்பவித்தாலும் அவனே
ஞான ஒளி. நல்ல காளமேகங்களாகளிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு
நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்னும்
என்றும் ஜ்வலித்துக் கொண்டி ருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும்
உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின்
பெருமை பிரகாசிக் கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக்
கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந் திருக்கும் ’ஸ்ரீமத்
பாகவதம்’ புராண சிரேஷ்டமாக விளங்குகிறது.
உடலுக்கு ஒளியளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக
உயிர்களுகெல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம்
தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகி விட்டான்.
அகக்ண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம்
அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும், உபதேச
சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்திக் குளிர வைக்கும் அந்தக் கண்ணனே
நம் உலகுக்குக் கண்.
ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து
நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு
மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அநுபவிக்கும்
ரஸிகன், (சாணூரன், முஷ்டிகன் என்ற கம்ஸனைச் சேர்ந்த மகாமல்லர்கள்
ஜயித்தபோது) மல்யுத்தத்தில் தேர்ந்தவன், ( நக்நஜித் என்ற ராஜாவின்
பெண்ணான ஸத்யை என்பவளைக் கலியாணம் செய்து கொள்வதற்கு நிபந்தனையாக ஏழு
காளைகளை அடக்க வேண்டும் என்ற போது) காளை மாடுகளை அடக்கிக் காட்டுபவன்,
ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, த்ரௌபதி போல் தீர்க்க முடியாத
கஷ்டத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவன், குசேலர் போன்ற
அநாதர்களை ரக்ஷிக்கும் பக்த வத்ஸலன், பீஷ்மருக்கு முக்தியே அளித்தவன்.
பீஷ்மருக்கு மாத்திரமல்ல – தன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகித்த
வேடனுக்கும் முக்தி கொடுப்பவன் – இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான்.
உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாகிய அநேக விதமான மனப்போக்கை உடையவர்களாக
ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும் சூரனும், திருடனும்
ஸ்த்ரீலோலனும், பேதையும் உழைப்பாளியும், கிழவனும் குழந்தையும்,
இறுமாப்புடையவனும் பரோபகாரியும், மனமுருகியவனும் கல்நெஞ்சக்காரனும்,
கஞ்சனும் ஊதாரியும், மூடனும் கல்விமானும், யோகியும் ஞானியுமாகப் பலவிதமான
மன நிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம்
உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களாகக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ
அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு
திருடனைப் பற்றிய கதையே ரஸமாயிருக்கும். ஒர் உல்லாஸ புருஷனுக்கு இன்னோர்
உல்லாஸ புருஷனின் கேளிக்கைகளே சுவாரஸ்யமாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன்
நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவரவேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக,
கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். பற்பல
போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்
தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும்
பாத்திர மாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூர்ணாவதாரம்.
சிவராத்திரிக்கும் கிருஷ்ணாஷ்டமிக்கும் இடையே சரியாக 108 நாள் இடை வெளி
இருக்கும். ஒன்றிலே ஞான ஜோதியான லிங்கங்கள் உதித்தது. அதுவேதான்
இன்னொன்றில் வெளியிலே எல்லாம் கருமையாக வைத்துக் கொண்டாலும், உள்ளே
ஞானத்திலும் கருணையிலும் ஜோதியான கண்ணனாக வந்தது.
முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இந்த க்ஷேத்திரமும் ஒன்று. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.
இந்த `விரஜ பூமி’ சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா’ எனப்படும். கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர் சிலர் அது கோவர்தன பரிக்ரமா எனப்படும். சிலர் மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. இப்படி பரிக்ரமா பல உள்ளன. நேர, கால, தேக சௌகர்யங்களுக்கு ஏற்ப மக்கள் இவற்றை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் என்பதை இன்றும் நாம் கண்கூடாக காணலாம்.
கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி’யில் உள்ளன. `பிருந்தா’ என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவன நகரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன. அவை, மகாவனம், காம்யவனம், மதுவனம், தாளவனம், குமுத வனம், பாண்டிரவனம், பிருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், பஹுளாவனம், பில்வவனம்.
மதுராவில் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் ஜென்மபூமி என்ற பெயரில் ஒரு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, கேசவ தேவ் கோயில் என்று பெயரிட்டுள்ளனர். தற்பொழுது பாதுகாப்பு படையினரால் காக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்குள் சென்று விட்ட பின் மிகவும் அருமையாக அனுபவிக்க வேண்டிய இடம். எல்லாவற்றையும் அடைந்த கண்ணன், நமக்காக இந்த சிறைச்சாலையில் வந்து பிறந்து பற்பல லீலைகள் புரிந்ததை நினைத்தால் நம் கண்களில் கண்ணீர் குடிகொண்டுவிடும்.
கிருஷ்ணனின் அவதார ஸ்தலமான கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் தரிசிப்பதற்கு ஏற்றவாறு பெரிய மண்டபங்களும், மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பிருந்தாவனத்தில் தமிழ்நாட்டு முறைப்படி அமைக்கப்பட்ட ரங்கமந்திர் என்று அழைக்கப்படும் விசாலமான கோவில் அல்லது ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. இதில் ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள், திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர் களுக்கு சன்னதிகள் உண்டு.
கோகுலாஷ்டமி அல்லது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் இங்கே ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்
இத்திருத்தலம் பற்றி பற்பல நூல்கள் உள்ளன, உதாரணத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் சேர்த்து பாடப்பட்டுள்ளது. கண்ணன் பிறப்பிற்கு முன், வசுதேவர் சிறை வைக்கப்பட்டது, தன்னுடைய தங்கையான தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தனக்கு மரணம் விளைவிக்கும் என்பதை அறிந்த கம்சன், தேவகியின் கணவன் வசுதேவர் மற்றும் தேவகியை சிறை வைப்பது, பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றது, கண்ணன், ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதி ரோஹிணி நட்சத்திரத்தில் திரு அவதாரம் செய்தவுடன் / பிறந்தவுடன், அன்று இரவே யமுனையை கடந்து ஆயர்பாடிக்கு/ஆய்ப்பாடிக்குக்கு கொண்டு செல்லப்பட்டது, வசுதேவரின் நண்பர் நந்தகோபாலன் வீட்டில் அவள் மனைவி யசோதையின் மகனாக வளர்ந்தது, அங்கு பலவித லீலைகளை / விளையாட்டுக்களை நடத்தியது, கோபிகைகளுடன் ஆடியது, அதன் பின் வாலிபனாகி, மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான பல வரலாறுகளுடன், துவாரகையில் கண்ணன் புதிய நகரத்தை நிர்மாணித்து, அரண்மனை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறன.
இந்த மதுரா நகரம் எல்லா யுகங்களிலும் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரமாகும். ஸ்ரீவாமனனாய் எம்பெருமான் திருஅவதாரம் செய்த போது, இங்கு தவம் புரிந்து இருந்தார்.
