Archive for the ‘ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்’ Category

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -31-39 —

August 5, 2021

பாடம் -31–பரமாத்மா யார்

தத்வம் புருஷார்த்தம் ஹிதம் -மூன்றையும்
வஸ்துக்கள் உண்மைப்பொருள்கள் இலக்கு வழி-அறிய வேண்டும்
ஞான த்ரயம் உபாதேயம் -ஸ்வ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றையும் அறிய வேண்டுமே –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கடல் நதிகளுக்கு இலக்கு -பூ கதிரவனையே நோக்கும் -உயிர் எம தர்ம ராஜனையே நோக்கும் –

ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டு அறிய வேண்டிய பொருள்களில் முக்கியமானவர் பரமாத்மா
அவரை அறிவதே அறிவின் பயன் என்று ஸாஸ்திரங்கள் கூறுகின்றன
பரமாத்மா என்று ஒருவரை ஏற்பதையும் ஏற்காததையும் வைத்து
ஆஸ்திக தர்சனங்கள் என்றும் நாஸ்திக தர்சனங்கள் என்றும் பிரிக்கப் படுகின்றன
பரமாத்மாவை ஏற்கும் தர்சனங்களிலும் கூட அவரைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன –

சாங்க்யர்கள்
பரமாத்மா என்பவர் ஸ்ருஷ்டிக்கு காரணமாய் எட்டு ஸித்திகளையும் பெற்றவர் என்கிறார்கள்
அணிமா –ஈஸித்வம்-வஸித்வம் -அஷ்ட மஹா சித்திகள்

யோக மதத்தைச் சேர்ந்தவர்கள் –
பரமாத்மா -அவித்யா அஸ்மிதா ராகம் த்வேஷம் அபி நிவேசம் என்ற ஐந்து கிலேசங்களும்
கர்மங்கள் பிறப்பு ஆயுஸ் போகம் என்ற மூன்று விபாகங்களும்
பாப புண்யங்கள் என்ற ஆசயங்களும்-
அற்றவர் பரமாத்மா
அவரே வேதத்தை இயற்றி அதை உலகுக்குக் கொடுத்தார் என்று கூறுகிறார்கள் –

பாசுபத மதம் -ருத்ரன்

புராண -நான்முகன்

புத்தர்கள்
உலகம் க்ஷணிகம் என்றும் பொய்யானது என்றும் அறிந்தவரே ஈஸ்வரன் என்கிறார்கள்

ஜைனம் -தர்மங்கள் அதர்மங்கள் உடல் மூன்றும் ஆவரணங்கள் மூடி
மேல் நோக்கி பிரயாணம் ஜீவாத்மா இயற்கையில்

சாருவாகர்கள் -மிகுந்த யுக புருஷர்கள் -ராஜாக்கள் -வடிவில் கடவுள் என்பர்

நியாய மாதத்தில்
ஜடமாய்-அளவற்ற ஞானம் உடையவராய்-ஸூகம் துக்கம் பாபம் புண்ணியம் அற்றவராய்
உலகைப் படைப்பவர் பரமாத்மா என்கிறார்கள்

மீமாம்ஸையில் யாகங்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களே கடவுள்
யஜ்ஜை ரூபியே ஈஸ்வரன் என்றும் சிலர் மீமாம்ஸா

அத்வைத மதத்தின் படி
குற்றம் அற்றவராய் ஞானம் ஆனந்த வடிவமாய் இருப்பவர் பரமாத்மா –
சச்சிதானந்த ஸ்வரூபன் நிர்மலன் -ஸத் -சித் -ஆனந்தம் —
அவித்யையால் மறைக்கப்பட்டு ப்ரஹ்மத்துக்கே பிரமம்
ஆச்சாத்தான சக்தி மறைக்கும்

விசிஷ்டாத்வைத ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தின் படியே
இவனே புருஷோத்தமன்
அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை ஏக –
ஸர்வஞ்ஞன் -சர்வ சக்தன் -சர்வ அந்தர்யாமி –
ஞான பல இத்யாதி
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
ஸூ பாஸ்ரயம்
ஸ்ரீ யபதி
ஞான ஆனந்த வடிவமாய்
உலகைக் காத்து படைத்து அழிப்பவராய்
உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் இருப்பவராய்
குற்றங்களே அற்றவராய்
கணக்கற்ற கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ மன் நாராயணன் பரமாத்மா —

ப்ரஹ்மம் என்றால் என்ன
வேதங்களில் பரம் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் முக்கியமானது ப்ரஹ்மம் என்கிற சொல்
எந்தச் சொல்லும் ஒரு தன்மையை முதலில் உணர்த்தி பின் அந்தத் தன்மையை யுடைய பொருளைக் குறிக்கும்
அதே போல் ப்ரஹ்மம் என்ற சொல் -உயர்வு அல்லது பெரிதாய் இருத்தல் – என்ற தன்மையை யுடைய பொருளையே குறிக்கும்
இந்தச் சொல் பிரகிருதி -முக்த ஆத்மா மற்றும் பரமாத்மா-மூவரையும் குறிக்கவும் வேதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது
இவை மூன்றுக்குமே ஒவ்வொரு படியால் உயர்வு உள்ள படியாலேயோ அவை பெரியதாய் இருக்கும் படியாலேயோ அது பொருந்தும்
ஆனால் இவற்றுள் முக்கியமான பொருள் எது என்று அறிய வேண்டும்

ஒரு சொல்லால் உணர்த்தப்படும் தன்மை பல பொருள்களில் இருந்தால் அவை அனைத்துமே அந்தச் சொல்லின் பொருள் ஆகும் –
ஆனால் அந்தத்தன்மை எந்தப்பொருளில் முழுமையாக -அதிகமாக -உள்ளதோ -அதுவே அந்தச் சொல்லின் முக்கிய பொருள் ஆகும்
அந்த முறையில் பார்த்தால் ஸ்வரூபத்தாலும் தன்னுடைய குணங்களாலும் பரமாத்மா தான் மற்ற இரண்டையும் காட்டிலும் மிக மிக உயர்ந்தவர்
எனவே ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு பரமாத்மாவே முக்கிய பொருள் ஆவார் –
பகவான் -சப்த பிரயோகம் போல் -ஆறு குணங்களும் பூர்ணம் -அவனுக்கு -மற்றவர்களுக்கு கௌணம் போல் ப்ரஹ்மம் சப்தமும் –
எனவே ப்ரக்ருதி அல்லது முக்தாத்மாவைக் குறிக்க ப்ரஹ்மம் என்ற சொல்லை உபயோகித்தால் அது தவறு அல்ல
ஆனால் அது இரண்டாம் பக்ஷ பொருள் தான் -முக்கியம் அல்ல -இதுக்கு அமுக்யம் கௌணம் என்று பெயர் –

ப்ரஹ்மத்தின் லக்ஷணம் என்ன
லக்ஷணம் -தனித்தன்மை -பலவும் பரமாத்மாவுக்குச் சொல்லலாம்
ஸர்வேஸ்வரத்வம் -அனைத்தையும் இயக்குதல்
ஸர்வ சேஷித்வம் -அனைத்துக்கும் ஸ்வாமி
ஸர்வ கர்ம ஸமாராதித்யம் -எல்லா வைதிக செயல்கஜலாலும் பூஜிக்கப்படுத்தல்
ஸர்வ கர்ம பல பிரதத்வம்
ஸர்வ ஆதாரத்வம்
ஸர்வ ஸரீரத்வம் –போன்ற பலவும் சொல்லலாம் –

லக்ஷணங்கள் இரண்டு வகைப்படும்
ஸ்வரூப லக்ஷணம் -தன்மைகளை வைத்தே லக்ஷணம் சொல்லுதல் –
தடஸ்த லக்ஷணம் -வேறே ஒரு பொருளைக் கொண்டு வேறே ஒரு பொருளுக்கு லக்ஷணம் சொல்லுதல்
கரையில் நின்று நதியைக் காட்டுவது போல் –

ப்ரஹ்மத்தின் தடஸ்த லக்ஷணம்
உலகு அனைத்தையும் காத்து படைத்து அழிப்பவர்
இங்கு உலகம் என்ற வேறே ஒரு பொருளைக் கொண்டு ப்ரஹ்ம லக்ஷணம்
தைத்ரியம் -வருணன் தன் பிள்ளைக்கு உபதேசம்
ஜென்மாதிகரணம் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -இத்தையே சொல்லும் –

ஸ்வரூப லக்ஷணம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
என்றுமே மாறாமல் ஒரே மாதிரி உள்ளபடியால் பிரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டதாகவும்
என்றுமே குறைவில்லாத ஞானம் யுடையவர் -பக்த முக்த வ்யாவ்ருத்தம்
தேச கால வஸ்து–த்ரிவித அபரிச்சேத்யம்-அளக்க முடியாத படியால் நித்யர்களில் வேறுபாடு –
இந்த மூன்று தன்மைகளின் சேர்க்கையே ப்ரஹ்மத்தின் ஸ்வரூப லக்ஷணம் –

———-

பாடம் -32-பரமாத்ம ஸ்வரூபம்
ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ ராமானுஜர் -பகவத் ஸ்வரூபம் –
இன்றியமையாத தன்மைகள் என்ன என்று அருளிச் செய்கிறார் –

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக ஸ்தான –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
அநந்த -ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –

இவையே ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –

1- அகில ஹேய ப்ரத்ய நீக
எல்லாவித தோஷங்களுக்கும் எதிர்த் தட்டானவர்
அசேதனங்களுக்கு விகாரம் என்கிற தோஷமும்
பத்தர்களுக்கு சம்சார சம்பந்த தோஷமும் -துக்க அஞ்ஞானம் மலம் –தோஷங்கள் பிரகிருதி சம்பந்தத்தால் -விஷ்ணு புராணம்
முக்தர்களுக்கு முன்பு ஒரு நாள் சம்சார சம்பந்தம் இருந்தது என்கிற தோஷமும்
நித்யர்களுக்கு பரிச்சேத -அளவுபட்டு இருத்தல் -வேறே ஒருவருக்கு ஆள்பட்டு இருத்தல் போன்ற தோஷங்கள் உண்டே
இவை எவையும் பரமாத்மாவிடம் இருக்க முடியாதே –
இருட்டுக்கு தேஜஸ்ஸூ விரோதியாய் இருக்குமா போலே இந்த தோஷங்களுக்கு பரமாத்மா எதிரி என்றவாறு –

தத்வ த்ரயம் -சர்ப்பத்துக்கு கருடன் போலவும் -தமஸூக்கு தேஜஸ்ஸூ போலவும் -அகில ஹேய ப்ரத்ய நீக –
ஆஸ்ரயிப்பார் விகாராதி தோஷங்கள் வரவிடாமல் செய்பவர் என்றுமாம் –
சர்வ பூத ப்ரக்ருதிம் -விகாரான் -அபஹத பாப்மா -வி ஜர -வி மிருத்யு -வி சோக -இத்யாதி –
நித்யம் -அஜம்–பிறப்பிலி -அஷயம்- அவ்யயம் ஏக ஸ்வரூபம் -நிர்மலம் -பவித்ரானாம் பவித்ரம்

2–கல்யாண ஏக ஸ்தான
தன்னோடு தொடர்பு பட்டவர்களுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடிய மங்களமான குணங்கள்
அனைத்துக்கும் ஒரே இருப்பிடம் பரமாத்மா –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவ ஸ்லோகம் இவற்றை விளக்கும் –
பரமாத்மாவின் குணங்கள் நித்யங்கள் -என்றுமே அழியாதவை
நிஸ் ஸீமங்கள் -எல்லை அற்றவை -உயர்வற உயர் நலம் உடையவன் –
நிஸ் சங்க்யங்கள் -எண்ணிக்கை அற்றவை -எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன்
நிருபாதிகங்கள்–இயற்கையானவை
நிர்தோஷம் -தோஷங்களோடே சேர்ந்து ஓர் இடத்தில் இருக்காமல் -தோஷத்தின் சேர்க்கையே இல்லாமல் -இருப்பவை
ஸமான அதிக ரஹிதங்கள் -தனக்கு நிகராகவோ உயர்ந்தோ இல்லாத குணங்கள்

ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் மூலமான கல்யாண குணங்கள்
கருணை ஞான வடிவம் போல் -அனைத்தும் இந்த ஆறு குணங்களுக்குள் அடங்கும் –
வஸீ -இத்யாதி ஸ்தோத்ர ரத்னம் -கத்ய த்ரயம் இந்த குணங்கள் பட்டியல் காட்டும் –
நிரலேபம் -தோஷ சம்பந்தம் இல்லாமல்
உபதா -உபாதை மூலம் இல்லாமல்
இயற்கையாக
நிகரற்ற ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்லும் –

3–ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
இப்படி தோஷங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாய் இருத்தல்
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடமாக இருத்தல்
என்ற இரண்டு அறிகுறிகளால் -உபய லிங்கங்களால் பரமாத்மா
தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவராக உள்ளார்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஆழ்வார் –

உபய லிங்க அதிகரணம்–3-2-11-
வ்யாப்த கத தோஷம் தட்டாத ப்ரஹ்மம்
ந ஸ்தான தோபி பரஸ்ய -உபய லிங்கம் -சர்வ சுருதி சொல்வதால் –

4-அநந்த
அந்தம் என்றால் முடிவு -எல்லை -அளவு
அநந்தன் -என்றால் -எல்லை அற்றவர் -என்று பொருள்
பரமாத்மாவை எந்த வகையாலும் அளவுபடுத்த இயலாது
அவர் நித்யமான படியால் அவரைக் காலத்தால் அளவுபடுத்த முடியாது
அவர் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறபடியால் அவர் விபு ஆவார்
அவர் இல்லாத இடமே கிடையாது
எனவே தேசத்தாலும் அளவு படுத்த முடியாது
அவருக்கு இணையான எந்தப்பொருளும் உலகில் இல்லாத படியால் –
பரமாத்மா இந்தப் பொருளைப் போன்றவர் என்று சொல்ல ஒரு பொருள் இல்லாத படியால்
அவர் பொருளாலும் அளவு படாதவர்
மேலும் அவரே உலகம் அனைத்துமாக இருக்கிற படியால் -இந்தப்பொருள் பரமாத்மா அல்ல –
என்று சொல்ல முடியாதே
ப்ரஹ்மாத்மகம் இல்லாத பொருளே இல்லையே
இதனால் எந்த வஸ்துவாலும் அளவு படாதவர்
இப்படி காலம் தேசம் வஸ்து -மூன்று அளவுகளும் அற்றவர்
த்ரிவித பரிச்சேத ரஹிதன் என்றவாறு –

ஒரு பொருளை உபமானம் சொல்லி –வஸ்துவால் அளவுபடுத்துதல் இல்லாமல் என்றும்–
கட்டுரைக்குள் தாமரை -கண் ஒவ்வா –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு ஒவ்வா -ஒட்டு உரைத்து
உலகு எல்லாம் உன்னை புகழ்வது எல்லாம் –கட்டுரையாய் –
வஸ்துவில் அளவு படுத்த முடியாதவன் என்றும் -இது குடம் துணி இல்லை என்பது போல் சொல்ல முடியாதே
அந்தர்யாமித்வம் மேலே பார்ப்போம் –

5-ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம்
ஞானமே வடிவானவர்
ஆனந்தமே வடிவானவர்
ஆனந்தம் என்பது அனுகூலமான ஞானம் -அதாவது நமக்குத் பிடித்ததாக ஏற்பனதாக ஞானம்
பரமாத்மா ஞானமே வடிவானவர் -அந்த ஞானத்துக்குத் தான் மட்டுமே விஷயம் –
தான் தனக்குப் பிடித்தவர் ஆகையாலே தன்னைப் பற்றிய ஞானமும் தனக்குப் பிடித்ததே
ஆகையால் பரமாத்மா என்கிற ஞானம் இயற்கையாகவே பிடித்த விஷயத்தைப் பற்றின
ஞானமே யாகையாலே அதுவே ஆனந்தமும் ஆகிறது –
எனவே பரமாத்மா ஆனந்த வடிவமான ஞானம் ஆகிறார் –
தத்வ த்ரயம் -ஆனந்த ரூப ஞான வடிவாய் இருக்கும் –
கட்டடங்க ஞானம் பிரகாசம்-கட்டடங்க அனுகூலம் –
ஜீவாத்மாவும் ஞான ஸ்வரூபம் -ஞானம் த்ரவ்யம் –

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஸூ த்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ப்ரஹ்மம் அறிவதே ஞானம்

——

பாடம் –33-சரீர ஆத்ம பாவம் –
நம் சம்ப்ரதாயம் -பிரதான பிரதிதந்தரம் -இதுவே

அபேத பேத கடக ஸ்ருதிகள்
வேதங்களில் –ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம (சாண்டில்ய வித்யை )-இந்த உலகம் அனைத்தும் ப்ரஹ்மமே -போன்ற இடங்களில்
பரமாத்வாவும் கல் போன்ற அசேதனப் பொருள்களும் ஒன்றே என்று சொல்லப்படுகிறது

அதே போன்று அஹம் ப்ரஹ்மாஸ்மி –தத் த்வம் அஸி -போன்ற இடங்களில்
பரமாத்மாவும் ஜீவாத்மா-சேதனப் பொருள்களும் ஒன்றே கூறப்படுகிறது –
இவற்றுக்கு அபேத ஸ்ருதிகள் என்று பெயர்
பேதம் -வேறுபாடு -வேறுபாடு இல்லை யுரன்கிறபடியால் இவை அபேத ஸ்ருதிகள்

போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்த்வா
ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் பர –ஈசத தேவ ஏக
பிரதான ஷேத்ரஞ்ஞன் பதி குணே ஸஹ -முதலானவற்றில் தெளிவாக
சேதன அசேதன ஈஸ்வர -மூன்றையும் வேதம் சொல்வதால் இவை பேத ஸ்ருதிகள் ஆகும்

இந்த முரண்பாட்டைத் தீர்க்க கடக ஸ்ருதிகள் –
கடகம் -சேர்த்து வைக்கும் -முரண்பட்டவை போன்ற ஸ்ருதி வாக்யங்களை சேர்த்து வைக்கும்
யஸ்ய ப்ருத்வீ சரீரம்
யஸ்ய ஆத்மா சரீரம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ப்ருஹதாரண்யம்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா –இத்யாதி
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம-
இந்த கடக ஸ்ருதிகள் அனைத்தும் சரீர ஆத்ம பாவம் சொல்லும்
உலகம் அனைத்தும் சரீரம் உடல் – உடல் உயிர் தொடர்பு இருக்கிறபடியால் அவை
வெவ் வேறாக இருந்தாலும் ஒன்றே என்றும் சொல்லப் படலாம் –

சரீரம் என்றால் என்ன
ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ ராமானுஜர்
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தும் நியந்தும் தாரயிதும் ச சக்யம்
தத் சேஷதைக ஸ்வரூபஞ்ச ச தத் தஸ்ய சரீரம் -என்று -மூன்று

எந்த ஒரு அறிவாளியாலே எந்த ஒரு த்ரவ்யம் அது இருக்கும் வரை
எப்பொழுதும் தாங்கப்படுவதற்கும்
அதுக்கு இயன்ற செயல்களிலே செலுத்தப்படுவதற்கும்
தகுதி யுடையதோ
மேலும்
அவருடைய மேன்மைக்காகவே உள்ளதோ
அந்த த்ரவ்யம் அந்த அறிவாளியின் சரீரம் -அந்த அறிவாளி தான் ஆத்மா –

இதை நம் உடல் நாம் என்கிற ஜீவாத்மா இடம் பொருத்திப் பார்ப்போம்
நாம் அறிவாளி -இந்த மாம்ச பிண்டம் த்ரவ்யம்
இந்த மாம்ச பிண்டம் நான் என்கிற அறிவாளியால் தங்கப்படுவதற்கும் செலுத்தப் படுவதற்கும் தகுதியானது தான்
நான் என்கிற ஆத்மா வெளியே சென்று விட்டால் இந்த மாம்ச பிண்டம் எழுந்து நிற்காது -எந்தச் செயலும் செய்யாது –
இந்த மாம்ச பிண்டம் என்னுடைய நன்மைக்காகவே உள்ளது
இத்தை சரீரம் என்றும் -நம்மை ஆத்மா என்றும் கூறுகிறோம் –

இதே போலே ஸமஸ்த சேதன அசேதனங்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு உடல் ஆகும் -பகவான் அறிவாளி –
இவை அனைத்தும் அவராலேயே தாங்கப்படுகின்றன -இயக்கப்படுகின்றன –
அவருடைய மேன்மைக்காகவே இவை அனைத்தும் உள்ளன
எனவே உலகையே சரீரம் என்றும் ப்ரஹ்மத்தை ஆத்மா என்றும் கூறலாம் –

திட விசும்பு –முழுவதுமாய் அவை அவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -சுடர் மிகு சுருதி -ஆழ்வார்

ஒரு ஆத்மா அதன் உடலுக்குச் செய்யும் உதவிகள் இரண்டு
1- சத்தா ஹேதுத்வம்
அந்த உடல் சத்தை -இருப்பு பெறுவதற்கு ஆத்மா தான் காரணம்
அதாவது ஆத்மா உள்ளே இல்லாவிட்டால் அதன் பெயரே மாறி விடும்
சரீரத்தின் சத்தை ஆத்மாவின் சத்தையைப் பொறுத்தது -இதற்கு ஆத்மா விழித்து இருக்க வேண்டும்
தன் அறிவைக் கொண்டு ஒன்றும் செய்யத் தேவை இல்லை உள்ளே ஆத்மா இருந்தால் மட்டுமே போதுமானது

2-உடல் இயங்குவதற்கும் காரணமாக ஆத்மா இருக்கிறார் —
இது அறிவால் செய்யக் கூடிய செயல் —
எனவே ஆத்மா விழித்து இருக்கும் பொழுது தான் இதை ஆத்மா செய்வதை நாம் உலகில் பார்க்கிறோம்

இந்த இரண்டு செயல்களையும் பரமாத்மா
தன்னுடைய சரீரமான உலகு அனைத்தைக்கும் செய்கிறார்

1- பரமாத்மா விபு -எல்லாவற்றையும் விட மிகப் பெரியவராக எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் –
அப்படி இருந்து கொண்டு அனைத்தையும் தாங்குகிறார்
பூமி அனைத்தையும் தாங்குவது போலே அவர் உலகம் அனைத்தையும் தாங்குகிறார்
ஏஷ சேது விதுரண
ஏதத் ஸர்வம் ப்ரஞ்ஞானே ப்ரதிஷ்டிதம் –
யதா ரத –நாபி -குச்சி -இத்யாதி –போன்ற
ஸ்ருதி வாக்கியங்கள் இத்தைக் காட்டும்
வாஸூதேவ வீர்யேண விதுர் தாணி -சங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்தாலே தாங்குகிறான் –
அவர் ஆசைப்பட்டு -விபுவான ஸ்வரூபத்தால் தாங்குகிறேன் -என்பதால்
சங்கல்பம் ஸ்வரூபம் இரண்டும் தாங்கும் என்பதில் தவறு இல்லை
தார்யமாகைவது -ஸ்வரூப சங்கல்பம் ஒழிந்த போது தன் சத்தை இல்லாத படி இருக்கை –தத்வ த்ரயம் 39-

2-பெரியதாக அனைத்தும் தாங்குவதைத் தவிர மிகச் சிறியவராகவும் இருந்து அனைத்து ஜீவாத்மாக்குள்ளும் இருக்கிறார் –
அங்கு இருந்து கொண்டு அனைத்து செயல்களையும் அனுமதித்து இயக்குகிறார் –
இப்படி உள்ளே புகுந்து இயக்குகிற படியால் அந்தராத்மா -என்றும் பெயர்
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம -ஸ்ருதி இத்தைக் காட்டும் –
நியாம்கை யாவது -புத்தி அதீனமாக எல்லா வியாபாரங்களும் உண்டாம்படி இருக்கை –தத்வ த்ரயம் 38-

தர்ம பூத ஞானம் -அறிவைக் கொண்டே -ஸுபரி -50 சரீரங்களையும் – இயக்கினார் அது போல் இல்லை இல்லாமல்
ப்ரஹ்மம் -உள்ளே இருந்து -அகடி கட நா சாமர்த்தியம் -ஒன்றும் குறையாமல் இங்கும்
சேஷத்வம்–பரகத அதிசய ஆதேய -அவனுக்காகவே -இதுவே இயற்க்கை –
ஆத்மா தாஸ்யம்-ப்ரஹ்மம் ஸ்வாமி – தாஸ்ய பூதா ஸ்வத-இங்கும் அங்கும் –

—–

பாடம் –34-ஜகத் காரணத்வம்

யன் மய ஜகத் ஸர்வம் -கேள்வி ஸ்ரீ விஷ்ணு புராணம்
யதஸ்ய ஏதஸ்ய சராசரம் யார் இடம் இருந்து வந்தது
எங்கே லயித்தது
விஷ்ணு உத்ப்பூதம் -அவன் இடமே ஒன்றி -ஸ்திதி ஸம்யமம் -காத்து -இயக்குகிறார் –
ஜகத் ச ஸஹ -அவரே ஜகத்தாக உள்ளார் -பராசரர்
கீழே அந்தர்யாத்மாவாக இருந்து இயக்குகிறார் பார்த்தோம்
ஸர்வ ஸப்த வாஸ்யன் -பர்யவசானாம்
ஜகத் ஜன்மாதி காரணம் -லக்ஷணம் ப்ரஹ்மதுக்கு

புத்த ஜைன தர்க்க மதம் மூன்றிலும் நுண்ணிய பரம அணுக்கள் சேர்ந்தே உலகில் காணும் பொருள்கள் உண்டாகின்றன
பரம அணுக்களே காரணம் என்பர்
தார்க்கிகர் -வைசேஷிக நியாய மதம் -கொஞ்சம் வாசி இரண்டுக்கும் உண்டு
இவர்களே தார்க்கிகர்
இவர்கள் பரமாத்மாவை ஒத்துக் கொண்டு பரம அணுக்களை உலகமாக உருவாக்குகிறார் -குயவன் ஸ்தானத்தில் –

ஆனால் இது சரி இல்லை
சுருதி விரோதம் –
புலன்களுக்கு அப்பால் பட்ட பரம அணு இருக்க பிரமாணமே இல்லையே
பிரகிருதி மிகப்பெரியது
2-2-தர்க்க பாதம்

சாங்க்ய மதத்தில்
முக்குண -வசத்தில் உள்ள பிரக்ருதியே உலகமாக என்பர்
ஆனால் இது சுதந்திரமாக தானாகவே ஸ்ருஷ்டிக்கும் என்பர்
சேதனன் துணை வேண்டாம் என்பர்
பால் தயிராக தானாகவே மாறுவது போல் என்பர்
காரணத்துக்கும் காரியத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமே
உலகில் முக்குண மய பொருள்களைப் பார்ப்பதால் இப்படி சொல்வர்

இதுவும் சரி இல்லை -அறிவற்ற ஒன்றால் இது முடியாதே -அறிவுள்ள சேதனன் வேண்டும்
தானாகவே செய்யும் என்றால் எப்பொழுதும் ஸ்ருஷ்ட்டி அல்லது எப்பொழுதும் பிரளயமாக ஆய்க்கொண்டே இருக்க வேண்டும்
ஸ்ருஷ்ட்டி சம்ஹார வியவஸ்தை கூடாதே
இத்தையே பிள்ளை லோகாசசார்யார் தத்வ த்ரயத்தில் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் அதிஷ்டானம் இல்லாமல் இது கூடாதே
இது என்னுடையது என்று பயன் படுத்தா விட்டால் பரிமாணம் அடையாதே

ஆகவே பிரகிருதி பிரதானம் தானாகவே மாற முடியாதே
வேதம் ஸ்பஷ்டமாக இத்தைக் காட்டும்

சிலர் நான்முகன் போல் சிறந்த புண்ணியம் செய்த ஆத்மாவே காரணம் என்பர்
இதுவும் கூடாதே
கர்மவசப்பட்டவர் -துக்கப்படுபவர் 0ஆகவே இதுவும் சரியில்லை –

உபநிஷத்துக்கள்
ஸத் -இருக்கும் பொருளே காரணம்
சதேவ சோம்ய-இதம் அக்ரே-சதேவ ஆஸீத் –
சிலர் உண்டாவதும் முன்பு அபாவம் -அஸத் கார்ய வாத நிராசனத்துக்கு சொன்னதே

மேலும் உபநிஷத் ப்ரஹ்மம் காரணம் -ஆத்மா காரணம் -என்றும் சொல்லும்
இவற்றுக்கு முரண்பட்டு இல்லை
சாமான்ய விசேஷ நியாயம்
விலங்கைக் கூட்டி வா மாட்டைக் கூட்டி வா -இரண்டுக்கும் வாசடி இல்லாதது போல்
பொதுவாக சொல்லி பின்பு விசேஷித்து சொல்லலாமே

அதே போல்
இருக்கும் பொருளே காரணம் -ஸத்
பெரிய பொருளே காரணம் -ப்ரஹ்மம்
ப்ரஹ்மம் ஏக அக்ர ஆஸீத்
அதுக்கும் மேலே அறிவுடைய பொருளே காரணம் என்றும் சொல்லும்
ஆத்மா வா இதம் ஏகமே வ அக்ர ஆஸீத்
ஏகோ வை நாராயணா ஆஸீத்
பின்பு நாராயணனே ஒருவராக முன்பு இருந்தார் என்றது –

நிமித்த காரணம் ப்ரஹ்மம் என்னும் இதில் பல கேள்விகள் எழும்
1-உலகில் ஒரு பொருளை படைக்கும் போது –
அவித்யை அறிவின்மை -கர்மம் பாபம் புண்யம் -பர நியோகம் பிறரால் ஏவப்பட்டு படைக்கிறார்கள்
பரமாத்மாவும் அப்படியேயோ

பதில் -ப்ரஹ்மம் நிர் அவத்யம் -நிரஞ்சனம் -அறிவின்மை அற்றவர்
அபஹத பாப்மா -கர்மங்கள் அற்றவர்
ந தஸ்ய ஈசே கச்சன் -யாராலும் ஏவப்படாதவர்
தன்னுடைய இச்சை ஆசையாலேயே ஸ்ருஷ்டிக்கிறார் –

2- இவ்வளவு பெரிய உலகைப் படைக்க சிரமமோ களைப்போ அடைவாரா

சங்கல்ப ஏக தேசத்தாலே படைக்கிறார் -நிஜ இச்சையால் மட்டுமே
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே -தனக்கு மாறுபாடு விகாரம் இல்லாமல்
மனம் செய் ஞானத்து உன் பெருமை -ஆழ்வார் –

3-அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்தும் எந்த ப்ரயோஜனத்துக்காகப் படிக்கிறார்
ஜீவர்கள் உலகில் படும் துன்பங்களைக் கண்டால் அவர்கள் நன்மைக்காகப் படைக்கிறார் என்று சொல்ல முடியாதே

லீலை -அச்சமய போகத்துக்காகவே -வேறே பலனை
எதிர்பார்க்காமல்
அரசன் தோட்டத்தில் பந்து விளையாடி வேறே பலனுக்காக இல்லாமல் மகிழ்வது போல்
ந ப்ரயோஜனத்வாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
லோகவத் லீலா கைகைவல்யம் –2-1-32-
பாலன க்ரீடநகைரிவ–வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையான்

4-முக்தி பெற படைக்கிறார் என்றால் எப்படி இது லீலை ஆகும்

உண்மையே தான்
வெகு சிலரே முக்தர் ஆவதால்
லீலையே அதிகமாக கிடைக்கும் பலன்

ஒரு பொருள் எதற்க்காக படைக்கப்பட்டது அதுக்காக இல்லாமல் இருந்தால் சிரிப்பு வருமே
நன்றாக செய்தால் அது போகமாக இருக்கும்
சிரிக்கும் பொழுது கேட்க சொன்ன கதை
எண்ணெய் வாங்க கோணிப்பை எடுக்க சிரிக்க
ஊதியம் உயர்வு கேட்டான்
ஆழ்வாராதிகளைக் கண்டால் போக ரசம் பெறுவான்

லீலா கைவல்யம் -லீலையே பிரயோஜனம்
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
உண்டியே உடையே உக்காந்து போகிறவன் எப்பொழுதாவது
ஜென்மம் கழிப்பான் என்று எண்ணி சோம்பாது ஒன்றி ஒன்றி உலகம் படைக்கிறான் -உத்ஸாகத்துடன் –

பிரதானம்-முக்கியம் வேறே –
பிரசுரம் அதிகம் வேறே –
இரண்டு பிரயோஜனங்களும் உண்டு -இரண்டுக்கும் பிரமாணங்கள் உண்டு
முக்தனாக்குவதே பிரதானம் –
ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்காதே
பிரசுரம் மிகுதி லீலா ரசம் -தான் அடைகிறான் –

5-உலகை அழிப்பது எப்படி லீலை ஆகும்

குழந்தை மண் வீடு கட்டி அழிப்பது போல்

6-ஏற்றத் தாழ்வுகள் காண்கிறோம்
வைஷம்யம் -பாகுபாடு
நைர் க்ருண்யம் -கருணை இன்மை வாராதோ

சா பேஷத்வாத் -தானாகவே செய்ய வில்லையே -கர்மம் அடியாகவே ஏற்றத்தாழ்வுகள்
தவறு செய்யும் குழந்தையை தாய் அடித்துத் திருத்துவது போல்
ஸமோகம் ஸர்வ பூதேஷு அவன் –
கர்மம் அடியாக செய்வதாலும் மண் தின்னும் பிரஜை -நாக்கில் குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போல்
ஹித பரன் –
பிரதான காரணம் ஜீவர்களுடைய கர்மங்கள் தான்
நிமித்த காரணம் -பொதுவான காரணம் ப்ரஹ்மம்
குற்றங்கள் வராதே

———–

பாடம் -35-அபின்ன நிமித்த காரணம்
உபாதானமாகவும் ப்ரஹ்மம்
இத்தை மேலே பார்ப்போம்

த்ரிவித–மூன்று வித – காரணங்கள்
1-உபாதான காரணம்
நிலை மாறி கார்யமாவது
உருண்டை வடிவில் இருக்கும் மண் குடம் ஆவது போல் –
மண் உருண்டையை குடத்துக்கு உபாதான காரணம் ஆகும்

சமவாய காரணம் -இத்தை நியாய மதம் சொல்லுவார்
ஸத் கார்ய வாதம் வேதாந்தம்
ப்ராக் பாவம் அபாவம் -நியாய மதஸ்தர்

ஜீவாத்மா நித்யம் -அதுக்கு உபாதானம் என்ன கேட்க வேண்டாமே
அசித் தான் பரிமாணம் அடையும் –

2-நிமித்த காரணம் -யார் ஒருவர் உபாதான காரணத்தை மாற்றுகிறாரோ அவர் –
குயவன் தானே மண்ணை குடம் ஆக்குகிறார்

3-ஸஹ காரி காரணம் -கார்யம் பண்ண உதவும் கருவிகள் -சக்கரம் போல்வன

ப்ரஹ்மமே நிமித்த காரணம் முன்பு பார்த்தோம்

உலகில் நாம் காணும் அனைத்தும் முக்குண வசமாய் இருப்பதால்
உபாதான காரணமும் அப்படியே தானே இருக்க வேண்டும் என்று தோன்றும்
மூலப் பிரக்ருதியே மஹான் இத்யாதிகளாக ஆகிறது என்றும் ஸ்ருதிகள் சொல்லும்
எனவே பிரக்ருதியே தான் உலகுக்கு உபாதான காரணம் என்று சொல்லத் தோன்றும்
ஆனால் வேத வியாசர் இத்தை ஏற்க வில்லை

ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பரோ தாத் —1-4-23-

ப்ரக்ருதி ச -உபாதான காரணமும் அவனே
முன்பே நிமித்த காரணம் முடிவானதால்
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த-இரண்டு காரணங்களாலும்
இரண்டுடன் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

கீழே நிமித்த காரணமாக சொன்ன பரமாத்மாவே உபாதான காரணமாக உள்ளார்
அப்பொழுது தான் ப்ரதிஞ்ஜை யோடும் –
எடுத்துக் காட்டும் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

சாந்தோக்யம் -ஆறாவது அத்யாயம் ஸத் வித்யை –
உத்தாலகர் தனது பிள்ளை ஸ்வேதகேதுவுக்கு உபதேசம்

ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் –ப்ரதிஞ்ஜை-
ஆதேசம் -உலகு அனைத்தையும் இயக்கம் அவனை அறிந்தாயா –
இவனை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவனாக ஆவாய்
இவனைப் பற்றி கேட்டாயானால் அனைத்தையும் கேட்டதாக ஆகும்

உலகை இயக்கக் கூடிய ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் -எடுத்துக் காட்டு-
மண் உருண்டையை அறிந்தால் அதில் இருந்து உண்டாகும் அனைத்தையும் அறிந்தால் போலே
அதே போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் என்றால்
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றதாகும் –

காலையில் குயவன் வீட்டில் மண் உருண்டையைப் பார்த்து
பின்னால் மதியம் அங்கு இருக்கும் குடம் மடக்கு போன்றவற்றைப் பார்த்து
இவை அனைத்தும் காலையில் பார்த்த மண் உருண்டையை என்று கூறுவதால்
மண் உருண்டையை உபாதான காரணம் என்றதாயிற்று
மேலும் தங்க காசு ஆபரணங்கள் எடுத்துக் காட்டுகளும் சொன்னார்

அதே போல் மரம் கல் துணி நீர் -போன்ற பல பெயர்களோடும் வடிவங்களோடும்
இருக்கும் உலகம் அனைத்தும்
முன்பு ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -நாராயணன் -என்று சொல்லப்படும்
பரமாத்மாவே -வேறே யாரும் முன்பு இல்லை
எனவே அவரே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் உள்ளார் என்று கிடைக்கிறது

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்

இதம் அக்ர ஆஸீத்-இவை அனைத்தும் முன் ஸ்ருஷ்டிக்கு முன்னால் –
மண் உருண்டையாகவே இருந்தது போல் இங்கும் -ஸதேவ -ஸத் -பரமாத்மாவேயாக இருந்தன

ஏகமேவ -ஒன்றாகவே இருந்தது -உபாதான காரணம் இதுவே -குடம் தட்டு இவை எல்லாம்
காலையில் மண் உருண்டை பெயர் வடிவத்துடன் இருந்தது போல் -நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் –

அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல் இருந்தது –
மண்ணை அறிந்தால் மண்ணால் உண்டான அனைத்தையும் அறியலாம் -குயவனை அறிய முடியாதே
அது போல் இல்லை
மாற்ற குயவன் போல் தனியாக வேறே ஒருவர் நிமித்த காரணம் இல்லை
இவரைத் தவிர வேறே இல்லை
அபின்ன நிமித்த ப்ரஹ்மம் என்றவாறு

மேலும் குயவன் இந்த மண் உருண்டையை குடம் மடக்கு போன்றவாறாக மாற்றுவேன்
என்று சங்கல்பம் கொள்வான்
பரமாத்மாவோ
நான் பலவாக ஆகப் போகிறேன் -அதற்காக படைக்கப் போகிறேன் -என்று
சங்கல்பம் செய்து கொள்வான் என்று மகன் இடம் கூறினார்

தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய
நான் இந்த மூலப்பிரக்ருதியைக் கொண்டு பலவற்றையும் ஸ்ருஷ்ட்டிக்கப் போகிறேன் என்று சொல்லாமல்
அந்த பரமாத்மா நானே பலவாக ஆகக் கடவேன் அதுக்காக ஸ்ருஷ்ட்டி செய்யக் கடவேன் -என்றவாறு

தானே -ஸ்வயம் -நிமித்தம்
தன்னை -ஆத்மநாம் -உபாதானம்
தானே தன்னை உலகமாக ஸ்ருஷ்டித்துக் கொள்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகாதிக்கு எல்லாம் -திருவாய் -10-10-
வித்து
முதல் வித்து
தனி வித்து

உபாதான காரணம் காரியமாக உரு மாற வேண்டுமே
பரமாத்மாவோ அவிகாராயா -விகாரம் மாறுபாடு அற்றவர் அன்றோ
அவிகாராய விகாராய ஸூத்தாயா நித்யாய
நிரஞ்சனம்
அகில ஹேய ப்ரத்யநீகன் -பரிணாமம் அற்றவன்
எவ்வாறு உபாதான காரணம் ஆக முடியும்
இதுக்குப் பதிலாக சிலவற்றைப் பார்ப்போம்

1-மண் உருண்டை குடமாக உரு வாகிறது

2-சிறுவன் முதிர்ந்தவர் ஆகிறான்
சிறியவனாக இருந்த நானே முதிர்ந்தவனாக உள்ளேன் என்பான்
உருவ வேறுபாடு உடலிலே தானே
உள்ளே இருக்கும் ஜீவாத்மாவின் உருவ வேறு பாடு இல்லையே
நிலை வேறுபாடு மட்டுமே உள்ளது
பால்ய அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாவே –
யுவா அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாக ஆனேன்
ஸ்வரூப மாற்றம் இல்லை -ஸ்வபாவ மாற்றமே

3-ப்ரஹ்மமும் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா –
இந்த உலகம் அனைத்துமே
பரமாத்மாவால் தாங்கப்பட்டு
இயக்கப்பட்டு
அவருடைய மேன்மைக்காகவே இருக்கிறபடியால்
அவருடைய உடலாகும் என்று பார்த்தோம்

பிரகிருதி மஹானாக ஆகும் பொழுது
ப்ரக்ருதிக்கு அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மமே மஹானுக்கும் அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மம் ஆகிறார் -அன்றோ
இதே போல் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்
காரணமும் காரியமும் ப்ரஹ்மமே
இது தான் சரீர ஆத்ம பாவ ஆச்சார்யம்

எனவே பரமாத்மாவே உலகமாக ஆகிறார் என்றால்
ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் —
ஸூஷ்ம சேதன அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே
ஸ்தூல சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் –
ஸ்தூல சேதன சேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் ஆகிறார் -என்று பொருள்

இங்கு உருவ வேறுபாடு அசேதனப் பொருள்களுக்கே
பரமாத்மாவுக்கு நிலை மட்டுமே வேறுபாடு
உபாதான காரணமாக இருந்தாலும் அவர் அவிகாராயா -விகாரமும் உருவ வேறுபாடும்
இல்லாமலேயே இருக்கிறார் -என்று தெளிவு –

ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த காரணம் -ஒருவரே உபாதானமாகவும் நிமித்தமாகவும் உள்ளார்
1– யதா ஊர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச (முண்டக உபநிஷத் சொல்லும் )
சிலந்திப் பூச்சி வலை கட்டுகிறது
தானே சங்கல்பித்து முடிவு செய்து பின்னுகிறபடியால் -செய்வதால் நிமித்த காரணம்
அதன் எச்சிலே வலையாக மாறுவதால் அதுவே உபாதான காரணம்

2-பராசர பட்டர் காட்டும் உதாரணம்
ஆண் மயில் பெண் மயிலை மகிழ்விக்க தானே முடிவு செய்து தனது-சரீர ஏக தேசம் -தோகை விரித்து ஆடுகிறது
விளையாட்டு முடிந்த பின் தோகையைச் சுருக்கிக் கொள்கிறது
விரிந்த தோகைக்கு மயிலே நிமித்த உபாதான காரணம்

இதே போல்
ஸ்வம் சரீர ஏவ தேசம் -ஸ்வ இச்சையால் விஸ்திருத –
பரமாத்மாவும் பிராட்டி மகிழ்ச்சிக்காக தானே முடிவு செய்து விளையாட்டாகப் படைத்து –
விளையாட்டு முடிந்ததும் பிரளயம் -தன்னிடமே லயம் அடையச் செய்கிறார் –

ஆக
1-சேதன அசேதன பொருள்களை உடலாகக் கொண்ட –
சேதன அசேதன விஸிஷ்ட பரமாத்மாவே உபாதான காரணம் ஆவார்
2-சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மமே நிமித்த காரணம் ஆவார்
3-ஞான சக்த்யாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமே ஸஹ காரி காரணம் ஆவார்

————

பாடம் –36- பரமாத்மாவின் பெருமைகள்

யஸ்மாத் பரம் ந பரம் அஸ்தி கிஞ்சித் -அசையாத மரம் போல் ஸ்ரீ வைகுண்டத்தில்
உயர்வு அற -மற்றவர்களின் உயர்வு அறும் படி என்றுமாம்
உலகம் பூர்ணமாக வியாபிக்கப்படுகிறது
விபு ஸ்வரூபம் –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ஸ்வரூபம் விபு
அனைத்தையும் தாங்கி
அளவுபட்டு ஆத்மாவுக்குள்ளும் அந்தர்யாமி யாகவும் பூர்ணனாக ஒன்றுமே குறையாமல் வியாபிக்கிறார்
இவரே ஜகத் காரணம் -முன்பு பார்த்தோம்

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக தாமம் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன்
விசிஷ்டம் என்றால் சேர்ந்தது
அத்வைதம் -இரண்டாவது இன்மை
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே உயர்ந்த பொருள் உண்டு என்கிற அதிசங்கை -ப்ரஹ்ம ஸூத்ரத்தில் விசாரம்
ப்ரஹ்மத்தை சேது என்பதாலும்
அவருக்கு அளவுண்டு என்பதாலும்
அம்ருதம் எனப்படும் பரமாத்மாவை அடைய ப்ரஹ்மமே வழி என்பதாலும்
உயர்த்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதாலும்
ப்ரஹ்மம் வேறே பரமாத்மா வேறே என்று அதிசங்கை வருமே

பராதிகரணம் –3-1-விசாரம்
3-1-30- நான்கு காரணங்களையும் காட்டும்
ப்ரஹ்மம் சேது என்பது பாலம் என்ற பொருளில் இல்லை
உலகம் அனைத்தையும் அதன் அதன் இடத்தில் நிலை நிறுத்தி வைப்பவர் என்கிற பொருளில் வந்ததே
அணை -நதிகளை -இரண்டு புறத்திலும் உள்ளவற்றை கலக்காமல் இருப்பது போல்
ஸமஸ்த வஸ்துக்களும் அவை அவை நிற்க காரணமே இவனே -யேஷாம் லோகான் அசம்பாவத
ப்ரஹ்ம் அளவுபட்டு தன்னை அமைத்துக் கொள்வது தியானத்துக்கு உதவுவதற்கே
உன்மானம் -நான்கு கால் -16 கலைகள் -இத்யாதி இதற்காகவே
புத்யர்த்தா பாதவத் –த்ரிபாத் விபூதி -லீலா விபூதி சொல்வது போல் –
ஐஸ்வர்யம் சொல்லவே வந்தது
சம்பந்தம் –அம்ருதம் -இவர் சேது வழி
அம்ருதஸ்ய ஏஷ சேது -தன்னை அடைய தானே வழி என்கிறது
வழி என்பதால் மட்டும் அடையப்படும் வஸ்து வேறே என்பது இல்லை
பேத அபேதம் சொல்ல வந்தது இல்லை
பராத்பரன் -புருஷன் உபைதி
அனைத்தையும் காட்டிலும் உயர்ந்தவர்

சர்வ கர்ம ஸமாராத்யாம்
பரமாத்மாவை மகிழ்விக்கவே அனைத்தும் –
அனைத்து தேவதைகளுக்கும் அந்தராத்மாவாக இருந்து
வாசனைக்கு ஏற்ப –கர்மம் அடியாக -லௌகிக விஷயங்களில் செல்ல -பசு மாடு வீடு வாசல் சுவர்க்கம் ஆசை –காம்ய கர்மங்கள்
அந்த அந்த தேவதையை ஆராதனம் செய்து அல்ப பலன்கள் பெறுகிறார்கள்
அவற்றுக்கு அந்தர்யாமியாக பரமாத்மா இருப்பதை அறிந்து த்யானத்தில் முக்தர் ஆகிறார்கள்
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச
அனைத்து யாகங்களாலும் இவனே பூஜிக்கப்படுகிறான் -இவனே பலன்களையும் அளிக்கிறான்
பலம் அத உப பத்தே –3-2-37-
அனைத்து பலன்களையும் ப்ரஹ்மமான பரமாத்மாவே வழங்குகிறார் -என்கிறார் வேத வியாசர் –
சர்வ தேவ நமஸ்கராம் கேசவன் கச்சதி -நதிகள் கடலில் சேருவது போல்
3-2-40-சேது வியாபதேசாத் –
வாயு தேவதை வேகமாக பலன் கொடுக்கிறார் வேதம் சொல்லும்
அபூர்வம் மட்டும் பலன் என்ன கூடாது
அந்தர்யாமியாக இருக்கும் ப்ரஹ்மமே பலன் அளிப்பார் இந்த்ராதிகள் அல்ப ஆயுஸ் -அன்றோ –
புண்யம் அபுண்யம் அவனது ப்ரீதியும் அப்ரீதியும்

ப்ரஹ்மம் நிர்குணம் என்றும்
ச குணம் -ஸர்வஞ்ஞன்
ஞான பல ஐஸ்வர்யா வீர்ய சக்தி தேஜஸ் கருணை உதாரம் சவ்ஸீல்யாதி குணங்கள் உண்டு என்றும் ஸ்ருதிகள் கூறும்
சமுச்சயமாக கொள்ளக் கூடாது இவை இரண்டையும்
விகல்பம் -என்றும் கொள்ள முடியாது
பொய் சொல்லக்கூடாது
கல்யாணத்துக்கு பொய் சொல்லலாம்
ஓன்று விதி -உத்சர்க்கம்
மற்ற ஓன்று அபவாதம் -விதி விலக்கு
கல்யாணம் போன்ற இடங்களில் தவிர பொய் சொல்லக்கூடாது என்றே கொள்ள வேண்டும்
உத்சர்க்க அபவாத நியாயம்
அதே போல் தீய குணங்கள் கிடையாது -நிர்குணம் -அபஹத பாப்மா -இத்யாதிகள்
ஆனந்தம் வள்ளல் தன்மை இத்யாதி இருந்தால் தானே பலன்களைக் கொடுக்க முடியும்

திவ்ய மங்கள விக்ரஹம் உண்டு
ஹிரண்மயம் -கப்யாஸம் புண்டரீக அக்ஷிணீ
ஸ்வரூப ரூப குணங்களைக் காட்டிலும் அத்யந்த அபிமதமாய் இருக்குமே -பிள்ளை லோகாச்சார்யார்
கருணை- -ஆத்ம குணம்
ஸ்வ அனுரூபமாய்
நித்தியமாய் ஏக ரூபமாய் ஸூத்த ஸத்வமாய்
சேதன தேகம் போலே ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தால் போலே இருக்க
பொன்னுருவமான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
ஸுகுமார்யாதி கல்யாண குண கண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோஹனமாய் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரமாய்
ஸமஸ்த போக வைராக்ய ஜனகமாய் -சிற்றின்பம் நீயும் அவளும் நிற்க கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
ருசி ஜனக விபவ லாவண்யம்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத்தடம் போலே சகல தாப ஹரமாய் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த –
அநந்த அவதார கந்தமாய்
ஸர்வ ரக்ஷகமாய்
சர்வ ஆஸ்ரயமாய்
அஸ்திர பூஷண பூஷிதமாய் இருக்கும் –

இதில் ஐந்து நிலைகள் உண்டே
1-பரத்வம் -ஸ்ரீ வைகுண்டத்தில் -தர்மாதி பீடம் -வீற்று இருந்த -திரு மேனி -பாட்டு கேட்க்கும் இடம் – நாராயண ஸ்ரீ மான்

2-வ்யூஹம் -திருப்பாற்கடலில் ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்
வாசுதேவன் -சங்கர்ஷணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தனன் -தன்னையே வ்யூஹித்து பிரித்து ஸேவை
உந்தித்தாமரையில் நான்முகனைப்படைத்து -கூப்பீடு கேட்க்கும் இடம் -ஷீராப்தி நிகேதன

3-விபவம் -ராமர் கிருஷ்ணன் -ஆகாதா மதுராம் புரீம் -அவதார ரஹஸ்யம் —
இச்சா க்ருஹீத -அப்ராக்ருதம் -சம்பவாமி யுகே யுகே -பூதானாம் ஈஸ்வரோபிசன் –
பரித்ராணாம் ஸாதூ நாம் –தொழும் காதல் களிறு அளிப்பான்
விநாசாய துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தானநார்த்தம் -தானே தர்மம் -என்று காட்டி அருளி -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம –
ஜென்ம கர்ம மே திவ்யம்

4-அந்தர்யாமி
உதாசீனம் -அனுமதி -சர்வ நியந்தா –
இரண்டு வகை
த்யானிப்பவர் -எளிதில் தியானிக்க சின்னவடிவில் ஹ்ருதய புண்டரீகாக்ஷம்
அங்குஷ்ட மாத்ர புருஷ
அகம்படி வந்து புகுந்து
கருட உத்சவம் நம்மாழ்வார் உள்ளத்தில்
த்யானம் மனிதர்களுக்குள் சிலருக்கு மட்டுமே

5-அந்தர்யாமி -சத்தை நியாந்தாவாக அனைத்திலும் உருவம் இல்லாமல்
இப்படி இரண்டு வகை
அர்ச்சை –
கோயில்களிலும் க்ருஹங்களிலும்
அர்ச்சனை பராதீனன்
ப்ரதிமா அப்ரதிபத்தி -சம தர்சனம் -ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் பரமாத்மா இருப்பதை உணர்வார்கள் இல்லாதாருக்காக
பரதவ ஸுலப்யம் இரண்டிலும் எல்லை அர்ச்சையிலே

———

பத்து அத்ரவ்யங்கள் -மேல் பார்ப்போம்
உண்மை பொருள்கள் ஆறு வகை த்ரவ்யங்கள் இவை தான்
தத்வம் அறிந்து
புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து
ஹிதம் பார்த்து
வேதாந்தம் நிகமிப்போம்

———

பாடம் -37-அத்ரவ்யங்கள்
இது வரை ஆறு த்ரவ்யங்கள்
1-ப்ரக்ருதி
2-ஸூத்த ஸத்வம்
3-காலம்
4-ஜீவாத்மா
5-பரமாத்மா
6-இருவடைய தர்ம பூத ஞானம் -பார்த்தோம்
முக்காலத்திலும் உள்ளவற்றை – யுகபத் -ஸர்வ -ஸூத இயற்கையாக அறியும்
ஸர்வஞ்ஞன்-பரமாத்மாவுக்கு தர்ம பூத ஞானம் உண்டே

இனி அத்ரவ்யங்கள் -த்ரவ்யம் அல்லாதவை
நியாய மாதத்தில் இவற்றையே குணங்கள் என்று -சொல்கிறார்கள்
குணமானது த்ரவ்யத்தை விட வேறு பட்டது என்பர் அவர்கள்
வேதாந்தத்தில் அப்படி அல்ல
குணமானது எப்பொழுதும் வேறே ஒரு பொருளை அண்டியே இருக்கும் –
ஆஸ்ரயத்து பிரிக்க முடியாமல் இருக்கும் –
அது த்ரவ்யமாகவோ அத்ரவ்யமாகவோ இருக்கலாம்
தர்ம பூத ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருக்கும்
ஸத்வாதி முக்குணங்கள் -அத்ரவ்யங்கள் -பிரக்ருதியை ஆஸ்ரயித்து இருக்கும்

விசிஷ்டாத்வைத மதத்தில் 10 அத்ரவ்யங்கள்
1-ஸத்வம்
2-ரஜஸ்
3-தமஸ்
4-ஸப்தம் -ஒலி
5-ஸ்பர்சம் -வெப்பம்
6-ரூபம் -நிறம்
7-ரஸம் -சுவை
8-கந்தம் -மணம்
9-ஸம்யோகம் -சேர்க்கை
10-சக்தி -திறன்-potency -ஆகியவை இவை –

பிரகிருதியின் பண்புகள்
1-ஸத்வம்
ஞானம் ஸூகம் பாரமின்மை ஆகிய தன்மைகளுக்குக் காரணமான –
புலன்களுக்கு அப்பால் பட்ட – சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு அத்ரவ்யம் தான் ஸத்வம்
ப்ரகாஸம் -ஸூகம் -லாகவம் -மூன்றுக்கும் காரணம் —அதீந்த்ரியம் -திறமை -சக்தி -அத்தை விட வேறு பட்ட -அத்ரவ்யமாய் இருக்கும்
மனஸூக்கும் இவை ஒத்து வரும் -ஆகவே அத்ரவ்யமாக என்று லக்ஷணம்
இது ஸூத்த ஸத்வம் என்னும் அசேதனப் பொருளில் தனியாக இருக்கும்
மிஸ்ர தத்வம் -ப்ரக்ருதி -என்ற அசேதனப் பொருளில் ரஜோ தமோ குணங்கள் உடன் கூடி இருக்கும் –

2- ரஜஸ் –
ராக த்ருஷ்ணா ப்ரவ்ருத்தி -ஆசை பற்று முயற்சி -மற்றும் பேராசை முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் ரஜஸ்

3- தமஸ்
பிரமாத மோஹாதி நிதானம் -கவனமின்மை சோம்பல் தூக்கம் முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் தமஸ்

இவை மூன்றும் பிரகிருதியின் குணங்கள் -ப்ரக்ருதியுடன் தொடர்பு கொண்ட ஆத்மாவையும் தாக்கக் கூடியவை
இவை -ப்ரவாஹதோ நித்யம் -அழியக் கூடியவையாக இருந்தாலும் தொடர்ச்சியாக எல்லாப் பொருள்களிலும் இவை இருக்கும்
பிரளயத்தில் ஸமமான திசையிலும்
ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் –

சாங்க்ய மாதத்தில் இவை த்ரவ்யங்கள்
நம் சித்தாந்தத்தில் இவை அத்ரவ்யங்கள் -பிரகிருதியின் பண்புகள் தான்

பஞ்ச பூதங்களின் பண்புகள்
4-ஸப்தம் -நம் காதால் கேட்கப்படும் அத்ரவ்யம்
இது ஆகாசத்தில் குணம்
பஞ்சீ கரணத்தால் மற்றவற்றிலும் உள்ளது
ஆகாசத்தோடு தோன்றி மறையும் பொருள்

நித்யர்களுக்கு அப்படி அல்லவே
ஆகவே அஸ்மதாதி நம் போல்வாருடைய காதால் கேட்கப்படும் என்று லக்ஷணம்
ஸப்தம் நித்ய விபூதியிலும் உண்டு -அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் –
இங்கு இருப்பவரால் க்ரஹிக்கப்படும் சப்தத்வம்
வேறு பட்டத்தைக் காட்டிலும் வேறுபட்டது -விஜாதீயம் -ரூபாதிகளை காட்டிலும் வேறு பட்டதாய் அங்குள்ள ஸப்தம்
விஜாதீய வ்யாவ்ருத்தம் –என்று லக்ஷணம்

இது இரண்டு வகைப்படும்
வர்ணம் -எழுத்தாக இருக்கும் ஒலி
அவர்ணம் -எழுத்து அல்லாத ஒலி -மிருதங்க ஒலி போல்வன –
தொலைவில் உள்ள ஒலியை காது சென்று க்ரஹிக்கிறது என்றும்
அவ்வொலி வாயு மூலம் பயணித்து நம் காதை அடைகிறது என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன –
தொலைவில் ஒலி கேட்க்கிறது -அருகில் -கிழக்கில் இருந்து ஒலி வருகிறது என்கிறோம் –
ஸ்ரோத்ரிய இந்திரியம் பிரயாணித்து அறிகிறது என்றே கொள்ள வேண்டும் –

5-ஸ்பர்சம் -நமது ஸ்பர்ச இந்த்ரியத்தால் -தோலால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ஸ்பர்சம் சொல்ல லக்ஷணம் –
வெப்பம் என்ற ஸ்பர்சம் நெருப்பிலும்
குளிர்ச்சி என்ற ஸ்பர்சம் நீரிலும்
நடுவான ஸ்பர்சம் பிருத்வியிலும் வாயுவிலும் இருக்கும்
மென்மை -கடினத் தன்மை -ஆகியவையும் ஸ்பர்சத்தின் வகைகள் தான்
நியாய மதத்தில் -கடினம் மென்மை- ஸம்யோகம் என்பர் -சேர்க்கையும் சேர்க்கை இன்மையுமே என்பர்
பிருத்வியாலான பொருள்களில் வெப்பத்தின் தாக்கத்தால் ஸ்பர்சம் மாறக்கூடும் -இதற்கு பாகம் -என்று பெயர் –
மாங்காய் அரிசிக்குள் வைத்தால் மாம்பழம் ஆவது போல் -பால் தயிர் ஆவது போலவும் –

6-ரூபம் -நம் கண்ணால் மட்டும் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரூபம் சொல்ல லக்ஷணம்
வெளுப்பு கருப்பு சிவப்பு மஞ்சள் -என்று நான்கு நிறங்கள் உண்டு
மஞ்சள் சிவப்பின் ஒரு வகை என்பாரும் உண்டு –
த்ரிவிக்கரணம் -என்பதால் இம் மூன்றும் -வெளுப்பு கருப்பு சிவப்பு –
மேலும் ஒளி விடக்கூடியது -ஒளி விடாதது -என்றும் பாகுபாடு உண்டு
நெருப்பில் ஒளி விடும் –lustrous -சிவப்பு
நீரில் ஒளி விடும் வெள்ளை
பிருத்வியில் ஒளி விடாத நான்கு (மூன்று)நிறங்களும் இருக்கும்
சித்ர ரூபம் -கலந்த நிறம் நியாய மாதத்தில் உண்டு என்பர்

7-ரஸம்-நமது ரசன இந்த்ரியத்தால் -நாக்கால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரஸம் சொல்ல லக்ஷணம்
இனிப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு துவர்ப்பு கசப்பு -என்று ஆறு வகைகள்
இது பிருத்வீ ஜலம் இரண்டிலும் இருக்கும் –

8-கந்தம் -நம் க்ராண இந்த்ரியத்தால் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத கந்தம் சொல்ல லக்ஷணம்
ஸூரபி-நறு மணம் -துர் நாற்றம் என்று இரண்டு வகைகள்
இது பிருத்வியில் மட்டும் இருக்கும் –

பஞ்சீ கரணத்தால் எல்லாவற்றிலும் எல்லாமும் பார்க்கிறோம்

அனைத்து த்ரவ்யங்களின் பண்புகள்
9-ஸம்யோகம்
இரண்டு த்ரவ்யங்களின் இடையில் இருக்கும் சேர்க்கை
சம்யுக்த ப்ரயுக்த நிமித்தம் -ஸம்யோகம்
இது
1-உண்டாகக் கூடியது
இரண்டு அளவு பட்ட பொருள்கள் அல்லது
ஒரு அளவு பட்ட பொருள் மற்ற ஒரு அளவு படாத பொருள் –
இடையே இருக்கும் தொடர்பு –
காலம் -எங்கும் உள்ளது -இங்கு ஸம்யோகம் -நான் நகர்ந்து -அங்கு ஸம்யோகம்
ஒரு நாள் உண்டாகும் -ஒரு நாள் அழியும்
2-உண்டாகாதது
இரண்டு அளவற்ற பொருள்களுக்கு இடையே தொடர்பு -என்பது எப்பொழுதும் இருக்கும்
பரமாத்மா காலம் ஸம்யோகம் நித்யம்

உண்டாகக் கூடிய ஸம்யோகம் இரண்டு வகைப்படும்
1-இருவரின் செயலால் உண்டானது -உபய க்ரியா ஜன்ய ஸம்யோகம்
இரண்டு மிருகங்கள் மோதிக் கொள்ளும் போது ஏற்படும் சேர்க்கை போல்வன
2-ஒருவர் செயலால் உண்டாவது
பறவை பறந்து வந்து ஒரு தூணில் அமர்ந்தால் ஏற்படும் ஸம்யோகம்

ஸம்யோகம் என்பது அனைத்து விதமான த்ரவ்யங்களிலும் உண்டு –
ஸம்யோகம் இல்லாத ஒரு பொருள் த்ரவ்யமாகவே இருக்க முடியாது
அத்ரவ்ய லக்ஷணமே ஸம்யோகம் இல்லாத பொருள்
நிறம் பொருளில் தொடுவது வேறே– இரண்டு த்ரவ்யங்கள் சேர்க்கை வேறே தானே

10-சக்தி
ஒரு பொருளுக்கு -காரணத்துக்கு -மற்ற ஒரு பொருளை -காரியத்தை -உண்டாக்கும் திறன் தான் சக்தி
ஸர்வ காரணத்வம் -மல்லிகைப் பூ மணம் -போல் ஒவ் ஒன்றிலும் சக்தி உண்டு
இது தர்க்கத்தாலும் வேதத்தாலும் நிரூபிக்கப் படுகிறது

நெருப்பு காகிதத்தை எரிக்கும்
சந்த்ர காந்த மணியை அருகில் எடுத்து வந்தால் நெருப்பால் காகிதத்தை எரிக்க முடியாமல் போகும்
நெருப்பில் இருந்த அந்த எரிக்கும் சக்தி திறன் சந்த்ர காந்த மணியால் அழிக்கப் படுகிறது
இப்படி தர்க்கத்தால் சக்தி என்று ஓன்று உண்டு என்று அறியலாம்
ஸாஸ்த்ரங்களும்
சக்த்ய ஸர்வ பாவாநாம் அசிந்த்ய ஞான கோசரா –
அனைத்துப் பொருள்களுக்கும் சக்தி என்கிற விசித்ர தன்மை -நம்மால் எண்ணிப் பார்க்க முடியாததாய் உள்ளது

நியாய மதம் –மணி பிரதிபந்தகம் தடை தான் சக்தி என்று ஒன்றைக் கொள்ள வேண்டாம் என்பர்
சுருதி சொல்வதால் நாம் ஒத்துக் கொள்கிறோம்
இது அதீந்த்ரியம் -கார்யம் பார்த்து சக்தி இருப்பதை அனுமானிக்க வேணும்

இது த்ரவ்யங்களில் மட்டும் அல்லாமல்
அத்ரவ்யங்களிலும் கூட இருக்கும்
அவையும் ஏதோ ஒரு கார்யத்தைச் செய்கிறபடியால் –

நியாய மாதத்தில் 24 குணங்கள் உண்டு என்று முன்பு பார்த்தோம்
இவை அனைத்தையும் இந்த ஆறு த்ரவ்யங்கள் பத்து அத்ரவ்யங்களில் அடக்கலாம்

புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம் -தர்மம் -அதர்மம் -ஸம்ஸ்காரங்கள் —
ஆகிய எட்டும் ஞானம் என்ற த்ரவ்யத்தின் வெவ்வேறு நிலைகள்
புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம்-ஆத்மாவின் தர்மபூத ஞான வகை
தர்மம் -அதர்மம்-ப்ரீதி கோபம் -அவனது ஞானம் வகை
ஸம்ஸ்காரங்கள்-பாவனா -பதிவு -வேகம்-ஸ்திதி ஸ்தாபனம் elasticity -ஸம்யோகம் -சேர்க்கையின் தன்மை தானே

விபாகம் ப்ருதக்த்வம் -இவை ஸம்யோகத்தின் இன்மை தான்

பரத்வம் அபரத்வம் இரண்டுமே ஒரு பொருளுக்கு காலத்தோடும் தேசத்தோடும் உள்ள தொடர்பு -ஸம்யோகம் -தவிர வேறு இல்லை

சம்க்யை -எண்ணிக்கை -பரிமாணம் -அளவு -த்ரவத்வம் -த்ரவத்தன்மை -ஸ்நேஹம் பசைத்தன்மை பிசுபிசுப்பு ஆகியவை
அந்த அந்தப் பொருள்கள் தான் தவிர தனியாக அத்ரவ்யங்கள் அல்ல

குருத்வம் -எடை -என்பது சக்தியின் ஒரு வகை தான்

ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் ஸப்தம் ஸம்யோகம் ஆகியவை அப்படியே ஏற்கப் பட்டுள்ளன

———-

பாடம் –38-புருஷார்த்தங்கள்

தத்வம் ஒன்றாகவும் ஏகோ மஹா யோகி –
தத்வ த்ரயம் – விஸிஷ்ட அத்வைதம் –
அவனையே ஆஸ்ரயத்து ப்ரஹ்மாத்மகமாக சேதன அசேதனங்கள்
தத்வம் பற்றி முன்பு பார்த்தோம்

புருஷன் எனப்படும் ஜீவாத்மாவால் -ஆசைப்பட்டு -வேண்டப்பட்டு -பெறப்படுவது
புருஷார்த்தம் என்று சொல்லப் படுகிறது
அர்த்தம் பிரயோஜனம் என்றுமாம் –
இவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்று நான்கு வகைப்படும்

தர்மமாவது –
தர்மம் -வேதம் சொன்னபடி -செய்வது -யாகம்-செயல் தானே அதுவே பயனாகுமோ -என்னில்
பிராணிகளின் ரக்ஷணத்துக்காகப் பண்ணும் செயல்கள் தர்மமாவது-
குளம் வெட்டுவது அன்னதானம் போல்வன –
தார்மிகர்
தன்னைப் பற்றி நினைக்காமல் பிராணி ரக்ஷணம் -அதுவே பிரயோஜனம்
கியாதி லாபமாக கருதாமல் தர்மமே பயனாக செய்பவர் –
அறம் -என்றாலே தனக்குச் செய்வது இல்லையே

அர்த்தமாவது –
பொருள் -தனம் -அத்தைக் கொண்டு தானே அனுபவிப்பத்தைச் சொல்ல வில்லை –
அவரவர் வர்ணாஸ்ரம தர்மத்துக்கு ஏற்ப செல்வம் தான்யம் முதலான வற்றைக்
நியாயமான முறையிலே ஈட்டி -தேவதைகளுக்கோ பித்ருக்களுக்கோ பிராணிகளுக்கோ
உத்க்ருஷ்டமான தேச கால பாத்ரங்களை அறிந்து -தர்ம புத்யா –
நன்மை செய்யும் வகையில் தர்ம புத்தியுடன் செலவிடுகை

காமமாவது
ஐஹ லௌகிகம் என்றும் பார லௌகிகம்-என்றும் இரண்டு வகைப்படும் –

இஹ லோகத்தில் காமமாவது –
தந்தை தாய் ரத்னம் செல்வம் தான்யம் வஸ்த்ரம் உணவு மக்கள் நண்பர்கள்
மனைவி மாடு வீடு நிலம் சந்தனம் வெற்றிலை மலர்கள் முதலான பொருள்களைக் கொண்டு
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் ஆகியவற்றை அனுபவித்து ஸூகப்படுகை –

பர லோகத்தில் காமமாவது –
இதில் விலக்ஷணமாய் -தேஜோ ரூபமான –
ஸ்வர்க்காதி லோகங்களுக்குச் சென்று பசி தாகம் சோகம் மோஹம் மூப்பு மரணம் முதலானவை இல்லாமல்
சேர்த்து வைத்த புண்யத்துக்கு ஈடாக ஸப்தம் முதலான விஷயங்களை அனுப்பவிக்கை

மோக்ஷம் -விடுபடுதல்
உடல் -சம்சாரம் -பிரகிருதி -கர்மங்கள் -பிறவி சுழலில் இருந்து
அடையும் இடத்தைப் பொறுத்து இரண்டாக
கைவல்ய ப்ராப்யம்
பகவத் ப்ராப்யம்
ஆக ஐந்து புருஷார்த்தங்கள் என்றும் சொல்லலாம் –

ஆத்ம அனுபவமாவது –
ஸம்ஸாரத்தைத் தொலைத்து-துக்க நிவ்ருத்த மாத்ரமான –
ஸூக வசிவமான ஆத்மா தன்னைத் தானே அனுபவித்துக் கொண்டு
தனிமையில் உடல் கூட இல்லாமல் என்றும் இருத்தல்

பகவத் அனுபவம் என்று சொல்லப்படும் உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமானது
கர்மங்கள் ஸம்ஸாரம் முதலானவற்றை துறந்து லீலா விபூதியைக் கடந்து நித்ய விபூதிக்குச் சென்று
அங்கு ஸ்ரீ வைகுண்டம் என்ற இடத்தில் ஸ்ரீ மன் நாராயணனை அனுபவித்துக் கைங்கர்யம் செய்வது –

ஜீவனம் salvation -மட்டுமே
உஜ்ஜீவனமே நமக்கு -பரம புருஷார்த்தம்
திரு நாராயணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின்

மோக்ஷம் இஷா முமுஷு
ப்ராப்யம் ப்ராபகம் -பயன் -வழி -பேறும் ஆறும் -விருந்தும் மருந்தும்
பயனை அறிந்த பின்பே வழிகளை அறிய வேண்டும் –

மோக்ஷம் அடையும் முறை
ஜீவன் ஏதோ ஒரு உபாயத்தைப் பற்றி மோக்ஷம் அடைய முயற்சிக்கும் பொழுது
அவனுடைய பாபங்கள் பகவானால் நீக்கப் படுகின்றன

4-1-13-தத் அதிகமே -உத்தர அக பூர்வ அக யோகோ அஸ்லேஷ விநாச

தத் அதிகமே-உபாயம் கைகூடி விட்டால்

நாம் செய்த புண்ய பாபங்களில்
பயன் கொடுக்கவே தொடங்காதவற்றுக்கு ஸஞ்சித கர்மம் -என்றும் பெயர்
இந்த மூட்டையில் இருந்து சிலவற்றை -ஆரப்தம் -தொடங்கப்பட்டவை –
பலன் கொடுக்கத் தொடக்கி விட்டதை பிராரப்த கர்மம் என்றும் –

இவற்றில் தீயில் இட்ட பஞ்சு போலே -சஞ்சித கர்மத்தை -பூர்வ அகத்தை -பகவான் அழிக்கிறார்

உபாயம் செய்த பிறகு மேல் உள்ள காலத்தில் இவன் செய்யும் பாபங்களை -உத்தர அகத்தை
அந்த ஜீவனிடம் ஒட்டாதபடி செய்கிறார் –

பிராரப்த கர்மத்தை அவர் அழிப்பது இல்லை –
பல பிறவிகள் ஆனாலும் அதன் பயனை அந்த ஜீவன் அனுபவித்தே முடிக்க வேண்டும் –

அடுத்த ஸூ த்ரம் –இதர பாதே து –புண்யங்களையும் போக்கி அருளுகிறார்
மோக்ஷத்துக்கு விலக்கு -பொன் விலங்கு இவையும் முமுஷுக்கு

அநாரப்த கார்யே -சஞ்சித ஒன்றுமே
போகேந -அனுபவித்தே போக்க வேண்டும் பிராரப்த கர்மாக்களை
ஒரு பிறவியே பலவோ-பக்தி யோக நிஷ்டனுக்கு
பிராரப்த கர்மம் இருந்தால் தான் -மரணம் அடைந்தால் முக்தி -மரணம் அடைவித்து முக்தி இல்லையே

அந்த ஜீவனிடம் இருந்து விலகுகிற சஞ்சித கர்மாவில்
புண்யங்களை இவனுடன் பிரியத்தோடு அனுகூலராய் இருப்பவர்களையும்
பாபத்தை இவனை வெறுப்பவர்கள் -பிரதிகூலராய் இருப்பவர்களையும் அடையும்
3-3-26-இத்தைச் சொல்லும் –

எப்பொழுது போகும் –
குதிரை சிலிர்த்து மயிர்களை தள்ளி
ராகு இடம் பிடிப்பில் இருந்து சந்த்ர ஸூர்ய விடுபடுவது போல்
உடல் நீங்கும் பொழுது பாப புண்யங்கள் போகும் என்றும்
விரஜையில் நீராடிய பின்பே அனைத்தும் நீங்கும்
இரண்டும் சுருதியில் உண்டே

கடைசி உடல் எப்பொழுது விழுகிறதோ அப்பொழுது தான் அனைத்து கர்மங்களும் தொலைக்கப் படுகின்றன
அதற்குப் பிறகு இந்த உலகத்தைக் கடந்து முக்தி அடைய இந்த ஜீவாத்மா உபயோகிக்கும்
ஸூஷ்ம சரீரம் -நுண்ணிய உடல் – இவன் செய்த பக்தி -சரணாகதியின் பெருமையால் ஏற்பட்டதே தவிர கர்மத்தால் அல்ல

ஜீவாத்மா புறப்பட வேண்டிய வேளையிலே இவன் செய்த உபாயத்தால் சந்தோஷம் அடைந்த பரமாத்மா
இருதயத்தில் இருந்து கொண்டு இருட்டான ஹிருதயத்தில் இந்த ஜீவாத்மா செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்
4-2-14-லோக அக்ர ஜ்வலனம் -ஹார்த்தமான பகவத் அனுக்ரஹம் –
உடலில் இருக்கும் 101-நாடியான ஸூஷ்ம்நா நாடி மூலமாக தலையின் உச்சி வழியே ஜீவாத்மா வெளியே புறப்பட்டு
அர்ச்சிராதி கதி -மார்கம் -மூலமாகப் பரம பதத்தை நோக்கிச் செல்கிறார் –

ஒளி உலகம் -பகல் உலகம் -வளர்பிறை உலகம் -உத்தராயண உலகம் -ஆண்டு உலகம் -ஸூர்ய உலகம் -சந்த்ர உலகம் –மின்னல் உலகம் –
முதலானவற்றைக் கடந்து -அங்கு இருக்கும் தேவர்களால் வழி நடத்தப்பட்டு
லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் இடையில் உள்ள விராஜா நதியில் நீராடி -அதுவரை இருந்த ஸூஷ்ம உடலையும் தொலைத்து
நித்ய விபூதிக்குள் புகுந்து அங்கே திவ்யமான அழகிய திருமேனியைப் பெறுகிறான் –

இதுவரை சம்சாரத்தாலும் கர்மங்களாலும் ஜீவாத்மாவின் இயற்கையான பல குணங்கள் மூடப்பட்டு இருந்தன
அவை இப்பொழுது விளங்குகின்றன –
ஸ்வேன ரூபேண அவி நிஷ்பத்யதே -சேற்றில் விழுந்த வைரம் போல் கீழே ப்ரக்ருதி விஸிஷ்ட ஆத்மா –
ஸ்வரூப ஆவிர்பாவம் -ஸூ ர்யன் கிழக்கு திக்கில் தோன்றுவது போல் –
எனவே ஜீவாத்மாவும் அக் குணங்களில் பரமாத்வாவுக்கு நிகராகிறார் –

அந்த முக்தன் தான் ஆசைப் பட்டத்தைச் செய்ய முடியும் -அஸ்ய சங்கல்ப ஏவ -ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமத்வம் -உண்டே –
தன் பித்ருக்களைக் காண வேண்டும் என்று நினைத்தாலே உடனே அவர்கள் அங்கேயே தோன்றுவார்கள் –

முக்தி அடைந்த ஜீவன் எட்டு கல்யாண குணங்களிலும் ஆனந்தத்தில் மட்டுமே பரமாத்மாவுக்கு நிகராவார்
ஜகத் வியாபார வர்ஜம் -ப்ரகரணாத் அசந்நிஹித்வாத்
போக மாத்ர சாம்யா லிங்காத் -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ஜகத்தைப் படைப்பது காப்பது அழிப்பது முதலான தொழில்கள் பரமாத்மாவுக்கே உண்டு

ப்ரஹ்ம அலங்காரம் சதம் மாலா அஞ்சன ஹஸ்தா இத்யாதி -திரு மா மணி மண்டபம்
நடுவாக வீற்று இருக்கும் -அஹம் அன்னம் –அஹம் அந்நாத –அநா வ்ருத்தி சப்தாத்-4-4-22 -நச புந ஆவர்த்ததே

ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து கொண்டு மற்ற முக்தர்களோடும் நித்யர்களோடும் சேர்ந்து பகவானை அனுபவித்து
அந்த ஆனந்தத்தால் அவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருப்பதே மிகச் சிறந்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தி ஆகும்

இப்படி முக்தி அடைந்த ஜீவன் என்றும் திரும்பி வருவதே கிடையாது -நச புந ஆவர்த்ததே -என்று வேதங்கள் கூறுகின்றன –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–23-

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த
மாமேவா வலோகயன் அப்ரச்யுத
பூர்வ சம்ஸ்கார மநோரத
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய
ததா நீமேவ மத பிரசாத லப்த
மச் சரணார விந்த யுகளை
காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய
மத் அனுபவ ஸ்தவம்
ததாவித மத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித
சேஷ சேஷ தைக ரதி ரூபா
நித்ய கிங்கரோ ப விஷ்யசி–ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -20-21-22-23

————-

உபாயம் வழி ஹிதம் பார்த்து
நியாய மீமாம்ஸ சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

பாடம் -39—மோக்ஷ உபாயங்கள் –

முமுஷு க்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும்
ஸூவ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றும் அறிய வேண்டும்
தன்னைப் பற்றிய அறிவு -பிரகிருதி உடலை விட வேறுபட்ட -அறிவுடைய -சேஷ பூதன் –
ஆத்மாவைப் பற்றி முன்பே பார்த்தோம் –

ப்ராப்யம் -புருஷார்த்தங்கள் முன்பு பார்த்தோம் –
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -நான்குக்கும் வழிகள்
உத்புத யாகம் பசு அடைய
செழிப்புக்கு வாயு தேவதை
ப்ரஹ்ம தேஜஸ்ஸூ ஸுர்ய தேவதை பற்றி யாகம் –
ஜ்யோதிஷ்டோம ஹோமம் ஸ்வர்க்கம் –
இவை அனைத்துக்கும் உபாயங்களை ஸ்ருதி சொல்லும் –

பரம புருஷார்த்த லக்ஷணத்துக்கு உபாயம்
பலத்துக்கு அருகில் அழைத்துச் செல்லப்படுவதே உபாயம் –

உபாயங்கள் வேறு -பல பிரதம் -ப்ரஹ்மமே -ரக்ஷகம் –
ஆசைப்படும் பலனை அறிந்து கொடுக்க பரம சேதனன் வேண்டுமே –

பக்த்யா ப்ரபத்யா -மஹா முனே–வேறே வழி இல்லை -கைங்கர்யம் செய்ய -ஸம்ஹிதை சொல்லும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -சாம்யா பத்தி கீழே பார்த்தோம் –

விஞ்ஞாய -அறிந்து பிரஞ்ஞாம் அறிந்து கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -பல நிலைகள் உண்டே

ஸ்ருதி உபாயம் பற்றித் தெளிவாக
ப்ரஹ்மத்தை அறிந்தால் அவரை அடையலாம் -என்று சொல்லும்
அறிதல் இங்கு ஓர் இரண்டு முறை அறிவது அல்ல
ஸ்ருதியே -ப்ரஹ்மத்தைத் தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லும்
ஆக அறிதல் -இடைவிடாமல் தியானித்தல் என்றபடி
தைல தாராவத் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்

ஆத்மா அரே த்ரஷ்டவ்யா -ஸ்ரோதவ்யா-மந்தவய-நிதித்யாஸி தவ்ய –
மேலும் அந்த த்யானம் நீடிக்க நீடிக்க -நேரே காண்பது போல் த்யானிக்கப் பெறுவோம்
இது தான் தர்சன சமானா கார த்யானம்
தர்சனமே புருஷார்த்தம் -அந்த அளவுக்கு தெளிவாக த்யானம் வேண்டுமே –

இது சாதாரணம் அல்ல -தன் இடம் பக்தி உள்ளோருக்கு மட்டும் தானே தன்னைக் காட்டிக் கொடுக்கிறார் என்றும் ஸ்ருதி சொல்லும்
நாயமாத்மா ஸ்ருதி –பேசியோ -கேட்டோ ஆலோசனையாலோ த்யானத்தாலோ அறிய முடியாது
யாரைத் தேர்ந்து எடுக்கிறானோ அவனே காண்பான்
விஸ்வரூபம் காண திவ்ய சஷுஸ் கொடுத்து காணும் படி அனுக்ரஹித்தால் போல்

நான் ஞானிகளுக்கு பிரியமாக இருக்கிறேன் -அப்படிப்பட்ட ஞானிகளை நானும் விருன்புக்கிறேன் -கீதை
ப்ரியதம வரணம் -ஸ்=வயம் வரம் போல் -தேர்ந்து எடுப்பது பக்தர்களையே
தேர்ந்து எடுத்துக் காட்டிக் கொடுத்து -அவர்களே தனக்கு ஆத்மா -மே மதம் –
வேதனம்–உபாசனம் -த்யானம் -நிதித்யா சனம் -இவை அனைத்தும் – ஸ்நேக பூர்வ அநு த்யானம்

கீதார்த்த ஸங்க்ரஹம் முதல் ஸ்லோகம் —ஸூவ தர்மம் –ஞானம் -வைராக்யம் -சாத்ய பக்தி ஏக கோசர
பக்தி யோகம் வேறே -பக்தி வேறே -நியமத்துடன் செய்வது -அங்கங்கள் உடன்
வேதார்த்த ஸங்க்ரஹம் –ஜீவ பர யாதாத்மா ஞான பூர்வக -வர்ணாஸ்ரம கர்மங்களை செய்து -த்யான -அர்ச்சன -ப்ரணாம –
ஸ்மரணம் கீர்த்தனம் பாத சேவகம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் -அஷ்ட வித பக்தி

எனவே தியானத்தை பக்தியுடன் செய்ய வேண்டும் -இதுவே பக்தி யோகம் ஆகும் –
பக்தி யோகம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு முன் கர்ம யோகமும் ஞான யோகமும் கை கூட வேண்டும் –

கர்ம யோகம்
ஜீவாத்மா பரமாத்மா இருவரையும் உண்மையாக அறிந்து
மூன்று வித த்யாகங்களுடன் -வர்ணாஸ்ரம தர்மத்தை பகவத் ஆராதனமாகவே நினைத்து செய்தல்

அந்த மூன்று வித தியாகங்கள்
1- கர்த்ருத்வ புத்தி தியாகம் -நான் தான் இந்தச் செயலைச் செய்கிறேன் -என்ற எண்ணத்தை விடுதல்
2- மமதா தியாகம் -இது என்னுடைய கர்மம் என்ற எண்ணத்தை விடுதல்
3-பல சங்க தியாகம் -அந்த கர்ம பலன்களில் ஆசையை விடுதல்

தபஸ்ஸூக்கள் -தீர்த்த யாத்திரை -தானம் யஜ்ஞம் -முதலியவற்றைச் செய்தல் எல்லாமே கர்ம யோகம் ஆகும்
கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகம் இவற்றைக் காட்டும்

இப்படி கர்மயோகம் செய்து கொண்டே வந்தால்
அந்தக் கர்மங்கள் அவன் சேர்த்து வைத்து இருக்கும் பழைய பாபங்களை எல்லாம் போக்கும்
அவை குறைந்தால் மனசில் ஸத்வ குணம் வளரும்
அதன் மூலம் மனத்தை ஒருமித்து ஒரு விஷயத்தைத் த்யானிக்கத் தகுதி உடையதாகும்

இந்த கர்ம யோகம் ஞான யோகம் மூலமாகவும் பக்தி யோகத்தை ஏற்படுத்தும்

ஜனக மஹாராஜர் போல்வார் கர்ம யோகத்தாலேயே நேராக பக்தி யோகம் போவதையும் கீதையில் உண்டு

1-யஜமான சம்ஹ்யா -ஆமை போல் விஷயங்களில் இருந்து இந்திரியங்களை திருப்பி
2-வியதிரேக சம்ஹ்யா
3-ஏகேந்த்ரிய சம்ஹ்யா-மனசைக் கட்டுப்படுத்துதல்
4-வசீகர சம்ஹ்யா
இப்படி வைராக்யம் வளர வேண்டும்

ஞான யோகம்
மனதைக் கட்டுப்படுத்தி -புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து -ப்ரக்ருதியில் காட்டில் விலக்ஷணமான
பரமாத்மாவின் உடலான -சேவகனான ஜீவாத்மாவை தியானித்தல் –

பக்தி யோகம்
அன்போடு நேரே காண்பது போல் தெளிவாக அறியும் அளவுக்கு பகவானை இடைவிடாமல் தியானித்தல்
பக்திஸ் ச ஞான விசேஷ -ஞானம் கனிந்த நலமே பக்தி

இதற்கு -சாதன ஸப்தகம் -ஏழு காரணங்கள் உண்டு
1-விவேகம் -குற்றமற்ற உணவால் உடலை ஸூத்தமாக வைத்துக் கொள்ளுதல் -ஆகார ஸூத்தி -ஸத்வ சித்தி
ஜாதி- வெங்காயம் போல்வன – ஆஸ்ரய -யார் பொருள் -நிமித்த-தலை முடி விழுந்த – துஷ்டங்கள் இல்லாமல் –
2-விமோகம் -எந்தப் பொருளிலும் அதிகமாக ஆசை வையாது இருத்தல்
3-அப்யாஸம் -பகவானின் திருமேனியை எப்பொழுதும் -எந்தத் தொழில்களை செய்து கொண்டு இருந்தாலும் நினைக்கை
த்யானம் -யோக காலம் -அவனை தியானிப்பது போல் மற்ற சமயங்களிலும் நினைக்க வேண்டும் ஸூபாஸ்ரயம் -அன்றோ
த்யானம் போல் ஆசன நியமாதிகள் வேண்டாம் -ஆலம்பநம்
4-க்ரியா -வர்ணாஸ்ரம தர்மங்களை இயன்ற அளவும் செய்கை
5-கல்யாணம் -உண்மை பேசுதல் நேர்மை தயை தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
சத்யம் ஆர்ஜவம் தயா தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
6-அந வாஸம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் வருந்தாமை
7-அநுத் தர்சம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் மகிழ்ச்சி அடையாமை –
ஸூக துக்க சாம்ய புத்தி வேண்டுமே –

இந்த பக்தி யோகத்தில் மூன்று நிலைகள் உண்டு
1-பர பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல்
2-பர ஞானம் -நேரே காண்பது போல் பகவானை தியானிக்கும் நிலை
3-பரம பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல் –

பர ஏகாந்த ப்ரீத்யா –
ஞானம் தர்சனம் பிராப்தி நிலைகள் இவை-

பக்தி யோகம் கொண்டு ஐஸ்வர்யமும் கைவல்யமும் -பகவத் ப்ராப்தி-மூன்றும் பெறலாம்
உண்மையான ஸ்வரூபம் அறிந்து முமுஷுவான பின்பு பகவத் பிராப்தி –
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய கைங்கர்யம் ஒன்றையே பிரார்த்திப்பார்கள் அன்றோ –

சாதன பக்தி
ஸாத்ய பக்தி
ஸஹஜ பக்தி -இவையும் உண்டே

சரணாகதி
பக்தி யோகம் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கு சரணாகதி
சக்தி இருந்தாலும் கூட -பிராப்தி -ஜீவாத்மாவின் உண்மையை தெளிவாக அறிந்து –
பக்தி யோகம் செய்வது கூடாது என்று சரணாகதி செய்வார் நம் பூர்வாச்சார்யர்கள்
ஜீவாத்மா பகவானுக்கு அடிமை -சொத்து -என்று புரியப் புரிய
ஸூய யத்னம் ஒன்றும் இல்லாமல் அவனே நம்மைக் கைக்கொள்ளுவார் என்று மஹா விச்வாஸமும்
அவன் நம்மைக் கைக்கொள்ளும் போது அவனை விலக்காமையும் போதும் என்கிற
புரிதல் வந்தபின்பு பக்தி யோகம் செய்வது தவறு என்று உணர்ந்து சரணாகதியை ஒரே வழி என்று அறிகிறோம் –

நான் ஆசைப்படும் பொருளை அடைய வேறே வழிகள் இல்லாத போது –
ஒருவர் இடம் மஹா விஸ்வாஸம் வைத்து வேண்டுதல் தான் சரணாகதி என்று சாஸ்திரங்கள் கூறும்

எனவே சரணாகதி என்பது
பரமாத்மாவே நமக்கு முக்தி அடைய உபாயம் என்ற உறுதி மட்டுமே –
அதற்குள் நாம் பரமாத்மாவிடம் வைக்கும் பிரார்த்தனையும் அடங்கி இருக்கும்

அநந்ய சாத்யே –மஹா விஸ்வாஸ பூர்வகம்– ததேக உபாய தயா யாஸ்மிதா —
இதி -ப்ரார்த்தனா கர்ப்பமான மதி சரணாகதி –
அவனே உபாயம் -மாம் ஏகம் அர்த்தம் -குஹ்ய தமம்

ஒருவன் சரணாகதி செய்து விட்டால்
அவனுக்குத் தானாகவே ஏற்படும் சில ஸ்வ பாவங்கள் உள்ளன -அவகாத ஸ்வேதம் போல் –
1-அனுகூல்ய சங்கல்பம் -பரமாத்மாவுக்கு பிடித்தத்தை மட்டுமே செய்வேன்
2-பிராதி கூல்ய வர்ஜம் -அவருக்குப் பிடிக்காததை தவிர்த்தல்
3-ரஷிஸ்யதி விஸ்வாச -அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்ற உறுதி
4-கோப்த்ருத்வ வரணம் ததா -அவரே காக்க வேண்டும் என்று தேர்ந்து எடுத்தல்
5-கார்ப்பண்யம் -கர்வம் இன்மை
6-ஆத்ம நிஷேபம் -ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பது –

ஆச்சார்ய அபிமானம் -நம் சம்பிரதாய -விசிஷ்டாத்வைத அசாதாரணம் இது

(ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் –
ஆச்சார்ய அபிமானம் ஆவது -இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே ஒருவனைக் குறித்து –
இவனுடைய இழவையும் -இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான்
உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -நாச்சியார் -10-10-என்று சொல்லுகிறபடியே –
சகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக்குகை –
எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே
சகல தேவதாந்த்ர்யாமியாயாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப்
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும்
எல்லா உபாயங்களுக்கும் சஹ காரியுமாய் ஸ்வ தந்த்ரமுமாய் இருக்கும் )

சரணாகதி செய்யும் பொழுது பகவான் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்கிற மஹா விச்வாஸம் வேண்டுமே
அது ஏற்படுவது மிகவும் துர்லபம்
நாம் சேர்த்து வைத்து இருக்கும் பாபங்கள் கனத்தைப் பார்த்தாலும்
ஈஸ்வரன் நிரங்குச ஸ்வ தந்த்ரர் என்பதைப் பார்த்தாலும்
ஒரு வேளை கைக் கொள்ளாமல் போவாரோ என்கிற சந்தேகம் ஏற்படலாம்
அதனால் சரணாகதி செய்ய சக்தி இல்லாதவர் களுக்காக உள்ள ஒரே உபாயம் தான் ஆச்சார்ய அபிமானம்

நம்முடைய இயலாமையைக் கண்ட ஒரு பக்தர்
நம்மை அடைந்தால் பகவான் பெரும் ஆனந்தமே ஹேதுவாக திரு உள்ளம் பற்றி
நம்மால் செய்ய முடியாத சரணாகதியை நமக்காக அவர் செய்கிறார்
பால் குடிக்கும் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் தாய் தானே மருந்தைக் குடிப்பது போலே
நம் இயலாமையால் அவர் நமக்காக பகவான் இடம் சரணாகதி செய்கிறார்

அப்படி தயையுடைய பக்தரின் நிழலில் ஒதுங்கி
அவருடைய அபிமானத்துக்கு இலக்காகி
நாம் இருப்பதே ஆச்சார்ய அபிமானம் ஆகும்
அவர் உபதேசித்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு –
அவர் இட்ட வழக்காக நாம் வாழ்ந்து வந்தால்
அதற்காகவே பகவான் உகந்து நமக்கு முக்தி அளிக்கிறார் என்று ஸாஸ்த்ரங்கள் கூறும்

பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா
தேநை வ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்
அதாவது
விலங்கோ மனிதனோ பறவையோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை அண்டி வாழ்ந்து வந்தால் –
அதனாலேயே அவர்கள் பரமபதத்தை அடையலாம்
அளியல் நம் பையல் என்று அபிமானம் ஒன்றே வேண்டுவது –

இதுவே நாம் அனைவருக்காகவும் பகவான் ஏற்படுத்தியுள்ள சிறந்த எளிய நெறி ஆகும் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -21-30 —

August 5, 2021

பாடம் -21-ஆத்மா –
ஆத்மா பொதுச்சொல்லை அறிந்து பின்பு ஜீவாத்மா பரமாத்மா பாகுபாட்டை அறிவோம் –
ஆத்மா -நான் என்கிற அறிவுக்கும் பேச்சுக்கும் விஷயமாக இருப்பவர் -இலக்காக இருப்பவர் –
நான் என்கிற அறிவும் சொல்லும் ஆத்மாவைக் குறிக்கும் –நம் உடலை அல்ல
தேக ஆத்மா விபாகம் விரிவாக பின்பு பார்ப்போம்
ஆத்மா ஞானம் என்ற பொருளால் ஆக்கப்பட்டது —
மண்ணால் குடங்களும் -தங்கத்தால் ஆபரணங்களும் -பஞ்சால் துணிகளும் -ஆக்கப்பட்டவை போலே ஆத்மா ஞானத்தாலேயே ஆக்கப்பட்டது –
உப்புக்குக் கட்டி எங்குமே உப்பு மயமாக இருப்பது போல் ஆத்மாவும் முழுவதுமே ஞான மயமாகவே இருக்கும் –
நியாய மதத்தின் படி ஞானம் குணமே-தன்மையே தவிர – த்ரவ்யம்-பொருள் – அல்ல –
ஆனால் வேதாந்தப்படி ஞானம் தனியாக த்ரவ்யம்
ஞானம் – ஞானம் நகரு கிறது -விரிகிறது சுருங்குகிறது –இது போல் செயல்கள் த்ரவ்யத்துக்குத் தானே இருக்க முடியும்
தன்மை குணத்துக்கு கூடாதே –ஆகவே மண் தங்கம் பஞ்சு போல் இதுவும் த்ரவ்யமே
ஆத்மாக்கள் கோடிக்கணக்கானவை –
தங்க துகள்கள் தங்கத்தாலே ஆனது போல் ஆத்மா ஞானத்தால் ஆன ஸூஷ்மமான -நுண்ணியதாக பொருள் –

ஆத்மா ஸ்வயம் ப்ரகாஸம் ஆனவர் –
ஜடம் -தானாக பிரகாசிக்காது
அஜடம் -தானாகப் பிரகாசிக்கக் கூடியது -இதுவே ஸ்வயம் பிரகாசம் –
இங்கு பிரகாசம் -ஒளி விடுதல் என்கிற பொருளில் இல்லை -தோற்றுதல் என்கிற பொருளில் உண்டு –
குருவின் உபதேசத்தால் எனக்கு அர்த்தம் பிரகாசிக்கிறது தோற்றுகிறது -என்னுமா போலே -தெளிவாக தோற்றுகிறது என்று பொருள்
தோற்றுதல் -வ்யவஹார யோக்யத்வம் -தகுதி உடையதாக இருத்தல் -வியவஹாரம் பேச்சு செயல் –
குடத்தைப் பற்றி வ்யவஹாரம் செய்கிறேன் என்றது குடத்தைப் பற்றி பேசுகிறேன் -அல்லது குடத்தை கையிலே வைத்து உள்ளேன் போல் –
அறியாத பொருளைப் பற்றி வியவஹாரம் செய்ய முடியாதே –
அறியப் படுவதாவது -அறிவுக்கு விஷயமாதல் -இலக்கு ஆதல் –
ஆக
1- ஒரு பொருள் முதலில் அறிவுக்கு விஷயம் ஆகிறது
2- இதனால் அது பிரகாசம் அடைகிறது -தோற்றுகிறது -வியவஹாரம் செய்ய தகுதி யாகிறது –
3- அந்த வியவஹாரம் செய்யப்படுகிறது -பேசப்படுகிறது -கையாளப் படுகிறது –

எனவே ஒரு பொருள் பிரகாசிக்க -அது முதலில் அறியப்பட வேண்டும் –
ஒரு குடம் அறியப்பட வேண்டும் என்றால் ஒரு ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தை
கண் மூலமாக வெளியே செல்ல வைத்து –
வெளிச்சத்தின் உதவியோடு அத்தை அறிய வேண்டும் –
ஆகவே ஒரு குடத்துகை அறிய கண் வெளிச்சம் ஞானம் போன்றவற்றின் உதவி தேவை
ஆகவே குடம் ஜடம் -தானாகாத் தோற்றாத த்ரவ்யம் -பொருள்
உலகப் பொருள்கள் அனைத்துமே இப்படி ஜடம் -தானாகாத் தோற்றாதவை –

இப்பொழுது ஞானம் -என்ற த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டால்
அறிவைப்பற்றிய வ்யவஹாரம் -எனக்கு இந்த அறிவு ஏற்படுகிறது -நான் இதை அறிகிறேன் போன்ற பேச்சு வர
அறிவு முதலில் பிரகாசிக்க தோற்ற வேண்டும் –
அறிவு அறியப்பட வேறே ஒரு பொருளின் உதவி வேண்டாம் -அறிவு தோன்றும் போது அத்துத்தானாகவே தன்னையும் அறிவிக்கிறது
விளக்கு இருட்டையும் போக்கி -தன்னைத்தானே பிரகாசிப்பது போல் -அறிவும் மற்றப் பொருள்களையும் பிரகாசப்படுத்தி தானும் பிரகாசிக்கும் –
ஆகவே அறிவு அஜடம் -ஸ்வயம் பிரகாசம் -தானாகவே தோற்றுவது –
ஆத்மாவும் ஞானத்தால் ஆக்கப்பட்ட பொருள் ஆதலால் -ஸ்வயம் பிரகாசம் -அஜடம் –

ஆத்மா ப்ரத்யக்
உலகப்பொருள்கள் ப்ரத்யக் பராக் இரண்டு வகைப்படும் –
பராக் -வேறே ஒருவருக்குத் தோற்றம் அளிக்கும் பொருள்
ப்ரத்யக் -தனக்குத் தானே தோற்றம் அளிக்கும் பொருள் –
குடம் துணி போன்றவற்றை அறிவைக் கொண்டே ஆத்மா அறிகிறார் -குடம் தன்னைத்தானே குடம் என்று அறியாது –
ஆத்மா தன்னைத்தானே அறிகிறார் -நான் -நாம் -சொல்வதால் =நம்மை நாம் அறிகிறோம் -என்பது விளங்கும் –
ஆகவே ஆத்மா ப்ரத்யக் –
ஒரு பொருள் பேசப்பட வேண்டும் என்றால் அது அறியப்பட வேண்டும் –அறிவுக்கு விஷயமாக வேண்டும் –
நான் நாம் சொல்லும் பொழுது -நம்மைப் பற்றியே பேசுகிறோம் –
இதற்கு முன் ஆத்மா என்ற ஆத்மா அறிவுக்கு விஷயமாக ஆகி இருக்க வேண்டும் —
அது வேறே ஒரு அறிவு அல்ல -ஆத்மா என்ற அறிவு தான்
ஆத்மாவே அறிவு வடிவமானவர் –
ஞானம் என்றால் அதற்கு விஷயம் இருக்க வேண்டும்
ஆத்மா என்ற ஞானத்துக்கு எது விஷயம் என்றால் தான் மட்டுமே தான் விஷயமாக ஆகிறது –

ஆத்மா சேதனர் –
சைதன்யம் என்றால் அறிவு -ஞானம் என்று பொருள்
சைதன்யம் உடைய பொருள் சேதனம் என்று சொல்லப்படுகிறது –
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம் -இனி ஆத்மா ஞானத்தையும் உடையவர் என்பதையும் பார்ப்போம் –
பஞ்ச பூதங்களில் தேஜஸ்ஸூ ஓன்று -நெருப்பு தீபம் -போன்றவை தேஜஸ்ஸால் ஆனவை –
தீபம் ஓர் இடத்தில் இருந்தாலும் -ஒளி சுற்றும் பரவுகிறது –
ஒளி விளக்கின் குணம் என்று சொல்ல முடியாதே – குணம் ஓர் இடத்தை விட்டு நகராதே –
சுற்றி இருக்கும் ஒளி -பிரபா -அதுவும் தேஜஸ்ஸாலே ஆன த்ரவ்யம் –
எனவே தீபம் பிரபை -இரண்டு த்ரவ்யங்கள் -இரண்டுமே தேஜஸ்ஸாலேயே ஆனவை –
பிரபை எப்பொழுதும் தீபத்தையே அண்டி இருக்கும் -தனியாக இருக்க முடியாது –
தீபம் அழிந்தால் சுற்றி இருக்கும் பிரபையும் அழிந்து விடுமே –
அதே போல் இங்கும் ஞானம் -என்று ஒருவகையான த்ரவ்யம் -அதனால் ஆக்கப்பட்ட இரண்டு பொருள்கள் –
முதல் பொருள் தீபத்தை தனது ஸ்தானத்தில் கொண்ட ஆத்மா -அணுவாக ஓர் இடத்தில் இருப்பார் –
தீபத்தை அண்டி இருக்கும் பிரபை போலே ஆத்மாவையே ஆஸ்ரயித்து இருக்கும் – மற்றை ஓரு ஞானப் பொருள் –
அது தான் தர்ம பூத ஞானம் –ஆத்மாவின் அறிவு -சைதன்யம் –
இந்த அறிவு த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவினுடையபிரிக்க முடியாத தன்மை ஆகும்
ஞானமே வடிவான ஜீவாத்மா ஞானத்தையும் உடையவராகவும் இருக்கிறார் –

அறிவு -தர்ம பூத ஞானம் -சைதன்யம் -ஞானம் வடிவு -ஸ்வயம் பிரகாசம் -பராக் -அசேதனம் –
ஆத்மா -ஞானமே வடிவானவர் -அதனாலே -ஸ்வயம் பிரகாசம் -ப்ரத்யக் –சேதனம் –
ஆத்மா ஞானத்தை உடையவர் –அதனால் சேதனம் –
தன்னைத்தானே அறிபவர் -ஆகவே ப்ரத்யக்
அறிவு என்பதும் ஞானமே வடிவானது -எனவே இதுவும் ஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல -எனவே அசேதனம்
அறிவு தானே அறியாது-ஆத்மாவுக்கு அறிவிக்கும் -ஆகவே பராக்
குடம் ஞான வடிவம் ஆனது அல்ல -எனவே அஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல –எனவே அசேதனம் –
குடம் தான் தன்னை அறியாது – ஆத்மாவால் தான் அறியப்படும் -ஆகவே பராக் –

ஆத்மாவின் லக்ஷணம்
இப்படிப்பட்ட ஆத்மாவின் லக்ஷணங்கள்
1-ப்ரத்யக்காய் இருத்தல் -தன்னைத்தானே அறிதல்
2-சேதனனாய் இருத்தல் -அறிவுடைய பொருளாக இருத்தல்
3-சரீரத்வம் -உடலைக் கொண்டதாக இருத்தல்

இந்த லக்ஷணங்கள் அனைத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கு பொதுவானவை –

ஜீவாத்மாவின் தனிப்பட்ட லக்ஷணம் என்ன என்றால்
1- அணுவாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -அணுத்வே சதி சேதனத்வம்
பரமாத்மா அணு அல்ல -விபு -உலகில் அனைத்து இடங்களிலும் இருக்கக் கூடியவர் -எனவே அவருக்கு இது பொருந்தாது –
2- இயற்கையான அடிமையாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -ஸ்வாபாவிக சேஷத்வே சதி சேதனத்வம் –
பரமாத்மா தன்னிடம் அதிகமான பக்தி உடையவர்களுக்குத் தான் ஆசைப்பட்டு அடிமை செய்கிறான்
ஆனால் அது பக்தியால் வந்த அடிமைத்தனமே தவிற இயற்கையானது அல்ல –

எனவே இயற்கையான அடிமைத் தனத்தை உடைய அறிவாளி ஜீவாத்மா மட்டுமே –

————-

பாடம் –22- ஜீவாத்மாவின் தனித்தன்மை

ஸ்வாமி ஆளவந்தார் ஸ்ரீ ஸித்தி த்ரயத்தில் ஆத்மாவின் தனித் தன்மையை விளக்கி அருளுகிறார்

சித்தி த்ரயம் -ஜீவாத்மா -ஞானம் -ஈஸ்வரன் மூன்றையும் ஆத்ம சம்வித் ஈஸ்வர-காட்டி அருளும்
ஆத்ம சித்தியில் -ஸங்க்ரஹ ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன

அறிவால் ஆக்கப்பட்ட ஆத்மாவே தானே
தீ -ஸம்விக் -இரண்டு வகை ஞானம்
விளக்கு பிரபை போல்
ஆத்மா -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம்
ஞானமும் ஒரு த்ரவ்யம் தகானே வேதாந்தத்தில்

நான் -என்று குறிக்கப் படுபவர் ஜீவாத்மா என்பதில் சந்தேகம் இல்லை –
அவர் எப்படிப்பட்டவர் என்பதிலே பல விவாதங்கள் உண்டு
உடலே ஜீவாத்மா
புலன்களே ஜீவாத்மா –
மனதே ஜீவாத்மா
பிராண வாயுவே ஜீவாத்மா
உலகப் பொருள்களின் அறிவே ஜாவாத்மா
இந்த வாதங்களை முறி அடித்து அருளவே ஸ்வ இதர விலக்ஷணன் ஜீவாத்மா என்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்
தேகம் என்றால் உடல்
இது என்னுடைய உடல் என்பதால் உடலை விட்டு வேறுபாடு தெளிவு
பிராணன் என்பது நம்முடைய மூச்சுக் காற்று -ஆகவே ஆத்மா பிராணனை விட பிராணனை விட வேறுபட்டது என்பது தெளிவு
நான் கண்ணால் காண்கிறேன் மூக்கால் முகர்கிறேன் என்பதால் புலன்களில் இருந்து வேறுபட்டது என்பது தெளிவு –
தீ -என்றால் அறிவு -நான் அறிவு என்று சொல்லாமல் -அறிவுடையவன் நான் என்கிறோம் -ஆகவே அறிவும் ஜீவாத்மாவும் வேறு

அடுத்து -அநந்ய சாதன -என்கிறார்
அந்நியம் -என்றால் வேறே ஓன்று
அநந்யம் -என்றால் வேறே அல்லாதது -அதாவது தானே -என்று பொருள் –
சாதன -என்றால் அதனால் பிரகாசிப்பது
எனவே அநந்ய சாதன -என்றால் வேறே ஒரு பொருளின் உதவி இல்லாமல் தானாகவே பிரகாசிக்கக் கூடிய வஸ்து -என்றதாயிற்று
இத்தையே ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -என்கிறோம் –
ஒரு குடம் அறியப் பட வேண்டும் என்றால்
அறிவு -கண் -வெளிச்சம் இவை அனைத்தும் தேவை -ஆகவே அது ஜடம்-தானாகப் பிரகாசிப்பது இல்லை
ஆனால் ஆத்மா அப்படி அல்ல
தானாகவே பிரகாசிக்கிறார்
நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருக்கிறார் -ஆகவே ஆத்மா தோற்ற எந்தப் பொருள்களின் உதவியும் தேவை இல்லை –
இதை அறிய பல பிரமாணங்கள் உள்ளன
1-ப்ரத்யக்ஷம் –
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது உள் புலன்களோ வெளிப்புலன்களோ இயங்காது
அப்போதும் நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருப்பார்
2-ஸாஸ்த்ரம்
அத்ர அயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதி என்று வேதம் கூறும்
ஸ்வயம் ஜ்யோதி என்றால் தானாகவே பிரகாசிக்கும் என்றதாயிற்று –
3-அநு மானம்
ஆத்மா ஸ்வயம் ப்ரகாசமானவர் -ஞானமான படியால் -நம் அறிவைப் போலே -என்கிற
அனுமானத்தாலும் இத்தை அறியலாம்
ஸ்வாமி வேதாந்த தேசிகன் ஸ்லோகம்
தத்வ முக்த கலாபம்
கிஞ்ச வேதாந்த த்ருஷ்ட்யா ஞானத்வாத் ஏஷ தீ வத்– ஸ்வ விஷய த்ருஷ்ணா
நிரபேஷ ஸ்வ ஸித்தி –அறிவு பிரகாசம் -வியவஹாரத்துக்கு தகுதி ஆவதே
தன்னைப் பற்றிய அறிவு தானாகவே வெளிக்காட்டும்
இரண்டு ஞானங்கள் உண்டே –
வேதாந்த ஸாஸ்த்ரத்தில் ஞானம் என்று வழங்கப் படுபவை எல்லாம் ஸ்வயம் ப்ரகாசங்கள்
ஆத்மாவும் ஞானம் எனப்படுகிறார்
ஆகவே அவரும் அப்படியே —

——-

பாடம் –23- ஜீவாத்மாவின் பண்புகள்

நியாய கலாபம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -நியாயக் கூட்டம் -வேத வியாசர் –தீர்ப்பை எங்குமே கொள்ளலாமே –
சகல உபநிஷத்துக்களையும் பொருத்தி பார்த்து -சம்யக் நியாய க்லாபேண மஹதா பாரதம் –
உப ப்ரும்ஹத வேத வேதார்த்த விஷயீ கரணம்

ஆத்மா நித்யமானவர்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ சித்தி த்ரய ஸ்லோகம் முதல் பாதி கீழே பார்த்தோம் –
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)

இரண்டாம் பாதியில் ஆத்மாவின் குணங்களை அருளிச் செய்கிறார்

நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

புத்த மதத்தில் ஆத்மா க்ஷணிகமான -ஒரு நொடியில் அழிந்து விடக்கூடிய அறிவுகளின் தொடர் தான் ஆத்மா என்பர்
ஆகவே இதுவும் அழியக் கூடியது என்பர்
இத்தை மறுக்கவே -ஆத்மா நித்யம் -பிறப்பு இறப்பு அற்றவர் என்கிறார் ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார்
முதலில் ஆத்மா க்ஷணிகம் அல்ல -நிலையானது என்பதற்கு பிரமாணம் பார்ப்போம்
நேற்று குடத்தைப் பார்த்த நானே இன்று அதைத் தொடுகிறேன் -என்கிற அறிவு ஏற்படுகிறது –
ப்ரத்யபிஞ்ஞா என்கிற இந்த அறிவால் நேற்று பார்த்தவருக்கு இன்று தொடுபவரும் ஒருவரே -என்று அறிகிறோம்
ஆகவே ஆத்மா நிலைத்து நிற்கும் ஒரு பொருளே என்பது தெளிவு –

ஸ்ரீ வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில் –ஆத்ம அதிகரணம் இது –
ந ஆத்மா ஸ்ருதே –நித்யத் வாச்ச தாப்ய–2-3-18-
ந ஆத்மா-ஆத்மா உண்டாவது இல்லை —
ஸ்ருதே–அவ்வாறு ஸ்ருதி சொல்லுகிறபடியால் —
நித்யத் வாச்ச தாப்ய–ஸ்ருதிகளில் இருந்து ஆத்மா நித்தியமான படியாலும் –

ஆத்மா உண்டாவது இல்லை என்று வேதம் நேராக நேரடியாகக் கூறுகிறது –
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்
ஞாஜ்ஜ்வ த்வவ் அஜவ் -முதலிய இடங்களில் -(அறிவு உள்ளார் அறிவு குறைவாளர் இருவரையும் பிறப்பிலிகள் )
ஸ்ரீ கீதையில் இதே போல் வாக்கியம் உண்டே –
ந ஜாயதே ம்ரியதே கதாசித்–நாயம் பூத்வா –அஜ நித்ய ஸாஸ்வத புராண –புரா அபி நவ- இத்யாதி
ஸத் கார்ய வாதம் -அவஸ்தா பேதங்கள் உண்டே அசேதனங்களுக்கு

மேலும் ஆத்மா நித்யமானவர் என்றும் கூறுகிறது –
நித்யோ நித்யாநாம்
அஜ நித்ய ஸாஸ்வத அயம் புராண -போன்ற சுருதி வாக்கியங்கள் மூலம் ஆத்மா உண்டாவது இல்லை என்று அறியலாம் –
உடலோடு தொடர்பு படுவதே பிறப்பு -அதை விட்டுப் பிரிவதே இறப்பு என்று உலகில் சொல்லுகிறோம் –

ஆத்மா அணுவானவர்
குடம் புத்தகம் போல் நடுவாக அளவாகக் கொண்டால் அது பகுதிகளால் ஆக்கப்பட்டு இருக்க வேண்டும் –
எனவே அழிந்தே தீரும்
இது ஒவ்வாத படியால் ஆத்மா நடுவாக அளவு கொண்டது இல்லையே –

உத் க்ராதி-கதி -ஆகதிநாம் –2-3-20—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் –ஆத்மா இவ்வுடலில் இருந்து புறப்படுகிறார் என்பதை
தேந ப்ரத்யோ தேந ஏஷ ஆத்மா நிஷ் க்ராமதி -என்றும்
வேறு உலகங்களுக்குச் செல்கிறார் என்பதை
யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மசமேவ தே ஸர்வே கச்சந்தி -என்றும்
அங்கு இருந்து மறுபடியும் திரும்பி வருகிறார் என்பதை
தஸ்மாத் லோகாத் புந ஏதி அஸ்மை லோகாய கர்மணே என்றும் வேதம் கூறுகிற படியால்
புறப்படுதல் செல்லுதல் வருதல் ஆகியவை விபுவான -எங்கும் பரந்துள்ள -பொருளுக்குக் கூடாத படியால் ஆத்மா விபு அல்ல

மேலும்
ஸ்வ ஸப்த உன் மாநாப்யாம் –2-3-23-ஸூத்ரத்தில் கோருகிறார்

வேதம் நேரடியாக ஜீவாத்மா அணு என்று கூறுகிறது
ஏஷ அணு ஆத்மா
ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் –முதலானவற்றில்

மேலும்
ஆராக்ர மாத்ரோ ஹ்யவரோபி த்ருஷ்ட
வாலாக்ர சத பாகஸ்ய சததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேய -என்பனவற்றில்
தலைமுடியின் நுனி ஊசியின் நுனி –முதலியவற்றுக்கு சிறியது ஆத்மா என்கிறது –

அவிரோத சந்தனவத்
சந்தானம் ஒரு இடத்தில் பூச உடம்பு முழுவதும் குளிர்வது போல்
இது நம் சித்தாந்தம் அல்ல
வேறே ஒருவர் சித்தாந்தம்
நம் சித்தாந்தம்-
குணாத்வா ஆலோக வத் –2-3-26- அணுவான ஆத்மா உடலில் ஓர் இடத்தில் இருந்தாலும்
அவருடைய தர்ம பூத ஞானம் உடல் முழுவதும் பரவி இருக்கிற படியால் உடல் முழுவதும் உள்ள இன்ப துன்பங்களை அறிகிறார்
ஆபாசத்துக்கு ஸுவ்ரி –50 உடல்களை கொண்டாரே –
இதே போல் முக்தி அடைந்த ஆத்மாவின் அறிவும் உலகம் முழுவதும் பரவி இருந்து அனைத்தையும் அறிகிற படியால்
ச ச அநந்த -அளவற்ற தர்ம பூத ஞானம் விரியும் –
ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார் ஸ்லோகத்தில் -வ்யாபி -என்று அருளிச் செய்கிறார்
விளக்கு ஓர் இடத்திலே இருந்து கொண்டு தன் ஒளியாலே வியாபித்து போலே
ஆத்மா அணுவாக இருந்தாலும் தன் அறிவால் வியாபிக்கிறார் —

ஆத்மாக்கள் பலர்
அடுத்து ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன -என்பதாக
ஆத்மாக்கள் பலர் உள்ளனர் -உலகில் ஆத்மா ஒன்றே என்று சொல்ல முடியாது
வேதம் -தேவ திர்யக் மனுஷ்யேஷு புமான் ஏக வ்யவஸ்தித –என்று
தேவ உடலிலும் மனுஷ்ய உடலிலும் மிருக உடலிலும் ஒரே ஆத்மா உள்ளார் -என்பதின் பொருளை உள்ளபடி அறிய வேண்டும்
எந்த உடலில் எந்த ஜீவாத்மா இருந்தாலும் -அவர்
ஞான வடிவாகவும்
நித்யமாகவும்
அணுவாகவும்
ஸ்வயம் ப்ரகாசராயும் இருப்பர்
சமமான ஒத்தவராக வேறு பாடு இன்றி இருப்பதால் ஒரே ஆத்மா உள்ளார் என்கிறது –
அரிசி மண்டியில் பல வகை மூட்டைகள் அரிசி இருக்க இது ஒரு அரிசி 52 ரூபாய் இது ஒரு அரிசி -60 ரூபாய் –
ஒரே தரத்தோடும் தன்மையோடும் உள்ளதால் ஒரே அரிசி என்கிறோம்
அதே போல் அனைத்து உடல்களிலும் உள்ள ஆத்மாவும் ஒரே தன்மை களைக் கொண்டவையே
தேஷாம் ஆதித்யவத் ஞானம் ப்ரகாசயதி தத் பரம் -முதலான வற்றால் முக்தர்களை பன்மையில் கூறும் –
ஆகவே ஆத்மா பலர் என்பது ஸித்தம்
ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன என்பதால் சரீரம் தோறும் வேறு பட்டவர் -என்றதாயிற்று –
அனைத்து சரீரங்களிலும் ஒரே ஆத்மா இருந்தால் அவரே உலகில் இருக்கும்
அனைத்து இன்ப துன்பங்களை எல்லாம் அனுபவிக்க நேரிடும் –

ஆத்மா ஆனந்த வடிவானவர்
ஸ்லோகத்தில் கடைசியில் ஸ்வத ஸூகீ -இயற்கையாகவே ஆனந்தமாகவே இருப்பவர் -என்று பொருள்
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம்
ஞானம் என்று ஓன்று இருந்தால் அதுக்கு விஷயமாக ஓன்று இருக்க வேண்டும்
அது பிடித்ததாக இருந்தால் அந்த ஞானம் ஸூகம்
பிடிக்காததாக இருந்தால் அதுவே துக்கம்
அதே போல் பயம் வெட்கம் கோபம் சந்தேகம் உறுதி போண்டாவை ஞானத்தின் வெவ்வேறு நிலைகள் தான்
எனவே ஆத்மா என்பவர் ஞானமே வடிவானவர் என்றால் அந்த ஞானத்துக்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும் –
ஆத்மா என்கிற ஞானத்துக்கு உலகப் பொருள்கள் விஷயம் ஆக மாட்டா -அதுக்கு தான் மட்டுமே விஷயமாக இருக்கும்
எனவே ஆத்மா என்பது தன்னையே எப்பொழுதும் அறியக்கூடிய ஒரு ஞானம் என்று சொல்ல வேண்டும்
தான் தனக்கு எப்பொழுதும் விரும்பக் கூடியவராக அனுகூலராகவே இருப்பார்
யாரும் தன்னையே வெறுப்பது இல்லையே
எனவே ஆத்மா என்பது தன்னைப் பற்றிய ஒரு ஞானம் -தான் தனக்கு எப்பொழுதும் விருப்பமானவர் –
ஆகவே ஆத்மா என்பது விரும்பப்படும் பொருளை பற்றிய ஞானம்
இதுவே ஸூ கம் -ஆனந்தம்
எனவே ஆத்மா ஆனந்தமே வடிவானவர் என்கிறோம்
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது எந்தப் பியருளையும் அறிவது இல்லை
ஆனால் விழித்ததும் ஸூகமாகத் தூங்கினேன் என்கிறோம்
தூங்கும் பொழுது எந்த ஸூகத்தை அனுபவித்து இருக்க முடியும் –ஆத்மா என்கிற ஸூகத்தை மட்டும் தான் –
அதனால் தான் ஆத்மா இயற்கையிலே ஸூகமாய் இருப்பவர் என்று சொல்கிறார்
துக்கம் எல்லாம் சம்சாரத்தால் தான் வருகிறது –

———

பாடம் -24—ஜீவாத்மாவின் ஞாத்ருத்வம்

ஞானமே வடிவானவர் என்றும் ஞானம் -அறிவுடையவர் என்றும் பார்த்தோம் -அந்தர் ஜோதி புருஷ –
சாங்க்யர் -கபிலர் -புத்தர் -இருவரும் ஞானம் வடிவானவர் மட்டும் தான் என்பர் -ஞானம் என்ற பண்பு கிடையாது என்பர்
நியாய மதத்தின் படி ஞான வடிவானவர் அல்ல
கல் கட்டை போல் ஜடமான பொருள் தான் -ஆனால் ஞானம் என்ற பண்பு-குணம் -உண்டு என்பர் –
இவை இரண்டுமே தவறு -ஆத்மா ஞான வடிவானவரும் ஞானம் உடையவருமாகவே உள்ளார் என்று
வேத வியாசர் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் கூறுகிறார்
ஞா அத ஏவ –2-3-19-(ஞாதி கரணம் -இந்த ஸூத்ரம் -பெயரால் இந்த அதிகரணம் )
எந்த வேதத்தின் அடிப்படையில் நித்யமானவர் என்று கூறப்படுகிறாரோ அதே வேத அடிப்படையில்
ஆத்மா அறிவாளி அறிவுடையவர் ஞாதா

1-அத யோ வேத இதம் ஜிக்ராணி இதி ஸ ஆத்மா-
எவன் நான் நுகர்கிறேன் என்று அறிகிறானோ அவன் ஆத்மா
2-ய அயம் விஞ்ஞான மய ப்ராணேஷூ ஹ்ருதி அந்தர் ஜ்யோதி புருஷ
ஆத்மா ஞானம் என்ற குணத்தை யுடையவராய் ஹ்ருதயத்தில் உள்ளே ஞான வடிவாகவே இருக்கிறார் –
ஜ்யோதி என்று ஸ்வயம் பிரகாசம்
இவை போன்ற வேத வாக்கியங்கள் ஆத்மா அறிவுடையார் – என்று கூறுகின்றன
உலக வாழ்விலும் நான் அறிவுடையான் என்று தானே அறிகிறோம் –

இந்த பிரமாணங்கள்
ஞானம் வேறு -ஆத்மா வேறு -ஞானத்தை யுடையவர் ஆத்மா என்று ஸ்பஷ்டமாகக் கூற வில்லை –
எனவே ஞானமே ஆத்மா என்று சிலர் கேள்வி எழுப்பலாம் –
அதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
வியதிரேக கந்தவத் ததா ச தர்சயதி–2-3-27-
மணம் உடையது ப்ருத்வீ என்று சொல்லும் பொழுது
ஆறாம் வேற்றுமை மணத்துக்கும் பிருத்வீயுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது –
அதே போல்
ஞாநாதி ஏவ அயம் புருஷ–முதலான வேத வாக்கியங்களில் ஞானம் யுடையவர் ஆத்மா – என்று சொல்லுகிற படியால்
ஞானம் வேறு என்றும் ஆத்மா வேறு என்றும் ஞானத்தை யுடையவர் ஆத்மா என்றும் அறிகிறோம் –

இதே போல் ப்ரஹ்மம் ஆனந்த மயன் என்றும் வேதம் சொல்லும் ப்ரஹ்மத்தின் ஆனந்தம் அளவிட முடியாதே –

இங்கே பராசர பட்டர் —
நான் அறிவுடையவன் என்னும் பொழுது ஆத்மாவும் அறிவும் வெவ்வேறாகவே தோற்றினாலும் இரண்டே ஒன்றே என்று கொண்டால்
குடத்தை நான் அறிகிறேன் -என்னும் பொழுது நானும் குடமும் ஒன்றே-வேறுபோராடு தோற்றம் பொய்யானது என்றும் சொல்லலாமே –
ஆகவே ஆத்மாவுக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்

இதுவும் ஸ்பஷ்டமாக இல்லை என்று நினைத்தால் -மேலும் வேத வியாசர் கூறுகிறார்
ப்ருதக் உபதேசாத் –2-3-28-
நேரடியாகத் தன் சொல்லைப் பயன்படுத்தியே அறிவானது ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதாகச் சொல்லப் பட்டுள்ளது வேதத்தில்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
அறிவு வடிவமான ஆத்மாவினுடைய அறிவுக்கு அழிவே கிடையாது என்று இதற்குப் பொருள் –

இங்கு ஒரு கேள்வி எழலாம்
ஆத்மா அறிவுடையவராக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே பல இடங்களில் கூறுவது எதனால் –
யோ விஞ்ஞானே திஷ்டன்
ஞானம் எனப்படும் ஆத்மாவின் மேல் எந்த பரமாத்மா இருக்கிறாரோ -என்றும்
விஞ்ஞானம் யஜ்ஜம் தநுதே
ஞானம் யாகத்தைச் செய்கிறது
போன்ற இடங்கள் உண்டே —
ஞான ஸ்வரூபம் ஆத்மா விஷ்ணு புராணமும் சொல்லுமே
இங்கு அறிவு என்றே -அறிவாளி -என்று சொல்லாமல் உள்ளதே –

இதற்கு வேத வியாசர் பதில் உரைக்கிறார் –
தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஞ்ஞ வத் –2-3-29-
ஞானத்தை சாரமான குணமாக ஆத்மா கொண்டு இருக்கிறபடியால் ஆத்மாவை ஞானம் என்றே கூறலாம் –
தவறு இல்லை என்றவாறு –

ஒருவருக்கு ஸாரமான குணம் எதுவோ அவரை அக் குணம் என்றே உலகில் சொல்கிறோமே
நம்மாழ்வாரை கிருஷ்ண பக்தர் என்று சொல்லாமல் க்ருஷ்ண த்ருஷ்ண தத்வம் -கிருஷ்ண பக்தியே உருவானவர் –
அதே போலவே இங்கும் ஆத்மாவை அறிவே என்பதில் தவறு இல்லை
இங்கே ஸாஸ்த்ரீயமான எடுத்துக்காட்டு காட்டுகிறார் வேத வியாசர்
ப்ராஞ்ஞவத்–என்று பரமாத்வையே
பிரகர்ஷேண ஞானம் -சர்வஞ்ஞன்-அவனையே ப்ராஞ்ஞ என்று வேதம் சொல்லும் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் சொல்லும் சுருதி -அறிவுடையார் என்று சொல்லாமல் ஞானம் என்றே சொல்லும்
ஆனந்த வல்லி -மேலே மேலே சொல்லி திரும்பிற்றே –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தை என்று -எவ்வளவு என்று அறிய முடியாதோ
என்று அறிபவன் -ஸ்பஷ்டமாக தன்மை வேறே ப்ரஹ்மம் வேறே என்றும் சொல்லும்
அவன் ஆனந்தம் உடையவராக இருந்தாலும் அவனை ஆனந்தம் என்றே வேதம் பல இடங்களில் கூறும் –
அதே போல் ஞானம் உடையவராக இருந்தாலும் ஞானம் என்றே கூறும்
அவ்விடங்களில் போல் இங்கும் ஸாரமான குணத்தைக் கொண்டே அழைக்கப் படுகிறது –

இங்கு இன்னும் ஒரு கேள்வி எழும்
தூங்கும் பொழுது ஆத்மாவுக்கு ஞானம் இல்லையே -எவ்வாறு இது ஸாரம் என்று சொல்ல முடியும் –
இதுக்கு வேத வியாசர் பதில் அளிக்கிறார்
யாவதாத்ம பாவித்வாத் ச ந தோஷ தத் தர்ச நாத் –2-3-30-என்று
ஆத்மாவிடம் ஞானம் எப்பொழுதும் உண்டு
விழித்து இருக்கும் பொழுது உலகப் பொருள்களை அறிய அது உதவுகிறது தானும் அறியப்படுகிறது

நாம் தூங்கும் பொழுது இந்திரியங்கள் செயல் படாமையால் நாம் வெளிப்பொருள்களை அறிவது இல்லை –
அக்காலத்தில் நம்மிடம் இருக்கும் அறிவு தொற்றுவது இல்லை –
இதற்கு ஒரு எடுத்துக் காட்டு வேத வியாசர் காட்டுகிறார்
பும்ஸ்த்வாதிவத் து அஸ்ய சத அபி வியக்தி யோகாத் –2-3-31-
என்று எப்படி பிறந்த குழந்தை இடமே ஆண் தன்மை பெண் தன்மை இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயசிலே
தான் வெளித் தோன்றுகின்றனவோ
அதே போல் ஆத்மாவிடம் எப்பொழுதுமே இருக்கும் ஞானம் நாம் விழித்து இருந்து மற்றப் பொருள்களை
அறியும் பொழுது மட்டும் தான் தோற்றுகிறது
மற்றப் பொழுதில் தோற்றுவது இல்லை -ஆகவே ஸாரமான குணம் என்று சொல்லத் தட்டில்லை

முன் சொன்ன ஸூத்ரத்தில் –ச -என்ற சொல் –
இது மட்டும் சமாதானம் இல்லை -வேறே ஒன்றும் உண்டு அது என்ன என்றால்
ஆத்மா அறிவுடையவனாக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே எதனால் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு
இப்படி சுற்றி வந்து சமாதானம் சொல்லத் தேவை இல்லை –
ஆத்மா அறிவுடையவராக இருந்து கொண்டு -தானும் ஞானமே வடிவுடையவராக இருக்கிற படியால்
வேதம் அப்படிச் சொல்கிறது என்று எளிமையாக சமாதானமும் சொல்லலாம் -என்று காட்டும் –

—–

பாடம் –25- ஜீவாத்மாவின் கர்தவ்யம் –

ஞாத்ருத்வம் வந்தாலே
கர்த்ருத்வமும்
போக்த்ருத்வமும் வருமே
ஹேய உபாதேய ஞான மூலம் -தத் கர்த்ருத்வ – சிகீர்ஷா -செய்வதில் ஆசை
ஞானம் இச்சா க்ருதி–மூன்றும் உண்டே

கர்த்ருத்வம் -செயல்களை செய்பவராக இருக்கும் தன்மை
போக்த்ருத்வம் -செயல்களின் பயனை அனுபவிப்பராக இருக்கும் தன்மை
முதலில் ஒரு பொருளை அறிகிறோம்
அறிந்து அதில் ஆசையோ வெறுப்போ தோன்றி -பெறுவதற்கோ பிளாக்குவதற்கோ முயல்கிறோம் –
அடுத்து அம் முயற்சியின் பயனை அனுபவிக்கிறோம்
ஆத்மா அறிவுடையவராய் இருப்பதால் கொள்ளத்தக்கது என்றோ தள்ளத்தக்கதோ என்றோ அறிகிறார்
அவரே கர்த்தாவான படியால் பிடித்ததை அடையவும் பிடிக்காதத்தை விலக்கவும் முடியும் –
ஆகவே ஆத்மா -ஞாதா -கர்த்தா -போக்தா என்பதே நம் சம்பிரதாய சித்தாந்தம் –

பூர்வ பக்ஷம் ஆத்மா கர்த்தா அல்ல
கபிலர் -சாங்க்ய மதம் -ஆத்மா கர்த்தா அல்ல -போக்தா மட்டும் தான் –
முக்குணங்களால் ஆக்கப்பட்ட பிரக்ருதியே அனைத்து செயல்களும் செய்கிறது
குணங்களே கார்யங்களை செய்கின்றன என்றும் சொல்வர்
சாங்க்ய மதத்தில் முக்குணம் என்று கொள்ளாமல் -மூன்று த்ரவ்யங்களே -தன்மை அல்ல
ப்ரக்ருதி த்ரவ்யமே மூன்று த்ரவ்யங்களின் கலவை என்பர் –
அவர்கள் வாதங்கள் பின்வருமாறு –

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதன் பொருள் – “கொலை செய்யும் ஒருவர் தன்னைக்
கொலை காரன் என்று நினைத்தாலோ கொலை செய்யப்படும் ஒருவர்
தன்னைக் கொல்லப்பட்டவராக நினைத்தாலோ , அவர்கள் ஆத்மாவின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை
என்று பொருள் ஏன் என்னில் ஆத்மா கொள்வதும் கிடையாது கொல்லப்படுவதும் கிடையாது –
இதிலிருந்து ஆத்மா எந்தச் செயல்களையும் செய்வது இல்லை என்று தேருகிறது

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதன் பொருள் -பிரகிருதியின் குணங்களால் செய்யப்படும் செயல்களை தானே செய்கிறான்
என்று நினைப்பவன் அஹங்காரத்தால் மூடப்பட்டு மயங்குகிறான்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
உடலும் இந்திரியங்களும் செயல்படுவதற்கு பிரகிருதி காரணமாகும்
ஸூக துக்கங்கள் அனுபவிக்க ஆத்மா காரணம் ஆவார் –

இப்படி பல பிரமாணங்களால் ஆத்மா கர்த்தா அல்ல பிரகிருதி தான் கர்த்தா என்றும்
ஆத்மா போக்தா மட்டுமே என்றும்
கூறப்பட்டுள்ள படியால் இதுவே சரியானது என்று சாங்க்ய மதம் –

இனி சித்தாந்தம்
இதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்த்வாத் –2-3-33–(கர்த் அதிகரணம் )
ஆத்மா தான் கர்த்தா -ஸாஸ்த்ரம் என்று சொல்லப்படும் வேதங்கள் பயன் உடையவை ஆவதற்காக –
அறிதல் -செயல் படுதல் -பயனை அனுபவித்தல் -இவை மூன்றும் ஒருவர் இடம் தான் இருக்க முடியும்
என்பதை வைத்து சாங்க்ய மத நிரஸனம் செய்கிறார்
சுவர்க்கத்தில் ஆசை இருப்பவன் ஜ்யோதிஷ்டோம ஹோமம் செய்ய வேண்டும்
முக்தியை ஆசை இருப்பவன் ப்ரஹ்மத்தை தியானிக்க வேண்டும்
போன்ற கட்டளைகள் போக்தாவே கர்த்தா என்பதைக் காட்டும்
ஆத்மா போக்தா என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள்
எனவே வேதம் பயன் உள்ளதாக வேண்டும் என்றால் போக்தாவான ஆத்மாவே கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –
ஸாஸனாத் ஸாஸ்த்ரம் –கட்டளை இடுவதால் இந்தப்பெயர் -ஒரு செயலில் மூட்டுதல் -ஈடுபடுத்துதல் –
எவர் அறிவுள்ளவரோ அவரைத்தான் வேதம் இத்தைச் செய் இதம் குரு இத்தைச் செய்யாதே -என்று கட்டளை இட வேண்டும்
பிரகிருதி அறிவுடையது அல்ல -எனவே அறிவுடைய ஆத்மா தான் கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –

தத்வ த்ரயம் -யதீந்த்ர மத தீபிகை போன்றவை இவற்றை சொல்லும்
கர்த்ருத்வம் இல்லை என்றால் இவனுக்கு சஸ்த்ர வஸ்யத்தையும் போக்த்ருத்வமும் குலையும்
சக்தி விபர்யதயாத் –2-3-37- என்றும் இத்தையே சொல்லும் –

பூர்வ பஷத்துக்கு சமாதானம்

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வது இல்லை என்ற கருத்தில் சொன்னது அல்ல
ஆத்மா நித்யமானவர் –அவரை யாராலும் அழிக்க முடியாது
கொல்வது உடலை மாத்திரம் தான் -கொலை செய்பவர் உடலைத்தான் அழிக்கிறார் ஆத்மாவை அல்ல
கொல்லப்படுபவரின் உடல் தான் அழிகிறது ஆத்மா அல்ல -என்பதே இதன் பொருள் –

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதிலும் கண்ணன் சொல்ல வருவது ஆத்மா கர்த்தாவே அல்ல என்பது அல்ல
ஆத்மா தான் கர்த்தா -ஆனால் சம்சாரத்தில் நாம் செய்யும் தினசரி செயல்களுக்கு எல்லாம்
ஆத்மா இயற்கையாக கர்த்தா அல்ல செயற்கையாகத் தான் இவற்றை எல்லாம் செய்கிறார் என்றே இதற்குப் பொருள் –
ஏன் என்றால் இயற்கையாக பாப புண்யங்கள் இல்லாமல் உடல் இல்லாமல் இருக்கும் ஆத்மாவுக்கு
பசி தாகம் துக்கம் போன்றவை இல்லையே -ஆகவே இந்தச் செயல்களைச் செய்யத் தேவை இல்லை
ஒரு உடலை எடுத்துக் கொண்டு முக்குண சேர்க்கை ஏற்படும் பொழுது தான் இவற்றைச் செய்கிறார் என்பதைக் காட்டவே இந்த ஸ்லோகம்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
இங்கும் உடலும் புலன்களும் செயல்பட ப்ரக்ருதியுடன் தொடர்புடைய ஆத்மாவே காரணம் –
இயற்கை நிலையில் இருக்கும் ஆத்மா அல்ல

ஆத்மா ஸ்வ தந்த்ரரா -பர தந்த்ரரா –
தன் இச்சையால் செயல்படுகிறாரா -வேறே ஒருவருக்கு கட்டுப்பட்டு செயல் படுகிறாரா –

பூர்வ பக்ஷம்
தானாக யோசித்து -தன் இச்சையால் முடிவு எடுத்து செயல் படுபவர்க்குத் தான் ஸாஸ்த்ரம் கட்டளை இட முடியும்
வேதம் பயன் உள்ளவையாக இருக்க வேண்டும் என்றால் ஆத்மா ஸ்வ தந்த்ரராகவே இருக்க வேண்டும் –

ஸித்தாந்தம்
இதற்கு வேத வியாஸர் பதில் அளிக்கிறார்
பராத் து தத் ஸ்ருதே –2-3-40-(பராயத்தா அதிகரணம் )
ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் -செயல்பாடும் தன்மை பரமாத்மாவுக்குக் கட்டுப் பட்டதே -வேதம் கூறுகிறபடியால்

அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா
பரமாத்மா ஜீவாத்மாக்குள் புகுந்து அவரை நியமிக்கிறார் -இயக்குகிறார்
சாஸ்தா விஷ்ணு அசேஷ ஜகத் -உன்னைக் கேட்க செய்தவனும்
என்னை திரு நாமம் சொல்லக் செய்தவனும் அவனே -பிரகலாதன் –

ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந அந்தர -யம் ஆத்மா ந வேத
யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தர யமயதி
எவர் ஆத்மாவின் மேல் உள்ளாரோ -எவர் ஆத்மாவுக்குள் உள்ளாரோ -எவரை ஆத்மா அறிவது இல்லையோ –
ஆத்மா யாருக்கு சரீரமோ -எவர் ஆத்மாவை உள் இருந்து இயக்குகிறாரோ அந்த பரமாத்மா

