Archive for the ‘Boothath Aalvaar’ Category

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே -அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்-

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளால் அறம் அருளும் அன்றே –அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை –41-

பிராமணர்க்கு புறச் சேரி யருகு வழி போகாதாப் போலே-நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை
உடையவன் திருவடிகளையே நெஞ்சே நீ மறவாதே கொள்-நீ உனக்க அடைத்த விஷயத்தை விஸ்மரியாதே கொள்-

————

இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே
ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

தாயையும் தமப்பனையும் சேர நினைப்பாரைப் போலே –தேசாந்தரம் போன பிரஜை நினைக்குமா போலே –
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே இருவரும் கூட இருந்தாப் போலே நினையா நின்றேன் –
திரு இடை கழியிலே கண்டாப் போலே -அவளோட்டை கலவியாலே போக்யதை அளவிறந்த தோளைக் காண –
ஸ்வர்க்காதிகளுக்கு அன்று –இத்தை எல்லாம் த்யஜித்தவர்கள் இறே – அத் தோள்கள் தொழுவார் ஆகிறார் –
இப்படி நினைக்குமவர்கள் -இவ்வனுபவத்துக்கு இடைச் சுவரான தொரு ஜன்மத்தையும் கிட்டார்கள்-

———————–

நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது -அவன் தானே தன்னை யுகந்தார் உடைய
விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் –
எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழு வாரைத் தொழ அமையும் –
அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

ராஷசனாக அமையும் -குரங்குகளாக அமையும் -ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் -பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –
அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது -ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –
வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய பரம உத்தேச்யமாக
பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-
தன்னை அல்லது அறியாத வனான பரதனை அல்லது அறியாதவன் போல-

————

பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் –
இதில் எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் –
கீழே பாகவதர்களை விரும்பினார் -இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44-

குருவிந்தக் கல்லை -கூழாங்கல்லை -மாணிக்கம் என்று நினைத்து இருந்தால் அது ரத்னமாக மாட்டாது இறே-
ரத்ன பரீஷகன் ரத்னம் என்று அறிந்தது இறே ரத்னம் ஆவது -அப்படியே தம்முடைய நெஞ்சிலே மனிச்சர் என்று
வைக்கப் பட்டவர்களே மனுஷ்யர் ஆவார் என்கிறார் –சர்வேஸ்வரனால் திருத்த ஒண்ணாது என்று கை விட்டவர்களையும்
திருத்தப் பார்க்கும் இவர் கை விட்டால் பின்னைப் புகல் இல்லை இறே-பின்னை மனிச்சராகக் கொள்வார் இல்லையே –
ஸ்ரீ யபதித்வத்துக்கு வாசகமான திரு நாமத்தைச் சொல்லுவதே யாவது த்வயத்தைச் சொல்லுகை –

இத்தை ஒற்றியே –
ஆன் விடை எழ் அன்று அடர்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று
என் மனத்தே வைத்தேனே-பெரிய திருமொழி -11-7-9- -என்கிறார் –
நண்ணாத வாள் அவுணர் பதிகத்திலும் –
தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறை பொழுதும் எண்ணோமே –
பூதத்தாழ்வார் அவதார ஸ்தல பாசுரத்திலே அவர் போல அருளி இருக்கிறார் –
தமர் உள்ளும் மா மல்லை -என்று பூதத்தாழ்வார் அருளி இருப்பதால் -பாகவத சேஷத்வத்தை இந்த பதிகத்தில் வைத்தார்
கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் –என்று
கத்தியும் வேலும் வைத்து கொண்டு இருப்பவர் அருளுகிறார் –
கூப்பிய கரங்கள் வுடன் அஞ்சலி ஹஸ்தராய் பாகவத சேஷத்வத்தை காட்டி கொண்டு
எழுந்து அருளி இருக்கிறார் இந்த திவ்ய தேசத்தில் –

————–

இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும்
சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய திருவடிகளைப் பயிலும் அவர்கள் அர்த்தத்தின் யுடைய
லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்-

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத் ஆன -1-4- என்று சஞ்சிதமான தனம் யுண்டு
என்று செப்பேட்டிலே கண்டு போகாமே
அந்நிதி வெளிப்பட்ட இடம் ப்ராமாணிகர்க்குப் பரம நிதிகள் ஆகிறன-உகந்து அருளின திருப்பதிகள் –
விண்ணோர் முடித்தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளதென்று இறுமாவார்-
இப்படிப் பட்ட உள்ளவனுடைய திருவடிகளைக் கிட்டின இவர்களுக்கு வேறு ஒன்றை நினைக்க அவசரம் யுண்டோ –
சம்சாரத்தில் சம்சாரியைக் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி அன்றோ –
இத்தை அன்றோ-உண்ணும் சோற்றில் முற் கூறும்-துவளில் மா மணியும் சொல்லுகிறது –
முன்ன நோற்ற விதி கொலோ-முகில் வண்ணன் மாயம் கொலோ –
நான் பண்ணின ஸூ க்ருதமோ -இடைவீடு இன்றிக்கே அவன் தன்னுடைய கிருபையோ –
என்னும் படிகளாலே பிரிவும் உத்தேச்யம் –
விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பயின்று உளது என்று இறுமாவார் –

————–

இவர்கள் அவனைப் பற்றி ப்ராக்ருத போகங்களைக் கை விட்டார்கள் என்றது கீழ் –
இப்பாட்டில் அவன் அப்ராக்ருத போகத்தை விட்டு இவர்களைப் பற்றின படி சொல்லுகிறது –
சௌபரி பல வடிவு கொண்டு நின்று புஜித்தாப் போலே யாய்த்து இவனும் பல திரு மேனியைக் கொண்டு புஜிக்கிற படி –
அவன் பிரசாதம் அடியாக இவன் இத்தன வடிவு கொள்ள வல்லனானால் –
இச்சாதீனமாகப் பல வடிவு கொள்ள அவனுக்குச் சொல்ல வேண்டா இறே –
இவர்களை அப்படி பயிலப் பண்ணுகைக்கு இவர்கள் பட்டதன்று -அவன் பட்டது என்கிறது
ஆஸ்ரிதர்க்காக உகந்து அருளின திருப்பதிக்கு எல்லை இல்லை -என்கிறார் –

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

சிரகாலம் வர்த்திக்கிறதும் திருமலையிலே -முந்துற பொற்கால் பொலிய விட்ட தேசம் –
சர்வேஸ்வரன் –தன்னை சம்சாரிகளுக்குக் கொடுக்கையால் வந்த ஔதார்யமும் சௌலப்யமும்-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-1-
விட்டிலங்கு செஞ்சோதி-திருவாய் -2-7-5-
மால்-சர்வாதிகன் -பிச்சன்
சம்சாரத்துக்கு ஆபரணமான திரு நீர் மலையிலே -இப்படியே ஆஸ்ரித அர்த்தமாக அவன் விரும்பி வர்த்திக்கிற
திருப்பதிகளுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –

———

அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47–

ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –
நினைத்த வகைகளிலே ஆஸ்ரயிக்கலாம் படி தொழுகைக்கும் அணிகைக்கும் பல முகங்கள் உண்டாக்கி வைத்தான் ஆய்த்து-
அண்ணலை –இவ்வோ செயல்களாலே தானே ஸ்வாமி என்று தோற்றி இருக்கிறவனை -சேதனர்க்கு அனுபாவ்யமான
குணங்களை உடைய சேஷியை-கீழ்ச் சொன்ன வற்றுக்கு அடியான சம்பந்தம் -அரஷகனாலும் விட ஒண்ணாத ப்ராப்தி இருக்கும் படி –

————-

நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன ஏதேனும் உண்டோ என்ன
தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் -கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி –
எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் –

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

வேதங்களையும் யுண்டாக்கினாய்- அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே-அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும்
எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வேத பிரதிபாத்யத்வமும் ஸ்ரீ யபதித்வத்தோ பாதி –
வேத ப்ரதிபாத்யனாகில் பரம பதத்திலே இறே ஓலைப் புறத்திலே கண்டுப்போம் விஷயத்தை
சம்சாரிகளுக்கு அனுபவிக்கலாம் படி கண்ணுக்கு விஷயமாக்கி திரு மலையை விரும்பினாய்
மாலே-திருமலையில் வந்து சந்நிஹிதன் ஆகைக்கு அடியான வ்யாமோஹத்தைச் சொல்லிற்று-

—————–

நெஞ்சே அவன் இப்படித் திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா –
ஆன பின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் –

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

நம்முடைய பிரதிபந்தகங்களை நினைத்து அஞ்சாதே கூப்பிடு-அது செய்யும் இடத்தில் ஜகம் அதிரும்படி கூப்பிடு –
பிரதிபந்தகங்களைச் செய்வது என் என்னில் -அப் பூதனை பட்டது படும் அத்தனை –
பேய்க்கும் தீண்டலாய் இருக்கிற விஷயம்-

————–

திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்-திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத்
தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

அழைப்பன் திருமாலை-ப்ராஹ்மண பிரஜை பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லும் அத்தனை-
ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்
ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –
உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-
ஆயவனே யாதவனே என்று அவனை –
கிருஷ்ணனே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனே என்று இரண்டும் சொல்லிக் கூப்பிடுவார்கள் போலே காணும் அவர்கள் —
இடைத்தனத்தோபாதி ஸ்ரீவஸூ தேவர் மகனானதுவும் ஆகர்ஷகமான படி –
இரண்டு அவதாரத்துக்கும் பிரயோஜனம் ருக்மிணீ நீளைகளை ப்ராபிக்கை –
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவார்கள்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அவனுடைய அப்ராக்ருதமான திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர் -என்கிறார்-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து————31-

இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே காட்டில்
புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இறே –
அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற திவ்ய விக்ரஹத்தை யுடையவன் திருவடிகளை பாகனாபிமன்னராய் ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நீல ரத்னம் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை உகந்து கொண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

————

இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே
பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்-

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—————-32-

——————————

கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அவனுடைய
ஸ்வரூப ரூப குணாதிகளான ஸ்வ பாவங்களை சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –
மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது –
இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

——————

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –
உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி——————34-

ஔதார்யம் குணம் கிடைக்கையாலே-அவனும் தன்னதாக்கி தருவனாவான் -நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-
ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் இஸ் ஸூ க்ருதத்துக்கு அடியாக
முன்பே பூமியை அளந்து கிருஷி பண்ணி வைத்தாய்-
தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல்

————–

அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு என்றைக்கும்
ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் –
இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்-

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது————–35-

இவர் நின்ற இடம் அவர்களால் அறிய ஒண்ணாதாப் போலே இறே அவர்கள் நின்ற நிலை இவர்க்கு
அறிய ஒண்ணாது இருக்கும் படி என்பர் –இவர் இந்த நாட்டிலும் இல்லையே-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் -7-1-1-
இதுக்கு மித்ர பாவம் அமையும் –இவ்விஷயத்தில் ப்ராதிகூல நிவ்ருத்தி ரஷையாம்
மற்றைய விஷயத்தில் ஆனுகூல்யமும் விநாசம்-

—————–

நீ இவ்வர்த்தத்தை பண்ணி -அவனை விச்வசித்து க்ருதக்ருத்யமாய் இரு –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

அனவரதம் அனுசந்தித்து ஸ்வீகார மாத்ரத்தையே பற்றி – மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே
நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-
நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் -அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –

————–

சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார்

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37–

ஜென்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது உன்னை ஆஸ்ரயிக்கை இறே –
அதற்குப் புறம்பான பின்பு அவை யடைய வ்யர்த்தம் என்கிறார் –

————-

ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும்
நாம் கொள்ளும் காரியமும் -என்கிறார்

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து————-38-

இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –
நமக்கு என்றும் ஸ்ரீ யபதியானவனே ஆஸ்ரயணீயனும் பிராப்யனும் என்று துணிந்து இருக்கும் மனசை யுடையராய் –
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியினுடைய அச் சேர்த்திக்கு வாசகமான திரு நாமங்களை சொல்லுகையே ஒத்து ஆவது

—————–

விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே-சகல வேத சஙக்ரஹமான
திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு பற்றப் பாருங்கோள்-

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-

அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு
அவன் பிரசாதம் அடியாகப் பிறந்த ஜ்ஞானம் யுடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –
பகவத் பிரசாதத்தாலே அவனைக் கண்ட என்னை விஸ்வசியுங்கள்-

————-

இதுவும் ஒரு வார்த்தா மாதரம் சொன்னான் என்று இராதே அதில் அர்த்த பூதனைக்
கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் –

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்————–40-

உபாசகனுக்கு அந்திம ஸ்ம்ருதி வேணும்
பிரபன்னனுக்கு காஷ்ட பாஷாண சந்நிபனாக வேணும்
இரண்டும் தப்பி நின்றார்க்கு அந்திம தசையில் த்வயத்தின் யுடைய நினைவு பிறத்தல் கீழ்ச் சொன்ன வற்றிலும் நன்று
பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே
அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே
வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும் பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும்
அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்-அதில் இங்கு நீர் நினைமின் என்ற மாத்திரமாய் இருந்தது

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 16, 2020

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–

சித்தத்தைப் பற்றுவார்க்கு சித்தமே அமையுமே –
திருவடிகளை வைத்தால் விலக்காத தொரு தலையை யுடையரே –
நான் என்று இருக்கை ராவணனோ பாதி -அடியேன் என்று இருக்கை விபீஷணனோ பாதி

———–

சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால்
எல்லாம் ஸூலபம் இறே என்கிறது-

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—-22-

அவனாலே அவனைப் பெறுதல் -தம்மாலே அவனை இழத்தல் -என்றபடி
எம்பெருமான் ஏறிட்டுக் கொள்ளாத போது முதலை வாயிலே கிடந்தான் –
அவன் ஏறிட்டுக் கொண்டவாறே துக்கம் நீங்கிற்று
அனுக்ரஹம் உள்ள போது ரஷ்யத்துக்கு மிடுக்காய் இருக்கும்
நிக்ரஹம் பிறந்த போது சத்ருக்களுக்கு மிடுக்காய் இருக்கும்-
ஆதலால் -அரியது எளியதாகும் -எளிதாகைக்கு இவன் செய்வது என் என்னில் –விலக்காமை-

—————–

ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும்

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

வத்சாரூரனும் விளவாசூரனும் பட்டது படும் இத்தனை விரோதிகள்-
ஸ்ரீ ய பதியானவன் அர்த்தியாய் நின்றது- உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே
ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் –
அவ்வவ அதிகாரிகளையும் -அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

————–

இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ -அடியே துடங்கி
இவன் சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

இவனுடைய நன்மை தீமைக்கு அடி அவனுடைய நிக்ரஹ அனுஹ்ரங்களை ஒழிய வேறு புண்ய பாபங்கள் இல்லை
த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் அவன்

————-

அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் –
இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

கோபம் தானிட்ட வழக்காய் இருக்கிறவன்-தானே கோபத்தின் வழக்காய் முடித்து வில் இருக்கச் செய்தேயும் கோபத்தால் கொன்றான் –
நின்றதும் வேங்கடமே –அவதாரத்துக்கு பிற்பாடர் ஆனவர்கள் இழக்க ஒண்ணாது என்று அவர்கள் விரோதியைப்
போக்குகைக்காக திரு மலையிலே வந்து நின்றது –பிராட்டியை மீட்டாப் போலே ஆத்மாபஹாரம் மீட்கைக்கு எடுத்து விட்டு நிற்கிறபடி –
வந்து –தன்னைக் கொடுக்கைக்கு அர்த்தியாய் வந்தபடி –

——-

கீழ் ப்ரஸ்துதமான மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று –
திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் –

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26-

படி யமரர் வாழும் பதி –பூஸூரரான வைஷ்ணவர்கள் வர்த்திக்கிற திரு மலை –அவர்கள் அனுபவித்து வாழுகிற திருமலை-

———————-

அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும் செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது –
கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே –
நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என்நெஞ்சு -என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்—-27-

கரை கட்டா காவேரி போலே சர்வாதிகான-சர்வேஸ்வரனை
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் தேடி ஓடா நின்ற நெஞ்சு-

————-

இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவன் -ஜகத் ரஷணத்துக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
விரோதி நிரசனம் பண்ணி -தேவாதி தேவன் என்று பரிச்சேதிக்கப் போகாதபடி பரப்புடைய கோயிலிலே கண் வளர்ந்து அருளிப்
போவது வருவதாக ஒண்ணாது என்று திரு மலையிலே நின்று அருளினவன் என் நெஞ்சு விரும்பிப் போகிறிலன் –
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

————

மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆனவாறே -அது தன்னிலும்
திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——————-29-

மகன் என்றாலும் -தாய் -என்றாலும் கிருஷ்ணன் பக்கலிலும் யசோதைப் பிராட்டி பக்கலிலும் நிற்கும்
புத்திர ச்நேஹம் என்றால் சக்கரவர்த்தி பக்கலிலே கிடக்குமா போலே

————————

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

மேலே எல்லாரோடும் வரையாதே கை தொட்டுப் பரிமாறின அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த அவதாரத்தைச் சொல்லுகிறது –
ஸ்ரீ யபதியான நீ பிச்சை மாணி யாவதே –
கடைகிற போதும் அடைக்கிற போதும் ஒரு கடல் ஒரு கடலை நின்று அலைத்தால் போலே இருக்கை
பேரோத மேனி-கடைந்த கடல் இவ்வடிவைப் பார்க்க குளப்படியாய் இருந்தபடி
பிரான் –கடல் கடைந்து ஆக்க வேண்டாதபடி இவருக்கு கொடுத்த அம்ருதம் இருக்கிறபடி
கடைந்து ஆராவமுதத்தை இவருக்குக் கொடுத்தான்

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்-

July 26, 2018

திருப்பல்லாண்டு –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -வந்து –கூடும் மனம் உடையீர்கள்–வந்து பல்லாண்டு கூறுமினோ -4-

————————————

பெரியாழ்வார் திருமொழி –

காறை பூணும் –ஆயிரம் பேர்த்தேவன் திறம் பிதற்றும் —
மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே –3-7-8-

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து –
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் -4-4-7-

ஆசை வாய்ச சென்ற சிந்தையராகி –அன்னை யத்தன் ஏன் புத்திரர் –என்று மயங்கி வாய் திறவாதே —
கேசவா புருடோத்தமா வென்றும் –பேசுவார் எய்தும் பெருமை -4-5-1-

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –உய்யலும் ஆமே -4-5-3-

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே -4-5-10-

————————————————————————————–

திருப்பாவை –

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து
அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் –6-

நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் -25-

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைத் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் —
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

——————————————

நாச்சியார் திருமொழி
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் –
-பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெற -1-9-

——————————————————————————————–

பெருமாள் திருமொழி –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற -1-3-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-9-

திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -2-1-

நிரை மேய்த்ததும் இவையே நினைந்து ஆடிப்பாடி அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் -2-2-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே -2-4-

மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே -2-8-

மொய்த்துக் கண் பணி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி
என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே -2-9-

——————————————————————————————-

திருச் சந்த விருத்தம் –

சோர்வில்லாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே –78-

———————————————————————————–

திருமாலை
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே –26-

—————————————————————————-

பெரிய திருமொழி –
சிக்கெனைத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் -1-1-5-

ஓதிலும் உன் பேர் அன்றி மற்றோதாள் -உருகும் நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையறவுடையள்
-கயல் நெடும் கண் துயில் மறந்தாள்–என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-5-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை -2-10-4-

நீடு பன்மலர் மாலையிட்டு -நின் இணை அடி தொழுது ஏத்தும் -என் மனம் –3-5-5-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் -3-5-6-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில் –9-3-9-

—————————————————————————————

திருவாய் மொழி –

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே –1-3-6-

ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது -1-3-7-

எந்தாய் என்பன் நினைந்து நைந்தே -1-5-1-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -1-5-2-

கள்வா வெம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவன் என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவரே -2-2-10-

குழாங்கள் ஆயிரத்துள் இவை பத்துமுடன் பாடி குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினே -2-3-11-

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாணுதலே -2-4-1-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கெத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட -2-6-3-

நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே -2-6-4-

உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி
என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் -2-6-6-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினான் காமனைப் பயந்தாய் என்று என்று
உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல்வாய் வெரீஇ
ஆழமானது கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீஇயதீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே -2-7-9-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராய் -2-9-6-

கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-

வார் புனல் அம் தண் அருவி வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே
பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -3-5-8-

தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -3-5-10-

கறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த வம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டிலனே -3-10-2-

திருக்குருகூர் அதனை பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே-4-10-2-

மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே -5-2-2-

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே -5-2-4-

நேமிப்பிரான் தமர் போந்தார் நன்று இசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தியே–5-2-6-

திரு வண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-

புகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர
வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே -6-4-3-

தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -6-5-1-

தொலைவில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசனை என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-

பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீர்கள் மல்கி மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் எண்ணிலமான் புகுமோர் திருக்கோளூரே– 6-7-1-

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்க -7-1-10-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே -7-10-11-

பணங்கள் ஆயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானு நீ தானே -8-1-8-

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-

நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனை பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைக்கிலென் நாண் உனக்கு ஆட் செய்யும் நீர்மையே –9-6-2-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே -10-4-10-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -10-7-8-

——————————————

முதல் திருவந்தாதி –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20 –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப்பிணித்த நான்று
குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே ஓங்கோத வண்ணா உரை -24-

நகரமருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி யுரு வெ ண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி
திசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் -37-

மனமாசு தீரும் அருவினையும் சாரா தனமாய் தானே கை கூடும்
புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் –43-

அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்
நயநின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொல்மாலை கற்றேன் தொழுது -57-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் ஏழு வாழி நெஞ்சே
பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை -58-

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த
படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய்ந்நாகப் பூம்போது கொண்டு -78-

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு -88-

நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-

——————————————————

இரண்டாம் திருவந்தாதி –

நகர் இழைத்து நித்திலத்து நாண் மலர் கொண்டு அங்கே திகழு மணி வயிரம் சேர்த்து
நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4-

அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே
அறிந்தவன் தன் பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே காரோத வண்ணன் கழல் -6-

பழிபாவம் கையகற்றிப் பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ
வழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் காரணங்கள் தாமுடையார் தாம் -20-

தா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -21-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலாரால் முன்னே
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேனுக்கு என் பாக்கியத்தால் இனி -34-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து
நமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38-

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
அறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -44-

திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டீர்
உரிமையால் ஏத்தினோம் பாதம் இருந்த தடக்கை எந்தை பேர் நால் திசையும் கேட்டீரே நாம் -57-

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்
துணிந்தேன் புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு வந்திவாய் வாய்ந்த மலர் தூவி வைகலும்
ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட்படத் துணிந்த யான் -73-

அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று -85-

——————————————-

மூன்றாம் திருவந்தாதி –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா
மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் -8-

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி
மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி -12-

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
இலாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க் கை தொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடியார் மலர் தூவிக் காணும்
படியானை செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு -22-

காண் காண் என விரும்பும் கண்கள் -கதிர் இலகு பூண்தார் அகலத்தான் பொன்மேனி
பாண் கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம் பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை -35-

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்த்த அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடித்தாமரையாமலர் -96-

———————————————————–

நான்முகன் திருவந்தாதி –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு -9-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -11-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த
வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீற் கண்டன் கண்ட நிலை -15-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -63-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று
என்றும் பூக்கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

—————————————————————-

திருவாசிரியம்

உலகு படைத்து உண்ட வெந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவாருயிருகி யுக்க
நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்க்கு அசைவோர் அசைக-2-

————————

பெரிய திருவந்தாதி –

வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -84-

——————————————————

இராமானுச நூற்றந்தாதி –

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம் ஐயன் ராமானுசன் என்று அழைக்கும்
அருவினையேன் கையும் தொழும் கண் கருத்திடும் காணக்
கடல் புடை சூழ் வையம் இதினில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -91-100 -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

நான்கு பாசுரங்கள் பர உபதேசம் -இதில் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அடுத்ததில் இஷ்ட ப்ராப்திக்கும் உபதேசம்

இவை இரண்டும் ஆஸ்திக புத்தி உள்ளவர்
அடுத்ததில் நாஸ்திகர் சாரு வாகர் -லோகாயுதம் -உபதேசம்
அடுத்ததில் தம்மை ஒத்த முமுஷுக்களுக்கு உபதேசம்

அடுத்த ஆறும் தான் பெற்ற பேற்றைச் சொல்லி நிகமிக்கிறார்

————–

பிரகிருதி வஸ்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒரு வகை தப்பாது –
ஆன பின்பு அவன் திருவடிகளை வணங்கப் பாருங்கோள் என்கிறார்-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பதவுரை

பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!-இதனால் ஆஸ்திக புத்தி உள்ளவர்களே என்றவாறு
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்-வேதைக சமைதி கம்யன் அன்றோ
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியை யெல்லாம்
அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சி செய்யுங்கள்.-உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்மின் என்றவாறு

ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான பல வகைப் பட்ட சாஸ்த்ரங்களாலும் யதாவாக அறுதியிடப் பட்டு இருக்குமவனாய்
கறுத்த கடலாலே சூழப் பட்டு இருக்கிற இந்த பூமியை எல்லாம் அளந்து கொண்ட ஸுலப்யத்தை யுடையவனுடைய
சிவந்த திருவடிகளை சரீர விஸ்லேஷத்துக்கு பின்பு பொறுக்க ஒண்ணாத நரகங்களில் சென்று கிட்டாத படி யாக
பாப பலமான நரகம் வரில் செய்வது என் -என்று அஞ்சி அறிவு கலங்குகிற நீங்கள் பின்னைச் செய்கிறோம் என்று
ஆறி இராமல் ஒரு க்ஷணம் ஆகிலும் முற்பட ஆஸ்ரயிக்க உத்ஸாஹியுங்கோள்-

(பரம காருணிகர் ஆகையாலே ஸம்ஸாரிகள் இழந்து போகலாகாது என்று நான்கு பாட்டால அவர்களுக்கு உபதேசிக்கிறார்
அளந்தான் –யாதோ வாஸோ நிவர்த்தந்தே -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் ஒரு மிடறாக அளத்ததற்கு அரியவன் என்று அளக்கப்பட்டவன்
யஸ்யா மதம் தஸ்ய மதம்
வேதா ஹமேதம் புருஷம் மஹாந்தம்
ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா
இவனை வணங்குவதே தக்கது என்று உபதேசிக்கிறார் இதில் -)

————————————————————————————————

சேவடி வணங்கி அநிஷ்ட நிவ்ருத்தி கீழ்
இதில் திரு நாமம் ஏத்தி இஷ்ட பிராப்தி பெற உபதேசம்

அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட ப்ராப்திக்கும் இது தானே –ரக்ஷணத்துக்கும்- இதற்காகவே கொடி கட்டி சேவை சாதிக்கிறான்

திரு நாம சங்கீர்த்தனம் -உபாயமாக சொல்லி ப்ரயோஜனாந்தரங்களைப் பெற சாமான்ய ஆஸ்ரிதர்களைக் கூட்டி மேலே உயர்த்தி
மேல் 94- பாசுரத்தில் தம்மைப் போன்றவர்களுக்கு உபதேசம்

அவனை ஆஸ்ரயிக்க உங்களுக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் –
ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்-

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பதவுரை

முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேஸ்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத்திருநாமம்) பெறுவிக்கும்

பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்று
என் போல்வார் பிரார்த்திக்குக் கிடக்குமதாய்-நிரதிசய ஸூ குமாரமான திருவடிகளாலே(பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் மெல்லடிகளாலே )
அவன் நினைத்த வஞ்சனம் அவனோடேயாம்படி ஏற்கவே கம்சனை உதைத்து முடித்து அந்த ஸ்வ பாவத்துக்குத் தோற்று
ப்ரஹ்மாதி தேவர்கள் -தேவராலே எங்கள் குடியிருப்புப் பெற்றோம் -என்று
வாய் விட்டுப் புகழும் படியான ஸ்வ பாவத்தை யுடையனாய்

ரக்ஷணத்துக்கு கட்டின கொடி மேல் -கருடத்வஜன் என்னும் படி எடுக்கப் பட்ட பெரிய திருவடியை யுடையனாய்
தன் பக்கல் ஓரடி வர நின்றவர்களை நெடுக நினைத்து நினைத்து கொண்டு இருக்கும்
ஸ்வபாவனுடைய திரு நாமங்களையே சொல்லி வாய் விட்டுப் புகழுங்கோள் –

இப்படி புகழ்ந்தால் தம் தாமுக்கு அபேக்ஷிதமான ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்கள் ஆகிற
சகல புருஷார்த்தங்களையும் ஏத்தின வாய் மூடுவதுக்கு முன்னே சீக்கிரமாக கைப்படும் படி காட்டித் தரும் –

(படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் -9-2-2-
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் அளித்து ரக்ஷிப்பவன் இவனே என்று
ஸூ பர்ணோ அஸி கருத்மான் -வேதாத்மா விஹகேஸ்வரனை கொடி கட்டிக் கொண்டு இருப்பவன்
சேவல் அம் கொடியோய்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோனே
புள்ளின் நிவந்து ஓங்கி உயர் கொடிச் சேவலோய்
அவிழ் துழாய் மலர் தரு செல்வத்துப் புள் மிசைக் கொடியோனும்–என்று பரிபாடல் கோஷிக்குமே
ஆசிய ஜா நந்தோ நாம சித்த விவக்தந
த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்
கைவல்யம் பகவந்தம் ச மந்த்ரோயம் சாதயிஷ்யதி
ப்ரயோஜனாந்தர பரர்களும் இவனையே ஸ்துதிக்க வேண்டும் என்கிறார் ஆயிற்று–)

—————————————————————————————————–

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருக்கிறோம் நீங்கள் நம்பினாலும் இல்லா விட்டாலும்
உண்மை நிலை -நரகமும் போவீர்கள் -அங்கு யமபடர் நலிவர்கள் என்ன
எங்களுக்கோ -பிரதிபந்தகங்கள் மிக்கு உள்ளனவே என்ன
அவற்றைப் போக்க பரிகரம் உள்ளவன் –
முன்னமே சிறு பாலகனாய் இருக்கச் செய்தே பூதனா தொடக்கமாக கேசி பர்யந்தமாக
ஸமஸ்த விரோதிகளை போக்கி அருளினவன் அன்றோ
அவனை ஏத்துங்கோள் -என்று உபதேசிக்கிறார் இதில்

குரூரமான நரகம் வந்து கிட்டுவதுக்கு முன்னே –
நிரதிசய போக்யனாய் -பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கோள் -என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

பதவுரை

கொடு நரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண் கொண்டு காண வொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்கு மேலும்
செய்கை–(அங்கு யம படர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரக வேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியை யுடைய சங்கைத் திருக் கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின் வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவி யிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

குரூரமான நரகம் முதலிலே கண் கொண்டு காண ஒண்ணாத படி சால வெவ்விதாக இருக்கும் –
பின்னும் கர்ம அனுகுணமாக -சேவதக்குவார் போலே புகுந்து -என்கிறபடியே –
யம படர் பண்ணைக் கடவ நெளிவுகள் மிகவும் துஸ் ஸஹமாய் இருக்கும் -என்று
அவற்றை அனுசந்தித்து நரக தரிசனமும் -அவர்கள் பண்ணும் நலிவும் வந்து கிட்டு வதுக்கு முன்னே எதிரிகளை முடிக்கும்
கூரிய த்வனியை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய்

கேசியினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டவனாய்
பூதனையினுடைய முலையில் நச்சுப் பாலை யுண்டு அவளை முடித்துப் பொகட்டவனை -மேல் எழ அன்றிக்கே
ச மனசமாக உறைத்து நின்று ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்

வடி சங்கம் -அழகிய சங்கம் -என்றுமாம் –

(தென்னவன் தமர் செப்பம் இலாதார் சேவதக்குவார்(சே தாக்குவார் -காளைக்கு காயடிப்பார் ) போலப் புகுந்து பின்னும்
வன் கயிற்றால் பிணித்து எற்றிப் பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-
நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திருமொழி -1-6-3-
நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு என மொழிவதற்கு அங்கி -1-6-4-
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்
வரி வளையால் குறைவில்லாப் பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த –விரி புகழான் -திருவாய் -4-8-8-
கூந்தல் -கேசி
கூந்தல் எரி சினம் கொன்றாய் –பரிபாடல்
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய் படுத்திட்டு -கலித்தொகை
கூந்தன் மா கொன்று குடமாடிக் கோவலனாய் -முத்தொள்ளாயிரம்
இப்படி விரோதிகளை நிரஸனம் பண்ணி அருளியது போல் உங்கள் நரக பயத்தையும் போக்க வல்லவன் அவன் ஒருவனே என்கிறார்
நாஸ்திகர்கள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணுவதற்கு உபாயம் நரக பயத்தை அனுசந்திக்கை என்றபடி -)

——————————————————————————————–

தம் போல்வார் -அர்ச்சாவதாரங்களில் மண்டி இருப்பதற்குத் தக்க
திருப்பாடகம் ஸ்வயம் பிரயோஜனமாக ஏத்தி இருப்பவர்கள் அன்றோ
பாடு பெருமை -அகம் -பெருமை தோற்ற வீற்று இருப்பவன் –
இவர் படியைக் காட்டி முமுஷுக்களுக்கு உபதேசம்

என்னுடைய நெஞ்சு கண்டீர்களே ஏத்துகிற படி -அப்படியே நீங்களும் ஜகத் ரக்ஷண ஸ்வபாவனாய்
நிரதிசய போக்யனானவனை ஏத்துங்கோள் -என்கிறார் –

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆஸ்ரயியுங்கோள்.

பூமியாதிகளான சகல லோகங்களையும் ஒன்றும் பிரி கதிர் படாத படி திரு வயிற்றிலே வைத்து நோக்கும் ஸ்வ பாவனாய்
அத்தாலே வந்த ஹர்ஷம் நிழலிட்டுத் தோற்றும் படி இருக்கிற வர்ஷூகவலாஹகம் போன்ற வடிவை யுடையவனாய்
பிடித்த பிடியே பிணமாம் படி பிடித்துத் தன்னுடன் பொருந்தாத ஹிரண்யனுடைய மார்பை இரண்டு கூறாகப் பிளந்து பொகட்டு
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்காக நிரதிசய போக்யமான (பூம்)திருப் பாடகத்திலே சிறுக்கனுக்கு உதவினபடியை
(இந்திரன் சிறுவன் அன்றோ )எல்லாரும் காண வேணும் என்று எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரனை என்னுடைய நெஞ்சானது
இவ்வோ ஸ்வ பாவங்களைச் சொல்லி புகழா நிற்கும் -இப்படியே நீங்களும் உங்கள் யோக்யதை நினைத்து பிற்காலியாதே
கிட்டி நின்று பஃன அபிமானராய்த் திருவடிகளிலே விழுந்து அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் –

(தான் நமஸ்கரித்துக் காட்டிக் குழந்தைகளை பழக்கி வைக்கும் தாய் போல் முமுஷுக்களாய் இருப்பவருக்கு நமஸ்கரித்துக் காட்டி அருளுகிறார் –
வள வேழ் உலகில் போல் அகலாமல் தொழுமின்
ஒரு பொருள் புறப்பாடு இன்றி திரு வயிற்றில் வைத்து ரஷித்த சர்வாதிகன் இவனே
உளம் தொட்டு –பெரியாழ்வார் -1-6-9- அவனுக்கும் நெஞ்சில் ஈரப்பசை உண்டோ என்று தேடுமவன் –
பாடகம் –பாடு அகம் -பெருமை தோற்ற வீற்று இருக்கும் திவ்ய தேசம்
பூம் பாடகம் -இனிமை
உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -ஸர்வ ரக்ஷகத்வம்
பொருந்தாதான் மார்பு இடந்து -ஸ்வா பாவிக -ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் )

—————————————————————————————————

ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி –
என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் –

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

பதவுரை

தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் சேய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்-கால உபலஷிதமான சகல -சேதன அசேதனங்களை ஸூஷ்ம மாகக் கொண்டவன்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையும் உண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்தி கிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்-பூதத்தாழ்வார் இன்றும் இவ்வாறே சேவை காஞ்சியில்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.

முன்னம் சேய் ஊழியான்
ஊழி பெயர்த்தான்
உலகு ஏத்தும் ஆழியான்
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன்
அத்தி ஊரான்
என் நெஞ்சமேயான் –
என் சென்னியான் -என்று அந்வய க்ரமம்

சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –என்கிறபடியே
ஸ்ருஷ்டே பூர்வ காலத்தில் அழிந்த ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்காகக் கால உபலஷிதமான
ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு நின்றவனாய் இப்படி ஸ்ருஷ்டித்த அளவிலே
தன்னை வழி படாதே இவை அதி பிரவ்ருத்தமானவாறே கால சேஷமாம் படி இவற்றை சம்ஹரித்தவனாய்
(பெரியவாச்சான் பிள்ளை ஸ்ருஷ்ட்டி பரமாக மட்டுமே அருளிச் செய்கிறார்)

ஸ்ருஷ்டமான ஜகத்தை ரஷிக்கைக்காக -லோகத்தில் உள்ளவர்கள் இருந்ததே குடியாக ஏத்தி ஆஸ்ரயிக்கும் படி –

திருப் பாற் கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளினவனாய் -அங்கு நின்றும்
நரசிம்ஹ ரூபியாய் வந்து அவதரித்து -ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய -தன் உக்ரமான வடிவைக் கண்டும் இளகாத படி
கடினமான ஹிருதயத்தைக் கிழித்துப் பொகட்டவனாய் -சிறுக்கன் விரோதி போகப் பெறுகையாலே -நீல மணி போலே இருந்து
குளிர்ந்த வடிவை யுடையனாய் –

அக் காலத்தின் பிற்பாடாரையும் ரஷிக்கைக்காகத் திருவத்தி யூரிலே வந்து நின்று அருளின
நீர்மையில் ஏற்றத்தை யுடையவன் —

(தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் அன்பு பூண்ட ராமானுஜன் அடியார்களான நம் போல்வாரை அருளவே )

இடவகைகள் இகழ்ந்திட்டு என்கிறபடியே
இந்தத் திருப் பாற் கடல் திரு வத்தியூர் ஆகிற இடங்களை உபேக்ஷித்து –
ஸுபரி போகார்த்தமாக பல வடிவு எடுத்தால் போலே என்னை அனுபவிக்கைக்காகப் பல வடிவு எடுத்துக் கொண்டு
நிலை பேரன் என் நெஞ்சத்து -என்னும் படி என்னுடைய ஹிருதயத்திலே பொருந்தி நித்ய வாசம் பண்ணா நின்றான்
தலை மேல் தாளிணைகள் என்னும் படி
என்னுடைய உத்தம அங்கத்திலும் விரும்பி வர்த்தியா நின்றான்
ஒருவன் அபிநிவேசம் இருக்கிறபடியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

(ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம்–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்)

(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந
பஹுஸ்யாம் ப்ரஜாயேயத்
த்ரி பாதூர்த்வ உதைத் புருஷ பாதோஸ் யேஹாபவாத் புந
ததோ விஷ்வங் வயக்ராமத் சாஸநா நஸேந அபி
ந ச ராக்ஷஸ சேஷ்டித
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

தலை மேலே தாளிணைகள் –நிலை பேரான் என் நெஞ்சத்து -திருவாய் -10-6-6-
இவையும் அவையும் -திருவாய் -1-9- சாத்மிக்க சாத்மிக்க போகத்தை அளிப்பவன் கிருஷி பண்ணி பரம புருஷார்த்தம் பெறப் பெற்றானே
இத்தகைய பராத் பரன் மிகத் தாழ்ந்த என் பக்கலிலே காட்டி அருளும் அபிநிவேச அதிசயம் இருந்த படி என் என்று விஸ்மிதர் ஆகிறார் -)

ஆழ்வார் திருவடி என்று அனுசந்திக்கவே நம்முள்ளும் இருப்பதை உணர்வோம் -அவன் வியாப்தி எங்கும் உண்டே –

அத்தை நாம் உணர்ந்து ஆஸ்ரயிக்கவே நமக்கும் பேறு ஸித்தம் என்று

——————————————————————————————————

உபய விபூதி உக்தனானவனை பெரிய மேன்மையை யுடையவன் கிடீர்
என்னை இப்படி விரும்புகிறான் என்கிறார் –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பதவுரை

புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப் பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

(எங்கள் பிரான் ஆகைக்காக அவன் சாதிக்கும் பட்டியல்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்– தேவாதி தேவன் ஆனவன்
முத்தீ மறையாவான் -வேதைக சமைதி காம்யன் ஆனான்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -வ்யூஹ வாஸூ தேவன் ஆனான்
புள்ளை யூர்வான் -கருட வாஹனானான்
அத்தி யூரான் -திவ்ய தேசங்கள் தோறும் சேவை சாதிக்கிறான்
தத் -அவ்வளவு பெரியவன்
த்வம் -இவ்வளவு எளியன்
அஸி -ஆகிறான்
ஸ்ரீ ரெங்க நாதன் மம நாதன்
அரங்கமாளி என்னை ஆளி
ஆஸி)

பெரிய திருவடியை -மேற்கொண்டு -நடத்துமவனாய் -அணிய பட்ட மாணிக்கங்களும்-அழகிய பொறிகளும் சேர்ந்து இருக்கிற
திரு வனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -மோக்ஷ ப்ரதிபாதங்களான வேதாந்த பாகங்களாலே
பிரதி பாதிக்கப் படுமவனாய் -பெரிய கடலில் பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை
ஈஸ்வரனாக அபிமானித்து இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரனான எம்பருமான் இப்படி உபய விபூதி உக்தனாய்
வேதாந்த வேத்யனான தன் பெருமை பாராதே எங்களுக்கு உபகாரம் பண்ணுமவனாய்க் கொண்டு திருவத்தியூரிலே வந்து அருளினான் –

(முத்தீ மறை -கர்ம காண்டம் சர்வ கர்ம ஆராதணீயன் –
வேதாந்தம் -முத்தி மறை -மோக்ஷ பிரதன் வேதாந்த சித்தம் அன்றோ
ஆக இரண்டையும் சொன்னவாறு -இரண்டும் சேர்ந்தே வேதங்கள்)

(கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு )

ஸூரிகளில் தலைவரான திரு வனந்த ஆள்வானைச் சொல்லுகையாலே நித்ய விபூதி யோகம் சொல்லிற்று
சம்சாரிகளில் தலைவனான ருத்ரனைச் சொல்லுகையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று -என்கை

முத்தீ மறையாவான் -என்ற பாடமான போது
த்ரேதாக்னியைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே
ஸமாராத்யத்தயா ப்ரதிபாதிக்கப் படுமவன் என்று பொருளாகக் கடவது –

(ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநாம் ஈஸதே பிஸூ நயன் கில மௌளி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -25-
ஓடும் புள்ளேறி -திருவாய் -1-8-1-
நாகத்தின் மேல் துயில்வான் -அமி தவ்ஜா பர்யங்க தஸ்மிந் ப்ரஹ்ம ஆஸ்தே –கௌஷீதகி
முத்தீ மறை யாவான் -என்று முத்தி மறையாவான் என்றும் –
வேதத்து மறை நீ -பரிபாடல்
கேஸீ விஷஸ்ய பாத்ரேண யத் ருத்ரேண அபிபத் ஸஹ -ருக் மண்டலம் -இவன் உள்ளே இருந்ததாலே நீல கண்டன் ஆலஹால விஷம் உண்ண முடிந்தது பாத்திரம் போல் அன்றோ ருத்ரனும் –
எங்கள் பிரான் அத்தியூரான் -எங்கள் என்று -கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் -2-7-1- -சம்பந்த சம்பந்திகளையும் கூட்டிச் சொல்கிறார்
அனைவரையும் உபகரித்து அருளவே ஸ்ரீ ஹஸ்தகிரியில் நித்ய வாஸம் செய்து அருளுகிறார் என்கிறார் – )

———————————————————————————————–

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திரு குடந்தையில் ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினாய் -என்கிறார் –

(எங்கள் பிரான் ஆவதற்காகவே -நின்ற திருக்கோலம் –
பரத்வமும் சயன திருக்கோலம் -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஸுலப்ய சவுந்தர்யங்களையும் காட்டி
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று உள்ளான்-

அங்கு நின்று எழுதி வாங்கிக் கொண்டு அத்தை திடப்படுத்த இங்கே சயனம் என்றுமாம் )

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

பதவுரை

செம் கண் நெடுமால்–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா-பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதிசேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.

எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே யுடையவனே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அவர்களுக்கு போக்யமான சிவந்த திருக் கண்களை யுடைய சர்வாதிகனான சர்வேஸ்வரனாய்
ஆஸ்திரிதரான எங்களுக்கு ஸ்வாமி யான நீ -எங்களை அங்கீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
திரு மேனி ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களையும்-திரு மூக்கையும் யுடையவனாய் அனுபவ ஜெனித ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு
ஏத்துகைக்கு ஆயிரம் வாயையும் யுடையனுமான திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டு அருளினாய் –

(நீ ஒவ்வொன்றிலும் சேர்த்து வியாக்யானம்
எங்கள் பெருமான்நீ
இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் நீ
திரு மார்பா நீ –
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் நீ
குட மூக்கில் கோயிலாகக் கொண்டாய் நீ

(திருமார்பா-பரத்வ ஸுலப்யங்களுக்கு நிதானம் -புருஷகாரம் நமக்கு உபாய உபேயங்களுக்கு -நித்ய முக்தர்களுக்கு கைங்கர்ய விருத்திக்கே)

(எங்கள் பிரான் ஆவதற்காகவே திருவத்தியூரில் நின்றதோடு நில்லாமல்
சம்சாரத்தை கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்து இருக்க மாட்டேன் என்பவன் போல்
திருக்குடந்தை போன்ற திவ்ய தேசங்களிலும் படுக்கையை விரித்துப் பள்ளி கொண்டும் அருளுகிறார் அன்றோ
திரு மார்பா -வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி -ஸ்ரீ குணரத்ன கோசம் -44-
ஹ்ரீஸ் ஸ தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ )

——————————————————————————————————-

தம்மை விஷயீ கரித்த சர்வேஸ்வரனுடைய அகடி தகடனா சாமர்த்தியம் -குடக் கூத்தாடுகை
முதலான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் –

(அர்ச்சை நிலைகளால் அடிமை கொண்டது கீழ் இரண்டு பாசுரங்களில்
விபவ சேஷ்டிதங்களைக் காட்டி அடிமை கொண்டான் என்கிறார் இதில்)

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸ ஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும் படியான
குழவி ஆய்–சிறு குழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப் பட்ட மிகச் சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட் கொண்டது (என்ன ஆச்சரியம்)

இடையனாய் வந்து பிறந்து அருளி -ஜாதி உசிதமாக ஐஸ்வர்ய செருக்காலே குடம் எடுத்துக் கூத்தாடி –
அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப் பொருந்திக் கொண்டு
என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் –
சிலர் எடுத்துக் கொண்டு சீராட்டி வளர்க்க வேண்டி இருக்கிற முக்த சிஸூவான வடிவை யுடையனாய்க் கொண்டு
தான் வளர்ந்து -அத் தசையிலே திரு வயிற்றுக்கு உள்ளே ஒரு புடையில் அடங்கும் படி அமுது செய்தது சகல லோகங்களையும் –
கொண்ட வடிவின் சிறுமையையும் -உண்ட லோகத்தின் பெருமையையும் -அது தான் திரு வயிற்றிலே
ஒரு புடையில் அடங்கின படியையும் -இது ஒரு ஆச்சர்யம் இருக்கும் படியே என்று விஸ்மிதராய் அனுபவிக்கிறார் –

(ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச ராக்ஷஸ
அஹம் வோ பாந்தவ ஜாத நைதச் சிந்த யமிதோன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
பாலனாய் ஏழு உலகுண்டு பரிவின்றி ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார் -திருவாய் -4-2-1-
அடியார்ந்த வையமுண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும் படி யாதுமில் குழவி -8-7-10-
பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-)

——————————————————————————————-

பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் –

(ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கார்யம் செய்து -இவற்றை பெற்று பின் ஒரு காலமாவது
அநந்ய ப்ரயோஜனர் ஆவார் என்னும் நப்பாசையில் அன்றோ செய்து அருளுகிறார்)

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

பதவுரை

இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–சேஷத்வ ஞானத்தால் -அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும் படியாக,(வாசிகம் -காயிகம் இரண்டாலும் )
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக் கழலை யுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.

ஈஸ்வரோஹம் என்று காளமூதித் திரிகிற துர்மானிகளான ப்ரஹ்மாதி தேவர்கள் தாங்கள் துர்மானத்தையும் –
ஊதின காளத்தையும் பொகட்டு – எங்களுக்கு வகுத்த ஸ்வாமியான ஸர்வேஸ்வரனே –
எங்கள் பக்கல் கிருபை பண்ணி அருள வேணும் -என்று அர்த்தித்துக் கொண்டு
அவன் சேஷியாயும் தங்கள் சேஷ பூதருமான முறையிலே நின்று –
அழகிய புஷ்பங்களை அக்ரமமாகப் பணி மாறிக் கொண்டு ஆஸ்ரயிக்க –

த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தான சிவந்த திருவடிகளை யுடையனாய் -ஐஸ்வர்ய ஸூசகமான
சிவந்த திருக் கண்களை யுடையனான சர்வாதிகனான சர்வேஸ்வரன் –

அந்த தேவர்கள் விஷயத்தை மதகு திறந்து பாய்கிற வியாமோஹத்தை யுடையனாய்க் கொண்டு –
ஸ்ரீ வாமன ரூபியாய் வந்து திரு அவதரித்து அருளி லோகம் அடங்க விழுங்கும் படி
முசிவற வளர்ந்த வடிவை யுடையனாய்க் கொண்டு பூமியை அளந்து கொண்டான் —

முறை நின்று –
பர்யாயமாய் நின்று என்றுமாம் –

(இந்திரன் இடம் மால் -மகாபலி இடமும் மால் நம் அனைவர் இடமும் மால் -எங்கும் மால்

இதனால் தான் அடுத்த பாசுரத்தில் -என் தன் அளவன்றால் யானுடைய வன்பு –அவன் அன்பால் இவர் அன்பு பெருக்கெடுக்குமே –
வ்யாமோஹம் -தப்புக்களைப் பார்க்காமல் ஓத்தே இல்லாத அதிகாரிகள் கொண்ட காதல்)

(அகில ஜகத் ஸ்வாமிந் -அஸ்மத் ஸ்வாமின்
கள்வா எம்மையும் ஏழு உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா–வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் –திருவாய் -2-2-10-
ஈஸ்வரோஹம் –
தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம்
பரமஞ்ச தைவதம் -ஸ்வேதாஸ்வர –
மா வலியை மண் கொண்டான் மால் என்று கொண்டு தாழ விட்டு வாத்சல்யம் காட்டி அருளினான் என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும்
மா வடிவில் மண் கொண்டான் என்று கொண்டு மிகப்பெரிய வடிவைக் கொண்டு உலகு அனைத்தையும் தீண்டினான் என்பர் ஸ்ரீ அப்பிள்ளை
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெரும்மம் எய்து பெற்றியோய் -திருச்சந்த -109-)

———————————————————————————–

(சுருக்குவாரை இன்றி சுருக்கினாயே –
ஓங்கி உலகு அளந்தவன் போல் மிகப் பெரியதான அன்பை
வாமன் போல் சுருக்கி அருள வேணும் என்கிறார்)

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன –
கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

பதவுரை

மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வ ஸ்மாத் பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத் துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத் தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என்தன் அளவு அன்று–என்னளவில் அடங்கி நிற்பதன்று.