பின்பு, த்ரேதா யுகத்தில், மது என்னும் பெயரில் சிறந்து விளங்கியது. ஒரு சமயம், அந்நகரை அரசாண்டு வந்த லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும் கொடியவனாக இருந்து, ரிஷிகள் நடத்தும் யாகங்களை அழித்து அவர்களுக்கு துன்பம் கொடுத்து வந்தான். இதனால் சில ரிஷிகள் இராமபிரானிடம் சென்று விசுவாமித்திரருக்கு உதவியது போல, லவணாசுரனை கொன்று தங்களை காத்திட வேண்டும் என்று வேண்டினர். ராமன் தன் தம்பி சத்ருக்னனை அனுப்பி லவணாசுரனை அழித்தான். சத்ருக்னன் மாத்ரா நகரத்தை விரிவாக்கி நெடுங்காலம் ஆண்டு வந்தான் .
கிருஷ்ணனாய் இங்கு அவதரித்ததாலும், இப்படி பல யுகங்களில் திருவடமதுரைக்கு பகவத்ஸம்பந்தம் தொடர்ந்து வருவதால், ஆண்டாள் மன்னு வடமதுரை என்று கூறுகிறார்.
கண்ணன் ஆயர்பாடியில் வாழ்ந்த சமயம், அங்கு இந்திர பூஜை நடப்பது வழக்கம். அதன்படி இந்திரனுக்கு, ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழையை வேண்டுவார்கள். கண்ணன், இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுஇருந்த போது, என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக, இந்திரனுக்குப் பிடித்தமான
உணவு வகைகளைச் செய்து அவனுக்கு படைப்போம், அதனைக்கொண்டு அவன் மழை கொடுப்பான் என்று சொன்னார்கள். அதற்கு கண்ணன், மழையை கொடுப்பது இந்த கோவர்த்தன மலை தான் என்றும், இந்திரனுக்கு படைக்க வேண்டாம் என்று சொன்னான். அந்த ஊரில், கண்ணன் சொன்னதை மறுப்பவர் கிடையாது, அவன் அந்த மக்களுக்கு மிக பிரியமானவன். கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை கொடுக்க சொல்லி, தானே கோவர்த்தன மலையாக இருந்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டான்.
இதனால் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி, அங்கிருந்த ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் தொல்லை கொடுத்து ஏழு நாட்கள் கடுமையான மழையால் அவதிக்குள்ளாக்கினான். மனிதர்களும், ஆடுமாடுகளும் கஷ்டப்படுவதை கண்ட கண்ணன், அந்த அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினான். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர். அந்த மலை கோவர்தன மலை என்றும், அதனை குடையாக பிடித்து அவர்கள் அனைவரையும் காப்பாற்றினான் என்பது குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் வரலாறு என்றும் கூறப்படும். கண்ணனின் இச்செயலைக் கண்டு வியந்த இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார் . அந்த மலை, அவர்களை காத்ததால், கோவர்த்தன மலை என்றும், அதைத் தாங்கிய கண்ணன், கோவர்தனன் என்றும் பெயர் பெற்றார். அந்த கோவர்த்தன மலை இன்றும் கொண்டாப்பட்டு, மக்கள் பரிக்ரமா என்ற கால்நடையாக அந்த மலையை சுற்றி வருகிறார்கள்; இது சுமார் 26 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.
கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணர் கன்று வடிவில் இருந்த வத்சாசுரனை வதம் செய்த பிறகு, அவருடைய தோழர்கள் கங்கையில் நீராடி புனிதப்படுத்திக் கொள்ளும்படி கிருஷ்ணரை அறிவுறுத்தினர். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது.
ஹரிதேவரின் கோயில் என்ற இடத்தில கிருஷ்ணர் நாராயண ரூபத்தில் வீற்று இருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே. இக்கோயிலுக்கு அருகில் பிரம்ம குண்டம் அமைந்துள்ளது. இந்திரன், ஸ்ரீ கிருஷ்ணரை நீராட்டிய பிறகு, அனைத்து தேவர்களும் புனித நதிகளும் சாதுக்களும் கிருஷ்ணரை நீராட்டினார்கள். அப்போது பிரம்மாவும் கிருஷ்ணரை நீராட்டினார். அந்த நீரே குளமாக மாறி பிரம்ம குண்டம் என்று அறியப்படுகிறது.
லக்ஷ்மி நாராயண கோயில்: ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இருக்கும் விக்ரஹங்கள் கோவர்தன மலையின் உற்சவ விக்ரஹங்களாக கருதப்படுகின்றனர்.
இதற்கு அருகில் இருக்கும், தான கடி என்னுமிடத்தில் கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கோபியர்களிடம் வரி வசூல் செய்தனர். அதாவது, கோபியர்கள் சுமந்து சென்ற பால், தயிர் போன்ற பொருட்களில் சிலவற்றை வலுக்கட்டாயமாக வரியாக பெற்று கொண்ட லீலை இவ்விடத்தில்தான் நடைபெற்றது.
அடுத்து, அனியோர், இங்கு சாதம், இனிப்புகள், காய்கறிகள், பால் பதார்த்தங்களை மலைபோல அமைத்து கோவர்தன மலைக்கு அன்னப் படையல் அர்ப்பணிக்கப்பட்ட இடம். இஃது அன்னகூட க்ஷேத்திரம் என்றும் அறியப்படுகிறது.
கதம்ப வனத்தில், சுரபி குண்டம், இந்திர குண்டம், ஐராவத குண்டம், ருத்ர குண்டம், உத்தவ குண்டம் அமைந்துள்ளன. ராதா குண்டம், இப்பிரபஞ்சத்தில் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது. ராதாராணியின் பிரேமையின் ஸ்வரூபத்தை இங்கு திரவ நிலையில் காணலாம். ராதாராணிக்கும் ராதா குண்டத்திற்கும் வித்தியாசமில்லை. கிருஷ்ணர் அரிஸ்டாசுரனை வதம் செய்த பிறகு, எல்லா புனித நதிகளையும் ஓரிடத்திற்கு வரவழைத்தார். அதன்படி உருவான குளம், சியாம குண்டம் என்று அழைக்கப்படுகிறது. சியாம குண்டமும் ராதா குண்டமும் அருகருகில் அமைந்துள்ளன.