இவை போன்ற பல வேத வாக்கியங்கள் ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா இருக்கிறார் என்றும் –
அவரே ஜீவாத்மாவை இயக்குகிறார் என்றும் -சொல்லப்பட்டுள்ள படியால்
ஜீவாத்மா ஸ்வ தந்த்ரர் அல்ல பர தந்த்ரரே –
தனது இச்சையாக செயல்படுவது இல்லை –
பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டு அவரால் இயக்கப்பட்டு தான் செயல்படுகிறார் என்பது தெளிவு –

மனதில் எழும் கேள்விகள்
இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் பல சங்கைகள் எழுமே
1–தன் இச்சையால் செயல்படாத ஜீவாத்மாவுக்கு எதனால் வேதங்கள் உபதேசிக்க வேண்டும் —
எதையும் முடிவு செய்து செயல் பட முடியாதே -வேதங்களுக்கு பிரோயோஜனம் இல்லாமல் போகுமே —

2- பரமாத்மா தூண்டுவாராகில் அந்தச் செயலின் பயனையும் அவரே அனுபவிப்பாரா –
பாப புண்யங்களும் அவருக்குத் தானே சேர வேண்டும் –
ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் எப்படி ஏற்படுகின்றன

3-தீய செயல்களை செய்விப்பான் ஆகில் -அதனால் துன்பப்பட வைப்பான் ஆகில் அவனுக்கு கருணை இல்லையா

4-ஒரு சிலரை நல்ல செயல்களில் தூண்டி புண்யம் பெற வைத்து –
ஒரு சிலரை தீய செயல்களில் தூண்டி பாபம் பெற வைப்பான் ஆகில்
ஒரு தலைப் பக்ஷ செயல் ஆகாதா -ஏன் இந்தப்பாகுபாடு -இது பரமாத்மாவுக்குப் பொருந்துமா

5-இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் தானாகவே யோசித்து மாறுவதற்கு வாய்ப்பே இல்லையா
எனக்கு உள்ள அறிவு வீணாகப் போகுமே

இவை அனைத்துக்கும் பதில் அளிக்கவே அடுத்த ஸூத்ரம்
க்ருத ப்ரயத்ன அபேஷஸ்து விஹித ப்ரதி ஷித்த அவை யர்த்யாதிப்ய –2-3-41–

இதற்கு ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்வாமி ராமானுஜர்
எல்லாச் செயல்களிலும் ஜீவாத்மா எடுக்கும் முதல் முயற்சியை எதிர்பார்த்து தான் அந்தர்யாமியாய் இருக்கும்
பரமாத்மா தனது அனுமதியை வழங்குவதில் மூலம் அச்செயலில் நம்மை மூட்டுகிறார் –
இந்த ஒரு ஸ்ரீ ஸூ க்தி நமது அனைத்து சங்கைகளையும் தீர்க்கும் –

ஜீவாத்மா கர்மம் அடிப்படையில் ஒரு உடலை எடுக்கிறார் –
அப்பிறவியில் எத்தனையோ பொருள்களைப் பார்க்கிறார்
முன் பிறவியில் அனுபவித்த விஷயங்களை பொறுத்து அவருக்கு ருசி -விருப்பு வெறுப்புக்கள் -உள்ளன –
அதன் அடிப்படியில் விருப்பமோ வெறுப்போ அடைகிறார்
அடையவோ விலக்கவோ முயற்சி செய்கிறார்
பின்பு அடுத்து அடுத்த முயற்சிகளில் செயல்களில் ஈடுபடுகிறார் –

இந்தச் சங்கிலியில் ஒவ்வொரு இலக்கையும் குறித்து முயல் முயற்சியில் -அந்தர்யாமியாக இருந்து
உதாசீனனாக -அலட்சியமாக இருந்து விடுகிறார்
அடுத்த நொடியில் அது ண்பல்ல செயலா தீய செயலா என்று பார்க்காமல் அதைத் தான் அனுமதிக்கிறார்
அவர் அனுமதி இல்லாமல் எந்தச் செயலும் நடக்க முடியாதே –
இந்த இரண்டாவது நிலை -அநுமந்த்ருத்வம் -அனுமதி கொடுத்தல் –

நம் சங்கைகளுக்கு பதில்கள் —
பதில்-1-முடிவு எடுத்து செயல் படும் ஸ்வா தந்தர்யம் நமக்கு உண்டு –
எனவே வேதங்கள் நமக்கு கட்டளை இடுவது சரியே -வீணாகாது

பதில்-2-இருவருக்குப் பொதுவாக ஒரு சொத்து உள்ளது -அதில் ஒருவர் அந்தச் சொத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து
மற்ற ஒரு உரிமையாளரின் அனுமதியைப் பெற்று -அந்த நாட்டின் அரசருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்
அந்த அரசர் மகிழ்ந்து பல நன்மைகளை செய்தார் -அதை அனுபவிக்கும் உரிமை முயற்சி எடுத்தவருக்கே உண்டு –
அனுமதி கொடுத்தவருக்கு கிடையாதே –
அதே போல் செயலைச் செய்ய முடிவு செய்த ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் சேரும்
அனுமதி கொடுத்த மற்ற ஒருவருக்கு கிட்டாதே –பரமாத்மாவுக்கு ஒரு குற்றமும் வராதே –

பதில் -3-தீய செயலை செய்யவும் அனுமதி கொடுப்பதால் கருணை அற்றவர் ஆக மாட்டார் –
ஜீவாத்மா தவறான செயலில் ஈடுபட்டது ஸாஸ்த்ர விரோதமாக உள்ளதால் தண்டனை வழங்க வேண்டுமே –
தண்டனை வழங்கும் முறையில் தான் அனுமதி வழங்குகிறார்

பதில் 4-பக்ஷபாதி என்று பரமாத்மாவை சொல்ல முடியாது
ஜீவாத்மா அவரவர் சுதந்திரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுத்து செய்யும் எந்தச் செயலையும் அனுமதிக்கிறார்
இவரே எந்தச் செயலிலும் மூட்டவில்லையே

பதில் 5–சுதந்திரமாக முடிவு எடுத்து செயல்படும் சக்தி ஜீவாத்மாவுக்கு இருப்பதால்
அவர் அறிவு யுடையவராய் இருக்கும் தன்மை வீண் ஆகாது –

ஆகவே பகவான் அனைத்தையும் இயக்குகிறார் என்பதற்குப் பொருள்
ஜீவாத்மா ஸ்வ தந்திரமாக முடிவு எடுத்து செயல் படத் தொடங்கும் வரை அவர் உதாஸீனமாக அலட்சியமாக இருந்து
அதற்குப் பின் தான் அனுமந்தாவாக -அனுமதி அளிப்பவராகவே இருக்கிறார் என்பதே —

1-பரமாத்மா அனைத்துக்கும் காரணம் –
2-ஜீவாத்மா முதல் முயற்சி செய்ய ஸ்வாதந்தர்யம்
3-அனுமதிப்பதால் பலன் அவனைத் தீண்டாதே
4-பார பக்ஷம் காடடாதவன்
5-காருண்யம் மிக்கவனே -நிர்தயத்வம் அல்லவே -அனைத்துமே பொருந்துமே

இதற்கு விதி விலக்கும் உண்டு –
ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யம் ஏப்ய-லோகேப்ய உந்நிநீஷதி
ஏஷ ஏவ அசாது கர்ம காரயதி தம் யம் அதோ நிநீஷதி -என்று கூறும்
யாரை மேலே உயர்த்த பகவான் ஆசைப்படுகிறாரோ அவர்களை நல்ல செயல்களை பண்ணும்படி தூண்டுகிறார் –
யாரைத் தாழ்வடைய வைக்க ஆசைப்படுகிறாரோ அவர்களை தீய செயல்களை செய்யும் படி தூண்டுகிறார் –

இங்கு கீழ் போல் அனுமதி மட்டும் அல்ல -தூண்டுதலும் உண்டு
இது ஒரு சிலருக்கே -ஸ்ரீ கீதையில் இத்தை தெளிவாக்க காட்டி அருளுகிறார்
யார் எல்லாம் என்னிடத்தே மிகுந்த பக்தியுடன் என்னை அடைய விரும்புகிறார்களோ அவர்களை நற் செயல்களில் தூண்டுகிறேன்
யார் எல்லாம் என்னை வெறுக்கிறார்களோ அவர்களை வேறே வழி இல்லாமல் தாழ்ந்த பிறவிகளில் தள்ளுகிறேன்
எனவே ப்ரயோஜகத்வம் -மறைமுகமாகத் தூண்டுதல் – என்ற மூன்றாவது நிலையில் பகவான் இருப்பது
பொதுவான நிலை அல்ல -ஒரு சிலருக்குத் தான் –

ததாமி புத்தி யோகம் -என்றும்
ஷிபாமி –ந க்ஷமாமி–ஆஸூர யோனியில் தள்ளுகிறேன் -என்றும் கீதையில் உண்டே
அதிமாத்ர அனுகூலர்களுக்கும் -தேஷாம் சததி யுக்தானாம் -ப்ரீதி உந்த இருப்பர்களுக்கு –
அதிமாத்ர பிரதி கூலர்களுக்கும்

———

பாடம் -26- ஜீவாத்மாவின் வகைப்பாடு –

ஜீவாத்மா -மூன்று வகை -பத்தர்கள் -முக்தர்கள் -நித்யர்கள் –
பத்தர்கள் -பாப புண்ய -கர்மங்களில் கட்டுப்பட்டு -பந்தப்பட்டு -இந்த அண்டத்துக்குள்ளே ஏதோ ஒரு இடத்தில்
இருந்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கும் ஜீவாத்மா
அஜோகி ஏக பிறக்காத நித்தியமான ஆத்மா ப்ரக்ருதி சம்பந்தத்தால் -பந்தம் -கட்டுப்பட்டு -ஆசை உடன் -சேர்ந்து
போகம் அனுபவித்து – -ஜகாதி- வெறுத்து முக்தன் ஆக

இவர்கள் நான்கு வகைப்பட்ட பிறவி கொண்டவர்கள்
தேவர்கள் -மனிதர்கள் -விலங்குகள் -ஸ்தாவரங்கள் –
அசுரர்கள் கிங்கரர்கள் கந்தர்வர்கள் இவர்கள் தேவர்கள் சப்தத்தில் அடங்கும் -33 கோடி -ஒரு வகை பிறவி இது
திதி அதிதி -பிள்ளைகள் -கஸ்யபர்
ராக்ஷசர் மனிதரில் ஒரு வகை போல்
தேவர்களுக்குள்ளும் மனிதர்களுக்கும் யோனிஜர் அயோனிஜர் உண்டே -நான் முகன் அஜன் அயன்
ஸ்வேதர் வியர்வை மூலம் வந்தவர் போல் உண்டு

செடி கொடிகளும் சில செயல்களைச் செய்வதால் அவற்றுக்குள்ளும் ஜீவர்கள் உண்டு –
கண்ணன் திருவடி பெற்ற கதம்ப மரம் புண்ணியம் நமக்கு இல்லையே –
இவற்றுள் விலங்குகளும் ஸ்தாவரங்களும் ஸாஸ்த்ரத்துக்குக் கட்டுப் பட்டவை அல்ல —
அதாவது -அவர்களுக்கு ஸாஸ்த்ரம் எதையும் -விதிக்காது
அவை ஸாஸ்த்ரம் சொல்லியதை செய்யா விட்டாலும் பாபம் இல்லை
தேவர்கள் மனிதர்கள் -ஸாஸ்த்ர வஸ்யர் -அதன் படியே நடக்க வேண்டும் –

இவர்களில் –
புபுஷுக்கள் முமுஷுக்கள் -இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
ஸம்ஸாரத்திலே இருந்து ஸூக துக்கங்களையே அனுபவிக்க ஆசைப்பட்டவர்கள் புபுஷுக்கள்
போகம் ஸூ க துக்க அனுபவம் -இதையே உண்ண ஆசைப்பட்டவர்கள் புபுஷு –
ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட ஆசைப்படுபவர்கள் முமுஷுக்கள் –

புபுஷுக்களை
அர்த்த காம பரர்கள் என்றும்
தர்ம பரர்கள் -என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

அர்த்த காம பரர்கள்
உடலையே ஆத்மா என்று நினைத்தும் வேறே உலகங்கள் இல்லை என்று நினைத்தும்
இவ்வுலக போகங்களையும் செல்வங்களையும் ஆசைப்படுபவர்கள்

தர்ம பரர்கள் –
உடலைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவர் என்று உணர்ந்து ஸாஸ்த்ரம் படி செயலைச் செய்து
புண்யம் சேர்த்து வேறே லோகங்களை அடைந்து ஸூகப்படலாம்
ஐஹிக ஆமுஷ்மிக ஸூகங்கள் -இவ்வுலக இவ்வுலக இன்பங்கள் —
என்று உணர்ந்து யாகம் தானம் தபஸூக்கள் செய்பவர்கள்
இவர்கள் பரமாத்மாவை அறியாமல் நிலையான ஸூகத்தை அடைய மாட்டாதவர்கள் என்று ஸ்ரீ கீதையில் உண்டே –

இந்த தர்ம பரர்களை
தேவதாந்த்ர பரர்கள்
பகவத் பரர்கள் என்றும் இரண்டு வகை பட்டவர்கள் –

தேவதாந்த்ர பரர்கள் –
இதர தேவர்களைக் குறித்து -பரமாத்மா இவர்களுக்கும் ஆத்மா– நியாந்தா என்று அறியாமல்
மேலோட்டமாக கர்மங்களை செய்து பலன்களைப் பெறுவார்கள் –
பூ போல் பேசி -காயோ பழமோ தராது -வேத வாத ரதர்கள் -ஸ்வர்க்க பரர்கள் கிரியா விசேஷ பஹுளாம் —
என்கிறார் கீதாச்சார்யர் –

பகவத் பரர்கள் –
எந்த பலன்களைப் பெற வேண்டிலும் பரமாத்மாவையே பற்றி அடைபவர்கள்
ஆனால் செல்வம் போகங்களையே விரும்பி பெறுவதால் இவர்களும் புபுஷுக்கள் தான் –

அர்த்தார்த்திகள் அபூர்வ ஐஸ்வர்ய காமன்
இழந்த அர்த்தம் பெறவும் –
அண்டக்குலத்துக்கு அதிபதி -பாசுரத்தியல் இருவரையும் குறித்து —
அண்டாதிபதி -ராக்ஷஸர்கள் அசுரர்களை-இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் –
இவர்களையும் உதாரர் என்று கொண்டாடுகிறான் கீதாச்சார்யர் —

முமுஷுக்கள் இரண்டு வகை
கைவல்ய பரர்கள்
பகவத் பிராப்தி பரர்கள்

கைவல்ய பரர்கள் –
சம்சாரத்தில் இருந்து விடுபட்டு -உடல் இல்லாத நிலையில் -ஆனந்தமாக இருக்க –
ஆனந்த வடிவமான ஆத்மாவையே அனுபவித்துக் கொண்டு –
பரமாத்மாவை அடைய ஆசைப்படாமல் இருந்து இழந்து போகிறவர்கள் –

பகவத் பிராப்தி பரர்கள் –
சேஷத்வ ஞானம் அறிந்து பரமாத்மாவையே அடைந்து ப்ரீதி கார்ய கைங்கர்யம்
ஒன்றே உயர்ந்த புருஷார்த்தம் என்று அறிந்து அதற்கு ஆசைப்படுபவர்கள் –
இவர்களை
பக்தர்கள் -உபாசகர்கள்
சரணாகதர்கள் -ப்ரபன்னர்கள் -என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம் –

பக்தர்கள் -மிகுந்த அன்புடன் பகவானை இடைவிடாமல் த்யானம் செய்து அதன் மூலம் முக்தி அடைபவர்கள்
சரணாகதர்கள் -தங்கள் முயற்சி ஒன்றுமே இல்லாமல் -அவன் திருவடிகளையே பற்றி அவரே நம்மை
அவருடன் சேர்த்துக் கொள்வார் என்று மஹா விச்வாஸத்துடன் இருப்பவர்கள் –

இவர்களையும்
ஏகாந்திகள்
பரம ஏகாந்திகள் -என்று இரண்டாக பிரிக்கலாம்
ஏகாந்திகள் -அவனை சரண் அடைந்து அவரை அடைய ஆசைப்படுவதோடு
இவ்வுலக இன்பங்களையும் அவர் இடம் பிரார்த்திப்பவர்கள்
பரம ஏகாந்திகள் -வேறே பயன்களை ஒன்றுமே எதிர்பார்க்காமல் அவனையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தகம் என்று இருப்பவர்கள் –

பரம ஏகாந்திகளும் இரண்டு வகை
ஆர்த்தர்கள்
திருப்தர்கள்
ஆர்த்தர்கள் சம்சாரத்தில் வெறுப்பால் இனி இங்கே சிறுது நேரமும் இருக்க முடியாமல்
உடனே அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய பார்க்கும் ஆழ்வார்கள் போல்வார்

திருப்தர்கள் -சரணாகதி செய்த பிறவி எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது இனி மறு
பிறவி எடுக்காமல் அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய ஆசைப்படும் நம் போல்வார் –

——–

பாடம் -27-
சம்சாரத்தின் காரணம்
ப்ரம்மா தொடங்கி பீபிலி வரை அனைத்தும் கர்மம் அடியாகவே சம்சாரத்தில் கட்டுப்பட்டு உள்ளன
ஆத்மா இயற்கையிலே ஞானமே வடிவானவர் -ஆனந்தமே வடிவானவர் -குற்றங்கள் அற்றவர் –
பிரகிருதி இயற்கையிலே துக்கமாயும் குற்றம் உடையதாகவும் ஞானத்துக்கு எதிராகவும் உள்ளது
அதில் கட்டுப்பட்டு ஆத்மாவும் செயற் கையாக அஞ்ஞானம் குற்றங்கள் துக்கங்கள் அனுபவிக்கிறது –
என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது –
ஆகவே சம்சாரத்துக்கு மூலம் கர்மம் -கர்மம் என்றால் நாம் செய்த செயல்களால் ஏற்படும் பாப புண்யங்கள் –
பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ளோம் இப்போதும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்
அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பதால் மேலும் பல பிறவிகளை எடுக்கிறோம் –
பாபங்கள் தீய பிறவிகளில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்பட வைக்கின்றன
புண்யங்கள் நல்ல பிறவியில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்படுத்துகின்றன –

கர்மத்தின் காரணம்
நாம் பாப புண்யங்களை சேர்ப்பதற்கு காரணம் அவித்யை தான் -அவித்யை என்றால் அறிவின்மை -தவறான அறிவு
அதன் வடிவத்தை ஸ்ரீ பராசர முனிவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் கூறுகிறார்
வேதார்த்த ஸங்க்ரஹம் -பவ பயம் -கோரம் ஸம்ஸாரம் -அநாதி அவித்யா சஞ்சிதா –
அநாத்மனி ஆத்ம புத்தியே அஹங்காரம்
நான் என்பது ஆத்மாவையே குறிக்கும்-உடலில் நின்றும் வேறு பட்டவர் – -இத்தை அறியாமல் உடலே நான் என்று நினைத்து
ஆத்மாவைக் காட்டிலும் வேறே ஒரு பொருளை ஆத்மா என்று நினைக்கிறோம் –
இதுவே தேக ஆத்ம ப்ரமம் -என்றும் அஹங்காரம் என்றும் பெயர்
இது அவித்யையின் ஒரு வடிவம்
இவ்வுலகம் அனைத்தும் பகவானால் படைக்கப்பட்டு ரக்ஷிக்கப்பட்டு -அவரது சொத்தாகவே உள்ளது
நான் தவறாக சில பொருள்களை நம்மது என்று நினைத்தால் அதற்கு மமகாரம் என்று பெயர்
இது அவித்யையின் இன்னொரு வடிவம்
ஆத்மா ஸ்வதந்த்ரன் என்ற நினைவும் அவித்யையின் ஒரு வடிவமே –
இவ்வாறு பிறவி எடுத்த ஒருவர் அஹங்கார மமகார -இரண்டு வித அவித்யைகளால் -மயங்கி செயல்களை செய்து –
அதன் பலனாக பாப புண்யங்களை அடைகிறார்
அவற்றைக் கழிப்பதற்கு மறுபடியும் பிறவி எடுக்கிறார் —

ஸம்ஸார சக்கரம்
இப்படி ஒரு சமயத்தில் அவித்யை இருந்து கர்மங்களை சேர்த்து இப்போது பிறவி எடுக்கிறோம் என்பதோடு நிற்க வில்லை
அப்படி எடுக்கும் பிறவிகளில் மறுபடியும் கர்மங்களை சேர்க்கிறோம் -அதனால் மறுபடியும் பிறவி எடுக்கிறோம்
எனவே சம்சாரம் என்பது அவித்யையும் கர்மமும் மாறி மாறி வரும் சக்கரம் ஆகும்
கர்மம் அடியாக எடுத்த பிறவியில் மீண்டும் எதனால் கர்மங்கள் சேர்க்கிறோம் என்றால் அதுக்கு அடி வாசனைகளும் ருசிகளும் –
நான் செய்யும் செயல்களால் பாப புண்யங்கள் ஏற்படுவது போலவே வாசனையும் ருசியும் ஏற்படுகின்றன –
வாசனை என்றால்
முன் செய்த செயல்களால் நம்மிடம் உண்டான பதிவுகள்
நான் எந்தச் செயலை அடிக்கடி செய்கிறோமோ அவற்றைப் பற்றிய பதிவுகள் நம்மிடம் அடிக்கடி ஏற்படும் –
எனவே மறுபடியும் அந்தச் செயலை செய்வது எளியதாக இருக்கும் –
அதே போல் பிறவியை எடுத்த பின்பு உலகப் பொருள்களை அனுபவிப்பதே நமக்குத் பழக்கப் பட்டது என்பதால்
மறுபடியும் மனஸூ அதிலேயே செல்லும் –
பரமாத்மாவை பற்றிய சிந்தனையில் ஈடுபடாது -அதனால் மறுபடியும் அவித்யையே ஏற்படுகிறது
ருசி என்றால்
முன் ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களால் இயற்கையாக ஏற்படும் விருப்பு வெறுப்புகள்
அவற்றின் அடிப்படையில் தான் இப்பிறவியில் நமக்கு இயற்கையாக எது பிடித்து இருக்கும் என்பது முடிவாகிறது
அதனால் உலகப் பொருள்களின் மேல் ஈடுபாடு இயற்கையாகவே ஏற்படும் -பரமாத்மா இடம் அல்ல –
இதனாலும் மேலும் அவித்யையே ஏற்படுகிறது –

ப்ரவாஹ அநாதித்வம் -பீஜாங்குர நியாயம் –

பிறவியின் ஏற்றத் தாழ்வுகள்
நாம் எடுக்கும் பிறவிகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன
அவனே ஸ்ருஷ்டிக்கிறார் -கர்மம் அடியாகப் பிறக்கிறோம்
ஏற்றத்தாழ்வுகளை இவர்களில் யார் காரணம்
ஸ்ரீ விஷ்ணு பூரணம்சொல்லும் -அவன் நிமித்த மாத்ரமாகவே உள்ளான் -பொதுவான காரணம் ஆகிறார்
பிறவிகளுக்கு விசேஷ முக்ய காரணம் அந்த அந்த ஜீவனின் பாபமும் புண்ணியமும் தான்
ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
வைஷம்ய நைர் க்ருண்யே ந சாபேஷாத் வாத் –2-1-34-
அவனுக்கு பாகுபாடு பார்ப்பது என்னும் குற்றமோ கருணை இன்மை என்னும் குற்றமோ வாராது –
அவன் ஸ்ருஷ்டிக்கும் பொழுது அந்த அந்த ஜீவனின் கர்மத்தை எதிர்பார்த்து அதன் அடிப்படையிலே
ஸ்ருஷ்டிப்பதால் -என்கிறார் வேத வியாசர் இதில் –

முக்தர்களும் நித்ய ஸூரிகளும்
முக்தர்கள் -ஜீவாத்மாகில் இரண்டாவது வகை –
பல நாள்கள் சம்சாரத்திலே கட்டுப்பட்டு இருந்து –
பகவானின் அருளால் -பக்தி சரணாகதி -முதலான உபாயங்களில் ஒன்றை அனுஷ்ட்டித்து –
அதன் மூலம் கர்மங்களைத் தொலைத்து
சம்சாரத்தை நீத்து
தங்கள் இயற்கையான தன்மைகளை விளங்கப் பெற்று
பகவானை அடைந்து -அனுபவித்து -அதனால் ஏற்படும் மகிழ்ச்சி உந்த கைங்கர்யம் செய்பவர்கள்

நித்யர்கள்
என்றுமே பாப புண்யங்களின் தொடர்பே இல்லாமல்
அதனால் சம்சாரத்தில் என்றுமே கர்மம் அடியாகப் பிறக்காமல்
பரமபதத்தில் அவனுடன் எப்போதும் சேர்ந்தே இருந்து
என்றுமே அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்டு -அதற்கு ஏற்ப தொண்டு செய்து கொண்டு இருக்கும்
ஆதி சேஷன் கருடன் விஷ்வக்ஸேனர் போல்வார் –

———

ப்ரக்ருதி நித்ய விபூதி காலம் ஜீவாத்மா
பரமாத்மா தர்ம பூத ஞானம் மேலே பார்த்து த்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம்
மேலே அத்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம் –

பாடம் -28- தர்ம பூத ஞானம்

இவர் குணசாலி -குணம் இவர் இடம் உள்ளது -அறிவாளி -அறிவு என்பதே தர்ம பூத ஞானம் –

ஐந்தாவது த்ரவ்யம்
இதன் லக்ஷணம்
ஸ்வயம் ப்ரகாஸமாகவும் –அசேதனமாகவும் –விஷயம் உடையதாகவும் -இருக்கும் த்ரவ்யம்
ஸ்வயம் பிரகாசம் -என்பதால் ப்ரக்ருதி -காலம் -இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப் பட்டது
அசேதனம் என்பதால் ஜீவாத்மா பரமாத்மா இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப்பட்டது –
விஷயம் உடையது என்பதால் நித்ய விபூதியில் இருந்து வேறுபாடு ஸித்தம்
மற்ற ஒரு லக்ஷணம்
அர்த்த ப்ரகாஸத்வம்
அதாவது பொருள்களை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுத்தல் –
ஆத்மா வேறு –அவர் இடம் உள்ள அறிவு வேறு –
ஆத்மா அணுவாக தனக்குத் தான் தோற்றம் அளிப்பவராக -தன்னை மட்டுமே விஷயமாகக் கொண்டு உருவம் மாறாமல் இருக்கும்
தர்ம பூத ஞானம் விபுவாக தனக்குத் தானே தோற்றம் அளிக்காமல் -ஆத்மாவுக்கே தோற்றம் அளிப்பதாய் –
உலகப் பொருள்களையும் விஷயமாகக் கொண்டு தன் உருவம் மாறாக் கூடியதாகவும் இருக்கும்
நான் அறிகிறேன் என்று உலகில் அனைவரும் உணருவதாலும்
வேதங்களிலும் ஆத்மாவை விஞ்ஞாதா -சேதனன் -என்று எல்லாம் சொல்லுகிறபடியாலும்
விஞ்ஞாதா -அறிவாளி -அறிவு உடையவன் –
ஆத்மாவைத் தவிர அவருடைய அறிவு என்று வேறு ஓன்று என்று தனியாக இருப்பது தெரிகிறது –

தர்மம் பொது சொல்- குணம் நிறம் செயல் த்ரவ்யம் இவற்றைச் சொல்லும் -இவை -தர்மியை அண்டி இருக்கும் –
தர்மி ஞானம் தர்ம ஞானம் -இரண்டும் அறிவு -இது ஆத்மாவை அண்டி இருக்கும்-
தர்மி ஞானம் -ஆத்மாவைச் -சேதனனைச் சொல்லி– தர்ம பூத ஞானம் சேதனன் இடம் உள்ள சைதன்யத்தைச் சொல்லும் –

தர்ம பூத ஞானத்தின் செயல்பாடு
ப்ரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -முதலான பல இடங்களில் சாஸ்திரங்களில் சொல்லப்படுகிற படியால்
ஆத்மாவின் தர்ம பூத ஞானம் பரவத் தொடங்கும்
ப்ரஸ்ருதா-ஓடுகிறது -ப்ரவாஹம் போல் ஞானம் ஓடும்-
ஒரு இந்திரியம் ஓடினால் -அதன் மூலம் அறிவு வெளியே ஓடும் -அனைத்தையும் கட்டுப்படுத்து -கீதாச்சார்யர்
கண் முதலான இந்திரியங்கள் மூலம் உடலில் இருந்து வெளியே சென்று வெளியில் உள்ள பொருள்களை அடைந்து
அவற்றை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுக்கிறது –
ஒரு ஜீவாத்மா விழித்து இருக்கும் பொழுது அதன் ஞானம் புறப்பட்டு வெளியே சென்று பொருள்களைக் காட்டும்
ஜீவாத்மா தூங்கும் பொழுது இந்திரியங்கள் இயங்காத படியாலும்
தமோ குணம் அதிகமான படியாலும் தர்ம பூத ஞானம் வெளியே செல்ல இயலாது –

அதனால் நாம் பொருள்களை அறிவது இல்லை –
இந்திரியம் மட்டும் செல்வது இல்லை -அறிவும் செல்கிறது —
இதனால் தான் தூக்கம் ஸ்வப்னம் அவஸ்தைகள் -மனஸ் மட்டும் வேலை -ஆழ்ந்த உறக்கம் மனசும் வேலை செய்யாமல் –
சங்கோசம் விகாசம் அறிவுக்கு -உண்டே
இப்படிக் கட்டுப்படுத்துவதே தமோ குணம் -ஞானம் இயற்கையாகவே பரவக்கூடியது –

இப்படி விரிதல் சுருங்குதல் முதலான நிலைகளையும் -வெளியே செல்லுதல் முதலான செயல்களையும் கொண்டபடியால்
தர்மபூத ஞானம் ஒரு த்ரவ்யமாகவே கொள்ளப் படுகிறது –
நியாய சாஸ்திரத்தில் ஞானம் -புத்தி -என்பது ஆத்மாவின் ஒரு குணம் மட்டுமே -த்ரவ்யம் அல்ல என்று சொல்லுகிறார்கள்
நம் விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தில் ஞானம் ஒரு த்ரவ்யம் ஆகும்
ஒரு பொருள் எப்பொழுதும் மற்ற ஒரு பொருளையே அண்டி இருந்தால் அது அதற்கு குணம் என்று சொல்லப்படுகிறது –
எனவே ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் அத்தை ஆத்மாவின் குணம் என்று சொல்வதிலும் ஒரு தவறும் இல்லை
தீபம் என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யத்தை பிரபை என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யம் அண்டி இருப்பது போல்
ஜீவாத்மா என்ற ஞான த்ரவ்யத்தை தர்ம பூத ஞானம் என்னும் ஞான த்ரவ்யம் அண்டி உள்ளது –

நான் உயரமாக இருக்கிறேன் மோதிரம் அணிந்து இருக்கிறேன்
அண்டியே இருப்பதே குணம் -த்ரவ்யமாகவும் இருக்கலாம்
நடத்தல் செயல் நடப்பவனை அண்டியே இருக்கும் -செயல் குணம்
வெண்மை நிறம் வேஷ்ட்டிக்கு குணம்
மோதிரம் கழற்றி விடலாம்
ஆத்மாவுக்கும் தர்ம பூத ஞானத்துக்கும் விட்டுப் பிரியாத -அப்ருதக் ஸித்த விசேஷணம் –
எனவே குணம் என்றும் த்ரவ்யம் என்றும் சொல்லலாமே
ஆத்மாவை -ஆஸ்ரயம் -விட்டு பிரியாமல் -வெளியில் போயும் இருக்கும் தர்ம பூத ஞானம் –
இதனால் குண பூத ஞானம் என்று சொல்லாமல் -தர்ம பூத ஞானம் – என்கிறோம் –

தர்ம பூத ஞானத்தின் தன்மைகள்
ஆத்மா எப்படி நித்யமானவரோ அதே போலே ஆத்மாவின் தன்மையான தர்ம பூத ஞானமும் நித்யம் என்று வேதம்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
ததா ஹேய குண த்வம்சாத் அவ போதய குண ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே -என்ற இடத்திலும்
(ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே-விளங்குகின்றன ஒழிய பிறப்பது இல்லை-நித்யா ஏவ-நித்யமாகவே இருக்கும் )
ஒரு ஜீவாத்மா முக்தி அடையும் பொழுது அவருக்கு புதிதாக அறிவு உண்டாவது இல்லை –
இயற்கையாக அவரிடம் உள்ள அறிவு முழுவதுமாக வெளிப்படுகிறது அவ்வளவே என்று சொல்லப் படுகிறது –
எனக்கு அறிவு உண்டானது -அறிவு நஷ்டமானது என்று உலகில் நாம் சொல்வது எல்லாம் உண்மையில்
தர்ம பூத ஞானத்தின் உத்பத்தியையோ அழிவையோ குறிக்கவில்லை
தர்மபூத ஞானம் உடலில் இருந்து பரவி வெளியே வந்து ஒவ்வொரு பொருளின் தொடர்பை அடைந்து
அதைக் காட்டிக் கொடுக்கும் பொழுது அந்தப் பொருளைப் பற்றின ஞானம் உண்டானது என்று சொல்கிறோம் –
உண்மையில் தொடர்பு மட்டுமே புதிதாக உண்டாகியது
இந்த ஞானம் இயற்கையாக விபுவாக -உலகு எங்கும் பரவியதாக -இருக்க வேண்டும்
நித்ய ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் அப்படித்தான் இருக்கும் –
பத்தர்களான சம்சாரிகளுக்கு மட்டும் அவர்கள் செய்த பாப புண்யங்களைப் பொருத்து அதனுடைய பரவும் தன்மை தடுக்கப்படும்
கல்லுக்குள் உள்ள தர்ம பூத ஞானம் வெளியே வர முடியாது –செடி கொடிகளில் சிறிது வரலாம் –
மனிதனாக இருந்தால் அதிகமாக வரலாம் -தேவர்களுக்கு இன்னும் அதிகம் –

தர்ம பூத ஞானத்தின் நிலைகள்
தர்ம பூத ஞானம் தான் -ஞானம் -சைதன்யம் -மதி -ப்ரஞ்ஞா- ஸம்வித் -திஷணா -தீ -மநீஷா –சேமுஷீ –மேதா –புத்தி –
முதலான சொற்களால் வழங்கப்படுகிறது
நியாய சாஸ்திரத்தின் படி நமக்குத் பிடித்த பொருளைப் பற்றின அனுபவம் ஏற்பட்டால் அதனால்
ஸூகம் என்ற தனி குணம் ஆத்மாவுக்கு உண்டாகும் -அது அனுபவிக்கப்படும் –
ஆனால் இப்படி தனியாக ஒரு குணத்தை நம் ஸித்தாந்தத்தில் ஏற்க வில்லை
ஸூகம் என்பது ஞானத்தைக் காட்டிலும் வேறான பொருள் இல்லை –
இஷ்டமான விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் ஸூகம் ஆகும் –
பிடிக்காத விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் துக்கம் ஆகும்
காமம் ஆசை -சங்கல்பம் முடிவு -விசிகித்சா சந்தேகம் -ஸ்ரத்தை -அஸ்ரத்தை -உறுதி உறுதியின்மை -வெட்கம் -அறிவு -பயம்
முதலான அனைத்துமே மனத்தின் மாறுபாடுகளே என்று ஸாஸ்த்ரம் சொல்லும்
அதன் பொருள் யாது என்னில் இவை எல்லாம் மனத்தின் தாக்கத்தால் தர்ம பூத ஞானத்தின் மாறுபாடுகள் என்பதே –
ஞானத்தின் வேறுபாடுகள் தான் -மனசின் துணையால் தர்ம பூத ஞானம் இத்தனை மாற்றங்கள் என்றபடி –

தர்ம பூத ஞானம் பற்றி பல மதஸ்தர்கள் உடைய க்யாதி வாதம் மேலே பார்ப்போம்

———

பாடம் –29-க்யாதி வாதம்

எந்த தரிசனமாக இருந்தாலும் உலகத்தின் உண்டாக்கும் அழிவு பிராணிகளின் பிறப்பு இறப்பு
முதலானவை எப்படி நடக்கின்றன என்பதை ஆராய்வது போல்
அறிவு என்றால் என்ன
நாம் அறிவு பெறுவது எப்படி
ஒரு அறிவு சரியாதனதா தவறானதா என்று எப்படி அறியலாம்
முதலான கேள்விகளுக்கும் பதில் உரைக்க வேண்டும் –
இதற்குத் தான் க்யாதி வாதம் என்று பெயர்

கியாதி என்றால் அறிவு
வாதம் -ஆராய்ச்சி

தன்மைகளையும் சேர்த்தே அறிகிறோம் -வெண்மை அளவு சுவை செயல் இவற்றைச் சேர்த்தே பொருளை –
ச விசேஷ -இது என்றாலே அருகில் -அது -உது-போல் – அறிகிறோம் –
பொருள் பதார்த்தம் -என்றே அறிகிறோம் -ஒரு ஏகத்துவம் அறிகிறோம் —
இங்கு ஒரு பொருள் உள்ளது -சத்தை உடன் இருப்பதையே சுருக்கமாக இது ஒரு பொருள் என்கிறோம் –
இது பொருள் தன்மை -விசேஷணங்கள் -இரண்டையும் அறிந்து வேறே ஒன்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்
விசேஷ்யம்–பிரகாரம் விசேஷணம் இவற்றை அறிகிறோம் –

அதில் முக்கியமாக பிரமம் -தவறான அறிவு ஏற்ப்படி ஏற்படுகிறது என்பதே முக்யமாகப் பேசப்படுகிறது –
அந்த முறையில் நம் விசிஷ்டாந்த சித்தாந்தத்தில் ஏற்ப்படி என்று பார்ப்போம்

அதற்கு முன்பு மற்ற தரிசனத்தில் எப்படி என்பதை முதலில் பார்ப்போம் –
ஸ்லோகம் ஐந்து கியாதி வாதங்களை சொல்லும்
1- ஆத்ம க்யாதி -புத்தர்களால் முன் வைக்கப்படுகிறது
2-அஸத் க்யாதி -சாருவாகர்களால் தழுவப்பட்டது
3-அக்யாதி -மீமாம்ஸகர்களில் ஒரு பிரிவினரான ப்ரபாகரர்களால் சொல்லப்படுகிறது
4-அந்யதா க்யாதி -நியாய மாதத்தில் ஒப்புக் கொள்ளப்படுகிறது
5-அநர்வசநீய க்யாதி -அத்வைத மதத்தால் ஏற்கப் படுகிறது
6-யதார்த்த கியாதி -விசிஷ்டாத்வ மதத்தில் ஏற்கப் படுகிறது –

ஆத்ம க்யாதி
புத்தர்கள் -யோகாச்சார்கள் -ஞானமே வடிவான ஆத்மாவைத் தவிர உலகில் எதுவுமே உண்மை அல்ல என்பர் –
குடம் சுவர் கயிறு போன்ற பொருள்கள் உலகில் இல்லை -எல்லாம் அறிவின் வெவ்வேறு வடிவங்களே
அந்த அறிவே தான் ஆத்மா
எனவே ஞான வடிவமான ஆத்மாவே கூடமாகவும் சுவராகவும் துணி யாகவும் அறியப்படுகிறார் –
இதுவே ஆத்ம க்யாதி
அவிபாகோபி புத்தயாத்மா விபர்யாசித தர்வநை
க்ராஹ்ய க்ராஹக ஸம் வித்தி பேதவாந் இவ லஷ்யதே –என்பதே அவர்கள் கூற்று –
கிரஹணம் க்ரஹீதா க்ராஹ்யம் -மூன்றும் -அறிவும் அறிவாளியும் அறியும் பொருளும் ஒன்றே –
ஞானத்தொடர் ஆத்மா க்ஷணிகம் அனைத்தும் -வேறு பாடு இருப்பது போல் தோற்றும் என்பர் –
சேர்ந்தே தோற்றம் அளிக்கிறது -அறிவு தான் பொருள் -ஸஹ ஆலம்பநம் –
உண்மையில் ஞானம் மட்டுமே உள்ளது –
அதுவே தான் நம் தோஷங்களின் காரணமாக
அறியப்படும் பொருள் என்றும் —
அறிவு என்றும் –
அறிபவன் என்றும் மூன்றாகத் தோற்றுகிறது என்பதே அவர்கள் மதம் –

அஸத் க்யாதி
இது சாருவாகர்கள் சொல்வது
இவர்கள் ப்ரத்யக்ஷம் என்கிற ஒரே பிரமாணத்தை ஏற்கிறார்கள் –
புலன்களால் அறியப்படுவது மட்டும் உண்மை என்பர்
கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பிரமிக்கும் பொழுது இல்லாத பாம்பு தான் தோற்றம் அளிக்கிறது
எனவே பிரமம் ஏற்படும் இடங்களில் -அஸத் -இல்லாத பொருள் தான் தோற்றம் அளிக்கிறது என்பது அவர்கள் மதம் –

அந்யதா க்யாதி -இது நியாய மாதத்தில் சொல்லப்படுவது -மீமாம்சை -பாட்ட மதம் -இதே போல்–
சில சந்தர்ப்பங்களில் கண் முன்னாள் இருக்கும் கிளிஞ்சல் நமக்கு வெள்ளியாகத் தோற்றும்
அங்கு கண்ணுக்கும் கிளிஞ்சலுக்கும் தொடர்பு ஏற்படுகிறது –
ஆனால் கண்ணில் இருக்கும் தோஷத்தால் அது கிளிஞ்சல் என்று அறியவில்லை
பளபளப்பான ஏதோ ஒரு பொருள் உள்ளது என்று மட்டும் அறிகிறேன் –
உடனே கடையில் என்றோ பார்த்த வெள்ளியின் நினைவு ஏற்பட்டு அதே போன்ற வெள்ளி தான்
நம் கண் முன் இருக்கிறது என்று நினைக்கிறேன்
அதனால் ஒரு பொருள் மற்ற ஒரு பொருளாக அறியப்படுகிறது –
இதுவே அந்யதா -வேறு மாதிரியான க்யாதி அறிவு எனப்படுகிறது –

அக்யாதி -இது மீமாம்சை ப்ரபாகர மதத்தில் சொல்லப்படுகிறது –
இவர்களும் கண் கிளிஞ்சலைப் என்றும் -அது கிளிஞ்சல் என்று தெரியவில்லை என்றும்
பளபளப்பாக இருப்பதைக் கண்டு வெள்ளியின் நினைவு ஏற்படுகிறது என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்
ஆனால் அதற்குப் பிறகு கிளிஞ்சலை வெள்ளி என்று கிரஹிக்கும் ஓர் அறிவு ஏற்படுகிறது என்று அவர்கள் ஏற்க வில்லை
கண் முன் இருக்கும் பொருளுக்கும் நினைவுக்கு வந்த வெள்ளிக்கும் உள்ள வேறுபாட்டை அறியாத படியால் தான் பிரமம் ஏற்படுகிறது
இரண்டும் ஓன்று என்று அறியத் தேவையில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்
ஆகவே இரண்டும் ஒன்றே என்ற அறிவு தோன்றுவதாகக் கொண்டால் அது அந்யதா க்யாதி
அவை வேறு என்ற அறியாமை மட்டுமே போதுமானது என்று சொன்னால் அக்யாதி –
அசம்சர்க்க அக்ரஹா தொடர்பு இல்லாமை அறியாமை இது –
ஞானம் உண்மையாகவே இருக்கும் -தவறாகவே இருக்காது என்பர் –
வெள்ளியும் கிளிஞ்சாலும் வேறே வேறே என்று அறியாமல் போனேன் என்பர் –

அநிர்வசநீய க்யாதி -இது அத்வைதிகளால் சொல்லப்படுவது -உலகமே பொய்யானது என்பர் –
பரமாத்மாவையே அவித்யை மூடிக் கொண்டு இருப்பதால் உலகம் தோற்றுகிறது
நாம் ஒரு கிளிஞ்சலை வெள்ளி என்று நினைக்கும் இடத்தில் அங்கு இருக்கும் அவித்யை என்ற பொருள்
உருமாறி வெள்ளியின் வடிவத்தை அடைகிறது –
அந்த வெள்ளிக்கு அநிர்வசநீயமான வெள்ளி என்று பெயர் -ஏன் என்றால் அது இருக்கும் பொருள் என்று சொல்ல முடியாது –
பின் ஒரு காலத்தில் பொய் என்று அறியப்படுகிற படியால் இல்லாத பொருள் என்றும் சொல்லப்பட முடியாது
தோற்றம் அளிக்கிற படியால் -அநிர்வசநீயம் -சொல்லப்பட முடியாதது என்றே அது சொல்லப்படுகிறது –

வேதாந்த பரிபாஷை -கிளிஞ்சல் வடிவில் அவித்யை
பளபளப்பை கண்டு -வெள்ளி நினைவு -பதிவு ஆத்மா இடம் உள்ளது
ஸாதர்சம் -தூண்டப்பட்டு -கண்ணில் காமாலை தோஷம் -அறியாமல் -அவித்யையே வெள்ளியாக உருவம் –
பார்க்கும் பொழுது தான் இது தோன்றும் -இந்தவித வெள்ளி உண்டாகிறது –
அவித்யையே வெள்ளியாக -ஸத் என்றும் அஸத் என்றும் சொல்ல முடியாதே இதை –

யதார்த்த க்யாதி –இது நமது விசிஷ்டாத்வைத சித்தாந்தம் -இதன் படி அனைத்து பரிவும் சரியானது தான்
தவறான அறிவு என்று ஒன்றே கிடையாது
கிளிஞ்சலை வெள்ளி என்று காட்டும் அறிவும் கூட இல்லாத பொருள் எதையும் காட்டவில்லை –
ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் பகவான் பஞ்சீ கரணம் செய்து பஞ்ச பூதங்களையும் கலந்த படியால்
ப்ருத்வியாலான கிளிஞ்சலிலும் வெள்ளியை உருவாக்கும் தேஜஸ்ஸின் சிறு அவயவங்கள் உள்ளன
எனவே நாம் அந்த வெள்ளியின் அவயவங்களை அதிகமாகவும் கிளிஞ்சலின் அவயவங்களை குறைவாகவும் அறிந்தால்
அது வெள்ளி என்று சொல்லி விடுகிறோம் –
அந்த அறிவு தவறானது அல்ல -இல்லாத எந்தப் பொருளையும் க்ரஹிக்க வில்லை -யதார்த்தம் சர்வஞ்ஞாம் –
உண்மையை முழுமையாகக் கிரஹிக்க வில்லை என்பது மட்டுமே –
அது அறிவின் தோஷம் ஆகாது -இப்படி ஒரு அறிவு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் செயல் வீணாகப் போகும் –
முழுமையான உண்மையை அறிந்தால் அதனால் ஏற்படும் செயல் பயன் உள்ளதாகும் என்பதே வேறுபாடு –

பிரதி நியதி நியாயம்
நெல் இல்லா விட்டால் சத்ருசமாக வ்ருஹீ கொள்ளலாம் -நீவாரங்கள் கொண்டு யாகம் செய்யலாம் –
ததேவ சத்ருசம் தஸ்ய -த்ரவ்ய -ஏக தேச பாவாத் -சில அவயவங்கள் அதிலும் இருக்குமே –
கானல் நீர் மணலிலும் நீரின் அவயவங்கள் உண்டே -பஞ்சீ கரணத்தால் –
கயிறு பாம்பு -இங்கு இரண்டுமே பிருத்வியாலே ஆனவையே -இங்கு பிரதி நியாயம் -உண்டே
சர்வம் ஞானம் யதார்த்தம் இதனாலே -செயல் வீணாக போனால் தானே பிரமம் ஆகும் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் /ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி- –2-10–கிளர் ஒளி இளமை–சாரங்கள் —

May 21, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஏதந் நிஜ அர்த்தி தம் இஹைவ ஹரி பிரதாதும்
ஆ ஸேதிவாந் வந மஹீத ரமித்யவேஷ்ய
பிராப்யம் தமேவ ச தத் அன்வயி நஞ்ச சர்வம்
ப்ரா சீகஸத் ஸ தசமே தசகே முநீந்த்ரர்–20-

————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் முகரித ஜலஜம் வர்ஷு காம்போத வர்ணம்
சைலஸ் சத்ராபி குப்தா ஸ்ரீ த மதி விலசத்தே திமாபீத கவ்யம்
சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம் பிரணத மத் அனுகுணம் பூதனா சேதனாந்தம்
பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –2-10-

1-தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் –வளர் ஒளி மாயோன்- -நிரவதிக தேஜஸ்ஸை யுடையவனுமாய் -ஆச்சார்ய சக்தி யுக்தனுமாய் –

2-முகரித ஜலஜம் —அதிர்குரல் சங்கத்து அழகர்–முழங்கா நிற்கிற திருச்சங்கை யுடையனுமாய் –

3-வர்ஷு காம்போத வர்ணம் -புயல் மழை வண்ணர்–நீல மேக ஸ்யாமளனுமாய் –

4-சைலஸ் சத்ராபி குப்த ஆஸ்ரிதம் –பெருமலை எடுத்தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையாலே கோ கோப ஜாதிகளை ரஷித்தவனுமாய் –

5-அதி விலசத்தே திம் —-அற முயலாழிப் படையவன்–ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் அத்யந்தம் முயலா நிற்கிற திரு ஆழியை யுடையனுமாய் –

6–ஆபீத கவ்யம்—-உறியமர் வெண்ணெய் யுண்டவன்–உறியில் அமைந்து இருக்கிற வெண்ணெயை யுண்டவனுமாய் –

7-சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம்–நிலமுன மிடந்தான்– -பூமியை உத்தரித்தவனுமாய்

8-பிரணத மத் அனுகுணம் –வலம் செய்யும் ஆய மாயவன்–ஆஸ்ரிதற்கு ப்ரதக்ஷிண பிரணாமாதிகளாலே சக்தியைக் கொடுத்து
அவர்களுக்கு அனுரூபனுமாய் –தன்னையும் சக்தியையும் கொடுப்பவனுமாய் –

9-பூதனா சேதனாந்தம்—-அழக்கொடி யட்டான் –பூதனையை முடித்தவனுமாய்

10-பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் –வேத முன் விரித்தான்– வேதங்களுக்கு எல்லாம் முந்தின ப்ரவர்தகனுமாய் இருக்கிற எம்பெருமானை

ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –கிளர் ஒளி இளமை என்னும் தசகத்திலே அதி ஸமீப வர்த்தியாய்
அதி மநோ ஹரமான திருமாலிருஞ்சோலையிலே கண்டு ஆழ்வார் அனுபவித்து அருளினார் -என்கிறார் –

———

இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா மானுஷத்வே பரத்வாத்
சர்வாத் ஆஸ்வாதத்வ பூம்நா வியசன ஹர தயா ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்
வைமுக்ய த்ராஸ யோகாத் நிஜ ஸூஹ்ருத வ நாத் முக்தி சாரஸ்ய தாநாத்
கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–2-11-

த்வதீய சதகத்தில்
பத்து தசகங்களாலும் ப்ரதிபாதிதங்களான அர்த்தங்களை ஸங்க்ரஹித்துக் காட்டி அருளுகிறார் –

1-இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா –க்ஷண மாத்ரமும் துஸ் ஸஹமாம்படியான தன் விரஹத்தை யுடைத்தாகையாலும்

2-மானுஷத்வே பரத்வாத் –மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தே பரனாய் இருகையாலும்

3-சர்வாஸ் வாதத்வ பூம்நா -ஸமஸ்த மதுர பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையனாகையாலும்

4-வியசன ஹர தயா –ஆஸ்ரிதருடைய வியசனத்தை ஹரிக்குமவன் ஆகையால்

5-ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்–ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷித்து அத்தாலே அத்யந்த ப்ரீதன் ஆகையாலும்

6-வைமுக்ய த்ராஸ யோகாத் -ஆஸ்ரிதர் தன்னை விடில் செய்வது என் என்று மிகவும் பீதன் ஆகையாலும்

7-நிஜ ஸூஹ்ருதவநாத் -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளையும் ரக்ஷிக்குமவன் ஆகையாலும்

8-முக்தி சாரஸ்ய தாநாத்-மோக்ஷ பிரதனாகையாலும்

9-கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் -கைங்கர்ய உத்தேச்யன் ஆகையாலும் –

10-ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–தர்ச நீயமான தெற்குத் திருமலையிலே நின்று அருளுகையாலும்

எம்பெருமான் அத்யந்த போக்யன் என்று த்விதீய சதகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
அநிதர சாதாரணம்– திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளவனுக்கே மூன்றாம் பத்தில்-ஸூப ரூபம் ஸூபாஸ்ரயம் –

————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

இதில் போக்யத்வ ஸ்தாபகங்களாக -இரண்டாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும்
ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

த்வதீயே அதி கிலேச க்ஷண விரஹ முத்துங்க லலிதம்
மில்லத் சர்வஸ் வாதம் வியஸன சமனம் ஸ்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்யத் ரஸ்தம் ஸ்வ ஜன ஸூஹ்ருதம் முக்தி ரசதம்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம் சுபகச விதஸ்தம் நிரவிசத் –6-

முதல் பத்தால் ஆஸ்ரயணீயன்-மோக்ஷ உபாயம் அவனே /
இரண்டாம் பத்தால் -இவன் அனுபவ போக்யன் –பரம புருஷார்த்தம் அவனே

அதி கிலேச க்ஷண விரஹ –வாயும் திரை –
ஸர்வஸ் ஸ்மாத் பரன்-உத்துங்க லலிதம் -திண்ணன் வீடு –
சர்வ மதுர ரஸ ஊனில் வாழ்
ஆஸ்ரித வியஸன சமன ஸ்வபாவம் -ஆடி யாடி
ஸ்வ ஆஸ்ரித பிராப்தி ஸந்துஷ்டன் -ஆஸ்ரித சம்ச்லேஷ பிரியன் -அந்தாமத்து அன்பு
ஆஸ்ரித விரகம் அஸஹத்வம் -வைகுந்த
சம்பந்த சம்பந்திகளுக்கும் ஸூஹ்ருத் -கேசவன் தமர்
முக்த சாரஸ்யம் ததா –அணைவது அரவணை மேல்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம்-எம்மா வீடு
சுப நிலையன்-அதி போக்யன் -கிளர் ஒளி

முதல் திருவாய் மொழியில் -எம்பெருமான் தன்னைப் பிரிந்தாருக்கு நித்ரா விச்சேதாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
அவனுடைய க்ஷண மாத்ர விரஹமும் அத்யஸஹம் என்று கொண்டு அதி கிலேச க்ஷண விரஹன் -என்று அருளிச் செய்தார்

இரண்டாம் திருமொழியில் -எம்பெருமான் மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரித்து இருக்கச் செய்தேயும்
ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று கொண்டு
லலித உத்தங்கன் என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஸர்வ ரஸ சமாகாரம் போலே ரஸ்யனாய்க் கொண்டு தம்மோடு கலைக்கையாலே
அவன் தான் ஸமஸ்த மதுர பதார்த்தங்களினுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையவன் என்று கொண்டு
ஸர்வ ஆஸ்வாத ஆஸ்ரயன் -என்று அருளிச் செய்தார் –

நான்காம் திருவாய் மொழியிலே -ஆஸ்ரிதருடைய ஆபத்தில் வந்து முகம் காட்டி
வ்யஸநங்களைப் என்று கொண்டு வியசன சமனன் என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியில் –
யதா தாதம் தசரதம் யதா ஐஞ்ச பிதாமஹம்
ததா பவந்தம் ஆஸாத்ய ஹ்ருதயம் மே ப்ரஸீததி -என்கிறபடியே
தான் ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறில் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வ பாவன் என்று கொண்டு
ஸ்வ பிராப்தி ஸம் ப்ரீதிமான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில் எம்பெருமான் -வளவேழ் உலகில் போலே ஸ்வ அநர்ஹதா அநுசந்தானாதிகளாலே
ஆஸ்ரிதற்கு தன் பக்கல் வைமுக்யம் வருகிறதோ என்று வியாகுலனாய் இருக்குமவன் ஆகையாலே –
ஸ்வ விரஹ சகிதன் என்று அருளிச் செய்தார் –

ஏழாம் திருவாய் மொழியிலே -பெருமாளுக்கு ஸ்ரீ விபீஷணன் பக்கல் ஓரம்
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப்யேஷ யதா தவ –என்று ராவணன் அளவும் சென்றால் போலே
எம்பெருமான் ஆஸ்ரிதர் பக்கல் அபி நிவேசத்தால் தத் சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்து
அருளுமவன் ஆகையாலே ஸ்வ ஜன ஹிதன் -என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியில் -எம்பெருமான் முக்தி தசையில் ரஸாவகனாய் இருக்கும் என்று கொண்டு
முக்தி ஸாரஸ்ய ஹேது என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் -உன் கைங்கர்யமே எனக்கு உத்தேச்யம் என்று கொண்டு
பரவா நஸ்மி காகுத்ஸத த்வயி வர்ஷ சதம் ஸ்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இத்யாதிகளைப் போலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகையாலே
கைங்கர்ய உத்தேச்யன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தம்மோடு ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் பரிமாறி
அனுபவிக்கும் படி தர்ச நீயமான தெற்குத் திருமலையில் நின்று அருளுகையாலே
ஸூப ஸவித கிரி நிலையன் -என்று அருளிச் செய்கிறார்

இப்படி அத்ய அஸஹ்ய க்ஷண விரஹாதிகளாலே அத்யந்த போக்யனான எம்பெருமானை –
ஆழ்வார் அனுபவித்துத் தலைக் கட்டுகையாலே
போக்யத்வேன முக்த ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

—————————

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் இவர் ஒல்லை -1-என்றும் ஒல்லை -10 -என்றும்
அருளிச் செய்த கருத்தை அறிந்து திருமேனியோடே வந்து ஆஸ்ரயிக்கும் படி
எம்பெருமான் திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவிக்கிறார்

———-

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

கிளர் ஒளியின் இடையில் பிறந்த ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே –
வளரா நின்றுள்ள படிகளை யுடைய ஆச்சர்ய சக்தன் நித்ய வாசம் பண்ணுகிற லோயிலாகிற
வளர வளர இளகிப் பதித்து வரும் பொழில்களாலே சூழப் பட்ட திருமாலிருஞ்சோலையை
அநர்த்தம் வாராது ஒழிய வேண்டில் கிட்டுமதே இவ்வாத்மாவுக்கு சதிர்
என்கிறார் -கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்-இத்யாதியாலே –

———-

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-

சதிரையும் இளமையையும் உடைய மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றும் மதியாதே
திருக்கையின் ஸ்பர்சத்தாலே எப்பொழுதும் ஓக்க முழங்கா நின்றுள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருக்கையிலே யுடையராய்
அந்த அழகாலே -அழகர் -என்று சொல்லப்படுமவர் கோயில் இருக்கிற
சந்திரன் தவழ்ந்து ஏறா நின்றுள்ள சிகரத்தை யுடைய திருமலையில் பதியை –
ஸ்வரூப அனுரூபமாக ஏத்தி உஜ்ஜீவிக்கும் இதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்
என்கிறார் –சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது–இத்யாதியாலே –

——–

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-

ப்ரயோஜன அநாஸ்ரயமானவற்றைச் செய்து ஒரு பிரயோஜனம் இல்லை காண் நெஞ்சே —
வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற அழகை யுடையவர் அவ்வடிவு அழகை
ஸர்வ ஸ்வ தானம் பண்ணி வர்த்திக்கிற கோயிலாய் இருக்கிற
போக்யதா ப்ரகர்ஷத்தாலே நெஞ்சை இருளப் பண்ணும் திருமால் இருஞ்சோலையோடு
சம்பந்தித்த மலையை அடைவது -அது ஒன்றுமே கர்தவ்யம்
என்கிறார்-பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே -இத்யாதியாலே —

————

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

கர்மமாகிற வலிய பாசத்தை ஸ்வ யத்னத்தாலே கழித்து –
ப்ராப்யமான கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவித்துத் தலைக்கட்டப் போமோ –
கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிக்கைக்காகவும் –
கைங்கர்யங்களைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்
பெரிதான கோவர்த்தன பர்வதத்தை எடுத்தவன் -அந்தப் பெருமையோடே வந்து
நித்ய வாஸம் பண்ணுகிற கோயிலாக இருக்கிற
வாரா நின்றுள்ள மேகங்கள் தவழும் திருமாலிருஞ்சோலை யாகிற திருமலையை
ஆஸ்ரயிக்குமதுவே செய்ய அடுத்து என்கிறார் -கரும வன்பாசம் கழித்து உழன்று-இத்யாதியாலே —

———–

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

திரண்ட பலத்தாலே ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் ஆகிற மஹா பாபத்தைக் கூடு பூரியாதே
ஸர்வேஸ்வரனிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முயலா நின்றுள்ள திருவாழியை
ஆயுதமாக யுடையவன் வந்து வர்த்திக்கிற கோயிலாகிற
மறுவற்றுத் தெளிவை யுடைத்தாய் தர்ச நீயமாய் ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட
மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போமிதுவே
பகவத் ப்ரத்யா சத்தி வேண்டி இருப்பார்க்கு வருத்தமற லபிக்கலாம் நல் விரகு
என்கிறார் –திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது–இத்யாதியால் –

————-

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

இது நல் விரகு என்று புத்தி பண்ணுங்கோள்
ப்ரயோஜனாந்தரங்களிலே ப்ராவண்யம் செய்யாதே
உறிகளிலே சேமித்துக் கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயை தெய்வம் கொண்டதோ
என்னலாம் படி களவு கண்டு அமுது செய்தவன் வந்து வர்த்திக்கிற தேசமாய் இருக்கிற
ரஷ்ய ரக்ஷகங்கள் தன்னிலே பிரியாதே வார்த்தைக்கும் மாலிருஞ்சோலையை
நெஞ்சிலே அடிபடும் படியாக அநுஸந்திக்குமதுவே நன்மை யாவது
என்கிறார் -கிறியென நினைமின்-இத்யாதியாலே –

———–

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

நான் சொல்லுகிற வார்த்தையை நன்மை என்று புத்தி பண்ணுங்கோள்
பிரிவால் வரும் கிலேச அனுபவம் பண்ணாதே வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹா வராஹமாய்
அண்ட புத்தியில் சேர்ந்து உரு மாய்ந்த பூமியை எடுத்துக் கொண்டு ஏறின
நிருபாதிக ஸூஹ்ருத்து நித்ய வாசம் பண்ணும் தேசமாய் இருக்கிற நிர்மலமான ஞான லாபத்தை உண்டாக்கும்
திருமாலிருஞ்சோலையை அனுகூலமான முறையிலே கிட்டிப் பரிசர்யை பண்ணுதல்
ஸ்ரேஷ்டம் என்கிறார்–நலமென நினைமின்– இத்யாதியால்

———–

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

ஸர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாகத் தந்த மனுஷ்ய சரீரத்தைக் கொண்டு
பலத்தை உண்டாக்கி -பின்னை அவனை ஆஸ்ரயிக்கை இன்றிக்கே
இதர விஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்கி -அநர்த்தப் படாதே
பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசமாய் இருக்கிற
நித்ய ஸூரிகளாதான திருமாலிருஞ்சோலையை அனுகூல புத்தி களைப் பண்ணி
பரிசர்யை பண்ணுதல் நியாயம் என்கிறார் -வலம் செய்து-இத்யாதியால் —

———-

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

நான் சொல்லுகிற இதுவே முறை என்று புத்தி பண்ணுங்கோள்
உங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாத மஹா பாபங்களைப் பரிஹரிக்க வேண்டி இருந்தீர்களாகில்
பேய்ப் பெண்ணான பூதனையை முடித்தவன் நித்ய வாசம் பண்ணுகையாலே ஸ்லாக்யமான கோயிலாய் இருக்கிற
இள யானைக் கன்றுகள் இனம் இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையைத் தொழ வேணும் என்னும்
மநோ ரதத்திலே துணிவதே இவ்வாத்மாவுக்கு விஜய ஹேது என்கிறார் -வழக்கென நினைமின்-இத்யாதியாலே —

————

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது என்று ஆத்ம அபஹாரத்தையும் துர் உபதேசத்தையும் செய்யாத படியாக
வேதார்த்தத்தை விஸதீ கரித்த கீதா உபநிஷத் ஆச்சார்யன் வர்த்திக்கிற கோயிலாய்
பேடையை உற்ற மயில் சேர்ந்துள்ள திருமாலிருஞ்சோலை யாகிற பூ மலரா நின்றுள்ள திருமலையைக் கிட்டுமதுவே
இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாய்த் தலைக்கட்டுமிது -அல்லாதவை எல்லாம் வியர்த்தம்
என்கிறார் -சூதென்று களவும் சூதும்-இத்யாதியாலே —

———-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

நிகமம் –
ப்ரயோஜனப்படும் என்று இந்த லோகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குண விஷயமாக
அஞ்ஞான கந்தம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்து தத்வ ஞானம் கொள்ளும் படி சொன்ன
ஓர் ஆயிரத்தில் இப்பத்தான் அருளே நிரூபகமான அவன் திருவடிகளை ஸம்ஸார சம்பந்தத்தை
வாசனையோடு போக்கிச் சேர்த்து விடும் என்று யுக்த அர்த்தத்தை
நிகமிக்கிறார்-பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்– இத்யாதியாலே

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -20-பாசுரம்–

அவதாரிகை –

இதில் சர்வ பிரகாரத்தாலும் திருமலையை ஆஸ்ரயிக்கையே
புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்
எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்
ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே
இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக
இங்கேயே
இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி
தெற்குத் திருமலையிலே தான் நிற்கிற படியை
இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து
அவனிலும்
அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து
ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி
பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி——–20-

வியாக்யானம்–

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க –
அதிசயமான ஒஜ்வல்யத்தை யுடைத்தாய்
கீழ் உக்தமான எம்மா வீட்டில் பிராப்யமானது லபிக்கைக்காக –

வளர் ஒளி மால் சோலை மலைக்கே –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி
கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
திருமால் இரும் சோலை மலைக்கே –

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும்-
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற
அநர்த்தம் இன்றிக்கே
அவன் வர்த்திக்கிற திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள்
என்று அருளிச் செய்யும் –

தளர்வு -மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு

அறவே –அது இன்றிக்கே -என்றபடி
கீழ் பிராப்யம்மான பாத பற்புக்கு
தென்னன் உயர் பொருப்பை பிராப்யமாக விதித்த படி –
இது வன்றாட்சி மயமாகையாலே -திரு விருத்தம் -ஆஸ்ரயிக்கைக்கு அடி உடைத்து –சிமயம் -சிகரம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –

இப்படி நெஞ்சை வைத்து சேரும் எனும் –
நெஞ்சை வைத்துச் சேரும் என்கிறதுக்கு மூலம் –கிளர் ஒளி இளமை –என்கிற பாட்டு
மானஸ ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -என்று இறே இதுக்கு அர்த்தம் அருளிச் செய்தது –
உய்த்து உணர்வு எனும் ஒளி விளக்கு –என்னக் கடவது இறே
சேரும் என்றது –கிளர் ஒளி இளமை கெடுவதம் முன்னம் என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
போதவிழ் மலையே புகுவது பொருளே –என்னும் அளவும் அருளிச் செய்தவை –
அதாவது
சார்வது சதிரே -என்றும்
ஏத்தி எழுவது பயனே -என்றும்
அயன் மலையை அடைவது கருமமே -என்றும்
திருமலை யதுவே அடைவது திறமே -என்றும்
நெறி பட வதுவே நினைவது நலமே -என்றும்
பிரதஷிணஞ்ச குர்வாணஸ் சித்ர கூடம் மஹா கிரிம் -என்னும்படி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்றும்
தொழக் கருதுவது துணிவது சூதே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
திருமலையோடு
அத்தைச் சேர்ந்த அயன்மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் -என்று துணிந்த துணிவோடு
வாசி அற பிராப்யாந்தர்க்கதமாய்
ஸ்வ அனுபவ கர்ப்ப
பரோபதேச முகேன
அனுபவித்து இனியராகிற பிரகாரமும் இவர்க்கு இப்பாட்டிலே விவஷிதம் –
அந்தர்கத குணா உபாசனத்தை
மதித்து பெருக்கி மூழ்கி அழுந்து கீழ்மை
வலம் சூது செய்து இளமை கெடாமல் செய்யும் ஷேத்திர வாசம்
சங்கீர்த்தனம் அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத்யங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில் –
என்று இறே-ஆச்சார்யா ஹிருதயம் -சூர்ணிகை -220-உபாயபரமாக நாயனார் அருளிச் செய்கிறார்
நாயனார் உபாய பரமாக அருளிச் செய்தது
ஆகையால் திருமலையை பிராப்யதயாவும் ப்ராபகதயாவும்
ஆஸ்ரயிக்கும் படி அருளிச் செய்யக் குறை இல்லை இறே
நெஞ்சை வைத்து சேரும் எனும் -நீடு புகழ் மாறன் தாள் –
இப்படி பரர அநர்த்தம் கண்டு
பரோபதேசம் பண்ணுகையாலே
நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான
யசஸை யுடைய ஆழ்வார் திருவடிகளிலே –

முன் செலுத்துவோம் எம்முடி –
அவர் திருவடிகளின் முன்பே
நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே
இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது
அன்றிக்கே
ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே
நாம் முற்பாடராய்
முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–இந்தியத் தத்துவ இயல் நூல்கள்– ஆசிரியர்கள் —

May 10, 2021

இந்தியத் தத்துவ இயல் நூல்கள்: ஆசிரியர்கள் : இந்திய மெய்யியலுக்கு ஆறு முக்கியமான தர்சனங்கள் அல்லது தத்துவங்கள் உள்ளது.
அதில் நியாயம், இதன் தத்துவ ஆசிரியர் கௌதமர்.
வைசேசிகம் எனும் பட்டறிவு தத்துவத்தின் ஆசிரியர் கணாதர். சாங்கியம் எனும் தத்துவத்தின் ஆசிரியர் கபிலர் (சாங்கியம்),
யோகம் என்ற தத்துவதிற்கு ஆசிரியர் பதஞ்சலி ஆவர்.
மீமாம்சம் எனும் தத்துவத்துவதிற்கு ஆசிரியர் ஜைமினி ஆவர்,
மற்றும் வேதாந்தம் எனும் உபநிடதங்கள் என ஆறு தத்துவங்கள் அல்லது ஆறு தர்சனங்கள் உள்ளது.
இதில் முதல் ஐந்தில் இறைவன் அல்லது பிரம்மம் எனும் இறையியலைப் பற்றி பேசுவதில்லை.
வேதாந்தம் ஒன்றுதான் பரம்பொருள் எனும் பிரம்மத்தைப் எனும் தத்துவத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

இந்தியத் தத்துவ இயலுக்கு லோகாயதம் எனும் பொருள் முதல் வாதிகள்,
பௌத்தம், மற்றும் சமண சமயம் போன்ற கருத்தியல் ஆசிரியர்களும் மிகவும் அதிகமாக பங்களித்துள்ளனர்.
இந்திய இறையியல், கருத்தியல், மெய்யியல், அறிவாய்வியல், தர்க்கம் மற்றும் பொருள் முதல்வாதம் குறித்து
அறிஞர்கள் படைத்த தத்துவ நூல்களின் விவரம்.

அபிதம்ம கோசம் : சர்வாஸ்திவாதிய புத்த மதத்வரின் அடிப்படை நூல். எழுதியவர் வசுபந்து.

அபிதம்ம கோச வியாக்யா : யசோமித்திரர் எமுதியது. அபிதம்ம கோசம் எனும் நூலின் விளக்க உரை நூல்.

அபிதம்ம பீடகா : மூன்றாவதும் இறுதியானதுமான புத்த பீடக நூல். நுண்புலப் பொருளியல் (Meta Physics) பிரச்சனைகள் பற்றி எழுதப்பட்டது என கருதப்படுவது.

அபிதம்ம விபாசா : காத்யாயனிபுத்ரரின் ’ஞானப்ரஸ்தானா’பற்றிய விமர்சனம். மன்னர் கனிஷ்கர் ஆதரவின் கீழ் நடைபெற்ற நான்காம் புத்த மாநாடு குழுவால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அசிந்த-பேதாபேத-வாதம் : இருமை (Dualism) மற்றும் இருமைப் மறுப்புக் கொள்கை (Non-Dualism) வங்காள வைஷ்ணவியத்தை நிறுவியவர் என்று அறியப்பட்ட சைதன்ய வேதாந்த கருத்தியலின் தத்துவகோட்பாடு.

அத்வைத-பிரம்ம-சித்தி : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்த யதி எழுதியது. அத்வைத சித்தாந்தம் பற்றியது.

அத்வைத வேதாந்தம் : பரிசுத்தமான தன்னுணர்வே மெய்ம்மை (பிரம்மம்) என்ற வேதாந்த கருத்தியல். ஆதிசங்கரர் என்வர் அத்வைத வேதாந்தியால் முன் வைக்கப்பட்டது. இவர் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அஜிதகேசகம்பிளி : புத்தர் காலத்தில் வாழ்ந்த பொருள் முதல்வாதி.

அகலங்கர் : கி. பி.750இல் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.

அக்சபாதா : கோதமரின் மறு பெயர். நியாய தத்துவ அமைப்பினை நிறுவியர்.

ஆலம்பன பரீக்சா : திக்னாகா என்பவர் எழுதியது. யோக்கார கருத்தியற்கோட்பாட்டிற்கு ஆதரவான ஆய்வுக்கட்டுரை நூல்.

அனிருத்தா : கி. பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய சூத்ராவுக்கு விளக்கம் எழுதியவர்.

அனாகா : சமணர்களின் புனித இலக்கியங்களில் ஒருவகை.

அன்னம பட்டர் : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியாய – வைசேசிக தத்துவவாதி. தர்க்க சங்கிரஹா எனும் புகழ் பெற்ற நூலை எழுதியவர்.

ஆபாதேவா : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மீமாம்ச தத்துவவாதி

ஆரண்யகா : வேதத்தை சேர்ந்த இலக்கிய வகை. மாயாவாத, போன்ற முன்மாதிரி தத்துவம் பற்றிய கேள்விகளை இது ஆய்கிறது.

அரியேதா : கி பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி. தர்ம கீர்த்தி என்பவர் எழுதிய ஹேது-பிந்து நூலைப் பற்றிய விளக்கம் அளித்தவர்.

அர்த்தசாஸ்திரம் : கௌடில்யர் எனும் சாணக்கியர் எழுதிய பழமையான சமுக அரசியல் நூல்.

ஆர்யதேவா : கி பி.320இல் வாழ்ந்தவர். மாத்யமிக புத்த தத்துவத்தின் அதி நுட்ப திறனாய்வாளர்.

ஆர்யசூரா : கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஜாதக மாலா எனும் நூலை எழுதி புகழ் பெற்றவர்.

அசங்கா : கி.பி.450ம் ஆண்டைச் சேர்ந்தவர். யோகாகார புத்த த்த்துவத்தை தொடக்க காலத்தில் முறையாக செய்தவர்.

ஆசுரி : பண்டைய சாங்கிய தத்துவ ஆசிரியர்.

அஸ்வகோசர் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி, கவிஞர், நாடக ஆசிரியர்.

அதர்வ வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் இறுதியானது. இது மந்திர தந்திரங்களை மையமாக கொண்டது.

ஆத்ம தத்துவ விவேகம் : உதயணாவின் ஒப்பீட்டு இலக்கியம், சுயம் பற்றி புத்தம் கூறும் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் நியாய வைசேசிக தத்துவ ஆய்வு நூல்.

பாதராயணர் : பிரம்ம சூத்திரம் எனும் நூலை எழுதியவர்.

பவதாயணா : கி.பி. 300ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். சட்டம் பற்றி எழுதிய முன்னோடி.

பகவத் கீதை : கர்மயோகம், பக்தியோகம் மற்றும் ஞானயோகம் போன்ற தத்துவங்களை, ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு உபதேசம் செய்த நூல். இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பிரஸ்தானத்ரயம் எனும் உயர் வேதாந்த நூல்களான உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் ஆகியவற்றில் பகவக் கீதையும் ஒன்று.

பாமதி : பிரம்ம சூத்திரம் பற்றிய ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கு விரிவுரை எழுதியவர்.

பாஸ்கரர் : பிரம்ம சூத்திரம் பற்றி கடவுள் நம்பிக்கை நிலையிலிருந்து விளக்கமளித்தவர். ஆதிசங்கரர் மற்றும் இராமானுஜர் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தவர்.

பாட்ட தீபிகா : கச்சதேவரின் மீமாம்ச தத்துவ கட்டுரைகள் எழுதியவர்.

பாட்ட மீமாம்சம் : குமாரில பட்டர் எழுதிய மீமாம்ச கருத்தியல் நூல்.

பாவவிவேகா : கி. பி. 5ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த மாத்யமக பிரிவு புத்த தத்துவ நிபுணர்.

பிரஸ்தானத்திரயம் : பிரம்மத்தை விளக்கும் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய மூன்று முதன்மையான வேதாந்த நூல்களை பிரஸ்தானத்திரயம் என்பர்.

பேதாபேத-வாதம் : பாஸ்கரரின் இருமை மற்றும் இருமையின்மை கொள்கை விளக்கம் நூல்.

போதிகார்யவாதாரா : சாந்தி தேவர் எழுதியது. மகாயான புத்தமததத்துவத்தை போற்றும் கவிதைகள்.

பிராமணம் : வேத சடங்குமுறைகளை ஆய்வு செய்யும் வேத இலக்கியம்.

பிரம்ம சூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் : உபநிடதங்களில் காணப்படும் முரணான கருத்துக்களை, பிரம்ம சூத்திரம் எனும் நூல் மூலம் பாதராயணர் களைந்து விளக்கி எழுதியதாக கூறப்படுகிறது. இந்நூலுக்கு பாஷ்யம் எழுதியவர்களில் சிறப்பானவர்கள், ஆதிசங்கரர், இராமனுஜர் மற்றும் மத்வர்.

ப்ரஹதி : மீமாம்ச சூத்திரம் பற்றிய சபரரின் கருத்துக்கள் மீது பிரபாகரர் எழுதிய விளக்கங்கள்.

புத்தர் : புத்த தத்துவத்தை தோற்றுவித்தவர். கி. மு. 483ஆம் ஆண்டில் இறந்தார்.

புத்தசரிதா : புத்தரின் வரலாற்றை கவிதை வடிவில் அஸ்வகோசர் எழுதியது.

புத்தபாலிதா : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமக புத்த தத்துவ நிபுணர்.

சைதன்யர் : கி. பி. 485வது ஆண்டில் பிறந்தவர். வங்காள வைணவ தத்துவம் என பொதுவாக அறியப்பட்ட மத இயக்கத்தை தோற்றுவித்தவர்.

சந்திரகீர்த்தி : கி. பி. 6வது நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமக புத்த தத்துவ நிபுணர்; நாகார்ஜுனரின் கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதியதால் புகழ் பெற்றார்.

சரக சம்ஹிதை : கி. பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் என்பவர் இந்த மருத்துவ நூலை எழுதியவர்.

சார்வாகம்: சார்வாகம் எனில் லோகாயவாதம் எனும் பொருள்முதல்வாதம் எனப்படும். சார்வாகர்என்ற பொருள்முதல்வாதி சார்வாகம் எனும் தத்துவத்தை நிறுவியவர்.

சாது சதகம் : மாத்யமக புத்த தத்துவ அறிஞரான ஆர்யவேதர் எழுதியது.

சித்சுகர்: கி. பி. 1220களில் வாழ்ந்தவர். அத்வைதி. பட்டறிவு சார்ந்த உள்ளமைவியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) பற்றிய எதிர்மறையான வாதத்தை முன்வைத்து புகழ் பெற்றவர்.

தர்மகீர்த்தி : கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திக்நாகருக்கு பின்வந்த புகழ்பெற்ற புத்த தத்துவவாதி.

தத்துவ – சங்கிரஹம் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சாந்தராட்சிதா என்பவர் எழுதிய புத்தவியல் தர்க்கநூல் ஆகும்.

தர்மோத்தரர் : கி. பி. 840களில் வாழ்ந்தவர். தர்மகீர்த்தியின் கருத்துகளுக்கு விளக்கம் அளித்தவர்.

திகம்பரர் : சமண தத்துவத்தின் ஒரு பிரிவு. இப்பிரிவுக்கு மாறானவர்கள் சுவேதாம்பரர்எனப்படுவர்.

திக்நாகர்: கி. பி. 500களில் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல் கருத்தியலை நிறுவியவர்.

திபாஷிகா : சாலிகநாதர் எழுதியது. பிரபாகர மீமாம்சம் பற்றிய ஒரு நூல்.

துர்வேகர் : புத்த தத்துவவாதிகளான தர்மோத்தரர் மற்றும் அர்க்கடர் ஆகியவர்களை விமர்சனம் செய்தவர்.

துவைதாத்வைத வாதம்: நிம்பர்க்கர் என்பவர் பேதாபேதம் வேதாந்த கருத்தியலின் இருமை (துவைதம்)மற்றும் இருமையின்மை (அத்வைதம்) தத்துவ கோட்பாட்டை விளக்கியவர்.

துவைதவாதம்: இத்த்துவத்தின் ஆசிரியர் மத்வர். இருமை எனும் துவைதம் தத்துவக் கொள்கையை (இறைவனும் சீவனும் வேறு) கடைப்பிடிப்பவர்கள்.

சுதாதரர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். தவ நியாய தத்துவ நிபுணர்.

கங்கேசர்: கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த தவ நியாய தத்துவ அறிஞர்.

கௌடபாதர்: கி. பி. 800களில் வாழ்ந்தவர். ஆதிசங்கரரின் குருவின் குரு. மாண்டூக்ய காரிகை நூலின் ஆசிரியர். அத்வைத வேதாந்தி.

குணரத்ன : கி. பி. 15வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர். இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.

ஹரிபத்ரர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலை எழுதியவர்.

ஹேமச்சந்திரர் : இவரது காலம் கி. பி. 1018 – 1172. புகழ்பெற்ற சமண சமய தத்துவ அறிஞர். தத்துவம் மற்றும் தர்க்க நூல்களை எழுதியவர்.

ஹேது – பிந்து : தர்ம கீர்த்தி என்பவர் எழுதிய புத்த தர்க்கவியல் நூல்.

ஹீனயானம் : தமது முன்னோர்களை (மட்டமாக) குறிக்க, மகாயானம் பிரிவு புத்த சமயத்தவர் பயன் படுத்திய சொல். (ஹீனயானம் எனில் தாழ்வான வழி அல்லது குறைந்த வழி என்று பொருள்).

ஜகதீசா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நவ நியாய தத்துவ அறிஞர்.

ஜைமினி : பூர்வ மீமாம்சக சூத்திரம் எழுதியவர்.

சமண தத்துவம் : துறவிகளின் மதம். தனித்துவமான தத்துவப்பார்வைகள் கொண்டது.

ஜாதகா : புத்தரின் ’முந்தைய பிறப்புகளை’ பற்றிய கதைகள் கூறுவது.

ஜெயந்த பட்டர் : கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய மஞ்சரி எழுதியவர். நியாய – வைசேஷிக தத்துவ அறிஞர்.

ஜெயராசி பட்டர் : கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அன்றைய காலத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவர். இவரை ஒரு பொருள்முதல்வாதி என்று தவறாக எண்ணினார்கள்.

ஞானப்பிரஸ்தானா : இந்நூலை காத்யாயனிபுத்ரர்என்பவர் எழுதியது. வைபாசிக புத்த தத்துவவாதிகளின் விளக்கமான மஹாவிபாச என்ற நூல் ஞானப்ரஸ்தானாவின் விமர்சனமாக எழுதப்பட்டது.

கமலசீலா : கி. பி. 750இல் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல்வாதி. சாந்தராக்சிதாவின் தத்துவ சங்கிரா என்ற நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

கணாதர் : வைசேசிகம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.

கபிலர் (சாங்கியம்) : சாங்கியம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.

காத்யாயனிபுத்ரர் : கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியவர். ஞானப்ரஸ்தானம்எனும் நூலை எழுதியவர்.

கௌடில்யர் : இவரை சாணக்கியர் என்றும் அழைப்பர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பாக நூலை எழுதி புகழ்பெற்றவர்.

கந்ததேவா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்த மீமாம்ச தத்துவவாதி

காந்தன-காந்த-காத்யம் : கி. பி. 1150இல் வாழ்ந்த ஸ்ரீஹர்சர் என்பவர் எழுதியது. அத்வைத வேதாந்த கருத்தியல் பற்றி, பட்டறிவு சார்ந்த உள்ளமையியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) மீதான முதல் விரிவான விமர்சனம் செய்தவர்.

கிராணவளி : வைசேஷிக தத்துவம் பற்றிய பிரசஸ்தபாதரின் விளக்கம் மீதான விமர்சனம். உதயணர்என்பவர் எழுதியது.

குல்லுக பட்டர் : மத்திய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். மனுதரும சாத்திரம் (மனு ஸ்மிருதி) எனும் நூலுக்கு விளக்கம் அளித்தவர்.

குமாரில பட்டர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். மீமாம்ச தத்துவத்தை நிறுவியவர். பாட்டா மீமாம்சா பள்ளியை (Bhatta School of Mimasa) நிறுவியவர்.

லக்வி : மீமாம்ச சூத்ரம் பற்றி சபரர் எழுதிய விளக்கத்திற்கு சுருக்கமான விளக்கம் எழுதியவர்.

லலித விஸ்தாரா : மகாயான புத்த சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்க்கை வரலாறு.

லங்காவதார சூத்திரம் : மகாயான பெளத்த மத சூத்திரங்களில் முக்கியமான ஒன்று.

லோகாயாதம் : பொருள்முதல்வாதம் (Materialism) எனும் தத்துவத்தை நிறுவியவர் சார்வாகர். இதனை சார்வாகம் என்றும் அழைப்பர்.

மாதவா : கி. பி. 14வது நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. சர்வ தரிசன சங்கிரஹ என்ற இந்திய தத்துவவியல் தொகுப்பை எழுதிப் புகழ் பெற்றவர்.

மதுசூதன சரசுவதி : காலம் 1565-1650. அத்வைத சித்திஎன்ற நூலை எழுதிய அத்வைத வேதாந்தி.

மத்வர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த துவைதம் எனும் இருமை கருத்தியலை நிறுவிய மாத்வ சம்பிராயத வைணவ குரு.

மாத்யமக : மகாயான புத்தவியல் தத்துவ கருத்தியல். இதனை நிறுவியது நாகார்ஜுனர். யதார்த்தம் (உண்மை) என்பது ’வெறுமையே’ என்பது இவர்கள் பார்வை.

மாத்யமக காரிகை : இதன் ஆசிரியர் நாகார்ஜுனர்

மகாபாரதம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரு இதிகாசங்களில் ஒன்றான இதை எழுதியவர் வியாசர். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 400க்கும் கி. பி. 400க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியது.

மகாசாங்கிகர்கள் : பழமைவாத புத்த சங்கத்திலிருந்து முதன்முதலில் வெளியேற்றப்பட்டவர்கள். பின் இவர்கள் தங்களுக்கு என தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.

மகாவிபாசா : அபிதம்ம விபாசாவும் இதுவும் ஒன்றே.

மகாவீரர் : சமண சமய தத்துவத்தை நிறுவியவர். கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.

மகாயானம் : ‘ உயர்ந்த பாதை ‘ என்று பொருள். பிற்கால புத்தவியல்வாதிகள் உருவாக்கிய புத்தமதப் பிரிவு. இவர்கள் தங்களின் எதிர்தரப்பை ஹீனயானம் (குறுகிய பாதை)என்பர்.

மகாயான சூத்திரங்கள் : மகாயான புத்தமத இறையியல் தத்துவபாடல்கள் அடங்கிய நூல்.

மைத்ரேயநாதர் : புத்தவியல் அடிப்படையிலான யோககார கருத்தியலை உருவாக்கியவர். கி. பி. 400இல் வாழ்ந்தவர்.

மந்தன மிஸ்ரா : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பாட்டா மீமாம்ச தத்துவ அறிஞர்.

மாண்டூக்ய காரிகை : கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் எழுதியது.

மனு : இவர் மனுதரும சாத்திரம் எனும் மனுஸ்மிர்தியின் ஆசிரியர். இந்திய சட்டங்கள் பற்றி கூறும் முதல் நூல். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 200க்கு முன்பு இருந்ததாகும்.

மாயாவாதம் : பிரம்மம் தவிர படைக்கப்பட்ட அனைத்துப் பிரபஞ்சங்களும் சீவராசிகளும் மித்யா(பொய்மையானது) எனக்கூறும் அத்வைத வேதாந்தக் கொள்கை.

மிலிண்ட பனாஹ : புத்தவியல் குறித்த பழங்கால பாலி மொழி (இந்தோனேசியா) நூல்.

மீமாம்சா (பூர்வ): ஜைமினி என்பவர் இதனை தொகுத்தவர். இப்பகுதியில் வேதத்தின் சடங்குகள் குறித்த விளக்கங்கள் கொண்ட மிகப் பழங்கால நூல்.

மீமாம்சா (உத்தர) : இப்பகுதியில் வேதத்தின் இறுதி பகுதிகளான உபநிடதங்கள் அமைந்துள்ளது.

மீமாம்ச சூத்ரா : மீமாம்ச தத்துவம் பற்றிய மூல நூல்.

நாகார்ஜுனர் : கி. பி. 200இல் வாழ்ந்தவர். புத்தவியல் தத்துவத்தின் மாத்யமிக கருத்தியலை உருவாக்கியவர்

நிம்பர்க்கர் : கி. பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரம் பற்றி ஆத்திக விளக்கம் கொடுத்தவர்.

நவ்ய நியாயா : நவ நியாயா. காங்கேசர் போதித்த நியாய தத்துவவியலின் இறுதிக் கட்டம்.

நியாயம் : இத்த்துவத்தை நிறுவியவர் கௌதமர். அறிவாய்வியல் மற்றும் தர்க்கம் குறித்த கேள்விகள் மீது கவனம் செலுத்தும் தத்தவ நூல்.

நியாய – பிந்து : புத்த தர்க்கவியல் நூல். தர்மகீர்த்தி எழுதியது.

நியாய – பிந்து – திகா : ’நியாய – பிந்து’ நூலைப் பற்றி தர்மோத்தரா எழுதிய விமர்சன நூல்.

நியாய – கந்தழி : வைசேஷிக தத்துவ முறை பற்றி பிரசஸ்தபாதர் கூறியதன் மீதான விமர்சன நூல்.

நியாய – கணிகா : மீமாம்சம் பற்றி வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. இது மந்தன மிஸ்ரர் எழுதிய ’விதி விவேகா’ என்ற நூலின் மீதான விமர்சன நூல்.

நியாய – குசுமாஞ்சலி : இந்நூலை உதயணர் எழுதியது. கடவுள் இருப்பதை நிரூபிக்கும் நியாய வைசேஷிக உரைகள் கொண்டது.

நியாய-மஞ்சரி : நியாய வைசேஷிக முறை குறித்து ஜெயந்த பட்டர் எழுதிய முக்கியமான நூல்.

நியாய-சூத்ரம் : நியாய முறைப் பற்றிய மூல நூல். கோதமர் அல்லது அக்சபாதர்எழுதியதாக கூறப்படுகிறது.

நியாய-வைசேஷிகம் : நியாயம் மற்றும் வைசேஷிக தத்துவங்கள் ஒருங்கிணைந்த போது உருவான பெயர்.

நியாய-வார்த்திகா : உத்யோதகாரர் எழுதியது. நியாய சூத்திரம் மீதான வாத்ச்யாயணரின் நூல் பற்றி எழுதப்பட்டு இன்றும் இருக்கின்ற நூல்களில் இதுவே மிகப் பழமையானது.

நியாய-வார்த்திகா-தாத்பரிய-பரிசுத்தி : உதயணர் எழுதியது. நியாய-வார்த்திகா-தாத்பர்ய-திகா பற்றி எழுதப்பட்ட நியாய வைசேஷிக விளக்க நூல்.

நியாய வார்த்திகா-தாத்பரிய-திகா : வாசஸ்பதி மிஸ்ரா எழுதியது இது நியாய-வைசேஷிக விளக்க நூல்.

பதார்த்த-தர்ம-சங்கிரஹா : வைசேஷிக தத்துவம் பற்றி இன்றும் உள்ள நூல்; எழுதியது ப்ரசஸ்பாதர்.

பத்மபாதர் : ஆதிசங்கரரின் சீடர். அத்வைத வேதாந்தி.

பங்காசிகர் : தொடக்க கால சாங்கிய ஆசிரியர்.

பாணினி : கி. மு. 300க்கு முற்பட்டவர். சிறந்த இலக்கண ஆசிரியர்.

பார்த்தசாரதி மிஸ்ரர் : பாட்ட மீமாம்ச தத்துவ ஆசிரியர்களில் முக்கியமானவர். காலம் 16வது நூற்றாண்டு.

பதஞ்சலி : யோகம் எனும் தத்துவத்தை நிறுவியர்.

பாயாசி : புத்தருக்குப் பின் வந்த பொருள்முதல்வாதி.

பீடகங்கள் : தொடக்க கால புத்த தத்துவ நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள்.

பிரபாசந்திரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண சமய தர்க்கவாதி.

பிரபாகர மீமாம்சம் : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபாகரர். மீமாம்சம்எனும் தத்துவவியல் கொள்கையை நிறுவியவர்.

பிரக்ஞபாரமிதா சூத்ரம் : மகாயான புத்தமத சூத்ரங்களில் ஒன்று.

பிரக்ஞ – ப்ரதீபா : பாவவிவேகர் என்பார் எழுதியது. மாத்யமக புத்த தத்துவம் பற்றியது.

பிரகரண – பஞ்சிகம் : சாலிகநாதர் எழுதியது. பிரபாகரரின் கருத்துகளுக்கு முக்கிய விளக்க நூல்.

பிரமாண சமுக்காயம் : திக்நாகர் எழுதியது. புத்தமத தர்க்கவியல் பற்றிய அடிப்படை நூல்.

பிரமாண – வார்த்திகா : தர்மகீர்த்தி எழுதியது.

பிரசன்ன – பாதா : சந்திரகீர்த்தி எழுதியது. மாத்யமிக காரிகை பற்றிய முக்கியமான விளக்க நூல்களில் ஒன்று.

பதார்த்த – தர்ம – சங்கிரகம் : கி. பி. 5வது நூற்றாண்டில் வாழ்ந்த பிரசஸ்தபாதா என்பவர் எழுதியது.

புரந்தரர் : லோகாயத தத்துவவாதி. (பொருள்முதல்வாதி)

பூர்வங்கள் : தொடக்க கால சமணர்களின் புனித இலக்கியம்.

ரகுநாத சிரோமணி : கங்கேசரின் தத்துவங்களை விமர்சித்தவர். 16வது நூற்றாண்டினர்.

ராஜசேகர சூரி : சமண சமய தத்துவ ஆசிரியர். கி. பி. 1340ல் வாழ்ந்தவர்.

ராமாயணம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரண்டு இதிகாசங்களில் ஒன்று. கி. மு. 3வது நூற்றாண்டில் உருவானது. இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவானது.

இராமானுஜர் : கி. பி. 11வது நூற்றாண்டில் வாழ்ந்த விசிட்டாத்துவைதம் எனும் தத்துவத்தை நிறுவிய வைணவ சமயப் பெரியார். பிரம்ம சூத்திரம் பற்றி ஸ்ரீபாஷ்யம் எனும் ஆத்திக அடிப்படையிலான விளக்கங்கள் எழுதியவர்களில் மிக முக்கியமானவர்.

ராவண-பாஷ்யம்: தொடக்க கால வைசேஷிக நூல்களில் ஒன்று.

ரமணர் : காலம் 1879-1950, அத்வைத வேதாந்தி. “உள்ளவை நாற்பது” போன்ற அத்வைத வேதாந்த நூல்களை எழுதியவர்.

ருக் வேதம் : வேத நூல்களில் மிகப்பழமையானதும் முக்கியமானதும் ஆகும். இதன் காலம் கி. மு. 1500 – 1100 ஆகும்.

ரிஜ்விமாலா : சாலிகநாதர் என்பவர் எழுதியது. பிரபாகரின் பிரஹதி என்ற நூல் பற்றிய விளக்க நூல்.

சபரர் : கி.பி. 400ல் வாழ்ந்தவர். மீமாம்ச சூத்திரம்பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூலை எழுதியவர் சபரர்.

சபர பாஷ்யம் : மீமாம்ச சூத்திரம் பற்றி சபரர் எழுதிய நூல்.

சத்-தர்சன-சமுக்காயம் : இந்தியத் தத்துவங்களின் தொகுதி. ஹரிபத்ரர் எழுதியது.

சத்தர்ம-புண்டரீகம் : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சாலிகநாதர் : கி. பி. 7 அல்லது 8வது நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்தவர். பிரபாகரரின் தத்துவங்கள் பற்றி எழுதப்பட்ட விளக்கங்களில் சாலிகநாதரின் விளக்கங்கள் புகழ் பெற்றது.

சமாதிராஜா : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சமந்தபத்ரா : முற்காலத்திய சமண சமய தத்துவவாதி.

சாம வேதம் : நான்கு வேதங்களில் மூன்றாவது. சடங்குகளின் போது பாடப்படும் பாடல்கள் கொண்டது.

சங்கரர் : கி. பி.788 – 820இல் வாழ்ந்த அத்வைத வேதாந்திகளில் மிக முக்கியமானவர். இவர் தத்வ போதம், விவேக சூடாமணி, பஜ கோவிந்தம், ஆத்ம போதம், முதலிய நூல்கள் இயற்றியவர். மேலும் முக்கிய பத்து உபநிடதங்களுக்கும் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கும் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியவர்.

சாங்கியம் : மிகப் பழமையான இந்திய தத்துவப் பிரிவுகளில் ஒன்று. கபிலர் (சாங்கியம்) இத்தத்துவத்தை நிறுவியவர்.

சாங்கிய-காரிகா : ஈஸ்வர கிருஷ்ணா எழுதியது. சாங்கியம் பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூல் இதுவே.

சாங்கிய-ப்ரவசன-பாஷ்யா : விஞ்ஞான பிட்சு என்பவர் எழுதியது. சாங்கிய சூத்திரம் பற்றிய விளக்க நூல்.

சாங்கிய-சூத்திரம் : மத்திய காலத்தின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட சாங்கியம் பற்றிய நூல்.

சாங்கிய-தத்துவ-கவ்முதி : வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. சாங்கிய காரிகா எனும் நூலின் விளக்க உரை நூல் இது.

சங்கபத்ரா : வசுபந்துவுக்கு பிறகு வைபாஷிக புத்த தத்துவவாதி.

சஞ்சய பெலத்திட்டா : புத்தர் காலாத்தில் வாழ்ந்த கடவுள் மறுப்புவாதி.

சாந்திதேவா : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்த மகாயான புத்தவியலை பரப்பியவர்.

சாரீரக – பாஷ்யம் : சங்கரரின் பிரம்ம சூத்திரம் நூலின் பாஷ்யத்திற்கு விரிவான விளக்க நூல்.

சர்வ-தர்சன-சங்கிரகம் : மாதவர் எழுதிய இந்திய தத்துவவியல்கள் பற்றிய மிகப் புகழ் பெற்ற தொகுப்பு.

சர்வாஸ்தி-வாதம் : “எல்லாமும் எப்போதும் உயிருடன் உள்ளது” என்ற புத்தவியல் கருத்தியல் கொள்கையை விளக்கும் நூல்.

சௌராந்திகா : புத்தமத தத்துவவியல் மற்றும் கருத்தியல் கொள்கைகளை விளக்கும் நூல்.

சாயனர் : கி. பி. 14ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில், முதலாவது புக்கா ராயன் காலத்தில் வாழ்ந்தவர். நான்கு வேதங்களைப் பற்றி விரிவான விளக்க நூல்கள் எழுதியவர். இன்று நாம் படிப்பது இவரது வேத விளக்க நூல்களே.

சித்தசேனர் : தொடக்ககால சமண சமய தத்துவவாதி.

சிக்ஷா சமுக்காயம் : சாந்தி தேவர் எழுதிய மகாயான பௌத்த சமயத்தை பரப்ப உதவிய கவிதை நூல்.

சுலோக வார்த்திகா : குமாரில பட்டர் எழுதிய முக்கிய தத்துவவியல் நூல்.

ஸ்புதார்த்த-அபிதம்ம-கோசாம்-வியாக்யா : யசோமித்ரர் எழுதியது. அபிதம்ம கோசம் பற்றிய விளக்க நூல்.

ஸ்தவீரவாதிகள் : புத்தவியல் கருத்தியலை பின்பற்றிய மிகப்பழமையான தொண்டர்கள்.

சுவேதாம்பரர் : சமண சமயத்தின் ஒரு பெரும் பிரிவினர்.

ஸ்ரீகந்தா : பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

சூன்யவாதம் : மாத்யமிக புத்தவியலாளர்களின் தத்துவக்கொள்கை. அதாவது “ உண்மை என்பது வெற்றிடமே “.

சுரேஷ்வராச்சாரியர் : ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்தவர். சங்கரரின் சீடர். சங்கர அத்வைத வேதாந்திகளில் வேதாந்தங்களைப் பற்றி விளக்கம் எழுதியவர்களில் முதன்மையானவர்.

சுத்த பீடகம் : தொடக்க கால புத்த நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள் அடங்கிய மூன்று நூல்களில் ஒன்று.

தந்திர-வார்த்திகா : மீமாம்ச தத்துவம் பற்றி குமரில பட்டர் எழுதியது.

தர்க்க-ரகஸ்ய-தீபிகா : சத்-தர்சண-சமுக்காயம் எனும் நூல் பற்றி குணரத்ணா என்பவர் எழுதிய விளக்க நூல்.

தர்க்க-சங்கிரஹா : அன்னம பட்டர் என்பவர் நியாய – வைசேஷிகம் தத்துவம் பற்றி எழுதிய பிரபலமான நூல்.

தத்துவார்த்த அதிகாம சூத்திரம் : உமாஸ்வாதி எழுதியது. சமண சமயம் பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல்.

தத்துவ சிந்தாமணி : கங்கேசர் எழுதியது. புதிய நியாயா தத்துவத்தின் மூல நூல்.

தத்துவ சங்கிரகம் : சந்திராக்சிதா என்பவர் எழுதிய புத்த தத்துவ நூல்.

தத்துவ வைசாரதி : வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு எழுதிய விரிவான விளக்க நூல்.

தத்வோபப்ளவசிம்மம் : ஜயராசி பட்டர் எழுதிய நூல். யதார்த்த நிலை மீது ஏற்படும் தீவிர சந்தேகம் பற்றிய நூல். பொருள்வாதிகள் எழுதியதாக தவறாக கருதப்படுவது இந்நூல்.

தேரவாதிகள் : தேரவாத பௌத்த சமய பிரிவினர். இது ஸ்தவீரவாதிகள் என்ற பாலி மொழிச் சொல்.

துப்திகா : குமாரில பட்டர் எழுதிய மீமாம்சகத் தத்துவ நூல்.

உதயணா : கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய – வைவேஷிக தத்துவத்தின் பழைய வடிவம் பற்றி போதித்தவர்களில் இறுதியானவர்.

உத்யோதகாரர் : வாத்ஸ்யாயனர் எழுதிய நியாய சூத்ரம் எனும் நூலுக்கு விளக்கம் எழுதியவர். கி. பி. 6 அல்லது 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

உபநிஷத்துக்கள் : நான்கு வேதங்களின் இறுதியில் வரும் இறையியல் அல்லது மெய்யியல் தொடர்பான தத்துவ நூல்கள் என்பதால் இதனை வேதாந்தம் என்றும் உத்தர மீமாம்சம் என்றும் அழைப்பர். இவைகள் பிரம்மத்தைபற்றியும், பிரபஞ்சம் பற்றியும், பிரபஞ்சம் மித்யா எனும் நிலையாமையானது என்ற கொள்கையும், சீவ-பிரம்ம ஐக்கிய தத்துவத்தையும் வலியுறுத்தும் நூல்கள். இவைகளைப் பல ரிஷிகள் இயற்றியுள்ளனர். ஆதிசங்கரர் பத்து முதன்மையான உபநிஷத்துகளுக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். சங்கரரின் உபநிடத விளக்கங்களுக்கு அவருக்கு பின் வந்தவர்கள் விரிவான விளக்கங்கள் எழுதியுள்ளனர்.

உமாஸ்வாதி : கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண சமயத்திற்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.

வாசஸ்பதி மிஸ்ரர் : கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சம், அத்வைத வேதாந்தம் போன்ற பலதரப்பட்ட தத்துவங்களுக்கு இவர் எழுதிய விளக்கங்கள் மிக முக்கியமானவை.

வைபாசிகம் : புத்தவியல் கருத்தியல் அடங்கிய நூல்.

வைசேசிகம் : பட்டறிவின் அடிப்படையிலான உள்ளமைவியல் குறித்த இந்தியத் தத்துவம்.

வைசேசிக சூத்ரம் : வைசேசிக தத்துவத்தின் நிறுவனரான கணாதர் என்பவரால் எழுதப்பட்ட வைசேசிக தத்துவத்தின் அடிப்படை நூல்.

வல்லபர் : 15வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரத்திற்கு ஆத்திக அடிப்படையில் விளக்கம் அளித்தவர்.

வாசுதேவ சார்வபாஉமா : கி. பி. 15 மற்றும் 16வது நூற்றாண்டிற்கு இடைப்பட்டவர். நவ நியாயம் எனும் தத்துவத்தை வங்காளத்தில் அறிமுகம் செய்தவர்.

வசுபந்து : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். முதலில் வைபாசிக புத்த சமயத்தை பின்பற்றியவர். பின்னர் யோககார புத்த சமயத்தை தழுவியவர்.

வாத்ஸ்யாயணர் : கி. பி. 4வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய பழமையான நியாய சூத்திரம் எனும் நூல் இன்னும் நம்மிடையே உள்ளது.

வேதம் : இந்துசமயத்தின் புனித நூல். மிக விரிவான இலக்கியத் தொகுப்பு. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் மிகப்பழமையானது. இதனை ருக் வேதம், யசுர்வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என்று நான்காக தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள பகுதிகளுக்கு வேதாந்தம் அல்லது உபநிசத்துக்கள் என்பர்.

வேதாந்தம் : வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளதால் இதனை உத்தர மீமாம்சம் என்பர்.

வேதாந்த சூத்திரம் : இதனையே பிரம்ம சூத்திரம் என்பர்.

வேதாந்த சாரம் : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்தர் என்பவர் உபநிடதங்களின் சாரத்தை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார்.

விபாசா : இதனையே அபிதம்ம விபாசம் என்பர்.

விதி-விவேகா : மந்தன மிஸ்ரர் எழுதியது. பாட்ட மீமாம்சம் பற்றிய நூல்.

வித்யானந்தா : சமண சமய தர்க்கவியல்வாதி.

வித்தியாரண்யர் : விசயநகரப் பேரரசு தோண்றக் காராணமானவர். உபநிடதங்களின் தெளிவுரையாக இவர் எழுதிய பஞ்ச தசீ எனும் அத்வைத வேதாந்த நூல் மிகவும் பிரபலமானது. மேலும் சிருங்கேரி மடாதிபதியாகவும் திகழ்ந்தவர். சிறந்த அத்வைத வேதாந்தி

விஞ்ஞான பிட்சு : கி. பி. 16வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கிய தத்துவத்தை பின்பற்றிய ஆன்மிகவாதி.

விஞ்ஞான-வாதம் : அகநிலைக் கருத்துக் கொள்கை. புத்தவியலின் யோககார கருத்தியலின் தத்துவக் கொள்கை.

விஞ்ஞாப்திமாத்ரா சித்தி : வசுபந்து எழுதியது. விஞ்ஞான வாதத்திற்கு ஆதரவான தத்துவக் கொள்கை கொண்ட நூல்.

வினய பீடகம் : தொடக்க கால புத்த சமய மூன்று நூல்களில் ஒன்று. புத்த துறவற நெறிகள் விளக்குவது.

விசிட்டாத்துவைதம் : முழுமுதற் கொள்கை. இராமானுஜரின் வேதாந்த கருத்தியலின் தத்துவப் பார்வை கொண்டது.

விருத்திகாரர் : மீமாம்ச சூத்திரம் பற்றி தொடக்க காலத்தில் விளக்கியவர்களில் ஒருவர் எனச் சபரர் சுட்டுகிறார்.

யோகா சூத்ரம் : மனிதனுக்கும் அப்பாற்ப்பட்ட சக்திகளை அடைய மேற்கொள்ளப்படும் ஒரு பண்டைய பயிற்சி முறை. பதஞ்சலி முனிவர் இதனை அறிமுகப்படுத்தியவர்.

யோககார : மைத்ரேயநாதர் மற்றும் அசங்கர் ஆகியோர் நிறுவிய மகாயான புத்த தத்துவ கருத்தியல் எண்ணங்களே உண்மை என்பது இவர்கள் கொள்கை.

யோககார-பூமி-சாஸ்த்ரா : அசங்கர் எழுதியது. யோககார புத்தவியல் பற்றிய அடிப்படை நூல்.

பதஞ்சலி யோக சூத்திரம் : பதஞ்சலி முனிவர் இத்தத்துவத்திற்கு ஆசிரியர். இவரின் பதஞ்சலியோக சூத்திரம் எனும் நூல் உலகளவில் பெருமை பெற்றது.

யாக்ஞவல்கியர் : உபநிடதங்கள் பற்றி போதித்த முக்கிய தத்துவவாதி. இவரது மனைவி மைத்ரேயி கூட ஒரு வேதாந்தி ஆவர்.

யாக்ஞயவல்கிய ஸ்மிருதி : கி. பி. 100க்கும் 300வது ஆண்டுகளுக்கு இடைப்பட்டது.

யசுர்வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் மூன்றாவதாகும். வேத சடங்குகள் பற்றிய விளக்க நூல்.

யசோமித்ரா : வசுபந்துவின் அபிதம்ம கோசம் நூலுக்கான விளக்க நூல் எழுதியவர்.

யசோவிஜயா : சமண சமய தர்க்கவியல்வாதி.

————

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி–

வேதாந்த மார்க்கத்துக்குப் பெரும் வித்திட்ட அப்பெரியோர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர்
அத்வைத சம்பிரதாயத்தின் ஸ்ரீமத் ஆச்சாரியராகிய ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆவார்.
பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், ஆகியவற்றிற்கு ஒப்பற்ற பாஷ்யங்கள் (விளக்கவுரைகள்) எழுதி
நம் மார்க்கத்துக்குத் தொண்டு புரிந்தவர்–
“பிரம்ம சூத்திரத்திற்கு ’யுஷ்மதஸ்மத் ப்ரத்யய கோசரயோ:’ என்று தொடங்கி,
’அனாவ்ருத்தி: சப்தாத் இதி ஸூத்ராப்யாஸ: சாஸ்த்ரபரிஸமாப்திம் த்யோதயதி’ என்று முடியும் பிரபல பாஷ்ய உரை நூலை எழுதியவர்”

சாக்ஷாத் அவருடைய சீடர் பத்மபாதர் “பஞ்சபாதிகா” என்ற நூலில் சங்கர பாஷ்யத்தின்
முதல் நான்கு சூத்திர பாஷ்யங்களை விரிவாக விளக்கியுள்ளார். இதை மேலும் விவரிக்க, ராமானுஜர் காலத்திற்கு முன்பே
பிரகாசாத்ம யதிகள் “பஞ்சபாதிகா விவரணம்” என்ற அநு பாஷ்யம் செய்துள்ளார்.
“விவரண பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை ஏற்படுத்தியவர் இவர்.
இவ்விவரண நூலை மேலும் விளக்க, “ருஜு விவரணம்”, “தத்வ தீபனம்” முதலிய பாஷ்ய நூல்கள் 13,14,15-ஆம்
நூற்றாண்டுகளில் வெளிவந்தமை பண்டிதர்கள் அனைவரும் அறிவர்.

ஆனந்தகிரி அல்லது ஆனந்தஞானர் எனப்படும் அத்வைத ஆச்சாரியார் சங்கரருடைய
பிரம்ம சூத்திர பாஷ்யம், பத்து உபநிடத பாஷ்யங்கள், கீதா பாஷ்யம், உபதேச சாஹச்ரி கிரந்தம் ஆகியவற்றுக்கும்,
சங்கரருடைய பிரதான சீடராகிய சுரேஷ்வரருடைய பிருகதாரண்யக தைத்திரீய பாஷ்ய வார்த்திகங்களுக்கும், டீகைகளை இட்டுள்ளார்.

மேலும், ஒன்பதாவது/பத்தாவது நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் வாசஸ்பதி மிச்ரா என்பவர்
சங்கர பாஷ்யத்தை விவரிக்கும் “பாமாதி” என்னும் நூலை எழுதியுள்ளார்.
இவர் “பாமாதி பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை உண்டாக்கியவர்.
அதையும் மேலும் விவரித்து அமலானந்தர் என்னும் 13-ஆம் நூற்றாண்டு அத்வைதியர் “வேதாந்த கல்பதரு” என்ற ஒரு உரையையும் எழுதியுள்ளார்.

(4) இன்று சங்கர பிரம்ம சூத்திர பாஷ்யத்தை விளக்கும் “பிரகடார்த்த விவரணம்” என்ற நூல் பதிப்பில் உள்ளது.
இதில் பேதாபேத மதமாகிய பாஸ்கரமதம் கண்டிக்கப்படுகிறது. ஆனால் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தில் இருந்து ஒரு குறிப்பும் இல்லை.
ஆகையால் இது இராமானுஜர் காலத்திற்கு முந்தையது என்று கொள்ள இடமிருக்கிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் ஸ்ரீ ஆனந்தகிரியும் தம் சூத்திர பாஷ்யத்தில் “பிரகடார்த்த காரர்” என்று
இவ்வாசிரியரைக் குறிப்பிட்டு, இந்நூலிலிருந்து மேற்கோளும் எடுத்துள்ளார்.

அத்வைத பிரம்ம சூத்திர பாஷ்யகாரராகிய சங்கரர் எழுதிய வேறு நூல்கள் எவை எவை என்று பார்த்தால்,
சர்ச்சைக்கு இடமில்லாதபடி அவருடைய
(1) கீதா பாஷ்யம்,
(2) ஈசாவாஸ்ய-கேன (பத/வாக்ய பாஷ்யங்கள் இரண்டு)-கட-பிரஷ்ன-முண்டக-மாண்டூக்ய-ஐதரேய-தைத்திரீய-பிருகதாரண்யக-சாந்தோக்ய
ஆகிய பத்து உபநிடதங்களுக்கு அவரிட்ட பாஷ்யங்கள்,
(3) ‘உபதேச சாஹச்ரி’ என்ற கிரந்தம் ஆகியவற்றை சம்பிரதாயமும் வரலாற்று ஆராய்ச்சியும் ஒப்புக் கொள்கிறது.
இது தவிர விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் முதலிய நூல்கள் அவருடையதா என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சை உள்ளது –

ஸ்ரீ ராமானுஜர் காலம் கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டு என்பதும், அவர் ஆதி சங்கரர் கொள்கைகளைத் தம்
ஸ்ரீபாஷ்யத்திலும் கீதா பாஷ்யத்திலும் விமர்சித்துள்ளமையால் அவர் சங்கரர் காலத்திற்கு பின்பு வாழ்ந்தவர் என்பதும் திண்ணம்.
அத்துடன், ஸ்ரீ ராமானுஜரின் இளைய பருவத்தில் வயதில் முதிர்ந்தவராக இருந்த யாமுனாச்சாரியார் அல்லது ஆளவந்தார்,
தம் நூல்களான “சித்தி திரயம்” மற்றும் “ஆகம பிராமாண்யம்” எனும் நூல்களில் சங்கரரின் சில கொள்கைகளைச்
சுட்டிக் காட்டி அவைகளிலிருந்து மாறுபடுகிறார்.

சங்கர பாஷ்யத்தை விளக்க எழுந்த பாமாதி என்ற நூலின் ஆசிரியராகிய வாசஸ்பதி மிச்ரர்
தம் “நியாய சூசி நிபந்தனம்” என்னும் நூலில் “வருடம் 898-இல் முடிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.
இந்திய வருடக்கணக்கில் சாக வருடம் விக்கிரம வருடம் என்று இரண்டு கணக்குகள் உண்டு.
சாக வருடம் என்று எடுத்துக் கொண்டால் வாசஸ்பதி மிச்ரர் கூறும் தேதி கி.பி. 976 என்று கொள்ள வேண்டி வரும்.
விக்கிரம வருடம் என்று எடுத்துக் கொண்டால் கி.பி. 841 என்று கொள்ள வேண்டி வரும்.
இவ்விரண்டில் “விக்கிரம வருடம் 898”, அதாவது ஆங்கில வருடம் கி.பி. 841 என்று கொள்வது தான் சரி என்று
வரலாற்று ஆராய்ச்சியாளர் Hajime Nakamura தமது “A History of Vedanta Philosophy, Vol. 1” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

ஆளவந்தார் என்னும் யாமுனாச்சாரியார் தம் சித்தித்ரயத்தில் “ஸ்ரீவத்சாங்கர் என்னும் வேதாந்தி
சங்கரர் காலத்துக்கும் பாஸ்கரர் காலத்துக்கும் இடையே வாழ்ந்தார்” என்று குறிப்பிடுகிறார்.
இது சித்தி த்ரயம் ஐந்தாம் பாகம், முதல் அத்தியாயத்தில் உள்ளதென்றும் குறிப்பிடுகிறார்.
இதையும், வாசஸ்பதி மிச்ரர் கி.பி. 841-இல் நூற்கள் எழுதியிருப்பதையும் சேர்த்துப் பார்த்தால், சங்கரர் கால வரையறையைக்
கண்டிப்பாகக் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன் வைக்க வேண்டும். இதிலிருந்து சிருங்கேரி மடம் கூறும் “கி.பி. 788-820” என்ற
கணக்கு சற்று அடிபடுகிறது. ஓர் ஐம்பதாண்டுகளாவது தாமதமாக இருக்க வேண்டும்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதங்களும் ஸ்ரீ வேதாந்தங்களும் -ஸ்ரீ உபநிஷத்துக்கள் சுருக்கம் —

April 9, 2021

வேதம் – அநாதியானது
அதாவது ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இதை ஒருவரும் இயற்றவில்லை. மஹரிஷிகளால் த்யானத்தில்
காணப்பட்டவை வேதம். இந்த மஹரிஷிகள்”மந்த்ர த்ரஷ்டா ”எனப்பட்டனர். வேதம் ”அபௌருஷேயம்” எனப்படும்.
அதாவது
ஒருவராலும் இயற்றப்படாதது. உலகில் வேறு எந்த நூலோடு கூடவும் ஒப்பிட இயலாதது. ஏனெனில் வேதம் ஆரம்பமும்,
முடிவும் இல்லாதது. இது எப்போது தோன்றியது என்பதை வரையறுத்து சொல்லவும் இயலாது. பகவானின் மூச்சுக்காற்று
என்று சொல்லப்படுவதால், பகவானைப் போலவே வேதமும் ஒருவராலும் தோற்றுவிக்கப்படாதது. வேதம் மிக கவனமாக பல
லட்சக்கணக்கான ஆண்டுகளாக முன்னோர்களால் எழுத்துப் பிசகாமல், ஸ்வரம் பிசகாமல் மனனம் பண்ணி, வழிவழியாக,
இப்போதுள்ள தலைமுறை வரை கொண்டு வந்திருப்பது வேறு எங்கும் காணாத, கேட்கப்படாத விந்தை. உலகத்தில் மிகமிகப்
பழமையானவை ‘வேதங்கள்”.
வேதத்தில் தர்மத்தைச் சொல்லும் பாகம் ”ஸம்ஹிதை”.
தத்வத்தைச் சொல்லும் பாகம் ”உபநிஷத்” அல்லது ”வேதாந்தம்”.
வேதத்தை ”ஸ்ருதி” என்றும் சொல்வர்.
ஆசார்யன் உபதேசிக்க சிஷ்யன் கேட்க, பிறகு, அந்த சிஷ்யன் தன் சிஷ்யனுக்கு அல்லது சிஷ்யர்களுக்குச் சொல்ல
இப்படி வேதம், வழி வழியாகச் சொல்லப்பட்டது. தமிழில் இதை ”எழுதாக் கிளவி” என்று சொல்வர்.

க்ருஷ்ண த்வைபாயநர் – அச்வத்தாமா

ஒவ்வொரு த்வாபரயுகத்திலும் விஷ்ணுவின் அம்சமாக ஒரு ரிஷி ”வ்யாஸர்” என்கிற பெயருடன் தோன்றி வேதத்தை
ஒழுங்குபடுத்துகிறார். இது 28வது சதுர்யுகம். இந்த யுகத்தில். ”க்ருஷ்ண த்வைபாயனர்” என்கிற ரிஷி வ்யாஸராக அவதரித்து
வேதங்களை ஒழுங்குபடுத்தினார்.
அடுத்து வரும் த்வாபரயுகத்தில் த்ரோணாரின் புத்ரர் ”அச்வத்தாமா” (இவர் சிரஞ்சீவிகளில் ஒருவர்) வ்யாஸராகத்
தோன்றி, வேதங்களை ஒழுங்குபடுத்துவார் என்று சாஸ்த்ரக்ஞர்கள் கூறியுள்ளனர்.
வேதம் என்பது ஸ்வர்க்கம், பசு, புத்ரன் முதலிய இஷ்டத்தை அடைவதற்கும், நரகம் முதலிய
அநிஷ்டத்தை அடையாமல் இருப்பதற்கும் உபாயத்தை, லோக ரீதியில் இல்லாததான ஒரு விஷயத்தைச் சொல்கிறது;.
யாகம்,ஹோமம், தானம், த்யானம் – இவை தர்மங்கள்.
இவைகளுக்கு ப்ரமாணமாக இருப்பது—_மூலமாக இருப்பது ”வேதம்”. இதை ”வேதோமீ கில தர்ம மூலம்” என்று சொல்வர்.
இப்படி வேதத்தின் அருமை, பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இது பாரத நாட்டின் பொக்கிஷம்,
கலியுகத்தில், மனிதர்கள் மந்த புத்தி உடையவர்களாக இருப்பர் என்று வ்யாஸர் (க்ருஷ்ணத்வைபாயனர்) வேதத்தை நான்காக
பிரித்தார் என்று பொரியோர்கள் சொல்வார்கள்

வேதங்களை அத்யயனம் செய்ய ”ஸ்வரம்” முக்கியம். இதை ஐந்து விதமாக அத்யயனம்/ பாராயணம் செய்வார்கள்.

பாராயண முறை விவரம்
(1) வேத மந்த்ரங்களை சந்தி சேர்த்து பாராயணம் செய்தல்– இது ”மூலஸம்ஹிதை” எனப்படும்.
(2) வேத மந்த்ரங்களைப் பதம் பதமாக பிரித்து அத்யயனம் செய்தல் – இது ”பதஸம்ஹிதை” எனப்படும்
(3) ஒரு பதத்தை முன்னும், பின்னும் சொல்லுதல் (உ.ம்:அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம்
யஜ்ஞஸ்ய, யஜ்ஞஸ்ய தேவம், தேவம் ரித்விஜம் —இப்படி ) இது ”க்ரம ஸம்ஹிதை” எனப்படும்.
(4) பதங்களைச் சேர்த்து சேர்த்து மறுபடியும் பிரித்துச்சொல்லுதல் (உ.ம்: .அக்னிம் ஈளே, ஈளே அக்னிம்,அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம்,
ப்ரோஹிதம் ஈளே,ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் யஞ்ஞயஸ்ய,யஞ்ஞயஸ்ய ப்ரோஹிதம் இப்படி) – இது”ஜடஸம்ஹிதை” எனப்படும்.
(5) கடினமாக அத்யயனம் செய்தல் (உ.ம்: அக்னிம் ஈளே, ஈளே அக்னிம், அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் அக்னிம் ஈளே,
அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ஈளே ப்ரோஹிதம், ஈளே, ஈளே ப்ரோஹிதம், யஞ்ஞஸ்ய ப்ரோஹிதம் -இப்படி) இது ”கனம்” எனப்படும்

———

ஸ்ரீ வேதாந்தங்கள்-ஸ்ரீ உபநிஷத்துக்கள்

இவற்றில் முக்கியமானவை
1. ஈசோபநிஷத்
(ஈசாவஸ்ய உபநிஷத்)
2. கேநோபநிஷத்
3. கடோபநிஷத்
4. ப்ரச்னோபநிஷத்
5. முண்டக உபநிஷத்
6. மாண்டூக்ய உபநிஷத்
7. தைத்திரீய உபநிஷத்
8. ஐதரேய உபநிஷத்
9. சாந்தோக்ய உபநிஷத்
10. ப்ருஹதாரண்யக உபநிஷத்
இவற்றின் சுருக்கம் ”ப்ருஹ்ம ஸூத்ரம் ” . வ்யாஸர் இயற்றியது. 545 ஸுத்ரங்கள்

மேற்சொன்ன, பத்து உபநிஷத்துக்களுடன்கூட,
(11)ச்வேதாச்வதர உபநிஷத்
(12) அதர்வசிர உபநிஷத்
(13) அதர்வசிகோ உபநிஷத்
(14) கௌஷீதகி உபநிஷத்
(15) மந்த்ரிகோபநிஷத்
(16) ஸூபாலோபநிஷத்
(17)அக்நி ரஹஸ்யம்
(18) மஹோபநிஷத் –

———-

வேதமும் உபநிஷத்தும் கங்கை.
பாஞ்சராத்ர நூல் -யமுனை.
ஆழ்வார் அருளிச் செயல்கள் – சரஸ்வதி நதியைப் போல.
ஆக விசிஷ்டாத்வைதம் ”த்ரிவேணி வைஷ்ணவம்” எனப்படுகிறது.

————-

வேதாங்கங்கள் – ஆறு
1.சிக்ஷை 2. வியாகரணம் 3. சந்தஸ் 4. நிருக்தம் 5.ஜ்யோதிஷம் 6.கல்பம்

1) சிக்ஷை – பாணினி, நாரதர் முதலியவர்களால் செய்யப்பட்டது என்று சொல்வர். 32 சிக்ஷைகள் கிடைத்துள்ளதாகவும்,
இதில் சப்தங்களின் அக்ஷரங்கள், மூன்று ஸ்வரங்கள், இவற்றைச் சரியாக உச்சரிக்கும் விதம் சொல்லப்பட்டுள்ளது என்றும் சொல்வர்.

2) வ்யாகரணம் – இது இலக்கணம். அனுமானை நவ வ்யாகரண பண்டிதன் என்று புகழ்வார்கள்.
வ்யாகரணம். ஸமஸ்க்ருத மொழிக்கும், வேதத்துக்கும் முக்யமானது

3) சந்தஸ் – வேத மந்திரங்களின் மாத்திரை. ; உச்சரிப்பு,உச்சரிக்கும்போது உள்ள ஏற்ற, இறக்கம் சந்தஸ்எனப்படுகிறது.

4) நிருக்தம் – வேதச் சொற்களைப் பிரிக்கும் விதம் இதில் சொல்லப்படுகிறது. அரிய பதங்களின் அர்த்தங்களும்
நிகண்டுவும் இதில் உள்ளன. பாஸ்கர முனிவரால் செய்யப்பட்டது தற்போது வழக்கத்தில் உள்ளது.

5) ஜ்யோதிஷம் – வானஇயல் என கருதப்படுகிறது. வானசாஸ்த்ரமும் இதில்சொல்லப்படுகிறது. ஜ்யோதிஷத்துக்கு சம்பந்தப்பட்டது
வானவியல். இதில் வைதீக கர்மாக்களை செய்ய வேண்டியகாலம், பலன் விசாரிக்கப்படுகிறது.
ஸுர்யன், மற்றும் க்ரஹங்களைப் பற்றிய கணித சாஸ்த்ரம் உள்ளது.

6) கல்பம் – வேதங்களில் சொல்லும் கர்மாக்களை ”கல்பம்” சொல்கிறது.
காத்யாயனர், ஆச்வலாயனர், போதாயனர் – இவர்கள் அருளிய கல்பஸுத்ரங்கள் புகழ் பெற்றவை

உப அங்கங்கள் (உபாங்கங்கள்)
(வேதத்திற்கு உப அங்கமாக ஆறு ரிஷிகள் அருளியவை
1. சாங்கியம் 2. யோகம் 3.மீமாம்ஸம் 5.ந்யாயம் 6 வைசேஷிகம்

1. சாங்கியம் – ஸ்ரீ கபில முனிவர் அருளியது. 25 தத்வங்கள் இதில் சொல்லப்படுகின்றன. பஞ்ச அங்க யோகத்தால்,
ஞானத்தை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது.

2. யோகம் – ஸ்ரீ பதஞ்சலி முனிவர் இயற்றியது.இவர் இருபத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்வர்
யோகஸுத்ரம் என்கிற நுhலை இயற்றியிருக்கிறார்-ஸம்ஸ்க்ருதத்திற்கு மஹா பாஷ்யம் என்கிற இலக்கணமும் இயற்றியிருக்கிறார்
யோகத்தில்194 ஸுத்ரங்கள் உள்ளன.-=மனஸ், உடல், ஆத்மா இவைகளை யோகம் செய்து நெறிப்படுத்தி பகவானுக்கு அர்ப்பணிப்பதைப் பற்றிச்
சொல்கிறது. இது ”யோகஸித்தி” எனப்படுகிறது.
யோகஸுத்ரத்தில் 185 பழமொழிகள் வாக்யங்களாக உள்ளன.
இதில் நான்கு பிரிவுகள் உள்ளன அவை சமாதி, ஸாதனா, விபூதி, கைவல்யம் (மோக்ஷம்) எனப்படும்

3. மீமாம்ஸம் (பூர்வ மீமாம்ஸம்) – ஜைமினி முனிவர் அருளியது.12 காண்டங்கள் 60 அத்யாயங்கள் வேதத்தில் உள்ள தத்வ விசாரணைகள் இதில் உள்ளன.

4. மீமாம்ஸம் (உத்தர மீமாம்ஸம்) – இது வேதாந்தம் எனப்படும்.ஸ்ரீ வியாஸ முனிவர் அருளியது. இது வேதங்களின் ஸாரம்.
இது ”ப்ருஹ்ம ஸுத்ரம் ” என்றும் சொல்லப்படும். 4 அத்யாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்யாயத்துக்கும் 4பாதங்கள்.
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் இதற்கு பாஷ்யம் (உரை) எழுதியுள்ளார். இது ”சாரீரக மீமாம்ஸை” எனப்படுகிறது.
பகவத்ஸ்ரீ ராமனுஜரின் உரை ”ஸ்ரீ பாஷ்யம்” எனப்படுகிறது.
ஸ்ரீ மத்வாச்சாரியாரும் உரை எழுதியிருக்கிறார்.

5. ந்யாயம் – வேதத்தில் சொல்லப்பட்டவைகளைக் கடைந்து அதிலிருந்து எடுக்கப்பட்டவை ”ந்யாயம்” , 537 ஸுத்ரங்கள் உள்ளன.
”ந்யாயத்தை”அறிய 16 வழிகளைச் சொல்கிறது
(1) ப்ரமாணம் (2) ப்ரமேயம் (3) ஸம்சயம் (4) ப்ரயோஜனம்
(5) உதாரணம் (6) சித்தாந்தம் (7) அவயவம் (8) தர்க்கம்
(9) நிர்ணயம் (10) வாதம் (11) ஜல்பம் (12) விதண்டாவாதம்
(13) ஹேத்வபாஸம் (14) தந்த்ரம் (15) ஜோதி
16) நிக்ரஹஸ்தானம்

6. வைசேஷிகம் – ஸ்ரீ கணாத முனிவர் அருளியது. உலகில் உள்ள எல்லாப் பொருள்களின் குண ஆராய்ச்சி ஸம்பந்தமானது.
இவை ஆறு 1) த்ரவியம் – இது 9 பிரிவு –
அவையாவன – மண், ஜலம், தேஜஸ், வாயு, ஆகாயம், காலம், திசை, ஆத்மா, மனம்
2) குணம் – இது த்ரவியத்துடன்சேர்ந்தது. 24 பிhpவுகள் உள்ளன.
அவை ரூபம் , ரஸம், கந்தம்,பரிசம், சங்க்யை, பரிமாணம், பிரிதல், சம்யோகம், வியோகம்,முன்னிலை, பின்னிலை, புத்தி,ஸுகம், துக்கம்,
த்வேஷம்,முயற்சி குருத்வம், ஸ்நேஹம், சப்தம், வேகம், திரவத்வம், விருப்பு, வெறுப்பு, அடக்கம் – ஆக 24.
3) கர்மம் (வினை)
4)சாமான்யம் (த்ரவ்யம், குணம் கர்மத்திலே சேரும். இது உயர்வு, தாழ்வு என்று இரண்டு வகை)
5) விசேஷம் (கடைசியாக மீதமாகும் இரண்டு அணுக்களின் நிலை)
6) ஸமவாயம்(கர்த்தா, செயல், அணு , அண்டம் – இவற்றின் ஆராய்ச்சி) –

”ருக்” வேதத்திலிருந்து ஆயுர்வேதமும்
”யஜூர்” வேதத்திலிருந்து தனுர்வேதமும்
”ஸாம” வேதத்திலிருந்து கான வேதமும்
”அதர்வண” வேதத்திலிருந்து அர்த்த வேதமும் (அர்த்தசாஸ்த்ரம் – ஆட்சிக்கலை) தோன்றியது என்று சொல்வர்.

இப்படி மிக முக்கியமானதாக உள்ள உபநிஷத்துக்களை, ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ரஹ்ம ஸுத்ரம் இவைகளுடன் சேர்த்து
”ப்ரஸ்தான த்ரயம்” என்று சொல்வர்.

———

1 – ஈசாவாஸ்ய உபநிஷத்

இது குரு, சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதைப் போல அமைந்துள்ளது. 18 மந்த்ரங்கள் இந்த உபநிஷத்தில் இருக்கின்றன.
இதன் சுருக்கம் –
குரு, சிஷ்யனுக்கு உபதேசம்
பகவான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். வெளிப்புறக் காட்சிகளைக் கண்டு மயங்காமல், உள்ளே இருக்கும் பகவானை
த்யானம் செய்வதில் வைராக்யம் இருக்க வேண்டும். அதே சமயம், கர்மாக்களையும் செய்தல் வேண்டும். எல்லாவற்றிலும்
வ்யாபித்து, எல்லாவற்றையும் நியமித்து, எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக பகவான் இருக்கிறான். ஆதலால் எல்லாமே
பகவானுக்குச் சரீரம். எல்லாக் கல்யாண குணங்களும் நிறைந்தவன் பகவான். பகவானை அடைய தனியான கர்மமோ,
தனியான ஞானமோ போதாது. ஸத்கர்மாக்களைச் செய்து கொண்டே இருந்து, வினைகளைப் போக்கிக் கொண்டு, நல்ல
ஞானம் வரப்பெற்று மோக்ஷம் அடைய வேண்டும்.
இதற்கு பக்தி அல்லது ப்ரபத்தி வழி.
இதில் 18 மந்த்ரங்கள் உள்ளன. இந்த 18மந்த்ரங்களின் விசேஷத்தை விவரிப்பது தான் ஸ்ரீமத் பகவத்கீதையின்
18 அத்யாயங்கள். ஈசன் வாஸம் பண்ணுகிற விஷயத்தைச் சொல்வதால் ”ஈசாவாஸ்யம்” எனப்பட்டது.

————-

2 – கேநோபநிஷத்து

இது சிஷ்யன் கேள்வி கேட்கும் ரூபமாய் அமைந்துள்ளது.
சிஷ்யன் –
மனது தன் இஷ்டப்படி சஞ்ரிக்கிறது. இப்படியே கண், காது, வாக்கு தம்தம் கார்யங்களைச் செய்கிறது.
இது யாருடைய கட்டளையால்?

ஆசார்யன் –
ப்ராணனுக்கும் ப்ராணனாய், நீ சொன்ன எல்லாவற்றிற்கும் சக்தியை அளித்து, பகவான் இயக்குகிறான்.
அவன் அனுக்ரஹத்தாலே ஒவ்வொரு அவயவமும், வேலை செய்கிறது. எவ்வளவு தெளிவாக பகவானின் செயலை நீ அறிய
முயன்றாலும், ஒரு ”திவலை” அளவுதான் தெரிந்து கொண்டவன் ஆவாய். பகவானை நான் நன்கு அறியேன் என்று
வணக்கத்துடன் சொல்பவனே, பகவானை அறிந்தவன் ஆவான்.-தேவர்களே கூட பகவானை முழுமையாக அறிந்தவரில்லை.
இதற்கு ஒரு உபாக்யானம் (கதை) உள்ளது.

பகவான் தன்னுடைய பக்தர்களான தேவர்கள் மீதுள்ள அன்பினால் அஸுராதிகளை ஜெயிக்கிறான். ஆனால் தேவர்கள்,
தாங்களே அஸுராதிகளை ஜெயிப்பதாக கர்வம் கொண்டனர்.
இந்தக் கர்வத்தை அழிக்க, பகவான் திருவுள்ளம் கொண்டான்.
உடனே பரப்ரம்மம் (பகவான்) யக்ஷரூபமெடுத்து அவர்கள் எதிரில் நின்றது. அவர்களுக்கு இது யாரென்று தெரியவில்லை.

தேவர்கள், அக்னி தேவனைப் பார்த்து இந்த ”யக்ஷன்” யாரென்று தெரிந்து கொண்டு வா என்றார்கள்,
அக்னி தேவன் யக்ஷனிடம் வந்தான். யக்ஷன் நீர் யாரென்று கேட்க
அக்னிதேவன் தன் பெருமை எல்லாவற்றையும் சொன்னான். உன்னுடைய வீர்யம்
எப்படிப்பட்டது என்று யக்ஷன் கேட்க எல்லாவற்றையும் ஒரு நொடியில் எரித்து விடுவேன் என்று அக்னி தேவன் சொன்னான்.
பரப்ரம்மம் ஒரு புல்லை எடுத்து எதிரில் வைத்து அக்னியைப் பார்த்து இதை எரித்து விடு என்றது. அக்னி, வெகு துரிதமாகவும்,
முழு ஆற்றலோடும் முயன்றும் அந்தப் புல்லை எரிக்க முடியவில்லை. இவன் யாரென்று தெரியவில்லை என்று
அக்னிதேவன் திரும்பி விட்டான்.

தேவர்கள் வாயு தேவனை யக்ஷனிடம் அனுப்பினார்கள்.
யக்ஷன், உன் பலம் எப்படிப்பட்டது என்று கேட்க,
வாயுதேவன், நான் எல்லாவற்றையும் என் ஆற்றலால் தூக்கி எறிந்து விடுவேன் என்றான்.
பரப்ரம்மம் இந்தப் புல்லை எடுத்துச் செல் என்றது. வாயுதேவன் தன்னுடைய சக்தியை எல்லாம் ப்ரயோகித்தும் புல்லை அசைக்க
முடியவில்லை. வாயுதேவனும் திரும்பி விட்டான்.
இவர்கள் இருவரும் பூமி, அந்தரிக்ஷம், ஸ்வர்க்கம் என்ற மூன்று உலகங்களுக்கும் ப்ரதான தேவதைகள் இவர்களால் முடியவில்லை.

மூன்றாவது ப்ரதான தேவதையான இந்த்ரனை தேவர்கள் அனுப்பினார்கள். இப்போது பரப்ரம்மம் மறைந்து விட்டது.
இந்திரன் திகைத்து நின்றான். அச் சமயம் ஆகாயத்தில் ஸர்வாபரண பூஷிதையாய் ஒரு ஸ்த்ரி தோன்றினாள்.
அவள் பார்வதி தேவி.
இந்த்ரன் அவளிடம் , ”யார் அந்த யக்ஷன்” என்று கேட்டான்.
”இந்திரனே, அது யக்ஷனல்ல! பரப்ரம்மம்.பரப்ரம்மத்தின் அனுக்ரஹம் இல்லாவிடில் உங்களால் ஒரு அணுவைக் கூட அகற்ற முடியாது.
உங்கள் கர்வத்தை விட்டு பரப்ரம்மத்தின் பெருமையை உணருங்கள்! என்று பார்வதி சொன்னாள்.
இந்திரன், இந்த உண்மையை எல்லாத் தேவர்களுக்கும் எடுத்துச் சொல்லி கர்வத்தை ஒழித்தான்.

பரப்ரம்மம் அனந்த கல்யாண குணங்களை உடையது.
வேத, வேதாங்கங்களை அத்யயனம் செய்து, ஸத்யஸந்தர்களாக இருப்பவர்களுக்கு ப்ரஹ்மஜ்ஞானம் கூடி வரும்.
நல்ல ஒழுக்கம், இந்த்ரியநிக்ரஹம், தபஸ் உள்ளவர்களுக்கு, ப்ரம்மவித்யை நிலையாக நிற்கும்.
இந்த வித்யையைப் பெற்றவர்கள், பகவான் வீற்றிருக்கும் உலகிற்குச்சென்று உயர்ந்த புருஷார்த்தத்தை அடைவர் என்று சொன்னார்.

இதில் நான்கு காண்டம்.
”கேந” என்கிற சொல்லைக் கொண்டு தொடங்குவதால் இது ”கேநோபநிஷத்து” எனப்பட்டது.