ஸ்வரூப ரூப குணங்களால் வந்த பெருமையை உடையனாய் -விபூதி யோகத்தால் வந்த வைபவத்தை யுடையனாய் –
ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகனாய்(கண்ணன் ரக்ஷகன் )-

பரமபத வாசிகளான நித்ய ஸூ ரிகளுக்கு அவ்வருகு பட்ட இருக்குமவனாய் –
அவர்கள் உகக்கும்படி அத்யாச்சர்யமான திருத் துழாய் மாலையாலே அழகு பெற ஒப்பித்துக் கொண்டு இருக்குமவனாய் –

இப்படி இருந்து வைத்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
அஸூரா விஷ்டமாய் நின்ற விளாவின் காயை அஸூரமயமான கன்றாலே விழ விட்டவனே

உன் பக்கல் நான் உடையேனான ப்ரேமம் ஆச்சர்ய பூதனான என்னளவில் அடங்கி நிற்பது ஓன்று அன்று
தர்மி அழியாத படி அத்தை அகஞ்சுரிப் படுத்தித் தந்து அருள வேணும் –

(இது வரை ஆறும் பரத்வ பரமான வியாக்யானம்
இனி ஆறும் ஸுலப்ய பரமான வியாக்யானம்)

அதவா
ஆஸ்ரித வியாமுக்தனாய் -அந்த வியாமுக்தத்துக்கு எல்லை இல்லாதபடி இருக்குமவனாய் –
அந்த வியாமோஹம் ப்ரேரிக்க ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு பவ்யனாய் இருக்குமவனாய்

இந்நிலையில் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பெருமையை யுடையனாய் –
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
விளாவாய் நின்ற அசுரனை கன்றாய் நின்ற அசுரானாலே யறிந்து விழ விட்ட -இரண்டையும் முறித்துப் பொகட்டால் போலே
என் விரோதியைப் போக்கினவனே –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று –
இத்தை அமைத்து அருள வேணும் -என்கிறாராகவுமாம் –

(விபுவான ஆத்மாவின் தர்ம பூத ஞானத்தையும் விஞ்சிற்று)

(பிரார்த்தனை அவ்யக்தம் -பிரார்த்தனா கர்ப்ப பிரபத்தி
தேவரீர் அடியேனுக்கு உபாயமாக இருக்க வேண்டும் -திருமந்திரம் ஓம் நமோ நாராயனுக்காக -மட்டுமே உள்ளது
பிரார்த்தனாய சதுர்த்தி போல் இங்கும்)

(கொள் கொம்பு மூடப் படர்ந்தது போலே என்னுடைய அன்பானது என் ஸ்வரூபத்தையும் விஞ்சி பெருகி
தளர்ச்சியை யுண்டாக்கி உன்னை அனுபவிக்க ஒட்டாமல் தடுக்கிறதே
அவ்வன்பை அடியேன் பொறுக்கும் அளவு சுருக்கி அருள வேண்டும் -என்கிறார் –
அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-10-10-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -1-8-3-
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே கண்ணனே -என்றும் அந்வயம் கொள்ளலாம்
தம்மை விஷயீ கரித்து அருளிய நீர்மைக்கு ஆறு விளிகள்-ஆறும் பரத்வமாகவும் ஸுலப்யமாகவும் கொண்டு வியாக்யானம்
மாலே -நெடியோனே -கண்ணனே -விண்ணோர்க்கு மேலா – வியன் துழாய் கண்ணியனே -மேலால் விளவின் காய் குன்றினால் வீழ்த்தவனே -என்தன் அளவன்றால் யானுடைய வன்பு -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்க்க வேண்டும்-

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
ரக்ஷணத்துக்கு அசாதாரண தனி மாலை சாத்திக்கொண்டு இருப்பானே
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-
சித்தமும் செவ்வை நில்லாது–பத்திமைக்கு அன்பு யுடையனாவதே பணியாய் எந்தாய் -திருக்குறும் தாண்டகம் -10-

ஆக அன்பே தகளியாக -என்று தொடங்கி
மேன் மேலாகப் பெருகி வந்த அன்பை அளவு படுத்தித் தந்து
அனுபவிப்பிக்க அருள வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் தலைக் கட்டி அருளுகிறார் -)

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று
பழங்கிணறு வாருகிறது என் –
இப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்ன வென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

இது நெடுங்காலம் பகல் விரவாத சம்சார காள ராத்திரியிலே கண் கெட்டு முன்னடி தோற்றாதே திரிந்த நான் –
இப்போது -ஸூப்ரபாதா ச மே நிசா –என்னும்படி –
இரவு விரவாத பகலாய்ச் செல்லும் படியான தொரு நல் விடிவைக் கண்டேன் –
பகவத் ஆஜ்ஜைக்கு பயப்பட்டு முப்பத்து வட்டத்தில் போவது வருவதாய்த் திரிகிற ப்ராதேசிகனான ஆதித்யன் அன்றிக்கே –
ஒரு காலத்திலும் போக்கு வரத்து அன்றிக்கே -சாஸ்தா ஜனா நாம் -என்னும் படி
சர்வத்தையும் நியமித்துக் கொண்டு
உபய விபூதி உக்தன் ஆகையால் சார்வத்ரிகனான நாராயணன் ஆகிற ஆதித்யனைக் கண்டேன் –

இந்திரியங்கள் துணை செய்யக் காண்கிற காட்சி அன்றிக்கே -ஸ்வப்ன தீ கம்யம் -என்னும் படி நேர் கோடு நேரே நெஞ்சாலே
காணப்படும் ஸ்வப்ன அவஸ்தையிலும் காட்டிலும் விசதமாய்-ப்ரத்யக்ஷ சாமானகாரமான மானஸ ஞானத்தால்
இந்திரியங்கள் கலக்க ஒண்ணாத படி அழகிதாக மீண்டு அவனைக் கண்டேன் –

வடிவு அழகு விளங்கா நின்றுள்ள திரு வாழி யையும் புகர் விளங்கா நின்றுள்ள சிவந்த திருவடிகளையும் யுடைய சர்வேஸ்வரனுடைய
பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள தேஜஸ்ஸை யுடைத்தான
வடிவு அழகை ப்ரத்யபி ஜ்ஞார்ஹமாம் படி அழகிதாகக் கண்டேன்

வான் திகழும் -என்றது
மேகத்தோடு ஓக்க விளங்கா நின்றுள்ள திரு மேனி என்னவுமாம் –

ஊன் திகழும் என்றது
சர்வேஸ்வரன் திரு மேனியில் விளங்கா நின்றுள்ள திரு வாழி என்னவுமாம் —
சத்ரு சரீரத்தில் விளங்கும் என்னுதல் –

(ஸூ ப்ரபாதா ச மே நிசா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2–
பீஷோ தேதி ஸூர்யா -தைத்ரியம் ஆனந்த வல்லி
அந்தப் ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம் -3-11-
ஸ்வப்ன தீ கம்யம் -மனு -12-122-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திரு மேனி யான் கனவில் -67-கனவில் மீண்டு அவனை மிகக் கண்டேன் -இதில்
அங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடராழி -67-இதில் ஊன் திகழும் நேமி –
ஊன் -என்று அழகு என்றும் திருமேனியைச் சொல்லி அதில் திகழும் ஆழி
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு —
அன்றிக்கே சத்ருக்களின் சரீரங்களில் விளையாடும் சுடர் ஆழி என்றுமாம்
வான் -பரமே வ்யோமன் -மேகம் போல் விளங்கா நிற்கும் நீல மேனி -முகில் வண்ணன் -)

—————————————————————————————-

வெறும் நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே
ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

(அபரிச்சேதய அழகு என்றும் -அவயவ பூதை என்றும் -புருஷகார பலம் என்றும் மூன்று நிர்வாகங்கள்)

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள் நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக் கண்களை யுடையவளும்
மா மலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செவ்விப் படிகோலம்–இயல்பான தக்க சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டு வைத்தும்
ஞாலத்தாள்–பூமிப் பிராட்டியானவள்
அடிக் கோலி–பாரித்துக் கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப் பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றி யிருக்கும் படியான அழகினால் குறை யில்லை யன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

(அடிக் கோலி–இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து_

நாட்டில் அழகு அடங்க லும் கோதாம்படி-அழகு படைத்த அவன் அழகு ஆகிற கோது கலவாத வடித்த அழகையும் –
வடிவிலே வடிவாய் ஒளி பெற்று போக்தாக்கு அளவிட ஒண்ணாத மிக்க யோக்யதையை யுடைத்தான திருக் கண்களையும் யுடையளாய்

(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

ஸ்லாக்யமான தாமரைப் பூவைப் பிறப்பிடமாக யுடையளாகை யாலே -ஸுகந்த்ய ஸுகுமார்யங்களைக் குறைவற உடையளுமான
பெரிய பிராட்டியாரும் -அரும்பினை அலரை-என்கிறபடியே
செவ்விய ஸ்வபாவமான அவன் வடிவு அழகைக் கண்டு
அனுபவித்துக் கண்ணை மாற வைத்தல் கால் வாங்குதல் செய்ய மாட்டாதே –

அவ் வழகு வெள்ளத்திலே ஆழம் கால் பட்டு
இறையும் அகலகில்லேன் -என்னும் படி
கால தத்வம் உள்ளதனையும் -க்ஷண காலமும் விஸ்லேஷிக்க க்ஷமை அன்றிக்கே இரா நின்றாள்-

ஷமையே வடிவான ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் -தலை நீர்ப் பாட்டிலே அனுபவிக்க இட்டுப் பிறந்த பேர் அளவு யுடையளான
அவள் ஆழம் கால் பட்டு அழுந்து கிறபடியைக் கண்டு இருக்கச் செய்தேயும்
அவளும் அவனுமான சேர்த்தியைக் கண் அழிவு அற அனுபவிக்கைக்கு அநு குணமாக –
இலை அகலப் படுத்துப் பாரித்து ஆசையைப் பண்ணிக் கொண்டு செல்லுகிற இது ஏதாய் இருக்கிறதோ

(மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

இதுக்கு அடி -இருவருக்கும் பாத்தம் போராமல் சீறு பாறு என்ன வேண்டும் படி
போக்யதை அளவு பட்டு இருக்கிற ஷூத்ர விஷயங்கள் போல் அன்றிக்கே
திரள் திரளாக இழிந்தாலும் குமிழ் நீர் உண்ணும் படி அழகால் குறை வற்று இருக்கை இறே –

(அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

(வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
யுவா குமார
அரும்பினை அலரை
செவ்விப் படிக் கோலம்
பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர -பால –77-36-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

——————————————————————————————-

பெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே
முன்பு (74-பாசுரத்தில் )செருக்கி வார்த்தை சொன்னவர் –
இப்போது நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி –
நாம் இவ் விஷயத்தையோ கவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று
கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன்  எனைப் பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)

ந இதி ந இதி என்றே வேதம் சொல்லும் அஸ்தி என்பதே அஸ்தமிக்காமல் -இது இல்லை இது இல்லை என்றே வேதம் சொல்லும்
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

அவன் படிகளை உள்ளபடி தறை கண்டு பேச ஒருப்பட்ட வேதங்களானவை -அது என்று சொல்லும் அத்தனை போக்கி
(யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ )இதம் இத்தம் என்று பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பெருமையை யுடைய சர்வேஸ்வரனை

அபரி பூர்ணானமாம் படியாக ப்ரேமம் வழிந்த -செவிக்கு இனிய செஞ்சொல் அன்றிக்கே –
கேட்டார் செவி வெடிக்கும் படி இருக்கிற வெட்டிய சொற்களால் சொன்னேன் –
இப்படிச் சொல்லி விஷய வைபவத்தைப் பார்த்ததும் அனுதபிக்க வேண்டி இருக்க –

அது செய்யாத அளவன்றிக்கே-
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையனானவன் இடத்தில் நின்றும் உண்டாய் வரக் கடவதான பிரசாதமானது
பண்டு கவி பாடினவர்களுக்கு அவன் கொடுத்துப் போரும் படியை நினைத்து –
நான் பாடின கவிக்கு பரிசிலாக ஏதேனும் சிறிதாகிலும் தாராதோ -என்று
அநேக நாள் எல்லாம் பிரதியுபகாரமாக நிரீக்ஷித்துக் கொண்டே இருந்தேன் –

1-விஷய கௌரவத்தையும்-2- சொல்லின் பொல்லாங்கையும் -3-பச்சையை நச்ச இருந்த படியையும் நினைத்து
என்ன மூர்க்கனோ -என்று அனுதாபிக்கிறார் –

பின்னை இவர் ஒரு பிரயோஜனத்துக்குக் கவி பாடினவரோ -என்னில் –
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக் கடாஷிக்குமாகில் –
அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு என்று இருப்பார் ஒருத்தர் இறே -அத்தாலே குறை இல்லை –

சென்ற வரம் –
அவன் பக்கல் சென்று பிறக்கக் கடவ வார்த்தை (அருள் கீழ் இங்கு சிறப்பான சொல் மா ஸூச வார்த்தை )- அவன் இறை யேனும் ஈயும் கொல்-என்று இருந்தேன் -என்றுமாம் –
மறை யாங்கு என உரைத்த மாலை—வாக் விக்ருதாஸ ச வேதா -என்கிறபடியே
சொல்லுகிற வார்த்தை எல்லாம் மறை என்னும் படி சொல்லுமவன் என்னவுமாம்

இத்தால்
அகச் செறிவில் பொல்லாங்கு அறியான் ஒருவனைச் சொல்லப் பெற்றதோ –
சர்வஜ்ஞனை இறே நான் மருட்டிச் சொல்லிற்று என்கை –

(பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்–திருவாய் -1-5-11-
இன் கவி பாடும் பரம கவிகள் –7-9-6-
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர் -பெரிய திருமொழி -2-10-4-
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தத் விஷ்ணோ பரமம் பதம் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –
வாக் விவ்ருதாஸ் ச வேதா –
பாடவும் செய்து-இளைய என் புன் கவிதைக்கு – பிரதியுதவியையும் எதிர்பார்த்து – பரிசும் வேண்டி இருந்தேனே -மூர்க்கனேன் மூர்க்கனேனே –
ப்ரயோஜனாந்தரங்களை எதிர்பார்த்தார் அல்ல -அனுதபிக்கவும் குறையில்லை –
மாயோன் கண் சென்ற வரம் -மாயோனான அவன் இடத்திலே பொருந்தி இருக்கும் சிறந்த அருள் என்றும்
வரம் -வார்த்தை என்றும் -சிறந்த வார்த்தைச் சிறிதேனும் நமக்கு அருள்வானோ என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்றுமாம் -)

——————————————————————————–

விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய
ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேஸ்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை

மூர்க்கத்தவனை-மூகத்தவனை -அஹங்காரம் -பிடிவாதம் கொண்டவனை
நரம் கலந்த சிங்கம் ஆய் கீண்ட–நரசிங்க வுருக் கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம் மா நிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

தேவர்கள் பக்கல் பெற்ற வரத்தைத் தனக்கு உறுதியாக நினைத்து –
அந்த தேவர்களுக்கும் அடியான பெருமையுடையனான தன்னை
ந நமேயம் என்னும் படி வணங்காதே போந்தவனாய் –
அந்த தேவர்கள் வரத்தால் வந்த மிடுக்கையும் -தன் தோளாலே எறிந்து கொண்ட
மிடுக்கையும் தனக்கு உபகரணமாக உண்டு என்று கருதி –
அத்தால் வந்த மேனாணிப்பை யுடையனான ஹிரண்யனை –

சேராச் சேர்த்தியான நரத்வ ஸிமஹத்வங்களோடே கூடின வடிவை யுடையனாய்க் கொண்டு கிழித்துப் பொகட்டவனாய் –
பரஸ்பர விருத்தமான இரண்டு வடிவை எடுத்துக் கொண்ட அளவில் பொல்லாதாய் இருக்கை அன்றிக்கே –
சேர் பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போலே அத்யந்த ரசாவஹமான அழகை யுடையவனுடைய
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளே -அழகிய இடமுடைத்தான மஹா பிருத்வியிலே
அநந்ய பிரயோஜனர்க்கு புஜிக்கலாம் படி நிரதிசய போக்யமான அம்ருதம் –

மூர்க்கத்தவனை என்ற பாடமான போது –
மூர்க்கனான ஹிரண்யனை -என்றபடி –

(த்விதா பஜ்யேயம் அப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-
ம்ருகோ ந பீம -ருக் -1-21-154-
நார ஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான்முகன் -22-
குறையாக வெஞ்சொற்கள் சொன்னேனே என்று கை வங்காத் தொடங்கின என்னை கவி பாட வைத்ததே இந்த ஆரா அமுதனுடைய அழகே என்கிறார் – )

——————————————————————————————-

அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் –

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன் மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திரு வாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்-அமுதினில் வரும் பெண்ணமுது கொண்டான் என்றுமாம்
சொல்லப் பட்ட–சொல்லப் பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப் பாசுரங்களினால்
ஏத்தி  நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

ஏத்தி நவின்று என்பதை அமுது தேன் ஆழியான் -அமுது கொண்டு உகந்தான் என்றும் ஒவ்வொன்றிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

நித்ய போக்யமான அம்ருதம் என்றும் –
சர்வ ரஸ சமவாயமான தேன் என்றும் –
நிரதிசய போக்யமான திரு வாழியை யுடையவன் என்றும் –
அஸூர பய வீதராய் தேவர்கள் சரணம் புக்க வன்று -கடலில் சாரமான அம்ருதத்தை
அந்தக் கடலைக் கடைந்து வாங்கிக் கொண்டு கொடுத்து
இதுக்காக வாகிலும் நம்மை வந்து அர்த்திக்கப் பெற்றோமே என்றும் ப்ரீதனானான் என்றும் –
ரஸோ வை ச -என்றும் -சர்வ ரஸ -என்றும்
மத்வ உத்ஸ -என்றும் -த்ருத சங்க சக்ர -என்றும் -சொல்லும் ஸ்ருதி சாஸ்த்ரங்களாலே சொல்லப் பட்ட விலஷணனான சர்வேஸ்வரனை

ஆதாரதிசயம் தோற்றப் புகழ்ந்து சொல்லி -எல்லா போக்யத்தையும் -தன் போக்யத்தையிலே பொதிந்து இருக்கையாலே
அமுது என்று சொல்லப்படுகிற அவனையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய்
இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர் மமனாய் விழுந்தேன் –

(அமுது அவனைச் சொல்லி –
அமுது கொண்டு உகந்தான் என்று அவளை சொல்லி
அமுது அன்ன சொன்மாலை மிதுனம் பற்றிய இவர் பிரபந்தம் –
இப்படி மூன்று அமுதன்கள் இதில் உண்டே)

(ஸர்வ ரஸ
ப்ரயோஜனாந்தர பரர்களும் தம்மை இதற்க்காகவாவது ஆஸ்ரயிக்கிறார்களே என்று உகக்குமவன் அன்றோ
உதாரா ஸர்வ ஏவைதே -ஸ்ரீ கீதை -7-18-
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -பெரிய திருமொழி -6-1-2-
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் -என்றவாறே
இப்பொழுது-ரஸோ வை ஸ-என்றும் ஸர்வ ரஸ என்றும் -சொல்லப்படும் அவ்விஷயத்தின் இனிமையை அனுசந்தித்த உடன்
அமுதன்ன சொன் மாலை என்கிறார்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-ருக் -1-21-124-
த்ருத சங்கு சக்ர
சங்க சக்ர கதா தர
யஸ்மின் அக்ருத்ரிம கிராம் கதிரேக ஏக கண்டா -பிரமம் பிரமாதம் விப்ரலிப்ஸை போன்ற தோஷங்கள் அற்ற ப்ரமாணங்களால்
ஸாஸ்த்ரங்களால் ஒரு மிடறாகக் கோஷிக்கப் படும் திருமால் அன்றோ – )

——————————————————————————————

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ –
சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–சாதன புத்தியால் (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்-சொல் ஏறு உழவர்கள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேஸ்வரனிடத்தில் நெருங்கி யாஸ்ரயித்து
அதனால் பெற்ற பயன் என் கொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜநம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வ ப்ரயத்நத்தால் என்ன பேறு பெற முடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநாநுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காண முடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்ற நிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப் பெற்றேன்?
(அவனே காட்டிக் கொடுக்கக் கண்டேனே யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை

அவனே தவம் செய்து என்னை அடைய இருக்க நான் செய்ய வேண்டுமோ )

அவன் திரு நாமங்களை ஆதாரம் தோற்றப் பல காலும் சொல்லிக் கொண்டு –
சப்தார்த்த சம்பந்தம் அறிந்து கவி பாட வல்ல பிரயோஜனாந்தர பரரான கவிகள் –
செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு அந்த சர்வேஸ்வரன் இடத்தில் நெருங்கி ஆஸ்ரயிக்க
அத்தால் பெற்ற பிரயோஜனம் ஏதோ –

இப்படி நெருங்கி சாதன அனுஷ்டானம் பண்ணினாருடைய சரீரத்தை ஒறுத்துப் பண்ணின
தபஸ்ஸாலே காண அரியனாய் -மேகம் போலேயும் -நீல மணி போலேயும்
ஸ்ரமஹரமான வடிவை யுடையனுமான சர்வேஸ்வரனை
அதி ஸூத்ரனான நான் இன்று எந்தத் தபஸ்ஸாலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே என்று கருத்து –

தே நைவ பல ப்ராப்ய பலம் அபி தேநைவ நாராயண -ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே -மாதா பிதா சரணம் ஸூஹ்ருத கதி நாராயணனே

(நா வலர் -நா வன்மை யுடையவர் என்றும்
நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்
மெய்த்தவம் -மெய் சரீரம் -சரீரத்தை வருத்திச் செய்யும் சாதன அனுஷ்டானம் –
யான் இன்று ஏத்தவத்தால் காண்பன் கொல்-தானே தன்னைக் காட்டி அருளினான் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்க்கு இனி மாறுண்டே -4-5-9-என்பது போலே
அவனைக் கொண்டே அவனைக் கண்ட தனது ஒப்பற்ற பெருமையை உணர்த்துகிறார் இதில் -)

—————————————————————————————

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் –
நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட
அவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து-பூவும் பிரகிருதி பதார்த்தம் தானே
திருக் கோட்டி எந்தை திறம்–திருக் கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை-ஸ்வரூப ரூப குண விபவங்களை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–அனுபவத்துக்குப் போக்கு வீடாக  கை தொழவும் பெற்றேன், (ஆன பின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந் நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்றா அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத் தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்ப வாஸமே தொடங்கி அறிவேன்)

கீழ் பாசுரத்தில் அவனே காட்டக் கண்டதுக்கு இதுவே திருஷ்டாந்தம்

ஒரு சாதனத்தை அறிந்து அனுஷ்டிக்கைக்கு யோக்கியதையும் கூட இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்துக்கு உள்ளே கிடந்து
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே சந்நிஹிதனாய் –
கர்ப்ப ஸ்தானான என்னுடைய தய நீய தசையைக் கண்டு
நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த என் ஸ்வாமி யுடைய குண சேஷ்டிதாதிகள் ஆகிற பிரகாரத்தைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்

அனுபவத்துக்கு போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அந்வயிக்கப் பெற்றேன்
ஆன பின்பு பரப்பை யுடைத்தான பூமியை ஒருவர் இரக்க அன்றிக்கே -அங்கே தானே சென்று
அளந்து கொண்ட திருவடியை இன்றாக அறிகிறேன் அல்லேன்-

ஸுலப்ய காஷ்டை -உலகளந்த காலத்துக்குப் பின்னானாரும் வணங்கும் ஜோதி அன்றோ

கை தொழுவதற்காகப் பெற்ற பலன் இல்லையே -அதுவும் இவனே செய்வித்தான் அன்றோ

(கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகேழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டானை நீயுமே –திருவாய் -1-10-5-
அறியாக் காலத்துள்ளே -2-3-8-
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
இவர் அயோனிஜர் என்று ப்ரஸித்தம் இறே -குருக்கத்தி மலரே இவருக்கு கர்ப்ப ஸ்தானம் –
அயோநிஜரான முதல் ஆழ்வாரும்
அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை -6- பாசுரத்தை அடி ஒற்றியே இப்பாசுரமும் –
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ச வை மோஷார்த்த சிந்தக -சாந்தி பர்வம் -358-73-
பரமபத நாதனோ என்னைக் கடாக்ஷித்தது
நீர்மைக்கு எல்லை நீளமான திருக்கோட்டியூரான் அன்றோ எனக்கு ஜாயமான கடாக்ஷத்தை அருளினான்
அதனாலேயே இன்று அளவும் அவனை மறவாமல் இருக்கும் படியும் அருளினான் -)

——————————————————————————————–

அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை —
வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் -(ஞானீ ஆத்மைவ மே மதம் பிரிய தமனை அவனே வரிப்பானே )

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கு மெம்பெருமானுடைய-ஸ்வாமி ஆகிற
திறம்பா வழி–அவ்யஹித உபாயமான -பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக் கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திருத் தேர்த் தட்டிலே அர்ஜுனன் ஒருவனுக்கும் -ஒரு கால் மாமேகம் -என்று சொன்ன தம்முடைய நிரபேஷ உபாயத்தை
சர்வ காலத்திலும் சர்வர்க்கும் கிரயம் செலுத்திக் கொண்டு
அழகிய கோயிலிலே அர்ச்சாவதார ஸூ லபனாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளுகிற
என் ஸ்வாமி யான பெரிய பெருமாளுடைய

(கொண்டல் வண்ணன் கோவலனாய் -இத்யாதி அவனே இங்கு பின்னானார் வணங்கும் ஜோதி அன்றோ இவன்
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்குமவன் அன்றோ)

மற்று ஒன்றால் -சலிப்பிக்க ஒண்ணாத நிரபேஷ உபாய பாவம் ஆகிற மஹா மார்க்கத்தைப் பற்றி நடக்கும் அவர்களுக்கு ஒழிய
அனுபவத்தாலும் தொலைக்க ஒண்ணாத படியான அவிஸால்யமாய் -அடித் தலை கண்டு அறுக்க ஒண்ணாத படி
தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரம் ஆகிற நரகத்தைத் தாங்கள் சாதன அனுஷ்டானத்தாலே போக்கித் தாங்கள் சென்று
கிட்டுவதுக்கு முன்னே நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற ஸ்தலமாய்-ஸ்வ யத்னம் சாத்தியம் அல்லாத
அரணை யுடைத்தான கலங்காப் பெரு நகரின் வாசலில் கதவு தப்பிற்று -இப்போது இத்தை நிரூபித்து அறிந்தேன்

(நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்)

கடி என்று பரிமளமாய்-போக்யதை விஞ்சின நகரம் என்றுமாம் –
இத்தால்
பகவத் ப்ரீதி சாத்தியம் பரம பதம் -ஸ்வ யத்ன சாதனம் அன்று என்ற படி –

(மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்
சரணம் நாராயணம்
நாராயணன் பாராயணம்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணவ் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-
அயோத்யா -அபராஜிதா -வானோர் நகர் -மரீசீநாம் பதம் -நித்ய ஸூரிகள் இட்ட வழக்காய் அன்றோ வைத்து அருளுகிறான்
அவனையே உபாயமாகக் கொண்டு அவனை அடைந்து அனுபவிக்கலாம் என்கிறார் ஆயிற்று – )

—————————————————————————————————-

நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மைப் பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன -விரோதியைப் போக்கியும்
விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் –

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-கதஞ்சிறந்து -பாட பேதம்

பதவுரை

முன்–முற் காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு-பதவி -நீர்மை என்றும் -வழி என்றும்
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

மிக்க சீற்றத்தை யுடையனான கம்சனைச் சீறி அவன் ஸந்நிதியில் தன் கொலை தானே காணும்படி முடித்து
தப்பிப் பிழைக்க இடம் அறும் படி அடர்த்து யுத்த உன்முகமான குவலயா பீடத்தை அநாயாசேன முறித்து விழ விட்டு

இப்படி மிடுக்குக் கொண்டு வியாபாரிக்க ஒண்ணாத படி உதாரம் என்பதொரு குண லேசம் (குண லேசம் என்றது இது இவன் சொத்து அல்லவே )கிடக்கையாலே நீர்மையை
யுடைமையாய்க் கொண்டு கொடுத்து வளர்ந்த கையாலே உதக ஜலத்தை ஏற்று வாங்கி முன்பு ஒரு காலத்தில் கொடுக்கையில்
தீஷித்து இருந்த மஹா பலியை இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்மச்சாரியாய்க் கொண்டு பூமியை அவன் பக்கலில்
நின்றும் வாங்கிக் கொண்டிலையோ –

உன்னை ஆஸ்ரயித்த வாஸூதேவர் -தேவகியார் -இந்திரன் இவர்களுக்கு விரோதியைப் போக்கிக்
கார்யம் செய்து கொடுத்திலையோ -என்றபாடு –

கதவுகை -சீறுகை
அதவுகை – நெருக்குகை –

கதவிக் கதஞ்சிறந்து -என்ற பாடமான போது –
கோபத்தால் சிறந்து அழகியனாய் -என்ற பொருளாகக் கடவது

பதவி என்றது –
பதவி என்று வழியாய்
கம்சனைக் கொன்றால் போலே மூலை அடியே யன்றிக்கே வழி கொடு வழி என்னவுமாம் –

(சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை -9-4-11-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் –4-3-1-
பாணியால் நீர் ஏற்று
அலம் புரிந்த நெடும் தடக்கை -அலம் அலம் போதும் போதும் என்னும்படி கொடுத்து நீண்ட திருக்கையால் நீர் ஏற்று
கிருஷ்ணா ஜினேந ஸம் வ்ருண்வன் வதூம் வக்ஷஸ் ஸ்தலா லயாம்
ஆஸ்ரிதர்களுடைய தடைகளைப் போக்கி நீ செய்து அருளிய கார்யங்கள் லோக ப்ரஸித்தம் அன்றோ
உன்னாலும் மறைக்கப் போகாதே என்கிறார் – )

———————————————————————————————–

நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் -உமக்குப்பெற வேண்டுவது
சொல்லீர் என்ன -உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார்

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியின் இடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேஸ்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்ட வழக்காக நிர்வஹிக்க மாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதி தேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

(திருமால் -மிதுனம் இல்லாமல் இழக்கிறேனோ
செம் கண் வாத்சல்யாதிகள் இல்லாமல் இழக்கிறேனோ
நெடியானை -புருஷோத்தமத்வம் இல்லாமல் இழக்கிறேனோ
எங்கள் பெருமானை -ஸ்வாமி இழக்கிறேனோ
நண்ணி -கிட்டாமல் இழக்கிறேனோ
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயிக்காமல் இழக்கிறேனோ

அவனைப் பெற்றால் பொன்னுலகம் ஆளீரோ புவனா எல்லாம் ஆளீரோ என்று கொடுக்க வல்லவன் ஆவேனே )

ஸ்ரீ யபதியாய் -வாத்சல்ய அம்ருத வர்ஷியான சிவந்த திருக் கண்களையும் யுடையனாய் –
ருணம் ப்ரவ்ருத்தம் -என்னும் படி
ஆஸ்ரித விஷயத்தில் -எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று உருகி நெஞ்சு பதண் பதண் என்று
இருக்குமவனாய் எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டி –

அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
பூமி யுப லஷிதையான லீலா விபூதியை நான் இட்ட வழக்காக நிர்வஹியேனோ –

நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான பெருமையை உடையனாய்க் கொண்டு பரம பதத்தில்
கால தத்வம் உள்ளதனையும் ஸூ கோத்தரனாய் பொருந்தி இரேனோ-

உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

(தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –தஸ்ய உதிதி நாம
கோவிந்த்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஸ்தோத்ர ரத்னம் -28-

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

அர்த்த தஸ் ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யா தயோ குணா
ஹத ஸத்ரும் விஜயினம் ராமம் பஸ்யாமி ஸூஸ் திதம் –யுத்த -116-24-

அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே -1-2-7-
அவனுடைய சம்பத்து என்னும் அனுசந்தானத்தால் லீலா விபூதியும் உத்தேஸ்யமாகுமே -)

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -71-80- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் –

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற-காலுதல் உமிழ்தல்
தீ வாய்–பயங்கரமான வாயை யுடைய
அரவு–திருவனந்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேஸ்வரன்
வலம் புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக் கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழி யானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத் தூக்கி யருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

பரிவின் கனத்தாலே ப்ரிதி கூலர் மேலே விஷத்தை உமிழா நின்றுள்ள பயங்கரமான வாயை யுடைய திரு வனந்த ஆழ்வான்
மேலே சாய்ந்து அருளக் கடவ ஸுகுமார்யத்தில் பிரதானனானவன் –

காடுமோடையுமான திக்குகளோடு கூடின பூமியை அளக்கைக்காகப் புஷப ஹாஸ ஸூ குமாரமான திருவடிகளை
வளர்த்து அருளின காலத்தில்

இடது திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதை போது பிறந்த
விஜயத்தை அனுசந்தித்த ஹர்ஷத்திலே பிரதி கூலர் மண்ணுண்ணவும்-
அனுகூலர் கொந்தளிக்கவும் ஒருபடிப் பட்டு நின்று முழங்க –

திரு வாழி யானது அங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் அற்று நெருப்பை உமிழா நின்று கொண்டு
சத்ருக்களான நமுசி பிரபிருதிகளை வாய் வாய் என்று முடங்கப் பண்ணிற்று –

(ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோளை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே –7-4-1)

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–ஸ்ரீ பெருமாள் திருமொழி -1-1-)

(பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்–தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ -நாச்சியார் -9-9- என்ற ஒலியைக் கேட்டு
ஜிதம் பகவதா ஜகத் -என்று மகிழ்ந்து பறை சாற்றி
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -1-19- என்றால் போல்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் -பெரியாழ்வார் -1-8-8-என்ற நமுசி பிரக்ருதிகள்
அழியும்படி நிலை நின்று பாஞ்சஜன்யம் முழங்கிற்றே
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை -அஸ்தான பயஸங்கை பண்ணும் திரு அனந்தாழ்வான்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற -பெரியாழ்வார் -5-1-7-என்கிறபடி
புஷ்ப்ப ஹாஸ -சஹஸ்ர நாமம் -922-ஸூ குமாரமான அவனுக்கு என் வருகிறதோ என்று நித்ய ஸூரிகள் படும் பாடு அன்றோ
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே-ருக் அஷ்டகம் -1-2-7-
அடி நிமிர்த்த போது இடங்கை வலம் புரி நின்று ஆர்ப்ப
ஆழி எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது -என்று அந்வயம் -)

————————————————————————————

அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து –
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

(அறிந்து-மாநஸம் –புக்கு-காயிகம் -ஏத்தும்-வாசிகம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -பூக்களை சமர்ப்பித்து ஆஸ்ரயிக்கும்)

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–உலகுக்கு ஆபரணம் போன்ற  அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த-அவ்விடத்தே என்றுமாம்
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

குரங்குகளானவை -ரிஷிகள் ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே உணருமா போலே காலம் அறிந்து உணர்ந்து போய்ப்
பரப்பு மாறாப் பூத்த சுனைகளிலே -ரிஷிகள் அகமர்ஷணம் பண்ணுமா போலே சென்று புக்கு

(தலை முழுகி ஸ்நானம் கால் தரையில் இருக்க வேண்டும்)

அவ்விடத்தில் கழிய அலருதல் கடு மொட்டாதல் அன்றிக்கே –
அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு ஜாதி உசிதமாக ஏதேனும் ஒன்றைச் சொல்லி
ஸ்துதிக்குக் கொண்டு ஆஸ்ரயியா நிற்கும் –

மனஸ்ஸே நீயும் பிற்காலியாதே போது -போந்த அநந்தரம்
திரு வேங்கடமுடையானுடைய சீலாதி குணங்களுக்கு வாசகமான-திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு –
நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனான திரு வேங்கடமுடையானுடைய பூப் போலே
அது ஸூ குமாரமான திருவடிகளுக்கே சென்று கிட்டும் படி
செவ்விப் பூக்களை அழகு பெறச் சாத்தி ஆஸ்ரயிக்கப் பார்–(மணி வேங்கடம் மோனைக்குச் சேரும் )

அன்றிக்கே
சம்சாரத்துக்கு ஆபரணமான திருவேங்கடமுடையான் என்றாய் -(அணி வேங்கடம்)
வேங்கடவன் மலர் அடிக்கே செல்லப் போதும் அணி என்றுமாம் -(போதும் அணி புஷ்ப்பம் சமர்ப்பிப்பாய் )

(ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம்
ஹரிர் ஹரிர் ஹரிர் இதி வ்யாஹரேத் வைஷ்ணவா புமான்
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து –
திவ்ய தேச ப்ரபாவத்தாலே இங்கு திர்யக்குகளும் காலத்தை அறிந்து பகவத் கைங்கர்யம் செய்கின்றன –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று –நான்முகன் -46-

அறிந்து என்று இவற்றின் மநோ வ்ருத்தியைச் சொல்லி மேலே காயிக வாசிக கைங்கர்யங்களைச் சொல்லுகிறார் –
ஏத்தும் பக்திக்குப் போக்கு வீடாக தனது ஜாதிக்கு உரிய ஏதேனும் ஒரு சப்தத்தை எழுப்பி ஸ்துதிக்கும்
மந்தி பாய் வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றபடி
நித்யர்களின் ஸாம கானத்தையும்
குரங்குகளின் கூக்குரலையும்
அவற்றில் உள்ள அன்பு அபிநிவேசம் ஒன்றையே பார்த்து வாசியற ஏற்றுக் கொள்பவன் அன்றோ –
மணி வேங்கடவன் என்றுமாம் -நீல மணி போல் கண்டார் களைப்பை ஆற்றும் திருவேங்கட முடையான் அன்றோ -_

————————————————————————————————

சர்வ ஸமாஸ்ரயணீயன் (தேவர்கள் அரசர்கள் திர்யக்குகள் மூன்று பாசுரங்களில் )ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம்
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –

(துணிந்த யான்-ஒழி வில் காலம் -வழுவிலா அடிமை செய்யப் பிரார்த்தனை இதில்)

(துணிந்த-மாநஸம் –தூவி-காயிகம் -உரைப்பன்-வாசிகம்)

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திரகலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின-குவலயா பீடத்தை முடித்த என்றுமாம்
பெம்மான்–ஸர்வேஸ்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதிகொண்ட யான்
ஆதி நடு அந்திவாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
ஆய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

பிறையோடு ஒத்து இருந்துள்ள கொம்புகளையும்-அழகிய கண்களையும் யுடைத்தான -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை –
தறையில் ஒரு பூ விழாத படி முதலை வாயிலே நின்றும் மெள்ள விடுவித்து அருளின
சர்வேஸ்வரனான என் நாயகனானுக்கு(பாகவதரின் அவயவங்களும் உத்தேச்யம் )

அடிமை செய்கையிலே அத்யவசித்த நான் முதலும் -நடுவும் -அந்தியுமான -சர்வ காலங்களிலும் ஏதேனுமாகக் கிட்டின பூக்களை
அடைவு கெடப் பணிமாறி இன்ன திரு நாமம் என்ற ஒரு நியதி அற குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமத்தையும் அனுசந்தித்துக் கொண்டு சொல்லி நிற்பன் –

(அத்யவசித்த-மாநஸம் –பணிமாறி-காயிகம் -அனுசந்தித்து-வாசிகம்0

அன்றிக்கே
சேர்ந்த பிறை போலே இருந்துள்ள கொம்புகளையும்-சிவந்த கண்களையும் யுடைத்தான குவலயா பீடத்தை
நிரசித்த படியாகவுமாம் –
அப்போது நம் விரோதியை நிரசித்த படிக்கு த்ருஷ்டாந்தம்

மற்றப் போது மற்றுள்ள ஆஸ்ரித விஷயத்தில் வத்சலனாய் –
அவர்கள் ஆபத்தை நீக்கும் படிக்கு த்ருஷ்டாந்தம் –

(ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -போல் நித்ய கைங்கர்ய பிரார்த்தனை இதில்
பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் -ஆயிரம் பேர் என்றது மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம் –
கழிவதோர் காதல் உற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் -97-
வைகல் இரவும் பகலும் என்றும் எல்லாக் காலத்தையும் –
ஆதி நாடி அந்தி -எல்லாக் காலத்தையும் என்றும் -எல்லா நிலைகளையும் என்றுமாம்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணாயேதி மந்த்ர ஏக சரணா வயம்

ஸாங்கேதயம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா
வைகுண்ட நாம க்ரஹண சேஷாக ஹரம் விது
திரு நாமம் சொல்ல கால தேச அவஸ்தை பிரகார அதிகாரி நியமம் இல்லையே -விஷய நியமமே உள்ளது
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந சாஸ்திரம் நைவ ச க்ரம
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவெது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –1-6-2- என்றபடி துணிவும் கைங்கர்யமே யாகும் –
கைங்கர்ய விரோதிகளை அழித்து அருளி என்னை எழுதிக் கொண்டவன் -என்கிறார்)

————————————————————————————————-

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு
சத்ருசமாகக் கவி படும்படியான ஸூ ஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் -(ஸூஹ்ருத தேவதை நம்பெருமாளே தானே )

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல் மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல் மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

(ப்ராப்த விஷயம் -இல்லை எனக்கு எதிர் இல்லை -அஹங்காரம் இதில் உத்தேச்யமே-கேட்டு ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல்லே )

இவ்வாத்மாவை ஸ்வரூப அனுரூபமாகத் திருவடிகளிலே அடிமை கொள்ளுகைக்கு உரிய என்னுடைய நிருபாதிக சேஷி யானவனே –
சகல ஜென்மங்களிலும் -அது தன்னில் -எல்லா அவஸ்தைகளிலும் உன் திருவடிகளிலே வாசிக கைங்கர்யம் பண்ணுகை யாகிற
இப் பேற்றுக்கு அடியான தபஸ்ஸைப் பண்ணினேன் நானே –

பண்ணின அந்த தபஸ்ஸாலே பலிக்கும் பலத்தைப் பெற்றுடையேனும் நானே —
அந்த தபஸ் பலமாக வந்த லக்ஷண லஷ்யங்களில் குறைவற்று இருக்கும் பெருமையை யுடையதாய் –
சர்வாதிகாரமாய் –
அத்யந்த விலக்ஷணமான திராவிட சந்தர்ப்பங்களை
சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன் நானே –

திராவிட சாஸ்திரத்தில் என் தன்னை அவகாஹித்தார் இல்லை என்னும் படி அதில் தேசிகனாய் இருப்பான் ஒருத்தன் –
அவ்வளவு இன்றிக்கே –
ஏதத் சாம காயன் ஆஸ்தே-என்று
பாங்கான நிலத்திலே இருந்து பாடி யாடி அடிமை செய்யக் கடவ நித்ய முக்தரைப் போலே அன்றிக்கே
இங்கே இருந்து கவி பாடப் பெறுகையாலே அவர்களிலும் மிகவும் நல்லனாய் இருப்பான் ஒருவன் –

(வீற்று இருந்து ஏழு உலகம் -திருவாய் -4-5- இப் பாசுர விவரணமாய் இருக்கும்
இங்கு தவமாவது
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –
விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் -4-5-7- என்று பகவத் கிருபையையே அருளிச் செய்கிறார் என்றுமாம்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய -செஞ்சொல்லே– 10-6-11-
விதி ப்ரயுக்தாம் பூஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம்
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு -4-5-1-
ஏதத் ஸாம காயன் ஆஸ்தே -என்று அங்குள்ளாரைப் போல் அன்றிக்கே
இங்கேயே இவ்வுடம்புடனே இப்பொழுதே
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –
பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த அபிமானம் உத்தேச்யமே )

(மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – ஸ்ரீ ராமாநுசன் நூற்றந்தாதி -10-)

———————————————————————————————–

பெரும் நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம்
ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் –

(ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு த்வய மஹா மந்த்ரம் -அருகில் உள்ள திருமந்திரம் சரம ஸ்லோகார்த்தங்கள் கலந்து
அருளிச் செய்ததாக ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்வார்-ஸாரமானவற்றை நமக்கு-நாம் அநாதரித்து இருந்தாலும் -காரேய் கருணையால் அருளியவர் அன்றோ )

(கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி –1-2-5-இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்)

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானை யானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப் பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலை யன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தானமான) பர்வதம்.

திருமலையிலே திரு அருவிகள் பெருக்கு எடுக்குமா போல மேன்மேல் எனப் பெருகா நின்றுள்ள மதத்தை யுடைத்தான ஆனையானது
எல்லா அளவிலும் தன்னை ஏவிக் கார்யம் கொள்ள வல்ல ஸ்லாக்யமான பிடிக்கு –
நான் இங்குத்தைக்குச் செய்யக் கடவ பணிவிடைகளைக் கற்பிக்க லாகாதோ -என்று
விநயம் தோற்ற முன்னே வந்து நின்று

இரண்டு கண்ணேறி அதுக்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இளையதாய் இருக்கிற மூங்கில் குருத்தைச்
செவ்வி குன்றாத படி -சாவதானமாக வாங்கி அருகில் மலை முழைஞ்சுகளில் கூட்டிலே
நிறைந்து இருக்கிற தேனில் மூங்கில் குறுத்தும் தேனும் தன்னிலே ஒன்றி ஒரு நீராம்படி தோய்த்து
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்று அது அநாதரித்து நிற்க –

இத்தனையும் அங்கீ கரிக்க வேணும் என்று சாதாரமாகக் கொடுக்கும் சிறப்பை யுடைத்தான திருவேங்கடம் -கிடீர் –
மேகத்தோடு சத்ருசமாகச் சேர்ந்த வடிவை யுடையவன் வர்த்திக்கிற மலை –

(இப்பாசுரத்தின் சிறப்பை நோக்கி நாலு கவிப்பெருமாள்
வரை செய் மாக்களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்துப் பிரசவாரி தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2-5- என்று விரித்து அருள் செய்கிறார் –
யானையே திருமலை தொடரிலே ஒரு கரு மலை போலே உள்ளது –
இளவெதிர் -இளையதான மூங்கில் -முளைத்த போதே அண்ட புத்தியில் சென்று தட்டும் படி -வளர்ந்து இருக்குமாயிற்று –
சர்க்கோ பசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதி மாப வர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வன் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் -ஸ்ரீ ஸ்தவம்
அவளுக்கு அவன் வசப்பட்டே அனைத்தும் செய்வது போல் -யானையும் பிடியின் நியமனம் எதிர்பார்த்தே இருக்கும்
நீட்டும் -பிரணய ரோஷத்தால்
அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உளர் கழகம் ஏறேல் நம்பீ -6-2-6-என்பது போல் அநாதரித்து நிற்க
புரிந்து மத வேழம் மாப்பிடியோடு ஊடித் திரிந்து சினத்தால் பொருது –
விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே -மூன்றாம் திரு -45என்று
ஊடல் முற்றிய நிலையை அருளிச் செய்தார்
இவ்வாழ்வார் இங்கு அது நீங்கிய நிலையை அருளிச் செய்கிறார் –
தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -என்றார் திருமங்கை மன்னனும்
தேன் கலந்த மூங்கிலைப் பிடியின் வாயிலே பிழியுமாம் –
பருக்கை -சக்கை -தட்டுமாகில் மிடற்றுக்குக் கீழே இழிச்ச மாட்டாதாயிற்று
அதுக்கு அடி இளம் பிடியாகை
தேனில் ரஸம் பெறுகைக்காக அதிலே தோய்த்துப் பின்னை அதில் கந்தல் யுண்டு -கோது -அது தட்டாதபடி பிழியும்
அதில் யுண்டான பருக்கையும் கூடப் பொறாத படியாய் யாயிற்று இதனுடைய ப்ரக்ருதி மார்த்வம் இருக்கிற படி –
திர்யக்குகளுக்கும் தம்முடைய ரஷ்யத்தினுடைய ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
வான் கலந்த என்கையாலே மேகமாகிற உபமானமும் மேக வண்ணனாய உபமேயமும் மிக்கு ஒத்து இருப்பதை உணர்த்துகிறார்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்று
உபய விபூதியில் உள்ளோரை எல்லாம் ரக்ஷிக்குமவனைப் போலவே
திர்யக்குகளுக்கும் ரஷ்யத்தின் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
பெரிய பிராட்டியாரும் தானுமாய் ஸம்ஸ்லேஷித்து இன்புற்று இருக்குமவன் அந்த சம்ஸ்லேஷத்துக்கு பின்பு
மதுபான கோஷ்டியாய் செல்லுமத்துக்கு இது உப லக்ஷணம் – )

——————————————————————————————————

இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு
வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ் வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் –

(கீழே வாசா கைங்கர்யம் சொல்லி இதில் காயிக கைங்கர்யம்
ஆத்ம ஸ்வரூப அனுரூபம் த்ரிவித கரணங்களால் கைங்கர்யம் அன்றோ)

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேகரித்துக் கொண்டு
ஆதிக் கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

நல்ல ஆகரத்தில் உண்டான சந்தனக் குழம்பும் அங்குத்தைக்கு சத்ருசமாம் படி அடைவே எடுத்து பெரு விலையனான
ஆபரணங்களும் திரு வரைக்குத் தகுதியான நல்ல பரிவட்டங்களும் -பரிமளம் மிக்கு இருப்பதாய் -கண்ணுக்கு ஆகர்ஷகமான
வெளுத்த நிறத்தை உடைத்தான மல்லிகையும் ஆகிற இவற்றை தர்ச நீயமாம் படி நிரைய அடைவே எடுத்துக் கொண்டு

இவை அழிந்து கிடக்கிற ஆதி காலத்திலே காரணமாய்க் கொண்டு நின்றவனாய் –
தன் பக்கல் இவன் பண்ணின அல்ப ஆனுகூல்யத்தை சர்வ காலமும் நினைத்து இருக்கும் சர்வஞ்ஞனானவனுடைய
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே
வாயார ஸ்தோத்ரம் பண்ணி
தலையார வணங்குவது இவ்வாத்மாவுக்கு மிகவும் சீரியது-

(ஸூ கந்த மேதத் ராஜர்ஹம் ருசிரம் ருசிராநநே
ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம்
எத்தை இட்டாலும் நற் சாந்தாகவே கொள்ளுமவனானாலும் அவனது ஸுகுமார்ய திருமேனிக்கு ஸத்ருசமாக இடுகையை இவன் ஸ்வரூபத்துக்குத் தக்கது –
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1- என்றபடி
அவனையே உபாய உபேயமாகக் கொள்ளும் நெஞ்சே நற் சாந்து ஆகும்
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செயகையே –மாடி ஏற்காதவர் கை கூப்புச் செய்கையே அவனுக்கு அணி கலனாகும்
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்றபடி
திருவரையே பூத்தால் போல் உள்ள திரு பீதாம்பரமும்
புனையும் கண்ணி என்னுடை வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே -4-3-2-என்றும்
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே என்றும் அருளிச் செய்த படியே
பூ மாலையே -உயிர் என்றும்
வான் கலன் -காதல் என்றும்
பட்டு -நற் பா மாலை
நெஞ்சையே பூசும் சாந்து என்னலாம் படி ஆக்கிக் கொண்டு அருளுபவன் அன்றோ
ஆதிக்கண் நின்ற
ந ப்ரஹ்மா நேஸாந நே மே த்யா வா ப்ருத்வீ ந நக்ஷத்ராணீ
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்
காரணம் து த்யேய
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே
ஸஹஸ்ராம் ஸூ -நமது லவ லேச நன்மையை பத்து நூறு ஆயிரமாக்கி கணக்கிட்டு நினைத்து இருக்கும் ஸர்வஞ்ஞன்
ஓதி வாய் படைத்த பயன்
பணிந்து தலை படைத்த பயனாக வணங்கி –
உறும் -இதுவே இவ் வாத்மாவுக்கு தக்கது -)

—————————————————————————————–

இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும்
சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார்

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐந்நூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

எனக்கு முன்னே பதறி விழுகிற நல்ல நெஞ்சே -நாம் விமுகரான திசையிலும் நம்மை நோக்கி இப்போது தன்னது பேறாக
அடிமை கொள்ளக் கடவ புருஷோத்தமனுடைய யோக்யர் அயோக்யர் என்று தரம் வையாதே எல்லாருக்கும் பற்றலாம் படியான
நன்மையை யுடைய திருவடிகள் சாலச் சீரியது ஓன்று கிடாய் –

(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் ஆழ்வாராதிகள் ஆச்சார்யர்கள்
நீ என்னை கை விட்டாலும் நான் உன்னை விடேன் என்று
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டு அருளுவார்கள் அன்றோ)

வாயாலே ஸ்துதித்து தலையாலே வணங்கி
அவனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களையும்
சர்வ காலத்திலும் எங்கும் பிரசித்தமாம் படி சொல்லுகை யாகிற தபஸ்ஸூ –
ஸூ ஸூகம் கர்த்தும்-என்னும் படி அத்யந்தம் சரசமாய் இருப்பது ஓன்று ஆகையால் மிகவும் சீரியது கிடாய் –

திரு நாமம் சொல்லுகையைத் தவம் என்கிறது ஈஸ்வரன் கருத்தாலே-

(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –)

(அனுபவ வேளையில் காட்டிலும் ஆஸ்ரயண வேளையில் பிறக்கும் இன்பமே போதுமானது –
நன்னெஞ்சே
முந்துற்ற நெஞ்சே
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8 என்றும்
விபரீத லக்ஷனையாகவுமாம்
உத்தமன் நற் பாதம்
அனைவரையும் திருத்தி உஜ்ஜீவிக்க வல்லவன்
பல பல நாழஞ்சொல்லி கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வைத சிசுபாலனுக்கும் அந்திம காலத்தில்
அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
திருவடி தாட் பால் அடைந்த -7-5-3-
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாமல் திண் கழலாய் இருக்கும் அன்றோ
நின்னில் சிறந்த நின் தாளிணை அவை -பரிபாடல் -3-
ஸூ ஸூகம் கர்த்தும் -அனுஷ்ட்டிக்கும் போதே இனிதாய் இருக்குமே )

———————————————————————————————-

இப்படி இருக்கிற தபஸ்ஸை அனுஷ்ட்டித்து (த்ரிவித கரணங்களால் ஆஸ்ரயித்து )சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தமற
லபிக்கப் பெற்றான் சதுர் முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார் –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்கா தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திரு நாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.(மஹா கல்பம் முடிவில் மோக்ஷம் பெற்றான் என்றபடி )

(அர்ச்சிராதி மார்க்கம் போனவர் திரும்ப மாட்டார்கள்
திரும்பாத மோக்ஷம் பெற்றவர்கள் எல்லாருமே அர்ச்சிராதி மார்க்கத்தில் போனவர்கள் என்று இருக்க வேண்டாமே
நான்முகன் ஸத்ய லோகத்தில் இருந்தே போகலாமே)

உறும் கண்டாய் -வாசிக காயிக மானஸ மூன்றுக்கும் மூன்று தடவை அருளிச் செய்கிறார்

பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்யமான திருவடிகளை –
க்ருஹீத்வா தர்ம பாநீயம்–என்கிறபடியே
பகவத் பக்தியாலே உருகி விழுந்த தர்ம மயமான கங்கா ஜலத்தைப் பணி மாறி –
அவனுடைய எல்லாத் திரு நாமங்களையும் வாய் படைத்த பிரயோஜனம் பெறச் சொல்லித்
தன்னுடைய சிவந்த அழகிய கைகள் அடங்கலும் உத்பத்தி பிரயோஜனம் பெற்றுப் பூர்ணமாம் படி யாக விளக்கினான் –

திருவடிகளை விளக்கப் பெற்ற பின்பு பகவன் நாம சங்கீர்த்தம் ஆகிற இனிய தபஸ்ஸைக் குறைவற அனுஷ்ட்டித்துச்
சதுர்முகன் ஒருவனுமே அது பலத்தோடே வியாப்தமாகப் பெற்றான் –

இவன் இனியது செய்ய அவன் தவம் என்று இருக்கும் –
வணக்குடைத் தவ நெறி -என்னக் கடவது இறே –

(உலகு அளந்த போது இந்திரன் பெற்றது கோதான த்ரை லோக்ய ராஜ்ஜியம்
பிரமன் திருவடிகளைக் காணப் பெற்றான்
இப்படித் தவம் செய்தார் யாரும் இல்லையே -இப்படிப் பயன் பெற்றாரும் இல்லையே –
பொற் பாதத்தைப் பெற்ற பின் காயிக வாசிக கைங்கர்யங்களையும் செய்யப் பெற்றானே
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய அர்க்யாதி பிரர்ச்சிதம்
ததமபு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா யுதான் யத பஹுன் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை
வணக்குடை தவநெறி -திருவாய் -1-3-சேதனன் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்தாலும்
சர்வேஸ்வரன் அத்தையே தவமாகக் கொண்டு பயன் அளித்து அருள்கிறான் -என்கிறார் ஆழ்வார் )

———————————————————————————————-

ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க
மறுத்துக் காடு ஏறப் போன சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் என்கிறார் –

(மென்மையான திருவடிகளுக்கும் -சேஷ்டிதங்களுக்கும் ஸாம்யம்
அவதாரிகை சங்கதி சொல்வதில் நோக்கம் -ஆகவே முதலில் திரு உலகு அளந்ததைச் சொல்லி பின்பு ராமாவதாரம்

திரிவிக்ரமன் விட வாமனன் என்று சொன்னால் தானே மென்மைக்கு ஒப்பாகும்
அதிதி -இந்திரன் -போல் கௌசல்யை பெருமாளைப் பெற்று -ஸந்தோஷம் -உபேந்த்ரன் சொல்ல முடியாமல் வஜ்ர பாணி இருப்பதால்
வஜ்ர லாஞ்சனம் உண்டே -சொல்லலாமே –
அங்கும் பெருமாளுக்கும் வாமனனுக்கும் ஸாம்யம் சொல்லிற்றே )

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன்ற திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராம பிரானுடைய
மொய் மலராள் தான்—பத்மாலய-அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப் பெருமான் மிகப் பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

தாயாரான ஸ்ரீ கௌசல்யையார் பின் தொடர்ந்து நின்று -ஏக புத்ரையான நான் உன்னைப் பிறந்தால் -தரித்து இருக்க வல்லேனோ –
நீ காட்டுக்குப் போக வேண்டா -என்று அர்த்திக்க-அத்தைக் கேளானுமாய் –

அதுக்கு மேலே நீண்டு சுற்றுடைத்தான தோளை யுடையாளாய் –
அழகிய பூவை இருப்பிடமாக யுடையாள் ஆகையால் நிரதிசய ஸூ குமாரையான பிராட்டியானவள் தான்
அக்ரதஸ் தே கமிஷ்யாமி -என்கிறபடியே
முற்பட்டு நின்று -கரு முகை மாலையைச் செவ்வி பெறுத்த வென்று நெருப்பிலே இடுமா போலே
இந்த அதி ஸூகுமாரமான திரு மேனி கொண்டு காடு ஏறப் போகிற இன்று உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் –
உமக்கு முன்னே போகக் கடவேன் -என்று பிரார்த்தியா நிற்க–அத்தையும் கேளாதானாய் –

தானோ என்றால் -ஸ்ரீ ராமாயணம் என்கிற பிரபந்தத்துக்கு நேரே பிரதிபாத்யனாய்க் கொண்டு நின்று-தோளை யுடையனாய் –

ஸுகுமார்யத்தில் வந்தால் தன்னை எண்ணினால் -பின்னை இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாத படி-பிரதானனுமாய் இருக்க –

இவை இத்தனையும் (மூன்றையும்)பாராமல் -காட்டில் மிறுக்கையும் கடைக் கணியாமல்-காடு ஏறப் போன
சக்கரவர்த்தி திருமகனுடைய அந்த ஸ்வ பாவம் எல்லா வற்றுக்கும் ஸ்ரீ மானனானவன்-

தான் அளந்து கொண்ட பரப்பை யுடையதான பூமி ஒப்பாகப் போரும் –
அதாவது
1-மாத்ரு வசனத்தை மறுத்துப் -2-பிராட்டி இரப்பைத் திரஸ்கரித்து -3-தன் ஸுகுமார்யத்தை புரிந்து பாராமல்-
4-போகிற காட்டில் மிறுக்கைக் கடைக் கணியாமல் -பித்ரு வசன பரிபாலனத்தையே புரஸ்கரித்து –
மன்னும் வளநாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்கரவர்த்தி திரு மகன் செயல்களுக்கு

இடங்கை வலம் புரி நின்றார்ப்ப -இத்யாதிப் படியே
1-அனுகூல அக்ரேசரரான ஸூ ரிகள் வயிற்று எரிச்சலையும்
2-தன் திருவடிகள் ஸுகுமார்யத்தையும் -3-காடுமோடையுமான அளக்கிற பூமியினுடைய கொடுமையையும் –
4-ஆஸூர ப்ரக்ருதிகளான நமுசி ப்ரப்ருதிகள் அலைச்சலையும் பாராமல்
ஆஸ்ரிதரான இந்திரன் பிரார்த்தனனையைத் தலைக் கட்டுகைக்காகக்(இதிலும் சாம்யம் -வேண்டித் தேவர்கள் இரக்க செய்த செயல்கள் )
கல்லும் கரடுமான வான்மா வையத்தை அளந்து கொண்ட
ஸ்ரீ வாமனனுடைய செயலானது சத்ருசமாம் அத்தனை -என்கை –

(சாமான்ய தர்மம்-குரு -பிதா -ராஜா -வ்ருத்தம் -நான்குக்கும் பிரதிசம்பந்தி –
விசேஷ தர்மம்-அபய பிரதானம் –
சாஷாத் தர்மம் -தானேயாக
இப்படி மூன்றுமாக அன்றோ பெருமாள்)

(தோளும் தாளும் -ராமனுக்கு தோள் -வலிமையால் ராவண நிரஸனம் -வாமனன் திரு விக்ரமன் தாள் வலிமையால் நமுசி ப்ரக்ருதிகள் நிரஸனம்
தர்ம ரக்ஷணம் -சாது ரக்ஷணம் -இரண்டிலும்)

(த்வயி ஸந்நிஹிதே அப்யேவம் அஹமாஸம் நிராக்ருதா
கிம் புந ப்ரோஷிதே தாத த்ருவம் மரணமேவ மே -அயோத்யா -20-41-
யதைவ தே புத்ர பிதா ததா அஹம் குருஸ் ஸ்வ தர்மேண ஸூ ஹ்ருத் தயா ச
ந த்வா நுஜாநாமி ந மாம் விஹாய ஸூ துக்கிதாம் அர்ஹஸி கந்து மேவம் -அயோத்யா -21-52-
குருஸ் ச ராஜா ச பிதா ச வ்ருத்த க்ரோதாத் ப்ரஹர்ஷாத் யதி வா அபி காமாத்
யத் வ்யாதி சேத் கார்யம வேஷ்ய தர்மம் கஸ்தம் ந குர்யாத ந்ருசம்ஸ வ்ருத்தி
ஸ வை ந சக்னோமி பிதுர் ப்ரதிஞ்ஞாம் இமாமகர்த்தும் சகலாம் யதாவத்
ச ஹ்யா வயோஸ் தாத குருர் நியோகே தேவ்யாஸ் ச பர்த்தா ச கதி ச தர்ம -அயோத்யா -21- 59-60-
கௌசல்யா தேவி வார்த்தைக்கும் பதில் அளித்து அருளி தர்மத்தை நிலை நாட்டி அருளினார் அன்றோ பெருமாள் –

பின்பு பிராட்டி
பாதா ருந்துத மேவ பங்கஜ ரஜ -தாமரைப் பொடியும் உறுத்தும் மென்மை யுடையவள்
யதி த்வம் பிரஸ்திதா துர்க்கம் வன மத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் -அயோத்யா -27-6- என்று பிரார்த்திக்க
தர்மத்தோடே ஒத்து இருக்கையாலே அன்றோ பெருமாள் அதற்கு இணங்கினார்
மன்னும் வள நாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்ரவர்த்தி திருமகன் செயல்கள் வாமணனுடைய செயல்களுக்கு ஒப்பாகுமே
ஸ்ரீ பெருமாளுடைய தர்ம ரக்ஷண உறுதிக்கு ஸ்ரீ வாமனனுடைய ஆஸ்ரித ரக்ஷண உறுதி ஒத்து இருக்கும் என்று கருத்து -)

————————————————————————————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளிலே அடிமை ருசித்து ஸ்ம்ருதி மாத்திரத்தாலே நான் அங்கே ப்ரவணம் ஆன படியைக் கண்டால்
பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ என்கிறார் –

(தனக்கும் பிறருக்கும் ஒப்புமை
தன்னையும் தன்னையும் கால வேற்றுமையால் ஒப்பு
திருவடி வெளிக் காட்டியதுக்கும் ஆபரணங்களால் மறைக்கப் பட்டதுக்கும் ஒப்பு
இப்படி மூன்று அர்த்தங்கள்
படி கோலம் -இயற்கையான அலங்காரம்)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப்போன்ற அத் திருவடிகளைச் சிந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப் பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என் கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப் பெற்ற முற் காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையே யன்றோ மிகச் சிறந்தது)

தேவர் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாகப் பண்ணக் கடவ கைங்கர்யத்தில் அத்யாவசாய புரஸ்சரமாக (அடிமைத்தனம் இவ்வளவு வியாக்யானம் )நேர் பட்டேன் –
அந்தக் கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தியாய் -அழகிய தாமரைப் பூ போலே நிரதிசய போக்யமாய் இருக்கிற
அந்த திருவடிகளை மனஸ்ஸாலே அனுசந்தித்தேன் –

நினைத்த மாத்திரத்திலே பெருகி வருகிற ப்ரேமத்தை யுடையேனாய்
வகுத்த சேஷியான தேவருடைய சிவந்த திருவடிகளின் மேலே பிரிக்க ஒண்ணாத படி பொருந்தினேன் –

(நினைந்தேன் முதலில் சொல்லி -அது -என்று சொல்லும் படி -ஒண் கமலம் –மறைத்து சொன்னால் தானே ஆர்வம் தூண்டப்பண்ணும் –
பின்பு சேவடி மேல் அன்பாய் என்கிறார்
அன்போடு நினைத்தேன் அல்ல
க்ரம பிராப்தி -நிர்ஹேதுக கடாக்ஷம்
நினைத்ததால் அன்பு பெருகிற்று)

பூர்ணமான திருவடிகளின் அழகைக் கண்டு அனுபவித்தவர்களுக்கு -இதுக்கும் அடியான வடிவு அழகை ஓன்று ஒழியாத படி
முழு நோக்குச் செய்து அனுபவிக்கப் பெற்ற போது என்னாய்த்தோ-என் பட்டார்களோ -என்கை –

அன்றிக்கே –
ஆர்ந்த அடிக் கோலம் கண்டவர் ஆகிறார் சேஷ பூதரான தாமாய் -நான் திருவடிகளின் அழகைக் கண்டு ஈடுபட்டபடி கண்டால்
முன்பு இவ் வடிவு அழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்றார்கள் என் பட்டார்களோ -என்றுமாம் –

ஆர்ந்த வடிக் கோலம் -இத்யாதி –
திரு உலகு அளந்து அருளின திருவடிகளைக் கண்டவர்களுக்கு முன்பு
ஸ்வாபாவிகமான ஒப்பனை கண்ட காலம் என்னோ என்றுமாம் –

ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று
திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன் என்னவுமாம் –

(குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே -அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-
மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட –8-9-11-
ஆபரணஸ்ய ஆபரணம்
ஆபரணத்துக்கும் அழகு கொடுக்கும் பெருமாள்
ஸர்வ பூஷண பூஷார்ஹா -)

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -61-70– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 15, 2016

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –

(ஸ்வரூபமும் ரூபமும் ஆஸ்ரித பாரதந்த்ரம் என்றார் கீழ்
இதில் சேஷ்டிதங்களும் அடியார்களுக்காகவே என்கிறார்)

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத்தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

ஒரு நினைவற்று இருக்கச் செய்தே நின்றதொரு திருவடிகள் பூமிப பரப்பை அடங்கலும் புறம் தோற்றாதே தன் கீழே
அடங்கும் படி அளந்து கொள்ள -அபிமதம் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே முசிவற வளர்ந்த திருத் தோளானது
திக்குகள் எல்லா வற்றையும் சென்று அளந்து கொண்டது என்று விவஷிதர் சொல்லா நின்றார்கள்-

இந்திரன் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு திருவடிகளில் வந்து விழுந்த அன்று
ஸ்ரமஹரமான கருத்த நிறமும் இரப்பிலே தகண்
ஏறின ப்ரஹ்மச்சாரி வேஷமும் உடையனாய்க் கொண்டு மகாபலியை சர்வ ஸ்வ அபகாரம் பண்ணின கிருத்ரிமனே
உன்னை அழிய மாறி மஹா பாலி பக்கலிலே கிடந்த பூமியை மீட்டுக் கொண்ட செயல் உன்னிடத்தில் தங்கள் பரத்தைப் பொகட்டு நியஸ்த பரராய் உன்னை விஸ்வசித்து இருந்த ஆஸ்ரிதர் ஆணவர்னர்கள் நிர்ப்பரராய் மார்பிலே கை வைத்து உறங்கும்படி பெற்ற பேறு அன்று
அவர்களுக்கு வைத்த தண்ணீர் பந்தல் என்றபடி
த்ரிவிக்ரம வடிவுடன் செய்த செயல் இது
தன்னது என்ன -அவன் பக்கலிலே இரந்ததாயாய்-வஞ்சித்தாயாய்ச செய்தது
இந்திரன் ஒருத்தனுக்குச் செய்ததேயோ –

ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும் -தூது போம் -சாரத்யம் பண்ணும் –
எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து உறங்கும் படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

(கரே நிபதிதே தோயே வாமனோ பூத் அவாமன -கையிலே மாவலியின் தான நீர் விழுந்த உடனே வாமனன் நெடியோன் ஆனான் –
அடியாருக்காகவே தனது ஸ்வரூபத்தையும் தாழ்த்திக் கொண்டு யாசிப்பதையும் -வஞ்சிப்பதையும்
தூது போவதையும் தேர் ஓட்டுவதையும் மற்றும் பல இழி தொழில்களையும் செய்து அவர்களை ரக்ஷிப்பவன்
என்று மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி பெற்ற பயன் அன்றோ –
அனைவருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தல் அன்றோ இந்தச் செயல் என்கிறார் -)

——————————————————————————————————

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும்
தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆஸ்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

ருஷபங்களுடைய வளர்ந்த கழுத்துக்களும் கொம்புகளும் முறியும்படிக்கு ஈடாக நப்பின்னை பிராட்டி பக்கலிலே உண்டான
ஆசையைப் பின் சென்று -அந்த ருஷபங்களுடைய கழுத்தைத் திருத்திப் பொகட்டவனாய் தன்னோடு ஒத்த நல்ல பருவத்தை யுடைய
இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் தலைவனாகையாலே வந்த செருக்கை யுடையவனான கிருஷ்ணன்
நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு சத்ருவாய் இருக்குமவன் என்று ஆஸ்ரயித்தேன் –

இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஒரு புருஷார்த்தம் அறியவும் பெற்றிலேன் –
அத்தாலே இப்புருஷார்த்தைப் பெற்று அனுபவிக்கப் பெறாமல் இழந்து போனேன் –
இதுக்கு அடி என் அறிவு கேடு ஐயோ அறிவு கேடு என் படுத்தாது தான் –

(ஸஹஜ ஸ்த்ரீகள் நாம் யாவரும் -அவன் ஒருவனே புருஷோத்தமன்)

(ஞானான் மோக்ஷ அஞ்ஞானாத் ஸம்ஸார —
குண மயீ மம மாயா துரத்யயா -மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -கீதை -7-14-
கச்ச த்வமே நம் சரணம் -என்று உபதேசிக்க
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்பதால் வணக்கமே சரணாகதி யாகுமே –
நமக்கு பிரபலமான புருஷகார பலம் -நப்பின்னை -உண்டாய் இருக்க நம் பாபங்களைக் கண்டு சீறி இவனால் உதற முடியாதே
நின் அன்பின் வழி நின்று -பெரியாழ்வார் -3-10-7-ப்ரேம பரதந்த்ரன் அன்றோ)

———————————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் –

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறி பட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
விடு சாபம்–எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலை வாய் நிறைய–பருந்துக்கள் ஏறி யிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக் கையாலே கீறியெடுத்து அளித்த–

ஒண் குருதி -அழகிய ரத்தத்தாலே–

கண்ட பொருள் அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

ருஷபங்கள் ஏழையும் ஜெயித்துப் திருகிப் பொகட்ட என் ஸ்வாமியான கிருஷ்ணன் –
நெருப்புப் போலே ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத வடிவை யுடையனாய் –
செருக்குப் போக்கு வீடாக ருஷபத்தை மேற்கொண்டு நடத்தக் கடவனுமான ருத்ரன் முன்பு
தலை யறுக்கிற இடத்தில் அனுமதி பண்ணி இருந்து
பின்பு குபிதனாய்க் கொண்டு ப்ரஹ்மா -கபாலீ த்வம் பவிஷ்யசீ –என்று சபிக்க

சாப உபஹதனாய்க் கையும் தலையோடுமாய்க் கொண்டு இரந்து திரியும்படி மறுபாடு உருவப்பட்ட வந்தேறியான சாபத்தை
கழுகும் பருந்தும் பாறு -என்கிற பஷி விசேஷமான அவை மேல் விழுந்து ஜீவித்த தலையோடு வாயளவும் நிறைந்து
ஸ்புடிதம் பஹுதா யாதம்-என்னும்படி –
சில்லுச் சில்லாக வெடித்துப் போம் படி குவிந்த அழகிய திருக் கையாலே
திரு மேனியில் ஒரு பிரதேசத்தைக் கீறி வாங்கித் தெறித்த -அழகிய ரத்தத்தால் கையில் நின்றும் தவிழ்ந்து போம்படி கண்ட
இவ்வர்த்தத்தைச் சொல்ல இழி யில் ஒரு மஹா பாரதத்தோடு ஒக்கும் –

ஈஸ்வரனாகவும் வேண்டா -பாதகியாகவும் வேண்டா –
அங்கை என்றது பாதகத்தைப் போக்க வல்ல அழகிய கை என்றபடி –

ஒண் குருதி -என்றது
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருதமான திரு மேனியில் நின்றும்
உண்டானதாகையாலே அடிக் கழஞ்சு பெற்ற குருதி -என்றபடி –

(ஓன்று மா கடல் உருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தாண்டகம் -2-
தழல் நிற வண்ணன் குழல் நிற வண்ண -பெரிய திரு -6-1-2-
உருவம் கார் உருவம் எரி -முதல் திரு -5-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –திருச்சந்த விருத்தம் -42-
கபாலீத்வம் பவிஷ்யஸி -மாத்ஸ்ய புராணம் -சாபத்தால் பீடிக்கப்பட்டு கையும் மண்டை ஓடுமாயத் திரிந்து யாசித்து
வெண் தலைப் புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் -திருச்சந்த -113-
ஸ்புடிதம் பஹுதா யாதம் -மாத்ஸ்ய புராணம் –
ஊறு செங்குருதி-என்றும்
அலங்கல் மார்பில் வாச நீர் -திருச்சந்த -113–
தலை அறுப்புண்டவனும்
தலை அறுத்து சாபம் பெற்றவனும் பரம் பொருள் அல்லரே
அந்த சாபத்தைப் போக்கி அருளினவனே பரம் பொருள்
மாத்ஸ்ய புராணம் -182-அத்யாயம் இந்த வ்ருத்தாந்தம் விவரிக்குமே-
தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாஸ் அஸகுலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்சயம்

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்

மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா

விஷ்ணு ப்ரஸாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –இவை அங்குள்ள சாரமான ஸ்லோகங்கள்)

———————————————————————————————

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி
பண்ணி அருள வேணும் என்கிறார் –

(கதை -என்றதும் இதிஹாஸ புராண பெரும் பொருளான  தாத்பர்யமான திரு நாம சங்கீர்த்தனம் பற்றி அருளிச் செய்கிறார்-கலவ் கேஸவ கீர்த்தனம் –
அருகில் சேவிக்க முடியாதவன் திரு நாமங்கள் மூலம் அனுபவித்து மகிழ்வான் அன்றோ-இதற்கும் அவன் திரு உள்ளம் பற்ற வேண்டுமே )

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ண பிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவை யெல்லாம்) உன்னுடைய திரு நாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பரு மொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

சர்வ ஸூலபனான கிருஷ்ணனே -த்வத் வைபவத்தைக் கதை போலே வகை இட்டுப் பரக்கச் சொல்லுகிற அர்த்தங்களும்
அந்த இதிஹாசங்களின் தாத்பர்ய அம்சமும் இருந்தபடியே அறிந்து கொண்டு ஸ்துதிக்கில் –
உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களேயாய் இருக்கும் –

உபநிஷத் ஸித்தமான வித்யா விசேஷங்களில் கதை போலே அவன்
குண சேஷ்டிதங்களை விஸ்தரித்துச் சொல்லுகிற அழகிய சப்தங்களுக்கு
உள்ளீடான பொருளாய்க் கொண்டு நின்ற ஸ்ரீ யபதியானவனே-

இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரும்ஹணங்களாலே பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியான உன்னை
இப்படி சப்த த்வாரா காண்கை அன்றிக்கே
ஒரு தேச விசேஷத்திலே வந்து பரிபூர்ணமாக -சதா பஸ்யந்தி -என்று அனுபவித்து –
அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று முழு மிடறு செய்து பேசுகிற பரிபூர்ண சப்தங்களாலே கண்டு
அனுபவிக்கும் படி -திரு உள்ளமாய் அருள வேணும் –

கதையும் திரு மொழியுமாய் நின்ற என்கிற இடத்தில்
கதை என்று இதிஹாசாதிகளையே சொல்லிற்று ஆகவுமாம் –

(கோது கழித்து -கங்கா காங்கேய –எச்சில் வாய் -அசாரம்-சாரம் -சார தரம்-சார தமம்–
தேவதாந்த்ர -உபாயாந்தர -உபயாந்தர -பிரபத்தி மஹா விஸ்வாஸம்-குலையுமே -திரு நாம சங்கீர்த்தனம் தான் தாத்பர்யம்)

(ஸர்வே வேதா கிருஷ்ண
வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
ஸத்யம் சத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜ முச்யுதே -வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி –
த்வம் ஆஸீர் மாத ஸ்ரீ கமி துரித மித்தந்தவ விபவ தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபி தத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ குணரத்ன கோசம் -28-
காணப் பணி
இது போல் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் கேட்டால் போதாது
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று அங்கு கண்டு அனுபவித்து
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத -என்னவும் பண்ணி அருள வேணும் –
இப் பேற்றை நிர்ஹேதுக கிருபையால் பண்ணி அருள வேணும் என்கிறார் )

—————————————————————————————————–

இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன
அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் –

(இங்கேயே இருந்து திவ்ய தேச கைங்கர்யம் என்றும்
அங்கு சென்றும் இதே போல் கைங்கர்யம் தொடர வேண்டும் என்றும்
இரண்டு நிர்வாகங்கள்
மாம் நமஸ்க்ரு பணிந்தேன்)

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திருமேனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்-கண்டு பணிந்தேன் -கண்டேன் என்று சொல்ல மாட்டாரே -அஹங்கார கர்ப்பமாக இருக்குமே
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி-இங்கு புறப்பாடு முடிந்து திருக் கோயிலுக்குள்ளே புகும் இடம்  பார்த்து என்றுமாம்
ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

ந நமேயம் (வணங்க லில் அரக்கர் )என்னும் படி -ஸ்வாதந்தர்யத்தால் -தலை வணக்கம் அற்ற நான் உன்னுடைய அழகிய திருமேனியைக் கண்டு
ஆழம் கால் பட்டு வேறு அற்ற மரம் போலே (சேஷத்வ )ஸ்வரூப அனுரூபமாக விழுந்தேன் –

அடிமை செய்யா விடில் தரிக்க ஒண்ணாத ப்ரேமத்தை உடையனாய்க் கொண்டு வகுத்த சேஷியான உன்னுடைய சிவந்த
திருவடிகளின் மேலே எடுத்துக் கை நீட்டக் கண்ட கையாலே அழகிய தாமரைப் பூக்களை அழகு பெறச் சாத்தினேன் –

எழுந்து அருளா நின்றால்-முன்னே சேவித்து -முன்புள்ள அழகைக் கண்டு களித்து
உன்னை ஸ்தோத்ரம் பண்ணிப் புக்கு அருளுகிற இடத்திலே
பின்புள்ள அழகைக் கண்டு கால் வாங்க மாட்டாதே அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸம்ருத்தி இப்படி மாறாதே
செல்ல வேணும் என்று புகழ்ந்து மங்களா சாசனம் பண்ணி
இப்படி அனுபவித்து வாழுகை ஆகிற இப்புருஷார்த்தத்தில் வியவஸ்த்தினன் ஆனேன் –

(வா போகு வா -சக்ரவர்த்தி பெருமாள் இடம் -இவர் நம்பெருமாள் இடம்)

அங்கன் இன்றிக்கே –
புகலிடம் -என்கிறது –
அவதார சமாப்தியிலே போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய்
அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவார் -என்கிறபடியே –
அவர்கள் நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் -என்னுமதிலே அத்யவசித்தேன் என்னவுமாம் –
இது திரு மலை நம்பி நிர்வாஹம்-

(த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த –36-11-என்று
வணக்கம் அற்று இருந்த என்னை திருமேனியைக் காட்டி ஐயப்பாடு அறுத்து மேலும் ஆதாரம் பெறுக வைத்தாய்
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி
ஸ்வயம் ப்ரயோஜனமாகவே சாத்தினேன்
கஜ ஸிம்ஹ கதீ வீரவ் ஸார்த்தூலவ் ருஷபோபமவ் -நடை அழகு
பூர்வாங்கா ததிகா பராங்க கலஹம் -முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்-

இங்கே இருந்து அர்ச்சா ஸ்தலங்களில் பல்லாண்டு பாடி வாழ வேண்டும் பட்டர் நிர்வாகம்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -10-10-9-
ந ச புந ராவர்த்ததே
புணை கொடுக்கிலும் போக ஒட்டார் -பெரியாழ்வார் -4-5-2-
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ஸ சமிந்ததே
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே
அங்கு புக்கு பல்லாண்டு ஏத்தி வாழ வேணும் -என்பதே திருமலை நம்பி நிர்வாஹம் -)

————————————————————————————————

பகவத் ப்ராவண்யம் பெற்ற அளவு அமையும் -(அன்பால் பைங்கமலம் திருவடிகளில் சாத்தினேன் -என்றாரே கீழே )
அத்தை விட அநர்த்தா வஹமான விஷயாந்தரங்களில் -தோஷத்தை அனுசந்தித்து அருசி பிறக்கையே வேண்டுவது என்கிறார் –

(ருசி பிறந்தமை கீழ் அருளிச் செய்து
ஸாம்ஸாரிக தண்மை -தோஷ தர்சனம் -பண்ணி அருசியும் வளர வேண்டுமே)

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப் பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திரு நாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

*நல் நெஞ்சே கீழே சொல்லி -வல்லையேல் -இங்கு ஸம்ஸாரத்தின் தண்மை உன்னையும் படுத்தும் அன்றோ)

சம்சாரம் பொல்லாது என்றால் -அதுக்கு இசைந்து என்னோடே ஒரு மிடறான நல்ல நெஞ்சே –
இது நிலை நிற்கும் –
போக்யமாய் இருக்கும் -என்று நாட்டார் பிரமிக்கிற ஆகாரம் இன்றிக்கே –
பகவத் பிரசாதத்தாலே தரிசிக்கும் அளவில் அத்ருஷ்ட தோஷ துஷ்டமான இந்த சம்சாரம் ஆகிறது –
அல்ப அஸ்திரத்தவாதி தோஷ தூஷிதமான இவ்வாகாரத்தோடே கூடின இதுவே கிடாய்

முன்பு அநாதியான காலம் எல்லாம் நன்றாய்த் தோற்றுகிற ஆகாரத்தாலே
நாம் மாறுபாடுருவ துக்க அனுபவம் பண்ணிப் போந்தது இது கிடாய் –

வகுத்த சேஷியான நாராயணனுடைய குணாதிகளுக்கு (ஆதி -சேஷ்டிதங்கள் )வாசகமான திரு நாமங்களை -நிரந்தரமாகச் சொல்லி
சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய பர்யந்தத்திலும் பிரவேசியாமைக்கு காரணமும்
அஸ்திரத்தவாதி (ஆதி அல்பம் )தோஷங்களால் த்யாஜ்யம் என்னும் ஆகாரம் பிரத்யஷிக்கலாம் படி இருக்கிற இஜ் ஜன்ம சம்பந்தம் கிடாய் –

மேல் எழத் தோற்றுகின்ற நன்மையில் பசை இல்லை –
தோஷமே வேஷம் என்று இத்தைத் தப்பாத படி காண வல்லை யாகில்
நாம் சொன்னது ஒக்கும் என்னும் இடத்தைக் கண்டு கொள்ளு –

(மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாய
பந்தாயா விஷயா சங்கி
முக்த்யை நிர்விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-)

————————————————————————————–

இவர் திரு உள்ளத்தைக் குறித்து -சம்சார தோஷத்தைக் காண் -என்ற அநந்தரம் -அவன் நிர்ஹேதுகமாக
தன்னைக் கொண்டு வந்து காட்ட -அதிலே தாம் கண்ட அம்சத்தை அருளிச் செய்கிறார் –

(நம் பெருமையைப் பாராமல் ஸம்ஸார தண்மையையே பார்க்க வேணும் என்று இவர் உபதேசிக்க
பதறி -தோஷமே கண்ணில் படாமல் நம் சொத்தை
பரம விமல திருமேனி -ஆழ்வாரது –
வேறே ஒன்றைக் காண முடியாமல் மானஸ அனுபவம் -கனவில் போல் –
கண்டேன் இங்கேயே –
பின்பு திருக்கண்டேன் அடுத்த ஆழ்வார்
பொன்னாழி கை கண்டேன் அவர்
இவரும் கனலும் சுடர் ஆழி -கண்டேன்)

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக் கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–வந்தேறியாய் இருக்கச் செய்தேயும் ஒன்றி -அனுபவித்தே அற வேண்டிய  மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறு கிளை கிளர்ந்து வரக் கூடிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

நிர்ஹேதுகமாக அவனாலே அங்கீ க்ருதனான நான் இந்திரிய த்வாரா விட்டு நீட்டிக் காண்கை யன்றிக்கே
ஸ்வப்ன கல்பமாய் –
அதிலும் விசத தமமான ஸ்வ அனுபவ தசையில்
அழகிய திரு மேனியைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

அப்படிப்பட்ட அழகை யுடையவன் திருக் கையிலே பிரதி பக்ஷத்தின் மேலே சீறு பாறு என்னா நின்றுள்ள
தேஜோ ரூபமான திரு வாழியைக் கண்டேன் –

துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும்
துரத்தி விட்டுப் பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் –
துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும் செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

(ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -மநு ஸ்ம்ருதி -12-122-மானஸ ஸாஷாத் காரம்
ஸூ பாஸ் ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருளி வாஸனா ருசியையும் போக்கி அருளியவனுடைய பலத்தைக் கண்டேன்
தானி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத் பர -என்று இவ் வர்த்தம் கீதையில் காட்டப்பட்டுள்ளது அன்றோ)

——————————————————————————————-

பிரயோஜனாந்தர பரரே யாகிலும் -தன்னை வந்து அர்த்தித்தால் வருந்தியும் –
அவர்கள் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் என்கிறார் –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலி மிக்க–மஹா பலசாலிகளாய்
வாள் எயிற்று–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட் படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள் வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மத யானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

பெரு மிடுக்கராய்-ஒளி விடுகிற எயிற்றை உடையருமாய் சாயுதருமான ஆசூர பிரக்ருதிகள் நசிக்கும் படியாகவும்
தான் நெருங்கின இடத்திலும் பிரிந்து-திரிந்து – போகாத படி கடி நோத்தரமாய்-ஒளி விடுகிற மந்த்ர பர்வதம் மத்தாகவும்
நெடும் போது இடவாய் வலவாய் சுற்றிக் கடைகிற அளவிலும் -அற்றுப் போகாதபடியான மிடுக்கையும்
மலையோடு தேய்ப் புண்கையாலே வந்த ஒளியையும் உடைய வாஸூகியாகிற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றிக்
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படியாக கடலைக் கடைந்து அருளினவன் சர்வர்க்கும் வேர்ப் பற்றான

தன் திறத்தில் நலிய வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்ட
சர்வ சேஷி கிடீர் –

இத்தால் தம் விரோதியைப் போக்கித் தம்மை எழுதிக் கொண்ட படி சொல்லுகிறது –

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -பெரிய திரு -5-7-4-
இப்பாசுரத்தால் தமது விரோதிகளை போக்கித் தம்மை தோற்பித்துக் கொண்டான் சர்வேஸ்வரன் என்கிறார்)

——————————————————————————————————-

ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில்
ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் –

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூ மண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப் பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பல பல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

சர்வத்துக்கும் ஸ்வாமி களாக முடி சூடி -பரப்பை யுடைத்தான பூமியை -சிறியதை பெரியது நலியாத படி ரக்ஷித்து
நம் கண் வட்டத்தில் குதிரை முதுகே படை வீடாக நடத்திச் செல்கின்ற ராஜாக்களும் -போக்யதை பொருந்தி இருந்துள்ள சிவந்த
தாமரைப் பூவைத் திரு நாபியிலே யுடையனாய் -(பூ புஷ்ப்பம் என்றும் இனிமை -போக்யதை என்றும் )

அத்தாலே சர்வ காரண பூதனான சர்வேஸ்வரனுடைய சிவந்த திருவடிகளிலே
ஜென்மங்கள் தோறும் குளிர்ந்த தாமரைப் பூ முதலான புஷபங்களைச் சாத்தி ஆராதித்த
ஆஸ்ரிதர் கிடீர் -ஏய்ந்தாருடைய (ப்ரஹ்மாதிகளுடைய )தமர் கிடீர் -என்னுதல் –
செங்கமலப் பூ மேவும் நாபியான் -என்னவுமாம் –

பூ வேகும் செங்கமல நாபியான் -என்று பாடமான போது -(எதுகைக்கு இது பொருந்தும் )
பூக்கள் தள்ளும் படியான (வெட்கப்பட்டு ஒதுங்கும் படி )செவ்வியை யுடைய
கமலத்தை நாபியிலே உடையவன் என்று பொருளாகக் கடவது –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –-பெரிய திருவந்தாதி -72-

(ஏய்ந்தார் தமர் -இவனை ஆஸ்ரயித்தவர்களே சக்கரவர்த்திகள் ஆவார் என்றும்
ஏய்ந்தாருடைய தமர் என்று இவரை ஆஸ்ரயித்த ப்ரஹ்மாதிகளை ஆஸ்ரயித்தவர்களும் சக்கரவர்த்திகள் ஆவார் என்றும் கொள்ளலாம் -)

——————————————————————————————————–

இப்படி பிரயோஜனாந்தர பரராய் ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
அநந்ய பிரயோஜனராய் தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி
ஓக்க விரும்பி அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

(ஆழ்வார் திரு உள்ளத்துக்கு எட்டு திவ்ய தேச வாசமும் ஒவ்வாது -எட்டைச் சொன்னது அனைத்துக்கும் உப லக்ஷணம்
பக்தானாம் -அடியார் உள்ளமே -அவனுக்கு பரம புருஷார்த்தம்

சோழ நாட்டு இரண்டும் -தலை அடை மொழி -தொண்டை நாட்டு -தண் கால் –
தமர் உள்ளும் -திருவேங்கட யாத்திரை மநோ ரதம் -தண் பொருப்பு
வேலை -திருப்பாற்கடல்
தமர் உள்ளும் புண்டரீகர் போல்வார் சிந்திக்கும் திருக்கடல் மல்லை
திருக்கோவில் -இவர்கள் மூவரும்
மதிள் திருக்குடந்தை -இங்கு தானே சாரங்க பாணி -ஸூ ரஷிதம் -திராவிட ஆம்னாய பெருமாள் அன்றோ

இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -அச்சு எழுத்து குறைவான புராணம் முதலில் சொல்லாமல்
அப்யஹிதம் பொருள் உயர்ந்த ஒன்றை முதலில் சொல்ல வேண்டும்
அதே போல் இங்கும் -அர்த்த கௌரவத்தாலே
வந்தே கோவிந்த தாதவ் -பட்டர் எம்பாரைச் சொல்லி பின்பே கூரத்தாழ்வானை அருளிச் செய்தது போல் இங்கும்
தமர் உள்ளமே அவனுக்கு பரம புருஷார்த்தம் )

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பதவுரை

தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப்பாற்கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக்கடன்மல்லை
கோவல்–திருக்கோவலூர்
மதிள் குடந்தை–திருமதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு -பெருமாள் கோதண்ட பாணி சக்ரவர்த்தி திரு மகன் –இருப்பிட மென்பர்.

மேல் சொல்லுகிற திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதம உத்தேசியமான ஆஸ்ரிதருடைய ஹிருத்யங்கள் —
தஞ்சை மா மாணிக் கோயில் -திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதானமான பரம பதத்தோடே கூட என்னலாம் படியான கோவில்
திருத் தண் கால் -ஸ்ரீ வைஷ்ணவர் தங்களுக்கு சர்வ ஸ்வம்மாக அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை
எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் -ஆஸ்ரிதரான புண்டரீகாதிகள் தங்களுக்கு உத்தேச்யமாக அனுசந்தித்து இருக்கும்
தறைக் கிடைக் கிடக்கும் திருக் கடல் மல்லை -எங்கள் மூவரோடும் ஓக்க நெருங்கின திருக் கோவலூர்
அரணான மதில்களை யுடைத்தாய் திரு மழிசைப் பிரான் உகந்த திருக் குடந்தை –

ஆகிற இவ்வோ திவ்ய தேசங்கள் எல்லாம்
பிரதி பக்ஷத்தை எய்து விழ விட வல்ல என் ஸ்வாமி யான தசாரதாத் மஜனுக்கு வாசஸ் ஸ்தானமாக
அறிவுடையார் சொல்லா நின்றார்கள்-

ஏ வல்ல வெந்தை-
எய்க்கைக்கு வல்லனான என் ஸ்வாமி -என்றபடி –

(தமர் உள்ளம் -அப்யர் ஹிதம் பூர்வம் -சிறந்த ஒன்றை முதலில் சொல்வதே நியாயம் –
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -என்றும்
நெஞ்சமே நீள் நகர் -திருவாய் -3-8-2-என்கிறபடியே
பெரும் கோயிலை முதலில் சொல்லி
வெள்ளத்து இளம் கோயில் -இரண்டாம் திரு -54-என்றபடியே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் போன்ற திவ்ய தேசங்களாக இளம் கோயில்கள் எல்லாம்
பிரதிபக்ஷத்தை எய்த்து விழ விட வல்ல தசரதாத்மஜனுக்கு வாசஸ்தானம் என்பர் அறிவுடையோர் என்கிறார்
ஏ வல்ல எந்தை -எய்தற்கு வல்லனான என் ஸ்வாமி என்றபடி -)

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -51-60– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 15, 2016

இப்படி அவன் திரு நாமத்தை சொல்லுகைக்குத் தம் ஈடுபாட்டை அனுசந்தித்தவர் –
நெஞ்சே நீ முந்துற முன்னம் என்னைப் போல் கலங்கி தளராதே
அவன் ஸுந்தரியாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் என்கிறார்-

மதிக் கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக் கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51–

பதவுரை

நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளை
மதி கண்டாய்–அநுஸந்திக்கக் கடவாய்-லாவண்யம் ஸூவுந்தர்யங்களை சொன்னவாறு –
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப் பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப் பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-

நெஞ்சே நீல மணி போலே இருந்து குளிர்ந்த வடிவை யுடையவன் திருவடிகளை புத்தி பண்ணு கிடாய் –
அதுக்கு மேலே அந்த சர்வேஸ்வரனுடைய அவ்வடிவழகுக்கு வாசகமான திரு நாமங்களை புத்தி பண்ணு கிடாய் –

தன் படுக்கையான பெரிய திருப் பாற் கடலில் நின்றும் பெயர்ந்து எழுந்து இருந்து நின்று –
பிரயோஜனாந்தர பரருக்கு அபேக்ஷித சம் விதானம் பண்ணுகைக்காக அந்தக் கடலைக் கடைந்தவனாய் –
அப்போது ஒரு வெண் கடலைக் கருங்கடல் கடைந்தால் போலே ஆகர்ஷகமாய் தோற்றுகிற
நிறைந்த நீரை யுடைய கடல் போன்ற வடிவை யுடையவன்
திரு நிறத்தை தேவர்களைப் போலே உப்புச் சாற்றை நச்சாதே
புத்தி பண்ணி அனுபவிக்கப் பார் கிடாய் –

(கண்டாய் -ஒவ்வொன்றையும் நன்றாக அனுபவித்து அனுசந்திக்க -சாத் மிக்க சாத் மிக்க-மீண்டும் மீண்டும் அருளிச் செய்கிறார் -)

(தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -விஸ்தாரமான திருமேனியோடே கண் வளரலாம் படியான பெரிய திருப்பாற் கடல்
கடல் கடையும் போதைக்கு ஒரு வெண் கடலை ஒரு கரும் கடல் கடைந்தால் போல் ரமணீயமாய்
கடல் போன்ற திரு நிறமுடையவனது அழகை பொறுக்கப் பொறுக்க அனுபவிக்கப் பாராய் என்கிறார் -)

——————————————————————————————————–

திரு உள்ளத்துக்கு உபதேசிக்க வல்லரான தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதி யுடைய வடிவு அழகையும்
பிராட்டி சம்பத்தால் வந்த மிக்க கிருபையையும் அனுசந்தித்து
இது ஓருவருக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார்

(அகல்விக்கத் தானும் கில்லான் -ஆழ்வாரை விட அவர் திரு உள்ளம் ஸ்ரேஷ்டம்
அத்தை யுடையவர் ஆகையால் ஆழ்வாருக்கும் ஸ்ரேஷ்டம்
மிதுன -சேர்த்தி –அவளாலேயே தர்மம் சாஸ்தாபனம் -இங்கே தர்மம்-ஆன்ரு சம்சயம் கிருபை –
கிருபையையும் அழகையம் -அளவிட்டு அறிய யாவராலும் முடியாதே-தானும் தன் தன்மை அரியான்)

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–

பதவுரை

நிறம் கரியன்–(காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப் பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்

ந்ருஸம் -கருணை இல்லாதவன் -ஆளவந்தார் நைச்யம் பாவித்து அருளிச் செய்துள்ளார் அன்றோ
ஆன்ரு சம்சயம் -தர்மம் -கருணை அதிசயம் –
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட் கையனான இராவணன் போன்ற மஹா பலியை
(இராவனைப் போலவே தலை யறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்ட காலம் வாழும்படியாக
உய்த்தான்–செலுத்தின அப் பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ள வல்லர்?-

(இந்திர லோகம் போல் பயப்பட வேண்டாத படி நீள் இருக்கையான பாதாள லோகம் என்றுமாம்

யார் அறிவார் -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்த்து அந்வயம்-அவனது கருணையின் பெருமை யார் அறியார்
அவளால் தான் இது என்பதை என்பதை யார் அறிவார்
மிதுனத்தில் அழகை யார் அறிவார் )

ஆஸ்ரிதருடைய சகல தாபங்களும் போம் படி ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை யுடையவனாய் –
அந்நிறத்துக்கு பரபாகமான -சிவந்த நிறத்தை யுடையவளாய் -பெரிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையவனாய் -அவளோட்டைத் தோயல் வாசியாலே ஆன்ரு சம்சயம் மிக்கு இருப்பவனாய்

திருவினைப் பிரிக்கை யாகிற குரூரமான செயலைச் செய்த சாயுதனான ராவணனோடு ஒத்து இருந்துள்ள மஹா பலியை
அழியச் செய்யாமல் அவனுடைய உதார குணமே பற்றாசாக -ராஜ்ய ஸ்ரத்தை பண்ணினவன் இழக்கிறது என் என்று

தன்னுடைய ஆன்ரு சம்சயத்தாலே தேவர்களுக்கு நிர்வாஹகனான இந்திரனுடைய ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமாய் இருக்கும்
பாதாள லோகத்தில் -அவனைப் போலே பரி கொடுத்து கண் பிசைய வேண்டாத படி –
நெடும் காலம் இருக்கைக்குப் பண்ணிக் கொடுத்த சர்வேஸ்வரனுடைய அந்த கிருபா பிரகாரத்தை –
ஆர் தான் அறிவார் -ஒருவராலும் அறியப் போகாது -என்று கருத்து –

(மிதுனச் சேர்த்தி அழகு –
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீலமுண்ட மின்னன்ன மேனிப்பெருமான் -திரு விருத்தம் -29-
தயா ஸ ராஜ ரிஷி ஸூத அபி ராமயா ஸமேயிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாம் அரேஸ்வர -பால -77-80-
ஆன்ரு சம்ஸயம் பரோ தர்ம -ஸூ ந்தர -38-41-
அவள் சம்பந்த்தாலேயே பேர் அருளாளன் ஆகிறான் –
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூ ந்தர -38-41- அவளுக்கும் அவன் உபதேசித்து அருளுவான்

அருளின் பெருமைக்கு உதாஹரணம் மேல் –

சுரி குழல் கனிவாய்த் திரு வினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பெரிய திருமொழி -5-7-7-
கோபம் ஆஹாரயத் தீவ்ரம் -ஆரண்ய -24-34-
கோபஸ்ய வஸமே யிவான் -யுத்த -59-136-

யத்ராம்பு விந்யஸ்ய பலீர் மநோ ஜ்ஞாந் அவாப போகான் வஸூதாதலஸ்த
ததா மரத்வம் த்ரித ஸாதி பத்யம் மந்வந்தரம் பூர்ணம பேத ஸத்ரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-30-
தான நீர் வார்த்ததாலேயே இவ்வுலகக போகங்களை அடைத்து மேலே ஒரு மன்வந்தர காலம் எதிரிகளே அற்றவனாய் மூ வுலகையும் ஆளும் தேவேந்திர பதவியும் பெற்றானே
நெறி என்று ஸ்வர்க்கம் போல் சிறந்த பாதாள உலகையும் அருளையும் காட்டும் )

———————————————————————————————————–

இப்படி ஆசூர பிரக்ருதிகள் அளவிலும் அனுக்ரஹ சீலனானவன் சர்வருக்கும் கண்ணாலே காணலாம் படி
வந்து நித்ய வாசம் பண்ணுகிற திருமலை கிடீர் நாங்கள் ஆதரிப்பது -என்கிறார் –

(கா மறு சீர் அவுணன் -அசுரர்களில் தாழ்ந்த நமக்காக அன்றோ திருவேங்கடத்தில் நித்ய வாஸம் செய்து அருளிகிறான்

நெறியார்-இதுவே நிரூபகம் கோயில் காப்பான் வாசல் காப்பான் போல் -இவர்களுக்கு -எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே போல் பாகவத உத்தமர்கள் வழியிலேயே ஊன்றி இருப்பார்களே)

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

பதவுரை

நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றி யிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தியென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்ய வாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலை யென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்பட வுரிய
வெற்பு–திருமலையாகும்.

திருமலை ஆழ்வார் உத்தேச்யமாக அனுசந்தித்து -மற்று ஓன்று அறியாதே (சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -ஏவகாரம் -அவனும் வேண்டாம் )-வழி பட நெடும் காலம் ஆஸ்ரயிக்கிறவர்களுடைய
குழல் கற்றையிலே முன்னே முளைத்துப் பின்னளவும் வர வளர்ந்து -தாழ விழுந்து –
மூச்சு விடுதல் உடம்பு அசைத்தல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு –
சில சேதனர் என்று அறியாதே சிறு மலைகளாய் இருக்கும் என்று புத்தி பண்ணி
அவ்விடத்தை விட்டு நீங்காதே -கண்ட இடம் எங்கும் பரந்து பூத்த கொடிகளானவை -நித்ய வாசம் பண்ணும் ஸ்தலமாய்
தன்னில் தான் திரை பொரா நின்றுள்ள (பொரு புனல் வேங்கடம் )ஜல ஸம்ருத்தியை யுடைத்தாய் அதி பிரசித்தமான
திருமலையே நாங்கள் பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-

(வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலை யுடையேனாவேனே -பெருமாள் -4-8-
இதுவே உத்தேச்யம் என்று நெறியைக் கொண்டே இவர்கள் நிரூபகம் -)

—————————————————————————————————–

இப்படி தாம் அவன் உகந்து வர்த்திக்கும் திருமலை அளவும் விரும்புகையாலே
இவனும் தான் உகந்து வர்த்திக்கிற இரண்டு திருமலைகளில் பண்ணும் விருப்பத்தைத்
தம் திரு உள்ளத்தில் ஒன்றிலும் பண்ணிக் கொண்டு மேலே விழுகிற படியை அருளிச் செய்கிறார் –

(திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –ஏறி வந்த ஏணி போல் -க்ருத்தஞ்ஞா கந்தம்)

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

பதவுரை

வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இளம் கோவில்–திருப் பாற்கடலாகிற பாலாலயத்தை
கை விடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.

(உள்ளினேன்-உள்ளம் வைத்ததாய் என்பதை நான் நினைத்தேன் என்றும்
கை விடேல் என்றும் உள்ளினேன்)

திருமால் இருஞ்சோலை மலை என்றும் திரு வேங்கடம் என்றும் திரு நாமத்தை யுடைத்தான
பெரிய திருமலை என்றும் சொல்லப் படுகிற இரண்டு ஸ்தானமும்
நாம் உகந்து வர்த்திக்கிற வாசஸ் ஸ்தானம் என்று நீ புத்தி பண்ணும் ஆதரிக்கும் ஸ்வ பாவம் போலே –

என்னுடைய ஹ்ருதயம் என்கிற வாசஸ் ஸ்தானமும் நீ உகந்து நித்ய வாசம் பண்ணும் ஸ்தானம் என்று
புத்தி பண்ணி என்னுடைய ஹிருதயத்தில் பண்ணுகிற அபிநிவேச அதிசயம் இருந்த படியால் அவ்வவ திருமலைகளில்
நிலை நிற்கும் படியும் -என் ஹிருதயம் திருந்தும் அளவும் வாசஸ் ஸ்தானமாக கர்ப்பித்ததான திருப் பாற் கடலாகிற
பாலாலயத்தையும் விடாத தேடுகிறாயோ என்று நினைத்து –

என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின அவ்விடத்தை
க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-உன் உகப்பைப் பற்றவும் –
பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

(மதுர கவி ஆழ்வார் கரிய கோலத் திருக் கோயில் காண்பது ஆழ்வார் திரு உள்ளம் உகப்புக்காக
ஆழ்வார் திரு உள்ளம் உகப்பதால் பெருமாளையும் இவற்றைக் கைவிடக் கூடாது என்கிறார்
மதுரகவி நிஷ்டையை அவனும் உகப்பானே)

(திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி –68-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–நான்முகன் திரு -36-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –பெரியாழ்வார் –5- 4-9 –

ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் –

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் –ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -170-

அங்குத்தை வாசம் சாதனம் –இங்குத்தை வாசம் சாத்யம் –சூர்ணிகை-171-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே-இது சித்தித்தால் –அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –சூரணை -174-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –சூரணை -173-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்–க்ருதஞ்சதையாலும்–பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் —சூரணை -174-)

—————————————————————————————–

இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன்
தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

(ஞானம் -மதி நலம் அருளினாய் -ஞப்த்தி பல முக்தி தலை சேர வேண்டாமோ -அதுக்குப் பலமாக பரம புருஷார்த்தமும் அருள வேண்டாமோ
இன்பக் கடலாழி நீ யருளிக் காண்–55–உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -நம்மாழ்வார் இந்த பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்
ஏழு பிறப்பும் -அதிலும் எப்பொழுதும் -எல்லா நிலைகளிலும் ஸ்திரமாக -நின்று அருளிய படியால்
என்றும் மறந்து அறியேன் –இந்த அவஸ்தை உண்டாக்கி கூப்பிட வைத்து அருளினாய்)

(பிராட்டி சொல்ல ஸ்ரோத்வயா கேட்டுக்கொண்டு
மனனம் பண்ணி
யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்ட தப்பி ஒடம்ப பார்க்க
நிதித்யாசித்வய
ஏழு பிறப்பும் நினைத்தீர்
எப்பொழுதும் நினைத்தீர்
நிலை நின்று நினைத்தீர்
ஆக ஆத்மா கேட்டு மனனம் பண்ணி நிதித்யாஸவ்ய-பண்ணும் க்ருத்யம் நீயே ஏறிட்டுக் கொண்டாயே)

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பதவுரை

வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.