குசும சரோவர் என்ற இடத்தில், கோபியர்கள் கிருஷ்ணருக்காக மலர்களை எடுத்துச் செல்வர். இதற்கு அருகில் உத்தவரின் கோயிலும் உள்ளது. கோபியர்களின் உயர்ந்த பக்தியை கண்ட உத்தவர், விருந்தாவனத்தில் ஒரு புல்லாகப் பிறக்க வேண்டும் என்றும், கோபியர்களின் பாதங்கள் தன்மீது பட வேண்டும் என்றும் பிரியப்பட்டார். இங்கே உத்தவர் புல்லின் வடிவில் வசிக்கிறார். இவ்விடத்திற்கு அருகில் நாரத வனம் இருக்கிறது. இங்கு நாரத முனிவர் நாரத பக்தி சூத்திரத்தை இயற்றியதோடு, விருந்த தேவியின் உபதேசத்தை ஏற்று இவ்விடத்தில் தவமும் புரிந்தா
————-
ஸ்ரீ மதுராஷ்டகம்
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
வேணூர் மதுரோ ரேணூர் மதுர: பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் ||
———–
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
இதழும் இனியது; முகமும் இனியது; கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
சொல்லும் இனியது; குணமும் இனியது; உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது; கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
பாடல் இனியது; பட்டாடை இனியது; உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
குறும்பு இனியது; வெற்றி இனியது; கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
சலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
மணிகள் இனியது; மாலை இனியது; யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது; கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்
வீழல் இனியது; ஆழல் இனியது;மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
——————————————
ஸ்ரீ வல்லபாச்சார்யர் -அருளிச் செய்த ஸ்ரீ மதுராஷ்டகம் –
ஸ்ரீ நாத் –முதலில் பிரதிஷ்டை செய்து அருளியவர்
ஸ்ரீ வல்லபாச்சார்யர்-1479–1530-புஷ்ட்டி மார்க்க வைஷ்ணவ சம்ப்ரதாயம் – ஆந்திர -முன்னோர்
ஸ்ரீ பால கிருஷ்ணன் புஷ்டியான அனுக்ரஹம் –
ஸ்ரீ மதுராதிபதியே அகிலம் மதுரம் -புண்யா பாப ஹரி ஸூபா -வடமதுரை மன்னு-யுகங்கள் தோறும் -வாமன ஆஸ்ரமம் –
சத்ருக்கனன் -லவணாஸூரன்/ஸ்ரீ கிருஷ்ண கா ஜென்ம பூமி -பெயரிலே மதுரம் –
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுரக் கானாக் கண்டேன் –மிகவும் விரும்பிய திரு நாமம் –
விதி வாக்கியம் -அநு வாதம் வாக்கியம் இரண்டும் உண்டே
ஸ்ரவணம்-விதி இல்லை -ஆசை வந்தால் தான் கேட்க வருகிறான் -மனனம் அவனே பண்ணுவான் –
கேட்பதும் மனனம் பண்ணுவதும் விதி இல்லை
அடுத்து அனவ்ரத சிந்தனம் ஒழுக்கம் த்யான மாத்திரம் -நிதித்யாஸனம் -விதி வாக்கியம் –
ஆசை -உண்ண பசி போலே –இத்தை வளர்க்கவே இது போன்ற ஸ்லோகங்கள் –
அவன் -பிரிய தமரானவர்களை தானே வரித்து -தன்னைக் காட்டுகிறான் -சததம் கீர்த்த யந்த –தாதாமி புத்தி பூர்வகம்
தேஷாம் நிதயாபி யுக்தாம் -பஜதாம் ப்ரீதி பூர்வகம் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டவர் –
தாதாமி புத்தி யோகம் -கொடுக்கும் பொழுது ப்ரீதி உடன் கொடுக்கிறான் -பக்தி என்றாலே ப்ரீதி தானே –
ஆகையால் இப்படி கொண்டு கூட்டுப் பொருள்
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி –
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ வைகுண்டம் -நினைவே அமுதம்-நனைந்த சிந்தனையால் மோக்ஷம் பெறுவோம் –
அதரம் மதுரம் –
திருவாய் -திரு உதடுகள் -உபதேசம் -இனிமை -பவள வாய் -பார்த்து நம் உதடு பாட துடிக்கும்
வாலியதோர் கனி கொல்—கோலம் திகழ் திரள் பவளம் –7-7-3-அபூத உவமை —
நீல நெடு முகில் போல் –திரு மேனி அம்மான் -தொண்டை வாய் –திசைகள் எல்லாம் –
வாய் அழகர் -சம்பாஷ மான இவ–நம்பெருமாள் புன்சிரிப்பால் குழி -ஈர்க்கும் –
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே –அபயம் ஹஸ்த முத்திரை புரியாமல் இருந்தால்
குவிந்த உதடால் மாஸூச சொல்ல –செங்கனி வாய் –நெஞ்சம் நிறைக்கும் – -கோவை வாயாள் -அபிமத அநு ரூபம் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -அஷ்ட புஜத்து எம்பெருமான் –
கழுத்தை உதட்டாட்டம் கண்டு -மயங்கினது போலே -/
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து –/
ஸ்மித புல்ல அதர பல்லவம் -கொழுந்து போலே அன்றோ –
வதனம் மதுரம் –
மையல் ஏற்றி மயக்க வல்ல மாய மந்த்ரம் கொலோ –புண்டரீகம் தடாகம் -திரு முகம் செங்கமலம் —
குண்டலம் தோடு -ஆண் பெண்- -/ தாமரை தாதுக்கள்-நீண்டு நுனியில் உருண்டு -கிரீட மகுட -சூடா வதம்ச –
பெரியவன் –ஆதி ராஜ்ய ஜல்பிகா /
வண்டுகள் ஒத்த திருக் குழல்கள் -மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ-மதுவை உண்ண /
கபோலம்–யசோதை அன்பு கையால் ஸ்பர்சம் பருத்து -அழகர் இடம் இன்றும் சேவிக்கலாம் –
நயனம் மதுரம் –
கருணை வெள்ளம் அகப்படாமல் இருக்க திரு மணத் தூண்கள் -கருணா பிரவாஹம் -குண பிரவாஹம் பெருமாள் இடம் இருந்து –
நவ ரசம் -ஸ்திரம் –பெறும் கேழலார் தம் பெறும் கண் மலர் புண்டரீகம் -நம் மேல் ஒருங்கே பிறழ வைத்து –
எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
குருகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் – சொட்டை குலத்தில் உதித்தார் இங்கே வந்தார் உண்டோ -ஐதிக்யம்-
ஆ முதல்வன் -என்று கடாக்ஷம் -ஸ்திரம் தானே –
எழில் கொள் தாம்பு –அழுத கையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் -நம்பி ஹனுமந்த தாசர் -திருவாராதன கிராமம் -ராமானுஜர் -ஐதிக்யம் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடே நீண்ட அப்பெரியவாய கண்கள் -பக்த ஸூர்யனால் மலரும் தாமரைக் கண்கள் –
கப்யாசம் புண்டரீக அக்ஷிணீ/ ராஜீவ லோசனன் -ந யுத்த யோக்யதாம் –
இணைக் கூற்றங்களோ அறியேன் -க ஸ் ஸ்ரீ சரியா கஹா புண்டரீகாஷா /கோபம்-நரசிம்ஹன் – தயை அனைத்தும் காட்டுமே /
செங்கண் சிறிச் சிறிதே எம் மேல் விழியாவோ
எம் பச்யதே புருஷோத்தமன் -ஜெயமான மது ஸூதன கடாக்ஷம்
சிரமணி –நெடு நோக்கு கொள்ளும் பத்த விலோசனத்துக்கு என்னை உய்த்திடுமின் -சபரி -விதுரன் -ரிஷி பத்தினிகள் -அனுக்ரஹம் உண்டே
பரிகாசமும் -கோபிகள் -சிற்றில் -முற்றத்தூடு புகுந்து -முகம் காட்டி முறுவல் செய்து -சிந்தையும் சிதைக்கக் கடவையோ –
எதிர்பார்த்து காத்து இருக்கும் -ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -கடல் கிடக்கும் மாயன் –
சிக்கென செங்கண் மாலே ஆவியே -நான் உன்னை விடேன்-
ஹசிதம் மதுரம்
புன்முறுவல் -பிரகசன்னிவே பாரத -அர்ஜுனன் விசாகம்–சிரித்து கொண்டே ஸ்ரீ கீதா உபதேசம் –
கன்றினை வால் ஓலை கட்டி —
ஹ்ருதயம் மதுரம்
திரு மார்பே -என்றும் -திரு உள்ளம் என்றும் -ஸுஹார்த்தாம் ஸர்வ பூதானாம் -முதல் படி ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கோர மாதவம் செய்தனன் –திரு ஆர
மார்பு அதன்றோ-
தாராய வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் -வக்ஷஸ்தலம் திருத் துளசி மாலை -ஸ்ரீ கௌஸ்துபம் -ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ கமலா -விமலம் விசாலம் –
கமனம் மதுரம்
நடை -வ்யாக்ர சிம்ம கஜ ரிஷப சர்ப்ப கதிகள்/ நம் பெருமாள் பக்கலிலே காணலாம்,
கோபம் தேஜஸ் கர்வம் பெருமிதம் -இங்கனே போந்து அருளி -சீரிய சிங்கம் –
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு திருவடிகள் வந்து ரஷிக்கும் -எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ -சீதா மத்யே -அக்ர பிரதயோ ராமா –
நடந்த கால்கள் நொந்தவோ –பேசி வாழி கேசனே -சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -வருக வருக நம்பி வாமன நம்பி
வா போ வந்து ஒருகால் கண்டு போ –கச்சதி ப்ராதரத்தி -நடை அழகில் மயங்கி கைங்கர்யம் கெடாமல் -ராகவ ஸிம்ஹம்–
நம்மாழ்வார் நாச்சியார் திருக் கோலம் -இராப்பத்து ஏழாம் திரு நாள் திருக் கைத் தலை சேவை இன்றும் சேவிக்கலாம்
மதுராதிபதயே அகிலம் மதுரம்
———————-
வசனம் மதுரம்
திரு வாக்கு –பேச்சு வார்த்தை சொல் -மூன்றும் உண்டே –
திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-பேச்சு ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
சொல்லும் பொய்யானால் -நானும் பிறந்தமை பொய்/
ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -சொல்
மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் -வார்த்தை
பாவி நீ என்று ஓன்று நீ சொல்லாய் என் முன்னால் காண வந்தே -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே –
வாக்மீ ஸ்ரீ மான் -கொண்டாடுகிறார் வால்மீகி -அபயப்ரதானம் -மஞ்சு பாஷீ மிருத பாஷீ பூர்வ பாஷீ ராகவா –
உனக்கு ஒரு வார்த்தை எங்களுக்கு வாழ்வு மாஸூச –
அர்ச்சா சமாதி குலைத்து வசனம் மதுரம் –திரு விளக்கு பிச்சன் -தொண்டமான் சக்ரவர்த்தி -திருக் கச்சி நம்பி –
சரிதம் மதுரம் -சேஷ்டிதங்கள்
அது இது உது என்னாலாவன -நைவிக்குமே/-சாரித்ரேன கோ யுக்தா -இஷுவாகு வம்ச பிரபவா /
ஜென்ம கர்ம மே திவ்யம் /அவதார ரஹஸ்ய ஞானம் -அதே பிறவியிலே மோக்ஷம் -பக்தனுக்கும் /
வசனம் மதுரம் –
வஸ்திரம்
அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே /செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஓர் சிவலிகை — கச்சு என்கின்றாளால்/
ஐயோ அச்சோ ஒருவர் அழகிய வா -/பவ்வ நீர் உடை ஆடை யாக சுற்றி –பவனம் மெய்யா -அண்டம் திருமுடி /திரு மாலே கட்டுரையே –
கைலி –நம் பெருமாள் -மாற்றுவதே அழகு –துலுக்க நாச்சியாருக்காக சாத்திக் கொள்கிறார்
வலிதம் மதுரம் —
மூன்று மடிப்புக்கள் கழுத்திலும் வயிற்றிலும் உண்டே
யா தாமோதர -உதர பந்தம் –சேஷி திரு இலச்சினை –
திரு வயிற்று உதர பந்தம் -பெற்ற வயிற்றுக்கு பட்டம் –
வரத வலி த்ரயம் -பிரதான திரு ஆபரணம் –
நஞ்சீயர் திரைக்குள்ளே -ஏகாந்த தழும்பு சேவிக்க ஆசை -பிரதம விபூஷணம் / தாமோதரனை ஆமோ தரம் அறிய –
தத்வ த்ரயம்-ஞான பக்தி வைராக்யம் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -முக்குணம் தாண்டி -ரஹஸ்ய த்ரயம் –
மூன்று பாதங்கள் -மூன்று அக்ஷரங்கள் -மண்டப த்ரயம் காட்டும் –
தேசிகன் -பெறும் தேவி தாயார் ஸ்வர்ண -கனக வளைய முத்ரா –
சலிதம் மதுரம் –
அசைவே மதுரம் –ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
முன் இருந்த தானத்தே -தாளால் உலகம் அளந்த அசைவே கொல்/
கிடந்த நாள் கிடந்தாய் –உன் திரு உடம்பு அசைய / எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -ஆராவமுத ஆழ்வார் – திரு மழிசை பிரான் -/
அசைவில் அமரர் தலைவா -அசையா நீ எழுந்து இருப்பதா வாழி –உத்தான சயன -உத்யோக சயனம் /
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -அசைந்து -காட்டி அருளி -இங்கிதம் நிமிஷ தஞ்சை தாவகம்–நீ பண்ணுவதே ரம்யம் அத்புதம் அதி பிரிய கரம்
தவழ்ந்து போய் என் மகன் கோவிந்தன் புழுதி அழைக்கின்றான் -நீ இங்கே நோக்கி போ -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –
கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
பிரமிதம் மதுரம்
சுழற்சி மதுரம் -ராஸக்ரீடை -/ அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவா -கோபிகள் கண்ணன் -/தோளுடன் தோள் கோத்து-
கோபிகா கீதம் -குரவை கூத்து -கோப வேஷ பரிகம்மிதா -பஞ்சாவதம்ச -மயில் பீலி சூடி —
ஒருவர் இருவர் ஓர் மூவர் என உருவு கரந்து -சுழன்று –
ஆடி ஆடி அகம் கரைந்து —
மதுராதிபதயே அகிலம் மதுரம்
————————————————
வேணூர் மதுரா
விசித்திர வேஷம் –செவி ஆட்ட கில்லாவே – /அத்புதம் கேளீர் -/உபதேசம் ஆச்சார்யர் மூலம் போலே புல்லாங்குழல் -கானம் -சப்த ஸ்வரம் –
சஜாதீயர் ஆச்சார்யர் –விஜாதீயர் அவன் /
வெள்கி மயங்கி ஆடல் பாடல் மறந்தனர் தாமே -/எழுது சித்ரங்கள் போல் நின்றன /
ரேனூர் மதுரா
ஸ்ரீ பாத ரேனு-சித்ரா கல்பா லாங்கனி-வலம் காதில் மேல் தோன்றி பூ அணிந்து –
புழுதி அளந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் -விளையாடு புழுதியும் கொண்டு – -நப்பின்னை காணில் சிரிக்கும் -/புனிதனோடு காப்பு நான் கட்ட -இதுவே இவன் ஆச்சாரம்
தவழ்ந்து எழுந்து ஓர் தளர் நடையால் — மண்ணில் செம்பொடி ஆடி வந்து என் தன் மார்பினில் –பெற்றிலேன் அந்தோ –
கோபால வேஷம் -கற்றுத் தூளி –தூசரிதமான திருக் குழலும் —
ஸைன்ய தூசி -சேனா -தூளி தூசரிதம் -பாரத சாமரம்
பாத தூளி படித்தலால் இவ்வுலகம் பாக்யம் -தொண்டர் அடிப் பொடி
பாணீர் மதுரா
கைத்தலங்கள் வந்து காணீரே –சங்கும் நேமியும் நிலாவிய -ரேகைகள் -யசோதை வளர்க்கும் பிள்ளை -நாராயணன் இல்லை –
அத்புதம் பாலகம் -/ கராவிந்தேனே –பால முகுந்தம் -/உந்தை யாவன் –நிஷ்காரணம் ஜகத் பிதா –
விரலாலே காட்ட -நந்தன் பெற்றனர் -வஸூ தேவன் இழந்தான் -எடுத்த பேராளன் –
முழுதும் வெண்ணெய் அலைந்து அலைந்து தொட்டு உண்ணும் –தாமரைக் கை —
கொட்டாய் சப்பாணி -பிளந்திட்ட கைகளால்
பாணி சிவந்தது ஊன்றி தவழ்ந்ததாலா -சாட்டை ஒட்டியா -தேரோட்டி கடிவாளத்தாலா –
திதியோதனம் ஊறுகாய்-கண் எச்சி படும்படி
செந்தாமரை கை விரல்கள் கோலம் அழிந்தில -வாடிற்றல –திரு உகிர் நொந்தும் இல –
கை வண்ணம் தாமரை -வாய் கமலம் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே பாணி கிரஹணம் -முறை –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அஞ்சேல் என்ற திருக் கைகள்
பாதவ் மதுரா
திருவடி தாமரைகள் -தானே சுவைத்து பார்ப்பான் -/பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே
கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -எடுத்துக் கொள்ளில் மருங்க இருத்திடும் / ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் அன்றோ –
சகடாசூர -சகடத்தை சாடிப் போய் -சாடுதைத்த திருவடி -உலகளந்த திருவடி -அவனுக்கும் ரஷகம்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்தால் போல் –
கதா புன -சக்ர சங்க த்வஜம் அங்குசம்
திருப் பொலிந்த சேவடி / தேருக்கு கீழே நாட்டிய
உலகம் அளந்த பொன்னடி -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
ந்ருத்யம் மதுரம்
குடமாடு கூத்தன் –குரவை கூத்து -கும்ப நாட்டியம் -காளிங்க நர்த்தனம் -சாரீ ந்ருத்தம் எண்ணிக்கை –
ஹல்லீ ந்ருத்தம் –வண்ண புஷ்ப்ப மாலை / கோஷ்ட்டி ந்ருத்தம் ராஸ க்ரீடை
மன்றமர கூத்தாடும் மைந்தன் -மன்றம் அமரும் படி -மயங்கி அங்கேயே அமர்ந்து
சக்யம் மதுரம்
நட்ப்பு -குகன் ஸூ க்ரீவன் விபீஷணன்
கோபி -பிரசாதம் -சுகர் ஆச்சர்யம் / உத்தவர் -ஸூ தாமா –
விதுரர் / மாலா காரர் / அக்ரூரர் / சஞ்சயன் -18-நாடார் கூட்டம்
ஆத்ம ஸஹர் -அறிவார் உயிரானார் -யாம் பெறும் ஸம்மானம் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மதுராதிபதயே அகிலம் மதுரம்
—————————–
ஐயப்பாடு அறுத்ததும் ஆதாரம் பெறுக வைப்பதும் அழகன் -அழகையே ஸைன்யமாக கொண்டு -கட்டுப்படுத்துவானே
மால் பால் மனம் சுழித்து மங்கையர் தோள் கை விட வேண்டுமே –
கீதம் மதுரம்
பாட்டு -ஸ்ரீ கீதா ஸூ கீதா -மதுரம் -தத்வ விவேக –இத்யாதி -பார்த்தன் அன்று ஓதிய –கீதாம்ருதம் மஹத் -ஸர்வ உபநிஷத் -சாரம் –
புல்லாங்குழல் கானம் -சங்க நாதமும் கீதமே -168-mile தூரம் —84-இடங்களில் ஸ்ரீ பாகவதம் சப்தாகம்
