ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) நான்காம்‌ அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

ஸ்ரீ (சூடிக்‌ கொடுத்தவள்‌) நான்காம்‌ அத்தியாயம்‌

இருமகட்சில்லமாகிய மார்பினையுடையவனே! பசுச்களைக்‌ சுவரும்‌ குழலூதுபவனே! செருக்குற்ற நரகாசுரன்‌ கவர்ந்த குண்ட
லங்களை மீட்டியவனே ! பசுமலை (வேங்கடகிரி) உறையும்கருடக்‌ கொடியுடையவனே! Iv—1

கேள்‌! அச்சமயத்தில்‌ 1-2

பெரியாழ்வாரின்‌ வெற்றி
வலிதின்‌ அறுத்தாற்போல நூலறுந்து தொங்கிய பொற்‌ எமி, சிறிது நேரம்‌ அந்தரத்தில்‌ இருந்து பின்‌ படீரெனக்‌ கீழே
நிலத்தில்‌ வீழ்ந்தது, வானத்தில்‌ துந்துபி முழங்கப்‌ பூமழை பொழிந்தது. IV—3

அப்போது, பாண்டிய மன்ளன்‌ பரிசளிக்க அனுப்பிய சேவகர்‌கள்‌ அங்குமிங்கும்‌ அலைந்து விரைவதினால்‌ மணிகளும்‌“பொன்‌
அணிகளும்‌, உடைகளும்‌, சிந்த, அவைக்களத்துக்கும்‌, கருவூலத்‌திற்கும்‌ இடையே உள்ள நிலம்‌, முழங்காலளவு நிறைந்து நிலமகள்‌
மகிழ்ச்சிப்‌ பெருக்கால்‌ அணிந்த பல்வண்ண மலர்மாலையோ எனும்‌ படியாக இருந்தது.
(சிந்திய மணிகளும்‌ அணிகளும்‌ முழங்காலளவு நிறையப்‌பெற்றதென்றால்‌, கொடைந்த பொருட்குவையின்‌ அளவினை
எவ்விதம்‌ கூறுவது? என்பது கருத்து) IV—4

வேதங்களால்‌ உணரப்பட்ட விஷ்ணு தத்துவத்தை விளக்கி இவ்விதம்‌ வாதிட்ட பெரியாழ்வார்‌, வென்று, பாண்டிய
மன்னனை பக்தியில்‌ மூழ்கச்‌ செய்து, இறைவனைச்‌ சரணடையு மாறு செய்து உலக நன்மையை உருவாக்கினார்‌. IV—5

அப்பெரியாழ்வார்‌ வென்றதைப்‌ பாராட்டி வானத்தில்‌ எல்லாம்‌ வாழ்த்தொலிகள்‌ முழங்க. தேவர்கள்‌ அடடா”
என்னும்‌ பிதுர்கள்‌ *ஆகா! * என்றும்‌, சித்தர்‌, **அப்பப்பா என்றும்‌, கந்தருவர்கள்‌ கலியுகம்‌” * “இரு தயுகமாயிற்று” * என்றும்‌,
கின்னரர்கள்‌ *இிறுமதியாளரின்‌ செருக்கடங்கிற்றல்லவா?” *என்றும்‌ கூவிப்பரவிளார்கள்‌. IV—6

மேலுதட்டினை நக்கியவாறு, (அரண்மனை) வெளித்‌ திண்ணைகளைப்‌ பாராமல்‌ சென்று, பாதுகைகளைச்‌ சுமப்‌.பவர்‌
களைத்‌ தேடுவோர்களும்‌, . தம்மருகிலுள்ள பல்லக்கிளைக்‌ காணாமல்‌ தாண்டிச்‌ சென்று, பெருங்குரலில்‌, சுமப்பவர்களைக்‌
கூவியழைப்பவர்களும்‌, நகரை நீங்கும்‌ வரையும்‌ தனித்துச்‌ சென்றுபின்‌ தின்று, கூடவந்த புலவர்களைக்‌ கூடுவோரும்‌* தம்‌
வீட்டினர்‌ எதிர்வரவும்‌ வீட்டு விவகாரங்களை கேட்டு அவர்கள்‌ ஒன்று கூடி தாம்‌ ஒன்றாக நினைந்து ஏதோ நினைவில்‌ *சரி சரி”
என்பவர்களும்‌ *வாதம்‌’*” என்னாயிற்று?” என்று கேட்ப,
“மன்னன்‌ ஒரு பக்கம்‌ சாய்ந்து அந்த தாசரி (நாலாம்‌ வருண பாகவதர்‌) யைப்‌ பாராட்டினான்‌. இல்லாவிட்டால்‌ அவளை
விட்டு வைப்போமா? ஏதோ தப்பித்தக்கொண்டான்‌ ”? என்போரும்‌ *சரி! விடு ஆராய்தலில்லாதவன்‌ வாசலில்‌ எவன்‌ .
இருப்பான்‌,’ ‘ என்பவர்களுமாக பண்டிதர்கள்‌ புறப்பட்டனர்‌.[3……7

அவர்கள்‌ சதுக்கத்தெருவில்‌ ஒன்று கூடி அரண்மனையைப்‌ பார்த்தவாறு ஏதோ மத்தனங்கள்‌ (இரகசியப்‌ பேச்சுக்கள்‌)
பேசியவாறு தத்தம்‌ இல்லங்கட்குச்‌ சென்றனர்‌. அப்பாண்டிய மன்னன்‌ அனைவரும்‌ அறிய. பெரியாழ்வாரைப்‌ பெரிய யானை
யின்‌ மீது ஏற்றி அமரச்‌ செய்தான்‌. Iv—8

நகர்வலம்‌ வரச்‌ செய்து, சிற்றரசர்களும்‌, இளவரசுகளும்‌, இருமருங்கும புடைசூழ, திருவல்லிபுத்தூருக்கு அனுப்பி வைத்‌ தான்‌. பாடகர்களும்‌, யானை, குதிரைகளின்‌ மணிகளின்‌ ஓசை யும்‌ பரத்தைய ரின்பாதச்‌ சிலம்பிசையும்‌ முழங்க, வழிச்செல்லும்‌ போது நடுவழியில்‌ 4-9-

இறைவன்‌ காட்சிதரல்‌
இங்கிலீகம்‌ நனைத்த மயில்துத்‌ த ஈரிழைச்‌ சீரையோ எனுமாறு வானம்‌ தன்‌ சிறகின்‌ ஒளி வீச்சினால்‌ இளஞ்சிகப்பு
வண்ணமுற்றது, அவ்வளவில்‌, பாற்கடலின்‌ பாலாடைப்‌ பிசுபிசுப்பினை உணர்த்தும்‌ இனிய காற்றுவீசியது. பின்‌
(கருடன்‌ (நெருங்கி வருதலால்‌) பேரோசை நிறைந்தது. பின்‌ பெரிய திருவடியைக்‌ (கருடாழ்வார்‌) கண்டனர்‌. அந்தப்‌ புள்ளரசன்‌ முதுகில்‌ திருமால்‌ தோன்றினான்‌. IV—10

தளி ர்க்கொத்து இணையில்‌ செந்தாமரை இருந்தாற்போல கருடனின்‌ உள்ளங்கைகளில்‌ தெய்வீக அடியிணைகள்‌ அமர,
மென்கரிய மேனியில்‌ தோன்றிய கருடனின்‌ (செவ்‌) வண்ணப்‌ பிரதிபலிப்போ எனுமாறு பீதாம்பரம்‌ மிளிர, படிந்த யோகி
யரின்‌ தூய இதயங்கள்‌ போல முத்தாரம்‌ ஒளிர, திருமகளுடன்‌ கூடப்பிறந்த உரிமையினால்‌ போலும்‌ ஏதோ விண்ணப்பிப்பது
போது (செவியருசே நெருங்கிச்‌ சென்றுரைப்பது போல) மகர குண்டலங்கள்‌ திகழ, கற்பக மரக்கிளை போன்ற தோள்‌
களும்‌ அதிலுள்ள அன்னம்‌ போன்ற சங்கும்‌, சுழல்‌ காற்றில்‌ எழுத்து சுழலும்‌ பூமகரந்தம்‌ போன்ற சக்கரமும்‌ தோன்ற கமலக்‌
கண்ணனாகிய நான்கு தோள்களையுடைய திருமால்‌ தோன்றினான்‌. 1V—11

எப்போது திருமாலைக்‌ கண்டனரோ அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும்‌, பெரியாழ்வாரைக்‌ கண்டு கொண்டிருந்‌
அனைவரும்‌ தமது சுரங்கஞுடன்‌ குடைகளையும்‌ விரைந்து முகிழ்வித்தனர்‌. (விரித்த குடையைச்‌ சுருக்கி வணக்க மிடுதல்‌ நமது மரபு) IV—12

தேவர்களுடன்‌ கூட இராக்கதரும்‌ பிசாசர்களும்‌ கூட்டமாகக்‌ கண்டு கொண்டிருத்தபோது கருடனின்‌ இறக்கைகளிலிருந்து
வீசிய காற்றினால்‌ நெற்களத்தில்‌ முறத்தால்‌ புடைக்கப்பட்ட காற்றில்‌ பறந்தோடும்‌ பதர்போல இராக்கதரும்‌ பிசாசர்களும்‌
அஞ்சியோடினர்‌. 17… 13

இடைவிடாது சொரிந்த பூ மழையில்‌ படிந்து சஞ்சரிக்கும்‌ வண்டினங்களின்‌ ரீங்காரம்‌ போல தன்னைத்‌ தொடர்ந்து
முனிவர்கள்‌ பாடும்‌ சாம கானம்‌ இசைத்தது. IV+14

இவ்விதம்‌ வானில்‌ கண்ணெதிரே திருமாலைக்‌ கண்ட பெரியாழ்வார்‌ ம௫ழ்ச்சிப்‌ பெருக்கால்‌ ஆனந்தக்‌ கண்ணார்‌
சொரிந்து, புளகாங்கமுற்று, (தானமர்ந்துள்ள) யானையின்‌ மணிகளே தாளங்களாக இவ்விதமாகத்‌ திருமாலைத்‌ துதி
(மங்களாசாசனம்‌) செய்தார்‌. 14/15

வெல்க! வெல்க! அசுரரை அழிக்கும்‌ சார்ங்கம்‌ எனும்‌ வில்லும்‌, கதையும்‌, சக்கரமும்‌ (சுதர்சனம்‌) – பூண்டவனே!
ஞாயிறும்‌ இங்களும்‌ போன்ற நூறுமடங்கு பேரொளியுடையமேனியை உடையவனே! கங்கைக்குப்‌ பிறப்பிடமான தாமரை
போலும்‌, பாதங்கள்‌ உள்ளவனே! பிரம்மனும்‌ சிவனும்‌ உருவான மூலகாரணனே! தாமரைக்‌ சண்ண! வெல்க! வெல்க! IV—16

வேதங்களைத்‌ திருடிய சோமன்‌ எனும்‌ அரக்கனை, மீன்‌ உருவில்‌ அழித்து, செதிள்கள்‌ *சதுரமான வேதாட்சரங்கள்‌ (வடமொழி நாகரி எழுத்துக்கள்‌) ஒப்பப்‌ பொலிவுறவும்‌, நீலக்‌ கடலைக்‌ கலக்கித்‌ தாண்டியபோது எழுந்த நீர்த்‌ துளிகள்‌ பிரம்ம லோகத்தை அடைவது வேதத்தை பிரம்மனிடம்‌ ஒப்படைப்பறு போல தோற்றுமாறு நீ பேரொளிப்‌ பிழம்பாக நீ கடலலைகளைத்‌ தாண்டவில்லையா? IV—17

மகிழ்வுடன்‌ பிரளயகால வெள்ளத்தில்‌ எதிர்‌ நீச்சலடித்துக்‌ கொண்டு நீ (மீன்‌ உருவில்‌) செல்லும்போது உன்‌ ,(வாயில்‌) தாடைகளில்‌ மலைகளும்‌, திமிங்கலங்களும்‌ உட்புகுந்துறை தலான்‌, அந்த வேகத்தில்‌ மலைகளும்‌ பிரம்மாண்டமும்‌ மோதும்‌ பேரொலியே, அரக்கனை வேதங்களை மீட்டிக்‌ கொன்ற வெற்றி முழக்கத்துந்துபி (றை) ஒலியாக அமைந்ததன்றோ? IV—18

நீ ௨ன்‌ திமிங்கல உருவை மிகமிக வளர்த்தபோது உன் வாயில்‌ தானாக துள்ளி வீழ்ந்தானன்றி, அவ்வரக்கன்‌ மிகச்சிறு
மீன்போலும்‌ அளவினனாதலின்‌ அவனை நீ விழுங்கிளனாய்‌ என்பது பொருந்தாதன்றோ? உன்‌ மூச்சுக்காற்று உள்ளிழுக்கும்‌
போது எழுந்த வேகத்தில்‌ வேதத்துடன்‌ கூட அவனும்‌ ஈர்க்கப்‌ பட்டு உன்‌ வாயில்‌ தானே புகுந்தான்‌ என்பதே மெய்யாகும்‌. IV—19

வெள்ளத்தில்‌ மூழ்கிய மண்‌ (பூமி) ஆய நிலம்‌, கரைந்து போகாமல்‌ இருக்க, காரை (சுண்ணாம்பு) பூசிப்‌ பாதுகாப்பதற்‌
காக, வைரம்‌ (இடி) ஓத்த தன்‌ முதுகு திரிகையின்‌ அடிக்கல்லாக அமைய, (பாற்கடல்‌ கடையுங்காலத்தில்‌) மந்திரமலை மேற்‌
கல்லாக உராயவும்‌, முத்து, சிப்பி, சங்குகள்‌ எல்லாம்‌ சூரணமாக (நீறாக) ஆக்கிய கூர்ம (ஆமை) மான தேவனே! உன்னை வணங்குகிறேன்‌.* 1V—20
… *தெலுங்கு எழுத்து வட்ட எழுத்து, நாகரி சதுர எழுத்து என்பது கருத்து. ;-இப்பாடல்‌ பெத்தன ‘மனுச்சரித்ர”விலும்‌ உளது.

வராகமாக உடலை வளர்த்துப்‌ பேருருத்‌ தாங்கி பிரளய வெள்ளத்தை நீ ஒரே தடவை முட்டியாற்‌ பெயர்த்தபோது
எழுந்த நீர்‌, பிரம்மாண்டத்தைக்‌ கடந்து மேலெழும்பி, மீண்டும்‌ கீழே தாரையாக விழுந்தபோது, அந்த தாரை–பொற்‌
சரடாகவும்‌, பிரம்மாண்டம்‌ தங்கமணி ஆகவும்‌ அமைய மாயை (இயற்கை)த்‌ தாயிற்கு அணிவித்த மூக்குத்தியாசு அமைந்த துன்றோ? Iv-—21
(நீரின்‌ தாரை பொற்சரடாகவும்‌ அதில்‌ வெண்‌ முத்துக்கள்‌ கோர்த்திருப்பதால்‌ வெள்ளிய தாரையாக உவமை, பிரம்‌
மாண்டம்‌ அந்த சரட்டில்‌ நடுமணியாகிய பொன்‌. மணியாக உவமிக்கப்பட்டுள்ளது.)
நரசிம்மனே! இரணியனின்‌ இதயமாகிய குண்டத்தில்‌ தூய குருதியில்‌ தோன்றும்‌ தனது பிரதிபிம்பத்தைப்‌ பார்த்து எதிரி
யாகிய சிங்கம்‌ எனக்கருதி அதன்‌ பிடரி மயிரைப்‌ பிடித்திழுத்‌ தாற்போல, அவன்‌ குடல்‌ மாலைகளைப்‌ பிய்த்தெறிந்த சினமிக்க
உனது கூரிய வெள்ளுகிர்கள்‌ எம்மைக்‌ சாக்குமாக. {V¥—22

முதன்‌ முதலில்‌ வெளுப்பும்‌, நுழைய நுழைய பின்‌ இகப்பும்‌ மீண்டும்‌ நுழைய குண்டிக்காய்‌ (ஈரல்‌)க்‌ கருப்பும்‌ தோன்ற, தன்‌
கூரிய நகங்களால்‌ அசுரனின்‌ மார்பாகிய சுவரினைப்‌ பிளந்துடி மும்மூர்த்திகளின்‌ தேசினை மீண்டும்‌ பெற்றது போல்‌ கோன்றும்‌
படி பொய்ச்சிங்கமாகிய நீ செய்தளையன்றோ?
(நகம்‌ தோலிற்‌ துளைப்ப முதலில்‌ வெளுப்பும்‌, சதையிற்‌ துளைப்ப சிகப்பும்‌, ஈரலைத்‌ துளைப்ப கருப்பும்‌ தோன்றுதல்‌,
சிவன்‌ தேசு (தேஜஸ்‌) வெளுப்பும்‌ பிரம்மன்‌ தேசு சிகப்பும்‌, விஷ்ணு தேஜஸ்‌ கருப்பும்‌ ஆகிய மூன்றும்‌, இரணியம்‌ முன்பு
கவர்ந்ததனை மீண்டும்‌ பெற்றெடுத்தாற்‌ போல்‌ தோன்றியது என்பது கற்பனை.) 1V—23

‌ பிரம்மாண்டமாகிய இல்லத்தில்‌ படியுமாறு, மேலோங்கி நிமிர்நத பலிச்‌ சக்கரவர்த்தன்‌ ஆற்றலாகய இபச்‌ சுடர்‌, அவிந்ததுமே, இருன்‌ விண்‌ முழுதும்‌ விரைந்து பரந்து செலுமாறு போல உன்‌ நீலமேனியை வானகத்துச்கப்புறமும்‌ (சம்சுமார சக்கரம்‌ எனும்‌ (நெபுலப்படலம்‌) இடம்‌ வரையும்‌) வளரீந்த வாமன மூர்த்தியல்லவா நீ!
(விளக்கின்‌ அடி நிழல்‌ இருள்‌–உலகல்‌ பலியைப்‌ பற்றிய அச்சத்துக்கு உவமை, பலியின்‌ ஆற்றல்‌ விளக்குச்‌ சுடர்‌ வாமனன்‌
அதை அணைத்ததும்‌ பேரிருட்டு மூவுலகும்‌ பரவுவதற்கு, திருமாலின்‌ கூரிய திருமேனி வளர்ந்தது உவமை.) 14-24

பரசுராமனே! உன்னால்‌ அழிக்கப்பட்ட க்ஷத்திரியர்‌ (அரசர்‌ குலம்‌) களின்‌ மனைவியர்‌ அழுத கண்ணீர்‌ மழைக்காலமாக,
உனது புகழ்‌ என்னும்‌ அன்னப்பறவை, நீ அம்பாற்‌ துளைத்த கரெளஞ்சமலைக்‌ துளையின்‌ வழியாகச்‌ சென்றதைக்‌ கண்டு
அன்று தொட்டு இன்று வரையும்‌ மழைக்‌ காலம்‌ வரவும்‌ அன்னங்கள்‌|பழக்கத்தால்‌ அதே வழியிற்‌ செல்கின்றன. ஈறுக்காகச்‌
செல்லும்‌ (விலங்கு, புள்‌) இனங்கள்‌ எல்லாம்‌ செல்வழிச்‌ செல்லும்‌ இயல்பினதன்றோ? IV—25
(சிவனிடம்‌ வில்வித்தை கற்ற பரசுராமன்‌, தன்னோடு கற்ற சிவகுமாரன்‌ முருகனுடன்‌ பந்தயம்‌ போட்டு அம்பெய்த போது
கிரெளஞ்சகிரி துளைக்கப்பட்டது என்பது புராணக்கதை, கிரெளஞ்சகிரி துளை வழியாச அன்னங்கள்‌ மழைக்‌ காலத்தில்‌
இமயமலையிலுள்ள மானச சரோவரத்திற்குச்‌ செல்லும்‌ என்பது கவிமரபு. ஹம்ஸத்வாரம்‌ ப்ருகு பதி யசோ வர்த்ம்யத்‌ க்ரெளஞ்‌
சரந்த்‌* ரம்‌என்று மேகதூதத்தில்‌ காளிதாசன்‌ பரசுராமனின்‌ புகழ்‌ வழியான கிரெளஞ்சமலை துளை வழியாக அன்னங்கள்‌ செல்‌
வதை வருணித்து இருப்பதும்‌ காணலாம்‌.)

இரகுகுல வீரனே/ தஇிருமகள்‌ கேள்வனே! இந்திரனின்‌ இடியேற்றின்‌ அடிகளைப்‌ பொருட்படுத்தாத இராவணன்‌
உடலிலுள்ள சப்த தாதுக்களையும்‌ புகுந்து பார்க்கும்‌ பயிற்சிக்‌ காசு முயன்றதோ எனுமாறு, சப்த சால மரங்களை (ஏழ்‌
கூந்தற்‌ பனை மரங்களை) வீழ்த்தியும்‌ நில்லாது அப்புறம்‌ சென்ற உனது காற்றினும்‌ கடிய அம்பு எமக்கு செல்வத்தை ஈயுமாக!
(சப்த தாதுசகள்‌–வச்சை, இரத்தம்‌, மாமிசம்‌, மஜ்ஜை எலும்புக்குள்ளிருக்கும்‌ நெய்‌) எலும்பு, மூளை, விந்து (சுக்கிலம்‌)
என்பன சப்த தாதுக்கள்‌. இவற்றால்‌ உடம்பு ஆக்கப்பட்டூள்ளது. வச்சை– என்பது கொழுப்பு.) 1V—26

இந்திரன்‌ அனுப்பிய தேரின்‌ சாரதி மாதலியின்‌ தலை சற்றுமாறு (மயங்குமாறு) பிரளயக்‌ காற்றுப்‌ போல அம்பிறக்கைகளின்‌
சிவ்வெளப்‌ பறக்கும்‌ ஓசையும்‌, இராவணனின்‌ உடலைப்‌ பிளந்து எலும்பினை உராய்ந்து பற்றிய தீ்ப்பொறிகள்‌௮வன்‌ இரத்தத்தில்‌
புகுந்ததால்‌ *சுய்‌’ என்ற ஓசையும்‌, அரக்க வீரர்களின்‌ கவசங்‌ களைத்‌ துளைத்து இதயத்தைப்‌ பிளந்து ஊடுருவிச்‌ சென்று
(இலங்கைக்‌) கோட்டைச்‌ சுவர்க்‌ சற்களிற்‌ பட்டு “டாண்‌” என்ற ஓசையும்‌, வீரர்கள்‌ வீழ்ந்து பட்ட முண்டங்களின்‌ பாரத்தைத்‌
தாங்க முடியாமல்‌ ஆதிசேடன்‌ தலை நெளிய விட்ட நெட்டுயிர்ப்‌ பாக *உஸ்‌” என்ற ஓசையும்‌, உண்டாக்கி, களைத்த தேர்க்‌
குதிரைகட்கு வெயில்‌ தோன்றாதபடி நிழலிட்டதாயும்‌ அமைந்த உனது தெய்வீக வில்லிலிருந்து புறப்பட்ட இலங்காபுரி வானகத்‌
தில்‌ சஞ்சரித்த அம்புகள்‌ எமது பாவங்களைப்‌ போச்குமாக. 14-27

“மண்ணை உழும்போது டைத்து (பிறந்து) மண்ணிலேயே மறைந்தாள்‌ தை” என்று அந்த கற்புக்கரசியின்‌ பிரிவாற்றாமை
யால்‌ வெளுத்துப்‌ போய்‌ ராமனாக உருவெடுத்த (பலராமனாகிய) நீ, அத்தச்‌ சதையை மீண்டும்‌ அடைவதற்காக அல்லவா ஏரார்‌
பிடித்து யமுனை நதிக்‌ கரையில்‌ உழுது கொண்டு, இருக்கிறாய்‌!
இல்லாவிட்டால்‌ மெய்‌ தள்ளாட (மதுவுண்டதாலோ, பிரி வாற்றாத மயக்கத்தாலோ) ஏன்‌ உழ 3வேண்டும்‌? ஏர்‌ ஏந்திய
பலராமா.! எம்மைச்‌ சாப்பாயாக,. IV—28

இந்திரன்‌ பெருமழை பொழிவித்தபோது கோவர்த்தன கிரியைக்‌ குடையாக உன்‌ விரலில்‌ ஏந்தியபோது, சுற்றிலும்‌
வீழ்ந்த நீர்த்தாரைகள்‌ சந்திர காந்தக்‌ கல்களில்‌ உன்‌ உருவம்‌ பிரதிபலித்து பசுக்கட்கு நாராயணகவசம்‌ போல ஏழு நாட்கள்‌
பாது காத்தது. யதுகுலவீர! எம்மையும்‌ காப்பாயாக!
(நாராயணன்‌ என்ற சொற்கு நீரில்‌ உறைபவன்‌ என்பது பொருள்‌. மழை நீரில்‌ கண்ணன்‌ உரு பிரதிபலிப்பது அப்பெய
ருக்குப்‌ பொருத்தமாக உள்ளது என்பது கருத்து, ) IV—29

இளமையுடைய உனது மசனை (மன்மதனை) அனுப்பி ஐந்து (மலர்‌) அம்புகளால்‌ அரக்கர்‌ மகளிர்‌ லத்தை அழித்து, பின்‌ நீயே ஒரே முதிய அம்பாகி (திரிபுரம்‌ எரித்த வன்‌ கையில்‌) அரக்கரை அழித்த தன்மை ஏன்‌? அடடா! போதமாயிற்று (உன்‌ கருத்து அறிந்தோம்‌) அந்நங்கையர்‌ கற்பு எனும்‌ கவசம்‌ யாரா
லும்‌ வெல்லற்கரிதல்லவா? கண்ணனே! உன்‌ எண்ணம்‌ என்னே?
(திரிபுர தகன காலத்தில்‌ திருமால்‌ அம்பானான்‌ என்ற புராணக்சுதை நினைவு கூரத்தக்கது. இரட்டையர்‌ எனும்‌ தமிழ்க்‌ கவிகள்‌ .
“நாணென்றால்‌ நஞ்ருக்கும்‌ நற்சாபம்‌ கற்சாபம்‌
பாணந்தான்‌ மண்தின்ற பாணமே”
என்று மண்தின்ற கண்ணனே அம்பானான்‌ என்பதை அழகாக வருணித்துள்ளதும்‌ அறிக! :

ஈண்டு அரக்க மகளிர்‌ ₹லம்‌ கெடச்‌ செய்தற்கு இளமையும்‌ ஐந்து மலரம்புகளும்‌ உடைய மன்மதன்‌ தேவைப்பட்டான்‌.
*புகழ்புரிந்த இல்லிலோர்க்கில்லை இகழ்வார்முன்‌
ஏறுபோல்‌ பீடு நடை” *
என்ற குறட்படி அரக்கர்‌ மனைவியர்‌ சீலம்‌ அழிந்த பிறகு அவர்‌களை முதிய அம்பால்‌ வெல்வதும்‌ எளிதாயிற்று என்று கருத்து.
இப்பாடலில்‌ இத்தன்மை ஏன்‌? என வினவிய கவி புத்தம்பய்‌’ (போதம்‌ ஆயிற்று) என்று கூறிய புத்தன்‌ பெயரை
முத்திரையலங்காரம்‌ எனும்‌ அணியில்‌ பெய்து புத்தாவதாரத்தை நினைவூட்டி வணங்குகிறார்‌. காமத்தை வெல்வது வீரத்தை விட
அரிய செயல்‌ என்ற குறிப்புத்‌ தோன்றும்‌ இப்பாடல்‌ மூலம்‌ புத்தன்‌ காமத்தை வென்று சிறப்புற்றான்‌ என்று குறிப்புப்‌
பொருள்‌ தோன்ற நயமுடன்‌ அமைத்துள்ளார்‌ கவிஞர்‌.) 14-30

கலியுகத்தில்‌ மிஞ்சும்‌ பஞ்சமாபாதகங்களை ஒடுக்க கல்‌கிஅவதாரமாக, குதிரையின்‌ பஞ்ச கதிகளை (ஐந்து நடை பேதங்‌
களை) அறிந்தவனாக, தன்னிரு சுரத்தும்‌ ஏந்திய பட்டாக்‌ சுத்தி களின்‌ மின்னொளியே கவசமாக மிலைச்சரின்‌ அம்புகளைத்‌
தடுக்க கல்கியாகிய பெருமானே! எம்மைக்‌ காப்பாயாக, 17-31

என்றிவ்வாறு துதிக்கவும்‌, திருமால்‌, தேவசிற்பியை நோக்கி
“பாண்டிய மன்னன்‌ தந்த அளவற்ற செல்வம்‌ முழுதும்‌ வைணவ அடியார்கட்‌ 8ந்து வெறுங்கையன்‌ ஆவான்‌ ஆதலின்‌ இவனது
இல்லத்தை அவ்வூரில்‌ மணிமயமாகச்‌ செய்து இறப்பிச்கவும்‌’ என்று கூற, 1V—32

விசுவகருமனும்‌ அவ்விதமே ஆக்கித்‌ தந்தான்‌. அவ்வளவில்‌ தாமரைக்‌ -சண்ணனும்‌ பெரியாழ்வாரை ஆதரித்து காட்சி
யளித்துப்‌ பின்‌ மறைந்தான்‌. முனிவனும்‌ (பெரியாழ்வாரும்‌) ஊரார்‌ போற்றத்‌ திருவில்லிபுத்தூருக்குப்‌ போந்தான்‌. [4.33

——

பெரியாழ்வார்‌ தன்நகர்‌ புகல்‌
வில்லிபுத்தூர்‌ மக்களும்‌ பெரியாழ்வாரைக்‌ காணும்‌ வேட்கையுடன்‌, நகரை அலங்கரித்து மக்கள்‌ எதிர்‌ சென்றழைத்து
வர மேளதாளத்துடன்‌ சென்றனர்‌. Iv—34

இவ்விதம்‌ அவ்வூரினர்‌ எதிர்‌ சென்று, பரிவட்டமும்‌, புனித மான பகவத்‌ பிரசாத தீர்த்தங்களும்‌ காணிக்கையாக்கி, வணக்கம்‌
செய்து, கை குவித்து, தங்க ரதத்திலேற்றி அமரச்‌ செய்து அழைத்துச்‌ சென்று போகும்போது, நகரவாசிகஞம்‌, சராமவாச
களும்‌ தம்முட்‌ கலந்து பரந்து நடந்து சென்றவாறு, மிருதங்கம்‌, பஹறை தாரை, தப்பட்டை, உருமு, காகளம்‌, வீணை, முகவீணை
புல்லாங்குழல்‌, தவில்‌, நாதசுரம்‌, முதலிய வாத்தியங்களோடு, இசை முழங்க, நடனமங்கையர்‌ நடனமாட, யானை, குதிரை
களின்‌ மணியோசைக்கியைய, நங்கையர்‌ லெம்பிசைபாட மெல்ல நடந்து வந்தனர்‌.

