ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த -ஸ்ரீ அம்ருத பலா வளி என்னும் ஸ்ரீ கடிகாசல ந்ருஸிம்ம ஸ்தோத்ரம் —

ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன் :

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸெளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர – அழகிய மணவாளமாமுனிகளின்‌, சரணாம் புஜ ஷட்பதம்‌ – திருவடித்‌ தாமரைகளில்‌ வண்டு போல்‌ படிந்து ரஸாநுபவம்‌ செய்பவரும்‌, திவ்ய ஜ்ஞாந ப்ரதம்‌ – தம்மை யண்டினவர்க்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை அளிப்பவரும்‌, சுபம்‌ – அறிவினாலும்‌ அனுஷ்டாநத்தாலும்‌ சோபிப்பவருமான, தேவராஜ குரும்‌ – தேவராஜ குருவென்னும்‌ எறும்பி யப்பாவை.

இவர் சர்வலோக சரண்யரின் திருக்குமாரர் -தேவராஜன் இயல் பெயர் –

ஆராதன பெருமாள் சக்ரவர்த்தி திரு மகன்

இப்பொழுது நம் கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருமாளிகையில் சேவிக்கலாம்

திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி

அவதார ஸ்தலம்: எறும்பி

ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான்

நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம்

கனு அன்று இன்றும் பக்தலோசனன் எறும்பி க்ராமத்துக்கு எழுந்து அருளி சேவை சாதிக்கிறார்
மா முனிகள் இங்கே எழுந்து அருளி இருந்து கால ஷேபம்செய்து அருளினார்
எறும்பி க்ராமத்தையே வட திருவரங்கம் என்றும்
இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களை -அழகிய மணவாள தாசர்கள் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்

இவ் வெறும்பியப்பா மணவாள மா முனிகளின்‌ சிஷ்யாக்ர கண்யர்களான அஷ்டதிக்கஜாசார்யர்களில்‌ ஒருவராவர்‌. இவர்‌ ‘ “தேவராஜகுரு ‘வென்றும்‌ ‘வரதராஜ கவி” என்றும்‌ வழங்கப்படுகிறார்‌. வானமாமலைஜீயர்‌ திருவேங்கடஜீயர்‌, பரவஸ்துபட்டர்பிரான்‌ ஜீயர்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌, எறும்பியப்பா , அப்பிள்ளை, அப்பிள்ளார்‌, ப்ரதிவாதி பயங்கரமண்ணா ஆகிய இவர்கள்‌ “அஷ்டதிக்கஜங்கள்‌ ‘ என்று ப்ரஸித்தர்களாயிருப்பர்‌. “பாராரு மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்‌ ஆராமம்‌ சூழ் கோயிற்‌ கந்தாடையண்ணன்‌ எறும்பியப்பா ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார்‌ வாதீபயங்கரரென்‌ பேரார்ந்த திக் கஜஞ் சூழ்‌ வர யோகியைச்‌ சிந்தியுமே‘ – யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்

(“முனி என்பதனை முன்னும்‌ பின்னும்‌ கூடக்கூட்டி, பாராரு மங்கை (சிரீவரமங்கல) முனி, திருவேங்கட முனி, பட்டர்பிரான்முனி என்று கூட்டிப்‌ பொருள்‌ கொள்க. “எறும்பியப்பா (எம்பெருமானா।:ககு) வடுக நம்பியைப்‌ போலே தேவுமற்றறியாதே, ஜீயருக்கு (மணவாளமாமுனிகளுக்கு) அத்யந்தம்‌ அபிமதராயிருப்பர்‌” என்று யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ க்ரந்தம்‌ இவர் பற்றிக் கூறுவது காண்க.
இவர்‌ தாமும்‌, தாம்‌ மணவாளமா, . னிகளின்‌ சிஷ்யரென்பதை, இந்த அம்ருதபலாவளி என்ற ஸ்தோத்திரத்தின்‌ இறுதியான ஸ்லோகத்தில்‌ “பக்த்யா சவ்ம்ய வர கிங்கரோ பஹிதாம்‌ அம்ருதபலாவளிம்‌” (பக்‌தியுடன்‌ மணவாள மாமுனிகளின்‌ தாஸனான அடியேனால்‌ ஸமர்ப்பிக்கப்பட்ட அம்ருதபலாவளி என்ற ஸ்தோத்ரத்தை) என்று அருளிச் செய்துள்ளார் –

————

ஸ்ரீ அம்ருத பலா வளி என்னும் ஸ்ரீ கடிகாசல ந்ருஸிம்ம ஸ்தோத்ரம்-

ஸ்ரீ வேங்கடேச சரணவ் சிரஸீ கரோமி ஸ்மிதாப்ஜ ஸூஹ்ருதவ் தவ்
ப்ருது தரம் அபி பவ ஜலதிம் பிப்தி தராம் யத் ப்ராக ப்ரமாணு–1-மங்கள ஸ்லோகத்துடன் உபக்ரமிக்கிறார்

யத் பராக பரமாணு:- எந்தத் திருவடிகளால்‌ ஒட்டிக்‌ கொண்டிருக்கிற ஒரு சிறு மண் துகள்‌ கூட, ப்ருதுதரம்‌ – மிகப்பெரிதான-. பவ ஜலதிம்‌ – பிறவிக்‌ கடலையும்‌, பிபதிதராம்‌ – அடியோடு குடிக்க (வற்றச்‌ செய்ய) வல்லதோ, தெள – அத்தகைய, ஸ்மிதாப்ஜ ஸுஹ்ருதெள – மலர்ந்த தாமரைகளோடு ஒத்த- ஸ்ரீவேங்கடேச சரணெள திருவேங்கடமுடையானுடைய திருவடிகளை, சிரஸி – (எனது) தலையில்‌, கரோமி வைத்துக்‌ கொள்ளுகிறேன்-

ம முனிகள் திரு உள்ள உகப்புக்காக அவர் கைங்கர்யம் செய்த திரு வேங்கடத்தானையே –
இவர் தான் மா முனிகள் திரு நாமம் கேட்டுக்கொண்டே திருக்கண் விழித்து அருளுகிறார் நித்யமாகவே –

எறும்பியப்பா தாம்‌ இயற்ற நினைத்த “அம்ருதபலாவளி” என்ற கடிகாசல நரஸிம்ஹ ஸ்தோத்ரம்‌ இடையூறேதுமின்றி இனிதே முடிவடைவதற்காகத்‌ தமக்கு இஷ்ட தெய்வமான திருவேங்கடமுடையானுக்கு மங்கள ஸ்லோகமாக முதல்‌ ஸ்லோகத்தை அமைக்கிறார்‌.
நீரைத்‌ தூர்ப்பதற்கு நீரைவிட அதிகமான அளவுடைய மண்‌ தேவைப்படுவது உலகவியல்பு. திருவடியிலுள்ள மிகச்சிறிய மண்துகள்‌ தனது மகிமையினால்‌ ஸம்ஸாரமென்னும்‌ பெருங்கடலையும்‌ தூர்த்து விடுஃன்றதென்பது மிக ஆச்சரியமாகும்‌.

—–

ஸ்ரீத கடிகாசல ஸ்ருங்கம் ஸ்ரீ தல கருணா தரங்கித அபாங்கம்
மனஸி மம உல்லஸ தங்கம் வஸதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்–2-

ஸ்ரிதகடிகாசலஸ்ருங்கம்‌ – திருக்‌ கடிகைமலையின்‌ சிகரத்தை அடைந்ததும்‌, சீதள கருணாதரங்கித – அபாங்கம்‌ குளிர்ந்த கருணை யலை யெறிகிற கடைக்‌ கண்ணோக்கத்தை யுடையதும்‌, வாஸஸாபிங்கம்‌ – வஸ்த்ரத்தினால்‌ பொன்னிறங்‌ கொண்டதும்‌, உல்லஸத்‌ அங்கம்‌ – மிகவும்‌ விளங்குந்‌ திருமேனியைப்‌ பெற்றதுமான, கிமபி மஹ: – ஒப்பற்ற தேஜஸ்ஸானது, மம மநஸி வஸதி – எனது மனதில்‌ உறைகின்றது.

திருக்கடிகை யெம்பெருமானாகிய ஒளி எனது மனதில்‌ உறைவதனால்‌ அஜ்ஞானமெனும்‌ இருள்‌ அகலப் பெற்றேன்‌. நன் ஞானமும்‌ பெற்றேன்‌. இனி அப்பெருமானை உள்ளபடி அறிந்து இந்த ஸ்தோத்ரத்தைச்‌ செய்து முடிக்க என்னால்‌ முடியுமென்று தமது ஆற்றலைக்‌ குறிப்பிட்டாராயிற்று இதனால்

—————-

வ்யத்யஸ்த சரண கமலாம் விநிஹித புஜ யுகல மித்ர ஜாநு யுகாம்
விலஸித ரதாங்க சங்காம் வ்யக்திம் உபாஸே விருத்தி ஜாதி மதீம்–3-

வ்யத்யஸ்தசரண கமலாம்‌ – -யோக நிலையில் அமர்ந்த திருக்கோலம்-(வீற்‌று இருந்த திருக்கோலத்தில்‌ இடது திருவடியை வலப் பக்கமாகவும்‌ வலது திருவடடியை இடப்பக்கமாகவும்‌) மாறுபட அமைத்த திருவடித் தாமரைகளை யுடையதும்‌, விநிஹீத புஜயுகள மித்ர ஜாநுயுகாம்‌ – வைக்கபட்ட இரண்டு திருக் கைகளுக்குத்‌ தோழர்களாக இரண்டு முழுந்தாள்களைக்‌ கொண்டதும்‌ (இரண்டு முழந்தாள்களின்‌ மேல்‌ சார வைக்கப்பட்ட இரண்டு திருக்கைகளைக்‌ கொண்டதும்‌)-திருக்கரங்கள் முழங்கால் பர்யந்தம் நீண்டு -, விலஸித ரதாங்க சங்காம்‌ – மிகவும்‌ விளங்கும்‌ சக்கர சங்குகளைப்‌ பெற்றதும்‌,-திருவாழி பாஞ்ச ஜன்ய ஆழ்வார்களுடன் விளங்கி -ஆழி யம் கை பிரான் அச்சோ ஒரு அழிகிய வா –விருத்த ஜாதிமதீம்‌ – ஒன்றோறு ஓன்று முரண்பட்ட “நரத்வம்‌ ஸிம்ஹத்வம்‌” என்னும்‌ இரண்டு ஜாதிகளை ஒருங்‌கே கொண்டதுமான, வ்யக்திம்‌ – வ்யக்தியை (தோன்றும்‌ ஓர்‌ உருவத்தை) உபாஸே -த்யானம் செய்கிறேன்-அழகியான தானே அரி உருவான தானே -அவனையே உபாஸிப்போம்

கடிகைத்தடங்குன்றின்‌ மிசையிருந்த அக்காரக்கனி யெனப்படும்‌ யோக நரஸிம்ஹ மூர்த்தியை நம்‌ கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த ஸ்லோக ரத்னம்

——————–

கலித தநு தநய பங்கம் கர கமலா ப்ரண வாரிஜ ரதாங்கம்
க்ருத கடிகாசல சங்கம் கிமபி மஹோ ஜயதி கேதந விஹங்கம் –4-

கலித தநு தநய பங்கம்‌ – தநுவின் தனயனா இரணியனைப் பிளந்ததும்‌, கர கமல ஆபரண – திருக்கைத்‌ தாமரைகளுக்கு ஆபரணமாகிய, வாரிஜரதாங்கம்‌ – -திரு சங்கு ஆழி ஆழ்வார்கள்-சங்கு சக்கரங்களை யேந்தியதும்‌, க்ருத கடிகாசல ஸங்கம்‌ – திருக் கடிகை மலையில்‌ பற்று வைத்துள்ளதும்‌, கேதந விஹங்கம்‌ – கொடியில்‌ கருடனைக்‌ கொண்டதுமான,-விநதா ஸூதனுக்கும் பல்லாண்டு பாடுகிறார் கிமபிமஹ: – ஒப்பற்ற தேஜஸ்ஸூ , ஜயதி – மேம்பட்‌டு விளங்குகிறது.-ஜய கோஷம் —கை வண்ணம் தாமரை -வடிவார் சோதி வலத்துறையும் ஆழியும் பல்லாண்டு-தேஜஸ் நிறைந்த திவ்ய தேசம்

கச்யப ப்ரஜாபதியின்‌ மனைவிகளில்‌ “தநு ” என்பவளுக்குப்‌ பிறந்த பிள்ளைகள்‌ தநுஜர்கள்‌ ( தானவர்கள்‌), “திதி” என்பவளுக்குப் பிறந்தவர்கள்‌ தைத்யர்கள்‌. இவர்கள்‌ இரு திறத்தாரும்‌ அசுரர்கள்‌. திதியின்‌ பிள்ளையான இரணியனை இங்கு தநுஜனாகக்‌ குறிப்பிட்டது அசுரத்துவம்‌ என்ற பொதுச்‌ தன்மையானது இரணியனுக்கும்‌ பொருந்துகையால்‌ ஆகும்‌. இங்ஙனம்‌ நூல்கள்‌, தைத்யர்களை தானவர்களாகவும்‌, தானவர்களை தைத்யர்களாகவும்‌ பல விடங்களில்‌. கூறப்பட்டுள்ளமை காணத் தக்கது

——————-

ஸர்வ ரஸ கந்த பரிதம் சங்க தமே கமபி ஸகல ஸாகாஸூ
அம்ருத பலம் அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி கடிகாத்ரவ் –5-

ஏகமபி – ஒன்றே யாயினும்‌, ஸர்வ ரஸ கந்த பரிதம்‌ – எல்லா வகையான சுவைகளாலும்‌ எல்லாவித நறு மணங்களாலும்‌ நிறையப் பெற்றது –ஸகல சாகாஸு ஸங்கதம்‌ – பல கிளைகளில்‌ தொடர்பு கொண்டதும்‌, அகில பும்ஸாம்‌ – ஆத்மாக்களனைவர்க்கும்‌, ஆஸ்வாத்யம்‌ – சுவைத்து உண்ணத் தக்கதுமாய்‌. சித்ரம்‌ – (இங்ஙனம்‌) விசித்திரமான, அம்ருத் பலம்‌ – அம்ருதம் போல்‌ தித்திக்கும்‌ பழம்‌ ஒன்‌று –கடிகாத்ரெள அஸ்தி – திருக்கடிகை மலையில்‌ உள்ளது.
இங்கு ஒரே பழம்‌ பலவகைச் சுவை நறு மணங்கள்‌ நிறையப் பெற்றதும்‌, பல கிளைகளில்‌ தொடர்பு கொண்டதும்‌, அனைவரும் சுவைத்துண்ண வுரியதுமாக இராதாகையால்‌ முரண்பாடு தோன்றும்‌. இதில்‌ அம்ருதம் போல்‌ தித்திக்கும்‌ பழமாக உருவகித்துக் கூறப்பட்ட கடிகை நரஸிம்ஹப் பெருமானாகிய திருமால்‌ ஒருவனே – சாந்தோக்யோபநிஷத்தில்‌ ஸர்வகந்த: ஸர்வரஸ: என்று எல்லா நறு மணங்களும்‌ எல்லா நற் சுவைகளும்‌ அமையப் பெற்றவனாகக்‌ குறிக்கப்‌ பட்டுள்ளமையினாலும்‌, வேதமாகிய மரத்தின்‌ கிளைகளாகிய ருக்‌ யஜுஸ்‌ ஸாம அதர்‌வணங்களென்னும்‌ எல்லாப் பிரிவுகளிலும்‌ பரம் பொருளாகக்‌ கூறப்படுவதனாலும் எல்லாரும்‌ தஞ்சம்‌ பற்றி அநுபவிக்கலாம்படி இருக்கையாலும்‌ முன்‌ தோன்றிய முரண்பாடு நீங்குதல்‌ காண்க. அதாவது உலகிலுள்ள எப்பழமும்‌ முற் கூறியபடி இராதாகிலும்‌ நரஸிம்ஹனாகிய பழம்‌ அப்படி யிருப்பதில்‌ தடை யொன்றுமில்லை என்றபடி.
இந்த ஸ்லோகத்தில்‌ அமுதம்‌ போல் இனிக்கும்‌ பழமென்று திருக் கடிகை யெம்பெருமான்‌ குறிக்கப்பட்டுள்ளான்‌. ஆழ்வார்கள்‌ இப் பெருமானை – அக்காரக்கனி என்று அழைத்துள்ளார்கள்‌. எறும்பியப்பா அம்‌ருதபலம்‌ என்று பணித்தருளுகிறார்‌. அக்காரக்கனி என்பதற்கு இரண்டு பொருள்கள்‌. 1. –ஸஹகாரக்‌ (ஒட்டு மாங்கனி, ஸஹகார மென்னும்‌ ஸம்ஸ்க்ருத பதம்‌ தமிழில்‌ அக்காரமென்‌று ஆகும்‌. ஸந்த்யா என்பது அந்தியென்று ஆனது போல்‌ இதைக் கொள்க. 2. அக்காரம்‌ – சர்க்கரை. இது தமிழ்ச் சொல்‌. சர்க்கரையே மரமாக முளைத்து அம்மரம்‌ முதன்‌ முதலாகப்‌ பழுத்த பழத்தை அக்காரக்கனி என்பர்‌ வ்யாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்‌ பிள்ளை. இவ் விரண்டு வகையிலும்‌, கடிகை யெம்பெருமான்‌ ஒட்டு மாங்கனி போன்றும்‌ சர்க்கரை மரக்கனி போன்றும்‌ மிகமிக இனியவனாகையால்‌ – அம்ருதம்‌ போல் தித்திக்கும்‌ பழம்‌ என்றும் அருளிச் செய்தது மிகவும்‌ பொருந்தும்‌.

ஸர்வ ரஸ கந்த பரிதம்-ஸர்வ கந்த ஸர்வ ரஸ  -குழந்தைகளுக்கு ஏற்ற தம்மை அமைத்து அனுபவிக்குமவன் அன்றோ-ஏகமபி –ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் ஏக மேவ அத்விதீயம்
சங்க தம் ஸகல ஸாகா ஸூ-ஸகல உபநிஷத்துக்கள் சாகைகளும் இவ்வாறே கோஷிக்குமே
அம்ருத பலம் -அக்கார கனி என்றவாறு –ஸ்வயம் ப்ரயோஜன பக்தர்களுக்கு இருக்கும் இருப்பு-கறந்த பால் நெய்யே- நெய்யின் இன் சுவையே -கடலினுள் அமுதமே -அமுதினில் பிறந்த இன் சுவையே – பேர் ஆயன்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியும் காலே ஸ்ரீ நரஸிம்ஹா -நர லோக மநோபிராமம் என்றாளே
அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவனையே முதலில் கூப்பிடுகிறார்கள்
அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி –நல்லை நெஞ்சே –நாம் தொழும் நம் பெருமான் அன்றோ இவன்

கறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில்

பிறந்தவின் சுவையே! சுவையது பயனே! பின்னைதோள் மணந்தபே ராயா!–8-1-7-

கறந்தபால்! என்பது தனிப்பட்ட விளி. கறந்தபோதே இயற்கையான ரஸத்தையுடைத்தான பால்போல் பரமபோக்யனே! என்றபடி.பாலின் ஸாரமான நெய்யே! நெய்யினுடைய இனி சுவைதானே வடிவெடுத்த தென்னலாம்படி. யுள்ளவனே!,கடலிடைத் தோன்றிய அமுதமே! அவ்வமுதத்தின் இனிமைதானே வடிவெடுத்ததென்னலாம்படியள்ளவனே! என்று இத்தனை சொல்லியம் த்ருப்தி பிறவாமையாலே பின்னைதோள் மணந்த பேராயா! என்று அவன் தன்னையே சொல்லித் தலைக்கட்டுகிறார்.

நப்பின்னைப் பிராட்டியும் நீயுமான சேர்த்திதானே ஸ்வயம் போக்யமன்றோ? இந்த போக்ய வமையிட்டுக் கூறவேணுமோ? என்றவாறு.நப்பின்னையை மணந்ததுபோல என்னையும் மணக்க ப்ராப்தியில்லையோ வுனக்கு என்ற கருத்துக் கொள்ளலாம்.

——————-

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக கோபி புண்ய க்ருது உபேய –6-

ஆரண்யக ஆப்த வாக்யை: – ஆ.ண்யகமென்கிற நம்பத் தக்க வேத புருஷனுடைய வாக்கியங்களால்‌, அவகம்ய: – உண்டென்று அறியப் படுவதும்‌, க்ராம்ய ஜந த்ருசாம்‌ (கிராம) பாமர மக்களின்‌ பார்வைகளுக்கு , அபதம்‌ – இலக்காகாததும்‌, புண்ய க்ருத்‌ உபேய: – புண்ணியம்‌ செய்தவர்களால்‌ அடையத் தக்கதுமான கோஃபி- ஒரு, பூருஷ ம்ருக: நர ம்ருகமானது (நரஸிம்ஹமானது). கடிகாசல அக்ரே – கடிகை மலையின்‌ உச்சியில்‌, ஸ்புரதி – பளபளவென்று விளங்குகிறது -இதிலிருந்து – கிராம மக்களால்‌ க்ராமத்தில்‌ காண முடியாத காட்டில் திரிகிற நம்பத் தக்க வேடர்‌ முதலியோர்களின்‌ பேச்சுக்களைக்‌ கொண்டு காட்டிலிருக்கிறதென்று அறிய வெளிய – புண்ணியம்‌ செய்தவர்களுக்குப்‌ பிடிபட்டு அடைய-தக்கதொரு ஆண்‌ சிங்கம்‌ கடிகை மலைச்‌ சிகரத்தில்‌ விளங்குகிறதென்று சாதாரணமானதோர் பொருளும்‌ அறிய இயலும்

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம் -வேடர்கள் க்ராம மக்களைப் பார்த்து சொன்னதாகவும்-பாமர மக்களுக்கு வேத புருஷன் காட்டிக் கொடுத்ததாகவும் கொள்ளலாம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக –ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாள் ஒளி விஞ்சி உள்ளாரே
கோபி புண்ய க்ருது உபேய —புண்யம் யாம் உடையோம் என்று ஆய்ச்சிகள் மகிழ்வார்கள் அன்றோ

———–

மஹதி கடிகாத்ரி விஷயே மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம்
தே தீப்யதே ஸ்திரோ அயம் திவ்யைர் முனிபி ப்ரவர்த்தித்தோ தீப –7-

மஹதி – பெரிய, கடிகாத்ரி விஷயே – கடிகை மலையாகிய இடத்தில்‌(அகலில்‌) மஹதா ஸ்நேஹேந – அதிகமான பக்தியுடன்‌ (நெய்யுடன்‌)… நிர்மல தசாயாம்‌ – மிகவும்‌ சுத்தமான ஸமயத்தில்‌ (அழுக்கற்ற திரியில்‌), திவ்யை: முநிபி: -மிகவுயர்ந்த ஸப்தருஷிகளால்‌, ப்ரவத்தித: – தோற்றுவிக்கப்‌ பட்டதாய்க்‌ (ஏற்றப்பட்டதாய்க்) கொண்டு, அயம்‌ தீப: – இந்த நரஸிம்ஹப்‌ பெருமானாகிய விளக்கு, ஸ்திர:தேதீப்யதே – நிலையாக ஜ்வலித்துக்‌ கொண்டிருக்கிறது.-சாதாரணவிளக்கு ஒரு மனிதனால்‌ அளவு பட்டதோர்‌ அகலில்‌ அளவான நெய்யிட்டுச் சில சாணளவுள்ள திரியில்‌ ஏற்றப்‌பட்டு நெய்யும்‌ திரியும்‌ மாண்டு போனால்‌ அணைந்து விடும்‌. அங்ஙனல்லாமல்‌, ஆற்றல்‌ மிக்க அத்திரி முதலிய முனிவர்களால்‌; கடிகை மலையாகில்‌ பெரிய அகலில்‌ மாளாத தமது பக்தியாகிய நெய்யை இட்டு, தமது நல்ல மனநிலையில்‌ அல்லது நல்ல நேரத்தில்‌ ஏற்றப்டட  நரஸிம்ஹப் பெருமானாகிய விளக்கு அணையாமல்‌ நிலை பெற்று எப்போதும்‌ ஜ்வலித்துக்‌ கொண்டிருக்கிறதென்க. ஸ்நேகம்‌ பக்தியும்‌ நெய்யும்‌, தசா – நேரமும்‌ திரியும்‌

மஹதி கடிகாத்ரி விஷயே –கடிகைத்தடம் குன்றமே அகலாக-மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம் —ஆர்வமே நெய்யாக -பக்தி -நீராய் அலைந்து உடலையும் உருக்குமே –
ஸூத்தமான மனஸே த்ரியாகவும்-திவ்யைர் முனிபி –ஆழ்வார்கள் தானே திவ்ய முனிகள்
தே தீப்யதே ஸ்திரோ அயம் -ஏற்றி வைத்த தீபத்தாலே-ப்ரவர்த்தித்தோ அயம் தீப–ஸ்ரீ அக்காரக்கனியே ஒளி விஞ்சி காட்சி தந்து அருளுகிறார்

———–

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத
ஆலோகதோ அகிலார்தன் அவகமயதி நித்யம் அச்யுதோ தீப –8-

கடிகாசலஸ்ய மூர்த்தி – கடிகை மலையின்‌ உச்சியில்‌, ஸம்பூத: – உண்டான, அச்யுத:தீப: – அச்யுதனென்று சொல்லப்பட்ட – அணையாத விளக்கானது, ஆலோகத: – தன்‌ பார்வையாலே – தன்‌ வெளிச்சத்தினாலே, ஜநாநாம்‌- மக்களுடைய, தம:– அஜ்ஞானத்தை-இருட்டை, முஷ்ணந்‌ – போக்குவதாய்க் கெண்டு, அகில அர்த்தாந்‌ -எல்லாப் புருஷார்த்தங்களையும்‌, நித்யம்‌ — போதும்‌, அவகமயதி – அனுபவிப்பிக்கிறது அறிவிக்கிறது.
விளக்கு தன் வெளிச்சத்தாலே புற விருளைப்‌ போக்கித்‌ தானிருக்குமிடத்திலுள்ள பொருள்களை நம்‌ கண்களுக்கு அறிவிக்கிறது. எம்பெருமானகிய விளக்கு தன்‌ கடாக்ஷத்தாலே தமோ குணம்‌ முதல்‌ அக விருளைப்‌ போக்கி (தன்னை தஞ்சமடையச்‌ செய்து) நமக்கு வேண்டிய ஸகல புருஷார்த்தங்களையும்‌ அனுபவிப்பிக்கிறது. தம: அக விருளும்‌ புறவிருளும்‌. அர்த்த:.புருஷார்த்தமும்‌ பொருளும்‌, ஸ்வயம்‌ ப்ரகாச ஸ்வரூபனான பகவான்‌ இவ்விரண்டு ஸ்லோகங்‌களிலும்‌ விளக்காக உருவகிக்கப்பட்டான்‌ என்கை. ‘நந்தா விளக்கே” என்றார்‌ கலியன்‌-

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் -அஞ்ஞானம் போக்கி அருளி-மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத -நித்தியமாக எழுந்து அருளிய-ஆலோகதோ -கடாக்ஷ மஹிமையாலே-அகிலார்தன் அவகமயதி –வேண்டிய புருஷார்த்தங்களையும் அருளி நித்யம் -எப்பொழுதுமாக நிலை நிற்கும் படி அச்யுதோ தீப –நந்தா விளக்கு

———

ரஸ்யம் ஸக்ருது பஸேவ்யம் லப்யம் அபத்ய ஸஹம் அஸூஹித மமோகம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் ஸூத்தம் கடிகாத்ரி மௌலிஜம் மூலம் –9-

கடிகாத்ரி மெளளிஜம்‌ – கடிக மலைச்‌ சிகரத்தில்‌ உண்டான, ஸூத்தம்‌ மூலம்‌ நரஸிம்ஹப்‌ பெருமானாகிய தூய்மையான மூலிகையானது. ரஸ்யம்‌ – சுவைக்கத் தக்கது. லப்யம்‌ – கிடைக்கத்‌ தக்கது. அபத்யஸஹம்‌ – பாபமாகிய அபத்யம்‌ எவ்வளவு செய்தாலும்‌ பொறுத்துக் கொள்வது, அஸுஹிதம்‌ – எவ்வளவு உட் கொண்டாலும்‌ போது மென்று தோன்றாதபடி மேன்‌ மேலும்‌ உட் கொள்ளத்‌ தக்கது. அமோகம்‌ – வ்யர்த்தமாகாதது. ( பயனை யளித்தே தீருமது). ஸக்ருத்‌ உப ஸேவ்யம்ஸத்‌ – ஒரு தடவை மட்டுமே உட்கொள்ளப் பட்டதாய்க்‌ கொண்டு . பவார்த்திம்‌ – பிறவி யென்னும்‌ நோயை, த்வரிதம்‌ ஸரதி- விரைவில்‌ போக்குகிறது சாதாரணமாய்‌ மூலிகை – சுவை யுடையதன்று, எளிதில்‌ கிடைக்காது, அபத்யம்‌ செய்தால்‌ வேலை செய்யாது. ஒரு தடவை யுட்கொண்டால்‌ போதும்‌ போதுமென்ற எண்ணத்தை யுண்டாக்குமது. சில சமயத்தில்‌ பயனளிக்காமலும்‌ போமது. பல நாட்கள்‌ உட் கொண்டால் தான்‌ நோயைத்‌ தீர்க்குமது. எம்பெருமானாகிற மூலிகை இதற்கு நேர்‌ முரணானதென்று இதனால்‌ காட்டப்‌ பட்டதாயிற்று.ஸுஹிதம்‌த்ருப்தம்‌, அஸூஹிம்‌ – அத்ருப்தம்‌ – த்ருப்திக்கு விஷயமாகாதது. மூலம்‌-மூலிகை, மருந்து. “மருந்தும்‌ பொருளும்‌ அமுதமும்‌ தானே” என்று பேயாழ்வார்‌ அமுதமென்று ரஸ்யமாகவும்‌, மருந்தென்று மூலிகையாகவும்‌ எம்பெருமானைக்‌ குறித்தருளினார்‌.

ஸூத்தம்-ஸூத்த ஸத்வ மயம்-கடிகாத்ரி மௌலிஜம் மூலம் ரஸ்யம் –மருத்துவனாய் நின்ற மா மணி -பேஷஜம் பிஜக் –விருந்தாகவும் போக்யமாகவும்-ஸக்ருது பஸேவ்யம் -ஒரே தடவை கிருபா கடாக்ஷம் பட்டாலே போதுமே-லப்யம் -எளிதாகவே லபிக்குமே
அபத்ய ஸஹம் -பாபங்களை பாற்றி உரு மாய்ந்து போக வைக்கும்
அஸூஹித மமோகம் –ஆராவமுதம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் –ஸம்ஸாரம் உடனே அறுக்குமே

————-

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் விச்சின்ன குசல சந்தானம்
ஸஞ்ஜீவனம் அபி கடிகாசைலஜ மூலம் கரோதி ஸாரூப்யம் –10-

கடிகாசைலஜ மூலம்‌ – கடிகைமலை யிலுண்டாகிய நரஸிம்மனென்னும்‌ மூலிகையானது, ஜகதாம்‌ – உலகிலுள்ளவர்களுக்கு, ஸ்திர சோகசல்யஹரணம்‌ நிலைநின்ற துன்பமாகிய – அம்பு தைத்த விரணத்தை ஆற்றுமதாய்‌, விச்சிந்நகுசல ஸந்தானம்‌ – முறிந்து போன க்ஷேமமாகிய எலும்‌பை ஒட்ட வைக்குமதாய்‌, ஸஞ்ஜீவநம்‌ நசிக்க விருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபமாகிய உயிரை நசியாமல்‌ பாதுகாக்குமதாய்‌ இருந்து, ஸாரூப்யம்‌ அபி கரோதி – (இறந்த பிறகு) பரம பதத்தில்‌ தன்னோடு ஒத்த திருமேனியை யுடைமையாகிய அழகிய உருவத்தையும்‌ உண்டாக்குகிறது.
சில மூலிகை அம்புபட்ட புண்ணை மட்டும்‌ மாற்றும்‌. இன்னும்‌ சில முறிந்து போன எலும்பைச்‌ சேர்த்து வைக்கும்‌. மற்றும்‌ சில போகுமுயிரை மீட்டுத் தரும்‌. வேறு சில அழகில்லாத உடலை அழகுடையதாக்கும்‌. அக்காரக் கனி யென்னும்‌ ஒரே மூலிகை இவை யெல்லாவற்றையும்‌ செய்யுமென்றார்‌ இதனால்‌. இவை முறையே “விசல்ய கரணீ ஸந்தாந கரணீ ஸஞ்ஜீவ கரணீ ஸாரூப்ய கரணீ’ எனப்படும்‌. இவ்விரண்டு ஸ்லோகங்களாலும்‌ எம்பெருமான்‌ மிக மிக வுயர்ந்த மூலிகையாக உருவகிக்கப் பட்டான்

விகல்ய கரணி -சாதாரண நோய்களுக்கு மருந்து
சந்தான கரணி -எலும்பு முறிவு போன்றவற்றுக்கு மருந்து
சஞ்ஜீவ கரணி -உயிர் போவதையும் மீட்டுக் கொடுக்கும் மருந்து
சாரூப்ய கரணி -கோர ரூபம் மாற்றி -அழகு ரூபம் கொடுக்கும் மருந்து
ஆயுர் வேதத்தில் லோகத்தில் நான்கு விதங்கள் உண்டு

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் -சோகம் ஆகிய அம்பால் துன்புறும் லோக மக்களின் அனிஷ்டங்களைப் போக்கி அருளும்
விச்சின்ன குசல சந்தானம் -எலும்பு முறிந்த மக்கள் -செல்வம் இழந்த மக்களைக் காத்து அளிக்கும்
ஸஞ்ஜீவனம் அபி -உயர் போகும் நிலையில் நுகர்ந்தால் -ஆத்ம ஸ்வரூபம் நசிந்தாலும் -மீட்டுக் கொடுக்கும்
கடிகாசைலஜ மூலம்
கரோதி ஸாரூப்யம் —ஸாம்யாபத்தி -சாரூப்யம் சாலோக்யம் சாமீப்யம் ஸாயுஜ்யம் அளிக்கும்

————————–

அதி பல பவாஹி தஷ்டான் அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான்
கடிகா சிகரி நரேந்த்ர கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண –11-

கடிகா சிகரி நரேந்த்ர: – கடிகை மலையிலுள்ள நரஸிம்ஹனென்னும்‌ விஷ வைத்தியன்‌, அதிபல பவ அஹி தஷ்டாந்‌ வலிமைமிக்க – ஸம்ஸாராமாகிய பாம்பினால்‌ கடிக்கப் பட்டவர்களாய்‌, அபிலாஷ விஷ அக்நி மூர்ச்சநா நஷ்டாந்‌ ஆசை யென்னும்‌ நெருப்புப்‌ போன்ற விஷம்‌ ஏறியதனால்‌ மாய்ந்தவர்‌களான மனிதர்களை, கடாக்ஷ மாத்ரேண – தனது கடாக்ஷ மாத்திரத்தினால் , அஸுபி : – பிராணன்களோடு, கடயதி – சேர்த்து விடுகிறான்‌ (பிழைக்கச்‌ செய்கிறான்‌).
உலகில்‌ பிரசித்தரான விஷ வைத்தியர்கள்‌ பாம்பு கடித்து விஷமேறி மாயவிருக்கும்‌ அவர்களை, கடித்த விடத்தில்‌ மருந்து தடவியும்‌ உள்ளுக்கும்‌ மருந்து கொடுத்தும் உயிர்ப்பிக்கிறார்கள்‌. எம்பெருமானோ எனில்‌ பிறவி யென்னும்‌ பாம்பு தீண்டி ஆசையாகிய விஷமேறி ஆத்ம நாசமடையுமவர்களை மருந்தொன்றுமின்றித்‌ தன்‌ திருக் கண்‌ நோக்கத்தினால்‌ மட்டும்‌, உயிர்களுக்கு ப்ராணனாகிய தன்னோடும்‌, தனக்கு ப்ராணன்களாகிய நித்ய ஸுரிகளோம்‌ சேர்த்து உஜ்ஜீவிப்பிக்கிறான்‌. லெளகிக விஷ வைத்தியனுக்கும்‌ எம்பெருமானுக்‌கும்‌ இதுவே வாசி. நரேந்த்ர: – விஷ வைத்தியன் –

அதி பல பவாஹி தஷ்டான் -மிக்க பலமுள்ள ஸம்ஸார சர்ப்பம் கடியில் ஆழ்ந்த நம்மை
அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான் -அதுக்கும் மேல் விஷயாந்தர அபிநிவேச அக்னியாலும் தவிக்கும் நம்மை காமம் அடிப்படை -க்ரோதம் லோபம் போல் மேல் மாறுமே
கடிகா சிகரி நரேந்த்ர -இங்குள்ள அக்காரக்கனி எம்பெருமான்-கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண -கடாக்ஷ லேசத்தாலேயே போக்கி அருளி நித்யர்களுடன் ஒரு கோவை யாக்கியும் அருளுகிறார் அன்றோ

நஷத்ர மாலிகை ஜீயர் நாயனார் ஆழ்வாரையும் இதே போல் ஸ்துதிக்கிறார் அன்றோ

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்-விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதாயும் இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை) என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

—————-

சோரம் ஸ்வதஸ் ச்யுதம் மாம் ஸ்வாமீ கடிகாத்ரிபோ விசின்வான
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத த்ருப்தம் அபத்நாத் தயா குணேந த்ருடம் –12-

ஸ்வாமீ கடிகாத்ரிப: – தலைவரான கடிகை மலை யரசன்‌, சோரம்‌ – தனது சொத்தான என்னை, எனது சொத்‌தென்று நினைத்துத்‌ திருடியவனாய்‌, த்ருப்தம்‌ கொழுப்புடையவனாய்‌, ஸ்வத:ச்யுதம்‌ தன்னிடமிருந்து நழுவிய, மாம்‌ – என்னை, விசிந்வாந: ஸந்‌ – ஒயாமல்‌ தேடிக்கொண்டே யிருந்து, குதோ5பி உபாயாத்‌ – ஏதோவொரு தந்திரத்தினால்‌, த்ருஷ்ட்வா – கண்‌டு கொண்டு, தயா குணேந – தயை யென்னும்‌ நற்பண்பாகிய கயிற்றால்‌, த்ருடம்‌ அபத்நாத்‌ – இறுக்கிக்‌ கட்டி விட்டான்‌.
அரசன்‌ தன்‌ சொத்தைத்‌ திருடிக்‌ கொண்டு ஓடியவனை ஏதோவொரு சூழ்ச்சி செய்து கண்டு பிடித்துக்‌ கயிற்றால்‌ கம்பத்தில் கட்டுவான்‌. எம்பெருமான்‌, ஸ்வதந்த்ரனாய்த்‌ தன்னை விட்டு அகன்ற கொழுத்த திருடனான ஜீவாத்மாவை, அஜ்ஞாத ஸுஹ்ருதமாகிய ஒரு தந்திரத்தைக்‌ கற்பித்து அவனைக் கடாக்ஷித்து, தனது தயையாகிய கயிற்றால்‌ தன்னோடு சேர்த்துக்‌ கட்டிக் கொண்‌டு விடுகிறான்‌. அவனைப்‌ பின்பு ஒரு காலும்‌ விடுவதில்லை.
அஜ்ஞாத ஸுஹ்ருதமாவது – பொல்லாத ஜீவாத்மா ஒருவன்‌ தனக்கும்‌ தெரியாமல்‌ செய்த நல்ல காரியம்‌. அதாவது பசுவைக் கொல்லுவதற்காக அதனைத்‌ துரத்திக் கொண்டு போய்‌, அப்பசு ஒரு கோயிலை வலம்‌ செய்‌து கொண்டு ஓடிப் போக, அதனைப்‌ பிடிக்கத் தானும்‌ அக் கோயிலை வலம்‌ செய்து கொண்டு செல்லுதல்‌ முதலியவை. எம்பெருமான்‌ இவனை இப்படியே விட்டு விட்டால்‌ மேலும்‌ இப்படியே கொடுந்தொழில்‌ புரிந்து கொண்டு தானும்‌ கெட்டு உலகையும்‌ அழித்து விடுவானென்று நினைத்துத்‌ தனது அபார கருணையினால்‌, இவன்‌ அக் கோயிலை வலம்‌ செய்ததை நல்ல காரியமாக – புண்ணியமாகக்‌ கணக்கிட்டு இவனைக்‌ கடாக்ஷித்து இவனுக்கு மோக்ஷம் அளித்துத்‌ தன்னோடு சேர்த்துக்‌ கொண்டு மறுபடியும்‌ அவனை இப்பூமண்டலத்தில் ஒரு நாளும்‌ திருப்பி யனுப்புவதில்லை என்னும்‌ விஷயம்‌ இந்த ஸ்லோகத்தில்‌ நூலாசிரியரால்‌ அருளிச் செய்யப்பட்டிருத்தல்‌ நோக்கத் தக்கது

சோரம் ஸ்வதஸ்ச்யுதம் மாம் த்ருபதம் -கள்வன் நானே அன்றோ -பிறர் நன் பொருளை அபகரித்தவன்-ஸ்வாமீ கடிகாத்ரி போ விசின்வான –உடையவன் அக்காரக்கனி -ஸர்வஞ்ஞன் அன்றோ
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத –அப்போது ஒரு சிந்தை செய்து -என்னுள் புகுந்தான் –
ஆச்சார்யர்களைக் காட்டிக்கொடுத்து திருத்திப் பணி கொண்டு அருளினானே
அபத்நாத் தயா குணேந த்ருடம் —தயை என்னும் குணத்தாலே நன்றாக அவன் இடம் விலகாமல் கட்டி வைத்து-கைங்கர்யமும் கொண்டு அருளினானே-

——————

விமல கபி ஸேவ்ய மாநா விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா
கா அபி கடிகாத்ரி சிகரே கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ –13-

விமல கபி ஸேவ்யமாநா – (கிழக்கில்‌) அழுக்கற்ற மனமுடைய ஆஞ்ஜநேயனென்னும்‌ குரங்காகிய – பளிச் சென்ற ஸூரியனாலே ஸேவிக்கப்‌ பெற்றதாய்‌ – (ஒளி வீசப் பெற்றதாய்‌) அதனாலே, விலஸித ஸந்நிஹித சங்க சக்ர அப்ஜா – மலர்ச்சி யடைந்த, தன்னிடமுள்ள சங்கு சக்கரங்களென்னும்‌ தாமரை மலர்களை யுடையதாய்‌, கருணா ரஸ பூர நிர்ப்பரா கருணை யென்னும்‌ நீர் வெள்ளம்‌ நிறையப்பெற்றதுமான, கா$பி ஸரஸீ – ஒரு குளம்‌, கடிகாத்ரி சிகரே – கடிகை மலைச்‌ சிகரத்தில்‌, அஸ்தி – இருக்கிறது.
குளத்தில்‌ நீர்‌ நிறைந்திருக்கும்‌ ஸூரிய க்‌ரணம்‌ பட்டு அதன்‌ கண்‌ உள்ள தாமரை மலரும்‌. எம்பெருமானிடம்‌ தயை நிறைந்திருக்கும் கிழக்கே சிறிய மலையில்‌ விளங்குகிற அனுமானாலே ஸேவிக்கப் பட்டு, எம்பெருமான்‌ கையில்‌ விளங்குகின்ற சங்கு சக்கரங்கள்‌ புத்துயிர்‌ பெற்று ஜ்வலிக்கும்‌ என்றபடி. இதில்‌ சிங்கப் பெருமான்‌ தாமரைத் தடாகமாக உருவகிக்கப்பட்டான்‌. கபி: – குரங்கும்‌, ஸூரியனும்

விமல கபி ஸேவ்ய மாநா —ஆச்சார்யர் போன்ற திருவடி யோக ரூப ஆஞ்சநேயர் -ஸேவை –
கிழக்கு புறம் இருந்து நரஸிம்ஹனை மங்களா ஸாஸனம் செய்து கொண்டே ஸேவை ஸாதித்து அருளுகிறார்
விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா –அதனாலேயே மலர்ந்த ஆழ்வாராதிகள் இவர் திருக்கரங்களில்
கா அபி கடிகாத்ரி சிகரே –அக்காரக்கனி எம்பெருமானே
கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ –கருணை வெள்ளம் தடாகம்-நீர்ப்பண்டமாக வருகிறதே
கபி -ஸூர்யன் என்று கொண்டு-கதிரவன் கிழக்கு திசையில் ஸேவிக்க வர தாமரைகள் மலரும் -சங்கு சக்கர ஆழ்வார்கள் விகசிதம் அடைந்தன என்றுமாம் –

————-

நிர் முக்த போக ஸூத்தான் நித்ய மஹீநாந் வஹந் நிஜா சக்தான்
பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ கோ அபி பரிமளீ ஸாகீ –14-

கடிகாத்ரி சிகரே – கடிகை மலையின்‌ சிகரத்தில்‌, (1) பரிமளீ – நறுமணம்‌ நிறைந்து, பத்ர ஸ்ரீ: – மங்கள கரையான ஸ்ரீமஹாலக்ஷமியை உடைய, ஸாகீ – வேத சாகைகளை ப்ரமாணமாகக்‌ கொண்ட, கோரூபி – ஒப்பற்ற எம்பெருமானாகிற, (2) பரிமளீ பரிமளம் மிக்கு, பத்ரஸ்ரீ: – சந்தன மரமாகிய கோபி ஸாகீ – ஒரு மரமானது (1) நிர்முக்த போக சுத்தாந்‌ – இஹுலோக பரலோக ஸூகங்களை விட்டதனால்‌ பரிசுத்தர்களாம்‌, நிஜஆஸக்தாந்‌ – தன்னிடம்‌ மிக்கபற்றுள்ளவர்களாய்‌, அஹீநாந்‌ – அவ்விரண்டும்‌ காரணமாகத்‌ தன்னால்‌ விடப்படாத பக்தர்களாகிய – (2) நிர்முக்த போக சுத்தாந்‌ தோலை யுரித்ததனால்‌ அழுக்கற்ற உடலைக்‌ . கொண்டவைகளாய்‌, நிஜ ஆஸக்தாந்‌ -தன்னோடு சேர்ந்தே யிருக்கிற (தன்னைச்‌ சுற்றிக்‌ கொண்டிருக்கிற) அஹி இநாந்‌ ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்களை, நித்யம்‌ வஹந பாதி – (1) எப்போதும்‌ பரம பதத்துக்கு அனுப்பிக்‌ கொண்டே விளங்குகிறது. (2) எப்பே தும்‌ சுமந்து கொண்டே விளங்குகிறது.
எம்பெருமானாகிய ஒரு மரம்‌ பக்தர்களாகிய ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்களை வஹித்துக் கொண்டே விளங்குகிறதென்று அந்வயித்துக்‌ கொள்க. எம்பெருமானுக்கும்‌ மரத்துக்கும்‌ பொதுவாக இடப்பட்ட விஸேஷணங்கள்‌ சிலேடை வகையில்‌ அமைந்துள்ளமை காண்க. போகம்‌ – அனுபவமும்‌ பாம்பின் உடலும்‌, அஹீநா: – தன்னால்‌ விடப் படாதவர்களும்‌ உயர்ந்த பாம்புகளும்‌, வஹந்‌ – அனுப்புபவனும்‌ சுமப்பதும்‌, பத்ரஸ்ரீ: – மங்களமான லக்ஷ்மியை உடையவனும்‌, சந்தன மரமும்‌, ஸாகீ – வேதத்தின்‌ பிரிவுகளாகிய ருக்‌ முதலியவைகளை ப்ரமாணமாகக்‌ கொண்டவனும்‌, கிளைகளையுடைய மரமும்‌. மற்றவை விளங்குமவையே –

நிர் முக்த போக ஸூத்தான் -போகி -அநந்தன் -போகீந்த்ர ஸாயி -அவன் -தோலை உரித்த பாம்புகள் -ஆச்சாரம் மிக்கு உள்ளன ப்ரபன்னர்கள் -ஸம்ஸார போகம் நீங்கினவர்கள் உள்ளார்கள்
நித்ய மஹீநாந் வஹந் -நிறைய பாம்பு இனங்கள் உள்ளன
நிஜா சக்தான் பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ –அக்காரக்கனி மேல் பற்றுதலை வைத்துள்ளார்கள் -இங்கு உள்ளார் அனைவருமே ப்ரபன்னர்கள்
அனைவரையும் வாழ வல்ல தாயார் -பத்ர ஸ்ரீ எழுந்து அருளி ஸேவை சாதிக்கிறாள்
கோ அபி பரிமலீ ஸாகீ –நறுமணம் மிக்க சந்தன மரங்களும் உள்ளன –அனைத்து கலைகளுமே மங்களா ஸாஸனம் பண்ணுமே -என்றவாறு –

—————-

கருண அம்ருத ரஸ வர்ஷைர் கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்
ஸம் சரணி தரணி தப்தம் ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் –15-

ஹே! கடிகாசல கடித க்ருஷ்ண மேக – வாராய்‌ கடிகை மலையில்‌ (வந்த) சேர்ந்த அல்லது ஸப்த ரிஷிகளால்‌ (கொண்டு) ஈர்க்கப்பட்ட கார் மேகமாகிய பெருமானே ! நிஜை: உனக்கு இயற்கையாக அமைந்த கருணா அம்ருத வர்ஷை: – கருணையாகிய அமுத மழையினால்‌ – ஸம்ஸரண தரணி தப்தம்‌ – ஸம்ஸாரமாகிய ஸூரியனால்‌ கொளுந்திச்‌ சாவியாகப் போன, இதம்‌ – இந்த, விநதஸஸ்யஜாலம்‌- (உனது) பக்தர்களாகிய பயிர்களின்‌ தொகுதியை, ஸஞ்ஜீவய – உயிர்ப்பிக்‌க வேண்டும்‌.
இதில்‌ எம்பெருமானை மேகமாவும்‌ அவனது கருணையை அமுத மழையாகவும்‌ பிறவித்‌ தொடர்ச்சியாகிய ஸம்ஸாரத்தை ஸூரியனாகவும்‌ பக்தர்களைப்‌ பயிராகவும்‌ உருவகித்துள்ளார்‌. ஸூரியன்‌ பயிர்களை வாட்ட, அப்போது அவை சாவியாகப்‌ போகாமல்‌ மேகம்‌ வந்து தோன்றி ஒரு பாட்டம் மழையைச்‌ சொரிந்து அப் பயிர்களை நனைத்து உயிர்ப்பிக்குமாப் போலே, எம்பெருமானே உன்னை வணங்கிய பக்தர்களாகிய அடியேன்‌ போன்றவர்கள்‌ ஸம்ஸாரத்தினால்‌ தபிக்கப் பெற்று ஸ்வரூப நாசமடையா நிற்க, நீ வந்து தோன்றி உனது இயற்கையான கருணை மழையைப்‌ பெய்வித்து உன்‌ பக்தர்களை உஜ்ஜீவிப்பித்தருள வேண்டும்‌ என்ற இதனால்‌ ப்ரார்த்தித்த படி

கருண அம்ருத ரஸ வர்ஷைர் –கருணா ரஸ பொய்கை கீழ் இங்கு மழை -கருணை பொங்கிய கண்ணினை வாழியே -இவர் மூலமே மா முனிகளுக்கு-கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்-அக்காரக்கனி கறுத்த மேகம்-ஸம் சரணி தரணி தப்தம் –தாபத்ரயங்களால் தபிக்கும் -ஸம்ஸார ஸூர்யன்-ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் —வாடி வதங்கி இருக்கும் பயிர் போல்வாரை இவற்றில் இருந்து காத்து அருளும் –

————

விமல தர பக்தி பூரே வ்யபகத பங்கே விகஸ்வராம்புருஹே
மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் –16-

ஹே! கடிகாத்ரி ராஜஹம்ஸ – கடிகை மலையிலுள்ள ராஜ ஹம்ஸமாகிய எம்பெருமானே ! பவாந்‌ – தேவரீர்‌, வ்யபகத பங்கே காமம்‌ குரோதம்‌ (ஆசை, கோபம்‌) முதலிய அழுக்காகிய சேறு நீங்கப் பெற்றதும்‌, விமலதர பக்திபூரே – மிகவும்‌ நிர்மலமான பக்தியாகிய நீர்‌ வெள்ளத்துக்கு இடமானதும்‌, விகஸ்வர அம்புருஹே – மலர்ந்த ஹ்ருதய கமலமாகிய தாமரை மலரை யுடையதுமாகிய, முநீநாம்‌ மானஸ ஸரஸி – முனிவர்களுடைய மனஸ்ஸாகிய மாநஸ ஸரஸ்ஸில்‌, ரமதே – விளையாடுகிறீர்‌.
ஹம்ஸம்‌, சேற்றுத்‌ தூய நீரை யுடையதாய் தாமரைகள்‌ மலரப் பெற்றதான மாநஸ ஸரஸ்ஸில்‌ விளையாடும்‌. எம்பெருமான்‌ காம க்ரோதாதிகள்‌ நீங்கப் பெற்றுத்‌ தூய்மையான பக்தியை யுடையதாம்‌ – ஹ்ருதய கமலம் மலரப் பெற்ற – முனிவர்களுடைய மனஸ்ஸில்‌ ஆசையோடு இருப்பான்‌ என்றதாயிற்று-மாநஸ ஸரஸ்: – (1) மனமாகிய ஸரஸ்ஸு (தடாகம்‌) (2) ஹிமய மலையிலுள்ள மாநஸ மென்கிற ஸரஸ்ஸூ , ராஜ ஹம்ஸம்‌- ஹம்ஸ ராஜம்‌ உயர்ந்த ஜாதி ஹம்ஸம்‌. அதன்‌ மூக்கும்‌ கால்களும்‌ சிவந்து உடல்‌ வெளுத்திருக்குமாம்

விமல தர பக்தி பூரே –நீராய் அலைந்து கரைய உருக்கும் பக்தி -உடல் எனக்கு உருகுமாலோ
வ்யபகத பங்கே -காமக்ரோதாதிகள் சேறு நீங்கப்பெற்ற-விகஸ்வராம்புருஹே -மலர்ந்த தாமரை-மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே –ஹ்ருதய ஸரோவரத்திலே கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் —அக்காரக் கனியே ஹம்ஸ ராஜா -தேவரீர் விளையாடுகிறீர்

—————–

ஸ்தம்போஹி விக்ந காரீ சந்த்ருஷ்டோ ஜகதி ஸர்வ கார்யேஷு
தாநவ விதாரணே தே தஸ்யைவ ஹரே கதம் நு ஸாசிவ்யம் –17

ஹரே ! – சிங்கப்பிரானே ! ஜகதி – உலகில்‌, ஸ்தம்ப: – கம்பமானது, ஸர்வ கார்யேஷு – எல்லாக்‌ காரியங்களிலும்‌, விக்நகாரீ ஹி – தடை செய்யுமதாக அல்லவா, ஸந்த்ருஷ்ட: காணப் பட்டுள்ளது. தே – உனக்கு, தாநவ விதாரணே – தானவனான ஹிரணியனைப்‌ பிளக்கும்‌ காரியத்தில்‌, தஸ்ய ஏவ – எல்லோருக்கும்‌ தடை செய்யும்‌ கம்பத்திற்கே, ஸாசிவ்யம்‌ – ஸஹாயமாக இருக்கும்‌ தன்மை, கதம்‌ நு ஜாதம்‌ – ௭ப்படித்தான்‌ உண்டாயிற்று.
எல்லோருக்கும்‌ தடை செய்யும்‌ கம்பம்‌ நரசிங்கப்பெருமாளுக்கு ஹிரண்யனைக்‌ கொல்வதற்காக முன்பே ஒளிந்துகொள்ளும்படி இடங்கொடுத்து உதவி செய்ததே அது எப்படி என்று கேட்டாராயிற்று. “ஸ்தம்ப்‌ – ப்ரதிகாசே ‘ என்ற தாதுவிலிருந்து உண்டான “ஸ்தம்பம்‌ என்ற சொல்‌, தடை செய்வது என்ற பொருளைத்‌ தெரிவிக்கும்

ஜகதி ஸர்வ கார்யேஷு ஸ்தம்போஹி விக்ந காரீ -உலகில் அனைத்து கார்யங்களையுமே தடைப்படுத்தும் -ஸ்தம்பம் -கம்பம் -என்று ப்ரஸித்தம்-சந்த்ருஷ்டோ–எங்கும் உளன் கண்ணன் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -கரந்து எங்கும் பரந்துளன்
-நன்றாகக் கண்டான் ப்ரஹ்லாதாழ்வான்
தாநவ விதாரணே தே -ஹிரண்யனை நிரசிக்கவே நீர் திரு அவதரித்தீர் –ஜய தபாவர பாலகன் அன்றோ –பக்தனுடைய அனைத்துமே என்னைச் சேர்ந்ததே என்று காட்டி அருளவே உனது மடியில் அவனைப் போட்டுக் கொண்டாய்-அந்தியம் போதில் அழிக்கவே அரி யுருவாய் காத்துக் கொண்டு இருந்தாய் போலும் அந்தத் தூணில்
தஸ்யைவ ஹரே கதம் நு ஸா சிவ்யம் —தடையாகி உள்ள தூணே உனக்கு சஹாயம் பண்ணிற்றே -எவ்வாறு –

—————-

தேவத்வமாக மாத்தே ஸித்தம் திர்யக்த்வம் அபி நரத்வேந
ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் –18-

கடிகா ஸ்தாவர – கடிகைமலையில் ஸ்தாவரமாய்‌ அசையாது உறையும்‌ பெருமானே ! தே – உனக்கு, தேவத்வம்‌ – தேவராக இருக்கும்‌ தன்மை, ஆகமாத்‌ ஸித்தம்‌ வேதத்திலிருந்து அறியப்பட்டுள்ள; நரத்வேந ஸஹ திர்யக்த்வம்‌ அபி மனிதத் தன்மையோடு விலங்கின்‌ (சிங்கத்தின்‌) தன்மையும்‌, அத்ய – இப்போது, (உனது உருவத்தில்‌) த்ருஷ்டம்‌ – காணப் பட்டிருககிறது. ஸர்வாத்மகஸ்ய – தேவர்‌ விலங்கு மனிதர்‌ தாவரம்‌ ஆகிய எல்லாமுமாக (எல்லாவற்றையும்‌ சரீரமாகக்‌ கொண்டு) இருக்கிற, தே உனக்கு, கிம்‌அயுக்தம்‌– எது தான்‌ பொருந்தாதது.
இவ் வண்டத்திலுள்ள தேவ திர்யகே மநுஷ்ய ஸ்தாவரங்களெல்லாவற்றிலும்‌ உட்புகுந்து நின்று அவை யெல்லாம்‌ தானே என்னும் படியுள்ள திவ்யாத்ம ஸ்வரூபத்தை யுடைமையாகிய ஆச்சரியமான தன்மையை யுடைய நர சிங்கப் பெருமானுக்குத்‌ தன்‌ திருமேனி யொன்றில்‌ மட்டும்‌ முற்கூறிய நான்கு விதமான தன்மைகளைக்‌ காட்டிக்‌ கொண்டிருப்பது ஆச்சரியமானதன்று, பொருத்தமுடையதே என்றாராயிற்று

தேவத்வமாக மாத்தே ஸித்தம் -தேவாதி தேவனாக இருப்பது ஸித்தம் -ஆகமம் வேதங்கள் காட்டி அருளும்-திர்யக்த்வம் அபி நரத்வேந -அப்படிப்பட்டவர் திர்யக்க்காகவும் நர ஸிம்ஹமாகவும் உள்ளீர்-ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர -ஸ்திரமாக இங்கேயே ஸேவை சாதித்து அருளுகிறீர்-ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் —-அனைத்துக்குள்ளும் இருந்து அனைத்துமாகவும் உள்ளீரே -மிகவும் பொருந்துமே

————

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ அஸி கதஞ்ச விஸ்வ சாஷீதி –19-

பகவந்‌ – பரமபூஜ்யனான எம்பெருமானே, த்வம்‌ – தேவரீர்‌, பஞ்சாஸ்ய: ஏவ ஹி– ஐந்து முகமுடையவராகவே யன்றோ, ப்ரதித: – பிரசித்தராயிருப்பது, (அப்படி யிருக்க) ஸஹஸ்ர ஆஸ்ய: (இதி ஏதத்‌) ஆயிரமுகமுடையவர்‌ என்னுமிது, கதம்‌ – எப்படி ? – மேலும்‌, கடிகாத்ரி பக்ஷபாதீ த்வம்‌ – கடிகைமலையின் கண்‌ பக்ஷபாதம்‌ (ஒரு தலையில்‌ மட்டும்‌ வைக்கும்‌ அன்பு) உடைய தேவரீர்‌, விஸ்வஸாக்ஷீ இதி ஏதத்‌ – எல்லோரிடமும்‌ ஸமமான அன்பு வைத்து ஸாக்ஷி சொல்லுமவர்‌ என்னுமிது, கதம்‌ – எப்படி பொருந்தும்
ஐம்முக முடையவன்‌ ஆயிரமுக முடையனாவதில்‌ முரண்பாடு தோன்றும்‌. பஞ்சாஸ்ய: என்பதற்கு விசாலமான முகமுடைய ஸிம்ஹம்‌ என்று பொருள்‌. ஸிம்ஹமாக அவதரித்த விஷ்ணு ஆயிரமுக முடையவராக இருப்பதில்‌ முரண்பாடு ஏதுமில்லையென்று பரிஹாரம் -கடிகாசலத்தில்‌ பக்ஷபாதமுடையவன்‌, அதற்கு மட்டுமன்றோ ஸாக்ஷியாக இருக்க வேண்டும்‌ ? எல்லோருக்கும்‌ ஸாக்ஷியாக இருப்பது எங்கனமென்று விரோதம்‌ தோன்றும்‌, விஸ்வஸாக்ஷி என்பதற்கு எல்லாவற்றையும்‌ நேராகப்‌ பார்ப்பவர்‌ என்று பொருள்‌. கடிகை மலையில்‌ மட்டும்‌ பற்றுடைய பெருமான்‌ எல்லாவற்றையும்‌ நேராகப்‌ பார்க்க முடியுமாகையால்‌ விரோத பரிஹாரம்‌. சிலேடையுள்‌ள சொற்களை யமைத்து வேடிக்கையாகக்‌ கேள்வி கேட்டபடி இது

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ -ஐந்து தலைகளைக் கொண்ட தேவரீர் -விசாலமான திருமுகம் கொண்ட நீர் –பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய -ஆயிரம் தலைகளாகக் கொண்டவராக வேதம் எவ்வாறு சொல்ல முடியும்-ஆயிரம் தலைகள் வேண்டுமோ உமக்கு
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ -இங்கு அக்காரக் கனியாக ஒரு தலைப் பக்ஷ பாதம் செய்து
அஸி கதம் ச விஸ்வ சாஷீதி –லோகங்களுக்கு பதியாக இருப்பது எவ்வாறு -ஜகன் நிர்வாஹம் பண்ணுகிறீர்-ஸங்கல்ப மாத்திரத்திலே அனைத்தும் செய்து அருளி இங்கு பிரியமாக உகந்து அருளி இருக்கிறீர் என்றவாறு –

————-

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாத் அத ஸ்திதம் பும்ஸ்த்வம்
மூர்த்தெள தாவத்ர ந்ரூ ஹரே முக்ய கோ வா அவகம்யதே அந்யேந–20-

ந்ருஹரே – நரசிங்கப் பெருமானே ! தவ அத்ர மூர்த்தெள – தேவரீருடைய இந்தத்‌ திருமேனியில்‌, அல்ப தேசாத்‌ – குறைந்த இடத்தில்‌ (தலையில்‌ மட்டும்‌) உள்ள, ஸிம்ஹத்வாத்‌ அபி – சிங்கத்தின்‌ தன்மையை விடவும்‌, அத:ஸ்திதம்‌ – தலையின்‌ கீழ்‌ (உடல்‌ முழுதும்‌) உள்ள, பும்ஸ்த்வம்‌ – புருஷனது தன்மை, பஹு தேசம்‌ – அதிகமான இடத்தில்‌ உள்ளது. (இப்படியிருக்க) அந்யேந – வேறொருவனால்‌, அத்‌ – இவ் விரண்டு தன்மைகளில்‌, கோ வா – எது தான்‌, முக்ய: – முக்கியமென்று அவகம்யதே -. – அறியப் படுகின்றது.
இக்கேள்விக்கு விடை:- தலையில்‌ மட்டும்‌ உள்ள ஸிம்ஹத்வத்தை விட உடல்‌ முழுதுமுள்ள புருஷத்வமே முக்கியமென்று தோன்றும்‌. ஆனால்‌ முக்யம்‌ என்பது முகத்திலுள்ளது என்று பொருள் பட்டு, முகத்திலுள்ளது ஸிம்ஹத்வமே யன்றிப்‌ புருஷத்வமன்று. அதனால்‌ ஸிம்ஹத்வமே முக்யம் என்று ஆராய்ந்தால்‌ தோன்றும்‌. மேலுள்ள ஸ்லோகத்தில்‌ இது தலைகீழாவது காணலாம் –

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாதத ஸ்திதம் பும்ஸ்த்வம் -ஸிம்ஹ தன்மை அல்பம் -மிக பெரிய பகுதி பும்ஸத்வம்-மூர்த்தவ் தாவத்ர -நேராகப் பார்க்கும் திவ்ய மங்கள விக்ரஹம் ந்ரூ ஹரே முக்ய கோவா அவகம்யதே அந்யேந -முக்கியம் எது என்று யாரால் அறிய முடியும்-பதிலும் இதிலேயே உள்ளதே-ஹிரண்யன் -பயந்தது ஸிம்ஹம் என்பதால் அன்றோ –

———–

பும் ஸூக்த பூர்வகைஸ்தை புருஷத்வம் முக்யமேவ தே விதிதம்
கதமியம் அமுக்யதா அஸ்மின் கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ -21-

கடிகாத்ரி மநுஜ ம்ருகராஜ – கடிகை மலை யிலுள்ள நரசிங்கப்‌ பெருமானே ! தை: -பிரசித்தமான, பும் ஸூக்த பூர்வகை: – புருஷ ஸூக்தி முதலிய வேத பாகங்களாலே, தே புருஷத்வம்‌ – தேவரீருடைய புருஷத்வமானது. முக்யமேவ – முக்கியமானதாகவே அறியப்பட்டுள்ளது. (இப்படியிருக்க) அஸ்மிந்‌ – இந்தப்‌ புருஷத்வத்தில்‌, இயம்‌ அமுக்யதா – இந்த அமுக்யத்வமானது, கதம்‌ – எப்‌படி, கடதே – பொருந்தும்‌ ?
முக்யத்வமானது – பிரதானமாயிருக்குந்‌ தன்மையென்றும்‌, முகத்திலுள்ளமை என்றும்‌ இரு வகைப்படும்‌. கீழ் ஸ்லோகத்தில்‌ முகத்திலுள்ளமை என்ற பொருளைக்‌ கொண்டு ஸிம்ஹத்வமே முகத்திலுள்ள படியால்‌ அதுவே முக்யமாயிருக்கத்‌ தகுமென்று குறிப்பாகக்‌ காட்டினார்‌. இந்த ஸ்லோகத்தில்‌ ப்ரதானத்வம்‌ என்ற பொருளை கைக் கொண்டு, புருஷ ஸூத்தாதிகளில்‌ கூறியபடியினால்‌ புருஷத்வமே முக்கியமென்று ஸ்பஷ்டமாகக்‌ காட்டினார்‌. ப்ரதானமான புருஷத்வமாவது – பக்த – முக்த – நித்யர்களிடமுள்ள புருஷத்வத்தைக்‌ காட்டிலும்‌ உயர்ந்த புருஷத்வம்‌ என்றபடி, புருஷோத்தமனிறே எம்பெருமான்‌. புருஷத்வத்திற்குப்‌ புருஷ ஸூக்தாதிகளில்‌ ப்ரதானத்வ ரூபமான முக்யத்வம்‌ கூறப்பட்ட போதிலும்‌ முகத்திலுள்ளமையாகிய முக்யத்வம்‌ ஸிம்ஹத்வத்திற்கே என்பதை இங்குக்‌ குறிப்பாகக்‌ காட்டியபடி. இவ்விரண்‌டு ஸ்லோகங்களிலும்‌ கவியின்‌ சமத்காராதிசயம்‌ தோன்றுவது காணலாம் –

பும் ஸூக்த பூர்வகைஸ்தை -புருஷ ஸூக்தாதிகள் புகழும்
புருஷத்வம் முக்யமேவ தே விதிதம் –பரத்வம் தானே முக்யம்-கதமியம் அமுக்யதா அஸ்மின் -புருஷத்வம் முக்கியம் அல்ல என்று எப்படி சொல்ல முடியும்
கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ – நீரே அருளிச் செய்ய வேண்டும்
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் -நம்முடைய எம்பெருமான் -ஸர்வமும் முக்கியம் அன்றோ –

—————

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலா ஸாத்த விக்ரியா மநுஜா
ஸ்ரவண அம்ருதேஷு கடிகாஸைல வந ப்ரிய வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –22-

கடிகாசைல வன ப்ரிய – கடிகை மலைக்‌ காட்டை விரும்பி யுறையும்‌ பெருமானே ! பாக்ய லக்ஷ்மீ விரஹ – அத்ருவடமென்னும்‌ செல்வமில்லாமையின்‌, விலாஸ ஆத்த விக்ரியா: மநுஜா: – திருவிளை யாடலால்‌ மன வேறுபாடு கொண்ட மனிதர்கள்‌, ஸ்ரவண அம்ருதேஷு – செவிக்கு அமுதம்‌ போல்‌ இனிய, தே வசஸ்ஸு – தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகளில்‌, ஸ்ரத்தாம்‌ – நம்பிக்‌கயை, ந விதததி – வைப்பதில்லை.
பாக்யமற்றவர்கள்‌ மேன்மேலும் ஸம்ஸாரத்திலேயே வருந்துவதற்கு உறுப்பாகக்‌ காமம்‌ குரோதம்‌ முதலிய மாறுபட்ட எண்ணங்களையே எண்ணி நசித்துப் போகிறார்கள்‌. நரசிம்மப்‌ பெருமாளுடைய சரம ஸ்லோககத்தில்‌ நம்பிக்கை வைத்து அதன்படி நடந்து மோக்ஷம்‌ பெறுகிறார்களில்லை என்று கவி தம்முடைய வருத்தத்தைத்‌ தெரிவிக்கிறார்‌. இதனால்‌ “ஸத்யம்‌ ப்ரவீமி மநுஜா: ஸ்வய மூர்த்வ பாஹு: | யோ மாம்‌ முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தநேதி, ஜீவந்‌ ஜபத்யநுதிநம மரணே ருணீவ | பாஷாணகாஷ்ட ஸத்ருயாய ததாமி முக்திம்‌” என்பது நரஸிம்ஹப் பெருமானருளிய சரம ஸ்லோகம்‌.
மனிதர்களே ! நான்‌ கையை உயர்த்தித் தூக்கி ஸத்யமாகச்‌ சொல்லுகிறேன்‌. (ஊக்கமாகக்‌ கேளுங்கள்‌) யாவனொருவன்‌ ஜீவித்திருக்கும்‌ போது, என்னை – முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தந (மோக்ஷ பூமியைத்‌ தருமவனே, நரஸிம்ஹனை, துஷ்ட ஜநங்களை யழிப்பவனே) என்று, தினந்தோறும்‌ ஜபம்‌ செய்கிறானோ அவன்‌ திறத்தில்‌ நான்‌ கடன்‌ பட்டவன்‌ போல்‌ இருந்து, அவன்‌ மரணமடையும் போது, கல்லைப்‌ போன்றும்‌ கட்டையைப்‌ போன்றும்‌ நினைவற்றுக்‌ கிடக்கிற அவனுக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்‌, என்பது இதன்‌ பொருள்‌. வசஸ்ஸு என்ற பஹு வசனத்தினால்‌ வராஹ சரம ஸ்லோகம்‌, ஸ்ரீராமசரம ஸ்லோகம்‌, ஸ்ரீக்ருஷ்ண சரம ஸ்லோகம்‌ ஆகியவற்றையும்‌ கொள்ளக்‌ குறையில்லை –

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலாஸ -விசுவாசம் இல்லாமல் ஸந்தான லஷ்மி ஸுபாக்யம் கிட்டாமல் இழந்தே போகிறார்களே
ஆத்த விக்ரியா மநுஜா -அவனைப் பற்றிய த்யானம் இல்லாமல் ப்ரயோஜனாந்தர பரர்களாக
ஸ்ரவண அம்ருதேஷு -செவிக்கு இனிய செஞ்சொல்லாக
கடிகாஸைல வந ப்ரிய -தேவரீரே
வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –தேவரீரே அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் நம்பிக்கை கொள்ளாமல்
சத்யம் ப்ரவீத் மனுஷா ஸ்வயம் மூர்த்த பாஹு -திருக்கைகளை மேலே தூக்கி சத்யம் பண்ணினீரே
தே யோ மாம் முகுந்த ஜனார்த்தன அபி -இவ்வாறு திரு நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு
புத்தி சுவாதீனம் இருக்கும் பொழுதே -அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -அனுதினம் யாவதாத்மா பாவி சொல்லிக் கொண்டு இருந்தால்
பாஷாண காஷ்டாம் ஸத்ருசாயா தாதாமி முக்திம் -பிராண பிரயாண சமயம் -கட்டை போல் கிடைக்கும் பொழுது முக்தி அளிக்கிறேன் என்று அருளிச் செய்தீரே-

———–

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த கம்ஸ ஹரணம் வா
அஹரஸ் த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம கிலாந்ய நர்த்த ஜாலாநி–23-

கடிகாசல லுப்த – கடிகை மலையில்‌ பற்றுள்ள பெருமானே ! கார்யம்‌ – உன்‌ காரியம்‌, ஹிரண்ய ஹரணம்‌ – ஹிரண்யனை அழிப்பது. அதவா – அல்லது, கம்ஸ ஹரணம்‌ கம்ஸனை மாய்ப்பது, இங்ஙனமிருக்க, த்வம்‌ – நீ, ஆஸ்ரிதாநாம்‌ – உன்‌னைத்‌ தஞ்ச மடைந்தவர்களுடைய, அநர்த்த ஜாலாநி அகிலாநி – துக்க ஸமூஹங்கள்‌ அனைத்தையும்‌, கிம்‌அஹர: – ஏன்‌ போக்கினாய்‌. ஹந்த – கஷ்டம்‌. ஹரணம்‌ – அழித்தல்‌.
உருவமுடைய அசுரரை மாய்ப்பது தகுதியுடையது. உருவற்ற துக்கத்தை மாய்ப்பது தகுதி யுடையதன்றே என்பது கேள்வி. உருவமுடையது உருவமற்றது என்பதில்‌ வாசியில்லை எம்பெருமானுக்கு, தன்னை யடைந்தவர்களுக்கு விரோதியான கம்ஸ ஹிரண்யாதிகளை அழித்தாப்‌ போல்‌, அவர்களுக்கு விரோதியான ஸம்ஸார துக்கத்தையும்‌ அழித்தானென்பது விடை. தஞ்சம்‌ பற்றிய பக்தர்களை மோஷமடைய வோட்டாமல்‌ தடை செய்கின்றதன்றோ அவர்கள்‌ அனுபவிக்கிற ஸம்ஸார துக்கம்‌.
இங்கு, லுப்தன்‌ – பேராசை கொண்டவன்‌, ஹிரண்யன்‌ – பொன்‌, கம்ஸம்‌ – வெண்கலம்‌, ஹரணம்‌ – திருடுதல்‌ என்று பொருள்‌ கொண்டால்‌. அடே பேராசை கொண்டவனே ! உன்‌ வேலை பொன்னைத்‌ திருடுதல்‌ அல்லது வெண்கலத்தைத்‌ திருடுதலாயிருக்க, ஐயோ துக்கத்தை ஏனப்பா திருடுனாய்‌ அதனால்‌ உனக்கு ஒரு லாபமுமில்லையே என்று வேடிக்கையாக மற்றொரு பொருளும்‌ தோன்றுதல்‌ காணலாம்

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு
தங்கம் வெங்கலம் -உயர்ந்த ரிஷிகளுக்கு மட்டும் அனுக்ரஹம் செய்வதற்கா மட்டும் அல்ல
காலே நரஸிம்ஹ -ருக்மிணித் தாயார் ஸந்தேஸம் – இவனே கண்ணன்-ஹரி -அரித்தல் –
கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு கம்ஸ ஹரணம் வா
அஹரஸ்த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம் அகிலாந் யநர்த்த ஜாலாநி -ஆஸ்ரிதர்களுடைய அனைத்து துக்க ஸமூஹங்களையும் போக்கி அருளி-கண்ணுக்கு தெரிந்தே அசுரர்களை போக்கிய மாத்திரம் அல்ல -ஆஸ்ரிதர் ஹிம்ஸை பண்ணும் பிராக்ருதியையும் போக்கி அருளினீர்-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் போன்ற அடியேன் போல்‌வாரையும் ரக்ஷித்து உனது திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவே அன்றோ இங்கு நித்ய வாஸம் உகந்து செய்து அருளுகிறீர் -என்றவாறு

——–

தோஷா மமாந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா
ததபி குணைஸ் த்வது பக ஸ்தாநே ஹீநாஸ்ரிதா ஜிதா தோஷா –24-

கடிகேந்த்ர – கடிகை மலை யரசனான, ஸ்வாமிந்‌ – ஸ்வாமியே, மம தோஷா: என்னுடைய குற்றங்கள்‌, அந்தரஹிதா – எல்லை யில்லாதவை. தாவகா: குணா: ச உன்னுடையவைகளான குணங்களும்‌ அந்த ரஹிதா: – எல்லை யில்லாதவை. தத்‌அபி ஆயினும்‌, த்வத்‌ உபகதை: – பெரியவனான உன்னை யடைந்த, குணை: – குணங்களால்‌, ஹீந ஆஸ்ரிதா: – தாழ்ந்தவனான ௭ன்னை யடைந்த, தோஷா: – குற்றங்கள்‌, ஜிதா:வெல்லப்பட்டன. ஸ்தாநே – இது யுக்தம்‌ தான்‌.
குணங்களும்‌ குற்றங்களும்‌ ௭ல்லை யற்றவை யென்றால்‌ ஒன்றை மற்றொன்று வெல்ல முடியாது. ஆயினும்‌ குணங்கள்‌ உன்னை அண்டை கொண்ட வலிமையால்‌ என்‌ தோஷங்களை வென்றன என்றபடி, அல்‌லது குணங்கள்‌ குற்றங்கள்‌ என்று சாதாரணமாக எடுத்துக்‌ கொண்டால்‌ குணங்களைக்‌ குற்றங்களே வலிமையுடையன. ஆகிலும்‌ குணங்கள்‌ உன்னைப்‌ பற்றி யிருக்கிற பெருமையினாலே வலிமை பெற்று, என்னைப்‌ பற்றி யிருக்கிற சிறுமையினாலே வலிவிழந்த குற்றங்களை வென்று விட்டன என்றும்‌ கொள்ளலாம்‌.

தோஷா மம அந்த ரஹித -எல்லை இல்லா தோஷங்கள் கொண்ட அடியேன்
அந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா –ஸகல குண பரிபூர்ண ஸம்பன்னன்

அடியேனின் ஸ்வாமி -சொத்து நான் என்று உணர்ந்து கொண்டேன்
ததபி -இப்படி இருந்தாலும்-குணைஸ் த்வது பகை ஸ்தாநே ஹீநா ஸ்ரிதா ஜிதா தோஷா —குணங்கள் போட்டி போட்டிக் கொண்டு உம்மை அணுகி ஆஸ்ரயம் பண்ண அனைத்து தோஷங்களும் தன்னடையே போயினவே

———–

பாதாம் புஜேந லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந
ஸ்ரயதாம் சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநாஸ் ஸகலா–25-

கடிகாசைலப – கடிகை மலைத் தலைவனே ! ப்ரஸ்ருமர மதுநா – பெருகுகின்ற தேனை யுடையதும்‌,  பரார்த்ய கந்தேந – சிறந்த நறுமணமுடையதும்‌ ஆகி, லஸதா விளங்குகிற, பாதஅம்புஜேந – திருவடித்‌ தாமரையினால்‌, ஸ்ரயதாம்‌ – உன்னைத்‌ தஞ்சமாகப்‌ பற்றியிருப்பவருடைய, ஸகலா: விபரீத வாஸநாஸ்– எல்லா வகையான – மாறுபட்ட விஷயப்‌ பற்றுகளையும்‌, சமயஸி– தணியச் செய்கிறாய்‌.
எம்பெருமான்‌, தேன்‌ வெள்ளமிடுவதும்‌ கம கம வென்று பரிமளிப்பதுமான தனது திருவடியை பக்தர்கள்‌ அனுபவிக்கும்படி செய்து அதில்‌ பற்றை யுண்டாக்கி, அப்பற்றுக்கு விரோதியாய்‌ இதற்கு முன்பிருந்த அவர்களுடைய துர் விஷயப்‌ பற்றாகிய துர்க் கந்தத்தைத்‌ தணிக்கிறான்‌ என்றபடி

பாதாம் புஜேந -திருவடித்தாமரைகளிலே-லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந -நறு மணம் மிக்க தேன் பிரவஹிக்க-ஸ்ரயதாம் -ஆஸ்ரிதர்களுடைய-சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநா ஸகலா –காம க்ரோதாதிகள் துர்கந்தங்களைப் போக்கி அருளி
தன்னிடமே வைத்து அனுபவிப்பிக்கிறான் அன்றோ

—————

ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா நிபுணே ந பதவிதா க்ரதிதா
ஸூதராம் த்வயைவ கடிகா நாயக ஸோபேத ஸூக்தி ஹாரலதா –26-

கடிகா நாயக – கடிகை மலையில்‌ எழுந்தருளியுள்ள நாயகனே ! (தலைவனே )!) ப்ரகுண உதயம்‌ – சிறந்த (1) மென்மை, செவிக்கினிமை முதலிய (2) குளிர்த்தி, பளபளப்பு முதலிய – குணங்களின்‌ தோற்றத்தைப்‌ பெற்று: ப்ரஸாதம்‌ – (1) எளிமையாகப்‌ பொருள்‌ புரிதலை (2) அழுக்கற்றுத்‌ தெளிவாயிருத்தலை. ப்ராப்தா – அடைந்ததும்‌, நிபுணேந ஸமர்த்தனான, பதவிதா – (1) வ்யாகரண சாஸ்த்ர மறிந்தவனாலே (2) கோக்குமிடமறிந்தவனாலே, க்ரதிதா – (1) சொல்லோடு சொல்‌ (2) முத்தோடு முத்து சேர்க்கப்பட்டதுமான, ஸக்தி ஹாரலதா – அடியேனுடைய (நல் வார்த்தைகள்‌ பொருந்திய) (1) ஸ்லோக வரிசையாகிய (2) முத்து மாலையானது. த்வயா ஏவ – உன்னாலேயே, சோபேத – ஒளி பெறுவதாகும்‌.
கவி தாம்‌ இயற்றும்‌ ஸ்லோக வரிசையை முத்து மாலையாக உருவகம்‌ செய்கிறார்‌ இதனில்‌. இரண்டிற்கும்‌ உரிய அடைமொழிகளை சிலேடை வகையில்‌ அமைத்திருக்கிறார்‌. பதவுரையில்‌ (1) என்று குறித்தவற்றை ஸ்லோகங்களுக்கும்‌, (2) என்று குறித்தவற்றை முத்து மாலைக்கும்‌ தொடர்பு படுத்துக. ஸ்லோகத்திற்கு குண மாவன – கடகட வென்றிராமல்‌ மெத்தென்றிருத்தலும்‌ இனிமையும்‌ சப்தாலங்காரமும்‌ அர்த்தாலங்காரமும்‌ பிறவும்‌ ஆம்‌. முத்துக்குக்‌ குளிர்த்தியும்‌ அணியுமவர்‌ கழுத்தில்‌ உறுத்தாமல்‌ ம்ருதுவாயிருத்தலும்‌ பிறவும்‌ ஆம்‌. ப்ரஸாதமாவது தெளிவு. அது *லோகத்திற்கு எளிதில்‌ பொருள்‌ புரிந்து கொள்ளும்படி அமைந்திருத்தலும்‌, முத்துக்கு அழுக்கின்மையும்‌ ஆம்‌. அவை யிரண்டும்‌ பதவிதாக்ரதிதமாயிருக்கும்‌. ஸ்லோகம்‌ வியாகரண சாஸ்த்ர மறிந்தவனால்‌ தொகுக்கப்பட்டிருக்கும்‌. பதம்‌ வ்யாகரண சாஸ்த்ரம்‌. இனி முத்து மாலை கோக்குமிடமறிந்தவனாலே கோக்கப்பட்டதாய இருக்கும்‌. அதாவது முத்துக்களில்‌ சில பெரிதாயும்‌ சில சிறிதாயும்‌ சில நடுத்தரமாயும்‌ இருக்கும்‌. மாலையிலும்‌ முதல்‌ முடிவு நடு முதலிய சில இடங்கள்‌ இருக்குமல்லவா ? அதில்‌ எத்தகைய முத்தை எந்த இடத்தில்‌ வைத்துக் கோத்தால்‌ மாலை சோபையைப்‌ பெறுமோ அந்த இட மறிந்தவனாலே கோக்கப்பட்டதாயிருக்கு மென்றபடி. பதம்‌ – காக்குமிடம்‌. ஸூக்தி: நல் வார்த்தைகள்‌ அமைந்த ஸ்லோகம்‌. ஹாரலதா – முத்து மாலை. ஹாரம்‌ – முத்து. முத்து மாலை மெல்லியதாக லதை (கொடி) போன்றிருத்தலால்‌ “ஹாரலச ” எனப்பட்டது. இங்கு நாயக சப்தம்‌ பாட்டுடைத்‌ தலைவனையும்‌, ஹாரத்தில்‌ பத்ய மணியையும்‌ குறிக்கும்‌. சிறந்த பாட்டுத் தலைவனாகிய நரசிங்கப்‌ பெருமாளாலே இவ் வம்ருத பலாவளி என்னும்‌ ஸ்தோத்ரம்‌ சோபிக்கிறது. உயர்ந்த – நடுவில்‌ பதித்த மணியினால்‌ முத்து மாலை சோபிக்கிறது-

கடிகா நாயக-ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா -மென்மை பொருந்திய பா மாலை -எளிமையாக பொருள் சொல்லும் ஸ்ரீ ஸூக்திகள்-குளிர்த்தி -பள பளத்து -ஸூத்தியையும் அளிக்கும்-மா முனிகள் ஆச்சார்யர் ஆணையால் செய்யப்பட்டதால் தாமே மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்-நிபுணேந பதவிதா க்ரதிதா-வியாகரண சாஸ்திரத்தில் நிபுணரான தன்னால் சேர்க்கப்பட்ட முத்து மாலை போல் கோக்க ஸாமர்த்யம் மிக்கவரால் செய்யப்பட்டதே ஸூதராம் த்வயைவ -உம்மைப் பற்றிய இது உம்மாலேயே
ஸோபேத ஸூக்தி ஹாரலதா —சோபனம் ஒளி மிக்கு விளங்குகிறதே -அப்படியே விளங்கட்டும் நாயகனாய் -நடு நாயக எம்பெருமானாரே கடிகா நாயகர் என்றுமாம் –
இவரையே திரு உள்ளத்தில் வைத்து குரு பரம்பரா ஹாரத்துக்கு மங்களா ஸாஸனம் என்றுமாம் –

—————

ஸரஸ ஸூமநோ அபி ராமோ ஸாது ச ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸா
ஸமுபைதி ஸூக்தி லதிகா சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் –27-