பிரபல பிரதிபந்தகங்களை அநாயாசேன போக்குகையாலே –
வரும் வெற்றி பெற்று யுடையனாய் யுத்த உன்முகனான திரு வாழியை -விரோதி நிரசன தவரையால்
எப்போதும் கையிலே கொண்டு இருக்குமவனாய் –
அஞ்ஞான அசக்தியாதிகளுக்கு கொள்கலமான என்னால் உன்னைப் பெற ஒண்ணாது –

ஞான சக்தி யாதிகளாலே குறைவற்ற உன்னாலே
உன்னைப் பெற வேணும் என்னும் இடத்தை பத்தும் பத்தாக அறிந்து இருக்கும் சர்வஞ்ஞனே–
இப்படி இருக்கிற நீ எல்லா ஜென்மங்களிலும்
எல்லா அவஸ்தைகளிலும் எதிர் சூழல் புக்கு இவன் நம்மை மறவாமல் பெற்றிடுவானுக்கு –

என்று நினைக்கும் நினைவு ஒருநாளும் மாறாதே
போருகிற ஸ்வ பாவத்தால் சர்வ காலத்திலும் தேவரீரை மறந்து அறியேன் —
இப்படி பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீ
ஞான பலமாக ஒரு தேச விசேஷத்திலே போந்து பரி பூர்ணமாக உன்னை அனுபவித்து விளையக் கடவ
அபரிச்சின்னமான ஆனந்த சமுத்திரத்தை தந்து அருள வேணும் காண் —

கடல் என்றும் ஆழி என்றும்
மீ மிசைச் சொல்லாய்
மிகவும் நிரதிசய ஆனந்தத்தைச் சொன்னபடி –

(எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -திருவாய் -2-7-6-என்கிறபடியே
எல்லாக் காலத்திலும் என்னைப் பற்றிய நிலையான நினைவு தன்மை உனக்கு இருக்கையாலே
நான் இப்பிறவியிலே உன்னை என்றும் அறியாத பெருமை பெற்றேன் –
என்னை நியமிக்க வல்ல உன்னாலே பெற்ற பேறு அன்றோ இது –
ஏழு பிறப்பு என்றது எக் காலத்தையும்
எப்பொழுதும் -எல்லா அவஸ்தைகளிலும் நிலைகளிலும் என்றவாறு
என்றும் மறந்து அறியேன் -என்னும்படியான ஞானத்தை விளைத்த நீயே அதன் பலனாக மோக்ஷத்தையும் தந்து அருள வேணும் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்னுமா போலே –
இன்பக் கடல் ஆழி -பேர் இன்பம் -ஏஷ ஹ்யேவ ஆனந்தயாதி-தைத்ரியம் -7-1- இவனே ஆனந்தம் அடைவிக்கிறான் )

—————————————————————————————————————-

இப்படி பேறு அவனாலே என்று நிச்சயித்த பின்பு அருள் (அருளுவாய் )என்று கொண்டு வடிம்பிட்டு (மடி பிடித்து )நிர்பந்திக்கக் கடவதோ என்ன
ப்ரேமம் அடியாக வந்த இருட்சி (நமக்கோ அஞ்ஞானம் அடியாக வந்த இருட்சி )உடையாருக்கு பற்றாசும் அங்கே உண்டாய் இருக்க ஆறி இருக்கப் போமோ -என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப்பம என்றால்–மேன்மேலும் அதிகரித்தால்
அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே-குணம் ஸ்வரூபம் காண முடியாதே -திருமேனி மூலமாகவே அறியலாம்
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பள்-உக்கமும் தட்டொளியும் உன் மணாளனையும் தந்து -பிரார்த்திக்கும் படி உண்டே

காணக் காண பழைய நிலை கழிந்து மேன்மேல் என வளர்ந்து வருகிற ப்ரேமமானது என்னால் அமைக்க ஒண்ணாதபடி
கை கழிந்து விட்டால் -அவனே வந்து மேல் விழும் அளவும் நாம் பதறுகை ஸ்வரூப ஹானி என்று லஜ்ஜித்து
ஓர் இடத்தில் ஒதுங்கி இருக்க வேணும் என்று விசாரித்தால் –

அப்படி முறை (ஸ்வரூபம்)பார்த்து -தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று ஆறி இருக்கப் போமோ –

அதுக்கு மேலே ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை யுடைய சர்வாதிகனாய் ஸ்ரீயபதியானவனை-
அத்யுஜ்ஜ்வலமாய் -ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதுக்கு முன்னே

நமக்கு ஸ்வாமி நியான பெரிய பிராட்டியார் -ஆதரித்துக் கொண்டு வந்து காட்டும் –

நகச்சின் நபராத்யதி -என்று மேல் விழுந்து சேர்க்கும் பிரபல புருஷ காரம் உண்டான பின்பு –
முறைக்குச் சேராது பதறுகை -என்று லஜ்ஜித்து ஆறி இருக்கப் போமோ -என்கிறபடி –

கண்டு அல்லது கழியாத காதல் -என்னவுமாம் –

(திருமேனி உபாயம் -உபாய பாவத்தை அவன் காட்டும் முன்பு பிராட்டி புருஷகாரம் பண்ண வேண்டுமே
திருமேனி உபாயம் என்பதுக்கு சிந்தயந்தி உதாஹரணம் -மானஸ ப்ரத்யக்ஷம் ஒன்றாலே பேறு பெற்றாள்
மாலாகாரர் -திரு மேனி காட்ட வந்தாயே -ஸூவுந்தர்ய ஸுசீல்ய குண ஆவிஷ்காரத்தால் அக்ரூர மாலாகார்களை பரம பாகவதர்களாக ஆக்கி அருளினாய் -கீதா பாஷ்யம் -)

(கழிய மிக்கதோர் காதல் காதலள்-திருவாய் -5-5-10-பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -மூன்று திருவாய் மொழிகளில்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் -திரு விருத்தம் – 97-காலம் கழிய கழிய காதல் மிக்கும் என்றும் -கண்டால் தான் கழியும் காதல் என்றுமாம்
புருஷகார பூதையான தாயாரும் அங்கே இருக்க -தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் -ஸூ ந்தர -39-30-என்று ஆறி இருக்க ஒண்ணாத தசை
சிந்த யந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாஸ தயா முக்திம் கதான்யா கோப கன்யகா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-22-
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ்
தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமீ த்யாஹ மால்ய உப ஜீவந -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21-
ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் க்ருத்வா -ஸ்ரீ கீதா பாஷ்ய ப்ரவேஸம்
கிம் ஏதத் நிர்த்தோஷ க இஹ ஜகதி –ஸ்ரீ குணரத்ன கோசம் -உசித உபாயங்களால் அவன் கோபத்தை ஆற்றுவாள்
தேந மைத்ரீ பவது -ஸூ ந்தர -21-21- அருள் உபதேசத்தாலும் அருள் நோக்காலும் இவனைத் திருத்துவாள்
அவனை அழகாலே திருத்துவாள் -இவனை அருளாலே திருத்துவாள்
இவளை உபாயமாகக் கொண்டால் உபாய நைரபேஷ்யத்துக்குக் குறை வருமே
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர் ஷிபி
மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லக்ஷணம் பவேத் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம்
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -146-44-சேரவிடும் புருஷகார பூதையும் அங்கமு இருக்க ஆறி இருக்க ஒட்டுமோ -)

————————————————————————————————–

இப்படி பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவன் கிடி கோள்-சர்வ ஸமாஸ்ரயணீயன் -என்கிறது –

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

பதவுரை

திரு மங்கை–பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம்–நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம்–நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம்–திருவடிகளையும்
பேர்–திருநாமங்களையும்
உரிமையால்–ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம்–போற்றுமவர்களாயிராநின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர்–உறுதியாகப் பற்றுங்கள்
நாம்–நாமோவென்றால்
இரும் தடக்கை எந்தை–மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை)
நால் திசையும்–நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே–கேட்டீர்களோ?

ஸ்வ சம்பந்தத்தாலே அவனுக்கு சர்வ உத்கர்ஷத்தையும் யுண்டாக்க வல்ல ஸ்வ பாவத்தை யுடையளாய்
போக யோக்கியமான பருவத்தையும் யுடையளான -பெரிய பிராட்டியார் -இறையும் அகலகில்லேன் என்று
இடைவிடாமல் உறையும்படி இருக்கிற சர்வாதிகனானவனை –
நாவால் ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற கார்யத்திலே ஒருப்படுங்கோள் கிடிகோள் –

முறை அறிந்த மாத்திரம் ஒழிய அவ் விஷயத்தைப் பற்றுகைக்கு ஈடான நன்மைகள்
ஒன்றும் அற்ற அயோக்யரான நாம் –
பணைத்து வளர்ந்த திருத் தோள்களை யுடைய என் ஸ்வாமி யானவனுடைய திருவடிகளை
நமக்கு வகுத்த சேஷி யன்றோ -என்கிற பிராப்தியாலே அவன் திரு நாமங்களைக் கொண்டு ஏத்தினோம் –

இவ் வர்த்தத்தை நாலு வகைப்பட்ட திக்கில் உள்ளார் எல்லாரும் கேட்டீர்களே –
கடைப் பிடிமின் கண்டீர் –

இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே புத்தி பண்ணுங்கோள் கிடி கோள் -என்னவுமாம் –

(ஸ்ரீர் இத்யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஸ்ரீ சதுஸ்லோகி -1-
விஷ்ணோர் ஸ்ரீ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
உன் திரு -திருவாய் -10-10-2-
ஸ்வத ஸ்ரீ ஸ்தவம் விஷ்ணோ ஸ்வமஸி தத ஏவைஷ பகவான்
த்வதா யத்யர்த்தி த்வேப்ய பவத பராதீன விபவ
ஸ்வயா தீப்த்யா ரத்னம் பவமஹார்க்கம் ந வி குணம்
ந குண்ட ஸ்வா தந்தர்யம் பவதி ச ந சான்யா ஹித குணம் –ஸ்ரீ குணரத்ன கோசம்
ரத்ன பிரபா புஷ்ப பரிமள நியாயத்தாலே பர ப்ரஹ்மத்துவத்துக்குக் குறையில்லையே –
யுவதிஸ் ச குமாரிணி -யுவஸ்ய குமார –
அபாங்கா பூயாம் ஸோ யது பரி பரம் ப்ரஹ்ம தத பூத் —ஆழ்வான் அவளது பூர்ண கடாக்ஷத்தாலே பரம் பொருளானதே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி -பட்டர்
அகலகில்லேன் இறையும் -6-10-10-)

———————————————————————————–

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து -சர்வேஸ்வரனுடைய கடாக்ஷத்தாலே -என்கிறார் –

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதி யானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து  நீர்மைக் கொண்டு
எம்மை–
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாக வுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

வேம்பாகிற பதார்த்தத்தினுடைய ஸ்வ பாவம் போலே -இவ் விஷயத்தை ஏத்துகை யாகிற இது
அத்யந்த விரசமாய் இருந்ததே யாகிலும்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியும் கையுமான சேர்த்தி அழகை ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் பாடு -என்று
சரஸ்வதி யானவள் – நமக்கு இருந்து திருத்துகைக்கு நல்ல ஸ்தலமாய் இருந்தது என்று ஆதரிக்கும் படி
விலக்ஷணமான நெஞ்சிலே முகம் கருக நியமியாமல்
நம் நினைவிலே தன்னை அமைத்து ராஜ புத்திரர்களை பள்ளி ஓதுவிப்பாரைப் போலே
அனுவர்த்தித்துக் கொண்டு இருந்து நம்மை சந்தையிட்டு ஓதுவித்து நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற
அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வ பாவமாக யுடையனான சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக
சர்வ ஸ்வதானம் பண்ணின பிரசாதம் அடியாக வந்ததாய் இருக்கும் –

(லோகே வநஸ் பதி ப்ருஹஸ் பதி தார தம்யம் யஸ்யா
கடாக்ஷ பரிணாம முதா ஹரந்தி ஸா பாரதீ பகவதீ -ஸ்ரீ ஸ்தவம்
கருக்கோட்டியுள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம் -87-
ஸர்வ ரஸ -ஸர்வ கந்த
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -திருவாய் -2-3-1-
வேம்பின் –பாடு என்று ஓதுவித்து -என்று அந்வயம் -ஸ்ரீ அப்பிள்ளை
வேம்பின் –பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -என்று அந்வயம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை )

——————————————————————————————————–

இந்த லாபத்துக்கு அடியாக அடியிலே அவன் நிர்ஹேதுகமாக தம்மைக் கடாஷித்த படி -சொல்லுகிறார் –

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பதவுரை

அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே-பொருள் அல்லாத -நம்மை பொருளாக ஆக்கி -கடாக்ஷத்தாலே பொருள் ஆவோம்
இருள் திரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படி யுள்ள அத் திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத் திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.-பிராபகமும் இதுவே –

அருளி அல்லது நிற்க ஒண்ணாத படி அருளிலே நோக்கான தேவருடைய திரு உள்ளத்தை -அருளுகைக்கு அடியான
சேஷத்வ ப்ராப்தியை யுடையரான -எங்கள் மேலே பரிபூர்ணமாக வைத்து -எங்களை ஒரு வஸ்து பூதராக நிரூபித்து
கடாக்ஷித்து அருளுகிற அந்த க்ஷணத்தில் அஞ்ஞானம் ஆகிற இருள் அடங்கலும் போன வழி தெரியாத படி சிதறிப் போய்
தேவர் சேஷீ நாம் சேஷம் -என்று இவருடைய ஸ்வரூபத்தையும் தெளியக் கண்டேன் –

(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி என்றும்
அர்த்த பஞ்சக ஞானம் வந்த பின்பு என்றும்)

இப்படி இரண்டு தலையையும் யதாவாக தரிசித்து -தேவருடைய அழகிய தாமரை போலே நிரதிசய போக்யமான
அந்தத் திருவடிகளையே பரம பிராப்யமாக அனுசந்தித்தேன்
என்னோடு எனக்கு உரிமை இல்லாதபடி தேவர்க்கே அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற படியை உள்ளூற நிரூபித்து
ஸ்வ ரக்ஷணத்தில் இறங்குகைக்கு அநர்ஹனான என்னையும் தன்னைப் பெறுகைக்குத் தானே உபாயமான
அந்தத் திருவடிகளிலே நிஷேபித்தேன் -(நிஷேபம் ந்யாஸம் சரணாகதி பர்யாய சொற்கள் )
உபாயமும் தேவரீர் திருவடிகளே என்று அத்யவசித்தேன் என்றபடி

இத்தால் கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி –
பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –

அருளிலே நோக்கான திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து –
அத்தாலே நாங்கள் பதார்த்த விவேகம் பண்ணி தர்சிக்கிற போது என்னவுமாம் –

(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -திருவாய் -5-7-3-
அசன்னேவ-இத்யாதி
யம் பஸ்யேந் மது ஸூதந –
பொருள் தெரிந்து -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
ஸ்வத்மம் ஆத்மநீ ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யாம் ஹரி
நிக்ஷேபாபர பர்யாய ந்யாஸ –
த்வமே உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி ஸரணாகதி
இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன்
ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும்
அக்கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் –
அவனை அடையைப் பதற்றமும்
அவனே உபாயம் என்ற துணிவும்
உண்டானபடியை அருளிச் செய்தார் ஆயிற்று )

——————————————————————————————-

இப்படி சர்வேஸ்வரன் தன் பெருமை பாராதே எளியனாய் தம்மையே விஷயீ கரித்த நீர்மையை அனுசந்திக்கையாலே –
நிராங்குச ஸ்வ தந்த்ரனான மேன்மை அன்று அவனுக்கு நிலை நின்ற வேஷம் -ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
என்று அறிந்து இருக்குமவர்கள்– ஜகத்தை சர்வ காலமும் ரக்ஷிக்குமவர்கள் என்கிறார் –

(பிராட்டி புருஷகாரம் செய்யும் போது ஸ்வாதந்தர்யம் தலை சாயும் -ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்கும்

எளிவரும் இயல்வினன் என்று சொல்லும் ஆழ்வார்களே மண் காப்பார் ஆவார்
அத்விதீயம் பரத்வம் ஒன்றை மட்டும் சொல்வார் அல்லர் -என்கிறார்)

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

பதவுரை

ஓர் உருவம் அல்லை–(எம்பெருமானே) பரத்வமே வடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம்–ஆஸ்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம்–உனது வடியாம் (இப்படி ஆஸ்ரித பாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர்–இப் பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர்–பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம்–ஆஸ்ரித பாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம்–எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர்–தெரிந்து கொள்ளுமவர்களே
நீதியால்–நியாயப்படி
நின்று–நிலைத்து நின்று
மண் காப்பார்–உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

உன் படி பார்த்தால் என்றும் ஒருபடிப்பட ஸ்வ தந்திரமாய் இருப்பதொரு ஸ்வரூபத்தை யுடையை அல்ல –
பக்தாநாம் தவம் பிரகாசாசே-என்கிறபடி
உன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காக்கி -அத்தாலே புகர் பெற்று
உஜ்ஜவலமாய் இருக்கிற ஸ்வரூபம் உனக்கு நிலை நின்ற ஸ்வரூபம் –

இப்படி இருக்கிற உன்னை இந்த ஆஸ்ரித பாரதந்தர்யத்தின் ஏற்றம் அறியாத மஹா பிரத்வியில் உள்ள வாய்கரையர் ஆனவர்கள்
நிராங்குச ஸ்வாதந்திரம் ஆகிற பெரிய ஸ்வரூபத்தை யுடையவன் -என்று இத்தை பெரிய ஏற்றமாகச் சொல்லா நின்றார்கள் –

ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே -என்னும் படி
ஆஸ்ரித பரதந்த்ரம் ஆகிற ஒருபடிப்பட்ட ஸ்வரூபமே சர்வ சத்தா ஹேதுவாய்க் கொண்டு
ஆஸ்ரிதற்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருக்கும் பிரகாரத்தை உள்ளபடி அறிந்து இருக்கும் மஹாத்மாக்களான அவர்கள் கிடீர்

ஈஸ்வரன் அரியன் -என்று ஜகத்தை வழியடித்து உக்கிர வாய்கரையரைப் போலே அன்றிக்கே
அவன் நீர்மையின் ஏற்றத்தைச் சொல்லி எல்லாரையும் பகவத் பிரவணராம் படி திருத்துகிற நியாயத்தாலே உருவ நின்று
ஜகத்தை தளிரும் முறியுமாம் படி ரக்ஷிக்கிறவர்கள் —

அன்றிக்கே
பஹுதா விஜாயதே -என்கிறபடி
ஆஸ்ரிதார்த்தமாக அவதரித்த தசையில் அநேகம் திரு மேனியை யுடையை யாகையாலே
ஒரு படிப்பட்ட விக்ரஹத்தை உடையை யல்லை-

(இந்த இரண்டாம் நிர்வாகம் இவர் வியாக்யானத்தில் மட்டும் உண்டு –
விபவம் தொடங்கி அர்ச்சாவதார பர்யந்தமாக கிருஷி பண்ணினவன் நீ அன்றோ என்கிறார்)

ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
இப்படி பல வடிவு எடுத்துக் கொண்டு பிறந்த இடத்திலும் ஸூ த்த சத்வ மயமாகக் கொண்டு
நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திரு மேனி –

இப்படி அசாதாரண விக்ரஹமும் -அவதார விக்ரஹமும் ஆகிற
இரண்டு விக்ரஹத்தையும் யுடையையாய் இருப்புதி-என்று
உன்னை நாட்டில் அறிவுடையார் சொல்லா நின்றார்கள் –

இதர சஜாதீயமாய் அவதரித்த அந்த அவதார விக்ரஹம் ஒன்றுமே
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி ராபிசாப்யய -என்கிறபடியே
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் ஜகத்தை எப்போதும் ரக்ஷிக்குமவர்கள் -என்றுமாம் –

(நிரங்குச ஸ்வா தந்தர்யம் அவனுக்கு ஸ்வரூபம் அன்று ஆஸ்ரித பரதந்த்ரமே நிலை நின்ற ஸ்வரூபம் -என்கிறார் –
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான் -கட -2-5-13-
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வாம் ப்ரகாஸ ஸே -ஜிதந்தே
கிருபை தலை எடுக்கும் பொழுது ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்து எப்போதும் உள்ள ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்குமே
அன்யாதீ நத்வம் தவ கில ஜகுர் வைதிககிர
பரா தீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே -வரத ஸ்தவம் -20-
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -திருவாய் -4-3-8-
சேதனன் தன்னை சர்வேஸ்வரனுக்கு ஆக்க நினைக்கும் போது கர்மம் தடுக்கலாம்
இவன் அவன் இட்ட வழக்காகும் போது தடை ஒன்றுமே இல்லையே -ஆள வந்தார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே –திருவாய் -4-3-11-
தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாந் திரு -14-
அர்ச்சாவதார பர்யந்தமான அவனது க்ருஷீ பலனே தம்மை பகவத் பிரவணர் ஆக்கி அருளிற்று என்கிறார்
அஜாய மானோ பஹுதா விஜாயதே
பிதா புத்ரேண பித்ரு மான்யோ நியோ நவ்
சதைக ரூப ரூபாய
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந-
தத் ஈஷத பஹுஸ் யாம்
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திர் அபி சாப்யய
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் எப்போதுமே ஜகத்தை ரக்ஷிக்குமவர்கள் என்றபடி -)

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -41-50– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 14, 2016

கீழ் பிறருக்குத் தாம் உபதேசித்த உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே –
தம் வைஸ்யத்துக்கு (தெளிவுக்கு )உடலாய்த் தம் திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான சர்வேஸ்வரன் திருவடிகளை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார் –

(காமத்தால் பயன் இல்லை கீழ் -பொருளால் பயன் இல்லை இதில்
காமத்தாலும் பொருளாலும் பயன் இல்லை கீழ்
தர்மமும் அதன் பலனும் அவன் அதீனம் இதில்)

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

பதவுரை

அமருலகம்–ஸ்வர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான ஸ்வர்க்க லோகத்தை-அஜத லக்ஷணை -விடாத லக்ஷணை
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு-மறையோற்கு -ஒருமை
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீல மணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.

சாஸ்திர சித்தம் ஆகையால் மோக்ஷத்தோ பாதி இதுவும் ஒரு புருஷார்த்தம் அன்றோ என்று புத்தி பண்ணி
ப்ரஹ்மாதி லோகங்களில் புக்கு அனுபவிக்க வேணும் என்று அதுக்கு ஈடாக யத்னிக்கலாகாது-

அதுக்கு அடி( அதற்குக் காரணம் -அருளான் -அருளாளன் -நிரவதிக கிருபாவான் )
நிரவதிக கிருபாவான சர்வேஸ்வரன் தர்ம பலமான ஸ்வர்க்காதிகளைத் தந்து அருளுமவன் அன்றோ –

ஆன பின்பு சம்சார போகங்களில் விரக்தராய்த் தன்னைப் பெற்று அனுபவிக்க வேணும் என்று இருக்கும்
ஸூக வாம தேவாதிகளான பரம வைதிகருக்கு –
ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்னும்படி
தன்னுடைய கிருபையால் மோக்ஷத்தை கொடுத்து அருளினவனாய்

அவர்களுக்கு அனுபாவ்யமாய் -நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடைய
சர்வேஸ்வரனுடைய -திருவடிகளையே
அறிவுக்கு பிறப்பிடமான நெஞ்சே நீ மறவாதே கொள்-எப்போதும் நினைத்த படியே இரு –

அறம் என்று லக்ஷணையாலே தத் பலத்தை நினைக்கிறது –
அன்றிக்கே அர்த்தத்தை சாதனமாக்கிக் கொண்டு நித்ய ஸூரிகள் நிரந்தர அனுபவம் பண்ணி வாழுகிற
பரம பதத்திலே போய்ப் புக ஒண்ணாது –

ஸ்வர்க்க அபவர்க்கங்கள் இரண்டும் தன் கிருபையால் கொடுக்கும் சர்வேஸ்வரனை மறவாதே கொள் -என்றுமாம் –

இப்போது இவ்வுடம்போடே அவனை மறவாதே அனுபவிக்கப் பெறில்
பரமபதம் அநபேஷிதம் -என்று கருத்து –

அன்றிக்கே
மா மறையோர்க்கு -என்று ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளையாய் -அவர்களுக்கு –
தத்ரூ ஸூர் விஸ்மிதாகாரா –என்னும்படி
தன் விக்ரஹத்தை அனுபவிப்பித்தவன் -என்றுமாம் –

மா மறையோற்கு-என்று றகர ஒற்றான போது
மார்கண்டேயனுக்கு நித்யத்வம் கொடுத்த படியைச் சொல்லுகிறது –

(கீழே போகத்தால் இல்லை பொருள் என்று காம புருஷார்த்தத்தால் பயனில்லை என்றார்
இதில் அர்த்தம் -என்னும் புருஷார்த்தத்தாலும் பயனில்லை என்கிறார் –
அறம் தர்மம் இங்கு அஜஹல் லக்ஷணையாலே தர்ம பலனைச் சொல்லும் -தர்ம மோக்ஷ புருஷார்த்தங்கள் அவன் அதீனம் என்கிறார் –
அருளாலே -கிருபையே ஏக ஸஹகாரி நிரபேஷ ஹேது
ரூப ஸம்ஹ நநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ரூஸூர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸிந -ஆரண்ய -1-13-
அவனது பாதமே என்றுமே மறக்காமல் நினைத்து இருப்பாய்
இப்போது இருக்கும் உடம்புடன் மறக்காதே அனுபவிக்கப் பெறுவோமாகில் பரமபதமும் வேண்டா
ஸதா பஸ்யந்தி இங்கேயே கிடைக்கப் பெற்றால் போதுமே –
நெஞ்சே -அறிவு பெருகும் இடமாய் இருக்கும் நீ அறிவாளிகள் செயலைச் செய்ய வேண்டுமே -)

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா –-முதல் திருவந்தாதி –94-

ஹிரண்ய சம்ஹாரத்துக்கு பிறகு ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு காட்டியதாகவுமாம் –
இந்த வைஸ்வரூப்யம் துரியோதன சதஸ்ஸிலே காட்டினதாகவுமாம் –
மார்க்கண்டேய பகவானுக்கு இது அடையத் தன் வயிற்றிலே இருந்தபடியைக் காட்டிற்று ஆகவுமாம்
தத் பஸ்யம் அஹம் சர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன –என்கிறபடியே –
(வாய் அங்காந்து -விஸ்வரூபம் காட்டிய -பத பிரயோகத்தால் -மறையவர்க்கு -ஒருவர் என்று கொண்டு மார்க்கண்டேயர் ப்ரஹ்லாதன் என்றும் பன்மையாகக் கொண்டு துரியோதனாதிகள் பீஷ்ம த்ரோணாதிகள் -என்று நான்கு நிர்வாஹங்கள்-பொய்யாசானம் இட -அடங்கிட நிமர்ந்தோன் -விஸ்வரூபம் காட்ட அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
11 அத்யாயம் -விஸ்வரூபம் -பாரத சமரம் -அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
மார்கண்டேயருக்கு திரு வயிற்றில் சேவை காட்டிய வ்ருத்தாந்தம்
கீழ் பாசுர நா மடித்த விளக்கம் என்றும் கொண்டு ப்ரஹ்லாதனுக்கு -தான் தான் உலகு எல்லாம் என்று காட்டிய வ்ருத்தாந்தம் –
இப்படி நான்கும் இதில் உண்டு )

———————————————————————–

(பகவானுக்கு )புறம்புள்ள சம்சார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்கள் இறே
ஜென்மங்களில் பிரவேசியாதார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

பதவுரை

திருமாலை–லக்ஷ்மீ நாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பன்–(அவனது) சிறந்த திருத் தோள்களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒருவகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத் தோள்–அந்தத் திருத் தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம் துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக் கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்-வைராக்கியத்துடன் இருப்பர் .- (பேர்இன்பம் என்றது -விபரீத லக்ஷணை )

இவ் வாத்மாவுக்கு பிரிய ஹிதங்கள் தானும் அவனுமாய்க் கொண்டு நடத்திக் கொண்டு போரும் பெரிய பிராட்டியாரோடு
கூடிக் கொண்டு இருக்கும் சர்வேஸ்வரனை –
அவளோட்டைக் கலவியாலே -அளவிறந்த போக்யதையை யுடைத்தான
திருத் தோள்களைக் கண்டு அனுபவிக்கைக்காக நினையா நின்றேன் –

இப்படி நினைக்குமவர்கள் -இவ் வனுபவத்துக்கு இடைச் சுவரான தொரு ஜன்மத்தையும் கிட்டார்கள்-
அந்த அழகிய தோளைத் தொழுவார்கள் ஒரோ மனையிடத்துப் பிறந்தவர்கள்
பிறந்து பிராபிக்கும் நிரவதிக ஸூகம் எல்லா வற்றையும் பரித்யஜித்த வர்களானவர்கள் கிடீர் –
தோள் அழகு தானே மற்றுள்ள இன்பங்களைத் துறக்கும் படி பண்ணும் என்கை

பேர் இன்பம் எல்லாம் துறந்தவர்கள் இறே -அது தோள்கள் தொழுவார் ஆகிறார் என்னவுமாம் –
அன்றிக்கே –
ஒரு ஸ்ம்ருதி மாத்திரமே பற்றாசாக அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டுமது ஒழிய ஆர் தான்
இவற்றைத் துறந்து அது தோள்களை தொழுவார் என்றுமாம் –

(விபரீத லக்ஷணம் என்றும் -அனுபவிக்கும் அவன் நினைவால் பேர் இன்பம் என்கிறார்)

பிறப்பென்றும் நேரார்-என்ற பாடமான போது –
எல்லாக் காலத்திலும் ஜன்மத்தைக் கிட்டார்கள் -என்று பொருளாகக் கடவது –

(நினைப்பன் திருமாலை -இவளை முன்னிட்டுக் கொண்டு அவனைப் பற்றுகிறவர்களுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டுமே ஸித்திக்கும் என்றதாயிற்று –
நீண்ட தோள் காண -உத்த்ருதாஸி வராஹேண கிருஷ்ணேந சத பாஹு நா -தைத்ரியம் –
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் யார் காண்பாரே -திருவாய் -2-8-7-
ப்ரஹர்ஷ யந்தம் மஹிஷீம் மஹா புஜம் -ஸ்தோத்ர ரத்னம் –44-
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் -14-
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-
நினைப்பான் என்ற நினைவையே பெரிதாகக் கொண்டு-அப்பரம புருஷன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்ட வேண்டுமது ஒழிய
யார் தான் த ங்கள் முயற்சியால் சிற்றின்பங்களை ஒழித்து அத் தோள் அணைப்பைப் பெறப் பெறுவார் -என்று பரகத ஸ்வீ கார பரமான பொருள் தேறுகிறது)

———————————————————————————–

எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவார் தொழ அமையும் –
அத் தோள் தொழுவார் தாளைத் தொழும் அத்தனை நாம் -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

பதவுரை

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்-வெட்ட வெட்ட முளைக்கும் அதனால் பிரித்து அருளிச் செய்கிறார்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)-எத்தனை சண்டாளராகிலும் -தாள் தொழுவாராக இருந்தாலே போதும் –
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.-பிடித்தார் பிடித்தாரைப் பற்றுமதே சிறப்பு

பிராட்டியைத் தனிச் சிறை வைத்து (தனிச்சிறையில் விளிப்புற்ற கிளி மொழியாள் )நலிந்த ராவணனுடைய இருப்பது தோள்களும் –
அறுக்க அறுக்க முளைக்கையாலே -ஒரு சங்க்யையில் அடங்காத தலைகளும் –
இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமான கால்கள் இரண்டும் அறுப்புண்ணும் படிக்கு ஈடாகத்
திருச் சரங்களை ப்ரேரித்து நடத்தின பெரு வீரரான சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள்
இரண்டையும் தொழுமவர்களாய்

அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

(அவர்கள் பகவத் சேஷபூதர்கள்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையவர்கள்
அடியேன் ததீய பாகவத சேஷ பூதன் -குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்தறியும் மதுரகவி நிலை
இதுவே வ்யாவ்ருத்தம்)

(சித்திர் பவதி வா நேதி ஸம்சய அச்யுத ஸேவி நாம்
ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யாரதாத்மநாம்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-
அவன் அடியார்களைத் தொழ நினைத்தால் பூரித்து எழுமே அவனுடைய திருத்தோள்கள்
செய்யும் சிறப்பு -அவனுடைய தோள் தொழுவாருடைய தாள் தொழுவதே என் தோள் எனக்குச் செய்யும் உபகாரம் -)

———————————————————————————

இப்படி அசல் காக்கும் படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே(பற்றினவரைப் பற்றாமல் )
மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் -என்கிறார் –

(அன்பினால் ஆள் செய்பவரை ஆதரித்தது கீழ்
அன்பிலாதவரை நிந்தித்து இது
எம்மானை –சொல்லிப்பாடி துள்ளாதார் பதிகம் போல்
பற்றினவனை தொழுவாரை அமரர் தேவர் தொழுவர்
பற்றாதவரை நிந்திக்க அடியேன் என்றார் அங்கே ஆழ்வார்)

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–

பதவுரை

சிறந்தார்க்கு–பிடித்தார் பிடித்தாரைப் பற்றும் ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழு துணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற(வழித்துணை பெருமாள் திரு மோகூர் ஆப்தன் )
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று
கூவியழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)

ஞானீ த்வாதமைவ மே மதம் –என்று(என்னது உன்னதாவியில் அறிவார் ஆத்மாவார் அவன் மதம் தோன்றுமே )
தான் உகக்கும் படி தன் திரு உள்ளத்துக்கு அனுரூபமாக ஆஸ்ரயித்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
சம்சார சம்பந்தத்தை அறுத்து ஞான விகாச உடையவராய்
உஜ்ஜீவிக்கைக்குப் போம் அர்ச்சிராதி மார்க்கத்துக்கு ஆதி வாஹிகர் முன்னே
நயாமி -என்கிறபடியே
துணையாமவனாய் -அவர்கள் விஷயத்தில் வாத்சல்யத்தால் குதறிச் சிவந்த திருக் கண்களை யுடைய
வியாமுக்தனாவனுடைய வாத்சல்யாதி குணங்களுக்கு வாசகமான திரு நாமத்தை
விஸ்மரித்து இருக்குமவர்களை சாஸ்திர வஸ்யமான மனுஷ்ய ஜென்மத்தில்
பிறந்தவர்களாய் என் மனசில் நினைத்து இரேன் –

ஆன்ரு சம்சயம் ஆகிற பரம தர்மத்தை தரியா நிற்கும் ஸ்ரீ யபதியானவனே -என்று
ஆதரிக்கும் புத்தியை உண்டாக்கிக் கொண்டு
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியானவனுக்கு வாசக நாமமான த்வயத்தை நாவால் சொல்லுகையிலே மனசே அநுஸந்தி –

மனஸை அத்யாஹரித்துக் கொள்வது –
கீழே பாகவதர்களை விரும்பினார் –
இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

(த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ –விஷ்ணு ஸூக்தம் -விஷ்ணுவை சங்கீர்த்தனம் செய்பவர் நிலையாய் இருப்பார்கள் –
ஞாநீத் வாத்மைவ மே மதம் -கீதை -7-18-ஞானிகள் எனது உயிர் நிலை -அறியார் உயிராவாய்
நயாமி பரமாம் கதிம்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –பெரிய திருமொழி -11-7-9-
ஆன்ரு சம்ஸ்யம் பரோ தர்ம -ஸூ ந்தர -38-41-
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூ ந் த்தர -38- 41-
லகு தரா ராமஸ்ய கோஷ்ட்டி க்ருதா -ஸ்ரீ குணரத்னகோசம்
மா தவன் -அவள் சம்பந்தத்தாலேயே இவன் அறம் தாங்குபவனாகிறான்
அவன் பேர் நாவினால் ஒத்துவதே உள்ளு -த்வயத்தை நாவால் சொல்வதையே நினைப்பாய் மனமே என்கிறார் -)

————————————————————————————————————————

இப்படி பகவத் பஜநம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களினுடைய லாப அலாபங்களால் வரும்
ஹர்ஷ சோகங்களை உடையர் அல்லர் கிடீர் -என்கிறார் –

(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 27 –இப்பாசுரம் அடி ஒற்றியே
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1- ​-தனியன் இப்பாசுரம் அடி ஒற்றியே)

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பதவுரை

அளவு அரிய வேதத்தான்–அநந்தாய வேத  அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

ஆர்க்கும் அளவிட ஒண்ணாத படி அபரிச்சின்னமான வேதங்களாலே பரம தனமாக பிரதி பாதிக்கப் படுமவனாய் –
இப்படி ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து
சந்நிஹிதனான ஸுலப்யத்தை யுடையனாய்

பரத்வ அனுபவத்தில் பழுத்து இருக்கும் பரம பத ஸ்தானரான நித்ய ஸூரிகள்
அவன் நீர்மைக்குத் தோற்றுத் தாங்கள் திரு முடியைத் திருவடிகளை யுடையனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளை
இடைவிடாமல் செறிந்து வைத்து ஜென்ம தரித்ரனாய்-திரியச் செய்தே–
நடுவே வந்த திரண்ட தனத்தைக் கண்டு இது நமக்கு உண்டாகப் பெற்றது-என்று
பிறர்க்கு சஞ்சரிக்க ஒண்ணாதபடி கார்வோத்தரராய் இரார்கள்-(இராமல் மட்டும் இன்றிக்கே )

சில நாள் குறைவற ஜீவித்த பின்பு வெறுவியரான அன்று அங்கனே நமக்கு இது உண்டாய்த்து-
இன்று இங்கனே இல்லையாய்த்து –என்று சோகித்து
தறைப் படுகை யாகிற அதன் அருகும் கூட கிட்டார்கள் –

(நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி ஆர் நிகர் நீள் நிலத்தே -திருவாய் -6-4-7-
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-விஸ்லேஷ கண்ணீருக்குப் பல்லாண்டு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம் –ஸூ ந்தர –33-4-
முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7-தளர்ச்சியையும் பாக்கியமாக ஸ்லாகித்துப் பேசினாரே
பீமசேனன் திருவடியைக் கண்டு அவன் திருமேனியில் துவட்சியாலே பகவத் சம்பந்தமுடையவன் என்று அறுதியிட்டு
நிர்க்குண பரமாத்மா சவ் தேஹம் தே வியாப்ய திஷ்டதி -வன பர்வம் -14-68-
அநந்தா வை வேதா யஜுர் கடகம் -1-11-
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
அநந்த ஸ்திர பலமாய் இருப்பவனுடைய திருவடிகளிலே இடைவிடாமல் சேர்ந்து இருப்பவர்கள் அல்ப அஸ்திரமான இவ்வுலகச் செல்வங்களை இழப்பதாலும் பெறுவதாலும் துன்ப இன்பங்களை அடைய மாட்டார்களே -)

(துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே
தனஞ்சய ஸ் யந்தன பூஷணம் தனம் –-ஸ்ரீ வைராக்ய பஞ்சகம் —4-

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம் –6-)

————————————————————————————————————

இப்படி தன்னை ஆஸ்ரயித்தவர்கள் இதர போகங்களின் லாப அலாபங்களால் வரும் விகாரம் அற்றுத்
தன்னைச் செறிந்து அனுபவிக்கை யாகிற இந்நினைவு இவர்களுக்கு உண்டாம் படி
பல திருப்பதிகளிலும் அவன் வருந்தி கிருஷி பண்ணின படியை அருளிச் செய்கிறார் -(கிருஷி -பக்தி உழவன் அன்றோ )

(அரங்கம் திருவேங்கடம் -சயனம்
வேங்கடம் -நின்ற
திரு நீர் மலை -ஒரே திவ்ய தேசத்தில்-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -அன்றோ
எனவே பிரித்து அருளிச் செய்கிறார்-

நான்கு திவ்ய தேசங்களை அருளிச் செய்தது -நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் சேவை சாதிக்கும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் )

(சாமான்ய ரஷணம் -ஆஸ்ரித விசேஷ ரக்ஷணம் -கை கூப்பி முதல் -மேல் அவனது ஆஸ்ரித விசேஷ ரக்ஷணத்துக்கு நாமும் அனைத்தும் செய்ய வேண்டுமேமற்று அல்லால் -விசேஷ ரஷணம் -அவன் பரம் -நமக்கு கை கூப்புச் செயலுக்கு மேல்)

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

பதவுரை

மணி திகழும்–நீல மணி போல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்-சர்வேஸ்வரன் -வ்யாமோஹம் உடையவன்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.

நீல மணி போலே ஸ்ரமஹரமாய் ஒளி விடுகிற வடிவையும் –
அவ்வடிவை சம்சாரிகளுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுகிற
சுற்றுடைத்தான திருக் கைகளையும் உடையனான சர்வேஸ்வரன் அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நித்ய வாசம் பண்ணி அருளிற்று கோயில் திருக் கோட்டி யாகிற திருப்பதிகளில் –
சிர காலம் செறிந்து வர்த்தித்ததுவும் திரு மலையிலே

இப்படியே சிர காலம் நெருங்கி வர்த்தித்ததுவும் அழகு விளங்கா நின்றுள்ள சோலைகளை யுடைத்தாய்
சம்சாரத்துக்கு ஆபரணமான திரு நீர் மலையிலே –
இப்படியே ஆஸ்ரித அர்த்தமாக அவன் விரும்பி வர்த்திக்கிற
திருப்பதிகளுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் -என்கை –

(கிடை அழகையும் நின்ற அழகையும் ஒவ்வோர் இடத்திலே காட்டி இருப்பதில் திருப்தி உறாமல்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலையாவது நீர் மலையே -பெரிய திருமொழி -2-4-1-
சேதனர்களை வசீகரிக்க உபகரணங்களாக திருமேனி அழகையும் குணங்களையும் உடையவன்
என் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அன்றோ
நீல மணி போலே கண்டார் களைப்பை ஆற்றும் படி ஒளி விடும் திவ்ய மங்கள விக்ரஹம் யுடையனாய்க் கொண்டு
அந்தத் திருமேனியை சர்வருக்கு ஸர்வ ஸ்வ தானம் பண்ணி அருளும் உதார குண பூர்ணனாய்
கொடுத்துக் கொடுத்துப் பூரித்து இருக்கும் திருக்கைகளை யுடையவன் அன்றோ -)

—————————————————————————————————————-

அவன் இப்படி உங்களைப் பெறுகைக்காகப் பல திருப்பதிகளிலும் புகுந்து செறிந்து கிருஷி பண்ணும்
ஸ்வபாவனான பின்பு எல்லாரும் க்ருதஞ்ஞராய் அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கை கோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

பதவுரை

ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறுகாலையில்
கைகோலி தொழுது–கைகூப்பிவணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்

பூமிப் பரப்பு அடங்க லும் அநாயாசேன அளந்து அழிந்த தசையில் இடந்து எடுத்து –
அழிவதற்கு முன்னே திரு வயிற்றிலே வைத்து நோக்கி
பின்பு வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்து –
இப்படி ஜகத்தை பஹு முகமாக ரஷித்தவனாய் –

இவ்வோ செயல்களால்
தானே சர்வ ஸ்வாமி என்று தோற்ற இருக்கிறவனை –
இப்படிப் பொதுவாகப் பண்ணும் வியாபாரங்கள் ஒழிய
மற்றும் ஆஸ்ரித விஷயமாகச் செய்தவையாய் –

அவர்கள் இது ஒரு நீர்மையே -என்று நெஞ்சு உளுக்கும் படி
ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற குண சேஷ்டித்த பிரகாரங்களோடு கூட அறிந்து
அனுசந்தித்துக் கொண்டு ஆஸ்ரிதனுக்காக தன்னை அழிய மாறிக் கொண்ட
நரசிம்ஹ வேஷத்தை உடையனானவனுடைய திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே
கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –

(அந்தியம் போதில் அரியுருவாகி
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தோடே வீற்று இருந்தும் மணம் கூடியும்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -திருவாய் -4-5-10-
அடியார்கள் இது ஒரு நீர்மையே -என்று நெஞ்சு உருகும்படி அவர்களுடைய நெஞ்சைப் பற்றிக் கிடைக்கும்
குணம் -செயல் -பிரகாரம் -முதலியவற்றின் கூட அறிந்து அனுசந்தித்துக் கொண்டு
அடியேனுக்கேயான நரசிங்கனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்றதாகிறது -)

————————————————————————————–

உளம் கிடந்த வாற்றால் -என்று ஆஸ்ரிதற்கு மறக்க ஒண்ணாத படியாக நான் செய்த செயல் தான்
ஏது என்ன -அதுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் –

(கீழ் வட திருவேங்கடம் -இதில் தென் திருவேங்கடம்)

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

பதவுரை

மாலே–ஸர்வேஸ்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்-உரைத்தாய் அல்ல -அப்ருவஷேயம்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற் பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்-

பிரளய தசையில் சங்கோசித்து ஸம்ஸ்கார ரூபேண கிடந்த நாலு வேதங்களையும் –
ஸூப்த ப்ரப்த்தா நியாயத்தால்
பத வர்ண அநு பூர்வி தப்பாதபடி உணர்ந்து அருளிச் செய்தாய் –

அந்த வேதார்த்தங்களை சம்சய விபர்மயம் அற நயிப்பித்து
விஸதீ கரிக்கக் கடவ ஸ்ம்ருத்யாதி உப ப்ரும்ஹணங்களை மன்வாதிகளான
முனிவர்களை யுண்டாக்கி நின்று அருளிச் செய்தாய்(முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணானாயும் வெளியிட்டு அருளினான் அன்றோ )

அந்த வேதங்களுக்கும் உப ப்ரும்ஹணங்களுக்கும் பிரதான ப்ரதிபாதயையாய் –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையவளான பெரிய பிராட்டியாருடைய திருத் தோளோடு –
வைகுண்டே  து பரே லோகே –ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே -என்னும் படி ஒரு தேச விசேஷத்திலே
நித்ய சம்ஸ்லேஷம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தாய் –
அவள் பக்கலிலே பெரும் பிச்சானவனே

ஓலைப் புறத்திலே கேட்டுப் போம் படி எட்டாத நிலத்திலே அவளோடு கலந்து வர்த்திக்கிற அளவன்றிக்கே
சம்சாரிகளோடே கலந்து பரிமாறும் படி -மூங்கில்கள் நிறைந்த பர்யந்தங்களை யுடைத்தாய் -விஸ்மய நீயமாய்
பரப்பை யுடைத்தான பூமியில் உள்ளவர்களால் சூழ்ந்து ஆஸ்ரயிக்கப் படுமதாய் –
உயர்ந்து பரந்த சோலைகளை யுடைத்தான திருமலையை உகப்புடனே போய்க் கலந்தாய் –

(நயதீதி நீதி –வேதார்த்தங்களை நியாயங்களாலே நயப்பித்துத் தெளிவு படுத்துகையாலே உப ப்ரும்ஹணங்கள் நீதி எனப்படுகின்றன
வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதை சஹ-
பித்தர் பனி மலர்ப்பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-
மாலிருஞ்சோலை வளம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -திருவாய் -2-10-8-
அடியார்கள் மறக்க ஒண்ணாதபடி நீ செய்து அருளின செயல்களுக்கு எல்லையே இல்லையே -)

————————————————————————————————

நெஞ்சே அவன் இப்படி திருமலையிலே சந்நிஹிதன் ஆன பின்பு -நமக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டு என்று
அஞ்சாதே ஜகத்து அடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு என்கிறார் –

(பாபங்கள் அநேகம் என்கிற சந்தேகம் -வர -அதுக்கு சமாதானம் இப் பாசுரம் -திருநாம சங்கீர்த்தனம் பலமாக செய்ய அனைத்தும் தீருமே
எங்கும் அதிரும்படி கூக்குரல் – பூதநா ஸம்ஹாரம் செய்து அருளிய கண்ணனே –
பூதனை பட்டது அவை படுமே)

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டுமுடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு–

பூமிக்கு ஆதாரங்களான சப்த குல பர்வதங்களும் -பரப்பை யுடைத்தான சப்த த்வீபங்களும் -கரையாலே சூழப்பட்டு
அத்தை அதிக்ரமியாதே அதுக்குள்ளே கிடந்தது கோஷிக்கிற சப்த சமுத்ரங்களும் அதிரும்படி-
முலையிலே எங்கும் வியாபித்த விஷத்தால் உண்டான மிடுக்கை யுடைய பேய்ப் பெண்ணை க்ருதஜ்ஜதை தோற்ற
நடு நடுவே சில முக்த ஜல்ப்பிதங்களை சொல்லிக் கொண்டு முலை யுண்டு முடித்த நாவை யுடையவன் என்று-
எனக்கு விதேயமான நெஞ்சே பிரதிபந்தகத்தை நினைத்து அஞ்சாதே வாய் விட்டுக் கூப்பிடு –

(ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட -திருவாய் -1-9-5-
பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயம் -பெரிய திருமொழி -1-8-1-
முந்துற்ற நெஞ்சே -பெரிய திருவந்தாதி -1-
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -திருவாய் -1-7-8-
உலகு எல்லாம் எதிர் ஒலிக்கும் படி அழைப்பாயாக -என்று அந்வயம்)

——————————————————————————————————-

இப்படி நெஞ்சைக் கூப்பிடச் சொல்லி நியமித்தவர்-
அநந்தரம் திரு வாய்ப்பாடியில் பெண்கள் அவன் திரு நாமங்களை-(பிரேம பாரவஸ்யத்தால் தளர்ந்து தோற்றச் சொல்லுமா போல் நெஞ்சுக்கு முன்னே தாமே கூப்பிட )ஓயாமல் பரவி அனுபவிக்கும் படி செய்து அருளினாய் என்கிறார்-

(கோபிகள் -அங்கு அப்பறை கொண்ட வாற்றை அனுகரித்து நாச்சியார் ஸ்ரீ ஸூக்திகள் போல்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பேசி
பெரும் பெயர் -அறியாத பிள்ளைகளாய் முன்பு பேசிய நாராயணாதி நாமங்கள் போல் அல்லவே கோவிந்தன் -கோபாலன் -யாதவன் -போன்றவை -இவை அன்றோ குற்றம் அற்ற பெரும் பெயர்கள்-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -உன் தன்னை சிறு பேர் அழைத்தனம் சீறி அருளாதே )

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

பதவுரை

இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸு தேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல் பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.

ஆர்க்கும் ஸ்வ யத்னத்தால் நினைக்க அரியனாய் பெண்பிறந்தாரை புண் படுத்தும் இடையனானவனே –
என்றும் யது குலத்திலே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனாய் பிறந்தவனே -என்றும் –
குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனானவனே என்றும் –
புத்தி பண்ணிக் கொண்டு நஞ்சுரத்து பெண்ணை நவின்றுண்ட நாவன்-என்று
ப்ரஸ்துதமான அந்த திரு வாய்ப்பாடியில் உள்ள இடைப் பெண்களானவர்கள் சொன்னதாய்
உள்ளீடான குண சேஷ்டித்த சாரஸ்யத்தையாலே அனுசந்திப்பார்க்கு பிழைக்க ஒண்ணாதா படியாய் இருப்பதாய்
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லி -(கல் எடுத்து கல் மாரி காத்தது அவலீலை அவனுக்கு -இவளுக்கோ சொல் எடுத்து சொல்வது அரிதானதே )
உகப்பாரோடு உகவாதாரோடு வாசியற எல்லார் முன்பும் ஸ்ரீ யபதியான அந்த சர்வேஸ்வரனை –
அவர்களுக்கு இரங்கினால் போலே நம் பக்கலிலும் இரங்கக் கூடும் என்று கூப்பிடா நின்றேன் –

(பிழைப்பில் -தோஷம் அற்ற பெயர் என்று கொள்ளலாமே யாகிலும் பிரகரண ஸ்வா ரஸ் யத்தாலே
அனுசந்தித்தாருக்குப் பிழைக்க ஒண்ணாத என்று பொருள் கொள்ளக் கடவது –
பெரும் பெயரே பேசி -நாராயணாதி பரத்வ பரம் இன்றிக்கே ஸுலப்யாதி குணங்களை அன்றோ பேச அடுத்து -கோவிந்த பட்டாபிஷேகத்துக்குப் பின் –
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தாநவ அஹம் வோ பந்தவோ ஜாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-12- என்றவன் அன்றோ அவன்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -1-3-4-
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
திருவாய்ப்பாடியிலே பெண்களுக்கு மனம் இரங்கினால் போலே நம்மிடமும் இரங்குவான் என்று கூப்பிடா நின்றேன்
நெஞ்சிலும் முற்பட்டு அழைப்பேன்)

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.