அருகில்‌ இரத்தினக்‌ கம்பளம்‌ போர்த்திய களிறுகளிலும்‌ பிடி. களிலும்‌ ஏறிய, பொன்னாலான அங்குசங்களைத்‌ தரித்த
சிற்றரசர்களின்‌ குமாரர்களின்‌ குழு, ஒருவரை ஒருவர்‌ முந்த பரபரப்புற்று, பெரியாழ்வாரைக்‌ கண்டு வணங்கி, ஒருபக்கம்‌
ஒதுங்கி மேல்‌ நோக்கிய அசையும்‌ கண்பார்வைசளோடு திரும்பித்‌ திரும்பிப்‌ பார்த்து, புகழ்ந்தவாறேகினர்‌.
அவ்வரச குமாரர்கள்‌ திருவில்லிபுத்‌தூரில்‌ புகும்போது தமக்கு முன்பே பழக்கமான, கலைத்திறனார்‌ தந்த சணிகையர்மேல்‌ வீசி
எறியும்‌ சாக்கிட்டு, ராம அதிகாரிகள்‌ காணிக்கையாகத்‌ தரும்‌ தாரத்தை, மாதுளம்‌, எலுமிச்சை, முல்லைப்‌ பூப்‌ பந்துகளை.
முன்பு தாம்‌ வந்தனுபவித்த நங்கையர்மேல்‌ எறிந்தவாறு சென்றனர்‌. ஒளிவீசும்‌ கும்மல்களுடன்‌, புன்முறுவல்‌ பூத்தவாறு
இளைஞர்களை, கருத்தோடு கூடிய கடைக்கண்‌ வீச்சுக்களோடு பார்த்து சிறிதே கூந்தலசைய, முகத்தைத்‌ திருப்பிக்‌ கொண்டு
மத்தளக்காரரின்‌ முதுகு மறைவில்‌ ஒதுங்கி வேசியர்‌ நடக்க, மத்தளக்காரார்‌ வாசிக்கும்போது குனிவதால்‌ வெளிப்பட்டு,
வேறு உபாயமின்மையின்‌, கொப்பினைச்‌ சரிசெய்து இளைஞர்கள்‌ எறியும்‌ பூப்பந்து முதலியவற்றைத்‌ தடுக்கும்‌ வகையில்‌ கைகளை
மறித்துச்‌ சுழலும்போது காதிலணிந்த பூக்களும்‌; கன்னத்தில்‌ தவமும்‌ புன்முறுவலாகிய முல்லைகளும்‌ செறிந்த நிலவினை உமிழச்‌ சென்றனர்‌,

இனிய சொற்களும்‌ சாதுரியமான சொற்கஞம்‌ உடைய பேரிளம்‌ பெண்டிர்‌ (அரச குமாரார்களான) இளைஞர்களை
வணங்க, அப்பெண்டிர்கட்கிருபுறமும்‌ ஒதுங்கி நிற்கும்‌ இள நங்கையர்‌, பழைய காதலுறவை நினைந்து (நாணத்தால்‌) தலை
குனிந்து, (இளைஞர்களை) வணங்காமல்‌ சிறிதே முகந்திருப்பி வேறுபக்கம்‌ பார்க்கவும்‌, அவ்வரச குமாரர்கள்‌ அந்நங்கையர்‌
தம்மை வணங்காத வஞ்சனையைப்‌ பார்த்து, பரிகாசமாக அவர்‌களையும்‌ வணங்கச்‌ செய்யும்‌, வேட்கையுடன்‌, ஆங்கே பேரரசர்‌
இன்மையாலும்‌, பொதுமக்களைப்‌ பொருட்படுத்தாமலும்‌, தம்‌ கருத்தினைஅறியும்வகையில்‌ பெண்டிரைநோக்கி, *வயதிலும்கல்வி
யிலும்மூத்த நீங்கள்‌ வணங்கும்போது அவர்கள்‌ (இளநங்கையர்‌) ஏன்‌ வணங்குவதில்லை. அவர்களையும்‌ வணங்கச்‌ செய்க”என்றும்‌
உடனே முறுவல்பூத்த முகத்தாமரைகட்குப்‌ புதிய எழில்‌ கூட்டி வணங்காமல்‌, ஆங்கு இணைத்தேகும்‌ தோழியர்கட்கு, தமக்கும்‌
அவ்வரச குமாரர்கட்கும்‌ நெருங்கிய உறவுண்டு என்ற பெருமையை வெவளிப்படுத்தச்‌ செவ்விதழை மடித்து, உள்ளுர
விரைந்தெழும்‌ உணர்ச்சித்‌ துடிப்பில்‌ இகழ்ச்சியாக உச்‌ சென்று ஓலி செய்யவும்‌, அக்குறிப்புணா்ந்த பேரிளம்‌ பெண்டிர்‌ “நமக்குச்‌
செல்வம்‌ திட்டியது, நமக்கருள்‌ செய்யும்‌ வள்ளல்‌ பெருந்‌தெய்வங்கள்‌ ஆன இவர்களை வணங்கீ3ரா?’* என்று கூறி
இளநங்கையரை முன்னேறும்படி உற்சாகப்‌ படுத்தியும்‌, புருவ நெரிவில்‌அச்சுறுத்தியும்‌ எப்படியோ உடன்பட வைத்துவற்புறுத்த
வும்‌, அவ்விள நங்கையர்‌, வெட்கத்தால்‌ சஞ்சலித்த கண்களோடு இடையீடுடைய விரல்களோடு கூடிக்‌ கை கூப்பி வணங்கவும்‌ ,
அவ்விதம்‌ வற்புறுத்தலுக்காக அரைமனதோடு வணங்கிய அந்தங்‌கையரை பறவைகளைப்‌ பிடிக்கும்‌ வலைகள்‌ போலச்‌ சூழ நின்ற
பெண்டிர்‌ பெரு நகை செய்யவும்‌, அவர்களை இளநங்கையா்‌ பொய்க்கோபம்‌ கொண்டு அடித்து, சினங்கலந்த பார்வையை
அரச குமாரர்கள்‌ மேல்‌ செலுத்திப்‌ பின்‌ மீண்டும்‌ மறைந்‌ தொதுங்கும்‌ மான்‌ விழியாரின்‌ வளையல்களின்‌ ஓசையும்‌,
முகத்திற்பூகிய வாசனைப்‌ பூச்சுக்காகப்‌ படிந்த வண்டுகளின்‌ ரீங்கார ஒலியும்‌ மிக, நடந்தனர்‌.

காதுகளில்‌ சங்குமணிகளும்‌, உள்‌ வளைந்த தோள்களும்‌, சுரி குழலும்‌, காவித்‌ துப்பட்டாவும்‌ (துண்டு) ௮மர சுயகிராமம்‌
தவிர்ந்து முதுமையில்‌ வில்லிபுத்தூர்‌ அடைந்து அவ்வூர்‌ மக்களின்‌ உறவினால்‌ தன்‌ சொந்த பந்தங்களை மறந்து, வாசனைப்‌
பொருள்கள்‌ கலப்பதும்‌ பூமாலை தொடுப்பதும்‌ ஆகிய தொழில்‌களில்‌ சிறந்து, ஆந்திறன்‌ காட்டும்‌ ஆந்திர நாட்டு சுகந்தப்‌ பொடி
செய்பவர்கள்‌, சல சில சொற்களில்‌ பாடல்கள்‌ புனைந்து துதித்து பைத்தியக்காரச்‌ சேட்டைகளோடு வணங்கி, யானை, குதிரை
களின்‌ மேல்‌ வரும்‌ அரசகுமாரர்கள்‌ ,மேலும்‌, நாட்டியக்காரிகள்‌ மேலும்‌ பெரியாழ்வார்‌ மீதும்‌, குளிரும்படியாக (மணப்பொடி
யைத்‌) தூவ, அப்பொடி மேல்‌ gH) உலகனைத்தும்‌ ஒரு பிடிக்குள்‌ கொணர்ந்தாற்‌ போல்‌ பரந்து சுதிரவனின்‌ வெயில்‌
மறையும்படியாக வானகத்தையும்‌ மூடவும்‌, பன்னீர்‌ நிறைந்த தோற்பைகளை அமுக்சவும்‌, அதன்‌ வழிப்‌ போந்த நீர்‌ வானத்திற்‌
பாய்ந்து கீழே வளைந்திறங்கும்‌ போது அதன்‌ தாரைகள்‌ மிருதங்கம்‌ முதலிய வாத்தியங்களில்‌ பட்டு, நனைந்துவிட ௮க்‌
கலைஞர்கள்‌, தம்‌ வாத்தியங்களைக்‌ காத்துக்‌ கொள்ள சூடாக்கநெருப்பினை வேண்டி. அலைய, அக்கூட்டம்‌ சென்றது.

அக்கூட்டத்தில்‌ அப்போது நாட்டியமாடுவகைக்கண்டு நின்று மெல்ல மெல்லச்‌ செல்லும்‌ உல்லாசம்மிக்க இளைஞர்கள்‌, தாமும்‌
ஆங்குள்ள தாமரை முகத்‌ தையலர்களும்‌, சமயம்‌ பார்த்து; நாணற்பூக்கள்‌ பிரதஇுபலிப்பதனால்‌ வெளுத்துள்ள பாதைகளில்‌
இருபுறமும்‌ மனோகரமான முங்காக்களுக்கும்‌ செங்கழுநீர்ப்‌ — பூக்கள்‌ நிஹைந்த கால்வாய்களில்‌ இறங்கி, எருமைத்‌ தயிரும்‌
பாலாடையும்‌ பிசைந்து கட்டிய நாரத்தங்காய்‌, இஞ்சித்‌ துண்டு களுடைய ஊறுகாய்களுடன்‌ செந்நெற்‌ சோற்றினை கமுகம்‌
பாளைகளில்‌ வைத்து உண்பதற்காக அமரவும்‌, அவர்களைக்‌ கண்டு வயிற்றுப்‌ பாட்டுக்காக, பசி கொண்டிளைத்து அலைந்‌
கலைந்தலுத்துப்போன தாசரிகள்‌ (வைணவ அடியார்களில்‌ ஒரு வகை) கூட்டம்‌ அவர்களை அணு “கோபாலா பிச்சை” என்ற
அன்னப்‌ பிச்சை கேட்டு, உண்டனர்‌. ஆற்றங்கரையில்‌ வைத்‌துள்ள பருத்த கல்‌ விளக்குத்‌ தூணில்‌ எறியும்‌ சகசோதி (அகலும்‌
வத்தியுமின்றி, எண்ணெய்‌ ஊற்றி துணிப்‌ பொதியை வைத்துத்‌ திப்பந்தம்‌ போல எறியும்‌) தீபங்களிலும்‌, சாம்பிராணிப்‌ புகை
போட்ட தூப குண்டிகையின்‌ நெருப்பிலும்‌, (முன்‌ பன்னீரால்‌ நனைந்த வாத்தியங்களை) ஈரம்‌ புலர்த்திடக்‌ காய வைத்து
தமது வாத்தியங்களின்‌) நாதத்தைப்‌ பரீட்சிக்க வாசிக்கும்‌ திம்‌ திம்‌ எனும்‌ ஓசை கேட்டுப்‌ பதறிய இந்தப்‌ பக்கத்துப்‌ பூங்கா
விருந்த ளிகள்‌ அந்தப்‌ பக்கத்திற்கும்‌ அந்தப்‌ பக்கப்‌ பூங்காவி லிருந்த இளிகள்‌ இந்தப்‌ பக்கமும்‌ பறந்து நெருங்கி கட்டாத
கோரணமாக எழில்‌ கூடிப்‌ பரந்துலவி ஓடின. தலையசைத்தலும்‌, வாய்‌ இறத்தலும்‌ தாளமிடக்‌ கைதட்டலும்‌ காணப்பட்டதன்றி
அந்தக்‌ கோலகலத்தில்‌ சிறிதும்‌ பாட்டுக்‌ கேட்க இயலாமல்‌ போக்‌, (திவ்விய பிரபந்தம்‌ பாடும்‌) பாகவதர்கள்‌ அக்கூட்டத்தில்‌ பஈடி*
கொண்டு வந்தவர்சுள்‌ மெளனம்‌ வகித்தார்கள்‌.

ஒவ்வோர்‌ சளர்ச்சந்தைகட்கும்‌ செல்வதற்காக தனவந்தர்கள்‌ வீட்டில்‌ வளர்க்கும்‌ பெண்‌ குதிரைகட்குப்‌ பிறந்து, நீளக்‌ கயிற்றால்‌ காலிற்‌ கட்டப்பட்டு தரிசுகளில்‌ மென்மையான பசும்‌ புல்லைத்‌ தின்று கொழுப்பேறி, மாலை நேரங்களில்‌ கொள்ளு காணம்‌ முதலிய ஊட்டங்களைப்‌ பெற்று வளர்ந்து, வரட்டி,
முதலியவற்றால்‌ (குதிரையுடன்‌) கேய்க்கப்பட்டு மினுமிஷப்புற்று கருங்கம்பளித்‌ துணி, நிழல்‌ முதலியன கண்டு பதறித்துள்ளும்‌ இளம்‌ குதிரைகளை கால்வரை தொங்கும்‌ குஞ்சங்களும்‌, Amy மணிகளும்‌, புரசம்பட்டையிற்‌ தோய்ந்த முழத்திற்கொன்றும்‌ சாணுக்கொனள்றுமாகத்‌ தொங்கும்‌ வலைகள்‌ தொங்க, அலங்கரித்து, வாசனைப்‌ பூச்சு தொய்த்த நிலவொத்த ஆடைகள்‌ அலங்கரிக்க (அக்குதிரைகளில்‌) ஏறி இளைஞர்கள்‌ வந்தனர்‌.

அவ்வூரின்‌ மேலோர்களான சாலியர்களும்‌, தட்டார்களுக்‌ கும்‌, சும்மாளரும்‌ செட்டிகளும்‌, கோமுட்டிகளும்‌, பாய்முடை வோரும்‌ ஆகிய பல குலங்களின்‌ இள நங்கையர்கள்‌ கூட்டமாக
கலந்து வரும்போது யானையைக்‌ கண்டு பயந்து ஓதுங்கவே, கடிவாளம்‌ இருகரத்தாலும்‌ பற்றி ஈர்த்தும்‌ அடங்காதோடிய குதிரைகள்‌ மிரண்டு௮க்கூட்டத்தினை மிதித்தக்கொண்டோடின்‌, மிதிபட்ட கூட்டத்திடையே உள்ள முதியவர்கள்‌, பெண்டிர்‌,
நோயாளிகள்‌ முதலியோர்‌ (அக்குதிரையில்‌ ஏறியவர்களை) வையவும்‌, அவாகள்‌ எதுவும்‌ பேச முடியாமல்‌ உயிரைக்‌ கைபில்‌
பிடித்துக்கொண்டு, போய்‌ அருகிலுள்ள புய வயலில்‌ துள்ளிக்‌ குதித்து தொடைகள்‌ வரையும்‌ மூழ்கி எம முடியாத குரை மீதிருந்து தாம்‌ இறங்க இடம்‌ இன்றி நாலுதிசையும்‌ பார்த்து பரிதாபகரமாக இருப்ப அதைக்கண்ட பூப்படையாத பெதும்‌£ பப்‌ பருவத்து மகளிர்கள்‌ “ஓ” “ஓ” என்று கூவி பரிகாசமாகக்‌ கேலி
செய்து கைதட்டவும்‌ அந்த ஒடை செறிந்த பூங்கா, மரங்களில்‌ எதிரொலிக்கவும்‌ செய்தன.

இவ்விதமாக மகாவைபவத்தோடு, அத்திருவில்லிபுத்‌ தாரையடைந்து, அந்த சக்கிராயுதமுடைய திருமாலின்‌ கோயில்‌ புக்கு
நின்று, அப்பெரியாழ்வார்‌ அந்த பிரம்மரதத்திலிருந்து கீழே இறங்க, இற்றரசுகளஞும்‌, தேவஸ்தானாதிபதிகளும்‌ குழுமி
பின்தொடர, இருமாலைச்‌ சேவித்து, சுவாமி பிரசாதமான பரிவட்டத்தினால்‌ அலங்கரிப்பட்டு, பின்னர்‌, பல்வேறுஅலங்காரங்‌ களுடன்‌ கூடிய, மணிகளும்‌ பொன்னும்‌ நிறைந்த தனது இல்லத்‌ தைக்‌ கண்டு வியந்து, இருமாலின்‌ திருவருட்பேறென நினைந்து
ஆங்குள்ள மன்னர்களை விடை கொடுத்து அனுப்பி வைத்து, இல்லம்‌ புகுந்து, முன்னைவிட நாறு மடங்கு அடியார்களை ஆதரித்துச்‌ சிறப்புற்றிருந்தார்‌. 11-49

அப்போது காணிக்கை ஈந்தவர்‌ இல்லங்களில்‌ விருந்தினனாகச்‌ குளித்துண்டு மகழ்ந்து, இரவில்‌ திருமால்‌ கோயிலில்‌ பல்வேறு
நாட்டியக்காரர்களின்‌ வாதங்களைத்‌ தீர்த்து வைத்து; மணிகள்‌, உடைகள்‌, ஊர்கள்‌ திருமாலுக்கு சமர்ப்பணம்‌ செய்து, மறுநாள்‌
காலையில்‌ 17-36

சிற்றரசுகள்‌ மதுரைக்குத்‌ திரும்பிச்‌ சென்றனர்‌. பெரியாழ்வாரும்‌ முன்போல வைணவ அடியார்களைச்‌ சேவித்‌
தும்‌ தனது நெடுநாளைய தொண்டாகுிய துளசிமாலை கட்டித்‌ தரும்‌ கைங்கரியம்‌ செய்து கொண்டும்‌, பக்தியுடன்‌ திகழ்ந்தார்‌. 1.37

ஒரு நாள்‌ நண்பகலில்‌ பூமாலை சமர்ப்பித்த பிறகு போய்க்‌ கொண்டிருந்த பெரியாழ்வாரை, அருளொயுகும்‌
புன்முறுவல்‌ பூத்த கடைக்கண்களோடு பார்த்துப்‌ பின்‌, கருட வாகனனான பகவான்‌ தாமலை மலராள்‌ ஆகிய தேவியைப்‌
பார்த்து இவ்விதம்‌ கூறினான்‌. IV—38

“யாமுனாசாரியர்‌ (ஆளவந்தார்‌) ஒருவனும்‌, இந்த மகாத்மா (பெரியாழ்வார்‌) ஒருவனும்‌ அல்லவா (வைணவ) தரிசனத்தை
புனருத்தாரணம்‌ செய்து எனது போருளுக்குப்‌ பாத்திரம்‌ ஆனார்கள்‌.” என இந்திராதேவி (லட்சுமி) தன்‌ கணவனிடம்‌
இவ்விதம்‌ கூறினாள்‌’ ”, 139

ஆளவந்தார்‌ வரலாறு
“இவர்‌ (பெரியாழ்வார்‌) கதை தெரிந்ததுதாஷே! அவர்‌ என்ன செய்தார்‌?” என்று கேட்ப, தாமரைக்‌ கண்ணன்‌, அந்த
நூற்றிதழ்த்‌ தாமரையில்‌ உறையும்‌ திருமகளுக்கு இவ்விதம்‌ கூறினான்‌! “*நங்காய்‌! என்னைச்‌ சேவிக்கும்‌ பக்தன்‌ ஒருவன்‌
முல்‌ பிருந்தான்‌.* ்‌ 1V—-40

அவன்‌ சிறுவயது முதலே ஆசாரியரிடம்‌ வேத சாத்திரங்‌களைக்‌ சற்றுச்‌ சிறந்திருந்தான்‌. நங்காய்‌! அப்போது இப்போ
துள்ள பாண்டிய மன்னனின்‌ முன்னோராகிய ஒருவன்‌ ஆண்டு வந்தான்‌. Iv—41
பித்துற்ற சைவத்தில்‌ முதிர்ந்து, எனது துதிகளை (விஷ்ணு துதி)க்‌ கேட்க மாட்டான்‌. எனது விக்கிரகங்களை வணங்கமாட்டான்‌. சிவன்தான்‌ பரம்பொருள்‌ என்பான்‌. எனது ஆலய உற்சவங்களைக்‌ கண்டு அஞ்சுவான்‌. அவளைச்‌ சார்ந்‌ தோரும்‌ அப்படியே இருந்தனர்‌. 1342

* வரலாற்றுப்படி யாமுனராகிய ஆள வத்த ரர்‌ பெரியாழ்வாருக்குச்‌ சில நூற்றாண்டுகள்‌ கழிந்த பின்‌ தமிழகத்‌
தில்‌ வாழ்ந்த வைணவ அடியார்‌ ஆகும்‌. கிருஷ்ணதேவராயர்‌ தமது காவியத்தில்‌ பின்னர்‌ இருந்தவரை முன்னவராக வருணித்‌ திருப்பது பொருந்தாது. எனினும்‌ இலக்கியங்களில்‌ இவ்விதம்‌ காலக்‌. கணக்கைப்‌ பொருட்படுத்தாது அமைப்பது மரபாகவே வந்துள்ளது. பின்‌ வந்த வேதாந்த தேசிகர்‌ அகோபில மடம்‌ உருவாக்கிய ஆதிவண்‌ சடகோபர்‌ போன்றவர்களையும்‌ இக்‌ காவியத்தில்‌ ஆண்டாள்‌ சரிதம்‌ கூறுமிடத்து வருணித்திருப்பதும்‌ காணலாம்‌. இப்போக்கு பல புராணங்களிலும்‌ காவியங்களிலும்‌ காணப்படுகிறது. எனினும்‌ சரித்திர நோக்கத்தில்‌ இது முரண்‌ பாடாகும்‌. *தரதா யதாபூர்வம்‌ கல்ப3யத்‌’ என்ற சுலோகப்படி பிரம்மா மீண்டும்‌ மீண்டும்‌ முன்போல உலக சிருஷ்டி நடத்து கிறார்‌ என்பதால்‌ யாமுனர்‌ முன்னைய யுகத்தவர்‌ ஆகக்‌ கொள்ளலாம்‌ எனச்‌ சிலர்‌ சமாதானம்‌ கூறுவர்‌.

அவன்‌ வேதமுணர்ந்த பிராமணர்களைப்‌ போற்றுவ தொழிந்து, ஐங்கமர்‌ (சைவ அடியார்‌, களைப்‌ போற்றி வணங்கினான்‌.
செவ்வாய்க்‌ கிழமைகளில்‌ வீரபத்தினுக்கு மாவிளக்கெடுத்துக்‌ கொண்டு சென்றான்‌. குலதெய்வங்களையும்‌ கும்பிட மறந்தான்‌.
தொண்ணுற்றாறு நாள்‌ விரதங்களில்‌ சங்க௱தாசமய்யார்களான சிவனடியார்கட்கு மன நிறைவுண்டாகும்படி சிரார்த்தங்களைச்‌ செய்து மகிழ்விப்பான்‌.
பழமையான கோயில்கள்‌ பாமாகக்‌ கடக்க சைவ மடங்களை நிறுவினான்‌. வடக்கத்திய சைவமதத்திற்‌ சேர்ந்து பூணூலையும்‌
அறுத்தெறிந்தான்‌. ஆசாரமற்ற ஆராத்திய்களை பெரிதாக எண்ணி கொண்டு செய்தான்‌. அவர்கள்‌ கூறும்‌ உபறிஷத்துக்‌
களை (வேதாந்தம்‌)க்‌ கேட்டான்‌. ஏதாவதொரு சைவஅடியார்‌ வந்தால்‌ வியந்து பாராட்டிப்‌ போற்றி வந்தான்‌. IV—43

சிவலிங்கதாரிகளாகிய ஐங்கமர்கள்‌ எது செய்தாலும்‌ இது பாவம்‌ புண்ணியம்‌ என்று ஆராயாமல்‌ ஒப்புக்‌ கொண்டு
இருப்பான்‌. சைவத்தைப்‌ போற்றும்‌ பிராமணர்கட்கு மட்டுமே அக்கரகாரங்கள்‌ தருவான்‌. 1V—44

அவன்‌ அரசாண்டு வந்த காலத்தில்‌ அவனது ஆட்சியிலிருந்த தாமிரபரணி நதித்துறையில்‌ மட்டுமே கிட்டும்‌ ஆணி முத்துக்கள்‌
எல்லாம்‌ சைவ அடியார்கள்‌ கழுத்துக்கு (ருத்ராட்ச மாலையில்‌ கோர்த்து) தீர்ந்து போய்விட்டன. IV—45

அவ்வப்போது, மன்னன்‌ விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில்‌ அந்தணர்கள்‌, தம்‌ நாட்டைப்‌ பிரிய
மனமில்லாமல்‌, நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு, . ருத்திராட்ச மாலை தரித்து, சூதசம்்‌ஹிதைச்‌ சுவடியைக்‌ கக்கத்‌
இல்‌ இடுக்கிக்‌ கொண்டு அவைக்களம்‌ புகத்‌ தொடங்கினர்‌. IV—46

ஒழுக்கத்திற்கு முரண்பாடாக மறைவாகக்‌ கஞ்சா, சாராயம்‌ குடிக்கும்‌ நீசர்களை வெளியேற்ற இயலாமல்‌ ஏற்றுக்‌ கொண்
டான்‌. பிராமணர்களின்‌ சிறு “தவறுகளை வெளிப்படுத்துமாறு சைவர்களுக்குச்‌ சைகை செய்வான்‌. . IV—47

அப்பட்டத்தரசி, நற்பேற்றினால்‌ என்‌ மீது பக்தியால்‌ ஆராதனை கொண்டிருந்தும்‌, தன்‌ கணவன்‌ எனது பக்தனாக
இல்லாததை தினைந்து மிகுந்த வருத்தத்தையடைந்திருந்தாள்‌. IV—48

மேலும்‌ அப்பெண்மணி I1v—49

மாளிகைக்கு முன்புள்ள அழகிய துளசி வனத்திற்கு: தானே கோலமிடுவாள்‌.. தசமியன்று ஒரு பொழுதுமட்டும்‌
உண்பாள்‌. மறுநாள்‌ ஏகாதசியன்று தூங்காமல்‌ உபவாசமிருந்து துவாதசியன்று பிராமணப்‌ பெண்கள்‌ கூறும்‌ கதைகளைக்‌
கேட்பாள்‌. விரதம்‌ இருக்கும்‌ மூன்று நாட்களும்‌ தன்‌ கணவனை விரும்ப மாட்டாள்‌, அதன்‌ மறுநாள்‌ தன்‌ கணவன்‌ படுக்கைக்குள்‌
அன்போடு செல்வாள்‌. செல்லும்‌ போது கஸ்தூரி (திலகத்தை துடைத்து கற்பூரத்‌ திலகத்தை அணிந்து செல்வாள்‌. இவ்விதரூ
என்‌ மேல்‌ பக்தி மிகுந்திருந்தாலும்‌ தன்‌ கணவனிடம்‌ பக்தி குறையாமல்‌ இருப்பாள்‌. இதுவே எனக்கும்‌ விருப்பமாகும்‌. 17-50

பிரம்மா, ரத்திரர்கள்‌ என்‌ உடல்கள்‌ தாம்‌ அவர்களை வணங்குவதும்‌ என்னை வணங்குவதுதான்‌. அவர்களை விருப்பத்‌
தைத்‌ தருபவனும்‌ நான்தான்‌. எனினும்‌ அதில்‌ சிறிது ஏற்றத்‌ தாழ்வுகள்‌ உள்ளன. 1-5)

பிற தெய்வங்களை என்னிலும்‌ வேறாகக்‌ கருதி உள்ள மந்த மதியினர்‌, எனது வாசுதேவநிலை–(அனளைத்திலும்தான்‌. தன்னில்‌
அனைத்தும்‌)யை உணராமல்‌ இயற்றும்‌ பூசனையின்‌ பயன்‌.- எல்லைக்குட்பட்டதாகவே முடிவுறும்‌. IV—52

மேலும்‌, இந்த ரகசியம்‌ (எல்லாம்‌ நானே எனும்‌ தத்துவம்‌) தெரியாமல்‌ அம்மன்னன்‌, தாமத குணமுடையவளாய்‌, எனது
பக்தர்களை சாதாரணமாகக்‌ கண்டு, அவர்கட்கு ஏற்படும்‌ தொல்லைகளை நீக்காது அலட்சியப்படுத்தி, காவல்‌ கடமையில்‌
நீங்கியவனாகினான்‌. இதைக்‌ கண்டு கலியுகத்தில்‌ தமிம்‌ நாட்டில்‌
(த்ரவிடமண்டலம்புன) கருதமாலா,* தாமிரபரணி நஇக்‌ கரை களில்‌ எனது பக்தர்கள்‌ பரந்திருட்பார்கள்‌, அந்நாட்டு
மன்னனாகிய பாண்டிய மன்னன்‌ ஆதலின்‌ காத்தல்‌, தண்டித்தல்‌ முதலியன நானே பிரத்தியட்சமாக செய்ய இயலாது. மன்னன்‌
மூலமே செய்வித்தல்‌ வேண்டுமாதலினாலும்‌, எனது பக்தர்களைக்‌ காப்பாற்றும்‌ விரும்பினாலும்‌, எனது பரதத்துவ நிர்ணயம்வாதத்‌
தாலன்றி நிலை நாட்ட முடியாதாகையாலும்‌, மன்னனை என்‌ பக்தனாக்க அவன்‌ சபையிற்சென்று வாதாடி வெற்றி பெறச்‌
செய்யும்‌ வகையில்‌ ஃ அவ்வந்தணனுக்கு (யாமுனாசாரியருக்கு) உணர்வைத்‌ தோற்றுவித்தேன்‌. ்‌ பல்வேறு நாடுகளிலிருந்தும்‌ வந்த ஏழை எளியோர்‌,
அனாதை, முதியவர்கட்கு தானியம்‌, உடை, மான்தோல்‌
முதலியன தந்தும்‌, பிரம்மச்சாரிகட்குத்‌ திருமணம்‌ செய்வித்தும்‌, உபநயனங்கள்‌ நடத்தியும்‌ முடம்‌, குருடு, செவிடுகட்கு எருது
முதலிய வாகனங்கள்‌ தந்தும்‌, மேலும்‌, குளம்‌ (தோண்டும்‌ வேலை) முடியாமல்‌ மிஞ்சியுள்ளது என்றும்‌, ஏழ்மை மிக்க (மரனியங்களற்ற) கோயில்கட்டு பூசை நடத்த வேண்டியும்‌, பாலை வழிகளில்‌ தண்ணீர்ப்பந்தல்‌ வைக்க வேண்டியும்‌, சிராத்தம்‌ செய்ய வேண்டும்‌ என்றும்‌, :
தீர்த்த யாத்திரைபோக வேண்டுமென்றும்‌, நோன்பு
(விரதம்‌) முதலியவற்றுக்காகவும்‌, நோய்‌ தீர்க்கவும்‌ என்று சொல்லி பட்டத்தரசியுடன்‌ சென்று தெரிந்தும்‌, தெரியாதும்‌ கொடை தந்த பொருட்களை முதிய பணியாளர்கள்‌ கொண்டு வந்து தர இடைவிட்டுக்‌ கட்டிய தோரணம்‌ போலுள்ள கரங்களால்‌ வாங்கிய ஏகதண்டி (சுமார்த்தர்கள்‌) திரிதண்டி
(வைணவர்கள்‌) பிரம்மசாரிகளின்‌ கையி3லந்திய கோல்களில்‌ காவி வண்ணக்‌ கொடிகளும்‌, பச்சைக்‌ கொடிகளும்‌ உடைகளும்‌,
நிறைந்து, யாசிக்கும்‌ வித்தையன்றி வேறு வித்தையறியாத
இரவலர்கள்‌ கூட்டமும்‌ நிறைந்து கடக்கும்‌, மேற்கு வாசலில்‌
அந்த யாமுனரும்‌ சென்று என்‌ கதைகளை முன்பே கேட்ட பாண்டிய மன்னன்‌ பட்டத்தரசியிடம்‌ வாயிலர்‌ மூலம்‌ சொல்லி
யனுப்பி “வெளி நாட்டவன்‌, விஷ்ணுவே பரதத்துவம்‌ என வாதில்‌ நிரூபித்து வெல்வேன்‌. அரசன்‌ விஷ்ணு பக்தர்களை மதியான்‌.
ஆகுலின்‌ அவனிடம்‌ நேரில்‌ யானோ, மற்றவர்களோ சென்று கூற முடியாது. நீ கணவன்பால்‌ அன்பும்‌ விஷ்ணு பக்தியும்‌ உடையவள்‌ ஆதலின்‌ உன்னிடம்‌ விண்ணப்பம்‌ செய்து கொள்‌கிறேன்‌. நீ சொல்வதை அரசன்‌ கேட்பான்‌. நீ சொல்லி என்னை
அழைப்பித்து வாதம்‌ செய்ய ஏற்பாடு செய்வாயாயின்‌ வாதம்‌ செய்து வென்று உன்‌ கணவனை விஷ்ணு பக்தனாக்கி பேறு
பெற்றவனாக்குவேன்‌.” என்று கூறி அனுப்பினான்‌. IV—53
* கிருதமாலா–மதுரையில்‌ தெற்கில்‌ உள்ள சிற்றாறு. புனித நீதியாக மதிக்கப்பட்டது. மகாபாரதத்திலும்‌ இந்நதி குறிப்பிடப்‌ பட்டுள்ளது. தற்போது இந்த அறு தூய்மையற்ற சிறுகால்‌வஈயாக மதுரை தெற்கு மேமபாலததருகே காணப்டுகிறது,

கோடைக்‌ காலத்தில்‌ வாடியிருந்த வெண்‌ மயில்‌ புது முகில்‌ முழக்கம்‌ கேட்டதும்‌ மகிழ்வுறுவதுபோல மகிழ்ச்சியுற்று, அந்த
அரசி தனித்திருக்கும்போது கணவனிடம்‌ யாமுனரைப்‌ பற்றிய செய்தி அறிவிக்கவும்‌ அரசன்‌ வியப்புற்று 1V—54

“எப்படி எப்படி? தான்‌ வாதம்‌ செய்து சைவமதத்தை வெல்வதற்கு வந்தானோ? பார்ப்போம்‌, வரவமைக்கவும்‌” என்று
கூறு அன்றிரவு சுமியவும்‌ 1V—55

காலையில்‌ ஜரா பாடு கூடிய அவையில்‌ (குறிப்பிட்ட உயர்‌ காரிகள்‌, கவிஞர்கள்‌, மட்டும்‌ உள்ள ௮வை) கொலுவிருக்கும்‌
சுணவன்‌ அருஇல்‌:.தான்‌ அமர்ந்து இருந்து அந்த மதிமுகத்தாள்‌, கணவனின்‌ அனுமதியுடன்‌ காவல்‌ மூலம்‌ ஏவி அமழைப்பிக்கவும்‌
அவ்‌ அந்தண குமாரன்‌ 1-0

ஆளவந்தார்‌ பாண்டியன்‌ அவைபுகல்‌
வாயில்புக்கு, கருடபச்சைகளுடன்‌ கூடிய நிலத்தில்‌ வைரம்‌ பொதிந்த மேடையுடன்‌ அமைந்த செந்தளிர்களுடைய *அசுவத்த
மரம்‌ (அரசமரம்‌) கண்டு அதனை வாகுத்திற்கு சாட்ியாக்கி வலம்‌ வந்து வணங்கினான்‌. IV—57