அம்ருதபல – அம்ருதம் போல்‌ இனிக்கும்‌, அழியாத பழமாகிய அக்காரக் கனிப்‌ பெருமானே ! தவ ஸங்காத்‌ – உன்னுடைய ஸம்பந்தத்தாலே, ஸூக்தி லதிகா அடியேனுடைய (1) ஸூக்தியாகிற (2) கொடியானது, ஸாது – நன்றாக, ஸம்ஸ்கார ஸம்ப்ருத உல்லாஸா – (1) அடிக்கடி கவித்வம்‌ செய்வதால்‌ உண்டான பழக்கத்தாலே நிறைந்த ப்ரகாசத்தை யுடையதாகவும்‌ (2) நீர் விடுதல்‌ எருஇடுதல்‌ முதலிய சீர்படுத்துதலாலே நிறைந்த விளக்கத்தை யுடையதாகவும்‌, ஸரஸஸுமந:அபிராமா ச – (1) ரஸிகர்களான வித்வான்‌௧ளுக்கு இன்ப மூட்டுவதாகவும்‌ (2) தேனோடு கூடிய புஷ்பங்களாலே, பார்ப்பவர்க்கு இன்ப மூட்டுவதாகவும்‌ இருந்து, ஸாபல்யம்‌ – (1) மோக்ஷமாகிய பலத்தோடு புருஷார்த்தத்தோடு கூடியிருத்தலையும் (2) இனிமையான பழத்தோடு கூடியிருத்தலையும்‌, ஸமுபைதி ஹி – அடைகின்றதல்லவா ?
இது தன்னில்‌ தம்முடைய ஸ்ரீஸூக்தியை ஒரு கொடியாக உருவகப் படுத்துகிறார்‌. ஸ்ரீஸூக்தியானது கவித்வம்‌ செய்து பழகிய ஒரு கவியால்‌ செய்யப்பட்டதாகில்‌ மிகவும்‌ விளக்கம்‌ பெற்று ரஸிகர்களான வித்வான்களுக்கு உகப்பை யூட்டி, இறுதியில்‌ எம்பெருமானுடைய ஸம்பந்தத்தாலே, கவித்வம்‌ செய்தவனுக்கும்‌, அதைப் படிப்பவர்க்கும்‌ மோக்ஷமாகிய பலத்தைப்‌ பெறுவிக்கும் கொடியானது நீர்‌ விட்டு எருவிட்டுத்‌ திருத்தம்‌ செய்யப்பட்டால்‌ தேன்‌ நிறைந்த மலர்களோடு கூடியிருந்து கடைசியில்‌ நல்ல பழங்களையும்‌ நமக்குத்‌ தருமென்றபடி. இங்கும்‌ (1) என்று குறிப்பிட்டவற்றை ஸ்ரீஸூக்திக்கும்‌ (2) என்று குறிப்பிட்டவற்றைக்‌ கொடிக்கும்‌ பொருத்திக் கொள்க. இதிலும்‌ சிலேடையுள்ளமை காணலாம்

ஸரஸ ஸூ மநோ அபி ராமோ ஸாது ச –மனங்களை ஈர்க்கும் வண்ணமாயும் -லலிதமான பதங்களைக் கொண்டும் -ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸூ –அர்த்த கௌரவமும் உல்லாஸமாக ஸ்துதி பண்ணவும்-ஸமுபைதி ஸூக்தி லதிகா -இந்த ஸ்லோகமும்
சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் —-அக்காரக் கனியே -உமது சம்பந்தத்தால் இந்த ஸ்ரீ ஸூக்தியும் அம்ருதமானதே-அனுசந்திப்போர்க்கு உமது திருவடி இணைகளையே கொடுக்கும் என்பது திண்ணம் என்றவாற-சம்ஸ்காரம் -கொடி போல் படரும் –நீர் உரம் போல்-சேர்த்து ஆகர்ஷகமாக இருக்கும் -அம்ருத கனிகளையும் கொடுக்கும் அன்றோ -பொதுவான அர்த்தமும் உண்டே

————–

ஸத் பக்ஷ பாத ஸூபகம் ஸந் மாநஸ ஸரஸிகாம்புஜா ஸக்தம்
புவநாஸ்ரயம் விஸூத்தம் புத்யே கடிகா வநெள ஸம் ஹம்ஸம் –28-

ஸத்பக்ஷபாத ஸுபகம்‌ – (1) நல்லோர்களிடம்‌ பக்ஷபாதம்‌ – ஒரு தலையில்‌ பற்று உள்ளமையினால்‌ மனத்தைக்‌ கவருமவனும்‌, (2) அழகிய சிறகடித்தலாலே மனத்தைக் கவருமதும்‌, ஸந்மாநஸ ஸரஸிகா அம்புஜ ஆஸக்தம்‌ (1) நல்ல மனமுடையவர்களென்னும்‌ தடாகத்தில்‌ உள்ள ஹ்ருதய கமலத்தில்‌ மிக்க பற்றுடையவனும்‌ (2) நல்ல மானஸ ஸரஸ்ஸில்‌ முளைத்த தாமரை மலர்களிடம்‌ மிக்க பற்றுடையதும்‌, புவந ஆஸ்ரயம்‌- (1) பூமியை ஆதாரமாக உடையவனும்‌. (2) நீரை ஆதாரமாகவுடையதும்‌, விசுத்தம்‌ – (1) மிகவும்‌ பரிசுத்தனானவனும்‌, (2) மிகவும்‌ வெண்மை நிறமுடையதுமான, கடிகாவந ஓகஸம்‌ – (1) கடிகை மலைக் காட்டை இருப்பிடமாகவுடையவனுமான எம்பெருமானை, ஹம்ஸம்‌ – (2) ஹம்ஸமாக, புத்யே – கருதுகிறேன்‌.
இதில்‌ கடிகை மலை நாயகனை ஹம்ஸமாக உருவகிக்கிறார்‌. விசேஷணங்களை முன்பு போல்‌ எம்பெருமானுக்கும்‌ ஹம்ஸத்துக்கும்‌ பொருந்தும்படி அந்வயித்துக்‌ கொள்க. இது தன்னிலும்‌ சிலேடை காணத்தக்கது. புவனம்‌ – பூமி ஜலம்

ஸத் பக்ஷ பாத ஸூபகம் -நீர் நிலையைக் கண்டதும் சிறகு அடித்து மகிழ-அத்தைக் கண்டவர் மனம் வழங்குவார்கள் அன்றோ –ஆஸ்ரிதர் பக்கல் பக்ஷ பாதி எம்பெருமான் -மனத்தைக் கொள்ளை கொள்வான் -ஸந் மாநஸ ஸரஸி ஜாம்பு ஜா ஸக்தம் –நீர் நிலையில் தாமரை மேல் அபி நிவேசத்துடன் –நீராய் அலைந்து கரைந்து உருக்கும் மானஸ தாமரையில் மகிழ்ந்து இருப்பான்-புவநாஸ்ரயம் வி ஸூத்தம் புத்யே –நீரையே ஆச்ரயமாகக் கொண்டு வெண்மையாக –ஸம்ஸார கந்தமே இல்லாமல் -அமலன் ஆதி பிரான் -இச்சா க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -கடிகா வநவ் ஸம் ஹம்ஸம் –இந்த ஹம்சத்தையே ப்ரத்யஷிக்கிறோமே இங்கு –

—————

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம்
கமலாலய யாந்தரங்கம் கலய கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம் –29-

ஸுமநஸ்‌ ரஸ க்ருத ஸங்கம்‌ – (1) ஞானிகளுடைய பக்தியாகிற ரஸத்தில்‌ பற்று வைத்தவனும்‌, (2) புஷ்பத்தின்‌ ரஸமான தேனில்‌ பற்று வைத்துள்ளதும்‌. ஸ்வரண விசேஷேண – (1) தனது பேச்சாகிய ஒலியினாலே (2) தனது ரீங்காரமாகிய ஒலியினாலே, தோஷித அநங்கம்‌ – (1) மகிழ்விக்கப்பட்ட – ப்ராக்‌ருத சரீரமற்ற முக்தர்களை யுடையவனும்‌, (2) மகிழ்விக்கப்பட்ட மந்மதனை யுடையதும்‌, கமலாலயா அந்த ரங்கம்‌ – தாமரையை இருப்பிடமாகவுடைய பிராட்டியிடம்‌ மனத்தைச்‌ செலுத்துமவனுமான. கமல ஆலய அந்த: அங்கம்‌ – தாமரை மலராகிய வீட்டினுள்ளே தனது உடலை வைத்துள்ளதுமான, கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம்‌ – கடிகை மலையில்‌ முளைத்த கற்பகத் தரு போன்று அனைத்தையும்‌ அனைவர்க்கும்‌ வழங்கும்‌ (1) பெருமானாகிய (2) வண்டை, கலயே – த்யானம்‌ செய்கிறேன்‌.
இதில்‌ கடிகைக் கற்பகமரமாக எம்பெருமானைக்‌ குறிப்பிட்டு அப்பெருமானையே வண்டாக உருவகித்துள்ளார்‌ அல்லது கடிகை மலையையே கற்பக மரமாகவும்‌ எம்பெருமானை அதில்‌ படிந்த வண்டாகவும்‌ உருவகிக்கிறாரென்றலும்‌ பொருந்தும்‌.
ஸுமநஸ: (1) புஷ்பங்கள்‌ (2) ஞாநிகள்‌. உலகிலுள்ள மக்களுக்குக்‌ காமத்தை யுண்டு பண்ணும்‌ மந்மதனுக்கு வண்டுகளின்‌ ரீங்காரவொலி உதவுகின்றமையால்‌, வண்டுகள்‌ மன்மதனுக்கு மகிழ்ச்சி யூட்டுவனவாம்‌. பரம பதத்தில்‌ எம்பெருமானுடைய பேச்சுக்கள்‌ முக்தி பெற்றவர்களுக்கு ஸந்தோஷத்தை விளைவிக்கும்‌. கதா மாம்‌ பகவாந்‌ ஸ்வகீயயா ஸ்நிக்த கம்பீர மதுரயா கிரா பரிசர்யாயாம்‌ ஆஜஞாபயிஷ்யதி (எப்போது அடியேனை)-பகவான்‌ தன்னுடையதான – அன்‌பு ததும்பி, கம்பீரமாய்‌ இனிமையான பேச்சாலே கைங்கர்யங்களில்‌ ஆணை யிடப்‌ போகிறார்‌ என்கிற ஸ்ரீவைகுண்ட கத்யம்‌ (சூர்‌ 4) காணத்தக்கது. அநங்க: (1) சிவனால் உடலழியப்‌ பெற்ற-மந்மதன்‌ (2) இந்த ஊன வுடல்‌ கழியப்பெற்ற முக்தன்‌. கமலாலயா – அந்தரங்கம்‌ என்று எம்பெருமான்‌ விஷயத்தில்‌ பிரிக்க. வண்டு விஷயத்தில்‌ கமலாலய – அந்த அங்கம்‌ என்று பிரிக்க –

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் –ஆஸ்ரித ஹ்ருதயத்தில் பக்தி வெள்ள ரசத்தில் ஆழ்ந்து
வண்டு மதுகரம் -ரீங்காரம் -ஹரி சப்தம் -ஆச்சார்ய புருஷர்கள் –
ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம் -இருப்பதையே கேட்டு -சரீரம் கழித்து
மன்மதன் அநங்கன் -உடல் அழிந்து -கரும்பு வில் மலர் பாணம்-அவனுக்கும் ஆனந்தம் கொடுக்கும்
கமலாலய யாந்தரங்கம் கலய –ஸ்ரீ அந்தரங்க பரிகரமாக தியானித்து அடைவோம்
வந்து தாமரையையே இருப்பிடமாக கொள்ளுமே-வண்டை த்யானம் பண்ணுவோம்
இவரே வண்டு -மா முனிகள் திருவடித் தாமரைகளையே பற்றி இருப்பாரே –
கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம்-நம்மை ஆக்கி தன்னையே தரும் கற்பகம்-

——————

துர்கதி துக்கித சித்தா துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸே வ்யாம்
பிராஜ்ஞா ப்ரயாந்தி நித்யாம் பூதிம் கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–30-

துர்கதி து:கித சித்தா: (1) ஸம்‌ஸாரமென்னும்‌ நரகத்தில்‌ வசிப்பதனால்‌ துன்புற்ற மனத்தையுடைய (2) வறுமையினால்‌ இன்புற்ற மனத்தை யுடைய, ப்ராஜ்ஞா: – (1) ஞானிகள்‌ (2) புத்தி சாலிகள்‌, துஷ்கர யோகாந்‌ – வருந்திச்‌ செய்ய வேண்டிய (1) கரும யோகம்‌ ஞான யோகம்‌ பக்தி யோகம்‌ முதலிய மோக்ஷோபாயங்களை, (2) உடலுழைப்பு வாணிபம்‌ முதலான பணம்‌ சம்பாதிக்கும்‌ ௨பாயங்களை, விமுச்ய – அறவே விட்டு விட்டு, கடிகாத்ரி பூபம்‌ – கடிகை மலை யரசனை, ஆலம்ப்ய – தஞ்சமாகப் பற்றி, ஸுகஸேவ்யம்‌ வருத்தமின்றி அனுபவித்தற்கு உறிய நித்யாம்‌ பூதிம்‌ – (1) நித்ய விபூதி யென்னும்‌ பரமபதத்தை (2) அழியாத செல்வத்தை. ப்ரயாந்தி– அடைகின்றனர்‌.
வறுமையினால்‌ வாடியவர்கள்‌ பணமீட்டும்‌ – வாணிபம்‌ முதலிய வருத்தந்தரும்‌ வழிகளை விட்டு கடிகைமலை யரஸை த்‌ தஞ்சமாகப் பற்றி நீண்ட நாள்‌ நீடித்திருக்கக் கூடிய செல்வத்தைப்‌ பெறுகிறார்கள்‌-இறப்பிறப்புத் தொடர்ச்சி யென்னும்‌ இவ் வுலக வாழ்க்கையினால்‌ வருந்தியவர்கள்‌ மோக்ஷத்திற்கு உரிய வருத்தம்‌ தருகின்ற கரும யோகாதிகளான உபாயங்களை விட்டு ஸித்தோபாயமான கடிகை மலை யரசனைச்‌ சரணமாகப் பற்றி, வருத்தமே யில்லாத ஸுகமே வடிவமான பரம பதத்தை அடைகிறார்கள்‌. இதனால்‌ கடிகை யெம்பெருமான்‌ ஐஸ்வர்யார்த்திகளாலும்‌, மோக்ஷார்த்திகளாலும்‌ சேவிக்கப் படுகிறான்‌ என்று, இரண்டு வகைப்பட்ட கருத்துக்களும்‌ ஒரே வகைச்‌ சொற்களால்‌ சிலேடை வகையில்‌ காட்‌டப்பட்டுள்ளமை காணத் தக்கது.
இங்கு ஸுக ஸேவ்யம்‌ என்று பாடமிருந்தால்‌ அது கடிகாத்ரி பூபம்‌ என்பதற்கு விசேஷணமாய்‌, கஷ்டமான உபாயங்களை விட்டு ஸுக ஸேவ்யனான எம்பெருமானைப்‌ பற்றி என்று பொருள்‌ தந்து சிறப்பைப்‌ பெறும்‌. மற்றை உபாயம்‌ கஷ்ட ஸாத்யம் எம்பெருமானாகிய உபாயம்‌ ஸுக ஸாத்யம்‌ என்‌றதன்றோ ஆசிரியருக்குக்‌ கருத்தாக இருக்க அடுப்பது. ப்ராஜ்ஞா:– (1) ஸுஃலபமான உபாயத்தை யறிந்த புத்திசாலிகள்‌ (2) ஞானிகள்

பிராஜ்ஞா துர்கதி துக்கித சித்தா –-நந்தா நரகம் -வெந்நரகம் -ஸம்ஸாரம் வெறுத்து இருக்கும் ஞானிகள்-ஐஸ்வர்யம் இழந்த துக்கம்-துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸேவ்யாம்–உபயாந்தரங்கள் துஷ்கரம் –அப்ராப்யம் -என்று விட்டு —ப்ரீதி காரித கைங்கர்யம் செய்ய வழியாக ப்ரயாந்தி நித்யாம் பூதிம் -நித்ய விபூதி அளிக்கும்
புத்தியாசாலியாக இருந்தவர் செல்லும் வழியான பிரபத்தி மூலம் பெறலாமே
கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–பூ பாலன் இங்கே நித்ய வாஸம் செய்ய -அவனை ஆஸ்ரயித்து –

—————–

கலயந்தி நைவ சந்தஸ் கா புருக்ஷத்வாரி காரணாத் கதநம்
கடிகா ஸிகரி முகுந்தம் கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா –31-

ஸந்த: – எம்பெருமானுடைய பெருவள்ளல்‌ தன்மையை அறிந்த புத்திசாலிகள்‌. கடிகா ஸிகரி முகுந்தம்‌ – கடிகைமலையில்‌ எழுந்தருளியுள்ள முகுந்தனென்கிற, ஸுலபம்‌ எளிதில்‌ கிடைக்கத் தக்க, அநவதிம்‌ – எடுக்க எடுக்கக் குறையாத, கமபி – ஒப்பற்ற, நிதிம்‌ நிதியை – புதையலை, லப்த்வா – அடைந்து. (அதன் பிறகு) காபுருஷ த்வாரி இழிந்தவனுடைய வீட்டு வாசலில்‌, காரணாத்‌ – செல்வம்‌ காரணமாக, கதனம்‌ – (அவனைப்‌ பற்றிக் )கவி சொல்லுவதை, நைவ கலயந்தி – எண்ணவே மாட்டார்கள்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ – துஷ்கர யோகமென்னும்‌ – வருந்திச்‌ செய்யும்‌ உபாயத்தைக்‌ கூறியபடியால்‌ அதில்‌ சேர்ந்த உபாயமான – நீசர் தம் வாசல்‌ பற்றித் துதி சொல்லுதலையும்‌ புத்திமான்கள்‌ விட்டுவிட்டார்கள்‌ – எம்பெருமானைப்‌ பற்றிய பிறகு என்று இது தன்னில்‌ கூறி யருளினார்‌. முகுந்த:- (முஞ்ச, குஞ்ச, ததா )-மோக்ஷத்தையும்‌ இவ் வுலக வாழ்வையும்‌ கொடுப்பவன்‌ என்று பொருள்படும் –

கலயந்தி நைவ சந்தஸ் -நல்ல புத்தி சாலிகள் -அவனே உபாயம் உபேயம் என்று அறிந்தவர்கள்-கா புருக்ஷத்வாரி காரணாத் கத நம் -செல்வத்துக்கு கா புருஷன் வாசலில் நிற்காதவர் -விரும்பாவதவர்-கடிகாதி ஸிகரி முகுந்தம் -இவனே முக்தி தருபவன் -மோக்ஷமும் இஹ லோக பலன்களையும் அளிப்பவன்-கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா –ஆராதனைக்கு எளியவன் –அள்ள அள்ள குறையா வைத்த மா நிதி இவனே –
இவனே நவ நிதி என்று மேல் ஸ்லோகம்

காரா காரே வரவரமுநே வர்த்தமானஸ் சரீரே |
தாபைரேஷத்ரிபிரபி சிரம் துஸ்தரைஸ் தப்யமாந: ||
இச்சந் போக்தும் ததபி விஷயானேவ லோக: க்ஷுதார்த்தோ |
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர்த்வாரி ப்ருத்வீ பதீநாம் ||-வர வர முனி சதகம் 68–மறந்தும் அஸேவ்ய ஸேவை செய்யேன் –மானிடம் கவி பாட வந்தேன் அல்லேன் –

ஹே வரவரமுநியே! உடல் என்னும் சிறையில் இருந்து கொண்டு தாண்ட முடியாத மூவகையான தாபங்களால் வெகு காலமாகத் தடுக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் இந்த ஜனம் விஷயங்களை அநுபவிப்பதிலே ஆசை கொண்டு பசியால் பீடிக்கப் பட்டவனாக உம்மை விட்டு அரசர்களுடைய வெளி வாயிற்படிகளில் புரளுகிறான்.

————————-

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் பத்ம மபி மஹா பத்மம்
குந்தம் அஸிதம் முகுந்தம் கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -32–

மகரம்‌ – மீனாக அவதரித்தவனும்‌, அத – மேலும்‌, கூர்ம ரூபம்‌ – ஆமை யுருவம்‌ கொண்டவனும்‌, வர சங்கம்‌ – உயர்ந்த சங்கை யுடையவனும்‌, பத்மம்‌ – தாமரை மலரைக்‌ கையிலேந்தியவனும்‌, மஹா பத்மம்‌ – பூஜிக்கத் தக்க ஸ்ரீமஹா லஷ்மியை (மனைவியாக) உடையவனும்‌, குந்தம்‌ – பாபத்தைப்‌ போக்குமவனும்‌, அஸிதம்‌ – நீல வர்ணமுடையவனும்‌, முகுந்தம்‌ – மோக்ஷ பூமியைத் தருமவனுமாகிய, கடிகாத்ரி நவநிதிம்‌ – கடிகாத்ரி எம்பெருமானென்னும்‌ – (மகரமும்‌ கூர்மமும்‌ உயர்ந்த சங்கமும்‌ பத்மமும்‌ மஹா பத்மமும்‌ குந்தமும்‌ அஸிதமும்‌ (நீலமும்‌) முகுந்தமும்‌ கர்வமுமாகிய) புதிய – அபூர்வமான நிதியை, கோ வா – எவன் தான்‌, ந பஜேத்‌ – அடையமாட்‌டான்‌.
இந்த ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை ஒன்பது வகையான நிதியாக அருளிச் செய்கிறார்‌. மஹா பத்மம்‌, சங்கம்‌, மகரம்‌, கச்சபம்‌, முகுந்கம்‌. குந்தம்‌, நீலம்‌, கர்வம்‌ என்று நிதிகள்‌ ஒன்பது. இவற்றில்‌ ஒன்று மற்றொன்றாக இராது. இவை யெல்லாமாகவும்‌ எம்பெருமானிருக்கிறானென்று அவனை நவநிதி (புதிய – எங்கும்‌ காணாத நிதி) என்கிறார்‌. ஒன்பது வகைப்பட்ட நிதியால்‌ கிடைக்கும்‌ பயனெல்லாம்‌ எம்பெருமானொருவனால்‌ கிடைக்குமென்றபடி. இந்த இரண்டு ஸ்லோகங்களிலும்‌ கடிகை மலை யரசனை நிதியாகக்‌ குறிப்பிடுகின்றமை காணத்தக்கது. இந்த ஸ்லோகத்தில்‌ எட்டு வகை நிதிகளையே குறித்துள்ளார்‌ அபி என்றதனால்‌, கர்வம்‌ என்ற நிதியையும்‌ சேர்த்துக்கொள்க. எம்பெருமான்‌ பக்ஷத்தில்‌ கர்வமென்பது வாமனனுக்கு வாசகமாகும் –

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் -மீன் =மத்ஸ்ய மேல் கூர்மமாகவும் -உயர்ந்த சங்கு ஆழ்வானைக் கொண்டவனும்-பத்ம மபி மஹா பத்மம் -தாமரை மலரைக் கொண்டவனும்
திருவையும் திரு மார்பில் கொண்டவனும்
குந்தம் -பாபம் போக்கும் -பரசுராமன்-அஸிதம் -நீல மேக ஸ்யாமளன்
முகுந்தம் -மோக்ஷம் அளிக்கும் -ஸாஷாத் ஸ்ரீ மன் நாராயணன்
கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -புதியதாக அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமும்-மஹா பத்ம பத்ம சங்க மகர சத்கப முகுந்த குந்த நீளா கர்வ –நவ நதிகள் புராணங்கள் சொல்லும்=ஒன்றுடன் வேறே நிதியைச் சேர்க்க முடியாது
இந்த தசாவதாரங்களை சேர்த்தாலும் அக்காரக்கனிக்கு ஒப்பு ஆகாதே இவனே சீரிய நிதி என்றவாறு –

———-

காஞ்சன மயே ஸ்புரந்தம் கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே
கிருஷ்ண மணி மர்க ரஹிதம் கேவா ந விதந்தி க்ருத்ஸ்நதஸ் ஸ்லாக்யம் –33-

கடிகா மஹீப்ருத: – கடிகை யென்னும்‌ மலையினுடைய, காஞ்சந மயே பொன் மயமான, ஸிகரே – கொடு முடியில்‌, ஸ்புரந்தம்‌ – விளங்குகின்றதும்‌, அர்க்க ரஹிதம்‌– விலை மதிப்பற்றதுமான, ஞ்சந – ஒரு க்ருஷ்ணமணிம்‌ – கரு மணியை, க்ருத்ஸ்நத: எல்லா மணிகளைக்‌ காட்டிலும்‌, ஸ்லாக்யம்‌ – உயர்ந்ததாக, கே வா – அறிவு படைத்த யார் தான்‌, ந விதந்தி – அறிய மாட்டார்கள்‌.
இதில்‌ எம்பெருமானை நீல மணியாக வருணிக்கிறார்‌. தங்கத்தில்‌ அழுத்திய நீல மணி மிகவும்‌ சோபிக்கும்‌. அது போல தங்க மயமான கடிகைக் கொடு முடியில்‌ எழுந்தருளியுள்ள நீல மணி வண்ணனான எம்பெருமானும்‌ சோபிக்கிறான்‌. க்ருத்ஸ்நத: என்பதற்கு ஜாதியாலும்‌ ப்ரகாசத்தாலும்‌ பொன்னோடு சேர்ந்திருப்பதனாலும்‌ – என்றும்‌ பொருள்‌ கொள்ளல்‌ தகும்

காஞ்சன மயே -பொன் வண்ணமாக-ஸ்புரந்தம் -விளங்கும் கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே -கனக கிரியில் காள மேகம்-கிருஷ்ண மணி மர்க ரஹிதம் -நீல மேக ஸ்யாமள ரத்ன மணி-கேவா ந விதந்தி க்ருத்ஸ் நதஸ் ஸ்லாக்யம் –உயர்ந்த ஒப்பற்ற இந்த செல்வத்தை அறிவாளிகள் யார் தான் அறிய மாட்டார்கள்
கீழ் நவ நிதி -இங்கு ஒப்பார் மிக்கார் இலையாய நீல மணி

சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியனவே நவநிதிகள் ஆகும்.-குபேர சம்பத்துக்களாக அவனருகில் இந்த நவநிதிகளும் திகழ்வதாகச் சொல்கின்றன புராணங்கள்-அரிசி, கோதுமை துவரை, பயறு, கொள்ளு, உளுந்து, எள், காராமணி, கடலை என்பவை நவ தானியங்கள் எனப்படும்.-கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சரயூ, குமாரி, பயோஷ்னி என்பவை நவ நதிகள் எனப்படும்.-சூரியன் சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு கேது என்னும் நவக்கிரகங்களும் முறையே சிவன் உமை முருகன், திருமால், பிரம்மா, குரு, இந்திரன், எமன், பத்திரகாளி சித்திரகுப்தன் ஆகியோரே நவக்கிரகங்களின் நவ சக்தியாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.-கோமேதகம், நீலம், பவளம், முத்து, புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், வைடூரியும் என்பவை நவ மணிகள் எனப்படும்.

—————-

ஸம் ஸரண ஸரணி பாந்தா தாப த்ரய தரணி கிரண சந்தப்தா
ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீதளச்சாயம் –34-

ஸம் ஸரண ஸரணி பாந்தா:- ஸம்ஸாரமாகிய வழியில்‌ எப்போதும்‌ திரியும்‌ வழிப் போக்கர்களாய்‌, தாப த்ரய தரணி கிரண ஸந்தப்தா: – தாபத்ரய மென்கிற ஸூர்ய கிரணங்களினால்‌ மிகவும்‌ தபிக்கப்பெற்ற மனிதர்கள்‌, கடிகாத்ரெள – கடிகை மலையில்‌ (உள்ள), ஸீதளச்சாயம்‌ – குளிர்ந்த நிழலை யுடைய, ஹரி சந்தனம்‌ – ஹரி சந்தன மென்கிற தேவ லோக வ்ருக்ஷத்தை (எம்பெருமானை) ஏத்ய – அடைந்து, ஆஸ்வஸிதா:பவந்தி இளைப்பாறுகின்றனர்‌.
தாப த்ரயம்‌- ஆத்யாத்மிகம்‌ ஆதிபெளதிகம ஆதிதைவிகம்‌ என்ற மூன்று தாபங்கள்‌. மன வருத்தமும்‌ உடல்‌ நோயும்‌ ஆத்யாத்மிகம் . தேள்‌ பாம்பு புலி சிங்கம்‌ மனிதன்‌ ஆகியவற்றால்‌ உண்டாகும்‌ கஷ்டம்‌ ஆதி பெளதிகம்‌. மழை வெயில்‌ காற்று முதலியவற்றால்‌ பிறக்கும்‌ வருத்தம்‌ ஆதிதைவிகம்‌. இவற்றை ஸம்ஸாரமாகிற வழியில்‌ செல்லும்‌ வழிப் போக்கர்களுக்குத்‌ தாபமாகச்‌ சொன்னார்‌. ஸூரிய வெப்பத்தினால்‌ துக்கமடைந்தவன்‌, நிழல்‌ செய்யும்‌ மரத்தை அணுகித்‌ தாபந்தீரப்‌ பெறுவது போல்‌, இம்மூவகைத்‌ தாபங்களினால்‌ வருந்துமவன்‌ “வாஸுதேவ தரு” என்று ப்ரஸித்தமான எம்பெருமானை யடைந்து தாபந்தீரப்பெற்று மகிழ்கிறான்‌ என்கிறார்

ஸம் ஸரண ஸரணி பாந்தா –ஸம்ஸார சாகரம் பாலை வனம் -கொடு வெந்நரகம்
தாப த்ரய தரணி கிரண சந்தப்தா –தாபத்ரயங்களால் -ஆத்யாத்மிகம் -ஆதி பவ்திகம் -ஆதி தெய்விகம் -இவற்றால் நன்றாக தவிக்கும் நமக்கு-ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீத லச்சாயம் –ஆஸ்வாஸம்-குளிர்ந்த சாயை -இங்கு தானே —ஹரி சந்தன வ்ருஷம் போல் கடிகாத்ரி அக்காரக்கனி எம்பெருமான்

—————-

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் சகடி காத்ரவ்
ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம்-35-

முக்தம்‌ – இயற்கையாகவே ஸம்ஸாரத்த்லிருந்து விடுபட்டதும்‌, நிஜ ஜந பத்தம்‌ தன்னுடைய பக்த ஜனங்களுக்குக்‌ கட்டுப்பட்டதும்‌, ஜகதாம்‌ – உலகங்களுக்கு, மூலம்‌ வேரானதும்‌ (காரணமானதும்‌) பலம்‌ ச – பழமானதும்‌ – பயனான புருஷார்த்தமானதும்‌, ஆகண்டம்‌ மநுஜம்‌ – காலிலிருந்து கழுத்த வரையிலும்‌ மனிதவுருப்‌ பெற்றதும்‌, ஆநநே ஸிம்ஹம்‌ – முகத்தில்‌ சிங்கமுமாகிய, மஹத்‌ அத்புதம்‌ – பெரிய ஆச்சரியமானதொரு பொருளை, கடிகாத்ரெள – கடிகைமலையில்‌, ஆகலயத– (சென்று) கைப் பற்றுங்கள்‌ அல்லது தியானியுங்கள்‌.
உலகில்‌ ஒரே சமயத்தில்‌ ஒரே வஸ்து, விடுபட்டதும்‌ கட்டுப்பட்டதுமாக இராது. ஒன்றே வேராகவும்‌ பழமாகவும்‌ இராது. ஒரே பொருள்‌ மனிதனாகவும்‌ சிங்கமாகவும்‌ இராது. அப்படி இங்கு அமைந்துள்ளதனால்‌ எம்பெருமானை மஹத்‌ அத்புதம்‌ என்றார்‌.

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் –வேர் பழம் முக்தன் பத்தன்
கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
மூலம் காரணமாகவும் -அக்காரக்கனி யாகவும் உள்ளாயே
சகடி காத்ரவ் ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம் -நர ஸிம்ஹ ரூபம்
அகடி கடநா சமர்த்தன் வழியாகவும் ப்ராப்யமாகவும் உள்ளாயே

——————–

பஸ்யந்தி நயந ஹரிணா ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்தகம் யாவத்
பரிசர சரைஸ்து தாவத் பாதக பதகை பலாயிதம் க்வாபி –36-

நயன ஹரிணா: – (அடியேனுடைய ) கண்களென்னும்‌ மான்கள்‌, கடிகாத்ரி லுப்தகம்‌ – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிய வேடனை, யாவத்‌ – எது வரையிலும்‌, ஸ்பஷ்டம்‌ – தெளிவாக, பஸ்யந்தி – பார்க்கின்‌றவோ, தாவத்‌ – அதுவரையிலும்‌, பரிஸர சரை: (அடியேனுடைய) பக்கத்தில்‌ திரிந்து . கொண்டிருந்த, பாகத பதகைஸ்து – பாவங்களாகிய பறவைகளாலோ எனின்‌, க்வாபி -எங்கேயோ, பலாயிதம்‌ – ஒடிப் போதல்‌ ஆயிற்று. மஹத்‌ அத்புதம்‌ – (இது) பெரிய ஆச்சர்யம்‌.
முன்‌ ஸ்லோகத்திலிருந்து மஹத்‌ அத்புதம்‌ என்ற சொற்களை வருவித்துக்‌ கொள்க. எம்பெருமானை ஸேவித்தேன்‌, பாவங்கள்‌ பறந்தோடின – என்பதனை ஒரு சமத்காரமாகக்‌ கூறுகிறார்‌. வேடனை மான்கள்‌ பார்‌த்துக்‌ கொண்டிருந்தனவாம்‌. பறவைகள்‌ ஒடினவாம்‌. பார்த்த மான்கள்‌ ஓடவில்லை, பாராதவைகள்‌ ஓடின – என்பது பெரிய ஆச்சரியமன்றோ –

பஸ்யந்தி நயந ஹரிணா -மான்கள் -அடியேன் கண்கள்-ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்த கம் யாவத்-ஸ்பஷ்டமாக கண்டு-பரி சர சரைஸ்து தாவத் பாதகப்தகை பலாயிதம் கவாபி — பாபங்கள் ஆகிய பறவைகள் ஓடியே போயினவே-வேடுவனைப் பார்த்து மான் ஓடாது -பறவைகளோ ஓடுமே -அதே போல் இங்கு –-ஆனால் இவன் வேடுவன் போல் கொடியவன் அல்லவே என்று அடுத்த ஸ்லோகம்-

————

விமல மணி ஹேம கடகம் விலஸித வநமால யோல்ல சந் மௌலிம்
கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே காஞ்சந பீதாம் ஸூகா வ்ருதம் ப்ராம் ஸூம் –37-

விமலமணி ஹேமகடகம்‌ குற்றமற்ற ரத்தினங்கள்‌ அழுத்தப்பெற்ற பொன் வளையல்களை அணிந்தவனும்‌, விலஸித வநமாலயா – விளங்குகின்ற வனமாலையினால்‌, உல்லஸத்‌ மௌலிம் – ப்ரகாசிக்கின்ற திருமுடியை யுடையவனும்‌, காஞ்சந பீதாம்சுக ஆவ்ருதம்‌ – பொன் மயமான பீதாம்பர மணிந்தவனும்‌, ப்ராம் ஸூம்‌ உயரமானவனுமாகிய, கடிகாத்ரி ஸூஹ்ருதம்‌ – கடிகை மலையிலுள்ள நன் மனம்‌ படைத்த தோழனை, ஈடே – ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌.
முன் ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை வேடனென்றார்‌. வேடனாகில்‌ கொடியவனாக
இருப்பானோ என்று ஐயமெழ , கொடியவனல்லன்‌, நன் மனம்‌ படைத்த தோழனாகி யிருப்பவனென்று இதனால் ஐயத்தைப்‌ போக்கினாராயிற்று. ஸுஹ்ருத்‌ சோபநா சம் ஸிஹ்ருதயவாந்‌ –நன்மையை வேண்டும்‌ மனம்‌ படைத்தவன்‌-எம்பெருமானுடைய அகத்தின்‌ அழகை ஸுஹ்ருதம்‌ என்பதனாலும்‌, திருமேனியழகை மற்றுள்ள எல்லாப்‌ பதங்களாலும்‌ குறிப்பிட்டருளினார்‌. ஆபாதபத்மம்‌ யா மாலா வனமாலேதி ஸா மதா (தோளிலிருந்து பாதகமலம் வரை தொங்குகின்ற மாலை வனமாலையென்று கருதப்பட்டது) என்ற களிங்கரின் வாக்கின்படி வனமாலையாவது திருமேனியில்‌ சாத்தும்‌ மாலையாகக்‌ கூறியதற்குக்‌ காரணம்‌ அறிய முடியவில்லை. கண்டு கொள்வது. இவரிப்படி அருளுகின்றமையால்‌ இங்ஙனமும்‌ இருக்கத் தகும் –

விமல மணி ஹேம கடகம் -நிர்மல -தூ மணி பொன் வளையல்கள் அணிந்து
விலஸித வந மால-யோல்ல சந் மௌலிம் -ஜ்வலிக்கும் திரு அபிஷேகம்
காஞ்சந பீதாம் ஸூக ஆவ்ருதம் ப்ராம் ஸூகம் —முடிச் சோதி -கடிச் சோதி -அடிச் சோதி -பரஞ்சோதி மயம்-பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள் கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே -ஸூஹ்ருத தேவரை சரணம் அடைந்து ஸ்தோத்ரம் பண்ணுவோம்-

—————–

ஸத்பி பரிகதம மலை ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் ஹிரண்ய க்ருதம்
கடிகாத்ர் யுபரி ஸூமேரும் கலயே ஸத் வோத்தரம் ஸூரைஸ் ஸேவ்யம் –38-

அமலை: குற்றமற்ற, ஸத்பி: – முனிவர்கள்‌ முதலிய நல்லோர்களாலே, பரிகதம்‌ சூழப் பெற்றதும்‌, ஸம்ஸ்ரித ஸர்வம் ஸஹம்‌ – (1) அடைய பட்ட பூமியை உடையதும்‌ (பூமியில்‌ இருப்பதும்‌) (2) தன்னை யடைந்தவரின்‌ குற்றமெல்‌லாவற்றையும்‌ பொறுக்க வல்லதும்‌, ஹிரண்ய க்ருதம்‌ – (1) பொன்னால்‌ செய்யப்பட்டதும் (2) ஹிரண்யனைக்‌ கிழித்ததும்‌, ஸத்த்வ உத்தரம்‌ – அதிகமான ஸத்துவ குணம்‌ படைத்ததும்‌, ஸூரை: ஸேவ்யம்‌ – (1) தேவதைகளால்‌ ஸேவிக்கப்பட்டதும்‌, (2) தேவதைகளால் வசிக்கப் பெற்றதுமான, ஸுமேரும்‌ – மேரு மலையை, கடிகாத்ரி உபரி – கடிகை மலையின்‌ மேலே, கலயே – காண்கிறேன்‌.
இதில்‌ கடிகை யெம்பெருமானை மேரு மலையாக ரூபணம்‌ செய்கிறார்‌. மேருமலைக்கு இடப்பட்ட ஐந்து விசேஷணங்களில்‌ மூன்று சிலேடையினால்‌ இரண்டு பொருள்களைத் தருவன. மற்ற இரண்டும்‌ ஒரே பொருள் தந்து பிரசித்தமான மேருவுக்கும்‌ எம்பெருமானாகிய மேருவுக்கும்‌ பொதுவாய்‌ நிற்பன. ஸம்‌ஸ் ரிதா – ஸர்வம்‌ ஸஹா யேந ஸ: – என்கிற வ்யுத்பத்தியால்‌ பூமியில்‌ இருக்கும்‌ : மேருமலையைக்‌ குறிப்பிடுகிறது ஸம்ச்ரிதஸர்வம்‌ ஸஹ: என்பது. அதுவே – ஸம்‌ ச்ரிதாநாம்‌ ஸர்வம்‌ (தோஷம்‌) ஸஹதே என்னும்‌ வ்யுத்பத்தியாலே ஆஸ்ரிதர்களுடைய குற்றங்கள்‌ அனைத்தையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிற எம்பெருமானாகிய மேருமலையைக்‌ குறிக்கிறது. ஹிரண்ய க்ருதம்‌ என்பது ஹிரண்யேந க்ருத: என்ற வ்யுத்பத்தியாலே பொன்னாலான மேருவைக்‌ குறிக்கிறது. ஹிரண்யம்‌ க்ருந்ததி இதி – ஹிரண்யக்ருத்தம்‌, ஹிரண்ய க்ருதம்‌ என்ற வ்யுத்பத்தியால்‌ ஹிரணியனைக்‌ கிழித்த எம்பெருமானாகிய மேருமலையைக்‌ குறிக்கிறது; க்ருதீ – ஸ்சேதநே என்பது தாது.-ஸுரைஸ்ஸேவ்யம்‌ என்பதில்‌ “ஸேவ்யம்‌” என்பது வசிக்கத்தக்கது என்ற பொருளைத் தந்து மேருவைக்‌ காடடிகிறது. தேவர்கள்‌ மேருமலையில்‌ வசிப்பதனால்‌. அதுவே ஸேவிக்கத்தக்கது என்னும்‌ பொருளைக்‌ காட்டி தேவர்களால்‌ ஸேவிக்க (வணங்கத்தக்க எம்பெருமானைக்‌ காட்டுகிறது. பிரசித்தமான மேரு பூமியில்‌ இருக்கிறது. எம்பெருமானாகிய மேரு கடிகைமலையில்‌ விளங்குகின்றது என்பது இரண்டு மேருக்களுக்கும்‌ வாசி

ஸத்பி பரிகதம் அமலை –சாத்விகர் களால் சூழப்பட்ட
ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் -பூமியை அடைந்து -நன்றாக ஆஸ்ரயம் அடைந்தவர்கள் அகம் பொறுத்து
ஹிரண்ய க்ருதம் -பொன் மயமான -ஹிரண்ய அசுரனைக் பாக்கியவான்
கடிகாத்ர் யுபரி -கடிகாத்ரி மலைக்கு மேல் உள்ள அக்காரக்கனியை –
ஸூ மேரும் கலயே -காண்கின்றேன்
ஸத் வோத்தரம் -ஸாத்விக குணம் மிக்கு
ஸூ ரைஸ் ஸேவ்யம் –தேவர்கள் இருப்பிடம் -ஸாத்விக குணம் உள்ள மலை –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
அடுத்த ஸ்லோகத்தில் திருப் பாற் கடலுடன் ஸாம்யம் அருளிச் செய்கிறார் –

———–

ஸரஸம் ஸம்ப்லுத வேலம் சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம்
கம்பீரம் அமிதம் அமலம் காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் –39-

ஸரஸம்‌ – (1) ஆனந்தத்தோடு கூடியவனும்‌ (2) சுவையோடு கூடியதும்‌, ஸம்ப்லுத வேலம்‌ – (1) கரை போல்‌ மேட்டு மடையான நீசர்களிடமும்‌ (அருள்‌ செய்வதற்காக) செல்லுமவனும்‌ (2) கரையையும்‌ மூழ்கடிப்பதும்‌, ஸந்த்ருத மணிராஜ ஸரஸிஜா சங்கம்‌ (1) நன்றாக தரிக்கப்பட்ட கெளஸ்து மணி, ஸ்ரீமஹாலக்ஷ்மி, சங்கு இவற்றை உடையவனும்‌ (2) இவற்றை யுடையதும்‌, கம்பீரம்‌ (1) ஆழமான திருவுள்ளமுடையவனும்‌, (2) ஆழமுடையதும்‌, அமிதம்‌ – (1) தேச கால வஸ்துக்களால்‌ அளவுபடாதவனும்‌ (எல்லா தேசத்திலும்‌ எல்லாக்‌ காலத்திலும்‌ எல்லாப்‌ பொருளாகவும்‌ இருப்பவனும்‌) (2) பரந்ததும்‌ (விசாலமானதும்‌) அமலம்‌ – (1) குற்றமற்றவனும்‌, (2) அழுக்கற்றதும்‌ ஆகிய, கடிகாசலேச கலசாப்திம்‌ (1) கடிகைமலைத் தலைவனாகிய (2) திருப்பாற்‌ கடலை, காஹே – (1) அனுபவிக்கிறேன்‌ (2) குடைந்தாடுகிறேன்‌.
இதில்‌ எம்பெருமானைத்‌ திருப் பாற்கடலாக அருளிச் செய்கிறார்‌. ஸந்த்ருதமணிராஜ ஸரஸிஜா சங்கம்‌ என்பது, பாற்கடலைக்‌ கடைந்து கெளஸ்துபத்தையும்‌ ஸ்ரீமஹா லக்ஷ்மியையும்‌ எம்பெருமான்‌ கைப்பற்றியதனால்‌ கடைவதற்கு முன்பு பாற்கடலிலும்‌, கடைந்த பின்பு எம்பெருமானிடமும்‌ அவையிரண்டு முள்ளமையும்‌, எம்பெருமானிடமும்‌ பாஞ்சஜந்யமாகிய சங்கு உள்ளமையினாலும்‌, பாற்கடலில்‌ சங்குகள்‌ இருப்பதனாலும்‌, சங்குள்ளமையும்‌ எம்பெருமானிடமும்‌ பாற்கடலிலும்‌ பொருந்தும்‌. மற்றவை ஸ்பஷ்டம்

ஸ ரஸம் ஸம் ப்லுத வேலம் -பாற் கடல் -ரஸம் மிக்கு -கரை இருக்குமே
ஆனந்த ப்ரஹ்மம் -ஸம்ஸாரிகளுக்கும் ஆஸ்ரயிக்கும் படி
சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம் -கௌஸ்துப -ஸிந்து கன்யா சங்கங்கள் தரித்து
கௌஸ்துப மணியையும் திருவையும் மார்பில் கொண்டவன் சங்கு ஆழ்வான் அனைத்தையும் தரித்து
கம்பீரம் -தேஜஸ் மிக்கு
அமிதம் -எல்லை அற்ற -கல்யாண குண ஏக ஸ்தானம்
அமலம் -நிர்மலம்
காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் —குடைந்து நீராடும் படி அக்காரக்கனி பாற் கடல் போல் உள்ளானே –

————-

விகத தமோ க்ரஹம் அசலம் வ்ருத்தி க்ஷய ரஹிதம் அநு தயாஸ்த மயம்
விலஸித மாநஸ கமலம் வீஷே கடிகாத்ரி விதும் அஹோ விமலம் -40-

விகத தமோ க்ரஹம்‌- (1) தமோ குணத்தினால் பிடிக்கப்படாதவனும்‌ (2) ராகுவினால்‌ உண்டாகும்‌ கிரஹணமில்லாதவனும்‌, அசலம்‌ (1) அழி வற்றவனும்‌ (2) அசைவில்லாதவனும்‌, வ்ருத்தி க்ஷய ரஹிதம்‌ – (1,2) வளர்வும்‌ தேய்வும்‌ இல்லாதவனும்‌, அநுதயாஸ்தமயம்‌ – (1,2) பிறப்பும்‌ இறப்புமற்றவனும்‌, விலஸித மாநஸ கமலம்‌ (யோகிகளின்‌) ஹ்ருதய கமலத்தை மலரச்‌ செய்பவனும்‌ (2) மாநஸ ஸரஸ்ஸிலுள்ள தாமரை மலரை மலரச் செய்பவனும்‌, விமலம்‌ – (1) குற்றமற்றவனும்‌ (2) களங்கமற்றவனுமாகிய. கடிகாத்ரி விதும்‌- கடிகை மலையிலுள்ள (1) (எம்பெருமானாகிய) (2) சந்திரனை, வீக்ஷே – ஸேவிக்கிறேன்‌. அஹோ – ஆச்சரியம்‌.
எம்பெருமானாகிய சந்திரன்‌ உலகிலுள்‌- சந்திரனுக்கு முரண்பட்டவனாக இருப்பதனால்‌, இப்படிப்பட்ட சந்திரனைக்‌ காண்‌பதில்‌ ஆச்சரியமடைகிறார்‌.
சந்திரனுக்கு – ராஹுக்ரஹணமும்‌ வளர்வும்‌, தேய்வும்‌, பிறப்பும்‌, இறப்பும்‌, களங்கமும்‌, தாமரை மலரைக்‌ கூம்பச்‌ செய்தலும் உண்டு. இவையில்லாத சந்திரன்‌ கடிகைமலை யெம்பெருமான்‌. எம்பெருமான்‌ பத்தில்‌ விசேஷணங்களுக்கு வேறு பொருளும்‌ காட்டப்பட்டமை காணத்தக்கது

விகத தமோ க்ரஹம் -தமோ குணங்கள் கிட்டாவே
அசலம் -ஸ்திரமாக
வ்ருத்தி க்ஷய ரஹிதம் -வளருதல் தேய்தல் இல்லையே
அநு தயாஸ்த மயம்-பிறப்பு மறைவு இல்லையே
விலஸித மாநஸ கமலம் வீஷே -ஹ்ருதய கமலத்தை விகஸிக்கும்
கடிகாத்ரி விதும் –அக்காரக்கனி சந்திரன் களங்கம் தீர்க்கும் -துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன்
அஹோ விமலம் –

————

நிரவதிக நித்ய மஹஸா நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா மம மநஸி வாரிதம் திமிரம்–41-

நிரவதிக நித்ய மஹஸா – எல்லை யற்ற அழியாத ஒளியை உடையதும்‌, நிர்மல முக்தா அநுபந்த ஸுபகேந – சுத்தமான முத்துக்களே சேர்ந்ததனால்‌ அழகுடையதும்‌, கடிகாத்ரிமகுடபாஜா – கடிகை மலையின்‌ சிகரத்தை அடைந்ததுமான, மணிநா எம்பெருமானாகிய ரத்தினத்தினொளியினால்‌. மம மநஸி – எனது மனஸ்ஸில்‌, திமிரம்‌ அறியாமையாகிய இருள்‌, வாரிதம்‌ – போக்கடிக்கப்பட்டது.
ரத்தினத்தினொளியினால்‌ புறவிருள்‌ நீங்கும் எம்பெருமானாகிய ரத்தினத்தினால்‌ அகவிருளாகிய அஜ்ஞானம்‌ நீங்கும்‌ ஜ்ஞானம்‌ உண்டாகும்‌. “மயர்வற மதிநலமருளினன்‌”, என்றாரிறே ஆழ்வார்‌. நிரவதிக நித்ய மஹஸா நிர்மல முக்த அநுபந்த ஸுபகேந என்ற இரண்டு விசேஷணங்களாலே – எல்லை யில்லாத நித்ய ஸூரிகளாலே ஒளிபெறுபவன்‌ என்றும்‌, ஸம்ஸார ஸம்பந்தமாகிய மலமறப்பெற்று முக்தியடைந்தவர்களோடு தொடர்பினால்‌ அழகுடையவன்‌ என்றும்‌ எம்பெருமான்‌ கூறப்படும்‌ பாங்கும்‌ அறியத் தக்கது –

நிரவதிக நித்ய மஹஸா –எல்லை அற்ற மஹத்வ தேஜஸ் -நித்ய ஸூரிகள் ஸமூஹம்
நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந –அழகிய முத்துக்கள் -முக்தாத்மாக்கள் சேர்ந்து
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா –அக்காரக்கனி யான ரத்ன தேஜஸ் ஸூ
மம மநஸி வாரிதம் திமிரம் -அஞ்ஞானம் போக்கி அருளட்டும் –சாஷாத்காரம் பெற்று அனுபவிக்கிறார்-அடுத்த ஸ்லோகம் மரகத அனுபவம் –

————–

அவிரள விஸ்ருமர க்ருணிநா ஹரி மணிநா சதத மாஹித ஒவ்ஜ்வல்ய
கநக நக கல்பிதோயம் கடகோ கடிகா மஹீ ப்ருதோ பாதி –42-

அவிரள விஸ்ருமர க்ருணிநா – இடைவிடாமல்‌ பரவுகிற ஒளியை யுடைய, ஹரிமணிநா – பச்சைநிறமுள்ள மரகத ரத்தினத்தினால்‌, ஸததம்‌ – எப்பொழுதும்‌, ஆஹித ஒளஜ்ஜ்வல்ய: – உண்டு பண்ணப்பட்ட பிரகாசத்தை யுடையதாக, கநகநக கல்பித: கட்டிப் பொன்னால்‌ செய்யப்பட்ட, அயம்‌ – இந்த, கடிகாமஹீப்ருத: கடக: – கடிகை மலை யரசனுடைய கை வளையல்‌, பாதி – விளங்குகிறது.
அவிரள விஸ்ருமர க்ருணிநா – நெருக்கமாகப்‌ பரவுகிற ஒளியை யுடைய, ஹரிமணிநா – ஹரியாகிற எம்பெருமானாகிற ரத்தினத்தினால்‌, ஸததம்‌ ஆஹித ஒளஜ்ஜ்வல்ய: – எப்போதும்‌ உண்டாக்கப்‌பட்ட பளபளப்பை யுடையதாக, கநகநக கல்பித: கட்டிப் பொன்னால்‌ செய்யப் பெற்ற (பொன் வர்ணமுள்ள) அயம்‌ – இந்த, கடிகாமஹீப்ருத: – கடிகையென்னும்‌ மலையினுடைய, கடக. – தாழ்வரை, பாதி – விளங்குகிறது.
ஹரி: – (1) எம்பெருமான்‌ (2) பச்சைநிறமுள்ளது. கடக: – (1) வளையல்‌ (2) தாழ்வரை. மஹீப்ருத்‌ – (1) அரசன்‌ (2) மலை.

அவி ரல விஸ்ரு மர க்ருணிநா –இடைவிடாத ஒளி பரவி-ஹரி மணிநா -மரகத ரத்னம் –நெருக்கமான ஒளி-சதத மாஹித ஒவ்ஜ்வல்ய —எப்பொழுதும் தேஜஸ் மின்னி
கிருபை கடாக்ஷம் வர்ஷம் பொழிந்து கொண்டே உள்ளான்
கநக நக கல்பிதோயம் கடகோ –தங்க -மயமான கட்டிப் பொன்னால் செய்த வளையல்
தாழ்வரை எங்கும் பரவி மின்னிக்கொண்டு உள்ளதே
கடிகா மஹீ ப்ருதோ பாதி —எம்பெருமானது -அக்காரக்கனி யுடைய திருக் கரங்களில் சாத்தி அருளுகிறார்

————–

ஸூ மநோ வ்ருதேந மதுநா ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா
மம கடிகாசல ஜநுஷா மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க –43-

ஸுமநஸ்‌ வ்ருதேந – (1) மலர்களிலிருந்து ஸ்வீகரிக்கப்பட்டதும்‌ (2) பண்டிதர்களாலே உபாயமாகவும்‌ உபேயமாகவும்‌ வரிக்கப் பட்டதும்‌, ஸுதராம்‌ மதுரேண – மிகவும்‌ இனிமை யானதும்‌, சுத்தி குண பாஜா – (1) கசண்டற்றுத்‌ தூய்மையானதும்‌ (2) பரிசுத்தமானதும்‌, கடிகாசல ஜநுஷா – கடிகை மலையில்‌ தோன்றியதுமான, மதுநா (எம்பெருமானாகிய) தேனாலே, மம அடியேனுடைய, மாநஸ நாமா ப்ருங்க: மனமென்னும்‌ வண்டானது, ஸமுத் ஸுக: ‘பவதி) மிகவும்‌ ஆசை யுடையதாகிறது. அந்தத்‌ தேனைப் பருக என்‌ மனம்‌ ஆசைப் படுகிறது என்றபடி.
தமது மனதை வண்டாகவும்‌ எம்பெருமானைத்‌ தேனாகவும்‌ வருணித்தாராயிற்று.
முதற் பொருள்‌ தேனுக்கும்‌ இரண்டாம்‌ பொருள்‌ எம்பெருமானுக்கும்‌ இயையும்‌. ஸுமநஸ: — மலர்களும்‌ பண்டிதர்களும்‌. ஆழ்வார்கள்‌ இப் பெருமானை அக்காரக்கனி என்றார்கள்‌. இவர்‌ அம்ருத பலம்‌ என்றும்‌ திருப்பாற்கடல்‌ என்றும்‌ தேனென்றும்‌ கூறுகிறார்‌. இவையனைத்தும்‌ மதுர தமமான வஸ்துக்களிறே

ஸூ மநோ வ்ருதேந மதுநா –சாத்விகர்களுக்கு- -உபாய உபேயம் இவனே அறிந்தவர்களுக்கு தேன்-ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா -மிகவும் இனிமையான -ஸூத்தமான -ஸாத்விக குணம்-கடிகாசல ஜநுஷா -இங்கு தான் உத்பத்தி ஆகிறது
மம மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க —மனசாகிய வண்டு மிகவும் அபி நிவேசம் மிக்கு உள்ளதே-நம்மாழ்வார் தீர்க்க சிந்தயந்தி —எறும்பி அப்பா ஸ்வாமியோ பரம தீர்க்க சிந்தயந்தி -மா முனிகள் விஸ்லேஷத்தில் தரியாமல் திருவடித் தாமரையில் படியும் ப்ருங்கம் இவர் தானே-

———-

தீனே பூர்ணாம் பவதநுசரே தேஹி த்ருஷ்டிம் தயார்த்ராம் |
பக்த்யுத்கர்ஷம் வரவரமுநே தாத்ருசம் பாவயந்தீம் ||
யேந ஸ்ரீமந் த்ருத மஹமித: ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம் |
த்வத் விஶ்லேஷே தநு விரஹித: தத்ர லீனோ பவேயம் ||–ஸ்ரீ வர வர முனி சதகம் – 75

ஹே வரவரமுநியே உமது கருணை தோய்ந்த கடாக்ஷத்தைப் பூர்ணமாக எளியவனான
உமது பணியாளனான அடியேனிடத்தில் வைப்பீராக. அந்தக் கடாக்ஷமே உம்மிடத்தில் மேலான பக்தியைத் தரவல்லது.
அந்தக் கடாக்ஷத்தாலேயே இங்கிருந்து உமது திருவடித் தாமரையை அடைந்து
உமது பிரிவு ஏற்படும்போது சரீரமற்றவனாக அங்கேயே மறைந்தவனாவேன்.

—————

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத சததம் ஆப்து காமேந
கடிகாசல பிரணயிநா விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ–44-

அணுதரமபி – மிகச் சிறியதாயிருந்த போதிலும்‌, ஸ்வம்‌ – பொருளை ( பணத்தை) அர்ப்பயத: – தனக்குக்‌ கொடுக்கிற, அந்யாந்‌ மற்றவர்களை, ஸததம்‌ – எப்போதும்‌, ஆப்துகாமேந – அடைய விரும்பித்‌ தேடுகிற. கடிகாசல ப்ரணயிநா – கடிகை மலையில்‌ அன்பு மிக்க எம்பெருமானாகிற யாசகனாலே, விபுலம்‌ – மிகப் பெரிதான, ஹிரண்ய தாநம்‌ – ஸ்வர்ண தாநமானது, விஹிதம்‌ – செய்யப்பட்டது. அஹோ – ஆச்சரியம்‌.
தனக்குச்‌ சிறிதாவது பொருள்‌ கொடுப்பாருண்டா என்று தேடித் திரியுமவன்‌ ஸ்வர்ண தாநம்‌ செய்தானென்பது முரண்‌பட்ட விஷயம்‌. இதற்குப்‌ பரிஹாரம்‌ ஹிரண்ய தானமாவது -ஸ்வர்ணதானமன்று. ஹிரண்யனைப்‌ பிளத்தலே யாகும்‌ என்று பொருள்படுதலால்‌ காண்க. தாநம்‌ என்னும்‌ சொல்‌ தாஞ்‌- தாநே- என்ற தாதுவிலிருந்தும்‌, தோ – அவகண்டநே – என்ற தாதுவிலிருந்தும்‌ உண்டாகக்‌ கூடியது. முதலது கொடுத்தலென்னும்‌ பொருளையும்‌, பின்னது பிளத்தலென்னும்‌ பொருளையும்‌ குறிப்பதாகும்‌.

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத -கிஞ்சித் சமர்ப்பித்தாலும் –பத்ரம் பலம் தோயம்
சததம் ஆப்து காமேந -எப்போதும் எதிர்பார்த்து இருக்கும்
அவாப்த ஸமஸ்த காமனும் நமது ஆபி முக்யம் எதிர்பார்த்து இருப்பானே
கடிகாசல பிரணயிநா -ஆசையுடன் உகந்து
விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ –ஸ்வர்ண தானம் -ஸ்லேடை -ஹிரண்யனைப் பிளந்த –நமது அஹங்காராதிகளைப் போக்கித் தன் தாளிணைக் கீழ் -இசைவித்து -இருத்தும் அம்மான் அன்றோ –

————–

அநநு குண விஷய தீஷாம் அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா
கடிகாசல ப்ரணயிநா கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் –45-

அநிதம்‌ ப்ரதமா – அநாதியான. ஸரஸ்வதீ – வேத வாக்கானது,-அநநுகுண விஷய தீக்ஷாம்‌ – (பகவத் சேஷமாகிய ஆத்ம ஸ்வரூபத்துக்குத்‌) தகாத சப்தாதி விஷய(அநுபவதித்தில்‌ உள்ள விரதத்தை (நான் சப்தாதி விஷயங்களை யனுபவிப்பேனே தவிர எம்பெருமானை அனுபவிக்க மாட்டே( னென்னும்‌ ப்ரதிஜ்ஞையை) முக்த்வா -விடுவித்து, கடிகாசல ப்ரணயிதா – கடிகைமலையில்‌ பற்றுமிக்க எம்பெருமானோடே, கன அநுராகமமீம்‌ த்ருஷ்டிம்‌ – நிறைந்த பக்தி மயமான எண்ணத்தை, கடயதி – சேர்ப்பிக்கிறது
வேத வாக்கியங்களை அர்த்தத்தோடு தெரிந்து கொண்டால்‌, விஷயாநுபவத்தில்‌ ஆசை நசிக்கப் பெற்றுப்‌ பரம புருஷனிடத்தில்‌ பக்தி ரூபமான ஞானமுண்டாகி பகவதனுபவம்‌ கிடைக்குமென்றபடி. அநிதம்ப்‌ரதமா இது தான்‌ வேதம்‌ தோன்றிய முதற்காலம்‌ என்பதில்லாதது – அதாவது எப்டோது வேத வாக்குக்குமுள்ள வேறுபாடு. முக்த்வா அந்தர்ப்பாவிதணிஜந்தம்‌- 

அநநு குண விஷய தீஷாம் – –யாதானும் பற்றி நீங்கி விரதம் –
அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா –வேத புருஷன் வேத மாதா -திரு உள்ளத்தில் வந்ததும் அநாதி
ஸரஸ்வதி -வேத வாக்கு என்றபடி -முக்த்வா விடுதலை தருகிறாள்
கடிகாசல ப்ரணயிநா –இங்கு உகந்து இருந்து அருளும் அக்காரக்கனியின் மேல்
கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் —நிறைந்த அபி நிவேசம் -பக்தியை யுண்டாக்க்கும் அன்றோ –

———–

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –46-

ஜராஆதிஅதீதேந – கிழத்தனம்‌ மரணம்‌ முதலியவற்றைக்‌ கடந்தவனும்‌, த்ருப்யந் மநஸா – அது காரணமாக மகிழ்ச்சி மிக்க மனமுடையவனும்‌, தைவ யோகாத்‌ த்ருஸ்யேந – அதிர்ஷ்ட யோகத்தினால்‌ காணத் தக்கவனுமான, கடிகாத்ரி யோகி புருஷேணே – கடிகை மலையிலுள்ள – யோக ஸித்தி பெற்ற பரம புருஷனோடு, ஸங்க: – ஸம்பந்தமானது, அகிலாம்‌ ஸித்திம்‌ – எல்லாவிதமான செல்வங்களையும்‌, ஸாதயதி – சாதித்துக்‌ கொடுக்கும்‌.
செல்வங்களாவன – இவ் வுலகிலும்‌, ஸ்வர்க்கம்‌ முதலிய உலகங்களிலும்‌ அனுபவிக்கும்‌ இன்பமும்‌, பரம பதத்கில்‌ அநுபவித்தற்குரிய பகவதனுபவ கைங்கரியங்களும்‌ ஆகும்‌. பகவானோடு ஸம்பந்தம்‌ பகவத் க்ருபையினால்‌ கிடைக்கும்‌. அந்த பகவத்‌ க்ருபை தான்‌ இங்கு அத்ருஷ்ட மெனப்பட்டது. அத்ருஷ்டமும்‌ விதியும்‌ ஒன்றே, விதி வாய்க்கின்று காப்பாரார்‌ பகவத்‌ க்ருபை பலிக்கும்போது தடுப்பார்‌ ஆர்‌ (திருவாய்‌ 5.1.1) என்றவிடத்தில்‌ விதி சப்தம்‌ பகவத் க்ருபா வாசகமாக ப்ரஸித்தமிறே. பகவத்‌ க்ருபையினால்‌ பகவத்‌ ஸம்பந்த மேற்பட்ட பிறகு, அகில ஸித்திகளும்‌ அந்த பகவத் க்ருபையினால்‌ தான்‌ உண்‌டாகும்‌. ஆக பகவத் க்ருபையினால்‌ பகவத் ஸம்பந்த முண்டாகி, அதனால்‌ பகவத் க்ருபை மேன்மேலும்‌ பெருகி அதன்‌ பிறகு ஸகல ஸித்திகளும்‌ ஏற்படுமென்றபடி. ஸங்கம்‌ – ஸம்பந்தம்‌- அன்பு என்றபடி “அன்புக் கடியானதுவே – (பகவத்‌ க்ருபையே) அடி சேருகைக்கும்‌ (பலத்திற்கும்‌ ஸாதனம்‌” என்றாரிறே -.நலமருளினன்‌ என்கொல்‌ என்று ஆமூலசூட.ம்‌ அருளால்‌ மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கு ஸாதநம்‌.-அழகியமணவாளப்பெருமாள்‌ நாயனார்‌ (ஆசார்ய ஹ்ருதயம்‌ 114)-“அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும்‌, ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர்‌ வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந -ஜரா கொடியது –கிளர் ஒளி கிளமை கெடுவதன் முன்னம்-இவற்றை அதீதேந -கடந்து -மகிழ்ந்த திரு உள்ளத்துடன் இருக்க-அவன் தர்சனம் பெறுவதற்கும் திரு உள்ளத்தில் ஸங்கல்பிக்க வேண்டுமே
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –அவன் உடன் ஸம்ஸ்லேஷித்து-யோக நரஸிம்ஹன் அன்றோ –ஸகல பல பிரதன் -அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளுவான் அன்றோ

———-

பிரபலைர் மம இந்த்ரியாஸ் வை பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே
பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ கடிகாத்ரி பார்த சாரதி நா –47-

மம – அடியேனுடைய, மந: – மனமென்கிற, ரத: – தேரானது, (முதலில்‌) ப்ரபலை: அதிக பலமுள்ள, இந்த்ரிய அஸ்வை: – செவி வாய்‌ கண்‌ முதலிய இந்த்ரியங்களாகிற குதிரைகளினால்‌, விஷம விஷய காந்தாரே – கொடிய சப்தாதி விஷயங்களாகிற காட்டு வழியில்‌, பரிக்ருஷ்ட: – நன்றாக இழுத்து” செல்லப்பட்டதாய்‌, (பின்பு) கடிகாத்ரி பார்த்த ஸாரதிநா – கடிகைமலையிலுள்ள நரஸிம்மப் பெருமாளாகிற பார்த்த ஸாரதியினால்‌, அக்ர்யாம்‌ பதவீம்‌ – உயர்ந்த பகவத்‌ பாகவதாசார்யர்களாகிற வழியை, ப்ராப்த: – அடைந்தது.
ஸாரதி யில்லாத தேரைப்‌ பொல்லாத குதிரைகள்‌ கல்லும்‌ முள்ளும்‌ மிக்க காட்டு வழியில்‌ இழுத்துச்‌ சென்றன-ஸமர்த்தனான ஸாரதி தேருள்ள இடமறிந்து சென்று அதின் கண்‌ ஏறிக் கொண்டு குதிரைகளை அடக்கி, அக் குதிரைகளின்‌ வாயிலாகவே உயர்ந்த வழியில்‌ இழுத்துச்‌ செல்லுவது உலகவியல்பு. அது போன்று பகவத்‌ க்ருபை யில்லாத போது பொல்லாத இந்த்ரியங்களால்‌ கொடிய விஷயங்களில்‌ இழுத்துச்‌ செல்லப்பட்ட மனமானது பகவானால்‌ க்ருபையோடு அவ்விந்த்ரியங்களின்‌ மூலமாகவே நல்ல வழியை அடைவிக்கப்‌ படுகிறதென்றபடி. நரஸிம்மப்‌ பெருமாளே பார்த்த ஸாரதி யாகையால்‌ கடிகாத்ரி பார்த்தஸாரதி என்று நரஸிம்மப்‌ பெருமாளைக்‌ குறிப்பிட் டருளினார்‌. மனம்‌ ஏதாவதொரு விஷயத்தைப்‌ பற்றியே நிற்கும்‌. இது வரையில்‌ நிக்ருஷ்ட விஷயத்தை பற்றிக்‌ கொண்டு அலைந்த மனஸ்ஸு பகவத்‌ க்ருபையினால்‌ உத்க்ருஷ்ட விஷயத்தைப்‌ பற்றி நிலைத்து நின்றதென்றார்‌ இதனால் –

பிரபலைர் மம இந்த்ரிய அஸ்வை -நமது பிரபல இந்த்ரியங்களே குதிரை-பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே -விஷயாந்தரங்களை நோக்கி -காட்டு வழி -நன்று இழுத்துச் செல்ல-பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ -அவற்றை அடக்கி தனது பக்கம் இழுத்துச் செல்லும்-அக்ர -உயர்ந்த நிலைக்குக் கூட்டிச் செல்கிறார் -என்றபடி-கடிகாத்ரி பார்த சாரதி நா —அக்காரக்கனியே பார்த்த சாரதி – நக்ஷத்ர மாலிகை முதல் ஸ்லோகம் -ஞான முத்திரை காட்டி அடக்கி ஆளும் -ஆழ்வார் ஜீயாத் –

————

அதி வேல விலஸிதோர்மே அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ
ப்ராப்தோ அஸ்மி பவ பயோதே பாரம் கடிகா நியாமகே நாஹம் –48-

அதிவேல விலஸித ஊர்மே: – கரையைக்‌ கடந்து வீசுகிற அலைகளை யுடையதும்‌,
(அதனால்‌) அவகாஹவதாம்‌ – மூழ்கியவர்களை . அத:நயனஹேதோ: – அடியில்‌ இழுத்துச்‌ செல்வதற்குக்‌ காரணமானதுமான, பவ பயோதே: – ஸம்ஸாரமாகிற கடலினுடைய-பாரம் –– அக்கரையை, கடிகாநியாமகேந – கடிகை மலை யரசனாகிய படகோட்டியினாலே, அஹம்‌ ப்ராப்த: அஸ்மி – அடியேன்‌ அடைந்‌தவனானேன்‌.
நீச விஷயங்களை அனுபவித்து அனுபவித்து ஸம்ஸாரமாகிற கடலில்‌ மூழ்கிக்‌ கொண்டிருந்த அடியேனை, எம்பெருமான்‌ படகோட்டியாக எழுந்தருளி க்ருபை செய்து அக் கடலின்‌ அந்தண்டைக்‌ கரைய அடைவித்தானென்றார்‌. நியாமக: – (1) ஆணையிடுமரசன்‌ (2) படகோட்டி –

அதி வேல விலஸிதோர் மே -அளவு கடந்த -கடலின் அலைகள் -ஸம்ஸார சாகர அலைகள்
அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ -மூழ்கினவர்களை-ப்ராப்தோ அஸ்மி பவ பயோ தே பாரம் -அக்கரைப்படுத்தி அடைய வைத்து அருளும்-கடிகா நியாமகே நாஹம் –கடத்தடம் குன்றின் அரசன் என்னும் படகோட்டி -நாவாய் முகுந்தன் அன்றோ -இவனும்

——–

கடிகா யதி குண கடிதா கடிகாசல சக்ரி கல்பிதா நஸ்யு
பவ கூபதோ ஜடாநாம் பவ்ய கோ வா ஸமுத்தரண ஹேது -49-

கடிகா: – (அறிவிலிகளின்‌ வாழ் நாட்களில்‌) சில நாழிகைகள்‌-குணகடிதா-தன்னுடைய க்ருபை முதலிய குணங்களோடு சேர்க்கப் பட்டவைகளாக, கடிகாசல சக்ரி கல்பிதா: ந ஸ்யு யதி – கடிகை மலையிலுள்ள சக்ர தாரியான எம்பெருமானால்‌ ஆக்கப் படாவிட்‌டால் , ஜடாநாம்‌ – அறிவற்ற ஜனங்களை, பவ கூபத: -ஸம்ஸாரமாகிற கிணற்றிலிருந்து. பவ்ய:ஸமுத்தரண ஹேது: – நல்லதான – மேலே தூக்குவதற்குக்‌ காரணம்‌, கோ வா .அஸ்தி – என்ன இருக்கிறது.
அறிவும்‌ ஆற்றலுமுடையவர்கள்‌ பக்தி யோகம்‌ முதலியவற்றை அநுஷ்டித்து ஸம்ஸாரமென்னும்‌ கிணற்றிலிருந்து மேல்‌ செல்லுகிறார்கள்‌. அறிவாற்றல்‌ இல்லாதவர்களுக்கு பகவானுடைய கிருபை முதலிய குணங்களே அக் கிணற்றிலிருந்து மேலெழுவதற்குக்‌ காரணம்‌ என்ற படியாம்‌. “நாஸெள புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம்‌ க்ருபயைவாஹம்‌ ப்ரேக்ஷே கஞ்சித்‌ கதாசந” (முற்கூறப்பட்ட நான்‌ புருஷகாரமான பிராட்டி காரணமாகவோ , பக்தி ப்ரபத்தி முதலிய வேறு காரணமாகவோ ஒருவனைக்‌ கடாக்ஷிப்பதில்லை; ௭ன்னுடைய நிர்ஹேதுகமான க்ருபையினால்‌ மட்டுமே யாரோவொருவனை ஏதோவொரு காலத்தில்‌ கடாக்ஷிக்கிறேன்‌ – லக்ஷமீ தந்த்ரம்‌) என்று பகவான்‌ கூறியபடி – அறிவற்ற வர்களை ஏதோவொரு காலத்தில்‌ க்ருபையால்‌ கடாக்ஷிக்கிறேன்‌ என்ற பொருளையே கடிகா: குணகடிதா: சக்ரி கல்பிதா: (சில நாழிகைகளில்‌ சக்ர தாரியானவன் அறிவிலிகள்‌ விஷயத்தில்‌ தனது க்ருபையை உபயோகப் படுத்துகிறான்‌) என்றார்‌. எம்பெருமான்‌ அறிவிலிகள்‌ வாழ்நாளில்‌ ஏதோவொரு ஸமயத்தில்‌ தன்‌ க்ருபையை ௨பயோகிக்காதிருந்தால்‌, அவர்கள்‌ ஸம்ஸாரமாகிய அக்கிணற்றிலிருந்து மேலே வருவதற்கு மோக்ஷம்‌ பெறுவதற்கு வேறொரு உபாயமில்லை என்பது கருத்து. இங்கு வேறொரு பொருளும்‌ தோன்றுகிறது.
சக்ரி கல்பிதா: கடிகா: குணகடிதா: யதி நஸ்யு: ஜட(லா)நாம்‌ கூபத: ஸமுத்தரண ஹேது: கோ வா அஸ்தி? என்று அந்வயித்தால்‌, குயவனால்‌ செய்யப்பட்ட பானைகள்‌ தாம்புக் கயிறோடு சேர்க்கப்படாவிட்டால்‌ கிணற்றிலிருந்து ஜலத்தை மேலே தூக்குவதற்கு வேறு உபாயம்‌ என்ன இருக்கிறது – என்பதே அப்பொருள்‌. டலயோ; அபேத: – (ட, ல என்ற இரண்டும்‌ ஒன்றே) என்ற ந்யாயத்தைக்‌ கொண்டு, ஜடாநாம்‌ என்பது இப்பொருளில்‌ ஜலாநாம்‌ பானைகள்‌. சக்ரீ – (1) சக்ரதாரியான எம்பெருமான்‌, (2) பானை செய்வதற்காகச்‌ சுழற்றப்படும்‌ சக்கரத்தையுடைய குயவன்‌. குண: -(1) நல்லகுணம்‌, (2) கயிறு-முன்‌ ஸ்லோகத்தில்‌ ஸம்ஸாரத்தைக்‌ கடலென்றார்‌. இதில்‌ கிணறென்றார்‌. நீஞ்சத்‌ தெரியாதவனுக்கு இவை யிரண்டும்‌ உயிரை மாய்ப்பனவே யாகும்

கடிகா யதி குண கடிதா நஸ்யு-கருணாதி குணங்களால் சில நாழிகை காட்டா விடில்
கடிகா சல சக்ரி கல்பிதா -சக்ரம் ஏந்திய அக்காரக்கனி என்றும் குயவன் என்றும்
பவ கூபதோ ஜடா நாம் பவ்ய -அறிவிலிகள் ஸம்ஸார பவக்கடலில் இருந்து
கடா நாம் -என்று கொண்டு குடாதிகள் கொண்டு கிணறு முதலியவற்றில் எடுக்க முடியாதே
கோவா ஸமுத்தரண ஹேது -உஜ்ஜீவனம் ஹேது ஒன்றுமே இல்லையே

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —ஆர்த்தி பிரபந்தம் -9-

———

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைத்ய கல்பிதேந பதா
பவ ரோகதோ அசிராத் தே முக்தா ஸ்நாநம் சரந்தி விரஜாயாம் -50-

யே- யார்‌, ஸ்வயாத்ராம்‌ – தமது தேஹ யாத்ரையை (ஜீவ தசையை) கடிகாசல வைத்ய கல்பிதேந பதா – கடிகை மலையிலுள்ள வைத்‌யனாகிற எம்பெருமானால்‌ கற்பிக்கப்பட்ட வழியாலே, கலயந்தி– செய்கிறார்களோ (நடத்துகிறார்களோ) தே- அவர்கள்‌, பவரோகத: – ஸம்ஸாரமாகிய வியாதியிலிருந்து, அசிராத்‌ – விரைவிலேயே, முக்தா: விடுபட்ட வர்களாய்க்‌ கொண்டு, விரஜாயாம்‌ – விரஜா நதியில்‌, ஸ்நாநம்‌ சரந்தி – ஸ்நாநம்‌ செய்கிறார்கள்‌.
மனிதர்‌ தம்‌ வாழ்நாள்களில்‌ எம்பெருமான்‌ கீதை முதலிய நூற்களில்‌ மோக்ஷ உபாயமாக விதித்த – தன்னையே ௨பாயமாகப்‌ பற்றும்படி விதித்த வழியில்‌ செல்வார்களாகில்‌ விரைவிலேயே (இப்பிறவியின்‌ இறுதியிலேயே) ஸம்ஸாரமென்னும்‌ நோயிலிருந்து விடுபட்டுச்‌ சென்று விரஜையாற்றில்‌ நீராடித்‌ தூய்மை பெற்றுப்‌ பரமபதம்‌ செல்லுகிறார்கள்‌ என்றபடி. ஸம்ஸாரத்தை இதில்‌ வியாதியாகக்‌ குறிப்பிட்டார்‌.
வைத்யன்‌ சொல்லும்‌ வழியில்‌ நடப்பவர்கள் வியாதி தீரப் பெற்று – இத்தனை நாட்கள்‌ ஸ்நாநம்‌ செய்யாத குறை தீரும்படி ஸ்நாநம்‌ செயகிறார்ளென்பதும்‌ காண்க-

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைதய கல்பிதேந பதா -தேக யாத்ரையை இவன் வழி நடத்தி-உபதேசங்கள் பலவும் அருளிச் செய்தானே-பவ ரோகதோ அசிராத் தே முக்தா -சம்சார ரோகம் அதி சீக்கிரமாகத் தீர பெற்று-ஸ்நாநம் சாந்தி விரஜாயாம் -குள்ளக் குளிர்ந்து விரஜையிலே நீராடலாம் அமானவன் கர ஸ்பர்சம் கிட்டும்-மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-கீழே 22 ஸ்லோகம் நரஸிம்ஹ சரம ஸ்லோகம் பார்த்தோம்
மஹா விஸ்வாசமே வேண்டும்-வடிவாய மா மகளும் நில மகளும் நடுவாக வீற்று இருந்த அவனைக் கிட்டி அனுபவித்து -அனுபவ ஜனித கைங்கர்யமும் செய்யப்பெற்று நித்யர்கள் உடன் ஒரு கோவையாகப் பெறுவோமே

———–

தததோ ஜகத் யுதாரான் ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ரா ஹு
ஆதத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –51-

ஜகதி – உலகில்‌, அர்த்திந: – யாசகர்கள்‌, ஸ்வாபேக்ஷிதம்‌ அர்த்தம்‌ – தமக்கு வேண்டிய பொருளை, ததத: – கொடுப்பவர்களை, உதாராந்‌ – கொடையாளிகளாக, ப்ராஹு: – சொல்லுகிறார்கள்‌. கடிகாசலார்த்திநா புந: – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற யாசகனாலோ வெனறால்‌, (இதற்கு மாறாக) (தன்னிடமிருந்து) அர்த்தாந்‌ – பொருளை (புருஷார்த்தங்களை) ஆததத: – யாசித்துப்‌ பெறுமவர்கள்‌ உதாரா: கொடையாளிகளாக, உக்தா: – சொல்‌லப்பட்டார்கள்‌.
உலகில்‌ கொடுப்பவர்களே கொடையாளிகளாகச்‌ சொல்லப் படுகின்றனர்‌. “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜஞாநீ ச பரதர்ஷப’, “உதாரா: ஸர்வ ஏவைதே’ (கீதை – அத்‌. 7.16) இழந்த செல்வத்தை விரும்பும்‌ அர்த்தார்த்தியும்‌, ஆத்மாநுபவரூபமான கைவல்யத்தை விரும்பும்‌ ஜிஜ்ஞாஸூம்‌. என்னுடைய அநுபவத்தை விரும்பும்‌ ஜ்ஞாநியும்‌ ஆகிய இவர்களனைவரும்‌ (இவற்றை என்னிடமிருந்து யாசித்துப்‌ பெற்றாலும்‌ யாசகர்களல்லர்‌, பின்னையோ வென்றால்‌) கொடையாளிகளே யாகிறார்கள்‌ என்று எம்பெருமான்‌ யாசகர்களைக்‌ கொடையாளிகளென்றது காணத் தக்கது. பொருளைக்‌ கொடுப்பவர்கள்‌ கொடையாளிகள் அல்லர்‌, பொருளைக்‌ கொடுப்பவர்களுக்குக்‌ கொடையாளியாகுந் தன்மையைக்‌ கொடுப்பவர்களே (யாசகர்களே) கொடையாளிகள்‌ என்பது பரமோதாரனான எம்பெருமானுடைய திருவுள்ளம்‌. கர்ணனிடம்‌ பிறர் யாசித்துப்‌ பெற்ற பொருள்‌ அப்பொழுதே அழிந்து விட்டது. கர்ணனுடைய கொடையாளியாகுந்‌ தன்மை (கொடையாளி என்னும்‌ பெயர்‌) என்றும்‌ அழியாமல்‌ நிற்கிறது என்பது ஈண்டு நினைக்கத் தக்கது. பொருள்‌ அநித்யம் – புகழ்‌ நித்யமிறே –

தததோ ஜகத் யுதாரான் -கொடுப்பவர்களை உலகம் உதாரர் என்பர் -கர்ணன் பெற்ற பெயர்
ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ராஹு -கேட்டதைக் கொடுப்பவர் களுக்கு முன்பு இவ்வாறு உலக வழக்கு-ஆதத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –இங்கு அக்காரக்கனியே யாசகன்-தன்னைக் கொடையாளியாக்கும் அனைவருமே உதாரர்
உதார -ஸர்வ கீதையில் அனைவரையும் -கொடையாளி யாக்கியவர்கள் –
அனைத்தையும் அருளி இன்னும் ஒன்றுமே செய்யாதவனாகவே ருணம் ப்ரவர்த்தம் என்று சென்றவன் அன்றோ-அந்தமில் பேர் இன்பம் கேட்டு இருப்பார்களே மம ஆத்மா என்பான் -அன்றோ –

————

தாதே ஹிதாதி கார்த்தான் ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம்
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா –52-

(உலகில்‌) தாதா – கொடையாளி ஸ்வ ஸம்ஸ்ரிதேப்ய: – தன்னை யண்டினவர்களுக்கு, ஸ்வ வ்யதிரிக்தாந்‌ – தன்னைவிட வேறான, ஈஹித அதிக அர்த்தாந்‌ – (அவர்கள் )விரும்பியதைக்‌ காட்டிலும்‌ அதிகமான பொருள்களை, ததாதி – கொடுக்கிறான்‌. கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா(து) – கடிகை மலை நரசிங்கப்‌ பெருமானாகிற கொடையாளியாலோ வென்றால்‌, ஸ்வஸம்‌ஸ்ரிதேப்ய: – தன்னை யடைந்தவர்களுக்கு,ஸ்வ:அபி – தானும்‌, தத்த: – கொடுக்கப்பட்‌டான்‌.

‘யாசகர்களே உதாரர்கள்‌, கொடுப்பவர்கள்‌ உதாரரல்லர்‌” என்பது எம்பெருமான்‌ திருவுள்ளமானாலும்‌, உண்மையை ஆராய்ந்தால்‌ எம்பெருமானே உதாரன்‌ என்பது இக் கவியின்‌ திருவுள்ளமென்பது இந்த ஸ்லோகத்தில்‌ விளங்குகிறது. உலகில்‌ கொடையாளிகள்‌, யாசிப்பவர்‌ விரும்பியவற்றையோ அவற்றைக்‌ காட்டிலும்‌ அதிகமாகவோ கொடுப்பார்களே யன்றித்‌ தன்னைக்‌ கொடுக்க மாட்டார்கள்‌. எம்பெருமான்‌ தன்னையும்‌ கொடுப்பான்‌. ஆகையால் எம்பெருமானாகிய கொடையாளியே உயர்ந்தவ னென்றதாயிற்று.
எம்பெருமான்‌ யாசிப்பவர்களுக்குத்‌ தன்‌னைக்‌ கொடுப்பதாவது, அவர்கள்‌ சொன்ன காரியத்தையெல்லாம்‌ தான்‌ செய்யுமளவுக்கு அவர்களுக்குத்‌ தன்னை இட்ட வழக்காக்கி வைப்பது. கண்ணபிரான்‌ அர்ச்சுநனுக்குத்‌ தேரோட்டியதும்‌ தூது நடந்ததும்‌, யதோக்தகாரி யெம்பெருமான்‌ திருமழிசைபிரான்‌ பின்னே சென்றதும்‌ திரும்பி வந்ததும்‌, திருக் குடந்தை ஆராவமுதாழ்வார்‌ திருமழிசை பிரானுக்கு எழுந்திருந்து பேசியதும்‌ முதலிய சரித்திரங்களே, பக்தர்களுக்கு எம்பெருமான்‌ தன்னைக்‌ கொடுத்தற்குப்‌ போதுமான சான்றுகளாகும்‌. “ஸோ5பி” என்று பாடம்‌ காணகிறது. அதைவிட ஸ்வோ$பி என்ற பாடமே சிறக்கும்‌. எம்பெருமானால்‌ அவனும்‌ கொடுக்கப்பட்டான்‌ என்பதை விட, எம்பெருமானால்‌ தானும்‌ கொடுக்கப் பட்டானென்பதன்‌றோ ஸ்வரஸமாவது. பூர்வார்த்தத்தில்‌ “தத்வ்யதிரிக்தாந்‌” என்னாமல்‌, “ஸ்வவ்யதிரிக்தாந்‌’ என்றது இதை வலியுறுத்தும்

தாதே ஹிதாதி கார்த்தான் -தாதா -கொடையாளி கேட்டதைக் கொடுப்பான்-ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம் –-என்னையும் ஆக்கி தன்னையும் தரும் கற்பகம் அன்றோ
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா —நன்றாக ஆஸ்ரயிப்பவர்களுக்கு-தன்னையே தனது பேறாகக் கொடுக்குமவன் அன்றோ

—————-

ஹிம்ஸித தாநவ கரிணே ஹ்ருதய குஹா விஹித பஹுவிஹாராய
விக்ரமவதே ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய –53-

விக்ரமவதே- பராக்ரமமுடையதாய்‌, ஹிமஸித தாநவ கரிணே – ஹிரண்யாஸுரனாகிய யானையைக்‌ கொன்றதும்‌, ஹ்ருதய குஹா விஹித பஹு விஹாராய – (ஞானிகளின்‌) ஹிருதயங்களாகிய குகைகளில்‌ பல விதமான விஹாரங்களைச்‌ செய்வதுமான, கடிகாத்ரி வீரஸிம்ஹாய – கடிகைமலையிலுள்ள வீரசிங்கத்திற்கு ஸபர்யாம்‌ விததே பணி விடைகளைச்‌ செய்கிறேன் –
பக்தர்களுக்குத்‌ தன்னையே கொடுப்பவனுக்கு, நீர்‌ என்ன செய்யப் போகிறீர்‌ என்ன, நான்‌ என்னையே அவனுக்குக்‌ கொடுககிறேனென்கிறார்‌. இதனால்‌ இவர்‌ தம்மையே அவனுக்குக்‌ கொடுத்தலாவது – தமது மனத்தையும்‌ வாக்கையும்‌ உடலையும்‌ அவனுக்கு ஸ்வாதீனமாக்கி, அவனை த்யானம்‌ செய்வதும்‌ அவனைப்‌ புகழ்வதும்‌, அவனை வணங்குவதுமாய்‌ அவனுக்குத்‌ தொண்‌டு செய்வதேயாகும்‌.
சிங்கம்‌ பராக்ரமமுடையது – யானைகளைக்‌ கொல்லுமது – குகையில்‌ ஸஞ்சரிப்பது. அது போல்‌ கடிகை மலை வீர சிங்கமும்‌ உள்ளமை காண்க. எம்பெருமான்‌ ஞானிகளின்‌ ஹிருதய குகையில்‌ விஹாரம்‌ செய்வது “நின்றதும்‌ இருந்ததும்‌ கிடந்ததும்‌ என்நெஞ்சுளே” (திருச்சந்தவிருத்தம்‌ 54) “தாமரைக்கண்ணன்‌ என்‌ நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக்‌ காணீர்‌” (திருவாய்‌ 7.3.1) முதலிய விடங்களில்‌ காணத் தக்கது.