ஸ்ரீ வல்லபாச்சார்யர் அருளி-84- க்ரோஸம் தூரம் என்பதால்
ஆ நிரை இனம் மீளக் குறித்த சங்க ஒலி -7-லக்ஷம் பசுக்களை இத்தைக் கொண்டே
நைவளமும் –கொண்டு பெண்ணை -நோக்கா –இது அன்றோ எழில் ஆலி என்பான் –
நாணினார் போலே –இறையே –தாசன் -என்று அபிமதம் விஞ்சி –
கான பிரியன் -முடங்கு கேள்வி இசை என்கோ–சாம வேத கீதனே –
பீதம் மதுரம்
குடித்தது -எதுவாய் இருந்தாலும் -அருகிருந்த மோரார் குடம் உருட்டி –கன்றுக் குட்டிக்கு நீர் குடிக்க –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –
இது முதலில் -உண்பது அப்புறம் -மாறி -பருகி விட்டே உண்பான் -இரண்டுக்கும் வாசி அறியான் என்றுமாம்
பால் உண்ணோம் -நெய் உண்ணோம் -போலே
புக்தம் மதுரம்
உண்டது –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் —என்னை முற்றும் பருகினான் -உண்டு பருகினான்
அப்பம் கலந்த சிற்றுண்டி –அக்காரம் பாலில் கலந்து-சொப்பட நான் சுட்டு வைத்தேன் –
வெண்ணெய் விழுங்கி –ஆராத வெண்ணெய் -வெள்ளி மலை இருந்தது ஒத்த -முப்போதும் கடைந்த வெண்ணெய் –
ஏரார் இடை நோவ- தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி –
கை விரல் அனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசில் மிச்சல் உண்ணப் பெற்றிலேன் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
குடத்தோடு சாய்த்துப் பருகி -குடத் தயிர் சாய்த்து பருகி —சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு -வளையலும் காணேன் –
கன்னல் -இலட்டு வத்தோடும் -சீடை கார் எள்ளின் உண்டை -என்னகம் என்று வைத்துப் போந்தேன்–இவன் புக்கு அவற்றை பெருக்கிப் போனான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி வெண்ணெயும் சோதிக்கின்றான் -உன் மகனைக் கூவிக் கொள்ளாய் –
சுக்தம் மதுரம்
தூக்கமே மதுரம் -பையத் துயின்ற பரமன் -/உறங்குவான் போல் யோகு செய்து -கிடந்தவாறும் நினைப்பு அரியன
அன்று வெக்கணை கிடந்தது –என் நெஞ்சுள்ளே –
புளிங்குடி கிடந்தது –தெளிந்த என் நெஞ்சம் அகம் கழியாமல் /
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடப்பாய் -அரவின் அணை மிசை கிடந்த மாயனாய் /
ஸ்படிக சிலை -பெருமாள் –சிறு காக்கை முலை தீண்ட -ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தபன்/ ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று/
ஸ்வரூப த்யானம் -/டோலத்சவம்-
ரூபம் மதுரம்
காந்தா –அத்தியாச்சார்யம்-சாஷாத் மன்மத மன்மதன்-அவனும் மடல் எடுக்க வேண்டும்படி -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபராஹினாம்-
கண்டவர் தம் மனம் வழங்கும் -மின்னு மா மகர குண்டலங்கள் -ஆடினால் தானே ஓளி வீசி -முக காந்தி குழல் காந்தி வாசி –
முத்துப்பல் ஓளி யாலே வா ஸூ தேவர் -தேவகி –/ மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் /
நீல தோய்த்த மத்யஸ்த -மேகம் மின்னல் வெட்டு -சந்திரன் ஓளி -வானவில் நினைத்து உபாஸிக்க -உபநிஷத் சொல்லுமே –
திகழ்கின்ற –திரு மார்பில் -திகழும் மங்கையோடும் -/முடிச்சோதியாய் –உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திருமாலே கட்டுரையே
நிறைந்த சோதி வெள்ளம் -சூழ்ந்த பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே ஒழிந்தான்-
அருவமும் எண்ணிறந்த உருவங்களில் ஒன்றே -வாரா வருவாய் –வாரா அருவாய்
ஆதாயம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
பஞ்ச உபநிஷத் சக்தி மயம் -/
திலகம் மதுரம்
ஊர்த்வ புண்டர திலகம் -பஹு மாணாத்-உத்தர உபரி பக்த ஜனாதி -நம்மை மேலே தூக்கி செல்லவே / இனிமை அறியவே –
தன் திரு நாமத்தை தானே சாத்தி -கம்பர் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்
—————————————-
கரணம் மதுரம்
லாவண்யம் ஸுந்தர்யம்–கொள்கின்ற கோள் இருளை –அன்று மாயன் குழல் –
சுட்டுரைத்த பொன் ஒவ்வாதே –கரும்பு வில் போன்ற திருப் புருவம் –
ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் –/அப்ராக்ருதம் -/ எழு கமலா பூ அழகர் /ஸுந்தர்ய அருவி சுழி -திரு நாபீ-உந்தித் தாமரை –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -கோல திருக் குறுங்குடி நம்பியை -என் சொல்லி நான் மறப்பேனோ /
ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச
தரணம் மதுரம்
தாண்டுவிக்கிறார் / வழுக்குப் பாறை –ஸூ கர்- திருவடி படும்படி பாக்யம் –ஸிம்ஹம் புழு மலை தாண்டிய கதை –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
வைதிக புத்ரன் கதை -ஒரு நாள் ஒரு பொழுதில் உடலோடு கொண்டு கொடுத்தவனைப் பெற்று இனி என் குறை
கண்ணன் ரூபம் சேவிக்க ஆசை கொண்ட ஸ்ரீ மஹா லஷ்மீ
அத்யயன உத்சவம் -நம்மாழ்வார் திருவடி சேவை -எங்கும் உண்டே -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
ஹரணம் மதுரம்
அவன் திருட்டே மதுரம் -வெண்ணெய் உடம்பு முழுவதும் பூசிக் கொண்டே –
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -வெள்ளி மலை ஒத்த வெண்ணெய்
திருட்டு ஒரு நாள் இல்லையே -கச்வம் பால –பாலானுஜன் -மன் மந்த்ர சங்கையா-
ஸ்ரீ கௌஸ்துபம் தேஜஸ் கொண்டே திருட்டு / வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்ட ஆளு கூத்து அப்பன் —
துன்னு படல் திறந்து புக்கு –திருமங்கை ஆழ்வார் போட்டி -ஸ்வர்ண விக்ரஹம் -எந்திரத்துக்கு உள்ளே -மதிள் கைங்கர்யம்
ரமணம் மதுரம்
விளையாட்டு –கண்ணை புரட்டு விழுந்து களகண்டு செய்யும் பிரான் – -அப்பூச்சி காட்டுகின்றான்
விளக்கில் வீட்டில் பூச்சி போலே ஆஸிரர்கள் -ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு -பால் குடிக்க உயிரும் சேர்ந்து
ரமண ரேடி -இன்றும் மணலில் உருண்டு வெட்கம் இல்லாமல்
வமிதம் மதுரம்
தாம்பூல ஸ்ரவணம் / தூய பெரு நீர் யமுனை / உமிழும் பொன் வட்டில் பிடித்து புகப் பெறுவேன் /
சமிதம் மதுரம்
பிரளய ஆபத்தில் -வையம் எழும் கண்டாள் பிள்ளை வாய்க்குள்ளே / ப்ரஹ்மாண்டம் ஜிஹாத் -மண் பிரசாதம்
நெய்யூண் மாற்று மருந்து /
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -மஞ்சாரா -எஞ்சாமல் வயிற்றில் அடக்கி -உண்டும் உமிழ்ந்து –
மதுராதிபதியே அகிலம் மதுரம்
—————————-
மதுரா பெண் பால் /மதுரம் ஆண்பால் மதுரம் வரும் -சப்தத்துக்கே லிங்கம் சமஸ்க்ருதம் /
உஞ்சா மதுரம்
பறை வாத்யம் -இடுப்பில் கட்டி குடக் கூத்து-குரவைக் கூத்து ராஸ க்ரீடை -ஜல க்ரீடை மூன்றாவது
விளையாட்டு –ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு —வாராயோ –சென்றேன் என் வல் வினையால்
பறை -திருப்பாவை -/ புருஷார்த்தம் –தாத்பர்யம் அறியாமல் -சீதை -திரும்பி இங்கு /
ஜாம்பவான் பறை -சாலப் பெறும் பறை -தான் கட்டின பறை –
கோவிந்தன் வருகின்ற கூட்டம் -தளைகளும் தொங்கலும் -மயில் பீலி கொடை–
தண்ணுமை எக்கம் மத்தளி – -தாள் பீலி குழல்கள் கீதமும் ஆகி எங்கும்
மலை கொலோ வருகிறது என்று –
பாலா மதுரா
மாலா -பாட பேதம் -கோப கோபி மேலே வரும் -அதுவே பருவ பரம்
புஷ்பங்கள் தொடுக்கப் பட்ட -காட்டுப் பூ மல்லிகைக்கு பாலா என்று பெயர்
ரமணம் -ஸ்மரணம் -கீழே பாட பேதம் /
செண்பகப் பூ சூட்ட வாராய் -/ ப்ராத கால புஷ்ப்பம் செண்பகம் -/
அனந்தாழ்வான் -மாலாகாரர்/ சுமந்து மா மலர் தீபம் கொண்டு -பாசுரம் ஐதிக்யம் /
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -குறும்பு அறுத்த நம்பி /தொண்டைமான் சக்கரவர்த்தி ஸ்வர்ண புஷ்ப்பம் /
மல்லிகை பூ -சாயங்கால பூ / பாதிரிப் பூ -பச்சை தமனகம் சேர்த்து -தவன உத்சவம் -/
மருவும் தவனமும் சேர்த்து -அடுத்து -/ செங்கழு நீர் ஐந்தாவது -விடிந்தால் வாய் நெகிழும் /
பின்னை பூ -பின்னை மர வாஹனம் உண்டே /குருக்கத்தி பூ அடுத்து /
இருவாட்சி கடைசியில் -நம்பெருமாள் மாலை பிரசாதம் தனியாக தெரியுமே –விருட்சி பூ /
சூடிக் கொடுத்த சுடர் கொடியையும் சேர்த்து அவனுக்கு சூட்டினார் -/
யமுனா மதுரா
தூய பெரு நீர் யமுனை –திருவடி தீண்ட பெருகி பின் வற்றிக் கொடுத்ததே -ஜானு மாத்திரம் /
மன்றமர கூத்தாடியே -வட திருவேங்கட மைந்தன் /
யமுனாச்சார்யர் -யமுனைத் துறைவன் -/பலராமன் -ராம் காட் -ஷீர் காட் வஸ்திர லீலை /கோவர்த்தன கிரி -21-மைல் சுற்றளவு -/
வீஸீ மதுரா
அலைகள் –தரங்கம் -சம்சார சுக துக்கம் மாறுவது போலே -ஆவாரார் துணை
சலிலம் மதுரம்
தண்ணீர் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -/பிள்ளை கார்யம் இடம் கண்டு -காரணத்தில் இருக்குமே /
யுத்த பூமியில் மோ ழை எழுவித்தான் / இட்டமான பசுக்களை இனிது மருத்து நீராட்டி -/
தெளிவில்லா கலங்கல் காவேரி -தெண்ணீர் பொன்னி–மாப்பிளை பார்க்க வரும் கலக்கம் -பிரிந்து போகும் கலக்கம் /
கமலம் மதுரம்
அடித்தலமும் தாமரை –அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் / ஆசன பத்மம் -தோற்று தாங்கும் திருவடித் தாமரை /
ஒப்பாகா –/கை வண்ணம் தாமரை வாய் கமலம் -போலும் கண் இணையும் அரவிந்தம் –அடியும் அஃதே -/ஆரோகணம் அவரோகணம் இல்லாமல் –
திருக் கல்யாணம் -பாணி கிரஹணம் -மந்த்ரம் வாயால் சொல்லி -கண்ணால் இவளையே நோக்கி -தோற்று விழுந்த திருவடி –
சப்த பதிக்கு திருவடி -கையைப் பிடித்து -வாயால் மந்த்ரம் சொல்லி -கண்ணால் முகத்தை பார்த்து தான் சொல்ல வேண்டும்
ஸர்வ லோக மகேஸ்வரன் வெட்கப்படாமல் -கண்டு -அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
பா மருவு மூ உலகம் படைத்த பத்ம நாபாவோ—அளந்த -பத்ம பாதாவோ –தாமரைக் கண்ணாவோ –தனியேன்
கரை புரண்டு –அரவம் சுமப்பது அஞ்சன மலை -அம்மலை பூத்தது அரவிந்த வனம் –அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே -/
கண்ணை தனியாக -அடியேனை பாட வைத்ததால் –
கமலக் கண் என்னும் நெடும் கயிறு -அமலங்களாக விழிக்கும்
மதுராதிபதியே அகிலம் மதுரம்
———————————–
கோபீ மதுரா
-5-லக்ஷம் -காத்யாயினி நோம்பு -சொல்லும் அவிடு ஸ்ருதியும் / கண்ணனை கையிலே வைத்துள்ளார்கள்
த்வதீய -கம்பீர -மநோ அநு சாரீ -வேதம் பின் செல்லுமே -வ்ரஜை ஸ்த்ரீகள் கண் அடி படவே அவதாரம் /
உத்தவர் ஞான உபதேசம் செய்ய வந்து பக்தி கற்று வந்தார் -ஞானம் அக்னியால் எல்லாம் போக்கலாம் -முயல வந்து –
காளியனாக அநு காரம் / கோவிந்தா வாங்கலையோ -/ மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் /
ஆண் உடையுடன் எப்படி நுழைந்தீர் -கோகுலத்துக்குள் –
லீலா மதுரா
சேஷ்டிதங்கள் அனைத்தும் மதுரம் -அவதரித்ததே மதுரம் -வண்ண மாடங்கள் சூழ் -/ ஒருத்தி மகனாய் பிறந்து
விளையாட்டாக பூதனை முதல் கேசி வரை -மிச்சம் இல்லாமல் அனைவரையும் முடித்து /அரவம் அடல் வேழம்-10- சேஷ்டிதங்கள் ஒரே பாசுரம் -/
யுக்தம் மதுரம்
அவர்கள் உடன் கூடியதும் ஆடியதும் -சம்யோகம் -யோகம் -சேர்க்கை – மதுரம்
பரீக்ஷித் -தர்ம ஸ்தாபனம் -பண்ண வந்த -இப்படி செய்யலாமோ -அக்னி -அனைத்தையும் புனிதமாக்கும் –
சர்வதவசாகம் -சர்வாந்தராமி -உடல் மிசை உயிர் என எங்கும் பரந்துளன் -சரீராத்மா பாவம் -சரீர த்வாரா ஆடினால் என்ன நேராக —
சரீர சம்பந்தமே இல்லையே -ஆத்ம சம்பந்தம் தானே
முக்தம் மதுரம்
பிரிவும் மதுரம் -கோபீகா கீதம் –விரஹம்-குடில குந்தளம்–நீண்டு சுழன்று செறிந்துன் நேத்து கடை சுருண்டு கரு நீலம் –
இரட்டை திருவடி –அஹங்காரம் -தூக்கி கொள்ளச் சொல்ல -ஆழ்ந்த ஒரு திருவடி இணை -ஒருத்தி அழ-
பூ கொத்து பறித்து வைத்து -குனிய -காண வில்லையே
சுரத்துடன் அழுது-
த்ருஷ்டம் மதுரம்
கடாக்ஷம் -செங்கண் சிறுச் சிறிதே -ஜெயமான புருஷன் எம் பச்யதி -சாத்விக சிரத்தை -நெடு நோக்கு புண்டரீகாக்ஷன்
வேண்டாத துரியோதனனுக்கும் -பீஷ்ம த்ரோண -கிம் அர்த்தம் புண்டரீகாஷா -புக்தம் விதுர போஜனம் –
அழல விழித்தான் அச்சோ அச்சோ -பார்வையால் துச்சோதனனை-இத்யாதிகளை – நிரசித்து –
அஹம் காலோஸ்மி நிமித்தம் தான் அர்ஜுனா நீ —
சிஷ்டம் மதுரம்
மிச்சல் -போனகம் செய்த சேடம் –நிவேதனம் பண்ணிய மிச்சல் -இல்லை என்றால் பாப உருண்டைகள் –
பரமன் உண்ட எச்சில் நச்சினேன் -லஷ்மணன் -தாரை இடம் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்
——————————————
கோபா மதுரா
கோபர்கள் -கோப குமாரர்கள் -தன்னேராயிரம்-கை கலந்து –திருட்டுக்கு துணை -பொத்த உரலை கவிழ்த்து- –
பிரசாதம் கை கலந்து -பிரமனுக்கு கற்றுக் கொடுத்த பாடம் -சென்று செருச் செய்யம் குற்றம் ஓன்று இல்லாத கோபர் -/
நல் செல்வன் -இருவரும் உண்டே -சாமான்ய விசேஷ தர்மங்கள் /லஷ்மணன் அக்னி கார்யம் செய்யும் அன்று தான் இவன் பால் கறப்பான்
தோழன்மார் கண்டதே –செண்டு கோல் மேலாடை இத்யாதி -ஒரு கையால் ஒருவன் தன் தோள் ஊன்றி
ஸத்ய பாமை -பின்பு -தோள் கொடுப்பாள்
காவோ மதுரா
பசுக்களும் கன்றுகளும் -ஏற்ற கலங்கள் எதிர் கொண்டு மீதளிக்கும் -வள்ளல் பெறும் பசுக்கள் –
கணங்கள் பல -கற்று கறவை -கறவைகள்–பல பன்மை
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -இட்டமான பசுக்களை –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –
ஆ மருவி அப்பன் -கோ சகன் -தேர் அழுந்தூர் -நிரை மேய்த்து அமரர் கோமான் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தான் -நெருஞ்சி முள் காட்டை மேய்ச்சல் நிலம்
யஷ்ட்டிர் மதுரா
கையில் கோல் -கொள்ளா மாக் கோல் -பார்த்தசாரதி -கையிலே பிடித்த -கோபால வேஷம் –
ஸ்ருஷ்ட்டிர் மதுரா
இயல்பு -குழந்தைகள் / ப்ரத்யும்னன் -அநிருத்தினான் -16008-ஒவ் ஒருவருக்கும் -10-அஷ்ட மஹிஷிகள்
குழந்தை பேறுக்கு ராம மந்த்ரம் -சொத்துக்கு கிருஷ்ண மந்த்ரம் –
கைலாச யாத்திரையில் -கள்வா –ருக்மிணி தேவி உடன் -சென்று -/
தலிதம் மதுரம்
உடைந்த மண் பாத்திரம் கண்ணன் கை ஸ்பர்சம் -இதுவும் மதுரம் -வெறும் கலத்தை வெற்பிடை இட்டு
அதன் ஓசை கேட்க்கும் உய்க்கும் கண்ணபிரான் கற்ற கல்வி
ஆத்மாவை ஸ்வா கருத்து சரீரம் விடுவதை
ததீ பாண்டன் -வ்ருத்தாந்தம் -இங்கு இல்லை என்றேனோ -ததி பாண்டனைப் போலே –
ததி பாண்டன் பிரகலாதன் இருவர் இடம் உள்ள பக்தியே முக்கியம்
முக்தி பெற்றது அன்றோ தயிர் தாழி யும்-
பலிதம் மதுரம்
பழம் -காய்-கண்ணன் அமுத செய்த சேஷம் -பலமும் சொல்லி நிகமிக்கிறார்
அவன் உண்ட மிச்சலே பலம் -முக்தி -மோக்ஷம் அங்கு காவு காவு தானே -இதுவே பரம புருஷார்த்தம் -உண்டதும் உமிழ்ந்ததுமே
என் அமுதினைக் கண்டா கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -போலே இங்கும் பல ஸ்ம்ருதி இல்லாமல் –
இந்த ஸ்லோகம் சொல்வதே கேட்பதே பலம் பூமாதிகரணம் -போலே இதுவே பூமா –
மதுராதிபதியே அகிலம் மதுரம் –
48-மதுரங்கள் -அனைத்தும் மதுரம் அஷ்ட 8-தடவை சொல்லி -நிகமிக்கிறார்
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வல்லபாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –





“பஞ்ச“ என்ற வடமொழிச் சொல்லுக்கு “ஐந்து“ என்று பொருள்.
இந்த அரங்கத்தம்மா “பெற்ற தாயினும்“ மேலாக அருள் புரிபவள்.
பஞ்ச சயன ரங்கத்தின் முற்றுப்புள்ளியான ஸ்ரீஅப்பாலரங்கன் உறையும் கோவிலடிக்கு பயணிப்போம். திரு அன்பிலிலிருந்து ஒரு புதியபாலம் ஒன்று காவிரியின் குறுக்கே சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது. அன்பில் பெருமாளின் அரவணைப்பைப் பெற்றபின் இந்த பாலம் வழியே சீக்கரமாகவே இந்த சன்னிதியினை அடையலாம்.