————

3 – கடோபநிஷத்து

இது க்ருஷ்ண யஜூர் வேதத்தில் உள்ளது.
”கடசாகை”யைச் சேர்ந்த உபநிஷத். ”கடா” என்பவரைச் சார்ந்த சாகை கடசாகை. இதில் நசிகேதஸ் உபாக்யானம் உள்ளது.
இது தைத்திரீய ப்ராம்மணத்திலும் (3-11-8) உள்ளது. மஹா பாரதத்தில் உள்ளது சிறிது வேறுபடும்.
இந்த உபநிஷத்தில் ”வல்லி” என்கிற பிரிவுகள் ஆறு உள்ளன. மும் மூன்றாக இரண்டுஅத்யாயங்கள் உள்ளன.

வாஜச்ரவஸர் (கௌதமர் என்றும் சொல்வர்) என்கிற மஹரிஷி தன் சொத்துக்களை எல்லாம் தக்ஷிணையாக கொடுத்து ஒரு யாகம் செய்தார்.
மிகவும் வயது முதிர்ந்த பசுக்களைத் தானம் செய்ய முற்பட்டபோது இவர் குமாரரான நசி கேதஸ், தந்தை இப்படித் தானம் செய்வதால்
(ஒன்றும் உபயோகப்படாத பசுக்களை) இருள் சூழ்ந்த உலகில் அல்லவோ வசிக்க நேரிடும் என்கிற தர்ம சாஸ்த்ரத்தை உணர்ந்து அதற்காக வருந்தி
தந்தையிடம் தன்னையே தானம் செய்யும்படி ஒரு தரத்துக்கு மூன்று தரம் வேண்டினான்.
தந்தைக்குக் கோபம் வந்து ”உன்னை யமனுக்குத் தானம் பண்ணுகிறேன்” என்று சொன்னார்.
நசிகேதஸ்,தந்தையின் வாக்கைச் சத்யமாக்க யம லோகம் செல்லப் புறப்பட்டான்.
வாஜச்ரவஸர் வருத்தம் மேலிட்டு, யமன் தன்னுடைய க்ருஹத்தில் இல்லாத சமயமாக பார்த்து நசிகேதஸ் என்கிற குமாரனை
யம லோகத்துக்குச் செல்ல அனுமதித்தார்.

அப்படியே யமனுடைய உலகத்தில் அவனுடைய க்ருஹத்துக்குச் சென்ற நசிகேதஸ், யமன் க்ருஹத்தில் இல்லாததால், அவன்
வீட்டிற்கு திரும்பும் வரை வீட்டு வாசலிலேயே காத்திருந்தான்.-மூன்று நாட்கள் அன்ன, ஆகாரமின்றி பட்டினியுடன் காத்திருந்தான்
யமன் வந்ததும் அதிதியான ப்ராம்மணச் சிறுவன் பட்டினியுடன் இருப்பதை அறிந்து அதற்கு பிராயச்சித்தமாக மூன்று வரங்களை கொடுப்பதாகவும்,
வரங்களை கேட்க வேண்டும் என்றும், நசிகேதஸைக் கேட்டுக் கொண்டான்.

நசி கேதஸ் கேட்ட முதல் வரம் – தன்னுடைய தந்தை துயரம் நீங்கி தன்னை அனுக்ரஹிக்க வேண்டும் என்றும், 2வது வரமாக
வயோதிகம், மரணம் இவை இல்லாத ஸ்வர்க்கமான மோக்ஷத்தை அடைய, அக்னி விஷயமாக ஹோமத்தைச் செய்யும் விதத்தைச்
சொல்ல வேண்டும் என்று கேட்டான்.-இந்த இரண்டு வரங்களும் யமனால் அருளப்பட்டன.
மூன்றாவது வரமாக இறந்தவனுடைய உண்மை நிலையை, ஆத்ம தத்துவத்தைச் சொல்லுமாறு கேட்டான். யமன் இந்த
விவரத்தை உடனே சொல்லாமல் பலவிதங்களில் நசிகேதஸ்ஸை, பரீக்ஷை செய்துவிட்டு பிறகு சொன்னான்.

”ஜீவாத்மா” பிறப்பு, இறப்பு அற்றவன். உடல் அழியுமே தவிர ஜீவாத்மா அழியாது. ஜீவாத்மா, பரமாத்மா இருவரும் ஹ்ருதயத்தில் இருக்கின்றனர்.
ஜீவாத்மாவுக்கு உடம்பு-ஒரு ரதம்.
புத்தி – ஸாரதி. மனது – கடிவாளம்.
புலன்கள் – குதிரைகள்.
விஷயங்கள் – அவற்றின் புலங்கள்.
இவற்றைக் கொண்டு ஜீவன், சுக துக்கங்களை அனுபவிக்கிறான். அறிவுள்ளவன் இவற்றை தக்கவாறு பயன்படுத்தி பகவானை அடைகிறான்.
பரமாத்மாவை அடைவதே ”ஸ்ரேயஸ்”.
ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும்.

ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும். வேர் மேலாகவும், கிளைகள் கீழாகவும், உள்ள இந்த ஸம்சாரம் என்கிற மரத்தில்,
எல்லாம் பகவானின் இஷ்டப்படி நடக்கிறது. கண்ணால் காணமுடியாத பகவானை மனத்தினால் காண,யோகத்தில் நிலை பெற வேண்டும்.
பலவகை நாடிகளும் தலையில் உள்ள ”ஸுஷும்நா ” நாடி வழியாகச் செல்ல அப்போது ஜீவனும் சென்று பகவானின் இருப்பிடம் சென்று விளங்குவான்.
பகவானை உபாஸித்து அவனுக்கு அடிமையாக பரமபதத்தில் ஸுகானுபவம் பெற்று வாழ்வான் என்று யமன் சொல்லி முடித்தான்.
கடோபநிமூத்தில் மிக விவரமாக இது சொல்லப்படுகிறது.

—————-

4 – பிரச்னோபநிஷத்து

இதில் 6 ப்ரச்னங்கள். ”ப்ரச்னம்” என்றால் கேள்வி.
ஒவ்வொரு ப்ரச்னமும் ஒரு மஹரிஷியின் கேள்வியாக அமைந்து அதற்கான பதிலை விளக்குகிறது.
ஸுகேசர், சைப்யர்,ஸெளர்யாயணி, கௌஸல்யர், பார்க்கவர், கபந்தி என்று ஆறுரிஷிகளும்,
பிப்பலாத மஹரிஷியை அணுகி, ஒரு வருட காலம் தபஸ், ப்ரம்மச்சர்யம், ச்ரத்தை இவைகளுடன் இருந்து
மஹரிஷியிடம் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர்.

ஒவ்வொரு மஹரிஷியின் கேள்வியும், மஹரிஷியின் பதிலும் சுருக்கமாகத் தரப்படுகிறது.

1-முதலில் கபந்தி – ப்ரஜைகள் எங்கிருந்து பிறக்கின்றன?
பிப்பலாதர் –
ப்ரஜாபதியானவர், ப்ரஜைகளை ச்ருஷ்டிக்க எண்ணி,”ரயி”, ”ப்ராணன்” என்ற இரண்டையும் ச்ருஷ்டித்தார்.
”ப்ராணன்” என்பது ஜீவ சமஷ்டி .”ரயி” என்பது அதற்கு உடலாக இருக்கின்ற ப்ரக்ருதி.
ஸ்ருஷ்டிக்கும் பகவானே, ஸம்வத்ஸரம், மாஸம், நாள் என்று கால ரூபமாக இருக்கிறான்.
தக்ஷிணாயனத்தின் வாயிலாக சில ப்ரஜைகள் சந்திரலோகம் (ஸ்வர்க்கம்) சென்று பலனை அனுபவித்து திரும்புகின்றனர் (மறுபடியும் பிறவி)
இவர்கள் கர்மானுஷ்டானத்திலேயே நோக்கம் உள்ளவர்கள்
வித்யையை அனுஷ்டித்து ஆத்மாவை அறிந்தவர் உத்தராயணம் வாயிலாக ஸுர்ய மண்டலம் சென்று
மறுபடியும் திரும் பமாட்டார்கள்.
த்ரிகரண சுத்தியும், தபஸ்ஸ@ம், ப்ரஹ்மசர்யமும் உள்ளவர்களுக்கு ப்ரக்ருதி மண்டலத்துக்கு மேலேயுள்ளது ப்ரஹ்மலோகம்.

2 – பார்க்கவர் கேட்பது –
ப்ரஜைகளின் உடம்பைத் தாங்குபவர் எவர்?
ப்ரகாசப்படுத்துகிறவர் எவர்?
இவர்களில் யார் சிறந்தவர்?

பிப்பலாதர் பதில் –
பஞ்சபூதங்களும், இந்திரியங்களும் உடம்பைத் தாங்குகின்றன. இதில் ப்ராண வாயு சிறந்தது. இதை நிரூபித்தும்
ப்ராண வாயு மற்ற இந்த்ரியங்களுக்கு உணர்த்தியது.
வாக்கு, கண், மனசு, காது போன்றவை. ப்ராணனைப் பலவாறு புகழ்ந்தன.
இந்த ஸ்தோத்ரம் இங்கு விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது ).

3 – கௌசல்யரின் கேள்வி –
இந்த ப்ராணவாயு எங்கிருந்து பிறக்கிறது?
எப்படி உடலில் வந்து சேருகிறது?
எவ்வாறு தன்னைப் பிரித்துக் கொள்கிறது?
எந்த வழியாக வெளியே கிளம்புகிறது?
உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி இருந்து வருகிறது?

பிப்பலாதர் பதில் –
பரமாத்மாவிடமிருந்து (பகவான்) ப்ராண வாயு பிறக்கிறது. ஒவ்வொருவர் உருவத்திற்கும் நிழல் இருப்பதைப்
போல, ஜீவனின் உடலில் சேர்ந்து( ப்ரவேசித்து) மனசும் மற்ற இந்த்ரியங்களும் பிரியாதபடி இருக்கிறது.
முகபாவத்தில் இருக்கிறது. ஹ்ருதயத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கீழ் இந்த்ரிய ஸ்தானத்தில் ”அபானன்” என்கிற பெயராலும்,
ஹ்ருதய நாடித்துடிப்பில் ”வ்யானன்” என்கிற பெயராலும்,
பாப புண்ய பலன் பெறும் நாடியில் – ”உதானன்” என்கிற பெயராலும்,
வயிற்றில் அக்னியாக ”ஸமானன்” என்கிற பெயராலும்,ப்ராணவாயு வசிக்கிறது.

கீழ் இந்தீரிய ஸ்தானம் – அபானன் – ஸுர்யன்
வயிற்றில் – ஸமானன் – பூமி
ஹ்ருதயத்தில் வ்யானன் – ஆகாயம்
புண்ய, பாப நாடித் துடிப்பில் – உதானன் – வாயு
முக்ய ப்ராணன் – தேஜஸ்
இப்படி பஞ்ச பூதங்களுக்கு சம்பந்தப்படுத்துவர்.

(அதனால்தான் ஆகாரம் உட்கொள்ளும் முன்பாக ப்ராணாஹுதி என்று ப்ராணாயஸ்வாஹா , அபாநாயஸ்வாஹா ,
வ்யாநாயஸ்வாஹா , உதானாயஸ்வாஹா , ஸமாநாயஸ்வாஹா , ப்ரஹ்மணேஸ்வாஹா … என்று துளி சாதம் எடுத்துக் கொண்டு
பல்லில் படாமல் ஒவ்வொரு மந்த்ரத்தையும் சொல்லி சாப்பிடுகிறோம்).

4. ஸெளர்யாயணி முனிவர் கேள்விகள் –
தூங்கும்போது உடலில் எவை வேலை செய்கின்றன?
எவை வேலை செய்யாமல் உள்ளன?
ஸ்வப்னம் காண்பது எப்படி?
எதற்கு சுகம் உண்டாகிறது?
எல்லாம் எங்கே தங்கி நிற்கின்றன?

பிப்பலாதர் பதில் –
உறங்கும்போது எல்லா இந்த்ரியங்களும் மனத்தில் லயிக்கின்றன. அப்போது ப்ராண, அபான, வாயுக்கள் வேலை செய்கின்றன.
அப்போது ப்ராணன் (ஜீவன் என்று பொருள் கொள்க), மனசை உடலிலேயே பரப்ரம்மம் உள்ள இடத்திற்கு கொண்டு செல்கிறது.
அப்போது வழியில் கண்டது, கேட்டது, எப்போதோ அனுபவித்தது, அனுபவிக்காதது, இருப்பது,
இல்லாதது எல்லாம் ஸ்வப்னத்தில் – ஸ்வப்ன அனுபவத்தில் வருகிறது.
தேஜஸ் (பராமாத்மா)ஸினால் தாக்கம் ஏற்பட்டு ஸ்வப்னமும் போய் சுகத்தை ஜீவன் அனுபவிக்கிறது.
எல்லாம் இப்படி தன்னிடத்தில் லயித்து இருக்கும்போது ஜீவன், பரமாத்மாவிடம் தங்கி நிற்கிறான்.
இப்படி உபாசிப்பவன் எல்லாவற்றையும ;அறிந்தவன் ஆவான்.

5 – சைப்யரின் கேள்வி –
ப்ரணவத்தை சாகும் வரை உபாஸிப்பவன் பெறும் உலகம் எது?

பிப்பலாதர் பதில் –
ஒற்றை மாத்ரை உள்ள ப்ரணவத்தை உபாஸிப்பவன் தபஸ், ப்ரஹ்மச்சர்யம், ஆஸ்திக்யம், என்ற
செல்வங்களுடன் உயர்ந்ததை அனுபவிப்பான்.
இரண்டு மாத்திரைஉள்ள ப்ரணவத்தை உபாஸிப்பவன் ஸ்வர்க்க லோகம் வரை(சந்திர லோகம்) சென்று நல்ல
அனுபவங்களை அனுபவித்து திரும்புவான்.
மூன்று மாத்ரை கொண்ட ப்ரணவத்தினாலே, பரமான ப்ரஹ்மத்தை உபாசிப்பவன், எல்லா பாபமும் போய்
பயத்தையும் போக்குகின்ற பரமபுருஷனைக் கண்ணாலே காண்பான்.

6 – ஸுகேசர் கேள்வி –
ஷோட சகல புருஷன் யார்?
எங்கு உள்ளான்?

பிப்பலாதர் பதில் –
பதினாறு கலைகளுக்கு புருஷன். இந்த உடலிலேயே இருக்கிறான். சிந்தனை செய்து ப்ராணன், ச்ரத்தை,
5 பூதங்கள், இந்த்ரியம், மழை, அன்னம், வீர்யம், தபஸ், மந்த்ரம், கர்மம், பலன், பேர் என்கிற பதினாறையும் அமைத்துக்
கொண்டால் இந்த ஜீவனுக்கும் மேலானவன் ப்ரம்மம் – பரமாத்மா என்று அறிவான்.
16 கலைகளும் ஜீவனிடம் அடங்கியுள்ளன.
இப்படி அறிந்தவனுக்கு ம்ருத்யு பயம் இல்லை. பொதுவாக ப்ராண வாயு முக ஸ்தானம் என்றும், இதுவே கீழ் இந்திரிய
ஸ்தானத்தில் அபான வாயு (அபானன்), வயிற்றில் அக்னி இருக்குமிடத்தில் ஸமானன், ஆத்மாவின் இருப்பிடமான
ஹ்ருதயத்தில் ஆயிரக்கணக்கான நாடிகளில் வ்யானன், புண்யத்தினால் பெறப்படும் புண்ய லோகம், பாவத்தின் பலனாக
பெறப்படும் பாப லோகம், இரு வினைகளின் பயனாக மனித உலகத்தையும் பெற வழியாக உள்ள நாடிகளில் உதானன் என்றும்
ப்ராண வாயு தன்னை பிரித்துக் கொண்டு இயங்குவதாக சொல்லப்படுகிறது.

————-

5 – முண்டகோபநிஷத்து

ப்ரஹ்மா, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமான ”ப்ரஹ்ம வித்யை”யை, தன் மூத்த குமாரரான அதர்வர் என்பவருக்கு உபதேசித்தார்.
இந்த வித்யை அங்கீர், பாரத்வாஜர், ஸத்யவாஹர் வழியாக ”அங்கிரஸுக்கு” வந்தது.
சௌநகர் என்கிற ரிஷி ,அங்கிரஸை அணுகி
”எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகும்?” எனக் கேட்டார். அதற்குரிய விளக்கம் தான்—-முண்டகோபநிஷத்து.

”பரை”, ”அபரை” என்கிற இரண்டு வித்யைகளை அறிய வேண்டும்.
அபரை என்பது வேதங்களும் அவற்றின் அங்கங்கள் உபாங்கங்கள். இவற்றை அர்த்தத்துடன் அத்யயனம் செய்து
அடையப்படும் தெளிவான ப்ரஹ்ம ஞானமே அபர வித்யை (உலக வாழ்க்கைக்கு பயன்படும் பலவகையான
கல்விகளைச் சொல்வது என்றும் சொல்லப்படுகிறது).

”பரை” – என்பது அழிவே இல்லாத பர ப்ரஹ்மத்தைப் பெற வழியாக உள்ள ஸாக்ஷாத்காரம். இது ஜ்ஞானிகளுக்கு உரியது.

ப்ரஹ்மத்திற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால்,
தன் த்ரேகத்திலிருந்து நூல் உண்டாக்கி அதனால் கூடு ஒன்று செய்து அதில் இருக்கும் ”ஊக்ணநாபி” என்கிற சிலந்திப் பூச்சியே.
நித்ய கர்மாக்களை விடாமல் செய்தால் ப்ரஹ்ம லோகம் வரையிலுள்ள பலன்கள் எல்லாம் கர்மம் செய்வதாலேயே வந்து சேரும்.

பரமபுருஷன் – பகவான் என்று அறிந்து அனுஷ்டான பரர்களாக இருப்பவர்கள் ஸுர்ய மண்டலம் வழியாக பகவானின் உலகத்தை அடைவர்.
காம்யங்களை விட்டு, நித்ய கர்மாக்களை விடாமல் செய்து வேத வேதாந்த ஞானமுள்ள குருவை அடைந்து அவர் மூலம் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்.

ப்ரணவம் என்கிற வில்லில் ஜீவாத்மா என்கிற அம்பை உபாஸனையால் கூர்மை யாக்கி வில்லில் தொடுத்து, ப்ரஹ்மம் என்ற இலக்கில் எய்ய வேண்டும்.
இதுதான் மோக்ஷத்திற்கு உபாயம். இப்படிப்பட்ட மோக்ஷ ராஜ்யத்திற்கு உரியவனான பகவான் ஹ்ருதயத்திலும் இருக்கிறான்.
இதை அறிந்தவன் த்வேஷம், வினைகள் எதுவும் இல்லாதவனாக ஆகிறான்.

உடல் ஒரு வ்ருக்ஷம். இதில் இரண்டு பக்ஷிகள் உள்ளன. ஒன்று வ்ருக்ஷத்தில் உள்ள பழங்களை சாப்பிடுகிறது
இன்னொரு பக்ஷி எதுவும் சாப்பிடாமல் ஒளியுடன் உள்ளது.
கர்மானுஷ்டானன் ப்ரஹ்ம வித்யை செய்யத் தகுந்தவன். ப்ரஹ்ம வித்யையை அனுசரிப்பவனை ஆராதிப்பவனுக்கு ஸர்வ லோகமும் பயன்.

ஸ்ரீ பாஷ்யத்தில் சொல்லப்பட்ட விவேகம், விமோகம், அப்யாஸம், க்ரியை, கல்யாணம், அனவஸாதம், அனுத்தர்ஷம் ஆகிய ஏழும் வேண்டும்.

1) விவேகம் – சாஸ்த்ர சம்பந்தமான சுத்தமான ஆஹாரத்தை எடுத்துக் கொண்டு வாழ்தல்.
2) விமோகம் – பற்றற்று இருப்பது.
3) அப்யாஸம் -பக்திக்கு இலக்கான பகவானையே சிந்தனை செய்வது.
4) க்ரியை – வைதீக கர்மானுஷ்டானம்.
5) கல்யாணம்- சத்யம், முக்கரணங்களுடன் (மனோ, வாக்கு,காயம்) ஒத்திருப்பது. தயை – நன்கொடை, அஹிம்சை – பிறருக்கு துன்பம் நினைக்காமை என்பன.
6) அனவஸாதம் – சோர்வில்லாமல் இருப்பது.
7) அனுத்தர்ஷம் – அதிக மகிழ்ச்சிக்கு ஆளாகாமல் இருத்தல்.

பக்தி யோகம் செய்ய இவை எல்லாமும் வேண்டும். இதனால் பகவானை அடையலாம்.

இந்த உபநிஷத் மூன்று பிரிவாக உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு கண்டங்கள்.

————-

6 – மாண்டூக்யோபநிஷத்து

ஆறு கண்டங்கள். இது ப்ரணவத்தில் உள்ள அக்ஷரங்களைப் பிரித்துச் செய்யப்படும் உபாஸநத்தைப பற்றிச் சொல்கிறது.
இந்த அக்ஷரங்களை வைச்வாநரன், தைஜஸன், ப்ராஜ்ஞன் – என்றிப்படி உபாஸிக்க வேண்டும்.
ஜீவனுக்கு விழிப்பு,ஸ்வப்நம், உறக்கம், மோக்ஷம் என்று நான்கு நிலைகள் உள்ளன.
ஒவ்வொரு நிலைக்கும் ஒரு மூர்த்தி.
இம் மூர்த்தி ஸ்ருஷ்டி, ஸ்திதி,வ்யாபாரங்களுக்குக் காரணன்.
சாந்தமாக இருப்பது நான்காவது மூர்த்தி. அதுவே ஆத்மா.
வைச்வாநரன் – அநிருத்தனையும்,
தைஜஸன் – ப்ரத்யும்நனையும்,
ப்ராஜ்ஞன் – ஸங்கர்ஷணனையும்,
துரீயன் – வாஸுதேவனையும் குறிக்கும்.
(உபநிஷத் பாஷ்யகாரர்–ப்ரஹ்மஸுத்ரத்தில் உபயலிங்க அதிகரணத்தில் விவரம் உள்ளது).

ஜீவனின் மூர்த்தி வ்யூஹம் குணங்கள்–நிலை

விழிப்பு வைச்வாநரன் அநிருத்தன் சக்தி,தேஜஸ் –(ஜாக்ரந் மூர்த்தி) ரக்ஷணம் – அறிவு
ஸ்வப்னம் தைஜஸன் ப்ருத்யும்னன் ஐச்வர்யம்,(ஸ்வப்னமூர்த்தி) வீர்யம்,ஸ்ருஷ்டி, தர்மம்
உறக்கம் ப்ராஜ்ஞன் ஸங்கர்ஷணன் க்ஞானம், பலம்(ஸஷுப்த ஸம்ஹாரம் மூர்த்தி) சாஸ்த்ரப்ரசாரம்
மோக்ஷம் வாசுதேவன் வாஸுதேவன் (மூர்ச்சாமூர்த்தி)

*முதல் வ்யூஹம் – வாஸுதேவன் என்றும், மொத்தம் நான்கு வ்யூஹங்கள் என்றும் சொல்வர். மூலவாஸுதேவனை –
பரவாஸுதேவன் என்றும், இந்த முதல் வ்யூஹ வாஸுதேவனை வ்யூஹ வாஸுதேவன் என்றும் சொல்வர்.
வ்யூஹ வாஸுதேவன் எல்லாவற்றிற்கும் பொது.
விழித்திருப்பவன் – எல்லாவற்றையும் செய்கிறான். ஸ்வப்னத்தில் உடலின் செயல் இல்லை.

ஜீவன் செய்யும் த்யானத்திலும் நான்கு நிலை:
1) வெளிவிஷயங்களிலே ஈடுபட்டுக் கொண்டே பகவானை சிந்தித்தல் – ஜாக்ரத் த்யானம்
2) வெளி விஷயங்கள் இல்லாமல், மனஸ் மட்டும் வெளிவிஷயங்களில் பற்றைவிடாமல்——பகவத்சிந்தனை—–ஸ்வப்ந த்யானம்
3) வெளிவாஸனையோடுமட்டும் கலப்புண்ட சிந்தனை——ஸுஷுப்தி த்யானம்
4) எல்லாமும் விலக பகவத் த்யானம் மட்டுமே இருப்பது—-மூர்ச்சா த்யானம்

பகவானின் லீலா விபூதியில் (உலகங்களையெல்லாம், ஜீவன்களை எல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் விளையாட்டில்)
ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹாரங்களில் வாஸுதேவ மூர்த்தியிடமிருந்து ஸங்கர்ஷண மூர்த்தி,
அதனின்று ப்ரத்யும்னமூர்த்தி, அதனின்று அநிருத்தமூர்த்தி தோன்றுகிறது.

ஸங்கர்ஷணன் – ஜீவ தத்துவத்திற்கு அபிமானி.
ப்ரத்யும்னன் -மனஸ்ஸுக்கு அபிமானி.
அநிருத்தன் அஹங்காரத்திற்கு அபிமானி.

மோக்ஷ ஆசை யுள்ளவர்கள் முதலில் அநிருத்தன், பிறகு ப்ரத்யும்னன், பிறகு ஸங்கர்ஷணன் அதன் பிறகு வாஸுதேவ உபாஸனம் செய்ய வேண்டும்.

ப்ரணவத்திற்கு வ்யூஹ மூர்த்தி விஷயமாக விவரித்துச் சொல்லப்படுகிறது.
அதர்வ வேதத்தைச் சேர்ந்த பிப்பலாத சாகையில் உள்ள ப்ரச்னோபநிஷத்து, முண்டக சாகையில் உள்ள முண்டகோபநிஷத்து,
மண்டூக சாகையில் உள்ள மாண்டோக்ய உபநிஷத்து இவை பிரஸித்தி பெற்றவை.

ஆத்மாவின் பதங்கள் நான்கு.
வைச்வாநரன், தைஜஸன், ப்ராஜ்ஞன், துரீயன்.
ஜீவனுடைய நான்கு அவஸ்தைகள்
விழிப்பு,ஸ்வப்னம், ஸுஷுப்தி மோக்ஷம்.-இந்த நான்கு அவஸ்தைகளை (நிலைகளை) நிர்வஹிப்பது நான்கு மூர்த்திகள் என்று சொல்லப்படுகிறது.

————-

7. தைத்திரீயோபநிஷத்து

கிருஷ்ண யஜூர்வேதம் – தைத்திரீய சாகை – ஆரண்யகத்தில் ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னம் என்பதாக தைத்திரீயோபநிஷத்து உள்ளது.

ஐந்தாவது (முதல் ப்ரச்னம்) – சீக்ஷா வல்லி, ஆனந்த வல்லி என்கிற ப்ரஹ்ம வல்லி, ப்ருகு வல்லி என்று மூன்று பிரிவுகள்.

ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னங்கள், ஸாம்ஹிதி உபநிஷத்,வாருணீ உபநிஷத் , யாஜ்ஞிகீ உபநிஷத் என்றும் மூன்றாகப் பிரிப்பர்.

சீக்ஷாவல்லிக்கு ஸாம்ஹிதீ உபநிஷத் என்றும், ஆனந்த வல்லியும், ப்ருகுவல்லியும் – ஆனந்தமயமான ப்ரஹ்ம வித்தையைச் சொல்வதால் ஸைஷா ,
பார்கவீ, வாருணீ வித்யா என்று சொல்லப்பட்டதற்கு இணங்க
வாருணீ உபநிஷத் என்றும் நாராயண உபநிஷத் – யாஜ்ஞகீ உபநிஷத் என்றும் சொல்லப்படுகிறது .

வேதாங்கங்களில் கூறப்படும் சிக்ஷையைச் சொல்வதால், சீக்ஷாவல்லி என்றும், ஆநந்தமய வித்யையைச் சொல்வதால் ஆனந்த வல்லி என்றும்,
”ப்ரஹ்மவித் ஆப்நோதிபரம்…..” என்ற ப்ரஹ்மசப்தத் தொடக்கத்தாலே ”ப்ரஹ்மவல்லி” என்றும் சொல்வர்.
இது வாருணீ உபநிஷத்தின் முன் பகுதி. பின் பகுதியானது ப்ருகுவுக்கு அவர் பிதாவான வருணன் உபதேசித்தது”ப்ருகுவல்லி.”

யக்ஞன் என்கிற நாராயணன் என்கிற மஹரிஷியால் ஸக்ஷாத்கரிக்கப்பட்டிருப்பதால், ”யாஜ்ஞகீ” என்றும், நாராயண உபநிஷத் என்றும் சொல்வர்.
நாராயணாநுவாகம் நடுநாயகமாக இதில் உள்ளது.
பகவான் நாராயணனையும், அவனை ஆராதிக்கும் முறையையும் சொல்கிறது. இது முக்யமானது.

சீக்ஷாவல்லி

வேதத்திற்கு அங்கமானவை ஆறு. அவற்றில் ஒன்று சிக்ஷை.
இதில் வர்ணம், ஸ்வரம், ஹ்ரஸ்வதீர்க்காதி மாத்ரை. உச்சரிப்புக்கு வேண்டிய ப்ரயத்ன பலம் (வலிமை) ஸாமஸம்ஹி தை எனப்படும்
ஸந்தானம் – இவைகள் இதில் உள்ளன.-ஸம்ஹிதை என்பது இணைப்பு,-இணைப்பதற்கு இரண்டு வேண்டும்.
பூர்வ ரூபம்,உத்தரரூபம், ஸந்தி, ஸந்தானம் என்ற நான்கு வஸ்துக்களில்
லோகம், ஜோதி, வித்யா, ப்ரஜை , சாரீரம் இவை ஸம்பந்தமாகச் சொல்லி இவற்றைச் சொல்பவருக்கு மக்கள், பசுக்கள்,
வேதார்த்தஜ்ஞானம், அன்னம், ஸ்வர்க்கம் போன்ற பலன்கள் சொல்லப்பட்டது.
ப்ரணவத்தைச் சொல்லி, அதனால் அறிவு, ஆரோக்யம், பேசும் ஆற்றல், காதுக்கு வன்மை வேண்டப்பட்டது.
பூ:, புவ:, ஸுவ: என்றமூ_ன்று வ்யாஹ்ருதிகள். அத்துடன் ”மஹ ” சேர்த்து நான்கு உபாஸனங்கள் சொல்லப்பட்டது.
உபாஸன பலனாக, பகவானைத் தியானித்து ஹ்ருதய நாடி மூலம் சிரசில் கபாலத்தை பிளந்து அக்னிலோகம்,
வாயுலோகம், ஸுர்ய லோகம் இவற்றில் தங்கி ப்ரஹ்மத்திடம் சேர்ந்து பேரானந்தத்தை அனுபவிப்பது சொல்லப்பட்டது.
பிறகு பங்க்தி, ஐந்து ஐந்தாக சொல்லப்பட்டது. துர்க்குணங்களை ஒழித்து ஸத்வ குணத்தை வளர்த்து தபஸ் செய்தல் – ”ந்யாஸம்”
என்கிற தபஸ் சொல்லப்பட்டது. முக்யமாக வேதரஹஸ்யம் சொல்லப்பட்டது.

ஆநந்தவல்லி

பகவானிடமிருந்து பஞ்சபூதங்களும் ஓஷதிகளும், அன்னமும், அன்னத்தின் மூலம் உடலும் பிறக்கின்றன.
எல்லாரும் அன்னத்தால் போஷிக்கப்படுகிறார்கள். அன்னம் உயர்ந்தது.
அன்னமய உடலில், ப்ராணமய ஆத்மா. இதற்கு ப்ராணன் தலை; வ்யானன் வலப்பக்கம்; அபானன் இடப்பக்கம்;
வாயு நடுவுடல்; பூமி ஆதாரம்; ப்ராணனே ப்ரஹ்மம்.

இதற்கு மேல் மனோமயம். யஜூர்வேத சிந்தனம் தலை; ருக்வேத சிந்தனம் வலப்பக்கம்; ஸாமவேத சிந்தனம் இடப்பக்கம்;
ஆசார்யர்களின் ஆக்ஞை நடுவுடல்; அதர்வ வேத சிந்தனம் ஆதாரம்.
இப்படி உபாஸிப்பதால் மனதிற்கு எட்டாத பேரானந்தம் கிடைக்கும். இதற்கு மேல் விஞ்ஞானமயம். ஜீவன் இதற்கு
(அறிவுகள் சக்தி – அவயவங்கள். ச்ரத்தை. அநித்ய வஸ்துவின் அநுபவம், நித்ய வஸ்துவின் அநுபவம். யோகம், சக்தி –அவயவங்கள்)
இப்படி உபாஸித்தால் உடலிலிருந்து வெளியே வரும் போது எல்லா பாபங்களையும் போக்கி எல்லாவற்றையும் அடையலாம்.

இதற்கு மேல் ஆனந்த மயம்.
ப்ரியம் – தலை; மோதம் -வலப்பக்கம்; ப்ரமோதம் – இடப்பக்கம் ;
ஆனந்தம் – நடுவுடல் ;ப்ரஹ்மம் – ஆதாரம்.
சிறந்த ஸுகஅனுபவம்.
இதை இப்படி உபாஸிப்பவன் பெறும் ஆனந்தம் அளவிட இயலாதது .

மானுஷ ஆனந்தம் – நல்ல ஆரோக்யத்துடன், யுவாவாய் இருக்கும்போது சிஷ்யர்களுக்கு நன்கு உபதேசித்துச்
செல்வத்துடன் இருக்கும்போது பெறும் ஆனந்தம்.

இதைப் போல் நூறு மடங்கு – மனுஷ்ய கந்தர்வர்களின் ஆனந்தம். தேவகந்தர்வர்கள், பித்ருக்கள், தேவலோக வாசிகள்,
இந்த்ரன், ப்ருஹஸ்பதி, ப்ரஹ்மா வரை ஆனந்தத்தை நூறு நூறாகப் பெருக்கி சதுர்முகாநந்தம் நூறு கொண்டது,
பரப்ரஹ்மத்தின் ஆனந்தம் என்று சொல்கிறது. இவ்வளவாக மோக்ஷம் அடைந்து, பரப்ரஹ்மத்தை அடைவது சொல்லப்படுகிறது.

ப்ருகுவல்லீ

வருணர் – தன் குமாரனான ப்ருகுவுக்கு சொன்னது.

ப்ரஹ்மம் என்பது அன்னம், ப்ராணன், கண், மூக்கு, மனஸ், வாக்கு, பிறகு ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இப்படி உபாஸிப்பது –
இதுதான் ப்ரஹ்மம் என்றார்.
கடைசியில் பிதாவின் உபதேசப்படி தபஸ் செய்து ஆனந்தமயமே
ப்ரஹ்மம் என்று ப்ருகு தெளிந்தான்.
இதில் ”விசிஷ்டாத்வைத”ப்படி மோக்ஷம் விளக்கப்படுகிறது

இரண்டாம் ப்ரச்னம் – நாராயணோபநிஷத்

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும் உள்ளவன்.
ஸர்வந்தர்யாமி.
எல்லாவற்றையும் படைத்து, காத்து,அழிப்பவன்.
எல்லாவற்றிலும் ஆராதிக்கப்படுபவன் என்று
பலவாறாக துதிக்கிறது நாராயணோபநிஷத்து.

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும் உள்ள ஸர்வந்தர்யாமி
இதில் அக்னி, ருத்ரன், விநாயகர், கருடன், துர்க்கை, நாராயணன் இவர்களைப் பற்றிய மந்த்ரங்கள் உள்ளன.
அகமர்ஷ ண ஸுக்தம் – ஸ்நானம் செய்யும் முறை, அபிகமன காலம் வரை செய்பவை சொல்லப்படுகின்றன.
ப்ரம்மோபாஸனம் சொல்லப்படுகிறது.

மதுஸுக்தம், க்ருதஸுக்தம் உள்ளது. ஸாத்விக த்யாகம் சொல்லப்படுகிறது.
தஹர வித்யை, மோக்ஷ வித்யை, பர வித்யைகளாலே உபாசிக்கப்படுபவன் என்கிறது.
ஸுர்ய மண்டலத்திலே பகவானை உபாசிக்கும் விதம் சொல்லப்படுகிறது.

உபாதான கால விவரம், ஆராதனம் இவைகள் கோடி காட்டுகிறது.
ஹிரண்ய கர்ப்ப ஸுக்தம், மேதா ஸுக்தம், த்ரி ஸுபர்ண ப்ரஹ்ம ஸுக்தம் இதில் உள்ளன.

ஸன்யாஸ,ஹோம மந்த்ரங்கள் சொல்லப்படுகின்றன–ஸத்யம், தபஸ், தமம்,சமம், தானம், தர்மம், பிரஜநனம், அக்னி,
அக்னிஹோத்ரம்,யஜ்ஞம், மாநஸம் இவைகளைச் சொல்லிக் கடைசியாக ”ந்யாஸத்தை”ச் சொல்கிறது.
இதுவே ப்ரபத்தி.

ப்ரபத்தி செய்து கொள்பவன் மீண்டும் பிறப்பதில்லை.
ப்ரணவத்தைக் கொண்டு ஜீவனை , பகவானிடம் சமர்ப்பிக்கும் தேவ ரஹஸ்யம் என்பது சொல்லப்படுகிறது.

தைத்திரியோபநிஷத்தில் உள்ள மஹா நாராயணோபநிஷத்”
பர தத்துவத்தைச் சொல்கிறது.

இதற்கு இரண்டு ப்ரச்னங்கள்.
முதல் ப்ரச்னத்தில் சீக்ஷாவல்லி, ப்ருகுவல்லி, ஆனந்தவல்லி.
இரண்டாவது ப்ரச்னத்தில் ”யாஜ்ஞிகி உபநிஷத்”.

—————————

தைத்திரியோபநிஷத்

இது மூன்றாக உள்ளது.
(1) ஸாம்ஹிதி உபநிஷத் (சீக்ஷாவல்லி),
(2) வாருணி உபநிஷத் (ப்ருஹ்ம வல்லி, ஆனந்த வல்லி)
(3) யாஜ்ஞிகி உபநிஷத் (ப்ருகுவல்லி)

பரவித்யாவின் அங்கம் – பூர், புவஸ், ஸுவ: என்கிற வ்யாஹ்ருதி த்ரயம் (பூர், புவ:, ஸுவ:மூன்று) நாலாவது வ்யாஹ்ருதி – மஹ

இந்த நாலாவது வ்யாஹ்ருதி – முதல் மூன்று வ்யாஹ்ருதிக்கு சரீரம்.
இந்த சரீரத்திற்கு ஆத்மா பரப்ருஹ்மம்.
இதற்கு ”வ்யாஹ்ருத் உபாசனை” என்று பெயர்.
இதைச் செய்பவனுக்கு ”ப்ரஹ்ம வித்யை” ஸித்திக்கிறது.

உபாஸனா | பூ | புவ: | ஸுவ: | மஹ :

1. லோகோபாஸனா | உலகம் | அந்தரிக்ஷம் | ஸ்வர்க்கம் | ஆதித்யன்
2. தேவதோபாஸனா | அக்னி | வாயு | ஆதித்யன் | சந்த்ரன்
3. வேதோபாஸனா | ருக் | ஸாமம் | யஜூர் | ப்ரஹ்ம| (ப்ரணவம்)
4. ப்ராணோபஸனா | ப்ராணன் |அபானன் |வ்யானன் | அன்னம்

இப்படி ப்ரஹ்ம வித்யை ஸித்திக்கும் உபாஸகன் தனது ஹ்ருதயாகாசத்தில் உள்ள அழகிய, அழிவற்ற ஒரு புருஷனை
உபாசித்து வாயினுள், அடி நாக்கின் மேலே” தாலுகை” எனப்படும்.
நடுவில், பசுவின் காம்பு போல் தொங்கும் ஒருவகை மாமிச பிண்டத்தின் உள் வழியாகச் சென்று, தலையின் ரோம வேர்களை
அடைந்து, பின் மண்டையோட்டை விலக்கிக் கொண்டுச் செல்லும்” ஸுஷும்னா” என்கிற நாடியின் வழியாக
அக்னி, வாயு,மற்றும் ஆதித்ய லோகங்களை அடைந்து, ப்ரஹ்மத்தை அடைந்து, கர்ம பந்தஹீனன் ஆகையாலே
அப்ராக்ருத சரீர இந்த்ரியங்களை தன் விருப்பப்படி பெற்று, நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் எல்லையில்லாப் பேரானந்தத்தை அனுபவிக்கிறான்.

————-

தைத்திரிய நாராயண உபநிஷத்

இப்போது நடப்பது, ஸ்வேதவராஹ கல்பம்.
இது முடிந்ததும் நைமித்திக ப்ரளயம். அப்போது ஸுர்ய மண்டலம் நாசம்.
ஒரு வஸ்துவை அறிய வேண்டிய ஜ்ஞானம் – தர்ம பூத ஜ்ஞானம் எனப்படும். நித்ய முக்தர்களுக்கு இது அளவில்லாதது.
பாபத்தை போக்கக்கூடிய வருணனுக்கு ”அகமர்ஷணன்” என்று பெயர். அகமர்ஷண ஸுக்தம் என்றால் எல்லா பாபங்களையும்
போக்குவதற்காக ஜபிக்கப்படும் மந்த்ரம் என்று அர்த்தம்.

பரமாத்மாவிடமிருந்து உண்டான வஸ்துக்கள்.

(1) ஏழு இந்த்ரியங்கள் (மனஸ், புத்தி, ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களான கண், காது, மூக்கு, தோல், நாக்கு)
(2) ஏழு அக்னிகள் – ஆவஹனீயம், கார்ஹ பத்யம், தக்ஷிணாக்னி, ஸப்ய, ஆவஸத்ய, ப்ராஜஹித,அக்னிர்த்ராஹா ::
(3) ஏழு ஸமித்துக்கள் (மரங்கள் – அச்வத்த, உதும்பல, பலாச, ஸமீ, விகங்கத, அசனீ, புஷ்கரபர்ன)
(4) அக்னிக்கு ஏழு நாக்குகள் (காயீ, கராலீ, மனோஜவ, சுநீசுதா, சுதாம்பரவர்ணா, ஸ்ப்ரிலிங்கிணீ, விஸ்வரூபி)
(5) ஏழு லோகங்கள் – பூலோக, புவர், ஸுவர், மஹர், ஜனோ, தபோ, ஸத்ய லோகம்

நாராயண உபநிஷத்தில்
64வது மந்த்ரம் – ஜ்ஞானத்தைப் பெற, ஜபிக்கப்பட வேண்டும்.
65வது மந்த்ரம் – கெட்ட கனவுகள், பயத்தைப் போக்க ஜபிக்கப்படவேண்டும்.
66வது மந்த்ரம் – மதுஸுக்தம் (அமாவாஸ்யை, ச்ராத்த காலங்களில் சொல்லப்படுகிறது)

————–

8. ஐதரேயோபநிஷத்து

இது ”ருக்” வேதத்தைச் சேர்ந்தது. ”ஐதரேயர்” என்கிற மஹரிஷி தவம் புரிந்து கண்ட ப்ராஹ்மணம். ஐதரேய ஆரண்யகமும் உள்ளது.
(ஐந்து ஆரண்யகங்கள் – இரண்டாவதுமற்றும் மூன்றாவது ஆரண்யகத்திற்கு ஐதரேயோபநிஷத்து என்றுபெயர்).

ப்ராணன் சிறந்தது. இது உடலை விட்டு கிளம்பினால் எல்லா அவயவங்களும் செயல்படாது.
ஸத்யம் – இதை ”ஸத்” ,”தி”, ”யம்” என்று மூன்றாகப் பிரித்தால் ”ப்ராணன்”, ”அன்னம்”,”ஆதித்யன்” என்று பொருள்படும்
வாக்கு – இதில் அடங்கிய சந்தஸ்களுக்கு,
ப்ருஹதி சந்தஸ் என்பது ப்ராணன்.

தண்ணீரால் ப்ராணனுக்கு புஷ்டி ஏற்படுகிறது.
விஸ்வாமித்ரர், இந்திரனிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த்ரன் சொன்னதாவது:-
நான் ப்ராணன், எல்லா பூதங்களும் ப்ராணனே, ஆதித்யன் ப்ராணனே.
எனக்கு அன்னம் இதுவே.
இது வைச்வாமித்ரம் ஆகும். (கௌஷீதகி உபநிஷத்தில்” ப்ரதர்தந வித்யை” முதலியவற்றில் உள்ளது).

மரம், செடி இவற்றில் ஆத்மா சிறிது விரிந்திருக்கும்.
பிராணிகளிடத்தில் கொஞ்சம் அதிகம்.
மனித உடலில் இந்த விரிவு அதிகம். (ஜீவாத்மா)

மனித உடலில் வாயு ஐந்து விதமாக இருக்கிறது.
இவைகளுக்கு கட்டுப்பட்டது கண், காது,மூக்கு,மனம், சொல் (வாக்கு).
வாக்கினால் செய்யப்படும் யஜ்ஞம் ஐந்து விதம் (ஸோம யாகமும் சேர்த்து)

உக்தி (அல்லது) உக்த்தம் மிக முக்கியமானது.
நிஷ்கேவல்யம் என்பது உக்த்த சாஸ்த்ரம்.
இது ஒரு விதமான மந்த்ர பாடம்.
பல த்ருஷ்டி விதிகள் இதில் சொல்லப்படுகின்றன (த்ருஷ்டி என்பது, ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது)
ப்ருஹதீயை (ஆயிரமாக) பாவித்து, இந்த்ரனாக பாவித்து, அதனால் இந்த்ர லோகத்தை அடையலாம்.
ஆனால்,மீண்டும் பிறப்பு உண்டு.
ஆதித்ய, அக்னியின் (இரண்டின்) அம்சங்கள் சுக்ல சோணிதங்கள். இவை ஒன்று சேர்வதால் ஆத்மா இவ்வுலகை அடைகிறது.
ஆத்மாவுக்கு ஆண்,பெண் என்கிற வித்யாஸம் இல்லை.
மனுஷ்ய ஆயுள் நூறு வயது.
அதாவது முப்பதாயிரம் நாட்கள்தான். நூறு என்பதை 365ல் பெருக்காதீர்கள். மொத்தத்தில் நூறு வயது;( நூறு வருஷம் அல்ல)
ப்ருஹதிசந்தஸ் ஆயிரம் என்று சொன்னதைப் போல,
இந்த எண்ணிக்கையும் முடிவடையும் போது, தேவ ரதத்தில் (ஐந்து உரு) சென்று பரமாத்மாவை அடையலாம்.
ஐந்து உரு என்பது – 1) வாக்கு – ரதத்தின் ஏர்க்கால்,
2) காதுகள் -சக்கரங்கள்,
3) கண்கள் – குதிரைகள்,
4) மனம் – தேர் பாகன் அல்லது கடிவாளம்,
5) ப்ராணன் – முதலாளி (ஆத்மா)

இதில் (ஐதரேயோபநிஷத்தில்) ஆத்ம ஷட்கம்

உலகெல்லாம் ச்ருஷ்டிப்பதற்கு முன்பு ஆத்மா ஒன்றே. (அதாவது பரமாத்மா ; பரமபுருஷன்)
இது ஸங்கல்பித்துக் கொண்டு ச்ருஷ்டி செய்யத் தொடங்கியது.
அம்பஸ் (ஸ்வர்க்கம்)
,மரீசி (அந்தரிக்ஷ லோகம்),
மரம் (பூலோகம்),
அப்பு (பாதாளம்).
லோக பாலர்கள், இவைகளை முதலில் ச்ருஷ்டித்தது.-பிறகு,ஜலத்தினின்று ஒரு புருஷ வடிவத்தை உண்டாக்கியது.
இதற்கு, அண்டம் போல் வாய் இருந்தது. வாக்கு, மூக்கு, கண், காது இந்த்ரியங்களையும் அவைகளுக்கான தேவதைகளையும்
பிறகு,
ஹ்ருதயம், ப்ராணன், மனஸ், சந்த்ரன், நாபி, அபானம், ம்ருத்யு தேவதை, ஆண் குறி, வீர்யேந்த்ரியம், இப்படி உண்டாக்கப்பட்டது.
இவைகளுக்கு பசி,தாகத்தை பரமாத்மா, உண்டாக்கியது.
அவைகள் ”நாங்கள் வசிப்பது எங்கே?” என்று கேட்க,
பரமாத்மா முதலில் பசுவைக் கொடுத்தது.-பிறகு குதிரையைக் கொடுத்தது.-மனித உடலை உண்டாக்கிக் கொடுத்தது.
பசி, தாகம் இரண்டும் எங்கள் இடம் எது என்று மறுபடியும் கேட்க ”ஹவிஸின்” பாகம் என்று பரமாத்மா சொல்லிற்று.

பிறகு ஜலத்திலிருந்து அன்னத்தை உண்டாக்கியது.
வாய்,அபானம் என்கிற வாயுவினாலே அன்னத்தை உண்ணத் தெரிந்து கொண்டது. ப்ராணன் என்கிற ஜீவாத்மா’ ஸீமா” என்கிற
தலையின் உச்சியைப் பிளந்து கொண்டு உள்ளே புகுந்தது. இது ”வித்ருதி” எனப்படும்.
இந்த ஜீவாத்மாவுக்கு விழிப்பு (ஜாக்ரம்),சொப்பனம் (ஸ்வப்னம்) ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற மூன்று நிலைகள் உண்டு.
இவை யாவும் அழியக் கூடியது. எங்கும் ப்ரம்மம் (பரமாத்மா) வ்யாபித்துள்ளது.

ஜீவாத்மா, முதலில் புருஷனிடத்தில்” வீர்ய”மாக இருக்கிறது.–புருஷன் வீர்யத்தை ஒன்று சேர்த்து ஸ்திரீயிடத்தில் சேர்த்தவுடன்,
இது ஜீவாத்மாவிற்கு முதல் பிறப்பு.-பிறகு எப்போதும் போலப் பிறப்பது இரண்டாவது பிறப்பு.
ஆயுள் முடிந்து, மரித்து,மறுபடியும் பிறக்கிறான்.-இது மூன்றாவது பிறப்பு.
இப்படி எண்ண இயலாத பிறப்புகள், இறப்புகள், சங்கிலித் தொடர் போல ஜீவாத்மாவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாமதேவர் என்கிற மஹரிஷி , கர்ப்பத்தில் இருக்கும்போதே முன் ஜன்மங்களையெல்லாம் அறிந்து, பிறந்தவுடனேயே கர்ம
பந்தத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேர்ந்தார், என்று சொல்வர்.

இது எல்லோராலும், ரிஷிகளால் கூட இயலாத செயல்.

பரமாத்மா சர்வ சேஷி . ப்ரஹ்மா, இந்த்ரன், ப்ரஜாபதி எல்லா தேவதைகள், பஞ்ச பூதங்கள், யோநிஜங்கள், அயோநிஜங்கள்,
முட்டையில் பிறப்பன, கர்ப்பத்தில் பிறப்பன, புழுக்கத்தில் பிறப்பன, பூமியை பிளந்து பிறப்பன, பறக்கும் பிராணிகள், நீர் வாழ்வன என்று
இப்படி ஜீவராசிகள் எல்லாமும், பரமாத்மாவின் ஆக்ஞைக்கு உட்பட்டு, அவனுக்கு சேஷனாக இருப்பவை.

மனித உடலில் எலும்புகள் 360. அவற்றில் கொழுப்பு 360 ஆக 720.
ஒரு வருடத்தில் பகல் 360 இரவு 360 ஆக 720.
உடல் என்கிற குடிசையி;ல் எல்லா மூங்கில்களுக்கும் ஆதாரமான நடுமூங்கில் போல, கண், காது, மூக்கு இவற்றிற்கு ஆதாரமான
ப்ராணனை நாளுக்கு சமமாக பாவித்து பாவனை செய்தால் ஆயுள் முதலிய பலன் கிடைக்கிறது.

அக்ஷரங்களை 360 , 360 என்று இரண்டு பாகமாக ஆக்கி, அவற்றின் சேர்க்கையை 360ஆக ஆக்குங்கள் (எப்படி என்று யோசியுங்கள்).
பகல், இரவு, சந்தி இவை முறையே 360 , 360 360, ஆக மொத்தம் 1080 ஆகும்- இப்படி ப்ருஹதி 1080 ஆகிறபடி,

இதை எலும்பு, கொழுப்பு 540, 540 ஆக பிரித்து மறுபடியும் கூட்டி”1080” என்று சொல்லி, பாவனை செய்யும் விதமும் அதன் பலனும் சொல்லப்படுகிறது.

சரீர புருஷனுக்கு, ரஸம், ப்ரஜ்ஞாத்மா. ஸந்தஸ் புருஷனுக்கு,ரஸம், அகாரம். வேதங்கள் மூன்றுக்கு, ரஸம் பிரமன். மஹா புருஷன் என்பது ஸம்வத்ஸரம்(வருடம்).
இதன் ரஸம் ஆதித்யன்.
ஸரீர ரசமான ப்ரஜ்ஞாத்மாவையும் மஹா புருஷனான ஆதித்யனையும் ஒன்றாக பாவனை செய்வது சொல்லப்படுகிறது.
பரமாத்மா, தன் ஆத்மாவின் அந்தராத்மா என்று தெளிய வேண்டும் என்று ஒரு மந்த்ரம் சொல்கிறது. (அதாவது ஜீவாத்மாவுக்கும் ஆத்மா).
சரீரத்தை வீணைக்கு ஒப்பிட்டு இதை நன்கு தெளிந்தவன், பார் புகழும் வண்ணம் இருப்பான் என்பது சொல்லப்படுகிறது.

ஸம்ஹிதையில் ”ண”காரம் பலம்.
”ஷ ”காரம் ப்ராணன்.
பரமாத்மாவே எல்லாமும் என்று இந்த உபநிஷத் சொல்கிறது.

—————

9 – சாந்த்யோக்யோபநிஷத்

இது ஸாம வேதத்தைச் சேர்ந்தது. இது ”தாண்டி”சாகையின் கடைசி பாகம்.
வேத வ்யாஸர் ப்ரம்மஸுத்ரத்திற் குஎடுத்துக் கொண்ட உபநிஷத்துக்களில் இதுவே அதிகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

ஸாம வேதத்தைச் சேர்ந்ததாகையால், உத்கீதத்தைப் பற்றி இது (இந்த உபநிஷத்) சொல்கிறது.
ப்ரணவத்தை முதலில் சொல்லி, பலவாறு உபாஸனங்களைச் சொல்லி,
உத்கீத பதம்,ஸாம பதம், ஸாம பொது, அதன் அம்சங்கள், உட் பிரிவுகள்
இவைகளில் உபாஸனம் செய்வதைச் சொல்லி, ஐஷிகம், ஆமுஷ்மிகம் என்று பல பலன்களுக்கான உபாஸனங்களைச் சொல்லிப்
பிறகு மோக்ஷத்திற்கான பக்தியோகம் இவற்றைச் சொல்கிறது.

எட்டு பிரபாடகங்களாக உள்ளது. பிரபாடகம் என்பது
அத்யாயம். அத்யாயத்தில் அனேக காண்டங்கள் (பிரிவுகள்).
ஸாமம் – வேத கானம்.”ருக்”குகளில் கானம் பண்ணப்படும்.
ஒவ்வொரு” ரிக்”கிலும் கானம் பண்ணும்போது அந்த கானத்தை ஐந்து பாகமாக பிரிப்பார்கள். அவையாவன:-
1) ஹிங்காரம்,
2) ப்ரஸ்தாவம்,
3) உத்கீதம்,
4) ப்ரதிஹாரம்,
5) நிதனம்.
இதை ஏழாகவும் பிரித்துச் சொல்வார்கள்.
1) ஹிங்காரம், 2) ப்ரஸ்தாவம், 3) ஆதி, 4) உத்கீதம், 5) ப்ரதிஹாரம், 6) உபத்ரவம், 7) நிதனம்.

ப்ரபாடகம் -1 –
ப்ரணவத்தை உத்கீதமாக உபாசிக்கச் சொல்கிறது.
உத்கீதம் உலகில் ஸாரமானது. பூமியின் ஸாரம்எதுவென்றால் விளையும் பயிர்களுக்கு ஜலம் மூலமாக இருப்பதால், ஜலம் – ஸாரம்.
அதில் உண்டான ஓஷதிகள் ஸாரம். இவற்றைச் சாப்பிட்ட மனித உடல் ஸாரம். இந்த உடலில் வாக்கு ஸாரம்.
வாக்குகளில் ”ருக்” ஸhரம். இதற்கு மேல் ஸாம கானம். இதில் சிறந்தது உத்கீதம்.

உபாஸனம் இல்லாமல் விதிக்கப்பட்டதைச் செய்தாலும் பலன் உண்டு.
உபாஸனத்தோடு செய்தால், பலன் மிகவும் அதிகம்.
இந்த உத்கீதத்தை -ப்ராணவாயுவாக உபாஸிப்போருக்கு விரோதிகள் அழிவர்.

கச்யப ப்ராஜபதிக்கு திதி, அதிதி என்று இரண்டு மனைவிகள்.-இவரின் புதல்வர்கள் தேவர்களும், அசுரர்களும் ஆவர்.

இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்களை ஜெயிக்க தேவர்கள் முடிவெடுத்து தேவர்கள் மூக்கில் உள்ள இந்த்ரியமாக
உத்கீதத்தில் சொல்லப்பட்ட ”ப்ரணவத்தை” உபாஸித்தனர்.

அசுரர்கள் அதைக் கெடுத்தனர். இப்படி வாக்கு, கண், காது, மனஸ் என்பதையெல்லாம் உபாஸித்தனர். அசுரர்கள்
எல்லாவற்றையும் கெடுத்தனர்.
கடைசியில் முகத்தில் உள்ள ப்ராணனான ப்ராண வாயுவை உத்கீதமாக தேவர்கள் உபாஸித்ததும் அசுரர்கள் அதன் மீது
எறிந்த பாவங்கள் வெளியே சிதறி ஓடியது.
(ப்ராணன் பாதிக்கப்படவில்லை). இவ்வாறாக ப்ராணனாக பாவிக்கப்பட்ட உத்கீதத்தின் பெருமை சொல்லப்பட்டது.

உத்கீத ப்ரணவத்தை ”அமிர்தம்” எனப்படும் ப்ரம்மமாக உபாஸிக்கச் சொல்கிறது. தேவதைகள், ம்ருத்யுவுக்குப் பயப்பட்டு
வேத வித்யைக்குள் புகுந்து வேத மந்த்ரங்களால் தங்களை மறைத்துக் கொண்டனர்.
அப்போது ம்ருத்யு, தண்ணீரில் மீனைக்கண்டாற் போல் தேவதையைப் பார்த்து விட்டான்.
பிறகு அவர்கள் அமிர்தமான ப்ரணவத்திலே மறைந்து கொண்டனர்.
இங்ஙனம் தங்களைக் காத்துக் கொண்டனர்.
இப்படி உபாஸிப்பவனுக்கு ” ம்ருத்யு ” இல்லை, பயமுமில்லை.

”கப்யாஸ புண்டரீகாக்ஷ த்ருஷ்டி” என்பது சொல்லப்படுகிறது.
ஆகாசமாக உத்கீதத்தைப் பார்ப்பவனுக்கு உயர்ந்த ஜீவனம் —-, உயர்ந்த உலகங்கள் கிடைக்கும். (சௌனகர் – சாண்டில்யருக்குச் சொன்னது).

உமூஸ்தி என்கிற மஹரிஷி , பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் உணவு கிடைக்காமல், ஒரு கிராமத்தில், யானைக்குக்
கொடுக்கப்படும் ”குல்மாஷம்” என்கிற உணவை, உயிர் தரிக்க வேண்டும் என்ற காரணத்தால், யானைப் பாகனிடம் கேட்டு, ஒரு
கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
ஆனால் தொடர்ந்து யானைப் பாகன் கொடுத்த தண்ணீரை ”இது எச்சில் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்
. உயிர் தரிக்க கொஞ்சம் உணவு சாப்பிட்டால் போதும் என்கிற நியதி இந்தத் தத்வத்தில் சொல்லப்படுகிறது.

ஒரு அரசன் யாகம் செய்யப் போகும் சமயத்தில் ”ப்ரஸ்தாபம்”, ”உத்கீதம்”, ”ப்ரதிஹாரம்” என்கிற ஸாமங்களுக்கு தேவதை யார்
யார் என்று ரிக் வித்குகளிடம் கேட்க (யாகத்தை நடத்திவைப்பவர்கள்),
அவர்கள் தெரியாது என்று சொல்ல,
அரசன் இவரையே (உஷஸ்தி) (அச்சமயர் உஷஸ்தி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்) ரிக்வித்தாக நியமித்து அவரை மேற்கண்ட
ஸாமங்களுக்கு தேவதைகளைப் பற்றிக் கேட்க உஷஸ்தி. ”ப்ரஸ்தாபம்” என்கிற ஸாமகானத்தில்
ஸர்வ பூதங்களுக்கும் பிறவி,அழிவு இவைகளுக்கு காரணமாக உள்ள ”ப்ராண” தேவதையையும் , உத்கீதத்திலே ”ஆதித்யன்” தேவதையையும்,
ப்ரதிஹாரத்தில் ”அன்னத்தையும்” தேவதையாகப் பாவிக்க வேண்டும் என்று சொல்லி யாகத்தை நடத்தி வைத்தார்.

அன்னத்தைப் பெறக் காரணமாக உள்ள ”சௌவோத்கீதம்” என்கிற உத்கீதம் இதில் சொல்லப்படுகிறது. ஸாமகானத்தில்
இசையின் பொருத்தத்திற்காக புதிய அக்ஷரங்கள் இருக்கும். அவை” ஸ்தோபாக்ஷரங்கள்” எனப்படும்.
”ஹா உ”, ”ஹா இ ”’போன்றவை

1) ஸுர்யோதயத்திற்கு முன்பு ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்குபுறப்படும் காலம்;
2) மனிதர்கள் விழித்தெழும் உதய காலம்;
3) பறவைகள் பறக்கும் ஸங்கவ காலம்;
4) தேவதைகளின் உச்சிக் காலம்;
5)அபரான்ன காலம்;
6) அஸ்தமனத்திற்கு முன்பு கால்நடைகள் திரும்பும் காலம்;
7) பித்ருக்களின் அஸ்தமன காலம்.
இப்படி ஏழு பிரிவுகளாக ஸுர்யனைப் பாவித்து ஸாமத்தை உபாஸிப்பது சொல்லப் படுகிறது.

மேலும், ”அதிம்ருத்யூபாஸனம்” விவரிக்கப்படுகிறது.

மாதங்கள் 12,
ருதுக்கள் 5 (ஹேமந்த ருது, சிசிர ருது ஒன்றாக கணக்கிடப்படுகிறது)
உலகங்கள் 3 . ஸுர்யன் 1
ஆக 21. ஸாம பக்திகளில் எழுத்துக்கள் 22.
இப்படி ஸுர்யோபாசனம் செய்தால் ம்ருத்யுவை ஜயித்து மோக்ஷத்திற்கு அருகதையாவது சொல்லப்படுகிறது.
ஸோம யாகத்தில் 3 யவனங்களுக்கு அதிபதியான வஸு , ருத்ர, ஆதித்யர்களைப் பற்றிய ஸாமங்களைச் சொன்னால்
மூவுலகும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

——————

10 ப்ருஹதாரண்யக உபநிஷத்து

இது உருவில் பெரியது. சுக்ல யஜூர் வேதத்தைச் சேர்ந்த சதபத ப்ராம்மணத்தின் கடைசிப் பகுதி.
இது காண்வம்,மாத்யந்தினம் என்று இரண்டு பிரிவுகள். (கிளைகள்).
ப்ராஹ்மணம் – காண்வ சாகையிலும் மாத்யந்தின சாகையிலும் உள்ளது.

எட்டு அத்யாயங்கள் இதில் உள்ளன. முதல் இரண்டு அத்யாயங்கள் ஜ்ஞானத்தைப் பற்றிச் சொல்கிறது. “ப்ரவர்க்யம்”
என்கிற ஸோம யாகத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தைச் சொல்வதாகவும் சொல்வர். மீதி ஆறு அத்யாயங்களுக்கும் பாஷ்யம் (விரிவுரை) உண்டு .

ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது “த்ருஷ்டி விதி” எனப்படும். அச்வமேத யாகம் தொடங்கி, ஒரு வருஷ காலம்
கழித்து இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது
(ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது). குதிரையின் தலை, கண், ப்ராணன் முதலிய அங்கங்களை விடியற்காலை வேளை (உஷத் காலம்)
ஸுர்யன், வாயு இவைகளைப் போல பாவிக்க வேண்டும்.
யாகம் செய்பவன் இது போன்ற பாவனைகளைத் தெளிந்து செய்ய வேண்டும். விரைவில் பலன் பெறலாம்.

பரமாத்மா உருவத்தை எடுக்க விருப்பம் கொண்டு ஜலத்தை உற்பத்தி செய்தது. ஜலத்தின் சாரமாக, பூமி உண்டாயிற்று.
அதிலிருந்து, அக்னி உண்டாயிற்று. அக்னியே, ஆகாயத்தில் வாயுவாகவும், மேலுலகில் ஆதித்யனாகவும் உள்ளது.
அக்னி என்கிற உருவத்தை எடுத்த பரமாத்மா, ஸம்வத்ஸரத்தை உண்டாக்கியது. அதாவது பல ஸம்வத்ஸர காலம் (பல வருஷங்கள்)
ப்ராணிகளை படைக்கும் ப்ரஹ்மா என்று கொள்ளலாம்.

ப்ரஹ்மஞானம் உண்டாகத் தடையாக இருக்கும் பாபங்களைப் போக்க ப்ராணனை உபாஸிக்கச் சொல்கிறது.
”மதுப்ராம்மணம்” என்பது இதில் சொல்லப்படுகிறது.
ஓவ்வொரு இந்த்ரியத்திற்கும் ஒரு அதிஷ்டான தேவதை உண்டு. தேவதைகள் இஷ்டப்படி இவை இருக்கின்றன. ஆதலால் மது என்று பெயர்.
இந்த தேவதைகள், ”மற்ற எல்லாருக்கும், அழிவே இல்லாமல் ஒருவன் அந்தர்யாமியாக இருக்கிறான். அவனே
ஆத்மா , அவனே மது” என்று உபாசித்தன (பரமாத்மாவை). இந்த மது ரஹஸ்யத்தை ”தத்தியங்” என்கிற மஹரிஷியிடத்தில்
”அச்வினி தேவர்கள்” வந்து, இந்த வித்யையை உபதேசிக்குமாறு கேட்டார்கள். இந்த ரஹஸ்யத்தை வெளியிட்டால் தலையை
வெட்டி விடுவதாக இந்த்ரன் சொல்லியிருப்பதால் அஞ்சுகிறேன் என்றார் முனிவர்
உங்களுடைய தலையை வெட்டித் , தனியாகப் பாதுகாத்து குதிரையின் தலையைப் பொருத்துகிறோம். நீங்கள் உபதேசியுங்கள்.
இந்த்ரன் வெட்டுவதாயிருந்தால், இந்த குதிரைத் தலையைத் தான் வெட்ட வேண்டும். வெட்டியவுடன் உங்கள் தலையைப் பொருத்தி விடுகிறோம் என்றனர்
அச்வினி தேவர்கள் –வைத்யர்கள் அல்லவா? மஹரிஷி ஒப்புக் கொண்டு ரஹஸ்யத்தை தேவர்களுக்கு குதிரை முகமாக உபதேசித்தார். (ஹயக்ரீவ ஸ்வரூபம்)

”பரமாத்மா எல்லா உயிர்களிலும் இருக்கிறான். உள்ளே, வெளியே எங்கும் இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை.
உலக வ்யவஹாரங்களை நடத்த பற்பல உருவங்களை எடுத்துக் கொள்கிறான்.
ஹரியானவன் அவன் —-பல ஆயிரக்கணக்கான ஹரியாக ஆகிறான். இந்தப் பரமாத்மா, எல்லாக் காலங்களிலும்
எல்லா இடங்களிலும் இருந்து ஸர்வேச்வரன் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறான்”. இதுதான், உபதேசத்தின் சுருக்கம்.

இந்த்ரன் கோபத்துடன் வந்து, முனிவரின் தலையை (குதிரைத்தலை) வெட்ட, அச்வினீ தேவர்கள், முனிவரின்
சுயமான தலையைப்பொருத்த, ”தத்தியங்” என்கிற அந்த முனிவர் செய்த பேருபகாரம் இவையெல்லாம்—————- தனிக்கதை.

வித்யையை உபதேசிக்கும் ஆசார்யன் முதல் பகவான் வரையிலுள்ள வம்ச ப்ராம்மணம் முக்யம். (வம்ச வித்யை) இதை
ஒவ்வொருவரும் அநுஸந்திக்க வேண்டும்.
அச்வலர் -யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்
விதேஹ தேச ராஜாவான ஜனகர், விசேஷமாக ஒரு யாகம் நடத்தினார். அதற்கு, ஏராளமான வேத வித்துக்கள் வந்தனர்.
இவர்களில், வேதங்களை வேதாங்கங்களை அத்யயனம் செய்து, ப்ரம்ம வித்யை வரையில் எல்லா வித்யைகளிலும் சிறந்து
விளங்குபவர் யார் என்று அறிய விருப்பம் கொண்டார்.
சிறந்த ஜ்ஞானியாக இருப்பவர், பொன் குப்பிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஆயிரம் பசுக்களை ஸ்வீகரிக்க வேண்டும் என்று
ப்ரார்த்தித்தார். ஒருவரும் முன்வரவில்லை.
அச்சமயத்தில் யாஜ்ஞவல்க்யர் (இவர் ஸுர்யனைத் த்யானம் பண்ணி ஸுர்யன் குதிரை ரூபமாகப் ப்ரஸன்னமாகி உபதேசிக்க அவரிடம் உபதேசம்
பெற்றார். இதற்கு அந்தர்யாமி ப்ராம்மணம் என்று பெயர்).
தன் சிஷ்யனை அழைத்து, ”பசுக்களை நம் க்ருஹத்திற்கு ஓட்டிக் கொண்டு போ” என்றார்.
மற்ற ப்ராம்மணர்கள் ஆக்ஷேபித்தனர்.
ஜனக ராஜனின் யாகத்தை நடத்தி வைக்கும் ருத்விக் அச்வலர், நீர்தான் சிறந்த ப்ரம்ம வித் என்று உங்களைக் கருதுகிறீரா ? என்று கேட்டார்.
யாஜ்ஞ வல்க்யர் ”அத்தகைய ப்ரஹ்ம வித்யைக்கு எனது நமஸ்காரம்,எனக்கு பசுக்கள் தான் தேவை” என்றார்.
அச்வலர், யாஜ்ஞவல்கயரை கேள்வி கேட்கலானார்.
அச்வலர் யாகத்தை நடத்தும் எஜமானர் மோக்ஷம் பெற ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரம்மா, என்கிற ருத்விக்குகள் பற்றியும்,
ஹோதா சொல்லும் ருத்விக்குகள், உத்காதா செய்யும் சாமகான ருக்குகள், ப்ரஹ்மா யாகத்தைக் காப்பது, பிற தேவதைகள்
பற்றியும் அவ்வப்போது பெறும் பலன்களைப் பற்றியும், யாஜ்ஞ வல்க்யரைக் கேட்டுத் , திருப்தி அடைந்தார்.

ஆர்த்தபாகர் என்கிற மஹரிஷி கேள்வி கேட்க யாஜ்ஞவல்க்யர்,
அவருக்கு க்ரஹங்கள் எட்டு
அவை மூக்கு, வாக்கு, நாக்கு, கண்,காது, மனஸ், கை, த்வக் என்பவை என்றும், அவற்றின் விஷயங்கள் அதிக்ரஹங்கள் என்றும்,
அக்னி ம்ருத்யு என்றும்,ஜலம் அதை அன்னமாக உடையது என்றும்,
ஜீவன் மரணம் அடையும்போது, ப்ராணன்கள் அவற்றை விடுவதில்லை என்றும் சொன்னார்.
ஜீவன் லயமடையப் போகுமிடம் எங்கே?” என்றுஆர்த்தபாஹர் கேட்க,
அவரைத் தனியே அழைத்துப்போய் புண்யம், பாபம் என்கிற கர்மாக்களுக்கு ஏற்பச் செல்கிறான் என்று பதில் சொன்னார்.
(ஸதஸ்ஸில் சொல்லாமல், தனிமையில் ஒருவருக்கு மட்டில் – கேள்வி கேட்டவருக்கு மட்டில்—- சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது)

புஜ்யு என்பவர், மத்ர தேசத்தில் அத்யயனம் செய்து கொண்டிருந்தபோது, ”பதஞ்சலர் என்பவர் வீட்டிற்குச்
சென்றோம். அவருடைய பெண்ணை, ஒரு கந்தர்வன் பிடித்திருந்தான் (ஒருவகைப் பிசாசம்) அதை நீ யார் என்று
கேட்டோம். நான் ஸுதன்வா–”ஆங்கீரஸ கோத்ரம்” என்று பதில் சொல்லிற்று. பிறகு லோகங்கள் விஷயமாகச் சில கேள்விகள்
கேட்டு “பாரிக்ஷிதர்கள்” எங்கே போயிருந்தன என்று அந்தக் கந்தர்வனைக் கேட்டோம். இதற்கு நீர் பதில் சொல்லும்” என்று
யாஜ்ஞவல்க்யரைக் கேட்டாh.

”பாரிக்ஷதர்கள், அச்வமேதயாகம் செய்யும் இடத்திற்குப் போனார்கள்” என்று பதில் சொன்னார்.
புஜ்யு , ”அச்வமேத யாகம் செய்பவர் எங்கே போகிறார்?” என்று கேட்டார்.
ஸுர்யனை, பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் பெரும் பகுதி ஸமுத்ரம். இந்த அண்டகடாஹத்தில்— இதில் கத்தி
முனையளவு கொசுவின் இறகளவு கனமுள்ள சந்தில் பாரிக்ஷதர்கள் சென்றனர். இந்த்ரன் அவர்களைக் கருடனாக
இருந்து சுமந்து சென்று வாயுவிடம் சேர்த்தான். வாயு அவர்களை அச்வமேத யாகம் செய்பவர் இடத்தில் சேர்த்தது. இப்படி அந்தக்
கந்தர்வன் உமக்குச்சொல்லி வாயுவே வ்யஷ்டி, சமஷ்டி எல்லாம் எங்கும் சஞ்சரிப்பவன் என்று சொல்லியிருப்பான் என்றார்.

பிறகு உஷஸ்தர் , கஹேளர்-இருவரின் கேள்விகள்.
உஷஸ்தர் – எல்லாவற்றுக்குள்ளும், உள்ளே இருக்கும் ஆத்மா ப்ரத்யக்ஷமாக இருக்கிற ப்ரம்மம் என்கின்றனர். இது என்ன?
யாஜ்ஞ வல்க்யர் – உமக்கும் ஆத்மாவாக இருப்பது அது.
உஷஸ்தர் – இது மாடு, இது குதிரை என்று சொல்வதைப் போல இருக்கிறதே ?
யாஜ்ஞவல்க்யர் – ச்ரவணம், மனனம், த்யானம், தர்சனம் என்பவற்றைச் செய்யும் ஆத்மாவை நான் சொல்லவில்லை.இது
ஜீவாத்மா. நான் சொன்னது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மாவாக இருப்பது.
கஹோளர் – அது எந்த ஆத்மா ?
யாஜ்ஞவல்க்யர் – பசி, தாகம், சோகம், மூப்பு, மரணம் இவை எதுவுமே இல்லாத ஆத்மா. இதனை உணர்ந்தவர்கள்
(ப்ராஹ்மணர்கள்) புத்ரன், பணம், உலகம் என்கிற மூன்றிலும் பற்று இல்லாமல், பிக்ஷை எடுத்து வாழ்கின்றனர். ப்ராஹ்மணன்,
உபதேசம் மூலம் பாண்டித்யம் பெற்று, அஹங்காரம் அற்று இருக்க வேண்டும். எப்போதும் அந்த ஆத்மாவையே சிந்திக்க வேண்டும்.

கார்கி என்கிற ஸ்த்ரீ கேள்வி கேட்டாள்
”இந்த பூமிக்கெல்லாம் ஆதாரமானது ஜலம். அதற்கு எது ஆதாரம்” என்று கேட்டு மேன்மேலும் கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தாள்.
யாஜ்ஞயவல்க்யர் மேன்மேலும் பதில்களைச் சொல்லி லோகங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார்.

கடைசியாக ”ப்ரம்ம லோகங்களுக்கு எது ஆதாரம்?” எனக் கேட்டாள்.
கேட்கத் தகாததை, உள்ளபடி உணராமல் கேட்டால் தலை விண்டு விழுந்து விடும் என்று யாஜ்ஞவல்க்யர் சொல்ல,
கார்கி அத்துடன் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.

உத்தாலகர் சொன்னதாவது:
மத்ர தேசத்தில் பதஞ்சலரின் வீட்டில் அத்யயனம் செய்து கொண்டிருந்த போது அவருடைய மனைவியை ஒரு கந்தர்வன்
பிடித்தான். அவனை யார் என்று கேட்டோம். நான் ஆதர்வணன், கபந்தன் என்றான். அந்த கந்தர்வன் என்கிற பிசாசம் எங்களைக் கேட்டான்.

”எல்லா உலகங்களையும் எல்லா ஜந்துக்களையும் தரித்திருக்கும் ஸுத்ரம், அவற்றின் உள்ளே இருந்து நியமிக்கும்
அந்தர்யாமியை அறிவீர்களா?
இதை அறிந்தவன்தான் லோகம்,வேதம், ப்ரம்மம் இவற்றை அறிந்தவனாவான் என்று சொன்னான்.
அது என்ன?”
யாஷ்ஞவல்க்யர் – நான் அறிவேன். அந்த ஸுத்ரமானது ப்ராணன். எல்லா உலகங்களையும் ஜந்துக்களையும் உள்ளே
இருந்து நியமிக்கும் அந்தர்யாமிதான் ப்ரம்மம். சாதாரணமாக உத்தாலகர் கேள்விகளுக்குத் த்ருப்தியான பதில் வந்தால்,
ஸதஸ்ஸில் கேள்வி கேட்பதை அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். (இவரை வெல்ல யாருமில்லை என்று பொருள்)

ஆனால், கார்கி மறுபடியும் கேள்வி கேட்டாள்.
கார்கி – வானுலகுக்கு கீழும், மேலும் (எல்லா இடங்களிலும்) எல்லா காலங்களிலும் எல்லா வஸ்துக்களும் எதை ஆதாரமாக
உடையதோ, எது காரணமோ, அது என்ன?
யாஜ்ஞவல்க்யர் – ஆகாசம் (மூலப்ரக்ருதி)
கார்கி – இதற்கும் (ஆகாசத்திற்கும்) ஆதாரம் எது ?
யாஷ்ஞவல்க்யர் – அக்ஷரம். சிறிதுமல்ல, பெரிதுமல்ல, நீண்டதுமல்ல, குறுகியதுமல்ல எந்த நிறமுமல்ல. எல்லா
இடத்திலுமிருப்பது. இதன் ஸங்கல்பத்தினாலே ஸுர்யன், சந்த்ரன்,ஸ்வர்க்கம், நக்ஷத்ரங்கள், பூமி யாவும் தரிக்கப்பட்டு இருக்கின்றன.
இதற்கு மேம்பட்ட எதுவுமில்லை என்று பலவாறாக எடுத்துரைத்தார்.

கார்கி என்பவள் ”இவரை ஜெயிக்க இயலாது எல்லோரும் இவருக்கு நமஸ்காரம் செய்யுங்கள்” என்றார்.

பிறகும் விதக்தர் என்பவர் கேள்விகள் கேட்டார்.
யாஜ்ஞவல்க்யர் ”இவ்வளவு மஹரிஷிகள் இந்த ஸதஸ்ஸில் கேள்விகள் கேட்டு என்னுடைய பதில்களால் திருப்தி
அடைந்தார்கள். நீர் வீண் ஆடம்பரத்திற்காக கேள்விகள் கேட்கிறீர். நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லும்” என்று பலவாறாகக் கேட்க,
எல்லாவற்றிற்கும் விதக்தர் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.
இந்தச் சமயத்தில்,
யாஜ்ஞவல்க்யர் முன்பு எட்டு புருஷர்களைப் பற்றிச் சொன்னேன் -அவர்களுக்கும் அவர்களின் ஆதாரம் முதலியவற்றிற்கும்
மேற்பட்டு அவற்றையெல்லாம் நியமித்து அடக்கும் ஓளபநிஷத புருஷன்–உபநிஷத்துக்களிலே சொல்லப்படும் புருஷன் யார்?
நீர் அது யார் என்று சொல்லவில்லையெனில், உமது தலை துண்டாகிக் கீழே விழும்” என்றார்.
விதக்தர் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவுடன் தலை துண்டாகிக் கீழே விழுந்தது.

அவருடைய சிஷ்யர்கள், அவருடைய அஸ்திகளை மூட்டையாகக் கட்டி, அவர் வீட்டில் சேர்க்க, எடுத்துச் செல்லும்
போது, வழியில், திருடர்கள், இந்த மூட்டையில் பணம் இருக்கிறது என்று எண்ணி அதைப் பிடுங்கிக் கொண்டு ஓடினர்
(ப்ரம்ம வித்திடம் அபசாரப்பட்டதால் இப்படிநேர்ந்தது என்பதை உணர வேண்டும்).

யாஜ்ஞவல்க்யர், ஸதஸ்ஸில் உள்ளவர்களைப் பார்த்து, இன்னும் யாராவது கேள்விகள் கேட்கலாம் என்றார்.
நடுநடுங்கிய அவர்கள் ஒன்றும் பேசவில்லை. ஸதஸ் கலைந்தது.

10(2) ஜநகர் – யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்

பிறிதொரு சமயம் யாஜ்ஞவல்க்யர் ஜனக ராஜன் சபைக்கு மறுபடியும் சென்றார். அரசன் வணங்கி, வரவேற்று, பசுக்கள்
வேண்டுமா அல்லது வேத அர்த்தங்களுக்கா என்றார்.
யாஜ்ஞவல்க்யர் இப்போது அரசனுக்கு உபதேசித்தார்.

வலது கண்ணிலே ”இந்த்தன்” என்கிற புருஷன் இருக்கிறான்
(இந்திரன் என்கிறதை மறைமுகமாக இப்படிச் சொல்லும் பழக்கம் உண்டு) இடது கண்ணில் அவனுடைய பத்னி இருக்கிறாள்.
இவ்விருவருக்கும் ஹ்ருதயமே வாசஸ்தலம். அங்குள்ள மாம்ஸமே அன்னம்.
ஹ்ருதயத்தில் பின்னலைப் போல உள்ள நாடிகள் வஸ்த்ரம்.
ஹ்ருதயத்தினுள் பல ஆயிரமாகப் பிரிந்து, கேசத்தைவிட மெல்லிய நாடிகள் உள்ளன. அவற்றிற்கு ”ஹிதை” என்று பெயர்.
அவற்றின் வழியாக, ஜீவன் வெளியே கிளம்புகிறான்.

ஹ்ருதயத்திலிருந்து உச்சந்தலை உள்ளவரை உள்ள மார்க்கமானது (சுஷும்நா நாடி) ப்ராண, இந்த்ரியங்களில்
சிக்குண்ட ஜீவாத்மாவைக் காட்டிலும், பற்றற்றவனாக அழிவற்றவனாக ஹ்ருதயத்திலுள்ள பரமாத்மா வேறுபட்டவன்.

இன்னொரு சமயம், இதே போன்ற ஒரு ஸம்வாதம் நடந்தது.
அரசன் கேட்க யாஜ்ஞவல்க்யர் பதில் சொல்ல மிக உன்னதமான கருத்துக்கள் கிடைத்தன.

அரசன் – புருஷ னுக்கு எது ஜ்யோதிஸ் ?
யாஞவல்க்யர்- ஸுர்யன்தான் ஜ்யோதிஸ்
அரசன் – ஸுர்யன் அஸ்தமித்தால் ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது சந்த்ரன்
அரசன் – இருவரும் இல்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது அக்னி (விளக்கு போன்றவை)
அரசன் – அதுவுமில்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – வாக்கு, மையிருட்டிலும் பேசினால் பேச்சைக் கொண்டு அவனை அறியலாம், அணுகலாம்
அரசன் – வாக்கும் இல்லாத போது ?
யாஜ்ஞவல்க்யர் – ஆத்மாவே ஜ்யோதிஸ்
அரசன் – ஆத்மாவாவது எது ?
யாஜ்ஞவல்க்யர் – ஹ்ருதயத்திலே ப்ராண வாயு முதலியன இருக்க அறிவுக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா. ஸ்வப்ன லோகத்தை
ஆத்மா சேரும்போது, துக்க ரூபமான இவ்வுலகைக் கடக்கிறது.
உடலோடு சேர்ந்திருக்கும்வரை பாபம் செய்கிறது.
உடலிலிருந்து விடுபட்டு விட்டால் பாபம் இல்லை. ஸ்வப்ன காலத்தில், அவற்றில் ஏற்பட்டதைக் கொண்டு தானே அவற்றை அறிகிறான்.
திரும்பவும் இவ்வுலகத்திற்கு வருகிறான். ஸ்வப்னத்தில் துக்கம், மகிழ்ச்சி, சோகம், இன்பம் இப்படி அனுபவிக்கிறான். எல்லாம்
ஸ்வப்னம் என்று பிற்பாடுதான் தெரிகிறது. ஸ்வப்ன காலத்திலே ஜீவன் தனக்குத் தானே ஜ்யோதிஸ்ஸாக ஆகிறான்.
உறக்கத்தில்(ஸுஷுப்தி) பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறான். அப்போது உற்றார், உறவினர், புண்யம், பாபம் , துக்கம் என்று எதனோடும்
இணைப்பு இருப்பதில்லை
தைத்திரியோபநிஷத்தில் சொல்லியபடி,

மனுஷ்ய ஆநந்தம், பித்ருக்களின் ஆநந்தம், தேவர்களின் ஆநந்தம், சதுர்முக (ப்ரம்மா) ஆநந்தம் என்று மேன்மேலும் உள்ள
ஆநந்தத்தை அடைகிறான். இப்போது எந்த இந்த்ரியமும் வேலை செய்வதில்லை. மனஸ் ஓய்வில் இருக்கிறது.

10(3) – விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், இறப்பு

விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம் என்ற நிலைகளுக்கு மேற்பட்ட நிலை இறப்பு. அப்போது பரமாத்மாவினால் வேறு இடம் கொண்டு போகப்படுகிறான்.
புண்ய, பாபங்களுக்கு ஏற்றவாறுவேறு சரீரம் எடுத்து அனுபவிக்கிறான்.
ஜ்ஞானம், கர்மாக்கள்,பூர்வ வாஸனை, இந்த மூன்றும இந்த ஜீவனைத் தொடர்கின்றன.
ஜ்ஞானமும், கருமங்களும் ஜீவனுக்கு அடுத்த பிறவியில் அநுபவிக்க வேண்டிய விஷயங்களைச் சேர்த்து வைக்கின்றன.
இந்த விஷயங்களைக் கையாள பூர்வ வாசனை உதவுகிறது.
ப்ரஹ்மஞானம் உள்ளவன், ப்ரம்மாநுபவம் பெறுகிறான்.
புனர் ஜன்மம் இன்றி, தேவயானம் வழியாக ஸுர்ய மண்டலம் புகுந்து மோக்ஷம் பெறுகிறான்.
பரமாத்மாவே,ப்ராணேந்த்ரியங்களுக்குச் சக்தி அளிப்பவன். அவன் எங்குமிருப்பவன். மனஸ்ஸால் தான் அவனைப் பார்க்க இயலும்.
அந்தர்யாமியாய் ஹ்ருதயத்தில் இருக்கிறான். இவனை அறிய, வேத அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ் முதலியன செய்கின்றனர்.
யோகநிஷ்டையில் இழிந்து, இவனைக் காண முயற்சிக்கின்றனர். இவனை அடைய ஸன்யாஸம் மேற்கொள்கின்றனர். இந்த்ரியங்களை அடக்கி, தீயதைச்
செய்யாமல், காம்ய கர்மங்களைச் செய்யாமல், சீதோஷ்ண சுக துக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, மனஸ்ஸை நன்கு
நிலைநிறுத்தி தனக்குள்ளே இருக்கும் இந்தப் பரமாத்மாவைப் பார்க்கவேண்டும்.
இதுவே ”பரப்ரம்மம்”. இந்த பரப்ரம்மம் , இக பர சுகங்களையும் எல்லாவற்றையும் அளிக்கும்.

பூர்ணத்தில் இருந்து பூர்ணம் உயர்ந்தது. பூர்ணத்தைச் சார்ந்த பூர்ணத்தை அழித்து , பூர்ணம் தான் முடிவில் இருக்கிறது.
வேதத்தில் சொல்லியபடி, எல்லா உலகமும் உயிர்களும் ப்ரஹ்மாவால் சிருஷ்டிக்கப் படுகின்றன. ஆதலால், வேதம்
எங்கும் நிறைந்திருக்கிறது. இதற்குக் காரணமான வேதம்,
கார்யமான ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் உயர்ந்தது. கார்யமாய் காரணம் நிறைந்து உள்ளதற்கும், மேலான வ்யாஹ்ருதி ( பூ:, புவ:,ஸு வ:)க்கு, லயஸ்தானமாய் எல்லாவற்றிற்குமே காரணமாக இருப்பது ப்ரணவம். இந்த ப்ரணவத்தை ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும்
(பூர்ணம் என்கிற மந்திரத்திற்குப் ப்ரம்மம் என்றும் பொருள் உண்டு).

10(4) ப்ரஜைகள் மூன்று வகை

தேவர்கள் (தேவதைகள்), மனிதர்கள், அசுரர்கள். இவர்கள் தங்களுடைய தகப்பனாரை அண்டி, உபதேசிக்குமாறு வேண்டினர்.
தேவர்கள் வேண்டிய போது “த” என்று உபதேசித்து தெரிந்து கொண்டீர்களா என்று தகப்பனார் கேட்டார்.
”தமம்”அதாவது ”இந்த்ரிய நிக்ரஹம்” வேண்டும் என்று புரிந்து கொண்டோம் என்றனர்.

மனிதர்களிடம் ”த” என்பதைச் சொன்னபோது ”தானம்” செய்யுங்கள் என்பதை உணர்ந்ததாக, அவர்கள் சொன்னார்கள்.

அசுரர்களிடம், அந்த எழுத்தைச் சொன்ன போது, தயை புரியுங்கள் என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள்.

ப்ரம்மத்திலிருந்து பிறந்த ”ப்ரஜாபதியின்” புதல்வர்களான தேவர்கள் ஸத்யத்தை உபாஸிக்கின்றனர். பரப்ரம்மமே ஸத்யம்.
இது (பரப்ரம்மம்) ஆதித்ய மண்டலத்திலும் உள்ளது.
கண்ணிலும் உள்ளது. இதற்கு பூ: , புவ:, ஸுவ: என்கிற வ்யாஹ்ருதிகள்.

சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்ட சாண்டில்ய வித்யை, மின்னலை ப்ரம்மமாக உபாஸிப்பது சொல்லப் படுகிறது
வாக்கை, ”பசு”வாக உபாஸிப்பது, மோக்ஷம் செல்பவன் தேவயான மார்க்கத்தில், ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக
தாபங்களுக்கு இடமில்லாத ப்ரம்ம லோகம் சென்று சந்தோஷிப்பது சொல்லப்படுகிறது .
அன்னத்தை ”வி” என்றும், ப்ராணனை ”ரம்” என்றும் சேர்த்து ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ப்ராணனை, ருக்காகவும், யஜூஸ்ஸாகவும், ஸாமமாகவும் உபாஸிப்பது சொல்லப்படுகிறது. வாக் எனப்படும் வேதத்தை
பசுவாக உபாஸிக்க வேண்டும். பசுவுக்கு நான்கு மடிகள்.
ஸ்வாஹா , வஷட், ஹந்த, ஸ்வதா.
தேவர்களுக்குக்கொடுக்கப்படும் ஹவிர் பாகங்கள் ஸ்வாஹா அல்லது வஷட்.
மனுஷ்ய யஜ்ஞத்தில், ஹந்த என்று சொல்லி ஹவிஸ்ஸும்,
பித்ருக்களை உத்தேசித்துச் செய்யும்போது ஸ்வதா என்றும் சொல்லப்படுகிறது.

பசு – வாக்கு.
காளை – ப்ராணன்.
கன்று – மனஸ்.
பால்-பகவானை துதிக்கும் ஸ்தோத்ரங்கள்.

10(5) – காயத்ரீ உபாஸனம்

காயத்ரீயின் முதல் பாதத்தை மூன்று உலகங்களாக உபாஸிப்பவன் மூன்று உலகங்களில் எதையும் அடைவான்.
இரண்டாம் பாதத்தை மூன்று வேதங்களாக உபாஸிப்பவன்,
வேதத்தில் சொல்லப்பட்ட பலன்களை அடைவான்.
மூன்றாம் பாதத்தை, ப்ராண அபான, வ்யானங்களாக உபாஸித்தால், எல்லாப் ப்ராணிகளையும் வசமாக்கிக் கொள்ளலாம்.
நான்காம் பாதத்திற்கு “தர்சபதம்” என்று பெயர். இதைப் ப்ரம்மமாக உபாஸித்தால், புகழ், பொருள் கிடைக்கும்.
ப்ராணன்களுக்கு,“கயம்” என்று பெயர்.
கயங்களைக் காப்பதாலே காயத்ரீ .
காயத்ரீ உபாஸனம் செய்பவன் இஷ்டப்பட்ட பலனை அடைவான்.

ப்ரம்ம உபாஸனம் செய்பவனுக்கு நான்கு மந்த்ரங்கள் –
ப்ரார்த்தனை செய்வதற்காக இங்கு சொல்லப்படுகிறது.
(இது,ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் உள்ளது).

10(6) மந்த்த கர்மா

ப்ராண வித்யை, பஞ்சாக்னி வித்யை, மந்த்த கர்ம – –மூன்றும் சொல்லப்படுகின்றன (சாந்தோக்ய உபநிஷத்தைப் பார்க்க) .
மந்த்த கர்மாவில் நெய்யினால் ஹோமங்களைச் செய்த பிறகு, ”மந்த்த”என்கிற வஸ்துவை, ப்ராணனைப் புகழும் மந்த்ரத்தைச் சொல்லிக்
கொண்டே கையில் வைத்துக் கொண்டு, காயத்ரீயினாலும், இன்னும் சில மந்த்ரங்களாலும், விதிப்படி ஆசமனம் செய்து,
அக்னிக்கு மேற்கே கிழக்கில் தலை வைத்து இரவில் படுத்திருந்து,
உதயத்தில் ஸுர்யனுக்கு உபஸ்தான மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.
இப்படியான மந்த்த த்ரவ்யத்தாலே உலர்ந்த கட்டையை நனைத்தால் அது துளிர் விட்டு, கப்பும் களையுமாக வளரும்.
”மந்த்த த்ரவ்யம்” என்பது, நெல், யவம், எள், உளுந்து, கோதுமை, ப்ரயங்கு, மஸுரம் கல்வம், கலகுலம்,இன்னொன்று
பெயர் தெரியவில்லை (பத்து தானியங்கள்)
இவற்றை எல்லாம் அரைத்து தயிர், தேன், நெய் இவற்றில் ஊற வைக்க வேண்டும்.
ஹோமங்கள் நெய்யினாலே செய்யப்பட வேண்டும்.
பிள்ளை பெறுகிறவன், இந்த பிள்ளை ,தனக்குச் சிறந்த பலன்களை மேலுலகில் அடையுமாறு செய்ய,இவன் எப்படி நடந்து கொள்ளவேண்டும்,
என்ன கார்யங்களைச்செய்யவேண்டும் என்று பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

தீர்க்கமான ஆயுளைப் பிள்ளை பெறும்படியாகவும்,நன்கு படிக்கவும்,
பிரஸித்தியாக வேண்டுமென்றாலும் செய்ய வேண்டிய முறைகள்,இதில் சொல்லப்படுகின்றன.

”வம்ஸ ப்ராம்மணம்” என்கிற பரம்பரை சொல்லப்படுகிறது.
பரப்ரம்மம், ப்ரஜாபதி என்கிற பரம்பரை ஒன்று.
ஆதித்யனிடமிருந்து வரும் பரம்பரை மற்றொன்று.
இரண்டும் ஒன்று சேர்ந்ததும் சொல்லப்படுகிறது.
யாஜ்ஞ்யவல்க்யர், ஸுர்யனிடம் ஸூக்ல யஜூஸ் வேதத்தைப் பெற்றது சொல்லப்படுகிறது .

இதுவே ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் சாரம்.

————

11 – ச்வேதாச்வதரோபநிஷத்

ஆறு அத்யாயங்கள். சித், அசித், ஈச்வரன் என்று தத்துவங்களை மூன்றாக வகுத்ததற்கு இது ஆதாரம்.
பரமாத்மாவின் ஸ்வரூபம்,சக்ர ரூபமாகச் சொல்லப்படுகிறது.
பிறப்பது, வாழ்வது, இறப்பது முதலிய எல்லாவற்றிற்கும் காரணமானது எது?
காலமா?
இயற்கையா?
முன்வினையா?
பஞ்சபூதங்களா?
மூலப்ரக்ருதியா?
ஜீவனா?—இல்லை,
இவை எல்லாம் சேர்ந்ததா?
சேர்ந்ததாக இருந்தால், சேர்த்தது யார்?
என்று விவாதித்து “பரமாத்மா” என்கிற முடிவுக்கு வந்தது.

ஸம்ஸாரத்திலே உழல்கின்ற ஜீவர்.
எல்லாம் அறிந்த ஈச்வரன்.
போகத்தை அளிக்கும் அசித் (அசேதநம்).
ஈச்வரன், குணங்கள் நிறைந்த குறையில்லாத ஜோதி.
இவன், சேதனன், அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருக்கிறான்.
இதுதான் ப்ரம்மம்.-இதற்கு மேல் ஒன்றுமில்லை.
இது அரணிக்கட்டையில் உள்ள அக்னியைப் போன்றது.-எளிதில் அறிய இயலாது.
ஜீவாத்மா கீழ் அரணிக் கட்டை.
ப்ரணவம் மேல் அரணி.
கடைதல் என்பது த்யானம் செய்தல்.
இப்படி ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா மறைந்திருப்பதைத் த்யானம் செய்து,அறிந்து உபாஸிக்க வேண்டும்.
த்யானம் செய்பவருக்கு,கர்மானுஷ்டானம் முக்கியம்.
விஷ்வக்ஸேனர், ஆசார்யன் இவர்களின் அநுக்ரஹத்தைப் பெற வேண்டும்
பகவானை ஸ்தோத்தரித்து, அவன் அருளாலே, அவனிடம் மனதைப் பதிய வைக்கவேண்டும்.
தலை, கழுத்து, மார்பு இவற்றை நன்கு நிமிர்த்தி, சுத்தமான இடத்தில் தகுந்த ஆஸனத்தில் அமர்ந்து புலன்களை அடக்கி ,
ப்ராணாயாமங்களைச் செய்து, மனஸ்ஸை பரப்ரம்மத்திடம் நிறுத்த வேண்டும்.

அக்ஷரங்கள் யாவும் அகரத்திலிருந்து உண்டாகின்றன.
அகரத்தின் பொருளான பரமாத்மாவிடமிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன.
அவன் அனைத்துக்கும் அந்தராத்மா. அவன் மாயன். மாயை ”மூலப்ரக்ருதி”.
அவனுடைய அம்சங்களே ஜீவாத்மாக்கள். இவனைச் சரணம் அடைய வேண்டும்.
ஜ்ஞானம், கர்மம் இரண்டாலும் அவனை ஆராதிக்க வேண்டும்.
இந்த ஜீவாத்மா ஆணல்ல, பெண்ணல்ல,அலியுமல்ல.
எந்த உடலை, கர்ம வினையால் பெறுகிறதோ, அதன் அடிப்படையில் ஜென்மாக்களில் இந்த ஜீவன்
அழைக்கப்படும்.
இவற்றையெல்லாம் தெளிந்து, பரமாத்மாவை ஆராதிப்பவர் அவன் திருவடியை அடைவர்.

பரமாத்மா ஜகத்காரணன்.
பந்த பாசங்களிடமிருந்து விடுபட்டு, அவனையே கதி என்று நினைப்பவருக்கு மோக்ஷம் உண்டு.
பரமாத்மா – ஆறு விதமான – எட்டுகளை உடையவன்.
(1) அஷ்டமாசித்தி
(2) எட்டு திக்குகள்
(3) எட்டு திக்பாலகர்கள்
(4) எட்டு ப்ரக்ருதிகள் (பூமி, ஜலம், ஆகாசம், நெருப்பு, வாயு,மனஸ், புத்தி, அஹங்காரம்)
(5) எட்டு தேவதைகள் (ப்ரஹ்மா, ப்ரஜாபதி போன்றவர்கள்)
(6) எட்டு வஸுக்கள்
(7) எட்டு திருக்கல்யாண குணங்கள்

(இந்த ஏழில் ஏதேனும் ஆறு) மூன்று மார்க்கங்களை உடையவன்.
(1) மோக்ஷத்திற்குச் செல்லும் தேவயாநம்
(2) கர்மலோகத்திற்குச் செல்லும் பித்ருயாநம்
(3) க்ஷூத்ர ஜந்துக்களுக்கான மார்க்கம்

ச்வேதாச்வதரர், தன் தபோபலத்தாலும், தெய்வ அநுக்ரஹத்தாலும், ப்ரம்மத்தை அறிந்து பலருக்கு இப்படி உபதேசித்தார்.

—————-

12 -அதர்வசிர உபநிஷத்து

தேவதைகள், ஸ்வர்க்கத்திற்குச் சென்று, ருத்ரனைப் பார்த்து, ”நீர் யார்?” என்று கேட்க,
அவர், ”நான் ஒருவனே முதலில் இருந்தேன்: இப்போதும் இருக்கிறேன்.
இனிமேலும் இருக்கப் போகிறேன் என்னைத் தவிர வேறொன்றும் இல்லை” என்றார்.
தேவதைகள், பகவான் சொல்ல வேண்டியதை இவர் சொல்கிறாரே என்று நினைத்தனர்.

ருத்ரன், ”தேவதைகளே! நீங்கள் நினைத்த அந்த பகவான் சூக்ஷ்மத்திற்கும் சூக்ஷ்மமானவன். எங்கும் பரந்து உள் புகுந்து
இருப்பவன். எனக்கும் அந்தர்யாமி. இவ்வாறே எனக்குள் புகுந்திருப்பதால், நான் என்றேன்” என்று சொன்னார்.
ருத்ரன், பகவானின் பக்தன். தேவதைகள் இவ்வாறு ருத்ரனைத் துதித்தனர்.
ப்ரணவம், அதற்கு விளக்கம்-இது ஒருஉபாஸனா மார்க்கம் என்று சொல்லப்பட்டது.
இந்த்ரன், நான்முகன், ஆதித்யன், பசுபதி, யாவருக்கும் பகவான் அந்தர்யாமி . இது ஒருவகை உபாஸனம்.

————-

13 – அதர்வ சிகோபநிஷத்து

பைப்பலாதர் மற்றும் பல மஹரிஷிகள், ”அதர்வா” என்பவரிடம் சென்று ”த்யானத்திற்கு மந்த்ரம் எது?
த்யானமானது எது?
த்யானம் செய்பவன் யார்?
த்யானம் செய்யப்படும் தத்துவம் என்ன?” என்று கேட்டனர்.

அதர்வா பதில் சொன்னார்.
”த்யானத்திற்கு மந்த்ரம் ப்ரணவம். அது நான்கு பாதம் உள்ளதாய் ப்ரம்மமாகும். அகார,உகார, மகாரங்கள்
அவற்றின் மேல் அரை மாத்திரை –
இதுவே வேதங்கள். இதுவே லோகங்கள் என்றும் மற்றும் பலவிதமாகவும் , இது புகழப்படுகிறது .
இந்தப் ப்ரணவம் ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம், எனவும் பிரிக்கப்படும்.
இந்த நான்கு மாத்திரைகளை மனிதனுக்கு உள்ள விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், மோக்ஷம் என்கிற நான்கு தசைகளாகச் சொல்வர்.
இந்தப் ப்ரணவமே த்யானத்திற்குச் சாதனம்.
த்யானத்தை விஷ்ணுவாகப் பாவிக்க வேண்டும்.
த்யானத்திற்கு அதிஷ்டான தேவதை விஷ்ணு . த்யானம் செய்பவனை ருத்ரனாகப் பாவிக்க வேண்டும்.
ஸர்வ ஐச்வர்யம் உள்ள எல்லாவற்றிற்கும் காரணனான முன்பு அரை மாத்திரையில் தேவதையாகச் சொல்லப்பட்ட
பரம புருஷனே எல்லோருக்கும் சுகம் அளிப்பவன். அவனே உபாஸிக்கப்படவேண்டியவன்.

ஓம்-உபாஸனா மந்த்ரம். இதில் பரமாத்மா என்கிற எண்ணம் வேண்டும்.
ஓம் – இதற்கு நான்கு பாதங்கள்- அகாரம், உகாரம், மகாரம், நாதம்.

அகாரம் – பாஸ்வதீ என்றும் பெயர்.
ப்ருத்வி லோகம்;சிவப்பு, மஞ்சள் நிறம்;
ருக் வேதம்; ப்ரஹ்மா
தேவதை; அஷ்டவஸுக்கள்;
காயத்ரீ சந்தஸ்;
கார்ஹபத் அக்னி; என்று த்யானித்தல்.அவச்யம்

உகாரம் – வித்யுமதீ என்றும் பெயர்.
அந்தரிக்ஷ லோகம்;
யஜூர்வேதம்;
கருப்பு நிறம்;
விஷ்ணு தேவதை;
ஏகாதச ருத்ரர்கள்;
த்ருஷ்டுப்சந்தஸ்;
தக்ஷிணாக்னீ;
என்று த்யானிக்க வேண்டும்.

மகாரம் – ”சுபாசுபா” என்றும் பெயர்.
ஸாம வேதம்;
வெளுப்பு நிறம்;
ருத்ரன் தேவதை;
பன்னிரண்டு ஆதித்யர்கள்;

ஜகதீசந்தஸ்;
ஆஹவநீயாக்னி; என்று த்யானிக்க வேண்டும்.

நாதம் – ”வித்யுமதி” என்றும் பெயர்.
அதர்வ வேதம். அர்த்த மாத்திரை;
ஸோம லோகம்;
எல்லா நிறங்களும்;
மருத்தேவதைகள்;
விராட் சந்தஸ்;
ஏகர்ஷி என்கிற அக்னி; என்று த்யானிக்க வேண்டும்.

————

14 – கௌஷீதகி உபநிஷத்து

இதில் பர்யங்க வித்யை, ப்ரதர்தந வித்யை, பாலகி வித்யை சொல்லப்படுகிறது.
இவை யாவும் வித்யைகளில் சொல்லப்பட்டுள்ளது.

—————

15 – மந்த்ரிகோபநிஷத்து

ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களால் மூல ப்ரக்ருதியானது, பரப்ரம்ம ஸ்வரூபத்தை மறைக்கிறது.
ரஜஸ், தமோ, குணம் ஒழிந்து ஸத்வ குணம் மேலோங்கியவர்களின் ஹ்ருதயத்திலே அந்தர்யாமியாக ப்ரம்மத்தை தர்சிப்பார்கள்.
உலகில் ப்ரம்மத்தைச் சிலர் 26வது தத்துவமாயும், 27வதாகவும், 24-ஆகவும், இன்னும் எவ்வெவ்வாறோ
பார்க்கிறார்கள். எல்லாம் அவனிடமிருந்து பிறந்து அவனிடமே மறைகின்றன. இந்த ப்ரம்மத்தை அறிந்து உபாஸிப்பவர் அவனிடம்
சேர்ந்து விளங்குவர்.

————–

16 – ஸூபாலோபநிஷத்து

16 அத்யாயங்கள் உடையது. நாராயணனே பரதத்துவம் என்பதைச் சொல்கிறது.
”கோராங்கர்” என்பவர் ரைக்வருக்குச் சொன்னது இது.

சேதனங்கள், அசேதனங்கள், சேதனா சேதனங்கள் இவைகளுக்கு கார்யமாக இல்லாத ஒன்றிலிருந்து ”தமஸ்” தோன்றியது.
தமஸ்ஸிலிருந்து பஞ்ச பூதங்களுக்குக் காரணமான தாமஸ அஹங்காரம்,
இதிலிருந்து ஆகாசம்,
இதிலிருந்து வாயு,
வாயுவிலிருந்து அக்னி,
இதிலிருந்து ஜலம்,
ஜலத்திலிருந்து மண்
இப்படியாகத் தோன்றி இதெல்லாம் ப்ரம்மாண்டமாக ஆயிற்று.
கொஞ்சகாலத்திற்குப் பிறகு, இந்த ப்ரம்மாண்டம் பிளக்கப்பட்டு, மேல் பாகம் – ஸ்வர்க்கம், கீழ் பாகம் பூமியாகவும் ஆயிற்று.
நடுவில் ப்ரம்மாவுக்கு அந்தர்யாமியான மஹா புருஷன்.
அவன் ப்ராணிகளுக்கு ம்ருத்யுவைப் படைத்தான். அவன்தான் ருத்ரன். (கண்ட பரசு என்றும்பெயர்).
அந்த ம்ருத்யு ப்ரம்மாவிடத்தில் புகுந்து மறைந்தான்.

ப்ரஹ்மா, மானஸ புத்ரர்களாக ஏழு பேரைப் படைத்தான்.
அவர்கள் புத்ரர்களைப் படைத்தனர் (ப்ரஜாபதி எனப்படுபவர்கள்).
முகத்திலிருந்து ப்ராம்மணனும், கைகளிலிருந்து க்ஷத்திரியர்களும், தொடையிலிருந்து வைச்யர்களும்,
கால்களிலிருந்து ஸுத்ரர்களும் உண்டானார்கள்.
மனஸ்ஸிலிருந்து சந்த்ரனும், கண்ணிலிருந்து
ஸுர்யனும் காதிலிருந்து காற்றும், ப்ராண வாயுவும்,
ஹ்ருதயத்திலிருந்து மற்ற எல்லாமும் உண்டாயிற்று.
நெற்றியிலிருந்து கோபத்தினால் ருத்ரன் உண்டானார்.
எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொண்ட ஹிரண்ய கர்ப்பன்,
ஸ்த்ரீ , புருஷன் இரு உருவமாகப்பிரிந்து, தேவ – ரிஷி – யக்ஷ –
ராக்ஷஸ – கந்தர்வ ஜாதிகளையும், மிருகங்களையும் மற்றப் பிராணிகளையும் ச்ருஷ்டித்தான்.

ப்ரளய காலத்தில் அவனே அக்னியாகி எல்லாவற்றையும் எரிக்கிறான். அப்போது பூமி, ஜலத்திலும், ஜலம், நெருப்பிலும்,
நெருப்பு, காற்றிலும், காற்று, ஆகாசத்திலும் லயிக்கின்றன.

ஆகாசம், இந்த்ரியங்களோடும், இந்த்ரியங்கள், தன்- மாத்ரைகளோடும், தன்மாத்ரைகள், அஹங்காரத்திலும்,
அஹங்காரம், மஹத்திலும், மஹத், அவ்யக்தத்திலும், அவ்யக்தம், அக்ஷரத்திலும், அக்ஷரம், தமஸ்ஸிலும் லயிக்கின்றன.
தமஸ் பகவானுடன் ஒன்றி மறைகிறது.

இப்படிப்பட்ட பகவானை அடைய பலனில் பற்றில்லாமல், ஸத்யம், கொடை, தவம், ப்ரம்மச்சர்யம், வைராக்யம், யஜ்ஞம்,
என்கிற ஆறு அங்கங்களைக் கொண்டு உபாஸிக்க வேண்டும்.
ஹ்ருதயத்தின் நடுவே, மாம்ஸ பிண்டம் ஒன்று உள்ளது. (புரிதத்து) . அதில் தாமரைப் பூ போல ஓர் அவயவம் உள்ளது.
அங்கே நாடிகளின் வாயாக பத்து த்வாரங்கள் உள்ளன.அவற்றில் ப்ராண, அபான முதலிய வாயுக்கள் உலவுகின்றன.
யோகி, அந்தந்த வாயுவின் ஸகாயத்தால் எல்லா லோகங்களையும் யக்ஷ , ராக்ஷஸ, கந்தர்வர்களையும் மற்ற எல்லாவற்றையும் பார்க்கிறான்.
முக்யமான இந்த பத்து நாடிகள் ஒவ்வொன்றுக்கும் 72,000 சிறிய நரம்புகள் உள்ளன. ஜீவாத்மா இந்த நாடிகளில் இருக்கிறான்
(விழித்திருக்கும்போது).ஸ்வப்ன தசையில், ஸ்வப்னம் காண்பது,உறக்கத்தில் உடலைக் காப்பது,
ரத்தத்தை எல்லா நாடிகளிலும் பரப்புவது,ஹிதை எனப்படும் நாடிகளோடு சேர்ந்த ”புரிதத்து”என்கிற
ஹ்ருதயாகாசத்தில் போய் உறங்குவது எல்லாமே இதன் செயல்.
கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (தோலில் எங்கும் உள்ளது) மனஸ், புத்தி, அஹங்காரம், சித்தம், வாக்கு, கை, கால்,
மலேயந்திரியம், மூத்திரேந்திரியம்-ஆக 14 இந்த்ரியங்கள்.
இவைகளுக்குத் தனித்தனியாக உள்ள விஷயம் – இவற்றுக்கான
தேவதை-இப்படி 14 உபாஸனைகள்.
நாடி, ப்ராணன், அதனால்உண்டாகும் அறிவஅப்போது ஏற்படும் ஆநந்தம், ஹ்ருதயாகாசம்
ஆகிய 8 இடங்களில் பரந்து உள்ளவனாக-பகவானை உபாஸிக்கவேண்டும்.
எல்லாவற்றையும் நிர்வஹிப்பவன். கட்டளையிடுகிறவன்.
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா.
ப்ராணனுக்கும் ஆத்மா.
அறிவுக்கு எட்டாதவன்.
பலபடியாக வருணிக்கப்படும் பரமாத்மா
ஸ்ரீமன்நாராயணன். ஆதித்யர்கள், ருத்ரர்கள் அவனே.
காரணமும் அவனே. அவனுக்கு எல்லாப் பூமிகளும் உடல்.
பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவன்.
எல்லாம் உடலாய், பகவான்எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் –
ஆத்மாவாய் இருக்கும் இந்தவித்யையை உபதேசமாகப் பெற்றார்.
இது வேத ரஹஸ்யம்.

உடம்பில் உள்ள நாடிகளில் நான்கு நாடிகள்
முக்கியமானவை. ரமை, அரமை, இச்சை, அபுநர்பவை –
புண்யலோகம், பாப லோகம், நினைத்த இடம், மோக்ஷ ஸ்தானம், என்கிற இடங்களுக்கு இவை முறையே வாயில்கள்.
நான்காம் நாடி வழியாகப் புறப்பட்டு, ஹ்ருதயகோசம்,
தலைக்கபாலம் இவற்றைப் பிளந்து கொண்டு ப்ருத்வி முதல் எல்லா தத்துவங்களையும் கடந்து ஜீவன் மேலே செல்கிறான்.

இப்படிப்பட்ட வித்யையை புத்ரன், சிஷ்யன் தவிர வேறு யாருக்கும் உபதேசிக்கலாகாது.

————————

17 – அக்னி ரஹஸ்யம்

சுக்ல யஜூர் வேதத்தில், சதபத ப்ராம்மணத்தில் இது ஒரு பாகம். இது உபநிஷத்து அல்ல.
யாகங்கள், ஹோமங்கள் செய்பவர் வைதீகமான அக்னியை ”ஆதானம்” என்பதை அனுஷ்டித்து ஸம்பாதிக்கிறான்.
இவன் ”ஆயிதாக்னி” எனப்படுகிறான்.
ஸோம யாகம் செய்யும்போது கருடன் முதலான உருவில இடம், நிர்மாணிக்கப்பட்டு,ஆஹவநியாக்னி வைக்கப்படுகிறது.
புருஷனுடைய ஆயுட்காலம் 36,000 நாட்கள்.ஒவ்வொரு நாளிலும் செய்யும் கடமைகளை, யாகத்துக்கு வேண்டிய அங்கங்களாக பாவித்து க்ரது (யாகம்)
செய்ய வேண்டும். (ஸ்தோத்ரங்கள், பூஜை உட்பட ஒவ்வொருவரும் செய்யும் கடமைகள்).
இது” வித்யாமயக்ரது” எனப்படும்.(வைச்வாநர வித்யை – சாண்டில்ய வித்யை தனியே சொல்லப்பட்டுள்ளது)

————-

18- மஹோபநிஷத்

நாராயணன் ஒருவன் தான் ச்ருஷ்டிக்கு முன்பு இருந்தான்.
ப்ரம்மன், ருத்ரன், ஜலம், அக்னி, ஸோமன், ஸ்வர்க்கம்,பூமி,நக்ஷத்ரம், ஸுர்யன், சந்த்ரன் முதலிய எதுவும் இல்லை,
தனியாக இருப்பதில் த்ருப்தி இல்லாத நாராயணன்
த்யானம் செய்ய 14 பிள்ளைகள். (10 இந்த்ரியங்கள், மனஸ், அஹங்காரம்,ப்ராணன், ஆத்மா (உடல்).
புத்தி 15வது—— இப்படியாகப் பிறந்தன.
பிறகு 5 பூதங்கள், 5 தன்மாத்ரைகள்,, 25வது தத்துவமாக ஜீவன் பிறந்தன.
பரமாத்மா எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஜீவனை அதில் புகுத்தி ஸ்ருஷ்டி செய்தான்.
இப்படி எல்லா ஜீவ ஸ்ருஷ்டிக்கும் காரணம் நாராயணன்.
நெற்றியிலிருந்து ருத்ரன், இவனிடம் சத்யம், ப்ரம்மச்சர்யம்,
வேதம் மற்றும் பல செல்வங்கள் சேர்ந்தன.
ஆகவே அவன் ஈசானன், மஹா தேவன் எனப்பட்டான்.
அவன் நாராயணனை தியானம் செய்ய நெற்றியில் வியர்வை உண்டாயிற்று.
அது எங்கும் பரவி நீராக ஆயிற்று.
அதில் ப்ரம்மாண்டம் உண்டாயிற்று. ப்ரம்மன் அங்கு தோன்றினான்.
பிறகு அந்தந்த லோகங்கள், தேவதைகள் பிறந்தன.
இதற்கெல்லாம் காரணம் நாராயணன். அவனை ஆச்ரயித்தே எல்லா உலகமும் உயிர்களும் உள்ளன.
தாமரை மொட்டுபோன்ற ஹ்ருதயத்தில் அக்னி ஜ்வாலை உள்ளது.
அதனிடையில் பரமாத்மா இருக்கிறான். ப்ரம்மன், சிவன், இந்த்ரன் எல்லோருடைய ஹ்ருதயத்திலும் இருக்கிறான்.
இதற்கு மேல் ச்லோக ரூபமாக இந்த உபநிஷத் உள்ளது.

வேதம்- பெரிய பர்வதம்.
வேதாந்தம் என்கிற உபநிஷத் —-மலைக்குள் இருக்கும் குகை.
இந்த குகைக்குள் நம்மை அழைத்துப் போய்
நமக்கு வழிகாட்டுபவர்கள் ஆசார்யர்கள்.
வேதத்தை அத்யயனம் செய்தால் மட்டும் போதாது.
வேதாங்கங்களையும் கற்க வேண்டும் (வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், கல்பம், சிக்ஷா , ஜோதிடம்).

மஹரிஷிகள், ருக் வேதத்தை புத்தியாகிற மத்தினால் கடைந்தார்கள். எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே யஜூர் வேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே ஸாமவேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இந்த 24 அக்ஷரங்கள் தான் காயத்ரீ மந்த்ரம்.

இதையும் சுருக்கினார்கள்.
ருக் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ” பூ: ”
யஜூர் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ”புவ:” ,
ஸாமவேத 8 அக்ஷரங்களிலிருந்து ” ஸுவ:”
பூ:, புவ:, ஸுவ: —– வ்யாஹ்ருதி மந்த்ரம் என்று பெயர். இதை மேலும் சுருக்கினார்கள்.

ருக் —–.. பூ:.—— … என்பதிலிருந்து ”அ ”காரம்
யஜூர் ..—- புவ : —–… என்பதிலிருந்து” உ”காரம்
ஸாம —–.. ஸுவ:—- … என்பதிலிருந்து ”ம” காரம்
மூன்றையும் சேர்த்தார்கள்.
”ஓம்காரம்” பிறந்தது. வேதத்திற்கு இதுவே சிரஸ்.

யஜ்ஞ ப்ரகரணத்தில்
உத்கீதத்தாலே (ஸாம வேதம்)தேவதைகளையும், பகவானையும் அழைக்க வேண்டும்.
ருக் வேதத்தாலே அப்படி வந்தவர்களை ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்.
யஜூர் வேத மந்த்ரங்களால் இப்படி இப்படி அழைக்கப்பட்டு வந்துள்ள தேவதைகளுக்கும் பகவானுக்கும் ஹோமம் பண்ண வேண்டும்.
அதர்வ வேதமானது ப்ரஹ்மாவாக இருந்து இந்த யஜ்ஞத்தை நடத்தி வைக்கிறது.
வேதமும், ஸ்ம்ருதிகளும் என் கட்டளைகள். அவற்றை மீறி நடப்பவன் என் கட்டளையை மீறியவனாவான்.
அவன் என்னிடம் பக்தி கொண்டாலும் ஏற்கப்படாது என்று ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் பகவானே அருளி யிருக்கிறார்.

ஸ்ரீ நாராயண உபநிஷத் மந்த்ரத்தைச் சொல்லி வேதோபாஸனத்தை நிறைவு செய்கிறோம்.

ஓம் அத புருஷோ ஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயதி |
ஸ்ரீ நாராயணாத் ப்ராணோ ஜாயதே |
ஸ்ரீமனஸ்ஸர்வேந்த்ரியாணிச |
ஸ்ரீ கம்வாயுர் ஜ்யோதிராப: ப்ருதிவீ விச்வஸ்ய தாரிணீ |
ஸ்ரீ நாராயணாத் ப்ரஹ்மாஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் ருத்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாதிந்த்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் த்வாதாசா தித்யா ருத்ரா வஸவ: ஸர்வாணிச சந்தாகும்ஸி |
ஸ்ரீ நாராயணாதேவ ஸமுத்பத்யந்தே |
ஸ்ரீ நாராயணாத் ப்ரவர்த்தந்தே |
ஸ்ரீ நாராயணே ப்ரலீயந்தே |
ஸ்ரீ அத நித்யோ நாராயண: |
ஸ்ரீ ப்ரஹ்மாச நாராயண: |
ஸ்ரீ சிவஸ்ச நாராயண: |
ஸ்ரீ சந்ரஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ காலஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ ஊர்த்வம்ச நாராயண: |
ஸ்ரீ அதஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ அந்தர்பஹிஸ்ச நாராயண: |
நாராயண ஏவேதகும் ஸர்வம் |
யத்பூதம் யச்சபவ்யம் |
நிஷ் களங்கோ நிர்விகலபோநிராஞ்ஜநோ நிராக்யாத:

ஸுத்தோதேவ ஏகோ நாராயண: |
நத்விதியோஸ்தி கஸ்சித் |
ய ஏவம் வேத
ஸவிஷ்ணுரேவபவதி ஸவிஷ்ணுரேவ பவதி

ஓமித்யக்ரே வ்யாஹ்ரேத்
நம இதி பஸ்சாத்
நாராயணாயேத்யுபரிஷ்டாத்
ஓமித்யோகாக்ஷரம்
நம இதி த்வே அக்ஷரே
ஸ்ரீ நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி
ஏதத்வை நாராயண-ஸ்யாஷ்டாக்ஷரம் பதம்
யோஹவை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம் பதமத்யேதி
அனபப்ருவ: ஸர்வமாயுரேதி
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம்
ததோம்ருதத்வமச்நுதே ததோம் ருதத்வ மச்னுத இதி
ய ஏவம் வேத
இத்யுபநிஷத்

ப்ரத்யகானந்தம் ப்ரம்ஹ புருஷம் ப்ரணவ ஸ்வரூபம்
அகார உகார மகார இதி
தானேகதா ஸதபவத்ததோமிதி
யமுக்த்வா முச்யதோ யோகீ ஜன்ம ஸம்ஸார பந்தனாத்
ஓம் நமோ நாராயணாயேதி மந்த்ரோபாஸக:
வைகுண்டலோக புவனம் கமிஷ்யதி
ததிதம் பரம் புண்டரீகம் விக்ஞாநகனம்
தஸ்மாத் ததிதாப மாத்ரம்
ப்ரம்ஹ்ண்யோ தேவகீ புத்ரோம் ப்ரம்ஹண்யோ மதுஸுதனோம்
ஸர்வபூதஸ் தமேகம் நாராயணம்
காரண ரூப மகாரம் பரம்ப்ரஹ்மோம்
ஏதத தர்வதிரோயோ தீயதே

ப்ராதரதீயானோ ராத்ரிக்ருதம் பாபம் நாசயதி
ஸாயமதீயானோ சிவஸ்க்ருதம் பாபம்நாசயதி
மாத்யந்தின மாதித்யாபிமுகோதீயான:
பஞ்சபாதக உபபாதகாத் ப்ரமுச்யதே

ஸர்வவேதபராயண புண்யம் லபதே
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி

ய ஏவம் வேத
இத்யுபநிஷத்

ஹரி : ஓம்

————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -22-30—

March 24, 2021

பாடம் -22
அத்யாயம் -9-ஊகம்
•ஏழாவது அத்யாயத்தில் அதிதேசம் பொதுவாக சொல்லப்பட்டு, எட்டாவது அத்யாயத்தில்
அதி தேசத்தைப் பற்றின சில சிறப்பு விசாரங்கள் செய்யப் பட்டன.
•அதற்கு அடுத்ததாக, ஒன்பதாவது அத்யாயத்தில், ஊஹம் என்பது ஆராயப் படுகிறது.
• ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப் பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறு ஒன்றைக் குறித்து
செய்யப் படுதலுக்கு ஊஹம் என்று பெயர்.
• ப்ரக்ருதி யாகத்திலிருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அந்த அங்கம்
விக்ருதியில் வேறே ஒரு பொருளைக் குறித்தும் செய்யப் படலாம். இதற்கு ஊஹம் என்று பெயர்.
•இதுமூன்று சைகைப்படும்
•(1) ஸம்ஸ் காரத்தின் ஊஹம்
•(2) மந்த்ரத்தின் ஊஹம்
•(3) ஸாமத்தின் ஊஹம்

ஸம்ஸ்கார ஊகம்
தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஒரு யாகமான ஆக்நேய யாகத்தின் விக்ருதி தான்
ஸௌர்ய யாகம் என்று எட்டாவது அத்யாயத்தில் பார்த்தோம்.
• தர்சபூர்ணமாஸத்தில் ’ நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ’ என்று ஒரு கட்டளை உள்ளது. இந்தக்
கட்டளையில் ப்ரோக்ஷணம் என்ற செயல் எதைக் குறித்து விதிக்கப் படுகிறது, அதாவது,
ப்ரோக்ஷணத்தின் குறிக்கோள் என்ன என்று ஆராய வேண்டும்.
• ப்ரோக்ஷணம் என்பது நெல் உண்டாவதற்காக என்று சொல்ல இயலாது, ப்ரோக்ஷணம்
இல்லாமல் நெல் உண்டாகிற படியால். ஆகவே , ப்ரோ க்ஷணம் என்பது நெல்லில் ஒரு
தகுதியை ஏற்படுத்துவதற்காக என்று கொள்ள வேண்டும்.
• தகுதி ஏற்படுவதாவது – “ப்ரோக்ஷிக்கப் பட்ட நெல்லைக் கொண்டு புரோடாசத்தை சமைத்து
யாகம் செய்தால் தான் அந்த யாகத்திலிருந்து பயன் கிடைக்கும்,இல்லை என்றால் வெறும் நெல்லால்
புரோடாசத்தைச் செய்து யாகம் செய்தால் பயன் கிடைக்காது” என்பது தான்.
• அந்தத் தகுதி ஒரு வகையான அபூர்வம் / அத்ருஷ் டம் / புண்ணியம். ப்ரோக்ஷணம்
செய்வதால் நெல்லில் ஒரு அபூர்வம் உண்டாகிறது.
அது இருந்தால் தான் அந்த நெல்லால் செய்யப்பட யாகத்துக்கு பலன் கிடைக்கும்.

• ஆகவே , ப்ரோக்ஷணம் என்பது நெல் நெல்லாக ஆவதற்காக அல்ல. யாகத்தில்
பயன் படக்கூடிய த்ரவ்யமாக நெல்லை ஆக்குவதற்காகத் தான்.
ஆகையால், “நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ” என்ற கட்டளைக்கு உண்மையான பொருள் “அரிசி
உண்டாக்குவதன் மூலம் எந்த பொருள் யாகத்துக்கு உதவுகிறதோ , அந்த ப்ரோக்ஷணம்
செய்ய வேண்டும்” என்பதுதான். அது நெல்லா மற்ற ஓன்றா என்பது முக்கியம் அல்ல.
• இப்படி இருக்கிற படியால், இந்த ப்ரோக்ஷணம் என்கிற ஸம்ஸ்காரத்தை ஒரு விக்ருதி
யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அங்கு நெல் இல்லாமல் வேறே ஓரு
தான்யத்தால் ஹவிஸ் செய்யப்படவிருந்தாலும் அந்த தாந்யத்துக்கு ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.
•ப்ரக்ருதியில் நெல்லுக்கு செய்யப்பட்ட ஸம்ஸ்காரம் விக்ருதியில் ச்யாமாகம் முதலான
த்ரவ்யங்களுக்குச் செய்யப்படுகிறடியால் இது ஊஹம் ஆகும்

மந்த்ர ஊகம்
யாகங்களில் ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும் மந்த்ரத்தை உச்சரிக்கிறோம்.
அந்த மந்த்ரங்கள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயலை நமக்கு நினைவூட்டுகின்றன.
• ப்ரக்ருதியான ஆக்நேய யாகத்தில் நாலு கைப்பிடி அளவு நெல்லை யாகத்துக்காக எடுக்கும் பொழுது,
’இந்த நெல் அக்நிக்கு பிரியமானதாக ஆகும் படி இதத நிர்வாபம் செய்கிறேன்” என்ற
மந்த்ரம் சொல்ல ப்படுகிறது
• இந்த மந்த்ரத்தை ஸௌர்ய யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, ஸூர்யனுக்காக செய்யப்படும் யாகத்தில் இந்த
மந்த்ரத்தை அப்படியே உச்சரித்தால் அது தவறாகும்,
ஏன் என்றால் இந்த யாகத்தில் ஸூர்யனுக்காக தான் நெல், அக்நிக்காக அல்ல.
• பிரக்ருதியில் அக்நியைப் பற்றி பேசிய மந்த்ரம் விக்ருதியில் ஸூர்யனைப் பற்றப் பேசுகிற டியால் இது மந்த்ரத்தின் ஊஹம் ஆகும்.
•ஆனால், அக்நிக்கு பதிலாக ஸூர்யன் இந்த யாகத்தில் தேவதையாக இருக்கிற படியால், மந்த்ரத்தில் அக்நி என்ற சொல்லை எடுத்துவிட்டு
அவ்விடத்தில் ’ஸூர்யன்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டு,
“இந்த நெல் ஸூர்யனுக்கு பிரியமானதாக ஆகும் படி இதை நிர்வாபம் செய்கிறேன் ” என்று தான் சொல்ல வேண்டும்.
• இது தான் மந்த்ரத்தின் ஊஹம்

சாம ஊகம்
•ஸாமம் என்பது இசை . ருக் என்பது ஸாஹித்யம் / பாடல் வரிகள் போல். ஒரு ஸாமத்தோடு சேர்த்து ஒரு ருக் மந்த்ரத்தைப் பாடி,
அதன் மூலம் ஒரு பொருளின் குணங்களைப் புகழ்ந்ததால் அதற்கு ஸ்தோத்ரம் என்று பெயர்.
•ஸாமம் என்ன செய்கிறது என்றால் – ருக்கில் இருக்கும் எழுத்துகளை விஸ்லேஷம் அதாவது விரித்தல் / நீட்டிப்பு செய்கிறது. எடுத்துக்காட்டு
– ருக் மந்த்ரத்தில் ’எ’ என் ற எழுத்து இருந்தால், அதை இசையாகப் பாடும் பொழுது ’ஆஇ’ என்று பிரித்துப் பாட வேண்டும்
• பிரக்ருதியில் ஒரு ருக் மந்த்ரத்தில் மூன்றாவது இடத்தில் ’எ’ என்ற எழுத்து இருந்திருந்தால், அவ்விடத்தில் ’ஆஇ’ என்று பாடி யிருப்போம்.
• அதத ஸாமத்தை வேறே ருக்கில் அதிதேசம் செய்து, அந்த ருக்கோடு சேர்த்து பாடும் பொழுது, அதிலும் மூன்றாவது இடத்தில்
’எ’ என்ற எழுத்து இருக்கும் என்று சொல்ல இயலாது. ஏழாவது இடத்தில் இருக்கலாம்.
• அப்பொழுது, ’ஆஇ’ என்ற இதை ஏழாவது இடத்திலிருக்கும் ’எ’ என்ற எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிறது.
•ஆக, பிரக்ருதியில் மூன் றாவது ஸ்தாநத்திலிருந்த எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் பட்ட ஸாமம் விக்ருதியில் ஏழாவது
இடத்திலிருக்கும் எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிற டியால் இது ஸாமத்தின் ஊஹம் ஆகும்.

—————-

பாடம் -23-அத்யாயம் -10-பாதம்
மீமாம்ஸா சாஸ்த்ரத்தில், எட்டாவது அத்யாயத்தில் அதிதேசத்தைப் பற்றிச் சொன்ன பிறகு, ஒன்பதாவது
அத்யாயத்தில் ஊஹமும் பத்தாவது அத்யாயத்தில் பாதமும் சொல்லப்பட்டுள்ளன.
•ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறே ஒன்றைக் குறித்து
செய்யப்படுதலுக்கு ஊஹம் என்று பெயர் என்று சென்ற பாடத்தில் பார்த்தோம்.
•ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்.
•அதிதேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம். அந்தச் செயலை முழுவதுமாகக்
கை விடுவது பாதம். ஆகையால், அதிதேசத்தைச் சொன்னவுடன், அதில் சிறு மாற்றத்தை மட்டும் சொல்லும்
ஊஹத்தை முதலில் சொல்லிவிட்டு, கை விடுதல் என்ற பெரிய மாற்றத்தைச் சொல்லும் பாதம் பின்னால் சொல்லப்பட்டுள்ளது.

பாதம் ஏன் ஏற்படுகிறது
•விக்ருதி யாகம் நேரடியாக ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களை எதிர்ப்பார்க்கவில்லை . ’எனக்கு உதவி வேண்டும்’ என்ற தேவை
முதலில் ஏற்பட்டு, அதன் பின் தான் ’அந்த உதவியைச் செய்யக் கூடிய செயல்கள் / பொருள்கள் எவை ’ என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
•ஆகையால், ப்ரயாஜம் அநுயாஜம் ஆஜ்யபாகம் முதலான அங்கங்களை ஆக்நேய யாகத்திலிருந்து ஸௌர்ய யாகத்துக்கு
அதிதேசம் செய்யும் பொழுதும், அவற்றை மற்றும் அதிதேசம் செய்யக் கூடாது. எனவே , ’ப்ரயாஜம் செய்து, அநுயாஜம் செய்து,
ஆஜ்யபாகம் செய்து ஸௌர்ய யாகம் செய்ய வேண்டும்’ என்று அதிதேசத்தை ஏற்க முடியாது.
• ’ப்ரயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, அநுயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, ஆஜ்யபாகத்தால் இந்த உதவியைச் செய்து,
ஸௌர்ய யாகத்தைச் செய்ய வேண்டும்’ என்று உதவிகளின் பின்னால் தான் செயல்கள் வர வேண்டும்.
•ஆகவே , ப்ரக்ருதி யாகமான ஆக்நேய யாகத்தில் தேவைப்பட்ட ஓர் உதவி விக்ருதியான ஸௌர்ய யாகத்தில் தேவைப்படாவிட்டால்,
அந்த உதவியையோ அதைச் செய்யும் செயலையோ அதிதேசம் செய்யத் தேவை இல்லை –
•ஆகவே , ப்ரக்ருதிக்கு அங்கமான ஒன்று விக்ருதிக்கு அங்கமாக இல்லாமல் போனபடியால் அந்தச் செயலுக்கு / பொருளுக்கு பாதம்
ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது –

அர்த்த லோபத்தால் பாதம் –
• அர்த்தம் என்றால் ப்ரயோஜனம்/ பயன். லோபம் என்றால் மறைதல் .
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஆக்நேய யாகம் உள்ளது. அந்த யாகத்தைச் செய்ய நெல்லை உலக்கையால்
குத்தி, உமியை நீக்கி,அரிசியை எடுக்க வேண்டும்.
• மற்ற ஓரு யாகம் – “நீண் ட ஆயுஸ் வேண்டும் என்று ஆசைப்படுபவன்,ப்ரஜாபதி என்ற தேவதைக்காக நூறு தங்கத்தகடுகளை நெய்யில்
சேர்த்து சரு செய்து யாகம் செய்ய வேண்டும்” என்று விதிக்கப்பட்டுள்ளது. இது ஆக்நேய யாகத்தின் விக்ருதி ஆகும்.
•ஆக்நேய யாகத்திலிருந்து இந்த யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யும் பொழுது, உலக்கையால் குத்துதல் என்ற செயலை
அதிதேசம் செய்வதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை , ஏன் என்றால் தங்கத் தகடுகளை உலக்கையால் குத்தி உமியை நீக்க முடியாது.
•ஆக, இவ்விடத்தில், ப்ரக்ருதியில் ஒரு செயலால் ஏற்படும் பயன் விக்ருதியில் தேவைப்படாமல் போகிறபடியால்,
ப்ரயோஜனமில்லாதமயால் ’உலக்கையால் குத்துதல்’ என்ற செயலுக்கு அதிதேசம் கிடையாது, அதாவதி, அதற்கு பாதம் ஏற்படுகிறது.
• அதே போல் ஒரு யாகத்தில் ’தானாக வெட்டப்பட்ட தர்பத்தைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், தர்மத்தை வெட்டுதல் என்ற செயலை ப்ரக்ருதியிலிருந்து இந்த யாகத்துக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை –

பிரதி ஆம்நாநத்தால் பாதம் –
ப்ரதி என்றால் எதிர்மறை என்று பொருள். ஆம்நாநம் என்றால் உபதேசம்.
• ப்ரக்ருதியில் ஒரு அங்கத்தை உபதேசித்துவிட்டு, விக்ருதியில் அதற்கு முறண் பட்ட வேறே ஒரு அங்கத்தை
வேதமே உபதேசித்தால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்தை விக்ருதிக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை .
ஆகையால், அந்த அங்கத்துக்கு விக்ருதியில் பாதம் ஏற்படுகிறது.
• எடுத்துக்காட்டு – ப்ரக்ருதி யாகத்தில் ’குசம்’ என்ற புல்லை தர்பமாகப் பயன் படுத்த வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆனால், ஒரு விக்ருதியில், ’சரம்’ என்ற மற்ற ஓரு புல் வகையை தர்பமாகப் பயன் படுத்தச் சொல்கிறது.
ஆகையால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட குசம் விக்ருதிக்கு அங்கமாக அழைத்து வரப் படக் கூடாது. ஆகையால்,
அந்த ’குசம்’ என்ற புல்லுக்கு விக்ருதி யாகத்தில் பாதம் ஏற்படுகிறது.
• ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் விக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் ஒரே ப்ரயோஜனம் இருந்தால் தான் இப்படி பாதம்
ஏற்படும். நக்ஷத்ர இஷ்டி என்று ஒரு யாகம் உள்ளது. அதற்கு நாரிஷ்ட ஹோமம் என்ற ஒரு ஹோமம் அதிதேசத்தால் வந்து அடைகிறது.
புதிதாக இந்த யாகத்தில் உபஹோமம் என்ற ஒரு ஹோமமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், நாரிஷ் டஹோமம்
உண்டாக்கும் அதே அபூர்வத்தைத் தான் உபஹோமம் உண்டாக்கும் என்பதற்கு எந்த ப்ரமாணமும் இல்லாததால், இரண்டையுமே
செய்ய வேண்டும். ஒன்று மற்ற ஒன்றைப் பாதிக்காது.