ஹிம்ஸித தாநவ கரிணே -ஹிரண்ய கசிபு யாகிய யானையை நிரஸித்து-ஹ்ருதய குஹா விஹித -ஹ்ருதய விசால குஹையில் மன்னி-பஹுவிஹாராய -நிறைய அனுபவம் கொடுத்துக் கொண்டு அருளி-விக்ரமவதே -வீர தீர பராக்ரமங்கையும் காட்டி அருளி பரிவர் இல்லை என்ற அதிசங்கை போக்கி அருளி-ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய —இந்த அக்காரக் கனிக்கு அனைத்து வித கைங்கர்யங்களும் செய்யப் பெறுவேனாக வேண்டும்

—————

ஸ்ருதி பாரகாய வித்யா ஸூதி க்ருஹாய ஸ்வ தர்ம நிரதாய
ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே கடிகாத்ரி பூமி தேவாய –54-

ஸ்ருதிபாரகாய – வேதங்களைச்‌ கரை கண்டவனும்‌, வித்யா ஸூதி க்ருஹாய சாஸ்திர ஜ்ஞானத்திற்குப்‌ பிறப்பிடமானவனும்‌, ஸ்வ தர்ம நிரதாய – தனது வர்ணாஸ்ரம தருமங்களில்‌ ஊன்றியவனும்‌, ஸூதியே (இச் செயற்கை யறிவேயன்றி) இயற்கையாகவே நல்லறிவு படைத்தவனுமாகிய, கடிகாத்ரி பூமிதேவாய – கடிகை மலையிலுள்ள ப்ராஹ்மணனுக்கு, ஸ்வ உசிதம்‌ – எனக்குத்‌ தகுந்த, ஸ்வம்‌ – சொத்தை, ப்ரதாஸ்யே கொடுக்கக் கடவேன்‌
ப்ராஹ்மணனுக்குத்‌ தானம்‌ செய்ய வேண்டுமென்று சாஸ்த்ரம்‌ சொல்லுகிறது. “வேங்கட வேதியனை?” (பெரியதிருமொழி – 1.10.10) என்றும்‌, “உலகளப்பான்‌ அடி நிமிர்த்த அந்தணனை” (பெரிய திருமொழி 5.6 7) என்றும்‌ எம்பெருமானை ப்ராஹ்மணனாக ஆழ்வார்கள்‌ அருளியது காண்க. ப்ராஹ்மணன்‌ – வேதத்தைக்‌ கண்டவன்‌, சாஸ்த்ர அறிவுக்குப்‌ பிறப்பிடமானவன்‌, தனது தருமங்களில்‌ ஊன்றியவன்‌, புத்திமான்‌ இவை யெல்லாம்‌ எம்பெருமானுக்கும்‌ ஒக்கும்‌. மேலும்‌ எம்பெருமான்‌ தனது தருமமான ஆஸ்ரித ஸம்ரக்ஷணத்தில்‌ ஊன்றியவனென்பதும்‌ இங்குக்‌ கருதுக. கவிக்குத்‌ தனக்குரிய சொத்தாவது ஸ்லோகங்களேயாகும்‌. இதுமேல்‌ ஸ்லோகத்தில்‌ விளங்கும்

ஸ்ருதி பாரகாய –-வேதம் வெளியிட்டு அருளிகரை காண அரிதான வேதக்கடலை அன்னமாய் அங்கு அரு மறை பயந்து அருளி-வித்யா ஸூதி க்ருஹாய -ஸாஸ்த்ர ஞானம் -ப்ரஹ்ம வித்யைகளை அருளிச் செய்து-ஸ்வ தர்ம நிரதாய –-சரணாகத வத்ஸலன் -ஆஸ்ரித பரதந்த்ரன் -பக்த உசிதன் -ரக்ஷணத்தில் நிலை நின்று-ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே -தீ -ஞானம் -கடிகாத்ரி பூமி தேவாய –ப்ரஹ்மணோத்தமனாக –ஸகல மனுஷ நயன விஷய தாங்கனாக அவனுக்கு கைங்கர்யம் -இந்த ஸ்ரீ ஸூ கத்தியை கன்னிகா தானமாக அருளி

மஹநீய வ்ருத்த வர்ணா மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா
ஸூக்தி ஸூதநு ப்ரதேயா ஸூத்தா கடிகாத்ரி பூ ஸூர வராய –55-

மஹநீய வ்ருத்த வர்ணா – (1) பூஜிக்கத்தக்க சந்தஸ்ஸும்‌ எழுத்துக்களும்‌ உடையதும்‌, (2) பூஜிக்கத்தக்க நடத்தையும்‌ மேனி நிறமும்‌ உடையவளும்‌, மஹித அந்வயவதீ – (1) உயர்ந்த – சொற்களின்‌ அந்வமுடையதும்‌, (க்லிஷ்டாந்வயமில்லாமல்‌ ஸுலபாந்வயமுடையதும்‌, (2) உயர்ந்த குடிபிறப்பை யுடையவளும்‌, அலங்க்ருதா – (1) சப்தாலங்காரங்களும்‌ அர்த்தாலங்காரங்களும்‌ உடையதும்‌. (2) வஸ்த்ராபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்டவளும்‌, ஸூத்தா – (1) காவியக் குற்றமின்றி சுத்தமாயும்‌, (2) நாண் மடம்‌ அச்சம்‌ முதலிய குணங்களினால்‌ சுத்தையாயும்‌ இருக்கிற, ஸூக்தி ஸுதநு: ஸ்ரீஸூக்திகள்‌ (ஸ்லோகங்கள்‌) என்கிற கந்யகை யானவள்‌, கடிகாத்ரி பூஸுரவராய- கடிகை மலையிலுள்ள ப்ராஹ்மணோத்தமனான எம்பெருமானுக்கு, க்ருதிநா – (1) பண்டிதனாலே (2) புண்ணியம்‌ செய்தவனாலே, ப்ரதேயா – கொடுக்கத் தக்கவளாகிறாள்‌.
தம்முடைய ஸ்ரீஸூக்தியைக்‌ கந்யகையாகக் கூறி, கடிகை மலை யெம்பெருமானை ப்ராஹ்மண உத்தமனாகக்‌ குறிப்பிட்டு, அவனுக்குத்‌ தம்‌ காவியமாகிய பெண்ணைத்‌ தானம்‌ செய்வது உசிதமென்கிறார்‌ இதனால்

மஹநீய வ்ருத்த வர்ணா -உயர்ந்த சந்தஸ் ஸூக்களைக் கொண்ட -பூஜிக்கப்பட்ட நல்ல நடத்தை யுடைய கன்னிகை போல்-மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா –உயர்ந்த அந்வயங்கள் -ஸப்த அலங்காரங்களைக் கொண்டும்-உயர்ந்த ஆபி ஜாதியம் -அலங்காரம்
ஸூக்தி ஸூத அநு ப்ரதேயா ஸூத்தா -பரிசுத்தம் -தீர்த்தம் -கன்னிகையை
கடிகாத்ரி பூ ஸூர வராய –இந்த அக்காரக்கனி அழகிய மணவாளனுக்கு தகுதியாக
வேதியர் கோன் -விளக்கு – தனது குழந்தையான பா மாலையை சூட்டி -பெரியாழ்வார் போல் மாமனார் ஆகிறார் எறும்பி அப்பா ஸ்வாமியும்

———-

காம்யோ ததாதி ஸார்த்தம் தவளம மதி ப்ரேம தாரயா ஸஹிதம்
கடிகாசல பிரணயிநே கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் –56-

கடிகாசலப்ரணயிநே – கடிகை மலையில்‌ பற்றுவைத்த யாசகனுக்கு, ஸார்த்தாம்‌ – (1) பொன்னோடு கூடிய (கொம்புக்கும்‌ குளம்புக்கும்‌ பொன்‌ கட்டு கட்டிய) (2) நல்ல அர்த்தத்தோடு கூடிய, காம்‌ – (1) பசுவை (2) ஸ்ரீ ஸூக்தியை (ஸ்லோகங்களை), தவள மதி ப்ரேம தாரயா ஸஹிதாம்‌ – (1! சுத்தமான எண்ணமும்‌ ப்ரதீயுமாகிற நீர்த் தாரையோடு கூடியதாக, (2) சுத்த ஜான ஞானமும்‌ பக்தியுமாகிறவற்றின்‌ தொடர்ச்சியோடு கூடியதாக, ய: – எவன்‌, ததாதி – கொடுக்கிறானோ, தஸ்ய – அவனுக்கு, காங்க்ஷிதம் பலம்‌ – விரும்பிய பயன்‌, கிம்‌ ந கடதே – எதுதான்‌ கை கூடாது
இதில்‌ தனது ஸ்ரீஸக்தியைப்‌ பசுவாகக்‌ கூறி அதனை எம்பெருமானுக்குத்‌ தானம்‌ செய்தால்‌ எல்லா விருப்பங்‌களும்‌ நிறைவேறுமென்று கூறினாராயிற்று. இவ்விரண்டு ஸ்லோகங்களினாலும்‌,-கீழ் ஸ்லோகத்தில்‌ தனக்குரிய சொத்து என்றதை விவரித்து அத்தகைய சொத்தான ஸ்ரீ ஸூக்தியை எம்பெருமானுக்குக்‌ கொடுக்கக்‌ கடவதாகவும்‌, கொடுத்தால்‌ எல்லா விருப்பமும்‌ நிறைவேறுவதாகவும்‌ அருளிச்‌ செய்தாராயிற்று. ப்ரணயீ – (1) பற்றுடையாவன்‌ (2) யாசகன்

காம்யோ ததாதி ஸார்த்தம் –பொன் கட்டிய பசு தானம் பண்ணுகிறார் இதில்
அர்த்தங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூ க்திகள் என்றுமாம்-தவல மதி ப்ரேம தாரயா ஸஹிதம் -ஸூத்தமான -வெண்மை -பிரேமை மிக்கு –நீராய் அலைந்து கரைந்து உருகும் திரு உள்ளம்
அனுபவ ஜெனித ப்ரீதி உள் அடங்காமல் வெளிவந்தவை அன்றோ
கடிகாசல பிரணயிநே -உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளும் அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க-கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் —கோ தானம் -வாக்கு -தானம் செய்த பின்பு அபீஷ்டங்கள் அனைத்துமே அருளுவான் அன்றோ
இந்த ஸ்துதியை நாவினால் நவிலவே நமக்கும் அருளிச் செய்வான் அன்றோ

————

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித வைமுக்ய கல்மஷா திஷணா
ப்ருது குண வதீ மதீயா ஸ்ப்ருஹயதி கடிகாசல ப்ரியாய ப்ருசம் –57-

கலுஷ ஆதி கடித வாக்யை – மனத்தின் கண்‌ (உள்ள) அழுக்கைப்‌ போக்கடிப் பவைகளாகத்‌ தானே சேர்ந்த வேத வாக்கியங்களாலே, அல்லது மஹர்ஷிகளாலே சேர்க்கப்பட்ட இதிஹாஸ புராண வாக்கியங்களாலே, க்ஷாளிதவைமுக்யகல்மஷா கழுவப்பட்ட – எம்பெருமானிடம்‌ பராமுகமா யிருத்தலாகிற அழுக்கை யுடைய, மதீயா திஷணா – என்னுடைய புத்தியானது. ப்ருது குணவதீ – அதிகமான – எம்பெருமானுக்கு நேர்‌ முகமாக இருத்தலென்னும்‌ குணத்தை யுடையதாய்க்‌ கொண்டு, கடிகாசலப்ரியாய கடிகைமலைநாயகன்‌ பொருட்டு, ப்ருசம்‌ மிகவும்‌, ஸ்ப்ருஹயதி – ஆசைப் படுகிறது.
மனதின்கண்‌ உள்ள அழுக்காவன – நான்‌ ஸ்வதந்த்ரன்‌ என்னும்‌ அஹங்காரமும்‌, உலகிலுள்ள பொருள்கள்‌ யாவும்‌ என்னுடையவையே என்னும்‌ மமகாரமுமாகும்‌. இப்படிப்பட்ட அழுக்குக்களை – எம்பெருமானொருவனே ஸ்வதந்த்ரன்‌, மற்ற ஜீவாத்மாக்கள்‌ மற்றுமுள்ள ஜடப் பொருள்களனைத்துமே அப் பெருமானுக்குப்‌ பரதந்திரமானவையே என்ற கருத்துக்களைக்‌ கொண்ட வேத வாக்கியங்கள்‌ அல்லது இதிஹாஸ புராண வாக்கியங்கள்‌ போக்கடிக்கின்றன. இக்கருத்து மனதின்‌ கண்‌ ஊறவூற மனிதர்களின்‌ எண்ணத்தில்‌ பகவத்‌ வைமுக்யம்‌ நசிக்கப் பெற்று செவ்முக்யமென்னும்‌ குணம்‌ அதிகமாக உண்டாகும்‌. அக் குணமுண்டாகவே பகவானிடம்‌ மிக்க ஆசை உண்டாகும்‌ என்பதைக்‌ கவி தம்மோடு தொடர்பு படுத்திக் கூறினாராயிற்று. இகனால்‌ வைமுக்யம்‌- எம்பெருமானிடம்‌ பாரமுகமாக இருத்தல்‌. ஸெளமுக்யம்‌ – நேர்முகமாக இருத்தல்‌. அதாவது சிறிது ஆசை யுண்டாகப்‌ பெறுதல்‌. அந்நிலமை நீடிக்கப் பெற்றால்‌ சில நாட்களில்‌ அதிகமான ஆசையாகிய பக்தி உண்டாகு மென்றபடி. கலுஷம்‌ – காலுஷ்யம்‌ – அழுக்கு. கலுஷம்‌ அதந்தீதி – கலுஷாநீதி கடிதாநி – கடிதாநிச தாநி வாக்யாநிச என்று விக்ரஹவாக்யம்‌. அத பக்ஷணே என்ற தாதுவின்‌ மேல்‌ ணிநிப்ரத்யயம்‌ சேர்ந்தால்‌ ஆதி என்ற ரூபம்‌ நிஷ்பந்நமாகும்‌. இதுநபும்ஸகலிங்க சப்தம்‌. நாசம்‌ பண்ணுமது என்பது அதன்‌ பொருள்‌. கடித வாக்யாநி – தாமே சேர்ந்த வேத வாக்கியங்கள்‌ – வேதம்‌ அபவ் ருஷேயமாகையாலே, கடித வாக்யாநி மஹர்ஷிகளாலே சேர்க்கப்பட்ட இதிஹாஸ புராண வாக்யங்கள்‌-கடிதமென்பதில்‌ முந்தின பக்ஷத்தில்‌ கர்த்தரியிலும்‌ பிந்தின பக்ஷத்தில்‌ கர்பணியிலும்‌ “க்த” ப்ரத்யயம்‌ வந்துள்ளது

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித -அஹங்கார மமகாரா தூஷித
வைமுக்ய கல் மஷாதிஷ ணா -பாராமுகமாக அடியேன் திரு உள்ளம்
ப்ருது குண வதீ மதீயா ஸ் ப்ருஹயதி -அவன் மேலே இழுத்துக் கொண்டு
கடிகாசல ப்ரியாய ப்ருசம் -அக்காரக்கனி உகந்து அருளின திவ்ய தேச மஹாத்ம்யத்தாலேயே நாம் அனுசந்திக்க தாம் நைச்ய அனுசந்தானம் செய்து அருளுகிறார்

—————

அந் விஷ்யதாம் ஸ்வம் அதவா தூஷ்ணீ மாத்வம் ஸூரர்ஷி பித்ரு முக்யா
தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை கடிகாத்ரி பூபுஜே ச சிவை –58

ஸுர ருஷி பித்ருமுக்யா: – தேவதைகள்‌ ருஷிகள்‌ பித்ருக்கள்‌ முதலியவர்களே ! ஸ்வம்‌ அந்விஷ்யதாம்‌ – உங்களுடைய சொத்து தேடப்படட்டும்‌, அதவா – அல்லது (சொத்தே வேண்டா மென்றால்‌) தூஷ்ணீம்‌ ஆத்வம்‌ – : வெறுமனே இருங்கள்‌. (எங்களுடைய சொத்தாக நீ இருக்க நாங்கள்‌ தேடுவதும்‌, வேண்‌டா விடில்‌ வெறுமனே இருப்பதும்‌ எதற்கு என்றால்‌ பதில்‌ கூறுகிறார்‌ – நான்‌ பகவானுடைய சொத்தாக ஆகிவிட்டேனென்று) அஹம்‌ – நான்‌, கடிகாத்ரிபூபுஜே – கடிகைமலை யரசரான எம்பெருமானுக்கு, தத்ஜ்தை;: அவனைப்‌ பற்றி அறிந்த – தத்வ ஜ்ஞாநிகளான , ஸசிவை: – மந்த்ரிகளாலே பாகவதர்களாலும்‌ ஆசார்யர்களாலும்‌, தத் கிங்கர: – அவ்வெம்பெருமானுடைய தொண்டனாக, அர்ப்பித: -ஸமர்ப்பிக்கப்பட்டேன் –
53ம்‌ ஸ்லோகத்தில்‌ – பகவானுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வேனென்றார்‌. 54,55,56ம்‌ ஸ்லோகங்களில்‌ வாசிக கைங்கர்யம்‌ செய்வதா௧க் கூறினார்‌. 57ல்‌ இங்ஙனம்‌ கைங்கர்யம்‌ செய்வதற்குக்‌ காரணமான பக்தி தமக்கு எம்‌பெருமானிடம்‌ உண்டானதாகச்‌ சொன்னார்‌. இதைக்‌ கேட்ட தேவர் ரிஷி பித்ருக்கள்‌ – இது வரையில்‌ எங்களுக்குத்‌ தொண்டு செய்து கொண்டிருந்த நீ எப்பொழுது இப்படி மாறிவிட்டாய் என்று கேட்க விடை யிறுக்கிறார்‌ இதனால்‌. பகவத்‌ க்ருபையால்‌ பாகவதர்களோடு ஸஹ வாஸம்‌ உண்டாக, இவர்கள்‌ என்னை ஸதாசார்யனோடு சேர்க்க, அவ்வாசார்யர்‌ என்னை பகவத் தாஸனாகச்‌ சேர்த்து விட்டார்‌. இனி உங்களுக்கும்‌ எனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை. உங்களுக்கு சொத்து வேண்டுமென்றால்‌ வேறுயாரையாவது தேடிப் பிடித்துக்‌ கொள்ளுங்கள்‌, இல்லையேல்‌ வாளா விருங்களென்று அவர்களிடம் அறை கூவுகிறார்‌ இதனால்‌ என்க.
தேவர்ஷிபூதாப்த ந்ருணாம்‌ பித்ரூணாம்‌ ந கிங்கரோ நாயம்ருணீச ராஜந்‌ | ஸர்வாத்மநா ய: ஸரணம்‌ ஸரண்யம்‌ நாராயணம்‌ லோக குரும்‌ ப்ரபந்ந: |!-(ஸ்ரீ பாகவதம்‌ 11.5.41) – அரசே எவனொருவன்‌ சரணமடையத் தக்கவனாய்‌ (க்ருபையும்‌ சக்தியுமுடையவனாய்‌) லோக பிதாவான நாராயணனை எல்லா விதத்தாலும்‌ சரணமடைந்தானோ, அவன்‌ – தேவர்களுக்கும்‌ ரிஷிகளுக்கும்‌ பூதங்களுக்கும்‌ பந்துக்களுக்கும்‌ பித்ருக்களுக்கும்‌ அடிமைப்பட்டவனல்லன்‌, கடன்பட்டவனுமல்லன்‌ என்ற ஸ்லோகம்‌ இங்கு நினைக்கத் தக்கது . இது கரபாஜந முனிவர்‌ நிமியரசனுக்கு உபதேசித்தது.

உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்-ஸூரர்ஷி பித்ரு முக்யா -ஸூரர் ரிஷிகள் பித்ருக்கள் முதலியவர்அந் விஷ்யதாம் ஸ்வம் -உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்-அதவா தூஷ்ணீ மாத்வம் -வெறுமனே உட்க்கார்ந்து இருங்கள்
கடிகாத்ரி பூபுஜே ச சிவை –அக்காரக்கனி -கடிகாத்ரி அரசன் பற்றிய பூர்ண ஞானம் கொண்ட மந்திரிகள் –மாச முனிகளை ஆஸ்ரயித்த பின்பு-தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை -கைங்கர்ய பரனாக அடியேன் சமர்ப்பிக்கப் பட்டேன்-ஆச்சார்யர்கள் நம்மை விற்கவும் பெறுவார்கள் அன்றோ-சூடகம் -கங்கணம் -தோள் வளை சங்கு சக்கர லாஞ்சனை தோடே செவிப்பூவே -மந்த்ர உபதேசம் -பாடகம் கால் கட்டு -பஞ்ச ஸம்ஸ்காரம்-சாஷாத் பல ஏக லஷ்யம் -மங்களா ஸாஸனம் -ஆஸாசித்தல் –

———-

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே
மன்யே மந்த தீயஸ் தான் மாதங்கா நேவ மத ஜூஷ கலுஷான் –59-

கடிகாமஹீப்ருத: கோப்த்ரே – கடிகைமலையின்‌ அரசனாகிய, ஹரயே (நர)ஸிம்ஹத்தின்‌ பொருட்டு, யே– யார்‌. அநர்த்தகம்‌– வ்யர்த்தமாக – (பயனின்றி) ந்ருத்யந்தி – கூத்தாடுகின்றார்களோ, தாந்‌ – அத்தகைய, மந்ததிய: – புத்தி குறையப் பெற்றவர்களை, கலுஷாந்‌ – அறிவு கலங்கிய, மதஜுஷ: மதம் பிடித்த, மாதங்காந்‌ ஏவ – யானைகளாகவே, மந்யே – கருதுகிறேன்‌.
கடிகைமலை யெம்பெருமானுக்குத் தொண்டராகிய தமக்கு விபரீதரானவர்களை பகவத்‌ த்வேஷிகளை நிந்திக்கிறார்‌ இதனால்‌, மதம்‌ பிடிக்காத யானை சிங்கத்தின்‌ எதிரில்‌ செல்லவே செல்லாது. மதம்‌ பிடித்த யானை அறிவு கலங்கிச்‌ சிங்கத்தின்‌ எதிரே சென்று
ஆடுவதும்‌ பிளிறுவதுமாக இருந்தால்‌ அது சிங்கத்தினால்‌ கொல்லப்படுவது உறுதி. அது போலவே நரசிங்கப்‌ பெருமானெதிரி. வந்து அவனை மதியாமல்‌ கூத்தாடுவர்களேல்‌ அவர்கள்‌ ஸ்வரூப நாசம்‌ பெறுவது உறுதி என்று இதனால்‌ குறித்து அருளினார் –

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே -அநர்த்த நாட்டியம் –ஈஸ்வரோஹம் -அகங்கார மமக தூஷித்தராய் ஆட –கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே –அக்காரக்கனி அரசே-மன்யே மந்த தீ யஸ்தான் -அஞ்ஞானம் தலை எடுத்து-மாதங்கா நேவ மத ஜூஷ் கலுஷான் –கலங்கிய அறிவால் மதம் பிடித்த யானை போல் – காட்டில் ஸிம்ஹ அரசன் முன் ஆடும் யானை மாள்வது போல் அன்றோ இவர்கள் –

———

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே
ஸ்வஸ்தி ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை கடிகாத்ரி பூபுஜே பூயாத் –60-

துஷ்டாந்‌ – துஷ்டர்களை, தரஸா விரைவிலேயே, நிக்ருஹ்ய – தண்டித்து, சிஷ்டாந்‌ அகிலாந்‌ – நல்லோர்கள்‌ அனைவரையும்‌. சிரேண – வெகு நாட்களாகவே, பாலயதே காப்பாற்றி வருமவனும்‌, ஸுஹ்ருதே நல்ல மனமுடையவனும்‌, குணாநாம்‌ பூத்யை நற்குணங்களுக்கு இருப்பிடமானவனுமான-கடிகாத்ரி பூபுஜே – கடிகைமலை யரசனுக்கு, ஸ்வஸ்தி பூயாத்‌ – க்ஷேமம்‌ உண்டாயிடுக.
58ம்‌ ஸ்லோகத்தில்‌ தாம்‌ பகவத் கிங்கரரானமையத்‌ தெரிவித்து மகிழ்ந்து, 59ல்‌ பகவத்‌ த்வேஷிகளை நிந்தித்து, இப்படி துஷ்டர்களை யழித்தலையும்‌ சிஷ்டர்களைக்‌ காத்தலையும்‌ தொழிலாகக்‌ கொண்ட எம்பெருமான்‌ தன்மைக்குத்‌ தோற்று, அவனுக்குப்‌ பல்லாண்டு பாடினாராயிற்று இதனால்

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா -அனிஷ்டங்களைப் போக்கி அருளி –தரஸா-விரைவில்
ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே-ஸமஸ்த இஷ்ட ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை -நல்ல குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடம்-ப்ரதானங்களையும் எப்பொழுதும் அருளி
ஸ்வஸ்தி கடிகாத்ரி பூ பஜே பூயாத் –அக்காரக்கனி தெய்வத்துக்கு அரசுக்கு பல்லாண்டு பாடுவோம்

————

ம்ருதுளம் பவாக்நி பாகாத் வ்யாப்தம் குணதோ வி ஸூத்தம் அஹம் அன்னம்
போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –61

பவஅக்நி பாகாத்‌ – ஸம்ஸாரமென்னும்‌ அக்நியால்‌ சமைக்கப்பட்டதனால்‌, ம்ருதுளம்‌ – (1 மெத்தென்றிருப்பதும்‌ (2) மனம்‌ கனியப் பெற்றவனும்‌, குணத: – (1) சுவையாகிற குணத்தினால்‌ நிறைந்ததும்‌ (2) சம தமாதி குணங்களினால்‌ நிறைந்தவனும்‌, விசுத்தம்‌ – (1) மிகவும்‌ சுத்தமானதும்‌ (2) மிகவும்‌ பரிசுத்தமான வனும்‌, போஜ்யம்‌ – உண்ணத் தக்கதுமான, அந்தம்‌ – அந்நமாக, போஜ்யம்‌ ஸ்வம்‌ – அனுபவிக்கத் தக்கவனுமான தன்னை (என்னை) கடிகாசலஸ்ய போக்த்ரே – கடிகை மலையில் வுள்ள (1) உண்ணுமவன்‌ பொருட்டு (2) அனுபவிப்பவன்‌ பொருட்டு, ஸஸ்நேஹம்‌ – (1) நெய்யோடு கூட (2) பக்தியோடு கூட, ஸமர்ப்பயே – ஸமர்ப்பிக்கிறேன்‌.
இதில்‌ எறும்பியப்பா கடிகை மலை யெம்பெருமானுக்குத்‌ தம்மை அந்நமாக ஸமர்ப்பிக்கிறார்‌. (1) என்று குறிக்கப்பட்ட விசேஷணங்கள்‌ அந்நத்துக்கும்‌, (2) என்று குறிக்கப்பட்ட விசேஷணங்கள்‌ – ஸ்வம்‌ என்‌பதனால்‌ சொல்லப்பட்ட தமக்கும்‌ (எறும்பி அப்பாவுக்கும்‌) பொருத்துக.
அந்நம்‌ சமைக்கப்பட்டு மெத்தென்றிருக்கும, சுவைக் குணம்‌ நிறைந்திருக்கும்‌, தூய்மை பெற்றிருக்கும்‌, நெய் சேர்ந்திருக்கும்‌. இப்படிப்பட்ட அந்நமே உண்பவனுக்கு உண்ணத் தக்கது. அங்ஙனமே அப்பாவும்‌ ஸம்ஸாராக்நியினால்‌ சமைக்கப்பட்டு முரட்டுத்தனம்‌ நீங்கி மெத்தென்றிருப்பர்‌. மனவடக்கம்‌ பொறியடக்கம்‌ முதலிய குணங்கள்‌ நிறையப் பெற்றிருப்பர்‌. அதனால்‌ தூய்மை பெற்றிருப்பர்‌. பகவானிடம்‌ பக்தியுடனிருப்பர்‌. இப்படிப்பட்ட இவர்‌ அனுபவிக்கின்ற பகவானுக்கு அனுபவிக்கத் தக்கவராயிருப்பர்‌ என்றபடி.

மருதலம் -வெந்து குழைந்து –நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற
பவாக்நி பாகாத் -அக்னியால் பக்குவப்பட்டு -சம்சார பாவாக்னி
வ்யாப்தம் குணதோ -ருசி மிக்கு சமதமாதி குணங்கள் நிறைந்து
வி ஸூத்தம் -பரி ஸூத்தம் –நெய் சமஸ்க்ருதம் அன்ன ஸூத்தி நிறைந்து
அஹம் அன்னம் போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் -அடியேனை சமர்ப்பிக்கிறேன் -சொத்து தானே-போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –இஷ்டமாக அனுபவித்து -ஸ்வாமி சொத்தை -நெய் -மிகுந்த பக்தி -நிறைந்த அன்னம் -அடியேன் பல்லாண்டு கீழே அருளி –அம்மம் உண்ண இதில் -பெரியாழ்வார் போல் இவரும் இதில்

————–

நித்ய ஸ்ரீ யே குணா நாம் நிதயே நிஷ்ட யூத நிகில தோஷாய
ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –62-

நித்ய ஸ்ரியே – பிராட்டியோடு எப்போதும்‌ கூடியிருப்பவனும்‌, (அது காரணமாக) நிஷ்ட்யூத நிகில தோஷாய – காரி யுமிழப்பட்ட எல்லாக்‌ குற்றங்களை யுமுடையவனும்‌, குணாநாம்‌ நிதயே – நற்குணங்களுக்கு நிதி போன்றவனுமான, கடிகாசலஸ்ய பர்த்ரே கடிகாசலத்தில்‌ வாழும்‌ எம்பெருமானாகிய கணவனுக்கு, பாக்ய வசாத்‌ – (என்னுடைய) அத்ருஷ்ட வசத்தில்‌, மயா – என்னால்‌. எஷா ப்ரஜ்ஞா – இந்த ப்ரஜ்ஞை என்னும்‌ கன்னிகை, அர்ப்பிதா – ஸமர்ப்பிக்கப் பட்டாள்‌.
இங்கு ப்ரஜ்ஞையாவது இடையறாமல்‌ எம்பெருமானை நினைத்தலாகிய ஜ்ஞான விசேஷம்‌. இதுவே பக்தி யெனப்படும் -இது தன்னை அவனுக்குக் கொடுத்தலாவது அவனையே எப்போதும்‌ நினைத்தல்‌ என்றபடி -அல்லது தத்வ ஹித புருஷார்த்த விஷயமான புத்தியும்‌ ப்ரஜ்ஞையாகலாம்‌. இதை நாயகனுக்கு ஸமர்ப்பித்தலாவது எம்பெருமானையே பர தத்துவமாகவும்‌ மோஷ உபாய ரூபமான ஹிதமாகவும்‌ புருஷார்த்தமாகவும்‌ அறுதி யிட்டிருக்கையாகும்‌. எம்பெருமானை பர்த்தா என்று குறித்துள்ளதற்கேற்ப, ப்ரஜ்ஞை கன்னிகையாகக்‌ கருதப்பட்டது. ஆக “ பிராட்டியின்‌ நித்ய யோகத்தினால்‌ குற்றமாகிய ஸ்வாதந்த்ரியம்‌ தலை மடிந்து, அதனால் தலை யெடுத்த வாத்ஸல்யாதி குணங்களை யுடைய எம்பெருமானாகிய மணவாளப்‌ பிள்ளைக்கு தமது ப்ரஜ்ஞையாம்‌ கன்னிகையைக்‌ கைப்பிடிக்கும்படி ஸமர்ப்பித்தார் ஆயிற்று -இதனால்‌. “ஓண் தாமரையாள்‌ கேள்வ னொருவனையே நோக்குமுணர்வு’ தான்‌ உணர்வாவது அதுவே இங்கு ப்ரஜ்ஞையாகக்‌ குறிப்பிடப்பட்டது என்க –

நித்ய ஸ்ரீ யே –கூடவே பிரியாமல் -ஸ்ரீ யபதி புருஷார்த்தம் இருப்பதால் பயப்படவே வேண்டாமே-காகாசுரன் இவள் சந்நிதியால் உஜ்ஜீவித்தான் -ராவணன் இவள் அஸந்நிதியால் மாண்டான்
குணா நாம் நிதயே-அதுக்கும் மேல் குணக்கடலாகவும்
என்னடியார் அது செய்யார் என்பவனும் ந கச்சின் ந அபராதயதி என்பாளும் உண்டே
நிஷ்ட யூத நிகில தோஷாய-காரி உமிழும் படி தோஷங்கள் அனைத்துக்கும் இருப்பிடமான நம் போல்வாரும்-ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே -ப்ரஞ்ஞா -தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள்-இவற்றை உணர்ந்து -ஸமர்ப்பிக்கப் பட்டாள்
கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –அதிர்ஷ்ட வசமாகப் பெற்ற மணவாளன் அக்காரக்கனி அன்றோ -திரிபுவன -உபய விபூதி நாயகன் அன்றோ
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -பிரதம மத்யம சரம பர்வதங்கள் -பெருமாள் -ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர் -ஆச்சார்யர் —கன்னிகையாக உருவகம் –தாயார் கூடவே இருப்பதால் பெற்ற பலன் அன்றோ –

—————

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் சாத்ரே ஸத் புருஷ வித் விஷாம் ஸததம்
தாத்ரே ஸகல பலா நாம் நேத்ரே ஜகதாம் நமோ ந்ருஸிம்ஹாய –63-

ஸததம்‌ – எப்போதும்‌, ஸமாஸ்ரிதாநாம்‌ – தன்னை யடைந்தவர்களை, பாத்ரே காப்பவனும்‌, ஸத் புருஷ வித்விஷாம்‌ – தன்னை யடைந்த ஸத்புருஷர்களின்‌ பகைவர்களை, சாத்ரே – மெலிவுறச்‌ செய்பவனும்‌-அழிப்பவனும்‌, ஸகல பலாநாம்‌ – எல்லா விதமான பலன்களையும்‌, தாத்ரே – (தன்னை யடைந்தவர்களுக்குத்‌, தருமவனும்‌ (இங்ஙனமாக) ஜகதாம்‌ – உலகத்திலுள்ளோர்க்கு, நேத்ரே – நாயானாகிய, ந்ருஸிம்ஹாய – நரஸிம்ஹப்‌ பெருமாளுக்கு, நம: – நமஸ்காரம்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எம்பெருமானே தத்வமும்‌ ஹிதமும்‌ புருஷார்த்தமும்‌ என்றறுதி யிடுதற்குரிய ப்ரஜ்ஞையை உடையவராகத்‌ தம்மைக்‌ குறிப்பிட்டவர்‌, அந்த ப்ரஜ்ஞைக்குத்‌ தக்கபடி எம்பெருமானுக்கு நமஸ்காரம் செய்கிறார்‌ இது தன்னில்‌. அவனே பர தத்துவம்‌ (சேஷி) என்றறிந்தாலும்‌, அவனே ஹிதம்‌ (மோக்ஷோபாயம்‌) என்றறிந்தாலும்‌, அவனே புருஷார்த்தம்‌ (ப்ராப்யம்‌) என்றறிந்தாலும்‌ அவனுக்கு நமஸ்காரம்‌ செய்யவேணுமிறே. அதனாலன்றோ திருமந்‌திரத்தில்‌ நடுவிலுள்ள நம: பதத்தை ஆவ்ருத்தி செய்து- சேஷியைச்‌ சொல்லும்‌ ப்ரணவத்தோடும்‌ உபாயத்தைச்‌ சொல்லும்‌ ‘நம:” பதத்தோடும்‌, ப்ராப்யத்தைச்‌ சொல்லும்‌ நாராயணாய என்னும்‌ பதத்தோடும்‌ ஆசார்யர்கள்‌ கூட்டி அர்த்தம்‌ அருளிச் செய்வது.

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதர் அனைவரையும் கை விடாமல் காத்து அருளி
சாத்ரே ஸத் புருஷ வித்விஷாம் ஸததம் –ஸத் புருஷர் -ஸாத்விகர் -ஆக்கி அருளி -தமோ ரஜோ குணம் தலை தூக்க விடாமல் பண்ணி அருளி
தாத்ரே ஸகல பலா நாம் -ஸமஸ்த அபீஷ்டங்களையும் அருளி
நேத்ரே ஜகதாம்அனைவருக்கும் கண்ணாவான் -நாயகன் ஆவான் –
நமோ ந்ருஸிம்ஹாய-அடியேன் உம்மை நமஸ்கரிக்கிறேன்
மந்த்ர ராஜ -திருமந்திரம் -திரு அஷ்டாக்ஷரம் -அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் அவனே தத்வம் -அவனே உபாயம் -அவனே உபேயம்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
பர கத ஸ்வீ கார நிஷ்டர் -இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
பொருள் அல்லாத அடியேனை பொருளாக்கி அடிமை கொள்வான்
ஓம் நம -ஸ்வரூப விரோதி அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளி
நமோ நம -உபாய விரோதி கழித்து அருளி
நாராயணாயா நம -ப்ராப்ய விரோதி கழித்து அருளி
நரஸிம்ஹ -நாராயணா போல் சதுர் அக்ஷரீ தானே –

———–

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் ஸூக முக ஸேவ்யாத் ஸூ ஸீதலச் சாயாத் –
கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத கஸ்யா காங்ஷிதம் ந பலம்–64-

ஸுமநஸ் ஸமூஹ பவ்யாத்‌ – (1) தேவதா ஸமுஹத்திற்கு க்ஷேமமளிப்பவனும்‌, (2) புஷ்ப ஸமூஹத்தினால்‌ மங்களமானதும்‌, சுக முக ஸேவ்யாத்‌ – (1) சுக முனிவர்‌ முதலியவர்களாலே ஸேவிக்கத் தக்கவனும்‌, 2) கிளி முதலிய பஷிகளாலே அடையப் பெற்றதும்‌, ஸுசீதள ச்சாயாத்‌ – மிகக்‌ குளிர்ந்த காந்தியை உடையவனும்‌ (2) மிகக்‌ குளிர்ந்த நிழலை யுடையதும்‌, கடிகாத்ரி தட நிசநடாத்‌ – கடிகைமலைத் தாழ்வரையில்‌ (1) தோன்றியவனுமான (2) முளைத்ததுமான. கல்பகத: – (1) எம்பெருமானாகிய (2) கற்பக மரத்தினிடமிருந்து, கஸ்ய – யாருக்கு, காங்க்ஷிதம்‌ பலம்‌ (1) விரும்பிய பலன்‌ (2) விரும்பிய பழம்‌, ந(லப்யதே) கிடைக்காது.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எல்லாப்‌ பலன்களையும்‌ தருமவன்‌ என்று அந்வயத்தினால்‌ (உடன்‌ பாட்டினால்‌) அருளிச்‌ செய்தவர்‌, அது தன்னை திடப் படுத்துவதற்காக இந்த ஸ்லோகத்தில்‌, யாருக்கு என்ன பலன்‌ கிடைக்காது என்று “வ்யதி ரேகத்தினால்‌” (எதிர் மறையினால்‌) அருளிச் செய்கிறார்‌. மேலும்‌ எம்பெருமானை எல்லாப் பயன்களையும்‌ எல்லாப்‌ பழங்களையும்‌ கொடுக்கும்‌ கற்பக மரமாக ரூபணம்‌ செய்கிறார் இதில் எம்பெருமானுக்கும்‌ கற்பகத்‌ தருவுக்கும்‌ பொருந்தும்படி சிலேடையில்‌ விசேஷணங்களை யமைத்துள்ளமை காண்க-

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் –வ்ருக்ஷத்தில் புஷ்ப ஸமூஹம் இருக்குமே-தேவதா ஸமூஹங்களுக்கு-ஸூக முக ஸேவ்யாத் -கிளி போன்றவை தங்கும் இடம்-ஸூக பிரமுகர்கள் பலரால் ஸேவிக்கப் பட்டவர்-ஸூ ஸீதலச் சாயாத் –குளிர்ந்த நிழல் பரவி இருக்குமே00சம்சார தாப த்ரயங்களைப் போக்கி அருளி-கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத -தாழ்வரையில் -கற்பக வ்ருக்ஷம்-கஸ்யா காங்ஷிதம் ந பலம் –யாருக்குத் தான் ஆசைப்பட்டவை கிடைக்காமல் போகும்-வியதிரேகத்தில் என்ன பலம் தான் கிட்டாது என்று இதில் திடமாக புத்திக்கு உபதேசம் –எனக்கே தந்தைத் தந்த கல்பகம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான்

————–

அவிரத ஹித ப்ரவ்ருத்தே ஆபதி ஸஹிதாத் அக்ருத்ரிம ஸ்நேஹாத்
மம கடிகாசல பந்தோ மான்யா தன்யேந கேந கிம் கார்யம் –65-

அவிரதஹித ப்ரவ்ருத்தே – இடைவிடாமல்‌ நமக்கு நன்மை செய்வதில்‌ முயலுமவனும்‌, ஆபதி – ஆபத்து வரும் போது, ஸஹிதாத்‌ – நம்மை விடாமல்‌ கூடவே இருப்பவனும்‌, (அவ்விரண்டிற்கும்‌ உதவியாக) அக்ருத்ரிம ஸ்நேஹாத்‌ – இயற்கையான (கபடமற்ற) நட்புடையவனும்‌, மாந்யாத்‌ – (அதனால்‌) கெளரவிக்கத் தக்கவனுமாகிய கடிகாசல பந்தோ: – கடிகை மலைபிலுள்ள பந்துவான எம்பெருமானை விட, அந்யேந வேறான, கேந – யாராலே, மம – எனக்கு, கிம்‌ கார்யம்‌ – எந்த காரியம்‌ (ப்ரயோஜனம்‌), பவேத்‌ உண்டாகக்‌ கடவது.
உண்மையான பந்துவுக்கு லக்ஷணம்‌ – கபடமற்ற நட்பும்‌, எப்போதும்‌ தன்‌ நண்பனுக்கு நன்மை செய்யும்‌ முயற்சி யுடைமையும்‌, ஆபத்து வந்தால்‌ கூடவே இருந்து உதவி செய்வதுமாகும்‌. அத்தகைய லக்ஷணம்‌ எம்பெருமான்‌ தவிர வேறு யாரிடமும்‌ இல்லாமையால்‌ அவனைத்‌ தவிர்ந்த யாரால்‌ எனகக என்ன காரியம்‌ ஆக வேண்டியிருக்கிறதென்றார்‌ இதனால்‌. எம்பிரானெந்தை என்னுடைச்‌ சுற்றம்‌ (பெரியதிருமொழி 1.1.6) என்று தொடங்கிக்‌ கலியன்‌, ஸர்வேஸ்வானே எல்லா வித பந்துவுமாவான்‌ என்றருளிச்‌ செய்தார் இறே –

அவிரத ஹித ப்ரவ்ருத்தே -நன்மையே செய்யும்-ஆபதி ஸஹிதாத் –ஆபத்துக்களில் துணையாக-அக்ருத்ரிம ஸ்நேஹாத் -இயற்கையாகவே நண்பன்-ஸக்யம் நவ வித பகுதிகளில் ஸ்நேஹ பாவமும் உண்டே-மம கடிகாசல பந்தோ –உற்ற நண்பனே விளிச் சொல்-மான்யாத் –மதிக்க வேண்டுமே-அன்யேந கேந கிம் கார்யம்--இவரை விட வேறே யாரால் என்ன வேண்டும்

—————

கந கருண அம்ருத பூரை கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநி தை
பாப அடாவீ ப்ரதக்தா பஜதே சித்ரம் பவ அம்புதி ஸோஷம் –66-

கடிகசால க்ருஷ்ண மேகத. – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிய கறுத்த மேகத்தாலே, ஜநிதை: – உணடு பண்ணப்பட்ட, கந கருணா அம்ருதபூரை: பெருங் கருணையாகிற அம்ருத ப்ரவாஹங்களினால்‌, பாப அடவீ – எனது பாவங்களாகிய காடு, ப்ரதக்தா – நன்றாகக்‌ கொளுத்தப்பட்டது; பவஅம்புதி:- (எனது) ஸம்ஸாரமாகிய கடல்‌, சோஷம்‌ பஜதே – வற்றுதலை அடைகிறது. சித்ரம்‌ – இது ஆச்சரியம்‌.
கொளுத்தும்‌ சக்தியும்‌ வற்றச்‌ செய்யுமாற்றலும்‌ நெருப்புக்கிருக்க, இதில்‌ கருணாம்ருத ப்ரவாஹத்திற்குப்‌ பாவங்கொளுத்து மாற்றலும்‌, பிறவிக் கடலை வற்றச்‌ செய்யும்‌ சக்தியும்‌ உண்டானதாகச்‌ சொல்லியதனால்‌ இது ஆச்சரியமென்றார்‌. குளிர்ந்த கருணையை
நெருப்பென்ன மாட்டாமல்‌ அம்ருத ப்ரவாஹம் என்றார்‌ என்க. இதில்‌ எம்பெருமானை கைம்மாறு கருதாமல்‌ மழை பொழியும்‌ கார்மேகம் என்றார்

கந கருண அம்ருத பூரை –அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அம்ருத ப்ரவாஹம் பொழிந்து
கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநிதை -இன்னும் கார் வண்ணனே
பாப அடாவீ ப்ரதக்தா -காட்டுத்தீயையும் அணைக்க வல்ல மேகம் அன்றோ
பவ அம்புதி ஸோஷம் –சம்சாரக்கடலை வற்ற வைக்கும் மேகம் அன்றோ
சித்ரம் பஜதே –என்ன ஆச்சர்யம் -ஆஸ்ரயிக்க வேண்டாவோ

————

கோபி பிரகாசி தார்த்தாத் கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத்
ஜாகர்தி ஸதத நித்ரம் ஸ விதுர் ஜகதாம் மனஸ் ஸரோஜம் மே –67-

கோபி: (1) தனது கிரணங்களினால்‌ (2) (கீதை சரமச்லோகம்‌ முதலிய) தனது ஸ்ரீஸூக்திகளினால்‌, ப்ரகாசித அர்த்தாச்‌ – (1) உலகிலுள்ள பொருள்களைக்‌ கண்களுக்குக்‌ காட்டுபவனும்‌ (2) சாஸ்த்‌ரார்த்தங்களை விளங்கச் செய்பவனும்‌, கடிகாஅபிதாநவதி கோத்ரே – கடிகை யென்னும்‌ பெயர்‌ பெற்ற மலையில்‌, உதிதாத்‌ தோன்றியவனுமான, ஜகதாம்‌ ஸவிது: – (1) உலகங்கட்கு ஸூர்யனானவனிடமிருந்து, ஸதத நித்ரம்‌ (1) எப்போதும்‌ கூம்பியே இருக்கிற (2) எப்போதும்‌ அறியாமையாகிய தூக்கங் கொண்டிருக்கிற, மே – என்னுடைய, மந: ஸரோஜம்‌ – தாமரை போன்ற மனஸ்ஸானது, ஜாகர்த்தி – (1) மலர்ச்சியை அடைகிறது (2) அறிவாகிய மலர்ச்சியைப்‌ பெறுகிறது.
கெள: – கிரணமும்‌ வாக்கும்‌. கோத்ரம்‌ – மலை. ஸவிதா – ஸூர்யனும்‌,-உலகங்களைப்‌ பெற்ற எம்பெருமானும்‌. இதில்‌ எம்பெருமானை ஸூரியனாகப்‌ பேசி யனுபவித்தார்‌

கோபி பிரகாசி தார்த்தாத் -தனது கிரணங்களால் பொருள்களை விளக்கும் ஆதித்யன்
கருணை ப்ரவாஹ -ஸ்ரீ ஸூக்திகளால் -சரம ஸ்லோஹாதிகள் -இவற்றால் ஸாஸ்த்ர சாரங்களை அருளிச் செய்து விளக்கி
கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத் –மலையிலே -உதித்து –
கீழே 13 ஸ்லோகம் கபி சூர்யன் உதித்து அக்காரக்கனியை ஸேவித்து பார்த்தோம்
எம்பெருமான் தானே உகந்து அருளி நித்யவாஸம் செய்து அருளி
ஜாகர்தி சதத நித்ரம் ஸ விது ஜகதாம் -உறக்கத்தில் இருந்து எழுப்பி
ஆதித்ய உதயம் முன்பே எழும் சாத்விகர் -காணாமல் கண்டு கொண்டு திரிகால சந்த்யா வந்தனம்
அஞ்ஞானம் அந்தகாரம் -உழன்று இருக்கும் சம்சாரிகள் விடுபட்டு ஞான மலர்த்தியை
மனஸ் ஸரோஜம் மே -மானஸ தாமரையை அலர்த்தும் அக்காரக்கனியே
தானே புகுந்து அகற்றி-விகஸித்து அருளுகிறார் -என்று ஸ்லாகிக்கிறார்

————

ருஷ்டேந யேந ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி
கந துரித தந்திநோ அஸ்மாத் கடிகாத்ரி ஹரே கதம் ந பிப்யது மே –68-

ருஷ்டேந யேந – கோபமடைந்த எம் பெருமானாலே, ருத்ர: – சிவபெருமான்‌, சரப:அபி – சரப வுருக்‌ கொண்ட போதிலும்‌, ருக்ண: – தோற்றுப்போய்‌, தரணீம்‌ ஜகாம – பூமிக்குள்ளே புகுந்து கொண்டானோ, அஸ்மாத்‌ கடிகாத்ரிவரே: – அத்தகைய இந்த கடிகாசலச் சிங்கப்‌ பெருமானிடமிருந்து, மே – என்னுடைய. கந துரித தந்திந: – மஹா பாதங்களாகிய யானைகள்‌, கதம்‌ – எப்படி, ந பிப்யது – அஞ்ச மாட்டா,
இக் கடிகை மலைச்சிங்கம்‌ சரபத்தை.. அச்சுறுத்துவதாக இருக்க, இதனிடம்‌ யானைகள்‌ அஞ்சுவதைப்‌ பற்றித்‌ தனியே சொல்ல வேண்டுமா ? என்றபடி
சரபம்‌ – இரண்டு தலைகளையும்‌ சிறகுகளையும்‌ கூரிய நகமுள்ள எட்டுக் கால்களையும்‌ மேல்‌ நோக்கி. கண்களை யுமுடைய மிருக விசேடம்‌. இதனைப்‌ பறவை யென்றலுமுண்டு. இது சிங்கத்தை எளிதிற்‌ கொல்லுந்‌ திறமுடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்கமாதலாலும்‌, ஸாமாந்ய ஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலுடைய புருஷோத்தமனது அவதாரமான திவ்ய ஸிம்ஹமாதலாலும்‌ இது சரபத்தைக்‌ கொன்று விட்டது-
ஹே! மர்த்ய ஸிம்ஹவ புஷஸ்தவ தேஜஸோஃம்ம ஸம்புர்‌ பவந்ஹி ஸரப: ஸலபோ பபூவ” சரப வுருக்‌ கொண்ட சிவன்‌ நரஸிம்ஹ ரூபங்கொண்ட உனது தேஜஸ்ஸில்‌ ஒரு மூலையில்‌ விட்டில்‌ பூச்சி போலே அகப்பட்டு மாண்டானன்றோ ? இது ஆச்சரியம்‌ – என்று கூரத் தாழ்வான்‌” (அதிமாநுஷ ஸ்தவ ‘ – 12) அருளிச் செய்தது ஸேவிக்கத் தக்கது –

ருஷ்டேந யேந -கொண்ட சீற்றம் ஓன்று இருக்க
ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி –சரப உருவாக வந்த பொழுதும் கூட
தோற்று கீழே ஒளிந்து போகப் பண்ணினாய் அன்றோ-
இவ்வளவு வைபவம் கொண்ட அக்காரக்கனி அழகிய ஸிம்ஹர் முன்னால்
பாப மூட்டையாகிய பெரிய யானைகள் பயந்து நடுங்கச் சொல்லவும் வேணுமோ

கிரீடா விதேஸ் பரிகரஸ் தவ யா து மாயா சா மோஹிநீ ந கதமஸ்ய து ஹந்த ஐந்தோ ஹை மர்த்ய ஸிம்ஹ வபுஷஸ் தவ தேஜஸ் சா அம்சே சம்புர் பவந் ஹி சரபச் சலபோ பபூவ –12-யாதொரு மாயையானது-தேவரீருடைய லீலா வியாபாரத்துக்கு ஸாமக்ரியையாய் இருக்கிறதோ அந்த மாயை யானது எந்தப் பிராணிக்குத் தான் அவி விவேகத்தை உண்டு பண்ணுகிறது இல்லை சரப உருக் கொண்ட சிவனானவன் நரஸிம்ஹ வடிவு கொண்ட தேவரீருடைய தேஜஸ்ஸின் ஏக தேசத்திலே வீட்டில் பூச்சி போலே பட்டு ஒழிந்தான் இறே–என்ன ஆச்சர்யம் –சலபோ பபூவ-லகாரம் -ரகாரம் -சரபம் சலபம் ஆனதே என்ன ஆச்சர்யம் –ஸ்ரீ நரஸிம்ஹ பிரதாபா அக்னிஸ் புலிங்கத்திலே வீட்டில் பூச்சி பட்டது பட்டான் என்பது மாயையின் காரியமே-இத்தை கண்ட ருத்ரன் உனது பரத்வம் அறிந்து போனான் வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும் அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த சிங்கவேள் குன்றத்தினார்க்கு –சிங்க வேள் குன்றம் நூற்று எட்டு அந்தாதி -97-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்-சரபத்தை பிளந்தாயே -மன்மதனை எரித்த சிவனையே பிளந்தாயே

————–

அவ்யாஹத ப்ரஸாராத் அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் ஸஹஸ்ராஸ்யாத்
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் கடிகாத்ரி போகிந கோஹி –-69-

அவ்யாஹத ப்ரசாராத்‌ – தடை யற்ற ஸஞ்சாரத்தை யுடையதும்‌, அபஹத மந்த்ர ஒளஷதாத்‌ – தூரத்தில்‌ துரத்தப்பட்ட மந்த்ரமென்ன மருந்தென்ன இவற்றை யுடையதும்‌ (மந்திரத்திற்கும் மருந்துக்கும்‌ கட்டுப்படாததும்‌), ஸஹஸ்ரஆஸ்யாத்‌ ஆயி ரவாய்களுடையதுமான, கடிகாத்ரி போகிந: – கடிகை மலையிலுள்ள போக மனுபவிக்கும்‌ எம்பெருமானாகிய ஸர்ப்பத்தைக்‌ காட்டிலும்‌, கோ ஹி – வேறு யார் தான்‌, பாதக மூஷிக நிவஹாத்‌ – பாபமாகிய எலிக் கூட்டத்திலிருந்து, பாயாத்‌ (நம்மைக்‌) காப்பாற்றக் கடவர்‌.
இதில்‌ எம்பெருமானை ஸர்பமாக “ரூபணம்‌” செய்தார்‌. ஆயிர முகமுடைய எம்பெருமானாகிற ஸர்ப்பம் தான்‌ நம்முடைய எண்ணற்ற பாதகமாகிய எலிகளை விழுங்க வல்ல தென்றபடி. போகீ – பாம்பும்‌, போகமனுவிப்பவனும்‌, மந்திரமும்‌ மருந்தும்‌ தானிட்ட வழக்காகப்‌ பெற்ற எம்‌பெருமானாகிற பாம்பு, மந்திர – மருந்துகளுக்குக்‌ கட்டுப்படாமல்‌ தடையற்று பக்தர்களுள்ள விடந்தோறும்‌ திரிந்து அவர்களுடைய பாதக மூஷிகங்களை விழுங்குமென்பது கருத்து –

அவ்யாஹத ப்ரஸாராத் -தனக்கு தடை இல்லாமல் எங்கும் புகுந்து -சஞ்சரிக்கும் அரவம்
ஸர்வ வ்யாபி -அண்டம் அகத்தும் புறத்தும் உள்ளான்
அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் -மந்த்ரத்துக்கும் ஒவ்ஷதத்துக்கும் கட்டுப்படாமல்
வேதமோ தபஸோ ஹோமமோ -கட்டுப்படுத்த முடியாமல் -பக்தி ஒன்றாலே –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ
ஸஹஸ்ராஸ்யாத் -ஆயிரம் தலை கொண்ட –ஸஹஸ்ரம் பல பலவே ஸர்வேஸ்வரேஸ்வரனையே சொன்னவாறு
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் –எலி பயல்கள் போல் -துஷ்ட பாபங்களையே எலி கூட்டமாக –கடிகாத்ரி போகி ந கோஹி -அக்காரக் கனியைத் தவிர வேறே யாரால் போக்க முடியும்

———–

கலித புருஷார்த்த ஸார்தாத் கடிகா கடிதாத் ஸநாதநாத் தர்மாத்
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –70 –

கலித புருஷார்த்த ஸார்த்தாத்‌ – உண்டு பண்ணப்பட்ட புருஷார்த்த ஸமூஹத்தை யுடைய உபாயமாயும்‌, கடிகா கடிதாத்‌ – கடிகை மலையில்‌ (மஹிரிஷிகளால்‌) சேர்க்கப் பட்டதுமான, ஸநாதநாத்‌ தர்மாத்‌ . நம்மால்‌ முயன்று உண்டாக்கப்படுகின்ற கரும யோகாதி தருமங்கள்‌ போலன்றிககே) நித்ய ஸித்தமான தருமமாகிய கடிகை யெம்பெருமானிடமிருந்து, ப்ரமாத்யதாம்‌ – தவறின, பும்ஸாம்‌ – புருஷர்களுக்கு, அத்ர அமுத்ர வா – இம்மையிலோ மறுமையிலோ, கிம்‌ வா க்ஷேமம்‌ ஸ்யாத்‌ – எந்த நன்மை தான்‌ உண்டாகும்‌ ?
புருஷார்த்தங்கள்‌ – இம்மை மறுமைகளல்‌ இன்பமும்‌, கைவல்ய மோக்ஷ ஸூகமும்‌ பரம பதத்தில்‌ பகவதநுபவ ஸூகமுமாம்‌, தருமம்‌ – ஸூகத்தைச்‌ சாதித்துத்‌ தரும்‌ உபாயம்‌ – முன்‌ ஸ்லோகத்தில்‌ ஸுகாநுபவத்திற்குத்‌ தடையாக வுள்ள பாவங்களை நீக்குதலாகிய அநிஷ்ட பரிஹாரம்‌ கூறினார்‌. இதில்‌ (இஷ்டமாகிய) ஸூகத்தைத்‌ தருவதாகிய இஷ்ட ப்ராபணம்‌ கூறினார்‌. இவை யிரண்டுமன்றோ உபாயத்தின காரியம்‌; ஹி ஹி – பாத பூரணம்‌.

கலித புருஷார்த்த ஸார்தாத் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -இங்கும் அங்கும் -தந்து அருளும்
கடிகா கடிதாத் ஸநாத நாத் தர்மாத் -அக்காரக்கனி -தர்ம நிஷ்டையில் -ததாமி ஏதத் விரதம் மம -என்னுமவன் அன்றோ
அநாதி தர்மம் ராமாவதாரத்தில் வெளிப்படுத்தி அருளி -அவனைப் போல் அநாதி
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –இவ்வாறு இருந்தும் நாம் இடறி விழுகிறோமே
பும்ஸாம் -மானிடர்கள் –
அத்ர அமுத்ர-இங்கும் அங்கும்
க்ஷேமம் பெறாமல் இழப்பது ஆச்சார்யம் அன்றோ -ஹி –

———

கந ஸமய நிர் வ்யபேஷாத் மேகாத் கடிகாத்ரி பர்த்ரு ருத்பூதா
ஷாள யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –71-

கந ஸமய நிர் வ்யபேக்ஷாத்‌ – கார் காலததை எதிர் பார்க்காத, கடிகாத்ரி பர்த்து: கடிகைமலைத் தலைவன்‌ என்கிற, மேகாத்‌ – மேகத்தினிடமிருந்து, உத்பூதா – உண்டான, காசந – ஒப்பற்ற, கருணா தரங்கிணீ – கருணையாகிய ஆறானது, கலுஷ மலிநம்‌ பாபத்தினால்‌ அழுக்கடைந்த, புவநம்‌ – உலகத்தை (உலகிலுள்ளோரை) க்ஷாளயதி சுத்தி செய்கிறது.
இதில்‌ எம்பெருமானை மேகமாகவும்‌, அவனிடமிருந்து பெருகுகிற கருணையை
நதியாகவும்‌ வருணிக்கிறார்‌. உலகில்‌ வெளி யழுக்கைக் கழுவித்‌ தூய்மை யாக்கும்‌ ஆறானது கார் காலத்திலுண்டாகும்‌ மேகத்தை எதிர் பார்க்கும்‌. உள்ளழுக்காகிய பாபத்தைக் கழுவிச் சுத்தமாக்கும்‌ கருணை யென்னும்‌ ஆறு கார் காலத்தை எதிர்பாராமல்‌ எப்போதும்‌ பெருகும்‌. எம்பெருமான்‌ நித்யனாகையால்‌ அவனது கருணையும்‌ நித்யமாய்ப்‌ பாபிகளுக்கு உபயோகப் படுகிறது. அதை நாம்‌ உபயோகித்துக்‌ கொள்ள வேணுமென்றபடி. தரங்கிணீ அலைகளை உடைய ஆறு.

கந ஸமய நிர் வ்யபேஷாத் -நதி தேவதை -மழை கால ருதுவை விரும்புமே -அசுத்தங்களை தள்ளிக் கொண்டு போகும் அன்றோ –ஆனால் சரத்காலம் அபேக்ஷை இல்லாத அக்காரக்கனி காள மேகம்
மேகாத் கடிகாத்ரி பர்த்ரு –தலைவன் -கணவன் -இவனே மேகம்
ருத்பூதா -உத்பத்தி செய்து அருளும்
ஷாள யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –பாப அழுக்கு கூட்டங்களை உடனே சுத்தம் பண்ணும் –கருணை அலைகள் மிக்கு உள்ள நதி-எப்பொழுதுமே -எத்தையும் எதிர்பார்க்காமலேயே செய்து அருளும் அன்றோ

————–

ஸந் நிஹித சங்க பத்மாத் ஸர்வ ஸகாத் ஸகல புண்ய ஜன ஸேவ்யாத்
கடிகாத்ரி ராஜ ராஜாத் கா வா ந ஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத் –72-

ஸமாஸ்ரிதாத்‌ – (நம்மால்‌) தஞ்சமடையப்‌ பெற்றவனாய்க்‌ கொண்டு, ஸந்நிஹித சங்க பத்மாத்‌ – (1) தன்னருகில்‌ இருக்கப்‌ பெற்ற சங்கையும்‌ தாமரை மலரையும்‌ அல்லது பிராட்டியையும்‌ உடையவனும்‌ (2) தன்னிடமுள்ள சங்க நிதி பத்ம நிதிகளை யுடையவனும்‌, ஸர்வ ஸகாத்‌ – (1) எல்லோருக்‌கும்‌ தோழனானவனும்‌, (2) சிவ பெருமானுக்குத்‌ தோழனானவனும்‌, ஸகல புண்ய ஜந ஸேவ்யாத்‌ – (1) எல்லாப் புண்யசாலி ஜனங்களாலும்‌ ஸேவிக்கத் தக்கவனுமான, (2) எல்ல புருக்ஷர்களாலும்‌ ஸேவிக்கத் தக்கவனுமான, கடிகாத்ரி ராஜ ராஜாத்‌ – கடிகை மலையிலுஎஃள குபேரனிடமிருந்து, கா வா ஸம்பத்‌ – எந்தச்‌ செல்வந்தான்‌, ந ஸ்யாத்‌ – உண்டாகாது.
இதில்‌ எம்பெருமானைக்‌ குபேரனாக வருணிக்கிறார்‌. பிரசித்தனான குபேரன்‌ – தநத: என்று பேர் பெற்றவனாய்ப்‌ பணமென்னும்‌ செல்வத்தை மட்டுமே அளிக்க வல்லவன்‌. இக் கடிகை மலைக்‌ குபேரனோ வன்னில்‌ – இப் பணமாகிய செல்வத்தோடு கூட ஆயுட் செல்வம்‌ மக்கட் செல்வம்‌ முதல்‌ இம்மைச்‌ செல்வமும்‌, சொர்க்க போகமாகிய மறுமைச்‌ செல்வமும்‌ மோக் ஷபோகமாகிய அழியாச் செல்வமும்‌ ஆகிய எல்லாவற்றையும்‌ கொடுக்குமாற்றல்‌ படைத்தவனென்பார்‌ – கா வா ஸம்பத்‌ ந ஸ்யாத்‌ – செல்வமென்று பெயர்‌ பெற்றவற்றில்‌ எது தான்‌ (இவனிடமிருந்து) உண்டாகாது என்றார்‌.
ஸந்நிஹிதெள சங்க; பத்ம: ச . அல்லது ஸந்நிஹிதே சங்க: பத்மா ச யேந ஸ: ஸந்நிஹித சங்க பத்ம: தஸ்மாத்‌ ௭-று பஹு வ்ரீஹி ஸமாஸம்‌ கொள்க. ஸர்வஸ்ய ஸகா – ஸர்வ ஸக: – ஸர்வ:- என்பது எல்லாரும்‌ என்ற பொருளையும்‌, சிவனையும்‌ குறிக்கும்‌. எல்லோருக்கும்‌ தோழன்‌ எம்பெருமான்‌, சிவனுக்குத்‌ தோழன்‌ குபேரன்‌, குபேரஸ்‌ த்ர்யம்பகஸக: என்பது அமர கோச… – குபேரன்‌ முக் கண்ணனுக்குத்‌ தோழன்‌ என்பது அதன்‌ பொருள்‌. புண்ய ஜந: – புண்யம் செய்தவனும்‌, யக்ஷனும்‌. ராஜ ராஜ: யக்ஷராஜனாகிய குபேரன்-

ஸந் நிஹித சங்க பத்மாத் -சங்க நிதி பத்ம நிதிகளைக் கொண்ட குபேரன்
சங்கம் தாமரை -அம்ருத பல வல்லித் தாயார் விட்டுப் பிரியாமல்
ஸர்வ ஸகாத் -ஸர்வேஸ்வரன் ஒருவனே -அனைவருக்கும் தோழன் -மங்களகரம் –
வைஷ்ணவானாம் யதா ஸம்பத் -அதுவே சம்பு சிவனுக்கு மங்களம் –
கீழே 68 ஸ்லோகம் சகாவாக முன்பே அருளிச் செய்தார் -ஆபத்து ரக்ஷகன்
அநந்யார்ஹம் இருக்க வேண்டியதாலும் -மற்றவரை வெறுக்கக் கூடாதே –
ஸகல புண்ய ஜன ஸேவ்யாத் -அனைவரும் ஆஸ்ரியத் தக்கவர்
கடிகாத்ரி ராஜ ராஜாத் -ராஜாதி ராஜன் -அக்காரக்கனி –
காவா நஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத்-எந்த செல்வம் தான் கிட்டப் பெறார்கள் -எல்லா செல்வங்களும்-அதுக்கும் மேலே பரம புருஷார்த்தமும் கிடைக்கப் பெறுவார்கள் அன்றோ –

————-

ப்ரஐந விஷாநல மூர்ச்சா விமுஷித சித்தான் பவோரக க்ரஸ்தான்
குர்வீத லப்த சத்தான் கோ வா கடிகாத்ரி காருடி கதோ அந்ய –73-

பவ உரக க்ரஸ்தாந்‌ – ஸம்ஸாரமென்னும்‌ சபர்ப்பத்தினால்‌ விழுங்கப்பட்டவர்களாய்‌, ப்ரஜந விஷாநல மூர்ச்சா விமுஷித சித்தாந்‌ பெண் கலவி யாகிற விஷக் காற்றின்‌ வளர்ச்சியினால்‌ கவரப்பட்ட மனத்தை யுடையவர்களை, கடிகாத்ரி காருடிகத: கடிகை மலையிலுள்ள விஷ வைத்தியனாகிய எம்பெருமானைத்‌ தவிர, அந்ய: கோ வா வேறு யார்‌ தான்‌, லப்த ஸத்தாந்‌ – ப்ராணனை யுடைபவர்களாக – ஸத்தை பெற்றவர்களாக ஸத்தையின்‌ பயனான மோக்ஷத்தை யடைந்தவர்களாக, குர்வீத – ஆக்க வல்லார்‌.
இதில்‌ எம்பெருமானை விஷம் போக்கும்‌ வைத்தியனாக வருணிக்கிறார்‌. பாம்பு தீண்டி விஷமேறிச்‌ சாகக் கிடக்கிறவனை விஷ வைத்தியன்‌ பிழைக்க வைப்பான்‌. இவ் வுலக வாழ்க்கை யென்னும்‌ அரவம்‌ தீண்டி விஷய போகமாகிய விஷமேறித்‌ தன்‌ பிறப்பிற்குப்‌ பயனாகிய மோக்ஷமென்னும்‌ உயர்ந்த ஜீவனத்தை (பிராணனை)ப் பெறாமல்‌ ஸத்தா நாசமடைய விருக்கும்‌ மனிதனை. எம்பெருமானாகிய விஷ வைத்தியன்‌ மோக்ஷமளித்துப்‌ பிராணனை உண்டு பண்ணுகிறான்‌ என்றபடி. காருடிக:– விஷ வைத்தியன் –

ப்ரஐந விஷா நல -காம மோஹத்தால் –
மூர்ச்சா விமுஷித சித்தான் -சித்தம் முழுவதும் மூழ்கி
பவோ ரக க்ரஸ்தான் -ஸம்ஸார –உரக-க்ரஸ்தான் –நம்மை விழுங்கும் சர்ப்பம் –
கீழ் 11 ஸ்லோகத்திலும் நரேந்திரன் விஷ வைத்யனாக அருளிச் செய்தார்
குர்வீத லப்த சத்தான் கோவா -அத்தை மீட்டு உஜ்ஜவிப்பிக்க வல்லவன்
கடிகாத்ரி காருடி கதோ அந்ய –அக்காரக்கனி மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணனை விட வேறே யார்-நல்ல பிராணன் –அம்ருத பலமான தன்னையே அளிப்பவர் அன்றோ –
வாடினேன் வாடி –ஓடினேன் ஓடி –நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் -என்றாரே –

——-

நித்யாந் நிரஸ்த தோஷாத் நியதபதாத் புண்ய கீர்தன ஸ்ரவணாத்
விநதோ சிதாபி தாநாத் ப்ரஹ்மண ஏவாதி கம்யதே சகலம் –74-

நித்யாத்‌ – எக்காலத்திலும்‌ அழியாமல்‌ நூலை பெற்றிருப்பவனும்‌, நியதபதாத்‌ நித்யமான பரமபதமென்னும்‌ ஸ்தானத்தையுடை பவனும்‌, நிரஸ்த தோஷாத்‌- துரத்தப்பட்ட குற்றங்களை யுடையவனும்‌, புண்ய கீர்த்தன ஸ்ரவணாத்‌ – புண்ணியத்தை உண்டாக்குகின்ற – தன்னைப்‌ பற்றிய கீர்த்தனத்தையும்‌ ஸ்ரவணத்தைமுடையவனும்‌ (எவனைத்‌ ஸ்துதித்தாலும்‌, பிறர் ஸ்துதிக்கக் கேட்டாலும்‌ அவை புண்ணியத்தை யுண்டாக்குமோ அப்படிப்பட்டவனும்‌) விநதோசித அபிதாநாத்‌ (தன்னை வணங்கிய பக்தர்களுக்குக்‌ கருணை செய்யத் தக்கவன்‌ என்று பொருள்‌ படுகின்ற) பக்தோசிதன்‌ என்ற திருநாமமுடையவனுமான, ப்ரஹ்மண: ஏவ – ப்ர ப்ரஹ்ம மமாகிய ஸ்ரீமந்‌ நாராயணனிடமிருந்தே, ஸகலம்‌ – விரும்பிய எல்லாப் பயனும்‌, அதிகம்யதே – அடையப்படுகிறது

கீழ்‌ 72ம்‌ ச்லோகத்தில்‌ கடிசை.॥லைக்‌ குபேரனிடத்தில்‌ எல்லாச்‌ செல்வங்களும்‌ கிடைக்குமென்றார்‌. அவனை வெற ॥ குபேரனென்று நினைக்க வேண்டாம்‌. அவன்‌ பரப்ரஹ்ம மென்னும்‌ ஸாக்ஷாத்‌ விஷ்ணுவேயாவான்‌. அவனிடமிருந்து எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ பெறலாம்‌ என்கிறார்‌ இதனால்‌. ஸகல பல ப்ரதோ ஹி விஷ்ணு: (விஷ்ணு எல்லாப்‌ பலன்களையும்‌ _உளிக்கவல்லவரல்லவா) என்றாரிறே வேதவ்யாஸ பகவான்‌ விஷ்ணு தர்மத்தில்‌ (43-47: விநத சப்தமும்‌, பக்த சப்தமும்‌ பரியாயமாகையால்‌, ‘பக்தோசிதன்‌” என்பதை “விரதோசிதன்‌

நித்யாந் –-ஸ நாதன் -நித்தியமாக –
நிரஸ்த தோஷாத் -அகில ஹேய ப்ரத்ய நீகன் அன்றோ
நியதபதாத் –பரமபதமும் நித்யம் அன்றோ
புண்ய கீர்தன ஸ்ரவணாத்-அது இது உது என்னாலாவது என கேனா அபி -அனைத்தும் புண்யம்
விநதோ சிதாபி தாநாத் -பக்தி பிரிய மாதவன் -பக்தி உசிதன் -கருணை பொழிபவன்
ப்ரஹ்மண ஏவ–சதேவ -ஏகமேவ அத்விதீயம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
அதி கம்யதே சகலம் –சகல அபீஷ்டங்களையும் பெற்று மகிழ்வார்கள் அன்றோ
கரந்து எங்கும் பரந்துளன் -தான் ஏற நாள் பார்த்து உள்ளானே

————–

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் ஸ்வ ஆலோகேந ஏவ வ சஷுஷோ ஜகதாம்
கடிகாத்ர மித்ரதோ அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –75-

ஸ்வ ஆலோ கேந ஏவ – (1) தன்னுடைய ஒளியினாலேயே (2) தனது கடாக்ஷத்தாலேயே, அக்ர்யாம்‌ சுத்திம்‌ – உயர்ந்த தூய்மையை, உபஜநயத: – உண்டாக்குமவனும்‌, ஜகதாம் சக்ஷுஷ: – உலகங்களுக்குக் கண்‌ போன்றவனுமான, கடிகாத்ரி மித்ரத: – கடிகை மலையிலிருக்கும்‌ ஸூரியனைக் காட்‌டிலும்‌, அந்யம்‌ – வேறொருவனை, அஹம்‌ – நான்‌, அகிலலோக பாந்தவம்‌ – எல்லா வுலகங்களுக்கும்‌ பந்துவான ஸூரியனாக, ந கலயே எண்ண மாட்டேன்‌.
இதில்‌ எம்பெருமானை ஸூரியனாக ரூபணம்‌ செய்கிறார்‌. எம்பெருமானென்கிற ஸூரியனை விட – வேறான ஆகாயத்தில் தோன்றும்‌ ஸூரியனை ஸூரியனாகக்‌ கருத மாட்டேன்‌ என்கிறார் இதனால்‌.

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் -முதன்மை -பவித்ரம்-சரீரத்துக்கு ஆத்ம உஜ்ஜீவனத்துக்கும் –
ஸ்வ ஆலோகேந ஏவ – சஷுஷோ ஜகதாம் -கண் போன்ற ஸூர்யன் -புற இருள் போக்க –கண்ணாவான் -ரக்ஷகன் அவனே-தன்னையே காட்டக் காணலாம்
கடிகாத்ர மித்ரதோ -மித்ரன் ஸூர்யன் –
அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –ந கலயே-ஸூர்ய நமஸ்காரம் செய்யாமல்
அவனுக்கும் அந்தர்யாமியான அக்காரக்கனியையே தொழுவேன்

——–

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை ஆலோகைர் அம்ருத ஸீதலை ஸ்நபிதா
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –76-

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை: – அமுத வெள்ளத்தோடு ஸமானமானவைகளும்‌, அம்ருத சீதளை: – அமுதம் போல்‌ குளிர்ந்தவைகளுமான, கடிகாத்ரி விலஸிதஸ்ய விதோ: ஆலோகை: – கடிகை மலையில்‌ மிகவும்‌ விளங்குகிற சந்திரனுடைய நிலவினாலே கடாக்ஷங்களாலே, ஸ்நபிதா: – நனைக்கப்ட்டவர்கள்‌, விவிதாந்‌ பவ தவ தாஹாந்‌ பலவகைப்பட்ட – ஸம்ஸாரமாகிய காட்டுத் தீயனால்‌ உண்டான எரிச்சல்களை, விஜஹதி விட்டு விடுகிறார்கள்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை ஸூரியனாக வருணித்தவர்‌, இதில்‌ சந்திரனாக வருணிக்கிறார்‌. காட்டுத் தீயினால்‌ உடம்புக்கு உண்டாகும்‌ எரிச்சல்‌ சந்திரனுடைய குளிர்ந்த நிலவு உடம்பின்‌ மேல்‌ பட்டால்‌ நீங்கும்‌. எம்பெருமானாகிற சந்திரனுடைய நிலவு – அதாவது குளிர்ந்த கடாக்ஷங்கள்‌ நம்‌ மேல்‌ பட்டால்‌ ஆத்மாவுக்கு ஏற்படும்‌ ஸம்ஸார தாபங்கள்‌ நீங்கி விடுமென்றபடி. ஆத்யாத்மிகம்‌ ஆதிபெளதிகம்‌ ஆதிதைவிகம்‌ என்று ஸம்ஸார தாபங்கள்‌ மூன்று. தவ:- காட்டுத் தீ

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை –அம்ருத வெள்ளம் -இயற்கையாகவே –கீழே ஸூர்ய துல்ய -இங்கு சந்த்ர துல்ய-ஆலோகைர் அம்ருத ஸீதலை -குளிர்ந்து-ஸ்நபிதா -நனைக்கும்
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி -சம்சார காட்டுத்தீயில் இருந்து விடுவித்து அருளும்
கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –அக்காரக்கனி சந்திரனே

——————

தர்மோத்தரம்‌ த்விபாத்ரே: ஸங்கே கடிகாத்ரி மத்பத விவாதம்‌ | கேநாப காரிணாரூஸ்மிந்‌ க்ருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம்வாஸ-77-

த்விபாத்ரே: – ஹஸ்தி கிரிக்கு, கடிகாத்ரி மத்பத விவாதம்‌ – கடிகைமலை யென்கிற நான்‌ வசிக்கும்‌ இடத்தோடு (உண்டான) வாய்ப் போரை – சண்டையை, தர்மோத்ரம்‌ உயர்ந்த தருமமுடையதாக (மிகவும்‌ நியாயமானதாக) ங்கே – ஊஹிக்கிறேன்‌. (அச் சண்டை எப்படிப்பட்ட தென்றால்‌) கேந அப காரிணா – எந்த அபகாரியினால்‌, அஸ்மிந்‌ – இங்கு (நானிருக்கும்‌ இடத்தில்‌) க்ருஷ்ண ம்ருக வரஸ்ய – கிருஷ்ணனாய்‌ அவதரித்த ம்ருக ராஜனான ஸிம்ஹத்திற்கு, நியத ஸம்வாஸ: – என்னோடு கூட நித்ய வாஸமானது. கல்பித: – ஏற்படுத்தப்பட்டது ? (என்பதேயாகும் )
கடிகைமலை தன்னிடம்‌ எழுந்தருளிடள்ள ஸிம்ஹத்தை ஹஸ்தி கிரிக்கு அனுப்பி அதனை நித்யம்‌ வஸிக்கும்படி செய்து விட்டதனால்‌, ஹஸ்தியான (யானையான) தனக்கு ஆபத்து நேரிட்டதென்று நினைத்து, ஹஸ்திகிரி – கடிகை மலையோடு சண்டை போடுவதாக, இக் கவி தாம்‌ கல்பித்து, அந்த சண்டையைத்‌ தாம்‌ மிகவும்‌ நியாயமாகக்‌ கருதுவதாகவும்‌ கூறுகிறாரிது தன்னால்‌. “எந்தத்‌ துரோஹி நானிருக்குமிடத்தில்‌ ஸிம்ஹத்தை ஸ்திர வாஸமாக இருக்கும்படிச்‌ செய்திருப்பான்‌. நீயே அப்படிச்‌ செய்திருப்பாய்‌” என்பது ஹஸ்திகிரி கடிகைமலையோடு புரிந்த வாய்ப்போரின்‌ அனுவாதமாகும்‌. இத்தகைய சண்டையை மிகவும்‌ நியாயமனதாகத்‌ தாம்‌ கருதுகிறாராம்‌ கவி. கடிகைமலைசெய்த காரியத்தினால்‌ ஹஸ்திகிரிக்கு ஆபத்து வந்து விட்டதனால்‌ ஆபத்தை யடைந்தவர்கள்‌ ஆபத்துக்குக்‌ காரணமாயிருப்பவர்‌ மேல்‌ கோபித்துச்‌ சண்டை யிடுவது நியாயந்தானே என்பது இக் கவியின்‌ கருத்தாகும்‌. கடிகாத்ரிக்கு மத்பத (என்னுடைய வாஸஸ்தானம்‌) என்று அடைமொழி யிட்டதற்கு- கடிகைமலை எனது மலையாயிருந்தாலும்‌, அது செய்த காரியத்தை நான்‌ நியாயமுடையதாகக்‌ கருத மாட்டேன் – அது செய்த துரோஹத்திற்காக, ஹஸ்திகிரி (வேறுமலை) அது தன்னோடு புரிந்த போரையே நான்‌ நியாயம்‌ மிக்கதாகக்‌ கருதுவேன்‌ என்பது கருத்து.
இங்ஙனமன்றி, பூர்வார்த்தத்தின்‌ இறுதியிலுள்ள மத்பதவிவாதம்‌ என்பதை மத்பதவிவாஸம்‌ என்பதாகக்‌ கொண்டும்‌. கேநாபகாரிணா என்ற விடத்திற்கு – வேறொரு பிரதியில்‌ “கேநாபிகாருணா” என்றுள்ள பாட பேதத்தை ஏற்றுக்‌ கொண்டும்‌, சுவை மிக்க பொருளொன்றும் உண்டு
த்விபாத்ரே: – ஹஸ்திகிரியினுடைய. க்ருஷ்ணம்ருக வரஸ்ய – க்ருஷ்ணனாகிய ஸிம்ஹத்திற்கு, அஸ்மிந்‌ – இந்த ஹஸ்திகிரியில்‌, நியத வாஸ: – நித்ய வாஸமானது. காருணா – லோகசிற்பியான, கேந – நான்முகக்‌ கடவுளினால்‌, ஆபி – அடைவிக்கப்பட்டது. (அது தருமமுடையதுதாள்‌) த்விபாத்ரே: – அந்த ஹஸ்திகிரியைவிட (ஹஸ்திகிரியில்‌ அப்பெருமான்‌ வாஸம்‌ செய்வதைவிட) க்ருஷ்ணம்ருகவரஸ்ய – அந்த க்ருஷ்ணனாகிய ஸிம்ஹத்திற்கு (உண்டான), (1) கடிகாத்ரி மத்பத விவாஸம்‌ – கடிகைமலையென்னும்‌ நானிருக்குமிடத்தில்‌ விசேஷ வாஸத்தை. தர்மோத்தரம்‌ – என்னுடைய உயர்ந்த தருமத்தின்‌ (புண்யத்தின்‌) பயனாக, சங்கே – கருதகிறேன்‌. அல்லது – (2) கடிகாத்ரி – மத்‌ – பத விவாஸம்‌ – கடிகை மலையையும்‌ என்னையும்‌ ஸ்தானமாகக்‌ கொண்டு செய்த விசேஷ வாஸத்தை, தர்மோத்தரம்‌ – “ஆந்ருசம்ஸ்யம்‌ பரோ தர்ம: (ராமாயணம்‌, ஸுந்தரகாண்டம்‌ 38.41) கருணையே உயர்ந்த தருமம்‌ – என்கிறபடியே அப்பெருமானுடைய உயர்ந்த கருணையின்‌ பயனாகவே, சங்கே – கருதுகிறேன்‌. என்றும்‌ கொள்ளலாம்‌

தர்மோத்தரம் த்வி பாத்ரே சங்கே -ஹஸ்திகிரிக்கும் கடிகாத்ரிக்கும் போட்டி -ஹஸ்திகிரிக்கே நியாயம்
கடிகாத்ரி மத்பத விவாதம்-அடியேன் வசிக்கும் கடிகாத்ரி யாக இருந்தாலும்
இரண்டு கிரிக்கும் பெருமாளையே தாங்கி இருந்தாலும்
கேநாப் காரிணா அஸ்மின் கிருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம் வாஸ–கரும் தெய்வங்கள் இருவரும் -முகில் வண்ணன் -கரிய கோலத் திரு உரு
தன்னிடம் இருந்த ஸிம்ஹம் ஹஸ்திகிரிக்கு அனுப்பி -அஸ்மின் நான் இருக்கும் இடத்தில் –
யார் அபவாதம் செய்தார் -நன் தர்மம் வழியே முடிவு -நீயே தப்பு செய்தாய்
கவி சாதுர்யம் -அபூத கற்பனை -இல் பொருள் உவமை -சண்டையை கல்பிதம் செய்து அருளிய ஸ்லோகம்

————–

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் அபி துர ரஸநத்வம் ஆர்ஜவம் கமநே
கதமிவ ச கருட ஸக்யம் கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே –78-

கடிகாசல க்ருஷ்ண போகிந: – கடிகை மலையில்‌ உள்ள க்ருஷ்ண ஸர்ப்பத்திற்கு, ஸ்ரிதாநாம்‌ அம்ருதார்ப்பணம்‌ – தன்னைக் கிட்டுபவர்க்கு அம்ருதத்தைக்‌ கொடுப்பதும்‌ அபிதுர ரஸநத்வம்‌ – பிளவு படாத நாக்குடைமையும்‌, கமநே – செல்லும் போது, ஆர்ஜவம்‌ நேர்மையும்‌, கருடஸக்யம்‌ ச – கருடனோடு தோழமையும்‌, கதமிவ கடதே – எப்படித் தான்‌ பொருந்துகிறது.
இதில்‌ வேடிக்கையாக – எம்பெருமானைக்‌ கரு நாகமாகக்‌ கூறி, அதற்கு விஷங்கொடுப்பதும்‌, பிளவு பட்ட நாக்குடைமையும்‌, செல்லும் போது வளைந்து வளைந்து கோணலாய்ச்‌ செல்லுவதும்‌, கருடனோடு பகைமையுமே இயற்கை யாகையால்‌, அதனோடு முரண்பட்ட -பதவுரையில்‌ கூறிய -தன்மைகள்‌ எங்ஙனம்‌ பொருந்துமென்று விரோதத்தைத்‌ தோன்ற வைத்தார்‌. க்ருஷ்ண போகீ – கருநாகம்
அவ் விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ வருமாறு க்ருஷண போகீ என்றால்‌ கருநாகமன்று, க்ருஷ்ண போகீ – க்ருஷ்ணனாய்‌ அவதரிததுப்‌ பல போகங்களை அனுபவித்த எம்பெருமானாகிய நரஸிம்ஹப் பெருமாள்‌. அவனுக்கு ஆஸ்ரிதர்‌ பொருட்டுக்‌ கடல்‌ கடைந்து அம்ருதம்‌ கொடுப்பதும்‌, முன்னுக்குப் பின்‌ முரணாகப்‌ பேசுகை யாகிற பிளவு பட்ட நாக்கில்லாமையும்‌, தனது நடத்தையில்‌ கோணல் இல்லாமையும்‌, கருடனோடு தோழமையும்‌ பொருந்தாமை யில்லை, மிகவும்‌ அவை பொருந்துமென்று விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ காண்க.

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதற்கு ஆரா அமுதம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான் -தன்னையே கொடுக்கும் கற்பகம்
அபி துர ரஸநத்வம் -பிளவு படாத ஜிஹ்வா -நாக்கு –ஸத்ய வாக்யன் அன்றோ –இரட்டை நாக்கு இல்லாமல்-ஆர்ஜவம் கமநே –நேர்மையாக நடந்து -நடப்பித்து
கதமிவ ச கருட ஸக்யம் –கீழே 4 ஸ்லோகம் கருடக்கொடி -மின்னி விளங்கியதை அருளினார் அன்றோ –கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே —அக்காரக்கனியை -உகந்து கைங்கர்யம் செய்ய தானே வந்தார் அன்றோ பெரிய திருவடி

———

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞஸ் யாத்மநோ அம்ருதஸ் யாஹம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் கடிகாத்ரி பூமி பாலஸ்ய –79-

ஸம்ஸ்ரிதாநாம்‌ ஆகஸ்ஸு – தன்னை யடைந்த பக்தர்களின்‌ குற்றங்களின்‌ திறத்தில்‌, அநபிஜ்ஞஸ்ய – அறியாமையை யுடையவனும்‌. அம்ருதஸ்ய ஆத்மந: – மரணம்‌ முதலிய விகாரங்கள்‌ இல்லாத பரமாத்மாவுமான கடிகாத்ரி பூமிபாலஸ்ய – கடிகை மலை யரசனான நரஸிம்ஹப்‌ பெருமானுக்கு, அஹம்‌ – அடியேன்‌, நித்யம்‌ – எப்பொழுதும்‌, நியமேந – எல்லா நிலைகளிலும்‌ தவறாமல்‌, ஸேவக: ஸ்யாம்‌ – தொண்டு செய்பவனாக ஆகக் கடவேன்‌.
எம்பெருமான்‌ அடியார்கள்‌ செய்த குற்றங்களைக்‌ காணாக்‌ கண்ணிட்டிருப்பவன்‌. ‘அவிஜ்ஞாதா” (விஷ்ணு ஸஹஸ்ர நாமம்‌ 483) என்பது காண்க. “ஸ தே ஆத்மா அந்தர்யாமீ அம்ருத:” (ப்ருஹ தா-ண்யகம்‌ 5.7.22) என்று, அந்தர்யாமியான எம்பெருமானை அம்ருத: ஆத்மா என்பதும்‌ நோக்கத் தக்கது. இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு “ஒழிவில்‌ காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை” செய்யக்‌ கடவேனென்றாராயிற்று இதனால்

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞ ஸ்யாத் -ஆஸ்ரிதர்கள் குற்றம் பாராமுகமாகவே இருந்து அருளி-யாத்மநோ அம்ருதஸ் யாஹம் –அக்காரக்கனி -ஆராவமுதம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை கொண்டு அருள வேண்டும்-கடிகாத்ரி பூமி பாலஸ்ய –பூ பரிபாலனம் செய்து அருளும்

———–

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ கடிகாத்ரி பூப்ருதோ யுக்தம்
ஸூதராம் பாப்ரதாநாம் யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –80

கடிகாத்ரி பூப்ருத: – கடிகை மலையரசனான எம்பெருமானுக்கு, ஸத்ப்ய: ஸத்துவ குணமுள்ள புண்யசாலிகளான நல்லோர்களுக்காக, ஸத்த்வோத்தர ஸ்வதாநாம்‌ – ஸத்துவ குணம்‌ அதிகமாகப்‌ பெற்ற தன்னை அனுபவிக்கும்படி கொடுப்பதென்பது, ஸுதராம்‌ யுக்தம்‌ – மிகவும்‌ தகுந்த செயலாகும்‌. பாபரதாநாம்‌ ஸுர த்விஷாம்‌ – பாபம்‌ செய்வதிலேயே பற்றுடைய அஸுரர்கள்‌ பொருட்டு, தாநம்‌- தன்னைக்‌ கொடுப்பதென்பது, கதம்‌ யுஜ்யேத்‌ – எப்படிப்‌ பொருந்தும்‌. ஸத்துவ குணமுடையவர்களுக்கு ஸத்துவ குணமுடைய தன்னைக்‌ கொடுப்பது தகுந்தது. ரஜோ குணமும்‌ தமோ குணமுடைய அசுரர்களுக்குத்‌ தன்னைத்‌ தருவது பொருந்தாது. ஆகையால் தான்‌ எம்பெருமான்‌ அவர்களுக்குத்‌ தன்னை யனுபவிக்கத்‌ தருவதில்லை என்றபடி.

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ —ஸாத்விகர் அனைவரைக்கும் தன்னையே கொடுத்து அருளும்-வேங்கடேச பிரபத்தி ஸ்தோத்ரம் -இதே போல் உண்டே –திருவேங்கடத்தானை சொல்லியே இந்த ஸ்தோத்ரம் உபக்ரமித்தார்
கடிகாத்ரி பூப்ருதோ –அக்காரக்கனி அரசன்
யுக்தம் -இதுவே தகுந்த செயல்
ஸூதராம் பாப்ரதாநாம் -நாநா விதம் பாபமே செய்து உள்ள அசுரர்களுக்கு
யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –-இவ்வாறு அருள முடியாதே –

————-

கடிகாத்ரி காம ஸூரபே காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம்
மாதுர் கவாம் மயி ஸ்யாத் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –81-

கவாம்‌ மாது: – பசுக்களுக்குத் தாயாரான, கடிகாத்ரி காமஸுரபே: கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற காமதேனு வினிடமிருந்து, ஜகதாம்‌ உலகிலுள்ளவர்களுடைய, காங்க்ஷாபத ஸகல பலம்‌ – விருப்பத்திற்கு இலக்கான எல்லாப் பலன்களும்‌, மயி – என்னொருவனிடத்தில்‌, ஸ்யாத்‌ – உண்டாகும்‌. அஹோ ஆச்சரியம்‌. வத்ஸே – தன் கன்றினிடத்தில்‌, மாது: – தாய்ப் பசுவுக்கு, வாத்ஸல்யம்‌ – மிக்க அன்பு, கதம்‌ ந ஸ்யாத்‌ – ஏன்‌ இராது ?
காமதேனு அவரவர்கள்‌ ஆசைப்பட்டுக்‌ கேட்டவற்றை மட்டும்‌ அவரவர்களுக்குக்‌ கொடுக்கும்‌, தன் கன்றுக்கோ வெனில்‌ கேட்காமலேயே எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌. பிறரை விடக்‌ காமதேனுவுக்குத்‌ தன் கன்றினிடம்‌ மிக்க வாத்ஸல்யம்‌ இருப்பது இயற்கை யன்றோ என்றபடி. இதனால்‌ முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறியபடியே தன்‌ கன்று போன்று அடியேனுக்குத்‌ தன்னையும்‌ கொடுக்கும்படியான வாத்ஸல்ய மிகுதி கூறியபடி

கடிகாத்ரி காம ஸூரபே -அக்காரக்கனி தன்னையே தரும் -காமதேனு –
மாதுர் கவாம்-ஈன்ற கன்றுக்கு கொடுக்கச் சொல்ல வேண்டுமோ
காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம் – ஸமஸ்த லோக மக்களுக்கும் ஸமஸ்த அபீஷ்டங்களை அளிக்கும் அவன்-மாதுர் கவாம் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –அஹோ –என்ன ஆச்சர்யம் இவன் ஈன்று எடுத்த குழந்தையான அடியேனுக்கு கிருபை பண்ணுவதில் என்ன ஆச்சர்யம்

————

ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா
கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-82-

ஹந்த ந ஐஹத்ய மோகாமா ஸிஷமாப்ய ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: | கடிகாசல ஹரி சந்தந பார்ஸ்வ மஹீநா: ஸுபாவநா ஹாரா: |! 82

அஹீநா: – ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்கள்‌, ஸுபாவந ஆஹாரா: – நல்ல காற்றை ஆஹாரமாக உடையவைகளாய்‌, அமோகாம்‌ ஆசிஷம்‌ ஆப்ய – வ்யர்த்தமாகாத விஷப்‌ பற்களை யுடையவைகளாய்‌, ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: – விஷத்தைக்‌ கக்குகின்றவைகளாய்‌, கடிகாசல ஹரி சந்நத பார்ஸ்வம்‌ – கடிகைமலையிலுள்ள எம்பெருமானாகிற, சந்தன மரத்தின்‌ ஸமீபத்தை, ந ஜஹதி – விட்டுப்போகிறதில்லை. ஹந்த – கஷ்டம்‌.
இப்பொருளின்படி கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற சந்தன மரத்தை விட்டு அகலாமல்‌ விஷப் பாம்புகள்‌ இருப்பதனால்‌ அவற்றுக்கு அஞ்சி எம்பெருமானை நாம்‌ அணுகி வணங்க முடியாமலிருக்கிறது. ஐயோ கஷ்ட! – என்ற கருத்துத்‌ தோன்றும்‌. இதற்குப்‌ பரிஹாரம்‌ மேலே காண்க.
அஹீநா: – மிகவும்‌ உயர்ந்த மஹரிஷிகள்‌ ஸுபாவந ஆஹாரா: – நல்ல காற்றையே ஆஹாரமாக வுடையவர்களாய்த்‌ (தவஞ்செய்து), அமோகாம்‌ ஆசிஷம்‌ ஆப்ய வ்யர்த்தமாகாத தமது விருப்பத்தை யுடையவர்களாய்‌ (தமது விருப்பம்‌ நிறைவேறப்‌ பெற்றவர்களாய்‌) ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: – தம்மை யண்டினவர்களுக்குச்‌ செல்வத்தை அளிப்பவர்களாய்க்‌ கொண்டு, கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம்‌ ந விஜஹதி – கடிகை மலை யிலுள்ள எம்பெருமானாகிற ஹரி சந்தன (கற்பக) வ்ருக்ஷத்தின்‌ பக்கத்தை விடாமலிருக்கிறார்கள்‌. ஹந்த – ஆச்சர்யம்‌.
இப்பொருளின்படி மகரிஷிகள்‌ தவஞ்செய்து எம்பெருமானிடம்‌ தாம்‌ விரும்பிய வரங்களைப்‌ பெற்று, அதனால்‌ எம்‌பெருமானையும்‌ தம்மையும்‌ அணுகினவர்களுக்கு வேண்டிய செல்வத்தை யளித்துக்‌ கொணடு பகவானை விடாமலிருக்கிறார்கள்‌. எல்லோரும்‌ எம்பெருமானையும்‌ அவனடியார்களான அம் மகரிஷிகளையும்‌ ஸேவிக்கக்‌ கடிகை மலைக்குச்‌ செல்லலாம்‌ என்று முன்‌ கூறிய விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ காண்க.
ஆசீ: – (1) விஷப்பல்‌ (2) விருப்பம் –ஸ்ரீ: (1) விஷம்‌ (2) செல்வம்‌ (1) அஹீநாம்‌ இநா: அஹீநா: – ஸர்ப்பங்களின்‌ ஸ்ரேஷ்‌டங்கள்‌. (2) நஹீநா: – அஹீநா: – நீசர்களுக்கு முரண்பட்ட உத்க்ருஷ்டர்கள்‌. பவநஏவ பாவந:- சோபந: பாவந: – ஸுபாவந: ஸுபாவந:ஆஹார: யேஷாம்‌ தே – ஸுபாவநாஹாரா

ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா -அமோகமான விஷப் பற்கள் கொண்டு இருந்தாலும்-மஹரிஷிகள் புருஷகாரமாக இருந்து நம்மையும் அவன் இடம் சேர்த்து அருளுகிறார்கள்-இதுவே அவர்கள் விரும்பும் கைங்கர்யம் -அது அமோகமாக நிறைவேறும் படி அருளிச் செய்கிறான் —பரம பக்தியுடன் இருந்து -தீங்கு விளைக்காமல்-கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-பக்கம் -சுற்றி என்றும் கொண்டு –அருகில் உள்ள பாம்புகளும் காற்றையே ஆகாரமாகக் கொண்டு இவனையே உண்ணும் சோறு என்று இருக்கும் மகரிஷிகளையும் சொன்னவாறு காற்றையே ஆகாரமாகக் கொண்டு மனனம் பண்ணி இருப்பவர்

 
—————-
 
சத அம்ருத பலஸ்ய கடிகா ஸைல ரஸா லஸ்ய ஸவித கஸ்யாபி
ஸப்தாதி நிம்ப ஸேவாம் ஸந்த்ய ஜதி ந ஹந்த ஹ்ருதய காகோ மே –83-
 
ஸத்‌ அம்ருத பலஸ்ய – நல்ல அம்‌ருதம் போல்‌ தித்திக்கும்‌ மோக்ஷமாகிய பழத்தை யுடைய, கடிகாசைல ரஸாலஸ்ய – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற ஒட்டு மா மரமானது, ஸவிதகஸ்ய அபி – என் பக்கத்தை அடைந்திருக்கச்‌ செய்தேயும்‌ அதனை விட்டுவிட்டு, மே – என்னுடைய, ஹ்ருதய காக: – மனமாகிய காக்கை யானது, சப்தாதி நிம்ப ஸேவாம்‌ சப்தாதி விஷயங்களாகிற வேப்பம்‌ பழத்தை உண்ணுதலை, ந ஸந்த்யஜதி விடுவதே யில்லை. ஹந்த – கஷ்டம்‌.
இதில்‌ கடிகை யெம்பெருமானை ஓட்டு மா மரமாகவும்‌ அவன்‌ கொடுக்கும்‌ அம்ருதத்தை – மோக்ஷத்தை அதில்‌ பழுத்த பழமாகவும்‌ பணம்‌ செய்து, அம் மரம்‌ கடிகை மலையில்‌ எனக்கு அண்மையில்‌ இருக்கச்‌ செய்தேயும்‌ அதை விட்டு விட்டு, என்‌ மனமாகிய காக்கை தான்‌ உண்டு பழகிய வேப்பம்‌ பழமாகி சப்தாதி விஷயத்தையே அனுபவிக்க எண்ணி, வெகு தூரம்‌ வருந்திச்‌ செல்கிற- ஐயோ கஷ்டம்‌ என்று கவி தம்மைப் பற்றி நைச்யாநுஸந்தானம்‌ செய்கிறார்‌. அதனால்‌ அவருடைய நைச்யாநுஸந்தானம்‌ நமக்குப்‌ பாடம்‌ கற்பிக்கிறது – நீச விஷயாநுபவத்தைவிட்டு மோக்ஷமாகிய பலம்‌ கிடைக்க கடிகை மலை எம்பெருமானைச்‌ சேவிக்கச்‌ செல்லுங்கள் என்பதாக –
 
சத அம்ருத பலஸ்ய –ஸாத்விக அம்ருத பலம் –அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளும்
கடிகா ஸைல ரஸா லஸ்ய —அக்காரக்கனி -கட்டடங்க அம்ருத ரஸம் மிக்கு -அன்றோ -தன்னையே அளித்து அருளும் –
ஸவித கஸ்யாபி -கூப்பிடு தூரத்தில் இருக்க
ஸப்தாதி நிம்ப ஸேவாம் -ஸப்தாதி -வேம்பை விரும்பிப் போகுவதே –
நெஞ்சம் உனது தாள் ஒழிந்தவற்றையே உகக்க -மா முனிகள் போல் இங்கு இவரும் நைச்யம் பாவிக்கிறார்
நாம் அனுசந்திக்கவே இருவரும் இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
ஸந்த்ய ஜதி ந –ஐந்தில் அறியாதார் ஐம்பதிலும் அறியாரே -இதுவே தேஹ யாத்திரை ஆவதே –
ஹந்த -என்ன ஆச்சர்யம் -ஐயோ
ஹ்ருதய காகோ மே -காகம் போல் –பறந்து கண்டதையும் கவ்விப் போவதே -ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
 
—————
 
அமல அநு ராக ஸலிலை அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம் கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –84-
 
அமல அநுராக ஸலிலை: – நிர்மலமான. அன்பென்கிற (பகவத் பக்தி யென்கிற) தீர்த்தத்தினாலே, அபிலாஷ மலாநி ஸகலாநி – நீசமான சப்தாதி விஷயங்களில்‌ ஆசையாகிற அழுக்குகள்‌ அனைத்தையும்‌, அபோஹ்ய – என்‌ மனத்திலிருந்து அகற்றி, அஹிம்ஸந ஆத்யை: புஷ்பை: – அஹிம்ஸை முதலிய எட்டுப்‌ புஷ்பங்களாலே, கடிகாத்ரி தைவதஸ்ய – கடிகை மலைத்‌ தேவதையாகிய நரஸிம்ஹப்‌ பெருமானுக்கு, அர்ச்சாம்‌ பூஜையை, குர்யாம்‌ – செய்யக் கடவேன் –
பகவானைப்‌ பற்றிய நிர்மலமான பக்தி உண்டானால்‌ நீச விஷயங்களில்‌ ஆசை அகன்று விடும்‌. அவை அகன்றால்‌ மனத்தில்‌ எட்டு வகையான எண்ணங்கள்‌ பிறக்கும்‌ அவற்றால்‌ எம்பெருமானுக்கு ஸந்தோஷமுண்டாகும்படி அவனுக்குப்‌ பூஜை செய்கிறேனென்கிறார்‌. முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறிய மோக்ஷத்திற்கு எம்பெருமானிடம்‌ பக்தி யுண்டாக வேணும்‌. அதனால்‌ கெட்ட ஆசைகள்‌ அகலும்‌. நல்லெண்ணங்கள்‌ உண்டாகும்‌. அவை பகவானுக்கு உகப்பை யுண்‌டு பண்ணுவன என்பது கருத்து.
பகவானை அர்ச்சிக்கும்‌ புஷ்பங்கள்‌ எட்‌டு -வெளிப் புஷ்பங்கள்‌ “ஆனிரை மேய்க்க நீ போதி” என்று தொடங்கும்‌ திருமொழியில்‌ பெரியாழ்வார்‌ அருளுகின்ற செண்பகம்‌, மல்லிகை, பாதிரி, செங்கழுநீர்‌, புன்னைப் பூ, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை – என்பவை எட்டு. உள்ளத்தில்‌ உண்டாகும்‌ புஷ்பங்களாவன – அஹிம்ஸை, பொறியடக்கம்‌, தயை, பொறுமை, தத்துவ ஜ்ஞானம்‌, தவம்‌, த்யானம்‌, ஸத்யம்‌ என்பவை. இவை யெட்டும்‌ விஷ்ணுவுக்கு ப்ரீதியை உண்டாக்குவனவாம் –
 
அமல அநு ராக ஸலிலை –குற்றங்கள் அற்ற ப்ரேமை -பக்தி -விரும்பி -நீர்ப் பண்டமாக உருகும் படி-பக்திக்கும் அமல –நீர்ப்பண்டத்துக்கும் அமல விசேஷணம்
பர கத ஸ்வீ காரம் -உதாராஸ் ஸர்வை என்னுமவன் அன்றோ
அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி -ஆசை காமம் -ஆறு பகைவர்கள் -காமம் க்ரோதம் இத்யாதிகளைபப் போக்கி-மதம் அபிமானம் அற்ற அந்திம உபாய நிஷ்டர்கள் அன்றோ மா முனிகள் ப்ருத்யைர்கள் -அவர்களில் ஸ்ரேஷ்டர் அன்றோ இவர்
நமக்காகவே இவ்வாறு அருளிச் செய்கிறார் -நிர்மலமான பக்தி நீர் கொண்டு அகற்றி அருள வேண்டும்
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம்--ஸாத்விக அஷ்ட புஷ்பங்களைக் கொண்டு
கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –அக்காரக்கனி அர்ச்சனை செய்யும் அருள வேண்டும்

அஹிம்ஸா பிரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:-சர்வபூத தயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத: சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம் ஞானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்

அபகத மத மாநைர் அந்திமோபாய நிஷ்டை-அதி கத பரமார்த்தைர் அர்த்த காம அநபேஷை –நிகில ஜன ஸூஹ்ருத்பிர் நிர்ஜித க்ரோதா லோபை வர வர முனி ப்ருத்யைர் அஸ்து மே நித்ய யோக –10-

விஷய போகக் களிப்பும் செருக்கும் அற்றவர்களாயும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம உபாயமாக நிஷ்கர்ஷிக்கப் பட்ட அந்திம உபாயத்தில் ஊற்றம் உடையவர்களாயும் சகல சாஸ்த்ர சாரார்த்தங்களும் கை வந்தவர்களாயும் -தர்ம மோக்ஷங்கள் தவிர அர்த்த காமங்களில் விருப்பம் அற்றவர்களாயும் -ஒருவர் இடத்திலும் மாத்சர்யம் கொள்ளாதே சர்வ பூத ஸூஹ்ருத்துக்களாயும் க்ரோதம் லோபம் இரண்டையும் வென்றவர்களாயும் இருக்கின்ற மா முனிகளின் அடியாரோடு அடியேனுக்கு நித்ய சகவாசம் உண்டாகக் கடவது -என்று விஞ்ஞாபனம் செய்வார் சில பக்தர்கள்-

—————

தந தாத்யைர் அபி ந பரஸை ஸாத்யம் ஸூ மஹத் ஹிரண்ய தாநம் தத்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் துல்யோ கடிகாத்ரி பூ ப்ருத கோ வா |!—85-

(கடிகைமலையரசனான எம்பெருமானாலே ) பரை: – பிறராகிய, தந தாத்யைரபி குபேரன்‌ முதலியவர்களாலும்‌, யத்‌ ந ஸாத்யம்‌ – எது ஸாதிக்க முடியாததோ –தத் -அத்தகைய -ஸுமஹத்‌ – மிகப் பெரியதான, ஹிரண்ய தாநம்‌ – (1) ஸ்வர்ண தானமானது -(2)ஹிரண்யனைப்‌ பிளத்தலானது(தாநம்‌ – கொடுத்தலும்‌ பிளத்தலும்‌) ஸு+கரேண – நல்ல கையினால்‌, க்ருதம்‌ – செய்யப் பட்டது. அத: – அக் காரணத்தினால்‌, கடிகாத்ரி பூப்ருத: – கடிகை மலையரசனுக்கு, கோ வா துல்ய: ஸ்யாத்‌ – எவன்‌ தான்‌ ஸமாநமாக ஆக முடியும்‌ ?

தந தாத்யைர் அபி –குபேரன் முதல் கொண்டு –
ந பரஸை ஸாத்யம் -வேறே எவராலும் செய்ய முடியாததாய்
ஸூ மஹத் ஹிரண்ய தாநம் தத் -பெரிய-மஹாத்ம்யம் மிக்க இரண்ய தானம் -ஹிரண்ய வதம் -மோக்ஷ பிராப்தி என்றுமாம்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் -ஸூ குமாரமான திருக் கரங்களால் செய்து அருளிய
துல்யோ கடிகாத்ரி பூ ப்ருதகோ –அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஓத்தார் மிக்கார் இல்லையே-மோக்ஷ பிரதன் இவன் ஒருவனே -என்றவாறு –

———–

ஐநயத்வதி ச சகலாந் ஞாப்யதி ச யோ ஹிதாஹிதே சாஸ்த்ராத்
நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய –86-

ய: – எவன்‌, ஸகலாந்‌- எல்லோரையும்‌, ஜநயதி அவதி ச – பிறப்பிக்கிறானோ, மேலும்‌ காப்பாற்றுகிறானோ, சாஸ்த்ராத்‌ – வேதாதி சாஸ்த்ரங்களின்‌ வாயிலாக, ஹிதஅஹிதே நன்மையையும்‌ தீமையையும்‌, ஜ்ஞாபயதி ச – அறிவிக்கின்றானோ, தஸ்ய – அந்த, கடிகாத்ரி ஸர்வஜநகஸ்ய – கடிகை மலையிலுள்ள -எல்லோர்க்கும்‌ தந்தையான எம்பெருமானை, கோ வா ஜ்ஞாநீ – எந்த அறிவாளிதான்‌, ந அத்யேதி – கற்றறிய மாட்டான்‌.
இத்தனை யுபகாரங்களைச்‌ செய்த எம்பெருமானை எல்லோரும்‌ வேதாதி சாஸ்த்ரங்களின்‌ மூலமாகக்‌ கற்றறிவார்கள்‌ என்றபடி. அத்யேதி தஸ்ய கோ வா என்று பாடமானால்‌ அவன்‌ சொல்லை யார் தான் மீறுவார்கள்‌ என்று பொருள்‌ கொள்க. பித்ரு வாக்ய பரிபாலனம்‌ பிள்ளைகளுக்குப் பணி யன்றோ ? பித்ரு வாக்யமானது ஸ்ருதி ஸ்ம்ருதீ மமைவாஜ்ஞா (விஷ்ணு தர்மம்‌ 76-31) என்கிறபடியே பகவதாஜ்ஞா ரூபமான ஸ்ருதிகளும்‌ ஸ்ம்ருதிகளுமாகும்

ஐநயத்வதி ச சகலாந் -ஸமஸ்த சேதனங்களையும் ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து அருளி
ஞாபயதி ச யோஹிதாஹிதே சாஸ்த்ராத் ஹிதமாக ஸாஸ்த்ர பிரதானங்களையும் அருளி
கோவிந்தா நாமம் வாயாலே சொல்வாருக்கும் ரக்ஷித்து அருளும் தீஷையும் கொண்டு அருளி-நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய -ஜனிக்கும் காரணம் —அகில லோக தந்தை அன்றோ அக்காரக்கனி-இவற்றை அறிந்து -அத்யயனம் பண்ணி -கற்று அறிந்து தேறி -யார் தான் செய்ய மாட்டார்கள் –

———–

தோஷா கரே வி ராகம் ஸூர்யா லோகே விகாஸ மா மோதம்
பத்ம்யாக்யாம் அபி வஹதோ யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –87-

தோஷாகரே – (1) இரவை விளங்கச் செய்யும்‌ சந்திரனிடத்தில்‌ (2) குற்றங்களுக்கு நிதியான மனிதனிடத்தில்‌, விராகம்‌ ஆசை யில்லாமையையும்‌ (வெறுப்பையும்‌), ஸூர்ய ஆலோகே (1) ஸூர்யனைப்‌ பார்க்கும் போதும் , ஸூரி ஆலோகே (2) தத்வ ஜ்ஞானியான பண்டிதனைக்‌ காணும்‌ போது, விகாஸம்‌ ஆமோதம்‌ – (1) மலர்ச்சியையும்‌ நறு மணத்தையும் (2) முகம் மலர்தலையும்‌ ஸந்தோஷத்தையும்‌, பத்ம ஆக்யாம்‌ அபி (1) (2) பத்ம: என்கிற பெயரையும்‌, வஹத: – வகிக்கிற, கடிகாத்ரியஸ்ய – கடிகை மலையரசனுக்கு, கேஸரிதா (7) பூந் துகளை யுடைமை (2) பிடரி மயிருடைமை, யுக்தா – பொருந்தியதேயாகும்‌.
இதில்‌ எம்பெருமானை – பூந் துகளையுடை . தாமரை மலராந் தன்மையையும்‌, பிடரி மயிருடைய ஸிம்ஹமாம்‌ தன்மையையும்‌, அவை யிரண்டு தன்மைகளுக்கும்‌ ஏற்கும்‌ விசேஷணங்களை சிலேடை வகையில்‌ அமைத்துச்‌ சமத்காரமாகப்‌ பேசுகிறார்‌.
தோஷாம்‌ கரோதி – இரவை அலங்கரிப்பதால்‌ சந்திரனுக்கும்‌, தோஷாணாம்‌ ஆகர: – குற்றங்களுக்கு இருப்பிடமாகையால்‌ துஷ்டனுக்கும்‌, தோஷாகரனாந்‌ தன்மை ஒக்கும்‌. பத்ம: என்பது தாமரை மலருக்கும்‌, பத்ம: அஸ்மிந்‌ அஸ்த, பத்மா அஸ்மிந்‌ அஸ்தி என்ற வ்யுத்பத்திகளால்‌ – தாமரை மலரைக் கையிலுடைமையாலும்‌, தாமரையாளான பிராட்டியைத்‌ திருமார்பில்‌ உடைமையாலும்‌ பெருமாளுக்கும்‌ பெயராகும்‌.

தோஷா கரே வி ராகம் -தோஷம் கரோதி –சந்திரனுக்கு தோஷாகரன் -அவனைப் பார்த்து கூம்பிப் போகுமே-குற்றங்களையே பண்ணிக் கொண்டு இருக்கும் ஸம்ஸாரிகளை பார்த்து திருமுகம் வாடுமே
ஸூர்ய ஆலோஸி விகாஸ மா மோதம் -கதிரவனைப் பார்த்ததும் விகசிக்கும்
ஸூரி ஆலோக்ய-நித்ய ஸூரிகளை -அவர்களிலும்  பிரதானரான ஆதி சேஷனைப் பார்க்கும் க்ஷணம் தோறும் அதி விகாஸம் அடையுமே
பத்ம்யாக்யாம் அபி வஹதோ -பத்மம் தாமரை -பத்மம் திருக் கையில் வைத்து இருப்பதால் பிராட்டிக்கும் அக்காரக்கனிக்கும் பத்மக யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –கேஸரி -மகரந்த சுவை இருப்பதால் தாமரைக்கும் ஸிம்ஹ பிடரிக்கும்-இவ்வளவு ஒற்றுமைகள் உண்டே –நீரே தாமரை -என்கிறார்

நித்யாநாம் யத் ப்ரதம கணநாம் நீயஸே ஷாஸ்த்ர முக்யை: |
க்ருத்யாSSக்ருத்யா பவஸி கமலா பர்துரேகாந்த மித்ரம் ||
தேவ:ஸ்வாமீ ஸ்வயமிஹ பவந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ |
போகீஷத்வத் விமுகமபிமாம் பூயஸா பஷ்யசி த்வம் ||-ஸ்ரீ வர வர முனி சதகம் –24

எந்த நீர் சாஸ்த்ரமறிந்தவர்களால் நித்யர்களுக்குள் முதல்வராக எண்ணப் படுகிறீர்,
செய்கையாலும் உருவத்தாலும் கமலாபதியின் ரஹஸ்யத் தோழனாகிறீர் —
தேவனாகவும் உடையவனாகவும் உள்ள தாமே இங்கு வரவர முநியாகி ஹே அநந்தனே!
உம்மைப் பாராதிருந்தும் என்னை நிறையக் கடாக்ஷிக்கிறீர்.

————————

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்
பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா–88–

மயா – என்னாலே, விபுலேந தபஸா – பெரிய தபஸ்ஸின்‌ மூலமாக, அத்ய லப்தா இப்போது அடையப்பட்ட, இயம்‌ – இந்த, தந்வீ – சிறிய அளவுள்ள (2) மெல்லிய மேனியை உடைய, பக்தி கந்யா – (1) பக்தியாகிற (2) கன்‌னிகையானவள்‌, ப்ரெளடா ஸதீ – (1) பரிபக்குவமடைந்ததாய்‌ (2) ருதுவானவளாய்க்‌ கொண்டு, கடிகாத்ரி பர்த்தரி – (1) கடிகை மலை யரசனான, (2) கணவனிடத்தில்‌, அவ்யபிசாரம பாவம்‌ – (1) வேறொரு தேவதையிடம்‌ பிளவுபடாத தன்மையை (2) வேறொரு புருடனிடத்தில்‌ செல்லாத மனதை, பஜதாம்‌ அடைந்திடுக.

இதில்‌ எம்பெருமானிடம்‌ பக்தியானது தமக்கு நீண்ட காலம்‌ தவம்‌ செய்து உண்டானதாகவும்‌, அது நாளடைவில்‌ வளர்ந்து பெருகி எம்பெருமானை விட்டு மற்றோர்‌ வ்யக்தியில்‌ அகலாதிருக்க வேணுமென்பதாவும்‌ பேசுகிறார்‌. இந்த பக்தியின்‌ நிலைமைக்கேற்ப, ஒரு பெண்ணின்‌ பருவத்தையும் குறித்திருப்பது அநுபவிக்கத் தக்கது. இப்படிபட்ட பக்திக்கு ப்ரயோஜநம்‌ மோக்ஷமடையத்‌ தகுதி பெறுதலாகும்‌. மாஞ்‌ ச யோஃவ்யபி சாரேண பக்தியோகேந ஸேவதே, ஸ குணாந்‌ ஸமதீத்யைதாந்‌ ப்ரஹ்ம பூயாய கல்பதே (கீதை 14-26) (என்னை எவனொருவன்‌ அவ்யபிசரிதமான-பிறரிடத்தில்‌ பிளவு பட்டுச்‌ செல்லாத பக்தி யோகத்தினால்‌ ஸேவிக்கிறானோ, அவன்‌ முற்கூறிய ஸத்த்வ ரஜஸ்‌ தமோ குணங்களைக் கடந்து, ப்ரஹ்ம ஸாம்யமாகிற மோக்ஷத்தை யடைவதற்குத்‌ தகுதி பெறுகிறான்‌ என்று கண்ணபிரான்‌, அருளியது காண்க. அல்லது உணவுக்கு அவச்யம்‌ முன்பு வேண்டிய பசி போலே, எம்பெருமானை அனுபவிக்கைக்கும்‌ அவனுக்குத்‌ தொண்டு செய்வதற்கும்‌ முன்பு உண்டாக வேண்டிய ஸ்வயம் ப்ரயோஜனமாகிய பக்தியை இங்குச்‌ சொல்லிற்றாகவும்‌ கொள்ளலாம்

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்-அடியேனால் விபுலமான தபஸ்ஸாலே இப்பொழுது அடையப்பெற்ற -பக்தி -என்னும் கன்னிகை -தந்வீ-இப்பாலையை –பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா—பிஞ்சிலே பழுத்து ஆசை விஞ்சி -பிரவிடாகி-அக்காரக்கனி எம்பருமானையே வரித்து-செய்த்தலை நாற்று போல் செய்வன செய்து கொள்ளட்டும் என்று அவனுக்கே அநந்யார்ஹை ஆகி-மற்று ஒரு தெய்வத்துக்கு ஆளாவதையும் -பேச்சும் கூட பொறுக்க மாட்டாமல் ஆனாள்-இந்த ஸ்தோத்ரம் ஸ்வாமியுடைய தபஸ்ஸாகும்-இதன் பலமாகவே பெற்ற பரம பக்தி நிலை என்று அருளிச் செய்கிறார்

—————-

பாஸ்வதி ஸூராஸூர குரவ் போகிநி வந்தாரு சவும்ய மந்தாரே
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி விதவ் கதம் க்ரஹை பீடா –89-

ஹே கடித ஆத்மகாய – வாராய்‌!, பொருந்தாத – ஸிம்ஹத்தின்‌ தலையையும்‌ மனிதனின்‌ உடலையும்‌ பொருத்தித் தனது திருமேனியாகக்‌ கொண்ட எம்பெருமானே, பாஸ்வதி – விளங்குமவனும்‌, ஸூர அஸுர குரெள – தேவர்களுக்கும்‌ அசுரர்களுக்கும்‌ பூஜிக்கத் தக்கவனும்‌, போகிநி போகங்களை அனுபவிக்கின்றவனும்‌, வந்தாரு ஸெளம்ய மந்தாரே – துதிப்பவர்க்கு நல்ல கற்பகம்‌ போல்‌ எல்லாவற்றையும்‌ அளிப்பவனும்‌ ஆகிய, கடிகாத்ரி விதெள – கடிகை மலையிலுள்ள எம்பெருமாளாகிய சந்திரனாகிய, த்வயி – உன்னிடத்தில்‌, க்ரகை: பீடா – க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ துக்கமானது, கதம்‌ எப்படி, கடதே – பொருந்தும்‌.

பாஸ்வதி –ஸூர்யன் -ஆச்சார்யமான தேஜஸ்
ஸூராஸூர குரவ் -ப்ருஹஸ்பதி சுக்ரன் -தேவாசுரர்களும் பூஜிக்கும்
போகிநி -ராகு கேது -போகங்களை அனுபவிக்கும் -பாற் கடல் எம்பெருமான்
வந்தாரு சவும்ய -புதன் -வாங்கியவர்களுக்கு கற்பகம்
மந்தாரே -அனைத்துக்கும் அந்தர்யாமி
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி –அக்காரக்கனி -சேராச் சேர்க்கை ந்ருஸிம்ஹம்
விதவ் கதம் க்ரஹை பீடா ––க்ரஹங்களால் என்ன பீடை வரும் –ஸந்த்ரன் விட ஆஹ்லாத கரம்-நீரே குளிரச் செய்து அருளிய பின்பு -ஆச்சார்யர் அநு க்ரஹமே -பலிக்கும் ‘
க்ரஹங்களால் அணுகவும் ஒண்ணாதே

இதில்‌ எம்பெருமானைச்‌ சந்திரனாகக்‌ குறிப்பிட்டு, சந்திரனுக்கு இயல்பாக உண்டாகும்‌ க்ரஹ பீடைகள்‌ உண்டாகாதென்கிறார்‌ – உண்டாகாமைக்குக்‌ காரணம்‌ – அவன்‌ வெறும்‌ சாதாரண சந்திரன்‌ அல்லால்‌ பற் பல பெருமைகளைப்‌ பெற்ற சந்திரன்‌ ஆகையாலே ஆகும்‌. அப் பெருமைகளே – பாஸ்வதி முதலிய விசேஷணங்களினால்‌ சொல்லப்பட்டனவாகும்‌-மேலும்‌ இந்த சந்திரன்‌ எல்லா க்ரஹங்களாகவும்‌ உள்ளமையால்‌ – க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ துக்கம்‌ இவனுக்கு உண்டாகாதென்கிறார்‌. எல்லா க்ரஹங்களுக்கும்‌ இவ்வெம்பெருமான்‌ அந்தர்யாமியாகையால்‌ எல்லா க்ரஹங்களாகவும்‌ இவனே யாகைக்குத்‌ தட்டில்லையாகையால்‌, க்ரஹ பீடை இவனுக்கு உண்டாகைக்கு இடமேயில்லை. தன்னால்‌ தனக்குப்‌ பீடை உண்டோ ?
(1) பாஸ்வாந்‌ – சூரியன்‌ (2) ஸுரஅஸுரகுரு (1) ஸுர குருவான ப்ருஹஸ்பதி (3) அஸூர குருவான சுக்ரன்‌ (4) ஸெம்யன்‌ – புதன்‌ (5) விது: – சந்திரன்‌, போகீ – பாம்பு (6)பாம்புத் தலையுடைய கேது, (7) பாம்பு உடலையுடைய ராகு. அங்காரகனும்‌ சனியுமாகிய மற்றுமுள்ள இரண்டு க்ரஹங்களையும்‌ உபலக்ஷண வகையால்‌ கூட்டிக்‌ கொள்க. ஆக இந்த க்ரஹங்களுக்குகெல்லாம்‌ அந்தர்யாமியாகை காரணமாக இந்த கிரஹங்களுக்கெல்லாம்‌ இவனுக்குச்‌ சரீரமாகையால்‌, இவ்வெம்பெருமானாகிற சந்திரனுக்கு இவனிட்ட வழக்காக இருக்கும்‌ க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ பீடை இல்‌லை யென்றாராயிற்று.
கடிதாத்மகாய: – கடிதெள – ஆத்மகாயெள யேந ஸ:- கடிதாத்மகாய: என்று விக்ரஹம்‌. காய சப்தம்‌ சரீரத்தைக்‌ குறிப்பதாய்‌ – இங்கு சரீர அவயவங்களாகிய தலையையும்‌ மற்றுமுள்ள கீழுடலையும்‌ குறிப்பிடுகின்றது. பொருந்தாத – சிங்கத்தின்‌ தலையையும்‌ மனிதனது உடலையும்‌ நன்றாகப்‌ பொருத்திக்‌ கொண்டானே எம்பெருமான்‌. ஸிதாக்ஷீரந்யா யேந ஸங்கமிதாங்கம்‌ _. ரங்கேந்த்ர ஸிம்ஹ முபாஸ்‌ மகே (ஸ்ரீரங்க உத்தர – 64) சர்க்கரையையும்‌ பாலையும்‌ சேர்க்கிற கணக்கிலே – ஸிம்ஹத்தம்‌ தலை மனிதனின்‌ உடல்‌ ஆகிய இரு திருவுருவங்களைச்‌ சேர்த்துக்‌ கொண்ட (பரம போக்யமாக) ஸ்ரீரங்கநாதனாகிய நரஸிம்ஹப்‌ பெருமாளைச்‌ சிந்திக்கிறோம்‌ என்று அருளிச்‌ செய்தாரிறே ஸ்ரீபராசரபட்டர்‌. பட்டர்‌ ஸங்கமிதாங்கக: என்றதனையே இவர்‌ இங்க கடிதாத்மகாய: என்ற சொல்லால்‌ குறிப்பிட்டருளுகிறார்-அழகியான் தானே அரி யுருவன் தானே

ந்ருஹரி தசயோ பஸ்யன் ஓவ்பத்திகம் கடநா அத்புதம்
நரம் உத ஹரிம் த்ருஷ்ட்வா ஏகைகம் சமுத்விஜதே ஜந
இதி கில சிதாஷீர ந்யாயேந சங்கமித அங்கம்
ஸ்புட சட மஹா தம்ஷ்ட்ரம் ரங்கேந்திர சிம்மம் உபாஸ்மஹே —64-

நரத்வ ஸிம்ஹத்வ அவஸ்தைகளுடைய உத்பத்தி ஸித்தமான விசித்திரமான ஸுவ் கட்யத்தை அனுபவித்து பிரத்யேக நரனையும் சிம்மத்தையும் பார்த்து பயப்படுக என்று போலே பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போல் சேர்க்கப்பட்ட அவயவங்களை உடையவராய் ஸ்பஷ்டங்களான பிடரி மயிரையும் பெரிதான கோரப் பல்லையும் உடையரான ஸ்ரீ பெரிய பெருமாளாகிற ஸ்ரீ நரசிம்மத்தை அந்த அழகுக்குத் தோற்று எப்போதும் அனுபவிக்கிறோம்

—————–

ஸம வர்த்திநி புவநேஸே புண்ய ஜநே பாவகே ஜகத் ப்ராணே
ஸ்ரீதே ஸிவே அபி கடிகா ஸைல ஹரவ் சதி கிமன்ய திக் பாலை –90-

கடிகாசைல ஹரெள – கடிகை மலையிலுள்‌ள நரஸிம்ஹப் பெருமான்‌, ஸமவர்த்திநி (1) எல்லோரிடம்‌ ஸமமாக நடந்து கொள்பவனாகவும்‌ (2) யமனாகவும்‌, புவநேசே – (1) உலகங்கட்குத்‌ தலைவனாகவும்‌, (2) அத்தகைய இந்கிரனாகவும்‌, (3) நீருக்குத்‌ தலைவனான வருணனாகவும்‌, புண்யஜநே – (1) புண்யர்களாகிய பக்த ஜனங்களை யுடையவனாகவும்‌ (2) நிர்ருதி என்கிற ராக்ஷஸனாகவும்‌, பாவகே- (1) பத்தியை உண்டு பண்ணுகிறவனாகவும்‌ (2) அக்நியாகவும்‌, ஜகத் ப்ராணே – (1) உலகுக்கெல்லாம்‌ உயிராகவும்‌ (2) ப்ராணனான வாயுவாகவும்‌, ஸ்ரீதே – (1) செல்வத்தையளிப்பவனாகவும்‌ (2) குபேரனாகவும்‌, சிவேஃபி (1) மங்களத்தை உண்டு பண்ணுமவனாகவும் (2) சிவ பெருமானாகவும்‌, ஸதி இருக்கும் போது, அந்ய திக்‌ பாலை:- வேறான யமா: இந்திரன்‌ முதலிய திக் பாலகர்களாலே, கிம்‌- எனக்கு என்ன பயன்‌ ?

ஸம வர்த்திநி -யம தேவன் –தர்ம ராஜன் –
புவநேஸே-இந்த்ரன் -வருணனையும் சொல்வார் -வர்ஷித்து ரக்ஷணம்
புண்ய ஜநே -நிருதி –
பாவகே –அக்னி தேவன் -பரம பாவனன்
ஜகத் ப்ராணே -வாயு பகவான்
ஸ்ரீதே -சுவையான திருவின் மணாளன் -குபேரன்
ஸிவே அபி -சிவன் உட்பட -பரம சிவன் –வைஷ்ணவாணாம் யதா சம்பு அன்றோ
இயற்கையான மங்களம் இவன் திருவடி தீர்த்தம் தாங்கி
கடிகா ஸைல ஹரவ் சதி -அனைவருக்கும் அந்தர்யாமி அக்காரக்கனி எம்பெருமானே தானே
கிமன்ய திக் பாலை –இவர்களால் ப்ரபன்னருக்கு என்ன வேண்டும் –

இந்திரன், அக்னி தேவன், எமதருமன், வருண பகவான், நிருதி பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள்
கிழக்குத் திசைக்கு அதிபதி, இந்திரன்
தென்கிழக்கு அக்னி தேவன்
தரும தேவன் -காலதேவன் – அவர் தான் எம தருமன். தென் திசைக்காவலன்
வருண பகவான், மேற்குத் திசையின் நாயகன். காவலன்
நிருதி பகவான் தென்மேற்கு திசையின் அதிபதி. –
இவரை வழிபட்டு வந்தால், மனோபலம் பெருகும். மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் பற்றிய பயமும் நீங்கும்.
வடமேற்கு திசைக்குக் காவலன் வாயு பகவான்
குபேரன் வடக்குத் திசையின் நாயகன்
வடகிழக்கு திசையின் அதிபதி, நாயகன்… ஈசானன்.-சிவனாரின் ஐந்து முகங்களில், ஈசானமும் ஒன்று

————–

யஸ் யோதய பரார்த்த யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம்
காலேந போதயதி ய கடிகா மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் –91-

யஸ்ய – எவனுடைய, உதய: (1) ௨தயமானது (2) தோற்றமானது (அவதாரமானது), பரார்த்த: – (1) பிறர்‌ தூக்கம்‌ விட்‌டு எழுந்து நல்ல காரியம்‌ செய்து சுகப்படுவதற்காக ஏற்படுகிறதோ (2) நல்லோர்கள்‌ வாழ்‌வு பெறுவதற்காக ஏற்படுகிறதோ, யஸ்ய ஆலோகேந – (1 எவனைக்‌ காண்பதனால்‌ (2) நல்லோர்கள்‌ வாழ்வு பெறுவதற்காக ஏற்படுகிறதோ, யஸ்ய ஆலோகேந – (1) எவனைக்‌ காண்பதனால்‌ (2) எவனுடைய கடாக்ஷத்தினாலே, அகம்‌ பாபமானது, விலயம்‌ யாதி – நாசத்தை யடைகிறதோ, ய: – எவன்‌, காலேந – (1) உரிய காலத்தில்‌ (இரவு முடியும்‌ ஸமயத்தில் ) (2) அஜ்ஞானம்‌ நீங்க வேண்டிய நல்ல காலம்‌ கிட்டும்போது, போதயதி – (1) விழிப்பை உண்டு பண்ணுகிறானோ (2) தானாகவோ அல்லது ஆசாரியர்கள்‌ வாயிலாகவோ ஜ்ஞானைத்தை உண்டாக்குகிறானோ, அத்ர கடிகாமித்ரே அத்தகைய இந்த கடிகை மலை ஸூரியனிடத்தில்‌, க: – எவன்‌, விராகீ ஸ்யாத்‌ ஆசையற்றவனாக இருப்பான்‌.

யஸ் யோதய பரார்த்த –யாருடைய உதயத்தால் பரர்களுக்கு நன்மை விளைகிறதோ
ஞானம் –அந்தமில் பேர் இன்பம் பிராப்தி பர்யந்தம் கிட்டுமோ
யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம் –யாரைக் காண்பதினாலேயே அகம் -அழுக்கு இருட்டு -அஞ்ஞானம் நீங்குகின்றதோ
கடாக்ஷத்தால் பிரதிபந்தங்களைப் போக்கி அருளி
காலேந போத யதிய கடிகா –சரியான காலத்தில் ஒளி உண்டாக்கி -விழிப்பு உண்டாக்கி -ஞானம் உண்டாக்கி
காலம் தாழ்த்தாமல் கிருபை அருளி
மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் —அப்பேர் பட்ட ஸூர்யன் மேல் யார் தான் விருப்பம் கொள்ளாமல் இருப்பார் –
அக்காரக்கனி திவாகரன்-அச்யுத பானு – மேல் ஆர் தான் ஆசை கொள்ளாமல் இருக்க இயலும்

—————

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே ஸரஸி ஜாலயே மோஹாத்
விரஸேஷு சித்த நாமா விஷயேஷுர கேஷு விஹரதே ப்ருங்க –92-

கடிகாஸைலகதே – (1) கடிகை மலையை அடைந்ததும்‌ (2) கடிகை மலையை அடைந்தவனும்‌, ஸரஸே – (1) நீர்‌ நிறைந்ததும்‌ (2) ஆஸ்ரிதரிடம்‌ அன்புடையவனும்‌, ஸரஸிஜ ஸரஸிஜா ஆலயே – (1) தாமரை மலர்களுக்கு இருப்பிடமுமான தடாகம்‌, (2) பிராட்டிக்கு இருப்பிடமுமான எம்பெருமான்‌, ஜாக்ரதி – (1) தன்னிடம் மலர்ந்த மலர்களால்‌ விழித்திருக்கச்‌ செய்தேயும்‌, (2) நம்மிடம்‌ யாராவது வரப்போகிறார்களா என்று கவனமாயிருக்கச்‌ செய்தேயும்‌, (1) அதனை (2) அவனை (அலக்ஷ்யம்‌ பண்ணி), சித்தநாமா ப்ருங்க: – எனது (1) மனமென்னும்‌ (2) அன்பற்ற, விஷய இக்ஷுர கேக்ஷ – (2) ஸ்த்ரீ முதலிய (1) முள்ளி மலர்களில்‌, விஹரதே – அலைந்து திரிகிறது.

தாமரைக் குளத்தில்‌ தேன்‌ நிறைந்த தாமரை மலர்கள்‌ மலர்ந்து கிடக்க, அதை விட்டுச்‌ சுவையற்ற முள்ளி மலரில்‌ அலையும்‌ மதியற்ற வண்‌டு போலே என் மனமானது – பிராட்டிக்கு வாஸஸ்தானமாய்‌ அவள்‌ காரணமாக ஆஸ்ரிதர்களிடத்தில்‌ அன்பு நிறைந்த எம்பெருமான்‌ கடிகை மலையில்‌ நம்மை எதிர்பார்த்திருக்க, அவனை அநாதரம்‌ பண்ணி, அன்பு சிறிதுமின்றிக்கே யிருக்கும்‌ பெண்களிடத்தில்‌ அலைந்து திரிகின்றது என்றாராயிற்று. இதுவும் நைச்ய அனுசந்தானம் -நம்மை திருத்து வதற்காகவே அருளிச் செய்துள்ளார்

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே -நீர் நிரம்பிய ஸரோவரம் இங்கே உள்ளது -நன்றாக மலர்ந்த
கருணா ரஸம் பொழியும் அக்காரக்கனி -கடிகைத்தடம் குன்றத்திலே நீர்ப்பண்டமாக
ஸரஸி ஜாலயே மோஹாத் -ஸரஸி ஜா- தாமரை மலர்களுக்கு இருப்பிடம் -பிராட்டி அம்ருத பல வல்லித் தாயாரும் இங்கே எழுந்து அருளி இருக்க
விரஸேஷு சித்த நாமா விஷயே ஷுர கேஷு விஹரதே ப்ருங்க — ரீங்காரம் இட்டு வரும் வண்டு
இங்கே வராமல் முள்ளு மலரிலே சென்று தன்னை வருத்திக் கொள்கிறதே ஐயோ
மிதுனமாக இங்கே நமக்காகவே உகந்து எழுந்து அருளி நித்ய வாஸம் பண்ணி நிற்க
புருஷாந்தரங்களை வேறே எங்கு எங்கோயே போகுமோ
ஹரீ ஹரீ என்று அன்றோ ரீங்காரம் இட்டுக் கொண்டு மங்களா ஸாஸனம் பண்ண அன்றோ அடுப்பது
கீழ் அச்யுத பானு ராம திவாகரன் அக்காரக்கனி பாஸ்கரன்
இங்கு தாமரை விகஸிப்பதும் பொருந்துமே

————-

பிப்ரதி ஸதைவ லக்ஷ்மீம்‌ விப்ராஜதி மித்ர மண்டலே விதுஷாம்‌ | கடிகாத்ரி ஸார்வ பெளமே கிம்‌ வா கடதே ந ஸம்ஸ்ரிதாபிமதம்‌ |! 93

ஸதைவ ! – எப்போதும்‌, லக்ஷ்மீம்‌ – (1) ஸ்ரீ மஹாலக்ஷமியை (2) செல்வத்தை, பிப்ரதி (1) திரு மார்பில்‌ தரித்துக்‌ கொண்டிருப்பவனும்‌ (2) வளர்த்து வைத்திருப்பவனும்‌, மித்ர மண்டலே விதுஷாம்‌ விப்ராஜதி (1) ஸூர்ய மண்டலத்தில்‌ ஞானிகள்‌ த்யானம்‌ செய்வதற்காக விளங்கிக்‌ கொண்டிருப்பவனுமாகிய (2) தோழர்களான சிற்றரசர்கள்‌ மந்திரிகள்‌ புரோகிதர்கள்‌ ஆகிய இவர்களின்‌ நடுவே வித்வான்‌௧ளை கெளரவிப்பதற்காகக்‌ கொலுவில்‌ விளங்குமவனாகிய, கடிகாத்ரி ஸார்வ பெளமே – திருக்கடிகை மலையிலுள்ள (1) எம்பெருமானாகிய (2) சக்ரவர்த்தியினிடத்தில்‌, ஸம்ஸ்ரித அபிமதம்‌ – (1) தன்னை ஆஸ்ரயித்த ஞானிகளின்‌ விருப்பமானது (2) வித்வான்‌௧ளின்‌ விருப்பமானது, கிம்‌ வா எதுதான்‌, ந கடதே – நிறைவேறாது.

இதில்‌ எம்பெருமானைச்‌ சக்கரவர்த்தியாக ரூபணம்‌ செய்தார்‌. லஷ்மீ: – (1) பிராட்டி (2) செல்வம்‌. மித்ர: – ஸூரியன்‌, மித்ரம்‌ – தோழன்‌, ஸார்வ பெளமன்‌ பூமண்டலமனைத்துக்கும்‌ பேரரசனான சக்ரவர்த்ததி விசேஷணங்களின்‌ பொருள்களைப்‌ பிரித்துக்‌ காண்க.

பிப்ரதி சதைவ லஷ்மீ -எப்பொழுதும் செல்வங்கள் மிக்கு இருக்கும் சக்ரவர்த்தி
அம்ருத பல வல்லி தாயார் இறையும் அகலகில்லேன் என்று இருக்க
விப்ரா ஜதி மித்ர மண்டலே விதுஷாம் -தோழர்கள்-வேத விற்பன்னர்கள் பண்டிதர்கள் மந்திரிமார்கள் புடை சூழ்ந்து –
ஓலக்கத்தில் சாதனர்களை கௌரவித்து –
ஞானிகள் தபஸ்ஸூ செய்யும் படி ஸூர்ய நாராயணனாக இருக்க
கடிகாத்ரி ஸார்வ பவ்மே -ஸர்வேஸ்வரேஸ்வரன் அக்காரக்கனி எம்பிரான் நித்ய ஸந்நிதியாய் எழுந்து அருளி இருக்க
நம் போல்வார் கூட சகல மனுஷ நயன விஷய தாங்கனாக உகந்து எழுந்து அருளி இருக்க
கிம் வா கடதே ந ஸம் ஸ்ரித அபி மதம் –அபீஷ்டங்கள் எவை தான் யாருக்குத் தான் கிட்டாமல் போகும் –

—————–

ஸ்ரித கடிகாசல ஸிகரே ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –94-

ஸ்ரித கடிகாசல ஸிகரே – கடிகை மலை யுச்சியை அடைந்ததும்‌, ஸ்திர கருணாபூர நிர்ப்பரே – நிலைத்திருக்கிற (1) கருனை யாகிற (2) நீர் வெள்ளத்தால்‌ நிறைந்ததும்‌, ஸிஸிரே – குளிர்ந்ததும்‌, திவ்யே – (1) அப்ராக்ருதமான (2) அழகுடையதுமான கமல ஆலயே – (1) பிராட்டிக்கு இருப்பிடமான பெருமானாகிற (2) கமல மலர்களுக்‌ க இருப்பிடமான தாமரைத்‌ தடாகத்தில்‌, விமல பக்ஷா: – : 1) குற்றமற்ற ஜ்ஞாநம்‌ அநுஷ்டான மென்கிற (2) இரண்டு இறகுகளையுடைய, ஹம்ஸா: ‘1) யோகிகளாகிற (2) அன்னப் பறவைகள்‌, சிரம்‌ வெகு காலம்‌, தீவ்யந்தி -விளையாடுகின்றன.

இதில்‌ எம்‌பருமானைத்‌ தாமரைத் தடாகமாகவும்‌ யோகிகளை ஹம்ஸங்களாகவும்‌ கூறுகிறார்‌. அன்னப்‌ பறவைகளுக்கு ஆகாசத்தில்‌ பறந்து செல்வதற்கு துணை செய்கின்ற இரண்டு இறகுகள் போல, யோகிகளுக்‌குப் பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்துக்குப்‌ பறந்து செல்வதற்கு உறுப்பாகிய ஞானமும்‌ அநுஷ்டானமும்‌ இரண்டு சிறகுகளாகக்‌ கருதப்பட்டன.

ஹம்ஸா: – (1) யோகிகள்‌ (2) அன்‌னப் பறவைகள்‌. திவ்யம்‌ (1) அப்ராக்ருதமானது (2) அழகுடையது. அன்னங்கள்‌ தடாகத்கில்‌ விளையாடுகின்றன, அதுபோல்‌ யோகிகள்‌ எம்பெருமானிடம்‌ ரமிக்கின்றனர்‌

ஸ்ரித கடிகாசல ஸிகரே -அடைந்த -உகந்து அருளி
ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே -குளிர்ந்த தடாகம் -கருணை வெள்ளம் நிரம்பிய
ஆச்சார்ய புருஷர்கள் கூடி -கிருபா கடாக்ஷம் -பெற்று ஆழ்ந்து –
லோக ஹிதம் ஒன்றே இவர்கள் க்ருத்யம் -59 சதகம் -நம் போல்வாரை கரை சேர்க்கவே
நம்போல்வாரை மிதுனத்துக்கு சேஷமாக்கி அருளவே இவர்கள் இங்கே மண்டி உள்ளார் அன்றோ
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –பாவனத்வம் -நிறைய நாளாக விளையாடிக் கொண்டு இருக்கும்
உலாவும் பெருமாள் -ஞான தீபம் ப்ரஸாதம் -ஸஜாதீய மனுஷ்யர் என்று எண்ணினால் யானையைக்குளிப்பாட்டிய பின்பு தன் மேல் புழுதி போட்டுக் கொள்ளுமா போலே அன்றோ
ஆச்சார்யர் திவ்ய மயம் என்று உணர வேண்டுமே –
திவ்யமான தடாகத்தில் மிதுன கருணா கடாக்ஷத்தில் விளையாடும் பரம ஹம்ஸர்
தூவி சேர் அன்னம் சூழ் புனல் குடந்தையே தொழுது
ஆச்சார்யர் -ஞானம் அனுஷ்டானம் -இரண்டு சிறகுகள் -பரம ஹம்ஸர் –
ப்ரயோஜனாந்தர பரர் இல்லாமல் -மங்களா ஸாஸனம் முதல் பாசுரம் கலியன்

அஸ்மாத் பூயாந் த்வமஸி விவிதா நாத்மந: சோதயித்வா |
பத்மா பர்த்து: ப்ரதி திநமிஹ ப்ரேஷயந் ப்ராப்ருதாநி ||
தஸ்மிந் திவ்யே வரவரமுநே தாமநி ப்ரஹ்ம ஸாம்யாத் |
பாத்ரீ பூதோ பவது பகவந் நைவ கிஞ்சித் தயாயா: ||–ஸ்ரீ வர வர முனி சதகம் –59

பிராட்டியின் கணவனான ஸ்ரீமந் நாராயணனுக்குப் பரிசாக இங்கு தினந்தோறும் பல ஜீவன்களைச் சுத்தி செய்து எங்களை அனுப்பிக் கொண்டு நீர் மதிக்கத் தக்கவராக இருக்கிறீர்.ஹே வரவரமுநியே! அந்தப் பரமபதத்தில் பரப்ரஹ்ம ஸமமாக இருப்பதால்
உமது கருணைக்குப் பாத்திரமாக ஒரு வஸ்துவும் ஆகிறதில்லை.

———————-

விஹரதி பஹு குண ஜாலே வீரே கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே
விஜஹதி ஸமஸ்த தாபான் விஜயந்தே கில மமாபி மோஹ மஹோ –95-

பஹுகுண ஜாலே – சுத்தி, நல்‌ நிறம்‌ முதலிய நற்குணங்களின்‌ ஸமூகங்களை உடையவனும்‌, வீரே – எரிக்கும்‌ பராக்ரமுடையவனுமான, கடிகாத்ரி க்ருஷ்ண வர்த்மநி – கடிகை மலையிலுள்ள அக்நி யானவன்‌ விஹரதி ஸதி – ஸஞ்சாரம்‌ செய்யும் போது, தே -முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறப்பட்ட ஹம்ஸங்கள்‌, ஸமஸ்த தாபாந்‌ – எல்லாத்‌ தாபங்களையும்‌, விஜஹதி – விட்டு விடுகின்றன, (மேலும்‌) மம – என்னுடைய, மோஹமபி அஜ்ஞானத்தையும்‌, விஜயந்தே – வெல்லுகின்றன. அஹோ – ஆச்சரியம்
ஹம்ஸங்கள்‌ அக்நியினிடம்‌ சென்று தமது தாபத்தைத்‌ தீர்த்துக்‌ கொள்வதும்‌, இக் கிரந்த கர்த்தாவின்‌ அஜ்ஞானத்தை வெற்றி கொள்வதும (போக்குவதும்‌) ஆச்சரியமாகையால்‌ விரோதம்‌ தோன்றும்‌, பரிஹாரம்‌ மேலே காண்க.

பஹு குண ஜாலே – க்ருபை வாத்ஸல்பம்‌ முதலிய குளிர்ந்த பல குண ஸமூகங்களை யுடையவனும்‌, வீரே – ஸம்ஸார தாபம்‌ போக்கும்‌ பராக்ரமமுடையவனுமான, கடிகாத்ரி க்ருஷ்ண வர்த்மநி – கடிகை மலையில்‌ வசிக்கும்‌ க்ருஷ்ணனாகிய ஸித்தோபாயமான பெருமான்‌, விஹரதி – விஹாரம்‌ செய்யும் போது, (அவனை யாஸ்ரயித்து) தே – ஹம்ஸர்கள்‌ என்று கூறப்பட்ட யோகிகள்‌, ஸமஸ்த தாபாந்‌ – ஆத்யாத்மிகம்‌ ஆதி பெளதிகம்‌ ஆதி தைவிகமாகிய எல்லாத்‌ தாபங்களையும்‌ (கஷ்டங்களையும்‌) விஜஹதி – விட்டு விட்டுச்‌ சுகமாக இருக்கிறார்கள்‌. (இதுவே யன்றி), மம – என்னுடைய, மோஹமபி – அவிவேகத்தையும்‌, விஜயந்தே – தமது உபதேசத்தாலே வெற்றி கொள்கிறார்கள்‌. இப்படிப் பொருள்‌ கொண்டால்‌ முற் காட்டிய விரோதம்‌ தோன்ற இடமில்லாமை காண்க.

க்ருஷ்ணவர்த்மா – (1) கறுத்த வழியை உடையது (தன்‌ வழியைக்‌ கறுப்பாக்குவது ) ஆகையால்‌ இது அக்நிக்குப்‌ பெயர்‌ (2) க்ருஷ்ணனாகிய வர்த்ம – மார்க்கம்‌ உபாயமென்றபடி. அதாவது க்ருஷ்ணனாகிய மோக்ஷோபாயம்‌. யோகிகள்‌ எம்பெருமானை யணுகி, தாம்‌ ஸம்ஸார தாபம்‌ தீரத்துக் கொள்வதோடு தம்மை யடைந்த வர்க்கும்‌ ஸம்ஸார தாபம்‌ தீர்த்து, மோக்ஷம்‌ பெறுவதற்குரிய ஞானம்‌ உண்டாவதற்காக, அஜ்ஞானம்‌ தீரும்படி உதவுகிறார்களென்றவாறு.

விஹரதி பஹு குண ஜாலே -கல்யாண குண கணங்கள் மிக்கு
வீரே -தாப த்ரயங்களைப் போக்கி அருளும் வீரனே
கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே –மார்க்கம் உபாயம் –அக்காரக்கனி கண்ணன் என்னும் கரும் தெய்வமே ஸித்த உபாயம்
விஜஹதி –ஆஸ்ரயித்து- கைங்கர்யமே யாத்ரையாகக் கொண்டு
ஸமஸ்த தாபான் விஜயந்தே -கீழே பரம ஹம்சர்கள் -தாபத் த்ரயங்கள் விடுபட்டுப்போய்
கில மமாபி மோஹம் அஹோ — அடியேனுக்கும் மோஹம் விலகிற்றே -என்ன ஆச்சார்யம் –
நீயே உபாயம் உபேயம் -அறியும்படி அருளினாயே
நாம் அனுசந்திக்க வேண்டியதற்காக அருளிச் செய்த ஸ்லோகம் அன்றோ

————–

கநக மய கடக ஸோபாம் கலயதி கடிகா மஹீ ப்ருதோ ருசிரே
தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே த்ராஸ லவம் அநு பவேத் கோ வா -96-

கநக மய கடக ஸோபாம்‌ – ஸ்வர்ண மயமான மலைச்‌ சரிவின்‌ சோபையை, கலயதி உண்டு பண்ணுவதும்‌, தீப்திமதி – ப்ரகாசமுடையதும்‌, ருசிரே – அழகுடையதுமான, கடிகா மஹீ ப்ருத க்ருஷ்ண வர்ணே – கடிகை மலையினுடைய கரு நிறமானது, த்ருஷ்டே ஸதி – பார்க்கப்பட்ட வளவில்‌, கோ வா – எவன் தான்‌, த்ராஸ லவம்‌ – பயத்தின்‌ சிறு பகுதியையும் கூட, அநுபவேத்‌ – அநுபவிப்பான் –

கநக மய கடக ஸோபாம் கலயதி –பொன் மயமான ஜ்வலிக்கும் சோபை மிக்க
கடிகா மஹீ ப்ருதோ ருசிரே தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே -ப்ரகாஸம் -அழகு -கருமை வண்ணம் -பொன் வண்ணமும் சேர்ந்து
த்ராச லவம் அனு பவேத் கோவா -ஸம்ஸார பயம் லவலேசமும் கீழே இருந்து தரிசித்தாலே போதுமே
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் இங்கும் –

முன்‌ ஸ்லோகத்தில்‌ மஹான்கள்‌ கடிகை யெம்பெருமானை ஆஸ்ரயித்து ஸம்ஸார தாபம்‌ தீரப் பெறுகிறார்களென்று அருளியவர்‌ இந்த ஸ்லோகத்தில்‌ அவ்வெம்பெருமானை ஆஸ்ரயிக்கவும்‌ வேண்டாம்‌, வெகு தூரத்திலிருந்தே கடிகை மலையைத் தர்ஸித்தாலே போதும்‌. சிறிதும்‌ ஸம்ஸாரத்திற்கு அஞ்ச வேண்‌டாம்‌ என்கிறார்‌. மலையின்‌ அழகு – கநகமயகடக சோபாம்‌ கலயதி தீப்திமதி க்ருஷ்ண வர்ணே – என்றதனால்‌ குறிக்கப்படுகிறது. மரங்கள்‌ அடர்ந்திருப்பதால்‌ மலையின்‌ கீழ்ப்பகுதி கறுத்துத்‌ தோன்றுகிறது. அக் கருநிறமானது சிவப்புப் பாறை மயமாகையால்‌ தங்க நிறமுள்ள சரிவுக்குச்‌ சோபையை யுண்டாக்கித் தானும்‌ அத்தங்க நிறப்‌ பாறைகளால்‌ சோபயை அடைகிறது. இங்ஙனம்‌ அத் திருமலையின்‌ கருநிறமே நம்முடைய அச்சமனைத்தையும்‌ அகற்றவல்ல தென்றாராயிற்று. இருள்‌ பேய்‌ முதலியவற்றின்‌ கருநிறம்‌ அச்சத்தை உண்டாக்கும்‌. இம்மலையின்‌ கருநிறம்‌ அச்சத்தைப்‌ போக்குமென்றபடி. திருவேங்கட மாமலை யொன்றுமே தொழ நம்‌ வினை ஓயுமே (திருவாய்மொழி 3.3.8) என்று நம்மாழ்வார்‌ அருளியது போலவே இங்கும் அருளிச் செய்கிறார்

—————-

ஸப்தரிஷி ஸேவ்ய மாநே சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே
ரமதாம் மநோ ஹரெள மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே –97-

ஸப்தர்ஷி ஸேவ்யமாநே – ஸப்த ரிஷிகளால்‌ ஸேவிக்கப்பட்டவனும்‌, ஸந்தத ஸுமநஸ்‌ ஸ்துதே – எப்போதும்‌ தேவர்களால்‌ துதிக்கப்பட்டவனும்‌, ஸஹஸ்ராஷே ஆயிரங்‌ கண்ணுடையவனும்‌. கடிகாத்ரி ரத்நஸாநு தடே – கடிகைமலை யென்கிற மேருமலையின்‌ சரிவில்‌, ப்ராஜதி -விளங்குமவனான, ஹரெள – (1) இந்திரனிடத்தில்‌ (2) நரஸிம்மப் பெருமாளிடத்தில்‌, மே மந: – என்னுடைய மனஸ்ஸானது, ரமதாம்‌ – ப்ரீதியை அடைந்திடுக.

ஹரி: என்பது இந்திரனுக்கும்‌, திருமாலுக்கும்‌, சிங்கத்துக்கும்‌ பெயர்

ஸப்த ரிஷிகள்‌ ஆவார்‌ – வஸிஷ்டர்‌, காஸ்யபர்‌, அத்ரி, ஜமதக்நி, கெளதமர்‌, விஸ்வாமித்ரர்‌, பரத்வாஜர்‌ என்ற எழுவர்‌ என்று விஷ்ணு புராணம்‌ (3.1.32) கூறும்‌. மரீசி, அங்கிரஸ்ஸு, அத்ரி, புலஸ்த்யர் . புலஹர்‌, க்ரது, வஸிஷ்டர்‌ ஆகிய எழுவரென்றும்‌– மரீசி அத்திரி, வசிஷ்டர், காஸ்யபர், கௌதமர், பரத்வாஜர், அங்கீரஸ் .ஆகிய எழுவரென்றும்‌–
சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே-– -புருஷ ஸூக்தம் கொண்டு ஸ்துதிக்கும் ஸத் புருஷர்கள்
ரமதாம் மநோ ஹரவ் மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே -நரஸிம்ஹன் இடம் மனஸ்ஸூக்கு ப்ரீதி உண்டாக்கி அருள வேண்டும்-மேரு போன்ற குன்றம் கீழேயே அருளிச் செய்தார் அன்றோ –

—————

பாத ஸ்பர்சந விபவாத் பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –98–

பாத ஸ்பர்சந விபவாத்‌ – (1) தனது கிரணங்களின்‌ ஸம்பந்தமாகிற பெருமையினால்‌ (2) தனது திருவடிகளின்‌ ஸம்பந்தமாகிற பெருமையினால்‌, பாலித புவநே – உலகங்களைக்‌ காப்பவனும்‌, ப்ரபோதித ஆத்ம குணே – (1) தூங்கும் போது கூம்பிய – ஆத்மாவின்‌ குணமாகிய அறிவை மலரச் செய்பவனும்‌, (2) மோக்ஷ உபாயமாகிய தத்‌ வஜ்ஞானத்தை மிகவும்‌ உண்டாக்குமவனுமாகிய, கடிகாத்ரி மித்ரே பகவதி – கடிகை மலையிலுள்ள (1) சூரியனாம்‌ (2) எம்பெருமானிடத்தில்‌, மே மநஸ்‌ ஸரோஜம்‌ – என்னுடைய மனமாகிய தாமரை மலரானது, பாவம்‌ – (1) ப்ரீதியை (2) பக்தியை, பஜது- அடைந்திடுக

பாத ஸ்பர்சந விபவாத் -தீண்டி -கிரணங்களை பரப்பி –திருவடி சடாரி சம்பந்தத்தால் -ப்ருத்ய -அடியார் அடியார்
பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே-பரிபாலனம் -இருள் நீக்கி -பயிர்களை விளைவித்து –
தத்வ ஞானம் அறிவித்து -அஞ்ஞானங்களைப் போக்கி-ஆத்ம குணம் வளர்த்து —
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –மித்ரன் சூரியனுக்கும் இன்னும் ஓரு பெயர் –
கடிகைத்தடம் குன்றம் மேல் உள்ள அக்காரக்கனி தானே ஹிருதய கமலத்தை இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

————-

துஷ்டே அல்பத ஸூ ஸீலே ஸூ குண க்ருஹீத ஸூ லக்ஷணே ஸூ த்ருடே
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார –99

அல்பத:துஷ்டே – (1) சிறிது கொடுத்தாலும்‌ அதனால்‌ ஸந்தோஷிப்பவனும்‌ (2) சிறிது ஆஹாரமிட்டாலும்‌ மகிழ்ச்சியடைவதும்‌, ஸுசீலே – (1) பக்தர்களோடு பேதமில்லாமல்‌ கலந்து பழகுதலை – சீலத்தை மிகவுமுடையவனும்‌ (2 )தன்னண்டையில்‌ வந்தவர்களைக்‌ கொம்பிலும்‌ குளம்பிலும்‌ ஏற்காமல்‌ ஸாதுவாக இருப்பதும்‌, ஸுகுண க்ருஹீதே- (1) ஜ்ஞாநம்‌ பக்தி சாந்தி வைராக்யம்‌ முதலிய நற்குணங்களையுடையவர் கட்கு வசப்படுபவனும்‌ (2) நல்ல கயிற்றால்‌ கட்டி வைத்தால்‌ அதற்கு அடங்கியிருப்பது… ஸூ லக்ஷணே – (1) நல்ல உத்தம புருஷ லக்ஷணங்களை யுடையவனும்‌ (2) எருதுக்கு இருக்க வேண்டிய நல்ல ஸாமுத்ரிக லக்ஷணங்களை யுடையதும்‌, ஸுத்ருடே – (1) பிராட்டி போல்வார்‌ குற்றங்களை யுரைத்தாலும்‌ ஆஸ்ரிதர்களைக் காப்பதில்‌ மிகவும்‌ மனத்திண்மை யுடையவனுமான (2) மிகவும்‌ பாரமேற்கத்தக்க பலமுடையதுமான, கடிகாத்ரி தூர்வஹே – கடிகாத்ரியில்‌ எழுந்தருளியிருந்து எல்லோருடைய ரக்ஷண பாரத்‌தையும்‌ வஹிக்கிற (1) எம்பெருமானாகிற பத்ரே – (2) எருதினிடத்தில்‌, மதீய: – என்னுடைய, பார: – ரக்ஷணமாகிய பாரமானது (சுமையானது) ஆரோபித: – ஏற்றப்ட:._து. பத்ர: – எருது.

துஷ்டே அல்பத ஸூ ஸீலே -எருது அல்ப தீனி கொடுத்தாலும் ஸந்தோஷம் அடைந்து –
அஞ்சலி பரமாம் முத்ரா -ஸக்ருத் -பக்தி ஒன்றையே எதிர்பார்த்து –
ஆச்சார்யர் ஸுலப்யமே உருவாகி
என் பேரைச் சொன்னான் ஊரைச் சொன்னான் இத்யாதி
ஸூ குண க்ருஹீத –கழுத்தில் காட்டியதும் அடங்கி இருக்கும்
கல்யாண குணங்கள் -ஞான பக்தி வைராக்யம் -பக்த ஆஸ்ரித வத்சலன் -பக்த உசிதன்
ஸூ லக்ஷணே ஸூ த்ருடே –அங்க அடையாளங்கள் பூர்த்தி -மல்லாண்ட திண் தோள்
திண் கழல் -ஊற்றம் உடையாய் -நெடுமால்
ஞானம் அனுஷ்டானங்கள் நிறைந்த ஆச்சார்ய ஸமூஹம் -நம்மைக் கரை யேற்றவே விரதம் தீக்ஷயாகக் கொண்டு
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார —இங்கே அன்றோ உள்ளது –
என்னுடைய பாரங்களை சமர்ப்பிக்க ஏற்றவாறு –
காளை புகுதக் கனாக் கண்டேன்
ரிஷபம் -ரிஷ அபம் -தீப பிரகாசம் இவனே
இவனையே பார்த்த சாரதி என்றும் முன்பே அருளிச் செய்தார்
பத்ரம் -மங்களம் -ஆச்சார்யர் திருவடிகளே மங்களகரம் -மங்களா ஸாஸனம் பண்ண நம்மை ஆக்கி அருளும் காளைகள் –

இதில்‌ எம்பெருமான்‌ பத்ரமாக எருதாக உருவகிக்கப்பட்டான்‌. ஒருவன்‌ தன்னுடைய பொருள்‌ பாரத்தை எருதினிடம்‌ ஏற்றுமா போலே, தம்மைக்‌ காப்பாற்றுதலாகிய பாரத்தை எம்பெருமானாகிய எருதினிடம்‌ ஏற்றினார்‌. இந்த பரஸமர்ப்பணம்‌ ஸித்தோபாய நிஷ்டர்க்குத்‌ தன்னடையே உண்டாகும்‌ ஸ்வபாவமிறே

———–

மேல் மூன்றும் பிரார்த்தனா ரூபமாக அங்கீ கரித்து அருள வேண்டி அருளுகிறார்

அநநு குணாம் அபி வாணீம் ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்
அங்கீ கரோது பகவான் ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –100-

ஆஸ்ரித தோஷ அவலோகந அகல்ய: – தன்னை யடைந்த பக்தர்களின்‌ குற்றங்களைக்‌ காண்பதில்‌ திறமை யற்றவனான, பகவாந்‌– ஜ்ஞாநம்‌, சக்தி, பலம்‌, ஐஸ்வர்யம்‌, வீர்யம்‌, தேஜஸ்‌ என்கிற ஆறு குணங்களை யுடைய எம்பெருமான்‌, ஆகஸ்‌ ஸந்தோஹ மந்தமதி கலிதாம்‌ – குற்றங்களின்‌ திரட்சிக்கு இருப்பிடமான – அல்ப புத்தியான அடியேனால்‌ சொல்லப்பட்ட. வாணீம்‌ – இந்த ஸ்தோத்ரமாகிய வாக்கை, அநநுகுணாம்‌ அபி – (தன்னுடைய பெருமைக்குத்‌) தக்கதாக இல்லாவிட்டாலும்‌, அங்கீகரோது – (தனது ஸ்தோத்ரமாக) ஏற்றுக்‌ கொள்வானாக

அநநு குணாம் அபி வாணீம் -உனது பெருமைக்குச் சேராத வாக்கு –
ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்-மந்த மதிகளான -ப்ருத்யர்களின் கடைசில் நிலையானதாக ஆக்கி அருள் என்றார் அன்றோ
அங்கீ கரோது -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனிய வாறே அன்றோ
பகவான் –ஸ்வா பாவிக ஷட் குண -பகவான்
ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –குற்றங்கள் எல்லாம் பார்க்காமல் -வாத்சல்யம் மிக்கு உள்ள அக்காரக்கனி எம்பெருமான் அன்றோ

———–

ஸ்வாமிந ஏவ க்ருதிர் மே ஸுக்திஸ் தோஷாய ததபி தஸ்யைஷா |! ஸ்வோக்தி மநு வததி பாலே ஸுதராம்‌ தாதோ அபி தோஷமுபயாதி--101-

மே க்ருதி: – என்னுடைய இந்த க்ரந்தமானது, ஸ்வாமிந: ஸூக்தி: ஏவ திருக்கடிகை யெம்பெருமானுடைய ஸ்ரீஸூக்தியே ஆகும்‌. ததபி – அத்தகையதாயினும்‌, ஏஷா – இந்த ஸ்ரீஸூக்தியானது, தஸ்ய தோஷாய – அவனுடைய ஸந்தோஷத்தின்‌ பொருட்டு ஆகிறது. (எப்படியென்னில்‌) பாலே – தன்‌ குழந்தையானது, ஸ்வ உக்திமபி (தகப்பனாரான) தனது சொல்லாயிருந்தாலும்‌ அதை, அநுவததி ஸதி – அப்படியே அநுவதித்துப்‌ பேசுமளவில்‌, தாத: – தகப்பன் ஸுதராம்‌ – மிகவும்‌, தோஷம்‌ ஸந்தோஷத்தை, உபயாதி(கலு) – அடைகிறான்‌ அல்லவா

இளைய புன் கவிதை
தன் சொல்லால் என்னைப் பாடுவித்த அப்பன்
பாலன் அநு வாதம் -தப்பாகவே பின்னால் சொன்னாலும்
தாதா-அப்பனுக்கு சந்தோசம் ஆகுமே
ஆர்த்தி பிரபந்தம் -முக்த ஜல்பிதம் என்று மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை திருவடி அடைந்த வஸ்துவின் உளறல்

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து—57-

தேசிக குல கூடஸ்தரான ஸ்ரீ ஆழ்வார் உடைய அசேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
அதுவே யாத்ரையாகச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான திருவடிகளை ஆஸ்ரயித்து

சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற ஸ்நேஹத்தால்-அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே அதில் அவிஞ்ஞாதா வாய் இருக்கிற தேவர் அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும்

———-

பக்தோசித அப் யுக்தாம் பக்த்யா சவ்ம்ய வர கிங்கர உப ஹிதாம்
அம்ருத பலா வளிம் அநகா ம்ருது ளாமஸ் வாத்ய ம்ருத்யு மதி யாந்தி –102-

பக்த்யா – பக்தியோடு கூடி, ஸெளம்யவா கிங்கர உபஹிதாம்‌ – மணவாள மாமுனிகளின்‌ அடியவனாகிய அடியேனால்‌ ஸமர்‌ப்பிக்கப்பட்டும்‌, பக்தோசித உபயுக்தாம்‌ – தக்கானாலே செவிசாத்தப்பெற்றும்‌, ம்ருதுளாம – பக்தியினால்‌ மெத்தென்றுள்ள கனிந்துள்ள, அம்ருதபல ஆவளிம்‌ – அமுத. பால்‌ தித்திக்கும்‌ பழங்களாகிய ஸ்லோகங்களின்‌ வரிசையை, ஆஸ்வாத்ய – சுவைத்து அனுபவித்து, அநகா: – பாவம்‌ தொலையப்‌ பெற்றவர்களாய்க்‌ கொண்டு (மக்கள்‌) ம்ருத்யும்‌ – ஸம்ஸாரத்தை, அதியாந்தி கடந்து பரமபதம்‌ செல்லுகிறார்கள்

பக்தோசித அப யுக்தாம் -பக்த வத்சலன் -தக்கான் திருச்செவி சாத்தும் படி அருளி -அங்கீ கரித்து அருளி
பக்த்யா ஸெளம்ய வர கிங்கர உப ஹிதாம் -அடையாளம் காட்டிக்கொள்கிறார் –ஷட் பதம் -திருவடித் தாமரைகளில் அமர்ந்த வண்டு
திவ்ய ஞான பிரதர் -தனியனிலே உண்டே-ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||
மா முனிகள் நியமிக்க அருளிச் செய்த திவ்ய கிரந்தம்
அம்ருத பலா வளிம் -ஸ்வாமியே திரு நாமம் -ஆவளி -தொடர்
ஒவ்வொன்றுமே அம்ருதம் -தொகுத்து அருளிய திவ்ய மாலை –
அநகா-குற்றங்களைப் போக்கி அருளும்
ம்ருது லாம் -மிருதுவாக
ஆஸ்வாத்ய -தாபத் த்ரயங்களுக்கு ஆஸ்வாஸ கரம்
ம்ருத்யு மதி யாந்தி –ஸம்ஸாரத் தடைகளைப் போக்கி நிரதிசய பரம புருஷார்த்தம்
ஆச்சார்யர் திருவடிகளிலே சேர்த்து அருளும்

—————————————————————————————————————————–

வித்தகனே வேந்தே மணவாள மா முனியே
சுத்தனே சோதிச் சுடர் முடியே -முத்தே
கரும்பின் சுவையே கடலில் அமுதமே
அரும்பின தாள் நீயே அருள் —ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் குண வகுப்பு

————-

மல்லிகைகள் வகுள மலர் மணி முடியில் நாறும்
வண் பவள வாய் அலரில் மறைகள் மிகு நாறும்
நல்லிசை சேர் பதின்மர்களின் நற் கலைகள் எல்லாம்
நலமுடைய கருணை விழி நாள் தோறும் மணக்கும்
சொல்லரிய பாதம் அபிஷேக மணம் நாறும்
தொல்லை எதிராசன் என இவ்வுலகில் வந்தோன்
செல்வன் மணவாளன் லோக குரு எங்கோன்
திருவடிகள் அல்லது ஒரு தெய்வம் அரியேனே–ஸ்ரீ ஸ்வாமி எறும்பி அப்பாவின் ஸ்ரீ மணவாள மா முனிகள் அகவல்

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading