Archive for the ‘Aandaal’ Category

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) ஐந்தாம்‌ அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

ஐந்தாம்‌ அத்தியாயம்‌
திருமகள்‌, நீளாதேவி (நப்பின்னை) ஜாமபவதி ஆகிய தேவியரின்மனத்தாமரையில்‌ வண்டென உறைபவனே[/களிந்த மலைபி
லிருந்து வரும்‌ யமுனை நதிபோல கருவண்ண எழில்‌ பொங்கும்‌அழகனே! எல்லையற்ற பாதங்களும்‌ தலைகளும்‌ கண்களும்‌
உடையவனே! சேடமலைபில்‌ வாழ்‌ சிங்கமே! (சேடமலை திருமலை) V-1

கேட்பரயாக/ அந்த விட்டுசித்தன்‌ (பெரியாழ்வார்‌) V-2

மாந்தளிர்கள்‌ நிறைந்த பூம்புதர்களிடையே, படுக்கை யமைத்துக்‌ காதலர்‌ மேலமரீந்து காதலுணர்வுமிக்க காரிகையார்‌
கலந்தின்புற்றுக்‌ களைத்து நெட்டுயிர்ப்பு மிகவே மீண்டும்‌ தாம்‌ மூன்போலவே (ழே) அமர்ந்து கலவிப்போரில்‌ தோற்கவே
அதைக்‌ கண்ட மன்மதன்‌ அவரை விரட்டியெறிந்த(வாள்‌ வீச்சுக்‌) காயமோ எனும்படியாக முதுகில்‌ ஒட்டிய மாத்தளிர்கள்‌
தோன்றும்‌ பூந்தோட்டத்தில்‌ ஒரு நாள்‌, * V—3

* இளவேனிற்‌ காலத்தில்‌ மாந்தளிர்கள்‌ சிந்திக்‌ கடந்த பூந்தோட்டத்தில்‌ பெண்கள்‌ காதலுணர்வுமிக்கவர்கள்‌ தாமே
ஆண்போலப்‌ பாவித்துக்‌ கலவி செய்தனர்‌ என்ற இந்த வருணனை இருஷ்ண தேவராயர்‌ ஆண்டாளின்‌ அறிமுகத்துக்கு
முன்பு வைத்துள்ளாஈ. இதில்‌ தொனியிருப்பதாக நான்‌ கருது கிறேன்‌. வேதம்‌ வேங்கட்ராய சாஸ்திரியோ, வாவிள்ள ராமசாமி
சாஸ்திரியோ இப்படி தொனி இருப்பதாக சிந்திக்கவில்லைதான்‌ எனினும்‌ பூந்‌ தோட்டத்தை வருணிக்காமல்‌ காம உணர்வு மிக்கு
காதலர்களை ஏன்‌ வருணித்தார்‌? என்பது ஆராய்வுக்குரியது.

ஒரு படைவீரன்‌ தோற்றால்‌ அந்தப்‌ படைதி தலைவனே அந்த வீரனின்‌ முதுகில்‌ அடித்து இழிவுபடுத்துவான்‌ வாள்‌ வீசித்தாக்க அவமானப்படுத்துவான்‌. என்பது மறபு. அது போலவே கலவிப்‌ போரில்‌ இந்த நங்கை தோற்று ”புருஷாயத கேளி” யிலிருந்து மீண்டும்‌ பழைய நிலைக்கு வந்ததால்‌ மன்‌
மதன்‌ தோற்றவரை வாளால்‌ வீரி காயம்‌ உண்டாக்களொன்‌. அந்த காயம்‌ தான்‌ எனுமாறு மாந்தளிர்‌ முதஇல்பட்டிருந்தது என்று கற்பனை செய்யப்பட்டுள்ளது. V—3

அசன்ற ஒரு காட்டுப்பாதையில்‌ மர நிழல்பட்டு மரகதத்‌ இண்ணையபோல்‌ தோன்றும்‌, வெண்பளிங்குத்‌ தஇண்ணையில்‌
வெண்காமரைப்‌ பொய்கைக்கருகில்‌, துளசி வனத்தில்‌, மங்கள கரமான இலட்சணங்களோடு கூடிய பதுமராகப்‌ (செம்மணி)
பாளங்கள்‌ போன்ற சேவடிகள்‌, உள்ளங்கை, இதழ்களை யுடைய ஒரு பெண்‌ குழந்தையைக்‌ கண்டான்‌. vV—4

கண்டு, வியப்புற்று, அருகணைற்து, மென்மை, மேனிஎழில்‌ சுபலட்சணங்களையும்‌, கண்ணிமைக்காது சிறிது நேரம்‌
பார்த்து, **ஆகா! குழந்தையற்ற எனச்குத்‌ திருமாலே மகளாக இக்தழந்தையைத்‌ தந்தருள்‌ கூரீந்தான்‌’ £* என்று கூறி மூழ்ந்த
வனாக, V—5

கொண்டுபோய்‌, தன்‌ இல்லக்கிழத்தியினிடம்‌ அன்போடு தந்திடவும்‌, அவளும்‌ சுரந்த தன்‌ முலைப்பாலுடன்‌ செல்லமாக
வளர்த்தாள்‌. இப்படி வளரிந்து வரும்‌ நாளில்‌ உதடுகள்‌ (வாய்த்திரை)* முன்போல விரைந்து பேச
வில்லை. கூந்தல்‌ வளைந்து நெளிந்து இயன்றன. செல்வம்‌ சேரீந்ததால்‌ அரைவிழியோடு கண்டன. முகம்‌
புருவங்கள்‌ நெரித்து, விளையாடக்‌ கற்றன. முலைகள்‌ வளர்ந்த மாரீபானது குழந்தைமையை அலட்சியப்படுத்தியது. பாதங்‌
களும்‌ கைகளும்‌ சிவந்தன. இடை வறுமைப்பட்டது. உடல்‌ பயிர்ப்பினை உற்றது. உந்தி வெறும்‌ ஆழத்தைக்‌ காட்டியது.
இவ்விதமாக நாள்தோறும்‌ முன்னைய அன்புகுறைந்து விடலாலே இஙிகிருக்கக்‌ கூடாது என்று குழந்தைமையானது அகன்றது.

(குழந்தைமை நீங்கக்‌ கோதைகுமரியானாள்‌ என்பதுகருந்து]-5-7-
* உதடுகட்கு தெலுங்கில்‌: *வாதெற்‌ எனும்‌ அழகிய சொல்‌ உண்டு, வாய்த்திரை என்பது பொருள்‌, ்‌

அவளுக்கு முதலிலிருற்து இருக்கிற மேனியின்‌ பொன்‌ வண்ணத்தினாலோ, இதழின்‌ செம்மையாலோ, முகமதியின்‌ வெண்ணில வொளியினாலோ பெயர்‌ அமையவில்லை.
(பொன்‌ மேனியள்‌, செவ்விதழினள்‌ என்றில்லாமல்‌)அவளது கருங்கூந்தலின்‌ வண்ணத்தால்‌ மாமை நிறுத்தினாள்‌ (சியாமங்கி) என்ற பெயரை அடைந்தனள்‌, உடலில்‌ தலையே பிரதான மானது எனும்‌ பழஞ்சொல்‌ சரியானதுதான்‌, தலை முடிக்‌ கூந்தல்தானே பெயரிட வைத்துள்ளது.
(வடமொழியில்‌ சியாமளா என்றால்‌ இளம்‌ பருவப்பெண்‌ என்று பொருள்‌, இச்சொல்லைக்‌ கொண்டு சியாமளா (மாமை
நிறம்‌) எனும்‌ பண்புக்கு கூற்தலைக்‌ காரணம்‌ காட்டி கற்பனை செய்யப்பட்டுள்ளது) 5-8-

(இக்‌ கோதை திருமாலை மயக்கிடற்குள்ளாள்‌ ஆதலின்‌), ஒரே சக்கர த்தனையடைய கண்ணனை, கைகலப்புப்‌ போரில்‌
வெல்வதற்காக முயலும்‌ மன்மதனுடைய உருக்குச்‌ சக்க்ரங்‌ சளோ(இரும்பு வளையஙிகள்‌) எனுமாறு. அந்‌ நங்கையின்‌ சுருண்ட கூந்தல்‌ அமைந்தது,
(மோதிரங்கள்‌ போல சுருள்‌ சுருளாகப்‌ படியும்‌ கூந்தல்‌ உருக்காலான சக்கிரங்களாக உவமை கூறப்பட்டுள்ளது) 1/9

கருப்பூரத்திலகத்தினால்‌ வெண்மை ஒளி படிந்த அவள்‌
நுதலில்‌ படிந்த கருங்கூந்தல்‌, பிரம்ம தேவன்‌ இவள்‌ எல்லாப்‌ பெண்டிர்கட்கும்‌(சீமற்தனி) மேலாக செல்வ வளத்துடன்‌
இிகழ்வாள்‌ என்று எழுதிய எழுத்துக்களின்‌ வரிசை போலத்‌ தோன்றியது.
(பிரம்மன்‌ நெற்றியில்‌ எழுதுவதாக ஐ$ூகம்‌, தலைஎழுத்து என்பர்‌. வெள்ளைக்காகிதத்தில கருப்புமையால்‌ எழுதிய
எழுத்துக்கள்‌ போல கற்பூர திலகமிட்ட நெற்றியில்‌ சுருண்ட. கூந்தல்‌ படிந்தது என்பது கருத்து) V-10

ஒப்பனை செய்யும்‌ தோழியர்‌, கோதையின்‌ முகத்தை மேல்நிமிர்த்திக்‌ கண்கட்கு மை தட்டும்போது கண்கள்‌
தோழியரின்‌ முகமாகிய நாலாம்‌ நாள்‌ சந்திரனைக்‌ கண்டது,
அதனால்‌ இவள்‌ முகஎழிலை சற்திரன்‌ கவர்ந்திட மக்கள்‌, சந்திரனின்‌ எழில்‌ தான்‌ இவள்‌ சுவர்ந்தாள்‌ என்று கூறுவர்‌.
(நாலாம்‌ நாள்‌ சந்திரனைக்‌ காணல்‌ நன்றல்ல எனும்‌ ஐதிகத்தை ஒட்டிக்‌ கற்பனை செய்யப்பட்டுள்ளது) 5-.11

கண்ணிணை(மதியிலுள்ள) கஸ்தூரிமானன வெல்ல, அப்பழி தீர்க்க வேண்டி அந்தமான்‌, மதியைத்‌ தூண்டவும்‌, சந்திரனும்‌
முகத்திற்குத்‌ தோற்று முகத்தின்‌ மணம்‌ தனக்கில்லை, ஒளி தான்‌ உண்டு எனப்பின்‌ வாங்கவும்‌’ கஸ்தூரிமான்‌ மணம்‌ தர
சந்திரனையடையவும்‌, அந்த மானின்‌ மீது பகைபூண்ட அந்த நங்கை (பகைவரின்‌ குருதியால்‌ திலகமிட்டுப்‌ பழி இர்ப்பது
போல்‌) மானின்‌ குருதியால்‌ திலகமிட்டாளேயன்றி மணம்பெறு தற்கன்று எனுமாறு பச்சைக்‌ கஸ்துரி திலகமிட்டாள்‌.
(கஸ்தூரி மானின்‌ அஸ்டகோசத்திலுள்ள சுரப்பியால்‌ கஸ்துரரிஎனும்‌ மணப்பொருள்‌ வெளிப்படும்‌. அதைத்‌ திஎகமிட
மரபு. இங்கு மான்கண்ணை வென்ற மங்கையின்‌ முகல்ம்‌ மதியையும்‌ வென்று விட்டதாம்‌. மானின்‌ மீது பழி தீர்க்கவே
திலகமிட்டாள்‌ என்பது கற்பனை)
கஸ்தூரிமான்‌ சந்திரனுக்கு மணம்‌ தந்ததாகவும்‌. அதனால்‌ பகைபூண்ட நங்கை, கஸ்தூரியின்‌ இரத்தத்தால்‌
இலகமிட்டுப்‌ பழி தீர்த்தால்‌ என்பது கருத்து) 412

கருவிழிகள்‌ கடைச்கண்களில்‌ அடிக்கடி சென்று மீண்டும்‌ விரைந்து வருவதாகி நாணோடு கூடிய அவளது பார்வைகள்‌,
மன்மதன்‌; வில்லில்‌ குறி வைத்து நாணிற்பூட்டிய கருங்குவளை மலர்களோ எனுமாறு இருந்தன . V—13

புது இளமையாகிய மதுவின்‌ மயக்கத்தால்‌ கருவிழிகள்‌ ஐடி காதுகளாகிய இணற்றில்‌ வீழ்ந்து விடுமோ என்றஞ்சிய பிரமன்‌
அதைத்‌ தடுக்க வைத்த தளைகளோ (சங்கிலி) எனுமாறு மை இட்டிய கண்ணிணையில்‌ பொருத்தி எழிலூட்டின .
(மதங்கொண்ட யானைகள்‌ இணெற்றில்விழுந்து விடாமல்‌சங்கிலியாற்‌ பிணைத்தற்‌ போல கருவிழிகள்‌ செவியாகிய
சணெற்றில்‌ விழாது தடுக்க இமையாகய சங்கிலியைப்‌ பிணைத்த தாகக்‌ கதிபனை) 5-14

(உலகில்‌ சுமங்கிலியான சகோதரியின அணிகளற்ற வெறம்‌ காதினைச்‌ சகோதரன்‌ பார்ப்பது பாவம்‌ என்பது மரபு ஆதலின்‌)
அவள்‌ காதுகள்‌ ஸ்ரீ(திரு) எனும்‌ (தெலுங்கு) எழுத்தைப்‌ போன்றிருக்கும்‌, திருமகள்‌, கூடப்பிறந்த சந்திரன்‌ ஆகிய முகம்‌
பத்தாடும்போது காதணி &மே வீழ்ந்துவிட்டதால்‌ அக்காதினளை பார்க்கக்‌ கூடாது என்று தலையைற்‌ தோளோடு சேர்த்து
மறைத்து காதணியுடைய பக்கத்தைக்‌ காட்டவே கம்மல்கள்‌ தள.தளக்க பந்தாடி மகிழ்ந்தாள்‌. V—I15

சம்பகப்பூப்‌ போன்ற நாசியை வண்டுகள்‌ முகர அஞ்சினும்‌ அவள்‌ பேசும்‌ போது வண்டுகள்‌ மொய்க்கும்‌, அவள்‌ வாயில்‌
எற்த மணம்தான்‌ இல்லை? அவளது முல்லைப்பூ போன்ற பற்களில்‌ பிரதிபலிக்கும்‌ தம்‌ உருவைக்‌ கண்டு வண்டுகள்‌ மயங்கி
மொய்த்துக்‌ கடக்கும்‌, V—I16

சங்களைப்‌ போல முன்பு பிரமன்‌ அத்‌ தாமரைக்‌ கண்ணி னாளின்‌ கழுத்திஎனப்‌ படைத்தான்‌. இளமை வந்ததும்‌ மீண்டும்‌
மென்‌ சந்தளப்‌ பூச்சென, அதன்‌ (உருவத்தோடு) வண்ணமும்‌ சேர்ந்து எழமில்பெற்றது. V—17

தாமரை இதழ்போன்ற கண்ணை உடைய அவளது சங்கேதத்தில்‌ திகழும்‌, மந்திர, மத்திய தாரம்‌ எனும்‌ மூன்று
சுரங்களில்‌ இருப்பிட எல்லைகளை வரைந்து காட்டியது போல அவள்‌ கழுத்தில்‌ வரைகள்‌ “மூன்றும்‌ திகழ்ந்தன. V—18

நங்கையின்‌ மெல்லிய தோளிணைகளாகிய தாமரைத்‌ குண்டுகள்‌, தாமரைத்‌ தண்டின்‌ திருவிளை (அழடஏளனை) சுவர்ந்து
கொண்டன. அதனால்‌ திருவிழந்த தாமரைத்தண்டு நெறிமுறிந்து
(செல்வத்தோடு கூடிய தன்‌ வாழ்க்கை நெறி கெட்டு) வறுமைப்‌
பட்டதால்‌ தன்‌ தேகயாத்திரை (உடல்‌ ஓம்பும்‌ வாழ்க்கை) நூல்‌
நூற்பதால்‌ கழித்துக்‌ கொண்டிருந்தது.
(வறுமையுற்றார்‌ நால்‌ நூற்றுப்‌ பிழைப்பர்‌. அதுயோல்‌ துரமரைத்‌ தண்டின்‌ திரு (அழகு) வினை நங்கையின்‌ தோள்கள்‌
சுவர்நீிது கொண்டதால்‌ வறுமையுற்றதாம்‌. நூல்‌ நூற்று வாழ்ந்ததாம்‌. தாமரைத்‌ தண்டினை முறித்தால்‌ நரல்‌ வரும்‌.
அதுனை நரல்‌ நூற்பதாக கற்பனை செய்யப்பட்டுள்ளது.) ‘

அநீநங்கையின்‌ கழுத்துக்குக்‌ கீழும்‌ முலையிணைக்கு மேலும்‌ அகன்று நீண்டு குறுக்காக உள்ள மார்பில்‌ இகழும்‌ மாலை
யில்‌, தோள்‌ வளையிலுள்ள மணிகள்‌ பிரதிபலித்து, மன்மதன்‌,
ரதிதேவிக்கு திருமண காலத்தில்‌ சூட்டிய நெற்றிச்‌ சுட்டியோ எனுமாறு இகழ்ந்து. V—20

அவளுக்கு இளமை உருவாகி உடலினின்றும்‌ ததும்பி வெளிப்‌ போதலும்‌, முந்தானையும்‌ வெட்சுமும்‌ அதனை உள்ளுச்‌
கனுப்பி அழுத்தவும்‌, (இளமை எனும்‌ எழிற்சாறு) முதிர்ச்சி யுறாத இளம்பாகமாதலின்‌ வெளிப்படவும்‌ இயலாது, உட்‌ புகவும்‌ இயலாது. பிதுங்கி மார்பிடத்ரல்‌ இருபுறமும்‌ அடங்கிக்‌ கிடக்கவும்‌ பின்‌ நாட்படவும்‌ வலிமையுற்று வளர்ச்சியுற்ற தெனதங்கையில்‌ நூல்கள்‌ (முலைகள்‌) ஒளிர்ந்தன.
(உடலிலிருந்து வெளிப்பட்ட இளமை எழிலும்‌ நாணமும்‌,
முந்தானைகளால்‌ உள்ளே அடக்கப்படவும்‌, உள்ளும்‌ புக இயலாது, வெளிப்படவும்‌ இயலாது. அங்கேயே பிதுங்கிக்‌
கிடந்தது போல முலைகள்‌, பருத்துச்‌ செழித்தன என்பது கருத்து) குரும்பை முலையுடன்‌ கூடவே நாணம்‌ கூடுதலும்‌,
தூவணியில்‌ மறைத்தலும்‌ எண்டு கூறப்பட்டது) 5-21-

இராமனது சாபம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக தீர்ந்து விடவும்‌ இறுதியில்‌ இணைந்த சக்கரவாகப்‌ பறவை (அன்றில்‌) இணை போல மார்பு முழுவதையும்‌ கவர்ந்து கொண்ட முலை யிணைகள்‌ இணைந்து கொண்டன, அப்பறவைகள்‌ மூக்குப்‌ போல முலைக்‌ கண்கள்‌ இளங்கருப்புடன்‌ திகழ்ந்தன.
(இராமன்‌ சீதையின்‌ பிரிவில்‌ துயருற்மபோது சக்கிரவாசுப்‌ பறவைகள்‌ களித்தின்புறம்‌ ௪ண்டு, சினந்து பிரிவறும்படி சபித்த தாக ஒரு கதை இங்கு கூறப்பட்டுள்ளது. எத்த சாபமும்‌ இரண்‌ டாயிரம்‌ ஆண்டுகளுக்குள்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக தீர்ந்து விடும்‌ என்பது ஐதீகம்‌, அதன்படி பிரிந்து தனித்தனியாக இருந்த மூலைகள்‌, வளர்ந்து செறிந்து ஒன்று கூடின என்றும்‌ அவை oa een போன்றுள்ளன என்றும்‌ கூறப்பட்டுள்ளன 5-22-

தாம்‌ எப்படியோ அப்படியே தம்மைச்‌ சேர்ந்த முத்துச்சரத்‌ தையும்‌ அவள்‌ முலைகள்‌, இரு பக்கத்தையும்‌ இணைவித்து ஒன்றாக்கின. பெரியவர்கள்‌ தம்மைச்‌ சாரீந்தோரிக்கும்‌ தமத ஒழுக்கத்தை ஈவார்கள்‌ அன்றோ?”
(முத்து மாலையின்‌ இருவடங்களும்‌ முலைகள்‌ மேல்‌ நில்லாது முலைச்‌ சந்தின்‌ ஒன்று கூடி இணைவது இயல்பு. அதனை, எப்படி முலைகள்‌ இரண்டும்‌ ஒன்றோடொன்று செறிந்து சொண்டனவேோ அதுபோல முத்துமாலையின்‌ இரு பக்க வடங்களையும்‌ ஒன்றாக ஆக்க. சான்றோர்களைச்‌ சேர்ந்தவர்களும்‌ சான்றோர்‌ பண்பு களை அடைவார்கள்‌ என்ற கருத்தினை மெய்ப்பிப்பது போலுள்ளது என்பது கருத்து.) V—23

பிரிவின்‌ மெலிந்த பெண்டிர்‌ மீது சினந்து மன்மதன்‌ விரைந்து பொன்னுறையுடன்‌ கூடிய வாளினை எறியவும்‌, உறையின்‌ தையல்‌ அறுந்து வாள்தோன்றியது போல பொன்னெழில்‌ இடை யூடாக மயிரொழுங்கு (வளி) தோன்றியது.
(பொன்னுறை வயிறாகவும்‌, தையல்‌ பிரிந்து நடு3வ தோன்றும்‌ வாள்‌ மயிர்‌ ஒழுங்காகவும்‌ உவமிக்சப்பட்டது.) 1.24

அன்னமென்னடையாளின்‌ உயிர்ப்புக்‌ சாற்றினை அவாவி, உந்திப்புற்றிலிருந்து புறப்பட்டு வந்து முளைக்குவடுகளின்‌ கடு போந்தூரும்‌ பாம்போ எனுமாறு அவளது மயிரொழுஙிகு எழில்‌ பெற்றிலங்கியது, V—25

நங்கை நிற்கும்போது அவளது மென்தோளும்‌ இடையும்‌ உலகினர்‌ காணுமாறு மணிகள்‌ மிடைந்ததோள்‌ வளையும்‌,
மேகலையும்‌ அணிவதாலும்‌, மயிரொழுங்கு அமைந்ததாலுமே தோன்றின,
(காணரிய இடையும்‌, மென்தோாளும்‌ அணிகள்‌ அணிவதால்‌ இருப்பது புலப்பட்டது என்பது கருத்து.) V—26
உடல்நடுவிலுள்ள (வயிற்றிலுள்ள) மும்மடிப்புகன்‌ எனும்‌ தங்கத்‌ துண்டுகளை பற்றவைத்திணைக்க அதே சாதியைச்‌

சார்ற்த தங்கத்தகுடு மன்மதன்‌ வைத்தான்‌ எனுமாறு ஒட்டியாணம்‌ அவளுக்கு எழிலூட்டியது.
(பொற்கொல்லர்‌ தங்கத்தை இணைக்க த௫கத்‌.தகட்டினை பயன்படுத்துவதுபோல, மன்மதன்‌ எனும்‌ பொற்கொல்லன்‌, அவளது வயிற்று மடிப்புகள்‌ (வளி) எனும்‌ துண்டுகளை இணைக்கும்‌ தங்கத்தசடு ஆக ஒட்டியாணம்‌ இருந்தது என்பது கருத்து.) V—27

மெல்லிடையாகய கொடி, நிதம்பம்‌ (புட்டம்‌) ஆய பாரத்‌தால்‌ அறுந்துவிழக்கண்ட பிரம்ம தேவன்‌, அதை இறக்கிவிட,
தளர்வாக முடிச்சுப்‌ போட்டானோ எனுமாறு சக்கிரவாகப்‌பறவை போன்ற முலைகளையுடைய அவளது ஆழமான உந்தி
அமைந்திருந்தது,(பிரம்மனின்‌ கயிற்றுமுடிச்சுப்‌ போல உற்தி இருந்தது என்றஉவமை நீயம்‌ சிறப்புறுகிறது.) V—28

நங்சையின்‌ நிதம்பம்‌ ஏனும்‌ பெயரில்‌ ஒரு மணல்‌ இட்டு– நதிக்கரை மணல்‌ திட்டுகளிலிருந்து தப்பி வந்துவிட்டது. அந்தக்‌
கணக்கு தெரியவே பிரம்மன்‌ : மனால்‌ திட்டில்‌ அன்னத்தின்‌ அடிகளாகிய குறியை இட்டான்‌.
(ஒரு பொருள்‌ காணாவிட்டால்‌ தெரிவதற்காக, கணக்கு அறிய குறியிடுவது வழக்கம்‌, மணல்‌ திட்டு ஒன்று நங்கையின்‌
நிதம்பமாகி காணாமற்போனது. . பீரம்மன்‌ மற்ற திட்டுக்களை கணக்கிட அன்னத்தின்‌ அடியாகய 3 என்ற குறியை இட்டு
வைத்தான்‌ என்பது கருத்து) V—29

வளத்தினைத்‌ திருடிக்‌ கொண்டது. எப்படி என்றால்‌, (திருடனின்‌ உடைகளைச்‌ சோதிப்பதுபோல) மட்டை புரிச்‌
தால்‌ உள்ளே பசு வால்போன்ற (மேலே அகன்று கழே குற்கிய) தண்டும்‌, பூவினையுரித்தால்‌ உள்ள நகம்‌ போன்ற மொட்டுக்களும்‌
(பூமூகைகள்‌ திருடர்களின்‌ ஒருவகைக்‌ கருவி போலுள்ளது) ௮தன்‌ சிகப்பும்‌ (பத்மராகக்‌ கற்கள்‌ எனும்‌ நவமணிகளும்‌) இருடியதின்‌
அடையாளங்களாகத்‌ திகழ்கின்‌றன. V—30

செல்வமிக்கவர்களானாலும்‌ அவளது தொடைகளுக்கு அடிமை செய்பவர்களாசத்தான்‌
ஆவார்கள்‌. செல்வமிக்க பெண்களின்‌ அங்கையின்‌ குடையும்‌ பூரண கும்பழம்‌ ரேகைசளாக அமைந்திருப்பது அடையாளமாகும்‌.
(அடிமைகள்‌ பிரபுவுக்கு குடைபித்து, பூரண கும்பம் பிடித்து வரவேற்பது போல–௮வள்‌ எழிலுக்கு தோற்ற பிற பெண்டிர்‌
தம்‌ கரங்கள்‌ குடை, கலச ரேகைகளால்‌ அடிமையாகின்‌றன என்பது கருத்து.) 5-31

நங்கையின்‌ சணுச்சால்‌ கலம்பிலுள்ள மரகதப்‌ பச்சையின்‌’ ஒளியால்‌ பசுமை படர்ந்து மன்மதனின்‌ குடும்பத்தைச்‌ செழிப்‌
பாகப்‌ பேணும்‌ செஞ்சாலிப்‌ பொதிபோல இருந்தது,
(நெற்பொதி (கதிர்விடுமுன்‌ உள்ள கருநிலை) சணுக்காலுக்கு உவமை கூறப்பட்டது.) V—32

நங்கையின்‌, மென்மையான, சணுக்காலின்‌, இணையாக வேண்டிய நெற்பொதி, தம்முன்னே முள்ளினை திறமையுடன்‌
அடக்கி வைத்திருந்தது, பின்னர்‌ நாட்படவும்‌ அடங்காது ௮வை (முள்‌) வெளிப்படவே (நாணத்தால்‌) தலை குனிந்தன.
(முதலில்‌ நெற்பொதி இணையாக இருந்தாலும்‌ நாட்படவும்‌ முள்வெளிப்படல்‌, நிறமாற்றம்‌, ஆ௫யெவையால்‌ இணையாக
முடியவில்லை, அதனால்‌ நாணுற்று தலை சுவிழ்ந்தது. நெற்‌ குதிர்கள்‌ முற்றியதும்‌ தலை கவிழ்தலை நாணுற்றதாக பல
சவிஞர்கள்‌ கூறியுள்ளனர்‌. அறிவு நிறைந்ததும்‌ தலை நிமிரீந்த செருக்கு நீங்கி தலை கவிழ்ந்து அடக்கம்‌ ஏற்படுவதாகவும்‌
கவிஞர்கள்‌ வருணிப்பர்‌.) 3.33

“உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம்‌ செல்வண்ணம்புூசும்‌ இயல்பினராகய எம்மீது இனிவேறு செம்பஞ்சுக்‌ குழம்பு
(அரத்தகம்‌) பூசுவா?னன்‌? பேதைமை யல்லவா??* என்றுஅவளது பாதங்கள்‌, முகமாகிய விரல்சளினால்‌ நகமாகபய பற்‌
களைக்‌ காட்டிச்‌ சிரிப்பது போல, நங்கை எழில்‌ மிக்‌இருந்தாள்‌.
(வெண்பற்களாகிய நகங்களிலும்‌ செம்பஞ்சுக்‌ குழம்பு பூசும்‌போது செம்மை படியுமமே எனினும்‌, வெற்றிலை போட்ட பற்‌
களோடு சிரித்தன என்று கொள்க,) V—34

நங்கையின்‌ முழங்கால்‌ ஆமை3யாடு போல இருக்கும்‌, அவளீ நடையோ பிடிநடையாகும்‌. ஆமைக்கும்‌ பிடிக்கும்‌ (பானளைக்கும்‌)
ஏற்பட்ட போராட்டம்‌ எனப்படும்‌ பழமொழி இவளால்தான்‌ ஏற்பட்டது,
(கஜகச்சப (யானை, ஆமை) கலஹ நியாயம்‌ எனும்‌ வட மொழிப்‌ பழமொழியைக்‌ கருத்துட்கொண்டு இக்கவிதை உள்ளது
யானைக்கும்‌ முதலைக்கும்‌ ஏற்பட்ட போராட்டக்கதை தான்‌ பிரசித்தம்‌ யானை, ஆமை கலகக்கதை தெரியவில்லை. V—35

மங்கையின்‌ மேனி எழிலுக்கெதிரே, புது மஞ்சள்‌ துலைக்கு வர முடியாமல்‌ (இணையாகாமல்‌) மிகுந்த மாசுற்றது. அதனால்‌
தான்‌ அதற்கு இரா, ௮ல்‌, என்பனை போன்ற இரவின்‌ பெயர்‌ களையுற்று கரைந்து இராமலே, இல்லாது போனது.
(மஞ்சள்‌ நாட்படின்‌ மேல்தோல்‌ கருவண்ணம்‌ உறும்‌, மாசுறு வதாக சுற்பனை செய்யப்பட்டது. மஞ்சளுக்கு வடமொழியில்‌
இரவீன்‌ பெயர்கள்‌ எல்லாம்‌ பரியாய பதங்களாகும்‌. ராத்ரி, நிச, தமிஸ்ர, நிஸீதினி, கூப என்பன இரவின்‌ பெயர்கள்‌.
கரைதல்‌, கெடுதல்‌, தேய்தல்‌, என்ற பொருளின்‌ அடியாக இச்சொற்கள்‌ அமைந்தன. அவளது உடல்‌ பொன்‌ வண்ணம்‌
உண்ட மஞ்சள்‌ தோற்ற கரைந்து இல்லாது போயிற்று என்பது கருத்து.) 5-36

அந்த மதிமுகத்தினள்‌, பூமி ‘தவியாசலின்‌ அவளுடைய முன்னைய தோழியரான நாகக்கள்னிகள்‌, அவளை இணை
பிரீயாதிருக்க வேண்டி, பக்கத்து வீடுகளில்‌ வைணவர்களின்‌ மகளிர்களாகப்‌ பிறந்து, மராளிகா (அன்னம்‌) ஏகாவளி (ஒற்றை
வட முத்துமாலை) மனோக்ஞா (மனதை அறிபவள்‌) ஸ்ரக்விணீ (பூமாலை யுடையவள்‌) என்ற பெயரிகளுடன்‌ தோழியராகத்‌
திகழ்ந்தனர்‌. அவர்கள்‌ பொம்மைக்‌ கல்யாணம்‌ முதலிய விளையாட்டுக்களில்‌ லட்சுமி தேவி திருமண வைபவக்‌ கதைப்‌
பாட்டுக்களைக்‌ கேட்டுக்கேட்டு, வியப்புற்று, திருமாலின்‌ திருவிளையாடல்களில்‌, ஈடுபட்டு அவனையே மணம்‌ புரிய
வேண்டுமென முன்பிறவி. வாசனையால்‌, ஆசையுற்று அவனது இரு அவதாரக்‌ கதைகளை மீண்டும்‌ மீண்டும்‌ கேட்டின்புற்று மூழ்ந்தாள்‌. 1.37

அவளது  தந்‌ைத (பெரியாழ்வார்‌) திருமால்‌ தந்த செல்வச்‌ செழிப்பு மிக்சிருந்தும்‌ தனது முன்னைய மாலை தொடுத்துச்‌
சேவகம்‌ புரிதலை விடாது ஆர்வமுடன்‌ இருந்தமையால்‌, திருமாலின்‌ திருவிளையாடல்களையும்‌, வைணவபுராணங்களை
யும்‌ வியாக்கியானம்‌ செய்து கொண்டும்‌, நுரல்கள்‌ இயற்றிக்‌கொண்டும்‌ இருப்ப, அவர்‌ கட்டிய மணமிகு செங்கழுநீர்‌,
பூக்களை யுடைய தோமாலையை, கூந்தல்‌ சீவி, மன்மதனுக்கு மயிற்பிலியால்‌ இயற்றிய முடி (கேடகம்‌) போல, கருவண்ணக்‌
காளை மாட்டின்‌ இமில்போல சிறிதே இடப்பக்கம்‌ சாய்ந்த கொண்டையினடியில்‌ விருப்புடன்‌ சேர்த்து (கூந்தலில்‌ பூமாலை
சூடி) ணெற்று நீரில்‌ (தன்னெழில்‌) கண்டு மீண்டும்‌ பூக்குடலை யில்‌ வைப்பாள்‌. V—38

அந்நகிகை (கோதை) சிறிது மஞ்சள்‌ பூசிக்குளித்து கூறை (சேலை) யுடுத்தி, முலைக்குவட்டில்‌ மணம்‌ மிகுமாறு குங்குமச்‌
சாறு பூசி, கற்பூரத்‌ இலகமிட்டு, தந்‌ைத கட்டிய பூமாலையை விருப்புடன்‌ கூநீதலில்‌ சூடி, சிறிது நேரம்‌ வைத்திருந்து, மீண்டும்‌ களைந்து வைத்துவிட்டு தோழிகளைப்‌ பார்த்து வெய்துயிர்ப்‌பாள்‌. [39

நீங்கள்‌ பாடிய திருமாலின்‌ நடவடிக்கைகளை எந்த முறையில்‌ சேர்க்க முடியும்‌? தஷ்னை நாடிய நங்கையரையே
அருள்‌ செய்யாதவன்‌, எந்தப்‌ பெண்ணைத்தான்‌ காப்பாற்றினான்‌, TV—-40

அவன்‌ தேவன்‌, (வாமனன்‌) முனிவன்‌ (பரசுராமன்‌) அரசன்‌ (ஸீராமன்‌) ஆய உடலைத்‌ தாஙிகி பெண்களை வெய்துயிர்க்கச்‌
செய்ததைவிட அதற்குமுன்‌ எடுத்த பிறவிசகளாகிய, மீன்‌, ஆமை பன்றி, சங்கமாகிய உருவிலிருந்தாலே நல்லதாயிருந்திருக்கும்‌.
(பெண்களுக்கு விரகதாபத்துயர்‌ தராத முன்னைய பிறவி களில்‌ மட்டும்‌ பிறந்திருந்தால்‌ நன்றாயிருக்கும்‌ என்பது கருத்து)-5 41

அந்த (மீன்‌, ஆமை, பன்றி, சங்க)ப்‌ பிறவிகளில்‌ பெண்கள்‌ காதலிக்க வில்லையல்லவா? நல்லதாசப்‌ போயிற்று, ஒருவேளை
காதலித்தாலும்‌ விலங்குகட்கு மனிதர்கட்டுள்ள வேட்கை இராதல்லவா? (என்‌ இராது?) தெரியாமல்‌ ஏன்‌ இப்படிச்‌ சொன்னேன்‌. IV—42

*அத்மவத்‌ சரீவபூதானி’* (தன்னைப்‌ போலவே எல்லா உயிர்களும்‌) என்பது பொய்தான்‌. மனிதப்பெண்களாவது
ஆடல்‌ பாடல்களிலும்‌, சரச சல்லாபங்களிலும்‌, கதைகளிலும்‌ கொஞ்சமாவது விரகதாபத்தை அடக்கிக்கொள்ளலாம்‌.
வாயில்லா உயிர்களுக்கு நோயும்‌ அதிகம்தான்‌.
(தன்போலவே பிற உயிர்களையும்‌ கருதுவது எப்படி? மனிதர்கள்‌ வாயிருப்பதால்‌ பேசி மகிழ்ந்து ஆற்றியிருக்க முடியும்‌.
வாயற்ற விலங்குப்‌ பிறவிகளில்‌ எப்படி விரகதாபத்தை அடக்க முடியும்‌ என்பது கருத்து ) 14-43

இவன்‌ முன்பிறவிகளில்‌, காதலித்த சன்னியரின்‌’ கமலக்‌ கண்களில்‌ நீரை வரவழைத்தும்‌, அவர்கள்‌ உடலில்‌ புளகம்‌
உருமாறம்‌ செய்த வினைப்பயனால்‌ தான்‌, பின்னர்‌, நீரில்‌ இடக்கும்‌ மீன்‌, ஆமையாகவும்‌, புளகம்‌ போன்ற மயிர்கிலிர்க்கும்‌
பன்றி, சிங்கமாகவும்‌ பிறந்தான்‌. எனினும்‌ அந்த உண்மையை மறைத்து திறமையாக இருக்கிறான்‌. ivV—44

தேவன்‌, முனிவன்‌, அரசனாகப்‌.பிறந்த பிறவிகளில்‌ இவன்‌ தாமரைக்‌ கண்ணாரைத்‌ தண்ணளியின்‌ றித்‌ தவிக்கச்‌ செய்தான்‌
என்றேனே அதனை உங்கள்‌ பாடல்களிலிருந்தே தெரிவிக்‌கிறேன்‌. IV—45

முதலில்‌ விஷ்ணுழூர்த்தியாக, இவன்‌, பிருகு முனிவரின்‌ மனைவியைக்‌ கொன்று, அந்தக்‌ கிழவன்‌ (பிருகுமுனி) தன்னைப்‌
போல மனைவியைப்‌ பிரிந்து வருந்துவாயாக எனச்‌ சாபமிட எனக்கு அதுவம்‌ தேவகாரியமாகட்டும்‌’ கூறி
வாமனனாஇ (பிரம்மச்சாரியாகி) திருமகளைப்‌ பிரிவுத்துயரில்‌ ஆழ்த்தினான்‌ அல்லவா?
(இராமாயணம்‌ உத்தர காண்டத்தில்‌ பிருகு முனிவன்‌ சாபக்‌கதை வருகிறது, பிருகு முனிவனின்‌ மனைவி அசுரர்களுக்கு அபயமளித்துக்‌ காப்பாற்றியதால்‌ அவளை, விஷ்ணு கொன்றதாகக்‌ கதை.) IV—46

பிரளயகாலச்‌ சூரியனைப்‌ போன்ற கூரிய கோடாரி (பரசு)யாகிய வீணைக்‌ தண்டினால்‌, பகைவன்‌, பகைவனின்‌ நண்பன்‌,
நண்பனின்‌ பகைவன்‌ எனும்‌ முத்திறத்துப்‌ பகைவர்களின்‌ சம்மாசனங்களாகிய (மந்திர மத்திய தாரங்கள்‌) கட்டைகளில்‌
ஏழு தடவை (ஏழு சுரங்களில்‌) வாசித்து, தன்‌ தோள்‌ வலிகாட்டிய புகம்‌ எனும்‌ வீணையை மீட்டிய போது, விழைந்து
வந்த பூமியாகிய கற்பின்‌ செல்வியைத்‌ துறந்து காசியப முனிவனின்‌ மகளாகி.ச்‌ செய்யவில்லையா?
(பரசுராமன்‌, தன்‌ தந்தையைக்‌ கொன்ற கார்த்த வீரியார்ச்‌ சுனனின்‌ மக்கள்‌ மீது வஞ்சினம்‌ பூண்டு ஏழு தடவை பூமியை
வலம்‌ வந்து, க்ஷத்திரியர்களைக்‌ கொன்று அந்தக்‌ குருதியினால்‌ சமந்த பஞ்சகம்‌, எனும்‌ மடுவை உருவாக்கி பித்ரு தர்ப்பணம்‌
செய்தான்‌. அவன்‌ உலகை வென்றும்‌, காசியபன்‌ எனும்‌ முனிவன்‌ யாசித்ததுமே அந்த உலக முழுதுமே தானம்‌ செய்து
விட்டான்‌. உலகம்‌ காசியபன்‌ மகள்‌ ஆயிற்று. ஆதலில்‌ காசினி என்று பூமிக்குப்‌ பெயர்‌ உண்டாயிற்று பரசுராமன்‌ தான்‌ வென்ற
பூமியை ஆளாமல்‌ துறந்தான்‌ என்பதால்‌ இப்பிறவியிலும்‌ இருமகள்‌ (பூமி) எனும்‌ பெண்ணுக்கு ௮ரள்‌ செய்யவில்லை என்பது கருத்து.) IV—47

தனது அழகினைச்‌ சொல்லக்‌ கேட்டு, மனமுருகி, திருமகள்‌ (ராஜ்யலட்சுமி) அழைத்துத்‌ தாமசைப்‌ படுக்கையில்‌ இன்ப
முடைய அன்போடு கூடி இணைய வரும்போது, கொடுமையாகத்‌ துறந்து சென்று அவளைப்‌ பித்துறச்‌ செய்த காகுத்தனாகய
இராமனின்‌ நடவடிக்கைகளை உள்ளத்தில்‌ ஆராய்ந்து பாருங்கள்‌.
(இராமன்‌, அரசு அகிய திருமகளைத்‌ துறந்து பட்டம்‌ ஏற்காமல்‌ காட்டுக்குச்‌ சென்று அவளை பிரிவுத்‌ துயரில்‌
ஆம்த்தினான்‌ என்பது கருத்து.) 13.48

அழூய உருவந்தாங்கி, தன்னை நாடிக்‌ காதலித்து வந்த இராவணனின்‌ தங்கை (சூர்ப்பநகை) யை, நாலுபேர்‌ நகைக்கும்‌
படியாக அவ்விதம்‌ (மூக்கரிந்த செயல்‌) செய்யாமல்‌, எற்றுக்‌ கொண்டிருந்தால்‌, சம்பந்தியாகி, அந்த இராவணனும்‌ சினந்து
சீதையைச்‌ றை வைச்கமாட்டான்‌. வீணாகப்‌ பகை மூளச்‌ செய்து தனக்கும்‌, தைக்கும்‌ இராவணனுக்கும்‌, சூர்ப்பணகைக்‌
கும்‌ கேடுண்டாக்கிக்‌ கோண்டானல்லவா?
(சூர்ப்பணகசையை ஏற்றிருந்தால்‌ இத்துணைத்‌ துன்பம்‌ வராது என்றும்‌: நயந்து வந்த பெண்ணைக்‌ கொடுமைப்படுத்து
வது நியாயமா? என்றும்‌ கேட்டிறாள்‌ கோதை! பெண்கள்‌ உணர்வறிந்த பெண்ணுக்குத்தானே இரச்கம்‌ அதிகம்‌.) IV—49

ஓவென்றலறிச்‌ செங்குருதி ஓழமுக, உதடுகள்‌ துடிக்க, முகில்‌ முழக்கம்‌ என முறையிட்டவாறு, கொடி போன்ற வாள்‌ ஏந்திய
சந்தன மரக்களை போன்ற தோள்களைத்‌ தடுக்க பாம்பு போன்ற தன்‌ கரங்களைச்‌ சுற்றிய சூர்ப்பபகையை இங்க
மொத்த அவன்‌ மூக்கரிந்து கொடுமைப்‌ படுத்தவில்லையா?
(மூக்கரிந்தது இலக்குவனே எனினும்‌ பொறுப்பாளி இராமனாதலின்‌ இராமன்‌ மேலைற்றிக்‌ கூறப்பட்டது. கோயில்‌
கட்டுதல்‌ சற்பியேயாயினும்‌ அரசன்‌ கோயில்‌ கட்டினான்‌ என்பது போல) IV—50

வேண்டாம்‌ போ என்றால்‌ போக மாட்டாளா? அவள்‌ அரக்கி என்பதால்‌ பரிகாசம்‌ செய்து அலைக்‌ கழித்தல்‌ முறையோ? பெண்‌
குலமே நாணுமாறு அவளாகவே வந்தாள்‌! அது போதாதென்று பெண்ணைக்‌ கேவலப்‌ படுத்த வேண்டுமா? V—51

தன்னைத்‌ தழுவப்‌ பெண்ணாகப்‌ பிறக்க விரும்பிய முனிவர்‌ களை, தன்‌ பாதத்துக்குள்‌ (பொண்ணாக்கும்‌) ஆற்றல்‌ இருந்தும்‌ கூட, மற்றொரு பிறவியில்‌ (கண்ணன்‌ ஆக) ஆயரீ மகளிராகப்‌ பிறக்கச்‌ செய்து இணைந்தும்‌, அக்குரூரவன்‌ தூண்டுதலால்‌, அநீநங்கையரைப்‌ பிரிந்து மதுராபுரிக்குச்‌ சென்று விடவில்லையா?
(ஆடவர்‌ பெண்மை அவாவுறும்‌ அழகன்‌ என்று கம்பனும்‌ இராமனைக்‌ குறிப்பிடுவான்‌. முனிவர்கள்‌ பரம்பொருளைப்‌ பெண்‌ கோலத்தில்‌ சுவைக்க விரும்பி ஆயர்‌ மகளிராகப்‌ பிறந்தனர்‌ என்று பாகவதக்‌ கதை கூறுகிறது.) V—52

அயோமுகி, சூர்ப்பணகை ஆகியவர்களை அரக்கியர்‌ அழகற்ற வார்கள்‌ என நயவாது தண்டித்தான்‌ என்றால்‌ பலரா.மனாக, தன்னை விட வயதில்‌ மூத்த பனைமரம்‌ போன்றுயர்ந்த ரேவதியைத்‌ தான்‌ கிழவனாக இணையவில்லையா? கண்ணன்‌ ஆகி, கூனியாகிய (குப்ஜா எனும்‌) வேலைக்காரியை விரும்பி உக்கிரசேனனிடம்‌ தான்‌ சேவகனாக, கூனலைத்‌ திருத்தி ஏற்றுக்‌ கொள்ளவில்லையா?
(அழகு, இளமை இல்லாவிட்டாலும்‌ அன்பிருந்தால்‌ ஏற்றுக்‌ கொள்வர்‌ என்றும்‌, அரக்கியர்பால்‌ அன்பின்மையால்‌ அவன்‌ அவர்களை ஏற்றுக்‌ கொள்ளவில்லை என்றும்‌ கருத்து)
(கிழவன்‌ என்பது உரிமையுடையவன்‌ என்ற பொருளிலும்‌ கொள்க.) V—53

முராரி, (கண்ணன்‌) பிருந்தாவனத்தில்‌ தன்னை எல்லோரும்‌ காதலித்திருந்தாலும்‌ சிலரைப்‌ புணர்ந்தும்‌ சிலரை விரகதாபத்‌
கால்‌ வருத்தியும்‌ ராதையிடம்‌ மட்டும்‌ ஈடுபாட்டுடன்‌ இருந்து எல்லாப்‌ பெண்டிரையும்‌ மனவருத்தம்‌ செய்யவில்லையாச்‌ VY—54

என்று, இவ்விதமாக, நாணம்‌ மிகுதியினால்‌ நிந்திப்பது போல மீண்டும்‌ மீண்டும்‌ நினைந்து திருமாலைப்‌ பற்றிப்‌ பேசவுல்‌,
தோழியர்‌ அவளது உட்கரந்துறையும்‌ காதலையுணர்ந்து
கொண்டு “இந்தத்‌ தோழி திருமாலிடம்‌ ஈடுபட்ட கன்னிக்‌ காதலுடையவளாய்‌ நாணத்தால்‌ வெளிப்படக்‌ காட்டாமல்‌, புடமிட்ட பொன்‌ போல, உள்ளம்‌ வெதும்பி, சிக்குற்று, நாள்‌ தோறும்‌ சிரித்தவாறே சங்கடப்பட்டுக்‌ கொண்டிருக்கிறாள்‌.
இந்நங்கையின்‌ தனிமை (மறைவான உணர்வுகளை) நீக்கி நம்மோடிணைந்து கலந்துறவாடச்‌ செய்து, நம்மிடம்‌ மறைக்கும்‌
மனக்‌ கருத்தினை (இங்கிதம்‌) தானே தெரிவிக்கும்படி செய்து சுவலையை நீக்காவிட்டால்‌ மோசம்‌ நேரும்‌” என்று சிரித்தவாறு குறிப்போடிவ்வாறு கூறினர்‌.V—54

எல்லோரும்‌ இப்படித்தான்‌, உயிர்த்துணைவரீகள்‌ நெடுந்‌தொலை பிரிந்திருத்தார்கள்‌ என்றால்‌, பிரிவுத்‌ துயரால்‌
வெய்துயிர்த்து குற்றங்கூறாமலிருக்க மாட்டார்கள்‌. பின்‌ அவரிகள்‌ தம்‌ வசப்படினோ, யாரையும்‌ பொருட்படுத்தாமல்‌
அவர்களோடிணைந்து இந்திரன்‌ சந்திரன்‌ என்று புகழ்வார்கள்‌ .
அதன்‌ பிறகு இணைவித்த தோழியரும்‌ பயனற்றவர்களாக நினைப்பார்கள்‌. இத்தகைய நிலை உன்‌ தலையிலும்‌ விடிந்தது போலும்‌. | V—56

எனலும்‌, இளநகை யரும்ப, வெளிக்காட்டாதடக்க, சிறிது . சினம்‌ வரவழைத்துக்‌ கொண்டு, &முதட்டைக்‌ கடித்துக்கொண்டு,
அத்தோழியரை பந்தினால்‌ மெல்ல வீசி எறிந்து, அக்கம்பக்கம்‌ பார்த்தவாறு மெதுவாகச்‌ சொன்னாள்‌. V—57

இடைவிடாத உஙிகள்‌ பாட்டு அழகாக இருந்ததினால்‌, மீண்டும்‌ பாடச்‌ சொன்னேனே யன்றி வேறல்ல. இது தவறா?
பாயசம்‌ மீண்டும்‌ கேட்டால்‌ ஏழைகளாக விடுவரே? பழி தூற்றா தர்கள்‌. அவனோடெனக்கென்ன வேலை?
(விருந்தில்‌ பாயசம்‌ மீண்டும்‌ வேண்டினால்‌ அவர்கள்‌ ஏழைகள்‌தான்‌ என்பதில்லை. செல்வந்தரும்‌ சுவைத்துக்‌ கேட்கலாம்‌ என்ற
பழமொழியைக்‌ கூறி இசைக்கு மயங்கனே?னேயன்றி இறைவனை நாடவில்லை என்றாள்‌ கோதை) ப V—58

அந்தப்‌ பேச்சை விடுங்கள்‌ என்று கோதை கூற தோழியர்‌, இவ்விதம்‌ கூறலானாரீகள்‌. :அகட்டும்‌, நீ சொல்வது உண்மை
இனிமேலேப்‌ போதாவது, இனிக்கொஞ்சநேரம்‌ கழித்தாவது, நாளையேனும்‌, நீ அவனுடைய குணங்களையோ
குற்றங்களையோ சொன்னால்‌ அப்போது சொல்லுகிறோம்்‌ஸ்ரீ உன்‌ மனம்‌ அவனிடம்‌ ஈடுபட்டிருப்பதை மழைத்து எங்களை ஏமாற்றப்‌
பார்க்கிறாயா? V—59

நீ முகத்தைத்‌ திருப்பிக்‌ சொண்டு (பிறஈறியாது) நகநுனியால்‌ துடைத்தெரிந்த கண்ணீர்த்‌ துளிகள்‌, விளக்குச்‌ சுடரில்பட்டு
௪ட௪ட என்ற ஓசை எழுப்ப நீ அழுவதைத்‌ தெரிவிக்கவும்‌, மிகுந்த வருத்தமுடன்‌ மறைவாக (உஸ்‌ என்று) வாயால்‌
நெட்டுயிர்த்தல்‌, மெல்லிய இடையின்‌ பக்கங்கள்‌ அடிக்கடி அசைவதால்‌ தெரிவிக்கவும்‌,
(நாங்கள்‌ பேச்சுக்‌ கொடுக்கும்போது) இடுக்கிட்டு தமுதழுத்த
குரலைச்‌ சரி செய்ய நீ முயலும்‌ முயற்சியே நின்‌ நிலையை வெளிப்படுத்தவும்‌,
(பெண்ணாகப்‌ பிறந்ததே தவறு என்று) பெண்பிறவியை விரகத்துயரால்‌ நிந்திக்கும்‌ உன்‌ நடவடிக்கைகளை உன்‌ துயரை
எடுத்துக்‌ காட்டவும்‌, பிரிவாற்றாது படுக்கையில்‌ புளுவதே துயிலின்மையை புலப்படுக்க, தணிவு (இறந்து விடுவோமா என்ற
மனத்துணிவு) உள்ளுக்குள்ளேயே நீ சிரித்துக்‌ கொள்வதே புலப்படுத்த, எங்கள்‌ மேல்‌ (தோழியர்பா&்‌) காரணமில்லாமல்‌
கோபித்துக்கொள்வது உன்‌ மனக்கலக்கத்தை உணர்த்த, நங்காய்‌ நீ. இரவில்‌ படும்‌ அவத்தையைக்‌ காட்டும்‌
அடையாளங்கள்‌ அல்லவா?” V—60

(ஒருதோழமி சொல்கிறாள்‌)
அ ஒரு அற்புதம்‌ உங்களுக்குத்‌ தெரியாதல்லவா? இந்தத்‌ தோழி (கோதை) பொய்கையீல்‌ குளிக்கப்போகும்போது தன்‌ முத்து
மாலையை என்னிடம்‌ ஒப்படைத்தாள்‌, நானும்‌ அவளுடன்‌ சென்று மறந்துபோய்‌ கூடவே குளிக்க நீரில்‌ இறங்கினேன்‌
(வீரகதாபத்தால்‌ முன்பே பொரிந்திருந்த முத்துமாலை) நீரில்‌ பட்டதும்‌ சுண்ணாம்பாடிவிட்டது. : அவளே௱
வற்புறுத்தி தனது நகையைத்‌ (முத்துமாலை) தருமாறு கேட்கி றாள்‌! கேட்ிறா3ளயன்றி தன்‌ நிலைமையை கிறிதும்‌ உணர்ந்த
தாகத்‌ தெரியவில்லை. v—61

எனலும்‌, மராளிகா எனும்‌ தோழி சொல்வாள்‌ “கேட்டாயா ஹரிணி/ ஒரு நாள்‌ கஸ்தூரி எடுத்துக்கொண்டு போய்‌ எனக்கு
பொட்டுவை என்று அன்புடன்‌ (கோதையை) கேட்கவும்‌ அவள்‌ பொட்டிட முனைந்தாள்‌, சுரீர்‌ என்று முகத்தில்‌ சுட்டதுபோல
அவள்‌ நெட்டுயிர்ப்புக்காற்றினால்‌ கஸ்தூரி காய்ந்துபோகவும்‌, அதை நகத்தால்‌ சுரண்டி எடுக்கவும்‌, மீண்டும்‌ வைக்கவும்‌,
காய்ந்ததைச்‌ சுரண்டவு3ம நேரம்‌ சரியாகப்‌ போய் விட்டது v—62

எனலும்‌, சிரக்வினி எனும்‌ தோழி சொன்னாள்‌… *தோழியரே/நான்‌ இவளை பூங்கொடி ஊஞ்சலில்‌ ஊக்கும்போது, இவளது முலைப்‌ பாரத்தினால்‌ பூங்கொடி அறுந்து வீழின்‌ எவ்விதம்‌ தாங்குவது என்று ஐயுற்று கைலாஇல்‌ இவளைத்‌ தூக்கிப்‌ பார்க்கவ நடுப்பகலில்‌ வாடிய தட்டைப்பொம்மை போல எளிதாக (இ3லசாக) என்‌ கைகளில்‌ இருந்தாள்‌”, v—63

என்றிவ்வாறு தன்‌ நிலைமை தோன்றும்‌ படியாகக்‌ கூறவும்‌, அவற்றைப்‌ பொருட்படுத்தாதவள்போல அவர்களிடம்‌ இவ்விதம்‌ கூறினாள்‌. V— 64

ஆற்று விக்கவும்‌, தீரீத்துவிடவும்‌ மிகுதிறமையுடைய தோழிகள்‌ போல நீங்கள்‌ ஏதேதோ பேசுகிறீர்கள்‌! என்மீது எவ்வளவே அக்கறை இருப்பது போலக்‌ காட்டுகிறீர்கள்‌ உங்களுக்கேன்‌ இந்தக்‌ கவலை எல்லாம்‌? V—65

என்று பரிகாசம்‌ செய்துகொண்டு, ம௰க்கடித்துப்‌ பேக புடமிட்டதுபோல விரகத்துயரால்‌ வெய்துயிர்த்து, அந்நங்கையர்‌ திலகம்‌, அடக்கியும்‌ அடக்க முடியாமல்‌ இரவில்‌ ஒவ்வொரு சமயம்‌ தனக்குள்‌ இவ்விதம்‌ கூறிக்கொள்வாள்‌. v—-56

புதிதாக அலர்த்த வேளை மலர்‌ போன்ற கருவண்ணமுடைய மென்மையான இடது தோளில்‌ மகர குண்டலம்‌ தொட்டுக்‌
கடக்க, இணையற்ற முகத்‌ 9ெழில்‌ எனும்‌ திருவார்ந்த இளமையை நிலைநிறுத்தும்‌ வேப்பிலையோ என புுவத்தைச்‌
காட்டியும்‌, பருவத்தலர்ந்த பந்தூகம்‌ (உச்சிதிலகம்‌*) போன்ற இதழ்கள்‌ சிந்தூர. மழை பொழிய, ஒளி பொருந்திய கண்ணிணைகளின்‌ ,
பார்வை, காதிலணிந்த குண்டலங்களின்‌ ஒளியோடிணைய, ஏழு உலகங்களிலுள்ள மகளிரையும்‌ மகிழ்விக்கும்‌ ஏழுவிதமான
(சப்தசரங்களாகய) மதகுகள்‌ மூலம்‌ அமுதம்‌: பொழிவித்திடல்‌ போல குழல்மேல்‌ விரல்களை மாற்றி மாற்று வைத்து (ஊது)
ஆய்ச்சியரை மயக்க முறச்செய்தனையோ? V—67

அந்தோ. ராதையே/ உனக்குத்‌ தகுநீிததுதானா? (முறையா) கணவரையும்‌ மாமன்மாமியரையும்‌ விடுத்து (ஏமாற்றி வந்து) முகுந்தனின்‌ வேணுகானம்‌ (குழலிசை) ஆய வீளைக்கு (விளிக்கும்‌ ஒசை) ஆட்பட்டு, மான்களின்‌ கூட்டம்‌ போல வந்து, (திராசையுற்று) விரகதாபத்தால்‌ வெந்து, பயந்து, இரவில்‌ வந்த ஆய்ச்சியர்களை வருத்தமுறச்‌ செய்து, நீ ஒருத்திம்ட்டும்‌ அவன்‌ நலம்‌ முழுமையும்‌ குத்தகைக்கு எடுத்தாற்‌ போல்‌ இன்பத்தில்‌ திளைத்தாயே/ (இது தியாயமாகுமா?) V—~68

அக்கமலக்‌ கண்ணன்‌, ஒருத்தியைத்‌ தன்‌ தோளில்‌ ஏற்றிக்‌ கொண்டு பூம்‌ புதார்க்காட்டிற்கொண்டு போகவும்‌, பிற
நங்கையர்‌ எல்லாம்‌, யமுளைக்‌ கரையில்‌, சுமையால்‌ மிகவும்‌ அழுத்திய அடிச்சுவடுகளைப்‌ பின்பற்றித்‌ தேடிச்‌ செல்வர்‌,
சென்று தேடி அங்கே எதைக்‌ காணப்போடறார்கள்‌? பெண்‌களுக்குத்‌ தன்மானம்‌ வேண்டாமோ? V—69

வீட்டை விட்டுக்‌ கனவிலும்‌ வெளியேறாத சுற்புடைய மகளிரைச்‌ கூட்டி, விடுபவளாக, அச்சத்தை நீக்கி, கண்ணனின்‌
கலவி இன்பச்‌ சுவையைக்‌ காட்டி, பிறகு, அவர்கள்‌ வீரகதாபத்‌தால்‌ உன்னுடைய மணல்‌ திட்டுகளில்‌ வருத்தத்தால்‌ புரளச்‌
செய்தனை! கொடுங்கதஇர்ச்கற்றையுடையவனின்‌ மகள்‌ அல்லவா நீ!
(கொடுங்கதிர்களையுைய சூரியனின்‌ மகள்‌ யமுனை/ யமனின்‌ சகோதரியுமாவாள்‌! ஆதலின்‌ மரபு வழிப்பட்ட
கொடுமை உனக்கும்‌ ஏற்பட்டது என்பது குறிப்பு. உள்ளச்‌
சூட்டைவிட மணல்கதிட்டுச்‌ சூடு குறைந்தது ஆதலின்‌ அதில்‌ துன்பத்தால்‌ புரண்டனர்‌ என்றும்‌ குறிப்புள்ளது) V—70

என்று தனித்துத்‌ தனக்குள்‌ சொல்லிக்கொள்ளும்‌ சொற்‌ களைக்‌ கேட்ட அருகிலிருந்த தோழியர்‌: முகத்தில்‌
சிரிப்பு ஏனும்‌ நிலவொளி கால, வெளிப்பட்டு, நங்காய்‌,!
என்னென்ன உன்‌ மனபறிந்துதானே முதன்‌ முதலிலேயே அவனைப்‌ பற்றிய பேச்சுக்களைவிட இயலாது என்று
சொன்னோம்‌ என்று நினைஷூட்டவும்‌, சிறிது தலை சுவழ்ந்தவளாக, முகம்‌ வெளுப்ப குறு நகையடக்கிக்கொண்டு, இனியும்‌
மறைக்க முடியாமற்‌ போகவே, அவர்களோடு கலந்து இவ்வாறு கூறினாள்‌. V—72,

“மலரன்ன மங்கையரே! அன்று நாம்‌ இருந்திருந்தால்‌ எப்படியிருப்போம்‌?2’* எனலும்‌ அவர்கள்‌ பதிலுக்கு அவளிடம்‌
கூறினர்‌. “நங்காய்‌ அன்று நீ இல்லாமல்‌ எங்கே போய்‌ விட்டாரய்‌2”* என்றலும்‌ வியப்புடன்‌ கோதை கூறினாள்‌, V—72

“தோழியரே! முக்காலமும்‌ உணர்ந்த முனிவர்கள்‌ போலச்‌ சொல்கிறீர்கள்‌! அத்தகைய ஞானம்‌ உங்களுக்கிருந்தால்‌
சொல்லுங்கள்‌, முதலில்‌ நான்‌ யாராக இருந்தேன்‌?“ எனவும்‌, அவர்கள்‌ மீண்டும்‌ இவ்விதப்‌ கூறலானார்கள்‌, V—73

“சம்மலர்க்‌ கண்ணினாய்‌! வானுலகப்‌ (பாரிவிதப்‌) பூவை சக்களத்தி (ருக்மணி)யிடம்‌ தந்ததைக்‌ கண்டு, பொறுக்காமல்‌,
சிறிய செய்தியைப்‌ பெரியதாக்க, சினமும்‌ பொறாமையும்‌ கொண்டு, பூவோடு போகாமல்‌ மரத்தையே கொண்டு வருமாறு
கணவனை ஏவி, மருந்தென மரமே கொண்டு வருமாறு போலகெடுவைத்துத்‌ தருவித்த அப்போதைய சத்தியயாமையல்லவா நீ்‌ *
(மருந்து கொண்டு வரச்சொல்லின்‌ மரத்தையே கொண்டு வருமாறு என்பது பழமொழி. அனுமன்‌ மருந்துக்காக
மலையையே கொணர்ந்தது போல என்பது குறிப்பு. செம்மலர்க்‌ கண்ணினாய்‌! என்பதில்‌ சனந்ததால்‌ (செம்மை படர்ந்த கண்‌
என்று குறிப்பால்‌ சத்திய பாமையே நீ என்ற கருத்தை விளக்கும்‌)V—74

திடீரென (உடனை) உதித்த ஞானம்‌ உடையவளாய்‌, வீட்டில்‌ விளக்கேற்றியதும்‌ வீட்டிலுள்ள பொருள்கள்‌ எல்லாம்‌
உடனே புலப்படுவது போல, முற்‌ பிறவியில்‌ கண்ணனோடு விளையாடிக்‌ கவித்த இனிய அனுபவங்கள்‌ அப்போது துய்த்தாற்‌
போலத்‌ தோன்றவும்‌, V—75

பரந்த கண்களில்‌ தோன்றிய கண்ணீர்‌, (கண்ணீல்‌ கட்டிய)மையோடு கலந்து, செவித்துளையில்‌ நிறைந்து, அருகிலுள்ள
கூந்தலுக்குத்‌ தாய்ப்‌ போலப்‌ பேணவும்‌ ஏலவள்ளி போன்ற தன்‌மேனியில்‌ பூ மொட்டுகள்‌ போலப்‌ புளகமுற்று, தளர்ந்த
மேனியளாய்‌, மயங்கிவிழவும்‌, தோழியர்‌ கண்டு மனம்‌ பதைத்து ஆ/ என்றலறியபடி. அன்போடு அருகணைந்தளர்‌.
(கண்ணீர்‌ கருமையினால்‌ கருங்குழலுக்கு மேலும்‌ வண்ணம்‌ பூச, தாய்போலப்‌ பேணியது என்பது குறிப்பு) 77-76

“தாமரைக்‌ கண்ணினாளின்‌ செயல்கள்‌ எந்த அளவுக்குக்‌ கொண்டு போய்‌ விட்டது பார்த்தீர்களா? அதோடு நிற்காது
இவளது முற்பிறவியைப்‌ பற்றிய செய்திகளைக்‌ கூறி நகத்‌தளவினை மலையளவாக்கி (கடுகனைமலையாக்கி) விட்டோம்‌.
என்று கூறி குவளையுமிழ்ந்த நீரோடு பனைமடல்‌ வீசிறியோடு விசிறி மென்மையான பனித்துளிகள்‌ பெய்து ஆற்றுவிக்கவும்‌,77

உணர்வு வரவும்‌, கண்‌ திறந்து, மீண்டும்‌ தாமரைக்‌ கண்‌களையுடைய கோதை, கண்ணனின்‌ திருவடிகளை ‘ நினைந்து
அசைவற்று, கண்களை மூடி, மீண்டும்‌ கண்ணீர்‌ நிறைந்து இமைகளைத்‌ தள்ளி கண்‌ திறந்து பார்த்துத்‌ தோழியரிடம்‌ கூறினாள்‌. V—78

நீங்கள்‌ யார்‌” எனலும்‌’? அழகிய நங்காய்‌, நாங்கள்‌ நாகக்கன்னியரி, முன்பே பூலோகத்திற்கு வந்தோம்‌’” என்றனர்‌
எனலும்‌ அந்‌ நங்கையரைத்‌ தழுவிக்கொண்டு ஆர்வமுடன்‌ கூறினாள்‌. V—79

“அத்தகைய முராரி (கண்ணன்‌)க்கு அப்போது காதலியாக இருந்து, பின்‌ இக்‌ கலிகாலத்தில்‌ மீண்டும்‌ பிறந்து பிரிவுத்துயரில்‌ வருந்தும்‌ இந்த உடல்‌ எதற்காக? இத்தகைய என்னை எனது தந்தை இன்னொருவனுக்குத்‌ தருவதற்கு முன்பே யோகசக்தி யால்‌ உடலை மாய்த்துக்‌ கொள்கிறேன்‌! மீண்டும்‌ கண்ணனின்‌ பாத தாமரைகளைப்‌ பற்றுவேன்‌” “, V—80

எவள்‌ காதலனைப்‌ பிரியும்‌ துயரினுக்குஞ்சி உடனே உடலைத்‌ துறப்பாளோ, அவளது மனமே தசுரயபக்தியுடைய
தாகும்‌. மற்றதெல்லாம்‌ வஞ்சக முடையதுதான்‌. 8)

என்று (கோத) கூறவும்‌, அவர்கள்‌ கூறினர்‌. “ அந்தக்‌ கண்ணன்‌ எங்கேபோய்விட்டான்‌?”” கேள்‌; இருவரங்கத்தில்தான்‌
அருக்கிறான்‌! விரைவெதற்கு? அவனே உன்‌ கணவளாவதற்கு அர்ச்சனைகள்‌ முதலியவற்றால்‌, இந்த (திருவில்லிபுத்தார்‌)
ஊரிலுள்ள ஆரி (வடபெருங்கோயிலுடையான்‌)யினைப்‌ பூசிப்பாயாக!’ * V—82

*அஞ்சேல்‌” எனவும்‌, மனம்‌ தெளிந்தாள்‌. பின்‌, அதிலிருந்து, அடிக்கடி தோழியர்‌ கூறும்‌ தெளிவுரைகளாகிய வெண்
(முத்துக்களும்‌, கவலைகளாகய ௧௫ (*லமணி)களும்‌ சுலந்து நகையணியாதக மெலிவுற்ற அவள்‌ இதயத்தில்‌ இடை இடை
மணிகோத்த பன்னசரம்போல இருந்தது.
(தெளிவுரைகள்‌ முத்துக்கள்‌, கவலை நீலமணிகளாக, இதயத்தில்‌ பிரதிபலித்தது என்பது கருத்து) V—83

காத்திருந்து எப்போதும்‌ சுண்ணுறங்கவிடாமல்‌, மன்மதண்டி சண்டைக்‌ கிழுத்தவாறிருக்க, வெண்ணிற (வளர்பிறை) கருநிற
(தேய்பிறை) இரவுகளாகிய முள்ளம்‌ பன்றியின்‌ முள்‌ வீட்டில்‌ வைத்தாற்போல மதிமுகத்திளளுக்காயிற்று,
(முள்ளம்‌ பன்றி முள்‌ வீட்டில்‌ இருந்தால்‌ கலகம்‌ வரும்‌ என்பது ஐ.கம்‌. அந்த முள்‌ கருப்பும்‌ வெளுப்பும்‌ ஆமாறு போல
வளர்பிறை தேய்பிறைகளாகய இரவுகள்‌ முள்போல குத்தவைத்து மன்மதன்‌ போரிட்டான்‌ என்பது கருத்து) -34

கதுளிர்களே ஆயுதமாக உடைய மன்மதனின்‌ அணையால்‌, காலை எனும்‌ பீரங்கி வீரன்‌, நங்கையின்‌ உறுதியாகிய பெருங்‌ கோட்டையை வீழ்த்த, நாள்‌ கோறும்‌ சினத்துடன்‌ மென்மை யான சூரியனின்‌ இளங்கதிராகய வத்தியின்‌ சுடர்பட்டு விரிந்த தாமரைக்‌ தண்டாகய இருப்புக்‌ குமா (பீரங்கி)யின்‌ துளை நின்று புறப்பட்ட கருவண்டுகளாகிய குண்டுகளைப்‌ பிரயோக௫ித்‌ தானி.
(மாலையில்‌ தாமரை மலருட்‌ புகுந்த கருவண்டுகள்‌ இகழ்‌ ஹடப்பட்டபின்‌, காலையில்‌ கதிர்பட விரிந்ததும்‌ இதழ்‌ விரிய வெளியேறியது. பீரங்கியிலிருந்து புறப்பட்ட இரும்புக்குண்டு களாக உவமிக்கப்பட்ட நயம்‌ பாராட்டற்பாலது) V—S85

நங்கையின்‌ உறுதியைக்‌ கெடுக்க, அருகில்‌ நடுப்பகல்‌ என்னும்‌ மந்திரவாதி, பனி நீர்த்துளிகள்‌ சிந்தும்‌ இல்லத்தில்‌ காவித்‌ துகில்‌ போரீத்த மாலையை விதானத்தின்‌ கீழ்‌ அமர்ந்து குடயற்திர ஏற்றம்‌ ஆகிய உருட்டினான்‌,
(குடங்களைச்‌ சச்கரத்தில்‌ கட்டி ஏற்றமாக இறைக்க ஒன்று கீழே நீர்‌ மொண்டு கொண்டும்‌ ஒன்று மேலே நீரைச்‌ இந்திக்‌ கொண்டும்‌ இருக்கும்‌ வகையிலமைந்த கமலையாகும்‌. இது இன்றும்‌ வடநாட்டில்‌ கிணற்றில்‌ நீர்‌ இறைக்கப்‌ பயன்படுத்தக்‌ காணலாம்‌. இது ஜபமாலை உருட்டுவதாக உவமிச்கப்பட்டது. பிறரை அழிக்க *அபிசாரஹோமம்‌” செய்வது போல நங்கையின்‌ உறுதியைக்‌ குலைக்க, நடுப்பகல்‌ முயன்றது என்பது கருத்து)1/..-660

தாமரை கேள்வனாகிய சூரியனாகய முகமுடையதும்‌ மல்லிகை மலர்கள்‌ ஆகிய பல்லினையுடையதும்‌, குவளை மலர்ப்‌ ந்தாதாகிய மேனி வண்ணமுடையதும்‌, தேன்வண்ணத்தாரகை களாகிய கண்களையுடையதும்‌ ஆகாய மரத்தில்‌ திரியும்‌ மாலை யாகிய பெண்‌ குரங்கு குட்டிகளாகய சக்கரவாகங்களின்‌ இச்சுக்‌ குரலோடு கூடியதாக–அந்த நங்கையின்‌ கவலையா இரவு களில்‌ (கனவில்‌) தோன்றி வருத்தியது.
(கனவில்‌ குரங்கு தென்படுவது  என்பது ஐதீகம்‌ மாலையே குரங்காகக்‌ காணப்பட்டதாகச்‌ கற்பனை) 37-67

இவ்விதம்‌ காலை, நடுப்பகல்‌, மாலை ஆய வேளைகளிலும்‌ வருந்தி, அற்ற மாட்டாது. அற்நங்கை, அங்கிருக்கும்‌ திருமாலை ண்டும்‌ அடைய மனளத்துட்கறாதினாள்‌. V— 88

தாமரை முகத்தினளளாகிய கோதை, தினந்தோறும்‌ விடியற்‌ காலையில்‌ மெளனமாகக்‌ கடவுளை வணங்கி எழுந்து, தோழியர்‌
தங்கப்பாத்திரத்தில்‌ மஞ்சளும்‌, நெல்லிக்காய்‌ முதலியவையும்‌ குளித்தற்குரிய பொருட்களைத்‌ தரவும்‌, துவைத்த துகிலும்‌,
கூந்தல்‌ உலார்த்தத்‌ துணியும்‌ எடுத்துக்‌ கொண்டுபோய்‌, வீட்டருகிலுள்ள தோட்டக்கிணற்றிற்குச்‌’ சென்று இவ்விய பிரபந்தப்‌
பாடலைப்‌ பாடியவாறு குளித்தெழுந்து, மஞ்சள்‌ பூசிய எழில்‌ மேனி அசைவின்‌ ஒளி வீச்சுகள்‌, இளங்கதிர்‌ வெயிலுக்கு மாறு
கொள்ள, (போட்டிடபோட) நீண்ட கூந்தலைப்‌ பின்னுக்கு முடித்து விரைந்து ஈரம்புலர்த்தி நியமப்படியே V—89

முல்லை முகை வென்ற பல்லினளாகிய கோதை, நெற்றியில்‌ பூசணிவிதை போல திருமண்‌ (நாமக்கட்டி) திலகம்‌ நீட்டி
யானையின்‌ மத்தகத்தில்‌ சிந்தாரம்‌ போல நிதம்பங்களில்‌ செவ்‌ வண்ணப்‌ பட்டாடையுடுத்தி இருந்தாள்‌. குளிர்ந்த இரவில்‌ பூசிய
புனுகன்‌ மணத்திற்கு வண்டுகள்‌ வந்து விருந்தயர கூந்தல்‌ ஈரம்‌ மணம்‌ பரப்பிட V—90

கோயிலுக்குச்‌ சென்று, தான்‌ கட்டிய செங்கழுநீர்‌ பூமாலையும்‌, மரத்தில்‌ பழுத்த கதலிப்‌ பழக்குலையும்‌ கொண்டு
சென்று, நம்பி (பூசாரி) மக்களை விலக்கி வழி செய்யப்போந்து, திருமாலை வணங்கி வழிபட்டு, கருவறைத்‌ திண்ணையில்‌ பல்‌
வண்ணக்‌ கோலமிட்டு 4.91

காராம்பசுவின்‌ நெய்‌ பெய்த பெரிய விளக்கில்‌ சுடரேற்றி துவய மந்திரத்தை உச்சரித்தவாறு திருமார்பிற்‌ சாற்றி, அகில்‌
புகையிட்டு, சர்க்கரை, நெய்‌ கலந்த வாழைப்பழத்தை நைவேத்தியம்‌(படையல்‌) சமர்ப்பித்து. V—92
* அதுகாலையில தாமமை மலபாதாதலின செங்கமுநீர்ப்‌ பூமாலை கொண்டு சென்றாள்

நறுக்கிய பாக்கும்‌, இஞ்சித்‌ துண்டுகளும்‌, கற்பூரத்‌ தண்டுகளும்‌ கலந்த தாம்பூலம்‌ (வெற்றிலை) மிகுந்த பக்கியுடன்‌
சமர்ப்பித்து, தோழிகளுடன்‌ புறப்பட்டு V—93

நங்கை, கருப்பகிரகத்தைப்‌ பிரதட்சினம்‌ செய்து (வலம்‌ வந்து) வணங்கி தலையில்‌ சடகோபம்‌ (சடாரி) தரித்து, சரண
இர்த்தம்‌ பெற்றுக்‌ கொண்டு, பிரசாதமாகக்‌ இடைத்த பூமாலையை அணிற்து கொண்டு, இல்லத்திற்குச்‌ செல்வாள்‌. V—94

அச்சுதன்‌ (வடபெருங்கோயிலுடையான்‌) திருவடிகளைத்‌ தினந்தோறும்‌ பூசை செய்து வந்து, பிரிவாற்றாமையாலே உறுதி
யிழந்தவளாகி, அப்பெருமானின்‌ குணங்களை தமிழ்‌ மொழியில்‌ (த்ரவிடபாஷன்‌) பாடிக்‌ கொண்டிருப்பாள்‌. V—95

இளவேனில்‌ ஏற்கனவே சூடி. கொடுத்தவளின்‌ (அமுக்க மால்யத) காதல்‌ வெம்மையாகிய கதிரவனால்‌ சுட்டெரிக்கப்பட்டு வெப்‌
புற்ற தென்திசையை எனது சூடும்‌ கூடினால்‌ முழுவது?ம கரிந்துவிடுமென்று விலகிக்கொண்டானோ எனுமாறு வடதிசை
நோக்கிக்‌ கதிரவன்‌ புறப்பட்டான்‌.
(தட்சிணாயனம்‌ விட்டு உத்தராயணம்‌ நோக்கி (மகர சங்கி ராந்தியன்று) சூரியன்‌ வடக்கு முகமாகப்‌ புறப்படுதல்‌ இயல்பு) V—S6

கொடுங்கதர்களையுடைய கதிரவன்‌ அப்போது குபேரனின்‌ (வடக்குத்‌) இசைக்குத்‌ சென்றதன்‌ காரணம்‌, தெரிந்துவிட்டது.
நங்கையின்‌ தாங்கரிய வீரகதாபத்தின்‌ தீச்சுட்ட தென்இசையில்‌ இருந்ததால்‌ உண்டான தன்‌ மேனிச்‌ சூட்டினைத்‌ தணிக்க
வேண்டி, சனவுருவடைந்த தண்ணீராகிய சிவபிரானின்‌ மாம னாகிய இமயமலைச்‌ சாரலில்‌ குனிர்மையுற்று உய்வதற்காகத்‌தான்‌. V—97

மன்மதன்‌ சினற்து (விரகமுற்ற நங்கையரீமேல்‌, படை எடுத்து வரும்போது அவன்‌ கொடியில்‌ உள்ள மீன்‌ (மீன ராசி) வருவது சரிதான்‌. மேடம்‌ (ஆடு) (மேஷ ராசி) எதற்காக, வநீதது என்று கூறுவானேன்‌? தலைவனைப்‌ பிரிந்து வாடும்‌ நஙிகையரின்‌ வருத்தும்‌ தீ (அக்னி) வரும்போது அதன்‌ வாகனமும்‌ (ஆடு) வராமல்‌ இருக்குமாச்‌(உத்தராயணத்தில்‌ சூரியன்‌ மீனராசி, மேடராூிகளில்‌ சஞ்சறித்‌ தலைக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது) V—98

காதலரை இறுகத்‌ தழுவுதல்‌ இனிமேல்‌ அவ்வளவாக (வசந்த காலம்‌ வருவதால்‌) இராது என்று குளிர்‌ காலத்திலேயே பயந்து உதடுகளை நக்கிய நங்கையர்கள்‌ முன்‌, வசந்த பருவம்‌ விரைந்து வந்தது, குளிர்‌ தீர்ந்து முன்னைய நிலைமைகளைத்‌ துறந்தகர்‌,
ஆபத்துக்‌ சகாரலத்தில்‌ தைரியமாக இருக்க வேண்டும்‌ என்ற மூதுரை பொருத்தமேயல்லவா?
(உதடுகளை நாக்கால்‌ நக்குதல்‌ பயத்தாலும்‌ ஏற்படும்‌ குளிர்‌காலத்தில்‌ பனியால்‌ உதடுகள்‌ பிளவுறுவதாலும்‌ ஏற்படும்‌. இவ்‌
விரண்டினையும்‌ இலக்கணையாலும்‌ சிலேடையாகவும்‌ உணர்த்தப்‌ பட்டுள்ளது. நங்கையார்‌ பயந்தபடியே வசந்தகாலம்‌ வந்தாலும்‌
உறுதியோடு சமாளித்துக்‌ கொண்டனர்‌ என்பது கருத்து) 14-99

பல காயங்களை (உதடுகளில்‌) உண்டாக்கிய குளிர்காலத்தில்‌ தாம்‌ எச்சிற்படத்திய தேனையே உண்ட தேனீக்களின்‌ எச்சி
லாகிய மெழுகினை (தம்‌ உதடுகளில்‌) பூசியதால்‌ ஏற்பட்ட அவமானத்தை இந்த வசந்தம்‌ இர்த்தது என்ற நன்றிப்‌ பெருக்‌
கால்‌ அந்நங்கையர்‌ஜ இலவேனிலானுக்கு ஓய்வளிதீது தாமே பூக்கள்‌ மலர ஊக்கமூட்டும்‌ (தோகத) செயல்கள்‌ செய்தார்கள்‌.
(உதட்டுப்‌ பிளவுக்குத்‌ தேன்‌ மெழுகினைப்‌ பூசுதல்‌ மரபு. அதனால்‌ பெண்கள்‌ இழிவுற்றனராம்‌. அதைத்‌ தவிர்தசது
இளவேனில்‌. ஆதலால்‌ நன்றியுடன்‌ வசந்தனின்‌ வேலைகளில்‌தாமும்‌ பங்கு கொண்டு வேலைப்‌ பளுவைக்‌ குறைத்தனராம்‌,
உதைத்தலால்‌ அசோகு, உமிழ்தலால்‌ மகிழும்‌, டார்த்தலால்‌ மாவும்‌ தளிரித்துப்‌ பூக்கும்‌ என்பது வடமொழி இலக்கிய ட்டம்‌–5-100

ஏற்கனவே சந்திரனின்‌ பலத்தோடு (கஇிரககஇியால்‌ சந்திரபலம்‌) மலய மலையின்‌ மணம்படு இளங்காற்று எனும்‌ தேரில்‌,
ஏறிவரும்‌ மன்மதனுக்கு, கதிரவன்‌ கூட புதிதாகத்‌ துணை நின்றான்‌. பிரிந்த தலைவியரின்‌ உயிர்கவர நினைக்கும்‌ விதியின்‌
செயல்‌ நிறைவேறாமல்‌ போகுமா? 5-.10]

சூடாமணிப்‌ பாடலும்‌ இக்கருத்தைக்‌ கூறும்‌. — ஏடவிழ்‌ ம௫ழ்சுவைக்க எழிற்பாலை நண்புகூடப்‌
பாடலம்‌ நிந்திக்கத்‌ தேம்படிமுல்லை நகைக்கப்‌ புன்னை ஆட, நீள்குரா அணைக்க, அசோகுதைத்திட வாசத்தி
பாட மாப்பார்க்க வார்சண்பக நிழற்படத்‌ தளிர்க்கும்‌ சூடாமணி நிகண்டு 12-109

மலய (பொதிகைமலைச்‌) சாரலில்‌ தவக்குடியில்‌ வாழும்‌ குடமுனியினிடம்‌ பணிவிடை புரிந்து கற்றாளனோ எனுமாறு
தென்றல்‌ காற்று மெதுவாகத்‌ தவழ்ந்து பனிக்கடலைப்‌ பருகியது.
(குடமுனி (அசத்தியன்‌) கடலைக்‌ குடித்த கதை பிர௫த்தம்‌. அவனிடம்‌ கந்றுதனால்‌ குளிர்கடலைக்‌ குடித்துக்‌ குளிர்மை
யூ.ற்‌.றதென்பது கருத்து), V—102

பொதிகைச்‌ சந்தன மரத்தின்‌ பரிமளச்‌ சிறப்பினை மற்றுள்ள எல்லா மரங்கட்கும்‌ உருவாக்க வேண்டுமென்றுதான்‌ போலும்‌
மலரீவிக்கும்‌ சாக்கில்‌ மணமுண்டாக்கியது எனுமாறு அங்கு தென்றல்‌ வீசியது. ்‌ Y—103

இரவிக்கையவிழ்த்து, ஒருக்களித்துக்‌ காதலரைத்தழுவியவாறு தமது செறிமுலைகள்‌ அவர்களது மார்பில்‌ ஒற்றப்படுத்திருந்த
காதலியர்‌, சிறிது நேரம்‌ கழித்து வியர்வை படிந்ததென ஐயுற்று விடியலில்‌ இலுப்பைப்‌ பூக்களை மலரச்‌ செய்து வரும்‌ தென்றற்‌
காற்று வீசவும்‌, கொசுவலையை மேலே எடுத்துக்‌ கட்டினார்கள்‌. வெம்மை மிகவே இரும்படுப்பின்‌ கணப்பினைத்‌ தூண்டாமல்‌
விட்டு விட்டனர்‌. V—10

செங்கதிர்களையுடைய கதிரவன்‌, பனிக்கர்லம்‌ எனும்‌ இரவில்‌ மெலிந்து மறைந்து, இளவேனிற்காலமாகிய பகலின்‌
விடியலில்‌ எழுந்து, மங்கையரின்‌ கொங்கைகளிற்‌ பூச்சாக இட்ட குங்குமமாகிய செம்மையை (முன்‌ ஒப்படைத்த பொருளை
மீண்டும்‌) பெற்றுக்‌ கொண்டான்‌. இல்லாவிட்டால்‌ காலக்கணித மறியும்‌ கோழி (குயில்‌)யின்‌ குரல்‌, புலர்ந்த மகளிரின்‌ செவிகட்கு
இடியாகத்‌ தோன்றுமா?
(பனிக்காலம்‌ (ஹேமந்த சிசிரருதுக்கள்‌) இரவாகும்‌. வசந்தம்‌ பகல்‌, பசுலில்‌ எழுந்த சூரியன்‌ செம்மை ஏற்றான்‌. அது
முன்பே பெண்களின்‌ முலைக்குவட்டில்‌ பூசிய குங்குமமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, சூரியன்‌ இரவில்‌ தன்‌ சூட்டினை
அக்னியிடம்‌ தருவான்‌. மறுநாள்‌ பெறுவான்‌ என்பது மரபு.
இங்கு அக்னிகை எனும்‌ குங்குமப்பூ அகீனியாகும்‌, அதனிடம்‌ செம்மையுளது, முலையில்‌ வெம்மையும்‌ குஙிகுமச்‌ செம்மையும்‌
இருத்தலின்‌ சூரியன்‌ ஒப்படைத்ததாகக்‌ கற்பனை செய்யப்‌ பட்டது. விடிந்ததும்‌ கோழி கூவும்‌. அதுபோல வசந்தமாகிய
விடியலில்‌ கோழி போலக்‌ காலக்‌ சுணிதமறிந்து வசந்தத்தில்‌ கூவும்‌ குயிலின்‌ குரலிசையும்‌ அமைந்தது. புலவி கொண்ட மகளிர்‌
கோழியின்‌ குரல்‌ கேட்டதும்‌ இடி முழக்கம்போல பொழுது வீணே கழிந்ததே விடிந்து விட்டதே என்று வருத்தம்‌ செய்வது போல,
குயிலின்‌ இசையும்‌ பிரிந்த தலைவியரை வருத்தமுறச்‌ செய்யும்‌.பருவஙிகளை ஒரே நாளாகக்‌ கற்பனை செய்யப்பட்டது) v—105

கஸ்‌.தூரிப்‌ பூச்சை விடுத்து சந்தனம்‌ பூசினர்‌. முலையிணை களில்‌ முத்துமாலை அணிந்தனர்‌, செருகிய சரப்பூமா லையில்‌ ஒரு நன்னாறிவேரினை ஏற்றுக்‌ கொண்டார்கள்‌.
(இளவேனிற்‌ தொடக்கமாதலின்‌ சம சீதோஷ்ணமான பொருள்களை ஏற்றனர்‌ என்பது கருத்து), V—106

பெண்‌ பாம்புகளின்‌ அமுத ரச இதழிலிருந்‌ தூறிய வாய்‌ மணத்தால்‌ இனிமையுடையதாகியும்‌, நயந்த காதலராகிய ஆண்‌ பாம்புகளின்‌ நச்சுப்‌ பற்களின்‌ வெம்மை படிந்த காரமுடியதாரஅ யும்‌ கலந்து சந்தனப்‌ பொதிகைத்‌ தென்றல்‌, புறப்பட்டு வீசுவதால்‌ மரங்களில்‌ வற்றலாகி (இலைகள்‌ உதிர்தலும்‌)யும்‌ தளிர்கள்‌ தளிர்த்தும்‌ இருகுணங்களையும்‌ கொண்டதாக இருந்தது.
(ஆண்‌ பாம்பின்‌ நச்சுக்காற்றால்‌ மரங்களில்‌ இலைகள்‌ உதிர்‌தலும்‌, பெண்‌ பாம்பின்‌ அமுதக்‌ காற்றால்‌ தளிர்கள்‌ தலிர்த்தலும்‌
ஆகிய இரு பண்புகளையும்‌ கொண்டதாகத்‌ தென்றல்‌ காற்று வீசியது). V—107

சந்தன (பொதிகை) மலையிலிருந்து திரியும்‌ மெல்லிய தென்றற்காற்று, பழுத்த மரஞ்‌ செடி கொடிகளிலிருந்து காம்‌
புதிர்ந்து வீழ்ந்த இலை (சருகு)கள்‌–தாமரைப்‌ பொகுட்டில்‌ உடையதும்‌, முறித்த மஞ்சட்‌ காம்பினுடையதுமான மஞ்சள்‌
வண்ணமுடைய தங்கச்‌ சக்கரங்கள்‌ (ஆடப்‌ பொலியும்‌ தேரில்‌ கிறு கிறு என்ற ஒலியுடன்‌ செல்வதால்‌ மன்மதனின்‌ தேர்‌ என்பது
உண்மை எனத்‌ தெரிந்தது.
(தென்றல்‌ மன்மதனின்‌ தேர்‌ என்பது சுவி மரபு, மன்மதன்‌ திருமகளின்‌ மகன்‌ அல்லவா? தங்கத்தேராகத்‌ தானே இருக்க
வேண்டும்‌. தங்கத்தேரின்‌ தங்கச்‌ சக்கிரங்களே உதிர்ந்த மஞ்சள்‌ இலைகள்‌ என்பது கற்பனை) V—108

அதன்பிறகு V—109

பூமி என்னும்‌ பிடி (பயானை)யின்‌ மேல்போரீத்திய சப்புக்‌ கம்பளமாகவும்‌, பெருங்காடு எனும்‌ நங்கையின்‌ மதுமாதம்‌
(வசந்தம்‌) எனும்‌ மதுவுண்டதால்‌ ஏற்பட்ட செம்மையாகவும்‌, கொடிகள்‌ என்னும்‌ பாம்புகளின்‌ நாக்காகவும்‌, மரங்கள்‌ எனும்‌
கருடனின்‌ இறகாசவும்‌, செய்குன்றமாகிய மேகத்தின்‌ படிந்த வாள வில்லாகவும்‌,
புதிதாக வந்த தும்பிகள்‌ எனும்‌ விருந்தாளிகளை அழைக்கும்‌ மங்கள (அட்சதை) மஞ்சளரிசியாகவும்‌, காகத்திடமிருந்து பிரிந்த
குயில்களின்‌ பிரிவுப்‌, பத்திரிக்கைகளாகவும்‌, மாலதி (சாதிமல்லிகை)யை அச்சுறுத்தும்‌ நோயான பச்சை இரத்தமும்‌, வன
தேவதைகள்‌ பூசிய குங்குமமாகவும்‌, தென்றல்‌ காற்று எனும்‌ சாணையிற்பிடித்ததால்‌ உராய்ந்து பழுத்த இலைகள்‌ எனும்‌
மேற்‌ செதில்கள்‌ உதிர்ந்து, ஒளி வீசும்‌ பதுராகம்‌ (செம்மணி) ஆகவும்‌, தளிர்கள்‌ எங்கும்‌ தளிர்த்திருந்தன . V—110

முல்லைப்‌ பூக்கள்‌ அம்பறாத்‌ தூணியில்‌ தீர்ந்துவிட்டன மன்மதனை இச்சமயத்தில்‌ வெல்லலாம்‌ எனக்‌ கருதிய
பெரியோர்கள்‌, கொடிய பலிகள்‌ தரும்‌ நாட்களான தேய்பிறைஇரவில்‌ (சிவராத்திரியில்‌ மன்மதன்‌ பகைவனான சிவனை
வணங்கியும்‌, தளிர்கள்‌ எனும்‌ பட்டாக்கத்தியால்‌ அடிக்கப்‌ பட்டார்கள்‌.
(மன்மதனுக்கு மலரம்புகளில்‌ மாசி மாதம்‌ மிகுதியும்‌ பூக்கும்‌முல்லைப்‌ பூக்கள்‌ சித்திரை மாதத்தில்‌ தீர்ந்துவிட்டதால்‌, அவன்‌
தூணியில்‌ முல்லைகள்‌ இல்லை. இதுதான்‌ சமயம்‌ என்று மன்மதனை வெல்ல பெரியோர்கள்‌ முயன்றனர்‌. மன்மதனின்‌
பகைவன்‌ சிவன்‌ ஆதலின்‌ வழிபட்டனர்‌. எனினும்‌ மன்மதன்‌ அம்புகள்‌ இல்லாவிட்டாலும்‌ தளிர்கள்‌ எனும்‌ கத்தியால்‌ அவர்‌
களை வீழ்த்தினான்‌. என்பது கருத்து) 111

பூமியில்‌ அப்போது புதிதாகப்‌ பிறந்த மன்மதன்‌ எனும்‌ குழந்தைகளுக்கு, வசந்த காலம்‌ எனும்‌ மருத்துவச்சி கொப்பூம்க்‌
கோடியறுத்த பண்ணரிவாள்‌ போன்ற புரசம்‌ பூமொட்டுகள்‌, பிரிந்திருப்பவர்களின்‌, நெஞ்சங்களையும்‌ அரிந்தன. 4.12

(பிரசவம்‌ பார்க்கும்‌ மருத்துவச்‌ வசந்த காலம்‌, புதிதாகப்‌ பிறந்த குழந்தையே மன்மதன்‌. கொப்பூழ்‌ கொடியறுத்த பண்ணிரிவாள்‌ புரசமொட்டு. புரசமொட்டு பண்ணரிவாள்‌ போல வளைந்திருக்கும்‌ கொப்பழ்‌ அறுத்ததால்‌ இரத்தம்‌ படிந்து சிவந்தாற்போல புரசம்‌ பூக்கள்‌ சிவந்திருக்கும்‌)
பிற எல்லா மலர்களும்‌ நங்கையரின்‌ கூந்தலில்‌ இருப்ப (மணமின்மையின்‌) தான்‌, மட்டும்‌ அப்படி இருக்க முடிய வில்லையே என்ற நாணத்தால்‌ வணங்கிளாற்‌ போல வளைந்‌ திருந்த, புரசமொட்டுகள்‌ எனினும்‌, காதலா்‌ (பீய்ச்சுங்‌) குழலில்‌ (புரச மலரை அரைத்துக்‌) கரைத்துத்‌ தெளித்தலால்‌ நங்கையரின்‌ கொங்கைகளில்‌ சிறிது நேரமேனும்‌ மெய்ப்பூச்சாக இருக்கும்‌ பாக்கியம்‌ இடைத்ததே என்ற பெருமிதத்தில்‌ மக௫ழ்ந்ததவோ எனுமாறு சிவந்து மலர்ந்து எழில்‌ பெற்றன.
(புரசமுூகை, நாணத்தால்‌ வளைந்தாலும்‌, வசந்தகாலத்தில்‌ (காமன்‌ பண்டிகையில்‌) செவ்வண்ண நீருக்காக புரசமலர்சளை அரைத்து நீரிற்‌ கலந்து பீய்ச்சாங்குமலால்‌ தெளிப்பார்‌, ஆதலின்‌ கொங்கையிற்‌ படிந்து, அதிக நேரம்‌ கூந்தலில்‌ இருப்பதைளி ட சிறிது நேரம்‌ கொங்கசையில்‌ இருப்பது சிறப்பெனக்‌ கருதி மகிழ்ந்து மலர்ந்தன என்பது கருத்து) V—113

தென்றல்‌ காற்றானது, சந்தனப்‌ பொதிகை மலைக்‌ காடு களின்‌ மரங்களின்‌ மணத்தில்‌ தோய்த்து, தாமிரபரணியில்‌
கிடைத்த முத்துக்களாகிய விதைகளை திறமையுடன்‌, கை விதைப்பாக விதைத்திட முளைத்தது போலும்‌, இல்லாவிட்டால்‌
இத்த (வசந்த சால) மலர்களுக்கு உருவெழிலும்‌ நன்‌ மணமும்‌, எவ்விதம்‌ கிட்டும்‌ எனுமாறு புதுமலர்கள்‌ தோன றின,
(விதைத்தல்‌ இருவகை, கைவிதைப்‌ பாக கைப்பிடியில்‌ எடுத்து எறிந்து விதைத்தல்‌ ஒருவகை. கருவியில்‌ விதைகளைப்‌
பெய்து துளை வழியாக ஒவ்வொன்றாக வீழச்‌ செய்வது ஒரு வகை. கைவிதைப்பு சிறப்பென்பர்‌, தென்றல்‌, முத்துக்களை
சந்தன மனத்தில்‌ தோய்த்து விதைத்ததாக கற்பனை செய்யப்‌ பட்டது) v—114

கொடிகளையும்‌ மரங்களையும்‌ இரட்டையராக (தம்பதியராக) இணைவிக்க, மன்மதன்‌ (அம்பினை) எய்யவும்‌. அது
துளைத்து (இப்புறமிருந்து அப்புறத்திற்கு) ஊடுருவி, பசு வண்ணமுடைய  மேற்தோல்‌ சிதைய முளைத்த அம்பின்‌ முனைகளோ
எனுமாறு மொட்டுக்கள்‌ தோன்றின. v—115

வனலட்சுமி எனும்‌ திருமகள்‌, தன்‌ வயிறரகிய நிலத்தில்‌ பிறந்த மரங்கள்‌ எனும்‌ குழந்தைகள்‌ தளிர்களால்‌ செவ்வண்ணம்‌
கொண்டிருப்ப, அவை வளரவும்‌ மொட்டுக்கள்‌ ஆகிய பற்கள்‌ முளைக்கவும்‌, இனி மாதவன்‌ (வசந்தன்‌) ஆகிய காதலனைக்‌
கலந்தின்புறலாம்‌ என மஒழ்ச்சியாற்‌ பொங்கினாள்‌.
(குழந்தைகள்‌ பிறக்கும்போது டுயல்பாக செம்மையாக இருப்பார்‌. அதுபோல தளிர்‌ வண்ணச்‌ செம்மையால்‌ மரங்கள்‌
பிறந்த குழந்தைகள்‌ போன்றன. பின குழந்தைகள்‌ வளரவும்‌ பற்கள்‌ தோன்றும்‌, அது? பால மரஙிகளில்‌ மொட்டுக்கள்‌ பற்கள்‌
போலத்‌ தோன்றின. பிரசவித்த பெண்டிர்‌, தமது குழந்தை களுக்கு பற்கள்‌ முளைத்த பிறகு மீண்டும்‌ புணர்ச்சிக்குத்‌ தகுதி பெறுகின்றனர்‌ என்பது மரபு, ஆதலின்‌ வனலம்சுமியாகிய திருமகள்‌, மரக்குழந்தைகட்கு மொட்டாகிய பற்கள்‌ வரவே இனி மாதவனைக்‌ சகுலநிதின்புறலாம்‌ என மகிழ்ந்தாள்‌ எனுமாறு
வசந்த கால எமில்‌ தோன்றியது.
குழந்தைகட்கு பற்கள்‌ முளைத்ததும்‌ கலவிக்குத்‌ தாம்‌ தகுதி யுற்றோம்‌ என பெண்டிர்‌ மகழ்ந்ததாக *காதா சப்த சதிூயிலும்‌
சில பாடல்கள்‌ உள்ளன. சுருதி, ஸ்மிருதிகளிலும்‌ கூறப்‌ பட்டுள்ளது) V–116

முதலில்‌ பூக்களை ஆர்வமுடன்‌ முன்கால்களால்‌ பற்றி மூக்கன்‌ இரு துளை (தும்பிக்கை)சகளால்‌ உறிஞ்சி, பச்சை
வாசனையடிக்க3வ விடுத்து,
பருவமலரீகளின்‌ கொத்துள்ள இடத்தை ஆராய்ந்து பூம்புதர்க்கு நிரை நிரையாகச்‌ சென்று, நுழைந்து ஒரு தும்பி,
புது மலரின்‌ முன்பே நுழைய முயன்றபோது அதனைத்‌ தள்ளி
நிலத்தில்‌ விழச்‌ செய்து, தான்‌ பூந்தேன்‌ மாந்த, இலைகளு]ர்ந்த துளையில்‌, ஊறிய பசையை (மதுவெளனமயங்கி) குடிக்க ஆசைப்‌
பட்டு, காலூன்றி கால்‌ சிக்கிக்கொள்ளவே பயந்து கூவி, எப்படிமோ, ஒரு மலர்‌ கிடைக்கவும்‌, வயிறாரக்‌ குடித்து,
அம்மலர்‌ காற்றில்‌ அசையவும்‌ தடுமாறி நிலை நிற்க,
பூந்தோட்டத்தைக்‌ காவல்‌ காக்கும்‌ கஉனியர்‌ விளையாட்டாக நகைத்தவாறு பிடிக்கவும்‌ மலரிலிருந்து கீழே விழும்‌.
(வசந்த காலப்பூக்களை நாடும்‌ ஒரு தும்பியின்‌ வருணனை இது, முதலில்‌ படிந்த பூ பக்குவமில்லாததாதலின்‌ விடுத்து, பருவமலரை நாடி, ஏற்கனவே படியும்‌ தும்பியைக்‌ கீழே ஒன்ளித்தான்‌ குடித்தது. வயிறு நிறைத்த மயக்கத்தில்‌ இருக்கும்‌ போது கன்னியர்‌ பிடித்தனர்‌) V—117

(வண்டுகளின்‌ வருணனை)
காற்று கொணர்ந்த சந்தனமலை மரப்பாம்புகளின்‌ ந்ச்சுப்‌ புகைபோலவும்‌, ௮ ) சக்கடி வீழும்‌ மன்மதனின்‌ தோர்ச்சக்கர த்தின்‌ வண்டிமை (மசகு)த்‌ துண்டுகள்‌ (கவளம்‌) போலவும்‌,
(வசந்தகாலத்தைக்‌ கண்டஞ்சி) பயந்தோடும்‌ சர (குளிர்‌) காலம்‌ (நங்கை விடுத்த (கருமை நீட்டிய) கண்ணீர்த்துளிசளோ எனுமாறும்‌,
குயிலின்‌ பஞ்சமசுத்தைப்‌ பாடற்கேற்ற சின்னஞ்சிறிய வீணை3யா எனுமாறும்‌, மழைபோன்று தேன்மமை பெய்யவும்‌ பழுத்த நாவற்கனிகளோ எனவும்‌ மமைக்காலம்‌ பாடப்பட்ட இததோளராகத்திற்‌ இசைந்து வந்த காரர்வண்ணனாகய திரு மாலின்‌ மேனி எழிலோ எனுமாறும்‌, கனவினில்‌ குறியிடம்‌ செல்லும்‌ கன்னியரின்‌ துகலினை கருவண்ணமாக்கும்‌ சித்த குளிகையோ எனுமாறும்‌ சாதிமல்லிகைப்‌ பூக்கள்‌ (பூக்காத கால மாதலின்‌) வசந்த காலத்தைப்‌ பழித்துத்‌ தூற்றிய வசைமொமி களோ எனுமாறும்‌,
நங்கையர்‌ (குளிர்காலத்தில்‌ கணப்படுப்பில்‌ வைத்த alls துண்டுகள்‌, வசந்த காலம்‌ வந்ததால்‌ இனித்‌ தேவையில்லை என்று) எறிந்ததும்‌ அக்‌ கரித்துண்டுகள்‌, வசந்தகாலமாகிய அமுத சஞ்சீவிபட்டு, மீண்டும்‌ உயிர்பெற்று தாம்‌ பிறந்த இடமாகிய மரங்களை நாடிச்‌ செல்கின்றனவோ எனுமாறும்‌ வண்டுகளின்‌ கூட்டம்‌ காட்டில்‌ அலைந்து திரிந்தன.
(இந்தோள ராகம்‌ . வசற்த காலத்‌ தொ…க்கத்தில்‌ பாடுதற்‌ குரிய பண்ணாகும்‌.
சித்த குளிகையால்‌ பிறரரியாது போகும்‌ திறன்‌ ஏற்படும்‌. களவிற்புணரக்‌ குறியிடம்‌ செல்லும்‌ கன்னியர்‌ பிறர்‌ காணா
திருக்க இரவில்‌ நீல வண்ண ஆடை அணிவர்‌. சித்த குளிகை ௧௫
நிறம்‌ ஆக இருப்பதால்‌ வண்டாக கற்பனை செய்யப்பட்டது .
புகழ்‌, வெண்மை, இகழ்கருமை என்பது கவிமறபு. சாதிமல்விகை கள்‌ சபித்தல்‌ இகம்‌ ஆதலின்‌ அவை கருமையாக உ வமிக்கப்‌
பட்டது) V—i18

இரு பிறப்பிளையுற்றும்‌ மதுசேவை விடாது சாஇதியைவிடுத்த
தேனீக்களின்‌ இசையோடு கூடிய தாலோ என்னவோ குயிலிசை யும்‌ பஞ்சமத்தையடைந்தது,
(இரு.அிறப்பு – அந்தணர்‌, பல்‌, பறவை மூன்றுக்கும்‌ துவிசர்‌ என்பதாதலின்‌, ஈண்டு வண்டு (பறவை) ஆகிய பிராமணன்‌, மது
சேவை (தேன்‌-கள்‌) யாலே சாதியை (சாதிமல்லிகைப்பூவை) விடுத்தலால்‌ பாவம்‌ செய்ததாயிற்று. அந்த வண்டோடு சேர்த
லினாலே குயில்‌ பஞ்சமத்தை (பஞ்சமம்‌ எனும்‌ சுரத்தை) அடைந்தது. பஞ்சமம்‌ என்பது பஞ்சமாபஈதகத்தை என்பதும்‌
குறிப்பிடும்‌, இவை சிலேடையாகப்‌ பொருள்பட்டன.
பிரம்ம ஹத்தி, மதுபானம்‌, இருட்டு, குருமனைவியைப்‌ புணரல்‌ இந்நான்டும்‌ மாபாதகம்‌, இத்நதுகையோரிடம்‌ சேர்வது
ஐந்தாவதாகிய பஞ்சமாபாதகம்‌ என்பது மரபு.) V—119

(மா என்ற சொல்‌, குதிரை, மாமரம்‌எனும்‌ இருபொருட்டும்‌, இச்சிலேடை. மூலம்‌ வரும்‌ கற்பனை இது.)
பூத்த மாவினை. கேடுவரும்‌ எனும்‌ ஐயத்தால்‌ மலரம்பின னுக்கு மாதவன்‌ (வ௪ந்த காலம்‌) விற்றனன்‌ அவன்‌ அதனையே
கைக்கொண்டு, பிரிந்து செல்பவர்களை வெல்லும்‌ திறமை பெற்றனன்‌. தனக்குதெய்வம்‌ அனுகூலமாகவும்‌, பிறருக்கு
மேன்மை குறையும்காலமாகவும்‌ இருந்தால்‌ கருவிகள்‌ பழுதுறினும்‌ வெற்றி பெறுவது நிச்சயம்‌ அல்லவா?
(பூத்த மா என்பது ஈண்டு நிறம்‌ வேறுபாடுற்ற குதிரை என்பது ஒரு பொருள்‌.ர்குதிரையின்‌ தோல்‌ நிறம்‌ வெளுப்புற்றால்‌
அதனால்‌ தீங்கு ஏற்படும்‌ என்பது அசுவ சாத்திரக்‌ கருத்து. பூத்த மாமரம்‌ பிரிந்தவார்கட்கு துன்பந்தருவதாகும்‌. இங்கு பூத்த
மாவாகிய குதிரையை மன்மதனுக்கு வசந்தன்‌ விற்றுவிட்டான்‌ என்றாலும்‌ மன்மதன்‌ தெய்வ அரளால்‌ அதனைக்‌ கொண்டே
வெற்றி பெற்றான்‌ என்பது கருத்து) V—120

வசந்த காலம்‌ எனும்‌ பால்‌ கறப்பவன்‌ தன்‌ ஆற்றல்‌ முழுதும்‌ காட்டி, இரவு எனும்‌ பசுவின்‌ சந்திரன்‌ எனும்‌ மடியில்‌ கறந்த
நிலவு,என்னும்‌ அமுது பரந்து, பிச்சிப்‌ (கொஜ்ஜக) பூக்களின்‌ மச ரந்தமாகிய மணம்‌ பொருந்திய நீரும்‌ கலந்து முன்னீராகப்‌
(கடலாக) பெருக்கெடுத்து இருக்கவும்‌, வண்டுகள்‌ ஆ£ய அன்னங்‌கள்‌ பிரித்தறிந்து உண்டன.
(அன்னம்‌ பால்‌ மட்டும்‌ பிரித்தறிந்துண்ணும்வண்டுகள்‌ நீர்‌ மட்டும்‌ பிரித்தறிந்துண்ணும்‌ நிலவாகியபாலும்‌, பூந்தேனாகய
மண நீரும்‌ கலந்திருட்ப வண்டுகள்வேறு பிரித்துண்டன என்‌. கருத்து,) V—.20

பொய்கையில்‌ அன்னப்பறவை தாமரைத்‌ தண்டினைத்‌ துண்‌டித்து வாயிற்‌ கவ்விக்‌ கொண்டு, கரையில்‌ வளைத்திருச்கும்‌ கரும்‌
பின்‌ ஊடாகப்‌ பறந்து அப்புறத்திலுள்ள மலர்ந்த புன்னை மரக்‌ இளையிற்‌ சென்று வ௫க்கவும்‌, (தாமரைத்‌ தண்டின்‌) நூலிழைகள்‌
வழியாக புன்னை மரத்‌ தேனுக்கும்‌ பொய்கை மலர்த்தேனுக்கும்‌ வரவும்‌ போகவுமாக இருக்கும்‌ வண்டுகளின்‌ வரிசை மன்மதனில்‌
(கரும்பு) வில்லுக்கு இரட்டை நாண்‌ ஆகத்தோன்றியது. 7–122

காற்று, நீண்ட தேன்‌ ஒழுக்கினை (நிலத்தில்‌ விழுமுன்பே) இடையை பெற்று, (பிசுபிஈத்துள்ள மையின்‌) அவை கொடிகளா
இச்‌ சுற்றிக்‌ கொண்டாற்போல பஞ்சள்‌ (கோரோசனை திறம்‌) வண்ணமுடையதா௫, கண்ணாடி வளைபோல நெளிந்த சுழித்துக்‌
கொண்டிருப்ப மெதுவாக நடந்தது? பிரிவுற்ற தலைவர்களின்‌ நெடுமூச்சுக்களாகிய இ எதிர்படவே, கொழுந்துவிட்டெறிந்து
படபடவெளனப்பொறிந்து சுழிப்புற்றனவோ எனுமாறு அக்காற்று திகழ்ந்தது. V—123

வனலட்சுமியானவள்‌ தனக்கும்‌ நிலமகளுக்கும்‌ கணவனாகிய மாதவன்‌ (வசந்தகாலம்‌) வருவதை உணர்ந்து, மலர்கள்‌ என்னும்‌ தகைகளை நிலமகளுக்கும்‌, நிலத்தாமரை என்னும்‌ நகைகளைத்‌ தனக்கும்‌ இரவலாகப்‌ பரிமாறிக்‌ கொள்ளத்‌ திரியும்‌ மரையாணித்‌ தஇருகலோ.
எனுமாறு 8ழே உதிர்ந்த பூ மகரந்தத்‌ தூளை வாரி எடுத்து சுழன்றடித்த காற்று மரங்கள்‌ மேல்‌ பொழிந்து மஞ்சள்‌ வண்ண முடன்‌ சுழன்றன. V—124

நங்கையர்‌ மகிழ மரத்தை மதுவுமிழ்ந்து பூக்கச்‌ செய்தலைக்‌ கண்ட வனதேவதைகள்‌ “நாங்களும்‌ பெண்கள்தானே” £ என்று எல்லா மகிழ மரங்களையும்‌ பூத்திடச்‌ செய்ததற்கு (தாண்டற்‌ காக) தம்‌ கன்னம்‌ நிறைய மதுவைத்‌ தேக்கி (௨மிழ்தற்காக)
வைத்தனரோ எனுமாறு மகரந்தம்‌ நிறைந்த இலுப்பைப்‌ பூக்கள்‌ நிறைந்திருந்தன.
(இலுப்பைப்‌ பூக்கள்‌ வெண்ணிறமுடையவை, கள்ளிற்கு உவமையாக்கப்பட்டது.) V—125

நங்கையர்‌ தழுவுதலால்‌ பூக்கும்‌ வாய்ப்பினை இழக்கசி செய்து, தம்மைப்‌ வீணாகப்‌ பூக்கள்‌ சுமை தாங்கெளாக்கி
விட்டான்‌ இந்த வசந்தன்‌. (இளவேனிற்காலம்‌) என்று; தழுவு மின்பம்‌ இடைக்காததால்‌ காதல்‌ தீயில்‌ வெந்து, வண்டுகளே
புகையாக, பூநீதுகளே நீறாக (சாம்பலாக) மகரந்தமே சா$தாக கொள்ளிக்கட்டையான குரவகம்‌ (மருதாணி) நிலத்தில்‌ சாய்ந்தது.
(கொரவி என்ற சொல்‌ கொள்ளிக்கட்டை ‘ என்றும்‌ குரவக மரம்‌ என்றும்‌ இருபொருள்‌ தெலுங்கு மொழியில்‌ உண்டு. அப்‌
பொருள்‌ சிலேடை நயம்‌ தோன்ற இப்பாடல்‌ அமைந்திருக்கிறது,
கொள்ளிக்கட்டை எரிந்தால்‌ புகையும்‌, சாம்பலும்‌ கட்டை நுனியில்‌ நீர்ச்‌ கசிவாகிய சாந்தும்‌ ஏற்படுதல்‌ இயல்பு. வண்டுகள்‌
கருநிறமாதலின்‌ புகையாகவும்‌, பூந்துகள்‌ சாம்பல்‌ (நீறு) ஆகவும்‌ மகரந்தம்‌ சாந்தாகவும்‌ உவமிக்கப்பட்டன. மிகுதியாகப்‌ பூத்து
விட்டதால்‌ பெண்கள்‌ தழுவ வரவில்லை என்ற ஏக்கத்தால்‌ காதல்‌ வெம்மை கொண்டு மரம்‌ எரிந்து கொள்ளிக்கட்டையாகி
விட்டது என்பது கற்பனை) V—J26—மரையாணி -Screw.

நங்கையர்‌ மாமரத்தை தொட்டு, பூக்கச்செய்யவே வண்டுகள்‌ கொண்டாட, காய்கனிகள்‌ உதிர்ந்து தம்‌ ‘உணவு கெடுதலின்‌,
கிளிகளும்‌ குயில்களும்‌, திண்டாடிச்‌ சனத்தலினால்‌ (கிளிகளின்‌) முகமும்‌, (குயில்களின்‌) கண்ணும்‌ மிகுதியாகச்‌ சலவந்தன.
(வசந்த காலத்தில்‌ கிளி (மூக்கும்‌, குயிற்கண்ணும்‌ அதிகம்‌ சிவப்புறும்‌ அதனைச்‌ சினத்தலினால்‌ வந்ததாகக்‌ கற்பனை செய்யப்பட்டது) V—127

இணையற்ற காதலால்‌ நெகிழ்ந்த ஒரு பெண்‌, தன்‌ காதலன்‌ விளையாட்டாகக்‌ குறியிடத்தில்‌ மறைந்திருப்ப அவனைக்‌
காணாது காதல்‌ வெம்மை கூர்ந்து மனக்கலக்கம்‌ உற்று “Qlமரமே! என்‌ ‘ காதலனைக்‌ கண்டனையோ” என்று கேட்டதும்‌
அற்த மலைக்‌ கோங்குமரம்‌, மலர்ந்தது. அவ்வளவில்‌ அவன்‌ காணப்படவே அவள்‌ நகைக்கவும்‌, அருகிலிருந்த சுரபுன்னை
மரமும்‌ மலர்களால்‌ நிறைந்தது.
(கோங்கு பெண்கள்‌ உரையாட மலரும்‌. சுரபுன்னை நகைத்தலின்‌ மலரும்‌ என்பது கவி மரபு. குறியிடத்தில்‌
விளையாட்டாக மறைந்திருந்த காதலனைக்‌ காணாக்காரிகை கலக்கமுடன்‌ மரத்தைப்‌ பார்த்து உரையாடினாள்‌. கோங்கு
மலர்ந்துவிட்டது. கோங்கு ! மலர்‌ பொன்‌ வண்ணமுடைத்தாதலின்‌ அம்மலரின்‌ ஒளியால்‌ மறைவிடத்தில்‌ இருட்டில்‌ இருந்த
காதலன்‌ தென்பட்டான்‌. அது கண்டு மகிழ்ந்து நகைத்தாள்‌. சுரபுன்னையும்‌ மலர்ந்தன என்பது கருத்து, கோங்குமலரை
சுடருக்கு உவமை கூறல்‌ கவிமரபு) V—128

தாணு (ஸ்தாணு மரக்கட்டை-சிவன்‌) ஒரு ஆண்‌ மகன்‌ தயங்காது உமிழகிவாது பலன்‌ (பயன்‌-பழம்‌) தந்ததாகக்‌
கூறுவர்‌. தாமரை முகத்தினள்‌ வாய்‌ மதுவினை அன்போடு தர மலராவது தராமல்‌ இருக்கலாமோ என்று தினைந்தாற்போல
(ஒருத்தி) உமிழவே வகுளம்‌ (மகிழ்‌) மலர்ந்தது. (வகுளம்‌ உமிழ்தலால்‌ மலரும்‌ என்பது கவிமரபு, மரக்‌
கட்டையே பழம்‌ தந்தபோது – இலைகளுடன்‌ செழித்த மரம்‌ ஆ$ூய நான்‌ மலராவது தரக்‌ கூடாதா? என்று கருதியதாகக்‌
குறிப்பு. தாணுவாகிய சிவனைக்‌ கண்ணப்பனாகிய திண்ணன்‌…வாயால்‌ நீரைக்‌ கொணர்ந்து உமிழ்ந்து பூசை செய்ய சிவன்‌
பயன்‌ (அருள்‌) தந்தான்‌ என்பது தமிழில்‌ பெரியபுராணத்திலும்‌ தெலுங்கில்‌ ஸ்ரீ காளாஹஸ்தி மகாத்மியம்‌ எனும்‌ நூலிலும்‌ கூறப்‌
பட்ட கதை; இதைக்‌ கருத்திற்கொண்டு இக்குவிதையமைநீ துள்ளது. அண்‌ மகன்‌ உமிழவே பயன்தர பெண்மகள்‌ உமிழ்த
லின்‌ மலராவது தரவேண்டும்‌ என்று வகுளமரம்‌ நினைத்தாகக்‌ கற்பிக்கப்பட்டது.) V—129

மது என்ற பெயரையுடைய வசந்தகாலமும்‌ மதுவென்ற கள்ளும்‌, ஒரே பெயரைப்‌ பெற்றதால்‌ ஏற்பட்ட போட்டி
பொறாமையாலே தத்தம்‌ ஆற்றலைக்‌ காட்ட முனைந்து
(பெண்களின்‌ வாயில்‌ உள்ள மது உமிழ்வதாலும்‌, வசந்த கால வருகையாலும்‌) வகுள மரங்கள்‌ இலையுதிர்ந்து மலர்‌ சொரிந்து
நிறைந்தன. அது கண்ட தேனீக்கள்‌ வெற்றியடைந்ததாகக்‌ கருதி ஆரவாரம்‌ செய்தன்‌. V— 130

முயன்று பிருகுமுனிவன்‌ (இருமாலைக்‌ காலால்‌) உதைத்த போது (சனக்காமல்‌) மெச்சியவர்‌ (நாராயணன்‌ )னுக்கு மனித
மனைவி (£தை)யாகிய திருமகஷூக்கு உறைவிடமாகி (அசோக வனத்தில்‌) நட்புப்பூண்டதால்‌ இத்தகைய சாந்த குணம ஏற்‌
பட்டதோ எனுமாறு பூங்காவிலுளள அசோகமரம்‌ ஒரு நங்கை உதைத்தலும்‌ மலர்ச்சியாயிற்று, மலர்த்தாது ஆகிய (பொன்‌
நாணயங்கள்‌) கனகாபி?ேகம்‌ செய்தது.
(அசோகு நங்கையர்‌ உதைத்தலால்‌ பூக்கும்‌ என்பது க்வி மரபு. மண்‌ மகள்‌ ஈதையின்‌ பொறுமை அசோகுக்கு ஏழ்‌
பட்டது என்பது கற்பனை) V—131

பொறுமைமிக்க சம்பகமரத்தில்‌ ஒரு நங்கை முகமெடுத்துப்‌ பார்த்தலும்‌ அவளது முகச்சந்திரனது அமுதூறப்பிறந்த பது
மலர்களில்‌ இனிய தேன்‌ சுவைக்கலாம்‌, முன்‌ போல கசப்பும்‌ வாசனையும்‌ இராதென்று கருதி தும்பிகள்‌ அருகணைந்தன/
அந்தோ! அம்மலர்களிலும்‌ பழைய சம்பகத்தீன்‌ குணமே இருந்தது. கசந்து விரட்டியது. பொதுவாக தாயினைப்‌
போலவே பிள்ளை என்பது போல தாயின்‌ தீய குணங்கள்‌ தாயினை ஓத்துள்ள குழந்தைகட்கும்‌ இருக்குமல்லவா?
(சம்பகம்‌ நங்கையர்‌ ஏறெடுத்துப்‌ பார்த்தலால்‌ மலரும்‌ என்பது கவிமரபு. தும்பிகட்கு சம்பகமலர்‌ பகை. அதன்‌ மணம்‌
பிடிக்காது. (அலர்ஜி) அதன்‌ பூந்தேனும்‌ கசக்கும்‌ எனினும்‌ நங்கையின்‌ முசுச்சந்திரனால்‌ உருவான மலர்கள்‌ ஆதலினாலே
ஒருவேளை தேன்‌ இனிக்கும்‌ என்ற நப்பாசையில்‌ தும்பிகள்‌ சென்றன. சம்பகத்தின்‌ இயல்பான தன்மை மாறவில்லை.
முகச்சற்திரன்‌–தந்்‌தயாகவும்‌, சம்பகம்‌ தாயாசவும்‌ கற்பனை செய்யப்பட்டது. தாயின்‌ குணமே பிள்ளைக்கு
வந்தது என்றும்‌ தந்தையின்‌ குணம்‌ அல்ல என்றும்‌ கருத்தாகும்‌ 5-132–

ஒரு பெண்‌ தனக்கு விருப்பமான வசந்த ராகத்தைப்‌ பாடவும்‌ (பாட்டை கேட்டலரும்‌) பிரியாளு எனும்‌ மரம்‌ பூக்கவும்‌
அப்பெண்ணின்‌ சக்களத்தி பொறாதையால்‌ *₹:பக்தியினால்‌ தேவர்கள்‌ மெச்சி அநள்வார்கள்‌ இவள்‌ வசந்த ராகம்‌ பாடிய
தால்‌ வசந்தன்‌ அருள்‌ கூர்ந்து பூக்கச்‌ செய்தானே யன்றி இவள்‌ ஆற்றல்‌ ஒன்றுமில்லை’ * என்று குறை கூறினாள்‌. V—133

ஒருத்தி தனது வாயால்‌ காற்றினை ஊதவும்‌ அவள்‌ அணித்‌ இருந்த மூக்குத்தி (புல்லாக்கு)யாகிய முத்து அவளது இதழழ
தால்‌ உயிர்‌ பெற்று தான்‌ (முத்து) உயிர்ப்‌ பொருள்‌ ஆதலினால்‌ உயிரித்து முத்து முட்டைகள்‌ இட்டனவோ எனுமாறு மலர்கள்‌
உடர்ந்த சிந்துவாரம்‌ (தேக்கு) மீண்டும்‌ மலர்களால்‌ நிறைந்தது,
(சிந்துவாரம்‌ பெண்களின்‌ உ&யிர்ப்புக்‌ காற்றால்‌ மலரும்‌ என்பது சவிமர பு) V—130

செறிந்திருந்த இலைகள்‌ உதிர்ந்து திலகமரம்‌ மிகு வறுமை யுற்றதைக்‌ கண்ட ஒருத்தி, உள்ளத்தில்‌ இரக்கம்‌ பூண்டு,
கண்ணிணையால்‌ கண்டாள்‌. தொடாமலும்‌, ஒரு செயற்பாடு மின்றி மலர்கள்‌ பூத்துக்‌ குலுங்குவது கண்டால்‌, மன்மதன்‌
ஏற்கனவே இவளிடம்‌ ஒப்படைத்திருந்த மலரம்புகள் தான்‌ நிறைந்‌ துள்ளன. இல்லாவிட்டால்‌ எப்படி பார்த்ததுமே பூக்கள்‌ வரும்‌.
இது பொய்‌! என்று கூறுமாறு பார்வையாலே மலர்வித்தாள்‌. (திலகம்‌ பார்வையால்‌ மலரும்‌ என்பது கவி௦ரபு) V—135

அடிக்கடி மகரந்த மழை பெய்து பாதாளமும்‌, உதிரும்‌ பூக்களால்‌ பூலோகமும்‌, பூந்துகள்‌ செறிந்து வானுலகும்‌ ஆக
மும்முறைகளாலும்‌ மாதவனாகிய வசந்தன்‌ மூவடி அளந்து சூரியனணாகிய பலி சக்கரவர்த்தியின்‌ சூடாகிய ஆற்றலினை
அடங்கச்‌ செய்தான்‌.
(மாதவனாகிய திருமால்‌ மூவடியினால்‌ மூவுலகளந்தாற்‌ போல மாதவனாகிய வசந்தன்‌ மூவுலகும்‌ அளந்தான்‌ என்பது கருத்து) V—136

மகரந்த ஊற்றுக்கள்‌ கொப்புளித்த நிலங்களில்‌ படிந்த கருவண்டுகளின்‌ கூட்டம்‌, வசந்த காலத்தில்‌ மர நிழல்கள்‌ அசையாது நின்று விட்டன போலத்‌ தோன்றின.
(நிழல்‌, சூரியன்‌ செல்லச்‌ செல்ல தானும்‌ அசைந்து வேறு படுவது இயல்பு, மரத்தடியில்‌ மொய்த்த வண்டுசளின்‌ கருவண்ணத்தால்‌ நிழல்‌ எப்போதும்‌ மாறாமல்‌ அசையாது இருப்பது போலத்‌ தோன்றிற்று என்பது கருத்து) V—137

வெண்டாமரை மலர்களைப்‌ பரப்பினாற்‌ போன்ற சித்திரை மாத இரவில்‌ பொழியும்‌ வெண்ணிலவாகிய வெள்ளத்தில்‌
வான்‌ தொடும்‌ மரங்களின்‌ பூந்துகள்‌ குவை சேர்ந்து சேறாட களங்கமுறலும்‌, மலைக்‌ காடுகளிலுள்ள களா மரப்‌ பூந்துகள்‌ பட்டு
தேறும்படி செய்தலாலன்றோ காதலர்கள்‌ நிலவாகிய வேள்ளத்‌திம்‌ புனல்‌ விளையாடிக்‌ களித்தின்‌ புற்றனர்‌. இல்லா விட்டால்‌
களித்தின்‌ புறுவது கெடும்‌ அன்றோ?
(களாவிள்‌ பூந்துகள்‌ நீரின்‌ கலக்சலை நீக்கி தெளிவுறுத்தும்‌; தேற்றாங்‌ கொட்டை போல என்க) V— 138

பனி(க்காலம்‌) இர்ந்ததும்‌ ௮தன்‌ குளிர்மையும்‌ வெண்மையும்‌ இருள்படு திராட்சைக்‌ பந்தரிலும்‌, பூக்களிலும்‌ சார்ந்தன.
பிரிவின்‌ மெலிந்தவர்களின்‌ கழன்ற வளையும்‌ கானமும்‌, பொதிகைத்‌ தென்றற்‌ காற்றில்‌ சுழலிலும்‌, வண்டுகளின்‌
ரீங்காரத்திலும்‌ சேர்ந்து கொண்டன.
சாதி மல்லிகையின்‌ மணமும்‌ ஓளியும்‌ புது மருதாணிப்‌ பூக்களையும்‌ நிலவையும்‌ சேரீந்தன.
நோற்றவன்கள்‌ (துறவிகள்‌) விரதம்‌ முடித்ததும்‌ அவர்களது சடைமுடி உச்சிமர விழுதினையும்‌, மூங்கில்‌ தண்டம்‌–வேலி
களையும்‌ சார்ந்தன, மாமரங்களில்‌ நங்கையர்‌ வளர்த்த
குயில்கள்‌ பாடின. ஆங்கு அவர்கள்‌ களவின்பத்தில்‌ துய்த்த களைப்பிளை நீக்கித்தாமரைப்‌ பொய்கையில்‌ தவழ்ந்து வரும்‌
புதுமணத்‌ தென்றல்‌ வீசியது, V—139

அடிக்கடி கிளிகள்‌ தேமாவின்‌ கிளையில்‌ பழங்களை கொத்தச்‌ செல்லவும்‌, அக்கனிரசத்தைச்‌ சுவைக்க கருவண்டுகள்‌ இளிகளைத்‌ தொடர்ந்து சென்றன. வனலட்சுமி மனிதர்களைப்‌ போலவே இளிகளின்‌ இன்‌ சொல்‌ அமுது பருக விழைந்து (கருவண்டுகள்‌ ஆகிய) சங்கிலியால்‌ (இளிகளைக்‌) கட்டி வளர்க்‌
கின்றனளோ எனமாறு அங்கே ஓசை மிகுந்திருந்தது. V—140

நோன்பினரைக்‌ கெடுத்த பாவத்தால்‌ புழுவாகப்‌ பிறந்து, அந்நிலை மாறி: வண்டுகளகக உருவெடுத்த உடலைப்‌ பெற்று, இயமன்‌ இசை (தெற்கு)யிலிருந்து வந்த காற்றால்‌ உயிர்ப்பினைப்‌ பெற்று, அந்த வண்டுகளின்‌ நடன அரங்கமாக காமரைப்‌ பூவாசிய கண்‌ விழித்து, ஆங்குள்ள மலர்ந்த மா மரத்தினைசி சேர்ந்து மொய்க்கும்‌ வண்டின்‌ ஈட்டம்‌ திடீரென்று எழுந்து (போவதுவே) சித்திரன்‌ (வசந்தனைத்‌ தழுவிக்‌ கொண்டு பூந்‌ துகளாகிய, ஆடையினால்‌, (நீர்‌ மட்டத்திலிருந்து) மேலேமழுந்த துண்டினையுடைய பொய்கை அல்லி மலரின்‌ பூந்தாகய இரதி தேவியின்‌ கண்ணீரைத்‌ துடைத்தவாறு, வெண்ணிறமுடைய முசிகண்ணன்‌, இரதியின்பால்‌ இரக்கப்‌ பட்டு உதைத்துவிட்ட தால்‌ பிழைத்த, மன்மதன்‌ மீண்டும்‌; புரசமுகை என்னும்‌ விற்பிடியினால்‌ கிளிகள்‌ அசைத்த இலைகளையுடைய அசோக மரத்தின்‌ பூங்கணைகளைத்‌ தொடுத்து எழுந்து நின்றான்‌.
(சிவனால்‌ எரிக்கப்பட்ட மன்மதன்‌, வண்டுகள்‌ எனும்‌ உடலைப்‌ பெற்று, தென்றல்‌ எனும்‌ உயிர்ப்பினையுற்று தாமரை யாகிய கண்‌ விழித்து எழுந்தான்‌. தன்‌ நண்பன்‌ வசந்தனை (சைத்திரன்‌) தழுவிக்‌ கொண்டான்‌. (வண்டுகள்‌ மொய்த்து எழுந்து வேறொரு மரத்தில்‌ படிதலைப்‌ தழுவுதலாக உருவ௫க்கப்‌ பட்டது) பூநீதுகள்‌ ஆகிய ஆடையால்‌, இரதிதேவியின்‌ கண்ணீரைத்‌ துடைத்தான்‌.
(நீர்மேல்‌ எழுற்துள்ள அல்லி மலரின்‌ பூந்‌?தன்‌ கண்ணீ ராகவும்‌, பூந்தேனில்‌ படிந்த பூந்துகளால்‌ தேன்‌ மறைதல்‌ துடைத்ததாகவும்‌ கற்பனை செய்யப்‌ பட்டது). உயிர்பெற்ற மன்மதன்‌ மீண்டும்‌ அசோக மலரம்புகளைத்‌ தொடுத்து தன்‌ கடமை ஆற்றப்‌ புறப்பட்டு விட்டான்‌. பனிக்‌ காலம்‌, இலையுகிரீந்து, பொலிவின்றி இருத்தல்‌ சிவன்‌, எரித்த மன்மதனுக்கு உருவகம்‌, வசந்தகாலத்தில்‌ வண்டுகள்‌.
மலர்கள்‌, பொலிவுடன்‌ இகழ்தல்‌ மன்மதன்‌ மீண்டும்‌ உயிர்‌ பெற்றதற்கு உருவகம்‌, மன்மதன்‌. நோன்பிருந்த துறவிகளை மலரம்பு எய்து கொடுமைப்‌ படுத்தியதால்‌ புழுவாகப்‌ பிறந்து
ணை்டாூப்‌ பிறப்பெடுதிதான்‌. என்பது இமை புரிந்தோர்‌ புழுவாகப்‌ பிறப்பர்‌ என்ற மர பிளை ஒட்டி எழுந்த கற்பனை, .  இருந்த வண்டுகள்‌, அந்நிலைமாறி .. இறகுகள்‌ பெற்று வானில்‌ பறந்து திரியும்‌ அமனை, புழு நிலை மாறிய வண்ணத்துப்‌ பூச்சிகள்‌ போல இருந்து, பனிக்‌ காலம்‌ புழுறிலை யாகவும்‌ வசந்த சாலம்‌ பறந்து திரியும்‌ வண்டாகவும்‌ உருவ௫த்‌ தாற்‌ போல தொனிப்‌ பொருல்‌ தருறது.
(அற்புதமான கற்பனை தயம்‌ செறிந்த கவிதையிது ,) 5-141-

குயில்களுக்குத்‌ தளிரும்‌, கிளிகட்‌ ஈமப்‌ மங்களும்‌, அஸி (தேனீக்‌) கட்குத்‌ தேனும்‌. வளி (காற்ழடக்கு மணமும்‌, காதலர்‌
கட்கு மலர்களும்‌, அருளோடு நிறையக்‌ தந்த வசந்தகாலம்‌ எனும்‌ காம3தனு, தான்‌ கொடை தந்ததால்‌ தன விருப்பங்கள்‌ நிலற வேறும்‌ என்ற கருத்தால்தான்‌ ஆண்மையை அடைதந்ததோ எனுமாறு கடுமையா பிரிந்தவர்களை வருத்தியது. 5- 142

தேமாவின்‌ பழச்சாற்றின்‌ மணத்தோடு கள்‌ மணமும்‌ கலந்து இதழ்களில்‌ பரிமளிக்க சந்தனப்‌ பூச்னால்‌ எலுமிச்சைத்‌ தோலின்‌ வண்ணத்தோடு எழில்‌ பெற்றிலஙிகும்‌ கரதுகளில்‌ ரோஜாமலர்களை அணிந்து, கற்பூரவாழையின்‌ உட்தண்டின்‌ வண்ணத்தோடு மாறு கொள்ளும்‌ பாவாடைகள்‌, தொடைகளின்‌ தகதகவெனும்‌ மினுமினுப்பைப்‌ பற்றிக்‌ கொண்டு (அவ்வெழிலில்‌) தமக்கும்‌ ஒரு பங்கு கேட்டு முரண, மிதிக்கும்‌ தேனீக்களை
விரட்ட சம்பகப்‌ பூமாலைகள்‌ தலை முடியில்‌ சூடி எழில்‌ பெற்றிலங்ட, கைகளில்‌ சித்திரான்ன வாசனை போக, குங்குமப்‌
மூ பூரிக்‌ கொண்டவாறு, பூக்கள்‌ பாரத்தால்‌ எழில்‌ பெற்ற
சுரபுன்னை மரங்களை தென்றல்‌ அசைத்ததால்‌ பூந்துகள்‌ நீறு தனது மேனி படிய, நங்கையர்‌, பூம்புதரிடையே தன்‌ சகாதலரோடு
இணைத்தின்புற்றனர்‌. V—143

அப்போது — (அந்த வசந்த காலத்தில்‌) V—144

நங்கை (சூடிக்கொடுத்த நாச்சியார்‌); வசந்த காலத்தில்‌ செருக்கினை அடக்குவேன்‌ என்று கூறி, தன்‌ நலம்‌ நாடியவளாக
(மேகரஞ்சனி’ ” எனும்‌ பண்ணினைப்‌ பாடவும்‌, பல்வண்ண மணி களுடன்‌ எழில்பெற்ற வானவில்லும்‌, மின்னலும்‌, கூடிய கார்‌
முகில்‌ கூட்டம்‌ தோன்ற, மலர்ந்த கதம்ப மலர்கள்‌, தாழம்‌பூக்களின்‌ மணத்தைத்‌ தழுவியவாறு மென்காற்று வீசவே,
அதைத்‌ தாங்க முடியாது சோர்ந்து மயங்கி வீழ்ந்தாள்‌.
(பிரிந்தவர்களை கதம்ப (கடம்‌ப) மலரும்‌ தாமை மலரும்‌ மிகவும்‌ வருத்தும்‌ என்பது கவி மறபு) V—-145

நங்கை (ஆண்டாள்‌) முழுமதியைக்‌ கண்டஞ்சி சந்திரகாந்தக்‌ கல்‌ மேடையில்‌ படுக்கவும்‌, அங்கு (வருத்தம்‌) இருமடஙிகாகவே
வானில்‌ இருந்த சந்திரனை வீட்டிற்குக்‌ கொணர்ந்தேனே என்று மிகவும்‌ பரபரப்புடன்‌ எழுந்து செல்வாள்‌.
(சந்திரகாற்தக்கல்‌ குளிரிச்சியுடையது. அதில்‌ சந்திரன்‌ பிரதி பிம்பம்‌ தோன்றும்‌, அது கண்டு தேவி பொறுக்க இயலாமல்‌
விஷ்ணில்‌ இருழ்ததை மண்ணிற்குக்‌ கொணர்ந்தேனே என மறுகினாள்‌ என்பது கருத்து) 5-146-

வண்டுகளின்‌ தத்தை அடக்க வீணை மீட்டவே, அந்த வீணையின்‌ இசை சுருதி கூடி வண்டிசையை இருமடங்கு சுவை
கூட்டி விடவும்‌, உடனே மீட்டுவதை நிறுத்தி **ஊழ்வலியின்‌ முன்னர்‌ நமது உபாயங்கள்‌ பலிக்காது”£” என்று கூறி நெட்டு யிர்த்துச்‌ சிரிப்பாள்‌. yV—147

மலர்ப்படுக்கை மங்கைக்கு மிகுந்த வெம்மையைத்‌ தந்தது, முன்‌ அவள்‌ உதைத்தல்‌ (நகைத்தல்‌, இகழ்தல்‌) முதலிய அதட்டல்‌
களால்‌ மனம்‌ நொந்து மரங்களில்‌ பூத்த மலர்கள்‌, காத்திருந்து பழிவாங்கும்‌ சமயம்‌ வாய்த்தது என மிகவும்‌ வருத்துமேயன்றி
ஆறுதலைத்‌ தருமா?
(நங்கையர்‌ உதைத்தல்‌, இகழ்தல்‌, உமிழ்தல்‌, முதலிய தோகதக்‌ (தூண்டற்‌) கிரியைகளினால்‌ அவமானமுற்ற மரஙி
களில்‌ பூத்த மலர்கள்‌ ஆதலின்‌ அவை பழிவாங்கக்‌ காத்திருந்து இதுதான்‌ சமயமெனப்‌ பழி தீர்த்துக்‌ கொண்டாற்‌ போல மலர்‌
களும்‌ வெம்மை தந்தன என்பது கருத்து) 5-148

அன்ன மங்கை நல்லாள்‌, பூசை புரிவதற்காக எனும்‌ காரணம்‌ காட்டி கவனமின்றி தன்‌ விரக தாபத்தைதி
தணிக்க வேண்டி, தஇருமாலின்‌ திருவுருவத்தை திறமையுடன்‌ சாத்திர விதிப்படி தூரிகை கொண்டு (9த்திரம்‌) எழுக, நாண
முற்று, எல்லா அவயவங்களையும்‌ வரைந்தாள்‌. பின்‌ அந்த தெய்வத்தின்‌ மார்பில்‌ இடங்கொண்ட திருமகள்‌ உருவத்தைக்‌
கண்டு, பொறாமையும்‌, தாபமும்‌ மிக3வ கலக்கமுற்றாள்‌.
(சத்திரம்‌ எழுதும்போது கவனமின்றி இருந்ததால்‌ இருமகள்‌ சித்திரமும்‌ வரைந்தாள்‌ என்றும்‌ பின்‌ அச்சித்திரம்‌ கண்டு
பொறாமையுற்றாள்‌ என்றும்‌ குறிப்பு) V—149

வள்ளையல்லிப்பூப்‌ பொய்கைக்‌ சுரையில்‌ புது கமுநீர்ப்பூம்‌ படுக்கையில்‌ சாய்ந்து, அந்த
தேவி, பெளர்ணமி, (முழு மதிஉலா)யில்‌ குயில்கள்‌ கூவி உயிரைப்‌ பறிக்க குறறுயிரோடு கிடந்து தாளம்‌ செய்த புண்ணியப்‌
பேற்றினால்‌ பிழைத்திருந்தாள்‌. அவ்விரலில்‌ மல்லிகை மலர்‌களை நாடிய வண்டுகளின்‌ ஓசை அவள்‌ காதில்‌ விழாதவாறு
இரவு முழுதும்‌ சொரிந்த கண்ணீரானது காதுகளில்‌ தேங்கிஅடைத்தது, அதனால்தான்‌ மறுநாளும்‌ பிழைத்திருந்தாள்‌.
(காதில்‌ கண்ணீர்‌ தேங்குவதால்‌ ஒலிபுகாது வண்டிசை கேட்கவில்லை. அதுவும்‌ கேட்டால்‌: துயர்‌ மிகுதியால்‌ இறந்‌திருப்பாள்‌ என்பது கருத்து) v-—150

(குடங்களில்‌ உதவியால்‌ வெள்ளத்தில்‌ நீந்திக்‌ கடச்களாம்‌. ஆனால்‌ அக்குடங்களினுள்ளே வெள்ளம்‌ மிகுந்தால்‌ அவை மிதக்காது.. மூழ்கடிக்கும்‌, அதுபோல)
நங்கையின்‌ முலைக்குடங்கள்‌ இரண்டிருந்தும்‌ பிரிவுத்‌ துயராகிய கடலைக்‌ கடக்கத்‌ துணைபுரியவில்லை தோழியர்‌ பெய்யும்‌ பன்னீர்‌ வெள்ளம்‌ உட்புகுந்தமையால்‌, மூழ்கடிக்காமல்‌ எளிதாக மிதக்க செய்யுமா என்ன?
– (விரகதாபம்‌ போக்க பன்னீர்‌ தெளித்தார்கள்‌. அந்தப்‌ பன்னீர்‌ முலைக்‌ குடத்தில்‌ நிறைந்ததால்‌ அதன்மூலம்‌ துயர்‌ வெள்ளத்தை நீந்திக்‌ கடக்க முடியவில்லை என்பது கருத்து]–151

சஞ்சலிக்கும்‌ கண்களையுடைய அந்நங்கையணிந்த தாமரைத்‌ தண்டுகளை, விரைந்து களையவும்‌, ஒடி வந்து பேய்ந்த அரச அன்னம்‌, அதன்‌ சூட்டினைப்‌ பொறுக்காமல்‌ (வாய்‌ வெந்து) அலறித்‌ தவித்திடும்‌ அதன்‌ சேட்டைகளை கண்டு, அவள்‌ மெல்லச்‌ சிரித்தான்‌! அவள்‌ நகையைக்‌ காண்போமா? என முகத்தில்‌ விழி வைத்து முகத்தினையே பார்த்துக்‌ கொண்டிருந்த தோமியர்கட்கு ஒருவிதமாக உயிர்‌ வந்தது
(விரகதாபத்தால்‌ தாமரைத்‌ தண்டுகள்‌ கொதித்தன. அறியாது தின்ற அன்னங்கள்‌ வாய்வெந்து அலறின. மரணப்‌ படுக்கையில்‌ இருப்பவர்சள்‌ சிரித்தால்‌ மீண்டும்‌ உயிர்‌ பிமைப்பா்‌ என நம்பிக்கை ஏற்படும்‌ என்பது மரபு. அன்னத்தின்‌ நிலை கண்டு தேவி சிரித்தாள்‌. தோழியர்கட்கும்‌ போன உயிர்‌ திரும்பியது. சஞ்சலநேத்திரி அலையும்‌ (கண்களையுடையவள்‌) என்ற விளி பொருத்தமானது. உயிர்‌ ஊசலாடுவது போல அவள்‌ கண்களும்‌ ஊசலாடின என்பது குறிப்பு) V—152

இருமகள்‌ கேள்வன்‌ மேல்‌, இனிய குரலையுடைய அந்த தேவி, பாட விரும்பி, வீணைஞஷயத்‌ தொடவும்‌, அவள்‌ கைச்சூடு பட்டு, படிக்கட்டின்‌ (மெட்டு) மெழுகு கரைந்து போகவே, அதனை விடுத்து, தம்புராவை எடுத்து பாட முனையவும்‌, மீண்டிம்‌ வியரீவையினால்‌ தந்திகள்‌ நனைந்து கெடவே, விடுத்துத்‌ தானே பாடுவாள்‌! கழுத்து குரல்தடுமாறவே இயலாது(செய்வதறியாது) நிலை குலைந்து திற்பாள்‌. V—153

ஒவ்வொரு பூம்படுக்கையிலும்‌ நழுவிவிழுந்த சுட்ட வளையல் களின்‌ கரிய குறிகள்‌ இரண்டும்‌, வட்ட வடிவமாகக்‌ கடந்தது;
அழகிய பற்களையுடைய நங்கை, இனி மானமும்‌, தைரியமும்‌ பூஜ்யம்தான்‌ என்று வெட்கத்தால்‌ சொல்ல முடியாமல்‌ எழுதிக்‌
காட்டினாளோ எனும்படியாக இருந்தது.
(பூம்‌ படுக்கையில்‌ சரிந்த வளையல்‌ இரண்டும்‌ இரு பூத்யங்‌களை (சைபர்‌ 0) குறியாகப்‌ பதித்தன, அவை நங்கை, மான
தைரியங்கள்‌ இன்மையை வரைந்து காட்டியது போலிருந்ததுஎன்பது கருத்து, பூஜ்யம்‌ (சுன்னம்‌) இன்மையை எண்ணிற்‌
குறிக்கும்‌) v—154

அந்தத்‌ தாமரைக்‌ கண்ணாள்‌, விரகதாபத்தால்‌ புரளவும்‌, கசங்கிய ஆடை. அணிகளை, உடனுக்குடன்‌ களைந்து வேறு வேறு
அணிகள்‌, உடைகள்‌ அணிந்து (பகற்கால) பூசைக்களுக்காக புத்தாடையணிவது போலத்‌ தோன்றுமாறு பகவத்‌ பூசளையில்‌
கவனமாக இருந்தும்‌, பொய்யான நலன்‌ காட்டியும்‌ காதல்‌ நோயை மறைத்தாலும்‌ அது எப்படியும்‌ வெளிப்படவே அதைக்‌
கண்டு (விஷ்ணு கத்தர்‌) மனம்‌ வருந்தினார்‌. V—155

விஷ்ணு சித்தர்‌, புதல்வர்‌ பேறின்மையாலும்‌, ஒருமகளும்‌ இவ்விதம்‌ இருப்பதறிந்தும்‌, காதல்‌ உணர்ச்சிகளை அறியாதவர்‌
ஆகையாலே, இது ஏதோ ஒரு தவம்‌ (விரதம்‌) என்று கருதினார்‌.V—156

(விஷ்ணுசித்தர்‌) நினைந்து நாள்தோறும்‌ வளரும்‌ மகள்‌ உடல்‌ மெலிவினைக்‌ கண்டு மிகுந்த வருத்தம்‌ அடைந்து அதன்‌
காரணத்தை அறியாமல்‌; வேண்டாம்‌ என்று அறியாமையால்‌ தடுத்துப்‌ பார்த்தும்‌, வரவர அதிகமாவதையறிந்து கோயிலுக்குச்‌
சென்று, பூசை முடித்து வணங்கிய பின்‌, தன்‌ மன வருத்தத்தை அநீநகரத்‌ திருமாலுக்கு (ஸ்ரீவில்விபுத்தூர்‌, மன்னார்‌ சுவாமிக்கு)
விண்ணப்பித்துட மீண்டும்‌ வணங்கி, ஓ தேவா! தங்கள்‌ அடிமை யாகிய என்மசள்‌ எதற்காகவோ விந்தையான விரதத்தை மேற்‌
கொண்டு உடலை மெலிவிக்கிறாள்‌. வேண்டாம்‌ என்றாலும்‌ கேட்க மாட்டாள்‌. மகன்‌ இல்லாத எனக்கு, மசன்‌ ஆனாலும்‌
மகள்‌ ஆனாலும்‌ அவளே தான்‌. நான்‌ என்‌ செய்வேன்‌! மேலும்‌, அள்‌ தவம்‌ செய்யும்‌ விதம்‌ எங்கள்‌ தவமுறையன்று, நாங்கள்‌
துங்கள்‌ தினங்கள்‌, தங்கள்‌ அவதார தினங்கள்‌ தவிர பிற நாட்‌ களில்‌ இரவில்‌ சண்‌ விழித்தறியோம்‌. நாங்கள்‌ தாமரைக்‌
கொட்டை அச்கமாலையன்றி தாமரைத்‌ தண்டு மாலையை அறியோம்‌. நாங்கள்‌ பிரசாதமான பூக்களை காதில்‌ செருகுவ
தன்றி, பூவினாலான படுக்கையில்‌ படுத்தறியோம்‌. நாங்கள்‌ தங்கள்‌ தீர்த்தத்தைப்‌ பருகினால்‌, அவள்‌ தன்னுடல்‌ முழுதும்‌
நனைத்துக்‌ கொள்கிறாள்‌. நாங்கள்‌ சாந்திராயண விரதத்தில்‌ கலைகட்கேற்ப (வளர்பிறையில்‌) கவளத்தைக்‌ கொஞ்சங்‌
கொஞ்சமாக அதிகமாக்க (உண்டால்‌) குறைத்துக்கொண்டு வருறாள்‌, நாஙிகள்‌ மூச்சை உள்‌ வாங்க அடக்கினால்‌ அவள்‌
மூச்சை (நெடு மூச்சுக்கள்‌) வெளியே விடுகிறாள்‌. நாங்கள்‌ சின்‌ முத்திரையாக கையை இதயத்தில்‌ சேர்த்தால்‌ அவளோ கையைக்‌
கன்னத்தில்‌ வைத்திருக்கிறாள்‌. நாங்கள்‌ மரவுரி அணிந்தால்‌ அவன்‌ தளிரிலைகள்‌ அணிகிறாள்‌. நாங்கள்‌ வளர்பிறை புதிய
நிலவினை (பிறைச்சந்திரனை) பாராட்டினால்‌ அவள்‌ முழுமதி யினை இகழ்கின்றாள்‌. இவ்விதமாக இருக்கிறாள்‌. இது என்ன
விரதமோ! பித்துற்றனள்‌ போலும்‌, தங்கள்பால்‌ எத்துணை பக்தியிருந்தாலும்‌ எங்களைப்‌ போன்றோருக்கு பிரகிருதி
சம்பந்தம்‌ ( உலகப்பற்று) விடாது. அந்தர்‌ யாமியாகிய உனக்குத்‌ தெரியாதது ஒன்றுமில்லை. இவளது நிலையினைத்‌ தெரிவிக்க
மாட்டாயா?” * என்றார்‌. எனலும்‌ துயைமிகுந்து அவரது வைஇீகத்தை (உலக விவகாரம்‌ தெரியாத நிலையை)யுணர்ந்து
குறுநகை புரிந்த குன்றெடுத்த மாதவன்‌ இவ்விதம்‌ ண -5-157

முகில்‌ போன்ற நீல வண்ணனே/ மது கைடபார்‌ எனும்‌ இராக்கதார்களாகிய நாகங்கட்டு கருடன்‌ ஆனவனே! யோகியரின்‌
இதய முடிச்சைப்‌ பிளந்து எழுந்த பெண்‌ பாம்பின்‌ (குண்டலினி சக்தி) உயிர்ப்பினோடு கபாலத்தில்‌ ஓழுகும்‌ அமுததாரையாகிய
பாற்கடல்‌ அலைகளில்‌ விளையாடும்‌ விருப்புடையவனே பத்துத்‌ தலை இராவணனின்‌ சகோதரன்‌ (விபீஷணன்‌) சரண்‌ புகப்‌ பெற்றவனே. V—158

தேவர்கள்‌ அனைவரும்‌ வணங்கும்‌ பாதங்களையுடையவனே! அசுரரை அழிக்கப்‌ பிறந்த சீதையின்‌ கேள்வனே/ பிறவிக்குப்‌
பகையான புகழ்மிக்க பெயரையுடையவனே . V—159

எல்லா பிரம்மாண்டங்களையும்‌ வயிற்றிலடக்கியவனே / குமரனின்‌ தவப்பயனாக குழந்தையாக அவதரித்தவனே! நீரி
நிறைந்த கோனளேரியில்‌ பொன்‌ மண்டபத்தில்‌ அமர்ந்தவனே /V—160

அது. தெலுங்கு மொழியில்‌ செம்பாவி (செங்கிணறு) என்ற இயல்பான பெயருடைய, யவனர்‌ (துருக்கர்‌) களின்‌ குருதியால்‌
நிறைக்கப்பட்ட, மேகங்களைத்‌ தடுக்கும்‌ கோட்டைகளை அழித்த சேனைகட்குமுன்‌ நடக்கும்‌ கிருஷ்ணராய மன்னன்‌ எனப்‌ பெயா்‌
பூண்ட எனது *ஆமுக்த மால்யத’ எனும்‌ நூலில்‌ ஐந்தாவது அத்தியாயம்‌ இனிய செய்யுட்களால்‌ அமையப்பெற்றுள்ள து.-V—161

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) நான்காம்‌ அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

ஸ்ரீ (சூடிக்‌ கொடுத்தவள்‌) நான்காம்‌ அத்தியாயம்‌

இருமகட்சில்லமாகிய மார்பினையுடையவனே! பசுச்களைக்‌ சுவரும்‌ குழலூதுபவனே! செருக்குற்ற நரகாசுரன்‌ கவர்ந்த குண்ட
லங்களை மீட்டியவனே ! பசுமலை (வேங்கடகிரி) உறையும்கருடக்‌ கொடியுடையவனே! Iv—1

கேள்‌! அச்சமயத்தில்‌ 1-2

பெரியாழ்வாரின்‌ வெற்றி
வலிதின்‌ அறுத்தாற்போல நூலறுந்து தொங்கிய பொற்‌ எமி, சிறிது நேரம்‌ அந்தரத்தில்‌ இருந்து பின்‌ படீரெனக்‌ கீழே
நிலத்தில்‌ வீழ்ந்தது, வானத்தில்‌ துந்துபி முழங்கப்‌ பூமழை பொழிந்தது. IV—3

அப்போது, பாண்டிய மன்ளன்‌ பரிசளிக்க அனுப்பிய சேவகர்‌கள்‌ அங்குமிங்கும்‌ அலைந்து விரைவதினால்‌ மணிகளும்‌“பொன்‌
அணிகளும்‌, உடைகளும்‌, சிந்த, அவைக்களத்துக்கும்‌, கருவூலத்‌திற்கும்‌ இடையே உள்ள நிலம்‌, முழங்காலளவு நிறைந்து நிலமகள்‌
மகிழ்ச்சிப்‌ பெருக்கால்‌ அணிந்த பல்வண்ண மலர்மாலையோ எனும்‌ படியாக இருந்தது.
(சிந்திய மணிகளும்‌ அணிகளும்‌ முழங்காலளவு நிறையப்‌பெற்றதென்றால்‌, கொடைந்த பொருட்குவையின்‌ அளவினை
எவ்விதம்‌ கூறுவது? என்பது கருத்து) IV—4

வேதங்களால்‌ உணரப்பட்ட விஷ்ணு தத்துவத்தை விளக்கி இவ்விதம்‌ வாதிட்ட பெரியாழ்வார்‌, வென்று, பாண்டிய
மன்னனை பக்தியில்‌ மூழ்கச்‌ செய்து, இறைவனைச்‌ சரணடையு மாறு செய்து உலக நன்மையை உருவாக்கினார்‌. IV—5

அப்பெரியாழ்வார்‌ வென்றதைப்‌ பாராட்டி வானத்தில்‌ எல்லாம்‌ வாழ்த்தொலிகள்‌ முழங்க. தேவர்கள்‌ அடடா”
என்னும்‌ பிதுர்கள்‌ *ஆகா! * என்றும்‌, சித்தர்‌, **அப்பப்பா என்றும்‌, கந்தருவர்கள்‌ கலியுகம்‌” * “இரு தயுகமாயிற்று” * என்றும்‌,
கின்னரர்கள்‌ *இிறுமதியாளரின்‌ செருக்கடங்கிற்றல்லவா?” *என்றும்‌ கூவிப்பரவிளார்கள்‌. IV—6

மேலுதட்டினை நக்கியவாறு, (அரண்மனை) வெளித்‌ திண்ணைகளைப்‌ பாராமல்‌ சென்று, பாதுகைகளைச்‌ சுமப்‌.பவர்‌
களைத்‌ தேடுவோர்களும்‌, . தம்மருகிலுள்ள பல்லக்கிளைக்‌ காணாமல்‌ தாண்டிச்‌ சென்று, பெருங்குரலில்‌, சுமப்பவர்களைக்‌
கூவியழைப்பவர்களும்‌, நகரை நீங்கும்‌ வரையும்‌ தனித்துச்‌ சென்றுபின்‌ தின்று, கூடவந்த புலவர்களைக்‌ கூடுவோரும்‌* தம்‌
வீட்டினர்‌ எதிர்வரவும்‌ வீட்டு விவகாரங்களை கேட்டு அவர்கள்‌ ஒன்று கூடி தாம்‌ ஒன்றாக நினைந்து ஏதோ நினைவில்‌ *சரி சரி”
என்பவர்களும்‌ *வாதம்‌’*” என்னாயிற்று?” என்று கேட்ப,
“மன்னன்‌ ஒரு பக்கம்‌ சாய்ந்து அந்த தாசரி (நாலாம்‌ வருண பாகவதர்‌) யைப்‌ பாராட்டினான்‌. இல்லாவிட்டால்‌ அவளை
விட்டு வைப்போமா? ஏதோ தப்பித்தக்கொண்டான்‌ ”? என்போரும்‌ *சரி! விடு ஆராய்தலில்லாதவன்‌ வாசலில்‌ எவன்‌ .
இருப்பான்‌,’ ‘ என்பவர்களுமாக பண்டிதர்கள்‌ புறப்பட்டனர்‌.[3……7

அவர்கள்‌ சதுக்கத்தெருவில்‌ ஒன்று கூடி அரண்மனையைப்‌ பார்த்தவாறு ஏதோ மத்தனங்கள்‌ (இரகசியப்‌ பேச்சுக்கள்‌)
பேசியவாறு தத்தம்‌ இல்லங்கட்குச்‌ சென்றனர்‌. அப்பாண்டிய மன்னன்‌ அனைவரும்‌ அறிய. பெரியாழ்வாரைப்‌ பெரிய யானை
யின்‌ மீது ஏற்றி அமரச்‌ செய்தான்‌. Iv—8

நகர்வலம்‌ வரச்‌ செய்து, சிற்றரசர்களும்‌, இளவரசுகளும்‌, இருமருங்கும புடைசூழ, திருவல்லிபுத்தூருக்கு அனுப்பி வைத்‌ தான்‌. பாடகர்களும்‌, யானை, குதிரைகளின்‌ மணிகளின்‌ ஓசை யும்‌ பரத்தைய ரின்பாதச்‌ சிலம்பிசையும்‌ முழங்க, வழிச்செல்லும்‌ போது நடுவழியில்‌ 4-9-

இறைவன்‌ காட்சிதரல்‌
இங்கிலீகம்‌ நனைத்த மயில்துத்‌ த ஈரிழைச்‌ சீரையோ எனுமாறு வானம்‌ தன்‌ சிறகின்‌ ஒளி வீச்சினால்‌ இளஞ்சிகப்பு
வண்ணமுற்றது, அவ்வளவில்‌, பாற்கடலின்‌ பாலாடைப்‌ பிசுபிசுப்பினை உணர்த்தும்‌ இனிய காற்றுவீசியது. பின்‌
(கருடன்‌ (நெருங்கி வருதலால்‌) பேரோசை நிறைந்தது. பின்‌ பெரிய திருவடியைக்‌ (கருடாழ்வார்‌) கண்டனர்‌. அந்தப்‌ புள்ளரசன்‌ முதுகில்‌ திருமால்‌ தோன்றினான்‌. IV—10

தளி ர்க்கொத்து இணையில்‌ செந்தாமரை இருந்தாற்போல கருடனின்‌ உள்ளங்கைகளில்‌ தெய்வீக அடியிணைகள்‌ அமர,
மென்கரிய மேனியில்‌ தோன்றிய கருடனின்‌ (செவ்‌) வண்ணப்‌ பிரதிபலிப்போ எனுமாறு பீதாம்பரம்‌ மிளிர, படிந்த யோகி
யரின்‌ தூய இதயங்கள்‌ போல முத்தாரம்‌ ஒளிர, திருமகளுடன்‌ கூடப்பிறந்த உரிமையினால்‌ போலும்‌ ஏதோ விண்ணப்பிப்பது
போது (செவியருசே நெருங்கிச்‌ சென்றுரைப்பது போல) மகர குண்டலங்கள்‌ திகழ, கற்பக மரக்கிளை போன்ற தோள்‌
களும்‌ அதிலுள்ள அன்னம்‌ போன்ற சங்கும்‌, சுழல்‌ காற்றில்‌ எழுத்து சுழலும்‌ பூமகரந்தம்‌ போன்ற சக்கரமும்‌ தோன்ற கமலக்‌
கண்ணனாகிய நான்கு தோள்களையுடைய திருமால்‌ தோன்றினான்‌. 1V—11

எப்போது திருமாலைக்‌ கண்டனரோ அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும்‌, பெரியாழ்வாரைக்‌ கண்டு கொண்டிருந்‌
அனைவரும்‌ தமது சுரங்கஞுடன்‌ குடைகளையும்‌ விரைந்து முகிழ்வித்தனர்‌. (விரித்த குடையைச்‌ சுருக்கி வணக்க மிடுதல்‌ நமது மரபு) IV—12

தேவர்களுடன்‌ கூட இராக்கதரும்‌ பிசாசர்களும்‌ கூட்டமாகக்‌ கண்டு கொண்டிருத்தபோது கருடனின்‌ இறக்கைகளிலிருந்து
வீசிய காற்றினால்‌ நெற்களத்தில்‌ முறத்தால்‌ புடைக்கப்பட்ட காற்றில்‌ பறந்தோடும்‌ பதர்போல இராக்கதரும்‌ பிசாசர்களும்‌
அஞ்சியோடினர்‌. 17… 13

இடைவிடாது சொரிந்த பூ மழையில்‌ படிந்து சஞ்சரிக்கும்‌ வண்டினங்களின்‌ ரீங்காரம்‌ போல தன்னைத்‌ தொடர்ந்து
முனிவர்கள்‌ பாடும்‌ சாம கானம்‌ இசைத்தது. IV+14

இவ்விதம்‌ வானில்‌ கண்ணெதிரே திருமாலைக்‌ கண்ட பெரியாழ்வார்‌ ம௫ழ்ச்சிப்‌ பெருக்கால்‌ ஆனந்தக்‌ கண்ணார்‌
சொரிந்து, புளகாங்கமுற்று, (தானமர்ந்துள்ள) யானையின்‌ மணிகளே தாளங்களாக இவ்விதமாகத்‌ திருமாலைத்‌ துதி
(மங்களாசாசனம்‌) செய்தார்‌. 14/15

வெல்க! வெல்க! அசுரரை அழிக்கும்‌ சார்ங்கம்‌ எனும்‌ வில்லும்‌, கதையும்‌, சக்கரமும்‌ (சுதர்சனம்‌) – பூண்டவனே!
ஞாயிறும்‌ இங்களும்‌ போன்ற நூறுமடங்கு பேரொளியுடையமேனியை உடையவனே! கங்கைக்குப்‌ பிறப்பிடமான தாமரை
போலும்‌, பாதங்கள்‌ உள்ளவனே! பிரம்மனும்‌ சிவனும்‌ உருவான மூலகாரணனே! தாமரைக்‌ சண்ண! வெல்க! வெல்க! IV—16

வேதங்களைத்‌ திருடிய சோமன்‌ எனும்‌ அரக்கனை, மீன்‌ உருவில்‌ அழித்து, செதிள்கள்‌ *சதுரமான வேதாட்சரங்கள்‌ (வடமொழி நாகரி எழுத்துக்கள்‌) ஒப்பப்‌ பொலிவுறவும்‌, நீலக்‌ கடலைக்‌ கலக்கித்‌ தாண்டியபோது எழுந்த நீர்த்‌ துளிகள்‌ பிரம்ம லோகத்தை அடைவது வேதத்தை பிரம்மனிடம்‌ ஒப்படைப்பறு போல தோற்றுமாறு நீ பேரொளிப்‌ பிழம்பாக நீ கடலலைகளைத்‌ தாண்டவில்லையா? IV—17

மகிழ்வுடன்‌ பிரளயகால வெள்ளத்தில்‌ எதிர்‌ நீச்சலடித்துக்‌ கொண்டு நீ (மீன்‌ உருவில்‌) செல்லும்போது உன்‌ ,(வாயில்‌) தாடைகளில்‌ மலைகளும்‌, திமிங்கலங்களும்‌ உட்புகுந்துறை தலான்‌, அந்த வேகத்தில்‌ மலைகளும்‌ பிரம்மாண்டமும்‌ மோதும்‌ பேரொலியே, அரக்கனை வேதங்களை மீட்டிக்‌ கொன்ற வெற்றி முழக்கத்துந்துபி (றை) ஒலியாக அமைந்ததன்றோ? IV—18

நீ ௨ன்‌ திமிங்கல உருவை மிகமிக வளர்த்தபோது உன் வாயில்‌ தானாக துள்ளி வீழ்ந்தானன்றி, அவ்வரக்கன்‌ மிகச்சிறு
மீன்போலும்‌ அளவினனாதலின்‌ அவனை நீ விழுங்கிளனாய்‌ என்பது பொருந்தாதன்றோ? உன்‌ மூச்சுக்காற்று உள்ளிழுக்கும்‌
போது எழுந்த வேகத்தில்‌ வேதத்துடன்‌ கூட அவனும்‌ ஈர்க்கப்‌ பட்டு உன்‌ வாயில்‌ தானே புகுந்தான்‌ என்பதே மெய்யாகும்‌. IV—19

வெள்ளத்தில்‌ மூழ்கிய மண்‌ (பூமி) ஆய நிலம்‌, கரைந்து போகாமல்‌ இருக்க, காரை (சுண்ணாம்பு) பூசிப்‌ பாதுகாப்பதற்‌
காக, வைரம்‌ (இடி) ஓத்த தன்‌ முதுகு திரிகையின்‌ அடிக்கல்லாக அமைய, (பாற்கடல்‌ கடையுங்காலத்தில்‌) மந்திரமலை மேற்‌
கல்லாக உராயவும்‌, முத்து, சிப்பி, சங்குகள்‌ எல்லாம்‌ சூரணமாக (நீறாக) ஆக்கிய கூர்ம (ஆமை) மான தேவனே! உன்னை வணங்குகிறேன்‌.* 1V—20
… *தெலுங்கு எழுத்து வட்ட எழுத்து, நாகரி சதுர எழுத்து என்பது கருத்து. ;-இப்பாடல்‌ பெத்தன ‘மனுச்சரித்ர”விலும்‌ உளது.

வராகமாக உடலை வளர்த்துப்‌ பேருருத்‌ தாங்கி பிரளய வெள்ளத்தை நீ ஒரே தடவை முட்டியாற்‌ பெயர்த்தபோது
எழுந்த நீர்‌, பிரம்மாண்டத்தைக்‌ கடந்து மேலெழும்பி, மீண்டும்‌ கீழே தாரையாக விழுந்தபோது, அந்த தாரை–பொற்‌
சரடாகவும்‌, பிரம்மாண்டம்‌ தங்கமணி ஆகவும்‌ அமைய மாயை (இயற்கை)த்‌ தாயிற்கு அணிவித்த மூக்குத்தியாசு அமைந்த துன்றோ? Iv-—21
(நீரின்‌ தாரை பொற்சரடாகவும்‌ அதில்‌ வெண்‌ முத்துக்கள்‌ கோர்த்திருப்பதால்‌ வெள்ளிய தாரையாக உவமை, பிரம்‌
மாண்டம்‌ அந்த சரட்டில்‌ நடுமணியாகிய பொன்‌. மணியாக உவமிக்கப்பட்டுள்ளது.)
நரசிம்மனே! இரணியனின்‌ இதயமாகிய குண்டத்தில்‌ தூய குருதியில்‌ தோன்றும்‌ தனது பிரதிபிம்பத்தைப்‌ பார்த்து எதிரி
யாகிய சிங்கம்‌ எனக்கருதி அதன்‌ பிடரி மயிரைப்‌ பிடித்திழுத்‌ தாற்போல, அவன்‌ குடல்‌ மாலைகளைப்‌ பிய்த்தெறிந்த சினமிக்க
உனது கூரிய வெள்ளுகிர்கள்‌ எம்மைக்‌ சாக்குமாக. {V¥—22

முதன்‌ முதலில்‌ வெளுப்பும்‌, நுழைய நுழைய பின்‌ இகப்பும்‌ மீண்டும்‌ நுழைய குண்டிக்காய்‌ (ஈரல்‌)க்‌ கருப்பும்‌ தோன்ற, தன்‌
கூரிய நகங்களால்‌ அசுரனின்‌ மார்பாகிய சுவரினைப்‌ பிளந்துடி மும்மூர்த்திகளின்‌ தேசினை மீண்டும்‌ பெற்றது போல்‌ கோன்றும்‌
படி பொய்ச்சிங்கமாகிய நீ செய்தளையன்றோ?
(நகம்‌ தோலிற்‌ துளைப்ப முதலில்‌ வெளுப்பும்‌, சதையிற்‌ துளைப்ப சிகப்பும்‌, ஈரலைத்‌ துளைப்ப கருப்பும்‌ தோன்றுதல்‌,
சிவன்‌ தேசு (தேஜஸ்‌) வெளுப்பும்‌ பிரம்மன்‌ தேசு சிகப்பும்‌, விஷ்ணு தேஜஸ்‌ கருப்பும்‌ ஆகிய மூன்றும்‌, இரணியம்‌ முன்பு
கவர்ந்ததனை மீண்டும்‌ பெற்றெடுத்தாற்‌ போல்‌ தோன்றியது என்பது கற்பனை.) 1V—23

‌ பிரம்மாண்டமாகிய இல்லத்தில்‌ படியுமாறு, மேலோங்கி நிமிர்நத பலிச்‌ சக்கரவர்த்தன்‌ ஆற்றலாகய இபச்‌ சுடர்‌, அவிந்ததுமே, இருன்‌ விண்‌ முழுதும்‌ விரைந்து பரந்து செலுமாறு போல உன்‌ நீலமேனியை வானகத்துச்கப்புறமும்‌ (சம்சுமார சக்கரம்‌ எனும்‌ (நெபுலப்படலம்‌) இடம்‌ வரையும்‌) வளரீந்த வாமன மூர்த்தியல்லவா நீ!
(விளக்கின்‌ அடி நிழல்‌ இருள்‌–உலகல்‌ பலியைப்‌ பற்றிய அச்சத்துக்கு உவமை, பலியின்‌ ஆற்றல்‌ விளக்குச்‌ சுடர்‌ வாமனன்‌
அதை அணைத்ததும்‌ பேரிருட்டு மூவுலகும்‌ பரவுவதற்கு, திருமாலின்‌ கூரிய திருமேனி வளர்ந்தது உவமை.) 14-24

பரசுராமனே! உன்னால்‌ அழிக்கப்பட்ட க்ஷத்திரியர்‌ (அரசர்‌ குலம்‌) களின்‌ மனைவியர்‌ அழுத கண்ணீர்‌ மழைக்காலமாக,
உனது புகழ்‌ என்னும்‌ அன்னப்பறவை, நீ அம்பாற்‌ துளைத்த கரெளஞ்சமலைக்‌ துளையின்‌ வழியாகச்‌ சென்றதைக்‌ கண்டு
அன்று தொட்டு இன்று வரையும்‌ மழைக்‌ காலம்‌ வரவும்‌ அன்னங்கள்‌|பழக்கத்தால்‌ அதே வழியிற்‌ செல்கின்றன. ஈறுக்காகச்‌
செல்லும்‌ (விலங்கு, புள்‌) இனங்கள்‌ எல்லாம்‌ செல்வழிச்‌ செல்லும்‌ இயல்பினதன்றோ? IV—25
(சிவனிடம்‌ வில்வித்தை கற்ற பரசுராமன்‌, தன்னோடு கற்ற சிவகுமாரன்‌ முருகனுடன்‌ பந்தயம்‌ போட்டு அம்பெய்த போது
கிரெளஞ்சகிரி துளைக்கப்பட்டது என்பது புராணக்கதை, கிரெளஞ்சகிரி துளை வழியாச அன்னங்கள்‌ மழைக்‌ காலத்தில்‌
இமயமலையிலுள்ள மானச சரோவரத்திற்குச்‌ செல்லும்‌ என்பது கவிமரபு. ஹம்ஸத்வாரம்‌ ப்ருகு பதி யசோ வர்த்ம்யத்‌ க்ரெளஞ்‌
சரந்த்‌* ரம்‌என்று மேகதூதத்தில்‌ காளிதாசன்‌ பரசுராமனின்‌ புகழ்‌ வழியான கிரெளஞ்சமலை துளை வழியாக அன்னங்கள்‌ செல்‌
வதை வருணித்து இருப்பதும்‌ காணலாம்‌.)

இரகுகுல வீரனே/ தஇிருமகள்‌ கேள்வனே! இந்திரனின்‌ இடியேற்றின்‌ அடிகளைப்‌ பொருட்படுத்தாத இராவணன்‌
உடலிலுள்ள சப்த தாதுக்களையும்‌ புகுந்து பார்க்கும்‌ பயிற்சிக்‌ காசு முயன்றதோ எனுமாறு, சப்த சால மரங்களை (ஏழ்‌
கூந்தற்‌ பனை மரங்களை) வீழ்த்தியும்‌ நில்லாது அப்புறம்‌ சென்ற உனது காற்றினும்‌ கடிய அம்பு எமக்கு செல்வத்தை ஈயுமாக!
(சப்த தாதுசகள்‌–வச்சை, இரத்தம்‌, மாமிசம்‌, மஜ்ஜை எலும்புக்குள்ளிருக்கும்‌ நெய்‌) எலும்பு, மூளை, விந்து (சுக்கிலம்‌)
என்பன சப்த தாதுக்கள்‌. இவற்றால்‌ உடம்பு ஆக்கப்பட்டூள்ளது. வச்சை– என்பது கொழுப்பு.) 1V—26

இந்திரன்‌ அனுப்பிய தேரின்‌ சாரதி மாதலியின்‌ தலை சற்றுமாறு (மயங்குமாறு) பிரளயக்‌ காற்றுப்‌ போல அம்பிறக்கைகளின்‌
சிவ்வெளப்‌ பறக்கும்‌ ஓசையும்‌, இராவணனின்‌ உடலைப்‌ பிளந்து எலும்பினை உராய்ந்து பற்றிய தீ்ப்பொறிகள்‌௮வன்‌ இரத்தத்தில்‌
புகுந்ததால்‌ *சுய்‌’ என்ற ஓசையும்‌, அரக்க வீரர்களின்‌ கவசங்‌ களைத்‌ துளைத்து இதயத்தைப்‌ பிளந்து ஊடுருவிச்‌ சென்று
(இலங்கைக்‌) கோட்டைச்‌ சுவர்க்‌ சற்களிற்‌ பட்டு “டாண்‌” என்ற ஓசையும்‌, வீரர்கள்‌ வீழ்ந்து பட்ட முண்டங்களின்‌ பாரத்தைத்‌
தாங்க முடியாமல்‌ ஆதிசேடன்‌ தலை நெளிய விட்ட நெட்டுயிர்ப்‌ பாக *உஸ்‌” என்ற ஓசையும்‌, உண்டாக்கி, களைத்த தேர்க்‌
குதிரைகட்கு வெயில்‌ தோன்றாதபடி நிழலிட்டதாயும்‌ அமைந்த உனது தெய்வீக வில்லிலிருந்து புறப்பட்ட இலங்காபுரி வானகத்‌
தில்‌ சஞ்சரித்த அம்புகள்‌ எமது பாவங்களைப்‌ போச்குமாக. 14-27

“மண்ணை உழும்போது டைத்து (பிறந்து) மண்ணிலேயே மறைந்தாள்‌ தை” என்று அந்த கற்புக்கரசியின்‌ பிரிவாற்றாமை
யால்‌ வெளுத்துப்‌ போய்‌ ராமனாக உருவெடுத்த (பலராமனாகிய) நீ, அத்தச்‌ சதையை மீண்டும்‌ அடைவதற்காக அல்லவா ஏரார்‌
பிடித்து யமுனை நதிக்‌ கரையில்‌ உழுது கொண்டு, இருக்கிறாய்‌!
இல்லாவிட்டால்‌ மெய்‌ தள்ளாட (மதுவுண்டதாலோ, பிரி வாற்றாத மயக்கத்தாலோ) ஏன்‌ உழ 3வேண்டும்‌? ஏர்‌ ஏந்திய
பலராமா.! எம்மைச்‌ சாப்பாயாக,. IV—28

இந்திரன்‌ பெருமழை பொழிவித்தபோது கோவர்த்தன கிரியைக்‌ குடையாக உன்‌ விரலில்‌ ஏந்தியபோது, சுற்றிலும்‌
வீழ்ந்த நீர்த்தாரைகள்‌ சந்திர காந்தக்‌ கல்களில்‌ உன்‌ உருவம்‌ பிரதிபலித்து பசுக்கட்கு நாராயணகவசம்‌ போல ஏழு நாட்கள்‌
பாது காத்தது. யதுகுலவீர! எம்மையும்‌ காப்பாயாக!
(நாராயணன்‌ என்ற சொற்கு நீரில்‌ உறைபவன்‌ என்பது பொருள்‌. மழை நீரில்‌ கண்ணன்‌ உரு பிரதிபலிப்பது அப்பெய
ருக்குப்‌ பொருத்தமாக உள்ளது என்பது கருத்து, ) IV—29

இளமையுடைய உனது மசனை (மன்மதனை) அனுப்பி ஐந்து (மலர்‌) அம்புகளால்‌ அரக்கர்‌ மகளிர்‌ லத்தை அழித்து, பின்‌ நீயே ஒரே முதிய அம்பாகி (திரிபுரம்‌ எரித்த வன்‌ கையில்‌) அரக்கரை அழித்த தன்மை ஏன்‌? அடடா! போதமாயிற்று (உன்‌ கருத்து அறிந்தோம்‌) அந்நங்கையர்‌ கற்பு எனும்‌ கவசம்‌ யாரா
லும்‌ வெல்லற்கரிதல்லவா? கண்ணனே! உன்‌ எண்ணம்‌ என்னே?
(திரிபுர தகன காலத்தில்‌ திருமால்‌ அம்பானான்‌ என்ற புராணக்சுதை நினைவு கூரத்தக்கது. இரட்டையர்‌ எனும்‌ தமிழ்க்‌ கவிகள்‌ .
“நாணென்றால்‌ நஞ்ருக்கும்‌ நற்சாபம்‌ கற்சாபம்‌
பாணந்தான்‌ மண்தின்ற பாணமே”
என்று மண்தின்ற கண்ணனே அம்பானான்‌ என்பதை அழகாக வருணித்துள்ளதும்‌ அறிக! :

ஈண்டு அரக்க மகளிர்‌ ₹லம்‌ கெடச்‌ செய்தற்கு இளமையும்‌ ஐந்து மலரம்புகளும்‌ உடைய மன்மதன்‌ தேவைப்பட்டான்‌.
*புகழ்புரிந்த இல்லிலோர்க்கில்லை இகழ்வார்முன்‌
ஏறுபோல்‌ பீடு நடை” *
என்ற குறட்படி அரக்கர்‌ மனைவியர்‌ சீலம்‌ அழிந்த பிறகு அவர்‌களை முதிய அம்பால்‌ வெல்வதும்‌ எளிதாயிற்று என்று கருத்து.
இப்பாடலில்‌ இத்தன்மை ஏன்‌? என வினவிய கவி புத்தம்பய்‌’ (போதம்‌ ஆயிற்று) என்று கூறிய புத்தன்‌ பெயரை
முத்திரையலங்காரம்‌ எனும்‌ அணியில்‌ பெய்து புத்தாவதாரத்தை நினைவூட்டி வணங்குகிறார்‌. காமத்தை வெல்வது வீரத்தை விட
அரிய செயல்‌ என்ற குறிப்புத்‌ தோன்றும்‌ இப்பாடல்‌ மூலம்‌ புத்தன்‌ காமத்தை வென்று சிறப்புற்றான்‌ என்று குறிப்புப்‌
பொருள்‌ தோன்ற நயமுடன்‌ அமைத்துள்ளார்‌ கவிஞர்‌.) 14-30

கலியுகத்தில்‌ மிஞ்சும்‌ பஞ்சமாபாதகங்களை ஒடுக்க கல்‌கிஅவதாரமாக, குதிரையின்‌ பஞ்ச கதிகளை (ஐந்து நடை பேதங்‌
களை) அறிந்தவனாக, தன்னிரு சுரத்தும்‌ ஏந்திய பட்டாக்‌ சுத்தி களின்‌ மின்னொளியே கவசமாக மிலைச்சரின்‌ அம்புகளைத்‌
தடுக்க கல்கியாகிய பெருமானே! எம்மைக்‌ காப்பாயாக, 17-31

என்றிவ்வாறு துதிக்கவும்‌, திருமால்‌, தேவசிற்பியை நோக்கி
“பாண்டிய மன்னன்‌ தந்த அளவற்ற செல்வம்‌ முழுதும்‌ வைணவ அடியார்கட்‌ 8ந்து வெறுங்கையன்‌ ஆவான்‌ ஆதலின்‌ இவனது
இல்லத்தை அவ்வூரில்‌ மணிமயமாகச்‌ செய்து இறப்பிச்கவும்‌’ என்று கூற, 1V—32

விசுவகருமனும்‌ அவ்விதமே ஆக்கித்‌ தந்தான்‌. அவ்வளவில்‌ தாமரைக்‌ -சண்ணனும்‌ பெரியாழ்வாரை ஆதரித்து காட்சி
யளித்துப்‌ பின்‌ மறைந்தான்‌. முனிவனும்‌ (பெரியாழ்வாரும்‌) ஊரார்‌ போற்றத்‌ திருவில்லிபுத்தூருக்குப்‌ போந்தான்‌. [4.33

——

பெரியாழ்வார்‌ தன்நகர்‌ புகல்‌
வில்லிபுத்தூர்‌ மக்களும்‌ பெரியாழ்வாரைக்‌ காணும்‌ வேட்கையுடன்‌, நகரை அலங்கரித்து மக்கள்‌ எதிர்‌ சென்றழைத்து
வர மேளதாளத்துடன்‌ சென்றனர்‌. Iv—34

இவ்விதம்‌ அவ்வூரினர்‌ எதிர்‌ சென்று, பரிவட்டமும்‌, புனித மான பகவத்‌ பிரசாத தீர்த்தங்களும்‌ காணிக்கையாக்கி, வணக்கம்‌
செய்து, கை குவித்து, தங்க ரதத்திலேற்றி அமரச்‌ செய்து அழைத்துச்‌ சென்று போகும்போது, நகரவாசிகஞம்‌, சராமவாச
களும்‌ தம்முட்‌ கலந்து பரந்து நடந்து சென்றவாறு, மிருதங்கம்‌, பஹறை தாரை, தப்பட்டை, உருமு, காகளம்‌, வீணை, முகவீணை
புல்லாங்குழல்‌, தவில்‌, நாதசுரம்‌, முதலிய வாத்தியங்களோடு, இசை முழங்க, நடனமங்கையர்‌ நடனமாட, யானை, குதிரை
களின்‌ மணியோசைக்கியைய, நங்கையர்‌ லெம்பிசைபாட மெல்ல நடந்து வந்தனர்‌.

அருகில்‌ இரத்தினக்‌ கம்பளம்‌ போர்த்திய களிறுகளிலும்‌ பிடி. களிலும்‌ ஏறிய, பொன்னாலான அங்குசங்களைத்‌ தரித்த
சிற்றரசர்களின்‌ குமாரர்களின்‌ குழு, ஒருவரை ஒருவர்‌ முந்த பரபரப்புற்று, பெரியாழ்வாரைக்‌ கண்டு வணங்கி, ஒருபக்கம்‌
ஒதுங்கி மேல்‌ நோக்கிய அசையும்‌ கண்பார்வைசளோடு திரும்பித்‌ திரும்பிப்‌ பார்த்து, புகழ்ந்தவாறேகினர்‌.
அவ்வரச குமாரர்கள்‌ திருவில்லிபுத்‌தூரில்‌ புகும்போது தமக்கு முன்பே பழக்கமான, கலைத்திறனார்‌ தந்த சணிகையர்மேல்‌ வீசி
எறியும்‌ சாக்கிட்டு, ராம அதிகாரிகள்‌ காணிக்கையாகத்‌ தரும்‌ தாரத்தை, மாதுளம்‌, எலுமிச்சை, முல்லைப்‌ பூப்‌ பந்துகளை.
முன்பு தாம்‌ வந்தனுபவித்த நங்கையர்மேல்‌ எறிந்தவாறு சென்றனர்‌. ஒளிவீசும்‌ கும்மல்களுடன்‌, புன்முறுவல்‌ பூத்தவாறு
இளைஞர்களை, கருத்தோடு கூடிய கடைக்கண்‌ வீச்சுக்களோடு பார்த்து சிறிதே கூந்தலசைய, முகத்தைத்‌ திருப்பிக்‌ கொண்டு
மத்தளக்காரரின்‌ முதுகு மறைவில்‌ ஒதுங்கி வேசியர்‌ நடக்க, மத்தளக்காரார்‌ வாசிக்கும்போது குனிவதால்‌ வெளிப்பட்டு,
வேறு உபாயமின்மையின்‌, கொப்பினைச்‌ சரிசெய்து இளைஞர்கள்‌ எறியும்‌ பூப்பந்து முதலியவற்றைத்‌ தடுக்கும்‌ வகையில்‌ கைகளை
மறித்துச்‌ சுழலும்போது காதிலணிந்த பூக்களும்‌; கன்னத்தில்‌ தவமும்‌ புன்முறுவலாகிய முல்லைகளும்‌ செறிந்த நிலவினை உமிழச்‌ சென்றனர்‌,

இனிய சொற்களும்‌ சாதுரியமான சொற்கஞம்‌ உடைய பேரிளம்‌ பெண்டிர்‌ (அரச குமாரார்களான) இளைஞர்களை
வணங்க, அப்பெண்டிர்கட்கிருபுறமும்‌ ஒதுங்கி நிற்கும்‌ இள நங்கையர்‌, பழைய காதலுறவை நினைந்து (நாணத்தால்‌) தலை
குனிந்து, (இளைஞர்களை) வணங்காமல்‌ சிறிதே முகந்திருப்பி வேறுபக்கம்‌ பார்க்கவும்‌, அவ்வரச குமாரர்கள்‌ அந்நங்கையர்‌
தம்மை வணங்காத வஞ்சனையைப்‌ பார்த்து, பரிகாசமாக அவர்‌களையும்‌ வணங்கச்‌ செய்யும்‌, வேட்கையுடன்‌, ஆங்கே பேரரசர்‌
இன்மையாலும்‌, பொதுமக்களைப்‌ பொருட்படுத்தாமலும்‌, தம்‌ கருத்தினைஅறியும்வகையில்‌ பெண்டிரைநோக்கி, *வயதிலும்கல்வி
யிலும்மூத்த நீங்கள்‌ வணங்கும்போது அவர்கள்‌ (இளநங்கையர்‌) ஏன்‌ வணங்குவதில்லை. அவர்களையும்‌ வணங்கச்‌ செய்க”என்றும்‌
உடனே முறுவல்பூத்த முகத்தாமரைகட்குப்‌ புதிய எழில்‌ கூட்டி வணங்காமல்‌, ஆங்கு இணைத்தேகும்‌ தோழியர்கட்கு, தமக்கும்‌
அவ்வரச குமாரர்கட்கும்‌ நெருங்கிய உறவுண்டு என்ற பெருமையை வெவளிப்படுத்தச்‌ செவ்விதழை மடித்து, உள்ளுர
விரைந்தெழும்‌ உணர்ச்சித்‌ துடிப்பில்‌ இகழ்ச்சியாக உச்‌ சென்று ஓலி செய்யவும்‌, அக்குறிப்புணா்ந்த பேரிளம்‌ பெண்டிர்‌ “நமக்குச்‌
செல்வம்‌ திட்டியது, நமக்கருள்‌ செய்யும்‌ வள்ளல்‌ பெருந்‌தெய்வங்கள்‌ ஆன இவர்களை வணங்கீ3ரா?’* என்று கூறி
இளநங்கையரை முன்னேறும்படி உற்சாகப்‌ படுத்தியும்‌, புருவ நெரிவில்‌அச்சுறுத்தியும்‌ எப்படியோ உடன்பட வைத்துவற்புறுத்த
வும்‌, அவ்விள நங்கையர்‌, வெட்கத்தால்‌ சஞ்சலித்த கண்களோடு இடையீடுடைய விரல்களோடு கூடிக்‌ கை கூப்பி வணங்கவும்‌ ,
அவ்விதம்‌ வற்புறுத்தலுக்காக அரைமனதோடு வணங்கிய அந்தங்‌கையரை பறவைகளைப்‌ பிடிக்கும்‌ வலைகள்‌ போலச்‌ சூழ நின்ற
பெண்டிர்‌ பெரு நகை செய்யவும்‌, அவர்களை இளநங்கையா்‌ பொய்க்கோபம்‌ கொண்டு அடித்து, சினங்கலந்த பார்வையை
அரச குமாரர்கள்‌ மேல்‌ செலுத்திப்‌ பின்‌ மீண்டும்‌ மறைந்‌ தொதுங்கும்‌ மான்‌ விழியாரின்‌ வளையல்களின்‌ ஓசையும்‌,
முகத்திற்பூகிய வாசனைப்‌ பூச்சுக்காகப்‌ படிந்த வண்டுகளின்‌ ரீங்கார ஒலியும்‌ மிக, நடந்தனர்‌.

காதுகளில்‌ சங்குமணிகளும்‌, உள்‌ வளைந்த தோள்களும்‌, சுரி குழலும்‌, காவித்‌ துப்பட்டாவும்‌ (துண்டு) ௮மர சுயகிராமம்‌
தவிர்ந்து முதுமையில்‌ வில்லிபுத்தூர்‌ அடைந்து அவ்வூர்‌ மக்களின்‌ உறவினால்‌ தன்‌ சொந்த பந்தங்களை மறந்து, வாசனைப்‌
பொருள்கள்‌ கலப்பதும்‌ பூமாலை தொடுப்பதும்‌ ஆகிய தொழில்‌களில்‌ சிறந்து, ஆந்திறன்‌ காட்டும்‌ ஆந்திர நாட்டு சுகந்தப்‌ பொடி
செய்பவர்கள்‌, சல சில சொற்களில்‌ பாடல்கள்‌ புனைந்து துதித்து பைத்தியக்காரச்‌ சேட்டைகளோடு வணங்கி, யானை, குதிரை
களின்‌ மேல்‌ வரும்‌ அரசகுமாரர்கள்‌ ,மேலும்‌, நாட்டியக்காரிகள்‌ மேலும்‌ பெரியாழ்வார்‌ மீதும்‌, குளிரும்படியாக (மணப்பொடி
யைத்‌) தூவ, அப்பொடி மேல்‌ gH) உலகனைத்தும்‌ ஒரு பிடிக்குள்‌ கொணர்ந்தாற்‌ போல்‌ பரந்து சுதிரவனின்‌ வெயில்‌
மறையும்படியாக வானகத்தையும்‌ மூடவும்‌, பன்னீர்‌ நிறைந்த தோற்பைகளை அமுக்சவும்‌, அதன்‌ வழிப்‌ போந்த நீர்‌ வானத்திற்‌
பாய்ந்து கீழே வளைந்திறங்கும்‌ போது அதன்‌ தாரைகள்‌ மிருதங்கம்‌ முதலிய வாத்தியங்களில்‌ பட்டு, நனைந்துவிட ௮க்‌
கலைஞர்கள்‌, தம்‌ வாத்தியங்களைக்‌ காத்துக்‌ கொள்ள சூடாக்கநெருப்பினை வேண்டி. அலைய, அக்கூட்டம்‌ சென்றது.

அக்கூட்டத்தில்‌ அப்போது நாட்டியமாடுவகைக்கண்டு நின்று மெல்ல மெல்லச்‌ செல்லும்‌ உல்லாசம்மிக்க இளைஞர்கள்‌, தாமும்‌
ஆங்குள்ள தாமரை முகத்‌ தையலர்களும்‌, சமயம்‌ பார்த்து; நாணற்பூக்கள்‌ பிரதஇுபலிப்பதனால்‌ வெளுத்துள்ள பாதைகளில்‌
இருபுறமும்‌ மனோகரமான முங்காக்களுக்கும்‌ செங்கழுநீர்ப்‌ — பூக்கள்‌ நிஹைந்த கால்வாய்களில்‌ இறங்கி, எருமைத்‌ தயிரும்‌
பாலாடையும்‌ பிசைந்து கட்டிய நாரத்தங்காய்‌, இஞ்சித்‌ துண்டு களுடைய ஊறுகாய்களுடன்‌ செந்நெற்‌ சோற்றினை கமுகம்‌
பாளைகளில்‌ வைத்து உண்பதற்காக அமரவும்‌, அவர்களைக்‌ கண்டு வயிற்றுப்‌ பாட்டுக்காக, பசி கொண்டிளைத்து அலைந்‌
கலைந்தலுத்துப்போன தாசரிகள்‌ (வைணவ அடியார்களில்‌ ஒரு வகை) கூட்டம்‌ அவர்களை அணு “கோபாலா பிச்சை” என்ற
அன்னப்‌ பிச்சை கேட்டு, உண்டனர்‌. ஆற்றங்கரையில்‌ வைத்‌துள்ள பருத்த கல்‌ விளக்குத்‌ தூணில்‌ எறியும்‌ சகசோதி (அகலும்‌
வத்தியுமின்றி, எண்ணெய்‌ ஊற்றி துணிப்‌ பொதியை வைத்துத்‌ திப்பந்தம்‌ போல எறியும்‌) தீபங்களிலும்‌, சாம்பிராணிப்‌ புகை
போட்ட தூப குண்டிகையின்‌ நெருப்பிலும்‌, (முன்‌ பன்னீரால்‌ நனைந்த வாத்தியங்களை) ஈரம்‌ புலர்த்திடக்‌ காய வைத்து
தமது வாத்தியங்களின்‌) நாதத்தைப்‌ பரீட்சிக்க வாசிக்கும்‌ திம்‌ திம்‌ எனும்‌ ஓசை கேட்டுப்‌ பதறிய இந்தப்‌ பக்கத்துப்‌ பூங்கா
விருந்த ளிகள்‌ அந்தப்‌ பக்கத்திற்கும்‌ அந்தப்‌ பக்கப்‌ பூங்காவி லிருந்த இளிகள்‌ இந்தப்‌ பக்கமும்‌ பறந்து நெருங்கி கட்டாத
கோரணமாக எழில்‌ கூடிப்‌ பரந்துலவி ஓடின. தலையசைத்தலும்‌, வாய்‌ இறத்தலும்‌ தாளமிடக்‌ கைதட்டலும்‌ காணப்பட்டதன்றி
அந்தக்‌ கோலகலத்தில்‌ சிறிதும்‌ பாட்டுக்‌ கேட்க இயலாமல்‌ போக்‌, (திவ்விய பிரபந்தம்‌ பாடும்‌) பாகவதர்கள்‌ அக்கூட்டத்தில்‌ பஈடி*
கொண்டு வந்தவர்சுள்‌ மெளனம்‌ வகித்தார்கள்‌.

ஒவ்வோர்‌ சளர்ச்சந்தைகட்கும்‌ செல்வதற்காக தனவந்தர்கள்‌ வீட்டில்‌ வளர்க்கும்‌ பெண்‌ குதிரைகட்குப்‌ பிறந்து, நீளக்‌ கயிற்றால்‌ காலிற்‌ கட்டப்பட்டு தரிசுகளில்‌ மென்மையான பசும்‌ புல்லைத்‌ தின்று கொழுப்பேறி, மாலை நேரங்களில்‌ கொள்ளு காணம்‌ முதலிய ஊட்டங்களைப்‌ பெற்று வளர்ந்து, வரட்டி,
முதலியவற்றால்‌ (குதிரையுடன்‌) கேய்க்கப்பட்டு மினுமிஷப்புற்று கருங்கம்பளித்‌ துணி, நிழல்‌ முதலியன கண்டு பதறித்துள்ளும்‌ இளம்‌ குதிரைகளை கால்வரை தொங்கும்‌ குஞ்சங்களும்‌, Amy மணிகளும்‌, புரசம்பட்டையிற்‌ தோய்ந்த முழத்திற்கொன்றும்‌ சாணுக்கொனள்றுமாகத்‌ தொங்கும்‌ வலைகள்‌ தொங்க, அலங்கரித்து, வாசனைப்‌ பூச்சு தொய்த்த நிலவொத்த ஆடைகள்‌ அலங்கரிக்க (அக்குதிரைகளில்‌) ஏறி இளைஞர்கள்‌ வந்தனர்‌.

அவ்வூரின்‌ மேலோர்களான சாலியர்களும்‌, தட்டார்களுக்‌ கும்‌, சும்மாளரும்‌ செட்டிகளும்‌, கோமுட்டிகளும்‌, பாய்முடை வோரும்‌ ஆகிய பல குலங்களின்‌ இள நங்கையர்கள்‌ கூட்டமாக
கலந்து வரும்போது யானையைக்‌ கண்டு பயந்து ஓதுங்கவே, கடிவாளம்‌ இருகரத்தாலும்‌ பற்றி ஈர்த்தும்‌ அடங்காதோடிய குதிரைகள்‌ மிரண்டு௮க்கூட்டத்தினை மிதித்தக்கொண்டோடின்‌, மிதிபட்ட கூட்டத்திடையே உள்ள முதியவர்கள்‌, பெண்டிர்‌,
நோயாளிகள்‌ முதலியோர்‌ (அக்குதிரையில்‌ ஏறியவர்களை) வையவும்‌, அவாகள்‌ எதுவும்‌ பேச முடியாமல்‌ உயிரைக்‌ கைபில்‌
பிடித்துக்கொண்டு, போய்‌ அருகிலுள்ள புய வயலில்‌ துள்ளிக்‌ குதித்து தொடைகள்‌ வரையும்‌ மூழ்கி எம முடியாத குரை மீதிருந்து தாம்‌ இறங்க இடம்‌ இன்றி நாலுதிசையும்‌ பார்த்து பரிதாபகரமாக இருப்ப அதைக்கண்ட பூப்படையாத பெதும்‌£ பப்‌ பருவத்து மகளிர்கள்‌ “ஓ” “ஓ” என்று கூவி பரிகாசமாகக்‌ கேலி
செய்து கைதட்டவும்‌ அந்த ஒடை செறிந்த பூங்கா, மரங்களில்‌ எதிரொலிக்கவும்‌ செய்தன.

இவ்விதமாக மகாவைபவத்தோடு, அத்திருவில்லிபுத்‌ தாரையடைந்து, அந்த சக்கிராயுதமுடைய திருமாலின்‌ கோயில்‌ புக்கு
நின்று, அப்பெரியாழ்வார்‌ அந்த பிரம்மரதத்திலிருந்து கீழே இறங்க, இற்றரசுகளஞும்‌, தேவஸ்தானாதிபதிகளும்‌ குழுமி
பின்தொடர, இருமாலைச்‌ சேவித்து, சுவாமி பிரசாதமான பரிவட்டத்தினால்‌ அலங்கரிப்பட்டு, பின்னர்‌, பல்வேறுஅலங்காரங்‌ களுடன்‌ கூடிய, மணிகளும்‌ பொன்னும்‌ நிறைந்த தனது இல்லத்‌ தைக்‌ கண்டு வியந்து, இருமாலின்‌ திருவருட்பேறென நினைந்து
ஆங்குள்ள மன்னர்களை விடை கொடுத்து அனுப்பி வைத்து, இல்லம்‌ புகுந்து, முன்னைவிட நாறு மடங்கு அடியார்களை ஆதரித்துச்‌ சிறப்புற்றிருந்தார்‌. 11-49

அப்போது காணிக்கை ஈந்தவர்‌ இல்லங்களில்‌ விருந்தினனாகச்‌ குளித்துண்டு மகழ்ந்து, இரவில்‌ திருமால்‌ கோயிலில்‌ பல்வேறு
நாட்டியக்காரர்களின்‌ வாதங்களைத்‌ தீர்த்து வைத்து; மணிகள்‌, உடைகள்‌, ஊர்கள்‌ திருமாலுக்கு சமர்ப்பணம்‌ செய்து, மறுநாள்‌
காலையில்‌ 17-36

சிற்றரசுகள்‌ மதுரைக்குத்‌ திரும்பிச்‌ சென்றனர்‌. பெரியாழ்வாரும்‌ முன்போல வைணவ அடியார்களைச்‌ சேவித்‌
தும்‌ தனது நெடுநாளைய தொண்டாகுிய துளசிமாலை கட்டித்‌ தரும்‌ கைங்கரியம்‌ செய்து கொண்டும்‌, பக்தியுடன்‌ திகழ்ந்தார்‌. 1.37

ஒரு நாள்‌ நண்பகலில்‌ பூமாலை சமர்ப்பித்த பிறகு போய்க்‌ கொண்டிருந்த பெரியாழ்வாரை, அருளொயுகும்‌
புன்முறுவல்‌ பூத்த கடைக்கண்களோடு பார்த்துப்‌ பின்‌, கருட வாகனனான பகவான்‌ தாமலை மலராள்‌ ஆகிய தேவியைப்‌
பார்த்து இவ்விதம்‌ கூறினான்‌. IV—38

“யாமுனாசாரியர்‌ (ஆளவந்தார்‌) ஒருவனும்‌, இந்த மகாத்மா (பெரியாழ்வார்‌) ஒருவனும்‌ அல்லவா (வைணவ) தரிசனத்தை
புனருத்தாரணம்‌ செய்து எனது போருளுக்குப்‌ பாத்திரம்‌ ஆனார்கள்‌.” என இந்திராதேவி (லட்சுமி) தன்‌ கணவனிடம்‌
இவ்விதம்‌ கூறினாள்‌’ ”, 139

ஆளவந்தார்‌ வரலாறு
“இவர்‌ (பெரியாழ்வார்‌) கதை தெரிந்ததுதாஷே! அவர்‌ என்ன செய்தார்‌?” என்று கேட்ப, தாமரைக்‌ கண்ணன்‌, அந்த
நூற்றிதழ்த்‌ தாமரையில்‌ உறையும்‌ திருமகளுக்கு இவ்விதம்‌ கூறினான்‌! “*நங்காய்‌! என்னைச்‌ சேவிக்கும்‌ பக்தன்‌ ஒருவன்‌
முல்‌ பிருந்தான்‌.* ்‌ 1V—-40

அவன்‌ சிறுவயது முதலே ஆசாரியரிடம்‌ வேத சாத்திரங்‌களைக்‌ சற்றுச்‌ சிறந்திருந்தான்‌. நங்காய்‌! அப்போது இப்போ
துள்ள பாண்டிய மன்னனின்‌ முன்னோராகிய ஒருவன்‌ ஆண்டு வந்தான்‌. Iv—41
பித்துற்ற சைவத்தில்‌ முதிர்ந்து, எனது துதிகளை (விஷ்ணு துதி)க்‌ கேட்க மாட்டான்‌. எனது விக்கிரகங்களை வணங்கமாட்டான்‌. சிவன்தான்‌ பரம்பொருள்‌ என்பான்‌. எனது ஆலய உற்சவங்களைக்‌ கண்டு அஞ்சுவான்‌. அவளைச்‌ சார்ந்‌ தோரும்‌ அப்படியே இருந்தனர்‌. 1342

* வரலாற்றுப்படி யாமுனராகிய ஆள வத்த ரர்‌ பெரியாழ்வாருக்குச்‌ சில நூற்றாண்டுகள்‌ கழிந்த பின்‌ தமிழகத்‌
தில்‌ வாழ்ந்த வைணவ அடியார்‌ ஆகும்‌. கிருஷ்ணதேவராயர்‌ தமது காவியத்தில்‌ பின்னர்‌ இருந்தவரை முன்னவராக வருணித்‌ திருப்பது பொருந்தாது. எனினும்‌ இலக்கியங்களில்‌ இவ்விதம்‌ காலக்‌. கணக்கைப்‌ பொருட்படுத்தாது அமைப்பது மரபாகவே வந்துள்ளது. பின்‌ வந்த வேதாந்த தேசிகர்‌ அகோபில மடம்‌ உருவாக்கிய ஆதிவண்‌ சடகோபர்‌ போன்றவர்களையும்‌ இக்‌ காவியத்தில்‌ ஆண்டாள்‌ சரிதம்‌ கூறுமிடத்து வருணித்திருப்பதும்‌ காணலாம்‌. இப்போக்கு பல புராணங்களிலும்‌ காவியங்களிலும்‌ காணப்படுகிறது. எனினும்‌ சரித்திர நோக்கத்தில்‌ இது முரண்‌ பாடாகும்‌. *தரதா யதாபூர்வம்‌ கல்ப3யத்‌’ என்ற சுலோகப்படி பிரம்மா மீண்டும்‌ மீண்டும்‌ முன்போல உலக சிருஷ்டி நடத்து கிறார்‌ என்பதால்‌ யாமுனர்‌ முன்னைய யுகத்தவர்‌ ஆகக்‌ கொள்ளலாம்‌ எனச்‌ சிலர்‌ சமாதானம்‌ கூறுவர்‌.

அவன்‌ வேதமுணர்ந்த பிராமணர்களைப்‌ போற்றுவ தொழிந்து, ஐங்கமர்‌ (சைவ அடியார்‌, களைப்‌ போற்றி வணங்கினான்‌.
செவ்வாய்க்‌ கிழமைகளில்‌ வீரபத்தினுக்கு மாவிளக்கெடுத்துக்‌ கொண்டு சென்றான்‌. குலதெய்வங்களையும்‌ கும்பிட மறந்தான்‌.
தொண்ணுற்றாறு நாள்‌ விரதங்களில்‌ சங்க௱தாசமய்யார்களான சிவனடியார்கட்கு மன நிறைவுண்டாகும்படி சிரார்த்தங்களைச்‌ செய்து மகிழ்விப்பான்‌.
பழமையான கோயில்கள்‌ பாமாகக்‌ கடக்க சைவ மடங்களை நிறுவினான்‌. வடக்கத்திய சைவமதத்திற்‌ சேர்ந்து பூணூலையும்‌
அறுத்தெறிந்தான்‌. ஆசாரமற்ற ஆராத்திய்களை பெரிதாக எண்ணி கொண்டு செய்தான்‌. அவர்கள்‌ கூறும்‌ உபறிஷத்துக்‌
களை (வேதாந்தம்‌)க்‌ கேட்டான்‌. ஏதாவதொரு சைவஅடியார்‌ வந்தால்‌ வியந்து பாராட்டிப்‌ போற்றி வந்தான்‌. IV—43

சிவலிங்கதாரிகளாகிய ஐங்கமர்கள்‌ எது செய்தாலும்‌ இது பாவம்‌ புண்ணியம்‌ என்று ஆராயாமல்‌ ஒப்புக்‌ கொண்டு
இருப்பான்‌. சைவத்தைப்‌ போற்றும்‌ பிராமணர்கட்கு மட்டுமே அக்கரகாரங்கள்‌ தருவான்‌. 1V—44

அவன்‌ அரசாண்டு வந்த காலத்தில்‌ அவனது ஆட்சியிலிருந்த தாமிரபரணி நதித்துறையில்‌ மட்டுமே கிட்டும்‌ ஆணி முத்துக்கள்‌
எல்லாம்‌ சைவ அடியார்கள்‌ கழுத்துக்கு (ருத்ராட்ச மாலையில்‌ கோர்த்து) தீர்ந்து போய்விட்டன. IV—45

அவ்வப்போது, மன்னன்‌ விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில்‌ அந்தணர்கள்‌, தம்‌ நாட்டைப்‌ பிரிய
மனமில்லாமல்‌, நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு, . ருத்திராட்ச மாலை தரித்து, சூதசம்்‌ஹிதைச்‌ சுவடியைக்‌ கக்கத்‌
இல்‌ இடுக்கிக்‌ கொண்டு அவைக்களம்‌ புகத்‌ தொடங்கினர்‌. IV—46

ஒழுக்கத்திற்கு முரண்பாடாக மறைவாகக்‌ கஞ்சா, சாராயம்‌ குடிக்கும்‌ நீசர்களை வெளியேற்ற இயலாமல்‌ ஏற்றுக்‌ கொண்
டான்‌. பிராமணர்களின்‌ சிறு “தவறுகளை வெளிப்படுத்துமாறு சைவர்களுக்குச்‌ சைகை செய்வான்‌. . IV—47

அப்பட்டத்தரசி, நற்பேற்றினால்‌ என்‌ மீது பக்தியால்‌ ஆராதனை கொண்டிருந்தும்‌, தன்‌ கணவன்‌ எனது பக்தனாக
இல்லாததை தினைந்து மிகுந்த வருத்தத்தையடைந்திருந்தாள்‌. IV—48

மேலும்‌ அப்பெண்மணி I1v—49

மாளிகைக்கு முன்புள்ள அழகிய துளசி வனத்திற்கு: தானே கோலமிடுவாள்‌.. தசமியன்று ஒரு பொழுதுமட்டும்‌
உண்பாள்‌. மறுநாள்‌ ஏகாதசியன்று தூங்காமல்‌ உபவாசமிருந்து துவாதசியன்று பிராமணப்‌ பெண்கள்‌ கூறும்‌ கதைகளைக்‌
கேட்பாள்‌. விரதம்‌ இருக்கும்‌ மூன்று நாட்களும்‌ தன்‌ கணவனை விரும்ப மாட்டாள்‌, அதன்‌ மறுநாள்‌ தன்‌ கணவன்‌ படுக்கைக்குள்‌
அன்போடு செல்வாள்‌. செல்லும்‌ போது கஸ்தூரி (திலகத்தை துடைத்து கற்பூரத்‌ திலகத்தை அணிந்து செல்வாள்‌. இவ்விதரூ
என்‌ மேல்‌ பக்தி மிகுந்திருந்தாலும்‌ தன்‌ கணவனிடம்‌ பக்தி குறையாமல்‌ இருப்பாள்‌. இதுவே எனக்கும்‌ விருப்பமாகும்‌. 17-50

பிரம்மா, ரத்திரர்கள்‌ என்‌ உடல்கள்‌ தாம்‌ அவர்களை வணங்குவதும்‌ என்னை வணங்குவதுதான்‌. அவர்களை விருப்பத்‌
தைத்‌ தருபவனும்‌ நான்தான்‌. எனினும்‌ அதில்‌ சிறிது ஏற்றத்‌ தாழ்வுகள்‌ உள்ளன. 1-5)

பிற தெய்வங்களை என்னிலும்‌ வேறாகக்‌ கருதி உள்ள மந்த மதியினர்‌, எனது வாசுதேவநிலை–(அனளைத்திலும்தான்‌. தன்னில்‌
அனைத்தும்‌)யை உணராமல்‌ இயற்றும்‌ பூசனையின்‌ பயன்‌.- எல்லைக்குட்பட்டதாகவே முடிவுறும்‌. IV—52

மேலும்‌, இந்த ரகசியம்‌ (எல்லாம்‌ நானே எனும்‌ தத்துவம்‌) தெரியாமல்‌ அம்மன்னன்‌, தாமத குணமுடையவளாய்‌, எனது
பக்தர்களை சாதாரணமாகக்‌ கண்டு, அவர்கட்கு ஏற்படும்‌ தொல்லைகளை நீக்காது அலட்சியப்படுத்தி, காவல்‌ கடமையில்‌
நீங்கியவனாகினான்‌. இதைக்‌ கண்டு கலியுகத்தில்‌ தமிம்‌ நாட்டில்‌
(த்ரவிடமண்டலம்புன) கருதமாலா,* தாமிரபரணி நஇக்‌ கரை களில்‌ எனது பக்தர்கள்‌ பரந்திருட்பார்கள்‌, அந்நாட்டு
மன்னனாகிய பாண்டிய மன்னன்‌ ஆதலின்‌ காத்தல்‌, தண்டித்தல்‌ முதலியன நானே பிரத்தியட்சமாக செய்ய இயலாது. மன்னன்‌
மூலமே செய்வித்தல்‌ வேண்டுமாதலினாலும்‌, எனது பக்தர்களைக்‌ காப்பாற்றும்‌ விரும்பினாலும்‌, எனது பரதத்துவ நிர்ணயம்வாதத்‌
தாலன்றி நிலை நாட்ட முடியாதாகையாலும்‌, மன்னனை என்‌ பக்தனாக்க அவன்‌ சபையிற்சென்று வாதாடி வெற்றி பெறச்‌
செய்யும்‌ வகையில்‌ ஃ அவ்வந்தணனுக்கு (யாமுனாசாரியருக்கு) உணர்வைத்‌ தோற்றுவித்தேன்‌. ்‌ பல்வேறு நாடுகளிலிருந்தும்‌ வந்த ஏழை எளியோர்‌,
அனாதை, முதியவர்கட்கு தானியம்‌, உடை, மான்தோல்‌
முதலியன தந்தும்‌, பிரம்மச்சாரிகட்குத்‌ திருமணம்‌ செய்வித்தும்‌, உபநயனங்கள்‌ நடத்தியும்‌ முடம்‌, குருடு, செவிடுகட்கு எருது
முதலிய வாகனங்கள்‌ தந்தும்‌, மேலும்‌, குளம்‌ (தோண்டும்‌ வேலை) முடியாமல்‌ மிஞ்சியுள்ளது என்றும்‌, ஏழ்மை மிக்க (மரனியங்களற்ற) கோயில்கட்டு பூசை நடத்த வேண்டியும்‌, பாலை வழிகளில்‌ தண்ணீர்ப்பந்தல்‌ வைக்க வேண்டியும்‌, சிராத்தம்‌ செய்ய வேண்டும்‌ என்றும்‌, :
தீர்த்த யாத்திரைபோக வேண்டுமென்றும்‌, நோன்பு
(விரதம்‌) முதலியவற்றுக்காகவும்‌, நோய்‌ தீர்க்கவும்‌ என்று சொல்லி பட்டத்தரசியுடன்‌ சென்று தெரிந்தும்‌, தெரியாதும்‌ கொடை தந்த பொருட்களை முதிய பணியாளர்கள்‌ கொண்டு வந்து தர இடைவிட்டுக்‌ கட்டிய தோரணம்‌ போலுள்ள கரங்களால்‌ வாங்கிய ஏகதண்டி (சுமார்த்தர்கள்‌) திரிதண்டி
(வைணவர்கள்‌) பிரம்மசாரிகளின்‌ கையி3லந்திய கோல்களில்‌ காவி வண்ணக்‌ கொடிகளும்‌, பச்சைக்‌ கொடிகளும்‌ உடைகளும்‌,
நிறைந்து, யாசிக்கும்‌ வித்தையன்றி வேறு வித்தையறியாத
இரவலர்கள்‌ கூட்டமும்‌ நிறைந்து கடக்கும்‌, மேற்கு வாசலில்‌
அந்த யாமுனரும்‌ சென்று என்‌ கதைகளை முன்பே கேட்ட பாண்டிய மன்னன்‌ பட்டத்தரசியிடம்‌ வாயிலர்‌ மூலம்‌ சொல்லி
யனுப்பி “வெளி நாட்டவன்‌, விஷ்ணுவே பரதத்துவம்‌ என வாதில்‌ நிரூபித்து வெல்வேன்‌. அரசன்‌ விஷ்ணு பக்தர்களை மதியான்‌.
ஆகுலின்‌ அவனிடம்‌ நேரில்‌ யானோ, மற்றவர்களோ சென்று கூற முடியாது. நீ கணவன்பால்‌ அன்பும்‌ விஷ்ணு பக்தியும்‌ உடையவள்‌ ஆதலின்‌ உன்னிடம்‌ விண்ணப்பம்‌ செய்து கொள்‌கிறேன்‌. நீ சொல்வதை அரசன்‌ கேட்பான்‌. நீ சொல்லி என்னை
அழைப்பித்து வாதம்‌ செய்ய ஏற்பாடு செய்வாயாயின்‌ வாதம்‌ செய்து வென்று உன்‌ கணவனை விஷ்ணு பக்தனாக்கி பேறு
பெற்றவனாக்குவேன்‌.” என்று கூறி அனுப்பினான்‌. IV—53
* கிருதமாலா–மதுரையில்‌ தெற்கில்‌ உள்ள சிற்றாறு. புனித நீதியாக மதிக்கப்பட்டது. மகாபாரதத்திலும்‌ இந்நதி குறிப்பிடப்‌ பட்டுள்ளது. தற்போது இந்த அறு தூய்மையற்ற சிறுகால்‌வஈயாக மதுரை தெற்கு மேமபாலததருகே காணப்டுகிறது,

கோடைக்‌ காலத்தில்‌ வாடியிருந்த வெண்‌ மயில்‌ புது முகில்‌ முழக்கம்‌ கேட்டதும்‌ மகிழ்வுறுவதுபோல மகிழ்ச்சியுற்று, அந்த
அரசி தனித்திருக்கும்போது கணவனிடம்‌ யாமுனரைப்‌ பற்றிய செய்தி அறிவிக்கவும்‌ அரசன்‌ வியப்புற்று 1V—54

“எப்படி எப்படி? தான்‌ வாதம்‌ செய்து சைவமதத்தை வெல்வதற்கு வந்தானோ? பார்ப்போம்‌, வரவமைக்கவும்‌” என்று
கூறு அன்றிரவு சுமியவும்‌ 1V—55

காலையில்‌ ஜரா பாடு கூடிய அவையில்‌ (குறிப்பிட்ட உயர்‌ காரிகள்‌, கவிஞர்கள்‌, மட்டும்‌ உள்ள ௮வை) கொலுவிருக்கும்‌
சுணவன்‌ அருஇல்‌:.தான்‌ அமர்ந்து இருந்து அந்த மதிமுகத்தாள்‌, கணவனின்‌ அனுமதியுடன்‌ காவல்‌ மூலம்‌ ஏவி அமழைப்பிக்கவும்‌
அவ்‌ அந்தண குமாரன்‌ 1-0

ஆளவந்தார்‌ பாண்டியன்‌ அவைபுகல்‌
வாயில்புக்கு, கருடபச்சைகளுடன்‌ கூடிய நிலத்தில்‌ வைரம்‌ பொதிந்த மேடையுடன்‌ அமைந்த செந்தளிர்களுடைய *அசுவத்த
மரம்‌ (அரசமரம்‌) கண்டு அதனை வாகுத்திற்கு சாட்ியாக்கி வலம்‌ வந்து வணங்கினான்‌. IV—57

பொன்‌ வேய்ந்த மூன்றுபடிக்கட்டுகளையுடையதும்‌ பரந்‌ துயர்ந்து சத்திர வேலைப்‌ பாடுகளுடன்‌ கூடியதும்‌ ஆன மேடை
யில்‌, இரத்தினகம்பள மெத்தையில்‌, பாண்டிய மன்னன்‌ அமர்ந்‌ இருந்தான்‌. அவனைச்‌ சுற்றிலும்‌ புலித்தோல்‌ மேலாடையாக
உடைய முதிய சைவ சன்னியாசிகள்‌ இருந்தனர்‌. முத்துச்சரத்‌ இல்‌ கோர்த்த ருத்திராட்சை மாலை அணிந்து, நெற்றியில்‌ பூசிய
விபூதி விசிறியினால்‌ வீசிய காற்‌.றில்‌ உதிர சிவந்த கண்களுடன்‌சிறு பீடத்தில்‌ வட்டத்‌ தலையணையில்‌ முழங்கையை ஊன்றி
நந்தி பொறித்த மோதிரக்‌ கையை கன்னத்தில்‌ வைத்தவாறு, சைவாகமங்களைக்‌ கேட்டவாறு, பொன்பொதிந்த சிறிய ருத்தி
ராட்சங்கள்‌ காதில்‌ பளபளத்து ஒளிர, வெண்தலைப்பாகையின்‌ மேலாக பெண்துகில்‌ ‘போர்த்து, தாம்பூலப்படிகம்‌ ஒருத்தியும்‌
கத்தி ஒருத்தியும்‌ ஏந்தி நிற்க, அரசி வெண்சாமரை வீச ஓலக்கசு மிருந்த மன்னனை யாமுனன்‌ கண்டான்‌. 1V—58

கண்டு, அடக்கத்துடன்‌ அருகளைந்து பூணூல்‌ காணிக்கை யாகத்‌ தந்து அமரவும்‌, அரசன்‌ ஆதரவு காட்டாமல்‌ பரபரப்புடன்‌
இவ்விதம்‌ கூறினான்‌. IV—59

“என்னப்பா? சிறிய குட்டிப்‌ பயல்‌ நீ, உனக்குத்‌ தகுமா? துத்துவவாத நிர்ணயங்கள்‌ செய்ய இயலுமா? தோற்றால்‌ ஐயோ
அப்பா என்று கூவினும்‌ பிடித்து லிங்கத்தைக்‌ கட்டாமல்‌ விட மாட்டோம்‌ தெரிந்து சொல்‌!” IV—60

வாதாடுவோம்‌ என்று சொல்லிவிட்டு வருவார்கள்‌. தோற்ற பின்‌ வெட்கமில்லாமல்‌ ஏதாயினும்‌ தயவுடன்‌ தரமாட்டீர்களா?
என்பார்கள்‌. இவ்விதமான வஞ்சசமுடன்‌ சபையிலேறும்‌, துணிவுடைய பிராமணர்களைப்‌ பற்றிச்‌ சொல்வானேன்‌? 774-061

ஓன்று கூறி இரகூயுமாக தேவியைப்‌ பார்த்து இவ்விதம்‌ “கூறினான்‌. IvV—62

“என்‌ (சைவ) மதத்தவன்‌ தோற்றால்‌, விபூதி, ௬ுத்திராட்சங்‌ி களைத்‌ துறந்து இவனால்‌, வியப்புறும்‌ வகையில்‌ என்னவர்‌
களுடன்‌ விஷ்ணுவின்‌ சக்கிர முத்திரையை ஏற்றுக்‌ கொண்டவனா கிறேன்‌. 77. 63

“பெண்ணே! உனது இந்த பண்டிதன்‌ தோற்றால்‌, உனக்கும்‌ இவனுக்குச்‌ சொன்ன மாதிரி தான்‌’* (கழுத்தில்‌ லிங்கம்‌ கட்டி
விடுவேன்‌), “பஞ்சபூதங்கள்‌ சாட்சியாக தேவரீர்‌ ஆணை குவறாமல்‌ இருந்தால்‌ போதும்‌.” ” IV—64

என்று கூறும்‌ அவ்விருவரின்‌ சபதங்களைக்கேட்டு IV—€3

அவன்‌ (யாமுளர்‌) மான்தால்‌ படபட என ஒலிப்ப, மஞ்சள்‌ துணி கட்டிய புரசங்கோல்‌ மேலெழ, கை கூப்பி அடக்கமுடன்‌ ,
விண்ணப்பம்‌ என்று பாதி இருக்கையிலிருந்து எழுந்து தைரியமுடன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. IV—66

“தவா? இவ்விதம்‌ கூறலாகாது. நான்‌ வயிற்றுப்‌ பாட்டுக்‌காக இங்குவரவில்லை. என்தோற்றம்‌ (பிரம்மச்சாரி)கண்டாலே,
பிரம்மா பிச்சை ஏற்றுண்ணுமாறு விதித்துள்ளான்‌ ஆதலின்‌ (வேறு தேவைகள்‌) இல்லை எவ்பதுணரலாம்‌. [77-07

எவர்‌ எல்லா உயிர்களிலும்‌ இருப்பாரோ அவரே இவ்விதம்‌ (வாதாடத்‌)தூண்டினார்‌. அவர்‌ கட்டளைப்படியே வந்துள்ளேன்‌.
தெரிந்தது நாலு சொல்ல எல்லாம்‌ நல்லதாகவே முடியும்‌. அவரே பொய்‌ கூறின்‌ நான்‌ என்ன செய்ய முடியும்‌. IV—68

அரசே! நானே போட்டியிட வந்தேன்‌. என்று நிளைத்தாலும்‌ அப்படியே ஆகட்டும்‌. அம்மா (அரசி) அழைத்து வந்து
பண்டிதம்‌ என்று (தாட்சண்ணியம்‌) பார்க்க வேண்டாம்‌.
வாதத்தில்‌ தோற்றால்‌ தாங்கள்‌ எப்படிச்‌ செய்ய வேண்டுமானாலும்‌ அப்படியே செய்து கொள்ளுங்கள்‌. Iv—69

என்று தைரியமாகக்‌ கூறி, மீண்டும்‌ அமர்ந்து, அவன்‌ அமைதி யுடன்‌ வாதத்தைத்‌ கொடங்கினான்‌. IV—70

பிறன்மதம்‌ மறுத்தல்‌
* அவர்களுடன்‌ ஒரு அறிஞனைப்‌ பார்த்து, அவன்‌ கூறிய வாதங்களை மீண்டும்‌ தானும்‌ கூறி அவன்‌ கருத்தை நிச்சயப்‌
படுத்திக்கொண்டு, பின்‌ அவன்‌ வாதங்களைக்‌ கண்டிக்கத்‌ தொடங்கி, அவன்‌ சொன்ன சுருத்துக்களின்‌ குற்றங்களை மெல்ல
எடுத்துக்காட்டி, பின்னர்‌ அவ்‌ அவையோர்‌ உடன்படப்‌ இடையே பேசும்‌ வாதங்கட்கு ஒவ்வொன்றாக பதில்கூறி
எல்லோரும்‌ இடைமறித்துப்‌ பேசும்பேதும்‌ கலவரமடையாமல்‌ எல்லோரையும்‌ சமாதானம்‌ அடையச்‌ செய்து, முதலில்‌ பேசிய
வனிடமே திரும்பி மற்றும்‌ சுருதி, சுமிருதி, சூத்திரம்‌ முதலிய
வற்றால்‌ ஒரே கருத்தை உருவாக்கி, தனது சிந்தாந்தத்தை அனைவரும்‌ ஏற்கச்‌ செய்து எதிரியை முறியடித்து அருளோடு
அவனை விடுவித்து* 17-71
* இப்பாடல்‌ மூன்றாம்‌ அத்தியாயம்‌ 6வது பாடலாகும்‌

நீ என்ன சொன்னாய்‌” வருக! (ய) என்ற ௮ அடுத்த த்தவனை இ ணு அவனையும்‌ தோற்றோடச்‌ செய்து அவ்வந்தணன்‌ (யாமுனரீ) அனைவரையும்‌ வென்றான்‌. IV—72

இவ்விதம்‌ வென்று திருமாலே பரதத்துவம்‌ என்று விசிட்டாத்துவிதமே மதம்‌ என்று நிறுவிட. 17:….73
அச்சமயம்‌ அவ்விதம்‌ எதிரிலிருந்த அரச மரத்திலிருந்து “ஓ. மன்ன! இதுவே மெய்ப்பொருள! நாராயணனே பரம்‌ பொருள்‌! [அவனைப்‌ போற்றுவாயாக[!, என்று ஒரு .சொல்‌ கேட்கப்பட்டது. 17-74

அச்சொற்களைக்‌ கேட்டு, வருத்தமுடன்‌ அங்கு கூடியபுற மதத்தார்‌ (பாசண்டர்‌) தலைகுனிந்தவாறு வெளியேறினர்‌.
அவ்வரசன்‌ அவனது (யாமுளர்‌) பெருமைகளையுணர்ந்து மகிழ்ந்து, சாட்டாங்கமாக வணங்கி மகஇழ்ச்சி, வியப்பு ஆய
உணர்ச்சிகள்‌ பொங்கும்‌ இதயத்துடன்‌. இருமால்‌ அடித்தாமரைகட்கு பக்தியடையவனாகி, பேறு பெற்றவனாக, பாண்டிய
மண்டலத்திற்கு மருமகனை பட்டத்துக்‌ குரியவனாதலினால்‌;
தகுந்தவன்‌ என பிரம்மச்சாரியான அவனுக்கு (யாமுனருக்கு) தன்‌ சிறிய தங்கையைக்‌ கொடுத்துத்‌ இருமணம்‌ செய்வித்து,
தட்சணையாக அம்மகாத்மாவுக்கு தாரை வார்த்து பாதி நாடு தந்து, இளவரசாக்கி, வேதவேதாங்கங்களைக்‌ கற்ற அவன்‌
அதுர்வணாவதமும்‌, கற்றவன்‌ என்பதுணர்ந்து, அந்து வேதத்தில்‌          தெய்வீகமான மந்திரதந்திரங்கள்‌ உடைமையும்‌ அறிந்து
அம்மகாத்மாவுக்கு முன்னறிவித்து அரிய பகைவரை அடக்குமாறு போருக்குச்‌ செல்லுமாறு கட்டளையிட அந்த யாமுனரும்‌
இசைந்துபுறப்பட முனைய, அவனது புரோகிதன்‌, முதன்மந்திரி ஆூயோர்‌ மழைக்காலம்‌ வருவதால்‌ அதன்‌ பிறகு சரத்காலத்தில்‌
பகைவரை யடக்கச்‌ செல்சு எனக்‌ கூறவும்‌ அதை அரசனுக்கு அறிவித்து அவன்‌ இசைவு பெற்று அங்கேயே இருந்தான்‌.
அவ்வளவில்‌ 17:75

மழைக்காலம்‌
சூரியன்‌, தான்‌ கடுமையானவன்‌ எனக்‌ கூறுவதனைச்‌ ச௫க்காமல்‌ தானும்‌ வருணனைப்போல நீரிளைச்‌ சேமிக்கும்‌ எண்ணம்‌ உடையவனாக ,நீர்‌ நிலைகளை (ஆவியாகச்‌)சேமித்தும்‌ அமையாமல்‌, வருணன்‌ முதலை (மகரம்‌) யை வாகனமாக்கியது போல தானும்‌ நண்டினை (சர்க்கடகம்‌) வாகனமாக்கிறானோ என கர்க்கடக ரா௫ியில்‌ புகுந்தான்‌. (சூரியன்‌, வருணனைப்போல குளிர்ந்தவன்‌ எனப்‌ பெயா்‌ வாங்கஅவனுடன்‌ போட்டியிட்டான்‌ என்பது கருத்து) 1V~-76
* இப்பாடல்‌ மூன்றாம்‌ அத்தியாயம்‌ 7 வது பாடலாகும்‌

சூரியன்‌ கர்க்கடகம்‌ புகுந்ததுமே, காடு, (வளம்‌) பன்றி(வராகம்‌) எருமை, மயில்‌, யானை, தவளை மன மகிழ்ச்சி
யடைந்தன. ஜன்மராசியிலிருந்து மூன்றாவது ராசியில்‌ சூரியன்‌ புகுந்தால்‌ உலகுக்கு மகழ்ச்சி விளையுமன்றோர?” *
(கிருஷ்ணதேவராயர்‌ தமது சோதிட நூற்புலமை தோன்ற இப்பாடல்‌ அமைத்துள்ளார்‌. வனம்‌, வராகம்‌ முதலிய உயிர்கள்‌
மகிழும்‌ என்றதால்‌ வ என்ற எழுத்துக்குரிய நட்சத்திரம்ரோகினி ஆகும்‌ என்றும்‌ ரோகிணி விருஷபராசி நட்சத்திரம்‌ ஆகலின்‌
விருஷபத்திற்கு மூன்றாவது ராசி கர்க்கடகம்‌ என்றும்‌ அதில்‌ சூரியன்‌ புகுந்ததால்‌ மனமகிழ்ச்சி ஏற்படும்‌ என்று கற்பனை செய்துள்ளார்‌.) 7.77

சூரியனிற்‌ பிறந்த கதிர்களாகய (பெண்‌) மக்கள்‌ கடலினைக்‌
கலந்து கருவுற்று மீண்டும்‌ (மழை பொழிதலாகிய) பிரசவத்திற்‌ காக தனது இல்லம்‌ (பிறந்த வீடாகிய சூரிய மண்டலம்‌) அடைந்‌
தனர்‌. பெண்மக்கள்‌ பெருமையுடன்‌ புக்ககத்தில்‌ இருந்து பின்‌ பிரசவத்திற்காக தாய்‌ வீட்டுக்கு வருவது வழக்கம்‌ (மரபு) அல்லவா? IV—78

பூமியில்‌ முகில்களின்‌ பனிக்குடம்‌ உடைந்த நீர்‌ (முதல்மழை) பொழியக்‌ கண்ட மயில்கள்‌ தாமும்‌ துவிஜர்‌ (இருபிறப்பாளர்‌)
ஆதலின்‌ ஆரணியகம்‌ (காட்டில்‌ எழும்‌ சத்தம்‌) படித்து கருப்பம்‌ சுகப்பிரசவமாதற்கு முயற்சிப்பதுபோல தோன்‌ றியது.
(பல்‌, பறவை, அந்தணர்‌ இரு பிறப்பாளர்‌ என்பது கவி மரபு, பல்‌ விழுந்து மீண்டும்‌ முளைத்திடும்‌ பறவை முட்டையாகி ஒரு
பிறப்பும்‌ பின்‌ முட்டையிலிருந்து பிறப்பது ஆக இரு பிறப்பு எனப்பட்டன. அந்தணர்‌ பிறப்பால்‌ ஒரு பிறப்பு
உபதயனத்தால்‌ இரு பிறப்பு எனப்பட்டனர்‌. ஈண்டு, மேகம்‌ பெண்ணாகவும்‌, முதல்‌ மழை-பிரசவ காலத்தில்‌ பனிக்குடம்‌
உடைதலாகவும்‌, சுகப்பிரசவத்திற்காக வேதத்தின்‌ ஆரணியக பாகம்‌ அந்தணர்‌ ஓதுவது மயில்‌ அகவுதலாசுவும்‌ கற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆரணியகமந்திரம்‌ காட்டில்தான்‌ படிப்பது மரபு. வீட்டில்‌ படித்தால்‌ கருச்சிதைவு ஏற்படுமாம்‌. பிரசவ சமயத்தில்‌ சுகப்‌
பிரசவத்இற்காக அந்தணர்கள்‌ ஓதுவது மரபு, இதனை ஒட்டி இக்கற்பனை செய்துள்ளார்‌ கவிஞர்‌.) IV—-79

இந்திரன்‌, சூரியன்‌ எனும்‌ உலையில்‌, வானம்‌ என்னும்‌ பெரிய கொப்பரையை, நீர்நிறைக்க வேண்டி (அதிலுள்ள துரு,
துளைகள்‌ நீங்க) இடியேற்றுடன்‌ பிறந்த அயக்காந்தம்‌ எனும்‌ துண்டினை வைக்க. (காந்தம்‌ இரும்பை ஈரத்‌ தலான்‌) உலகிலுள்ள
இரும்புத்தூளை ஈர்த்தனவோ, எனுமாறு, கோடையில்‌ காட்டுத்‌ தீயால்‌ 1எழுந்தமை (புகைக்கரி) சூறவளியால்‌ மேலெழுந்து
போய்‌, முதலில்‌ பருந்தளவு இருந்த மேகத்தை சார்ந்து பெரிய முகிலாக மாறியது. IV—80

மேகங்கள்‌, எனும்‌ யானைச்குட்டிகள்‌, வானகத்து ஐராவத யானையிடம்‌ கற்றதோ எனுமாறு பூமியில்‌ இறங்கி சூறாவளி
என்னும்‌ துதிக்கையால்‌ பூழ்த்தியை வாரி இறைத்து கடல்‌ நீரை உறிஞ்சி வானத்திலிருந்து சொரிந்து திரிந்தன .Iv—81

நீர்‌ (பால்‌) குடித்தபுதிய முகிற்குழந்தைகளின்‌?ஆலங்கட்‌ டிகள்‌ எனும்‌ பாற்பற்கள்‌ உதிர்ந்தன. மீண்டும்‌ கொக்குகள்‌ எனும்‌
இருப்பிறப்பின (பறவை-பல்‌) கஇடைத்தன, முகில்‌ வளர வளர குரலும்‌ கம்பீரமானது.
(வடமொழில்‌ பயஸ்‌ என்றால்‌ பால்‌, நீர்‌ என்ற இரு பொருளும்‌ உண்டு. அது சிலேடையாகச்‌ சிறப்புறுகிறது. இரு
பிறப்பு (துவிஐ) என்பது பறவை, பல்‌, அந்தணர்‌ மூவர்க்கும்‌ உரித்தெனக்கூறல்‌ கவிமரபு. குரல்‌ கம்பீரமடைதல்‌ இடிமுழக்‌
கத்தைக்குறிக்கும்‌) கொக்கு முகிலின்‌இரண்டாவது முளைத்து பல்லாக உவமை. IV—82

குனது நீரை கதிரவனின்‌ கதிர்களாகிய (திருடர்கள்‌) எடுத்துக்‌ கொண்டு போகவே, பூமி, சூறாவளிக்‌ காற்றின்‌ மூலம்‌ மேல்‌
சென்று இந்திரனிடம்‌ (அரசனிடம்‌) முறையிடவும்‌, அவன்‌திருட்டைக்‌ கண்டுபிடிக்க வானத்தில்‌ வில்‌ ஏந்தவும்‌, (அதைக்‌
கண்டு) பயந்த ஆயிரங்கற்றைகளுடைய ஆதித்தனும்‌ மறைவாக மு௫ல்‌ இறங்கி தான்‌ (கவர்ந்த பொருனை) &ீமே கொட்டியது
போல மின்னல்‌ வெளிச்சத்தில்‌ மழை நீர்‌ வெள்ளம்‌ saree IV—83

முதன்மழை பொழிந்ததும்‌ (மண்ணிலிருந்துஎழும்‌) ஆவியாகிய கொடிகள்‌ மேலெழுந்து, இந்திரன்‌ முதன்‌ மழை வெள்ளத்தைக்‌
கண்டு பயந்து பிரளயகாலமோ எனக்‌ கருதி அதைத்‌ தடுத்து நிறுத்த அதன்‌ பாதங்களில்‌ (நீர்த்தாரைகளாகிய நூல்களில்‌)
தளையிட்ட விலங்குகளோ எனத்தோன்றியது. IV—84

மூன்பு வானத்தில்‌ எந்தத்‌ தடையும்‌ இன்றி ஓசையின்றிச்‌ சென்ற சூரிய சந்திரரின்‌ தேர்கள்‌, மழைக்காலத்தில்‌ முகில்கள்‌
குடையாவதால்‌ அதன்‌ மேல்‌ உராய்வதால்‌ எழும்‌ தேதர்ச்‌ சக்கரங்களின்‌ முழக்கமோ எனுமாறு இரவும்‌ பகலும்‌ பயங்கர
மான இடி முழக்கங்கள்‌ முழங்கின. IN=85

அன்றாடம்‌ கடல்‌ நீரைக்‌ குடித்ததினால்‌ படிந்த உப்புப்‌ பாளங்கள்‌, வளரும்‌ காட்டுத்‌ தீயாகிய இடி மின்னல்களின்‌ நெருப்‌
பில்‌ பட்டு, ௪டசட வெனப்‌ பற்றி வெடித்ததுவோ? எனுமாறு பயங்கரமான முழக்கங்களை மேகங்களின்‌ கருவறைகள்‌ உ௬-:வாக்கின. 1V—86

சூரிய கரணங்கள்‌ தாகங்கொண்டு கடலைச்‌ சேர்ந்து நீர்‌. சிறிது குடிக்கு முயலும்போது, உடனே தனது சூட்டினால்‌. சுய்‌
யென்ற ஒலியுடன்‌ எழுந்தபுகை சுற்றிக்‌ கொண்டு மேலெழவும்‌ காற்றிற்‌ கலைந்த மேகத்‌ திடைவெளிகளில்‌ காணப்பட்டதாக
புகை சுண்களில்‌ பட்டு எரிச்சலை மூட்டிக்‌ கண்ணீர்‌ உண்டாகியது போல மழை பொழிந்தது. IV—87

பூமியில்‌ உள்ள நீரையெல்லாம்‌ சூரியன்‌ கவர்ந்ததால்‌, (பூமி சூரியனின்‌ பகைவனான) இராகுவிடம்‌, பகைவனுக்குப்‌ பகைவன்‌
நண்பன்‌ எனும்‌ நியாயப்படி முறையிட அந்த நீரை ஒரே தட வையில்‌ கவிழ்க்குமாறு செய்ய எவ்வளவு பேருருவம்‌ தேதேவையோ
அந்த அளவு உருவெடுத்தாற்போல கார்முகில்கள்‌ வாளம்‌ முழுவதும்‌ பரந்திருந்தன. IV—83

புற்றிலிருந்து புறப்பட்டு வானச்‌ சுவரில்‌ ஏறிச்‌ செல்லும்‌ வாளவில்லாகிய பல்‌ வண்ண முடைய பூரான்‌ (ஆயிரங்கால்‌
பூச்சி எனினும்‌ அமையும்‌) நடந்து செல்லும்‌ கால்சுளோ எனு மாறு காற்றடித்தலால்‌ அசையும்‌ கார்முகில்‌ குழுவின்‌ மழைத்‌
தாரைக்‌ கால்கள்‌ வானகம்‌ முழுவதும்‌ நடந்தன. IV—89

ஒருதுளி கூட பயிர்களோடு கூடிய பூமிக்கு இறங்க விடாமல்‌ நெருங்கி மொய்த்துக்‌ குடித்துச்‌ சாதகங்கள்‌ (வான்‌ குயில்கள்‌)
குடுக்கன்றன என்று மனதிற்‌ சினந்த முகில்‌, அவை ஆடிக்கொண்டிராமல்‌ அகலும்படியாக குழலில்‌ ஊதி உண்டைகளை எறிந்தாற்‌
போல்‌, ஆலங்கட்டிகளை மழையோடு உதிர்த்தன. (குழலில்‌உண்டைக்‌ கற்களை வைத்து வாயால்‌ வேகமாக ஊதி அக்கற்‌
சுளால்‌ பறவைகளைப்‌ பிடித்தலும்‌ விரட்டலும்‌ முன்னோர்‌ கையாண்ட முறையாகும்‌) 1.90

முதலில்‌ பெய்த இளஞ்சாரல்‌ மமை சடசட வென இறங்கி தடுவீட்டை நனைத்துச்‌ செல்லவும்‌,
இரண்டாவது தொடர்ந்த மழை ஆலங்கட்டிகளுடன்‌ விழ (அதன்‌ குளிர்ச்சியும்‌ நிலத்தின்‌ வெம்மையும்‌ கலந்து எழுந்து) அவி எழுந்து மண்மணம்‌ பரப்பி முன்போலவே செல்ல, மூன்றாவதாக மீண்டும்‌ வந்த மழை நின்று பெய்து மின்னலிடிகளுடன்‌ வெள்ளம்‌ பொழிந்து உலஇனையே இருளில்‌ மூழ்கச்செய்ய, ஊஞ்சல்‌ சங்கிலிபோல&£ழும்‌ மேலுமாகப்‌ பெய்த மமழைபெருமமை யாகா மேலும்‌ மேலும்‌ ஊற்றிய வண்ணமிருந்தது,
நிலத்தைப்‌ பிளப்பதுபோல கனமமைத்துளிகள்‌ வீழ்ந்து, வேசுமான காற்றோடு இடைவிடாமல்‌ குடத்தைக்‌ கவிழ்த்தாற்‌ போல தாரைகள்‌ வீழ்ந்து வெள்ளக்‌ கஈடரதி விண்ணும்‌ மண்ணும்‌ ஒன்றாமாறு மழை பெய்தது, 1/9]

அந்த இந்திரன்‌ மயில்களாகிய நடனக்‌ காரர்களை ஆடச்‌ செய்தபோது, காற்றாகிய மிருதங்கக்‌ காரன்‌, மேகமாகிய மிரு தங்கத்தைக்‌ கமும்‌ மேலும்‌ ஆட்டி வாசிக்க நிலத்தில்‌ விழும்‌ வென்னிய தாரைகளும்‌, அந்த நீர்த்தாரைகளில்‌ அசைந்தாடும்‌ இந்திர கோபம்‌ (தம்பலம்‌) பூச்சிகளும்‌, மிரு தங்கத்தை அலங்கரிக்‌ கும்‌ வெண்‌ சரிகையும்‌ அதில்‌ கோத்த சிவந்த குஞ்சமும்‌ போரவத்‌ கோன்றின. 1/2

முதலில்‌ பெருமழை பொழியும்போது காற்றடித்து ஒருக்‌ ஈரய்வாக இழுக்கவும்‌ மேகங்கள்‌ இந்திரன்‌ அமரும்‌ தேர்களோ எனுமாறு இயங்கின. முஇில்களில்‌ மின்னல்கொடி. பிடிக்கவும்‌, இருவிழாவிற்கொடியேழ்றுவதால்‌ Shouy A பிறஊர்கட்கு செல்ல இயலாதவாறு (கொடித்தடை) போல மக்கள்‌ (மழை _ விடாது பெய்தலின்‌) தத்தம்‌. இல்லங்களிலேயே வெளிமயற முடியாது தங்களரி, IV—93

வசந்த காலத்தில்‌ மஞ்சள்வண்மைச்‌ சம்பங்கி பூக்கள்‌ மிகுஇ யாகக்‌ கிடைத்ததை நம்பி, தாழையை புறக்கடையில்‌ வைத்த அதே மக்கள்‌, கற்போது (சம்பங்கி கிடைக்காததால்‌ அதே வண்ணம்‌ ஓத்த) தாழை (சைதை) மடல்களை விரும்பிடவும்‌ அவை அவார்களைப பார்த்து (முன்பு மட்டும்‌ அலட்சியப்படுத்தி னீர்களே என்று கூறுமுகத்தான்‌ சிரிப்பது போல வாய்திறந்து விரிந்தன. ்‌
(தாழம்‌ பூக்கள்‌ முள்ளுடைத்தாதலின்‌ வேலிகளின்‌  களில்‌ போட்டு வளர்ப்பர்‌, அதனை அலட்சியமா (1றக்கடையில்‌ வைத்ததாக கவிஞர்‌ கற்பனை செய்துள்ளார்‌.) IV–94

எப்போதும்‌ வானகத்துப்‌ பூர்தோட்டங்களில்‌ இருந்து (பாரி சாதம்‌ முதலிய பூக்களின்‌ மணம்‌ அடைந்து, மழைக்‌ காலத்தில்‌ முகிலுடன்‌ 8ீமே இறங்கி ஓடி வந்த மின்னல்‌, தாழம்‌ புதரில்‌ இறங்கவும்‌, அங்குள்ள பெண்‌ நாகப்பாம்புகள்‌ (மின்னலின்‌ பாரி சாதவாசனைக்‌ காட்பட்டு) பிணைத்துக்‌ கொள்ளவும்‌ விடுபட முடியாமல்‌ அகப்பட்டுக்‌ சொண்டனவோ எனுமாறுதாழம்புதரில்‌ பொன்தகட்டிளனை இகழும்‌ தாழம்பூ மடல்கள்‌ நிறைந்து எழில்‌ பெற்றன.
(மின்னல்‌ பாம்பு போல்தலின்‌ பெண்‌ பாம்புகள்‌ பிணைந்தன என்றும்‌, சுவர்க்க லோகப்‌ பூமணத்தைக்‌ சுவார்ந்து வந்தமின்னலை செல்வம்‌ மிக்கவளை நாடும்‌ மகளிர்‌ என பெண்‌ நாகங்கள்‌ குவர்ந்‌ தீன என்றும்‌ குறிப்பு தோன்றுகிற த) IV—95

வேனிற்காலத்தில்‌ மன்‌ மதன்‌ வில்லாகிய கரும்‌?பநிலத்தோடு கிடந்ததுதான்‌ இப்போது பசிய இலைகளும்‌, கணுக்களில்‌ சாம்பல்‌ பூத்தும்‌ மேல்‌ தோல்‌ சிவந்தும்‌ மூவண்ணப்‌ பொலிவுற்று இருக்கவும்‌. மன்மதன்‌ அதனை கைப்பிடியில்‌ இறுச்கவும்‌ அதிலி ருந்து உதிர்ந்த முத்துக்களோ எனுமாறு, வாளவில்லோடு கூடிய முகிலிலிருந்து உதிர்ந்த ஆலங்கட்டிகள்‌ தோன்றின. இதன இத்திரவில்‌ என்பது சரியல்ல! இந்திரவில்லானால்‌ புற்றில்‌ பிறப்பானளேன்‌?
(கரும்பில்‌ முத்துக்கள்‌ தோன்றும்‌ என்பதுகவிமரபு. வானவில்‌ பல்வண்ணம்போல கரும்புவில்லும்‌ மூவண்ணப்பொலிவுறு கத லான்‌, உவமை இந்திறவில்‌ அன்று! மன்மதன்‌ வில்‌”* என்று கற்‌ பனை நயம்‌ கூறப்பட்டது) TV—96

இவன்‌ மிகுந்த நீரைக்‌ கடலிலிருந்து குடித்திருக்கிறான்‌! எல்‌ லாமே சொரிந்தால்‌ மிகுமழை என்னும்‌ கேடுண்டாகும்‌. அளவோடு முகில்‌ உருவில்‌ பொழிந்த மழையே பரயிர்கட்குப்‌ போதும்‌. என்று மனதில்‌ நினைத்த பிரம்மதேவன்‌, வானத்தில்‌ சூரியனைச்‌ சுற்றிலும்‌ (மிகுநீர்‌ வெளியேறாது தடுக்கக்‌) கட்டிய
அணைபோல வட்டமான பரிவட்டம்‌ சூழ்ந்திருந்தது. [3.97

வானகம்‌ எனும்‌ அரநிகத்தில்‌ மிகுந்த திறமையுடன்‌ காளி | தேவி எனும்‌ மகம்‌, நீலப்புடவை தரித்து நாட்டியமாடும்போது
அவள்‌ வாயிலிருந்து உமிமும்‌ நெருப்புத்‌ துண்டுசகுளோ எனுமாறு இயந்திர கோபப்‌ (தம்பலம்‌) பூச்சிகளின்‌ கூட்டம்‌ பூமியில்‌ உதார்ந்தன. 7898

சூரியனின்‌ கதிர்கள்‌, மேகமாக, அமாவாசையன்று சந்தி னைச்‌ சேர்ந்ததும்‌ (சந்திரனிடமுள்ள அமுதத்தை) மழைச்‌
சமயம்‌ வந்தபோது தான்‌ உண்ட அமுதத்‌ துளிகளை மீண்டும்‌ உமிழ்ந்தனவோ எனுமாறு ஆலங்கட்டிகள்‌ மிகுதியும்‌ உதிர்ந்தன.
(அமுதத்துளிகள்‌ நீராகிலும்‌ மேகத்தின்‌ குளிர்மையால்‌ கட்டி யாகி வீழ்ந்ததுவே ஆலங்கட்டிகள்‌ என்பது கற்பனை. சூரியனும்‌
சந்திரனும்‌ சேர்வதுவே அமாவாசை என்பது சோதிட நரல்‌ மரபு) IVv—99

முதலில்‌ மேகங்களில்‌ ஒளியோடு இகழ்ந்த வானவில்லின்‌ செம்மை நிறம்‌ எல்லாம்‌, மழை நீரோடு கரைந்து செந்நுரை
படிந்தாற்போல இந்தர கோபப்பூச்சகள்‌ காணப்பட்டன. வான வில்லின்‌ பிய வண்ணமே கரைந்து கரைந்து மண்ணிற்‌ படுந்‌
துள்ளது போல பசும்புல்வெளிகள்‌ தோன்றின.
(வானவில்லின்‌ பச்சை நிறமே மழை நீரால்‌ கரைந்து பூமியில்‌ பசும்‌ புல்லாகவும்‌, செவ்வண்ணம்‌ தம்பலப்‌ பூச்சிகளாகவும்‌ தெரிவதாகக்‌ கற்பனை.) Iv—100

மேகங்கள்‌, படீர்‌, படீர்‌ என உறுமி முழக்கவும்‌, திடுக்கிட்டுப்‌ பயத்த பூமிதேவி, வைடூரிய மணி முூனைகளாகிய புளகாங்கித
முற்று, தன்‌ தலைவனாகிய தூங்கும்‌ நாராயணனைத்‌ தழுவ விரைந்த கரங்களோ எனுமாறு, கற்கணப்‌ பறவைகள்‌ ஓலிப்ப
புல்‌ மிதக்கவும்‌, வண்டல்‌ (சேறு) மேலேபடிந்தவாறு நதிகள்‌ விரைந்து கடலிற்‌ புகுந்தன.
(வண்டல்படிந்த நீரால்‌ சந்தனம்‌ பூசிய சரம்‌ ஆக உவமிக்கப்‌ பட்டது. . கடலில்‌ இருமால்‌ துயில்வதாக மரபு) 4-101-

மயில்‌ சட்ஜம்‌ எனும்‌ சுரம்தவீர இல்லாததாலும்‌, மேகத்தின்‌ . முழக்கம்‌ கடுமையாதலாலும்‌, (கோடையில்‌) பிரிவாற்றாது
மெலிந்த நதிகளாகிய நங்கையர்‌ சடல்சலைவனளைக்‌ கலந்துற வாடத்‌ துணையாகும்‌ தூதியராக மயில்‌ அகவலே அமுதமாக இனித்தது. 1V—102

பேருடலினனாஇய இராகு, சந்திரனின்‌ அமுதத்தை விழுங்கவும்‌, திருமால்‌ கண்டித்த கழுத்துப்போல, கருமேகுத்தில்‌ வானவில்‌
தோன்றியது. அந்த சக்கிராயுதம்‌ (சுதரிசனம்‌) போல வானத்‌தில்‌ பிரதி சூரிய பிம்பம்‌ தோன்றியது.
(மழைக்‌ காலத்தில்‌ வானத்தில்‌ சூரிய பிம்பம்‌ போல எதிர்‌ பிம்பமும்‌ தோன்றும்‌ என்பது வானநால்‌ கருத்தாகும்‌.) IV—103

இடியின்‌ கூர்மை, நீரின்‌ இனிமை, மயிலின்செருக்கு, மின்னல்‌ தீச்சுடர்‌, ஆலங்கட்டிவெண்மை, கொக்குகளின்‌ வளர்ச்சி, நன்னீர்‌
மழை வளம்‌, இவற்றைத்‌ தருவதற்காக மேகம்‌ முறையே உப்பு, கருப்பஞ்சாறு, கள்‌, நெய்‌, தயிர்‌, பால்‌, நன்னீர்‌ ஆகிய ஏழு கடல்‌
களில்‌ படிந்து குடித்தனவோ என்னத்‌ தோன்றிற்று.
(இடியின்‌ கூர்மைக்கு உப்பும்‌, நீரின்‌ இனிமைக்கு கருப்பஞ்‌சாறும்‌, மயிலின்‌ செருக்குக்கு கள்ளும்‌, மின்னல்‌இக்கு சுடர்மிக
நெய்யும்‌, ஆலங்கட்டிக்குதயிரும்‌ கொக்குவிற்கு பாலும்‌, மழைக்கு நன்னீரும்‌ குடித்தன என்று கூறப்பட்டுள்ளது. ஏழு கடல்கள்‌
என்பது புராண வழக்கு) 17104

சிறியபசுமையானமின்னல்‌ எனும்‌ கெளபீனமும்‌ (கோவணம்‌) வானவில்‌ என்னும்‌ கோலும்‌ தரித்து, நாய்க்குடை என்னும்‌
குடை கிடைக்கவும்‌, மயில்‌ தோகை என்னும்‌ சுவடியை விரித்து. உருமும்‌ முழக்கமே வேதப்படனமாக அமைய எழும்‌ துரசிப்படல
மாகிய பலிச்சக்கரவர்த்தியை அடக்கிய வாளம்‌ மூழுதும்‌ பரந்து நின்ற வாமனளாகிய மேகத்தினை வாயுவாகிய பிரம்மதேவன்‌
உபசரித்து கழுவிய பாத நீர்‌ என்னும்படி மழை சொரிந்தது. 4-105-

மிகு மழையால்‌ பாம்புகள்‌ தம்‌ பூற்றுக்களின்‌ துளைகளை மூட்‌ எடுத்த குடைகளோ எனுமாறு நிலமெங்கும்‌ நாய்க்குடைகள்‌ தோன்றின,
(நாய்க்‌ குடையை தெலுங்கில்‌ புட்டகொடுகு) புற்றுக்குடை என்பரீ, புற்றுகளில்‌ பிறத்திலின்‌ இப்பெயர்‌ வந்தது, இதனை
யொட்டி கற்பனை செய்துள்ளார்‌ கவிஞர்‌.) IV—106

அடிக்கடி வானத்தில்‌ செவ்வாய்க்‌ (அங்காரகன்‌) கிரகம்‌, புரோ அங்காரக யோகம்‌ (முன்செவ்வாய்‌) மூலம்‌ மழையின்மை
யாகிய இமை பயப்பதைக்‌ கண்டு, மேகம்‌ சினந்து, செவ்வாய்‌ கிரகத்தை குடும்பத்தோடு வெளித்‌ தள்ள செவ்வாய்‌ கிரகத்தின்‌
குட்டிகள்‌ கழே வீழ்ந்தனவோ எனுமாறு இயதிர- கோபப்‌பூச்சிகள்‌ உதிர்ந்தன.
(இந்திர கோபம்‌ வானத்திலிருந்து உதுர்வதாகக்‌ கற்பனை செவ்வாய்‌, சிவப்பாதலின்‌ அதன்‌ குட்டி குழந்தைகளாக
கற்பனை செய்யப்பட்டது. புரோ அங்காரகன்‌ மழையின்மையும்‌ புரோ சுக்கிரன்‌ மழை மிகுதியும்‌ தரும்‌ என்பது சோதிட றா
பகையாகிய பாம்புகளை மேகம்‌ மின்னி இடித்தலின்‌ புற்று களுக்குள்‌ புகச்‌ செய்தது என்று கண்ட தவளைக்‌ கூட்டம்‌
பல்வேறு சந்த விருத்தங்களில்‌ பாராட்டிசைத்தனபோல தவளைகள்‌ கத்தின. iv—108

முகில்‌, தன்மெய்யிருட்டினால்‌ பகலை இரவாக்கியும்‌, தனது மின்னொளியால்‌ இரவைப்‌ பகலாக்கியும்‌ மாறுபாடுறச்‌ செய்தது.
எல்லாவற்றையும்‌ உறங்கச்‌ செய்யும்‌ திருமாலையே, உறங்க வைக்கும்‌ பெருமை சேர்ந்த முகிலுக்கு இது ஒன்றும்‌ வியப்பான
செயல்‌ அல்லவே! . © W—109

தரசியடங்கவும்‌ பின்‌ வானத்தில்‌ மின்னல்‌ தோன்றியது எப்படியிருந்ததென்றால்‌ இந்திரன்‌ வான்மகளுக்கு நசைசெய்யும்‌ விருப்பத்துடன்‌ நிலத்தும்‌ மென்மையான பொன்பொடியை மேக மாகிய அரிப்பலகையில்‌ வைத்து வானகங்கை நீரில்‌ கழுவவும்‌ தோன்றும்‌ பொற்சுடர்‌ போலிருந்தது.
(நகை செய்யும்‌ தட்டார்களின்‌ மனைத்‌ தூசியை குவித்து
வைப்பர்‌. அது கருநிறமாக இருக்கும்‌. அதனை மண்‌ அரித்தலசம்‌ பெட்டியில்‌ போட்டு நீர்‌ ஊற்றி ஊற்றி அலசுவர்‌. மண்‌ போய்‌
விட பொன்‌ துகள்கள்‌ மிஞ்சும்‌, அதனைச்‌ சேர்த்து நகையாக்கலாம்‌. இந்த நிகழ்ச்சியை கவிஞர்‌ உருவகித்துள்ளார்‌) 14-10

பெரியதும்‌ பழுத்ததுமான காட்டு அத்திப்‌ பழத்தின்‌ மேல்‌ துளையில்‌ மழைதீர்‌ புகுதலான்‌ கொசுக்‌ கூட்டம்‌. காட்டுத்‌ இப்‌ புகையடங்கிற்று, இனிக்கூட்டம்‌ கூடலாம்‌ என்று ஓய்வு பெற வெளியேறுவதுபோல வெளிச்‌ சென்றன. (மழைக்காலத்தில்‌ கொசுக்கள்‌ மிகுதல்‌ இயல்பு) IV—211

வானத்தில்‌ ஆவணி மாத முகில்கள்‌ வரவும்‌ மலைமேல்‌
மயில்கள்‌ தோகை விரித்தாட, தாழை மடற்பூந்தாதும்‌, மல்லி கைப்‌ பூ மகரந்தமும்‌ படிந்து, பசும்‌ புல்‌ வெளி காணாமல்‌ மூட்‌,
மழை வந்ததும்‌ பசும்புல்‌ மீண்டும்‌ தோன்றுவதுமான காட்சி
மேகமாகிய இந்திர ஜாலவித்தைக்காரன்‌, விபூதி, அறுகம்புல்‌, மயில்‌ தோகைகள்‌ வைத்துக்கொண்டு காட்டும்‌ தோன்றலும்‌
மஷழஹைதலுமான காட்சி அற்புதங்களாக அமைந்தன. IV—112

மலைச்சிகரங்களிலுள்ள நாவல்‌ மரத்திலிருந்து உதிர்ந்த கனி, களில்‌ சாறுகளில்‌ பிறந்தது, ஐம்பூநதி (நாவலாறு) ஆதலின்‌,
அக்கனிச்சாறு முகில்களில்‌ பட்டதும்‌ மின்னலாகிய மேலான தங்கம்‌ ஆயிற்று.
(நம்‌ நஈட்டுக்கு ஐம்பு.தீவு (நாவலந்தீவு) என்று பெயர்‌… இங்கு
ஜஐம்புநதி பாய்கறதாக கூறுவார்‌. அது பொன்னாறு ஆகும்‌. ஜாம்பு நதம்‌ என்றால்‌ ஐம்பு நதியில்‌ பிறந்தது என்ற பொருள்‌. இத பொன்னைக்‌ குறிக்கும்‌ வட சொல்‌, இந்த அடிப்படையில்‌ “கவிஞர்‌ கற்பனை செய்துள்ளார்‌.) IV—113

வசந்த காலத்தோடு சென்றுவிட்ட, முல்லை தாமரை அசோகம்‌, குவளை, மா ஆகிய மலர்கட்குப்‌ பதிலாக கதம்பம்‌;
(கடப்பம்‌) குண்டுமல்லிகை, காட்டுமுல்லை, மருது, ஆகிய ஐந்து மலர்களும்‌ மன்மதனுக்கு மலரம்புகளாயின,
அதோடு தாழம்பூ என்னும்‌ சுரிகை (கட்டாரி)யும்‌ அதிகமாகக்‌ கிடைத்தது. IV—114

நடனமிடும்‌ மயிலாகிய கதாபாத்திரத்திற்கு மேகமே திரைச்‌ சீலையாயிற்று. மலைமுகட்டில்‌ முகிலின்‌ இலைகள்‌ மேயும்‌ சட்‌
சட்‌ எனும்‌ ஓசையே தாள இசையாக அமைந்தது.
(மேகம்‌ மலைமுசுடூகளின்‌ இலைகள்‌ மேய்ந்து கடல்‌ நீர்‌, குடிக்கும்‌ எனும்‌ மக்கள்‌ வழக்காற்றுக்‌ கற்பனையை ஓட்டி
இலைகள்‌ மேயும்‌ என்று கவிஞர்‌ குறிப்பிட்டார்‌. இலைகளில்‌ பனிக்கட்டி வீழ்ந்தால்‌ இலைகள்‌ துளைபடுதலின்‌ இக்கற்பனை
உருவாயிற்று போலும்‌, மழைபெய்து ஓய்ந்தபின்‌, இலைகளிலிருந்து கட்‌ கட்‌ என மெல்ல மெல்ல விழும்‌ துளிகளின்‌ ஒலியே
தாளமாக கற்பனை செய்துள்ளார்‌ கவிஞர்‌. ரூ.115
(மேகம்‌, உப்போடு புளிப்பும்‌ கலந்தால்‌ சுவையாயிருக்கு மெனக்‌ கருதி) முதலில்‌ உப்புக்‌ கடலைக்‌ குடித்துப்‌ பின்‌ தயிர்க்‌
கடலைக்‌ குடிக்க முனையவும்‌, தயிர்க்கடல்‌ மிகப்பழமையான தாதலின்‌, தயிர்க்கட்டிகள்‌ மிகப்‌ புளிப்புறவே துப்பிவிடவே
அவையே ஆலங்கட்டிகளாக உதிர்ந்தன. பூமியில்‌ விழுந்த ஆலங்‌கட்டிகளைத்‌ தின்றதுமே பல்‌ சிவ்வென்று கூச்சமுறுவானேன்‌?
(புளிப்பு மிகினே பல்‌ கூச்சம்‌ எடுக்கும்‌. ஆலங்கட்டி (பனிக்‌கட்டி) யாதலின்‌ குளிர்‌ மிகுதலானும்‌ பல்‌ கூச்சம்‌ எடுக்கும்‌.
இதனைக்‌ கவிஞர்‌ கற்பனை நயமுடன்‌ விவரித்துள்ளார்‌.) iV—l116

அப்போது (மழைக்‌ காலத்தில்‌) சேறுமிகுந்திருக்கும்‌ நிலங்‌களில்‌ இறங்காமல்‌ மலை முகடுகளில்‌ இருக்கும்‌ மான்‌ கூட்டங்கள்‌
காவல்‌ மந்தையில்‌ (இடையில்‌ இருப்பது போலிருக்க அதைசீசுற்றி முகில்கள்‌ சூழ்ந்திருப்பது இந்திரன்‌ ஆகிய அரசன்‌
வில்லேந்தி வேட்டையாடத்‌ தயார்படுத்திய திரைவேட்டை போல இருந்தது. ்‌
(அரசனுக்காக அதிகாரிகள்‌ காட்டைச்‌ சுற்றிலும்‌ மிருகங்கள்‌ வெளியேறாமல்‌ தடுக்க இரைகட்டி விடுவார்கள்‌. நடுவில்‌ உள்ள
காட்டில்‌ அரசன்‌ எளிதில்‌ வேட்டையாடி. மகிழ்வான்‌. இருஷ்ணதேவராயர்‌ தம்‌ அனுபவ முத்திரைகளை ஆங்காங்கே பதித்திருப்‌
பதற்கு இக்கவிதையும்‌ சான்றாகும்‌). IV—117

மழைநீர்‌ தலையில்‌ விழுந்து உடல்‌ முழுதும்‌ நனைப்பவும்‌ அசைவுற்று, நுனி இமைகளால்‌ (மிகுந்த முயற்சியுடன்‌) கண்‌
இறந்து கண்‌ மூடாது பார்த்துக்கொண்டும்‌, நீர்‌ மூக்கில்‌ மூக்குத்திபோல வீழவும்‌, (சுவாசம்‌ தடைப்படவே), வாயில்‌ கொஞ்சம்‌
வாங்கியும்‌, கொஞ்சம்‌ கூண்டுச்கம்பியில்‌ உராய்ந்தும்‌ நீக்கி, முழங்கால்‌ மார்பில்‌ புக. நடுங்குவதன்றி இறக்கை விதிர்ப்பவும்‌
இயலாமல்‌ பறவைகள்‌ இருந்தன. IV—118

அந்திச்‌ செல்வானம்‌ குங்குமப்‌ பூப்பொலிந்த காசுமீரதேச: மாக ஆகிவிட்டது. அந்தாட்டிலுள்ள சந்திரக்‌ காந்தக்‌ கல்லாக சூரியன்‌ ஆகிவிட்டது. இல்லாவிட்டால்‌ (சந்திரக்காந்தக்‌ கல்‌ கசிந்த நீராகிய) மழை எங்கிருந்து வரும்‌2(குங்குமம்‌ சாசுமீர நாட்டில்‌ விளைவது. அங்கு சந்திரகாந்தக்‌
கற்களும்‌ மிகுதி. ஆதலின்‌ மழை நாட்களில்‌ மப்புமந்தாரத்தி னூடுள்ள சூரியன்‌ சந்திரன்‌ போலத்‌ தோன்றுவதால்‌ சந்திர காந்தக்கல்லாக உவமிக்கப்பட்டது.) W—119

பகலில்‌, சூரிய கிரணங்கள்‌ கடல்‌ நீரைக்‌ குடித்துக்‌ கருக்‌ கொண்டதைக்‌ கண்டு, இரவில்‌, சந்திர கரணங்களும்‌ தாமும்‌
பொறாமை கொண்டு முகில்கள்‌ குடித்துக்‌ கொணர்ந்த அக்கடல்‌ நீரைக்‌ குடித்துக்‌ கருக்கொள்ளக்‌ கூடியவோ எனுமாறு வெள்ளை
நிறக்கொக்குகள்‌ முகில்களைச்‌ சேர்ந்து கருக்கொண்டன. IV— 120

இடிமுழக்கவும்‌ கேட்டுப்பயந்த அளகை நகருக்குச்‌ செல்லும்‌ அன்னப்பறவைகளின்‌ கூட்டம்‌, தின்னுவதற்சாகக்‌ கடித்த
தாமரைக்‌ தண்டின்‌ துண்டுகளை, பயத்தால்‌ வாய்‌ நழுவிக்‌ மேல்‌விழுந்தனவோ எனுமாறு ஆலங்கட்டிகள்‌ உதிர்ந்தன. 1712]

இடி.முழக்கத்தால்‌ விரட்டப்பட்ட பாம்புகளாகிய (புற்று களுக்குள்‌ ஒளிந்து கொள்ளவே) உணவு கிடைக்காவிட்டாலும்‌
மயில்கள்‌ நடனமாடுவதை விடவில்லை. மனதிற்கு மிகுந்த மகழ்ச்சி ஏற்பட்டால்‌ பசியும்‌ தாகமும்‌ தோன்றாதல்லவா? IV—122

சூரியனைப்‌ பார்த்துவிட்டுப்‌ பிறகுண்ணும்‌ விரதமுடையவர்‌கட்கும்‌, ஒணான்கட்கும்‌ பார்வை விண்மேலேயே நின்றன.
மாலை சந்தியாவந்தனம்‌ செய்யும்‌ அந்தணர்கட்கும்‌, வீடு இரும்பும்‌ பசுக்கட்கும்‌, (மாலையாயிற்றோ இல்லையோ என்னும்‌)
மயக்கம்‌ உண்டாயிற்று,
ஏர்வாழ்க்கையுடைய உழவர்‌ கூட்டத்திற்கும்‌ கொக்கு கூட்டத்திற்கும்‌ நல்ல கருக்காலம்‌ (விதை விதைக்கும்‌ காலம்‌) கிடைத்தது.
அழூய காட்டு முல்லைப்‌ பூக்கள்‌ மலர்ந்தன. சந்தையில்‌ மக்கள்‌ (மழைக்கஞ்சி) கலைந்து சென்றனர்‌. விருந்தினர்‌ (அதிதி) கூட்டத்திற்கு (வெளிச்சென்று உணவு சாப்பிட முடியாமல்‌) வாய்க்கட்டப்பட்டது. ஈன்றணிமையுடைய எருமைக்‌ கன்றுக்குட்டிகள்‌ (குஸிரால்‌) வாய்க்கட்டு ஏற்பட்டது.
மண்மாடியுடையவர்கள்‌ (நீர்‌ ஓழுகுவதால்‌) தமக்கும்‌,
காமன் பணிக்கும்‌ (கலவிபுரிவார்க்கும்‌) காதலியைப்‌ பிரிந்தவர்‌ கட்டும்‌, தாச்சும்‌, கெட்டது. 14… 123

எமனின்‌ வாசுனமாகிய எருமை தான்‌ காளையாக இருந்தால்‌, மேட்டு நிலங்களை உழச்செய்வர்‌ (நல்லவேளை தப்பித்தோம்‌) எருமையாக இருப்பதால்‌ பிழைத்தோம்‌ என்றும்‌, எமனை மிதித்த ஈசுவரனின்‌ வாகனமாகிய நந்தி (எருது), :₹நல்லவேளையாக உழவுமாடாக இல்லாமற்போனோம்‌’”. நம்மையும்‌ வயலில்‌ சேற்றுமவிற்‌ கட்டியிருப்பர்‌ ஏதோ தப்பித்தோம்‌” என்றும்‌ மகழ்ச்சியுற்றன எனுமாறு எல்லா மாடுகளையும்‌ பூட்டி மேட்டு நிலம்‌, பள்ளக்கால்‌ எல்லாம்‌ ஏரைப்‌ பிடித்கோட்டி ஏழைகள்‌ கூட உழவு செய்தனர்‌. IV—124

வயலில்‌ சேற்றில்‌ மிதித்து உழவர்கள்‌ (கொத்தைகளை சமப்‌ படுத்த மிதிக்கும்‌ போது) காலில்‌ பொன்னிறமாக வயிற்றினை யுடைய நீர்‌ பாம்பு காலிற்‌ சுற்றிக்‌ கொள்ளவே, உழவர்கட்கு (கழல்‌ அணிந்து) விருது அளித்தாற்போலத்‌ தோன்றியது. IV—125

மழையில்‌ நனைந்த கரும்புச்‌ சக்கைகள்‌ அடுப்பில்‌ போடவும்‌ நெருப்பாறிவிட்டது. இப்பட்டதும்‌ கரும்புச்சாறு வெளியேறுவது
போல மை சுசிந்தன, மக்கள்‌ உணவு சமைக்க இயலாது. விழாக்‌
காலத்தில்‌ இயக்கர்கள்‌ (யட்சகானம்‌ பாடுவோர்‌) கூறும்‌ “சோஹறோ சோறு” எனும்படியாக பொய்யான சோறு (உணவு)
உடையார்கள்‌ அகுமாறு அடுப்புக்கள்‌ மழையால்‌ எரியவும்‌ இல்லை. IV—126

அடைமமை நாட்களில்‌ பெண்டிர்‌ வீடு வீடாகச்‌ சென்று சிறிது நெருப்புக்‌ இடைக்கவே அதைக்‌ கொண்டு வந்தனர்‌,
வீட்டுக்‌ கூரையைப்‌ பிய்த்து அந்‌ நெருப்பைப்‌ பற்றவைத்தனர்‌,
விஈறினால்‌ அன்றிப்‌ பற்றவில்லை. பற்றினாலும்‌ எரியவில்லை. எரிந்தாலும்‌ சோறு சமைக்க முடியவில்லை. கறிவகையும்‌
சமைப்பது அரிதாயிற்று, எப்படியோ சமைத்தாலும்‌ முதல்‌
பத்தியில்‌ உட்கார்ந்தவர்கட்கே தேர்ந்துவிடும்‌, பெண்டிர்‌ மீண்டும்‌ தம்‌ பசிக்காக சமைக்க முயல்வர்‌. நெய்‌ தோய்த்த
துணிகள்‌, வீட்டுக்‌ கூரை ஈத்தைகள்‌ போட்டு எரித்து அவை அழிவது குறித்துக்‌ சவலைப்படவில்லை. பசயோடுள்ள
மனைவி மீண்டும்‌ சமையல்‌ வேலையில்‌ ஈடுபடவே படுச்கையி வுள்ள கணவன்‌, மன்மதனின்‌ குறும்பினால்‌ மனைவி வர
வில்லையோ என்று நொந்து கொண்டிருந்தான்‌. 4-127

இடிகட்‌ கஞ்சிய பெண்டிர்‌, வீட்டின்‌உள்ளேயே வட்டிலைக்‌ நீர்‌ வெளியே ஊற்றவும்‌, அப்போது பளபளக்கும்‌
. வட்டிலின்‌ ஒளி மின்னல்‌ போலத்‌ தோன்ற, புகை படிந்த புல்‌ வேய்ந்த வீடுகள்‌ மேகங்களாகவும்‌ தோன்றின. இந்த (வீடாகிய
மேகங்கள்‌, பூமி முழுதும்‌ வெள்ளத்தில்‌ மூழ்கடித்துவிட்டோம்‌. இனி பாதாளத்தைப்‌ படையெடுப்போம்‌ என்று செல்லும்‌
பாசறை)களாகத்‌ தோன்றின, IV—128

குடையைக்‌ காற்றடித்துக்‌. கொண்டு போக வெறும்‌ காம்பு மட்டும்‌ ஏந்தி ஓடும்‌ வழிப்போக்கர்களை உடல்‌ முழுதும்‌ நனை
வித்த அடைமழை மேகத்துக்கு என்ன பகையோ? எனினும்‌ பிரம்மன்‌ பாதுகாப்பாக, ஒவ்வொரு சமயம்‌ நஞ்சும்‌ அமுதாக்கு
மாறு போல, மழை நீர்‌ அவன்‌ உடலில்‌ நுழைந்து காதலியின்‌ பிரிவினால்‌ ஏற்பட்ட விரகத்‌ தீயினைக்‌ கொஞ்சம்‌ கொஞ்சம்‌ அவித்தது. IV—129

தூரத்தில்‌ சாரல்‌ வரக்கண்ட வழிப்போக்கர்கள்‌ அருகிலுள்ள மரத்தடியில்‌ ஒதுங்கவும்‌, ஏற்கனவே பெய்த சாரலால்‌ நனைந்‌
திருந்த மரக்கிளை, சாரலுக்கு முன்வரும்‌ காற்றினால்‌ அசைக்கப்‌ பட்டு, மழைத்‌ துளிகள்‌ பெய்து, சாரல்‌ வரு முன்பே அவர்களை
(மரங்கள்‌) நனைவித்தன. IV—130

பல்வேறு நாடுகளிலிருந்து வந்த வழிப்போக்கர்கள்‌ மழைக்கு விரைந்தோடி வந்து சாவடியில்‌ ஓதுங்கி, அசுவபஇியை
விட கஜபதி, அவனைவிட நரபதி சிறந்தவன்‌ என்றும்‌, யானைகளின்‌ எண்ணிக்கைகளைப்‌ பற்றியும்‌ தமக்குள்‌ வீண்சண்டைகள்‌
போட்டுக்‌ கொண்டிருப்பர்‌. அதற்குள்‌ மேகம்‌ சிறிதே கலையவும்‌, தாமும்‌ தம்‌ தம்‌ வழிகளைப்‌ பார்த்துக்‌ கொண்டு செல்வர்‌. 2131

காகங்கள்‌ (மழைக்காலத்தில்‌) நந்தவன மரங்களில்‌ கூடுகட்ட புல்‌, முதலியன வாயிற்‌ கவ்விக்‌ கொண்டு திரிதல்‌ காணின்‌ நீஏ
மணிகள்‌ புல்‌ கவர்வன ஆதலின்‌ நிறைந்த கிராமத்திருமகளின்‌ கழுத்திவிட்ட நீலமணிகளோ எனுமாறிருந்தன,
(காந்தம்‌ இரும்புத்‌ தூள்‌ கவர்வது போல நீலமணி, வைக்கோல்‌ (புல்‌) துண்டுகளைக்‌ கவரும்‌ என்பது இரத்தின நூல்‌ மரபு ஆகும்‌.) 1132

ஐப்பசி மாதத்தின்‌ அடை ॥ழைக்‌ காலத்தில்‌ வீட்டிலிருந்து புறப்பட்டு கஞ்சிக்‌ கலயம்‌ எடுத்துக்கொண்டு, மழைக்காக தலை
யில்‌ நார்க்கூடை (தொப்பி போல) வைத்துக்கொண்டு காட்டுக்குச்‌ சென்ற குடியானவர்‌ பெண்களின்‌ பருத்த மென்முலைகளும்‌
(சோளம்‌, கேழ்வரகு) போன்றவற்றின்‌ பசுங்கதிர்களும்‌ உழவர்‌ களால்‌ கசக்கப்பட்டன.
(கதிர்களைக்‌ கசக்கிய தானியத்தை உண்பது இயல்பு “குடை எடுத்துச்‌ சொல்லின்‌ இரு கரங்கட்கும்‌ தொந்தரவு: தரும்‌ என
குலையில்‌ தொப்பிபோல முடைந்த கூரை அணிந்து செல்வரி, 1V—133

அவ்வடைமழைக்‌ காலத்தில்‌, இரட்டியார்கள்‌ (இஅராமத்‌ தவைவார்கள்‌) கரை வகைகளின்‌ (குருது, செஞ்சலி, தும்மா
Sale) மெல்லடகுகளை இளம்‌ புளியந்தளிரோடு சேர்த்து” அவியல்‌ செய்து எண்ணெய்‌ நிறைய *ஊற்றி வதக்கி, ஆவியெழ
உணவுண்பார்கள்‌. பசுக்கள்‌ காட்டுக்குச்‌ செல்ல, இளகஙிகளன்றுகள்‌, ஆட்டுச்‌ சாணக்‌ *கணப்படுப்பின்மேல்‌ கட்டில்‌ பட்டுக்கையில்‌
கிடக்கும்‌ இவர்கள்‌ உடம்பை நக்கும்‌, IV—134

மணி குபின்ற மேடையில்‌ அமர்ந்து, மயில்கள்‌ அகவும்‌ அமுத இசை கேட்டின்புற்று நேரங்கழித்து விழித்தெழுந்து, கமகம
வெனும்‌ பூமணச்‌ சுகந்தப்பொடி மெய்‌ முழுதும்‌ பூசி, இளஞ்‌ சூடான வென்னீரில்‌ நெடுநேரம்‌ குளித்து, ஒளிர்மென்‌
துகிலுடுத்தி ஆரங்கள்‌ பூண்டு, தாழம்பூ மடல்கள்‌’ தரித்து, தாழிகை கழிந்ததும்‌, கொலு மண்டபஞ்செல்லும்‌ நேரம்‌ குறித்த,
செஞ்செற்சோறும்‌, காட்டு வேட்டையிற்‌ கிடைத்த புள்‌, விலங்குகளின்‌ புலாலுடன்‌, புத்துருக்கு நெய்‌ மிகவிட்டு, உணவுண்டு,
கஸ்குரரி மிகுந்த தாம்பூலம்‌ தரித்தலால்‌ கருவண்ணம்‌ இதழில்‌ படிய, அல்‌ கணப்பு எரிய, மேடைச்‌ சாளரங்களில்‌ வந்து
திற்கும்‌. அந்தப்புரத்தினரின்‌ கண்பார்வை மின்னல்கள்‌ ஒளிவீச, மன்னர்கள்‌ மகிழ்ச்சியுடன்‌ இருந்தனர்‌. IV—135

இவ்விதம்‌ இடைவிடாத மழைத்துளிகள்‌ ஒழுக்கும்‌ மிகுமமை மாதங்கள்‌ அமைதியாக கழியவும்‌, அதன்‌ பி.ழகு IV—136

அரச அன்னங்கள்‌ கிரெளஞ்சமலைத்‌ துவாரத்தின்‌ வழியே மீண்டும்‌ திரும்பும்‌ காலமும்‌ நெல்விளைந்து, நாணற்பூக்கள்‌
பூத்துக்‌ குலுங்கும்‌ வேள்வி செய்தற்குரிய காலமும்‌, ஒளிரும்‌ திருமகள்‌ தாமரைப்‌ பூக்களைச்‌ சேர திருமால்‌ பாம்புப்‌ படுக்கை
விட்டெழவும்‌, எடுத்த ஆரத்திபோல, மலர்ந்த செங்கமுநீர்‌ பொய்கைகளையுடைய காலமும்‌, ஆகிய சரத்காலம்‌ உலகில்‌
உதித்தது. 14137

மின்னலாகிய விளக்குச்‌ சுடர்கள்‌ உமிழ்ந்த புகையால்‌ புகை படிந்தது என்ன வானம்‌ இந்திர நீலம்‌, நாவற்‌ பழம்போல
கருநிறமுற்று மிகு செருக்குற்றது. 17138

அந்திச்‌ செவ்வண்ண அலைகளால்‌ பாதி சிவந்த வெண்‌ மு௫ல்கள்‌, வானத்தில்‌ இரிந்து உறக்கத்திலிருந்து எழுந்‌த திருமகள்‌
கேள்வனுக்கு எடுத்த கற்பூர ஆரத்தியோ எனுமாறு சரத்காலத்‌தில்‌ தோன்றின, 14139

நெல்‌ வயலை நாடி வானிற்‌ பறக்கும்‌ கிளிக்‌ கூட்டத்திடையே சிறிதே செவ்வந்தி வண்ணம்‌ படிந்த மேகத்‌ துண்டுகள்‌ விரிந்த
பழங்களுடன்‌ பசும்‌ இலைகளும்‌ கூடிய வெள்ளரித்‌ தோட்டூ போலிருந்தன. வண்டுகள்‌ இறக்கை நுனிபோல்‌ கருவண்ணம்‌
பளபளக்கும்‌ வானத்தில்‌ அம்முகல்கள்‌ பிரதிபலிப்பதாகத்‌ தோன்றின. IV—140

மரவண்டுகள்‌ துளைத்தலால்‌ பொடிப்பொடியாக வான: வில்லிலிருந்து உதிர்ந்த தூள்‌ போல, கண்ணாடி போன்ற
வானத்தில்‌, சணப்பநார்‌ஆ. போன்று வெளுத்துள்ள முகில்‌ துண்டுகள்‌ திரிந்தன, 17… 141

சரத்காலம்‌ எனும்‌ இளநங்கை, (மழைக்‌ காலத்தில்‌ மாசு படிந்து) சந்திர சூரியர்களாகிய கண்ணாடிகளை துலக்குவதற்‌
காக வைத்த சாம்பல்‌ தானோ எனுமாறு ஏழமிலை வாழையின்‌ மகரந்தப்‌ பொடி காற்றால்‌ வானத்தில்‌ பறந்து தூய ஒளியோடு திகழ்ந்தது. 17–142

விழித்தெழுந்த உலகுடை நாயகன்‌ ஸ்ரீமன்‌ நாராயணன்‌, காற்றையுண்ணும்‌ பாம்புப்‌ படுக்கையில்‌ கையூன்றி எழவும்‌,
(அச்சுமையால்‌) பூமி ஆழத்தில்‌ இறங்க, மழைக்கால இடிகளால்‌துளைக்கப்பட்ட துவாரங்கள்‌ வழியாக பாதாள கங்கையின்‌ நீர்த்‌
தாரைகள்‌ ஐல தம்பங்களாக வெளிப்போந்தன3வா எனுமாது நாணல்‌ பக்கல்‌ வெண்ணிறத்துடன்‌ ஒளிர்ந்தன.
(நீரில்‌ ஒரு பக்கம்‌ அழுத்தினால்‌ மறுபக்கம்‌ துணை வழி நீர்‌ பிய்ச்சிக்‌ கொண்டு மேலெழுந்து“ சிதறுவதுபோல பாதாள கங்கை
நீர்‌ மேலே பிய்ச்சியடிப்பது போல நாணற்பூக்கள்‌ தோன்றின என்பது கருத்து, காற்றையுண்ணும்‌ பாம்புஆதலின்‌ காற்றடைத்த
இரப்பர்‌ தலையணை போல இருந்ததாகக்‌ கருதலாம்‌), [7143

தாமரைக்‌ கண்ணன்‌ அவ்வேளையில்‌ தூக்கம்‌ கலைந்துஎழுந்து தனது பாதங்களைத்‌ தன்மீது வைத்ததனாலோ பூதேவி,
புளகாங்கித மடைந்தனள்‌. எனுமாறு முற்றிய ௧௬ முட்களுடன்‌ கூடிய நெற்கதிர்கள்‌ நிலத்தில்‌ விளைந்தன. [*……144
மீண்டும்‌ (அகத்தியன்‌) குடிப்பானோ என ஐயுற்‌.ற சூரியனின்‌ கதிர்கள்‌ கடலை வானில்‌ வைத்துக்கொள்ள இடியேறாகிய
வடவைக்களலுடன்‌ கூடிய அக்கடல்‌ முகலாகி நிலங்குளிரப்‌ பெய்யவும்‌, அங்கும்‌ (வானத்திலும்‌) அகத்தியன்‌ (நட்சத்திரம்‌)
தோன்றி மீண்டும்‌ கடல்நீர்‌ குடித்தனன்‌ போலும்‌! இல்லா விட்டால்‌ ஓரே இடத்தில்‌ விண்மீன்களும்‌ கிரகங்களும்‌ சூரிய
சந்திரார்களாகிய முத்துக்களும்‌ மணிகளும்‌ தெளிவாகத்‌ தோன்றுமா?
(அகத்திய நட்சத்திரம்‌ தோன்றுவதுடன்‌, வானம்‌ மேகங்‌ களற்றுத்‌ தெளிவாக பிரகாசிப்பதும்‌ ஈண்டு வருணிக்சுப்‌ பட்டுள்ளன) IV—145-

மலயமலை (பொதிகை)யில்‌ இருந்த அகத்தியன்‌ எனும்‌ தேற்றாங்கொட்டையை சரத்காலம்‌ பொய்சைகளில்‌ (அகத்திய
மீன்‌) பிரதி பிம்பம்‌ ஆகபோட, நீராமகளிர்‌, அலைகளாகிய கைகளால்‌, தேய்த்துவிட, சலங்கியநீர்‌ தெளிவுற்றது. அதன்‌
குறுகிய தன்மையே கரி (சாட்சி)யாகும்‌, விண்‌ மீனாயின்‌ நீரை எப்படித்‌ தெளிவிக்கும்‌?
(அகத்திய விண்மீன்‌ தேற்றாங்கொட்டைக்கு உவமை, சரத்‌ காலத்தில்‌ நீர்‌ நிலைகள்‌ தெளிந்திருக்கும்‌) IV—~ 146

பூமியில்‌ அமுதுக்கிணையாக்க வேண்டி. சரத்காலம்‌ எனும்‌ நங்கை, பொய்கை நீரின்‌ மாச நீக்க முகிலற்ற வெயிலில்‌ காய்ச்சி,
மலார்ந்த தாமரை, குவளை மலர்களின்‌ மகரந்தப்‌ பொடியாகியமஞ்சள்‌ பொடியை அலைகளில்‌ தெளித்தாளோ எனத்‌ தோற்ற மளித்தது.
(நீர்‌ சுவை மிகவும்‌, கருமி நாசினியாகவும்‌, நெல்லிக்கட்டை மஞ்சள்‌ பொடிகளை Harnad போடுவது மரபு. அதுபோல
ஈண்டு பூமகாந்தத்‌ தூளாகிய மஞ்சள்‌ பொடி போட்டதாகக்‌ கற்பனை) IV—147

மிகுத்த நேயமுடன்‌ தாமரையாகிய தையலர்கட்கெல்லாம்‌ அணி செய்ய சரக்காலம்‌ எனும்‌ பொற்கொல்லன்‌, கம்பியிழைகள்‌
சமமாக்க கிரவுஞ்சமலை எனும்‌ கம்பியச்சு (நூரச்சு-கம்பி இழுக்கும்‌ சட்டம்‌) தன்னில்‌, இழுத்த வெள்ளிமலையின்‌ வெள்ளிச்‌
கட்டிகள்‌ போல அன்னப்பறவைகள்‌ பொய்கைகளில்‌ வட்ட மிட்டுப்‌ பறந்து கூவியமைந்தன. IV—148

அகத்தியன்‌, கடலினைக்‌ குடித்து வயிற்றிலடக்கியிருந்த ஒளிமிக்க முத்துக்களை மட்டும்‌ கொட்டிவைத்தானோ எனுமாறு
காரமரை இலைகளில்‌ தெளிந்த இனிய நீர்த்துளிகள்‌ அப்பொய்கை – களில்‌ ஒளிவீசித்‌ திகழ்ந்தன. IV—149

ஆற்ஹறொழுக்கினைப்‌ போன்ற கடிகாயந்திரத்தில்‌ (நாழிகை வட்டிலில்‌) மேல்‌ பணம்‌ கீமே நிறைந்த வேளையில்‌
(சுபமுகூர்த்தத்தில்‌ சூரியன்‌, மேகத்திரை விலயகதும்‌ (எதிரே உள்ள மணப்பெண்ணாகிய) தாமரையாள்‌ மீது சீரகமும்‌ வெல்லமும்‌
வைப்ப அவை பிரிவுத்‌ தாபத்தால்‌ உருகியவோ எனுமாறு பூ மகரந்தம்‌ பொலிந்தது. மணப்பெண்‌ தலையில்‌ தெளித்த முத்துக்‌
களாகிய அட்சதைகள்‌ அவளது தாபத்தால்‌ வெந்து சரூகினவேோ எனுமாறு கருவண்டுகள்‌ படிந்தன.
(முன்னாட்களில்‌ கடிகாரங்கள்‌ இல்லாத காலத்தில்‌ மணல்‌ நிறைத்த வட்டில்‌ மேலே வைத்து ஒரு சிறு துளை வழி மணல்‌
ஒழுசக்‌ செய்து கழே கண்ணங்களில்‌ பிடித்து நிறைத்தனர்‌.
கிண்ணம்‌ நிறைந்தால்‌ ஒரு நாழிகை எனக்‌ கணக்கிடுவர்‌. மேல்‌ மணல்‌ கமே வருதல்‌ மழைக்காலத்தில்‌ மேலே கலங்கிய நீருடன்‌
இருந்த மணல்‌ சரத்காலத்தில்‌ தெளிவுற்று மணல்‌ 8ழே படிவதற்கு உவமையாக்கப்பட்டது. ஆற்றொழுக்கினைப்‌ போன்றே என்பது இவ்வுவமையின்‌ பொருள்‌ கொண்டதாகும்‌.
சூரியன்‌ மணமகன்‌, மணமகள்‌ தாமரை. . இருவருக்கும்‌ இடையே இருந்த திரை மேகம்‌. அது விலகவும்‌ சூரியன்‌ திருமணச்‌
சடஸ்கில்‌ ஆந்திர நாட்டில்‌ சீரகமும்‌ வெல்லமும்‌ மணப்பெண்‌ தலையில்‌ வைப்பது போல்‌ வைத்தான்‌. சீரகம்‌ தாமரைப்‌
பொகுட்டின்‌ கேசரங்கள்‌, உருகிய வெல்லம்‌ மகரந்தம்‌. மணப்‌ பெண்‌ தலையில்‌ அட்சதைகள்‌ தெளிப்பதும்‌ மரபு ) IV~150

தாமரை இலை மேலிருக்கும்‌ நீரும்‌, (இலைகட்கு) இடை
வெளியில்‌ தோன்றும்‌ வானத்தின்‌ நிழலும்‌ எப்படித்‌ தோன்றிய தென்றால்‌, பொய்கையின்‌ அவ்விரண்டில்‌ (தீர்‌-வானம்‌) எது மென்மையானது, எனத்‌ தெரிய, அலைக்கரத்தால்‌, மே?லழும்‌ வண்டுகளாகிய சங்கிலியில்‌, தாமரையிலையாகிய தட்டில்‌ வைத்து தூக்க (எடைபோடவும்‌) நீர்‌ மென்மையானதாதலின்‌
மேலே எழுத்துள்ளது. வரனம்‌ செறிவுடையது (கனமானது) ஆதலின்‌ மே கிடக்கிறது எனுமாறுள்ளது.
(தாமரை இலைத்‌ தண்ணீர்‌ தவிர மற்ற நீர்‌ வானத்தைப்‌ பிரதிபலிப்பதால்‌ வானமாகவே தோன்றிற்று, துலாக்கோலின்‌
தட்டாக தாமரை இலை உள்ளது. வானம்‌ வைத்த தட்டு கீழே கடப்பதால்‌ அது காணப்படவில்லை. என்றும்‌ நீர்வைத்த குட்டு
மேலே இருப்பதால்‌ காணப்படுகிறது என்றும்‌ கற்பனை).
வானினும்‌ மென்மையானது தெளிந்த நீர்‌ என்பது கருத்து. ன நிலத்திற்குச்‌ சுமையாக நன்கு முற்றிய இனிய நாமக்குரும்பு
சுள்‌ நதிக்கரையோரத்தில்‌ விளைந்து தாமே வளைந்து, தாமரை மலர்கள்‌ மேல்‌ விழ, காலையில்‌ தாமரைமலர்கள்‌ மகரந்தம்‌
ததும்பிச்‌ சந்தன. தாமரையாகிய கரும்பாலையில்‌ சுரும்பு களா௫ய உருளைகள்‌ சுழன்று ஓசையுடன்‌ பிழிந்த சாறே மகரந்த
மாகவும்‌ பொய்கையே சுடாரம்‌ (சாறு நிறைக்கும்‌ பாத்திரம்‌)ஆகவும்‌ அமைந்தன. IV—152

ஏர்முளையால்‌ தோண்டப்பட்ட வாழைக்‌ கிழங்குபோல, குறுக்காக வளைந்துள்ள தலையில்‌ (வாழைக்‌) குருத்துப்போல ஒரு
கொம்பு மண்ணைக்‌ குத்தி நிற்க, கவுளிலிருந்து இறங்கி தாடையில்‌ இரவெல்லாம்‌ படிந்த மதம்‌ கருஞ்சாந்துச்‌ சிமிழ்‌ போல அமைய,
புற்றிலிருந்து வந்ததும்‌ அடிப்பட்ட பாம்பு, மெய்‌ சுற்றியும்‌ விரிந்தும்‌ துடிப்பது போல துதிக்கை ஆடிக்கொண்டிருப்ப,
(யானை உராய்தலின்‌) நாணல்‌ பூக்களுடன்‌ மண்‌ கட்டிகள்‌ ஆற்றில்‌ வீழ்ந்த (பூக்கள்‌) நுரையாகவும்‌, (மண்‌) வண்டலாகவும்‌
அமைநீது (சேறும்‌ நுரையுமான) மழைக்‌ காலவெள்ளம்‌ மீண்டும்‌ வந்ததோ எனும்‌ எண்ணத்தைத்‌ தோற்றுவிக்க,
பூற்துகுள்‌ கண்களில்‌ படியாதவாறு மேற்கண்ணை மூடி, இடைமேலெம, தோல்‌ அசைய, ஓழுகும்‌ மதநீர்‌ ஆற்றில்‌ கலந்து
மணமும்‌ இளங்கசப்பும்‌ ஈய, தன்‌ போலக்‌ குதித்தாடும்‌ எருதுகளுடன்‌ வண்டுகள்‌ பறக்க, யானைகள்‌ அவ்வாற்றங்கரையில்‌,
(தந்தங்களால்‌ மண்‌ மேடுகளைக்‌ குத்திக்‌ கொண்டு குதித்து) விளையாடின. IV—153

இரு கன்னங்களிலும்‌ படிந்த மதத்தில்‌, மலர்ந்த ஏழிலைப்‌ பாலைப்பூக்களின்‌ மகரந்தம்‌ படிந்து, சாமரங்கள்‌ போலவும்‌,
தந்தம்‌ போலவும்‌ அமைய, மலையைத்‌ தோண்டிய மண்ணால்‌ உறையுடன்‌ கூடிய கத்திகளாக தந்தங்கள்‌ மிளிர, யானைகள்‌,
ஐராவதம்‌ போல நின்று அரசர்களைப்‌ போருக்குத்‌ தரண்டுவது போல நின்றன. IV—154

அப்போது (சரத்காலத்தில்‌) ஒருவரை ஒருவர்‌ வெல்லும்‌நோக்கமுடன்‌ உள்ள மன்னர்‌ இரட்டையம்பறாதக்‌ தூணிகளி
லிருந்து குறிவைத்து எய்து வெற்றி பெற்றதால்‌, தமது குலத்தின வாகிய சரங்கள்‌ (அம்புகள்‌) மூலம்‌ புகழ்பெற்றதைக்‌ குறிக்கும்‌
வகையில்‌ மலர்ந்த நாணற்பூக்கள்‌ காடெல்லாம்‌ ஒளிர்ந்தன.
(நாணற்தட்டையால்‌ முன்‌ காலத்தில்‌ அம்பு செய்தனர்‌. ஆதலின்‌ அதற்கும்‌ சரம்‌ என்றே பெயர்‌. நாணற்பூக்கள்‌
பூத்தலின்‌ சரத்காலம்‌ என்று பெயர்‌ வந்தன. நாணலின்‌ வெண்ணிறப்‌ பூக்கள்‌ புகழுக்குக்‌ குறியீடாகும்‌) iV-=155

ஆற்றங்கரை ஈரமண்படிந்த திமிலையுடைய: காளை மாட்டின்‌ மேலே நாணற்‌ மூக்கள்‌ சிதறி வீழ்வது, மலைச்‌ சிகரங்கள்‌ எனக்‌ கருஇப்படியும்‌ மழை பெய்து தீர்ந்த வெண்முஒற்‌ துண்டுகளோ எனுமாறு இருந்தன, IV—156

வானத்‌ இிருமகளின்‌ பெரிய நட்சத்திர மாலை எனும்‌ ஆரத்தை ஆகாய கங்கையில்‌ கழுவப்‌ பிசைந்ததும்‌, பரந்து சீயக்காய்‌ பழத்தின்‌ நுரைபோல, புலபுலவெளன வெளுத்த முகில்‌ நிரைகள்சிதறிக்‌ கிடந்தன.(27 ஆணிமுத்துக்களை வைத்துச்செய்யும்‌ நசையே நட்சத்திர மாலை எனப்படும்‌) 17157

நீராசிய கடனை கடலிலிருந்து பெற்றுக்‌ கொண்டு தன்‌ கடமைகள்‌ முடித்து, தான்‌ முன்பெற்ற கடனை தூரதேசம்‌ சென்றும்‌ திரும்பவும்‌ வட்டியுடன்‌ அக்கடலுக்கே துநிது( கணக்குத்‌) தீர்த்ததனால்‌, அந்தப்‌ புண்ணியத்தால்‌ பரிசுத்தமான ஆன்மா வும்‌, தூயஉடலும்‌ உடையதாக, நிலாவினை உடைய SUIT our துயர்ந்து செல்லும்‌ வெண்‌ மேகங்கள்‌ திகழ்ந்தன.
(அப்பு எனும்‌ தெலுங்குச்‌ சொல்‌ நீர்‌, கடன்‌ எனும்‌ இரு பொருள்படும்‌. இச்சொல்லைக்‌ கவிஞர்‌ பயன்படுத்தியுள்ளார்‌. கடனைத்‌ தீர்த்தவன்‌ உள்ளமும்‌ அதன்வழி உடலும்‌ தரய்மை யுறும்‌ எனும்மனத்தத்துவச்‌ சிந்தனைஇக்கவிதையினைச்‌ சிறப்பிக்‌ கிறது. பரிசுத்தமானவர்கள்‌ உயர்ந்து நிற்பர்‌ ஒன்ற தொனிப்‌ பொருளும்‌ உண்டு. வெண்மேகம்‌–கடன்‌ தீர்த்த சான்றோர்க்குஉவமை, கரு3மகம்‌ -கடன்‌ 9கொாண்டவர்க்குவமை) (7158

தெளிந்த மூடில்‌ எனும்‌ yor சுற்றிய வானமணியாகயே சூரியனின்‌ “லசுனபட” எனும்‌ (பால்போலும்‌) படலம்‌ உருவாகக்‌ கண்ட திருமால்‌ அது மணிவகைக்‌ குற்றம்‌ ஆதலின்‌ அதை மனத்‌துணர்ந்து, தன்‌ பாதமாகய ஆகாயத்திலிருந்து பரிவட்டமாகய கழலை நீத்துவைத்து, பேராசையற்றவனாக அறிவுபெற்றவனாக பாற்கடலில்‌ திருமகளுடன்‌ இணைந்திருந்தான்‌. IV—159

வானத்தவர்கள்‌ (தேவர்கள்‌) நெருப்புப்பெற வேண்டி (மழைக்காலத்தில்‌ இழந்தமையால்‌) சூரியனாகய பளிஙிகுக்சல்லின்‌
(சூரிய காந்தக்கல்லாகிய9க்கி முக்கெல்‌) மேல்‌ வெண்முகிலாகய பஞ்சினை வைத்துஉராய, இப்பிடித்து, ஒரளவோடு நில்லாது
(மட்டுமீறி) பரவியது எனுமாறு மு௫ல்கலைந்த வெயில்‌ மிகவும்‌சுட்டெரித்தது IV—16

சூரியனின்‌ உதய அத்தமனங்களின்‌ செவ்வந்தி வண்ணம்‌ அமைய திசைகளின்‌ கருவண்ணம்‌ சுற்றிலும்‌, நடுவிலும்‌ இருக்க,
வாளம்‌,இயற்கைத்‌ தாய்‌ என்னும்‌ குறிஞ்சமகளின்‌ மூக்கலணிந்த குன்றி மணியாகிய மூக்குத்தியோ எனும்‌ படியாக இருந்தது.IV—161

கூண்டுகட்கு நெற்கதிர்களைக்‌ கொண்டு,கூட்மாக வான்வழிச்‌ செல்லும்‌ கிளிகள்‌, பய ஒவ்வொரு இலை (சோகை) களோடு
பமுத்த (விளைந்த) நெல்‌ வயல்‌ அறுத்து விடுவார்கள்‌ என்ற பயத்தால்‌ பறந்து செல்கின்றதே எனுமாறுதோன்றிற்று, 175-162

தாம்‌ திரு (ஸ்ரீ) வினர்‌ ஆதலின்‌ தாம்‌. சேரும்‌ இடம்‌ ஆன தரமரைப்‌ பொகுட்டினைக்‌ சார்ந்தனவோ எனுமாறு காதில்‌
தாமரைப்‌ பொருட்டினை அணிந்தவராக, மன்மதனின்‌ தேரை நடத்தும்‌ ரதி தேவியின்‌ அதட்டல்கள்‌ போலபரண்‌ மீதமர்ந்து
கிளிகளை ஓப்பும்குரல்‌ அதட்டல்களோடு திகழ்ந்து,(இளி கடிதற்கு குவளை மொட்டுகளை எறிய அவை தாரம்‌ செல்லாமையின்‌
கைதட்டி ஓசை எழும்பும்போது மென்‌ முலைகளும்‌ கூந்தலும்‌ அசைந்தாட, (கேலிக்காக) தவறான வழியை முன்பு கூறி, உடனே
சிரிக்கவும்‌, (அதை அறிந்து) வழிப்போக்கர்கள்‌ சென்ற வழியேஇரும்பும்போது அவர்களோடு நாணமும்‌ திரும்பிவர, இதழின்‌
இனிமையையும்‌, பல்‌ நிறையின்‌ எழிலினையும்‌ போலாது கரும்பும்‌, அதில்‌ விளையும்‌ முத்தும்‌ அவள்‌ அருள்வேட்டரோ
எனுமாறு முதிர்ந்து பிதிர்ந்து முத்துக்கள்‌ சிந்தும்வளைந்திருக்கும்‌ கரும்புத்‌ தோட்டமும்‌, அவர்களது, முழங்காலுக்குஇணையாக
இயலாமையின்‌ நாணமுற்றுத்‌ தலை கவிழ்ந்து அடியிறைஞ்சும்‌ கதிர்‌ தண்டினையும்‌ உடைய நெல்‌ வயலையும்‌, காவல்புரியும்‌
அக்குடியாவைப்‌ பெண்கள்‌ எழிலுடன்‌ திகழ்ந்தனரி. IV—163

வாளம்‌ அப்போது [சரத்காலத்தில்‌) தான்‌ மாபெரும்‌ நீலக்கல்‌ போலுதலின்‌ அதன்‌ பெருமைக்‌ கேற்ப (gr நீலம்‌
புல்லினைக்‌ கவர்வதியல்பாதலின்‌) தகும்படி. நிறைந்து கவர்ந்தி மூத்ததுவோ எனுமாறு விளைந்த நெல்‌ வயல்களில்‌ வைக்கோற்‌
போர்கள்மலைபோல விண்ணெட்டி உராய்ந்திடல்‌ போல்‌ திகழ்ந்தன.
(நீலக்கல்‌ புல்லைக்கவரும்‌ என்பது முன்‌ 413வது பாடலிலும்‌ கூறப்பட்டுள்ளது காண்க.) IV—166

சரத்‌ காலமாகிய சனகன்‌ வெண்டாமரையாகிய குடை. ஏற்தி வேள்வி செய்யப்புகுங்‌ காலை,பரமஹம்சர்‌ (முனிவர்கள்‌. அன்னப்‌
பறவைகள்‌) வந்து நிறைய கார்வண்ண இராமன்‌ வான வில்லாகய சிவத னுசுவை முறிக்க ஏரீச்சாலாகிய சீதை கிடைக்‌
காமற்‌ மோவாளா?
(சனகளை சரத்காலத்துக்கு சிலேடை மூலம்‌ஒப்பிட்ட இக்‌ சுவிதை சிறிது சிக்கலானது. காரீ காலம்‌ முடிந்து சரத்‌ காலத்தில்‌
உழவு வேலைகள்‌ நடைபெறுவதையும்‌ அதனால்‌ உழவர்கள்பயன்‌ பெறுவதையும்‌ கற்பனை செய்துள்ளார்‌) IV—165
முகல்‌ சலைந்து வெயிற்‌ சூடு மிகுதலின்‌, வானில்‌ கிளிகளின்‌ பச்சை வண்ணம்‌ பரவுதலும்‌, பச்சை வண்ணக்‌ குதிரைகளுடன்‌
சூரியனின்‌ தேர்‌ அருகில்‌ வந்ததோ என்று மக்கள்‌ பயந்தனர்‌.(சூரியனின்‌ குதிரைகள்‌ பச்சை வண்ணம்‌ என்பது கவிமரபு) IV~166

மண்ணிலிருந்து பொய்கையில்‌ மலரீந்த வெள்ளாம்பற்பூக்கள்‌ (விளக்குகளாகி) வீரட்டியடிக்க, விண்ணிலிருந்து சுடரும்‌ கோள்‌
களும்‌ (வின்மீன்களும்‌) ஒளிரும்‌ ஒளி ஓட்டிவிடவும்‌, தேய்பிறைக்‌ கரல வலவிமையின்றி, இருள்‌, தனது கருநிறத்தை (திற்கவேறிட
மின்றி) வானக்‌ சுருமை நிறத்தோடொன்றி விட்டதோ எனுமாறு ஆகாயம்‌ கருமைவண்ணம்‌ மிக்கது. IV—-167

கன்றுகளை நினைந்து (ஆற்றோரஙிகளில்‌) புல்மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள்‌ சுரந்த பால்‌ ஆற்று நீரோடு கலக்கவும்‌
(தாகம்‌ கொண்டவர்கள்‌ பாலைச்சாப்பிட்டால்‌ உடல்‌ நலத்துக்கு ஊறு நேரும்‌ ஆதலில்‌) வெயில்களைத்த வழிப்போக்கர்கட்கு
உதவும்‌ பொருட்டு, பிரம்மதேவன்தன்‌ வாகளஙிகளாகிய அன்னஙி களை (பால்‌ பிரித்துண்டு நீர்மட்டும்‌ இருக்கு மாறு செய்ய
வேண்டி) அனுப்பினானோ எனுமாறு அன்னங்கள்‌ ஆறுகளில்‌ நிறைந்திருந்தன. IV—~168

பருவத்திலுள்ள (புணர்ச்சிக்கு ஏற்ற காலமுடைய) பசுக்க களின்‌ கூடப்போச முடியாத தாபத்தினால்‌ கொழுப்பு கரைந்து,
கமுத்தை வளைத்து முயன்று கனைப்பொலி எழுப்பிய முழக்ககி சளோடு காளைகள்‌ மந்தையின்‌ பின்னர்‌ மந்தகதியில்‌ சென்றன.
(கொழுத்த காளைகள்‌ உடல்‌ சுமையால்‌ பசுக்களோடு விரைந்து செல்ல முடியாமல்‌ மெல்லச்‌ செல்லும்‌, பருவப்பசுக்‌
களும்‌ வேட்கை மீறினும்‌ பிடிகூடாமல்‌ விரைந்து முன்செல்லும்‌,அதைத்‌ தொடரகாளை முயன்று சனைத்தவாறு மெல்லாப்பின்‌
தொடரும்‌ என்பது கருத்து) Iv—169

கடல்‌ நீரையெல்லாம்‌ வெறும்‌ வயிறாகுமாறு &மே சொரிந்து மீந்த உட்பு வயிற்றில்‌ சேரவும்‌ அந்த வெண்மை நிறமே வெளியே
அதன்‌ தூய்மையால்‌ தோன்றுகிறது எனுமாறு ஓடும்‌ சரத்கால மேகங்களின்‌ உடம்பில்‌ வெண்மை மிகுந்துதோன்றியது.
(கடல்நீர்‌ உப்பானது மேகம்‌ அதைக்‌ குடித்து நன்னீர்‌ பொழிகிறது, அந்த உப்பு படிந்து மொத்தமாக மேகத்தின்‌ வயிற்றில்‌
உள்ளதுதான்‌ வெண்மை நிறமாகக்‌ காட்சி தருகிறது என்பதுகருத்து[ 1V—170

கடலில்‌ முன்‌ குடித்த நீரெல்லாம்‌ போழிந்து, மேகம்‌ எனும்‌ உருவத்தை இழந்த சூரியனின்‌ கதிர்கள்‌, தன்‌ சுய உருவத்தை
அடைதலின்‌ கதிர்கள்‌ முன்னிலும்‌ ஒளிமிக்கதாயின. முகில்களும்‌ உருக்கலைந்தோடின. /–171

சரத்கால மேகங்கள்‌, மூன்‌ குடித்த (கடல்‌) நீர்‌ எல்லாம்‌ சொரிந்து தீரீந்ததனால்‌, மீண்டும்‌ நீர்‌ நிறைத்தற்குப்‌ பொய்கை
களுக்குட்புகுந்தனவோ எனுமாறு ஆங்குள்ள நாணற்பூக்களின்‌ நிழல்கள்‌ (பிரதிபிம்பங்கள்‌) பொய்கையிற்‌ தோன்றின. (172

குளத்தில்‌ பிடியும்‌ களிறுய்‌, சிறிது மலரீந்த தாமரை மொட்டு களை, ஒன்றற்கொன்று (உண்ணத்‌) தருவதற்காக ஒரே சமயம்‌
எடுத்து (துதிக்கை நீட்டிக்‌) கொடுக்க, அம்மலரிலிருந்து மகரந்தம்‌ சொரிதலும்‌, பொய்கைத்‌ திருமகளுக்கு அன்போடு இரட்டை
யானைகள்‌ அபிடேகத்திற்கு எடுத்த பொற்கலசங்களோ எனும்‌ படியாக இருந்தன, 4173

சேறு அடியிற்படிந்து தெளிந்த பொய்சைகளில்‌ எல்லாம்‌ மீண்டும்‌ சேறாகும்படி பங்கயங்கள்‌ (சேற்றிற்‌ பிறந்த தாமரை
மலர்கள்‌) செய்தன. தாமரையின்‌ பூந்தேனோடு குழைந்து பூந்தாதுசேறாகி அவ்விதம்‌ அமைந்தது. காரணத்தின்‌ பண்புகள்‌
காரியத்திலும்‌ உண்டாகுமல்லவா?
(காரணமாகிய மண்‌, பொன்‌ முதலியவற்றின்‌ பண்புகள்‌ காரியமாகிய மட்குடம்‌, ‘பொற்குடத்துிலும்‌ அமைதல்போல
சேற்றில்‌ இருந்து பிறந்த தாமரை மலர்‌ பூந்தேள்‌, பூந்தாது கலந்து சேற்றினையே உருவாக்கின என்பது கருத்து) |/-174

அகத்தியரை (விண்மீனை) நோக்கி “தாங்கள்‌ இக்குளநீரை பயிர்கட்காக விட்டுவைக்கவும்‌’ ” எனக்கது
கேட்டு அவரது சினட்பார்வை தலிர்க்சு வணங்கிப்‌ பணிந்தனர்‌, எனுமாறு மச்கள்‌ பூசனளைபுரிந்தளர்‌. IV—175

கொடும்‌ வெயிலிழற்‌ காய்நீத பூமியாகிய பாத்திரத்திற்‌ பட்டதனால்‌, இறுகிப்‌ பரிபக்குவமடைந்தது எனுமாறு சரத்கால
வெண்ணிலவு இரவுகளில்‌ செறிவுற்று ஒளிர்ந்தது.
(சாய்ந்த தோசைக்‌ கல்லில்‌ பட்டதும்‌ திரவமான மாவுப்‌ பொருளும்‌ இறுகி திடப்பொருளாவதுபோல, நிலாவும்‌ இறுகியது
என்பது கருத்து) iV—176

மழைக்காலத்தில்‌ இட்ட (மீன்‌) கருவினைக்‌ குடிக்க, 8ழிருந்து மேலே வரும்‌ பெரிய மீன்கள்‌, பாசிக்‌ கொடியோடு மிதந்து
பளபளப்போடு மின்னுவது, (தாசரிகள்‌ வாசிக்கும்‌) குதிரைவால்‌ மயிரில்‌ கட்டிய வில்லில்‌ வெள்ளியினாலான மீன்‌ உருவங்களை
யூடைய உடுக்கையினை யாட்டுவது போல இருந்தது. 14197

ஹம்ச (அன்னற்பறவை)த்தினை விட பரம ஹம்சரமான அகத்தியரோ மலய (பொதிகை) மலைச்‌ சிகரத்தின்‌ வழியே வருகிறார்‌ ஹம்சம்பாலும்‌ நீரும்‌ வேறு யிரித்திட, பரம ஹம்‌ சரான அகத்தியர்‌ நீரும்‌ சேறும்‌ வேறுபடுத்திச்‌ சிறப்புற்றார்‌.
(சரத்காலத்தில்‌ அசுத்திய நட்சத்திரம்‌ தோன்றுதலும்‌ சேறு நீங்கி நிர்‌ தெளிவுறுதலும்‌ இங்கு வருணிக்கிறார்‌) IV—178

கிரவுஞ்ச மலைத்துளையில்‌ செல்லும்‌ அன்னப்பறவைகள்‌ வானத்தில்‌ செல்லும்‌ வழியில்‌ இட்ட முட்டைகளை, பிற பறவைகள்‌ அடை காத்தலின்‌ அன்னப்பறவைகள்‌ உருவாகி மிகுதியாயின. அதெப்படி முடியும்‌ என்றால்‌ கோழி அடைகாக்க மயில்‌ முட்டைகவிலிருந்து மயிற்‌ குஞ்சுகள்‌ வருவது சான்றல்லவா?
(சரத்காலத்தில்‌ அன்னங்கள்‌ மிகுதியாக வரும்‌ அதன்‌ பெருக்‌ கத்துக்குமான சரோவரம்‌ மட்டுமின்றி, கரவுஞ்சமலைப்‌ பாதை
களிலும்‌ உற்பத்தியாகியிருக்கும்‌ என்று கற்பனை செய்யப்படு கிறது) IV—179
நீரரமகளிர்கள்‌, காணும்‌ பொய்கை என்னும்‌(கண்‌) ஆடியில்‌ படிந்த களிம்பினை நீக்க, அன்னப்பறவைகள்‌ அங்குமிங்கும்‌ மிதந்து தேய்ப்பது (விளக்குவது) போலிருந்தது. அதனால்‌ மாசு பறப்பது போல தாமரைப்‌ பூந்தாது சிதறியது (தேய்க்கும்‌ பொதெழும்‌ சத்தம்‌ போல) அன்னங்களின்‌ ச்சுக்குரல்‌ ஒலித்தன.
(மூற்காலத்தில்‌ முகம்பார்க்கும்‌ கண்ணாடியாக வெங்கலத்‌ தால்‌ செய்து கொண்டனர்‌. அதன்‌ களிம்பு நீக்க சாம்பலால்‌
துலக்குவர்‌. இங்கு பொய்கை ஆடி, அன்னஙிகள்‌ துலக்குகன்றன என்பது கற்பனை) iV—180

சூரிய மண்டலத்தை முகில்‌ மலறத்ததுமே (மயில்‌) இரைதேடுவதை விடுத்து, முகம்மேல்‌ நோக்க (மழைமுகில்‌ வந்ததோ என்ற
ஆசையுடன்‌) மயங்கி,குகையில்‌ புகுந்த காற்றினால்‌ குமகும* எனும்‌ ஓசை வரவே,
(உரும்‌ஓலி என மயங்க) தோகையை சிறிதே விரிக்க முயன்று(முகிலின்மைஅறிந்து) மேலே பார்த்து புரிந்துகொண்டு,
(தோகையை) மடக்கக்‌ கொண்டு, பூக்கள்‌ இல்லாத தாழையினைக்‌ கண்டு வருந்திக்‌ கண்ணீரை அதிலையே துடைத்துக்‌
கொண்டு, தவளைகள்‌ பதுங்கும்‌ குட்டைகளின்‌ ஓரம்‌ செவி கொடுத்துக்‌ கேட்டு, அகவுதற்காக மும்முறை கழுத்தை லளைத்து
முயன்றும்‌ குரல்‌ வராமையின்‌, ஏதோ சிறிது அகவி, வாயில்‌ எதையோ கடித்துக்‌ கொண்டு, வெயிலின்‌ கொடுமைக்கஞ்சி
நிழல்‌ தேடி சரத்காலத்தில்‌ பூக்கும்‌ மரங்களை நாடாமல்‌ மழைக்‌ காலத்தில்‌ பூச்கும்‌ மரநிழலை நாடிச்‌ சென்று அலகினால்‌ இருபக்க
இறக்கைகளையும்‌ கொத்திச்‌ சிலிர்த்தவாறு, வெறுமையுற்ற பாரிவைகளுடன்‌, மார்பின்‌ இருபுறமும்‌. பார்த்துக்கொண்டும்‌
காளச மயில்கள்‌ இருந்தன.
(தவளைச்‌ சத்தம்‌ கேட்டால்‌ மழை வரும்‌ ஆதலின்‌ மயில்‌ குட்டையில்‌ தவளைகள்‌ இருக்கும்‌ குழிகளில்‌ காதுகொடுத்து
ஓசை வருகிறதா என்று காதுகளைத்‌ தீட்டிக்காத்திருப்பதாக கற்பித்துள்ளார்‌. மழைக்கேங்கும்‌ மயிலின்‌ மூலமாக மனித
மனத்தின்‌ மழைக்கேங்கும்‌ ஏக்கத்தையும்‌ கவிஞர்‌ காட்டி யுள்ளார்‌) 14/18]

நிழல்‌ வாட்டத்தில்‌ காய்ந்த சேறு படிந்த கூம்பிய தோகையை விரிக்காததனால்‌ அப்படியே (சேறு) அழியாமல்‌, தோகையுடன்‌
மயில்‌ இருந்தது. முன்‌ (மழைக்காலத்தில்‌) இந்திரன்‌ அதன்‌ நடனம்‌ கண்டு மகஒழ்ந்து அளித்த பொற்கிழியின்‌ முத்திரையோ
எனு மாறு அத்தோகையில்‌ சேறுஇருந்தது.
(பட்டுத்துணியில்‌ பொன்‌ நாணயங்கள்‌ பெய்து அரக்கு முத்திரையிட்ட பொற்கிமி போல்‌ மயில்‌ தோகை (பீலியின்‌
கண்கள்‌) நாணயங்கள்‌ பொிந்திருந்ததாகவும்‌ சேறுஅரக்கு முத்திரையாசவும்‌ இருந்தது. மழைக்காலமின்மையின்‌ தோகை
விரிக்கவில்லை.அது முத்திரை வைத்ததாலே எனுமாறு இருந்தது என்பது கருத்து) iV—182

சக்கிரவாகம்‌ (அன்றில்‌) எனும்‌ முலை தெரியுமாறு. நுரையர்‌ கிய முந்தானையைசி சரியவிட்டு நீரீக்கோழியின்‌ மென்குரலால்‌, முணங்கியவாறு, கம்‌ பாறைகளாகிய கடிதடம்‌, அன்னங்களாகிய முத்துச்சரம்‌, பூந்தாது என்னும்‌ தங்க அரைஞான்‌, களுடன்‌ நீர லையாகிய உடை, மணல்மேடுகளாகிய கடிதட மேற்பாகத்தில்‌ சரிய, புன்னளைமரங்களாகய கரங்களால்‌ தழுவி, மெலிந்து,வருந்தி கரையிலுள்ள நாணற்பூக்களின்‌ நிழல்களாகய தகைகளுடன்‌, நெட்டுயிரீப்போடு, செங்குவளைக்‌ கண்களால்சினந்து, தாமரை யைத்‌ நீண்டும்‌ கடற்காயல்‌ கரங்களின்‌ பரிசத்திற்கு மகிழ்ந்து குவளைகளின்‌ பூந்தேன்‌ கலந்த அலைகளால்‌ கடல்‌ ஆடிய காதலனை, நதி மகள்‌ முரண்‌ புணர்ச்சியில்‌ (பெண்‌ ஆண்போல அமைநீதியற்றும்‌ கலவி) ம௫ழ்வுறச்‌ செய்தாள்‌.
(நதியின்‌ கணவன்‌ கடல்‌ சரத்கரலத்தில்‌ பிரிவுற்ற நதியைப்‌ புலந்து பின்‌ கூடியதாகக்‌ கற்பனை) ்‌

ஆளவந்தார்‌ ஆட்சியின்‌ மாட்சி
இவ்விதமாக சரத்காலம்‌ திகழவும்‌, யாமுனர்‌ (யமுளைத்‌ துறைவன்‌) அரசநீதியை ஏற்றவர்‌ ஆதலின்‌, திக்விசயம்‌ செய்தல்‌ மூறையெனக்‌ கருதி ஆறங்கங்கள்‌ சிற்றரசுகள்‌ கூட வர புயணம்‌ புறப்பட்டு [4184

யாளை,குதிரை தேர்ப்படைகள்‌ நிறைந்ததால்‌ பாரம்‌ தாங்கப்‌ மல்‌ நிலத்தைத்‌ தாங்கும்‌ ஆதிசேடனின்‌ தலை முடியிலுள்ள மணிகள்‌, நிலத்தில்‌ உள்ள மணிகளோடு புதைற்து கொள்ளுமாறு சுமைமிகுந்ததாக அமைய எட்டியுடன்‌ கட்டியகொடிகள்‌, காற்ற சைத்தலால்‌ கடல்‌ அலை முழங்குதலைவிட படைகளின்‌ L169 9 யொலி முழக்கமே பெரிதாக, படைகளுடன்‌ யாமுளர்‌ புறப்பட்டு திக்விஜயம்‌ செய்து பகைவரை முறியடித்துச்‌ சிறப்புற்றார்‌.[44165

வேள்விகள்‌ இயற்றி, தாளங்கள்‌ அந்தந்த நாட்டு அந்தணர்‌ கட்கு மனநிறைவுறுமாறு செய்து, செல்வச்‌ செழிப்புடன்‌ என்றும்‌ கவலையின்றி, அச்சமின்றி இருந்தார்‌. IV—186

மேலும்‌ அவர்‌ ஆட்சியில்‌ புல்‌ தின்று கைஎடுத்துமுறையிடுவது களிறுகள்‌ மட்டுமே (வீரர்கள்‌ அன்று( ஆங்காங்கிருப்ப, கழுத்தைப்‌
பிடித்துத்‌ தள்ளுவது, பண்டிகைகளில்‌ எண்ணெய்‌ தேய்த்துக்‌குளிக்குமாறு கணிகையரின்‌ சகோதரர்கள்‌ கேலியாக (நாணத்‌
தால்‌) மெல்லச்செல்லும்‌ இளைஞர்களைத்தான்‌ (வெறுப்பால்‌ அன்று) சுண்ணாம்பு நீற்றல்‌, குறடுபற்றி இழுத்தல்‌ மாளிகை
வெள்ளையடிக்கவும்‌, நகைகள்‌ செய்யவும்‌ மட்டுமே (குற்றவாளி களைத்‌ தண்டித்தற்காக அன்று),
பொற்கிழி கட்டி கத்தி ஏந்துதல்‌ கோழிகள்‌ போரில்‌ (சேவற்‌போர்‌ (மட்டுமே மக்கட்குள்‌ போட்டி பொறாமை சண்டைகள்‌ இல்லை.

அளவினால்‌ ஏற்படும்‌ உராய்வுகள்‌ (சிறு சண்டைகள்‌) பொன்‌ உரைகல்லில்‌ மட்டுமே. எதி3லனும்‌ கண்வைத்தல்‌ (பொருளை
அபகரிக்க எண்ணுதல்‌) என்பது மிருதங்கத்தில்‌ மட்டும. (மிருதங்‌கத்தின்‌ ஒரு பக்கம்‌ கருமையான கண்போள்ற தோற்‌ 4பகுதிவைத்‌
தலைக்‌ குறிக்கும்‌) (பிறர்‌ பொருளிற்‌ கண்‌ வைக்கமாட்டார்கள்‌) :
தாது (வினைச்சொல்‌) வாதங்கள்‌ (தாது மருந்துகள்‌ சப்ததாதுக்கள்‌) எல்லாம்‌ இலக்கணத்தில்‌ மட்டுமே. மற்ற இடஙிகளில்‌
இவை இல்லாதவாறு அரசாட்சி செய்து வந்தான்‌. IV—187

அந்த யாமுனரின்‌ பிதாமகர்‌ (பாட்டன்‌) ஆகிய நாதமுனியீன்‌ சீடராகிய ஸ்ரீபுண்ட ரீகாட்சர்‌ (உய்யக்கொண்டார்‌) உடைய
நெருங்கிய சீடரான ஸ்ரீராம மிசிரா்‌ (மணக்கால்நம்பி) எனது பரமகுருவின்‌ பேறரருக்கு இத்தகைய பந்தம்‌ எப்படி. நேர்ந்தது? * * IV—188

யோக சாம்ராச்சியத்தை மறந்து லோகசாம்ராச்சியத்தில
ஈடுப்ட்டவாறு என்னை? அப்பெரிய மகானின்‌ மரபில்‌ பிறந்து இவர்‌ இவ்விதமானது முறையன்று: ** IV—189

**இவரது பாட்டனார்‌ ஸ்ரீமன்‌ நாதமுனிகள்கடிகாசல நதியில்‌ மூன்று வேளையும்‌ குளித்து நியமநிட்டைகளைக்‌ கடைப்பிடித்து
பகல்‌ பூசைகள்‌ முடித்து, ஒரு குகையில்‌ தனித்துச்சென்று தருப்‌ பைப்புல்‌ இருக்கையில்‌ அமர்நீது, திருமகள்‌ கோள்வன்‌ திருவடி.
களை, மகழ்ச்சியுடன்‌ புளகமுற்று கண்ணீர்‌ மல்கச்‌ சந்தித்து வந்‌தித்து மாலையானதும்‌, பூணூல்‌; தாமரைக்‌ கொட்டை மாலை
களுடன்‌ யோக பட்டம்‌ மார்பில்‌ இகழ அம்மலையில்‌ இருக்கும்சுநீ தரத்‌ தோளுடையானைச்‌ சிந்தித்துச்‌ சேவித்து,இல்லத்தரச ரை
அடகு பண்ணிவிக்க குலதெய்வத்துக்கு சமர்ப்பித்து, வேள்வியியற்றி சிறப்புற்றுதன்‌ வாழ்நாளைக்‌ கழித்தார்‌. IV—190

புலனின்‌ பங்களில்‌ ஈடுபட்டிருப்பவனிடம்‌ விரைவுற்று அதனை விடுமாறு கூறுவதை விட வேறுபகையுண்டோச திறமையுடன்‌
இன்சொற்கதைகள்‌ மூலம்‌ பேசி ஒரு விதமாக உணரச்‌ செய்து, புலன்‌ வேட்கையைப்‌ போக்க வேண்டும்‌. ச/-191

உலகில்‌ தந்‌ைத, தன்‌ மகனின்‌ தீய நடவடிக்கைகளேயே திருத்த இயலாமற்‌ போகும்போது, அரசபோகத்தில்‌ மூழ்கிய
மன்னனை திருத்துவது என்பது முடிக்கிற காரியமா? யாரால்‌ எப்படி முடியும்‌? IV—198

இரத்தம்‌ குடிக்கவிட்டு, மெல்ல வேங்கையின்‌ வாயிலிருந்து மானை ஈர்த்துக்‌ கொள்ளும்‌ சாதுரியம்‌ மிக்கு வேட்டைக்கார
ளைப்‌ போல, புலன்கள்‌ மூலம்‌ துய்க்கும்‌ வேட்கைதணியச்செய்து பின்‌ திருத்திக்‌ கொள்வதுவே மேலாகும்‌.
(மானைக்‌ கவரும்‌ புலி சிறுத்தை ‘மு.தலியன கழுத்தைக்‌
கடித்து இரத்தம்‌ குடிக்கும்போது அதை விரட்ட முடியாது. விரட்டினால்‌ மானை இழுத்துக்‌ கொண்டோடும்‌. அல்லது எதிர்‌
வற்து தாக்கும்‌. ஆதலின்‌, அது இரத்தம்‌ குடிக்கும்‌ அளவு விட்டு பின்விரட்டி மானை எடுத்துக்‌ கொண்டு வரும்‌ வேட்டைக்காரன்‌
போல அரன்பங்களில்‌ மூழ்கிக்‌ கடப்பவனை சிறிது விட்டுக்‌ கொடுத்து பின்னர்‌ திருத்தவேண்டும்‌ என்பது கருத்து) 1/–193

ஆதலின்‌ “அதற்காக இதுவரை இனிமேல்‌ பொருட்படுத்‌தாமல்‌ விடவும்‌ கூடாது. தகுந்த முறையில்‌ உபாயத்தினால்‌ ஒரு விதமாகத்‌ இருப்ப வேண்டும்‌. உலசுமக்கள்‌ உணவுக்குற்றத்தால்‌அறிவு மயங்குவர்‌. உணவே உணர்வுக்கு மூலகாரணம்‌” * என்று கருதி IV—194

முள்‌ உருவாகாத இளம்‌ தளிரானதும்‌, முக்தி எனும்‌ பெண்ணின்‌ காதுகளில்‌ அணியும்‌ நெருஞ்சப்பூக்கள்‌ போன்ற,
பூக்களை உடைய ஆம்‌ ஆன தூதுளைக்‌ ரையை நிறையக்‌ கொண்டு வந்து IV—195

ஒரு வைணவன்‌ கொண்டு வந்து தந்தான்‌ ‘என்று கூறி சமையல்‌ அந்தணர்‌ மூலம்‌ கொடுத்தனுப்பவும்‌, அவர்‌ (யாமுளர்‌)
பிரியமுடன்‌ சமைத்துண்டு மகிழ்ந்தார்‌. இவ்விதம்‌ (மணக்கால்‌ நம்பி) சல நாட்கள்‌ சொண்டு வற்து தந்தார்‌. —IV196

ஒரு நாள்‌ அவர்‌ (யாமுனர்‌) உணவுண்ணும்போது, எல்லாக்‌ காய்கறிகளையும்‌ உண்டவாறு அந்த (தூதுளை)க்‌ For ous
சுவைத்து நினைவு வரவே, “இதைக்‌ கொண்டு வந்துதரும்‌ பாசுவதுரை உணவுண்டபின்‌ எமக்குக்‌ காண்பியும்‌** என்று கூறி,
கைகால்‌ கழுவி நீர்‌ குடித்துப்‌ பின்‌ அவரைக்‌(மணக்கால்‌ நம்பியை ‘கண்டு, வணங்கி, “வந்த காரியம்‌ என்ன?” என்று கேட்டதும்‌,
அவர்‌ இவ்விதம்‌ கூறலானார்‌. IV—197

அரசே[ தங்கள்‌ முன்னோர்கள்‌ கூட்டிவைத்த புதையல்‌ ஓன்று மேற்குமலை (சஹ்யாத்திரி) யிலிருந்து பிறந்த காவேரி
யாற்றின்‌ இடையே உள்ள ;தீவில்‌ (இருவரங்கம்‌) உள்ளதை தங்கட்கு காட்ட வந்தேன்‌,” 1/4198

எனக்கு  என்று கூற வேண்டாம்‌ நதிகளும்‌ கனிவளங்களும்‌ மன்னர்கள்‌ உடமையாதலினால்‌ விண்ணபித்துக்‌ கொள்கிறேன்‌. அதன்‌ விவரத்தைக்‌ கேட்பாயாக…199(நிதிக்கும்‌ கருணாநிதியாகிய திருமாலுக்கும்‌ சலேடை மூலம்‌ கவிஞர்‌ இங்கு விவரிக்கிறார்‌)

படத்தில்‌ மணிகள்‌ ஒளிரும்‌ வெண்ணிறப்‌ பாம்பு சாந்தமுடன்‌ சுற்றியிருக்கும்‌ (அதிசேடன்‌ எனும்‌ பாம்பு) அரக்கர்‌ (wien) காத்துக்கெடப்பரீ, எனினோ ஆறுமாதத்துக்‌ கொருதடவைதான்‌ வருவான்‌ (விபீடணன்‌ ஆறு மாதத்துக்கொருமுறை இருவரங்கப்‌ பெருமானை தரிசிக்க வருவான்‌ என்பர்‌) ஏதாவது பலி கொடுக்க வேண்டுமே எனினோ உயிர்ப்பலி மூதலிய கொலைகளை விரும்‌ பாது (மலரிட்டு வணங்கினும்‌ போதும்‌) கண்கட்கு அஞ்சனம்‌ (மை) இீட்டித்தான்‌ காண வேண்டும்‌ என்பஇில்லை. குன்‌ சுய ஒளியாற்‌ காணப்படும்‌. (மாசற்ற ஞானத்தினால்‌ காண முடியும்‌) அத்றிதி அளவற்றது. அங்கு விலைமதிப்பற்ற இரத்தினம்‌ (கெளஸ்துப மணி மாரீபில்‌) உள்ளது. பதுமநிதி (உந்தித்‌ தாமரை, சங்கறிதி (கையில்‌ சங்கு) உள்ளது. சொற்களால்‌ என்ன பயன்‌) அழிவற்றதும்‌, எல்ளையற்றதும்‌ முதலுடையதுமான அதை தனித்து உன்‌ ஒருவனுக்கேயன்றி மன்னா] பிறருக்குக்‌ காட்டல்‌ கூடாது,
(புதையலை பாம்பு சுற்றியிருக்கும்‌, அரக்கர்‌, யட்சர்‌ காத்திருப்பர்‌, பலிகொடுத்தல்‌ வேண்டும்‌, அஞ்சனம்‌ இட்டிடு பார்க்க வேண்டும்‌ என்ற ஐ.கங்களை ஒட்டி ஈண்டு திருமாலாகிய நிதியை சிலேடை மூலம்‌ உருவஒத்திருச்கும்‌ நயம்‌ காணப்‌ படுகிற து.) IV—200 perl

என்று விண்ணப்பிக்கவும்‌, மகிழ்ந்து, படைகளுடன்‌ அவன்‌ (மணக்கால்‌ நம்பி) முன்னே வழிகாட்ட இருவரங்கம்‌ சென்று காவேரி, சந்திரபுட்கரணிகளில்‌ குளித்து திருவரங்கத்‌ தம்மானைசி சேவித்து, குறிப்புடன்‌ கடைக்கண்ணால்‌ மணக்கால்‌ தம்பியை மன்னன்‌ பார்க்கவும்‌ ௮வன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. IV—20!

தங்கள்‌ முன்னோர்‌ சேவித்த நிதியிது. கைக்கொள்க என்று திருவரங்கத்தானின்‌ இருவடிகளைக்‌ காட்டவும்‌ அம்மன்னனும்‌
(யாமுனர்‌) அதிரிச்சியுடன்‌ மயக்கம்‌ சளைந்தவனாகி IV—202

விரைந்து, தனது முள்னைய நிலையை உணர்ந்து இதுகாறும்‌ தான்‌ மறைந்திருந்தமைச்சாக வருந்தி, “நீ யார்‌?” என வினவலும்‌
நரன்‌ தங்கள்‌ பிதாமகர்‌ ஸ்ரீநாதமுனிசுள்‌ “டரா௫ய உய்யக்‌ கொண்டாரின்‌ சீடன்‌, அந்த யோகி, எதிர்காலத்தில்‌ தாங்கள்‌
அவதரிப்பதுணர்ந்து, பாகவதர்களில்‌ உயர்ந்தவனாகிய உன்னால்‌ விசிட்டாத்துவித சித்தாந்தம்‌ எல்லா உயிர்களும்‌ கடைத்தேற
சீர்‌ பெற்.றிலங்குமென நிச்சயித்து, உனக்கு துவயம்‌ (மந்திரம்‌) உபதேக்குமாறு | தனது சடனாகிய உய்யக்கொண்டாரிடம்‌ கூற
அவர்‌, புலனின்பத்தில்‌ ஈடுபட்ட உன்னை உபாயத்தினால்‌ உணர்த்துமாறு கூற நானும்‌ வந்து அவ்விதம்‌ செய்தேன்‌!” என்று
கூறவும்‌, அடி மீசை வீழ்ந்து வணங்கி, அவர்‌ (மணக்கால்‌ நம்பி) மூலம்‌ பஞ்ச சமஸ்காரங்கள்‌ பெற்று, அத்துடன்‌ நில்லாது நாலாம்‌
ஆிரமத்திற்கு (துறவு) புகமுனைந்தவனாய்‌, பாடி வீடு வந்து தன்‌ மசுனுக்கு அரசினை ஒப்படைத்து உற்றார்‌ உறவு நட்பு
மந்திரி முதலிய படை பலங்களையும்‌ மக்களையும்‌ ஒப்படைத்து மகனிடம்‌ இவ்வீதம்‌ கூறலானான்‌. IV—203

அரசநீதி
எந்நேரத்திலும்‌ முனைப்புடன்‌ மக்களைப்‌ பாதுகாக்க வேண்டும்‌. துயருற்றவர்கள்‌ முறையிட்டால்‌ கேட்டு நல்ல நீதி
வழங்க வேண்டும்‌, சுயவர்களிடம்‌ அதிகாரம்‌ கதுரவேண்டாம்‌. IV—204

நாட்டு மக்கனின்‌ நன்மையை நாடும்‌ மன்னனின்‌ நலத்தை நாட்டு மக்களும்‌ விழைவார்கள்‌. அதனால்‌ என்ன பயன்‌ எனக்‌
கருதல்‌ கூடாது. அம்மக்களின்‌ விழைவினை அவர்களில்‌ அந்தனர்‌ முதலிய சான்றோர்‌ தம்‌ ஒருமித்த விருப்பத்தை, அந்தரான்மா
வாகத்‌ திகழும்‌ இறைவன்‌ நிறை?3வற்றுவான்‌. IV—205

அரசனுக்கு ஆணை செலுத்துவது அவ௫ியமாகும்‌, இடையர்‌, வேடர்‌ முதலியவர்கள்‌ கூட அம்பு நூல்‌ இவற்றின்‌ குறியீட்டால்‌
ஆணை செலுத்துவர்‌, (அப்படியிருப்ப)) மன்னர்‌ மன்னராக பேரரசின்‌ ஆணைகிகு எல்லோரும்‌ அஞ்சவேண்டாமா?
(காட்டில்‌ இடையர்‌, வேடர்‌ முதலிய பாளையக்காரர்கள்‌ தம்‌ எல்லைக்குள்‌ ஆணை செலுத்துவர்‌. தளைவன்‌ ஒருவனிடம்‌
அம்பு, நரல்‌ முதலியன ஆணையின்‌ குறியீடாக தந்தால்‌ அவளை மற்றவர்கள்‌ சரண்‌ தந்து இங்கியற்ற மாட்டார்கள்‌ என்பர்‌.
சாதாரண பாளையக்காரர்கட்கே அரசாணை நடக்கும்‌ எனின்‌ பேரரசுக்கு ஆணை செலுத்தல்‌ வேண்டுமன்ஹறோ?) IV—206

கோட்டைகட்கு தன்னவா்களாகிய அதந்தணர்கட்கே அதிகாரம்‌ தருக, அவர்கள்‌ கம்‌ எதிரிகளை முறியடிச்கும்‌ அளவான படைகளையே தருக, அளவுக்கதிகமான படைகளை நிறுத்தல்‌ வேண்டாம்‌. IV—207

மூதலில்‌ உயரச்‌ செய்து, பின்னா்‌ (பதவியில்‌) குறையச்‌ செய்தால்‌ யாரானாலும்‌ தனது முன்னைய நிலையினைக்‌ கருதாமல்‌ (மன்னனைச்‌) பனப்பர்‌, ஆகையால்‌ அவனது நன்னடத்தையை அப்போதைக்கப்போது ஆராய்ந்து வரிசைப்படி பதவி உயர்வுகள்‌ தந்து, காலமறிந்து செயற்படக்‌ செய்ய வேண்டும்‌, IV—208

உனது ஆட்சி உன்னிடமே இருக்க விரும்புவாயானால்‌, அந்ிதணனே யானாலும்‌, நற்குடிப்பிறவாதவன்‌, வேடர்கள்‌ சேரியில்‌ வாழ்பவன்‌, கல்வியறிவில்லாதவன்‌, கொலைக்கஞ்சா தவன்‌, கொடுமனத்தன்‌, அயல்நாட்டான்‌, ஒழுக்கமற்றவன்‌ ஆகியவர்களை விலக்க வேண்டும்‌ (தன்னருகே சேரவிடக்‌ கூடாது) 1/–209

நன்னெறி நீங்கிய வேடருடன்‌ வூக்கும்‌ தயரை விலக்குக! முன்‌ ஓழுக்கம்கெட்ட அந்தணன்‌ தன்னைப்‌ பாதுகாத்த கொக்கிளை ஒருவேளைச்‌ சோற்றுக்காகக்‌ கொல்லவில்லையா?(ஒரு அந்தணன்‌ கெளதமன்‌ எனும்‌ பெயரினன்‌ ஓழுக்கம்‌ கெட்டு வேடர்களுடன்‌ கூடி வேட்டுவச்சியை மணந்து கொண்டு, வழிப்போக்கருடன்‌ சென்று யானைக்‌ கூட்டத்திலகப்பட்டு தப்பித்துக்கொண்டு ஒரு ஆலமரத்தடியில்‌ சென்றிருந்தான்‌. அங்கே நாடீ சங்கன்‌ என்னும்‌ கொக்கு விருத்தினனுக்கு உணவீந்து, பணமும்‌ தந்தது. மறுநாள்‌ பயணம்‌ ,புறப்பட்ட அந்தணன்‌ துங்கும்‌ கொக்கினைக்‌ கொன்று மாமிசத்தினை எடுத்துக்‌ சொண்டு புறப்பட்டான்‌. நன்றி கொன்ற இவ்வந்தணல்‌ கதை மகாபாரதம்‌ சாந்தி பருவத்தில்‌ வருகிறது. இவனைப்போலும்‌ பிராமணன்‌ உண்டு. ஆகையால்‌ அப்படிப்பட்டவர்கள்‌ தன்னருசே வரவிடக்கூடாது) 47210

கற்று மறவழிக்கஞ்சி, அரசியல்‌ அறிவுடையவனாகி, ஐம்பது வயதுக்குமேல்‌, எழுபது வயதுக்குட்பட்டவனாக, அமைந்து,
நோயற்ற மரபினனாகி, அகந்தையற்றவளாய்‌, அரசன்‌ வேண்டிய தூரல்‌ அமைச்சர்‌ பதவியை ஏற்று, காரியங்கள்‌ நடத்தும்‌ மந்திரி
கிடைத்தால்‌, அரசாங்கம்‌ சிறந்து மிளிரும்‌, இத்தகையவர்‌ ஒரு நாள்‌ இருந்தால்‌ போதாதா? ்‌ 1V—211

அத்தகு அமைச்சர்கள்‌ இடைக்காவிட்டால்‌ IV—219

அரசன்‌ தானே அரச நீதியுணர்ந்து செயலாற்ற வேண்டும்‌ கார்யங்‌ கள்‌ நிறைவேறினும்‌ நிறைவேறாவிட்டாலும்‌ சரியே
படை பலத்தாலும்‌ செல்வவளத்தாலும்‌ நிம்மதியாக இருக்காமல்‌ மந்திரி என்ற! ஒருவஎள, பண்பற்றவளை நியமீத்துப்‌ பேணினால்‌
ழூசணிக்காயளவு முத்து என்பது போல மனத்தை வருத்தம்‌ உறச்‌ செய்யும்‌. அதன்பிறகு அவன்‌ கையிற்‌ சிக்கி (அவன்‌ சொன்னபடி
ஆடும்‌) வாழ்க்கையுடையவனாக நேரும்‌, ்‌
(முதிது சிறிதாக இருக்கும்போது அணிந்து மகிழலாம்‌. ழூசணிக்காயளவாக இருந்தால்‌ அதை அணிந்தாலும்‌ தாங்க
முடியாது, வருத்தம்‌ தரும்‌. அதுபோன்றே தன்னளவு மீறும்‌ அமைச்சினால்‌ துயரே பெருகும்‌ என்பது கருத்து) 1V—213

ஒருவனிடமே அதிகமான பாரத்தை விரிவாச்காமல்‌ பலரிடமும்‌ ப௫ர்ந்தளிக்க வேண்டும்‌. ஓவ்வொருவரரைச்‌ சார்ந்தும்‌
பலர்‌ இருப்பதால்‌ காரியம்‌ எளிதில்‌ நிறைவேறும்‌. அதிகாரத்தைக்‌ குறைப்பதால்‌ சிரமங்கள்‌ மிகும்‌, மிகுவிப்பதால்‌ சிரமங்கள்‌ குறையும்‌. /7……214

பொருளால்‌ (பணத்தால்‌) மட்டும்‌ எச்சேயலும்‌ நிறைவேறி விடாது. பல குறுநில மன்னர்கள்‌ அக்கறையுடன்‌ செயலாற்ற
வேண்டும்‌, அவர்களை நம்‌ வசம்‌ இருக்குமாறு செய்ய பொருளைத்‌ தாராளமாகத்‌ தரவேண்டும்‌. கொடுமை கூடாது.
உண்மையும்‌ நட்பும்‌ இருக்க வேண்டும்‌. iv—215

மூலதனம்‌ (கருவூலம்‌) குதிரைகள்‌ முதலியன இருந்தும்‌, தகுந்த மனிதர்சள்‌ (அதிகாரிகள்‌) இன்மையால்‌, அவை இழந்து
நாட்டையும்‌ இழந்து, பகை வருக்கடங்கி இருக்கும்‌ சிம்மாசனகிகள்‌ (சமஸ்தானங்கள்‌) குறித்து நாம்‌ கேள்விப்பட்டதில்லையா? IV—216

அரசகுலத்தினர்‌ (க்ஷத்திரியர்‌) வேளான்‌ குலத்தினர்‌ (சூத்திரர்‌) முதலியவர்கள்‌ தம்மை இகழ்வர்‌ என்ற அச்சத்‌
தாலும்‌, தன்‌ போன்ற அற்தணர்களில்‌ தருமத்தை அறித்தேனும்‌ – சங்கடங்கள்‌ வரும்போது உறுதியாக நின்று சமாளிப்பர்‌ என்ப
தால்‌, அந்தணர்களை அதிகாரிகள்‌ ஆக்குவது மேன்மை பயக்கும்‌,
(பிரம்மனின்‌ குலையிலிருந்து அத்தணர்‌, தோளிலிருந்து கூத்திரியர்‌, தொடையிலிருந்து வைசியர்‌, பாதங்களிலிருந்து
சூத்திரர்‌ (தொண்டர்‌) பிறந்தனர்‌ என்று வேதம்‌ கூறும்‌) 114….217

வருமான அதிகாரிக்கு, கோயில்‌, முதலியவற்றின்‌ நிருவாக அதிகாரம்‌ தரக்கூடாது. அவன்‌ தன்‌ வருமான இழப்புக்டோக
கோயில்‌ சொத்து முதலியவற்றைக்‌ கவர்ந்து அரசனுக்கும்‌ அனுப்பிவைப்பான்‌. அவ்விதம்‌ செய்தாய்‌ தீங்காகும்‌. அதலின்‌
தனியதிகாரியே கோயிலுக்கிருத்தல்‌ வேண்டும்‌, கோயில்‌ சொத்தை அனுபவிப்பவன்‌ தானே நாசம்‌ அடைவான்‌, [7….218

மூதவில்‌ தனது நிலத்தின்‌ எல்லையை வரையறுத்து வேலி யிட்டு, புலம்‌ மென்மையுற கடப்பாரையால்‌ வேர்‌, தூர்களை
அப்புறப்படுத்தி உழுது பண்படுத்தும்‌ உழவன்‌ போல, மன்னன்‌ பகைவருடன்‌ நட்புடனோ, தன்‌ படை வலிமையாலோ தனது
நாட்டின்‌ எல்லையைப்‌ பத்திரப்படுத்தி, கவலையின்றி பிறகு தன்‌தாட்டினுள்‌ உள்ள எதிர்ப்புகளை அடக்க, ஆட்சியை திலைதீரட்டுவதே சிறப்பாகும்‌, IV-—219

புறங்கூறுபவனை முதலிலேயே கடிந்து பே9ிவிடக்‌ கூடாது. அவன்‌ கூற்றை மனதில்‌ அழ்ந்து சிந்தித்துப்‌ பார்க்கவேண்டும்‌. முற்றிலும்‌ பொய்‌ என்று தெரிந்தாலும்‌ பின்‌ அவனை வீரட்டி, விடாமல்‌ தனிமைப்‌ படுத்தி, அவன்‌ கூற்றுக்களை மட்டும்‌ புறக்கணிக்கவும்‌.
(பிறர்‌ மறைவான செய்திகளை அறிய அத்தகையோரும்‌
அரசனுக்குத்‌ தேவை ஆகையால்‌, அவனை விரட்டி விடக்கூடாது, அவன்‌ கூற்றை முற்றிலும்‌, ஏற்கவோ, நம்பிவிடவோ கூடாது என்பது கருத்து) IV—220

புகுதற்கரிய மலை, காடுகளைச்‌ சேரிந்த இடங்களில்‌ வ௫ிக்கும்‌, தொல்லை தருபவர்களான வேடர்‌, Loh opt aon ar ஊரீகளைசி சேர்ந்த இடங்களைச்‌ சரண்‌ புகுந்த அன்னியா்‌ களுக்குத்‌ தாற்காலிகமாகத்‌ தரவும்‌. அவர்கள்‌ கலந்திருந்தாலும்‌ போரிட்டாலும்‌ இரண்டு?ம நமக்கு நல்லது தான்‌, 1V—222

முக்கியமாக மலைப்பகுதியுள்ளவர்கள்‌ . தன்னோடிணையாத அரசனுக்கு மக்களால்‌ தொல்லைகள்‌ மிகும்‌. எப்படியும்‌
பயத்தைப்‌ போக்க அவர்களை கைவசப்படுத்திக்‌ கொள்ள
வேண்டும்‌. .நம்பிக்கையில்லாமை, நம்பிக்கை, சினம்‌, நட்பு; மிகுபகை, மிகுந்த உறவு முதலியன அவர்கள்‌ சிறுமதியாளர்‌
ஆதலின்‌ சிறிய காரணங்களிலேயே அமையும்‌,
(சிறிய விஷயங்களினாலேயே சினப்பர்‌. அதே போல்‌ சிறியவற்றினாலே மிகுந்த அன்பு பாராட்டுவர்‌ என்பது கிருத்து ) எப்படி என்றால்‌ IV—222

ஒரு வேடன்‌ வில்லுடன்‌ மற்றொரு வேடன்‌ இல்லம்‌ சென்றான்‌. (வந்தவனுக்கு) பாலன்னத்துடன்‌ விருந்தளிதிதான்‌
(அடுப்பில்‌) பளைநார்‌ வெந்து கொண்டிருக்கக்‌ கண்டான்‌. மாமிசம்‌ என்று கருதினான்‌. (விருந்தோம்பலை) மறந்து
(அவனை தனக்கு மாமிசம்‌ படைக்கவில்லை என்று இநந்து அவனைக்‌ கொல்லக்‌ கருதினான்‌) வழியனுப்ப வற்துவனைக்‌
கொல்லக்‌ கருதும்‌ (போது (வீருந்தளித்த) அவன்‌ ““விடைதருக/
(என்‌ வீட்டில்‌ வேரும்‌) பணைநார்‌ முறுகிம்‌ கெட்டுவிடும்‌] விரைந்தேக வேண்டும்‌” *, எனவும்‌ (மாமிகமல்ல என்று உணரிநற்து தெளிந்தவனாக (கொல்லாது) செல்ல விடுத்தான்‌ (முன்னைய கருத்துக்கு உதாரணம்‌) V—223

காட்டாள்கள்‌, பால்‌ சோற்றுக்கே, படைத்தவரிகளிடம்‌ நன்றியுடன்‌ சத்தியம்‌ தவறாமல்‌ நடந்து கொள்வர்‌, அது
போன்ற ஒரு சிறிய தவறு கண்டாலும்‌ அதைப்‌ பெரிது படுத்தி சினந்து விடுவார்கள்‌,
(மிகச்‌ சிறு காரணஙிகளிலும்‌ அன்பும்‌ பகையும்‌ கொள்‌ வார்கள்‌ என்பது கருத்து) IV—224

வாய்மை தவறாமை காட்டாள்களை வசமாக்க உதவும்‌, பகையரசரின்‌ தரதர்களைக்‌ கெளரவிப்பதனால்‌ அவர்தம்‌ நட்பு
உருவாகும்‌. சரியான சமயத்தில்‌ சம்பளம்‌ கொடுப்பதால்‌ காலாட்படை வசமாகும்‌. குதிரை வீரர்களை பரிசுகள்‌ தருவதால்‌
பற்றுடன்‌ இருப்பர்‌. IV—225

மேலான குதிரை, யானைகளை உனக்கு வேண்டியவர்‌களிடமே தருக, குதிரை லாயம்‌ முதலியன விழிப்போடு
பாதுகாக்கவும்‌. அதிகாரிகள்‌ வசம்‌ அப்பொறுப் பிளை ஒப்படைக்க வேண்டாம்‌. IV—226

ஒரு காரியத்தை ஒருவன்‌ சொன்னால்‌ அவன்‌ மீது பொறாமையினால்‌ மற்றொருவன்‌ அதனை மறுத்துரைப்பான்‌. இருவர்‌
கூற்றையும்‌ கண்டிக்காமல்‌ ஏற்றுக்‌ கொண்டு, பின்‌, அவை முடிந்ததும்‌, முதலில்‌ சொன்னவள்‌ கூற்று சரியானதாயின்‌
அதன்படி செய்தால்‌ நலமாகும்‌, 1V—227

அமைச்சர்கள்‌, ,வெளிப்பகைவர்களைதீ தாண்டியும்‌, உட்பகையாகிய திருடர்‌. கொள்ளையடிப்பவர்களை அடக்காமல்‌
வளரவிட்டும்‌, அரசனைச்‌ சிக்க வைத்து தம்மை விட்டால்‌ வேறு க தியில்லை எனுமாறு/ஆட்டிப்படைக்க முயல்வார்கள்‌. 1V—228

தனக்கு வேண்டி௰வரீகட்குத்‌ தருவார்கள்‌, பிறருக்கு உதவ மாட்டார்கள்‌. அரசன்‌ வாக்கை திறைவேற்றாமல்‌ தவறும்படி
செய்வர்‌. (அதற்குக்‌ காரணம்‌): அரசன்தான்‌ என நம்பும்படி செய்வர்‌, பிறரை அரசனிடம்‌ அணுகமுடியாதபடி செய்வர்‌. IV—229

கூர்மையுடைய ஜடராக்கினி (வயிற்றில்‌ சீரணிக்க உதவும்‌ வெம்மையுடைய தி) கபம்‌, பித்தம்‌, வாயு முதலிய குற்றங்களால்‌
வலிமை கெட்டு மந்தமுற்றால்‌ புறமான பெரு மருந்துகளால்‌ மீண்டும்‌ வலிமை (ஆரோக்கியம்‌) பெறுவது போல, தீய
அமைச்சர்களை அடக்க புதியவனை நியமித்தால்‌ அவன்‌ அவர்கள்‌ செருக்கிளை அடக்குவான்‌. 1V—230

அந்த தியவர்களை அடக்குவது எப்படி எனின்‌. IV—231

நிதி (கருவூலம்‌)–யரளை குதிரைப்‌ படைகள்‌, தனது சுவா தினத்தில்‌ இருந்தால்‌, அறிவாளியும்‌ வீரமும்‌ உடைய மன்னனுக்கு
தீயவர்களால்‌ ஆதம்‌ தொந்தரவுகள்‌ தானாக நீஙிஒவிடும்‌.
(நிதி, பாதுகாப்பு இரண்டும்‌ அரசன்‌ வசம்‌ இருக்கவேண்டும்‌ கல்வி, சுகாதாரம்‌ போன்ற .பிற துறைகள்‌ பிற அமைச்சரிடம்‌
இருக்கலாம்‌ என்பது கருத்து) IV—232

வயிற்றுக்கு (கண்டிக்கு)  (அரசனைக்‌) கெடுக்கப்‌ பார்ப்பார்களே அன்றி அரசனுக்கு (உண்மையான) நண்பனும்‌ இருக்கிறானாம்‌ (இல்லை), ஆதலின்‌,
தரமாட்டேன்‌ என்று கூறி, விட்டு விடவும்‌ முடியாது, திறமையுடன்‌ அவர்கள்‌ (ஏதாவது தற்து திருப்திப்‌ படுத்தியவாறும்‌) நம்பாமலும்‌ நடதித வேண்டும்‌. 7833

ஒரு செயலில்‌ வெறுப்படையாமல்‌ ஈடுபடுவறைக்‌ கண்டு, Yo செயலிலும்‌ ஈடுபடுவான்‌ என்பதை அறிந்து சொள்க; துருபதன்‌ துரோணனைக்‌ கொல்வதற்காக ஒரு யாகம்‌ செய்யு மாறும்‌ இலட்சம்‌ பசுக்கள்‌ காணிக்கை தருவதாகவும்‌ கூறவும்‌; அதற்கு முனிவன்‌ (உபயாஜன்‌) தான்‌ செய்ய விரும்பவில்லை என்றும்‌ எனது அண்ணன்‌ (யாஜன்‌) செய்வான்‌/ ஒரு பழம்‌ புனித மற்ற இடத்தில்‌ கிடந்ததைக்‌ கண்டு நான்‌ வேண்டாது செல்ல அவன்‌ அதனை எடுத்துண்டான்‌.! வெறுப்புறவில்லை! ஆதலில்‌ அவன்‌ செய்வான்‌ என்பதை உணர முடியும்‌ என்றும்‌ கூறினான்‌. இது போல்‌ ஒருவனின்‌ செயல்‌ (நடத்தை) மூலம்‌ அவளது இயல்பை உணர்ந்து கொள்ள வேண்டுமேயன்றி எல்லஈ நிகழ்ச்சிகளையும்‌ கண்டு தெளிய முடியுமோ?
(துரோணன்‌ துருபதனின்‌ ஒரு சாலை மாணாக்கன்‌ என்ப தாலும்‌ தான்‌ கற்கும்‌ காலை பின்னாளில்‌ தான்‌ அரசளானதும்‌ பாதியரசு தருவதாக துருபதன்‌ கூறியதாலும்‌ தான்‌ வறுமையுற்ற போது குழந்தைக்காக பால்‌ வேண்டி இல பசுக்களை யாூப்‌ பதற்காக துருபதனிடம்‌ சென்றான்‌. துருபதன்‌ அடையாளம்‌ தெரியாதவனாக பொய்யாக நடந்தான்‌. அதனால்‌ சினமுற்ற துரோணன்‌ பின்னாளில்‌ அத்தினாபுரம்‌ வந்து கெளரவ பாண்டவர்கட்கு ஆசிரியனாக அமைந்தான்‌. அருச்சுணனைப்‌ பயிற்றுவித்து துருபதனை தன்‌ தேர்க்காலில்‌ இழுத்துவரச்‌ செய்தான்‌, இந்த அவமானம்‌ தாங்காத துருபதன்‌ யாகம்‌ செய்து துரோணனைச்‌ கொல்லும்‌ மகளைப்‌ பெற விரும்பினான்‌. அருச்சுணனை மணக்கும்‌ மகளைப்‌ பெற விரும்பினான்‌. அந்த யாகம்‌ செய்ய *உபயாஜன்‌” எனும்‌ முனிவனை வேண்ட அவன்‌ மறுத்து தன்‌ அண்ணன்‌ :₹யாஜன்‌” அக்காரியம்‌ செய்வான்‌ என்றும்‌ புனிதமற்ற. இடத்தில்‌ உள்ள பழத்தைத்‌ தான்‌ வெறுத்தும்‌ அவன்‌ அதை நயந்து எடுத்ததால்‌ இதை உணர்வ தாகவும்‌ கூறினான்‌. இக்கதை மகாபாரதம்‌ ஆஇிபருவத்தில்‌ வருகிறது.
சாதாரணமான பழம்‌ எடுத்த நிகழ்ச்சி மூலம்‌ இந்த சகோதரர்களின்‌ இயல்பு புலப்படுவது போல ஒரு மனிதனின்‌
நடதிதையை சாதாரண நிகழ்ச்சி மூலமேமுன்னறிந்து அவர்களை கணிக்க வேண்டும்‌ என்பது கருத்து) IV—234

“இவன்‌ இக்கட்டான சூழ்நிலையில்‌ கேடு நினைத்தவன்‌* என்று இருந்தாலும்‌ நீ அந்த இடரிலிருந்து நீங்கி வெற்றி பெற்ற பின்‌ அவனைத்‌ துன்புறுத்த வேண்டாம்‌. அவன்‌ மட்டும்‌ சகுவர்ந்து கொள்க! பாம்பின்‌ சோரைப்‌ பற்களைப்‌ பிடுங்கி விட்டால்‌ அது என்ன செய்ய இயலும்‌? அதுபோல அவன்‌
செருக்கடஙிகிக்‌ உடப்பான்‌. தனனைக்‌ கொல்லாது விட்டதற்காக நன்றியுடன்‌ நட்பும்‌ பூணமுயல்வாள்‌. IV—235

நாட்டின்‌ விரிலே பொருட்பேற்றுக்கு மூலமாகும்‌, நிலட்‌ கொஞ்சமாக இருந்தாலும்‌, குளம்‌, கால்வாய்கள்‌ உருவாக்கி, ஏழைகளிடம்‌ வரி, பணமேல்‌. தானியமோ நியாயப்படி  படு,சீதாமல்‌ வசூலிதிது அவர்களை வளம்‌ உறும்படி செய்தால்‌ அரசுக்கு அறமும்‌ பொருளும்‌ வளரும்‌. IV—236

மக்கள்‌, வறுமையால்‌’ வாடி கட்குச்‌ சென்றால்‌, அவர்களை “மீண்டும்‌ அழைத்து வநீது குடி யேற்றி வைக்காமல்‌, அந்த மக்களின்‌ பசுக்களையும்‌ தானியங்‌ களையும்‌ விற்று, வீடுகள்‌ விறகுக்‌ காகும்‌ என்று எண்ணும்‌ போரீக்களத்து நரி போன்ற அதிகாரிகளை உடைய அரசன்‌, ஏழு தீவுகளையாண்டாலும்‌ செல்வவளம்‌ உற மாட்டான்‌. ]134._.237

அரசன்‌, தனது வருமானத்தில்‌ மிகுந்த கொடைக்கும்‌ தன்‌ அனுபவத்திற்கும்‌ ஆய இரண்டுச்கும்‌ ஒரு பங்கும்‌; படைபலம்‌ பெருக்கி அதனைக்‌ காப்பாற்ற இருபஙிகும்‌, சுருவூலத்தில்‌ சேமிக்க ஒரு பங்கும்‌ ஆக (நாற்பகிகாக்கி) வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஒற்றர்கள்‌ மூலமாக பகைவரின்‌ நட்பினரைக்‌ கண்‌
காணிப்பதோடு தன்‌ அங்கங்களான அமைச்சு, முதலியவர்களின்‌ இரகசிய நடவடிச்கைகளையும்‌ சண்காணித்து வரவேண்டும்‌, தன்‌ நாட்டில்‌ உள்ள திருடர்கள்‌ முதலிய தீயரைத்‌ தண்டிக்க வேண்டும்‌: IV —238

பரிசில்களை ஈந்து காவலர்களைப்‌ பேணி, அவர்கள்‌ மூலம்‌ திருடர்களைத்‌ தெரிந்து உடனே தண்டித்து விட வேண்டும்‌.
தாமதப்படுத்தினால்‌ அவன்‌ தப்பித்துக்‌ கொண்டு ஓடிவிட்டால்‌ அவனுகிகுப்‌ பதில்‌ ஒருவனைப்‌ பிடித்து வைக்திருப்பார்கள்‌.
அவனை அரசன்‌ அறியாது தண்டித்து இகழ்‌ அடைய நேரும்‌, கழுவேற்றிய பெரிய செட்டி நியாயம்தான்‌ நடக்கும்‌,
(கழுவிலேற்றிய பெரிய செட்டி. நியாயம்‌ ஆனது. ஒரு மூட அரசனிடம்‌ ஒருவன்‌ தான்‌ கட்டிய மண்வீடு மழையில்‌ சுரைந்து
சுவர்‌ இடிந்து விட்டதால்‌ தனக்கு நஷ்டம்‌ ஏற்பட்டதென்றும்‌
அவரைத்‌ தண்டிக்கவேண்டும்‌ என்றும்‌ முறையிட்டான்‌. மன்னன்‌ காரணம்‌ யார்‌ என விசாரித்தான்‌. மழைக்குக்‌ காரணம்‌ மேகம்‌,
மேகத்துக்கு காரணம்‌ குயவன்‌ இட்ட புகை, புசைக்குக்‌ காரணம்‌ குயவன்‌, குயவன்‌ சூளை வைக்கக்‌ காரணம்‌ யார்‌ என விசாரித்‌
தான்‌, மழைக்குக்‌ காரணம்‌ மேகம்‌, மேகத்துக்குக்‌ காரணம்‌ குயவன்‌ இட்ட. வுகை, புகைக்கு காரணம்‌ குயவன்‌. குயவன்‌
சூளை வைக்கக்‌ காரணம்‌ திருமண விழாச்‌ சட்டிகள்‌ செய்ததால்‌
இருமண மாப்பிள்ளை, என்ற கடைசியில்‌ மாப்பிள்ளை தலையில்‌ வீழ்ந்தது. அவனைக்‌ கழுவில்‌ ஏற்றுமாறு அரசன்‌ கூறினான்‌.
அவனைக்‌ கழுவில்‌ ஏற்றச்‌ சென்ற போது அவன்‌ நான்‌ ஒல்லியாக
இருக்கிறேன்‌. கழுமரம்‌ பருத்துள்ளதால்‌ அதற்கேற்ற ஆளை ஏற்றுங்கள்‌ என்றான்‌. அரசனும்‌ ஏற்று அங்கே வேடிக்கை
பார்க்கு வந்த பருத்த உடலையுடைய சேட்டி ஒருவனை கழுவி
லேற்றினான்‌ என்று கதை. இதை *சூலப்ருது வணிக நியாயம்‌” என வடமொழி நியாயம்‌ (பழமொழி) கூறும்‌, இக்கதையை இசி
செய்யுளில்‌ பயன்படுத்துகிறார்‌ கவிஞர்‌, தொல்காப்பிய உரை பில்‌ இதுபோல வேறொரு கதை வருவது –4-239

அரசன்‌, அரசியல்‌ குறித்துத்‌ தெரிய வேண்டியவற்றிகி நாலில்‌ மூன்று பங்குதானே சுயமாகக்‌ கற்றுத்‌ தெளிந்திருக்க வேண்டும்‌.
தனச்குத்‌ தெரியாத ஒரு பங்கு மட்டுமே நண்பர்கள்‌, பெரியோர்‌ கள்‌ அறிவுறுத்தத்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌. இவ்விதம்‌
இருந்து, தற்செருக்கின்றி, இருந்தால்‌ இடையூறுகள்‌ யாதுமின்றி நெடுநாள்‌ ஆட்ச? புரிவான்‌. IV—240

ஒரு கண்ணால்‌ தூங்கி, மற்றொரு கண்ணால்‌ விழிப்புடன்‌ இருக்கும்‌ மரத்தின்‌ உச்சியில்‌ உள்ள கரடியைப்‌ போல, இன்பம்‌
துய்க்கும்‌ போதுகூட வெளிப்பசை, உட்பகைகளின்‌ மேல்‌ ஒரு கண்‌ வைத்திருக்க வேண்டும்‌ (விழிப்புடனிருக்க வேண்டும்‌ ) IV—241

கல்வியின்‌ பால்‌ மதிப்பால்‌ கண்ணோட்டமுடன்‌ பொருளுடு ஊர்களும்‌ தரின்‌ செருக்கடைற்து துறவிகளும்‌, ஆண்டிகள்‌
முதலானோர்‌. தம்‌ விரதங்களைக்‌ கைவிட்டு போகங்களில்‌ மூழ்குவர்‌. அதனால்‌, பஞ்சமும்‌, நோயும்‌, கருக்கலைப்புகளும்‌
(குழந்தைச்‌ சாவுகளும்‌) மிகும்‌. அவர்களை பக்தி செய்தாற்‌ போதும்‌ அதனால்‌ அவர்கள்‌ சினப்பினும்‌ எத்தகைய பாவமும்‌
நேராது. இது குறித்து ஐயமோ, பாவமோ வேண்டாம்‌.1V—242

தலில்‌ மூன்று தவணைகள்‌ கொலைக்குரியாரை மன்னித்து மூறைகேட்டு நீதி வழங்க வாய்ப்பளிக்கவும்‌. தப்பித்துக்கொண்டு
போனால்‌ அபாயம்‌ எனக்‌ கருதும்‌ கொடியவனை பிடிக்கும்‌ முன்பே ஒறுப்பதே போதும்‌, IV—243

அரசன்‌, தான்‌ பெருவீரனாயினும்‌ கூ… தன்‌ கீழுள்ள வீரர்‌ களின்‌ தற்புகழ்ச்சிகளை வெறுக்காமல்‌ விரும்பிக்‌ கேட்க
வேண்டும்‌. கேட்டால்‌ அவர்கள்‌ உற்சாகம்‌ அடைவார்கள்‌ ,
(இல்லாவிட்டால்‌ உற்சாகம்குன்றுவர்‌) தனது வீரத்தை வீரர்கள்‌மூலமே கண்டு செயலாற்ற வேண்டும்‌.
(ஈண்டு வீரர்கள்‌ என்பது தன்‌ 8ழ்‌ உள்ள அதிகாகிீகள்‌, தளபதிகள்‌, சிற்றரசர்களைக்‌ குறித்து வந்துள்ள சொல்‌ ஆகும்‌.) IV—244

அரசன்‌, பிற நாட்டிலிருந்துவரும்‌ யானை, குதிரை, மணிகள்‌ அூல்‌ (சந்தனம்‌) முத்து மதலியவற்றை இறக்கிமதி செய்து,
துறைமுகங்களை வளர்ச்சியுறச்‌ செய்து வாணிபத்தை வளர்க்க வேண்டும்‌, பிற நாட்டிலிருந்து மழையின்மை, நோய்‌, இடையூறு
களால்‌ வரும்‌ மக்களை அவரவர்‌ தகுதிக்கேற்ப ஏற்றுப்‌ பேணுதல்‌ வேண்டும்‌. பூங்கா, பசுமந்தைகள்‌, கனிச்சுரங்கங்கள்‌ முதலிய
வற்றை தன்னவர்கள்‌ மேற்பார்வையிடுமாறு பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. 17… 245

சரியான சமயம்‌ வாய்க்கும்‌ வரை, குற்றவாளியின்‌ மேல்‌ சினத்தை அடக்கி வைத்திருந்து சமயம்‌ வந்ததுமே, குறி வாய்த்த
தும்‌ தன்‌ வலிமையைப்‌ பிரயோகித்து அம்பினை எய்யும்‌ வில்லானியைப்‌ போல, அவனைத்‌ தண்டிக்க வேண்டும்‌. IV—246

தீய பசைவர்‌ நாட்டின்மேல்‌ சிறு பயணம்‌ புறப்பட்டு சில நாட்கள்‌ இருந்து, வெள்ளம்‌ வரவும்‌ கடங்குத்‌ தண்ணீர்கூடி
அலைதிதுச்‌ செல்‌ துபோல, மேலும்‌ படைகள்‌ வறீது சேர்ந்ததும்‌ மீண்டும்‌ பயணம்‌ புறப்பட வேண்டும்‌. பகையரசன்‌ வலிவுடையவ
ராளால்‌ அவன்‌ செய்யும்‌ விருந்தோம்பலுக்கு மகிழ்ந்து தன்‌ வழிச்‌ செல்ல வேண்டும்‌. ஒற்றர்கள்‌ மூலம்‌ வலிவற்றவன்‌ என்பது
தெரிந்தால்‌ அந்நாட்டை முற்றுகையிட வேண்டும்‌. IV—247

மக்கள்‌ வருந்துமாறு வரி (பொருள்‌) வாங்குதல்‌ கயவர்‌களுடன்‌ ஆலோசனை புரிதல்‌, தனது நிலத்தை பிறர்‌ கவர
அனுமதித்தல்‌, முன்னைய நட்பினைக்‌ கருதாது ஐயுறுதல்முதலியவற்றால்‌ அரசன்‌ மேல்‌ அவநம்பிக்கை ஏற்படும்‌, அத்தகு அரச
னிடம்‌ உள்ள அமைச்சு, அதிகாரிகள்‌ உட்குமைந்து இருப்பர்‌.- அத்தகையோறிடம்‌ சரணளித்தும்‌, ஆடைகள்‌ தந்தும்‌ இரகசிய
மாக வசம்‌ செய்து கொண்டு, பகைவரிடம்‌ வேற்றுமையை உருவாக்கவேண்டும்‌, முன்கூறிய குற்றங்கள்‌ தன்னிடம்‌ இல்லாத படி பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌, IV~248

பகைவன்‌ தன்‌ நாட்டில்‌ உரிமை கொண்டாடிளாக்தான்‌ ஆளும்‌ நிலத்தில்‌ பாதியேயானாலும்‌ கொடுத்து, இடையறா
நட்புப்‌ பூண்டு வெளிப்பகையை நீக்கிக்கொள்ள வேண்டும்‌.
அதன்பின்‌ உட்பகையை நீக்க வேண்டும்‌, உட்பகை பாம்பினை விட பயங்கரமானதன்ஹறோ? 77249

பலப்படப்‌ பேசுவானேன்‌ (ஆயிரம்‌ சொற்கள்‌ கூறுவானேன்‌)
அரசன்‌ தான்‌ ஆளும்‌ நாட்டில்‌, உட்பகைவரை பலவிதத்தும்‌ ஆராய்ந்து தேடிப்‌ பிடித்தழிக்க வேண்டும்‌. காாமரைக்‌ சண்களை
யுடை மங்கையரின்‌ நடுவவஉள்ள ஆண்‌ மகன்போல (மனமூழ்ச்சி யுடன்‌) அச்சமின்றி வாழான்‌ என்‌.மால்‌ அரசாட்சியால்‌ என்ன
பயன்‌? துன்பங்களை அனுபவிக்கவா அரசாள்வது? (அச்சமின்றி மூழ்வுடனிருக்க உட்பகையை நீக்கிக்‌ கொள்ள வேண்டும்‌
என்பது கருத்து) IV 250

அஞ்சித்‌ தன்னருகே வராத வலிமை மிக்க எதிரியை இறுகப்‌ பிடிக்காமல்‌, அவனாகவேவரும்வகையில்‌ வளைத்துப்‌ போடுவதே
தடந்ததாகும்‌, பிணங்கத்‌ துள்ளும்‌ பெரிய மீனை கரையிலிருக்‌ கும்‌ தூண்டில்காரன்‌ கயிற்றால்‌ வசம்‌ பாரித்துச்‌ சுண்டியிழுக்கும்‌
முறையே உவமையாகும்‌.
(பெரிய மீன்‌ தூண்டியில்‌ பட்டு கீமே இழுக்கும்‌ போறு தூண்டில்காரன்‌ அதன்‌ போக்குக்கு விட்டு மீன்‌ தானாக மேலே
வரும்போது sang இழுத்துக்‌ கொள்வான்‌. இல்லாவிட்டால்‌ தூண்டிற்‌ கயிறு அறுந்து விடும்‌. மீன்‌ தப்பிவிடும்‌. அதுபோல
பகைவனும்‌ தானாகவே மாட்டிக்‌ கொண்டு தன்‌ வசம்‌ வரும்‌ போது சமயமறிந்து அடக்க வேண்டும்‌ என்பது கருத்து.)4-251-

கொடிய தண்டனை, புறஞ்சொல்‌ கூறியவர்‌ கூற்றினை ஆராய்ந்து பாராமை, பகைவா்சமாதானத்துக்கு வரும்போது
இடந்தராமல்‌ முரண்படுதல்‌, அயல்நாட்டிலிருந்து தன்னைச்‌ சரண்புகுந்தாரைக்‌ காட்டிக்‌ கொடுத்தல்‌, தன்னை எதிர்க்கும்‌
முதலமைச்சர்‌ முதலானவர்கட்குத்‌ தெரியும்படியாகச்‌ செயல்‌ புரிதல்‌, நம்பிக்கைக்குரிய ரல்லாத மக்களிடம்‌ கலந்துறவாடல்‌
நம்பிக்கைக்‌ குரியவரறை வேறுபடுத்தி விலக்குதல்‌, மந்திரா லோசனையில்‌ கண்ணோட்டம்‌ மிகுதல்‌, மந்திராலோசனளனையை
வெளீப்படுத்தியவர்களை கண்டி.க்காதி ஞத்‌ தல்புதுமைகள்‌ நிகழ்ந்‌தால்‌ ஆராய்ந்து பார்த்து முடிவினைச்‌ செய்யாமை, பெரியோர்‌
சளை மதித்து வணங்கி ஒரு பார்வையேனும்‌ பாராமை, தீயோர்‌நட்பு, (பெண்‌,கள்‌, வேட்டை முதலிய) விசனங்களில்‌ மூழ்கிடுதல்‌,
பொறாமைப்படுதல்‌ ஆகிய (குற்றங்களை) அரசன்‌ கைவிடவேண்டும்‌, IV—252

மூன்றுவகை உற்பாதங்கள்‌ (பஞ்சம்‌, மழையின்மை, இயற்கைச்‌ ற்றங்கள்‌ முதலிய விண்‌, மண்‌, தேவர்களால்‌ எனும்‌
மூவகை விபத்துக்கள்‌) நிகழ்ந்தால்‌ அரசன்‌, பிராமணர்கட்கு அன்னதானம்‌, தேவர்கட்கு யாகம்‌, அக்கினி ஹோமம்‌ முதலியன
செய்வதற்கு பெருஞ்செல்வம்‌ செலவிடவேண்டும்‌- IV—253

அரசன்‌, தனது அதிகாரிகள்‌, வீரர்களுக்கிடையே போட்டிகள்‌ உருவாக்க வேண்டும்‌. அதனால்‌ ஒருவருக்கொருவர்‌ போட்டி
மனப்பான்மையால்‌ இரகூயங்களை வெளிப்படுத்துவர்‌ போட்டி போட்டுக்‌ கொண்டு அரசனுக்கு நலன்‌ விளைவிப்பார்கள்‌.4-—254

அரசன்‌ எஙிகும்‌ தானாகச்‌ செல்லக்கூடாது. தனக்குப்‌ பதிலாக ஒருவனை அனுப்ப வேண்டும்‌. அவன்‌ வலிவு__ன்‌ இல்லா
விட்டால்‌ பகைவர்‌ அஞ்சமாட்டார்கள்‌. ஆதலின்‌ அவனுக்கு பொருள்‌, நிலம்‌, யானை, குதிரைகள்‌ நிறையத்‌ தரவேண்டும்‌.
அந்தணனை நியமித்தால்‌ நல்லது. எதிர்க்க மாட்டான்‌. மற்றவர்‌ களும்‌ வேண்டியதுதான்‌. கோட்டை, படைபலம்‌ உடைய நிலத்தைத்‌ தரவேண்டும்‌. IV—255

எல்லைப்புறக்‌ காடுகளை நெருக்கமாக வளர்ச்கவும்‌, உன்‌ நாட்டுக்குள்ளே இருக்கும்‌ று காடுகளை, திருடர்கள்‌ தொல்லை கள்‌ நேராதவாறு துண்டு துண்டாக அழித்து விடவும்‌, JV—256

புகுத.ற்கரிய காடுகள்‌ (மன்னியம்‌) தன்னில்‌ வ௫ூக்கும்‌ காட்டு மச்களிடம்‌ தட்புகளை ஆராய்வது மண்‌ குடிலை நீரால்‌ கழுவுவது போலாகும்‌.ஆதலின்‌ அவர்களைபரிசில்கள்‌ தந்தும்‌, ண்மையான நட்புடனும்‌ நடந்துகொள்ள வேண்டும்‌. எதிரிகள்‌ மேல்படை எடுக்கும்‌ போது துணையாவார்கள்‌, எல்லைப்புறக்கொள்ளைகட்கு உதவுவார்கள்‌: நூறு குற்றங்களும்‌, ஆயிரம்‌ தண்டனை களையும்‌ எல்லாம்‌ பரிபாலிக்கும்‌ அரசன்‌ பொருட்படுத்த கூடாது,
(குற்றம்புரியும்‌ இயல்புடைய காட்டு மக்களின்‌ மேல்‌ கடுமை யான குற்றச்சட்டத்தைப்‌ பிரயோகித்து அவர்கள்‌ வெறுப்பைசி
சம்பாதிக்கக்‌ கூடாது அவரிகள்‌ போக்கறிந்து நிதானமாக தண்டித்து அள வேண்டும்‌ என்றும்‌ அரசன்‌ ஆட்சியில்‌ குற்றங்‌
களும்‌, தண்டனைகளும்‌ இயல்பாதலின்‌ பெரிது படுத்திக்கொள்ள வேண்டாம்‌ என்றும்‌ கூறுறார்‌) iV—257

யானை, குதிரைகளைக்‌ கொண்டு வரும்‌ தொலைதூர தீவு களிலிருந்து வரும்‌ வணிகர்கட்கு, ஊர்கள்‌, நகரில்‌ நல்ல வீடுகள்‌,
தரல்‌, கொலுவில்‌ தரிசனம்‌ தருதல்‌, பரிசுகள்‌, நல்ல வினை தருதல்‌ முதலியவற்றால்‌ பழமை பாராட்டும்‌ நட்பினனாக்‌54 கொள்ள
வேண்டும்‌. (யானை குதிரைகள்‌) பகைவர்க்குக்‌ கஇட்டாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்‌. IV—258

எல்லைப்புறத்‌ தரசர்சகளின்‌ தூதர்களிடம்‌ கொலுவிருக்கும்‌ போது அரசன்‌ சரசசல்லாபங்கள்‌ (இனிமையான பேசிசுக்கள்‌)
செய்ய வேண்டும்‌. தனது அதிகாரிகள்‌ அவர்கட்கு முன்‌ எல்லைப்‌ புற விவகாரங்களைப்‌ பற்றி சுடுமையாக விவாதிக்க வேண்டும்‌.
எனினும்‌ தான்‌ மட்டும்‌ மென்மையாக நட்புடன்‌ இருப்பதாக (நடித்து தன்னதி காரிசகுட்குசமாதானம்‌ செய்து) பேச வேண்டும்‌.4-259

புதிய அதிகாரிகளையும்‌ மற்திராலோசணையில்‌ விரைந்து இடம்தரக்‌ கூடாது. அவன்‌ செருக்கினால்‌ தன்‌ நண்பர்களிடம்‌
பெருமை பேசும்போது உண்மையைச்‌ சொல்லிவிட அதனால்‌ காரியமும்‌ கெடும்‌. அவனும்‌ அதனால்‌ கேடுறுவான்‌. IV—260

தனது நலம்‌ நாடுவோர்‌, அறிஞர்கள்‌, நன்னெறியாளர்கள்‌, வீரர்கள்‌ மரபுரிமையான செல்வத்துடன்‌ வாழ்வோர்‌ ஆய
அந்தணர்களை கோட்டைக்‌ கதிபதிகளாக நியமித்தும்‌, புலிப்பால்‌ வேண்டினும்‌ கிடைக்குமாறு நூற்றாண்டு வாழும்‌ நிறைசெல்வ
வளங்கள்‌ சேர்த்தும்‌, எறும்பள வாயினும்‌ ஏற்றத்தாழ்வின்றிநிலம்‌ பஇர்த்தளித்து சிற்றரசர்களைப்‌ பேணியும்‌ வருமானம்‌ அதிக
மாகவும்‌ செலவ குறைவாகவும்‌ அமைய மக்களைத்துள்புறுத்தாத வாறு கருவூலத்தைச்‌ சேர்த்தும்‌, வலி விழக்கும்‌ பகைவர்‌ நிலங்‌
சளை ஒற்றர்கள்‌ எனும்‌ கண்கள்‌ மூலம்‌ பார்த்து கொக்கினைப்‌ போல சமயமறிந்து சுவாீந்து தானும்‌ துன்புறாமல்‌ தன்‌ மக்களும்‌
துன்புறாமல்‌ காப்பாற்றி, பசைவர்கள்‌ அஞ்சும்படியாகத்‌ திகழ்‌ கின்ற அரசன்‌ மார்பில்கைவைத்து நிம்மதியாகத்‌ தூங்குவான்‌. IV— 261

யானை, குதிரைகளை விலைக்கு வாஙிகவும்‌, அவற்றை மேய்த்தற்காகவும்‌, வீரர்களது சம்பளத்திற்காகவும்‌,; அறிஞர்‌
களைப்‌ போற்றவும்‌, கடவுளை வணங்கவும்‌, தான்‌ அனு விப்‌ பதற்கும்‌ ஆகும்‌ செலவு செலவல்ல என்றும்‌, அரசன்‌ தனது
செல்வத்தை இவற்றுக்காகத்‌ தாராளமாகச்‌ செலவளிக்சலாம்‌. IV—262

அரசனின்‌, எதிரிகள்‌ மேல்சபதம்‌ செய்தல்‌ கூடாது. படை பெடுப்பில்‌ வெற்றி கட்டலாம்‌. கட்டாமலும்‌ பொசலாம்‌,
பின்‌ நாளாவட்டத்தில்‌ வெற்றியாகலாம்‌. ஆதலின்‌ காரியத்தில்‌ நாட்டமிருக்க வேண்டுமின்றி சுலகத்தில்‌ நாட்டம்‌ இருத்தல்‌ கூடாது. W—263

(பகைவர்‌ மேற்படை எடுக்கும்போது) தப்பிச்‌ சொல்ல முடியாத இடங்களில்‌, பகைவரைச்‌ செலுத்தி: அவர்கள்‌ (வேறு வழியின்றி) வெற்றியோ, வீரமரணமோ என்றுபோரிடும்போது (தீவிரமுனைப்புடன்‌ போரிடுவார்கள்‌ ஆதலின்‌ தனது படைச்‌ கருவிகளைப்‌ பயன்படுத்தி தான்‌ செல்லாமல்‌, தன்‌ படைகளைச்‌ செலுத்திப்போரிடவேண்டும்‌. IV-—164

ஆலோசனைகளில்‌ ஒரிரண்டுமுறை சரியான யோசனைகள்‌ சொல்லி ஒருவனை மனதுக்குப்‌ பிடித்துவிட்டால்‌
அரசர்கள்‌ அவளையே மீண்டும்‌ மீண்டும்‌ அழைச்கத்‌ தொடங்‌குவர்‌. அப்படி அடிக்கடி அழைக்கும்‌ செல்வாக்களைப்‌ பார்த்து
மக்களும்‌ அவனிடம்‌ பணம்‌ (லஞ்சம்‌) தந்து தசாத காரியங்களையும்‌ நிறைவேற்றுமாறு செய்விப்பர்‌, அவனும்‌ செருக்குற்று
செய்யும்படி. செய்யுவான்‌. அரசன்‌ அத்தகையனின்‌ வெளிநடவடிக்கைகளை (லஞ்சம்‌ பெற்றுச்‌ செல்கின்றனர்‌ என்று)
ஒற்றர்‌ மூலம்‌ ஆராய்ந்து பாரீத்‌ தறிய3வண்டும்‌, IV—265

எல்லைப்புறத்தரசன்‌ கெடுவான்‌ என்றறிறந்தால்‌ கேடுறச்‌செய்ய வேண்டும்‌. கேடுறான்‌ என்றறிந்தால்‌ நட்பாடலே நல்லது.
அவனுக்கடுத்துள்ள எல்லைப்புறத்தவனே நமக்கு உதவுவான்‌.
இவன்‌ அவனோடு போரிட்டால்‌ நம்‌ எல்லைக்குக்‌ காவலாக அமைவான்‌ (பகைவனுக்குப்‌ பகைவன்‌ நண்பனாதலின்‌ நமக்கு
உதவிபுரிவான்‌,) 1V—266

பகை நாட்டைப்‌ பாழ்ப்படுத்துக கோட்டைகளை வசப்‌ படுத்துக, அவர்களது அந்தப்புர மகளிர்‌ அகப்பட்டுக்‌
கொண்டால்‌ அவர்களது பிறந்தகம்‌ போல்‌ மரியாதையுடன்‌ நடத்துக, பகையரசர்களின்‌ தூதுவர்கள்‌ முன்பாக கொடுஞ்‌
சொல்கூறவேண்ாரடம்‌. ஒருவேளை அவர்களோடு சந்தி (அமைதி யுடன்‌ படிக்கைகள்‌) செய்து கொள்ள நேரலாம்‌. IV—227

அபிசாரம்‌ (பில்லிசூனியம்‌ முதலிய மந்திர தந்திரப்‌ பிரயோகங்கள்‌) நஞ்சுகலற்த நீர்‌, முதலியவற்றால்‌ கூடியதும்‌
நிரந்தர நோய்களையுடையதும்‌, மலை, காடுகள்‌ நிறைந்ததும்‌, கொடிய மிலேச்சர்களால்‌ நிறைந்தது மான பூமிக்குள்‌ மேருமலை
யளவு பொன்‌ கிடைத்தாலும்‌ புகல்‌ வேண்டாம்‌. அத்நிலத்தைக்‌ கைப்பற்றி வேண்டின்‌ படைகளை மட்டும்‌ அனுப்ப கண்க
இனிமையாகப்‌ பேசி தன்‌ காரியத்தை நிறைவேற்றிக்‌ சொண்டு, மகிழ்ச்சியான நேரங்களில்‌ திறமையுடன்‌ பழகக்‌
காரியம்‌ நடக்காதெனின்‌ விலூச்செல்லும்‌ வஞ்சக மனிதனின்‌ நாணயத்தை (இந்நாணயம்‌, செல்லுமா செல்லாதா என்று
அறியும்‌) வியாபாரியைப்‌ போல அரசனும்‌ அறிந்திருக்க வேண்டும்‌. 1V—269

அறிந்த ஞானிகளை அழைத்து, தாதுக்களை அறிந்து தங்கம்‌ முதலியன ஏற்று, இயல்புக்கேற்றபடி அளவறிந்து நடந்து,
அன்புடன்‌ உடல்‌ நலனும்‌ மக்கள்‌ நலனும்‌ பேணி, தன்னுடல்‌ ஒரு பங்கும்‌ அரசியல்‌ ஒரு பங்குமாகச்‌ சமமாக மதித்து நீண்ட
ஆயுளுடன்‌ அரசன்‌ வாழவேண்டும்‌.
(இந்த பாடல்‌ சிலேடை மூலம்‌ உடலுக்கும்‌ அரசியலுக்கும்‌ உவமை காட்டி அமைந்தது, அதன்‌ பொருள்‌) அரசன்‌ தன்‌
வாழ்நாளில்‌ நலமுடன்‌ அரசாள, அறிந்தவர்கள்‌ மூலம்‌ தன்‌ நாட்டில்‌ தங்கம்‌ முதலிய கனிவளங்கள்‌ (தாதுக்கள்‌) இருப்பிடம்‌
அறிந்து அதை எடுத்தும்‌, மக்கள்‌ வருமானத்தில்‌ சிறிதளவே வரியாகப்‌ பெற்றும்‌, செருக்குடன்‌ அநீதிபுரிபவர்களைத்‌
தண்டனை மூலம்‌ அடக்கியும்‌, அருளோடும்‌, எல்லோரையும்‌ பேணி, சமூக நீதிகளைக்‌ குலையாமல்‌ பாதுகாத்து, அந்தணர்‌
களை கெளரவித்தும்‌, மக்கள்‌ குறைந்த இடங்களில்‌ மக்களை குடியமர்த்தியும்‌, இடமில்லாதவர்கட்கு இடம்‌ குந்தும்‌, இய பகை
வரை அழித்தும்‌, வளமோடு தன்னுடல்போல நாட்டையும்‌ காக்க வேண்டும்‌ என்பது ஒரு பொருள்‌.)
[அரசன்‌ தன்‌ ஆயுளை நீட்டிக்க விரும்பி தாதுக்களை அறிந்து, வைத்தியர்கள்‌ மூலம்‌ தங்கப்பற்பம்‌ முதலியவை ஏற்றும்‌,
உடல்‌ முழுதும்‌ பேணி பருத்திருக்க வேண்டிய மார்பு, தோள்‌ களை பருக்குமாறும்‌ மெலிற்திருக்க வேண்டிய இடை, வயிறு
களை மெலியுமாறு உடற்பயிற்சிகள்‌ செய்தும்‌, உடலை சுத்தம்‌ செய்து கொண்டு தன்‌ உடலை தனது நாடு போலவே காக்க
வேண்டும்‌ என்பது ஒரு பொருள்‌.) [270

அரசன்‌ அதிகாலையில்‌, நலமாகத்‌ தூங்கனாயா எனக்‌ * கேட்கும்‌. மருத்துவர்‌, சோதிடர்‌ முதலிய அந்தணர்களோடு
பேக்‌ கலந்திருக்க வேண்டும்‌. பின்‌ விடிற்த பிறகு ஒரு நாழிகை கழித்து, மந்திரிகள்‌, அதிகாரிகளோடு பேசி, அரசாங்க வரவு
செலவுகளைப்‌ பரிசீலிக்க வேண்டும்‌. பின்‌ நடுப்பகலில்‌ உடலைப்‌ பிடித்துவிடச்‌ செய்தும்‌ .(மர்த்தனம்‌–மசாஜ்‌) மல்லர்களோடும்‌,
சமையற்காரார்களோடும்‌, வேட்டைக்காரர்களோடும்‌, கலந்து பேசி, உடற்பயிற்சி, விளையாட்டு, உணவு முதலியனவற்றைப்‌
பற்றி கலந்தாய்தல்‌ வேண்டும்‌. பிற்பகலில்‌ கடவுளை வணங்கி, அறிஞர்‌ அந்தணர்களுடன்‌ பேசி மகிழ வேண்டும்‌. மாலை, உண்ட
பின்‌ விதூசகனுடன்‌, கவிஞர்களுடனும்‌ பேசிமகஇிழ்ந்தும்‌ பின்‌ முன்னிரவில்‌ ஒற்றர்களுடன்‌ பேசிவிட்டு இன்னிசைப்‌ பாடகர்‌
களுடன்‌ கூட இருந்து இசை கேட்டு மகிழ வேண்டும்‌. இரவில்‌ நல்ல தூக்கமும்‌, காதலியருடன்‌: கலந்தின்புறுதலும்‌ இருக்க
வேண்டும்‌. 1271

நண்பர்‌, நட்பும்‌ பகையும்‌ உடையவர்‌, பகைவர்‌ என மூன்று விதமாக சேவகர்கள்‌ அரசனிடம்‌ என்றும்‌ இருப்பார்கள்‌. அவர்‌
களைப்‌ பற்றிச்‌ சொல்லுகிறேன்‌. கேட்பாயாக! IV-—272

அரசனுக்கு மருத்துவன்‌, சோதிடன்‌, அறிஞர்‌, சுவிஞன்‌, புரோகிதன்‌, முதலியவர்கள்‌ அரசனின்‌ நலமே நாடும்‌ நட்பினரா
வார்‌… நட்பும்‌ பகையும்‌ உடையவர்கள்‌ வரி வருூலிக்கும்‌
அதிகாரிகள்‌, முதலியவர்கள்‌ ஆவார்கள்‌. (இவர்கள்‌ தமது பணம்‌வகையில்‌ புரியும்‌ குற்றங்களைக்‌ கண்டு அரசன்‌ தண்டிப்பானோ
எனப்‌ பகைமையுணர்வும்‌ கூடக்‌ கலந்திருப்பர்‌) பறிமுதல்‌ செய்யப்‌ பட்ட செல்வத்தினை புகடயவர்கள்‌ பகைவர்‌ ஆவர்‌, (பறிமுதல்‌
செய்த பணம்‌, செரத்துக்களை மீட்டுப்பெற விழைந்து பகைமை பாராட்டுவர்‌) ஆதலின்‌ இந்த மூவகையினரிடமும்‌ தான்‌ பகைமை
பாராட்டுவது வெளிச்‌ தெரி.ரமல சாதுரியமாகவும்‌ நீதியுடனும்‌ நட்பினருடன்‌ நட்புடனும்‌ பகைவரிடம்‌ பகையாகவும்‌ நடந்து
கொள்ள வேண்டும்‌. ்‌ ்‌. 14–273

தகுதியுடையவர்களை நன்காராய்ந்து, அவர்கள்‌ கேட்கு
முன்பே, ஒருவர்‌ சொல்லும்‌ முன்பே, பலாப்பழம்‌ காய்த்துத்‌ தொங்குவதுபோல, கனவுகண்டாற்போல, நிறையத்‌ தந்து
வியப்பில்‌ ஆழ்த்த வேண்டும்‌.
(பலா, பூக்காது காய்த்தலின்‌, காய்க்கும்‌ எனும்‌ பூவாகிய முன்னறிவிப்பின்று இடீரெனப்‌ பிஞ்சுகள்‌ விடும்‌. அதுபோல
அரசன்‌ மூன்னறிவிப்பின்றி பரிசுகள்‌ தந்து வியப்பில்‌ ஆழ்த்த வேண்டும்‌ என்பது கருத்து)
“அபிகம்ய க்ருதே தானம்‌ த்ரேதாஸல-? ஆஹுூய தீயதேத த்வாபரே
யாசமானாய சேவயா தீயதே கவெள,”” பராசரஸ்மிருதி
(இருதயுகத்தில்‌ தானே சென்று கொடுத்தார்கள்‌. திரேதா
யுகத்தில்‌ அழைத்துக்‌ கொடுத்தார்கள்‌. துவாபரத்தில்‌ கேட்டுக்‌ கொடுத்தார்கள்‌. கலியுகத்தலோ தொண்டு செய்தால்‌ சொடுத்‌ தார்கள்‌”! என்பது சுலோகம்‌,)-4-274-

பிதுரீ்பூசை, தேவபூசைகளில்‌, பெற்றோர்க்கயற்றும்‌ கடனே சிறந்ததாதலின்‌, பெற்றோரிடம்‌ பக்தியுடையவனாக, கற்‌.றடங்கய ஒழுக்க சீலரீகட்கும்‌ வைணவ பக்தர்கட்டும்‌ தானம்‌ தந்து பிதுருக்களை நற்கதிக்கு உய்ப்பாயாக. IV—275
தானம்‌, அறிஞர்களைக்‌ காப்பாற்றவும்‌, ஞானம்‌ தன்னைக்‌ காப்பாற்றவும்‌ ஆமென்றுணர்ந்து, ஸ்ரீமந்‌ நாராயணனைச்‌ சரண்‌ புகுக *$ராஜ்யாந்தே நரகம்‌ த்ருவம்‌: (அரசாட்சியிள்‌ முடிவில்‌ நரகம்‌ நிச்சயம்‌) எனும்பழமொழி யோர்ந்து அவனைச்‌ சரண்புகு வதன்றி வேறு வழியில்லை. IV—276
மனைவியின்‌ பதிபக்தி, ஆண்பெண்களின்‌ pupae மரியாதைகள்‌, துறவிகளின்‌ புலன்‌ அடக்கம்‌, ழ்‌ சாஇயினர்‌ மேல்‌ சாதியனரை மதித்து நடத்தல்‌, சேவகர்கள்‌ அரசகாரியங்‌களில்‌ நன்னடத்தையுடனிருத்தல்‌, எல்லாம்‌ அரசனின்‌ தண்டனைக்கு அஞ்சித்தான்‌ என்பதை உணர்தல்‌ வேண்டும்‌.IV—277

அரசன்‌ விசித்திரமான முறையில்‌ (கயவர்களை) கொன்று தருமவான்‌ ஆகவும்‌, மனைவியை . (பருவகாலங்களில்‌ மட்டும்‌)
கலற்தின்புற்று பிரம்மச்‌ சாரியாகவும்‌, பிறர்நலத்துக்‌காகப்‌) பொய்‌ சொல்லி சத்தியவான்‌ ஆகவும்‌.* (ஒரு நாளுக்கரு
மூறை மட்டும்‌) உணவுண்டும்‌ உபவாசியாகவும்‌, (பெரியார்‌களிடம்‌ மதித்து) விலகச்‌ சென்று வீரனாகவும்‌, (நல்லோர்க்குத்‌
தானம்‌ செய்வதில்‌ செலவழித்துச்‌) செல்வந்தளாகவும்‌, இகழவேண்டும்‌, iV—278
* பொய்மையும்‌ வாய்மை இடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்‌ குறள்‌

ஒற்றன்‌, அரசன்‌ உள்ள ஊரில்‌ இருப்பவனாகவும்‌, பல்வேறு மொழிகள்‌ தெரிந்தவனாகவும்‌, பிற நாட்டு ஒற்றர்களை அறிந்த வனாகவும்‌ அடையாளம்‌ காணும்‌ சின்னம்‌ எதுவும்‌ அற்றவனாக வும்‌, பல்வேறு வேடதாரியாகவும்‌, இறக்க வேண்டும்‌. இப்படி இல்லாதவன்‌ ஒற்றனாக வரமாட்டான்‌. IV—279
அரசன்‌, அந்தந்தக்‌ காலத்திற்கேற்றவாறு, உடலைப்‌ பிடித்து விடுதல்‌, குளிப்பு, உணவு, மெப்ப்பூச்சு, உடை, மலர்கள்‌
தரித்து இவற்றில்‌ ஆர்வமுடன்‌ இருந்து, உடலை வருத்தி மெலியச்‌ செய்வதால்‌ (உபவாசங்களினால்‌) ஏற்படும்‌ புண்ணியத்தை பொருட்‌ கொடையாலே பெற்று உய்தல்‌ வேண்டும்‌.
(தவம்‌ செய்தல்‌ வேண்டா தானம்‌ செய்தல்‌ வேண்டும்‌ என்பது கருத்து) 1V—280

எப்போதும்‌ பல்வேறு சுவைகளையுடைய உணவும்‌அரசனுக்கு இருத்தல்‌ வேண்டும்‌. நடுப்பகல்‌ கழிந்ததும்‌ உண்ண
வேண்டும்‌. பூத்துச்‌ சாப்பிடவேேண்டுமே யன்றி சுவை விருப்பிற்‌ காசு உண்ணுதல்‌ கூடாது. இது உடல்‌ நலத்துக்குரியதாகும்‌. IV—281
(அறம்‌ பொருள்‌ இன்பம்‌ எனும்‌) முப்பாலிலும்‌ சமமாசு மூயன்று அரசன்‌ இருந்தாலும்‌ அறத்துக்காக அதிகம்‌ செலவான
௮ம்‌, அது2வ சிறப்புடையதாகும்‌. பிற வயல்கட்சுப்‌ பாய்ச்சிய நீர்கரையுடைந்து செந்நெல்‌ வயலில்‌ பாய்ந்தது போல அது மூழ்தற்குரியதாகும்‌. IV—282
ஒளிதரும்‌, சிறப்பினையும்‌ நல்கும்‌ ஒரு இரத்தினத்தை அரசன்‌ புகழ்மிகுமாறு ௮ணிய வேண்டும்‌. வாரந்தோறும்‌ கிழமைக்கேற்ற மணிகளையும்‌ அணிந்து அரசன்‌ ஒளிர்தல்‌ வேண்டும்‌,
(தோற்றப்‌ பொலிவுக்கும்‌, செல்வச்‌ செழிப்புக்குமடையாள மாகவும்‌ மிகச்‌ சிறந்த வைரம்‌, முத்து முதலிய மணிகளை அணிய
வேண்டும்‌ என்பது கருத்து. ஆங்கில அரசாட்சியின்‌ மாண்பின்‌ குறியீடாக, மணி மடியில்‌ 6கோஹிஜார்‌’ வைரம்‌ பிரகாசித்தது
குறிப்பிடத்தக்கத), 1V—283

செய்வது அரசியலாம்‌. பாவத்திலிருந்து எப்படி நீங்குவது எனக்‌ கருதவேண்டாம்‌. வேதம்‌ கூட செயற்படுத்த இயலாத
வற்றைக்‌ கட்டளை இடாது தன்‌ அற்றலுக்கேற்ற அளவே செய்யுமாறு கூறும்‌. IV—284

மனு, யமதருமன்‌ முதலானோர்‌ சிறப்பாக குற்றங்களை அறிந்து தண்டித்ததால்தான்‌ தேவாம்ச தருமவான்களாகப்‌ புகழ்‌
பெற்றனர்‌. பிரமன்‌ தேவாம்சமாகப்‌ பிறப்பித்து, மக்களை ஆட்சி செய்து விராட்‌, சம்ராட்‌ முதலிய வேதங்‌ கூறிய.
சொற்களுக்குரியவனாக. தேவா்கட்ிணையாக அரசனை உருவாக்கினான்‌ அரசன்‌, சிரமங்களைப்‌ பொறுத்து உலகிலுள்ள
இடையூறுகளை நீக்காவிட்டால்‌ பிறவிப்பயனுண்டாகுமோ?
புலனின்பங்களில்‌ சிக்குண்டு பிறன்மனை வழிப்பறிகளில்‌
கிடைத்த பணத்தால்‌ மகிழும்‌ திருடர்‌ தலைவர்களும்‌ இருப்ப தில்லையா? இந்த மோகம்‌ (அரசியலில்‌ ஆர்வம்‌) ஏன்‌ என
வெறுப்பது கூடாது. பூமியை அள்வதில்‌ பொறுப்பின்மை கூடாது. எப்படி எனின்‌, முன்பு கிருதயுகத்தில்‌ கிருதவீரியன்‌
மசனான :ஆயிரந்தோளுடையான்‌. எனும்‌ அரசன்‌ தனது தோளில்‌ நிலத்தைத்‌ தாங்கியவனாக எந்தத்‌ தீவில்‌, எந்த
நாளில்‌, எந்த நகரில்‌, எற்த வழியில்‌, எந்தச்‌ செயலில்‌ எந்த நேரத்தில்‌ யார்‌ எதைச்‌ செய்ய விழைவார்களோ அறிந்து
கொண்டு, கத்து, உலக்கை, வில்‌ முதலிய சஸ்திர அஸ்திரங்‌ களால்‌ தண்டித்து கோலோச்சிப்‌ புகழ்‌ பெற்றான்‌. இறுதி பூமி
யாகிய கலியுகத்தில்‌ அதுபோல அணையிட இயலுமா? வேள்விக்‌ கேற்ற வலிமையுடைய இக்கால மன்னர்களால்‌ இயலாதல்லவா?
என்று கருதற்க. அரசர்க்கு மட்டுமே யன்றி அந்தணர்சட்கும்‌ முன்னைய வலிமையில்லையன்றோ! கடல்‌ நீரைக்‌ கைப்பிடியில்‌
அடக்கிக்‌ குடித்தான்‌ அகத்தியன்‌, பிரம்மனின்‌ சிருட்டிக்குப்‌ பிரதிசிருட்டி செய்தான்‌ விசுவாமித்திரன்‌.
பிரம்மாத்திரத்தை தனது யோகதண்டத்தினால்‌ தடுத்தான்‌ விட்டன்‌. இத்தகைய தவ வலிமை தமக்கில்லை என அந்தணா்‌
கள்‌ தம்‌ கடமையை ஆற்றலுக்கேற்பச்‌ செய்வதைச்‌ தவிர்த்தார்‌களா?அவர்களை நாம்‌ போற்றவில்லையா? ஆதலின்‌ அரசர்களும்‌
விழிப்போடிருத்து ஆற்றலுக்கேற்ப, கண்டதும்‌ கேட்டதும்‌ அலட்சயப்படுத்தாமல்‌ தயோரைத்‌ தண்டித்து நல்லோரைப்‌
பாராட்டியும்‌ அரசாண்டு தீனர்களைப்‌ பாதுகாக்கும்‌ ஸ்ரீமந்‌நாராயணனைச்‌ சரண்புகுந்து அடக்கமுடன்‌ இருந்தால்‌ எல்லா
தீலன்களும்‌ எய்தலாம்‌. பட்டம்‌ ஏற்ற மன்னன்‌ தருமத்தையே மனத்துட்‌ கொண்டு அதன்படி நடக்கவேண்டும்‌. தேவர்களும்‌,
சுவர்க்கங்களும்‌ தருமத்தை அடிப்படையாகக்‌ கொண்டிருப்பதனால்‌ அற வழி நடந்து, கடமைகளைச்‌ செய்து, எல்லோரினும்‌
மேன்மை பெற்றவனாக இலங்கி அரசாட்சி நடத்தவேண்டும்‌.
இவ்வாறு ஆளவந்சார்‌ தன்‌ மகனிடம்‌ கூறி ஆட்சியை ஓப்டைத்தான்‌ இது எனது பக்தனின்‌ பிரபாவம்‌ என்று
இவ்வாறு தாமரையில்‌ உறையும்‌ திருமகளிடம்‌ இறைவன்‌ உரை செய்தான்‌, IV—285

பாற்‌ கடலில்லத்தில்‌ பற்றுடையவனே! வணஙிகும்‌ தேவககளின்‌ மணி முடிகளின்‌ ஒளிபட்டுப்‌ பிரகாசிக்கும்‌ பாதங்களை
யுடையவனே/ கடலளவு கருணை வெள்ளம்‌ ததும்பும்‌ கண்களை யுடையனே! மந்தரமலையைக்‌ தாங்கெயெவனே! யாளையின்‌
துயர்‌ தீர்த்த சக்கிராயுத முடையவனே, திருமகளின்‌ இன்சொற்‌களைக்‌ கேட்பதில்‌ ஆர்வமுடையவனே! சங்கத்தை முழக்கி
அரக்கர்களை மயக்கம்‌ உறச்‌ செய்பவனே. IV—286

கைகளில்‌ தாங்கிய சங்கு சக்கரங்களால்‌ தொண்டைமான்‌ மன்னனைக்‌ காப்பாற்றினாய்‌! கருவிலிருந்த அருச்சுணனின்‌
பேரனைக்‌ காத்து &யிர்‌ தந்தவனே, சரண்புக்கவரைக்‌ காப்பவ$னை! பாம்புகளை உண்ணும்‌ கருடனை வாகனமாக
உடையவனே? IV —287

கொடியுடையவனே! இந்திரனின்‌ பாரிசாத மரத்தைப்‌ பெயர்த்துக்‌ கொண்டு வந்து சத்திய பாமாவை
மகிழச்‌ செய்தவனே. தூது நடந்து சொற்சாதுரியங் ளைக்‌ காட்டியவனே! தருமன்‌ புகழ்பெறச்‌ செய்தவனே! வி.லை
ஓடித்து இல்ல்னை ஏற்ற நல்லவனே –

* இந்த விளிகள்‌ அடுத்த அத்தியாயத்தில்‌ கேட்பாயாக எனும்‌ சொல்லில்‌ ௮வாய்‌ நிலையால்‌ பயனிலையாக முடிவுறும்‌;

இது, சம்மாசல நரசிம்ம சுவாமியின்‌ பாதங்களை வணங்கிய புண்ணியத்தால்‌ இடைத்த வெற்றியாய பொட்டனூரு எனு
மிடத்தில்‌ மெய்க்கிர்த்தியை தூணில்‌ வரைந்த சாசனமுடைய கிருஷ்ண தேவராயரால்‌ இயற்றப்பட்ட ஆமுக்த மால்யத எனும்‌
நூலில்‌ நான்காவது அத்தியாயம்‌ ஆக இனிது மிளிர்கிறது 4-289-

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)-மூன்றாம்‌ அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

மூன்றாம்‌ அத்தியாயம்‌

திருமகள்‌, நிலமகள்‌, நப்பின்னை (மீளா தேவி)யர்க்குக்‌ கணவ/ எருதாகி வந்த இராக்கதனைக்‌ கொன்றழித்தவனே!
வராக அவதாரத்தின்‌ தன்‌ கோரைப்‌ பற்களால்‌ இரணியாட்‌ சனைக்‌ கொன்றவனே? குமரனை பார்வையால்‌ அருள்பவனே!
வெங்கடேசனே! 111.1

கேட்பாயாக. அவ்விதம்‌ சென்று விஷ்ணு சித்தன்‌ (பெரியாழ்வார்‌) 1172

நாள்தோறும்‌ விவாதங்கள்‌ நடந்து கொண்டிருந்ததால்‌ முன்னறிவிப்பின்றியே காவலர்கள்‌ அனுமதிக்கவும்‌ தான்‌ செல்லவே, மன்னனும்‌ அறிஞர்குழுவும்‌, ஐயமுடன்‌ உடன்‌ எழுந்து மரியாதை செய்யவும்‌, அவைச்சுளம்‌ புகுந்து, மன்னனால்‌ தரப்பட்ட உன்னதமான இருக்கையில்‌ அமர்ந்து [11.3

விருந்தாளியாக மரியாதை செய்யப்பட்டு, இருமால்தன்‌ மனத்‌ கமர்ந்திருக்க, அமைதியாக இருந்த அறிஞர்‌ குழுவை நோக்கி, “அன்னியமா நான்‌? தொடங்கியதை நிறுத்துவானேன்‌? பேசுங்கள்‌ * என்று சொன்னான்‌. uI—4

சில சொற்களிலேயே அவர்களது திறமையைப்‌ புரிந்து கொண்டு, புன்முறுவலோடு அரசன்முகம்‌ நோக்கி *₹நீ நடுவராக
இருப்பின்‌ யாமும்‌ சில பேசுகிறோம்‌” என்று கூறி அவன்‌ அனுமதி பெற்று, 115

பெரியாழ்வார்‌ வாதம்‌

அவர்களுள்‌ ஒரு அறிஞனைப்‌ பார்த்து அவன்‌ கூறிய வாதங்‌ களையே தானும்‌ மீண்டும்‌ கூறி அவன்‌ கருத்தை திச்சயப்படுத்திக்‌
கொண்டு பின்‌ அவன்‌ வாதங்களைக்‌ கண்டிக்கத்‌ தொடங்க சொன்ன கருத்துக்களில்‌ உள்ள குற்றங்களை மெல்ல எடுத்துக்‌
காட்டிப்‌ (விரைவுபட்டால்‌ தன்‌ வாதமே கெடலாம்‌, பொறாமை ஏற்படலாம்‌) பின்னர்‌, அவ்‌ அவையோர்‌ உடன்படப்‌ Gua,
இடையே பேசும்‌ வாதங்களுக்கு ஒவ்வொன்றாக பதில்‌ கூறு, எல்லாரும்‌ இடைமறித்துப்‌ பேசும்போதும்‌, கலவரமடையாமல்‌,
எல்லோரையும்‌ சமாதானம்‌ அடையச்‌ செய்து, முதலில்‌ பேசியவனிடமே திரும்பி, மற்றும்‌ சுருதி சுமிருதி, சூத்திரம்‌ (வேதம்‌
மனுதர்மசாஸ்திரம்‌, பிரம்ம சூத்திரம்‌) முதலியவற்றால்‌ ஒரே கருத்தை உருவாக்கி, தனது சித்தாந்தத்தை அனைவரும்‌
ஏற்கச்‌ செய்து, எதிரியை முறியடித்து அருளோடு அவனை விடுத்து IJI—6

**நீ என்ன சொன்னாய்‌? வருக** என்று அடுத்தவனை அணுகி, அவளையும்‌ தோற்றோடச்‌ செய்து, அவ்வந்தணன்‌
(பெரியாழ்வார்‌) அனைவரையும்‌ வென்றான்‌ IlI—7
—————

பிறர்மதம்‌ மறுத்தல்‌
உலகப்‌ படைப்புக்கு ₹பிரடஇருதி” (பிரதானம்‌)யே மூல காரணம்‌ என்னும்‌ சாங்கிய வாதியை *ஈக்தோர்‌ நாசப்தம்‌”
முதலிய பிரம்ம சூத்திரங்களைக்‌ கொண்டும்‌,
ஈசன்‌ (பிரம்மம்‌) *நானே’ என்னும்‌ ஜீவாத்மா, பரமாத்மா ஒன்றே என்கிற) வேதாந்தியின்‌ .(அத்வைதிகளின்‌) மாயா
வாதத்தை *:போக மாத்ர சாம்யலிங்காச்ச’” எனும்‌ சூத்திரங்‌ களைக்‌ கொண்டும்‌,
**கருமமே (வேள்வி முதலியவை) பலன்‌ தரும்‌ எனும்‌ பூர்வமீமாம்சா வாதியாகிய கடவுளை ஏற்காதவர்களை ₹பலம்‌
அத: உபபத்தே’ என்றும்‌ சூத்திரத்தின்‌ மூலமும்‌ இறைவனை அனுமானம்‌ மூலமே பெறமுடியும்‌ (சப்தபிரமாணத்தாலன்று)
எனும்‌ பரமாணுவாதி, யாகிய வைசேடிகரை, சாஸ்த்ர யோனித்வாத்‌” ‘ எனும்‌ சூத்திரம்‌ மூலமும்‌,
“நித்தியங்களில்‌ எல்லாம்‌ நித்தியமான து” எனும்‌ (நித்யோ நித்யானாம்‌ எனும்‌ கடோபநிடத) சுருதி மூலமாக உலசம்‌
கஷணிகம்‌ (அநித்தியம்‌) எனும்‌ பெளத்தமத வாதியையும்‌,
“மன்னனே இறைவன்‌” எனும்‌ பிரத்தியட்சவாதியாகய சார்வாகனை *அனுபபத்தேர்‌ நசாரீரக;) எனும்‌ சூத்திரம்‌ மூலமும்‌ வாதிட்டு வென்றான்‌. il—8

———
அறிஞர்களால்‌ புகழப்பட்ட விஷ்ணு சித்தன்‌( பெரியாழ்வார்‌)
இவ்விதம்‌ சத்‌.சித்‌, ஆனந்தமயமான பரப்பிரம்ம தத்துவத்தை. வியாசபகவானால்‌ அருளப்பட்ட பிரம்மசூத்திரம்‌, மற்றும்‌ உபநிடதங்கள்‌ மூலம்‌ நிறுவி, பின்னா்‌ அப்பரப்பிரம்மதத்துவம்‌ விஷ்ணுவே(திருமால்‌) என்று விசிஷ்டாத்வைத தத்துவத்தை தெளி வாக தக்க பிரமாணங்களுடன்‌ எடுத்துச்‌ சொன்னான்‌, 171…

ஆதியில்‌ (படைப்பின்‌ தொடக்கத்தில்‌) நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌. பிரம்மா இல்லை. மசேசன்‌ இல்லை.
ஆகாயம்‌ இல்லை. சூரியன்‌ இல்லை. சந்திரன்‌ இல்லை. நட்சத்திரங்கள்‌ இல்லை. நீர்‌ இல்லை.  இல்லை. அப்படியிருக்கும்‌
போது விளையாட்டாக தனித்திருப்பது தகாது: பலவாகிறேன்‌ என நினைந்து சத்‌-௮9த்‌ இரண்டிற்‌ புகுந்து, என்று சாந்தோக்கிய
உபநிடதம்‌ தெரிவிக்கிறது.

*அந்தராதித்யவித்யையில்‌’ சூரியனில்‌ இருக்கும்‌ தாமரைக்‌ கண்ணன்‌ அவனே என்று கூறுகிறது.
எட்டுக்‌ கண்களையுடைய பிரம்மாவும்‌, முக்கண்‌ உடைய சிவனும்‌, ஆயிரங்கண்ணுடைய இந்திரனும்‌ ௮ன்றி இரு கண்கள்‌
உடைய (திருமால்‌) தெய்வமே கூறப்படுதலின்‌ அச்சுருதியே தெளிவாகக்‌ கூறியுள்ளது.* HI—10
இந்தச்‌ சுருதியில்‌ (சாந்தோக்கியத்தில்‌) இணையற்றுள்ள சொரூபமும்‌, குணங்களும்‌, செல்வங்களும்‌ உள்ளும்‌ புறமும்‌
நிறைந்திருப்பது நாராயணனே என்றும்‌, நாராயணீய யக்னி கோப நிஷத்திலும்‌ வேதத்தில்‌ அருணம்‌ எனும்‌ பாகத்திலும்‌
நாராயணனே பரம்‌ பொருள்‌ என்பது தெளிவாக்கப்பட்டுள்ள து. 1.11
இந்த சுருதியில்‌ *அபஹதபாப்மாதி திவ்யோ தேவ ஏதோ நாராயண” என்று கூறப்பட்டுள்ளபடி வேதவாக்கியங்களில்‌
நிலையற்றுள்ள நாராயண பதமே. வேறு தெய்வம்‌ இல்லை என்னும்‌ உண்மையை சொல்லி வாதத்தைத்‌ தீர்த்துவைத்துள்ளது.1[[…..12
*(சாந்தோக்கிய உபநிடதத்தில்‌ அந்தராதித்ய வித்தையில்‌,
“ய ஏஷோ ன்தராதித்யே ஹிரண்மய… ஸர்வ ஏவ ஸுவார்ணஸ்‌ தஸ்யயாதா,
கப்யாசாம்‌ புண்டரீகமேவ மக்ஷிணி தஸ்யோதிதி நாம”எனும்‌ மந்திரம்‌ ஈண்டு குறிப்பிடப்படுகிறது)

முன்பு ₹பிரதர்த்தனன்‌’ எனும்‌ அரசன்‌ பரசுராமனுக்கஞ்சி, அரசினை நீத்துக்‌ காட்டுக்கேக, வீடுபேற்றுக்காக இந்திரன்‌
வேண்ட, இந்திரன்‌ பிரத்தியட்சமாகி *என்னை வணங்குக” என்றான்‌. தன்னை வணங்கி வரும்போது தன்னை வணங்குக
என்றது அந்தர்யாமியாக உள்ள நாராயணனை வணங்குக என்பது கருத்தாகும்‌. சத்‌ ௮சித்‌ அனைத்தும்‌ நாராயணனின்‌ சரீரம்‌ ஆகும்‌.

வாமதேவ முனிவரும்‌ இதையே கூறுகிறார்‌:
அறம்‌, பொருள்‌, இன்பம்‌, மூன்றும்‌ பிரம்ம ருத்திரர்‌ முதலிய தெய்வங்கள்‌ அளிப்பினும்‌ வீடுபேறு அளிப்பது நாராயணனே.
மற்றும்‌ எல்லாவற்றுக்கும்‌ அவனே அடைக்கலம்‌. தாய்‌, தந்தை சகோதரர்‌, வீடு, பாதுகாவலன்‌ அனைத்தும்‌ அவனே என்று
சுபாலோபநிஷத்‌ கூறுகிறது.

இவ்விதமாக பாண்டிய மன்னனுக்கு போதித்து விஷ்ணு சித்தன்‌ அ௮ம்மன்னனுக்கு நாராயணன்‌
அடைய வழி கூறுகிறேன்‌ என்று காண்டிக்ய, கேசித்வஜ சம்வாகுத்தைக்‌ கூறலானான்‌. [ரா….-13

——-

காண்டிக்கிய கேசித்துவஜ உரையாடல்‌
நிமி எனும்‌ அரச வம்சத்திற்கு சனகர்கள்‌ என்பது பொதுப்‌ பெயராகும்‌. ௮ம்மரபில்‌ தருமத்துவசன்‌ எனும்‌ மன்னனுக்கு
மிதத்துவசன்‌, திருதத்துவசன்‌ என இருமக்கள்‌ பிறந்தனர்‌. அவர்‌கட்கு முறையே (மிதத்துவசனுக்கு) கருமத்திலீடுபாடுடைய
சாண்டிக்கியனும்‌, இருதத்துவசனுக்கு பிரம்மஞானத்தில்‌ ஈடுபாடுடைய கே௫ித்துவஜனும்‌ பிறந்தனர்‌. 11114

அவர்கள்‌ தமக்குள்‌ அரசு பெற வேண்டும்‌ எனும்‌ நோக்கில்‌
பகைமை பூண்டு பல நாட்கள்‌ போரிட்டனர்‌. மக்கள்‌ நிலை குலைவும்படி இடைவிடாது போரிட்டனர்‌, WI—15

அவர்கள்‌ இருவரும்‌ *இச்சுமதியாற்றின்‌ இருகரையிலும்‌ இருந்து கொண்டு, விடிந்ததும்‌ படைகளைத்‌ தத்தம்‌ பாசறைகளி
லிருந்து ஓல்று சேர்த்து வெளியே வந்து போரிட்டு, மீண்டும்‌ பாசறைக்குச்‌ சென்றும்‌ இவ்விதம்‌ நாள்தோறும்‌ போரிட்டுக்‌
கொண்டிருந்தனர்‌. இறுதியில்‌ கேசித்துவஜனின்‌ படைகளின்‌ முற்றுகைக்‌ காற்றாமல்‌ காண்டிக்கியன்‌ தோற்றோடினான்‌. 1]1–16

தோற்றோடிக்‌ காட்டிற்குச்‌ சென்று, ஆங்காங்கே மலைச்‌ சிகரங்களில்‌ ஒற்றர்களை வைத்து சுற்றிலும்‌ தடையமைத்துக்‌
குடில்களில்‌ மந்திரி, குர, சேனைகளோடு கூடி இருந்து வந்தான்‌.
(மலைச்சிகரங்களில்‌ ஒற்றர்களாக காவலர்கள்‌ இருந்து எதிரி நடமாட்டத்தை உடனுக்குடன்‌ அடுத்தடுத்துள்ள பாசறைகட்கு
ஓலி மூலமோ, தீப்பந்தம்‌ மூலமோ, சமிக்ஞை செய்து அறிவிப்பது வழக்கம்‌) ; 1[1–17

இவ்விதம்‌ இரு அரசுகளும்‌ தனக்குச்‌ சேர்ந்ததும்‌ கேசித்துவஜன்‌, பயனில்‌ பற்றற்றவனாக அறியாமையையும்‌
சாவினையும்‌ வெல்வேன்‌ இனிப்‌ பிறப்பெடுக்கமாட்டேன்‌ என்று யோகத்தில்‌ இணைந்து ஞானம்‌ அடைந்து, வேள்விகள்‌ செய்து,
தட்சை பெற்று இருக்கும்‌ காலத்தில்‌ 111–18

வேள்விச்‌ சாலைக்கருகே ஆற்றோரம்‌ புதரில்‌ புல்‌ மேய்ந்து கொண்டிருந்த யாகப்பசு, யமனின்‌ கொடியோ என அசையும்‌
பெண்பாம்பு போன்ற புலியின்‌ வாலினைக்‌ கண்டு, பயந்து, கழுத்திலுள்ள மணி ஒலிப்பப்‌ பாய்ந்து குஇக்கவும்‌, அந்தப்‌ புலி
இடிபோல மேலே தாக்கியது. 111… [9

புலி வாய்‌ நாற்றமும்‌ ஈக்களும்‌ மூச்சையடைக்க பசு மயங்க, மர இலைகள்‌ உதிருமாறு தள்ளிக்‌ கொண்டு போகவும்‌, மேக
முழக்கம்‌ போன்ற ஒலி செவியில்‌ வீழவும்‌ பசுமேய்ப்பவன்‌ மயங்கி நிலத்தில்‌ விழவும்‌, அந்த வெம்புலி(வேங்கை) கழுத்தைக்‌ கடித்து
மாறு தலைபோட்ட பசுவை வீழ்த்திப்‌ பாய்ச்சலுடன்‌ 17-20

தன்னுடம்பில்‌, கொம்பு குளம்புகள்‌ படாமல்‌ (பசுவின்‌ உடலை) திருப்பியவாறு ஓசையோடு வாலையாட்டி உதிரம்‌
குடித்தவாறே சாதுரியமாக வேள்விப்பசுவைத்‌ தன்‌ குகைக்கு இழுத்துச்‌ செல்லும்‌ நேரத்தில்‌ 121

வயல்‌ வெளிகளில்‌ காவலிருப்பவர்கள்‌ கூச்சடலிடவே, அந்தணர்கள்‌ அந்நதியில்‌ சந்தியா வந்தனம்‌ செய்து கொண்டிருந்‌
தவர்கள்‌ மரக்கிளைகளில்‌ ஏறி கைதட்டி அதட்டவும்‌ குதிரை வீரர்கள்‌ விரட்டியடிக்கவும்‌, அப்புலி (பசுவை) அங்கேயே போட்டு
விட்டு உதடுகளை நக்கிக்‌ கொண்டும்‌ (சினத்தினால்‌) குடகுட வென உறுமிக்கொண்டும்‌ (மீண்டும்‌ இரை கிடைக்குமோ என)
திரும்பிப்‌ பார்த்துக்‌ கொண்டும்‌, மரங்கள்‌ செறிந்த இடத்திற்கு (தப்பித்துக்கொள்ள) விரைந்தோடிச்‌ சென்றது. [11-22

குபுகுபுவெனக்‌ குருதி கொப்புளித்து வரவும்‌, கழுத்துக்‌ குழி யில்‌ உயிர்ப்பு திக்குமுக்காடவும்‌, கண்விழிகள்‌ பிதுங்க நடுங்கிய
வாறு குற்றுபிரோடு உதைத்துக்கொண்டு இருந்தஅந்தப்‌ பசுவைப்‌ பற்றிய செய்தியை, 1.23

அரசன்‌ (கேசிதுவஜன்‌) இடம்‌ விண்ணப்பிக்கவும்‌ அவன்‌ (தன்‌ வேள்விப்‌ பசு இறந்து போனதால்‌) பிராயசித்தம்‌ (கழுவாய்‌)
என்னவென்று ருத்துவிக்குகளை (யாகசாலைத்‌ தலைமையந்தணனை)க்‌ கேட்டான்‌.அவர்கள்‌ கசேரு முனிவளைக்‌ கேட்கக்‌
கோரினர்‌. கசேருவும்‌ தனக்குத்‌ தெரியாதென்று சுனகமுனிவனைக்‌ கேட்கச்‌ சொல்ல, அவரும்‌ தனக்குத்‌ தெரியாது என்று கூறி
விட்டு “மன்னனே! ருத்துவிக்குகள்‌, கசேரு, ஆகியோருக்கோ எனக்கோ தெரியாது. நாங்கள்‌ மட்டுமல்ல! உலகில்‌ யாருக்கும்‌
தெரியாது. உனக்கு (தோற்றோடி) அரசினைத்‌ தந்து (படை,குடி, கூழ்‌, அமைச்சு, நட்பரண்களையும்‌ தந்து) மரங்கள்‌ வெறும்‌
கற்பாறைகளுக்கடையே திரிந்து கொண்டு இருக்கும்‌ காண்டிக்‌இயன்‌ ஒருவன்தான்‌ தெரிந்திருக்கலாம்‌! விரும்பினால்‌ அவனைக்‌
கேள்‌’ ” என்றான்‌. ்‌ VWI—24

அரசன்‌ “முனிவரனே! என்‌ பகைவன்‌ நான்‌ பிராயச்சித்தம்‌ கேட்கச்‌ செல்லும்‌ போது என்னைக்‌ கொன்றால்‌ யாகப்பலன்‌
இட்டும்‌. கொல்லாமல்‌ பிரயாச்சித்தம்‌ சொன்னால்‌ யாகம்‌ நிறைவேறி முழுமைபெறும்‌. இருவிதத்தும்‌ என்‌ விருப்பமே
நிறைவேறும்‌: ‘என்று சொல்லித்‌ தேரில்‌ ஏறிச்சென்றான்‌. 11-25

கேசித்துவஜன்‌, மான்தோல்‌ மேலாடையாக, ஆயுதமின்றி, காண்டிக்கியன்‌ இருக்கும்‌ இடத்திற்குப்‌ புறப்பட்டுக்‌ காட்டை
யடையவும்‌, ஒற்றர்கள்‌ அவன்‌ கொடியைக்‌ கண்டதும்‌ யார்‌ என அறிந்துகொண்டு ஒன்றுகூடி. கூச்சலிட்டு அறிவிக்கவும்‌. 11726

நாட்டை விட்டோடி வந்த மக்கள்‌ பயந்து கலங்க காண்டிக்கென்‌ அவர்கள்‌ பயம்‌ தீர்ப்பதற்காக சிலரை நியமித்து,
மலைச்‌ சிகரங்களில்‌ ஆங்காங்கு வில்‌ வீரர்களை அனுப்பி த்குந்த ஏற்பாடுகளைச்‌ செய்து, தான்‌ கோபம்‌ மிக்கவனாக வாசற்‌
சுதவைத்‌ திறந்து வெளியே வந்தான்‌. WI—27

வருகின்ற பகைவனை (கேசித்துவசனைப்‌) பார்வையாலேயே சுட்டெரித்து, தன்‌ செல்வத்தைக்‌ கவர்ந்ததாலும்‌ மீண்டும்‌ ஈண்டு
வந்துற்றதாலும்‌, சினத்தாலும்‌ முத்தியாகச்‌ சேர்ந்து வலிமை யுற்று மின்னல்போல அசையும்‌ வில்லில்‌ அம்பைத்‌ தொடுத்துச்‌ சொன்னான்‌. . 11128

குனம்‌, தானியம்‌, யானை, குதிரை, பசுக்கூட்டம்‌, அரசு எல்லாம்‌ கவர்ந்தது போதாதென்று மாரீசனைப்போல மான்‌
தோல்‌ போர்த்துக்கொண்டு, சாந்தமுடையவனைப்‌ போலப்‌ புகுந்து, உயிரையும்‌ கவர வந்தனையோ? இய நோக்குடை
யவனே! உன்னைக்‌ கூரிய வேலால்‌ கொன்றொழிப்பேன்‌” * 11[..-29

எனவும்‌, கையெடுத்து ஓஒ! கோபப்படாமல்‌ கேள்‌! நான்‌ கொல்ல வரவில்லை. என்‌ வேள்வியில்‌ தவறுதலாக இடையூறு
நேர்ந்துவிட்டது. அதற்குப்‌ பிராயச்சித்தம்‌ அந்தணர்களைக்‌ கேட்க அவர்கள்‌ உன்னிடம்‌ அனுப்பி வைத்தார்கள்‌. “மன்னா!
அவனுக்குத்தான்‌ பிராயச்சித்தம்‌ தெரியும்‌ போ!” என்று கூறினர்‌.
கோபத்தையோ சாபத்தையோவிடுக, எதுவானாலும்‌ மேல்தான்‌(கோபம்‌ விட்டால்‌ அருள்கூர்ந்து பிராயச்சித்தம்‌ கேட்டு வேள்வி முடித்து நலம்பெறுவேன்‌ அல்லது சாபம்‌(வில்‌) விட்டால்‌ இறந்துபடுவேன்‌ அதுவும்‌ சரிதான்‌ என்பது கருத்து.) IJI—30

எனவும்‌, அவன்‌ (காண்டிக்கியன்‌) மரச்செறிவிற்குள்‌ புகுந்து மந்திரி, புரோகிதர்‌ முதலியவர்களுடனும்‌ அச்செய்தி சொல்லி
ஆலோசனை கேட்கவும்‌ மந்திரிகள்‌ இவ்விதம்‌ கூறினர்‌. 111-231

“பங்காளி (தாயாதி) நமக்கொரு சிரமமும்‌ இல்லாமல்‌ தானே அருகணைந்துள்ளான்‌. இதுதான்‌ சமயம்‌! எழுக!
மன்னவா! அருள்போதும்‌! முற்றிய இலைகளைத்‌ இன்னச்‌ செய்து மக்களைக்‌ கொல்லாதே! * JIJ—32

மனைவி மக்கள்‌ குழுமி தரிசு நிலங்களில்‌ ரை கொய்யச்‌ சென்று, மெல்லடித்‌ தாமரைகளில்‌ முள்‌ தைத்து அதை எடுக்கும்‌
போது அவர்கள்‌ நோவால்‌ அலறுவதால்‌ கண்களுக்குத்‌ தூக்கம்‌ வராமல்‌ ஒதுங்கிச்‌ இடந்து வேதனைப்‌ படுகிறோம்‌. எங்களுக்கு
மட்டுமன்று! நீ படும்‌ பாட்டைச்‌ சொல்ல முடியுமா? 171…33

உடையவன்‌, அமைச்சு, நட்பு, பொருள்‌ (பொக்கிஷம்‌) நாடு, படை, அரண்‌ எனும்‌ ஏழு அரசியலங்கமும்‌ உடையவன்‌ (அரசு) இருந்தால்‌ முன்பாக அதுவும்‌ இருக்கும்‌. அவயவி (ஆன்மா) சுகமாக இருந்தால்‌ அங்கங்களும்‌ (உறுப்புகளும்‌) சுகமாக இருக்கும்‌ என்பது நாம்‌ அறிந்ததுதானே 11134

அவன்‌ காரியத்தை முடித்துவிட்டால்‌, அரசு இரண்டுமே உன்னைச்‌ சாரும்‌, எப்படியேனும்‌ அரசனுக்கு பகைவனை
வெல்வது இன்றியமையாதது, அதனால்‌ பொருட்பேறும்‌ மக்களை அருளோடு பாதுகாத்தலும்‌ அறமாகும்‌. 11-35

தாங்கரிய குரோதமுடைய வலிமையான பகைவனை அநியாயத்தால்‌ கொன்றால்‌ அந்தப்‌ பாவத்திற்குப்‌ பரிகாரம்‌,
நியாயமாக மக்களைப்‌ பாதுகாப்பதுதான்‌ ஆகும்‌. 136

இந்திரன்‌, இரி£ீரிடன்‌ (முத்தலையன்‌) எனும்‌ அந்தணனும்‌ தன்‌ குருவானவுமான பெரியவனால்‌ தன்‌ நாட்டுக்குத்‌ இமை
நேரும்‌ என்று அறிந்து கொல்லவில்லையா? அருளை விழக!
உன்னை நம்பிய மக்கள்‌ துன்புற்று மெலிய இந்த அருள்‌ என்ன பயன்‌? [ரா–37 :

மன்ன! நல்லொழுக்கமுடைய உன்னை இந்தப்‌ பாடுபடுத்திய சுயவனைக்‌ கொன்று, பின்பு வேள்விகள்‌, தான தருமங்கள்‌
செய்து பாவத்தைப்‌ போக்கிக்‌ கொள்வாயாக, 111–38

இன்னும்‌ இரண்டு நாட்கள்‌ பார்த்து உன்னிடம்‌ சாரமில்லை என்று கண்டால்‌ மக்கள்‌ ஊரை நோக்கிப்‌ போனால்‌, நீ துறவி
யாக வேண்டும்‌ அல்லது தாழ்ந்த நிலையில்‌ உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்‌! இதுதவிர வேறுவழியுண்டேோ? 111-..39

மன்ன! தவம்‌ செய்ய முயன்றாலும்‌, அவமானம்‌ என்னும்‌ அம்பு தைத்த வேதனை இதயத்தில்‌ இருக்கும்போது வெறும்‌
கண்ணை மூடிக்கொள்ளலாமே தவிர, பரப்பிரம்மத்தை தியானிக்க முடியுமா? Tlf 40

பரசுராமன்‌ அவமானத்தால்‌, தன்‌ தந்தையைக்‌ கொன்ற மன்னார்களைக்‌ கொன்று அவர்கள்‌ குழந்தைகளையும்‌ மரபினரை
யும்‌ தேடித்‌ தேடிக்‌ கொன்று பிறகுதான்‌ தவம்‌ செய்து முனிவன்‌
ஆனான்‌. அரசைப்‌ பெறுவதற்காக இல்லாவிட்டாலும்‌ மன அமைதியுறவேனும்பகையை அழிக்கவேண்டாமா? 11-41

பகைமையும்‌ கவலையும்‌ இல்லாமல்‌ கிடைத்தது போது மென்கிற சாதாரண குடிமகன்‌ ஆக இருப்பது மேல்தான்‌.
ஆனால்‌, அரச வேடம்‌ ண்டவனுக்கு பகை ஏற்பட்டுவிட்டால்‌ அமைதியாக பசையை மறந்திருப்பது தகுந்ததன்று 11-42

புலிமலையிலிருந்து (ஈன்ற(புனிறு) காலத்தில்‌) கண்ணோயால்‌ ஊருக்குள்‌ வந்துவிட்டால்‌, மனிதர்கள்‌ நோய்‌ நீக்கிக்‌ கொள்‌
என்று சொல்லி குகைக்கு அனிப்பி வைத்துவிட்டுப்‌ பின்னா்‌ அதனாலே கொல்லப்படுவரோ? ஊரிலேயே கூச்சல்‌ போட்டுக்‌
கத்தியாற்‌ குத்திக்‌ கொல்வார்களா? சொல்க! 111–43

இந்நேரம்‌ வலிமை மிக்க அவனை நீதிக்காக விட்டு விட்டா யானால்‌, இழந்த அரசினை மீண்டும்‌ பெறுவதற்கு என்ன வழி
பபிருக்கிறதென விரல்‌ மடித்துச்‌ சொல்க, * Ti—44

சோம்பேறியாகப்‌ படுத்திருக்கும்‌ மனிதன்‌ கலியுகமாம்‌. உட்கார்ந்திருப்பவன்‌ துவாபரயுகமாம்‌. எழுந்திருப்பவன்‌
திரேதாயுகமாம்‌. மற்றும்‌ நடப்பவன்‌ திருதயுகமாம்‌. இவ்விதம்‌ கூறும்‌ ருக்வேத பிராமணத்தில்‌. உள்ள சோல்‌ கேட்கவில்லையா?
(நடக்கும்‌ முயற்சியே சிறந்தது என்பது கருத்து) [77-45

தன்னாட்டிலுள்ள குறைகளை உடனே நீக்கியும்‌, தன்‌னாட்டை எதிரிகளிடமிருந்து துன்புறாமல்‌ பாதுகாத்தும்‌,
பகைவரை அழிக்க ஏற்ற காலத்தில்‌ நண்பர்‌ கூறும்‌ வாக்குக்கேற்ப முயற்சி செய்தும்‌, தகாத காலத்தில்‌ விரையாமல்‌ ஆழ்ந்து சிந்தித்‌
தும்‌ இவ்விதம்‌ இருக்கும்‌ அரசன்‌ நெடுநாள்‌ உலகிஎன ஆள்வான்‌.11-46

எமுக! எழுக! என்று கூறவும்‌ = பார்த்து மன்னன்‌ இவ்விதம்‌ கூறலானான்‌. IN—47

நீங்கள்‌ கூறியது செய்யத்‌ தகுந்தது தான்‌! இவ்விதம்‌ செய்தால்‌ அரசு முழுதும்‌ நமக்கும்‌ அவனுக்குப்‌ பரலோகம்‌
(சுவர்க்கம்‌) கிடைக்கும்‌. இதில்‌ எது சிறந்தது என்பதை ஆராய வேண்டும்‌. 111-468

பரலோகம்‌ (துறக்க இன்பம்‌) நிலையானது. உலக அரச போகங்கள்‌ நிலைத்தவையன்று. ஆதலின்‌ பாவம்‌ செய்து
பரத்தை இழக்கலாமோ? 111–49

கைகூப்பி எனளிமையுற்று வரும்‌ அடைச்கலமானவளை, பரலோக சிந்தையுடைய ஒருவன்‌ சினத்தால்‌ கொல்வது மிகுந்த தீங்காகும்‌ என கண்வமகரிஷி கூறிய வாக்குகளைச்‌ இந்திக்க வேண்டாமோ? 1171-50

என்று கூறி வெளியே வந்து அம்மன்னனிடம்‌ (கேசித்துவஜ னிடம்‌) கேட்டு, யாகப்பசு கொல்லப்பட்ட விதம்‌ அறிந்து, அதற்‌
கேற்ற பிராயச்சித்தம்‌ (கழுவாய்‌) கூறினான்‌; அது கேட்க அவனும்‌ வேள்வி முறையாகச்‌ செய்து முடித்து, 11-51

வேள்வியின்‌ இறுதி நீராட்டு முடிந்து, வேத அந்தணர்கட்கு
வணங்கிப்‌ பரிசுகள்‌ ஈந்து, பின்னர்‌ இரவலர்கட்குப்‌ பரிசுகள்‌ நல்கி, கேட்டவர்கட்கெல்லாம்‌ அவர்கள்‌ தேவைகளை நிறை வேறச்‌ செய்து, 11152

அதன்பின்னும்‌ தன்‌ மனம்‌ அமைதியுறாமையால்‌, அராய்ந்து “குருதட்சணை கொடுக்காமல்‌ இருக்கிறோமே” என வருந்தி மீண்டும்‌ காண்டியக்கியனிடம்‌ செல்லவும்‌ அவன்‌ ஐயமழுற்று பரபரப்புறவும்‌, (1–53

அமைதியுறச்‌ செய்து 1உனக்கு எது விருப்பம்‌? குருதட்சணை (காணிக்கை) தர வந்துள்ளேன்‌, மன்ன! கேட்பாயாக” * எனவும்‌ அம்மன்னன்‌ மீண்டும்‌ கன்‌ நண்பர்களுடன்‌ 111… 54

குருதட்சணை தர இம்மன்னன்‌ வந்துள்ளான்‌! நீவிர்‌ என்பாற்‌ பற்றுடையவர்கள்‌! ஆராய்ந்து நன்றாகச்‌ சிந்தித்து
நாம்‌ கேட்பதற்கு எதுமேல்‌ என்று கூறுங்கள்‌.” £ 111-255

எனவும்‌, அவர்கள்‌ அம்மன்னவனிடம்‌ மகிழ்ச்சியோடு இவ்‌விதம்‌ கூறினர்‌. **இன்றல்லவா தெய்வம்‌ அருள்‌ கூர்ந்தது!.
விரைந்து குருதட்சணையாக சுடல்‌ சூழ்ந்த நிலம்‌ முழுதும்‌ கேட்பாயாக! மன்ன! எங்கள்‌ அனைவரையும்‌ காப்பாற்றுக!
சுற்றமும்‌ நட்பும்‌ பாதுகாத்தலைவிடப்‌ புண்ணியம்‌ வேறிருக்‌கிறதா? 11-56

நமக்கெப்போது பலம்‌ வரும்‌! . எப்போது சமயம்‌ வாய்க்கும்‌! வாய்த்தாலும்‌ போர்‌ ஏற்படுமா? ஏற்பட்டாலும்‌ நாம்தாம்‌
வெல்வோம்‌ என்று யாரேனும்‌ சொல்ல முடியுமா? உன்‌ பாக்கியவசத்தால்‌ இந்த நற்பயன்‌ கிடைத்துள்ளது. சுற்றத்தார்க்கும்‌
நட்பினர்க்கும்‌ ஒரு திங்கும்‌ நேராமலேயே, தீ இருந்தாற்‌ போலிருந்து நமக்குக்‌ கிடைக்கிறது, செல்வம்‌ சாகாமலும்‌
நோகாமலும்‌ கிடைக்குமா? 11-57

என்று கூறவும்‌, மெல்ல நகைத்து அம்மன்னன்‌ (காண்டிக்கியன்‌) இவ்விதம்‌ கூறினான்‌. *₹நீங்கள்‌ பொருளாதாற
நூல்‌ வல்லவார்களேயன்றி, பேரின்பம்‌ நல்கும்‌ வீடுபேற்றைக்‌ காட்டும்‌ தத்துவ ஞானத்தில்‌ வல்லவர்கள்‌ அல்லர்‌! நிலையற்ற
செல்வத்திருமகளை எவ்விதம்‌ சென்று கேட்பேன்‌! அப்பேரறிஞ விடம்‌ பரமார்த்தம்‌ (தத்‌ தவம்‌) கேட்காமல்‌ அரசினைக்‌ கேட்பதெப்படி?” 111…

எமக்கு அரசுதர்னர்‌ குறிக்கோள்‌! அவன்‌ தூய யோகநெறி சார்ந்தவன்‌. மேலான யோகத்தைப்‌ பெறுவது சிறப்பா? நிலத்தைக்‌ கேட்பது சிறப்பா? UI—59

*விடுக* என்று பாசறை நீங்கி வெளியேவந்து காண்டிக்‌ யென்‌ கேசித்துவஜனைக்‌ கண்டு கெளரவித்து *ஈகுருதட்சணை நிச்சய
மாகத்‌ தருவாயா?’” என *:நிச்சயமாகத்‌ தருவேன்‌”  எனவும்‌, *“மன்ன! நீஆன்ம இன்பத்திற்‌ இளைப்பவன்‌ குருவுக்கு தட்சணை
தர விரும்பினால்‌, எல்லாப்‌ பிறப்புக்களையும்‌ ஒழிக்கும்‌ வித்தை எதுவோ அகளைப்‌ போதிக்கவும்‌” என்று கூறவும்‌, கேசித்துவஜன்‌
சிரித்து, **அடடா! இடையூறு இல்லாத எனது அரசனைக்‌ கேட்காமல்‌ இது ஏன்‌ கேட்டாய்‌ இப்போது? க்ஷத்திரியர்கட்கு
அரசினைவிடப்‌ பிரியமானது வேறொன்றுண்டோ?” என்றான்‌. எனவும்‌ அவன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. 11160

கேசித்துவனே! அரசனைக்‌ கேட்காததற்குக்‌ காரணம்‌ கூறுகிறேன்‌. அறியாமையால்‌ உள்ளவர்க்கன் றி ஞானிகட்கு ஆசைகள்‌ உண்டாகுமா? போரில்‌ பகைவரை அழிக்கும்‌ வீரமும்‌,
அறத்தோடு குடிமக்களை ஓம்புதலும்‌ அரசனுக்கு தருமமாகும்‌, உன்னால்‌ தோற்கடிக்கப்பட்ட எனக்கு (இவ்விரண்டும்‌ இயலா மையின்‌) பாவம்‌ சேராது. 11-61

மன்ன! அரசினை ஏற்று குடிமக்களைக்‌ காத்தல்‌, பசைவரை அழித்தல்‌ எனும்‌ மன்னர்க்குரிய தருமத்தை அதிகாரமில்லா தவன்‌ விடுவதில்‌ தவறில்லை. அதிகாரமுடையவன்‌ விட்டால்தான்‌
பாவம்‌ சேரும்‌. மேலும்‌ ஒருவன்‌ தர ஒருவன்‌ ஏற்கும்‌ அர போகத்துக்கேயன்றி தருமத்துக்குரியதன்று. அரசன்‌ இரந்து
பெற்றுக்‌ கொள்வது மிக்க இழிவாகும்‌, என்‌ _ மந்திரிகள்‌ அரசினைப்‌ பெறுக என்று கூறுவது ஆசையால்‌ கூறுவதன்றி
அறத்தால்‌ அன்று. அது தக்கதல்ல. ஆதலின்‌ நான்‌ அரசனைக்‌ கேட்காமல்‌ ஆன்மஞானத்தைக்‌ கேட்கிறேன்‌. *” 11-62

ஞானிகள்‌ அரசினுக்கு ஆசைப்படுவரோ? நான்‌ எனும்‌ அகங்காரக்‌ கள்ளினைக்‌ குடித்தவர்கள்‌ போன்று, எம்‌ போன்‌
றோர்க்கு ஆசைகள்‌ எதற்கு?’” என்று (காண்டிக்கியன்‌) கூறவும்‌, கேசித்துவஜன்‌ கூறினான்‌; ம.

நான்‌ அறியாமையால்‌ சாவினைத்‌ தாண்டுதற்கு அரசும்‌ வேள்விகளும்‌ செய்துகொண்டிருக்கிறேன்‌. புண்ணியப்‌ பயனை
அனுபவித்து அழிப்பேன்‌. * 1.64

மன்ன! நமது இந்த நிமி மரபின்‌ புனிதமான நற்பேற்றினால்‌ உனக்கு தத்துவ ஞானச்‌ சிந்தை உண்டாயிற்று! இனி உனக்கு
அஞ்ஞானத்தின்‌ இயல்பைக்‌ கூறுகிறேன்‌. கேள்‌/ 111௦

அஞ்ஞானம்‌ எனும்‌ மாபெரும்‌ மரத்தின்‌ உற்பத்திக்குத்‌ தான்‌ (ஆன்மா) அல்லாத உடம்பில்‌ தான்‌ எனும்‌ புத்தியும்‌, தனது இல்லாத (மனைவி, மக்கள்‌, வீடு, சொத்து)வற்றில்‌ தனது எனும்‌ பற்றும்‌, ஆகிய இவ்விரு விதைகளே மூலகாரணங்களாகும்‌. 11-66

மன்ன? பஞ்சபூதங்களாலாள சரீரத்தில்‌, ஆன்மா, அஞ்ஞான
மாகிய செறிந்த இருளினால்‌ சூழப்பட்டு, ₹நான்‌, இது என துடமை’ என்று எல்லையற்ற மயக்கத்தில்‌ சழல்வான்‌.”* 11767

நீர்‌, மண்‌, விண்‌, இ, காற்றெனும்‌ பஞ்சபூதங்கட்கு அப்பாற்‌பட்டு ஒளிரும்‌ ஆன்மா இருக்கும்போது, இவ்வுடம்பினை யார்‌ .
ஆன்மா வென்று கருதுவார்கள்‌? 171.-…68

மன்ன! வீடு, மனைவி முதலியவை உடல்‌ அனுபவிக்கத்‌ தக்கதேயன்றி ஆன்மாவிற்குடையதன்று. அதுபோன்று உடலால்‌
பிறந்த மகன்‌, பேரன்‌ முதலியோரும்‌ ஆன்மாவிற்கு தொடர்‌பின்றி உடல்‌ தொடர்புடையவரே யாவர்‌. மரணத்தையடையும்‌
இவ்வுடலிற்‌ பிறந்த மகன்‌ முதலியோரும்‌ தன்னவர்‌ எனக்‌ கருதுதல்‌ தகாது, எப்போது ஆன்மா வேறு, உடல்வேறு என்று
அறிகின்றானோ அப்போது அனுபவங்கள்‌ ஆன்மாவைத்‌ திண்டாது. அப்படிக்கின்றி இவ்வுடலே ஆன்மா எனக்‌ கருதினால்‌
அனுபவங்களும்‌ தன்னைத்‌ தீண்டும்‌. மண்குடில்‌ மண்ணாலும்‌ நீராலும்‌ பூசப்பட்டிருப்பததைப்போல, பஞ்சபூதச்‌ சேர்க்கையான
இவ்வுடலும்‌ உண்பது, குடிப்பது முதலியவற்றினால்‌ இருக்கும்‌இதில்‌ ஆன்மாவினைப்‌ பெளதீக அனுபவங்கள்‌ தொடாது. 11-69

சம்சாரியாகி (பிறவியுற்றற) வழிப்போக்கனாகிய ஜீவன்‌ ஆயிரக்‌ கணக்கான பிறவிகள்‌ என்னும்‌ பயணங்களையுடைய
வனாக, பிரபஞ்ச வாழ்க்கை என்னும்‌ வழியே சென்று கொண் டிருப்பான்‌. அனாதி கருமவாசனையாகிய தூசி படிந்து
அஞ்ஞானமாகிய களைப்பினையுற்று துன்புறுவான்‌. எப்போதேனும்‌ ஞானமென்னும்‌ வெத்நீரால்‌ கழுவப்பட்டு அக்களைப்‌
பினைத்‌ தீர்ந்து இன்புறுவான்‌. [ர….-70

நல்லோய்‌! ஜீவன்‌ முன்பு நிர்வாண (மோட்ச) ஆனந்த ரூபியாகலின்‌, அஞ்ஞானமாகிய களைப்பினைத்‌ தீர்ந்ததும்‌
முன்னைய நிர்வாண (போட்ச) சுகத்தையே அடைவான்‌,1[[…-7]1

கேள்‌ மன்னனே! நீர்‌ நேரிடையாக நெருப்பினால்‌ தொடடு படாதிருந்தும்‌ குடத்தின்‌ வயிற்றில்‌ இருப்பதினால்தான்‌ மிகக்‌
குஸிர்ச்சியுடையதாயிருந்தும்‌, வெந்து கொதித்துப்‌ பொங்குவது போல, ஆன்மாவும்‌ பிரகிருதி (மாயை) சம்பந்தத்தினால்‌, *:நான்‌
எனது” எனும்‌ அகங்காரத்தால்‌ அழுக்குற்று பிரகிருதியின்‌ தன்மையைப்‌ பெறும்‌. இவற்றிற்கு முரண்பட்ட தன்மையுடைய
ஆன்மா அழிவற்றது. ஆதலின்‌ துன்பங்கட்கு மூலகாரணம்‌ அஞ்ஞானமே. அதைத்‌ தெரிவித்தேன்‌. எல்லாத்‌ துன்பங்‌
களையும்‌ நீக்கும்‌ ஒரே உபாயம்‌ யோகம்தான்‌! வேறொரு உபாயம்‌ இல்லை” எனவும்‌ மகிழ்ந்து, காண்டிக்கியன்‌!
“மகாத்மா! நிமிமரபில்‌ யோக சாத்திரத்தை அறிந்தவன்‌ நீ. எனக்கும்‌ அந்த யோகத்தைத்‌ தெரிவித்தருள்க” எனவும்‌ கேத்‌
துவஜன்‌ அருளோடு கூடியவனாக, “மன்ன! மறுபிறப்பை எய்தாது பிரம்மத்தில்‌ இணைவிக்கும்‌ யோக சாத்திரத்தைச்‌
சொல்கிறேன்‌! கவனமாகக்‌ கேள்‌!” என்று கூறி இவ்விதம்‌ கூறினான்‌, [11-72

உயிர்கள்‌ கட்டு (பந்தம்‌) வீடுபேறு (மோட்சம்‌) அடைவதற்கு மனமே காரணமாகும்‌. புலன்களோடு சேரும்போது பந்தம்‌
அடைகிறது. புலன்களிலிருந்து விடுபடும்போது வீடு?பற்றை யடைகறது. 173

வீடுபேற்றையடைய சாதகன்‌ புலனின்பங்களிலிருந்துமனதை மீட்டு, பரப்பிரம்மத்தை தியானித்தல்‌ வேண்டும்‌. காந்தம்‌
இரும்பைக்‌ கவரிந்து தன்‌ சொரூபத்தைத்‌ தருவதுபோல, பிரம்மம்‌, தன்னை தியானிப்பவனுக்கு தன்‌ சொரூபத்தை
யளிக்கும்‌. யோகம்‌ என்பது யமம்‌, நியமம்‌ (அடக்கம்‌, கட்டுப்‌ பாடு) முதலியவற்றால்‌ மனதைப்‌ பரிசுத்தமாக்கி, அம்மனத்தை
பிரம்மத்தில்‌ நிலை நிறுத்துதல்‌ ஆகும்‌. இத்தகு சிறப்பான யோகத்தை உடையவனே யோகி ஆவான்‌. [1]-.-74

மேலும்‌, பிரம்மச்சரியம்‌ முதலிய யமம்‌ (அஹிம்சை, சத்தியம்‌? திருடாமை, பிரம்மச்சரியம்‌, பரிமிதபரிசிரகம்‌ (மிகு பொருள்‌
விரும்பாமை) என்னும்‌ ஐந்தும்‌, தன்‌ பயிற்சி (ஸ்வாத்யாயம்‌) செளசம்‌ (சுத்தம்‌), சந்தோஷம்‌, தவம்‌, கடவுள்‌ வணக்கம்‌,
முதலிய நியமம்‌ ஐந்தும்‌ பற்றற்றவனா9 மனப்‌ பரிசுத்தத்திற்காக அனுசரிக்க வேண்டும்‌. இவை பற்றுடன்‌ கூடியிருந்தால்‌ றந்த
பேறுகளும்‌, பற்றற்றிருப்பின்‌ வீடு பேறும்‌ நல்கும்‌. இந்த யம, நியமங்களை விடாது பின்பற்றி, ஆசனங்கள்‌ (பத்ரம்‌, பத்மம்‌, சிம்மம்‌, சித்தம்‌ முதலிய யோகாசனங்கள்‌) முதலியவற்றில்‌ _ ஒன்றைப்‌ பின்பற்றி, பிரணாயாமத்தினால்‌ உயிர்ப்பினைத்‌ தன்‌
வயமாக்க வேண்டும்‌. அது சபீஜம்‌, நீர்பீஜம்‌ என இருவகைப்‌ படும்‌. ரேசகம்‌ (மூச்சை வெளியிடுதல்‌) பூரகம்‌ (மூச்சை உள்ளுக்‌
கிழுத்தல்‌) கும்பகம்‌ (மூச்சை அடக்குதல்‌) எனும்‌ மூன்று வகைப்‌ படும்‌. சபீஜம்‌ என்பது உருவத்தை தியானிப்பது, நீர்பீஜம்‌
உருவற்றதை தியானிப்பது. மனதைப்‌ புலன்களிலிருந்து திருப்பி, மனத்துக்குள்‌ கட்டுப்படுத்துதல்‌ பிரத்தியாஹாரம்‌ எனப்படும்‌.
இத்தகைய பிரத்தியாஹாரம்‌ மோட்சத்தை விரும்புபவன்‌ செய்வது இன்றியமையாதது. இதனால்‌ மிகுந்த சஞ்சலமுடைய
இந்திரியங்கள்‌ (புலன்கள்‌) தன்வயம்‌ ஆகும்‌. இது வசமாகா விட்டால்‌ அவன்‌ யோகியாகமாட்டான்‌. பிராணாயாமத்தால்‌
காற்றையும்‌, பிரத்தியாஹாரத்தால்‌ புலன்களையும்‌ வசப்‌ படுத்திய பிறகு சித்தம்‌ (மனம்‌) நலஞ்சார்ந்து அமைதியுறச்‌
செய்யவேண்டும்‌’” என்றலும்‌ காண்டிக்கியன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. 111-.-75

நல்லோய்‌! மனதிற்கு மங்களம்‌ (நலம்‌) தருவதெதுவோ? எது எல்லாவற்றுக்கும்‌ ஆதாரமோ? எதை நினைத்தால்‌ எல்லாத்‌
துன்பங்களும்‌ நீங்குமோ அதனைக்‌ கூறுவாயாக,  111–76

பின்‌, கேசித்துவஜன்‌ அவனுக்குச்‌ சொன்னான்‌. “பிரம்மமே மனதுக்குப்‌ பற்றிடம்‌ ஆகும்‌. அது பரம்‌, அபரம்‌ என இருவகைப்‌
படும்‌. பரம்‌ உருவற்றது. அபரம்‌ உருவுடையது. TH—77

முன்பு நான்‌ கூறிய இரண்டில்‌ பரம்‌ எனப்படுவது பிரகிருதி சம்பந்தமில்லாத (வீடுபேறுற்றற ஆன்மா (பிரம்மம்‌) ஆகும்‌.
உருவற்றது. உபாசனை (தியானம்‌) செய்ய இயலாதது. மற்றது அபரபிரம்மம்‌ என்பது பிரம்மன்‌ (நான்‌ முகன்‌) மூதலிய கட்டுப்‌
(பந்தத்தில்‌) பட்ட ஜீவர்களின்‌ கூட்டம்‌, இது உருவுடையதேனும்‌ மூன்று பாவனைகளுடன்‌ கூடியிருப்பதனால்‌, கைவிடத்‌
தக்கதாகும்‌, மோட்சத்தை விரும்புபவன்‌ இவ்விரண்டையுமே கைவிடவேண்டும்‌. 11478

அந்த மூன்று பாவனைகள்‌ யாதெனச்‌ கூறுகிறேன்‌! பிரம்ம பாவனை, கரும பாவனை, பிரம்ம கரும உபயபாவனை என மூன்றும்‌ அவற்றில்‌, பிரம்ம பாவனையாளர்கள்‌ சனந்தனர்‌ முதலானோர்‌. தேவர்கள்‌ முதல்‌ தாவரங்கள்‌ ஈறாக உள்ள உயிர்கள்‌ யாவும்‌ ௧௬ம பாவனையாளர்கள்‌. பிரம்மா முதலானோர்‌. உபயபாவனை (இரண்டிலும்‌ ஈடுபட்டோர்‌) யாளர்கள்‌. இம்மூவகையினரும்‌, மூன்று பாவனைகள்‌ உடைய வார்கள்‌. ஆதலினாலே இம்‌ மூவகை உருவினையும்‌ போற்றுதல்‌ கூடாது. சனந்தனர்‌ முதலானோர்‌ முன்னைய பிரம்ம கற்பத்தில்‌ சஞ்சரித்தவர்கள்‌ ஆதலின்‌ பாவனையால்‌ . கட்டுப்பட்டனர்‌. பாவனையோடு கூடிய உலகு இருப்பதற்கு எல்லை யாதெனின்‌ ஞான கருமங்கள்‌ தேவமானுடர்களில்‌ ஓழிந்து போவதுதான்‌!
இத்தகைய உலகாகக்‌ காணப்படும்‌ பிரம்மா முதலியவார்‌ களைவிட வேறுபட்ட பரம்‌ எனக்‌ கூறப்படும்‌ உருவற்றது, கட்டற்றதுமான பொருளைப்பற்றி முன்பே குறிப்பிட்டேன்‌ அல்லவா? அதன்‌ சொருபத்தைத்‌ தெளிவாக்குகிறேன்‌. முன்‌ கூறிய தேவர்கள்‌ முதலிய பேதங்கள்‌ இல்லாததாய்‌, அத்தகைய வேறுபாடில்லாததாலே இத்தகையது எனக்‌ கூற முடியாததும்‌, அழிவு முதலிய சிந்தனைகட்கு உட்படாததும்‌, சம்‌( உட்பொருள்‌)
என்ற சொல்லால்‌ குறிப்பிடப்பட இயல்வதுமாய, தன்னாலே உணரப்படுவதும்‌ (ஆத்ம சம்வேத்யம்‌) ஆன, ஞானத்தால்‌ மட்டுமே நிரூபிக்கப்படத்‌ தக்கதும்‌, ஆன பிரம்மம்‌ எனப்‌ பெயரிடப்பட்ட பரம்‌ பொருளாகும்‌.
மேலும்‌, மூவகை பாவனைகளையுடைய, உலகுக்கு வேறு பட்ட உருவற்ற பிரம்மத்தைப்‌ பயின்ற யோகியர்க்கும்‌ சிந்திக்க இயலாததாகும்‌ இனி அபரம்‌ எனச்‌ சொல்லப்பட்ட பிரம்மன்‌,
இந்திரன்‌, பிரஜாபதி (தக்ஷன்‌) முதலானவர்கள்‌ மருத்துக்கள்‌, வசுக்கள்‌ (8) ருத்திரர்‌ (11) ஆதித்தர்கள்‌ (12) நட்சத்திரங்கள்‌,
கிரகங்கள்‌ (9) கந்தருவர்‌, யட்சார்‌, இராக்கதர்‌, அசுரர்கள்‌, முதலிய எல்லா தேவர்களும்‌, மனிதர்‌, விலங்கு, மலை, கடல்‌
மரம்‌ முதலியனவும்‌, மேலும்‌ ஒருகால்‌, இருகால்‌, பலகால்‌, காலற்றவை ஆகிய உயிர்களும்‌, அவை பிறத்தற்கு காரணமாகித்‌
திகழ்கின்ற, பிரதானம்‌ முதல்‌, விசேடம்‌ வரையுள்ள அறிவுடைய, அறிவிலாத பிரபஞ்சத்திலுள்ள உயிர்த்‌ தொகைகள்‌ பருவுருவுடை
யவர்கள்‌ யாவும்‌ யோக முயற்சியாளனுக்குச்‌ சிந்தித்தற்குரிய தாகும்‌. இவை மோட்சம்‌ தர வல்லன அன்று, இவை திருமாலின்‌
உடலாக அமையும்‌. கருமத்தினால்‌ சூழப்பட்ட ஆன்மா (வன்‌) பிறப்பு, இறப்புக்கள்‌ எனும்‌ பிறவித்‌ துன்பங்களில்‌ உழன்று,
வினைக்கேற்ற உடல்கள்‌ எடுத்து, அறிவின்‌: தராதரங்கட்‌ கேற்ப, ஏற்றத்தாழ்வுகளை அடையும்‌. அதன்‌ தன்மையைக்‌ கேட்பாயாக. 1711-79

(ஆத்ம சைதன்யத்தின்‌ (அறிவின்‌) தராதரமாவது) உயிரற்றவைகளில்‌ ஓரளவு அந்த சக்தி (ஆற்றல்‌) உண்டு,
தாவரங்கட்கு அதைவிட அதிகமுண்டு. மண்புழு, பூரான்‌, முதலிய ஊர்வனவற்றுக்கு அதைவிட அதிக அறிவுண்டு. பறவை
கட்கு அதைவிட அதிகம்‌, விலங்குகட்கு அதைவிடஅதிகம்‌ உண்டு. யானை,நரி,பச முதலியவற்றுக்கு அதைவிட அதிகமுண்டு. அதை
விட தேவர்கட்கு அதிகமாகும்‌, இந்திரனுக்கு அதைவிட அதிகம்‌.தட்சபிராஜாபதிக்கு அதைவிட அதிகம்‌, அதைவிட இரணிய
கருப்ப(பிரம்மா)னுக்கு அதிக ஆன்ம ஆற்றல்‌ உண்டு. 111–80

ஆகாயம்‌ எவ்விதம்‌ எல்லாவற்றிலும்‌ நிறைத்திருக்குமே அது போல விஷ்ணு (இிருமால்‌) எல்லா உருவங்களிலும்‌ சிந்தனைக்‌
கெட்டாத ஆற்றல்‌ மூலமாக நிறைந்திருப்பான்‌. அந்த உருவங்கள்‌ எல்லாம்‌ அவனுடைய உடலாகும்‌. 111..-8!

முன்பு யான்‌ கூறிய பரம்‌ என்ற குறியீட்டையுடைய, இரண்‌டாவது (தத்துவமாக) யோகிகள்‌ தியாளத்திற்குரியதாக,
உருவற்ற மற்றொரு சொரூபம்‌ *விஷ்ணு’ எனும்‌ பெயரில்‌ உண்டு. அதையே தொல்லறிஞர்கள்‌ என்பர்‌. ௮ச்‌
சொரூபமே எல்லாச்‌ சக்திகட்கும்‌ மூலமாக, முன்‌ கூறிய பிரபஞ்ச உருவத்தைவிட முரணுடையதாக, கல்யாணகுணங்களும்‌ எல்லை
யற்ற செல்வங்களும்‌ உடையதாக) மிகுந்த பெருமைபெற்‌றிலங்கும்‌, அத்தகைய ஆற்றல்‌ உடைய அந்த பிரம்மம்‌, உலகைக்‌
காப்பாற்ற தன்‌ திருவிளையாடல்‌ காரணமாக, தேவர்‌, மனிதர்‌, விலங்கு முதலிய பெயர்களோடும்‌ உருவகிகளோடும்‌ அவதாரம்‌ எடுக்கும்‌. 1[1–62

(நம்போல) கரும (வினைக்&டான) பலனைத்‌ துய்ப்பதற்காக அன்றி, (உயிர்களை உய்விக்க) அவன்‌ எல்லாக்‌ குலத்திலும்‌
பிறப்பெடுப்பான்‌. பிறந்த அவன்‌ செயல்கள்‌, இராவணன்‌முதலானோர்களால்‌ குறைபாடுறுவதில்லை, 11183

அத்தகைய பரமேசுவரனுக்கு, பக்த, முத்த (கட்டு, வீடு பேறு) முதலிய பல்வேறு உருவங்களையுடைய முமுட்சு (வீடு
பேற்றைத்‌ தேடுபவன்‌)விற்கு அறிவைப்பெற, பர, வியூக, விபவ, முதலிய உருவங்களே சித்திக்கத்தக்கன. சுடரும்‌ நெருப்பானது
காய்ந்த புதரினை எப்படி எரிக்குமோ அதுபோல உள்ளத்துறையும்‌ இறைவன்‌, யோகியரின்‌ எல்லாப்‌ பாவங்களையும்‌
சுட்டெரிப்பான்‌. ஆதலின்‌, எல்லா ஆற்றல்கட்கும்‌ உறைவிட,மான அப்பரமான்மாவிடம்‌, உள்ளத்தை நிறுத்துதல்‌ தூய
தாரணை எனப்படும்‌. எல்லாப்‌ பழ்றுக்களையும்‌ நாடி. ஓடம்‌ சபலமுடைய மனத்திற்கு, மூன்று பாவனைகள்‌) (பிரம்ம, கரும
பிரம்ம க௫ம பாவனைகள்‌) கடந்தவனாகுிய அத்தேவன்‌நலமீந்து வீடுபேறருள்வான்‌. மற்ற (பிரம்மா, சிவன்‌ முதலிய,
தேவர்கள்‌ கருமத்திற்குட்பட்டவர்கள்‌ ஆதலின்‌ மனதிற்கு பற்றுக்‌ கோடாகமாட்டார்கள்‌. பற்றுக்‌ கோடில்லாத தியானம்‌ அமை
யாது. ஆதலின்‌, தாரணை தியானங்கட்குத்‌ தென்படும்‌ தூய, மற்றொரு பரு உருவம்‌, அப்பிரம்மத்திற்கு உண்டு, அதை
விரிவாகக்‌ கூறுகிறேன்‌ கேள்‌! 111-984

சரத்கால சந்திரனின்‌ மின்னொளியை வென்ற கருணைமிக்க மூகமுடையவனும்‌, பெரிய செந்தாமரைகள்‌ போன்ற கண்களை
யுடையவனும்‌, அழகிய கன்னங்களும்‌ நுதலும்‌ உடையவனும்‌, மகரகுண்டலங்களை யணிந்துள்ளவனும்‌, கமுசினை வென்ற
எழில்மிகு கழுத்தும்‌, மார்பில்‌ இருவும்‌ மறுவும்‌ மருவியவனை, ஆழமான நாபி (உந்தி)யும்‌, மும்மடிப்புகளையுடைய சன்னமான
வயிறுடையவனும்‌, . மூழங்காலளவு நீண்ட நான்கு தோள்களை யுடையவனும்‌, மானையின்‌ [துதிக்கை போன்ற துடைகள்‌
அழகிய தளிர்கள்‌ போன்ற பாதங்களையுடையவனும்‌, பொன்‌ னாடை, மகுடம்‌, முத்துமாலை முதலிய அணிகளும்‌, சங்கு
சக்கரம்‌ முதலிய ஆயுதங்களும்‌ உடையவனும்‌, ஆன திருமாலைத்‌ தியானிக்க வேண்டும்‌. 17… 85

திருமாலை இவ்விதம்‌ தியானம்‌ செய்யவேண்டும்‌. எவ்விதம்‌ எனின்‌, முதலில்‌ ஒரு உறுப்பை மனதில்‌ அழுத்தமாகப்‌ பதித்துக்‌
கொண்டு, அதன்பின்‌ அதைத்‌ தொடர்ந்து மற்ற உறுப்புக்களையும்‌ பாவனை செய்து முழு உருவமும்‌ மனத்தில்‌ நிலைபெறச்‌
செய்யமேண்டும்‌. தான்‌ நடந்தாலும்‌ இடந்தாலும்‌ எப்பணி செய்தாலும்‌ விடாது தன்‌ மனத்தில்‌ இறைவனை இருத்திக்‌
கொள்ளவேண்டும்‌. இவ்விதம்‌ இலைவனோடிணைந்து அஞ்ஞானம்‌ அழிந்து, கல்யாண குணங்களுடைய திருமாலும்‌
தானும்‌ ஒன்றேயான நிலைபெற வேண்டும்‌. அப்படி இறைவனளோடிணைந்தவளை எவரும்‌ பிரித்திடஇயலாது. 11186

மன்னனே! (காண்டிக்கியனே) இவ்விதமாக கட்டற்ற வீடு பேற்றினை அளிக்கும்‌ அங்காட்டகம்‌, எனும்‌ பெயரையுடைய
யோகத்தை விரிவாகச்‌ சொன்னேன்‌. இனியும்‌ எனக்குச்‌ செய்யத்‌ தக்கது யாதெனக்‌ கூறுவாயாக” என்றான்‌. IU—87

எனவும்‌, “மன்ன/ (கேசித்துவஜனே) நற்பேறடைந்தேன்‌ எனக்கு இதைவிட வேண்டத்தக்கதென்ன இருக்கிறது” என்று
கூறி, அவனை வணங்க, வேண்டாம்‌ என்று மறித்தும்‌ தானே ஈந்த தனது அரசனை தன்‌ மகனுக்கு அளித்துவிட்டு 11-68

புரோகிதர்‌, மந்திர முதலானவர்களிடம்‌, இளமையடைட
யாத தன்‌ மகனை ஒப்புவித்து, தன்‌ மகனிடம்‌ அவர்கட்கு கொடை, பரிசு முதலியவற்றால்‌ பேண வேண்டுமெனக்‌ கூறி, தான்‌ கோவிந்த திருவடிகளை நினைந்த உள்ளத்தவனாக; காண்‌டிக்கியன்‌ இருவிளைநீத்து,அக்காடே தபோவ்னமாகஅமையச்சில
காலத்தில்‌ கேசித்துவஜன்‌ சொன்ன பக்தியோகத்தில்‌ நிலைத்து திருமாலுடன்‌ இரண்டறக்‌ கலந்தின்புற்றான்‌.
கேசித்துவஜனும்‌, அவன்‌ மகளையும்‌, மந்திரியையும்‌ அரசினை நடத்துமாறு ஒப்படைத்துவிட்டு, மீண்டும்‌ மிதிலை
புக்கு, யோகத்தில்நிலைத்து இருவினை தீர நன்னெறியில்‌ ஆண்டு வந்தான்‌.
ஆதலின்‌ பாண்டிய மன்னனே! அந்த திருமாலே நீ அடையத்‌ தக்கவன்‌, பரந்தாமனையே வணங்குவாயாக! இது பக்தி யோகம்‌
ஆகும்‌. இதிலும்‌ ஒரு குறையுண்டு. இடையூறு ஏற்படின்‌ மறுபிறவி உண்டு. அதன்‌ பின்‌ முக்தியடையலாம்‌. ஆதலினாலே, இதை
விட எளியவழி, அக்‌ (குருட்சேத்திர) போர்க்களத்தில்‌ கண்ணன்‌ அர்சுணனுக்கு உபதேசித்த சரணாகதி தருமமேயாகும்‌. ” *என்றிவ்‌
வாறு, பரிபக்குவமான மனத்தை உடைய பாண்டியனுச்கு, எண்ணெமுந்து (ஓம்‌ நாராயணாயா நம) மந்திரத்சையும்‌துயத்தை (இரட்டை) யும்‌ அருளிச்‌ செய்து, சிறந்த வைணவளாக்க, பெரியாழ்வார்‌ மகிழ்ந்தார்‌, [1[–69

வருள மாலையணிந்த (நம்மாழ்வார்‌) உடைய இதயத்‌ துறைபவனே! ஓளிறும்‌ ஞாயிறும்‌ திங்களும்‌ இரு கண்களாக
உடையவனே! தாமரையிற்பிறந்தவன்‌ (பிரம்மா) காமனைக்‌ தூய்ந்தவன்‌ (சிவன்‌) இருவரையும்‌ படைத்தவனே! கொடிய .
அரக்கனாகிய கேசியைக்‌ கொன்றவனே! கோழிக்‌ கொடியை யுடைய (முருக)னின்‌ தெப்ப உற்சவத்திலும்‌ கோடையில்‌ தெப்ப
உற்சவத்திலும்‌ ஈடுபாடுடையவனே! 11-90

அருச்சுணனுக்குத்‌ தேரோட்டியவனே! இடைச்சிறுவரோடி.ணைந்‌ தாடுவதில்‌ விருப்பமுள்ளவனே! பிரகலாதனின்‌ பிரார்‌
தனைப்‌ பாடலைக்‌ கேட்டு புளகாங்கெதமுற்ற உடலையுடை யவனே.
அரவின்‌ பாயலில்‌ படுத்தவனே! வானமும்‌ மண்ணும்‌ அளந்த பாதங்களையுடையவனே! பக்தர்களின்‌ மனமாசுகளைப்‌ போக்கு
பவனே]! காளிய நாகப்.படத்தின்‌ மேலே நாட்டியங்கள்‌ ஆடிய ஸ்ரீவெங்கடேசா! 11192

இது பிரகரேசுவரபாத்ர முதலிய உத்கல மன்னர்களால்‌ பாதுகாக்கப்பட்ட விண்தொடும்‌, இறமையான யந்திரங்களை
யுடைய *கொண்டபல்லி’ கோட்டையைக்‌ கவர்நீத பாம்பொச்த வாளினளையும்‌ வலமிக்க தோளினையும்‌ உடையகிருஷ்ணதேவராய
மன்னன்‌ இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக்கொடுத் தனை) எனும்‌ காவியத்தில்‌ மூன்றாவது அத்தியாயமாகப்‌ பொலிவுறும்‌. 111–93

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)-இரண்டாம் அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

இரண்டாம்‌ அத்தியாயம்‌

இருமகள்‌ கண்கள்‌ என்னும்‌ குவளைமலர்கட்கு, நிலவாகிய புன்னகை இந்தும்‌ ஒளி பொருந்திய முகத்தையுடையவனே.
அசுரர்களால்‌ கவரப்பட்ட தேவர்களின்‌ செல்வத்தை மீட்டித்‌ தந்தவனே! திருவேங்கட வா! II—1

கேட்பாயாக! அவ்வமயம்‌ பாண்டிய மண்டலத்தில்‌ 7-2

எந்த நகரில்‌, நங்கையர்‌ முலைத்தடத்தில்‌ கற்பூரம்‌, புது முத்துமாலையின்‌ சிப்பிகளின்‌ புலவு நாற்றத்தைப்‌ போக்குமோ,
எந்த நகரில்‌, சந்தன மரக்‌ கட்டைகள்‌ முதலில்‌ வீட்டு உத்தரங்‌களாகப்‌ போடப்பட்டு மிகுந்தவை பிற நாடுகட்கு ஏற்றுமதி
செய்யப்படுமோ.-எந்த நகரில்‌, ஈழநாட்டின்‌ வேழங்கள்‌ (சிங்கள தேசயானைகள்‌) வடதிசையானைகளை வசந்த காலத்தென்றல்‌
வீசி மருளச்‌ செய்யுமோ, எந்த நகரில்‌, மூன்னைய மன்னர்கள்‌ அணிந்து எறிந்த மரகத மணிகளை பிற நாட்டரசர்கள்‌சூடுவரோ.
குரக்கரசனால்‌ (சுக்கிரிவனால்‌) பாராட்டப்பட்டுக்‌ கூறப்பட்ட மலை போன்று பொன்னும்‌ முத்துக்களும்‌ உடைய
கதவுகளையுடைய (இராமயாணத்தில்‌ கவாடபுரம்‌ என்று சிறப்பிக்கப்பட்ட) வாசலைக்‌ கொண்ட உயர்ந்த கோட்டையை உடையதுமான மரங்கள்‌ செறிந்துள்ள தென்‌ மதுரை சிறப்புற்றிலங்கியது. 11–3

காலனைக்‌ காய்ந்தவனாகிய சிவன்‌ முப்புரம்‌ எரித்தபோது மேருமலையை வளைத்து வில்லாக்கிய பின்‌ விட்டுச்‌ சென்ற
பொன்மயமான மலையோ எனும்படியாக அந்நகரினைச்‌ சுற்றிலும்பொற்கோட்டை திகழ்ந்தது. 1-4

அந்நகரின்‌ கோட்டை மதிற்சகெரங்களின்‌ வரிசை பொன்‌ கதிர்கள்திகழ உராய்வினால்‌ நுண்ணியதாகத்‌ தென்படுவது,
வானத்‌ திருமகள்‌ சூட்டிய வண்ணச்சம்பங்சிப்‌ பூமாவை போலத்‌ தோன்றும்‌, 175

அகழியில்‌ இத்நகர்ப்பெண்டிர்‌ புனல்விளையாட்டின்போது, அவர்களது பேரெழிற்‌ கொங்கையிற்‌ பூசிய குங்குமமும்‌ அகிலும்‌
கஸ்தூரியும்‌ சந்தனமும்‌ ஆகிய சேற்றின்‌ மணம்‌ நீரில்‌ கலந்ததால்‌, பாதாள உலகத்திலுள்ள தேவநதிக்கும்‌ போகவதி என்ற பெயா்‌
பொருத்தமாக ஏற்பட்டது.
(மணம்‌ போகப்‌ பொருளாதலின்‌ அது பெற்றமையால்‌ போகவதி என்ற பெயர்‌ பொருத்தம்‌ என்பது கருத்து) 77.6

பாம்புகள்‌ (நாகம்‌) பாதாளத்திலிருந்து வந்து பூமியையும்‌ கைப்பற்ற நினைத்து அந்தஅகழி நீரில்‌ எறி மேல்வர முயலவும்‌,
ஆங்குள்‌ ள கருடபச்சைகற்களால்‌ ஆனபடித்துறைகளைக்‌ கண்டதும்‌ பயந்து நிற்காமல்‌ உடனே மூழ்இவிடும்‌.

(பாம்புக்கு கருடன்‌ எதிரியாதலின்‌ என்பது கருத்து 2-~7

இளம்‌ பாசியும்‌. தாமரை இலைகளும்‌ மிடைந்து மரகத வண்ணத்திற்‌ பொலியும்‌ அந்த அகழி நீர்‌, முன்‌ பிரம்மதேவன்‌
கோட்டையை பொன்னாக்குவதற்காகப்‌ பிழிந்த மருந்திலைகளின்‌ சாறு போலத்தோன்றும்‌. [8

உறுதியான கால்கோள்‌ (அஸ்திவாரம்‌) உடைய அந்த கோட்டை என்னும்‌ மல்லன்‌, தன்‌ கைகளாகிய பீரங்கிகளால்‌
சுவர்க்கம்‌ எனும்‌ மல்லனைப்‌ போருக்கழைத்து ஆகாய கங்கையாகிய கச்சையிடையே பிணங்கி தரக்கப்போட முயன்றது
போலச்‌ சிறப்புற்றிலங்கும்‌. 1-9

நிமிர்ந்த கொங்கைபோன்ற இரும்புப்‌ ுூண்களையுடைய மார்பு போன்ற கதவினளைக்‌ கொண்ட சந்தனக்‌ கட்டை
(தாழ்ப்பாள்‌) பொன்‌ (தகடு)களையுடைய நகரம்‌ ஆகிய நங்கையின்‌ எழில்கண்டு, வாசலிலேயே விடாமல்‌ எப்போதம்‌ சூரிய
சந்திரார்களாகிய (விடர்‌)கள்‌ சுற்றித்திரிவார்கள்‌. []….-10

மாளிகையின்‌ மேல்‌ உப்பரிகைகளில்‌ ம௫ழ்த்திருக்கும்‌ இளநங்கையர்‌ கலவி வேகத்தில்‌ அறுந்து வீழ்த்த தூயமுத்துமாலை
யின்‌ பெரியமுத்துக்கள்‌ சிதறி விழ, காலையில்‌ பணிமகளிர்‌ சூடிக்களைந்த பூக்களுடன்‌ சேர்த்து, பெருக்கஎறியவும்‌, அவை
கீழே உள்ள முகில்களின்‌ வயிற்றிலடங்கியிருந்து சமயம்‌ வரும்‌ போது மழையுடன்‌ 8ழே விழுவதால்தான்‌ மு௫லிலும்‌ முத்துக்கள்‌
பிறக்கும்‌ என்பதன்றி, கடலில்‌ அன்றி வேறெவ்விடத்தாவது முத்துக்கள்‌ பிறக்குமா? [[..-11

(கடலில்‌ சப்பல்களில்‌ செல்லும்‌ வணிகர்கள்‌, நடுக்கடலில்‌ தத்தமது புதிய சரக்குகளின்‌ மாதிரி (சாம்பிள்‌) களை துணியில்‌
முடிந்து ஒரு மூங்கிற்கழியில்‌ முடிச்சினை வைத்து எதிரேயுள்ள கப்பலில்‌ உள்ளவர்கட்கு நீட்டித்தருவர்‌. அவர்களும்‌ அவ்வாறே
இவர்கள்‌ பக்கம்‌ கழியிற்கட்டிய மாதிரியைத்‌ தருவர்‌. இவ்விதம்‌ பரஸ்பரம்‌ பரிமாறிக்கொள்வது கடல்‌ வணிகர்களின்‌ பழஙிகால
வழக்கம்‌ (அதுபோலவே)

உயர்ந்த மேடைகள்‌, ஆகாய கங்கை என்னும்‌ கடலில்‌ பிரதிபலித்து கப்பல்கள்‌ போலவும்‌, (மேடையிலுள்ள) மகளிர்கள்‌
வணிகர்கள்‌ போலவும்‌, அந்நகரக்‌ கொடிக்கம்பங்களில்‌ கட்டிய கொடி (பதாகை)கள்‌ காற்றில்‌ அசைந்து தத்தமது கழிகளில்‌
முடிந்துவைத்த தமது தீவில்‌ (நாட்டில்‌) உள்ள புதிய சரக்குகளின்‌ மாதிரிகள்‌ பொதிந்த பட்டுத்துணிகள்‌ போலவும்‌, சுவர்க்க
மும்‌ மதுராபுரியும்‌ பரஸ்பரம்‌ வணிகம்‌ செய்வது போலத்‌ தோன்றும்‌. 11-12

மேடைகளில்‌ உள்ள காலதர்‌ (ஜன்னல்‌)களில்‌ இளம்‌ விண்மீன்‌ (நட்சத்திரம்‌) கள்‌ (வழிதவறிப்‌) புகவும்‌, அங்குள்ள
மகளிர்‌ அதைப்பிடிக்க கதவினை மூடவும்‌, (அவ்விண்மீன்கள்‌) தம்மை: முத்துக்கள்‌ என நினைத்து துளையிடுவார்கள்‌. என
அஞ்சு, அழகிய விதான (மேல்கட்டு)த்தில்‌ தொங்கும்‌ முத்து மாலைகளோடு தாமும்‌ ஒரு முத்து மாலையாக ஓளித்திருந்து
விட்டு, பொமுதானதும்‌, கலவியிற்களைத்த மகளிர்‌ (காற்று வரட்டும்‌ என) கதவுகளைத்‌ திறந்ததுமே விடுபட்டு வெளியேறும்‌. W—13

மயிற்‌ பீலியொத்த கூந்தலையுடைய மகளிர்கள்‌ அத்ரசுற மாளிகைகளின்‌ கீழே முழக்கத்துடன்‌ திரியும்‌ முகல்களை,
மாளிகையில்‌ உள்ள தமது மயில்கட்கு நடனம்‌ கற்பிக்க வேண்டி.
*மேகரஞ்சனி: ராகம்‌ பாடி முகில்களை மேலே வரவழைப்பார்கள்‌.
(மேகரஞ்ஜனி ராகம்‌ பாடினால்‌ முகில்கள்‌ ஒன்று திரண்டு வந்து மழைபொழியும்‌ என்பது மரபு. இந்தராகம்‌ பதினைழ்‌ தாவது
மெளகர்த்தா ராகமாகும்‌. சரிகம நிப–பநிமகரி௪ — என்பது இந்த ராகம்‌.) 11-14

மதுரைத்‌ திருமகளின்கரங்களில்‌ மிளிரும்‌ தங்கச்‌ சங்கிளியின்‌ ஓலி கேட்டு, சுவர்க்கத்‌ திருமகள்‌ என்னவென்று தன்‌ முகத்தை
மேல்நோக்கிப்‌ பார்க்கவும்ம துரைமகள்‌ சுவர்க்கமகளின்‌ கண்களை விளையாட்டாகப்‌ பொத்தியது போல,மதுரை நகர்மாளிகைகவில்‌
உள்ள கொடிகள்‌ கிண்கிணி ஒலிப்ப சுவர்க்க மாளிகைச்‌ சிகரங்‌களின்‌ தாமரை மொட்டுகள்‌ போன்ற கலசங்களை மூடும்‌ 11-15

மேடைகளில்‌ உள்ள குலமகளிர்‌, ஏழு முனிவர்‌ (சப்தரிஷிகள்‌)களின்‌ மனைவியர்‌ அருளோடு புலவி நீக்கி (இரவு வறிதே கழிந்த
தாலும்‌ விடியல்‌ நேரமாயதாலும்‌) அறிவுறுத்தவும்‌ விரைந்து மேகங்களிலுள்ள மின்னற்சுடரில்‌ வட்டில்‌ வைத்து அதன்‌ அடியில்‌
படிந்த கண்மையால்‌ அஞ்சனம்‌ தட்டியும்‌, இளஞாயிற்றின்‌ சூட்டில்‌ கரைந்த புனுகைப்‌ பூசிக்கொண்டு, உதய சநீதிரனில்‌
படச்செய்து செங்குவளை மலார்களைவிரியசீ செய்து கூந்தலில்‌ அணிந்துகொண்டு கணவளைக்‌ கூடியின்‌ புறுவார்கள்‌.
(மகளிர்‌ என்ற பன்மைக்கு கணவர்கள்‌ என்ற பன்மைச்‌ சொற்‌ கூறுவது சிறப்பின்மையால்‌ கணவன்‌ என்ற ஒருமை
மூலமே விளக்கிய நயம்‌ கவனித்தற்குரியது) IT—16

ஞாயிறு என்னும்‌ விளக்கை கொடித்துகில்‌ முனையால்‌ மறைத்து, நீரூற்று யந்திரங்களாகிய வியர்வை யோடு கூடி;
புறாக்களின்‌ மெல்லொலிச்‌ சொல்லினால்‌ பேச, .சுவர்க்க நாயகனை மதுரைத்‌ திருமகள்‌ புதுமணப்பெண்போல, மணப்‌
புகையாகய இரவில்‌, கூரை முகடாகிய தோழியர்‌ உய்ப்ப கலத்தின்‌ புறுவாள்‌; 11-17

மதுரைப்பட்டினத்திற்குமேல்‌ நேராகச்‌ சூரியன்‌ செல்லும்‌ போது நடுப்பகலில்‌ ( உச்சிவேளையில்‌) பிரம்மதேவன்‌ (காலை,
மாலைச்‌ சந்திகளுக்கு செம்மை வைத்தாற்போல மத்தியான வேளைக்கு செம்மை வைக்க) மறந்துபோன குறையைதீ
இர்ப்பதற்காக, செம்மை சோர்த்தாற்போல நகர மாளிகைக்‌ கோபுரங்களில்‌ செதுக்கப்பட்ட பதுமராக (செம்மணி) க்கதிர்கள்‌
பட்டு மிகுந்த சிகப்பாகத்‌ திகழ்வான்‌, 11-18

ஈழங்காய்‌! உன்‌ பூ மாலைக்கு விலை என்ன?
“என்‌ (இடம்‌ சேர்தற்குரிய) மாலை (நேரத்திற்கு) விலை மதிக்க யாரால்‌ இயலும்‌?”
“அங்குவளை”  எங்கே? மலர்க்‌ கூந்தலோய்‌?”,
இங்கு “வளை” கழன்ற இயல்புதான்‌.” ”
கடிமிக்க தாழம்பூ தருக! நங்காய்‌”
கடிமிக்க தென்பதை பின்னர்‌ பார்ப்போம்‌”
சாதி உள்ளவோ? தாமரைக்‌ கண்ணாய்‌”: *
சாதிகள்‌ இருப்பது அரிதாகுமே?’ ”.
இவ்விதம்‌ முற்கூறிய சொல்லில்‌ உள்ள காமக் குறிப்புடைய சொற்கேற்ப சாதுரியமாகப்‌ பதிலளித்து .பூக்களைஅந்நகரப்‌
பூக்காரிகள்‌ விற்பனை செய்வர்‌. 11… 19

கடி -மணம்‌, கடித்தல்‌, வளை — வளையல்‌, குவளை.-குவளைமலாா்‌
சாதி — சாதிமல்லிகை– பத்மினி, சங்கிளி முதலிய பெண்டிர்‌ வகைகள்‌

சுவைஞர்‌ (ரசிகர்‌)களின்‌ காதற்குறிப்புடைய சொற்கள்‌ இன்பம்‌ ஊட்ட, கதம்பமாலை தொடுக்கும்‌ போது தமது மனம்‌
உருகுதலைக்காட்டும்‌ கடைக்‌ கண்பார்வைகளும்‌, பதில்‌ தரும்‌
தமது இடை இடையே நகைக்கும்‌ நகை களும்‌ கழுநீர்ப்பூக்களும்‌ மல்லிகைப்‌ பூக்களும்‌ என மயங்கி வெற்றிடம்‌ தொடுத்து வெறும்‌
நூலை மட்டும்‌ (மாலை என்று) தந்து (பின்‌ தம்‌ பிழையுணர்ந்து நாணத்துடன்‌ பூக்காரிகள்‌ இருப்பார்கள்‌. 11-20

தாமரை முகத்தவளே  இந்நகரில்‌ நீயே கெட்டிக்காரி
(பூத்தொடுப்பதில்‌ –. கஈதல்‌ களியாட்டில்‌ என்பது கருத்து) என்று தெரிந்து இங்கே வரவேண்டியதாயிற்று .
நங்காய்‌! யாமம்‌” வரைக்கும்‌ இருக்கும்‌ கடிமணம்‌ (மகழ்ச்சி) வாசனைமலர்‌ நன்றா? நாழிகை வரையிருக்கும்‌ மலர்‌ நன்றா?” *
“நாங்கள்‌ கேட்டால்‌ நீ£ஃ ருது (பருவ) வேளையச்‌ சொல்கிறாயே? அது வரை காத்திருக்க முடியுமா?”
*பக்சுத்தில்‌ வரக்‌ கூடாதா பந்தில்‌ கைப்பட்டால்‌ வாடிப்‌ போகுமா என்ன! மான்‌ விழியாய்‌; என்றிவ்வாறு பரிபாடையாக (குறிப்பு மொழியில்விடர்கள்‌) பேச, முந்தானையால்‌ வாயிதழ்‌ களைமூடி அடக்கிய சிரிப்பு கண்கள்‌ மூலமாக வெளிப்பட்டுப்‌
பொங்கிவர பூக்களை நனைப்பது போல தண்ணீர்‌ தெளிக்கவும்‌ அந்த சரசமான (காதற்‌ சுவைமிக்க) தண்ணீரே அந்த விடலைகளை மோகங்‌ கொள்ளச்‌ செய்யும்‌. 2-21

“இதோ! என்று சொல்லும்போது முல்லைப்பல்‌ வரிசை ஒளியோடு கூடிய அசையாத கூரிய பார்வையால்‌ முன்பே (உளம்‌) தடுமாறவும்‌-
விலை ஒப்பாது அப்புறம்‌ சென்றால்‌, இதழ்‌ (உதடு) மடித்து சினங்கலந்த பார்வை வீசிட (முகங்கோணக்கூடாதென்ற
தாட்சண்யத்தினால்‌) கண்ணோட்டமுடன்‌ திரும்பிவரச்‌ செய்து,
திரும்பிவந்தவரைப்‌ புன்‌ முறுவல்‌ பேசும்‌ ஓய்யாரப்‌ பார்வையால்‌ உண்டு, இல்லை என்று எதுவும்‌ பேச முடியாமல்‌ செய்து.
இவளதுதான்‌ ஆகுமோ? எங்களது ஆகாதோ? என்ற பிற பெண்டிரைச்‌ சக்களத்திகளாக்கப்‌ பேசும்‌ துடுக்கான பேச்சுக்கள்‌ மனம்‌ மகிழச்‌ செய்ய, சாதுரியப்பேச்சு, ஒய்யாரம்‌, மேனியெழில்‌ ஆகியவற்றால்‌ கவர்ந்து, முன்பு பணம்‌ தந்தமங்கையை மறந்து
நிற்க, தான்‌ மன்மதனுக்கு (மலர்‌) அம்புகளைத்‌ தரும்‌ இரதி தேவியைப்போல விடர்களுக்கு அவர்கள்‌ (பூக்காரிகள்‌) விரை மலர்கள்‌ தருவார்கள்‌.–11.22

நிறைந்த கற்பூரத்துண்டுகள்‌ தாரகைகள்‌ ஆகவும்‌, புனுகு ஜவ்வாது நிறைந்த மினுமினுக்கும்‌ இளஞ்சிகப்பு (பாடலம்‌) நிற
முடைய தந்தச்‌ மிழ்‌, சந்திரனாசவும்‌, குங்குமம்‌ தடவிய சேலையின்‌ செம்மை படிந்து, ஒருபுதிய சந்தியாகாலம்‌ போலத்‌
தோன்றுமாறு அந்நகர வெளி வீதிகளில்‌ சந்திரகாந்தக்‌ கல்‌ இண்ணைகளில்‌ மணப்பொருள்கள்‌ (வாசனைப்‌ பொடிகள்‌)
விற்கும்‌ மகளிர்‌ திகழ்வார்கள்‌. 11-23

தன்‌ மேலிருக்கும்‌ மாவுத்தனின்‌ கட்டளைகட்கு செவி கொடுத்து மேல்நோக்கி வெட்ட வெளியைச்‌ சீறி
முதுகில்‌ உராயச்‌ சென்று விண்ணதிர அதட்டும்‌ (கழே உள்ள) ஈட்டிக்காரனை தளைப்பட்ட பாதங்களால்‌ தாண்டி விரட்டி,
விரட்டி, ஈரத்தை உணர்ந்து வீட்டு வாசல்‌ இது எனத்‌ தெரிந்து தின்று அங்குள்ள மக்களைப்‌ பிடிக்க விரும்பி துதிக்கையை நீட்டி
நீட்டி, தப்பட்டை ஒலிக்கு மதநீர்‌ பெருக்கெடுக்கவும்‌, வாத்தியம்‌ வாசிப்பவனை கற்களால்‌ எறிந்து எறிந்து, மூங்கிற்கமி அடிகட்கு
அஞ்சி ஊருக்கு வெளியே வந்து, பிற யானைகளின்‌ பிளிறல்‌ கேட்டுப்‌ போகாமல்‌ திரும்பி வந்து, கண்களால்‌ எதிரிகளை
வெல்ல அனுப்பும்‌ சக்தியைப்‌ போல்‌ கூர்ந்து பார்த்து, பிடி (பெண்யானை) யின்‌ வசப்பட்டு (பிடிப்பட்டு) த்திரும்பி
ஊருக்குள்‌ வருவதாக மதயானை கம்பீரமாக இருக்கும்‌. 11-24

தன்மேல்‌ எப்போதும்‌ வாரி எறிந்த தரசியின்‌ மேல்‌ (பறவைகள்‌ கடித்து) எறிந்த (யாளைகட்டும்‌) கம்பமான மரத்தின்‌ பழங்‌
களிலிருந்து உதிர்ந்த விதைகள்‌, அதனுடைய (யானையின்‌) துதிக்கை நீரால்‌ நனைந்து முளைக்கவும்‌, நெருங்க முடியாதபடி.
உயிருடைய மலைகளோ எனும்படியாக அந்நகர நந்‌ தவனங்களில்‌ மதயானைகள்‌ திரியும்‌. 11-25

அந்தகர உயர்சாதிக்‌ குதிரைகள்‌ “முனிவன்‌ சாபத்தால்‌ எங்கள்‌ இறக்கைகள்‌ இற்றொழிந்தன! நீங்கள்‌ (அம்பு) இறகுகள்‌
உள்ளவர்கள்‌ தானே! வாருங்கள்‌ பார்க்கலாம்‌ (பந்தய ஓட்டத்‌ துக்கு) என்று வில்லோடு கூடிய பாம்புகளை ஓத்த அம்புகளைப்‌
பார்த்து கேட்பதுபோல ஓரக்கண்‌ பார்வையுடனும்‌, வாய்‌ நுரையாகிய சிரிப்புடனும்‌ கடிவாளமிட்ட முகத்தைத்‌ தாக்கிப்‌
பாய்வதுபோலத்‌ தோன்றும்‌, அம்புகளைவிட விரைவாக குதிரைகள்‌ செல்லும்‌ என்பது கருத்து) 11–26

அந்நகரக்‌ குதிரைகள்‌ “நம்மேலிருக்கும்‌ வீரர்கள்‌ பகைவரிடம்‌ சினம்‌ கொண்டு போரிடும்போது நம்மிடம்‌ வில்லும்‌ அம்புப்‌
பொதிகளும்‌ காட்டாமல்‌ விடமாட்டார்கள்‌. அப்போது அம்பிளைச்‌ செலுத்தும்போது அம்பு நம்‌ நடைக்குப்‌ பின்‌
வாங்காமல்‌ இருக்காது. தவறுதலாக அந்த அம்பு நம்வீரர்கள்‌ முதுகில்‌ பட்டால்‌, புற முதுகற்‌ புண்பட்டறியாத அவர்கட்கு
இழுக்கு ஏற்படுமோ? என்‌ செய்வது”  என்ற கவலையினால்‌ போலும்‌ தம்‌ காற்‌ குளம்புகளால்‌ நிலத்தைக்‌ &றிக்கொண்டிருக்கும்‌.
(கவலையுற்றவர்கள்‌ கால்‌ நக’த்‌ தால்‌ நிலத்தைக்கறுவது இயல்பு. குதிரைகள்‌ குளம்பால்‌ நிலம்‌ &றுவதும்‌ இயல்பு. இவ்விரு
தன்மைகளை இணைத்த கற்பனை இது, * தாங்கள்‌ விட்ட அம்பே தங்களைத்‌ தைக்கும்‌ அளவிற்கு குதிரைகள்‌ விரைவாகப்‌ போகும்‌ என்பது குருத்து.) 11-27

தனக்குச்‌ சமமான (இணையான) வாயுக்‌ கூட்டத்தை (பத்து வாயுக்களை) ஒரே பாய்ச்சலில்‌ பின்‌ வாங்கச்‌ செய்து வென்றா
லும்‌, தன்‌ வயிற்றில்‌ உள்ள சமானன்‌ (இணையானவன்‌-௪மான வாயு) என்னும்‌ வாயு (காற்று) மட்டும்‌ தன்னோடு இருப்பதால்‌
வெல்ல முடியவில்லை என்ற இகழ்‌ என்னும்‌ கருமை அக்குதிரை கட்கு இருந்தது. காலையில்‌ இனியுண்ணும்‌ போது சுவாசக்‌ காற்றினால்‌ மணிபந்தம்‌ என்னும்‌ மலையிற்‌ பிறந்த காண்ணடி டிப்‌ பாளங்கள்‌ போன்ற உப்புப்‌ பாளங்களை நக்கும்‌ போது அவை கருமையுறுவது அதனால்தான்‌ என்று தோன்றுகிறது((பிராணன்‌ (இதயம்‌) அபானம்‌ (குதம்‌) சமானன்‌ (நாபி) உதானன்‌ (கழுத்து) வியானன்‌ (உடல்‌ முழுவதும்‌) என்று பஞ்ச
வாயுக்களில்‌ சமானன்‌ என்றும்‌ வாயு வயிற்றிலுள்ளது.)2-28-

“பாய்ந்தோடும்போது (குதிரையின்‌ முதுகு வளைந்து) கால்‌ நிலத்திற்பட்டும்‌, (குதிரையில்‌) ஏறும்போது முன்பே இருதிவலயங்‌
கள்‌ வேண்டியிருப்பதாலும்‌ (உயரமாகையால்‌) இருவிதத்திலும்‌ இது நமக்கு இகழ்‌ தருகிறது என்று கூறும்படியான பாஹ்லிகம்‌ சகம்‌, தாரா, ஆரட்ட, கோட்டாணம்‌ முதலிய நாடு களின்‌ உயர்ந்த சாதிக்குதிரைகள்‌ அந்நகரில்‌ மிகுதியாக உள்ளன.-11-29

முடியவிழ்த்தலுமே அடித்தாமரையில்‌ படி.தலால்‌ தேனிக்கள்‌ (தும்பிகள்‌) தான்‌ கூந்தல்‌ என்பதில்‌ ஐயமுண்டேோ?
கண்டார்‌ எப்படிப்பட்டவராயினும்‌ தம்‌ கொள்வதால்‌ கண்ணாடி தான்‌ அவர்கள்முகம்‌ என்பதில்‌ .ஐயமுண்டோ?
மெல்லிடை என்னும்‌ ஆகாயத்தில்‌ மிளிர்வதால்‌ சக்கரவாக (அன்றில்‌) இணை தான்‌ முலைகள்‌ என்பதில்‌ ஐயமுண்டோ?
புலவு புரளும்‌ பார்வையால்‌ மீன்கள்‌ தான்‌ அவர்கள்‌ கண்கள்‌ என்பதில்‌ ஐயமுண்டோ?
அருகணைந்ததுமே மணம்‌ வீசுவதால்‌ பூங்கொடிதான்‌ அழகிய உடல்‌ என்பதில்‌ ஐயமுண்டோ? என்று கூறும்படியாக
அழகுமிக்க, மதனகலையில்‌ சிறந்த விலைமகளிர்‌ அந்நகரில்‌ திகழ்வார்கள்‌. Il—30

பரந்து சிவந்த மஞ்சள்‌ வண்ணமுடன்‌ கூடிய குங்குமப்‌ பூக்களோடும்‌, ௧௬ வண்ணக்‌ கஸ்‌ தூரி வீணையில்‌ தேனிசை முரல,
கற்பூரக்குவையானது நாரத முனிவனைப்போல்‌ திகழும்‌ ஆதலின்‌ அந்நகர காமுகர்கட்கு கலவிப்போர்கட்கு இடையூறு நேராமல்‌
மிகுந்திருக்கும்‌. [1.31

வானமும்‌ திரிசங்குவினால்‌ பறைச்சேரி யானது இங்கு இருக்கக்‌ கூடாது என்று பூமிக்கு இறங்கிவந்த தாரகைகள்‌,
கிரகங்கள்‌ என்னும்படியாக ஒளிமிக்க நவரத்தினங்கள்‌ அந்நகரின்‌ அங்காடிகளில்‌ மிளிரும்‌. JI—32

நெடுங்காலமாகப்‌ பாதுகாத்து வந்த அக்னி (யாகத்த) நனைந்து கெடுமென்று அஞ்சியோ அல்லது தாமே வேள்வித்தி
உருவினராதலின்‌ அந்‌ தணர் கள்‌ மறைமலைகளாகவும்‌. தவவேள்விச்‌ சீடர்களாகவும்‌ இகழ்ந்து இந்திர குபேரர்‌ ஆனாலும்‌
அவரிடம்‌ தானம்‌ (கொடை) பெறுவதற்காக வலது கையை நீட்ட மாட்டார்கள்‌.
(தானம்‌ பெறும்‌ போது தாரை வார்த்தலின்‌ கைநனையும்‌ என்று தாளம்‌ பெறமாட்டார்கள்‌ என்பது கருத்து)
(அந்தணர்‌ வலச்கரத்தில்‌  உள்ளதாக உருவூத்தல்‌, வேதமரபு, வேள்வித்‌ தீயாகவும்‌ உவமிப்பர்‌, JI—33

மந்திரக்‌ கவசம்‌ அணிவார்களே யன்றி போரில்‌ கவசம்‌ அணியார்‌ கொடையின்‌ போது ஐந்தைப்‌ பந்தாக்குவார்களே
யன்றி தங்கள்‌ ஆற்றலைக்‌ காட்டும்‌ போது அவ்விதம்‌ செய்ய மாட்டார்கள்‌.
(முன்வைத்த கால்‌ விரல்‌ ஐந்தைப்‌ பின்‌ வாங்கி மற்ற ஒரு கால்விரலுடன்‌ இணைத்துப்‌ பத்தாக்க மாட்டார்கள்‌. அல்லது
கைவிரல்‌ ஐந்துடன்‌ மற்றொரு கைவிரல்‌ ஐந்தும்‌ இணைத்து பத்தாக்கி எதிரியை வணங்க மாட்டார்கள்‌ என்பது குறிப்பு
கொடை தரும்போது ஐந்து பொன்‌ கேட்டால்‌ பத்துப்‌ பொன்‌ ‘ தருவர்‌ என்பது கருத்து, மந்திர கவசம்‌ என்பது கந்தர்‌ சஷ்டி.
கவசம்‌ போன்றவை)
விளையாடும்‌ களத்தில்‌ மண்ணிய்புரள்வார்களே யன்றி அரசன்‌ தராமல்‌ மண்ணிற்‌ புரளார்‌. (நிலம்‌ வேண்டி கெஞ்ச
மாட்டார்கள்‌ என்பது கருத்து)

இடியேறுபோன்ற (வஜ்ரம்‌ போன்ற) தம்‌ தோள்களால்‌ பிற மன்னார்களைதக்‌ தம்‌ வயப்படுத்தும்‌ ஆற்றலுடையவா்களாக
அந்நகர அரசகுமாரர்கள்‌ (அித்திரியார்கள்‌) இருந்தார்கள்‌. 11.34

செருக்கில்லாமல்‌, கொடுத்த தானம்‌ வார்த்த நீர்‌ தெருவில்‌ பாய்ந்தோடி அங்காடியில்‌ உள்ள .கம்பங்களினை தளிர்க்கச்‌
செய்கிறது என்று கூறும்படியாக, அறவழியிற்‌ சம்பாதித்த பொன்‌ கோடிக்கு ஒரு கொடியாக நட்டு, முகிலினை மறைக்கச்‌ செய்யும்‌
வளமுடையவர்களாக அந்‌ நகர வணிகர்‌ (வைசியார்‌)கள்‌ திகழ்ந்தார்கள்‌. 11..-35

மன்னர்கள்‌ பாதங்களில்‌ உள்ள ஏர்‌ ஆகிய ரேகைக்கு (சங்கு சக்கர ரேகை போல ஏர்‌ ரேகை இறப்பினைக்‌ குறிக்கும்‌) எங்கள்‌
தோள்களில்‌ உள்ள ஏர்தான்‌ மூலகாராணம்‌ என்று கூறி, கோடிக்‌ சுணக்கிலும்‌ குன்றுகள்‌ போலவும்‌ நிறைவிக்கும்‌ தானியக்‌ குவைகளைப்‌
பயிர்‌ செய்து விளைவித்து அந்நகர நான்காம்‌ வருணத்தார்‌ (சூத்திரர்கள்‌) நல்லோர்களைப்‌ போற்றிப்‌ புகழ்‌ பெ.ற்றிலங்குவார்கள்‌. Il—36

உமிழ்தல்‌, உதைத்தல்‌, உரைத்தல்‌, சீரித்தல்‌ ஆகிய தூண்டுகோற்‌ செயல்கள்‌ செய்து தம்மை இகழ்ந்த நங்கையரை
(நங்கைக்குப்‌) பிடித்துத்‌ தருக என்று சில மரங்கள்‌ (அணைத்தல்‌? பார்த்தல்‌, தொடுதல்‌ முதலிய கூண்டுகோழ்‌ செயல்கள்‌ செய்யப்‌ பட்ட) மரங்களிடம்‌ கூறி, வண்டுகளாகிய சங்கிலியாற்‌ பிணித்து, நம்‌. பிக்கையின்றி,’ மன்மதனின்‌ படையாகிய கிளி, குயில்களை கூட்டிக்கொண்டு முற்றுகையிட்டனவோ எனும்படியாக பூங்கா வளங்கள்‌ எமில்‌ பெற்றிலங்கிென.* 11-37

தென்திசையானையின்‌ மதத்துக்கும்‌ மதுரை நகர யானை யின்‌ மதத்துக்கும்‌ உள்ள வேறுபாட்டைக்‌ காண வேண்டும்‌ என்று
கருதியது போல கடாம்‌ (யானையின்‌ கன்னம்‌) உரச, கலவியிற்‌ களைத்தவர்பால்‌ அருள்‌ கொண்டாற்‌ போல்‌
காரிகையாரின்‌ கன்ன வியர்வையைத்‌ துடைத்து; சழித்த நாபியுடன்‌ கடக்கும்‌ கஸ்தாரிமான்கட்கு உயிர்‌ கொடுக்கப்‌ .
போவதுபோல அதன்‌ உந்திப்பையில்‌ நுழைந்து, கதன்‌ பகையான பாம்புகளைக்‌ கொல்லும்‌ என்பதால்‌ இல்லக்‌
கூரைகளில்‌ உள்ள மயில்களின்‌ இறகினை (நேயமோடு) தடவி, நகரின்‌ செல்வச்‌ செழிப்பினை விரைவின்றி மெல்லக்‌
காண்பதுபோல, மேல்‌ திசையானை மேல்‌ ஏறி வந்தாற்போல
மென்னடையில்‌ எப்போதும்‌ அந்த மதுரையில்‌ சந்தன மலையி லிருந்த வந்த மந்த மாருதன்‌ (இளந்தென்‌ றல்‌) இன்புறுத்துவான்‌.
(தென்றற்குரியை மணம்‌, தண்மை, மென்னடைகசட்கு காரணம்‌ கற்பிக்கப்பட்ட நயம்‌ காண்க) 11.38

* (நந்தன மரங்கள்‌ பூத்தலால்‌ வண்டுகளாலும்‌, பழங்கள்‌ மிகுந்ததால்‌ கிளிகளாலும்‌, தலிர்கள்‌ மிகலால்‌ குயில்களாலும்‌
நிறைந்து பொலிவுற்றன என்பது கருத்து)
(வட மொழி இலக்கிய மரபில்‌ பெண்களின்‌ சில செயல்கள்‌
சில மரங்கட்டு எருவிட்டாற்போல தரண்டற்கிரியை (கோகதம்‌) ஆற்றும்‌ என்று கற்பிப்பர்‌. சூடாமணி நிகண்டு 12–109 பாடல்‌
இதனை விளக்கும்‌.

ஏடவிழ்‌ மகிழ்‌ சுவைக்க, எழிற்பாலை நண்பு கூடப்‌ பாடலம்‌ நிந்திக்கத்‌ தேம்படி முல்லை நகைக்கப்‌ புன்னை
ஆட, நீள்‌ குரா அணைக்க, அசோகுதைத்திட, வாசந்தி பாட, மாப்பார்க்க வார்சண்பக நிழல்படத்‌ தவிர்க்கும்‌”

இதற்குரிய வடமொழிக்‌ காரிகை.
அசோகஸ்‌ சரணாஹத்யா வகுளோமுக துளா, ஆலிங்களாத்‌ குரவகஸ்‌ திலகோ வீகூணேனச௪
கரஸ்பார்ஸணே மாகந்தோ முகராகேன சம்பக; ஸல்லாபத: கர்ணிகார; சிந்துவாரோ முகானிலாத்‌
கத்யா ப்ரியாளுர்‌ நிதராம்‌ நமேரு ஹஸிதேன ச”

———-

மீனக்கொடியோன்‌
சந்தி (நட்பு) விக்ரகங்களாகிய அறுகுணகிகளில்‌ (அரசநீதியில்‌) சிறந்த சக்கரவர்த்தியும்‌ ஈரிரண்டு (நான்கு–சாமதான,
பேத தண்டங்கள்‌) உபாயங்களாகிய அறிவில்‌ சிறந்த பண்டிதனும்‌, மலய (பொதிகை) மலையை விளையாடும்‌ செய்குன்ற
மாகத்‌ கொண்டவும்‌, பொன்மலை (மேரு)யில்‌ தன்‌ பெயர்‌ பொறித்த நூலாசிரியனும்‌ சங்கிலியாற்‌ கட்டப்பட்ட மேகங்கள்‌
போன்ற யானைகள்‌ உடையவனும்‌, கடலிற்கு அணைகோலிய தற்கால இராமனும்‌, தாமிரபரணி (பொருளை) நதியின்‌ தூய
நண்ணீரில்‌ களிக்கும்‌ அன்னப்‌ பறவையானவனும்‌ இலங்கைக்கு அரசனுடன்‌ நட்புடையவனும்‌ அகத்திய ‘முனிவனுடைய ஆசி
சுளைப்‌ பெற்றவனும்‌, இந்திரனையும்‌ வெல்லும்‌ திறன்‌ படைத்தவனும்‌ பூதகணங்களை வசப்படுத்தும்‌ சிவபெருமானின்‌ தொடர்‌
பான நிலத்துக்ககிபதியானவனும்‌ ஆகிய மீனக்கொடியோன்‌ ஆகிய பாண்டியன்‌ அந்நகரை ஆண்டு வந்தான்‌. 11-39

சந்திரகுலத்திற்‌ சிறந்தவனாகிய அம்மன்னன்‌ எப்போதும்‌ நீதி வழுவாது இருப்பான்‌. மனம்‌ வருந்துமாறு மக்களிடமிருந்து
வரி (இறை) வசூலிக்க (ஏற்க) மாட்டான்‌. ஒருவர்‌ கூறும்‌ புறஞ்‌ சொற்களைக்‌ கேட்டு, மனத்துட்கொண்டு மூழ்ச்சி கெடுமாறு
பிறருக்குக்‌ கெடுதல்‌ செய்ய மாட்டான்‌. தன்னைப்‌ புகழ்ந்தால்‌ (நாணத்தால்‌) தலை குனிவான்‌. தான்‌ வீரனாகினும்‌ கோழை
யைக்‌ கூட குறை கூற மாட்டான்‌. 1{—40

மலயமலைக்‌ காடுகளில்‌ விளையாடினும்‌, பாம்புகட்கு, கடுகளவும்‌ அஞ்சமாட்டான்‌, மிகமிகக்‌ குறைவாகப்‌ பேசுபவனாக
தற்புகழ்ச்சியற்றவனாக, பிறரைக்‌ கேலிப்‌ பேச்சிலயே-அடக்குபவனாக (சேர மன்னர்களை ஓடுக்குபவனாக) இருந்தான்‌,
தாமிரபரணிக்கு (தென்திசை பெண்‌ யானையின்‌ பெயர்)த்‌குலைவனாக இருந்தாலும்‌ நல்லோர்‌ (சங்கத்தார்‌) உறவினால்‌
இகழ்‌ (அஞ்சனம்‌-மை) இல்லாதவனாகவும்‌ இருந்தான்‌.
(அஞ்சனம்‌ எனும்‌ யானை தாமிரபரணி எனும்‌ பிடியின்‌ கணவன்‌ ஆதலின்‌ இக்கற்பனை செய்யப்பட்டது)
சிறந்த பெருமையினால்‌ மதுர (மதுரைநகர்‌-இனிப்பு) முடையவனாயினும்‌, லாவணியம்‌ (அழகு-உப்பு) கூடியிருந்தும்‌ சிறப்புற்றான்‌.

கடல்‌ அலைகள்‌ முறிந்து வீழச்‌ சிதறிய நீர்த்துளிகளை உண்டாக்கத்‌ திரியும்‌ இமிங்கலத்தின்‌ வால்‌ வீச்சுப்போல, (அலை
போன்ற) பகைமன்னர்‌ யானைகளின்‌ கும்பங்களில்‌ இருந்து  (நீர்த்துளி போன்ற) முத்துக்கள்‌ சிதறி விழும்படிச்‌ செய்யும்‌
(வால்போன்ற) வாள்‌ வீச்சினையுடைய (திமிங்கலம்‌ போன்ற)தோள்களை உடையவனாக அந்த மன்னன்‌ இருந்தான்‌. 71.41

தானம்‌ (பிறர்‌ கேட்ப தாரை வார்த்துத்‌ தருவது) தியாகம்‌ (பிறர்‌ கேளாமலேயே தாமாகவே அளிப்பது) என்னும்‌ இரண்டு
இறக்கைகளையுடைய அம்மன்னனுடைய புகழ்‌ என்னும்‌ அன்னப்‌ பறவை, தானமாகிய இற்கு நனைந்தாலும்‌, பிற பறவை
போலன்றி ஈரிறகுகள்‌ நனைந்தாலும்‌ பறக்கும்‌ தன்மையுடைய தாதலின்‌ வானத்தில்‌ பறந்து இரியும்‌.
அன்னம்‌ இரு சிறகுகள்‌ நனைந்தாலும்‌ பறக்கும்‌ என்பது மரபு) 11-42

இனிக்‌ கூட்டம்‌ சங்கிலிகளால்‌ கணிகையர்‌ இல்லங்களில்‌ சிறைப்படுத்தப்பட்டும்‌, சிற்றெலிகளின்‌ கூட்டம்‌ பகைவரின்‌
சூனியமாகிய மாளிகைகளில்‌ செண்டாடிக்‌ கொண்டிருக்கவும்‌, தன்‌ வீரக்கழலில்‌ பிரதிமைகளாக உள்ள சிற்றரசர்கள்‌ மட்டுமே
உரக்‌ கொண்டு அடங்கிக்‌ கடப்ப, தன்‌ படையிலுள்ள யானைகட்கு போட்டியான எதிரி யானைகளின்‌ கன்னங்களில்‌ (மதம்‌
இன்றி) அனாவிருட்டி (மழையின்மை) சேர்ந்து கொள்ள, தானம்‌ (கொடை) தரும்போது தனது கையில்‌ அதிவிருட்டி (மிகுமழை)
அமைந்துவிட, தன்‌ பிரதாபம்‌ (ஆற்றல்‌) என்னும்‌ இயில்‌ எதிரிகள்‌ பொசுங்கிய விட்டில்கள்‌ ஆகவும்‌ அப்பாண்டிய மன்னன்‌
இவ்விதம்‌ இவ்வுலகை ஆட்சி புரிந்து வந்தான்‌.
(அதி விருஷ்டி அநாவிருஷ்டிர்‌ மூஷிகாஸ்‌ ஸபலர்‌ சுகா; அத்யாபன்னாஸ்ச ராஜான: ஷடேதே ஈதய: ஸ்ம்ருதா.
எனும்‌ சுலோகப்படி ஒரு நாட்டின்‌ துன்பங்களான மழையின்மை, மிகுமழை, எலி, விட்டில்‌, இளிகள்‌ பயிர்‌, தானீயங்‌
களை அழித்தல்‌, எதிரி மன்னர்கள்‌ படை எடுப்பு ஆயெவற்றைக்‌ கடந்து நலமான வளமுடன்‌ ஆட்சி செய்தான்‌ என்பது கருத்து.)11-43

அவ்வரசன்‌ இவ்விதமாக சாம்ராஜிய வைபவங்களை அனுபவித்துக்‌ கொண்டிருக்கும்போது சில காலம்‌ கடந்ததும்‌. 11-44

முது வேனில்‌
பாதிரி மரம்‌ பாக்கியம்‌ பெற்றது போலப்‌ பூக்கவும்‌, கானல்‌ நீர்‌ தோன்றும்‌ காலமும்‌, இலவம்‌ பழங்களை உடைக்கச்‌ செய்வது
மாகிய கோடைக்‌ (முதுவேனிழ்‌) காலம்‌ பூமியில்‌ வந்தது. 11-45

அருவி வெள்ளம்‌ வற்றியதும்‌ பாறைகளில்‌ தேங்கிய பாட வரண்டு பெரும்‌ பிளவுகளாக எழுந்தன. குறவர்கள்‌, குழிகளில்‌ நீர்‌ வற்றியதால்‌ குருவிகளைப்‌ பிடிப்பதற்காக ஆங்காங்கு கொண்டுவந்து ஊற்றிய நீர்‌ தெரிந்தது.
காட்டுத்தீயால்‌ பொசுங்கிய மர இலைகளை சூறாவளிக்‌ காற்று மேலே கிளப்பவும்‌, புறாக்கள்‌ எனக்‌ கருதி வல்லூறுகள்‌ ஊடே பாய்ந்தன. மரத்தடி நிழலில்‌ தரங்கிய வழிப்போக்கர்கள்‌ நிழல்‌ நகர நகர தாமும்‌ அதைத்‌ தொடர்ந்து புரண்டு புரண்டு படுத்தனர்‌. திகம்பரர்‌ (திசையே உடையானவர்‌) ஆன வைரவ (பைரவர்‌)ருக்குத்‌ துவைத்த உடைகள்‌ காயப்போட்ட வண்ணாந்துறை போல எல்லா திசைகளும்‌ (வெளுத்த) இருத்தன. பேய்த்தேர்‌ (கானல்‌ நீர்‌)களால்‌ வெளியிடங்கள்‌ வெளுத்து வெயிலில்‌ கன்றியது போல திசைகள்‌ புகைப்படிந்து காணப்பட்டன. 11-46

வேனிலில்‌ யானை, பன்றி, காட்டெருமை, முதலியவற்றின்‌ உடலில்‌ மூடிக்கிடக்கும்‌ சேறு காய்ந்து ஆறிய பிறகு; இந்த வெக்கையில்‌ எல்லா உயிர்களும்‌ அழிந்துவிடும்‌ என்றஞ்சிய பிரம்மதேவன்‌ இனிவரும்‌ சிருஷ்டிக்‌ (படைப்புக்‌) காக மேலக்‌ காற்றினால்‌ ஒளிரும்‌ கொடும்‌ வெயில்‌ எனும்‌ தீயில்‌ வேக வைத்து அச்சுவார்க்க வைத்த மூசைகளோ எனும்படியாக இருந்தது. அச்சு வார்த்தல்‌–மோல்டிங்‌ ( M oalding) Ji—47

காட்டுத்‌ தீயின்‌ புகை என்னும்‌ இருட்டில்‌ தங்களது தண்ணீர்‌ ஆகிய திரவியத்தை (பொருளை) தாமரை கேள்வனின்‌ (சூரியனின்‌) கதிர்கள்‌ (எனும்‌ ஆட்கள்‌) கவர்ந்து சென்று விடவும்‌ (இத்த அனியாயத்தை சூரியனிடம்‌) மூறையிடுவதற்காக வானத்‌ திற்குச்‌ செல்லும்‌ பாழும்‌ உறை கணறுகளோ எனும்படியாக, பார்க்கம்‌ போதே பூமியில்‌ உருவாகி மேலே அகன்றுள்ள, வைக்கோல்‌ சுற்றியும்‌ ஆட, சூறாவளிக்காற்றில்‌ பூழ்தி வட்டங்கள்‌ மேலே பறந்து சென்றன.
(புகை கருநீல நிறமாதலின்‌ இருட்டெனக்‌ கூறப்பட்டது. சூறாவளிகள்‌ கிணறுகளாக உவமிக்கப்பட்டன. சூரியன்‌ தாமரை கேள்வன்‌ ஆதலின்‌, தாமரை நீர்‌ இன்றி வாமாதாதலின்‌ முறை யிட்டதும்‌ நீர்மீண்டும்‌ கடைக்கும்‌ என்று கருதியதாகக்‌ கருத்து. சூரியன்கதிரால்‌ நீர்‌ நீராவியாகி முகிலாகி மீண்டும்‌ மமையாக திரும்பி வருவது இயற்கை. அதை நினைவிற்கொண்டு இக்கற்பனை செய்யப்பட்டுள்ளது.) [[…. 48

சூரியனின்‌ தேர்க்கயிறாகிய பாம்புகள்‌, மேல்‌காற்று ஆகிய சுடுகாற்றினை (உணவு ஆதலின்‌) உண்ண முடியாமல்‌, வேறுண
வின்‌.றி பட்டினி கடந்து களைத்துப்போகவே, பிடி நழுவி விட்டதால்‌, முடவனாகிய அருணன்‌ ஆகிய தேரோட்டி சூரியனின்‌ ஆணையால்‌, பாம்புக்‌ கயிற்றினை முடிச்சுப்போட அடிக்கடி தேரை நிறுத்தியதால்‌, பயணம்‌ தடைபட்டுத்‌ தாமதம்‌ ஆனதென பகல்‌ நீண்டதாக வேனிற்காலம்‌ இருந்தது.
(ரதஸ்யேகம்‌ சக்ரம்‌ புஜங்கயமிதா: சப்த துரகர்‌ நிராலம்போ மார்க்கஸ்‌ சரணவிகல : சாரதிரபி ரவிர்‌ யாத்யே வாஸ்தம்‌
ப்ரதிதினமபாரஸ்ய நபாஸ ; க்ரிய : சத்வே பவதி மஹதர்ம தநோபகரனே -போஜபிரபந்தம்‌.
தோர்ச்சக்கரம்‌ ஒன்று. பாம்புகள்‌ கயிறு, ஏழு குதிரைகள்‌. ஆதாரமில்லா வழி. முடவன்‌ சாரதி, (இப்படி இருந்தும்‌) சூரியன்‌
தினந்தோறும்‌ எல்லையற்ற வானத்தைக்‌ கடந்து அத்தம்‌ புகுகின்றான்‌. பெரியோர்க்கட்கு தம்மன உறுதியால்தான்‌ செயலில்‌ வெற்றி பெறுகின்றார்களே ஒழிய துணைக்‌ கருவி களால்‌ அன்று,
இத்த சுலோகப்படி ஓன்றையாழியானாகிய சூரியனுக்கு பாம்பக்கயிறும்‌ முடவனாகிய சாரதியும்‌ இருப்பதால்‌ பகல்‌ நீண்ட தெனக்‌ கற்பிக்கப்பட்டது.) 1… 49

சூரியனின்‌ கதிர்க்கற்றைகள்‌ என்னும்‌ நெருப்பில்‌ வெந்த பூமியின்‌ நீறு (சாம்பல்‌) காற்றால்‌ பறந்தது போல இலவமரத்தின்‌
பழுத்த பழங்கள்‌ உடைந்து சிதறிய பஞ்சு வானில்‌ பரந்தது. II—50

வழிப்போக்கர்களால்‌ தோண்டப்பட்ட ஊற்றுக்‌ குழிகளில்‌ நிறைந்த நீரில்‌ பிரதிபலித்த சூரிய பிம்பங்கள்‌, கடலரசனைப்‌
பிரிந்த விரக தாபத்தை நீக்குவதற்காக நதி நங்கையர்‌ தம்‌ மேனியில்‌ அணிந்த முத்து வடங்களோ எனும்படியாக இருந்தன.
(நதிகளாகிய நங்கையர்‌ வேனிலில்‌ நீர்ப்பெருக்கின்மையால்‌ கடலினைத்‌ தழுவ முடியாத பிரிவுத்‌ துயரால்‌ ஏற்பட்ட
வெம்மையைப்‌ போக்க குளிர்ந்த முத்து மாலையணிந்தது போலக்‌ கற்பனை.) IT~—51

வருணதேவன்‌ மிகுமழை பெய்வித்து அதனால்‌ முன்‌ நாட்‌களில்‌ கடலோடு கூட்டுவிப்பவனாக இருந்தமையால்‌, அதுபோல
இந்நாளிலும்‌ செய்வித்தருள வேண்டுமென்று இலஞ்சம்‌ (காணிக்கை) ஆக, பொற்காசுகளை, நதி வாளத்திலுள்ள வருண
தேவனுக்கு தன்கையால்‌ கொடுப்பதுபோல நீரற்ற நதி.பில்‌ வெள்ளம்‌ இன்மையால்‌ வணங்கிய இதழ்களோடு கூடிய
பொகுட்டினையுடைய மேல்‌ நிவந்ததாமரைத்‌ குண்டுகள்‌ தோன்றின,
(மேலே தரக்கிய தாமரைத்‌ தண்டு கரங்கள்‌, பொகுட்டு உள்ளங்கை, அதிலுள்ள மஞ்சள்‌ வண்ண விதைகள்‌ பொற்‌
காசுகள்‌ என்று உவமிக்கப்பட்டுள்ளது. ) ]1–52

சிறிதே வாடிய பாசிகளைத்‌ தின்றதால்‌ கழுத்தில்‌ துவர்ப்பு அடைந்து, இளம்புலால்‌ மணம்‌ கலந்த காற்று வீசுவதால்‌
விரைந்து செல்லாமல்‌ மெல்ல ஒதுங்கி, முடிவாக சென்று, ஒரு பக்கமாக இருந்து மிதித்தவாறு அயிரை மீன்களையும்‌, சிறு
நத்தைச்சிப்பிகளையும்‌ மென்றவாறு, நண்டு தன்‌ காலைக்‌ கவ்விடவும்‌ சிறிது விலகி அலகால்‌ குத்தித்‌ தின்றும்‌, ஈரம்புலர்ந்த
நிலத்தில்‌ சேம்புத்‌ தோட்டம்‌ போல உள்ளதாமரைத்‌ தண்டுகளுக்‌ இடையே வெயிலைக்‌ கழித்தும்‌, இருக்கிற கொக்குகட்கு குளங்கள்‌
முழங்கால்‌ அளவானது. உடும்புகள்‌ போல முதலைகள்‌ நாய்கட்‌ கஞ்சி கிணற்றில்‌ வீழ்ந்தும்‌, பசுஞ்சாணத்திலுள்ள புழுக்களைத்‌ தின்பதற்காகவும்‌
இரவில்‌ திரியலாயின. விலாங்கு (பாம்பு போன்ற மீன்‌) மீன்கள்‌ பொத்துகளில்‌ புகுந்தன. IT—-53

ஆழமான குட்டங்களில்‌ நீர்‌ வற்றவும்‌ அங்குள்ள பெரு நாரைகள்‌ முதலில்‌ பெரிய மீன்களை எல்லாம்‌ விழுங்கி, வெயிலிற்‌
காய்ந்த பிளவுகளின்‌ வழியே தோன்றும்‌ அல்லி வேரிளைத்‌ தொடர்ந்து உள்ள சேற்றின்‌ சாற்றோடு கலந்து சின்னஞ்சிறு
மீன்களையும்‌ அதன்‌ சனைகளையும்‌ குடித்தன. I[—54

விடியலில்‌ அந்த வேனிற்காலத்தில்‌ பாதிரிப்‌ பூக்களின்‌ மகரந்தம்‌ நனைந்த பூந்தோட்டத்தின்‌ மணமிக்க தென்றல்‌ வீசும்‌
போது அம்மரங்கட்கு நீர்‌ பாய்ச்சும்‌ ஏற்றக்காரர்கள்‌ பாடும்‌ உரத்த குரலிலான பாட்டுக்கு, ஏற்றப்பானை நீர்‌ மொண்ட
போது ஏற்படும்‌ ஒலி மிருதங்க வாத்தியமாக அமைய மனம்‌ மகிழ்விப்பதாக இருந்தது. 11-55

மிகக்‌ கொடுமையான உச்ச வெயிலில்‌ வாடிய இளம்‌ குண்டு மல்லிகைப்‌ புதர்களின்‌ முனையில்‌ வேனற்கொப்புளங்கள்‌ போல
பெரிய மொட்டுக்கள்‌ உருவாகின. 141–56

நீர்ச்சுமி உந்தியாகவும்‌, தாமரை மலர்கள்‌ கண்களாகவும்‌ பாசி கூந்தலாகவும்‌ சக்கரவாகம்‌ (அன்றில்‌) பறவை முலைகளாக
வும்‌, நுரை நகையாகவும்‌ தம்முன்‌ அமைத்துக்‌ கொண்டு, கோடைக்குப்‌ பயந்து (நீர்‌ அற்று விடுமென அஞ்ச?) எதிர்‌
காலத்துக்கே வேண்டுமென்று கருதி விதை எடுத்து வைத்தாற்‌ போல தண்ணீரைக்‌ குடங்களில்‌ வைத்து பாதுகாத்து உதவும்‌
நீரரமகளிர்‌ (ஐலதேவை)கள்‌ என்னும்படியாக வேனிற்பத்தலில்‌ இள நங்கையர்‌ இருந்தனர்‌.
(சுழி தாமரை முதலியவற்றைத்தம்‌ அவயவங்களில்‌ தாங்கிய ஐலதேவதைகள்‌ வரம்‌ ஈந்தாற்போல வருவோர்க்கு தண்ணீர்‌
தந்து உயிர்தரும்‌ நங்கையர்‌ வேனிற்காலத்து தேவதைகளாகவே தோன்றுவர்‌ என்பது கருத்து.) 1—57

வெம்மைக்காற்றாது மறைவிடம்‌ தேடிய கங்கையும்‌ யமுனை போல மல்லிகைப்‌ பூச்சூடிய சடை (கூந்தல்‌)கள்‌ தோன்றவும்‌.
வட்டமுலை அழகினைத்‌ திருடியது (முலைகட்கு குடம்‌ உவமையாதலின்‌) அதனை மீண்டும்‌ தருக என்று சோதித்திடல்‌
போல பெரிய பானைகளில்‌ (நீர்‌ மொண்டுதரும்‌) அகப்பைகள்‌ (துமாவிய படி.) உள்ளே மூழ்கினவாசவும்‌.
நீரின்‌ தாரையில்‌ தோன்றும்‌ கண்களின்‌ பளபளப்பு, வாசனைக்காக இட்ட ஆம்பல்மலரிதழ்கள்‌, வீழ்ந்துள்ளனவேோ
என்று மயங்கச்‌ செய்யவும்‌ ஒளிமிக்க முகத்தமகை மெச்சி தலை யசைக்கும்‌ நீர்‌ குடிக்கும்‌ வழிப்போக்கர்கள்‌ ஊற்றுகின்ற நீர்‌
போதும்‌ என்று குறிப்பிடுபதற்கான சைகையாகக்‌ கருதாமல்‌ குலையசைப்பினை தம்‌ அழகளை மெச்சித்தான்‌ என்றுணர்ந்து)
நிலையறிந்து (நீர்‌ ஊற்றுதலை) நிறுத்தாமல்‌, நகைபுரியும்‌ சாது ரியத்துக்கு மனங்கரையவும்‌ ஆக உள்ள நங்கையார்கள்‌ உள்ள
வேனிற்‌ பந்தலில்‌, மன்மதன்‌ வேறிடங்கள்‌ செல்ல இயலாத
வனாகி போலி அதிகாரங்காட்டி வழிப்போக்கர்கள்‌ அந்நங்கையர்‌ அழகில்‌ ஈடுபட்டு அன்புடன்‌ தரும்‌ தாம்பூலம்‌ என்கின்ற சுங்கம்‌
(வரி) பெற்றவனாசு இருந்தான்‌. Tl—59

(முதலில்‌ தாகத்தால்‌ களைத்துத்‌) தள்ளாடியவாறு வந்த! அம்மா அச்கா! என்று கிறங்கியவாறு பரிதாபமாக வந்து லக :
குவித்து (நீர்ஊற்றியதும்‌) தாகம்‌ தீர்ந்து களைப்பு தீர்ந்து விடவும்‌, தாம்‌ முனபு கூறிய (அம்மா; அக்க என்ற) சொற்களைத்‌
கணிக்காமல்‌, முகமும்‌, முலையும்‌, கக்கங்களும்‌ ஏற இறங்க பார்த்தபடி குடிப்ப துபோல பாவனை செய்யும்‌ ஓரு வழிப்‌
போக்களைப்‌ பார்த்து, நீர்வார்ப்பது போல சன்னமாக நீரொழுகுமாறு தந்தபடி தமக்குள்‌ குறிப்பாக சைகைகள்‌ மூலம்‌
சிரித்துக்‌ கொண்டார்கள்‌ * 2….-59

* காதா சப்த சதி பாடலின்‌ சாயல்‌ இதில்‌ உள்ளது
இப்பாடலைத்‌ தழுவிய அப்பயதட்சிதரின்‌ அலங்கார மேற்கொள்‌ சுலோகம்‌.
யதோ ஊர்த்‌ வாக்ஷ பிபத்யம்பு. பதி கோ விரலா ங்குலி?
கு தாப்ரபா பாலி காபி தாராம்‌ விதனுதேதனும்‌.
மேலே பார்த்தவாறு தண்ணீர்‌ குடிக்கும்‌ வழிப்போக்கன்‌ விரல்கள்‌ நெடிழவிட்டு நீர்‌ குடிப்பதுபோல இருப்ப, வேனிற்‌
பந்தல்‌ நங்கை கூட நீர்‌ ஓமுக்களை மெல்லிய தாக்கி இன்னும்‌ மெலிதாக்கி ஊற்றினாள்‌.
(இருவரும்‌ பிறர்‌ அழகினை காண கூடக்கொஞ்ச நேரம்‌
இருக்க வேண்டும்‌ என்ற ஆர்வத்தினால்‌ தண்ணீரைச்‌ சிந்தவிட்டு
நேரம்‌ கடத்தினான்‌. அவளும்‌ தண்ணீர்‌ சிறிது சிறிதாக களற்றி நேரம்‌ மிகுவித்தாள்‌ என்பது கருத்து.)

தோசைக்கல்லில்‌ மாவு ஊற்றியதும்‌ கிளர்ந்த ‘ ஆவிபோல–நீராவிப்புகை எழவும்‌, பகல்வெயில்‌ ஆறாத பொழுதே காய்ந்த
கல்போல உள்ள பூ மண்டலத்தில்‌ இரவில்‌ நிலவு பொழிவது சகோரப்பறவைக்‌ குஞ்சுகட்டு மெல்லியதாக தோசை சுட்டுத்‌ தந்தது போல இருந்தது. 11.60

பகல்‌ முழுதும்‌ வாவியில்‌ புனல்‌ விளையாட்டில்‌ பொழுதைக்‌ கழித்துக்‌ களைத்தும்‌, தாமரைத்‌ தண்டுபோலக்‌ குளிர்ந்துவிட்ட
தோள்களை முழுங்கைகட்கெதிராக வளைத்து கைகளைத்‌ தழுவியவாறு, சோம்பலினால்‌ நன்கு ஆற்லிடாத மணம்மிக்க
கூந்தலில்‌ மல்லிகைப்‌ பூக்கள்‌ மலர. கழுவியும்‌ சந்தன மணம்‌ மிகுந்துள்ள குளிர்‌ முலைகள்‌ பொருந்த குழுவியும்‌, புரண்டும்‌;
தென்னங்கள்ளின்‌ இனியநெட்டுயிர்ப்புகள்‌ உண்டாக, மெல்லிய ஒற்றைத்‌ துகில்‌ அணிந்து மார்பில்‌ துயிலும்‌ தம்‌ நங்கையரை
விடியலில்‌ தொடை நெ௫இழ்த்தி எச்சரித்து பால்வெண்ணிலாவில்‌ பாக்கிய சாலிகளான இளைஞர்கள்‌ நிலா முற்றங்களில்‌ கலந்து மகிழ்ந்தார்கள்‌. 1[–6)

நெஞ்சம்‌ (வெம்மையின்‌ உருக்கத்தால்‌) இணைபாராமல்‌ வெட்டி அரவணைப்புகளுடன்‌, மேலான செயலில்‌ (கலவியில்‌)
ஈடுபடாமல்‌ வீண்‌ பேச்சுக்களிலே பொழுதைப்‌ போக்கி, வெறும்‌ தன்மை மிக்க உபசாரங்களாலும்‌ கொடும்‌ வேனிற்காலத்தில்‌
பண்பாடில்லாதவர்களின்‌ கூட்டுறவு போல தம்பதியர்கள்‌ கூடினர்‌.
(நெஞ்சமிணையாத செயலற்ற பேச்சுக்கள்‌ உடைய நட்பு பண்பாடிலார்‌ நட்பு ஆதலின்‌ வேனிற்காலக்‌ கலவிக்கு உவமிக்கப்‌ பட்டுள்ளது, ) 11-62

வேனிற்காலத்தில்‌ அடங்கிக்‌ கிடக்கும்‌ மன்மதனைத்‌ தொடர்ந்து தென்றலும்‌, வெயிலுக்காற்றாது பாதாளம்‌ புக
முனையவும்‌, (இளைஞர்‌ தம்‌ காதலியர்கட்கு) வெட்டிவோர்‌ சுட்டிய பனையோலை விசிறிகளால்‌ வீசும்‌ காற்று பெண்டிர்‌
முகத்தில்‌ படுவது எப்படியிருந்ததென்றால்‌ ( வெட்டிவேர்‌ மருந்தாதலின்‌, மருந்துக்‌ கதிபதி சந்திரன்‌ ஆதலாலும்‌) வெட்டி
வோர்‌ தன்‌ மணத்தைத்‌ திருடிய காற்றினை தம்‌ குலைவனாகிய சந்திரன்‌ (பெண்டிர்முகம்‌) பால்‌ ஒப்படைத்தது போலத்‌ தோன்றுகிறது. [[…63

நகரில்‌ அத்தகைய கடுமையான வேவிலில்‌ சந்தனமலைத்‌ தென்றல்‌ அழிந்து புகழ்‌ (கதை) மட்டும்‌ மிஞ்சியதாகிவிட, அதை
செயற்கையாக இந்திரஜாலமந்திரவாதி கொண்டுவந்தாற்போல விசிறிகள்‌ காற்றைக்கொணர்ந்தன. விசிறி மாந்திரிகம்‌ செய்கிறது
என்பதற்கு அதில்‌ மயிற்பீலி சூட்டியிருப்பதுவே சாட்சியாகும்‌ அல்லவா? 11-04
(மந்திரவாதி மயிற்பீலி வைத்திருப்பதுமரபு. ஆ தலின்‌ விசிறிக்கு மயிற்பீலி வைத்ததை இவ்விதம்‌ உவமிக்கப்‌ பட்டுள்ளது.)

அத்தகு கொடுமையான வெச்கையால்‌ மன்மதனின்‌ கைகள்‌ வியர்வைமிகுதலால்‌ பிடிநழுவி அடிக்கடி பூமியில்‌ வீழ்ந்த
கருப்புவில்‌ எனும்படியாக அக்காலத்தில்‌ கரும்பு பக்குவத்திற்கு வந்தது. 11-63

இளமங்கையர்‌ கைப்பிடிச்சுவல்‌ முலை வைத்து (குனிந்து) நீர்‌ இறைக்கவும்‌, கதிரவனின்‌ வெயிலுக்கு அஞ்சி பாதாள குகை
களில்‌ ஒளிந்து கொண்ட குளுமை. (வேட்டைக்காரன்‌ பழக்கிய விலங்கு, பறவைகள்‌ மூலம்‌ அதன்‌ இனத்தைப்‌ பிடித்து விடுவதுபோல) இந்த முலையின்‌
குளுமைதான்‌ மேலே கொணர்ந்தது அல்லாமல்‌ முடிச்சுப்போட்ட கயிறுகளா கொண்டு வரமுடியும்‌? ஏனுமாறு மிகுந்த முயற்சியால்‌
காணப்பட்ட கண்ணீரின்‌ குஞுமை கிணறுகளில்‌ அக்காலத்தில்‌ மகிழ்வூட்டியது.
ஈகூபோதகம்‌ வடச்சாயா தாம்பூலம்‌ தரூணிகுசெளசீததாலே பவத்யுஷ்ண முஷ்ணகாலேது ச€ீதல என்ற சுலோகப்படி கிணற்ற.
நீர்‌, ஆலமரநிழல்‌ தாம்பூலம்‌, கலிர்‌ மூலைகள்‌, குளிர்காலத்தில்‌ வெம்மையும்‌, கோடை காலத்தில்‌ குளுமையும்‌ தருமாதலின்‌
ரமூலைகளின்‌ குரஞுமைதான்‌ கிணற்றின்‌ குளுமையை மேலே கொண்டுவந்ததாகக்‌ கற்பனை.] 11-06

தனக்குக்‌ காரணமாகிய கோடையைப்‌ போலவே சூடுடைய மல்லிகை மலர்கள்‌ இளநங்கையரின்‌ கருங்கூந்தலை பிளவுகளாகப்‌
பிரித்து விடவும்‌, பாதிரிப்‌ பூக்கள்‌ மிகுதியினால்‌ பூந்தேன்‌
சாரலாடச்‌ சிந்தி அக்கூந்தலை இணைவித்தது (ஓ3ர காலத்து உதித்த மலர்களில்‌ வேறுபாடுண்டாகுமோ என்றால்‌) அது சரித்‌
தான்‌, ஒரே கடலில்‌ பிறந்த நஞ்சுவும்‌ அமுதமும்‌ வேறு வேறு பண்பு களைக்‌ காட்டக்‌ காண்கிறோம்‌ அல்லவா? Il–67
(மல்லிகை, பாதிரிப்‌ பூக்கள்‌ கோடையில்‌ மலர்வன;)
மாவின்‌ (பிஞ்சு, காய்‌, செங்காய்‌–பழம்‌) இளமை கடந்த (குழந்தைமை, இளமை, வாலிபன்‌, முதுமை எனும்‌ நான்கு மனித
நிலைக்குவமை) புதிய பழங்களோடு நன்கு எண்ணெய்‌ ஊற்றி, சுய்யென்ற ஒலியுடன்‌ தாளிதம்‌ செய்து, வற்றிய நீரோடு கூடிய
மீன்‌ துண்டங்களும்‌ நடுப்பகலில்‌ உண்டு அது ₹ரணிக்கும்போது உண்டாகும்‌ ஏப்பம்‌ வரவே அதன்‌ துவார்ப்பு அடங்குவதற்காக
மாலைநேரத்தில்‌ பூந்தோட்டத்தில்‌ மணலில்‌ வைக்கப்பட்ட தேங்காய்களின்‌ இளநீர்‌ பருக, அங்குள்ள மக்கள்‌ இன்பம்‌ அனுபவித்தனர்‌. 71…-68

அரூர்க்கு குறுநில மன்னர்கட்கிட்ட வேனிற்‌ பந்தல்கள்‌, : குளிர்மைதந்து, உலகம்‌ என்னும்‌ அடுப்பில்‌ பூத்த தாமரை
மலர்கள்போல அக்காலத்தில்‌ திகழ்ந்தன. [1.59

பகலெல்லாம்‌ தோட்டத்தில்‌ இருந்துவிட்டு, மாலையில்‌ மல்லிகைப்‌ பூக்களைச்‌ சூடியவாறு காவியுடையுடுத்திய குடியான
வார்கள்‌ கரும்பாலைக்கு (கருப்பஞ்சாறு பருகுவதற்காக) வருவதைக்‌ காணின்‌, இனிவரும்‌ மழைக்கு அஞ்சி முட்டைகளோடு
இனிப்பை நாடும்‌ செவ்வெறும்புகள்‌ போலத்‌ தோற்றும்‌, ||–70

அயல்‌ நாட்டந்தணன்‌
அந்த கொடும்‌ வேனிற்காலத்தில்‌ வைபவத்தோடு அந்நகருக்கு ‘ அருகே உள்ள (அழகர்கோவில்‌) சுந்தரத்தோளுடையார்கோவில்‌
தெப்ப உற்சவத்திற்கு வந்த அயல்நாட்டு அந்தணன்‌ ஒருவன்‌ பக்தியோடு, 71

சேவித்து செல்லும்போது மதுரைநகரின்‌ செல்வச்‌ செழிப்‌ பினைக்‌ காணும்‌ வேட்கையுட்ன்‌ இரிந்து களைப்பு நீங்க வைகை
நதியிற்‌ குளித்து மாலைச்‌ சந்தியாவந்தனம்‌ முடித்துவிட்டு மன்னனின்புரோகிதனுடைய இல்லத்திற்கு முன்பு [72

பரிபக்குவமான மணம்மிக்க வாழைப்பழங்களுடனும்‌, பருத்த பலாவின்‌ பெரியசுளைகளோடும்‌, கட்டிநெய்த்துண்டுகள்‌ போன்ற
கண்டசக்கரையுடனும்‌, பல்வகையான மாம்பழங்களோடும்‌, திராட்சை, மென்குலைகளோடும்‌, தோல்‌ நீக்கிய பாூிப்பயி
றுடனும்‌, இனிய மாதுளை விதைகளுடனும்‌, அன்னமிட்டு பானகந்தரவும்‌ விருந்தினரோடு தானும்‌ உண்டுகளித்து,
சந்தனம்‌ பூசிக்கொண்டு தலையில்‌ பூச்சூடி, வெற்றிலைக்‌ கற்பூர மூடன்‌ மென்று அந்த அந்தணன்‌ நிலாக்காயும்‌ நேரத்தில்‌ |/–73

(தான்கொணர்ந்த) பையை தலையணையாக வைத்து வழித்‌இண்ணையில்‌ படுத்து, ஒருவன்‌ பாட்டும்‌ ஒருவன்‌ தையும்‌ பாட
தான்‌ சில நீதி சுலோகங்களைக்‌ கூறிக்கொண்டு பொழுதைக்‌ கழித்தவாறு இருக்கும்வேளையில்‌. H-—74

அரசன்‌ கணிகையிடம்‌ செல்லல்‌

பன்னீரோடு பரிமளதிரவியங்கள்‌ கலந்து பூசிய கஸ்தூரியின்‌ மணம்‌, அரண்மனையைச்‌ சார்ந்தவன்‌ என்று தெரிவிக்க,
பாதிரிப்‌ பூமணத்தென்றல்‌ அசைப்ப தலைப்பாகையில்‌ உள்ள குஞ்சங்கள்‌ அசைந்து பூ மணம்‌ நாடிவந்த வண்டுகளை ஓச்ச,
காதில்‌ ஊஞ்சலாடும்‌ முத்துக்களின்‌ ஒளி, மார்பணியான முத்துமாலையின்‌ மேலேறும்‌ ஒளியை கீழே தள்ளிவிட,
௪ந்திரனின்‌ நிலவொத்த செங்காவி உருமாலையுடைய: கையில்‌ தங்கக்‌ கைப்பிடி போட்ட கூர்வாள்‌ ஒளிர,
ஓரு பெண்‌ அடைப்பைதர, முன்னும்‌ பின்னும்‌ மெய்க்‌ காவலர்கள்‌ வர, நடமாடும்‌ மேரு மலைபோல நடுவழியில்‌
இரண்டாவது அந்தப்புரம்‌ போன்ற மாளிகைக்கு தனது காமக்‌ கிழத்தியிடம்‌ கலந்தின்புறச்‌ சென்று கொண்டிருந்த அந்த பாண்டிய மன்னன்‌ 11-75

மழைக்காலமாகிய நான்கு மாதங்கட்கு மற்ற எட்டு மாத காலத்திலும்‌, இரவுக்காசு பகலிலும்‌, முதுமைக்காக இளமை
யிலும்‌, பரலோகத்துக்காக இக லோகத்திலும்‌ (எச்சரிக்கையாக இருந்து வேண்டியவற்றை) முயற்சித்தல்‌ வேண்டும்‌ என்ற
பொன்மொழியை (சுலோகத்தை) அந்த அந்தணன்‌ எதிர்கால நலன்‌ கருதும்‌ நீதியை மற்ற அந்தணர்கள்‌ மனம்‌ கொள்ளும்படி
சொன்னதைக்‌ கேட்டான்‌.-

வார்ஷர்த்தமஷ்டெளப்ரயதேத மாஸான்‌ நிசார்த்தம்‌ அர்த்தம்‌ இ*வஸே யதேத
வார்த்‌ கய ஹே தோர்‌ வயஸா நவேந பரத்ர ஹேதோ ரிஹஜன்மனாச௪  ”
என்ற வடமொழிச்‌ சுலோகத்தை அந்தணன்‌ கூற பாண்டிய மன்னன்‌ கேட்டான்‌ என்பது கருத்து,] 12-76

கேட்டு, அச்செய்யுளின்‌ பொருளை மனத்தில்‌ நிளைந்து புரிந்து, மயங்கி, முடிவில்‌ தன்‌ அறியாமைக்கு அஞ்சி, மன்னன்‌
(காமக்கிழத்தியின்மனையின்‌ (௮ப்‌)பக்கம்‌ செல்லாமல்‌ நின்று வருத்தத்துடன்‌ Il—77

“என்ன அரசவைபவங்கள்‌? என்ன போகங்கள்‌? என்ன விரைவு? அந்தோ! நீர்க்குமிழி போன்ற இவ்வுடம்பிளை நம்பி,
மோட்சத்தை (வீடுபேற்றை) எண்ணாமலிருந்தேன்‌! யுகங்கள்‌ முழுதும்‌ இருந்த மனுமுகலானவர்கள்கூட இறுதியில்‌ காலனின்‌
கைப்பட்டு அழிவதிலிருந்து தப்பிக்க முடிந்ததா? TI—78

இருந்தாற்போலிருந்து அக்கரைக்குச்‌ சேர்க்கும்‌ நாவாய்‌ (படகு) போல மனிதர்களை விரைந்துதான்‌ போகாதது
போலிருந்து காலம்‌ ஆயுளைக்‌ கழித்து மோசம்‌ (மரணத்தை) செய்விக்கும்‌ 11-79

சகரன்‌, நளன்‌, புரூரவன்‌, அரிச்சந்திரன்‌, புருகூதன்‌, கார்த்த வீரியார்ச்சுணன்‌, கயன்‌, பிருது, பரதன்‌, சுகோத்திரன்‌, சிபி,
பரதன்‌, இலீபன்‌, பரசுராமன்‌, யெளவனாஸ்வன்‌, சிபிந்து, அசங்கன்‌, அம்பரீடன்‌, யயாதி, ரந்திதேவன்‌, இராகவன்‌ மருத்து
முதலிய மன்னன்மன்னர்களை எல்லாம்‌ காலம்‌ தன்‌ பால்‌ ஆக்கிக்‌ கொள்ளவில்லையா? [1–80

ஆதலினால்‌, மின்னல்போன்ற நிலையற்ற அரசபோகங்களீல்‌ மூழ்கி புலனின்பங்களில்‌ திளைக்க மாட்டேன்‌. இனி3மலாவது
மறுமை இன்பத்திற்காக முயல்வேன்‌. [[- 81

(அறம்பொருள்‌ இன்பம்‌ ஆகிய) முப்பால்‌ தன்னில்‌ முயன்று சுவர்க்க நகரங்களில்‌ உழலாமல்‌, வீடுபேற்றை எந்த தெய்வம்‌
தருமோ அவனை அறிந்து வழிபடுவேன்‌”, 11.82

என நிளைந்து, மெச்சி, அவ்வந்தணனுக்குத்‌ தாம்பூலத்‌ : தட்டோடு பொற்கிழி ஒன்றை காவலர்‌ மூலம்‌ கொடுக்கச்‌ செய்து,
பின்‌ நகரை யடைந்து இரவு கழிந்ததும்‌ 11-83

கொலுவிருந்து, பல்வேறு சமயவாதிகளையும்‌ சித்தாந்த பண்டிதர்களையும்‌ ஒன்றுகூட்டி “உநிகள்‌ உங்கள்‌ சாத்திரங்களில்‌ :
யார்‌ மோட்சத்தை அடைவிப்பான்‌ என்பதை ஆராய்ந்து தநிச்சயிப்பீர்களாக” என்றான்‌ IIT —84

வாதம்‌ செய்து (பிறன்‌ மதம்‌ மறுத்துத்‌ தன்மதம்‌ நிறுவி) வென்றவர்கட்கு என்று பீர்க்கம்பூவைப்‌ போன்ற பொழ்காசு
களை நிறைத்து ஆஸ்தானமண்டபத்தில்‌ பொற்கிழியைக்‌ கட்டித்‌ தொங்கவிடவும்‌ கருநாகம்‌ போன்று தொங்கும்‌ கிழியைக்‌ சுண்டு ர… 85

ஒருவன்‌ சிவன்‌ எனவும்‌ ஒருவன்‌ உமை எனவும்‌ ஒருவன்‌ இந்திரன்‌ எனவும்‌ ஒருவன்‌ அக்னி எனவும்‌, ஒருவன்‌ சூரியன்‌
எனவும்‌ ஒருவன்‌ சந்திரன்‌ எனவும்‌, ஒருவன்‌ சணபதி எளவும்‌ ஒருவன்‌ பிரம்மன்‌ எனவும்‌ விவாதமானது அச்சமயத்தில்‌ 11-86

திருவில்லிபுத்‌தரரில்‌ உள்ள விஷ்ணு சித்தர்‌ (பெரியாழ்வார்‌) துளசிமாலையும்‌ மூல மந்திரமும்‌ மார்பில்‌ அணிவிக்கப்‌ போகும்‌
போது மன்னார்‌ (திருமால்‌) இன்மொழிகளில்‌ (மதுரை சம்பந்தமான செய்திகளை) விவரித்து இவ்விதம்‌ ஆணையிட்டார்‌ 11-87

பேரறிவுடையோய்‌! இன்று நீ மதுரைக்கு விரைந்து சென்று அங்கு பாண்டியன்‌ அவையில்‌ நிறைந்து ஏதேதோ பேசுகின்ற
செருக்குற்ற குருடர்களின்‌ திறல்‌ அடக்கி, எனது பெருமையை வெளிப்படுத்து, பொற்குமியை அறுத்துக்கொண்டு வருக அவனும்‌
(மன்னனும்‌) இவ்வுலக இன்பங்களை வெறுத்துள்ளான்‌. அவனை அருளோடு வைணவனாக்குயாக (1–88

எனவும்‌, கடகடவென நடுநடுங்கி சாட்டாங்கமாக வணங்கி, ஆனந்தக்‌ சுண்ணீர்‌ பெருகிட, புளகமுற, ‘ அடக்கத்துடன்‌,
அவ்வந்தணன்‌ (விட்டுசித்தன்‌) திருமாலிடம்‌ பக்தியுடன்‌ இவ்விதம்‌ விண்ணப்பித்தான்‌ 189

“சுவாமி” இதற்கு முன்பு படித்தறியாத, சாத்திர நூல்களைக்‌ கற்றறியாத என்னை, பூந்தோட்டத்தில்‌ மண்ணை த்தோண்டி
கடப்பாரை, மண்வெட்டிகளைப்‌ பிடித்து காய்த்துப்போன கைகள்‌ உடையவனும்‌, தங்கள்‌ கோவிலில்‌ வாழ்பவனுமாகிய என்னை,
வாதம்‌ செய்ய அனுப்புவீர்களேயானால்‌, மன்னரவையில்‌ நான்‌ தோற்றால்‌ அதனால்‌ வரும்‌ இகழ்‌ குங்களைச்‌ சாராதிருக்குமா? 11-90

கோயில்‌ மெழுகல்‌, தண்ணீர்‌ கொண்டு வருதல்‌ சிங்காரப்‌ . பல்லக்கை சுமத்தல்‌, துளசி மாலை கோத்தல்‌, கொடி. பிடித்தல்‌,
விசிறுதல்‌, குடை பிடித்தல்‌ தீப்பந்தம்‌ ஏந்துதல்‌ முதலிய வேலைகளா? நரசிம்மனே! வாதமாடல்‌ இது போன்றதல்லவே!
தின்‌ திருவிளையாட்டிற்குப்‌ பாத்திரமானவர்கள்‌ வேறு யாரு மில்லையா? 91 –

திருமால்‌ பெரியாழ்வார்க்‌ கருளல்‌
என்று கூறவும்‌ அவனது பக்திக்குமெச்சி அச்சுதன்‌ (திருமால்‌) புன்முறுவல்‌ பூத்து திருமகள்‌ முகத்தைப்‌: பார்த்து “இவன்‌
மூலமாகவே வாதத்தில்‌ வெற்றி பெறச்‌ செய்வேன்‌. எனது பெருமையை மடந்தாய்‌! காண்க’” என்று தனது வைபவம்‌ தோன்றச்‌ சொல்லி H—92

“உன்‌ விருப்பமா? சும்மா போ அப்பா! வரமுனிவனே! மன்னன்‌ அவையில்‌ உன்னை ஏற்கும்படி செய்கிறேன்‌.
மறுப்பொன்றும்‌ கூற வேண்டாம்‌. அதன்‌ பிறகு நான்‌ பார்த்துக்‌ கொள்கிறேன்‌.” 2-93-

எனவும்‌, பதில்‌ சொல்ல அஞ்சி, அந்த ஆழ்வார்‌ போவதற்கு
ஒப்புக்‌ கொண்டார்‌. அதற்குள்‌ தாமரைக்‌ கண்ணனாூய திருமால்‌ பயண ஏற்பாடுகளைச்‌ செய்யுமாறு நம்பி (பூசாரி)க்கு- கட்டளை இட்டார்‌ 11—94

பெரியாழ்வார்‌ மதுரைக்‌ கேகுதல்‌ ‘
கட்டளைப்படியே, கோயில்‌ நிர்வா௫ுகள்‌ பழைய பல்லக்கும்‌, சுமப்பவர்களையும்‌ ஏற்பாடு செய்து கோயில்‌ கொட்டாரத்தி
லிருந்து பயணப்படி தந்து அனுப்பி வைத்தான்‌ [495

வலிய குதிரைகள்‌ மேல்‌ பயணப்பைகள்‌ தொங்க, பக்கத்தில்‌.ஏகாங்ககள்‌ வரவும்‌ மன்னனுக்கு கோயில்‌ பிரசாதங்கள்‌
(அதிரசம்‌) எடுத்துக்கொண்டு சென்றான்‌. 11—96

இல்லாள்‌ பக்தியுடன்‌ வழிப்பயணத்திற்காக வேண்டிய பொருட்களோடு, பொரிவிளங்காய்‌ வைத்து அனுப்பவும்‌,
உலையில்‌ அப்படியே போடுவதற்கேற்ற (கல்‌ பொறுக்கி சுத்தம்‌ செய்த) பழைய நெல்லரிசியும்‌, வெல்லம்‌ (பலசரக்கு சாமான்கள்‌)
கூடிய புளி, சமையல்‌ பாத்திரங்கள்‌ (அடிசிற்கலங்கள்‌) உள்ள காவடியின்‌ நுனியில்‌ கட்டிய நெய்ச்செம்புகளும்‌, தயிர்‌ வடகம்‌,
பச்சை வடகம்‌, பருப்பு, பூசைக்கான பெட்டி, முதலியவற்றை சாத்தினவர்களும்‌ சாத்தாதவர்களும்‌ * முறையறிந்து கொண்டு
வர மதுரைக்குச்‌ சென்றான்‌. 11.-97

யமம்‌, நியமம்‌, (அடக்கம்‌) முதலியயோகத்தினால்‌ அடையப்‌ படுபவனே ! பிரம்மா முதலிய தேவர்கட்குத்‌ தலைவனே! பிறவித்‌
துயர்கெடுக்கும்‌ நாமசங்கர்த்தனையுடையவனே! முரன்‌ என்னும்‌ (முரண்பட்ட) அசுரனைக்‌ கொன்றவனே! பாவங்களை அழிப்‌
பவனே! திருமகள்‌ காதலனே! தாமரைக்‌ கண்ண? அடியார்‌ மனத்திலுள்ள அறியாமை என்னும்‌ புல்லைச்‌ செதுக்கும்‌ வாள்‌
போன்றவனே! நிலமகள்கேள்வனே/ முலையும்‌ கரிக்குருவி யையும்‌ வென்ற வண்ணமுடையவனே 17-98

நுகம்‌ போன்ற தோள்களால்‌ ஆற்றற்கரிய கோவர்த்தன கிரியைத்‌ தாங்கயெவனே! இராதையின்பால்‌ அன்பு பூண்டவனே!
விசாயாட்டாக வட்டி (இருப்பதி வெங்கடேசப்‌ பெருமான்‌ வட்டி
வாங்குவதற்காக புராணம்‌) வாங்குபவனே! இந்திரன்‌ மகன்‌ (சயந்தன்‌) கண்களை (காகமாக வந்து தையை அவமானப்‌
படுத்தியபோது இராமனாக) விகாரம்‌ படுத்தியவனே 17-9௦

பிரம்மபுத்திரனாகய நாரதனின்‌ மனத்தில்‌ வூக்கும்‌ சிவந்த பாதங்களையுடையவனே / எல்லா உயிர்களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ திறைந்திருப்பவனே/ பார்வதி தேவியால்‌ துஇிக்கப்படும்‌ சிறப்பினையுடையவனே ! TJ-—~100

“இப்பாடல்கள்‌ திருமாலை நோக்க விளிப்பதாக அமைந்த சமர்ப்பண பாடல்கள்‌.

உலகுக்கணியாகக்‌ கொண்ட. ₹வீடு’ என்னும்‌ கோட்டையிலும்‌ உகுயகரியிலும்‌ கஜபதிமன்னன்‌ மகன்‌ வீரபத்திர பாத்திரனின்‌ படை மக்களின்‌ உயிரைக்‌ கவரும்‌ இராகுவான வீரமிக்க கிருஷ்ண தேவராயர்‌ எனும்‌ பெயருடைய என்னுடைய ஆமுக்த மால்யத எனும்‌ காவியத்தில்‌ இனிய செய்யுட்களோடு கூடிய இரண்டாவது அத்தியாயம்‌ இதுவாகும்‌.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)-முதல்‌ அத்தியாயம்‌–ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

இவ்வரிய காவியத்துக்கு “ஆமுக்த மால்யத:என்றும்‌ ₹₹விஷ்ணு சித்தீயம்‌’” என்றும்‌ இரு பெயர்கள்‌ உண்டு.

“ஆமுக்த மால்யத’ என்று வடசொற்கு *:சூடிக்‌ களைந்த பூமாலையைத்‌ தந்தவள்‌£” என்று பொருள்‌ படும்‌:

விஷ்ணு சித்தீயம்‌ என்பது பெரியாழ்வார்‌ பெயர்‌ “விஷ்ணு சித்தன்‌” என்ற சொல்லிலிருந்து உருவாகியதாகும்‌.

தமிழில்‌ சூடிக்கொடுத்தவள்‌ என்று பெயரிட்‌.டுள்ளோம்‌.

இக்காப்பியம்‌ ஆறு ஆஸ்வாசம்‌ எனப்படும்‌. அத்தி யாயங்களை உடையது, வேதம்‌ வெங்கடராயசாஸ்திரி அவர்கள்‌ உரை நூலில்‌ ஏழு அத்தியாயங்களாகக்‌
கொண்டுள்ளார்‌. — ஏமூமலையானுக்குச்‌ சமர்ப்பித்த நூல்‌ ஆதலின்‌ ஏழே பொருத்தம்‌ என்பது அவரது கருக்‌தாகும்‌.

ஸ்ரீ வைணவத்தில்‌ ஆழ்ந்த பற்றுடையவராக  ஸ்ரீகிருஷ்ணதேவராயர்‌ திருப்பதி ஸ்ரீவேங்க டேசுவரிடத்து அளவற்ற பக்தி கொண்டவர்‌.

இவர்‌, 1513இல்‌ கட்டாக்‌ (ஒரிசா) கஜபதி மன்னரைப்‌ போரில்‌ வென்றார்‌; கஜபதி மன்னரின்‌ மகளை மணந்து கொண்டார்‌.
இவர்‌, கர்நாடகத்தைச்‌ சேர்ந்த ராயச்சித்திரத்‌தையும்‌, தமிழகம்‌, சிங்களம்‌, கேரளம்‌ கிய நாடுகளையும்‌ தம்‌ வசமாக்‌கினார்‌.
பீஜப்பூர்‌ சுல்தானை வென்று கர்நாடகம்‌ முழுவதையும்‌ தம்மடிக்‌கிழ்க்‌ கொணர்ந்தார்‌.
பத்தாண்டுகளுக்குள்‌(1520-இல்‌) தென்னகம்‌ முழுவதற்கும்‌ ௮வர்‌ ஏக சக்கராதிபதியாக உயர்ந்தார்‌.

தாதாசாரியரீ என்பவர்‌ கருஷ்ணதேவராயரின்‌ வைணவக்‌ குருவாவார்‌.–கிருஷ்ணதேவராயர்‌ 1529, அக்டோபர்‌ 27ம்‌ நாள்‌ மரணமுற்றார்‌.

ஸ்ரீ கிருஷ்ணதேவராயர்‌ 1515-16ம்‌ ஆண்டில்‌ விஜயவாடா விற்கு அருகிலுள்ள ஸ்ரீகாகுளம்‌ ஆந்திர விஷ்ணு தேவாலயத்‌
திற்குச்‌ சென்று *ஆமுக்த மால்யத” காவியத்தை இயற்றத்‌ தொடங்கி 1520இல்‌ அதனை முடித்திருப்பார்‌ என்றுகரு தப்‌ படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்‌, பெரியாழ்வாருக்கு மிகப்‌ பிற்‌காலத்தில்‌ வாழ்ந்த ஆளவந்தார்‌, ஆளவந்தாரின்‌ சீடராகிய
இராமானுசர்‌, இவரது மரபில்‌ வந்த வேதாந்த தேசிகர்‌ ஆகியோரையும்‌ இணைத்திருக்கிறார்‌. இது வரலாற்றுணர்வுக்குப்‌
பொருத்தமன்று, கவி நயத்தாலும்‌, கவிஞனுக்குரிய சுதந்திரத்தாலும்‌, இக்காலப்‌ பொருத்தமின்மையைக்‌ காவியங்களில்‌ முற்காலக்‌
கவிஞர்களும்‌ பயன்படுத்திமையாலும்‌ இதனை ஒரு காவிய உத்தியாகவே கொள்ள வேண்டும்‌,
————-

முதல்‌ அத்தியாயம்‌

திருமகளின்‌ அழகிய மார்பணியான மணிஹாரரத்தில்‌ தானும்‌ தனது கெளஸ்துப மணியில்‌ அத் திருமகளும்‌ பிரதி பிம்பமாகத்‌
தோன்ற, பரஸ்பரம்‌ தத்தம்‌ மனங்களில்‌ காதல்‌ மீதூர நிலைத்து இலங்கும்‌ அவர்களது உருவங்கள்‌ உடலின்‌ .தூய்மையாலே
வெளியே தோன்றுகின்றனவோ என்று கருதும்‌ படியாக உள்ள, திருவேங்கடவனை வணங்குகிறேன்‌. I~1

திருமகளை வஞ்சித்து அவளுக்குத்‌ தெரியாமல்‌ நிலமகளைப்‌ புணர்தற்கு யாருடைய படமுடிகள்‌ விசாலமான சந்திர சாலை
களாக (நிலாமுற்றங்களாகத்‌) திகழ்ந்தனவேவோ அந்த ஆதிசேடனை, புலனடக்கமிக்க புனிதனை என்றும்‌ வணங்குகிறேன்‌–I—2

கடல்நீர்‌ வானில்‌ நடமிடப் பாதாளம்‌ காணப்பட்டும்‌, ஒன்றோடொன்று பிணைந்து மொத்தையாடிூப்‌ பயந்த அரவங்‌
களைக்‌ காணத் தக்கதாக்கியும்‌, கூடு கட்டக்‌ கொண்டு செல்லும்‌ கட்டைகளோ எனுமாறு பெருமரங்கள்‌ பின் தொடருமாறு
காற்றடித்தும்‌, இறக்கைகளின்‌ பேரொலியால்‌ எதிர்முழக்கமிடும்‌ மேரு மத்தர கிரிகளின்‌ குசைகள்‌ துந்துபிகளாக அமையச்‌ செய்தும்‌,
சூறாவளிக்‌ காற்றால்‌ எறியப்பட்டு தத்தம்‌ நகர்கள்‌ மாற்றமடைந்த திக்பாலகர்களை வெருவச்‌ செய்தும்‌, மின்னலுடன்‌
கூடிய மழை முகில்களை கடலில்‌ வீழ்த்தியும்‌, கடலிலுள்ள வடவைத்‌ கீயை வானில்‌ வீசியும்‌, மாபெரும்‌ ஆற்றலைக்காட்டும்‌
கருடனுடைய இறக்கைகளிலிருந்து எழுந்த பெருங்காற்று எமது பாவங்கள்‌ என்றும்‌ பஞ்சுக் குவையை வீசியெறியுமாக/ —1~3

முகுந்தனின்‌ கட்டளைகளை புருவ அசைப்பிற்‌ கண்டு பிரம்மாண்ட பிரபஞ்சங்களை உருவாக்கவும்‌ அழிக்கவும்‌ வல்ல
தனது.பொற்பிரம்பின்‌ அசைவும்‌ அசைவின்மையும்‌ ஜடசேதனங்‌ களாகத்‌ திகழச்‌ செய்யும்‌ விசுவக்சேனரின்‌ பொற்பிரம்பினை வணங்குகின்றேன்‌, –1-4

திருமால்‌ (சங்கை) ஊதவும்‌, அவன்‌ வாய்மணம்‌ விழைந்து கவரப்பட்ட உந்திக்‌ கமலத்துள்ளிருக்கும்‌ வண்டுகள்‌ எதிர்‌
சூழவும்‌, அது, அசுரர்களின்‌ பாவம்‌ நிறைந்த உயிர்களைக்‌ கவர்வது போலத்‌ தோன்றும்‌, முழுநிலவொத்த பாஞ்ச ஜன்யம்
எனும்‌ சங்கம்‌ எல்லா நலன்களும ஈவதாக, (அசுரர்‌ உயிர்கள்‌ கருவண்டுகளாக உவமிக்கப்பட்டது) 1–5

பரந்துள்ள கீழ்  மேல் பாகங்கள்‌ (பிடியின்‌ இருபக்கமும்‌) விளக்குத் தூண்‌ போலவும்‌, அதன்மேல்‌ ஒளிரும்‌ முதலைவாய்‌
எனும்‌ பொன்தகடு. விளக்குச்‌ சுடராகவும்‌ அதன்‌ மேல் திகழும்‌ வாள்‌ சுடர்க்‌ கொடி(கரும்புகை)யாகவும்விளங்கி ஞானதீ பமாகத்‌
திகழும்‌ அழகிய நந்தகமென்னும்‌ – வாள்‌= பாவக்கொடிகளை அறுத்தெறியுமாக, –1-6-

யாதவகுல மாமன்னன்‌ (கண்ணன்‌) உடைய தோள்களால்‌ ஏவப்பட்டு சாளுவன்‌ எனும்‌ அசுரனுடைய பொன்னாலான
மணிகள்‌ உடைய கோட்டையை தனது (கதையினுடைய) வளையணிகளில்‌ ஒன்றாக அமைத்த காமோதகி எனும்‌ கதையை,
மகழ்ச்சி தரும்‌ கற்பகப்‌ பூமாலைகளுடன்‌ இகழ்வதாகிய அதனை வணங்குகிறேன்‌.
(சாள்வன்‌ பொற்கோட்டையும்‌ ஒரு வலயமாக அணிவிக்கப்‌ பட்ட கதை வெற்றி மிக்கது என்பது கருத்து, இக்கதை புராணக்‌ கதைகளில்‌ காண்க) 1—7

பிடியிலடங்கும்‌ இடையும்‌ மூன்று வளைவுமுடைய கூனியை நிமிர்த்தி நல்லெழில்‌ நங்கை யாக்கியது போல பிடியிலடங்கி,
வளைவுடன்‌ நற்குணமும்‌ உடைய என்னையும்‌ நேராக்கி ஏற்றுக்‌ கொள்க என்று வணங்கும்‌ சார்ங்கம்‌ எனும்விற்கொடி நம்மைக்‌ காக்குமாக.
(சுமாலி எனும்‌ அசுரனைப்‌ போரில்‌ வென்ற போது மழை போல அம்புகள்‌ பொழிந்த வில்‌ சார்ங்கம்‌ ஆகும்‌.) 1–8-

கழுத்திலிருந்து ஒழுகும்‌ குருதி தீச் சுவாலையாகவும்‌, தலை–உலை வைத்த பெரும் பானையாகவும்‌, வாய் கக்கிய அமுத தாரை,
நுரை பொங்குவதாகவும்‌ தோன்றுமாறு ராகுவின்‌ தலையைக்‌ கொய்த சுதர்சன சக்கரத்தை வணங்குகிறேன்‌– I-9

பிரசித்தமான பன்னிரண்டு சூரியர்கள்‌ (துவாதச ஆதித்தியர்கள்‌) நடுவில்‌ வசித்ததால்‌ ஏற்பட்ட வெம்மையைப்‌
போக்குவதற்காக, தமது மனத் தாமரை மலரில்‌ பிறந்த தேனாற்றில் திளைத்து இன்புறுமாறு திருமாலை வழிபட்டுப்‌ பயன்‌
பெற்ற பன்னிரு ஆழ்வார்களையும்‌ (திவ்ய சூரிகள்‌) மோட்‌ சத்தை விழைந்து வணங்குகிறேன்‌. . 1—10

என்று தெய்வ வணக்கம்‌ செய்து, முன்பு சுலிங்க நாட்டை வெற்றி கொள்ள நினைந்து படையெடுத்துச்‌ செல்லும் போது
விஜயவாடாவில்‌ சின்னாள்‌ இருந்து ஸ்ரீகாகுளத்தில்‌ உறையும்‌ ஆந்திரமது மதனனை (திருமாலை)ச்‌ சேவிக்கச்‌ சென்று ஏகாதசி விரதம்‌ இருந்து அங்கு அப்புண்ணிய இரவில்‌ நான்காவது யாமத்தில்‌, 1–11

கரு முகிலை வென்ற மின்னும்மாமை நிறத்தோடு கூடிய வனும்‌, தாமரை மலர்களை வென்ற ஒளி மிக்க நீண்ட கண்ணிணை
யுடையவனும்‌, புள்ளரசனின்‌ (கருடனின்‌) இறக்கைகளைவென்ற பொன்‌ வண்ணப்பட்டாடையுடனும்‌, காலை இளம்பரிதி எழிலை வென்ற கெளஸ்துப மணியுடனும்‌, தாமரைக் கையிருக்க, மற்றொரு கையால்‌ கை லாகு தருகின்ற வறுமையைப்‌ போக்கும்‌ இளம்‌ பார்வையுடைய நங்கையோடு (திருமகளோடு) கூடியவனாக இருந்து, அருள்‌ ஒழுகும்‌ புன் முறுவலோடு ஆந்திர விஷ்ணு இவ்விதம்‌ ஆணையிட்டருளினான்‌ I—12

உவமை உருவகங்களின்‌ சிறப்பு மிளிர, ரசிகர்கள்‌ மனங்களிப்ப மதாலசசரித்திரம்‌ சொன்னாய்‌, தொனி, கருத்து எழில்மிகுமாறு
“சத்ய பாமா பரிணயம்‌’” எனும்‌ காவியம்‌ செய்தாய்‌, வேத புராணங்களிலிருந்து தேர்ந்து தொகுத்து *:சகல கதாசார
சங்கிரகம்‌’” படைத்தாய்‌! கேட்பவர்‌ பாவங்கள்‌ போமாறு சொற்‌ சாதுரியத்தோடு *:ஞானசிந்தாமணி** நால்‌ இயற்றினாய்‌
மேலும்‌ *ரசமஞ்சரி’ முதலிய இனிய காவியங்கள்‌ வடமொழியில்‌ படைத்துச்‌ சிறப்பெய்தினாய்‌! அத்தகைய உனக்கு தெலுங்கில்‌ படைப்பது அ௮ரிதன்று; அதில்‌ ஒரு காவியம்‌ எமது விருப்பத்தின்‌ பொருட்டு இயற்றுவாயாக, T—13

எனது அவதாரங்களில்‌ எதைப்‌ படைப்பது? என்பாயாயின்‌ கேள்‌! நான்‌. தானே சூடிக் கொடுத்த பாமாலையைத்‌ குந்த அச்சிறுமியை (பேதையை) திருவரங்கத்தில்‌ திருமணம்‌ புரிந்த கதையைக்‌ கூறுவாயாக! முன்பு (கருஷ்ணாவதாரத்தில்‌) ஒரு ஆண்மகன்‌ (சுதாமன்‌) தர விருப்பின்‌றி மலர்மாலை கள்‌ புனைந்து கொண்டேன்‌. நானோ தெலுங்குராயன்‌. (தெலுங்கு மன்னன்‌- நீயோ கன்னடராயன்‌ (கர்ணாடக அரசன்‌) அக்குறையைத்‌ தீர்க்குமாறு காதலி சூடித்தந்த கையைக்‌ கூறுவாயாக. 1–14-

தெலுங்கில்‌ எதற்கென்று கேட்டால்‌ நான்‌ இருக்கும்‌ நாடு தெலுங்கு நாடாகும்‌. நான்‌ தெலுங்கு வல்லபன்‌. தெலுங்கு
மட்டுமா? எல்லா மன்னர்களும்‌ கொலுவிருக்கும்போது (பல்வேறு மொழிகளில்‌) பேசியறிய மாட்டாயா? தேச பாஷைகளில்‌
(நாட்டு மொழிகளில்‌) தெலுங்கே அழகானது. இனிமை மிக்கது -1-15-

உனக்கு இஷ்டதெய்வம்‌ வெங்கடேசுவரன்‌ ஆதலினாலே அவன்‌ பெயரில்‌ சமர்ப்பணமாக்கி இயற்றுக. ஓவ்வோரிடத்தும்‌
வேறு வேறு குறியீடுகளுடன்‌ (பெயர்‌ வேறுபடினும்‌) இருப்பது நான்தான்‌ அல்லவா? I—16

நூல்‌ இதனைச்‌ செய்யின்‌ உனக்கு மேன்மேலும்‌ நலன்கள்‌ கிட்டும்‌ என்று கூறிச்‌ செல்லவும்‌. ( துயிலிலிருந்து) விழித்தெழுந்து
வியப்புற்று பக்தியுடன்‌ கோயில்‌ கோபுரத்தை வணங்கி விடிந்ததும்‌ காலைக்‌ கடன்கள்‌ முடித்துவிட்டு –1-17-

கொலுவிருந்து, சேனாதிபதி, சிற்றரசர்கள்‌ குழுவை அழைத்து விடியற்காலையிலேயே வீட்டிற்கனுப்பி வைத்து,
பல்வேறு வேதாகம வித்தகர்களாகிய பண்டிதர்களைக்‌ கண்டு வணங்கி அவ்வினிய கனவைப்‌ பற்றிக்‌ கூறவும்‌, மகிழ்ந்து அவர்‌
களும்‌ வியப்புற்ற மனத்தினர்களாய்‌ “தேவா தேவதேவன்‌ (திருமால்‌) விஜயம்‌ செய்த அக்கனவு பல நலன்களும்‌ எய்துவதைக்‌
குறிக்கும்‌, எப்படி எனின்‌, முதலில்‌ தாமரைக்‌ கண்ணன்‌ கனவில்‌ காட்சி தந்தது முன்னைவிட அதிக பக்தியும்‌, அவன்‌ பிரபந்தம்‌
(காவியம்‌) படைக்குமாறு பணித்தது முன்னினும்‌ அதிக ஆமமான இலக்கியப்‌ பேரறிவும்‌, அவன்‌ தேவியின்‌ வருகை முன்னினும்‌
மிக்கச்‌ செல்வச்‌ செழிப்பும்‌ அவனது தேவியின்‌ கையிலிருந்த நூற்றிதழ் வெண்டாமரை இன்னும்‌ மிக்க வெண்‌ கொற்றக்‌
குடைகளையும்‌, அவன்‌ பல்வேறு மன்னர்களோடு அவரவர்‌ மொழிகளில்‌ பேசியறியமாட்டாயா? என்றது இன்னும்‌ மிக்க
மன்னர்களை வென்றுயர்வாய்‌ என்பதையும்‌, காதலி சூடித்தந்த தின்பம்  மிக்கதென்றதால்‌ இன்னும்‌ மிக்க பல காதலியர்‌ எய்தி
யின்புறுவதையும்‌, எடுத்துக்காட்டுகிறது! மிகுதிறன்மிக்க துருவசு மரபில்‌ பிறந்த உனக்கு இத்தகு நலன்கள்‌ எய்துவதில்‌ வியப்‌ பென்ன இருக்கிறது கேட்பாயாக- I~18

எவனைக்‌ கடல்தாய்‌ வயிறாரப்‌ பெற்றெடுத்தாளோ, சிவனுடைய சடை முடிக்காட்டில்‌ யார்‌ வாடாத பூவாக, என்றும்‌
பொலிவுற்றிலங்குவரோ, எல்லா தேவர்கட்கும்‌ பசி நீக்கும்‌,வித்தி விளைவிக்காத வான்பயிராகத்‌ திகழ்வது எதுவோ, இருளைத்‌
தின்று, குமுத மலரைத்‌ தன்‌ கரத்தால்‌ தீண்டிய நகையுறுத்துபவர்‌ யாரோ, அந்தப்‌ புகழ்மிகுந்த திருமாலின்‌ மைத்துனனும்‌,
கலைகட்‌குறைவிட மானவனும்‌, விண்மீன்களுக்கு அரசனும்‌, ஒளியின்‌ எல்லையாகத்‌ திகழும்‌, மன்மதனின்‌ தாய்‌ மாமன்‌ ஆகிய
பகலொளிக்கிணையான இரவொளியாகிய சந்திரன்‌ சிறப்புற்று, இலங்கினான்‌. 1.19

அந்த அழகு கிரணனுடைய செல்வமரபெனும்‌ கடலில்‌ எழுந்த மகனான, வேத வேதாங்க சாஸ்திரக்‌ கலைகள்‌ முற்று
முணர்ந்த அறிவுச்சுமை தாங்கிய புதன்‌ உதயமானான்‌.–I~20

அவனுக்குபுரூரவன்‌,சிங்கம்‌ போலப்‌ பேரறிவுடன்‌ பிறந்தான்‌. அம்‌ மன்னனுக்கு ஆயுவு பிறந்தான்‌. அவ்வரசனுக்கு யயாதி பிறந்தான்‌, 1.21
அவனுக்கு யது, துருவ்ச்‌ என்னும்‌ மக்கள்‌ பிறந்தனர்‌. பகைவரை யடக்கும்‌ திறனும்‌ கலைஞானமும்‌ மிக்கவர்களாக ்‌
இருந்தனர்‌. அவருள்‌ நற்குணச்சிறப்புடன்‌ துருவசு புகழ்‌ பெற்று இலங்கினான்‌ — 1–22

அவன்‌ மரபு, துளுவ வம்சம்‌ ஆயிற்று, அதில்‌ பலமன்னர்கள்‌ பிறந்தனர்‌. எல்லா உலகிலும்‌ நிறைந்த புகழுடன்‌ சிறப்புற்றிலங்‌
கிய அம்மரபில்‌ பிறந்தான்‌ திம்மராஜு மன்னன்‌. 1–23:

ஆன்ம, மந்தரமலை, அனந்த (சேஷ) சர்ப்பம்‌, திசை யானைகள்‌, முதுவராகம்‌ இவைகள்‌ தாங்கிய உராய்வின்‌ துயர்‌
தீர்த்து கன்‌ தோளில்‌ தாங்கி நிலைநிறுத்தி புகழ்‌ ஓளிவான்‌ முழுவதும்‌ பரவச்‌ செய்து, மன்னர்கள்‌ மருங்கில்‌ வணங்கத்‌
கொலுவிருக்குமாறு பிரதாபத்துடன்‌ அம் மன்னன்‌ தான்‌.–1-24

கொடை வள்ளலான அத் திம்ம மன்னனுக்கும்‌ தேவகி தேவிக்கும்‌ ஈஸ்வர ராஜு என்னும்‌ நல்லோரைக்‌ காக்கும் புண்ணிய மூர்த்தி பிறந்தான்‌. -1-25

திறன்‌ மிக்க செருக்குடைய பகைவர்‌ கோட்டைகளை (முப்‌ புரங்களை) அழித்தும்‌, நல்லோரைக்‌ காத்தும்‌, முன்னைய
ஈஸ்வரனே ஈஸ்வரனாசு பிறந்ததனால்‌, தாமரைக்‌ கண்‌ மடந்தையரை நீத்து, மலைக்‌ காடுகளில்‌ அஞ்சித்‌ திரியும்‌ பகை மன்னரின்‌
உடலிற்‌ பூசிய மன்மதக்‌ குறிகளும்‌ அழிவுற்றன. I—26

தன்‌ தோளைச்‌ சரணடைந்த நிலத்திற்கு வைரக்கவசமாகவும்‌, கயவர்களான பாம்புகட்கு பாம்பாட்டியாகவும்‌, தாமரைக்‌
கண்ணார்‌ தம்‌ மனப்பொருளைக்‌ கவர்பவனாகவும்‌, பகைவர்‌ எனும்‌ அன்னப்பறவைகளை விரட்டும்‌ மழை முகில்‌ வரவாகவும்‌
யாசகர்கள்‌ எனும்‌ குயில்கட்கு இளவேனிலாகவும்‌, நற்குண மணிகட்குறைவிடமான மலையாகவும்‌ உறவினர்‌ எனும்‌ தாமரை
மலர்கட்குச்‌ செங்கதிரவனாகவும்‌, அருள்‌ நதிக்‌ கரசனாகவும்‌, திகழ்ந்து, புகழ்‌ பெற்றான்‌. திம்ம பூபாலன்‌ மகன்‌ ஈஸ்வரன்‌
மன்னர்கள்‌ 555 திறைகளின்‌ செழிப்பால்‌ சுவர்க்கத்தை வென்ற சிறப்புடன்‌ மிளிர்ந்தான்‌, I—27

அந்த ஈஸ்வர மன்னனுக்கு,கற்புடைச்‌ செல்வி புக்க மாம்பா்‌வுக்கும்‌ கதிரொளியும்‌ மதிவலிவும்‌ உடைய தரசிம்மன்‌, திம்ம
ராஜு எனும்‌ இருவர்‌ உதயமாயினர்‌. I—28-

அவருள்‌ நரசமன்னன்‌, சந்தனம்‌, மந்தார மலர்‌, முல்லைப்பூ, நிலவுகளுக்கி ணையாளபுகழ்நிறைந்து நாற்றிசையும்‌ கீர்த்தியுடன்‌
பாவங்களைப்‌ போக்கி அரசாண்டான்‌.–1-29-

கடலாடையுடுத்த நிலவலயத்தைத்‌ தன்‌ தோளில்‌ தாங்கி பரிபா்லித்தும்‌, நாற்றிசை மன்னர்களை வென்று தன்‌ வீரக்கழல்‌
மணிச்‌ சித்திரமாக்கி வைத்தவனும்‌, தன்‌ பெரும்‌ புகழ்‌ என்னும்‌ பொய்கையில்‌ வானகத்தையே, அன்னப்பறவை ஆக்கியவனும்‌
இடைவிடாக்‌ கொடை மழையால்‌ கவிச்‌ சாதகப்‌ பறவைகளைத்‌ தணிவித்தவனும்‌ ஆகிய, கூரிய வாள்துணித்த செருக்குற்ற
மன்னர்தம்‌ தலைகளை ஈசனுக்கு அணியாக்கி வழிபட்ட நர௫சம்‌.ம மன்னன்‌ மிக்க புகழுடன்‌ திகழ்ந்தான்‌. J—30

அந்த நரசிம்ம மன்னன்‌ இப்பாம்பா மூலம்‌ வீரநரசிம்மனும்‌ நாகாம்பா மூலம்‌ திருமாலின்‌ அம்சமாக கிருஷ்ண தேவராய
னாகிய நின்னையும்‌ புத்திரராக அடைந்தான்‌- 1-31

வீர நரசிம்மன்‌ தன்‌ தோள்வலியால்‌ பகைவரை வென்றடக்கிச்‌ சிறப்புடன்‌ ஒருகுடைக்கீழ்‌ நிலத்தினையாண்டான்‌. 1.32

அம்மன்னனுக்குப்‌ பின்னார்‌, இந்நிலத்தை நீ ஆண்டாய்‌?திருமாலாதேவியும்‌, அன்னபூர்ணாதேவியும்‌ (கமலாப்‌ ஐமுகியும்‌)
மனைவியராக இன்புடன்‌ திகழ்ந்தாய்‌, –I—33

கிருஷ்ண தேவராய நீ ஆட்சிப்‌ பொறுப்பேற்று அரசாளத்‌ தொடங்கியதுமே எங்கும்‌ செழிப்பு ஏற்பட்டது. மக்களுச்கு
தூமகேதுவின்‌ பீடை (தூமகேது–வால்‌ நட்சத்திரம்‌)தொலைந்தது. மிகுமழையால்‌ வரும்‌ அச்சம்‌ அகன்றது. கயவரைப்‌ பற்றிய பயம்‌ நீங்கியது. செருக்‌
குற்ற மன்னரின்‌ பெருக்கம்‌ ஒழிந்தது, பாவம்‌ நீங்கியது. பாரலைவனத்தும்‌ மாதம்‌ மும்மாரி பொழிந்தது.
பேதையர்‌, கோவலர்‌ முதல்‌ அனைவரும்‌ மகிழ்வுடன்‌ வாழ்ந்தனர்‌. மக்கள்‌ எல்லோருக்கும்‌ ராமராஜ்யமாகத்‌ திகழ்ந்தது. 1—34

ஓன்பது கண்டங்களாம்‌! பதினெட்டுப்‌ பேர்‌ சுமப்பவர்கள௱ம்‌,-யானை, பன்றி, ஆமை, மலை; பாம்புகள்‌ என்ன வலியுடையன
எனக்கருதி உனது தோள்‌ ஒன்றே உலகினைத்‌ தாங்கியது . (சுமப்பவார்‌ 18 அவது திசையானை 8பன்றி1 ஆமை 1
மலைகள்‌ 7 ஆதிசேடன்‌ .1] ஆக 18 என்பது கருத்து. பதினெட்டு போர்‌ சுமந்த9 கண்டங்களையுடைய பூமியை உன்‌ ஒரு புஜமே
தாங்கிற்று என்பது கருத்து.) .1-35

கிருஷ்ண தேவராய! உனது பிரதஈபம்‌ என்னும்‌ நெருங்குதநற் கரிய இயானது வால்நெருப்புப்‌ போல முதன்முதலில்‌ உதயகிரி
என்னும்‌ கல்லில்‌ உன்‌ வாளாகிய இரும்பு உராயவே சூடேறிப்‌ பிறந்தது. பின்கொண்ட வீடு (மலைவீடு)வைப்‌ பற்றி எரிந்தது.
அதைக்‌ தொடர்ந்து ஐம்மி லோய” (வன்னிமரப்‌ பள்ளத்தாக்கு) எனும்‌ இடத்தை சுட்டெரித்தது. கோளசீமை ‘(சீழ்க்கடற்கரைப்‌
பகுதி)யைக்‌ கொளுத்தி, கொட்டம்‌ (கொட்டாரம்‌) எனும்‌ ஊரையும்‌ பற்றிக்‌ கொண்டது. கனகஇரி (தங்கமலை)யை
கரைத்து, கோதாவரியைக்‌ காயச்‌ செய்து அதன்‌ பிறகு பொட்டுனூரை (பதர்ஊர்‌)யும்‌ தீய்த்து, .மாடமுல (மாடி)
ஊரைப்‌ பொசுக்கியது. ஒட்டியா்‌ நாட்டை (கலிங்கம்‌) கரியாக்கியது. கடகத்தை (கட்டாக்‌)ச்‌ சுட்டது. கஜபதி (கலிங்க
மன்னர்கள்‌) (யானை)கள்‌ மருண்டோடச்‌ செய்தது. (வால்நெருப்பு :–வரட்டிகளை வரிசையாக ஒன்றன்பின்‌
ஒன்றாக அடுக்கிக்‌ காட்டில்‌ தீ மூட்டி விடுவர்‌. அது அணையாது. ஒவ்வொன்றாகப்‌ பற்றியெரியும்‌. வால்போல அமைந்து இருப்ப
தால்‌ இதனை வால்நெருப்பு (தோகசிச்சு) என்பது வழக்கம்‌:
அதுபோல கிருவ்ணதேவராயரின்‌ படை எடுப்பான உதயூரியில்‌ (நெல்லுர்‌ அருகே) தொடங்கிய முற்றுகை வெற்றி பெற்று
ஒரியாதலை தலைநகரான கடகம்‌ (கட்டாக்‌) வரை சென்று வென்ற வீர வரலாற்றை இப்பாடல்‌ விளக்குகிறது.) I—36

இருண்ண தேவராய மன்னனே! உனது முற்றுகைக்குத்‌ தாங்காமல்‌ தோற்றோடிய உத்கல (கலிங்க) க்ஷத்திரியார்களாகிய
பாத்திரார்கள்‌ எல்லோரும்‌ வாடாத மேனியோடு (விழுப்புண்‌ படாமலே) தேவமகளிரின்‌ இல்லங்களில்‌ புகுந்தார்கள்‌.
ராஜமஹேந்திரத்திற்கும்‌ கொண்ட. வீடுவுக்கும்‌ குடிபோக என்ன தந்திரம்‌ (சுரங்க வழி போன்றவை) முன்னோர்‌ செய்தனரோ?
வியப்பாயுள்ளது.
(தோற்றவர்கள்‌ ராஜமஹேந்திரவரம்‌. பகுதி புளிஞர் (சபரர்‌) இல்லங்களில்‌ நுழைந்து மறைந்து சுகமாக இருந்தார்கள்‌ என்பது ஏளனமாக சுட்டப்படுகிறது.) 1-37

கிருஷ்ணதேவராய மன்னனே! கலிங்க ராத்யலட்சுமி
யானவள்‌ விண்தொடும்‌ யானைகளோடு வந்துன்னைச்‌ சேர்ந்‌ தாள்‌!
அன்புடன்‌ வாடாத நேயமுடன்‌ குிருஷ்ணராயனைச்‌
சேர்வதன்றி, முறைகெடுமாறு சகோதரனாூய உருத்திரனைக்‌ கூடுவாளோ?
காரணம்‌ இதுதான்‌ ஆகும்‌.
(கலிங்க மன்னன்‌ பெயர்‌ வீரருத்திரன்‌, லட்சுமிக்கு
உருத்திரன்‌ (சிவன்‌) சகோதரி முறை என்பது புராணம்‌.) 1–38

கிருஷ்ணதேவராய/! உனது முற்றுக்கைக்கஞ்சி விந்திய
மலையைக்‌ கடந்து கஜபதி மன்னர்கள்‌ செல்வர்‌.
அவர்கள்‌ உனக்கஞ்சியபடி இடையர்‌ வேடம்‌ பூண்டு காட்டில்‌ நுழையும்‌ போது, இரவில்‌ குகையில்‌ புகவே
பாம்புச்‌ சட்டையானது தலை முடியில்‌ சுற்றிக்கொண்டு தலைப்பாகை போலவும்‌,
உடலெங்கும்‌ சிலந்தி வலைபட்டு, பட்டுத்துகில்போல அமையவும்‌,
இருட்டில்‌ குகையில்‌ நுழையும்போது கல்லில்‌ இடிபட்ட நெற்றியில்‌ பொங்கிய குருதி காய்ந்து போய்‌ சிந்தூரதிலகம்‌ போல்‌ இருக்கவும்‌,
களைப்பில்‌ புரண்டபோது ஒட்டிய மயிலிறகுகள்‌ மூவண்ணச்‌ சரிகைக் கரைபோல தோன்றவும்‌ செய்தன.
தூக்கத்திலிருந்து எழுந்து, அருவி நீரில்‌ தம்‌ நிழலைக்‌ கண்டு, இடையர்‌ வேடம்‌ போய்‌ முன்னைய மன்னர்‌ வேடம்‌ வந்ததென்ன?
இந்த இடத்தின்‌ மஹிமை போலும்‌ என்று பயந்தவாறு அந்த வனத்தைவிட்டுப்‌ பெயர்ந்தனர்‌. J—39

நீ பொட்டுனூரி1யருகில்‌ பனைமரம்‌ என நிறுவிய வெற்றித்‌ தூணில்‌ செதுக்கிய சாசனத்தை
சிம்மாசல நரசிம்ம சுவாமியின்‌ திருநாளுக்காக வானத்திலிருந்து இறங்கிய தேவர்கள்‌
கலிங்கமன்னனின்‌ இகழ்‌ என்னும்‌ மையைத்‌ தடவி பல
முறை விருப்புடன்‌ படிப்பார்கள்‌.
(ஏடுகள்‌, சாசனங்களில்‌ மையைத்‌ தடவி வாசிப்பது மரபு) 1.40

கிருஷ்ணதேவராய/ கலபரகி (குல்பர்க்கா) சாகர்‌ பட்டணங்‌களில்‌ யவன மன்னர்களை வென்றபோது படையெடுப்பில்‌
இருந்த துருக்கப்படை வீரர்கள்‌ சுவர்க்கத்தில்‌ சென்று சனகாதி முனிவர்களின்‌ கோபிசந்தன திரிபுண்டர நாமங்களை நக்கியும்‌,
தேவநாயகர்களின்‌ வீணையின்‌ தந்திகளை அறுத்தும்‌, சப்தரிஷிகளின்‌ ததேவகங்கை மணலிற்‌ செய்த லிங்கங்களை காலால்‌
துவைத்தும்‌, ரம்பை முதலிய அப்சரமகவிர்தம்‌ முலைக்‌ கும்பங்‌ களை பிடித்திழுத்தும்‌ பூர்வவாசனை விடாமல்‌ திரிகின்‌ றனர்‌. I—41

குதிரைக்‌ குளம்புகளால்‌ பேய்ச்சுரைக்‌ கொடிகள்‌ போக உழுது, யானைகளின்‌ மத தாரையால்‌ நனைந்த நிலத்தில்‌ நினது
புகழ்‌ என்னும்‌ பயிரையிட்டு ஏதில்‌ ஷா என்னும்‌ முஸ்லிம்‌ மன்னனின்‌ தலையாகிய திருஷ்டிபொம்மையை கட்டி வைத்‌ துள்ளாய்‌. ்‌ I— 42

கிருஷ்ணராய/ அடிக்கடி மனமொத்தியற்றும்‌ உனது பதினாறு தானங்களும்‌, அக்கரகாரங்கள்‌ தந்த கெரடையும்‌
கண்டு உனக்கிணையாகோம்‌ என்றல்லவா தேவலோகக்‌ கற்பக தருவும்‌ இகழ்‌ஃ என்னும்‌ வண்டுகளும்‌ குயில்களும்‌ சேரப்‌ பெற்றுள்ளது.

பிரபல ராஜாதிராஜ! வீரப்பிரதாப! ராஜபரமேசுவர! பொருள்‌ எனும்‌ பார்வதிக்கு நடேசனாகியவனே/ சாஹித்ய (இலக்கியம்‌) சமராங்கன (போர்க்கள) சார்வ பெளம (சக்கரவர்த்தி)! இருஷ்ணராயேந்திர! நரல்‌ செய்வாயாக” எனக்‌ கூறினர்‌. [44

அவ்வளவில்‌ மகிழ்ந்த மனத்தினனாய்‌ I—45
சமர்ப்பணப்‌ பாடல்கள்‌
அலை மகளின்‌ முலைதடக்‌ குங்குமத்தொய்யில்‌ சப்பட்ட
மார்புடையவனும்‌, இந்திரன்‌ மு.தலியவர்கட்குத்‌ தலைவனும்‌, தாமரைக்‌ கண்கள்‌ உடையவனும்‌, தரசிம்மமானவனும்‌ I—46

காளிங்கனின்‌ படத்தை துவைத்தவனும்‌,சடைமுடியோனும்‌,
பிரம்மனும்‌ பிரதிபிம்பிக்கப்பட்ட துரய  யுடையவனும்‌, சார்ங்கம்‌ எனும்‌ வில்லின்‌ தழும்பையுடைய தோளையுடையவனும்‌, பாவச்‌ சேற்றினைப்‌ போக்கும்‌ சூரியன்‌ ஆனவனும்‌, அசுரர்‌ எனும்‌ யானைகட்கு அங்குசம்‌ (தோட்டி) ஆனவனும்‌. I-47-

குக்புஷ்கரணிக்‌ கரையின்‌ காட்டில்‌ அலைந்த வஞ்சகப்‌ புளிஞன்‌ (பளியர்‌) ஆனவனும்‌, பிரம்மாண்டங்களைத்‌ தன்‌
வயிற்றிலடக்கியவனும்‌, நலன்‌ பயக்கும்‌ கருணை மிக்கு கடைக்‌ கண்களையுடையவனும்‌ I—48

சுதர்சனம்‌ எனும்‌ சக்கிராயுதமாகிய நெருப்புக்குத்‌ தூண்டி. விடும்‌ நெய்யாகிய ராகு எனும்‌ அசுரனின்‌ ரத்தத்தைப்‌
பெய்தவனும்‌ ஆகிய திருவேங்கடாசலபதிக்கு I—49

நான்‌ விண்ணப்பிக்கப்‌ பூண்டுள்ள ஆமுக்தமால்யத (சூடிக்‌ கொடுத்தவள்‌) எனும்‌ மகா காவியத்துக்கு கதைக்‌ இரமம்‌ எப்படி. என்றால்‌, 1-30-

—————

கதைத்‌ தொடக்கம்‌
மனங்கவரும்‌ பூங்காவிலுள்ள குயில்‌, கிளிகளின்‌ குரல்‌ எதிரொலித்து, மாளிகை உப்பரிகையில்‌ இழைக்கப்பட்ட நீலமணி
களால்‌ ஆன குயில்‌, மரகதத்தால்‌ ஆன கிளிகளின்‌ குரலாக மயங்கச்‌ செய்யும்‌. வானைத்‌ தொடுகின்ற பொன்‌ மாளிகைகள்‌
எங்கும்‌ எழில்‌ பெற்றிருக்கும்‌ ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ என்னுமவர்‌ பாண்டிய நாட்டின்‌ தலைச்சுட்டியாக (திலகம்‌ போல) சிறப்புற்றிருக்கும்‌. I—S!

தாமரை மொட்டுக்கள்‌ போன்ற செம்புக்‌ கலசங்களின்‌ ஒளி, சிகப்புத்‌ தலைப்பாகையாகவும்‌, தங்க ஓடுகள்‌ வேய்ந்துள்ளது
கவசமாகவும்‌ அமைய, இந்திரனின்‌ மாளிகையான “வைஜயந்தத்‌’)ை வெற்றி கொள்வதற்காக நிற்கும்‌ (படை
வீரன்‌ போன்று) ஸ்ரீ வில்லிபுத்தூாரின்‌ மாளிகைகள்‌ எழில்‌ பெற்றிலங்குகின்றன. I—S2

கடலில்‌ கிடந்ததால்‌ பாசிபடித்த இசை யானைகள்‌ என்னும்‌ படியாக மரகதக்‌ கல்லில்‌ இழைத்த யானைகளும்‌, யானையின்‌
துதிக்கை மட்டும்‌ மிஞ்ச (மற்ற உடலை) விழுங்கிய மரகதத்தால்‌ ஆன சிங்கமும்‌* (துதிக்கையடன்‌ கூடிய சிங்கம்‌ ஆன ₹யாளி’யை யை இங்கு கவிஞர்‌ குறிப்பிடுவதாகத்‌ தோன்றுகிறது. இத்தகைய யாளி உருவங்கள்‌ தென்னகக்‌ கோயில்களில்‌ காணப்படுகின்றன. இதனை தெலுங்கு உரையா?ரியர்கள்‌ சிங்கம்‌ என்றே கருதி உரை வகுத்துள்ளனர்‌)நிறுவிய படிக்கட்டுக்கள்‌ அமைய இரட்டை
யானைகள்‌ நீராட்டும்‌ பொன்‌ (முலாம்‌) னாலான நீரில்‌ வரையப்‌ பட்ட இருமகளும்‌, அவளருகில்‌ சங்கு சக்கரங்களும்‌ உடைய
சித்திரம்‌, அணிகளால்‌ ஆன திண்ணையில்‌ பிரதிபலிக்க மாளிகைகள்‌ இருந்தன. பிற நகர மனைத்திருவினை மண முடிக்க இவ்வில்லத்தரசார்கள்‌ கட்டிய கங்கண சூத்திரம்‌ போல மணித்தோரணங்கள்‌ திகழ்ந்தன. இத்தகு இல்லங்கள்‌ நூல்‌ பிடித்தாற்‌ போல ஒழுங்காக இருந்தன. I—53 .

பவளச்‌ செந்தூரம்‌ பூசிய பாண்டிய மாதர்‌ முலைகளை நகைக்கும்‌, செவ்விளநீர்களோடு கூடிய தென்னை மரங்களும்‌,
வைரச்‌ சுவர்களோடு கூடிய பாதைகளும்‌, வீடு கட்ட உபயோகித்தது போக மீந்த மணிகளைக்‌ காப்பாற்றுவதற்காக,
கடலானது தனது முதன்‌ மனைவியாகிய கங்கையையும்‌ மகனாகிய கற்பசுத்‌ தருவையும்‌ அடகு வைத்தது போலதீ
தோன்றின. (வைரமணிச்‌ சுவரின்‌ ஓளிபட்ட தெருக்கள்‌ வெண்மையான கங்காநதி போலவும்‌, தென்னை மரங்கள்‌
கற்பகத்‌ தருக்களாகவும்‌ உவமிக்கப்பட்டுள்ளன) 1… 54

பாளை விரிந்த தென்னை மரங்கள்‌,(வாயிலைச்‌ சேர்ந்துள்ள) மணிகளால்‌ ஆன திண்ணைகளில்‌ பிரதிபலித்துவாசலை முயற்சி
யின்றியே செய்த சிங்காரமாகி (சாணத்தால்‌) மெழுகிக்‌ கோல மிட்டது போலத்‌ தோன்றும்‌,
(சாணத்தால்‌ மெழுகனால்‌, தென்னையின்‌ ஓலைகள்‌ போல பசு நிறமான நீண்ட வளைவான வரைகோடுகளும்‌, தென்ன
ஈர்க்கு போல கரும்பச்சைக்‌ கோடுகளும்‌ விழும்‌, இதில்‌ பாளை விரிந்த பூ மொட்டுகள்‌ கோலம்‌ போட்டது போல அமையும்‌.
இவ்வுவமை மனம்‌ சுவருவதாகவும்‌ மாமன்னனின்‌ கவித்‌ திறமையை எடுத்துக்‌ காட்டுவதாகவும்‌ அமைந்துள்ளது.) 1-55

கையில்‌ உள்ள பூசனைக்குரிய தாமரைப்பூ குடத்தில்‌ தள்ளாட, இணைமுலைகள்‌ மெல்லிடை மீது அருள்‌ இல்லாது
போக, செங்கழுநீர்ப்பொய்கையில்‌ திருமால்‌, திருமஞ்சனத்‌ திற்காக, நீர்‌ சுமந்து இடையில்‌ வைத்துச்‌ கொண்டு, திவ்வியப்‌
பிரபந்தம்‌ பாடும்‌ வாயினராக, தமிழ்ப்‌ பெண்கள்‌, பூங்காவின்‌ உள்‌ பாதைகளில்‌ சிலம்பார்ந்த பாதங்களால்‌ நடந்து வருவார்கள்‌. 1-56

நீலமணிகளால்‌ இயன்ற மேல்‌ மட்ட உறை வரையும்‌ நிறைந்த தெளிந்த நீரையுடைய, தெருக்கிணற்றில்‌ உள்ள மீன்‌களைப்‌ பார்த்து,
வீட்டு மேற்கூரையைச்‌ சார்ந்துள்ள மரக்கிளையிலிருந்து குபீரெனப்‌ பாய்ந்து மீன்‌ கொத்துப்‌ (சிரல்‌) பறவை
கீழே வீழ்ந்தும்‌ எழுந்தும்‌ (வருவதும்‌ போவதுமாக) இருப்பது,இல்லம்‌ (வீடு) என்னும்‌ நங்கை மறைந்திருந்து,
தமிழ்ப்பெண்‌களிடம்‌ பழகியதால்‌ பந்தாடுவது போலத்‌ தோன்றுகிறது. 1— 57

மனித தம்பதிகளின்‌ உருவத்தில்‌ செதுக்கப்பட்ட பொம்மைகளோடு கூடிய, திருமால்‌, திருமகள்‌, இருவரது (உற்சவத்‌)
தேர்கள்‌; தேவர்கட்கு உறைவிடம்‌ நல்கிய மேருமலையும்‌,அமுதம்‌ (உணவு) ஈந்த மந்தரமலையும்‌, தத்தமது புண்ணிய
பலனின்‌ தராதரங்களைத்‌ தெரிந்து கொள்வதற்காக, எளியவர்‌கட்கு உணவுடைகள்‌ தரும்‌ திருவில்லிபுத்தூர்‌ இல்லங்கள்‌ அருகில்‌
வந்து நிற்‌பது போலத்‌ தோன்றுகின்றன, (பொம்மைகளுடன்‌ கூடிய தேர்கள்‌, சித்தர்கள்‌ வாழும்‌ குகைகளையுடைய மலைகளுக்கு உவமை.) I—58

வளை ஒலிப்ப, பாசிகை (சொக்கட்டான்‌ ஆடும்‌ தாயம்‌) உருட்டும்போது அதட்டலைக்‌ கேட்ட முனிவர்கள்‌ நெஞ்சம்‌
இஇிலுற்று கலங்கும்படியாகவும்‌, எதிரே வரும்போது ஏறெடுத்துப்‌ பாராமல்‌ இருக்கும்‌ பராமுகம்‌, மன்மதனைக்‌ கூட அலட்சியப்‌
படுத்தவும்‌, கோயில்‌ கைங்கரியஸ்தார்களைக்‌ கண்டதும்‌ எழுந்து வணங்குவது கண்டு இந்திரன்‌ (சுவர்க்கத்தைவிட) இந்தக்‌
கோயில்‌ கொலுவினையே விரும்புவதாக அமையவும்‌, கோயில்‌ பூசை வேளைச்‌ சங்கொலி கேட்டு முகந்திருப்பும்‌ போது கடைக்‌
கண்‌ பார்வை மக்கள்‌ நெஞ்சு ஊடுருவிப்‌ பாயவும்‌, தாயம்‌ உருட்டி, கூந்தல்‌ குலைய ஒரு கரத்தால்‌ சரிசெய்து கொண்டு, அப்போது
முந்தானையில்‌ மன்மதனின்‌ திண்டு மெத்தை போன்ற பட்டு ரவிக்கையணிந்த முலைகள்‌ குத்திட்டு நிற்க, திண்ணைகளில்‌
பரத்தையர்‌ சொக்கட்டான்‌ ஆடுவார்கள்‌, 1—59

தாம்பூலச்‌ செங்காவி நிறம்‌ போய்‌ நிலவொளி காலும்‌ படியாக ஓரு நெல்‌ மணியால்‌ பல்துலச்கியும்‌, வெண்துகிலால்‌
துவட்டினும்‌ அதில்‌ படாதவாறு மேனியில்‌ மினு மினுக்குமாறு மஞ்சள்‌ பூசி நீராடியும்‌, முந்தானைக்குள்‌ கைவிட்டு பரிமள
இிரவியப்‌ பூச்சினை மென்மையாகப்‌ பூசிக்‌ கொண்டும்‌ கலவியின்‌ விரைவில்‌ முத்துக்கள்‌ அறுந்த நாலில்‌ தங்காமல்‌ சிதறி வீழச்‌
சிங்காரம்‌ செய்துகொண்டு குலம்‌ அறிந்து கூடியும்‌, நலன்‌ அழிந்து ஏழ்மையுறினும்‌ அவர்கட்கு ஆதரவு காட்டியும்‌ மன்னனின்‌ புற
அந்தப்புரம்‌ போல எண்ணும்படி பல்வேறு மொழிகளில்‌ காவியம்‌ படைக்கும்‌ திறமையுடன்‌ அற்த தாமரை முகத்தினர்‌ ஆகிய
கணிகையர்‌ இருந்தார்கள்‌. 1.60

அங்குள்ள இளநங்கையர்கள்‌, மேலான முத்துமாலை வளை யணிகள்‌ அன்றி களிம்புறும்‌ (கடினமான) தங்க நகைகள்‌
அணியார்‌. கஸ்தூரியை மெய்யில்‌ பூசுவரன்றி ஜவ்வாது (புனுகு)பிசுக்குறும்‌ எனத்‌ தொடமாட்டார்கள்‌. அகில்‌ புகையன்றி
பூக்களை ஈரம்‌ எனக்‌ கருதிச்‌ சூடார்‌. மென்துகில்‌ அன்றி பிற அணியார்‌. 1-61

வீணை வாசிப்பதில்‌ தேர்ந்த, அக்கணிசையர்‌, விடிந்ததும்‌, மேடையில்‌ உப்பரிகையிலிருந்து கொண்டு தங்கள்‌ சடையை
முலைமேல்‌ வைத்து (௪டையை) அவிழ்த்து சிக்கை எடுக்கும்‌ போது ஆங்குள பூக்களை (மல்லிகை முதலியன) நகத்தால்‌
விதிர்க்கும்‌ போது மணம்‌ நாடி. வந்த தும்பிங்கள்‌ ரீங்காரம்‌ செய்‌வதைக்‌ கேட்ட தெரு வழிச்‌ செல்லும்‌ காமுகர்கள்‌, நின்று (முலை
மீதுள்ள சடை) வீணையாகவும்‌, பூக்கள்‌ குந்தக்கட்டை(மெட்டுக்‌கள்‌) கள்‌ ஆகவும்‌, அவிழ்க்கும்‌ விரலசைவின்‌ விரைவு வீணை
வாசிப்பது போலவும்‌ தோன்ற மகிழ்வுறுவார்கள்‌. 1-62

தோழியர்‌ கூற்றுக்களால்‌,பணத்தாசைக்‌ காட்டிக்‌ கெஞ்சினும்‌.தாழ்நீத குலம்‌, முதுமை, அழகின்மை ஆகியவையுடையவர்களின்‌
அழைப்பினை அவர்கள்‌ நிராகரித்துச்‌ செவியில்‌ ஏற்கமாட்டார்‌கள்‌. * ஸ்ரீ (திருமகள்‌) சொரூபமான செவிகள்‌ ஆகையால்‌ பணப்‌
பேராசையுடைய சொற்களைக்‌ கேளார்‌, 1.63

(ஸ்ரீ (இர) என்னும்‌ எழுத்து தெலுங்கில்‌ (3) என்ற உருவில்‌ இருக்கும்‌. இதனை காதுகட்கு உருவ ஒப்புமையாகக்‌ கூறுவது தெலுங்குக்‌ கவிகளின்‌ மரபு, )

தமிழ்ச்‌ சுமங்கலிகள்‌ (இல்லத்தரசிகள்‌) மஞ்சள்‌ தங்கப்படிக்‌ கட்டுகளின்‌ 8மே–நீர்‌ அலைத்ததால்‌ அங்கு தூங்கிய இல்லப்‌
பொய்கையில்‌ உள்ள அன்னங்களின்‌ இறகுகளில்‌ தோய்ந்து பசுமையுண்டாக, அவை நகரில்‌ திரியும்‌ போது ஆகாயகங்கையி
லிருந்து வந்த பொற்‌ சிறறனையுடைய அன்னங்களோ என மயக்சுத்தையூட்டும்‌. [–64

தலையை இறக்கைகளில்‌ நுழைத்து வாத்துக்கள்‌ வயலில்‌ கால்வாய்‌ நடுவே தூநிகவும்‌, அதைக்கண்ட குளக்காவலர்கள்‌
(கரையாளர்‌) அதிகாலையில்‌ (விடியலில்‌)குளித்துவிட்டுப்‌ போன அந்தணர்கள்‌ துவைத்துப்‌ பிழிந்து வைத்த துணிகள்‌ என்று
நினைத்து அவர்களிடம்‌ சேர்ப்பதற்காக, துறையிலிறங்கவும்‌, அவர்களைக்‌ கண்டதும்‌ (வாத்துக்கள்‌) ஓடவே, இதைக்‌ கண்டு
(களை எடுக்கும்‌) உழத்தியர்‌ நகையாடுவார்கள்‌. 1—65

பூந்தோட்டத்திலுள்ள மலர்க ளின்‌ பெயரையுடைய(மல்லிகை – கர்‌ ஜூரம்‌ — புஷ்பமஞ்சரி– மாம்பூங்கொத்து என
நெல்வகைள்‌) நெல்வயல்களிலும்‌ இருப்பதால்‌ இணையானாலும்‌ நெல்வயலே உயர்வென்று (தராசின்‌) இணை முள்‌ காட்டும்‌
(நெல்லில்‌ முள்போல ஈர்க்குகள்‌ இருப்பதால்‌ இக்கற்பனை செய்யப்பட்டுள்ளது) ஆதலின்‌ நெல்‌ வயல்‌ வெண்ணிறப்பறவை
(பலாகா)யின்‌ செருக்கினால்‌ நகும்‌. 1—66-

(யானைக்கொம்பு–£ரகச்‌ சம்பா–முதலிய நெல்வகைகள்‌ தமிழகத்துண்டு. அதுபோல இவை ஆந்திர நாட்டில்‌ முன்பு
வழங்கிய நெல்வகைகளின்‌ பெயர்கள்‌ ஆம்‌.) நெற்பயிர்கள்‌ விளைந்தபிறகு (அறுவடைக்காக) நீர்வற்றம்‌
செய்யவே, தாகம்‌ கொண்டு, அப்பயிர்கள்‌ செழித்த செங்கழுநீர்ப்‌பூக்கள்‌ மேல்‌ சாய்ந்து தலை வைத்து முன்‌ நீர்‌ குடித்த வேர்களை
தலையில்‌ கொணர்ந்து பூந்தேன்‌ மாந்துவது போல அருகுள பூங்காவிலிருந்து வரும்‌ காற்றினால்‌, அ௮சைக்கப்‌ பட்டுத்‌ தோன்றும்‌. I—67

அடியில்‌ பழுத்து உடைந்து சேறாகி, தேன்‌ கொப்புளிக்கும்‌ வேர்ப்பலாவின்‌ உருண்டைக்கல்‌ போன்ற பெரிய பழங்களின்‌
சாற்றினைப்‌ பருக வந்த தேனீக்கள்‌ மல்லாடுவது காணின்‌,மதம்‌ ஒழுகி பூழ்தி படிந்து, சங்கிலியால்‌ கட்டப்பட்டுள்ள வசந்த
மன்னனின்‌ பட்டத்து யானையின்‌ கும்பம்‌ ( தலைப்பகுதி) போலத்‌ தோன்றும்‌. 1.68

மிகச்‌ செறிந்த பெரிய சம்பகப்‌ பூக்களோடு கட்டிய தோமாலை(இலைகளுடன்‌ பூக்கள்‌ மிடைந்து பெரிதாகக்‌ கட்டிய
பூமாலை) போலப்‌ பழுத்த நிலந்தோய நின்ற மணமிக்க வாழைக்‌ குலைகளில்‌ தொங்கும்‌ வாழைப்‌ பழங்களின்‌ நுனியிலுள்ள கருப்பு
சம்பகப்‌ பூவில்‌ வீழ்ந்து மயங்கிக்‌ கிடக்கின்ற வண்டுகளைப்‌ போலத்‌ தோன்றும்‌. இத்தகு கதலி வனங்கள்‌ (வாழைத்‌ தோப்புகள்‌) ஆங்குண்டு,. I—69
(சம்பகப்பூ — மணம்‌ வண்டுகளைக்‌ கிறங்கச்‌ செய்யும்‌. ஆதலின்‌ நெருங்காது அறியாது சென்ற வண்டுகள்‌ இவ்விதம்‌ மயங்கிக்‌ கடக்கின்றன.)

நமக்கு அனுராகம்‌ (செம்மை–காதல்‌) மிகுவிக்கும்‌ மருந்து இதுதான்‌ என்று கழுத்தைத்‌ துழுவியவாறு நாகவல்லி
(வெற்றிலைக்‌ கொடி) கமுகிளைப்‌ பார்த்து சொல்வது போலத்‌ தோன்றும்‌. அதனைக்‌ கேட்ட கமுகு மட்டை உதிர்க்கவே அது
வீழ்ந்ததால்‌ ஒடிந்த கரும்பின்‌ முத்துக்கள்‌–கரும்பாலை அடுப்பில்‌ வீழ்ந்து பொரிந்து சுண்ணாம்பாக இருக்கும்‌.
(கரும்பில்‌, கதலியில்‌, மூங்கிலில்‌ முத்துக்கள்‌ விளைவதாகக்‌ கூறுவது கலிமரபு, முத்துப்‌ போன்ற முளைக்கணுக்களை
உவமித்திருப்பர்‌ போலும்‌. இங்கு வெற்றிலை பாக்குக்கு செம்மை மிகுவிக்கும்‌ சுண்ணாம்பும்‌ ஒரே இடத்தில்‌ விளைகிறதாகக்‌ காட்டப்பட்டுள்ளது) I~ 70

அத்நகரில்‌ கழுநீர்ப்பூக்கஞம்‌, நீர்த்தாமரையும்‌ பாசியும்‌ கற்பூரவாசமும்‌ பரவியிருக்க, உள்ளே கொழுத்த வாளை மீன்கள்‌
போராடித்‌ துள்ள, உள்ளே நீர்க்‌ கோழிகள்‌ கொல கொலவென்று கூச்சலிட்டவாறு நீரில்‌ மூழ்கும்போது அதன்‌ கழுத்து வளைவுகள்‌
வினோதமாகத்‌ தென்பட, மாந்தோப்பிலுள்ள பழங்கணெறு (குட்டம்‌)கள்‌ மலர்கள்‌ சிந்தி அதில்‌ நடந்து போக இயலுமாறு
போல எழிலுடன்‌ காணப்படும்‌. மாலைநேரத்தில்‌ இறைவன்‌ திருமால்‌ இல்லத்‌ (கோயில்‌) திலிருந்து பறைஓலியும்‌, குழல்‌ (நாதசுரம்‌) ஒலியும்‌ எழுந்து பரவி
பூம்புதர்களினுள்‌ எதிரொலிக்கும்‌. அது, விளையாட்டு பூங்காவிலிருந்து கூட்டை நோக்கிச்‌ செல்ல முனைந்த அன்னங்களின்‌
இழக்கைகளின்‌ படபடவென்ற (பறை ஒலிபோன்ற) ஓலியும்‌,அதன்‌ (குழல்‌ ஓலி போன்ற) கூவுதலும்‌, தான்‌ எதிரொலிப்பதுபோலத்‌ தோன்றும்‌. 1—72

வடபெருங்கோயிலுடையானாகிய, தாமரைக்‌ கண்ணணின்‌ மார்பில்‌ உள்ள துளசிமாலையின்‌ மகரந்தத்துளிகளைத்‌ தழுவி,
பணியாரம்‌ (நைவேத்தியத்தின்‌) புனித மணம்‌ அளைந்து, நடனமாட முனைந்த நங்கையரின்‌ ஓரஞ்சாய்ந்த கூந்தலில்‌
(கொப்பு) இருந்து நழுவும்‌ செங்கழுநீர்ப்‌ பூக்களை அசைத்தும்‌ தென்றல்‌, (தன்மை, மணம்‌, மென்மை ஆகிய தன்மைகளுடைய
தாகி) மூன்று வருத்தங்களை (தாபத்திரயம்‌) நீங்கச்‌ செய்யுமாறு வீசும்‌.
(தாபத்திரயம்‌-ஆத்யாத்மிகம்‌–(தன்மனத்தால்‌ உருவாருங்‌ துன்பம்‌) ஆதிபெளதிகம்‌ (பிற உலகிலுள்ள பெளதீகப்‌ பொருட்‌
களால்‌ உருவாகும்‌ துன்பம்‌) ஆதிதைவிகம்‌ (தெய்வத்தால்‌–இடி_.பூகம்பம்‌ முதலியவற்றால்‌ உருவாகும்‌ துன்பம்‌) என மூன்று ஆகும்‌.
முத்துன்பமும்‌ முக்குணம்‌ உடையதென்றல்‌ போக்கும்‌ என்பது கருத்து. மகரந்தத்தால்‌ தன்மை, நைவேத்தியத்தால்‌
மணம்‌, கூந்தல்‌ மலர்களை அசைப்பதால்‌ மென்னடையும்‌ உடையதாகத்‌ தென்றல்‌ திகழ்கின்றது என்பது கவியின்‌ கற்பனை,) I—73

பொதிகைத்‌ தென்றல்‌ இரவில்‌ திருமால்‌ கோயில்‌ கொடிமரத்‌தின்‌ பொன்மணிகளை ஒவ்வொரு சமயம்‌ அசைக்கவும்‌ கணீர்‌
என்று ஓலிப்பவும்‌, ஆங்கு விண்முட்டும்‌ பொற்பிராகாரத்திலுள்ள சம்பக மரக்கிளையிலுள்ள பறவைகள்‌ அவ்வொலி கேட்டு
இடுக்கிட்டெழுந்து கலகலவென ஓசைஎழுப்பவும்‌,விழிந்ததென்று கருதி தம்பதியர்‌ புலவி நீத்துக்‌ கலவி கொண்டின்புறுவர்‌. 1.74

அந்நகரில்‌ முற்றத்தில்‌ செந்நெல்‌ காயப்‌ போட்டுக்‌ காவலிருக்கும்‌ தமிழ்‌ மங்கையர்‌, திருமால்‌ கோயில்‌ மான்கன்று
நெல்லை அடிக்கடி தின்ன வரவும்‌, கொண்டையில்‌ வைப்பதற்‌காக விற்க வந்த கிராமப்‌ பெண்கள்‌ இறக்கி வைத்த, பிரப்பங்‌
கூடையிலுள்ள செங்சமழுநீர்ப்பூந்தண்டினாலே (நோகாதபடி)விரட்டி விடுவார்கள்‌. I—75

எதிர்சென்று சாஷ்டாங்கமாக வணங்கி,கால்‌ கழுவி, நீர்தந்து தென்னம்பாய்‌ இருக்கையில்‌ அமர்வித்து, மென்மையான கமுகம்‌
பாளையில்‌ செய்த தொன்னைகளோடு (காய்கறிவைத்து) அகன்ற வாழையிலை விரித்து, நெற்சோறு, பருப்பு, நிறைய நெய்‌
பெய்து, பலவிதமான கறிகளோடு, பால்‌ தயிர்வைத்து உண்பித்து கை கழுவிய பிறகு கால்களை ஒற்றி, தாம்பூலம்‌ தந்து, நலம்‌
விசாரித்து *போகிறோம்‌’ என்று கூறின்‌, அவர்பின்‌ சிறிது தூரம்‌ சென்று, தம்‌ செல்வநிலைக்கேற்ப மரியாதை செய்து விடை.
கொடுத்தனுப்பி, (பிரிந்ததால்‌) வருத்தமுடன்‌ இல்லம்‌ மீண்டு வருவர்‌. இவ்விதம்‌ எப்போது அதிதிகளாகிய பாகவதார்களை
உபசரிப்பது அவ்வூர்‌ பாகவதரார்களின்‌ பண்பாகும்‌. [-..-76

விட்டு சித்தன்‌
துவயம்‌ (இருமை) எனும்‌ வைணவதிருமந்திரத்திற்கு இல்லம்‌ (உறைவிடம்‌) ஆனவனும்‌, தாமரை போன்ற முகமுடையவனும்‌
சுகதுக்கங்களாகிய இருமையைச்‌ சமமாகக்‌ கருதுபவனும்‌, இடை.யறாத தியான யோகமென்னும்‌ சங்கிலியால்‌ திருமால்‌ என்னும்‌
யானையைக்‌ கட்டியவனும்‌, படிக்காமலேயே வேத வேதாங்க ஞானங்களைத்‌ தெளிந்த துவைதமறிந்த ஞானியும்‌, பொருத்த
மான பெயரையுடையவனுமாகிய விஷ்ணு  என்னும்‌ ஆசார சீலன்‌ அவ்வூரில்‌ (ஸ்ரீவில்லிபுத் தூரில்‌) இருந்தான்‌. 1-77

அவ்வந்தணன்‌, பிரகிருதியைவிட வேறுபட்ட தன்‌ (ஆன்மா)னையும்‌, தன்னைவிட. வேறுபட்ட பரம்பொருளையும்‌ (ஈஸ்வரன்‌)
,பரமேசுவரனின்‌ அருளால்‌ பல பிறவிகளின்‌ நற்பயனாய்‌ கிட்டிய குருவருளால்‌ மறைத்து வைத்த புதையல்‌ கிடைத்தது
போல ஞானம்‌ உணர்ந்து, தான்‌ (ஜீவன்‌) அடிமை, அவன்‌(ஈஸ்வரன்‌) உடையவன்‌ என்பது ஆனாதியான தொடர்பென்‌
றுணர்ந்து, முழுமையான பேரின்பத்தில்‌ திளைத்து இருக்கும்‌ பரமயோகிக்கு (உத்தம பக்தனுக்கு) வருத்தந்‌ தருகின்ற கல்வி
யாற்‌ பயன்‌ என்ன? என்று சிந்தித்து, இந்த ஞானம்‌ இல்லாதவன்‌ பகுத்தறிவு பாழாகும்‌, தருக்க அறிவு உருக்குலைக்கும்‌. சாங்கியம்‌
சபலமுடையது. மீமாம்சை இம்சையாகும்‌. இலக்கணம்‌ தலைக்‌கனம்‌. அதுமட்டுமின்றி படிக்க முயன்றால்‌ காலம்‌ சாலாது.
இடையூறுகள்‌ தடையாகும்‌. கொஞ்சம்‌ படித்ததும்‌ செருக்கை யுண்டாக்கும்‌, முற்ற முடியக்‌ கற்றறிந்தாலும்‌ அதனால்‌
கிடைத்த தெளிந்த அறிவை, முக்குண விஷயத்தை வைத்துக்‌ கொண்டு, தானியம்‌ கஇடைத்தவன்‌ பதர்‌ நீக்குவது
போலவும்‌, தேனடை பெற்றவன்‌ தேன்‌ கொண்டு மெழுகை நீக்குவது போலவும்‌ (விஷயஞானத்தை) விட்டு (தத்துவ
ஞானத்தை)ப்‌ பெற்று உய்தல்‌ வேண்டும்‌. ஆதலின்‌ சாந்தி (புறப்‌ புலன்களை ஒடுக்குதல்‌) தாந்தி (அகப்புலன்களை ஒடுக்குதல்‌)
களையுடைய பற்றற்ற எனக்கு முதலில்‌, படித்து முடிவில்‌ விடுவானேன்‌? அதனால்‌ பயன்‌ என்ன? எதிரிகளை வாதத்தில்‌
மடக்கவும்‌, அரசர்களை மூழ்விக்கவும்‌ ஆன அக்கல்வி மீண்டும்‌ பிறத்தற்கஞ்சாதவர்களுக்காகுக. எம்மைப்‌ போல்வார்க்கு,
வேதங்கற்றதால்‌ உண்டாகும்‌ புகழ்‌, பரிசில்‌, குழப்பம்‌; இழப்புகள்‌ எவையும்‌ வேண்டாம்‌,”* என்று ஆராய்ந்து முன்பு
சிந்து தேசாதிபதிக்கு ஐடபரதமுனி உபதேசம்‌ செய்து முக்தி நெறி காட்டியவாறு பாசவதர்கட்கு பல பிறவிகளிலும்‌
கைங்கரியம்‌ செய்து, பகவான்‌ திருமாலுக்குப்‌ பணிவிடை செய்வதே பிறவிப்‌ பயன்‌ என்று ஓர்ந்து ஸ்ரீவில்லிபுதீ தூரில்‌
திருமால்‌ கோயிலில்‌ பூமாலை தொடுத்தளிக்கும்‌ தொண்டில்‌ ஈடுபாடு கொண்டிருந்தான்‌, 1-78

மேலும்‌, நியாயமாகச்‌ சம்பாஇுத்த பொருளைக்‌ கொண்டு அந்த யோூஸ்வரன்‌, இமய௰யமலைக்கும்‌, பொதிகை மலைக்கும்‌
இடையே வந்து போய்க்‌ கொண்டிருக்கும்‌ வைணவ அடியார்கட்‌ கெல்லாம்‌ அன்னமளித்து விருந்தோம்பினார்‌. I—79

வாளம்‌ மலையூற்றெனப்‌ பொங்கிய அடைமழைக்‌ காலத்தில்‌ மனைவியின்‌ கண்களில்‌ புகை நுழையாதபடி, தேங்காய்ச்‌
சிரட்டைகள்‌ போட்டெரிந்து சமையல்‌ ஆக்கவும்‌, சிரட்டை அகப்பைகளால்‌ முகந்தெடுத்த செந்நெற்சோறு, தோல்நீக்கிய
பருப்பு, நான்கைந்து தாளித்த கறி வகைகளுடன்‌, நெய்‌ வெள்ள மெனப்‌ பெய்து, வடகம்‌ வற்றல்களுடன்‌ தயிர்‌ வைத்து
உணவருந்தச்‌ செய்தபின்‌. 1.80

முதலில்‌ சந்தனப்‌ பூச்சு தந்து, இதமான சூடுள்ள (இளஞ்‌சூடான) வெண்சோறும்‌, இனிய சாறு (ரசம்‌)களும்‌, மோர்க்‌
குழம்பும்‌, மென்மையான கூழும்‌, கருப்பஞ்சாறு, இளநீர்‌, சுவைப்‌பண்டங்கள்‌, இன்கனிகள்‌ மணம்‌ (வெட்டிவேர்‌) ஊட்டிய
குளிர்ந்த தண்ணீர்‌, ஊறுகாய்‌, நீர்‌ மோர்‌, முதலியவற்றோடு கோடைக்‌ காலத்தில்‌ உணவிடுவான்‌, 1—81

புனுகு மணங்கமழும்‌ செஞ்சாலிப்‌ புத்தன்னம்‌; மிளகுப்‌ பொடியோடு, சட்டி சர்‌*ரென்று ஓசை எழ, (அப்போதே
இறக்கிய) சுடச்சுட கறி வகைகளுடன்‌, மூக்குக்கு மருந்தான கடுகுப்பொடியோடு கலந்த பச்சடிகள்‌, பாயசமும்‌, ஊறுகாய்கள்‌,
கை சுறுக்கெனும்படியான புத்துருக்கு நெய்‌, வற்றக்‌ காய்ச்சிய பால்‌, மூதலியன மிகுதியாக குளிர்காலத்தில்‌உணவிடுவான்‌,1–82

சனிக்கிழமையன்று, ஆழமான வாழைப்பூமடல்‌ தொன்னையைக்கையில்‌ இலுப்பைமாவில்‌ பொருத்தமாக வைத்துக்கொண்டு
வேண்டிய மட்டும்‌ நல்லெண்ணயை நிறைய ஊற்றிக்‌ கொண்டு சென்று, கயிற்றில்‌ துவைத்த வேட்டி. தொங்க நதியில்‌ குளித்து
விட்டு பிறநாட்டு வைணவர்கள்‌ பலரும்‌ அவர்‌ இல்லத்திற்கு விருந்தென வருவார்கள்‌, J—83

அந்த நல்லொழுக்கச்‌ செல்வரின்‌ இல்லத்தில்‌ நடு இரவில்‌ சென்று கேட்பின்‌, திருமால்‌ திரு அவதாரக்‌ கதைகளும்‌, திவ்வியப்‌
பிரபந்த அனுசந்தானமும்‌ கேட்கும்‌. அந்நேரந்தில்‌ “கறிகள்‌ அதிகம்‌ இல்லை. சூடு இல்லை, அப்பளம்‌ இல்லை, அன்னம்‌
சிறப்பாக இல்லை” என்று அடக்கத்தின்‌ காரணமாக விஷ்ணு சித்தன்‌ கூறும்‌ சொற்கள்‌ காதில்‌ விழும்‌. 1—84

அந்த வைணவோத்தமராகிய விஷ்ணு சித்தன்‌, இவ்விதமாக விழிப்புடன்‌ தீர்த்த யாத்திரை வரும்‌ பாகவதர்கட்கு
சிரமம்‌ கருதாமல்‌ யார்‌ எது வேண்டினும்‌ அவர்கட்கு மனம்‌ நிறைவுறுமாறு ஈந்து விருந்தோம்பி வந்தான்‌. I—85

இளஞாயிற்றின்‌ கதிர்பட்டு விரிந்த சரத்காலத்‌ தாமரை போன்ற கண்கள்‌ உடையவனே! தாமரைமலராள்‌, நிலமகள்‌,
நீளாதேவி, ஜாம்பவதி எனும்‌ நங்கயைர்‌ கணவ! சிவன்‌, தாமரையிற்‌ பிறந்த பிரம்மன்‌, இந்திரன்‌ முதலியவர்களின்‌ மணி
மகுடங்கள்‌ : ஒளிபட்டு விளங்கும்‌ பாதங்களையுடையவனே! நான்காம்‌ நாள்‌ பிறைச்‌ சந்திரன்‌ பே௱ன்ற நெற்றியில்‌
அழகொளிரும்‌ . சுருள்‌ முடியுடையவனே! மகர குண்டலங்கள்‌ அணிந்தவனே! T—86

மீன்‌, ஆமை எனும்‌ நீர்வாழ்வன, பன்றி, சிங்கம்‌, பிரம்மச்‌சாரி, (வாமனன்‌) பரசுராமன்‌, ரகு குல ராமன்‌, பலராமன்‌,
புத்தன்‌, குதிரையையுடைய கல்கி ஆகிய அவதாரங்களால்‌ மக்களைக்‌ காப்பாற்றுபவபனே, அலர்மேல்‌ மங்கை எனும்‌
பெயருடைய திருமகளை மார்பில்‌ ஏற்றவனே! I—87

இந்திரனால்‌ ஏவப்பட்ட மழைமுகல்களின்‌ கல்மாரியை தடுக்கு மலையைக்‌ குடையாக ஏந்தியவனே! சாணூரமல்லனை
மாய்த்தவனே! ஓரேநிமிடத்தில்‌ கம்சனைக்‌ கொன்றவனே! மயிற்‌ பீலியணிந்தவனே! * 1-—88

கேட்பாயாக! என்று அடுத்த அத்தியாயத்தில்‌ வினை முடிவு வரும்‌.

இது, கர்ணாடக (கன்னட) நாட்டின்‌ (சாம்ராஜ்யத்தை) தாங்கிய தோள்களையுடைய, உதயகிரி கோட்டையில்‌ மன்னன்‌
(பிரதாப கஜபதியின்‌) சிற்றப்பன்‌ (பிரஹரேஸ்வரபாத்ரனை) காணிக்கை தந்த மகுடத்தின்‌ மணிக்கண்களின்‌ ஒளிபடும்‌ பாதங்‌
களையுடைய, கிருஷ்ணதேவராய மாமன்னனால்‌ சொல்லப்பட்ட ஆமுக்தமால்யத (சூடிக்கொடுத்தவள்‌) எனும்‌ காவியத்தில்‌
இனியசெய்யுட்களால்‌ இயன்ற முதல்‌ அத்தியாயமாகத்‌ திகழ்‌ கின்றது, * . I—89

*கிருஷ்ண தேவராயர்‌ திக்விஐயயாத்திரையில்‌ கட்டாக்‌ (ஒரிசா) சென்ற கஐபதி மன்னர்களை வென்ற காலத்தில்‌ உதயகிரி கோட்டையில்‌ இருந்து கொண்டு கஜபதி மன்னனின்‌ சிற்றப்பன்‌ “பிரகரேஸ்வர பாத்ரா” என்பவன்‌ கடும்‌ போரிட்டான்‌. முற்றுகையிட்ட மன்னன்‌ இருஷ்ண தேவராயா்‌ *பிரகரேஸ்வரன்‌ தலையை மிதிக்காமல்‌ குளிக்க மாட்டேன்‌” என்று சபதம்‌ (வஞ்சினம்‌) கூறி போரிட்டபோது அது தெரிந்த பிரகரேஸவரன்‌ அஞ்சி தனது மகுடத்தை தோல்வியை ஒப்புக்‌ கொண்டு அனுப்பிவைத்தான்‌. மாமன்னனும்‌ அதனை மீதித்து வஞ்சினம்‌ தீர்ந்து நண்பகலில்‌ குளித்தான்‌ என்ற சரித்?ரம்‌ இந்தச்‌ செய்யுளில்‌ குறிப்பிடப்படுகிறது.

முதல்‌ அத்தியாயம்‌ முடிவுற்றது

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)—ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா-

January 16, 2023

ஸ்ரீ ஆ முக்த மால்யதா (Amuktamalyada) (தெலுங்கு: ఆముక్తమాల్యద) தெலுங்கு மொழிக் காவியக் கவிதையான இந் நூலை விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் இயற்றினார்.
ஆமுக்தமால்யதா எனும் தெலுங்கு மொழிச் சொல்லிற்கு முத்துகளால் ஆன மாலை எனப்பொருளாகும்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து நூல்களையும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்கிறோம்.

ரகுவம்சம், குமாரசம்பவம், நைஷதம், சிசுபாலவதம், கிராதார்ஜுனீயம் ஆகிய ஐந்தும் வடமொழியின் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.

அதுபோல், தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் உள்ளன – ஆமுக்த மால்யத, மனு சரித்திரம், வசு சரித்திரம், பாரிஜாத அபகரணம், சிருங்கார நைஷதம் ஆகியவையே அந்த ஐந்து காப்பியங்கள்.

அவற்றுள் ஆமுக்த மால்யத என்னும் காப்பியத்தை விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் அரசரான ஸ்ரீகிருஷ்ணதேவ ராயர் இயற்றினார்.

இது பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறும் நூலாகும். ஏழு அத்தியாயங்கள் உள்ள இந்நூலின் முதல் நான்கு அத்தியாயங்களில் பெரியாழ்வாரின் வரலாறும், அடுத்த மூன்று அத்தியாயங்களில் ஆண்டாளின் வரலாறும் சொல்லப்பட்டுள்ளது. விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் வரலாறும் இந்நூலில் விரிவாக இடம்பெறுவதால், விஷ்ணுசித்தீயம் என்ற பெயரும் இந்நூலுக்கு உண்டு.

இக்கவிதைக் காவியம் ஆண்டாள், திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் மீது கொண்ட பக்தியையும், மையலையும் கூறுவதுடன்,
இறுதியில் திருவரங்கப் பெருமானுக்கும், ஆண்டாளுக்கும் நடைபெற்ற திருமண விழாவைப் புகழ்ந்து பாடும்,
இந்நூல் தெலுங்கு மொழியின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாக கருதப்படுகிறது.

பக்தி மயமான வாழ்க்கையை 900 பாடல்களில் விவரிக்கும் அற்புதமான நூல் ‘ஆமுக்த மால்யதா‘.
கைசிக நாடகம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர ஆட்சியில் இருந்திருக்கிறது.
‘ஆமுக்த மால்யதா’ என்ற நூலில் ‘மால் கேசரி’ என்ற பெயரில் நம்பாடுவானைக் குறிப்பிட்டு திருக்குறுங்குடியில் நடந்ததாகவே
அவ்வரலாற்றைக் கூறியுள்ளார். 1530-1554ல் கைசிக நாடகம் நடைபெறுவதற்கு நிலங்களைத் தானமாக அளித்துள்ளார்
அச்சுதராயரின் இரண்டாவது மனைவி.–

—————-

முஸ்லீம்களின் படை எடுப்பிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியவர் இருவர்: தென்னகத்திலிருந்து முஸ்லீம் படை எடுப்பாளர்களை விரட்டியவர் கிருஷ்ண தேவ ராயர்; வடநாட்டிலிருந்து விரட்டியவர் வீர சிவாஜி.கிருஷ்ண தேவ ராயர் போல கோவில்களுக்கு தானம் செய்தவரும் இல்லை; இலக்கியத்தை வளர்த்தவரும் இல்லை. திருப்பதி கோவிலுக்கு வாரி வழங்கியுள்ளார்

———-

நம் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திரனுக்குப் பின் பெரும்பாலான தென்னிந்தியா முழுவதும் ஒரு குடையின் கீழ் இருந்தது என்றால் அது இம்மாமன்னரின் காலத்தில்தான் .

பொதுவாக சரித்திரவியலாளர்கள் கீழ்வரும் நான்கு அரசர்களை மிக கண்ணியத்துடன் அழைப்பார்கள் . அசோகர் , ராஜராஜன் , அக்பர் , கிருஷ்ண தேவராயன் . அதற்கு காரணம் அவர்களின் பிற மத சகிப்புத் தன்மையும் , நிர்வாக திறனுமாகும் .

கிருஷ்ண தேவராயன் , துளுவ நரச நாயக்கன் – நாகலா தேவியின் புதல்வர் . நரச நாயக்கருக்கு இரண்டு மனைவியர் . மூத்தவர் , சுலக்‌ஷனா தேவி , நாகலா தேவி இளையவர் . அக்கால முறைப்படி மூத்தவரின் மகன் வீரசிம்ம ராயர் அரசரானார் . அவர் போரில் மரணித்துவிட , கிருஷ்ணதேவராயன் முடியரசர் ஆனார் . சங்கம வம்சத்தவராகிய ஹரிஹரர்-புக்கர் ஆகிய இருவரால் துவங்கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்யம் , சாளுவ வம்சத்தில் பயணித்து , கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட துளுவ வம்சத்தில் நிலைபெற்றது .

கிருஷ்ணதேவராயன் மாபெரும் வீரர். கன்னட மக்களால் ‘கன்னட ராஜ்ய ராம ரமணன்’ என்றும் , தெலுங்கு மக்களால் ‘ஆந்திர போஜன்’ எனவும் பெருமையோடு பேசப் படுகிறார் .

இவ்விரு மொழிகளிலும் கவி பாடும் திறன் கொண்ட கிருஷ்ண தேவராயன் தமிழைப் பாடி தெய்வத் தன்மை பெற்ற ஆண்டாளை , காவிய நாயகியாகக் கொண்டு தெலுங்கில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆமுக்த மால்யதா- வை இயற்றியது–ஆண்டாளின் விருப்பமேயன்றி வேறென்ன ..!

இக் காவியம் இயற்ற அமைந்த கதை மிக சுவாரஸ்யமானது . மாமன்னர் கிருஷ்ண தேவராயரன் , கலிங்க தேசத்தின் மீது படையெடுத்துச் செல்லும் வழியில் விஜயவாடாவில் தங்குகிறான். அருகிலுள்ள ஶ்ரீகாகுளம் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள விஷ்ணு ஆலயத்திற்கு , ஏகாதசியன்று விரதமிருந்து தரிசித்து விட்டு தன் கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.

நான்காம் சாம மணியொலி கேட்கிறது . அது கோயிலில் பூசைகளின் போது எழுப்பப்படும் மணியோசை போல பெரிய சத்தம் எழுப்புகிறது . கூடவே சங்க நாதமும் . இருட்டான அந்த அறையில் தெய்வ ஒளி படர்கிறது . அரசனுக்கு பதற்றம் . ஆனால் பரவசம் . ஆம் , அவர்முன்னே தவம் செய்தும் கிட்டாத தெய்வ தரிசனம் . சங்கு , சக்ர , கதை , மலரோடு பரந்தாமன் .

ஆனால் தோள்களிலே மாலை இல்லை. முகத்திலே ஒரு சிறிய வாட்டம் .ஏன் ? இறைவனுக்கே வருத்தமா ? கூப்பிய கரங்களோடு மன்னன் கண்ணீர் வழிய, பார்த்த விழி பார்த்தபடி , பேச நா எழாமல் .இறையே முன் தோன்றினாலும் , பேசினால்தானே தெளிவு பிறக்கும் . முன் , மாவலியிடம் இரந்தவன் , தற்போதும் கேட்கிறான்

“ மன்னா ! என் தோள்கள் மனம் வீசும் மாலைகளின்றி வாடித் துவள்கின்றன . அன்று பெரியாழ்வாரின் நந்தவனத்து மாலையாகிய கோதை நாச்சியார் அணிவித்த மாலைகளே எனக்குப் பிடித்தவை . அக்கோதையைப் பாடி , அப் பாட்டு மாலைகளை திருமலையில் எனக்குச் சாற்று . மகிழ்வேன் . புகழடைவாய்”.

சேவிப்பதையும் மன்னன் மறந்தான் . அதற்குள் காட்சிகளும் மாறின . தான் கண்டது கனவென்று உணர்ந்த மன்னன் , கோதையின் தமிழ்ப் பாசுரத்தில் தோய்ந்தான் . உருகினான் . கரைந்தான் .முடிவெடுத்தான் , பாமாலை பாடி , பூமாலை சூடி , இறையோடு கலந்து , இறைவியான நங்கைக்கு , ‘சூடிக் கொடுத்தவள்’ என்ற சொல்லைக் கொண்டே தன் காவியத்தைத் துவங்கினான் .

பல பணிகளுக்கு இடைய அம் மாமன்னன் இருமுறை ஶ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தந்துள்ளான் . ஒரு லட்சம் தங்க காசுகளால் ஆபரணங்கள் செய்து காணிக்கை செலுத்தி உள்ளான் . நவ ரத்தினங்களின் கணக்குகள் எண்ண முடியாதவை .
ஆண்டாள் சன்னதியில் உள்ள கல் மண்டபம் அவன் சமர்பித்ததே . அது இப்போது தங்கத் தகடுகளால் வேயப் பட்டுள்ளது .

ஆமுக்த மால்யதா என்னும் காவியத்தை இயற்றிய சரித்திர நாயகனின் கதைச் சுருக்கம் இதுவே .

.———–

நான் முன்பு கங்கர்களைப் போரில் வெல்வதற்காக அவர்கள் மீது படையெடுத்துச் சென்ற காலத்தில் விஜயவாடா அருகில் சிலவாரங்கள் பாசறை அமைத்தேன். அங்கே உள்ள பெருமாள் கோவிலில் (திவி சீமாவில் உள்ள ஸ்ரீகாகுளம்) ஏகாதசி விரதம் இருந்து அன்றிரவு அங்கேயே உறங்கினேன். அடுத்தநாள் அதிகாலை துவாதசி வரும்போது திடீரென எனக்கு ஒரு அரிய காட்சி கிடைத்தது. ஆஹா.. எப்படி வர்ணிப்பேன் அந்த அதிசய காட்சியை..

நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளித்தார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன்.. ஆஹா! இதோ பெருமாளே பேசுகிறாரே..

‘நான் ஆந்திர விஷ்ணு.. நீ வடமொழியில் பல நூல்கள் புனைந்துள்ளாய்.. எனக்காக நீ தெலுங்கு மொழியில் ஒரு நூல் எழுதவேண்டும்.. தேச பாஷைகளில் தெலுங்கு உயரிய பாஷை.. எனக்கு ஒருசமயம் மதுராவில் (வடமதுரை) அளிக்கப்பட்ட மாலையில் அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. ஆனால் வில்லிபுத்தூரில் கோதை தன் மாலையை அணிவித்தாளே, அவள் மாலையுடன் ரங்கநாதனைக் கலந்ததைப் பற்றி எழுதி என்னை நீ மகிழ்விக்க வேண்டும். மேலும் அந்த மாலையை திருவேங்கடவன் முன்பு நீ சமர்ப்பிப்பாயாக”

ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் சொந்த வாக்கியங்கள்தான் மேலே கண்டவை. தெலுங்கு மொழியில் முதல் முதலாய் ஒரு முழு காவியமாக படைக்கப்பட்ட ‘ஆமுக்தமால்யதா’ எனும் காவியம்தான் பெருமாள் மேலே கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ரீகிருஷ்ண தேவ ராயரால் எழுதப்பட்டதாகும். அந்தக் காவியத்திலேயே குறிக்கப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

ஆமுக்தமால்யதா, (அந்த சிறப்பான (ஆணிமுத்ய) மாலை) தமிழின் தெய்வீகத் தேவதையும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியுமான கோதை நாச்சியாரைப் பற்றியும் அவள் தந்தை பெரியாழ்வாரின் பக்தியைப் பற்றியும் பொதுவாகப் பேசும் காவியம் என்றாலும், இதைக் காவியமாக வடித்த கிருஷ்ணதேவராயன், தம் காலத்தே உள்ள அரசாங்க நிலையையும், ஒரு அரசன் என்பவன் எப்படி தருமத்தின் துணைகொண்டு எப்படியெல்லாம் அரசாளவேண்டும் என்பதையும் எழுதியுள்ளான். காவியம் முழுவதும் ஆன்மீகத்தின் ஒளி பரவி உள்ள ஒரு அற்புத படைப்பு இது.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். சரியாக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1509) அரச பீடம் ஏறிய இந்த துளுவ கிருஷ்ணதேவராயன் ‘திராவிடன்’ எனும் சொல்லுக்கு முழு உரிமையும் கொண்டவன். இவன் ஒருவனே சரியான தென்னிந்தியன் என்று சற்று இந்தக் காலகட்டத்திற்கேற்றவாறு கூட சொல்லலாம். பாருங்கள். இவன் பிறப்பால் துளுவன்.. (மங்களூர் அருகே பிறந்ததாகச் சொல்வார்கள்). ஆட்சி செய்யும் இடமோ, அதாவது தலைநகரம் அமைந்த இடமோ கன்னடம் செழித்தோங்கும் விஜயநகரம். இவன் படைத்த காவியமோ தெலுங்கு மொழியில், காவியத்தின் நாயகியோ தமிழன்னையின் தவப்புதல்வியான ஆண்டாள். திராவிடத்தின் மொத்த உருவத்தையும் தன்னகத்தேக் கொண்ட ஒரு உன்னதத் தலைவன் ஸ்ரீகிருஷ்ண தேவராயன். வடமொழியில் வல்லவனான கிருஷ்ணதேவராயனுக்கு தென் மொழியான தமிழ் மிக நல்ல பரிச்சயம். அதுவும் வைணவத்தை ஆராதிப்பவனான அரசன் தமிழ்ப் பாமாலைகளான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினைக் கரைத்துக் குடித்தவன் என்றே சொல்லலாம். இதற்கு உதாரணம் அவனே எழுதிய வரிகளைப் படியுங்கள்!

பன்னிரு சூரியர்கள் பிரபஞ்சம் முழுதும்
நடுவிலே நாராயணன் பரிபாலிக்க
ஏன் இந்த வெப்பம் என உணர்ந்தவன்
வெப்பம் தணியவே தனிவழி தேடி
பன்னிரு ஆழ்வாரின் நெஞ்சத்துக் குளிர்ச்சியிலே
தஞ்சம் புகுந்தானோ..அந்தக் குளிர்ச்சியிலே
உறைந்து மணத்திலே மனதைக் கொடுத்த
அந்த அமரர்களின் அதிபதிக்குத் தலை வணங்குவோம்

பன்னிரெண்டு சூரியர்களின் சூட்டைத் தாங்கமுடியாமல் தம்மிலேயே ஆழ்ந்திருக்கும் பன்னிரெண்டு ஆழ்வார்களின் நெஞ்சக்குளிர்ச்சியில் தன்னைப் புதைத்துக் கொண்டானாம்.. ஒரு சில வரிகளில் ஆழ்வார்களை ஸ்ரீகிருஷ்ணதேவராயன் எவ்வளவு பெருமைப் படுத்திவிட்டான்..

பன்னிரு ஆதித்யர்கள் –
தாதா,மித்ரன்,அர்யமா,சக்ரன்,வருணன்,அம்சன்,பகன்,விவஸ்வான்,பூஷன்,ஸவிதா,த்வஷ்டா,விஷ்ணு (மஹாபாரதம் – ஆதி பர்வம்)

ஆண்டாள் அரசனை மிகவும் கவர்ந்தவள் என்றே சொல்லவேண்டும். இவன் காவியத்தில் ஆண்டாளைப் போற்றிப் பாடினாலும், நாச்சியார் திருமொழி வாக்கியங்களை மற்ற காவியப் பொருள்களிலும் தாராளமாக கையாள்கிறான் அரசன். அதுவும் திருவேங்கடவனின் சங்கினைப் போற்றும் பாடலில், ‘கற்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ’ என ஆண்டாள், கண்ணனின் வாய் எச்சிலின் மகிமையைப் பற்றி சங்கினைக் கேட்பாளே, அதே கேள்விகளை போற்றுதல்களாக மாற்றி ஸ்ரீகிருஷ்ணதேவராயன் தெலுங்கில் வடித்திருப்பது மிகவும் போற்றுதலுக்குரியதுதான். அதே சமயம் ஆண்டாளின் தமிழ் இவனை எப்படியெல்லாம் பாதித்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

இதோ நாரணன் சங்கை ஊதிவிட்டான்
ஆஹா.. கீதமா சங்கீதமா
நறுமணம் என்றால் இதுதானோ
நல்ல தேனினை உண்டு கொண்டிருந்த
தேனீக்களே.. ஏன் திடீரென அங்கு ஓடுகிறீர்கள்
ஓ, புரிந்து விட்டது.. இந்த நல்ல கமலங்களில்
கிடைக்கும் நறுமணத்தைவிட, இனிய தேனை விட
விட நறுமணம் வீசும் நாரணன் எச்சில்
அந்த சங்கூதலால் கிடைத்துவிட்டதா..

சங்கரைப் பற்றியே இப்படி முப்பது பாடல்கள் காவியத்தில் உள்ளன. இந்தப் பாமாலைகளைப் போலவே தன்னுடைய காவியம் முழுவதும் ஆண்டாளின் தமிழ்த் தாக்கம் அதிகமாகவே தெரியும் வகையில் படைத்திருக்கிறான் அரசன். பொதுவாகவே அரசர்கள் என்போர் கவி புனைவது என்பது ஒத்து வராத விஷயம். அரசர்கள் சபையில் ஆன்றோர் பலர் இருப்ப, அந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் படைக்கும் காவியங்களை மிகவும் ரசித்து அந்தப் புலவர்களைக் கௌரவிப்பதே அரசன் கடமை என சரித்திரத்தில் நிறைய படித்திருக்கிறோம். மகேந்திரபல்லவன் நாடகங்கள் படைத்திருக்கிறான். அவனுக்குப் பிறகு ஒரு சில அரசர்கள் கவிதை உலகத்துக்கு பங்கு அளித்தார்கள்தான் என்றாலும், ஸ்ரீகிருஷ்ணதேவராயனின் இலக்கிய பங்கு என்பது வியப்புக்குரியதுதான்.

ஏனெனில் கிருஷ்ணதேவராயனின் அவையிலேயே அஷ்ட திக்கஜங்கள் என்று பெருமை பெற்ற எட்டு பேர் கொண்ட ஒரு பெரிய புலவர் படையே இருந்தது. அல்லசாணி பெத்தண்ணா என்ற புகழ்பெற்ற தெலுங்குப் புலவர் சபைக்குத் தலைவர் போல இருந்தவர். கன்னட மொழிப் புலவர்கள் பலர் இருந்தனர். ஆனால் தமிழுக்கு என்று பெயர் சொல்லக்கூடிய புலவர் ஒருவரும் அவனுடைய சபையில் அந்தக் கால கட்டத்தில் இல்லாததைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். ஆனால் தமிழ் அவன் சபையில் இல்லை என்பதை ஈடு செய்யவே கிருஷ்ணதேவராயனே முன்வந்து தமிழ்ப் பாடல்களின் மகிமையை தெலுங்கு மொழியில் இயற்றினானோ என்னவோ.. ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும்போது தமிழன்னை தன்னை உயர்த்திக் காட்ட இந்தக் காவியம் படைக்க இப்படி ஒரு வகை செய்தாளோ என்றுதான் தோன்றும்.

இல்லையேல், ஒரு ராஜா அதுவும் தமிழல்லாத ராஜா, சண்டை போட இருந்த ஒரு இடத்தில், யுத்த கால கட்டத்தில், நாராயணனே முன் தோன்றி, ‘எனக்கு கோதையின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மாலை தெலுங்கில் காவியமாக வேண்டும், அதையும் அரசனான நீயே செய்யவேண்டும் என்று கேட்பானா? இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியைக் கூட ‘ஆமுக்தமால்யதா’ வில் அரசன் எழுதுகிறான்.. .

‘ஆஹா.. சாட்சாத் நாராயணனே இலக்குமி சகிதம் வந்து என்னிடம் ஆணை போட்டுவிட்டான்.. அமைச்சர்களே.. புலவர்களே.. இதன் நிமித்தம் சொல்லுங்களேன்..’

என ஆன்றோர்களைக் கேட்கவும் அந்த யுத்த பூமியிலும் சபை மளமளவெனக் கூடுகிறது. இலக்குமியின் ஒரு கையில் தெரிந்த கமலம், இந்த யுத்தத்தின் வெற்றியின் பரிசு என்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு காவியம் எழுது என்று சொல்லிவிட்டானே ஆண்டவன்.. காவியத்துக்கே உரிய வகையறாக்கள் ஆராயப்படுகின்றன. கடவுள் வாழ்த்து கூட வைணவ மார்க்கத்தில் முதலில் திரு (இலக்குமி) யைப் போற்றி எழுதப்படவேண்டும் என்று நிர்ணயிக்கிறார்கள். அப்போது ஒரு சிறிய மாற்றம் அரசரால் சொல்லப்படுகிறது. ஆந்திர விஷ்ணு, திருமலையில் நின்றவடிவில் ஆருள் புரியும் திருவேங்கடவன் முன்பு இந்தப் பாமாலையினை சமர்ப்பிக்கும்படி ஆணையிட்டிருப்பதால் இலக்குமியை முன்வைத்து அந்தத் திருவேங்கடவனுக்கே முதல் பாடல் எழுதப் போகிறேன்.. என்று சொல்கிறான். அதுவும் எந்த இலக்குமி, திருவேங்டவன் திருமார்பில் வாசம் செய்வதாக நம்மாழ்வார் சொல்கிறாரே ‘அகலகில்லேன், இறையும் என அலர்மேல்மங்கையுறை மார்பா’ அந்த மகாலக்குமியைப் போற்றவேண்டும் என தேவர் முடிவு செய்கிறார்.

திருமால்.திருமாலின் ஆணையை ஏற்று, தனது இஷ்டதெய்வமான திருமலையப்பனுக்கு அர்ப்பணித்து ஆமுக்த மால்யத என்ற தெலுங்குக் காப்பியத்தை இயற்ற முடிவெடுத்தார் கிருஷ்ண தேவராயர்.

இலக்குமியின் திருமார்பில் ஒளிரும் ஆரத்தின் ஒளி நீயே
அவன் திருமார்பில் ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
ஒருவருக்கொருவர் உள்ளேயே ஒளிந்திருந்தும் இந்த மணிகளின்
வழியே தெள்ளத் தெளிவாய் வெளியே தெரியும் விந்தையை
அளித்த திருவேங்கடவனே, உனக்கு முதல் வணக்கம்!

அவனும் அவளும் ஒன்றுதான்.. ஆனால் அவள் மூலம் அவனிடம் செல்வது என்பது மிக மிக எளிது.. இதுவே ஆண்டாளும், நம்மாழ்வாரும், திருமங்கைமன்னனும் ஏற்கனவே காண்பித்தது என்பது விஜயநகரத்து மன்னன் ஸ்ரீகிருஷ்ணதேவராயனுக்கு பரிபூரணமாகத் தெரிந்திருக்கிறது. அவன் வார்த்தைகளில் உள்ள சத்தியம் ஆணும் பெண்ணும் ஆண்டவனிலிருந்து அகிலம் முழுமைக்கும் ஒன்றுதான் என்ற கருத்து பலமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தனையும் தமிழின் கருத்து. அப்படியே அண்டை மொழி மூலம் ஆண்டவன் கட்டளையாக, அந்த ஆண்டவனுக்கே அழியாத மாலையாக அழகாகக் கோர்த்து மாலையிட்டவன் ஸ்ரீகிருஷ்ணதேவராயன்.

ஆமுக்தமால்யதா தெலுங்கில் பொருள் அறிந்து படிக்க படிக்க தெலுங்கு மொழியின் மகிமையை விட தமிழின் மகிமை மிக அதிகமாக தமிழராகிய நமக்கு விளங்கும். தமிழராகிய நாம் தலை நிமிர்ந்து நடக்க, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு மகாகாவியம் இந்த ‘ஆமுக்தமால்யதா’ என்று பெருமை கொள்வோம்.

இவருக்கு ஆண்டாளும் ஆழ்வாரும் எப்படி பரிச்சயம் என்றால், இவருக்கு சின்ன வயதிலிருந்தே அரசியல் குரு, அதாவது சந்திரகிரி கோட்டையைத் தலைமையாகக் கொண்டு ஆண்டுவரும் சாலுவ நரசிம்மா என்கிற ப்ராம்மண ராஜாதான் காரணம் என்று சொல்லலாம். இந்த நரசிம்மா என்கிற செல்லப்பாதான் ஸ்ரீவில்லி கோயிலையே புதிதாக செப்பனிட்டுக் கட்டியதாக தகவல் உண்டு. இவருக்கு ஆண்டாளே சின்னப் பெண் வடிவில் தரிசனம் தந்ததாக பர்டன் ஸ்டெஇன் எழுதி இருக்கிறார். கூடவே (அப்போது குட்டி) கிருஷ்ணதேவனும் இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த செல்லப்பனுக்கு கந்தையாடை என்றொரு ஜீயர்தான் குரு. அந்த குருவின் உதவியும் கிருஷ்ணதேவராயருக்கு கிடைத்திருக்கலாம். மேலும் அகோபில மடத்துத்து ஜீயரையும் ஆமுக்த மால்யதாவில் போற்றுகிறான்.

கிருஷ்ண தேவராயருடைய முதல் அமைச்சர் பெயர் அப்பாஜி. அப்பாஜி கூர்மையான நுண் ணறிவு மிகுந்தவர்.

ஒரு நாள் அரசரும் அமைச்சருமாக மாறு. வேடம் அணிந்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள்.. அந்தக் காலத்தில் அரசர்கள் தங்கள் குடிமக்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக இவ்வாறு சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.

அரசரும் அமைச்சரும் பம்பை ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்றனர். அந்த ஆற்றங்கரையை ஒட்டியிருந்த வயல்கள் எல்லாம் – நன்றாக விளைந்து பச்சைப்பசேல் என்றிருந்தன. அவற்றுள் அறுவடை ஆகிக் காய்ந்து கிடந்த ஒரு வயலை உழவன் ஒரு.. வன் உழுது கொண்டிருந்தான்.

அவ்வழியே மூன்று பெண்கள் இடுப்பில் நீர் நிறைந்த குடங்களுடன் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் உழவன் உழுது கொண்டிருந்த நிலத்தைப் பார்த்துக் கொண்டே போனார்கள். அவர்களுள் ஒருத்தி, “நீலா, உழவன். உழுகின்றானே, இந்த நிலம் முகத்துக்கு ஆகும்” என்று கூறினாள்.

“தவறு தவறு கமலா. இந்த நிலம் வாய்க்கு ஆகும்” என்று நீலா கூறினாள்.

மூன்றாவது பெண்ணாகிய சுந்தரி, “ அல்ல அல்ல. இந்த நிலம் பிள்ளைக்குத்தான் ஆகும். – நீங்கள் இருவரும் கூறியது சரி அல்ல” என்றாள்.

இவ்வாறு அவர்கள் மூவரும் அந்த நிலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே சென்றனர். அவர்கள் மூவரும் கூறியவைகளை அரசரும் அமைச்சரும் கேட்ட வண்ணம் அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.

அந்தப் பெண்கள் கூறியவை, அரசருக்கு விளங்கவில்லை. அரசர் அமைச்சரைப் பார்த்து, “அமைச்சரே, இந்தப் பெண்கள் ஒரு நிலத்தை முகத்துக்காகும், வாய்க்காகும், பிள்ளைக்காகும் என்று கூறிக் கொண்டு போகிறார்களே, இவர்கள் கூறியதன் பொருள் என்ன?” என்று கேட்டார்.

அமைச்சர் அரசரைப் பார்த்து, “அரசே, முகத்துக்கு ஆகும் என்று கூறினளே ஒருத்தி, அதன் பொருள் என்ன வென்றால், முகத்தில் பூசும் மஞ்சள் பயிரிடுவதற்குத் தகுதியான நிலம் என்பதாகும். மற்றொருத்தி வாய்க்கு ஆகும் என்றாளே, அதன் பொருள் வெற்றிலைக் கொடி பயிரிடுவதற்குத் தகுதியான நிலம் என்பதாகும். இன்னொருத்தி பிள்ளைக்கு ஆகும் என்றாளே, அதன் பொருள் தென்னம் பிள்ளை வைத்து வளர்ப்பதற்கு ஏற்ற நிலம் என்பதாகும்” என்று கூறினார்.

இந்த விளக்கத்தைக் கேட்ட அரசர் பெரும் வியப்பு அடைந்தார்; தம் அமைச்சர் கூறியது சரி தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினார் ; தமக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பெண்களை நிறுத்தி, அவர்கள் கூறியதற்கு விளக்கம் கூறுமாறு கேட்டார். அவர்கள், அமைச்சர் சொன்னதைப் போலவே கூறினர். அரசர் தம் அமைச்சரின் கூர்மையான அறிவைப் புகழ்ந்து பாராட்டினார்.

கிருஷ்ண தேவராயர், மற்றொரு முறை மாறு வேடத்தில் தம் நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். நல்ல வெய்யிலில் சுற்றி வந்ததால் அவருக்குச் சற்றுக் களைப்பாயிருந்தது. ஒரு சிற்றூரின் குளக்கரை அருகில் வந்ததும் அங்குச் சிறிது நேரம் களைப்பாற விரும்பினார்.

அந்தக் குளம் மிகப் பெரியதாகவும் நீர் நிரம்பி யும் இருந்தது. அதன் ஒரு கரையில் பெரிய ஆலமரம் ஒன்று தழைத்திருந்தது. அதன் கிளைகள் நான்கு புறமும் பரவி விழுதுகள் விட்டு அடர்ந்து, ஒரு மன்னன் தன் நால்வகைப் படைகளுடன் தங்கு வதற்கேற்றவாறு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. அக் கொடிய வெய்யிலிலும் அக்குளக்கரை யில் ஆலமரத்தின் அடியில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது.

வெய்யிலில் சுற்றிவந்த கிருஷ்ண தேவராயர் அந்த ஆலமரத்தின் அடியில் தம் குதிரையை ஒரு புறம் மாகக் கட்டிவிட்டு, அமர்ந்தார். அவ்வமயம், அவ்வூர்ப் பெண்கள் சிலர் தண்ணீர் எடுத்துச் செல் வதற்காக அக்குளத்திற்கு வந்தனர். தங்கள் குடங்களில் நீரை நிரப்பிக் கொண்டு திரும்பிச் செல்கையில், ஆலமரத்தை ஏறிட்டு நோக்கிய ஒருத்தி, “காலும் கழியும் ஒன்றடி” என்று கூறினாள். அதைக் கேட்ட மற்றொருத்தி, அண்ணாந்து பார்த்து, “இறகும் இலையும் ஒன்றடி” என்று கூறினாள். இவ்விருவர் கூறியதைக் கேட்ட இன்னொருத்தி, “வாயும் கனியும் ஒன்றடி” என்றாள் இவ்வாறு பேசிக் கொண்டே அந்தப் பெண்கள் சென்று விட்டனர்.

மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டிருந்த இராயருக்கு இப் பெண்கள் கூறியதன் பொருள் விளங்க வில்லை. அவர் அரண்மனைக்குத் திரும்பிய பின் தம் அவையிலுள்ள அறிஞர்களிடம் அந்தப் பெண்கள் கூறியவற்றை எடுத்துச் சொல்லி, “அவற்றின் உட்பொருள் என்ன ?” என்று கேட்டார். அவையினர் நீண்ட நேரம் சிந்தித்துப் பார்த்தும், அவர்களுக்கு அவற்றின் உட்பொருள் விளங்க வில்லை .

ஆனால், கிருஷ்ண தேவராயரின் முதல் அமைச் சராகிய அப்பாஜி, அரசரை நோக்கி, “ அந்த மூன்று பெண்களும் ஆலமரத்தைப் பார்த்து இப் படிக் கூறினரா?” என்று கேட்டார். அரசர் ‘ஆம்’ என்று கூறினார். உடனே அப்பாஜி, அந்தப்பெண் கள் கூறியவற்றின் உட் பொருளை விளக்கத் தொடங் கினார்.

அரசே, அந்த ஆலமரத்தில் ஒரு கிளி பறந்து வந்து உட்கார்ந்தது. அதனை அந்த மூன்று பெண் களும் பார்த்தார்கள்; உடனே அதற்கு உவமை கூறத் தொடங்கி விட்டார்கள். காலுங்கழியும் ஒன்றடி’ என்று ஒருத்தி கூறியது, கிளியின் காலும் மரத்தின் கிளையும் ஒன்று போல் இருக்கின்றன என்று பொருள்படுகிறது. “இறகும் இலையும் ஒன்றடி ” என்று மற்றொருத்தி கூறியது கிளியின் இறகும், ஆலமரத்தின் இலையும் ஒன்றுபோல் இருக்கின்றன என்று பொருள் படுகிறது. “வாயுங் கனியும் ஒன்றடி” என்று இன் னொருத்தி கூறியது கிளியின் அலகும் ஆலமரத்துக் கனியும் ஒன்றுபோல் இருக்கின்றன என்று பொருள்படுகிறது. எனவே, அப்பெண்கள் கிளி யையும் ஆலமரத்தையும் இணைத்துத்தான் இவ்வாறு குறிப்பாகப் பேசியிருக்கின்றார்கள் என்று கூறினார்.

தம் முதல் அமைச்சர் கூறிய விளக்கம் பொருத் தமாக இருந்தாலும், அது சரிதானா என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று கிருஷ்ணதேவராயர் கருதினார். எனவே, தம்முடன் அப்பாஜியை அழைத்துக் கொண்டு, அந்தச் சிற்றூருக்குச் சென்று அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார். இரு வரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். அவ்வமயம் வழக்கம் போல் நீர் எடுக்க அப்பெண் கள் குளத்திற்கு வந்தனர். அப்பெண்களை அடை யாளம் கண்டு கொண்ட அரசர், அவர்களை அழைத்து, அவர்கள் கூறியவற்றிற்கு விளக்கம் கேட்டார். அப்பெண்கள், ஆல மரத்தில் வந்து நின்ற கிளியைப் பார்த்துத் தாங்கள் அவ்வாறு கூறியதாகச் சொன்னார்கள்.

அரசர், தம் முதல் அமைச்சரின் அறிவுக் கூர்மையின் திறத்தைப் பெரிதும் மெச்சி, அவருக்குப் பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தினார்.

—————-

கிருஷ்ண தேவராயர் ஒரு நாள் கொலு மண்ட பத்தில் அமர்ந்து, ஆட்சி நடத்திக் கொண்டிருக்கையில், தமிழ் நாட்டிலிருந்து நடன மகளிர் மூவர், அவர் கொலுமண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; நடனக்கலையில் பெரும் புலமை பெற்றவர்கள்; கல்வியறிவிலும் சிறந்தவர்கள். அப்பெண்கள் தங்கள் திற மையை அரசர் முன் விளக்கிப் பெருமை பெறவேண் டும் என எண்ணி விசய நகரம் வந்தனர்.

கொலுமண்டபம் வந்து அரசரைக்கண்ட அப்’ பெண்கள் அரசரை வணங்கினர். பிறகு,

“மன்னர் மன்னரே, நாங்கள் மூவரும் தமிழகப் பெண்கள். இசை பிசகாது பாடவும், விதி பிறழாது நடனம் ஆடவும், குழல் ஊதவும், யாழ் இசைக்கவும் எங்களுக்குத் தெரியும். தங்கள் முன் னிலையில் எங்கள் கலைத்திறனைக் காட்டித் தங்கள் அன்பான ஆதரவைப் பெறவே வந்துள்ளோம்” என்று அந்தப் பெண்கள் மூவரும் கூறினார்கள்.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கும் ஆண்டாளின் திருப்பாசுரங்களில் மனத்தைப் பறி கொடுத்து, அப்பாசுரங்களை “ஆமுக்த மால்யதா” என்னும் பெயருடன் தெலுங்கில் எழுதியவரான கிருஷ்ண தேவராயர், அத்தமிழ்ப் பெண்களின் கலைத்திறனைக் காண விரும்பி, “நாளை நம் அவையில் உங்கள் நடனக் கலையை நாம் காணுவோம்” என்று கூறினார்.

மறு நாள் தமிழகப் பெண்களின் ஆடலைக் காணச் சபை கூடியது. நடனக் கலையில் தேர்ச்சி உடையவர்கள் பலர் தமிழ்ப் பெண்களின் கலைத்திற னைக் காண வந்திருந்தனர். மன்னர் தம் தேவியாருடன் வந்தமர்ந்தார்.

நடன மகளிர், முதலில் மன்னருக்கும் அவையி னருக்கும் வணக்கம் செலுத்தியபின், நடனம் ஆடத் தொடங்கினர். ஆடலுக்கேற்ற இசையும் இசைக் கேற்ற ஆடலும் அவையினர் மனத்தைக் கவர்ந்தன. அப்பெண்களின் ஆடல், நடன இலக்கணத்தினின் றும் இம்மியும் பிசகாமல் சிறப்புற்றிருந்தது. மன் னரும் அவையினரும் இந்நடனத்தைப் பெரிதும் சுவைத்தனர். மன்னர் அவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தி விருதுகள் அளித்து, அவர்கள் மனம் மகிழுமாறு பரிசுகள் அளித்தார்.

நடனப் பெண்கள் மூவரும் மன்னர் மன்னரை வணங்கித் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து அப்பரிசுகளை ஏற்றுக் கொண்டனர். பிறகு, அவர்களுள் ஒருத்தி, “நம் மன்னர் முள்ளும் முரடுமடி ” என்றாள். மற்றொருத்தி, “நம் மன்னர் கல்லும் கரடும் அடி” என்றாள். இன்னொருத்தி “நம் மன்னர் வேரும் விறகும் அடி” என்றாள்.

அவர்கள் ஏன் இவ்வாறு கூறினார்கள்? அவர்கள் கூறியவற்றின் பொருள் என்ன? என்பவற்றை அறிய மன்னர் விரும்பினார்; உடனே தம் முதலமைச் சராகிய அப்பாஜியை நோக்கினார்.

மன்னரின் கருத்தறிந்த அமைச்சர் அப்பாஜி, எழுந்து மன்னரை வணங்கிவிட்டுப் பின்வருமாறும் அப்பெண்கள் கூறியவற்றை விளக்கினார்.

“மன்னர் மன்னா! உங்களை முள்ளும் முரடும் என்றாள் இப்பெண். பலாப்பழம் முள்ளையும் முரட்டுத் தோலையும் மேற்புறத்தில் பெற்றிருக்கிறது. அதைப் போல், நீங்கள் குற்றம் செய்பவர்களுக்கும் பகை வர்க்கும் முள்போன்றவராயும் முரட்டுத்தனம் உடையவராயும் விளங்குகின்றீர்கள். அதாவது கடுமையானவராகவும் வன்மை உடையவராகவும் காணப்படுகின்றீர்கள். பலாப்பழத்தின் தோலை உரித்து விட்டால், உள்ளே பொன்போன்று விளங்கித் தேன்போல் இனிக்கும் சுளைகள் காணப் படுகின்றன. அதுபோல் நீங்களும் அகத்தில் அன்பும் இன் சொல்லும் நிறைந்து விளங்கு கின்றீர்கள். எனவே தீயவர்களுக்குக் கடுமையான வராகவும், நல்லவர்களுக்கு அன்புடையவராகவும் நீங்கள் விளங்குவதால் அப்பெண் உங்களைப் பலாப் பழத்திற்கு ஒப்பிட்டாள்.

மற்றொருத்தி உங்களைக் கல்லும் கரடும் என்றாள். கல் என்பது மலையைக் குறிக்கும். மலை நெடுந் தொலைவிலிருந்து. பார்த்தாலும் நன்கு தெரி யும். அதனுடன் பல்வேறு அரிய பொருள்களை மலை தருகிறது; அளக்கவோ அசைக்கவோ முடியாதது. அதுபோல, நீங்களும் பேராற்றல் படைத்த பகை வராலும் அசைக்க முடியாதவர். வேண்டுவோர் வேண்டியவற்றையெல்லாம் கொடுத்து ஆதரிக்கும் வள்ளல். உங்கள் புகழ் நெடுந்தொலை பரவியிருப் பதால் எங்கிருப்பவர்களும் உங்களை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, மலை என்று அவள் உங்களைக் கூறியது முற்றிலும் பொருந்தும். கரடு என்பது காலடி எனப் பொருள்படும். கால் உடலைத் தாங்குவதுடன் நம்மை நடமாட வைக்கிறது. அதுபோல நீங்கள் உங்கள் நாட்டைத் தாங்கி நாட்டு மக்களை மகிழ்ச்சிப் பெருக்குடன் நடமாட வைக்கின்றீர்கள். அதனால் அவள் உங்களைக் கால்’ –என்னும் பொருளில் கரடு எனக் கூறியது மிகவும் பொருத்தமே யாகும்.

“இன்னொருத்தி உங்களை வேரும் விறகும் என்றாள். வேர் நிறைந்து விறகுபோல் இருப்பது அடிக்கரும்பு ஆகும். அதைப்போல் புறத்தோற்றத் தில் நீங்கள் கடினமாய் இருந்தாலும் அடிக்கரும்பு மிகுந்த இனிப்புடையதாயிருப்பது போல, நீங்கள் அகத்தில் கருணையும், இன்சொல்லும், நிறைந்த வராய்க் காணப்படுவதால், வேரும் விறகும் என்று அவள் கூறியதும் பொருத்தமாகவே இருக்கிறது. –

இவ்வாறு அமைச்சர், அந்தப் பெண்கள் மூவரும் கூறியவற்றை விளக்கியதைக் கேட்ட மன்னரும் அவையினரும் பெருமகிழ்ச்சியடைந் தனர்; அமைச்சரின் அறிவுத் திறமையையும் பாராட் டினர். அரசர் அப்பெண்களுக்கு மேலும் சில பரிசளித்துப் பாராட்டி உபசரித்து அனுப்பி வைத்தார்.

இக்காப்பியத்தைப் பாடி நிறைவு செய்த வாறே, ஆண்டாள் மற்றும் திருமாலின் அருளால் ஒரிசா பகுதியைக் கிருஷ்ண தேவராயர் வெற்றி கொண்டதாக, இக்காப்பியத்தின் நிறைவுப் பாடலின்மூலம் அறிய முடிகிறது. நீல மலையான பூரி ஜகந்நாத்தில் நீலவண்ண ஆடை அணிந்த பலராமனோடும், சுபத்திரையோடும் கண்ணன் வீற்றிருக்கிறான்.

அந்தக் கண்ணன் குவளை மலர்களை வென்ற கண்களைக் கொண்டவன். அவனது கருணை மிகுந்த கடைக்கண் அருளால் ஒரிசா பகுதியின் அதிபதிகளான கஜபதி மன்னர்களை வீழ்த்தியவனும், தோள் வலிமையால் அவர்களை அஞ்சச் செய்தவனுமான கிருஷ்ணதேவராய மன்னர் இயற்றிய ஆமுக்த மால்யத காவியம் இனிய செய்யுட்களுடன் நிறைவடைகிறது என்று நூலை நிறைவு செய்துள்ளார்.

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் –கூடாரை வெல்லும் சீர்–

January 10, 2023

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————–

அவதாரிகை –

நோற்றால்
அவன் பக்கல் பெறக் கடவ பேறு
சொல்லுகிறார்கள் –

(கீழே சம்யா பத்தி -உபகரணங்கள் பிரார்த்தனை
சா யுஜ்யம் -யுக -சேர்ந்து இருந்து கல்யாண குண அனுபவம் இதில்-
கூடி இருந்து குளிர்ந்து மகிழ்ந்து சாயுஜ்யம் -ஸம்மானம் பிரார்த்தனை
ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது -)

பெண்காள் நம்மோடு ஓத்தான் ஒருவன் ஈஸ்வரன் உண்டாகில் இறே
நம் பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த சங்கு உண்டாவது –
இனி தான் சங்கங்கள் பல வேணும் என்றி கோள்-
ஒன்றைத் தேடினோம் ஆகிலும் அத்தோடு ஒத்த பல சங்குகள் கிடையாதே –

1-நம் பாஞ்ச சன்னியத்தையும்
2-புள்ளரையன் கோயிலில்  வெள்ளை விளி சங்கையையும்
3-ஆநிரை இனம் மீளப் பசு மேய்க்கும் போது குறிக்கும் சங்கையும் கொள்ளுங்கோள் –

பறை என்றீர்கள்
ஆகில் நாம் உலகு அளந்த போது
ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு –
அத்தை தரலாய்த்து –

பெரும் பறை என்றி கோளாகில்
நாம் லங்கையை அழித்த போது
நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு அத்தை தரலாய்த்து –

சாலப் பெரும் பறை -என்றி கோளாகில் –
அற விஞ்சின பறையாவது
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்கக் குடமாடுகிற போது –
நம் அரையில் கட்டி ஆடிற்று ஒரு பறை உண்டு அத்தைக் கொள்ளுங்கோள் –

பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்கு பெரியாழ்வார் உண்டு –
அவரைப் போலே உங்களுக்கும் நமக்கும் சேரக் காப்பிடுகை அன்றிக்கே
உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையும் கொண்டு போங்கோள்

கோல விளக்குக்கு
உபய பிரகாசகையான நப்பின்னை நின்றாள் இறே

கொடிக்கு
கருளக்   கொடி ஒன்றுடையீர் (பெரிய திருமொழி -10-8 )என்று
நீங்கள் சொல்லும் பெரிய திருவடியைக் கொண்டு போரி கோளே

விதானத்துக்கு அன்றோ நாம் மதுரையில் நின்றும் இவ் வூருக்கு வருகிற போது
நம் மேல் மழைத் துளி படாத படி தொடுத்து
மேல் விதானமாய் வந்த நம் அநந்தனைக் கொண்டு போங்கோள் –

உங்களுக்கு செய்ய வேண்டியது இத்தனையே என்றான்

மார்கழி நீராடப் போம் போதைக்கு வேண்டுமவை இவை –
நோற்ற அனந்தரம் நாங்கள் உன் பக்கல் பெறக் கடவ இன்னம் சில
சத்கார விசேஷங்கள் உண்டு –
இவற்றிலும் அவை அந்தரங்கமாக இருப்பன சில
அவையும் நாங்கள் பெறுவோமாக ஆக வேணும் என்று வேண்டிக் கொள்கிறார்கள் –

ஸ்ரீ வைகுண்டம் -நித்ய விபூதி- ஸ்வயம் வியக்தம்-ஸ்வயம் பிரகாசம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் – -ஸ்திரம் அநந்தம் ஆனந்த மயம் –
ஸ்வேந ரூபேண ஸ்வரூப ஆவிர்பாவம் -அபஹத பாப்மா இத்யாதி அஷ்ட குணங்களில் சாம்யம் –

மரம் சரீரம்-இரண்டு பறவைகள் -சமானம் வ்ருக்ஷம் -ஞான ஆனந்தத்தால் சாம்யம் –
ஓன்று கர்ம அனுபவம் புஜித்து மழுங்கி -ஓன்று அகர்ம வஸ்யனாய் ஆனந்தமே வடிவு
அனுபவம் பொது -சாம்யம் இல்லையே இங்கு –
அங்கு தான் ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –

கூடி இருந்து அனைத்துக் கல்யாண குணங்களை – அனுபவித்து குளிரலாம் –
ஸாயுஜ்யம் -ஸ யோகம் -கூடி -ஸமான பாவனை -ஆனந்த அனுபவம் –
நோன்புக்கு உண்டான சம்மானங்களைப் பிரார்த்திக்கிறாள் இதில் –
ப்ரஹ்மம் வேறே ஜீவர்கள் வேறே -ஸஹ -கூடவே என்றாலே -தர்சனம் பேவ ஏவச –
ஐக்யா பத்தி இல்லையே -கூடினதாகவே இருக்குமே –

பாஷாண கல்பம் இல்லையே -அநிஷ்ட நிவ்ருத்தி மட்டும் போராதே -இஷ்ட பிராப்தியும் உண்டே –
கூடிற்றாகில் நல் உறைப்பு -அது அதுவே -அவர் அவராக நான் நானாக –
சேஷி ஸ்வாமி சர்வ நியாந்தா சர்வ தார்யமாய் அவன் -சேஷமாய் சொத்தாய் நியமிக்கப்பட்டு தாங்கப்பட்டு நாம் –
தானும் யானும் எல்லாம் தானாய் கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் அமுதமும் கன்னலும் போல்
கூடி இருந்து –அந்தமில் பேர் இன்பத்தோடு அடியாரோடு இருந்தமை –

கீழில்-
தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று –
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –

(அங்கே தான் நாம் நாமாக ஸ்வரூப ஆவிர்பாவம் -மூடிய அழுக்கு நீங்கப் பட்டு –
புண்ய பாப விதூய -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -ஸ்வேந ரூபேண -இயற்கை ஸ்வரூபம் அடைகிறோம் –
வி குண்டம் குறைவே இல்லாமல் அன்றோ அங்கு – –அர்ச்சிராதி –12 -லோகங்கள் தாண்டி –
விரஜா நீராடி ஸூஷ்ம சரீரம் போக்கி -ஸ்வரூப ஆவிர்பாவம் -சுத்த ஸத்வ திரு மேனி பெற்று -ப்ரஹ்ம அலங்காரம் -)

நேற்று சாம்யா பத்தி மோக்ஷம்-அஷ்ட குண சாம்யம் -உபகரண பிரார்த்தனை –
இன்று சாயுஜ்யம் மோக்ஷம்-ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா – கூடி இருந்து -தமிழ் படுத்தி இங்கு
பக்தைர்ஸ் பாகவத ஸஹ -அனுபவம்-நோன்புக்கு ஸம்மானம் )

(நெய் உண்ணோம் -விரதம் ஆரம்பிக்க -இங்கு முடியும் பொழுது அனைத்தும் வேண்டுமே)

கீழில்-
தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று -(ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே )
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –

(விரஜையில் நீராடி அமானவன் கர ஸ்பர்சம் சதா மாலா ஹஸ்தா -இத்யாதி அலங்காரம் உண்டே)

தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே
கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு
பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும்
அனுகுண அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –

நோற்றால் பெறக் கடவ பேறு சொல்கிறது –
இத்தால்
ப்ரஹ்ம அலங்கார ரேனோலங்குர்வந்தி-
என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாதாயத்தாம் என்கிறது

இப் பாட்டில்
நோற்றால் -அவன் பக்கல் பெருமவற்றைச்
சொல்கிறார்கள்

(கூடாரை வென்று–கூடி இருந்து குளிரும்படி வைத்தருளும் சீர் –அல்லோம் என்றோரை ஆவோம் என்றாக்கி -இருவரையும் சேர்ப்பது உபதேசத்தால் -அல்லாத போது அழகாலே –ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா”(12) || 1.65 | -ப்ரஹ்மத்துக்கு அப்ராதான்யம் -கல்யாண குணங்களை அங்கும் அவனுடன் சேர்ந்து அனுபவிக்கிறோம் -சீர் -கல்யாண குணங்களுக்கே ப்ராதான்யம் -காருண்யம் -பிராட்டி -ஆஸ்ரித பாரதந்தர்யம் -ஆச்சார்யர் -உலாவும் பெருமாளே ப்ராதான்யம்)

—————————

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

கூடாரை வெல்லும் –
ஆந்தனையும் பார்த்தால் –
ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –
அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –

சீர் –
எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே –
வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் –
அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –
சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே-
அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம்
நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –

பெண்காள் –
நம்மை எளிவரும் இயல்வினன் என்று
அழகிதாக வறிந்து கொண்டி கோள்
எங்கனே –
அபேக்ஷித்தது தருகிறோம் என்கிற அளவைக் கொண்டு
நம்மையும் நம்முடைய சர்வஸ் வத்தையும் உங்களதாக்கிக் கொண்டு
உங்களை வெல்ல இருந்த நம்மைத் தோற்பித்துக் கொண்டி கோள்
எங்கனே
ஜெய அபஜெயங்கள் நாம் நினைத்த படி இன்றிக்கே இருந்ததீ -என்ன

கூடாரை வெல்லும் சீர்
கூடும் என்பாரை வெல்லும் அத்தனை போக்கி
கூடுவோம் என்பாரை வெல்லலாமோ உன்னால்

கூடாரை வெல்லும்
பரசு ராமன் இருபத்தொரு படி கால் ஷத்ரியரை வென்ற உனக்கு
ஒரு ஷத்ரிய புத்ரன் எதிரோ -என்று பெருமாளை வெல்ல நினைத்து வந்து
தன் கையில் வில்லை அவர் கையிலே கொடுத்து
நான் ப்ராஹ்மணன் என்று நமஸ்கரித்துப் போந்தான் –
வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் இவராய்த்து தோற்பது –

ராவணன் இந்த்ராதிகளை வென்ற எனக்கு ஒரு மனுஷ்யன் எதிரோ என்று இருக்க –
திருவடியை இட்டும்
அங்கதனை இட்டும் பின்பு
வில் பொகட்ட அளவில் -இன்று போய் நாளை வா -என்னும் இத்தனையும் சொன்ன இடத்தில் –
வணங்கலில் அரக்கனான பின்பு (9-8 )
ஆந்தனையும் பார்த்தோம் -என் செய்வோம் என்றாய்த்துக் கொன்றது

(வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன்   தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ்  சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-5-)

பின்பு வில்லை எடுத்திலன் ஆகில் பெருமாளை வென்றானாய் விடும் –
லோகம் பண்ணின பாக்யத்தாலே பின்பு வில் எடுத்தான்
பெருமாள் அவனுக்குத் தோற்க்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலர் –

கூடாரை வெல்லும் சீர்
ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட ஈரைந்து தலையான் —-என்று
ஒரு படியாலும் கூடேன் என்று அவனை இறே வென்றது –

கூடுவேன் என்ற விபீஷணனுக்கு வில்வெட்டி இறே செய்தது –
(வில்வெட்டி இறே செய்தது-அவன் சொன்னது எல்லாம் கேட்டான் )
ஸூக்ரீவ வசனம் ஹனுமான் வசனம் -என்று கூடினாருடைய
குற்றேவல் கொண்டு அபிஷேக பிரதானமும் பிராண ஹரணமும் பண்ணும் படி இறே தோற்ற படி –

அர்ஜுனனோடு உறவு பண்ணுவோம் -கிருஷ்ணன் காலிலே வணங்கோம் என்ற
துரியோதனனை வெல்ல வல்லனானான் –

நீ சொல்லிற்றுச் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் ( பெரிய திருவந்தாதி 19 )-சர்வ காலமும்
தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணித் திரிந்தான்

(சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-)

வெல்லும் சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தால் –
கூடுவாரை சீலத்தாலே வெல்லும் –
கூடாதாரை ஸுர்யத்தாலே வெல்லும்

சீர்
ஸுர்யம் அம்புக்கு இலக்காகும் —
சீலம் அழகுக்கு இலக்காகும் –
(ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்களோ அறியேன் )

ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம் கொலோ ?அறியேன்
ஆழி அம் கண்ண பிரான் திரு கண்கள் கொலோ ? அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
தோழியர் காள் அன்னைமீர் ! என் செய்கேன் துயராட்டியேனே–7-7-1

அம்புக்கு இலக்கானார்க்கு மருந்து இட்டு ஆற்றலாம்
சீலமும்
அழகும் நின்று ஈரா நிற்கும்

ஈர்கின்ற கண்கள் -(திருவாய் -8-1 )
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ -(திருவாய் -10-3-1 )

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

அம்பு தோல் புரையே போம் –
அழகு உயிர்க் கொலை யாக்கும்

வெல்லும் சீர்
ஸ்வரூப அனுசந்தானம் பண்ணி வாரோம் -என்று இருப்பார்
ப்ரதிஞ்ஜையை அழித்து வர பண்ணிக் கொள்ளவற்றாய் –
ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தாலே வாசல் விட்டுப் புறப்படோம் என்று
இருப்பாருடைய அபிமானத்தை முறித்து
தன் வாசலிலே வரப் பண்ணின குணம் –
தேஹாத்ம அபிமானிகளை தலை சாய்ப்பிக்கச் சொல்ல வேணுமோ

நலமுடையவன் என்னா-
தொழுது எழு -என்றார் இறே குணங்களுடைய எடுப்புக் கண்டு

வெல்லும் சீர்
அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும் –
சர்வஞ்ஞரை எத்திறம் என்னப் பண்ணும்

கூடாரை வெல்லும் –
தங்கள் பட்ட இடரை அறிவித்து அத்தலையை தோற்பிக்க நினைத்தார்கள்
அவன் தன் தோல்வியைக் காட்டி அவர்களைத் தோற்பித்த படியைச் சொல்லுகிறது
எங்களைத் தோற்பித்த நீ யாரை வெல்ல மாட்டாய் -என்கிறார்கள்
அதாவது –
நாங்கள் வந்து -உன்  முன்னே  நின்று -வார்த்தை சொல்லும்படி -பண்ணினாயே
ஆந்தனையும் பார்த்தால் –
ந நமேயம்(வணங்கலில் அரக்கன் )-என்று கூடாரை வெல்லும் அத்தனை –
கூடினால் தான் தோற்கும் அத்தனை

சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தாலே –
கூடுவாரை சீலத்தாலே வெல்லும் –
கூடாதாரை ஸூ வீர்யத்தாலே வெல்லும் –
அழகுக்கும் அம்புக்கும் இலக்காகும்(சூர்ப்பணகை ராவணன் )

அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும்
சர்வஞ்ஞரை – எத்திறம் -என்னப் பண்ணும்(மூவாறு மாசம் மோஹித்தார் ஆழ்வார் )
சத்யேந லோகான் ஜயதி-இத்யாதி வத்

(சத்தியமே பேசி உலகங்கள் வென்று -ஜடாயு மோக்ஷம் இதனாலே -மனித பாவனையால் –
தீனர்களை தானம் அருளி -குருக்களை அனுகூலம் பண்ணி- சத்ருக்களை வீரத்தால் -வெல்லுமவன் )

அம்பு வாய் மருந்தூட்டித் தீர்க்கலாம் –
இதுக்கு பரிஹாரம் இல்லை -நீர் கொன்றால் போலே
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து(9-6) -என்னக் கடவது இறே

(நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-)

சத்ருக்களை வில்லைக் காட்டிக் கொல்லும் அத்தனை –

ச சால சாபம் ச முமோச வீர -என்று
வில் பிடித்த பிடியைக் கண்டு வில்லை ராவணன் பொகட்டான்
பின்னை வில் எடாதே ஒழிந்தான் ஆகில் பெருமாளை வென்றே போகலாயிற்று
வில் கை வீரன் பெருமாள் –
வெறும் கை வீரன் ராவணன் என்றான் வால்மீகி  ருஷி(அஞ்சலிம் பரமாம் முத்ரை )

தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷன்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

விஜிதாத்மா -நான்கு திருக் கல்யாண குணங்கள் காட்டும் கண்ணாடி–விஜிதாத்மா -சங்கரர் -அனைவரையும் வென்றார்
பக்தர்களால் ஜெயிக்கப் பட்டவர் பட்டர் -தோற்கடிக்கப் பட்டவர் – விதேயாத்மா -சேர்த்து -அவிதேயாத்மா -யாருக்கும் கீழ் படாதவர்
வினை கொடுத்து வினை வாங்குவார் போலே அகாரம் சேர்க்க வேண்டாமே-தன்னுடைய அடியவர் சொன்னபடி விதேயர்
சத் கீர்த்தி-இத்தையே கீர்த்தியாக கொண்டவன்–கூடாதார் சத்ருக்கள் மட்டும் இல்லை
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஆண்டாள் விரோதிகள் அனைவரையும் வியாக்யானம்-அஞ்சிறையும் மட நாராய் தூது விட வந்து அருளி –
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்–வளம் மிக்க மால் பெருமை மன் உயிரின் தண்மை–உளமுற்று -தளர்வுற்று நீங்க நினைத்த -மாறனை
பாங்குடனே சேர்த்தான் மகிழ்ந்து -கூடாரை வெல்லும் சீர் –
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் -சௌசீல்யம் தெரியுமா -கேட்டானாம் மகதோ மந்தைச்ய நீர் சம்ச்லேஷ –
புரை அறக் கலந்து நாடு புகழும் பரிசு -நாம் பெரும் சம்மானம்
இன்னம் அங்கே நட நம்பி–எற்றுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய்
மட்டை அடி -மின்னிடை மடவார் -நம் ஆழ்வார் -உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் பந்தும் கழலும் தந்து போகு நம்பி
போகு நம்பி -உன் தாமரைக் கண்ணும் செய்ய வாயும் –ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோம்
மின்னிடையார் சேர் கண்ணன் –தான் தள்ளி உன்னுடனே கூடன் என்று –குலசேகரர் ஆழ்வார் -வாசுதேவ உன் வரவு பார்த்தே –
நீ உகக்கும் -கண்ணினாரும் அல்லோம் ஒழி –என் சினம் தீர்வன் நானே-கோபிகள் -பிரணய ரோஷம்
காதில் கடிப்பிட்டு –எதுக்கு இது இது என் இது என்னோ–கதவின் புறமே வந்து நின்றீர் -திருமங்கை ஆழ்வார்
நிச்சலும் என் தீமைகள் செய்வாய்–அல்லல் விளைத்த பெருமானை–குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற நந்த கோபாலன்
விநயம் காட்டி சேர்த்துக் கொள்வான் –

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று தன் நிலை போய்ப் பெண் நிலையாய்த் தான் தள்ளி – உன்னுடனே கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே நாள் தோறும் நெஞ்சமே! நல்கு–52-

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை வெல்லும் விருத்த விபூதியன் என்று – எல்லை அறத் தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார் வானவர்க்கு வாய்த்த குரவர்–53-நம்முடைய ஊடலையும் போக்கி, அவனுடன் நாம் கூடும்படிச் செய்தான். அந்தக் கண்ணன் விருத்த விபூதியை உடையவன். முதல் தனி உன்னை உன்னை -அப்ருதக் ஸித்த ஸ்வரூபம் -அசாதாரண விக்ரஹ விஸிஷ்ட ப்ரஹ்மம் -அனுபவத்துக்கு -கூடி குளிர வேண்டுமே -வைத்த அஞ்சல் என்ற கையுடன் கல்யாண குண அனுபவம் அடியார்களுடன் பக்தைர் பாகவதர் குழாங்களுடன் அனுபவம் தானே பரம புருஷார்த்தம்

——————–

கோவிந்தா –
கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத
மாத்ரத்திலே ரஷித்த படி –

கோவிந்தா
கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில்
கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ

கோவிந்தா
பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே-
ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-

இட்டமான பசுக்களை –
நாலிரண்டு நாள் தீம்பிலே வளர்ந்து நடந்து பெண்களோடு கலந்து வந்தால்
மாதா பிதாக்கள் தாழ்த்து வந்தது என் என்றால்
பசு மேய்க்கப் போனேன் என்று கண்ணழிவு சொல்லலாம் படி ஒதுங்க நிழலாய் இருக்கை –

காமுகராய் இருப்பார் உகந்த விஷயங்களில் காட்டிலும் கடகரை இறே உகப்பது-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -(திருவாய் -10-3-10 )
கன்று மேய்த்து இனிது உகந்த –
காலி மேய்க்க வல்லாய் -(திருவாய் -6-2 )
கன்று மேய்த்து விளையாட வல்லானை -(பெரிய திருமொழி -2-5 ) 

சாமான்ய ரக்ஷணமும் –
விசேஷ ரக்ஷணமும் –

தன் வாயாலே பறித்து மேய்வாருடைய -(பசு-உபாயாந்தர பரர் )ரக்ஷணமும் –
தான் பறித்துக் கொடுப்பாருடைய (கன்று -பிரபன்னர் )ரக்ஷணமும்

கோவிந்தா
சேரோம் என்னும் அத்யாவசியம் இல்லாத திர்யக்குகளோடும் பொருந்தும் படியான
நீர்மையை யுடையவன் –

கோவிந்தா –
பசுக்களுக்கும் தோற்குமவனே
கூடுவோம் என்னும் அபி சந்தி இல்லாதாரையும் (தடுக்காதவரை -அத்வேஷம் மாத்ரம் )ரஷித்த படி –

(இது முதல் மூன்று பாசுரங்களில் கோவிந்தா -ஸ்ரீ ரெங்கத்திலும் தேர் இழுக்கும் பொழுதும் கோவிந்தா என்றே சொல்லுவோம் அன்றோ)

————-

வுன் தன்னைப் பாடிப் –
ஹிரண்யாய நம -என்கை தவிர்ந்து
வகுத்த உன்னுடைய பேரை
ஸுயம் பிரயோஜனமாகச் சொல்லப் பெறுவதே -என்கை –
கோபீ ஜன வல்லபனான உன்னை பாடுகையே எங்களுக்கு பிரயோஜனம் போரும் -என்னவுமாம் –

உன் தன்னைப் பாடி
ஹிரண்ய புரம் போலே இவன் பேர் சொல்ல ஓட்டுவார் இல்லை போலே காணும் பண்டு –
அநந்தரத்திலே இவர்கள் கோபிப்பார்கள் என்று தவிர்ந்த இழவு எல்லாம்
சந்நிதியில் பாடப் பெறுகையாலே தீரப் பெற்றது –

உன் தன்னைப் பாடி
வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் பிரயோஜனமாகப் பாடப் பெறுகையாலே –
வாயினால் பாடி( 5 )-என்று உபக்ரமித்தபடி
நா படைத்த பிரயோஜனம் கொள்ளப் பெற்றோம்

உன்னைப் பாடி என்னாதே
உன் தன்னைப் பாடி என்கிறது
அத் தலை இத் தலை யாவதே –
உன் பணியை நாங்கள் ஏறிட்டுக் கொள்வதே

கோவிந்தா உன் தன்னைப் பாடி
கோவிந்தன் குழல் கொடூதின போது -என்று நீ பாடும் போது –
கேயத் தீங்குழல் ஊதிற்றும்-என்னும் படி
பெண்கள் புணர்ப்பை குழலிலே இட்டுப் பாடி –
எங்களை தோற்ப்பிக்கை அன்றிக்கே
எங்கள் வாசல்களில் பாடி ஆவி காத்து இராதே (நாச்சியார் -8-3 )
உன் வாசலிலே வந்து கோவிந்தா என்று பாடும் படி ஆவதே

வுன் தன்னைப் பாடிப்
விலக்கினது பெற்ற படி –
ஹிரண்யாய என்கை தவிர்ந்து (ஓம் நமோ நாராயணாய என்று )உன்னைச் சொல்லப் பெறுவதே என்கை –

பாடி யுன் தன்னை
பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் உன்னைப்
பாடுகையே பிரயோஜனம் என்றுமாம்

சீர்
சீலவத்தையின் மிகுதியே என்னவுமாம்(கல்யாண குணங்களையே சீர் என்கிறது –

கூடாரை வெல்லும் சீர் -என்றதால் கூடினாரிடம் தோற்பதும் சீர் என்று அருளிச் செய்தாதாயிற்று

————–

பறை கொண்டு –
பிராப்யத்திலே
பிரபாக வ்யவஹாரம் –
ஊருக்கு -பறை -என்கிறது -தங்களுக்கு பிராப்யம்-

பறை கொண்டு
பாடிப் பறை கொண்டு என்று அடியில் சொன்ன படியே
ஊரார் இசைந்த பறையைக் கொண்டு –
ப்ராப்யத்தில் ப்ராபக வியவஹாரம் பண்ணுகிறார்கள் ஆற்றாமையால் -ஊருக்கு இறே
தங்களுக்கு ப்ராப்யம் இறே

(பாடுவதே இவர்களுக்கு ப்ராப்யம்
இத்தை உபாயமாக த்வனிக்க ஊராருக்காகப் பாடுகிறார்கள் இப்படி )

பறை கொண்டு
ப்ராப்யத்தில் ப்ராபக வ்யவஹாரம் -ஊருக்குப் பறை என்கிறது(பாடுவதே பறை -ஸ்வயம் பிரயோஜனம் -பாடிப் பறை உபாயம் சப்தம் )

————

யாம் பெரும் சம்மானம் –
தோளில் மாலையை வாங்கி இடுகை -இவருக்கு பெறாப் பேறு -என்கை
பெருமாள் தோளில் மாலையை வாங்கி இட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்
பட்டரும் பணிக்கும்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி கொண்டாடுகை –

யாம்
தேவகீ புத்ர ரத்னமான உன் வாசி அறிந்து பற்றி உன்னை ஆச்ரயித்தார்க்கு
பேறு தப்பாது என்கிற வ்யவசாயம் யுடைய நாங்கள்

பெறும் ஸம்மானம்
வெறும் ஊரார் காரியமே யாக ஒண்ணாது –
எங்களுடைய அபிமதமும் பெற வேணும்

யாம் பெறும் ஸம்மானம்
பெருமாள் பிராட்டிக்கு பண்ணின ஸம்மானம் போலே –
ஆத்வாரம் தொடர்ந்து ஏத்தின பிராட்டிக்கு தன் தோளில் மாலையை வாங்கி
இட்டு
காலைப் பிடித்து நில் என்று போன ஸத்காரம் இறே
இவர்களுக்குப் பண்ணப் புகுகிறது

அவள் இவர் திருவடிகளைப் பிடிப்பது கைப் பிடித்த முறையால் –
இவர் அவள் காலைப் பிடிப்பது பிரணயித்தவத்தாலே

அவளுக்குச் சொல்லும் ஏற்றம் எல்லாம் ஸ்வரூப நிபந்தனம்-
இவனுக்கு சொல்லும் ஏற்றம் எல்லாம் பிரணயித்தவ நிபந்தனம்

அவனுடைய வியாபாரம் வைதம் –
இது ராக பிராப்தம் –
ஸ்வயம் ப்ரவ்ருத்தனாம் இடத்தில் விதி விஷயம் ஆக மாட்டாதே
அவ் விடத்தில் விதி நுழையுமாகில் போக மாட்டாதே

வெளித் திரு முற்றத்திலே -பிரசாதம் அவ்வளவில் வர
யாம் பெறும் ஸம்மானம் வந்தது என்பர் பட்டர்

யாம் பெரும் சம்மானம்
தங்கள் பேறு-
இவ்வளவில் வெளித் திரு முற்றத்தில் நின்றும் பிரசாதம் கொண்டு ஒருவன் வர
இது யாம் பெறு சம்மானம் வந்தது -என்று பட்டர் அருளிச் செய்தார்

பதி சம்மாநிதா சீதா -என்று தோளில் மாலையை வாங்கியிட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்
பட்டர் -பிரணயித்வத்தாலே காலைப் பிடித்து நில் என்றார் என்பர்
தாம் ஸ்ரீரிதி த்வதுப சம்ஸ்ரயணாந் நிராஹூ (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று கொடுத்தால் தட்டென் என்கை

யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சார்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-29-)

யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது
சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே
ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் )

(சுமந்திரன் செய்தி சொல்ல பெருமாள் பிராட்டிக்கு சம்மாநம் செய்து அருளிச் சென்றதுக்கு இரண்டு நிர்வாஹங்கள்)

யாம் பெறு சம்மானம்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும் படி அவள் கொண்டாடும்படி சொல்கிறது –

—————-

நாடு புகழும் பரிசினால் –
ஒருவன் கொடுக்கும்படியே
சிலர் பெறும்படியே-
என்று நாட்டார் கொண்டாட வேணும் –

நாடு புகழும் பரிசினால்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும் படியாக
ஒருவன் கொடுத்த படியே –
சிலர் பெறும் படியே என்று
நாட்டார் கொண்டாடும்படியாக வேணும் –
பாரோர் புகழ (1 )என்னும் படியே தலைக் கட்ட வேணும் —

கிருஷ்ணனும் சத்யபாமை பிராட்டியும் அர்ஜுனனும் திரௌபதியுமாக கால் மேல் கால் ஏறிட்டு கொண்டு இருக்க
சஞ்சயன் திருவாசலிலே வந்தான் என்று அறிவிக்க –
கிருஷ்ணன் அருளிச் செய்கிறான் -நம்முடைய இருப்புக் கண்டால் உகப்பானும் உகவாதார் மண் உண்ணும் படி
இவ் விருப்பைச் சொல்ல வல்லானும் ஒருவன் புகுர விடுங்கோள் என்ன
அவனும் புகுந்து -கண்டு -அப்படியே போய் –
துரியோதனனுக்கு கெடுவாய் –
அவர்கள் இருப்பு கண்டேனுக்கு உன் கார்யம் கெட்டது கிடாய் என்றான் இறே –

சுக சாரணர்கள் சென்று ராவணனுக்கு அவருடைய ஓலக்கத்தில் மதிப்பும்
அவருடைய வீரப்பாடும் கண்டோமுக்கு உனக்கு ஒரு குடி இருப்பு
தேடிக் கொள்ள வேண்டி இருந்தது –
ஊற்று மாறாதே நித்தியமாய் நடக்கிற ஐஸ்வர்யத்தை யுடையராய் உனக்கு வரம் தந்து
உன் கையாலே தகர்ப்புண்ணும் அவர்களை போல் அன்றிக்கே
உனக்கு முடி தந்தார்க்கும் முடி கொடுத்த ராஜா உன் தம்பிக்கு
லங்கையைக் கொடுத்தான் -வானரங்களும் ஆர்த்துக் கொண்டது –என்று சொன்னார்கள் இறே –

இப்படி தன்னை ஆஸ்ரயித்தாரை நாடு புகழும் படி இறே வாழ்விப்பது –
வாழ்வர் வாழ்வு எய்து ஞாலம் புகழ (திருவாய் -3-3-11 )-என்கிறபடியே –

நாடு புகழ என்று
யசஸ் பரராய்ச் சொல்லுகிறார்கள் அன்று –
புகழ்ந்து நாட்டார் உஜ்ஜீவிக்கை ஸ்வ லாபமாக நினைக்கையாலே
ஸூத்ரனை ஒளித்து வேண்டிப் பெறுமது இறே லோகம் இகழ்வது –
சர்வ ஸமாஸ்ரயணீயன் தானே
மேல் விழுந்து சத்கார பூர்வகமாகக் கொடுக்கிறது ஆகையால் புகழும் இறே

நாடு புகழும் பரிசினால்
பாரோர் புகழ -1-என்னும்படியே -ஒருவர் கொடுக்கும்படியே –
சிலர் பெறும்படியே-என்று கொண்டாட வேணும் –
சஞ்சயனும் ஸூக சாரணர்களும் இவனுடைய ஆஸ்ரித பக்ஷபாதத்தை புகழ்ந்து பேசினால் போலே

(சஞ்சயன் அர்ஜுனனும் திரௌபதியும் கண்ணனும் சத்யபாமையும் சேர்ந்து இருந்த பொழுது உள்ளே வரவிட்டு
ஆஸ்ரித பக்ஷ பாதி-அஸூயை இல்லாத சஞ்சயன் -யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ
யத்ர பார்தோ தனுர்-தர: தத்ர ஷ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம

சுக சாரணர்கள் ராவண தூதர்கள் -கண்டு உன்னால் வெல்ல முடியாது -என்று சொன்னார்கள் அன்றோ
விரோதிகளும் புகழும் படி ஆஸ்ரித பக்ஷ பாதம்)

——————

நன்றாகச் –
இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பெருமாளும் பிராட்டியும் கூட இருந்து
திருவடிக்கு பூட்டினாப் போலே பூண வேணும் –
சிலரை இட்டு ஒப்பிக்கை அன்றிக்கே
தானும் பிராட்டியும் கூட இருந்து ஒப்பித்த தன்னேற்றம் –
ஆபரணத்தைப் பூண்டு அவன் வரவு பார்த்து இராது ஒழிகை -என்றுமாம்

நன்றாக
இவனை ஒழிந்தாரைப் பாட வேண்டிப் பெறுமது பரிமித பலமாகையாலே –
படி வைக்க யுண்பார் பாடே பிச்சை புக்கு உண்ணும் மாத்ரம் –
காலன் கொண்ட பொன்னிட்டு ஆபரணம் பண்ணிப் பூண்பார் மாத்ரம் –
நாடும் புகழும் அளவன்றிக்கே அவன் தானும் சத்தை பெற்று நாமும் சத்தை பெற வேணும் –
இவர்களை ஒப்புவிக்கை அவனுக்கு ஸ்வரூபம் –
அவன் ஒப்பிக்க இசைகை இவர்களுக்கு ஸ்வரூபம் –

நன்றாக
இந்திரன் வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுத்து அருள –
திருக் கையிலே பிடித்துக் கொண்டு இருந்து
பெருமாளை ஒரு கண்ணாலும் திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க –
பெருமாள் பிராட்டி திரு உள்ளத்தில் ஓடுகிறதை அறிந்து
அடியார் தரம் அறிந்து கொண்டாடும் வீறுடைமைக்கு பர்யவசான பூமியான நீ கொடு என்ன
திருவடியை ஒப்புவித்தால் போலே
கிருஷ்ணன் நப்பின்னை பிராட்டியை விடுவித்து ஒப்பிக்கை யாய்த்து
நன்றாக ஒப்பிக்கை யாவது –

இவர்கள் நோக்குதியேல் என்னப் பண்ணிற்று ஒரு பூர்ண கடாக்ஷம் உண்டு இறே –
அப் பார்வை பட்ட இடம் இருக்கும் படியை மேலே சொல்லுகிறார்கள் –

நன்றாகச்
நாடு சிரிக்கும் படி –
காலன் கொண்ட பொன்னையிட்டு ஆபரணம் பூண்கை அன்றிக்கே
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் யஸ்ய துஷ்டாசி பாமிநி-என்று இந்திரன்
வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுக்க
அத்தை ஒரு கையிலே பிடித்து பெருமாளை ஒரு கண்ணாலும்
இத்தை இவனுக்குக் கொடுப்பது என்று திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க
பெருமாள் அத்தை அறிந்து அருளி –
ஆஸ்ரிதரை அறிவாய் நீ யன்றோ கொடுக்கலாகாதோ என்று அருளிச் செய்யக் கொடுத்தால் போலே
இருவரும் கூடிக் கொடுக்கும் ஆபரணம் -என்கை –

நன்றாக
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -(கௌஷீகிதி )என்று
விரஜைக்கு அக்கரைப் பட்டாரை-எம்பெருமான் தன்னை ஒப்பிப்பாரை இட்டு ஒப்பிக்கக் கடவது
இங்கு அங்கன் இன்றிக்கே தானும் பிராட்டியும் கூட ஒப்பித்த தன்னேற்றம் சொல்லுகிறது

(பஞ்ச சதான் அப்சரஸ் சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சனம் ஹஸ்தா
சதம் சூர்ணம் ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா )

நன்றாக
ஆபரணத்தைப் பூண்டு அவர் வரவு பார்த்து இராது ஒழிகை என்றுமாம் –

——————

சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்
பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று
இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி
மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –

சூடகமே
அணி மிகு தாமரைக் கையை (பெரிய திருமொழி கள்வன் கொல் )-என்று
தன் கையை இவர்கள் ஆசைப் படுமா போலே –
இவர்கள் ஆபரணம் பூண்ட கையை
அவன் மார்பிலும் தோளிலும் தலையிலும் வைத்துக் கொள்ள இறே அவனும் ஆசைப்படுவது –
அக் கைக்கு இடக் கடவ ஆபரணம் சூடகம் –
வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –
அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –
(பாணி கிரஹணம் முதல் அன்றோ )

சூடகமே
வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே
அநன்யார்ஹைகளாகப் பிடித்த கைகளிலே இறே முதல் ஆபரணம் பூட்டுவது
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -என்னுமா போலே
அவன் சொல்லி மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம் கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி வைத்த -முந்துறக் காணும் இடம்
முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்
கைத்தலம் பற்ற –

(கை -தோள் —-பாடகமே –ஆரோகணம் அவரோகணம் இல்லாமல்
கைத்தலம் பற்ற கானாக்கண்டேன்
வெள்ளி வளைக் கைப்பற்ற அநந்யார்ஹத்வம் பாணிக்ரஹணம் -சூடகம் -முதல் ஆபரணம்)

கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ?

————-

தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே
அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –

தோள் வளையே
கையைப் பிடித்த அனந்தரம் –
அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் –
அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே

வேய் இரும் தடம் தோளினார் (திருவாய் – 6-2 )-என்று
சுந்தரத் தோளுடையான்-தோற்கும் படி தோள் படைத்த தோளுக்கு இடம் ஆபரணம்
வேய் மரு தோளிணை (திருவாய்-10-3-1 )-மெலியும் காலத்தில் இறே வளை பொறாது ஒழிவது –
இப்போது அணைக்கிற காலம் இறே

தோள் வளையே
அத்தலையில் ஸ்பர்சம் அணைக்க வேண்டி இருக்கையாலே
அணைத்த தோளுக்குத் தோள் வளையும் -என்கை

—————–

தோடே –
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடு இட்டாலும்
அவன் இட்டாப் போலே இராது இறே –

தோடே
தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே –
அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் –
இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த
சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –

கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று
அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே
இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது 

தோடே
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடிட்டாலும் இவன் இட்டால் போலே இராதே

தோடே
அணைத்தாலும் உறுத்துமவை -ப்ரியாவதம் ஸோத்பல –
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்னுமா போலே

நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்*
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்-
கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்*
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே

————–

செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –

செவிப் பூவே
அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்

செவிப் பூவே
ஆக்ராணம்-பண்ணும் இடம் -(மேல் காதுக்கு -மேல் தோன்றிப்பூ ஆழ்வார் )
கண்ணாகவுமாம்

————–

பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –

பாடகம்
அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்

பாடகமே
அணைத்தால் துவண்டு விழுமிடம் –
அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்

———

சூடகமே இத்யாதி
1-பிடித்த கைக்கும் –
2-அணைத்த தோள்களுக்கும்
3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்
4-ஸ்பர்சத்துக்கும்
5-தோற்று விழும் துறைக்கும்

சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற —
திருக்கையால் தாள் பற்ற –

கையைக்
காலைப் பிடித்து இறே
நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

——–

என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –
நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –

என்றனைய பல் கலனும்
இவ்வளவிலே இருந்தது எண்ணுமது அன்றே –
பருப் பெருத்தன சிலவற்றைச் சொன்னோம் –
நீ அறியுமவை எல்லாம் என்கிறார்கள்-
பல பலவே ஆபரணம் -என்னக் கடவது இறே அவன் தனக்கு உட்பட –

என்றனைய பல்கலனும்
பருப் பெருத்தன சில சொன்ன இத்தனை -நீ அறியுமவை எல்லாம் என்கை –
பல பலவே ஆபரணம் இத்யாதி –இத்தசையிலே எண்ணப் போமோ –

பல பலவே யாபரணம் பேரும் பல பலவே,
பல பலவே சோதி வடிவு பண்பெண்ணில்,
பல பல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்,
பல பலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ-2-5-6-

————–

யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்
பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-

யாம் அணிவோம் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று –
பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –

இவ் வெல்லை வரும் வளவு இறே மலரிட்டு நாம் முடியோம் என்றது –
நாம் முடியோம் என்றால் பூட்ட மாட்டான்
அணிவோம் என்றால் பூட்டாது இருக்க மாட்டான் —
அவன் அலங்கரிக்கைக்கு இவர்கள் அனுமதியே அமையும்

யாம் அணிவோம்
ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒப்பிக்கக் கணிசிக்கிறார்கள் –

நாடு புகழும் பரிசினால் –யாம் அணிவோம்
நிறை புகழ் ஆய்ச்சியர் –(நாச்சியார் 4-11 )
அணி இழை யாய்ச்சியார் (திருவாய் 9-10-11 )-என்கிற இரண்டும் பெற வேணும் –

யாம் அணிவோம்
மலரிட்டு நாம் முடியோம் -2-என்ற இவர்கள் அனுமதி பண்ண அமையும் என்கை

————

ஆடை யுடுப்போம்-
பண்டு உடுத்தார்களோ -என்னில்
அவன் உடுத்து உடாதது உடை அன்று இறே என்று இருப்பது –
அவன் திருப் பரியட்டம் இவர்கள் அறையிலே யாம்படி கூறை
மாற வேணும் -என்றுமாம் –
நோன்பை முடிக்கையாலே நல்ல பரிவட்டம் உடுக்க -என்றுமாம் –
உடுத்துக் களைந்த -என்னுமவர்கள் இறே இவர்கள்
ஸ்வேத கந்த உக்தமாய் அவன் உடுத்து முசிந்த ஆடை -என்றுமாம் –

அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து –
அதுக்கு மேலே பாற்சோறு மூடும்படியாக நெய் பெய்து –
இத்தால்
பகவத் சம்பந்தமுள்ள திருவாய்ப்பாடியிலே
சம்ருத்தி எல்லாம் பிரியமாய் இருக்கும்படி –

ஆடை யுடுப்போம்
புனை இழைகள் அணிவும் என்றால் ஆடையுடையும் என்று அடைவு -(திருவாய் 8-9 )
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுங்கும் (பெரியாழ்வார் -3-9 )-என்றால்
பின்னை கூறை யுடுக்கை இறே அடைவு –

நாடு புகழும் பரிசினால் –ஆடை யுடுப்போம் –
கூறை யுடுக்கும் –அயர்க்கும்-(பெரியாழ்வார் -3-9 )-என்று
வசை சொல்லாத படி அரையிலே தொங்கும் படி உடுக்கை

கோவிந்தா உன் தன்னைப் பாடி –ஆடை யுடுப்போம் –
இவன் தூர வாசியான போது கோவிந்தன் -என்று புடவை பெறுகிறவள்
இவன் சந்நிதியில் சொன்னால் புடவை பெறக் கேட்க வேணுமோ

ஆடை யுடுப்போம்
முன்பு உடாதே இருந்து இப்போது உடுப்போம் என்கிறார்கள் அன்று –
அவன் உடுத்த உடுத்தும் இறே -உடையாவது –
இவர்கள் யுடுக்க உபக்ரமிக்க உடுத்தபடி பொல்லாது என்று
அவன் அழிக்கை இறே நன்றாக யுடுக்கை யாவது

நன்றாக –ஆடை யுடுப்போம்
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு(நாச்சியார் -13-1) -என்கிறபடியே
அவனைப் போலே வெளுப்போடே வாங்கி உடுத்தது அன்றிக்கே
உடுத்து முசித்து வேர்ப்பு மணத்தோடு கூடின கூறை மாறாடப் பட்ட உடையாய் இருக்கை

அணிவோம் –உடுப்போம்
பிரிந்து இருக்கில் இறே வரி
வளையால் குறைவிலமே–(திருவாய் -4-8 )
மேகலையால் குறைவிலமே -என்ன வேண்டுவது

பல் கலனும் யாம் அணிவோம் ஆடை யுடுப்போம்
எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும்(திருவாய் 4-3 ) -என்னக் கடவது இறே

அதன் பின்னே
பீதக வாடை யுடுத்தால் -கலத்தது உண்ணும் அத்தனை இறே

அதன் பின்னே
புறம்பே ஒன்றைப் பற்றினால்
அவையும் இல்லை –
அவனையும் கிடையாது –
அவனைப் பற்றினார்க்கு சர்வ லாபமும் உண்டு –

ஆடையுடுப்போம்
பண்டு உடார்களோ என்னில் —

கோவிந்தா உன்தன்னைப் பாடி ஆடை யுடுப்போம்
ஒருத்திக்குப் புடவை கொடுத்தது இவர்களுக்குச் செய்யச் சொல்ல வேணுமோ –
அவன் உடுத்துக் கொடுத்தது உடை -உடுத்துக் கொடுக்காத உடை அன்று என்கை
அதாவது கூறை மாறுகை -மாறாடுகை
புனை இழைகள் அணியும் ஆடையுடையும் புதுக்கணிப்பும் நினையும் நீர்மையதன்று இத்யாதி –
அப்பன் திருவருள் மூழ்கினள்-என்கிறபடியே –

புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட் கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-குட்ட நாட்டுத் திருப்புலியூர் அப்பனோட்டை சம்பந்தமே இவளுக்கு புதுக்கணிப்பு

அவனோட்டை சம்பந்தமே இவர்கள் நன்மைக்கு எல்லாம் அடி என்கை
புதுக் கணிப்பும் –
அவன் உகப்பு ஒழிய தங்கள் உகப்பு பொகட்ட படி
நோன்பு முடிக்கையாலே நல்ல புரியட்டம் உடுக்க என்றுமாம்
உடுத்துக் களைந்த  நின் பீதகவாடை -என்னுமவர்கள் இறே

பல்கலனும் அணிந்த பின்பு ஆடை உடுப்போம் -என்கிறார்கள் -அவனுடன் ஸம்ஸ்லேஷம் -கூடும் பொழுது ஆடையும் பிரதிபந்தகமாகுமே -ஆகவே பின்பே கண்ணனும் இவர்களும் ஆடை அணிவோம் -இவர்களுக்கு அவனே அனைத்து ஆபரணங்கள் -இவர்களே அவனுக்கும் அனைத்து ஆபரணங்கள் ஆவார்கள் –

—————

முழங்கை வழி வாரக்
நம்பி திரு வழுதி வளநாடு தாசர் -நெய் படாதோ -என்ன
கிருஷ்ண சன்னதியாலே த்ருப்தைகளாய் இருந்தவர்களுக்கு
சோறு வாயில் தொங்கில் அன்றோ
நெய் வாயில் தொங்குவது -என்று பட்டர் அருளிச் செய்தார் –

வ்யதிரேகத்தில் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று
சொன்னவர்கள் இன்று ஆசைப் படுகிறார்கள் –

பாற் சோறு மூட நெய் பெய்து
நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்கிற விரதங்கள் ஸமாப்பித்து –
இவர்கள் வ்ரதத்துக்காகத் தவிர்ந்து இவர்கள் தவிருகையாலே
அவன் தவிர்ந்து ஊரில் நெய்க்கும் பாலுக்கும் போக்கில்லையே –

நெய் பெருமையாலும்
பால் பெருமையாலும் நீரிலே யாக்காதே
பாலில் யாக்கி
நெய்யை நிரம்ப விட்டு
நெய்யிடையிலே
சோறு உண்டோ என்று தடவி எடுக்க வேண்டும் படி இருக்கை

முழங்கை வழி வார
கிருஷ்ணன் சந்நிதியில் திருப்தைகளாய் இருக்கிறவர்களுக்கு
உள்ளுத் தொங்குகிறது அன்றே -கை வழியே வழிய

(அலங்காராசனத்துக்குப் பின் போஜ்யாசனம் தானே)

அதன் பின்னே பாற்சோறு-மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்(ஓங்கு பெரும் செந்நெல் கீழ் )
பகவத் சம்பந்தம் உண்டான திருவாய்ப்பாடியிலே ஸம்ருத்திகள் எல்லாம் இவளுக்கு பிரியமாய் இருக்கிறபடி-
நம்பி திருவழுதி வளநாடு தாசர் -நெய் வாயில் படாதோ என்ன
ஓரவல் (ஓர் அவில் -ஒரே அரிசி மணியாவது )வாயில் தொங்கில் அன்றோ நெய் வாயில் படுவது -என்று பட்டர் அருளிச் செய்தார்
கிருஷ்ண சந்நிதியாலே த்ருபத்தைகளாய் இருக்கிறார்கள்
பால் தொங்கில் அன்றோ நெய் தொங்குவது
நெய் யுண்ணோம் பாலுண்ணோம் -2-என்றது தனியாகை –

(எழ பிரார்த்தனை – கடாக்ஷம் பிரார்த்தனை – நடை அழகைப் பிரார்த்தகித்து மங்களா சாசனம் பண்ணி
அவன் இடம் அவனையே பிரார்த்தித்து -நோன்புக்கு உபகரணங்களை பிரார்த்தித்து -கீழ் எல்லாம்
இங்கு தானே அவன் சந்நிதி கிட்டிற்று)

————-

கூடி இருந்து –
பிரிந்து பட்ட கிலேசம் தீரக்
கூடி தொட்டுக் கொண்டு இருக்கையே பிரயோஜனம் –
புஜிக்கை பிரயோஜனம் அன்று –

கூடி இருந்து
பசி கெட யுண்கிறார்கள் அன்றே –
எல்லாரும் கூட தொட்டுக் கொண்டே இருக்கை இறே உத்தேச்யம் –

கூடி –
பிரிந்த பட்ட வியாசனம் எல்லாம் தீரக் கூடி –
எனை நாள் வந்து கூடுவன்-(திருவாய் -10-10 )என்ற இழவும் தீர்ந்த படி

இருந்து
வாசல்கள் தோறும் அலமந்து எழுப்பிக் கொண்டு திரிந்த கிலேசம்
எல்லாம் தீர இருந்து –

————-

குளிர்ந்து –
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் குளிரும்படி –
நம்பெருமாள் திருநாள் -என்று ஒரு பேரை இட்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களைத் திரட்டிக் காணுமா போலே
ஒருவருக்கு ஒருவர் போக்கியம் இறே
ஸ்ருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது —

குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் வவ்வல் இடும்படி குளிர்ந்து –

கோவிந்தா உன் தன்னைப் பாடி கூடி இருந்து குளிர்ந்து
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து –
காமத் தீயுள் புகுந்து கதுவா நிற்க இராதே –
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனோடு சாம்யாபன்னைகளாய் இருக்கை –

ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது –

விராஜா ஸ்நானத்தில் உத்யுக்தனாய் போருமவனுக்கு
காளங்கள்-வலம் புரிகள் தூர்ய கோஷம் –(பெரியாழ்வார் -4-4 )
ஆண்மின்கள் வானகம்-(திருவாய்-10-9 )என்கிற மங்களா சாசனம் –
நிறை குட விளக்கம் –
கொடி அணி நெடு மதிள்-என்னும் படி கட்டின கொடியும் மேல் கட்டியுமாய்
ஆதி வாஹிகர் தொடக்கமான வர்கள் சத்கரிக்கப் போய்
விராஜா ஸ்நாநம் பண்ணின அனந்தரம்
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒப்பிக்கக் கடவராய் இருக்கும்
திவ்ய அப்சரஸ் ஸூக்கள் பல ஹஸ்தைகளுமாய்
வாசோ ஹஸ்தைகளுமாய் வந்து
ப்ரஹ்ம அலங்காரம் பண்ணி ஸ்ரீ வைகுண்ட நாதனோடு கூட ஸூரிகளோடே சேர்ந்து இருந்து
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே நிரதிசய போக்யமாய் –

உண்ணும் சோறு -என்று சொல்லப் பட்ட போக்கிய விஷயத்தை –
பாலே போல் சீர் என்கிற குணங்களோடு
கை கழியப் போருகிற ஸ்நேஹத்தோடே புஜித்துக் களிக்கக் கடவ பரிமாற்றத்தை
ஒரு முகத்தால் ஸூசிப்பிக்கிறார்கள் –

முக்தரானவர்களுக்கு இஸ் ஸத்காரமும்
இவ் வனுபவமும் சித்திக்கிறது –
கோவிந்தன் தன் தனக்கு குடி குடியார் என்று இறே -(திருவாய் -10-9-8 )

கோவிந்தா உன் தன்னைப் பாடி
தேஹாந்த்ரே தேசாந்தரே பெறக் கடவ பேற்றை எங்களுக்கு
நீ சம்மானமாகப் பண்ணித் தர வேணும் என்று
சாம்யா புத்தியையும்
குண அனுபவத்தையும் அபேக்ஷித்தார்களாய் இருக்கிறது

திருவடி -திருவனந்த ஆழ்வான் -திவ்ய ஆயுத ஆழ்வார்கள் தொடக்கமான ஸூரி வர்க்கம்
திவ்ய மஹிஷிகள்
முமுஷுக்கள்
அசாதாரணமான நாடு ஈஸ்வரன் தானே எல்லாரும் சம்மானம் பண்ணும் படியான விஷயம்
முமுஷுவாய் முக்தனாம் என்கிற ஸ்ருதி யர்த்தம் ஸூசிதமாகிறது-

கூடி இருந்து குளிர்ந்து –பல் கலனும் யாம் அணிவோம்
பிரிந்த போது பர்யட்டங்களையும் ஆபரணங்களையும் கட்டி எங்கேனும் பொகட்டு
ராக்ஷஸிகள் நடுவு இருக்கிற எனக்கு என் செய்ய என்று
இருந்த பிராட்டியை போலே இருந்தார்கள் இவர்கள் –

ஸ்நாநமும் வஸ்த்ரங்களும் ஆபரணங்களும் பரதனை ஒழிய நமக்கு என் என்று இருந்த
பெருமாளை போலே இருந்தான் கிருஷ்ணன் –

நீராட்டம் அமைத்து குளிக்க அழைத்தாலும் வராதே
நப்பின்னை காணில் சிரிக்கும் என்றாலும் இசையாதே
குளியாது இருந்தமை அவர்களும் அறிகையால் இறே –
உன் தன் மணாளனை எம்மை நீராட்டு என்றது இவர்கள் (20)

இவர்களோடு கூடின பின்பு
விசோதித ஜடராய் (ஜடை முடி ஷவரம் பண்ணி)
ஸ்நாநம் பண்ணி
சித்ரமால்யா நுலேபநராய்
மஹார்ஹ வசனமும் யுடுத்து விளங்கி நின்றால் போலே

இவனும்
இவர்களோடு கூடிக் குளித்து
ஒப்பித்து விளங்க வேண்டுகையாலே
கூடி இருந்து இப்படிச் செய்யக் கடவோம் என்கிறார்கள்

கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே

நன்றாகக் கூடி இருந்து குளிர்ந்து
இனி விஸ் லேக்ஷம் கலசாமல் கூடி

நல்ல நாளிலே வருகிற கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே

உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து
வாய் பாட
உடம்பு கூட
நெஞ்சு குளிர
கூடி –குளிர்ந்து
குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –

(நீரிலே தோயாதே–உபாயாந்தரங்களிலே இழியாதே
நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் -ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும் )

கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-
தனியே புஜிக்கக் கடவது அன்று –
உண்கை உத்தேச்யம் அன்று-
பிரிந்து பட்ட கிலேசம் தீரத் தீர கூடித் தொட்டுக் கொண்டு இருக்கை பிரயோஜனம்
நம்பெருமாள் திரு நாள் என்று ஒரு பேரை இட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை யடையத் திரட்டிக் காணுமா போலே
ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-
அஹம் அன்னம் -இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை

(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனே)

குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சங்கள் வவ்வலிடும்படி –

—————————————–

கூடாரை வெல்லும் சீர் –
கரண களேபர பிரதானம் –
முதலாக சாங்க சாஸ்திர பிரதானம் பண்ணின விடத்திலும்
ந நமேயம் என்று இருப்பாரை
தன்னுடைய சௌர்யாதி குணங்களாலும்
சீலாதி குணங்களாலும் வெல்லும் இத்தனை –

வில் பிடியைக் காட்டி ராவணனை ஜெயித்தான் –
இது பிரதம யுத்தத்திலே இவனும் அதுக்கு எதிர்பார்த்து போந்தவன் தோலாமை இல்லை இறே
ஆனால் மறுபடியும் யுத்தமுண்டான படி எங்கனே என்னில்
பெருமாளுடைய நிரதிசய சௌர்யத்தை
பிரகாசிப்பிக்கைக்காக மறுபடியும் யுத்தம் பண்ணினான் இத்தனை
என்று நம்முடைய ஆச்சார்யர் அருளிச் செய்வர் –

தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய
வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்

இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்
சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –
கோவிந்தா –
சர்வ சுலபன் ஆனவனே –

வுன்தன்னைப் பாடிப் –
சர்வ ஸ்மாத் பரனாய்
சர்வ சுலபனான உன்னை
த்வத் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி –

பறை கொண்டு –
புருஷார்த்தத்தை லபித்து –

யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக-
நாடு ஸ்வ அபிப்ராயத்தால் கொண்டாடும் பிரகாரத்தாலே
உன் பக்கல் கை பார்த்து இருக்கும் நாங்கள்
லபிக்கிற பஹூமானம்
உன் பக்கல் நன்றாக யாம் பெரும் சம்மானம் -என்றுமாம் –

சூடகமே –
காப்பே

தோள் வளையே –
திரு இலச்சினையே

தோடு –
திரு மந்த்ரமே

செவிப்பூவே
த்வயமே

பாடகமே
சரம ஸ்லோகமே

இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் –
பகவத் சம்பந்த த்யோதகங்களாய் -இருப்பன

இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான
பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே –
திருமந்த்ரத்தை சொல்லுகிறது –

செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான
த்வயத்தை சொல்லுகிறது –

பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான
சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –

இம் மூன்று ரகஸ்யங்களாலும்
ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –

திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு
பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –

என்று அனைய
என்று சொல்லப் படுகிற

பல் கலனும்
ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே-
ஆகையால் -பல் கலனும் -என்கிறார்கள் –

யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்
இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –

ஆடை உடுப்போம்
சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்

அதன் பின்னே –
அதுக்கு மேலே

பால் சோறு
கைங்கர்யம் ஆனது

மூட நெய் பெய்து
மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –

கூடி இருந்து குளிர்ந்து –
போக்தாவான உன்னோடு
போக்யரான நாம்
சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இது வன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்-

—————-

ஆழ்வார் கோஷ்டி என்று சேவிக்கிறோம்–அஹம் அன்னம் -இந்த பாசுரம்–விரஜா ஸ்நானம்
ஆண்மின்கள் வானகம் மங்களா சாசனம்–ஆதிவாகார் சத்கரிக்க–சதம் ஹச்தாகா அலங்கரிக்க ஒப்பிக்கும் படி-ப்ரஹ்ம அலங்காரம்
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே-நிரதிசய போக்கியம் அனுபவிக்க
அஹம் அன்னம்–அந்நாதா அன்னம் புஜிக்க–அஹம் அன்னம் புஜிக்கிறவனை சாப்பிடுகிறேன் —மூன்றாலும் சொல்லி –
பாலே போல் சீர் -கை கழிய போகிற சிநேகம்–முகத்தாலே சூசிபபிகிறார்கள்-இதில் சாம்யாபத்தி என்றும் கீழே குணா அனுபவம் என்றும் சொல்லாலாம்
கோவிந்தன் தன குடி அடியார் -தனக்கு முடி உடை வானவர் எதிர் கொல்ல–கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உன் தன்னை பாடி–தேசாந்தரே தேகாந்தரே இல்லாமல்–இங்கே இந்த தேசத்தில்–சூரி வர்க்கம் திவ்ய மகிஷி பரமபதம்
முமுஷு முக்தன் சூசகம்–கூடி இருந்து பாலகனும்–ஆடை உடுப்போம் சேர்த்து
கூடி இல்லாத காலத்தில் ஆடை ஆபரணம் பால் சோறு வேண்டாம்–பிரிந்த போது -சீதை பரியட்டம் ஆபரணங்கள் எங்கேயேனும் பொகட்டு-கிஷ்கிந்தை
ராஷசிகள் நடுவில் இவை எதற்கு–பிராட்டி சேர்த்த பின்பு சர்வாலங்கார பூஷிதை
பரதனை கிட்டிய பின்பே ஸ்நானம் வஸ்த்ரம் அலங்காரம் பெருமாள் போலே கிரிஷ்ணனும் -கோபிகள் -சேர்ந்த பின்பு
கைகேயி புத்ரம் பாரதம் –
பரத ஆழ்வான் கூடின பின்பு ஜடை களைந்து ஸ்நானம் மாலை சந்தானம் வஸ்த்ரம் உடுத்து-இவனும் கூடி குளித்து ஒப்பித்து
கூடி இருந்து பல் கலனும் யாம் அணிவோம் கண்ணனையும் சேர்த்து–கூடி இருந்து ஆடை உடுப்போம்
கூடி இருந்து பால் சோறு நெய் பேர்ந்து–விச்லேஷம் இல்லாத நல கூட்டம்
வாய் பாட -முக்கரணங்களும் அவன் இடம்-குளிர்ந்து -நீர் வண்ணன் மார்பிலே தோய வேண்டும்-

சூடகமே —காப்பே
தோள் வளையே —திரு இலச்சினையே
தோடு —திரு மந்த்ரமே
செவிப்பூவே–த்வயமே
பாடகமே–சரம ஸ்லோகமே
இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் —பகவத் சம்பந்தத்யோதகங்களாய் -இருப்பன
இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே -திருமந்த்ரத்தை சொல்லுகிறது –
செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –
பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான-சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –
இம் மூன்று ரகச்யங்களாலும்-ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞானபரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு-பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ச்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்–ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
என்று அனைய–என்று சொல்லப் படுகிற–பல்கலனும்-ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இ றே-
ஆகையால் -பல்கலனும் -என்கிறார்கள் –
யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்-இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இ றே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இ றே –
ஆடை உடுப்போம்–சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்
அதன் பின்னே —அதுக்கு மேலே
பால் சோறு-கைங்கர்யம் ஆனது
மூட நெய் பெய்து–மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –
கூடி இருந்து குளிர்ந்து –போக்தாவான உன்னோடு-போக்யரான நாம்-சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இதுவன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்

சூடகமே -கையில் தோள் வளையே -தோடு -செவிப்பூவே பாடகமே–ஐந்து ஆபரணங்கள் பஞ்ச சம்ஸ்காரம்
திரு ஆபரணங்கள் ஆத்மாவை அலங்கரிக்க
தாப -எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டம் -தீயில் -அக்னியில் காட்டிலும் அக்னியில் காட்டிய -பொலிகின்ற செஞ்சுடர் –கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட செய்கின்றோம் -திரு இலச்சினை–தோள் வளையே -திரு இலச்சினை–கங்கணம் கட்டி -சூடகம்–
பட்டம் சூடகம் ஆவன -பூட்டும் ஆத்மபூஷணங்கள்-பரகுரு -சம்சார நிவர்தகமான திரு மந்த்ரம் உபதேசித்த-உத்தாராக ஆசார்யர் –
சிந்தனாசார்யர் அவரகுறு –பட்டம் கட்டி -பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்து பெரியாழ்வார் –
புண்டர -தோடு செவிப்பூ இரண்டு காதுக்கு குரு பரம்பரை ரகஸ்ய த்ரயம் –அர்த்தங்கள் —பாடகமே -காலுக்கு முகுந்த மாலை ஹரே கச்சான்க்ரி–சீரார் வேம்கடமே -ஆலயம் –
அனைய பல்கலனும் யாம் அணிவோம் -ஐந்து மட்டும் இல்லை

சாம்யாபத்தில் கீழ் பாசுரத்தில்–குண அனுபவம் இங்கே–ஆண்மின்கள் வானகம்-வலம்புரிகள் கலந்து எங்கும் இசைத்தன
சங்கு -திருச்சின்னம்–விரஜா ஸ்நானம் -கோஷம்–மங்களா சாசனம்
ஆதி வாஹிகர் சத்கரிக்க–ஒப்பிக்க கடவர் அலங்காரம்–சதம் அஞ்சன ஹஸ்தா ஆபரணம் ஹஸ்தா–வஸ்த்ரம் சந்தனம் வாசனாதி திரவியம்
கூடிஇருந்து குளிர்ந்து –

சீர் -ஸ்வாமி ஸ்வரூபம் ரூபம் குண விபூதிகள்
வடுக நம்பி போலவும்–வாழி எதிராசன் -மா முனிகள் போலேயும்–உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்–உன் தன மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்

கூடியிருந்து குளிர்மாலை -சாற்றி அருளுகிறாள்
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவையும் தன்னோடு கூடுவது இல்லை யான் –
நூலின் நேர் இடையார் திறத்து நிற்கும் ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
மாறனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினாரோடும் கூடுவது இல்லையான் –
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லையான் –
கூடத்தகாதவர்களை ஸ்ரீ குலசேகர ஆழ்வார்
கூடத் தகுந்தவர்களை -மறம் திகழு –தொல் நெறிக் கண் நின்ற தொண்டர் –
நினைந்து உருகி யேத்துமவர்கள்
அணி யரங்கத்து திரு முற்றத்து அடியவர்கள்
மால்கொள் சிந்தையராய் –அழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் –
ஒருகாலும் பிரிகிலேனஎன்று இருக்குமவர்கள்
பழுதே பல காலும் போயின -அஞ்சி அழுது இருக்குமவர்கள்
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிகர்கள்
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிகள்
வரவரமுனி ப்ருத்யைரச்து மே நித்ய யோக -நித்ய குதூகுல சாலிகள்
மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டுமவர்கள்
நித்ய அனுபவ யோக்யர்கள்
இன்னும் அங்கே நட நம்பி -புள்ளுவம் பேசாதே போகு நம்பி
கூடோம் என்று ஊடினவர்கள்
அக்கொடிய நிலை எல்லாம் தொலைந்து எப்போதும் கூடுவோம் என்று கூடி இருந்து குளிர்வோம்
கூடி இருந்து கண் வளர்ந்து போது போக்காமல் குளிர்ந்து-

——————————————————————————————————–

27. பாலேபோல் சீர் :

தே மதுர பாலே போல் சீர் தன்னால் தன் பால்
நமவெனலார் தாம் தோற்ப தன் குணம் காட்டி
சமன் கொள் நல் வீடு செய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .

கீழ் பாசுரத்தில் நோன்புக்கு உபகரணமாக
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோலா விளக்கே
கொடியே
விதானமே
என்று தன்னதேயான
பாஞ்சஜன்யம்
பேரிகை
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
நப்பின்னை
கருடன்
ஆதிசேஷன்
ஆன கேட்டவை அனைத்தும்
நதே ரூபம் நசாகாரம் நஆயுதாநி . . . பக்கத்தானாம் துவாம் பிரகசாஸசே என்பதாக கொடுத்தாகி விட்டது.
அது ஸாரூப மோக்ஷம் என்றால்,
மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இங்கனே போந்தருளி என்று ஸாலோக , ஸாமீப்ய மோக்ஷத்தைப் பெற்றாள்.
இப்போது இந்த பாசுரத்தில், நோன்பு நோற்றதற்கான சன்மானம் என்ற பெயரில் ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.

பேற்றுக்கு வேண்டியது விலக்காமையும், இரப்பும் என்ற கணக்கில் -2 ஆம் பாட்டில் நெய் உண்ணோம், பாலுண்ணோம்,
மலரிட்டு நாம் முடியோம் என்று தாங்கள் விலகினதை இப்போது இந்த பாட்டில்
சூடகமே, தோள்வளையே, தோடே , செவிப்பூவே என்று பல்கலனும் யாம் அணிவோம் .
அத்தை நீ கொடுக்கும் போது விலக்க மாட்டோம் என்பதான அப்பிரதிசேஷத்தை சூசிப்பிக்கிறாள்.

சரணாகதி கத்யமும் கோத கீதையும் :
பகவத் விஷயத்தில் செய்யப் போகிற சரணாகதி பலிக்க வேண்டி முதலில் புருஷகார பிரபத்தி.
அடுத்து பகவத் குணாநுசந்தானம்.
அடுத்து அவனுடைய பூஷணங்கள்.
அதை அடுத்து பத்னி பரிவாரங்கள் பற்றி அநுசந்தித்து
ஶ்ரீமந் நாராயண! துவத் பாதரவிந்த சரணமஹம் பிரபத்யே என்று சரணாகதியை அநுட்டித்தார்.

இதுவரை துவய பூர்வகண்டார்த்த அநுசந்தானமாயித்து.

மேலே கீதா ஸ்லோகங்கள் மூன்றை உதாகரித்து ஸ்லோக த்ரியோஜித, ஸ்தான த்ரியோஜித ஞானமாகிற –
பரபக்தி, பரஞான, பரமபக்தியைக் கொடு என்கிறார் ஸ்வாமி எம்பெருமானார்.
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும், விஸ்லேஷத்தில் தரியாமையும் பரபக்தி. ஆர்த்தி தலை எடுத்து
வழியல்லா வழியிலாவது அவனை அடைய நினைப்பது , தர்சன ஸமாகார ஸாட்சாத்கரம் இரண்டும் பரஞானம்.
பிரியாதே கூடி அநுபவிக்ககை பரமபக்தி.
பகவத் குணானுப கைங்கரயத்துக்கு பசி போலே இந்த பரபக்தி, பரஞான, பரம்பக்தி.

ஆண்டாள்
இந்த பாசுரத்தில் சொல்லப்பட்ட பாலே போல் சீர்குணங்களை அனுபவிக்க வேண்டிய அவளுடைய அவாதான் பசி. அத்தால்
அவனை
வாயினால் பாட , மனத்தினால் சிந்திக்க,
முகில் வண்ணன் பேர்பாட,
மனத்துக்கினியானைப் பாட
என்ற இவையே பரபக்தி, பரஞான, பரமபக்தியாய் பசி வளர வளர பகவத் குணானுபவம் சிறக்கும் படியாய்
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிது – என்று
பரம பதத்தில் பெரும் களிப்பாய் கூடி இருந்து குளிர்வதையே ஆண்டாளும்
பால் சோறு மூடநெய் பெய்து கூடி இருந்து குளிர்ந்து என்கிறாள் .

இங்கு முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் ,
அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு
இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.
பாலே போல் சீரை அனுபவிக்க முதல் நிலை பசி பர பக்தி. அது இன்னும் அதிகமாக அதிகமாக
பரஞான பரம பக்தியாக பழுக்கிறது. அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக
பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.

—————————————————————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–ஒருத்தி மகனாய் பிறந்து–

January 9, 2023

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

——

அவதாரிகை –

உங்களுக்கு வேண்டுவது என் -என்ன
ஏதேனும் பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி
எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள்

பெண்காள் உங்கள் பிறப்பால் நம் விஜயத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை ஸ்வரூபம் இறே –
இக் குளிரில் உங்களைப் பேணாதே க்லேசித்து வந்திகோளே
உங்கள் நெஞ்சிலே ஓடுகிறது வெறும் பறையோ-
வேறு ஏதேனும் உண்டோ என்ன –

உன்னுடைய குண கீர்த்தனம் பண்ணிக் கொண்டு வருகையால்
ஒரு கிலேசங்களும் படாதே ஸூகமே வந்தோம் –
பறை என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நாங்கள் உன்னை இறே அர்த்தித்து வந்தது என்கிறார்கள் –

பறை கொள்ள வந்தோம் இரங்கு என்று நம்மை வடிம்பிடா நின்றி கோளே –
நீங்கள் சொன்ன போதாகச் செய்யப் போமோ
பிரதிபந்தகங்கள் உண்டாய் இருக்குமே என்ன –

பிரதிபந்தகங்களைப் போக்கி அரியது செய்த உனக்கு எளியது செய்யத் தட்டுண்டோ-
எங்களோடு சஜாதீயரிலே சிலர் நோன்பு நோற்றுப் பெற்றது
எங்கள் நோன்பு பலித்த படி அன்றோ -என்கிறார்கள் –

தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம் ஸ்ரீவத்ச லக்ஷ்மம் ஸ்ரீவத்ச லக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம்பீதாம்பரம் சாந்த்ர பயோத லௌபகம் மஹார்ஹ வைடூர்ய கிரீட குண்டலத்விஷா பரிஷ் வக்த சஹஸ்ர குந்தலம் உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிஹி விரோசமாநம் வசுதேவ ஜக்ஷத

( சங்கு, சக்கரம், கதை, பத்மம் தாங்கிய நான்கு திருக்கரங்கள் , திருமறு,கவுத்துவம், வனமாலை
தாங்கிய மார்பு, பீதகவாடை, மின்னும் முடி-குண்டலங்கள், மேகலையும் கங்கணமும். தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம்.
வசுதேவர் கண்ணிமைக்காமல் பார்த்தார்)

பெண்காள் நோன்பு ஒழிய உங்கள் நெஞ்சிலே ஓன்று உண்டு இறே என்ன
பறை என்று ஒரு பேர் நாங்கள் உன்னை அர்த்தித்து வந்தோம் -என்ன
என்னை அர்த்தித்துப் பெற்றார் உண்டோ என்ன
எங்களோட்டையார் பெற்றார் உண்டு -என்கிறார்கள் –

(எங்களோட்டை இடைச்சிகள் பெண்கள் சிறுமிகள் -அவனையே ப்ராப்யமாக கொண்ட –
நமக்கே -உபாய அத்வசயாம் கொண்டு ப்ராப்ய த்வரை உள்ளவர்கள்-நாயமாத்மா ஸ்ருதி சித்தம்
யாம் பாடி -உபாயமும் ப்ராப்யமும் அவனே என்று இருப்பவர்கள் -மாதா பிதா –மத அன்வாயானாம் -ஆளவந்தார் –
உடையவர் சம்பந்தம் இருக்கவே ஆழ்வார் சம்பந்தம் கிட்டும் -எங்களோட்டை அங்கும் உண்டே )

இப்பாட்டில் –
கீழ்ப் பாட்டில் -ஏற்றிப் பறை கொள்வான் -இன்று யாம் வந்தோம் -இரங்கு -என்று
இவர்கள் அபேஷிக்கையாலே
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன –
நெடுமாலே -நீ புருஷார்த்தத்தை கொடுத்தாயாகில் –
நாமும்
உன்னையும் உன் குணங்களையும்
ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி
பட்ட வ்யசனம் எல்லாம் தீர்ந்து
மகிழக் கடவோம் –
என்கிறார்கள் –

ஸ்வரூப லாபத்தோ பாதி
துக்க நிவ்ருத்தியும் தத் ஆஸ்ரயணத்தாலே -என்கிறது –

———-

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

ஒருத்தி –
சர்வ லோகங்களையும் நியாமகன் ஆனவனையும் கூட
நியமிக்குமவள் ஆகையாலே
நாட்டில் தனக்கு ஒப்பற்று இருக்குமவள்-

ஒருத்தி மகனாய்-
சர்வ லோகங்களுக்கும் பிதாவானவன்
ஒருத்தி மகனாய் ஆவதே –
சக்கரவர்த்தி தபஸ் ஸூபண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளைப் பெற்றாப் போலே
நால்வரும் கூடி தபஸ் ஸூ பண்ணி 
ஒரு மகனைப் பெற்றபடி –

ஒருத்தி மகனாய்–
ஒருவன் சாதன அனுஷ்டானம் பண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளை பெற்றால் போலே
நால்வரும் கூடி தபஸ்ஸூ பண்ணி -(ஒருவனைப் பெற்றதாலே )
பேறு ஒருத்தியது யாகையாலே -ஒருத்தி -என்கிறார்கள் –

ஊழி முதல்வன் ஒருவனே
என்கிற வஸ்துவை வயிற்றிலே அடக்கப் பெற்றாள் ஒருத்தி இறே

ஒருத்தி மகனாய்
சர்வ லோகங்களுக்கும் சர்வ பூதங்களுக்கும் முந்தைத் தாய் தந்தையாய் இருப்பான் ஒருவனைத் (5-7 )
தனக்குப் பிள்ளையாக பெறுகைக்கு நோன்பு நோற்க
ஜகத்துக்கு சேஷியுமாய்
சர்வ வியாபகனுமாய்
நித்யனுமாய் இருக்கிற
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் (மூன்றாம் )
சிலர் அபேக்ஷித்தத்துக்காக மகனானான் என்னும் அளவன்றிக்கே –
தேவகீ புத்ரன் என்றே தன்னை நினைக்கும் படி
அவ்வருகு தனக்கு ஒரு ஏற்றம் உண்டு என்று அறியாதபடி பிள்ளையானான் –

ஒருத்தி மகனாய் –
சர்வ லோகத்துக்கு பிதாவானவன் ஒருத்தி மகனாகப் பெறுவதே-(தேவ தேவோ ஹரி பிதா)
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் இறே(மூன்றாம் திருவந்தாதி)

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

(அகில காரணம் நிஷ் காரணம் அத்புத காரணம்
த்வம் மாதா -பிதா லோகஸ்ய
எவ்வுயிர்க்கும் தாயாய் தந்தையாய்
உலகு எல்லாம் ஒரு பகல் தன் வயிற்றில் கொண்டவனை தன் வயிற்றில் வைத்தவள் )

ஒருத்தி
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம் சர்வாத்மா -என்கிறபடியே
சர்வ லோகங்களுக்கும் நியாமகனானவனையும் கூட நியமிக்குமவள் என்கையாலே
நாட்டில் தனக்கு ஒப்பு இன்றிக்கே இருக்குமவன்

(ஆணும் அல்லன் பெண்ணும் அல்லன் அல்லா அலியும் அல்லன் )

மகனாய்
பிறந்த போதே சொல்லிற்றுச் செய்கை –
ஸ்துதோ ஹி யத் த்வயா பூர்வம் புத்தரார்த்திந்யா ததத்ய தே-சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோ அஹம் யத் தவோ தராத்-(ஸ்ரீ விஷ்ணு புராணம்)

(இருள் அன்ன மா மேனி -பிறந்ததும் இருளில் -சிரிக்க அந்த முத்துப்பல் ஒளியால் கண்டாள்
(ஸூதபா பிருஸ்னி – அதிதி கஸ்யபர் முன்பு இது மூன்றாம் தடவை -பிரார்த்தித்து பெற்றார்கள்- -பிரார்த்தனை சபலம் ஆயிற்று என்றான் )
சக்கரவர்த்தி திருமகன் வளர்ந்த பின்பு பித்ரு வசனம் பரிபாலனம் பண்ணினான்
இவன் பிறந்த போதே தோள்களை மறைத்துத் திருவாய்ப்பாடியிலே போகச் சொல்ல போனான் –
சோபனம் கூறுகைக்கும் வேறு ஆள் இல்லை –தானே(ஜன்ம கர்ம மே திவ்யம் -வண்ண மாடங்கள் பெரியாழ்வார் பின்னர் )

(ஆண்டு தோறும் ஸ்ரார்த்தம் -கயாவில் பிண்ட தானம் -இருக்கும் பொழுது சொன்ன சொல் படி நடப்பது –
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை
பிது நரகம் போக வேண்டாதபடி காப்பவன் புத்ரன்
பிறந்த பொழுதே சொன்னபடி -உப ஸம் ஹரதி -மறைத்துக் கொண்டானே
பெருமாள் 25 திரு நக்ஷத்திரத்தில் தண்டகாரண்யம் போனார்)

(மகனாய் -தசரதன் மகன் அன்றி -இரண்டு பிரயோகங்களும் -வெள்ளை வேஷ்ட்டி -தண்டீ புருஷ -போல் -ப்ருதக் -அப்ருதக் -ஸ்திதிகள் -இரண்டும் -ஆயவையாய் ஆமவையாய் -சர்வாத்ம பாவம் -புகழும் நல் ஒருவன் -மாயா வாமனா –வியாப்ய கத தோஷம் அற்றும் -ஏற்றுக்கொண்ட அதில் பூர்ணத்வமும் இவனுக்கு உண்டே-)

———–

மகனாய் பிறந்து –
பிறந்த போதே
சொல்லிற்று செய்கை –
சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –
இவன் பிறந்த போதே
ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –

பிறந்து –
ஆவிர்பவிக்க லாகாதோ –
பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே –

பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்

நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் –

அவன் பிறவி நமக்கு என்று கோல –
நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –

நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –

பிறந்து
சிலர் மகனாக வேணும் என்று ஆசைப்பட்டால்
தூணிலே தோன்றினாலே போலே ஆதல் –
ஆனைக்கு உதவினால் போலே யாதல் –
வந்து உதவ அமைந்து இருக்க
ஈஸ்வரனே வந்து பிறக்க வேணும் என்று நோற்ற படியால் பூர்வ வ்ருத்தாந்த அனுசந்தானம் இன்றியே
கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து
உம்முடைய வயிற்றின் நின்றும் நாம் பிறந்தோமே என்று சோபனம் சொல்லிக் கொண்டு வந்து பிறந்தான்(தூணைப் பிளந்தோ கருடன் மேல் பறந்தோ வராமல் கர்ப்ப வாஸம் செய்து பிறந்து )

பிறந்து
கர்ம வஸ்யர் படுவது எல்லாம் கிருபா பரதந்த்ரனாய் படுவதே -என்று
தீமதாம் அக்ரேஸர் -பிறந்தவாறும் -என்று ஆழங்கால் படும்படி யாய்த்து பிறந்தது

ஆவிர்பவித்தான் என்கிறது
கர்ப்பத்தில் தோஷ ஸ்பர்சம் இல்லை என்கைக்காக

நித்ய ஸூரிகள் அதிபதியாய் இருக்கிறவன் சம்சாரத்தில் பிறந்த இக் குணம்
இழக்க ஒண்ணாது என்று ரிஷிகளைப் போலே ஆவிர்பவித்தான் என்று
அவத்யம் சொல்லாதே
நிறம் பெறும்படி பிறந்தான் என்பார்கள் ஆழ்வார்கள் –

மகனாய் பிறந்து –
மகனாகை யாவது மாதா பித்ரு பரதந்த்ரனாகை இறே –
பெருமாள் பக்வரான பின்பு மாதா பித்ரு வசன பரிபாலனம் பண்ணினார்
இவன் பிறந்த போதே
ஆழ்வார்களையும் திருத் தோள்களையும் மறைக்க வேணும் என்ன உப சம்ஹரித்தான் –

பிறந்து
கர்ம வஸ்யர் படுமவற்றை அகர்ம வஸ்யன் கிருபாவஸ்யனாய் பிறந்து படுவதே
உப சம்ஹார -இத்யாதி
அஜோபிஸந் நவ்யயாத்மா (அபிஸந்)பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.
கர்ம வஸ்யர் கூறான ஜென்மாதி தோஷங்கள் இன்றிக்கே இருக்கை
என் பிறவாமைக்குத் தட்டு வாராதபடியும் எனக்கு நிறம் உண்டாம்படியும் காண் நான் பிறப்பது
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான(பிறக்க பிறக்க தேஜஸ் மிக்கு இன்னும் கார் வண்ணனே -தோற்றமாய் நின்றசூடார் அன்றோ )
பூதா நாம் ஈஸ்வரோ அபி சன்(இன்னும் கார் வண்ணனே -கருமை தீராதே )

(குறைத்துக் கொள் என்றாலே விட்டுக் கொடுக்காமல் அவதாரம்
பிறப்பிலி விட்டுக் கொடுக்காமல் பிறக்கிறேன் அஜன் –
கர்மத்தால் பிறக்க வில்லை கிருபையால் அவதாரம்-அஜோபிஸந் நவ்யயாத்மா (அபிஸந்)பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.
நியந்தாவும் நானே -அனைவருக்கும் ஈஸ்வரன் நானே-அஜன் ஸ்தம்ப சம்பவாத் -இதர விஜாதீயன் -நரஸிம்ஹன் )

தேவகி பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர் பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
(அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானு -தேவகியை கிழக்கு திக்கு -ஸூர்ய உதயம் போல் )

பிறக்கையும் பிறவாமையும் கிடக்கப் பிறக்கும் பிறப்பு நித்யர்க்கும் உண்டாகையாலே அவ்வளவே அல்ல
அல்லாதார் பிறப்பையும் நீக்க வல்ல ஸ்வதந்த்ரன் பிறப்பு அன்றோ என்கை –
சிறையர் சிறைக் கூட்டத்தில் பிணை உண்கைக்குப் புகும் -நியாமகன் சிறைக் கூட்டத்தை விடுவிக்கப் புகும்
புகுகையிலே இத்தனை நெடுவாசி உண்டு
அவன் பிறந்தால் இவன் பிறவி தனக்குத் தட்டாமை யல்ல
நம் பிறவியைப் போக்கி நம்மை தன் போலே யாக்க வல்லனாய் இருக்கும்
ஜென்ம கர்ம ச மே திவ்யம் இத்யாதி

(தந்தை கால் விலங்கு அற அன்றோ தோன்றினான் -ஸ்வ தந்த்ரன் அவதாரம் போல் அல்லவே பரதந்த்ரர் அவதாரம்
நித்யர்களை ஏவிப் பணி செய்து இங்கு வரவைக்கிறான்)

நம் பிறவி நம்மையும் அவனையும் உறவு அறுகைக்கு உடலாய் இருக்கும்(இத்தை அறிவதே யோ வேத்தி தத்வத )
இப்படி அல்லனாகைக்கு அடி சாவுதல் பிறத்தல் செய்ய வேண்டாத நித்தியமான உடம்பு உடையனாகை
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –
யத்ர அவ தீர்ணம் கிருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக் ருதி-
அவனுக்கு பிறக்கை யாகிறது அத்தை நாம் பிறவாதபடி சஜாதீயமாக்கிக் கொண்டு தோன்றுகை
புன்னாம்நோ நரகாத் த்ராயத இதி புத்ர -என்கிறபடியே இவர்கள் தாளில் தளை கழலப் பிறந்தபடி)11-5)
என்றும் பிறவி நமக்கென்று கோல நம் பிறவியாக விலக்கப் படும்
அறுவர் தம் பிறவி அஞ்சிறையே (1-3-11)-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அவன் பிறப்பு கூட்டும் –
அவனை விட்டு நீங்கவே  நம் பிறப்பு
பிரபத்தி யாவது இந்த ஞானமே -(பிரபத்தி இந்த பிரதிபத்யே )

நம்முடைய கர்மம் அவனை நம்மோடே சஜாதீயனாக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடே பரமம் சாம்யம் உபைதி -என்று சஜாதீயர் ஆக்கும்
பிறந்தவாறும்

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே –5-10-1-

மகனாய் பிறந்து
பிறக்கை தவிராதாகில் தமப்பானானாலோ என்னில் தன்னுடைய பிறவி
விசஜாதீயத்துக்குப் போராத பின்பு ஆராய்ப் பிறக்கில் என் என்றுமாம்

ஒருத்தி
இன்னாள் என்னாதே-தங்கள் பயத்தால் மறைத்துச் சொல்லுகிறார்கள்
அத்தத்தில் பத்தா நாள் (1-2)-என்னுமவர்கள் இறே

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–பெரியாழ்வார்-1-2-6-

பிறந்து
ஆவிர்பவித்தால் ஆகாதோ –
பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மனா என்று -பிறந்தான் என்கை
அவத்யம் என்று பரிஹரித்தான் ருஷி
அது தான் அவத்யம் என்று -பிறந்தவாறும் -என்று பிறக்க வல்லன் என்று சொல்லுகிறார்கள்

—————-

ஓர் இரவில் –
அவ்விரவிலே யசோதை பிராட்டிக்கும் பிள்ளையாக வேண்டுகையாலே
திருவாய்ப்பாடியிலே புக்கு –
நாய்க் குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே
கம்சாதிகள் தன்மை ஸூதிகா கிருஹத்திலே
ஓர் இராத் தங்க ஒட்டிற்றிலை -என்கை –

ஓர் இரவு –
அவ் விரவை ஒக்கும் இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை –

ஓர் இரவில் –
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் வஸ்து
கால அதீனமான தேசத்தில் பிறப்பதே –
அவர்கள் தங்களோபாதியும் பெற்றிலன் -என்கை –

ஓர் இரவில்
பிறந்த இடத்தில் ஓர் இரவும் வசிக்கப் பெற்றது இல்லை இறே
சம்சாரிகள் கீழ் -நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே
சம்சாரிகள் தண்மை கர்ப்ப க்ருஹத்தில் ஓர் இராத் தங்க ஒட்டிற்று இல்லை –
சம்சாரிகள் பிறந்தால் பெறுவதுவும் பெறப் பெற்றது இல்லை –
நால்வர் இருவர் அறிந்து சோபனம் சொல்லி
தூரியம் கொட்டி
கண் கண்டு நெய்யாடல் போற்றப் (போத்தப்) பெற்றது இல்லை –

சர்வேஸ்வரன் இங்கே வந்தால் நம்முடைய கர்மம் நம்மோடே அவனுக்கு சாம்யத்தைக் கொடுக்கும் –
நாம் அங்கே சென்றால் அவனுடைய கிருபை அவனோடே பரம சாம்யத்தைத் தரும் –
இணைவனாம் எப்பொருட்க்கும் –(நாம் சமமாக ஆக்க இந்த பிரமாணம் )
தம்மையே ஓக்க அருள் செய்வர்–(அவன் சமமாக ஆக்க இந்த பிரமாணம் )

நம் பிறவி அவனை அகற்றும் –
அவன் பிறவி அணுகைக்கு உடலாம் –
அவன் பிறவி நமக்கு என்று கோல
நம் பிறவி அவனைப் பெற்றவர்கள் காலில் விலங்கு பட்டது படும் –

ஓர் இரவில்
கால க்ருத பரிமாணம் இல்லாத தேசத்திலே வஸ்து காலாதீனமான தேசத்திலே பிறந்து
ஓர் இரவில் பட்ட பாடு தான் என் –

வீங்கிருள் வாய் பூண்டு
இவ் விரவோடு ஒத்த இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை

ஓர் இரவில்
நாய்க்குடலுக்கு நறு நெய் வகுக்குமோ
சம்சாரிகள் பொல்லாங்கு அவனை ஓர் இராத் தங்கிப் போக ஒட்டிற்று இல்லை என்கை –
அவ்விரவோடு ஒக்கும் இரவும் இல்லை -பகலும் இல்லை
மாதா பிதாக்கள் கை விட்ட அளவிலே கை தந்த ராத்திரி-
பிறவா நின்றால் கண் காண வந்து பிறந்து தூர்யம் கொட்டப் பெறாது ஒழிவதே

(ஆனக துந்துபி -வாசுதேவர் பிறக்க ஆகாசம் முழுவதும் துந்துபி கொட்டிற்றே -அதனால் இந்தப்பெயர் அவருக்கு)

(பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை வணங்கி -அவனையே ரஷித்த இரவு அன்றோ )

இரவு
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசத்திலே வர்த்தித்த இவன்
காலக்ருத பரிணாமமான தேசத்திலே பிறந்தால் பெறுவதும் பெறாது ஒழிய வேணுமோ

—————

ஒருத்தி மகனாய் –
ஒருத்தி -இவனை மகனாய் பெற வேணும் -என்று ஆஸ்ரயிக்க
அவளுக்கு அவதார ரசத்தைக் கொடுத்து
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்த படி –
ஓர் அவதாரத்திலே யாதவ சஜாதீயனுமாய்
கோப சஜாதீயனுமாய் -ஆனபடி –

மகனாய்
பிறப்பில் புரை இல்லாதாப் போலே
இவள் மகனான இடத்திலும் புரை அற்று இருக்கை –

ஒருத்தி மகனாய்
அங்கே பிறந்து
இங்கே வளர்ந்தானாய் இருக்கை அன்றிக்கே
இங்கே பிறந்தானாய் இருக்கிறபடி

ஓர் இரவில் ஒருத்தி மகனாய்
அவ் விரவிலே யசோதை பிராட்டிக்கு பிள்ளையாக வேண்டுகையாலே
ஒருத்திக்கு அவதார ரசத்தைக் கொடுத்து
ஒருத்திக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்தான்

ஒருத்தி மகனாய்
அவ் விடத்தில் முலைச் சுவடு அறியாமல் போந்த படியால்
அழுது முலைப் பால் குடித்த இடம் இறே பிறந்த இடமாவது –

திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்
ஜீரண உத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்

யாதவத்தையும் கோபவத்தையும் ஏக காலத்திலேயே யாக்கினான் –

யது குல உத்பவன் என்ற ரிஷி தானே
கோபாலன் யாதவ குலத்தை எடுக்கக் கடவன் என்றான் இறே
(விஷ்ணு புராணம் ஸ்லோகம் கோபாலன் யது குலத்தைத் தூக்கி வைத்தான் என்று சொல்கிறது
வராக கோபாலர் பூமி ஜென்ம உத்தாரணம் -நாயனார் )

அவளுக்கு முலை சுரவா நின்றதாகில்
இவன் அழுது முலை உண்ணா நின்றான் ஆகில் உமக்குச் சேதம் என் என்று பட்டர் –

யசோதை பிராட்டியாக பூதனை பாவித்து
இவன் உண்ணாத போது முலை விரியும்படியான தசையை யுடையாளாய்
பிள்ளையாக கொண்டு எடுத்து முலை கொடுக்க அது பெறா விடில் வயிறு ஆராத படியாய்
இவனும் முலை உண்ண-இவனை பிள்ளை என்று
அவள் விசுவசிக்க ஒண்ணாதே துணுக் துணுக் என்னும் படி இவளாக பாவித்து அவள் பக்கல் பரிமாறுபவன்
இவள் பக்கல் பிள்ளைத் தனத்தில் தப்ப நில்லானே –
மகனாகக் கொண்டு எடுத்தாள் இத்யாதி (இரண்டாம் திருவந்தாதி )

ஒருத்தி மகனாய்
அவள் இங்கே ஏற நியமித்து போக விட்ட மாத்ரம் –
இவள் காடு ஏறப் போ என்னலாம் படி இருக்கை –
கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் -(பெரியாழ்வார் -3-2 )
அசேஷ ஜகத்துக்கும் சாஸ்தா வான  வஸ்து
இவள் கட்டவும்
அடிக்கவும் படி நியமிக்கலாம் படியாய்த்து இருப்பது –

மகனாய்
அங்கு பிள்ளையாய் பெற்றவளுக்கு யாய்த்து இழவு உள்ளது –
நந்தன் -பெற்றனன்-யசோதை பிராட்டியைக் கைப் பிடித்த பாக்யாதிகர் பெற்றார் –
என்னைக் கைப் பிடித்த முஹூர்த்தத்தாலே ஸ்ரீ வஸூ தேவர் இழந்தார்

மருவு நின் திரு நெற்றி (பெருமாள் திருமொழி )-திருப் பவளத்தில் முலையைக் கொடுக்கப் புக்கவாறே
திரு நெற்றியில் சாத்தின சுட்டியில் அசைவையும் முறுவலையும் கண்டு
தமப்பனாரைக் கொண்டான் என்று அகவாய் பணைக்கும்-
அந்த ப்ரீதியாலே தனக்கும் வாசி தெரிக்க ஒண்ணாத விரலை வாயிலே இட்டுக் கொண்டு
ஒரு வார்த்தை சொல்லும் போது பெரிய தேற்றத்தோடே தொடங்கின மழலைச் சொல்லும்
பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன் –
பாக்யவதியான அவள் பெற்றுப் பூர்ணை யானாள்

ஒருத்தி மகனாய்
கம்சன் முடிந்து பழை நாள் பட்டு இருக்கச் செய்தேயும்
இந்நாள் என்னாதே மறைத்து போருகிறார்கள் பொல்லாங்கு விளையும் என்னும் அச்சத்தால் –
அத்தத்தின் பத்தா நாள் -என்னுமா போலே

ஒருத்தி
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் –
ஞாலத்தில் புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று ஆரும் இல்லை –

ஒருத்தி மகனாய்–
இருவரும் (தேவகியும் யசோதையும் )அவனைப் பெற வேணும் என்று ஆஸ்ரயிக்க –
அவளுக்கு அவதார ரசத்தைக் காட்டிக் கொடுத்து
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பிக்கிற படி
அம்ச அவதாரோ ப்ரஹ்மர்ஷே யோ அயம் யது குலோத்பவ(ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்ற ருஷி தானே
கோபாலா யாதவம் வம்சம் மக்ந மப் யுத்தரிஷ்யதி -என்றான்
அவள் கரும்பின் கோதைக் (கேளை -வேரை )கொண்டவோபாதி
இவளும் கரும்பின் நடுவைக் கொண்டால் போலே இருக்கிறது –
ஆப்புண்டு -10-6-1-
தீங்கரும்பு -2-5-1-
அங்கு ஈஸ்வர லக்ஷணத்தோடு பிறந்தது பிறப்பில் புரையற்றால் போலே –
இவள் மகனான வளவிலும் பிறப்பில் புரை அற்று இருக்கை

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே-10-6-1-

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப் படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே ————–2-5-1-

திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்–ஜீரணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்-ஈன்ற முதல்  தாய் சடகோபன் -மொய்ம்பால்  வளர்த்த இதத்தாய் இராமானுசன் –இதனால் தான் இராமானுசன் தர்சனம் என்று பேரிட்டு நம் பெருமாள் நாட்டி வைத்தார் –

———————-

ஒளித்து வளரத் –
கம்சனுடைய விஷ திருஷ்டி படாமே வளர்ந்தபடி-

நாட்டார் செய்வன செய்யப் பெறாதே
கள்ளர் பட்டது படுவதே
திரு அவதரித்து இருக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது படுவதே –
உள்ளே இருக்கச் செய்தேயும் இவனில்லை என்று எழுத்திடுமவன்
முகம் காண சம்மதிக்குமோ -என்கை –
அந்தர்யாமியாய் மறைய நிற்கிறது -பிச்சேறின பிரஜை தாய் முன்னே நிற்கில் தாயைக் கொல்லும் –
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்-
அதுக்காக முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கும் மாதாவைப் போலே
இசைந்து அம்மே -என்றால் ஏன் என்கைக்கு கிட்டே விருக்கிறபடி -என்றுமாம் –
பேர் சொல்லாதே ஒருத்தி -என்றது
அத்தத்தின் பத்தா நாள் -என்றவள் மகள் ஆகையாலே
பயத்தாலே ஒளிக்கிறாள் –
அபிசரிக்கிலும் அதுவோ இதுவோ என்று சந்தேஹிக்கைக்காக –

மாமனார் மாமியார் பெயர்களைச் சொல்லக் கூடாதே – கீழே நந்தகோபர் யசோதை நமக்குக் காட்டதான் -கண்ணன் உடன் சேர்ந்த பின்பு பெயர்களைச் சொல்லக் கூடாதே – ஒப்பற்ற என்றும் ப்ரஸித்தம் என்பதால் ஒருத்தி -என்கிறாள் –

ஒளித்து வளரத்
பிறந்த இடத்தில் தோன்றப் பெறா விட்டால் –
போன இடத்தில் ஒளியாமல் தான் வளரப் பெற்றதோ
விஷ த்ருஷ்டிகளான பூதநாதிகள் கண் பட ஒண்ணாது என்று
நாட்டார் செய்வன செய்யப் பெறாதே நில வறைகளிலே இறே வளர்ந்தது –
வானிடைத் தெய்வங்கள் காண (பெரிய திருமொழி )-என்று
அனுகூலர் கண் உட்பட பட ஒட்டாதவள் பிரதிகூலர் கண் பட ஓட்டுவாளோ –
கன்றின் பின் போக்கில் என்று புறப்பட ஓட்டாள்

ஒளித்து வளர
உகப்பார் சதா தர்சனம் பண்ணி அனுபவிக்க கடவ வஸ்து
கண்ணுக்கு தோற்றாத படி மறைக்க வேண்டும் படி
கள்ளர் பட்டது படுவதே –
அவதரிக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது பட்டான்

ஒளித்து வளர
உள்ளே இருக்கச் செய்தேயும்
இவன் இல்லை என்று எழுதி எழுத்து இடுமவன் முகம் காட்ட சம்வதிக்குமோ-
பிச்சேறின பிரஜை முன்னே தாய் நிற்கிலும் கொல்லும்-
இவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொல்லும்
அப்படியே அவதரிக்கில் எதிர் இடுவார்கள் –
பரம பதத்தில் இருக்கில் அசத் கல்பர் ஆவார்கள்
அந்தர்யாமியாய் முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கி
தெளிவு பிறந்து அம்மே என்றால் ஏன் என்கைக்கு பதிக்கிடைக் கிடக்கிறபடி –

ஒளித்து வளர –
கம்சாதிகளுடைய விஷ த்ருஷ்டிகள் படாமே –
நாட்டார் செய்வன செய்யப் பெறாதே –
கள்ளர் பட்டது படுவதே
அந்தர்யாமி பட்டது படுவதே
உள்ளே இருக்கச் செய்தே இவனை இல்லை என்று எழுதி எழுத்திடுமவன் முகம் காண சம்மதிக்குமோ
பிச்சேறின பிரஜை தாய் முன்பே நிற்கில் தாயைக் கொல்லும்
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்
அதுக்காக முகம் தோற்றாதே நின்று (இரா மடம் ஊட்டுவாரைப் போலே உள்ளேயே கிடந்து )நோக்குமா போலே
இவனும் முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்குகிறான்
இசைந்து அம்மே என்றால் அடியேன் என்கைக்குக் கிட்டவே இருக்கிறான் –

(அந்தர்யாமி -நியமிக்க -அந்தராத்மா சத்தைக்கு –
பரஞ்சோதி -அர்ச்சிஸ்-அர்ச்சிராதி கதிக்கு -வழி காட்ட -ஒளித்து நம்முள் )

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்-உபநயனம் -ப்ராஹ்மண ஜென்மம் கொடுக்கும் -ஸமாச்ரயணம் ப்ரபந்ந ஜென்மம் கொடுக்கும் -சடக்கென பண்ண வேண்டும் –

———–

தரிக்கிலானாகித் –
கிருஷ்ணன் வலரா நின்றான் -என்று கேட்ட பின்பு அவன் தரிக்க மாட்டிற்று இலன் –
ஈஸ்வர சத்தையையும் பொறாத ஆஸ்ரயம் இறே –

ஒளித்து வளரத் தரிக்கிலானாகித்-தான்
நாரதாதிகள் சென்று உன்னுடைய சத்ரு திருவாய்ப் பாடியிலே வளரா நின்றான் -என்று
சொல்லக் கேட்ட மாத்திரத்தில்
நம் கண் வட்டத்தில் இல்லையாகில் அவன் என் செய்யில் என் என்று இராதே
சதுரங்க பல உபேதனாய் ஐஸ்வர்யத்துக்கு ஹானி இன்றிக்கே இருந்தோம் ஆகில்
வந்த அன்று பொருகிறோம் என்று ஆறி இராதே தரிக்க மாட்டிற்று இலன்

அஸஹ்ய அபசாரமாவது
பகவத் பாகவத விஷயமாக அவர்கள் சத்தையும் பொறாது ஒழிகை இறே
கம்ச வதத்து அளவும் அனுசந்திக்கிறவர்கள் ஆகையால்
மேலே படப் புகுகிற பாட்டை அனுசந்தித்து ஸூத்ரனான பையில்
தானே சிம்ஹத்தோடே நரி எதிர் இடுமா போலே எதிர் இட்டவன் சிறுமையைச் சொல்கிறார்கள்

ஒளித்து வளரத் தரிக்கிலானாகித்
நாரதாதிகள் கிருஷ்ணன் வளரா நின்றான் என்று சொல்லக் கேட்ட பின்பு தரிக்க மாட்டிற்று இலன்
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்(பெரியாழ்வார் -1-2)
ஈஸ்வர சத்தையும் பொறாது ஒழிகை

விண் கொளமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து
திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16-

————–

தான் தீங்கு நினைந்த –
பயத்தாலே பரிந்து மங்களா சாசனம் பண்ணும் விஷயத்தில் தீங்கு நினைத்தது –
துஷ் பிரகிருதி யாகையாலே

தான்
உத்தர ஷணத்திலே படப் புகுகிற பாடு அறியாத தான் –

தீங்கு நினைந்த –
தங்கள் வாயாலே சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும்
வில் விழவுக்கு என்று அழைத்து நலியத் தேடின படி –

தீங்கு
பரிய வேண்டும் விஷயத்தில் பொல்லாங்கை நினைப்பதே –
என்ன துஷ் ப்ரக்ருதி தான்
இன்னது என்று தன் வாயால் சொல்ல மாட்ட்டாமையாலே தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும் –
வில் விழவுக்கு என்று அழைத்ததும்
நலியத் தேடின எல்லா வற்றையும் நினைத்து –

நினைந்த
இதுக்கு மனஸ் சஹகாரம் உண்டாவதே –
சிந்தையினால் இகழ்ந்த -என்கிறபடி
யுக்தி மாத்ரமான அளவில் நலியாதே
நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் யாய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்தில் கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான்

தீங்கு நினைந்த
தீய புந்திக் கஞ்சன் இறே-

தான் தீங்கு நினைந்த
எத்திறம் என்று அங்குத்தைக்கு பரிய –
மோஹிக்க வேண்டும் விஷயத்திலே இறே தீங்கு நினைத்தது -துஷ் ப்ரக்ருதி யாகையாலே –

(கம்சன் அசுரப்பிறவி இல்லையே -மனிதன் அசுரத்தன்மை கொண்டவன்
மூவாறு மாதம் மோஹித்து -பத்துடை எளியவர் -பிறந்தவாறும் -கண்கள் சிவந்து )

தான் தீங்கு நினைந்த
உத்தர ஷணத்திலே படப் புகுகிற தான் –
தீங்கு என்கிறது அப் பொல்லாங்கு தன் வாயால் சொல்ல மாட்டாமை
அஸ்மாந் ஹந்தும் ந சம்சய -(விபீஷணன் -நமக்கு எல்லாம் உயிரான பெருமாளை நம்மை அழிக்க வருகிறான் என்றாரே சுக்ரீவ மகா ராஜர் )
மாயத்த்தல் எண்ணி -(4-3)
தங்களை நலிந்ததாய் இருக்கை
பூதனை யுள்ளிட்டாரையும் வரக் காட்டியும் வில் விழவுக்கு என்று அழைத்தும் நலியத் தேடின படியும்

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய்உயிர்
மாய்த்த ஆய மாயனே!வாஅ மனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டுஉன்னைப் போதால் வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.—திருவாய் -4-3-4-

—————

கருத்தைப் பிழைப்பித்துக் –
பூதனை முதலானோர் நலிவுகளைப் பண்ணப் புக –
அத்தைத் தப்பி தன்னை நமக்குத் தந்தபடி –
அவன் நினைவை அவன் தன்னோடு போம்படி பண்ணி -என்றுமாம் –

கருத்தைப்
அம்மானாய் –
கண்ண நீர் விழ விட்டு இருக்க –
நினைத்த அபிப்ராயத்தை –

பிழைப்பித்துக் –
அவன் நினைவை
அவன் தன்னோடே போம் படி பண்ணி

கருத்தைப் பிழைப்பித்துக்
அவன் நினைத்ததைப் பிழைக்கும் படி பண்ணி -அவன் நினைவை அவனோடே போம்படி பண்ணினான்

அவன் நினைத்த தீங்கை பிழை யாம்படி பண்ணி
கொல்ல வேண்டும் என்ற நினைவால் தான் கொலை யுண்டான்
செயற்கையாக அழ த்ரவ்யம் பூசி இவன் இருக்க
ஜராசந்தன் பெண்கள் இருவர் இவன் மனைவிமார் – அழும் படி பண்ணினான் )

(போஜன் ஸ்தாலி -கண்ணன் ஒளிந்து விளையாடிய இடங்கள் –
இவன் வாய் அமுதத்தால் நிறைந்த புஷ்கரணி
விஷ்ணு சித்தர் மனத்தைக் கோயிலாகக் கொண்டு பெரியாழ்வார் அஸ்தானே பயம் போக்கி அருளினான் )

————–

கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற –
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்
கண்ட காட்சியிலே அனுபவித்து அறும்படி நின்றவன்
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றில் கொளுத்தினவன் என்கை
அதாவது பாகனி கொளுத்துகை –

கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற
கிருஷ்ணன் என்றால் வயிறு எரிதலோடே இருக்கக் கடவ பெண்களுடைய பயத்தை
எல்லாம் அவன் வயிற்றிலே யாக்கின படி

கஞ்சன் வயிற்றில்
கம்சனுடைய தப்புக்களை நினைத்து –
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் –(பெரியாழ்வார் -3-3 )
வாழ கில்லேன் வாசுதேவா –
ஊடுற என்னுடைய ஆவி வேமால் -என்கிற
ஆஸ்ரிதருடைய பயாதிகளை எல்லாம் கம்சன் வயிற்றிலே கொளுத்தினான்

கஞ்சன் வயிற்றில்
தேவகி வயிற்றில் பிள்ளை –
கம்சன் வயிற்றில் நெருப்பு

நெருப்பன்ன
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -(பெருமாள் -7-10 )
தேவகியார் வயிற்றில் நீரைச் சொரிகிறவன் காணும்
கம்சன் வயிற்றில் நெருப்பைச் சொரிகிறான்

நெருப்பன்ன நின்ற
கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு உருவன்-

நெருப்பென்ன நின்ற
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்
கண்ட காட்சியில் அனுபவித்து அறும் படி நின்ற நிலை

கஞ்சன் வயிற்றில்-நெருப்பன்ன நின்ற
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றிலே புகும்படி பண்ணி

(திருவடி -பிராட்டி சோக நெருப்பை -வாயு புத்ரனாகையாலே கொண்டு இலங்கைக்கு வீசிய படி)

தேவகி வயற்றில் பிள்ளை–அண்ணன் வயிற்றில் நெருப்பு–கஞ்சன் –நெருப்பு கரு முகில் எந்தாய் -தேவகி வயிற்றில் நீர்
கம்சன் -கண்ட காட்சியில் -பாபம் கழிய நின்ற நிலை —வெந்நரகம் சேரா வகையே சிலை குணித்தான் இதுவே நரகம்
இப்படி சொன்னவரை பார்க்க வேண்டும்–நஞ்சீயர் மடலும் தமிழும் முன்பே தெரியும்

————————

நெடுமாலே –
இது எல்லாம் பட வேண்டிற்று –
ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோகத்தால் -என்கை –
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும்
திரு உள்ளம் மண்டின படி என்றுமாம் –

நெடுமாலே
இது எல்லாம் பட வேண்டிற்று ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹத்தாலே

நெடுமாலே
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும் திரு உள்ளம் மண்டி –
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் –காணுமாறு இனி யுண்டு எனில் அருளே
என்று அவள் பட்ட இழவுகள் எல்லாம் தீர
முலைப் பால் திரு மேனியில் பாய
அவளுக்கு நின்று பால சேஷ்டிதங்களைக் காட்டின வ்யாமோஹத்தை
அவள் தான் காண்பதற்கு முன்னே மஞ்சங்களில் பெண்கள் கண்டு வாழும் படி
வ்யாமோஹ அதிசயத்தை நெடுமாலே என்கிறது –
(மாலும் நெடுமாலும் -தாய் மார் இடமும் கோபிகள் இடமும்
அடுத்த பாசுரம் மாலே )

கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் அச்சோ ஒருவர் அழகிய வா (பாசுரம் -6)-என்று
இறே பெண்கள் பார்த்துக் கொடு நின்றது –

நாம் அவ்விடத்தில் அப்படி செய்த செய்த தீமை யுண்டு –
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன

நெடுமாலே –
இது எல்லாம் பட வேண்டிற்று ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹ அதிசயத்தாலே என்கை
வஸூதேவ தேவகிப் பிராட்டிகள் பக்கல் திரு உள்ளமன்றே-தாயாருக்கும் தமப்பனார்க்கும் செய்தன இவை
அவர்களையும் ஒளித்துச் செய்யுமவர்கள் அன்றோ நாங்கள் என்கை

(காணுமாறு உண்டு எனில் அருளே என்றதும் அனைத்தையும் காட்டி அருளினானே –
அது மால் என்னும் படி இவர்கள் பக்கல் நெடுமால்)

அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே–நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து-அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய–வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –

————–

உன்னை –
அர்தித்வத்தில் நிரபேஷனான உன்னை –
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தது ஆர் அபேஷித்து –
நெடுமாலே உன்னை அர்தித்து வந்தோம் –
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே
பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –
அர்த்தித்தின் அளவு எங்கள் வடிவைப் பார்க்க அமையும் –

யுன்னை அருத்தித்து
எங்களுக்கு பிறந்து காட்டவும் வேண்டாம் –
வளர்ந்து காட்டவும் வேண்டாம் –
கொன்று காட்டவும் வேண்டாம் –
உன்னைக் காட்ட அமையும் –

உன்னை அருத்தித்து
உன் பக்கலிலே ஓன்று வேண்டி வந்தோம் அல்லோம் –
உன்னையே வேண்டி வந்தோம்

உன்னை அருத்தித்து
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் (2-7-11)-என்று
அர்த்தித்தவ நிரபேஷமாக அர்த்திகளையும் யுண்டாக்கி
உன்னையும் கொடுப்புதி இறே
உன்னுடைய உதார குணம் எல்லாம் அசத் கல்பமாக்கி
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாக வந்தது –
யார் அபேக்ஷித்து
(வேண்டித் தேவர் இரக்க நீயே அன்றோ உன்னைப் பிரார்த்தித்து வேண்டி வந்தாய் )

நெடுமாலே உன்னை அருத்தித்து
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே
பெரும் பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –

யுன்னை-அர்த்தித்து வந்தோம்
அர்த்தித்வாதி நிரபேஷனான உன்னை-
பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் -(உபாய நிரபேஷன் -கைங்கர்ய பிரார்த்தனை -ஏவிப் பணி கொள்ள வேண்டுமே -)
உன்னைப் பெறவே இருக்கிறோம்
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தவன் இறே -(ஏஷ நாராயண ஸ்ரீ மான்–ஆகாதோ மதுராம் புரம் )
எங்கள் வடிவைப் பாராய்
மாசுடை யுடம்பு இத்யாதி(நாச்சியார் )

———–

வந்தோம்
எங்கள் மிகைச் செயல் கண்டாயே –
உன் வ்யாமோஹம் எல்லாம் அத்வேஷம் என்னும் படிக்கு ஈடாய் நாங்கள் வந்தது

வந்தோம்
எதிர் சூழல் புக்கு –
ஆள் பார்த்து உழி தருகின்றாய் –
ஆயர் குலத்தினில் வந்து தோன்றின உன் வியாமோஹம் எல்லாம்
நாலடி இட்டு அசத் கல்பம் ஆக்கினோம்

———

பறை தருதியாகில் –
எங்களுக்கு உத்தேச்யம் செய்குதியாகில்

ஆகில் -என்றது
நம்முடைய அர்த்தித்வாதிகள் அப்ரயோஜகம் –
அவன் நினைவாலே பலம் என்கை –
உன் அழகாலே பிழைப்பியாதே செய்தருளப் பார்ப்பாயாகில் -என்னவுமாம் –

பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் -என்று சொல்வது –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்பதாய்
வியாஹதமாக வார்த்தை சொன்னி கோளே என்ன

பறை தருதியாகில்
எங்களுக்கு உத்தேச்யம் செய்ய நினைவாகில்
(ஆகில் -கொடுக்க நீ திரு உள்ளம் பற்ற வேண்டுமே
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் )

தருதியாகில்
அவர்கள் அர்த்தித்தவம் அப்ரயோஜம் –
அவன் நினைவாலேயே பலம் என்கைக்காக
ஆகில் என்கிறது

இவன் எல்லாம் செய்தாலும்
அவன் அல்லேன் என்றவாறே
ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
இவர்கள் அர்த்தித்தவம் அவன் ஸ்வாதந்தர்யத்தை போக்க மாட்டாதே –
ஆகையால் தருதியாகில் என்கிறார்கள்

எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் என்று இறே சொல்வது

ஆகிறது நினைவு சுருக்கம் ஒழிய அறிந்தோம் –
வந்தபடி தான் என் –
வருகிற போது கிலேசித்தி கோளே என்ன

ஒரு கிலேசம் இன்றியிலே உகப்போடே வந்தோம் –

பிரிந்து இருக்கிற நீங்கள் உகப்போடே வந்த படி என் என்ன

பறை தருதியாகில்
தாழ்ந்தார் உயர்ந்தாரை திரு உள்ளமாகில் செய் என்னுமா போலே
உன் அழகாலே எங்களை மயக்காதே –
செய்து அருளப் பார்த்தாயாகில் -செருக்கு அடியாதே செய்து அருளப் பார்த்தாயாகில்

(நெறி காட்டி நீக்குதியோ -கரு மேனி காட்டுதியோ
அழகைக் காட்டி மயக்கி கைங்கர்யம் கொடுக்காமல் –
ஸ்வா தந்தர்யத்தாலும் கைங்கர்யம் கொடுக்காமல் )

ஆகில் -என்றது
நம்முடைய அர்த்தித்வாதிகள் அப்ரயோஜகம் –அவன் நினைவாலே பலம் என்கை –பொது நின்ற பொன் அம் கழல் சடாரி
உன் அழகாலே பிழைப்பியாதே செய்தருளப் பார்ப்பாயாகில் -என்னவுமாம் –
அவன் நினைவே பல சாதனம்–இவன் எல்லாம் செய்தாலும்–அவன் அல்லேன் என்ற வன்று ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
ஆகையால் தருதியாகில் -என்கிறார்கள்–எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் -என்று இ றே சொல்வது

————

திருத் தக்க செல்வமும் –
ஸ்ரீய பதித்வத்தால் வந்த சம்பத்தையும் –
பிராட்டி ஆசைப் படும் சம்பத் -என்னவுமாம்

திருத் தக்க செல்வமும்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த சம்பத்தையும் –
பிராட்டியை எனக்கு என்னும் பெருமை யுண்டாம் போது அவள் ஆசைப்பட்டு
மேல் விழும்படி அதுக்கு ஈடான சம்பத் உண்டாக வேணும் இறே –

திருத் தக்க செல்வமும்
செல்வச் சிறுமியரான இவர்களுக்கு செல்வம் தக்காப் போலே
போதமர் செல்வக் கொழுந்தான -பெரிய பிராட்டியாருக்கு தகுதியாய்
இருக்கும் செல்வத்தினால் வளர் பிள்ளையுடைய செல்வம்

திருத் தக்க செல்வமும்
திருவுக்கு தக்க செல்வம்
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிற படியே
பிராட்டி ஆசைப்படும் சம்பத்து –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே –
ஸ்ரிய ஸ்ரியம் (ஆளவந்தார் )

திருத் தக்க செல்வமும் -சம்ப்ரதாயம் திரு ஆராதனம் -திருத் துழாய் -திரு மடப்பள்ளி –
திரு சப்தம் சொல்லாமல் சொல்லி திருடன் வர டன் வந்தான் -கதை –திரு மால் உரு ஒக்கும் மேரு —
அம்மேருவில் செஞ்சுடரோன் –சின்னமே பிதற்றவே நிற்பதோர் -திருமால் -எங்கே வரும் தீவினையே ஆழ்வார் –ஸ்ரீ மத் ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் பர்யந்தம் ஸ்ரீ மத் பாகவதம் -பூர்ண அவதாரம் அன்றோ

————-

சேவகமும் –
அத்தை காத்தூட்ட வல்ல வீரியமும்

சேவகமும்
அவ் வைஸ்யர்வத்தைத் காத்தூட்ட வல்ல ஆண் பிள்ளைத் தனமும் –
பிராட்டியுடைய விரோதிகளை பெண்களுடைய விரோதிகளை போக்கி
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் காத்தூட்ட வல்ல வீர்யம் –
என்று என்றும் உன் சேவகமே ஏத்தி (24 )என்கிற இடத்தில் இரண்டும் உண்டு இறே

செல்வமும் சேவகமும்
ஆற்றப் படைத்தான் மகனே(செல்வமும்) என்றதுவும் –
கப்பம் தவிர்க்கும் கலியே-(சேவகமும்)என்றதுவும்

சேவகமும்
இத்தைக் காத்தூட்ட வல்ல வீர்

—————

யாம் பாடி –
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உகப்போடே அத்தைச் சொல்லி –

யாம் பாடி
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உன் பேர் சொல்ல ஒட்டாதார் முன்னே உகப்போடே பாடி –
புள்ளின் வாய் கீண்டானை (கீர்த்திமைப்பாடி )என்று ஊர் எல்லாம் பாடிக் கொண்டு திரிகிறார்கள் இறே

யாம் பாடி-வருத்தமும் தீர்ந்து
வருத்தம் உன்னை நீ கண்டு அறியாயே-பிரிந்தார் படும் பாடு பாராய் -என்கை
சொல்லப் பெறாத நம் வருத்தமும் தீர்ந்து

———

வருத்தமும் தீர்ந்து –
உன்னைப் பிரிந்து படும் துக்கமும் தீர்ந்து
பிரிந்தார் படும் பாடறிய
உன்னை நீ பிரிந்து அறியாயே –

வருத்தமும் தீர்ந்து
உன்னைப் பிரிந்து நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம் தீர்ந்து –
கேவலரைப் போலே துக்க நிவ்ருத்த மாத்திரமே அன்றி இவர்களுக்கு பிரயோஜனம்
பாடுகிற போது ப்ரீதிக்கு போக்கு வீடாகை யாலே
அனுபவ காலத்தில் அநந்தம் போலே அனுசந்தான சமயத்தில் ஹர்ஷம் கனக்க யுடையோமாய்

உனது வருத்தமும் தீர்ந்து நீ மகிழ அது கண்டு நாமம் மகிழ-என்றுமாம்

———

மகிழ்ந்து –
கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி மாத்ரமே அன்றி
ப்ரீதிக்கு போக்கு விடும்படி யாகவேணும்-

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –(பெரியாழ்வார் 5-4 )
உகந்தே உன்னை உள்ளும் என்னுள்ளம் (திருவாய் -9-4-7 )-என்கிறபடி
அனுசந்தான காலத்தில் அனுபவ காலம் போலே இறே இருப்பது
தூய வமுதை பருகி பருகி (திருவாய் – 1-7 )-கிருஷ்ண அனுசந்தானம் தித்திக்கும் இறே –
(மருந்து சாப்பிட்டு விருந்து இல்லாமல்
விருந்தேயாக பிறவி போக்கவும் அனுபவத்துக்கும் )

வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் –
மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –

ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் –
ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது

பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
இசை மாலைகளில் ஏத்தி மேவப் பெற்றேன் (திருவாய் 4-5-2)
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய –(திருவாய் 4-5-3)
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனம்-

(ராஜகுமாரனுக்கு முடி சூட்டி பின்பு சிறையில் இருந்து விடுவிக்குமா போல் )

விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து –
அபிமத சித்தியும் யுண்டாய்த்து —
பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –

மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் எல்லாம் ஏற்ற
கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி யன்று தேட்டம்
ப்ரீதிக்குப் போக்கு விட வேண்டும்படி யாகை-(பாடுவதே ஆனந்தம் பரிவாஹமாய் கைங்கர்யம் )

பறை தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –

வருத்தம் தீர்ந்து–மகிழ்ந்து–கேவலர் போலே இல்லை–அநிஷ்ட நிவ்ருத்தி வியாதி போக்க–இஷ்ட பிராப்தி அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடுவது ஆனந்தம்–நினைந்து இருந்தேன் சிரமம் தீர்ந்தேன் -வருத்தம் தீர்ந்து–உகந்தென் என் உள்ளம் -மகிழ்ந்து –
சாதனமே பலம் -இங்கு-அனுசந்தானம்–தூய அமுதை பருகி மாய பிறவி மயர்வு அறுத்தேன்–வருத்தம் தீர சேவகம் பாடி–மகிழ-வீவில் இன்பம்
அபிமத சித்தி உண்டானதே –

சேவகமும் யாம்பாடி–வருத்தமும் தீர்ந்து–மகிழ்ந்து–உன்னை அருத்தித்து வந்தோம் -என்று அந்வயம் -மகிழ்ந்திடுவோம் என்றது ஆயிற்று-

————————————————————————

வருத்தம் தீர் மாலை –சாற்றி அருளுகிறாள்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
திருத்தக்க செல்வமும் -துல்ய சீல வயோ வ்ருத்தாம் -எம்பெருமானார் -பிராட்டி ஒத்த செல்வம் -எம்பெருமான் அடி சேர்ப்பிக்கை
சேவகம் -பரதவ சௌலப்யம் இரண்டையும் பாடி–பாங்கு அல்லர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு
இராமுனுசா இம்மண் அகத்தே இருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் –
பணிமானம் பிழையாமே யடியேனைப் பணி கொண்ட –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
மால் வ்யாமோஹம் அதற்கும் திரு சேர்த்து அருளினார் ஆழ்வார்
திரு -தக்க செல்வம் -நம் சம்ப்ரதாயம் -என்றபடி
திருவுக்கும் திருவாகிய செல்வன் -சுவையன் திருவின் மணாளன்
பரம ரசிகன் இந்த ரசிகத்துக்கு ஊற்று வாய் சொல்கிறது மேல் திருவின் மணாளன் என்று-பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் என்னப் பிறந்தவன்

நெடுமால்–அச்யுத பதாம்புஜ யுகம ருக்ம வ்யாமோஹத
நித்ய கைங்கர்ய அபேஷை 16 தடவை கத்ய த்ரயம்-மெய் தானா -ராமோ   த்வைய இரண்டாவது வார்த்தை பேசாதவன்-இது மயைய உக்தம் நித்ய கைங்கரோ பவோ-உற்றோமே ஆவோம் உனக்கே ஆட் செய்வோம்-

——————

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கரும வினை
கூற பிரிவினை இங்காகல் — மாறமால்
தானும் பிறந்து இருமை வினை தீர்த்துப்
பேணும் கருணை பெரிது.

ஜன்ம கர்மச மே திவ்யம் யோ வேத்தி தத்வத : என்றும்
அப்யுக்தானம் அதர்மசஸ்ச ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் என்றும்
தேவகி பூர்வஸந்தியாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா என்றும்
தாஸாம் ஆவீரபூத் பூமௌ ஸ்வயமான முகாம்புஜ : என்றும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை உயர்வான வார்த்தைகளால் ஸ்ரீ கிருஷ்ணன் தானும், ரிஷிகளும் பேசி இருக்க,
ஆண்டாள் அவன் பிறந்தமையை மநுஷ்யர்கள் பிறப்பைப் போலே கூறல் தகுமோ? என்னில்
ஆவிர் பூதம்
பிராதுர் பூதம்
என்பதற்கு மறைந்து இருந்தவன் வெளிப்பட்டானாக, தோற்றினதாக பொருள் படும்.
இல்லாதது உண்டாகாது. இருப்பதுதான் புலன்களுக்குத் தோற்ற புலப்படும்.
பூ = ஸத்தாயாம் என்று இருப்பைச் சொல்லி, ஆவிர்பூதம், பிராத்துர்பூதம் என்று வெளிப்படுதலைச் சொல்லுகிறது.

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்பது ஜனி = ஜாயதி என்ற பொருளில் பிறப்பு என்றாகிறது.
எனவே அர்த்தத்தை வைத்துப் பார்க்கில், இருவருடைய பிறப்பும் வெளிப்படுகை அன்றி உண்டாகுகை இல்லை.
என்றானால் நம்முடையது பிறப்பு, அவனுடையது அவதாரம் என்பது ஏன்?
இருப்பு இருவருக்கும் பொது. எப்படி இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டால் இருவருமே ஜ்ஞான, ஆனந்த ஸ்வரூபத்தோடே
இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுவரை ஸாம்யாப்பத்தி போல தோன்றினாலும் ,
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தில் தாரதம்யம், மற்றும் ஆத்ம தத்வங்களிடையே தாரதமயத்துக்கும் ஹேது
இன்னும் வேறு சில குணங்கள் காரணம்.
அவற்றில் இருவர் பிறக்கைக்கும் பிரதான காரணம் பகவானுடையது கிருபை. நம்முடையது கர்மம்.

பூ ஸத்தாயாம் என்று இருக்கும் நாம் கர்மத்தால் பாதிக்கப் பட்டு வெளிப்படுவது பிறப்பு.
பூ ஸத்தாயாம் என்று இருக்கும் அவன் கிருபையால் உந்தப்பட்டு கண்களுக்கு புலப்படும்படியாக வெளிப்படுவது
அவதாரம் (அ)ஆவிர்பூதம் . இப்படி இருவர் வெளிப்படுகைக்கும் பிரயோஜனம் ,
நம்முடையது சேர்த்து வைத்த, சேர்த்துக் கொள்கிற புண்ய, பாபங்களை அனுபவிக்க (அ) நஷ்டமாக்கை .
அவனுடையது நம்மை தன் கிருபைக்கு இஷ்டமாக்கை .

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் கடலை கழிமினே .

ஜனனோ ஜன ஜன்மாதிஹி பீமா பீம பராக்கிரம :
இருவரும் ஜன என்பது பொதுவானாலும்,
அவர் ஜனன : கர்ம பாரவஸ்யத்தால் நமக்கு சரீரத்தை கொடுத்து பிறப்பிக்குமவர். தவிர
ஜன -; ஜனங்களின்
ஜன்மம் -; பிறப்புக்கு
ஆதி -; நிமித்தம் (அ) பிரயோஜனம்
பகவான் – அவர் தான். ஆக, நம்முடைய பிறப்புக்கு பிரயோஜனம் அவரை அடைவது .
அவருடைய பிறப்புக்கு பிரயோஜனம் ஜனங்களைத் திருத்திப் பணிக் கொள்வது.

இப்படி கர்மா கழிந்தபின் உண்டாகிற ஜ்ஞான ஆவிர்பாவத்தை உபநிஷத்
ஸதா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்றும்
அஸ்மாது சரீராய ஸமுத்தாய பரம்ஜியோதிர் உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே – என்றும்
கர்மம் தொலைந்து ஜ்ஞானம் விகசித்து பக்குவமான சக்கரைப் பொங்கல் பிரசாதம் போலே இவன் விளங்க
அத்தை அவன் ஆனந்தமாக விநியோகம் கொண்டு களிப்பிக்கிறான்.
இது நடத்தவே ஒருத்தி மகனாய் அவன் பிறந்து என்கிறாள் ஆண்டாள்.

————————

ஒருத்தி மகனாய் பிறந்து –
அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்-
குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்
அவதரித்து –

ஓர் இரவில் ஒருத்தி மகனாய் –
லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில்
வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் –

ஒளித்து வளரத்-
குண விக்ரஹ விபூதி களாலே
சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –

தரிக்கிலானாகித் –
ஸ்வரூப மாத்ரேண-ஈஸ்வர சத்தையையும் பொறாதவனாய் –

தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –
அநவரதம் மங்களா சாசனம் பண்ணக் கடவ விஷயத்திலே
அவனால் ஒரு உபத்ரவம் உண்டாய்
பொல்லாமையை நினைக்கை அன்றிக்கே –
தானே
த்வேஷத்தை நினைந்த அபிப்ராயத்தை வ்யர்த்தமாக்கி
அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே
நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து
அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய
வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –

யுன்னை அருத்தித்து வந்தோம் –
உன்னை அபேஷித்து வந்தோம்

பறை தருதியாகில்-
நீ புருஷார்த்தத்தை கொடுப்பாயாகில்

திருத் தக்க செல்வமும் சேவகமும் –
பெரிய பிராட்டியாருக்கு தகுதியான
ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதி -விசிஷ்டனாய்
இருக்கிற செல்வத்தையும் வீர சரிதையையும் –

யாம் பாடி-
அதுவே தாரகமான நாம் பாடி –

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
உன்னைப் பிரிந்து பட்ட வ்யசனம் எல்லாம்
நிஸ் சேஷமாக தீர்ந்து
ஆனந்திக்கக் கடவோம் –

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்றும் –
பள்ளிக் கட்டில் கீழே -என்றும்
சீரிய சிங்காசனத்து இருந்து -என்றும் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும்
மாலே ஆலினிலையாய் அருளாய் -என்றும் –
கூடி இருந்து குளிர்ந்து என்றும் –
நீ தாராய் பறை -என்றும்

சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –

1- பிறந்து -2-ஒளித்து -3-வளர்ந்து -4-கஞ்சன் வயிற்றில் நெருப்பென்று இருந்து -5-நெடுமாலாகி -6-வருத்தமும் தீர்ந்து -7-மகிழ்ந்து -ஆகிய ஆகாரங்கள்
கண்ணனுக்கும்
ராமானுஜருக்கும்
திருவாய் மொழிக்கும்
ஈட்டுக்கும் உண்டே

———————

god proposes god disposes mam poses மட்டுமே

ஆச்ரித ரக்ஷணம் திருத்தக்க செல்வம் -திரு உன்னை விரும்ப
திருவாலே வந்த செல்வம் என்றுமாம்-அவனே திருத்தக்க செல்வம் என்றுமாம் -திரு செல்வச் சிறுமீர்களுக்கு தக்கவன் என்றுமாம்

யார் வருத்தம் தீர்ந்து -அவன் காத்து இருந்தது பல ஜென்மங்கள் -உன்னை மகிழ்வித்து நாங்கள் மகிழ்வோம்

ஆச்சார்யர் -ஒருத்தி பிறந்து -ஞான ஜென்மம்-திருமந்திரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து

ஒளித்து வளர ஆதி சேஷன் -ஆயிரம் வாதங்கள் -கலி யுகம் கம்சன்
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் -நித்யம் -அப்பா இருந்தாலும் செய்ய வேண்டும்
350 வருஷங்கள் முன்பு நடந்தது-சாஷாத் ஸ்வாமி நீராடிவிட்டு வர மீண்டும் மீண்டும் எச்சில் துப்ப கோபிக்காமல் நீராட–எய்தவன் இருக்க அம்பு மேல் கோபிக்கவா -உன்னை கருவியாக அந்தப் ரெங்கனே இப்படி ஐந்து தடவை துலா நீராட வைத்தாய் அன்றோ -என்று உபகாரமாக அருளிச் செய்ய -அவன் திருந்தி இவருக்கே கைங்கர்யமாக -அவன் சொத்தை ஆற்றில் போட்டு அம்மா மண்டபம் கட்ட வைத்தானாம் –
உன்னையே அர்த்தித்து வந்தோம் கையில் கனி என்ன கண்ணனைக் காட்டித் தரிலும் உன் மெய்யில் பிறங்கிய சீர் ஒன்றுமே வேண்டுவேன்
அந்த வண்ணானை மன்னிக்க மோக்ஷம் நீர் இருக்க அரங்கன் இடம் கேட்க வேண்டுமோ

————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அரையர் சேவை பற்றி ஸ்ரீ ரெங்கம் அரையர் ஸ்வாமிகள் –ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி” –முனைவர் ஸ்ரீராம்–அவர்கள் –

September 22, 2022

“நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகள் காலத்திலிருந்து எங்களின் அரையர் மரபு தொடங்குகிறது.
நாதமுனிகளின் தங்கை தன் இரு மகன்களைத் தான் திவ்யப் பிரபந்தங்களைப் பெருமாள் கோயில்களில் பாட அர்ப்பணிக்கிறார்.
அவர்கள் மேலகத்து ஆழ்வார், கீழகத்து ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வழிவந்த வாரிசுகள்தான் நாங்கள்.

பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாடும் அரையர்கள் குடும்பங்கள்
ஸ்ரீவில்லிப்புத்தூர், மேல்கோட்டை, திருநாராயணபுரம் (கர்நாடகா), ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறோம். இன்னொரு குடும்பம் ராமானுஜம் அரையருடையது.

என்னோட 11-வது வயதிலிருந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாடி வருகிறேன்.
வைகுண்ட ஏகாதசியின்போதான 20 நாள் விழாவில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாட கோயிலில் இருந்து வந்து அழைத்துச் செல்வார்கள் இதுதான் மரபு.
எங்களின் பாடல்களைக் கேட்டு பெருமாள் தன்னுடைய பரிவட்டத்தையும் குல்லாவையும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
அதனால், பாடலைப் பாடும்போது குல்லா அணிந்துகொண்டு பாடுவோம்.
நாங்கள் பாடல்களை நேரடியாக பெருமாள் முன்பு நேரடியாகப் பாடுவதாக உணர்கிறோம்.

பகல்பத்து விழாவின் முதல் ஐந்து நாளில் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி பாடுவோம்.
வைகுண்ட ஏகாதசி முதல் நம்மாழ்வார் மோட்சம் வரைக்கும் திருவாய்மொழி பாடுவோம்.
இயல், இசை, நாடகம் என்கிற அடிப்படையில் பாடல்களைக் காட்சிகளாக்க அபிநயமும் நடத்துவோம்.
அதற்கு அடுத்த நாள் இயற்பா என நாலாயிரம் பாடல்களையும் பாடி முடித்துவிடுவோம்.
இதைத்தவிர அரங்கநாதர் உற்சவ காலங்களிலும் பாடுவோம்.

தம்பிரான் படி வியாக்கியானம், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்களின் வியாக்கியானப் படிகள் வழிவழியாக எங்களிடம் மட்டுமே இருக்கிறது.
இதை எங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே சொல்லித் தருகிறோம். வேறு யாருக்கும் சொல்வதில்லை. அரங்கநாதர் கோயிலில் மட்டுமே நாங்கள் பாடுவோம்.

இயற்பா பாடுவதற்கு இருந்த அமுதானார் என்பவரின் குடும்பத்தில் வாரிசு இல்லாததால்
அவருக்குப் பின் இயற்பாவையும் 24 ஆண்டுகளாக நாங்கள்தான் பாடுகிறோம்” என்றார் சம்பத் அரையர்.
உங்கள் மகன்களும் பாடுவார்களா என்று கேட்டபோது, “நிச்சயமாக, எங்கள் குடும்பத்தில் சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்கிறோம்.
என் மகன் பரத்வாஜ் விமான பைலட்டாக இருக்கிறார். ஆனாலும் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் அவர் பாடுவார்.
இளைய மகன் இன்ஜினியர், அவரும் பாடுவார். எங்களுக்கு அரசு உதவித்தொகை தருவதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அதை மறுத்துவிட்டோம். இதை பெருமாளுக்கு செய்யும் சேவையாக மட்டுமே நினைக்கிறோம்” என்றார்.
அருகிலிருந்த பரத்வாஜும் நிச்சயமாக இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று உறுதியாகச் சொன்னார்.

ஆழ்வார்களின் இனிமையான பக்திப் பாசுரங்களால் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமியையும், கோயிலையும்
மந்திர கனத்திற்கு ஒப்பான அதிர்வைத் தந்து வரும் அரையர்களின் சேவை ஒரு நீண்ட பாரம்பரியமாக தொடர்ந்து வந்திருக்கிறது.
கோயிலில் இருந்து புறப்பட்ட போது அரையர்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதற்குப் ‘பாட்டுக்கு அரசன்’ என்று பெருமை பொங்கச் சொன்னார் பரத்வாஜ்.

அரங்கனுக்கு நடக்கும்அனைத்து விழாக்களும் பொதுவாக 10 நாட்களே நடக்கும். மார்கழிவைகுண்ட ஏகாதசி விழா மட்டும் 22 நாட்கள் நடக்கும். இதனாலேயே இது பெரிய திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்கழி உற்சவத்தின் முதல் பத்து நாட்கள் திருமொழித் திருநாள் எனவும் பின்னால் வரும் 10 நாட்கள் திருவாய்மொழித் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் முதல் பத்து நாட்கள் பகல் நேரத்தில் அரையர் சேவை நடைபெறும். திருவாய்மொழித் திருநாளின் போது அரையர் சேவை இரவு நேரத்தில் நடைபெறும். இந்த அரையர் சேவை நடைபெறும் காலத்தை வைத்து இதை பகல்பத்து இராப்பத்து என்றும் அழைக்கின்றனர்.

  • திருமங்கையாழ்வார் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பத்துநாள் திருவாய்மொழி திருநாளாக ஆரம்பிக்கப்பட்டது
  • நாதமுனிகள் காலத்தில் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்கள் சேர்க்கப்பட்டு 21 நாள் திருநாளாக அரையர் சேவையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
  • ஜகதசாரியன் சுவாமி ராமானுஜர் நம்மாழ்வார் தொடக்கமாக அனைத்து ஆழ்வார்களின் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து விழாவிற்கு மேலும் பொலிவு ஊட்டினார்.
  • பராசரபட்டர் காலத்தில் மார்கழி பெரிய திருநாள் தொடக்க விழாவாக திருநெடுந்தாண்டகம் சேர்க்கப்பட்டு இன்றுவரை 22 நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மணவாள மாமுனிகள் காலத்தில் தம்பிரான் படி வியாக்கியானம் அரையர் சேவையில் சேர்க்கப்பட்டது.
  • நம்பெருமாள் வீணை வாசிப்பு கைங்கரியம்
    முத்தமிழ் விழாவில் தமிழ்வேதமான, திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை அரையர்கள் தாளம் இசைத்துப் பாடுவார்கள்.
    வீணை இசைக் கலைஞர்கள்,
    சில பிரபந்தப் பாசுரங்களை பலவகை அமிர்தமான ராகங்களில்,யாழ்(வீணை) இசைத்தும், வாய்ப்பாட்டாகவும் பாடுவார்கள்.

    இராப்பத்து நாட்களில் நம்பெருமாளின் இரவுப் புறப்பாட்டில், நாழிகேட்டான் வாசலிலிருந்து, மேலப்படி ஏறும்வரை,
    நம்பெருமாள் சுமார்1.30 மணி நேரம் இந்த அற்புதமான இசையைக் கேட்டுக்கொண்டு வருவார்.

    சாந்தோக்ய உபநிஷத்தின்படி, வீணையில் இசைக்கப்படும் இசை எல்லாம் சேர்ந்து பரப்ரம்மமான ஸ்ரீமந்நாராயணனை போற்றுமாம்.

    மேலும் வீணை இசையே மஹாலக்ஷ்மித் தாயாரின் ஒரு வடிவம் என்கிறது உபநிஷத்.

    உடையவர் நியமித்து அருளிய வீணாகானச் சேவை:
    திவ்யப் பிரபந்தங்களில் பெரிதும் ஈடுபட்டிருந்த உடையவர்,
    பல பாசுரங்களிலும் ஆழ்வார்கள் யாழிசையை பாடியுள்ளார்கள்.
    எனவே, ஸ்வாமி இராமானுஜரும் பெரியபெருமாள் கேட்டு உகக்க வேண்டும் என்று கருதி, வீணை இசைக்கும் கைங்கரியத்தை ஏற்பாடு செய்தார்.

    பெருமாள் வீணை கானம் கேட்டருளும் சமயங்கள்:

    திருப்பள்ளி எழுச்சியின் போது – ‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்’ எனும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம்.
    இரவில் திருக்காப்பு சேர்க்கும் போது – ‘மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே என்னும் பெருமாள் திருமொழி பாசுரம்.
    வைகுண்ட ஏகாதசி இராப்பத்தில்
    மற்ற சில உற்சவங்களில் பெருமாள் புறப்பாட்டின் போது வீணை கானம் சேவிக்கப்படும்.

    —————————–

ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி”

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் உற்சவங்களில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு முத்து குறி.
ஆண்டாள் எம்பெருமானையே எப்பொழுதும் நினைப்பவள்.
கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே- – என்பது ஆண்டாளின் நிலை.
“தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும், அவனுடன் கூடிமகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன்.’’
“புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல், அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்தப் பெருமான்
தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?’’ என்பது இந்தப் பாசுரத்தின் பொருள்.

ஆண்டாள் எம்பெருமானை அடைவதற்கு வழி இருக்கிறதா என்று துடிக்கிறாள். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் வீதி வழியே குறி சொல்லும் ஒரு குறத்தி போகிறாள்.
அவளை அழைத்து தோழிகள் சூழ்ந்திருக்க தன் கவலைக்கான காரணத்தையும், அது தீர்வதற்கான
வழியையும் கேட்பது போல அமைந்த நிகழ்ச்சிதான் முத்துகுறி கேட்கும் நிகழ்ச்சி.
ஆண்டாள் கவலையோடு கேள்வி கேட்பதும், அவள் நோய்க்கு கட்டுவிச்சி நீண்ட பதில் சொல்வதும், சுவாரசியமாக இருக்கும்.

அதற்காகவே வடிவமைக்கப்பட்ட உரையாடலை அபிநயத்தோடு அரையர்கள் பேசுவார்கள்.
நெல்லை மாவட்ட இலக்கியங்களில், குறிகேட்கும் இந்த நிகழ்ச்சிகள் நிறைய வரும். `
`குற்றாலக் குறவஞ்சி’’ என்ற சிற்றிலக்கியமே, இந்த உரையாடலில் அடிப்படையில் அமைந்ததுதான்.
இந்த நிகழ்ச்சி ஆடிப்பூர உற்சவத்தில் நடைபெறும். பத்தாம் நாள் உற்சவத்தில், சப்தாவரணம் நடக்கும்.
அன்று ஆண்டாள் முத்துகுறி கேட்கும் வைபவம் நடைபெறும்.
கட்டுவிச்சி பாவனையில் அபிநயம் பிடிக்கும் அரையர் சுவாமி வாயால் ஆண்டாள் இதைக் கேட்டு மகிழ்வாள்.

அரையர் சுவாமி ஒரு கருப்பு பட்டுத்துணியில் சோழிகளை போட்டு குறி சொல்வதுபோல் அபிநயம் செய்வார்.
ஆடித் திருநாளிலும், பங்குனித் திருநாள் ஒன்பதாம் நாள் விழாவுக்கு பிறகு, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் என்கிற பாசுரத்தில்
“பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள்’’ என்று தொடங்கும் பாடலுக்கு அபிநயம் பிடிப்பர்.
மார்கழி மாதத்தில் ஆண்டாள் கோயில் பிராகாரத்தில் ஆண்டாள் மட்டும் தனியாக எழுந்தருளி இருக்க,
தலையில் பட்டு குல்லாய் அணிந்து அரையர் அபிநயம் செய்து முத்து குறி செய்வார்.
இதில், இரண்டு பேர் கிடையாது. அவரே கேள்வி கேட்டு, அவரே பதில் சொல்ல வேண்டும். ஓரங்க நாடகம் போலிருக்கும்.

“சூழ நீர் பாயும் தென்னங்குறுங்குடி, திருமாலிருஞ்சோலை, சுக்கு குத்தி
கழத்தட்டி, வஞ்சி நகரம் என்னும் இஞ்சி நறுக்கி,
ஞானசாரம் பிரமேய சாரம் என்கின்ற சாற்றை எடுத்து,
ஸ்ரீசைலேச தயாபாத்திரத்தில் சேர்த்து
அச்சுதன் என்னும் அடுப்பை வைத்து,
உத்தமன் என்னும் உமியைத் தூவி,
வேங்கடம் என்னும் விறகை முறித்திட்டு,
நீர்மலை என்னும் நெருப்பை மூட்டி,
மணி மந்திரம் என்னும் துடிப்பினாலே,
வானமாமலை என்னும் வட்டிலில் சேர்த்து,
திருமணி கூடத்திலே இறக்கி,
உபதேசரத்தினமாலை என்னும் உரை கலத்தில் இட்டு,
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் மாத்திரை தேய்த்து,
விண்ணகரம் என்னும் மேல்பொடி போட்டு,
கண்ணபுரம் என்னும் கரண்டியால் கலக்கி,
திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து,
திருப்பள்ளி எழுச்சி என்று திகழக் கலக்கித்
திருக்குடந்தை என்று எடுத்து புசி. உன் நோய் தீரும்.”

இதை நீட்டி முழக்கி சொல்லி முடித்ததும், இப்பொழுது கோதையின் தோழிகள் கேட்கிறார்கள்.
“என்ன மருந்து சாப்பிட்டாய்?’’

கோதை பதில்,“எங்கும் இல்லாத மருந்து. விலையில்லா மருந்து.
வடக்கே சென்று வாயு புத்திரன் கொணர்ந்த மருந்து.
தெற்கே சென்று தேவர்கள் கொணர்ந்த மருந்து.
அனுமன் அங்கதன் கொணர்ந்த மருந்து. ஆழ்வார்கள் ஆசாரியர்கள் அனுசந்தித்த மருந்து.
“ஸ்ரீமன் நாராயணா…” என்று தொடங்கும் திவ்யமந்திர மருந்து’’ என்கிறாள்.

இப்படிப் போகும் அரையர் நிகழ்ச்சி. அரையர் சேவை உள்ள ஒரு சில தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரும் உண்டு.
நாதமுனிகள், ஆழ்வார்களின் அருளிச் செயலை, இயல், இசை, நாடகமாகத் தொகுத்தார்.
பொதுவாக தனித்தனியாக இருக்கும்.
இம்மூன்றும், ஒன்றாக கலந்து இருக்கும் நிகழ்ச்சிதான் அரையர் சேவை.
அவர்கள் பாடல் பாடுவார்கள். அதற்கான உரையையும் சொல்லுவார்கள். அபிநயம் பிடிப்பார்கள். வெறும் கைத்தாளம் கொண்டு மட்டும்தான் பாடுவார்கள்.
பக்கவாத்தியம் எதுவும் இருக்காது. இவர்கள் பாடலுக்கு உரை சொல்லும் பொழுது தனி உரையை பயன் படுத்துவார்கள்.
தம்பிரான்படி வியாக்கியானம் என்று பெயர்.

————-

“கோயிலுடைய பெருமாளரையர்” என்றோ,
“வரந்தரும் பெருமாளரையர்” என்றோ,
“மதியாத தெய்வங்கள் மணவாளப்பெருமாளரையர்” என்றோ.
“நாத விநோத அரையர்” என்றோ அரங்கனின் கைங்கர்யபரர்களால் ,அரையர் ஸ்வாமிகளுக்கு அருளப்பாடு சாதிக்கப்படும்.

(பகல்பத்து ,இராப்பத்து விழாக்காலங்களில்,அரையர் ஸ்வாமிகளுக்கான அருளப்பாடு,மேற்சொன்னவாறே சாதிக்கப்படும்)

அரையர்களுக்கு ஸ்தாநீகர் ,தீர்த்தம், சந்தனம், தொங்குபரியட்டம்,மாலை ஆகியவற்றை சாதிப்பார்…

பிறகு அரங்கன் பள்ளிகொண்டு இருக்கும் கர்ப க்ருஹத்தின் (மூலஸ்தானத்தின்) மேற்கு பகுதியில்,அரையர் ஸ்வாமிகள் இருந்துகொண்டு,

“பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத் திகழும் பெருமாள்”
“போதமணவாள மாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்”–என்ற கொண்டாட்டங்களைச் சொல்லி,
திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்” என்பதை பலதடவை இசைப்பர்.

பிறகு,அரையர்கள் சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளி, திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்”
என்று தொடங்கும் முதல் பாசுரத்தினை இசையுடன் அபிநயம் செய்வர்.

பிறகு முதல் பாட்டிற்கு ,”ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த,வ்யாக்யான(விரிவுரை) அவதாரிகைகளும்,
இரண்டாம் பாட்டிலிருந்து,11 பாட்டான,”பட்டுடுக்கும்”என்னும் பாசுரம் வரை,”தம்பிரான்படி” வியாக்யானமும் சேவிக்கப்டும்.

திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு, நாதமுனிகள் தொடங்கி, அவரின் வம்சத்தில் உதித்த, அரையர் ஸ்வாமிகள்
(இன்றைய அரையர் ஸ்வாமிகளின் முன்னோர்கள்) எழுதி வைத்த, வ்யாக்கியானங்களுக்கு (விரிவுரை) “தம்பிரான் படி வியாக்யானம்” என்று பெயர்.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் ஓலைச் சுவடிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் அச்சு வடிவில் இல்லை.
தற்பொழுது அரையர் கைங்கர்யம் செய்யும், அரையர் ஸ்வாமிகளிடம் உள்ள ஓலை ச்சுவடிகளில் இருந்து இந்த தம்பிரான்படி வியாக்கியானம் சேவிக்கப்படும்.

இந்த தம்பிரான் படி விரிவுரை, சொல்லழகும், பொருளழகும் கொண்ட, கருத்தாழமிக்க, சொற்றொடர்களாகும்.
இவற்றை கேட்கக் கேட்க, பக்தர்களின் உள்ளத்திலே பக்தியும், மகிழ்ச்சியும் பொங்கும்.

திவ்யப் பிரபந்தச் சொற்கள் பின்னிப் பிணைக்கப் பட்டு, சந்தத்தோடு அவைகள்,அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும் போது,
அதைக் கேட்போரின் உள்ளத்தில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சொல்லழகு புலப்படும்…..

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு–

January 16, 2022

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு : ஒரு முன்னுரை

கொண்டல் வண்ணனைக் குழவியாய்க் கண்டு குதூகலித்துப் பாடிய
விட்டு சித்தரின் மகள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள்.
குழல் இனிது, யாழ் இனிது, மழழைச் சொல் அமுதினிது என்று இறைவனைப் பிள்ளையாய்க் கண்டு
ஆனந்தித்துப் பாடிய பெரியாழ்வாழ்வருக்கு – உண்மையான தூண்டுதல் (inspiration)
ஆண்டாள் என்ற இளம் சிட்டிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்.

பழந்தமிழ்நூல் வெளியீடுகளுள் பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு
ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள் மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ.வே.சாவின் கூற்று.
அத்தகைய ஆழ்வார்திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், “கோதை நாச்சியார் தாலாட்டு”.
ஏடுகளில் கண்டபடி 1928-ல் ஆழ்வர்திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

வைணவம் என்பதின் மறு பெயர் அன்பு, பரிவு, காதல் என்பவை.
முதல் மூவருக்கிடையில் இடித்துப் பழகும் தோழனாக நாராணன் இடையில் புகுந்தான்.
வாள் கொண்டு போர் செய்யும் வேல் மாந்தர் கள்ளத் தொழில் செய்த போது, மறைமகன் திருடனாக வந்து வழி மறைத்தான்,
பறைமகன் ஒருவன் பரம் பொருளைத் தொழத்தடையான போது மறை சொல்லும் நூலார் தலை மேல்
தூக்க வைத்தான் நம் பெருமாளான, “நீதி வானவன்!”,
கள்ளமற்ற விட்டு சித்தர் உள்ளம் கவர்ந்து வெண்ணெய் உண்ட வாயனாக வளைய வந்தான்
வீட்டு முற்றத்தில் மணிவண்ணன்,

ஆனால், அவர் மகள்கோதைக்கோ, “மானிடற்கு மணமென்ற பேச்சுப் படின் மரித்திடுவேன்” எனப்
பேச வைத்து மணவாளனாக வந்து உய்யக் கொண்டான்.
இப்படி வீட்டுக் கொல்லையில் வளைய வரும் கன்று போல், கை கொண்டு நெருடும் அன்பர்க்கு கழுத்தை தரும்
பசும் கன்று போல் அன்று முதல் இன்றுவரை வளைய, வளைய வருகிறான்,

“பண்டமெல்லாம் சேர்த்து வைத்துப் பால் வாங்கி மோர் வாங்கிப்,
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து,
நண்பனாய்,மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்”

வளைய, வளைய வருகிறான் மாதவன்.
இத்தனைச் சுகம் தரும் வைணவத்தின் மறுபெயர் அன்பு, காதல், பரிவு என்றால் மிகையோ?

எனவே பரிவுடன் வரும் தாலாட்டில் வைணவத்தின் மெல்லிசை, குழல் போல் ஒலிப்பது தவறோ? தவறில்லை
என்று சொல்லித் தாலாட்டுப் பாடினர் முன்னைய மாந்தர்.
கண்ணனுக்குத் தாலாட்டு பலபாடி வைத்து விட்டார் புதுவைப் பட்டர் என்று சொல்லி,
கோதைக்குத் தாலாட்டுப்பாடினர் கொங்கைப் பெண்டிர்!

இத்தாலாட்டு பல வைபவங்கள் கொண்டது.
புதுவை நகர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு முதலில் சொல்லப்படுகிறது.

கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க 20

மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ளத்
தேன் கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் 21

புன்னையும் பூக்கப் புறத்தே கிளி கூவ
அன்னமும் பேசும் அழகான தென் புதுவை 26

கன்னல் தமிழர் வாழ்வுடன் இணைந்த ஒரு பயிர். கன்னல் மொழிப் பெண்டிர் நிறைந்த தமிழ் மண்ணில்
கன்னல் “கல, கலவென”ப் பேசுவதாகச் சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே!
கண்ணன் ஊரில் கரும்புகள் குழல் ஊதுவதும் இயல்பான ஒன்றே!
கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமிதத்தில்
தேன் கூடுகள் கூட நெஞ்சு விம்மி தேன் பாய்ச்சுவது கவிச் சுவையின் உச்சம்!!

அடுத்து, கோதை நாச்சியாரின் திரு அவதாரம்!
கிரேக்க, ரோம பழம் தொன்மங்களை விஞ்சும் தொன்மங்கள் (myth) தமிழில் உண்டு என்பதற்கு
கோதையின் கதை நல்ல உதாரணம். பூமி விண்டு கோதை பிறக்கிறாள். மண்ணின் மாது அவள்.
அப்போது விஷ்ணுசித்தன்

அலர்மகளைத் தானெடுத்துச்செப்பமுடன்
“கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்”!! 35

“அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி” என்றார்!!! 36

சீதை போல் பூமியின் புதல்வியான கோதை,
கண்விழித்துச் சொல்லும் முதற் சொல்,
“மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி” என்பது!

இவள் துளசியின் புதல்வி! காளிதாசன் சொல்லாத கவி நயம் ஒரு எளிய தமிழ்த் தாலாட்டில் கிடைப்பது,
நாம் செய்த பாக்கியம்! வைணவத் தொன்மங்களில், குரு பரம்பரைக் கதைகளில் மிகச் சாதாரணமாக
பக்தனுக்கும், பரம்பொருளுக்கும் உரையாடல் நடக்கும்.
இது, இந்த நூற்றாண்டு “கோபல்ல கிராமம்” வரை கடைபிடிக்கப் படுகிறது
(கோபல்ல கிராமத்தின் மூத்த குடிகள் பரம வைஷ்ணவர்கள்).
அதனால் தான், திருவரங்கத்துயில் பரம்பொருள், “நம் பெருமாள்” என்றழைக்கப் படுகிறார்.
நம் பெருமாள், நம்மாழ்வார், நம் ஜீயர், எம்பெருமானார் என்று இவர்கள் கொண்டாடும் பந்தம் பக்தனைப் பிச்சேற்றுவது!!
அந்தச் சம்பிரதாயம் மாறாமல் விட்டு சித்தர் பெருமாளிடம் போய் பெண்வந்த காரணம் கேட்டுபேரும் வைத்து வருகிறார்.

பெண் கொணர்ந்த விஷ்ணு சித்தன் பெருமாளைத் தானோக்கிப்
‘பெண் வந்த காரணமென் பெருமாளே சொல்லு” மென்றார் 39

அப்போது மணிவண்ணன்

‘அழகான பெண்ணுனக்குச்செப்பமுடன்
வந்த திருக்கோதை நாயகியார் 40

என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்’ என்றார். 41

விட்டு சித்தர், கண்ணனுக்குப் பாடிய வரிகளை ஒரு வைணவ உரிமையுடன் கோதைக்குப் பாடுவதாகச் சொல்வது,
“தொண்டீர்! எல்லீரும் வாரீர், தொழுது, தொழுது நின்றார்த்தும்!” என்ற நம்மாழ்வாரின் எட்டாம் நூற்றாண்டு
வைணவ அறைகூவல் (an address of Vaishnava congress) இன்றளவும் கேட்பதன் அறிகுறியென்றே
கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அவரே சொல்வது போல்,

“தடங்கடல் பள்ளிப்பெருமான், தன்னுடைப் பூதங்களேயாய் (பூதம்=பக்தன்)
கிடந்தும், இருந்தும், எழுந்தும், கீதம் பலபலபாடி, நடந்தும், பரந்தும், குனித்தும் நாடகம் செய்கின்றனவே” –
கடல் வண்ணனே, பக்தர்கள் உருவில்வந்து நாடகம் ஆடுவதாகச் சொல்வதால், கண்ணனுக்குப் பாடிய சொல்
கோதைக்கும் பொருந்துவது இயல்பானதே. அந்த உரிமையின் குரல் இத்தாலாட்டு முழுவதும் கேட்கிறது.

மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் 44

பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ, 45

ஒரே பாட்டில் ஒரு பிரபஞ்ச பந்தத்தைக் காட்ட முடியுமெனில் அது தாலாட்டில் தான் முடியும் என்பதற்கு
கீழ்க்காணும் வரிகளே சான்று;

அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ. 46

பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ, 47

இப்படிப் பாசமுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லதொரு தமிழ்க் குடியாக வராமல் பின் என்ன செய்யும்?
கம்பனும், வள்ளுவனும், பாரதியும் அணி செய்த தமிழுக்குப் பெண்மை மணம் தந்தவள் ஆண்டாள்.
அவள் இல்லையேல் இன்று மார்கழி நோன்பு இல்லை. ஒரு அழகிய திருப்பாவையில்லை.
நாச்சியார்மொழியில் இல்லாத பெண்மையை வேறெங்கு காணமுடியும்?
கோதை தந்த தமிழுக்கு, தமிழ்சொல்லும் தாலாட்டுதான், இத்தாலாட்டு :

முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ, 58

“பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே”!! 59

அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, 60

பிஞ்சிலே பழுத்த தமிழ் புலவர்கள் இருவர். ஒருவர் கந்தனின் பெண் தோழி! அதாவது ஒளவை!!
இரண்டாவது கண்ணனின் பெண் தோழி ஆண்டாள். இளமையிலேயே மெய்ஞானம் எய்தியவர்கள்.
முன்னவர் உடல் மாற்றம் வேண்டிப் பெற்றார். இரண்டாமவர் எந்த மாற்றமுமின்றி இளமையுடன் அரங்கனுடன் கலந்தார்.
ஒளவை, காரைக்கால் அம்மையார், அக்கம்மா தேவியார் இவர்கள் பெண்ணின் உடல் ஆன்மீகத்திற்குத் தடை
(ஆண் பார்வை தோஷத்தால் 🙂 என்று கருதி பெளதீக உடல் மாற்றம் வேண்டி நின்றனர்.
ஆண்டாளோ, சிங்கத்திற்கு வைத்த உணவை சிறு குறு நரி கொண்டு செல்ல முடியுமோ வென்ற மனோதிடத்தில்,
பாரதி சொல்லிய”ரெளத்திரம் பழகி” அக்கினிக் குஞ்சு போல் வாழ்ந்து நினைத்தை சாதித்தவள்.

வையம் புகழய்யா! மானிடவர் பதியன்று.”
உய்யும் பெருமாள் உயர் சோலை மலையழகர் 95

இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள்* தம் பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் 96*

மணம் கேட்டு வந்தவர்கள் மானிடர்க்குப் பதி என்பவன் இறைவன் ஒருவன்தான்.
நாம் எல்லோரும் அவன் தோட்டத்துக் கோபியர்கள் என்னும் தத்துவத்தை விளம்பும் வரிகள் இவை.
சூடிக் கொடுக்கும் திடம் தமிழ் வரலாற்றில் ஆண்டாள் ஒருவளுக்குக்குத் தான் இருந்திருக்கிறது.
ஒரு பக்தை சூடிக் கொடுத்த மாலையைப் பரிவுடன் ஏற்கிறான் பரந்தாமன்.
இது பக்தியின் சக்தியை அவனிக்குச் சொன்ன முக்தி இரகசியமாகும்.
இது காட்டுத்தீ போல் இந்தியா முழுதும் பரவி, உலக மாந்தரை உய்யக் கொண்டுள்ளது.

அடுத்து மார்கழி நோன்பு பற்றிப் பேசுகிறது தாலாட்டு.

“தூயோமாய் வந்தோம்” என்னும்படிஉள்ளத் தூய்மைக்கு வித்திடுவது நோன்பு ஆகும்.
நோன்பு கழித்த பின் தான் இறைத் தரிசனம் சாத்தியமாகிறது.
அது “நெய்யுண்ணோம், பாலுண்ணோம்” என்னும் விரதம் மட்டுமன்று,
“செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்” என்பதும் அடங்கும்.
உடலையும்,மனதையும் சுத்தப் படுத்தும் போது இறையொளி சாத்தியப் படுகிறது.

அடுத்து, கோதைக் கல்யாண வைபவம் பேசப்படுகிறது.
எளிமையின் மறு உருவான விட்டு சித்தரின் வாழ்வு பல திருப்பங்கள் கொண்டது.
பூவின் இனம் காணும் பட்டரின் வாய் வழியாய் கவிதையில் இனம் காண வைக்கிறான் பரந்தாமன்.
பிள்ளைத் தமிழை தமிழுக்குத் தரும் உள நோக்குடன்!! பிள்ளைத் தமிழ் பாடினால் போதாது என்று
பர தத்துவம் பேச வைத்து பொற்கிழி கொண்ட பிரானாக்கி,
‘ நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்பது போல்
கூடல் சனம் அத்தனைக்கும் அன்று வைகுந்த தரிசனம் அளிக்கிறான் இறைவன்.
பின் பிள்ளையற்ற பட்டருக்கு பிள்ளை விடாய் தீர்க்க ஆண்டாளைத் தந்துய்வித்தான்.
கொடுத்த பெண்ணை மணம் பெரும் வயதில் மறைத்து வைத்து,

ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!
என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர்சென்றெங்களய்யர்
திருவடியைத் தான்தொழுவார்!

ஆக, யசோதையின் பாவத்தில் பாடிய பட்டர்பிரானை உண்மையான தாயென்றே கருதி
அய்யரவர் திருவடியைத் திருவரங்கன் தொழுகின்றான்.
பாகவதன் திருப்பாதத் தூளியில் சுகம் காணும் பாகவதப் பிரியனான கீதாசிரியன்,
அத்தோடு நில்லாமல் அவர் தம் திருமகள் பாத மலரையும் தொடுகின்றான்.
முன்பு வந்து எல்லோர்க்கும் அருளியது போதாது என்று பட்டர் பிரான் சம்மந்தமுடைய அனைவருக்கும்
மணவாளனாக வந்து மீண்டுமொரு முறை காட்சி யளிக்கின்றான். (வைணவ சம்மந்தம் பரமுக்தி யளிக்கும் என்பது வாக்கு)

நம்மை யுடையவன் நாராயணன் நம்பி 159

செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி
அம்மி மிதித்து அருந்ததியும்தான்பார்த்து 160

அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை…………

நாராணனுக்குப் பெருமை “நம்மை உடைத்தல்” என்று சொல்லும் வரிகளை வேறு எந்த நெறியிலும் காணப்பெறோம்?

செம்மையுடைய திருக்கையால் அம்மிமிதித்து, அங்கைமேல் கைவைத்து பொரி முகர்ந்த சேதி வேறு எங்கேணும் உண்டோ?

பரம் பொருளை “தாழ்த்தி அம்மி மிதி”க்க வைத்த திறம் தமிழுக்கு உண்டு ஆரியத்திற்கு உண்டோ?

“அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது.”

என்று சொல்வதாகப் பேசுகிறது கோதை தாலாட்டு. இதுதான் எவ்வளவு உண்மை!!

ஆண்டாள், “வாரணமாயிரம்” என்று தொடங்கும் பாடல்களில் திருமண வைபவத்தைப் பதிவு செய்கிறாள்.
அதில் விட்டுப் போன சில சேதிகள் (details) இத்தாலாட்டில் இடம் பெறுகிறது.
தாயின் சொல் அமுது என்பது இப்பாட்டில் தெரிகிறது. செந்தமிழ், தாய் சொல் பட்டு மென்மையாகிப் போகிறது.

சீராரு மெங்கள் விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில்
ஏராருந் துளசி முல்லை யேகமாய்த் தானும்வச்சு 31

வச்ச பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய் துகந்திருக்கும் வேளையிலே; 32

என்று கிராமத்து மக்கள் மொழியில் தாலாட்டு போகிறது.

மேலும் சில உதாரணங்கள்:

நோம்பு (நோன்பு);
நோன்பு நேத்தியாய் (நேர்த்தியாய்);
மாயவனைப் போத்தி (போற்றி)ஆரு மனுப்பாமல் (யாரும் அனுப்பாமல்);
மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் (வைத்திருந்தால்)
கைத்தலம் பத்திக் கலந்து (கைத்தலம் பற்றி);
சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க.- தாமசம்? தாமதம்!!
வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓத !!

நாட்டுப் பாடல்களுக்கான தனி மொழி இத்தாலாட்டிலும் ஒலிக்கிறது.

“ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!”

என்று விட்டு சித்தர் அன்று கதறியது இத்தாலாட்டின் வாயிலாக இன்று நம் நெஞ்சைக்கலக்குகிறது.
“அய்யர் இணையடியைத்” என்று சொல்வதிலிருந்து இப் பாடல் இயற்றப் பட்டகாலத்தில்
ஐயங்கார் என்ற ஒரு பிரிவு தோன்றவில்லையென்று தெரிகிறது.
இல்லையெனில் பரம வைஷ்ணவரான விட்டு சித்தரை ஐயங்கார் என்றே இத்தாலாட்டு இயம்பியிருக்கும்.

1928-ல் பதிப்பிக்கப் பட்டு இன்று 73 ஆண்டுகளாகின்றன (2001).
இவ்வோலைச் சுவடிபதிப்பிக்கப் பட்ட காலம் புத்தகத்தில் இல்லை.
ஐயங்கார் என்ற பிரிவு ஆங்கிலேயர்காலத்தில் உருவானது என்று சொல்வர்.
அப்படியெனில் இத்தாலாட்டு ஆங்கிலேயர் வருகைக்கு முன் எழுதப் பட்டிருக்குமோ?

“ஆழி நிறை வண்ணன் முதல் ஆழ்வார்கள் தான் வாழி
கோதையரும் வாழி கோயில்களும் தான் வாழி
சீதையரும் வாழி செக முழுதும் தான் வாழி.

————–

கோதை நாய்ச்சியார் தாலாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின்
வளர்ப்பு புதல்வியான ஆண்டாள் என்று அழைக்கப்படும் கோதை நாய்ச்சியாரின் வரலாற்றினை 316 செய்யுள் அடிகளுள்
எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
காப்புச் செய்யுள் திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள அரங்கநாதப் பெருமாள் மீது பாடப்பட்டுள்ளது.
இந்நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

காப்பு

சீரார்ந்த கோதையர் மேல் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழ நிதம் பாடவே வேணுமென்று
காராந்த தென் புதுவைக் கண்ணன் திருக் கோயில்
ஏரார்ந்த சேனையர் கோன் இணையடியுங் காப்பாமே.

தென் புதுவை விட்டு சித்தன் திருவடியை நான் தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான் கூறத்
தெங்கமுகு மாவாழை சிறந்தோங்கும் சீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே.

நூல்

சீரார்ந்த கோயில்களுஞ் சிறப்பான கோபுரமும்
காரார்ந்த மேடைகளுங் கஞ்சமலர் வாவிகளும்
மின்னார் மணி மகுடம் விளங்க வலங்கிருதமாய்ப்
பொன்னாலே தான் செய்த பொற் கோயில் தன்னழகும்
கோபுரத்து வுன்னதமுங் கொடுங்கை நவமணியும் 5

தார்புரத் தரசிலையுஞ் சந்தனத் திருத் தேரும்
ஆராதனத் தழகும் அம் மறையோர் மந்திரமும்
வேத மறையோரு மேன்மைத் தவத்தோருங்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தாமுழங்கப்
பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணனை 10

ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான் துதிக்கக்
கச்சு முலை மாதர் கவிகள் பலர் பாட
அச்சுதனார் சங்கம் அழகாய்த் தொனி விளங்கத்
தித்தியுடன் வீணை செக முழுதுந் தான் கேட்க
மத்தள முழங்க மணியும் அந்தத் தவிலுடனே 15

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்க
பேரிகையும் எக்காளம் பின்பு சேகண்டி முதல்
பூரிகை நாதம் பூலோகம் தான் முழங்கத்
தும்புருவும் நாரதரும் துய்ய குழலெடுத்துச்
செம்பவள வாயால் திருக்கோயில் தான் பாட 20

அண்டர்கள் புரந்தரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த
வண்டுகளும் பாட மயிலினங்கள் தாமாடத்
தொண்டர்களும் பாடித் தொழுது பணிந்தேத்தப்
பண்பகரும் பாவலர்கள் பல்லாண் டிசைபாடச் 25

செண்பகப்பூ வாசனைகள் திருக் கோயில் தான் வீச
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர் தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தாம் போடக்
குன்று மணி மாடங்கள் கோபுரங்கள் தான் துலங்கச்
சென்று நெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 30

அன்னம் நடைபயில அருவை மடலெழுதச்
செந்நெல் குலை சொரியச் செங்குவளை தான் மலரக்
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கச்
சுரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க
மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ள 35

தேன் குடங்கள் விம்மிச் செழித்து வழிந்தோடச்
செந் நெல் விளையச் செக முழுதும் தான் செழிக்கக்
கன்னல் விளையக் கமுக மரம் தான் செழிக்க
வெம் புலிகள் பாயு மாமேரு சிகரத்தில்
அம்புலியைக் கவளமென்று தும்பி வழி மறிக்கும் 40

மும் மாரி பெய்து முழுச் சம்பாத் தான் விளையக்
கம்மாய்கள் தாம் பெருகிக் கவிங்கில மழிந்தோட
வாழை யிடை பழுத்து வருக்கைப் பலாப் பழுத்துத்
தாழையும் பழுத்துத் தலையாலே தான் சொரியப்
புன்னையும் மலரப் புனத்தே கிளிகூவ 45

அன்னமும் பேசும் அழகான தென் புதுவை
தலை யருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக் குளமும்
மலை யருவி பாயும் வயல் சூழ்ந்த தென் புதுவைப்
பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான் கொழிக்கும் தென் புதுவை 50

காவணங்கள் மேவிக் கதிரோன் தனை மறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுமை மணங்கமழும்
தென்னை மடல் விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிழ் விரியப் புதுவை வனந்தனிலே
சீராரு மெங்கள் விட்டு சித்தர் நந்தவனமதனில் 55

இளந்துளசி முல்லை ஏகமாய்த் தானும் வைத்து
வைத்த பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய்து உவந்திருக்கும் வேளையிலே
பூமிவிண்டு கேட்கப் புகழ் பெருகு விட்டுசித்தன்
பூமிவிண்ட தலம் பார்த்துப் போனார் காண் அவ்வேளை 60

ஆடித் திருப் பூரத்தில் அழகான துளசியின் கீழ்
நாடி யுதித்த நாயகியைச் சொன்னாரார்
அப்போது விட்டு சித்தன் அலர் மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்
அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கு 65

மெய்யார்ந்த தாயார் மேன்மைத் துளசி என்றாள்
அப் பேச்சுக் கேட்டு அவரும் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக் கோயில் தான் புகுந்து
புகுந்து மணிவண்ணன் பொன்னடிக் கீழ்ப் பெண்ணை விட்டு
ஊர்ந்து விளையாடி உலாவியே தான் திரிய 70

பெண் கொணர்ந்த விட்டுசித்தன் பெம்மானைத் தானோக்கி
பெண் வந்த காரணமென் பெம்மானே சொல்லுமென்றார்
அப்போது மணி வண்ணன் அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக் கோதை நாயகியார்
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை 75

உந்தன் மனைக்கே உவந்து தான் செல்லுமென்றார்
சொன்ன மொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைக் கையிலே தான் கொடுக்க
அப்போது விரசையரும் அமுது முலை தான் கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு 80

மாணிக்கங் கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப் பொன் னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையே தாலேலோ
அன்னமே தேனே அழகே அருமயிலே 85

சொர்னமே! மானே! தோகையரே தாலேலோ
பொன்னே! புனமயிலே! பூங்குயிலே! மான்றுளிரே!
மின்னே! விளக்கொளியே! வேதமே! தாலேலோ,
பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார் தம்மாவல்
பிள்ளை விடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ! 90

மலடி விரசை யென்று வையகத்தோர் சொன்ன
மலடுதனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ!
பூவனங்கள் சூழும் புதுவைப் புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார்
கண்ணே யென் கண்மணியே! கற்பகமே தெள்ளமுதே! 95

பெண்ணே! திருமகளே! பேதையரே! தாலேலோ!
மானே! குயிலினமே! வண்டினமே! தாருவே!
தேனே! மதனாபி டேகமே! தெள்ளமுதே!
வானோர் பணியும் மரகதமே! மா மகளே!
என் இடுக்கண் நீங்க ஈங்கு வந்த தெள்ளமுதே! 100

பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே! சோதி மரகதமே! தாலேலோ!
வண்டினங்கள் பாடு வாழும் பூங்காவில்
பண்டு பெரியாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே!
செந்நெல்கள் முத்தீன்று செழிக்கும் புதுவையினில் 105

அன்னமே! மானே! ஆழ்வார் திருமகளே!
வேதங்க ளோதி வென்று வந்த ஆழ்வார்க்குச்
சீதை போல் வந்த திருமகளைச் சொன்னாரார்
முத்தே! பவளமே! மோகனமே! பூங்கிளியே!
வித்தே! விளக்கொளியே! வேதமே தாலேலோ! 110

பாமாலை யிட்டீர் பரமர்க்கு என்னாளும்
பூமாலை சூட்டப் புகழ்ந்தளித்த தெள்ளமுதே!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்துப்
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ!
எந்தை தந்தை யென்று யியம்பும் பெரி யாழ்வார்க்கு 115

வந்து விடாய் தீர்த்தாய் மாதே நீ தாலேலோ!
பொய்கை முத லாழ்வார்க்குப் பூ மகளாய் வந்துதித்த
மை விழி சோதி மரகதமே! தாலேலோ!
உலகளந்த மாயன் உகந்து மணம் புணர
தேவாதி தேவர்கள் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ! 120

சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்வப் பெண்ணாய் வந்த திருமகளைச் சொன்னாரார்
நாரணனை விட்டுவென்று நம்புமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்
உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப் 125

பிள்ளை விடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ!
பாகவத வர்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாக விடாய் தீர்த்த தங்கமே தாலேலோ!
தென் புதுவை வாழுந் திருவிட்டு சித்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே! தாலேலோ! 130

சாத்திரங்கள் ஓதும் சத் புருட ராழ்வார்க்குத்
தோத்திரங்கள் செய்து துலங்க வந்த கண் மணியே!
வாழைகளுஞ் சூழ் புதுவை வாழு மெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே! தாலேலோ!
கன்னல்களுஞ் சூழ் புதுவை காக்கு மெங்க ளாழ்வார்க்குப் 135

பன்னு தமிழ் என்னாளும் பாட நல்ல நாயகமோ!
பல்லாண்டு பாடும் பட்டர் பிரா னாழ்வார்க்கு
நன்றாக வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்
எந்தாகந் தீர்த்து வேழேழு தலை முறைக்கும்
வந்தருளுஞ் செல்வ மங்கையரே தாலேலோ! 140

என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே
அன்றொருநாள் விட்டு சித்தன் அமுதுமலர் தொடுத்து வைக்கத்
தொடுத்து வைத்த மலரதனைச் சூடியே நிழல் பார்த்து
விடுத்து வைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய
அப்போது விட்டு சித்தர் அநுட்டான முதல் செய்து 145

எப்போதும் போல் கோவிலுக் கேகவே வேணுமென்று
தொடுத்து வைத்த மாலை தன்னைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்துமே வாழ்வாரும் நோக்கையில் கிலேசங்கொண்டு
என்னரசி கோதை குழல் போல யிருக்குதென்று
கண்ணாலே கோதையரைக் கட்டியே தானதுக்கிப் 150

பின்பு வனம் புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச் சாத்த
அப்போது மணவாள ஆழ்வாரைத் தான் பார்த்து
எப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே!
என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையுந் தான் கூப்பித் 155

துன்றி வளர் கோதையரும் சூட்டியே தானும் வைத்தாள்
அம் மாலை தள்ளி அழகான பூக் கொணர்ந்து
நன் மாலை கொண்டு நாமுமக்குச் சாத்த வந்தேன்
என்று சொல்ல, மணி வண்ணன் இன்பமாய்த் தான் கேட்டு,
நன்றாக வாழ்வாரே நானுமக்குச் சொல்லுகின்றேன் 160

உன் மகளும் பூச்சூடி ஒருக் கால் நிழல் பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள்
அம்மாலை தன்னை ஆழ்வார் நீ ரெடுத்து வந்து
இம் மாலை சாத்தி யிருந்தீ ரிது வரைக்கும்
இன்று முதல் பூலோக மெல்லாருந் தாமறிய 165

அன்று மலர் கொய்து அழகாகத் தான் தொடுத்துக்
கோதை குழல் சூடிக் கொணர்வீர் நமக்கு நிதம்
கீத மேளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும்
இன்று முதல் சூடிக் கொடுத்தா ளிவள் பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான் பெறுவீர்! 170

என்றுரைக்க மணி வண்ண னேகினர் காண் ஆழ்வாரும்
சென்று வந்த மாளிகையில் சிறப்பா யிருந்து நிதம்
நீராட்டி மயிர் முடித்து நெடு வேற் கண் மை யெழுதிச்
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள் 175

சீரான வாழ்வாரைச் சிறப்பாகப் பெண் கேட்க
அப்போது விட்டு சித்தன் அன்பான கோதையரைச்
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலை தான் கொடுத்து
உனக்குகந்த பிள்ளைக்கு உகந்தே மலர் சூடி
மனைக்கா வலனென்று மகிழ்ந்தேத்தி வாழும் என்றார் 180

அவ் வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தை யென்று திரும்பியே தானுரைப்பாள்
வையம் புகழய்யா மானிடவர் பதியென்று!
உய்யும் பெருமாள் உயர் சோலை மலை யழகர்
இவர்கள் பதி யன்றி இரண்டாம் பதியில்லை 185

அவர்கள் தமைத் தாமும் அனுப்பியே வையுமென்றார்
இவ் வார்த்தை கேட்டு இனத்தோர்க ளெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள்
போனவுடன் விட்டுசித்தன் புன்னை புன மயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார் 190

ஒப்பில்லா நோன்பு உகந்துதா னேற்கவென்று
மணி வண்ணனைத் தேடி மனக் கருத்தை யவர்க்குரைத்துப்
பணி செய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான் கேட்க
மகிழ்ந்து மணி வண்ணன் மகிழ்ந்து மறையோர்க்குப்
புகழ்ந்து தான் உத்தரவு பிரியமாய்த் தான் கொடுக்க 195

உத்தரவு வாங்கி உலகெல்லாந் தான் நிறைய
நித்தமோர் நோன்பு நேர்த்தியாய்த் தான் குளித்து
மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போற்றி மணம் புணர வேணுமென்று
மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை 200

சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான் பாடி
பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூ மாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைந்திருக்க
மாயவனும் வாரார் மலர் மாலைகளுந் தாராமல்
ஆயன் முகங் காட்டாமல் ஆருமனுப்பாமல் 205

இப்படிச் செய்த பிழையே தென்று நானறியேன்
செப்புங்கள் தோழியரே! திங்கள் முகக் கன்னியரே,
தோழியருந் தாமுரைப்பார் துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம் புணர்வான்
என்று சொல்லக் கோதையரு மிதயங் குழைந்து நிதம் 210

அன்றில் குயில் மேகங்கள் அரங்கருக்குத் தூது விட்டார்,
தூதுவிட்டு[ம்] வாராமல் துய்ய வட வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனி மேல் மனஞ்சகியேன்
என்று மனம் நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்று வந்து தோழியர்கள் செப்பவே யாழ்வார்க்கு 215

அச்சேதி கேட்டு ஆழ்வார் நடு நடுங்கிச்
சென்று வந்து பிள்ளை விடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வைத்திருந்தால் மோசம் வரும்
என்று திருமகளை எடுத்துச் சிவிகை வைத்துச்
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று 220

நல்ல நாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்து தென் காவிரியில்
நீராட்டஞ் செய்து நொடிப் போதில் செபமுஞ்செய்து
சீராட்ட வந்து திரு மகளைத் தான்தேட
பல்லக்கில் காணாமல் பைந்தொடியுங் காணாமல் 225

எல்லோருங் காணாமல் என் மகளை யாரெடுத்தார்
நின்று மனம் நொந்து நாற்றிசையும் தான் தேடிச்
சென்று திருவரங்கந் திருக் கோயில் தான் புகுந்து
ஒரு மனையா ளுடனேயே உலகளந்த மாயவனும்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய் 230

என்று சொல்ல வாழ்வாரு மிரங்கித் திருவரங்கர்
சென்றுங்களையர் திருவடியைத் தான் தொழுவீர்
அப்போது கோதையரும் அரங்கர் மடியை விட்டு
எப்போது மைய ரிணை யடியைத் தான் தொழுவார்
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள் தனக்கும் 235

வாழ்த்தி யெடுத்து மகிழ்ந்து வரங்கருக்கும்
வாழி முதல் பாடி மங்களமுந் தான் பாடி
ஆழி நீர் வண்ண அழகாய் மணம் புணர்வாய்
என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் அரங்கர் தமை
மன்றல் செய்ய வாருமையா மணவாளா வென்றுரைத்தார் 240

பங்குனி மாதம் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்குரஞ் செய்து அழகாய் மணம் புணர
வாருமையா வென்று மகிழ்ந்தேத்தி யரங்கரையும்
சீரணிந்த கோதையையுஞ் சிறப்பாகத் தானழைக்க
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடை கொடுத்து 245

தப்பாமல் நான் வருவேன் சீர் கோதை தன்னோடும்
என்று சொல்ல ஆழ்வாரும் ஏகினார் வில்லிபுத்தூர்
சென்று திரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து
கோதையர்க்கு மன்றல் கோலமாய்ச் செய்ய வென்று
சீதையர்க்கு மன்றல் சிறப்பாகச் செய்ய வென்று 250

ஓலை யெழுதி உலகெல்லா மாளனுப்பி
கரும்பினால் கால் நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்டு
கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்க விட்டு
பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான் போட்டு
மாங் கனிகள் தூக்கி வருக்கைப் பலா தூக்கித் 255

தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து
மேளமுடன் மத்தளமு முரசமுந் தானடிக்கக்
காளமுடன் நாதசுரம் கலந்து பரிமாற
வானவர்கள் மலர் தூவி வந்து அடி பணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த, 260

இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர் தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரைகள் தாம் போட
இரத்னமணி யாசனமும் இரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும்,
ஆழ்வார் கிளையும் அயலோர் கிளை யெல்லோரும் 265

ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்ற வந்தார்
தூபங் கமழத் தொண்டர்களுந் தாம் பாட
தீபந் துலங்கத் திருவைண வோரிருக்க
வேதந் துலங்க மேன் மேலுஞ் சாத்திரங்கள்
கீத முரைக்கக் கீர்த்தனங்கள் தாமுழங்க, 270

வாத்தியார் புல்லெடுத்து மறைகள் பல வோதிப்,
பூரண கும்பமுதல் பொற்கலசந் தானும் வைத்து
நாரணனைப் போற்றி நான் மறைகள் தாமோத
இப்படிக்கு வாழ்வாரு மெல்லோருங் காத்திருந்தார்
சற்புருடர் வாராமல் தாமதமாய்த் தாமிருக்க, 275

கொற்றப்புள் ளேறிரங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கு ஊதி வில்லிபுத்தூர் தன்னில் வந்து
மணவாள ராகி மணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தனங்கொடுத்தார்
ஆடைமுத லாபரணம் அணிமுலைப் பாற்பசுக்கள் 280

குடைமுதல் தானங் கொடுத்து நிறைந்த பின்பு
மந்திரக் கோடி யுடுத்து மணமாலை
அந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு
மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தலின் கீழ் 285

கைத்தலம் பற்றிக் கலந்து பெருமாளும்
ஆழ்வாரும் நீர்வார்க்க அழகான கையேந்தி
ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி
மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு முண்டு கழித்துமே வாங்கிருந்தார் 290

அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பஞ்சிலை நாணல் படுத்து பரிதிவைத்து
ஓமங்கள் செய்து ஒருக்காலும் நீர்தூவி
காசு பணங்கள் கலந்துதா னங் கொடுத்து 295

தீவலஞ் செய்து திரும்பி மனையில் வந்து
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பர்த்தாவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதித்து அருந்ததியுந் தான் பார்த்து 300

அரிமுதல் அச்சுதன் அங்கை மேலும் கை வைத்துப்
பொரி முகந்து பம்ப போற்றி மறையோரை
அட்சதைகள் வாங்கி அரங்கர் மணவறையில்
பட்சமுடனிருந்து பாக்கிலையுந் தான் போட்டுக்
கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில் 305

சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார்
அச்சேதி கேட்டு ஆழ்வார் மன மகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது
என்று பெரியாழ்வார் இளகி மன மகிழ்ந்து
குன்று குடை யெடுத்த கோனை மகிழ்ந்துநிதம், 310

வாழி முதல் பாடி மங்களமுந் தான் பாடி
ஆழி முதல் பாடி ஆழ்வாரும் போற்றி நின்றார்
வாழும் புதுவை நகர் மாமறையோர் தாம் வாழி!
ஆழி நிறை வண்ணன் முதல் ஆழ்வார்கள் தாம்வாழி!
கோதையரும் வாழி! கோயில்களும் தாம்வாழி! 315

சீதையரும் வாழி! செகமுழுதும் தாம்வாழி!

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.