பொன்‌ வேய்ந்த மூன்றுபடிக்கட்டுகளையுடையதும்‌ பரந்‌ துயர்ந்து சத்திர வேலைப்‌ பாடுகளுடன்‌ கூடியதும்‌ ஆன மேடை
யில்‌, இரத்தினகம்பள மெத்தையில்‌, பாண்டிய மன்னன்‌ அமர்ந்‌ இருந்தான்‌. அவனைச்‌ சுற்றிலும்‌ புலித்தோல்‌ மேலாடையாக
உடைய முதிய சைவ சன்னியாசிகள்‌ இருந்தனர்‌. முத்துச்சரத்‌ இல்‌ கோர்த்த ருத்திராட்சை மாலை அணிந்து, நெற்றியில்‌ பூசிய
விபூதி விசிறியினால்‌ வீசிய காற்‌.றில்‌ உதிர சிவந்த கண்களுடன்‌சிறு பீடத்தில்‌ வட்டத்‌ தலையணையில்‌ முழங்கையை ஊன்றி
நந்தி பொறித்த மோதிரக்‌ கையை கன்னத்தில்‌ வைத்தவாறு, சைவாகமங்களைக்‌ கேட்டவாறு, பொன்பொதிந்த சிறிய ருத்தி
ராட்சங்கள்‌ காதில்‌ பளபளத்து ஒளிர, வெண்தலைப்பாகையின்‌ மேலாக பெண்துகில்‌ ‘போர்த்து, தாம்பூலப்படிகம்‌ ஒருத்தியும்‌
கத்தி ஒருத்தியும்‌ ஏந்தி நிற்க, அரசி வெண்சாமரை வீச ஓலக்கசு மிருந்த மன்னனை யாமுனன்‌ கண்டான்‌. 1V—58

கண்டு, அடக்கத்துடன்‌ அருகளைந்து பூணூல்‌ காணிக்கை யாகத்‌ தந்து அமரவும்‌, அரசன்‌ ஆதரவு காட்டாமல்‌ பரபரப்புடன்‌
இவ்விதம்‌ கூறினான்‌. IV—59

“என்னப்பா? சிறிய குட்டிப்‌ பயல்‌ நீ, உனக்குத்‌ தகுமா? துத்துவவாத நிர்ணயங்கள்‌ செய்ய இயலுமா? தோற்றால்‌ ஐயோ
அப்பா என்று கூவினும்‌ பிடித்து லிங்கத்தைக்‌ கட்டாமல்‌ விட மாட்டோம்‌ தெரிந்து சொல்‌!” IV—60

வாதாடுவோம்‌ என்று சொல்லிவிட்டு வருவார்கள்‌. தோற்ற பின்‌ வெட்கமில்லாமல்‌ ஏதாயினும்‌ தயவுடன்‌ தரமாட்டீர்களா?
என்பார்கள்‌. இவ்விதமான வஞ்சசமுடன்‌ சபையிலேறும்‌, துணிவுடைய பிராமணர்களைப்‌ பற்றிச்‌ சொல்வானேன்‌? 774-061

ஓன்று கூறி இரகூயுமாக தேவியைப்‌ பார்த்து இவ்விதம்‌ “கூறினான்‌. IvV—62

“என்‌ (சைவ) மதத்தவன்‌ தோற்றால்‌, விபூதி, ௬ுத்திராட்சங்‌ி களைத்‌ துறந்து இவனால்‌, வியப்புறும்‌ வகையில்‌ என்னவர்‌
களுடன்‌ விஷ்ணுவின்‌ சக்கிர முத்திரையை ஏற்றுக்‌ கொண்டவனா கிறேன்‌. 77. 63

“பெண்ணே! உனது இந்த பண்டிதன்‌ தோற்றால்‌, உனக்கும்‌ இவனுக்குச்‌ சொன்ன மாதிரி தான்‌’* (கழுத்தில்‌ லிங்கம்‌ கட்டி
விடுவேன்‌), “பஞ்சபூதங்கள்‌ சாட்சியாக தேவரீர்‌ ஆணை குவறாமல்‌ இருந்தால்‌ போதும்‌.” ” IV—64

என்று கூறும்‌ அவ்விருவரின்‌ சபதங்களைக்கேட்டு IV—€3

அவன்‌ (யாமுளர்‌) மான்தால்‌ படபட என ஒலிப்ப, மஞ்சள்‌ துணி கட்டிய புரசங்கோல்‌ மேலெழ, கை கூப்பி அடக்கமுடன்‌ ,
விண்ணப்பம்‌ என்று பாதி இருக்கையிலிருந்து எழுந்து தைரியமுடன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. IV—66

“தவா? இவ்விதம்‌ கூறலாகாது. நான்‌ வயிற்றுப்‌ பாட்டுக்‌காக இங்குவரவில்லை. என்தோற்றம்‌ (பிரம்மச்சாரி)கண்டாலே,
பிரம்மா பிச்சை ஏற்றுண்ணுமாறு விதித்துள்ளான்‌ ஆதலின்‌ (வேறு தேவைகள்‌) இல்லை எவ்பதுணரலாம்‌. [77-07

எவர்‌ எல்லா உயிர்களிலும்‌ இருப்பாரோ அவரே இவ்விதம்‌ (வாதாடத்‌)தூண்டினார்‌. அவர்‌ கட்டளைப்படியே வந்துள்ளேன்‌.
தெரிந்தது நாலு சொல்ல எல்லாம்‌ நல்லதாகவே முடியும்‌. அவரே பொய்‌ கூறின்‌ நான்‌ என்ன செய்ய முடியும்‌. IV—68

அரசே! நானே போட்டியிட வந்தேன்‌. என்று நிளைத்தாலும்‌ அப்படியே ஆகட்டும்‌. அம்மா (அரசி) அழைத்து வந்து
பண்டிதம்‌ என்று (தாட்சண்ணியம்‌) பார்க்க வேண்டாம்‌.
வாதத்தில்‌ தோற்றால்‌ தாங்கள்‌ எப்படிச்‌ செய்ய வேண்டுமானாலும்‌ அப்படியே செய்து கொள்ளுங்கள்‌. Iv—69

என்று தைரியமாகக்‌ கூறி, மீண்டும்‌ அமர்ந்து, அவன்‌ அமைதி யுடன்‌ வாதத்தைத்‌ கொடங்கினான்‌. IV—70

பிறன்மதம்‌ மறுத்தல்‌
* அவர்களுடன்‌ ஒரு அறிஞனைப்‌ பார்த்து, அவன்‌ கூறிய வாதங்களை மீண்டும்‌ தானும்‌ கூறி அவன்‌ கருத்தை நிச்சயப்‌
படுத்திக்கொண்டு, பின்‌ அவன்‌ வாதங்களைக்‌ கண்டிக்கத்‌ தொடங்கி, அவன்‌ சொன்ன சுருத்துக்களின்‌ குற்றங்களை மெல்ல
எடுத்துக்காட்டி, பின்னர்‌ அவ்‌ அவையோர்‌ உடன்படப்‌ இடையே பேசும்‌ வாதங்கட்கு ஒவ்வொன்றாக பதில்கூறி
எல்லோரும்‌ இடைமறித்துப்‌ பேசும்பேதும்‌ கலவரமடையாமல்‌ எல்லோரையும்‌ சமாதானம்‌ அடையச்‌ செய்து, முதலில்‌ பேசிய
வனிடமே திரும்பி மற்றும்‌ சுருதி, சுமிருதி, சூத்திரம்‌ முதலிய
வற்றால்‌ ஒரே கருத்தை உருவாக்கி, தனது சிந்தாந்தத்தை அனைவரும்‌ ஏற்கச்‌ செய்து எதிரியை முறியடித்து அருளோடு
அவனை விடுவித்து* 17-71
* இப்பாடல்‌ மூன்றாம்‌ அத்தியாயம்‌ 6வது பாடலாகும்‌

நீ என்ன சொன்னாய்‌” வருக! (ய) என்ற ௮ அடுத்த த்தவனை இ ணு அவனையும்‌ தோற்றோடச்‌ செய்து அவ்வந்தணன்‌ (யாமுனரீ) அனைவரையும்‌ வென்றான்‌. IV—72

இவ்விதம்‌ வென்று திருமாலே பரதத்துவம்‌ என்று விசிட்டாத்துவிதமே மதம்‌ என்று நிறுவிட. 17:….73
அச்சமயம்‌ அவ்விதம்‌ எதிரிலிருந்த அரச மரத்திலிருந்து “ஓ. மன்ன! இதுவே மெய்ப்பொருள! நாராயணனே பரம்‌ பொருள்‌! [அவனைப்‌ போற்றுவாயாக[!, என்று ஒரு .சொல்‌ கேட்கப்பட்டது. 17-74

அச்சொற்களைக்‌ கேட்டு, வருத்தமுடன்‌ அங்கு கூடியபுற மதத்தார்‌ (பாசண்டர்‌) தலைகுனிந்தவாறு வெளியேறினர்‌.
அவ்வரசன்‌ அவனது (யாமுளர்‌) பெருமைகளையுணர்ந்து மகிழ்ந்து, சாட்டாங்கமாக வணங்கி மகஇழ்ச்சி, வியப்பு ஆய
உணர்ச்சிகள்‌ பொங்கும்‌ இதயத்துடன்‌. இருமால்‌ அடித்தாமரைகட்கு பக்தியடையவனாகி, பேறு பெற்றவனாக, பாண்டிய
மண்டலத்திற்கு மருமகனை பட்டத்துக்‌ குரியவனாதலினால்‌;
தகுந்தவன்‌ என பிரம்மச்சாரியான அவனுக்கு (யாமுனருக்கு) தன்‌ சிறிய தங்கையைக்‌ கொடுத்துத்‌ இருமணம்‌ செய்வித்து,
தட்சணையாக அம்மகாத்மாவுக்கு தாரை வார்த்து பாதி நாடு தந்து, இளவரசாக்கி, வேதவேதாங்கங்களைக்‌ கற்ற அவன்‌
அதுர்வணாவதமும்‌, கற்றவன்‌ என்பதுணர்ந்து, அந்து வேதத்தில்‌          தெய்வீகமான மந்திரதந்திரங்கள்‌ உடைமையும்‌ அறிந்து
அம்மகாத்மாவுக்கு முன்னறிவித்து அரிய பகைவரை அடக்குமாறு போருக்குச்‌ செல்லுமாறு கட்டளையிட அந்த யாமுனரும்‌
இசைந்துபுறப்பட முனைய, அவனது புரோகிதன்‌, முதன்மந்திரி ஆூயோர்‌ மழைக்காலம்‌ வருவதால்‌ அதன்‌ பிறகு சரத்காலத்தில்‌
பகைவரை யடக்கச்‌ செல்சு எனக்‌ கூறவும்‌ அதை அரசனுக்கு அறிவித்து அவன்‌ இசைவு பெற்று அங்கேயே இருந்தான்‌.
அவ்வளவில்‌ 17:75

மழைக்காலம்‌
சூரியன்‌, தான்‌ கடுமையானவன்‌ எனக்‌ கூறுவதனைச்‌ ச௫க்காமல்‌ தானும்‌ வருணனைப்போல நீரிளைச்‌ சேமிக்கும்‌ எண்ணம்‌ உடையவனாக ,நீர்‌ நிலைகளை (ஆவியாகச்‌)சேமித்தும்‌ அமையாமல்‌, வருணன்‌ முதலை (மகரம்‌) யை வாகனமாக்கியது போல தானும்‌ நண்டினை (சர்க்கடகம்‌) வாகனமாக்கிறானோ என கர்க்கடக ரா௫ியில்‌ புகுந்தான்‌. (சூரியன்‌, வருணனைப்போல குளிர்ந்தவன்‌ எனப்‌ பெயா்‌ வாங்கஅவனுடன்‌ போட்டியிட்டான்‌ என்பது கருத்து) 1V~-76
* இப்பாடல்‌ மூன்றாம்‌ அத்தியாயம்‌ 7 வது பாடலாகும்‌

சூரியன்‌ கர்க்கடகம்‌ புகுந்ததுமே, காடு, (வளம்‌) பன்றி(வராகம்‌) எருமை, மயில்‌, யானை, தவளை மன மகிழ்ச்சி
யடைந்தன. ஜன்மராசியிலிருந்து மூன்றாவது ராசியில்‌ சூரியன்‌ புகுந்தால்‌ உலகுக்கு மகழ்ச்சி விளையுமன்றோர?” *
(கிருஷ்ணதேவராயர்‌ தமது சோதிட நூற்புலமை தோன்ற இப்பாடல்‌ அமைத்துள்ளார்‌. வனம்‌, வராகம்‌ முதலிய உயிர்கள்‌
மகிழும்‌ என்றதால்‌ வ என்ற எழுத்துக்குரிய நட்சத்திரம்ரோகினி ஆகும்‌ என்றும்‌ ரோகிணி விருஷபராசி நட்சத்திரம்‌ ஆகலின்‌
விருஷபத்திற்கு மூன்றாவது ராசி கர்க்கடகம்‌ என்றும்‌ அதில்‌ சூரியன்‌ புகுந்ததால்‌ மனமகிழ்ச்சி ஏற்படும்‌ என்று கற்பனை செய்துள்ளார்‌.) 7.77

சூரியனிற்‌ பிறந்த கதிர்களாகய (பெண்‌) மக்கள்‌ கடலினைக்‌
கலந்து கருவுற்று மீண்டும்‌ (மழை பொழிதலாகிய) பிரசவத்திற்‌ காக தனது இல்லம்‌ (பிறந்த வீடாகிய சூரிய மண்டலம்‌) அடைந்‌
தனர்‌. பெண்மக்கள்‌ பெருமையுடன்‌ புக்ககத்தில்‌ இருந்து பின்‌ பிரசவத்திற்காக தாய்‌ வீட்டுக்கு வருவது வழக்கம்‌ (மரபு) அல்லவா? IV—78

பூமியில்‌ முகில்களின்‌ பனிக்குடம்‌ உடைந்த நீர்‌ (முதல்மழை) பொழியக்‌ கண்ட மயில்கள்‌ தாமும்‌ துவிஜர்‌ (இருபிறப்பாளர்‌)
ஆதலின்‌ ஆரணியகம்‌ (காட்டில்‌ எழும்‌ சத்தம்‌) படித்து கருப்பம்‌ சுகப்பிரசவமாதற்கு முயற்சிப்பதுபோல தோன்‌ றியது.
(பல்‌, பறவை, அந்தணர்‌ இரு பிறப்பாளர்‌ என்பது கவி மரபு, பல்‌ விழுந்து மீண்டும்‌ முளைத்திடும்‌ பறவை முட்டையாகி ஒரு
பிறப்பும்‌ பின்‌ முட்டையிலிருந்து பிறப்பது ஆக இரு பிறப்பு எனப்பட்டன. அந்தணர்‌ பிறப்பால்‌ ஒரு பிறப்பு
உபதயனத்தால்‌ இரு பிறப்பு எனப்பட்டனர்‌. ஈண்டு, மேகம்‌ பெண்ணாகவும்‌, முதல்‌ மழை-பிரசவ காலத்தில்‌ பனிக்குடம்‌
உடைதலாகவும்‌, சுகப்பிரசவத்திற்காக வேதத்தின்‌ ஆரணியக பாகம்‌ அந்தணர்‌ ஓதுவது மயில்‌ அகவுதலாசுவும்‌ கற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆரணியகமந்திரம்‌ காட்டில்தான்‌ படிப்பது மரபு. வீட்டில்‌ படித்தால்‌ கருச்சிதைவு ஏற்படுமாம்‌. பிரசவ சமயத்தில்‌ சுகப்‌
பிரசவத்இற்காக அந்தணர்கள்‌ ஓதுவது மரபு, இதனை ஒட்டி இக்கற்பனை செய்துள்ளார்‌ கவிஞர்‌.) IV—-79

இந்திரன்‌, சூரியன்‌ எனும்‌ உலையில்‌, வானம்‌ என்னும்‌ பெரிய கொப்பரையை, நீர்நிறைக்க வேண்டி (அதிலுள்ள துரு,
துளைகள்‌ நீங்க) இடியேற்றுடன்‌ பிறந்த அயக்காந்தம்‌ எனும்‌ துண்டினை வைக்க. (காந்தம்‌ இரும்பை ஈரத்‌ தலான்‌) உலகிலுள்ள
இரும்புத்தூளை ஈர்த்தனவோ, எனுமாறு, கோடையில்‌ காட்டுத்‌ தீயால்‌ 1எழுந்தமை (புகைக்கரி) சூறவளியால்‌ மேலெழுந்து
போய்‌, முதலில்‌ பருந்தளவு இருந்த மேகத்தை சார்ந்து பெரிய முகிலாக மாறியது. IV—80

மேகங்கள்‌, எனும்‌ யானைச்குட்டிகள்‌, வானகத்து ஐராவத யானையிடம்‌ கற்றதோ எனுமாறு பூமியில்‌ இறங்கி சூறாவளி
என்னும்‌ துதிக்கையால்‌ பூழ்த்தியை வாரி இறைத்து கடல்‌ நீரை உறிஞ்சி வானத்திலிருந்து சொரிந்து திரிந்தன .Iv—81

நீர்‌ (பால்‌) குடித்தபுதிய முகிற்குழந்தைகளின்‌?ஆலங்கட்‌ டிகள்‌ எனும்‌ பாற்பற்கள்‌ உதிர்ந்தன. மீண்டும்‌ கொக்குகள்‌ எனும்‌
இருப்பிறப்பின (பறவை-பல்‌) கஇடைத்தன, முகில்‌ வளர வளர குரலும்‌ கம்பீரமானது.
(வடமொழில்‌ பயஸ்‌ என்றால்‌ பால்‌, நீர்‌ என்ற இரு பொருளும்‌ உண்டு. அது சிலேடையாகச்‌ சிறப்புறுகிறது. இரு
பிறப்பு (துவிஐ) என்பது பறவை, பல்‌, அந்தணர்‌ மூவர்க்கும்‌ உரித்தெனக்கூறல்‌ கவிமரபு. குரல்‌ கம்பீரமடைதல்‌ இடிமுழக்‌
கத்தைக்குறிக்கும்‌) கொக்கு முகிலின்‌இரண்டாவது முளைத்து பல்லாக உவமை. IV—82

குனது நீரை கதிரவனின்‌ கதிர்களாகிய (திருடர்கள்‌) எடுத்துக்‌ கொண்டு போகவே, பூமி, சூறாவளிக்‌ காற்றின்‌ மூலம்‌ மேல்‌
சென்று இந்திரனிடம்‌ (அரசனிடம்‌) முறையிடவும்‌, அவன்‌திருட்டைக்‌ கண்டுபிடிக்க வானத்தில்‌ வில்‌ ஏந்தவும்‌, (அதைக்‌
கண்டு) பயந்த ஆயிரங்கற்றைகளுடைய ஆதித்தனும்‌ மறைவாக மு௫ல்‌ இறங்கி தான்‌ (கவர்ந்த பொருனை) &ீமே கொட்டியது
போல மின்னல்‌ வெளிச்சத்தில்‌ மழை நீர்‌ வெள்ளம்‌ saree IV—83

முதன்மழை பொழிந்ததும்‌ (மண்ணிலிருந்துஎழும்‌) ஆவியாகிய கொடிகள்‌ மேலெழுந்து, இந்திரன்‌ முதன்‌ மழை வெள்ளத்தைக்‌
கண்டு பயந்து பிரளயகாலமோ எனக்‌ கருதி அதைத்‌ தடுத்து நிறுத்த அதன்‌ பாதங்களில்‌ (நீர்த்தாரைகளாகிய நூல்களில்‌)
தளையிட்ட விலங்குகளோ எனத்தோன்றியது. IV—84

மூன்பு வானத்தில்‌ எந்தத்‌ தடையும்‌ இன்றி ஓசையின்றிச்‌ சென்ற சூரிய சந்திரரின்‌ தேர்கள்‌, மழைக்காலத்தில்‌ முகில்கள்‌
குடையாவதால்‌ அதன்‌ மேல்‌ உராய்வதால்‌ எழும்‌ தேதர்ச்‌ சக்கரங்களின்‌ முழக்கமோ எனுமாறு இரவும்‌ பகலும்‌ பயங்கர
மான இடி முழக்கங்கள்‌ முழங்கின. IN=85

அன்றாடம்‌ கடல்‌ நீரைக்‌ குடித்ததினால்‌ படிந்த உப்புப்‌ பாளங்கள்‌, வளரும்‌ காட்டுத்‌ தீயாகிய இடி மின்னல்களின்‌ நெருப்‌
பில்‌ பட்டு, ௪டசட வெனப்‌ பற்றி வெடித்ததுவோ? எனுமாறு பயங்கரமான முழக்கங்களை மேகங்களின்‌ கருவறைகள்‌ உ௬-:வாக்கின. 1V—86

சூரிய கரணங்கள்‌ தாகங்கொண்டு கடலைச்‌ சேர்ந்து நீர்‌. சிறிது குடிக்கு முயலும்போது, உடனே தனது சூட்டினால்‌. சுய்‌
யென்ற ஒலியுடன்‌ எழுந்தபுகை சுற்றிக்‌ கொண்டு மேலெழவும்‌ காற்றிற்‌ கலைந்த மேகத்‌ திடைவெளிகளில்‌ காணப்பட்டதாக
புகை சுண்களில்‌ பட்டு எரிச்சலை மூட்டிக்‌ கண்ணீர்‌ உண்டாகியது போல மழை பொழிந்தது. IV—87

பூமியில்‌ உள்ள நீரையெல்லாம்‌ சூரியன்‌ கவர்ந்ததால்‌, (பூமி சூரியனின்‌ பகைவனான) இராகுவிடம்‌, பகைவனுக்குப்‌ பகைவன்‌
நண்பன்‌ எனும்‌ நியாயப்படி முறையிட அந்த நீரை ஒரே தட வையில்‌ கவிழ்க்குமாறு செய்ய எவ்வளவு பேருருவம்‌ தேதேவையோ
அந்த அளவு உருவெடுத்தாற்போல கார்முகில்கள்‌ வாளம்‌ முழுவதும்‌ பரந்திருந்தன. IV—83

புற்றிலிருந்து புறப்பட்டு வானச்‌ சுவரில்‌ ஏறிச்‌ செல்லும்‌ வாளவில்லாகிய பல்‌ வண்ண முடைய பூரான்‌ (ஆயிரங்கால்‌
பூச்சி எனினும்‌ அமையும்‌) நடந்து செல்லும்‌ கால்சுளோ எனு மாறு காற்றடித்தலால்‌ அசையும்‌ கார்முகில்‌ குழுவின்‌ மழைத்‌
தாரைக்‌ கால்கள்‌ வானகம்‌ முழுவதும்‌ நடந்தன. IV—89

ஒருதுளி கூட பயிர்களோடு கூடிய பூமிக்கு இறங்க விடாமல்‌ நெருங்கி மொய்த்துக்‌ குடித்துச்‌ சாதகங்கள்‌ (வான்‌ குயில்கள்‌)
குடுக்கன்றன என்று மனதிற்‌ சினந்த முகில்‌, அவை ஆடிக்கொண்டிராமல்‌ அகலும்படியாக குழலில்‌ ஊதி உண்டைகளை எறிந்தாற்‌
போல்‌, ஆலங்கட்டிகளை மழையோடு உதிர்த்தன. (குழலில்‌உண்டைக்‌ கற்களை வைத்து வாயால்‌ வேகமாக ஊதி அக்கற்‌
சுளால்‌ பறவைகளைப்‌ பிடித்தலும்‌ விரட்டலும்‌ முன்னோர்‌ கையாண்ட முறையாகும்‌) 1.90

முதலில்‌ பெய்த இளஞ்சாரல்‌ மமை சடசட வென இறங்கி தடுவீட்டை நனைத்துச்‌ செல்லவும்‌,
இரண்டாவது தொடர்ந்த மழை ஆலங்கட்டிகளுடன்‌ விழ (அதன்‌ குளிர்ச்சியும்‌ நிலத்தின்‌ வெம்மையும்‌ கலந்து எழுந்து) அவி எழுந்து மண்மணம்‌ பரப்பி முன்போலவே செல்ல, மூன்றாவதாக மீண்டும்‌ வந்த மழை நின்று பெய்து மின்னலிடிகளுடன்‌ வெள்ளம்‌ பொழிந்து உலஇனையே இருளில்‌ மூழ்கச்செய்ய, ஊஞ்சல்‌ சங்கிலிபோல&£ழும்‌ மேலுமாகப்‌ பெய்த மமழைபெருமமை யாகா மேலும்‌ மேலும்‌ ஊற்றிய வண்ணமிருந்தது,
நிலத்தைப்‌ பிளப்பதுபோல கனமமைத்துளிகள்‌ வீழ்ந்து, வேசுமான காற்றோடு இடைவிடாமல்‌ குடத்தைக்‌ கவிழ்த்தாற்‌ போல தாரைகள்‌ வீழ்ந்து வெள்ளக்‌ கஈடரதி விண்ணும்‌ மண்ணும்‌ ஒன்றாமாறு மழை பெய்தது, 1/9]

அந்த இந்திரன்‌ மயில்களாகிய நடனக்‌ காரர்களை ஆடச்‌ செய்தபோது, காற்றாகிய மிருதங்கக்‌ காரன்‌, மேகமாகிய மிரு தங்கத்தைக்‌ கமும்‌ மேலும்‌ ஆட்டி வாசிக்க நிலத்தில்‌ விழும்‌ வென்னிய தாரைகளும்‌, அந்த நீர்த்தாரைகளில்‌ அசைந்தாடும்‌ இந்திர கோபம்‌ (தம்பலம்‌) பூச்சிகளும்‌, மிரு தங்கத்தை அலங்கரிக்‌ கும்‌ வெண்‌ சரிகையும்‌ அதில்‌ கோத்த சிவந்த குஞ்சமும்‌ போரவத்‌ கோன்றின. 1/2

முதலில்‌ பெருமழை பொழியும்போது காற்றடித்து ஒருக்‌ ஈரய்வாக இழுக்கவும்‌ மேகங்கள்‌ இந்திரன்‌ அமரும்‌ தேர்களோ எனுமாறு இயங்கின. முஇில்களில்‌ மின்னல்கொடி. பிடிக்கவும்‌, இருவிழாவிற்கொடியேழ்றுவதால்‌ Shouy A பிறஊர்கட்கு செல்ல இயலாதவாறு (கொடித்தடை) போல மக்கள்‌ (மழை _ விடாது பெய்தலின்‌) தத்தம்‌. இல்லங்களிலேயே வெளிமயற முடியாது தங்களரி, IV—93

வசந்த காலத்தில்‌ மஞ்சள்வண்மைச்‌ சம்பங்கி பூக்கள்‌ மிகுஇ யாகக்‌ கிடைத்ததை நம்பி, தாழையை புறக்கடையில்‌ வைத்த அதே மக்கள்‌, கற்போது (சம்பங்கி கிடைக்காததால்‌ அதே வண்ணம்‌ ஓத்த) தாழை (சைதை) மடல்களை விரும்பிடவும்‌ அவை அவார்களைப பார்த்து (முன்பு மட்டும்‌ அலட்சியப்படுத்தி னீர்களே என்று கூறுமுகத்தான்‌ சிரிப்பது போல வாய்திறந்து விரிந்தன. ்‌
(தாழம்‌ பூக்கள்‌ முள்ளுடைத்தாதலின்‌ வேலிகளின்‌  களில்‌ போட்டு வளர்ப்பர்‌, அதனை அலட்சியமா (1றக்கடையில்‌ வைத்ததாக கவிஞர்‌ கற்பனை செய்துள்ளார்‌.) IV–94

எப்போதும்‌ வானகத்துப்‌ பூர்தோட்டங்களில்‌ இருந்து (பாரி சாதம்‌ முதலிய பூக்களின்‌ மணம்‌ அடைந்து, மழைக்‌ காலத்தில்‌ முகிலுடன்‌ 8ீமே இறங்கி ஓடி வந்த மின்னல்‌, தாழம்‌ புதரில்‌ இறங்கவும்‌, அங்குள்ள பெண்‌ நாகப்பாம்புகள்‌ (மின்னலின்‌ பாரி சாதவாசனைக்‌ காட்பட்டு) பிணைத்துக்‌ கொள்ளவும்‌ விடுபட முடியாமல்‌ அகப்பட்டுக்‌ சொண்டனவோ எனுமாறுதாழம்புதரில்‌ பொன்தகட்டிளனை இகழும்‌ தாழம்பூ மடல்கள்‌ நிறைந்து எழில்‌ பெற்றன.
(மின்னல்‌ பாம்பு போல்தலின்‌ பெண்‌ பாம்புகள்‌ பிணைந்தன என்றும்‌, சுவர்க்க லோகப்‌ பூமணத்தைக்‌ சுவார்ந்து வந்தமின்னலை செல்வம்‌ மிக்கவளை நாடும்‌ மகளிர்‌ என பெண்‌ நாகங்கள்‌ குவர்ந்‌ தீன என்றும்‌ குறிப்பு தோன்றுகிற த) IV—95

வேனிற்காலத்தில்‌ மன்‌ மதன்‌ வில்லாகிய கரும்‌?பநிலத்தோடு கிடந்ததுதான்‌ இப்போது பசிய இலைகளும்‌, கணுக்களில்‌ சாம்பல்‌ பூத்தும்‌ மேல்‌ தோல்‌ சிவந்தும்‌ மூவண்ணப்‌ பொலிவுற்று இருக்கவும்‌. மன்மதன்‌ அதனை கைப்பிடியில்‌ இறுச்கவும்‌ அதிலி ருந்து உதிர்ந்த முத்துக்களோ எனுமாறு, வாளவில்லோடு கூடிய முகிலிலிருந்து உதிர்ந்த ஆலங்கட்டிகள்‌ தோன்றின. இதன இத்திரவில்‌ என்பது சரியல்ல! இந்திரவில்லானால்‌ புற்றில்‌ பிறப்பானளேன்‌?
(கரும்பில்‌ முத்துக்கள்‌ தோன்றும்‌ என்பதுகவிமரபு. வானவில்‌ பல்வண்ணம்போல கரும்புவில்லும்‌ மூவண்ணப்பொலிவுறு கத லான்‌, உவமை இந்திறவில்‌ அன்று! மன்மதன்‌ வில்‌”* என்று கற்‌ பனை நயம்‌ கூறப்பட்டது) TV—96

இவன்‌ மிகுந்த நீரைக்‌ கடலிலிருந்து குடித்திருக்கிறான்‌! எல்‌ லாமே சொரிந்தால்‌ மிகுமழை என்னும்‌ கேடுண்டாகும்‌. அளவோடு முகில்‌ உருவில்‌ பொழிந்த மழையே பரயிர்கட்குப்‌ போதும்‌. என்று மனதில்‌ நினைத்த பிரம்மதேவன்‌, வானத்தில்‌ சூரியனைச்‌ சுற்றிலும்‌ (மிகுநீர்‌ வெளியேறாது தடுக்கக்‌) கட்டிய
அணைபோல வட்டமான பரிவட்டம்‌ சூழ்ந்திருந்தது. [3.97

வானகம்‌ எனும்‌ அரநிகத்தில்‌ மிகுந்த திறமையுடன்‌ காளி | தேவி எனும்‌ மகம்‌, நீலப்புடவை தரித்து நாட்டியமாடும்போது
அவள்‌ வாயிலிருந்து உமிமும்‌ நெருப்புத்‌ துண்டுசகுளோ எனுமாறு இயந்திர கோபப்‌ (தம்பலம்‌) பூச்சிகளின்‌ கூட்டம்‌ பூமியில்‌ உதார்ந்தன. 7898

சூரியனின்‌ கதிர்கள்‌, மேகமாக, அமாவாசையன்று சந்தி னைச்‌ சேர்ந்ததும்‌ (சந்திரனிடமுள்ள அமுதத்தை) மழைச்‌
சமயம்‌ வந்தபோது தான்‌ உண்ட அமுதத்‌ துளிகளை மீண்டும்‌ உமிழ்ந்தனவோ எனுமாறு ஆலங்கட்டிகள்‌ மிகுதியும்‌ உதிர்ந்தன.
(அமுதத்துளிகள்‌ நீராகிலும்‌ மேகத்தின்‌ குளிர்மையால்‌ கட்டி யாகி வீழ்ந்ததுவே ஆலங்கட்டிகள்‌ என்பது கற்பனை. சூரியனும்‌
சந்திரனும்‌ சேர்வதுவே அமாவாசை என்பது சோதிட நரல்‌ மரபு) IVv—99

முதலில்‌ மேகங்களில்‌ ஒளியோடு இகழ்ந்த வானவில்லின்‌ செம்மை நிறம்‌ எல்லாம்‌, மழை நீரோடு கரைந்து செந்நுரை
படிந்தாற்போல இந்தர கோபப்பூச்சகள்‌ காணப்பட்டன. வான வில்லின்‌ பிய வண்ணமே கரைந்து கரைந்து மண்ணிற்‌ படுந்‌
துள்ளது போல பசும்புல்வெளிகள்‌ தோன்றின.
(வானவில்லின்‌ பச்சை நிறமே மழை நீரால்‌ கரைந்து பூமியில்‌ பசும்‌ புல்லாகவும்‌, செவ்வண்ணம்‌ தம்பலப்‌ பூச்சிகளாகவும்‌ தெரிவதாகக்‌ கற்பனை.) Iv—100