பிரதி ஷேதத்தால் பாதம்
ப்ரதிஷேதம் என்றால் ஒன்றைச் செய்யாதே என்ற உபதேசம்.
ஒன்றைத் தவிற மற்றவற்றைச் செய் என்ற கட்டளைக்கு பர்யுதாஸம் என்று பெயர்.
• பொதுவாக யாகங்களின் யஜமாநன் சில ரித்விக்குளை அவனுக்குத் துணையாக அழைத்து, அவர்களை வரிக்க வேண்டும்.
ஆனால், மஹாபித்ரு யஜ்ஞம் என்று அழைக்கப்படும் விக்ருதியில் ’ஹோதா என் ற ரித்விக்கை வரிக்காதே ’ என்று கட்டளை உள்ளது.
• பூர்வபக்ஷம் – ப்ரக்ருதியில் ஹோதாவை வரிக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளது. எனவே அதிதேசத்தால் ஹோதாவை வரித்தல்
என்ற செயல் இந்த விக்ருதியை வந்து அடையும். ஆனால் விக்ருதியில் ’ஹோதாவை வரிக்காதே ’ என்று ப்ரதிஷேதம் / நிஷேதம் உள்ளது.
ஆகையால், சாஸ் த்ரமே ஹோதாவை வரிக்க வேண்டும் என்றும் வரிக்க வேண்டாம் என்றும் சொல்கிறபடியால் இரண்டுக்கும்
விகல்பம் தான், நம் ஆசைப்படி ஏதோ ஒன்றைச் செய்யலாம்.
• ஸித்தாந்தம் – விகல்பம் ஒப்புக் கொண்டால் பல தோஷங்கள் ஏற்படுகின்றன. ஆகையால், பர்யுதாஸம் சொல்வது தான் சிறந்தது.
பர்யுதாஸம்-இதைத்தவிர வேறே ஒன்றைச் செய்யாதே -சொல்வது தான் சிறந்தது.-
எனவே , இந்த கட்டளைக்கும் நாம் கல்பித்த கட்டளைக்கும் தொடர்பைக் கல்பித்து, ’மஹாபித்ரு யஜ்ஞத்தில் ஹோதாவை
வரித்தலைத் தவிற மற்ற அங்கங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்’ என்று பொருள் கொள்ள வேண்டும். ஆகையால்,
இங்கு ஹோதாவை வரித்தல் என்ற செயல் பாதிக்கப்படுகிறது, ஆனால் பர்யுதாஸத்தின் மூலம், ப்ரதிஷேதத்தால் அல்ல.

தர்ச பூர்ண மாஸங்களில் ஆறு ப்ரதான யாகங்கள் சொல்லப் பட்டுள்லன. அவற்றின் அங்கங்களில்
ஆஜ்யபாகங்கள் என்று இரு யாகங்கள் உள்ளன. அவற்றை உபதேசித்துவிட்டு, ’இவற்றை ஒரு விக்ருதி யாகத்தில்
செய்யக்கூடாது’ என்று ஒரு கட்டளை உள்ளது.
• இங்கும் முன் சொன்னது போல் ப்ரதிஷேதம் ஒப்புக் கொண்டால் விகல்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பர்யுதாஸம் தானா?
’அந்த விக்ருதியில் ஆஜ்யபாகங்கள் தவிற மற்ற அங்கங்களைத்தான் அதிதேசம் செய்ய வேண்டும்’ என்று பொருளா?
என்று பார்த்தால், அல்ல. ஏன் என்றால்,
எங்கோ இருக்கும் விக்ருதியின் அதிதேச வாக்யத்துக்கும் இங்கிருக்கும் வாக்யத்துக்கும் தொடர்வை கல்பிக்க இயலாது.
• ஆகையால், தவறு வழி இல்லாமல் இது ப்ரதிஷேதம் தான். ஆகையால், அந்த விக்ருதி யாகத்தில் ஆஜ்யபாகங்களுக்கு பாதம் ஏற்படுகிறது

————

பாடம் -24- அத்யாயம் -11-
• மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பத்தாவது அத்யாயத்தில் பாதம் என்பது விசாரிக்கப்பட்டது.
ஆக பத்து அத்யாயங்களால் ப்ரக்ருதி கர்மங்களிலும் விக்ருதி கர்மங்களிலும் எவை எல்லாம் அங்கங்கள் ஆகின்றன என்பது
முடிவாகியுள்ளது. இப்படி அந்தந்த யாகத்தில் ப்ரயோஜ்யமான அங்கங்கள் முடிவான பிறகு, அவற்றின் ப்ரயோகத்தைப் பற்றின விசாரம்
செய்யப் படுகிறது, தந்த்ரம் என்பதை விசாரிப்பதன் மூலம்.
• தந்த்ரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரே முறை அநுஷ்டித்தல்.
• ப்ரயோக விதியானது அங்கங்களையும் ப்ரதாநங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து ஒரு சேர்க்கை நமக்குத் தோற்றுகிறது.
அச் சேர்க்கை , ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும். ஆனால், எங்கு அது இயலாதோ அங்கு இடை விடாமல்
அடுத்தடுத்து அநுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது .
• ஆனால், எங்கு எங்கு முடியுமோ அங்கு சேர்த்தே அநுஷ் டிக்க வேண்டும், அதற்கு தான் தந்த்ரம் என்று பெயர்.
• (1) ப்ரதாந யாகங் களில் தந்த்ரம் –
வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களை ஒரே நொடியில் சேர்த்துச் செய்ய முடியாவிட்டாலும்,
ஒரே தேவதைக்காகச் செய்யப் படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்துச் செய்யலாம்.ஆகையால், இது தந்த்ரம் ஆகும்.
• (2) அங்கங்களுக்குள் தந்த்ரம் –
பல யாகங்களுக்கு அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது, அவற்றுக்குள் காலத்தாலோ தேசத்தாலோ
எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால், வேறுபாடு அறியாதபடியாலேயே அந்தச் செயலை ஒரே முறை செய்வதன் மூலம்
அனைத்து யாகங்களுக்கும் உதவலாம். இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும்

தந்திரம் ஏற்படுமா
• பூர்வபக்ஷம்
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் உள்ள ஆறு ப்ரதாந யாகங்கள் தனித் தனி விதி வாக்கியங்களால் விதிக்கப்படுகின்றன.
ஆகையால், அவை ஒவ் ஓன்றும் தங்கள் தங்கள் பலனை உண்டாக்க தனித் தனியே ஸாமர்த்யம் படைத்தவை என்று அறிகிறோம்.
• அடுத்து, ஒரு வேத வாக்கியம், இந்த யாகங்களுக்கு எல்லாம் ஸ்வர்கம் தான் பயன் என்று சொல்கிறது.
ஆகையால், தனித்தனியே ஒவ் ஓரு யாகத்தைச் செய்வதாலும் ஸ்வர்கம் பெறலாம்.
• ஆகையால், ஒன்றைச் செய்யும் பொழுது மற்ற ஓரு யாகத்தைச் செய்யும் ஆசை இருக்கத் தேவையில்லை .
எனவே அவற்றினிடையே ஒரு எத்ர்பார்ப்பு இல்லாத படியால் ஒரே ப்ரயோக விதிக்கு அவை இலக்கு ஆக மாட்டா.
• ஆகையால், அவற்றைச் சேர்த்து அநுஷ்டிக்க வேண்டும் என்று வேதம் சொல்லாத படியால், தந்த்ரம் என்பதே கிடையாது.
•ஸித்தாந்தம்
• முதலில் தனித்தனியே யாகங்கள் போதிக்கப் பட்டிருந்தாலும் அவை அனைத்துக்கும் சேர்த்து ஸ்வர்கம் என்ற ஒரே பயன் வேதத்தால்
சொல்லப் பட்டுள்ளது. ஆகையால், அவை ஒவ் ஓன்றும் மற்ற 5 யாகங்களை எதிர்பார்த்து தான் பலத்தைக் கொடுக்கின்றன.
• ஆகையால், பரஸ்பரம் எதிர்பார்ப்பு உள்ளபடியால் அனைத்துக்கும் சேர்த்து ஒரே ப்ரயோக விதி தான் உள்ளது.
ஆகையால், ஆறு ப்ரதாந யாகங்களையும் அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் சேர்த்தே செய்ய வேண்டும் என்பது வேதத்தின் எண்ணம்.
• ஆகையால், பல ப்ரதாநங்களைக் குறித்து ஒரு செயலை ஒரே முறை செய்யும் தந்த்ரம் என்பது ஏற்படலாம்.

கபிஞ்ஜல அதிகரணம் -உத்தர அதிகரணம்
• கபிஞ்ஜலாதிகரணம்
• வேதத்தில் ’வஸந்தம் என்ற தேவதைக்காக கபிஞ்ஜலங்களைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’
என்று ஒரு வாக்கியம் விதிக்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கு ’கபிஞ்ஜலங்கள்’ என்று பன்மை இருக்கிற படியால், பன்மை யானது மூன்று தொடங்கி இருக்கும் அனைத்து
எண்ணிக்கைகளையும் குறிக்கும் என்பதனால் யஜமாநனின் இஷ்டப்படி இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை
கபிஞ்ஜலங்களை வேண் டுமானாலும் பயன் படுத்தலாம்
•ஸித்தாந்தம் –
பன்மையைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வருவது மும்மை தான். மேலும், நான்கு ஐந்து என்ற
எதை எடுத்தாலும் அதில் மூன்றும் அடங்கும் என்பதனால் மும்மை என்பது தவிர்க்கமுடியாதது.
ஆகையால், மூன்று கபிஞ்ஜலங்களைப் பயன் படுத்தினாலே சாஸ்த்ரம் சொன்னது நிறைவேறி விடும்
என்பதால் பன்மைக்கு மும்மை தான் பொருள்
• உத்தராதிகரணம்
• தர்சபூர்ணமாஸத்திலுள்ள பால் யாகத்துக்காக மாடுகளைக் கறக்கும் போது
’மூன்று மாடுகளைக் கறந்து விட்டு மேலுள்ள மாடுகளைக் கறக்க வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கும் பன்மைக்கு மும்மை தான் பொருள். ஆகையால், மேலுள்ள மாடுகளில் மூன்றை மட்டும் கறக்க வேண்டும்.
•ஸித்தாந்தம் –
இங்கு ’அன்று இரவு குழந்தைகளுக்கும் பால் கிடைப்பதில்லை , பாலால் இவன் அக்நி ஹோத்ரமும் செய்ய முடியாது’ என்று
வேதம் சொல்கிற படியால், அந்த யஜமானனிடம் எத்தனை மாடுகள் உள்ளனவோ அவை அனைத்தையும்
கறக்க வேண்டும் என்று தெரிகிறது–மூன்றோடு நிறுத்தக் கூடாது –

ஆதாநம் ஒரு முறை தான்
•ஒரு யாகத்தைச் செய்ய அத்யயநம் செய்து பெற்ற வித்யை ,
ஆதாநம் செய்து பெற்ற அக்நிகள், ஸாமர்த்யம் ஆகியவை தேவை என்று பார்த்தோம்.
•ஒவ்வொரு யாகத்துக்கும் அக்நிகள் தேவைப்படுகிறபடியால், ஒவ்வொரு யாகத்துக்கு
முன்னாலும் ஆதாநம் செய்ய வேண்டுமா என்பது கேள்வி.
•பதில் – ஆதாநத்தால் கிடைக்கும் அக்நிகள் அனைத்து யாகங்களிலும் பயன்பட்டாலும், ஆதாநம் எந்த ஒரு
யாகத்தின் ப்ரகரணத்திலும் சொல்லப் படவில்லை .
அநாரப்யாதீதமாகச் சொல்லப் பட்டபடியால் அனைத்து யாகங்களுக்கும் பொதுவானது. மேலும், ’வஸந்த காலத்தில்
ஆதாநம் செய்ய வேண்டும்’ என்று தனியே ஆதாநத்துக்கு என்று ஒரு காலம் சொல்லப்பட்டபடியால்,
அவனத்து யாகங்களுக்காகவும் சேர்த்து ஒரே முறை ஆதாநம் செய்ய வேண்டும் என்று தெரிகிறது.
•ஆகவே ,ஆதாநம் செய்வதும் தந்த்ரம் தான்

விதிக்கப் பட்டதும் விதிக்கப் படாததும்
• ஸோம யாகத்தில் காலையில் இருந்து தொடங்கி மதியம் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்கும் வரை
யஜமாநனுக்கு அரிப்பு ஏற்பட்டால், சொரிந்து கொள்வதற்காக ஒரு மான் கொம்பு விதிக்கப்பட்டுள்ளது சாஸ்த்ரத்தால்.
• மதியம் தக்ஷிணை கொடுத்த பிறகு மான் கொம்பை ஒரு குழியில் எறிந்துவிட வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், மதியம் யாகத்தைத் தொடரும் போது அரிப்பு ஏற்பட்டால் கையால் தான் சொரிந்து கொள்ள வேண்டும்.
• இந்த யாகத்தின் விக்ருதியாக பல நாட்கள் செய்யும் ஸோம யாகங்கள் உள்ளன.
அவற்றில் ஒவ்வொரு நாளும் மதியும் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
• கேள்வி – முதல் நாள் தக்ஷிணை கொடுத்த பின்பு மான் கொம்பை எறிய வேண்டுமா?
கடைசி நாள் தக்ஷிணையைக் கொ டுத்த பின்பு எறிய வேண்டுமா?
• பூர்வபக்ஷம் –
நம் இஷ்டப்படி செய்யலாம். முதல் நாள் மதியம் அதை எறிந்துவிட்டால், இரண்டாம் நாள் தொடங்கி காலையில் யாகம்
செய்யும் பொழுது அரிப்பு ஏற்பட்டால் சொரிந்து கொள்ள மான் கொம்பு இல்லாதபடியால் சாஸ்த்ரத்தை மீறினவராவோம்.
கடைசி நாள் எறிந்தால், முதல் நாள் தொடங்கியே மதியம் கையால் சொரிய வேண்டும் என்று வேதம்
சொன்னதை மீறினராவோம்.ஆகையால், ஒரு வேறுபாடும் இல்லை .
•ஸித்தாந்தம் –
கடைசி நாள் தான் எறிய வேண்டும். தினமும் காலையிலும் மான் கொம்பால் சொரிந்து கொள்ளுதல் என்பது விதிக்கப்பட்டதே
தவிற மதியம் கையால் சொரிந்து கொள்வது வேதத்தில் விதிக்கப்படவில்லை ,
நாமாக அறிந்து கொண்டது தான்.ஆகையால், அதற்கு பாதம் ஏற்பட்டால் தவறில்லை

————

பாடம் -25- அத்யாயம் -12-பிரசங்கம் –
• பதினோராவது அத்யாயத்தில் தந்த்ரம் என்பதை விசாரித்து, கடைசியாக பன்னிரண்டாம்
அத்யாயத்தில் ப்ரஸங்கம் என்பதைப் பற்றி ஆராய்கிறார் மஹர்ஷி ஜைமிநி.
• ப்ரஸங்கம் என்றால் – ஒரு யாகத்துக்குத் தன் அங்கம் ஒன்றிலிருந்து கிடைக்க வேண்டிய உதவியானது
வேறே ஓரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது.
• எடுத்துக்காட்டு –
அக்நீ ஷோமீயம் என்று ஒரு யோகம் உள்ளது. அது தர்ச பூர்ண மாஸத்தில் இந்த்ரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின்
விக்ருதி ஆகும். அந்த அக்நீ ஷோமீய யோகத்துக்கு அங்கமாக புரோடாச யோகம் ஒன்று உள்ளது.
அதுவும் தர்ச பூர்ண மாஸத்தின் விக்ருதிதான் .
தர்ச பூர்ண மாஸங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிற படியால், அதி தேசத்தின் மூலம்,
இந்த அக்நீஷோமீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கும் கூட ப்ரயாஜங்கள் அங்கம் ஆகின்றன .

பிரசங்கம்
• இந் நிலையில், அக்நீஷோமீயம் என்ற யாகத்தின் பிரயோகம் -அனுஷ்டானம் பெரியது. அதற்கு
அங்கமான புரோடாச யோகத்தின் ப்ரயோகம் (அநுஷ் டானம் ) சிறியது.
ஆகையால், புரோடாச யாகத்தின் அநுஷ்டானம் அக்நீஷோமீய அநுஷ்டானத்துக்குள் அடங்கியது தான் .
• உதாஹரணத்துக்காக,
அக்நீ ஷோமீய யாகத்தின் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம் .
அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை காலை 7 மணிக்கு செய்ய வேண்டும். அதே போல், புரோடாச யாகத்தை
மதியம் 12 மணி முதல் 1 மணி வரை செய்கிறேன் -அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை மதியம் 12:30 மணிக்கு செய்ய வேண்டும்.

• இந் நிலையில் காலை 7 மணிக்கு அக்நீ ஷோமீயத்துக்கு அங்கமாக நான் ப்ரயாகங்களைச் செய்தவுடன்
அதிலிருந்து அபூர்வம்/ அத்ருஷ்டம்/புண்ணியம் உண் டாகிறது. அந்த அபூர்வம் யோகத்தின் ப்ரயோகம் முழுவதும்
முடிந்து பரம அபூர்வம் உண்டாகும் வரை இருக்க வேண்டும் என்ற படியால் மாலை 6 மணி வரை இருக்கப் போகிறது.
• இந் நிலையில், மதியம் நான் புரோடாச யோகத்தைச் செய்யும் பொழுது, அந்த யாகத்துக்கும் ப்ரயாஜங்களால்
உண்டான உதவி (அபூர்வம்) தேவைப்படும் பொழுது, நான் காலை செய்த ப்ரயாஜங்களால் உண்டான
அபூர்வம் ஸித்தமாக (தயாராக) இருக்கிற படியால் அதுவே புரோடாச யாகத்துக்கும் உதவி செய்து விடும். ஆகையால்,
தனியான புரோடாச யாகத்துக்கு அங்கமான ப்ரயோஜங்களை அநுஷ்டிக்கத் தேவை யில்லாமல் போகிறது –
• அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமான ப்ரயாஜங்களில் இருந்தே புரோடாச யோகத்துக்கு தேவையான உதவியும்
கிடைத்து விட்ட படியால், புரோடாச யாகத்துக்கு எனத் தனியாக ப்ரயோஜங்களைச் செய்யத் தேவையில்லை
இதுவே ப்ரஸங்கம் ஆகும்.

மற்ற அங்கங்கள்
• ப்ரஸங்கம் ஏற்படும் இடத்தில், ஒரு யாகத்துக்குத் தன் அங்கத்திடம் இருந்து வர வேண்டிய உபகாரம் வேறே ஒன்றிலிருந்து
கிடைக்கிற படியால், அதற்கு என எந்த அங்கங்களும் தேவையில்லை -ஆகையால் அதிதேசமே வேண்டாம் என்று சொல்லக் கூடாது
• அதிதேசம் என்பது நாம் வேதத்தைக் கற்று ஆராயும் போது நாம் மனசால் ஏற்படும் ஒன்று.
அதன் மூலம் புரோடாச யாகத்துக்கும் அங்கமாகப் ப்ரயாஜங்கள் கண்டிப்பாக வந்து சேர்கின்றன
• அதற்குப் பிறகு, எப்பொழுது ப்ரயோக விதியால் ப்ரயோகம் என்ற அனுஷ்டானத்தை விதிக்கிறதோ,
அப்பொழுது தான் இந்த யாகத்துக்குத் தேவையான ஒரு உதவி வேறே ஓரு வழியில் கிடைக்கிற படியால், இதற்கு
அங்கமோ ப்ரயாஜங்களைச் செய்ய வேண்டாம் என்ற காரணத்தால், ப்ரயோக விதி ”ப்ரயாஜங்களைச் செய் ” என்று கட்டளை இடாது
• இப்படி இருக்கும் நிலையில், அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமாக இல்லாத ஒரு செயல் புரோடாச யாகத்துக்கு அங்கமாக இருந்தால்,
அப்பொழுது ப்ரஸங்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை . ஆகையால் புரோடாச யாகத்தின் அங்கமாக அந்தச் செயலைச் செய்தே
ஆக வேண்டும்.
• எடுத்துக் காட்டு – அக்நீ ஷோமீயத்தில் ஆஜ்ய பாகங்கள் என்ற அங்கங்கள் கிடையாது
ஆனால் புரோடாச யாகத்தில் அவை அங்கங்கள் தான் . ஆகையால் , ப்ரஸங்கம் ஏற்பட முடியாததால்,
புரோடாச யகத்துக்காக ஆஜ்ய பாகங்களைச் செய்து தான் ஆக வேண்டும் –

பலருக்காக சிலரை விடலாம்
• இந்த அத்யாயத்தில் “பூயஸாம் ஸ்யாத் ஸ்வ தர்மத்வம்” என்று ஒரு ந்யாயம் சொல்லப் படுகிறது.
ஒரு கூட்ட த்தில், சிலருக்கு ஒரு தேவையும் பலருக்கு வேறே ஓரு முரண் பட்ட தேவையும் இருந்தால்,
பலரின் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்வதே சரியானது என்பது தான் அந்த நியாயம் –

• வேதத்தில், கீழ்க் கண்ட ஏழு யாகங்கள் சேர்த்து ஒரு பலனுக்காக விதிக்கப் பட்டுள்ளன .
இவற்றில் ஒவ் வொரு யாகமும் தர்சபூர்ணமாஸத்தில் இருக்கும் 6 யோகங்களுள் ஏதோ ஒன்றின் விக்ருதி ஆகும்.
எந்த யாகத்தின் விக்ருதியாக எந்த யாகம் உள்ளதோ, அது அதன் தன்மைகளைக் கொண்டு இருக்கும்

1-அக்னிக்கு புரோடாசம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி
2-இந்திரனுக்கு புரோடாசம் -ஐந்த்ராக்னி யாகத்தின் விக்ருதி
பிரஜாபதி தேவதைக்காக ஐந்து
1-தயிர் -இந்திரனுக்கான தயிர் யாகத்தின் விக்ருதி
2-தேன் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
3-நெய் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
4-நீர் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
5- தான்யம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி

தர்ச பூர்ண மாஸத்தில் ஆக்நேய யோகம் அமாவாசையிலும் பௌர்ணமியிலும் செய்யப்படுகிறபடியால்,
அதன் விக்ருதிகளும் (யோகம் 1 மற்றும் யோகம் 7) இரண்டுக்கும் பொது வானவை .
• ஐந்த்ரோக்ந யோகமும் இந்த்ரனுக்கான தயிர் யாகமும் அமாவாஸையில் மட்டும் உள்ளபடியால் அவற்றின்
தன்மைகள் தான் அவற்றின் விக்ருதிகளுக்கும் (யாகம் 2 மற்றும் யாகம் 3)
• உபாம்சு யாஜம் பௌர்ணமியில் செய்யப்படுகிறபடியால், அதன் விக்ருதிகளுக்கு
(யாகம் 4,5,6) பௌர்ணமியின் தன்மைகள் தான் –

சமமானவர்களுள் முதலாவது
பலருக்கு ஒரு விருப்பமும் சிலருக்கு வேறே ஓரு விருப்பமும் இருந்தால் பலரின் விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்று பார்த்தோம்.
•ஸமமான எண்ணிக்கையக் கொண்ட இரண் டு பக்ஷங்களுக்குள் முரண் பாடு வந்தால் முதலில் சொல்லப் பட்டத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் உபக்ரம ந்யாயம் என்ற விஷயத்திலும் முன்னமே பார்த்தோம் .
• வேதத்தில், புரோடாசத்தை வைத்து செய்யப்படும் ஆக்நா வைஷ்ணவம் என்ற ஒரு யாகமும்
ஸரஸ்வதிக்காக நெய்யைக் கொண்டு செய்யப்படும் யாகமும் சேர்ந்து ஒரே பயனுக்கக விதிக்கப் பட்டுள்ளன .
இதில் முதல் யாகம், தர்ச பூர்ண மாஸத்தில் அமாவாசை யன்று செய்யப்படும் ஐந்த்ராக்ந யாகத்தின் விக்ருதி.
இரண்டாம் யாகம் பவுர்ணமி அன்று செய்யப்படும் உபாம்சு யாஜத்தின் விக்ருதி.
•ஆகையால் முதல் யாகத்துக்கான ஆஜ்ய பாகங்கள் வ்ருதந்வதீ மந்த்ரங்களோடும்
இரண்டாவதற்கான ஆஜ்ய பாகங்கள் வார்த்ரக்நீ மந்த்ரத்தோடும் செய்யப் பட வேண்டியவை –
ஆனால் தந்த்ரமாக ஒரே முறை செய்கிற படியால் ஏதோ ஒன்றைத் தான் செய்ய முடியும்.
•ஸித்தாந்தம் – முதலில் சொல்லப் பட்ட படியால் ஆக்நா வைஷண யாகத்தால் எதிர் பார்க்கப்படும்
வ்ருதந்வதீ மந்த்ரத்தத்தைத் தான் சொல்ல வேண்டும்

காம்ஸ்ய போஜி நியாயம்
• ஒரு கூட்டத்தில் , பலருக்கு எந்த சிறப்பு எதிர்பார்ப்பும் இல்லை , ஆனால் சிலருக்கு ஒரு விசேஷ எதிர்பார்ப்பு
உள்ளது என்றால் , அந்த சிலரின் எதிர் பார்ப்பு தான் செய்யப்பட வேண்டும் –
• வேதத்தில் ஆக்ரயணம் என்ற ஒரு கர்மத்தில் ஐந்த்ராக்நம்,
வைச்வதேவம் , த்யாவா ப்ருதிவ்யம் என்று மூன்று யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன
. இவற்றில் முதல் இரண்டு யாகங்களில் இந்தப் புல்லைத் தர்பமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற
எந்த நியமமும் வேதத்தில் சொல்லப்பட வில்லை –
ஆனால் மூன்றாவதில் ப்ரஸூநமயமோ (பூவோடு கூடின / வெட்டப்பட்டு மறுபடியும் வளர்ந்த) புல்லைக் கொண்டு
செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது
•ஆகையால், முதல் இரண்டு யாகங்களுக்கும் எந்த விசேஷ எதிர்பார்ப்பும் இல்லாத படி யாகையால் ,
மூன்றாவது யாகத்தின் தேவைப்படியே மூன்றையும் செய்ய வேண்டும்
• இதற்கு அடிப்படை காம்ஸ்ய போஜி ந்யாயம் ஆகும் – குரு என்பவர் சிஷ்யரை விட உயர்ந்தவர்.
குருவிற்கு ’இந்த பாத்திரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்ற நியமம் இல்லை -.
ஆனால் சிஷ்யன் ’பித்தளை பாத்திரத்தில் மட்டும் தான் உண்பேன் என்ற நியமம் கொண்டவர் –
இந்நிலையில், இருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உண்ணும் பொழுது, குரு உயர்ந்தவராக இருந்தாலும்
சிஷ்ய விஷயத் தேவைக்கு ஏற்பத் தானும் பித்தளை பாத்திரத்தில் தான் உண்ண வேண்டும்.
அதே ந்யாயம் தான் இங்கும் சொல்லப்படுகிறது.

விகல்பமும் சமுச்சயமும் –
ஒரு த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்காக்க இரண்டு பொருள்கள் விதிக்கப் பட்டால் அவற்றில்
ஏதோ ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் / செய்ய முடியும்.
ஆகையால் அவ்விடத்தில் அவ்விடத்தில் விகல்பம் ஏற்படும். எடுத்துக்காட்டு – புரோடாசத்தை செய்வது என்ற
த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்கு நெல் மற்றும் யவம் என்ற இரண்டு தானியங்கள் வேதத்தால் போதிக்கப் பட்டுள்ளன
ஆகையால் அவற்றில் ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் என்ற விகல்பம் ஏற்படுகிறது.
• அத்ருஷ்டத்துக்காக -அதாவது -அபூர்வம் என்ற புண்யத்துக்காக சில செயல்கள் விதிக்கப் பட்டால்
அதில் ஒரு செயலில் இருந்து வரும் அபூர்வம் மற்ற ஒன்றில் இருந்து வராது என்பதால்
ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று வீணாகாது ஆகையால் அவற்றைச் சேர்த்தே செய்ய வேண்டும் –
இதற்கு சமுச்சயம் என்ற பெயர் -. எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள் அநுயாஜங்கள் என்ற அங்கங்களுக்கு ஸமுச்சயம் தான் –
•அத்ருஷ்டமான ப்ரயோஜனங்கள் இருந்தால் எந்த இடத்தில் பிரயோஜனம் ஓன்று என்று முடிவு
செய்ய முடியுமோ அங்கு விகல்பம் தான் -எடுத்துக்காட்டு
– தர்ச பூர்ண மாஸம் செய்ய வேண்டிய ஒருவன் அமாவாசை அல்லது பௌர்ணமியைத் தெரியாமல் விட்டு விட்டால்
அதற்கு இரண்டு ப்ராயச்சித்த யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன .
அவை அத்ருஷ்டமான ப்ரயோஜனத்தை உண்டு செய்தாலும் தர்ச பூர்ணமாஸம் செய்யயாதலால் வந்த ஒரே பாபத்தைப் போக்க
இரு யாகங்களும் என்று நாம் அறிவோம்.ஆகையால் ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று தேவையில்லை என்ற விகல்பம் ஏற்படுகிறது –

————–

சங்கர்ஷ தேவதா காண்டம் மேலே நான்கு அத்யாயங்கள்
மேலே மீமாம்ஸா தர்சனம் பார்ப்போம்

பாடம் –26-மீமாம்சையில் பிரமாணங்கள்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பன்னிரண்டு அத்யாயங்களின் பொருளையும் நாம் படித்தோம்.
அதில் சொல்லப்பட்ட கருத்துக்களைக் கொண்டு தான் வேதத்தின் பொருள் நிச்சயிக்கப்படுகிறது.
இப்படி வேதத்தின் உபாங்கமாக விளங்கும் மீமாம்ளஸ, ஒரு தனி தர்சநமாகவும் வளர்ந்துள்ளது.
அந்த தர்சநத்தின் சிறப்பம்சங்களைத் தான் நாம் மேல் வரும் சில வகுப்புகளில் படிக்கப் போகிறோம்.
• ஒவ்வொரு தர்சநமும் அவர்கள் ஏற்கும் ப்ரமாணங்களையும், அவற்றால் அறியப்படும் விஷயங்களான
ப்ரமேயங்களளயும் நிர்ணயிக்க வேண்டும்.

ப்ரத்யக்ஷம், அநுமானம், சப்தம், உபமாநம், அர்த்தாபத்தி, அநுபலப்தி, ஸம்பவம் ஐதிஹ்யம் என்ற எட்டு ப்ரமாணங்கள் வெவ்வேறு
சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றில் சார்வாகர்கள் முதல் ப்ரமாணத்தை மட்டும் ஒப்புக் கொண்டார்.
பௌத்தர்களும் வைஸேஷிகர்களும் முதலிரண்டு ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாஸவஜ்ஞர் முதலான சில நையாயிகர்களும், ஸாங்க்ய மதத்தாரும் முதல் மூன்று ப்ரமாணங்களை ஏற்றார்கள்.
நையாயிகர்களில் பலர் முதல் நான்கு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
ப்ராகாரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்கள் முதல் ஐந்து ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாட்டர்கள் என்ற மீமாம்ஸகர்களும், அத்வைத தேதாந்திகளும் முதல் ஆறு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
இறுதியாக, பௌராணிகர்கள் என்பவர் எட்டு ப்ரமாணங்களையும் ஆதரித்தார்கள்.

• ந்யாய மதத்தில், ஒரு பொருளை உள்ளபடி காட்டிக்டுக்கும் ஜ்ஞாநம் ப்ரமா (யதார்த்த ஜ்ஞாநம்) என்று சொல்லப்பட்டது.
குமாரில பட்டரின் சிஷ்யர்களான பாட்ட மீமாம்ஸகர்கள் இதை ஏற்க வில்லை
• “முன்னால் அறியப்படாத விஷயத்தை உள்ளபடி காட்டிக் கொடுக்கும் அறிவு தான் ப்ரமா ” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
• ’முன்னால் அறியப்படாத’ என்று சொன்னபடியால், ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் நினைவுக்கு ப்ரமா என்ற பெயர் கிடையாது என்று
அறியலாம், ஏன் என்றால் நிளனவு எப்பொழுதுமே முன்னால் அறியப்பட்ட விஷயத்தைப் பற்றியதாகத் தான் இருக்கும்.

• ’உள்ளபடி’ என்று சொன்னபடியால், ப்ரமம் ஸந்தேகம் முதலானஅறிவுகளுக்கும் ப்ரமா என்று பெயர் கிடையாது என்று தேருகிறது.
• கேள்வி – தாராவாஹிக ஜ்ஞாநம் (அறிவுத் தொடர்) என்று ஒன்று உண்டு. நீண்ட நேரத்துக்கு நான் என் கண்ணால் ஒரு குடத்தைப் பார்த்தால்,
’இது குடம்’, ’இது குடம்’ என் ற அறிவு பல முறை ஏற்படும். இவை அனைத்துமே ப்ரத்யக்ஷம் என்ற அறிவு தான், ஸ்மரணம் அல்ல.
அறிவு என்பது சில வினாடிகள் மட்டுமே இருக்கும் ஒன்று, ஆகையால், நீண்ட காலத்துக்குள் அந்தக் குடத்தைப் பற்றின பல அறிவுகள் ஏற்பட வேண்டும்.
அதில் முதல் அறிவானது, நான் இதுவரை அறியாத குடத்தைக் காட்டிக் கொடுத்தபடியால் ப்ரமா ஆகும்.
அதற்குப் பிறகு, அதே குடத்தைப் பற்றி மறுபடியும் மறுபடியும் ஏற்படும் மற்ற ஜ்ஞாநங்கள் ப்ரமா ஆகுமா?
• பதில் – தாராவாஹிக ஜ்ஞாநத்தில் முதல் அறிவி லேயே குடம் அறியப்பட்டுவிட்டாலும், அது ’அந்தந்த வினாடியில் உள்ளது’ என்ற
புது புது அம்சம் அந்தந்த ஜ்ஞாநத்தில் புதிதாக அறியப்படுகிறபடியால் அவற்றையும் ப்ரமா என்று கூறலாம்.

ப்ராபகர மாதத்தில் ஞானம்
பாட்டர்களின் மதத்தில், கயிற்றை பாம்பு என்றும், கிளிஞ்சலை வெள்ளி என்றும், சங்கத்தை மஞ்சளானது என்றும்
காட்டிக் கொடுக்கும் தவறான அறிவுகள் உண்டு.
ந்யாய மதத்தில் அயதார்த்த ஜ்ஞாநம் எப்படி சொல்லப்பட்டதோ அதே போல்தான் பாட்ட மதத்திலும்.
• ப்ராபாகரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்களின் மதத்தில் வேறான அறிவு என்று ஒன்றே கிடையாது.
ஜ்ஞாநம் அனைத்துமே சரியானதுதான்.
• கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிகிறோமே , எப்படி அது சரியாக இருக்க முடியும்? அவர்களின் கூற்றைப் பார்ப்போம்.
• கயிற்றைப் பார்த்து ’இது பாம்பு’ என்று அறியும் இடத்தில் தோன்றுவது ஒரு ஜ்ஞாநமே அல்ல, இரண்டு ஜ்ஞாநங்கள்.
கண் முன் இருக்கும் பொருள் நீளாமானது, வளைந்தது , பச்சையானது என்று கண்ணால் அறிகிறேன்.
இது புலன்களால் ஏற்படும் ப்ரத்யக்ஷம் ஆகும்.
கயிற்றிலுருக்கும்’கயிற்றுத் தன்மை ’ என்ற ஸாமாந்யத்தை (ஜாதியை ) மட்டும் க்ரஹிக்க வில்லை .
இல்லாத ஒரு தன்மையை உள்ளது என்று நினைத்தால் தான் ப்ரமம் ஆகும்.
இருக்கும் தன்மையை க்ரஹிக்காதது குற்றமல்ல.ஆகதே, இந்த ஜ்ஞாநம் சரியானது தான்.
• அதே ஸமயத்தில், இதே தன்மைகளை உடைய ஒரு பாம்பை நான் முன் ஓரு நாள் கண்டிருந்தபடியால் பாம்பின் நிளனவு ஏற்படுகிறது.
இதிலும் எந்த பொய்யான தன்மையும் தோற்றவில்லை . இதுவும் சரி தான்.
• நினைவுக்கு வந்த பாம்புக்கும் கண் முன் இருக்கும் பொருளுக்குமுள்ள வேறுபாட்டை அறியாத படியால் அதைக் கண்டு பயந்து விட்டேன்.
• ஆகவே , ஒரு பொருளின் ப்ரத்யக்ஷம், மற்ற ஓரு பொருளின் ஸ்மரணம், அவற்றுக்குள் வேறுபாட்டை அறியாமை
என்ற மூன்று தான் உள்ளன. ப்ரமம் இல்லை

ஞானம் ப்ரத்யக்ஷமா அல்லவா –
ஆத்மாவினுடைய குணமான ஜ்ஞாநம் என்பதை புலன்களால் அறிய முடியுமா முடியாதா என்ற விஷயத்திலும் வாதமுள்ளது.
• ந்யாய மதத்தில், மனது என்ற புலனைக் கொண்டு ஆத்மாவையும், ஆத்மாவின் குணங்களான ஜ்ஞாநம், இச்சை , த்தேஷம், ஸுகம்,
துக்கம் முதலானவற்றை அறியலாம் என்று படித்துள்ளோம்.
• ந்யாய மதத்தில் ஒரு பொருளை நான் பார்த்தவுடன் ’இது குடம்’ என்ற அறிவு ஏற்படுகிறது. இதற்கு வ்யவஸாயம் என்று பெயர்.
அதற்குப் பிறகு, ’நான் குடத்தை அறிகிறேன்’ என்ற ஜ்ஞாநம் உண்டாகிறது. இதற்கு அநுவ்யவஸாயம் என்று பெயர்.
இதுதான் ஜ்ஞாநத்தைப் பற்றின ப்ரத்யக்ஷம்.
• ப்ராபாகர மதத்தில், முதலில் ஏற்படும் ஜ்ஞாமே பொருள், அறிவு, ஆத்மா என்று மூவரையும் காட்டிக் கொடுக்கும்,
அதாவது “நான் குடத்தை அறிகிறேன்” என்று தான் முதலிலேயே ஜ்ஞாநம் உண்டாகும்.
ஆகவே , ஜ்ஞாநம் புலன்களால் அறியக் கூடியது தான்.
• பாட்ட மதத்தில் ஜ்ஞாநம் புலன்களுக்கு அப்பாற்பட்டது. நமக்கு ஒரு ஜ்ஞாநம் ஏற்பட்டாலும், அதை நாம் மனதால் அறிய இயலாது.
நாம் அறிந்த விஷயத்தில் ’அறியப்படுதல்’ என்ற ஒரு தன்மையை முதலில் பார்த்து, இந்தப் பொருளில் அறியப் படுதல் என்ற தன்மை
உள்ளபடியால் நான் என்ற ஆத்மாவிடம் அறிவு இருக்க வேண்டும்’ என்று அநுமானம் செய்து தான் அறிவு உள்ளது என்றே அறிய முடியம்

த்ரிபுட ப்ரத்யக்ஷம் -குடத்தை நான் அறிகிறேன் குடமும் நான் அறிவு மூன்றுமே ப்ரத்யக்ஷம் –
மூன்றுமே அறியலாம் -ப்ராபகரர்கள் -ஞானம் ப்ரத்யக்ஷம்
பாட்ட மதத்தில் அனுமானத்தாலே அறிகிறோம் -குடம் அறியப்பட்டது என்றால் அறிவு இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து கொள்ள வேண்டும் –

ஞானம் சரியானது என்று எப்பொழுது அறியலாம் –
ந்யாய மதத்தில் ஒரு ஜ்நாநம் சரியானதா தவறானதா என்பதை உடனடியாக அறிய முடியாது.
’இது ஜலம்’ என் றஅறிவு ஏற்பட்டவுடன் அதை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
குடத்தால் ஜலத்தை எடுக்க முடிந்தால், நமக்கு வந்த ஜ்ஞாநம் சரியானது என்று முடிவு செய்யலாம்.
குடத்தில் நீர் வராமல் மண் மட்டுமே வந்தால், நாம் கண்டது கானல்நீர், ஆகையால் நமக்கு ஏற்பட்ட
அறிவு தவறானது என்று அறியலாம்.
ஆகவே , ஒரு ஜ்ஞாநம் சரியானது என்றோ தவறானது என்றோ முயற்சி செய்த பிறகு தான் அறிய முடியும்.
இதற்கு ’பரத: க்ராஹ் யத்வம் ’ (வேறே ஒன்றின் மூலம் க்ரஹிக்கப் படுதல்) என்று பெயர்.
• மீமாம்ஸையில் (ப்ராபாகர மதத்திலும் பாட்ட மதத்திலும் பொதுவாக ) ஒரு ஜ்ஞாநம் ஏற்படும் பொழுதே அது சரியானது தான்
என்று அறியப்படுகிறது. இதற்கு ஸ்வத: க்ராஹ் யத்வம் (தானாக /இயற்கையாகவே அறியப்படுதல்) என்று பெயர்.
ஆனால், முயற்சி செய்த பிறகு, முயற்சி வீணாகப் போனால், நமக்கு ஏற்பட்ட அறிவு தவறானது என்று மட்டும் பின்னால் அறிகிறோம்.
ஆகையால், ஜ்ஞாநம் சரியானது என்று உடனே அறியலாம், தவறானது என்பதை பிற்காலத்தில் தான் அறியமுடியும்.

—————

பாடம் -27-மீமாம்ஸையில் பிரமாணங்கள்
•பாட்ட மதத்ததச் சசர்ந்த மீமாம்ஸகர்களால் ஆறு ப்ரமாணங்கள் ஒப்புக் கொள்ளப் படுகின் றன. அவையாவன –
1. ப்ரத்யக்ஷம்
2. அநுமானம்
3. சப்தம்
4. உபமாநம்
5. அர்த்தாபத்தி
6. அநுபலப்தி
இதில் முதல் ஐந்து ப்ரமாணங்கள் ப்ராபாகர மதத்தைச் சேர்ந்த மீமாம்ஸகர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

ப்ரத்யக்ஷம்
• புலன்களுக்கும் ஒரு பொருளுக்கும் ஏற்படும் தொடர்பால் உண்டாகும் ஜ்ஞாநம் ப்ரத்யக்ஷம் ஆகும்.
• சக்ஷுஸ் , க்ராணம், ஸ்ரோத்ரம், ரஸநம், த்வக் மற்றும் மனஸ் ஆகியதை ஆறு புலன்களில்.
இதில் முதல் ஐந்தும் வெளிப் புலன்கள் வெளி விஷயங்களைக் க்ரஹிக்க உதவுகின்றன.
மனது உட்புலன். ஆத்மாவையும் அதன் பண்புகளையும் அறிய உதவுகிறது.
• இந்த்ரியத்துக்கும் பொருளுக்கும் ஏற்படும் தொடர்பு ஸந்நிகர்ஷம் என்று அழைக்கப் படுகிறது.
ந்யாய மதத்தில் ஆறு ஸந்நிகர்ஷங்கள் ஏற்கப் பட்டன.
ஆனால், மீமாம்ஸையில் இரண்டே ஸந்நிகர்ஷங்கள் தான் தேவைப் படுகின்றன.
• ந்யாய மதத்தில் ஏற்கப்பட்ட ஸமவாயம் என்ற ஸம்பந்தம் மீமாம்ஸையில் ஏற்கப் படவில்லை .
ஆகையால், குணத்துக்கும் அது இருக்கும் த்ர்வ்யத்துக்கும், செயலுக்கும் அது இருக்கும் த்ரவ்யத்துக்கும்,
ஸாமாந்யத்துக்கும் அது இருக்கும் த்ர்வ்யத்துக்கும் இடையில் ஸமவாயம் கிடையாது,–தாதாத்ம்யம் என்ற ஸம்பந்தம் தான் உண்டு.
• தாதாத்ம்யம் என்றால் ஐக்யம். குணமானது, தானிருக்கும் த்ர்வ்யத்தைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதே அல்ல
என்பது மீமாம்ஸகர்களின் ஸித்தாந்தம். ஆகையால், கண்ணுக்கும் குடத்துக்கும் உள்ள தொடர்பு ஸம்யோகம்.
கண்ணுக்கும் குடத்திலிருக்கும் நிறத்துக்கும் / செயலுக்கும் / ஸாமாந்யத்துக்கும் உள்ள தொடர்பு ஸம்யுக்த தாதாத்ம்யம்.
நிறத்திலிருக்கும் நிறத் தன்மையும் நிறத்தைக் காட்டிலும் வேறுபட்டதே அல்ல,
ஆகையால் அங்கும் தாதாத்ம்யம் இருப்பதால் ஸம்யுக்த தாதாத்ம்யமே ஸந்நிகர்ஷம்.

• ஒரு பொருளை மற்ற த்ரவ்யம் / குணம் / க்ரியை / ஸாமாந்யம் / பெயர்-ஆகியவற்றோடு சேர்த்து க்ரஹிக்கும்
ஜ்ஞாநத்துக்கு ஸவிகல்பகம் என்று பெயர். விகல்பம் என்றால் வேறுபாடுகள்.
இந்த ஜ்ஞாநத்தில் பல வேறுபாடுகள் தோற்றுகிற படியால் இது ஸ விகல்பகம் ஆகும்.
• கையில் தடி பிடித்த, வெள்ளையான, தேவதத்தன் என்ற பெயரை உடைய மனிதன் நடக்கிறான்” என்ற ஒரு
சொல் தொடரில் த்ரவ்யம் , குணம், பெயர், ஸாமாந்யம், செயல் ஆகிய ஐந்து விகல்பங்களை யுமே நாம் அறியலாம்.
• இந்த ஜ்ஞாநம் ஏற்படுவதற்கு முன்பு,வெறுமனே ஒரு பொருளைப் பற்றின அறிவு ஏற்படும்.
அதற்கு நிர்விகல்பகம் என்று பெயர். அதில் ஸாமாந்யம், குணம், க்ரியை என்று எல்லாம் பிரித்து அறிய முடியாது.
ஸம்முக்தமாக / ஒன்றாகத் தான் அனைத்தும் தோற்றும்.
• ஒரு மாட்டை முதன் முதலில் காணும் பொழுது அதைப் பற்றின நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் ஏற்படும்.
அப்பொழுது என் கண்ணுக்கும் மாட்டுக்கும் தொடர்பு ஏற்பட்டவுடன், மாடு, அதன் அங்கங்கள், தன்மைகள், குணங்கள்
அனைத்தையும் நாம் க்ரஹிக்கிறோம்.
ஆனால் முதன் முதலில் ஏற்படும் நிர்விகல்பகத்தில் எது அனைத்து மாடுகளுக்கும் பொதுவான அம்சம், எது
இந்த மாட்டின் தனித்தன்மை என்பது எல்லாம் தெரியாது.
அந்த தன்மைகள் மட்டுமே அறியப்படுகின்றன.
• இந்த நிர்விகல்பக ப்ரத்யக்ஷத்துக்கு ஆலோசநா ஜ்ஞாநம் என்றும் பெயர் உண்டு.

அனுமானம்
• ந்யாய மதத்தில் போல் மீமாம்ஸையிலும் அநுமானம் ஏற்கப் படுகிறது.
• ஒரு பொருள் மற்ற ஓரு பொருளை விட்டுப் பிரியாமல் இருந்தால் அதற்கு வியாப்தி என்று பெயர்.
இப்படி வியாப்தி உடைய ஒரு பொருளை நாம் ஓரிடத்தில் கண்டால், மற்ற ஓரு பொருள் இருப்பதை ஊஹம் செய்யலாம்.
இதற்கு தான் அநுமானம் என்று பெயர். எடுத்துக் காட்டு –
புகை என்றுமே நெருப்பைப் பிரிந்து இருக்காது என்பதால் ஒரு மலையின் மேல் புகையைக்
கண்டால், அங்கு நெருப்பு உள்ளது என்று நான் முடிவு செய்யலாம்.
• வியாப்தியை க்ரஹிப்பதற்கு நாம் பல இடங்களில் புகையையும் நெருப்பையும் சேர்த்துப் பார்த்திருக்க வேண்டும்,
ஓரிடத்தில் கூட நெருப்பில்லாமல் புகையைக் கண்டிருக்கக் கூடாது.
• ந்யாய மதத்துக்கும் மீமாம்ஸா மதத்துக்கும் ஒரு முக்கிய வேறுபாடு அநுமானத்தை அடி ஒற்றி உள்ளது.
ந்யாய மதத்தில் பரார்த்த அநுமானம் ( வேறு ஒருவருடைய பயனுக்காகச் செய்யப்படும் அநுமானம்) என்று நாம் படித்தோம்.
அதில் ஐந்து அவயவங்கள் சொல்லப்பட்டன –
“மலையில் நெருப்பு உள்ளது” என்று ப்ரதிஜ்ஞா;
“புகை இருக்கிறபடியால்” என்று ஹேது;
“எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும், அடுப்படியில் போல்” என்று உதாஹரணம்;
“அப்படி நெருப்பை விட்டுப் பிரியாத புகை இந்த மலையில் உள்ளது” என்பது உபநயம்;
“ஆகையால் இந்த மலையில் நெருப்பு உள்ளது” என்பது நிகமநம்.
• மீமாம்ஸகர்கள் இதை ஏற்க வில்லை .
இதில் சொன்னதையே சொல்கிறோம் என்று அபிப்ராயப்பட்டு 3 அவயவங்கள் போதும் என்கிறார்கள், அதாவது –
முதல் மூன்று அவயவங்களையோ கடைசி மூன்று அவயவங்களையோ ப்ரயோகம் செய்தாலே போதும் என்பது அவர்கள் கூற்று.

சப்த பிரமாணம்
• ந்யாய மதத்தில் போல் மீமாம்ஸையிலும் சப்த ப்ரமாணம் ஏற்கப் படுகிறது.
• முதலில் நாம் சொற்களுக்கும் அவற்றின் பொருள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். இந்தத் தொடர்புக்கு சக்தி என்று பெயர்.
• அடுத்து, நாம் “ராமன் ராவணனைக் கொன்றான்” என்ற ஒரு சொல் தொடரைக் கேட்கிறோம்
. இதைக் கேட்டவுடன், இதிலிருக்கும் ஒவ்வொரு சொல்லின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒரு பொருளை நினைவு படுத்துகிறது –
ராமன், ராவணன், கொலை , ஒருமை , கடந்த காலம், ஆண் பால் என்பது போல். இது தான் பதார்த்த ஸ்மரணம்
• பிறகு, அந்த பதார்த்தங்கள் (பொருள்கள்) எல்லாம் சேர்ந்து, வாக்யார்த்த ஜ்ஞாநம்
(சொல் தொடரின் பொருளைப் பற்றின அறிவை ) என்பதை உண்டாக்குகின்றன.
• இதில் ஆகாங்க்ஷா (சொற்களுக்கு இடையில் இருக்கும் எதிர்பார்ப்பு), யோக்யதா (சொல்லப் படும் அர்த்தத்தின் ஏற்புடமை ),
ஸந்நிதி (சொற்களை தாமதமில்லாமல் உச்சரித்தல்),
தாத்பர்ய ஜ்ஞாநம் (பேச்சாளர் எந்த எண்ணத்தோடு இந்தச் சொல் தொடரைச் சொன்னார் என்ற அறிவு) ஆகியவை உதவுகின்றன.
• சப்தம் இரண்டு வகைப்படும் – (1) லௌகிக சப்தம் – மனிதர்களால் சொல்லப்பட்டது. இது ப்ரமாணமாகவும் இருக்கலாம், அப்ரமாணமாகவும்
இருக்கலாம். பேச்சாளரின் நம்பகத் தன்மையைப் பொருத்தது அது.
(2) வைதிக சப்தம் – வேதம் என்னும் நூல் எப்பொழுதுமே முழுமையாக ப்ரமாணம் தான். அது
யாராலும் இயற்றப் படாதபடியால் மனிதனின் குறைகளால் ஏற்படும் சொற் குற்றங்ககளோ பொருட்குற்றங்களோ
வேதத்தில் ஏற்பட வாய்ப்பே இல்லை . ஆகையால் அது ப்ரமாணமே
• சொல் தொடரின் பொருளை அறிவதில் இரண்டு வழிகள் உள்ளன –
(1) கலே கபோத ந்யாயம் – அந்தந்த சொற்களால் நினைவு படுத்தப்பட்ட பதார்த்தங்கள்
அனைத்துமே சேர்ந்து ஒரே ஸமயத்தில் ஒரு கூட்டுப் பொருளை உணர்த்துகின்றன
(2) கண்ட வாக்யார்த்த போதம் – ஒரு சொல் தொடரின் சிறு பகுதிகளின் பொருளை
முதலில் அறிந்து, அதற்குப் பிறகு முழு சொல் தொடரின் பொருளை அறிதல்.

உபமானம்
• ந்யாய மதத்தில் சபோல் மீமாம்ஸையிலும் உபமாநம் எனற ப்ரமாணம் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.
ஆனால், இரண்டு மதங்களிலும் சிறு வேறுபாடும் உள்ளது.
• நகரத்திலிருக்கும் என்னிடம் காட்டிலிருந்து ஒருவர் வந்து “மாட்டைப் போல் இருப்பது கவயம்” என்று கூறினார்.
பிறகு நானே ஒரு முறை காட்டிற்குச் சென்று மாடு போன்ற ஒரு ப்ராணியைப் பார்த்தேன்.
பார்த்தவுடன் அந்த மனிதர் எனக்குச் சொன்ன சொல் தொடரின் பொருள் ஞாபகம் வந்தது.
அதனால் “இது கவயம் என்று அழைக்கப் பட வேண்டும்” என்று அறிந்தேன்.
இப்படி சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் அறிவு தான் உபமிதி.
இதற்குக் காரணமாக ஸாத்ருச்யம் என் ற ஒற்றுமையைப் பற்றின ஜ்ஞாநம் தான் உபமாநம் – இது ந்யாய மதத்தின் படி உபமாநத்தின் விளக்கம்.
• மீமாம்ஸையில் சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றின ஜ்ஞாநம் உபமிதி என்று ஏற்கவில்லை .
“மாடு போல் உள்ளது இந்த ப்ராணி” என்று எனக்கு ஏற்பட்ட ஸாத்ருஸ்ய ஜ்ஞாநம் (ஒற்றுமையைப் பற்றின ஜ்ஞாநம்) தான் உபமானம்.
அதிலிருந்து தோன்றக் கூடிய “இந்தப் ப்ராணியைப் போல் தான் என்னுடைய மாடு உள்ளது” என்ற அறிவு தான் உபமிதி ஆகும்.
• அதாவது, கண் முன் இருக்கும் பொருளில் மாட்டின் ஒற்றுமையைக் காண்பது உபமாநம்.
நினைவுக்கு வரும் பொருளில் கண் முன்னாலிருக்கும் பொருளின் ஒற்றுமையைக் காட்டுவது உபமிதி.
• இது அதிதேசம் செய்யும் பொழுது மீமாம்ஸையில் உபயோகப்படும். ஸௌர்ய யாகத்தின் விதி வாக்கியத்ததப் பார்த்ததும்
“இதைப் போல்தான் ஆக்நேய யாகமும் உள்ளது” என்று நாம் அறிந்து உபமாந ப்ரமாணத்தால்.
இதை அறிந்தால் தான் ஆக்நேய யாகத்தின் அங்கங்களை ஸௌர்ய யாகத்திற்கு அதிதேசம் செய்து நம்மால் கொண்டு வர முடியும்.

அர்த்தா பத்தி

• பொருந்தாத இரண்டு ப்ரமாணங்களைப் பொருந்த வைப்பதற்காகக் ஒரு விஷயத்தைக் கல்பிப்பதற்குத் தான் அர்த்தா பத்தி என்று பெயர்.
எது பொருந்தாமலிருக்கிறதோ அதற்கு உபபாத்யம் என்று பெயர்.
அதைப் பொருந்த வைக்க எது கல்பிக்கப்படுகிறதோ அதற்கு உபபாதகம் என்று பெயர்.
• எடுத்துக் காட்டு 1 – தேவதத்தன் பருத்துள்ளான் என்று ஒரு ப்ரமாணத்தால்
அறிந்தேன். ஆகையால், பொதுவாக அவன் சாப்பிடுவான் என்று அறிந்தேன். அதே
ஸமயத்தில், வேறே ஓரு ப்ரமாணத்தால், அவன் பகலில் உண்பதே இல்லை என்று
அறிந்தேன். தேவதத்தன் உண்கிறான் என்னும் ப்ரமாணத்துக்கும், பகலில்
உண்பதில்லை என்னும் ப்ரமாணத்துக்கும் விரோதம் தோற்றி, அதைப் போக்குவதற்காக
“தேவதத்தன் இரவில் உண்கிறான்” என்று கல்பிக்கிறோம்.
• எடுத்துக் காட்டு 2 – ஜ்யோதிஷ சாஸ்த்ரத்தைக் கொண்டு தேவதத்தன் நூறு வயது வரை வாழ்வான் என்று நான் அறிந்தேன்.
ஆகையால், அவன் வீட்டிலோ அல்லது வேறே எங்கோ கண்டிப்பாக இருக்கிறான் என்று அறிவேன்.
அதே ஸமயம், அவன் வீட்டில் பார்த்த பொழுது அவன் காணப் படவில்லை .
இப்பொழுது “வீட்டிலோ வெளியிலோ இருக்கிறார்” என்னும் பொதுவான ப்ரமாணத்துக்கும் “வீட்டில் இல்லை ” என்ற
சிறப்புப் ப்ரமாணத்துக்கும் முறண்பாட்டைப் போக்குவதற்காக, வெளியிலே இருக்கிறான்” என்று கல்பிக்கிறோம். இதுவும் அர்த்தாபத்தி தான்.
• இது இரண்டு வகைப்படும் –
(1) த்ருஷ்ட அர்த்தா பத்தி – நாம் கண்ட ஒரு விஷயத்தைப் பொருந்த வைப்பதற்காக மற்ற ஓன்றைக் கல்பிப்பது
(2) ச்ருத அர்த்தா பத்தி – நான் கேட்ட ஒரு விஷயத்தைப் பொருந்தத வைப்பதற்காக மற்ற ஓன்றைக் கல்பிப்பது.
எடுத்துக்காட்டு – ஸ்ம்ருதி நூல் ப்ரமாணம் ஆவதற்காக ச்ருதியைக் கல்பிப்பது, ப்ரயாஜங்கள் தர்ச பூர்ண மாஸத்தின்
ப்ரகரணத்தில் படிக்கப் பட்டதைப் பொருந்த வைப்பதற்காக ச்ருதியைக் கல்பித்து ப்ரயாஜங்கள் தர்சபூர்ணமாஸத்தின் அங்கம் என்று அறிதல்.

அநுப லப்தி
பாவ பதார்த்தங்களை (இருக்கும் பொருள்களை ) க்ரஹிப்பதற்கு உதவும் ஐந்து ப்ரமாணங்ளைப் பார்த்தோம்.
ஆறாவது ப்ரமாணமான அநுபலப்தி என்பது அபாவத்தை (ஒரு பொருளின் இன்மையை ) க்ரஹிப்பதற்கு உதவுகிறது.
• முதல் ஐந்து ப்ரமாணங்களால் அறியப்பட முடிந்த ஒரு பொருளைப் பற்றின அறிவு ஓரிடத்தில் நமக்கு ஏற்படவில்லை என்றால்,
அவ்விடத்தில் அந்தப் பொருள் இல்லை என்று நாம் அறிகிசறாம்.
உபலப்தி என்றால் அறிவு. அநுபலப்தி என்றால் அறிவு தோன்றாமை -.
ஆகவே , அறியக் கூடிய ஒரு பொருளைப் பற்றின அறிவு தோன்றாமல் இருப்பது தான் அநுபலப்தி ஆகும்.
• இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன –
(1) பொருள் அறியப்பட முடிந்ததாக இருக்க வேண்டும். பிசாசு முதலானவை ஓரிடத்தில் இருந்தாலும் நம்மால் காண
முடியாது. ஆகையால், காணாமையைக் கொண் டு அது இல்லை என்று முடிவு செய்ய இயலாது
(2) அந்தப் பொருளைப் பற்றின அறிவு தோன்றாமல் இருக்க வேண்டும்.
• இதில் இரண்டாவதாகச் சொல்லப் பட்ட ’அறிவு தோன்றாமை ’ என்பது ஸத்தயா காரணம், அதாவது,
தன் இருப்பாலேயே அது காரணமாகும்.
யோக்யதை / அறியப்படும் தகுதி என்பது அந்தப் பொருளில் இருந்தால் போதாது, நம்மால் அறியப்பட வேண்டும்.
• ஓர் இருட்டு அறையில் மோதிரத்தைத் தொலைத்து விட்டுத் தேடினேன் .
அறை முழுவதும் தேடா விட்டாலும், தேடினேன் என்று நான் நம்பினேன் என்றால், “இங்கு
மோதிரம் இல்லை ” என்ற அறிவு (அபாவத்தைப் பற்றினது) வந்து விடும்.
முழுவதுமாகத் தேடியிருந்தாலும் “சரியாகத் தேடவில்லை ” என்று தோன்றினால்,
அங்கு உண்மையில் மோதிரம் இல்லா விட்டாலும், நமக்கு “இங்கு மோதிரம் இல்லை ”அறிவு ஏற்படாது.

சம்பவம் ஐதிஹ்யம்
• மீமாம்ஸகர்கள் இந்த ஆறு ப்ரமாணங்களைத் தான் ஏற்கிறார்கள். இதற்கு மேல் ப்ரமாணங்கள் இல்லை என்கிறார்கள்.
ஆனால் பௌராணிகர்கள் ஸம்பவம் என்றும் ஐதிஹ்யம் என்றும் இரண்டு அதிகமான ப்ரமாணங்களை ஏற்கிறார்கள்.
அவற்றைப் பற்றி மீமாம்ஸகர்களின் கருத்து இவ்வாறு உள்ளது :
•ஸம்பவம் – நூறு ரூபாய் ஒருவரிடம் உள்ளது என்று அறிந்தால், அவரிடம் ஐம்பது ரூபாய் உள்ளது என்று அறிகிறோம்.
இது தான் ஸம்பவம் என்று பௌராணிகர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதைத் தனி ப்ரமாணம் என்று சொல்லத் தேவையில்லை .
இதை அநுமானத்திலேயே அடக்கி விடலாம் என்பது மீமாம்ஸகர்களின் அபிப்ராயம்.
எங்கு எல்லாம் நூறு ரூபாய் உள்ளது அங்கு எல்லாம் ஐம்பது ரூபாய் உள்ளது என்ற வியாப்தியைக் க்ரஹித்த ஒருவனுக்கு
இந்த அறிவு அநுமானத்தாலேயே வரக் கூடும்.
• ஐதிஹ்யம் – “’மரம் தோறும் குபேரன் உள்ளார்” போன்ற சொல் தொடர்களை நாம் கேள்விப் படுகிறோம்.
இதை சரியா தவறா என்று சொல்ல எந்த வழியுமில்லை . இது தான் ஐதிஹ்யம் என்று பௌராணிகர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், இதை சப்த ப்ரமாணத்திலேயே அடக்கலாம் என்பது மீமாம்ஸகர்களின் கூற்று.
சொன்னவர் யார் என்று தெரியாத சொல் தொடர் இது. ஆகவே சப்த ப்ரமாணம் தான்.

————-

பாடம் –28-மீமாம்ஸையில் ப்ரமேயங்கள்

•பாட்ட மீமாம்ஸகர்கள் ஐந்து பதார்த்தங்கைள ஏற்கிறார்கள். அவை யாவன –
1. த்ரவ்யம்
2. ஜாதி / ஸாமாந்யம் என்கிற பொதுத் தன்மை
3. குணம் என்கிற பண்புகள்
4. க்ரிையை என்கிற செயல்
5. அபாவம் என்கிற இன்மை
ந்யாய மதத்தில் ஏற்கப்பட்ட விசேஷம் என்ற பதார்த்தத்தையும் ஸமவாயம் என்ற பதார்த்தத்தையும் இவர்கள் ஏற்க வில்லை –

த்ரவ்யங்கள்
• “பரிமாணம் என்ற குணத்துக்கு ஆதாரமாக எது உள்ளதோ அதுவே த்ரவ்யம் ”
என்று த்ரவ்யங்களின் பொதுவான லக்ஷணம் சொல்லப் படுகிறது.

உண்டாகும் க்ஷணத்தில் குணம் இருக்காதே -நியாய மாதத்தில் ஓன்று மற்ற ஒன்றுக்கு காரணம் -சமவாயம் –
மீமாம்சையில் இத்தை கொள்ளாமல் தாதாத்ம்யம் என்று குணத்தை பிரித்துப் பார்க்க முடியாது
உண்டாகும் பொழுதே குணம் நிறம் பரிமாணம் உண்டு -என்பர் –

• மீமாம்ஸையில் 11 த்ரவ்யங்கள் சொல்லப்படுகின்றன.-அவையாவன –
1. ப்ருதிவீ – மணத்தை உடையது ப்ருதிவீ. மூக்கிலிருக்கும் க்ராண இந்த்ரியம் ப்ருதிவியால் ஆனது.
ப்ருதிவியால் ஆன சரீரம் ஜராயுஜம் (கர்ப்பையிலிருந்து தோன்றியது),
அண்டஜம் (முட்டையிலிருந்து தோன்றியது),
ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து வந்தது)
மற்றும் உப்பிஜ்ஜம் (முளையிலிருந்து வந்தது) என்று நான்கு வகைகளில் உள்ளது
2. ஜலம் – இயற்கையான த்ரவத்வம் -நீர்மையை -உடையது –
3. தேஜஸ் – வெப்பத்தை உடையது -. இதன் ரூபமும் ஸ்பர்சமும் உத்பூதம் (வெளிப் பட்டது),
அநுத்பூதம் (வெளிப் படாதது), அபிபூதம் (மறைக்கப் பட்டது) என்று மூன்று நிலைகளில் இருக்கும் .
A. இரும்பைக் காய்ச்சினால் தெரியும் தேஜஸ்ஸின் ரூபமும் ஸ்பர்ஸமும் உத்பூதமாக (வெளிப்பட்டு) இருக்கின்றன.
B. தீபத்தின் ஒளியில் ரூபம் உத்பூதமாகவும் ஸ்பர்ஸம் அநுத்பூதமாகவும் உள்ளது.
C. வெந்நீரிலுள்ள தேஜஸ்ஸில் ஸ்பர்ஸம் உத்பூதமாகவும் ரூபம் அநுத்பூதமாகவும் உள்ளது.
D. சஷுர் இந்த்ரியம் தேஜஸ்ஸால் ஆக்கப் பட்டபடியால் ரூபத்தையும் வெப்பத்தையும் கொண்டது தான்,
ஆனால் அவை இரண்டுமே அதில் அநுத்பூதமாக இருக்கிறபடியால் நமக்குத் தோற்றுவதில்லை .
E. தங்கம் தேஜஸ்ஸால் ஆனது, எனவே வெப்பத்தையும் வெள்ளை நிறத்தையும் உடையது.
ஆனால் அருகிலுள்ள ப்ருதிவீ பாகத்தின் மஞ்சள் நிறத்தாலும் ஸ்பர்சத்தாலும் அவை மறைக்கப் படுகின்றன
4. வாயு – ரூபம் அற்றது ஆனால் ஸ்பர்சம் உடையது . த்வக் இந்த்ரியத்தால் க்ரஹிப்படுவது.
5. தமஸ் –ஸ்பர்சம் அற்ற்து ஆனால் ரூபம் உடையது. இது தனி த்ரவ்யம் அல்ல,-
தேஜஸ்ஸின் அபாவம் தான் தமஸ் என்று ந்யாய மதத்தில் சொல்லப் படுகிறது.
ஆனால் அது சரி அல்ல. கருமை நிறமுடைவதாக தோற்றுகையாலும், செயலுடைய தானபடியாலும்,
’இருட்டு உள்ளது’ என்று பாவ பதார்த்தமாக(இருக்கும் பொருளாக) தோற்றுைகையாலும், தேஜஸ்ஸின் நினைவு இல்லாத பொழுதும்
தமஸ் க்ரஹிக்கப் படுகிறபடியால் அதன் அபாவமாக இது இருக்க முடியாத படியாலும் தமஸ் கருப்பு நிறத்தை உடைய தனி த்ரவ்யம் தான்.

• மேல் சொல்லப்பட்ட ஐந்து த்ரவ்யங்களுக்கும் அவயவங்கள் உண்டு.அவயவங்கள் சேர்ந்து அவயவியை உண்டாக்குகின்றன.
• அவற்றின் கடைசி அவயவம் தான் பரமாணு, அது கண்ணுக்குப் புலப்படாது,
அணுவானது என்று ந்யாய மதத்தில் சொல்லப்படுகிறது. மீமாம்ஸா தர்சனத்தில் ஜன்னல் வழியாக ஸூர்ய ஒளி
வரும் பொழுது கண்ணுக்குத் தெரியும் மிக மிக நுண்ணிய பொருட்கள் தான் பரமாணுக்கள்,
அதை விட சிறிய பொருள் கிடையாது என்று சொல்லப் படுகிறது.
• இப்படி அவயவங்களைச் சேர்த்து உலகத்தைப் படைப்பது ஈச்வரன் என்று ந்யாய மதம்.
எந்த ஒரு உண்டாகும் பொருளுக்கும் உண்டாக்கிய ஒருவர்
தேவைப் படிகிறபடியால் இந்த உலகை உண்டாக்கியவர் ஈஸ்வரன் என்று அநுமானம் செய்கிறார்கள் அவர்கள்.
அது மீமாம்ஸையில் ஏற்கப்படவில்லை .
ஈஸ்வரன் ஒரு உடலோடு படைத்தார் என்றால் நாம் பார்த்திருப்போம், உடல் இல்லாமல் படைக்க முடியாது.
ஆகையால் இந்த உலகம் படைக்கப்படவே இல்லை , எப்பொழுதும் இப்படியே தான் இருந்தது, வருங்காலத்திலும் இருக்கும்.

6. ஆகாசம் – நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
7. காலம் – நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
8. திக்- நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
9. ஆத்மா – ஜ்ஞாநம் உடையவர். மநஸ் என்ற உட்புலனால் க்ரஹிக்கப் படுபவர்.
• உடலையும், இந்த்ரியங்கைளயும் காட்டிலும் வேறு பட்டவர், அவற்றை இயக்குபவர்.
• அறிவு வடிவானவர் அல்ல, அறிவை உடையவர், அறிவாளி.
• ஸுகமே வடிவானவர் அல்ல,ஸுகத்தை உடையவர்,ஸுகீ.
• ஒவ்வொரு சரீரத்திலும் வெவ்வேறு ஆத்மா உள்ளார், அவரவரின் இன் பம்
துன்பம் விருப்பு வெறுப்பு முதலியவை வேறுபடிகிறபடியால்.
• விபுவானவர். நித்யமானவர்.
• போகம் என்று அழைக்கப்படும் இவ்வுலக இன்பத்தையும், ஸ்வர்கம் எனப்படும் இன்பத்தையும்,
முக்தி என்று அழைக்கப்படும் நிகரற்ற இன்பத்தையும் அநுபவிப்பவர்.
• முக்தி என்ற நிலையில் ஆத்மாவின் துக்கங்கள் எல்லாம் நீங்கி, இயற்கையாக ஆத்மாவிடம் இருக்கும் ஸுகத்தை
அவர் அநுபவிக்கிறார்,தன்னுைடய மனதைக் கொண்டு.
10. மநஸ் – ஸுகம் துக்கம் முதலிய குணங்கைள ப்ரத்யக்ஷமாக அறிகைக்கான கருவி. இது மீமாம்ஸா தர்சனத்தில் விபுவானது.
11. சப்தம் – மீமாம்ஸா தர்சனத்தில் சப்தம் என்பது ஆகாசத்தின் குணம் அல்ல. தனி த்ரவ்யம் .
அ, ஆ, இ, ஈ என்ற ஒவ்வொரு சப்தமும் நித்யமானது, விபுவானது (எங்கும் பரந்திருப்பது).
நாம் வாயால் சில வியாபாரங்களைச் செய்தால் நம்மைச் சுற்றி இருக்கும் ஒரு சிறு இடத்தில் மட்டும் அந்த சப்தம் வெளிப் படுகிறது.
வியாபாரம் அழிந்தவுடன் அந்த சப்தத்தின் வெளிப் பாடும் அழிந்து விடும், சப்தம் உண்டாவதும் இல்லை – அழிவதும் இல்லை

ஜாதி சாமான்யம் பொதுத்தன்மை .
• மீமாம்ஸையில் ஏற்கப்பட்ட அடுத்த பதார்த்தம் ஸாமாந்யம் என்று ந்யாய மதத்தில் அழைக்கப் படும் பொதுத் தன்மை .
• அனைத்து குடங்களிலும் குடத் தன்மை என்று ஒரு பொதுத் தன்மை உள்ளது.
அனைத்து மாடுகளிலும் மாட்டுத் தன்மை என்ற ஒரு பொதுத் தன்மை உள்ளது.
• இந்த பொதுத் தன்மை நித்யமானது, விபுவானது. மாடு இருக்கும் இடத்தில் மட்டும் தான் மாட்டுத் தன்மை உள்ளது என்றல்ல.
மாட்டுத் தன்மை உலகு எங்கும் பரந்திருக்கும் ஒன்று.
• எங்கு ஒரு மாடு தோன்றுகிறதோ , அங்கு அந்த மாட்டுக்கும், முன்னமே இருந்த மாட்டுத் தன்மைக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.
• மாடு இல்லாத போது ஏன் மாட்டுத் தன்மையை அறிய முடிய வில்லை என்றால், மாட்டுத் தன்மையை வெளிப் படுத்துவது (அபிவ்யங்ஜகம்)
மாடு தான். எப்படி ஒரு விளக்கு இல்லாமல் ஒரு குடம் வெளிப்படாதோ ,அதே போல் மாடு இல்லாத போது
ஓரிடத்தில் மாட்டுத் தன்மை இருந்தாலும் அது வெளிப் படாது.
• ’த்ரவ்யம் உள்ளது’, ’குணம் உள்ளது’, ’க்ரியை உள்ளது’, ’ஜாதி உள்ளது’ என்று இந்த நாலு பதார்த்தங்கைளப் பற்றியும்
’உள்ளது’, ’உள்ளது’ என்ற அறிவு ஏற்படுகிறபடியால், இந்த நான்குக்கும் பொதுவான
’ஸத்தா’ /’இருத்தல்’ என்ற ஒரு பொதுத் தன்மை ஒப்புக் கொள்ளப் படுகிறது –

குணங்கள் –
• மீமாம்ஸா தர்ஸநத்தில் 24 குணங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவை –
(1) ரூபம் = நிறம் (2) ரஸம் = சுவை (3) கந்தம் = மணம்
(4) ஸ்பர்சம் = குளிர்ச்சி வெப்பம் இரண்டும் இல்லாமை என்ற தொடு வுணர்ச்சி
(5) ஸம்க்யா = ஒன்று, இரண்டு முதலான எண்ணிக்கை (6) பரிமாணம் = அணு, மஹத், விபு என்ற அளவுகள்
(7) ப்ருதக்த்வம் = வேறுபாடு (8) ஸம்யோகம் = சேர்க்கை (9) விபாகம் = பிரிவு
(10, 11) பரத்வம் அபரத்வம் = தொலைவில் இருத்தல் -அருகில் இருத்தல்-காலத்தால் முதுமை இளமை
(12) குருத்வம் = எடை (13) த்ரவத்வம் =நீர்மை (14)ஸ்நேஹம் = பசை

சப்தம் குணம் இல்லை த்ரவ்யம் இவர்கள் தர்சனத்தில்
தர்மம் அதர்மம் இவற்றையும் கொள்ள வில்லை
த்வநி சக்தி ப்ராகட்யம் இந்த மூன்றும் இவற்றுக்குப் பதில் இங்கு

மேலே ஆத்மாவின் குணங்கள் -ஆறும்
(15) புத்தி = அறிவு. இது ந்யாய மதத்தில் ப்ரத்யக்ஷமானது அதாவது மனதால் அறியப் படுவது.
ஆனால் மீமாம்ஸையில் இதை அநுமானம் தான் செய்யலாம்.
(16) ஸுகம் = ஐஹிகம் (இவ்வுலகத்தது), ஆமுஷ்மிகம் (ஸ்வர்க இன்பம்), அபவர்கம் (மோக் ஷஇன் பம்) என்று மூ வகைப் பட்டது
(17) துக்கம் = ஐஹிகம் (இவ்வுலகத்தது), ஆமுஷ் மிகம் (நரகத் துன்பம்) என்று இரண்டு வகைப் பட்டது
(18) இச்சை = ஆசை (19) த்வேஷம் = வெறுப்பு (20) ப்ரயத்நம் = முயற்சி
(21) ஸம்ஸ்காரம் = இது மூ வகைப்படும் – வேகம், பாவனை , ஸ்திதி ஸ்தாபகம் என்று.

(22) த்வநி = இது வாயுவின் குணம். நம் தொண்டை /வாயின் வியாபாரத்தால்
வாயுவில் இந்த குணம் ஏற்பட்டு, இது தான் சப்தத்தை வெளிப் படுத்துகிறது.
(23) ப்ராகட்யம் = ஒரு பொருளில் உண் டாகும் ’அறியப் படுதல்’ என்ற குணம்.
இதைக் கண்டு தான் நமக்கு அறிவு ஏற்பட்டதை நாம் அநுமானம் செய்யலாம்.
(24) சக்தி = திறமை . இது இரண்டு வகைப்படும்
(1) லௌகிக சக்தி –நெருப்புக்கு எரிக்கும் சக்தி, நீருக்கு நெருப்பை அணைக்கும் சக்தி முதலியவை
(2) வைதிக சக்தி – ஜ்யோதிஷ் டோமம் முதலான வற்றுக்கு ஸ்வர்க்கத்தை ஏற்படுத்தும் சக்தி.
அபூர்வம் என்ற ஒன்றைக் கல்பிக்கிறார்கள்

கர்மம் அபாவம்
• மீமாம்ஸா தர்ஸநத்தில் ஏற்கப்பட்ட அடுத்த பதார்த்தம் கர்மம் எனப்படும் க்ரியை / செயல் ஆகும்.
• இது விபு அல்லாத த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும், ஏன் என்றால் விபு த்ரவ்யங்களால் நகர இயலாது.
• இது புலன்களால் க்ரஹிக்கக் கூடியது.
• உத்ஷேபநம் (மேலே செல்லுதல்)முதலான வடிவங்களில் இருக்கும்
• ஸம்யோகத்துக்கும் விபாகத்துக்கும் காரணமானது

• மீமாம்ஸா தர்ஸநத்தின் ஏற்கப்பட்ட ஐந்தாவது பதார்த்தம் அபாவம்.
• இது ப்ராபாகரர்கள் என்ற மீமாம்ஸகர்களால் ஏற்கப்பட வில்லை . ஆனால் பாட்டர்களால் ஏற்கப் பட்டுள்ளது.
• ஒது ப்ராகபாவம் (ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் இருக்கும் அதன் அபாவம்),
ப்ரத்வம்ஸா பாவம் (ஒரு பொருளின் அழிவு), அத்யந்தா பாவம் (ஒரு பொருள் இருக்கவே முடியாத இடத்தில் இருக்கும் அதன் அபாவம்) மற்றும்
அந்யோந்யா பாவம் (பொருட்களுக்கு இடையுள் இருக்கும் வேறுபாடு) என்று நான்கு வகைப்படும்.

• ஆறாவது ப்ரமாணமான அநுபலப்தி என்ற ப்ரமாணத்தால் இந்த அபாவம் க்ரஹிக்கப் படுகிறது என்று பாட்ட மீமாம்ஸகர் களின் கூற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -11-20—

March 24, 2021

பாடம் -11-யாகத்தின் அறிமுகம்

யாகம் என்றால் ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை ஸமர்பித்தல் / த்யாகம் செய்தல் .
ஆகையால், எந்த ஒரு யாகத்திற்கும்
அதில் கொடுக்கப்படும் த்ரவ்யமும் வணங்கப்படும் தேவதையும் தான் முக்கியமான பகுதிகள்.
• த்ரவ்யம் – பால் (பயஸ்), தயிர் (ததி), நெய் (ஆஜ்யம்), ப்ருஷதாஜ்யம் (தயிர் கலந்த நெய்),
ஆமிக்ஷா (கொதிக்கும் பாலில் தயிரைச் சேர்த்தால் கிடைக்கும் கெட்டியான த்ரவ்யம்),
வாஜிநம் (அதே செயலில் கிடைக்கும் த்ரவமான த்ரவ்யம்), புரோடாசம் (தோசை போன்றது),
சரு (கஞ்சி வடிக்காத சோறு), யவாகூ (அரிசிக்கஞ்சி), ஸோமம் என்ற கொடியின் ரஸம் என்று
பல த்ரவ்யங்களால் செய்யப்படும் யாகங்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன
• தேவதை – அக்நி, இந்த்ரன், ஸோமன், வருணன், வாயு, மித்ரன்,
ருத்ரன், ப்ரஜாபதி, விஷ்ணு போன்ற பல தேவதைகள் வேதங்களில் சொல்லப் பட்டுள்ளனர்.
• சில இடங்களில் இரண்டு தேவதைகள் சேர்ந்து ஒரு த்ரவ்யத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
எடுத்துக்காட்டு –
இந்த்ராக்நீ (இந்த்ரனும் அக்நியும் சேர்ந்து), அக்நாேிஷ்ணூ (அக்நியும் விஷ்ணுவும் சேர்ந்து), முதலானவை .
• சில யாகங்களில் இரண்டு தேவதைகளுக்கு தனித்தனியே ஆகுதிகளைக் கொடுக்க வேண்டும்.

யாகம் செய்ய யோக்யதை

ஒருவன் யாகம் செய்ய வேண்டும் என்றால் மூன்று தகுதிகள் இருக்க வேண்டும்
• (1) வித்யை – அத்யயநம் செய்து, அதன் மூலம் வேதத்தின் பொருளை அறிந்திருக்க வேண்டும்
• (2) அக்நி – ஆதாநம் என்ற வைதிகச் செயலைச் செய்து, அதன் மூலம் மூன்று அக்நிகளைப் பெற்றிருக்க வேண்டும்
• (3) ஸாமர்த்யம் – யாகத்தைச் செய்வதற்கு வேண்டிய பொருள், பண வசதி, உடல் ஆரோக்யம், உதவிக்கு மக்கள், முதலியவை –

ஆதானம்

ஒருவனுடைய விவாஹத்தில் (கல்யாணத்தில்) உபயோகிக்கப்பட்ட அக்நிக்கு வைவாஹிகாக்நி என்று பெயர்.
அதை விவாஹம் முதல் ரக்ஷித்து வைத்து, அதில் சில ஹோமங்களை
தினமும் செய்ய வேண்டும் என்று சாஸ்த்ரம் கூறுகிறது.
ஸ்மார்த்த அக்னி ஸ்ம்ருதியில் சொல்லிய அக்னி
அத்தை ஸ்ருதியில் சொன்ன அக்னியாக மாற்றி உயர்ந்த ஆதானம் செய்ய வேண்டும்

• அந்த அக்நிக்கே ஆதாநம் என்ற ஒரு ஸம்ஸ்காரத்தைச் செய்தால், அது உயர்வு பெற்று யாகம் செய்வதற்குத்
தகுந்த அக்நியாக ஆகிறது. அந்த அக்நியில் தான் ஒருவன் வேதம் கூறிய யாகங்களைச் செய்ய வேண்டும்.
• ஒருவன் தவறாமல் செய்ய வேண்டிய வைதிகச் செயல்களுள், அக்நி ஹோத்ரம் என்ற ஹோமமும்,
தர்சபூர்ணமாஸம் என்ற யாகமும், அக்நிஷ்டோமம் (வருஷத்துக்கு ஒரு தடவை )என்ற யாகமும் உள்ளன.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக அக்நிஹோத்ரம் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
ஹோம பூர்வக ஆதாநம் என்று பெயர்.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக தர்சபூர்ணமாஸம் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
இஷ்டிபூர்வக ஆதாநம் என்று பெயர்.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக அக்நிஷ்டோமம் என்ற ஸோம யாகத்தைச் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
ஸோம பூர்வக ஆதாநம் என்று பெயர்.

மூன்று அக்நிகள்
ஸ்ரவ்த அக்னி மூன்று -த்ரேத அக்னிகள் -குளித்து மூன்று அனலை ஓம்பும் –

ஆதாநம் செய்வதன் மூலம் ஒருவனுக்கு மூன்று அக்நிகள் ஸித்திக்கின்றன –
கார்ஹ பத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி
• (1) கார்ஹபத்யம் – இது மேற்கு திசையில் வட்டமான குண்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
இதில் தான் யாகத்தில் தேவதைக்குக் கொடுக்கப் போகும் த்ரவ்யத்தை சமையல் செய்ய வேண்டும்.
• (2) ஆஹவநீயம் – இது கிழக்கு திசையில் சதுரமான குண்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
இதில் தான் அநேகமாக யாகங்களிலும் ஹோமங்களிலும் ஆஹுதிகளைக் கொடுக்க வேண்டும்.
• (3) தக்ஷிணாக்நி – இது தெற்கு திசையில் அர்த்த-சந்த்ரம் வடித்திலுள்ள குண்டத்தில் வைக்கப் பட வேண்டும்.
இதில் தான், யாகத்தில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு இடப் போகும் அன்னத்தை ஸமைக்க வேண்டும்.
• இவற்றில், கார்ஹபத்யம் தான் தினமும் வீட்டில் ரக்ஷிக்கப்பட வேண்டும்.
ஆஹவநீயம்-தக்ஷிணாக்நி-இதில் சேர்த்து விடலாம் -பின்பு இதில் இருந்து எடுத்து இவற்றைத் தொடங்கலாம்
அதில் தான் தினமும் செய்ய வேண்டிய அக்நி ஹோத்ரம் என்ற கர்மத்தைச் செய்ய வேண்டும்.
எப்பொழுது வேறு யாகங்களைச் செய்கிறோமோ , அப்பொழுது கார்ஹபத்யத்திலிருந்து
தணல்களை எடுத்துச் சென்று ஆஹவநீயத்தையும் தக்ஷிணாக்நியையும் மூட்டிக் கொள்ள வேண்டும்.

அக்நி ஹோத்ரம்

ஆதாநம் செய்து, மூன்று அக்நிகளை உடைய ஒருவன், தினமும் காலையிலும் மாலையிலும்
அக்நி ஹோத்ரம் என்ற ஹோமத்தைச் செய்ய வேண்டும்.
இன்று மாலையும், நாளை காலையும் செய்யும் ஹோமங்கள் சேர்ந்து ஒரு
அக்நி ஹோத்ரம் என்று அழைக்கப் படுகின்றன.
• அக்நிஹோத்ரத்தை பால், தயிர், நெய், கஞ்சி முதலான பல த்ரவ்யங்களைக் கொண்டு செய்யலாம்.
ஆனால், முதன் முதலில் எந்த த்ரவ்யத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ , அதைத் தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
• இந்த அக்நி ஹோத்ரத்தில், மாலைப் பொழுதில், அக்நி தேவதைக்கு மந்த்ரம் சொல்லியும்,
ப்ரஜாபதி தேவதைக்கு மந்த்ரம் இல்லாமல் மௌனமாகவும் ஹோமம் செய்யவேண்டும்.
காலைப் பொழுதில், ஸூர்ய தேவதைக்கு மந்த்ரம் சொல்லியும்,
ப்ரஜாபதி தேவதைக்கு மந்த்ரம் இல்லாமல் மௌனமாகவும் ஹோமம் செய்ய வேண்டும்-

சாயங்காலம் தொடங்கி அடுத்த நாள் காலை செய்வது தான் ஒரு அக்னி ஹோத்ரம் –
காலையில் தானே ஆதாயம் பண்ணி மாலையில் தொடங்குவதால் –

தர்ச பூர்ண மாஸம்

ஆதாநம் செய்து கொண்டு மூன்று அக்நிகளை உடைய ஒவ் வொருவனும், பர்வ காலங்களில்
(பௌர்ணமி மற்றும் அமாவாஸை காலங்களில்) ஒரு கர்மத்தைச் செய்யவேண்டும்.
அதற்கு தான் தர்ச-பூர்ணமாஸம் என்று பெயர்.-தர்சம் என்றால் அமாவாஸை.
• இந்த தர்சபூர்ணமாஸம் என்பது 6 யாகங்களின் கூட்டம். அதில்
• பௌர்ணமியில் செய்யும் யாகங்கள்:
• அஷ்ட கபாலம் (எட்டு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நி தேவதைக்காகச் செய்யும்
யாகம் – ஆக்நேய யாகம் என்று பெயர்
• நெய்யைக் கொண்டு விஷ்ணுவுக்கோ , ப்ரஜாபதிக்கோ , அக்நீஷோமீயர்களுக்கோ செய்வது – உபாம்சு யஜம் என்று பெயர்
• ஏகாதச கபாலம் (பதினொரு கபாலங்களில் ஸமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நீ ஷோமர்கள் என்ற தேவதைக்காகச் செய்யும் யாகம்
• அமாவாஸையில் செய்யும் யாகங்கள்:
• அஷ்ட கபாலம் (எட்டு கபாலங்களில் ஸமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நி தேவதைக்காகச் செய்யும்
யாகம் – ஆக்நேய யாகம் என்று பெயர்
• பாலைக் கொண்டு இந்த்ரனுக்குச் செய்யும் யாகம்-ஐந்த்ரம் பய
• தயிரைக் கொண்டு இந்த்ரனுக்குச் செய்யும் யாகம்-ஐந்த்ரம் தயி
• இந்த ஆறு யாகங்களுக்கு ப்ரதான யாகங்கள் என்று பெயர், ஏன் என்றால் அவை தான் நாம் ஆசைப்படும்
பயனைப் பெற்றுத் தரப் போகின்றன.

பவுர்ணமி தொடங்கி பிரதமை காலை பண்ண வேண்டும்
அமாவாசை தொடங்கி இதுவும் பிரதமை காலை பண்ண வேண்டும்

எட்டு கட்டுகள் தர்ப்பம் பரப்பி வைக்க
பரித்ராணாம் -சுற்றி வைப்பது
ஆதார சமித்துகள்
21 சமித்துகள்

நெல்லை எடுத்து ப்ரோக்ஷணம் உலூகலம் குத்தி பத்னி கார்யம்
அம்மியில் அரைப்பது பேஷனம்
வறுத்து தீர்த்தம் வைத்து பிண்டம் கபாலத்தில் வைத்து புரோடாசம் பண்ணும் முறை

அத்வர்யு
ஆக்னீஸ்வரன் உதவி
ஹோதா மந்த்ரம் சொல்லி
ப்ரம்மா மேற்பார்வை அனுமதி
நால்வரும் எஜமானுக்கு வேண்டும்

தர்சபூர்ண மாஸத்தின் அங்கங்கள் –

இந்த தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்திற்கு அங்கமாக பல யாகங்களும் ஹோமங்களும் விதிக்கப்பட்டுள்ளன
ப்ரதான யாகங்களைச் செய்வதற்கு முன்னால் செய்யப் பட வேண்டியவை
1. ஆகார ஹோமங்கள் – மந்த்ரம் சொல்லாமல் ப்ரஜாபதி தேவதைக்கும் மந்த்ரம்
சொல்லி இந்த்ரனுக்கும் நெய்யைக் கொண்டு செய்யும் இரண்டு ஹோமங்கள்
2. ப்ரயாஜங்கள் – அக்நி முதலான தேவதைகளுக்காக நெய்யைக் கொண்டு
செய்யும் ஐந்து யாகங்கள். மீதமிருக்கும் நெய்யை ப்ரதான யாகங்களின் ஹவிஸ்ஸூகளில் சேர்க்க வேண்டும்.
3. ஆஜ்ய பாகங்கள் – அக்நி தேவதைக்கும் ஸோமன் என்ற தேவதைக்கும் நெய்யைக் கொண்டு செய்யும் இரண்டு யாகங்கள்

ப்ரதான யாகங்களைச் செய்த பிறகு சேய்யப்பட வேண்டியவை .
1. ஸ்விஷ்டக்ருத் – ப்ரதான யாகத்தின் ஹவிஸ்ஸூகளிலிருந்து சிறு சிறு
துண்டுகஸள எடுத்து, அக்நி தேவதை க்காகச் செய்யப்படும் ஒரு யாகம்
2. அநுயாஜங்கள் – பர்ஹிஸ், நராசம்ஸன், ஸ்விஷ்டக்ருத் என்ற மூன்று தேவதை களுக்காக நெய்யைக் கொண்டு செய்யும் மூன்று யாகங்கள்
3. பத்நீ ஸம்யாஜங்கள் – ஸோமன், த்வஷ்டா, தேவ பத்நிகள், க்ருஹபதி என்ற அக்நி ஆகிய நால்வருக்கும் செய்யப் படும் நான்கு யாகங்கள்
4. பார்வண ஹோமம் – பௌர்ணமி அல்லது அமாவாஸை தேவதைக்காகச் செய்யும் ஒரு ஹோமம்
5. நாரிஷ்ட ஹோமம் – யாகம் செய்பவனின் வயிற்றில் இருக்கும் ஜாடராக்நியும்,
அவனது ப்ராண வாயுவும் சிறப்பாக இருப்பதற்காகச் செய்யும் ஏழு ஹோமங்கள்
6. ஸமிஷ்டயஜு: – ஒரு ஹோமம்
7. ப்ராயச்சித்த ஹோமங்கள் – வ்ரதத்தில் தவறுதல்களுக்காகவோ மந்த்ரங்களில் தவறுகளுக்காகவோ செய்யப்படும் ப்ராயச்சித்தங்கள்

பிரதிபத்தி கர்மங்கள் –

யாகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீதமில்லாமல் கௌரவத்வதோடு செலழிப்பதற்காக
வேதமே ப்ரதிபத்தி கர்மங்களை விதிக்கிறது.
• ப்ரதான யாகங்களைச் செய்து முடித்தவுடன், அந்த ஹவிஸ்ஸின் மீதமிருக்கும் பகுதியைச் செலழிப்பதற்காக
ஸ்விஷ்டக்ருத் யாகம் – ப்ரதான யாகத்தின் ஹவிஸ்ஸிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இந்த யாகம் செய்யவேண்டும்.
• ஒவ் வொரு ஹவிஸ்ஸிலிருந்தும் ஒரு துண்டை எடுத்து, அதை ப்ரஹ்மா என்ற ருத்விக் உண்ணவேண்டும்.
இதற்கு ப்ராசித்ரம் என்று பெயர்.
• ஒவ்வொரு ஹவிஸ்ஸிலிருந்தும் இரண்டிரண்டு துண்டுகளை எடுத்து அதை ப்ரஹ்ம, அத்வர்யு, ஹோதா, ஆக்நீத்ரன் என்ற நால்வரும்
உண்ணவேண்டும். இதற்கு இடா பக்ஷணம் என்று பெயர்
• அக்நிக்காக செய்யப்பட்ட புரோடாசத்தை நான்காகப் பிரித்து, நான்கு ரித்விக்குகளும் உண்டு விடவேண்டும்.
• நெல்லிலிருந்து நீக்கப்பட்ட உமியை , கபாலத்தில் வைத்து, ஒரு மூலையில் வைத்து விடவேண்டும். இது ராக்ஷைர்களுக்காக
• நெல்லின் தவிடை நெய்யில் சேர்த்து, கார்ஹபத்யம் என்ற அக்நியில் ஹோமம் செய்யவேண்டும்
• அரிசியை அரைக்கப் பயன்பட்ட அம்மியிலும் குழயியிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவைச் சுரண்டு, அதை நெய்யில் சேர்த்து,
பிஷ்டலேபம் / பலீகரணம் என்ற ஹோமத்தைச் செய்யவேண்டும்.
• ப்ரஸ்தரம் என்ற தர்பக்கட்டை நெருப்பில் இடகேண்டும்
• அரிசி மாவை பிண்டமாக்கப் பயன்படுத்திய ப்ரணீதா என்ற ஜலத்தைக் கொண்டு யஜமாநன் முகம் துடைக்க வேண்டும்.
இது தான் இந்த யாகத்தின் அவப்ருத ஸ்நானம் ஆகிறது.

எஜமானன் செய்ய வேண்டிய கர்மங்கள்

ஒரு யாகத்தில் யஜமாநன் அவசியம் செய்ய வேண்டிய கர்மங்களுள் சில:
• தேவதைகளை ஸ்வீகரித்து வரவேற்றல்
• ருத்விக்குகளைத் தேர்ந்தெடுத்து, யாகத்திற்கு அழைத்து, வரித்தல்
• வ்ரதமிருத்தல், அதைத் தொடங்கவும் முடிக்கவும் தேவையான கர்மங்களைச் செய்தல்
• யாகத்தின் முக்கியப் பகுதி – தேவதையைக் குறித்து த்ரவ்யத்தைத் த்யாகம் செய்தல்.
சொத்து அவனதானபடியால், யஜமாநன் தான் இதைச் செய்யவேண்டும். ரித்விக்குகளைக் கொண்டு செய்ய முடியாது
• ருத்விக்குகளுக்கு தக்ஷிணையை வழங்குதல்
• இவற்றைத் தவிர்ந்த மற்ற செயல்களை எல்லாம் ருத்விக்குகளைக் கொண்டு யஜமாநன் செய்யலாம்

———————

நான்காம் அத்யாயம் –
பிரமாணங்கள் -பேதங்கள் -அங்கங்கள் கீழே பார்த்தோம்
சேஷ சேஷித்வம் அறிந்து ஏது பிரயோஜனம் எதிர் பார்ப்பு வருமே –
ஒரே செயல் பலவற்றுக்கும் அங்கம் ஆகும் -எது பிரயோஜனம் என்ற கேள்வி வருமே
இதுவே -ப்ரயுக்தம்-இத்தை விவரித்து சொல்லும் இதில் –
இவற்றைப் பார்க்கும் முன்பு அங்கங்களின் வகைகளைப் பற்றி அறிய வேண்டுமே
அவற்றைப் பார்ப்போம்

பாடம் -12-அங்கங்களின் வகைகள்

மூன்றாம் அத்யாயத்தில் ஒரு வைதிக கர்மத்தின் அங்கங்களை எப்படி அறியலாம் என்று பார்த்தோம்.
அந்த அங்கங்கள் இரண்டு வகைகளாக உள்ளன.
• (1) ஸித்த ரூபம் – ஸித்தமாக (தயாராக) இருக்கும் பொருள்கள்.எடுத்துக்காட்டு –
பால், தயிர், நெய், கரண்டி, புரோடாசம், ரித்விக், புரசக்கிளை , தர்பம், காலம், தேசம், முதலானவை ,
• (2) க்ரியா ரூபம் – செயல் வடிவமான அங்கங்கள். எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷித்தல், உலக்கையால் குத்துதல், அரைத்தல், சமைத்தல்,
அங்கமான யாகங்கள், அங்கமான ஹோமங்கள், முதலானவை

• க்ரியை வடிமான அங்கங்களை மறுபடியும் இரண்டாகப் பிரிக்கலாம் –
• (1) ஸந்நிபத்ய உபகாரகம் – ஒரு யாகத்தின் அங்கமான த்ரவ்யம் முதலானவற்றுக்கு அங்கமாக இருந்து
உதவி செய்யும் செயல்கள். எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷணம், உலக்கையால் குத்துதல் முதலியவை யாகத்தின் அங்கமான நெல்லினுடைய அங்கங்கள்.
ஸ்விஷ்டக்ருத் என்ற அங்க யாகம், ப்ரதான யாகத்திற்கு அங்கமான ஹவிஸ்ஸை சரியாகச் செலவழிப்பதற்காக
உள்ளபடியால் அது அந்த ஹவிஸ்ஸின் அங்கம்.
• (2) ஆராத் உபகாரகம் – த்ரவ்யம் முதலானவை மூலமாக அல்லாமல் நேரடியாக
அத்ருஷ்டம் / அபூவர்ம் / புண்யம் வழியாக ஒரு யாகத்திற்கு உதவி செய்யும் செயல்கள். எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள் முதலானவை

ஸந்நிபத்ய உபகாரங்களின் வகைகள்
ஸந்நிபத்ய உபகாரகங்களான செயல்கள் மூன்று வகைப்படும் –
• (1) த்ருஷ்டார்த்தம் – த்ருஷ்டமான (இந்த்ரியங்களுக்கு புலப்படும்) ஒரு நன்மையைக் / பயனைக் கொடுக்கக் கூடியவை .
எடுத்துக்காட்டு
– உலக்கையால் குத்துதல் என்பது நெல்லின் அங்கம். அது, உமியை நீக்குதல் என்ற த்ருஷ்டமான ப்ரயோஜனத்திற்காகத் தான்
செய்யப்படுகிறது.
அதே போல் அரிசியை அரைத்தல் என்பதும் த்ருஷ்டார்த்தம்,
அரைக்காவிட்டால் யாகத்திற்குத் தேவையான புரோடாசத்தைச் செய்ய முடியாதே .
• (2) அத்ருஷ்டார்த்தம் – த்ருஷ்டமான பலன்களை ஏற்படுத்தாமல்,
அத்ருஷ்டமான (இந்த்ரியங்களுக்குப் புலப்படாத) அபூவர்ம் / புண்யம் என்ற பயனை ஏற்படுத்தக்கூடியவை .
எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷணாம் செய்வதால் நெல்லில் எந்த மாற்றமும் தெரியவில்லை , ஆனால் அதில் ஒரு அத்ருஷ்டம் / அபூர்வம் /
புண்யம் உண்டாகியிருக்கும். அந்த அபூர்வத்வதாடு கூடின நெல்லை அரைத்து, புரோடாசம் செய்து
தேவதைக்குக் கொடுத்தால்தான் பயன் கிடைக்கும்.
ப்ரோக்ஷணத்தால் ஏற்படும் அபூர்வம் இல்லாத நெல்லை யாகத்தில் பயன்படுத்தினால் பயனில்லை
• (3) த்ருஷ்டாத்ருஷ்டார்த்தம் – ஒரே ஸ்விஷ்டக்ருத் யாகம் என்ற செயல், ப்ரதான யாகத்தில்
உபயோகித்த நெல்லை அக்நியில் சேர்த்து ’செலவழித்தல்’ /
’ப்ரதிபத்தி’ என்ற த்ருஷ்டமான ப்ரயோஜனத்தை உடையபடியால் த்ருஷ்டார்த்தமாயும்,
அதை வேறே ஒரு தேவதைக்குக் கொடுக்கிறபடியால் அந்த யாகம் என்ற அம்சம் அத்ருஷ்டார்த்தம் தான்.
ஆகையால், இந்தச் செயல் இரண்டு வகையான பலன்களையும் ஏற்படுத்துகிறது.

யாகத்தில் இருந்து அபூர்வங்கள்
இப்பொழுது நாம் செய்யும் யாகம் தானம் முதலான செயல்கள் அனைத்தும் சில வினாடிகளில்
முடிந்துவிடக்கூடியவை , அழிந்துவிடக்கூடியவை .
ஆனால், ஸ்வர்கம் முதலான பயன்கள் பல காலம் கழித்துக் கிடைக்கின்றன. ஆகையால், யாகம் ஸ்வர்த்துக்குக்
காரணம் என்பதை மெய்ப்பிப்பதற்காக, அபூர்வம் என்று ஒன்றைக் கல்பிக்கிறோம். யாகம் முடிந்துவிட்டாலும், யாகத்திலிருந்து
உண்டான அபூர்வம் நிலைத்திருந்து பயனைக் கொடுக்கும். இதற்கு ப்ரதான அபூர்வம் அல்லது உத்பத்தி அபூர்வம் என்று பெயர்.
• அதே போல் அங்கங்கள் விஷயத்திலும் அபூர்வங்கள் தேவை
ப்ரோக்ஷணம் செய்து பல நேரம் கழித்து தான் ப்ரதான யாகம் செய்யப்படிகிறது. ஆனால், ப்ரோக்ஷணம் என்பது யாகத்திற்கு
உபகாரகம் (உதவி செய்வது) என்று கூறியுள்ளோம். ஆகையால், ப்ரோக்ஷணம் ஒரு அபூர்வத்தை ஏற்படுத்திவிட்டு தான்
முடிந்துவிடும். அந்த அபூர்வம் தான் தேவையான காலம் இருந்து உபகாரத்தைச் செய்துேவிட்டு அழியும்.
இவற்றுக்கு அங்க-அபூர்வங்கள் என்று பெயர்.
• ஸந்நிபத்ய உபகாரகங்கள், ஆராத் உபகாரகங்கள் இரண்டிலிருந்தும் அபூர்வங்கள் தோன்றி ப்ரதான யாகத்திற்குத் துணை புரிகின்றன.
ஆனால், அவை உதவி செய்யும் முறை வேறு

அங்க அபூர்வங்களின் உதவிகள்

பிரதான யாகத்துக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய ஆராத் உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள்
இவை உண்டாக்குவதால் உதவியால்
பிரதான யாகத்துக்கு முன் செய்ய வேண்டிய ஸந்நிபத்ய உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள் -உதவியால் -பிரதான யாகம்
ப்ரதான யாகம்–உத்பத்தி அபூர்வம் (ப்ரதான யாகம் செய்வதனால் தோன்றுவது )–பரம அபூர்வம் -முழு யாகமும் முடிந்த உடன் ஏற்படுவது –ஸ்வர்க்கம்
பிரதான யாகத்துக்கு பின் செய்ய வேண்டிய ஸந்நிபத்ய உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள் – பாது காத்தலில் உதவும்

———————–

பாடம் -13-ப்ரயோஜகத்வம்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தின் தர்மத்தை போதிக்கும் ப்ரமாணங்களும்,
இரண்டாவது அத்யாயத்தில் தர்மங்களுக்குள் வேறுபாட்டை அறியும் முறைகளையும்
மூன்றாவது அத்யாயத்தில் எந்த கர்மம் எந்த கர்மத்துக்கு அங்கம் என்பதையும் கூறினார் ஜைமிநி மஹரிஷி.
ஸ்ரீ ஜைமினி நியாய மாலை -அத்யாய சங்கதி –

• அடுத்ததாக நான்காவது அத்யாயத்தில் ப்ரயோஜகத்வம் என்ற விஷயம் கூறப்படுகிறது.
• ஒரே செயல் / பொருள் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம்.
ஆனால் அந்த அங்கிகளுக்குள் ஏதோ ஒன்று தான் அந்த கர்மத்துக்கு ப்ரயோஜகமாக இருக்கும்,
அதாவது அநுஷ்டாபகமாக இருக்கும்.
• ஒருவர் பல செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவரது முக்கியமான கடமை என்று ஒன்று இருக்கும்.
அதைச் செய்வதற்காகத் தான் அவர் இருக்கிறார், அவர் அதிகப்படியாக வேறு பொருப்புகளையும் பார்க்கலாம்
ஆனால் அந்த முக்கிய காரியம் இல்லை என்றால் அவர் இருக்கமாட்டார்.
• அதே போல் தான், யாகங்களில் ஒரே பொருள் / செயல் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம்
ஆனால் அவற்றுள் ஒன்று தான் அதற்கு ப்ரயோஜகமாக (செய்விப்பதாக) இருக்கும்.
அதற்கு தான் ப்ரயோஜகம் என்று பெயர். இந்த கர்மத்துக்கு ப்ரயோஜ்யம் என்று பெயர்

• எடுத்துக் காட்டு –
தர்ச பூர்ணமாஸம் என்ற யாகத்தில் புரோடாசம் (தோசை ) என்ற த்ரவ்யத்தை தேவதைக்கு ஸமர்பிக்க வேண்டும்.
அதற்காக அதை சமைப்பதற்கு கபாலம் என்ற சுட்ட மண் தகடுகளைப் பயன்படுத்த வேண்டும்.
இஸத வேதம் “கபாலங்களில் புரோடாசத்தை சமைக்கவேண்டும்” என்ற விதியில் சொல்லுகிறது.
• அதே கபாலங்களைக் கொண்டுதான், நெல்லிலிருந்து பிரிந்து விழுந்த உமியை நீக்கவேண்டும் என்றும் கூறுகிறது வேதம்,
“புரோடாசத்திற்கான கபாலத்தால் துஷங்களை நீக்க வேண்டும்” என்ற கட்டளையால்.
• கபாலத்தைச் செய்வது புரோடாசத்தைச் சமைக்கத் தான்.
அதே கபாலம் உமியை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது, அவ்வளவே. ஆகையால்,
புரோடாசம் செய்வது ப்ரயோஜகம் + அங்கி,
கபாலம் ப்ரயோஜ்யம் + அங்கம்.
கபாலத்துக்கு உமியை நீக்குதல் என்ற செயல் அங்கி ஆகுமே தவிற ப்ரயோஜகம் ஆகாது.
• இதன் விளைவு என்ன வென்றால், ஒரு யாகத்தில் புரோடாசம் இல்லை என்றால், அந்த யாகத்தில்
கபாலங்களைச் செய்யத் தேவையில்லை
. அந்த யாகத்தில் சரு (கஞ்சி வடிக்காத அரிசிச் சோறு), யவாகு (அரிசிக் கஞ்சி) முதலானவற்றுக்காக நெல்லைக் குத்தி உமி
உண்டாகியிருந்தாலும், அது நீக்கப்பட் வேண்டும் என்றால் வேறே ஓரு முறையில் தான் நீக்க வேண்டும்,
கபாலங்களை உபயோகிக்க முடியாது

க்ரத்வர்த்தமும் புருஷார்த்தம்
க்ரது -வைதிக கர்மங்களுக்காக செய்பவை க்ரத் அர்த்தம்
புருஷனுக்காக செய்பவை புருஷார்த்தம்
பலம் இச்சா -அடைவிக்கும் வழி -அதில் இச்சை –
புருஷார்த்தம் -க்ரத் அர்த்தம் -இரண்டும் உண்டே

அங்கங்கள் இரண்டு வகைப்பட்டுள்ளன – க்ரத்வர்தம் என்றும் புருஷார்தம் என்றும்.
• புருஷனுடைய ஒரு பயனுக்காக எந்தச் செயல் செய்யப்படுகிறதோ , அது புருஷார்த்தம் என்று
அழைக்கப்படுகிறது, எடுத்துக்காட்டு –
ஸ்வர்கத்துக்காக ஜ்யோதிஷ்டோமம் என்ற யாகம் செய்யப்படுகிறது,
மழைக்காக காரீரீ என்ற யாகம் செய்யப்படுகிறது.-இவை புருஷார்த்தங்கள்.
தானாக எந்த ஒரு பொருளில் ஆசை ஏற்படுமோ , அதற்கு ஸாதநமாக (உபாயமாக /
வழியாக) விதிக்கப்பட்ட செயல் புருஷார்த்தம் ஆகும்.
• க்ரது என்றால் யாகம் முதலான வைதிகச் செயல்கள்.
அந்த க்ரதுவின் பூர்த்திக்காகச் (முழுமைக்காகச்) செய்யப்படுவது க்ரத்வர்த்தம் ஆகும். எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள், அநுயாஜங்கள் போன்ற பல யாகங்கள் தர்சபூர்ணமாஸத்தின் அங்கமாகச் செய்யப்படுகின்றன.
அவற்றுக்குத் தனியாகப் பலம் எதுவும் கிடையாது. தர்சபூர்ணமாஸத்தின் பூர்த்தி தான் பலம்.
இந்த அங்கங்களைச் செய்யா விட்டால் தர்சபூர்ணமாஸம் என்ற யாகம் முழுமை பெறாது, அதாவது,
அது தன் பலத்தைக் கொடுக்கும் சக்தி உடையதாக ஆகாது.

கோதோஹநம் புருஷார்த்தம்
தர்சபூர்ணமாஸ யாகம் ஒருவனுக்கு நித்ய கர்மமாக (தவறாமல் செய்ய வேண்டிய கர்மமாக) விதிக்கப்பட்டுள்ைது.
அதில், தண்ணீரை ப்ரணயனம் செய்ய (ஓரிடத்திலிருந்து மற்ற ஓரிடத்திற்கு எடுத்துச் செல்ல) சமஸம் என்ற பாத்திரம்
பயன் படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
யாகத்துக்கு ப்ரணயனம் அங்கம், ப்ரணயனத்துக்கு சமஸம் என்ற பாத்திரம் அங்கம்.
ஆகையால், சமஸம் க்ரத்வர்த்தம் அதாவது யாகத்தின் முழுமைக்காகப் பயன்படும் பொருள் தான்.
• அதே யாகத்தைச் செய்பவன், பசுக்களைப் பெற ஆசைப்பட்டால், சமஸத்திற்கு பதிலாக கோதோஹநம் என்ற
(மாட்டைக் கறப்பதற்கான) பாத்திரத்தால் ப்ரணயனம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது.
ஆனால், அந்த கோதோஹநம் என்ற பாத்திரம் யாகத்தின் அங்கம் அல்ல.
பசுவிற்காகச் செய்யப்படும் முயற்சியில் ஒரு கருவியாக விதிக்கப்பட்டபடியால்
கோதோஹநம் நேரடியாக பசு என்ற பலத்துக்கு தான் அங்கம். ஆகையால், அது புருஷார்த்தம் ஆகும்.
• ஆகையால், பசுவை அடைய யாகம் ஸாதநம் அல்ல, பாத்திரம் தான் ஸாதநம்.
ஆனால், தனியாக இருக்கும் பாத்திரம் எந்தப் பயனையும் ஏற்படுத்த முடியாது என்பதால் அதை
தர்சபூர்ணமாஸத்தில் ப்ரணயனத்தில் பயன்படுத்தினால் பசுமாடு கிடைக்கும்.
இத்தை-கோதோஹநத்தை- உபயோகித்தால் நித்ய கர்மம் ஆகாரம் மாறி காம்ய கர்மம் ஆகுமே –

உதிக்கும் ஸூர்யனைக் காணாமை -புருஷார்த்தம்
• வேதத்தில், குருகுலத்தில் வேத அத்யயநம் முடித்துப் புறப்படும் மாணவனின் வ்ரதங்களைச் சொல்லுகிறது.
அதில் “ந ஈவேத உத்யந்தம் ஆதித்யம்” என்று ஒரு கட்டளை உள்ளது.
• பூர்வ பக்ஷம் –
“உதிக்கும் ஸூர்யனைக் காணுதல் என்ற செயலைச் செய்யாதே ” என்று இந்த வாக்கியம் கூறுகிறது.
செய்யாதே என்று சொல்கிறபடியால் இது நிஷேதம் (மறுப்பு) ஆகும்.
ஒரு செயல் நடக்கும் வாய்ப்பு இருந்தால் தான் அதை மறுக்க முடியும்.
ஆகையால், எந்த யாகத்தில் ஸூர்யனைக் காண வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ , அதே யாகத்தில் ஸூர்யனைக் காணாதே
என்று இந்த விதி கூறுகிறது. வேதமே ஒரு செயலைச் செய் என்றும் செய்யாதே என்றும் கூறினால்,
இரண்டு வேத வாக்கியங்களும் தவறாக இருக்க முடியாதபடியால், இரண்டு அநுஷ்டானமுமே சரி தான்.
காண்பதோ காணாமலிருப்பதோ நம் விருப்பத்தைப் பொருத்தது என்று புரிந்து கொள்ளலாம்.
இதற்கு விகல்பம் என்று பெயர். இந்த மறுப்பு (நிஷேதம்) யாகத்தின் அடிப்படையில் சொல்லப் பட்டபடியால் க்ரத்வர்த்தம் ஆகும்.
• ஸித்தாந்தம் –
இந்த ப்ரகரணம் வ்ரதத்தைச் சொல்ல வந்த்து. வ்ரதம் என்றால் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் தான்.
ஆகையால், அந்த ஸந்தர்பத்தில், ஒரு மறுப்பைச் செய்து, “இதைச் செய்யாமலிரு” என்று வேதம் சொல்வது ஒட்டாது.
ஆகையால், இங்கும் ஒரு விதி (கட்டளை ) தான் இருக்க வேண்டும், நிஷேதம் (மறுப்பு) அல்ல.
• ஆகையால், “உதிக்கும் ஆதித்யனைக் காணாதே ” என்று பொருள் அல்ல.
“உதிக்கும் ஆதித்யனைக் காணாமையைச் செய்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
ஆனால், காணாமையை எப்படி ஒருவர் செய்ய முடியும்?
அதனால், “ஆதித்யனைக் காணாமையை ஸங்கல்பம் செய்” என்று பொருள் கிடைக்கிறது.
• அப்படிச் செய்யும் ஸங்கல்பமும், யாகத்துக்காகச் செய்யும் க்ரத்வர்த்தம் அல்ல.
அருகிலிருக்கும் அர்த்தவாதத்தில் ஆதித்யனைக் கண்டால் பாபம் ஏற்படும் என்று சொல்லப்பட்டபடியால்,
பாபம் விலகுவது தான் இதற்கு ப்ரயோஜநம் ஆகும்.
ஆகையால், ஆதித்யனைக் காணாமலிருக்கும் ஸங்கல்பம் புருஷார்த்தம் தான்.

ப்ரபத்தியைக் காட்டிலும் ஸம்ஸ்காரம் சிறந்தது
• ஸோம யாகத்தில் யஜமாநன் சில நியமங்களைக் கடைப்பிடிப்பதாக தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது யஜமாநனிடம் ஒரு தண்டம் (தடி) கொடுக்கப்படும். ஸோம லதையை வாங்கிய உடன் அந்த
தண்டத்தை அவர் மைத்ராேருணன் என்ற ரித்விக்கிடம் கொடுக்க வேண்டும் என்றும்.
அந்த ஸமத்ராேருணர், தண்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு தான் யாகத்தில்
அவரது கார்யங்களைச் செய்ய வேண்டும் என்றும் வேதம் சொல்கிறது
• ஸந்தேஹம் – யஜமாநன் தான் உபயோகித்த தண்டத்தை ஸமத்ராேருணனுக்கு தானம் செய்தல் என்பது,
உபயோகிக்கப்பட்ட தண்டத்திற்கு ப்ரதிபத்தி கர்மம் (நல் வழியில் செலவழிக்கும் கர்மம்) ஆகுமா?
அல்லது தண்டத்துக்கு ஸம்ஸ்காரமா?
• பூர்வபக்ஷம் – யஜமாநனுக்கு தண்டத்தின் பயன் முடிந்து விட்டபடியால், அந்த தண்டம் சிறந்த வகையில்
செலவழிக்கப் பட வேண்டும் என்ற தேவை உள்ள படியால், தானம் செய்வது ப்ரதிபத்தி கர்மம் தான்.
ஆகையால்,எத்தனை யஜமாநர்கள் உள்ளார்களோ , அத்தனை தண்டங்களை தானம் செய்ய வேண்டும்
• ஸித்தாந்தம் – சம்ஸ்காரம் காரியத்துக்கு யோக்யம் தர பரிஷ்காரம் செய்வது தானே –
ஸம்ஸ்காரம் என்றாலே , மேலே நடக்க இருக்கும் ஒரு செயலுக்குத் தகுதி உடையதாக
ஒரு பொருளை ஆக்குவது தான். ஆகையால், யஜமாநனால் உபயோகப் படுத்தப்பட்ட தண்டத்துக்கு
தானம் ப்ரதிபத்தி வடிவமான ஸம்ஸ்காரம் என்று சொல்வதைக் காட்டிலும்,
ஸமத்ராவருன் உபயோகப் படுத்தப்போகிற தண்டத்திற்கு தானம் என்பது ஸம்ஸ்காரம் என்று கொள்ளுதல் சிறந்தது.
ஆகையால், எத்தனை யஜமாநர்களிடம் எத்தனை தண்டங்கள் இருந்தாலும், ஸமத்ராவருணன்
ஒருவனானபடியால் ஒரு தண்டத்தை அவருக்கு தானம் செய்தால் போதும்.

அத்ருஷ்டார்த்தமான கர்மத்தைக் காட்டிலும் பிரதிபத்தி உயர்ந்தது
ஜ்யோதிஷ்டோமம் என்ற ஸோம யாகத்தில் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையைக் கொடுத்த பிறகு,
மான் கொம்பை சாத்வாலம் என்ற குழியில் எரிய வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
• ஸந்தேஹம் – இப்படி மான் கொம்பை எரிவது ப்ரயாஜங்கள் போல் அபூர்வத்துக்காக மட்டும் செய்யப்படும் கர்மமா,
அல்லது மான் கொம்பின் ப்ரதிபத்தி கர்மமா?
பிரதிபத்தி கர்மா என்பது யாகத்தில் உபயோகிக்கப் பட்டவற்றை சரியாக பயன்படுத்த செய்வது
• பூர்வபக்ஷம் – இது அபூர்வத்துக்காகச் செய்யப்படும் கர்மம் தான்.
இப்படி எரிவதன் மூலம் அபூர்வம் உண்டாகி, யாகத்திலிருந்து புத்ரன், பசு போன்ற பலன்கள் உண்டாக உதவும்.
இல்லை எனில், இந்தச் செயல் பயனற்றதாகப் போகும்.
• ஸித்தாந்தம் – இது ப்ரதிபத்தி கர்மம் தான். யஜமாநனுக்கு யாகத்தின் போது அரிப்பு ஏற்பட்டால்
சொறிந்து கொள்ளவே மான் கொம்பைப் பயன்படுத்த வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
ஆகையால், யாகத்தில் உபயோகிக்கப்பட்ட அந்த மான் கொம்பு, தான் நல்ல முறையில் செலவழிக்கப் பட வேண்டும்
என்று எதிர்பார்க்கும், அதாவாது, அதற்கு ஒரு ப்ரதிபத்தி கர்மம் தேவைப்படுகிறது.
ஆகையால், மான் கொம்பைக் குழியில் எரிவது அபூர்வத்துக்காக மட்டும் செய்யப்படும் கர்மம் அல்ல,
ப்ரதிபத்தியாகச் செய்யும் கர்மம் தான்.
அத்ருஷ்டார்த்தமான கர்மத்தைக் காட்டிலும் ப்ரதிபத்தி உயர்ந்த்து-
சம்ஸ்காரம் பிரதிபத்தியை விட உயர்ந்தது

சமமான இடத்தில் யாகம் செய் -பவ்ர்ணமி அன்று செய் -இவற்றை உண்டாக்கி செய்ய வேண்டாம் –
இவை சித்தம் அன்றோ –
முதல் இரண்டு பாத அர்த்தம் பார்த்தோம்

—————

பாடம் -14-

அங்கம் அங்கி சம்பந்தம் -மூன்றாவது அத்யாயம்
பிரயோஜகத்வம் விசாரம் நான்காவது அத்யாயம் –
அனுஷ்டாபகத்வம் -செய்வித்தல் -கீழே பார்த்தோம் -கபாலம் உண்டு செய்விப்பது புரோடாசம் செய்வதுக்காகவே –
தண்ட தானம் -பிரபத்தி காரியமா -ஸம்ஸ்கார காரியமா -எஜமானன் கொடுத்த தண்டத்தை வைத்துக் கொண்டே
மைத்ரா வருணன் யாகம் இத்தை வைத்து செய்வதால் ஸம்ஸ்காரமே பிரதானம் –
அபூர்வம் இப்பொழுது தான் வரும் -கார்யம் ச பலமாகும் –
விஷயம் விசயம் பூர்வ பக்ஷம் சித்தாந்தம் பலம் ஐந்தையும் அதிகரணத்துக்கு உண்டே –

மூன்றாவது பாகம் -பல சிந்தனை –
தர்ச பூர்ண மாசத்தால் சுவர்க்கம்-பலனைச் சொல்லி -யார் உபகாரம் எதிர் பார்ப்பு -இருப்பதால்
ப்ரயாஜா யாகங்கள் ஐந்தும் இதுக்கு அங்கம்
பிரதான கர்மமே அங்கீ -மற்றவை அங்கம் –

அங்கங்களுக்கு தனி பலன் கிடையாது

• வேதங்களில் ஸ்வர்கம், புத்ரன், பசு, மழை , செழிப்பு போன்ற பல பலன்களை நமக்கு அளிக்கக்கூடிய
பல கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.அவற்றுக்குப் ப்ரதான கர்மங்கள் என்று பெயர்.
அந்த கர்மங்களுக்கு அங்கமாகவும் பல கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.
• அங்கம் என்பது, ப்ரதான கர்மம் முழுமை பெரிவதற்காக மட்டுமே இருக்கும் ஒன்று.
ஆகையால், ப்ரதான கர்மத்தின் பூர்த்தியைத் தவிர்ந்த வேறோரு பலன் அங்கத்துக்கு இருக்க முடியாது.
• ஆனால் வேதத்தில் சில அங்கங்கஸள உபதேசித்து விட்டு, அவற்றுக்குப் பலனும் சொல்லப்படுகிறது.
எடுத்துக்காட்டு – “பர்ண மரத்தால் ஜுஹூ என்ற பாத்திரத்தைச் செய். எவன் ஒருவன் பர்ண மரத்தால்
ஜுஹூவைச் செய்கிறானோ அவன் இழிவான -வசைப் பேச்சை கேட்க வில்லை போன்ற வாக்கியங்கள்.
• பூர்வ பக்ஷம் – தனியாகப் பலன் இருக்கிறபடியால் இவை அங்கங்கள் அல்ல-
•ஸித்தாந்தம் – “பர்ண மரத்தால் ஜுஹூவைச் செய்” என்பது விதி (கட்டளை ). அதில் “வாக்யம்” என்ற
ப்ரமாணத்தால் பர்ண மரம் ஜுஹூவிற்கு அங்கம் என்று உடனடியாகத் தெரிந்து விடுகிறது.
ஆகையால், அடுத்து இருக்கும் வாக்கியம் பலத்தைச் சொல்ல முடியாது, தேவை இல்லாதபடியால்.
எனவே அது வெறும் அர்த்தவாதம் தான், பர்ண மரத்தைப் புகழ்ந்து பேசுகிறது.
மேலும், “வசைச் சொல் கேட்க மாட்டான்” என்று வருங்காலத்தில் சொன்னால் தான் அது பலம்
ஆகும், “கேட்கவில்லை” என்று நிகழ் காலத்தில் வேதம் சொல்லி யுள்ள படியால் அது பலம் ஆகாது –

விநியோக ப்ருதக்த்வம் நியாயம்

உத்பத்தி வாக்கியம் -அக்னி ஹோத்ரம் செய்
பலம் -சுவர்க்கத்தில் ஆசை இருந்தால் இத்தைச் செய்
சுவர்க்கம் -பலம் -கரணம்-அக்னி ஹோத்ரம் – –
எதற்க்கா எப்படி எத்தைக் கொண்டு -மூன்றும் உண்டே
தயிரைக் கொண்டு செய் பாலைக் கொண்டு செய் இதி கர்தவ்யம் -விகல்பம் -தனித்தனி வாக்கியம் –
ஆசைப்படி ஏதாவது ஒன்றை வைத்து செய்யலாம்
எதை வைத்து செய்கிறோமோ வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டும்
இந்திரியங்கள் நன்றாக இருக்க ஆசை கொண்டவன் தயிரைக் கொண்டு ஹோமம் -இதுவும் ஒரு வாக்கியம் உண்டே

தர்ச பூர்ண மாச யோகம் சமஸம் கொண்டு நித்ய பிரயோகம்
காம்ய -கோதோஹனம் கொண்டு -இப்படி இருப்து வேறே அங்கே
ஆனால் இங்கு தயிரை வைத்தே நித்ய காம்ய இரண்டுக்கும் சொல்கிறது
சன்யோக ப்ருதக்த்வம்-விநியோக ப்ருதக்த்வம் -இதுவே

அங்கம் என்று போதித்தலுக்கு விநியோகம் செய்தல் என்று பெயர்.
ஒரே செயல் அல்லது பொருள் பல விதி வாக்கியங்களால் பலவற்றுக்கு அங்கமாக விதிக்கப்படலாம்.
இதற்கு விநியோக ப்ருதக்த்வம் என்று பெயர்.
அந்தப் பொருள் அவை அனைத்துக்கும் உதவும் ஸாமர்த்யம் உடையதாக ஆகும்.
• எடுத்துக் காட்டு – அக்நி ஹோத்ரம் என்பது நித்ய கர்மம்.
அதைச் செய்ய தயிர் என்ற த்ரவ்யத்ஸத அங்கமாக விதிக்கிறது வேதம்
“தயிரால் ஹோமம் செய்” என்ற கட்டளையால். ஆகவே, எந்த பலத்திலும் ஆசை இல்லாத போதும்,
நித்ய கர்மமாக அக்நி ஹோத்ரத்தை ஒருவன் செய்யும் போது, தயிர் அந்த ஹோமத்திற்கு அங்கம் ஆகும்.
• அதே சமயம், “அக்நி ஹோத்ரத்தில் உபயோகிக்கப்பட்ட தயிரால் இந்த்ரியங்களின் நலனை அடையலாம்” என்று
மற்ற ஓரு வேத வாக்கியம் கூறுகிறது. இதில், இந்த்ரியங்களின் நலனைக் குறித்துச் செய்யும் முயற்சியில்
தயிர் கருவியாக விதிக்கப்பட்டபடியால், தயிர் அந்த பலனுக்கு அங்கம் ஆகிறது.
இங்கு அக்நி ஹோத்ரம் பலத்தைக் கொடுக்கவில்லை , தயிர் தான் பலத்தைக் கொடுக்கும் கருவி ,
ஆனால் வெறும் தயிருக்கு அது ஒட்டாத காரணத்தால் அக்நி ஹோத்ர ஹோமம் அதன் வ்யாபாரமாக / ஆச்ரயமாக உள்ளது.
• இங்கு, இந்த்ரியங்களுக்காக ஒருவன் தயிரால் ஹோமம் செய்தால், தனியாக நித்ய கர்மமாக மறுபடியும்
ஹோமம் செய்யத் தேவையில்லை . சங்கல்பத்தில் தான் வேறு பாடு உண்டு இதில் –
இந்த்ரியங்களுக்கு அங்கமான தயிரே ஹோமத்துக்கும் அங்கமானபடியால் அதற்கும் உதவி விடும்.

அக்னி ஹோத்ரம் நித்யம் செய்து பாபங்களை போக்கி கொள்ளலாம்
பக்தி ஆரம்ப விரோதிகள் போக்க இவை உதவும்
ஒரே கார்யம் பாப ஷயத்துக்கும் பக்தி வளர்க்கவும் -விநியோக பிருத்தக்த்வம் இதுவே –
அதுவே ஸ்வர்க்கத்துக்கும் செய்தால் காம்ய கர்மா ஆகும்
வேதாந்த விசாரத்திலும் அங்க அங்கி பாவங்கள் -விநியோக பிருதக்த்வம் போன்றவை உபயோகிப்போம்
ஆகவே இது அடிப்படையான-தேவையான – ஞானம் தான் –

விஸ்வஜித் நியாயம்

வேதத்திலிருக்கும் விதிகள் (கட்டளைகள்) மனிதனின் முயற்சியை விதிக்கின்றன என்று பார்த்தோம்.
முயற்சி என்றால் அதற்கு மூன்று அம்சங்கள் இருக்கவேண்டும் –
இலக்கு (பலம்), கருவி (கரணம்), செயல்முறை (இதி கர்தவ்யதா).
வேதத்திலும் ஸ்வர்கம் முதலான பயன்களுக்குக் கருவியாக ஜ்யோதிஷ்டோமம் முதலான
யாகங்களையும், அவற்றின் செயல்முறையான அங்கங்களையும் விதிக்கிறது.
• ஆனால், சில இடங்களில், வேதம் ஒரு கர்மத்தைச் சொல்லி விட்டு, எந்த பலனையும் சொல்லாமல் விட்டுள்ளது.
அந்த கர்மங்களுக்கு எந்த பயன் இருக்கும் என்று மீமாம்ஸையில் சிந்திக்கப்படுகிறது.
• எடுத்துக்காட்டு – “விஸ்வஜித் யாகத்தைச் செய்” என்று கட்டளை உள்ளது.
ஆனால் இந்த யாகத்துக்கு எந்தப் பலமும் சொல்லப்பட வில்லை
• அந்த கர்மத்துக்கு புத்ரன், பசு, அந்நம், ஆரோக்யம் போன்ற எந்த பலத்தைக் கல்பித்தாலும் அதை
ஆசைப்படுபவர்கள் குறைவான படியால் இந்த யாகத்தைச் செய்யும் அதிகாரிகள் சிலரே ஆவர்.
• ஸ்வர்கம் தான் பலம் என்று கல்பித்தால் அதிகமாக அதிகாரிகள் கிடைக்கிறபடியால் யாகம் உயர்ந்தாகும்.
• ஆகையால், பயன் சொல்லப்படாத வைதிக கர்மங்களுக்கு எல்லாம் ஸ்வர்கம் தான் பலம் என்று முடிவாகிறது.
• இதற்கு விஸ்வஜித் ந்யாயம் என்று பெயர்.

ராத்ரி ஸத்ர நியாயம்

முன் சொன்ன விஸ்வஜித் ந்யாயத்துக்கு ஓர் அபவாதம் (விதி விலக்கு) இங்கு கூறப்படுகிறது.
• விதி வாக்கியத்தில் பலம் சொல்லப்படா விட்டாலும், அருகிலுள்ள அர்த்தவாதத்தில் ஒரு பலன்
பேசப்பட்டிருந்தால், அது வெறும் புகழ்ச்சிச் சொல்லாக இருந்தாலும் அந்த பலத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது தான் இந்த விதி விலக்கு.
• எடுத்துக்காட்டு – ஜ்யோ தி:, கௌ:, ஆயு: என்ற முன்று யாகங்கஸள வேதம் விதிக்கிறது.
இவற்றுக்கு ராத்ரி சத்ரம் என்று பெயர்.
ஆனால், அவற்றுக்குப் பலத்தைச் சொல்லும் எந்த விதி வாக்கியமும் காணப்படவில்லை .
ஆனால், இந்த யாகங்களைப் புகழ்ந்து பேசும் அர்த்த வாதத்தில் “யார் எல்லாம் இந்த ராத்ரி சத்ர யாகத்தைச்
செய்கிறார்களோ அவர்கள் நிலை பெறுவார்கள்-ப்ரதிஷ்டிந்தி ” என்ற கூறப்படுகிறது.
ஆகையால், ராத்ரி சத்ர யாகத்திர்கு நிலை பெறுவது தான் பயன் என்று ஏற்கப்படுகிறது.
• இதற்கு தான் ராத்ரி சத்ர ந்யாயம் என்று பெயர்

விதி வாக்கியத்தில் பலனைச் சொல்லா விட்டாலும் அர்த்தவாதத்தில் சொல்லப்பட்ட பலனை
ஏற்றுக் கொள்வது தான் இந்த நியாயம்
அர்த்த வாதத்திலும் சொல்லப்படா விட்டால் சுவர்க்கம் பலன் என்று முந்திய விஸ்வஜித் நியாயம் படி கொள்ள வேண்டும்
பர்ண மரம் -அர்த்தவாதம் பலனைப் புறக்கணித்தோமே -யாகம் முழுமை பெறவே என்றோம்
அங்கு அங்கத்தவத்தைப் போதிக்கும் பிரமாணம் உண்டே -பர்ணம் ஜுஹுவுக்கு அங்கம்
இங்கே இப்படி இல்லாமல் மூன்று யாகங்களைச் செய் என்றதே

யோக சித்தி நியாயம்

தர்சபூர்ணமாஸம் என்பது ஆறு யாகங்களின் கூட்டம். அது நித்ய கர்மமாக விதிக்கப்படுகிறது –
“உயிரிருக்கும் வரை தர்சபூர்ண மாஸங்களைச் செய்” என்ற கட்டளையால்.
• அதே தர்சபூர்ண மாஸம், ஸ்வர்கத்திற்கு ஸாதநமாகவும் (வழியாகவும்) விதிக்கப்படுகிறது –
“ஸ்வர்கத்தில் ஆசை யிருப்பவன் தர்ச பூர்ண மாஸத்தைச் செய்யக்கடவன்” என்ற கட்டளையால்.
• அதே தர்சபூர்ண மாஸத்தைப் பற்றி மற்ற ஓரு விதி கூறுகிறது –
“தர்சபூர்ணமாஸம் ஆசைப்பட்ட பலன்கள் அனைத்துக்கும் ஸாதநம்” என்று.
இதனால், புத்ரன் பசு மழை ஆரோக்யம் போன்ற எந்த பலனுக்காகவும் தர்சபூர்ண மாஸம் செய்யலாம் என்று அறிகிறோம்.
இப்படி மூன்று வேத வாக்கியங்கள் இருப்பதால் சங்கை எழுமே –
• கேள்வி – பொதுவாக, ஒரு பொருள் பலவற்றுக்குக் காரணாமாக இருந்தால், அது அவை அனைத்தையும்
ஒரே காலத்தில் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டு –
ஒரு செடி இலைக்கும் பூவுக்கும் காரணமான படியால் இரண்டையுமே ஒரே காலத்தில் ஏற்படுத்தலாம்.
அதைப்போல், ஒரு முறை தர்சபூர்ண மாஸங்களைச் செய்தால் புத்ரன், பசு போன்ற பலன்கள் அனைத்தையும் பெறலாமா?
• பதில் – ஒரு முறை தர்சபூர்ண மாஸம் செய்த்தற்காக, புத்ரன் பசு என்ற அனைத்துப் பலன்களையும் பெற்றுவிட முடியாது.
வேதம் “ஆசைப்பட்ட பயனுக்கு ஸாதநம்” என்று சொன்னபடியால், எதை ஆசைப்பட்டு அம் முறை
தர்சபூர்ண மாஸத்தைச் செய்கிறோமா அந்த பலன் மட்டும் தான் கிடைக்கும்.
• இதற்கு தான் யோக ஸித்தி ந்யாயம் என்று பெயர்.

தர்ச பூர்ண மாஸங்கள் எவை -நான்காம் பாதம் -12 அதிகரணம் விஷயம் இது –

வேதம் “தர்சபூர்ண மாஸங்களால் ஸ்வர்கத்தை அடை யலாம்” என்று கூறி யுள்ளது.
இதில், தர்சபூர்ண மாஸம் என்ற சொல் எவற்றைக் குறிக்கிறது என்று சிந்திக்கப்படுகிறது.
• பூர்வபக்ஷம் – தர்சம் என்றால் அமாவாஸை , பூர்ணமாஸம் என்றால் பௌர்ணமி. அந்தந்தக் காலங்களில்
செய்யப்படும் அனைத்து யாகங்களையும் அந்தந்தச் சொல் குறிக்கிறது,
அவற்றுக்குள் வேறுபாடு ஒன்றும் இல்லாதபடியால். ஆகையால், அக்நிக்கான புரோடாச யாகங்கள் இரண்டு,
இந்த்ரனுக்கான தயிர் யாகம், இந்த்ரனுக்கான பால் யாகம், உபாம்சுயாஜம், அக்நீஷோமர்களுக்கான
புரோடாசயாகம் என்ற ஆறு மட்டுமல்ல, ப்ரயாஜங்கள் அநுயாகங்கள் ஆஜ்யபாகங்கள் என்று எவை எல்லாம்
அமாவாஸை அல்லது பௌர்ணமியன்று செய்யப்படுகின்றனவோ அவை அனைத்துமே தர்சபூர்ணமாஸம்
என்று அழைக்கப் படுகின்றன. -ஆகையால், இவை அனைத்தும் சேர்ந்து தான் ஸ்வர்கத்தைக் கொடுக்கின்றன.
இதில் உள்ள 17 யாகங்களும் அங்கி அங்க பாவம் இல்லை -அனைத்தும் சம ப்ராதான்யம் என்பர் பூர்வ பக்ஷி –
• ஸித்தாந்தம் – தர்சம் பூர்ணமாஸம் என்ற சொற்களைக் கேட்டவுடன், அந்தந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
அதிலிருந்து, எந்த எந்த கர்மங்களுக்கு உத்பத்தி விதியிலேயே அமாவாஸை பௌர்ணமி என்ற காலம் சொல்லப்பட்டுள்ளதோ
அவை தான் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. அவை எவை எனில் – முன் சொன்ன ஆறு ப்ரதாந யாகங்கள் தான்.
ப்ரயாஜங்கள் முதலானவற்றை விதிக்கும் வாக்கியங்களில் காலம் சொல்லப்பட வில்லை .
ஆகையால், ஆறு யாகங்கள் தான் ஸ்வர்கத்தைக் கொடுக்கின்றன. மற்றவை அவற்றுக்கு உதவி செய்கின்றன
ஆறு தான் புருஷார்த்தம் -சுவர்க்கம் பலன்
மற்ற 11 க்ருத்யர்த்தம் யாகம் முழுமை பெறவே -அங்கங்களே என்று சித்தாந்தம் –

————-

பாடம் -15-
க்ரமத்தைப் போதிக்க அடுத்த ஐந்தாவது அத்யாயம் –

தர்மத்தைப் பற்றிக் கூறும் மீமாம்ஸா சாஸ்த்ரத்தில், முதல் அத்யாயத்தில்
தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்கள் சொல்லப்பட்டன. அதற்குப் பிறகு, மூன்று அத்யாயங்களால்
ஜைமிநி மஹரிஷி தர்மத்தைப் பற்றி விளக்கினார்.
இரண்டாவது அத்யாயத்தில் கர்மங்களின் வேறுபாடு என்னும் பேதத்தையும்,
மூன்றாம் அத்யாயத்தில் அங்கத்வம் என்பதையும்,
நான்காவது அத்யாயத்தில் ப்ரயுக்தி என்பதையும் கூறுவதன் மூலம்,
அநுஷ்டேயம் அதாவது செய்யப்பட வேண்டிய செயல்களைக் கூறினார்.
• இனி, அநுஷ்டிக்கப் பட வேண்டிய செயல்கள் தெரிந்தவுடன், அடுத்து ஏற்படும் எதிர்பார்ப்பு –
“இவற்றை எந்த வரிசையில் செய்ய வேண்டும்?” என்பது தான்.
ஆகையால், அடுத்திருக்கும் ஐந்தாம் அத்யாயத்தில், அந்தச் செயல்களை எந்த க்ரமத்தில்
(வரிசையில்) செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்.

• ஒவ்வொரு வைதிகச் செயலிலும் க்ரமத்தைச் சொல்லித் தலைக் கட்ட முடியாதபடியாலும்,
அப்படிச் செய்வதன் மூலம் மாணவர்களுக்குத் தானாகச் சிந்திக்கும் திறமை ஏற்படாது என்பதாலும் ,
ஜைமிநி மஹரிஷி நேரடியாக செயல்களின் வரிசையைத் தெரிவிக்காமல்,
க்ரமத்தைக் காட்டிக் கொடுக்கும் ஆறு ப்ரமாணங்களையும்,
அவற்றின் வலிமைகளையும் காட்டுகிறார் இந்த அத்யாயத்தில்.

பிரயோக விதி –

• கீழ் பாடங்களில் உத்பத்தி விதி, அதிகார விதி, விநியோக விதி மற்றும் ப்ரயோக விதி என்று
நான்கு வகையான விதிகளைப் பார்த்தோம்.
அதிகார விதி, -ப்ரயோஜனங்களைச் சொல்லும் இது மேல் ஆறாம் அத்தியாயத்தில் பார்ப்போம்
விநியோக விதி -அங்கங்களைப் போதிக்கும் –
• அதில் முதல் மூன்று வகையான விதிகள் புதிதான கர்மங்களையும்,
அவற்றின் பயன்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிவிக்கின்றன, ஆனால் செய்விப்பதில்லை .
நான்காவதான ப்ரயோக விதி தான் “அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதான கர்மத்தைச் செய்” என்று நமக்கு
விதிப்பதன் மூலம் ப்ரயோகம் என்று அழைக்கப்படும் அநுஷ் டானத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால் இதற்குப் ப்ரயோக விதி என்று பெயர்.
• ப்ரயோக விதி என்று ஒன்று தனியாகக் கிடையாது. அங்கங்களைப் போதிக்கும் அனைத்து வாக்கியங்களோடும்
சேர்ந்த ப்ரதான வாக்கியம் தான் ஒரு மஹா வாக்கியமாக ஆகி ப்ரயோக விதி என்று அழைக்கப் படுகிறது.
• தர்சபூர்ணமாஸம் என்ற ப்ரதானத்தை விதிக்கும் வாக்கியம் – “ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவன்
தர்சபூர்ணமாஸத்தைச் செய்யக்கடவன்” என்பது.
அதன் அங்கங்களான ப்ரயாஜங்கள், அநுயாஜங்கள், ஸ்விஷ்டக்ருத்,
முதலானவற்றை விதிக்கும் வாக்கியங்கள் தனித்தனியாக உள்ளன.
• இவை அனைத்தும் சேர்ந்து, “ப்ரயாஜங்களைச் செய்து, அநுயாஜங்களைச் செய்து
ஸ்விஷ்டக்ருத் செய்து, ப்ராசித்ர பக்ஷணம் செய்து, இடா பக்ஷணம் செய்து, பலீகரண ஹோமம் செய்து,
ப்ராயச்சித்த ஹோமங்கள் செய்து, இவ்வாறு தர்சபூர்ணமாஸங்களைச் செய்து ஸ்வர்கத்தை அடைவாய்” என்ற
மஹாவாக்யம் தான் அங்களோடு கூடின ப்ரதானத்தைச் செய்யும்படி விதிக்கிறபடியால் ப்ரயோக விதி ஆகிறது.

க்ரமம் என்றால் என்ன

• இப்படி அங்கங்களோடு கூடின ப்ரதானத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது,
அந்த கூட்டு / சேர்க்கை என்பது ஒரே காலத்தில் அவை அனைத்தையும் அநுஷ்டித்தால் தான் ஏற்படும்,
தனித்தனியாகச் செய்யப்பட்ட செயல்களைச் சேர்ந்து செய்யப்பட்டன’ என்று உலகில் சொல்லாதபடியால்.
ஆகையால், அங்கங்களையும் ப்ரதானங்களையும் ஒரே நொடியில் செய்ய வேண்டும் என்று ஆகிறது.
•ஆனால் இது அஸாத்யமான செயல் ஆகும். ஆகையால், சற்று தளர்த்தி, “இடைவிடாமல் செய்யவேண் டும்”
என்று இந்த ப்ரயோக விதி நமக்குக் காட்டுகிறது.
ஆகையால், வைதிக கார்யங்களைச் செய்யும்போது இடையில் லௌகிக கார்யங்களைச் செய்வது தவறு.
• இடைவிடாமல், தாமதமில்லாமல் செயல்களை அடுத்தடுத்துச் செய்யவேண்டும் என்றால்,
அவற்றைச் செய்யவேண்டிய வரிசையை நாம் முன்னமே முடிவு செய்திருக்க வேண்டும்,
இல்லை என்றால் ஸந்தேகத்தால் தாமதம் ஏற்படும். ஆகையால் தான் ப்ரயோக விதி க்ரமத்தையும் விதிக்கிறது.
• க்ரமம் என் றால் பௌர்வாபர்யம் – முன் பின் தன்மை . “இந்தச் செயலுக்கு அடுத்து இந்தச் செயல்
செய்யப்பட வேண்டும்” என் பது தான் க்ரமம்/ வரிசை என்று அதழக்கப்படுகிறது.
• க்ரமத்தை போதிக்கும் ப்ரமாணங்கள் ஆறு –
(1) ச்ருதி (2) அர்த்தம் (3) பாடம் (4) ஸ் தாநம் (5) முக்யம் (6) ப்ரவ்ருத்தி என்பவை தான் அவை

ஸ்ருதி க்ரமம்

க்ரமத்தை நேரடியாகக் கூறும் சொற்கள் தான் க்ரமத்தை போதிக்கும் முதல் ப்ரமாணமான
’ச்ருதி’ என்று அழைக்கப்படுகின்றன.
’இது முதலாவது’, ’இது பத்தாவது’ என்று தனிச் சொற்களாலும் க்ரமம் சொல்லப் படலாம்.
அல்லது, “இதைச் செய்துவிட்டு இதைச் செய்” என்பது போல் ’விட்டு’ என்ற ஒரு விகுதியாலும் கூறப்படலாம்.
ஏதோ ஒரு வகையில் ஒரு வரிசையைக் காட்டும் எந்தச் சொல்லும் ச்ருதி ப்ரமாணம் ஆகும்.
• இந்த ச்ருதி இரண்டு வகைப்படும் –
• (1) முன்னமே தெரிந்த செயல்களின் க்ரமத்தை மட்டும் போதிப்பவை –
வேதம் என்ற தர்ப்ப-கட்டைச் செய்ய வேண்டும் என்பதும்,
கார்ஹபத்யத்துக்கும் ஆஹவநீ யத்துக்கும் இடையிலுள்ள்ள வேதி என் ற
பூமியைத் தயார் செய்ய வேண்டும் என்பதும் தனித்தன வாக்கியங்களால் விதிக்கப்பட்டுள்ளன.
ஆகையால் அவை நமக்குத் தெரிந்த செயல்கள். இப்படி இருக்க, “வேதத்ததச் செய்துவிட்டு வேதியைச் செய்”
என்ற வேத வாக்கியம் அவற்றுக்குள் இருக்கும் க்ரமத்தை மட்டும் போதிக்கிறது.
• (2) க்ரமத்தோடு கூடின ஒரு புதுச் செயலை போதிக்குமவை –
ஸோம யாகத்தில் யாகம் முடிந்தவுடன் மீதமிருக்கும் ஸோம ரஸத்தை ரித்விக்குகள் பருக வேண்டும்.
அதில், யாகம் செய்யும் போது யார் ’வௌஷட்’ என்று வஷட்காரம் சொன்னாரோ , அவரும் அந்த ரஸத்தைப்
பருக வேண்டும் என்றும், அவர்தான் முதலில் பருக வேண் டும் என்றும் ஒரே வாக்கியம் கூறுகிறது
“வஷட்காரம் செய்தவருக்கு முதல் பக்ஷணம்” என்று.
• இந்த ச்ருதி ப்ரமாணம் மற்றவற்றைக் காட்டிலும் வலியை யுடையது, அவற்றை
எதிர்பார்க்காமல் க்ரமத்தை போதிக்கிறபடியால்

அர்த்த க்ரமம்

அர்த்தம் என்றால் ப்ரயோஜநம் என்று பொருள். ஒரு செயலின் ப்ரயோஜநத்தைக் கருதி அதன் க்ரமத்தை
முடிவு செய்தால் அதற்கு அர்த்தக்ரமம் என்று பெயர்.
• “அக்நி ஹோத்ர ஹோமத்தைச் செய்” என்று ஒரு வேத வாக்கியம் விதிக்கிறது. அதற்குப் பிறகு உள்ள ஒரு வாக்கியம்
“அரிசிக்கஞ்சியை சமைப்பாய்” என்று கூறுகிறது. “அரிசிக் கஞ்சியால் அக்நி ஹோத்ரம் செய்ய வேண் டும்” என்ற
வேறு ஓரு வாக்கியம், அக்நிஹோத்ரத்தில் கஞ்சியைப் பயன் படுத்த வேண் டும் என்று கூறுகிறது.
• வாக்கியங்களின் வரிசையைப் பார்த்தால், அக்நி ஹோத்ரத்தைச் செய்து விட்டு தான் கஞ்சியைச் சமைக்கவேண் டும்.
ஆனால் அப்படிச் செய்தால், கஞ்சியால் அக்நிஹோத்ரத்துக்கு எந்த ஒரு த்ருஷ் டமான பயனும் இருக்க முடியாதபடியால்,
கஞ்சி சமைப்பதால் ஏற்படும் புண்ணியம் அக்நி ஹோத்ரத்துக்கு உதவுகிறது என்று அத்ருஷ்டத்தை
/ அபூர்வத்தை / புண்ணியத்தைக் கல்பித்தே ஆக வேண்டும்.
• கஞ்சியை முன்னால் சமைத்து, அக்நிஹோத்ரத்தைப் பின்னால் செய்தால், அக்நிஹோத்ரம் செய்ய ஒரு த்ரவ்யம்
தேவைப்படும் போது இந்தக் கஞ்சியையே பயன் படுத்தலாம் ஆகையால் த்ருஷ் டமான
ப்ரபயோஜநம் கிடைக்கும் கஞ்சிக்கு. இதுதான் சிறந்தது.
• ஆகையால், கஞ்சியின் ப்ரயோஜநத்தை மனதில் கொண் டு,
“கஞ்சியைச் சமைத்த பிறகு அக்நிஹோத்ரம் செய்ய வேண் டும்” என்று க்ரமத்தை முடிவு செய்கிறபடியால்
இதற்கு அர்த்த க்ரமம் என்று பெயர்.

பாட க்ரமம்

பாடம் என்றால் படித்தல். செயல்களைப் பபோதிக்கும் வாக்கியங்கள் வேதத்தில் எந்த வரிசையில் படிக்கப் பட்டுள்ளனவோ
அதே வரிசையில் அந்தச் செயல்களைச் செய்வதற்கு பாட க்ரமம் என்று பெயர்.
• இது இரண்டு வகைப்படும் – (1) ப்ராஹ் மண பாட க்ரமம் (2) மந்த்ர பாட க்ரமம்.
வேதத்தை ப்ராஹ் மணம் என்றும் மந்த்ரம் என்றும் இரண்டாகப் பிரிப்பர்.
ப்ராஹ்மணம் என்றால் “இத்தைச் செய்” என்று கட்டளையிடும் வாக்கியம்.
மந்த்ரம் என்றால், ப்ராஹ் மணத்தால் விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்யும் போது நாம் உச்சரிக் வேண்டிய வாக்கியம்.
• (1) ப்ராஹ் மண பாட க்ரமம் – எந்த வரிசையில் ப்ராஹ்மண வாக்கியங்களால் செயல்கள் விதிக்கப்பட்டுள்ளனவோ ,
அதே வரிசையில் அவற்றைச் செய்தல்.
• எடுத்துக்காட்டு – “ஸமித் யாகத்தைச் செய்”, “தநூநபாத் யாகத்தைச் செய்”, “இட் யாகத்தைச் செய்”, “பர்ஹிஸ் யாகத்தைச் செய்”,
“ஸ் வாஹாகார யாகத்தைச் செய்” என்ற ஐந்து ப்ராஹ் மண வாக்கியங்கள் (கட்டளைகள்) ப்ரயாஜங்கள் என்று அழைக்கப்படும்
ஐந்து யாகங்களை விதிக்கின்றன. அவற்றை எந்த க்ரமத்தில் செய்ய வேண் டும் என்ற கேள்வி எழும் போது, எந்த வரிசையில்
கட்டளைகள் படிக்கப்பட்டுள்ளனவோ அதே வரிசையில் செய்வது உசிதமானபடியால், ஸமித் தநூநபாத் இட் பர்ஹிஸ் ஸ்வாஹாகாரம்
என்ற இந்த வரிசையில் தான் யாகங்கள் செய்யப்பட வேண்டும்.-இதற்கு ப்ராஹ் மண பாட க்ரமம் என்று பெயர்.

மந்த்ர பாட க்ரமம்

(2) மந்த்ர பாட க்ரமம் – ப்ராஹ்மண வாக்கியங்களைக் காட்டிலும் மந்த்ரங்கள் அநுஷ்டானத்துக்கு
நெருக்கமானவை – (அந்தரங்கமானவை ).
• ப்ராஹ்மண வாக்கியங்கள் “இத்தைச் செய் ” என்று கட்டளை இட்டுவிட்டு விலகி விடுகின்றன.
அநுஷ்டான வேளையில் அவற்றுக்கு உபயோகம் இல்லை –
ஆனால் மந்த்ரங்கள்தான் அநுஷ்டானம் செய்யும் போது எப்பொழுதும் உச்சரிக்கப்படுகிறபடியால் மிகவும் நெருக்கமானவை .
• ஆகையால், ப்ராஹ்மண வாக்கியங்களில் செயல்கள் கட்டளை யிடப்பட்ட வரிசைக்கும்,
அந்தச் செயல்களுக்கான மந்த்ரங்கள் படிக்கப்பட்டுள்ள வரிசைக்கும் விரோதம் இருந்தால்,
அநுஷ்டானத்துக்கு நெருக்கமான மந்த்ரங்களின் வரிசையில் (க்ரமத்தில்) தான் செயல்களைச் செய்ய வேண்டும்.
இதற்கு தான் மந்த்ர பாட க்ரமம் என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் பௌர்ணமி அன்று ஆக்நேயம், உபாம்சுயாஜம், அக்நீ ஷோமீயம்
என்று மூன்று யாகங்கள் செய்யப்பட வேண் டும்.
அதில், வேதம் கட்டளையிடும் போது, முதலில் “அக்நீ ஷோமீயத்தைச் செய்” என்றும்
பின்னால் ஒரு வாக்கியத்தில் “ஆக்நேயத்தைச் செய்” என்றும் சொல்லியுள்ளது.
ஆனால், அந்தந்த யாகத்தைச் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்த்ரங்களைச் சொல்லும் போது,
முதலில் ஆக்நேய யாகத்தின் மந்த்ரமும் பிறகு அக்நீ ஷோமீயத்தின் மந்த்ரமும் படிக்கப்பட்டபடியால்
ஆக்நேயம் செய்த பிறகு தான் அக்நீஷோமீயம்.

————

பாடம் -16-ஸ்தான க்ரமம் –

ஐந்தாம் அத்யாயத்தில்
முதல் பாதத்தில் ஆறு பிரமாணங்கள் க்ரமத்தைப் போதிக்கும்
இரண்டாம் பாதம் -அவற்றின் சிறப்பு விசேஷங்கள் -சங்கை போக்க –
மூன்றாம் பாதம் -வ்ருத்தி அவர்த்தனம் -செயல் வளர்ச்சி குறைவு பற்றி –
நான்காம் -பலம் பொருந்தியவை எவை என்று சொல்லும்

க்ரமத்தைப் போதிக்கும் பிரமாணங்களுக்குள் நான்காவது ஸ்தாநம்–
ஸ்தாநம் என்றால் உபஸ்திதி / நினைவு என்று பொருள். பல செயல்களை ஒரே காலத்தில் செய்ய வேண்டிய போது,
எது தவறாமல் முதலில் நினைவுக்கு வருகிறதோ அதை முதலில் செய்வதற்குத் தான் ஸ்தாந க்ரமம் என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – ஸோம யோகம் ஐந்து நாட்கள் செய்யப் படுவது.
அதில் தைக்ஷம் என்ற யோகம் நான்காவது நாளிலும், ஸவநீயம் என்ற யாகம் ஐந்தாவது நாள் நடுவிலும்,
ஆநு பந்த்யம் என்ற யாகம் ஐந்தாம் நாள் இறுதியிலும் செய்யப்பட வேண்டும்.
• மற்ற ஓரு ஸோம யாகத்தில் இந்த மூன்று யாகங்களையும் சேர்த்து ஒரே காலத்தில் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
அப்பொழுது எந்த யாகத்தின் இடத்தில் மூன்றையும் செய்யலாம் என்று பார்த்தால், பிரதாந யாகமான ஸோம யோகத்துக்கு
அருகிலுள்ள படியாலும், ஸ்தாந அதிக்ரமம் (தங்கள் தங்கள் இடத்தை விட்டு நகருதல்) குறைவாக உள்ள படியாலும்,
நடுவான ஸவநீயம் என்ற யாகத்தின் இடத்தில் தான் செய்ய வேண்டும்.
• அப்படி ஸவநீய யாகத்தின் இடத்தில் மூன்று யாகங்களையும் செய்யும் போது எதை முதலில் செய்ய வேண் டும்
என்ற கேள்வி எழும் பொழுது, அவ்விடத்தில் முதலில் ஸவநீயம் தான் நினைவுக்கு வரும் –
ஆகையால் அதைச் செய்து விட்டு, பிறகு தைக்ஷத்தையும் ஆநு பந்த்யத்தையும் செய்ய வேண்டும்.
இது தான் ஸ்தாந க்ரமம் –

முக்ய க்ரமம் –
•முக்யம் என்றால் பிரதாநம் என்று பொருள் .
சேர்த்து செய்யப்படும் பிரதாந யாகங்களின் வரிசையில் அவற்றின் அங்கங்களைச் செய்வதற்கு முக்ய க்ரமம் என்று பெயர்.
•பிரயோக விதியில் ’அங்கங்களோடு கூட பிரதாந யாகத்தைச் செய் ’ என்று சொன்ன படியால்
அங்கங்களையும் பிரதாநத்தையும் சேர்த்துச் செய்ய வேண்டும். அது முடியாத படியால் இடைவிடாமல் செய்ய வேண்டும்.
அதுவும் முடியா விட்டால் ஸமமான ஆனால் குறைவான இடைவெளி விட்டுச் செய்ய வேண்டும்.
அதற்காகத் தான் முக்ய க்ரமம் பின் பற்றப் படுகிறது.
• பிரதாநம் 1 பிரதாநம் 2 என்று இரண்டு பிரதாநங்களும், அவற்றுக்கு அங்கம் 1 அங்கம் 2 என்று இரண்டு அங்கங்களும் இருந்தால்,
அங்கம் 1 – அங்கம் 2 – பிரதாநம் 1 – பிரதாநம் 2 என்ற வரிசையில் செய்தால் தான் ஒவ்வொரு அங்கத்துக்கும் அதன் பிரதாநத்துக்கும்
ஸமமான இடைவெளி இருக்கும். இது தான் முக்ய க்ரமம்.
• இதை மாற்றி, அங்கம் 2 – அங்கம் 1 – பிரதாநம் 1 – பிரதாநம் 2 என்று செய்தால் ,
முதல் அங்கத்துக்கும் முதல் பிரதாநத்துக்கும் இடைவெளியே இல்லாமலும், இரண்டாம் அங்கத்துக்கும் இரண்டாம் பிரதாநத்துக்கும்
அதிக இடைவெளியும் உள்ள படியால், பிரயோக விதியில் சொல்லப் பட்ட இடைவிடாமையைத் தகர்த்த தாகும்–
எடுத்துக்காட்டு –
தர்ஸ பூர்ணமாஸத்தில் பிரயாஜங்கள் செய்து மீதமிருக்கும் நெய்யை மூன்று பிரதாந யாகங்களின்
ஹவிஸ்ஸுகளிலும் சேர்க்கும் போது, அந்த பிரதாந யோகங்களைச் செய்யப் போகும் க்ரமம் எதுவோ
அதே க்ரமத்தில் செய்ய வேண்டும்.
• இந்த முக்ய க்ரமத்தில், பிரதாநங்களின் க்ரமத்தை அறிந்தால் தான் அங்கங்களின் க்ரமத்தை அறியலாம் என்பதால்
இது நேரடியாக அங்கங்களின் க்ரமத்தைச் சொல்லும் பாட க்ரமத்தைக் காட்டிலும் துர் பலமானது.
• எடுத்துக்காட்டு –
தர்ஸ பூர்ண மாஸத்தில் பவ்ர்ணமி அன்று ஆக்நேயம், உபாம்சுயாஜம், அக்நீ ஷோமீயம் என்ற மூன்று
யாகங்கள் இதே வரிசையில் செய்யப் படுகின்றன. ஆகையால்,முக்ய க்ரமத்தின் படி பார்த்தால் இதே வரிசையில் தான்
அந்தந்த யாகத்துக்கு வேண்டிய த்ரவ்யத்தை (நெல், நெய், நெல்) நிர்வாபம் செய்ய வேண்டும்
(மூட்டை / பாத்திரத்திலிருந்து யாகத்துக்குத் தேவையான அளவை மட்டும் எடுத்து வைத்தல்) நிர்வாபம் ஆகும்).
ஆனால், மந்த்ரங்களைப் படிக்கும்பொழுது ஆக்நேயத்துக்கும் அக்நீ ஷோமீயத்துக்கும் நிர்வாபம் செய்வதை அடுத்தடுத்து
வேதம் சொல்லியுள்ள படியால், பாட க்ரமத்தால் ஆக்நேயத்துக்கு, பிறகு அக்நீ பஷோமீயத்துக்கு, பிறகு உபாம்சுயாஜத்துக்கு
என்று தான் நிர்வாபம் செய்யவேண்டும்.

ப்ரவ்ருத்தி க்ரமம்
ஒரே காலத்தில் பல யாகங்கள் செய்யப்படும் போது அனைத்து ஹவிஸ்ஸுகளுக்கும் ஒரே ஸம்ஸ்காரங்களைச்
செய்யும் பொழுது, முதல் ஸம்ஸ்காரத்தை த்ரவ்யங்களின் எந்த க்ரமத்தில் செய்தோமோ அதே
க்ரமத்தில் தான் இரண்டாவது முதலான ஸம்ஸ் காரங்களையும் செய்யவேண்டும். இதுவே பிரவ்ருத்தி க்ரமம்.
• எடுத்துக்காட்டு – பிரஜா பத்யம் என்ற கர்மத்தில் பிரஜாபதி என்ற தேவதைக்கு
ஒரே ஸமயத்தில் 17 யாகங்கள் செய்யப் பட வேண் டும்.
ஒவ்வொரு யாகத்திற்கும் தனித்தனியாக ஒரு த்ரவ்யத்தை தயார் செய்யவேண்டும்.
அவற்றுக்குச் செய்யும் ஸம்ஸ் காரங்களையும் தனித்தனியாக செய்யவேண்டும்.
• அதில், முதல் த்ரவ்யத்துக்கு அனைத்து ஸம்ஸ் காரங்களையும் முடித்துவிட்டு பிறகு அடுத்ததுக்கு அனைத்ததையும்
செய்தால் சில அங்கங்கள் தங்கள் பிரதாநங்களிலிருந்து வெகு தொலைவிலும் ,
சில வெகு அருகிலும் இருக்குமாகையாலே அப்படி செய்யாமல், முதல் ஸம்ஸ்காரத்தை அனைத்து த்ரவ்யங்களுக்கும்
செய்துவிட்டு, பிறகு இரண்டாவது ஸம்ஸ்காரத்தைத் தொடங்க வேண்டும்.

இது முக்ய க்ரமம் விட துர்லபம்
தயிர் தயார் பண்ண முன்பே தொடங்க வேண்டும்
ப்ரவ்ருத்தி க்ரமம் படி தயிருக்கு உள்ளவற்றை எல்லாம் பண்ணி தோசை பால் செய்யாமல் இல்லாமல்
தயிர் உண்டு செய்ய வேண்டியதை மட்டுமே செய்து விட்டு
அக்னிக்கு தோசை -இந்திரனுக்கு தயிர் -இந்திரனுக்கு பால் -இந்த க்ரமத்திலே செய்ய வேண்டும்

• அப்படி இரண்டாவது ஸம்ஸ்காரம் செய்யும் பொழுது, ஏதோ ஒரு வரிசையில் 17 த்ரவ்யங்களுக்கு அதைச் செய்தால்,
மறுபடியும் அந்தந்த த்ரவ்யத்தின் அடுத்தடுத்த ஸம்ஸ்காரங்களுக்குல்ள் உள்ள இடைவெளி மாறிவிடும்.
ஆகையால், த்ரவ்யங்களின் எந்த வரிசையில் முதல் ஸம்ஸ்காரம் செய்யப் பட்டதோ அதே வரிசையில் தான்
இரண்டாவதையும் செய்ய வேண்டும். இது தான் பிரவ்ருத்தி க்ரமம் ஆகும்

உத்கர்ஷம் அபகர்ஷம்
வேதத்தில் சில இடங்களில், ஒரு காலத்தில் செய்யப்பட வேண்டிய செயலை சற்று
தாமதித்து, பின் ஒரு காலத்தில் செய்யச் சொல்கிறது. இதற்கு உத்கர்ஷம் என்று பெயர்.
•அதே போல் , ஒரு காலத்தில் செய்யப்பட வேண்டிய செயலை முன்னால் இழுத்து,
முன் ஒரு காலத்திலேயே செய்யச் சொல்கிறது – இதற்கு அப கர்ஷம் என்று பெயர் –

பதார்த்த அநு சமயம் -காண்ட அநு சமயம்
பல த்ரவ்யங்களுக்கு ஒரே ஸம்ஸ்காரத்தைச் செய்யும் இடத்தில், முதல் ஸம்ஸ்காரத்தை அனைத்துக்கும்
செய்துவிட்டு, பிறகு அடுத்த ஸம்ஸ்காரத்தைத் தொடங்க வேண்டும் என்று பார்த்தோம்.
• பவ்ர்ணமி அன்று இரண்டு புரோடாசங்கள் தேவைப்படுகின்றன .
முதலுக்கு நெல்லை எடுத்தல், இரண்டாவதுக்கு நெல்லை எடுத்தல், முதலுக்கு நெல்லை ப்ரோக்ஷித்தல்,
இரண்டாவதுக்கு நெல்லை ப்ரோக்ஷித்தல், முதலுக்கு நெல்லைக் குத்துதல், இரண்டாவதுக்கு
நெல்லைக் குத்துதல் என்ற வரிசையில் தான் செய்யவேண் டும்.
இதற்கு பதார்த்த அநுஸமயம் என்று பெயர்.
பதார்த்தம் என்று அழைக்கப்படும் ஒவ்வொரு செயலையும் அனைத்துக்கும்
செய்துவிட்டு அடுத்த செயலைச் செய்கிற படியால்.

• நெல்லைக் குத்துதல் என்ற ஒரு செயலுக்குள் மான் தோலை விரித்தல் -உரலை வைத்தல் நெல்லைச் சேர்த்தல்
என்று பல கார்யங்கள் உள்ளன. அவற்றையும் பதார்த்த அநுஸமயமாகச் செய்ய வேண்டுமோ? என்றால் – அல்ல.
நெல்லைக் குத்துவது என்ற ஒரு முழுமையான செயல் ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டுள்ளது,
ஆகையால் அதத முழுவதுமாக ஒரு த்ரவ்யத்துக்கு முடித்துவிட்டு தான் அடுத்ததுக்குச் செல்லலாம்.
இதற்கு காண்ட அநுஸமயம் என்று பெயர்.
ஒரு காண் டத்தில் சொல்லப் பட்டது போலே ஒரே செயலின் பகுதிகளான அங்கங்கள் அனைத்தையும்
சேர்த்துத் தான் செய்யவேண்டும்.

விவ்ருத்தி
• சில இடங்களில் கர்மங்களை வளர்க்க வேண்டும் என்று வேதம் சொல்லும்.
வளர்ப்பது மீண் டும் மீண் டும் அநுஷ்டிப்பதால் தான்.இதற்கு ஆவ்ருத்தி என்று பெயர்.
• தர்ச பூர்ண மாஸங்களில் 5 பிரயாஜங்கள் சொல்லப்பட்டு உள்ளன –
வேறே ஒரு . யாகத்தில் 11 பிரயாஜங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப் படுகிறது
ஐந்தை வைத்துக் கொண்டு பதினொன்று என்ற எண்ணை எப்படிச் செய்வது என்றால் ஒவ்வொரு
பிரயாஜத்தையும் இரு முறை செய்து, கடைசி பிரயாஜத்தை மட்டும் மும்முறை செய்தால் 11 முறை
பிரயாஜம் செய்ததாக ஆகும்
• அப்படி செயல்களை ஆவ்ருத்தி செய்யும் பொழுது, ஒரு முறை ஐந்தையும் முடித்துவிட்டு, பிறகு
ஐந்தையும் செய்தால் அதற்கு தண்ட-கலிதவத்-ஆவ்ருத்தி என்று பெயர்.
அதோவது 1 2 3 4 5 1 2 3 4 5 5 என்ற வரிசையில் பிரயாஜங்களைச் செய்தல்.
•ஆனால் இப்படிச் செய்தால் ’முதல் பிரயாஜத்துக்கு அடுத்து இரண்டாவது பிரயாஜம்’ என்ற க்ரமம் பாதிக்கப்படும்.
ஆகையால், இப்படிச் செய்யாமல் தன் தன் இடத்திலேயே அந்தந்த பிரயாஜத்தை ஆவ்ருத்தி செய்ய வேண்டும்.
அதாவது 1 1 2 2 3 3 4 4 5 5 5 என்ற வரிசையில் செய்ய வேண்டும்.
இதற்கு ஸ்வ-ஸ்தாந விவ்ருத்தி என்று பெயர்.

——–

பாடம் –17-ஆறாம் அத்யாயம் -அதிகாரம்

கீழ் ஐந்து அத்யாயங்களில் அநுஷ் டிக்கப்படவேண்டிய கர்மங்ள் எல்லாம் சொல்லப்பட்டன,
அவற்றைச் செய்யவேண்டிய வரிசையும் சொல்லப்பட்டன. அடுத்து இயற்கையாக ஏற்படும் எதிர்பார்ப்பு –
“இவற்றைச் செய்யப்போகுமவர்(அநுஷ் டாதா) யார்?” என்ற கேள்வி எழுகிறபடியால், அதிகாரம்
என்பதை அடுத்திருக்கும் ஆறாவது அத்யாயத்தில் கூறுகிறார் மஹர்ஷி ஜைமிநி
• அதிகாரம் என்றால் பல-ஸ் வாம்யம் அதாேது பலத்தை அநுபவித்தல் என்று பொருள்.
ஒரு யாகத்தின் பலத்தை அநுபவிப்பவன் தானே அதைச் செய்ய முயற்சிப்பான்.
ஆகையால், பலத்தை அநுபவிப்பது தான் அதிகாரம் ஆகும்.
•ஆனால் இப்படிச் சொன்னால் , மகன் செய்யும் ஸ்ரார்தத்தின் பலத்தை அநுபவிக்கும் பித்ருக்களுக்கு
அதிகாரம் கிடைத்து விடும், மகனுக்குக் கிடைக்காது. ஆகையால், பலத்தின் அநுபவமும், யாகம்
என்கிற செயலும் எவரிடம் உள்ளதோ அவரே அதிகாரி என்று மாற்றிக் கொள்ள வேண் டும்.
•ஆனால், அப்படிக் கொண்டாலும், மகனின் நலனுக்காக செய்யப்படும் ஜாதேஷ்டி என்ற யாகத்தில்
தந்தைக்கு அதிகாரம் இல்லாமல் போகும், அவர் பலத்தை அநுபவிக்காதபடியால்.
ஆகையால், யாகத்தில் முயற்சிக்குக் காரணமான பலத்தைப் பற்றின ஆசையும்,
யாகம் என்கிற செயலும் எவரிடத்திலுள்ளனவோ அவரே அதிகாரி ஆவார்.

சொல்லப் படாத அதிகாரங்கள்

யாகம் முதலான வைதிக கர்மங்ளைச் செய்ய, மூன்று அடிப்படையான தேவைகள் உள்ளன.
இவை நேரடியாக விதி வாக்கியங்களில் சொல்லப்படாத போதும், இவை இல்லாமல்
கர்மங்களைச் செய்ய முடியாதபடியால் இவை அதிகாரத்தில் சேர்கின்றன
1. வித்யை – அத்யயநம் செய்து, வேதங்களையும் அவற்றின் பொருளையும் கற்றிருக்க வேண்டும்.
இது இருந்தால் தான், அடுத்தடுத்து என்ன செயல்கள் செய்யவேண்டும் என்பதையும்,
சொல்லவேண்டிய மந்த்ரங்களையும் அறிய முடியும்.
2. அக்நி – யாகம் ஹோமம் முதலானவற்றில், ஒரு த்ரவ்யத்தை அக்நியில் சேர்க்க வேண்டும் என்பதால்,
அதற்காக ஆதாநம் என்ற கர்மத்தைச் செய்து கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்நி
என்ற மூன்று அக்நிகளும் ஒருவனிடத்தில் இருந்தால் தான், அவன் யாகம் முதலானவற்றைச் செ ய்ய முடியும்
3. ஸாமர்த்யம் – யாகம் முதலானவற்றைச் செய்யும் திறமையும், பண வசதியும், உடல் ஆரோக்யமும்,
நன்கு செயல்படக்கூடிய புலன் களும் இருந்தால்தான் ஒருவனால் யாகம் செய்ய முடியும்.
ஆகையால், பார்க்கமுடியாதவர்கள், பேச முடியாதவர்கள், நடக்க முடியாதவர்கள் ஆகியவர்களுக்கு
யாகம் முதலானவற்றில் அதிகாரம் கிடையாது.

பெண்ணின் அதிகாரம்

• பூர்வபக்ஷம் – யாகம் முதலான வைதிக கர்மங்களில் பெண்களுக்கு அதிகாரம் கிடையாது, ஏன் என்றால்
1. யாகங்களைச் சொல்லும் விதிகளில் “இந்த பலத்தில் ஆசை யிருப்பவன் இந்தக் கர்மத்தைச் செய்ய வேண்டும்”
என்று ஆண்பால் தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
2. பெண்களுக்கு அத்யயநம் மூலம் பெற்ற ஞாநம் இல்லை , அதாநம் மூலம் பெற்ற அக்நிகள் இல்லை, சொத்து
இல்லாதபடியால் ஸாமர்த்யமும் இல்லை -அதனால்
• ஸித்தாந்தம் – பெண் களுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு.
1. “தர்மத்திலும், செல்வத்திலும் விஷய அநுபவத்தில் மனைவியைக் கணவன் மீறக்கூடாது” என்றும்
“பாணிக்ரஹணம் செயததால் தர்ம கார்யங்களிலும் அவற்றின் பலன்களிலும் சேர்ந்து தான் பங்கு உள்ளது”
என்றும் ஸ்ம்ருதிகள் சொல்கிறபடியால் அதிகாரம் நிச்சயம் உண்டு. இரண்டு பால்களில் ஏதோ
ஒன்றைச் சொல்ல வேண் டியபடியால் வேதம் ஆண் பாலால் சொன்னது.
2. பெண் களுக்குத் தனியாக வேத ஞாநமோ அக்நிகளோ தேவையில்லை -கணவனின் ஞாநமும் அக்நிகளும் போதும்.
கணவனின் செல்வமும் அவனது மட்டுமல்ல, மனைவிக்கும் சொந்தமானது என்று வேதம் சொல்கிற படியால் அவளிடம் பணமும் உள்ளது

தம்பதியின் அதிகாரம்

ஆணுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு, பெண்ணுக்கும் உண்டு என்று பார்த்தோம்.
ஆனால், அவர்களுக்குத் தனித்தனியே யாகம் செய்யும் உரிமை கிடையாது.
• வேதம், ஒரே யாகத்தில் கணவன் செய்யவேண்டிய சில செயல்களையும், அவனுடைய மனைவி செய்ய வேண்டிய
செயல்களையும் சொல்கிறது. கணேவனோ மனைவியோ தனியாக யாகம் செய்தால், மற்ற ஒருவர் செய்ய வேண் டிய செயல்களைச்
செய்ய முடியாதபடியால், யாகத்தின் சில அங்கங்களைச் செய்யாதபடியால் யாகம் நிறைவு பெற முடியாது, பலம் கிடைக்காது.
• ஆகையால், இருவரும் சேர்ந்து தான் ஒரு யாகத்தைச் செய்ய வேண் டும்.
• ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாத போதோ , வேறு சில ஸந்தர்பங்களிலோ மட்டும், கணவன் அல்லது மனைவியின்
ஸ்தாநத்தில் வே றே ஒருவரை வைத்து யாகம் செய்யலாம் என்று வேதம் அநுமதிக்கிறது.
• யாகம் செய்யும் புருஷனுக்கு ’யஐமாநன்’ என்ற பெயரையும், யாகம் செய்யும் மனைவிக்கு ’பத்நீ’ என்ற பெயரையும் வேதம்
கொடுத்துள்ளது. ஆகையால், பத்நீ என்ற சொல்லில் இருந்தே அறியலாம் – பெண்களுக்கு யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு என்று.

அத்யாயம் -6- பாதம் -2-
தொடங்கியதை முடித்தல்

•ஒரு பலத்தில் ஆசையால் ஒரு கர்மத்தைத் துவங்கிவிட்டு, அந்த கர்மம் முடிவதற்குள் அந்த ஆசை விலகிவிட்டால்,
தொடங்கப்பட்ட கர்மத்தை முடிக்க வேண்டுமா, அப்படியே நிருத்த வேண்டுமா என்று கேள்வி.
•முயற்சிக்குக் காரணம் ஆசை , அது இல்லாதபடியால் யாகத்தைத் தொடர்ந்து செய்யத் தேவையில்லை என்பது பூர்வ பக்ஷம்.
•முதலில் இருந்த ஆசையால் யாகத்தைத் தொடங்கி விட்டபடியால், அழைக்கப்பட்ட தேவதைகளுக்கு
ஹவிஸ்ஸை அளிக்காமல் அனுப்புவது தவறாகும்.
ஆகையால், மீதமிருக்கும் யாகத்தை ஆசை இல்லாவிட்டாலும் செய்து முடிக்க வேண்டும் என்பது ஸித்தாந்தம்.
•அப்படி ஒருவன் யாகத்தை முடிக்கத் தவறினால், அவன் தேவதைகளிடம் அபசாரம் செய்தவன் ஆவான் , ஆகையால்
த்ரைதாதவீயம் என்ற யாகத்தை ப்ராயச்சித்தமாகச் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது.

அங்க குண விரோத நியாயம்
இது ஐந்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது

ஒரு ப்ரதாந கர்மத்துக்குப் பல அங்கங்கள் இருக்கலாம். அந்த அங்கங்களுக்கும் எத்தனையோ குணங்கள் / அங்கங்கள் இருக்கலாம்.
ஒரு ப்ரதானத்தின் அங்கத்துக்கும், ஒரு அங்கத்தின் அங்கத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டால் எதைச் செய்ய வேண்டும்?
•ஜ்யோதிஷ்டோமம் என்ற ஸோம யாகம் ஐந்து நாட்கள் செய்யப்படுவது.
அதில் ஐந்தாவது நாளில் தான் ஸோம ரஸத்தை வைத்து ப்ரதாந யாகத்தைச் செய்யவேண்டும்.
அதற்கு முன் இருக்கும் நான்கு நாட்களில் வேறு சில அங்க யாகங்கள் விதிக்கப்பட்டுள்ளன, எடுத்துக்காட்டுக்கு
முதல் நாள் தீக்ஷணீயா என்ற ஒரு யாகம் சொல்லப்பட்டுள்ளது.
• வேதத்தில் ஒரு விதி வாக்கியம் “எந்த யாகத்தைச் செய்தாலும் அதை பர்வ காலத்தில்
(பௌர்ணமி அன்றோ அமாவாஸை அன்றோ ) செய்ய வேண்டும்” என்றுவிதிக்கிறது.
• ஆகையால், ஜ்யோதிஷ்டோமம் என்ற ப்ரதாந யாகமும், தீக்ஷணீயா என்ற அங்க யாகமும் பர்வ காலத்தில்
செயப்படவேண்டும். ஆனால் இது அஸாத்யமானது. தீக்ஷணீயா யாகத்தை பர்வ காலத்தில் செய்தால்,
ஜ்யோஷ்டோம யாகத்தைச் சதுர்த்தி அன்று தான் செய்ய முடியும். ஸோம யாகத்தை பர்வ காலத்தில் செய்ய வேண்டும்
என்றால் தீக்ஷணீயா யாகத்தை ஏகாதசி அன்று தான் செய்ய வேண்டும்.
• இப்படி ப்ரதாந கர்மத்தின் ஒரு குணத்துக்கும் அங்கத்தின் குணத்துக்கும் விரோதம் ஏற்பட்டால், ப்ரதாநத்தின் குணத்தைத் தான்
செய்ய வேண்டும், அங்கத்தின் குணத்தை விட்டுவிட வேண்டும், ஏன் என்றால் அங்கம் இருப்பதே ப்ரதாநத்துக்காகத் தான்,
அங்கத்தைக் குறைவில்லாமல் செய்து, ப்ரதாநத்தைக் குறையோடு செய்தால் எந்தப் பலனும் கிட்டாது.

அத்யாயம் -6- பாதம் -3-
யதா சக்தி நியாயம்

• ஒரு யாகத்தைச் செய்யும் பொழுது அனைத்து அங்கங்களையும் செய்து தான் ஆக வேண்டுமா என்று கேள்வி.
• ஒரு பலனில் ஆசையால் செய்யப்படும் கர்மங்களுக்கு காம்ய கர்மங்கள் என்று பெயர்.
• அப்படிப்பட்டவையை விதிக்கும் ஸாஸ் த்ரம் “இந்த கர்மத்தால் இந்த பலனை அடையலாம்” என்று சொல்லும் பொழுது,
தனியாக அந்த யாகத்துக்கு மட்டும் அந்தப் பலனை ஏற்படுத்தும் சக்தி இல்லாதபடியால், அனைத்து அங்கங்களோடு கூடிய இந்த
யாகத்தால் இந்த பலனை அடையலாம் என்று தான் கூறவேண்டும்.
ஆகையால், காம்ய கர்மங்கள் ஒரு அங்கத்தில் குறை ஏற்பட்டாலும் பலன் கிடைக்காது.
• வேறு சில கர்மங்களை ஒருவன் கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டும் என்று வேதங்கள் சொல்கின்றன.
அவற்றுக்கு நித்ய கர்மங்கள் என்று பெயர்.
• அவ்விடங்களில், அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதாந கர்மத்தைக் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று வேதம் சொல்ல
முடியாது, ஒருவனுக்கு அப்படி செய்ய சக்தி இல்லாமல் போகலாம் ஆகையால்.
ஆகையால், ப்ரதாநங்களைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும், அங்கங்களை அவரவர் சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்
என்று தான் வேதம் கூறுகிறது. இதற்கு தான் யதா சக்தி ந்யாயம் என்று பெயர் –

யாவத் ஜீவன் அக்னி ஹோமம்
ஸ்வர்க்க காம ஜோயிதிஷ்டோமேன யஜேதே ஸ்ருதி வாக்கியங்கள் -இந்த வேறுபாட்டை உணர்த்தும்
மூன்றாம் வேற்றுமை -ஆல் -என்றாலே உப கரணங்கள் தானாகவே சேரும் –
ஆகவே எல்லா அங்கங்களும் சேர்ந்து செய்தால் தான் பலன் கிட்டும்
விட்டால் பிராயச்சித்தங்கள் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்

பிரதிநிதி நியாயம்

யாகம் என்றால் ஒரு தேவதைக்கு ஒரு த்ரயத்தை த்யாகம் செய்வது .
ஆகையால், யாகம் என் றாலே ஏதோ ஒரு த்ரவ்யம் வேண்டும் என்று நாம் அறிந்தபடியால், ஒரு யாகத்தின்
விதியைப் பார்த்தவுடன் தானாகவே நாம் அதில் உபயோகிக்கக்கூடிய அனைத்து த்ரவ்யங்களையும் நினைப்போம்.
அப்பொழுது, வேறே எந்த த்ரயத்தையும் உபயோகப்படுத்தக் கூடாது
என்பதற்காக வேதமே ஒரு த்ரவ்யத்தை விதிக்கும் “நெல்லால் யாகத்தைச் செய் ” என்பது போல்.
• ஆனால், ஒரு வேளை அந்த த்ரவ்யம் நமக்குக் கிடைக்காவிட்டால், அதற்காக யாகத்தையே செய்யாமல் இருப்பது சரி அல்ல –
ஓர் அங்கம் இல்லாததுக்காக ப்ரதாநத்தை விடுவது சரியல்ல. ஆகையால், அதற்கு பதிலாக உபயோகிக்கூடிய த்ரவ்யங்களையும் வேதமே சொல்லும்.
அவற்றுக்குப் ப்ரதிநிதி என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – தர்பூர்ணமாஸத்தில் நெல் கிடைக்காவிட்டால் நீ வாரம் என்ற காட்டு அரிசியைப் பயன் படுத்தலாம் என்று வேதம் சொல்கிறது.
• விதிவிலக்கு –
ஒரு தேவதைக்குப் பதிலாக மற்ற ஓரு தேவதையையோ ,
கார்ஹபத்யம் முதலான மூன்று அக்நிகளுக்கு பதிலாக ஸாதாரண அக்நியையோ ,
வேதம் அந்த யாகத்துக்காகச் சொன்ன மந்த்ரத்தை விட்டு வேறே ஓரு மந்த்ரத்தையோ ,
ப்ரயாஜம் முதலான ஆராதுபகாரகங்களுக்கு பதிலாக வேறு ஆராதுபகாரகங்களையோ செய்ய இயலாது,
அதாவது அவற்றுக்குப் ப்ரதிநிதி கிடையாது. ஏன் என்றால்,
இவற்றால் வரும் பயன் மற்ற வற்றைச் செய்தால் ஏற்படும் என்பதற்கு எந்தப் ப்ரமாணமும் இல்லை ,
இவை அனைத்தும் அத்ருஷ்டம் / அபூர்வம் / புண்ணியம் மூலம் யாகத்திற்கு உதவுகின்றன.
ஆனால், நெல் இல்லாவிட்டால் நீ வாரம் அதே போல் பயன் படுத்தலாம் என்பது தெரிந்தது.
• ஒரு த்ரவ்யம் கிடைக்காவிட்டால், அதற்கு பதிலாக வேறு எந்த த்ரவ்யத்தை வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்
என்பது கிடையாது. அந்த த்ரவ்யத்துக்கு ஒப்பான வேறே ஒன்றைத் தான் உபயோகிக்க வேண்டும்.
• “நெல்லால் யாகம் செய்” என்ற கட்டளையில் நெல் தன்மை என்ற ஸாமாந்யம், நெல் மணி என்ற அவயவி,
அதன் அவயவங்கள் என்ற மூன்றுக்கும் யாகத்தைக் குறித்து ஸாதநத்வம் (காரணத்வம்) தெரிகிறது.
• ஒரு வேளை நெல் கிடைக்காமல் போனால், சாமான்யத்தையோ அவயவியையோ யாகத்தில் உபயோகிக்க முடியாமல் போனாலும்,
நெல்லின் அவயங்களை மட்டுமாவது பயன் படுத்த வேண்டும்.
• நெல் இல்லாமல் நெல் அவயவங்களை எப்படி உபயோகிப்பது? நெல்லை போன்ற வேறே ஒரு தானியத்தை எடுப்பதன் மூலம் தான் –
ஸத்ருஸமான அதாவது ஒப்பான பொருட்களில் பொதுவான அவயவங்கள் இருக்கவேண்டும்.
ஆகையால், நீவாரம் போன்ற தான்யங்களில் நெல்லின் சிறு அவயவங்கள் இருக்கும்.
•ஆகையால், நாம் நீவாரத்தை உபயோகித்தால் அதிலிருக்கும் நெல் அவயவங்களை உபயோகித்ததாக ஆகிறபடியால்,
“நெல்லால் யாகம் செய்” என்ற விதியை குறைந்த பக்ஷம் கடைப்பிடித்து விட்டோம் என்று ஆகும்.
•ஆகையால், ஒரு த்ரவ்யம் கிடைக்காத போது, அதற்கு ஸத்ரு ஸமான (ஒப்பான) வேறே ஓரு த்ரவ்யத்தைத் தான் பயன் படுத்தவேண்டும்

————–

பாடம் -18–

ஆறாம் அத்யாயத்தின் எட்டு பாதங்களில் சொல்லப்பட்ட அர்த்தங்கள் –
•(1) அதிகாரீ– யாகத்தைச் செய்யத் தகுதி உடையவன் யார் என்பது
•(2) தர்மா: – அந்த அதிகாரியின் சில தர்மங்கள்
•(3) ப்ரதிநிதி: – ஒரு அங்கம் இல்லாதபோது அதற்கு ப்ரதிநிதியை உபயோகித்தல்
•(4) அர்த்தலோபநம் – சில யாகங்களில் சில கர்மங்கள் இல்லாமல் போகுதல்
•(5) தீக்ஷா – ஸோம யாகத்தில் செய்யப்பட வேண்டிய தீஷை யைப்பற்றி
•(6) ஸத்ரம் – பலர் சேர்ந்து செய்யும் சத்ரம் என் ற ஒரு யாகத்தில் அதிகாரத்தைப்பற்றி
•(7) தேயம் – யஜமாநன் ரித்விக்குகளுக்குக் கொடுக்கும் தக்ஷிணையைப்பற்றி
•(8) வஹ்நி – கார்ஹபத்யம் முதலான அக்நிகளைப்பற்றி சில விசாரங்கள்-

அத்யாயம் -6- பாதம் -4-

யாகத்திற்காகச் செய்யப்பட்ட ஹவிஸ்ஸிலிருந்து இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இதற்கு அவதாநம் என்று
பெயர். அவதாநம் செய்யப்பட்ட துண்டுகளில் நெய் சேர்த்து அக்நியில் போட வேண்டும். ஒரு வேளை அவதாநம்
செய்யப்பட்ட துண்டுகள் அழிந்துவிட்டாலோ , தொலைந்து விட்டாலோ , கெட்டுவிட்டாலோ , அந்த த்ரவ்யத்துக்கு
ப்ரதிநிதியாக நெய்யைப் பயன் படுத்த வேண்டும்
அவத்த ஹவிஸ்ஸூ -அவதானம் செய்யப்பட்டது –
• த்ரவ்யம் என்பது யாகத்துக்கு அங்கம், அங்கம் இல்லாததற்காகப் ப்ரதாந கர்மமான யாகத்தை விடக்கூடாது.
ஆகையால், நெய்யால் செய்ய வேண்டும்
• நேர் மாறாக, யாகத்தில் உபபயாகப்படுத்திய ஹவிஸ்ஸின் மீதத்தை செலவழிப்பதற்காக இடாமக்ஷணம்
ப்ராசித்ரபக்ஷணம் முதலான உண்ணும் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுக்கான த்ரவ்யம் ஒரு வேளை
அழிந்துவிட்டால், வேறே ஒரு த்ரவ்யத்தை உண்ண வேண்டும் என்ற தேவை இல்லை .
•இந்த செலவழிக்கும் கர்மங்கள் தான் ஹவிஸ்ஸில் மீதமிருக்கும் பகுதிக்கு அங்கங்கள், ஆகையால் ப்ரதாநமான
அந்த த்ரவ்யமே இல்லாதபோது இவற்றைச் செய்யத் தேவையில்லை

ஹவிரார்த்தி நியாயம்

• தர்ஸ பூர்ணமா ஸத்தில் அமாவாஸை அன்று பாலாலும் தயிராலும் இந்த்ரனுக்கு யாகம் செய்ய வேண்டும்.
அப்பொழுது, பால் கெட்டுவிட்டால் ஒரு ப்ராயச் சித்தத்தையும், தயிர் கெட்டுவிட்டால் ஒரு ப்ராயச் சித்தத்தையும்
செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு “யாருக்கு இரண்டு ஹவிஸ் ஸூகளும் கெட்டுவிடுகின்றனவோ அவன்
இந்த்ரனுக்காக ஐந்து பாத்திரங்கள் அளவுள்ள அரிசிச் சோறால் யாகம் செய்ய வேண்டும்”
என்று ப்ராயச் சித்தம் சொல்கிறது வேதம்.
•ஹவிஸ்ஸின் அழிவு என்ற நிமித்தம் ஏற்பட்டால், இந்த ப்ராயச் சித்தம் என்ற நைமித்திக கர்மத்தைச் செய்ய வேண்டும்.
• இங்கு நிமித்தம் என்ன என்று விசாரிக்கப்படுகிறது.
இரண்டு ஹவிஸ் ஸூகளும் அழிதல் தான் நிமித்தம் என்று பூர்வ பக்ஷம்.
•ஸித்தாந்தம் – குறைந்த பஷமான நிமித்தம் கிடைத்தவுடன், அதற்கு மேலும் சிறப்பிக்கக்கூடாது.
• வெறும் ’அழிவு’ நிமித்தம் ஆக முடியாது, ஏன் என்றால் ஏதோ ஒரு பொருள் எப்பொழுதுமே உலகில் அழிந்து
கொண்டுதான் இருக்கும், ஆனால் நிமித்தம் என் பது அவ்வப்போது ஏற்படும் ஒன்றாக இருக்க வேண்டும்.
• ’ஹவிஸ்ஸின் அழிவு’ என்று கொண்டால் அது அவ்வப்போது ஏற்படுவதுதான், ஆதகயால் அது தான் நிமித்தம்.
அதற்கு ஒரு படி மேல் சென்று ’இரண்டு ஹவிஸ் ஸூகளின் அழிவு’ என்று கொள்ளுதல் சரி அல்ல.
ஆகையால், இரண்டு ஹவிஸ்ஸூகளில் எது அழிந்தாலும் இந்த ப்ராயச் சித்தத்தைச் செய்ய வேண்டும்.

மூன்றாம் அத்யாயம்
கிரஹம் சோமா யாகத்துக்கு கொண்ட பாத்திரம் –
கிரஹம் தொடைக்க வேதம்
பூர்வ பக்ஷம் ஒரு பாத்திரம்
சித்தாந்தம் -ஒன்றை மட்டும் அல்ல -ஒருமையை கணிசிக்காமல் அனைத்தையும் என்றே கொள்ள வேண்டும்
அதே போல் இங்கு ஹவிஸ்ஸூ அழிவு -ஏதோ ஓன்று அழிந்தாலும் செய்ய வேண்டும்

ஹவிரார்த்தி நியாயத்தின் விதி விலக்கு

யாருக்கு மூன்று அக்நிகளும் அழிந்து விடுகின்றனவோ ,அவன் மறுபடியும் ஆதாநம் செய்து கொள்ளுதல்
ப்ராயச் சித்தம்’ என்று வேதம் கூறுகிறது.
•முன் சொன்ன ஹவிரார்தி ந்யாயத்தின் படி பார்த்தால், ’மூன்று’ என்ற சொல்லைக் கணிசிக்கக் கூடாது,
கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்தி என்ற மூன்று அக்நிகளில் ஏதோ ஒன்று அழிந்தாலும் மறுபடியும்
ஆதாநம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும்.
•ஆனால், விதிக்கப்படும் ஆதாநத்தின் தன்மை யாதெனில் – மூன்று அக்நிகளையும் உருவாக்குவது. ஆகையால், ஒரு
அக்நி அழிந்தவுடன் இதைச் செய்தால், தேவையில்லாமல் மற்ற இரண்டு அக்நிகளும் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
•ஆகையால், விதிக்கப்படும் ஆதாநத்தின் தன்மையைப் பார்த்து, ஹவிரார்தி ந்யாயத்ததயும் மீறி, மூன்று என்ற
சொல்லையும் சேர்த்து தான் நிமித்தத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆகையால், மூன்று அக்நிகளும்
அழிந்தால்தான் மறுபடியும் ஒருவன் ஆதாநம் செய்து கொள்ள வேண்டும்.

உபக்ரம நியாயம் –

மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் பாதத்தில் சொல்லப்பட்ட ஒரு ந்யாயம் – உபக்ரம ந்யாயம்.
உபக்ரமம் என்றால் தொடக்கும்.உப ஸம்ஹாரம் என்றால் முடிவு.
• வேதத்தில் ஓரிடத்தில், “அக்நியிடமிருந்து ரிக்வேதம் தோன்றியது” என்ற ஒரு அர்த்தவாதமும்,
அதற்குப் பிறகு “உரத்த குரலில் ரிக்கால் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
• தொடக்கத்தில் ரிக்வேதம் சொல்லப்பட்டபடியால் முடிவிலிருக்கும் ரிக் என்ற சொல்லுக்கு ரிக்வேதம்
என்று பொருளா? அல்லது முடிவில் ரிக் மந்த்ரம் சொல்லப்பட்டபடியால் தொடக்கத்திலும் ரிக்வேதம் என்ற சொல்
ரிக் மந்த்ரத்தைத் தான் சொல்லுகிறதா?
• பூர்வபக்ஷம் – தொடக்கத்திலிருப்பது அர்த்தவாதம், முடிவில் இருப்பது விதி. அர்த்தவாதத்தைக் காட்டிலும்
விதி முக்கியமானது. ஆகையால், விதியில் ரிக் என்ற சொல் உள்ளபடியால், தொடக்கத்திலும் ரிக்வேதம்
என்ற சொல் ரிக்மந்த்ரத்தைத் தான் குறிக்கிறது.
•ஸித்தாந்தம் – தொடக்கத்தில் இருப்பது அர்த்தவாதமாக இருந்தாலும், அது தான் முதலில் படிக்கப்படுகிறது.
அதைப் பார்த்தவுடன் ஏற்படும் அறிவுக்கு முரண்பட்ட எந்த அறிவும் நம்மிடம் இல்லை .
பின்னாலிருக்கும் வாக்கியம் விதியாக இருந்தாலும், அதைப் படிக்கும் பொழுது,
அர்த்தவாதத்தால் முன் ஏற்பட்ட அறிவுக்கு முரண்படாத
பொருளாகத்தான் அதற்குக் கொள்ள வேண்டும்.
ஆகையால், அஸஞ்சாத விரோதம் வராமைக்காக -இறுதியில் இருக்கும் ரிக் என்ற சொல்லுக்கு ரிக்வேதம் என்று பொருள்.
• முதலில் இருப்பது அதிக பலமுடையது என்பது தான் உபக்ரம ந்யாயம்-

சேஸ்வர மீமாம்ஸை
தேவதை ஒத்துக் கொள்ளாதவர்களும் உண்டு
அக்னி என்ற சொல்லையே வேதம் சொல்லும் -தேவதையை அல்ல என்பர்
ஜைமினி சேஸ்வர மீமாம்சகர் என்றும் பின்னால் வந்தவர் மாற்றினார்கள் என்பாரும் உண்டு
இதன் விசாரம் ஒன்பதாம் அத்தியாயத்தில் பார்ப்போம்

அபச்சேத நியாயம் –
இது ஸ்ரீ பாஷ்ய காரர் முதலிலே எடுத்து காட்டிய நியாயம் –
மூன்றாம் அத்யாயத்தில் சொல்லப் பட்ட உபக்ரம ந்யாயத்திற்கு விதிவிலக்காக அபச்சேத ந்யாயம் என்ற
மற்ற ஓரு ந்யாயம் சொல்லப் படுகிறது–ஆறாம் அத்யாயத்தில்
• ஸோம யாகத்தில் பஹிஷ் பவமாநம் என்ற ஸ்தோத்ரம் பாடும் பொழுது, உத்காதா ப்ரஸ் தோதா ப்ரதிஹர்தா
ஆகியவர்கள் மண்டபத்தைச் சுற்றி நடந்து வர வேண்டும். அப்பொழுது, முன்னால் செல்பவரின் கச்சத்தைப்
பின்னால் செல்பவர் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நடக்கும் பொழுது ஒருவர்
அந்த கச்சத்தை விட்டு விட்டால், அதற்கு ப்ராயச் சித்தம் சொல்லப்படுகிறது.
• உத்காதா கச்சத்தை விட்டால் – அந்த யாகத்தை முடித்து, ரித்விக்குகளுக்கு எந்த தக்ஷிணையும் கொடுக்காமல்,
மறுபடியும் அதே யாகத்தைச் செய்து, அது முடியும் பொழுது முன் கொடுக்க இருந்த தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும்.
• ப்ரதிஹர்தா கச்சத்தை விட்டால் – யஜமாநன் தன்னிடமிருக்கு செல்வம் அனைத்தையும் ரித்விக்குகளுக்குக் கொடுத்து விட வேண்டும்.
• இருவரும் ஒரே ஸமயத்தில் கச்சத்தை விட்டால் – இரண்டு நிமித்தங்களும் உள்ளபடியால், இரண்டு ப்ராயச்சித்தங்கதளயும்
செய்ய வேண்டும். ஆனால், (1) செய்து கொண்டிருக்கும் யாகத்தில் தக்ஷிணை கொடுக்காமலிருப்பது
(2) தன்னிடமிருக்கும் அனைத்தையும் கொடுப்பது என்ற இரண்டையும் சேர்த்து செய்யவே முடியாது.
ஆகையால், விகல்பம் ஏற்படுகிறது – இரண்டு ப்ராயச்சித்தங்களில் ஏதோ ஒன்றை நம் இஷ்டப்படி செய்து கொள்ளலாம்

ஒரே யாகத்தில் வரிசையாக இருவரும் கச்சத்தை விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று விசாரம் செய்யப்படுகிறது.
• பூர்வபக்ஷம் –
உபக்ரம ந்யாயத்தின் படி பார்த்தால், முதலில் எதை அறிகிறோமோ அது ப்ரபலமானது,
ஏன் என்றால் அப்பொழுது அதற்கு முரணாக நம்மிடம் எந்த அறிவும் இல்லை . ஆகையால், முதலில் ஒருவர்
கச்சத்தை விட்டவுடன், அதற்காக விதிக்கப்பட்ட ப்ராயச்சித்தத்தை நாம் அறிந்து விடுகிறோம்.
அது முதலில் ஏற்படுகிறது. அதற்குப் பிறகு இரண்டாவதாக ஒருவர் கச்சத்தை விட்டால், அப்பொழுது முன் அறிவுக்கு
முரண் இல்லாதபடி தான் நடக்க வேண்டும் என்பதால், முன் ப்ராயச் சித்தத்தை விட்டு இரண்டாவது ப்ராயச் சித்தத்தைச்
செய்ய முடியாது. ஆகையால், முதலில் யார் கச்சத்தை விடுகிறாரோ , அவருக்காக விதிக்கப்பட்ட
ப்ராயச் சித்தத்தைத்தான் செய்ய வேண்டும்.
• ஸித்தாந்தம் –
உபக்ரம ந்யாயம் என்பது முன்னும் பின்னும் உள்ள வாக்கியங்கள் ஒன்றை ஒன்று எதிர்பார்த்து அறிவை உண்டு
செய்யும்போது மட்டும் தான் செயல்படும். விதியும் அர்த்தவாதமும் அப்படிப்பட்டவை
ஆனால் இங்கு, முதல் ப்ராயச் சித்தத்தைச் சொல்லும் வாக்கியமும் இரண்டாம் ப்ராயச் சித்தத்தைச் சொல்லும் வாக்கியமும்
ஒன்றை ஒன்று எதிர்பார்க்க வில்லை .ஆகையால், உபக்ரம ந்யாயம் இங்கு செயல்படாது.
• முதலில் ஒருவர் கச்சத்தை விட்டவுடன் , அதற்கான ப்ராயச் சித்தத்தைச் செய்ய வேண்டும் என்று நமக்குத் தோன்றும்.
பிறகு, இரண்டவதாக ஒருவர் கச்சத்தை விடும் பொழுது அதற்கான ப்ராயச் சித்தத்தைப் பற்றின அறிவு
ஏற்படும் பொழுது, முன் ஏற்பட்ட ஜ்ஞாநத்தைத் தவறாக்கிக் கொண்டு தான் உண்டாக முடியும்.
ஆகையால், பின்னால் ஏற்படும் அறிவு தான் ப்ரபலமானது என்பது அபச்சேத ந்யாயம்

அத்யாயம் -6- பாதம் -6-

ஆறாம் அத்யாயத்தின் ஆறாவது பாதத்தில் சத்ரம் என்ற ஒரு வகையான யாகத்தைப் பற்றி விசாரம் செய்யப் படுகிறது.
• சத்ரம் என் பது பல யஜமாநர்கள் சேர்ந்து செய்யும் ஒரு யாகம். இந்த யாகத்தில் ரித்விக்குகள் கிடையாது.
யஜமாநர்களே தான் ரித்விக்குகளின் கார்யங்களைச் செய்ய வேண்டும்.
• அந்த சத்ரம் என்ற கர்மத்தில் அங்கமாக ப்ரயாக்ஜங்கள் செய்யப் படுகின்றன.
ப்ரயாஜங்கள் என்பவை தர்ஸ பூர்ணமாஸம் என்ற கர்மத்தில் உபதேசிக்கப்பட்டுள்ளன.
ஸமித், தநூநமாத், இடா, பர்ஹி ஸ் , ஸ்வாஹாகாரம் என்ற ஐந்து தேவதைகளுக்காகச் செய்யப்படும் ஐந்து
யாகங்கள் தான் ப்ரயாஜங்கள்.
• ஸத்ரத்தைப்பற்றிச் சொல்லும் பொழுது வேதம், “வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் நாராஸம்ஸம் என்பது
இரண்டாவது ப்ரயாஜகமாகச் செய்ய வேண்டும். மற்றவர்கள் தநூநபாத் என்பதைச் செய்ய வேண்டும்” என்று.
• ஸத்ரத்தில் சில யஜமாநர்கள் வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவராகவும், சிலர் மற்றவராகவும் இருந்தால்,
சிலருக்காக நாராஸம்ஸத்தைச் செய்தால் மற்றவரால் செய்யப்பட வேண்டிய அங்கம் விட்டுப்பபோகும்.
பலருக்காக தநூநபாத் ப்ரயாஜத்தைச் செய்தால், சிலருக்காகச் செய்யப்பட வேண்டிய
தநூநபாத் ப்ர்பயாஜம் செய்யப் படாமல் போகும்.
• ஆகையால், துல்யமான கல்பத்தில் இருப்பவர்களுக்கு தான் ஸத்ரத்தில் அதிகாரம் உண்டு. அதாவது,
அனைவரும் வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது மற்ற கோத்ரத்தைச் சேர்ந்தவராகவோ தான்
இருக்க வேண்டும்.

அத்யாயம் -6- பாதம் -7-
• விஸ்வஜித் என் ற யாகத்தில் யஜமாநன் தன்னிடமிருக்கும் சொத்து அனைத்தையும் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்
என்று வேதம் கூறுகிறது. சொத்து என்னும் சொல் எவற்றைக் குறிக்கிறது என்று விசாரம் செய்யப் படுகிறது
• ’யஜமானம் தன்னுடையது அனைத்தையும் கொடுக்க வேண்டும்’ என்று கட்டளை உள்ளது.
’தன்னுடையது’ என்ற சொல் யஜமாநனான தன்னையும், தனது தந்தை முதலானவர்களையும், பங்காளிகளையும், தன்னுடைய
சொத்தையும் குறிக்கக்கூடிய சொல். ஆகையால், இவை அனைத்தையும் கொடுக்க வேண்டுமா? அல்ல. ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தால்,
ஒரு முறை உச்சரிக்கப்பட்ட போது ஒரு பொருளைத்தான் அது குறிக்கும். ஆகையால், இங்கு தக்ஷிணை கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறபடியால்,
தக்ஷிணை பொதுவாக சொல்வத்தைக் கொண்டு கொடுக்கப் படுகிறபடியால், இங்கு யஜமாநன் தன் செல்வத்தைத் தான் கொடுக்க வேண்டும்.
• ராஜா யாகம் செய்தால், தன் சொத்தான ராஜ்யத்தைக் கொடுக்க வேண்டுமா? இல்லை . ராஜ்யம் என்ற பரந்து பூமி
ராஜாவினுடைய சொத்து அல்ல, அவரிடம் காப்பதற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகையால், அதைக் கொடுக்கக் கூடாது
• கடந்த காலத்திலிருந்த சொத்தையோ வருங்காலத்தில் வரப் போகும் சொத்தையோ கொடுக்கத் தேவையில்லை ,
யாகம் முடிந்து தக்ஷிணை கொடுக்கும் சமயத்தில் என்ன உள்ளதோ , அதைக் கொடுக்க வேண்டும்.
• யாகம் தொடங்கும் பொழுது, யஜமாநன் தன் சொத்தை (1) தன் வாழ்கைக்காக (2) யாகத்துக்காக (3) தக்ஷிணைக்காக
என்று மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஸர்வ ஸ்வ தாநம் என்றால் தக்ஷிணைக்காக வைக்கப் பட்ட
செல்வம் முழுவதையும் கொடுப்பது தான். அனைத்தையும் அல்ல.

அத்யாயம் -6- பாதம் -8-

இந்த பாதத்தில் இருக்கும் ந்யாயங்களில் முக்கியமானது – ஸாமாந்ய விசேஷ ந்யாயம் என்றும்
ஸாக-பசு-ந்யாயம் என்றும் சொல்லப் படுகிறது.
• ஒரு பொதுச் சொல்லை உபயோகித்து விட்டு, பின் ஒரு சிறப்புச் சொல்லை உபயோகித்தால், அந்தப் பொது சொல்லுக்கும்
அந்த சிறப்புச் சொல்லின் பொருள் மட்டும் தான் பொருள் ஆகும்.
• எடுத்துக்காட்டு – “அந்த விலங்கை அழைத்து வா” என்று சொல்லி விட்டு, பிறகு “பசுவை அழைத்து வா”
என்று சொன்னால், முதலில் ’விலங்கு’ என்று சொல்லப்பட்டது வேறொரு விலங்கு,
இப்பொழுது பசு சொல்லப்படுகிறது என்று பொருள் அல்ல.
பொதுவாக உள்ள விலங்கு என்று சொல்லும் இவ்விடத்தில் பசுதவத் தான் குறிக்கிறது. இதற்கு
தான் ஸாமாந்ய விபஷ ந்யாயம் என்று பெயர் –

சத் -ப்ரஹ்மம் -ஆத்மா-சிறப்புச் சொற்கள் -சொல்வதையே -நாராயண பொதுச் சொல் குறிக்கும்
உபதேச ஷட்கம் பார்த்தோம்
அதி தேச ஷட்கம் -மேல் ஆறும் –

————–

பாடம் -19-அத்யாயம் -7

•மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் ஆறு அத்யாயங்களால் தர்மத்தின் ப்ரமாணங்கள், தர்மங்களுக்குள் வேறுபாடு,
அங்கத்வம், ப்ரயுக்தி, க்ரமம், அதிகாரம் ஆகிய ஆறு விசாரங்களின் மூலம் தர்மங்களளப் பற்றி வேதத்தில்
இருக்கும் உபதேசங்கள் (நேரடியான கூற்றுகள்) காண் பிக்கப்பட்டன.
இனி, அதிதேசம் என்பது ஏழாவது அத்யாயம் தொடங்கி கூறப்படுகிறது.
•அதிதேசம் என்றால் ஓரிடத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ஒற்றுமை யுடைய மற்ற இடங்களில்
தருவித்துக் கொள்ளுதல். ஆகையால், உபதேசம் செய்யப்பட்டதை தான் அதிதேசம் செய்ய இயலும்
என்றபடியால் அதிதேசம் என்றுமே உபதேசத்தை நம்பியே இருக்கக் கூடியது.

ப்ரக்ருதி விக்ருதி
• வேதத்தில் நூற்றுக்கணக்கான யாகங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஆனால், அவை அனைத்துக்கும் உள்ள அங்கங்கள் ஒவ்வொன்றையும் வேதம் தனித்தனியாக மறுபடியும் மறுபடியும்
சொல்லவில்லை . ஓரிடத்தில் அனைத்து அங்கங்களளயும் உபதேசம் செய்துவிட்டு, மற்ற யாகங்களிலும்
இதே போல் செய்யவேண்டும் என்று சொல்லி நிருத்தியுள்ளது.
• எந்த கர்மங்களினுடைய அங்கங்கள் அனைத்தும் விரிவாக நேரடியாக வேதத்தால் போதிக்கப்பட்டுள்ளனவோ, அவற்றுக்கு
ப்ரக்ருதி என்று பெயர். எடுத்துக்காட்டு – அக்நி ஹோத்ரம் என்ற ஹோமம், தர்சபூர்ணமாஸம் என் ற யாகம், ஜ்யோதிஷ்டோமம்
என்று அழைக்கப்படும் ஒரு ஸோம யாகம் ஆகிய மூன்று யாகங்களுக்குமுள்ள அங்கங்களை வேதமே நேரடியாக
உபதேசிக்கிறது.ஆகையால் இவை ப்ரக்ருதிகள்.
• எந்த கர்மங்களின் அங்கங்கள் அனைத்தையும் வேதம் உபதேசிக்காமல், “முன்னால் சொல்லப் பட்ட கர்மத்தைப் போல்
இதுவும் செய்யப்படவேண்டும்” என்று வேதம் சொல்கிறதோ , அவை விக்ருதிகள் ஆகின்றன. எடுத்துக்காட்டு – ஸூர்யனுக்காக சருவை
(வடிக்காத அரிசிச் சோற்றை) கொடுக்கும் யாகமானது, தர்சபூர்ணமாஸத்தில் செய்யப்படும் எட்டு கபாலங்களில்
சமைக்கப்பட்ட புரோடாசத்ளத அக்நிக்கு தானம் செய்யும் யாகத்தின் விக்ருதி ஆகும்.

அதிதேசம்
அதி என்றால் மீதூர்ந்து / கடந்து / தாண்டி என்று பொருள்.
தேசம் என்றால் போதித்தல் / அறிவித்தல்.
ஆகையால், அதிதேசம் என்ற சொல், “கடந்து போதித்தல்” என்ற பொருளைக் குறிக்கிறது.
• ப்ரக்ருதிக்கு அங்கமாக விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தை , அதைக் கடந்து, மற்ற விக்ருதி யாகங்களுக்கும்
அங்கமாக போதிக்கும் சொல் தொடருக்குத் தான் அதிதேசம் என்று பெயர்.
• வேறு ஓரு இடத்தில் சொல்லப்பட்ட காரியக்கூட்டம் (இதி கர்தவ்யதா / செயல்முறை ) தான் செய்யும் உபகாரத்தின்
வயிலாக வேறு இடங்களளச் சென்று அடைவது தான் அதிதேசம் ஆகும்
• எந்த ஒரு சொல் தொடரால் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் கர்மத்தில் இருந்து அதோடு ஒத்த (ஸத்ருசமான /
ஒற்றுமையுடைய) மற்ற கர்மங்களுக்கு அங்கங்கள் சென்று அடைகின்றனவோ அந்தச் சொல் தொடர்
அதிதேசம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரக்ருதியும் விக்ருதியும் அங்கத்தை ஏற்கும் முறை
முதலில் ப்ரக்ருதி யாகம் வேதத்தால் விதிக்கப்படுகிறது.
• அதே யாகத்துக்கு தனக்கு உதவக்கூடிய அங்கங்ளின் தேவை ஏற்படுகிறது
• அப்பொழுது அருகிலேயே ப்ரயாஜம் முதலானவை உபதேசிக்கப்பட்டு, தங்களுக்கு ஒரு பயனை எதிர்பார்க்கின் றன.
•ஆகையால், ஒன்றுக்கு ஓன்று எதிர்பார்ப்பு இருப்பதால், இதே ப்ரக்ருதி யாகத்துக்கு ப்ரயாஜம் முதலானவை அங்கங்கள் ஆகின் றன.
• அடுத்து, விக்ருதி யாகம் ஒன்று விதிக்கப்படுகிறது. அதற்கும் தனக்கு உதவக்கூடிய அங்கங்களின் தேவை ஏற்படுகிறது
• அதே விக்ருதிக்கு அருகிலேயே சில அங்கங்கள் உபதேசிக்கப்பட்டு இருந்தாலும், அந்த வாக்யங்களை நாம் இன்னும்
அடையாதபடியால் அவை எந்த வகையில் உதவக்கூடியவை என்று நமக்குத் தெரியாது.
ஆகையால், முன்னமே உதவியாளர்கள் என்று பெயர் எடுத்த ப்ரக்ருதியின் அங்கங்கள் தான்
முதலில் விக்ருதி யாகத்தால் க்ரஹிக்கப்படுகின்றன.
அப்பொழுதும், ப்ரயாஜம் முதலானவைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதபடியால், ஒரு பக்ஷமான எதிர்பார்ப்பால் தான் ப்ரயாஜம்
முதலானவை விக்ருதி யாகத்துக்கு அங்கங்கள் ஆகின்றன. இதுதான் அதிதேசம் ஆகும்
• இறுதியாக, விக்ருதிக்கு அருகில் படிக்கப்பட்ட அங்கங்கள், தாங்கள் பயனை எதிர்பார்க்கிற படியால், விக்ருதிக்கு
அங்கங்கள் ஆகின்றன.இப்பொழுது அந்த விக்ருதிக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை –

அதிதேசம் இரண்டு வகைப்படும் – வசன அதிதேசம் என்றும் நாம அதிதேசம் என்றும்.
அதில் வசன அதிதேசமானது ப்ரத்யக்ஷ வசன அதிதேசம் என்றும்
கல்பித வசன அதிதேசம் என்றும் மேலும் இரண்டு வகைப்படும்

ஏழாம் அத்யாயத்தின் நான்கு பாதங்களில் சொல்லப்படும் விஷயங்கள்:
•முதல் பாதம் – ப்ரத்யக்ஷ வசன அதிதேசம்
•இரண்டாம் பாதம் – ப்ரத்யக்ஷ வசன அதிதேசத்தின் ஒரு வகையான ஸாம அதிதேசம்
• மூன்றாம் பாதம் – நாம அதிதேசம்
•நான்காம் பாதம் – கல்பித வசன அதிதேசம்

ப்ரத்யக்ஷ வசநம் என்றால் நாம் வேதத்தில் காணக்கூடிய / படிக்கக்கூடிய சொல் தொடர். அப்படிப்பட்ட சொல் தொடர்
நேரடியாக ஒரு யாகத்தின் அங்கத்தை மற்ற ஓரு யாகத்துக்கும் அங்கமாக்க வேண்டும் என்று
அதிதேசத்தை போதித்தால் அதற்கு ப்ரத்யக்ஷ வசன அதிதேசம் என்று பெயர்
• எடுத்துக்காட்டு – ஜ்யோதிஷ் டோமம் என் ற யாகம் தான் அனைத்து ஸோம யாகங்களுக்கும் ப்ரக்ருதியானது.
ச்யேநம் என்ற ஒரு யாகமும் இஷு என்ற மற்ற ஓரு யாகமும் அதன் விக்ருதிகள். ஆகையால்,
ஜ்யோதிஷ் டோமத்தின் அங்கங்கள் அனைத்தும் ச்யேநத்தையும் இஷுவையும் சென்று அடைகின்றன.
• அப்படி ப்ரக்ருதியிலிருந்து அங்கங்களைப் பெற்ற பிறகு, ச்யேந யாகத்தில் சில சிறப்பு அங்கங்களும் விதிக்கப்படுகின்றன –
ரித்விக்குகள் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து கொண்டு கார்யம் செய்யவேண்டும், முதலானவை .
• அதே போல் இஷு என்ற யாகத்திலும் ப்ரக்ருதியில் இருந்து அங்கங்கள் வந்து அடைந்த
பிறகு சில சிறப்பு அங்கங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
• அதற்குப் பிறகு – “மற்றவை ச்யேந யாகத்தோடு ஒக்கும்” என்று ஒரு வேத வாக்கியம் உள்ளது. இதன்மூலம்,
இஷு என் ற யாகத்தில் விதிக்கப்பட்ட சிறப்பு அங்கங்களளத் தவிற, ச்யேந யாகத்தில் விதிக்கப்பட்ட சிறப்பு
அங்கங்களும் இஷு யாகத்தில் சேர்த்துக் கொள்ளப் பட வேண் டும் என்று தெரிகிறது.
• ஆக, “மற்றவை ச்யேந யாகத்வதாடு ஒக்கும்” என்ற சொல் தொடர் , ச்யேந யாகத்தின் அங்கங்களள இஷு யாகத்தில்
சென்று சேர்க்கிற படியால் ப்ரத்யஷ வசந அதிதேசம் ஆகும் –

ஸாமத்தின் அதிதேசம்
ப்ரத்யக்ஷ வசன அதி தேசத்தில் மற்ற ஓரு வகை தான் ஸாமங்களின் அதிதேசம்.
•ஸாமம் என் பது இசை வடிவ மானது. ஸாம வேதத்தில் ஸாமங்கள் படிக்கும் பொழுது, வெறும் இசையைப் படிக்க முடியாத படியால்,
ருக் என்ற ஸாஹித்யத்தோடு சேர்த்து தான் படிக்கப்பட்டுள்ளன. ஒரு ஸாமம் முதன்முதலில் வேதத்தில் உபதேசிக்கப் படும் பொழுது எந்த
ருக்கோடு சேர்த்துப் படிக்கப்பட்டுள்ளதோ அது யோனி ருக் என்று அழைக்கப் படுகிறது –
• அதற்குப் பிறகு, இதே ஸாமத்தை மற்ற ருக்குகளோடும் சேர்த்து பாட வேண்டும் என்று வேதம் சொல்கிறது, ஆனால் மறுபடியும்
மறுபடியும் இதே ஸாமத்தை அந்தந்த ருக்கோடு சேர்த்து பாடிக்காட்டு வதில்லை .
• “கவதி என் ற ருக்குகளில் ரதந்தரம் என் ற ஸாமத்தைப் பாடவேண்டும்” என் ற கட்டளையின்மூலம், ஒரு ருக்கோடு
படிக்கப்பட்ட ஸாமத்தை மற்ற ஓரு ருக்கோடு சேர்க்கிறது. ஆகையால், இதற்கு ஸாமத்தின் அதிதேசம் என்று பெயர்.
• அதே போல், “யோநி ருக்கில் படிக்கப்பட்ட ஸாமத்ளத உத்தரா என்ற பெயருளடய இரண் டு ருக்குகளோடும் சேர்த்தும் படிக்க வேண்டும்”
என்று ஒரு வேத வாக்கியம் உள்ளது. இவை எல்லாம் ஸாமத்தின் அதிதேசத்தைக் கூறுகின் றன

நாமத்தால் அதிதேசம்

பெயரைக் கொண்டும் அதிதேசம் ஏற்படுவதுண்டு. பொதுவாக , ஒருவருக்குப் ப்ரபலமாக இருக்கும் பெயரை இட்டு மற்ற ஓருவரை
அழைத்தால், அவருக்கும் இவருக்கும் ஏதோ ஒற்றுமை உள்ளது என்று நாம்அறிந்து கொள் வோம்.
• எடுத்துக்காட்டு – ஒருவரைப் பார்த்து, “இவர் ஹநுமான்” என்று சொன்னால், அவர் ஹநுமானைப் போல் மிகுந்த் ராம பக்தி உடையவர்
என்று பொருள். ஆகையால், நாம் ஒருவருக்கு இடும் பெயரை வைத்து , அவரது தன்மை களை அறியலாம்.
• அதே போல் தான் வேதத்திலும் ஒரு கர்மத்தின் பெயரை வைத்து அது எந்த கர்மத்தோடு ஒற்றது என்று அறியலாம்.
• எடுத்துக்காட்டு – நாம் தினமும் செய்யவேண் டிய ஒரு ஹோமத்துக்கு அக்நி ஹோத்ரம் என்று பெயர்
என்று முன்னால் படித்தோம். அதே பெயரை உடைய வேறே ஒரு கர்மமும் விதிக்கப்படுகிறது –
“ஒரு மாதத்திற்கு அக்நி ஹோத்ரம் செய்யவேண்டும்” என்று. ஆகையால், ப்ரஸித்தமான அக்நி ஹோத்ரத்தின் பெயரால் இந்த புது
ஹோமம் குறிக்கப்படுவதால் நாம் அறியலாம் – “ப்ரஸித்தமான அக்நி ஹோத்ரத்தைப் போன்ற தன்மைகளை உடையது இந்த
ஹோமம்” என்று. ஒரு வைதிக கர்மத்தின் தன்மைகள் என்ன ? அதன் அங்கங்கள் தான். ஆகையால், இந்த புது கர்மமானது ப்ரஸித்தமான
அக்நி ஹோத்ரத்தின் அங்கங்களையே அங்கங்களாக உடையது என்று இந்தப் பெயரைக் கொண் டு அறிகிறோம். இதுவே நாம அதிதேசம் –

கல்பித வசன அதிதேசம்
இப்படி ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களைக் கொண்டு வந்து விக்ருதி யாகத்தில் சேர்க்கக்கூடிய
ஒரு கட்டளை ஒருவேளை ஒரு விக்ருதி யாகத்தில் இல்லை என்றால்,நாமாக அப்படி ஒரு வசனதைக்
கல்பிக்க வேண்டும். ஏன் என்றால், இதி கர்தவ்யதா / செயல் முறை / உதவியாளர்கள் /
அங்கங்கள் இல்லாமல் ஒரு யாகத்தால் மட்டும் எந்த பயனயும் கொடுக்க முடியாது.
•இப்படி கல்பிக்கப்படும் வாக்யத்துக்கு கல்பித வசன அதிதேசம் என்று பெயர்.
•“ஆக்நேய யாகத்தைப் போல் ஸௌர்ய யாகத்தைச் செய்ய வேண்டும்”, “ப்ரக்ருதி யாகத்தைப் போல்
விக்ருதி யாகத்தைச் செய்ய வேண்டும்”என்பது போல் இந்த வசனம் கல்பிக்கப்படுகிறது-

————–
பாடம் -20-
•ஏழாவது அத்யாயத்தில் கடைசி பாதத்தில் கல்பித வசந அதிதேசம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது –
பொதுவாக விவரிக்கப் பட்டது. அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய சிறப்பு அம்சங்கள் இந்த எட்டாவது அத்யாயத்தில்
சொல்லப்படுகின்றன.
•அதிலும் நான்கு பாதங்களில் –
•முதல் பாதம் – ஸ்பஷ்டமான அறிகுறியை வைத்து கல்பிக்கப்படும் வசநத்தால் ஏற்படும் அதி தேசத்தையும்
•இரண்டாவது பாதம் – ஸ் பஷ்டம் அல்லாத அறிகுறியை வைத்து கல்பிக்கப்படும் வசநத்தால் ஏற்படும் அதி தேசத்தையும்
•மூன்றாவது பாதம் – பல அறிகுறிகள் இருந்தால் அவற்றில் எதைக் காட்டிலும் எது பலம் பொருந்தியது என்பதையும்
•நான்காவது பாதம் – அதிதேசம் ஏற்படாது விதி விலக்குகளையும் கூறுகின்றன

கல்பித வசன அதிதேசத்தின் முறை –
• ஸூர்யனுக்காக சரு என்று அழைக்கப்படும் கஞ்சி வடிக்காத அரிசி சோற்றைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்
என்று ஒரு வேத வாக்கியம் கூறுகிறது. இதற்கு ஸௌர்ய யாகம் என்று பெயர்
• இந்த யாகத்தின் செயல்முறை முழுமையாக சொல்லப் படவில்லை , ஆகையால் இந்த யாகம் அங்கங்களை
எதிர்பார்க்கிற படியால் அதிதேசம் கல்பித்து அங்கங்களைக் கொண்டு வர வேண்டும்.
• ஒரு நியதி இல்லாமல் ஏதோ ஒரு யாகத்திலிருந்து ஏதோ ஒரு யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யலாம் என்பது சரியல்லை .
சாஸ்த்ரத்தின் பொருள் என்பது ஒரு ந்யாயத்தோடும் நியமத்தோடும் தான் இருக்க வேண்டும்.
ஆகையால், ஏதோ ஒரு யாகத்தின் அங்கங்கள் தான் இங்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அந்த யாகம் ஸௌர்ய யாகத்ததாடு ஒற்றுமை யுடையதாக இருந்தால் எளிது.
• ஸௌர்ய யாகத்தை விதிக்கும் வேத வாக்கியத்தைப் பார்த்தவுைன் நமக்குத் தெரியும் விஷயங்கள்:
• இதில் ஒரு தேவதை தான்
• இது நெல்லைக் கொண் டு செய்யப் படுகிறது
• இதில் தத்திதம் என்ற ப்ரத்யயம் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது
(தாசாரதி -தசரதன் தொடர்பு -ஜனகன் -ஜானகி -இவை தத்வித ப்ரத்யயங்கள் )
• இதில் நிர்வாபம் என்ற செயல் உள்ளது
• இவற்றைப் பார்த்தவுடன் நமக்கு சடக்கென முதலில் நினைவுக்கு வரக் கூடியது தர்சபூர்ணமாஸத்தில் செய்யப்படும் ஆக்நேய யாகம் தான்.
ஏன் என்றால் மேற் சொன்ன நான்கு தன்மைகளும் அதற்கும் உள்ளன.
• ஆகையால், ஸௌர்ய வாக்கியத்தைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஆக்நேய யாகத்தின் அங்கங்களையே தான்
ஸௌர்ய யாகத்திலும் செய்ய வேண்டும் என்று ஒரு விதியை கல்பிக்கிறோம். இது தான் கல்பித வசந அதிதேசம் ஆகும் –

தர்ச பூர்ண மாச ஆறு யாகங்களை இஷ்டிகள் என்றும் அழைப்பர் –

ஸோம யாகங்கள்
ஸோம யாகங்கள் அனைத்துக்கும் ஜ்யோதிஷ் டோமம் என்ற ஸோம யாகம் தான் ப்ரக்ருதி,
அதிலிருந்து தான் அனைத்து ஸோம யாகங்களுக்கும் அங்கங்கள் சென்று அடைகின்றன.
• “விச்வஜித் யாகத்தைச் சேய்”,”அபிஜித் யாகத்தைச் செய்”, “எதிரிகளைக் கொலை செய்பவன் ச்யேந யாகத்தைச்
செய்ய வேண்டும்” என்று பல விதிகளால் பல யாகங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எல்லாம் எங்கிருந்து
அங்கங்களைக் கொண்டு வர வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
• இவற்றின் விதி வாக்கியத்தைப் பார்த்தால் ஒன்று தெரியும் – எந்த தேவதைக்காக இந்த யாகம் செய்யப்படுகிறது என்று இந்த
வாக்கியத்தில் இல்லை .-அதே போல் வேறே யாகம் உள்ளதா என்று பார்த்தால் – “ஸோமேந யஜேத” / “ஸோம லதையைக் கொண்டு
யாகம் செய்” என்று ஜ்யோதிஷ் டோமம் என் ற யாகத்தை விதிக்கும் வாக்கியத்திலும் தேவதை சொல்லப்டவில்லை , ஆனால்
ஜ்யோதிஷ் டோமத்தின் அனைத்து அங்கங்களும் விவரிக்கப் பட்டுள்ளன.
•ஆகையால், உத்பத்தி வாக்கியத்தில் தேவதை சொல்லப்படாமை என்ற ஒற்றுமையைக் கொண்டு விச்வஜித், அபிஜித், ச்யேநம்
முதலான யாகங்கள் ஜ்யோதிஷ் டோமத்தின் விக்ருதிகள் தான் என்று முடிவு செய்து, அதன் அங்கங்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கும்
அதிதேச வாக்கியத்தைக் கல்பிக்கலாம். ஆகையால், இவையும் ஸோம ரஸத்தால் செய்யும் யாகங்கள் ஆகின்றன

அதி தேசம் ஆகாதவை
• ஒரு யாகத்திலிருந்து மற்ற ஓரு யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யும் பொழுது,
கீழ்க் கண்டவற்றை அதிதேசம் செய்யக் கூடாது :
• (1) பலம் – ப்ரக்ருதி யாகத்துக்கு என்ன பலம் வேதத்தால் சொல்லப் பட்டதோ , அதையும் விக்ருதிக்கு எடுத்துச் சென்று,
விக்ருதிக்கும் அதே பலம் தான் என்று சொல்லக் கூடாது, ஏன் என்றால் விக்ருதியை போதிக்கும் வாக்கியத்திலேயே
அதற்குத் தனியாக பலம் சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால், ஆக்நேயம் என்ற ப்ரக்ருதி யாகம் ஸ்வர்கத்துக்காக செய்யப்பட்டாலும், அதன் விக்ருதியான
ஸௌர்ய யாகத்துக்கு ப்ரஹ்ம வர்சஸம் என்ற பலம் இருக்கலாம்
• (2) நியமம் – தர்சபூர்ணமாஸம் என் ற கர்மம் வாழ்நாள் முழுவதும் செய்யப்பட வேண் டும் என்று வேதம் உபதேசிப்பதால்
அது நித்ய கர்மம் ஆகிறது. ஆனால், அதிலிருந்து ஸௌர்ய யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது,
’வாழ்நாள் முழுவதும் செய்தல் வேண்டும்’ என்ற நியமத்தை எடுத்துச் செல்லக் கூடாது. ஸௌர்ய யாகத்தை ஒரு முறை செய்தாலே
ப்ரஹ் மவர்சஸம் என்ற பலம் கிட்டும்.
• (3) கர்த்தா – தர்சபூர்ணமாஸத்தைச் செய்பவன் ஸ்வர்ககாமன், அதாவது ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவன் என்று வேதம் கூறுகிறது.
அந்த கர்த்தாவை அதிதேசம் செய்து, ஸௌர்ய யாகத்தையும் ஸ் வர்கத்தில் ஆசை இருப்பவன் தான் செய்ய வேண் டும் என்று கூற முடியாது.
ஸௌர்ய யாகத்தின் பலத்தில் ஆசை இருப்பவன்,அந்த யாகத்தின் கர்த்தா ஆவான்.
• (4) ஸங்கம் – ஸங்கம் என் றால் சேர்க்கை என்று பபாருள். ஆக்நேய யாகம் தனியாக ஸ்வர்கத்தைக் கொடுக்காது,
தர்சபூர்ணமாஸத்தில் இருக்கும் மற்ற ஐந்ததோடு சேர்ந்து தான் கொடுக்கும். ஆனால் அதே போல் அதன் விக்ருதியான
ஸௌர்ய யாகமும் வேறு ஐந்து யாகங்களை எதிர்பார்க்க வேண்டும் என்று தேவை இல்லை
, அதாவது ப்ரக்ருதி யாகத்துக்கு இருக்கும் சேர்க்கைகளை அதிதேசம் செய்யக்கூடாது.

அதே போல் ப்ரக்ருதியில் காம்யமாக விதிக்கப்பட்ட குணங்களுக்கும் அதிதேசம் கிடையாது.
• தர்சபூர்ணமாஸ யாகத்தை நித்ய கர்மமாகச் செய்யும் பொழுது, தீர்த்தத்தை ஓர் இடத்திலிருந்து மற்ற ஓர் இடத்திற்கு
மாற்றும் ப்ரணயநம் என்ற கார்யத்துக்காக சமஸம் என்ற பாத்திரத்தை உபயோகிக்க வேண்டும்.
ஆனால், நித்ய கர்மமாக இல்லாமல், பசுக்கள் வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதத ப்ரணயநத்தை கோதோஹநம்
என் ற பாத்திரத்தால் செய்ய வேண்டும் என்று பார்த்திருக்கிறோம்.
இதில் சமஸம் என்பது தர்சபூர்ணமாஸ யாகத்தின் அங்கம், அதற்கு உதவுகிறபடியால். கோதோஹநம் என்பது நேரடியாக
பசு என்ற பலத்தின் அங்கம், தர்சபூர்ணமாஸத்தின் அங்கம்அல்ல.
• அதிதேசம் என் பது, ஒரு விக்ருதி யாகத்துக்கு அங்கங்களின் எதிர்பார்ப்பு, அதைத் தீர்ப்பதற்காக வேறே ஒரு ப்ரக்ருதி
யாகத்திலிருந்து அங்கங்களைக் கொண் டுவந்து சேர்ப்பது தான்.
ஆகையால், ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களை மட்டும் தான் அதிதேசம் செய்யமுடியும்.
• கோதோஹநம் என்பது தர்சபூர்ணமாஸத்தின் அங்கமே அல்ல, பசு என்ற பலத்தின் அங்கம். ஆகையால், கோதோஹநத்தை
ஸௌர்ய யாகத்திற்கு அதிதேசம் செய்ய முடியாது. சமஸத்தை மட்டும் தான் அதிதேசம் செய்ய முடியும்.
• ஆகையால், ஸௌர்ய யாகத்தில் சமஸத்தால் மட்டும் தான் ப்ரணயநம் செய்யலாம்.
ஸௌர்ய யாகத்தில் கோதோஹநத்தால் ப்ரணயநம் செய்தால் பசுக்களைப் பெற முடியாது

எது எதற்கு விக்ருதி
பதிதனாரு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக் கொண்டு இந்த்ரனுக்கு யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் விதிக்கிறது.
இப்பொழுது இந்த யாகம் எந்த யாகத்தின் விக்ருதி, அதாவது, எந்த யாகத்தின் அங்கங்களை இதில்
கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற ஸந்தேஹம் எழுகிறது.
• நேரடியாக அதிதேசத்தைப் போதிக்கும் எந்த வாக்கியமும் இல்லாதபடியால், இந்த யாகத்துக்கு வேறு எந்த யாகத்ததாடு
ஒற்றுமை உள்ளது என்று பார்த்து தான் அதிதேசம் செய்ய வேண்டும்.
• (1) இந்தனுக்காகச் செய்யப்படுதல் என்ற ஒற்றுமையை வைத்து தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காகச் செய்யப்படும்
பால் அல்லது தயிர் யாகத்தின் அங்கங்களைக் கொண்டுவரலாம்
• (2) பதினொரு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக் கொண்டு செய்யப் படுதல் என்ற ஓற்றுமையை வைத்துப் பார்த்தால்,
தர்சபூர்ணமாஸத்தில் பதினொரு கபாலங்களில் சமைக்கப் பட்ட புரோடாசத்தைக் கொண்டு
செய்யப்படும் அக்நீ ஷோமீயம் என் ற யாகத்தின் அங்கங்களைக் கொண்டுவரலாம்
• பூர்வ பக்ஷம் –
யாகத்தில் ப்ரதானமானது தேவதை தான், அவருக்காக யாகம் செய்கிறபடியால். ஆகையால், தேவதையில் ஒற்றுமையைக் கொண்டு தான்
அதிதேசம் செய்ய வேண்டும்.
• ஸித்தாந்தம் –
யாகம் என் றால் ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தைத் த்யாகம் செய்வது. த்ரவ்யம் கண் முன் உள்ளது,
த்யாகத்துக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. தேவதையோ மனதால் நினைக்கப் படுகிறார்,
அவ்வளவுதான், ஆகையால் த்யாகத்திற்கு நெருக்கமானவர் அல்ல. ஆகையால், த்யாகம் என்ற யாகத்துக்கு தேவதையைக் காட்டிலும்
அந்தரங்கமானது த்ரவ்யம் தான். ஆகையால், மேற் பசொன்ன இரண் டாவது பக்ஷத்தைத் தான் பின் பற்ற வேண்டும்

வேதத்தில் “தயிர், தேன், நெய், நீர் , சோளம், அரிசி, இவற்றால்
ப்ரஜாபதிக்கு யாகம் செய்ய வேண்டும்” என்ற வாக்கியம் 6 யாகங்களை விதிக்கிறது.
• இதில் தயிர் யாகம் தர்ச பூர்ண மாஸத்திலிருக்கும் இந்த்ரனுக்கான தயிர் யாகத்தின் விக்ருதி என்பதையும்,
நெய் யாகம் தர்சபூர்ணமாஸத்தில் பௌர்ணமி அன்று நெய்யை வைத்து செய்யப் படும்
உபாம்சுயாஜத்தின் விக்ருதி என்பதையும், சோளம் மற்றும் அரிசியை வைத்துச் செய்யும் யாகங்கள் தர்சபூர்ணமாஸத்திலிருக்கும்
ஆக்நேய யாகத்தின் விக்ருதிகள் என்பதையும் எளிதில் அறியலாம்.
• ஆனால் தேன் யாகமும் நீ ர் யாகமும் எவற்றின் விக்ருதிகள் என்று ஆராய வேண்டும்.
• பூர்வபக்ஷம் –
த்ரவமான த்ரவ்யத்தைக் கொண்ட து என்ற ஒற்றுமையைக் கொண் டு தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காகச்
செய்யப் படும் பால் அல்லது தயிர் யாகத்தின் விக்ருதிகள் தான் இவை
•ஸித்தாந்தம் –
நெய்யும் நெருப்பின் ஸம்பந்தத்தால் த்ரவமாக ஆகக் கூடியதான படியால் அதோடும் இவை இரண் டுக்கும் ஒற்றுமை
உள்ளது. மேலும், நெய்யோடு மற்ற ஓரு ஒற்றுமையும் உள்ளது -தேனுக்கு நீருக்கும் – அவற்றின் வழியே ஒளி புக முடியும் என்பது.
ஆகையால், மிகுந்த ஒற்றுமை இருக்கிறபடியால், தேன் யாகமும் நீ ர் யாகமும்,
தர்சபூர்ணமாஸத்தில் நெய்யால் செய்யப்படும் உபாம்சுயாஜத்தின் விக்ருதிகள் தான்.

• வேதத்தில் ஆமிக்ஷா என் ற த்ரவ்யத்தைக் கொண்டு செய்ய வேண்டிய யாகம் விதிக்கப்பட்டுள்ளது. அது எதன் விக்ருதி?
எந்த யாகத்தின் அங்கங்களை இதில் கொண்டு வர வேண்டும் என்று ஸந்தேஹம் ஏற்படுகிறது.
• ஆமிக்ஷா என்ற த்ரவ்யம் எந்த த்ரவ்யத்தோடு தொடர்பு / ஒற்றுமை உடையதோ , அந்த த்ரவ்யத்தால் செய்யப்படும் யாகத்தின்
விக்ருதியாகத் தான் இந்த ஆமிக்ஷா யாகம் இருக்க வேண்டும்.
• கொதிக்கும் பாலில் தயிரை சேர்த்து அதைத் திரிய வைத்தால் கிடைக்கும் கெட்டிப் பகுதிக்கு தான் ஆமிக்ஷா என்று பெயர்.
• பூர்வ பக்ஷம் 1 –
பால் தயிர் இரண் டிலிருந்தும் ஆமிக்ஷா தோன்றுகிற படியால், தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனைக் குறித்து
தயிராலும் பாலாலும் செய்யப் படும் யாகங்களின் அங்கங்களைத் தான் இந்த ஆமிக்ஷா யாகத்தில் சேர்க்க வேண்டும்
• பூர்வ பக்ஷம் 2 –
ஆமிக்ஷா என் பது தயிர் பால் என் ற இரண் டிலிருந்தும் தோன்றியிருந்தாலும், ஆமிக்ஷா கெட்டியாக இருக்கிறபடியால் அதற்கும்
தயிருக்கும் தான் மிகுந்த ஒற்றுமை உள்ளது. ஆகையால், தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காக செய்யப்படும் தயிர் யாகத்தும் விக்ருதி தான் இது
•ஸித்தாந்தம் –
ஆமிக்ஷா தயிர் பால் என் ற இரண் டிலிருந்தும் தோன்றியிருந்தாலும், பால் தான் முக்கியமானது. கெட்டி பாகம் த்ரவமான
பாகம் என்ற பிரிவை ஏற்படுத்த மட்டுமே தயிர் உதவுகிறது. ஆகையால் ஆமிக்ஷா யாகத்தில் பால் யாகத்தின் செயல் முறையைத்தான்
பின் பற்ற வேண்டும்-

அக்நாவிஷ்ணு என்ற தேவதைக்கு பதினொரு கபாலங்களில் சமைக்கப் பட்ட புரோடசத்தாலும் , ஸரஸ்வதி என்ற
தேவதைக்கு சரு என்ற த்ரவ்யத்தாலும், ப்ருஹஸ்பதி என்ற தேவதைக்கு சரு என் ற த்ரவ்யத்தாலும்
யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது .
• பூர்வ பக்ஷம் –
இங்கு மூன்று யாகங்கள் உள்ளன.
தர்சபூர்ணமாஸத்தில் பௌர்ணமி அன்றும் மூன்று யாகங்கள் உள்ளன. ஆகையால், இங்கிருக்கும் முதல் யாகம்
தர்சபூர்ணமாஸத்தில் முதல் யாகமான ஆக்நேய யாகத்தின் விக்ருதி தான்
•ஸித்தாந்தம் –
யாகங்களின் இடத்தில் ஒற்றுமையைக் காட்டிலும் அவற்றின் தேவதைகளின் ஒற்று மையைப் பார்ப்பது முக்கியம்.
இவ்விடத்தில் முதல் யாகம் அக்நி விஷ்ணு என்பவர்களைச் சேர்த்து ஒரு தேவதையாக உடையது. தர்சபூர்ணமாஸத்தில் முதல் யாகமான
ஆக்நேய யாகம் ஒரே ஒரு அக்நியை மட்டும் தேவதையாக உடையது.
ஆகையால் தேவதைப் பொருத்தம் இல்லை . தர்சபூர்ணமாஸத்தில் மூன் றாவது யாகம் ஆக்நீ ஷோமீயம், அதாவது அக்நி ஸோமன்
என்பவர்களைச் சேர்த்து ஒரு தேவதையாகவே உடையது. ஆகையால், அது தான் இங்கு சொல்லப்பட்ட யாகத்ததாடு அதிகமான ஒற்றுமை
உடையது. ஆகையால் இந்த முதல் யாகம் அங்கிருக்கும் மூன்றாவது யாகத்தின் விக்ருதி தான்

யாகம் -தேவதையைக் குறித்து த்ரவ்யம் தியாகம் -அதுக்கு அங்கமாக -அக்னியில் ஒரு பகுதியை சேர்ப்பது
ஹோமம் -அங்க அங்கி பாவம் இல்லை -மூன்றுக்கும் சமமான ப்ராதான்யம்

தர்வி ஹோமங்கள்
இது வரை அதிதேசம் ஏற்படும் இடங்களைப் பார்த்தோம். எட்டாவது அத்யாயத்தின் கடைசி பாதத்தில்
அதிதேசமே இல்லாத இடமான தர்வி ஹோமங்களைப் பற்றிச் சொல்லப் படுகிறது
• ‘ஜுஹோதி’ / ’ஹோமம் செய்ய வேண்டும்’ என்ற சொல்லால் விதிக்கப்படுபவை தர்வி ஹோமங்கள்.
பல தர்வி ஹோமங்கள் ஸ்ம்ருதி நூல்களிலும் ச்ருதி என்ற வேதத்திலும் சொல்லப் பட்டுள்ளன.
• பூர்வ பக்ஷம் –
தர்விஹோமங்களை விதிக்கும் வாக்கியங்களிலும் தேவதை சொல்லப் படாதபடியால், இவை ஸோம யாகத்தின் விக்ருதிகள்
•ஸித்தாந்தம் –
விதி வாக்கியத்தில் தேவதை சொல்லப்படாமை என் ற ஒற்றுமை இருந்தாலும், ஸோம யாகங்கள் யாகங்கள், இவை ஹோமங்கள்.
யாகங்களுக்கும் ஹோமங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
யாகங்களில் “வௌஷட் ” என்று சொல்ல வேண்டும், ஹோமங்களில் ஸ்வாஹா என்று சொல்ல வேண்டும். மேலும், தர்வி ஹோமங்களில்
“ப்ருதிவிக்கு ஸ்வாஹா அந்தரிக்ஷத்துக்கு ஸ்வாஹா” போன்ற மந்த்ரங்கள் சொல்லப் படுகிறபடியால், இவற்றில் தேவதைகள் உள்ளன, ஆகையால்
ஸோம யாகத்ததாடு ஒற்றுமையும் இல்லை .
• ஆகையால், ஒற்றுமையைக் காட்டிலும் வேற்றுமைகள் அதிகமாக உள்ளபடியால் எந்த யாகத்தின் செயல்முறையையும் இவற்றில் அதிதேசம்
செய்ய முடியாது.
• ஆகையால், தர்வி ஹோமங்களில் அதி தேசமே செய்ய முடியாது.
அவ்விடத்தில் எந்த அங்கங்கள் சொல்லப் பட்டுள்ளனவோ அவற்றை மட்டும் தான் செய்ய வேண்டும்.

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -1-10—

March 24, 2021

பாடம் -1-மீமாம்சைக்கு அறிமுகம்
தர்மம்
உலகத்தைத் தாங்குகிற படியால் தர்மம்
யாகம் ஹோமம் தானம் மரம் வெட்டுதல் குளம் வெட்டுதல் போன்ற நற் செயல்கள் தான் உலகத்தைத் தாங்குகின்றன
அந்த தர்மத்தைப் போதிக்கும் பிரமாணம் வேதங்கள் ஸ்ம்ருதிகள் முன்னோர் நடந்த வழிகள் ஆச்சாரங்கள்
மஹான்களின் திரு உள்ளங்கள் போன்றவை -ஸ்ம்ருதி ஸீலாம் தத் விதாம் –
வேதம் தர்மத்துக்கு மூலம்-வேதம் அகிலம் தர்மம் மூலம்-மனு

தர்மம் அர்த்தம் காமம் வீடு நான்கு புருஷார்த்தங்கள் -அர்த்தம் மூலம் தர்மம் -இதன் மூலம் காமம் வீடு
உலகம் தர்மத்தில் ப்ரதிஷ்டை யாய் இருக்கும் –
வித்யா -ததாதி விநயம் -விநயத்தால் யோக்யதை -தனம் தானே வரும் -ஸூகம் -தர்மம் கார்யம் செய்ய ஸூகத்தை பெறலாம் –
தாரணாத் தர்மம் -வேதா அகில தர்ம மூலம் —
உலகத்தை தாங்குவதால் தர்மம் -பண்டிதர்களால் தாங்கப் படுவதும் தர்மம் –
ஜபம் செய்யச் செய்ய பலம் –
மூலமும் அறிந்து அர்த்தமும் அறிந்து அனுஷ்ட்டித்து பலன் –
வேதவதி இதி வேதா -விஷயங்களைப் போதிப்பதால் வேதம் –
ஸாஸனாத் இதி ஸாஸ்த்ரம் –
வேதம் ஓதி -அர்த்தம் அறியாமல் இருந்தவன் சுமை தங்கி களுக்கு சமம் –

படித்தால் புண்யம் என்றது அல்ல -கற்றால் மட்டும் போதாது -அவற்றின் பொருளை அறிய வேண்டும்
அதை அறியவே 4-வேதங்களும்-6-அங்கங்களும்-8- உப அங்கங்களும் -18 வித்யா ஸ்தானங்கள் –
உப அங்கங்களில் ஒன்றே மீமாம்ஸா

வேதம் அசன்னிகர்ஷ்ட -அர்த்தம் போதிக்கும்
உலகத்தால் அறியப்படும் விஷயம் போதிக்காது -விபர்யமாகவும் போதிக்காது
உலகம் எப்படிப் பட்டது அறிய நியாய சாஸ்திரம் தேவை

மீமாம்ஸா -ஞாதும் இச்சா-அறிய வேண்டும் என்ற ஆசை -அதற்கு செய்யும் ஆராய்ச்சி -விசாரம்
மீமாம்ஸா என்ற சொல்லுக்கு விசாரம் என்றே பொருள் –
சாதாரணமான விசாரம் அல்ல
பூஜ்யமான-வணங்கத் தக்க வேதத்தைப் பற்றிய விசாரம் -வேதார்த்த விசாரமே மீமாம்சை –
தர்ம ஞானத்தைப் பெற செயல் முறை -இதி கர்தவ்யதா —
வேதம் என்ற கருவியைக் கொண்டு தர்ம ஞானம் அறிய மீமாம்சை என்கிற சாஸ்திரம் தேவை
வேதத்தைக் கொண்டு மீமாம்சை என்கிற ஆராய்ச்சி செய்தால் தர்ம ஞானம் கிடைக்கும் என்றவாறு

வாக்ய சாஸ்திரம் -மீமாம்சை -விசார சாஸ்திரம் -பூஜ்ய விஷய விசாரம் –
வியாகரண சாஸ்திரம் -பத சாஸ்திரம்
வேதத்திலே மீமாம்சம் வார்த்தை -விசாரம் செய்கிறார்கள் –
மறை -அர்த்தங்களை மறைக்கும் -ஸ்ரத்தை பக்தி உடன் அறிந்தால் தான் அறிய முடியும் –

மீமாம்சையின் பரம்பரை
பகவான் பிரம்மாவுக்கு உபதேசம்
ப்ரம்மா -பிரஜாபதி -இந்திரன் -ஸூர்யன் -வசிஷ்டர் -பராசரர் -வியாசர் –
வியாசர் -மகரிஷி – ஜைமினி -மீமாம்ஸா ஸூத்ரங்கள் -சபரர் -சாபர பாஷ்யம் –
சபரர் -சாபர பாஷ்யம்-போதாயனர் -உப வர்ஷர் -தேவ ஸ்வாமி -பவ தாசர் -பர்த்ரு மித்ரர் –

சாம வேதம் கற்றவர் ஜைமினி -பூர்வ மீமாம்ஸா -2700-ஸூத்ரங்கள் இயற்றி அருளி உள்ளார்-கர்ம காண்டம் -கர்ம மீமாம்ஸா –
ப்ரஹ்ம காண்டம் -உத்தர பாகம் -ஆராதன ரூபமான கர்மம் -கைங்கர்யமாக –
வேதாந்தம் -உப நிஷத் -வியாஸரே ஸூத்ரங்கள் இயற்றி அருளி உள்ளார் -ப்ரஹ்ம மீமாம்ஸா -உத்தர மீமாம்ஸா –
மீமாம்ஸா -வேதாந்தம் என்று இவற்றை பிரித்தும் சொல்வர்
போதாயனர் இரண்டுக்கும் விருத்தி எழுதி உள்ளார் –

சபரர் -சாபர பாஷ்யம்-இதே மூன்றாக பிரிந்து –
1-குமாரில பட்டர் -பத்தாம் நூற்றாண்டு-பாட்ட மதம் -ஸ்லோக வார்த்திதம் -தந்த்ர வார்திகம்-கத்யமாக -டுப்டீகா -ஸங்க்ரஹமாக-நூல்கள்
2-பிரபாகரர் -ப்ராபகர மதம் -குரு மதம்-லக்வீ-ப்ருஹதீ -நூல்கள்
(அங்கும் சொல்லப்பட வில்லை இங்கும் சொல்லப் பட வில்லை இரண்டு இடத்திலும்
அபி து அதிர அபி நா யுக்தம் பிரித்து -நீயே குரு என்று இவரை சொல்ல குரு மதம்)
3-முராரி மிஸ்ரர் -மிஸ்ரா மதம் -அங்கத்துவ நிருத்தி

பாட்ட மதஸ்தர்கள்
1-பார்த்த சாரதி மிஸ்ரர் நூல்கள் -நியாய ரத்ன மாலை -நியாய ரத்நாகாரம் -ஸாஸ்த்ர தீபிகை –
2-கண்ட தேவர் நூல்கள் -பாட்ட கௌஸ்துபம் -பாட்ட தீபிகை –பாட்ட ரஹஸ்யம் –

பிரபாகரர் மதஸ்தர் -சாலிகா நாதர் -பிரகரண பஞ்சிகை –

பிரகரண கிரந்தங்கள்
1-பவ நாதர் -நியாய விவேகம் –
2-காகா பட்டர் -பாட்ட சிந்தாமணி –
3-ஆப தேவர் -மீமாம்ஸா நியாய பிரகாசம் –
4-சங்கர பட்டர் -மீமாம்ஸா பால பிரகாசம்
5-லௌகாஷி பாஸ்கரன் -அர்த்த ஸங்க்ரஹம்
6-கிருஷ்ண யஜ்வா –மீமாம்ஸா பரிபாஷை
சேஸ்வர மீமாம்சை தேசிகர் கிரந்தமும் உண்டே –
12 அத்தியாயங்கள் -2700-ஸூத்ரங்கள்-ஜைமினி -சபரி ஸ்வாமி வியாக்யானம் –
ஒரு வாரம் ஒரு அத்யாயம் பார்ப்போம் –

—————-

பாடம் -2-மீமாம்ஸ ஸாஸ்த்ர சுருக்கம்

பிரகரண கிரந்தங்கள்
அர்த்த ஸங்க்ரஹம்
நியாய பிரகாசம்
மான மேய உதேயம்
நியாய கௌதம ஸூத்ர -மூல கிரந்தம்
வைசேஷிகர் கணாதர் ஸூத்ர -மூல கிரந்தம்
மீமாம்ஸ -ஜைமினி ஸூத்ர -மூல கிரந்தம்
வேதாந்தம் -பாதாயனர் வேத வியாசர் ஸூத்ர -மூல கிரந்தம்
வியாகரணம் -பாணினி -ஸூத்ர -மூல கிரந்தம் –
பூஜ்யமான வேத விசாரம் மீமாம்ஸா முன்பே பார்த்தோம்
விசாரம் செய்து வேதார்த்த ஞானம் பெறுவோம்
தொடுத்து வைக்கும் கயிறு நூல் போல் ஸூத்ரம் -அர்த்தங்களைக் கோவையாக கோத்து கொடுக்கும் –

ஸூத்ரம் -அதிகரணம்

அல்ப அக்ஷரம் -எண்ணிக்கையில் குறைந்து
அசங்விப்தம் -ஸ்பஷ்டமாக காட்டும்
சாரவத் -ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லும்
விஸ்வதோ முகம்-appilcable every where
அஸ்தோபம் -வியர்த்த அக்ஷரங்கள் இல்லாமல் -சாரியை போல் ஸ்தோத்ரங்களில் ஸ்தோப அக்ஷரங்கள் இருக்குமே
சந்தஸ்ஸுக்களை பூர்த்தி பண்ண –
அநவத்யம்-அவத்யம் குறைகள் இல்லாமல் இருக்கும்

குறைந்த எழுத்துக்களைக் கொண்டதாயும்
சந்தேகத்துக்கு இடம் இல்லாததாயும்
ஆழ்ந்த பொருள்களை உடையதாயும்
பல இடங்களில் பயன் படுத்துவதாயும்
பயன் அற்ற எழுத்துக்கள் இல்லாததாயும்
பிழை இல்லாததாயும் -இருப்பது ஸூத்ரம்

லகு -சிறியது -எளிமை
பூஜிதார்த்தா நி –பூஜ்யமான கருத்துக்களை
ஸ்வல்ப அக்ஷரா பதாநி –
ஸர்வதா சாரா பூதா நி

எளிதாகவும்
பல பொருள்களைக் கோடி காட்டுவதாகவும்
குறைந்த எழுத்துக்களையும் சொற்களையும் உடையதாகவும்
ரஸமாகவும் இருப்பதே ஸூத்ரங்கள்

அதிகரணம்
ஒரே விஷயத்தை ஆராயும் ஸூத்ரங்களின் கூட்டத்திற்கு ஓரு அதிகரணம் என்று பெயர்.
அதிகரணம் என்பதற்கு ஐந்து பகுதிகள் உண்டு:

1. விஷயம் – ஆராயப்படும் வேத வாக்யம்
2. விசயம் – அந்த வாக்யத்தின் பொருளில் உள்ள சந்தேகம்
3. பூர்வ பக்ஷம் – எதிராளி கூறும் யுக்திகள்
4. உத்தரம் -ஸித்தாந்தம் –நாம் சொல்லும் யுக்திகளும் முடிவும்
5. ஸங்கதி –முன் அதிகரணத்தோடு இந்த அதிகரணத்துக்கு உள்ள தொடர்பு.-906-ஸங்கதிகள் உண்டு-907 அதிகரணங்கள் –

மஹர்ஷி ஜைமினி தன் ஆசார்யர்கள் இடம் கற்ற மீமாம்ஸ
சாஸ்த்ரத்தை பிற்காலத்தவர் களின் நன்மைக்காக ஸூத்ரங்களாக எழுதி வைத்தார்.
• மீமாம்ஸா சாஸ்த்ரத்தில் 12 அத்யாயங்கள் உள்ளன.
• ஒவ் ஓரு அத்யாயத்திலும் 4 பாதங்கள் இருக்கும் (பாதம் என்றால் கால் பகுதி என்று பொருள்).
3ஆவது 6ஆவது மற்றும் 10ஆவது அத்யாயங்களில் மட்டும் 8 பாதங்கள் உண்டு.
ஆகையால் மொத்தத்தில் மீமாம்ஸா சாஸ்த்ரத்தில் 60 பாதங்கள் உள்ளன.
• இந்த 60 பாதங்கைிலும் சேர்த்து 907 அதிகரணங்கள் உள்ளன,–
எனவே 1000 நியாயங்கள் கொண்டது மீமாம்ஸா சாஸ்திரம் என்பர்
• அவர் எழுதிய ஸூத்ரங்களின் எண்ணிக்கை 2745–சில மாறுதல்களும் உண்டு இந்த எண்ணிக்கையில் –

1 -அத்யாயம் -8 4 10 20–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -42-அதிகரணங்கள்
2-அத்யாயம் – 18 13 14 2–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் –47–அதிகரணங்கள்
3 -அத்யாயம் -15 19 20 21 20 16 23 23–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -157-அதிகரணங்கள்
4 -அத்யாயம் -17 13 20 12-பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -62-அதிகரணங்கள்
5 -அத்யாயம் -18 12 15 9–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -54-அதிகரணங்கள்
6 -அத்யாயம் -13 11 21 14 21 7 13 9–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் -ஆக மொத்தம் -99-அதிகரணங்கள்
7 -அத்யாயம் -5 1 14 3-பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -23-அதிகரணங்கள்
8 -அத்யாயம் -19 6 6 4–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -37-அதிகரணங்கள்
9 -அத்யாயம் -18 20 14 15–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -67-அதிகரணங்கள்
10 -அத்யாயம் -11 34 20 27 26 22 20 19-பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -179-அதிகரணங்கள்
11 -அத்யாயம் -11 16 16 21–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -64-அதிகரணங்கள்
12 -அத்யாயம் -21 15 16 16–பாதம் தோறும் உள்ள அதிகரணங்கள் –ஆக மொத்தம் -68-அதிகரணங்கள்-

12-அத்தியாயங்களின் பொருள் -த்வாதஸ லக்ஷணீ -அத்தியாயங்கள் மீமாம்ஸையில் உண்டே –
மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் ஒரே பொருள் – ’தர்மம்’.
அதிலும்
1. ப்ரமாணம் – தர்மத்தை அறியும் ப்ரமாணங்களைப் பற்றி
2. பேதம் – தர்மங்களுக்குள் வேறுபாட்டை அறியும் முறைகள்
3. சேஷத்வம் – ஒரு செயல் மற்ற ஓன்றுக்கு அங்கமாக /துணையாக / உறுப்பாக ஆகுதல்
4. ப்ரயுக்தி – பல இடங்களில் உபயோகப்படும் ஒரு பொருளின் முக்கியமான கார்யம் எது என்று நிரூபித்தல்
5. க்ரமம் – வைதிகச் செயல்களைச் செய்யும் வரிசை
6. அதிகாரம் – வைதிகச் செயலைச் செய்யும் தகுதிகள்
7. ஸாமாந்ய அதிதேசம் – ஓரிடத்தில் உபதேசிக்கப்பட்ட செயல் முறையை மற்ற ஒரு இடத்தில் ஏறிடுதல்
8. விசேஷ அதிதேசம் – எங்கிருந்து எங்கு ஏறிட வேண்டும்?
9. ஊஹம் – ஏறிடும் போது செய்ய வேண்டிய சிறு மாற்றங்கள்
10. பாதம்– ஏறிடும் பொழுது தவிற்க வேண்டியவை / நிருத்தப்பட வேண்டியவை
11. தந்த்ரம் – பல வற்றுக்கு உப யோயாகப்படும் ஒரு செயலை அனைத்துக்காகவும் ஒரு முறை செய்தல்
12. ப்ரஸங்கம் – ஒன்றுக்காகச் செய்யப்பட்ட செயலால் மற்ற ஓன்று பயன் பெற்றபடியால் அதற்காகத் தனியாகச் செய்ய வேண்டாமை

நியாயமத –அதிகரண ஸ்லோகம் -பூர்வ பக்ஷம் உத்தரம் விளக்கி ஒரு ஸ்லோகம்
ஸங்க்ரஹ ஸ்லோகம்
தர்மோ துவாதச லக்ஷன்யாம் உத்பாத்யா -தர்மம் அறியவே –
மீமாம்ஸா நியாயம் -ஒரு கருத்து ஒரு அதிகரணத்துக்கு -907 நியாயங்கள் உண்டே
பிரமாணம் -மாணா தீனா மேய ஸித்தி -தர்மம் அறியும் கருவி -போதிக்கும் உபகரணம் –
வேதம் அகில தர்ம மூலம் -அஷ்ட பிரமாணங்கள் தர்மம் அறிய

அடுத்து பேதம் -வேறுபாடு
கர்மாக்களைச் செய்யும் முறைகள் வேதம் போதிக்கும் -செய்யக் கூடாதவற்றையும் சொல்லும் –
ஆறு வழிகள் சொல்லி வேறுபாட்டை உணர்த்தும்
அங்கமாகவும் ஸ்வ தந்த்ரமாகவும் இருக்குமே கர்மாக்கள்

அடுத்து -அங்கத்வம் -சேஷத்வம்
பிரதான யாகம் -தேவதையைக் குறித்து த்ரவ்யம் தியாகம் தானம் பண்ணுவதே யாகம் -முன் செய்வது எல்லாம் அங்கங்கள்
ஆவாஹனம் -செய்து -பிரசாதம் செய்ய பல கர்மாக்கள் –
பின்பு செய்யும் அங்கங்களும் உண்டே -அனைத்தும் யாக பிரயோகங்கள்

அங்க வஸ்திரம் க்ரஹஸ்தனுக்கு
தூசியும் தட்டலாம் -முகமூடியாகவும்
பிரதானம் ஒன்றே
phone -பலவற்றுக்கும் -உபயோகம்
கபாலம் -ப்ரோடாஸம் பண்ண -உமி நகற்றவும் உபயோகம் -ப்ரயோஜம் ஒன்றே -இத்தை நான்காவது அத்யாயம் சொல்லும்

அடுத்து எந்த வரிசையில் -க்ரமம் -சொல்லவே அடுத்த அத்யாயம் -வேத வாக்கியங்கள் கொண்டு அறிவோம்
வைதிக கர்ம க்ரமம்

அடுத்து -அதிகாரம் -யோக்யதை –
சுவர்க்கம் அடைய ஒரு யாகம் –
ராஜா பெரிய அரசு கிடைக்க யாகம் –
சில இடங்களில் சொல்லப்படாத யோக்யதை இருக்கும்
பலராக செய்யும் யாகங்களும் உண்டு -அவற்றுக்கும் அதிகாரம்

அதி தேசம் -அடுத்து -சோறு பொங்கல் -கொஞ்சம் மாற்றம் -அது மட்டும் சொல்வது போல்
யாக அங்கங்கள் விவரணம் சொல்லப்பட்டதை உபயோகித்து -மாற்றங்களை சொல்வது போல்
இது தான் ஏழாவது அத்யாயம் –

விசேஷ அதி தேசம்
கீழே பொதுவானவை –
இதில் விசேஷங்கள்

ஊஹம்-மிளகாய் -இல்லாமல் மிளகு போல் மந்த்ர மாற்றங்கள்
அக்னிக்கு இந்த மந்த்ரம்
சூரியனுக்கு சொல்லும் மந்த்ரம் செயல் முறைகளில் கொஞ்சம் மாற்றம் -தகுந்தாற் போல்

செய்யாமல் விட வேண்டியவையும் உண்டே -இத்தை அடுத்த அத்யாயம் சொல்லும் -பாதம்
அரிசி -ஓர் இடத்தில்
தங்க தூள்கள் -வேறே இடத்தில்
உரலில் போட்டு இடிக்க வேண்டாமே –
இவற்றைச் சொல்லுவதே பாகம் –
அரச மரம் -ஓர் யாகம் -பனை மரம் வேறே இடத்தில் இருக்குமே

தந்த்ரம் -ஒரே செயல் பலவற்றுக்கும் அங்கமாக –
அநேக உத்தேச்யமாக ஸக்ருத் செய்வது

பிரசங்கம் -அடுத்து
ஒருவருக்காக போகும் பொழுது நடுவில் ஒருவரை இறக்கி விடுவது
ஒரே கார்யம் -பலரும் பெறலாம் -இதுவே பிரசங்கம் –
ஒரு யாகத்துக்கு செய்த செயலே மற்ற ஒன்றுக்கும் உபயோகப்பட்டால் அதுவே பிரசங்கம் –

————–

பாடம் -3-மீமாம்ஸா சாஸ்திரத்தின் தேவை
தர்மத்தின் பிரமாணங்கள்

• மீமாம்ஸா சாஸ்த்ரம் வேதத்தின் பொருளைப் பற்றி விசாரம் செய்வதன் மூலம் தர்மத்தைப் பற்றி அறிவிக்கிறது
• ஒரு பொருளைப் பற்றி ஆராய்வதற்கு முன், அதை நாம் அறியப் பயன்படுத்தும் ப்ரமாணம் எது என்று
முடிவு செய்ய வேண்டும். அதற்காகத் தான் ஜைமிநி மஹரிஷி முதல் அத்யாயத்தில் தர்மத்தை
அறிவிக்கும் ப்ரமாணங்களைப் பற்றிக் கூறுகிறார்.
• தர்மத்தை போதிக்கும் ப்ரமாணங்கள் எட்டு. அவை
முதல் அத்யாயத்திலிருக்கும் நான்கு பாதங்களால் சொல்லப்படுகின்றன.
• முதல் பாதத்தில் – (1) விதி
• இரண்டாம் பாதத்தில் – (2) அர்த்த வாதம், (3) மந்த்ரம்
• மூன்றாம் பாதத்தில் – (4) ஸ்ம்ருதி, (5) ஆசாரம் (சான்றோர் நடத்தை )
• நான்காம் பாதத்தில் – (6) நாமதேயம், (7) வாக்ய சேஷம், (8) ஸாமர்த்யம் –

• முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில், ’விதி’ என்ற ப்ரமாணத்தைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது.
• ’விதி’ என்றால் ’கட்டளை ’ என்று பொருள்–பர்யாய சொற்கள் -கட்டளை –
உதாஹரணம் – ஆசார்யன் சிஷ்யனைப் பார்த்து ’மாட்டை ஓட்டிக் கொண்டு வா ’ என்று சொல்லும் வாக்யம்
• சோதநா, உபதேசம், விதி என்ற சொற்கள் எல்லாம் ஒரே பொருளை உடையவை தான்
• விதி என்பது இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும் –
• (1) அஜ்ஞாத ஜ்ஞாபநம் – அறியப்படாத ஒரு விஷயத்தை அறிவித்தல்
• (2) அப்ரவ்ருத்த ப்ரவர்தநம் – ஒரு செயலில் ஈடுபடாத ஒருவரை அந்தச் செயலில் மூட்டுதல் / தூண்டுதல்
• எடுத்துக் காட்டு – “மாட்டை ஓட்டிக் கொண்டு வா ” என்று ஆசார்யன் சொல்லும் வார்த்தை -(விதி),
சிஷ்யன் இதற்கு முன் அறியாத ’மாட்டை அழைத்து வர வேண்டும்’ என்பதை அறிவிக்கிறது.
மாட்டை அழைத்து வருதல் என்ற செயலில் அவனைத் தூண்டுகிறது.

வேதம் –
1-மந்த்ரம் பாகம் -கார்யம் சொல்லும் பொழுது சொல்ல வேண்டியவை
2-ப்ராஹ்மண பாகம் -இதில் ஓன்று விதி
ஜ்யோதிஷ்டோமம் யாகம் செய்வாய் ஸ்வர்க்கம் போக வேண்டுமானால் – விதி வாக்கியம் –
கட்டளைகளால் தர்மம் காட்டிக் கொடுக்கும் இந்த விதி வாக்கியங்கள் –

ஸ்லோக வார்த்திகம் குமாரில பட்டர் எழுதியது –

விதியின் வகைகள்
விதி மூன்று வகைப்படும் – 1-அபூர்வ விதி -2- நியம விதி, 3-பரிசங்க்யா விதி

• (1) அபூர்வ விதி – நாமாக அறிய முடியாத புதிதான விஷயத்தை அறிவிக்கும் விதி அபூர்வ விதி ஆகும்.
எடுத்துக் காட்டு –
யாகத்திற்கு அரிசியை சேகரிக்க நெல்லை எடுத்து, உலக்கையால் இடிக்க வேண்டும்.
அதற்கு முன் -க்ரீஹீ ப்ரோஷதி ’நெல்லை ப்ரோக்ஷிக்க வேண்டும்’ என்று ஒரு வேத வாக்யம் சொல்லுகிறது.
ப்ரோக்ஷணம் செய்வது லௌகிகத்தில் இல்லையே -இத்தை வேதம் சொல்வதால் அபூர்வ விதி –
இந்த வாக்யம் இல்லா விட்டால், ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும் என்று நாம் அறியவே முடியாது.
ஆகையால், அபூர்வமான இந்த விஷயத்தைச் சொல்லும் இந்த விதி அபூர்வ விதி ஆகும்

• (2) நியம விதி – ஒரு பயனை அடைய பல வழிகள் நமக்குத் தெரிந்திருந்தால், நம் இஷ்டத்துக்கு
ஏதோ வழியில் செய்யக்கூடாது என்பதற்காக அந்த வழிகளுக்குள் ஒரு வழியை வேதமே உபதேசிக்கும்.
இப்படி ஒரு நியமத்தைச் செய்து தருகிறபடியால் இதற்கு நியம விதி என்று பெயர்.
எடுத்துக் காட்டு –
நெல்லிலிருந்து அரிசியை சேகரிக்க உலக்கையால் அடித்தல், நகத்தால் கிழித்தல் போன்ற
பல வழிகள் உண்டு என்று நாமே அறிவோம். -அதை வேதம் சொல்லத் தேவையில்லை .
ஆனால், -அவஹந்தி -’நெல்லை இடிக்க வேண்டும்’ என்ற விதி உள்ளது. இது எதற்கு என்றால்,
நாமாக இஷ்டப்பட்டு நகத்தால் கிழித்து அரிசியை எடுக்க் கூடாது,
உலக்கையால் இடித்துத் தான் ஆக வேண்டும் என்ற நியமத்தை போதிப்பதற்காக –
ஆகையால் -இடித்துத் தான் -என்பதால் – இது நியம விதி.
மற்ற வழிகளால் கூடாது என்பதை அர்த்தமாக அறிகிறோம் இதில் –

• (3) பரிஸங்க்யா விதி – ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்ய வாய்ப்பு இருக்கும் பொழுது,
அவற்றில் சில வற்றை வேதமே தள்ளத் தக்காத உபதேசிக்கும்.
தள்ள வேண்டியவை தள்ளப் பட்டால் செய்ய வேண்டியவை எவை என்று தானாகவே நாம் அறியலாம்.
இந்த ’நீக்குதல் / தவிர்த்தல்’ என்பதற்கு தான் பரி சமக்யா என்று ஸம்ஸ்க்ருதத்தில் பெயர்.
ஆகையால் இந்த விதி பரிசம்க்யா விதி என்று அழைக்கப்படுகிறது.
• எடுத்துக்காட்டு – ஒரு இடத்தில் பொய்யோ உண்மையோ பேச வாய்ப்பிருக்கும் பொழுது,
வேதம்-ந அநிருத்தம் வத – ’பொய்யைப் பேசக் கூடாது’ என்று நமக்கு உபதேசிக்கிறது.
இப்படி ஒரு வழியைத் தவிர்த்து விட்டால், தானாகவே உண்மையைத் தான் பேச வேண்டும்
என்று நமக்குத் தெரிந்து விடும். -ஆகையால் இதி பரிசம்க்யா விதி.
• இந்த இடத்தில், ’சத்யம் தான் பேச வேண்டும்’ என்று வேதம் சொல்லியிருந்தால் அது நியம விதி,
ஏன் என்றால் செய்ய வேண்டிய ஒன்றை வேதம் சொல்லி யுள்ளது.
’பொய் பேசாதே ’ என்று சொன்னபடியால் இது பரிசம்க்யா விதி, -ஒரு பொருளைத் தவிர்ப்பதைப் பற்றிச் சொல்லுகிறபடியால்.
சத்யம் தான் சொல்ல வேண்டும் என்று ஆர்த்தமாக அறிகிறோம் –

மீமாம்ஸா சாஸ்த்ரத்தில் முதல் அதிகரணம் –
ஜிஜ்ஞாஸா அதிகரணம்-

முதல் பாதத்தால் விதி கட்டளை கொண்டு தர்மம் அறியலாம்
இது தர்க்க பாதம் -இதில் விதி வாக்கியங்கள் இருக்காது
விஷயம் -விஷயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் சங்கதி க்கு பதில் பிரயோஜனம்
முதல் அதிகரணம் -ஒரே ஸூத்ரம் -ப்ரதிஜ்ஜா -ஸூத்ரம்
அது அத தர்ம ஜிஜ்ஞாசா –
அடுத்து ஆகையால் தர்மத்தை பற்றி விசாரம் செய்ய வேண்டும்
வேத அத்யயனத்து அடுத்து
வேத அத்யயனம் செய்ததால்
தர்ம விசாரம் -ஜிஜ்ஞாசா -ஞாதும் இச்சா -விசாரம் -லக்ஷணை யால்

இந்த அதிகரணத்தில் மீமாம்ஸா சாஸ்த்ரம் ஆரம்பிக்கப்பட வேண்டுமா அல்லவா எனறு விசாரிக்கப்படுகிறது.
• விஷய வாக்யம் -ஸ்வ அத்யாயம் அத்யே தவ்ய-தன்னுடைய வேத பாகம் -கற்க வேண்டும் –
’ஒருவன், அவனவன் முன்னோர்கள் பயின்ற வேதத்தை , அத்யயநம் செய்ய வேண்டும்’ என்று வேதம் சொல்லுகிறது.
• அத்யயநம் என்றால் வேதத்தை ஒரு ஆசார்யன் சொல்லச் சொல்ல, மாணவன் அத்தை திரும்பச் சொல்லுதல்.
• ஸந்தேகம் – இந்த விதி வாக்யம் வேதத்தை அத்யயநம் செய்தால்
புண்ணியம் பெற்று ஸ்வர்கத்தை அடையலாம் என்று சொல்கிறதா? அல்லது
வேதத்தை அத்யயநம் செய்தால் அதன் பொருளை அறியலாம்,
அதாவது, அர்த்த ஜ்ஞாநத்தைப் பெறலாம் என்று சொல்கிறதா? –
அத்யயநம் செய்ததன் பயன் ஸ்வர்கமா? அர்த்த ஜ்ஞாநமா?
• அத்யயநம் செய்யப்படுவது ஸ்வர்கத்துக்காக என்றால், வேதத்தின் மூலத்தைக் கற்றால் போதும்,
பொருள் அறியத் தேவையில்லை என்பதால் மீமாம்ஸா சாஸ்த்ரம் தேவையில்லை
. அத்யயநம் செய்வது வேதத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக என்றால், சந்தேகங்கள் இல்லாமல்
வேத்த்தின் பொருளை அறிய மீமாம்ஸை என்கிற விசாரம் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.

பூர்வ பக்ஷம் –
அத்யயநம் செய்வது அர்த்த ஜ்ஞாநத்துக்காக என்று சொல்ல முடியாது.
’அர்த்த ஜ்ஞாநத்துக்காக அத்யயநம் செய்ய வேண்டும்’ என்று சொல்லும் இந்த விதி அபூர்வ விதியா? நியம விதியா?
• அபூர்வ விதி என்று சொல்ல இயலாது – ஏன் என்றால் இதில் அபூர்வமான விஷயம் ஒன்றும் இல்ஸல.
ஒரு நூலை அத்யயநம் செய்தால் அதன் பொருளை அறியலாம் என்று உலகத்தில் நாம் அறிந்தது தான்.
• நியம விதி என்றும் சொல்ல முடியாது, ஏன் என்றால் நியம விதிகளில்
நியமத்தை மீறினால் என்ன சங்கடம் நேறிடும் என்று சொல்ல வேண்டும்.
• எடுத்துக் காட்டு –
நாம் முன்னால் பார்த்த எடுத்துக் காட்டில், நெல்லை உலக்கையால் குத்தி, உமியை நீக்கி,
அரிசியை எடுத்து, சோறு சமைத்து, தேவதைக்கு சமர்பித்தால் தான் புண்ணியம் ஏற்படும்,
அதன் மூலம் தான் நாம் ஆசைப்படும் பயன் கிட்டும்,
நகத்தால் கீறி அரிசியை எடுத்து சோறு சமைத்து தேவதைக்குக் கொடுத்தால்
புண்ணியம் ஏற்படாது, பயனும் கிட்டாது என்று சொல்லலாம்.
• அதைப் போல் இவ்விடத்தில் சொல்ல இயலாது. அர்த்த ஜ்ஞாநம் என்பது அநுஷ்டானத்திற்காக.
அத்யயநம் செய்து அர்த்த ஜ்ஞாநம் பெற்றாலும் சரி, நாமாகப் படித்துப் பெற்றாலும் சரி, அநுஷ்டானத்தைக்
குறையின்றி செய்யலாமே .ஆகையால் இது நியம விதி ஆக முடியாது,
• ஆகையால், அத்யயநம் செய்வது ஸ்வர்கத்துக்காக என்று தான் சொல்ல வேண்டும்.
பயன் சொல்லப்படாத செயல்கள் அனைத்துக்குமே ஸ்வர்கம் தான் பலன் என்பது மீமாம்ஸையில் கோட்பாடு.

அதீத்ய ஸ்நாயாத் -ஸ்ம்ருதி -சமா வர்த்தநம்-ஹோமம் பண்ணி பூர்த்தி -அத்யயனம் செய்த உடன் செய்ய வேண்டும் –
அர்த்தத்துக்கு நடுவில் மீமாம்ஸா படி- சொல்ல வில்லை
எனவே வேதம் அத்யயனம் அர்த்தத்துக்கு இல்லை-ஸ்வர்க்கத்துக்காகவே என்பர் பூர்வ பக்ஷி

• ஸித்தாந்தம் –
அத்யயநம் செய்வது அர்த்த ஜ்ஞாநத்திற்காகத் தான்.
• இது நியம விதி தான். எந்தக் குறையும் இல்லை.
• நியமத்தை மீறினால் ஏற்படும் குறையை இப்படிச் சொல்ல வேண்டும்
அத்யயநத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்ட அர்த்த ஜ்ஞாநத்தைக் கொண்டு அநுஷ்டானம் செய்தால் தான்,
செய்யப்பட்ட வைதிக கர்மா புண்ணியத்தைக் கொடுத்து அதன் மூலம் நாம் ஆசைப்பட்ட பலனைக் கொடுக்கும்.
நாமாக புத்தகத்தைப் படித்து அர்த்த ஜ்ஞாநம் பெற்று, அதன் மூலம் அநுஷ்டானம் செய்தால்,
அந்தச் செயல் எந்த புண்ணியத்தையும் கொடுக்காது.
• அத்யயநத்துக்கு ஸ்வர்கம் தான் பலம் என்று சொல்லக் கூடாது.
ஒரு செயலுக்கு த்ருஷ்டமான (கண்ணுக்குப் / புலன்களுக்குப் புலப்படும்) பயன் இருக்கும் பொழுது,
பாபம் புண்யம் போன்ற அத்ருஷ்டமான ஒன்றை பலன் என்று சொல்லக் கூடாது.
• நாம் உண்ணும் ஒரு மருந்து, த்ருஷ்டமான முறையில் ஏதோ ரஸாயனங்களை உடலில் புகுத்தி,
நோயைப் போக்குகிறது என்று சொல்ல முடியும் பொழுது, மருந்து உண்டதால் புண்ணியம் கிடைத்தது
அதனால் நோய் நீங்கியது என்று சொல்லக் கூடாது
• அதே போல் தான் அத்யயநத்தினால் அர்த்த ஜ்ஞாநம் என்ற த்ருஷ்டமான பலன் இருக்கும் பொழுது,
அத்ருஷ்டமான புண்ணியம், ஸ்வர்கம் முதலானவற்றைப் பலனாகக் கல்பிக்கக் கூடாது.
• ஆகையால், அத்யயநம் செய்த பிறகு மீமாம்ஸை என்ற விசாரம்
செய்தால் தான் ஸந்தேஹங்கள் இல்லாமல் வேதத்தின் அர்த்தத்தை
அறிய முடியும் என்பதால் மீமாம்ஸா சாஸ்த்ரம் தேவை யானது தான்,

ப்ரயோஜநம்
• ஒவ்வொரு அதிகரணத்திலும் ஒரு பிரயோஜனம் சொல்லப்படும்.
பூர்வ பக்ஷி சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டால் கர்மங்களில் அநுஷ்டானம் எப்படி ஏற்படும்.
ஸித்தாந்தி வேறு கருத்தை நிர்ணயம் செய்ததால் அநுஷ்டானத்தில் என்ன மாற்றம் ஏற்படுகிறது
என்பது தான் ஓர் அதிகரணத்தின் பிரயோஜனம் என்று சொல்லப்படுகிறது.
• ஸ்ம்ருதிகளில் ’அத்யயநம் செய்து ஸமாவர்தநம் என்ற கர்மத்தைச் செய்ய வேண்டும்’ என்று சொல்கிறது.
• பூர்வ பக்ஷத்தில் அத்யயநம் ஸ்வர்கத்துக்காக என்பதால் வேதத்தின் மூலத்தை அறிந்து கொண்டால் போதும்,
மீமாம்ஸா சாஸ்த்ரத்தைப் படிக்கத் தேவையில்லை
ஆகையால், அத்யயநம் செய்து முடித்தவுடன் உடனே அடுத்து ஸமா வர்தநம் செய்து விட்டு
குருகுலத்திலிருந்து மாணவன் புறப்படலாம்.
• ஸித்தாந்தத்தில் அத்யயநம் செய்வது அர்த்த ஜ்ஞாநத்துக்காக. ஆகையால், வேதத்தின் மூலத்தை மட்டும்
கற்றால் போதாது,-பொருளையும் அறியவேண்டும். அதற்காக மீமாம்ஸா சாஸ்த்ரத்தை ஆசார்யனிடம் பயில வேண்டும்.
ஆகவே, அத்யயநம் முடித்துே விட்டு, குருகுலத்திலேயே தங்கியிருந்து மீமாம்ஸையும் பயின்ற பிறகு தான்
ஸமா வர்தநம் செய்து விட்டு மாணவன் குருகுலத்திலிருந்து புறப்படலாம்

வேத அத்யயனத்துக்கு பிறகு
வேத அத்யயனத்தால் த்ருஷ்ட பலமான அர்த்தம் ஞானம் வருவதால் -தர்மம் அறிந்து
அனுஷ்டானம் செய்து -புண்ணியம்
சமா வர்த்தநம்–அத்யயனம் செய்த பிறகு -என்பதால் -அத்யயனம் செய்து மீமாம்ஸா மூலம்
அர்த்த ஞானம் பெற்று பின் காலத்தில் சமா வர்த்தநம்
அத்யயனத்துக்கு அடுத்து சமா வர்த்தநம் இல்லை பின்பே என்றதாயிற்று
ஆகவே விசாரம் செய்ய வேண்டும் என்று நிரூபணம் –

————–

பாடம் -4-விதி அர்த்தவாதம் மந்த்ரம்

1-1-2-தர்மத்தின் லக்ஷணம் –

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தின் முதல் அதிகரணத்தில் (1.1.1)
மீமாம்ஸா சாஸ்த்ரம் ஏன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று நிரூபித்தார் ஸைமிநி மஹரிஷி
• அடுத்து, இரண்டாவது அதிகரணத்தில், தர்மத்தின் லக்ஷணம் என்ன?
தர்மத்தை போதிக்கும் ப்ரமாணம் எது? என்ற இரண்டு கேள்விகளுக்கு பதில் கூறுகிறார்.
விதி உபதேசம் சோதனா -பர்யாயம்
• “(ஸோதநா லக்ஷண:) ஸோதநா என்று அழைக்கப்படும் வைதிக விதியால் (கட்டளையால்) அறியப்படுவதாகவும்,
(அர்த:) நமக்கு நன்மையைக் கொடுப்பதாகவும் இருப்பது தான் (தர்ம:) தர்மம்.”
• அநர்தம் என்பது நரகம் போன்ற தீங்குகளை ஏற்படுத்தும் செயல்.
அர்தம் என்றால், அப்படி இல்லாமல், நன்மையைக் கொடுப்பது.-ஸ்ரேயஸ் கரம் –
வேத போதித இஷ்ட சாதனத்வம் தர்மம் –
• இந்த லக்ஷணத்தில், ’அர்தம்’ = ’நன்மையைக் கொடுப்பது’ என்று சொல்லாமல் போனால் அதி வ்யாப்தி ஏற்படும்.
நமது எதிரிகளைப் போக்குவதற்கான சில யாகங்கள் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளன.
ஆனால், அந்த கர்மங்களைச் செய்பவனுக்கு நரகம் ஏற்படும் என்றும் வேதமே சொல்கிறது.
ஆகையால், அவற்றுக்கு தர்மம் என்ற பெயர் கிடையாது.
ஆனால், அவையும் விதி வாக்யத்தாலே போதிக்கப்படுமவை தான்.
அதனால் அவற்றில் அதி வ்யாப்தி ஏற்படும்.
• மற்ற ஓரு வகையில் சொன்னால், “நாம் ஆசைப்படும் ஒரு பயனைப் பெற்றுக் கொடுக்கும் வழியாலே
வேதத்தாலே போதிக்கப்படுவது தான் தர்மம்” என்று சொல்லலாம்.

இரண்டு நியமங்கள்
• லக்ஷணம் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு.
• (1) லக்ஷணம் = அஸாதாரண தர்மம் / இலக்கணம்
• (2) லக்ஷணம் = பன்னிரண்டு அத்யாயங்களைக் கொண்ட இந்த மீமாம்ஸா சாஸ்த்ரத்துக்கு
த்வாதச லக்ஷணீ என்று பெயர்
• (3) லக்ஷணம் = ப்ரமாணம். ஸோதநா என்கிற வேத விதிகளைப் ப்ரமாணமாகக் கொண்டவை தர்மங்கள்,
அதாவது அவற்றால் அறியப்படுபவை தான் தர்மங்கள். அதனால் தான் ஸோதநா லக்ஷண: என்று கூறுகிறார் ஸைமிநி.
• இதை லக்ஷணா என்ற சொல்லோடு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ஒரு சொல், தனது முக்கியமான அர்த்தத்தைக் குறிக்க முடியாத போது, அதனோடு தொடர்புடைய
வேறு ஓரு அர்த்தத்தைக் குறிப்பதற்கு லக்ஷணா என்று பெயர் என்ற கற்றுள்ளோம்.
• பொதுவாக ஒரு சொல் தொடரில் வலியுறுத்தல் இல்லா விட்டாலும், அதை நாம் வைத்துக் கொள்ளலாம்.
’அர்ஜுனன் வில்லாளி என்று சொன்னால் “அர்ஜுனன் தான் வில்லாளி மற்றவர்கள் அல்ல” என்றும்
“அர்ஜுனன் வில்லாளி தான் ” என்றும் இரண்டு கருத்துகள் வலியுறுத்தப்படலாம்.
• அதே போல் “விதி வாக்யங்களைப் ப்ரமாணமாகக் கொண்டது தர்மம்” என்று கூறும் இந்த ஸூத்ரத்தில்
இரண்டு வலியுறுத்தல்கள் கூறப்படுகின்றன –
“விதிகள் தான் தர்மத்தின் ப்ரமாணங்கள், வேறு ப்ரமாணங்கள் இல்லை ” என்றும்
“விதிகள் தர்மத்தின் ப்ரமாணம் தான், அப்ரமாணங்கள் அல்ல” என்றும்.

1-1-3-விசார சாஸ்திரம்

கீழ் ஸூத்ரங்களில்,
வேத அத்யயநத்துக்குப் பிறகு தர்மத்தைப் பற்றின விசாரம் செய்யப்பட வேண்டும்-என்றும்,
தர்மத்தின் லக்ஷணம் என்ன என்றும்,
தர்மத்தை போதிக்கும் ப்ரமாணம் எது என்றும் கூறினார் ஜைமிநி மஹரிஷி.
• இந்த சாஸ்த்ரம் உபதேசம் மட்டுமே செய்யும்,-சொல்வதைக் கேட்டு ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்
என்ற எண்ணம் படிப்பவர்களுக்கு வரக் கூடாது என்பதற்காக, முற் கூறிய கருத்துகளை தானே விசாரம்
செய்யப் பாேவதாகப் ப்ரதிஜ்ஜை செய்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்

• “ (தஸ்ய) அந்த தர்மத்தின் (நிமித்த-) நிமித்தம்/ப்ரமாணம் (-பரீஷ்டி:) ஆராயப்பட வேண்டும்”
என்று இந்த ஸூத்ரத்தின் பொருள்.
• இப்படி உபதேசமாக இல்லாமல் விசாரம் செய்யும் நூலாக இருக்கிறபடியால் தான் இந்த மீமாம்ஸா
சாஸ்த்ரத்துக்கு ’விசார சாஸ்த்ரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

1-1-4-தர்மத்திற்கு வேறு ப்ரமாணம் கிடையாது

• கீழ் சொல்லப்பட்ட இரண்டு நியமங்களுள் (வலியுறுத்தல்களுள்)
“வேதம் தான் தர்மத்துக்குப் ப்ரமாணம், வேறு ப்ரமாணம் கிடையாது” என்பதை நிரூபிப்பதற்காக வந்தது அடுத்த ஸூத்ரம்.
• “ஸத் ஸம் ப்ரயோகே புருஷஸ்ய இந்த்ரியாணாம் புத்தி ஜந்ம தத் ப்ரத்யக்ஷம்” –
இந்த்ரியத்துக்கும் ஒரு பொருளுக்கும் தொடர்பு (ஸந் நிகர்ஷம் / ஸம் ப்ரயோகம்) ஏற்பட்டால் தான்
ப்ரத்யக்ஷம் என்று சொல்லப்படும் ஜ்ஞாநம் தோன்றும்.
• தொடர்பு ஏற்படவேண்டுமானால் அந்தப் பொருள் தற்போது இருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் இருந்த / வருங் காலத்தில் உண்டாகப் போகிற பொருளோடு இப்போது இந்த்ரியம் தொடர்பு பட முடியாது.
ஸ்ரீ ராமனைத் தற்போது கண்ணால் பார்க்க இயலாதே .
• “வித்ய மாநே உபலம்ப நத்வாத்” – ஆகையால், ப்ரத்யக்ஷம் என்பது தற்போது இருக்கும் பொருள்களை மட்டும் தான் க்ரஹிக்கும்.
• “அநிமித்தம்” – ஆகையால் தர்மத்தை போதிக்கும் ப்ரமாணமாக ப்ரத்யக்ஷம் ஆகாது, ஏன் என்றால்
தர்மம் என்பது இப்போது இருக்கும் பொருள் அல்ல.
• நாம் ஆசைப்படும் ஒரு பயனைப் பெற்றுக் கொடுக்கும் கருவி தர்மம். ஆசைப்படும் பயன் தற்போது ஏற்படாது,
பல வருடங்களுக்குப் பின் ஏற்படும். ஆகையால், “இந்தச் செயல் அந்தப் பயனைக் கொடுக்கும்” என்பது
தற்போது இருக்கும் ஒரு பொருள் அல்ல, பிற்காலத்தில் தான் தெறியும். ஆகையால் இதை ப்ரத்யக்ஷத்தால் அறிய முடியாது.
• ப்ரத்யக்ஷத்தின் அடிப்படையில் தான் அநுமானம் முதலானவையும் செயல்படும்.
ஆகையால் அவையும் தர்மத்துக்குப் ப்ரமாணங்கள் அல்ல.

வேதம் பிரமாணம் ஆகாது என்ற ஆஷேபம் –

• கீழ் சொல்லப்பட்ட இரண்டு நியமங்களுள் (வலியுறுத்தல்களுள்) “வேதம் தர்மத்துக்கு ப்ரமாணம் தான்,
அப்ரமாணம் அல்ல” என்பதை இனி நிரூபிக்க வேண்டும்.
அதில் இவ்வாறு ஆஷேபம் எழுகிறது –
• வேதம் என்பது நூல் வடிவத்தில் உள்ளது.
ஒரு நூல் ப்ரமாணமா அல்லவா என்பது அதை இயற்றின மனிசரைப் பொருத்தது.
இயற்றினவரிடம் குற்றங்கள் இருந்தால், அந்த நூலும் ப்ரமாணம் ஆகாது.

• மனிதர்கள் என்றாலே , அவர்களுக்கு நான்கு குற்றங்கள் இருக்கலாம் –
• ப்ரமம் – தவறான புரிதல்
• ப்ரமோதம் – கவனக் குறைவு
• அ சக்தி – நினைப்பதை எடுத்துச் சோல்லும் வலிமை இன்மை
• விப்ரலிப்ஸோ – ஏமாற்றுத்தன்ஸம

• இப்படி குற்றங்களை உஸடய மனிதர்கள், மூன்று இடங்களில் ஒரு நூலோடு தொடர்பு படுகிறார்கள்:
1. ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உள்ள தொடர்பு மனிதர்களால் ஏற்படுத்தப் படவேண்டும்.
உலகில் ஒரு குழந்தைக்குப் புதிதாகப் பெயர் வைப்பது கூட தாய் தந்தை முதலானவர்கள் தான்.
2. தனித் தனியாக சொற்களுக்குப் பொருள் தெரிந்த பிறகும், ஒரு சொல் தொடருக்கும்
அது கூறும் பொருளுக்கும் தொடர்பு மனிதர்களால் தான் ஏற்படுத்தப்பட வேண்டும்
3. சொற்களைச் சேர்த்து, ஒரு சொல் தொடராக ஆக்குவதும் மனிதன் தான்
• ஆக இதே போல் வேதத்திலும் மூன்று முறைகளிலே மனிதர்களின் பங்கு இருப்பதால், மனிதர்கள்
குற்றமிருக்க வாய்ப்புடை யவர்கள் என்பதால், வேதத்தைப் ப்ரமாணமாக ஏற்க முடியாது என்று கேள்வி எழுகிறது –

1-1-5- சொல்லுக்கும் பொருளுக்கும் தொடர்பு நித்தியமானது –

• முதல் கேள்விக்குப் பதிலை அடுத்த அதிகரணத்தில் கூறுகிறார் ஜைமிநி
• ஔத்பத்தி கஸ்து சப்தஸ்ய அர்தேந ஸம்பந்த: – சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு
ஔத்பத்திகம் (இயற்கையானது,நித்யமானது). ஆகையால் அந்த இடத்தில் மனிதனின் பங்கு இல்ஸல
• தஸ்ய ஜ்ஞாநம் உபதேச : – அப்படிப்பட்ட நித்யமான தொடர்பு தான் தர்மத்தைப் பற்றின அறிவுக்கு ஸாதநம் (வழி )
• அவ்யதிரேக ச : – உலகில் எங்குமே மனிதனால் இயற்றப்பட்ட வேற ஓரு சம்பந்தம் காணப்பட வில்லை —
மனிதனால் செய்யவும் இயலாது
• அர்தே அநுபலப்தே – வேதத்தால் சொல்லப்படும் பொருட்கள் புலன்களுக்கே எட்டாதவையான படியால்
அவற்றோடு சொற்களுக்கு உள்ள தொடர்பை மனிதன் எப்படிச் செய்ய முடியும்?
• தத் ப்ரமாணம் பாதராயணஸ்ய அநபேக்ஷத்வாத் – ஆக, இயற்கையாகவே சொல்லுக்கும் பொருளுக்கும்
தொடர்பு இருக்கிறபடியால், மனிதனை எதிர்பார்க்காமலேயே வேதம் தர்மத்தை போதிக்கும் ப்ரமாணம் ஆகும்
என்று பாதராயணர் (வேத வ்யாஸர்) கூறுகிறார்.
• ஒரு ஜ்ஞாநம் தவறானது என்று முடிவு செய்ய இரண்டு காரணமுண்டு:
• அதற்கு முரண்பட்ட வேற ஓரு ஜ்ஞாநம் ஏற்படுவது
• அதை ஏற்படுத்தின கருவியில் தோஷம் உள்ளது என்ற அறிவு
• வேதத்தில் சொல்லப்பட்ட பொருள் தவறு என்று நமக்கு ப்ரத்யக்ஷம் முதலானவற்றால் தெரிவது இல்லை .
வேதத்துக்கு உத்பத்தியே இல்லாதபடியால் அதில் தோஷமும் இருக்க முடியாது.
ஆகையால், வேதத்திலிருந்து உண்டாகும் ஜ்ஞாநம் சரியானதே .

1-1-6- சொற்களும் நித்யமானவை —

முன் அதிகரணத்தில் சொன்ன பதிலில் செய்யப்பட்ட ஓர் ஆஷேபம்
அடுத்த அதிகரணத்தில் நீக்கப்படுகிறது.
• பூர்வ பக்ஷம் –
சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு நித்யமானது என்று சொன்னீர்கள் ,
சொற்களே அநித்யமானவை (அழியக் கூடியவை ).
பிறகு எப்படி சொற்களுக்கும் பொருட்களுக்கும் தொடர்பு நித்யம் ஆகும்?
• யுக்தி (1) – கர்ம ஏச தத்ர தர்ஸ நாத் –
நாம் வாய் / தொண்டை யால் ஒரு முயற்சி செய்த பிறகு தான் சப்தத்தைக் கேட்கிறோம். ஆகையால்,
அந்த முயற்சியால் சப்தம் உண்டாகிறது என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
• யுக்தி (2) – அஸ்தாநாத் –
வாய் / தொண்டையின் முயற்சி நின்றவுடன் சப்தம் தோற்று வதில்லை . ஆகையால், சப்தம் அழிந்திருக்க வேண்டும்.
• ஸித்தாந்தம் –
நித்யஸ்து ஸ்யாத் தர்ஸ நஸ்ய பரார்தத்வாத் –
சப்தம் நித்யமானது தான், இல்லை எனில் சொற்கள் மாறிக் கொண்டே இருக்கிற படியால் அதைக் கொண்டு
ஒருவர் மற்ற ஒருவருக்கு ஒரு பொருளை அறிவிக்கவே முடியாமல் போய் விடும்.
• பதில் (1) – ஸமம் து தத்ர தர்ஸநம் –
முயற்சிக்குப் பிறகு தோற்றுகிற படியால், சப்தம் உண்டாகி யிருக்க வேண்டும் என்ற தேவை இல்லை
முன்னமே இருக்கும் ஒரு பொருள் நாம் செய்யும் முயற்சியால் வெளிப் படுகிறது என்றும் கூறலாம்.
இதற்கு அபிவ்யக்தி என்று பெயர்.
முன்னமே பூமியில் இருக்கக் கூடிய ஆகாசம், பள்ளம் தோண்டின பிறகு வெளிப்படுகிறது போலே
• பதில் (2) – ஸத: பரம் அவிஜ்ஞாநம் விஷயா நாகமாத் –
முயற்சி முடிந்த பின் சப்தம் தோற்றாததும் சப்தம் அழிந்து விட்டபடியால் அல்ல,
அபி வ்யக்தியைச் செய்யும் காரணம் இல்லாதபடியால் தான்-

மீமாம்ஸா தர்ஸநத்தில் சப்தம் —

ந்யாய மதத்தின் படி சப்தம் என்பது ஒரு குணம். அது ஆகாசத்தினுடைய குணம்.
ஆனால், மீமாம்ஸையில் அப்படி ஒப்புக் கொள்ளப் படவில்லை .
• மீமாம்ஸா மதத்தில் பதம் (எழுத்து) என்பது ஒரு வகையான த்ரவ்யம்.
• ’அ’ என்ற எழுத்து (ஒலி) ஒரு த்ரவ்யம். ’இ’ என்ற எழுத்து ஒரு த்ரவ்யம். ’க்’ என்ற எழுத்து ஒரு த்ரவ்யம்.
• இந்த ஒவ்வொரு த்ரவ்யமும் விபு வானது (உலகு எங்கும் பரந்து உள்ளது).
• நாம் தொண்டை வாய் முதலான வற்றால் ஒரு வகையான முயற்சியைச் செய்தால், நாம் இருக்கும் ப்ரதேசத்தில்
இருக்கும் ’அ’ என்ற எழுத்து வெளிப்படுகிறது (அபி வ்யக்தி அடைகிறது, தோற்றம் பெருகிறது-உத்பத்தி இல்லை ).
• வேறு ஓரு வகையான முயற்சியைச் செய்தால், ’க்’ என்ற எழுத்து வெளிப்படுகிறது.
• ஒரே ’அ’ என்ற எழுத்து நான் இருக்கும் இடத்தில் என் முயற்சியால் வெளிப்படுமே தவிர
உலகு எங்கும் வெளிப்படாது . அதனால் தான் தொலைவில் உள்ள வர்களுக்கு அது கேட்பதில்லை .
• சப்தம் (சொல்) என்பது தனியான ஒரு பொருள் அல்ல.
எழுத்துக் களின் ஒரு வரிசை தான் சொல் ஆகும். ஆக, எழுத்துக்கள் நித்யமானபடியால்,
அவற்றின் கோர்வையான சப்தமும் நித்யமானது தான்.
• ஆகையால், சப்தத்துக்கும் அதன் பொருளுக்கும் உள்ள தொடர்பு
நித்யமானது என்று முன் அதிகரணத்தில் சொன்னது சரி தான்.

இரண்டாது கேள்விக்கு பதில் அடுத்த அதிகரணம் –1-1-7-

அடுத்த அதிகரணத்தில், முன்னால் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்குள்
இரண்டாவது கேள்விக்கு பதில் கூறப்படுகிறது.
• கேள்வி – சொற்களுக்கும் அவற்றின் பொருள்களுக்கும் தொடர்பு நித்யமாக இருந்தாலும்,
ஒரு சொல் தொடரின் பொருள் என்பது புதிதானது. ஆகையால், ஒரு சொல் தொடருக்கும் அதன் பொருளுக்கும்
உள்ள தொடர்பு மனிதனால் ஏற்படுத்தப்பட வேண்டும்
• எடுத்துக் காட்டு – ராமன், மாரீசன், கொலை முதலான சொற்களுக்கான பொருள் நமக்கு முன்னமே தெரிந்திருந்தாலும்,
“ராமன் மாரீசனைக் கொன்றான்” என்ற சொல் தொடரைக் கேட்டால் நமக்கு ஏற்படும் அறிவு புதிதானது.
அதற்கும் இந்த சொல் தொடருக்கும் உள்ள தொடர்பு மனிதனால் செய்யப் பட்டிருக்க வேண்டும்.
• பதில் – அந்த அந்தச் சொல் அதன் அதன் பொருளை நினைவு படுத்தும்.
அதற்குப் பிறகு, ஆகாங்ஷை யோக்யதை ஸந்நிதி போன்ற அனைத்துத் தேவைகளும் இருக்குமானால்,
அந்த நினைவு படுத்தப்பட்ட பதார்த்தங்களே (பொருள்களே ) சேர்ந்து,
“ராமன் மாரீசனைக் கொன்றான்” என்ற அறிவை ஏற்படுத்து கின்றன .
• ஆகையால், இந்த நிலையிலும் மனிதனின் பங்கு இல்லை -வேதத்தில்.

மூன்றாவது கேள்விக்குப் பதில் –1-1-8-

அடுத்த அதிகரணத்தில், முன்னால் கேட்கப்பட்ட மூன்று
கேள்விக்குள் மூன்றாவது கேள்விக்கு பதில் கூறப்படுகிறது.
• பூர்வ பக்ஷம்
• யுக்தி 1 – வேதமும் வாக்யங்களால் ஆக்கப்பட்ட ஒரு நூல் தான்.
ஆகையால், சொற்களைச் சேர்த்து ஒரு சொல் தொடராக அமைக்கும் செயலில் மனிதன் பங்கு கண்டிப்பாக
இருக்க வேண்டும். அதில் தவறுகள் இருக்க வாய்ப்புள்ள படியால் வேதம் ப்ரமாணம் ஆகாது. அதாவது –
ஒரு அநு மானத்தைச் சொல்கிறார் பூர்வ பக்ஷீ –
“வேதம் பௌருவஷேயம் (ஒரு புருஷனால் செய்யப்பட்டது),-வாக்யத்வாத் பாரதம் போல்
வாக்ய வடிவத்தில் இருக்கிறபடியால், மஹாபாரதம் முதலானவை போலே .”
• யுக்தி 2 – வேதாம்ஸ் ச ஏகே ச ஸந்நிகர்ஷம் புருஷாக்யா : –
வேதங்களில் சில பகுதிகளுக்கு ’காடகம்’, ’காபாலகம்’, ’பைப்பலாதகம்’, ’ஸதத்திரீயம்’ என்று ரிஷிகளின் பெயரை
வைத்துப் பெயர் வழங்கப்படுகிறது. ஆகையால், அந்தந்தப் பகுதிகள் அந்தந்த ரிஷியால் இயற்றப்பட்ட வையாகத் தான்
இருக்க வேண்டும். இல்லை எனில் அந்தப் பெயர் ஒட்டாது.
• யுக்தி 3 – அநித்ய தர்ஸநாச் ச – சில வேத வாக்யங்களில் அநித்யமான (ஒரு காலத்தில் உண்டாகி ஒரு காலத்தில்
அழியக்கூடிய-முனிவர் பிள்ளையின் பெயர் போன்றவற்றையும் பேசும் ) சிலவற்றைப் பற்றி பேசப்படுகிறது.
ஆகையால், அந்தப் பொருள் உண்டான பிறகு தான் அந்த வேத வாக்யம்
இயற்றப் பட்டிருக்க வேண்டும். ஆகவே வேதம் பௌருவஷேயமே –

ஸித்தோந்தம்
• பதில் 1 – உக்தம் து சப்த பூர்வத்வம் –
பூர்வ பக்ஷிகள் சொன்ன அநுமானத்தில் பாதகம் உள்ளது.
ஒரு நூலின் நம்பகத் தன்மை அதன் ஆசிரியரின் நம்பகத் தன்மையைப் பொருத்தது தான்.
எனவே, ஒரு நூலுக்கு ஒரு நூலாசிரியர் இன்றியமையாதவர் ஆகிறார். (அவஸ்யம் ஸ்மர்த்வயம் -)
ஒரு கிணற்றைக் கட்டியவர் யார் என்று தெரியா விட்டாலும் அதைப் பயன்படுத்தலாம். ஆனால்,
ஒரு நூலின் ஆசிரியரை மறந்து விட்டால் அதை உப யோகிக்கவே முடியாது.
அப்படி ஆசிரியர் முக்கியமாக இருக்கும் பொழுதும், “வேதத்தை இவர் இயற்றினார்” என்று ஒருவர் கூட
நினைவு கூறாமலிருப்பது (’ஸ்மர்தவ்ய அஸ்மரணம்’) நூலாசிரியரே இல்லை என்பதைத் தான் காட்டும்.

அநுமானம் – வேதத்தின் அத்யயநம் அனைத்துமே அதற்கு முன் நடந்த அத்யயனத்தினால் வந்தது,
வேத அத்யயநமான படியால், இன்றிருக்கும் அத்யயனம் போல் –

• பதில் 2 – ஆக்யோ ப்ரவ ச நாத் –
வேதப் பகுதிகளுக்கு ரிஷிகளின் பெயர் இருப்பது அவர்களால் இயற்றப்பட்ட படியால் தான் என்று கூற முடியாது.
முன் சொன்ன பதிலால் இயற்றியவர் இல்ஸல என்று தெரிந்து விட்டால்,
விசேஷமாக ஒரு ரிஷி அந்த வேதப் பகுதியைக் கற்று பலருக்கும் போதித்தபடியால் தான்
அந்தப் பெயர் ஏற்பட்டது என்று முடிவு செய்யலாம்.

• பதில் 3 – பரம் து ச்ருதி ஸாமாந்யம் –
அநித்யமான பொருட்களைப் பற்றி வேதம் பேசாது. அப்படித் தோற்றும் இடங்கைில்
அதற்கு வேறே ஓரு பொருள் தான் கொள்ள வேண்டும்.
(பிரவாகர் புத்திரர் பிரவாஹினி -சொல்வது வாயு பகவானையே சொல்லும் –
அநித்யமான புத்திரர் பெயரைச் சொல்ல வில்லை )

• ஆகையால், வேதம் அபௌருவஷேயமானபடியால் இவ் விதத்திலும்
மனிதனின் பங்கு இல்லாதபடியால் வேதம் ப்ரமாணம் தான்.

ஜ்யோதிஷடஹோமம் சுவர்க்கம் ஆசைப்படுபவன் செய்யட்டும் -தர்ம லக்ஷணம் –
இஷ்ட சாதனத்வம் வேதத்தால் போதிக்கப் படுவதால் இது தர்மம்
வேதமும் சில தாழ்ந்த கர்மாக்களை உண்டே
செய்யக் கூடாது -எதிரிக்கு மரணம் -உனக்கு நரகம் -நன்மையைக் கொடுத்தால் தானே தர்மம்
ஆகவே வேதத்தால் போதிக்கப்பட்டு நமக்கு நன்மையைக் கொடுப்பதே தர்மம் என்று லக்ஷணம் வாக்கியம்
விதி பிரமாணம் என்று காட்டினார் முதல் பாதத்தால்

—————–

அர்த்த வாதங்கள் –1-2-1-

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில் பொதுவாக வேதமும், சிறப்பாக அதிலிருக்கும்
விதிகளும் (கட்டளைகளும்) தர்மத்தை போதிக்கும் ப்ரமாணங்கள் தான் என்று நிரூபிக்கப்பட்டது.
• அடுத்து, முதல் அத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில்,
அர்த்த வாதங்கள் மந்த்ரங்கள் என்ற இரண்டு வகையான வேதச் சொல் தொடர்களைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது.
• அதில் முதல் அதிகரணம் அர்த்தவாத-அதிகரணம் ஆகும்.
• வேதத்தில், ’செழிப்பு வேண்டுமானால் வாயு தேவதைக்காக இந்த யாகத்தைச் செய்’ என்று ஒரு விதி (கட்டளை ) உள்ளது.
அதற்குப் பிறகு வேதம் கூறுகிறது –
“வாயு மிகவும் வேகமாகச் செல்லும் தேவதை -அவரைத் தான் இந்த யாகத்தில் பூஜிக்கிறோம்.
அவர், இவன் ஆசைப்படும் பயனைக் கண்டிப்பாகக் கொடுப்பார்” என்று.
இந்த சொல் தொடர்களுக்கு தான் அர்த்த வாதம் என்று பெயர்.

• பூர்வ பக்ஷம் – இந்தச அர்த்த வாதம் எதையும் விதிக்க வில்லையே?
விதி வாக்யம் தானாகவே ஒரு யாகத்தை விதிக்கிறது. இந்த அர்த்த வாதம் தானாகவே மஹாபாரதம் முதலானவை
போல் முன்னால் நடந்த ஏதோ ஒரு கதையைக் கூறுகின்றது. செய்யப்பட வேண்டிய ஒரு செயலையும் போதிக்க வில்லை .
ஆகையால், அர்த்த வாதம் தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணம் அல்ல.

ஸித்தாந்தம்
• ஒருவர் மற்ற ஓருவரிடம் “இந்த மாட்டை விலைக்கு வாங்கிக் கொள்” என்று கூறினார்.
இது கட்டளையாக இருந்தாலும், கேட்டவர் சில ஸந்தேகங்கள் காரணமாக உடனே வாங்காமல் இருக்கலாம்.
இதை தினமும் பாதுகாக்க வேண்டுமே , புல் இட வேண்டுமே , பணம் செலவு ஆகுமே
என்று எல்லாம் யோசிக்கலாம்.
• அப்படி யோசிக்கும் ஒருவரை , அந்தச் செயலில் ஈடுபட வைப்பதற்காகத் தான் ’இந்த மாடு அதிகமாகப் பால் கொடுக்கும்,
இதற்கு ஒரு பெண் கன்றும் உள்ளது’ என்று எல்லாம் அதைப் புகழ்ந்து பேசுவதன் மூலம் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள்.
• ஆகவே, ஒரு விதி கட்டளை மட்டும் இடும். அதற்கு மேல் செய்யப்ப்பட வேண்டிய செயலில் உற்சாகத்தை ஏற்படுத்த, சில
புகழ்ச்சிப் பேச்சுக்கள் தேவைப்படுகின்றன – அதே சமயத்தில் இந்த அர்த்த வாதம் ஏதோ ஒரு கடந்த கால நிகழ்சியைப்
பற்றிப் பேசுவதனால் எந்தப் பயனும் இல்லாதபடியால் தனக்கு ஏதோ ஒரு பயனைத் தேடுகிறது.
• இப்படி பரஸ்பரம் தேவை இருக்கிற படியால், அர்த்த வாதம் விதியோடு சேர்ந்து கொண்டு, விதிக்கப் பட்ட செயலைப்
புகழ்ந்து பேசுகிறது என்று கொள்ள வேண்டும்.
• “வேகமாகச் செல்லும் வாயுவிற்காக யாகம் செய்கிறபடியால் உனக்குப் பலன் விரைவில் கிட்டும்” என்பது போல் பொருள்.

நஷ்ட அஸ்வ -ரத -ஒருவன் இடம் ரதம் உடைய ஒருவன் இடம் குதிரை மாய இருவரும் சேர்ந்து உபயோகப்படுத்தலாம்
இந்த நியாயம் போல் பரஸ்பர ஆங்கஷை விதி வாக்யத்துக்கும் அர்த்த வாதத்துக்கும் –

அர்த்த வாதத்தின் வகைகள் –
• அர்த்த வாதங்கள் மூன்று வகைப் படுகின்றன
• (1) குண வாதம் –
ப்ரத்யக்ஷம் முதலான வற்றுக்கு முரண்பட்ட ஒரு பொருளை வேதம் சொல்வது போல்
தோற்றம் அளித்தால் அவ்விடத்தில் குணத்தை வைத்து ஒப்பிடுகிறது என்று பொருள்.
எடுத்துக் காட்டு –
ஒரு யாகத்தில், நடுவில் ஒரு மரத் தூணை பூமியில் நட வேண்டும். அந்தத் தூணைப் பற்றி “ஸூர்யன் தான்
இந்தத் தூண்” என்று வேதம் சொல்கிறது. ஸூர்யன் தூண் ஆக முடியாது. ஆஸகயால்,
“ஸூர்யன் போல் ப்ரகாசமாக உள்ளது இந்தத் தூண்” என்று தான் இதற்குப் பொருள்
• (2) அநு வாதம் –
நமக்கு முன்னமே தெரிந்த விஷயத்தைச் சொல்லும் அர்த்த வாதம் அநு வாதம் ஆகும்.
எடுத்துக் காட்டு –
“நெருப்பு தான் குளிருக்கு மருந்து” என்று வேதம் சொல்கிறது.
• (3) பூதார்த்த வாதம் –
ப்ரத்யக்ஷம் முதலான வற்றோடு முரண்பாடும் இல்லாமல், ஆனால் முன்னால் அறியப்படாத
ஒரு பொருளைச் சொல்லும் அர்த்த வாதத்திற்கு பூதார்த்த வாதம் என்று பெயர்.
எடுத்துக் காட்டு –
“இந்த்ரன் வ்ருத்ரன் என்ற அஸூரனைக் கொன்றார்” என்று அர்த்த வாதம் சொல்கிறது. இது
தவறு என்று நம்மால் ப்ரத்யக்ஷம் முதலான வற்றால் சொல்லவும் முடியாது,
முன்னமே நமக்குத் தெரிந்த விஷயமும் அல்ல. ஆகையால் இது பூதார்த்த வாதம்.

—————

1-2-4-மந்த்ரங்கள்
முதல் அத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் விசாரிக்கப்படும் மற்ற ஓரு விஷயம் – மந்த்ரங்கள்.
• வேதத்தில் இருக்கும் விதி வாக்யங்கள், நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கட்டளை இடுகின்றன.
• அதற்குப் பிறகு, நாம் அந்த செயல்களைச் செய்யும் பொழுது உச்சரிக்க வேண்டிய மந்த்ரங்களையும் வேதமே கூறுகிறது.
• அந்தந்த மந்த்ரம் அவ்வப் போது செய்யப்படும் செயலைப் பற்றிப் பேசக்கூடியதாகத்தான் இருக்கும் என்பது நிலை .
• பூர்வபக்ஷம் –
அடுத்தடுத்து என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை விதி வாக்யங்களே சொல்லி விட்டபடியால்,
அவற்றைச் செய்யும் பொழுது மந்த்ரங்களை உச்சரிப்பது அத்ருஷ்டத்துக்காக (புண்யத்துக்காக) மட்டும் தான்.
• ஸித்தாந்தம் –
ஒரு செயலுக்கு த்ருஷ்டமான ஒரு ப்ர யோஜனம் இருக்கும் பொழுது, அதைப் புறக்கணித்து,
அத்ருஷ்டத்தை மட்டும் ப்ர யோஜனம் என்று சொல்லக் கூடாது.
• ஒரு மந்த்ரத்தைச் சொன்னால் அதன் பொருள் நினைவுக்கு வரும் என்பது அனைவரும் காணும் உண்மை .
ஆகையால், அடுத்தடுத்து செய்யப்பட வேண்டிய செயலை நினைவு படுத்திக் கொள்ளத் தான் மந்த்ரங்கள் உள்ளன.
பிரயோக சமவேத அர்த்த ஸ்மரகங்கள் -வரிசை கிரமம் அறிய மந்த்ரங்கள் வேணுமே

• கேள்வி –
அடுத்தடுத்து செய்யப்பட வேண்டிய செயலை நியாபகப் படுத்திக்க கொள்ள பல வழிகள் இருக்கின்றனவே?
ஏன் மந்த்ரங்களைக் கொண்டு தான் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்?
• பதில் –
உண்மை . பல வழிகள் உள்ளன. ஆனால், வேதம் மந்த்ரங்களை உபதேசிக்கிற படியால், “மந்த்ரங்களைச் சொல்லிச்
சொல்லித் தான் அடுத்தடுத்த செய்யப்பட வேண்டிய செயலை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்” என்ற ஒரு நியமத்தை
ஏற்க வேண்டும். இல்லை என்றால், வேதத்தில் உபதேசிக்கப்பட்ட மந்த்ரங்கள் அனைத்தும் வீணாகப் போய் விடும்
• அந்த நியமத்தை நாம் கடைப்பிடித்தால் ஒரு அத்ருஷ்டம் கிடைக்கும். அது இருந்தால் தான் நாம் செய்யும் யாகம் பயன்
கொடுக்கும் என்று ஏற்கப் படுகிறது.
• மந்த்ரங்களின் பயனே அத்ருஷ்டம் என்று ஏற்காமல், மந்த்ரங்களின் பயன் நினைவு படுத்துதல், மந்த்ரங்களால் தான்
நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நியமத்தின் பயன் அத்ருஷ்டம் என்று ஸித்தாந்தம்.

கீழே நியம விதி பார்த்தோமே -நினைவு படுத்த பல வழிகள் இருந்தாலும் மந்த்ரம் கொண்டே செய்ய வேண்டும்
இந்த நியம விதி புண்ணியத்துக்காக -மந்திரத்துக்கு த்ருஷ்ட பலன் தான் –

——————–

பாடம் -5- ஸ்ம்ருதி மற்றும் ஆசாரம்

ஸ்ம்ருதி பாதம் மூன்றாவது பாதத்துக்கு பெயர் –
ஸ்ம்ருதிகள் ப்ரமாணமா –1-3-1-
முதல் அத்யாயத்தின் முதல் இரண்டு பாதங்களில் விதி, அர்த்தவாதம், மந்த்ரம் என்ற மூன்று
ப்ரமாணங்கள் சொல்லப்பட்டன.
அடுத்து மூன்றாவது பாதத்தில் ஸ்ம்ருதிகள், சான்றோர்களின் ஆசாரம் (நடத்தை ) ஆகிய இரண்டும்
தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்கள் தான் என்று நிரூபிக்கப்படுகிறது.
• அதில் முதல் அதிகரணம் – ஸ்ம்ருத் யதிகரணம்
• வேதம் காதால் கேட்டுக் கேட்டே பரப்பப்பட்டபடியால் ’ச்ருதி’ என்று அழைக்கப்படுகிறது.
வேத்த்தின் பொருளை நினைத்து நினைத்து (ஸ்மரித்து ஸ்மரித்து) எழுதப்பட்டபடியால்,
சில நூல்களுக்கு ’ஸ்ம்ருதி’ என்று பெயர் ஏற்பட்டது.
• மநு போன்ற பலரும் ஸ்ம்ருதிகஸள இயற்றி யுள்ளார்கள். அவற்றில் சில விஷயங்கள்
வேதத்திலேயே காணப்படும் விஷயங்களாக இருக்கும். சில விஷயங்கள் வேதத்தில் எங்குமே
கிடைக்காமலும் இருக்கும். அவற்றைப் போதிக்கும் இந்த ஸ்ம்ருதிகள் ப்ரமாணமா அல்லவா என்று
விசாரம் செய்யப்படுகிறது

பூர்வ பக்ஷம் –
ஸ்ம்ருதிகள் ப்ரமாணம் ஆக முடியாது. அவை பௌருஷேயங்கள் (ஒரு புருஷனால் இயற்றப்பட்டவை )தான்.
ஒருவன் ஒரு நூலை எழுதும் பொழுது, வேறே ஓரு ப்ரமாணத்தின் மூலம் தான் அறிந்த விஷயங்களைத் தான் எழுதுவான்.
ஆனால், இந்த ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு அப்படி ஒரு மூலமான ப்ரமாணம் காணப்படவில்லை .
ஆகையால் அவை ப்ரமாணங்கள் அல்ல.
• கேள்வி – வேதங்கள் தான் ஸ்ம்ருதிகளுக்கு மூலம். வேதத்திலிருந்து தாங்கள் கற்ற விஷயங்களைத் தான் மநு
முதலானேர்கள் தங்கள் தங்கம் ஸ்ம்ருதி நூல்களில் எழுதினார்கள் என்று கொண்டால் என்ன?
• பதில் – வேதத்தில் இருக்கும் விஷயங்களைச் சொல்லத் தான் வேதமே உள்ளதே ? அந்த அந்த வேதப் பகுதிளையே
பலருக்கு போதித்து விஷயங்கஸளத் தெரிவித்து இருக்கலாமே ?
எதற்காகத் தனியாக ஒரு ஸ்ம்ருதி க்ரந்தத்தை எழுத வேண்டும்?
• ஆகையால், வேதம் தான் ஸ்ம்ருதிகளுக்கு மூலம் என்றால், ஸ்ம்ருதிகள் ப்ரமாணம் ஆக முடியாது.
ப்ரமாணம் என்பது புதிதாக ஒரு விஷயத்ஸத அறிவிக்கவேண்டும்.
இந்த ஸ்ம்ருதிகள், வேதங்களில் சொல்லப்பட்ட விஷயங்களையே பின் மொழிகின்றன.
ஆகையால், அநுவாதம் (பின் மொழிதல்) தான் ஆகுமே தவிற ப்ரமாணம் ஆகாது.

ஸித்தாந்தம் –
“ஸ்ம்ருதிகளுக்கு வேதம் தான் மூலம், வேதம் சொன்னதை மட்டுமே செய்யக்கூடிய மநு முதலானேர்களால்
இயற்றப்பட்டபடியால், உபநயனத்ஸதப் பற்றிச் சொல்லும் ஸ்ம்ருதி போல்” என்கிற அநுமானத்தால்,
ஸ்ம்ருதிகளுக்கு வேதம் தான் மூலம் என்று முடிவு செய்யலாம்.
• வேதத்தை மூலமாகக் கொண்ட போதிலும், ஸ்ம்ருதிகளே தேவை இல்லையே என்ற கேள்வி எழாது .
ஏன் என்றால், மநு முதலானேர்கள் மிகவும் அதிகமான ஜ்ஞாநம், சக்தி உடையவர்களானபடியால்,
வெவ்வேறு வேதஙகளிலோ வெவ்வேறு , சூழ்நிலைகளிலோ , நாம் காணாத வேதங்களிலோ ,
மறைமுகமாகவோ சொல்லப்பட்ட ஆழ்ந்த தர்மங்களையும் கூட அறியும் திறமை உடையவர்களாய் இருந்தபடியால்,
சாமாந்ய மனிதனால் அறிய முடியாத தர்மங்களைத் தாங்கள் அறிந்து, தொகுத்து, தங்கள் நூல்களில் எழுதினார்கள்.
ஆகையால் பயனற்றவை அல்ல ஸ்ம்ருதிகள்.
• ஆனால், ஸ்ம்ருதி நேரே ப்ரமாணம் ஆகாது. ஒரு ஸ்ம்ருதியைக் கண்டால், இதற்கு மூலமான ஒரு வேத
வாக்யம் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்து கொண்டு, அந்த வேத வாக்யத்தின் அடிப்படையில் தான் நாம்
அநுஷ்டானம் செய்ய இயலும்.

1-3-2- ஸ்ருதி ஸ்ம்ருதி எது பிரபலம்

அடுத்த அதிகரணம் விரோத-அதிகரணம்.
ச்ருதிக்கும் ஸ்ம்ருதிக்கும் விரோதம் இருந்தால் எதை ஆதரிக்க வேண்டும் என்று இதில் நிரூபிக்கப்படுகிறது.
• விஷயம் – ஒரு யாகத்தில் ஔதும்பரீ என்று ஒரு மரக் கிழையை நடுவில் பூமியில் நடவேண்டும்.
“அந்த மரத்தைத் தொட்டுக் கொண்டு காநம் (பாடல்) பாடவேண்டும்” என்று வேதம் சொல்லுகிறது.
“அந்த மரத்தை முழுவதுமாகத் துணியில் மூடவேண்டும்” என்று ஒரு ஸ்ம்ருதி சொல்கிறது.
தொட்டுக்கொண்டால் முட இயலாது, மூடினால், தொட இயலாது.
ஆகையால் ச்ருதிக்கும் ஸ்ம்ருதிக்கும் விரோதம் உள்ளது

• பூர்வ பக்ஷம் –
ஸ்ம்ருதிகள் அனைத்துமே வேதத்தை மூலமாகக் கொண்டதே என்று முன் அதிகரணத்தில்
நிரூபித்தபடியால், ஔதும்பரீ மரத்தைத் துணியால் மூடவேண்டும் என்று சொல்லும் ஸ்ம்ருதிக்கும் மூலமாக ஒரு
ச்ருதி வாக்யம் இருக்கவேண்டும். ஆகையால், வேதமே மூட வேண்டும் என்றும், தொட வேண்டும் என்றும் முரண்பட்ட
இரு பக்ஷங்கஸளச் சொல்லுகிறபடியால், இந்த இரண்டு வாக்யங்களும் ஸமமானபடியால்,
இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து எடுத்து அநுஷ்டிக்கலாம். இரண்டுமே சரிதான்

ஸித்தாந்தம்
• ஒரு விஷயத்தில் ஸ்ம்ருதி இருப்பதைக் கண்டு, அதைக் கூறும் ச்ருதி இருக்க வேண்டும் என்று அநுமானம்
செய்யும் பொழுது, அந்த விஷயத்துக்கு நேர் எதிரான கருத்தைச் சொல்லும் ச்ருதி வாக்யம் இருந்தால் பாதம்
என்கிற தோஷம் ஏற்படும், அநுமானமே செய்ய இயலாது.
• எடுத்துக் காட்டு –
“நெருப்பு சூடானது அல்ல” என்று ஒருவன் அநுமானம் செய்யப் பார்த்தால், நேரே தொட்டுப் பார்த்தால்
நெருப்பு சுடுகிறபடியால் இதில் பாதம் என்ற தோஷம் உள்ளது.
ஆகையால், நெருப்பு சுடாது என்ற அநுமிதி ஒரு நாளும் ஏற்பட முடியாது.
• அதே போல் தான், “ஔதும்பரியைத் துணியால் மூடவேண்டும்” என்ற ஸ்ம்ருதிக்கு மூலமாக ஒரு வேத வாக்யம்
இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்ய நாம் முயற்சிக்கும் பொழுதே , அதற்கு நேர் முரணாக
“ஔதிம்பரியைத் தொட்டுக் கொண்டு பாட வேண்டும்” என்ற வேத வாக்யம் இருப்பதால்,
“ஔதும்பரியைத் துணியால் மூட வேண்டும்” என்று ஒரு வேத வாக்யம் இருப்பதாக
அநுமானம் செய்யவே முடியாது,
பாதம் என்ற தோஷம் இருக்கிறபடியால்.
• ஆகையால், ஸ்ம்ருதியைக் காட்டிலும் ச்ருதி பலமானது.

1-3-3-சில இடங்களில் ஸ்ம்ருதி பலம் –

அடுத்த அதிகரணத்தில், ச்ருதியைக் காட்டிலும் ஸ்ம்ருதி பலம் பொருந்தியதாக இருக்கும்
இடங்களும் உண்டு என்று தெரிவிக்கிறார்.
• ஒரு ச்ருதி வாக்யம் “வேத்தைச் செய்து விட்டு வேதியைச் செய்ய வேண்டும்” என்று கூறுகிறது.
இவ்விடத்தில், வேதம் என்ற சொல் தர்பப் புல் கட்டு ஒன்றைக் குறிக்கும்.
வேதி என்பது யாகம் செய்யும் ஒரு இடம். ஆகையால், வேதம் செய்வதற்கும் வேதி செய்வதற்கும்
உள்ள வரிசை இதில் தெரிகிறது.
• ஒரு ஸ்ம்ருதி “ஒரு வைதிக காரியத்தைச் செய்யும் பொழுது, இருமல் தும்மல் அழுகை முதலானவை
ஏற்பட்டால், ஆசமநம் என்று ஒரு செயலைச் செய்த பிறகு தான் அந்த கர்மத்தைத் தொடரலாம் என்று கூறுகிறது.
• ஸந்தேகம் –
வேதம் செய்தவுடன் இருமல் ஏற்பட்டால், ச்ருதி சொன்ன வரிசையிலிருந்து மாறாமல் அடுத்து
உடனே வேதியைச் செய்ய வேண்டுமா?
அல்லது ஸ்ம்ருதி சொன்னபடி ஆசமநம் செய்த பிறகு தான் வேதியைச் செய்ய வேண்டுமா?

பூர்வ பக்ஷம் –
முன் அதிகரணத்தில் ஸ்ம்ருதியைக் காட்டிலும் ச்ருதி பலம் பொருந்தியது என்று முடிவு செய்தபடியால்,
இங்கும் ஆசமனம் செய்ய வேண்டும் என்ற ஸ்ம்ருதியைப் புறக்கணித்து விட்டு, ச்ருதி சொன்ன
வரிசையிலிருந்து மாறாமல், வேதியைத் தான் அடுத்து செய்ய வேண்டும்
• ஸித்தாந்தம் –
பொதுவாக ஸ்ம்ருதியைக் காட்டிலும் ச்ருதி பலமானது என்பது உண்மை.
ஆனால், சமமான பொருள்களைப் பற்றிப் பேசும் போது தான் இந்த நியமம் பொருந்தும்.
இவ்விடத்தில் சமமாந பொருள்கள் பேசப்பட வில்லை .
• இங்கு ஸ்ம்ருதியால் சொல்லப்படுவது ஆசமநம் என்ற ஒரு செயல். செயல் என்பது முக்யமானது.
• இங்கு ச்ருதியால் சொல்லப்படுவது செயல்களுக்கு இடையில் இருக்கும் வரிசை தான்.
செய்தலைக் காட்டிலும் வரிசை என்பது இரண்டாம் பக்ஷம் தான்.
• ஆகையால், அநுஷ்டிக்கப்பட வேண்டிய செயலைச் சொல்லும் ஸ்ம்ருதி தான் பலமானது,
செயல்களுக்கு இடையில் இருக்கவேண்டிய வரிசையை மட்டும் சொல்லும் ச்ருதி இங்கு
துர்பலமானது என்பது தான் ஸித்தாந்தம்.
• ஆகையால், வேதம் செய்த பிறகு இருமல் வந்தால், ஸ்ம்ருதி சொன்னபடி ஆசமநம் செய்து விட்டு
தான் வேதிஸயச் செய்ய வேண்டும்

சான்றோர்களின் ஆசாரமும் -நடத்தையும்-பிரமாணம் தான் –

அடுத்து, சான்றோர்களின் ஆசாரம் என்று சொல்லப்படும் நடத்தையும் தர்மத்தை போதிக்கும்
ப்ரமாணம் தான் என்று நிரூபிக்கிறார் ஜைமிநி மஹரிஷி
• வேதமே பல தர்மங்கஸள உபதேசிக்கிறது. வேதத்தில் காணப்படாத சில தர்மங்கள் கூட
ஸ்ம்ருதிகளில் உள்ளன என்றும் பார்த்தோம்.
வேதத்திலோ ஸ்ம்ருதிகளிலோ இல்லாத சில செயல்கள் நம் முன்றோர்களின்
வழக்கத்தில்/நடத்தையில் காணப்படுகின்றன . அவை தர்மங்கள் தானா?
அவை தர்மம் என்று முடிவு செய்ய முன்னோர்களின் ஆசாரம் போதுமானதா?
அல்லது அவர்கள் நடத்தையைக் கொண்டு தர்மத்தை அறிய இயலாதா? என்ற கேள்வி எழுகிறது.
• பூர்வ பக்ஷம் –
முன் சொன்ன படி, முன்னோர்களின் சில வழக்கங்கள் வேதத்திலோ ஸ்ம்ருதிகளிலோ
காணப்படாதபடியால் அவற்றுக்கு மூலமே கிடையாது. அவை தர்ம்மாக இருந்தால், ஏதோ ஒரு மூலத்திலிருந்து
அவற்றை அறிந்து தானே முன்னோர்கள் செய்திருக்க வேண்டும்?
அப்படி ஒரு மூலம் கிடைக்கவே இல்லை . ஆகையால், அவர்கள் தானாகவே ஏதோ செய்திருக்கிறார்களே தவிற,
அவர்கள் வழக்கத்தைக் கொண்டு அந்த செயல்கள் எல்லாம் தர்மங்கள் என்று முடிவு செய்ய இயலாது-

ஸித்தாந்தம் –
நம் முன்னோர்கள் வேதங்களையும் ஸ்ம்ருதிகளையும் கற்று, அவற்றில் சொன்ன தர்ம
கார்யங்களை மட்டுமே செய்பவர்களாக இருந்தபடியால்,அப்படிப்பட்ட சான்றோர்களால்
செய்யப்பட்ட ஒன்று தர்மமாகத் தான் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்யலாம்.
ஆகையால், அவர்களின் ஆசாரமும் ப்ரமாணம் தான்.
• கேள்வி – முன்னோர்கள் செய்த அந்தக் காரியங்கள் ஏன் மநு முதலியோர்களால் ஸ்ம்ருதியில்
எழுதப்பட வில்லை ?
• பதில் – அனைத்து தர்மங்களையும் ஒரு நூலில் எழுதினால் அது வேதம் போல் மிகவும் பெரிதாகி விடும்
என்ற அச்சத்தால் தான் மநு முதலானேர்கள் சில தர்மங்களை மட்டும் எழுதி, சிலவற்றை எழுதாமல் விட்டனர்.
ஆனால், அவற்றையும் சிஷ்யர்கள் அறிய வேண்டும் என்பதற்காகத் தான் மநு பகவான்
“சான்றோர்களின் நடத்தையும் தர்மத்தின் ப்ரமாணம்” என்று பொதுவாகச் சொல்லி விட்டார்.

ஆசாரத்தை எப்போது பிரமாணமாக ஏற்கலாம் —

ஸ்ம்ருதி என்பது நேரே ப்ரமாணம் ஆகாது,
ச்ருதியை அநுமானம் செய்ய வைப்பதன் மூலம் தான் ப்ரமாணம் ஆகும் என்று பார்த்தோம்.
• அதே போல் , ஆசாரமும் நேரே ப்ரமாணம் ஆகாது.
அது ஸ்ம்ருதிக்கு சமமாகக் கூட ஆகாது.மூன்றாவது படி தான்.
• மநு தன் ஸ்ம்ருதியில் ஒரு செயலைச் சொல்லியிருந்தால் அதைக் கண்டிப்பாக வேதத்திலிருந்து
அறிந்திருப்பார் என்று சொல்லலாம்,
ஏன் என்றால் மநு அனைத்து வேதங்களையும் அறியும் திறமை உடையவர்.
• நம் முன்னோர்கள் ஒரு செயலைச் செய்வதைப் பார்த்தால், அது ஏதோ ஒரு வேதத்தில் சொல்லப்பட்டிருக்க
வேண்டும் என்று நேரே அநுமானம் செய்ய இயலாது, ஏன் என்றால் நம் முன்னோர்கள் அனைத்து
வேதங்களையும் அறியும் அளவுக்கு ஜ்ஞாநம் மிகுந்தவர்கள் அல்லர்.
• ஆகையால், அவர்கள் மநு முதலானவர்களால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளைப் படித்து, அதிலிருந்து தான்
அந்த செயலைப் பற்றி அறிந்திருக்க முடியும்.
• ஆகையால், ஒரு செயலை முன்னோர்களின் வழக்கத்தில் கண்டு, அந்தச் செயலை போதிக்கும் ஸ்ம்ருதி
இருக்க வேண்டும் என்று முதலில் அநுமானம் செய்து, அந்த ஸ்ம்ருதிஸய எழுதிய மநு முதலானவர்கள்
அந்தச் செயலை வேதத்திலிருந்து தான் அறிந்திருக்க வேண்டும் என்பதால் வேதத்தைப்
பின்னர் தான் அநுமானம் செய்ய முடியும்.
• ஆகவே, வேதத்தைக் காட்டிலும் ஸ்ம்ருதி துர்பலமானது, ஸ்ம்ருதியைக் காட்டிலும் ஆசாரம் துர்பலமானது.
• ஆகையால், ஸ்ம்ருதி / வேதத்தோடு முரண்படாத ஆசாரத்தை மட்டும் தான் ப்ரமாணமாக ஏற்க முடியும்..
ஆச்சார்யாத் ஸ்ம்ருதி -அதனால் -சுருதி -இதுவே நேராக பிரமாணம் —

வ்யவஹாரம் என்ற ஆசாரம் உலகமா ஆசாரமா

வராஹம் -பன்றி -காக்கை –
சைந்தவம் உப்பையும் குதிரையும் குறிக்கும்
யவம் -பார்லி -வால் கோதுமை -இரண்டையும் குறிக்கும்
இது போல் ஒரே பொருளுக்கு பல அர்த்தங்கள் இருக்குமே

முன்னோர்களின் ஆசாரத்தில் (நடத்தையில்) ஒரு வகை தான்
அவர்களது பேச்சு / சொல்லாடல் என்ற வ்யவஹாரம்.
அது எப்போது ப்ரமாணம் ஆகும், எப்போது ஆகாது என்று விசாரிக்கப் படுகிறது.
• விஷயம் மற்றும் ஸந்தேகம் –
ஒரு விதி வாக்யம் ’வராஹம்’ என்ற சொல்லை உபயோகிக்கிறது. பிறகு, வேதமே ஒரு
அர்த்தவாதத்தில், “வராஹத்தின் பின்னால் மாடுகள் ஓடுகின்றன” என்று கூறுகிறது.
ஆகையால் வராஹம் என்பது பன்றி என்று தெரிகிறது. அதே சமயம், உலகத்தில் வராஹம் என்ற சொல்
காக்கை -கிருஷ்ண சகுனி – என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
இப்பொழுது விதி வாக்யத்தில் இருக்கும் வராஹம் என்ற சொல்லுக்கு
பன்றி என்று பொருளா? காக்கை என்று பொருளா என்று சந்தேகம் .
• பூர்வ பக்ஷம் –
தர்மத்தை போதிப்பதில் வேதம் தான் ப்ரமாணம் என்றாலும், சொற்களுக்கும் அவற்றின் பொருள்களுக்கும்
உள்ள தொடர்பைப் போதிப்பதில் வேதமும் உலகமும் ஸமமானவை தான். ஆகையால், ஒரே சொல்லுக்கு
வேதத்தில் ஒரு பொருளும் உலகத்தில் ஒரு பொருளும் வழக்கத்திலிருந்தால், எதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்,
இரண்டுமே ஸமமானவை தான்.
ஆகையால், இங்கு விதி வாக்யத்தில் இருக்கும் வராஹம் என்ற சொல்லுக்குக் பன்றி என்றும் பொருள் கொள்ளலாம்,
காக்கை என்றும் பொருள் கொள்ளலாம்.

ஸித்தாந்தம் –
எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் என்ற விஷயத்தில் வேதத்துக்கும் உலகத்துக்கும் முரண்பாடு
ஏற்பட்டால், வேதம் தான் ஏற்கப்பட வேண்டும்.
• அர்த்தவாத அதிகரணத்தில், அர்த்த வாதங்களுக்குத் தனித்து ஒரு பயனும் இல்லாதபடியால்,
விதி வாக்யத்தால் விதிக்கப்பட்ட ஒரு பொருளை புகழ்வது தான் அர்த்த வாதங்களின்
உபயோகம் என்று பார்த்தோம்.
• அது நிலைக்க வேண்டும் என்றால், விதியும் அர்த்தவாதமும் ஒரே பொருளைப் பற்றிப் பேச வேண்டும்.
• நாம் பார்த்த எடுத்துக் காட்டில், “வராஹத்திற்குப் பின்னால் மாடுகள் ஓடுகின்றன” என்ற அர்த்த வாதத்தில்
’வராஹம்’ என்ற சொல் பன்றியைத்தான் குறிக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது –
• விதி வாக்யத்தில் இருக்கும் ’வராஹம்’ என்ற சொல்லுக்கு மட்டும், உலக வழக்கின்படி, காக்கை என்ற
பொருளைக் கொண்டோம் என்றால் விதி வேறு ஒன்றை விதிக்க,
அர்த்தவாதம் வேறே ஒன்றைப் புகழ்கிற து என்றாகிவிடும். அது ஒட்டாது.
• ஆகையால், உலக வழக்குக்கும் வேத வழக்குக்கும் விரோதம் இருந்தால்,
வேத வழக்கு ப்ரபலமானது, அது தான் ஆதரிக்கப்படவேண்டும்-

வ்யவஹாரம்-என்ற ஆசாரம் கற்றோரா -கல்லாதாரா –
விஷயம் –
அடுத்து, வேதத்தில் ஒரு சொல்லுக்குப் பொருள் கூறப்படாத பொழுது, அச் சொல்லிற்கு
குரு விடமிருந்து வேதம் முதலானவற்றைப் படித்த வைதிகர்கள் ஒரு பொருளையும் ,
அவற்றைக் கல்லாத லௌகிகர்கள் ஒரு பொருளையும் கூறினால்,
எது ஏற்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
• ஸந்தேகம் –
வேதத்தில் ’பீலு’ என்ற சொல் காணப்படுகிறது.அதற்கு வைதிகர்கள் ’ஒரு வகையான மரம்’ என்று
பொருள் கூறுகின்றனர். லௌகிகர்கள் ’யானை ’ என்று பொருள் கூறுகின்றனர். எதை ஏற்க வேண்டும்?
• பூர்வ பக்ஷம் –
தினசரி வழக்கத்தில் ஒன்றான சொல்-பொருள் தொடர்பு என்பதில் வைதிகர்களுக்கு எவ்வளவு பரிசயம் / திறமை
உண்டோ , அதே அளவுக்கு லௌகிகர்களுக்கும் உண்டு. ஆகையால், இரண்டில் எதை வேண்டுமானாலும் கொள்ளலாம்.
• ஸித்தாந்தம் –
உலகப் பேச்சு வழக்கில் இருவரும் சமமாக இருந்தாலும், வைதிகர்கள் வேதத்தையும் அதன் பொருளையும்
காப்பதை மிக முக்கியமாகக் கருதுகிறபடியால், அதுவும் வேதத்தின் பொருள் புலன்களுக்கு அப்பாற்பட்டதான படியால்,
ஒரு சொல்லோ அதன் பொருளோ மாறு படாமல் கவனமாக இருப்பார்கள்.
லௌகிகர்கள் பேசுவது த்ருஷ்டமா (புலன்களுக்கு எட்டும்) விஷயங்களைப் பற்றி தான்.
ஆகையால் அவர்களுக்கு அதில் கவனம் இருக்காது.
ஆகையால், வைதிகர்கள் கூறும் பொருள் தான் பலமானது.
பிரமாதம் -கவனக்குறைவு -ஆனால் நன்றாக என்று லௌகிகர் –

வ்யவஹாரம் என்ற ஆசாரம் பொது மக்களா -அங்கங்களா –
விஷயம் –
அடுத்து, ஒரு சொல்லுக்கு வேதமோ வைதிகர்களோ எந்தப் பொருளும் கூறாத போது, லௌகிகர்களின் வழக்கத்தில்
இருக்கும் பொருளை எடுத்துக் கொள்ளலாமா? அல்லது நிருக்தம் முதலான வேதத்தின் அங்கங்களாக் கொண்டு புதிய பொருள்
கண்டு பிடிக்கப்பட வேண்டுமா?
நிருக்தம் என்பது கடினமான சொற்களுக்குப் பொருள் கூறும் ஒரு நூல். வேதத்தின் அங்கம்.
• ஸந்தேகம் –
வேதத்தில் ’பிகம்’ என்ற சொல் உள்ளது. அதற்கு உலக வழக்கில் ’கொக்கு’ என்ற பொருள் உள்ளது. அதை
ஏற்கலாமா? அல்லது, நிருக்தம் முதலியவற்றைக் கொண்டு புது பொருள் சொல்ல வேண்டுமா?
• பூர்வபக்ஷம் –
நிருக்தம் முதலான வற்றைக் கொண்டு அறிய வேண்டும். இல்லை எனில் அவை இருப்பதே வீண் என்று
ஆகிவிடும். மேலும், வேதத்தின் அங்கம் தானே உலக வழக்கை விட பலமானதாக இருக்க வேண்டும்.
• ஸித்தாந்தம் –
நிருக்தம் என்பது ஒரு சொல்லிற்குப் புது பொருளை கண்டு பிடிப்பதற்காக அல்ல. ஒரு சொல்,
வழக்கத்திலிருக்கும் ஒரு பொருளை ஏன் கூறுகிறது என்ற காரணத்தைச் சொல்லத் தான்.
ஆகையால், முன்னமே அனை வரும் அறிந்த உலக வழக்கைப் புறக்கணித்து விட்டு, புதிதாக நிருக்தத்தைக் கொண்டு
ஒரு பொருள் கூறுவது என்பது சரி அல்ல.
• எந்தச் சொல்லுக்கு வேதமோ , வைதிகர்களோ , லௌகிகர்களோ எந்தப் பொருளும் கூற வில்லையோ ,
அந்தச் சொல்லின் பொருளைக் கூறுவது தான் நிருக்தத்தின் பயன். அது வீண் அல்ல.

1-3-10- வேதத்திலும் உலக வழக்கிலும் இருக்கும் சொற்கள் ஒன்றா வெவ்வேறா –

இந்த பாதத்தின் இறுதியில், உலகில் பயன்படுத்தும் சொற்களும், அவற்றின் பொருள்களும்,
வேதத்திலிருக்கும் சொற்களும் பொருள்களும் ஒன்றா வெவ்வேறா? என்று விசாரிக்கப்படுகிறது.
• பூர்வ பக்ஷம்
• உலகில் ஆத்மா, ப்ராஹ்மணன் முதலான சொற்கள் வழக்கத்தில் உள்ளன.
வேதத்தில் ’ஆ’ என்ற எழுத்ஸத விட்டு விட்டு ’த்மா’ என்றும், ’ஸ ’ என்ற எழுத்தைக் கூட்டி
’ப்ராஹ்மணாஸ:’ என்றும் காணப்படுகிறது.
ஆகையால், சொல்லின் வடிவத்தில் வேறுபாடு உள்ளபடியால், சொற்கள் வெவ்வேறு தான்.
• வேதத்தில் ’தேவ லோகத்தில் மாடுகள் தலை கீழாக நடக்கின்றன’ என்று கூறப்படுகிறது. ஆகையால்,
நாம் மாடு என்று அழைக்கும் பொருள் இங்கு சொல்லப்பட வில்லை . ஆகையால், வேதத்தில்
இருக்கும் சொற்களின் பொருளும் வேறு வேறு தான்.
• ஸித்தாந்தம் –
வேதத்திலும் உலகத்திலும் சொற்கள் ஒன்று தான். ’ஆத்மா என்கிற சொல் தான் த்மா என்று சொல்லப் பட்டுள்ளது’
என்ற ப்ரத்யபிஜ்ஜை ஏற்படுகிறபடியால்.பொருளும் ஒன்று தான்,
தேவ லோகத்தைப் புகழ்வதற்காக வேதம் அப்படிக் கூறுகிறது.
ப்ரத்யபிஜ்ஜை-சோயம் தேவதத்தா -அவரே இவர் நினைவும் ப்ரத்யக்ஷமும் சேர்த்து recognition
• வேதச் சொற்களுக்கு வேறு பொருள் என்று கொண்டால் ஒருவரும் அதை அறியவே முடியாது.
உலக வழக்கிலிருந்து சொற்களின் பொருள்களைக் கற்றுக் கொண்டு வேதத்தைப் படித்தால் தான் அதன்
பொருள் புரியும். வேதச் சொற்களுக்கு வேற ஓரு பொருள் என்றால், அதை எப்படி அறிய முடியும்?
ஆகையால் ஒன்று தான் –

——————-

பாடம் 6- -நாம தேயம் -வாக்ய சேஷம்-மற்றும் சாமர்த்தியம்

கட்டளையின் அம்சங்கள் –

உலகத்திலோ வேதத்திலோ ஒரு கட்டளை இருந்தால் அதில் ஒருவராலே மற்ற ஓருவரின்
முயற்சி கட்டளை யிடப்படுகிறது.
• ’அவன் கோடாரியாலே மரத்தை வெட்டுகிறான்’ என்பதற்கும் ’நீ கோடாரியாலே மரத்தை வெட்டு’
என்பதற்கும் உள்ள வேறுபாடு, இரண்டாவது சொல் தொடரில் சொல்பவர் இடமிருக்கும் ஒரு ஆசை உள்ளது –
’இவன் அந்த மரத்தை வெட்ட வேண்டும்’ என்று. அதற்கு தான் ’விதி’ என்று பெயர்
• கேட்பவரில் முயற்சியில் மூன்று பகுதிகள் உள்ளன –
பயன் (பலம்), கருவி (கரணம்), செயல் முறை (இதி கர்தவ்யதா) என்று.
மரம் பிளவு படுதல் தான் பயன். கோடரி தான் கருவி . ஓங்கி அடிப்பது தான் செயல் முறை
முயற்சி -பாவனா- பிரவிருத்தி-
எதைக் கொண்டு -கருவி -கரணம் –
எப்படிச் செய்ய வேண்டும் -இதி கர்தவ்யதா -செயல் முறை procedure
செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் சேரும் –
எதனால் -பாவ்யம் -பிரயோஜனம் –
காரீரி யாகத்தால் மழை -இதில் யாகம் கருவி
தியாகம் -நம் பொருளை நமக்கு என்று கொள்ளாமல் -தேவதைக்கு சமர்ப்பித்தது தான் யாகம் –
ஹோமத்தில் போடுவது ஒரு அங்கமே
• அதே போல் , வேதத்திலும் ’ஸ்வர்கத்துக்காக ஜ்யோதிஷ்டோம யாகத்தைச் செய்’ என்ற கட்டளையில்
ஸ்வர்கம் பயன், யாகம் கருவி -செயல் முறை பெரிது – பல அங்கங்களை வேதமே உபதேசிக்கிறது. –
அவற்றைச் செய்து கொண்டு ஒரு யாகத்தைச் செய்தால் தான் பயன் கிடைக்கும் –

கட்டளையின் வகைகள்

மற்ற ஓரு வகையில் பிரித்துப் பார்த்தால் விதிகளை இப்படியும் பிரிக்கலாம்
• (1) கர்ம விதி – நாம் இது வரை அறியாத ஒரு கர்மத்தை விதிப்பது
• (2) குண விதி – முன்னமே வேதத்தால் விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தினுடைய அங்கத்தை போதிக்கக் கூடிய விதி.
ஒரு யாகத்தின் அங்கம் என்பது ஒரு லௌகிகச் செயலாகவோ, ஒரு பொருளாகவோ
யாகம் ஹோமம் முதலான வைதிகச் செயல்களாகவோ இருக்கலாம்.
எடுத்துக் காட்டு –
யாகம் செய்யத் தேவைப்படும் நெல் யாகத்தின் அங்கம்.
அந்த நெல்லிலிருந்து உமியை நீக்க அதை உலக்கையால் குத்துவது என்ற லௌகிகச் செயலும் யாகத்தின் அங்கம்.
அந்த நெல்லை ப்ரோக்ஷிப்பது / வேற ஓரு யாகம் செய்வது என்பதும் யாகத்தின் அங்கம்.
இவை அனைத்துமே ’குணம்’ என்றே அழைக்கப்படுகின்றன.
• (3) விசிஷ்ட விதி – நாம் அறியாத ஒரு கர்மத்தையும், அதில் பயன்படும் ஒரு குணத்தையும் சேர்ந்தே
விதிக்கக் கூடிய ஒரு விதி-
சோமேநே யஜதே-ஸோம ரசம் கொண்டு யாகம் -போல்வன
சோமத்தால் யோகத்தால் சுவர்க்கம் அடையலாம்
சோமா லத்தியால் இந்த யாகம் செய்து சுவர்க்கம்
சோமம் என்கிற யோகத்தால் என்றும் அர்த்தம் கொள்ளலாமே -ஆனால் சோமம் என்கிற யாகம் இல்லையே
ஆகவே லதையையே சொன்னவாறு

நான்காவது பாகத்தின் விஷயம் -நாம தேய பாதம் என்றே இதற்குப் பெயர் –

முதல் அத்யாயத்தின் நான்காவது பாதம், தர்மத்தைப் போதிக்கும் கடைசி மூன்று ப்ரமாணங்களை போதிக்கிறது –
நாம தேயம்,
வாக்ய சேஷம் மற்றும்
சாமர்த்யம் என்று.

• நாம தேயம் என்றால் பெயர்.
விதி வாக்கியங்களில் இருக்கும் சில பெயர்ச் சொற்கள் , அந்த யாகத்தில்
பயன் படுத்தப்பட வேண்டிய ஒரு பொருளைக் குறிக்கின்றனவா ?
அல்லது அந்த யாகத்தின் பெயர் தானா? என்று விசாரம் செய்யப்படுகிறது.
• நாம் தமிழில் ’உயரமான ராமனால் ராவணன் கொல்லப்பட்டான்’ என்று சொல்வதை
’உயரமானவனால் ராமனால் ராவணன் கொல்லப்பட்டான்’ என்று தான் ஸம்ஸ்க்ருதத்தில் சொல்ல வேண்டும்.
உயரமானவன், ராமன் என்ற இரண்டு சொற்களுக்குப் பிறகும் மூன்றாம் வேற்றுமை உறுப்பு இருப்பதைக் காண்க.
அந்த உயரமானவன் தான் ராமன் என்று பின்னர் அறிகிறோம்.
• ’ராமனால் அம்பால் ராவணன் கொல்லப்பட்டான்’ என்று சொன்னால், வேற்றுமை உறுபு ஒன்றாக இருந்தாலும்,
ராமன் வேறு, அம்பு வேறு என்று நாம் அறிவோம்.
• வேதத்தில் ’சோமத்தால் யாகத்தால் ஸ்வர்கத்தைப் பெறலாம்’,
’அக்நி ஹோத்ரத்தால் சோமத்தால் ஸ்வர்கம் பெறலாம்’ என்று கூறுகிறது.
இங்கு, சோமம், அக்நி ஹோத்ரம் போன்ற சொற்கள் ஒரு அங்கத்தைச் சொல்லுகின்றனவா ?
அல்லது யாகத்தின் பெயர்களா ? என்று சந்தேகம் ஏற்படலாம் –

குணமா பெயரா -முடிவுகள் –

1-ஒரு பெயர்ச் சொல் இடுகுறிப் பெயராக இருந்து, உலகில் அதற்குப் ப்ரபலமாக ஒரு பொருள் இருந்தால்,
அந்தச் சொல் யாகத்தின் பெயர் ஆகாது. குணத்தைத் தான் காட்டுகிறது.
எடுத்துக் காட்டு –
“சோமத்தால் யாகத்தால் ஸ்வர்கம் பெறலாம்”. இங்கு சோமம் என்ற சொல் இடுகுறிப் பெயராகவும்
உலகில் ஒரு கொடியைக் குறிப்பதாகவும் இருக்கிறபடியால் அது யாகத்தின் பெயர் ஆகாது

2. ஒரு சொல் காரணப் பெயராக இருந்து, அது உலகில் எந்த ஒரு பொருளையும் குறிப்பதாக வழக்கத்தில் இல்லா விட்டால்,
அது யாகத்தின் பெயர் ஆகலாம். ஒரு குணத்தோடு கூடிய ஒரு செயலை விதித்தால் அந்த விதி வாக்யத்துக்கு கௌரவம்
(கார்ய மிகுதி) ஏற்படும். ஆகையால், இந்தச் சொல் குணத்தைச் சொல்லவில்லை
யாகத்தின் பெயர் தான்.
எடுத்துக் காட்டு –
உத்பிதா யஜதே பசு காம -“உத்பித்தால் யாகத்தால் பசுவைப் பெறலாம்”.
இங்கு உத்பித் என்ற சொல் பொதுவாக உலக வழக்கத்தில் இல்லை . இது காரணப் பெயர் தான்.
’உத்’ –மேல் போக்கி – ’பித்’ – பிளத்தல் என்று பொருள் கொண்டு
உத்பித் என்றால் மண் வெட்டி (கணித்ரம்-சமஸ்க்ருதம் ) –என்று பூர்வ பக்ஷம்.
இல்லை ,
’உத்பித்’ – உத்பத்தி என்று கொண்டு -மேல் நோக்கி உண்டாக்குவது என்ற அர்த்தத்தால்
பசு என்ற பலத்தை உத்பத்தி செய்யும் யாகத்தைத் தான் சொல்லுகிறது என்று ஸித்தாந்தம்.

உத்பித் அதிகரணமே முதல் அதிகரணம் –

3–இடுகுறிப் பெயர் பொதுவாக குணத்தைத் தான் சொல்லும், யாகத்தை அல்ல என்று சொல்லி யிருந்தாலும்,
அந்தச் சொல்லால் குறிக்கப்படும் குணம் (அங்கம்) முன்னமே வேறே ஓரு வழியால் போதிக்கப் பட்டதாக இருந்தால்,
இந்த வாக்யத்தில் அதை விதிப்பதில் எந்தப் ப்ரயோஜனமும் இல்லை .
ஆகையால், அது யாகத்தின் பெயராகத் தான் இருக்க வேண்டும்.
• எடுத்துக் காட்டு –
“அக்நி ஹோத்ரத்தால் சோமத்தால் ஸ்வர்கம் பெறலாம்”.
• இங்கு அக்நி ஹோத்ரம் என்ற சொல்லுக்கு, “அக்நிக்காக செய்யப் படும் ஹோமம்” என்று பொருள்.
ஆகையால், இந்தச் சொல்லால், அக்நி என்ற தேவதை (கடவுள்) தான் இந்த யாகத்தின் அங்கமாக விதிக்கப் படுகிறார்
என்று சொல்ல வேண்டும்.
• ஆனால், இந்த ஹோமத்தில் அக்நி தேவதை என்பது முன்னமே அக்நியைப் பற்றின ஒரு மந்த்ரத்தினால் நாம் அறிந்ததே தான் .
ஆகையால், மறுபடியும் அக்நி என்ற தேவதையை விதிப்பதால் எந்தப் ப்ரயோஜனமும் இல்லை
• ஆகையால், இந்தச் சொல் யாகத்தின் பெயராகத் தான் இருக்க வேண்டும்.

4–ஓர் இடுகுறிப் பெயரால் குணத்தை விதிக்க முயலும் பொழுது, அந்தப் பொருளுக்கு ஒட்டாத ஓர் உவமாநம் வேதத்தில்
சொல்லப் பட்டிருந்தால், அதை விதிக்க முடியாது.
• எடுத்துக் காட்டு – “
ச்யேநத்தால் யாகத்தால் எதிரிகள் மரணம் அடைவார்கள் ”.
• இங்கு ச்யேநம் என்ற சொல் உலகில் கழுகைக் குறிக்கும்.
ஆகையால், இந்தச் சொல்லால், கழுகு தான் இந்த யாகத்தின் அங்கமாக விதிக்கப்படுகிறார் என்று சொல்ல வேண்டும்.
• ஆனால், இந்த இடத்தில் ஓர் உவமானம் சொல்லப் பட்டுள்ளது –
“கழுகு எப்படி எதிரிகளைக் கொத்திக் கொல்லுமோ அதே போல் இதுவும் எதிரிகளைக் கொத்திக் கொல்லும் ” என்று,
• ’இது’ என்று குறிக்கப்படுவதும் கழுகாக இருந்தால், தானே தனக்கு உவமை என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.
• ஆகையால், இந்தச் சொல் யாகத்தின் பெயராகத் தான் இருக்க வேண்டும்.
• “எப்படி கழுகு எதிரிகளைக் கொத்திக் கொல்லுமோ அதே போல் இந்த யாகமும் எதிரிகளைக் கொத்திக் கொல்லும் ”
என்று யாகத்தைப் புகழ்வது தான் இந்த உவமையின் கருத்து –

கௌணீ வ்ருத்தி

ந்யாய சாஸ்த்ரம் படிக்கும் பொழுது, சக்தி லக்ஷணா என்ற இரண்டு வ்ருத்திகளைப் பற்றிப் பார்த்தோம்.
சக்தி வ்ருத்தி என்பது தான் ஒரு பொருளுக்கும் அதன் முக்கியமான பொருளுக்குமுள்ள தொடர்பு.
எந்த இடத்தில் அந்தப் பொருளைக் குறிக்க இயலாதோ , அங்கு அதோடு தொடர்புடைய மற்ற ஓரு பொருளைக்
குறிப்பிடப் பயன்படுவது தான் லக்ஷணா என்ற வ்ருத்தி.-சக்தி சம்பந்தா லக்ஷணா –
• லக்ஷணா என்ற வ்ருத்தியால் அறிவு ஏற்படும் பொழுது,
ஸிம்ஹா தேவ தத்தன் -இரண்டும் வேறே வேறே -சக்தியால் கொண்ட அர்த்தங்கள் கொள்ள முடியாதே இதில்
பலத்துக்காக சொன்னால் லக்ஷணா விருத்தி ஆகும்
’மாணவன் அக்நி’ என்ற சொல் தொடரில் , அக்நி என்ற சொல் அக்நியிடமிருக்கும் தேஜஸ்ஸைக் குறிக்கிறபடியால்,
’தேஜஸ்ஸை உடையவன் மாணவன்” என்ற அறிவு தான் ஏற்படும்.
• சில நேரத்தில், அக்நி என்ற சொல், தேஜஸ்ஸை மட்டும் குறிக்காமல், “அக்நியிடமிருக்கும் தேஜஸ்ஸைப் போன்ற
தேஜஸ்ஸை உடையவன் மாணவன்” என்ற அறிவை ஏற்படுத்தும். அதுதான் கௌணீ வ்ருத்தி என்று சொல்லப் படுகிறது.
• ஒரு குணத்தின் அடிப்படையில் ஒரு சொல் தன் பொருளை விட்டு, வேறே ஒரு பொருளைக் குறிக்கிற படியால்,
இந்த வ்ருத்திக்கு கௌணீ வ்ருத்தி -என்ற பெயர் –
லக்ஷணா விருத்தி போல் முக்கிய அர்த்தம் விடாமல் இந்த விருத்தி

பல அதிகரணங்களைக் கொண்டு ஒரே விஷயத்தை காட்டி விளக்க கௌணீ வ்ருத்தி –

கௌணீ விருத்தியின் வகைகள் –

1. தத் ஸித்தி – ஒரு செயலைச் செய்து முடிக்கும் திறமை .
“யஜமாநன் ப்ரஸ்தரம்” என்ற வேத வாக்யத்துக்கு
’யஜமாநன் போல் தன் கார்யத்தை முடிப்பது ப்ரஸ்தரம் என்ற தர்பக் கட்டு” என்று பொருள்
2. ஜாதி – ஒரே இடத்திலிருந்து பிறப்பு.
“அக்நி ப்ராஹ்மணன்” என்ற வேத வாக்யத்துக்கு
“அக்நியைப் பிறப்பித்த ப்ரஜாபதியிடமிருந்து பிறந்தவன் ப்ராஹ்மணன்” என்று பொருள்.
3. ஸாரூப்யம் – உருவ ஒற்றுமை .
“ஆதித்யன் யூபம்” என்ற வேத வாக்யத்துக்கு
“ஆதித்யனிடம் இருக்கும் ஒளி போல் ஒளி பொருந்தியது யூபம் என்ற மரத் தூண்” என்று பொருள்
4. ப்ரசம்ஸை – புகழ்ச்சி. ஒன்றைப் புகழ்வதற்காக மற்ற ஓன்றைக் குறைத்துச் சொல்லுதல்.
“பசுவும் குதிரையும் தான் விலங்குகள், மற்றவை விலங்குகள் அல்ல” என்ற வேத வாக்யத்துக்கு
(இவை இரண்டுமே பசு மற்றவை அபசு என்று வேதம் சொல்லும் -பசு சப்தத்தால் விலங்கு )
“மற்ற விலங்குகள் பசு / குதிரை போல் உயர்ந்த விலங்குகள் அல்ல” என்று பொருள்
5. பூமா – மிகுதி – ஒரு கூட்டத்தில் இருப்பவர்கள் இடம் பெரும்பாலும் ஒரு
தன்மை இருந்தால், அதை இட்டு அவர்கள் அனைவரையும் குறிக்கலாம்.
“ஸ்ருஷ்டி மந்த்ரங்கள்” என்ற சொல்லால், வேதம் ’ஸ்ருஶ்டி’ என்ற சொல்
ஸ்ருஷ்டி என்ற சொல் இருக்கும் பல மந்த்ரங்களையும், அது இல்லாத சில மந்த்ரங்களையும் சேர்த்துக் குறிக்கிறது
6. லிங்க ஸமவாயம் – குறைவு – ஒரு கூட்டத்தில் இருப்பவர்கள் இடம் சிலரிடமே உள்ள் ஒரு தன்மை இருந்தால்,
அதை இட்டு அவர்கள் அனைவரையும் குறிக்கலாம். “ப்ராண ப்ருத் மந்த்ரங்கள்” என்ற சொல்லால்,
வேதம் ’ப்ராணன்’ என்ற சொல் இல்லாத பல மந்த்ரங்களையும்,
அது இருக்கும் வேறு சில மந்த்ரங்களையும் சேர்த்துக் குறிக்கிறது –

வாக்ய சேஷம்

• தர்மத்தைப் போதிக்கும் ஏழாவது ப்ரமாணம் வாக்ய சேஷம்.
சேஷம் என்றால் மீதம் / பின்புள்ள பகுதி. ஒரு விதிக்கு உதவி செய்வதன் மூலம் அதற்கு சேஷமாக இருக்கும்
அர்த்த வாதங்களும் அவ்வப்போது தர்மத்தின் ப்ரமாணம் ஆகலாம்.
• எடுத்துக் காட்டு –
“பூசப்பட்ட சிறு கற்களை அடுக்க வேண்டும்” என்ற வேத வாக்யத்தில், கற்கள்
பூசப்பட வேண்டும் என்று உள்ளதே தவிற, நெய்யாலாலேயா எண்ணையாலேயா என்று தெளிவாக இல்லை .
• பூர்வ பக்ஷம் –
எந்த பொருளையும் குறிப்பிடாதபடியால், நம் இஷ்டப்படி ஒன்றைப் பூசலாம்
• ஸித்தாந்தம் –
விதி வாக்யத்தில் எந்த த்ரவ்யமும் குறிப்பிடப்படாத போதும், அடுத்து வரும் அர்த்தவாதத்தில் நெய்யைப் புகழ்ந்து
பாடியுள்ள படியால், இங்கு நெய்யைக் கொண்டு தான் கற்களைப் பூச வேண்டும்.(நெய் -க்ருதம் – சமஸ்க்ருத சொல் )
• விதி வாக்யத்துக்கு அர்த்தவாதம் உதவியாக மட்டும் இருந்தாலும், விதி வாக்யத்தில் ஒரு சந்தேகம்
இருந்தால் அர்த்த வாதம் அதைத் தீர்த்துக் கொடுக்கலாம்.

சாமர்த்தியம்

தர்மத்தைப் போதிக்கும் எட்டாவது ப்ரமாணம் சாமர்த்யம் என்று சொல்லப்படும் திறமை .
• வேதத்தில் “ஸ்ருவத்தால் அவதானம் செய்”, “கையால் அவதானம் செய்” என்று சொல்கிறது.
ஸ்ருவம் என்பது ஒரு கரண்டி. அவதாநம் என்றால், ஒரு பொருளில் இருந்து ஒரு பகுதியைப் பிரித்து எடுத்தல்.
யாகத்தில், தேவதைக்காகக் கொடுக்கப்பட்ட த்ரவ்யத்தின் ஒரு பகுதியை எடுத்து அக்நியில் சேர்க்க வேண்டும்.
அந்த த்ரவ்யம் பால், தயிர், நெய், கஞ்ஜி (சரு), தோசை (புரோடாசம்) என்று பல வகைப்படும்.
• பூர்வ பக்ஷம் –
இந்த விதிகளில் எந்த ஒரு வகையையும் குறிப்பிடாதபடியால், எந்த த்ரவ்யத்தை வேண்டுமானாலும்
ஸ்ருவத்தாலோ கையாலோ அவதானம் செய்யலாம்
• ஸித்தாந்தம் –
விதிகளில் வெளிப்படையாகச் சொல்லப்படா விட்டாலும் -ஸ்ருவம் என்ற கரண்டிக்கு த்ரவ்யமாக
இருக்கும் நெய் பால் போன்ற பொருள்களை அவதாநம் செய்வதில் தான் திறமை உண்டு.
கெட்டியாக இருக்கும் தோசை முதலான வற்றை விண்டு எடுக்க இயலாது-
கைக்கு, புவரோடாசத்தை அவதாநம் செய்யத் தான் திறமை உண்டு.
த்ரவமான பொருள்களைக் கையால் பிரித்து எடுக்க முடியாதே .
• ஆகையால் த்ரவமான பொருள்களை ஸ்ருவத்தால் தான் அவதாநம் செய்ய வேண்டும் என்ற தர்மத்தின்
நுணுக்கம் அந்தப் பொருளின் ஸாமர்த்யத்தால் தான் நமக்குத் தெரிகிறது.

தரையில் பாத்திரத்தில் உண்கிறான் -இரண்டிலும் ஏழாம் வேற்றுமை இருந்தாலும்
தரையில் அமர்ந்து உணவை பாத்திரத்தில் போட்டு உண்கிறான் -சாமர்த்தியத்தால் இப்படித்தானே அர்த்தம் –
சாமர்த்தியமும் தர்மத்துக்கு பிரமாணம் –

விதிகளின் வகைகள்
1-உத்பத்தி விதி – ஒரு கர்மத்தை முதன் முதலில் போதிக்கும் விதி.
யாகம் என்பது ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை த்யாகம் செய்வது
ஆகையால், த்ரவ்யத்தையும் தேவதையையும் வைத்துத் தான் ஒரு யாகத்தை நாம் அறியவே முடியும்.
ஆகையால், த்ரவ்யம் அல்லது தேவதையை உபதேசிக்கும் விதி தான் அனேகமாக ஒரு யாகத்தின் உத்பத்தி விதியாக இருக்கும்
2. அதிகார விதி – ஒரு கர்மத்தின் பலத்தை (பயனை ) போதிக்கும் விதி அதிகார விதி
3. விநியோக விதி – ஒரு கர்மத்தின் அங்கங்களை போதிக்கும் விதிக்கு விநியோக விதி என்று பெயர்
இதி கர்தவ்யங்களும் அங்கங்களே –
4. ப்ரயோக விதி – ப்ரயோகம் என்றால் அநுஷ்டானம்.
ப்ரதானமான கர்மும், அதன் அங்கங்களும் அறிவிக்கப்பட்ட பிறகு,
“அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதான கர்மத்தைச் செய்” என்று அநுஷ்டானத்தை போதிக்கும்
விதிக்கு ப்ரயோக விதி என்று பெயர் –

———

பாடம் -7- -அத்யாயம் -2-கர்ம பேதம் -தர்ம பேதம்

கீழே தர்ம விளக்கம் முதல் அத்யாயம் –
மேலே தர்ம ஸ்வரூபம் –

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தில் தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்களைப் பார்த்தோம்.
அடுத்து, இரண்டாவது அத்யாயத்தில் கர்மங்களைப் பிரித்து அறிவதற்கான வழிகள் சொல்லப்படுகின்றன .
• பேதம் என்றால் வேறுபாடு. ஒரு கர்மத்துக்கும் மற்ற ஓரு கர்மத்துக்குமுள்ள வேறுபாடு தெரிந்தால்
தான் நாம் ஒன்றை அநுஷ்டானம் செய்ய முடியும்.
ஆகையால், இந்த அத்யாயமே கர்மங்களுக்குள் இருக்கும் வேறுபாட்டை (பேதத்தை ) போதிக்கிறது.
• இந்த அத்யாயத்தின் முதல் பாதத்தில் கர்ம பேதத்தை போதிப்பதற்குத் தேவையான முன்னுரை
அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து இரண்டாவது பாதத்தில் கர்மங்களைப் பிரித்து அறியும் வழிகளும்,
மூன்றாவது பாதத்தில் கர்மபேதம் இல்லாத விதி விலக்குகளும், -தஸ்ய அபவாத கீதி -விதி விலக்கே அபவாதம் –
நான்காவது பாதத்தில் ஒரே கர்மத்தின் வெவ்வேறு ப்ரயோகங்களும் (வெவ்வேறு பலனுக்காக
அநுஷ்டானங்களும்) சொல்லப்படுகின்றன .-பிரயோக அனுஷ்டான வேதங்கள் –

பிரதி பத அதிகரணம்
முன் பாடங்களில் ஒரு விதி வாக்யத்தால் ஒரு முயற்சி விதிக்கப்படுகிறது,
அந்த முயற்சிக்கு பயன், கருவி , செயல் முறை என்று மூன்று பகுதிகளுண்டு என்று பார்த்தோம்.
அதில் எது கருவியோ அதுதான் பலத்தைக் கொடுக்கப் போகிறது.
கருவி மாறினால், பயனும் மாறிவிடும். தர்மமே மாறிவிடும். ஆகையால், ஒரு வேத வாக்யத்தைக்
கண்டால், அதில் சொல்லப்படும் கருவி எது என்று அறிவது மிகவும் முக்கியமானது.
• ஸந்தேஹம் –
ஒரு பலனுக்கு ஒரு கருவி தானா ? அல்லது பல கருவிகளா ? என்ற விசாரம் செய்யப்படுகிறது ப்ரதிபத-அதிகரணத்தில்.
• பூர்வபக்ஷம் –
’ஸோமத்தால் யாகத்தால் ஸ்வர்கம் அடையலாம்’ என்ற வேத வாக்யத்தில்,
ஸோமம் யாகம் என்ற இரண்டுக்குமே மூன்றாவது வேற்றுமை உறுபு உள்ள படியால், இரண்டுமே கரணம் தான்
• ஸித்தாந்தம் –
யாகம் இன்று செய்யப்படுகிறது. அதன் பயனான ஸ்வர்கம் பற்பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படப் போகிறது.
அது வரை ஸோமம் என்ற கொடியும் இருக்கப் பாேவதில்லை , யாகம் என்ற செயலும் தொடரப் பாேவதில்லை .
ஆகையால், இடையில் ’அபூர்வம்’ /’அத்ருஷ்டம்’ / புண் யம் என்று ஒன்றை ஏற்றே ஆக வேண்டும்.
இந்த யாகத்தால் ஏற்பட்ட புண்யம் பல காலம் நம்மிடம் இருந்து, ஸ்வர்கத்தைக் கொடுக்கிறது என்றால் தான் பொருந்தும்.
• சோமம் யாகம் என்ற இரண்டுமே கரணமாக (கருவி யாக) இருந்தால்,
இரண்டு அபூர்வங்கள் ஏற்படுகின்றன என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
அதைக் காட்டிலும், ஒன்று தான் கருவி, அதிலிருந்து தான் அபூர்வம் ஏற்படும், மற்ற ஓன்று அதற்கு
த்ருஷ்டமான (புலன்களுக்கு எட்டின ) உதவியை மட்டும் செய்யும் என்று கொள்வது தான் எளிதானது –

பாவார்த்த அதிகரணம்

சரி ஒன்று தான் கருவி என்று கொண்டாலும்,
ஸோமம் கருவியா? யாகம் கருவியா? என்ற கேள்வி எழும்.
அதன் பதில் சொல்லப் படுகிறது அடுத்த அதிகரணத்தில்
• பூர்வ பக்ஷம் –
முன்னமே ஸித்தமாக (தயாராக) இருக்கும் ஒரு பொருளைக் கொண்டு தான் வேறே ஒரு பொருளை உண்டாக்க முடியும்.
ஸோமம் என்பது தயாரான த்ரவ்யம். யாகமோ இனி செய்யப்பட வேண்டியது. ஆகையால், சோமம் தான் கருவி
ஸ்வர்கத்தை அடைய. ஸோமக் கொடியை வெறுமனே வைத்திருந்தால் ஸ்வர்கம் கிடைக்காது,
ஆகையால் ஸோமத்தால் செய்யப்படும் செயல் ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் யாகம்.
• ஸித்தாந்தம் –
’ஸோமத்தால் யஜிப்பாய்’ என்ற வேத வாக்யத்திற்குத் தான் நாம் ’ஸோமத்தால் யாகத்தால் பயனை அடையலாம்’ என்று
பொருள் கூறுகிறோம். அந்த வாக்யத்தைப் பார்த்தால் கட்டளை இடும் ’யஜிப்பாய்’ என்ற சொல்லிலேயே கூறப்படுவது
யாகம் தான். ஸோமம் அல்ல. ஆகையால், ’யஜிப்பாய்’ என்ற சொல்லால் எந்த முயற்சி விதிக்கப் படுகிறதோ ,
அதற்குக் கருவியின் ஏற்படும் பொழுது, மிக அருகிலிருக்கும் யாகம் தான் சடக்கென நினைவுக்கு
வருகிற படியால், யாகம் தான் கருவி .
• யாகத்தைச் செய்ய ஏதோ ஒரு த்ரவ்யம் சேண்டுமே என்று யோசிக்கும் பொழுது தான் ஸோமம் என்ற கொடி வந்து அடைகிறது .
ஆகவே, ஸோமத்திலிருந்து அபூர்வம் கிடையாது, யாகம் தான் கருவி , அதிலிருந்து தான் அபூர்வம் ஏற்பட்டு ஸ்வர்கம் பெருகிறோம்.
• ஆகையால், பொதுவாக வினைச் சொல்லால் சொல்லப்படும் செயல் தான் கருவி ஆகும்

ருக் யஜுஸ் சாமம்

வேதம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது –
மந்த்ரம் என்றும்
ப்ராஹ்மணம் என்றும்.
ப்ராஹ்மணம் என்றால் நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கட்டளையிடும்
வேதப் பகுதிகள்.
மந்த்ரம் என்றால், ஒரு செயலைச் செய்யும் பொழுது உச்சரிக்கப்படவேண்டிய சொல் தொடர்கள் -.
• மந்த்ரங்களை மூன்றாகப் பிரிக்கலாம் – ருக், ஸாமம், யஜுஸ் என்று.
• ருக் – எந்த மந்த்ரத்தில் ஒரு அடியின் அளவு எழுத்துக்களின் எண்ணிக்கையால் இல்லாமல்,
சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் வகுக்கப் படுகிறவதா, அது ருக் மந்த்ரம் ஆகும்
• ஸாமம் – இசை வடிவில் இருக்கக்கூடிய மந்த்ரங்களுக்கு ஸாமம் என்று பெயர்.
ஸாமம் என்ற இசையோடு சேர்த்து, ருக் என்ற மந்த்ரத்தைப் பாடினால் , அதற்கு தான் ஸ்தோத்ரம் என்று பெயர்.
• யஜுஸ் – ருக் ஸாமம் என்ற இரண்டையும் தவிர இருக்கக்கூடிய மந்த்ரங்கள் அனைத்தும் யஜுஸ் என்று
அழைக்கப்படுகின்றன .

அநு ஷங்கம்

வேதத்தில் ஒரு சொல் தொடரில் பகுதியாகப் படிக்கப்பட்ட ஒன்றை ,அதோடு தொடர்பு கொண்ட ,
அடுத்தடுத்து இருக்கும் மற்ற சொல் தொடர்களோடும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு அநுஷங்கம் என்று பெயர்.
• வேதத்தில் அடுத்தடுத்து மூன்று மந்த்ரங்கள் உள்ளன –
“மனிதன் தலைவன் உன்னை புனிதம் ஆக்கட்டும்,
பேச்சின் தலைவன் உன்னைப் புனிதமாக்கட்டும்,
ஸூர்யக் கடவுள் உன்னைப் புனிதமாக்கட்டும்” என்று.
• மூன்றாவது மந்த்ரத்தின் இறுதியில் மட்டும், எப்படி அவர் நம்மைப் புனிதமாக்கவேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது.
முதல் இரண்டு மந்த்ரங்களின் இறுதியில் சொல்லப்பட வில்லை .
• ஆனால், அந்த இரண்டு மந்த்ரங்களுக்கும்கூட ’எப்படிப் புனித்தப்படுத்துேவார்?’ என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆகையால் ஆகாங்க்ஷா உள்ளது. அவற்றோடு சேர்த்துப் பார்த்தால், இந்த சொல் தொடரின் பொருளும் ஒட்டி வரும் –
ஆகையால் யோக்யதா உள்ளது. அடுத்தடுத்து படிக்கப்பட்டபடியால் ஸந்நிதியும் உள்ளது.
• ஆகவே, சாப்த போதத்துக்கு தேவையான அனைத்தும் இந்த சொல் தொடருக்கு மூன்றாவது மந்த்ரத்தோடு மட்டுமல்ல,
முதல் இரண்டு மந்த்ரங்களோடும் கூட உண்டு .
• ஆகையால், இந்தச் சொல் தொடரை மூன்று மந்த்ரங்களோடும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• இடையில் இந்த சொல் தொடரோடு சம்பந்தமில்லாத வேறே ஓன்று பேசப்பட்டிருந்தால், அப்போது
ஸந்நிதி தடைப்பட்டபடியால், அதற்குப் பின் இருக்கும் மந்த்ரங்களோடு இந்த சொல் தொடர் சேராது .

கர்ம பேதத்தைக் காட்டும் பிரமாணங்கள்

கர்மங்களுக்குள் இருக்கும் வேறுபாட்டைக் காட்ட ஆறு ப்ரமாணங்கள் உள்ளன –
1. சப்தாந்தரம் – வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும் செயல்கள் வெவ்வேறு கர்மங்கள் தான்.
எடுத்துக் காட்டு –
யஜிப்பாய்(யாகம் செய்வாய் ), ஹோமம் செய்வாய், தானம் செய்வாய் என்ற கட்டளைகளில்
யாகம் தானம் ஹோமம் என்ற வெவ்வேறு சொற்களால் சொல்லப்படுகிறபடியால் அந்தக் கர்மங்கள்
வெவ்வேறுதான். யாகமே ஹோமம் ஆகாது, ஹோமமே தானம் ஆகாதபடியால்

2. அப்யாஸம் – ஒரே கட்டளையை , வேறு எந்தப் பிரயோஜனமும் இல்லா விட்டாலும், திரும்பத் திரும்ப
வேதம் சொன்னால் , அது வெவ்வேறு கர்மங்களை விதிக்கிறது என்று தான் கொள்ள வேண்டும்.
விதிப்பது என்றால் அறியப்படாத ஒன்ஸற அறிவிப்பது. அது ஒரு கர்மத்தைப் பற்றி ஒரு முறை தான் செய்ய முடியும்.
பலமுறை செய்தால் அது வேறு ஒரு கர்மத்தின் விதி தான்.
• ’அக்நி ஹோத்ரம் என்ற ஹோமம் செய்’, ’தயிரால் ஹோமம் செய்’ என்ற இரண்டு விதிகளிலும்
ஹோமம் செய் என்று இருந்தாலும்,பிரயோஜனம் வெவ்வேறு. முதல் கட்டளை கர்மத்தை விதிக்கிறது,
இரண்டாவது அதில் பயன்படுத்தப்படவேண்டிய த்ரவ்யத்தை விதிக்கிறது.
ஆகையால், வேறு பிரயோஜனம் உள்ள படியால் இது அப்யாஸம் ஆகாது.
• எந்த விதியில் வேறு பிரயோஜனம் இல்லாமல், கர்மம் மட்டும்
கட்டளை யிடப்படுகிறதோ , அங்கு கர்மங்கள் வெவ்வேறு தான்,

3. ஸம்க்யா – வேதமே சில கர்மங்களின் எண்ணிக் கையைச் சொல்லி விடும்
. அப்பொழுது தெளிவாக அறியலாம், இவை வெவ்வேறு கர்மங்கள் என்று.
எடுத்துக் காட்டு – ’மூன்று ஆஹுதிகளைச் செய்கிறான்’என்று வேதம் சொல்வதால்
ஆமந ஹோமங்கள் என்ற பெயர் கொண்ட ஹோமங்கள் மூன்று வெவ்வேறு ஹோமங்கள் என்று அறியலாம்

4. ஸம்ஜ்ஞா – பெயர் மாறினால் கர்மம் மாறும். பெயர் (நாமதேயம்) என்பது ஒரு யாகத்தை ஸூலபமாகக்
குறிப்பிடுவதற்காக என்று பார்த்தோம். ஆகையால், ஒரு கர்மத்துக்கு ஒரு பெயர் போதுமானது –
ஆகையால், பல பெயர்கள் ஓரிடத்தில் சோல்லப்பட்டாலும் அவை வெவ்வேறு கர்மங்களைத் தான் குறிக்கும்.
எடுத்துக்காட்டு – ’ஜ்யோதிஷ்டோமம்’ என்ற யாகத்தைப் பற்றிச் சொல்லி விட்டு,
’அடுத்து ஜ்யோதிஸ், அடுத்து விஸ்வ ஜ்யோதிஸ், அடுத்து ஸர்வ ஜ்யோதிஸ் ’ என்று வேதம் சொல்கிறது.
இங்கு ஒவ் வொரு பெயரும் ஒவ்சோரு கர்மத்தைக் குறிக்காது-ஜ்யோதிஷ்டோமம் என்ற யாகத்தை அல்ல.

5. குணம் – ஒரு யாகத்தில் ஒரு த்ரவ்யம் தான் உபயோகிக்கப்பட முடியும்.
ஆகையால், முன்னமே த்ரவ்யம் விதிக்கப்பட்ட ஒரு யாகத்தில் மற்ற ஓரு த்ரவ்யத்தை நுழைக்க இயலாதபடியால்
அது வேற ஓரு யாகத்தில் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆகையால் , கர்மங்களுக்குள் வேறுபாடு- த்ரவ்யங்களைக் கொண்டும் ஏற்படலாம்.
எடுத்துக்காட்டு –
விச்வே தேவர்களுக்காக ஆமிக்ஷா என்ற த்ரவ்யத்தைக் கொண்டு யாகம் செய் என்று சொல்லி விட்டு,
வேதமே வாஜிநம் என்ற த்ரவ்யத்தை மற்ற ஓரு வாக்யத்தால் விதிக்கிறது.
அது கண்டிப்பாக வேற ஓரு யாகத்தைத் தான் காட்டிக் கொடுக்கும்

6-ப்ரகரணாந்தரம் – ஒரு கர்மத்தை ஒரு ப்ரகரணத்தில் (நூலின் பகுதியில்) விதித்து விட்டு, மற்ற ஓரு
ப்ரகரணத்தில் அதே பெயரை உடைய ஒரு கர்மத்ஸத விதித்தாலும், அவை ஒன்றாக மாட்டா.
ஏன் என்றால்,
ப்ரகரணம் மாறிவிட்டபடியால் முன் கர்மத்தின் நினைவு சடக்கென ஏற்படாது.
• மேலும், அநுஷ்டானம் செய்யப்பட முடியாத சில குணங்களும் (தேசம், கலம், நிமித்தம், பலம்,
ஸம்ஸ்கார்யம் ஆகியவையும்) இவ்விடங்களில் சொல்லப் பட்டிருக்கிற படியால், அவற்றை அநுஷ்டானம்
செய் என்று விதியால் விதிக்க முடியாதபடியால் வேறு வழி இல்லாமல் அந்தக் கர்மம் தான் விதிக்கப்படுகிறது
அந்தச் சொல் தொடரில் என்று சொல்லவேண்டும்.
• ஆகவே, அந்தக் கர்மம் தற்போது புதிதாக உபதேசிக்கப்படுகிறது என்றும் கொள்ளலாம்.
ஆகையால், அது ஒரு புது கர்மமாகத்தான் இருக்க வேண்டும்.

பிரயோக பேதம்

சில இடங்கைில் ஒரே கர்மமே வெவ்வேறு ப்ரயோகங்களை (அநுஷ்டானங்களை ) உடையதாக இருக்கும்
• அக்நி ஹோத்ரம் என்ற ஒரு ஹோமத்தை உபதேசித்து விட்டு, வேதம்
“அக்நி ஹோத்ரத்தால் ஸ்வர்கத்தை அடையலாம்” என்றும்
“வாழ் நாள் முழுவதும் அக்நி ஹோத்ரம் செய்யப் பட வேண்டும்” என்றும் கூறுகிறது.
• பூர்வ பக்ஷம் –
ஸ்வர்கத்துக்காக செய்யப்படும் அக்நி ஹோத்ரத்தை தான், வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டும் என்று இந்த வாக்யம்
சொல்லுகிறது. ஆகவே, வாழ் நாள் முழுவதும் ஒருவன் அக்நி ஹோத்ரம் செய்தால் தான் ஸ்வர்கம் கிடைக்கும்.
• ஸித்தாந்தம் –
இங்கு ஸ்வர்கத்துக்காகச் செய்யப்படும் அக்நி ஹோத்ர ஹோமத்தில், வாழ் நாள் முழுவதும் என்ற காலம்
விதிக்கப்பட வில்லை . ஜீவனத்தைக் காரணமாகக் கொண்டு,
அக்நி ஹோத்ரத்தில் வேற ஓரு ப்ரயோகம் (அநுஷ்டானம்) விதிக்கப்படுகிறது.
• ஒருவனுஸடய ஜீவனமே காரணமாக இது விதிக்கப்பட்டபடியால், இதைத் தவறாமல் செய்யவேண்டும்
என்று ஆகிறது. அதனால் இதற்கு நித்ய கர்மம் என்று பெயர்.
• அதாவது, அக்நி ஹோத்ரம் என்ற ஒரே ஹோமம், ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவர்களால்
அதற்காகச் செய்யப்பட வேண்டும்.
அதில் ஆசை இல்லாதவர்களாலும் கூட அது வாழ்க்கை முழுவதும் செய்யப்பட வேண்டும்.
அப்படிச் செய்தால், அதன் பயனாக நமது பாபங்கள் நிங்குகின்றன என்று பொருள்.
ஆகவே, இங்கு கர்ம ஒன்று தான், ஆனால் ப்ரயோகம் மட்டும் வேறு.
நித்ய கர்மங்களை செய்து பாப்பம் போக்குவது பயன்
இதையே காம்ய பிரயோகம் -அனுஷ்டானம் செய்து -ஸ்வர்க்கம் பயன் -காம்ய கர்மம்
ஒரே அக்னி ஹோத்ரம் -இப்படி இரண்டு வித பயணிகளுக்குத் தான்
ஒரு தடவை செய்தால் ஸ்வர்க்கம் கிட்டும்
நித்தியமாக செய்வதால் பாபங்கள் போகும் –

நான்காம் பாதத்தில் இரண்டு அதிகரணங்கள்
இது இரண்டாவது சாகாந்தர அதிகரணம்

ஒவ்வொரு வேதத்துக்கும் காடகம், காண்வம், மாத்யந்தினம், தைத்திரீயம் என்று பல சாகைகள் உண்டு.
ஒரே வேதமே , சிறு சிறு மாறுதல் களோடு ஒவ்வொரு சாகை என்று வழங்கப்படுகிறது.
• அதில் வெவ்வேறு சாகைகளில் ஒரே கர்மத்தை விதிக்கும் வாக்யங்கள் இருந்தால்,
அவை ஒரே கர்மத்தை விதிக்கின்றனவா ? அல்லது வெவ்வேறு கர்மங்களையா? என்ற
சந்தேகம் தீர்க்கப்படுகிறது இந்த அதிகரணத்தில்
• பூர்வபக்ஷம் –
ஒரே கர்மத்தை , வேறு பிரயோஜனம் எதுவுமின்றி மறுபடியும் மறுபடியும் விதித்தால், அது ’அப்யாஸம்’ ஆகும்.
அப்யாஸம் என்பது கர்மங்களுக்குள் வேறுபாட்டைக் காட்டும்.
முன்னமே விதிக்கப்பட்ட கர்மத்தை மறுபடியும் விதிக்க முடியாதபடியால் புதிதான ஒரு கர்மம்
தான் விதிக்கப்படுகிறாது மற்ற ஓரு சாகையில்
• ஸித்தாந்தம் –
ஒருவன் ஒவ்வொரு வேதத்திலிருந்து ஒவ்வொரு சாகையைப் படிக்க வேண்டும் என்று தான்
சாஸ்த்ரம் சொல்கிறது.
ஆகையால், ஒரே வேதத்தின் இரண்டு சாகைகளை ஒரே மனிதன் படிக்கப் பாேவதில்லை .
ஒருவனுக்கே பல முறை உபதேசித்தால்தான் ’அப்யாஸம்’ஆகும்.
வெவ்வேறு மனிதர்களுக்காக இங்கு சொல்லப்படுகிறபடியால், ஒரே கர்மம் தான் இது,
அவற்றுக்குள் பேதம் இல்லை .

—————

சேஷத்வம் அங்க அங்கி பாவம் -கர்மங்களுக்குள் பிரித்து அறிந்த பின்பு –
மூன்றாம் அத்தியாயத்தில் பார்ப்போம்
பாடம் -8-அத்யாயம் -3- அங்கத்வமும் அதன் பிரமாணங்களும் –

மூன்றாம் அத்தியாயத்தின் சங்கதி –

மீமாம்ஸா சாஸ்த்ரத்தில் வேத வாக்யங்களின் பொருளான தர்மத்தைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது என்று
ப்ரதிஜ்ஜை செய்தார் ஜைமிநி மஹரிஷி.
• தர்மத்தைப் பற்றி விசாரம் செய்வதற்கு முன்னால்,
தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்கள் எவை என்று முடிவு செய்வது அவஸ்யமானபடியால் முதல் அத்யாயத்தில்
தர்மத்தைப் போதிக்கும் 8 ப்ரமாணங்களைப் பற்றி ஆலோசனை செய்தார்.valid cognition-
நியாயம் சாஸ்திரம் பார்த்த ஆறு உடன் இதில் கூட இரண்டையும் சேர்த்து இதில் 8 பிரமாணங்கள் அர்த்தப்பத்தி அநுதாலப்தி
இதன் விவரம் மேல் பார்ப்போம் –
• வேதம் தான் தர்மத்தின் ப்ரமாணம் என்று முடிவான உடன்,
வேதத்தில் எத்தனையோ கட்டளைகள் உள்ளபடியால், அவற்றில் எவை புதிதான கர்மத்தைக் குறிக்கின்றன,
எவை முன்னமே போதிக்கப்பட்ட ஒரு கர்மத்தைப் பற்றி அதிகப்படியாக உபதேசிக்கின்றன என்று அறிவதற்காக
இரண்டாவது அத்யாயத்தில் கர்மங்களுக்குள் வேறுபாட்டை (பேதத்தை ) போதிக்கும் ஆறு ப்ரமாணங்களைக் காட்டினார்.
• அடுத்து, கர்மங்களுக்குள் வேறுபாடு தெரிந்தவுடன் இயற்கையாக அடுத்து ஏற்படும் ஆசை – அவற்றுக்குள்
இருக்கும் தொடர்பை அறியத்தான். ஆகையால் தான், அடுத்து உள்ள மூன்றாவது அத்யாயத்தில் எந்தக் கர்ம எந்தக்
கர்மத்துக்கு அங்கம் ஆகும் என்று நிரூபிக்கிறார்.

அங்கம் என்றால் என்ன -(சேஷ சேஷி பாவம் -அங்கம் -அங்கி -அப்ரதானம் -பிரதானம் )
சேஷா பராரார்த்யம் -பர உத்தேச்ய முயற்சி பாவனா -ப்ரவ்ருத்தன் க்ருதி -செயல் யத்னம் -காரகம் -கிரியா ஹேது

பரம் = ’வேறு ஓன்று’,
உத்தேசம் = ’நோக்கம்’ / ’குறி’.
ப்ரவ்ருத்தன்= முயல்பேன்,
க்ருதி – முயற்சி,
காரகம் = முயற்சியை உண்டாக்கும் பொருள்,
விஹிதம் = விதிக்கப்பட்டது
• காரகம் – முயற்சியை உண்டாக்கும் பொருள். எடுத்துக் காட்டு –
“தேவதத்தன் கட்டைகைளால் பாத்திரத்தில் அரிசியை குடும்பத்திற்காகச் சமைத்தான்” என்ற சொல் தொடரில் ,
எல்லா வேற்றுமை உருபுகள் வியக்திகள் உள்ள வாக்கியம் –
இந்த முயற்சி ஏற்பட தேவதத்தன் கர்தாவாகவும், அரிசி கர்மமாகவும், விரகுகள் கருவியாகவும்,
குடும்பம் ஸம் ப்ரதானமாகவும் (பயனாளி யாகவும்), பாத்திரம் அதிகரணமாகவும் இருந்து
முயற்சியை உண்டாக்குகிறார்கள். ஆகையால், இவை அனைத்துமே காரகங்கள்.
• வேறு ஓரு குறிக்காக முயற்சிக்கும் மனிதனின் முயற்சியில் காரகமாக விதிக்கப்பட்டது அங்கம், அதாவது,
வேறே ஒரு பொருளைக் குறித்த முயற்சியில் காரகமாக விதிக்கப்பட்டது அங்கம்.
• “ஜ்யோதிஷ்டோம யாகத்தால் ஸ்வர்கத்தை அடைய முயற்சி” என்று வேதம் கட்டளையிடுகிறபடியால்,
ஸ்வர்க்கத்தைக் குறித்த முயற்சியில் கருவியாக (கரணமாக) யாகம் விதிக்கப்பட்டபடியால்
யாகம் ஸ்வர்கத்துக்கு அங்கம்
• “அக்நிஹோத்ர ஹோமத்தைத் தயிரால் செய்” என்ற வேத வாக்யத்தில் ஹோமத்தைக் குறித்த முயற்சியில்
தயிர் கருவியாக விதிக்கப்பட்ட படியால், தயிர் ஹோமத்தின் அங்கம் ஆகும்.

அங்கத்தவத்தைக் காட்டும் பிரமாணங்கள்

அங்கத்வத்தைக் காட்டும் ப்ரமாணங்கள் ஆறு –
1-ச்ருதி,
2-லிங்கம்,
3-வாக்யம்,
4-ப்ரகரணம்,
5-ஸ்தாநம்,
6-ஸமாக்யா என்று.

• ச்ருதி –
“நிர பேஷா ரவ : ச்ருதி:” – வேறே எதையும் எதிர்ப்பார்க்காத சொல் ச்ருதி ஆகும்.
• ச்ருதி மூன்று வகைப்படும் –
(1) அபிதாத்ரீ – பெயர்ச் சொல்
(2)விநியோக்த்ரீ – அங்கத்வத்தை அறிவிக்கும் சொல் -அங்கத்துவ போதனம் –
(3) விதாத்ரீ –கட்டளையிடும் சொல்
• எடுத்துக்காட்டு – “ நெற்களால் யாகத்தைச் செய்” என்ற வேத வாக்யத்தில்,
நெல் யாகம் என்ற இரண்டும் பெயர்ச் சொற்கள்(அபிதாத்ரீ). ’
ஆல்’ என்ற முன்றாவது வேற்றுஸம உருபும், ’ஐ’ என்ற இரண்டாம் வேற்றுஸம உருபும் விநியோக்த்ரீ.
’செய்’ என்ற சொல் கட்டளையிடுகிறபடியால் அது விதாத்ரீ.
• ’ஐ’ என்ற உருபு, யாகம் தான் உத்தேச்யம் (இலக்கு) என்று காட்டுகிறது.
’ஆல்’ என்ற உருபு, நெல் தான் கருவி (கரணம்) என்ற காரகம் என்று காட்டுகிறது.
ஆகையால் யாகத்தைக் குறித்துச் செய்யும் முயற்சியில் கருவியாக (காரகமாக) விதிக்கப்பட்டுள்ளது நெல்.
ஆகையால், நெல் யாகத்துக்கு அங்கம் என்று அறிகிறோம்.
• இதே போல் , “நெல்லை ப்ரோக்ஷணத்தால் ஸம்ஸ்கரிப்பாய்” என்ற கட்டளையில்,
’ஐ’ உருபால் நெல் உத்தேச்யம் என்றும், ’ஆல்’ உருபால் ப்ரோஷணம் கருவி என்றும் அறிகிறபடியால்
நெல்லுக்கு ப்ரோஷணம் அங்கம் ஆகும்.
• ஆகையால், இலக்கில் இருக்கும் உத்தேஸ்வத்தையோ கருவியில் இருக்கும் காரகத் தன்மையையோ
நேரடியாக இங்கு வேற்றுமை உருபு காட்டுகிறபடியால், இது ச்ருதி ப்ரமாணம் ஆகும்.

லிங்கம் – “சப்த-சாமர்த்யம்” –
ஒரு சொல்லின் திறமை தான் லிங்கம் / ஸாமர்த்யம் என்று சொல் ப்படுகிறது.
• குடத்துக்கு ஜலத்தைத் தாங்கும் சாமர்த்யம் உண்டு.
துணிக்கு, ஒரு பொருளை மறைக்கும் சாமர்த்யம் உண்டு.
சொல்லுக்கு இருக்கும் சாமர்த்யம் – தன் பொருளை அறிவிக்கும் சாமர்த்யம்
• யாகத்தில் தர்பம் பயன்படுத்த வேண்டும் என்றும்,
அந்த தர்பங்களை சமமாக வெட்டவேண்டும் என்றும் வேதம் கட்டளை யிடுகிறது.
• அதைத் தவிர , “தேவர்களின் இருப்பிடமான தர்பத்தை வெட்டுகிறேன்” என்று சொல்லும் ஒரு மந்த்ரம் உள்ளது.
இந்த மந்த்ரத்தைப் பார்த்தாலே , இது தர்பத்தை வெட்டுதல் என்ற செயலை அறிவிக்கிறது என்று அறியலாம்.
ஆனால், இந்த மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு தான் தர்பத்தை வெட்ட வேண்டும் என்ற ஒரு கட்டளை வேதத்தில் இல்லை
• ஆனாலும், இந்த மந்த்ரத்துக்கு ’தர்பத்தை வெட்டுதல்’ என்ற செயலை அறிவிக்கும் சாமர்த்யம் இருப்பதைப் பார்த்து,
நாமாக “இந்த மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு தர்பத்தை வெட்டவேண்டும்” என்றோ ,
“இந்த மந்த்ரத்தால் தர்பத்தை வெட்டுதல் என்ற செயலை அறிவிக்கவேண்டும்” என்றோ ச்ருதியைக் கல்பிக்க வேண்டும்.
அந்த ச்ருதி, இந்த மந்த்ரம் தர்பத்தை வெட்டுதல் என்ற செயலுக்கு அங்கம் என்று அறிவிக்கும்
• ஆகையால், சாமர்த்யம் என்ற லிங்கம் ச்ருதியைக்
கல்பிப்பதன் மூலம் அங்கத்வத்தைப் போதிக்கும் ப்ரமாணம் ஆகும்.

வாக்யம் – “சமபி வ்யாஹார:” –
இரண்டாம் வேற்றுமை முதலான ச்ருதி ப்ரமாணம் இல்லாத போது, இரண்டு பொருட்களுக்கிருக்கும் சேர்ந்த உச்சரிப்பு
• “பர்ண மயமான ஜுஹூ” என்ற ஒரு வேத வாக்யம் உள்ளது.
இங்கு ”பர்ண மரத்தால் ஜூஹூ என்ற பாத்திரத்தைச் செய்” என்று நேரடியாகக் கட்டளை இல்தை.
பர்ண மரத்தால் ஜூஹூ என்ற பாத்திரத்தைச் செய்ய முடியும் என்ற ஸாமர்த்யமும் உலகில் நாம் அறியாத ஒன்று,
ஏன் என்றால் ஜூஹூ என்பது யாகத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பொருள், உலகில் கிடையாது.
ஆகையால் ச்ருதியோ லிங்கமோ இல்லை .
• ‘பர்ணம்’, ‘ஜூஹூ’ என்ற இரண்டு சொற்களும் சேர்த்துப் படிக்கப்பட்டுள்ளன, அவ்வளவு தான்.
இதுதான் வாக்யம் என்று சொல்ப்படுகிறது.
• இந்த வாக்யத்தைக் கொண்டு, “இப்படி சேர்த்து உச்சரிக்கப்பட்டபடியால், பர்ணம் ஜுஹூ வைச் செய்யும்
ஸாமர்த்யம் உடையதாக இருக்க வேண்டும்” என்று முதலில் லிங்கத்தைக் கல்பிக்கவேண்டும்.
• அடுத்து, சாமர்த்யத்தை அறிந்துவிட்டபடியால், “பர்ண மரத்தால் ஜுஹூ என்ற பாத்திரத்தைச் செய்” என்ற
வெளிப்படையான கட்டளையை (ச்ருதி ப்ரமாணத்தை ) கல்பிக்கவேண்டும்.
அந்த ச்ருதி ப்ரமாணம் தானாக பர்ணமரம் ஜூஹூவுக்கு அங்கம் என்று அறிவிக்கும்.
• ஆகையால் , வாக்யம் என்ற ப்ரமாணம் லிங்கத்தைக் கல்பித்து,
அதன் மூலம் ச்ருதியைக் கல்பித்து, அங்கத்வத்தைப் போதிக்கும்.

ப்ரகரணம் – “உபய-ஆகாங்ஷா” –
இரண்டு கர்மங்களுக்கு இடையில் பரஸ்பரம் (ஒன்றுக்கொன்று) இருக்கும் எதிர்பார்ப்பு
இடை -தேர் அஸ்வ நியாயம் போல் –
• “தர்ச-பூர்ணமாஸ யாகத்தால் ஸ்வர்கத்தைச் செய்” என்ற வாக்யம்,
ஸ்வர்கத்தை இலக்காகக் கொண்ட முயற்சியில் யாகம் கருவி என்று சொல்கிறது,
ஆகையால் தர்ச-பூர்ணமாச யாகம் ஸ்வர்கத்துக்கு அங்கம்.
• ஆனால், இந்த யாகத்தால் ஸ்வர்கத்தை எப்படி அடைய வேண்டும்? செயல்முறை என்ன? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது,
இதற்கு தான் இதி கர்தவ்யதா-ஆகாங்க்ஷா / உபகாரக-ஆகாங்க்ஷா என்று பெயர்.
தர்ச-பூர்ணமாச யாகம் தனக்கு உதவுபவர்களைத் தேடுகிறது.
• அதே சமயத்தில், வேறு ஓரு இடத்தில், ப்ரயாஜங்கள் என்ற ஐந்து யாகங்களைச் செய் என்று விதிக்கும்
வாக்யங்கள் உள்ளன. அங்கு, ப்ரயாஜங்களை எதற்காகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கு ப்ரயோஜன-ஆகாங்க்ஷா / உபகார்ய-ஆகாங்க்ஷா என்று பெயர்.
• ஆகவே, ஒருவர் உதவி யாளரையும், ஒருவர் பிரயோஜனத்தையும் எதிர்பார்க்கிறபடியால், பரஸ்பர-எதிர்பார்ப்பு
என்று சொல் ப்படும் ப்ரகரணம் உள்ளது. ச்ருதி, லிங்கம், வாக்யம் இல்லை .
• இந்த எதிர்பார்ப்பு என்ற ப்ரகரணத்தைக் கொண்டு, இந்த இரண்டு வாக்யங்களுக்கும் தொடர்பு இருக்கவேண்டும்
என்று வாக்யத்தைக் கல்பித்து, அதன் மூலம்
“ப்ரயாஜங்கள் தர்ச-பூர்ணமாச யாகத்துக்கு உதவும் சாமர்த்யம்” என்று லிங்கத்தைக் கல்பித்து,
அதன் மூலம், “ப்ரயாஜங்களைச் செய்வதால் தர்சபூர்ணமாச யாகத்துக்கு உபகாரம் செய்ய வேண்டும்” என்ற
ச்ருதியைக் கல்பிக்க வேண்டும். –
ஆகையால் ப்ரயாஜங்கள் தர்ச-பூர்ணமாச யாகத்தின் அங்கங்கள் என்று அறியலாம்,

ஸ்தாநம் – தேச -சாமாந்யம் – இடத்தில் ஒற்றுமை -similar location-
• இது இரண்டு வகைப்படும் –
(1) வேதத்தில் (நூலில்) ஒரே இடத்தில் இருத்தல் என்கிற பாட சா தேச்யம்
(2) அநுஷ்டானத்தில் ஒரே இடத்தில் இருத்தல்
• அதிலும் பாட சா தேச்யம் இரண்டு வகைப்படும் –
(1)யதா சங்க்ய-பாடம்
(2) ஸந்நிதி பாடம்
• யதா ஸங்க்ய பாடம் –
பல யாகங்களை வரிசையாகச் சொல்லி விட்டு, வேதம் பல மந்த்ரங்களை வரிசையாக உபதேசிக்கிறது.
அவற்றுள், முதல் மந்த்ரம் முதல் யாகத்துக்கு அங்கம், இரண்டாவது மந்த்ரம் இரண்டாவது யாகத்துக்கு அங்கம்
என்று நாம் அறிவது யதா சங்க்ய பாடத்தால்.
• ஸந்நிதி பாடம் – proximity
சாதாரணாமாக ஒரு கர்மத்துக்கு அருகில் படிக்கப்பட்ட மற்ற ஓன்று, அந்தக் கர்மத்தின் அங்கம் ஆகும்.

• அநுஷ்டான ஸாதேச்யம் –
ஒரு பொருளை அநுஷ்டானம் செய்யும் அதே சமயத்தில் அநுஷ்டானம் செய்யப்படும்
வேற ஓன்று அதற்கு அங்கமாகும்
• ஒரே இடத்தில் இருத்தல் என்ற ஸ்தாநத்தால், பரஸ்பரம் எதிர்பார்ப்பு என்ற ப்ரகரணத்தைக் கல்பித்து,
அதன் மூலம் சேர்ந்த உச்சரிப்பு என்ற வாக்யத்தைக் கல்பித்து,
அதன் மூலம் சாமர்த்யம் என்ற லிங்கத்தைக் கல்பித்து,
அதன் மூலம் ச்ருதியைக் கல்பித்து,
ஒரு பொருள் மற்ற ஓன்றுக்கு அங்கம் என்று போதிக்கக் கூடியது ஸ்தாநம் என்ற ப்ரமாணம்.

ஸமாக்யா – “யௌகிக: சப்த:” – காரணப் பெயர்
• ஸோம யாகத்தில் ஸோமக் கொடியைப் பிழிந்து, அதிலிருந்து வரும் ரஸத்தால் யாகம் செய்ய வேண்டும்.
• ஸோம யாகத்தில் 16 ரித்விக்குகள் சேர்ந்து யாகத்தைச் செய்வார்கள்.
அதில் பத்து ரித்விக்களுக்கு சமஸம் என்ற பாத்திரம் கொடுக்கப்படும்.
அதில் தான் ஸோம ரஸத்தை வைத்து அவர்கள் ஆஹுதியைக் கொடுத்து விட்டு, அவரவர் பாத்திரத்தில்
மீதமிருக்கும் ஸோம ரஸத்தை அவரவர் உண்ண வேண்டும்.
• ஆனால், அந்த உண்ணுதலை விதிக்கும் வேத வாக்யம் எதுவும் இல்லை .
அது, சமாக்யா என்ற ப்ரமாணத்தால் தான் தெரிகிறது.
• ’ஹோத்ரு சமஸம்’ என்று ஒரு பாத்திரத்திற்குப் பெயர்.
ஹோதா என்ற ரித்விக்கினுடைய சமஸம் என்று அதற்குப் பொருள்.
• சமஸம் என்ற சொல்லுக்கே “உண்ணும் பாத்திரம்” என்று தான் ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்.
ஆகையால், “ஹோதா உண்ணும் பாத்திரம்” என்று தான் ஹோத்ரு சமஸம் என்ற பெயரின் பொருள்.
• ஹோதா அதி லிருக்கும் ஸோம ரஸத்தின் மீதியை உண்ணவில்லை என்றால், அந்தப் பெயர் ஒட்டாது.
ஆகையால், அந்த சமாக்யா (காரணப் பெயர்) என்ற ப்ரமணத்தைக் கொண்டு தான்,
ஸ்தாநம் ப்ரகரணம் வாக்யம் லிங்கம் ஆகியவற்றைக் கல்பித்து, இறுதியில்
“ஹோதா ஸோம ரஸத்தைப் பருக வேண்டும்” என்று விதிக்கும் ச்ருதியைக் கல்பிக்கிறோம்,

சுருதி ஒன்றே நிரபேஷ பிரமாணம் -வேறே ஒன்றையும் கல்பிக்க வேண்டாத ஸ்வதா பிரமாணம் –

———-

பாடம் -9-ப்ரமாணங்களுக்குள் விரோதம்
மூன்றாம் அத்யாய எட்டு பாதங்கள்

மூன்றாவது அத்யாயத்தில் அங்கத்வம் / சேஷ–சேஷி- பாவம் என்பதை நிரூபிக்கப்படுகிறது.
இந்த அத்யாயத்தில் 8 பாதங்கள் உள்ளன. அவற்றில் –
• முதல் பாதத்தில் ச்ருதி என்ற ப்ரமாணத்தையும்
• இரண்டாம் பாதத்தில் லிங்கம் என்ற ப்ரமாணத்தையும்
• மூன்றாம் பாதம் வாக்யம் ப்ரகரணம் ஸ்தாநம் ஸமாக்யா என்ற 4 ப்ரமாணங்களையும்
• நான்காவது பாதத்தில் ப்ரமாணங்களுக்குள் விரோதம் ஏற்பட்டால் அவற்றுள் ஒன்றோடு ஒன்றுக்குள்ள வலிமையையும்
• ஐந்தாவது பாதத்தில் ப்ரதிபத்த கர்மங்களைப் பற்றியும்
• ஆறாவது பாதத்தில் அநாரப்யோக்தமான தர்மங்களையும்-(எதையும் தொடங்காமல் உள்ளது பற்றிய யுக்தி )
• ஏழாவது பாதத்தில் ஒரே தர்மம் பலவற்றுக்கு அங்கமாகும் இடங்களையும் (பஹு அர்த்தமாக செய்வது )
• எட்டாவது பாதத்தில் ஸ்வாமி என்று அழைக்கப்படும் யஜமாநனுக்காகச் செய்யப்படும் கர்மங்களையும்
(எஜமானன் -யாகம் செய்யும் அதிகாரி -பத்னி -யாகத்துக்கு சஹகரிக்கும் பெண் )
நிரூபிக்கிறார் ஸஜமிநி மஹரிஷி-

பலபாலதிகாரணம் -சமவாயே -ஒரே வஸ்துவை வேறே வேறே அங்கமாக சொல்லும் பொழுது -முரண்பாடை போக்க வந்த அதிகரணம்
பார தைரபல்யம் -பின் பின் பிரமாணங்கள் துர்லபம் -முன் முன் பிரமாணங்கள் பிரபலம் -அர்த்தம் விப்ரகர்ஷம் இருப்பதால் –
பிரபலம் -popular -அர்த்தம் இல்லை -வலிமை உள்ள பலம் உள்ள பிரமாணம் என்றபடி –
கல்பனா மூல உச்சேதம் இருப்பதால் பின்னால் வரும் பிரமாணம் கொள்ள முடியாது -கற்பனைக்கு மூலமே எதிர்பார்ப்பு இருப்பதால் தானே
சுருதி முதலிலே சொன்னதும் எதிர்பார்ப்பு இருக்க முடியாதே –
அப்ராப்த பாதம் என்றும் இத்தைச் சொல்லுவார்கள் –
3-3-14-
மூன்றாவது அத்யாயத்தின் மூன்றாவது பாதத்தில் ஸஜமிநி மஹரிஷி கூறுகிறார் –
ச்ருதி லிங்கம் வாக்யம் ப்ரகரணம் ஸ்தாநம் ஸமாக்யா என்ற ஆறு ப்ரமாணங்களுள் (ஸமவாயே ) ஒன்றுக்கு ஓன்று
முரண்பாடு ஏற்பட்டால், (பார தௌர்பல்யம்) பின்னாலிருக்கும் ப்ரமாணங்கள் முன்னாலிருக்கும்
ப்ரமாணங்களைக் காட்டிலும் வலிமை குறைந்தவை (அர்த்த விப்ரகர்ஷாத்)
பின் பின் ப்ரமாணங்கள் முன் முன் ப்ரமாணங்களைக் கல்பிப்பதன் மூலம் தான் தங்கள் விஷயத்தைக் காட்டுகிறபடியால்
• பின் பின் ப்ரமாணங்கள், “இந்த கர்மம் எதற்காகச் செய்யப்பட வேண்டும்?” என்ற எதிர்பார்ப்பு (ஆகாங்ஷை )
இருப்பதால், முன் முன் ப்ரமாணங்களைக் கல்பிப்பதன் மூலம் அங்கத்வத்தை போதிக்கின்றன.
அது நடப்பதற்குள், முன் ப்ரமாணம் ஒன்று இருந்தால், அது வேகமாக தான் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துவிடும்.
ஆகையால், பின் ப்ரமாணம் தான் வேலை செய்வதை நிருத்தி விடும், வேலை செய்வதற்குத் தேவையான
எதிர்பார்ப்பு (ஆகங்ஷை ) இல்லாதபடியால்.
• ஆக, கல்பநா மூல உச்சேதத்தால் ஏற்படும் அப்ராப்த பாதம் (ஒன்று வந்து அடை வதற்கு முன்னே ஏற்படும் பாதம்)
என்று இது அழைக்கப்படுகிறது.

1-ஸ்ருதிக்கும் லிங்கத்துக்கு விரோதம் –

வேதத்தில் “ஐந்த்ரீ” என்ற பெயர் ஒரு மந்த்ரத்துக்கு இடப்பட்டுள்ளது. இந்த மந்த்ரம் இந்த்ரனைப் பற்றிப் புகழ்ந்து பாடுகிறது.
அதனால், இந்த்ரனோடு ஸம்பந்தப்பட்டபடியால் இதற்கு ’ஐந்த்ரீ’ என்று பெயர்.
ஜானகி ஜனகன் பெண் -தாசாரதி -தசரதன் பிள்ளை சொல்வது போல் ஐந்த்ரீ இந்த்ரனைப பற்றிய மந்த்ரம்
• ஆகவே, இந்த மந்த்ரத்தின் லிங்கம் (ஸாமர்த்யம்) என்ன என்று பார்த்தால் – “இந்த்ரனைப் பற்றி போதித்தல்” தான்.
ஆகவே, லிங்கத்தைப் பார்த்து இந்த மந்த்ரத்தை விநியோகம் செய்தால் (ஒரு செயலுக்கு அங்கமாக ஆக்கினால்),
அது இந்த்ரனுக்காகச் செய்யப்படும் கர்மமாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது.
• ஆனால், ஒரு வேத வாக்யம் உள்ளது – “ஐந்த்ரீ மந்த்ரத்தால் கார்ஹபத்யம் என்று அழைக்கப்படும் அக்நியைப் புகழ்ந்து பாடுவாய்”
என்று. இந்த கட்டளையில், ’ஐ’ உருபால் கார்ஹபத்யம் உத்தேச்யம் என்றும், ’ஆல்’ உருபால் மந்த்ரம் கருவி என்றும் ஸ்பஷ்டமாகத்
தெரிகிறபடியால், இது ச்ருதி ப்ரமாணம் ஆகும்.
• ஆகவே, அக்நியை போதிப்பதற்கு இந்த மந்த்ரம் அங்கம் என்று சொல்லும் ச்ருதிக்கும், இந்த்ரனை போதிப்பதற்கு இந்த மந்த்ரம்
அங்கம் என்று சொல்லும் லிங்கத்துக்கும் முரண்பாடு உள்ளது.
• லிங்கம் என்பது தானாக அங்கத்வத்தை போதிக்காது, ச்ருதியைக் கல்பிப்பதன் மூலம் தான். அந்த கல்பனை நடப்பதற்குள் ஸித்தமாக
இருக்கும் ச்ருதி இந்த மந்த்ரத்ஸத “அக்நியை போதித்தல்” என்ற கர்மத்துக்கு அங்கமாக ஆக்கிவிடும்.
சக்தியால் லக்ஷணையால் கௌணீ விருத்தி மூன்றாலும் அர்த்தம் கொள்ளலாம் ஆகவே அக்னிக்கே என்று கொள்வதில் தப்பில்லையே –
• ஆகையால், மந்த்ரத்தின் ப்ரயோஜனத்திற்காக எதிர்பார்ப்பு முடிந்து விட்டபடியால், இனி அந்த லிங்கம் ஒரு ச்ருதியைக்
கல்பிக்கவே முயலாது.ப்ரத்யக்ஷ ஸ்ருதி இருக்க கல்பித்த ஸ்ருதி வேண்டாமே
• ஆகவே, ச்ருதி என்பது லிங்கத்தைக் காட்டிலும் ப்ரபலமானது –

2-லிங்கத்துக்கு வாக்யத்துக்கும் விரோதம் –

வைதிகச் செயல்களில் தேவதைக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருளுக்கு ’ஹவிஸ்’ என்று பெயர்.
அந்த ஹவிஸ்ஸை பூமியில் வைப்பதற்கு ’ஸதநம்’ என்ற இடத்தைத் தயார் செய்ய வேண்டும்.
அடுத்து, அந்த ஹவிஸ்ஸை அந்த இடத்தில் வைப்பதற்கு ’ஸாதநம்’ என்று பெயர்.
• வேதத்தில் ஒரு மந்த்ரம், தனது இரண்டு பகுதிகளால் ஸதநம் செய்வதையும் ஸாதனம் செய்வதையும் கூறுகிறது.
ஹவிஸ்ஸைப் பார்த்தே சொல்லும் மந்த்ரம் -அதில் நீ அமர்வாய்-தஸ்மின் ஸீதே –
வாக்கியம் விநியோகமா லிங்கத்தால் விநியோகமா -சங்கை வருமே
ஆகையால், அந்தந்தப் பகுதியின் லிங்கத்தைப் (ஸாமர்த்யத்தைப்) பார்த்தால்,
முதல் பகுதி ஸதநம் செய்தலுக்கு அங்கமாகவும்,
இரண்டாவது பகுதி ஸாதநம் செய்வதற்கு அங்கமாகவும் இருக்க வேண்டும்.
• ஆனால், இவை இரண்டும் ஒரே வாக்யமாக (மந்த்ரமாக) இருக்கிறபடியால், வாக்ய ப்ரமாணத்தின் படி இரண்டு பாகங்களும்
சேர்ந்து தான், ஸதநம் செய்வதற்கோ ஸாதநம் செய்வதற்கோ அங்கமாக ஆக முடியும்.
• ஆகையால், லிங்கத்துக்கும் வாக்யத்துக்கும் முரண்பாடு உள்ளது.
• ஆனால் லிங்கம் தான் வாக்யத்தைக் காட்டிலும் ப்ரபலமானது,
ச்ருதியை மட்டும் கல்பிப்பதன் மூலம் வேகமாக அங்கத்வத்தை போதிக்கிற படியால். வாக்யம் என்பது லிங்கம், ச்ருதி என்று
இரண்டைக் கல்பித்து அங்கத்வத்தை போதிக்க வேண்டும், ஆகையால் துர்பலமானது.
• எனவே, இந்த எடுத்துக் காட்டில் மந்த்ரத்தை இரண்டாகப் பிரித்து,
முதல் பகுதி ஸதநம் செய்வதற்கு அங்கம் என்றும்,
இரண்டாவது பகுதி ஸாதநம் செய்வதற்கு அங்கம் என்றும் கொள்ள வேண்டும்.

3-வாக்யத்துக்கும் பிரகரணத்துக்கும் விரோதம் –

வேதத்தில் ஒரு கட்டளை உள்ளது –
“பௌர்ணமாஸீ என்ற கர்மத்தை முடித்துவிட்டு வைம்ருதம் என்ற யாகத்தைச் செய்ய வேண்டும்” என்று.
• இக் கட்டளை , தர்ச பூர்ண மாஸம் என்ற கர்மத்தின் ப்ரகரணத்திலுள்ளது
• தர்ச-பூர்ணமாஸம் என்று ஒரு வைதிக கர்மம் உள்ளது.
தர்சம் என்பது அமாவாஸ்யை யன்று செய்யப்படும் மூன்று யாகங்கள்.
பூர்ணமாஸம் என்பது பௌர்ணமி அன்று செய்யப்படும் மூன்று யாகங்கள்.
இந்த ஆறு யாகங்களுக்கும் சேர்த்து ஸ்வர்கம் தான் பலம் என்று வேதம் சொல்கிறது.
• ஆறு யாகங்களுக்கும் பொதுவாக ஒரே ப்ரகரணம் தான் உள்ளபடியால், ப்ரகரணம் என்ற ப்ரமாணத்தால் அங்கத்வத்தை
நிர்ணயித்தால், இந்த வைம்ருதம் என்ற யாகம் தர்சபூர்ணமாஸம் என்ற ஆறு யாகங்களுக்கும் அங்கம் ஆகும்.
• ஆனால், நாம் பார்த்த கட்டளையில், பூர்ணமாஸம் என்ற கர்மத்தை மட்டும் குறிக்கும் சொல் உள்ளபடியால்,
ஸமபி வ்யாஹாரம் (சேர்த்து படிக்கப்படுதல்) என்ற வாக்ய ப்ரமாணம் வைம்ருத்த்துக்கும்
பூர்ணமாஸம் என்ற கர்மத்துக்கும் மட்டும் தான் உள்ளது.
ஆகையால், வாக்ய ப்ரமாணத்தால் அங்கத்வத்தை அறிந்தால், வைம்ருதம் என்ற யாகம் பூர்ணமாஸம் என்ற
மூன்று யாகங்களுக்கு மட்டும்தான் அங்கம்.
• ஆகவே, வாக்யத்துக்கும் ப்ரகரணத்துக்கும் முரண்பாடு உள்ளது.
• ப்ரகரணத்ஸதக் காட்டிலும் வாக்ய ப்ரமாணம் வேகமாக அங்கத்வத்தை போதிக்கிறபடியால் ப்ரபலமானது.
ஆகையால், வைம்ருதம் என்ற யாகம் பூர்ணமாஸம் என்ற மூன்று யாகங்களுக்கு மட்டும்தான் அங்கம்.

4-பிரகரணத்துக்கும் ஸ்தானத்துக்கும் விரோதம்

வேதம் “ராஜாவாய் இருப்பவன் பெரிய ராஜ்யத்தை அடைய விருமிப்னால் ராஜ ஸூயம் என்ற
கர்மத்தைச் செய்ய வேண்டும்” என்று சொல்கிறது. ராட் விராட் சூராட் சாம்ராட் -மேல் மேல் உண்டே –
ராஜ ஸூயம் என்பது ஒரு யாகம் அல்ல, பற்பல யாகங்களின் கூட்டம்.
• அந்த ராஜஸூயத்தின் ப்ரகரணத்தில் தான் “பகடையைக் கொண்டு சூதாட வேண்டும்” என்ற கட்டளை உள்ளது.
• ராஜஸூயம், தனக்கு உதவி செய்யும் அங்கங்களைத் தேடுகிறது.
சூதாட்டம், தனது ப்ரயோஜநம் என்ன என்று எதிர்பார்க்கிறது.
ஆகையால், பரஸ்பர எதிர்பார்ப்பு என்கிற ப்ரகரண ப்ரமாணத்தின்படி பார்த்தால், சூதாடுதல் என்ற செயல்
ராஜஸூயம் என்ற யாகக் கூட்டத்திற்கு அங்கம்.
• ஆனால், ஸ்தாநம் என்ற ப்ரமாணத்தைப் பார்த்தால், இந்த சூதாட்டத்தை விதிக்கும் கட்டளை ,
“அபிஷேச நீயம்” என்ற யாகத்திற்கு அருகில் படிக்கப் பட்டுள்ளபடியால், அந்த யாகத்துக்கு
ஒரே சோம யாகம் அங்கம் -தான் அங்கம் என்று தோன்றுகிறது.
• ஆகவே, ப்ரகரணத்துக்கும் ஸ்தாநத்துக்கும் முரண்பாடு உள்ளது.
• ப்ரகரணம் என்பது வேகமாக வாக்யம், லிங்கம், ச்ருதி என்ற மூன்றை மட்டும் கல்பித்து,
சூதாட்டல் ராஜ ஸூயத்தின் அங்கம் என்று போதித்து விடும்.
ஸ்தாநமோ , ப்ரகரணம் வாக்யம் லிங்கம் ச்ருதி என்ற நான்கையும் கல்பித்து தான் அங்கத்வத்தை
போதிக்கவேண்டும். ஆகையால், அது பலம் குறைந்தது.
• ஆகையால், சூதாட்டம் என்ற செயல் ராஜ ஸூயம்
என்று அழைக்கப் படும் அனைத்து யாகங்களுக்கும் தான் அங்கம்.

5-ஸ்தானத்துக்கும் சமாக்யாவுக்கும் விரோதம் –

தர்சபூர்ணமாஸம் என்ற கர்மம் ஆறு யாகங்களின் கூட்டம் என்று பார்த்தோம்.
அதில் 3 யாகங்கள் தோசை போன்ற புரோடாசத்தாலும் ,
ஒன்று தயிராலும், ஒன்று பாலாலும் ஒன்று நெய்யாலும் செய்யப்பட வேண்டும்.
• அந்த தர்சபூர்ணமாஸத்தின் ப்ரகரணத்தில் தான் ஒரு மந்த்ரம் படிக்கப்பட்டுள்ளது –
“சுந்தத்வம் தைவ்யாய கர்மணே …” என்று. இது பாத்திரங்களைச் சுத்தம் செய்வதைப் பற்றி பேசுகிறது.
• இந்த மந்த்ரம் இருக்கும் வேதப் பகுதிக்கு “பௌரோடாசிக காண்டம்” (புரோடாசத்தோடு ஸம்பந்தப் பட்ட காண்டம்)
என்ற பெயர். ஆகையால்,ஸமாக்யா என்ற பெயரைக் கொண்டு பார்த்து அங்கத்வத்தை முடிவு செய்தால்,
இந்த மந்த்ரம் புரோடாசத்தால் செய்யப்படும் 3 யாகங்களின் பாத்திரங்களை சுத்தம் செய்யும் செயலுக்கு மட்டும் தான்
அங்கம் ஆகும். தயிர் பால் நெய் யாகங்களின் பாத்திரங்களுக்கு அல்ல.
• ஆனால், ஸ்தாநம் என்ற ப்ரமாணத்தைப் பார்த்தால், இந்த மந்த்ரம் தயிர் மற்றும் பாலால் செய்யப்பட வேண்டிய
யாகங்களுக்கு அருகில் தான் படிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஸ்தாந ப்ரமாணத்தின் அடிப்படையில் பார்த்தால்
இந்த மந்த்ரம் தயிர் பால் யாகங்களின் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கு தான் அங்கம்.
• ஆகையால், ஸ்தாநத்துக்கும் ஸ்மாக்யாவுக்கும் முரண்பாடு உள்ளது.
• ஸ்தாநம் தான் ஸமாக்யாவைக் காட்டிலும் பலம் பொருந்தியது,வேகமாக அங்கத்வத்தை போதிக்கிறபடியால்.
ஆகையால் இந்த மந்த்ரம் தயிர் பால் யாகங்களின் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு தான் அங்கம் –

நான்காவது பாதம் தொடங்கி எட்டாேது பாதம் முடியும் வரை முன் சொன்ன 6 ப்ரமாணங்களுக்குள்
எந்த இடங்களில் முரண்பாடு உள்ளது, எங்கு இல்லை என்று விசாரிக்கப்படுகிறது.
எந்த உக்திகளைக் கொண்டு விசாரம் என்பதில் தான் வேறுபாடு இவற்றுக்குள் –

நான்காவது பாதத்தின் சுருக்கம்

• இந்த இடத்தில், சில தர்மங்கள் புருஷார்த்தங்கள் என்றும், சில தர்மங்கள் க்ரத்வர்த்தங்கள் என்றும்
கூறுகிறார் ஸஜமிநி மஹரிஷி.
க்ரத்வர்த்தங்கள்–க்ரது -வைதிக கர்மம் யாகம் என்று அர்த்தம் -இது யாகத்துக்கு பயன்படும்
• எந்தச் செயல் புருஷனுக்கு நன்மையையோ தீமையையோ விளைக்கிறவதா, அது புருஷார்த்தம் ஆகும்.
• எந்தச் செயல் ஒரு யாகத்திற்கு (க்ரதுவுக்கு) தீங்கை / குறைபாட்டை விளைவிக்குமோ அது க்ரத்வர்த்தம் ஆகும்.
• வேதத்தில் பொதுவாக ஒரு கட்டளை உள்ளது – “பொய் சொல்லக் கூடாது” என்று. இதை மீறினால்,
அவனுக்குப் பாவம் ஏற்படும்.
• அதைத் தவிற, யாகத்தின் ப்ரகரணத்திலும் ஒரு கட்டளை உள்ளது – “பொய் சொல்லக் கூடாது” என்று.
இந்தக் கட்டளையை மீறினால், செய்யப்படும் யாகத்துக்கே குறை பாடு ஏற்பட்டு பலம் கிடைக்காமல் போகும்.
• ஆகையால், யாகம் செய்யும் போது பொய் சொன்னால், யாகமும் பயன் கொடுக்காது, செய்பவனுக்கும் பாபம் ஏற்டும்.

ஐந்தாவது பாதத்தின் சுருக்கம்

இந்தப் பாதத்தில் ப்ரதிபத்தி கர்மங்கள் சொல்லப் படுகின்றன.
• யாகத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்களை அலட்சியமாகப் போடாமல் மதிப்போடு உபயோகப்படுத்தி முடிக்க வேண்டும்.
அப்படி யாகத்தில் உபயோகிப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்தும் செயல்கள் ப்ரதிபத்தி கர்மங்கள் எனப்படுகின்றன.
• நெல்லிலிருந்து எடுக்கப்பட்ட உமி, ரித்விக்குகள் சொரிந்து கொள்ள உபயோகிக்கும் மான் கொம்பு போன்ற அனைத்து
த்ரவ்யங்களையும் எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று வேதமே சொல்கிறது.
• தர்ச பூர்ண மாஸத்தில் உபயோகிக்கப்பட்ட புரோடாசத்தை நான்காகப் பிரித்து, ப்ரஹ்மா அத்வர்யு ஹோதா ஆக்நீத் என்கிற
நான்கு ரித்விக்குகளும் பிரித்து உண்ண வேண்டும். இது அவர்களின் நலனுக்காக அல்ல,
புரோடாசத்தை ப்ரதிபத்தி செய்வதற்காகத்தான்.
• ஸோம யாகத்தில், ஸோம ரஸத்தை வைத்து யாகம் செய்த பிறகு, மீதமிருக்கும் ரஸத்தை ரித்விக்குகள் உண்ண வேண்டும்.
சேஷம் உண்டு -வமனம்-வாயல் எடுத்தாலும் அதுக்கு பிராயச்சித்த மந்த்ரமும் உண்டு வேதத்தில்
• ’சமஸம்’ (உண்ணும் பாத்திரம்) என்ற பெயர் உள்ளபடியாலேயே அதில் ரித்விக்குகள் உண்ண வேண்டும் என்று தெரிகிறது.
ஹாரியோஜநம் என்ற பாத்திரத்தில் இருக்கும் ரஸத்தை அனைத்து ரித்விக்குகளும் பருக வேண்டும். ஒரே பாத்திரத்தில் பலர்
அருந்தினால் எந்த வரிசை , ஒருவரே பல முறை அருந்தினால் எதற்காக முதலில் அருந்த வேண்டும் என்று
எல்லாம் பல நியமங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன இந்த பாதத்தில் –
வஷட் மந்த்ரம் சொன்னவன் வஷட் காரன் முதலில் உண்ண வேண்டும்
ஆஹ்வானம் -அழைத்து அழைத்து முறைப்படி உண்ண வேண்டும்
இப்படி regulation உண்டு

ஆறாம் பாதத்தின் சுருக்கம் –

இந்தப் பாதத்தில் அநாரப்யோக்தி என்ற விஷயம் விசாரிக்கப்படுகிறது.
• வேதத்தில் பல யாகங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு யாகத்தையும் பற்றிப் பேசும்
வேதப் பகுதிகள் (ப்ரகரணங்கள்) உள்ளன.
அந்தந்த ப்ரகரணத்தில் சொல்லப்பட்ட அங்கங்கள் அந்தந்த யாகத்துக்கு அங்கம்.
• அப்படி எந்த ஒரு யாகத்தைப் பற்றின பேச்சையும் தொடங்காமல்,பொதுவாகவும் சில கட்டளைகள் உள்ளன.
அவற்றுக்கு தான் அநாரப்ய (யாகத்தைத் தொடங்காமல்) உக்தி (சொல்லப்பட்டது) என்று பெயர்.
• அப்படி விதிக்கப்பட்ட அங்கங்கள் அனைத்து யாகங்களுக்கும் அங்கங்களாக வேண்டும்.
ஆனால், அனைத்தையும் குறித்து விதிக்கத் தேவையில்லை . ப்ரக்ருதி யாகத்தில் மட்டும் விதித்தால் போதும்.

ஆஹவனீயம் ஹோமத்தில் தானே எல்லா ஹோமமும் பண்ண வேண்டும்
சமிந்தனம் -அக்னி வளர்க்க -இதற்கு –11மந்த்ரங்கள் உண்டு –
மூன்று தடவை முதல் மந்த்ரம் -கடைசி மந்த்ரம் மூன்று தடவை -இப்படி ஆவ்ருத்தி -15 ஆக பெருக்கி சொல்ல வேண்டும்
சப்த தச –17 -தடவை சொல்ல வேண்டும் என்று ஒரு யாகத்துக்கு விதிக்கும்
இப்படி மாறுவதை மட்டும் சொல்லும்

• வேதம் அனைத்து யாகங்களுக்கும் மறுபடியும் மறுபடியும் அங்கங்களைச் சொல்லாது.
ஒரு யாகத்திற்குத் தான் சொல்லும். அந்த யாகத்திற்கு ப்ரக்ருதி யாகம் என்று பெயர்.
மற்ற யாகங்களைச் சொல்லிவிட்டு, “முன் யாகத்தில் சொன்னது போல் செய்ய வேண்டும்” என்று சொல்லி விடும்.
ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அதை மட்டும் கூறிவிடும். அந்த யாகங்களுக்கு விக்ருதி யாகங்கள் என்று பெயர்.
• ஆகவே, அநாரப்யோக்தியான கட்டளைகள் ப்ரக்ருதி யாகத்திற்கு அங்கமாக ஒரு பொருளை
போதித்து விட்டால், அது தானாகவே மற்ற யாகங்களுக்கும் அங்கம் ஆகிவிடும்.

ஏழாம் பாதத்தின் சுருக்கம் –

ஏழாவது பாதத்தில் பல யாகங்களுக்குப் பொதுவாக உதவி செய்யும் அங்கங்கள் சொல்லப் படுகின்றன.
• எடுத்துக் காட்டுக்கு, தர்சபூர்ண மாஸத்தில் ஆறு யாகங்கள் உள்ளன.
அவற்றை ஸமமான பூமியில் வைத்துச் செய்யவேண்டும் என்று வேதம் கட்டளை யிடுகிறது.
அதற்கு வேதி என்ற ஒரு பூமியைத் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது
• அந்த பூமி அனைத்து யாகங்களுக்கும் பொதுவானது . தனித்தனியாக ஆறு வேதிகளைச் செய்யத் தேவையில்லை –
• யஜமாநன் தானாகத்தான் யாகத்தில் அனைத்துச் செயல்களையும் செய்ய வேண்டும் என்பதில்லை .
அதற்காகச் சிலரை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு தான் ரித்விக்குகள் என்று பெயர்.
• தர்சபூர்ணமாஸத்தைச் செய்ய ப்ரஹ்மா, அத்வர்யு, ஹோதா, அக்நீத் என்று நான்கு ரித்விக்குகள் தேவை
• ஸோம யாகத்ஸதச் செய்ய 16 ரித்விக்குகள் தேவை . அவர்களை நான்கு குழுமங்களாகப் பிரிக்கலம்
1. ப்ரஹ்மாவின் கூட்டம் – ப்ரஹ்மா, ப்ராஹ்மணாச்சம்ஸி , ஆக்நீத்ரன்,போதா
2. அத்வர்யுவின் கூட்டம் – அத்வர்யு, ப்ரதிப்ரஸ்தாதா, நேஷ்டா, உந்நேதா
3. ஹோதாவின் கூட்டம் – ஹோதா, ஸமத்ராவருணன், அச்சாவாகன்,க்ராவஸ்துத்
4. உத்காதாவின் கூட்டம் – உத்காதா, ப்ரஸ்தோதா, ப்ரதிஹர்தா,ஸூ ப்ரஹ்மண்யன்

எட்டாவது பாதத்தின் சுருக்கம்

எட்டாவது பாதத்தில், ஸ்வாமிக்காகச் செய்யப்படும் கர்மங்கள் சொல்லப்படுகின்றன.
• ஸ்வாமீ என்பது யஜமாநன் தான். யாகத்தைச் செய்கிறபடியால் யஜமாநன் என்று பெயர். யாகத்தின் பயனை
அடைந்து அநுபவிக்கிறபடியால் அவருக்கே ஸ்வாமீ என்று பெயர்.
• அவர் யாகம் செய்யத் தேவையான தகுதிகள் சில. அவற்றைத் தவிற வேதம் வேறு சில ஸம்ஸ்காரங்களையும்
சொல்லுகிறது –ஷவரம் செய்தல், பட்டு உடுத்துதல், ஆபரணங்களை அணிதல், முதலானவை .
• இவை எல்லாம் போக்த்ரு -ஸம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகின்றன. யாகத்தின் பயனை அநுபவிக்கும்
போக்தா தான் யஜமாநன். அவன் யாகத்தின் பயனைப் பெறவேண்டும் என்றால், இந்த ஸம்ஸ்காரங்களை அவனுக்குச்
செய்ய வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
• இந்த ஸம்ஸாரங்கள் யஜமாநன் தானே செய்து கொள்பவை ,
மற்ற ரித்விக்குகள் அவருக்காகச் செய்து கொடுப்பவை என்று பல வகைகள் உள்ளன.
• இவை எல்லாம் முன்றாவது அத்யாயத்தின் இறுதியான எட்டாவது பாதத்தில் விசாரிக்கப் பட்டுள்ளன.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி 1 : ந்யாய சாஸ்த்ரம்– பாடங்கள் -25-32—

March 24, 2021

ஒன்பது த்ரவ்யங்கள்
24 குணம்
சப்த பதார்த்தங்கள்
லக்ஷணம் பரீஷை பார்த்தோம்
ப்ரமேயம்
பிரமாணம்
ஞானம் எப்படி ஏற்படும் -வகைகள் என்ன -ப்ரத்யக்ஷம் இத்யாதி -இவற்றின் தன்மைகள்-சரியான அறிவு என்ன
ப்ராசீன நவீன நியாயம் -இவற்றைப் பார்ப்போம் –

————–

பாடம் –25-பிரமாணம்

ப்ரமேயம் பிரமாணம் பிரமாதா மூவரும் சாத்விக -கூடி என்றும் எப்பொழுதும் ஜெயிக்க வேண்டும்
மாண மேய சித்தி -பிரமாணம் கொண்டே ப்ரமேயம் சித்திக்கும் –

ஞானம் என்னும் ஆத்மாவின் குணம் ஸ்ம்ருதி -அனுபவம் -என்ற இரண்டு வகை –
அனுபவம் -யதார்த்த அனுபவம் என்றும் அயதார்த்த அனுபவம் என்று இரண்டு வகை
யதார்த்த அனுபவத்துக்கு ப்ரமா என்ற மற்ற ஒரு பெயரும்
அயதார்த்த அனுபவத்துக்கு அப்ரமா -அல்லது பிரமம் -என்ற மற்ற ஒரு பெயரும் உண்டு

அப்படிப்பட்ட ப்ரமா என்னும் உண்மை அறிவுக்கு விஷயமாக -அறியப்படும் பொருளாக இருக்கும்
பொருளுக்கு ப்ரமேயம் என்று பெயர்
அந்த ப்ரமா என்னும் ஞானத்தை உடைய ஆத்மாவுக்கு ப்ரமாதா என்று பெயர்
அந்த ப்ரமா வை உண்டு செய்யும் கருவிக்கு ப்ரமாணம் என்று பெயர்
ப்ரமா-யின் கரணம் தான் ப்ரமாணம் என்ற முறையில் இந்தச் சொல் ஏற்படுகிறது

ப்ரமேயங்கள் பதார்த்தங்கள் த்ரவ்யம் இத்யாதி பிரமாதா முன்பு பார்த்தோம்
இனி பிரமாணம் பார்ப்போம்
விக்ரஹ வாக்கியம் -பிரித்துப் பொருள்
நான்கு கால்களை உடையது நாற்காலி
லோக நாதன் -லோகங்களுக்கு நாதன் -லோகம் எதுக்கு நாதனோ
ராம தாசன் இப்படி
ப்ரமாவின் கரணம் -பிரமாணம் –

கரணம் என்றால் என்ன என்று அறிய
காரணம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்
காரணம் என்றால் என்ன என்று அறிய காரியம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்

காரியம்
எந்தப் பொருள் உண்டாகிறதோ அதுக்குக் காரியம் என்று பெயர்
ஆகாசம் திக் ஆத்மா இவற்றைக் கார்யம் என்று சொல்ல முடியாதே நித்தியமான படியால் -அநாதி யான படியால் –
ஒரு காலத்தில் இல்லாமல் இருந்து பிறகு உண்டாகக் கூடிய பொருளை காரியம் என்று அழைக்கிறோம்
ஒரு பொருளின் தோற்றம் -உத்பத்திக்கு -முன்பு அந்தப் பொருளின் அபாவம் தான் இருக்கும் –
இதுக்கு ப்ராக் அபாவம் என்று பெயர்
ஆகவே காரியம் என்று அழைக்கப்படும் பொருள்கள் அனைத்துக்கும் ப்ராக் அபாவம் கண்டிப்பாக இருக்கும்
ப்ராக் அபாவம் இல்லாத பொருள்கள் ஆகாசம் காலம் ஆத்மா போன்ற தோன்றாத நித்யமான பொருள்கள் தான்

எந்த ஒரு பொருளுக்கு ப்ராக் அபாவம் உள்ளவையே கார்யம் ஆகும் -இதுவே லக்ஷணம்
எந்தப் பொருளின் அபாவத்தைச் சொல்லுகிறோமோ அதற்கு பிரதியோகி என்று பெயர்
இருக்கும் இடம் அநு யோகி பிரதியோகியின் எதிர்மறை –
அந்தத் தன்மைக்கு பிரதியோகித்வம் என்று பெயர்
கார்யம் என்று சொல்லும் பொருளுக்கு ப்ராக் அபாவம் உண்டு என்று பார்த்தோம்
அதாவது ப்ராக் அபாவத்தின் பிரதியோகியாய் இருக்கும் பொருள் தான் காரியம் என்றும்
அழைக்கப்படுகிறது என்றும் சொல்லலாம்
ப்ராக பாவத்துக்கு பிரதி யோகி யாக உள்ளதே கார்யத்வம் லக்ஷணம் என்றது ஆயிற்று –

காரணம்
காரியம் என்று ஓன்று இருந்தால் அதற்கு காரணம் என்ற ஓன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்
காரணம் என்றால் என்ன என்று பார்ப்போம்
ஒரு வஸ்து உண்டாவதற்கு முன் வினாடியில் எந்தப் பொருள் தவறாமல் இருக்கிறதோ
அந்த வஸ்துவுக்கு அந்தப் பொருள் காரணம் என்று சொல்லப் படுகிறது
ஒரு பொருள் உண்டாவதற்கு முன் வினாடியில் அதன் காரணம் இருந்து இருக்க வேண்டும்
ஒரு காரணம் தானே இல்லாத போது தன்னுடைய காரியத்தை ஏற்படுத்த முடியாது
ஆகையால் முன் வினாடியில் இருப்பது என்பது அவசியம்
பூர்வ வ்ருத்தி –முன் க்ஷணத்தில் இருப்பவை எல்லாம் காரணம் ஆக மாட்டாதே –
ஏதோ ஒரு குடம் உண்டாகும் போது அருகில் ஒரு கழுதையோ இருந்து இருக்கலாம்
ஆனால் தவறாமல் அனைத்து குடங்கள் உண்டாவதற்கு முன்பும் அவ்விடத்தில் சுவரோ கழுதையோ
இருக்கும் என்று சொல்ல இயலாது
ஆகையால் அவை குடத்துக்கு காரணங்கள் ஆக மாட்டாதவை ஆகும்
நியத பூர்வ வ்ருத்தி -தவறாமல் முன் க்ஷணத்தில் இருப்பதே காரணத்தின் -லக்ஷணம் –

கரணம்
எவை தவறாமல் இருக்கும் என்றால்
மண் -கபாலங்கள் -குயவன் -சக்கரம் -தடி -ஈஸ்வரன் -காலம் -திக் -அத்ருஷ்டம் -முதலியவை
அவற்றுள் ஈஸ்வரன் தொடக்கமானவர்கள் அனைத்து கார்யங்கள் உண்டாவதற்கு முன் வினாடியில் தவறாமல் இருப்பார்கள்
ஆகையால் அவை உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் காரணம்
ஆகையால் சாதாரண காரணம்-Common Causes- என்று அழைக்கப் படுகின்றன

மண் குயவன் முதலியவை குடம் உண்டாவதற்கு முன் வினாடியில் மட்டும் தான் இருக்கும்
ஆகையால் குடத்துக்கு மட்டுமே காரணம் ஆகும்
ஒரு புடவைக்கோ நாற்காலிக்கோ குயவனும் மண்ணும் தேவை இல்லை
ஆகையால் அவற்றுக்கு அசாதாரண காரணங்கள் -Special Causes-என்று பெயர்
அந்த அசாதாரண காரணத்துக்குத் தான் கரணம் என்ற மற்ற ஒரு பெயர் கொடுக்கப் பட்டு உள்ளது
நெசவாளி குடத்துக்கு காரணம் ஆக மாட்டார் போன்ற வியவஸ்தை உண்டே –

நியத பூர்வ வ்ருத்தி -காரணம் என்றவாறு –
கார்யத்துக்கு பிரதி யோகியாக இருப்பதே காரணம்
ஞானத்துக்கு ப்ராக் அபாயம் -ஞானம் இல்லாமல் இருக்க படிக்க போகிறோம்
ஞானம் கார்யம் -ப்ரமா-யதார்த்த ஞானம்
இதுக்குத் தனிப்பட்ட காரணமே கரணம் –

ப்ரமா கரணம் -ப்ரமா என்ற கார்யம் உண்டாவதுக்குத் தனிப்பட்ட காரணம் பிரமாணம்
ப்ரத்யக்ஷம் -அநு மிதி உபமிதி சாப்த போதம் -நான்குக்கும்
நான்கு பிரமாணங்கள் -உண்டே
ப்ரத்யக்ஷம் -அனுமானம் -உபமானம் -சாப்தம் இவை நான்கும் அந்த நான்குக்கும்
ப்ரத்யக்ஷம் என்பது ஞானத்துக்கும் இந்த்ரியங்களுக்கும் ஒரே சொல்

லக்ஷண ஞானமும் வேண்டும் பிரமாணமும் வேண்டும் பிரமேயங்களை அறிய –
இவற்றின் விவரணம் பின்பு பார்ப்போம்

காரணம் மூன்று வகைப்படும்
சமவாயி காரணம் -Inherent Cause-material cause-
அசமவாயி காரணம்
நிமித்த காரணம் -Efficient or Instrumental Cause

சமவாயி காரணம்
ஒரு பொருள் உண்டாகும் பொழுது எந்த வஸ்துவில் சமவாயம் என்கிற சம்பந்தத்தால் இருந்து கொண்டு உண்டாகுமோ –
அந்தப் பொருளுக்கு அந்த வஸ்து சமவாயி காரணம் -என்று சொல்லப் படுகிறது
துணி -என்ற கார்யம் உண்டாகும் பொழுது
துணி என்கிற அவயவி -நூல்கள் என்கிற அவயவங்களில் சமவாய சம்பந்தத்தால் இருந்து கொண்டு தான் தோன்றும்
அவயவிக்கும் அவயவங்களுக்கும் இடையில் சமவாயம் என்கிற சம்பந்தம் இருக்கிறபடியால் –
ஆகையால் நூல்கள் தான் துணியின் சமவாயி காரணம்

அதே போல் அந்தத் துணியில் இருக்கும் நிறம் சுவை மணம் போன்ற குணங்களும்
உத்க்ஷேபணம் முதலான செயல்களும் அந்தத் துணியில் சமவாய சம்பந்தத்தால் இருந்து கொண்டு தான் உண்டாகின்றன
குணங்களுக்கும் கிரியைகளுக்கும் அவற்றின் இருப்பிடங்களுக்கு இடையில் சமவாயம் என்கிற சம்பந்தம் உள்ளபடியால்
ஆகையால் குணங்களுக்கும் கிரியைகளுக்கும் அவை இருக்கும் பொருள் தான் சமவாயி காரணம்

ஆத்மாவில் ஞானம் சுகம் இச்சை இத்யாதி
ஞானம் குணம் ஆஸ்ரயமான ஆத்மா இடத்தில் சமவாய காரணம்
சமயாவ சம்பந்தத்தால் ஏற்படுவது –

அசமவாயி காரணம் -இரண்டு வகைப்படும்
ஒரு கார்யப் பொருள் தன்னுடைய சமவாயி காரணத்தில் இருந்து உண்டாகும் பொழுது அந்த சமவாயி காரணத்தில்
சமவாய சம்பந்தத்தால் இருந்து கொண்டு இந்தக் காரியத்தை உண்டாக்கும் ஒரு வஸ்துவுக்கு அசமவாயி காரணம் என்று பெயர்
துணி உண்டாக நூல்கள் மட்டும் இருந்தால் போதாது
அவற்றுள் சம்யோகம்- சேர்க்கை -ஏற்பட வேண்டும் –
ஆகையால் நூல்களின் சேர்க்கையும் -அவயவங்கள் சம்யோகமும் -துணி -அவயவி -உண்டாக ஒரு காரணம்
நூல்கள் என்கிற சமவாயி காரணத்தில் இருந்து துணி என்ற கார்யம் உண்டாகும் பொழுது அந்த நூல்கள்
சமவாயி காரணத்தில் சமவாய சம்பந்தத்தால் இருக்கக் கூடிய சம்யோகமும் சேர்க்கையும் -துணிக்குக் காரணம் ஆகிறது
ஆகையால் நூல்களின் சேர்க்கை துணிக்கு அசமவாயி காரணம் என்று சொல்லப்படுகிறது –

குருத்வம்
கிரியை -கிரியாவான் -இடையில் சமவாய சம்பந்தம்
பந்து விழுவது
பந்தில் எடை குருத்வம் -பந்தின் இடத்தில் சமவாயம் சம்பந்தம்
எடை விழுவதும்- கிரியைக்கு அசமவாய காரணம் போல்
முன் க்ஷணத்தில் கட்டாயம் இருப்பதால் காரணம்
விழுவதுக்கு பந்து சமவாய சம்பந்தம்
குருத்வம் விழுவதும் அசமவாயி காரணம்

துணி போன்ற ஒரு அவயவி
நூல்கள் போன்ற தனது அவயவங்களில் இருந்து உண்டாகும் பொழுது அந்தத் துணியில்
எந்த நிறம் சுவை மணம் வெப்பம் அளவு ஆகியவை இருக்க வேண்டும் என்பது அந்த அவயவங்களில் இருக்கும்
நிறம் சுவை மணம் ஆகியவற்றைப் பொறுத்தது
ஆகவே நூல் என்ற சமவாயி காரணத்தில் இருந்து துணி என்ற கார்யப் பொருள் உண்டாகும் பொழுது
அந்த சமவாயி காரணத்தில் இருக்கும் ரூபம் ரசம் முதலியவை கார்யப் பொருளில் இருக்கும் ரூபம் ரசம்
முதலியவற்றுக்கு அசமவாயி காரணம் ஆகின்றன
இது மற்ற ஒரு வகையான அசமவாயி காரணம்

நிமித்த காரணம்
ஒரு பொருள் உண்டாகத் தேவைப்படும் காரணங்களுக்குள் சமவாயி காரணமாகவோ
அசமவாயி காரணமாகவோ இல்லாமல்
ஆனால் அந்தக் காரியப் பொருளைக் குறித்துக் காரணமாக இருக்கும் அனைத்துமே
நிமித்த காரணம் என்று அழைக்கப் படுகின்றன
குடத்துக்கு சமவாயி காரணம் அதன் அவயவங்களான கபாலங்கள் மண்
அசமவாயி காரணம் -அந்தக் கபாலங்களின் -அவயவங்கள் -சேர்க்கை -சம்யோகம்
ஆகவே இவ் விரண்டையும் தவிர்ந்த குயவன் சக்கரம் கடவுள் காலம் திசை அதிருஷ்டம் போன்றவை அனைத்தும்
குடத்தின் நிமித்த காரணங்கள் தான் –

————–

பாடம் –26-ப்ரத்யக்ஷ பிரமாணம்

ப்ரமா என்று அழைக்கப்படும் யதார்த்த அனுபவம் -நான்கு வகைகள்
ப்ரத்யக்ஷம் முதல் வகை
அக்ஷம் -என்றால் இந்திரியம் -ப்ரதி என்றால் முன்னால்-இந்திரியங்களுக்கு முன்னால் இருக்கும் பொருள்களைப்
பற்றிய யதார்த்த அனுபவம் தான் ப்ரத்யக்ஷம் என்னப்படும் –
ப்ரத்யக்ஷ ப்ரமா-புலன்களால் ஏற்படும் எதார்த்த அனுபவம்
அறிவுக்கும் அறிவுக்கு கருவியாக உள்ள புலன்களுக்கும் ப்ரத்யக்ஷம் –
இந்திரிய அர்த்த சந்நிகர்ஷ ஜன்ய ஞானம் ப்ரத்யக்ஷம் –பொருளுக்கும் இந்திரியங்களுக்கு தொடர்பு இருந்தால் தானே அறிவு ஏற்படும் –
இந்த்ரியத்துக்கும் கிரஹிக்கப்படும் பொருளுக்கும் அர்த்தத்துக்கும் இடையில் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய ஞானம்
என்பது தான் ப்ரத்யக்ஷ ப்ரமாவின் லக்ஷணம்
அப்படிப்பட்ட ப்ரத்யக்ஷம் என்னும் ப்ரமாவிக்குக் காரணமாக இருக்கக் கூடியவை இந்திரியங்கள்
அவற்றுக்கும் பிரத்யக்ஷம்-ப்ரத்யக்ஷ பிரமாணம் என்று பெயர் –

ப்ரத்யக்ஷம் இரண்டு வகைப்படும்
ச விகல்பகம் என்றும் நிர் விகல்பகம்

ச விகல்பகம்
விகல்பம் என்றால் பிரிவு -விகல்பங்களோடே பிரிவுகளோடே கூடிய ப்ரத்யக்ஷம் ச விகல்பகம் எனப்படும்
ஞானம் என்கிற குணத்தில் பகுதிகளோ இருக்க முடியாதே
ஆகவே ஞானத்தின் பிரிவுகள் என்றால் ஞானத்தால் அறியப்படும் விஷயங்களின் பிரிவுகளே ஆகும்
விசேஷயத்தில் பிரிவுகள் என்றால்
விசேஷ்யம்
பிரகாரம்
சம்சர்க்கம் –போன்ற பாகுபாடுகள்

எந்த ஒரு ஞானமும் தன்மைகளுடன் கூடிய விஷயத்தையே கிரகிக்கும்
சிவப்பான குடம் என்ற அறிவு-சிவப்பு நிறம் என்ற குடத்தோடே கூடிய குடமாகிய த்ரவ்யம் என்பதையே கிரகிக்கும்
இது குடம் என்ற அறிவு கூட குடத்தன்மை என்கிற சாமான்யத்தோடு கூடினதாக கண் முன்னே இருக்கும் த்ரவ்யத்தை க்ரஹிக்கிறது
அப்படி ஞானத்தால் கிரஹிக்கப்படும் தன்மைக்கு -பண்புக்கு -சிவப்பு நிறத்துக்கு -தர்மம் பிரகாரம் விசேஷணம் என்ற பெயர்
அந்தப் பண்பை உடைத்தாய் இருக்கும் கிரஹிக்கப்படும் பொருளுக்கு -குடத்துக்கு -தர்மீ -விசேஷ்யம் -என்று பெயர்
அந்தக் குடத்துக்கும் சிவப்பு நிறத்துக்கும் இடையில் இருக்கும் சமவாயம் என்கிற சம்பந்தத்துக்கு சம் சர்க்கம் என்று பெயர்
இப்படி இந்தப் பகுதி பிரகாரம்
இந்தப் பகுதி விசேஷ்யம்
இது சம் சர்க்கம்
என்று எந்த ஞானத்தில் பிரித்து அறிய முடிகிறதோ அது ச விகல்பக ப்ரத்யக்ஷம் ஆகும்

நிர் விகல்பகம்
எந்த ஒரு ப்ரத்யக்ஷத்தால் அதில் கிரஹிக்கப்படும் பொருளை பிரகாரம் விசேஷ்யம் சம் சர்க்கம் என்று
பிரித்து அறிய முடியாதோ அந்த ப்ரத்யக்ஷம் நிர் விகல்பகம் எனப்படும்
இப்படி ஒரு ப்ரத்யக்ஷம் ஏற்படுவதை நம்மால் நேராக அறிய முடியாது
ச விகல்பகம் ஏற்பட்டால் மட்டும் தான் -நான் குடத்தை அறிந்தேன் -என்பதைப் போன்ற அறிவு ஏற்படும்
நிர் விகல்பகம் ஏற்பட்டால் இப்படி அறிவு ஏற்படாதே
ஆனால் நிர் விகல்பகம் என்ற ஒரு ப்ரத்யக்ஷம் இருக்க வேண்டும் என்று அனுமானத்தாலே அறியலாம்
தடியை உடைய மனிதன் -என்ற ஒரு அறிவு ஏற்படுகிறது
தடி பிரகாரம்
மனிதன் விசேஷ்யம்
ஸம்யோகம் தான் ஸம் சர்க்கம்
இப்படிப்பட்ட அறிவு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு முன்னால் பிரகாரம் -தடியைப் பற்றிய அறிவு
இருந்து இருக்க வேண்டும் என்று உலகத்தில் காண்கிறோம்
ஆகையால் பிரகாரத்தைப் பற்றின அறிவு ஏற்பட்ட பிறகு தான் அந்த பிரகாரத்தோடே கூடின பொருளைப்
பற்றின அறிவு ஏற்பட முடியும் என்று தெரிகிறது
அந்த நியாயத்தைக் கொண்டு பார்த்தால் இது குடம் என்ற அறிவு ஏற்படுவதற்கு முன்பு பிரகாரமான
குடத் தன்மையைப் பற்றிய ஒரு அறிவு ஏற்பட்டு இருக்க வேண்டும்
அப்படி ஏற்படுவதாக நமக்குத் தெரியாத போதும் அனுமானத்தால் அது சித்திக்கிறது
அது தான் நிர் விகல்பகம்
அதில் பிரகாரம் விசேஷ்யம் போன்ற பிரிவுகள் கிடையாது

சந்நிஹர்ஷங்கள்
ப்ரத்யக்ஷ ப்ரமாவை உண்டாக்குவது இந்த்ரியத்துக்கும் அர்த்தத்துக்கும் ஏற்படக் கூடிய தொடர்பே என்று பார்த்தோம்
அந்த தொடர்பு தான் -சந்நிஹர்ஷம் -என்று அழைக்கப் படுகிறது
ஆறு வகையான -சந்நிஹர்ஷங்கள்-நமக்கு உபயோகப்படுகின்றன

கண்ணால் ஏற்படக் கூடிய -சிவப்பான குடம் விழுகிறது -என்ற ஒரு ஞானத்தைக் கொண்டு ஆராய்வோம்
இது ஓரு ப்ரத்யக்ஷ ப்ரமா -இந்த ஞானத்தில்
1-குடம் -என்கிற த்ரவ்யம் –
2-குடத்தில் இருக்கும் கடத்வம் -குடத்தன்மை என்ற சாமான்யம்
3-குடத்தில் இருக்கும் சிவப்பு நிறம் -ரக்த ரூபம் -என்ற குணம்
4-அந்த ரூபத்தில் இருக்கும் ரூபத்வம் நிறத்தன்மை என்ற சாமான்யம்
5-குடத்தில் இருக்கும் விழுதல் என்ற கர்ம-கிரியை -செயல்
6-அதில் இருக்கும் கர்மத்வம் -செயல் தன்மை என்கிற சாமான்யம்
என்கிற ஆறு விஷயங்கள் கிரஹிக்கப் படுகின்றன
ஒரு ப்ரத்யக்ஷ ப்ரமாவில் ஒரு பொருள் விஷயம் ஆக வேண்டும் என்றால் அந்த ப்ரமாவை உண்டு செய்யும்
புலனுக்கும் அந்தப் பொருளுக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும்

சிவப்பான குடம் விழுகிறது
குடம் முதல் நிலை -த்ரவ்யம் சஷுஸால் கிரகிக்கும் இந்திரியம் சென்று விரிந்து குடம் தொட்டு –
த்ரவ்யம் தொட்டால் சம்யோகம் தானே -குடத்தையும் குடத்தன்மையும்
ரூபமும் ரூபத்வம் -குணம் குணத்தன்மை -சமவாயம் சம்பந்தம் இவற்றுக்கும் -குடத்துக்கும் குணத்துக்கும் சமவாய சமவாயம்
கிரியை -செயல் தன்மை -இங்கும் சமவாயம்
இந்திரிய அர்த்த ஸந்நிகர்ஷம் -சம்யோக சம்பந்தத்தால்
சமயோகப்பட்டது சம்யுக்த சமவாயம் – -தொடர்பு உள்ளவை-

சந்நிஹர்ஷங்கள்-
1-சம்யோகம்
நாம் இந்த்ரியத்தைக் கொண்டு ஒரு த்ரவ்யத்தை க்ரஹிக்கத் தேவைப்படும் ஸந்நிகர்ஷம் -சம்யோகம் –
ஏன் என்றால்
இந்த்ரியமும் ஒரு த்ரவ்யம்
குடமும் ஒரு த்ரவ்யம்
த்ரவ்யங்களுக்கு இடையில் ஏற்படும் சேர்க்கை சம்யோகம் தான் ஆகும்

2-ஸம்யுக்த சமவாயம்
நாம் இந்த்ரியத்தைக் கொண்டு ஒரு குடத்தில் இருக்கும் குடத்தன்மை என்ற சாமான்யத்தையோ
சிவப்பு நிறம் என்ற குணத்தையோ
விழுதல் என்ற கிரியையோ
கிரஹிக்கத் தேவைப்படும் ஸந்நிகர்ஷம் -ஸம்யுக்த சமவாயம்
ஸம்யுக்தம் என்றால் சமயோகப்பட்டது
கண்ணோடு சம்யோகப் பட்ட குடத்தில் சமவாய சம்பந்தத்தால் குணம் கிரியை சாமான்யம் ஆகியவை இருக்கிற படியால்
கண்ணுக்கும் அவற்றுக்கும் நேரடித் தொடர்பு இல்லா விட்டாலும் பரம்பரத் தொடர்பு உண்டு
ஆகவே இங்கு சம்யுக்த சமவாயமே ஸந்நிகர்ஷம் ஆகிறது

3-ஸம்யுக்த சமவேத சமவாயம்
நாம் இந்த்ரியத்தைக் கொண்டு ஒரு குணத்தில் இருக்கும் சாமான்யத்தையோ
ஒரு கிரியையில் இருக்கும் சாமான்யத்தையோ
கிரஹிப்பதற்கு உபயோகப்படும் சந்நிகர்ஷம் ஸம்யுக்த சமவேத சமவாயம் என்று சொல்லப் படுகிறது
ஏன் என்றால்
கண்ணோடு சம்யுக்தமான தொட்டுக் கொண்டு இருக்கும் குடத்தில் சமவேதமான-சமவாய சம்பந்தத்தால் இருக்கக் கூடிய
குணத்திலோ கர்மத்திலோ சமவாய சம்பந்தத்தால் அந்த சாமான்யம் உள்ளது

கண்ணும் தோலும் தான் த்ரவ்யத்தை -புஷ்பத்தை கிரகிக்கும் -மூன்று சன்னிகர்ஷங்களும் இவற்றுக்கு

மூக்கு மணத்தையும் மணத்தன்மையும் தான் கிரகிக்கும்
ரசன இந்த்ரியமும் இப்படி –
நேரடியாகத் தொட்டு வந்த சமவாயம் இல்லையே இவற்றுக்கு
இரண்டு ஸந்நிகர்ஷங்கள் தான் இவற்றுக்கு

4-சமவாயம்
சப்தம் என்பது ஆகாசத்தில் குணம்
ஆகையால் தொலைவில் உண்டாகும் ஒரு சப்தமானது அடுத்து அடுத்து ஆகாசப் பகுதியில் மற்ற
ஒரு சப்தத்தை உண்டு செய்து நம் காது வரை வந்து அடைகின்றது
ஸ்ரோத்ர இந்திரியம் என்பது நம் காதுக்குள் இருக்கும் ஆகாசமே தான்
ஆகவே கடைசியாக ஸ்ரோத்ர இந்திரியம் என்கிற ஆகாசப் பகுதியிலேயே ஒரு சப்தம் உண்டாகிறது
அந்த சப்தத்தை கிரகிக்கத் தேவைப்படும் ஸந்நிகர்ஷம் சமவாயம் தான் –
ஏன் என்னில் ஸ்ரோத்ர இந்திரியம் என்பது ஆகாசம் தான்
சப்தம் என்பது ஆகாசத்தில் குணம் தான்
குணத்திற்கும் அது இருக்கும் இடத்துக்கும் இருக்கும் தொடர்பு சமவாயம் தான்
சம்யோகம் இங்கு வேண்டாமே –

5-சமவேத சமவாயம்
ஸ்ரோத்ர இந்திரியம் என்கிற ஆகாசப் பகுதியில் சமவாய சம்பந்தத்தால் இருக்கும் சப்தத்தில்
சமவாய சம்பந்தத்தால் சப்தத்வம் என்ற சாமான்யம் உள்ளது
ஆகையால் அதை க்ரஹிக்கத் தேவைப்படும் சன்னிகர்ஷம் சமவேத சமவாயம்
சப்தத்வம் சாமான்யம் கிரகிக்க இது வேண்டும்

6-விசேஷண விசேஷ்ய பாவம்
எந்த ஒரு இந்த்ரியமும் ஒரு அபாவத்தைக் கிரஹிக்கப் பயன்படும் ஸந்நிகர்ஷம்
விசேஷண விசேஷ்ய பாவம் என்று சொல்லப் படுகிறது
குடத்தின் அபாவத்தை உடையது பூமி என்ற அறிவில்
குடத்தின் அபாவம் விசேஷணம் ஆகிறது
பூமி விசேஷ்யம் ஆகிறது
கண்ணுக்கும் பூமிக்கும் இடையில் சம்யோகம் உள்ளது
ஆகையால் கண்ணோடு சமயோகப்பட்ட பூமிக்கு விசேஷணமாக அபாவம் இருக்கிற படியால்
அந்த விசேஷண விசேஷ்ய பாவம் தான் ஸந்நிகர்ஷம் என்று சொல்லப் படுகிறது

பூமியையும் குடத்தின் அபாவத்தையும் கண்ணால் பார்க்கிறோம் -இரண்டு உடன் தொடர்பு இந்த ஸந்நிகர்ஷம்
அபாவத்துக்கும் அது இருக்கும் இடத்துக்கும் சமவாய சம்பந்தம் இல்லை
குடத்தின் அபாவம் உடைய பூமி -விசேஷணம் உடன் கூடிய விசேஷ்யம் தானே இது –
கல்லில் மணம் இல்லை -கந்த அபாவம் -மூக்குக்கும் இதே போல் –

முதல் மூன்று சன்னிகர்ஷங்களைக் கொண்டு தான் சஷூஸ் த்வக் மனஸ் என்ற மூன்று இந்திரியங்களும்
த்ரவ்யங்களையும் -அதில் இருக்கும் குணம் முதலியவற்றையும்
அவற்றில் இருக்கும் சாமான்யங்களையும் கிரஹிக்கின்றன

க்ரண இந்த்ரியமும் ரசன இந்த்ரியமும் -இரண்டாவது மற்றும் மூன்றாவது சன்னிகர்ஷங்களைக் கொண்டு
குணங்களையும் அவற்றில் இருக்கும் சாமான்யங்களையும் கிரஹிக்கின்றன
அவை இரண்டும் த்ரவ்யத்தை கிரஹித்தும் சக்தி அற்றவை
ஆகையால் சம்யோகம் ஸந்நிகர்ஷத்தைக் கொண்டு எதையும் கிரஹிக்க மாட்டா

ஸ்ரோத்ர இந்த்ரியமும் சப்தத்தைக் கிரஹிப்பதற்கு சமவாயம் என்கிற சன்னிகர்ஷமும்
சப்தத்வம் என்கிற சாமான்யத்தை கிரகிக்க சமவேத சமவாயம் என்கிற சன்னிகர்ஷமும் உபயோகப் படுகின்றன

அனைத்து இந்த்ரியங்களாலும் அபாவத்தைக் கிரஹிப்பதற்கு தேவையான ஸந்நிகர்ஷம்
விசேஷண விசேஷ்ய பாவம் என்பது –

ஆறாவது-ஆந்திர இந்திரியம் -ஆத்மா த்ரவ்யம்- மனஸ்ஸூ -சம்யோகம்
ஆத்மத்வம் ஞானத்தவம் -சம்யுக்த சமயோக சன்னிகர்ஷம்
ஸூகம் துக்கம் இச்சை -ஆசையத்வம் சாமான்யம் காட்டிக் கொடுக்கும் -சம்யுக்த சமவேத சமவாயம்
சஷூஸ் த்வக் போல் மனஸ்ஸூ ஆறையும் பயன்படுத்தும்
என்னிடம் அறிவு இல்லை ஞானம் இல்லாதா ஆத்மா-விசேஷணம் விசேஷ்ய சன்னிகர்ஷம்

—————————–

பாடம் 27-அனுமானம் -அறிமுகம்

நியாய ஸாஸ்த்ரம் அனைத்துக்கும் தேவை -ஆன் வீஷிதி-அனுமானம் முக்கியமாகக் கொண்டதால் –
இதுவும் நியாய ஸாஸ்த்ரத்தையே சொல்லும்
ஈஷணம் -ப்ரத்யக்ஷம் சாஸ்திரம் கொண்டு முதன் முதலில் அறிவது –
அனுமானம் முன்னமே அறியப்பட்ட ஒரு பொருளை மீண்டும் நோக்குதல் -ஆராய்தல்
அனுமானம் தான் பிரதான விஷயம் இதுக்கு -நவீன நியாய சாஸ்திரம் அனுமானத்தை நுட்பமாக ஆராய்ந்து உள்ளார்கள்

நான்கு பிரமானங்களில் இரண்டாவது அனுமானம்
அநு -பின் தொடர்வது
மானம் – உண்டாக்கும் கருவி
ப்ரத்யக்ஷத்தாலோ சாஸ்திரத்தாலோ முன்னமே அறியப்பட்ட ஒரு பொருளை மீண்டும் நோக்குதல் -ஆராய்தல்
நான்கு வகை யதார்த்த அனுபவங்களில் -பிரமாக்களுக்குள் இரண்டாவது அநு மிதி என்று பார்த்தோம்
ப்ரத்யக்ஷம் என்றது ஞானத்துக்கும் கருவிக்கும் ஒரே பெயர் அது போல் இங்கு இல்லை
அனுமானம் வேறே அநுமிதி வேறே

அந்த அநுமிதிக்கு கருவியாக -கரணமாக- அசாதாரண காரணமாக இருப்பதே அனுமானம் என்று அழைக்கப் படுகிறது
ஆகையால் அநுமிதிக்குக் கரணமாக இருத்தல் தான் அனுமானத்துக்கு லக்ஷணம்
அநுமிதியின் லக்ஷணம் யாது என்னில்
பராமர்ச ஜன்ய ஞானம் அநுமிதி –
ஒரு ஞானம் வேறே ஒரு ஞானத்துக்கு காரணம்
இந்திரியங்கள் பொருள்கள் ப்ரத்யக்ஷ ஞானத்துக்கு காரணம் பார்த்தோம்
பராமர்சம் என்ற ஞானத்தில் இருந்து உண்டாகக் கூடிய ஞானம் தான் அநுமிதி
வியாப்தி விஸிஷ்ட பக்ஷ தர்மதா ஞானம் பராமர்ச
பராமர்சம் வியாப்தியைப் பற்றியும் பக்ஷ தர்மதா என்பதைப் பற்றியும் ஏற்படக் கூடிய ஞானம்
இப்படி அபேஷா -ஆசை உருவாக- லக்ஷணம் சொல்லி ஒன்றை அறிய வேறே ஒன்றைச் சொல்லி
பலவற்றையும் அறிய ஆசை வர -விளக்கும்

அநுமானம் செய்யும் முறை
முதலில் அடுப்பு விளக்கு போன்ற இடங்களில் புகை யையும் நெருப்பையும் சேர்ந்தே பார்ப்பதனால்
எங்கு எங்கு புகை இருக்கிறதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும் என்று அறிந்து கொள் கிறோம்
அடுத்து ஒரு சமயம் மலையைப் பார்க்கிறோம் –
அந்த மலையின் மேல் ஒரு நெருப்பு உள்ளதோ இல்லையோ என்கிற சங்கை ஏற்படுகிறது
பிறகு மலையில் தொடர்ந்து புகை வருவதைக் கண்ணால் காண்கிறோம்
புகையைப் பார்த்த உடன் நாம் முன்னமே இருந்து வைத்த தகவல் நினைவுக்கு வருகிறது –
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும் என்று
முன் ஏற்பட்ட இரண்டு அறிவுகளையும் சேர்த்து நெருப்பு விட்டுப் பிரியாத புகையை உடையது
இந்த மலை என்ற அறிவு ஏற்படுகிறது
இது தான் பராமர்சம்
கடைசியாக -ஆகையால் -இந்த மலையில் கண்டிப்பாக நெருப்பு இருக்கிறது என்று அறிகிறோம்
இதுவே அநுமிதி ஆகும்

வியாப்தி
வியாபித்தல் -பரந்து இருத்தல் –
கடவுள் உலகு அனைத்தும் வியாபித்து இருக்கிறார் -அனைத்து இடங்களிலும் இருக்கிறார் என்றபடி –
சாஹசர்ய நியமம் வியாப்தி -என்று சொல்கிறார்கள் -அதாவது -தவறாமல் சேர்த்து இருத்தல்
நியத சாஹசர்யம் வியாப்தி

புகை எப்பொழுதுமே நெருப்பை விட்டு இருக்காது -அதாவது நெருப்பு இல்லாத இடத்தில் புகை ஒரு நாளும் இருக்காது –
புகை இருக்கும் இடங்களில் எல்லாம் நெருப்பு கண்டிப்பாக இருக்கும்
ஆகையால் நெருப்பின் வியாப்தி புகையில் உள்ளது என்று கூறுகிறோம்
நெருப்பு இருக்கும் இடங்களோ -புகை இருக்கும் இடங்களும் காய்ச்சின இரும்பு போன்ற சில இடங்களிலும் அன்றோ
எந்தப் பொருள் மற்ற ஒரு பொருளை விட்டு இருக்காதோ அந்தப் பொருள் தான் வியாப்தி என்ற தன்மையைக் கொண்டது –
அதற்கு வியாப்யம் என்று பெயர்
அந்த மற்ற ஒரு பொருளுக்கு வியாபகம் என்று பெயர்
புகை நெருப்பை விட்டு இருக்காது -ஆகையால் புகைக்கு வியாப்தி உள்ளது -புகைக்கு வியாப்யம் என்று பெயர்
நெருப்புக்கு வியாபகம் என்று பெயர்
நாம் உபயோகிக்கும் ஹேது புகை
ஸாத்யத்தை -நெருப்பை -விட்டுப் பிரியாததாகத் தான் இருக்க வேண்டும்
இல்லை என்றால் அனுமானம் செய்ய இயலாது –

பக்ஷ தர்மதா
அநுமிதி infer பண்ண -பக்ஷம் -சாத்தியம் -ஹேது -இவை மூன்றும் தேவை –
மலையில் புகை இருக்கிற படியால் நெருப்பு இருக்கிறது என்று அநுமானம் செய்கிறோம்
இதில் எந்தப் பொருளைப் பற்றி அனுமானம் செய்கிறோமோ அதற்குப் பக்ஷம் என்று பெயர்
இவ்விடத்தில் மலை தான் பக்ஷம்
அதில் தான் நெருப்பு உள்ளது என்று அநுமானம் செய்கிறோம்
அடுத்து அந்த பக்ஷத்தில் -எந்த ஒரு பொருள் -தன்மை இருப்பதாக அநுமானம் செய்கிறோமோ அதற்கு
ஸாத்யம் -சாதிக்கப் பட வேண்டியது என்று பெயர்
கீழ் உள்ள எடுத்துக் காட்டில் நெருப்பு தான் ஸாத்யம்
அதைத் தான் மலை என்னும் பக்ஷத்தில் இருப்பதாக அனுமானிக்கிறோம்
எந்தக் காரணத்தைக் கொண்டு நெருப்பு இருப்பதாக அனுமானம் செய்கிறோமோ
அந்தப் பொருளுக்கோ தன்மைக்கோ ஹேது -லிங்கம் -ஸாதநம்-என்று பெயர் –
ஆகவே ஏதோ ஒரு ஹேதுவைக் கொண்டு ஏதோ ஒரு பக்ஷத்தில் ஏதோ ஒரு சாத்யம் உள்ளது
என்று அறிவது தான் அனுமானம்
பக்ஷ தர்மதா என்றால்
பக்ஷத்தில் இருத்தல்
ஹேது என்று நாம் எதைச் சொல்கிறோமோ அது பக்ஷத்தில் இருக்க வேண்டும்
இல்லை என்னில் அதைக் கொண்டு ஸாத்யத்தை அறிய முடியாது
பக்ஷ தர்மதா என்றால் -பக்ஷத்தில் இருக்கும் தன்மை உடைய பொருளாக இருத்தல்

பராமர்சம்
பராமர்சம் என்றால் வியாப்தியையும் பக்ஷ தர்மதா என்ற தன்மையையும் பற்றிய அறிவு
நாம் அனுமானம் செய்யும் பொழுது ஒரு ஹேதுவைக் கொண்டு ஒரு ஸாத்யம் ஒரு பக்ஷத்தில் இருக்கிறது என்று அறிகிறோம்
இது சரியாக நடக்க அந்த ஹேதுவுக்கு இரண்டு தன்மைகள் அவசியமாகும்
அந்த ஹேது அந்த சாத்யத்தில் இருந்து பிரியாததாக -வியாப்யமாக – இருக்க வேண்டும் -அதாவது
அந்த ஸாத்யத்தினுடைய வியாப்தி அந்த ஹேதுவில் இருக்க வேண்டும்
இல்லை என்னில் இந்த ஹேது இருக்கிற படியால் இந்த சாத்தியமும் கண்டிப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாதே
அந்த ஹேது நமது பக்ஷத்தில் இருக்க வேண்டும்
இல்லை எனில் அதைக் கொண்டு எப்படி பக்ஷத்தில் சாத்தியம் உள்ளது என்று அறிய முடியும்
ஆகவே ஹேதுவுக்கு இருக்க வேண்டிய இரண்டு தன்மைகள் தான் வியாப்தியும் பக்ஷ தர்மதாவும்
இவ்விரண்டையும் உடையதாக ஹேதுவை அறியும் அறிவை தான் பராமர்சம் ஆகும்
நெருப்பை விட்டுப் பிரியாத புகையை உடையது இந்த மலை என்பது தான் பாரமர்சம் என்ற ஞானத்தின் வடிவம்
பொதுவாகச் சொன்னால்
இந்த சாத்யத்துக்கு வியாப்யமான இந்த ஹேதுவை உடையது இந்த பக்ஷம் என்பது தான் அதன் வடிவம்
இந்த அறிவு ஏற்பட்டு விட்டால் அடுத்து இந்த மலையில் நெருப்பு உள்ளது என்ற அநுமிதி ஏற்பட்டு விடும்
பராமர்சம் தான் அனுமானத்துக்கு கரணம் கருவி-

அனுமானம் இரண்டு வகைப்படும்
ஸ்வார்த்த அனுமானம் -பரார்த்த அனுமானம்

ஸ்வார்த்த அனுமானம்
ஒருவன் தன்னுடைய பயனுக்காகச் செய்யும் அனுமானம் ஸ்வார்த்த அனுமானம்-இதன் படிகள்
தானே அடுப்படி போன்ற இடங்களில் நெருப்புக்கும் புகைக்கும் உள்ள வியாப்தியை கிரஹித்து
பின்பு வேறு ஒரு நாள் பிரயாணிக்கும் பொழுது மலையைக் கண்டு
மலையில் நெருப்பு உள்ளதா இல்லையா என்ற சங்கை கொண்டு
மலையில் புகை இருப்பதைக் கண்டு
உடனே எங்கு எங்கு புகை இருக்கிறதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும் என்கிற வியாப்தியை நினைவு படுத்திக் கொண்டு
கண்ணால் கண்டதையும் நினைவுக்கு வந்ததையும் சேர்த்து
நெருப்புக்கு வியாப்யமான புகையை உடையது இந்த மலை என்ற பராமர்சத்தை அடைந்து
அதில் இருந்து இந்த மலையில் நெருப்பு இருக்கிறது என்ற அநுமிதியை அடைந்தால்
அது ஸ்வார்த்த அனுமானம் ஆகும்

பரார்த்த அனுமானம்
மற்றவரின் பயனுக்காச் செய்யும் அனுமானம்
ஒருவன் முன் சொன்ன வகையில் தான் நெருப்பை அனுமானம் செய்து விட்டு அது மற்றவருக்குப் புரிவதற்காகச் செய்யும்
போதனையில் இருந்து மற்றவருக்கும் மலையில் நெருப்பு உள்ளது என்ற அறிவு வருகிறதோ
அதுவே பரார்த்த அனுமானம்
ஆத்மாவின் நித்யத்வம் அர்ஜுனனுக்கு சொல்ல பல சொல்லி புரிய வைத்தது போல்-

நியாயமும் அதன் ஐந்து அங்கங்களும்
பரார்த்த அனுமானத்துக்காக ஒருவன் மற்ற ஒருவனுக்குச் செய்யும் போதனைக்கு நியாயம் -என்று பெயர்
நியாயம் என்பதில்
ஐந்து அவயவங்கள் கண்டிப்பாக இருக்க வேணும் என்பர்

1-ப்ரதிஜ்ஜை-வாக்யம்-அந்த மலையில் நெருப்பு உள்ளது -thesis-
2-ஹேது-வாக்யம்-புகை இருக்கிற படியால் -reason-
3-உதாஹரணம்-வாக்யம்-எங்கு எங்கு புகை இருக்கிறதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும் -அடிப்படியைப் போல் -ex amble
4-உபநயம்-வாக்யம்-அப்படி நெருப்பை விட்டுப் பிரியாத-நெருப்புக்கு வியாப்யமான புகையை உடையது தான் இந்த மலை -co relation
5-நிகமனம்-வாக்யம்-ஆகையால் நெருப்பை உடையது இந்த மலை -conclusion

இப்படி ஐந்து சொல் தொடர்களைப் பயன்படுத்தித் தான் மற்றவருக்கு மலையில் நெருப்பு இருப்பதைப் போதிக்க வேண்டும்

ஸ்வார்த்த அனுமானத்திலும் பரார்த்த அனுமானத்திலும் அநுமிதி என்ற ஞானம் ஏற்படுவதற்கு
கரணமாக-அசாதாரண காரணமாக -இருப்பது பராமர்சம் தான்
அநுமிதிக்கு கரணம் எதுவோ அது தான் அனுமானம் என்றும் பார்த்தோம்
ஆகையால் அனுமானம் என்னும் சொல் பராமர்சத்தைத் தான் குறிக்கிறது –
வியாப்தி ஞானத்துக்கே அனுமானம் என்பர் சிலர்-

————

பாடம் -28-அனுமானத்தின் வகைகளும் தோஷங்களும்

தத்வ சிந்தாமணி மங்கள ஸ்லோகம் –

அனுமானம் என்பது ஒரு ஹேதுவைக் கொண்டு ஒரு பக்ஷத்தில் ஒரு சாத்தியம் இருப்பதை அறிவது
ஹேது என்பதற்கு இரண்டு தன்மைகள் தேவை
1-வியாப்தியும்
2-பக்ஷதர்மதா வும்

வியாப்தியில் இரண்டு வகை உண்டு
1-அந்வய வியாப்தி
2-வியதிரேக வியாப்தி

அந்வய வியாப்தி
எங்கு எங்கு ஹேது உள்ளதோ அங்கு அங்கு சாத்தியம் உள்ளது என்று இரண்டு பொருள்களின்
இருப்புகளுக்கு இடையில் உள்ள வியாப்தி அந்வய வியாப்தி என்று சொல்லப்படும்

வியதிரேக வியாப்தி
எங்கு எங்கு சாத்தியம் இல்லையோ அங்கு அங்கு ஹேது இருக்காது என்று இரண்டு பொருள்களின்
அபாவங்களுக்கு இடையிலே உள்ள வியாப்தி வியதிரேக வியாப்தி ஆகும்

வியாப்தியின் தன்மையைக் கொண்டு ஹேதுக்கள் மூன்றாகப் பிரிக்கப்படும்
1-அந்வய வியதிரேகி –அந்வய வியாப்தி -வியதிரேக வியாப்தி இரண்டையும் உடையது
2-கேவல அந்வயி -அந்வய வியாப்தி மட்டுமே உடையது
3-கேவல வியதிரேகி -வியதிரேக வியாப்தி மட்டுமே உடையது –

அந்வய வியதிரேகி
அந்வயத்திலும் வியதிரேகத்திலும் வியாப்தியை ஹேது அந்வய வியதிரேகி என்று அழைக்கப் படுகிறது
நெருப்பு சாத்யமாக இருக்கும் பொழுது புகை போல் -புகைக்கும் நெருப்புக்கும் இடையில்
இரண்டு வகையான வியாப்தியும் உண்டே
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு உள்ளது -அடுப்பு விளக்கு போல் -என்று
வியாப்தியைச் சொல்லலாம் -எனவே அந்வய வியாப்தி உண்டு
எங்கு எங்கு நெருப்பு இல்லையோ அங்கு அங்கு புகை இல்லை -கடலில் போல் என்று எதிர்மறையிலும் கூறலாம் –
ஆகவே வியதிரேக வியாப்தியும் உண்டு
இப்படி இரண்டு வகையான வியாப்தியும் உடைய ஹேதுவுக்கு அந்வய வியதிரேகி -என்று பெயர் –

கேவல அந்வயி
அந்வய வியாப்தியை மட்டும் உடைய ஹேது கேவல அந்வயி -என்று அழைக்கப் படுகிறது –
த்ரவ்யத்வம் என்ற சாமான்யத்தை ஹேதுவாகக் கொண்டு
குடம் என்ற பக்ஷத்திலே பெயராலே குறிக்கப் படுதல் என்ற தன்மை உள்ளது என்று சாதிக்கும் பொழுது
எங்கு எங்கு த்ரவ்யம் உள்ளதோ அங்கு அங்கு பெயராலே குறிக்கப் படுதல் உள்ளது –
துணியைப் போலே கண்ணாடியைப் போலே என்று வியாப்தியை அறிய இயலும்
ஆகையால் பெயராலே குறிக்கப் படுதல் என்ற தன்மைக்கும் த்ரவ்யத்வம் என்ற சாமான்யத்துக்கும் இடையில்
அந்வய வியாப்தி உண்டு
எங்கு எங்கு பெயராலே குறிக்கப்படுதல் இல்லையோ அங்கு அங்கு த்ரவ்யத்வம் இல்லை –போலே
எதிர்மறையில் வியாப்தியை அறியவே முடியாது
உலகில் இருக்கும் பொருள்கள் அனைத்துமே பெயராலே குறிக்கப்படுவது தான்
ஆகையால் பெயராலே குறிக்கப்படுதல் இல்லா இடம் ஒன்றே உலகில் அறியப்படாதது -ஆகையால்
வியதிரேக வியாப்தியை கிரஹிக்க வழியே இல்லை
இப்படி அந்வய வியாப்தியை மட்டும் உடைய ஹேதுவுக்கு கேவல அந்வயி என்று பெயர்
உலகில் இருக்கும் அனைத்துப் பொருள்களிலும் இருக்கும் ஒரு தன்மையை சாத்யமாகக் கொண்டால் மட்டும் தான்
ஒரு ஹேது கேவல அந்வயி ஆகும்
இதே த்ரவ்யத்வம் என்ற ஹேதுவைக் கொண்டு வேறு ஒரு சாத்யத்தை சாதிக்க முயற்சித்தால் அப்பொழுது
இதே ஹேது அந்வய வியதிரேகியாக இருக்கலாம் –

கேவல வியதி ரேகி
வியதி ரேக வியாப்தியை மட்டும் உடைய ஹேது -கேவல வியதி ரேகி -என்று அழைக்கப் படுகிறது
கந்தம் -மணம் -என்ற ஹேதுவைக் கொண்டு பிருத்வீ என்ற பக்ஷத்தில் -மற்ற எட்டு த்ரவ்யங்களில் நின்றும் வேறுபாடு –
என்ற சாத்தியத்தை அனுமானம் செய்யும் பொழுது
எங்கு எங்கு மற்ற எட்டு த்ரவ்யங்களில் காட்டிலும் வேறுபாடு என்ற சாத்தியம் இல்லையோ
அங்கு அங்கு மணம் இருக்காது என்று சொல்லலாம்
ஜலம் முதலான எட்டு த்ரவ்யங்களில் காட்டிலும் வேறுபாடு இல்லாத இடம் ஜலம் முதலான எட்டு த்ரவ்யங்கள் தான்
அவற்றிலே எதற்கும் மணம் கிடையாதே
ஆகையால் வியதி ரேக வியாப்தி உண்டு
எங்கு எங்கு மணம் இருக்கிறதோ அங்கு அங்கு ஜலம் முதலான எட்டு த்ரவ்யங்களில் காட்டில் வேறுபாடு இருக்கும்
என்ற அந்வய வியாப்தியை நம்மால் அறியவே முடியாது
ஏன் எனில் ப்ருத்வீ முழுவதுமே பக்ஷமாகி விட்டது -அதைத் தவிர்ந்த எந்த இடத்திலும் மணம் என்ற ஹேது இருக்காது –
ஆகையால் ஹேதுவுக்கும் வியாப்தியை அறிய இடமே இல்லை
இப்படி வியதி ரேக வியாப்தியை மட்டும் உடைய ஹேதுவுக்கு கேவல வியதி ரேகி என்று பெயர்
ஒரு ஹேது இருக்கும் அனைத்து இடங்களையுமே ஆக்கினால் மட்டும் தான் அந்த ஹேது கேவல வியதி ரேகி ஆகும்
இதே மணம் என்ற ஹேதுவைக் கொண்டு ஒரு குடம் என்ற பக்ஷம் ஜலம் முதலிய எட்டு த்ரவ்யங்களில் காட்டில்
வேறுபட்டது என்ற அனுமானம் செய்யப் பார்த்தால் மற்ற பிருத்வீ பொருள்களில் அந்வய வியாப்தியை கிரஹிக்க முடியும்
ஆகையால் இதே ஹேது அந்வய வியதி ரேகி ஆகும்

பக்ஷம் -ச பக்ஷம் -வி பக்ஷம்
பக்ஷம் -எந்த ஒரு பொருளில் சாத்யம் உள்ளதா இல்லையா என்று சந்தேகிக்கப் படுகிறதோ அது பக்ஷம் ஆகும்
ச பக்ஷம் -எந்த ஒரு இடத்தில் சாத்தியம் உள்ளது என்று நிச்சயிக்கப் பட்டுள்ளதோ அது ச பக்ஷம்
வி பக்ஷம் -எந்த ஒரு இடத்தில் சாத்தியம் இல்லை என்று நிச்சயிக்கப் பட்டுள்ளதோ அது வி பக்ஷம்

எடுத்துக் காட்டு
குடம் மணத்தை உடையது -பிருத்வீ யானபடியால் -என்ற அனுமானத்தை எடுத்துக் கொள்வோம்
சாத்யம் -மணம்
ஹேது -பிருத்வீயாய் இருத்தல் -பிருத்வீத்வம் என்ற சாமான்யம் -நிலத் தன்மை
இந்த அனு மானத்துக்கு முன் குடத்தில் மணம் உள்ளதா இல்லையா என்ற சந்தேகம் உள்ளது –
ஆக இப்படிப்பட்ட சந்தேகத்துக்கு விஷயமான குடம் தான் பக்ஷம் ஆகும்

மணம் என்ற சாத்யம் துணி மரம் போன்றவற்றில் உள்ளது என்ற நிச்சயம் நமக்கு உள்ளது
குடத்தில் மட்டும் தான் சந்தேகிக்கப் படுகிறது
ஆகையால் துணி மரம் ஆகியவை ச பக்ஷங்கள்

மணம் என்ற ஸாத்யம் ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் போன்ற மற்றத் த்ரவ்யங்களில் இல்லை
என்ற நிச்சயம் நமக்கு உள்ளது -ஆகவே அவை வி பக்ஷங்கள்

ஹேத்வ ஆபாசங்கள்
சரியான ஹேதுக்களின் வகைகளையும் தன்மைகளையும் பார்த்தோம்
இனி தவறான பயன் இல்லாத ஹேதுக்களைப் பார்ப்போம்
அவற்றைக் கொண்டு நாம் விரும்பும் சாத்யத்தை நாம் தேர்ந்து எடுத்த பக்ஷத்தில் சாதிக்க முடியாது
இரண்டு கருத்தாளர்களுக்கு இடையில் வாதம் நடக்கும் போது நமது தத்வத்தை நிலைநாட்ட ஹேதுக்களைச் சொன்னால் மட்டும் போதாது
எதிர் கருத்திலும் அதை நிலை நாட்ட உபயோகப்படுத்தப்படும் ஹேதுக்களையும் தவறானவை என்றும் காண்பிக்க வேண்டும்
ஆகையால் நியாய சாஸ்திரம் பயில்வார்களுக்கு தவறான ஹேதுக்களையும் கண்டு அறியும் திறமையும் தேவை
இந்த தவறான ஹேதுக்களே ஹேது ஆபாசங்கள் என்று பெயர்
ஆபாசம் என்றால் தோற்றம்
இந்த ஹேதுக்கள் சரியான ஹேதுக்கள் போலே தோற்றம் அளித்தாலும் சரியானவை அல்ல –
ஆகவே ஹேது ஆபாசங்கள் -ஹேது போலே தோற்றம் அளிப்பவை -என்று அவற்றுக்குப் பெயர்
ஐந்து ஹேது ஆபாசங்கள் உள்ளன
1-ஸ வியபிசாரம் -straying reason
2-விருத்தம்
3-ஸத் ப்ரதிபக்ஷம்
4-அஸித்தம்
5-பாதிதம் -என்ற இந்த ஐந்தும்

ஸ வியபிசாரம்
வியபிசாரம் என்றால் வியாப்தி இல்லாமை
வியாப்தி என்பது ஒரு பொருள் இல்லாத இடத்தில் தானும் இல்லாமல் இருத்தல் என்று பார்த்தோம்
அப்படி ஒரு பொருளோடு மாறாத -தவறாத -தொடர்பைக் கொள்ளாமை தான் வியபிசாரம் ஆகும்
இதற்கு அனைகாந்திகம் -பல் முனைப்பட்டது -என்றும் பெயர்
அதாவது சாத்தியம் என்ற ஒரு பொருளோடு முனையோடே மட்டும் சம்பந்தப்படாமல் பல பொருள்களோடு முனைகளோடே இருத்தல்
இது மூன்று வகைப்படும்
1-A –சாதாரணம்
1-B –அசாதாரணம்
1-C –அநுப ஸம்ஹாரீ-non conclusive

1-A –சாதாரணம்
சரியான ஹேதுவானது சாத்யம் இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது -அது தான் வியாப்தி என்று பார்த்தோம்
எந்த ஒரு ஹேது சாத்யம் இல்லாத இடங்களிலும் இருக்குமோ அது சாதாரணம் ஆகும்
சாத்யத்தின் இருப்புக்கும் சாத்யத்தின் இல்லாமைக்கும் பொதுவான படியால் இது
சாதாரணம் -பொதுவானது -என்று அழைக்கப் படுகிறது
எடுத்துக்காட்டு மலை நெருப்பை உடையது -ஞானத்தால் அறியப் படுகிறபடியால் -என்று அனுமானம்
பக்ஷம் –மலை
சாத்யம் –நெருப்பு
ஹேது -ஞானத்தால் அறியப்படுதல்
இங்கு நாம் சொன்ன ஹேதுவானது நெருப்பு இருக்கும் இடங்களில் அடுப்பு விளக்கு போன்றவற்றிலும் இருக்கும்
நெருப்பு இல்லாத கடல் குளம் போன்றவற்றிலும் இருக்கும்
அடுப்பும் விளக்கும் எப்படி ஞானத்துக்கு விஷயம் ஆகின்றனவோ அதே போலே தானே கடலும் குளமும் ஆகின்றன –
ஆகையால் ஞானத்துக்கு விஷயமாய் இருத்தல் -ஞானத்தால் அறியப்படுதல் என்பது
சாத்யம் இருக்கும் இடங்களிலும் இருக்கும் -சாத்தியமான நெருப்பு இல்லாத இடங்களிலும் இருக்கும்
ஆகையால் இந்த ஹேது சாதாரணம் ஆகிறது –

1-B –அசாதாரணம்
சரியான ஹேதுவானது -ச பக்ஷங்களில் -சாத்யம் இருப்பதாக நிச்சயிக்கப் பட்ட இடங்களில்
சிலவற்றிலாவது இருக்க வேண்டும்
வி பக்ஷங்களில் -சாத்யம் இல்லாததாக நிச்சயிக்கப் பட்ட இடங்களில் -இருக்கக் கூடாது
அப்பொழுது தான் வியாப்தியை அறிய முடியும்
எந்த ஒரு ஹேது ச பக்ஷத்திலும் இல்லாமல் எந்த வி பக்ஷத்திலும் இல்லாமல்
பக்ஷத்தில் மட்டும் உள்ளதோ அதற்கு அசாதாரணம் என்று பெயர் –
அசாதாரணம் என்றால் தனித்தன்மை
இந்த ஹேது பக்ஷத்துக்கு மட்டும் தனித்தன்மையாக இருக்கிறபடியால் அசாதாரணம் என்று அழைக்கப் படுகிறது
எடுத்துக்காட்டு
சப்தம் நித்யமானது சப்தத்வம் என்ற சாமான்யத்தை உடைய படியால் -என்ற அனுமானம்
பக்ஷம் -சப்தம்
சாத்யம் -நித்யத்வம் -அழியாமை
ஹேது -சப்தத்வம் என்ற சாமான்யம்
இங்கு நாம் சொன்ன சப்தத்வம் என்ற ஹேதுவானது சப்தம் என்ற பக்ஷத்தில் மட்டுமே இருக்கும் ஒரு சாமான்யம் ஆகும் –
ஆகையால் அழியாமை நிச்சயிக்கப்பட்ட ஆகாசம் காலம் முதலான ச பக்ஷங்களிலும் சப்தத்வம் இல்லை
அழியாமையின் அபாவம் நிச்சயிக்கப்பட்ட குடம் புத்தகம் போன்ற வி பஷங்களிலும் இல்லை
ஆகையால் வியாப்தி அறியவே வழி இல்லாமல் போகிறது –

1-C –அநுப ஸம்ஹாரீ
ஒரு ஹேதுவுக்கு சாத்யத்தோடே உள்ள வியாப்தியை கிரஹிக்க வேண்டுமானால் அது சாத்யத்தோடு சேர்ந்து
சில இடங்களில் பார்க்க வேண்டும்
சாத்யம் இல்லாத இடங்களில் பார்க்காமல் இருக்கவும் வேண்டும்
ஆகவே அந்வய த்ருஷ்டாந்தம் -ஹேதுவும் சாத்யமும் சேர்ந்து இருக்கும் இடங்கள் –
வியதி ரேக த்ருஷ்டாந்தம் -ஹேது சாத்யம் இரண்டுமே சேர்ந்து இல்லாத இடங்கள் -என்ற
இரண்டு த்ருஷ்டாந்தங்களும் ஒரு ஹேதுவுக்குத் தேவை
அப்படிப்பட்ட அந்வய த்ருஷ்டாந்தமும் வியதி ரேக த்ருஷ்டாந்தமும் அற்றது தான் அநுப ஸம்ஹாரீ என்று சொல்லப் படுகிறது
எடுத்துக்காட்டு
உலகில் இருக்கும் அனைத்துமே அழியக் கூடியது -ஞானத்துக்கு விஷயமான படியால் -என்ற அனுமானத்தை எடுத்துக் கொள்வோம்
பக்ஷம் -உலகில் இருக்கும் அனைத்தும்
சாத்யம் -அழிவு
ஹேது –ஞானத்துக்கு விஷயம் ஆகுதல் -அறியப்படுதல்
உலகில் இருக்கும் அனைத்துமே பக்ஷமான படியால் அதைத் தவிர்ந்த ஒன்றை அந்வய த்ருஷ்டாந்தம் என்றோ
வியதி ரேக த்ருஷ்டாந்தம் என்றோ காட்டவே இயலாது
ஆகவே வியாப்தியை நம்மால் கிரஹிக்க முடியாது –

2-விருத்தம் -adverse reason
விருத்தம் என்றால் எதிர்மறையானது என்று பொருள் -அதாவது கொடுக்கப்பட்ட காரியத்துக்கு எதிர்மறையான
ஒரு காரியத்தைச் செய்யும் பொருளை விருத்தம் என்று சொல்கிறோம்
எந்த ஒரு ஹேது சாத்யத்தை சாதிப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளதோ அதே ஹேது சாத்யத்தின் அபாவத்தை
சாதித்து விட்டால் அந்த ஹேது விருத்தம் என்று சொல்லப்படுகிறது
எடுத்துக் காட்டு
சப்தம் அழியாதது உண்டாகிற படியால் -என்ற அனுமானத்தை எடுத்துக் கொள்வோம்
பக்ஷம் -சப்தம்
சாத்யம் -அழியாமை
ஹேது -உண்டாகுதல் உத்பத்தி
இங்கு உண்டாகுதல் என்கிற ஹேது அழியாமை என்கிற சாத்யத்தை சாதிக்கப் பிரயோகிக்கப் பட்டுள்ளது
ஆனால் உண்மையில் உலகில் உண்டாகும் பொருள்கள் எல்லாமே அழியக் கூடியவை தான்
ஆகையால் இந்த ஹேது அழியாமை என்ற நம் சாதனத்துக்கு வியாப்யமானதே அல்ல –
அதுக்கு நேர் மாறான அழிவு என்பதுக்கு வியாப்யமானது -அதைத் தான் நிலை நாட்டி விடும்
ஆகையால் இது விருத்தம் என்று சொல்லப் படுகிறது –

3- ஸத் ப்ரதிபக்ஷம் -opposable reason
பிரதி பக்ஷம் என்றால் எதிர் கட்சி
பக்ஷத்தில் சாத்யத்தின் இருப்பை நிலை நாட்ட பிரயோகிக்கப் பட்ட எந்த ஒரு ஹேதுவுக்கு எதிரான பக்ஷத்தில்
சாத்யத்தின் – அபாவத்தை -இல்லாமையை -நிலை நாட்டக் கூடிய மற்ற ஒரு ஹேது காண்பிக்கப் படுகிறதோ
அந்த ஹேது எதிர் கட்சியோடு கூடிய படியால் ஸத் பிரதிபக்ஷம் ஆகும்
எடுத்துக் காட்டு
சப்தம் அழியாதது -காதால் கேட்க்கிறபடியால் -சப்தத்வம் என்ற சாமான்யத்தைப் போலே என்று நாம் ஒரு அனுமானத்தைச் சொல்ல
அதற்கு எதிராக -சப்தம் அழியக் கூடியது -உண்டாகிற படியால் -குடத்தைப் போலே -என்று முரண் பட்ட ஹேதுவைச் சொல்ல முடியும்
இப்படி எதிர் ஹேது பிரயோகிக்கப் பட்டால் எது சரி என்று தெரியாமல் எந்த ஹேதுவிலும் குற்றங்களே தெரியாமல் போனால்
இரண்டு ஹேதுக்களில் இருந்தும் அநு மிதியே ஏற்படாது
ஆகையால் நாம் சொன்ன கேட்கப்படுதல் என்கிற ஹேது ஸப்ரதிபக்ஷம் ஆகிறது

4-அஸித்தம் -un established
அஸித்தி என்ற தோஷத்தை உடைய ஹேது அஸித்தம் என்று அழைக்கப் படுகிறது
அஸித்தி என்றால் இல்லாமை -அறியாமை –
இது மூன்று வகைப்படும்
4-A–ஆஸ்ரய அஸித்தம்
4-B ஸ்வரூப அஸித்தம்
4-C-வியாப்யத்வ அஸித்தம்

4-A–ஆஸ்ரய அஸித்தம் pasham un established
ஆஸ்ரயம் என்று அழைக்கப் படும் பஷமே அஸித்தமாக -அறியப் படாததாக இருக்கும் ஒரு ஹேது
எடுத்துக் காட்டு
ஆகாயத் தாமரை மணமானது தாமரை யானபடியால் -குளத்துத் தாமரை போலே என்ற அனுமானத்தின்
ஆகாயத் தாமரை என்ற ஒன்றே உலகில் இல்லாதது அறியாதது

4-B ஸ்வரூப அஸித்தம் hethu un established
நாம் சொல்லும் ஹேது நமது பக்ஷத்தில் இல்லாமை –
எடுத்துக் காட்டு
சப்தம் ஒரு குணம் கண்ணால் காணப் படுகிற படியால் என்ற அனுமானத்தின்
சப்தம் என்கிற பக்ஷத்தில் கண்ணால் காணப்படுதல் என்கிற ஹேதுவே கிடையாது -சப்தம் காதால் கேட்கிற படியால்

4-C-வியாப்யத்வ அஸித்தம்
நாம் சொன்ன ஹேதுவில் சாத்யத்தோடு வியாப்தி இல்லாமை
உபாதியோடு கூடிய ஹேது வியாப்யத்வ அஸித்தம் ஆகும்
இதை ஆழமாகப் பார்ப்போம்

உபாதி என்றால்
ஸாத்யத்துக்கு வியாபகமாகவும் ஹேதுவுக்கு அவ்யாபகமாகவும் இருக்கும் ஓன்று
எடுத்துக் காட்டு
மலை புகையை உடையது -நெருப்பு உடைய படியால் என்ற தவறான அனுமானத்தை எடுத்துக் கொள்வோம்
பக்ஷம் -மலை
ஸாத்யம் -புகை
ஹேது -நெருப்பு
இங்கு நெருப்பு என்ற ஹேதுவுக்கு உபாதி உள்ளது
அந்த உபாதி -ஈரமான எரி பொருளோடு தொடர்பு -ஆர்த்ர இந்த்ன ஸம்யோகம் –
உபாதியின் முதல் தேவை -ஸாத்யத்துக்கு வியாபகமாய் இருத்தல்
எங்கு எங்கு புகை என்ற சாத்தியம் உள்ளதோ அங்கு அங்கு ஈரமான பொருளோடு தொடர்பு உள்ளது -அடுப்பு போலே என்று கூறலாம்
ஆகையால் சாத்யத்துக்கு வியாபகம் தான் இந்த உபாதி
அடுத்து எங்கு எங்கு நெருப்பு உள்ளதோ அங்கு அங்கு ஈரமான எரி பொருளோடு தொடர்பு உள்ளது என்று சொல்ல இயலாது
நன்கு காய்ச்சப்பட்ட இரும்பில் ஈரமான எரி பொருளோடு தொடர்பு இல்லா விட்டாலும் நெருப்பு இருக்கிற படியால்
ஆகையால் ஹேதுவுக்கு அவ்யாபகம் தான் இந்த உபாதி
இப்படி இரண்டு தன்மைகளையும் கொண்ட ஒரு உபாதியை இந்த அனுமானத்தின் கண்டு பிடித்து விட்ட படியால்
இந்த ஹேது ஸோ பாதிகம் -உபாதியோடு கூடியது என்றும் வியாப்யத்வ அஸித்தம் என்றும் பெயர்

உபாதி என்று ஓன்று இருந்தால் ஹேது ஏன் தவறானது என்று பார்ப்போம்
சாத்யத்துக்கு வியாபகம் உபாதி -அதாவது சாத்யம் இருக்கும் இடத்தில் எல்லாம் உபாதி இருக்கும்
ஹேதுவுக்கு வியாபகம் அல்ல உபாதி -அதாவது உபாதி இல்லாத இடங்களிலும் ஹேது இருக்கும்
ஸாத்யத்துக்கு வியாபகமான உபாதியே இல்லாத இடம் என்பது கண்டிப்பாக சாத்தியம் இல்லாத இடமாகத் தான் இருக்கும்
ஆகையால் உபாதி இல்லாத இடத்திலும் ஹேது இருக்கும் என்பதைக் கொண்டு
சாத்யம் இல்லாத இடத்திலும் ஹேது இருக்கும் என்று தாராளமாக அறியலாம்
ஒரு மாணவனை அறிபவர் அனைவரும் அவனது குருவை அறிவார்கள் என்று வைத்துக் கொள்வோம்
வேறு சிலரும் குருவை அறிந்து இருக்கலாம் குரு மாணவனுக்கு வியாபகம் ஆகிறார்
ஒருவருக்கு குருவையே தெரியாது என்று சொன்னால் சிஷ்யனையும் தெரியாது என்று என்று தானாகவே கிடைக்கும்
ஆக சாத்யம் இல்லாத இடத்தில் ஒரு ஹேது இருந்தால் அந்த ஹேது சாத்யத்துக்கு வியாப்யமே அல்ல என்றதாகும்
ஆகையால் ஹேது வியாப்யத்வ அஸித்தம் ஆகிறது

5-பாதிதம் –
பாதம் என்றால் எதிர்மறை நிச்சயம்
ஆக எந்த ஒரு ஹேதுவுக்கு எதிரான விஷயம் வேறு ஒரு பிரமாணத்தால் நிச்சயிக்கப் பட்டுள்ளதோ
அந்த ஹேது பாதிதம் என்று சொல்லப் படுகிறது
எடுத்துக் காட்டு
நெருப்பு சுடாதது -த்ரவ்யமான படியால் -என்ற அனுமானம்
பக்ஷம் -நெருப்பு
சாத்யம் –சுடாமை
ஹேது -த்ரவ்யத்வம் என்கிற சாமான்யம்
இந்த அனுமானத்தைக் கொண்டு நாம் நெருப்பு சுடாது என்று சாதிக்கப் பார்க்கும் போது
ப்ரத்யக்ஷம் -புலன்கள் -என்கிற வேறே ஒரு பிரமாணத்தால் நெருப்பு சுடும் என்ற அறிவு ஏற்படுகிறது
நெருப்பைத் தொட்டதும் த்வக் இந்த்ரியத்தால் அதில் இருக்கும் சூட்டை உணர்கிற படியால்
ஆகவே நாம் இந்த ஹேதுவைக் கொண்டு எந்த சாத்யத்தை சாதிக்க நினைத்தோமோ அந்த சாத்யத்தை
இந்த பக்ஷத்தில் இல்லை என்று வேறே ஒரு பிரமாணத்தால் முடிவாகி விட்டது
ஆகையால் இனி நெருப்பு சுடாது என்கிற அநுமிதி ஏற்பட முடியாது
ஆகையால் இந்த ஹேது பாதிதம் என்று சொல்லப் படுகிறது –

வாயு ரூபவான் ஸ்நேஹம் உள்ள படியால்-என்னும் அனுமானத்தில் ஐந்து ஹேது ஆபாசங்களும் உண்டு

————————

பாடம் -29-உபமானமும் சப்தமும்

யதார்த்த அனுபவத்தில் மூன்றாவது வகை உபமிதி
அந்த உபமிதிக்குக் கரணமான -அசாதாரண காரணமாக இருப்பதற்கு -உபமானம் -என்று பெயர்
உபமிதி என்றால் ஸம்ஜ்ஞா ஸம்ஜ்ஞி சம்பந்த ஞானம் -வாசக வாத்ஸ்ய சம்பந்த ஞானம் –
ஸம்ஜ்ஞா -என்றால் பெயர்
ஸம்ஜ்ஞி-என்றால் பெயரை உடைய பொருள் -வஸ்து –
இரண்டுக்கும் உள்ள தொடர்பு -சம்பந்தம் -பற்றிய ஞானமே உப மிதி
இந்தச் சொல் இந்தப் பொருளைக் குறிக்கலாம் என்று பல-எட்டு – வழிகளாலே அறியலாம்
அவற்றை மேலே சப்த பிரமாணம் பார்க்கும் பொழுது பார்ப்போம்
அதில் ஒரு வகையான அறிவு உப மிதி
அதுக்குக் கரணம் உபமானம் -அது சாத்ருஸ்ய ஞானம் -அதாவது ஒற்றுமையைப் பற்றின அறிவு

நகரத்தில் உள்ள ஒருவன் மாடு -கோ -என்ற விலங்கைப் பார்த்து இருக்கிறான்
ஆனால் காட்டில் உள்ள கவ்யம் என்ற விலங்கைப் பார்த்தது இல்லை
காட்டில் இருந்து வந்த ஒருவர் அவன் இடத்தில் கோ என்ற மாட்டைப் போல் இருப்பது தான் கவ்யம்
என்று அழைக்கப் படுகிறது என்று கூறினார்
அவர் கூறிய சொல் தொடரில் இருந்து மாட்டைப் போல் இருப்பது கவ்யம் என்று அழைக்கப் படுகிறது
என்று அறிந்து கொண்டான் இவன்
வேறே ஒரு காலத்தில் இவனே காட்டுக்குப் போகும் பொழுது சில விலங்குகளை பார்த்தான் –
அவை மாட்டைப் போலவே இருந்தன -similar-
மாட்டுக்கும் இந்த விலங்குகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை சாத்ருசத்தை அவன் கண்ணால் கண்டான் –
இது தான் உபமானம்
உடனே அந்த மனிதர் சொன்னது நினைவுக்கு வந்தது-வாக்யார்த்த ஸ்மரணம் –
மாட்டைப் போலவே இருப்பது தான் கவ்யம் என்று அழைக்கப் படுகிறது -என்று அடுத்து
இந்த விலங்குகள் தான் கவ்யம் என்ற சொல்லால் அழைக்கப் படுகின்றன
என்ற ஞானம் ஏற்பட்டது
இதுவே உபமிதி
அதுக்கு கரணமாக இருப்பது உபமானம் என்று சொல்லப் படுவது அந்த விலங்கிற்கும் மாட்டுக்கும் உள்ள
ஒற்றுமையைப் பற்றின அறிவே ஆகும்
பிரத்யஷத்துக்கு இந்திரியங்கள் கரணம்
இந்த பிரத்யக்ஷ ஞானமே கரணமாக நினைவு வர உபமிதி –
சப்தத்துக்கும் வஸ்துவுக்கும் உள்ள சம்பந்தம் கிரஹிக்க ஒரு வழி உபமானம் –
பராமர்ச ஞானம் அநுமிதி முன்பே பார்த்தோம்

சப்த பிரமாணம் –
யதார்த்த அனுபவத்தின் நான்காவது வகை -சாப்த போதம் –
போதம் என்றால் அறிவு
சாப்தம் -சப்தத்தில் இருந்து உண்டானது -தாசாரதி -தசரதி திருக்குமாரர் போல் –
அதுக்கு கரணம் சப்தம் என்னும் பிரமாணம்
சப்தம் என்றால் சொல் என்பது பொதுவான வழக்கு -ஆனால் இங்கு அப்படி அல்ல
இங்கு சொல் தொடர் -வாக்கியம் என்று பொருள்
சப்தம் பற்றிய அறிவே -வாக்யார்த்த ஞானம் -சாப்த போதம் -verbal cognition –

யதார்த்த அனுபவத்தை ஏற்படுத்தக் கூடிய ஒலியை சப்தம் என்று முன்பு பார்த்தோம் –
ஒரு சொல்லுக்கு அர்த்தத்தைப் பற்றிய ஸ்ம்ருதியை ஏற்படுத்தும் வலிமை உண்டே தவிற
ஒரு அனுபவத்தை ஏற்படுத்தும் வலிமை கிடையாது
அனுபவம் என்றால் அறியாத விஷயத்தைப் பற்றின அறிவு –
ஒரு சொல் எந்த புதிதான அறிவையும் ஏற்படுத்த முடியாது
முன்னமே இன்ன சொல்லுக்கு இன்ன பொருள் என்று அறிந்து வைத்தாய் நினைவு தான் படுத்தும்
ஒரு சொல் தொடர் தான் நமக்குத் தெரியாத விஷயத்தை நமக்கு அறிவிக்க முடியும்
எனவே சப்தம் இங்கு சொல் தொடர் வாக்கியம் என்றே பொருள்

ஆகையால் சப்த பிரமாணத்தை லக்ஷணம் என்ன என்றால் –
ஆப்த வாக்கியம் சப்த -ஆப்தனாலே சொல்லப்பட்ட சொல் தொடர் தான் சப்த பிரமாணம் ஆகும்
ஆப்தன் -நம்பத் தக்கவர் -நலன் விரும்பி -ஒன்றை உள்ளபடி அறிந்தது நமக்கு அப்படியே சொல்ல வல்லவர்
அறியாதவர் நமக்கு நன்மையை செய்ய முடியாது -அறிந்து இருந்தாலும் வஞ்சனை உள்ளம் கொண்டவர் நன்மை செய்ய மாட்டார்

வாக்கியம் என்றால் பத ஸமூஹம் -இதுவே சொல் தொடர்
பதம் என்றால் என்ன -சக்தம் பதம் -சத்தியை உடைய ஓன்று சக்தம்
ஒரு பொருளைப் போதிக்கும் சக்தியை -திறமையை – உடைய சொல்லுக்கு பதம் என்று பெயர்
சக்தி என்றால் என்ன –
ஏழு பதார்த்தங்களைப் பார்க்கும் பொழுது சக்தி என்ற ஒன்றைப் பார்க்க வில்லையே -எதனால் என்ற கேள்வி எழும்
உலகில் இந்த சொல்லுக்கு இந்த பொருள் இருக்கட்டும் என்று விளையாட்டாகவோ கேலியாகவோ செய்வது ஸங்கேதம்
பாணினியும் அ ஏ ஓ எழுத்துக்களுக்கு குணம் என்றும்
ஆ ஐ ஒவ் எழுத்துக்களுக்கு வ்ருத்தம் என்றும் வியாகரண ஸூத்ரங்களைச் சொல்லும் பொழுது சொன்னதும் ஸங்கேதம் தான்
இதே போல் அனைத்து சொற்களைப் பற்றியும் பகவான் முடிவு செய்கிறார் -குடம் என்ற சொல் குடத்தைக் குறிக்கட்டும் –
நதி என்ற சொல் நதியைக் குறிக்கட்டும்
இவை தான் ஈசுவரனுடைய ஸங்கேதம் -இது தான் சக்தி என்று அழைக்கப்படுகிறது
ஸங்கேதம் என்றால் அதை செய்பவர்களின் இச்சை ஆசை தான் -ஆகவே ஈஸ்வரனின் இச்சையே சக்தி
நாம் செய்யும் ஸங்கேதங்கள் அநித்யங்கள்
ஈசுவரனுடைய ஆசை ஸங்கேதம் என்னும் சக்தி நித்யம்
ஸ்ருஷ்டி பிரளயங்கள் மாறி மாறி வந்தாலும் இது மாறாது -இது தான் வேறுபாடு
உத்பன்னன் -உத்பத்தி அறிந்தவன் –

சக்தியை அறியும் வழிகள்
1–வியாகரணம்
சமஸ்கரதத்தில் பூ சைத்தாயாம் இருத்தல் / லட் என்று நிகழ் காலம்
2-உபமானம்
முன்பே பார்த்தால் போல் கவயம் என்ற சொல் எந்த பிராணியைக் குறிக்கும் என்று உபமானத்தாலே அறிகிறோம்
3-கோசம்
அமரர்கள் நிர்ஜரர்கள் தேவர்கள் த்ரிசதர்கள் விபுதர்கள் ஸூரர்கள் -பர்யாய சொற்களை
சொல் களஞ்சியம் கோசம் மூலம் அறிகிறோம்
4-ஆப்த வாக்யம்
ஆப்தர் தேஜஸ் என்றால் நெருப்பு என்று சொல்ல அறிகிறோம்
5-வியவஹாரம்
ஒரு பெரியவர் ஏவ மற்ற ஒரு பெரியவர் வேலை செய்ய இதைப் பார்க்கும் சிறுவன் எடுத்தல் கழித்தல் என்ற
முறையால் எந்தச் சொல்லுக்கு எந்த அர்த்தம் என்று அறிகிறான்
6-வாக்ய சேஷம்
வேதத்தில் ஒரு சொல்லின் பொருளில் சந்தேகம் இருக்கும் பொழுது பின் வரும் பகுதிகளில் -வாக்ய சேஷத்தில்
சொல்லப்பட்ட அந்த தன்மைகளைக் கொண்டு முடிவு செய்தல்
7-விவரணம்
சமைக்கிறான் என்று சமையல் செய்வதை விவரித்தல் -ஒவ் ஒரு பகுதியின் பொருளையும் அறிவது
பஸதி -சமைக்கிறான் -பாகம் கரோதி -சமையல் செய்கிறான் -விவரணம் –
8-பிரசித்தமான சொற்களோடு சேர்க்கை -சித்த பத ஸாந்நித்யம் –
ஒரு சொல் தொடரில் ஒரு சொல்லைத் தவிற மற்றவற்றில் பொருள்களை அறிந்தால்
வசந்த காலத்தில் மரத்தில் அமர்ந்து பிகம் அழகாகப் பாடும் என்றால் பிகம் குயிலைக் குறிக்கிறது
என்று அறிவது போலே
பிகம் குயில் என்று நேராக சொல்லிக் கொடுத்தால் அது ஆப்த வாக்கியம் ஆகும்

சக்தி இரண்டு வகைப்படும்
1-அவயவ சக்தி
2-சமுதாய சக்தி

அவயவ சக்தி -அவயவம் என்றால் பகுதி-சக்தி என்றால் போதிக்கும் திறமை –
ஒரு சொல்லை பகுதிகளாகப் பிரித்து ஒவ் ஒரு பகுதியின் அர்த்தத்தைக் கொண்டு முழு சொல் தொடரின்
பொருளை அறிய முடியும் என்றால் அந்தபி பொருளைப் போதிக்கும் திறமைக்கு அவயவ சக்தி என்று பெயர்
நாற்காலி -நான்கு பகுதியால் எண்ணையும் கால் என்ற பகுதியால் தாங்கும் உறுப்பையும் அறிவது போல்
இதற்கு யோக சக்தி என்ற மற்ற ஒரு பெயரும் உண்டு

சமுதாய சக்தி
சமுதாயம் -கூட்டம் -சொல் என்பதே எழுத்துக்களின் கூட்டம் வரிசை தானே
ஒரு சொல்லை பகுதிகளாகப் பிரிக்க முடியாமல் இந்த எழுத்துக்களின் வரிசைக்கு இது பொருள் என்று
உலகில் வழக்கத்தில் இருந்தால் அந்த சொல்லினுடைய அந்தப் பொருளைப் போதிக்கும் திறமைக்கு
சமுதாயசக்தி என்று பெயர்
குடம் குளம் நீர் புத்தகம் -இந்த சொற்களைப் பிரித்து பகுதியின் பொருளை அறிய முடியாது
இந்த சொல்லுக்கு இது பொருள் என்று தான் அறிந்து கொள்ள வேண்டும்
இதற்கு ரூடி சக்தி என்ற மற்ற ஒரு பெயரும் உண்டு

பதங்களின் வகைகள்
தங்களுக்கு இருக்கும் சக்தியைக் கொண்டு நான்கு வகை
1– யவ் கிகம்
அவயவ சக்தியால் மட்டும் ஒரு பொருளைக் குறிப்பது
நாற்காலி -காலணி -தலையணை போலே
2-ரூடம்
சமுதாய சக்தியால் மட்டும் ஒரு பொருளைக் குறிப்பது
புத்தகம் -ஆடு -மாடு -போலே
3- யோக ரூடம்
அவயவ சக்தியாலும் ரூடி சக்தியாலும் ஒரு பொருளைக் குறிப்பது
பங்கஜம் -பங்கம் – சேறு / ஜம் – தோன்றியது –அவயவ சக்தியால் சேற்றிலே தோன்றின பொருளைக் குறிக்கும்
தாமரை குமுதம் கிருமிகள் -பலவற்றையும் குறித்தாலும் பங்கஜம் தாமரையை குறிக்கப் பயன்படும்
ஆகையால் இந்த சொல்லுக்கு தாமரை என்ற பொருளில் சமுதாய சக்தி ரூடி சக்தியும் உண்டு
இரண்டு சக்திகளாலும் ஒரே பொருள் போதிக்கப் படுகிறது
4- யவ்கிக ரூடம்
அவயவ சக்தியால் ஒரு பொருளையும் சமுதாய சக்தியால் வேறே ஒரு பொருளையும் போதிப்பது
உத்பித் என்ற சமஸ்க்ருத சொல்
உத் மேலே / பித் -பிளந்து கொண்டு வருவது
எனவே அவயவ சக்தியால் மரங்களையும் செடிகளையும் குறிக்கும்
வேதத்தில் இதே சொல் யாகத்தைக் குறிக்கும் –
ஆகையால் அந்த யாகம் என்னும் பொருள் சமுதாய சக்தியால் போதிக்கப் பட வேண்டும்

—————-

பாடம் –30-
சப்தம் பிரமாணம் தேவைகள் -வகைகள்

உலகில் வாக்கியங்கள் இரண்டு வகை –
லௌகிகம் -வைதிகம் –
லௌகிக வாக்கியங்களில் ஆப்தராலே சொல்லப் பிற்பட்டவையே பிரமாணம்
வைதிக வாக்கியங்கள் அனைத்தும் பிரமாணம் -ஈஸ்வரனாலே சொல்லப் பட்ட படியால்
மீமாம்சத்திலும் வேதாந்தத்திலும் வேதம் யாராலும் இயற்றப்பட வில்லை -அவை நித்யம் –
அவை தானாகவே பிரமாணம் -வேதத்தால் போதிக்கப் படுவதால் ஈஸ்வரனும் உளன் ஆகிறான்
நியாய மாதத்தில் ஈஸ்வரனை அறிய வேதம் தேவை இல்லை -அனுமானத்தாலேயே அவரை அறியலாம் –
அவராலே இயற்றப்பட்ட படியால் வேதம் பிரமாணம் என்பர்

லக்ஷணா வ்ருத்தி
ஒரு சொல்லுக்கும் அதனால் போதிக்கப்படும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பு -வ்ருத்தி -எனப்படும் –
வ்ருத்தி -இரண்டு வகை – சக்தி -லக்ஷணா –
சக்தி என்பது பரமாத்மாவால் ஏற்படுத்தப் பட்ட நித்தியமான தொடர்பு என்பதை முன்பே பார்த்தோம்
அது தான் முக்கியமான வ்ருத்தி
முடிந்தவரை அதைக் கொண்டே சொற்களுக்குப் பொருள் சொல்ல வேண்டும்
ஒரு சொல் சக்தி என்கிற வ்ருத்தி மூலம் எந்தப் பொருளை உணர்த்துகிறது
அதற்கு சக்யம் அல்லது ஸக்ய அர்த்தம் என்று பெயர்

சில இடங்களில் சக்தியால் போதிக்கும் படும் பொருளை எடுத்துக் கொள்ள முடியாமல் போகும்
அந்த இடங்களில் வேறு வழி இல்லாமல் சக்யம் என்பதை -சக்தியால் போதிக்கப்படும் அர்த்தத்தை விட்டு
அதோடு தொடர்பு உள்ள வேறே ஒரு அர்த்தத்தை அந்தச் சொல்லுக்கு கொள்ள வேண்டும்
அப்பொழுது பயன்படும் விருத்திக்கு லக்ஷணா என்று பெயர்
லக்ஷணா -என்றால் ஸக்ய சம்பந்தம் -அதாவது ஒரு சொல்லின் ஸக்யமான அர்த்தத்தோடு
இருக்கக் கூடிய தொடர்பு தான் லக்ஷணா ஆகும் –
லக்ஷணம் வேறே லக்ஷணா வேறே

லக்ஷணா -எடுத்துக்காட்டு
கங்கையில் கிராமம் -இடைச்சேரி- கோசா -அஸ்தி
கங்கை -சக்தியால் நதியை பிரவாஹத்தைத் தான் குறிக்கும்
நதியில் கிராமம் இருக்க சாத்தியம் இல்லையே
நதி உடன் தொடர்பு உள்ள நதிக்கரையைத் தான் கொள்ள வேண்டும்
கங்கைக்கரையில் கிராமம் என்ற ஞானத்துக்கு குற்றம் ஒன்றும் இல்லையே
கங்கை -சக்தியால் உணர்த்தப்படும் அர்த்தமான -சக்யார்த்தம்-பரம்பரா சம்பந்தம் –
சங்கிலித் தொடர் தான் -ஸக்ய சம்பந்தம் தான்
லக்ஷணா விருத்தியால் கங்கை சொல் கங்கைக் கரையைத் தான் குறிக்கும் என்றவாறு
கங்கையில் மீன்கள் என்று சக்தி வ்ருத்தியால் நதி அர்த்தத்தையே தான் குறிக்கும்

லக்ஷணாவின் வகைகள்
1-ஜஹல் லக்ஷணா-
ஜஹத் என்றால் கை விடுதல் -தனது சக்யார்த்தத்தைக் கை விட்டு வேறு ஒரு அர்த்தத்தை மட்டும்
போதிக்கும் லக்ஷணா ஜஹல் லக்ஷணா-ஆகும்
கங்கையில் கிராமம் -நதிக்கரையில் கிராமம் -நதிக்கும் கிராமத்துக்கும் சம்பந்தம் இல்லையே
இதுவே ஜஹல் லக்ஷணா-ஆகும்

2-அ ஜஹல் லக்ஷணா-
தனது சக்யார்த்தத்தை கை விடாமல் லேயே வேறு அர்த்தங்களையும் போதிக்கும் லக்ஷணா –
அ ஜஹல் லக்ஷணா–ஆகும்
காக்கையிடம் இருந்து தயிரைக் காப்பாற்று
தயிரை உண்ணும் காக்கை பூனை நாய் போன்ற அனைத்தையும் குறிக்குமே
இங்கு காக்கை என்னும் சொல் -அ ஜஹல் லக்ஷணா-ஆகும்

3-ஜஹத ஜஹல் லக்ஷணா-
சோயம் தேவ தத்தன் -அன்று காசியில் பார்த்த மனிதனே இவன் -என்ற அறிவில்
மனிதன் என்பதை மட்டும் கைக் கொண்டு -மற்றவற்றை கை விட்டு இருவரும் ஒருவரே என்று போதிக்கிறது
ஒரு பகுதியைக் கைக்கொண்டு ஒரு பகுதியைக் கை விட்டதால் இது -ஜஹத ஜஹல் லக்ஷணா-ஆகும்

(மஞ்சா க்ரோசி -மெத்தையில் இருக்கும் குழந்தைகள் சப்தம் இடுகின்றன
அன்வய அனு பபத்தி ஒவ்வாமை -தொடர்பு உள்ள
தாத்பர்ய அனுப பத்தி -ஒவ்வாமை -)

சாப்த போதம் ஏற்படும் முறை
1-ஒருவர் ராமன் மாரீசனைக் கொன்றார் -என்ற சொல் தொடரை உச்சரிக்க -ஒலிகளின் வரிசை –
2- இந்த ஒலிகளின் வரிசை ஆகாசம் மூலமாகப் பரவி நம் காதை வந்து அடைகின்றன
3- காது என்ற இந்திரியம் புலன் -ஒலியைக் கிரகிக்கும் -இந்த அறிவு இந்த்ரியத்தில் இருந்து
ஏற்படுகிற படியால் ப்ரத்யக்ஷம் ஆகும்
4- ஒவ் ஒரு சொல்லின் பொருளைப் பற்றிய நினைவு ஸ்மரணம் -ஸ்ம்ருதி ஏற்படும்
இந்த நினைவு ஏற்படுவதற்குத் தான் நாம் முன்னமே சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பை —
சக்தியை அறிந்து இருக்க வேண்டும் -இல்லை என்றால் நினைவு ஏற்படாது
5- கடைசியாக அந்த பொருள்களையும் அவற்றுக்குள் ஒன்றோடும் ஒன்றுக்கும் உள்ள சம்பந்தத்தையும்
பற்றியும் அறிவு ஏற்படும்
ஒருவனான ஆண் மகனான ராமன் மாரீசனைக் கொன்றான் –
சொல் தொடரின் பொருளை பற்றிய அறிவு –வாக்யார்த்த ஞானம் -சாப்த போதம்

சாப்த போதத்துக்கு வேண்டியவை –அர்த்தம் புரிய சில தேவைகள் உள்ளன
1-ஆ காங்ஷா –என்பதைப் பற்றின அறிவு -verbal expectancy –
2-யோக்யதா -என்பதைப் பற்றின அறிவு -அர்த்த அபாதம் -யோக்யம் -பாதிதம் இல்லாமல் இருக்க வேண்டுமே –
3-ஸந்நிதி -என்பதின் அறிவு
4-தாத்பர்யம் -என்பதின் அறிவு

1-ஆ காங்ஷா –என்பதைப் பற்றின அறிவு
ஒரு பதத்துக்கும் மற்ற ஒரு பதத்துக்கும் இடையில் இருக்கும் எதிர் பார்ப்பு தான் -ஆகாங்ஷை
ஒரு வினைச் சொல் தனியாக இருக்க முடியாது -ஒரு பெயர்ச் சொல்லை எதிர்பார்க்கும் –
பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லை எதிர்பார்க்கும் -இது ஒரு வகையான
ஆகாங்ஷா –தனித்தனியாக வினைச் சொல்லையோ பெயர்ச் சொல்லையோ உபயோகித்தால் சாப்த போதமே ஏற்படாது
அதே போல் ஒரு சொல்லுக்கு உள்ளேயே பகுதி என்பது விகுதியை எதிர்பார்க்கும் -விகுதி பகுதி இல்லாமல் இருக்காதே
நடக்கிறான் என்று சேர்ந்தே பிரயோகம் -கிறான் ஆன் தனியாக உச்சரித்தால் சாப்த போதம் ஏற்படாது
கிறு ஆன் என்பதைத் தான் பகுதி எதிர்பார்க்கும்
அதே அர்த்தத்தை உடைய நிகழ் காலம் என்ற சொல்லைச் சேர்த்து –
நடத்தல் நிகழ் காலம் ஒருமை ஆண்பால்-என்று சொன்னால் சாப்த போதம் ஏற்படாது
ஆகவே எந்த பதங்களோடு சேர்ந்தால் மட்டுமே ஒரு பதம் விஷயத்தைப் போதிக்குமோ
அந்த ஆங்ஷையை நாம் அறிந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்

2-யோக்யதா -என்பதைப் பற்றின அறிவு
சொல் தொடரின் அர்த்தம் ஸாத்யமான ஒன்றாக இருக்க வேண்டும்
நெருப்பால் நனைக்கிறான் -என்கிற சொல் தொடரால் சாப்த போதம் ஏற்படாதே
நனைத்தல் என்ற செயலில் கருவியாக ஜலம் தானே இருக்க முடியும் -நெருப்பு இருக்க முடியாதே
அப்படி இல்லாமல்
இந்த சொல் தொடரின் பொருள் ஸாத்யமானது தான் என்ற புரிதல் நம்மிடம் இருந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்

3-ஸந்நிதி -என்பதின் அறிவு
சொற்களின் இடை வெளி இல்லாத உச்சரிப்பு
இப்பொழுது ராமனை என்று சொல்லி சில மணி நேரம் கழித்து ராவணனை என்று சொல்லி பின்பு
பல மணி நேரம் கழித்து கொன்றான் என்று சொன்னால் கேட்பவருக்கு சாப்த போதம் ஏற்படாதே
சொற்கள் அடுத்து அடுத்து உச்சரிக்கப்பட்டு ஒரே சமயத்தில் கேட்பவரின் மனத்தில் இருக்க வேண்டும்
இது தான் ஸந்நிதியைப் பற்றிய ஞானம் ஆகும்

4-தாத்பர்யம் -என்பதின் அறிவு
தாத்பர்யம் என்றால் -வக்து இச்சா -அதாவது பேசுபவரின் இச்சா -கருத்து –
அதை அறிந்தால் தான் சரியான புரிதல் ஏற்படும்
சைந்தவம் -என்றால் குதிரை என்றும் உப்பு என்றும் இரண்டு பொருள்களும் உண்டு
சாப்பிடும் பொழுது சைந்தவம் கொண்டு வா என்றால் உப்பைக் கொண்டு வா என்றும்
பிரயாணத்தின் பொழுது சைந்தவம் கொண்டு வா என்றால் குதிரையை அழைத்து வா என்றும் பொருள்
ஆகவே பேசுபவரின் சூழ்நிலையை வைத்து அவருடைய தாத்பர்யத்தை அறிந்தால் தான்
சரியான சாப்த போதத்தை அறிய முடியும் –

கூஜந்தம் ராம ஸ்லோக ஆலாபனை பண்ணி -சந்நிதி -இடை வெளி இல்லாமல் –
ஆனாலும் சிலருக்கு ஞானம் ஏற்படலாம் -மனசில் சேர்க்க தெரிந்தவர்
சந்நிதி ஞானம் இருக்க வேண்டும்
சந்நிதி இருக்கா இல்லையா என்பது இல்லை -இருப்பதை அறிவதே முக்கியம்
பாத ஞானம்
பதார்த்த ஸ்மரணம்
வாக்யார்த்த ஞானம் -சாப்த போதம்
ப்ரத்யக்ஷம் மட்டும் இந்திரிய -த்ரவ்ய ஜென்ம ஞானம்
மற்றவை மூன்றுமே ஞானத்தில் இருந்து ஞானம் உண்டாவது –

———

பாடம் -31-சம்சாரமும் முக்தியும் –

தத்வ ஞானத்தால் மோக்ஷம் அஞ்ஞானத்தால் சம்சாரம் -எல்லா தர்சனங்களிலும் உண்டே –
ஞானம் -அனுபவம் ஸ்ம்ருதி -யதார்த்தம் அயதார்த்தம் -இரண்டும் உண்டே

ப்ரத்யக்ஷம் என்று அழைக்கப்படும் இந்த்ரியங்களோ
அனுமானம் என்று சொல்லப்படும் பாரமர்சம் என்கிற ஞானமோ
உப மானம் என்று சொல்லப்படும் ஸாத்ருஸ்ய ஞானமும்
சப்த பிரமாணம் என்று சொல்லப்படும் வாக்கியங்களை பற்றிய ஞானமோ
இவை சரியாக வேலை செய்தால் பிரமா -எனப்படும் ஞானம் ஏற்படும்
இவற்றில் ஏதாவது ஒரு குற்றம் ஏற்பட்டு தவறாக செயல்பட்டால் -அயதார்த்த ஞானம் -பிரமம் -ஏற்படும் –
ஒரு பொருளில் இல்லாத தன்மையை அதில் இருப்பதாகக் காட்டிக் கொடுக்கும் அனுபவமே –
அயதார்த்த அனுபவ லக்ஷணம் –
அந்த அயதார்த்த அனுபவம் மூன்று வகைப்படும்
1-சம்சயம்
2-விபர்யயம்
3-தர்க்கம்

சம்சயம்
ஒரு தர்மியில் முரண் பட்ட பல தர்மங்களைக் கிரஹிக்கும் ஞானம் -சம்சயத்தின் லக்ஷணம்
மூன்று தளங்கள் -ஒரு தர்மி – தர்மங்கள் – விருத்த நா நா தர்ம – முரண்பட்ட-இப்படி மூன்றும் வேண்டும் –
விரோதம் -சேர்ந்து இல்லாமை -ஸஹ -அந வஸ் தானம்
கயிற்றைப் பார்த்து இது கயிறா பாம்பா என்கிற சந்தேகம்
கயிற்றுத் தன்மை பாம்புத் தன்மை முரண்பட்ட தர்மங்கள் ஒன்றில் கிரஹிக்கும் ஞானம் -யதார்த்த ஞானம்
ஒரு தர்மியில் -என்று சொல்லாமல் போனால் குடமும் துணியும் என்ற சமூக அலம்பந ஞானத்தில் அதி வியாப்தி ஏற்படும் –
குடத்தன்மை துபித்தன்மை இரண்டு வேறே வேறே முரண் பட்ட தர்மங்கள் இரண்டு வேறே வேறே பொருளில் கிரஹிக்கிற படியால்
முரண்பட்ட என்று சொல்லாமல் போனால் -சிவப்பு குடம் -சிவப்புத்தன்மையும் குடத்தன்மையும் முரண் படாத
இரண்டு தர்மங்கள் ஒரு தர்மியில் கிரஹிக்கிற படியால் அதி வியாப்தி ஏற்படும் –

விபர்யயம்
ஒரு பொருளில் இல்லாத தன்மையை அதில் இருப்பதாக முடிவு செய்து விட்டால் அந்த முடிவு நிச்சம் தான் என்ற விபர்யயம் ஏற்படும் –
ஒரு கயிற்றைப் பார்த்து இது கயிறு -இதில் கயிற்றுத் தன்மை உள்ளது என்று நிச்சயித்தால் அது யதார்த்த அனுபவ ம்
கயிறா பாம்பா சங்கித்தால் சம்சயம்
இது பாம்பு -இதில் பாம்புத் தன்மை உள்ளது என்று நிச்சயித்தால் அது விபர்யயம்
விபர்யயம் -மித்யா ஞானம் -தவறான ஞானம் என்ற மற்ற ஒரு பெயரும் உண்டே
இந்த மித்யா ஞானமே அஞ்ஞானம் -இதனாலே நான் சம்சாரத்தில் இருந்து துன்பம் அனுபவிக்கிறோம்
மித்யா ஞானம் நீங்கி விட்டால் சம்சாரத்தில் இருந்து விடுபடலாம் –

தர்க்கம்
இது வாதத்துக்கு உபயோகிக்கப் படும் கருவி -தர்க சாஸ்திரம் அன்றோ -இதனாலே பெயர் –
மலையில் புகையைப் பார்த்து நெருப்பு உள்ளதாக அனுமானம் செய்து மற்ற ஒருவர் இடம் சொல்ல
புகை இருக்கட்டும் நெருப்பு எதனால் இருக்க வேண்டும் –
அப்ரயோஜகதா சங்கா -இது தான்
அதற்கு பதிலாக நான் -நெருப்பு இல்லை என்றால் புகையும் இல்லாமல் இருக்க வேண்டுமே என்றேன்
நெருப்பின் அபாவம் வியாப்யம்-
புகையின் அபாவம் வியாபகம் –
மலையில் நெருப்பின் அபாவத்தை ஏறிட்டு அதன் மூலம் புகையின் அபாவத்தை ஏறிட்டு
புகையின் அபாவம் இல்லை என்று எதிராளி மறுக்க இயலாதே
இதுவே தர்க்கம் ஆகும் –

16 பதார்த்தங்கள் உண்மையான அறிவாலேயே முக்தி
வைசேஷிக தர்சனம் 7 பதார்த்தங்கள்
நியாய சாஸ்திரம் 16 பதார்த்தங்கள் கௌதமர்
ஏழும் -16 ஆகப் பிரித்து சொல்வர்
1-பிரமாணம்
2-பிரமேயம்
3-சம்சயம்
4-பிரயோஜனம்
5-த்ருஷ்டாந்தம்
6-சித்தாந்தம்
7-அவயவ
8-தர்க்க
9-நிர்ணய
10-வாதம் -தத்வம் அறியும் ஆசையால் செய்யும் debate –
11-ஜல்பம் -வெற்றி அடைய debate
12-விதண்டா வாதம் -ஸ்வ பக்ஷம் சொல்லாமல் பிறர் பக்ஷ கண்டனம்
13-ஹேது ஆபாசங்கள்
14-சலம் -சாதுர்யத்தால் வேறே அர்த்தம் -நவ ஒன்பது புதிய துணி உடையவன் தேவ தத்தன் –
15-ஜாதி -தனது பக்ஷம் தோற்கும் படி வாதம்
16-நிக்ரஹ ஸ்தானம் -சாதிக்க முடியாமல் ப்ரதிஜ்ஜை மாற்றுவது —

முக்தி
நியாய ஸாஸ்த்ரம் படி முக்தி துக்கம் நீங்குதல்
ஆத்யந்த்திக துக்க நிவ்ருத்தியே மோக்ஷம் -அந்தம் -முடிவு அத்யந்தம் எல்லையைத் தாண்டியது –
முக்தி நிலையில் ஆத்மா
சுகம் துக்கம் விருப்பு வெறுப்பு முயற்சி பாபம் புண்ணியம் பதிவுகள் -முதலிய
எந்தக் குணங்களும் இல்லாமல் கல்லைப் போலே இருப்பதே முக்தி ஆகும் என்பர்

துக்கம் –21- வகைகள் என்பர்
ஆறு இந்திரியங்கள் -மனஸ் -ஞான இந்திரியங்கள்
அவற்றில் இருந்து தோன்றும் ஆறு அறிவுகள் -சப்தாதிகள்
அறிவுக்கு விஷயமான ஆறு பொருள்கள்
சரீரம்
சுகம் என்கிற குணம் (ஸ்வர்க்கம்-தள்ளும் பொழுது பார்க்க துக்கம் வருமே )
துக்கம் என்கிற குணம் –ஆகிய இவையே
இவை அனைத்தும் நீங்கி மீண்டு வராதபடி அழிவதே முக்தி என்பர்

துக்க ஜென்ம பிரவிருத்தி தோஷம் மித்யா ஞானம் -உத்தர உத்தரம் வர முன் உள்ளவை போகுமே
தோஷம் ராக த்வேஷங்கள் சொன்னவாறு
ப்ரவ்ருத்தி தர்ம அதர்மங்கள் சொன்னவாறு

தத்வ ஞானம் ஏற்பட்டு தவறான புரிதல் மித்யா ஞானம் போகும்
அஞ்ஞானம் நீங்க விருப்பு வெறுப்பு ராகம் த்வேஷம் போகும் -இவை இரண்டுமே தோஷம்
இவை நீங்கினால் புண்ய பாப செயல்களில் பிரவிருத்தி இல்லாமல் போகும்
இவை இல்லா விடில் அடுத்த பிறவி கிட்டாது
மீதம் இருக்கும் புண்ய பாபங்களைக் கழித்து சரீரம் துறந்து கல்லைப் போலே ஆன பின்பு முக்தி அடைகிறான்
இதுவே முக்தி என்பர் நியாய சாஸ்திரத்தில் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி 1 : ந்யாய சாஸ்த்ரம்– பாடங்கள் -13-22—

March 24, 2021

கீழே உத்தேச கிரந்தம் பார்த்தோம் -விபாகம் உட் பிரிவுகளையும் பார்த்தோம் –
இனி லக்ஷணம் பரீஷை பார்ப்போம் –

பாடம் -13-

த்ரவ்யங்கள் –

த்ரவ்யம் –
குணாஸ்ரயம்-குணத்தை இருப்பிடமாகக் கொண்டதாகவே இருக்கும் -குணாஸ்ரயத்வம் –
இதுவே லக்ஷணம்

ப்ருத்வீ –
நிலம் மட்டும் இல்லை -செடி கொடிகள் துணி சரீரம் அனைத்துமே குறிக்கும் –
கந்தவதி கந்தத்துக்கு உடையவள் -ப்ருத்வீ பெண் பால் சமஸ்க்ருதம் -சொல்லுக்குத் தான் பால் -விஷயத்துக்கு இல்லை

லக்ஷணம் -மணம் என்றால்
அசம்பவ தோஷம் உள்ளதா -இல்லை
மண் மரம் துணி போன்றவற்றில் மணம் இருக்கிறது

அவ்யாப்தி தோஷம் உள்ளதா -இல்லை –
பாஷாணம் -கல்லில் தெரியா விட்டாலும்-பஸ்மம் – உடைத்த துகள்களில் மணம் இருக்கிறதே
கல்லில் மணம் நமக்கு புலப்பட வில்லை -ப்ரத்யக்ஷம் இல்லா விட்டாலும் அனுமானம் கொண்டு
யத் த்ரவ்யம் த்வம்ச ஜன்யம் தத் தது உபாதானம் உபாதேயம் நியாயம் –பரமாணுக்கள் சேர்ந்த கல் -அதே சேர்ந்த துகள்
இதில் கந்தம் இருப்பதால் அதிலும் உண்டு அனுமானிக்கலாம் -உத்பூதம் இல்லை -அநுத்பூதமாக-விளங்காமல் உள்ளது

அதி வியாப்தி தோஷம் உள்ளதா -இல்லை –
நீரிலும் காற்றிலும் திண்ணிய ப்ருத்வீ பொருள்கள் கலந்து இருப்பதாலேயே மணம் தோற்றுகிறது
ஸூத்த ஜலத்துக்கும் காற்றுக்கும் மணம் இல்லை
ஏலக்காய் தீர்த்தம் மணம் போலே –
பூவில் இருந்து மணத்தை பிரிக்க முடியாதே -சிறு அவயவங்கள் நுண்ணியதாக உள்ளவற்றைக் கவர்ந்து
வாயு மணம் வீசுகிறது

ஆக லக்ஷணம் பரீஷை பார்த்தோம்
இனி விபாகம் பார்ப்போம்

ப்ருத்வீயின் வகைகள் இரண்டு-
நித்யமான ப்ருத்வீ –
அநித்யமான ப்ருத்வீ –

நித்யமான ப்ருத்வீ பரமாணு வடிவத்தில் இருக்கும் -உத்பத்தியோ அழிவோ இல்லையே
அநித்யமான ப்ருத்வீ கார்யங்கள் அனைத்தும் -பரமாணுக்கள் சேர்ந்து கல் மண் மரம் துணி போன்ற அனைத்தும்

எந்தப்பொருளின் அபாவம் சொல்லப்படுகிறதா அது பிரதியோகி
எந்த இடத்தில் அந்த அபாவம் இருப்பதாகச் சொல்லுகிறமோ அது அநு யோகி
பூமியில் குடமில்லை என்று சொன்னால்
குடம் பிரதியோகி
பூமி அநு யோகி
இல்லை -அத்யந்த பாவம் -குடம் பிரதியோகி -எங்கு இருக்கு பூமி -அநு யோகி -இத்தை முன்னமே பார்த்தோம்
த்வம்சம் -துணி கிழிந்து விட்டது -ப்ரத்வம்சா பாவம் -துணியின் துவம்சம் நூலில் உள்ளது நூல் தானே அதிகரணம்
இங்கு -துணி பிரதியோகி -இத்தை நூல்களை பார்த்து அறிந்தோம் –

அநித்யமாக இருத்தல் ஆவது
ஒரு நாள் அழிவுக்கு உட்படுதல் -அதாவது அந்தப் பொருளுக்கு ஒரு நாள் அழிவு உண்டு
அழிவு என்றால் ப்ரத்வம்ச அபாவம்
ஆகையால் இந்தப் பொருளை பிரதியோகியாகக் கொண்ட துவம்சம் ஒரு நாள் ஏற்படும் என்றதாயிற்று
அழிவு என்று அழைக்கப்படும் த்வம்சத்துக்கு ப்ரதியோகியாக அந்தப் பொருள் இருக்கும்
த்வம்சத்துக்கு ப்ரதியோகியாய் இருத்தல் தான் அநித்யத்வம் -அநித்யமாக இருத்தல்
அநித்யத்வம் என்றால் த்வம்சத்துக்கு பிரதி யோகியாய் இருக்கும் தன்மை-

நித்யமாக இருத்தல்-ஒரு நாளும் அழியாமல் இருத்தல் –
அதாவது எந்த த்வம்சத்துக்கும் பிரதி யோகியாய் ஆகாமை –

ப்ருத்வீ -பரமாணுக்கள்–இவை சேர்ந்து உண்டான பொருள்கள் -இரண்டாக பிரித்து
பரமாணு -காரணம் என்றும் -நித்யம்
கார்யம்-உண்டாகும் பொருள் -அநித்யம் என்று இரண்டு வகை என்றபடி
நித்யா பரமாணு ரூபம் அநித்யா கார்ய ரூபம் -என்றவாறு

தர்க்க ஸங்க்ரஹம் இன்னும் ஒரு வகையாகவும் பிரித்து அருளுகிறார்
அறிவு -ஞானம் ஆத்மாவுக்கே -இதுக்கு ப்ருத்வீ எப்படி உபயோகம்
புந த்ரிவித -சரீர இந்திரிய விஷய பேதாத்

ஆத்மாவுக்கு ஞானம் ஏற்பட ப்ருத்வீ எப்படி உதவுகிறது என்ற கண் நோட்டத்தில் பார்த்தால்
ப்ருத்வீயை மூன்றாகப் பிரிக்கலாம்
1-சரீரம்
2-இந்திரியம்
3-விஷயம்

சரீரத்துக்கு இரண்டு வகையில் லக்ஷணம் சொல்லலாம் –
1-அதன் கார்யத்தைக் கொண்டும் –
2-அதன் தன்மையைக் கொண்டும்
ஜன்மாத்யத்ய அஸ்ய யத -ப்ரஹ்ம லக்ஷணம் -கார்யம் கொண்டு தனித்து அறிகிறோம்

கார்யத்தைக் கொண்டு லக்ஷணம்
போகம் -ஸூக துக்கங்கள் -இவற்றை வரையறைப் படுத்துவது
ஆத்மா விபுவாய் இருக்கும்
குறிப்பிடட இடத்தில் தான் ஸூ கத்தையும் துக்கத்தையும் அனுபவிக்க முடியும் என்று வரையறைப் படுத்துவது சரீரம்
ஆத்மா எங்கும் பரவி இருந்தாலும் இந்த உடல் இருக்கும் இடத்தில் தான் இன்ப துன்பங்களை அனுபவிக்க முடியும் –

போக ஆயதனம் சரீரம்–ஸூக துக்க
சந்தனம் பற்றிய ஞானம்- அறிந்து–இச்சை ஆசை -பிரயத்தனம் -முயற்சி -ஸூகம் -சுகமாக இருக்கிறேன் ஞானம் -அனுபவம்
இதே போலே முள்ளில் கால் வைத்து அஹம் துக்கி
இதுவே போகம்
சோக துக்க சாஷாத்காரம் போகம்
போக ஆயதனம் -சரீரம்
இவர் தர்சனம் ஆத்மா விபு -நம் தர்சனம் அணு

தன்மையைக் கொண்டு
சேஷ்டைக்கு இருப்பிடமானது சரீரம்
கை கால்களைத் தனித்தனியே சரீரம் என்று குறிப்பிடக் கூடாது
சேஷ்டையை உடைய இறுதியான -அந்த்ய -அவயவி தான் சரீரம்
இறுதியான அவயவி என்றால் மற்ற ஒரு அவயவியைத் தோற்றுவிக்காது என்று பொருள்
கை கால்கள் இறுதியான அவயவி ஆகாது -உடல் என்னும் அவயவியைத் தோற்றுவிக்கும் படியால்

சேஷ்டாஸ்ரயத்யம் -முயற்சி வேறே –ஆத்மாவின் குணம் -செயல் வேறே -கர்மம் -சரீரம் செய்வது -ஐந்து வகை பார்த்தோம் –
கீழே மேலே செல்ல கையயை நகர்த்த ஆத்மா முயர்சசி
மரம் கூட சரீரம் தான் -வெட்டினால் வளரும் -பிராண சஞ்சாரம் உண்டே –

போக ஆயதனம் சரீரம்-சேஷ்ட ஆஸ்ரயமாகவும் –அந்த்ய அவயவியாகவும் இருக்க வேண்டும் -இதுவே சரீர லக்ஷணம் –

இந்திரியம் மற்றும் விஷயம்
ப்ரத்யக்ஷம் என்று அழைக்கப்படும் ஏற்படக் கருவியாக இருக்கும் நம் புலன்கள் தான் இந்திரியங்கள்

ஞானத்தால் அறியப்படும் பொருள்கள் அனைத்துமே விஷயங்கள் என்று அழைக்கப் படுகின்றன –

ப்ருத்வியாலான சரீரம்
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் விலங்குகள் செடிகள் முதலானவற்றின் சரீரம்
நம் சரீரம்-பாஞ்ச பவ்திகம் – ஐந்து பூதங்களாலும் ஆக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும்
முக்கியமாக ப்ருத்வியால் தான் ஆக்கப் பட்டுள்ளது –
நீர் நெருப்பு முதலியவை உதவுகின்றன

ப்ருத்வியாலான இந்திரியம் -கிராணம் -என்ற பெயர் பெற்ற முகர் புலன்
அது மணத்தைக் காட்டிக் கொடுக்கும் -மூக்கின் நுனியில் இருக்கும்
பார்த்திவ இந்திரியம் -கிராண இந்திரியம் -நாச அக்ர வர்த்தி

ப்ருத்வியாலான விஷயங்கள் மண் கல் மரம் போன்றவை -ம்ருத் பாஷாணாதிகள் –

இந்த விபாகத்தில்
பரமாணுக்களை -எங்கே -என்றால்
சரீரம் இந்திரியம் -இவற்றுள் இல்லை
விஷயத்துக்குள்ளே உண்டு

——————

பாடம்-14-ஜலம் -தேஜஸ் -வாயு –

அன் வீஷா-அனுமானம் -ஆன்வீஷீகா -அனுமானம் கொண்டு நியாய சாஸ்திரம் –
தர்க்க ஸங்க்ரஹம் அன்னம் பட்டர் எழுதியவற்றைக் கொண்டு பார்க்கிறோம்

ப்ருத்வியினால் ஆன சரீரம்
1-யோனிஜம் -கருவில் இருந்து உண்டானது
2-அயோனிஜம் -கருவில் இருந்து உண்டாகாதது

யோனிஜம்
1-ஜராயுஜம் -கர்ப்பையில் இருந்து தோன்றியவை -மனிதர்கள் விலங்குகள் போலே -ஜராயு -கர்ப்பப்பை –
2-அண்டஜம் -முட்டையில் இருந்து தோன்றியவை -பறவைகள் பாம்புகள் போலே

அயோனிஜம்
1-ஸ்வேதஜம் -வியர்வையில் இருந்து தோன்றியவை -கிருமிகள் போல்வன -கிருமி கீடாதிகள்-
2-உத்பிஜ்ஜம் -முளையில் இருந்து தோன்றுபவை -மரம் செடி கொடி போல்வன
3-ஸ்வர்க்கத்திலும் நரகத்திலும் எடுத்துக் கொள்ளும் சரீரங்கள்

க்ராணம் என்று அழைக்கப்படும் முகர் புலன் பிருத்வியால் ஆனது என்று எப்படி அறிவது
அனுமானத்தால் தான்
குங்குமத்தில் நிறம் ரூபம் மணம் சுவை போன்ற பல பண்புகள் இருந்தாலும் அவற்றுள் மணத்தை மட்டும்
அபி வியஞ்சனம் – வெளிப்படுத்தும் பசும் நெய்-அது பிருத்வி
அதே போலே ஒரு பொருளில் எத்தனை பண்புகள் இருந்தாலும் அதில் இருக்கும் மணத்தை மட்டும்
வெளிப்படுத்துகிறது முகர் புலன்
ஆகையால் இதுவும் பிருத்வியாகத் தான் இருக்க வேண்டும்

——–

ஜலம்
குளிர்ந்த ஸ்பர்சத்தை உடையது நீர்
குளிர்ந்த ஸ்பர்சம் தான் அதனுடைய லக்ஷணம்
அப்பு -சீதா ஸ்பர்சவத் யா ஆப -பன்மையில் பிரயோகம் எப்பொழுதும் –

தண்ணீர் -அசம்பவ தோஷம் இல்லை
வெந்நீர்-தண்ணீர் ஸ்வ பாவம் இல்லை அக்னி -தேஜஸ் அவயவங்கள் சேர்ந்து வெந்நீர் -அவ்யாப்தி தோஷம் இல்லை
அதி வியாப்தி தோஷமும் இல்லை –காலையில் தரை குளிர்ந்து உள்ளதே -பனி நீர் அவயவங்கள் இருப்பதால் தான் –
பனிக் கட்டிகள்-பிருத்வி என்று சொல்லலாமோ என்னில் எது த்ரவ்யம் த்வம்ஸ உபாதான உபாதேய -உருக்கினால் த்ரவ்யம் வருமே –

விபாகம் முன்பு போலவே பார்ப்போம்
நீர் இரண்டு வகை
பரமாணு வடிவில் இருக்கும் நீர் -நித்யமானது
பரமாணுவில் இருந்து உருவாகும் நீர் -அநித்யமானது

மற்ற ஒரு விபாகம்
சரீரம் -வருண லோகத்தில் இருப்பவர்களுடையது -அங்கும் பிருத்வி உண்டு -பிரதானம் ஜலம்
இந்திரியம் -சுவை -ரஸம் -என்னும் பண்பைக் க்ரஹிக்கும் ரஸந இந்திரியம் -நாக்கின் நுனியில் இருப்பது –
ஜிஹ்வா அக்ர வர்த்தி -சுவையைப் பற்றின ஞானத்தை ஆத்மாவுக்கு காட்டும் ரசந இந்திரியம் –

ரஸந இந்திரியம் நீராலே ஆனது என்பதற்கு அனுமானம்
மாவு பொடியில் இருக்கும் சுவையை மட்டும் வெளிப்படுத்தும் நீர் -அது ஜலம் தான்
அதே போல் பொருள்களில் இருக்கும் சுவையை மட்டும் -அபி வியஞ்சனம் -வெளிப்படுத்துவது ரஸந இந்திரியம்
ஆகையால் இதுவும் ஜலத்தாலே ஆக்கப் பட்டதாகவே இருக்க வேண்டும்

விஷயம் -நதி கடல் முதலியவை

——–

தேஜஸ்
உஷ்ணமான ஸ்பர்சத்தை உடையது தேஜஸ்
உஷ்ணமான ஸ்பர்சம் தான் தேஜஸ்ஸின் லக்ஷணம்
உஷ்ண ஸ்பர்சவத் தேஜஸ்ஸூ -ந பும்ஸ லிங்கம் இது

அசம்பவத் தோஷம் இல்லை
சந்த்ர கிரணங்கள் ஆஹ்லாதமாக இருக்க -உள்ளே நீர் அவயவங்கள் இருப்பதால் -அவ்யாப்தி தோஷம் இல்லை
ரத்னம் தேஜஸ்ஸூ -கூட பிருத்வி இருப்பதால் தேஜஸ் வெப்பம் அடி பட்டுப் போகுமே –
அபிபவம் ஆகுமே-அமுக்கி விடும் -அவ்யாப்தி இல்லை
வெந்நீர் -வெப்பம் -அதி வியாப்தி இல்லை நீர் தேஜஸ் சேர்ந்ததால் தானே

நித்யமான தேஜஸ்ஸூ -பரமாணு வடிவில் இருப்பது
அநித்யமான தேஜஸ்ஸூ -பரமாணுவில் இருந்து உருவான கார்யங்கள்

வேறு ஒரு வகை விபாகம்
சரீரம் –ஆதித்ய லோகத்தில் இருப்பவர்களுடையவை -பிரசித்தம் -தேஜஸ் பிரதானம் என்றவாறு-

இந்த்ரியம் -நிறம் -ரூபம் -என்னும் பண்பைக் க்ரஹிக்கும் சஷுஸ்ஸூ இந்த்ரியம் -கரு விழியின் நுனியில் இருப்பது
கிருஷ்ண தாரா அக்ர வர்த்தி

சஷுஸ்ஸூ என்னும் இந்திரியம் தேஜஸ்ஸாலே ஆனது என்பதற்கு அனுமானம்
ஒரு விளக்கு தன் முன் இருக்கும் பொருளின் ஸ்பர்சம் முதலியவற்றை வெளிப்படுத்தாமல்
நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறது –
அது தேஜஸ்ஸால் ஆனது –
அதே போல் சஷுஸ்ஸூம் தன் முன் இருக்கும் மற்ற பண்புகளை விட்டு நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறது
ஆகையால் இதுவும் தேஜஸ்ஸூ தான்

விஷயம் –
1-பவ்மம்-பொதுவான நெருப்பு முதலியவை -பவ்மம்-பூமி உடன் தொடர்பு –
இந்தநம் -எரி பொருள் பூமி உடன் சம்பந்தம் –
2-திவ்யம்-வானத்தில் இருக்கும் மின்னல் போன்றவை –
த்யு லோகம் -வானம்- அபிந்தனம் வித்யுதாதிகள் -மேகத்தில் உள்ள ஆப அப்பு இந்தனமாகக் கொண்டது
3-உதர்யம்-வயிற்றில் இருந்து ஜெரிமானம் செய்யும் அக்னி -ஜாடராக்னி-
4-ஆகரஜம்–சுரங்கங்களில் கிடைக்கும் தங்கம் முதலியவை -தேஜஸ் மழுங்க அடிப்பட்டு -பிருத்வியால்

———–

வாயு
நிறம் இல்லாமலும் ஸ்பர்சம் உடையதாயும் இருப்பது வாயு
நிறத்தின் இன்மையோடு -அபாவத்தோடு -கூடிய ஸ்பர்சம் தான் வாயுவின் லக்ஷணம்
ரூப ரஹித சூன்ய ஸ்பர்சவான் –ரூப அபாவ ஸ்பர்சவான் –

பிருத்வி அப்பு தேஜஸ் மூன்றுக்கும் ரூபம் -இவற்றைக் கழிக்க ரூப ரஹிதம்
மீதி ஆறு -இவற்றில் ஐந்தும்
ஆகாசம் காலம் திக்கு மனஸ் ஆத்மா இவற்றுக்கு ஸ்பர்சம் இல்லையே
அசம்பவ -அவ்யாப்தி அதி வியாப்தி தோஷங்கள் இல்லாத லக்ஷணம் இதுவே –

நித்யமானது –பரமாணு வடிவில் இருக்கும் வாயு
அநித்யம் -பரமாணுவில் இருந்து உருவாகும் கார்யங்கள்

வேறே விபாகம்
சரீரம் -வாயு லோகத்தில் இருப்பவர்களுடையவை

இந்த்ரியம் -ஸ்பர்சம் என்னும் பண்பைக் க்ரஹிக்கும் த்வக் இந்த்ரியம் -உடல் முழுவதும் பரவி தோலில் இருக்கும்
த்வக் -சர்வ சரீர வர்த்தி –
நாக்கு இனிமையும் ரஸத்தையும் உஷ்ணத்வமும் காட்டும்–நாக்கின் நுனியில் ரஸந இந்த்ரியமும் த்வக் இந்த்ரியமும் உள்ளதே –

த்வக் இந்திரியம் வாயுவினால் ஆனது என்பதற்கு அனுமானம்
விசிறியில் இருந்து வரும் காற்று நம் உடலில் இருக்கும் நீரில் இருக்கும் குளிர்ச்சியை மட்டும்
வெளிப்படுத்துகிறது அது வாயுவினால் ஆக்கப் பட்டது
அதே போல் த்வக் இந்த்ரியமும் ஒரு பொருளின் ஸ்பர்சத்தை மட்டும் வெளிப்படுத்துகிற படியால்
அதுவும் வாயுவால் ஆனது தான் –

விஷயம் -மரம் முதலியவற்றை அசைக்கும் காற்று

பிருத்வி அப்பு தேஜஸ் கண்ணால் பார்க்கலாம்
மத பேதம் ப்ராசீன வாயுவை -ஸ்பர்சம் -குணம் -மட்டும் கிரஹிக்கிறது -பொருள் இருக்க வேண்டும்
வாயுவை அனுமானம் செய்கிறார்
நவீனம் -காற்றும் அறியப்படுகிறது என்பர் –காற்றைத் தொடுகிறேன் பிரத்யக்ஷம் என்பர்

—————

பாடம் –15-அவயவம் -அவயவி –

வேதங்களுக்கு விருத்தமான தர்க்கம் ஒத்துக் கொள்ள ஒண்ணாது -மனு பகவான் –

ரூப ரஹித ஸ்பர்ஸவான் வாயு லக்ஷணம் பார்த்தோம்
ப்ராண வாயு
வாயுவை சரீரம் -இந்திரியம் -விஷயம் -என்று பிரித்தோம்
அதில் விஷயம் என்பதற்குள் ப்ராண வாயுவும் அடங்கும்
நம் உடலுக்குள் சஞ்சரிக்கும் வாயு ப்ராண வாயு
இது நம் உடலில் வெல்வேறு பகுதிகளில் இருந்து வெவ்வேறு செயல்களைச் செய்வதால்
ப்ராணம் -அபானம் -வ்யானம்-உதானம் -சமானம் -என்று ஐந்து வாயுக்களாகப் பிரித்து அழைக்கப்படுகிறது

ப்ராண வாயு ஹ்ருதயத்திலும்-மேல் நோக்கி சஞ்சரிக்கும் –
அபான வாயு குடலிலும்
சமான வாயு நாபியிலும்
உதான வாயு தொண்டையிலும்
வ்யான வாயு சரீரம் முழுவதிலும் இருக்கும்
காரியம் வேறே இருக்கும் இடங்கள் வேறே என்பதால் ஐந்தாக பிரித்து சொல்வர்

——–

பிருத்வி அப்பு தேஜஸ் வாயு நான்குக்கும் பரமாணுக்கள் உண்டு என்று பார்த்தோம் –
பரமாணுக்கள் என்றால் என்ன -அத்தை எதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் –
இவை சேர்ந்து -சேர்க்கை -பொருள்கள் வேறே வேறே என்பதைப் பார்ப்போம் –

உலகில் உண்டாக்க கூடிய பொருள்கள் எல்லாம் வெவ்வேறு அளவுகளில் உள்ளன
ஒரு பொருள் பகுதிகளால் -அவயவங்களால் -ஆக்கப் பட்டு இருந்தால் தான் அளவு மாறுபட முடியும்
ஆக ஒரு பொருளை உடைத்தால் அதன் அவயவங்கள் கிடைக்கும்
எவ்வளவு தூரம் உடைக்க முடியும் -எவ்வளவு அவயவங்கள் இருக்க முடியும்
முடிவில்லாமல் உடைக்கலாம் -அநந்தமான அவயவங்கள் உண்டு என்றால் -மலைக்கும் கடுகுக்கும் வேறுபாடு இருக்க முடியாது –
இரண்டுக்கும் எண்ணற்ற அவயவங்கள் உண்டு என்கிற பக்ஷத்தில்
ஆகையால் அவயவங்களுக்கு முடிவு உண்டு-அதாவது கடைசி அவயவம் ஓன்று இருந்தே ஆக வேண்டும்
அந்த கடைசி அவயவத்திற்கு அவயவங்கள் இருக்க முடியாது
அவயவங்கள் அற்ற ஒரு பொருள் உண்டாகவோ அழியவோ முடியாது
ஆகவே அது நித்யமாக இருக்கும்
அப்படிப்பட்ட அவயவங்கள் குறைவாக சேர்ந்தால் கடுகு பிறக்கும் -அதிகமான எண்ணிக்கையில் சேர்ந்தால் மலை பிறக்கும்

நியாய மாதத்தில் கடைசி அவயவத்தை இப்படி அறிகிறார்கள்
உலகில் நுண்ணிய பொருள்களை எடுத்துக் கொள்வோம் -ஜன்னல் வழியே வரும் ஸூர்ய ஒளி கற்றை –
அதில் கண்ணுக்குத் தெரியும் பொருள் -த்ரி யணுகம் என்று பெயர் வைத்தார்கள்
கண்ணுக்குத் தெரியும் எந்தப் பொருள்களும் பகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளது என்று முன்பே பார்த்துள்ளோம் –
குடம் துணி போன்றவை
மிக நுண்ணிய த்ரி யணுகம் நம் கன்னுக்குத் தெரிவதால் அதுக்கும் கூட அவயவங்கள் இருக்க வேண்டும் –
அவை நம் கண்ணுக்குத் தெரிய மாட்டா
அவற்றுக்குத் த்வி யணுகம் என்று பெயர்
உலகில் கண்ணுக்குத் தெரியும் ஒரு பொருளை உருவாக்கக் கூடிய எந்த அவயவத்துக்கும் தனக்கே
அவயவங்கள் உண்டு என்று பார்த்து இருக்கிறோம்
துணியை உருவாக்கும் நூல் பஞ்சின் அவயவங்களால் ஆக்கப்பட்டுள்ளது போல்
அதே போலே கண்ணுக்குத் தெரியும் இந்த த்ரி யணுகத்தை உருவாக்கும் இந்த த்வி யணுகமும்
அவயவங்களைக் கொண்டதாகவே தான் இருக்க வேண்டும்
அவற்றுக்கு பரமாணுக்கள் என்று பெயர் -அவையே கடைசி அவயவம்
இதே போல் பரமாணுவையும் பிரித்தால் முடிவு இல்லாமல் பிரிக்க வேண்டி வரும்
அதாவது அநவஸ்தா தோஷம் வரும்–infinite regression -ஆகையால் பரமாணுவோடே நிறுத்திக் கொள்கிறார்கள்

பரிமாணம் ஏற்றத் தாழ்வு -தார தம்யம்-இருந்தாலே ஏதோ ஒரு இடத்தில் முடிய வேண்டும்
மேல் எல்லை பரம மஹத்வம் -விபு பதார்த்தங்கள் ஆகாசம் காலம், திக்கு ஆத்மா -எங்கும் பரவி உள்ளவை
பரம பதம் என்கிறோமே
அதே போல் கீழ் எல்லை -அணுக்களிலும் இதுக்கு கீழ் எல்லையும் இருக்க வேண்டுமே –
இதுவே பரமாணு -இது இரண்டாவது காரணம் -பரம அணுத்வம் உள்ளது பரமாணு –

ப்ராசீன நியாயம் இப்படி நிர்வாகம்
த்ரி அணுகம் அளவிலே நின்று இருக்கலாமே
எதுக்கு த்வி அணுகம் -பரமாணு -கல்பிக்க வேண்டும் –
நவீன நையாயிகம்-

பொருள்கள் உருவாக்குவதில் இரண்டு கண்ணோட்டங்கள் உண்டு –
ஸத் கார்ய வாதம் –இருக்கும் ஒரு பொருள் மற்ற ஒரு பொருள் ஆகும்
அ ஸத் கார்ய வாதம் –புதிதாக பொருள்கள் உண்டாகும்

ஸத் கார்ய வாதமே வேதாந்திகள் ஒப்புக் கொள்வது
இதில் ஒரு பொருள் வெவ்வேறே நிலைகளை அடைந்தால் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப் படுகின்றன
ஆனால் பொருள் ஓன்று தான்
பிருத்வியால் ஆக்கப்பட்ட பஞ்சு–,முதலில் பந்துக்களாக இருக்கும் -பின்பு நூல் ஆகும் -பின் துணி ஆகும் –
கிழிந்து நூல் ஆகும் -கொளுத்தி விட்டால் சாம்பல் ஆகும்
ஆக அந்த அந்த நிலை உண்டாகி அழிந்தது என்று தானே சொல்ல வேண்டுமது ஒழிய
பொருள் உண்டாயிற்று அழிந்தது என்று சொல்ல ஒண்ணாது
ஆகவே அவயவியும் அவயவமும் வெவ்வேறு பொருள் அல்ல
பிருத்வி பரமாணுவே -பஞ்சாகவும் -நூலாகவும் -துணி யாகவும் -சாம்பலாகவும் ஆகிறது –

நியாய மதம் சொல்லும் அ ஸத் கார்ய வாதம்
இந்த வாதத்தில்
அவயவங்கள் சேரும் பொழுது அவயவி என்ற புதிய த்ரவ்யம் உண்டாகும் –
அந்தப் பொருள் இதற்கு முன்னால் இல்லவே இல்லை -அதனால் தான் ப்ராகபாவம் என்பதைச் சொல்கிறார்கள் –
ஒரு பொருள் அழியும் பொழுது அது மற்ற ஒரு பொருளாகாது -முழுவதாகவே அழிந்து விடும் –
அதன் அவயவங்கள் மட்டும் தான் மீதம் இருக்கும்-அதனால் தான் ப்ரத்வம்சாபாவம் என்று ஓன்று உள்ளது –
ஆக ஒவ் ஒரு அவயவியும் அதன் அவயவங்களைக் காட்டிலும் வேறு பட்ட ஒரு த்ரவ்யமான படியால்
ஒரே கோட்டில் அவற்றைக் காட்ட முடியாது
ஒவ் ஒரு பொருள்களுக்கும் தனித் தனி கோடுகள் வேண்டும்
நூலில் இருந்து துணி என்ற புதிய பொருள் உண்டாகும்
அப்போது நூலும் அப்படியே இருக்கும்
துணி அழிந்த பின்பு துணி என்பது இருக்கவே இருக்காது –
நூல் என்ற பழைய பொருள் மட்டுமே இருக்கும் –
இப்படி இரண்டு வெவ்வேறு பொருள்களான அவயவத்துக்கும் அவயவிக்கும் இடையில்
சமவாயம் என்னும் சம்பந்தம் இருக்கும்
துணி -சமவாயம் –நூல்
நூல் -சமவாயம் -பஞ்சு பந்துக்கள்
பஞ்சு பந்துக்கள் -சமவாயம் -பிருத்வீ பரமாணு

அவயவி -அவயவங்கள் -இவற்றுக்கும் சமவாயம் சம்பந்தம் –
குணம் ஆஸ்ரயத்தில்
கிரியை ஆச்ரயத்தில்
சாமான்யம் ஆஸ்ரயத்தில்
நித்ய -பரமாணு -இவற்றில் உள்ள விசேஷம் ஆஸ்ரயம் போலே இங்கும்
அவயவி அவயவங்களில் உள்ளவையும் சமவாயம் சம்பந்தம் –

மேஜைக்கும் குடத்துக்கும் -சம்யோக சம்பந்தம் -ஆதாரமாக கொண்டதால்
கபாலங்கள் -கடம் -இதுவும் ஆதாரம் -சம்பந்தம் வேறே
அது சம்யோகம் -இது சமவாயம்
கபாலம் அண்டியே குடம் இருக்கும் -பிரிக்க முடியாத சம்பந்தம்
குடத்தை மேஜையில் இருந்து பிரிக்கலாம் -எடுத்து தரையில் வைக்கலாம் –
ப்ராக் அபாவம் சொல்வதால் த்ரவ்யங்கள் வேறே வேறே -தொடர்பு சமவாயம் –
ப்ராக் அபாவம் த்வம்ச அபாவம் சொல்வதால் அஸத் கார்ய வாதிகள்

சிலர் செய்யும் ஆஷேபம்
அவயவி என்று தனியே ஓன்று தேவை இல்லை
பரமாணுக்களின் கூட்டங்களே தான் குடம் என்றும் துணி என்றும் அழைக்கப் படுகின்றன –
நம் கேள்வி –
பரமாணுவை நாம் கண்ணால் காண முடியாத படியால் அதன் கூட்டமான குடத்தையும் நம்மால் காண முடியாமல் போகுமே
இதுக்கு அவர்கள் பதில்
ஒரு மயிரைப் பார்க்க முடியா விடிலும் மயிர்க் கற்றையைப் பார்க்கிறோமே
ஒரு பெரிய குடம் -குடம்–என்று எல்லாம் சொல்கிறோமே -குடம் பல பரமாணுக்களின் கூட்டம் என்றால்
ஓன்று என்றோ பெரியது என்றோ எப்படி அழைக்கலாம்
ஒருமை -சங்க்யை -சிறிய பெரிய -பரிமாணம்

பல சிறிய நெல் குவியலைப் பார்த்து ஒரு பெரிய நெல் குவியல் என்று சொல்வதைப் போல் சொல்லலாமே
இதுக்கு -அவர்கள் பதில் –
ஒரு தலை முடி கண்ணுக்குத் தெரியும் பொருள் தான் அருகில் இருந்தால் தெரியும்-தொலைவில் இருந்தால் தெரியாது –
ஆகவே தலை முடிக் கற்றை கண்ணுக்குத் தெரிவதில் தப்பில்லை
பரமாணு கண்ணுக்குத் தெரியாத பொருள் -அதன் கூட்டமும் கண்ணுக்குப் புலப்பட முடியாதே –
எங்கள் மதத்தில் பரமாணுக்கள் சேர்ந்து த்வி அணுகம் -த்ரி அணுகம் -குடம் -என்று வெவ்வேறு பொருள்கள் உண்டாகின்றன –
அவற்றில் ஒவ் ஒன்றும் முன்புள்ள பொருள்களைக் காட்டிலும் பெரியது -ஆகவே கண்ணுக்குத் தெரிவதில் தவறு இல்லை –

பரமாணு த்வி அணுகம் -கண்ணுக்குத் தெரியாதவை
த்ரி அணுகம் கண்ணுக்குத் தெரியும் –
இவைகள் சேர்ந்து அவயவி-

————

காரிகா வளி -ஒன்பது த்ரவ்யங்கள் தேஹி ஆத்மா குணி குணம் உடையவன் போல் –

பாடம் -16-ஆகாசம் –காலம் –திக்கு –

ஆகாசம்
சப்தத்தைக் குணமாகக் கொண்டது -ஆகாசம் -லக்ஷணம்
சப்தம் குணத்தைக் காதாலே க்ரஹிக்கிறோம்
குணம் த்ரவ்யத்தை ஆஸ்ரயித்துத் தான் இருக்க முடியும் -சமவாய சம்பந்தம்-
ஆகவே சப்தத்துக்கு ஆஸ்ரயமாக ஆகாசம் இருப்பதை அனுமானிக்கிறோம் –
சப்த குணகம் ஆகாசம் –சப்தம் என்னும் ஒரே குணத்தைக் கொண்டது ஆகாசம் -பஹு வ்ரீஹி சமாசம் –
உலகில் பல ஆகாசங்கள் இருந்தாலும் லகுவாக ஆகாசம் ஒன்றே என்பதே எளிதாகும் –
குடம் வகை பல குடங்கள் போல் இல்லாமல் ஒரே ஆகாசம் -ஏகம் –
உலகம் முழுவதும் சப்தம் கேட்பதால் ஆகாசம் விபு -உலகம் எங்கும் பரந்துள்ளது என்று அறியலாம் –
ஆகாசத்துக்கு அவயவங்கள் என்று கொண்டால் -அவை சேர்ந்து பெரிய ஆகாசம் என்று கடினமாக கொள்ள வேண்டி வரும்
ஆகவே ஆகாசம் பகுதிகள் இல்லாமல் நித்யம் என்றும் அறிகிறோம்

விபாகம்
முன்பு ஒவ் ஒரு த்ரவ்யத்தையும் சரீரம் இந்திரியம் விஷயம் என்று மூன்றாகப் பிரித்துப் பார்த்தோம்
ஆகாசத்தாலான சரீரம் கிடையாது –
ஆகாசத்தாலான இந்திரியம் உண்டு -சப்தத்தைக் கிரஹிக்கும் ஸ்ரோத்ரம் -ஸ்ரோத்ர இந்திரியம்
ஆனால் ஆகாசம் ஓன்று என்று பார்த்தோம் –
ஸ்ரோத்ர இந்திரியம் ஒவ் ஒருவருக்கும் தனித்தனியாக உள்ளதே
எப்படி ஆகாசமே ஸ்ரோத்ரம் ஆகும்
பகுதிகள் இல்லாத ஆகாசத்தைக் கூட பொருள்களின் சேர்த்தியைக் கொண்டு உலகில் பிரித்துப் பார்க்கிறோம்
இந்திய வான் வெளி -அமெரிக்க வான் வெளி-air space-flying space -குட ஆகாசம் -என்று பிரித்துப் பார்ப்பது போல்
ஒவ் ஒருவரின் காதால் வரையறுக்கப் பட்ட ஆகாசம் வெவ்வேறு தானே –
அதுவே ஸ்ரோத்ரம் எனப்படுகிறது –
ஆகாசத்தால் ஆக்கப் பட்டது என்று சொல்லாமல் ஆகாசமே ஸ்ரோத்ரம் இந்திரியம்
கரண சஸ்குளிக்கு உள்ளே-வரையறுக்கப் பட்ட ஆகாசம் -அவச்சின்னம் –

——–

காலத்தை நிலை நாட்டுதல்
இப்பொழுது குடம் உள்ளது என்று சொல்லும் பொழுது -இப்பொழுது என்ற சொல்லில் இருந்து
ஸூர்யனின் கிரியைக்கும் குடத்துக்கும் உள்ள சம்பந்தம் தோற்றுவதால்
இந்த ஸூர்ய கிரியை உடன் கூடிய குடம் என்றே இதற்குப் பொருள் என்பர் நியாய தரிசனத்தில்
இதில் ஒரு கேள்வி வரும் -ஸூர்யன் கிரியை பூமியில் உள்ள குடத்துடன் எப்படி சம்பந்தம் உண்டாகும் என்றால்
அந்த கிரியை உடைய ஸூர்யன் ஒரு த்ரவ்யத்தைத் தொட்டுக் கொண்டு உள்ளது -சமயோக சம்பந்தம் கொண்டுள்ளது
அதே த்ரவ்யத்தை இந்தக் குடம் தொட்டுக் கொண்டு உள்ளது
கிரியைக்கு இருப்பிடமான ஸூர்யன் தொட்டுக் கொண்டு இருக்கும் த்ரவ்யத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கும் குடம்
பரம்பரா சம்பந்தத்தால் அந்தக் கிரியை உடன் கூடிய குடம்
அந்த இடையில் உள்ள த்ரவ்யத்தை காலம் என்று அனுமானிக்கிறார்கள்
கிரியை கிரியாவான் -இரண்டுக்கும் சமவாய சம்பந்தம் -விட்டுப் பிரிக்க முடியாத -சமவாய சம்யோக சம்பந்தம் இல்லாமல்
பரம்பரயா சம்பந்தம் -இப்பொழுது -இதானி -ஞானம் -ஸூர்யன் -கிரியைக்கும் பொருளுக்கும் சம்பந்தம் -காலம்

காலத்தை நிரூபிக்க மற்ற ஒரு வழி
குணங்களின் வகைகள் –24-இவற்றில்
பரத்வம் அபரத்வம் பார்த்தோம்
தேசத்தாலும் காலத்தாலும் பரத்வம் அபரத்வம் பார்த்தோம் முன்பு
பழையவை பரத்வம் புதிதானவை அபரத்வம் –
இவை தானாக உண்டாக மாட்டாதே -ஏதோ காரணம் இருக்க வேண்டும் –
அதுவே காலம் என்னும் த்ரவ்யத்துடன் சம்யோக சம்பந்தம்
சம்யோகத்துக்கு இருப்பிடமான த்ரவ்யம் காலம் என்றவாறு
பல காலங்களுடன் தொடர்பு உள்ள பொருள் முதிர்ந்து பரத்வம் என்ற குணம் உள்ளது என்றும்
குறைவான காலங்கள் உடன் தொடர்பு -சம்யோகம் -உள்ள பொருள் இளையது -அபரத்வம் என்ற குணம் உள்ளது என்கிறோம்

காலத்தின் தன்மைகள்
இப்படி அனுமானிக்கும் காலமும் ஆகாசம் போல் லகுவாக உலகம் முழுவதும் ஒன்றாகவே கொள்ள வேண்டும் –
ஒவ் ஒரு இடத்தில் ஒவ் ஒரு காலம் என்பது இல்லை
காலம் ஓன்று -எங்கும் காணப்படுகிறது என்பதால் விபு
லாகவத்தைப் பற்றி ஆகாசம் போலவே இதுக்கும் அவயவங்கள் இல்லை இதுவும் நித்யம் என்றே கொள்ள வேண்டும்
காலம் ஏகம் -விபு -நித்யம் -அதீத வியவகார ஹேது காலம் –

காலம் என்பது மாம்பழம் பழுக்கவும் பூக்கள் பூக்கவும் போன்ற செயல்களுக்கு காரணமாக இருப்பதை பார்க்கிறோம்
உலகில் உண்டாகும் அனைத்துப் பொருள்களுக்கும் காலமும் ஒரு காரணம் என்பது நியாய மதக் கொள்கை —
பூமியில் குடம் உள்ளது போல் காலையில் குடம் உள்ளது என்று சொல்வதால் பூமி போலே
காலமும் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் இருப்பிடம்- ஆஸ்ரயம் ஆகிறது

காலம் ஒன்றே என்றால் வினாடி நிமிஷம் முஹூர்த்தம் பகல் பக்ஷம் மாதம் வருஷம் யுகம் போன்ற பிரிவுகள் எப்படி
மஹா காலம் நித்தியமாக இருந்தாலும் ஒவ் ஒரு பொருளுடன் தொடர்பு பட்ட -சம்யோகம் பட்ட -காலம்
அளவுபட்டதாகவே இருக்கும் –அந்தப் பொருள் அளவு பட்டதாக இருப்பதால்
நான் 30 வயசுடன் இருந்தாலும் காதில் கடுக்கனுடன் ஐந்து வருஷம் இருந்தேன் என்பது போல்
அதே போல் காலம் நித்யமாக இருந்தாலும் குடத்தால் வரையறுக்கப்பட்ட காலம் -இமைத்தல் என்கிற செயலால்
வரையறுக்கப் பட்ட காலம் அளவுபட்டதாகவே இருக்குமே

ஒரு க்ஷணம் -வினாடி -என்பதை எவ்வாறு வரையறுப்பது
இதை அறிய -கர்மம் -கிரியை -செயல் -என்பதைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் –

எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் என்ன நடக்கும்?
ஒரு பொருள் ஓர் இடத்திலிருந்து மற்ற ஓர் இடத்திற்குச் செல்லும்.
அந்தப் பொருள், செயலுக்கு முன்னால் எந்த இடத்தில் இருந்ததோ அதற்கு“முன் இடம் (பூர்வ தேசம்) என்று பெயர்.
அந்தப் பொருளுக்கும் பூர்வ தேசம் என்று சொல்லப்படும் மு்ன்னிடத்துக்கும் ஸம்யோகம் இருந்தது.
அந்தப் பொருளில் க்ரியை ஏற்பட்டால், அது முதலில் மு்ன்னிடத்திலிருந்து பிரிந்து விடும்,
அதாவது, அந்தப் பொருளுக்கும் பூர்வ தேசத்துக்கும் இருந்த ஸம்யோகம் அழிந்து விடும்.

க்ரியையானது நேரடியாக சம்யோகத்தை அழிக்காது.
இடையில் அந்தப் பொருளில் விபாகம் (பிரிவு) என்ற குணம் உண்டாகும்,
அதற்குப் பி்ன் தான் முன் தேசத்தோடு இருந்த சம் யோகம் அழியும் –.
அடுத்து, அந்தப் பொருள், க்ரியையி்ன் காரணமாக எந்த இடத்தை அடைகிறதோ,
அதற்கு “அடுத்த இடம் (உத்தர தேசம்) என்று பெயர்.
ஆக, அந்த உத்தர தேசத்துக்கும் இந்தப் பொருளுக்கும் இடையே ஸம்யோகம் ஏற்படுகிறது என்று பொருள்.

உத்தர தேசத்தோடே சம்யோகம் ஏற்பட்ட பிறகு அந்தச் செயல் முடிந்துவிடும்.
ஆக, கீழுள்ள க்ரமத்தில் தான் இது நடக்கிறது
1-க்ரியை உண்டாகும்-
2-விபாகம் உண்டாகும்
3-பூர்வ தேச சம்யோகம் அழியும்
4-உத்தர தேச சம்யோகம் ஏற்படும்
5-க்ரியை அழிந்து விடும்

இப்படி ஒரு செயலிலிருந்து அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்களைப்
பயன் படுத்தித் தான் நாம் ’ஒரு வினாடி’ என்பதை வரையறுக்கப் போகிறோம்
மனதில் கொள்க
ஒரு பொருள் உண்டாவதற்கு முன் வினாடி வரை தொடக்கமே இல்லாததான அதன் ப்ராக அபாவம் இருக்கும்.
ஒரு பொருள் அழியும் வினாடி தொடங்கி , முடிவில்லாத காலம் வரை அதன் ப்ரத்வம்ச அபாவம் இருக்கும்

ஆக, கீழே உள்ளவை ஒவ் ஒன்றும் ஒவ் ஒரு வினாடி மட்டுமே இருக்கக் கூடியவை
விபாகத்தின் ப்ராக் அபாவத்தினுடன் கூடிய கிரியை
பூர்வ தேச சம்யோகத்துடன் கூடிய விபாகம்
உத்தர தேச சம்யோகத்தின் ப்ராக் அபாவத்துடன் கூடிய பூர்வ தேச சம்யோக நாசம்
உத்தர தேச சம்யோகத்துடன் கூடிய கிரியை

கால உபாதிகள் இவை – இப்படி ஒவ் ஒரு கிரியைக்கும் நான்கு க்ஷணங்கள் இருக்குமே
ஆக -ஒரு விநாடி என்றால்
கிரியை ஏற்பட்டு ஆனால் அதில் இருந்து விபாகம் ஏற்படாத காலம்
விபாகமும் பூர்வ தேச சம்யோகமும் சேர்ந்து இருக்கும் காலம்
பூர்வ தேச சம்யோகத்தின் அழிவும் உத்தர தேச சம்யோகத்தின் ப்ராக் அபாவமும் சேர்ந்து இருக்கும் காலம்
கிரியை இடம் உத்தர தேச சம்யோகமும் சேர்ந்து இருக்கும் காலம்

———-

24 குணங்களுக்குள் பரத்வம் அபரத்வம் என்று இரண்டு குணங்களைப் பார்த்தோம்.
தொலைவில் இருக்கும் பொருளிடம் பரத்வமும், அருகிலிருக்கும் பொருளிடம் அபரத்வமும் இருக்கும் என்றும் பார்த்தோம்.
இந்த குணங்கள் தானாக உண்டாக முடியாது, ஏதோ ஒரு காரணம் வேண்டும். அது என்ன என்றால் –
“திக் என்ற த்ரவ்யத்தோடு இருக்கும் தொடர்பு (சம்யோகம்)” என்கிறது ந்யாய மதம்.
ஆகையால், “இருக்குமிடத்தை வைத்து வரக் கூடிய பரத்வம் மற்றும் அபரத்வத்துக்குக் காரணமான சம்யோகத்துக்கு
இருப்பிடமான த்ரவ்யம்” என்கிற முறையில் திக் என்று ஒரு த்ரவ்யம் உள்ளது என்று நாம் நிரூபிக்கலாம்

ஆகாசத்துக்கும் காலத்துக்கும் சொன்னது போல் லாவகம் என்கிற கொள்கையைப் பின் பற்றிப் பார்த்தால்
திக் என்பதும் ஒன்று தான், விபு (எங்கும் பரந்து இருப்பது), அவயவங்கள் அற்றது, நித்யமானது
காலத்தைப் போலவே திசையும் உலகில் உண்டாகும் அனைத்துப் பொருட்களுக்கும் காரணமானது,
அனைத்துப் பொருட்களையும் தாங்கக் கூடியது

திசை என்னும் த்ரவ்யம் ஒன்றாக இருந்தாலும் அந்த அந்த இடத்தில் இருக்கும் பொருள்களைக் கொண்டு
அதை வரையறுத்துப் பார்க்க முடியும்
அப்படிச் செய்யும் போது தான் கிழக்கு மேற்கு போன்ற பிரிவுகள் ஏற்படுகின்றன
அஸ்தாசலம்–மாடு -மேரு மலை -ஆடு -உதயாசலம்
ஆடு மாட்டுடன் ஒப்பிட்டால் கிழக்கு
அஸ்தாசல மலைக்கு அருகில் மேற்கு
மேரு மலையில் அருகில் வடக்கு
தொலைவில் தெற்கு என்று பிரித்துச் சொல்கிறோம்

உதயாசலம் அஸ்தாசலம் மேரு பர்வம் மூன்றையும் வைத்து நான்கு திக்குகள்

காலம் திக்கு இவை சர்வ ஆதாரம் -அனைத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கும் -அனைத்துக்கும் காரணம்
பூதலே – பூமியில் ஏழாம் வேற்றுமை -காலையில் பூமியில் குடம் உள்ளது இங்கும் ஏழாம் வேற்றுமை
அதிகரணம் -தாங்கும்

ஆத்மா மனஸ் இவற்றைப் பற்றி மேல் பார்ப்போம்

——————-

பாடம் –17-ஆத்மா

ஆச்சர்யம் உடைய ஜீவாத்மா–ஆயிரக்கணக்கான மக்களில் யாரோ ஒருவன் காண்கிறான் –
அதில் சொல்லி புரிய வைப்பவர் மிக சிலர் -கேட்பதற்கும் சுலபத்தில் ஆள் இல்லை -உள்ளபடி அறிபவர் துர்லபம் கீதை
குணத்துக்கு ஆஸ்ரயம் த்ரவ்யம் -ஆகவே ஆத்மா த்ரவ்யம்
சிகப்பு நிறத்துக்கு மணம் இல்லை –
அறிவு உடையவன் புத்திக்கு இருப்பிடம் தான் ஆத்மா சைதன்யன் ஞானம் உடையவன் –
ஞானாதிகரணம் ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மா -குணம் த்ரவ்யம் சமவாயம் சம்பந்தம் –
த்ரவ்யங்களுக்குள் தானே சம்யோக சம்பந்தம் இருக்கும்

ஞானத்தின் இருப்பிடம் ஆத்மா -அதாவது ஞானம் தான் ஆத்மாவின் லக்ஷணம் –
அதுவே மற்ற பொருள்களின் இடத்தும் ஆத்மாவை வேறு படுத்துகிறது –
ஞானம் -என்பது ஒரு குணம் –
அதன் இருப்பிடம் ஆத்மா என்று அழைக்கப்படும் த்ரவ்யம்
தொடர்பு -சமவாயம் -சம்பந்தம் –
சமவாய சம்பந்தத்தால் ஞானத்தைக் கொண்டு இருக்கும் த்ரவ்யம் ஆத்மா -இதுவே லக்ஷணம்

ஆத்மா இரண்டு வகைப்படும்
ஜீவாத்மா
பரமாத்மா
ஆத்மா என்னும் சொல் வேதாந்தத்தில் “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸி தவ்ய:” போன்ற
இடங்களில் பரமாத்மாவைக் குறிப்பதாகவும் காணப்படுகிறது.
ஜ்ஞாநத்தை உடையவன் ஆத்மா என்னும் லக்ஷணம் பரமாத்மாவுக்கும் பொருந்துவது தான் -ஆகையால் குறையில்ஸல.

பரமாத்மா –ஈஸ்வரன்
தத்ர ஈஸ்வர –சர்வஞ்ஞன்– ஏக ஏவ -உலகை ஆள்பவன் –
பரமாத்மா என்பவர் “ஈஸ்வரர் ” என்று அழைக்கப்படுகிறார்.
இதற்கு “உலகத்தைப் படைத்து ஆள்பவர்” என்று பொருள்.
ஈஸ்வரனாக இருப்பதால் சர்வஞ்ஞனாகவே இருக்க வேண்டும் –
ஈர் அரசு கூடாதே –
ஒரு குடம் மண்ணைக் கொண்டு குயவனாலே செய்யப்படுகிறது. குடத்துக்குக் கார்யம் என்று பெயர்.
மண்ணுக்கு உபாதாந காரணம் என்று பெயர்.
குயவனுக்கு நிமித்த காரணம் என்று பெயர். அந்தக் குயவனுக்கே “கர்த்தா”-செய்பவன் – என்று மற்ற ஓரு பெயரும் உண்டு.
கர்த்தா என்றால், ஒரு பொருளை உருவாக்கத் தேவைப்படும் உபாதாந காரணத்ஸத முதலில் அறிந்து கொண்டு,
பி்ன் அந்தக் கார்யத்ஸத உண்டாக்க ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியை எடுப்பவர்.

கர்த்தா -உபாதான கோசர -அபரோக்ஷ ஞானம்–ஆசை -இச்சை – அடைய பிரயத்தனம் -மூன்று படிகள்
கார்த்தாவுக்கு இச்சா ஸூகீரிஷா-கிருதி -புத்தி-ஞானம் ஆசை கிரியை மூன்றையும் ஆத்மா குணமாகவே முன்பே பார்த்தோம்

ஒரு குயவன் , குடத்தை உருவாக்கத் தேவையான மண்ணை முதலில் காண்கிறார்,
அடுத்து இந்த மண்ணிலிருந்து குடத்தை உருவாக்க ஆசைப்படுகிறார்,
பி்ன் குடத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.
ஆகையால் தான் அவர் குடத்தி்ன் கர்த்தா என்று அழைக்கப்படுகிறார்.

அதே போல் பரமாத்மா இந்த உலகத்தை உண்டாக்கத் தேவையான பரமாணுக்களை முதலில் அறிகிறார்,
பி்ன் உலகை உருவாக்க ஆசைப்படுகிறார்,
பி்ன் அதற்கான முயற்சியை எடுக்கிறார்.
ஆகையால் பரமாத்மா இந்த உலகத்தி்ன் கர்த்தா ஆகிறார்.

பரமாத்மா சர்வஞ்ஞன் -ஒருவன்
ஆக, நம் புலன்களுக்கு எட்டாதவையான நுண்ணிய பரமாணுக்கள் அனைத்தையும் பரமாத்மா காண்கிறார்,
நுண்ணிய பரமாணுக்களையே பார்க்க முடிந்தவரால் நிச்சயமாக குடம், துணி, வளையல் போன்ற பெரிய
பொருட்களையும் பார்க்க முடியும். ஆகையால், உலகிலிருக்கும் அனைத்துப் பொருள்களையும் அவர்
காண்கிறபடியால், அவர் ஸர்வஜ்ஞன் (அனைத்னையும் அறிந்தவர்) என்று கொண்டாடப்படுகிறார்.

நாம் ஒரு சமயத்தில் ஒன்றை அறிகிறோம், பிறகு மறந்து விடுகிறோம்.
ஈஸ்வரனுக்கு அப்படி எந்த குறைபாடுகளும் கிடையாது. ஆகையால், ஈஸ்வரர் எப்படி நித்யமோ , அதே போல்
அவரிடத்திலிருக்கும் ’அனைத்துப் பொருள்களைப் பற்றின ஜ்ஞாநமும்’ நித்யமானது என்று சொன்னால் ஒரு தவறும் இல்லை .
ஆகவே, “நித்யமான அறிவைக் கொண்டிருப்பவர் பரமாத்மா” என்று பரமாத்மாவுக்கு லக்ஷணம் சொல்லலாம்.
நித்தியமான ஞானம் உடையவர் சர்வேஸ்வரன் —
ஜீவாத்மாவுக்கு ஜ்ஞாநம் இருந்தாலும், நித்யமான ஜ்ஞாநம் கிடையாது. நம் ஜ்ஞானம் உருவாகும் அழியும்.
உலகுக்கு இரண்டு ஆள்பவர்கள் இருந்தால் குழப்பம் தான் ஏற்படும். ஆகையால், ஈஸ்வரராக இருக்கும் பரமாத்மா
ஒருவர் தான் உள்ளார். இரண்டாவது ஈஸ்வரர் தேவை இல்லை

ஜீவாத்மா
ஜீவாத்மாவின் லக்ஷணம்
ஸூகம், துக்கம், த்வேஷம், தர்மம், அதர்மம் என்ற குணங்களி்ன் இருப்பிடமாயிருத்தல்.
பரமாத்மாவுக்கு ஜ்ஞாநம், இச்சை , ப்ரயத்நம் இருந்தாலும்,ஸூகம் துக்கம் முதலாைனவை கிடையாது.
ஆகவே இது ஜீவனுக்கு மட்டுமிருக்கும் தனித்தன்மை யாகும் –

ஸூகாதிகள் ஆஸ்ரயத்வம் ஜீவாத்மா –பரமாத்மாவுக்கு இல்லை -இதுவே லஷ்ணம்
ஆசை உண்டு ஞானம் உண்டு ப்ரயத்தனம் உண்டு பரமாத்மாவுக்கு
ராக த்வேஷம் ஸூகம் துக்கம் பாபம் புண்ணியம் இல்லையே –பரமாத்மாவுக்கு -ஜீவாத்மாவுக்கே உண்டு

இந்த ஜீவாத்மா ஒவ் ஓரு உடலிலும் வேறாக உள்ளார்.
ஒரு உடலில் இருப்பவர் ஸூகப்படும் போதே மற்றொரு உடலில் இருப்பவர் துக்கப்படு வதைக் காண்கிறோம்.
ஆகையால், அந்த இரண்டு சரீரங்கிளிலும் ஒரே ஆத்மா இருக்க முடியாது, ஒவ் ஓரு சரீரத்தில் ஒவ் ஓரு ஆத்மா
தான் இருக்கவேண்டும்.
பிரதி சரீரம் பின்னமாகவே ஆத்மா இருக்க வேண்டும்
சரீரங்கள் எண்ணிலடங்காதபடியால் ஆத்மாக்களும் எண்ணிலடங்காதவையே –

கேள்வி – ந்யாய மதத்தி்ன்படி நம் சரீரம் ஒவ் ஓரு நொடியும் மாறுகிறதே . அப்பொழுது ஆத்மா மாறி விடுமா?
பதில் – இல்லை -. ஒரே காலத்தில் இரண்டு சரீரங்களில் ஒரு ஆத்மா இருக்க முடியாதே
தவிர வேவ்வேறு காலங்களில் இருக்கலாம்.

கேள்வி – ரிஷிகள் ஒரே காலத்தில் பல உடல்களை எடுத்துக் கொள்கிறார்களே ? அவர்கள் ஆத்மா மாறுமா?
பதில் – இல்லை . யோகத்தி்ன் பலத்தால் ஒரே காலத்தில் பல சரீரங்கள் எடுக்கலாம். மற்றவரால் முடியாது-

ஆத்மாவின் அளவு என்ன
பொருட்களை அவற்றி்ன் அளவை வைத்து அணு (நுண்ணியது),
மத்யம பரிமாணம் (நடுத்தர அளவு),
விபு (எங்கும் பரந்திருப்பது) என்று மூன்றாகப் பிரிக்கலாம். -ஆகாசம் போல் –
அவற்றில் ஆத்மா எந்தப் பிரிவில் அடங்கும் என்று பார்ப்போம் .

ஆத்மா அணுவாக இருக்க முடியாது. ஏன் என்றால் –
இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள்
ஓன்று
அணுவான பொருள்களையும், அவற்றிலிருக்கும் குணங்களையும் நம் புலன்களால் அறிய முடியாது.
பரமாணுவாக உள்ளவற்றையும் அவற்றின் குணங்களையும் இந்த்ரியங்களால் அறிய முடியாதே –
ஆனால் நான் என்று ஆத்மாவையையும் அதிலிருக்கும் ஜ்ஞாநம் ஸூகம் முதலான குணங்களையும் நாம் அறிகிறோம் –
இரண்டு
“நான் குடத்தை அறிகிறேன் , “நான் ஸூகமாக உள்ளேன் ” என்று ஒரே சமயத்தில் உடலில் இரு பகுதிகளில் ஸூகத்தையும்
துக்கத்தையும் நாம் அநுபவிக்கிறோம் – “காலுக்கு ஸூகமாக உள்ளது ஆனால் தலை வலிக்கிறது” என்று.
ஆத்மா அணுவாக இருந்தால் அவர் ஒரு காலத்தில் காலிலும் தலையிலும் இருக்க முடியாது.

ஆத்மா நடுத்தர அளவை உடையது என்றும் சொல்ல முடியாது,
ஏன் என்றால் உலகில் “எந்தப் பொருள் நடுத்தர அளவில் உடையதோ அது நிச்சயமாக ஒருநாள் அழியும்” என்ற நியமம் உள்ளது.
ஆத்மாவுக்கு அழிவை ஒப்புக் கொள்ள முடியாது என்று அடுத்து பார்க்கப் போகிறோம்.

ஆகையால் ஆத்மா விபுவாகத் தான் (உலகு எங்கும் பரந்து விரிந்து இருக்கும் பொருளாகத்) தான் இருக்க வேண்டும்.
பல ஆத்மாக்கள் உண்டே அவை எல்லாம் விபுவாக இருக்க முடியுமா
ஸூஷ்ம வஸ்து ஆகாசம் ஆத்மா திக்குக்கள் விபுவாக இருந்தாலும் ஒன்றுடன் ஓன்று முட்டிக் கொள்ளாதே
ஒளி எவ்வளவும் நுழையலாம்

ஆகையால் ஆத்மா விபு என்பர் நியாய வாதிகள்
வேதாந்த சித்தம் ஆத்மா அணு

ஆத்மா நித்யமானதா அல்லவா ?
ஆத்மா அநித்யமானது, அதாவது ஒரு நாள் உண்டாகி ஒரு நாள் அழியக்கூடியது என்று ஒப்புக் கொண்டால் பல சிக்கல்கள் ஏற்படும்

அக்ருத அப்யாகமம் –
நாம் இந்தப் பிறவியை எடுப்பதற்கும், இந்தப் பிறவியில் அநுபவிக்கும் ஸூக துக்கங்களுக்கு ஏதோ
ஒரு காரணம் இருக்க வேண்டும். காரணமில்லாமல் எதுவும் நடக்காது.
ஆனால் இந்த ஆத்மா இப் பொழுது தான் உண்டான படியால் இவன் இதற்கு முன்னால் எந்தச் செயலும் செய்திருக்க முடியாது.
ஆகவே, செய்யாத செயல்களுக்கான பலனை நாம் அநுபவிக்கிறோம் என்பதாகும்.
இது ஒப்புக் கொள்ள முடியாத ஒரு கண்ணோட்டம்

க்ருத ஹாநம் –க்ருத நாசம்
நாம் அடுத்தடுத்த பிறவிகளில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பிறவியில் செய்யும் செயல்கள் எல்லாம் வீணாகப் போகும்,
ஆத்மா இந்த பிறவியி்ன் முடிவில் அழிந்து விடுவார் என்றால். அந்தச் செயல்களை போதித்த வேதங்களும் தவறானவை ஆகி விடும்

ஐஹிக பலன்கள் இங்கேயே இந்தப்பிறவியில் அடையும் பலன்கள்–ஸ்வர்க்காதி பலன்கள் கிடைக்க
வேதங்கள் சொல்லுவது செய்து நாசம் ஆகுமே கர்மங்களும் சாஸ்திரங்களும் வியர்த்தமாகும்

மேலும் மூன்றாவது காரணம் -ஸ்தன்ய பாந ப்ரவ்ருத்தி –
ஆத்மா இந்த உடலோடு பிறக்கும் போது தான் உருவாகிறது என்றால்,
முதன் முதலில் பசியைப் போக்கிக் கொள்ளப் பால் குடிக்க வேண்டும்,
அதையும் இப்படித் தான் குடிக்க வேண்டும் என்று எப்படி ஒரு குழந்தை அறிகிறது?
பிறந்தவுடன் இதை அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லா விட்டாலும் பால் குடிக்க அதற்குத் தெரிந்துள்ளது.
ஆகவே முன் பிறவிகளி்ன் பழக்கதால்-பதிவினால் -ஸம்ஸ்காரங்களால் – மட்டும் தான் இதை ந்யாயப்படுத்த முடியும்.

ஆகையால் ஆத்மா நித்யமானது என்று ஒப்புக் கொள்ள வேண்டும்

1-பிரதி சரீர பின்னம்
2-விபு
3-நித்யஸ் ச ஆத்மா என்றபடி –

———

பாடம் –18-த்ரவ்யங்கள் –ஆத்மா மனஸ் —

மனா ஏக மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷாயா
பந்தாயா விஷயா சங்கீ
மனசும் ஆந்திர புலன் -ப்ரத்யக்ஷம் -இந்த்ரியங்களால் அறிய படும் -என்னும் பொழுது மனசும் சேரும் –

ஆத்மாவை ஏன் ஏற்க வேண்டும் -இதற்கு பிரமாணம் -சான்று -என்பதைப் பார்ப்போம் –
முதலில் நம் அனுபவத்தில் இருந்தே ஆத்மாவை அறிய முடியும்
நான் அறிகிறேன் -நான் பார்க்கிறேன் -போன்ற அனுபவங்களில் அறிவை உடையவனாக நான் என்னும் ஆத்மா அறியப்படுகிறது அன்றோ –
மேலும் இது என் உடல் என்று நாம் சொல்லுகிறபடியால் நான் என்பவன் உடலைக் காட்டிலும் வேறுபட்டவன் என்றும் அறிந்து விடலாம்
ஆகவே ப்ரத்யக்ஷம் -புலன்களால் ஏற்படும் அறிவு தான் ஆத்மாவை அறிய முதல் பிரமாணம்

ஆத்மா இந்த்ரியானாம் -மனஸ் புத்தி பிராண இவற்றைத் தாண்டி ஞான ஆச்ரயமான ஓன்று
இந்திரியங்கள் கருவி -பயன் படுத்தி -அறிகிறோம்
நான் கண்ணாலே பார்க்கிறேன் என்பது கோடாலியால் வெட்டுகிறேன் போல் கருவி வேறே கர்த்தா வேறே
ஆத்மாவை அனுமானம் செய்தும் அறியலாம் -நான் கத்தியால் வெட்டுகிறேன் என்று சொல்லும் பொழுது
அறிவற்ற அசேதனப் பொருளான கத்தி தானாகவே எதையும் வெட்டாது
அத்தை இயக்க அறிவுள்ள ஒருவர் வேண்டும்
அதே போலே கண்ணால் பார்க்கிறேன் நாக்கால் சுவைக்கிறேன் என்னும் பொழுது இந்திரியங்களும்
அறிவற்ற பொருள்களான படியால் அவற்றை இயக்க அறிவுள்ள ஒருவர் தேவை -அவர் தான் ஆத்மா

இந்த உடலே தான் ஆத்மாவா
சாருவாக மதத்தில் சரீரமே தான் ஆத்மா என்று சொல்கிறார்கள்
நான் மனுஷ்யன் நான் உயரமானவன் என்று எல்லாம் நமக்கு அறிவு ஏற்படுகிற படியால்
மனிதத்தன்மை உயரம் இவை எல்லாம் சரீரத்தின் தன்மைகள் ஆகிறபடியால்
நான் என்பது சரீரமாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்
மனுஷ்ய சரீரத்தை உடைய நான் என்று சொல்லாமல் நான் மனுஷ்யன் என்பதால் உடலே ஞானம் உடைய
ஆத்மா என்பர் லோகாயுத சாருவாகர்

ஆனால், அப்படி ஒப்புக் கொண்டால் பல.தோஷங்கள் ஏற்படுகி்றன
1-சரீரம் என்பது கை கால் முதலான பல அயவங்களி்ன் சேர்க்கையால் உருவான ஒரு அவயவி –
ந்யாய மதத்தி்ன் படி, ஒரு அவயவம் குஸறந்தாலும், அதிலிருந்து உருவான அவயவி மாறி விடும்.
ஆகவே ஒரு கையோ காலோ குறைந்தாலும் இந்த சரீரம் மாறி விடுகிறது.
சரீரமே ஆத்மா என்று ஒப்புக் கொண்டால், கை வெட்டுப் பட்டால் ஆத்மாவே அழிந்து விடும் என்று ஒரு தோஷம் –
2-ந்யாய மதத்தி்ன்படி நமது சரீரம் ஒவ் ஓரு விநாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது,
பல அவயவங்கள் சேருகிறபடியாலும் பிரிந்து போகிறபடியாலும்.
ஆகவே சிறு வயதில் நமக்கு இருந்த சரீரமும் இப்போது இருக்கும் சரீரமும் வேவ்வேறு.
சரீரமே தான் ஆத்மா என்றால் வயதாகும் போது ஆத்மாவே மாறி விடுகிறது என்பதாகும்.
ஆகவே சிறு வயதில் பார்த்த ஒரு பொருளை இப் பொழுது நினைத்துப் பார்க்க முடியாமல் போகும்,
அன்று பார்த்த ஆத்மா இ்ன்று இல்லாதபடியால்.
3-பார்த்தவர் வேறே நினைப்பவர் என்றாலும் பதிவு சம்ஸ்காரம் -அனுபவித்ததால் வந்த பதிவு என்று கொண்டு சாமதானம் செய்பவர் –
இதை விட லாகவமாக ஆத்மா வேறே தேகம் சரீரம் வேறே என்று கொள்ளலாமே –
4-ஸ்தன்ய பாநம் – சரீரமே ஆத்மா என்றால், சரீரம் இப் பொழுது தான் உண்டானபடியால் அதற்குப் பால் குடிக்கும் முறை
தெரிந்திருக்க வாய்ப்பில்லை-

இந்த்ரியங்களே ஆத்மா என்று சொல்லலாமா
கண் பார்க்கிறது”, “காது கேட்கிறது”போன்ற வ்யவஹாரங்கஸளக் கொண்டு கண், காது முதலான
இந்த்ரியங்களே தா்ன் ஆத்மா என்று சொல்லலாம் என்று சிலர் கூறுகி்றனர். ஆனால், இந்த மதமும் ஒவ்வாது.
i. கண் என்ற இந்த்ரியம் தான் ஆத்மா என்று கொண்டால், ஒருவருக்கு கண் மட்டும் அழிந்தால் ஆத்மாவே
அழிந்து விட்டது என்று ஆகும். ஆனால் உலகில் அப்படி நாம் காண்பதில்ஸல.
கண் இழந்தவர்களும் மற்றப் புலன்களைக் கொண்டு வாழ்கின்றனர்
ii. ஒருவர் கண்ணிருக்கும் போது ஒரு பூவைப் பார்த்திருந்தால், ஏதோ காரணத்தால் அவர் கண்ணை இழந்தாலும்,
பிற் காலத்தில் அந்தப் பூவை நினைத்துப் பார்க்க முடிகிறது உலகில்.
ஆனால், கண் தான் ஆத்மா என்று கொண்டால், கண் அழிந்து விட்டால், அந்தப் பூவை அறிந்த ஆத்மாவே
அழிந்து விட்டபடியால் பிற்காலத்தில் எப்படி நினைவு வரும்?
iii. இந்த்ரியமே தான் ஆத்மா என்றால், கண் என்பது ஒரு ஆத்மா, தோல் என்பது வேறே ஓரு ஆத்மா என்பதாகும்.
அப்படி இருந்தால், நேற்று இந்தக் குடத்தைப் பார்த்த நானே இ்ன்று கண்ணை மூடி அதைத் தொடுகிறவன் என்கிற ஜ்ஞாநம் ஏற்படவே முடியாது.
ஏன் என்றால், குடத்தைப் பார்த்த கண் வேறே ஓரு ஆத்மா, இப்பொழுது தொடும் தோல் வேறே ஒரு ஆத்மா.

மனது தான் ஆத்மா என்றும் கொள்ளலாமா
சரீரமோ இந்த்ரியமோ அழியக் கூடிய பொருள்கள் -ஆகையால் அவை தான் ஆத்மா என்று கொண்டால்
முன்னால் சொன்ன தோஷங்கள் வரும்
மனதோ நித்தியமானது -அதையே ஆத்மா என்று கொண்டால் என்ன என்று சிலர் ஆக்ஷேபிக்கின்றனர்
ஆனால் அதுவும் சரியில்லை
நியாய மதத்தின் படி அணுவாக நுண்ணியதாக இருக்கும் பொருள்களையும் அவற்றில் இருக்கும் குணங்களையும்
இந்த்ரியங்களைக் கொண்டு அறிய முடியாது
மனது என்பதோ நுண்ணிய பொருள் -அதனால் தான் மனதை நம்மால் காண முடிவது இல்லை
மனது தான் ஆத்மா என்று கொண்டால் ஆத்மாவையும் ஆத்மாவின் இடத்தில் இருக்கும் ஞானம் ஸூகம் துக்கம்
முதலான குணங்களையும் நம்மால் அறிய முடியாமல் போகும்
இது உலகிற்குப் புறம்பானது -நமக்கு நான் அறிகிறேன் நான் ஸூகமாக உள்ளேன் நான் துக்கமாக உள்ளேன் என்று
ஆத்மாவையும் ஆத்மாவின் குணங்களையும் பற்றின அறிவு கண்டிப்பாக ஏற்படுகிறது
இது ஏற்பட முடியாது மனது தான் ஆத்மா என்று கொண்டால்-

தேகாத்ம பிரமம் தவிர்த்தால் தானே வேறே லோகம் என்று கைங்கர்யம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வரும்
இனி ஆத்மாவின் குணங்கள் பார்ப்போம்

ஜீவாத்மாவின் குணங்கள்
ஞானம் -அறிவு
சம்ஸ்காரம் -பதிவு
ஞானம் -இச்சை -ஆசை என்றும் த்வேஷம் வெறுப்பு -என்றும் தூண்டி
பிரயத்தனம் -முயற்சி மூலம்
தர்மம் -புண்யம் / அதர்மம் -பாபம் -செய்து
ஸூகம் -துக்கம் ஏற்பட்டு
ஞானம் சம்ஸ்காரம்
இப்படி சுழன்று சுழன்று இருக்குமே

1-ஞானம் -புத்தி
2-ஆசை -இச்சா
3-த்வேஷம்
4-பிரயத்தனம் –க்ருதி
5-சுகம்
6-துக்கம்
ஏற்பட்டு சுகம் உடையவன் என்ற ஞானம் ஏற்படும்
7-தர்மம் -புண்யம்
8-அதர்மம் -பாபம் –
9-சம்ஸ்காரம் -ஞானம் முதலில் பின்பும் வந்து இது சம்ஸ்காரம் -பதிவு

இனி மனஸ்-ஒன்பதாவது த்ரவ்யம் பார்ப்போம்
சுகாதி உபலப்தி சாதனம்-இந்திரியம் -வழியாகவும் -கருவியாகவும் இருப்பது லக்ஷணம்
காரணமாக சாதனம் மட்டும் என்றால் ஆத்மாவும் காலமும் திக்குக்கும் சேரும் -அதி வியாப்தி தோஷம் வரும்

ஸூகம் -துக்கம் முதலான ஆத்மாவின் குணங்களை நாம் அறிவதற்கு காரணமாக இருக்கும் இந்திரியம் மனது
என்று மனதின் லக்ஷணம் சொல்லப்படுகிறது

மற்ற ஒரு லக்ஷணம் –
ஸ்பர்சம் அற்றதாகாவும் -செயல் உடையதாகவும் இருப்பது மனஸ்ஸூ –
ஸ்பர்சம் ரஹித -ஆகாசம் திக்கு காலம் ஆத்மா மனஸ் ஐந்துக்கும் உண்டு –
முதல் நான்கும் விபு -பரவி இருப்பதால் நகர முடியாதே -செயல் இருக்காதே –
செயல் உடையதாகவும் -கிரியாவத்வம்-மனசுக்கே
கண்ணால் பார்க்கிறோம் -ஒரு ஞானத்துக்கு ஒரு கருவி
நினைவு -ஸ்ம்ருதிக்கு கருவி மனசு –

நாம் பார்ப்பதுக்குக் கண் கருவியாக இருப்பது போல் நாம் சிந்திப்பதற்கு கருவியாக மனஸ்ஸூ உள்ளது
இரண்டு ஆத்மாக்களுக்குப் பொதுவாக ஒரே மனஸ்ஸூ இருந்தால் ஒருவர் நினைப்பதுவே மற்ற ஒருவரும்
நினைக்க வேண்டும் -அப்படி உலகில் காண்பது இல்லை
ஆகையால் ஒவ் ஒரு ஆத்மாவுக்கும் தனித்தனியாக ஒரு மனது உள்ளது
ஆத்மாக்கள் அனந்தமாக எண்ணில் அடங்காததாக இருக்கிறபடியால் மனசுக்களும் உலகில் அனந்தங்கள்
ப்ரத்யாத்ம நியதத்வாத் அனந்தம் –

மனத்தின் அளவு என்ன
இந்த்ரியத்தில் இருந்து ஒரு ஞானம் உண்டாவதற்கு
ஆத்மா –மனஸ் – இந்திரியம் -விஷயம் -என்கிற வரிசையில் சம்யோகம் ஏற்பட வேண்டும்
மனது விபுவாக இருந்தால் விபுவான மனதுக்கும் விபுவான ஆத்மாவுக்கும் சம்யோகம் ஏற்படவே முடியாது –
இரண்டு இடத்திலும் கிரியை ஏற்பட முடியாதபடியால் –
சம்யோகம் உண்டாகத் தானே கிரியை வேண்டும் நித்தியமான சம்யோகமாய் இருக்கட்டுமே என்றால் அதுவும் ஒவ்வாது

ஆத்மா மனசா சம்யுக்த-மனசா இந்திரியம் -அது விஷயம் இப்படி சங்கிலி தொடர்பால் ஞானம் –
இது இல்லாமல் தூங்கும் பொழுது விஷயமோ இந்த்ரியங்களோ இல்லாமல் -மனசு நினைத்தே சம்யோகம்
ஆழ்ந்த உறக்கத்தில் ஸூஷுப்தி -நிலையில் இந்த சம்யோகம் போகும்
ஆத்மாவுக்கும் மனசுக்கும் சம்யோகம் இல்லா விட்டால் தான் ஆத்மா ஆழ்ந்த தூக்கத்தை அடைய முடியும்
ஆத்மாவுக்கும் மனசுக்கும் நித்தியமான சம்யோகம் இருந்தால் சம்யோகம் இல்லாத காலமே இல்லாமல் போகும் —
ஆத்மாவுக்கு தூக்கமே ஏற்படாமல் போய் விடும் –
ஆகையால் மனஸ்ஸூ விபுவாக இருக்க முடியாது –

மனது நடுத்தர அளவை -மத்யம -பரிணாமத்தை -உடையதாக இருந்தால் அதுக்கு அழிவு நிச்சயம் ஏற்பட வேண்டும்
அதுவும் ஒப்புக் கொள்ள முடியாது
ஆகையால் மனஸ்ஸூ அணுவான நுண்ணியதாக த்ரவ்யமாகவே தான் இருக்க வேண்டும்
ஆத்மாவும் மனசும் அணு என்றால் மனஸ் ஸ்பிருதத் நாடிக்குள் போகும் -ஸ்ப்ருதத் குகைக்குள் மனசு இருந்தால் ஞானம் ஏற்படாது

மனசுக்கு மூன்று நிலை
இந்திரியங்கள் தொடர்பால் -ஞானம் –
ஸ்வப்னம் நிலையில் நினைவால் ஞானம் –
ஸ்ப்ருத்தத் உள்ளே போய் ஞானம் வராதே

அணுவாக இருப்பதால் அதை அழிப்பதற்கு வேறு ஒரு பொருள் உலகில் இல்லை
ஆகையால் மனஸ்ஸூ நித்யமாகத் தான் இருக்க வேண்டும் –
மோக்ஷம் -எப்படி நித்யம் என்றால் –
நியாய படி முக்தி -ஆத்மாவும் மனசும் தொட்டுண்டே இருந்தாலும் இயக்க மாட்டார் -சிந்திக்க மாட்டார்
நான் புஸ்தகத்தை தொட்டுக் கொண்டு இருக்கிறேன் போல் முக்தியிலும் அழியாமல் நினைக்க கருவியாக இல்லாமல்
மனசால் பாதிக்கப் பட மாட்டார்

இதுவரை ஒன்பது த்ரவ்யங்களைப் பார்த்தோம்
இனி -24-குணங்களைப் பார்த்து எந்த குணங்கள் எந்த த்ரவ்யங்களில் உள்ளன என்பதைப் பார்ப்போம்

————–

பாடம் –19-குணங்கள் -ரூபம் முதல் –சங்க்யா வரை –

ரூபம்
வடிவம் அல்ல நிறம் என்பதையே இங்கு ரூபம் என்கிறது
சஷூர் மாத்ர க்ராஹ்யம் குண -என்பது லக்ஷணம் -மூன்று தன்மைகள் -தலங்கள் –
சஷுர் இந்த்ரியத்தால் மட்டும் கிரஹிக்கப்படும் குணம் ரூபம் என்று அழைக்கப் படுகிறது
சஷுர் இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படுதல்
மற்ற இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படாமல் இருத்தல்
குணமாய் இருத்தல்
ஆகிய மூன்று பண்புகளின் சேர்க்கை தான் ரூபத்தின் லக்ஷணம் ஆகும்

இதில் முதலாவதான தலத்தை விட்டால் -எந்த இந்த்ரியத்தாலும் கிரஹிக்கப் படாத குருத்வம் -அதி வியாப்தி ஏற்படும் –
(பாரம் -எடை -புலன்களுக்கு எட்டாதது அனுமானித்துத் தான் அறியலாம் நியாய மதம் )
ஆகவே தலம் தேவை
இரண்டாவது தலத்தை விட்டால் -சம்யோகம் சங்க்யா முதலிய குணங்களில் அதி வியாப்தி உண்டாகும் –
அவையும் சஷுர் இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படும் குணங்கள் தான்
ஆகவே இரண்டாவது தலமும் தேவை
சம்யோகம் சங்க்யா முதலிய குணங்கள் த்வக் இந்த்ரியத்தாலும் கிரஹிக்கப்படுபவை
ஆகையால் மற்ற இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படாமல் இருக்கும் பண்பு அவற்றுக்கு இல்லை
(இது குடம் ஒரு குடம் என்பதை கண்ணை மூடி தொட்டு அறியலாமே )
மூன்றாவது தலத்தை விட்டால் ரூபத்வம் என்ற சாமான்யத்தில் அதி வியாப்தி வரும்
ஒரு குணம் எந்த இந்த்ரியத்தால் கிரஹிக்கப் படுகிறதோ அதே இந்திரியம் தான் அந்த குணத்தில் இருக்கும்
சாமான்யத்தையும் அந்த குணத்தின் அபாவத்தையும் கிரகிக்கும் என்ற நியமம் உள்ளது
ஆகையால் சஷுஸ்ஸால் கிரஹிக்கப் படுதல் -மற்ற இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படாமை என்ற இரண்டும்
ரூபத்வம் -நிறத்தன்மை –என்கிற சாமான்யத்துக்கும் உண்டு -ஆகையால் அதி வியாப்தி –
(ரூபத்வத்தின் அபாத்வமும்-இல்லாமையும் கண்ணாலே கிரஹிக்கிறோம்
ரூபத்வம் சாமான்யமாகத் தானே இருக்கும் குணம் ஆகாதே )
அத்தைப் போக்க மூன்றாவது தலத்தைச் சேர்க்க வேண்டும் ரூபத்வம் சாமான்யமே ஒழிய குணம் ஆகாது

இப்படி லக்ஷணம் பரீஷை பண்ணி அறிந்தால் மற்ற வித்யைகளுக்கு பழக்கம்- கை விளக்காக இருக்கும்

ரூபத்தின் வகைகள்
வெளுப்பு கருப்பு மஞ்சள் பச்சை சிவப்பு பழுப்பு சித்ரம்-கலவை இப்படி ஏழு வகை
White, Black, Yellow, Green, Red, Brown and Mixed.

ரூபம் என்கிற குணம் பிருத்வீ ஜலம் தேஜஸ்-ஆகிய மூன்று த்ரவ்யங்களில் உண்டு
பிருத்வியில் ஏழு வகை ரூபங்களும் உண்டு
ஜலத்தில் அபாஸ்வர சுக்லம் ஒளி விடாத வெண்மை -transparent என்ற நிறம் உள்ளது –
ஒரு பொருளில் நிறம் இருந்தால் தான் அது கண்ணுக்குப் புலப்படும் என்கிற நியமம் உண்டே –
(ஆகாசம் இதனால் தான் கண்ணுக்குத் தெரிய வில்லை என்கிறார் )
ஆகையால் ஜலத்திலும் ரூபம் உண்டு
தேஜஸ்ஸிலே பாஸ்வர சுக்லம்-ஒளி விடும் வெள்ளை -என்ற நிறம் உள்ளது
நெருப்பில் மஞ்சள் போன்ற நிறங்கள் அதில் சேர்க்கப்பட்ட பிருத்வியாலான எரி பொருள்களின் நிறங்கள்

வெவ்வேறு நிறங்களைக் கொண்ட அவயவங்களில் இருந்து -நூல்களில் இருந்து -ஒரு அவயவி -துணி -உண்டானால்
அது கண்ணுக்குப் புலப்படுகிற படியால் அதில் ரூபம் இல்லை என்று சொல்ல முடியாது —
(துணி ரூபம் தெரிகிறது அவயவங்கள் நிறம் தான் என்று சொல்ல முடியாதே –
ரூபம் வியாப்த்த விருத்தி ஒன்றாகவே இருக்கும் என்பர் )
ஒரு பொருளில் எங்கும் ஓக்க ஒரு நிறம் தான் இருக்க முடியும் என்கிறபடியால்
ஒவ் ஒரு பகுதியில் ஒவ் ஒரு நிறம் உள்ளது என்று சொல்ல முடியாது
ஆகையால் புதிதான சித்ர -ரூபம் -கலவை -கலந்த ரூபம் என்ற ஓன்று அந்த துணியில் இருப்பதாக
ஒப்புக் கொள்ளப் படுகிறது

————–

ரஸம் -சுவை
ரசன இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படும் குணம் -என்று ரஸத்தின் லக்ஷணம்
இங்கு மாத்ர விசேஷணம் இல்லை -இரண்டு தலங்கள் தான் –
ரஸத்வம் -சாமான்யம் -சாமான்யத்துக்கும் உண்டே அதி வியாப்தி -வரும் ஆகவே குணம் விசேஷணம் –

அது ஆறு வகைப்படும்
மதுரம் -இனிமை -அம்லம் புளிப்பு -ஆசிட் -லவணம்-உவர்ப்பு -கடு-கார்ப்பு -கஷாயம் -துவர்ப்பு -மற்றும் திக்தம் -கசப்பு
ரஸம் என்பது பிருத்வீ ஜலம்-இரண்டு த்ரவ்யங்களிலும் இருக்கும்
பிருத்வீயில் ஆறு வகைகளான சுவைகளும் இருக்க முடியும்
ஜலத்தில் மதுர ரசம் இனிப்பு மட்டும் தான் உண்டு -பொதுவாக இது நமக்குத் தெரியா விட்டாலும்
கசப்பான நெல்லிக்காயை உண்ட பின்பு ஜலத்தைப் பருகினால் அதில் இருக்கும் இனிப்பு நமக்குத் தெரிய வரும்

—————-

கந்தம்–மணம்
க்ராண இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படும் குணம் -கந்தத்தின் லக்ஷணம்
அது ஸூரபி -நறு மணம் என்றும்
அஸூரபி-துர் நாற்றம் என்று இருவகைப்படும்
கந்தம் என்பது பிருத்வியில் மட்டும் தான் உண்டு –
பிருத்வியில் இரண்டு வகையான கந்தங்களும் இருக்க முடியும்

சித்ர ரூபத்தை ஒப்புக் கொண்டதைப் போல்
சித்ர ரஸம் சித்ர கந்தம் என்பதை ஒப்புக் கொள்வது இல்லை
வெவ்வேறு நிறங்களைக் கொண்ட நூல்களில் இருந்து உண்டான துணியில் சித்ர ரூபம் என்ற ஓன்று இல்லாவிடில்
அந்தத் துணி கண்ணுக்குத் தெரியாமல் போய் விடும் -ஆகையால் அத்தை ஒப்புக் கொண்டோம்
இங்கு வெவ்வேறு ரசங்களைக் கொண்ட பகுதிகளில் இருந்து ஒரு த்ரவ்யம் உண்டானால்
அதில் ரஸம் இல்லாவிட்டாலும் குறை இல்லை
கண்ணும் தோலும் தான் த்ரவ்யத்தை அறியும்
க்ராண இந்திரியம் மணம் மட்டுமே கிரகிக்கும்
பச்சிடியில் சித்ர ரசம் இருக்கு என்று கொள்ள வேண்டாம் அதில் உள்ள அவயவங்கள் சுவைகள் ரசம் அறிகிறோம்

————–

ஸ்பர்சம் –தொடு உணர்ச்சி
த்வக் இந்த்ரியத்தால் மட்டும் கிரஹிக்கப்படும் குணம் என்று ஸ்பர்சத்தின் லக்ஷணம்
இங்கும் மாத்ர விசேஷணம் உண்டு –
அது மூன்று வகைப்படும் -சீதம் -குளிர்ச்சி -உஷ்ணம் -வெப்பம் -அனுஷ்ணா சீதம்-
ஸ்பர்சம் என்பது – பிருத்வீ ஜலம் தேஜஸ் வாயு -என்ற நான்கு த்ரவ்யங்களிலும் இருக்கும்
குளிர்ந்த ஸ்பர்சம் ஜலத்தில் இருக்கும்
வெப்பமான ஸ்பர்சம் தேஜஸ்ஸிலே இருக்கும்
பிருத்வியிலும் வாயுவிலும் மிதமான ஸ்பர்சம் இருக்கும்

வாயுவில் ஸ்பர்சம் மட்டும்
தேஜஸ்ஸில் ரூபமும் ஸ்பர்சமும் இரண்டும்
ஜலத்தில் ரூபம் ரஸம் ஸ்பர்சம் மூன்றும்
பிருத்வியில் ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் நான்கும் உண்டு

ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் -இவற்றின் நித்யத்வமும் அநித்யத்வமும்
பிருத்வீ ஜலம் தேஜஸ் மற்றும் வாயுவின் கார்யங்கள் அநித்யமான படியால்
அவற்றில் இருக்கும் ரூபங்கள் முதலானவை அநித்யங்கள்

ஜலம் தேஜஸ் மற்றும் வாயுவின் பரமாணுக்கள் நித்தியமான படியால்
அவற்றில் இருக்கும் ரூபம் முதலானவைகளை நித்யங்கள்

பிருத்வீ பரமாணுக்கள் நித்தியமாய் இருந்தாலும் அவற்றில் இருக்கும் ரூபம் முதலானவை நித்யங்கள் அல்ல
ஏன் என்றால் பிருத்வியில் பாகம் -ஒருவகை சமையல் -ஒரு விதமான வெப்பத்தின் சேர்க்கை ஏற்பட்டால்
மாங்காய் மாம்பழம் ஆகுதல் பால் தயிர் ஆகுதல் போன்ற இடத்தில் பரமாணு முதல் மாங்காய் பால் வரை உள்ள
அனைத்து த்ரவ்யங்களிலும் நிறம் சுவை மணம் இவை மாறுகின்றன
ஆகையால் பிருத்வீ பரமாணுக்களில் இருக்கும் ரூபம் முதலியவை நித்தியமாக இருக்க முடியாது

——————-

சங்க்யா–எண்ணிக்கை
ஏகாத்வாத் வியவஹார ஹேது சங்க்யா –
ஓன்று இரண்டு போன்ற சொல்லாடலுக்குக் காரணமாக இருப்பது சங்க்யா–என்று சொல்லப்படும் -எண்ணிக்கை
ஒரு பொருளில் இருக்கும் ஒருமை இருமை முதலியவையை இட்டுத்தான்
இது ஓன்று இவை இரண்டு போன்ற வார்த்தைப்பாடுகள் வருகின்றன

எண்ணிக்கை என்பது ஒன்பது த்ரவ்யங்களுக்கும் உண்டு
ஆகாசம் காலம் திக்கு ஒன்றே ஆகவே சங்க்யா இவற்றுக்கும் உண்டே –
ஓன்று இரண்டு மூன்று நான்கு –பத்து நூறு ஆயிரம் பதினாயிரம்–என்று தொடங்கி பரார்த்தம் வரை எண்ணிக்கை உள்ளது

ஒவ் ஒரு த்ரவ்யத்திலும் இயற்கையாக ஒருமை மட்டும் இருக்கும்
எண்ணிக்கை த்ரவ்யங்களை ஆஸ்ரயித்தே இருக்கும்
ஏகத்துவம்-பரமாணு நித்யம் -அதில் உள்ள ஏகத்துவம் நித்யம்
குடமே உண்டாகும் பொழுது அதில் உள்ள ஏகத்வமும் உண்டாகும்
அது நித்தியமான வஸ்துவாக இருந்தால் அதில் இருக்கும் ஒருமையும் நித்யமாகவே இருக்கும்
அது அநித்யமாக இருந்தால் அதில் இருக்கும் ஒருமையும் அநித்யம்

இருமை மும்மை முதலானவை அனைத்துப் பொருள்களிலும் அநித்யமானது தான்
அபேஷா புத்தி -தெரிந்து கொள்ளும் புத்தி வந்தால் தானே இருமை போன்றவை ஆகியவை தோன்றும் –
எப்பொழுது ஒருவனுக்கு இவை இரண்டு இவை மூன்று என்ற ஞானம் ஏற்படுகிறதோ
அப்பொழுது மட்டும் இருமை மும்மை ஆகியவை தோன்றும் –
அந்த ஞானம் அழிந்த உடன் அந்த எண்ணிக்கையும் அழிந்து விடும்

——————

பாடம் –20-
குணங்கள் –பரிமாணம் முதல் சப்தம் வரை –

6-வது குணம் -பரிமாணம் -அளவு
ஒரு பொருளைப் பற்றி ’இது சிறியது’, ’இது பெரியது’ போன்ற சப்த ப்ரயோகங்களுக்கு
(சொல்லாடல்களுக்குக்) காரணமாக இருப்பது பரிமாணம் என்று அழைக்கப்படுகிறது.
’சிறியது’ என்று ஒரு பொருளைச் சொல்ல, அதைப் பற்றிச் ’சிறியது’ என்ற ஜ்ஞாநம் இருக்க வேண்டும்.
’சிறியது’ என்ற ஜ்ஞாநம் ஏற்படுவதற்கு அந்தப் பொருளில் சிறுமை என்ற ஒரு அளவு (பரிமாணம்) இருக்க வேண்டும்,
சிறுமை இல்லாமல் சிறியது என்ற ஜ்ஞாநம் ஏற்பட முடியாது என்பது ந்யாய மதம்.

• பரிமாணம் -அளவு -என்பது ஒன்பது த்ரவ்யங்களிலும் உண்டு
நவ த்ரவ்ய வ்ருத்தி -ஸங்க்யை போல்

• அளவு -பரிமாணம்) நான்கு வகைப்படும் –
அணு (நுண்ணியதாயிருக்கும் தன்மை —
மஹத் (பெரியதாயிருக்கும் தன்மை )
தீர்க்கம் (நீண்டதாயிருக்கும் தன்மை ) மற்றும்
ஹ்ரஸ்சம் (குள்ளமாயிருக்கும் தன்மை ).

• ப்ருத்வி ஜலம் தேஜஸ் வாயு ஆகிய நான்கு பூதங்களின் பரமாணுக்களும் த்வ்யணுகங்களும்,
(இதுவும் கண்ணுக்குத் தெரியாது முன்பே பார்த்தோம் )
மனது (மனஸ்) என்ற த்ரவ்யமும் நுண்ணியவை — நம் கண்களுக்குப் புலப்பட மாட்டா.
ஆகையால் அவற்றுக்கு அணு பரிமாணம் உள்ளது.

ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு ஆகியவற்றில் த்ர்யணுகம் தொடங்கி
நாம் பார்க்கும் குடம், மரம், துணி, புத்தகம், நம் உடல், யானையின்
உடல், கடல், மஸல, சூறாவளி ஆகியவை அனைத்துமே மஹத்
(பெரியதாயிருக்கும் தன்மையை உடையவை )

• ஆகாசம் காலம் திக் ஆத்மா ஆகிய நான்கும் விபு (எங்கும் பரந்து
இருப்பவை ). இவற்றின் பரிமாணம் பரம மஹத்வம் (பெரியதாய்
இருப்பதன் மேல் எல்லை ) என்று சொல்லப்படுகிறது.

———

7-வது குணம் -ப்ருதக்த்வம்–வேறுபாடு –

இதி அஸ்மாத் ப்ருதக்

• “இந்தப் பொருள் அந்தப் பொருளிடம் இருந்து தனிப்பட்டது / வேறுபட்டது” என்ற வ்யவஹாரத்திற்கு
(சப்த ப்ரயோகத்திற்கு / வார்த்தைப் பாட்டிற்குக்) காரணம் ப்ருதக்த்வம் என்று சொல்லப்படுகிறது.
• இது ஒன்பது த்ரவ்யங்களிலும் இருக்கும்.
ஒரு ப்ருத்வீ பரமாணு மற்ற ஒரு ப்ருத்வீ பரமாணுவைக் காட்டிலும் தனியானது,
ஜல பரமாணுவைக் காட்டிலும் கூடத் தனியானது,
ஆகாசம் காலம் ஆத்மா முதலியவற்றைக் காட்டிலும் கூடத் தனியானது.
அதே போல் , ஆகாசம் என்பது காலம், திக், ஆத்மா, மனது, ப்ருத்வீ ஜலம் முதலானவற்றைக் காட்டிலும் தனியானது.
ஆகையால், ப்ருதக்த்வம் என்பது அனைத்து த்ரவ்யங்களிலும் உண்டு

———

8-வது குணம் -சம்யோகம் –சேர்க்கை –

அவயவி அவயவங்கள் சம்பந்தம் நூல்கள் துணி சமவாயம் முன்பு பார்த்தோம்
அவயவி இரண்டும் தொட்டுக் கொண்டு இருக்கும் -மேஜை கை -வெறுமனே தொட்டுக் கொண்டே இருக்கும் -சம்யோகம்

• “இந்தப் பொருட்கள் சேர்ந்துள்ளன / தொட்டுக் கொண்டுள்ளன” என்ற வ்யவஹாரத்திற்குக்
காரணம் சம்யோகம் என்று சொல்லப்படுகிறது. இருபொருள்களுக்கிடையே சம்யோகம் -சேர்க்கை –
இருப்பதால் தான் அவற்றை நாம் சம்யுக்தங்கள்-சேர்ந்தவை – என்று சொல்கிறோம்.
• இது ஒன்பது த்ரவ்யங்களிலும் இருக்கும்
• குடம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும், துணி நம் உடலைத் தொட்டுக் கொண்டிருக்கும்,
ஆகாசம் உலகிலிருக்கும் அனைத்தையும் தொட்டுக் கொண்டிருக்கும்.
இதே போல் எந்த த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டாலும் அது எதாவது ஒரு த்ரவ்யத்தைத் தொட்டுக் கொண்டு தான் இருக்கும்

கபாலம் குடம் பூமியில் இருக்கும் பொழுது
கபாலத்துக்கும் குடத்துக்கும் சமவாயம் குடத்துக்கும் பூமிக்கும் சம்யோக சம்பந்தம்
சம்யுக்த வ்யவகார ஹேது சம்யோகம்

———-

9-வது குணம் -விபாகம் –பிரிவு

• சம்யோகத்தை அழிக்கும் குணத்திற்கு விபாகம் என்று பெயர்.
• விபாகம் ஒன்பது த்ரவ்யங்களிலும் ஏற்பட முடியும்.
• இரண்டு பொருட்கள் தொட்டுக் கொண்டிருக்கும் போது, ஏதாேது ஒரு பொருளிலோ இரண்டு பொருள்களிலுமோ
க்ரியை ஏற்பட்டால், முதலில் விபாகம் என்ற குணம் இரண்டு பொருள்களிலும் ஏற்படும்.
அந்த விபாகம், அந்தப் பொருட்களுக்கு இடையில் இருக்கும் சம்யோகத்தை அழிக்கும் .
சம்யோகம் அழிந்த பிறகு தான் அந்தப் பொருட்கள் விலகிச் செல்கி்ன்றன

தேர் நகர -க்ஷணம் தோறும் -சம்யோகம் அழிந்து பூர்வ தேசம் சம்யோக நாசம் -உத்தர தேசம் –
கிரியை -விபாகம் -காலம் முன்பே பார்த்தோம்
கிரியை விபாகம் நாசம் சம்யோகம் இப்படி நான்கும் முன்பே பார்த்தோம்

———–

10/11-வது குணம் -பரத்வம் -அபரத்வம் —

• ’பரம்’, ’அபரம்’ போன்ற வ்யவஹாரங்களுக்குக் காரணமாக இருக்கும் குணங்கள் பரத்வமும் அபரத்வமும்.
• இவை ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு மற்றும் மனஸ் என்ற ஐந்து த்ரவ்யங்களில் இருக்கும்,
ஏன் என்றால் இவை தான் தேசத்தாலோ காலத்தாலோ அளவு பட்டவையாக இருக்க முடியும்.
எங்கும் பரந்து இருக்கும் ஆகாசத்ஸதப் பார்த்து, ஆகாசம் குடத்தைக் காட்டிலும் அருகில் உள்ளது என்று சொல்ல முடியாது
• பரத்வமும் அபரத்வமும் இரண்டிரண்டு வகைப்படும் –
திசையால் ஏற்பட்ட பரத்வம் அபரத்வம், காலத்தால் ஏற்பட்ட பரத்வம் அபரத்வம் என்று.
• தொலைவில் இருக்கும் பொருளில் திசையால் ஏற்பட்ட பரத்வம்
• அருகிலிருக்கும் பொருளில் திசையால் ஏற்பட்ட அபரத்வம்
• பழையதான பொருளில் காலத்தால் ஏற்பட்ட பரத்வம்
• புதியதான பொருளில் காலத்தால் ஏற்பட்ட அபரத்வம்-

ப்ராசீன நியாய மதஸ்தர் இந்த நான்கையும்-ப்ருதக்த்வம் -விபாகம்-பரத்வம் -அபரத்வம் –ஒத்துக் கொள்கிறார்கள்
நவீனர் ஒத்துக் கொள்வது இல்லை -சம்யோகங்கள் மூலமே இவற்றைச் சொல்லலாமே -என்பர் –

———————–

12-வது குணம் -குருத்வம் –எடை —

ஆத்ய பதன முதலில் விழுவதற்கு -அசமவாய காரணம்-குருத்வம்
• ஒரு பொருள் முதன் முதலில் விழுவதற்குக் காரணமான குணம் குருத்வம் என்று அழைக்கப் படுகிறது.
• நாம் கையில் ஒரு பந்தைப் பிடித்துக் கொண்டிருந்து, அதை விடுவித்தால், அந்தப் பந்து விழுகிறது.
விழுதல் என்பது அபேக்ஷணம் –பதநம் என்ற ஒரு வகையான செயல் (கர்ம / க்ரியை ).
10 அடி உயரத்திலிருந்து பூமிக்கு அந்தப் பந்து விழுவதற்குள் அந்தப் பந்தில் எத்தனையோ க்ரியைகள் அடுத்தடுத்து ஏற்படுகி்றன.
• அதில் முதல் விழுதல் மட்டும் குருத்வம் என்று அழைக்கப் படும் -பொருளின் எடை காரணமாக ஏற்படுகிறது,
•விழத் தொடங்கியதும், அந்தப் பந்தில் ’வேகம்’ என்று ஒரு வகையான சம்ஸ்காரம் ஏற்படும்.
சம்ஸ்காரம் கடைசி குணம் -அதன் உள் பிரிவு தான் வேகம் —
ஆகையால், இரண்டாவது விழுதல் தொடங்கி அனைத்து க்ரியைகளும் வேகத்தி்ன் காரணமாகத் தான் உண்டாகி்றன,
குருத்வம் என்ற எடையால் அல்ல.
• ஆகவே, குருத்வத்துக்கு லக்ஷணம் சொல்லும் போது ’முதல் விழுதலுக்குக் காரணமானது’ என்று தான் சொல்ல வேண்டும்

• குருத்வம் (எடை ) என்னும் குணம் ப்ருத்வீ ஜலம் என்ற இரண்டு த்ரவ்யங்களில் மட்டும் தான் உண்டு

——————-

13-வது குணம் -த்ரவத்வம் –நீர்மை

ஆத்ய ஸ்யந்தன அசமவாய காரணம் இது

• ஒரு பொருள் முதன் முதலில் ஓடுவதற்குக் (ப்ரவஹிப்பதற்குக்) காரணமான குணம்
த்ரவத்வம் என்று அழைக்கப் படுகிறது.
• ஓர் அணையில் நீரைத் தேக்கி வைத்து, அணையின் மதகைத் திறந்தால், நீர் ஓடுகிறது.
விழுதல் என்பது ஸ்யந்தனம் என்ற ஒரு வகையான செயல் (கர்ம / க்ரியை ).
நீர் ஒரு அடி தூரம் ஓடுவதற்குள் அந்த நீரில் எத்தனையோ க்ரியைகள் அடுத்தடுத்து ஏற்படுகி்றன.
• அதில் முதல் ஓடுதல் மட்டும் த்ரவத்வம் என்று அழைக்கப்படும்–
பொருளின் நீர்மை காரணமாக ஏற்படுகிறது,
• ஓடத் தொடங்கியதும், அந்த நீரில் ’வேகம்’ என்று ஒரு வகையான சம்ஸ்காரம் ஏற்படும்.
ஆகையால், இரண்டாவது ஓடுதல் தொடங்கி அனைத்து க்ரியைகளும் வேகத்தி்ன் காரணமாகத் தான் உண்டாகி்றன,
த்ரவத்வம் என்ற நீர்மையால் அல்ல.
• ஆகவே, த்ரவத்வத்துக்கு லக்ஷணம் சொல்லும் போது
’முதல் ஓடுதலுக்குக் காரணமானது’ என்று தான் சொல்ல வேண்டும்

• த்ரவத்வம் (நீர்மை) என்னும் குணம் ப்ருத்வீ ஜலம் தேஜஸ் ஆகிய மூன்று த்ரவ்யங்களில் மட்டும் தான் உண்டு

த்ரவத்வதின் வகைகள்

• த்ரவத்வம் இரண்டு வகைப்படும்–
சாம் சித்திக (இயற்கையான) த்ரவத்வம்,
ஸந மித்திக (செயற்கையான ) த்ரவத்வம் என்று.
• இயற்கையான த்ரவத்வம் ஜலத்திற்கு மட்டும் தான் உண்டு.
• செயற்கையான த்ரவத்வம் ப்ருத்வீயிலும் தேஜஸ்ஸிலும் ஏற்படும்.
• ப்ருத்வீ யாலான அனைத்து த்ரவ்யங்களிலும் த்ரவத்வம் செயற்கையாகக் கூட ஏற்படுவதில்லை . உதாஹரணத்திற்கு,
ஒரு குடமோ துணியோ எப்போதும் த்ரவமாக ஆகாது.
ஆனால், நெய் மெழுகு , அரக்கு போன்ற ப்ருத்வீ பொருட்கள், நெருப்பி்ன் வெப்பம் பட்டால், தனது கெட்டிப்பட்ட நிலையை
விட்டு, த்ரவமாக ஆவதைக் காண்கிறோம். ஆகையால், ப்ருத்வீயாலான சில பொருட்களில் த்ரவத்வம் உண்டு.
• அதே போல், தங்கம்,வெள்ளி இரும்பு போன்ற தேஜஸ்ஸாலான பொருட்களுக்கும் நெருப்பி்ன் தொடர்பால்
த்ரவத்வம் ஏற்படுவதைக் காண்கிறோம்.
• ஆகையால், ப்ருத்வீ யாலான சில பொருட்களுக்கும் தேஜஸ்ஸாலான சில பொருட்களுக்கும் த்ரவத்வம் செயற்கையாக ஏற்படுவதுண்டு.

—————-

14-வது குணம் -ஸ்நேஹம்–பசை

• சூர்ணம் (பொடி) முதலியவை பிண்டமாக (கட்டியாக) ஆகுவதற்குக் காரணமான குணம் தான் –
ஸ்நேஹம்–பசை- என்று அழைக்கப்படுகிறது.
• ஸ்நேஹம்– என்பது ஜலத்தில் மட்டும் தான் உண்டு.
• நெய் எண்ணெய் , முதலியவற்றில் நாம் காணும் ஸ்நேஹம்–பசை கூட, அதிலிருக்கும் ஜலத்தினுடையது தான்

————

15-வது குணம் -சப்தம் –ஒலி

ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் க்ரஹிப்படும் குணம் தான் சப்தம் என்று அழைக்கப் படுகிறது.
• ஆக, (i) ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் க்ரகிக்கப்படுதல்
(ii) குணமாக இருத்தல் ஆகிய இரண்டு பண்புகளும் சேர்ந்து தா்ன் சப்தத்தி்ன் லக்ஷணம் ஆகி்றன.
• இதி முதல் தலத்தை விட்டு விட்டால்
குணமாய் இருப்பது சப்தத்தி்ன் லக்ஷணம் என்று ஆகும்.
இந்த லக்ஷணத்திற்கு மற்ற அனைத்து குணங்களிலும் அதி வ்யாப்தி சேரும்.
அதைப் போக்குவதற்குத் தான் முதல் பண்பு சேர்க்கப்படுகிறது
• இரண்டாவது தலத்தைச் சேர்க்காமல் போனால், ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் க்ரஹிக்கப்படுதல் என்ற பண்பு
சப்தத்தில் இருப்பது போல் , சப்தத்வம் என்ற சாமாந்யத்திலும் இருக்கும்படியால் அதி வ்யாப்தி ஏற்படும்.
அதைப் போக்கத் தான் இரண்டாேது தலம் சேர்க்கப்படுகிறது.

• சப்தம் என்னும் குணம் ஆகாசத்தில் மட்டும் தான் இருக்கும்
வாயு இவற்றை எடுத்து வரும் –

• சப்தம் இரண்டு வகைப்படும் – (i) த்வநி (ii) வர்ணம்
• த்வநி என்பது ம்ருதங்கம், பேரீ முதலானவற்றிலிருந்து வருவது
• வர்ணம் (எழுத்து) என்பது தமிழ், சம்ஸ்க்ருதம் முதலான மொழிகளின் வடிவமாக இருக்கும் ஒலிகள்

சப்தம் உண்டாகும் முறைகள்

• சப்தம் மூன்று வழிகளில் உண்டாகிறது
• (i) சம்யோகத்திலிருந்து – நம் கையால் ஒரு ம்ருதங்கத்தை அடிக்கும் போது ஏற்படும் சப்தம்,
நம் கைக்கும் அந்த வாத்தியத்துக்கும் ஏற்பட்ட சம்யோகத்தால் ஏற்படுகிறது
• (ii)விபாகத்திலிருந்து – ஒரு மூங்கிலை எடுத்து, கையால் இரண்டாக முறித்தால், ஒரு ஒலி ஏற்படும்.
அந்த ஒலி, மூங்கிலி்ன் இரு பகுதிகளுக்குள் ஏற்படும் விபாகம் என்ற குணத்திலிருந்து உண்டாகிறது
• (iii) சப்தத்திலிருந்து – ம்ருதங்கத்தை அடிப்பதால்,
வாத்தியம் இருக்கும் இடத்தில் உள்ள ஆகாசப் பகுதியில் சப்தம் உண்டாகும்.
அந்த சப்தம் தனக்கு அருகிலிருக்கும் தேசத்திலுள்ள ஆகாசப் பகுதியில் தன்னைப் போன்ற வேறு ஒரு சப்தத்தை உண்டாக்கும்.
இதே போல் தொடர்ந்து அடுத் தடுத்த ஆகாசப் பகுதியில் ஒரு சப்தம் அடுத்த சப்தத்தை உண்டு செய்வதால் தான்
சப்தம் நம் காது வரையில் வந்து அடைகிறது-
தண்ணீரில் ஒரு கல்லை போட்டால் எப்படி சிறு சிறு அலைகள் நடுவில் தொடங்கி கரை வரை வந்து சேருமோ
அதே போல் தான் -வீஸீ தரங்க நியாயம்

மேலே புத்தி தொடங்கி மீதம் உள்ள ஒன்பது ஆத்ம குணங்களைப் பார்ப்போம்

———————-

பாடம் –21-குணங்கள் –புத்தி -அறிவு –

16th குணம் -சர்வ வியவஹார ஹேது ஞானம் புத்தி –

தத்வ ஞானத்தால் மோக்ஷம் -அஞ்ஞானத்தால் சம்சார சூழலில் அழுந்துகிறோம் -எல்லா தர்சனங்களிலும் இது உண்டே –

புத்தி என்கிற சொல்லுக்கு சில இடங்களில் அந்த:கரணம் (உள்-இந்த்ரியம் / உட் புலன் ) அதாவது
மனது என்ற பொருள் உண்டு.
அதே போல் புத்தி என்றால் ’உறுதி’ என்ற அர்த்தமும் உண்டு.
ஆனால் இங்கு இவை குறிக்கப் படுவது இல்லை —
புத்தி என்ற சொல் ஜ்ஞாநம் (அறிவு) என்பதைத்தான் இங்கு சொல்லுகிறது.
’புத்தி’, ’ஜ்ஞாநம்’, ’உபலப்தி’ என்ற சொற்கள் எல்லாம் ஒரே அர்த்தத்தைத் உடையவையே
-அநர்த்தாந்தரம்-என்று கௌதமர் அவரது ஸூத்ரத்தில் கூறுகிறார்.

• கீழே ப்ருதக்த்வம், சம்யோகம், பரிமாணம் ஆகியவற்றுக்கு இலக்கணம் சொல்லும் போது
(i) “இவை தொட்டுக் கொண்டுள்ளன என்கிற வ்யவஹாரத்திற்குக் (சொல்லாடலுக்குக்) காரணமானது ஸம்யோகம்
(ii) ’இது தனி யாயது” என்கிற வ்யவஹாரத்துக்குக் காரணமானது ப்ருதக்த்வம்
(iii) ’இது சிறிது”, ’இது பெரிது” என்கி்ற வ்யவஹாரங்களுக்குக் காரணமானது பரிமாணம் (அளவு)
என்று எல்லாம் இலக்கணம் சொன்னோம் —
ஆக, ஒரு பொருளைப் பற்றின ஒவ் ஒரு குறிப்பிட்ட வ்யவஹாரத்திற்கு,
அந்தப் பொருளிலிருக்கும் ஒவ் ஓரு குணம் அறியப் பட்டிருக்க வேண்டும்.

• இப்பொழுது புத்தியி்ன் இலக்கணம் யாது எனில் –
“அனைத்து வ்யவஹாரங்களுக்கும் ( சப்த ப்ரயோகங்களுக்கும்) காரணமானது புத்தி” என்பது தான் .
சர்வ வியவஹார ஹேதுவே புத்தி
• ’அர்த்தம் புத்த்வா சப்த ரசநா (ஒரு பொருளை அறிந்து கொண்ட பிறகு தான் அதைப் பற்றிப் பேச முடியும்’ என்கிற
ந்யாயத்தி்ன் படி எந்த ஒரு வ்யவஹாரத்திற்கும் முன்னால் பேசப்படும் பொருளைப் பற்றின ஜ்ஞாநம் இன்றியமையாதது —
ஆகையால் அனைத்து வ்யவஹாரங்களுக்கும் காரணமானது புத்தி என்கிற அறிவு தான் –

ஞானத்தின் வகைகள் –
• அந்த புத்தி (அறிவு) இரண்டு வகைப்படும்
(i) ஸ்ம்ருதி – நினைவு
(ii) அநுபவம்

• ஸ்ம்ருதியி்ன் இலக்கணம் – “ஸம்ஸ்காரத்திலிருந்து மட்டுமே உண்டாகக் கூடிய ஜ்ஞாநம் தான் ஸ்ம்ருதி” என்று சொல்லப் படுகிறது.
• நாம் ஒரு பொருளை பார்க்கும் பொழுதோ கேட்க்கும் பொழுதோ அந்த அறிவு சில விநாடிகள் தான் இருக்கும்.
ஆனால், அது ஆத்மாவில் ஒரு பதிவை (ஸம்ஸ்காரத்தை ) ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது.
பிற்காலத்தில், இந்தப் பொருளோடு தொடர்பு பட்ட வேறு ஒரு பொருளை நாம் கண்டால், இந்த சம்ஸ்காரம் தூண்டப்பட்டு இந்தப்
பொருளைப் பற்றின நினைவு நமக்கு ஏற்படுகிறது.
ஸம்ஸ்கார ஜன்ய ஞானம் -உத்போதகம் -சம்ஸ்காரம் தானே எழுப்பும் –
யானைப் பாகனைப் பார்த்து யானை உடன் சேர்ந்து பார்த்த அனுபவத்தின் பதிவு -தொடர்பு பட்ட சம்ஸ்காரம்
ஆக, ஸ்ம்ருதி என்பது சம்ஸ்காரத்திலிருந்து மட்டும் தான் தோன்றுகிறது ,
அதற்கு புலன்கள் (இந்த்ரியங்கள்) தேவையில்லை . அதனால், நாம் சொன்ன இலக்கணம் பொருந்தும்.

• ’சம்ஸ்காரத்திலிருந்து மட்டுமே ’ என்று சொல்லாமல் போனால் , ப்ரத்ய பிஜ்ஞா என்ற ஒரு வகையான அநுபவத்தில் அதி வ்யாப்தி ஏற்படும்.
ப்ரத்யபிஜ்ஞா என்பது,recognition-அவனே தேவதத்தன் – முன்னால் பார்த்த ஒருவரை இன்று மறுபடியும் காணும் போது
“அன்று நான் பார்த்தவரே தான் இவர் என்று நமக்கு ஏற்படும் அறிவு. கண் முன் இருப்பவரைக் காண்பதற்கு இந்த்ரியங்கள் தேவை ,
கடந்த காலத்தில் இவரைத் தான் பார்த்தேன் என்று அறிய சம்ஸ்காரம் தேவை –
ஆக இந்த்ரியமும் ஸ்ம்ஸ்காரமும் சேர்ந்து இந்த ஜ்ஞாநத்தை உண்டு செய்கி்ன்றன.
ஆகவே, “மட்டும்” என்று சொல்லாமல், ’சம்ஸ்காரத்திலிருந்து ஏற்படுவது ஸ்ம்ருதி’என்று சொன்னால் , ப்ரத்யபிஜ்ஜையில் அதிவ்யாப்தி ஏற்படும்

• “ஸ்ம்ருதியைத் தவிர்ந்த ஜ்ஞாநம் அனைத்துமே அனுபவம் தான் என்று அநுபவத்திற்கு இலக்கணம்

யதார்த்த அனுபவம்
• அநுபவம் என்பதும் இரண்டு வகைப்படும் – (i) யதார்த்தம் – சரியான அறிவு (ii) அ யதார்த்தம் – தவறான அறிவு.
• யதார்த்த அநுபவம் என்றால் –
“ஒரு தன்மையை உண்மையாக உடைய ஒரு பொருளை அந்தத் தன்மையை உடையதாக அறியும் அநுபவம்”.
நான் ஒரு குடத்தைப் பார்த்து ’இது குடம்’ என்று அறிகிறேன் , அதாவது
“(இது) என் கண் முன் இருக்கும் பொருள் (குடம்) குடத் தன்மை என்னும் சாமாந்யத்தைக் கொண்டது’ என்று அறிகிறவன்
என் கண் முன் இருக்கும் அந்தப் பொருள் உண்மையாகவே குடமானபடியால், அதில் உண்மையாகவே
குடத்தன்மை இருக்கிறது. -ஆகவே என்னுடைய அறிவு யதார்த்தம் (சரியான அறிவு) ஆகிறது.

• அறியப்படும் பொருளுக்கு ’விசேஷ்யம் / தர்மி’ என்று பெயர்.
அந்தப் பொருளில் இருப்பதாக அறியப்படும் தன்மைக்குப் ’ப்ரகாரம் / தர்மம்’ என்று பெயர்.
• ஒரு அறிவில் ப்ரகாரமாக (தர்மமாக) எந்த ஒரு தன்மை ஆகிறதோ அந்தத் தன்மை , அந்த அறிவுக்கு விசேஷ்யமாய் இருக்கும்
பொருளில் உண்மையாகவே இருந்தால், அந்த ஜ்ஞாநம் யதார்த்த ஜ்ஞாநம் என்று சொல்லப்படுகிறது.
• ’இது குடம்’ = “என் கண் முன் இருக்கும் பொருள் குடத் தன்மையை உடையது’ என்ற அறிவில்,
கண் முன் இருக்கும் பொருள் விசேஷ்யம், குடத் தன்மை ப்ரகாரம் ஆகிறது.
நீலமான குடம் -விசேஷணம் -தன்மை தர்மம் நீலம் பண்பு -விசேஷ்யம் த்ரவ்யம் தர்மி -குடம் -பண்பை உடையது –
இவற்றையே பிரகாரம் பிரகாரி என்பர் -குடத்தன்மை கடத்தவம் potness சாமான்யம் உடையது –
அறிவுக்கு விசேஷ்யமான கண் மு்ன் இருக்கும் பொருளில், அறிவுக்கு ப்ரகாரமான குடத்தன்மை
உண்மை யாகவே உள்ளபடியால், இது சரியான ஜ்ஞாநம்.

அயதார்த்த அநுபவம்-
அயதார்த்த அநுபவம் என்றால் –
“ஒரு தன்மை இல்லாத ஒரு பொருளை அந்தத் தன்மையை உடையதாக அறியும் அநுபவம்”.
நான் ஒரு கயிற்றைப் பார்த்து ’இது பாம்பு’ என்று அறிகிறேன்
அதாவது “(இது) என் கண்முன் இருக்கும் பொருள் (பாம்பு)
பாம்புத் தன்மை என்னும் சாமான்யத்தைக் கொண்டது’ என்று அறிகிறேன் —
என் கண் முன் இருக்கும் அந்தப் பொருள் உண்மையாகவே பாம்பு அல்ல, கயிறு தான் , அதில்
உண்மையாகவே பாம்புத் தன்மை இல்லை , கயிற்றுத் தன்மை தான் உள்ளது.
ஆகவே என்னுடைய அறிவு அயதார்த்தம் (தவறான அறிவு) ஆகிறது.

• அறியப்படும் பொருளுக்கு ’விசேஷ்யம் / தர்மி’ என்று பெயர். அந்தப்
பொருளில் இருப்பதாக அறியப்படும் தன்மைக்குப் ’ப்ரகாரம் / தர்மம்’என்று பெயர்.
• ஒரு அறிவில் ப்ரகாரமாக (தர்மமாக) எந்த ஒரு தன்மை ஆகிறதோ அந்தத் தன்மை , அந்த அறிவுக்கு விசேஷ்யமாய் இருக்கும்
பொருளில் உண்மையில் இல்லை என்றால், அந்த ஜ்ஞாநம் அயதார்த்த ஜ்ஞாநம் என்று சொல்லப்படுகிறது.
• ’இது பாம்பு’ = “என் கண் முன் இருக்கும் பொருள் பாம்புத் தன்மையை உடையது’ என்ற அறிவில்,
கண் முன் இருக்கும் பொருள் விசேஷ்யம்,
பாம்புத் தன்மை தான் ப்ரகாரம் ஆகிறது.
அறிவுக்கு விசேஷ்யமான கண் மு்ன் இருக்கும் பொருளில் (கயிற்றில்), அறிவுக்கு ப்ரகாரமான பாம்புத் தன்மை உண்மையில்
இல்லாதபடியால், இது தவறான ஜ்ஞாநம்.

யதார்த்த அனுபவத்தின் வகைகள்
யதார்த்த அனுபவம் நான்கு வகைப்படும்
1-ப்ரத்யக்ஷம் –
நம் புலன்களால் ஏற்படும் அறிவு -கண்ணால் காண்கிறோம் -காட்சி ஒருவகை ப்ரத்யக்ஷம்
மூக்கால் மணத்தை முகர்கிறோம் -அந்த மணத்தைப் பற்றின ஞானம் ஒரு வகை ப்ரத்யக்ஷம்
2- அநு மிதி –
சமையல் அறையில் புகையையும் நெருப்பையும் சேர்த்தே பார்த்து இருக்கிற படியால்
நெருப்பை விட்டுப் பிரிந்து புகை இருக்காது என்று அறிந்து கொண்டு
பிரயாணம் பொழுது ஒரு மலையின் மேல் புகையைப் பார்த்த உடன் அங்கு நெருப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்
அந்த ஊகத்தால் ஏற்பட்ட ஞானத்துக்குத் தான் அநுமிதி என்று பெயர்
3-உபமிதி –
இந்தச் சொல் இந்தப் பொருளைக் குறிக்கும் என்று சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பை க்ரஹிக்கும் ஞானம் உபமிதி ஆகும்
4–சாப்த போதம்
ஒரு சொல் தொடரைக் கேட்டவுடன் அதன் பொருளைப் பற்றின அறிவு நமக்கு ஏற்படுகிறது -அதுவே சாப்த போதம் -என்று சொல்லப்படுகிறது

இவற்றின் விளக்கம் மேலே பார்ப்போம்

அயதார்த்த அனுபவம் மூன்று வகைப்படும்
1-சம்சயம்
சந்தேகம் -ஒரு பொருளைப் பார்த்து இது கயிறா அல்லது பாம்பா -இது கிளிஞ்சலோ அல்லது வெள்ளியோ என்று
ஏற்படும் சந்தேகத்துக்கு சம்சயம் என்று பெயர்
2-விபர்யயம்
தவறான நிச்சயம் -வெள்ளையான சங்கைப் பார்த்து -எனக்கு மஞ்சக் காமாலை நோய் இருக்கிறபடியால் –
இது மஞ்சளான சங்கு என்ற அறிவு எனக்குப் பிறக்கிறது
வெள்ளையா மஞ்சுளா என்று சந்தேகப்பட வில்லை -மஞ்சள் தான் என்று தவறாக முடிவு செய்து விட்டேன் -இதுவே விபர்யயம்
3–தர்க்கம்
ஒரு பொருளின் தன்மைகளை பார்த்து இப்பொருள் இப்படிப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக அதற்கு அந்தத் தன்மையும்
இருக்க வேண்டும் என்று வாதம் செய்வதே தர்க்கம் என்கிறோம்

இவற்றின் விளக்கம் மேலே பார்ப்போம் –

ஞானம் -புத்தி என்பதை இரண்டாக –
அதாவது -ஸ்ம்ருதி நினைவு -அனுபவம்
இந்த ஸ்ம்ருதி அனுபவம் இவற்றை யதார்த்தம் அயதார்த்தம் என்று இரண்டு வகை
யதார்த்தம் ப்ரத்யக்ஷம் அநு மிதி உபமிதி சாப்த போகம் என்று நான்கு வகை என்றும்
அயதார்த்தம் -சம்சயம் விபர்யயம் தர்க்கம் என்று மூன்று வகை என்று பார்த்தோம்

———-

பாடம் -22-ஸூகம் –முதல் அபாவம் வரை-

ஏழு த்ரவ்யங்கள் –24-குணங்கள் -7 பதார்த்தங்கள்

17th குணம்-ஸூகம் –

ஸர்வேஷா அனுகூல தயா வேதநீயம் ஸூகம்
ஸர்வேஷா பிரதிகூல தயா வேத நீயம் துக்கம்

அனைவராலும் -அனுகூலமாக -அறியப்படும் பொருள் தான் ஸூகம் என்று சொல்லப்படுகிறது
ஸூகம் ஏற்படுத்தும் கருவிகளில் ஒவ் ஒருவருக்கு ஓன்று ஓன்று பிடித்து இருக்கலாம் -பிடிக்காமலும் இருக்கலாம்
ஒருவருக்கு குளிர் பிடித்து இருக்கலாம் மற்று ஒருவருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்
ஒருவருக்கு இனிப்பு பிடித்து இருக்கலாம் -மற்ற ஒருவருக்கு அது பிடிக்காமல் கசப்பான ஓன்று பிடித்து இருக்கலாம்
ஆனால் அந்த கருவியின் மூலம் இறுதியில் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறதே -அது அனைவருக்கும் பிடித்தே இருக்கும்
அந்த ஸூகத்தை அடையும் வழிகளில் தான் மனிதருக்குள் விருப்பு வெறுப்புக்கள் மாறுபட்டு இருக்கும்
ஆகையால் அனைவராலும் விரும்பத்தக்க அறியப்படும் பொருள் என்ன என்றால்-ஸூகம் ஓன்று தான் –
ஆக அதுவே ஸூகத்தின் லக்ஷணம் ஆகும்

18th குணம்–துக்கம்

ஸர்வேஷா அனுகூல தயா வேதநீயம் ஸூகம்
ஸர்வேஷா பிரதிகூல தயா வேத நீயம் துக்கம்

அனைவராலும் பிரதிகூலமாக அறியப்படும் பொருள் தான் துக்கம் என்று சொல்லப்படுகிறது
ஒருவருக்குத் துக்கத்தை ஏற்படும் பொருள் தானே மற்ற ஒருவருக்கு துக்கத்தைக் கொடுக்காமல் இருக்கலாம்
ஆகையால் அவர் அத்தை வெறுக்க வேமாட்டார்
ஆனால் அவருக்கு துக்கம் தரும் பொருள் வேறு சில இருக்கலாம்
ஆகையால் துக்கம் ஏற்படுத்தும் பொருள்கள் தான் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருக்கலாமே ஒழிய
துக்கம் என்பது அனைவருக்குமே வெறுக்கத் தக்கதாய் இருக்கும் ஒரு பொருளாகத் தான் உள்ளது
ஆகையால் அனைவருக்கும் வெறுக்கத் தக்கதாக அறியப்படும் பொருள் என்ன என்றால் துக்கம் தானே –
ஆக அதுவே துக்கத்தின் லட்ஷணம் ஆகும்

ஆத்மாவின் மற்ற குணங்கள்
19th குணம்–இச்சை –ஆசை
20th குணம்-த்வேஷம் – வெறுப்பு -கோபம்
21st குணம்-பிரயத்தனம் -முயற்சி -உடலில் செயலை உண்டு செய்வது
22nd குணம்–தர்மம் -புண்யம் -வேத விஹித கர்ம க்ருத்யத்தால் வருமவை -விஹித கர்ம ஜெனிதம் தர்மம் –
நித்ய கர்ம -நைமித்திக கர்ம -காம்ய கர்ம —
23rd குணம்–அதர்மம் -பாபம் -வேத நிஷேதித்த கர்ம க்ருத்யத்தால் வருமவை -நிஷித்த கர்ம ஜெனிதம் அதர்மம் –
24th குணம்–ஸம்ஸ்காரம் -பதிவு –

சம்ஸ்காரம் -மூன்று வகைப்படும்
1-வேகம் -ஒரு பொருளில் ஏற்படும் செயலால் -கர்மத்தால் -அதில் வேகம் என்ற குணம் ஏற்படுகிறது –
மேற்கொண்டு அந்தப்பொருள் நகருவதற்காக காரணம் இந்த வேகம் உள்ளது –
இது செயலினுடைய அனைத்துப் பதார்த்தங்களிலும் இருக்கும்
ஆகையால் இது பிருத்வீ ஜலம் தேஜஸ் வாயு மற்றும் மனம் ஆகிய ஐந்து த்ரவ்யங்களிலும் உண்டு
2- பாவனா -பதிவு
ஒரு அனுபவித்தில் இருந்து உண்டாகி பின்பு நினைவு ஏற்படக் காரணமாக இருப்பதுவே இந்த சம்ஸ்காரம்
இது ஆத்மாவில் மட்டுமே இருக்கும்
அனுபவ ஜனித ஸ்ம்ருதி ஹேது பாவனா -ஆத்மாவுக்கு மட்டும் ஏற்படும் சம்ஸ்காரம்
ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு சம்ஸ்காரம்
நினைவும் ஒரு வகையான ஞானம் -பலமான சம்ஸ்காரம் பலம் இழந்த சம்ஸ்காரம் -இரண்டு வகை –
திரும்பி திரும்பி நினைக்க பதிவு அழுத்தமாக -உரு சொல்லச் சொல்ல திடமான சம்ஸ்காரம் –
ஒரே விஷயத்தைப் பற்றி பலவித சம்ஸ்காரம் இப்படி இரண்டு விதம் என்பர்
3-ஸ்த்தி ஸ்தாபக
ஒரு பொருளின் வடிவை மாற்றினால் அது மீண்டும் பழைய வடிவைக் கொள்வது –(Elasticity) –
சுத்தி வைத்துள்ள பாயை விரித்தால் மீண்டும் அது தானே சுருண்டு கொள்வது போல்
சில வகை பிருத்வியில் தான் இது இருக்கும்

த்ரவ்யங்களும் அவற்றின் குணங்களும்-
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக=எல்லா த்ரவ்யங்களிலும் உண்டு

1-பிருத்வீயில் உள்ள குணங்கள்
ரூப -ரஸ -கந்த -ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ -குருத்வ -த்ரவத்வ –
ஸம்ஸ்காரத்தில் வேகமும் ஸ்த்திஸ்தாபகமும் –ஆகிய -14-குணங்கள்

2-ஜலத்தில் உள்ள குணங்கள்
ரூப -ரஸ –ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ -குருத்வ -த்ரவத்வ -ஸ்நேகம்
ஸம்ஸ்காரத்தில் வேகம் –ஆகிய -14-குணங்கள்

3-தேஜஸ்ஸில் உள்ள குணங்கள்
ரூப-ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ –த்ரவத்வ –
ஸம்ஸ்காரத்தில் வேகம் –ஆகிய -11-குணங்கள்

4-வாயுவில் உள்ள குணங்கள்
ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ -ஸம்ஸ்காரத்தில் வேகம் –ஆகிய -9-குணங்கள்

5-ஆகாசத்தில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக –சப்த –ஆகிய -6-குணங்கள்

6-காலத்தில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -ஆகிய -5-குணங்கள்

7-திசையில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக –ஆகிய -5-குணங்கள்

8-ஜீவாத்மாவின் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக –புத்தி -ஸூகம் –துக்கம் -இச்சை -த்வேஷம் -ப்ரயத்ன –
தர்மம் -அதர்மம் -ஸம்ஸ்காரத்தில் -பாவனா -ஆகிய -14-குணங்கள்

9-பரமாத்மாவின் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -புத்தி–இச்சை -ப்ரயத்ன–ஆகிய -8-குணங்கள்

10-மனசில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ-அபரத்வ -ஸம்ஸ்காரத்தில் -வேகம் -ஆகிய -8-குணங்கள்

————

கர்ம –செயல்
எந்த ஒரு அசைவும் கிரியை -கர்ம -என்று சொல்லப் படுகிறது

இது ஐந்து வகைப்படும்
1-உத்க்ஷேபணம் -(Upward Motion)-இப்பொழுது உள்ள இடத்தில் இருந்தும் மேல் உள்ள இடத்துக்கு தொடர்பு ஏற்படக் காரணம்
ஊர்த்வ தேச சம்யோக ஹேது-
2- அபஷேபணம் -(Downward Motion)இப்பொழுது உள்ள இடத்தில் இருந்தும் கீழ் உள்ள இடத்துக்கு தொடர்பு ஏற்படக் காரணம்
3- ஆகுஞ்சனம் (Folding) –உடலுக்கு அருகில் உள்ள பொருளோடு தொடர்பு ஏற்படக் காரணமான செயல் -மடித்தல்
சரீர சன்னிகிருஷ்ட சம்யோக ஹேது
4-ப்ரசாரணம் -(Stretching)-உடலில் இருந்து தள்ளி இருக்கும் பொருளோடு தொடர்பு ஏற்படக் காரணமான செயல் -விரித்தல்
சரீர விப்ரக்ருஷ்ட சம்யோக ஹேது
5–கமனம் -மற்ற அனைத்து செயல்களும் இதில் அடங்கும் like linear motion, circular motion, rotation, etc

———–

சாமான்யம் –பொதுத் தன்மை
நித்யமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில் சமவாயம் என்கிற சம்பந்தத்தால் இருப்பதாகவும் உள்ள
பொருள் சாமான்யம் எனப்படுகிறது

ஆகவே
1-நித்தியமாக இருப்பதாயும்
2-ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில் இருப்பதாயும்
3-அதுவும் சமவாயம் என்ற சம்பந்தத்தால் இருப்பதாயும்
ஆகிய மூன்று தன்மைகளையும் கூட்டி தான் சாமான்யத்தின் லக்ஷணம் ஆகும்

நித்யம் -அநேகம்-அநேக பொருள்களில் சமவாய சம்பந்தத்தால் இருப்பதே லக்ஷணம் -மாட்டுத் தன்மை போல்

இதில் முதல் தலத்தை விட்டால் -சம்யோகம் -என்ற குணத்தில் அதி வியாப்தி வரும்
சம்யோகம் என்பதும் தொடர்வு ஏற்படும் பொருள்களில் சமவாய சம்பந்தத்தால் இருப்பது தான் –
ஆனால் நித்தியமாக இருக்காது
இரண்டாவது தலத்தை விட்டால் -நித்தியமாக இருத்தலும் சமவாய சம்பந்தத்தால் இருத்தலும்
ஜலம் தேஜஸ்ஸூ ஆகியவற்றின் பரமாணுக்களில் இருக்கும் ரூபம் ரசம் முதலானவற்றிலும் இருக்கிற படியாலும்
அதி வியாப்தி உண்டாகும்
மூன்றாவது தலத்தை விட்டால் அபாவத்தில் அதி வியாப்தி வரும் -மாட்டைக் காட்டிலும் வேறுபாடு என்கிற
அந்யோன்ய அபாவம் சிங்கத்தின் இடமும் குதிரையின் இடமும் உள்ளபடியால்
ஆனால் அபாவம் அதின் இருப்பிடத்தில் சமவாய சம்பந்தத்தால் இருக்காது

சாமான்யம் த்ரவ்யம் குணம் செயல் மூன்றிலும் இருக்கும்

————-

விசேஷமும் சமவாயமும்
நித்தியமான த்ரவ்யங்களில் -பிருத்வீ -ஜலம் -தேஜஸ்ஸூ -வாயு -என்கிற நான்கின் பரமாணுக்கள் –
ஆகாசம் காலம் திக்கு ஆத்மாக்கள் மனஸ்ஸூக்கள்-இவற்றில் இருந்து கொண்டு –
அவற்றை மற்ற அனைத்துப் பொருள்களில் இருந்தும் வேறுபடுத்திக் காட்டுபவை தான் விசேஷங்கள்

சமவாயம் -என்பது ஒரு நித்தியமான தொடர்பு–
இந்தத் தொடர்பு -அயுத சித்தங்களான -பிரிக்க முடியாதவையாக –பொருள்களின் இடையில் இருக்கும்
எந்த இரண்டு பொருள்களுக்குள் ஓன்று தான் இருக்கும் வரை மற்ற ஒன்றை ஆஸ்ரயித்து -அண்டி தான் இருக்குமோ
அந்த இரண்டு பொருள்களும்-அயுத சித்தங்கள் -பிரிக்க முடியாதவை -என்று கூறப்படுகின்றன

அவையாவன
அவயவியும் அவயவங்களும் -நூல் துணி –
ஒரு குணமும் அதன் இருப்பிடமும் -குடமும் சிகப்பு நிறமும்
ஒரு செயலும் அதன் இருப்பிடமும் -ராமர் நடக்கிறார் -நடத்தல் செயல் அண்டியே இருக்கும்
ஒரு சாமான்யமும் அதன் இருப்பிடம்
ஒரு விசேஷமும் அதன் இருப்பிடமான நித்ய த்ரவ்யமும்

———————

அபாவம் -இன்மை -a (Non-Existence)
1-ப்ராக் அபாவம்
ஒரு பொருள் உண்டாவதற்கு முன் க்ஷணம் வரை அந்தப் பொருளின் ப்ராக் அபாவம் இருக்கும்
ஆகவே -ப்ராக் அபாவம் -என்பது -தொடக்கம் அற்றது -முடிவு உடையது -அநாதி -ச அந்த-
2-ப்ரத்வம்ச அபாவம்
ஒரு பொருள் அழிந்த பிறகு அந்தப் பொருளின் -ப்ரத்வம்ச அபாவம் -அழிவு -இருக்கும்
ஆகவே -ப்ரத்வம்ச அபாவம் -என்பது தொடக்கம் உடையது முடிவு அற்றது -ச ஆதி -அநந்தம் –
3- அத்யந்த அபாவம்
முக்காலத்திலும் இருக்கும் அபாவம் இது
வாயுவில் நிறம் இல்லை -வெல்லத்தில் கசப்பு இல்லை என்பது போன்ற அபாவங்கள்
4- அந்யோன்ய அபாவம்
ஒரு பொருளில் மற்ற பொருள்களில் காட்டிலும் வேறு பாடு இருக்கும்
இந்த வேறுபாடு தான் அந்யோன்ய அபாவம் -என்று சொல்லப்படுகிறது
குடம் புடவை இல்லை மாடு ஆடு அல்ல போல்வன

———–

ஒன்பது த்ரவ்யங்கள்
24 குணம்
சப்த பதார்த்தங்கள்
லக்ஷணம் பரீஷை பார்த்தோம்
ப்ரமேயம்
பிரமாணம்
ஞானம் எப்படி ஏற்படும் -வகைகள் என்ன -ப்ரத்யக்ஷம் இத்யாதி -இவற்றின் தன்மைகள்-சரியான அறிவு என்ன
ப்ராசீன நவீன நியாயம் -இவற்றைப் பார்ப்போம்
கேள்வி பதில்கள் -self exams paarppom –

———-

பாடம் –23-கேள்வி பதில்கள் –

பிருத்வீ -பூவின் மணம் நுகரும் பொழுது -பூவின் துகள் -அணுக்கள் -பகுதிகள் பிருத்வீயாகவே இருக்க வேண்டும்
ரூபம் உண்டே -கண்ணுக்கு தெரியாமல் இருப்பது எதனால்
அணு பரிமாணம் -தெரியாதே -மிக சிறிய த்வி யணுகங்கள்-வரை தெரியாதே
பூக்கள் துகள்கள் அணு என்று சொல்ல முடியாது
அணுவாக இருந்து இருந்தால் அதில் உள்ள மணத்தை கிரகிக்க முடியாமல் இருக்குமே
த்ரி அணுகமோ பெரியதாகவோ தான் இருக்க வேண்டும்
ரூபம் எதனால் தெரியவில்லை
உத்பூதம்-நன்றாக விளங்கும் /manifest ஆகாமல் அநு பூதமாய் இருக்கும் -வெளிப்படாமல் அடங்கி இருக்கும்
தங்கக்கட்டி -தேஜஸ் உடன் -பாஸ்வர ஸூக்லம் -உடன் பிருத்வீ பகுதியும் சேர்ந்த கூட்டு போல்
தேஜஸ் உஷ்ண -இருந்தாலும் தொட்டால் சுடாமல் இருப்பது பிருத்வி பகுதி கலசி இருப்பதால் அநுபூதமாய் இருப்பது போல்
இப்படி இரண்டு விதமாக அநுபூதமாய் இருக்கும்
ஆகவே அணு அல்ல மஹத் தான் ரூபம் அனுபூதம்

சரீரம் இந்திரியம் விஷயம் மூன்றாக பிரித்து பார்த்தோம்
விஷயத்துக்குள் இந்திரியங்களும் சரீரமும் அடங்கும்
ஞானத்தால் அறியப்படும் தன்மை பொது தான்
அனைத்துமே விஷயம் என்றாலும் நமக்குத் பிரித்து அறிவதற்காக
இந்திரியங்கள் ஞானத்தை உண்டு பண்ணுதல் என்ற கோணத்தில் தனி ஸ்தானம்
அதே போல் சரீரமும் தனி ஸ்தானம்
எனவே பிரித்துப் பார்க்கிறோம்

காலம்
லக்ஷணம் அதீதாதி வியவகார ஹேது -கடந்த காலப் பொருள் போன்ற சப்த பிரயோகம் –
அநாகதம் -இன்னும் வராதது
வர்த்தமானம் -நிகழ் காலம் -verbal expression

திக்கு
லக்ஷணம் -இது கிழக்கில் இருக்கும் பொருள்-வடக்கத்திக்காரன் – போன்ற வார்த்தைப் பாடுகளுக்கு காரணம்
திக்கு என்ற ஓன்று இருப்பதால் தானே

ஆத்மா
விபு -பலர் -என்றால் எப்படி பொருந்தும்
ஓன்று விபுவாக இருக்க மற்ற ஓன்று எப்படி
tangible -ஸ்பர்சம் இல்லாமல் இருந்தால் இருக்கலாம்
ஆகாசமும் பிருத்வியும் -குடம் இருக்கும் இடத்தில் ஆகாசமும் உண்டே
space எங்கும் -உண்டே தனக்குள் இடம் அளிக்கும் ஸூஷ்மம் பெரியதாக இருந்தாலும்
ஒரு இடத்தில் பல வெளிச்சம் வருமா போல்
subtle ஆக இருப்பதால் பொருந்தும்

ஒரு ஆத்மாவுக்கு ஒரு சரீரம் ஒரு மனஸ்ஸூ -ஆத்மாவுக்கும் சரீரத்துக்கு சம்யோகம்
விபுவாக இருக்க நான் ஆத்மா அனைவரையும் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டுமே
அனைத்து சரீரங்களையும் மனசுக்களையும் சம்யோகம்
அதிஷ்டானம் -என்று -என்னுடைய உடலை சம்யோகமும் தரித்தும் கொண்டு இருப்பதால்
மற்றவற்றை அதிஷ்டானம் பண்ணாதே

ஆத்மாக்களை எப்படி பிரித்து அறிவது
ஒருவருக்கு சுகம் மற்ற ஒருவருக்கு துக்கம்
இத்தை வைத்து அறியலாம்
ஸூஷ்ப்தி தசையில் மனஸ் வேறுபாடு
முக்தி -வேறுபாடு -விசேஷம் என்ற பதார்த்தம் ஒன்றால் வேறுபாடு காணலாம்

மூளை -வைதிக தரிசனத்தில் தனியாக இல்லை -ஒரு மாமிச பிண்டம் தான்
புத்தி ஞானம் -மனஸ் கருவி -ஆத்மா தான் சிந்திக்கும்

மனஸ் அணு -பார்த்தோம் -சம்யோகம் வைத்தே ஞானம் –
மத்யம பரிமாணம் -நடுத்தர அளவாக இருந்தால் அழியும்
அணுவான படியால் நித்யம்

ஆத்மா மனஸ் தொட்டு -மனஸ் இந்திரியம் தொட்டு -இந்திரியம் விஷயம் தொட்டு -ஞானம் என்றால்
ஒரே காலத்தில் பல புலன்கள் வேலை செய்வதைக் காண்கிறோம்
மனஸுக்கு மிக வேகமாக நகரும் சக்தி உண்டே
அடுத்து அடுத்த ஞானம் வந்தாலும் இடைவெளி தெரியாமல் ஒரே சமயத்தில் அறிகிறோம்
ஒரே காலத்தில் ருசித்துக் கொண்டே காண்கிறோம் என்று அறியும் படி –

கனவு -என்ன
ஸ்ம்ருதி -அனுபவம் -யதார்த்தம் -அயதார்த்தம்
கனவு –ஸ்மரணம் தான் -பார்த்த விஷயங்களை சேர்த்து -ஆட்டின் தலை வெட்டப்பட்டது என்னுடைய தலை -அயதார்த்தம்

இந்திரியங்கள் அணுவா மஹத்தா –
அணுவாக இருந்தால் அதன் குணங்களை அறிய முடியாது
அவயவங்களைக் கொண்டே இருக்கும் -ஆகாசம் ஸ்ரோத்ரம் இந்திரியம் மட்டும் இதுக்கு விதி விலக்கு
அணுவாக இருந்தால் அவயவங்கள் இருக்காதே
ஆனால் இந்திரியங்கள் கண்ணுக்கு எதனால் புலப்பட வில்லை –
அநுத் பூதம் -வெளிப்படாமல் இருப்பதால் புலப்பட வில்லை -manifest ஆகாமல் இருப்பதால்

இச்சா த்வேஷா -நடுவில் உதாசீனம் –indifferent தனி குணமா
இரண்டின் அபாவமே

சம்ஸ்காரம் -பதிவு -முன் பிறவிகள் பதிவு எதனால் ஸ்மரிக்க முடியவில்லை
பதிவு -இந்தப்பிறவியிலே கீழ் உள்ளதை மறக்கிறோம்
வியாதி -காலம் ஆனால் அழியலாம்
பெரிய துக்கம் மரணம் வந்தால் பதிவுகளை அழிக்கலாம்
சில ரிஷிகள் தான் அறிவார்கள்

திடமான சம்ஸ்காரம் ஆக்க அத்தை மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும் அப்பியாசம் வேண்டும்

சத்தா –சாமான்யம்
மாடு -மாட்டுத்தன்மை -பொதுத்தன்மை
பரம் அபரம்-இரண்டு வகை -அதிகமான இடங்களில் உள்ள சாமான்யம்
குடத்தன்மை -பிருத்வித்வம் இதற்குள் குடத்தன்மை ஒரு வகை தானே
குடத்தன்மை அபரம்–பிருத்வித்வம் பரம்
த்ரவ்யத்வம் -ஒன்பது வகை த்ரவ்யங்களிலும் உண்டு -பிருத்வித்வம் இதற்குள் ஓன்று தானே
சத்தா -exisடீence -இருத்தல் -அஸ்தி -அனைத்துக்கும் மேலே -சாமான்யம் -த்ரவ்யங்களிலும் குணங்களுலும் கிரியைகளில் இருக்கும்
இதற்குள் ஓன்று ஓன்று
இதுவே பரத்வம்

சாமான்யம் விசேஷயம் சமவாயம் உள்ளது என்று சொல்லாமல் இந்த மூன்றில் மட்டும் சத்தா என்பது ஏன்
ஜாதி -சாமான்யம் -இந்த மூன்றில் தான் இருக்க முடியும்
அங்கு எல்லாம் சாமான்யம் இல்லையே
சாமான்யத்வம் விசேஷத்வம் சமவாயத்வம் போன்றவை இல்லையே

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்