மேகங்கள்‌, படீர்‌, படீர்‌ என உறுமி முழக்கவும்‌, திடுக்கிட்டுப்‌ பயத்த பூமிதேவி, வைடூரிய மணி முூனைகளாகிய புளகாங்கித
முற்று, தன்‌ தலைவனாகிய தூங்கும்‌ நாராயணனைத்‌ தழுவ விரைந்த கரங்களோ எனுமாறு, கற்கணப்‌ பறவைகள்‌ ஓலிப்ப
புல்‌ மிதக்கவும்‌, வண்டல்‌ (சேறு) மேலேபடிந்தவாறு நதிகள்‌ விரைந்து கடலிற்‌ புகுந்தன.
(வண்டல்படிந்த நீரால்‌ சந்தனம்‌ பூசிய சரம்‌ ஆக உவமிக்கப்‌ பட்டது. . கடலில்‌ இருமால்‌ துயில்வதாக மரபு) 4-101-

மயில்‌ சட்ஜம்‌ எனும்‌ சுரம்தவீர இல்லாததாலும்‌, மேகத்தின்‌ . முழக்கம்‌ கடுமையாதலாலும்‌, (கோடையில்‌) பிரிவாற்றாது
மெலிந்த நதிகளாகிய நங்கையர்‌ சடல்சலைவனளைக்‌ கலந்துற வாடத்‌ துணையாகும்‌ தூதியராக மயில்‌ அகவலே அமுதமாக இனித்தது. 1V—102

பேருடலினனாஇய இராகு, சந்திரனின்‌ அமுதத்தை விழுங்கவும்‌, திருமால்‌ கண்டித்த கழுத்துப்போல, கருமேகுத்தில்‌ வானவில்‌
தோன்றியது. அந்த சக்கிராயுதம்‌ (சுதரிசனம்‌) போல வானத்‌தில்‌ பிரதி சூரிய பிம்பம்‌ தோன்றியது.
(மழைக்‌ காலத்தில்‌ வானத்தில்‌ சூரிய பிம்பம்‌ போல எதிர்‌ பிம்பமும்‌ தோன்றும்‌ என்பது வானநால்‌ கருத்தாகும்‌.) IV—103

இடியின்‌ கூர்மை, நீரின்‌ இனிமை, மயிலின்செருக்கு, மின்னல்‌ தீச்சுடர்‌, ஆலங்கட்டிவெண்மை, கொக்குகளின்‌ வளர்ச்சி, நன்னீர்‌
மழை வளம்‌, இவற்றைத்‌ தருவதற்காக மேகம்‌ முறையே உப்பு, கருப்பஞ்சாறு, கள்‌, நெய்‌, தயிர்‌, பால்‌, நன்னீர்‌ ஆகிய ஏழு கடல்‌
களில்‌ படிந்து குடித்தனவோ என்னத்‌ தோன்றிற்று.
(இடியின்‌ கூர்மைக்கு உப்பும்‌, நீரின்‌ இனிமைக்கு கருப்பஞ்‌சாறும்‌, மயிலின்‌ செருக்குக்கு கள்ளும்‌, மின்னல்‌இக்கு சுடர்மிக
நெய்யும்‌, ஆலங்கட்டிக்குதயிரும்‌ கொக்குவிற்கு பாலும்‌, மழைக்கு நன்னீரும்‌ குடித்தன என்று கூறப்பட்டுள்ளது. ஏழு கடல்கள்‌
என்பது புராண வழக்கு) 17104

சிறியபசுமையானமின்னல்‌ எனும்‌ கெளபீனமும்‌ (கோவணம்‌) வானவில்‌ என்னும்‌ கோலும்‌ தரித்து, நாய்க்குடை என்னும்‌
குடை கிடைக்கவும்‌, மயில்‌ தோகை என்னும்‌ சுவடியை விரித்து. உருமும்‌ முழக்கமே வேதப்படனமாக அமைய எழும்‌ துரசிப்படல
மாகிய பலிச்சக்கரவர்த்தியை அடக்கிய வாளம்‌ மூழுதும்‌ பரந்து நின்ற வாமனளாகிய மேகத்தினை வாயுவாகிய பிரம்மதேவன்‌
உபசரித்து கழுவிய பாத நீர்‌ என்னும்படி மழை சொரிந்தது. 4-105-

மிகு மழையால்‌ பாம்புகள்‌ தம்‌ பூற்றுக்களின்‌ துளைகளை மூட்‌ எடுத்த குடைகளோ எனுமாறு நிலமெங்கும்‌ நாய்க்குடைகள்‌ தோன்றின,
(நாய்க்‌ குடையை தெலுங்கில்‌ புட்டகொடுகு) புற்றுக்குடை என்பரீ, புற்றுகளில்‌ பிறத்திலின்‌ இப்பெயர்‌ வந்தது, இதனை
யொட்டி கற்பனை செய்துள்ளார்‌ கவிஞர்‌.) IV—106

அடிக்கடி வானத்தில்‌ செவ்வாய்க்‌ (அங்காரகன்‌) கிரகம்‌, புரோ அங்காரக யோகம்‌ (முன்செவ்வாய்‌) மூலம்‌ மழையின்மை
யாகிய இமை பயப்பதைக்‌ கண்டு, மேகம்‌ சினந்து, செவ்வாய்‌ கிரகத்தை குடும்பத்தோடு வெளித்‌ தள்ள செவ்வாய்‌ கிரகத்தின்‌
குட்டிகள்‌ கழே வீழ்ந்தனவோ எனுமாறு இயதிர- கோபப்‌பூச்சிகள்‌ உதிர்ந்தன.
(இந்திர கோபம்‌ வானத்திலிருந்து உதுர்வதாகக்‌ கற்பனை செவ்வாய்‌, சிவப்பாதலின்‌ அதன்‌ குட்டி குழந்தைகளாக
கற்பனை செய்யப்பட்டது. புரோ அங்காரகன்‌ மழையின்மையும்‌ புரோ சுக்கிரன்‌ மழை மிகுதியும்‌ தரும்‌ என்பது சோதிட றா
பகையாகிய பாம்புகளை மேகம்‌ மின்னி இடித்தலின்‌ புற்று களுக்குள்‌ புகச்‌ செய்தது என்று கண்ட தவளைக்‌ கூட்டம்‌
பல்வேறு சந்த விருத்தங்களில்‌ பாராட்டிசைத்தனபோல தவளைகள்‌ கத்தின. iv—108

முகில்‌, தன்மெய்யிருட்டினால்‌ பகலை இரவாக்கியும்‌, தனது மின்னொளியால்‌ இரவைப்‌ பகலாக்கியும்‌ மாறுபாடுறச்‌ செய்தது.
எல்லாவற்றையும்‌ உறங்கச்‌ செய்யும்‌ திருமாலையே, உறங்க வைக்கும்‌ பெருமை சேர்ந்த முகிலுக்கு இது ஒன்றும்‌ வியப்பான
செயல்‌ அல்லவே! . © W—109

தரசியடங்கவும்‌ பின்‌ வானத்தில்‌ மின்னல்‌ தோன்றியது எப்படியிருந்ததென்றால்‌ இந்திரன்‌ வான்மகளுக்கு நசைசெய்யும்‌ விருப்பத்துடன்‌ நிலத்தும்‌ மென்மையான பொன்பொடியை மேக மாகிய அரிப்பலகையில்‌ வைத்து வானகங்கை நீரில்‌ கழுவவும்‌ தோன்றும்‌ பொற்சுடர்‌ போலிருந்தது.
(நகை செய்யும்‌ தட்டார்களின்‌ மனைத்‌ தூசியை குவித்து
வைப்பர்‌. அது கருநிறமாக இருக்கும்‌. அதனை மண்‌ அரித்தலசம்‌ பெட்டியில்‌ போட்டு நீர்‌ ஊற்றி ஊற்றி அலசுவர்‌. மண்‌ போய்‌
விட பொன்‌ துகள்கள்‌ மிஞ்சும்‌, அதனைச்‌ சேர்த்து நகையாக்கலாம்‌. இந்த நிகழ்ச்சியை கவிஞர்‌ உருவகித்துள்ளார்‌) 14-10

பெரியதும்‌ பழுத்ததுமான காட்டு அத்திப்‌ பழத்தின்‌ மேல்‌ துளையில்‌ மழைதீர்‌ புகுதலான்‌ கொசுக்‌ கூட்டம்‌. காட்டுத்‌ இப்‌ புகையடங்கிற்று, இனிக்கூட்டம்‌ கூடலாம்‌ என்று ஓய்வு பெற வெளியேறுவதுபோல வெளிச்‌ சென்றன. (மழைக்காலத்தில்‌ கொசுக்கள்‌ மிகுதல்‌ இயல்பு) IV—211

வானத்தில்‌ ஆவணி மாத முகில்கள்‌ வரவும்‌ மலைமேல்‌
மயில்கள்‌ தோகை விரித்தாட, தாழை மடற்பூந்தாதும்‌, மல்லி கைப்‌ பூ மகரந்தமும்‌ படிந்து, பசும்‌ புல்‌ வெளி காணாமல்‌ மூட்‌,
மழை வந்ததும்‌ பசும்புல்‌ மீண்டும்‌ தோன்றுவதுமான காட்சி
மேகமாகிய இந்திர ஜாலவித்தைக்காரன்‌, விபூதி, அறுகம்புல்‌, மயில்‌ தோகைகள்‌ வைத்துக்கொண்டு காட்டும்‌ தோன்றலும்‌
மஷழஹைதலுமான காட்சி அற்புதங்களாக அமைந்தன. IV—112

மலைச்சிகரங்களிலுள்ள நாவல்‌ மரத்திலிருந்து உதிர்ந்த கனி, களில்‌ சாறுகளில்‌ பிறந்தது, ஐம்பூநதி (நாவலாறு) ஆதலின்‌,
அக்கனிச்சாறு முகில்களில்‌ பட்டதும்‌ மின்னலாகிய மேலான தங்கம்‌ ஆயிற்று.
(நம்‌ நஈட்டுக்கு ஐம்பு.தீவு (நாவலந்தீவு) என்று பெயர்‌… இங்கு
ஜஐம்புநதி பாய்கறதாக கூறுவார்‌. அது பொன்னாறு ஆகும்‌. ஜாம்பு நதம்‌ என்றால்‌ ஐம்பு நதியில்‌ பிறந்தது என்ற பொருள்‌. இத பொன்னைக்‌ குறிக்கும்‌ வட சொல்‌, இந்த அடிப்படையில்‌ “கவிஞர்‌ கற்பனை செய்துள்ளார்‌.) IV—113

வசந்த காலத்தோடு சென்றுவிட்ட, முல்லை தாமரை அசோகம்‌, குவளை, மா ஆகிய மலர்கட்குப்‌ பதிலாக கதம்பம்‌;
(கடப்பம்‌) குண்டுமல்லிகை, காட்டுமுல்லை, மருது, ஆகிய ஐந்து மலர்களும்‌ மன்மதனுக்கு மலரம்புகளாயின,
அதோடு தாழம்பூ என்னும்‌ சுரிகை (கட்டாரி)யும்‌ அதிகமாகக்‌ கிடைத்தது. IV—114

நடனமிடும்‌ மயிலாகிய கதாபாத்திரத்திற்கு மேகமே திரைச்‌ சீலையாயிற்று. மலைமுகட்டில்‌ முகிலின்‌ இலைகள்‌ மேயும்‌ சட்‌
சட்‌ எனும்‌ ஓசையே தாள இசையாக அமைந்தது.
(மேகம்‌ மலைமுசுடூகளின்‌ இலைகள்‌ மேய்ந்து கடல்‌ நீர்‌, குடிக்கும்‌ எனும்‌ மக்கள்‌ வழக்காற்றுக்‌ கற்பனையை ஓட்டி
இலைகள்‌ மேயும்‌ என்று கவிஞர்‌ குறிப்பிட்டார்‌. இலைகளில்‌ பனிக்கட்டி வீழ்ந்தால்‌ இலைகள்‌ துளைபடுதலின்‌ இக்கற்பனை
உருவாயிற்று போலும்‌, மழைபெய்து ஓய்ந்தபின்‌, இலைகளிலிருந்து கட்‌ கட்‌ என மெல்ல மெல்ல விழும்‌ துளிகளின்‌ ஒலியே
தாளமாக கற்பனை செய்துள்ளார்‌ கவிஞர்‌. ரூ.115
(மேகம்‌, உப்போடு புளிப்பும்‌ கலந்தால்‌ சுவையாயிருக்கு மெனக்‌ கருதி) முதலில்‌ உப்புக்‌ கடலைக்‌ குடித்துப்‌ பின்‌ தயிர்க்‌
கடலைக்‌ குடிக்க முனையவும்‌, தயிர்க்கடல்‌ மிகப்பழமையான தாதலின்‌, தயிர்க்கட்டிகள்‌ மிகப்‌ புளிப்புறவே துப்பிவிடவே
அவையே ஆலங்கட்டிகளாக உதிர்ந்தன. பூமியில்‌ விழுந்த ஆலங்‌கட்டிகளைத்‌ தின்றதுமே பல்‌ சிவ்வென்று கூச்சமுறுவானேன்‌?
(புளிப்பு மிகினே பல்‌ கூச்சம்‌ எடுக்கும்‌. ஆலங்கட்டி (பனிக்‌கட்டி) யாதலின்‌ குளிர்‌ மிகுதலானும்‌ பல்‌ கூச்சம்‌ எடுக்கும்‌.
இதனைக்‌ கவிஞர்‌ கற்பனை நயமுடன்‌ விவரித்துள்ளார்‌.) iV—l116

அப்போது (மழைக்‌ காலத்தில்‌) சேறுமிகுந்திருக்கும்‌ நிலங்‌களில்‌ இறங்காமல்‌ மலை முகடுகளில்‌ இருக்கும்‌ மான்‌ கூட்டங்கள்‌
காவல்‌ மந்தையில்‌ (இடையில்‌ இருப்பது போலிருக்க அதைசீசுற்றி முகில்கள்‌ சூழ்ந்திருப்பது இந்திரன்‌ ஆகிய அரசன்‌
வில்லேந்தி வேட்டையாடத்‌ தயார்படுத்திய திரைவேட்டை போல இருந்தது. ்‌
(அரசனுக்காக அதிகாரிகள்‌ காட்டைச்‌ சுற்றிலும்‌ மிருகங்கள்‌ வெளியேறாமல்‌ தடுக்க இரைகட்டி விடுவார்கள்‌. நடுவில்‌ உள்ள
காட்டில்‌ அரசன்‌ எளிதில்‌ வேட்டையாடி. மகிழ்வான்‌. இருஷ்ணதேவராயர்‌ தம்‌ அனுபவ முத்திரைகளை ஆங்காங்கே பதித்திருப்‌
பதற்கு இக்கவிதையும்‌ சான்றாகும்‌). IV—117

மழைநீர்‌ தலையில்‌ விழுந்து உடல்‌ முழுதும்‌ நனைப்பவும்‌ அசைவுற்று, நுனி இமைகளால்‌ (மிகுந்த முயற்சியுடன்‌) கண்‌
இறந்து கண்‌ மூடாது பார்த்துக்கொண்டும்‌, நீர்‌ மூக்கில்‌ மூக்குத்திபோல வீழவும்‌, (சுவாசம்‌ தடைப்படவே), வாயில்‌ கொஞ்சம்‌
வாங்கியும்‌, கொஞ்சம்‌ கூண்டுச்கம்பியில்‌ உராய்ந்தும்‌ நீக்கி, முழங்கால்‌ மார்பில்‌ புக. நடுங்குவதன்றி இறக்கை விதிர்ப்பவும்‌
இயலாமல்‌ பறவைகள்‌ இருந்தன. IV—118

அந்திச்‌ செல்வானம்‌ குங்குமப்‌ பூப்பொலிந்த காசுமீரதேச: மாக ஆகிவிட்டது. அந்தாட்டிலுள்ள சந்திரக்‌ காந்தக்‌ கல்லாக சூரியன்‌ ஆகிவிட்டது. இல்லாவிட்டால்‌ (சந்திரக்காந்தக்‌ கல்‌ கசிந்த நீராகிய) மழை எங்கிருந்து வரும்‌2(குங்குமம்‌ சாசுமீர நாட்டில்‌ விளைவது. அங்கு சந்திரகாந்தக்‌
கற்களும்‌ மிகுதி. ஆதலின்‌ மழை நாட்களில்‌ மப்புமந்தாரத்தி னூடுள்ள சூரியன்‌ சந்திரன்‌ போலத்‌ தோன்றுவதால்‌ சந்திர காந்தக்கல்லாக உவமிக்கப்பட்டது.) W—119

பகலில்‌, சூரிய கிரணங்கள்‌ கடல்‌ நீரைக்‌ குடித்துக்‌ கருக்‌ கொண்டதைக்‌ கண்டு, இரவில்‌, சந்திர கரணங்களும்‌ தாமும்‌
பொறாமை கொண்டு முகில்கள்‌ குடித்துக்‌ கொணர்ந்த அக்கடல்‌ நீரைக்‌ குடித்துக்‌ கருக்கொள்ளக்‌ கூடியவோ எனுமாறு வெள்ளை
நிறக்கொக்குகள்‌ முகில்களைச்‌ சேர்ந்து கருக்கொண்டன. IV— 120

இடிமுழக்கவும்‌ கேட்டுப்பயந்த அளகை நகருக்குச்‌ செல்லும்‌ அன்னப்பறவைகளின்‌ கூட்டம்‌, தின்னுவதற்சாகக்‌ கடித்த
தாமரைக்‌ தண்டின்‌ துண்டுகளை, பயத்தால்‌ வாய்‌ நழுவிக்‌ மேல்‌விழுந்தனவோ எனுமாறு ஆலங்கட்டிகள்‌ உதிர்ந்தன. 1712]

இடி.முழக்கத்தால்‌ விரட்டப்பட்ட பாம்புகளாகிய (புற்று களுக்குள்‌ ஒளிந்து கொள்ளவே) உணவு கிடைக்காவிட்டாலும்‌
மயில்கள்‌ நடனமாடுவதை விடவில்லை. மனதிற்கு மிகுந்த மகழ்ச்சி ஏற்பட்டால்‌ பசியும்‌ தாகமும்‌ தோன்றாதல்லவா? IV—122

சூரியனைப்‌ பார்த்துவிட்டுப்‌ பிறகுண்ணும்‌ விரதமுடையவர்‌கட்கும்‌, ஒணான்கட்கும்‌ பார்வை விண்மேலேயே நின்றன.
மாலை சந்தியாவந்தனம்‌ செய்யும்‌ அந்தணர்கட்கும்‌, வீடு இரும்பும்‌ பசுக்கட்கும்‌, (மாலையாயிற்றோ இல்லையோ என்னும்‌)
மயக்கம்‌ உண்டாயிற்று,
ஏர்வாழ்க்கையுடைய உழவர்‌ கூட்டத்திற்கும்‌ கொக்கு கூட்டத்திற்கும்‌ நல்ல கருக்காலம்‌ (விதை விதைக்கும்‌ காலம்‌) கிடைத்தது.
அழூய காட்டு முல்லைப்‌ பூக்கள்‌ மலர்ந்தன. சந்தையில்‌ மக்கள்‌ (மழைக்கஞ்சி) கலைந்து சென்றனர்‌. விருந்தினர்‌ (அதிதி) கூட்டத்திற்கு (வெளிச்சென்று உணவு சாப்பிட முடியாமல்‌) வாய்க்கட்டப்பட்டது. ஈன்றணிமையுடைய எருமைக்‌ கன்றுக்குட்டிகள்‌ (குஸிரால்‌) வாய்க்கட்டு ஏற்பட்டது.
மண்மாடியுடையவர்கள்‌ (நீர்‌ ஓழுகுவதால்‌) தமக்கும்‌,
காமன் பணிக்கும்‌ (கலவிபுரிவார்க்கும்‌) காதலியைப்‌ பிரிந்தவர்‌ கட்டும்‌, தாச்சும்‌, கெட்டது. 14… 123

எமனின்‌ வாசுனமாகிய எருமை தான்‌ காளையாக இருந்தால்‌, மேட்டு நிலங்களை உழச்செய்வர்‌ (நல்லவேளை தப்பித்தோம்‌) எருமையாக இருப்பதால்‌ பிழைத்தோம்‌ என்றும்‌, எமனை மிதித்த ஈசுவரனின்‌ வாகனமாகிய நந்தி (எருது), :₹நல்லவேளையாக உழவுமாடாக இல்லாமற்போனோம்‌’”. நம்மையும்‌ வயலில்‌ சேற்றுமவிற்‌ கட்டியிருப்பர்‌ ஏதோ தப்பித்தோம்‌” என்றும்‌ மகழ்ச்சியுற்றன எனுமாறு எல்லா மாடுகளையும்‌ பூட்டி மேட்டு நிலம்‌, பள்ளக்கால்‌ எல்லாம்‌ ஏரைப்‌ பிடித்கோட்டி ஏழைகள்‌ கூட உழவு செய்தனர்‌. IV—124

வயலில்‌ சேற்றில்‌ மிதித்து உழவர்கள்‌ (கொத்தைகளை சமப்‌ படுத்த மிதிக்கும்‌ போது) காலில்‌ பொன்னிறமாக வயிற்றினை யுடைய நீர்‌ பாம்பு காலிற்‌ சுற்றிக்‌ கொள்ளவே, உழவர்கட்கு (கழல்‌ அணிந்து) விருது அளித்தாற்போலத்‌ தோன்றியது. IV—125

மழையில்‌ நனைந்த கரும்புச்‌ சக்கைகள்‌ அடுப்பில்‌ போடவும்‌ நெருப்பாறிவிட்டது. இப்பட்டதும்‌ கரும்புச்சாறு வெளியேறுவது
போல மை சுசிந்தன, மக்கள்‌ உணவு சமைக்க இயலாது. விழாக்‌
காலத்தில்‌ இயக்கர்கள்‌ (யட்சகானம்‌ பாடுவோர்‌) கூறும்‌ “சோஹறோ சோறு” எனும்படியாக பொய்யான சோறு (உணவு)
உடையார்கள்‌ அகுமாறு அடுப்புக்கள்‌ மழையால்‌ எரியவும்‌ இல்லை. IV—126

அடைமமை நாட்களில்‌ பெண்டிர்‌ வீடு வீடாகச்‌ சென்று சிறிது நெருப்புக்‌ இடைக்கவே அதைக்‌ கொண்டு வந்தனர்‌,
வீட்டுக்‌ கூரையைப்‌ பிய்த்து அந்‌ நெருப்பைப்‌ பற்றவைத்தனர்‌,
விஈறினால்‌ அன்றிப்‌ பற்றவில்லை. பற்றினாலும்‌ எரியவில்லை. எரிந்தாலும்‌ சோறு சமைக்க முடியவில்லை. கறிவகையும்‌
சமைப்பது அரிதாயிற்று, எப்படியோ சமைத்தாலும்‌ முதல்‌
பத்தியில்‌ உட்கார்ந்தவர்கட்கே தேர்ந்துவிடும்‌, பெண்டிர்‌ மீண்டும்‌ தம்‌ பசிக்காக சமைக்க முயல்வர்‌. நெய்‌ தோய்த்த
துணிகள்‌, வீட்டுக்‌ கூரை ஈத்தைகள்‌ போட்டு எரித்து அவை அழிவது குறித்துக்‌ சவலைப்படவில்லை. பசயோடுள்ள
மனைவி மீண்டும்‌ சமையல்‌ வேலையில்‌ ஈடுபடவே படுச்கையி வுள்ள கணவன்‌, மன்மதனின்‌ குறும்பினால்‌ மனைவி வர
வில்லையோ என்று நொந்து கொண்டிருந்தான்‌. 4-127

இடிகட்‌ கஞ்சிய பெண்டிர்‌, வீட்டின்‌உள்ளேயே வட்டிலைக்‌ நீர்‌ வெளியே ஊற்றவும்‌, அப்போது பளபளக்கும்‌
. வட்டிலின்‌ ஒளி மின்னல்‌ போலத்‌ தோன்ற, புகை படிந்த புல்‌ வேய்ந்த வீடுகள்‌ மேகங்களாகவும்‌ தோன்றின. இந்த (வீடாகிய
மேகங்கள்‌, பூமி முழுதும்‌ வெள்ளத்தில்‌ மூழ்கடித்துவிட்டோம்‌. இனி பாதாளத்தைப்‌ படையெடுப்போம்‌ என்று செல்லும்‌
பாசறை)களாகத்‌ தோன்றின, IV—128

குடையைக்‌ காற்றடித்துக்‌. கொண்டு போக வெறும்‌ காம்பு மட்டும்‌ ஏந்தி ஓடும்‌ வழிப்போக்கர்களை உடல்‌ முழுதும்‌ நனை
வித்த அடைமழை மேகத்துக்கு என்ன பகையோ? எனினும்‌ பிரம்மன்‌ பாதுகாப்பாக, ஒவ்வொரு சமயம்‌ நஞ்சும்‌ அமுதாக்கு
மாறு போல, மழை நீர்‌ அவன்‌ உடலில்‌ நுழைந்து காதலியின்‌ பிரிவினால்‌ ஏற்பட்ட விரகத்‌ தீயினைக்‌ கொஞ்சம்‌ கொஞ்சம்‌ அவித்தது. IV—129

தூரத்தில்‌ சாரல்‌ வரக்கண்ட வழிப்போக்கர்கள்‌ அருகிலுள்ள மரத்தடியில்‌ ஒதுங்கவும்‌, ஏற்கனவே பெய்த சாரலால்‌ நனைந்‌
திருந்த மரக்கிளை, சாரலுக்கு முன்வரும்‌ காற்றினால்‌ அசைக்கப்‌ பட்டு, மழைத்‌ துளிகள்‌ பெய்து, சாரல்‌ வரு முன்பே அவர்களை
(மரங்கள்‌) நனைவித்தன. IV—130

பல்வேறு நாடுகளிலிருந்து வந்த வழிப்போக்கர்கள்‌ மழைக்கு விரைந்தோடி வந்து சாவடியில்‌ ஓதுங்கி, அசுவபஇியை
விட கஜபதி, அவனைவிட நரபதி சிறந்தவன்‌ என்றும்‌, யானைகளின்‌ எண்ணிக்கைகளைப்‌ பற்றியும்‌ தமக்குள்‌ வீண்சண்டைகள்‌
போட்டுக்‌ கொண்டிருப்பர்‌. அதற்குள்‌ மேகம்‌ சிறிதே கலையவும்‌, தாமும்‌ தம்‌ தம்‌ வழிகளைப்‌ பார்த்துக்‌ கொண்டு செல்வர்‌. 2131

காகங்கள்‌ (மழைக்காலத்தில்‌) நந்தவன மரங்களில்‌ கூடுகட்ட புல்‌, முதலியன வாயிற்‌ கவ்விக்‌ கொண்டு திரிதல்‌ காணின்‌ நீஏ
மணிகள்‌ புல்‌ கவர்வன ஆதலின்‌ நிறைந்த கிராமத்திருமகளின்‌ கழுத்திவிட்ட நீலமணிகளோ எனுமாறிருந்தன,
(காந்தம்‌ இரும்புத்‌ தூள்‌ கவர்வது போல நீலமணி, வைக்கோல்‌ (புல்‌) துண்டுகளைக்‌ கவரும்‌ என்பது இரத்தின நூல்‌ மரபு ஆகும்‌.) 1132

ஐப்பசி மாதத்தின்‌ அடை ॥ழைக்‌ காலத்தில்‌ வீட்டிலிருந்து புறப்பட்டு கஞ்சிக்‌ கலயம்‌ எடுத்துக்கொண்டு, மழைக்காக தலை
யில்‌ நார்க்கூடை (தொப்பி போல) வைத்துக்கொண்டு காட்டுக்குச்‌ சென்ற குடியானவர்‌ பெண்களின்‌ பருத்த மென்முலைகளும்‌
(சோளம்‌, கேழ்வரகு) போன்றவற்றின்‌ பசுங்கதிர்களும்‌ உழவர்‌ களால்‌ கசக்கப்பட்டன.
(கதிர்களைக்‌ கசக்கிய தானியத்தை உண்பது இயல்பு “குடை எடுத்துச்‌ சொல்லின்‌ இரு கரங்கட்கும்‌ தொந்தரவு: தரும்‌ என
குலையில்‌ தொப்பிபோல முடைந்த கூரை அணிந்து செல்வரி, 1V—133

அவ்வடைமழைக்‌ காலத்தில்‌, இரட்டியார்கள்‌ (இஅராமத்‌ தவைவார்கள்‌) கரை வகைகளின்‌ (குருது, செஞ்சலி, தும்மா
Sale) மெல்லடகுகளை இளம்‌ புளியந்தளிரோடு சேர்த்து” அவியல்‌ செய்து எண்ணெய்‌ நிறைய *ஊற்றி வதக்கி, ஆவியெழ
உணவுண்பார்கள்‌. பசுக்கள்‌ காட்டுக்குச்‌ செல்ல, இளகஙிகளன்றுகள்‌, ஆட்டுச்‌ சாணக்‌ *கணப்படுப்பின்மேல்‌ கட்டில்‌ பட்டுக்கையில்‌
கிடக்கும்‌ இவர்கள்‌ உடம்பை நக்கும்‌, IV—134

மணி குபின்ற மேடையில்‌ அமர்ந்து, மயில்கள்‌ அகவும்‌ அமுத இசை கேட்டின்புற்று நேரங்கழித்து விழித்தெழுந்து, கமகம
வெனும்‌ பூமணச்‌ சுகந்தப்பொடி மெய்‌ முழுதும்‌ பூசி, இளஞ்‌ சூடான வென்னீரில்‌ நெடுநேரம்‌ குளித்து, ஒளிர்மென்‌
துகிலுடுத்தி ஆரங்கள்‌ பூண்டு, தாழம்பூ மடல்கள்‌’ தரித்து, தாழிகை கழிந்ததும்‌, கொலு மண்டபஞ்செல்லும்‌ நேரம்‌ குறித்த,
செஞ்செற்சோறும்‌, காட்டு வேட்டையிற்‌ கிடைத்த புள்‌, விலங்குகளின்‌ புலாலுடன்‌, புத்துருக்கு நெய்‌ மிகவிட்டு, உணவுண்டு,
கஸ்குரரி மிகுந்த தாம்பூலம்‌ தரித்தலால்‌ கருவண்ணம்‌ இதழில்‌ படிய, அல்‌ கணப்பு எரிய, மேடைச்‌ சாளரங்களில்‌ வந்து
திற்கும்‌. அந்தப்புரத்தினரின்‌ கண்பார்வை மின்னல்கள்‌ ஒளிவீச, மன்னர்கள்‌ மகிழ்ச்சியுடன்‌ இருந்தனர்‌. IV—135

இவ்விதம்‌ இடைவிடாத மழைத்துளிகள்‌ ஒழுக்கும்‌ மிகுமமை மாதங்கள்‌ அமைதியாக கழியவும்‌, அதன்‌ பி.ழகு IV—136

அரச அன்னங்கள்‌ கிரெளஞ்சமலைத்‌ துவாரத்தின்‌ வழியே மீண்டும்‌ திரும்பும்‌ காலமும்‌ நெல்விளைந்து, நாணற்பூக்கள்‌
பூத்துக்‌ குலுங்கும்‌ வேள்வி செய்தற்குரிய காலமும்‌, ஒளிரும்‌ திருமகள்‌ தாமரைப்‌ பூக்களைச்‌ சேர திருமால்‌ பாம்புப்‌ படுக்கை
விட்டெழவும்‌, எடுத்த ஆரத்திபோல, மலர்ந்த செங்கமுநீர்‌ பொய்கைகளையுடைய காலமும்‌, ஆகிய சரத்காலம்‌ உலகில்‌
உதித்தது. 14137

மின்னலாகிய விளக்குச்‌ சுடர்கள்‌ உமிழ்ந்த புகையால்‌ புகை படிந்தது என்ன வானம்‌ இந்திர நீலம்‌, நாவற்‌ பழம்போல
கருநிறமுற்று மிகு செருக்குற்றது. 17138

அந்திச்‌ செவ்வண்ண அலைகளால்‌ பாதி சிவந்த வெண்‌ மு௫ல்கள்‌, வானத்தில்‌ இரிந்து உறக்கத்திலிருந்து எழுந்‌த திருமகள்‌
கேள்வனுக்கு எடுத்த கற்பூர ஆரத்தியோ எனுமாறு சரத்காலத்‌தில்‌ தோன்றின, 14139

நெல்‌ வயலை நாடி வானிற்‌ பறக்கும்‌ கிளிக்‌ கூட்டத்திடையே சிறிதே செவ்வந்தி வண்ணம்‌ படிந்த மேகத்‌ துண்டுகள்‌ விரிந்த
பழங்களுடன்‌ பசும்‌ இலைகளும்‌ கூடிய வெள்ளரித்‌ தோட்டூ போலிருந்தன. வண்டுகள்‌ இறக்கை நுனிபோல்‌ கருவண்ணம்‌
பளபளக்கும்‌ வானத்தில்‌ அம்முகல்கள்‌ பிரதிபலிப்பதாகத்‌ தோன்றின. IV—140

மரவண்டுகள்‌ துளைத்தலால்‌ பொடிப்பொடியாக வான: வில்லிலிருந்து உதிர்ந்த தூள்‌ போல, கண்ணாடி போன்ற
வானத்தில்‌, சணப்பநார்‌ஆ. போன்று வெளுத்துள்ள முகில்‌ துண்டுகள்‌ திரிந்தன, 17… 141

சரத்காலம்‌ எனும்‌ இளநங்கை, (மழைக்‌ காலத்தில்‌ மாசு படிந்து) சந்திர சூரியர்களாகிய கண்ணாடிகளை துலக்குவதற்‌
காக வைத்த சாம்பல்‌ தானோ எனுமாறு ஏழமிலை வாழையின்‌ மகரந்தப்‌ பொடி காற்றால்‌ வானத்தில்‌ பறந்து தூய ஒளியோடு திகழ்ந்தது. 17–142

விழித்தெழுந்த உலகுடை நாயகன்‌ ஸ்ரீமன்‌ நாராயணன்‌, காற்றையுண்ணும்‌ பாம்புப்‌ படுக்கையில்‌ கையூன்றி எழவும்‌,
(அச்சுமையால்‌) பூமி ஆழத்தில்‌ இறங்க, மழைக்கால இடிகளால்‌துளைக்கப்பட்ட துவாரங்கள்‌ வழியாக பாதாள கங்கையின்‌ நீர்த்‌
தாரைகள்‌ ஐல தம்பங்களாக வெளிப்போந்தன3வா எனுமாது நாணல்‌ பக்கல்‌ வெண்ணிறத்துடன்‌ ஒளிர்ந்தன.
(நீரில்‌ ஒரு பக்கம்‌ அழுத்தினால்‌ மறுபக்கம்‌ துணை வழி நீர்‌ பிய்ச்சிக்‌ கொண்டு மேலெழுந்து“ சிதறுவதுபோல பாதாள கங்கை
நீர்‌ மேலே பிய்ச்சியடிப்பது போல நாணற்பூக்கள்‌ தோன்றின என்பது கருத்து, காற்றையுண்ணும்‌ பாம்புஆதலின்‌ காற்றடைத்த
இரப்பர்‌ தலையணை போல இருந்ததாகக்‌ கருதலாம்‌), [7143

தாமரைக்‌ கண்ணன்‌ அவ்வேளையில்‌ தூக்கம்‌ கலைந்துஎழுந்து தனது பாதங்களைத்‌ தன்மீது வைத்ததனாலோ பூதேவி,
புளகாங்கித மடைந்தனள்‌. எனுமாறு முற்றிய ௧௬ முட்களுடன்‌ கூடிய நெற்கதிர்கள்‌ நிலத்தில்‌ விளைந்தன. [*……144
மீண்டும்‌ (அகத்தியன்‌) குடிப்பானோ என ஐயுற்‌.ற சூரியனின்‌ கதிர்கள்‌ கடலை வானில்‌ வைத்துக்கொள்ள இடியேறாகிய
வடவைக்களலுடன்‌ கூடிய அக்கடல்‌ முகலாகி நிலங்குளிரப்‌ பெய்யவும்‌, அங்கும்‌ (வானத்திலும்‌) அகத்தியன்‌ (நட்சத்திரம்‌)
தோன்றி மீண்டும்‌ கடல்நீர்‌ குடித்தனன்‌ போலும்‌! இல்லா விட்டால்‌ ஓரே இடத்தில்‌ விண்மீன்களும்‌ கிரகங்களும்‌ சூரிய
சந்திரார்களாகிய முத்துக்களும்‌ மணிகளும்‌ தெளிவாகத்‌ தோன்றுமா?
(அகத்திய நட்சத்திரம்‌ தோன்றுவதுடன்‌, வானம்‌ மேகங்‌ களற்றுத்‌ தெளிவாக பிரகாசிப்பதும்‌ ஈண்டு வருணிக்சுப்‌ பட்டுள்ளன) IV—145-

மலயமலை (பொதிகை)யில்‌ இருந்த அகத்தியன்‌ எனும்‌ தேற்றாங்கொட்டையை சரத்காலம்‌ பொய்சைகளில்‌ (அகத்திய
மீன்‌) பிரதி பிம்பம்‌ ஆகபோட, நீராமகளிர்‌, அலைகளாகிய கைகளால்‌, தேய்த்துவிட, சலங்கியநீர்‌ தெளிவுற்றது. அதன்‌
குறுகிய தன்மையே கரி (சாட்சி)யாகும்‌, விண்‌ மீனாயின்‌ நீரை எப்படித்‌ தெளிவிக்கும்‌?
(அகத்திய விண்மீன்‌ தேற்றாங்கொட்டைக்கு உவமை, சரத்‌ காலத்தில்‌ நீர்‌ நிலைகள்‌ தெளிந்திருக்கும்‌) IV—~ 146

பூமியில்‌ அமுதுக்கிணையாக்க வேண்டி. சரத்காலம்‌ எனும்‌ நங்கை, பொய்கை நீரின்‌ மாச நீக்க முகிலற்ற வெயிலில்‌ காய்ச்சி,
மலார்ந்த தாமரை, குவளை மலர்களின்‌ மகரந்தப்‌ பொடியாகியமஞ்சள்‌ பொடியை அலைகளில்‌ தெளித்தாளோ எனத்‌ தோற்ற மளித்தது.
(நீர்‌ சுவை மிகவும்‌, கருமி நாசினியாகவும்‌, நெல்லிக்கட்டை மஞ்சள்‌ பொடிகளை Harnad போடுவது மரபு. அதுபோல
ஈண்டு பூமகாந்தத்‌ தூளாகிய மஞ்சள்‌ பொடி போட்டதாகக்‌ கற்பனை) IV—147

மிகுத்த நேயமுடன்‌ தாமரையாகிய தையலர்கட்கெல்லாம்‌ அணி செய்ய சரக்காலம்‌ எனும்‌ பொற்கொல்லன்‌, கம்பியிழைகள்‌
சமமாக்க கிரவுஞ்சமலை எனும்‌ கம்பியச்சு (நூரச்சு-கம்பி இழுக்கும்‌ சட்டம்‌) தன்னில்‌, இழுத்த வெள்ளிமலையின்‌ வெள்ளிச்‌
கட்டிகள்‌ போல அன்னப்பறவைகள்‌ பொய்கைகளில்‌ வட்ட மிட்டுப்‌ பறந்து கூவியமைந்தன. IV—148

அகத்தியன்‌, கடலினைக்‌ குடித்து வயிற்றிலடக்கியிருந்த ஒளிமிக்க முத்துக்களை மட்டும்‌ கொட்டிவைத்தானோ எனுமாறு
காரமரை இலைகளில்‌ தெளிந்த இனிய நீர்த்துளிகள்‌ அப்பொய்கை – களில்‌ ஒளிவீசித்‌ திகழ்ந்தன. IV—149

ஆற்ஹறொழுக்கினைப்‌ போன்ற கடிகாயந்திரத்தில்‌ (நாழிகை வட்டிலில்‌) மேல்‌ பணம்‌ கீமே நிறைந்த வேளையில்‌
(சுபமுகூர்த்தத்தில்‌ சூரியன்‌, மேகத்திரை விலயகதும்‌ (எதிரே உள்ள மணப்பெண்ணாகிய) தாமரையாள்‌ மீது சீரகமும்‌ வெல்லமும்‌
வைப்ப அவை பிரிவுத்‌ தாபத்தால்‌ உருகியவோ எனுமாறு பூ மகரந்தம்‌ பொலிந்தது. மணப்பெண்‌ தலையில்‌ தெளித்த முத்துக்‌
களாகிய அட்சதைகள்‌ அவளது தாபத்தால்‌ வெந்து சரூகினவேோ எனுமாறு கருவண்டுகள்‌ படிந்தன.
(முன்னாட்களில்‌ கடிகாரங்கள்‌ இல்லாத காலத்தில்‌ மணல்‌ நிறைத்த வட்டில்‌ மேலே வைத்து ஒரு சிறு துளை வழி மணல்‌
ஒழுசக்‌ செய்து கழே கண்ணங்களில்‌ பிடித்து நிறைத்தனர்‌.
கிண்ணம்‌ நிறைந்தால்‌ ஒரு நாழிகை எனக்‌ கணக்கிடுவர்‌. மேல்‌ மணல்‌ கமே வருதல்‌ மழைக்காலத்தில்‌ மேலே கலங்கிய நீருடன்‌
இருந்த மணல்‌ சரத்காலத்தில்‌ தெளிவுற்று மணல்‌ 8ழே படிவதற்கு உவமையாக்கப்பட்டது. ஆற்றொழுக்கினைப்‌ போன்றே என்பது இவ்வுவமையின்‌ பொருள்‌ கொண்டதாகும்‌.
சூரியன்‌ மணமகன்‌, மணமகள்‌ தாமரை. . இருவருக்கும்‌ இடையே இருந்த திரை மேகம்‌. அது விலகவும்‌ சூரியன்‌ திருமணச்‌
சடஸ்கில்‌ ஆந்திர நாட்டில்‌ சீரகமும்‌ வெல்லமும்‌ மணப்பெண்‌ தலையில்‌ வைப்பது போல்‌ வைத்தான்‌. சீரகம்‌ தாமரைப்‌
பொகுட்டின்‌ கேசரங்கள்‌, உருகிய வெல்லம்‌ மகரந்தம்‌. மணப்‌ பெண்‌ தலையில்‌ அட்சதைகள்‌ தெளிப்பதும்‌ மரபு ) IV~150

தாமரை இலை மேலிருக்கும்‌ நீரும்‌, (இலைகட்கு) இடை
வெளியில்‌ தோன்றும்‌ வானத்தின்‌ நிழலும்‌ எப்படித்‌ தோன்றிய தென்றால்‌, பொய்கையின்‌ அவ்விரண்டில்‌ (தீர்‌-வானம்‌) எது மென்மையானது, எனத்‌ தெரிய, அலைக்கரத்தால்‌, மே?லழும்‌ வண்டுகளாகிய சங்கிலியில்‌, தாமரையிலையாகிய தட்டில்‌ வைத்து தூக்க (எடைபோடவும்‌) நீர்‌ மென்மையானதாதலின்‌
மேலே எழுத்துள்ளது. வரனம்‌ செறிவுடையது (கனமானது) ஆதலின்‌ மே கிடக்கிறது எனுமாறுள்ளது.
(தாமரை இலைத்‌ தண்ணீர்‌ தவிர மற்ற நீர்‌ வானத்தைப்‌ பிரதிபலிப்பதால்‌ வானமாகவே தோன்றிற்று, துலாக்கோலின்‌
தட்டாக தாமரை இலை உள்ளது. வானம்‌ வைத்த தட்டு கீழே கடப்பதால்‌ அது காணப்படவில்லை. என்றும்‌ நீர்வைத்த குட்டு
மேலே இருப்பதால்‌ காணப்படுகிறது என்றும்‌ கற்பனை).
வானினும்‌ மென்மையானது தெளிந்த நீர்‌ என்பது கருத்து. ன நிலத்திற்குச்‌ சுமையாக நன்கு முற்றிய இனிய நாமக்குரும்பு
சுள்‌ நதிக்கரையோரத்தில்‌ விளைந்து தாமே வளைந்து, தாமரை மலர்கள்‌ மேல்‌ விழ, காலையில்‌ தாமரைமலர்கள்‌ மகரந்தம்‌
ததும்பிச்‌ சந்தன. தாமரையாகிய கரும்பாலையில்‌ சுரும்பு களா௫ய உருளைகள்‌ சுழன்று ஓசையுடன்‌ பிழிந்த சாறே மகரந்த
மாகவும்‌ பொய்கையே சுடாரம்‌ (சாறு நிறைக்கும்‌ பாத்திரம்‌)ஆகவும்‌ அமைந்தன. IV—152

ஏர்முளையால்‌ தோண்டப்பட்ட வாழைக்‌ கிழங்குபோல, குறுக்காக வளைந்துள்ள தலையில்‌ (வாழைக்‌) குருத்துப்போல ஒரு
கொம்பு மண்ணைக்‌ குத்தி நிற்க, கவுளிலிருந்து இறங்கி தாடையில்‌ இரவெல்லாம்‌ படிந்த மதம்‌ கருஞ்சாந்துச்‌ சிமிழ்‌ போல அமைய,
புற்றிலிருந்து வந்ததும்‌ அடிப்பட்ட பாம்பு, மெய்‌ சுற்றியும்‌ விரிந்தும்‌ துடிப்பது போல துதிக்கை ஆடிக்கொண்டிருப்ப,
(யானை உராய்தலின்‌) நாணல்‌ பூக்களுடன்‌ மண்‌ கட்டிகள்‌ ஆற்றில்‌ வீழ்ந்த (பூக்கள்‌) நுரையாகவும்‌, (மண்‌) வண்டலாகவும்‌
அமைநீது (சேறும்‌ நுரையுமான) மழைக்‌ காலவெள்ளம்‌ மீண்டும்‌ வந்ததோ எனும்‌ எண்ணத்தைத்‌ தோற்றுவிக்க,
பூற்துகுள்‌ கண்களில்‌ படியாதவாறு மேற்கண்ணை மூடி, இடைமேலெம, தோல்‌ அசைய, ஓழுகும்‌ மதநீர்‌ ஆற்றில்‌ கலந்து
மணமும்‌ இளங்கசப்பும்‌ ஈய, தன்‌ போலக்‌ குதித்தாடும்‌ எருதுகளுடன்‌ வண்டுகள்‌ பறக்க, யானைகள்‌ அவ்வாற்றங்கரையில்‌,
(தந்தங்களால்‌ மண்‌ மேடுகளைக்‌ குத்திக்‌ கொண்டு குதித்து) விளையாடின. IV—153

இரு கன்னங்களிலும்‌ படிந்த மதத்தில்‌, மலர்ந்த ஏழிலைப்‌ பாலைப்பூக்களின்‌ மகரந்தம்‌ படிந்து, சாமரங்கள்‌ போலவும்‌,
தந்தம்‌ போலவும்‌ அமைய, மலையைத்‌ தோண்டிய மண்ணால்‌ உறையுடன்‌ கூடிய கத்திகளாக தந்தங்கள்‌ மிளிர, யானைகள்‌,
ஐராவதம்‌ போல நின்று அரசர்களைப்‌ போருக்குத்‌ தரண்டுவது போல நின்றன. IV—154

அப்போது (சரத்காலத்தில்‌) ஒருவரை ஒருவர்‌ வெல்லும்‌நோக்கமுடன்‌ உள்ள மன்னர்‌ இரட்டையம்பறாதக்‌ தூணிகளி
லிருந்து குறிவைத்து எய்து வெற்றி பெற்றதால்‌, தமது குலத்தின வாகிய சரங்கள்‌ (அம்புகள்‌) மூலம்‌ புகழ்பெற்றதைக்‌ குறிக்கும்‌
வகையில்‌ மலர்ந்த நாணற்பூக்கள்‌ காடெல்லாம்‌ ஒளிர்ந்தன.
(நாணற்தட்டையால்‌ முன்‌ காலத்தில்‌ அம்பு செய்தனர்‌. ஆதலின்‌ அதற்கும்‌ சரம்‌ என்றே பெயர்‌. நாணற்பூக்கள்‌
பூத்தலின்‌ சரத்காலம்‌ என்று பெயர்‌ வந்தன. நாணலின்‌ வெண்ணிறப்‌ பூக்கள்‌ புகழுக்குக்‌ குறியீடாகும்‌) iV-=155

ஆற்றங்கரை ஈரமண்படிந்த திமிலையுடைய: காளை மாட்டின்‌ மேலே நாணற்‌ மூக்கள்‌ சிதறி வீழ்வது, மலைச்‌ சிகரங்கள்‌ எனக்‌ கருஇப்படியும்‌ மழை பெய்து தீர்ந்த வெண்முஒற்‌ துண்டுகளோ எனுமாறு இருந்தன, IV—156

வானத்‌ இிருமகளின்‌ பெரிய நட்சத்திர மாலை எனும்‌ ஆரத்தை ஆகாய கங்கையில்‌ கழுவப்‌ பிசைந்ததும்‌, பரந்து சீயக்காய்‌ பழத்தின்‌ நுரைபோல, புலபுலவெளன வெளுத்த முகில்‌ நிரைகள்சிதறிக்‌ கிடந்தன.(27 ஆணிமுத்துக்களை வைத்துச்செய்யும்‌ நசையே நட்சத்திர மாலை எனப்படும்‌) 17157

நீராசிய கடனை கடலிலிருந்து பெற்றுக்‌ கொண்டு தன்‌ கடமைகள்‌ முடித்து, தான்‌ முன்பெற்ற கடனை தூரதேசம்‌ சென்றும்‌ திரும்பவும்‌ வட்டியுடன்‌ அக்கடலுக்கே துநிது( கணக்குத்‌) தீர்த்ததனால்‌, அந்தப்‌ புண்ணியத்தால்‌ பரிசுத்தமான ஆன்மா வும்‌, தூயஉடலும்‌ உடையதாக, நிலாவினை உடைய SUIT our துயர்ந்து செல்லும்‌ வெண்‌ மேகங்கள்‌ திகழ்ந்தன.
(அப்பு எனும்‌ தெலுங்குச்‌ சொல்‌ நீர்‌, கடன்‌ எனும்‌ இரு பொருள்படும்‌. இச்சொல்லைக்‌ கவிஞர்‌ பயன்படுத்தியுள்ளார்‌. கடனைத்‌ தீர்த்தவன்‌ உள்ளமும்‌ அதன்வழி உடலும்‌ தரய்மை யுறும்‌ எனும்மனத்தத்துவச்‌ சிந்தனைஇக்கவிதையினைச்‌ சிறப்பிக்‌ கிறது. பரிசுத்தமானவர்கள்‌ உயர்ந்து நிற்பர்‌ ஒன்ற தொனிப்‌ பொருளும்‌ உண்டு. வெண்மேகம்‌–கடன்‌ தீர்த்த சான்றோர்க்குஉவமை, கரு3மகம்‌ -கடன்‌ 9கொாண்டவர்க்குவமை) (7158

தெளிந்த மூடில்‌ எனும்‌ yor சுற்றிய வானமணியாகயே சூரியனின்‌ “லசுனபட” எனும்‌ (பால்போலும்‌) படலம்‌ உருவாகக்‌ கண்ட திருமால்‌ அது மணிவகைக்‌ குற்றம்‌ ஆதலின்‌ அதை மனத்‌துணர்ந்து, தன்‌ பாதமாகய ஆகாயத்திலிருந்து பரிவட்டமாகய கழலை நீத்துவைத்து, பேராசையற்றவனாக அறிவுபெற்றவனாக பாற்கடலில்‌ திருமகளுடன்‌ இணைந்திருந்தான்‌. IV—159

வானத்தவர்கள்‌ (தேவர்கள்‌) நெருப்புப்பெற வேண்டி (மழைக்காலத்தில்‌ இழந்தமையால்‌) சூரியனாகய பளிஙிகுக்சல்லின்‌
(சூரிய காந்தக்கல்லாகிய9க்கி முக்கெல்‌) மேல்‌ வெண்முகிலாகய பஞ்சினை வைத்துஉராய, இப்பிடித்து, ஒரளவோடு நில்லாது
(மட்டுமீறி) பரவியது எனுமாறு மு௫ல்கலைந்த வெயில்‌ மிகவும்‌சுட்டெரித்தது IV—16

சூரியனின்‌ உதய அத்தமனங்களின்‌ செவ்வந்தி வண்ணம்‌ அமைய திசைகளின்‌ கருவண்ணம்‌ சுற்றிலும்‌, நடுவிலும்‌ இருக்க,
வாளம்‌,இயற்கைத்‌ தாய்‌ என்னும்‌ குறிஞ்சமகளின்‌ மூக்கலணிந்த குன்றி மணியாகிய மூக்குத்தியோ எனும்‌ படியாக இருந்தது.IV—161

கூண்டுகட்கு நெற்கதிர்களைக்‌ கொண்டு,கூட்மாக வான்வழிச்‌ செல்லும்‌ கிளிகள்‌, பய ஒவ்வொரு இலை (சோகை) களோடு
பமுத்த (விளைந்த) நெல்‌ வயல்‌ அறுத்து விடுவார்கள்‌ என்ற பயத்தால்‌ பறந்து செல்கின்றதே எனுமாறுதோன்றிற்று, 175-162

தாம்‌ திரு (ஸ்ரீ) வினர்‌ ஆதலின்‌ தாம்‌. சேரும்‌ இடம்‌ ஆன தரமரைப்‌ பொகுட்டினைக்‌ சார்ந்தனவோ எனுமாறு காதில்‌
தாமரைப்‌ பொருட்டினை அணிந்தவராக, மன்மதனின்‌ தேரை நடத்தும்‌ ரதி தேவியின்‌ அதட்டல்கள்‌ போலபரண்‌ மீதமர்ந்து
கிளிகளை ஓப்பும்குரல்‌ அதட்டல்களோடு திகழ்ந்து,(இளி கடிதற்கு குவளை மொட்டுகளை எறிய அவை தாரம்‌ செல்லாமையின்‌
கைதட்டி ஓசை எழும்பும்போது மென்‌ முலைகளும்‌ கூந்தலும்‌ அசைந்தாட, (கேலிக்காக) தவறான வழியை முன்பு கூறி, உடனே
சிரிக்கவும்‌, (அதை அறிந்து) வழிப்போக்கர்கள்‌ சென்ற வழியேஇரும்பும்போது அவர்களோடு நாணமும்‌ திரும்பிவர, இதழின்‌
இனிமையையும்‌, பல்‌ நிறையின்‌ எழிலினையும்‌ போலாது கரும்பும்‌, அதில்‌ விளையும்‌ முத்தும்‌ அவள்‌ அருள்வேட்டரோ
எனுமாறு முதிர்ந்து பிதிர்ந்து முத்துக்கள்‌ சிந்தும்வளைந்திருக்கும்‌ கரும்புத்‌ தோட்டமும்‌, அவர்களது, முழங்காலுக்குஇணையாக
இயலாமையின்‌ நாணமுற்றுத்‌ தலை கவிழ்ந்து அடியிறைஞ்சும்‌ கதிர்‌ தண்டினையும்‌ உடைய நெல்‌ வயலையும்‌, காவல்புரியும்‌
அக்குடியாவைப்‌ பெண்கள்‌ எழிலுடன்‌ திகழ்ந்தனரி. IV—163

வாளம்‌ அப்போது [சரத்காலத்தில்‌) தான்‌ மாபெரும்‌ நீலக்கல்‌ போலுதலின்‌ அதன்‌ பெருமைக்‌ கேற்ப (gr நீலம்‌
புல்லினைக்‌ கவர்வதியல்பாதலின்‌) தகும்படி. நிறைந்து கவர்ந்தி மூத்ததுவோ எனுமாறு விளைந்த நெல்‌ வயல்களில்‌ வைக்கோற்‌
போர்கள்மலைபோல விண்ணெட்டி உராய்ந்திடல்‌ போல்‌ திகழ்ந்தன.
(நீலக்கல்‌ புல்லைக்கவரும்‌ என்பது முன்‌ 413வது பாடலிலும்‌ கூறப்பட்டுள்ளது காண்க.) IV—166

சரத்‌ காலமாகிய சனகன்‌ வெண்டாமரையாகிய குடை. ஏற்தி வேள்வி செய்யப்புகுங்‌ காலை,பரமஹம்சர்‌ (முனிவர்கள்‌. அன்னப்‌
பறவைகள்‌) வந்து நிறைய கார்வண்ண இராமன்‌ வான வில்லாகய சிவத னுசுவை முறிக்க ஏரீச்சாலாகிய சீதை கிடைக்‌
காமற்‌ மோவாளா?
(சனகளை சரத்காலத்துக்கு சிலேடை மூலம்‌ஒப்பிட்ட இக்‌ சுவிதை சிறிது சிக்கலானது. காரீ காலம்‌ முடிந்து சரத்‌ காலத்தில்‌
உழவு வேலைகள்‌ நடைபெறுவதையும்‌ அதனால்‌ உழவர்கள்பயன்‌ பெறுவதையும்‌ கற்பனை செய்துள்ளார்‌) IV—165
முகல்‌ சலைந்து வெயிற்‌ சூடு மிகுதலின்‌, வானில்‌ கிளிகளின்‌ பச்சை வண்ணம்‌ பரவுதலும்‌, பச்சை வண்ணக்‌ குதிரைகளுடன்‌
சூரியனின்‌ தேர்‌ அருகில்‌ வந்ததோ என்று மக்கள்‌ பயந்தனர்‌.(சூரியனின்‌ குதிரைகள்‌ பச்சை வண்ணம்‌ என்பது கவிமரபு) IV~166

மண்ணிலிருந்து பொய்கையில்‌ மலரீந்த வெள்ளாம்பற்பூக்கள்‌ (விளக்குகளாகி) வீரட்டியடிக்க, விண்ணிலிருந்து சுடரும்‌ கோள்‌
களும்‌ (வின்மீன்களும்‌) ஒளிரும்‌ ஒளி ஓட்டிவிடவும்‌, தேய்பிறைக்‌ கரல வலவிமையின்றி, இருள்‌, தனது கருநிறத்தை (திற்கவேறிட
மின்றி) வானக்‌ சுருமை நிறத்தோடொன்றி விட்டதோ எனுமாறு ஆகாயம்‌ கருமைவண்ணம்‌ மிக்கது. IV—-167

கன்றுகளை நினைந்து (ஆற்றோரஙிகளில்‌) புல்மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள்‌ சுரந்த பால்‌ ஆற்று நீரோடு கலக்கவும்‌
(தாகம்‌ கொண்டவர்கள்‌ பாலைச்சாப்பிட்டால்‌ உடல்‌ நலத்துக்கு ஊறு நேரும்‌ ஆதலில்‌) வெயில்களைத்த வழிப்போக்கர்கட்கு
உதவும்‌ பொருட்டு, பிரம்மதேவன்தன்‌ வாகளஙிகளாகிய அன்னஙி களை (பால்‌ பிரித்துண்டு நீர்மட்டும்‌ இருக்கு மாறு செய்ய
வேண்டி) அனுப்பினானோ எனுமாறு அன்னங்கள்‌ ஆறுகளில்‌ நிறைந்திருந்தன. IV—~168

பருவத்திலுள்ள (புணர்ச்சிக்கு ஏற்ற காலமுடைய) பசுக்க களின்‌ கூடப்போச முடியாத தாபத்தினால்‌ கொழுப்பு கரைந்து,
கமுத்தை வளைத்து முயன்று கனைப்பொலி எழுப்பிய முழக்ககி சளோடு காளைகள்‌ மந்தையின்‌ பின்னர்‌ மந்தகதியில்‌ சென்றன.
(கொழுத்த காளைகள்‌ உடல்‌ சுமையால்‌ பசுக்களோடு விரைந்து செல்ல முடியாமல்‌ மெல்லச்‌ செல்லும்‌, பருவப்பசுக்‌
களும்‌ வேட்கை மீறினும்‌ பிடிகூடாமல்‌ விரைந்து முன்செல்லும்‌,அதைத்‌ தொடரகாளை முயன்று சனைத்தவாறு மெல்லாப்பின்‌
தொடரும்‌ என்பது கருத்து) Iv—169

கடல்‌ நீரையெல்லாம்‌ வெறும்‌ வயிறாகுமாறு &மே சொரிந்து மீந்த உட்பு வயிற்றில்‌ சேரவும்‌ அந்த வெண்மை நிறமே வெளியே
அதன்‌ தூய்மையால்‌ தோன்றுகிறது எனுமாறு ஓடும்‌ சரத்கால மேகங்களின்‌ உடம்பில்‌ வெண்மை மிகுந்துதோன்றியது.
(கடல்நீர்‌ உப்பானது மேகம்‌ அதைக்‌ குடித்து நன்னீர்‌ பொழிகிறது, அந்த உப்பு படிந்து மொத்தமாக மேகத்தின்‌ வயிற்றில்‌
உள்ளதுதான்‌ வெண்மை நிறமாகக்‌ காட்சி தருகிறது என்பதுகருத்து[ 1V—170

கடலில்‌ முன்‌ குடித்த நீரெல்லாம்‌ போழிந்து, மேகம்‌ எனும்‌ உருவத்தை இழந்த சூரியனின்‌ கதிர்கள்‌, தன்‌ சுய உருவத்தை
அடைதலின்‌ கதிர்கள்‌ முன்னிலும்‌ ஒளிமிக்கதாயின. முகில்களும்‌ உருக்கலைந்தோடின. /–171

சரத்கால மேகங்கள்‌, மூன்‌ குடித்த (கடல்‌) நீர்‌ எல்லாம்‌ சொரிந்து தீரீந்ததனால்‌, மீண்டும்‌ நீர்‌ நிறைத்தற்குப்‌ பொய்கை
களுக்குட்புகுந்தனவோ எனுமாறு ஆங்குள்ள நாணற்பூக்களின்‌ நிழல்கள்‌ (பிரதிபிம்பங்கள்‌) பொய்கையிற்‌ தோன்றின. (172

குளத்தில்‌ பிடியும்‌ களிறுய்‌, சிறிது மலரீந்த தாமரை மொட்டு களை, ஒன்றற்கொன்று (உண்ணத்‌) தருவதற்காக ஒரே சமயம்‌
எடுத்து (துதிக்கை நீட்டிக்‌) கொடுக்க, அம்மலரிலிருந்து மகரந்தம்‌ சொரிதலும்‌, பொய்கைத்‌ திருமகளுக்கு அன்போடு இரட்டை
யானைகள்‌ அபிடேகத்திற்கு எடுத்த பொற்கலசங்களோ எனும்‌ படியாக இருந்தன, 4173

சேறு அடியிற்படிந்து தெளிந்த பொய்சைகளில்‌ எல்லாம்‌ மீண்டும்‌ சேறாகும்படி பங்கயங்கள்‌ (சேற்றிற்‌ பிறந்த தாமரை
மலர்கள்‌) செய்தன. தாமரையின்‌ பூந்தேனோடு குழைந்து பூந்தாதுசேறாகி அவ்விதம்‌ அமைந்தது. காரணத்தின்‌ பண்புகள்‌
காரியத்திலும்‌ உண்டாகுமல்லவா?
(காரணமாகிய மண்‌, பொன்‌ முதலியவற்றின்‌ பண்புகள்‌ காரியமாகிய மட்குடம்‌, ‘பொற்குடத்துிலும்‌ அமைதல்போல
சேற்றில்‌ இருந்து பிறந்த தாமரை மலர்‌ பூந்தேள்‌, பூந்தாது கலந்து சேற்றினையே உருவாக்கின என்பது கருத்து) |/-174

அகத்தியரை (விண்மீனை) நோக்கி “தாங்கள்‌ இக்குளநீரை பயிர்கட்காக விட்டுவைக்கவும்‌’ ” எனக்கது
கேட்டு அவரது சினட்பார்வை தலிர்க்சு வணங்கிப்‌ பணிந்தனர்‌, எனுமாறு மச்கள்‌ பூசனளைபுரிந்தளர்‌. IV—175

கொடும்‌ வெயிலிழற்‌ காய்நீத பூமியாகிய பாத்திரத்திற்‌ பட்டதனால்‌, இறுகிப்‌ பரிபக்குவமடைந்தது எனுமாறு சரத்கால
வெண்ணிலவு இரவுகளில்‌ செறிவுற்று ஒளிர்ந்தது.
(சாய்ந்த தோசைக்‌ கல்லில்‌ பட்டதும்‌ திரவமான மாவுப்‌ பொருளும்‌ இறுகி திடப்பொருளாவதுபோல, நிலாவும்‌ இறுகியது
என்பது கருத்து) iV—176

மழைக்காலத்தில்‌ இட்ட (மீன்‌) கருவினைக்‌ குடிக்க, 8ழிருந்து மேலே வரும்‌ பெரிய மீன்கள்‌, பாசிக்‌ கொடியோடு மிதந்து
பளபளப்போடு மின்னுவது, (தாசரிகள்‌ வாசிக்கும்‌) குதிரைவால்‌ மயிரில்‌ கட்டிய வில்லில்‌ வெள்ளியினாலான மீன்‌ உருவங்களை
யூடைய உடுக்கையினை யாட்டுவது போல இருந்தது. 14197

ஹம்ச (அன்னற்பறவை)த்தினை விட பரம ஹம்சரமான அகத்தியரோ மலய (பொதிகை) மலைச்‌ சிகரத்தின்‌ வழியே வருகிறார்‌ ஹம்சம்பாலும்‌ நீரும்‌ வேறு யிரித்திட, பரம ஹம்‌ சரான அகத்தியர்‌ நீரும்‌ சேறும்‌ வேறுபடுத்திச்‌ சிறப்புற்றார்‌.
(சரத்காலத்தில்‌ அசுத்திய நட்சத்திரம்‌ தோன்றுதலும்‌ சேறு நீங்கி நிர்‌ தெளிவுறுதலும்‌ இங்கு வருணிக்கிறார்‌) IV—178

கிரவுஞ்ச மலைத்துளையில்‌ செல்லும்‌ அன்னப்பறவைகள்‌ வானத்தில்‌ செல்லும்‌ வழியில்‌ இட்ட முட்டைகளை, பிற பறவைகள்‌ அடை காத்தலின்‌ அன்னப்பறவைகள்‌ உருவாகி மிகுதியாயின. அதெப்படி முடியும்‌ என்றால்‌ கோழி அடைகாக்க மயில்‌ முட்டைகவிலிருந்து மயிற்‌ குஞ்சுகள்‌ வருவது சான்றல்லவா?
(சரத்காலத்தில்‌ அன்னங்கள்‌ மிகுதியாக வரும்‌ அதன்‌ பெருக்‌ கத்துக்குமான சரோவரம்‌ மட்டுமின்றி, கரவுஞ்சமலைப்‌ பாதை
களிலும்‌ உற்பத்தியாகியிருக்கும்‌ என்று கற்பனை செய்யப்படு கிறது) IV—179
நீரரமகளிர்கள்‌, காணும்‌ பொய்கை என்னும்‌(கண்‌) ஆடியில்‌ படிந்த களிம்பினை நீக்க, அன்னப்பறவைகள்‌ அங்குமிங்கும்‌ மிதந்து தேய்ப்பது (விளக்குவது) போலிருந்தது. அதனால்‌ மாசு பறப்பது போல தாமரைப்‌ பூந்தாது சிதறியது (தேய்க்கும்‌ பொதெழும்‌ சத்தம்‌ போல) அன்னங்களின்‌ ச்சுக்குரல்‌ ஒலித்தன.
(மூற்காலத்தில்‌ முகம்பார்க்கும்‌ கண்ணாடியாக வெங்கலத்‌ தால்‌ செய்து கொண்டனர்‌. அதன்‌ களிம்பு நீக்க சாம்பலால்‌
துலக்குவர்‌. இங்கு பொய்கை ஆடி, அன்னஙிகள்‌ துலக்குகன்றன என்பது கற்பனை) iV—180

சூரிய மண்டலத்தை முகில்‌ மலறத்ததுமே (மயில்‌) இரைதேடுவதை விடுத்து, முகம்மேல்‌ நோக்க (மழைமுகில்‌ வந்ததோ என்ற
ஆசையுடன்‌) மயங்கி,குகையில்‌ புகுந்த காற்றினால்‌ குமகும* எனும்‌ ஓசை வரவே,
(உரும்‌ஓலி என மயங்க) தோகையை சிறிதே விரிக்க முயன்று(முகிலின்மைஅறிந்து) மேலே பார்த்து புரிந்துகொண்டு,
(தோகையை) மடக்கக்‌ கொண்டு, பூக்கள்‌ இல்லாத தாழையினைக்‌ கண்டு வருந்திக்‌ கண்ணீரை அதிலையே துடைத்துக்‌
கொண்டு, தவளைகள்‌ பதுங்கும்‌ குட்டைகளின்‌ ஓரம்‌ செவி கொடுத்துக்‌ கேட்டு, அகவுதற்காக மும்முறை கழுத்தை லளைத்து
முயன்றும்‌ குரல்‌ வராமையின்‌, ஏதோ சிறிது அகவி, வாயில்‌ எதையோ கடித்துக்‌ கொண்டு, வெயிலின்‌ கொடுமைக்கஞ்சி
நிழல்‌ தேடி சரத்காலத்தில்‌ பூக்கும்‌ மரங்களை நாடாமல்‌ மழைக்‌ காலத்தில்‌ பூச்கும்‌ மரநிழலை நாடிச்‌ சென்று அலகினால்‌ இருபக்க
இறக்கைகளையும்‌ கொத்திச்‌ சிலிர்த்தவாறு, வெறுமையுற்ற பாரிவைகளுடன்‌, மார்பின்‌ இருபுறமும்‌. பார்த்துக்கொண்டும்‌
காளச மயில்கள்‌ இருந்தன.
(தவளைச்‌ சத்தம்‌ கேட்டால்‌ மழை வரும்‌ ஆதலின்‌ மயில்‌ குட்டையில்‌ தவளைகள்‌ இருக்கும்‌ குழிகளில்‌ காதுகொடுத்து
ஓசை வருகிறதா என்று காதுகளைத்‌ தீட்டிக்காத்திருப்பதாக கற்பித்துள்ளார்‌. மழைக்கேங்கும்‌ மயிலின்‌ மூலமாக மனித
மனத்தின்‌ மழைக்கேங்கும்‌ ஏக்கத்தையும்‌ கவிஞர்‌ காட்டி யுள்ளார்‌) 14/18]

நிழல்‌ வாட்டத்தில்‌ காய்ந்த சேறு படிந்த கூம்பிய தோகையை விரிக்காததனால்‌ அப்படியே (சேறு) அழியாமல்‌, தோகையுடன்‌
மயில்‌ இருந்தது. முன்‌ (மழைக்காலத்தில்‌) இந்திரன்‌ அதன்‌ நடனம்‌ கண்டு மகஒழ்ந்து அளித்த பொற்கிழியின்‌ முத்திரையோ
எனு மாறு அத்தோகையில்‌ சேறுஇருந்தது.
(பட்டுத்துணியில்‌ பொன்‌ நாணயங்கள்‌ பெய்து அரக்கு முத்திரையிட்ட பொற்கிமி போல்‌ மயில்‌ தோகை (பீலியின்‌
கண்கள்‌) நாணயங்கள்‌ பொிந்திருந்ததாகவும்‌ சேறுஅரக்கு முத்திரையாசவும்‌ இருந்தது. மழைக்காலமின்மையின்‌ தோகை
விரிக்கவில்லை.அது முத்திரை வைத்ததாலே எனுமாறு இருந்தது என்பது கருத்து) iV—182

சக்கிரவாகம்‌ (அன்றில்‌) எனும்‌ முலை தெரியுமாறு. நுரையர்‌ கிய முந்தானையைசி சரியவிட்டு நீரீக்கோழியின்‌ மென்குரலால்‌, முணங்கியவாறு, கம்‌ பாறைகளாகிய கடிதடம்‌, அன்னங்களாகிய முத்துச்சரம்‌, பூந்தாது என்னும்‌ தங்க அரைஞான்‌, களுடன்‌ நீர லையாகிய உடை, மணல்மேடுகளாகிய கடிதட மேற்பாகத்தில்‌ சரிய, புன்னளைமரங்களாகய கரங்களால்‌ தழுவி, மெலிந்து,வருந்தி கரையிலுள்ள நாணற்பூக்களின்‌ நிழல்களாகய தகைகளுடன்‌, நெட்டுயிரீப்போடு, செங்குவளைக்‌ கண்களால்சினந்து, தாமரை யைத்‌ நீண்டும்‌ கடற்காயல்‌ கரங்களின்‌ பரிசத்திற்கு மகிழ்ந்து குவளைகளின்‌ பூந்தேன்‌ கலந்த அலைகளால்‌ கடல்‌ ஆடிய காதலனை, நதி மகள்‌ முரண்‌ புணர்ச்சியில்‌ (பெண்‌ ஆண்போல அமைநீதியற்றும்‌ கலவி) ம௫ழ்வுறச்‌ செய்தாள்‌.
(நதியின்‌ கணவன்‌ கடல்‌ சரத்கரலத்தில்‌ பிரிவுற்ற நதியைப்‌ புலந்து பின்‌ கூடியதாகக்‌ கற்பனை) ்‌

ஆளவந்தார்‌ ஆட்சியின்‌ மாட்சி
இவ்விதமாக சரத்காலம்‌ திகழவும்‌, யாமுனர்‌ (யமுளைத்‌ துறைவன்‌) அரசநீதியை ஏற்றவர்‌ ஆதலின்‌, திக்விசயம்‌ செய்தல்‌ மூறையெனக்‌ கருதி ஆறங்கங்கள்‌ சிற்றரசுகள்‌ கூட வர புயணம்‌ புறப்பட்டு [4184

யாளை,குதிரை தேர்ப்படைகள்‌ நிறைந்ததால்‌ பாரம்‌ தாங்கப்‌ மல்‌ நிலத்தைத்‌ தாங்கும்‌ ஆதிசேடனின்‌ தலை முடியிலுள்ள மணிகள்‌, நிலத்தில்‌ உள்ள மணிகளோடு புதைற்து கொள்ளுமாறு சுமைமிகுந்ததாக அமைய எட்டியுடன்‌ கட்டியகொடிகள்‌, காற்ற சைத்தலால்‌ கடல்‌ அலை முழங்குதலைவிட படைகளின்‌ L169 9 யொலி முழக்கமே பெரிதாக, படைகளுடன்‌ யாமுளர்‌ புறப்பட்டு திக்விஜயம்‌ செய்து பகைவரை முறியடித்துச்‌ சிறப்புற்றார்‌.[44165

வேள்விகள்‌ இயற்றி, தாளங்கள்‌ அந்தந்த நாட்டு அந்தணர்‌ கட்கு மனநிறைவுறுமாறு செய்து, செல்வச்‌ செழிப்புடன்‌ என்றும்‌ கவலையின்றி, அச்சமின்றி இருந்தார்‌. IV—186

மேலும்‌ அவர்‌ ஆட்சியில்‌ புல்‌ தின்று கைஎடுத்துமுறையிடுவது களிறுகள்‌ மட்டுமே (வீரர்கள்‌ அன்று( ஆங்காங்கிருப்ப, கழுத்தைப்‌
பிடித்துத்‌ தள்ளுவது, பண்டிகைகளில்‌ எண்ணெய்‌ தேய்த்துக்‌குளிக்குமாறு கணிகையரின்‌ சகோதரர்கள்‌ கேலியாக (நாணத்‌
தால்‌) மெல்லச்செல்லும்‌ இளைஞர்களைத்தான்‌ (வெறுப்பால்‌ அன்று) சுண்ணாம்பு நீற்றல்‌, குறடுபற்றி இழுத்தல்‌ மாளிகை
வெள்ளையடிக்கவும்‌, நகைகள்‌ செய்யவும்‌ மட்டுமே (குற்றவாளி களைத்‌ தண்டித்தற்காக அன்று),
பொற்கிழி கட்டி கத்தி ஏந்துதல்‌ கோழிகள்‌ போரில்‌ (சேவற்‌போர்‌ (மட்டுமே மக்கட்குள்‌ போட்டி பொறாமை சண்டைகள்‌ இல்லை.

அளவினால்‌ ஏற்படும்‌ உராய்வுகள்‌ (சிறு சண்டைகள்‌) பொன்‌ உரைகல்லில்‌ மட்டுமே. எதி3லனும்‌ கண்வைத்தல்‌ (பொருளை
அபகரிக்க எண்ணுதல்‌) என்பது மிருதங்கத்தில்‌ மட்டும. (மிருதங்‌கத்தின்‌ ஒரு பக்கம்‌ கருமையான கண்போள்ற தோற்‌ 4பகுதிவைத்‌
தலைக்‌ குறிக்கும்‌) (பிறர்‌ பொருளிற்‌ கண்‌ வைக்கமாட்டார்கள்‌) :
தாது (வினைச்சொல்‌) வாதங்கள்‌ (தாது மருந்துகள்‌ சப்ததாதுக்கள்‌) எல்லாம்‌ இலக்கணத்தில்‌ மட்டுமே. மற்ற இடஙிகளில்‌
இவை இல்லாதவாறு அரசாட்சி செய்து வந்தான்‌. IV—187

அந்த யாமுனரின்‌ பிதாமகர்‌ (பாட்டன்‌) ஆகிய நாதமுனியீன்‌ சீடராகிய ஸ்ரீபுண்ட ரீகாட்சர்‌ (உய்யக்கொண்டார்‌) உடைய
நெருங்கிய சீடரான ஸ்ரீராம மிசிரா்‌ (மணக்கால்நம்பி) எனது பரமகுருவின்‌ பேறரருக்கு இத்தகைய பந்தம்‌ எப்படி. நேர்ந்தது? * * IV—188

யோக சாம்ராச்சியத்தை மறந்து லோகசாம்ராச்சியத்தில
ஈடுப்ட்டவாறு என்னை? அப்பெரிய மகானின்‌ மரபில்‌ பிறந்து இவர்‌ இவ்விதமானது முறையன்று: ** IV—189

**இவரது பாட்டனார்‌ ஸ்ரீமன்‌ நாதமுனிகள்கடிகாசல நதியில்‌ மூன்று வேளையும்‌ குளித்து நியமநிட்டைகளைக்‌ கடைப்பிடித்து
பகல்‌ பூசைகள்‌ முடித்து, ஒரு குகையில்‌ தனித்துச்சென்று தருப்‌ பைப்புல்‌ இருக்கையில்‌ அமர்நீது, திருமகள்‌ கோள்வன்‌ திருவடி.
களை, மகழ்ச்சியுடன்‌ புளகமுற்று கண்ணீர்‌ மல்கச்‌ சந்தித்து வந்‌தித்து மாலையானதும்‌, பூணூல்‌; தாமரைக்‌ கொட்டை மாலை
களுடன்‌ யோக பட்டம்‌ மார்பில்‌ இகழ அம்மலையில்‌ இருக்கும்சுநீ தரத்‌ தோளுடையானைச்‌ சிந்தித்துச்‌ சேவித்து,இல்லத்தரச ரை
அடகு பண்ணிவிக்க குலதெய்வத்துக்கு சமர்ப்பித்து, வேள்வியியற்றி சிறப்புற்றுதன்‌ வாழ்நாளைக்‌ கழித்தார்‌. IV—190

புலனின்‌ பங்களில்‌ ஈடுபட்டிருப்பவனிடம்‌ விரைவுற்று அதனை விடுமாறு கூறுவதை விட வேறுபகையுண்டோச திறமையுடன்‌
இன்சொற்கதைகள்‌ மூலம்‌ பேசி ஒரு விதமாக உணரச்‌ செய்து, புலன்‌ வேட்கையைப்‌ போக்க வேண்டும்‌. ச/-191

உலகில்‌ தந்‌ைத, தன்‌ மகனின்‌ தீய நடவடிக்கைகளேயே திருத்த இயலாமற்‌ போகும்போது, அரசபோகத்தில்‌ மூழ்கிய
மன்னனை திருத்துவது என்பது முடிக்கிற காரியமா? யாரால்‌ எப்படி முடியும்‌? IV—198

இரத்தம்‌ குடிக்கவிட்டு, மெல்ல வேங்கையின்‌ வாயிலிருந்து மானை ஈர்த்துக்‌ கொள்ளும்‌ சாதுரியம்‌ மிக்கு வேட்டைக்கார
ளைப்‌ போல, புலன்கள்‌ மூலம்‌ துய்க்கும்‌ வேட்கைதணியச்செய்து பின்‌ திருத்திக்‌ கொள்வதுவே மேலாகும்‌.
(மானைக்‌ கவரும்‌ புலி சிறுத்தை ‘மு.தலியன கழுத்தைக்‌
கடித்து இரத்தம்‌ குடிக்கும்போது அதை விரட்ட முடியாது. விரட்டினால்‌ மானை இழுத்துக்‌ கொண்டோடும்‌. அல்லது எதிர்‌
வற்து தாக்கும்‌. ஆதலின்‌, அது இரத்தம்‌ குடிக்கும்‌ அளவு விட்டு பின்விரட்டி மானை எடுத்துக்‌ கொண்டு வரும்‌ வேட்டைக்காரன்‌
போல அரன்பங்களில்‌ மூழ்கிக்‌ கடப்பவனை சிறிது விட்டுக்‌ கொடுத்து பின்னர்‌ திருத்தவேண்டும்‌ என்பது கருத்து) 1/–193

ஆதலின்‌ “அதற்காக இதுவரை இனிமேல்‌ பொருட்படுத்‌தாமல்‌ விடவும்‌ கூடாது. தகுந்த முறையில்‌ உபாயத்தினால்‌ ஒரு விதமாகத்‌ இருப்ப வேண்டும்‌. உலசுமக்கள்‌ உணவுக்குற்றத்தால்‌அறிவு மயங்குவர்‌. உணவே உணர்வுக்கு மூலகாரணம்‌” * என்று கருதி IV—194

முள்‌ உருவாகாத இளம்‌ தளிரானதும்‌, முக்தி எனும்‌ பெண்ணின்‌ காதுகளில்‌ அணியும்‌ நெருஞ்சப்பூக்கள்‌ போன்ற,
பூக்களை உடைய ஆம்‌ ஆன தூதுளைக்‌ ரையை நிறையக்‌ கொண்டு வந்து IV—195

ஒரு வைணவன்‌ கொண்டு வந்து தந்தான்‌ ‘என்று கூறி சமையல்‌ அந்தணர்‌ மூலம்‌ கொடுத்தனுப்பவும்‌, அவர்‌ (யாமுளர்‌)
பிரியமுடன்‌ சமைத்துண்டு மகிழ்ந்தார்‌. இவ்விதம்‌ (மணக்கால்‌ நம்பி) சல நாட்கள்‌ சொண்டு வற்து தந்தார்‌. —IV196

ஒரு நாள்‌ அவர்‌ (யாமுனர்‌) உணவுண்ணும்போது, எல்லாக்‌ காய்கறிகளையும்‌ உண்டவாறு அந்த (தூதுளை)க்‌ For ous
சுவைத்து நினைவு வரவே, “இதைக்‌ கொண்டு வந்துதரும்‌ பாசுவதுரை உணவுண்டபின்‌ எமக்குக்‌ காண்பியும்‌** என்று கூறி,
கைகால்‌ கழுவி நீர்‌ குடித்துப்‌ பின்‌ அவரைக்‌(மணக்கால்‌ நம்பியை ‘கண்டு, வணங்கி, “வந்த காரியம்‌ என்ன?” என்று கேட்டதும்‌,
அவர்‌ இவ்விதம்‌ கூறலானார்‌. IV—197

அரசே[ தங்கள்‌ முன்னோர்கள்‌ கூட்டிவைத்த புதையல்‌ ஓன்று மேற்குமலை (சஹ்யாத்திரி) யிலிருந்து பிறந்த காவேரி
யாற்றின்‌ இடையே உள்ள ;தீவில்‌ (இருவரங்கம்‌) உள்ளதை தங்கட்கு காட்ட வந்தேன்‌,” 1/4198

எனக்கு  என்று கூற வேண்டாம்‌ நதிகளும்‌ கனிவளங்களும்‌ மன்னர்கள்‌ உடமையாதலினால்‌ விண்ணபித்துக்‌ கொள்கிறேன்‌. அதன்‌ விவரத்தைக்‌ கேட்பாயாக…199(நிதிக்கும்‌ கருணாநிதியாகிய திருமாலுக்கும்‌ சலேடை மூலம்‌ கவிஞர்‌ இங்கு விவரிக்கிறார்‌)

படத்தில்‌ மணிகள்‌ ஒளிரும்‌ வெண்ணிறப்‌ பாம்பு சாந்தமுடன்‌ சுற்றியிருக்கும்‌ (அதிசேடன்‌ எனும்‌ பாம்பு) அரக்கர்‌ (wien) காத்துக்கெடப்பரீ, எனினோ ஆறுமாதத்துக்‌ கொருதடவைதான்‌ வருவான்‌ (விபீடணன்‌ ஆறு மாதத்துக்கொருமுறை இருவரங்கப்‌ பெருமானை தரிசிக்க வருவான்‌ என்பர்‌) ஏதாவது பலி கொடுக்க வேண்டுமே எனினோ உயிர்ப்பலி மூதலிய கொலைகளை விரும்‌ பாது (மலரிட்டு வணங்கினும்‌ போதும்‌) கண்கட்கு அஞ்சனம்‌ (மை) இீட்டித்தான்‌ காண வேண்டும்‌ என்பஇில்லை. குன்‌ சுய ஒளியாற்‌ காணப்படும்‌. (மாசற்ற ஞானத்தினால்‌ காண முடியும்‌) அத்றிதி அளவற்றது. அங்கு விலைமதிப்பற்ற இரத்தினம்‌ (கெளஸ்துப மணி மாரீபில்‌) உள்ளது. பதுமநிதி (உந்தித்‌ தாமரை, சங்கறிதி (கையில்‌ சங்கு) உள்ளது. சொற்களால்‌ என்ன பயன்‌) அழிவற்றதும்‌, எல்ளையற்றதும்‌ முதலுடையதுமான அதை தனித்து உன்‌ ஒருவனுக்கேயன்றி மன்னா] பிறருக்குக்‌ காட்டல்‌ கூடாது,
(புதையலை பாம்பு சுற்றியிருக்கும்‌, அரக்கர்‌, யட்சர்‌ காத்திருப்பர்‌, பலிகொடுத்தல்‌ வேண்டும்‌, அஞ்சனம்‌ இட்டிடு பார்க்க வேண்டும்‌ என்ற ஐ.கங்களை ஒட்டி ஈண்டு திருமாலாகிய நிதியை சிலேடை மூலம்‌ உருவஒத்திருச்கும்‌ நயம்‌ காணப்‌ படுகிற து.) IV—200 perl

என்று விண்ணப்பிக்கவும்‌, மகிழ்ந்து, படைகளுடன்‌ அவன்‌ (மணக்கால்‌ நம்பி) முன்னே வழிகாட்ட இருவரங்கம்‌ சென்று காவேரி, சந்திரபுட்கரணிகளில்‌ குளித்து திருவரங்கத்‌ தம்மானைசி சேவித்து, குறிப்புடன்‌ கடைக்கண்ணால்‌ மணக்கால்‌ தம்பியை மன்னன்‌ பார்க்கவும்‌ ௮வன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. IV—20!

தங்கள்‌ முன்னோர்‌ சேவித்த நிதியிது. கைக்கொள்க என்று திருவரங்கத்தானின்‌ இருவடிகளைக்‌ காட்டவும்‌ அம்மன்னனும்‌
(யாமுனர்‌) அதிரிச்சியுடன்‌ மயக்கம்‌ சளைந்தவனாகி IV—202

விரைந்து, தனது முள்னைய நிலையை உணர்ந்து இதுகாறும்‌ தான்‌ மறைந்திருந்தமைச்சாக வருந்தி, “நீ யார்‌?” என வினவலும்‌
நரன்‌ தங்கள்‌ பிதாமகர்‌ ஸ்ரீநாதமுனிசுள்‌ “டரா௫ய உய்யக்‌ கொண்டாரின்‌ சீடன்‌, அந்த யோகி, எதிர்காலத்தில்‌ தாங்கள்‌
அவதரிப்பதுணர்ந்து, பாகவதர்களில்‌ உயர்ந்தவனாகிய உன்னால்‌ விசிட்டாத்துவித சித்தாந்தம்‌ எல்லா உயிர்களும்‌ கடைத்தேற
சீர்‌ பெற்.றிலங்குமென நிச்சயித்து, உனக்கு துவயம்‌ (மந்திரம்‌) உபதேக்குமாறு | தனது சடனாகிய உய்யக்கொண்டாரிடம்‌ கூற
அவர்‌, புலனின்பத்தில்‌ ஈடுபட்ட உன்னை உபாயத்தினால்‌ உணர்த்துமாறு கூற நானும்‌ வந்து அவ்விதம்‌ செய்தேன்‌!” என்று
கூறவும்‌, அடி மீசை வீழ்ந்து வணங்கி, அவர்‌ (மணக்கால்‌ நம்பி) மூலம்‌ பஞ்ச சமஸ்காரங்கள்‌ பெற்று, அத்துடன்‌ நில்லாது நாலாம்‌
ஆிரமத்திற்கு (துறவு) புகமுனைந்தவனாய்‌, பாடி வீடு வந்து தன்‌ மசுனுக்கு அரசினை ஒப்படைத்து உற்றார்‌ உறவு நட்பு
மந்திரி முதலிய படை பலங்களையும்‌ மக்களையும்‌ ஒப்படைத்து மகனிடம்‌ இவ்வீதம்‌ கூறலானான்‌. IV—203

அரசநீதி
எந்நேரத்திலும்‌ முனைப்புடன்‌ மக்களைப்‌ பாதுகாக்க வேண்டும்‌. துயருற்றவர்கள்‌ முறையிட்டால்‌ கேட்டு நல்ல நீதி
வழங்க வேண்டும்‌, சுயவர்களிடம்‌ அதிகாரம்‌ கதுரவேண்டாம்‌. IV—204

நாட்டு மக்கனின்‌ நன்மையை நாடும்‌ மன்னனின்‌ நலத்தை நாட்டு மக்களும்‌ விழைவார்கள்‌. அதனால்‌ என்ன பயன்‌ எனக்‌
கருதல்‌ கூடாது. அம்மக்களின்‌ விழைவினை அவர்களில்‌ அந்தனர்‌ முதலிய சான்றோர்‌ தம்‌ ஒருமித்த விருப்பத்தை, அந்தரான்மா
வாகத்‌ திகழும்‌ இறைவன்‌ நிறை?3வற்றுவான்‌. IV—205

அரசனுக்கு ஆணை செலுத்துவது அவ௫ியமாகும்‌, இடையர்‌, வேடர்‌ முதலியவர்கள்‌ கூட அம்பு நூல்‌ இவற்றின்‌ குறியீட்டால்‌
ஆணை செலுத்துவர்‌, (அப்படியிருப்ப)) மன்னர்‌ மன்னராக பேரரசின்‌ ஆணைகிகு எல்லோரும்‌ அஞ்சவேண்டாமா?
(காட்டில்‌ இடையர்‌, வேடர்‌ முதலிய பாளையக்காரர்கள்‌ தம்‌ எல்லைக்குள்‌ ஆணை செலுத்துவர்‌. தளைவன்‌ ஒருவனிடம்‌
அம்பு, நரல்‌ முதலியன ஆணையின்‌ குறியீடாக தந்தால்‌ அவளை மற்றவர்கள்‌ சரண்‌ தந்து இங்கியற்ற மாட்டார்கள்‌ என்பர்‌.
சாதாரண பாளையக்காரர்கட்கே அரசாணை நடக்கும்‌ எனின்‌ பேரரசுக்கு ஆணை செலுத்தல்‌ வேண்டுமன்ஹறோ?) IV—206

கோட்டைகட்கு தன்னவா்களாகிய அதந்தணர்கட்கே அதிகாரம்‌ தருக, அவர்கள்‌ கம்‌ எதிரிகளை முறியடிச்கும்‌ அளவான படைகளையே தருக, அளவுக்கதிகமான படைகளை நிறுத்தல்‌ வேண்டாம்‌. IV—207

மூதலில்‌ உயரச்‌ செய்து, பின்னா்‌ (பதவியில்‌) குறையச்‌ செய்தால்‌ யாரானாலும்‌ தனது முன்னைய நிலையினைக்‌ கருதாமல்‌ (மன்னனைச்‌) பனப்பர்‌, ஆகையால்‌ அவனது நன்னடத்தையை அப்போதைக்கப்போது ஆராய்ந்து வரிசைப்படி பதவி உயர்வுகள்‌ தந்து, காலமறிந்து செயற்படக்‌ செய்ய வேண்டும்‌, IV—208

உனது ஆட்சி உன்னிடமே இருக்க விரும்புவாயானால்‌, அந்ிதணனே யானாலும்‌, நற்குடிப்பிறவாதவன்‌, வேடர்கள்‌ சேரியில்‌ வாழ்பவன்‌, கல்வியறிவில்லாதவன்‌, கொலைக்கஞ்சா தவன்‌, கொடுமனத்தன்‌, அயல்நாட்டான்‌, ஒழுக்கமற்றவன்‌ ஆகியவர்களை விலக்க வேண்டும்‌ (தன்னருகே சேரவிடக்‌ கூடாது) 1/–209

நன்னெறி நீங்கிய வேடருடன்‌ வூக்கும்‌ தயரை விலக்குக! முன்‌ ஓழுக்கம்கெட்ட அந்தணன்‌ தன்னைப்‌ பாதுகாத்த கொக்கிளை ஒருவேளைச்‌ சோற்றுக்காகக்‌ கொல்லவில்லையா?(ஒரு அந்தணன்‌ கெளதமன்‌ எனும்‌ பெயரினன்‌ ஓழுக்கம்‌ கெட்டு வேடர்களுடன்‌ கூடி வேட்டுவச்சியை மணந்து கொண்டு, வழிப்போக்கருடன்‌ சென்று யானைக்‌ கூட்டத்திலகப்பட்டு தப்பித்துக்கொண்டு ஒரு ஆலமரத்தடியில்‌ சென்றிருந்தான்‌. அங்கே நாடீ சங்கன்‌ என்னும்‌ கொக்கு விருத்தினனுக்கு உணவீந்து, பணமும்‌ தந்தது. மறுநாள்‌ பயணம்‌ ,புறப்பட்ட அந்தணன்‌ துங்கும்‌ கொக்கினைக்‌ கொன்று மாமிசத்தினை எடுத்துக்‌ சொண்டு புறப்பட்டான்‌. நன்றி கொன்ற இவ்வந்தணல்‌ கதை மகாபாரதம்‌ சாந்தி பருவத்தில்‌ வருகிறது. இவனைப்போலும்‌ பிராமணன்‌ உண்டு. ஆகையால்‌ அப்படிப்பட்டவர்கள்‌ தன்னருசே வரவிடக்கூடாது) 47210

கற்று மறவழிக்கஞ்சி, அரசியல்‌ அறிவுடையவனாகி, ஐம்பது வயதுக்குமேல்‌, எழுபது வயதுக்குட்பட்டவனாக, அமைந்து,
நோயற்ற மரபினனாகி, அகந்தையற்றவளாய்‌, அரசன்‌ வேண்டிய தூரல்‌ அமைச்சர்‌ பதவியை ஏற்று, காரியங்கள்‌ நடத்தும்‌ மந்திரி
கிடைத்தால்‌, அரசாங்கம்‌ சிறந்து மிளிரும்‌, இத்தகையவர்‌ ஒரு நாள்‌ இருந்தால்‌ போதாதா? ்‌ 1V—211

அத்தகு அமைச்சர்கள்‌ இடைக்காவிட்டால்‌ IV—219

அரசன்‌ தானே அரச நீதியுணர்ந்து செயலாற்ற வேண்டும்‌ கார்யங்‌ கள்‌ நிறைவேறினும்‌ நிறைவேறாவிட்டாலும்‌ சரியே
படை பலத்தாலும்‌ செல்வவளத்தாலும்‌ நிம்மதியாக இருக்காமல்‌ மந்திரி என்ற! ஒருவஎள, பண்பற்றவளை நியமீத்துப்‌ பேணினால்‌
ழூசணிக்காயளவு முத்து என்பது போல மனத்தை வருத்தம்‌ உறச்‌ செய்யும்‌. அதன்பிறகு அவன்‌ கையிற்‌ சிக்கி (அவன்‌ சொன்னபடி
ஆடும்‌) வாழ்க்கையுடையவனாக நேரும்‌, ்‌
(முதிது சிறிதாக இருக்கும்போது அணிந்து மகிழலாம்‌. ழூசணிக்காயளவாக இருந்தால்‌ அதை அணிந்தாலும்‌ தாங்க
முடியாது, வருத்தம்‌ தரும்‌. அதுபோன்றே தன்னளவு மீறும்‌ அமைச்சினால்‌ துயரே பெருகும்‌ என்பது கருத்து) 1V—213

ஒருவனிடமே அதிகமான பாரத்தை விரிவாச்காமல்‌ பலரிடமும்‌ ப௫ர்ந்தளிக்க வேண்டும்‌. ஓவ்வொருவரரைச்‌ சார்ந்தும்‌
பலர்‌ இருப்பதால்‌ காரியம்‌ எளிதில்‌ நிறைவேறும்‌. அதிகாரத்தைக்‌ குறைப்பதால்‌ சிரமங்கள்‌ மிகும்‌, மிகுவிப்பதால்‌ சிரமங்கள்‌ குறையும்‌. /7……214

பொருளால்‌ (பணத்தால்‌) மட்டும்‌ எச்சேயலும்‌ நிறைவேறி விடாது. பல குறுநில மன்னர்கள்‌ அக்கறையுடன்‌ செயலாற்ற
வேண்டும்‌, அவர்களை நம்‌ வசம்‌ இருக்குமாறு செய்ய பொருளைத்‌ தாராளமாகத்‌ தரவேண்டும்‌. கொடுமை கூடாது.
உண்மையும்‌ நட்பும்‌ இருக்க வேண்டும்‌. iv—215

மூலதனம்‌ (கருவூலம்‌) குதிரைகள்‌ முதலியன இருந்தும்‌, தகுந்த மனிதர்சள்‌ (அதிகாரிகள்‌) இன்மையால்‌, அவை இழந்து
நாட்டையும்‌ இழந்து, பகை வருக்கடங்கி இருக்கும்‌ சிம்மாசனகிகள்‌ (சமஸ்தானங்கள்‌) குறித்து நாம்‌ கேள்விப்பட்டதில்லையா? IV—216

அரசகுலத்தினர்‌ (க்ஷத்திரியர்‌) வேளான்‌ குலத்தினர்‌ (சூத்திரர்‌) முதலியவர்கள்‌ தம்மை இகழ்வர்‌ என்ற அச்சத்‌
தாலும்‌, தன்‌ போன்ற அற்தணர்களில்‌ தருமத்தை அறித்தேனும்‌ – சங்கடங்கள்‌ வரும்போது உறுதியாக நின்று சமாளிப்பர்‌ என்ப
தால்‌, அந்தணர்களை அதிகாரிகள்‌ ஆக்குவது மேன்மை பயக்கும்‌,
(பிரம்மனின்‌ குலையிலிருந்து அத்தணர்‌, தோளிலிருந்து கூத்திரியர்‌, தொடையிலிருந்து வைசியர்‌, பாதங்களிலிருந்து
சூத்திரர்‌ (தொண்டர்‌) பிறந்தனர்‌ என்று வேதம்‌ கூறும்‌) 114….217

வருமான அதிகாரிக்கு, கோயில்‌, முதலியவற்றின்‌ நிருவாக அதிகாரம்‌ தரக்கூடாது. அவன்‌ தன்‌ வருமான இழப்புக்டோக
கோயில்‌ சொத்து முதலியவற்றைக்‌ கவர்ந்து அரசனுக்கும்‌ அனுப்பிவைப்பான்‌. அவ்விதம்‌ செய்தாய்‌ தீங்காகும்‌. அதலின்‌
தனியதிகாரியே கோயிலுக்கிருத்தல்‌ வேண்டும்‌, கோயில்‌ சொத்தை அனுபவிப்பவன்‌ தானே நாசம்‌ அடைவான்‌, [7….218

மூதவில்‌ தனது நிலத்தின்‌ எல்லையை வரையறுத்து வேலி யிட்டு, புலம்‌ மென்மையுற கடப்பாரையால்‌ வேர்‌, தூர்களை
அப்புறப்படுத்தி உழுது பண்படுத்தும்‌ உழவன்‌ போல, மன்னன்‌ பகைவருடன்‌ நட்புடனோ, தன்‌ படை வலிமையாலோ தனது
நாட்டின்‌ எல்லையைப்‌ பத்திரப்படுத்தி, கவலையின்றி பிறகு தன்‌தாட்டினுள்‌ உள்ள எதிர்ப்புகளை அடக்க, ஆட்சியை திலைதீரட்டுவதே சிறப்பாகும்‌, IV-—219

புறங்கூறுபவனை முதலிலேயே கடிந்து பே9ிவிடக்‌ கூடாது. அவன்‌ கூற்றை மனதில்‌ அழ்ந்து சிந்தித்துப்‌ பார்க்கவேண்டும்‌. முற்றிலும்‌ பொய்‌ என்று தெரிந்தாலும்‌ பின்‌ அவனை வீரட்டி, விடாமல்‌ தனிமைப்‌ படுத்தி, அவன்‌ கூற்றுக்களை மட்டும்‌ புறக்கணிக்கவும்‌.
(பிறர்‌ மறைவான செய்திகளை அறிய அத்தகையோரும்‌
அரசனுக்குத்‌ தேவை ஆகையால்‌, அவனை விரட்டி விடக்கூடாது, அவன்‌ கூற்றை முற்றிலும்‌, ஏற்கவோ, நம்பிவிடவோ கூடாது என்பது கருத்து) IV—220

புகுதற்கரிய மலை, காடுகளைச்‌ சேரிந்த இடங்களில்‌ வ௫ிக்கும்‌, தொல்லை தருபவர்களான வேடர்‌, Loh opt aon ar ஊரீகளைசி சேர்ந்த இடங்களைச்‌ சரண்‌ புகுந்த அன்னியா்‌ களுக்குத்‌ தாற்காலிகமாகத்‌ தரவும்‌. அவர்கள்‌ கலந்திருந்தாலும்‌ போரிட்டாலும்‌ இரண்டு?ம நமக்கு நல்லது தான்‌, 1V—222

முக்கியமாக மலைப்பகுதியுள்ளவர்கள்‌ . தன்னோடிணையாத அரசனுக்கு மக்களால்‌ தொல்லைகள்‌ மிகும்‌. எப்படியும்‌
பயத்தைப்‌ போக்க அவர்களை கைவசப்படுத்திக்‌ கொள்ள
வேண்டும்‌. .நம்பிக்கையில்லாமை, நம்பிக்கை, சினம்‌, நட்பு; மிகுபகை, மிகுந்த உறவு முதலியன அவர்கள்‌ சிறுமதியாளர்‌
ஆதலின்‌ சிறிய காரணங்களிலேயே அமையும்‌,
(சிறிய விஷயங்களினாலேயே சினப்பர்‌. அதே போல்‌ சிறியவற்றினாலே மிகுந்த அன்பு பாராட்டுவர்‌ என்பது கிருத்து ) எப்படி என்றால்‌ IV—222

ஒரு வேடன்‌ வில்லுடன்‌ மற்றொரு வேடன்‌ இல்லம்‌ சென்றான்‌. (வந்தவனுக்கு) பாலன்னத்துடன்‌ விருந்தளிதிதான்‌
(அடுப்பில்‌) பளைநார்‌ வெந்து கொண்டிருக்கக்‌ கண்டான்‌. மாமிசம்‌ என்று கருதினான்‌. (விருந்தோம்பலை) மறந்து
(அவனை தனக்கு மாமிசம்‌ படைக்கவில்லை என்று இநந்து அவனைக்‌ கொல்லக்‌ கருதினான்‌) வழியனுப்ப வற்துவனைக்‌
கொல்லக்‌ கருதும்‌ (போது (வீருந்தளித்த) அவன்‌ ““விடைதருக/
(என்‌ வீட்டில்‌ வேரும்‌) பணைநார்‌ முறுகிம்‌ கெட்டுவிடும்‌] விரைந்தேக வேண்டும்‌” *, எனவும்‌ (மாமிகமல்ல என்று உணரிநற்து தெளிந்தவனாக (கொல்லாது) செல்ல விடுத்தான்‌ (முன்னைய கருத்துக்கு உதாரணம்‌) V—223

காட்டாள்கள்‌, பால்‌ சோற்றுக்கே, படைத்தவரிகளிடம்‌ நன்றியுடன்‌ சத்தியம்‌ தவறாமல்‌ நடந்து கொள்வர்‌, அது
போன்ற ஒரு சிறிய தவறு கண்டாலும்‌ அதைப்‌ பெரிது படுத்தி சினந்து விடுவார்கள்‌,
(மிகச்‌ சிறு காரணஙிகளிலும்‌ அன்பும்‌ பகையும்‌ கொள்‌ வார்கள்‌ என்பது கருத்து) IV—224

வாய்மை தவறாமை காட்டாள்களை வசமாக்க உதவும்‌, பகையரசரின்‌ தரதர்களைக்‌ கெளரவிப்பதனால்‌ அவர்தம்‌ நட்பு
உருவாகும்‌. சரியான சமயத்தில்‌ சம்பளம்‌ கொடுப்பதால்‌ காலாட்படை வசமாகும்‌. குதிரை வீரர்களை பரிசுகள்‌ தருவதால்‌
பற்றுடன்‌ இருப்பர்‌. IV—225

மேலான குதிரை, யானைகளை உனக்கு வேண்டியவர்‌களிடமே தருக, குதிரை லாயம்‌ முதலியன விழிப்போடு
பாதுகாக்கவும்‌. அதிகாரிகள்‌ வசம்‌ அப்பொறுப் பிளை ஒப்படைக்க வேண்டாம்‌. IV—226

ஒரு காரியத்தை ஒருவன்‌ சொன்னால்‌ அவன்‌ மீது பொறாமையினால்‌ மற்றொருவன்‌ அதனை மறுத்துரைப்பான்‌. இருவர்‌
கூற்றையும்‌ கண்டிக்காமல்‌ ஏற்றுக்‌ கொண்டு, பின்‌, அவை முடிந்ததும்‌, முதலில்‌ சொன்னவள்‌ கூற்று சரியானதாயின்‌
அதன்படி செய்தால்‌ நலமாகும்‌, 1V—227

அமைச்சர்கள்‌, ,வெளிப்பகைவர்களைதீ தாண்டியும்‌, உட்பகையாகிய திருடர்‌. கொள்ளையடிப்பவர்களை அடக்காமல்‌
வளரவிட்டும்‌, அரசனைச்‌ சிக்க வைத்து தம்மை விட்டால்‌ வேறு க தியில்லை எனுமாறு/ஆட்டிப்படைக்க முயல்வார்கள்‌. 1V—228

தனக்கு வேண்டி௰வரீகட்குத்‌ தருவார்கள்‌, பிறருக்கு உதவ மாட்டார்கள்‌. அரசன்‌ வாக்கை திறைவேற்றாமல்‌ தவறும்படி
செய்வர்‌. (அதற்குக்‌ காரணம்‌): அரசன்தான்‌ என நம்பும்படி செய்வர்‌, பிறரை அரசனிடம்‌ அணுகமுடியாதபடி செய்வர்‌. IV—229

கூர்மையுடைய ஜடராக்கினி (வயிற்றில்‌ சீரணிக்க உதவும்‌ வெம்மையுடைய தி) கபம்‌, பித்தம்‌, வாயு முதலிய குற்றங்களால்‌
வலிமை கெட்டு மந்தமுற்றால்‌ புறமான பெரு மருந்துகளால்‌ மீண்டும்‌ வலிமை (ஆரோக்கியம்‌) பெறுவது போல, தீய
அமைச்சர்களை அடக்க புதியவனை நியமித்தால்‌ அவன்‌ அவர்கள்‌ செருக்கிளை அடக்குவான்‌. 1V—230

அந்த தியவர்களை அடக்குவது எப்படி எனின்‌. IV—231

நிதி (கருவூலம்‌)–யரளை குதிரைப்‌ படைகள்‌, தனது சுவா தினத்தில்‌ இருந்தால்‌, அறிவாளியும்‌ வீரமும்‌ உடைய மன்னனுக்கு
தீயவர்களால்‌ ஆதம்‌ தொந்தரவுகள்‌ தானாக நீஙிஒவிடும்‌.
(நிதி, பாதுகாப்பு இரண்டும்‌ அரசன்‌ வசம்‌ இருக்கவேண்டும்‌ கல்வி, சுகாதாரம்‌ போன்ற .பிற துறைகள்‌ பிற அமைச்சரிடம்‌
இருக்கலாம்‌ என்பது கருத்து) IV—232

வயிற்றுக்கு (கண்டிக்கு)  (அரசனைக்‌) கெடுக்கப்‌ பார்ப்பார்களே அன்றி அரசனுக்கு (உண்மையான) நண்பனும்‌ இருக்கிறானாம்‌ (இல்லை), ஆதலின்‌,
தரமாட்டேன்‌ என்று கூறி, விட்டு விடவும்‌ முடியாது, திறமையுடன்‌ அவர்கள்‌ (ஏதாவது தற்து திருப்திப்‌ படுத்தியவாறும்‌) நம்பாமலும்‌ நடதித வேண்டும்‌. 7833

ஒரு செயலில்‌ வெறுப்படையாமல்‌ ஈடுபடுவறைக்‌ கண்டு, Yo செயலிலும்‌ ஈடுபடுவான்‌ என்பதை அறிந்து சொள்க; துருபதன்‌ துரோணனைக்‌ கொல்வதற்காக ஒரு யாகம்‌ செய்யு மாறும்‌ இலட்சம்‌ பசுக்கள்‌ காணிக்கை தருவதாகவும்‌ கூறவும்‌; அதற்கு முனிவன்‌ (உபயாஜன்‌) தான்‌ செய்ய விரும்பவில்லை என்றும்‌ எனது அண்ணன்‌ (யாஜன்‌) செய்வான்‌/ ஒரு பழம்‌ புனித மற்ற இடத்தில்‌ கிடந்ததைக்‌ கண்டு நான்‌ வேண்டாது செல்ல அவன்‌ அதனை எடுத்துண்டான்‌.! வெறுப்புறவில்லை! ஆதலில்‌ அவன்‌ செய்வான்‌ என்பதை உணர முடியும்‌ என்றும்‌ கூறினான்‌. இது போல்‌ ஒருவனின்‌ செயல்‌ (நடத்தை) மூலம்‌ அவளது இயல்பை உணர்ந்து கொள்ள வேண்டுமேயன்றி எல்லஈ நிகழ்ச்சிகளையும்‌ கண்டு தெளிய முடியுமோ?
(துரோணன்‌ துருபதனின்‌ ஒரு சாலை மாணாக்கன்‌ என்ப தாலும்‌ தான்‌ கற்கும்‌ காலை பின்னாளில்‌ தான்‌ அரசளானதும்‌ பாதியரசு தருவதாக துருபதன்‌ கூறியதாலும்‌ தான்‌ வறுமையுற்ற போது குழந்தைக்காக பால்‌ வேண்டி இல பசுக்களை யாூப்‌ பதற்காக துருபதனிடம்‌ சென்றான்‌. துருபதன்‌ அடையாளம்‌ தெரியாதவனாக பொய்யாக நடந்தான்‌. அதனால்‌ சினமுற்ற துரோணன்‌ பின்னாளில்‌ அத்தினாபுரம்‌ வந்து கெளரவ பாண்டவர்கட்கு ஆசிரியனாக அமைந்தான்‌. அருச்சுணனைப்‌ பயிற்றுவித்து துருபதனை தன்‌ தேர்க்காலில்‌ இழுத்துவரச்‌ செய்தான்‌, இந்த அவமானம்‌ தாங்காத துருபதன்‌ யாகம்‌ செய்து துரோணனைச்‌ கொல்லும்‌ மகளைப்‌ பெற விரும்பினான்‌. அருச்சுணனை மணக்கும்‌ மகளைப்‌ பெற விரும்பினான்‌. அந்த யாகம்‌ செய்ய *உபயாஜன்‌” எனும்‌ முனிவனை வேண்ட அவன்‌ மறுத்து தன்‌ அண்ணன்‌ :₹யாஜன்‌” அக்காரியம்‌ செய்வான்‌ என்றும்‌ புனிதமற்ற. இடத்தில்‌ உள்ள பழத்தைத்‌ தான்‌ வெறுத்தும்‌ அவன்‌ அதை நயந்து எடுத்ததால்‌ இதை உணர்வ தாகவும்‌ கூறினான்‌. இக்கதை மகாபாரதம்‌ ஆஇிபருவத்தில்‌ வருகிறது.
சாதாரணமான பழம்‌ எடுத்த நிகழ்ச்சி மூலம்‌ இந்த சகோதரர்களின்‌ இயல்பு புலப்படுவது போல ஒரு மனிதனின்‌
நடதிதையை சாதாரண நிகழ்ச்சி மூலமேமுன்னறிந்து அவர்களை கணிக்க வேண்டும்‌ என்பது கருத்து) IV—234

“இவன்‌ இக்கட்டான சூழ்நிலையில்‌ கேடு நினைத்தவன்‌* என்று இருந்தாலும்‌ நீ அந்த இடரிலிருந்து நீங்கி வெற்றி பெற்ற பின்‌ அவனைத்‌ துன்புறுத்த வேண்டாம்‌. அவன்‌ மட்டும்‌ சகுவர்ந்து கொள்க! பாம்பின்‌ சோரைப்‌ பற்களைப்‌ பிடுங்கி விட்டால்‌ அது என்ன செய்ய இயலும்‌? அதுபோல அவன்‌
செருக்கடஙிகிக்‌ உடப்பான்‌. தனனைக்‌ கொல்லாது விட்டதற்காக நன்றியுடன்‌ நட்பும்‌ பூணமுயல்வாள்‌. IV—235

நாட்டின்‌ விரிலே பொருட்பேற்றுக்கு மூலமாகும்‌, நிலட்‌ கொஞ்சமாக இருந்தாலும்‌, குளம்‌, கால்வாய்கள்‌ உருவாக்கி, ஏழைகளிடம்‌ வரி, பணமேல்‌. தானியமோ நியாயப்படி  படு,சீதாமல்‌ வசூலிதிது அவர்களை வளம்‌ உறும்படி செய்தால்‌ அரசுக்கு அறமும்‌ பொருளும்‌ வளரும்‌. IV—236

மக்கள்‌, வறுமையால்‌’ வாடி கட்குச்‌ சென்றால்‌, அவர்களை “மீண்டும்‌ அழைத்து வநீது குடி யேற்றி வைக்காமல்‌, அந்த மக்களின்‌ பசுக்களையும்‌ தானியங்‌ களையும்‌ விற்று, வீடுகள்‌ விறகுக்‌ காகும்‌ என்று எண்ணும்‌ போரீக்களத்து நரி போன்ற அதிகாரிகளை உடைய அரசன்‌, ஏழு தீவுகளையாண்டாலும்‌ செல்வவளம்‌ உற மாட்டான்‌. ]134._.237

அரசன்‌, தனது வருமானத்தில்‌ மிகுந்த கொடைக்கும்‌ தன்‌ அனுபவத்திற்கும்‌ ஆய இரண்டுச்கும்‌ ஒரு பங்கும்‌; படைபலம்‌ பெருக்கி அதனைக்‌ காப்பாற்ற இருபஙிகும்‌, சுருவூலத்தில்‌ சேமிக்க ஒரு பங்கும்‌ ஆக (நாற்பகிகாக்கி) வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஒற்றர்கள்‌ மூலமாக பகைவரின்‌ நட்பினரைக்‌ கண்‌
காணிப்பதோடு தன்‌ அங்கங்களான அமைச்சு, முதலியவர்களின்‌ இரகசிய நடவடிச்கைகளையும்‌ சண்காணித்து வரவேண்டும்‌, தன்‌ நாட்டில்‌ உள்ள திருடர்கள்‌ முதலிய தீயரைத்‌ தண்டிக்க வேண்டும்‌: IV —238

பரிசில்களை ஈந்து காவலர்களைப்‌ பேணி, அவர்கள்‌ மூலம்‌ திருடர்களைத்‌ தெரிந்து உடனே தண்டித்து விட வேண்டும்‌.
தாமதப்படுத்தினால்‌ அவன்‌ தப்பித்துக்‌ கொண்டு ஓடிவிட்டால்‌ அவனுகிகுப்‌ பதில்‌ ஒருவனைப்‌ பிடித்து வைக்திருப்பார்கள்‌.
அவனை அரசன்‌ அறியாது தண்டித்து இகழ்‌ அடைய நேரும்‌, கழுவேற்றிய பெரிய செட்டி நியாயம்தான்‌ நடக்கும்‌,
(கழுவிலேற்றிய பெரிய செட்டி. நியாயம்‌ ஆனது. ஒரு மூட அரசனிடம்‌ ஒருவன்‌ தான்‌ கட்டிய மண்வீடு மழையில்‌ சுரைந்து
சுவர்‌ இடிந்து விட்டதால்‌ தனக்கு நஷ்டம்‌ ஏற்பட்டதென்றும்‌
அவரைத்‌ தண்டிக்கவேண்டும்‌ என்றும்‌ முறையிட்டான்‌. மன்னன்‌ காரணம்‌ யார்‌ என விசாரித்தான்‌. மழைக்குக்‌ காரணம்‌ மேகம்‌,
மேகத்துக்கு காரணம்‌ குயவன்‌ இட்ட புகை, புசைக்குக்‌ காரணம்‌ குயவன்‌, குயவன்‌ சூளை வைக்கக்‌ காரணம்‌ யார்‌ என விசாரித்‌
தான்‌, மழைக்குக்‌ காரணம்‌ மேகம்‌, மேகத்துக்குக்‌ காரணம்‌ குயவன்‌ இட்ட. வுகை, புகைக்கு காரணம்‌ குயவன்‌. குயவன்‌
சூளை வைக்கக்‌ காரணம்‌ திருமண விழாச்‌ சட்டிகள்‌ செய்ததால்‌
இருமண மாப்பிள்ளை, என்ற கடைசியில்‌ மாப்பிள்ளை தலையில்‌ வீழ்ந்தது. அவனைக்‌ கழுவில்‌ ஏற்றுமாறு அரசன்‌ கூறினான்‌.
அவனைக்‌ கழுவில்‌ ஏற்றச்‌ சென்ற போது அவன்‌ நான்‌ ஒல்லியாக
இருக்கிறேன்‌. கழுமரம்‌ பருத்துள்ளதால்‌ அதற்கேற்ற ஆளை ஏற்றுங்கள்‌ என்றான்‌. அரசனும்‌ ஏற்று அங்கே வேடிக்கை
பார்க்கு வந்த பருத்த உடலையுடைய சேட்டி ஒருவனை கழுவி
லேற்றினான்‌ என்று கதை. இதை *சூலப்ருது வணிக நியாயம்‌” என வடமொழி நியாயம்‌ (பழமொழி) கூறும்‌, இக்கதையை இசி
செய்யுளில்‌ பயன்படுத்துகிறார்‌ கவிஞர்‌, தொல்காப்பிய உரை பில்‌ இதுபோல வேறொரு கதை வருவது –4-239

அரசன்‌, அரசியல்‌ குறித்துத்‌ தெரிய வேண்டியவற்றிகி நாலில்‌ மூன்று பங்குதானே சுயமாகக்‌ கற்றுத்‌ தெளிந்திருக்க வேண்டும்‌.
தனச்குத்‌ தெரியாத ஒரு பங்கு மட்டுமே நண்பர்கள்‌, பெரியோர்‌ கள்‌ அறிவுறுத்தத்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌. இவ்விதம்‌
இருந்து, தற்செருக்கின்றி, இருந்தால்‌ இடையூறுகள்‌ யாதுமின்றி நெடுநாள்‌ ஆட்ச? புரிவான்‌. IV—240

ஒரு கண்ணால்‌ தூங்கி, மற்றொரு கண்ணால்‌ விழிப்புடன்‌ இருக்கும்‌ மரத்தின்‌ உச்சியில்‌ உள்ள கரடியைப்‌ போல, இன்பம்‌
துய்க்கும்‌ போதுகூட வெளிப்பசை, உட்பகைகளின்‌ மேல்‌ ஒரு கண்‌ வைத்திருக்க வேண்டும்‌ (விழிப்புடனிருக்க வேண்டும்‌ ) IV—241

கல்வியின்‌ பால்‌ மதிப்பால்‌ கண்ணோட்டமுடன்‌ பொருளுடு ஊர்களும்‌ தரின்‌ செருக்கடைற்து துறவிகளும்‌, ஆண்டிகள்‌
முதலானோர்‌. தம்‌ விரதங்களைக்‌ கைவிட்டு போகங்களில்‌ மூழ்குவர்‌. அதனால்‌, பஞ்சமும்‌, நோயும்‌, கருக்கலைப்புகளும்‌
(குழந்தைச்‌ சாவுகளும்‌) மிகும்‌. அவர்களை பக்தி செய்தாற்‌ போதும்‌ அதனால்‌ அவர்கள்‌ சினப்பினும்‌ எத்தகைய பாவமும்‌
நேராது. இது குறித்து ஐயமோ, பாவமோ வேண்டாம்‌.1V—242

தலில்‌ மூன்று தவணைகள்‌ கொலைக்குரியாரை மன்னித்து மூறைகேட்டு நீதி வழங்க வாய்ப்பளிக்கவும்‌. தப்பித்துக்கொண்டு
போனால்‌ அபாயம்‌ எனக்‌ கருதும்‌ கொடியவனை பிடிக்கும்‌ முன்பே ஒறுப்பதே போதும்‌, IV—243

அரசன்‌, தான்‌ பெருவீரனாயினும்‌ கூ… தன்‌ கீழுள்ள வீரர்‌ களின்‌ தற்புகழ்ச்சிகளை வெறுக்காமல்‌ விரும்பிக்‌ கேட்க
வேண்டும்‌. கேட்டால்‌ அவர்கள்‌ உற்சாகம்‌ அடைவார்கள்‌ ,
(இல்லாவிட்டால்‌ உற்சாகம்குன்றுவர்‌) தனது வீரத்தை வீரர்கள்‌மூலமே கண்டு செயலாற்ற வேண்டும்‌.
(ஈண்டு வீரர்கள்‌ என்பது தன்‌ 8ழ்‌ உள்ள அதிகாகிீகள்‌, தளபதிகள்‌, சிற்றரசர்களைக்‌ குறித்து வந்துள்ள சொல்‌ ஆகும்‌.) IV—244

அரசன்‌, பிற நாட்டிலிருந்துவரும்‌ யானை, குதிரை, மணிகள்‌ அூல்‌ (சந்தனம்‌) முத்து மதலியவற்றை இறக்கிமதி செய்து,
துறைமுகங்களை வளர்ச்சியுறச்‌ செய்து வாணிபத்தை வளர்க்க வேண்டும்‌, பிற நாட்டிலிருந்து மழையின்மை, நோய்‌, இடையூறு
களால்‌ வரும்‌ மக்களை அவரவர்‌ தகுதிக்கேற்ப ஏற்றுப்‌ பேணுதல்‌ வேண்டும்‌. பூங்கா, பசுமந்தைகள்‌, கனிச்சுரங்கங்கள்‌ முதலிய
வற்றை தன்னவர்கள்‌ மேற்பார்வையிடுமாறு பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. 17… 245

சரியான சமயம்‌ வாய்க்கும்‌ வரை, குற்றவாளியின்‌ மேல்‌ சினத்தை அடக்கி வைத்திருந்து சமயம்‌ வந்ததுமே, குறி வாய்த்த
தும்‌ தன்‌ வலிமையைப்‌ பிரயோகித்து அம்பினை எய்யும்‌ வில்லானியைப்‌ போல, அவனைத்‌ தண்டிக்க வேண்டும்‌. IV—246

தீய பசைவர்‌ நாட்டின்மேல்‌ சிறு பயணம்‌ புறப்பட்டு சில நாட்கள்‌ இருந்து, வெள்ளம்‌ வரவும்‌ கடங்குத்‌ தண்ணீர்கூடி
அலைதிதுச்‌ செல்‌ துபோல, மேலும்‌ படைகள்‌ வறீது சேர்ந்ததும்‌ மீண்டும்‌ பயணம்‌ புறப்பட வேண்டும்‌. பகையரசன்‌ வலிவுடையவ
ராளால்‌ அவன்‌ செய்யும்‌ விருந்தோம்பலுக்கு மகிழ்ந்து தன்‌ வழிச்‌ செல்ல வேண்டும்‌. ஒற்றர்கள்‌ மூலம்‌ வலிவற்றவன்‌ என்பது
தெரிந்தால்‌ அந்நாட்டை முற்றுகையிட வேண்டும்‌. IV—247

மக்கள்‌ வருந்துமாறு வரி (பொருள்‌) வாங்குதல்‌ கயவர்‌களுடன்‌ ஆலோசனை புரிதல்‌, தனது நிலத்தை பிறர்‌ கவர
அனுமதித்தல்‌, முன்னைய நட்பினைக்‌ கருதாது ஐயுறுதல்முதலியவற்றால்‌ அரசன்‌ மேல்‌ அவநம்பிக்கை ஏற்படும்‌, அத்தகு அரச
னிடம்‌ உள்ள அமைச்சு, அதிகாரிகள்‌ உட்குமைந்து இருப்பர்‌.- அத்தகையோறிடம்‌ சரணளித்தும்‌, ஆடைகள்‌ தந்தும்‌ இரகசிய
மாக வசம்‌ செய்து கொண்டு, பகைவரிடம்‌ வேற்றுமையை உருவாக்கவேண்டும்‌, முன்கூறிய குற்றங்கள்‌ தன்னிடம்‌ இல்லாத படி பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌, IV~248

பகைவன்‌ தன்‌ நாட்டில்‌ உரிமை கொண்டாடிளாக்தான்‌ ஆளும்‌ நிலத்தில்‌ பாதியேயானாலும்‌ கொடுத்து, இடையறா
நட்புப்‌ பூண்டு வெளிப்பகையை நீக்கிக்கொள்ள வேண்டும்‌.
அதன்பின்‌ உட்பகையை நீக்க வேண்டும்‌, உட்பகை பாம்பினை விட பயங்கரமானதன்ஹறோ? 77249

பலப்படப்‌ பேசுவானேன்‌ (ஆயிரம்‌ சொற்கள்‌ கூறுவானேன்‌)
அரசன்‌ தான்‌ ஆளும்‌ நாட்டில்‌, உட்பகைவரை பலவிதத்தும்‌ ஆராய்ந்து தேடிப்‌ பிடித்தழிக்க வேண்டும்‌. காாமரைக்‌ சண்களை
யுடை மங்கையரின்‌ நடுவவஉள்ள ஆண்‌ மகன்போல (மனமூழ்ச்சி யுடன்‌) அச்சமின்றி வாழான்‌ என்‌.மால்‌ அரசாட்சியால்‌ என்ன
பயன்‌? துன்பங்களை அனுபவிக்கவா அரசாள்வது? (அச்சமின்றி மூழ்வுடனிருக்க உட்பகையை நீக்கிக்‌ கொள்ள வேண்டும்‌
என்பது கருத்து) IV 250

அஞ்சித்‌ தன்னருகே வராத வலிமை மிக்க எதிரியை இறுகப்‌ பிடிக்காமல்‌, அவனாகவேவரும்வகையில்‌ வளைத்துப்‌ போடுவதே
தடந்ததாகும்‌, பிணங்கத்‌ துள்ளும்‌ பெரிய மீனை கரையிலிருக்‌ கும்‌ தூண்டில்காரன்‌ கயிற்றால்‌ வசம்‌ பாரித்துச்‌ சுண்டியிழுக்கும்‌
முறையே உவமையாகும்‌.
(பெரிய மீன்‌ தூண்டியில்‌ பட்டு கீமே இழுக்கும்‌ போறு தூண்டில்காரன்‌ அதன்‌ போக்குக்கு விட்டு மீன்‌ தானாக மேலே
வரும்போது sang இழுத்துக்‌ கொள்வான்‌. இல்லாவிட்டால்‌ தூண்டிற்‌ கயிறு அறுந்து விடும்‌. மீன்‌ தப்பிவிடும்‌. அதுபோல
பகைவனும்‌ தானாகவே மாட்டிக்‌ கொண்டு தன்‌ வசம்‌ வரும்‌ போது சமயமறிந்து அடக்க வேண்டும்‌ என்பது கருத்து.)4-251-

கொடிய தண்டனை, புறஞ்சொல்‌ கூறியவர்‌ கூற்றினை ஆராய்ந்து பாராமை, பகைவா்சமாதானத்துக்கு வரும்போது
இடந்தராமல்‌ முரண்படுதல்‌, அயல்நாட்டிலிருந்து தன்னைச்‌ சரண்புகுந்தாரைக்‌ காட்டிக்‌ கொடுத்தல்‌, தன்னை எதிர்க்கும்‌
முதலமைச்சர்‌ முதலானவர்கட்குத்‌ தெரியும்படியாகச்‌ செயல்‌ புரிதல்‌, நம்பிக்கைக்குரிய ரல்லாத மக்களிடம்‌ கலந்துறவாடல்‌
நம்பிக்கைக்‌ குரியவரறை வேறுபடுத்தி விலக்குதல்‌, மந்திரா லோசனையில்‌ கண்ணோட்டம்‌ மிகுதல்‌, மந்திராலோசனளனையை
வெளீப்படுத்தியவர்களை கண்டி.க்காதி ஞத்‌ தல்புதுமைகள்‌ நிகழ்ந்‌தால்‌ ஆராய்ந்து பார்த்து முடிவினைச்‌ செய்யாமை, பெரியோர்‌
சளை மதித்து வணங்கி ஒரு பார்வையேனும்‌ பாராமை, தீயோர்‌நட்பு, (பெண்‌,கள்‌, வேட்டை முதலிய) விசனங்களில்‌ மூழ்கிடுதல்‌,
பொறாமைப்படுதல்‌ ஆகிய (குற்றங்களை) அரசன்‌ கைவிடவேண்டும்‌, IV—252

மூன்றுவகை உற்பாதங்கள்‌ (பஞ்சம்‌, மழையின்மை, இயற்கைச்‌ ற்றங்கள்‌ முதலிய விண்‌, மண்‌, தேவர்களால்‌ எனும்‌
மூவகை விபத்துக்கள்‌) நிகழ்ந்தால்‌ அரசன்‌, பிராமணர்கட்கு அன்னதானம்‌, தேவர்கட்கு யாகம்‌, அக்கினி ஹோமம்‌ முதலியன
செய்வதற்கு பெருஞ்செல்வம்‌ செலவிடவேண்டும்‌- IV—253

அரசன்‌, தனது அதிகாரிகள்‌, வீரர்களுக்கிடையே போட்டிகள்‌ உருவாக்க வேண்டும்‌. அதனால்‌ ஒருவருக்கொருவர்‌ போட்டி
மனப்பான்மையால்‌ இரகூயங்களை வெளிப்படுத்துவர்‌ போட்டி போட்டுக்‌ கொண்டு அரசனுக்கு நலன்‌ விளைவிப்பார்கள்‌.4-—254

அரசன்‌ எஙிகும்‌ தானாகச்‌ செல்லக்கூடாது. தனக்குப்‌ பதிலாக ஒருவனை அனுப்ப வேண்டும்‌. அவன்‌ வலிவு__ன்‌ இல்லா
விட்டால்‌ பகைவர்‌ அஞ்சமாட்டார்கள்‌. ஆதலின்‌ அவனுக்கு பொருள்‌, நிலம்‌, யானை, குதிரைகள்‌ நிறையத்‌ தரவேண்டும்‌.
அந்தணனை நியமித்தால்‌ நல்லது. எதிர்க்க மாட்டான்‌. மற்றவர்‌ களும்‌ வேண்டியதுதான்‌. கோட்டை, படைபலம்‌ உடைய நிலத்தைத்‌ தரவேண்டும்‌. IV—255

எல்லைப்புறக்‌ காடுகளை நெருக்கமாக வளர்ச்கவும்‌, உன்‌ நாட்டுக்குள்ளே இருக்கும்‌ று காடுகளை, திருடர்கள்‌ தொல்லை கள்‌ நேராதவாறு துண்டு துண்டாக அழித்து விடவும்‌, JV—256

புகுத.ற்கரிய காடுகள்‌ (மன்னியம்‌) தன்னில்‌ வ௫ூக்கும்‌ காட்டு மச்களிடம்‌ தட்புகளை ஆராய்வது மண்‌ குடிலை நீரால்‌ கழுவுவது போலாகும்‌.ஆதலின்‌ அவர்களைபரிசில்கள்‌ தந்தும்‌, ண்மையான நட்புடனும்‌ நடந்துகொள்ள வேண்டும்‌. எதிரிகள்‌ மேல்படை எடுக்கும்‌ போது துணையாவார்கள்‌, எல்லைப்புறக்கொள்ளைகட்கு உதவுவார்கள்‌: நூறு குற்றங்களும்‌, ஆயிரம்‌ தண்டனை களையும்‌ எல்லாம்‌ பரிபாலிக்கும்‌ அரசன்‌ பொருட்படுத்த கூடாது,
(குற்றம்புரியும்‌ இயல்புடைய காட்டு மக்களின்‌ மேல்‌ கடுமை யான குற்றச்சட்டத்தைப்‌ பிரயோகித்து அவர்கள்‌ வெறுப்பைசி
சம்பாதிக்கக்‌ கூடாது அவரிகள்‌ போக்கறிந்து நிதானமாக தண்டித்து அள வேண்டும்‌ என்றும்‌ அரசன்‌ ஆட்சியில்‌ குற்றங்‌
களும்‌, தண்டனைகளும்‌ இயல்பாதலின்‌ பெரிது படுத்திக்கொள்ள வேண்டாம்‌ என்றும்‌ கூறுறார்‌) iV—257

யானை, குதிரைகளைக்‌ கொண்டு வரும்‌ தொலைதூர தீவு களிலிருந்து வரும்‌ வணிகர்கட்கு, ஊர்கள்‌, நகரில்‌ நல்ல வீடுகள்‌,
தரல்‌, கொலுவில்‌ தரிசனம்‌ தருதல்‌, பரிசுகள்‌, நல்ல வினை தருதல்‌ முதலியவற்றால்‌ பழமை பாராட்டும்‌ நட்பினனாக்‌54 கொள்ள
வேண்டும்‌. (யானை குதிரைகள்‌) பகைவர்க்குக்‌ கஇட்டாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்‌. IV—258

எல்லைப்புறத்‌ தரசர்சகளின்‌ தூதர்களிடம்‌ கொலுவிருக்கும்‌ போது அரசன்‌ சரசசல்லாபங்கள்‌ (இனிமையான பேசிசுக்கள்‌)
செய்ய வேண்டும்‌. தனது அதிகாரிகள்‌ அவர்கட்கு முன்‌ எல்லைப்‌ புற விவகாரங்களைப்‌ பற்றி சுடுமையாக விவாதிக்க வேண்டும்‌.
எனினும்‌ தான்‌ மட்டும்‌ மென்மையாக நட்புடன்‌ இருப்பதாக (நடித்து தன்னதி காரிசகுட்குசமாதானம்‌ செய்து) பேச வேண்டும்‌.4-259

புதிய அதிகாரிகளையும்‌ மற்திராலோசணையில்‌ விரைந்து இடம்தரக்‌ கூடாது. அவன்‌ செருக்கினால்‌ தன்‌ நண்பர்களிடம்‌
பெருமை பேசும்போது உண்மையைச்‌ சொல்லிவிட அதனால்‌ காரியமும்‌ கெடும்‌. அவனும்‌ அதனால்‌ கேடுறுவான்‌. IV—260

தனது நலம்‌ நாடுவோர்‌, அறிஞர்கள்‌, நன்னெறியாளர்கள்‌, வீரர்கள்‌ மரபுரிமையான செல்வத்துடன்‌ வாழ்வோர்‌ ஆய
அந்தணர்களை கோட்டைக்‌ கதிபதிகளாக நியமித்தும்‌, புலிப்பால்‌ வேண்டினும்‌ கிடைக்குமாறு நூற்றாண்டு வாழும்‌ நிறைசெல்வ
வளங்கள்‌ சேர்த்தும்‌, எறும்பள வாயினும்‌ ஏற்றத்தாழ்வின்றிநிலம்‌ பஇர்த்தளித்து சிற்றரசர்களைப்‌ பேணியும்‌ வருமானம்‌ அதிக
மாகவும்‌ செலவ குறைவாகவும்‌ அமைய மக்களைத்துள்புறுத்தாத வாறு கருவூலத்தைச்‌ சேர்த்தும்‌, வலி விழக்கும்‌ பகைவர்‌ நிலங்‌
சளை ஒற்றர்கள்‌ எனும்‌ கண்கள்‌ மூலம்‌ பார்த்து கொக்கினைப்‌ போல சமயமறிந்து சுவாீந்து தானும்‌ துன்புறாமல்‌ தன்‌ மக்களும்‌
துன்புறாமல்‌ காப்பாற்றி, பசைவர்கள்‌ அஞ்சும்படியாகத்‌ திகழ்‌ கின்ற அரசன்‌ மார்பில்கைவைத்து நிம்மதியாகத்‌ தூங்குவான்‌. IV— 261

யானை, குதிரைகளை விலைக்கு வாஙிகவும்‌, அவற்றை மேய்த்தற்காகவும்‌, வீரர்களது சம்பளத்திற்காகவும்‌,; அறிஞர்‌
களைப்‌ போற்றவும்‌, கடவுளை வணங்கவும்‌, தான்‌ அனு விப்‌ பதற்கும்‌ ஆகும்‌ செலவு செலவல்ல என்றும்‌, அரசன்‌ தனது
செல்வத்தை இவற்றுக்காகத்‌ தாராளமாகச்‌ செலவளிக்சலாம்‌. IV—262

அரசனின்‌, எதிரிகள்‌ மேல்சபதம்‌ செய்தல்‌ கூடாது. படை பெடுப்பில்‌ வெற்றி கட்டலாம்‌. கட்டாமலும்‌ பொசலாம்‌,
பின்‌ நாளாவட்டத்தில்‌ வெற்றியாகலாம்‌. ஆதலின்‌ காரியத்தில்‌ நாட்டமிருக்க வேண்டுமின்றி சுலகத்தில்‌ நாட்டம்‌ இருத்தல்‌ கூடாது. W—263

(பகைவர்‌ மேற்படை எடுக்கும்போது) தப்பிச்‌ சொல்ல முடியாத இடங்களில்‌, பகைவரைச்‌ செலுத்தி: அவர்கள்‌ (வேறு வழியின்றி) வெற்றியோ, வீரமரணமோ என்றுபோரிடும்போது (தீவிரமுனைப்புடன்‌ போரிடுவார்கள்‌ ஆதலின்‌ தனது படைச்‌ கருவிகளைப்‌ பயன்படுத்தி தான்‌ செல்லாமல்‌, தன்‌ படைகளைச்‌ செலுத்திப்போரிடவேண்டும்‌. IV-—164

ஆலோசனைகளில்‌ ஒரிரண்டுமுறை சரியான யோசனைகள்‌ சொல்லி ஒருவனை மனதுக்குப்‌ பிடித்துவிட்டால்‌
அரசர்கள்‌ அவளையே மீண்டும்‌ மீண்டும்‌ அழைச்கத்‌ தொடங்‌குவர்‌. அப்படி அடிக்கடி அழைக்கும்‌ செல்வாக்களைப்‌ பார்த்து
மக்களும்‌ அவனிடம்‌ பணம்‌ (லஞ்சம்‌) தந்து தசாத காரியங்களையும்‌ நிறைவேற்றுமாறு செய்விப்பர்‌, அவனும்‌ செருக்குற்று
செய்யும்படி. செய்யுவான்‌. அரசன்‌ அத்தகையனின்‌ வெளிநடவடிக்கைகளை (லஞ்சம்‌ பெற்றுச்‌ செல்கின்றனர்‌ என்று)
ஒற்றர்‌ மூலம்‌ ஆராய்ந்து பாரீத்‌ தறிய3வண்டும்‌, IV—265

எல்லைப்புறத்தரசன்‌ கெடுவான்‌ என்றறிறந்தால்‌ கேடுறச்‌செய்ய வேண்டும்‌. கேடுறான்‌ என்றறிந்தால்‌ நட்பாடலே நல்லது.
அவனுக்கடுத்துள்ள எல்லைப்புறத்தவனே நமக்கு உதவுவான்‌.
இவன்‌ அவனோடு போரிட்டால்‌ நம்‌ எல்லைக்குக்‌ காவலாக அமைவான்‌ (பகைவனுக்குப்‌ பகைவன்‌ நண்பனாதலின்‌ நமக்கு
உதவிபுரிவான்‌,) 1V—266

பகை நாட்டைப்‌ பாழ்ப்படுத்துக கோட்டைகளை வசப்‌ படுத்துக, அவர்களது அந்தப்புர மகளிர்‌ அகப்பட்டுக்‌
கொண்டால்‌ அவர்களது பிறந்தகம்‌ போல்‌ மரியாதையுடன்‌ நடத்துக, பகையரசர்களின்‌ தூதுவர்கள்‌ முன்பாக கொடுஞ்‌
சொல்கூறவேண்ாரடம்‌. ஒருவேளை அவர்களோடு சந்தி (அமைதி யுடன்‌ படிக்கைகள்‌) செய்து கொள்ள நேரலாம்‌. IV—227

அபிசாரம்‌ (பில்லிசூனியம்‌ முதலிய மந்திர தந்திரப்‌ பிரயோகங்கள்‌) நஞ்சுகலற்த நீர்‌, முதலியவற்றால்‌ கூடியதும்‌
நிரந்தர நோய்களையுடையதும்‌, மலை, காடுகள்‌ நிறைந்ததும்‌, கொடிய மிலேச்சர்களால்‌ நிறைந்தது மான பூமிக்குள்‌ மேருமலை
யளவு பொன்‌ கிடைத்தாலும்‌ புகல்‌ வேண்டாம்‌. அத்நிலத்தைக்‌ கைப்பற்றி வேண்டின்‌ படைகளை மட்டும்‌ அனுப்ப கண்க
இனிமையாகப்‌ பேசி தன்‌ காரியத்தை நிறைவேற்றிக்‌ சொண்டு, மகிழ்ச்சியான நேரங்களில்‌ திறமையுடன்‌ பழகக்‌
காரியம்‌ நடக்காதெனின்‌ விலூச்செல்லும்‌ வஞ்சக மனிதனின்‌ நாணயத்தை (இந்நாணயம்‌, செல்லுமா செல்லாதா என்று
அறியும்‌) வியாபாரியைப்‌ போல அரசனும்‌ அறிந்திருக்க வேண்டும்‌. 1V—269

அறிந்த ஞானிகளை அழைத்து, தாதுக்களை அறிந்து தங்கம்‌ முதலியன ஏற்று, இயல்புக்கேற்றபடி அளவறிந்து நடந்து,
அன்புடன்‌ உடல்‌ நலனும்‌ மக்கள்‌ நலனும்‌ பேணி, தன்னுடல்‌ ஒரு பங்கும்‌ அரசியல்‌ ஒரு பங்குமாகச்‌ சமமாக மதித்து நீண்ட
ஆயுளுடன்‌ அரசன்‌ வாழவேண்டும்‌.
(இந்த பாடல்‌ சிலேடை மூலம்‌ உடலுக்கும்‌ அரசியலுக்கும்‌ உவமை காட்டி அமைந்தது, அதன்‌ பொருள்‌) அரசன்‌ தன்‌
வாழ்நாளில்‌ நலமுடன்‌ அரசாள, அறிந்தவர்கள்‌ மூலம்‌ தன்‌ நாட்டில்‌ தங்கம்‌ முதலிய கனிவளங்கள்‌ (தாதுக்கள்‌) இருப்பிடம்‌
அறிந்து அதை எடுத்தும்‌, மக்கள்‌ வருமானத்தில்‌ சிறிதளவே வரியாகப்‌ பெற்றும்‌, செருக்குடன்‌ அநீதிபுரிபவர்களைத்‌
தண்டனை மூலம்‌ அடக்கியும்‌, அருளோடும்‌, எல்லோரையும்‌ பேணி, சமூக நீதிகளைக்‌ குலையாமல்‌ பாதுகாத்து, அந்தணர்‌
களை கெளரவித்தும்‌, மக்கள்‌ குறைந்த இடங்களில்‌ மக்களை குடியமர்த்தியும்‌, இடமில்லாதவர்கட்கு இடம்‌ குந்தும்‌, இய பகை
வரை அழித்தும்‌, வளமோடு தன்னுடல்போல நாட்டையும்‌ காக்க வேண்டும்‌ என்பது ஒரு பொருள்‌.)
[அரசன்‌ தன்‌ ஆயுளை நீட்டிக்க விரும்பி தாதுக்களை அறிந்து, வைத்தியர்கள்‌ மூலம்‌ தங்கப்பற்பம்‌ முதலியவை ஏற்றும்‌,
உடல்‌ முழுதும்‌ பேணி பருத்திருக்க வேண்டிய மார்பு, தோள்‌ களை பருக்குமாறும்‌ மெலிற்திருக்க வேண்டிய இடை, வயிறு
களை மெலியுமாறு உடற்பயிற்சிகள்‌ செய்தும்‌, உடலை சுத்தம்‌ செய்து கொண்டு தன்‌ உடலை தனது நாடு போலவே காக்க
வேண்டும்‌ என்பது ஒரு பொருள்‌.) [270

அரசன்‌ அதிகாலையில்‌, நலமாகத்‌ தூங்கனாயா எனக்‌ * கேட்கும்‌. மருத்துவர்‌, சோதிடர்‌ முதலிய அந்தணர்களோடு
பேக்‌ கலந்திருக்க வேண்டும்‌. பின்‌ விடிற்த பிறகு ஒரு நாழிகை கழித்து, மந்திரிகள்‌, அதிகாரிகளோடு பேசி, அரசாங்க வரவு
செலவுகளைப்‌ பரிசீலிக்க வேண்டும்‌. பின்‌ நடுப்பகலில்‌ உடலைப்‌ பிடித்துவிடச்‌ செய்தும்‌ .(மர்த்தனம்‌–மசாஜ்‌) மல்லர்களோடும்‌,
சமையற்காரார்களோடும்‌, வேட்டைக்காரர்களோடும்‌, கலந்து பேசி, உடற்பயிற்சி, விளையாட்டு, உணவு முதலியனவற்றைப்‌
பற்றி கலந்தாய்தல்‌ வேண்டும்‌. பிற்பகலில்‌ கடவுளை வணங்கி, அறிஞர்‌ அந்தணர்களுடன்‌ பேசி மகிழ வேண்டும்‌. மாலை, உண்ட
பின்‌ விதூசகனுடன்‌, கவிஞர்களுடனும்‌ பேசிமகஇிழ்ந்தும்‌ பின்‌ முன்னிரவில்‌ ஒற்றர்களுடன்‌ பேசிவிட்டு இன்னிசைப்‌ பாடகர்‌
களுடன்‌ கூட இருந்து இசை கேட்டு மகிழ வேண்டும்‌. இரவில்‌ நல்ல தூக்கமும்‌, காதலியருடன்‌: கலந்தின்புறுதலும்‌ இருக்க
வேண்டும்‌. 1271

நண்பர்‌, நட்பும்‌ பகையும்‌ உடையவர்‌, பகைவர்‌ என மூன்று விதமாக சேவகர்கள்‌ அரசனிடம்‌ என்றும்‌ இருப்பார்கள்‌. அவர்‌
களைப்‌ பற்றிச்‌ சொல்லுகிறேன்‌. கேட்பாயாக! IV-—272

அரசனுக்கு மருத்துவன்‌, சோதிடன்‌, அறிஞர்‌, சுவிஞன்‌, புரோகிதன்‌, முதலியவர்கள்‌ அரசனின்‌ நலமே நாடும்‌ நட்பினரா
வார்‌… நட்பும்‌ பகையும்‌ உடையவர்கள்‌ வரி வருூலிக்கும்‌
அதிகாரிகள்‌, முதலியவர்கள்‌ ஆவார்கள்‌. (இவர்கள்‌ தமது பணம்‌வகையில்‌ புரியும்‌ குற்றங்களைக்‌ கண்டு அரசன்‌ தண்டிப்பானோ
எனப்‌ பகைமையுணர்வும்‌ கூடக்‌ கலந்திருப்பர்‌) பறிமுதல்‌ செய்யப்‌ பட்ட செல்வத்தினை புகடயவர்கள்‌ பகைவர்‌ ஆவர்‌, (பறிமுதல்‌
செய்த பணம்‌, செரத்துக்களை மீட்டுப்பெற விழைந்து பகைமை பாராட்டுவர்‌) ஆதலின்‌ இந்த மூவகையினரிடமும்‌ தான்‌ பகைமை
பாராட்டுவது வெளிச்‌ தெரி.ரமல சாதுரியமாகவும்‌ நீதியுடனும்‌ நட்பினருடன்‌ நட்புடனும்‌ பகைவரிடம்‌ பகையாகவும்‌ நடந்து
கொள்ள வேண்டும்‌. ்‌ ்‌. 14–273

தகுதியுடையவர்களை நன்காராய்ந்து, அவர்கள்‌ கேட்கு
முன்பே, ஒருவர்‌ சொல்லும்‌ முன்பே, பலாப்பழம்‌ காய்த்துத்‌ தொங்குவதுபோல, கனவுகண்டாற்போல, நிறையத்‌ தந்து
வியப்பில்‌ ஆழ்த்த வேண்டும்‌.
(பலா, பூக்காது காய்த்தலின்‌, காய்க்கும்‌ எனும்‌ பூவாகிய முன்னறிவிப்பின்று இடீரெனப்‌ பிஞ்சுகள்‌ விடும்‌. அதுபோல
அரசன்‌ மூன்னறிவிப்பின்றி பரிசுகள்‌ தந்து வியப்பில்‌ ஆழ்த்த வேண்டும்‌ என்பது கருத்து)
“அபிகம்ய க்ருதே தானம்‌ த்ரேதாஸல-? ஆஹுூய தீயதேத த்வாபரே
யாசமானாய சேவயா தீயதே கவெள,”” பராசரஸ்மிருதி
(இருதயுகத்தில்‌ தானே சென்று கொடுத்தார்கள்‌. திரேதா
யுகத்தில்‌ அழைத்துக்‌ கொடுத்தார்கள்‌. துவாபரத்தில்‌ கேட்டுக்‌ கொடுத்தார்கள்‌. கலியுகத்தலோ தொண்டு செய்தால்‌ சொடுத்‌ தார்கள்‌”! என்பது சுலோகம்‌,)-4-274-

பிதுரீ்பூசை, தேவபூசைகளில்‌, பெற்றோர்க்கயற்றும்‌ கடனே சிறந்ததாதலின்‌, பெற்றோரிடம்‌ பக்தியுடையவனாக, கற்‌.றடங்கய ஒழுக்க சீலரீகட்கும்‌ வைணவ பக்தர்கட்டும்‌ தானம்‌ தந்து பிதுருக்களை நற்கதிக்கு உய்ப்பாயாக. IV—275
தானம்‌, அறிஞர்களைக்‌ காப்பாற்றவும்‌, ஞானம்‌ தன்னைக்‌ காப்பாற்றவும்‌ ஆமென்றுணர்ந்து, ஸ்ரீமந்‌ நாராயணனைச்‌ சரண்‌ புகுக *$ராஜ்யாந்தே நரகம்‌ த்ருவம்‌: (அரசாட்சியிள்‌ முடிவில்‌ நரகம்‌ நிச்சயம்‌) எனும்பழமொழி யோர்ந்து அவனைச்‌ சரண்புகு வதன்றி வேறு வழியில்லை. IV—276
மனைவியின்‌ பதிபக்தி, ஆண்பெண்களின்‌ pupae மரியாதைகள்‌, துறவிகளின்‌ புலன்‌ அடக்கம்‌, ழ்‌ சாஇயினர்‌ மேல்‌ சாதியனரை மதித்து நடத்தல்‌, சேவகர்கள்‌ அரசகாரியங்‌களில்‌ நன்னடத்தையுடனிருத்தல்‌, எல்லாம்‌ அரசனின்‌ தண்டனைக்கு அஞ்சித்தான்‌ என்பதை உணர்தல்‌ வேண்டும்‌.IV—277

அரசன்‌ விசித்திரமான முறையில்‌ (கயவர்களை) கொன்று தருமவான்‌ ஆகவும்‌, மனைவியை . (பருவகாலங்களில்‌ மட்டும்‌)
கலற்தின்புற்று பிரம்மச்‌ சாரியாகவும்‌, பிறர்நலத்துக்‌காகப்‌) பொய்‌ சொல்லி சத்தியவான்‌ ஆகவும்‌.* (ஒரு நாளுக்கரு
மூறை மட்டும்‌) உணவுண்டும்‌ உபவாசியாகவும்‌, (பெரியார்‌களிடம்‌ மதித்து) விலகச்‌ சென்று வீரனாகவும்‌, (நல்லோர்க்குத்‌
தானம்‌ செய்வதில்‌ செலவழித்துச்‌) செல்வந்தளாகவும்‌, இகழவேண்டும்‌, iV—278
* பொய்மையும்‌ வாய்மை இடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்‌ குறள்‌

ஒற்றன்‌, அரசன்‌ உள்ள ஊரில்‌ இருப்பவனாகவும்‌, பல்வேறு மொழிகள்‌ தெரிந்தவனாகவும்‌, பிற நாட்டு ஒற்றர்களை அறிந்த வனாகவும்‌ அடையாளம்‌ காணும்‌ சின்னம்‌ எதுவும்‌ அற்றவனாக வும்‌, பல்வேறு வேடதாரியாகவும்‌, இறக்க வேண்டும்‌. இப்படி இல்லாதவன்‌ ஒற்றனாக வரமாட்டான்‌. IV—279
அரசன்‌, அந்தந்தக்‌ காலத்திற்கேற்றவாறு, உடலைப்‌ பிடித்து விடுதல்‌, குளிப்பு, உணவு, மெப்ப்பூச்சு, உடை, மலர்கள்‌
தரித்து இவற்றில்‌ ஆர்வமுடன்‌ இருந்து, உடலை வருத்தி மெலியச்‌ செய்வதால்‌ (உபவாசங்களினால்‌) ஏற்படும்‌ புண்ணியத்தை பொருட்‌ கொடையாலே பெற்று உய்தல்‌ வேண்டும்‌.
(தவம்‌ செய்தல்‌ வேண்டா தானம்‌ செய்தல்‌ வேண்டும்‌ என்பது கருத்து) 1V—280

எப்போதும்‌ பல்வேறு சுவைகளையுடைய உணவும்‌அரசனுக்கு இருத்தல்‌ வேண்டும்‌. நடுப்பகல்‌ கழிந்ததும்‌ உண்ண
வேண்டும்‌. பூத்துச்‌ சாப்பிடவேேண்டுமே யன்றி சுவை விருப்பிற்‌ காசு உண்ணுதல்‌ கூடாது. இது உடல்‌ நலத்துக்குரியதாகும்‌. IV—281
(அறம்‌ பொருள்‌ இன்பம்‌ எனும்‌) முப்பாலிலும்‌ சமமாசு மூயன்று அரசன்‌ இருந்தாலும்‌ அறத்துக்காக அதிகம்‌ செலவான
௮ம்‌, அது2வ சிறப்புடையதாகும்‌. பிற வயல்கட்சுப்‌ பாய்ச்சிய நீர்கரையுடைந்து செந்நெல்‌ வயலில்‌ பாய்ந்தது போல அது மூழ்தற்குரியதாகும்‌. IV—282
ஒளிதரும்‌, சிறப்பினையும்‌ நல்கும்‌ ஒரு இரத்தினத்தை அரசன்‌ புகழ்மிகுமாறு ௮ணிய வேண்டும்‌. வாரந்தோறும்‌ கிழமைக்கேற்ற மணிகளையும்‌ அணிந்து அரசன்‌ ஒளிர்தல்‌ வேண்டும்‌,
(தோற்றப்‌ பொலிவுக்கும்‌, செல்வச்‌ செழிப்புக்குமடையாள மாகவும்‌ மிகச்‌ சிறந்த வைரம்‌, முத்து முதலிய மணிகளை அணிய
வேண்டும்‌ என்பது கருத்து. ஆங்கில அரசாட்சியின்‌ மாண்பின்‌ குறியீடாக, மணி மடியில்‌ 6கோஹிஜார்‌’ வைரம்‌ பிரகாசித்தது
குறிப்பிடத்தக்கத), 1V—283

செய்வது அரசியலாம்‌. பாவத்திலிருந்து எப்படி நீங்குவது எனக்‌ கருதவேண்டாம்‌. வேதம்‌ கூட செயற்படுத்த இயலாத
வற்றைக்‌ கட்டளை இடாது தன்‌ அற்றலுக்கேற்ற அளவே செய்யுமாறு கூறும்‌. IV—284

மனு, யமதருமன்‌ முதலானோர்‌ சிறப்பாக குற்றங்களை அறிந்து தண்டித்ததால்தான்‌ தேவாம்ச தருமவான்களாகப்‌ புகழ்‌
பெற்றனர்‌. பிரமன்‌ தேவாம்சமாகப்‌ பிறப்பித்து, மக்களை ஆட்சி செய்து விராட்‌, சம்ராட்‌ முதலிய வேதங்‌ கூறிய.
சொற்களுக்குரியவனாக. தேவா்கட்ிணையாக அரசனை உருவாக்கினான்‌ அரசன்‌, சிரமங்களைப்‌ பொறுத்து உலகிலுள்ள
இடையூறுகளை நீக்காவிட்டால்‌ பிறவிப்பயனுண்டாகுமோ?
புலனின்பங்களில்‌ சிக்குண்டு பிறன்மனை வழிப்பறிகளில்‌
கிடைத்த பணத்தால்‌ மகிழும்‌ திருடர்‌ தலைவர்களும்‌ இருப்ப தில்லையா? இந்த மோகம்‌ (அரசியலில்‌ ஆர்வம்‌) ஏன்‌ என
வெறுப்பது கூடாது. பூமியை அள்வதில்‌ பொறுப்பின்மை கூடாது. எப்படி எனின்‌, முன்பு கிருதயுகத்தில்‌ கிருதவீரியன்‌
மசனான :ஆயிரந்தோளுடையான்‌. எனும்‌ அரசன்‌ தனது தோளில்‌ நிலத்தைத்‌ தாங்கியவனாக எந்தத்‌ தீவில்‌, எந்த
நாளில்‌, எந்த நகரில்‌, எற்த வழியில்‌, எந்தச்‌ செயலில்‌ எந்த நேரத்தில்‌ யார்‌ எதைச்‌ செய்ய விழைவார்களோ அறிந்து
கொண்டு, கத்து, உலக்கை, வில்‌ முதலிய சஸ்திர அஸ்திரங்‌ களால்‌ தண்டித்து கோலோச்சிப்‌ புகழ்‌ பெற்றான்‌. இறுதி பூமி
யாகிய கலியுகத்தில்‌ அதுபோல அணையிட இயலுமா? வேள்விக்‌ கேற்ற வலிமையுடைய இக்கால மன்னர்களால்‌ இயலாதல்லவா?
என்று கருதற்க. அரசர்க்கு மட்டுமே யன்றி அந்தணர்சட்கும்‌ முன்னைய வலிமையில்லையன்றோ! கடல்‌ நீரைக்‌ கைப்பிடியில்‌
அடக்கிக்‌ குடித்தான்‌ அகத்தியன்‌, பிரம்மனின்‌ சிருட்டிக்குப்‌ பிரதிசிருட்டி செய்தான்‌ விசுவாமித்திரன்‌.
பிரம்மாத்திரத்தை தனது யோகதண்டத்தினால்‌ தடுத்தான்‌ விட்டன்‌. இத்தகைய தவ வலிமை தமக்கில்லை என அந்தணா்‌
கள்‌ தம்‌ கடமையை ஆற்றலுக்கேற்பச்‌ செய்வதைச்‌ தவிர்த்தார்‌களா?அவர்களை நாம்‌ போற்றவில்லையா? ஆதலின்‌ அரசர்களும்‌
விழிப்போடிருத்து ஆற்றலுக்கேற்ப, கண்டதும்‌ கேட்டதும்‌ அலட்சயப்படுத்தாமல்‌ தயோரைத்‌ தண்டித்து நல்லோரைப்‌
பாராட்டியும்‌ அரசாண்டு தீனர்களைப்‌ பாதுகாக்கும்‌ ஸ்ரீமந்‌நாராயணனைச்‌ சரண்புகுந்து அடக்கமுடன்‌ இருந்தால்‌ எல்லா
தீலன்களும்‌ எய்தலாம்‌. பட்டம்‌ ஏற்ற மன்னன்‌ தருமத்தையே மனத்துட்‌ கொண்டு அதன்படி நடக்கவேண்டும்‌. தேவர்களும்‌,
சுவர்க்கங்களும்‌ தருமத்தை அடிப்படையாகக்‌ கொண்டிருப்பதனால்‌ அற வழி நடந்து, கடமைகளைச்‌ செய்து, எல்லோரினும்‌
மேன்மை பெற்றவனாக இலங்கி அரசாட்சி நடத்தவேண்டும்‌.
இவ்வாறு ஆளவந்சார்‌ தன்‌ மகனிடம்‌ கூறி ஆட்சியை ஓப்டைத்தான்‌ இது எனது பக்தனின்‌ பிரபாவம்‌ என்று
இவ்வாறு தாமரையில்‌ உறையும்‌ திருமகளிடம்‌ இறைவன்‌ உரை செய்தான்‌, IV—285

பாற்‌ கடலில்லத்தில்‌ பற்றுடையவனே! வணஙிகும்‌ தேவககளின்‌ மணி முடிகளின்‌ ஒளிபட்டுப்‌ பிரகாசிக்கும்‌ பாதங்களை
யுடையவனே/ கடலளவு கருணை வெள்ளம்‌ ததும்பும்‌ கண்களை யுடையனே! மந்தரமலையைக்‌ தாங்கெயெவனே! யாளையின்‌
துயர்‌ தீர்த்த சக்கிராயுத முடையவனே, திருமகளின்‌ இன்சொற்‌களைக்‌ கேட்பதில்‌ ஆர்வமுடையவனே! சங்கத்தை முழக்கி
அரக்கர்களை மயக்கம்‌ உறச்‌ செய்பவனே. IV—286

கைகளில்‌ தாங்கிய சங்கு சக்கரங்களால்‌ தொண்டைமான்‌ மன்னனைக்‌ காப்பாற்றினாய்‌! கருவிலிருந்த அருச்சுணனின்‌
பேரனைக்‌ காத்து &யிர்‌ தந்தவனே, சரண்புக்கவரைக்‌ காப்பவ$னை! பாம்புகளை உண்ணும்‌ கருடனை வாகனமாக
உடையவனே? IV —287

கொடியுடையவனே! இந்திரனின்‌ பாரிசாத மரத்தைப்‌ பெயர்த்துக்‌ கொண்டு வந்து சத்திய பாமாவை
மகிழச்‌ செய்தவனே. தூது நடந்து சொற்சாதுரியங் ளைக்‌ காட்டியவனே! தருமன்‌ புகழ்பெறச்‌ செய்தவனே! வி.லை
ஓடித்து இல்ல்னை ஏற்ற நல்லவனே –

* இந்த விளிகள்‌ அடுத்த அத்தியாயத்தில்‌ கேட்பாயாக எனும்‌ சொல்லில்‌ ௮வாய்‌ நிலையால்‌ பயனிலையாக முடிவுறும்‌;

இது, சம்மாசல நரசிம்ம சுவாமியின்‌ பாதங்களை வணங்கிய புண்ணியத்தால்‌ இடைத்த வெற்றியாய பொட்டனூரு எனு
மிடத்தில்‌ மெய்க்கிர்த்தியை தூணில்‌ வரைந்த சாசனமுடைய கிருஷ்ண தேவராயரால்‌ இயற்றப்பட்ட ஆமுக்த மால்யத எனும்‌
நூலில்‌ நான்காவது அத்தியாயம்‌ ஆக இனிது மிளிர்கிறது 4-289-

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading