Archive for the ‘ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்’ Category

தத் த்வம் அஸி விளக்கம்-

June 9, 2025

தத்துவம் என்றால் தத்+த்வம்=அது நீயே.-அது எது? நாம் தேடிக்கொண்டிருக்கும் கடவுள். -த்வம் என்றால்-தேடி அலைந்துகொண்டிருக்கும் நீ-நீ கடவுள் என்பதே தத்துவம் என்பதன் அர்த்தம்-மஹா வாக்கியங்கள்-என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மஹா வாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மஹா வாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:
-1. பிரக்ஞானம் ப்ரஹ்மம் – “பிரக்ஞையே(அறிவுணர்வே) ப்ரஹ்மம்” (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்])
-2. அயம் ஆத்மா ப்ரஹ்மம் – “இந்த ஆத்மா ப்ரஹ்மம்”(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
-3. தத் த்வம் அஸி – “அது(ப்ரஹ்மம்) நீ” (சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம்)
தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய், அல்லது ‘நீ அதுவாக உளாய்’ என்றும் சொல்லலாம்.
-4. அஹம் ப்ரஹ்மாஸ்மி – “நான் ப்ரஹ்மம்” (யஜுர் வேதத்தின்பிருஹதாரண்யக உபநிடதம்)
-மேலே கூறப்பட்டுள்ள ப்ரஹ்மம்,பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் ‘ப்ரஹ்மத்தை’க் குறிக்கிறது தமிழில் கடவுள்,இறைவன் என்பதைக் குறிக்கிறது.
இந்த நான்கு மஹா வாக்கியங்களும் ஆத்மனுக்கும் ப்ரஹ்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது.
-சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் ஸ்வேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேத சாஸ்த்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்து விட்டுத் திரும்பும் வாலிபனிடம் “எதனால் கேள்விக் கேட்கப்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ் வுபதேசத்தை குருவிடம் தெரிந்து கொண்டாயா?”என்று கேட்கிறார்.
இதைத் தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்த முடிவாக இதே மஹா வாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார்.-ஒன்பது எடுத்துக் காட்டுகளில் சில-“எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகி விடுகின்றனவோ, -மற்றும் அவை அந் நிலையில் ‘நான் இது’என்று எங்ஙனம் அறிய மாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம் பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணு மாத்திரமான ஸூஷ்மப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்”-“ஆலம்பழம் ஒன்றைப் பிளந்தால் அணு வடிவான விதைகள் காணப் படுகின்றன. அவ் விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த ஸூஷ்மப் பொருளிலிருந்தே பெரிய ஆல மரம் உண்டாகி நிற்கிறது. எது அணு மாத்திரமான ஸூஷ்மப் பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்”-“உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக் கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல் பாகத்தையோ நடுப் பாகத்தையோ அடிப் பாகத்தையோ உண்டு பார்த்தால் அது உப்பாகவே யிருப்பது தெரியும். அதே போல் முக் காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணு மாத்திரமான அந்த ஸூஷ்மப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்”-“ஒருவனை கண்ணைக் கட்டி காந்தார தேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய் விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும்? அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஆத்ம ஞானம் பெற்று அப்பரம் பொருளுடன் ஒன்றுபடலாம். அணு மாத்திரமான் அந்த ஸூஷ்மப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்.த

தத் தவம் அஸி-இந்த வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஸ்தாபிக்கிறார் ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில். இதன் பொருள் என்ன என்பதை விளக்க சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு முழு அத்தியாயம் இருக்கிறது

ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்.” சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் “தத் தவம் அஸி” நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.

தந்தை “எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா,” என்று கேட்க ச்வேதகேது “ அது எப்படி சாத்தியம் “ என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.

யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத் 
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.

வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.

இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.

இதில் உத்தாலகருடைய மகன் ச்வேத கேது குருகுலவாசம் முடிந்து தந்தையிடம் வருகிறான். அவனைப் பார்க்கும்போது எல்லாம் அறிந்தவான் போல் ஒரு பெருமிதம் காணப்படுகிறது. அதைப் பார்த்து உத்தாலகர் கேட்கிறார்.-எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ (ஏக விக்ஞானேன சர்வ விஞ்ஞானம்) அந்த ஞானத்தை அடைந்தாயா என்று,-அவன் அது என்ன என்று கேட்கிறான் . அவன் தந்தை சொல்ல ஆரம்பிக்கிறார். “ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்.” சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் “தத் தவம் அஸி” நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.-தந்தை “எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா,” என்று கேட்க ச்வேதகேது “ அது எப்படி சாத்தியம் “ என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.

யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத் 
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.-இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.-ஸ்வேதகேது இதை அறியவில்லை என்றதும் அவரே சொல்ல ஆரம்பிக்கிறார்.“ஸதேவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத், ஏகம் எவ அத்விதீயம்’

சௌம்ய– அன்பு மகனே
அக்ரே – முதலில்
இதம்- இந்த பிரபஞ்சம்
ஸத் ஏவ- பிரம்மம் ஆகவே 
ஆஸீத்– இருந்தது 
(ஸத், தத், ஓம் என்ற சொற்கள் பிரம்மத்தை குறிக்கின்றன.)
ஏகம் ஏவ- அது மட்டும்தான் இருந்தது 
அத்விதீயம் – அதைத்தவிர வேறொன்றும் இல்லை

அக்ரே , முதலில் என்றால் எதற்கு முதலில்? படைப்பிற்கு முதலில் என்று அர்த்தம். அதாவது இந்த உலகம் படைப்பிற்கு முன் பிரம்மமாகவே இருந்தது என்று பொருள். ஏகம் ஏவ அத்விதீயம் ஒன்றுதான் இருந்தது இன்னொன்று இல்லை என்பதனால் அதிலிருந்துதான் எல்லாம் ஏற்பட்டது என்று பொருள்.-சரி பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது? 
தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் பிரஜாயேய என்கிறார்.-அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது.-அங்கே ‘தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,’ 
அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.-அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
‘அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்ய உப.)-இதன் பொருள், ‘இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.’

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.

எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.-அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.-இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.

எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

ச்வேதகேது மேலும் விளக்கத்தைக் கேட்கவே எட்டு உதாரணங்கள் மூலம் அதை விளக்குகிறார்.ஒவ்வொன்றையும் சொல்லி “ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ” என்று முடிக்கிறார்.

1. ஒரு தேநீயானது பல புஷ்பங்களில் இருந்து தேனை சேகரிக்கிறது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்த பின் எந்த மலரிலிருந்து எந்த தேன் வந்தது என்று தெரிவதில்லை. எல்லாம் ஒன்றாகவே ஆகிறது.

அதே போல ஜீவ ராசிகள் எப்படி அயர்ந்த தூக்கத்தில் இருக்கும்போது தன்னுடைய தனித் தன்மையை அறிய முடியவில்லையோ அது போல முடிவில் பிரம்மத்தில் லயித்து விடுகின்றன,. ஆனால் மறுபடி ஸ்ருஷ்டி தொடங்கும்போது தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன.

அதாவது மனிதன், விலங்குகள், பட்சிகள் , பூச்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளின் குணமும் ஸ்ருஷ்டிக்கு சிருஷ்டி மாறுபடுவதில்லை. புலி புல்லைத் தின்பதில்லை கொசு கடிக்காமல் இருப்பதில்லை. தூங்கி எழுந்த போது எப்படி அதனதன் இயற்கை மாறவில்லையோ அது போல,. முக்தியடைந்த ஜீவர்கள் மறுபடி பிறப்பதில்லை. மற்றவர்கள் அவரவர் கர்மவாசனைப்படி மறுபிறவி எடுக்கிறார்கள்.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும் எல்லா உயிர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் இறைவனிடம் ஒடுங்குகின்றன. கர்ம வாசனை பிரம்மஞானம் ஏற்பட்டு முக்தியடையும் வரை அழிவதில்லை. 

2.ஆறுகள் சமுத்திரத்தை அடையும் முன் தனித் தனிப் பெயர்கள் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் கடலில் கலந்ததும் அவைகளின் தனித் தன்மை போய் விடுகிறது. கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி எல்லாமே உப்புக்கடலாக மாறிவிடுகிறது. ஆயினும் அவை ஆவியாகி மறுபடி பூமியில் மழையாக சேரும்போது அவைகள் மறுபடி தனித் தனி உருவம் பெறுகின்றன. அதே போல ஜீவராசிகள் பிரம்மத்தில் ஒடுங்கும்போது தனித் தன்மையை இழந்தாலும் மறுபடி ஸ்ருஷ்டியின்போது பழைய நிலையை அடைகின்றன.

3. இந்த மரம் உயிருள்ளவரை தண்ணீர் குடித்து வாழ்கிறது. வேரில் உறிஞ்சிய தண்ணீர் மரத்தின் எல்லா பாகங்களுக்கும் செல்கிறது. ஆனால் அதன் ஒரு கிளையை ஒடித்துவிட்டால் அந்த ஒடிக்கப்பட்ட கிளையானது வாடி விடுகிறது. அதாவது அந்தக் கிளையிலிருந்து ஜீவன் போய்விட்டது. மரம் முழுவதுமே வெட்டப்பட்டால் அது மறுபடி துளிர்ப்பதில்லை.

அதே போல இந்த உடலில் ஆத்மாவானது இருக்கும் வரை உடல் உயிருடன் இருக்கிறது. ஆத்மா வெளியேறிவிட்டால் உடல் உயிரற்றதாகிறது. ஆனால் ஆத்மா அழிவதில்லை.

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது எது உறங்குவதில்லையோ அதுதான் ஆத்மா. அதன் அந்தராத்மாவாக இருப்பது பிரம்மம். அதுவே இந்த பிரபஞ்சத்தின் அந்தராத்மாவாக உள்ளது.

ஆனால் ச்வேத்கேதுவின் கேள்வி இதல்ல. ஸத் அல்லது பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமி சர்வவ்யாபி என்பதை உணர்ந்தாலும் எப்படி அது உலகமாக நாமரூப வடிவில் தோன்றுகிறது என்பதுதான் அவன் சந்தேகம். அதை மேலும் சில உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்

4. ஒரு ஆலம்பழத்தை எடுத்து அதைப் பிளந்தால் சிறிய விதைகளைப் பார்க்கிறோம். அதில் ஒரு விதையை எடுத்துப் பிளந்தால் உள்ளே என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. தந்தை கூறினார். இந்த வெற்றிடம் போல் காணப்படுவதில் இருந்துதான் இந்த பெரிய மரம் வளர்கிறது. அதேபோல உருவம் இல்லாத பிரம்மத்தில் இருந்துதான் இந்த பிரபஞ்சம் ஸ்தூல உருவில் தோன்றுகிறது,

5. ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு கரண்டி உப்பைப் போட்டால் அது கரைந்து விடுகிறது. அதில் உப்பு எங்கே என்று கண்டுபிடிக்க முடியுமா? அது எங்கும் பரவி உள்ளது, அதை உணரலாமே தவிர பார்க்க முடியாது. அதுபோல் பிரம்மம் எங்கும் பரவியுள்ளதானாலும் அதைக் காண இயலாது. ஏனென்றால் அது சர்வாந்தர்யாமியாக பிரபஞ்சத்தில் இருந்து பிரிக்கமுடியாததாடாக உள்ளது. ஆனால் எவ்வாறு தண்ணீரில் கரைந்த உப்பைக் காண முடியாவிட்டாலும் அதை சாப்பிட்டால் உணரமுடியுமோ அதைப் போல பிரம்மத்தை வேறுவிதமாக அறிய முடியும். எப்படி என்பதை இன்னும் சில உதாரணங்களுடன் விளக்குகிறார்

6. காந்தார தேசத்தைச் சேர்ந்த ஒரு மனிதனை கொள்ளைக்காரர்கள் அவனுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு அவன் கண்களைக் கட்டி அவனை ஒரு மனித சஞ்சாரம் அற்ற ஒரு காட்டில் விட்டுவிடுகின்றனர்.

அவன் நான்குதிசைகளிலும் ஓடி என்னைக் கண்ணில் கட்டி இந்த இடத்தில் விட்டுவிட்டனர் என்று கூவுகிறான். அப்போது அதைக் கேட்ட ஏதோ ஒரு நல்ல வழிப்போக்கன் அவன் கண்கட்டை அவிழ்த்து விடுகிறான். திக்கு திசை தெரியாத அவனிடம் காந்தார தேசத்திற்கு இந்த வழியாகப் போகவேண்டும் என்று சொல்கிறான். அதன்படி அவன் அந்த வழியிலே சென்று தன் இருப்பிடத்தை அடைகிறான்.

அதேபோல நாம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இந்த உலகத்தில் இருக்கிறோம்.நம்முடைய ஆசைகளே திருடர்கள். அவைகள் நம் அறிவைக் குருடாக்கி உலகம் என்ற காட்டில் அலைய விடுகின்றன.நம்முடைய அறியாமையே நம் கண்களுக்குபோட்ட கட்டு. வழிப்போக்கன் அந்த மனிதனுக்கு உதவினது போல் நம் குரு நமக்கு அறியாமை என்னும் கண்கட்டை அவிழ்த்து நல்ல வழியைக் காட்டுகிறார்.

இந்த உடலில் உள்ளவரைதான் சம்சாரம். பிரம்மஞானத்தை அடைந்து விட்டால் இந்த உடலை விட்டதும் இறைவனிடம் போய் சேர்ந்து விடுவோம் அதாவது வந்த இடத்திற்கே சென்று விடுவோம். இதன் சாராம்சம் பிரம்மத்தை குருமூலம் தான் அடைய முடியும் என்பது.

7. அடுத்த உதாரணம் இறக்கும் நிலையில் உள்ள மனிதனைப் பற்றியது. அந்த நிலையில் “என்னைத்தெரிகிறதா ,” என்று சுற்றி இருக்கும் உறவினர் கேட்கின்றனர். எதுவரை அவனுக்கு தன்னைப் பற்றியும் தன்னை சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் உணர்வு இருக்கும்?

உத்தாலகர் சொல்கிறார். 
‘ எதுவரை வாக்கு மனதில் ஒடுங்கி மனம் பிராணனில் ஒடுங்கி, பிராணன் அக்னியில் ஒடுங்கி, அக்னியும் பரப்ரம்மத்தில் ஒடுங்கவில்லையோ அதுவரை அவனுக்கு பிரக்ஞை இருக்கும். அதற்குப்பிறகு அவன் ஆத்மா அந்தராத்மாவான பிரம்மத்தில் ஒடுங்குகிறது. அந்த பிரம்மமே எல்லா உயிர்கட்கும் ஆத்மா.”

இதை நாம் நடைமுறையில் காணலாம். மரணத்தருவாயில் முதலில் பேச்சு ஒடுங்குகிறது. மனது நினைத்தாலும் பேச முடிவதில்லை. அடுத்ததாக மனம் பிராணனில் ஒடுங்குகிறது. அதாவது மூச்சு மட்டும் இருக்கிறது. பிறகு பிராணன் அக்னியில் ஒடுங்குகிறது என்றால் பிராணன் போய் விட்டபோதும் உடல் உடனே சில்லிடுவதில்லை. ஏனென்றால் பிராணன அக்னியில் ஒடுங்குகிறது. எப்போது அக்னியும் ஆத்மாவில் ஒடுங்குகிறதோ அப்போதுதான் இறப்பு உறுதியாகிறது. அதாவது உடல் குளிர்ந்து போகிறது.

இதில் ஒரு சந்தேகம் எழலாம் . இது எல்லோருக்கும் உள்ளதுதானே ? ஆனால் பிரம்மத்தில் ஒடுங்குவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? பிறகு ஏன் சில ஜீவர்கள் மறுபடி பிறக்கிறார்கள் சிலர் பிரம்மத்தை அடைந்து முக்தியடைகிறார்கள் ? என்று. இதற்கு பதில் அடுத்ததாக கூறுகிறார்.

8. ஒருவனை அவன் திருடியதாக சந்தேகித்து அழைத்து வருகிறார்கள். அவனை பழுக்கக் காய்ச்சிய கோடரியையைக் கையில் பிடிக்கச் சொல்கிறார்கள். அவன் குற்றவாளி என்றால் அவன் கையில் வெந்து விடும். அப்போது அவனைக் கொன்றுவிடுவார்கள். அவன் நிரபராதி என்றால் அவன் கைக்கு ஒன்றும் ஆகாது. அப்போது அவனை விடுவித்துவிடுவார்கள்.

இது ஒரு வேத கால தண்டனையைக் குறிக்கிறது. 
இது எப்படி ச்வேதகேதுவின் கேள்விக்கு பதிலாகிறது என்று பார்க்கலாம்.

குற்றம் செய்தவன் கோடரியால் தீய்க்கப் படுவது போல அறியாமையால் உலகப் பற்று கொண்ட ஜீவன் பழுக்கக் காய்ந்த கோடரி போன்ற உலகின் தொடர்பால் பிறப்பு இறப்பு என்று துன்புறுகிறது. ஆனால் எவ்வாறு ஒரு நிரபராதியை அந்தக் கோடரி சுடாதோ அதே போல ஒரு ஞானியை இந்த உலகம் பாதிப்பதில்லை. அதனால் மறுபிறப்பில்லை.

அதுவே நீயாக உளாய்’ என்ற வாக்கியத்தில், ‘அது’ என்ற பரம் பொருளினிடத்திலுள்ள படைப்பாற்றல், மாயா ஆற்றல் முதலிய மானிடமல்லாத குணங்களைத் தள்ளிவிட்டு, அவ்விதமே ‘நீ’ என்ற பிராணி யினிடத்தில் குடி கொண்டிருக்கும் அஞ்ஞானத்தையும், உடல், மனது, புத்தி இவைகளையும் தள்ளி விட்டால், ‘அது’வும், ‘நீ’யும் ஒன்றே என்பது விளங்கும் என்பது அத்வைத சித்தாந்தம்.
ஸ்ரீராமானுஜரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக வைணவம் என்ற பெயரில் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விசிஷ்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. மகாவாக்கியத்திலுள்ள ‘நீ’ என்ற சொல், பிராணிகளிலுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் இவ்வான்மாவையும் அப்பரம் பொருளையும் ஒன்றாக்கி ஒரு முற்றொருமையாகக் கூறமுடியாது. ஏனென்றால், இவ்வான்மா அப்பரம் பொருளின் ஒர் அம்சமே. ‘இது’ வும் ‘அது’ வும் ஒன்றாகாது. இரண்டன்மை என்னும் பொருள் படும் அத்வைதம் என்னும் கருத்தில் இருந்து நுட்பமாய் வேறுபாடு கொண்டது என்று குறிக்கவே விசிஷ்ட என்னும் முன்னொட்டு உள்ளது
மத்வாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக பெரிதும் போற்றப்படும் துவைதம் வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. ‘தத்துவமஸி’ என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் ‘ஸ ஆத்மா’ என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, ‘ஸ ஆத்மாதத்துவமஸி’ என்பதை ‘ஸ ஆத்மா + அதத்துவமஸி’ என்று பிரிக்கவேண்டும் என்றும், அதனால் அதன் பொருள் ‘நீ ‘அதத்’, அதாவது, பரம்பொருள் அல்லாததாக, உளாய்’ என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு, என்பது துவைத சித்தாந்தம். மேலும் இவ்விதம் ‘அதத்துவமஸி’ என்று சொல்வதுதான் சுவேதகேதுவின் கேள்விகள் ஏற்பட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிறது. ஏனென்றால் அவன் வரும்போதே தான் 12 ஆண்டுகள் படித்துவிட்ட செறுக்குடன் வந்தான். அவன் உண்மையில் பரம்பொருள் என்று சொல்லப்பட்டுவிட்டால் அவனது கர்வம் இன்னும் அதிகமாகிவிடும்
சுத்தாத்வைதம் -இது 15ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபரால் விரிவாக விளக்கப்பட்ட வேதாந்தப்பிரிவு. இதன்படி ஆன்மாவும் பரம்பொருளும் சாராம்சத்தில் ஒன்றே; ஆனால் ஆன்மாவுக்கு பரம்பொருளின் ஆனந்த அம்சம் கிடையாது. அதனால் ‘தத்துவமஸி’ என்ற மகாவாக்கியத்திற்கு சங்கரரின் முற்றொருமையில் ஒரு சிறிய மாற்றத்துடன் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, ‘தத்’ என்பது பரம்பொருள். ‘துவம்’ என்ற சீவன் அதனுடைய ஒரு பாகம்
துவைதாத்வைதம் -இது நிம்பர்க்கரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம். இதன்படி, பரம்பொருளுக்கும் தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள ‘பேதத்தில் அபேதம்’, ஆதவனுக்கும் அதன் கிரணங்களுக்கும் உள்ள உறவு, அல்லது நெருப்புக்கும் நெருப்புத் துளிகளுக்கும் உள்ள உறவு, இவைகளைப் போன்றது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்
அசிந்த்யபேதாபேதம் இது 16ம் நூற்றாண்டில் சைதன்யரால் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதா அபேதம் (ஒற்றுமை வேற்றுமைகள்) நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் ‘அது’வும் ‘நீ’யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, மற்றொன்று முடிவில்லாதது. இதற்கு தகுந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்

பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது?

தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய என்கிறார். அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. இதன் மூலம் மேற்கூறிய மூன்று காரணங்களும் பிரம்மமே என்று ஆகிறது.

வேதார்த்த சங்க்ரஹம்-9

அத்வைதத்தின் விளக்கம் என்னவென்றால்., எப்படி பானை முதலியவை பெயர், உருவம் இவைகளினால் வேறுபட்டாலும் அத்தனையும் மண் என்பதுதான் உண்மையோ அதேபோல உலகத்தில் உள்ளவை யாவும் பெயர் , உருவம் இவற்றில்தான் வேறு உண்மையில் பிரம்மம்தான்.

எப்படி கயிறைப் பாம்பாகப் பார்க்கிறோமோ அதேபோல பிரம்மத்தை உலகமாகக் காண்கிறோம். பிரம்மம்தான் சத்யம் என்பதுதான் ம்ர்த்திகேத்யேவ சத்யம் என்னும் வாக்கியத்தின் பொருள்..இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். சர்க்கரையில் நிறைய பொம்மை செய்வதைப் பார்த்திருக்கிறோம். விதவிதமான பொருள்கள் மிருகங்கள் பட்சிகள் முதலியன. ஆனாலும் நமக்கு எல்லாம் சர்க்கரையாகத்தானே தெரிகிறது? அதே போல் பிரம்மஞாநிகளுக்கு உலகம் ப்ரம்மமாகத்தான் தெரிகிறது.

குழந்தைகள் அந்த பொம்மைகளை எல்லாம் வாயில் போட்டாலோ உதிர்த்தாலோ ஒரு நிமிடத்தில் சர்க்கரையாகமாறிவிடும் என்பது தெரியாமல் நிஜம் என்று நினைத்து, என்னுடையது குடம், உன்னுடையது மீன், அவனுடையது வாத்து என்று நினைப்பதுபோல நாம் உலகத்தை வேறுபடுத்திப் பார்க்கிறோம்,

.இதுதான ஏகவிக்ஞானேன சர்வ விக்ஞானம், அதாவது எது ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகிறதோ என்ற வாக்கியத்தின் பொருள்.

பிரம்மமே மாயையின் மூலம் பலவாகத் தெரிகிறது. இதுதான் தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் ப்ரஜாயேய , பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது என்பதன் அர்த்தம்.

இதற்கு ராமானுஜர் கூறும் பதில்,

எதுவும் உண்மை இல்லை என்றால் அவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏகவிக்ஞானேன சர்வவிக்ஞானம், எது ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் விளங்குமோ என்பதற்கு அர்த்தமே இல்லை

 .பிரம்மத்தை ஆன்மாவாகக் கொண்டதனால் எல்லாம் உண்மையில் பிரம்மமே என்ற பொருளில்தான் ஏகவிக்ஞானேன சர்வ விஞ்ஞானம் என்பது பொருந்தும்.

எப்படி மண்ணாலான பொருள்கள் பெயர் உருவம் இவை இன்றி மண்ணாகவே இருந்தனவோ அவ்வாறே இந்த உலகம் பிரம்மத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் இருந்தன . அப்போது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. இதுதான் ம்ருத்திகா இத்யேவ சத்யம் என்பதன் பொருள்.

பிரம்மம்தான் பிரபஞ்சத்தின் உபாதான், நிமித்த , உதவிக் காரணமாக இருப்பதால் பிரம்மத்தை தெரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சத்தை தெரிந்துகொள்ளலாம் என்று பொருள்.

எல்லாம் பிரம்மத்தில் சூக்ஷ்ம வடிவில் உள்ளன. அது ஸ்தூல வடிவத்தில் தோன்றுவதே தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாஎய என்ற வாக்கியத்தின் பொருள்.

சரி ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.

வேதார்த்த சங்க்ரஹம்-10

ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.

ராமானுஜரின் விளக்கத்தின்படி,

தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாயேய

பிரம்மம் பலவாக ஆக சங்கல்பித்தது.

ஸ்வாம்ச ஏகதேசாதேவ வியதாதி பூதானி ஸ்ருஷ்ட்வா

தன்னுடைய ஒரு அம்சத்தினாலேயே ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களை தோற்றுவித்து,

சாந்தோக்யத்தில் தத் தவம் அஸி என்ற பகுதியில் ஆகாயம் முதலான பூதங்களின் சிருஷ்டி சொல்லப்படவில்லை.

அங்கே ‘தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,’ அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.

அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
‘அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்ய உப.)

இதன் பொருள், ‘இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.’

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

இப்போது ஜடவஸ்துக்களின் உளதாம் தன்மை (existence) அவற்றின் உள் பிரம்மம் அந்தர்யாமியாக இருப்பதனால் தான் என்று அறிகிறோம்.

இப்போது புலன் உணர்ச்சி கொண்ட உயிர்களும் உலகத்தில்(sentient) உள்ளவைதானே ? அவைகளுக்கும் பிரம்மமே ஜீவனாக இருக்கிறது அல்லவா? அத்தகைய ஜீவராசிகள் பிரம்மத்தின் உடல்லகவும் பிரம்மமே அவைகளின் உயிராகவும் உபநிஷத் வாக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

‘எது ஜீவாத்மாவின் உள் இருந்துகொண்டு அதை நடத்துகிறதோ, எதை ஜீவாத்மா அறியவில்லையோ,எதற்கு ஜீவாத்மா சரீரமாக உள்ளதோ அதுதான் உண்மையானஆத்மா, அந்தர்யாமியாகவும் நித்யமாகவும் இருக்கிறது. அதுதான் ப்ரஹ்மம்.’(brhd.up. 5.7)

அதனால் எல்லாவற்றிற்கும் பிரம்மமே அந்தராத்மா என்று அறிகிறோம். ‘ப்ரம்மாத்மகானி தானி ஸர்வாணி.’

ஆகையால் தேவர், மனுஷ்யர், யக்ஷர், ராக்ஷசர், பசு, ம்ருகம், பக்ஷி, வ்ருக்ஷம், கோடி, கட்டை, கல், புல், பானை, துணி, முதலிய எல்லா சொற்களும் அதனதன் உருவம், குணம் இவைகளால் அவற்றின் மூலமான பிரம்மத்தையே சுட்டுகின்றன.

இதை எளிதாக விளக்கலாம். இது ஒரு பசு என்று சொல்லும்போது நாம் அதன் உருவத்தை மட்டுமா குறிப்பிடுகிறோம்? அதன் குணங்கள், தன்மை மேலும் அதை ஒரு உயிருள்ள ஜந்துவாக அல்லவா காண்கிறோம்?

அதே போல இவன் தான் ராமசாமி அன்று சொல்லும்போது அவன் உருவம் மட்டுமா நம் மனதில் தோன்றுகிறது? அதற்கு அவன் படமே போதும். அவன் யார் எப்படிப்பட்டவன் என்ற எல்லா விஷயங்களும் நம் மனதிற்கு வருகின்றது. மேலும் அவனுடைய தேகத்தைத் தாண்டி அவன் ஒரு உயிருள்ள மனிதன் என்னும்போது தேகம் மனம் புத்தி எல்லாவற்றிற்கும் மேல் அவன் உயிர் அல்லது ஆன்மா என்பது தானே உண்மை. இல்லாவிட்டால் அவன் என்பது போய் அது என்றாகிவிடுமே.

அதனால் பெயர் உருவம் குணம் மற்ற சம்பந்தங்கள் எல்லாவற்றிற்கும் மேல் ஆன்மா என்பதே முக்கியம் ஆகிறது. அந்த ஆன்மாவிற்குள் அந்தராத்மாவாக இருப்பதே பிரம்மம்.

\அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே .

,
‘க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ச ஜகத் தஸ்ய சரீரம். ‘

‘அதனால் பிரம்மம்தான் அகில உலகத்துக்கும் ஆத்மா. அகில உலகமும் பிரம்மத்தின் சரீரம் ‘ ‘த்வம்’ என்னும் சப்தத்தால் கூறப்படும் ‘நீ’ பிரம்மத்தினுடைய படிவமே. இதனால் எல்லாம் பிரம்மத்தையே ஆத்மாவாகக் கொண்டவை என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

‘தத் த்வம் அஸி’ என்ற மஹாவாக்கியத்தின் பொருள், நீ என்ற ஜீவன் உன் அந்தராத்மாவான பிரம்மமே என்பது.

இந்த சரீர சரீரி பாவம்அதாவது பிரம்மம் தான் ஆத்மா ஜீவன் , ஜகத் இவை அதன் உடல் என்பதை பின்னும் விவரிக்கிறார் . அதைப் பின்னர் காண்போம்.

வேதார்த்த சங்க்ரஹம் -11

எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது ப்ரம்மமே என்பதனால் எப்படி ஒருவரின் பெயர் அவருடைய உடலை மட்டும் குறிக்காமல அவருடைய ஆத்மாவை குறிக்குமோ அதுபோல எந்தப் பொருளை குறிப்பிட்டாலும் அது பிரம்மத்தையே குறிக்கிறது.

இது எப்படி என்றால் இப்போது ஒருவருடைய தந்தை இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்பா போய்விட்டார் என்று சொல்கிறோம். அப்பா என்ற சொல் அவர் உடலை அல்ல அவர் ஆத்மாவைக் குறிக்கிறது என்று தெரிகிறது. அதே போல இவ்வுலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாக உள்ள பிரம்மம்தான் எல்லாவற்றினாலும் குறிக்கப்படுகிறது.

‘யஸ்ய ஆத்மா சரீரம்’ என்ற உபநிஷத் வாக்கியமும் இதைத்தான் கூறுகிறது. அதனால் ‘ப்ரம்மாத்மகானி சர்வாணி’ எல்லாவிதமான உயிருல் உயிரில்லாத வஸ்துக்களும் பிரம்மத்திற்கு சரீரமாகவும் பிரம்மமே அவற்றின் ஆத்மாவாகவும் இருக்கிறது. அதனால் சொற்களின் மூலம் அறியப்படுவது எல்லாம் முடிவில் பிரம்மத்தையே சுட்டுகின்றன.

‘.ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்’ என்ற சாந்தோக்ய உபநிஷத் விளக்கத்தில் பிரம்மமே ஜகத்காரணம் என்று பார்த்தோம். அதற்குப்பிறகு ‘ஸந்மூலா: ஸௌம்ய இமா: ஸர்வா: பிரஜா: ஸதாயதனதா: ஸத்ப்ரதிஷ்டா:’ (சாந்தோக்ய-6.8., 4-6), இவை எல்லாம் ஸத், அதாவது பிரம்மத்தில் இருந்து தோன்றின, பிரம்மத்தில் இருக்கின்றன, பிரம்மத்தால் நிலைநிறுத்தப் படுகின்றன , என்ற வாக்கியம் காணலாம். 
எப்படி உடலுக்கு உயிர் காரணமோ , உயிரினால் உடல் வாழ்கிறதோ , உயிர் உடலை தாங்குகிறதோ அதேபோல பிரம்மம் இந்த உலகத்திற்கு உயிர் அல்லது ஆத்மாவாக இருக்கிறது,

எப்படி உடல் உயிரின் உடைமையோ அதே போல உலகம் பிரம்மனின் உடைமை. 
ராமானுஜர் மேலும் சொல்கிறார்

‘ஏதத் ஆத்ம்யம் இதம் ஸர்வம் தத் சத்யம்’ என்ற வாக்கியம் ‘தத் தவம் அஸி’ என்பதற்கு முன்பு காணப்படுகிறது. இதன் பொருள், பிரம்மம் ஜகத் காரணம் என்பதனால் இந்த உலகம் உண்மை ஏனென்றால் பிரம்மமே அதன் அந்தராத்மாவாக இருக்கிறது. பிறகு ‘தத் தவம் அஸி’ அந்த பிரம்மம்தான் உண்மையில் நீ என்று சொல்லப்படுகிறது.

க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ஜகத் தஸ்யசரீரம். அதாவது பிரம்மம் அகில உலகத்திற்கும் ஆத்மாவாக உள்ளது. அகில உலகமும் அதன் சரீரம்.

அதனால் தத் அந்த பிரம்மம் த்வம் அஸி நீதான். எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக் குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

தத் த்வம் அஸி என்பது ஏன் பிரம்மஜீவ ஐக்யத்தைக் குறிப்பதாக இருக்கக் கூடாது? ஏன் சரீர சரீரி பாவத்தை கொண்டுவரவேண்டும்

முதல் ஆறு அத்தியாயங்களும்  த்வம் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விளக்குகிறது.ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடைய வேண்டிய நிறை நிலை, அதற்கு எடுக்க வேண்டிய முயற்சி போன்றவை அடங்கி உள்ளது. இது முதல் ஷட்கம். ஏழாம் அத்தியாயம் முதல் பனிரெண்டு ஈறாக உள்ளவை இரண்டாம் ஷட்கம். அது  தத் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரத்துவம் அல்லது பரமாத்மாவை விளக்குகிறது. பதிமூன்றிலிருந்து பதினெட்டு வரையிலான அத்தியாயங்கள் மூன்றாவது ஷட்கமாகும் அஸி எனும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்மா ஜீவாத்மா இணக்கத்தைத் தெரியப் படுத்துகிறது. தத் த்வம் அஸி என்னும் மூன்று பதத்துக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருக்கிறது கீதை.ஆக மஹாவாக்கியத்துக்கான வியாக்கியானம் என்றும் இதைஇயம்பவேண்டும்

ஒருவர் கீதையை பக்தி நூல் எனலாம். இன்னொருவர் ஞான மார்க்கம் எனலாம் மற்றொருவர் அதை யோக சாஸ்திரம் எனலாம் இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம்வெறும் பெயரளவில்  என்றும் கூறலாம். நீ அத்வைதியாயிரு, துவைதியாயிரு விசிஷ்டத்த்வைதியாயிரு என்றெல்லாம் அது புகட்டுவதில்லை. ”ஆத்மபோதம் அடையப் பெற்றவனாக ஆவாயாக. உனது பேரியல்பில் நிலை பெற்றிடு. பேராற்றல் படைத்தநீ உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இப்பூவுலகுக்கு வரவில்லை.உலகுக்கும் உனக்கும் தொடர்புண்டு. அதை நிலை நாட்டுவது யோகம். தூக்கி வினை செய்து அத்தொடர்பை நிரூபிப்பாயாக ஆத்மஸ்வரூபத்தில் அனைத்தையும் அடக்கிக் கொள்வாயாக மலர் மணம் வீசுவதுபோல உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும் ஒளிவிடும் ஞாயிறு போல் உன் அறிவு ஓங்கி இருப்பதாக எல்லாப் பிரிவுகளும் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம ஸ்வரூபத்தில் காண்கின்றன” என்று யோகேஸ்வரன்  உயிர்களை யோகிகளாகத் தூண்டுகிறான்.

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

“சிஷ்டக்ருதே நம:”

April 10, 2025

ஒரு முறை வேத வியாசர், தமது சீடர்களைப் பார்த்து,

“அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா

பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ”

என்ற சுலோகத்தைச் சொன்னார்.

பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும் தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும்.

“சீடர்களே! அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர்கள்.

ஓர் அழகிய பெண்ணை உருவாக்க விழைந்த பிரம்மதேவர், தமது கற்பனையை எல்லாம் திரட்டி, அகல்யாவை உருவாக்கினார்.

அர்ஜுனனை மணப்பதற்கேற்ற பெண்ணை வேண்டித் துருபத மன்னன் வேள்வி செய்தபோது, அந்த வேள்வித் தீயில் தோன்றினாள் திரௌபதி.

ஜனக மன்னன் தனது யாகசாலையை உழுத போது, கலப்பை நுனியில் சீதா தேவியைக் கண்டெடுத்தார்.

பாற்கடல் கடைந்த போது அதிலிருந்து தாரை தோன்றினாள்.

பார்வதியின் சாபத்தால் தவளையாய்ப் பிறந்த மதுரா என்னும் அப்சரஸ் பெண்ணுக்குப் பரமசிவன் சாப விமோசனம் தந்து, அவளை மண்டோதரி என்னும் அழகிய பெண்ணாக மாற்றினார்!” என்று கூறினார் வேத வியாசர்.

“இவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்புகள் உண்டா?” என்று கேட்டார்கள் சீடர்கள்.

அதற்கு வேத வியாசர், “இந்த ஐவருமே தங்கள் வாழ்வில் பேரிழப்புகளையும் பெருந்துயரங்களையும் சந்தித்த போதும், அவற்றை மனவுறுதியோடு தாண்டி வெற்றி கண்டவர்கள்.

தன் கணவர் கௌதமர் தந்த சாபத்தால் கல்லாக மாறிய போதும், பொறுமையோடும் மனவுறுதியோடும் இருந்த அகல்யாவை, ராமன் தன் திருவடிகளால் தீண்டி மீண்டும் தூய பெண்ணாய் ஆக்கினான்.

கௌரவர்களின் சபையில் பெரும் அவமானத்தைச் சந்தித்த திரௌபதி, மனவுறுதியுடன் துன்பங்களைப் பொறுத்திருந்து, பாரதப் போரின் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றினாள்.

பத்துமாத காலம் அசோக வனத்தில் அரக்கர்கள் புடைசூழச் சிறையிருந்த போதும், ராமன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி கண்டாள் சீதை.

வாலியின் மனைவியான தாரை, தன் கணவனை இழந்து தவித்தபோதும், தன் மகனான அங்கதனின் நன்மைக்காகத் துயரத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் தரித்திருந்தாள்.

ராவணனின் மனைவியான மண்டோதரி, தனது கணவன், மகன்கள், உறவினர்கள் அனைவரையும் போரில் இழந்த போதும் மனம் தளராதிருந்தாள்

எனவே இந்த ஐவரும் காலையில் தியானிக்கத் தக்கவர்கள்!” என்று கூறினார்.

அப்போது சீடர்கள், “சுவாமி! இந்த ஐவருள் மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கு நிகராக மற்ற நால்வரையும் கூறுவது சரியா?

இந்திரனின் ஆசைக்கு இணங்கினாள் அகல்யா.

ஐந்து ஆண்களை மணந்தாள் திரௌபதி.

வாலியின் மரணத்துக்குப் பின் சுக்ரீவனை மணந்தாள் தாரை.

மண்டோதரி நல்லவள் தான் என்றாலும், அவள் பெரும் பாவியான ராவணனின் மனைவியாவாள்.

இந்த நால்வரும் எப்படி சீதைக்குச் சமமானவர்களாக ஆக முடியும்?” என்று வியாசரிடம் கேட்டார்கள்.

அதற்கு வியாசர், “அதற்குத் திருமாலின் திருவருளே காரணம்.

ராமனின் பாதுகையில் உள்ள மண் அகல்யாவின் மீது பட்ட மாத்திரத்தில், அவளுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கப் பெற்று அவள் தூய்மையாகி விட்டாள்.

திரௌபதி எப்போதும் கண்ணனையே தியானித்துக் கொண்டிருந்த படியால், அவள் எப்போதும் தூய்மையாகவே இருந்தாள்.

ராம தரிசனத்தால் தாரையும் மண்டோதரியும் தூய்மை பெற்றார்கள்.

இவ்வாறு திருமாலின் அருளால் தூய்மை பெற்ற அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி ஆகிய நால்வரும் மகாலட்சுமியின் அவதாரமாகிய சீதைக்கு நிகராகப் போற்றப்படுகிறார்கள்!” என்றார்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோரைச் சீதையின் ஸ்தானத்துக்கு நிகராய் உயர்த்தியது போல், சாதாரண மனிதர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே உயர்ந்த மனிதர்களாகத் திருமால் ஆக்குவதால் ‘சிஷ்டக்ருத்’ (உயர்ந்தவர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்படுகிறார்.

உயர்ந்த மனிதர்களை ‘சிஷ்ட:’ என்று சொல்வார்கள். ‘க்ருத்’ என்றால் உருவாக்குபவர் என்று பொருள்.

‘சிஷ்டக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 251-வது திருநாமம்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோருக்குத் தூய்மை அளித்ததைப் போல், தோஷமுள்ளவர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே தூய்மையானவர்களாகத் திருமால் ஆக்குவதால், அவர் ‘சுசி:’ என்றழைக்கப்படுகிறார்.

‘சுசி:’ என்றால் தூய்மை என்று பொருள்.

தானும் தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதால், திருமால் ‘சுசி:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 252-வது திருநாமம்

“சிஷ்டக்ருதே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையத் திருமால் அருள்புரிவார்.

“சுசயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தூயவர்களாக ஆக்கி அருள்வார்.ஹேதவே நமஹ…..!!!

—————

மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்….

மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்

– சாந்தனுவாய்….

——————————-

சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்

– கங்கை மைந்தானாய்..

——————————–

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்

– பாண்டுவாய்….

——————————

வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்

– சகுனியாய்…

——————————

ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு

– குந்தியாய்…

——————————-

குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்

– திருதராஷ்டிரனாய்….

——————————

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்

– கௌரவர்கள்…

——————————

பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே

– துரியோதனனாய்…

——————————

கூடா நட்பு, கேடாய் முடியும்

– கர்ணனாய்…

——————————

சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்

– பாஞ்சாலியாய்..

——————————

தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்

– யுதிஷ்டிரனாய்…..

——————————

பலம் மட்டுமே, பலன் தராது

– பீமனாய்….

——————————

இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே

– அர்ஜூனனாய்….

——————————

சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது

– சகாதேவனாய்..

——————————

விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது

– அபிமன்யூ

——————————

நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்

– கண்ணனாய்….

——————————

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….

வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -மூன்றாம் பகுதி –113-148–

August 19, 2024

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
 I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II
–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

113–நிமித்த உபாதாநஸ்து பேதம் வதந்த-வேத பாஹ்ய ஏவஸ்யு–
ஜன்மாத்யஸ்ய யத–
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா திருஷ்டாந்த அநு பரோத்யாத்–இத்யாதி
வேதவித் ப்ரணீத ஸூத்ர விரோதாத்
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ப்ரஹ்ம வநம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் ததோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு-
ப்ரஹ்மத் யாத்ய திஷ்டத புவநாநி தாரயந்
சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி
ந தஸ்யேசே கஸ்ஸன் தஸ்ய நாம மஹாத்யச
நேஹ நாநாஸ்தி கிஞ்சன
ஸர்வஸ்ய வஸி ஸர்வஸ் யேசாந
புருஷ ஏவேதம் சர்வம் யத் பூதம் யச்ச பவ்யம்
உதாம்ருதத் வஸ்யே சாந
நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதி சர்வ ஸ்ருதி கண விரோதாஸ் ச —

செய்வோன் செயப்படு பொருள் வேறுபட்டவை எனில் அக் கருத்து வேதத்திற்கும் புறம்பாகும் ஏன் என்றால் -எந்தப் பொருளின் நின்றும் -பரம புருஷனிடம் இருந்து படைப்பு இருப்பு அழிப்பு ஏற்படுகிறதோ -என்றும்
செயப்படு பொருளும் செய்வோனும் ஆன காரணங்கள் அவனே-ஏன் எனில் முதல் கொண்ட கருத்துடன் மாறுபடாது இருக்க -என்றும்
குழந்தாய் -ஸத் ஒன்றே முதலில் இருந்தது -மற்றை இரண்டாவது ஏதும் இல்லை என்றும் –
ப்ரஹ்மமாகிற காட்டில் உள்ள ப்ரஹ்மம் ஆகிற மரத்தால் -இம் மாளிகை -ஆனது நான் மனப் பூர்வமாகச் சொல்லுகிறேன் -இதைப் போலவே ப்ரஹ்மமே உள் நுழைந்து -உயிர்களை ஆள்கிறான் -என்றும்
காலம் மின்னொளி படைத்த ப்ரஹ்மத்தின் நின்றும்
உண்டானது என்றும்
புகழ் மிக்க அவன் யாராலும் ஏவப்படுவது இல்லை -அவனை நீங்கிய பொருள் ஏதும் இல்லாததால் பல பொருட்கள் என்பது இல்லை -என்றும்
யாவற்றையும் தன் வசத்தில் வைத்திருப்பவன் -யாவற்றிற்கும் தலைவன் என்றும்
இறந்தகால நிகழ் கால வருங்காலப் பொருyaanumயாவும் இந்தப் புருஷனே என்றும்
அவனே மோக்ஷத்திற்கு -அம்ருதம் -காரணமாகிறான் -அவனை அறிய வேறு வழியில்லை-என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றன –

—————–

114–இதிஹாச புராணே ஷு ச ஸ்ருஷ்ட்டி ப்ரலய பிரகரணயோர் இத மேவ பர தத்வம் இத்யவகம்யதே-
யதா மஹா பாரதே
கேந ஸ்ருஷ்டம் இதம் சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம்-பிரலயே ச கமப்யேதி தந்மே ப்ருஹி பிதா மஹ-இதி ப்ருஷ்டா
நாராயணோ ஜெகன் மூர்த்தி அநந்தாத்மா சநாதன –இத்யாதி ச வதந்
ருஷய பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ ஜங்கமாங் ஜங்கமம் சேதம் ஜெகன் நாராயண உத்பவம் -இதி ச

இதிஹாஸ புராணங்களிலும்
படைப்பு அழிப்பு செய்பவருக்கு ஒப்பற்ற உயர் நிலை இவ்வாறே நிரூபிக்கப்பட்டு இருக்கிறது
பாரதத்தில்
யுதிஷ்ட்ர பீஷ்ம ஸம்வாதத்தில்-எவரால் இவ்வுலகின் நிற்பனவும் நகர்வனவும் படைக்கப்பட்டன -பேர் அழிவில் யாரிடம் ஒடுங்குகின்றன என்பதை எங்களுக்குச் சொல்ல வேண்டும் –
நாராயணனே உலகை உடலாக உடையவன் -எண்ணற்ற இப் பொருள்களுக்கு ஆத்மா யாராலும் படைக்கப் படாதவன் –
ரிஷிகள் பித்ருக்கள் தேவர்கள் பஞ்ச பூதங்கள் தாதுக்கள் நிற்பன திரிவன யாவும் நாராயணன் இடமிருந்தே உண்டாயின -என்று சொல்லப் படுகிறது –

ப்ராஸ்ய -உதீஸ்ய -தஷிணாத்ய–பாஸ்சாத்ய சர்வ சிஷ்டை -சர்வ தர்ம -சர்வ தத்வ -வ்யவஸ்தாயாம் –
இதமேவ பர்யாப்தம்–இதயவிகீத பரிக்ருஹீதம்-ஸ்ரீ வைஷ்ணவம் ச புராணம்
ஜெந்மாத் யஸ்ய யத -இதி ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹ்மேத் யவகம் யதே –
தது ஜென்மாதி காரணம் கிமதி ப்ரஸ்ன பூர்வகம் -விஷ்ணோ சாகாசாதுத் பூதம் -இத்யாதிநா
ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ ப்ரதிபாதந ஏக பரதயா ப்ரவ்ருத்தம் இதி சர்வ சம்மதம் ததாததத்ரைவ
ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணீ
புருஷஸ் சாப்யுபாவேதவ லீயதே பரமாத்மநி
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர
விஷ்ணு நாமாச வேதேஷு வேதாந்ததேஷு ஸகீயதே -இதி
-( என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தலைக் கட்டி அருளுகிறார் )

சர்வ வேத வேதாந்ததேஷு சர்வைஸ் சப்தைஸ் பரம காரண தயா அயமேவ கீயதே இத்யர்த்த –

கிழக்கு வடக்கு தெற்கு மேற்கிலுள்ள சான்றோர்கள் யாவரும் நன்னெறிகளை தத்வங்கள் இவற்றை நிலை நாட்டுகையில் உயர்ந்த மஹான்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
பிறப்பிக்கக் காரணமானது எது என்று ஆராய்கையில் உலகின் காரணம் ப்ரஹ்மமே என்று நிறுவி அதுவே போதுமான காரணம் என்று கொள்ளப் பட்டது –
இவ் வுலகிற்குக் காரணம் எது என்ற கேள்விக்கு விடையிறுக்கும் முகமாக விஷ்ணுவிடமிருந்தே யாவும் உண்டாயின என்று ப்ரஹ்ம ஸ்வரூபத்தை அறுதியிட்டுக் காட்டவே இப் புராணம் தோன்றியது என்பது எல்லாராலும் ஏற்கப்பட்ட ஓன்று
அவ்வாறே அதைத் தலைக் கட்டுகையில்
மைத்ரேயா வெளிப்படை உள்ளுறையாயுள்ள எந்த மூலப்பிரக்ருதி என்னால் விளக்கப் பட்டதோ அதுவும் புருஷனும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன
ஒப்பு மிக்கும் அற்ற பரமாத்மாவே எல்லாவற்றையும் தாங்குபவராகவும் ஏவுகின்றவனாகவும் இருக்கிறார் அவரே விஷ்ணு என்று வேத வேதாந்தங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது

இதனால் எல்லா வேதாந்தங்களிலும் உள்ள சொற்களின் படி அவனே காரணமாகிறான் என்பது பொருள்-
யதா சர்வ ஸூஸ்ருதி ஷு கேவல பர ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ ப்ரதிபாதநாயைவ ப்ரவ்ருத்தோ நாராயணானுவாக

ததா இதம் வைஷ்ணவஞ்ச புராணம்
ஸோஹம் இச்சாமி தர்மஞ்ஞ ஸ்ரோதும் த்வத்தோ யதா ஜகத் பபூவ பூயாஸ் ச யதா மஹா பாக பவிஷ்யஸி
யந் மாயம் ச ஜகத் ப்ரஹ்மந் யதைஸ் சைத சராசரம் லீநமா ஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ரச–
இதி பர ப்ரஹ்ம கிமிதி பிரக்ரமய
விஷ்ணோ சகாசாதுத் பூதம் ஜதத் தத்ரைவை ச ஸ்திதம் ஸ்திதி சம்ய மகர்த்தாஸை ஜகதோஸ்ய ஜகச் சச

இவ்வாறே வேதங்கள் அனைத்திலும் பர ப்ரஹ்ம மெய்நிலையை சிறப்பாக நிறுவ வந்த நாராயண அநுவாகத்திலும் விளக்கப் பட்டு இருக்கிறது -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -தர்மம் அறிந்தவரே -உலகு முதலில் எவ்வாறு இருந்தது -எவ்வாறு இருக்கப் போகிறது-எதனால் நிறைந்து இருக்கிறது -எவரிடம் இருந்து தோன்றிற்று -எங்கு எவ்விதம் ஒடுங்கி இருந்தது -இனி எவ்விதம் ஒடுங்கும் -என்பதை அந்தணரே உம்மிடமிருந்து அறிய விரும்புகிறேன் -என்று மைத்ரேயரை வினவினார்பர ப்ரஹ்மம் என்பது யார் -எவ்விதம் இருப்பார் -என்ற இந்த வினாக்களுக்கு -விஷ்ணுவிடமிருந்தே உண்டாயிற்று -அவரிடமே லயித்து இருந்தது -அவராலேயே நிறைந்து இருக்கிறது -ஆக்கி அளித்து அழிப்பபவன் விஷ்ணுவே –
பர பரணாம் பரம பரமாத்மாத்ம ஆத்ம ஸம்ஸ்தித
ரூப வர்ணாதி நிர்தேச விசேஷண- விவர்ஜித
அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜென்மபி வர்ஜித்த சக்யதே வக்தும் ய சதாஸ் தீதி கேவலம்
சர்வதராசவ் சமஸ்தம் ச வசத்யத்ரேதி வையத ததஸ் ச வாஸூ தேவேதி வித்வத்பி பரிபட்யதே
தத் ப்ரஹ்ம பரம் நித்யம் அஜம் அஷயம் அவ்யயம் ஏக ஸ்வரூபம் ச சதா ஹேய அபாவாச் ச நிர்மலம்
ததேவ சர்வமே வைதத் வ்யக்த அவ்யக்த ஸ்வரூபவத் ததா புருஷ ரூபேண கால ரூபேண ச ஸ்திதம்-

மேலானவர்களுக்கு எல்லாம் மேலானவனான அவனே தனக்கும் மற்றை யோர்க்கும் ஆத்மாவாய் இருப்பவன் -உருவம் நிறம் இவற்றால் சுட்டிக் காட்ட முடியாமல் இருப்பவன் -தேய்வு அழிவு மாறுபாடு வளர்ச்சி பிறப்பு அற்றவன் எப்பொழுதும் இருப்பவன் என்று மட்டுமே சொல்லத் தக்கவன்எல்லாவற்றிலும் இவன் வசிக்கிறான் -இவனிடம் யாவும் வசிக்கின்றன -இதனால் அவன் வாஸூ தேவன் என்று ஞானிகளால் சொல்லப் படுகிறான் -அவனே ப்ரஹ்மம் -மேலானவன் -என்றும் இருப்பவன் -பிறப்பு அழிவு மாறுதல் அற்றவன் -ஒருபடிப்பட்டவன் -எப்பொழுதும் எல்லாத் தீக் குணங்களில் நின்றும் விடுபட்டு மாசற்றவன் -அவனே இந்த கட் புலனாகும் -புலனாகாத பொருள்களாய் இருப்பவன் -அவ்வாறே மெய் நிலை ஆன்ம நிலையிலும் காலம் எனும் நிலையிலும் நிலைத்து இருப்பவன் –
ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாராந் குணாதி தோஷாஞ்ச முநே வ்யதீத
அதீத சர்வா வரணோ அகிலாத்மா தேநா ஆஸ்ருதம் யத் புவநாந்த ராலே
ஸமஸ்த கல்யாண குணாத்ம கோசவ் ஸ்வ சக்தி லேசோ த்ருதா பூத வர்க
இச்சா க்ருஹீதாபி மதோரு தேஹ சம்சாதிதா சேஷ ஜகத்தி தோசவ்

தேஜோ பல ஐஸ்வர்யா மஹா வபோத ஸ்வ வீர்ய சக்த்யாதி குணைக ராசி
பர பரானாம் சகலா ந யத்ர க்லேசாதயஸ் சந்தி பராவரேசே
ச ஈஸ்வரோ வ்யஷ்டி சமஷ்டி ரூப வ்யக்த ஸ்வரூப பராவரேசே
ச ஈஸ்வரோ வ்யஷ்டி சமஷ்டி ரூப பிரகட ஸ்வரூப சர்வேஸ்வர சர்வ த்ருக் சர்வ வேத்தா ஸமஸ்த சக்தி பரமேஸ்வராக்ய
சம்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வாதது ஞானம் அஞ்ஞானம் அதோ அந்ய துக்தம்
இதி பர ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ நிர்ணயாயைவ ப்ரவ்ருத்தம் –
அக்யாநி சர்வ புராணாநி அந்ய பராணி ஏதத் அவிரோதேந நேயாநி அந்ய பரத்வஞ்ச தத் தத்
ஆரம்ப பிரகாரை அவகம்யதே சர்வாத்மநா விருத்தாம் ச தாம சத்வாத் அநா தரணீய –

அவன் உயிர்கள் யாவற்றிற்கும் மூல காரணம் -மூல பிரகிருதியின் த்ரிபான குணங்களைக் கடந்தவன்-அவன் நிலையு உலகிற்கு ஆத்மாவாகிறான் -அவனாலேயே உலகின் பொருள் கள் யாவும் நிறைக்கப் பட்டு இருக்கின்றன –
அவன் -இந்தப் பரமாத்மா -எல்லா நற் குணங்களையும் இயற்கையாகவே உடையவன் -தனது ஆற்றலின் soruசிறு பகுதியாலேயே உலகைப் படைக்கிறான் -தன் விருப்பப்படியே பல உடல்களை எடுக்கிறான் -உலகிற்கு எப்பொழுதும் நன்மையே செய்பவன் -தேஜஸ் முதலான குணங்களின் குவை -மேலோர் யாவர்க்கும் மேலோன் -அவனிடம் துக்கம் முதலானவை இல்லை

அந்த ஈசன் காரண காரியமாகவும் பொருள்கள் யாவற்றின் தன்மையையும் -அவற்றின் திறன்களையும் உடையவனாகவும் விளங்கும் பரமேஸ்வரன் ஆகிறான் –
எந்த அறிவினால் தூய்மை எல்லா வற்றிற்கும் மேம்பட்ட தன்மை -அப்பழுக்கு இன்மை -ஒருபடிப்பட்டு இருத்தல் -ஆகியவை ஒருங்கே பொருந்திய ப்ரஹ்மம் அறியப் படுகிறதோ -அதுவே மெய் ஞானம் -அந்த அறிவினால் பர ப்ரஹ்மம் கட் புலனாகும் பொருட்கள் போல் மனக் கண்ணால் நேராகக் கண்டு அனுபவிக்கப் படுகிறது -மற்றைய அறிவுகள் யாவும் அஞ்ஞானம் எனப்படுகிறது –

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பர ப்ரஹ்மம் இயல்புகளை நன்கு அறுதி யிடுவதற்காகவே இவ்வாறு கூறப்பட்டது
மற்றைய புராணங்களில் ப்ரஹ்ம நிலையை கூறுமிடத்தும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும்
அவைகளில் மாறுபாடான பொருள் கிடைக்குமானால் அப் புராணங்கள் பர ப்ரஹ்மத்தை விளக்க வந்தவை யல்ல எனவாகும் –
இக் கருத்து அவற்றின் துவக்கத்திலேயே நன்கு தெரியும் -இக் கருத்துக்கு முற்றிலும் விரோதமான கருத்தை உடையவை தாமஸ புராணங்கள் என்று தள்ளத் தக்கவையாகும் –

————————-

115–நந்வஸ்மிந்நபி
ஸ்ருஷ்ட்டி ஸ்தித் யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ச சக் ஞாம்யாதி பகவான் ஏக ஏவ ஜநார்த்தந-
இதி த்ரி மூர்த்தி சாம்யம் பிரதீயதே நைததேவம்
ஏக ஏவ ஜனார்த்தன -இதி ஜனார்த்தனஸ் யைவ ப்ரஹ்ம சிவாதி க்ருத்ஸ்ன ப்ரபஞ்சதாத்ம்யம் விதீயதே-
ஜகஸ் ச ச இதி பூர்வ உக்தமேவ விவ்ருணோதி -ஸ்ரஷ்டா ஸ்ருஜதி சாத்மாநம் விஷ்ணு பால்யம் ச பாதிச
உப ஸ்ம்ஹ் ரியதே சாந்தே ஸம்ஹர்த்தா ச ஸ்வயம் பிரபு
இதி ஸ்ருஷ்டத்வேந அவஸ்த்திதம் ப்ரஹ்மாணம் ஸ்ருஜ்யம்ச ஸம்ஹர்த்தாராம்–சம்ஹார்யம் ச யுகபந் நிர்திஸ்ய –
ஸர்வஸ்ய விஷ்ணு தாதாம்ய உபதேசாத்-ஸ்ருஜ்ய ஸம்ஹார்ய பூதாத் வஸ்துந ஸ்ருஷ்ட்ட சம்ஹத்ரோ ஜனார்த்தன
விபூதி த்வேந விசேஷோ த்ருச்யதே -ஜனார்த்தன விஷ்ணு சப்தயோ பர்யாயத்வேந-
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் -இதி விபூதி மத ஏவ ஸ்வ இச்சையா லீலார்த்த விபூதி யந்திர பாவ உச்யதே –

மும் மூர்த்திகளும் சமம் என்பதற்கு விடை
இதே புராணத்திலும் அந்த பகவான் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகியவற்றைச் செய்யும் பிரமன் திருமால் சிவன் என்று பெயர்களை அடைகிறான் -என்று கூறப்பட்டு இருந்தாலும் -அவர்கள் யாவரும் ஒருவரேயான ஜனார்த்தனனே -என்று மும் மூர்த்திகள் ஸமத்வம் தோன்றும்படி கூறி இருந்தாலும் அது சரியல்ல -ஜனார்த்தனன் ஒருவனே யாகிறான் -என்று பிரமன் சிவன் ஆகிய உலகுக்கும் -அவனுடைய உடல் -ஜனார்த்தனன் ஆத்மாவாய் இருத்தல் விதிக்கப் படுகிறது –
உலகு முதல் யாவும் அவனே என்பது முன்பே விளக்கப் பட்டு இருக்கிறது –

படைத்தல் படைப்பு காத்தல் காக்கப் படுவது -அழித்தல் அழிக்கப் படுவது ஆகியவை அவற்றிற்கு ஆத்மாவாய் இருக்கும் விஷ்ணுவினாலேயே ஆகிறது –

இதனால் படைப்பு தொழில் செய்யும் பிரமனும் அவன் படைப்பும் அழிப்பவன் அழிக்கப் படுவது யாகிய யாவும் விஷ்ணு ஆத்மாவாய் விளங்குவதாலேயே நடக்கிறது –
படைக்கப்படும் அழிக்கப்படும் பொருட்கள் அவனுடைய செல்வமாக உடையோன் -பொருள் உடைமையாக ஜனார்த்தனனுடைய சிறப்பு அமைகிறது –
ஜனார்தனன் என்பது விஷ்ணுவையே ஒரு பொருள் பன்மொழியாகக் காட்டும் விஷ்ணுர் நாராயண கிருஷ்ண வைகுண்ட ஜனார்த்தன -அமர கோசம்
பிரமன் விஷ்ணு சிவன் இவர்களுக்கு ஆத்மாவாகி இவர்களைத் தன் ஏவலுக்கு உட்பட்ட செல்வமாய் தன் விருப்பப் படியான விளையாட்டிற்கு உறுப்புகளாக்கி தான் மகிழ்கிறான் –

பிருதிவி ஆபஸ் ததா தேஜஸ் வாயுர் ஆகாச ஏவ ச -சர்வ இந்திரிய அந்தக்கரணம் புருஷாக்யம் ஹி யஜ் ஜகத்
ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யதோவ்யய
சர்க்யதேதம் அநந்தரம் ஏவ உச்யதே
கா தினம் ததோஸ்யைவ பூதஸ்தம் உபகாரகம்
ச ஏவ ஸ்ருஜ்ய ச ச சர்க்ககர்த்தா ச ஏவ பாத்யத்தி சபால்யதேச
ப்ரஹ்மத்யவஸ்தா ப்ரசேஷ மூர்த்தி விஷ்ணு வரிஷ்டோ வரதோ வரேண்ய இதி —

இது பின் வருமாறு விளக்கப் படுகிறது
நிலம் நீர் ஒளி வளி வெளி புலன்கள் மனம் ஜீவாத்மாவுடன் கூடிய உலகு யாவும் அவனே –
அவனே எல்லா உயிர்களிலும் உடல் களிலும் இருக்கிறான்-உலகையே உடலாகக் கொண்டு இருப்பினும் மாறுபாடு அற்றவன் -அனைத்து உயிர்களையும் ஆக்கி அளித்து அழித்தல் யாவும் அவன் செயலே
அவனே படைப்பவன் படைப்பு காப்பவன் காக்கப்படும் பொருள் அழிப்பவன் அழிக்கப் படுவது பிரமன் முதலான பல உருக்களைக் கொண்டு -விளங்குபவன்
உயர்ந்தோனானான வரம் அளிப்பவன் விஷ்ணுவே –

அத்ர சாமாநாதி காரண்ய நிரதிஷ்ட ஹேய மிஸ்ர பிரபஞ்ச தாதத்ம்யம் நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய
ஸமஸ்த கல்யாண குணாகாரஸ்ய-ப்ரஹ்மண கதம் உபபத்யதே ? இத்யா சங்க்யா-
ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யத அவ்யயய –இதி ஸ்வயமேவ உபபாதயதி–
ச ஏவ -ஸர்வேச்வரேச்வர -பர ப்ரஹ்ம பூத விஷ்ணுரேவ சர்வம் ஜகத் -இதி ப்ரதிஞ்ஞாய –

சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யதோவ்யய –
இதி ஹேது ருக்த–சர்வ பூதாநாம் அயமாத்மா விஷ்வா சரீரோ -யதோவ்யய -இத்யர்த்த
வஷ்யதிச–தத் சர்வம் வை ஹரேஸ் தநு -இதி –

இவ்வாறு -குறையுள்ள ப்ரபஞ்சத்திற்கும் குறையற்ற அவனுக்கும் பொருத்தம் -ஸாமா நாதி கரண்யத்தால் சுட்டிக் காட்டப்பட்ட ப்ரபஞ்சத்துடன் ஒருபடிப்பட்டு இருப்பது மாறுதல் இல்லாத நிறை குறையற்ற குற்றமற்ற நற் குணக் கடலான ப்ரஹ்மத்திற்கு எவ்வாறு பொருந்தும் என்று ஐயுறின் -இவற்றின் ஆத்மாவாக இவன் விளங்குவதால் விகாரம் அடைவதில்லை என்று தானே விளக்குகிறார்ஸர்வ -ஸர்வேஸ்வரனான பர ப்ரஹ்மமான விஷ்ணுவே உலகு முழுதுமாகிறான் என்று தேற்ற ஏகாரத்தால் அறுதிப்படுகிறதுஸர்வ பூத —–அவ்யய என்று காரணம் கூறினார்எல்லாவற்றிற்கும் இவன் ஆத்மாவாய் இருந்து உலகைத் தன் உடலாகக் கொண்டு இருக்கிறான்அதனால் உடல் உலகு மாறுபட்டாலும் அவன் மாறுதல் இல்லாதவன்உலகுகள் யாவும் ஹரிக்கு உடல் என்றும் சொல்லப்பட்டது
ஏதத் யுக்தம் பவதி –
அஸ்ய அவ்யயஸ் யாபி பரஸ்ய ப்ரஹ்மண விஷ்ணோ விஸ்வசரீரதயா தாத்ம்யம விருத்தம் இதி –
ஆத்ம சரீரயோஸ் ச ஸ்வபாவா வ்யவஸ்திதா ஏவ —

ஏவம் பூதஸ்ய-சர்வேஸ்வரஸ்ய விஷ்ணோ பிரபந்த அந்தர் பூத நியாம்ய கோடி நிவிஷ்ட ப்ரஹ்மாதி தேவ திர்யக் மனுஷ்யே
தத் தத் ஸமாச்ரயணீயத்வாய ஸ்வ இச்சாவதார பூர்வ யுக்த –
ததே தத் ப்ரஹ்மாதிநாம் பாவநாந்தரய அந்வயேந கர்ம வஸ்யத்வம்
பகவத பர ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நிகில ஜகத் உபகாராய ஸ்வ இச்சையா ஸ்வேநைவ ரூபேண
தேவாதி ஷு அவதார இதி ச ஸ்பஷ்டாம்சே ஸூபாஸ்ரய பிரகரேண ஸூ வ்யக்தம் யுக்தம்
அஸ்ய தேவாதி ரூபேண அவதாரேஷ் வபி நப்ரா க்ருதோ தேஹ இதி மஹா பாரதே –
ந பூத சங்க சமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந-இதி ப்ரதிபாதிதே –
ஸ்ருதிஸ் ச
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -இதி
கர்மா வஸ்யாநாம் ப்ரஹ்மாதீனம் நிஸ்ஸதாம் அபி தத் தத் கர்ம அநு குண ப்ரக்ருதி பரிணாம ரூப பூத சங்க சமஸ்தான
விசேஷ தேவாதி சரீர பிரவேச ரூபம் ஜென்ம அவர்ஜநீயம்
அயம் து சர்வேஸ்வர ஸத்யஸங்கல்ப பகவான் ஏவம் பூத ஸூயேதர ஜென்ம அகுர் வன்னபி ஸ்வ இச்சையா
ஸ்வநைவ நிரதிசய கல்யாண குண ரூபேண தேவாதி ஷு ஜகத் உபகாராய பஹுதா ஜாயதே –
தஸ்யை தஸ்ய ஸூவ இதர ஜென்ம பஹுதா யோநிம் பஹுவி ஜென்ம தீரா தீமதாம் அக்ரேஸரா ஜா நந்தி இத்யர்த்த –

அவன் உயிராய் விளங்குவதால் அவனை உடலின் மாறுபாடுகள் ஒட்டுவதில்லை -இதனால் ப்ரஹ்மத்திற்கும் உயிர்கள் உடல்களும் உள்ள உயிர் உடல் தொடர்பு விளக்கப் பட்டதாகிறது
விகாரம் இல்லாதவனாயினும் ஸர்வேஸ்வரன் விஷ்ணு யாவற்றுடனும் உயிர் உடல் தொடர்பு கொண்டு இருப்பதால் பொருட்கள் யாவையும் அவனாகக் கொள்ளுதல் குற்றமன்று
இப்படிப்பட்ட விஷ்ணுவிற்கு ப்ரபஞ்சத்துடன் சேர்ந்த ஏவப்படும் குழுவில் உள்ள பிரமன் தேவன் விலங்கு மனிதன் போன்றோர் தன்னை வந்து பற்றும் படி தன் விருப்பால் அவதரிக்கிறான் என்பது முன்பே விளக்கப் பட்டுள்ளது
இது பிரமன் முதலானோர் கர்ம வசப்பட்டு இருத்தல் வாஸூதேவன் உலகில் நன்மை பொருட்டு தன்னிச்சையால் அவதரித்தல் என்பதால் ஸ்ரீ விஸ்ணு புராணத்தில் 6 அம்சத்தில் கபாஸ்ரய ப்ரகரணத்தில் விளக்கிச் சொல்லப்பட்டுளளது
இவன் தேவன் முதலான உருவெடுத்தாலும் அவன் உலகின் தொடர்பு இன்மையால் மாறுதல் இல்லாதவன் ஆகிறான் –
பாரதத்தில் இந்த பரமாத்மாவின் உடல் 24 தத்வங்களால் ஆனதல்ல -என்று கூறப்பட்டுள்ளது
மறைகளிலும் பிறப்பற்ற இவன் சிறப்பாக அவதரிக்கிறான் -அவனுடைய பிறப்பை ஞானிகளின் தலைவர்கள் அறிகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது
பிரமன் முதலியோர் வினையடியாக தங்கள் விருப்பம் இன்றியே உலகிற்கேற்ற ஏற்ற உடல் மாறுபாடுகளுடன் பிறப்பிக்கப் படுகின்றனர்
தேவர் முதலான பிறப்புகளில் பிறப்பதை இவர்கள் தடுக்க இயலாதவர்கள் -இவ்வாறு தாழ்ந்த பிறப்புகளை அடையாத -மெய்யான வினைத்திட்பமுடைய ஸர்வேthamathuதனது விருப்பப்படியே தானாகவே எல்லையற்ற நற் குணங்களுடம்பி உலகில் நன்மையின் பொருட்டு பலபடியாகப் பிறக்கிறான்
அவனுடைய இப் பிறப்புகளை ஞானிகளின் தலைவர்களாய் இருப்பவர்கள் மட்டுமே அறிகிறார்கள் என்பது பொருள் –

——————–

116–ததே தந் நிகில ஜெகன் நிமித்த உபாதான பூதாத்
ஜந்மாத் யஸ்ய யத–1-1-2-
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பராதாத்-1-4-7–இத்யாதி ஸூத்ரை
ப்ரதிபாதி தாத் பரஸ்மாத் ப்ரஹ்மண பரம புருஷாத் அந் யஸ்ய கஸ்யசித் பரத்வம்
பரமதஸ் சேதூந்மாந சம்பந்த பேத வ்யபதேசேப்ய-3-2-30–
இத்யா சங்க்யா –
(பர ப்ரஹ்மம் அணை-இரு கரைகளை இணைப்பதால் அளவு பட்டது -இரண்டு கரைகளிலும் வேறுபட்டது
வேறு ஓன்று உண்டு என்ற சங்கை போக்க )
சாமாந் யாத் து
புத்யர்த்த பாதவாத
ஸ்தான விசேஷாத் ப்ரகாசாதிவத்
உப பத்தேஸ் ச
ததாந்ய பிரதிபேதாத்
அநேந சர்வ கதத்வ மாயாம சப்தாதிப் ய
இதி ஸூத்ரகார ஸ்வயமேவ நிராகரோதி–

உலகுகள் யாவற்றிற்கும் அவனே பொருள் காரணமாகவும் -செய்வோனாகவும் இருப்பவன் என்பது
உலகின் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகிய செய்பவனே செய்பவனே ப்ரஹ்மம் என்று ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் கூறி -1-1–2-
அவனே பொருள் காரணமாகவும் ஆகிறான் என்பது கொள்கையாலும் எடுத்துக் காட்டாலும் விளங்குகிறது என 1-4-7- –132–தெளிவாக விளங்குவதால் அவனுக்கு மேம்பட ஒரு பொருள் இல்லை -என நிறுவுகிறார்

இக் கருத்துக்கு மாறுபாடாக- பரம் பொருள் ஒரு அணை-இரு கரைகளை இணைப்பதால் அளவுபட்டது -அவ்விரு கரைகளில் நின்றும் வேறுபட்டது வேறு ஓன்று உண்டு –3-2-30- — 344என எழுந்த ஐயத்தை
1- இவ்வணை இரு புறங்களிலும் உள்ள பொருட்கள் கலந்து விடாமல் காக்கிறது -3-2-30—345
2-ப்ரஹ்மம் -அளவு பட்டதாகத் தோன்றுவது -அது தன்னைத் த்யாநிப்போருக்கு எளிதாக இருப்பதற்காக –
சொல் முதலியவற்றை ப்ரஹ்மத்திற்கு கால்கள் என உவமித்து இருப்பது போலே –3-2-31–346
3- அளவற்ற ப்ரஹ்மம் -பொருளோடு தொடர்பு கொள்ளும் போது அளவுடையது போல் காணப்படுகிறது
எடுத்துக் காட்டாக -சாளரத்துடன் தொடர்பு கொள்ளும் ஸூர்ய வெளிச்சம் போல் -பானைக்குள் காணப்படும் வெளி போல் -3-2-32-347
4-எல்லாம் வல்ல பரம் பொருள் தன்னை அடையத் தானே வழியாய் இருத்தலும் பொருத்தமே –3-2-33–348
5- அதை ஒழிந்த வேறு பொருள் இல்லை –3-2-34–349
6- இந்தப் ப்ரஹ்மத்தாலேயே உலகுகள் யாவும் நீக்கமற நிறைக்கப் பட்டுள்ளன
என்று எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பண்பு கூறப்படுவதால்
மேற் சொன்ன கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்களை நீக்குகின்றன என ஸூத்ரம் அருளிச் செய்த வியாசரும் தானே அறுதியிட்டுள்ளார்

——————–

117–மாந வேச சாஸ்த்ரே
பிராதுரா ஸீத்தமோநுத
சிச்ருஷு விவிதா பிரஜா
அப ஏவ ச சர்ஜாதவ் தாஸூ வீர்யமபா ஸ்ருஜத்
தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா –இதி ப்ரஹ்மணோ ஜென்ம ஸ்ரவணாத்
ஸ்ரேத்த ஞாத்வமேவ அவகம்யதே ததா ச ஸ்ருஷ்டு -பரம புருஷஸ்ய தத் விஸ்ருஷ்டஸ்ய ச ப்ரஹ்மண-
அயநப் தஸ்யதா பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருதி
தத் விஸ்ருஷ்ட ச புருஷ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே-இதி நாம நிர்தேசஸ்
ஸ–மனு ஸ்ம்ருதி –ஸ்லோகங்கள் -6-/11-

ததா வைஷ்ணவே புராணே
ஹிரண்ய கர்ப்பாதீநாம் பாவநாத்ரய அந்வயாத் அ ஸூத்தத்வேந ஸூபாஸ்ரயத்வா
நஹர்த்வோப பாதநாத் ஷேத்ரஞ்ஞத்வம் நிஸ்ஸீயதே –

மநு ஸ்ம்ருதியிலும் -ஸ்லோகங்கள் 6-11-
ப்ரக்ருதியை ஏவுகிறவராக ஸ்வயம்புவானவர் ப்ரகாசித்தார் -பலபடியான உயிர்களைப் படைக்க விரும்பினார்
நீர் முதலான தத்வங்களைப் படைத்து அவற்றில் உயர்களைச் சேர்த்தார் –
தானே ப்ரம்மாவைப் படைத்தார் என்று பிரமனின் படைப்பு சொல்லப்படுகிறது
அந்த சரீரம் என்ற ஜலத்தைப் படைத்து அதில் வசித்தலால் நாராயணன் என நினைக்கப் படுகிறார் -அவரால் படைக்கப் பட்ட அந்த ஆத்மா உலகில் ப்ரம்மா என்ற பெயருடன் நிலவுகிறது -என்ற பெயரும் நுட்பப்படுவதை விவரிக்கிறது

அவ்வாறே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
ஹிரண்ய கர்ப்பன் -ப்ரம்மா -போன்றவர்கள் முக்குணச் சேர்க்கை உடையவர்களாய் கூறப்பட்டு இருத்தலால் அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிறார்கள்
ஆகவே அவர்கள் பரிசுத்த ஆத்ம நிலையினர் அல்லர்
பரிசுத்த ஆன்ம நிலையே தியானத்திற்கு பற்றுக்கோடு ஸூ பாஸ்ரயம் -ஆகிறது -அவர்களும் ஜீவாத்மாக்களே ஆகிறார்கள் –

—————-

118–யதபி கைஸ்சித் யுக்தம்
ஸர்வஸ்ய சப்த ஜாதஸ்ய வித்யர்த்தவாத மந்த்ர ரூபஸ்ய கார்யாபிதா யித்வேநைவ ப்ராமாண்யம் வர்ணனீயம்
வ்யவஹாராதந் யத்ர சப்தஸ்ய போதகத்வ சக்த்ய வதாரணா சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி மூலத்வாத்
கார்ய ரூப ஏவ சப்தார்த்த அத நபரி நிஷப்ந்நே வஸ்துநி சப்த பிரமாணம் இதி –

(விதி அர்த்த வாதம் மந்த்ரம் -இவை தேர்ந்த மற்ற ஸ்ருதி வாக்கியங்கள் பிரமாணம் இல்லை என்று
மீமாம்சகர் -கொள்கையை சொல்லி அடுத்து சித்தாந்தம் –)

சிலர் கொள்கைப்படி -எல்லா சொற் கூட்டங்களும் -விதி -அர்த்தவாதம் -மந்த்ரம் -என்று ஒரு செயலில் ஈடுபடுத்துவதால் மட்டுமே பொருள் உள்ளவையாய் கொள்ளப்படுகின்றன –
இவ்வாறு நடைமுறையில் செயலில் ஈடுபடுத்தப்படாத சொற்களுக்குப் பொருள் காட்டும் தன்மை ஏற்படுவதற்கு இல்லை –
நடைமுறையில் செயலைச் செய்யும் அறிவு -அதனால் விளையும் செயல் -இவற்றின் வழியாகவே சொற்களின் பொருள் கிடைக்கும் -இவ்வாறு காட்டப்பட்ட பொருள்களைத் தவிர்த்த uமற்றவை அறுதி இட்டனவாகக் பிரமாணமாகக் -கொள்ள முடியாது
ஆகையால் இவ்வாறு செயலில் ஈடுபடுத்த முடியாத ப்ரஹ்மத்தை வேதாந்த சொற்கள் காட்டாது
அவ்வாறன்றி -சுட்டிக் கட்டப்பட்டு -அல்லது இடுகுறிச் சொற்களால் அறியப்படும் பொருட்கள் -ஸித்த வஸ்துக்கள் -முன்பே அறியப்பட்டவை -அல்லது செயலால் அறியும் தேவை அற்றவை –

————

119—அத்ரோச்யதே
ப்ரவர்த்தக வாக்ய வ்யவஹாராதேவ சப்தாநாம் அர்த்த போதகத்வ சக்த்யவதாரணம் கர்த்தவ்யம் இதி கிம் இதம் ராஜாஞ்ஞா ?
சித்த வஸ்துஷு சப்தஸ்ய போதகத்வ சக்தி கிரஹணம் அத்யந்த ஸூகரம்
ததாஹி
கேந சித் ஹஸ்த சேஷ்டாதிநா -அபவர்கே தண்ட ஸ்திதா –இதி தேவ தத்தாயா ஞாபயேதி ப்ரேஹித
கஸ்சித் தது ஞாபநே ப்ரவ்ருத்த -அபவர்கே தண்ட ஸ்திதா-இதி சப்தம் ப்ரயுங்க்தே-மூகவத் ஹஸ்த சேஷ்டா மிமாம்
ஜாநந் பார்ஸ்வஸ்யோந்ய ப்ரக வ்யுத்பன்னோபி ஏதஸ்யார்த்தஸ்ய போதநாய அபவர்கே தாண்ட ஸ்தித –
இத்யஸ்ய சப்தஸ்ய பிரயோக தர்சநாத் -அஸ்ய அர்த்தஸ்ய அயம் சப்தோ போதக -இதி ஜாநாதி –
இதி கிம் அத்ர துஷ்கரம்–

ஸித்தாந்தம்
இது இவ்விதம் பதில் அளிக்கப் படுகிறது –
நடப்பு உரையாடல் மூலமாக மட்டுமே சொற்கள் அனைத்தும் பொருள் உள்ளவைகளாக ஆகின்றன என்பது ஏதாவது அரசு கட்டளையா -ஸித்த வஸ்துக்களை சுட்டிக் காட்டி அறியப்படுதல் மிக இலகுவானது
அவ்வாறே ஒருவன் வாய் பேசாது கை செய்கையாலேயே வீட்டு மூலையில் தடி வைக்கப்பட்டுள்ளது-என்று கூற
அவனும் அதை நன்கு புரிந்து கொண்டு தன்னை அனுப்பிய தேவதத்தனிடம் -வீட்டு மூலையில் தடி வைக்கப்பட்டுள்ளது என்று கூறி விளங்க வைத்தல் வழக்கில் இருக்கின்றது
அவ்வாறே ஊமையும் கைச்சாடையினால் விளங்க வைப்பது போல் ஒருவன் சைகையால் சொல்ல வந்த பொருளை முன்பு அதை அறியாத இரண்டாமவன் புரிந்து கொள்ள முடிகிறது
அவன் அவ்வாறு அறிவதில் என்ன கெடுதல் ஏற்படுகிறது

———————

120–ததா பால –
ததோ யம் -அயம் அம்பா -அயம் மாதுல-அயம் மனுஷ்ய -அயம் ம்ருக-சந்திரோதயம் -அயம் ச ஸூர்ய -இதி
மாதா பித்ரு ப்ரப்ருதிபி சப்தை சரை அங்குல்யா நிர்த்தேசேந-தத்ர தத்ர பஹு ச -ஸிஷித-தைரேவ சப்தை –
தேஷ் வரத்தேஷு-ஸ்வாத் மனஸ் ச யுத் பத்திம் த்ருஷ்ட்வா தேஷ் வரத்தேஷு தேஷாம் சப்தாநாம் –
அங்குல்யா நிர்தேச பூர்வக பிரயோக சம்பந்தாந்த்ர பாவாத் சங்கேத யித்ரு புருஷா ஞாநாச்ச போதகத்வ நிபந்தன-
இதி க்ரமேண நிஸ்ஸித்ய புநர் அபி அஸ்ய சப்தஸ்ய அயமர்த்த-இதி பூர்வ விருத்தை -ஸிஷித சர்வ சப்தாநாம் மர்த்தம்
அவகம்ய ஸ்வம் அபி சர்வம் வாக்ய ஜாதம் ப்ரயுங்க்தே –
ஏகமேவ சர்வ பதாநாம் ஸ்வார்த்த அபிதா யத்வம் ஸங்காத விசேஷானாம் ச யதா வஸ்தித சம்சர்க்க விசேஷ போதகத்வம்
ச ஜாநாதி இதி -கார்யார்த்த ஏவ வ்யுத்பத்தி இத்யாதி நிர்பந்தோ நி நிர்பந்தந —
அத
பரி நிஷ்பன்னே வஸ்துநி சப்தஸ்ய போதகத்வ சக்த்ய வதாராநாத் சர்வானி வேதாந்த வாக்யானி
சகல ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகாரம் யுக்த லக்ஷணம் ப்ரஹ்ம போதயந்த்யேவ —

இது போலவே குழந்தைகளுக்கும் -இது அம்மா -இவர் மாமா -இவர் மனிதர் -இது விலங்கு மான் -இது சந்திரன் இது ஸூர்யன் என்று
தாய் தந்தையர் கையால் சுட்டிக்காட்டி பலவற்றை அறிவிக்கிறார்கள் -அவ்வாறு பயிற்றுவிக்கப் பட்ட அக் குழந்தை பிற் காலத்தில் இன்ன இன்ன சொற்களுக்கு இன்ன இன்ன பொருட்கள்Mikaமிக எளிதாக அறிந்து கொள்கின்றது
இவ்வாறு அறிந்து கொள்வதற்கு ஒரு பொருள் அதைச் சுட்டும் சொல் -என்று சொல் பொருள் – தொடர்பின்றி வேறு ஏதும் காரணமாக முடியாது –
சொல் அறிவிக்கும் இயல்புடையதாயும் பொருள் அறியப்படுதலையும் பெற்றுள்ளது
இவ்வாறே அக் குழந்தை பல சொற்களை அறிந்து அவற்றைத் தானும் வழக்கில் உபயோகித்தல் என்பது உலகு எங்கும் காணப்படுகிறது
இவ்வாறே சொற்கள் யாவும் தம் தம் பொருளைத் தொடர்புச் சிறப்பால் அறிவித்து -அவற்றின் கூட்டத்தால் வாக்கியங்களாக விரித்து ஒருவருடைய மனக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றன என்பதால் செயல் காட்டும் சொற் களால் மட்டுமே பொருள் அறியப்படுகிறது என்பது தவறு -இது கட்டாயமில்லை –
ஆகவே எல்லா வேதாந்தங்களிலும் உள்ள ப்ரஹ்மத்தைக் குறிக்கும் சொற்கள் ப்ரஹ்மம் உலகின் காரணமாதலையும் குணங்கள் யாவற்றையும் பெற்று இருப்பதையுமே காட்டுகின்றன –

————————–

121—அபி ச கார்யார்த்த ஏவ வ்யுத்பத்தி ரஸ்து வேதாந்த வாக்யாநி உபாஸநா விஷய கார்யாதி க்ருத விசேஷண பூத
பலதவேந -துக்காசம் பிந்ந தேச விசேஷ ரூப ஸ்வர்க்காதி வத்ராத்ரி சத் ப்ரதிஷ்டாதி வத் அபகோரண சதயாதந
ஸாத்ய சாதனா பாவவச்ச கார்ய உபயோகி தயைவ சர்வம் போதயந்தி

ததாஹி
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -இத்யத்ர ப்ரஹ்ம உபாஸந விஷய கார்யாதி க்ருத விசேஷண பூத
பலத்வேந ப்ரஹ்ம பிராப்தி ஸ்ரூயதே
ப்ர பிராப்தி காமோ ப்ரஹ்ம வித்யாத் -இதி அத்ர ப்ராப்ய தயா ப்ரதீயமாநம் ப்ரஹ்ம ஸ்வரூபம் தத் விசேஷணம்
ச சர்வம் கார்ய உபயோக்யதை வசித்தம் பவதி –தத் அந்தர் கதமேவ-ஜகத ஸ்ருஷ்டத்வம்- ஸம்ஹார்த்ருத்வம்–ஆதாரத்வம் –
அந்தராத்மத்வம் -இத்யாதி யுக்தம் அனுக்தம் ச ஸர்வமிதிந கிஞ்சித் தநுப பந்நம் –

மேலும் செயல் தொடர்புடைய பொருளை மட்டும் சொற்கள் அறிவுறுத்தும் எனில் -இங்கு ப்ரஹ்மம் என்னும் சொல் -இடையறாத் த்யானமாகிற செயலால் -மோக்ஷமாகிற நம் விருப்பத்தைக் கொடுக்கும் என்று நம்பி – அடையப்படும் இலக்கு என்பது வேதாந்த வாக்யங்களால் தெளிவாகிறது
துக்கம் கலவாத நாடான ஸ்வர்க்கத்தை -ஜ்யோதிஷ்டோமம் செய்து -அடைவதற்கும் நிலை பெற்று இருப்பதற்கும் ராத்ரி சத்ரம் போன்ற யாகங்கள் செய்ய வேண்டும் –
அந்தணரை பழித்தோர் நூறு பொற் காசு தண்டம் விதிக்கப்பட வேண்டும் -இல்லை எனில் நரகம் புக்க நேரும் -என்பன போன்ற நெறியும் இலக்கும் ஆகிய செயல் பயன்பாடு தெரிவது போல் இங்கும் காணப்படுவதால் இச் சொற்களும் பொருள் பொதிந்தவை யாகின்றன

அவ்வாறே இடையறாது த்யானிப்பவன்பலம் -பரம் -அடைகிறான் என்று ப்ரஹ்ம உபாஸநம் -கேட்டல் -பார்த்தல் மனத்தில் நிலை இருத்தல் இடையறாது சிந்தித்தல் -இச்செயல்களில் ஈடுபடும் உபாசகரின் சிறப்பால் அதன் பயனாகிய ப்ரஹ்மத்தை அடைதல் ஏற்படுகிறது
பலத்தில் விருப்பமுடையவன் ப்ரஹ்மத்தை இடையறாது தியானிக்கக் கடவன் என்று விதிக்கப்பட்டு இருக்கிறது
இதனால் குணங்களோடு கூடிய ப்ரஹ்மம் மெய் நிலை ஒரு செயலுக்கு இலக்காக அமைந்து இருக்கின்றன
மேலும் ப்ரஹ்மம் உலகுகளை ஆக்கி அளித்து அழித்து அவற்றைத் தாங்கி யாவற்றிலும் உயிராக உள் நுழைந்து இயக்குதல் போன்ற செயல்களும் செய்வதால் இது சிறிதளவும் தவறு என்று கொள்ள முடியாது –

—————–

122–ஏவம் ச சதி மந்த்ர அர்த்தவாத கதா ஹ்ய விருத்தா அபூர்வாஸ் ச சர்வே விதி சேஷ தயைவ சித்தா பவந்தி-
யதோக்தம் -த்ரமிட பாஷ்யே–ருணம் ஹிவை ஜாயதே -இதி ஸ்ருதே -இத் யுபக்ரம்ய யத்யாப்யவதாந ஸ்துதி பரம் வாக்யம்
ததாபி நாசதா ஸ்துதி ரூப பத்யதே இதி-
ஏதத் யுக்தம் பவதி –
சர்வோ ஹயர்த்த வாத பாக -தேவதாராதன பூத யாகாதே சாங்கஸ்ய ஆராத்ய தேவதாயாஸ் ச அதிருஷ்ட ரூபான்-குணாந் –
சஹஸ்ரசோ வதந்-கர்மணி ப்ராசஸ்த்ய புத்திம் உத்பாதயதி தேஷாம ஸத்பாவே ப்ரஸாஸ்த்ய புத்திரேவ நஸ்யாத்-
இதி கர்மணி ப்ரஸாஸ்த்ய புத்யர்த்த குண ஸத்பாவமேவ போதயதி இதி –
அநயைவதிசா சர்வ மந்த்ரார்த்தவாத கதா ஹ்யார்த்தா சித்தா —

(ச குண ப்ரஹ்மம் நிர் குண ப்ரஹ்மம் இரண்டு இல்லையே
சத் வித்யையிலும் ச குண ப்ரஹ்மமே உபாசிக்கப்படுகிறான்
இதுவே அபி யுக்தர் -வாக்யகாரர் –
சங்கல்பாதி நிர் குண ப்ரஹ்மம் செய்ய முடியாதே)

இவ்வாறு இருக்கையில் மந்த்ரம் அர்த்தவாதம் முதலானவை ஒன்றுக்கு ஓன்று முரண் இன்றி இலக்கை அடைவிக்கின்றன -விதி -இலக்கு
இதற்கு ஏற்ப த்ரமிட பாஷ்யத்திலும் -தமிழர் உரையிலும் -குணம் ஹி வை ஜாயதே -என்று துவங்கி விளங்கும் மந்த்ரம் ஹோமத்திற்கான ஹவிஸ்ஸின் நின்றும் தமது பங்கைப் பிரித்து எடுத்துக் கொள்வதை ஸ்துதிக்கிறது ஸ்துதி என்பது உள்ளதைச் சொல்வது -இல்லாததைச் சொல்வது ஸ்துதி அல்ல –
அர்த்த வாதப்பகுதிகள் யாவும் தேவதைகளை ஆராதிக்கும் முகமாய் -யாகம் போன்ற செயல்களில் அங்கமாக -ஆராதிக்கப்படும் தேவதைகளின் கட் புலனாகாத பண்புகளை ஆயிரக் கணக்கில் விவரிக்கின்றன –
அதனால் அந்த யாகம் செய்வது சிறந்தது என்ற எண்ணம் தூண்டப் படுகிறது –
இவ்வாறு அர்த்த வாதங்கள் இல்லை எனில் செயலின் சிறப்பு புலப்படாது -ஆகவே அவை உள்ள பண்புகளையே தெரிவிக்கின்றன
அதே போல் எல்லா மந்திரங்களும் அவற்றின் பொருளும் முன்பே அறியப்பட்டவை ஆகின்றன -ஸித்த வாக்யம்
ஆகவே அவை விதி வாக்யத்திற்குத் துணை செல்லும் –

———————–

123–அபிச கார்ய வாக்யார்த்தவாதிபி
கிமிதம் கார்யத்வம் நாம -இதி வக்த்தவ்யம்–க்ருதிபாவ பாவிதா க்ருத யுத்தேஸ்யதா ச இதி சேத்
கிமிதம் க்ருத யுத்தேஸ்யத்வம் –
யதகதி க்ருத்ய க்ருதி -வர்த்ததே தது க்ருத யுத்தேஸ்யத்வம் –
இதி சேத் புருஷ வியாபார ரூபாயா க்ருதே கோயம் அதிகாரோ நாம ?
யத் பிராப்தீச்சயா க்ருதிம் உத்பாதயதி புருஷ -தத் க்ருத யுத்தேஸ்யத்வம் இதி சேத் –
ஹந்த-தரஹி இஷ்டத்வமேவ க்ருத யுத்தேஸ் யத்வம் –

ஒரு செயலுக்கு இலக்காக இருப்பதே சொல்லின் பொருள் என்பீராயின் -செயல்படுதல் என்றால் என்ன -என்ற கேள்வி எழும்
மனத்தில் ஏற்படும் எண்ணம் -அதனடியான முயற்சி -அதன் விளைவான வெளிப்பாடு செயல் என்று பதில் வரும் –
ஒரு பயனைக் கருதி செயல்படுவது செயல் எனில் கருதிச் செயல்படுவது என்பது யாது -என்ற கேள்வியும் எழும் –
ஒரு இலக்கை அடைவதற்கு என்னால் செய்யப்படத் தக்கது என்று எது செயல் படுத்தப் படுகிறதோ அது என்பீராயின் அதைச் செய்யத் தகுதி உள்ளோர் யார் -என்ற கேள்வியும் எழும் -அதற்கு விடை
(எண்ணமுடையோன் என்பதால் அசேதனப் பொருள்களுக்கு எண்ணம் கருத்து ஏற்பட வழியில்லை )
இச்செயல் என் விருப்பத்தை நிறைவேற்றும் என்று எண்ணமுடைய மனிதனே ஆவான் -அதாவது -ஒன்றை அடைவதில் விருப்பமுடைய மனிதனே அதற்குத் தகுதியுள்ளவன் என ஆகிறது
அவனது விருப்பமே செயலுக்குப் பலன் என்பதே தீர்ந்த முடிவு -அந்தோ இதை -விருப்பமானதை அடையச் செய்யும் முயற்சியே செயல் -எனச் சொல்லி இருக்கலாமே
இது அவனுடைய விருப்பம் என்பதைத் தவிர வேறு ஆகாது

————–

124–அதைவம் மனுபே-இஷ்டஸ்யைவ ரூப த்வய -மஸ்தி –இச்சா விஷய தயாஸ்திதி -புருஷப் பிரேரகத்வம் ச –
தத்ர பிரேரகத்வார க்ருத யுத்தேஸ் யத்வம் இதி -சோயம் ஸ்வ பஷாபி நிவேச காரிதோ வ்ருதாஸ்ரம-
ததாஹி -இச்சா விஷய தயா ப்ரதீதஸ்ய ஸ்வ ப்ரயத்ந உத்பத்தி மாந்தரேண அசித்தி -பிரேரகத்வம் தாத்தா ஏவ ப்ரவ்ருத்தே –
இச்சாயம் ஜாதாயாம் -இஷ்டஸ்ய ஸ்வ ப்ரயத்ந உத்பத்தி மந்தரேண அசித்தி -பிரதீயதே சேத் –
தத சிகீர்ஷா ஜாயதே தத ப்ரவர்த்ததே புருஷ -இதி தத்வ விதாம் ப்ரக்ரியா தஸ்மாத் இஷ்டய க்ருத்யதீநாத்
மலாபத் வாதிரேகி க்ருத யுத்தேஸ் யத்வம் நாம கிமபி ந த்ருச்யதே –

விருப்பம் என்பது இரண்டு நிலைகளில் இருக்கிறது -பலனில் விருப்பமும்
அதற்கான செயலில் ஊக்கமும்
இதில் பலனில் விருப்பம் முதன்மையானது -அதுவே செயலில் ஊக்கம் அளிக்கிறது
ஆகவே செயல் பாடு என்பது தன் விருப்பத்தினால் அடையக் கூடியது
மாறாக செயலில் ஊக்கமே முதன்மை யானது என்று கொள்வீராகில் அது நீங்கள் உங்களுடைய கொள்கையின் பால் கொண்ட பிடிப்பால் மட்டுமே கொள்ள முடியும் –
அவ்வாறாயின் விரும்புவதின் இச்சையின் இலக்காகத் தோன்றுவதை விருப்பத்தை நம் முயற்சி இன்றி அடைய முடியாது -அதனால் தான் நம் விருப்பங்களை அடைய செயல் புரிகிறோம்
விரும்புவதில் இருந்து பிறந்த விருப்பத்தை தன் முயற்சியால் அடையமுடியும் என்பது தவறு என்றால் -உலகில் முயற்சியால் விருப்பமும் அதனடியான செயல்பாடும் உள்ளதை மெய்யறிவுடையோர் யாவரும் நன்கு உணர்ந்து இருக்கின்றனர்
அதனால் ஆத்ம லாபத்திற்காக மற்ற ஒன்றைக் கருதாத -உபாஸனம் முதலான -செயல்கள் என்பது எவ்வாறு காணப்படாமல் இருக்கும் –

————

125–அதோஸ்யதே–இஷ்டாதா ஹேதுஸ் ச புருஷ அநு கூலதா -தத் புருஷ அநு கூலத்வம் க்ருத யுத்தேஸ்யத் -வமிதி —
நைவம் -புருஷ அநு கூலம் -ஸூகம்-இத் யநரத்த அந்தரம் ததா புருஷ பிரதி கூலம் துக்க பர்யாயம் –
அத ஸூக வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி புருஷ அநு கூலத்வம் ந சம்பவதி –
நநு ச துக்க நிவ்ருத்தேர் அபி ஸூக வ்யதிரிக்தாயா-புருஷ அநு கூலதா த்ரஷ்டா ?
நைதத் -ஆத்ம அநு கூலம் ஸூகம் -ஆத்ம பிரதி கூலம் துக்கம் -இதி ஹி ஸூக துக்கயோ-விவேக –
தத்ர ஆத்ம அனுகூலம் ஸூகம் -இஷ்டம் பவதி -தத் பிரதி கூலம் துக்கம் ச அனிஷ்டம் –
அத துக்க சம்யோகஸ்ய அஸஹ்யதாய தந் நிவ்ருத்திர் அபி இஷ்டாபவதி -தத ஏவ இஷ்ட தா சாமியாத் அநு கூலதாப்ரம –
ததாஹி -ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டஸ்ய ஸம்ஸாரின புருஷஸ்ய அநு கூல சம்யோக பிரதி கூல சம்யோக ஸ்வரூபேணா வஸ்திதி –
இதி திஸ்ர அவஸ்தா தத் பிரதி கூல சம்பந்த நிவ்ருத்தி அநு கூல சம்பந்த நிவ்ருத்தி ஸ்வரூபேண அவஸ்த்திதி ரேவ–
தஸ்மாத் -பிரதி கூல சம்யோகே வர்த்தமாநே தந் நிவ்ருத்தி ரூபா ஸ்வரூபேண அவஸ்திதிரபி இஷ்டா பவதி –
தத்ர இஷ்டதாசாம்ய அநுகூலதா ப்ரம-அத ஸூக ஸ்வரூபத்வ அநு கூல தயா நியோகஸ்ய
அநு கூல தாம் வதந்தம் பிரமாணிகா பரிஹஸந்தி-

ஒரு பொருள் தனக்கு விருப்பமாய் இருப்பதற்குக் காரணம் -அது தனக்கு அநுகூலமாய் இருப்பது -அதுவே விருப்பமான செயலுக்கும் காரணமாகிறது –
அதாவது தனக்கு எது நன்மை அளிக்கிறதோ அது சுகம் என்று கூறத் தடை யில்லை -எது நன்மை அளிக்க வில்லையோ அது துக்கம் -சுகத்தின் நின்றும் வேறுபட்ட யாவும் ஒருவனுக்கு அநுகூலமாக இருக்க முடியாது –
மாறாக துக்கம் கழிதல் என்பது சுகத்தின் நின்றும் வேறுபட்டதாயினும் நன்மை அளிப்பதாகக் காணப் படுகிறதே எனில் தனக்கு நன்மை அளிப்பது சுகமாகவும் விருப்பமாகவும் இருக்கிறது -மாறாக தீமையை அளிப்பது துக்கமாகவும் விருப்பம் அற்றதாகவும் இருக்கிறது –
பிந்தையது விருப்பத்திற்கு மாறானது -ஆகையால் அது கழிதல் சுகம் போல் தோன்றுவதால் விருப்பமாகிறது –
அதனாலேயே துக்கம் ஏற்பட்ட பிறகு அது தங்க முடியாமல் இருத்தலால் அது கழிதல் நன்மை அளிப்பதாகிறது
அவ்வாறே உலகின் தொடர்பால் பிறவியில் கட்டுண்டவர்களுக்கு சுகம் துக்கம் இரண்டுமற்ற நிலை என மூன்று நிலைகள் உண்டு -இதில் மூன்றாவது நிலையில் ஆத்மா தன்னிலையால் விளங்குகிறது -அதனால் தீமை அளிக்கும் தொடர்பால் துக்கமும் -அது கழிந்தால் தன் இயல்பான நிலைக்குத் திரும்புகிறது -அதனால் தீமை அளிக்கும் தொடர்பு கழிதல் ஆத்மாவின் இயல்பான நிலைக்கு விருப்பமாகிறது –

————–

126–இஷ்டஸ்ய அர்த்த விசேஷஸ்ய நிர்வர்த்தக தயைவ ஹி நியோகஸ்ய நியோகத்தவம் –
ஸ்திரத்வம் அபூர்வத்வம்ச பிரதீயதே
ஸ்வர்க்க காமோ யஜதே இத்யத்ர கார்யஸ்ய க்ரியாதிரிக்த்தா ஸ்வர்க்க காம பத சமாபி வ்யாஹாரேண
ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸயாதேவ பவதி –

விருப்பம் என்னும் சொல் அதன் பொருள் சிறப்பால் -விரும்புவோனை -ஒரு செயலில் ஈடுபடுத்தி -ஒரு செயலில் ஈடுபடுத்துவது நியோகத்தவம் -செயலில் விருப்பம் ஏற்படுத்துதல் –
அது நிறைவு பெற்றவுடன் அதினின்றும் நீங்கி விருப்பத்தைக் கொடுப்பதால் அந்த செயலில் விருப்பம் ஏற்படுகிறது -அதனால் அபூர்வமும் விளைகிறது
யாகம் செய்வோர் நோக்கம் ஸ்வர்க்கமே ஒழிய அபூர்வமில்லையே
இசைவித்து அடியேனை உனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் அன்றோ

———————-

127—ந ச வாஸ்யம் -யஜேத-இத்யத்ர பிரதமம்-நியோக -ஸ்வ பிரதான தயைவ பிரதீயதே ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹாராத்
ஸ்வ ஸித்தயே ஸ்வர்க்க சித்த யனுகூல தாச்சி நியோகஸ்ய இதி யஜேத-இதிஹி -தாதவர்த்தஸ்ய புருஷ பிரயத்தன சாத்யதா பிரதீயதே ?
ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹாராதேவ தாத்வர்த்தாதிரேகினோ நியோகத்வம்-ஸ்திரத்வம் -அபூர்வத்வம்-ச இத்யாதி அவகம்யதே –
தச்ச ஸ்வர்க்க சாதனத்வ ப்ரதீதி நிபந்தம் -சமாபி வ்யாஹ்ருத ஸ்வர்க்க காம பதார்த்த அந்வய யோக்யம்
ஸ்வர்க்க சாதனமேவ கார்யம் லிங்காதயோபி தததீ இதிஹி லோக வ்யுத்பத்திரபி திரஸ் க்ருதா —
ஏதத் யுக்தம் பவதி –
சமபி வ்யாஹ்ருத -பதாந்தர வாஸ்ய அன்வய யோக்யமேவ இதரபத ப்ரதிபாத்யம் இதி அன்விதாபிதாயி பத ஸங்காத ரூப
வாக்ய ஸ்ரவண சமந்தரமேவ பிரதீயதே தச்ச ஸ்வர்க்க சாதன ரூபம் அத க்ரியாவத் அநன்யார்த்த தாபி விரோதாதேவ பரித்யக்தா இதி
அத -கங்காயாம் கோஷ-இத்யாதவ் கோஷ பிரதிவாஸ யோக்யார்த்த உபஸ்தான -பரத்வம் கங்கா பதஸ்ய ஆஸ் ரீயதே-
பிரதமம் கங்கா பதேந கங்கார்த்த ஸ்ம்ருத இதி -கங்கா பதார்த்தஸ்ய உபேயத்வம் ந வாக்யார்த்த அந் வயீ பவதி –
ஏவமாத்ராபி -யஜேத-இத்யேதா வந் மாத்ர ஸ்ரவனே கார்யம் அநன்யார்த்த ஸ்ம்ருதமிதி வாக்யார்த்த அன்வய ஸமயே
கார்யஸ்ய அன்யார்த்ததா நாவாதிஷ்டதே-
கார்யாபிதாயி பத ஸ்ரவண வேலாயாம் பிரதமமம் கார்யம் அநன்யார்த்த ப்ரதீதம் இத்யேததபி ந சங்கச்சதே வ்யுத்பத்தி காலே
கவா நயநாதி க்ரியாயா துக்க ரூபாயா இஷ்ட விசேஷ சாதன தயைவ கார்யதா ப்ரதீதே–

ஸ்வர்க்கத்தை விரும்புபவன் யாகத்தைச் செய்யட்டும் என விதிக்கிறது -இதில் முக்கியமான செயல்பாடு யாகம் செய்தல் -நோக்கம் ஸ்வர்க்கம் அடைதல் -ஆனால் செயல்பாடான யாகம் செய்தல் அது முடிந்தவுடன் முடிந்து விடுகிறது -ஆனால் செய்தவன் இறந்த பிறகு தான் அவனுடைய ஸ்வர்க்கம் கிட்டும் -இந்த இடைப்பட்ட காலத்தில் அதைப் பெற்றுத் தரக் காரணமாக இருப்பது -அபூர்வம் என்ற கட் புலனாகாத ஓன்று -இது யாகம் செய்தவனின் நோக்கம் அன்று -எனினும் தானே விளைகிறது -உண்மையில் ஸ்வர்க்கத்தைப் பெற்றுத் தருவதற்குத் தானே சக்தியற்ற யாகமாகிற செயலில் ஈடுபடுத்துகிறது -விதியுடன் சேர்த்தப் பார்க்கையில் அபூர்வம் முக்யமானதன்று -ஆயினும் அதுவே ஸ்வர்க்கத்தைப் பெற்றுத் தருகிறது –
உதாரணமாக -கங்கையில் இடைச்சேரி என்ற சொல் தொடருக்கு கங்கையின் நீர்ப் பெருக்கைத் தவிர்த்து அதன் கரை என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பதே முறை –
இதே போல் யாகம் செய்க -என்பது ஸ்வர்க்கத்தை அடைவிப்பதை நேரடியாகக் காட்டும் செயல் என்று கொள்ள முடியாது -அதனால் மட்டும் யாகம் ஸ்வர்க்கம் என்ற சொற்கள் பொருளுடையவையாக ஆகின்றன எனக் கொள்ள முடியாது -ஆனால் ஸ்வர்க்கத்தில் விருப்பமுடையவன் என்ற விருப்பத்தை நிறைவேற்ற அது வழி என்று ஏற்படுகிறது
அதனால் ஒருவன் செய்ய வேண்டிய காரியத்தையும் அதன் தொடர்புடைய பலனையும் சேர்த்தே தான் உணருகிறான்
அதனால் செயல் இலக்கை அடையும் வழி மட்டுமே ஆகுமே யன்றி செயல் புரிவதே நோக்கமாகாது
ஒரு செயலைக் குறிக்கும் வாக்யங்களைக் கேட்டவுடன் செயலை மட்டும் வேறு எதையும் எதிர்பாராது அறிகிறான் என்பது கொள்ளத் தக்கதில்லை
மேலும் அவ்வாக்கியத்தின் பொருளை அறிகையில் பசு முதலியவற்றைக் கொண்டு வருதல் முதலான செயல்கள் மெய் வருந்திச் செய்ய வேண்டி இருப்பதால் அச் செயல் பாட்டின் முகமாய் ஏதோ ஒரு விருப்பம் நிறைவேறும் செயல் நடை பெறும் என்பதே அறியக் கிடக்கிறது –

—————-

128–அத நியோகஸ்ய புருஷ அநு கூலத்வம் சர்வ லோக விருத்தம் -நியோகஸ்ய ஸூக ரூப புருஷ அநு கூலதாம் வதத –
ஸ்வ அநுபவ விரோதஸ் ச கரீர்யா வ்ருஷ்டி காமோ யஜேதா –இத்யாதி ஷு சித்தேபி நியோக வ்ருஷ்டியாதி சித்தி நிமித்தஸ்ய
வ்ருஷ்டி வ்யதிரேகேன நியோகஸ்ய அநு கூலதா நாநு பூயதே யத்யபி அஸ்மின் ஜென்மநி வ்ருஷ்ட்யாதி சித்தேர நியம –
ததாபி அநியமா தேவ நியோக சித்தி அவஸ்ய ஆஸ்ரயணீயா தஸ்மிந் அநு கூலதா பர்யாய ஸூக அநு பூதி ந வித்யதே –
ஏவம் உக்தரித்யா க்ருதி சாத்யேஷ்டத்வாதிரேகி க்ருத யுத்தேஸ் யத்வம் ந த்ருஸ்யதே–

பிறகு யாகத்தின் காரணமாய் ஏற்படும் கார்யமான அபூர்வம் செய்தவனுக்கு உறு துணையாகவும் ஸூகமாகவும் இருக்கிறது என்பது உலகு இயற்க்கைக்கு ஒவ்வாது -அவ்வாறு அந்த ஸூகத்தைத் துய்த்தவர் யாருமில்லை -மழை வேண்டுவோர் காரீரி என்ற யாகத்த்ச் செய்க என்று விதிக்கையில் -காரீரம் என்ற மூங்கில் தளிர் வாடினால் காரீய என்னும் யாகம் செய்யத்தக்கது என்றும் கொள்ளப்படும்-யாகம் முடிந்த உடனேயே மழை பொழிந்து விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை -ஏன் எனில் இந்த யாகத்தில் குறை ஏதும் ஏற்பட்டு இருந்தால் செய்தவருடைய பிறவி முழுவதுமே மழை பெய்யாது போகலாம் -அதனால் மீமாம்ஸகர்கள் சொல்லும் அபூர்வம் யாகம் செய்தவனுக்கு சுகமாகவோ அனுகூலமாகவோ இருப்பதில்லை எனத் தெளிவாகிறது –
ஆகவே-அபூர்வம் -மக்களுக்கு நல்லது -அதனால் யாகம் செய்ய வேண்டும் -என்று மீமாம்ஸகர்கள் சொல்வது நேராது -மாறாக அது -யாகம் -செய்ய முடிந்தது -செய்யும் விருப்பத்தைத் தூண்டுவது என்றவை மட்டுமே கிடைக்கும்

—————-

129–க்ருதிம் பிரதி சேஷித்வம் க்ருத யுத்தேஸ் யத்வம் இதி சேத் -கிமிதம் சேஷித்வம் ?-கிம் ச சேஷத்வம் ? இதி வக்தவ்யம்
கார்ய பிரதி சம்பந்ததீ சேஷ -தத் பிரதி சம்பந்தத்வம் சேஷத்வம் இதி சேத் -ஏதம் தர்ஹி கார்யத்வமேவ சேஷித்வம்
இத் யுக்தம் பவதி -கார்யத்வமே ஹி விசார்யதே ? பர உத்தேச ப்ரவ்ருத்த க்ருதி வ்யாப்த் யர்ஹத்வம் சேஷத்வம்
இதி சேத் கோயம் பர உத்தேசோ நாமேதி அயமேவ ஹி விசார்யதே ?
உத்தேஸ் யத்வம் நாம ஈப்சித சாத்யத்வம் இதி சேத் கிமீப்ஸி தத்வம் ?
க்ருதி பிரயோஜனத்வம் இதி சேத் புருஷஸ்ய க்ருத்யாரம்ப ப்ரயோஜனமேவ ஹி க்ருதி ப்ரயோஜனவம் ?
ச ச இச்சா விஷய க்ருத்யதீன ஆத்ம லாப இதி பூர்வ யுக்த ஏவ —

முயற்சியை ஆள்வது செயல் ஊக்கம் தான் எனில் ஆள்வது -சேஷி -யார் -ஆளப்படுவது -சேஷன் யார் என்ற வினா எழும்
ஒரு செயலால் எது நிறைவேறுகிறதோ அதுவே அந்தச் செயலுக்கு-சேஷன் -ஆண்டான் சேஷி ஆகிறது என்பீராயின்
செயல் -அதைச் செய்வோன் -சேஷன் -அச் செயலால் நிறைவேறுகிறது -சேஷி -ஆண்டான் என்பது அதன் பலனை நுகர்ச்சி செய்வோனே யாகும் –
மற்ற ஒன்றிற்காக செய்யப்படும் இலக்கு-சேஷி -ஆண்டான் -இந்த இலக்கு -அச் செயலால் அடையப் படக் கூடியதாயும் செய்வோனால் செய்யத் தக்கதாயும் இருத்தல் எனில் -ஸ்வர்க்கத்தை விரும்பி யாகம் செய்பவனுக்கு -அவன் செய்யும் யாகத்தினால் ஏற்படும் விளைவு -அபூர்வம் இலக்கல்ல -அதனால் அவனுக்கு மகிழ்ச்சியும் ஏற்படுவதில்லை -ஆகவே அவனை எந்த இலக்கு செயல்படத் தூண்டுகிறதோ-எது அவனால் அடைய முடியுமோ அதுவே ஆள்வோன் சேஷி ஆகவேண்டும் -இது முன்பே விளக்கப் பட்டு இருக்கிறது –

————–

130–அயமேவ ஹி ஸர்வத்ர சேஷ சேஷி பாவ
பரகத அதிசய ஆதாநே இச்சாயா உபாதேயத்வ மேவ யஸ் ஸ்வரூபம் -ச சேஷ -பர சேஷீ -பல உத்பத்தி இச்சாயா யாகதே–
தத் பிரயத்தனஸ் யச உபா தேயத்வம் -யுகாதி சித்தி இச்சாயா அந்யத் சர்வம் உபாதேயம்-ஏவம் கர்பதாஸாதீநாம் அபி
புருஷ விசேஷாதி சாயாதாநேச் சயா உபாதே யத்வமேவ சேதந அசேதநாத்ம கஸ்ய நித்யஸ்ய அநித்யஸ்ய ச ஸர்வஸ்ய வஸ்துந –
ஸ்வரூபம் இதி சர்வம் ஈஸ்வர சேஷ பூதம் -ஸர்வஸ்ய ச ஈஸ்வர சேஷீதி -ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்ய ஈஸாந
பதிம் விஸ்வஸ்ய –இத்யாதி யுக்தம்
க்ருதி ஸாத்யம் பிரதானம் -யத் தத் கார்யம் அபி தீயதே -இதயயமர்த்த -ஸ்ரத்தூதாநேஷ் வேவ சோபதே —

சேஷன் சேஷி தொடர்பு எல்லாவிடத்திலும் இவ்வாறே காணப்படுகிறது -மற்ற ஒன்றின் மேல் ஏற்படும் விருப்பத்தால் எது -செயல் -செய்யப்படுகிறதோ -அது சேஷம் -மற்ற ஓன்று சேஷி -பலன் கிடைக்கும் என்ற விருப்பத்தால் -யாகம் போன்றவை -அதற்கான முயற்சிகள் கைக் கொள்ளத் தக்கவை -அதனுடன் தொடர்புடைய செயல்களும் கொள்ளத் தக்கவையே -அவ்வாறே பிறப்பாலேயே அடிமையான ஆத்மாக்களை ஆண்டானாகிய இறைவன் தன் மகிழ்ச்சிக்காகவே பெற்றுக் கொள்கிறான் –
அதே போல் பிறப்பிலேயே அடிமையான அழிவற்ற அழிவுள்ள சேதன அசேதனப் பொருட்கள் ஈஸ்வரனுடைய மகிச்சிக்காகவே அவனால் கைக் கொள்ளப் படுகின்றன –
இவ்வாறு இருத்தலே அப் பொருள்களின் மெய் நிலை -ஸ்வரூபம் -ஆகவே இவைகள் யாவும் நுகர் பொருள்கள் -சேஷன் -அவன் நுகர்வோன் -சேஷி -எப் பொருள்களையும் தன் வசமுடையவன் -எல்லாவற்றையும் நடத்துவோமன் -உடையவன் -என்றும் -உலகிற்கு ஒரே தலைவன் என்றும் -வேதத்தில் சொல்லப் படுகிறது –
முயற்சியால் பெறத் தக்க தலையாயது என்பது -அபூர்வம் என்று மீமாம்ஸகர் சொல்வது -அறிவுடையோர் குழுவில் ஏற்கத் தக்கது அல்ல –

———————-

131—அபி ச ஸ்வர்க்க காமோ யஜேத-இத்யாதி ஷு லகார வாஸ்ய கர்த்ரு விசேஷ சமர்ப்பண பரானாம்
ஸ்வர்க் காமாதி பதாநாம் நியோஜ்ய விசேஷ சமர்ப்பண பரத்வம் சப்த அநு சாசன விருத்தம் கேந அவகம்யதே ?
ஸாத்ய ஸ்வர்க்க விசிஷ்டஸ்ய ஸ்வர்க்க சாதநே கர்த்ருத்வ அந்வயோ ந கடேத இதி சேத் –
நியோஜயத்வ அந்வயோபி ந கடதா இதி ஹி ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸய -ச து ஸாஸ்த்ர சித்தே கர்த்ருத்வ அந்வயே
ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸய -க்ரியதே –
யதா போக்து காமோ தேவதத்த க்ருஹம் கச்சேத் இத் யுக்தே-போஜன காமஸ்ய தேவதத்த க்ருஹ கமநே
கர்த்ருத்வா ஸ்ரவனா தேவ ப்ராகஜாதமபி போஜன சாதநத்வம் தேவ தத்த க்ருஹ கமநஸ்ய அவகம்யதே –
ஏவம த்ராபி பவதி -நஹி க்ரியாந்தரம் ப்ரதி கர்த்ரு தயா ஸ்ருதஸ்ய க்ரியாந்தரே கர்த்ருத்வ கல்பநம் யுக்தம் –
யஜேத-இதி ஹி யாக கர்த்ரு தயா ஸ்ருதஸ்ய புத்தவ கர்த்ருத்வ கல்பனம் நியதம் -புத்தே கர்த்ருத்த மேவ ஹி நியோஜ்யத்வம் ?
யதோக்தம்
நியோஜ்ய ச ச கார்யம் ய ஸ்வ கீய த்வேந புத்யதே இதி
யஷ்ட்டத்வ அநு குணம் தத் போக்த்ருத்வம் இதி சேத் தேவ தத்த பசேத் இதி பாக கர்த்ருதயா ஸ்தருதஸ்ய தேவ தத்தஸ்ய
பாகார்த்த கமனம் பாக அநு குணமிதி கமநே கர்த்ருத்வ கல்பனம் ந யுஜ்யதே —

இங்கும் ஸ்வர்க்கத்தை விரும்புபவன் யாகம் செய்யக் கடவன் -என்னும் விதி வாக்கியம் யாகம் செய்பவனைக் குறிக்கிறது
மீமாம்ஸகர் -இது யாகம் செய்யும் செயலை முன்னிலைப் படுத்துகிறது என்கின்றனர்
இந்த விதி வாக்யம் எல்லோரையும் யாகம் செய்தலான செயலில் ஈடுபடுத்தவில்லை
இச் செயலைச் செய்வதற்கு ஸ்வர்க்கத்தின் மீது விருப்பம் என்ற தகுதியை செய்பவனுக்கு விதிக்கிறது
இவ்வாறு கொள்வதே இலக்கணத்திற்குப் பொருந்தும் அதுவன்றி பொதுவாக ஒருவரை யாகம் செய்யத் தூண்டுகிறது என்னும் வாதம் இதற்கு மாறானது –இதற்கு விடையாக விதி வாக்யம் செய்பவனையே கூறுகிறது –
அவனுக்குள்ள தகுதி என்பதில் ஐயமில்லை -ஆயின் யாகம் நேராக ஸ்வர்க்கத்தைத் தராதலால் இடைப் பட்டதான அபூர்வத்தையே இலக்கணையாகக் குறிக்கும் -ஸ்வர்க்க விருப்பம் என்பது அபூர்வத்தை அவ்வாறே காட்டும் என்கின்றனர் –
நேரிடையாக ஸ்வர்க்கத்தைத் தராத இலக்கணப் பிழையான வாக்யத்தைக் கைக் கொண்டு அதுவே விதி என்று சொல்லும் குற்றம் உங்களுக்கு ஏற்படுகிறதே என்றால் அதற்கு விளக்கமாக எப்பொழுது ஸ்வர்க்கம் அடைவதற்காக யாகம் செய்தலில் இறங்கினானோ அப்பொழுதே அச் செயல் அவன் மனத்தில் இந்த யாகம் ஸ்வர்க்கத்தைக் கொடுக்கும் இதை நான் செய்கிறேன் என்ற உணர்வு ஏற்பட்டு விடும் -ஆகவே அந்த உணர்வு தான் செய்வோனாக ஆகிறது என்கின்றனர் -இது தவறு
செய்பவன் தான் கர்த்தா இதற்கு மாறுபாடு கொள்வது உலகியலுக்கு ஒவ்வாதது -எடுத்துக் காட்டாக தேவதத்தன் சமைக்கிறான் என்று சொல்லும் போது சமையலுக்குத் தொடர்புடைய சாமான்கள் வாங்கி வருவதைச் செய்தாலும் அவனுடைய முக்கியமான பணி சமைத்தலே ஆகும் -ஆகவே சமைத்தல் என்பதையே நாம் செயலாகவும் தேவதத்தனையே செய்வோனாகவும் கொள்ள வேண்டும் –

உணவை விரும்புவோர் தேவதத்தன் இல்லத்திற்குச் செல்க -என்னும் விதி வாக்கியத்தில் உணவை விரும்புதல் என்னும் சிறப்பு அங்கு செல்ல வேண்டியவர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது –

—————

132—கிஞ்ச லிங்காதி சப்த வாஸ்யம் ஸ்தாயி ரூபம் கிமிதி அபூர்வம் ஆஸ் ரீயதே ?-
ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹார அநு ப பத்தே இதி சேத் கா அத்ர அநுப பத்தி ?
சிஷாதயிஷித ஸ்வர்க்கோஹி ஸ்வர்க்க காம தஸ்ய ஸ்வர்க்க காமஸ்ய காலாந்தர பாவி ஸ்வர்க்க ஸித்தவ் க்ஷண
பங்கினீ யாகாதி கிரியா ந சமர்த்த இதி சேத்

வினை யுருபுகளுடன் சேர்ந்த வினைச் சொற்கள் நிலை பெற்று எவ்வாறு அபூர்வத்தைச் சுட்டிக் காட்டுகின்றன -ஸ்வர்க்கத்தை அடையும் வழியைச் சொல்வதால் எனில் அவ் வழி எது -எவன் ஸ்வர்க்கத்தை விரும்புகிறானோ அவனுக்கு அவன் இறந்த பிறகு கிடைக்கும் ஸ்வர்க்கத்தை கண நேரத்தில் அழிந்து விடும் யாகம் பெற்றுத்தர வல்லதல்ல -அதனால் அபூர்வத்தைக் கற்பிக்கிறோம் என்பீராகில்
அநாக்ராத வேத வித் அக்ரேசரோ ஐயம் அநுப பந்தி -சர்வை கர்மபி ஆராதித பரமேஸ்வர பகவான் நாராயண
தத்திஷ்டம் பலம் ததாதி இதி வேத வைத்தோ வதந்தி

குறைவு படாத வேதத்தால் நிறுவப்பட்ட இடையறாத த்யான வழி எல்லாச் செயல்களுக்கும் ஆராதனைகளுக்கும் இலக்கான பரமேஸ்வரனான பகவான் நாராயணன் அவர்களுடைய விருப்பத்தைக் கொடுக்கிறான் -என்று வேதத்தைக் கரை கண்டவர்கள் அறுதியிடுகிறார்கள்

யதா ஆஹு வேத வித் அக்ரேஸரா த்ரமிடாச்சார்யாபல சம்பிபந்த் சயா கர்மபிராத்மாநாம் பிப்ரீஷந்தி சப்ரிதோலம் பலாய-இதி ஸாஸ்த்ர மர்யாதா -இதி
பல சம்பந்தேச்சயா கர்மபி யாக தான ஹோமாதிபி -இந்திராதி தேவதா முகேந தத் தந்தர்யாமி ரூபேண அவஸ்திதம்
இந்த த்ராதி சப்த வாஸ்யம் பரமாத்மநாம் பகவந்தம் வாஸூ தேவம் ஆரிராதயிஷ்யந்தி –
ச ஹி கர்மபிராராதிதா -தேஷாம் இஷ்டாநி பலாநி பிரயச்சத்தி இத்யர்த்த –

அவ்வாறே வேதம் அறிந்தோரில் தலையாய த்ரமிடாச்சார்யார் கூற்றுப்படி ஜீவாத்மா ஒருவன் தான் விரும்பியதைப் பெறும் ஆசையினால் யாகம் தானம் ஹோமம் செய்து இந்திரன் முதலான தேவதைகள் மூலமாக அவர்களின் உள்ளுறைவோனான வாஸூ தேவனை திருப்த்திப்படுத்தி விரும்பிய பலன்களை அடைகிறார்கள் என்பது ஸாஸ்த்ரத்திற்கு ஏற்புடையது –
அதாவது பலன் தொடர்புடைய செய்கைகள் யாகம் தானம் போன்றவை இந்திரன் முதலிய தேவதைகள் மூலமாக அவைகளுக்கு உள்ளு றைவோனாக விளங்கும் பரமாத்மாவான வாஸூ தேவனை ஆராதிக்கிறார்கள் -அவனும் அவ்வாறு ஆராதிக்கப்பட்டு விரும்பிய பலன்களைக் கொடுக்கிறான் என்று பொருள்

ததா ச ஸ்ருதி
இஷ்டா பூர்த்தம் பஹுதா ஜாதம் ஜாயமானம் விஸ்வம் விபர்த்தி புவனஸ்ய நாபி -இதி இஷ்டா பூர்த்தம் –
இதி சகல ஸ்ருதி ஸ்ம்ருதி சோதித்தம் கர்மா உச்யதே -தது விஸ்வம் விபர்த்தி –
இந்திர அக்னி வருணாதி சர்வ தேவதா சம்பந்தி தயா பிரதீயமானம் தத் தத் அந்தராத்மா தயா அவஸ்தித
பரம புருஷ ஸ்வயமேவ விபார்த்தி -ஸ்வயமேவ ஸ்வீ கரோதி-
புவனஸ்ய நாபி
ப்ரஹ்ம க்ஷத்ராதி சர்வ வர்ண பூர்ணஸ்ய புவனஸ்ய தாரக
தைஸ்தை கர்மா பிராராதித–தத் தத்திஷ்ட பல பிரதாநேந புவனானாம் தாரக இதி நாபி இத்யுக்த
அக்னி வாயு ப்ரப்ருதி தேவதாந்தராத்மதயா தச் தச் சப்தாபி தேய அயமேவேத்யாஹ-
ததே வாக்நிஸ் தத் வாயுஸ் தத ஸூர்யஸ் தாது சந்த்ரமா -இதி

அவ்வாறே வேதத்திலும் வேதங்களில் கூறப்பட்ட வினைகளை இந்திரன் அக்னி வருணன் ஆகியோருடன் உயிர் உயில் தொடர்புடன் உறையும் பரம புருஷன் தானே ஏற்றுக் கொள்கிறான்
அந்தணர் அரசர் முதலிய எல்லா வர்ணங்களும் கொண்ட உலகு அனைத்தையும் தாங்குவோன் அவ்வாறே செயல்களால் ஆராதிக்கப்பட்டு அந்தந்த பலன்களைக் கொடுத்து உலகில் உள்ள அனைவரையும் தாங்குவோன்
இவனே அக்னி வாயு தேவர்களின் உயிராக உறைந்து அவ்வ்ப் பெயர்களால் ஆராதிக்கப் படுபவன்
அவனே அக்னி அவனே வாயு அவனே ஸூர்யன் அவனே சந்த்ரன் என்று வேதமும் சொல்லிற்று

யதோக்தம் பகவதா–ஸ்ரீ கீதையிலும் -7-21–/22-
யோயோ யாம் யாம் தநும் பக்த ஸ்ரத்தாயா அர்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யா சலாம் ச்ராத்தம் தாமேவ விததாம் யஹம்
ச தயா ஸ்ரத்தயா யுக்த தஸ்யா ஆராதன மீஹதே
லபதேச தத காமான் மயைவ விஹிதாந் ஹி தாந்
யாம் யாம் தநும்
இந்த்ராதி தேவதா விசேஷம் தத் தத் அந்தர்யாமிதயா அவஸ்திதஸ்ய பகவத-
தநவ–சரீராணி இத்யர்த்த
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச இத்யாதி
பிரபுரேவ ச இதி சர்வ பலாநாம் ப்ரதாதா சேத்யர்த்த –

ஸ்ரீ கீதையிலும் -என்னுடைய உடலான இந்திரன் முதலான தேவர்களை எந்த பக்தர்கள் முயற்சியுடன் அர்ச்சிக்கிறார்களோ அவர்களுக்கு அவரவர்கள் விரும்பும் பலனை நானே கொடுக்கிறேன் -அந்த தேவதைகளன் மேல் நம்பிக்கையை வளர்க்கிறேன்
அந்த பக்தன் அந்த நம்பிக்கை யுடன் அந்த தேவதைகளுக்கு ஆராதனம் செய்து தான் விரும்பிய
பலன்களை என்னால் கொடுக்கப்பட்டு அடைகிறான் -என்று பகவான் சொல்கிறார்
இதில் இந்திரன் முதலிய தேவர்கள் தனக்கு சரீரம் என்று விளக்கமாகக் கண்ணன் கூறியிருக்கிறான்
நானே யாகங்களுக்கு எல்லாம் உள்ளுறைபவன் -அநுபவிப்பவன் -பலன் அளிப்பவன்
இவ்வாறு என்னை சிலர் உள்ளபடி அறியாமல் முக்கிய பலனில் இருந்து நழுவி விடுகிறார்கள்

யதாச
யஜ்ஜைஸ் த்வம் இஜ்யஸே நித்யம் சர்வ தேவ மயா ஸ்யுத
யைஸ்வ தர்ம பரைநார்த்த நரைராராதிதோ பவாந்
தே தரந்த்யகிலா மேதாம் மாயாமாத்ம வி முக்தயே இதி –ஸ்ரீ விஷ்ணு புராணம்

அவ்வாறே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
தங்களுக்கு உரிய தர்மத்தைக் கைக் கொண்டு அந் நெறி பிறழாமல் எந்த சிறந்த மனிதர்கள் யாகங்களை தேவதைகளை அச்சுதனால் நிறைக்கப் பட்டவர்களாய் அறிந்து தினமும் ஆராதிக்கிறார்களோ அவர்கள் இந்த உலக வாழ்க்கை எனும் மாயையின் நின்றும் ஆத்ம விடுதலை பெறுகிறார்கள் –

சேதிஹாச புராணேஷு -சர்வேஷ்வேவ வேதேஷு –
ஸர்வாணி கர்மாணி சர்வேஸ்வர ஆராதன ரூபாணி தைஸ்தை கர்ம பிராராதித புருஷோத்தம தத்ததிஷ்ட பலம்
ததாதி இதி தத்ர தத்ர பிரபஞ்சிதம்
ஏவமேவ ஹி சர்வஞ்ஞம் -சர்வ சக்திக்கு -சர்வேஸ்வரன் -பகவந்தம்-இந்திராதி தேவதாந்தர்யாமி ரூபேண
யாக தான ஹோமாதி -வேதோதித சர்வ கரமானாம் போக்தாரம் சர்வ பலானாம் பிரதாதாரம் ச சர்வா ஸ்ருதயோ வதந்தி –
சதுர் ஹோதாரோ யத்ர சம்பதம் கச்சந்தி தேவை இத்யாத்யா
சதுர் ஹோதார யஜ்ஞா -யத்ர பரமாத்மநி தேவேஷ் வந்தர்யாமிதயா அவஸ்தித -தேவை சம்பந்தம் கச்சந்தி இத்யர்த்த –
அந்தர்யாமி ரூபேண அவஸ்தி தஸ்ய பரமாத்மாந சரீரதயா அவஸ்திதாநாம் இந்த்ராதிநாம் யுகாதி சம்பந்த இத்யுக்தம் பவதி

இவ்வாறே இதிஹாஸ புராணங்களிலும் எல்லா வேதங்களிலும்எல்லாச் செயல்களும் ஸர்வேஸ்வரனையே ஆராதிப்பதாக உள்ளன -அந்தந்தச் செயல்களால் ஆராதிக்கப்பட்ட புருஷோத்தமன் அவரவர்களின் விருப்பங்களைக் கொடுக்கிறான் என்று பல இடங்களில் நன்கு விளக்கப் பட்டு இருக்கிறது -அதனாலேயே யாவும் அறிந்தவனும் யாவற்றிக்கும் தலைவனும் பகவானும் இந்த்ரன் முதலிய தேவர்களுக்கு உள்ளுறைவோனாக இருந்து கொண்டுயாகம் தானம் ஹோமங்களான -வேதத்தால் விதிக்கப்பட்ட எல்லாச் செயல்களையும் அனுபவிப்பவனும் எல்லா வற்றிற்கும் பலன் அளிப்பவனுமாக அவனே இருக்கிறான் -என வேதங்கள் கூறுகின்றனநான்கு அங்கங்களை வுடைய யாகங்களின் பலனாக நன்மைகள் தேவரீராலேயே அளிக்கப்படுகின்றனஉள்ளுறைவோனாக விளங்கும் பரமாத்மா அவனது உடலாக விளங்கும் இந்திராதி தேவர்கள் மூலமாக யாகங்களுடன் தொடர்புடையவன் ஆகிறான் என்று கொள்வதால் சிறந்தது
யதோக்தம் பகவதா –ஸ்ரீ கீதையிலும்
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் சர்வலோக மஹேஸ்வரம் இதி தஸ்மாத் அக்னியாதி தேவதாந்தர்யாமி பூத
பரம புருஷ ஆராதன பூதாநி ஸர்வாணி கர்மாணி ச ஏவ ச அபிலஷித ப்ரதாயி
இதி கிமத்ர அபூர்வேன வ்யுத்பதி பததூர வர்த்திநா வாச்யதயா அப்யுகதேந கல்பிதேந வா பிரயோஜனம் ?-

இதை ஒட்டியே கீதையிலும்
யாகம் தவம் முதலியவற்றால் அடையப்படுபவன் -எல்லா உலகுகளுக்கும் தலைவனான மஹேஸ்வரன் -என்று கூறப்படுகிறது
ஆகவே அக்னி முதலான தேவர்களின் உள்ளுறைபவனான பரம புருஷனை ஆராதிக்கும் எல்லாச் செயல்களுக்கும் அவனே இலக்காகி பலன் அளிக்கிறான் எனும் போது அபூர்வம் என்ற இலக்கணத்திற்கு ஒட்டாததும் சொல்லால் விளக்க முடியாததுமான ஒன்றைக் கற்பித்துக் கொள்வதால் என்ன பயன் –

——————-

133–ஏவஞ்ச சதி லிங்காதே -கோயமர்த்த -பரிக்ரஹீதோ பவதி ?
யஜ தேவ பூஜா யாம் -இதி தேவதாராதன பூத யாகாதே -ப்ரக்ருத்யர்தஸ்ய-கர்த்ரு வபாரசாத்யதாம் வ்யுத்பத்தி சித்தாம்
லிங்காதய அபி தததி இதி ந கிஞ்சித் தநுபபந்நம் -கர்த்ரு வாசிநாம் ப்ரத்யயாநாம் ப்ருக்ருத் யர்த்தஸ்ய
கர்த்ரு வியாபார சம்பந்த பிரகாரோ ஹி வாஸ்ய ?
பூத வர்த்தமாநாதிகம் அந்யே வதந்தி லிங்காத யஸ்து கர்த்ரு வியாபார சாத்யதாம் வதந்தி —

இங்கு தேவர்களை ஆராதிப்பாயாக என்ற வியங்கோள் வினை முற்றால் தேவர்கள் மகிழ்ச்சியடைய யாகம் முதலிய செயல்களைச் செய்வாயாக என்ற கட்டளை இருக்கிறது –
யஜ -யஜ் அ -யாகம் செய்வாயாக எனப்பொருள் கொடுப்பதால் இது ஒருவரால் செய்யப்பட வேண்டும் என பகுதி விகுதி சேர்க்கையால் செய்வோனையும் செயலையும் இலக்கணைப் பிழையின்றிக் காட்டுகிறது –
இந்தப் பகுதி செயலையும் விகுதி காலத்தையும் காட்டி இது ஒருவனால் செய்யப்பட வேண்டும் என விதிக்கிறது –

————–

134–அபி ச காமிந -கர்த்தவ்ய தயா கர்மா விதாய கர்மனோ தேவதா ஆராதன ரூபதாம் தத் த்வாரேண பல சித்திம்
ச தத் தத் கர்மா விதி வாக்ய அன்யேவ வதந்தி –
வாயவ்யம் ஸ்வேத மால பேதபூதி காம -வாயுர் வை ஷேபிஷ்டா தேவதா -வாயுமேவ ஸ்வேந பாகதேயேநோ பதாவதி
ச ஏவைநம் பூதிம் கமயதி இத்யதிநி நாத்ரா பல சித்யநுப பத்தி காபி த்ருச்யதே இதி பல சாதனத்வா வகதி ஒளபதாநிகீ-
இத்யபி ந சங்கச்சதே வித்யபேஷிதம் யாகாதே பல சாதனத்வப் பிரகாரம் வாக்ய சேஷ ஏவ போதாயாதி இத்யர்த்த —

மேலும் விதி வாக்யங்கள் -விரும்புவோர் விருப்பத்திற்கு ஏற்ப பல தேவதைகளை ஆராதிக்கும் முகமான செயல்களை விதிக்கின்றன
அவற்றிக்கு அந்த அந்த தேவதைகள் பலன் கொடுப்பர் என்றும் கூறுகின்றன –
எடுத்துக் காட்டாக -பொருளை வேண்டுவோன் வெள்ளக் குதிரையைப் பலி கொடுத்து ஹோமம் செய்வதாக ஆராதிக்கக் கடவன் -அந்த வாயு மிக வேகமாகச் செல்லுபவன் -அவனைத் தன் ஹவிஸ் உணவால் திருப்திப்படுத்தக் கடவன் -அவனே இவனுக்கு செல்வத்தை அடைவிக்கிறான் -என்று
இங்கு ஒருவன் விரும்பிய செல்வத்தை இச்செயலின் மூலம் வாயுவே அளிக்கிறான் என்று கொள்வது சாலச் சிறந்தது –
விதி வாக்கியத்தில் இது வெளிப்படையாகக் காணப்படா விடிலும் அர்த்த வாதத்தில் சொல்லப்பட்டதை உள்ளுறை பொருளாக -அர்த்தா பத்தி நிறுவுவதால் பலனில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை –

தஸ்மாத் -ப்ராஹ்மணாய நா பகுரேத் -இத்யத்ர அபகோரண—நிஷேத விதி பர வாக்ய சேஷே ஸ்ரூயமாணம்
நிஷேத் யஸ்ய அபகோரணஸ்ய சத யாதநா சாதநத்வம் நிஷேத வித்யுபயோகி இதி ஹி ஸ்வீ க்ரியதே ?
அத்ர புந காமிந கர்த்தவ்ய தயா விஹிதஸ்ய யாகாதே காம்ய ஸ்வர்காதி சாதனத்வ பிரகாரம் வாக்ய சேஷா வகதம்
அநாத்ருத்ய கிமிதி உபாதேநேந யாகதே பல சாதனத்வம் பரிகல்ப்யதே-
ஹிரண்ய நிதி மபவரகேநிதாய யாசதே கோத்ரவ்யாதி லுப்த க்ருபணம் ஜனம் இதி ஸ்ரூயதே ததேதத் யுஷ்மாஸூ த்ருச்யதே –

அவ்வாறே அந்தணனைக் கொல்ல முயற்சிக்காதே -என்று கொல்லும் முயற்சியைத் தடுத்து விதித்து -பிற் பகுதியில் அவ்வாறு தடுக்கப்பட்ட செயலைச் செய்தால் -நூறு சவுக்கடி தண்டமாகக் கிடைக்கும் -என்று அவ்விதியால் அடையப்படும் பலனையும் கூறுகிறது –
இங்கு தண்டனையாகிற பலனுக்குக் கொல்லும் முயற்சி என்ற செயல் காரணமாகிறது –
ஆகவே அதைத் தடுத்த விதி தொடர்ந்து வரும் அர்த்த வாதத்தால் தான் பொருளுடைய தாகிறது என்பது வெளிப்படை –
அது போலவே ஸ்வர்க்கம் முதலிய விருப்பங்களை அடைவதற்காகச் செய்யப்படும் யாகங்களும் பொருள் கொள்வதில் தடையில்லை –
இவ்வாறு நேரடியாகப் பொருள் கொல்வதைத் தவிர்த்து அபூர்வத்தைக் கற்பித்தல் தங்கப் புதையலை வீட்டில் வைத்திருக்கும் ஒருவன் தெருவில் பிச்சை எடுத்தல் போன்ற கஞ்சத் தனத்தையே காட்டுகிறது –

சதயாதநா சாதனத்வம் அபி ந அத்ருஷ்டத் வாரேண-சோதிதாந்யநுதிஷ்டத -விகிதம் கர்மா குர்வத–நிந்திதாநி ச குர்வத–
ஸர்வாணி ஸூகாநி துக்காநி சபரம புருஷ அநு க்ரஹ நிக்ரஹாப்யா மேவ பவந்தி-

ஏஷ ஹ்யேவாநந்தயாதி
அத சோ பயங்கதோ பவதி
அத தஸ்ய பயம் பவதி
பீஷாஸ்த்மா வாதா பவதே பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்த்மா தக்நி சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி —
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசசநே கார்க்கி –ஸூர்ய சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே
கார்க்கி -தததோ மனுஷ்யா ப்ரஸஸந்தி யஜமானம் தேவா தர்வீம் பிதரோந் வாயத்தா இத்யாத்யேந கவிதா ஸ்ருதய சந்தி –

விலக்கப்பட்ட செயல்கள் தண்டனை நிந்தனையைப் பெற்றுத் தருவதும் -விதிக்கப்பட்ட செயல்கள் நன்மையை ஏற்படுத்தித் தருதலும் போலே எல்லா இன்ப துன்பங்களும் பரம புருஷனுடைய மகிழ்வு கோபத்தாலேயே ஏற்படுகின்றன
இப் பரம் பொருள் எல்லோரையும் மகிழ்ச்சி அடைவிக்கிறான் -பிறகு அவனே பயத்தை நீக்குகிறான் – அவனை அடையாதவன் பயத்தை அடைகிறான் -அவனிடத்து உள்ள பயத்தாலேயே காற்று வீசுகிறது -ஸூர்யன் உதிக்கிறான் -தீ ஒளிர்கிறது -இந்திரன் செயல் படுகிறான் -ஐந்தாவதாக யமனும் செயல்படுகிறான் –
ஹே கர்க்கி இந்த எம்பெருமானின் கட்டளையின் படியே ஸூர்ய ஸந்த்ரர்கள் தாங்கப் படுகிறார்கள் –
ஹே கர்க்கி அழிவற்ற இந்த எம்பெருமானுடைய ஆணையினாலேயே அந்தந்த மனிதர்கள் யாக காரியங்களில் தேவர்களையும் பித்ருக்களையும் நினைத்து ஹோமம் செய்யும் பாத்திரத்தில் கொடுத்து ஸ்துதிக்கிறார்கள் என்பது போலப் பலவகையான வேத வாக்கியங்கள் இருக்கின்றன –

யதோக்தம் த்ரமிட பாஷ்யே-
தஸ்ய ஆஞ்ஞாய தாவதி வாயு -நத்ய -ஸ்ரவந்தி -தேந ச க்ருதஸீமாநோ ஜலாசயா சமதா இவ மேஷ விசர்ப்பிதம் குர்வந்தி-
இதி தத் ச கல்ப்பநி பந்தநா ஹி இமே லோகா நஸ்ய வந்தே நஸ் புடந்தி-ஸ்வ சாசன அநு வரத்தினம் ஞாத்வா
காருண்யாத் ச பகவாந் வர்த்தயேத வித்வான் கர்ம தக்ஷ -இதி ச –

பரம புருஷ யாதாத்ம ஞான பூர்வகம் தத் உபாசாநாதி-விஹித கர்ம அனுஷ்டாயின-தத் ப்ரஸாதாத்
தத் பிராப்தி பர்யந்தாநி ஸூகாநி அபயம் ச யதாதிகரம் பவந்தி-தத் ஞான பூர்வகம்
தத் உபாஸநாதி விஹிதம் கர்ம அகுர்வத-நிந்திதாநி ச குர்வத தந் நிக்ரஹாதேவ தத் பிராப்தி பூர்வகா
பரிமித துக்காநி பயம் ச பவந்தி –

திரமிடாச்சார்யரும் இதை விளக்கும் முகமாய் -அவனுடைய ஆணையால் வாயு வீசுகிறான் -நதிகள் ஓடுகின்றன -வரம்புக்கு உட்பட்டு நீர் நிலைகள் விளங்கி ஆடுகள் நகர்வது போல் கட்டுக்கு அடங்கி இருக்கின்றன -என்கிறார்
மேலும் அவனுடைய ஆணையாலேயே -ஸங்கல்பத்தாலேயே -இவ்வுலகங்கள் நழுவுவதில்லை -வெடிப்பதில்லை -தன் கட்டளைகளை மேற் கொள்வோரை அறிந்து அவர்களுக்கு அறியும் தன்மையை கருணை கூர்ந்து aவளர்க்கிறான் -என்றும் கூறுகிறார் –
மிக்க இறை நிலையை ஞானத்தால் அறிந்து -அவனை இடையறாது தியானித்தல் முதலிய விதிக்கப் பட்ட கர்மங்களைச் செய்வோருக்கு அதன் பலனாக பிறவிச் சூழல் பயத்தை நீக்கி தன்னையே அடைவிப்பது வரையிலும் நன்மைகளை அளிக்கிறான் –
மாறாக அறியாமையில் உழன்று விதிக்கப் பட்ட செயல்களைச் செய்யாதவருக்கும் நிந்திக்கப்பட்ட செயல்களைச் செய்தவனுக்கும் அவனது தண்டனையாக அவனை அடைய முடியாமையாகிற பயமும் ஏற்படுகிறது –

யதோக்தம் பகவதா -ஸ்ரீ கீதையிலும் –
நியதம் குரு கர்மத்வம் கர்மஜ்யாயோ ஹ்ய கர்மண –இத்யாதிநா க்ருத்ஸ்நம் கர்மா ஞான பூர்வகம் அநுஷ் டேயம் விதாய –
மயி ஸர்வாணி கர்மாணி சந் யஸ்ய -இதி சர்வஸ்ய கர்மண ஸ்வ ஆராதநுதாம் ஆத்மநாம் ஸ்வ நியாம்யதாம் ச ப்ரதிபாத்ய
யே மே மதமிதம் நித்யம் அநு திஷ்டந்தி மாநவா
ஸ்ரத்தா வந்தோ அந ஸூயந்தோ நாநு திஷ்டந்தி மே மதம்
சர்வஞ்ஞான வி மூடாம் ஸ்தாந் வித்தி நாஷ்டாந சேதச —
இதி ஸ்வ ஞான அநு வர்த்திந ப்ரஸஸ்ய விபரீதாந் விநிந்த்ய -புநரபி ஸ்வ ஞான அநு பாலநம் அகுர்வதாம்
ஆஸூர ப்ரக்ருத் யந்தர்பாவம் அபிதாய அதமாகதிஸ் ச யுக்தா
தாநஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம்ய ஜஸ்ரமஸூபாந் மூடா ஜென்மநி ஜென்மநி –
யாமப்ராப் யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் தீம் இதி –
சர்வ கரமண்யபி சதா குர்வானோ மப்த்யபாஸ்ரய
மத் பிரசாதாதவாப் நோதி சாஸ்வதம் பதமவ்யயம்
இதி ச ஸ்வ ஞான அநு வர்த்தி நாம் சாஸ்வதம் பதம் ச யுக்தம் —

அஸ்ருதா வேதாந்தாநாம் கர்மணி அஸ்ரத்தா மா பூத் -இதி தேவதாதி கரேண திவாதா-க்ருதா கர்மமாத்ரே
யதா ஸ்ரத்தா ஸ்யாத் இதி சர்வம் ஏக சாஸ்திரம் இதி வேதவித் சித்தாந்த –

இதற்கு ஏற்ப கீதையிலும்
செயல்படாது இருத்தலை விட விதிக்கப்பட்ட செயல்களைச் செய்தல் சாலச் சிறந்தது -என்பதால் செயல்கள் யாவும் மனப் பூர்வமாகச் செய்யப்பட வேண்டும் என்று விதித்து
எல்லாச் செயல்களையும் பலன்களையும் -என்னிடமே அர்ப்பணிப்பாயாக என்றும்
அவைகள் தன்னால் விதிக்கப் பட்டவை -தனக்கு ஆராதனையானவை என்றும் சொல்லி
எவர்கள் இந்த என் கொள்கையை தினமும் செயலாற்றுகிறார்களோ அதில் விருப்பமுடையவர்களாய் இருக்கிறார்களோ -அதில் பொறாமையற்று இருக்கிறார்களோ
அவர்கள்-மூவரும் எல்லாப் புண்ய பாபங்களில் நின்றும் விடுபடுகிறார்கள்
மாறாக எவர்கள் இவ்வாறு செயல்படுவதில்லையோ விருப்பமின்றி இருக்கிறார்களோ -பொறாமை கொள்கிறார்களோ -அவர்கள் மூவரும் அறிவுகள் யாவும் நீங்கினவர் என்றும்
அதனால் பலவற்றையும் இழந்தவர்கள் என்றும் -அறிவாயாக
தனது விதிகளை -கொள்கைகளை கைக் கொள்வோரைக் கொண்டாடி மாறானவர்களை நிந்தித்து அதனால் அவர்களுக்கு அசுரத்தன்மை ஏற்படுவதைக் கூறிக் கீழ் நிலை pஅடைவிபத்தைச் சொல்கிறான்
என்னை வெறுப்பவர்களாய் கொடியவர்களாய் -மனிதரில் கடைப்பட்டவராய்-நலன்கள் அற்றவராய் உள்ள அவர்களை நான் இடைவிடாது அசுரப்பிறவிகளில் தள்ளுகிறேன்
குந்தீ புத்ரனே அரக்கப் பிறவி யடைந்த இவர்கள் பிறவிகள் தோறும் என்னைப் பற்றிய மெய்யறிவு அற்று அடுத்தடுத்துத் தாழ்ந்த பிறவிகளையே அடைகிறார்கள்
எல்லாச் செயல்களையும் என்னிடத்தில் அர்ப்பணித்து எப்போதும் என் அருளாலே குறைவற்ற என்னை நிலையாக அடைகிறான்
இவ்வாறு தனது ஆணைகளை நிறைவேற்றுவோர்க்கு நிலையான பதத்தை அடைவிக்கிறான்
வேதம் அறியாதோருக்கு பற்று விடாது இருக்கவே அவ் வாறு மீமாம்சை பூர்வ மீமாம்ஸை தேவதைகளை மிகவும் புகழ்ந்துள்ளது
அவை பூர்வ உத்தர மீமாம்சைகள் இரண்டும் ஒரே ஸாஸ்த்ரம் என்பது வேதம் அறிந்தோர் கொள்கை –

—————–

135–தஸ்யை தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ நாராயணஸ்ய -அபரிச்சேத்ய ஞான ஆனந்த அமலத்வ ஸ்வரூபவத் –
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜ ப்ரப்ருத்ய -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண வத் –
ஸ்வ சங்கல்ப ப்ரவர்த்ய –ஸ்வேதா ஸமஸ்த சிதசித் வஸ்து ஜாதவத்–
ஸ்வ அபிமத -ஸ்வ அநு ரூப -ஏக ரூப திவ்ய ரூப -ததுசித -நிரதிசய கல்யாண -விவித அநந்த பூஷண –
ஸ்வ சக்தி சத்ருச -அபரிமித -அனந்த -ஆச்சர்ய -நாநா வித ஆயுத –
ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப விபவ ஐஸ்வர்ய சீலாத்யா அநவதிக மஹிம மஹிஷி –
ஸ்வ அநு ரூப கல்யாண ஞான கிரியாத்ய அபரிமேய குண ஆனந்த பரிஜன பரிச்சத
ஸ்வ உசித நிகில போக்ய போக உபகரணாத் அனந்த மஹா விபவ –
அவாங் மனஸ் கோசர ஸ்வரூப ஸ்வபாவஸ் திவ்யாஸ்தாநாதி நித்யதா நிரவத்யதா கோசாராஸ் ச சஹஸ்ர ச ஸ்ருதய சந்தி

பர ப்ரஹ்மமான நாராயணனுடைய பண்புகள் செல்வம் முதலியன இங்கு சுருக்கித் தரப்படுகின்றனஅளவற்ற ஞானம் -ஆனந்தம் -தூய்மை உடைமைஞானம் -வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அண்டங்கள் யாவற்றிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் யாவற்றையும் ஒரு சேர அறிதல்சக்தி -கூடாதவற்றை கூட்டுவிக்கும் திறன்பலம் -ஆக்கி அளித்து அழித்தல் ஆகிய செயல்களை சிறிதும் வருந்தாது விளையாட்டாகச் செய்தல் ஐஸ்வர்யம் -அழியக்கூடிய இவ்வண்டங்களையும் அழிவே யற்ற பரமபதத்தையும் தன் செல்வமாக உடைமைவீர்யம் -யாவற்றினுள்ளும் நீக்கமற நிறைந்து இருந்தாலும் அவற்றின் தீக்குணங்கள் தன்னுடன் ஒட்டாது இருத்தல் தேஜஸ் -தனக்கு ஒரு துணை இன்றி தானே யாவற்றையும் செய்து முடிக்கும் திறன்மற்றையோருக்கு இந்த ஆறு குணங்கள் நிறைந்த பகவத் சப்தம் அடைமொழியாக மரியாதை நிமித்தமாகவே பயன்படுத்தப்படுகிறதுபரப்ருத்ய -ப்ரு -பாழ் -ப்ருத் -நுழைந்துள்ளமூலப் ப்ரக்ருதி என்னும் பாழை நிரப்புபவன் -சேதனப் பொருள்களாகவும் விளங்குவான்இத்தகைய எண்ணற்ற நற் பண்புகள் உடைமைசேதன அசேதன பொருட்கள் யாவற்றையும் படைத்தல்தன் மனத்துக்கு இசைந்து தனக்கு என்றும் துணையாய் இருக்கும் தெய்வத்தன்மை பொருந்திய திவ்ய மங்கள விக்ரஹமும் -அதற்கேற்ற நாநா வித அணிகலன்களும் தன் திறமைக்கு ஏற்ற பலவகையான வியப்பூட்டும் அளவற்ற படைக்கலன்களும் உடைமைதனக்கு என்றும் உடன்பாடாய் எப்பொழுதும் தனக்கு ஒத்த மனம் மொழி மெய்களால் குறைவற்ற பெருமை செல்வம் இவற்றையுடைய தேவிமார்களும்அளவற்ற நற் பண்புகள் ஞாநம் செயல் முதலியவற்றைப் பெற்று தன் விருப்பத்தை மனம் அறிந்து நடத்தும் பணியாளர்களையும் பெற்று இருத்தல்தன் விருப்பங்கள் யாவும் நிறைவேறப் பெற்றவனாயும் அதற்கு ஏற்ப பலவித விளையாட்டிடங்களை உடையவனாய் இருத்தல்மனதிற்கு எட்டாத அமைப்பை யுடைய அழிவு அறியாத குறையேதுமற்ற ஆயிரக் கணக்கான தெய்வத்தன்மை பொருந்திய இருப்பிடங்களை உடையவனாய் இருத்தல்ஆகியவை அவனுடைய சிறப்புக்கள் என வேதங்கள் ஒதுகின்றன –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத்
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவும் மஷிணீ

அறப் பெரியவனும் பகலவனை ஒத்த நிற ஒளி யுடையவனும் அஞ்ஞானம் சிறுதும் இல்லாதவனுமாக இருந்த புருஷனை அறிகிறேன்-எவன் ஸூர்யனின் உள்ளுறைபவனும் பொன்னிறம் கொண்டவனுமான புருஷனோ அவன் ஸூர்யனால் அலர்த்தப்பட்ட தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனாய் இருக்கிறான்
ச யே ஏஷ யந்திர் ஹ்ருதய ஆகாச தஸ்மிந் நயம் புருஷோ மநோ மய
அம்ருதோ ஹிரண்மய
மநோ மய–இதி மனசைவ விஸூத்தேந க்ருஹ்யதே இத்யர்த்த
சர்வே நிமேஷா ஜஜிரே

அந்த விஷ்ணுவின் பரமபதத்தில் நித்யர்கள் இடைவிடாது அவனைக் காண்கிறார்கள்ராஜஸ குணம் நிறைந்த ப்ரக்ருதிக்கு மேல் அவனுடைய இருப்பிடம் விளங்குகிறது -அவனுக்கு அழிவற்ற புதிய உலகெல்லாம் நிறைந்த கட் புலனாகாத உலகுகளுக்கு மேம்பட்ட உருவம் உள்ளதுஎவன் பரம ஆகாஸமான பரமபதத்தில் உள்ளவனை -ஹ்ருதயத்தில் குகையான தஹர ஆகாஸத்தில் விளங்குகிறவனை அறிகிறானோ அவன் பரமாத்மாவை அடைந்து அவனுடைய கல்யாண குணங்களில் திளைக்கிறான் -எதிர் நிகழ் கழிவு ஆகிய முக்காலங்களிலும் உலகுகள் பரமாத்மாவின் உடல் ஆகின்றன -அவன் பரமாகாசமான பரமபதத்தில் வசிக்கிறான்இப்படிப்பட்ட நூற்றுக் கணக்கான வேத வாக்யங்கள் அவனுடைய குணம் உருவம் இருப்பிடம் போன்றவற்றை விளக்குகின்றனஎந்தப் புருஷன் இதயத்தின் தஹர ஆகாசத்தில் உறைகிறானோ அவனே தூய்மையான மனத்தால் அறியப்படுபவன் -அவன் பொன்னிறமானவன் -அழிவற்றவன்இங்கு மநோ மயம் என்பது மிகத் தூய்மையான மனத்தால் மட்டும் அறியப்படக் கூடியவன் என்று பொருள்மின்னொளி படைத்த இப்புருஷன் காலங்கள் யாவற்றையும் பிறப்பிக்கிறான்

வித்யுத புருஷா ததி–வித்யுத் வர்ணாத் புருஷாதித்யர்த்த
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
மத்யஸ்த நீல தோயதா வித்யுல்லேகேவ சோயம் தஹர புண்டரீக மத்யஸ்தா ஆகாச வர்த்திநீ வஹ்நி சிகா –
ஸ்வ அனந்தர்நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபாதி இத்யர்த்த —
மநோ மய
பிராண சரீர
பா ரூப சத்ய காம ஸத்ய ஸங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்மா சர்வ காம சர்வ கந்த சர்வ ரஸ சர்வம் இதம் அம்யாத்தோ
அ வாக்ய அநாதா
மஹா ரஜனம் வாச இத்யாத்யா
அஸ்யே சாநா ஜகதோ விஷ்ணு பத்னீ
ஹ்ரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய –
ஷயம் அந்த மஸ்ய ரஜஸ பராகே
யதேகம் அவ்யக்தம் அனந்த ரூபம் விஸ்வம் புராணம் தமஸஸ் பரஸ்தாத்
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
யோ அஸ்யாத் யக்ஷய பரமே வ்யோமந்
ததேவ பூதம் ததுபவ்யமா இதம் தத் அக்ஷரே பரமே வ்யோமந்
இத்யாதி ஸ்ருதி சத நிஸ்ஸிதோ அயமர்த்த –

இதய கமலத்தில் உள்ள தஹர ஆகாசத்தில் விளங்கும் அக்னி ஜ்வாலையுள் நீல நிறமான பரமாத்மா விளங்குவதால் அது நீல மேகத்தைத் தன்னுள் கொண்ட மின்னல் போல் ஒளிர்கிறது
தூய மனத்தால் மட்டும் அறியத் தக்கவன் -உயிர்களைத் தனக்கு உடலாக உடையவன் -நன்கு ஒளிரும் அமரத் திருமேனி யுடையவன் –
தடைபடாத விருப்பங்களும் தடையற்ற செயல்பாடுகளும் யுடையவன் -நுண்ணியவன் -தானும் ஒளிர்ந்து மற்றைவற்றையும் ஒளி விடச்செய்யும் ஆகாசத்திற்கும் உள்ளுறைபவன் -உலகங்கள் யாவிலும் நடக்கும் செயல்களை நடத்துவிப்பவன் –
தானே எல்லா விருப்பங்களுமானவன் –உலகியலின் அழுக்கு கலவாத வாசனைகளையும் சுவைகளையும் யுடையவன் -எல்லாவற்thamathதனது செல்வமாக உடைமையால் பேச்சற்று இருப்பவன் -அவனுடைய அழகிய உருவம் மஞ்சள் வெண்மை இந்திரகோபப் பூச்சி போன்ற செந்நிறம்
அக்னி ஜ்வாலையின் வண்ணம் தாமரையின் நிறம் போன்ற வண்ணங்கள் பெற்று மின்னலை விஞ்சி ஒளிர்கிறது
அவனுக்கு உலகின் ஈஸ்வரியான விஷ்ணு பத்னி இருக்கிறாள் -பூமி தேவியும் இலக்குமியும் அவனுக்கு மனைவிகள் ஆகின்றனர்

—————-

136–தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி விஷ்ணோ -பரஸ்ய ப்ரஹ்மண-பரமம் பதம் -சதா பஸ்யந்தி ஸூரய -இதி வசநாத்
சர்வ கால தர்சனவந்த பரிபூர்ண ஞானா -கேசந சந்தி இதி ஞாயதே -யே ஸூரய –
தே சதா பஸ்யந்தி -இதி வசன வ்யக்தி யே சதாஸ் யந்தி தே ஸூரய -இதி வா -உபய பக்ஷப் யநேக விதாநம்
ந சம்பவதி இதி சேத் ந -அபிராப்தத்வாத் ஸர்வஸ்ய சர்வ விசிஷ்டம் பரமம் ஸ்தானம் விதீயதே-
யதோக்தம் –
தாது குணாஸ் து விதியேரந் அவி பாகாத் விதாநாத்தே ந சேதந்யேந சிஷ்டா இதி –
யதா யதாக்நேயோஷ்ட கபால -இத்யாதிக் கர்ம விதேந கர்மனோ குணா நாஞ்ச அப்ராத்வேந ஸ்வே குண விசிஷ்டம் கர்ம விதீயதே-
ததா அத்ராபி ஸூரிபி சதா த்ருஸ்யத்வேந விஷ்ணோ பர ஸ்தானம் பிராப்தம் ப்ரதிபாதயதி இதி ந கஸ்சித் விரோத —

தத் விஷ்ணோ பரமம் பதம் -என்பதால் பர ப்ரஹ்மமான விஷ்ணுவின் மேலான இடம்
சதா பஸ்யந்தி ஸூரய -என்கையால் -எல்லாக் காலங்களிலும் ஸேவித்துக் கொண்டு இருப்பவர்களாய் -குறைவற்ற ஞானமுடையவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள் என்பது பொருளாகிறது-
எவர்கள் நித்யர்களோ அவர்கள் எப்பொழுதும் சேவிக்கிறார்கள் என்று வாக்கியத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் -இல்லாவிடில் எவர்கள் எப்பொழுதும் சேவிக்கிறார்களோ அவர்கள் நித்யர்கள் என்றும் கொள்ளலாம் –
இவ்விறுவிதமாக பொருள் கொள்வதிலும் பல பொருட்களை ஒரே வாக்கியம் கூறுவதிலும் அநேக விதானம் என்ற குற்றம் ஏற்படாது -ஏன் எனில்
எப்பொழுதும் சேவிக்கிறவர்களான நித்யர்களைக் கொண்ட பரமபதம் -என்று நித்யர்கள் சேவித்தலை பரமபதத்துக்கு அடை ஆக்கிக் கொள்ளலாம்
பூர்வ மீமாம்ஸையிலும் ஒரே வாக்கியத்தில் ஒரு செயலையும் அதன் பல அங்கங்களையும் விவரித்து -அவை வேறு தொடர்புடைய வாக்கியங்களில் காணப்படாது இருந்தால் அதில் ஒன்றை மற்ற ஒன்றிற்கு அடை ஆக்கிக் கொள்ளலாம் -என விதித்து இருக்கிறது
எடுத்துக்காட்டாக -எட்டு பானை உடைவுகளில் யதாக்கனயோ அஷ்ட கபால மந்திரத்தில் அந்த பாகத் தேவதையான அக்னியை 1-எட்டு கபாலங்களில் -2- hமந்திரத்தோடு வைக்கப்பட்ட புரோடாசத்தை -3- அமாவாஸ்யை பவ்ர்ணமாவாஸ்யைகளில் 4- யாகம் செய்ய வேண்டும் என விதிக்கிறது
இதனால் பல பொருட்கள் ஒரே வாக்யத்தால் கிடைக்கிறது அவ்வாறே இங்கும் நித்யர்கள் இடைவிடாது நோக்கியவாறு விஷ்ணுவின் மேலான இடத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று ஆவதால் விதிகளுக்கு முரண்படவில்லை –

—————–

137–கரண மந்த்ரா க்ரியமானாநுவாதி ந -ஸ்தோத்ர சஸ்த்ர ரூபா -ஜபாதி ஷு வி நியுக்தாஸ் ச ஸ்வார்த்தம்
சர்வம் யதா வஸ்தித மேவ அபிராப்தம விருத்தம் ப்ராஹ்மணவது போத யந்தி இதிஹி வைதிகா ?
(பிரகீத மந்த்ர ஸாத்ய குணி நிஷ்ட குணா பிதாநம் -ஸ்தோத்ரம்
அப்ரகீத மந்த்ர ஸாத்ய குணி நிஷ்ட குணா பிதாநம் -சஸ்திரம்)
விநி யுக்தார்த்த பிரகாசிநாம் ச தேவதாதி ஷு அபிராப்த விருத்த குணவிரேஷா ப்ரதிபாதனம் விநியோகாநு குணமேவ

ஒரு செயலைக் கூறும் மந்திரங்கள் அச் செயலை அனுசரித்து -ஸ்தோத்திரம் சத்திரம் -என இருவகைப்படும் ஜபம் போன்றவற்றில் உபயோகிக்கப் பட்டு அவ்வவ்விடத்தில் சொல்லப்பட்டதாயும் மற்ற இடங்களில் சொல்லப்படாததாயும் -தன் pமுழுப்பொருளையும் உள்ளபடி காட்டி தேவையற்றதை விலக்கி தெளிவிப்பதும் சஸ்திரம் என வைதிகர்கள் கொள்கிறார்கள்
இசையுடன் மந்திரத்தின் தேவதையை வர்ணிப்பது ஸ்தோத்ரம் -இசையின்றி உரைநடையில் கூறுதல் சத்திரம் -யாகங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தேவதைகள் முரண்பாடற்று இருக்கும் பண்புகள் இவற்றை விளக்குதல் -விநியோக விதி -எனப்படுகிறது –

—————-

138—நேயம் ஸ்ருதி -முக்த ஜன விஷயா-தேஷாம் சதா தர்சன அநு பத்தே -நாபி முக்த ப்ரவாஹ விஷயா -சதா பஸ்யந்தி இத்யேகைக
கர்த்ரு விஷய தயா ப்ரதீதே -ஸ்ருதி பங்க பிரசங்காத் மந்த்ரார்த்த வாத கதா ஹ்யர்த்தா -கார்யபரேத்வே அபி சித்த யந்தி இத்யுக்தம் –
கிம் புந சித்த வஸ்துந்யேவ தாத்பரியே வ்யுத்பத்தி சித்தே இதி சர்வம் உப பந்நம் —

இந்த ஸ்ருதி முக்தர்களைப் பற்றியதல்ல -ஏன் எனில் அவர்களுக்கு எப்பொழுதும் ஸேவித்தல் ஏற்புடைத்தல்ல -அல்லது எப்பொழுதும் முக்தர்களால் தொடர்ந்து ஸேவிக்கப்பட்டுக் கொண்டிருத்தலும் அல்ல -எப்பொழுதும் பார்க்கிறார்கள் என்பதால் இடையீடின்றி நோக்குகிறார்கள் என்பதற்கு மாறுபடும் மந்த்ரங்கள் அர்த்த வாதங்களில் இருந்து ஒரு செயலுடன் தொடர்புடைய சொற்களையே அறிய முடியும் என்பது முன்னமேயே விளக்கப்பட்டு இருக்கிறது -இயற்கையாகவே அறியப்படும் -ஸித்த வஸ்துக்கள் -பொருள்களைச் செயல் வாக்கியங்கள் முடியாது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ –

—————-

139–நநு -சாத்ர–தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி பர ஸ்வரூபமேவ -பரமபத சப்தேந அபிதீயதே –
ஸமஸ்த ஹேய ரஹிதம் -விஷ்ண வாக்யம் பரம் பதம் -இத்யாதி ஷு அவ்யதிரேக தர்சநாத்

இங்கு பர நிலையே -தாழ்ச்சி ஏதுமற்ற விஷ்ணுவாகிய பரநிலை என்று விஷ்ணுவும் பரநிலையும் பிரிவின்றி ஒன்றாகவே படிக்கப்பட்டு இருக்கிறது -என்பீராயின்
மைவம் –
ஷயந்தமஸ்ய ரஜஸப் பராகே
தத் அக்ஷரே பரமே வ்யோமந்
யோஸ்யாத் யஷ பரமே வ்யோமந்
யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமந் –இத்யாதி ஷு பர ஸ்தானஸ்யைவ தர்சநாத்
விஷ்ணோ பரமம் பதம் -இதி வ்யாதிரேக நிர்த்தேசச் ச -விஷ்ண வாக்யம் பரமம் பதம் -இதி விசேஷணாத்
அந்யதாபி பரம் பதம் வித்யதே இதி தேநைவ ஞாயதே ததிதம் பர ஸ்தானம் ஸூரிபி -சதா த்ருச்யத்வேந ப்ரதிபாத்யதே –

அவ்வாறு அல்ல
ராஜஸ குணம் நிறைந்த உலகிற்கு மேற்பட்ட நிலையில் பரமபதத்தில் உள்ள அவன் -அழிவற்ற பரமாகாசத்தில் அவன் வகிக்கிறான் –
எவன் இதயக்குகையில் இருக்கும் பரமனை அறிகிறானோ அவன் பரமபதத்தை அடைகிறான் -என்று
அவன் வசிக்கும் இடம் விளக்கப்பட்டு இருப்பதால் விஷ்ணு பரமபதம் என்ற இரண்டும் தனித்தனியானவை என்று விளங்குகிறது –
விஷ்ணுவாகிய பரமம் பதம் என்பதால் அவ்வாறு மற்றொரு பரமபதம் இருக்கிறதா எனில் -இல்லை ஏன் எனில் வேறு எங்கணும் நித்யர்களால் பார்க்கப்படுத்தல் இல்லை

ஏதத் யுக்தம் பவதி –
க்வசித் பரம் ஸ்தானம் பரம பத சப்தேந ப்ரதிபாத்யதே –
க்வசித் ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபம் –
க்வசித் பகவத் ஸ்வரூபம் -தத் விஷ்ணோ பரம் இதி பர ஸ்தானம் –
சர்க்க ஸ்தித் யந்த காலேஷு த்ரி தேவம் ஸம்ப்ரவர்த்ததே -குண ப்ரவ்ருஸ்யா பரமம் பதம் தஸ்யா குண மஹத் –
இத் யத்ர ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபம் -ஸமஸ்த ஹேய குண ரஹிதம் விஷ்ண வாக்யம் பரமம் பதம் –
இத் யத்ர பகவத் ஸ்வரூபம் -தரீண்யாப்யேதாநி பரம ப்ராப்யத்வேந பரம பத சப்தேந ப்ரதிபாத யந்தே –

கதம் த்ரயாணாம் பரம ப்ராப்யத்வ மிதிசேத் -பகவத் ஸ்வரூபம் -பரம ப்ராப்யத்வாதேவ பரமம் பதம் இதர யோரபி –
பகவத் பிராப்தி கர்பத்வாதேவ பரம பதத்வம் -ஸ்வர்க்கம் பந்த விநிர்முக்த ஆத்ம ஸ்வரூபா வாப்தி –
பகவத் பிராப்தி கர்ப்ப இதி -த இமே சத்யா -காமா -அந்ருதா பிதாநா இதி பகவதோ குண கணஸ்ய
திரோதாயகத்வேந அந்ருத சப்தேந ஸ்வ கர்மண ப்ரதிபாதநாத் –

இதை விளக்குவோம்
சில இடங்களில் மேம்பட்ட இடம் என்று பரம என்ற சொல்லினால் சொல்லப்படுவதும் -சில இடங்களில் உலகின் நீங்கிய முக்தர்கள் உறையும் இடம் என்றும் சில இடங்களில் இறைவன் உருவம் என்றும் பொருள் படும் அந்த விஷ்ணுவின் பரமபதம் என்ற சிறந்த இடம் -மூன்று குணங்கள் அற்ற பிறப்பு -நிலை -முடிவு விடுபட்ட – ஜீவர்களின் உருவமும் பரமபதம் ஆகும் –
கடைசியாக எல்லாக் குற்றங்களில் நின்றும் நீங்கிய விஷ்ணுவினுடைய பரமம் பதம் என்னும் விஷ்ணு ஸ்வரூபம் என்று மூன்று வஸ்துக்களாகப் பரமபதம் விவரிக்கப் பட்டுள்ளது
இப்படி மூன்று படிப்பட்டு இருந்தாலும் இறை உருவம் எல்லாவற்றினும் மேலானது -அடையத் தக்கது -என்பதில் ஐயமில்லை -அந்த பரமபதத்தை அடைகையில் eஜவான் மிகத் தூய்மை யடைந்து தூய்மையான ஆத்ம நிலையை யடைந்து பின்னும் அவனோடு ஒத்த உருவத்தையும் அடைகிறான் –
ஆகவே இவை மூன்றும் ஒன்றாகவே அமையப்படுகின்றன
இதுவரை அவனுடைய திருக் கல்யாண குணங்கள் இவனுடைய வினைகளால் மறைக்கப்பட்டு இருந்தன என்று இவனது வினைகள் திரைகளாயின என்று கூறப்படுகிறது

அந்ருத ரூபா திரேதாநம் ஷேத்ரஞ்ஞ கர்மேதி கதம் அவகம்யதே இதி சேத்
அவித்யா கர்ம சம்ஞ்ஞா அந்யாத்ரி தீயா சக்திரிஷ்யதி
யயா ஷேத்ரஞ்ஞ சக்தி சாவேஷ்டிதா ந்ரூப சர்வகா
சம்சாரதாபாநகிலாந் அவாப்நோத் யதி சந்த தாந்
தயாதி ரோஹித த்வாச்ச–இத்யாதி ஸ்ரீ விஷ்ணு புராண வஸனாத்
பர ஸ்தான பிராப்திரபி பகவத் பிராப்திகமைவ இதி ஸூ வியக்தம் –

வினையால் ஏற்படும் இம் மறைப்பு ஆத்மாவிற்கு எப்படி ஏற்படுகிறது எனில் -வினையின் அடியாகப் பிறந்த அறியாமை மூன்றாவது சக்தியாகிறது -இதனால் பற்பல உடல்களில் உள்ள ஆத்மாக்களின் ஜீவ சக்தி மூடப்பட்டுள்ளது -இதனால் அவ்வுயிர்கள் பிறப்பு சிறப்புகளில் உழல்கின்றன என்ற ஸ்ரீ விஷ்ணு புராண வசனத்தின் படி பரமபதத்தைக் கிட்டிய பின் இத்திரை விலகுகிறது என்று தெளிவாகிறது-

ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே இதி ரஜஸ் சப்தேந த்ரி குணாத்மிகா ப்ரக்ருதி ருச்யதே -கேவல்ய ரஜசோநவ ஸ்தநாத் இமாம்
த்ரி குணாத் மிகாம் ப்ரக்ருதி மதிக்கரம்யா ஸ்திதேஸ்தாநீ ஷயந்தம்-வசந்தம் -இத்யர்த்த –
அநேந த்ரி குணாத் மகாத் ஷேத்ரஞ்ஞஸ்யா போக்ய போதாத் வஸ்துந -பரஸ்த்தாத் விஷ்ணோ வாச ஸ்தானம் இதி கம்யாதே

ரஜோ குணத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் அவனுடைய இடம் இருக்கிறது -என்று ரஜோ குணத்தால் முக்குணத் தொடர்பையும் காட்டி -அதை யுடைய பிரக்ருதியையும் காட்டி -இப்படி முக்குணத்தோடு வசிக்கும் ஜீவனைப் போல் அன்றி-அவற்றைக் கடந்து வசிப்பவன் என்று பொருள் படும் -அதனால் அந்த விஷ்ணுவின் இருப்பிடம் முக் குணமுடைய ஜீவனுடைய இருப்பிடத்தைக் காட்டிலும் வேறானது என்பது தெளிவு –
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத் -இத் யத்ராபி தமஸ் சப்தேந
சைவ ப்ரக்ருதி உச்யதே கேவலஸ்யத மச -அநவஸ்தாநா தேவ ரஜஸ பராகே ஷயந்தம்-இத்யநேந
ஏக வாக்யத்வாத்-தமஸ பரஸ்தாத் வசந்தம் ஆதித்ய வர்ணம் புருஷம் அஹம் வேத இதயயமர்த்த அவகம்யதே –

சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மா
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
தத் அஸ்ஹர் பரமே வ்யோமந்
இதி தத் ஸ்தானம் அதிகார ரூபம் பரம வ்யோம சப்தாபிதேயமிதி ச கம்யதே
அக்ஷரே பரமே வ்யோமந் –
இத்யஸ்ய ஸ்தானஸ்ய அக்ஷரத்வ ஸ்ரவணாத் ஷர ரூபா -ஆதித்ய மண்டலாதய-ந பரம வ்யோம சப்தாபிதேயா
யத்ர பூர்வே ஸாத்ய சாந்தி தேவா
யத்ருஷய பிரதம ஜாயே புராணா
இத்யாதி ஷு ச தா ஏவ ஸூரய இதி கம்யாதே
தத் விப்ராசோ வி பந்யவோ ஜாக்ரு வாம்ச சமிந்ததே விஷ்ணோர்யப் பரமம் பதம் –
இத்யத்ராபி விக்ராஸ மேதாவிந -விபந்யவ -ஸ்துதி ஸீலோ
ஜாக்ரு வாம் ச -அஸ் கலித ஞானா தா ஏவ அஸ் கலிதா ஞானா தத் விஷ்ணோ பரமம் பதம்
சதா ஸ்துவந்த ச பந்ததே -இத்யர்த்த –

ஸூர்ய ஒளி படைத்தவனாயும் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாயும் அழிவற்றவனாயும் இருக்கும் அப்புருஷனை நான் அறிகிறேன் -என்னும் இடத்தில்
தமஸ் என்னும் சொல்லால் பிரகிருதி கூறப்பட்டது ஏன் எனில் தமஸ் மட்டும் தனித்து எங்கும் இருப்பதில்லை
இந்த வாக்யத்துடன் ரஜஸ்ஸுக்கு மேற்பட்ட இடத்திலுள்ள வசிப்பிடம் என்பதும் ஒரே பொருளாகக் கொள்ளக் கூடியது
தமஸ்ஸுக்கு மேற்பட்ட இடத்தில் வசிக்கும் கதிரொளி படைத்த புருஷனை நான் அறிகிறேன் என்று பொருள் தெளிவாகிறது –

விகாரமற்ற தன்னொளி படைத்த அழிவற்ற ப்ரஹ்மம் என்று எவன் அறியப் படுகிறானோ அவன் பரமாகாசத்தில் மறைந்து வசிக்கிறான்
அழிவற்ற பரமாகாசம் என்று எல்லாம் அவ்வவ்விடங்களில் விகாரமற்ற பரமாகாசம் என்ற பதத்தாலும் குறிக்கப்படுகிறது –
அழிவற்ற பரமாகாசம் என்பதில் அழிவற்ற என்ற பதம் அடை கொண்டு இருப்பதால் அழியும் தன்மையுள்ள கட் புலனாகும் ஸூர்ய மண்டலம் பரமாகாசம் ஆகாது
எங்கு முன்னரே தேவர் அடைந்து வணங்குகிறார்களோ எங்கு முன்னரே ஞானிகள் இருக்கிறார்களோ என்பதனால் அவ்விடம் நித்யர்களால் அடையப்படுகிறது எனப் பொருள் அந்த மனத்தால் அறிந்து நிலை பெற்ற அறிவுடைய மேதைகள் இருந்து ஸ்தோத்தரித்துக் கொண்டிருக்கும் தடையற்ற ஞானமுடையவர்கள் கூடியிருக்கும் விஷ்ணுவின் பரமபதம் என்பதாலும் மேற்கண்ட பொருளே குறிக்கப்படுகிறது –
விப்ராஸ -மேதைகள்
விபன்ய வ -ஸ்தோத்தரிப்பவர்கள்
ஜாக்குவாரும் ஸ -தடையற்ற ஞானமுடையவர்கள் –
இவர்கள் தடையற்ற ஞானமுடையவர்களாய் அந்த விஷ்ணுவின் பரமபதத்தில் இடையறாது ஸ்தோத்தரிக்கிறார்கள் என்பது பொருள் –

——————

140–ஏதேஷாம் பரிஜன ஸ்தானதீநம்
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யத்ர ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண கணவத் பர ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர் பூதத்வாத் –
சதேவ –ஏகமேவ அத்விதீயம் –இதி பிரம்மா அந்தர் பாவ –அவகம்யதே-
ஏஷாம் அபி கல்யாண குணைக தேச தத்வாதேவ சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் -இத்யத்ர இதம் இதி சப்தஸ்ய
கர்ம வஸ்யா போக்த்ரு வர்க்க மிஸ்ர- தத் போக்ய பூத விக்ஷயத்வாச்ச- சதா பஸ்யந்தி ஸூரய-
இதி சதா தர்சித்வேந ச தேஷாம் கர்ம வஸ்யாநந்தர் பாவாத் -அபஹத பாப்மா –இத்யாதி அபி பாஸே இத்யந்தேந
ஸ்வ லீலோபகரண பூத த்ரிகுணாத்மகா ப்ரக்ருதி பிராகிருத ததஸ்ம்ஸ்ருஷ்ட புருஷ கதம் ஹேயா ஸ்வ பாவம்
சர்வம் ப்ரதிஷித்ய சத்யகாம -இத்ய நேந ஸ்வ போக்கிய போக உபகரண ஜாதஸ்ய ஸர்வஸ்ய நித்யதா ப்ரதிபாதிதா–

சத்யா காம யஸ்ய அ சவ்
சத்ய காம–காம் வந்தே –இதி காமா –தேந பரேண ப்ரஹ்மணா ஸ்வ போக்ய ததுபகரணாதய-ஸ்வாபிமதா -யேகாம் வந்தே –
தே சத்யா -நித்யா -இத்யர்த்த -அந் யஸ்ய லீலோபகரணஸ் யாபி வஸ்துந
பிராமண சம்பந்த யோக்யத்வே சத்யபி விகராஸ் பதத்வேநா -அஸ்திரத்வாத் தத் விபரீதம் ஸ்திரத்வம் ஏஷாம் ஸத்ய பதேந உச்யதே
ஸத்ய சங்கல்ப இதி ஏதேஷு போக்ய தத் உப கரணாது ஷு நித்யேஷு நிரதிசயேஷு ஆனந்தே ஷு சத்ஸ்வபி அபூர்வாணாம்
அபரிமிதானாம் அர்த்ததானாம் அபி சங்கல்ப மாத்ரேண சித்தம் வததி-
ஏஷாம் ச போக உபகரணாநாம் லீலா உபகரணாநாம் சேதநாநாம் அசேதநாநாம் ஸ்திராணாம் அஸ்திராணாம்
சதத் சங்கல்பாதயாத் ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி பேதாதி சர்வம் வததி ஸத்ய சங்கல்ப இதி –

இப்படிப்பட்ட குடி படைகளுடைய இருப்பிடங்கள் -சந்திரனை ஒத்த முகமுடையவனே -ஸ்வேதகேதுவே -முதலில் ஸத் ஆகவே இருந்தது -என்று ஞானம் பலம் ஐஸ்வர்யம் முதலான குணங்களைக் கொண்ட பர ப்ரஹ்மத்தில் உள் வைக்கப்பட்டு இருந்தது என்னும் பொருள் பட -ஒன்றே இருந்தது -இரண்டாவது இல்லை -என ப்ரஹ்மத்தில் ஒடுங்கி இருந்தது தெரிவிக்கப்பட்டது –
இங்கும் நற் குணங்கள் அனைத்திற்கும் இருப்பிடமாவது போல் ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் -என்பதில் இதம் கட் புலனாகிற வினைகளுக்கு ஏற்ப பலன் துய்ப்பதான உலகைக் காட்டி அதற்கு எதிர் தட்டாக ஞானிகள் எப்பொழுதும் பார்க்கிறார்கள் என்பது இடைவிடாது நோக்கல் என்பதால் அவர்கள் வினைகட்க்கு ஆட்பட்டவர்கள் அல்ல என்பதையும்
பாபங்கள் அற்ற தொடங்கி தாகமற்ற ஈறான தனது அலகிலா விளையாட்டிற்கு உறுப்பான முக் குணக் கலவையான உலகின் தாழ்ச்சி சிறிதும் தொடாத நிலையையும் விளக்கி –
ஸத்ய காம -என்று அவனுடைய துய்ப்பிடம் அதன் உறுப்புக்கள் ஆகியவற்றின் நித்யத்வம் அழிவின்மை சொல்லப்படுகிறது –
விரும்பும் பொருட்கள் அப்பரம் பொருளின் மகிழ்ச்சிக்கான பொருட்களும் -அதன் உறுப்புகளும் அவனது விருப்பத்திற்கு ஏற்ப அமைந்திருத்தல்
மேலும் அவை அழிவற்றவை -மாறு பாடு அற்றவை -மற்றவர்களின் விருப்பத்திற்கான பொருள்களின் நிலையாமைக்கு எதிர்த்தட்டாய் இருத்தல் என்பது ஸத்யம் என்னும் பதத்தால் விளக்கப் படுகிறது –

இப்படிப்பட்ட மனமகிழ் பொருள்களை அழிவற்றையாகவும் -எல்லையற்றவவையாயும் -எண்ணில் அடங்காமலும் இதுவரை இல்லாதவையாகவும் பற்பல பெயருடையதாகவும் தனது எண்ணத்தினாலேயே படைத்துக் கொள்ளும் திறமை கூறப்படுகிறது
இந்த நுகர் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளுமான சேதன அசேதனப் பொருட்கள் நிலைத்து இருப்பவை அளிப்பவை யாவும் தனது எண்ணத்தினாலேயே படைத்து காத்து அழிக்கும் திறமையால் அழிவற்ற வினைத்திடபம் உடையவன் எனப்படுகிறான் –

——————-

141—இதிஹாச புராணயோ வேத உப ப்ரும்ஹண யோஸ்ச அயமர்த்த உச்யதே
தவ்து மேதாவினவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரிநிஷ்டிதவ் வேத உப ப்ரும்ஹணதயா பிரார்ப்பதே
ஸ்ரீ ராமாயணே
வ்யக்தமேஷ மஹா யோகி பரமாத்மா சனாதன அநாதிமத்ய நிதந மஹத பரமோ மஹான்
தமசப் பரமோ தாதா சங்க சக்ர கதா தர -ஸ்ரீ வத்ச வஷாஸ் நித்ய ஸூரி அஜய்ய சாஸ்வதோ த்ருவ-என்றும்

சரா நாநாவிதாஸ் சாபி தனுராயத விக்ரஹம் -அந்வகச் சந்த காகுத்ஸ்த்தம் சர்வே புருஷ விக்ரஹா –
விவேச வைஷ்ணவம் தாம ச சரீர சஹானுக –ஸ்ரீ மத் வைஷ்ணவே புராணே –
சமஸ்தா சக்த்யஸ் சைதா ந்ருப யத் ப்ரதிஷ்டிதா–தத் விஸ்வ ரூபா வை ரூப்யம் ரூபமந் யத்தரேர் மஹத் –
மூர்த்தம் ப்ரஹ்ம மஹா பாக -சர்வ ப்ரஹ்ம மயோஹரி –
நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அந பாயிநி
யதா சர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம
தேவத்வே தேவ தேவோயம் மனுஷ்யத்வே ச மானுஷீ –
விஷ்ணோ தேஹானு ரூபாம்வை கரோத்யேஷா ஆத்மநஸ் தனும்-
ஏகாந்தின சதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகிநோ ஹியே –
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யதவை பஸ்யந்தி ஸூரய —
கலா முஹுர்த்தாதி மயஸ் ச கால -நயத்விபூதே பரிணாம ஹேது

மஹா பாரதே ச
திவ்யம் ஸ்தாநம் அஜாம் சா ப்ரமேயம் துர் விஜ்ஜேயம் சாகமைர்கம்ய மாத்யம்
கச்ச ப்ரபோ ரக்ஷ சாஸ்மாந் ப்ரபந்நான் கல்பே கல்பே ஜாயமான ஸ்வ மூர்த்யா –
காலஸ் சபசயதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -இதி –

இப் பொருள் வேதத்தை விளக்க வந்த -உப ப்ரும்ஹணங்களான -இதிஹாசங்களிலும் புராணங்களிலும் விளக்கப்பட்டுள்ளது
வேதங்களில் நன்கு தேர்ந்தவர்களான -மேதைகளான -அவ் விருவர் -லவ குசர் -களையும் கண்டு வேதங்களில் உட் கருத்தை விளக்கும் பொருட்டு -ஸ்ரீ ஸீதா ராம சரிதங்களை -விரிவாகப் பாடினார்கள் -பலகாண்டம் -4-6-
வேதம் மற்றும் உப ப்ரும்ஹணத்தின் ஆரம்பம் என்பது ஸ்ரீ ராமாயணம் –
இந்த ஸ்ரீ ராமன் பெரிய யோகியாய் -பரம் பொருளாய் -என்றும் இருப்பவராய் -முதல் நடு முடிவு அற்றவராய் -பெரியவை யாவற்றிலும் பெரியவரானவர் –
மூலப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானவர் -தாங்குபவர் சங்கு சக்கரம் இவற்றைத் தரித்தவர் – ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவையும் இணை பிரியாத மஹா லஷ்மியையும் திரு மார்பில் உடையவர் –
வெல்ல முடியாதவர் விகாரமற்றவர் நிலையானவர் -யுத்த காண்டம் –114-தனி ஸ்லோகம்
பலவிதமான அம்புகளும் வில்லும் உருக் கொண்டு
மஹா புருஷனான ககுத்ஸ்தனை பின் தொடர்ந்தன -உத்தர காண்டம்
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -பத்த முக்த சேதனர்களின் சக்தி -அசேதனப் பொருட்களின் சக்தி வினைப்பயன் ஆகிய சக்திகள் யாவும் எவருடைய திரு மேனியில் நிலை பெற்று இருக்கின்றனவோ அத்திருவுரு மற்றவர்களின் நின்றும் வேறு பட்டதாயும் – உலகியல் தொடர்பு அற்றதாயும் -மிகப் பெரியதாகவும் உள்ளது
அந்த உருவுடைய ப்ரஹ்ம்ம் எல்லா ஜீவன்களையும் தனது உடலாகக் கொண்டது -என்றென்றும் இருப்பவளும் உலகிற்கு எல்லாம் தாயானவளும் ஆகிய ஸ்ரீ அவனை விட்டு ஒரு பொழுதும் பிரிவதில்லை -அவனைப் போல் எங்கும் வியாபித்து உள்ளாள் -அவன் தேவனாக அவதரித்தால் இவளும் தேவ உடலுடனும் மனிதனாகில் மனித உடலுடனும் அவன் எடுக்கும் அவதாரங்களுக்கு ஏற்ப தானும் அவதரிக்கிறான்
ஒரே மனமுடையவர்களும் யோகிகளும் இடைவிடாது ப்ரஹ்மத்தைத் த்யானித்துக் கொண்டு அந்த மேலான ஸ்தானத்தில் எப்பொழுதும் அவனையே -கண் அமையாது -நோக்கிக் கொண்டு இருக்கின்றனர்
கலை முஹூர்த்தம் என்னும் கால அளவைகள் அவனுடைய ஏவலுக்கு உட்பட்டவை
பரமபதத்தில் அவைகளுக்கு இருப்பு இல்லை -அவை மாறு பாட்டிற்குக் காரணமாகின்றன -அவை இவ்வுலகில் மட்டுமே உண்டு
மஹா பாரதத்திலும் -இறைத் தன்மை பெற்றதும் மூப்பற்றதும் பிரமாண நூல்களால் அறிதற்கு அரியதுமான அந்த மேலான உலகிற்குச் செல்வீராக -எங்களைக் காப்பதற்குக் கல்பம் தோறும் அவதரிப்பீராக -இவ்வுலகில் பொருட்களை மாறுதல் அடைவிக்கும் -காலத்திற்கு அங்கு பரம பதத்தில் -எந்த சக்தியும் கிடையாது -என்றும் கூறப்பட்டு இருக்கிறது –

———————–

142–பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபவத்வம் ஸூத்ரகாரச் ச வததி
அந்தஸ் தத் தர்மோபதே ஸாத்-1-1-21-இதி
யோ அசாவாதித்ய மண்டலாந்தர் வர்த்தி தப்தகார்த்த -ஸ்வர கிரிவரப்ரப —
சஹஸ்ராம் ஸூ சத சஹஸ்ர கிரண
கம்பீராம்ப ஸமுத்பூத -ஸ்ம்ருஷ்ட நாள ரவி கர விகசித புண்டரீக தல -அமலாய தேஷண-
ஸூப்ரூ லலாட –
ஸூ நாஸ-
ஸூஸ்பிதாதர வித்ரும ஸூ ருசிர கோமல கண்ட கம்புக்ரீவ
சமுந் நதாம் ச விலம்பி ஸூ ரூப திவ்ய கர்ணகி சலய
பீந விருத்தாயத புஜ சாருதர ஆதாரம்ர கரதலானு ரக்தாங்கு லிபி -அலங்க்ருத –
தனு மத்யே விசால வக்ஷஸ்தல சமா வி பக்த சர்வாங்க அநிர்தேஸ்ய திவ்ய ரூப சம்ஹ நத-
ஸ் நிக்த வர்ண-பிரபுத்த புண்டரீக சாரூ சரண யுகள -ஸ்வ அநு ரூப பீதாம்பரதர
அமல கிரீட குண்டல ஹார கௌஸ்துப கேயூர கடக நூபுரோதர பந்தநாத் யபரிமித ஆச்சர்ய அனந்த திவ்ய பூஷண
சங்க சக்ர கதா சி சார்ங்க ஸ்ரீ வத்ச வனமாலா அலங்க்ருத அநவதிக அதிசய ஸுவ்ந்தர்யாஹ்ருத
அசேஷ மாநோ த்ருஷ்ட்டி வ்ருத்தி லாவண்யாம் ருதபூரித அசேஷ சராசர பூத ஜாத
அத்யத் புதாசிந்த்ய நித்ய யவ்வன -புஷப ஹாஸ ஸூ குமார புண்ய கந்த வாசித அநந்ததி கந்த ரால
த்ரை லோக்யாக்ரமண ப்ரவ்ருத்த கம்பீர பாவ கருணானுராக மதுர லோசந அவலோகிதாஸ்ரித வர்க்க –
புருஷவரோ தரீத் ருஸ்யதே —

ச ச நிகில ஜகத் உதய விபவ லய லீல நிரஸ்த ஸமஸ்த ஹேய ஸமஸ்த கல்யாண குண நிதி –
ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண பரமாத்மா பரம் ப்ரஹ்ம நாராயண இத்யவகம்யதே
தத் தர்மோபதேசாத்
ச ஏஷ ஸர்வேஷாம் லோகாநாம் ஈச-ஸர்வேஷாம் காமாநாம்
ச ஏஷ சர்வேப்ய பாப் மப்ய உதித-இத்யாதி தர்சநாத்
தஸ்யை தே குணா ?
சர்வஸ்யா வசீ சர்வஸ்யேசாந
அபஹத பாப்மா விஜர–இத்யாதி ஸத்யஸங்கல்ப இத்யந்தம்
விஸ்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம்
பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் -இத்யாதி வாக்யப் பிரதி பாதித–

பர ப்ரஹ்மத்தின் உருவத்தை ஸூத்ர காரரும் விவரிக்கிறார்
அந்தஸ் தர்மோபதேஸாத் –1-1-21—ஸூர்யனுக்கு உள்ளே இருப்பவன் -அந்த பரமாத்மாவிற்கே உரிய தன்மைகளைக் கொண்டு இருக்கிறான்
ஸூர்ய மண்டலத்தில் இருப்பவன் எவன் எனில் -உருக்கி வார்த்த பொன் மலையின் ஒளி படைத்தவன் -நூறாயிரம் ஸூர்ய ஒளி படைத்தவன் -ஆழமான நீர் நிரம்பிய தடாகத்தில் பருத்த தண்டுள்ள -ஸூர்யனால் மலர்விக்கப்பட்ட பெரிய தாமரை மலரின் இதழ் போன்ற தூய்மையான கண்கள் உடையவன் –
அழகிய புருவமுடைய நெற்றி -கூரிய மூக்கு -புன்னகை புரியும் பவளம் போன்ற இதழ்கள் -அழகிய மென்மையான கன்னங்கள் -சங்கை ஒத்த கழுத்து -உயர்ந்த தோள்கள் வரை தொங்கும் தளிர் போன்ற காதுகள் பருத்து உருண்டு நீண்ட தோள்கள் -மிக அழகிய விரல்களால் அலங்கரிக்கப் பட்ட கைகள் அழகிய இடை பரந்த மார்பு ஒத்த அளவுள்ள அவயவங்கள் -விவரிக்க இயலாத தெய்விக உரு ஒளி சிந்தும் வண்ணம் நன்கு மலர்ந்த தாமரை போன்ற திருவடிகள் -அவனுக்கே பொருந்தும் மஞ்சள் நிறப் பட்டாடை தூய்மையான தலைமுடி -குண்டலம் மாலை தோள்வளை -வளைகள் காற் சதங்கை -ஒட்டியாணம்-அளவிறந்த பற்பல அழகிய அணி கலன்கள்-சங்கு சக்கரம் கதை வாள் கௌஸ்துபம் வனமாலை இவைகளால் அலங்கரிக்கப்பட்டு -உயர்ந்த எழிலுடன் தன் அவயவங்களால் எல்லாருடைய பார்வைகளையும் கொள்ளை கொள்பவன்
இவ் வெழில் அழகால் நிறைக்கப்பட்டு சேதன அசேதனப் பொருட்களின் மனங்களை நிறைப்பவன் -மிக அற்புதமான மனத்திற்கு எட்டாத அழிவற்ற இளமையுடைய அன்று அலர்ந்த பூவின் மென்மையுடைய -தன் மணத்தால் திசைகள் யாவையும் நிரப்பும் மணமுடையவன் -மூன்று உலகங்களையும் நிறைக்கும் கம்பீரம் உடையவன் -இரக்கம் அன்பு இனிமை நிரம்பிய பார்வைகளால் அடியார் கூட்டத்தைப் பார்ப்பவன் -ஆண் ஏறு -ஸூர்ய மண்டலத்தினு காணப்படுகிறான் –

அவனே உலகுகளை ஆக்கி அளித்து அழித்துச் செய்யும் விளையாட்டுடையவன் -குற்றங்கள் அற்றவன் -நற் குணங்களின் குவை -மற்றப் பொருட்கள் யாவற்றன் நின்றும் வேறுபட்டவன் -பரமாத்மா பர ப்ரஹ்மம் நாராயணன் -என்று அறுதிப்படுகிறது –

இப்பண்புகளால் குறிக்கப் படுபவன்-அவனே எல்லா உலகிற்கும் ஈசன் -எல்லா விருப்பங்களையும் அளிப்பவன் -எல்லோருடைய பாபங்களையும் நீக்குபவன் -என்று காட்டப்படுகிறது –

இப்படிப்பட்ட இயல்புகள் உடையவன் -எல்லோரையும் தன் வசப்படுத்துவோன் -uயாவர்க்கும் ஈசன் -குற்றங்கள் -பாபங்கள் சிறிதும் அற்றவன் -மூப்பின்மை முதல் எண் குணங்கள் -உண்மையான வினைத்திட்பம் உடைமை ஈறான குணங்கள் -உலகுகட்க்கு மேலானவனாய் அழிவற்ற பெரியனான நாராயணன் -ஹரி -உலகுகள் யாவற்றிற்கும் தலைவனாய் அவற்றின் உட் புகுந்து நியமித்து அவற்றைத் தனது உடைமைகளாக உடையவன் என்று படு வாக்யங்களால் சொல்லப்படவோன் நாராயணனே –

————-

143–வாக்ய காராஸ் சைதது ஸூ ஸ்பஷ்டமாஹ-
ஹிரண்மய புருஷோத்ருச்யதே இதி -ப்ராஞ்ஞ சர்வ அந்தரஸ்யாத் -லோக காமே சோபதேசாத் ததோதயாத் பாப்மநாம் இத்யாதிந —

வேத ரிஷியும் இதைத் தெளிவாக விளக்குகிறார் -பொன் நிறமான புருஷன் காணப்படுகிறான் -விதி என்னும் சிறந்த ஞானமுடைய இந்த எம்பெருமான் யாவற்றிலும் உள் நிறைந்து இருக்கிறான் -உலகம் அனைத்துக்கும் விருப்பங்களை நிறைவேற்றுகிறான் -அவன் பாபங்கள் அற்றவன் -என்றும் கூறியிருக்கிறார் –
தஸ்ய ரூபஸ்ய அநித்யதாதி வாக்ய காரேனைவ ப்ரதிஷித்தம்
ஸ்யாத் ரூபம் க்ருதக மனுக்ரஹார்த்தம் தச்சேதாநாநாம் ஐஸ்வர்யாத்-இதி உபாசிது–
அநு க்ரஹாரத்தை பரம புருஷஸ்ய ரூப ஸங்க்ரஹ -இதி பூர்வ பக்ஷம் க்ருத்வா -ரூபம் வா அதீந்த்ரிய மந்தகரண ப்ரத்யக்ஷம்
தந் நிர்தேசாத் -இதி யதா ஞானதயா-பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூப தயா நிர்தேசாத் ஸ்வரூப பூதா குணா –
ததா இதமபி ரூபம் ஸ்ருத்யா ஸ்வரூபதயா நிர்தேசாத் ஸ்வரூப பூதம் இத்யர்த்தா —

இப்படிப்பட்ட அவனுடைய உருவம் அழியக்கூடியது என்பதை வேத ரிஷியே -வாக்யகாரரே -மறுத்திருக்கிறார் -அவ் வுருவம் தன்னுடைய உபாஸகர்களை மகிழ்விப்பaதற்காக அவனால் -அந்த எம்பெருமானால் எடுத்துக் கொள்ளப் பட்டது -என்னும் முற் கூற்றிற்கு அவ்வுரு பொறிகளுக்கு எட்டாதது-என்று கூறி -ஞானத்தால் மட்டும் இப்படிப்பட்ட உரு இன்னோரன்ன குணங்கள் என்று அறுதியிட்டு இவ்விதமாகவே மறைகளில் விளக்கப்பட்டு இருக்கிற உருவமுள்ளது என்று பொருள்

பாஷ்யகாரேண ஏதத் வ்யாக்யாதம்
அஞ்ஞசைவ விஸ்வ ஸ்ருஜா ரூபம் -தத்து ந சஷுஷா க்ராஹ்யம் -மனசா த்வக் கலுஷேன சாதனாந்தரவதா க்ருஹ்யதே –
ந சஷுஷா க்ருஹ்யதே -நாபி வாசா மனசாது விஸூத்தேந -இதி ஸ்ருதே-
நஹி அ ரூபாயா தேவதாயா ரூபம் உபதிஸ்யதே-யதா பூதவாதி ஹி சாஸ்திரம் –
மஹா ரஜனம் வாச –
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்-ஆதித்ய வர்ணம் தமசப் பரஸ் ஸாத் -இதி ப்ரகாரனாந்தர நிர்தேசாஸ் ச ஸாக்ஷிண-இத்யாதிநா —

உரையாசிரியரும் இதை விளக்குகிறார்உண்மையான உலகுகளைப் படைக்கும் அவனுடைய உருவம் மாயா ஜாலமல்ல -அது கட் புலனாகாது -நன்கு கற்று உணர்ந்த மனத்தால் மட்டுமே அறியப்படுகிறது -கண்ணால் காண முடியாதது -வாக்கினாலும் அறிய முடியாதது -தூய்மையான மனத்தால் மட்டும் அறியப்படும் -என்று மறையும் கூறுகிறது -இல்லாத தேவதைக்கு ஸாஸ்த்ரம் உருவத்தை விவரிக்கிறது என்பது தவறு -இல்லாத ஒன்றை ஸாஸ்த்ரம் எப்பொழுதும் கூறுவதில்லை -வண்ண ஆடையை அணிந்து இருப்பவன் -ப்ரக்ருதிக்கு மேற்பட்ட ஸூர்யனின் ஒளியுடைய அந்த புருஷனை மஹான்கள் இவ்வாறு அறிகிறார்கள் என்று பலவிடங்களில் அவனுடைய உருவுடைமை அறுதியிடப் பட்டிருப்பதே சாட்சிகள் ஆகும்
ஹிரண்ய மய –
இதி ரூப சாமான்யான் சந்த்ர முகவத் -நம யத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே -அநாரப் யத்வாதாத் மந-இதி –
யதா ஞானாதி கல்யாண குண அனந்த்ய நிர்தேசாத் அபரிமித கல்யாண குண விசிஷ்டம் பரம ப்ரஹமேத் யாவகம்யதே –
ஏவம் -ஆதித்ய வர்ணம் -புருஷம் -இத்யாதி நிர்தேசாத்
ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப கல்யாண தம ரூப -பர ப்ரஹ்ம பூத -புருஷோத்தமோ -நாராயண இதி ஞாயதே –
ததா அஸ்யேசாந –
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
சதா பஸ்யந்தி ஸூரய
தமசப் பரஸ்தாத்
ஷயந்தம் அஸ்ய ரஜஸப் பராகே —
இத்யாதிநா பத்னி பரிஜன ஸ்தானாதீநம் நிர்தேசா தேவததை வசந்தீத் யவகம் யதே –
யதாஹ பாஷ்யகார
யதா பூதவாதி ஹி சாஸ்திரம்

தங்க மயமான -என்பதில் மயம் -என்பது தங்கத்தாலானது என்று குறிப்பிடாது -மாறாக மதிமுகம் என்பதிலுள்ளது போல் சிறந்த ஒளி என்பதற்கு உவமிக்கப் பட்டு இருக்கிறது –
ஞானம் முதலிய நற் குணங்களால் அளவற்றது என்று அறுதியிடப் படுவதால் அளவற்ற நற் குணங்களுடையது பர ப்ரஹ்மம் என்று வேதம் அறிவிக்கிறது -அவ்வாறே ஸூர்யனின் ஒளி -புருஷம் -என்று விளக்கி -அந்த உருவம் பர ப்ரஹ்மம் தனது விருப்பத்திற்கு என்றே கொள்ளப்பட்ட நற் குணங்களே நிறைந்த புருஷோத்தமனான நாராயணனின் உருவம் என்றும்-அவனே ஈசன் இலக்குமியை மனைவியாக உடையவன் -சான்றோர்கள் இவனை இடையறாது பார்க்கிறார்கள்
தமஸ்ஸுக்கு மேற்பட்டவன் ரஜஸ்ஸுக்கு மேற்பட்ட இடத்தில் வசிப்பவன் என்றெல்லாம் மனைவி பரிவாரங்கள் போன்றவற்றையும் அறுதியிட்டு அவனது உருவுடைமையை உறுதி செய்கின்றன -உரை யாசிரியரும் முன்பு கூறப்பட்ட உருவுடைமையையே ஸாஸ்த்ரம் வலியுறுத்துகிறது -என்றார்

இதி ஏதத் யுக்தம் பவதி–யதா
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -இதி நிர்தேசாத் பரமாத்ம ஸ்வரூபம்-ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீக –
அநவதிக அனந்தைக தாநதயா அபரிச்சேதயதயா ச சகல இதர விலக்ஷணம் ததா
யஸ் சர்வஞ்ஞ சர்வவித்
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே
ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச
தமேவ பாந்த மதுபாதி சர்வம் தஸ்ய பாஸா சர்வம் இதம் விபாதி –
இத்யாதி நிர்தேசாத் நிரதிசய அசங்க்யேயாஸ் ச குணா சகல இதர விலக்ஷணா –
ததா ஆதித்ய வர்ணம் -இத்யாதி நிர்தேசாத்
ரூப பரிஜன ஸ்தாநாதயஸ் ச சகல இதர விலக்ஷண ஸ்வ அசாதாரணா அநிர்தேஸ்ய ஸ்வரூபம் ரூபஸ்வ பாவா இதி –

இதை இவ்வாறு விளக்கலாம்
எப்படி மாறுபாடாற்ற அழிவற்ற ஞானம் ப்ரஹ்மம் என்று அதனுடைய -திவ்யாத்ம ஸ்வரூபத்துடைய -தெய்விக ஆன்ம நிலை எல்லாத் தீய குணங்களுக்கும் எதிர்த் தட்டாய் விளங்குவது போலவே அளவற்ற ஆனந்தமுடைமை அளவின்மை -எல்லா நற் குணங்களும் பொருந்தி மற்றவர்களின் நின்றும் வேறுபட்டு இருத்தல் அவ்வாறே எல்லாம் அறிதல் எல்லாவற்றிக்கும் காரணமாதல் இயல்பாகவே அவனுடைய திறன் ஏனையவைகளுடைய அவற்றினின் நின்றும் மேம்பட்ட அறிவு செயல் இவற்றில் விளங்குகிறது என்று அறுதி இடப் படுகிறதோ அவ்வாறே அவனது தெய்விகத் திருமேனி ஸூர்யன் போன்ற வண்ணம் முதலியவற்றால் மற்றவைகளின் நின்றும் வேறு பட்டு அவனுக்கே உரித்தாய்-இன்னது என்று வரையறுக்க முடியாததாய் இருக்கும் –

———–

144–வேதா பிரமாணம் சேத் வித்யர்த்த வாத மந்த்ர கதம்
சர்வம் அபூர்வம் அவிருத்தம் அர்த்த ஜாதம் யதா வஸ்திதமேவ போதயந்தி
ப்ராமாண்யம் ச வேதாநாம்
ஒவ்த்பத்தி கஸ்தி சப்தஸ்யார்த்தேந சம்பந்த -இத்யுக்தம் ததா
அக்னி ஜலாதீநாம் ஓவ்ஷ்ண்யாதி சக்தி யோக ஸ்வாபாவிக- யதா ச சஷுராதீநாம் இந்த்ரியானாம் புத்தி விசேஷ
ஜனன சக்தி ஸ்வாபாவிகி ததா சப்தஸ் யாபி போதகத்வ சக்தி ஸ்வாபாவிகீ –

ந ச ஹஸ்த சேஷ்டாதிவது சங்கேத மூலம்-சப்தஸ்ய போதகத்வம் இதி வக்தும் சக்யம்
அநாத்யநுசந்தான விச்சேதேபி சங்கேதயித்ரு புருஷா ஞானாத் யாநி சங்கேத மூலாநி தானி சர்வானி சாஷாத்வா
பரம் பரயாவா ஞாயந்தே –

வேதங்கள் பிரமாணம் எனக் கொண்டால் விதி அர்த்தவாதம் மந்த்ரம் இவற்றால் விளக்கப்படும் புதிய பொருள்கள் நாம் கண்களால் காண்பது முதலான உய்த்துணரும் பொருள்களுக்கு மாறுபாடின்றி இருக்குமேயாகில் அவையும் கொள்ளத் தக்கவையேஏன் எனில்வேதங்கள் எப்பொழுதும் உண்மையான பொருள்களைத் விளக்கும் -அது அவ்வாறு இருந்தால் தான் உண்மையாகும் -அப்படியே தீ நீர் முதலியவற்றுக்கு வெப்பம் முதலியவை இயற்கையாக இருப்பது போல் கண் முதலான புலன்களுக்கு இயற்கையாகவே தன்னுடன் தொடர்புடைய பொருட்களுடைய நிலையை அறிவுறுத்தல் இயற்கையாகும்மேலும் கைச்செய்கை குறியீட்டு மூலமும் ஒரு பொருளை விளக்கும் திறன் உள்ளது -அவ்வாறே நெடு நாட்களாக வழக்கில் இருக்கும் சொற்களுக்கும் அதனதன் பொருளைத் தெரிவிக்கும் ஆற்றல் உண்டு
ந ச தேவ தத்தாதி சப்தவத் கல்பயிதும் யுக்தம் -தேஷு ச சாஷாத் வா பரம்பரயா வா ஸங்கேதோ ஞாயதே –
கவாதி சப்தாநாம் து அநாத் யநுஸந்தான விச்சேத அபி ஸங்கேதா ஞானாதேவ போதகதவை சக்தி ஸ்வாபாவிகீ —

அத -அக்னீயாதீநாம் ஓவ்ஷ்னாதி சக்திவத் இந்த்ரியானாம் போதகத்வ சக்தி வச்ச சப்தஸ் யாபி போதகத்வ சக்தி -ஆச்ரயணீயா

தொடர்ந்து தேவதத்தன் போன்ற பெயரைக் குறிக்கும் சொற்கள் நெடுநாளாக வழி வழியாக ஒரு குறிப்பிட்ட பெயராகவே வழங்கப்பட்டு வருகின்றன -அவ்வாறே பசு முதலிய சொற்கள் வழக்கில் ஒரு குறிப்பிட்ட பொருளையே சுட்டிக் காட்டுகின்றன-அதனால் தீக்கு வெப்பம் புலன்களுக்கு தத்தம் அறிவு போன்று சொற்களுக்கும் பொருளை அறிவித்த்ல் தன்னடையே உண்டு என்றே கொள்ள வேண்டும்
ந னு ச
இந்த்ரியவத்-சப்தஸ் யாபி போதகத்வம் ஸ்வா பாவிகம் சம்பந்த கிரஹணம் போதகத்வாய கிமதி அபேக்ஷதே ?
லிங்க வத் இத்யுச்யதே-
யதா ஞாத ஸம்பந்த நியம் தூமாதி அக்னியாதி விஞ்ஞான ஜனகம்-
ததா ஞாத ஸம்பந்த நியம சப்தோபி அர்த்த விசேஷ புத்தி ஜனக –
ஏவம் தர்ஹி சப்தோபி அர்த்த விசேஷஸ்யா லிங்க மிதி அனுமானமேவ ஸ்யாத் -நைவம் சப்தார்த்தயோ –
ஸம்பந்த போத்ய போதக பாவ ஏவ தூமாதீநா து சம்பந்தாந்தரமிதி –
தஸ்ய ஸம்பந்தஸ்ய ஞான த்வாரேண புத்தி ஜனகத்வமிதி விசேஷ
ஏவம் க்ருஹீத சம்பந்தஸ்ய போதகத்வ தர்ஸனாத் அனாதி யநுசந்தான விச்சேதே பி ஸங்கேதா
ஞானாத் போதகத்வ சக்தி ரேவேதி நிஸ்ஸீயதே —

தொடர்ந்து தேவதத்தன் போன்ற பெயரைக் குறிக்கும் சொற்கள் நெடுநாளாக வழி வழியாக ஒரு குறிப்பிட்ட பெயராகவே வழங்கப்பட்டு வருகின்றன -அவ்வாறே பசு முதலிய சொற்கள் வழக்கில் ஒரு குறிப்பிட்ட பொருளையே சுட்டிக் காட்டுகின்றன-
அதனால் தீக்கு வெப்பம் புலன்களுக்கு தத்தம் அறிவு போன்று சொற்களுக்கும் பொருளை அறிவித்தல் தன்னடையே உண்டு என்றே கொள்ள வேண்டும்

———

145–ஏவம் போதகாநம் -பத சங்காதாநாம் சம்சர்க்க-விசேஷ போதகத்வேந-வாக்ய சப்தாபிதேயநாம் உச்சாரண க்ரமோ
யத்ர புருஷ புத்தி பூர்வக
தே பவ்ருஷேயா –சப்தா இத் யுச்யந்தே -யத்ர து உச்சாரண க்ரம பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார பூர்வக
ஸர்வதா அபவ்ருஷேயா தே ச வேதா இத் யுச்யந்தே-
ஏததேவ வேதாநாம் அபவ்ருஷே யத்வம் நித்யத்வம் ச யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்காரேண
தமேவ க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யா மாணத்வம் –

பொருள் கூறல் -சொற்களின் கட்டமைப்பு -பொருள் தொடர்பு -சொல்லப்படும் முறை -இவைகளால் சிறப்புடையது -ஒருவரால் அமைக்கப்படும் வாக்யம் உச்சரிப்பு முறை முன்னோர் வழியாக வழங்கி வருதல் -ஒருவரால் இயற்றப்படாமை -எப்பொழுதும் ஒரு புருஷனால் ஆக்கப்படாது இருத்தல் போன்ற சிறப்புடையவை வேதங்கள் எனப்படுகின்றன –

இவ்வாறு வேதங்கள் ஒரு மனிதரால் ஆக்கப் படாமையும் -என்றும் நிலையாக இருத்தலும் -முன்னோர் சொன்ன முறை தவறாமல் கேட்டு உச்சரித்தல் -மாறாத சொற் கட்டமைப்பு போன்ற நியமங்களுக்கு உட்பட்டே கற்கப்படுவன
தேச ஆனு பூர்வ விசேஷேண ஸம்ஸ்திதா அக்ஷர ராசயோ வேதா -ரிக் யஜுஸ் சாம அதர்வ பேத பிந்நா –
அநந்தாஸ் சாகா வர்தந்தே-தேச வித்யர்த்தவாத மந்த்ர ரூபா வேதா பர ப்ரஹ்ம பூத நாராயண ஸ்வரூபம்
தத் ஆராதனபிரகாரம் ஆராதிதாத் பல விசேஷம் ச போதயந்தி
பரம புருஷவத் தத் ஸ்வரூப தத் ஆராதந -தத் பல ஞாபக வேதாக்ய சப்த ஜாதம் நித்யமேவ –
வேதாநாம் அந்நதத்வாத் துரவகாஹத் வாச்ச பரம புருஷ நியுக்தா பரமர்ஷய கல்பே கல்பே நிகில ஜகத் உபகாரார்த்தம்
வேதார்த்தம் ஸ்ம்ருத்வா வித்யர்த்தவாத மந்த்ர மூலாநி தர்ம சாஸ்த்ராணி இதிஹாச புராணாநி ச சக்ரு
லௌகிகாச்ச சப்தா வேதராசே உத்ருத்யைவ தத் தத் அர்த்த விசேஷ நாம தயா
பூர்வ வத் ப்ரயுக்தா பாரம்பர்யேண ப்ரயுஜ்யந்தே —

நநுச வைதிகா ஏவ சர்வே வாசகா சப்தாஸ் சேத் -சந்தஸ்யேவம் பாஷாயாமேவம் -இதி லக்ஷண பேத கதம் உப்பத்யதே
உச்யதே தேஷாமேவ சப்தாநாம் தஸ்யாமேவ ஆநு பூர்வ்யாம் வர்த்தமாநாநாம் ததைவ பிரயோக
அந் யத்ர ப்ரயுச்யமாநா நாமந்யதேதி நகஸ் சித்தோஷ–

அவைகள் இச்சிறப்பினால் முதலில் இருந்தபடியே உள்ளன -ருக் யஜுஸ் ஸாம அதர்வண என்ற பிரிவுகளோடு எண்ணிறந்த கிளைகளை உடையவனாய் விளங்குகின்றன -அவைகள் விதி அர்த்தவாதம் மந்திரம் ஆகிய வடிவில் இருக்கின்றன -அவைகள் பரப் ப்ரஹ்மமான நாராயணனின் தெய்விக ஆன்ம நிலை -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -தெய்வீகத் திருமேனி -திவ்ய மங்கள விக்ரஹம் -அவற்றை ஆராதிக்கும் முறை அதனால் கிடைக்கும் பலன் இவற்றை அறிவுறுத்துகின்றன –

பரம புருஷன் -பெருமாள் -அவன் நிலை அவனுடைய ஆராதனம் – அதன் பலன் இவைகளை விளக்கும் வேதச் சொற்களின் கூட்டம் என்றும் அழியாதவை

வேதங்கள் அளவற்றவையாகவும் ஸுலபமாகப் பொருள் கொள்ள அரியவையாகவும் -பரம புருஷனால் செய்யப்பட்டதாகவும் -ரிஷிகளால் காணப்பட்டதாயும் -கல்பங்கள் தோறும் உலகு அனைத்திற்கும் நலன் கருதி நினைக்கப்பட்டு விதி அர்த்தவாதம் மந்திரம் மூலமாகவும் தர்ம ஸாஸ்ரங்களாயும் இதிஹாஸ புராணங்களாகவும் செய்யப்படுகின்றன

உலகியல் சொற்கள் வேதச் சொற்களில் இருந்தும் எடுக்கப்பட்டு அதன் பொருள் சிறப்பால் முன்பு போல பரம்பரையாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன –
அவ்வாறு எனில் சொற்கள் யாவும் வேதச் சொற்களா எனில் -இல்லை -தன் வரிசை ஒழுங்கு மாறாதது வேதம் உலகியல் மொழி அவ்வாறு அல்லாதது என்று வேறு படுத்தப் படுகிறது -ஆனால் சொற்களின் பொருள்களில் சிறிதே வேறுlபாடுள்ளது என்று இலக்கண நூலில் விளக்கப் பட்டுள்ளது -ஆகவே அச் சொற்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை –

——–

146–ஏவம் இதிஹாச புராண தர்ம சாஸ்த்ர உப ப்ரும்ஹித சாங்க வேத வேத்ய-பர ப்ரஹ்ம பூத நாராயண –
நிகில ஹேய ப்ரத்ய நீக -சகல இதர விலக்ஷண –
அபரிச்சின்ன நாநாந்தைக ஸ்வரூப -ஸ்வாபாவிக அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குணாகர-
ஸ்வ சங்கல்ப அநுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேத-சிதசித் வஸ்து ஜாத அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ –
அனந்த மஹா விபூதி நாநாவித அனந்த சேதந அசேதநாத்மக பிரபஞ்ச லீலோபகரண இதி ப்ரதிபாதிதம்

புருஷனால் செய்யப்பட்டதாகவும் -ரிஷிகளால் காணப்பட்டதாயும் -கல்பங்கள் தோறும் உலகு அனைத்திற்கும் நலன் கருதி நினைக்கப்பட்டு விதி அர்த்தவாதம் மந்திரம் மூலமாகவும் தர்ம ஸாஸ்ரங்களாயும் இதிஹாஸ புராணங்களாகவும் செய்யப்படுகின்றன

உலகியல் சொற்கள் வேதச் சொற்களில் இருந்தும் எடுக்கப்பட்டு அதன் பொருள் சிறப்பால் முன்பு போல பரம்பரையாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன –
அவ்வாறு எனில் சொற்கள் யாவும் வேதச் சொற்களா எனில் -இல்லை -தன் வரிசை ஒழுங்கு மாறாதது வேதம் உலகியல் மொழி அவ்வாறு அல்லாதது என்று வேறு படுத்தப் படுகிறது -ஆனால் சொற்களின் பொருள்களில் சிறிதே வேறுlபாடுள்ளது என்று இலக்கண நூலில் விளக்கப் பட்டுள்ளது -ஆகவே அச் சொற்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை –

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
ஐததாத்ம்யம் இதம் சர்வம்
தத்வமஸி ஸ்வேத கேதோ
ஏநமேக வதந்யக்நிம் மாருதோந்யா பிரஜா பதிம்
இந்திரமேகே பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம்
ஜ்யோதிம்ஷி ஸூக்லாநி ச யாநி லோகே த்ரயோ லோகா லோக பாலா த்ரயீ ச
த்ரயோக்நயஸ் சாஹு தயஸ் ச பஞ்ச சர்வே தேவா தேவகீ புத்ர ஏவ
த்வம் யஜ்ஞ த்வம் வஷட்கார த்வம் வ ஓங்கார -பரந்தப
ரிததாமா வஸூ -பூர்வ வஸூநாம் த்வம் பிரஜாபதி –
ஜகாத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வஸூதா தலம்
அக்னி கோப பிரசாதஸ் தே ஸோம
ஸ்ரீ வத்ச லக்ஷண
ஜ்யோதீம் ஷி விஷ்ணு புவநா நி விஷ்ணு வநாநி விஷ்ணு
கிரயோதிசாஸ் ச நத்ய சமுத்ராஸ் ச ச ஏவ சர்வம் யதஸ்தியந் நாஸ்தி ச விப்ரவர்ய –இத்யாதி
சாமாநாதி கரண்ய பிரயோகேஷு சர்வை சப்தை -சர்வ சரீர தயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபிதீயதே இதி ச யுக்தம் –

இவை யாவும் ப்ரஹ்மத்தால் செய்யப்பட்டவை- இவையாவும் அவனை ஆத்மாவாக உடையது
நீயும் -ஸ்வேத கேதுவே -அதுவே -சில இடங்களில் வேதத்தில் இவனை அக்னி என்றும் காற்று என்றும் -உயிர்களுக்குத் தலைவன் என்றும்
இந்திரன் என்றும்
உயிர் என்றும்
நிலையான ப்ரஹ்மம் என்றும் கூறுகின்றன –
உபநிஷத்தில் -இவ்வுலகில் ஒளிரும் மூன்று ஒளிகளும் மூன்று லோக பாலகர்களும் மூன்று வேதங்களும் முத்தீயும் ஐந்து ஆஹுதிகளும் தேவர்கள் அனைவரும் தேவகியின் மகனே
கூடாரை வெல்லும் நீரே யஜ்ஜம்-வஷட்காரம் ஓங்காரம் யாவும் ஆகிறீர்-உலகின் தலைவர் என்பவர்களான வஸூ க்களில் ருததாமா என்பவர் ஆகிறீர்
உலகு அனைத்துக்கும் உமக்கு உடல் -இங்கு நிலைத்து இருப்பவை யாவும் உமக்கு அடிமை -உமது சினம் தீ ஆகிறது -மகிழ்ச்சி ஸ்ரீ வத்ஸம் போன்ற மறு மறுவுடைய சந்த்ர ஆகிறது -ஒளிகள் யாவும் உலகுகள் யாவும் வனங்கள் யாவும் மலைகள் யாவும் விஷ்ணுவே நதிகளும் கடலும்-இருப்பவை இல்லாதவை யாவும்விஷ்ணுவே -என அந்தணரின் சிறந்தவரே அறிவீராக –
இவ்வாறு ஸாமாநாதி கரணத்தால் பொருட்கள் யாவையும் சொற்கள் யாவையும் தனக்கு அடிமைப்பட்ட- பிரிவற்ற உடலாக ப்ரஹ்மம் கொண்டுள்ளது என்பதையே விளக்குகிறது -எனக் கொள்வதே சரியான பொருட்கோளாகும் –

ஸத்ய ஸங்கல்பம் பரம் ப்ரஹ்ம ஸ்வயமேவ
பஹு பிரகாரம் ஸ்யாம் –இதி சங்கல்ப்ய அசித் சமஷ்டி ரூப மஹாபூத ஸூஷ்மம் வஸ்து போக்த்ரு வர்க்க ஸமூஹம்
ச ஸ்வஸ்மிந் ப்ரலீநம் ஸ்வயமேவ விபஜ்ய-தஸ்மாத் பூத ஸூஷ்மாத் வஸ்துந மஹா பூதாநி ஸ்ருஷ்ட்வா தேஷு
போக்த்ரு வர்க்கமாத்ம தயா பிரவேஸ்ய-தை-சித் அதிஷ்டிதை–மஹா பூதை-அந்யோந்ய ஸம்ஸ்ருஷ்டை –
க்ருத்ஸ்னம் ஜகத் விதாய-ஸ்வயமபி ஸர்வஸ்ய ஆத்ம தயா பிரவிஸ்ய பரமாத்மத்வேந அவஸ்திதம்
சர்வ சரீரம் பஹு பிரகாரம் அதிஷ்டதே –
யதிதம் மஹா பூத ஸூஷ்மம் வஸ்து -ததேவ ப்ரக்ருதி சப்தேந அபிதீயதே -போக்த்ரு வர்க்க ஸமூஹ ஏவ புருஷ சப்தேந உச்யதே
தவ் ச பிரகிருதி -புருஷவ் பரமாத்ம சரீர தயா பரமாத்ம பிரகார பூதவ் தத் பிரகார -பரமாத்மவை ப்ரக்ருதி புருஷ சப்தாபிதேய
சோ காம யத பஹுஸ் யாம் பிரஜா யேயேதி –தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிசத்–
தத் அநு பிரவிஸ்ய –சச்ச த்யச்சா பவத்
நிருக்தஞ்சா நிருக்தஞ்ச நிலயனஞ்ச அநிலயனஞ்ச விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச சத்யஞ்சா ந்ருதம் ச சத்யம் அபவது –
இதி பூர்வ யுக்தம் சர்வம் அநயைவ ஸ்ருத்யா வ்யக்தம் –

நினைத்தவைகளைச் சாதிக்க வல்ல பர ப்ரஹ்மம் தானே பலவாக ஆகக் கடவேன் என எண்ணி அசேதனப் பொருள்களின் மூலப்பிரக்ருதித் திரளும் சேதனக் கூட்டங்களையம் தன்னிடம் லயித்து இருந்த கட் புலனாகாத நிலையின் நின்றும் பிரித்து -பஞ்ச மஹா பூதங்களையும் ஐந்தொழில் முறையால் கலந்து அதனால் உலகில் காணப்படும் அசேதனப் பொருட்களைப் படைத்து-ஆத்மாவை அவைகளின் வினைக்கு ஏற்ப அவற்றுள் புக விட்டு தானும் அவையவையிலும் உள்ளுயிராகப் புகுந்து நிலைத்து இருப்பதால் இவ்வுலகு அவனுக்கு உடலாகிறது –

இங்கு மஹா பூதம் என்னும் சொல் மூலப் பிரக்ருதி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது -புருஷன் அல்லது ஆத்மா -போக்த்ரு வர்க்க ஸமூஹம் -நுகர்வோரின் திரள் என்ற பொருளில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது –
அதனால் ப்ரக்ருதி புருஷர்கள் பரமாத்மாவின் உடலாய் -அவனிடமிருந்து பிரிந்த நிலை அற்றவர்களாய் உள்ளனர்
என்பதால் பரமாத்மாவும் அச் சொற்களால் காட்டப்படுகிறான் -அவன் படைக்க விரும்பினான் -பல உயிர்களாக ஆனான் – அவன் படைத்தான் அவன் உயிர்களை நுழைப்பித்தான் -தானும் நுழைந்தான் உயிர் உள்ளதாகவும் அல்லாதாகவும் ஆனான் -சுட்டிக் காட்டப் படுவதும் அல்லாததுமாக ஆனான் -தாங்கப்படுவதும் தாங்குவோனாகவும் ஆனான் -அறிவுள்ளதும் அல்லாததுமாக ஆனான் -மாறுபாடு அற்றதாகவும் aமாறுபாடு உடையதாகவும் ஆனான் -தான் மாறுபாடு அடையாது இருந்தான் -என்ற
மறை வாக்கியங்கள் முன்பு கூறிய அனைத்தையும் அறுதியிடுகின்றன

ஸோகாமயத -ஸ -அகாம -அதி -அவன் படைக்க விரும்பினான்
ஸச்ச த்யச்ச அபவது -ஜீவனுள்ளதும் அல்லதுமாக ஆனான்
ஸத்யம் -விகாரமடையாத ஆத்மா
அன்ருதம் -ஒரே நிலையற்ற உடல்

——–

147–ப்ரஹ்ம ப்ராப்த் யுபாயஸ் ச
சாஸ்த்ராதி கத -தத்வ ஞான பூர்வக -ஸ்வ கர்ம அநு க்ரஹீத -பக்தி நிஷ்டா ஸாத்ய
அநவதிக அதிசய ப்ரிய விசததம ப்ரத்யக்ஷதா பந்ந -அநு த்யான ரூப -பர பக்தி ரேவ இத் யுக்தம் –
பக்தி சப்தஸ் ச ப்ரீதி விசேஷே வர்த்ததே -ப்ரீதிஸ் ச ஞான விசேஷ ஏவ —

நநு ச ஸூகம் ப்ரீதி–இத்ய நர்த்தாந்தரம்–ஸூகம் ச ஞான விசேஷ ஸாத்யம் பதார்த்தாந்தரம் இதி லௌகிகா–
நைவம் யேந ஞான விசேஷேண தத் ஸாத்யம் இத் யுச்யதே -ச ஏவ ஞான விசேஷ ஸூகம் –

ப்ரஹ்மத்தை அடையும் நெறி –ஸாஸ்த்ரங்களைக் கற்று அதனடியாகப் பிறந்த ஞானத்தால் தன் கடைமைகளைச் சரிவரச் செய்து -பக்தி மேலீட்டால் கிடைக்கும் எல்லையற்ற அன்பினால் மிகத் தெளிந்து நேரேயே காண்பது போன்று மனத்தின் இடையறா நினைவு பரபக்தி எனப்படும்
பக்தி எனும் சொல் சிறந்த அன்பு -காதல் -என்பதைக் குறிக்கும்-அன்பு என்பது மனத்தின் அறிவின் சிறப்பே

மாறாக இன்பம் விருப்பம் என்னும் சொற்களை ஒன்றாகக் கொள்ளலாம் -இங்கு இன்பம் என்பது மனத்தின் நிலையால் மட்டும் அறியப்படுவது என்பது உலகியலில் காணலாம் -அப்படிப்பட்ட அறிவினால் ஏற்படுiம் இன்ப நிலையே ஸுகம் –

ஏதத் யுக்தம் பவதி
விஷய ஞானாநி ஸூக துக்க மத்யஸ்த சாதாரணாநி தாநி ச விஷயாதீநா விசேஷாணி ததா பவந்தி –
யேந விஷய விசேஷேண விசேஷிதம் ஞானம் ஸூகஸ்யா –ஜனகம் இத்யபிமதம் –
தத் விஷய ஞான மேவ ஸூகம் -தத் இதிரேகி பதார்த்தந்தரம் நோப லப்யதே –
தேநைவ ஸூகித்வ வ்யவஹாரோப பத்தேஸ் ச –

ஏவம் வித ஸூக ரூப ஞானஸ்யா விசேஷ கத்வம் -ப்ரஹ்ம -வ்யதிரிக்தஸ்ய வஸ்து ந சாதிசயம் அஸ்திரம் –
சப்ரஹ்மணஸ் து அநவதிக அதிசயம் ஸ்திரம் ச இதி ஆனந்தே ப்ரஹ்ம -இத் யுச்யதே
விஷயா யத் தத்வத் ஞானஸ்ய ஸூக ரூப தயா ப்ரஹ்ம ஏவ ஸூகம்-

ததிதமாஹ
ரஸோவை ச -ரசம் ஹ்யே வாயம் லப்த்வாநந்தீ பவதி -இதி ப்ரஹ்ம ஏவ ஸூகம் இதி ப்ரஹ்ம லப்த்வா ஸூகீ பவதீத் யர்த்த –
பரம புருஷ ஸ்வேநைவ ஸ்வம் அநவதிக அதிசய ஸூகஸ் சந் -பரஸ்யாபி ஸூகம் பவதி ஸூக ரூபாத்வா விசேஷாத்
ப்ரஹ்ம யஸ்ய ஞான விஷயோ பவதி ச ஸூகீ பவதி இத்யர்த்த —

ததேவம் பரஸ்ய ப்ரஹ்மண
அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரஸ்ய நிரவத்யஸ்ய அனந்த மஹா விபூதே
அநவதிக அதிசய ஸுவ்சீல்ய வாத்சல்ய ஸுவ்ந்தர்ய ஜலதே சர்வ சேஷித்வாத் ஆத்மந –
சேஷத்வாத் பிரதிசம்பந்தி தயா அநு சந்தீயமானம் அநவதிக அதிசய ப்ரீதி விஷயம்
சத் பரம் ப்ரஹ்ம ஏவ ஏந மாத்மாநம் ப்ராபயதி–இதி –

இதை விளக்குவோம் -பொருள்களால் கிடைக்கும் அறிவு மகிழ்ச்சி துயரம்
இரண்டுக்கும் இடைப்பட்டது
இரண்டும் அற்றது -என்று பிரிக்கப் படுகிறது –
அது அப்பொருட்களின் நிலையைப் பொறுத்து மனத்தில் ஏற்படும் உணர்வு –
எந்தப் பொருளால் மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அப்பொருள் மேல் விருப்பமும் பிறக்கிறது -அந்த விருப்பமே இன்பமாகிறது
இப்படி யல்லாத பொருட்கள் மேல் விருப்பம் ஏற்படுவதில்லை -மேற் கூறியது போன்று மனத்திற்கு கிடைக்கும் இன்பமே ஒருவரை மகிழ்ச்சி யடைந்தவர் எனக் கூறக் காரணமாகிறது –
இவ்வாறு மகிழ்ச்சி தரும் பொருட்கள் என்று வேறுபடுத்திப் பார்க்கும் அறிவுத் திறத்தால் ப்ரஹ்மத்தைத் தவிர்த்த மற்றப் பொருட்கள் அளவுபட்டதாயும் -நிலையற்றதாயும் இருத்தலால் ப்ரஹ்மம் ஒன்றே எல்லையற்ற இன்பமுடையதாயும் நிலையாயும் இருப்பதால் அதைப் பற்றிய மறை மொழிகளும் -ஆனந்தே ப்ரஹ்மம் என்று முடிக்கின்றன –
பொருளைப் பொறுத்து மகிழ்ச்சி அமைவதால் ப்ரஹ்மம் ஒன்றே மகிழ்வு தருவது என்பது முடிவு –
அது எவ்வாறு எனில்
அவன் -ப்ரஹ்மம் -இனிமையானவர் -இவன் -ஜீவன் -அந்த இனிமையை அறிந்து ஆனந்தம் அடைகிறான் -இதனால் ப்ரஹ்மமே இனிமை என்பதும் -அதை அடைதலே ஆனந்தம் என்றும் பெறப்படுகிறது
எம்பெருமான் தன்னடையே எல்லையற்ற ஆனந்தமுடையவன் -ஆதலால் பிறர்க்கும் சுவையன் -அவன் அவ்வாறு இருப்பதால் அவனைத் தன் மனத்தால் அறிபவன் நீங்காத ஆனந்தம் அடைகிறான் –
அந்த ப்ரஹ்மம் -எல்லையற்று நற் குணங்களின் கடலாக இருப்பதாலும் குறைகள் ஏதும் அற்றவனாய் இருப்பதாலும் -அளவற்ற செல்வம் உடையவனாய் இருத்தலாலும் -இவ்வுலகுகள் அனைத்தையும் எல்லையற்ற நீர்மை அன்பு அழகு இவற்றின் கடலாக இருப்பதாலும் எல்லாவற்றையும் அடிமை கொள்வோனாகவும் உயிர்கள் யாவையும் அவனுக்கு தன்னடையே அடிமைகளாய் இருத்தலாலும் உள்ள பரஸ்பரத் தொடர்பினால் அவனே எப்பொழுதும் நினைக்கத் தக்கவன் -அவனே எல்லையற்ற மகிழ்ச்சிக்கும் பொருளானவன் -அந்த பர ப்ரஹ்மத்தையே இந்த ஆத்மா அடைய வேண்டும் -அவனே இவனால் ஜீவாத்மாவால் அடையத் தக்கவன்

———–

148—நநுஸ–அத்யந்த சேஷதைவ ஆத்மந -அநவதிக அதிசயம் ஸூகம் இத் யுக்தம் பவதி -ததே தத் சர்வ லோக விருத்தம் –
ததாஹி-
ஸர்வேஷாமேவ சேதநாநாம் ஸ்வா தந்தர்யமேவ இஷ்ட தமம் த்ருச்யதே -பாரதந்தர்யம் துக்கதாம் ஸ்ம்ருதிஸ் ச –
சர்வம் பரவசம் துக்கம் சர்வாத்மா வசம் ஸூகம் -ததாச- சேவா ஸ்வ வ்ருத்தி -ராக்யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜ யேத் -இதி –

திரு அணுக்கத் தொண்டனாய் இருத்தலே ஆத்மாவிற்கு எல்லையற்ற மகிழ்ச்சி என்பது உலகியலுக்கு மாறுபாடானது -அவ்வாறே உலகிலுள்ள உயிர்கள் யாவற்றுற்கும் அவைகள் ஸூதந்திரமாக இருத்தலே மிக விருப்பமாகக் காணப்படுகிறது பிறருக்கு அடிமைப்பட்டு இருத்தல் மிகத் துயரமாகவே இருக்கிறது -மறைகளிலும் -யாவருக்கும் பிறருக்கு வசப்பட்டு இருத்தல் துயரம் -தனக்கு மட்டுமே வசப்பட்டு இருத்தல் இன்பம் என்றும் பிறருக்கு அடிமை நாய்த் தொழில் ஒத்தது -அதை விலக்க வேண்டும் -என்றும் கூறப்பட்டு இருக்கிறது
ததிதம்-அநவதிக -தேஹாதிரிக்தாத்ம ஸ்வரூபாநாம் சரீராத்ம அபிமான விஜ்ரும்பிதம் –
ததாஹி
சரீரம் ஹி மனுஷ்யத்வாதி ஜாதி குணாஸ்ரய பிண்ட பூதம் ஸ்வ தந்திரம் பிரதீயதே -தஸ்மிந்நேவ –
அஹம் – இதி ஸம்ஸாரிணாம் ப்ரதீதி -ஆத்ம அபிமாநோ யாத்ருச-தத் அநு குண ஏனைவ புருஷார்த்த ப்ரதீதி –
ஸிம்ஹ வ்யாக்ர வராஹ மனுஷ்ய யஷ ரக்ஷ பிசாசா தேவ தாநவ ஸ்தீரி பும்ஸ வ்யவஸ்தித ஆத்ம அபிமாநாநாம்
ஸூகாநி வ்யவஸ்திதாநி தாநிச பரஸ்பர விருத்தாநி தஸ்மாத் ஆத்ம அபிமாந அநு குண
புருஷார்த்த வியவஸ்த்தயா சர்வம் ஸமாஹிதம் —
ஆத்ம ஸ்வரூபம் து தேவாதி தேஹ விலக்ஷணம் ஞான ஏக ஆகாரம் -தச்ச பர சேஷதைக ஸ்வரூபம் –
யதா வஸ்திதாத்ம அபிமாநே தத் அநு குண ஏவ புருஷார்த்த ப்ரதீதி -ஆத்மா ஞான மய அமல-இதி ஸ்ம்ருதே–
ஞான ஏக ஆகாரதா பிரதிபந்நா –
பதிம் விஸ்வஸ்ய-இத்யாதி ஸ்ருதி கணை பரமாத்ம சேஷதைக ஆகாரதயா ச ப்ரதிபாதிதா–
அத ஸிம்ஹ வ்யாக்ராதி சரீர ஆத்ம அபிமானவத் ஸ்வா தந்தர்ய அபிமாநோபி
கர்ம க்ருத விபரீத ஆத்ம ஞான ரூபோ வேதி தவ்ய —

உடலினின்றும் வேறுபட்ட உயிரை உணராதவர்கள் -உடலே உயிர் என்று மயங்குவோருக்கே இப்படிப்பட்ட எண்ணம் தோன்றும்
இக்கருத்தப் படி சுதந்திரம் என்பது மனிதர் முதலிய இனங்களுக்கு உரிய தன்மை போன்ற பண்புகளையும் -சதைப்பிண்டம் ஆகிற உடலையும் -தான் என்று நினைத்தால் -இவ்விதம் நினைப்பவர்கள் அதற்கு ஏற்ப இலக்குகளை அடைய முயல்கின்றனர்
சிங்கம் புலி பன்றி மனிதர் யக்ஷர் ராக்ஷஸர் பிசாசர் போன்ற வேறுபாடுகளையும் -அதில் ஆண் பெண் போன்ற வேறுபாடுகளையும் -உடையவர்களாய் -அவ்வுடலையே ஆத்மா என்று எண்ணி இருப்பவர்களுடைய இன்பம் அளவுபட்டது
இதுவும் ஒன்றுக்கு ஓன்று மாறுபட்டதாகவும் இருக்கிறது -அது அந்தவந்த ஆத்மாவின் எண்ணத்திற்கு ஏற்ப அமைகிறது -ஆகவே ஸுகம் துக்கம் என்பவை தானாக ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உணர்வே –
ஆத்மாவின் உண்மையான நிலை தேவர்கள் முதலிய உடல்களின் நின்றும் மாறுபட்டது -ஞானமே வடிவெடுத்தது -அது பரன் ஒருவனுக்கே அடிமைப்பட்டது -இம்மெய்யறிவு பெற்றோர் அதற்கு ஏற்ப இலக்கை அடைகிறார்கள் -ஆத்மா குற்ற மற்ற ஞான வடிவானவன் -என்று மறை ஓதுகிறது –
ஆத்gnaanaஞான வடிவினனாகக் குறிப்பிடும் -உலகின் தனிப்பெரும் தலைவன் போன்ற வேத வாக்கியங்கள் அது பரமாத்மாவின் தொண்டனாக ஆத்மா இருத்தலையும் அறுதியிடுகின்றன
சிங்கம் புலி முதலிய உடலை ஆத்மா எனக் கொள்ளுவோர் அந்தந்த ஆத்மாவின் வினையடியாக அதற்கு ஒவ்வாத நிலைகளை அடைகிறார்கள் –

அத -கர்ம க்ருத மேவ பரம புருஷ வ்யதிரிக்த விஷயானாம் ஸூகத்வம் -அத ஏவ தேஷாம் அல்பத்வம்-அஸ்திரத்வம் –
ச பரம புருஷஸ் யைவ ஸ்வத ஏவ ஸூகத்வம் -அத ததேவ ஸ்திரம் -அநவதிக அதிசயம் ச –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம —
ஆனந்தோ ப்ரஹ்ம –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –இதி ஸ்ருதே–
ப்ரஹ்ம வியதிரிக்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வஸ்துந ஸ்வரூபேண ஸூகத்வாபாவ –
கர்ம க்ருதத்வேந ச அஸ்திரத்வம் பாகவதர் பாராசரேண யுக்தம் –

நரக ஸ்வர்க்க சம்ஜே வை பாப் புண்யே த்விஜோத்தம –
வஸ்த்வேகமேவ துக்காய ஸூகாயேர்ஷ் யாகமாய ச கோபாய ச யதஸ் தஸ்மாத் வஸ்து வஸ்வாத்பகம் க்ருதா
ஸூக துக்காத் யேகாந்த ரூபேண வஸ்துனோ வஸ்துத்வம் குத ?
ததே காந்ததா புண்ய பாபா க்ருதேத்யர்த்த–
ஏவம் அநேக புருஷ அபேக்ஷயா கஸ்யஸித் துக்கம் பவதி இத் யவஸ்தாம் ப்ரதிபாத்ய ஏகஸ்மின்நபி புருஷே நவ்ய வஸ்தித மித்யாஹ
ததேவ ப்ரீதயே பூத்வா புந துக்காய ஜாயதே
ததேவ கோபாய தத் ப்ரஸாதாய ச ஜாயதே
தஸ்மாத் துக்காத் மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் -ஸூகாத் மகம் –
இதி ஸூக துக்காத் மகத்வம் ஸர்வஸ்ய வஸ்து ந -கர்ம க்ருதம் ந வஸ்து ஸ்வரூப க்ருதம் -அத கர்ம வசாநே ததவைதி இத் யர்த்த –

பரம புருஷனைத் தவிர்த்து வினையடியாகக் கிடைக்கும் மற்ற இன்பங்கள் அற்பமானதாகவும் அளவுபட்டதாகவும் இருக்கும்பரம புருஷனோ தன்னடையே இன்பமாவான்-அதுவே அழிவற்றது -எல்லை யற்றதும் ஆகும் -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -ப்ரஹ்மம் மாறுபாடாற்ற அழிவற்ற ஞானமே ப்ரஹ்மம் -என்றும் வேதம் மொழிகிறதுப்ரஹ்மம் நீங்கிய மற்ற பொருட்கள் யாவும் இயற்கையான இன்பம் அற்றதாயும் -வினைக்கு ஏற்ப நிலை அற்றதாயும் இருக்கும் என்பதைப் பகவான் பராசரரும் சொல்கிறார் -நரகமும் ஸ்வர்க்கமும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப விளைகின்றன -இரு பிறப்பாளரே பொருள் ஒன்றாகவே இருப்பினும் அதுவே சில சமயம் இன்பமாகவும் பிறிதொரு சமயம் துன்பமாகவும் ஆகிறது -அதுவே சிலருக்கு கோபத்திற்கும் காரணமாகிறது -இன்பம் துன்பம் இரண்டும் கலக்காத பொருட்களுக்கு இருப்பு என்பது ஏது-அவை யாவும் தனது புண்ய பாபங்களுக்கு ஏற்பவே அமைகிறதுஅதே போல் சிலருக்கு இன்பமாக இருக்கும் பொருள் சிலருக்குத் துன்பத்திற்கு காரணமாகிறது -மேலும் ஒரே பொருள் ஒருவருக்கே எப்போதும் சுகத்தைத் தருவதில்லை -இதப் பராசரர் கூறுகிறார்எது விருப்பமானது தோன்றுகிறதோ அதே பொருள் பிறகு துயரத்திற்கு காரணமாகிறது -அதுவே கோபத்திற்கும் பிறிதொரு சமயத்தில் மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது -அதனால் துயரமே தரும் பொருள் என்றோ இன்பமே தரும் பொருள் என்றோ எதுவும் இல்லை -மகிழ்ச்சி அளிப்பதோ துயரம் அளிப்பதோ பொருட்களின் குணம் அன்று -அதை அடைவோரின் வினைகட்க்கு ஏற்ப அமைகிறது -அவரவர் வினைகட்க்கு ஏற்ப பொருள்களில் இம் மாறுபாடு தோன்றுகிறது –
யத் து –சர்வம் பரவச துக்கம்– இத் யுக்தம்-தத் பரம புருஷ வ்யதிரிக்தாநாம்-பரஸ்பர சேஷ சேஷீ பாவ அபாவாத்
தவ் வ்யதிரிக்தம் பிரதி சேஷதா–துக்கமேவ இத் யுக்தம்
சேவா ஸ்வ வ்ருத்தி -ராக்யாதா -இத் யத்ராபி அசேவ்ய சேவா -ஸ்வ விருத்தி ரேவ இத் யுக்தம்
சஹ்யாஸ் ரமை சதோபாஸ்ய சமஸ்தை ஏக ஏவது -இதி சேர்வை ஆத்ம யாதாம்ய வித்பி ஸேவ்ய புருஷோத்தம ஏக ஏவ —

அவ்வாறே -பிறருக்கு அடிமையாகிறவருக்குத் துயரம் என்பது பரம புருஷனைத் தவிர்த்த மற்றவைகளுக்குள்ள ஏவுபவன் -ஏவப்படுபவன் தொடர்பு
அவனைத் தவிர்த்த மற்றோருக்கு அடிமை துக்கமே எனப்படும் -தொண்டு செய்தல் நாய்ப் பிழைப்புக்ச் சமம் -என்பது -தொண்டு கொள்ளத் தகாதவர்களுக்குத் தொண்டு செய்வது என்பது பொருந்தும்
எல்லா ஆஸ்ரமங்களில் உள்ளவர்களாலும் தொண்டு செய்யத் தக்கவன் அவன் ஒருவனே -என்று கூறியவாறு -ஆத்ம மெய்ப் பொருளை அறிந்த எல்லோராலும் வணங்கத் தக்கவன் அவன் ஒருவனே-

யதோக்தம் பகவதா –ஸ்ரீ கீதையிலும் -14-26-
மாம் ச யோ வ்யாபிஸாரேண பக்தி யோகநே சேவதே
ச குணாந் சமதீத்யைதாந் ப்ரஹ்ம பூயாய கல்பதே–இதி
இயமேவ பக்தி ரூபா சேவா
ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி –இத்யாதி ஷு வேதநா சப்தேநாபி தீயதே இத் யுக்தம்
யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய-இதி விசேஷணாத்
யமேவைஷா வ்ருணுதே-இதி பகவதா வரணீயத்வம் பிரதீயதே வரணீ யஸ்ஸ ப்ரியதம யஸ்ய பகவதி
அநவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ச ஏவ பகவத ப்ரிய தம-தத் யுக்தம் பநவதைவ
ப்ரியோஹி ஞாநிநோத் யர்த்தம் அஹம் ச ச மம ப்ரிய -7–17-இதி
தஸ்மாத் பர பக்தி ரூபா பந்நமேவ வேதனம் தத்வத்தோ பகவத் பிராப்தி சாதனம்

அவ்வாறே-பகவானும் கீதையில் -14-26-பிறர் பிற பலன்கள் இவற்றில் சிறிதும் ஆசையின்றி என்னொருவனையே பக்தி யோகத்தினால் எவன் ஆராதிக்கிறானோ அவன் இம்முக் குணங்களையும் கடந்து ப்ரஹ்மத்துக்கு இணையாக இருக்கும் தன்மையை அடைவிக்கிறேன் -என்கிறார்
இதுவே பக்தியுடன் கூடிய தொண்டு -ப்ரஹ்மத்தை அறிபவன் பர ப்ரஹ்மத்தை அடைகிறான் -ப்ரஹ்மம் இவ்வாறு உள்ளது என்று அறிபவன் சாகா நிலையடைகிறான் –
ப்ரஹ்மத்தை அறிபவன் ப்ரஹ்மத்துக்கு ஒப்பாகிறான் – என்ற வாக்கியங்களில் -அறிதல் -ஞானம் -என்ற சொல் பக்தியை விளக்குகிறது –
எவனை அthereதேர்ந்து எடுக்கிறானோ அவனாலேயே அடையத் தக்கவன்-என்பதால் சிறப்பாக அவனால் வரிக்கப்படுதலைக் கூறி அதுவே சிறந்த இன்பம் -எவனை எல்லையற்ற இன்பமுடைய பகவான் விரும்புகிறானோ அவன் அடைவதே இன்பத்தின் எல்லை
அதை ஒட்டியே-பகவானும் -கீதையில் -7-17- ஞானிக்கு நான் எல்லையற்ற விருப்பமானவன் -அவ்வாறே அவனும் எனக்கு மிகவும் விருப்பமானவன் -என்பதால் பக்தியே வடுவெடுத்த இடையறாத மனத்தின் நினைவே உண்மையில் இறை மகிழ்ச்சிக்கு உரிய நெறியாகும் –

யதோக்தம்
பகவதா த்வை பாயநேந மோக்ஷ தர்மே சர்வ உப நிஷத் வியாக்யான ரூபம்-
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பச்யதி கஸ்ஸனநநம்
பக்த்யா ச த்ருத்யா ச ஸமாஹி தாத்மா ஞான ஸ்வரூபம் பரி பஸ்யதீஹ–இதி
த்ருத்யா ஸமாஹி தாத்மா பக்த்யா புருஷோத்தமம் பச்யதி -சாஷாத் கருதி ப்ராப்நோதி
இத் யர்த்த பக்த்யாத் வநந்யயா சக்ய-இத்யநேந ஐகார்த்யாது
பக்திஸ் ச ஞான விசேஷ ஏவ இதி சர்வம் உப பந்நம்
சார அசார விவேகஞ்ஞா கரீயாம்சோ விமத்சரா
பரமாணதந்த்ரா சந்தீதி க்ருதோ வேதார்த்த ஸங்க்ரஹம்

அதனாலேயே பகவான் வியாஸரும்
மோக்ஷ தர்மத்தில் -எல்லா உபநிஷதங்கள் பொழிப்புரையாக -அவனுடைய உருவம் கட் புலனாகாதது -யாரும் அவனைக் கண்ணால் கண்டதில்லை -அடக்கமும் மனப் பூர்வமான ஈடுபாடும் நிலையான மனமும் உடையவரால் மட்டுமே அந்த ஞான உரு அறியப்படும் -என்கிறார்
அடக்கம் -நிலையான மனது -பக்தி இவற்றால் மட்டுமே புருஷோத்தமன் பார்க்கப்படுகிறார் நேராகக் காணப்படுகிறான் -அடையப்படுகிறான் என்பதே பொருள் பக்தியால் அன்றி மற்றவைகளால் அடையப்படுபவன் அல்லன் -என்பதும் இத்துடன் ஒத்த பொருள் கொண்டது
பக்தி என்பது ப்ரஹ்மத்தைப் பற்றிய சிறப்பான அறிவு -ஞானம் -என்பதே எல்லா விதத்திலும் பொருந்தும்

இதி பகவத் ஸ்ரீ ராமானுஜ விரசித வேதார்த்த ஸங்க்ரஹ ஸமாப்தம்–

அகிலப் பொருட்கள் யாவையும் அடிமை கொண்டு ஆள்பவனாம்
அமலன் நற் குணக் கடலாவான் அனந்தன் மேலே துயில்பவனாம்
அலர் மேல் மங்கை நாயகனாம் அடியாருக்கு என்றும் எளியவனாம்
அகிலம் எங்கும் நீக்கமற வசிக்கும் விஷ்ணு துணை நமக்கே –

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
 I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II
–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி -அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

——————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -இரண்டாம் பகுதி –72-112-ஸ்வ மத விஸ்தாரம்-

August 13, 2024

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
 I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

(நிர்விசேஷ அத்வைதம் அவர்கள் நம்மது ச விசேஷ அத்வைதம் -)

72–ய ப்ருதிவ்யாம் திஷ்டந் ப்ருதிவ்யாந்த ரோயம் பிருதிவி ந வேத யஸ்ய ப்ருதிவீ சரீரம்
ய ப்ருத்வீன் அந்தரோ யமயதி ஏஷத ஆத்மாந்தர் யாம்ருத –
ஸூக்ல யஜுர் ப்ரு -கண்வ

ய ஆத்ம திஷ்டந் ஆத்மநோ யந்த ரோயம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மந அந்தரோ யமயதி
ச த ஆத்மாந்தர் யாம்ருத
–ஸூக்ல மாந்யந்திந

(தத்வ அதிகரணம் அடுத்து பர தேவதா அதிகரணம் -பரமை காந்தி ஆவதற்கு தத்வத்துக்கும் மேல் ஸ்வரூபம் ரூபம் இத்யாதிகளை அறிய வேண்டுமே)

ய -ப்ருத்வீ மந்தரே சஞ்சரன் யஸ்யப் ப்ருத்வீ சரீரம் யாம் ப்ருத்வீ ந வேத இத்யாதி யோஷர மாந்தரே சஞ்சரன்
யஸ்யாஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத யோ ம்ருத் யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் யம் ம்ருத்யுர் ந வேத
ஏஷ சர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபாலோபநிஷத்

த்வா ஸூபர்ணா சாயுஜா சகாயா சமாநம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதி தயோர் அந்ய பிப்பலம்
ஸ்வா த்வத்ய நஸ்ரந் அநந்யோ அபிசாக ஸீதி
–முண்டக-3-1-1-

அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசது தத் அநு ப்ரவிஸ்ய-
ஸச் ஸத்யச் சா பவது இத்யாதி ஸத்யந்சாந்ரு தந் சாசத்யம பவது
–தைத்ரியம்

அநேந ஜீவேநாத்மநா –இத்யாதி -சாந்தோக்யம்

ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேந அம்ருதத்வமேதி போக்தா போக்யம் ப்ரேரிதாரம்
ச மத்வா சர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம ஏதத்
–மந்திரிகோ

நித்யோ நித்யாநாம் சேதநஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமாந் –கடவல்லி

பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச(பதி சேஷி -நியாந்தா குணங்கள் தேவையான பொழுது காட்டி )

ஞாஜெவ் த்வாவ் அஜவ் வீசனீசவ் இத்யாதி ஸ்ருதி சதை –மந்த்ரிகா

தத் உப ப்ரஹ்மண

ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யாம் தேவ ஸூதா தலம்–ஸ்ரீ ராமாயணம் -அதிதி தேவி ஸ்துதி

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந சத்வாஜா தேநவை த்விஜ தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூதவ்
தத் சர்வம் வை ஹரேஸ்தநு
–ஸ்ரீ விஷ்ணு புராணம்

அஹமாத்மா குடா கேச சர்வ பூதாசய ஸ்திதி -ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ஸ்ம்ருதிர்
ஞாநம் அபோஹநம் ச
–ஸ்ரீ கீதா

இத்யாதி வேத வித் அக்ரேஸர வால்மீகி–பராசர -த்வைபாயன -வாசோபிஸ் ச
பரஸ்ய ப்ரஹ்மண ஸர்வஸ்ய ஆத்மத்வா வகமாத்-சித் அசித் ஆத்ம கசிய வஸ்து ந தச் சரீரத்வாவகமாச் ச சரீரஸ்ய ச சரீரிணம்
பிரதி பிரகார தயைவ பதார்த்ததவாத் சரீர சரீரிணஸ் ச தர்ம பேதே அபிதயோர சங்கராத் சர்வ சரீரம் ப்ரஹ் மேதி
ப்ரஹ்மணோ வைபவம் ப்ரதிபாதயத்யபி சாமாநாதி கரண்யாதிபுபி முக்ய வ்ருத்தை –
சர்வ சேதந அசேதன பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபி தீயதே

(இப்படி வேதங்களை நன்கு அறிந்த சான்றோர்களில் தலையாயவர்களானparaasaraபராசரர் த்வைபாயனர் -வ்யாஸர் -ஆகியோர்
பரப்ரஹ்மத்துக்கு எல்லாப் பொருள்களுக்கும் உயிராய் இருக்கும் தன்மையும் சேதன அசேதனப் பொருள்களுக்கு அதன் உடலாய் இருக்கும் தன்மையும்
உயிரும் உடலும் மாறுபட்ட நிலை நெறிகளை உடையவையாயினும் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தொடர்புடைய ப்ரகாரத்துவமும் இருத்தலால்
ஸாமாநாதி கரணத்தால் திரண்ட பொருளாக ப்ரஹ்மத்து எல்லாப் பொருள்களுக்கு உயிராய் உறையும் தன்மை உணர்த்தப்பட்டது -)

(அஹம் கச்சாமி -அஹம் ஆத்மாவைக் காட்டாது -தேகத்துடன் சேர்ந்த ஆத்மாவையே காட்டும்)

(கார்யம் செய்ய சரீரம் சுகம் துக்கம் அனுபவிக்க ஆத்மா -ஞானம் இதுக்குத் தானே -ஆகவே இரண்டும் சேர்ந்ததும் அஹம்
அனுகூலமாக இருக்கும் பொழுது பேத வியவஹாரமும் -பிரதிகூலமாக இருக்கும் பொழுது அபேத வியவஹாரமும் செய்கிறோம்)

(சாமானாதி கரண்யம் -ஏகார்த்த ப்ரதிபாதிதம் -விசேஷண விசேஷ்ய கொள்ளாமல் சங்கரர்)

(பின்ன பிரவ்ருத்தி நிமித்த ஏகஸ்மின் அர்த்தே ப்ரதிபாதிதம் -பர்யாய சப்தங்கள் இல்லாமல் -ஒரே பதார்த்தத்தை வெவ்வேறே பிரகாரம்
ஸ்யாமோ யுவ தேவதத்தன் -இவனை வியாவ்ருத்திக்க இரண்டு பிரகாரங்கள்)

சாமா நாதி கரண்யம் ஹி த்வயோ பதயோ பிரகார த்வய முகேந ஏகார்த்தநிஷ் டத்வம்
தஸ்ய ச ஏதஸ்மிந் பக்ஷே முக்யதா ததாஹி -தது த்வம்-இதி சாமாநாதி கரண்யே –
தது-இத்யேந ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகரம் நிரவத்யம் ப்ரஹ்ம உச்யதே
த்வம் இதி ச சேதன சாமாநாதி கரண வ்ருத்தேந ஜீவ அந்தர்யாமி ரூபி -தச் சரீரம் ததாத்மதயா அவஸ்திதம்
தத் பிரகாரம் ப்ரஹ்ம உச்யதே
இதரேஷு பக்ஷேஷு சாமாநாதி காரண்ய ஹாநி ப்ரஹ்மண ச தோஷதாச ஸ்யாத் –

ஸாமா நாதி கரணம் என்பது இரண்டு சொற்களால் குறிக்கப்படும் இரு வெவ்வேறு பொருள்கள் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தன்மையினால் ஒரே பொருளைக் காட்டுதல் ஆகும்
வேதச் சொற்களுக்கு இவ்வாறு பொருள் கொள்வதே -அதாவது எல்லா வேத வாக்யங்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதே -எங்கள் தலையாய கொள்கை
அப்படியே ததுவம் என்ற வாக்யத்துக்கு ஸாமாநாதி கரணத்தின் படி
தது -அந்த -என்பதால் எல்லாவற்றுக்கும் முழு முதல் காரணமாயும்
எல்லையில்லா நன்னலம் உடையோனாகவும்
குற்றங்கள் சிறிதும் அற்றோனாகவும்
உள்ள ப்ரஹ்மமே -த்வம் -நீ என்ற சொல்லால் குறிப்பிடப்படும்
சேதனனுடன் பிரிக்க முடியாத தொடர்புடையதாய் ஜீவாத்மாவின் உள்ளுறைவதாய் -அதை உடலாக உடையதாய் -அதன் ஆத்மாவாக உறையும் ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது
மற்றை அத்வைதக் கொள்கைகளில் இரு மெய்ப் பொருள்கள்-ப்ரஹ்மம் தவிர்த்து இன்மையால் ஸாமா நாதி கரணம் வர வாய்ப்பில்லை
எனவே மற்றைக் கொள்கைகளில் இந்த சாமாநாதி கரண்யம் அழிகிறது
அதனால் ப்ரஹ்மத்துக்கு குற்றங்களின் தொடர்புடைமை வரும்)

—————

73–ஏதத் யுக்தம் பவதி
ப்ரஹ்ம ஏவ ஏவமவஸ்திதம் -இத்யத்ர -ஏவம் -சப்தார்த்த பூத பிரகார தயைவ விசித்ர சேதன அசேதநாத்மக
பிரபஞ்சஸ்ய ஸ்தூலஸ்ய ஸூஷ்மஸ்ய சத் பாவ -ததாச பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இதி அயமர்த்த ஸம்பந்நோ பவதி –
தஸ்யைவ ஈஸ்வரஸ்ய கார்ய தயா காரண தயா ச சமஸ்தான சமஸ்தி தஸ்ய சமஸ்தான தயா சித் அசித் வஸ்து ஜாதம வஸ்திதமிதி –

(பஹு -பல மட்டும் அல்ல -பரஸ்பர பின்னமான எல்லாமாகக் கொள்ள வேண்டும் நானே(ப்ரஹ்ம சரீரத்துக்கு -நானே )-ஸமஸ்த பதார்த்தமாக ஆகிறேன்)

இதை இவ்வாறு விளக்கலாம்
ப்ரஹ்மமே இவ்வாறு விளங்குகிறது -என்ற வேத வாக்யத்தில் -இவ்வாறு என்ற சொல்லின் கருப்பொருள் புலன்களால் உணரப்படும் உணரப்படாமலும் சேதன அசேதனப் பொருள்களால் பல படியாக நிறைக்கப்பட்டு இருக்கும் ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்துடன் பிரிவற்ற தொடர்புடையதாக இருத்தல் என்பது
அதனாலேயே -நான் பலவாக ஆவேன் மக்களைப் படைப்பேன் என்ற வாக்யம் பொருளுடையதாக ஆகும் –
பலபடித்தான உருவ அமைப்புள்ள சேதன அசேதன பொருள்களை தனது உடலாகக் கொண்டு அவை யாவற்றிலும் அந்த ஈஸ்வரனே கட் புலனாகும் கார்யமாகவும் கட் புலனாகாத காரணமாகவும் வஹிக்கிறான்

———

74 —நநு ச -சமஸ்தான ரூபேண ப்ரகாரதயா-ஏவம் -சப்தார்த்தத்வம் ஜாதி குணயோ ரேவ த்ருஷ்டம் –
ந த்ரவ்யஸ்ய ஸ்வ தந்த்ர ஸித்தியோக் யஸ்ய பதார்த்தஸ்ய ஏவம் சப்தார்த்ததயா ஈஸ்வரஸ்ய பிரகார மாத்ரத்வம யுக்தம்
இதி சேத்ப உச்யதே த்ரவ்யஸ்யாபி தண்ட குண்டலாதே த்ரவ்யாந்தர பிரகாரத்வம் த்ருஷ்டமேவ —

அவ்வாறு ஆகாது
உருவ அமைப்பால் பிரிவற்ற நிலை உடைமையால் இவ்வாறு என்ற சொற் பொருள் கொள்வதானால்
அதாவது-சேதனம் அசேதனம் ஆகியவை பொருள்களே -அவ்வாறு இருக்க அவை ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையை அடைதல் எவ்வாறு என்பது கேள்வி –
ஒரு பொருளுக்கு அடையாக அதன் ஜாதியையோ அல்லது குணத்தையோ தான் கொள்ள முடியும்
மாறாக மற்ற ஒரு பொருளை அதற்க்கு பிரிவற்ற நிலையை உடைய அடையாகக் கொள்ள வியலாது
இங்கு தனித்து இயங்கும் தன்மையுடைய சேதன அசேதன பொருள்களை ஈஸ்வரன் என்னும் பொருளுக்கு அடையாகக் கொள்ளுதல் பொருந்தாது என்பீராகில்
சில சமயங்களில் ஒரு பொருளும் மற்ற ஒரு பொருளுக்கு -அதை மற்றதனின்றும் பிரித்துக் காட்டும் அடையாக -தடியை உடையவன் தடிக்காரன் குண்டலம் அணிந்தோன் என்பது போல் வழங்கி வருவதைக் காண்கிறோம்

————————-

75–நநுச தண்டாதே ஸ்வ தந்த்ரஸ்ய த்ரவ்யாந்தர பிரகாரத்வே மத்வர்த்தீய ப்ரத்யயோ த்ருஷ்ட –
யதா தண்டி குண்டலீ இதி அத கோத்வாதி துல்ய தயா சேதன அசேதநஸ்ய த்ரவ்ய பூதஸ்ய வஸ்துந ஈஸ்வர பிரகார தயா
சாமாநாதி கரண்யே ந ப்ரதிபாதநம் ந யுச்யதே அத்ரோச்யதே –கவ்ரஸ்வோ மனுஷ்யோ தேவ இதி பூத சங்காதா ரூபாணாம்
த்ரவ்யாணாமேவ -தேவ தத்தோ மனுஷ்யோ ஜாத புண்ய விசேஷேண யஜ்ஜ தத்தோ கவ்ர் ஜாத பாபேந கர்மணா
அந்யஸ் சேதந புண்யாதிரேகேண தேவோ ஜாத இத்யாதி தேவாதி சரீராணாம் சேதன பிரகார தயா லோக
வேதயோ சாமாநாதி கரண்யே ப்ரதிபாதனம் திருஷ்டம்

அப்படி யல்ல -தடி போன்றவை தாங்கள் ஒரு பொருளாக இருந்து கொண்டே மற்ற ஒரு பொருளுக்கு -மனிதனுக்கு -த்வர்த்தீய ப்ரத்யயத் -vilankuவிளங்க முடியும்
உதாரணம் -தண்டி குண்டலீ –
மேலும் பசுத்தன்மை -பேசுவாய் இருத்தல் -போன்றவற்றுக்கு இணையாக சேதன அசேதன பொருள்கள் நிறைந்த ப்ரபஞ்சம் ஈசனுக்கு பிரிவற்ற நிலையில் உள்ளதால் ஸாமா நாதி கரண்யம் பொருந்தாது எனில்
பசு குதிரை மனிதன் தேவன் போன்ற உருவ அமைப்புக்கள் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆகின்றன
தனது நல் வினையின் பயனாக தேவ தத்தன் மனிதனாகப் பிறந்தான் -தன் தீ வினைகளின் விளைவாய் யஜ்ஜ தத்தன் பசுவாய் ஆனான்
வேறொரு உயிர் மிகுந்த நல்ல வினையின் பயனாய் தேவனாகப் பிறந்தான் என்றெல்லாம் மறை எல்லாம் உலக வழக்குகளில் உள்ளது
தேவன் முதலான உடல்களில் உயிரின் பிரிவற்ற நிலை உள்ளதையும் காண்கிறோம் -ஸாமாநாதி கரணம்
இங்கு உடலும் உயிரும் தனித் தனியான பொருள்கள் ஆயினும் ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையுள்ளவை

(த்ரவ்யம் த்ரயம் சம்யோகம்-யுவா ஸ்யாம தேவ தத்தன் அப்ருதக் சமஸ்தானம்
குண்டலி தேவதத்தன் ப்ருதக் ஸம்ஸ்தானம்-ஜீவன் அசேதனன் ப்ரஹ்மம் -மூன்றும் த்ரவ்யம் -அப்ருதக் ஆக பிரகாரங்கள் ஆக வேண்டுமே )

த்வர்த்தீய ப்ரத்யயம் -புவநாநி விஷ்ணு -விஷ்ணு இன்றி தனித்து இயங்காத புவனம்
மத்வர்த்தீய ப்ரத்யயம் –அப்ருதக் சித்தம் –இனிச் மான் வான் -பிரிவற்ற நிலை -ஸ்ரீ மந் -ஸ்ரீ மதே

——————————

76–அயமர்த்த -ஜாதிர் வா குணோ வா ந தத்ர ஆதரந-கஞ்சன த்ரவ்ய விசேஷம் பிரதி விசேஷண தயைவ
யஸ்ய சத் பாவ -தஸ்ய தத் அப்ருதக் சித்தே தத் ப்ரகாரதயா தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாதநம் யுக்தம்
யஸ்ய புந த்ரவ்யஸ்ய ப்ருதக் சித்தஸ்யைவ கதாசித் க்வசித் த்ரவ்யாந்தரப் பிரகாரத்வ மிஷ்யதே
தத்ர மத்வர்த்தீய ப்ரத்யய -இதி விசேஷ

இதன் பொருள் –ஒரு பொருளுடன் பிரிவற்ற நிலையில் அடையாக இருப்பதற்கு -ஜாதியோ பொருளோ குணமோ முக்யமாகக் கொள்ளப் பட வேண்டாம்
எந்த ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் தொடர்பு அதற்கு பிரிவற்ற பண்பை ஏற்குமோ -அவற்றின் பிரித்து இயங்காத தன்மையால் அவ்விரு பொருள்களுக்கும் சாமா நாதி கரணம் உள்ளது என்று கொள்வதே பொருந்தும்
மீண்டும் எந்த பொருள் சாதாரணமாகத் தனித்தே இயங்கிக் கொண்டு எப்பொழுதாவது மற்ற ஒன்றிற்கு பிரிவற்ற அடையாக ஆகிறதோ அப்பொழுது அதற்கு மத்வர்த்தி ப்ரத்யயம் வர வேண்டும் என்பது சிறப்பு விதி –

—————

77–ஏவமேவ ஸ்தாவர ஜங்கமாத்மகஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ஈஸ்வர சரீரத்வேந தத் பிரகார தயைவ ஸ்வரூப சத் பாவ இதி
தத் பிரகாரீ ஈஸ்வர ஏவ தத் தத் சப்தேந அபிதீயதே இதி தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாத நம் யுக்தம்
ததே தத் பூர்வமேவ நாம ரூப வியாகரண ஸ்ருதி விவரனே பிரபஞ்சிதம் —

மேற்கூறிய படியே அனைத்து அசையும் அசையாப் பொருள்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருப்பதனால் அப் பிரிவற்ற பண்பினாலேயே அவற்றுக்கு இருப்பு ஏற்படுகிறது என்பதால் அவற்றிற்கு உரிமையானவன் ஈஸ்வரன் தத் என்று குறிப்பிடப் படுகிறான் என்று சாமா நாதி கரணத்தை அறுதியிடல் பொருந்தும்
இவையாவும் முன்பே நாம ரூப விளக்கத்தில் விரிவாகச் சொல்லப்பட்டன

———-

78–அத ப்ரக்ருதி புருஷ மஹத் அஹங்கார தந் மாத்ர பூதேந்த்ரிய -ததாரப்த-சதுர்தச புவநாத்மக ப்ரஹ்மாண்ட தத் அந்தர்வர்த்தி
தேவ திரியக் மனுஷ்ய ஸ்தாவராதி சர்வ பிரகார சமஸ்தாந ஸம்ஸ்திதம் கார்யமபி சர்வம் ப்ரஹ்ம ஏவ இதி காரண பூத
ப்ரஹ்ம விஞ்ஞாநாதேவ சர்வம் விஞ்ஞாதம், பவதீதி ஏக விஞ்ஞானம் உப பந்நதரம்-ததேவம் கார்ய காரண பாவாதி முகேந
க்ருஸ்த்ரஸ்ய சித் அசித் வஸ்துந பர ப்ரஹ்ம பிரகார தயா ததாத்மகத்வம் யுக்தம் –

மேலும் ப்ரக்ருதி புருஷன் மஹத் அஹங்காரம் தன் மாத்ரைகள் பஞ்ச பூதங்கள் பதினோரு புலன்கள் -அவைகளான பதினான்கு உலகங்கள் ப்ரஹ்மாண்டங்கள் அவற்றின் உள்ளுறையும் தேவ மனித விலங்கு ஸ்தாவரம் முதலான பலவகை அமைப்புடைய பொருள்களுக்கு -விளைவுகளுக்கு -காரணமாக ப்ரஹ்மம் இருத்தலால் -அந்த ஒன்றை அறிவதன் மூலம் மற்ற யாவையும் அறிந்ததாக ஆகும் என்பதே மிகப் பொருந்தும்
இவ்வாறு காரண காரியத் தொடர்பால் சேதன அசேதன பொருள்களுக்கு உள்ளுறை ஆத்மாவாய் இருக்கும் தன்மை ப்ரஹ்மத்திற்குச் சொல்லப்பட்டது –

————-

79–நநு ச பரஸ்ய ப்ராஹ்மண ஸ்வரூபேண பரிணாம ஆஸ்பதத்வம்-நிர்விகார நிரவத்ய ஸ்ருதி வ்யாகோப ப்ரசங்கேந நிவாரிதம்-
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் இதி ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஞ்ஞா
ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தாப்யாம் பரம புருஷஸ்ய ஜகாத் உபாதான காரணத்வம் ச ப்ரதிபாதிதம்
உபாதான காரணத்வம் ச பரிணாம ஆஸ்பதத்வ மேவ கத மிதமுபபத்யதே அத்ரோஸ்யதே -ச ஜீவஸ்ய பிரபஞ்சஸ்ய
அவிசேக்ஷண காரணத்வம் யுக்தம் தத்ர ஈஸ்வரஸ்ய ஜீவ ரூப பரிணாமாப் யுபகமே
நாத்மாஸ்ருதேர் நித்யத்வாச் ச தாப்ய–ப்ரஹ்ம சூத்ரம் -2-3-3-
இதி விருத்யதே-வைஷம்ய நைர் க்ருண்ய பரிகாரஸ் ச ஜீவாநாமநாதித் வாப்யுகமேன
தத் கர்ம நிமித்தயா ப்ரதிபாதித -வைஷம்ய நைர்க்ருண்யே ந சா பேஷத்வாத் -2-1 -34—
ந கர்ம விபாகதிதி சேண்ந அநாதித்வாது ப பத்யதே சாப்யு பலப்யதேச -2-1-35-இதி
அக்ருதாப்யாகம க்ருத் விபிரணாச பிரசங்கஸ் ச அநித்யத்வே அபிஹித

மாறாகப் பர ப்ரஹ்மத்திற்கு தன்னிலையில் நின்றும் மாறுபாடு அடைதல் ஒரு பொழுதும் இல்லை என்று சாற்றப்படும் -மாறுதல் அடையாத்தன்மை -குற்றங்கள் அற்ற நிலை போன்ற மறை மொழிகளால் அறுதியிடுதல் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு
ப்ரக்ருதிஸ் ச பிரதிக் நாத் ருஷ்டாந்தநு பரோதாத் –ப்ரஹ்ம ஸூத்தரம் -1-4-
ஒன்றை அறிதலால் எல்லாவற்றையும் அறிந்ததாகும் என மறை மொழியில் மறை மற்றும் அதை விளை பொருளை எடுத்துக் காட்டி பரம புருஷன் உலகின் கருப்பொருளாகும் தன்மை விளக்கம் தரப்படுகிறது
கருப்பொருள்கள் யாவும் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதால் இது எவ்வாறு பொருந்தும்
இதற்கு விடையாக
இந்த ஜீவன் ப்ரபஞ்சம் இவற்றுடன் ப்ரஹ்மத்துக்குள் பொதுப்படையான காரணம் கூறப்படுகிறது –
ஈஸ்வரன் ஜீவனாக மாறுகின்றான் எனக் கொண்டால்
மறை மொழிகளின் படி ஆத்மா உண்டாவது இல்லை -என்றும் உள்ளவன் எனத் தேறுகிறபடியால் –2-3-3-ஈசனுக்கு ஏற்றத்தாழ்வு -அருளின்மை -2-1-34-ஆகியவை ஏற்படாது –
ஜீவனுடைய பன்னெடுங்கால வினைப்பதொடர்பின் அடியாகப் படைப்பதால் ப்ரஹ்ம ஸூத்ரத்திலும் படைப்புக் காலத்தில் ப்ரஹ்மம் தவிர்த்த வேறில்லை என்பதால் வினையும் ஜீவனும் இல்லை என்று கொள்ள முடியாது
ஏன் எனில் ஜீவன் ஆரம்பம் அற்றது என்று கூறப்பட்டு இருப்பதால் -ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது என்பதே பொருந்தும் -ஜீவர்கள் நாம ரூபங்கள் இல்லாமல் ப்ரஹ்மத்தோடே ஒன்றி இருந்தனர் -என்பதால்
ஆரம்பம் இல்லாத அநாதியான ஜீவர்களின் வினைகளும் பன்னெடும் காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பொருந்தும்
இதுவே வேதத்தாலும் அறுதியிடப்பட்டது
வினைகள் படைப்புக்கு முன் இல்லை எனக் கொள்ளில் ஜீவர்கள் காரணம் இன்றித் துயர் உறுதலும் செய்யும் தீயச் செயல்கள் பலன் அளிக்காது போலும் ஏற்படும்

ததா ப்ரக்ருதே ரப்யநாதிதா ஸ்ருதிபி ப்ரதிபாதிதா –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் வஹ்நீம் ப்ரஜாம் ஜன யந்தீம் ச ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமானே நுசேதே
ஜஹாத்யேநாம் புக்த போகாம ஜோந்ய இதி ப்ரக்ருதி புருஷயோரஜத்வம் தர்சயதி–

இப்படியே ப்ரக்ருதியும் ஆரம்பம் அற்றது -அநாதி என்று வேதங்களால் அறுதிப்படுகிறது
பிறப்பு அற்றதும் -கருப்பு சிவப்பு வெளுப்பு நிறங்கள் கலந்ததுமான ப்ரக்ருதியை பிறப்பற்ற ஒருவன் அனுபவித்துக் கொண்டு அதன் வழி செல்கிறான்
பிறப்பற்ற மற்ற ஒருவன் அதை அனுபவிப்பதில்லை -என்று ப்ரக்ருதி புருஷர் -ஜீவர்களின் பிறப்பின்மை காட்டப்படுகிறது –

——————

80–அஸ்மாந் மாயி ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிந் சாந்யோ மாயயா சந்நிருத்த -மாயம் து ப்ரக்ருதிம் வித்யாந் மாயி நந்து மஹேஸ்வரம்
இதி ப்ரக்ருதிரேவ ஸ்வரூபேண விகாராஸ்பத மிதிச தர்சயதி-கௌரநாத் யந்தவதி ச ஜநித்ரி பூத பாவிநீ இதிசா

ப்ரக்ருதியை -மாயாவை -ஏவல் கொள்ளும் பரமாத்மா -மாயி -அந்தப் பிரக்ருதியைக் கொண்டு உலகைப் படைக்கிறான்
வேறொருவன் -ஜீவாத்மா அதில் அடைபடுகிறான்
மாயா என்பது பிரக்ருதியாகவும் மாயி என்பது சர்வேஸ்வரனாகவும் அறியப்படுகிறது
இவ்வாறு பிரக்ருதி தனது நிலை மாறுபாடு அடையக் கூடியதாகக் காணப்படுகிறது
ஸ்ருஷ்டியின் பசுவான மூலப்ப்ரக்ருதி -சமஷ்டி -ஆரம்பமும் முடிவும் அற்றது -ஸ்ருஷ்டியின் பூதங்களை வ்யஷ்டி உண்டாக்குகிறது என அறியப்படுகிறது


ஸ்ம்ருதிஸ் ச
ப்ரக்ருதிம் புருஷஞ்ச ஏவ வித்யாநாதி உபாவபி -பூமிர் ஆபோ அநலோ வாயு கம் -மநோந் புத்தி ரேவச அஹங்கார
இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிர் அஷ்டதா -அபரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் –
ஜீவ பூதாம் மஹா பாஹோ யாயேதம் தார்யதே ஜகத்
பிரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந புந மாயா த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் இத்யாதிகா
ஏவம் ச ப்ரக்ருதேரபி ஈஸ்வர சரீரவத் ப்ரக்ருதி சப்தோ அபி ததாத்ம பூதஸ்ய ஈஸ்வரஸ்ய தத் பிரகார சமஸ்திதஸ்ய வாசக
புருஷ சப்தோ அபி தத் ஆத்மக பூதஸ்ய ஈஸ்வரஸ்ய புருஷ பிரகார சமஸ்திதஸ்ய வாசக –
அத தத் விகாராணமபி தயைவ ஈஸ்வர -ஆத்மா -ததாக வ்யக்தம் விஷ்ணுஸ் ததா அவ்யக்தம் புருஷ கால ஏவச
ச ஏவ ஷோபகோ ப்ரஹ்மந் ஷோப்யஸ் ச பரமேஸ்வர -இதி அத ப்ரக்ருதி பிரகார சமஸ்திதே பரமாத்மநி பிரகார பூத
ப்ரக்ருதி அம்சே விகார பிரகார்யம்ஸோ நியாந்தா நிரவத்ய சகல கல்யாண குணாஸ்ரய ஸத்யஸங்கல்ப
ஏவ ததாச சதி காரண அவஸ்தோபி ச ஏவேதி கார்ய காரணயோர் அநந்யத்வம் சர்வ ஸ்ருதி விரோதஸ் ச பவதி-

ஸ்ம்ருதியும்
ப்ரக்ருதி புருஷன் ஆகியவைகள் ஆரம்பம் அற்றவை என அறிந்து கொள்
நிலம் நீர் நெருப்பு வளி வெளி மனம் புத்தி -மஹான் -அஹங்காரம் பத்து இந்திரியங்கள் ஆகிய எட்டு வகையாகி எனக்கு படைப்பில் துணை நிற்கின்றன
இவற்றின் நின்றும் வேறுபட்டதான ஜீவன் -அதனால் உலகு தாங்கப்படுகிறது என்று உயர்ந்த தோளாய் அறிவாயாக
என்னுடைமையான மூலப் பிரக்ருதியை எட்டு வித வேறுபாட்டை அடைவித்து பலவிதமாக உலகை மீண்டும் மீண்டும் படைக்கிறேன் –
அழியாத வினைத் திட்ப்பமுள்ள என்னால் ப்ரக்ருதியும் -அதிலுள்ள அசையும் அசையாய் பொருள்களும் நிறைக்கப்படுகின்றன என்று சொல்கிறது
இவ்வாறு மூலப்பிரக்ருதி ஈஸ்வரனின் உடலாய் இருக்கும் பண்பால் ப்ரக்ருதி என்னும் சொல்லும் -அதைக்குறிக்கும் சொற்கள் யாவும் -அதின் உயிர்நிலையான ஈஸ்வரனுடைய பிரிவற்ற நிலையைக் குறிக்கும்
அவ்வாறே ஆத்மா புருஷன் -என்ற சொல்லும் அதன் உயிர் நிலையாகவும் அதனுடன் பிரிக்க இயலா நிலை யுடையவனாயும் இருக்கும் ஈஸ்வரனையே குறிக்கும்
அவ்வாறே மஹான் மூலப்ப்ரக்ருதி காலம் ஆத்மா -யாவையும் விஷ்ணுவே -அவரே படைக்க முனபவர் படைப்படுவதும் -அவற்றில் உள்ளுறைபவரும் அவரே
பரமாத்மாவுக்கு அங்கமான ப்ரக்ருதியில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன
ப்ரக்ருதியை அங்கமாக வுடைய பரமாத்மாவின் மாறுபாடு ஏற்படுவதில்லை
இவ்வாறே ஜீவாத்மாவை அங்கமாக உடையனாதலின் அதில் ஏற்படும் குறைபாடுகள் உள்ளிருப்பவனாகவும் அங்கியாகவும் ஏவுவோனாகவும் விளங்கும் குறைபாடற்ற எல்லா நலன்களுக்கும் இருப்பிடமான வழுவாத முனைப்புடைய பரமாத்மாவிற்கு இல்லை
அங்கி-அங்கங்களை யுடையவன்

அதனாலேயே கட் புலனாகாத காரண நிலையாவோனும் அதைக் கருப்பொருளாய்க் கொண்டு கட் புலனாகும் காரியப் பொருளான உலகு முதலியவையாக ஆகுபவனும் ஈஸ்வரனே
இப்படிக் கொள்வதாலேயே காரண காரியப் பொருள்களில் வேறுபாடின்மை மறைக் கொள்கைகளுக்கு உள்ள உடன்பாடு கிடைக்கிறது –

——————–

81–ததேவம் நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்மத சாபந்ந பிரகிருதி புருஷ சரீரம் ப்ரஹ்ம காரணாவஸ்தம் –
ஜகத ததாபத்திரேவ ச ப்ரலய நாம ரூப விபாக விபக்த ஸ்தூல சிதசித் வஸ்து சரீரம் ப்ரஹ்ம கார்யாவஸ்தம் ப்ராஹ்மண
ததாவித ஸ்தூல பாவ ஏவ ஸ்ருஷ்ட்டி இத்யுச்யதே –

கட் புலனாகாத நிலையில் பெயர் உருவ மாறுபாடற்றசேதன அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரணம்இவ்வாறு இருக்கும் நிலைக்கே ப்ரளயம் என்று பெயர்இதினின்றும் தோன்றும் கட் புலனாகும் அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரியம்இந்தக் கட் புலனாகும் நிலை படைப்பு எனப்படும் –
யதோக்தம் பகவதா பராசரேண-பிரதான பும்ஸோரஜயோ -காரணம் கார்ய பூதயோ-இதி

இதை ஒட்டியே பகவான் பராசரரும் -பிறப்பற்ற மூல பிரகிருதி புருஷர்கள்-இவை காரண கார்யங்களாக ஆகின்றன -என்றார்

தஸ்மாத் ஈஸ்வர பிரகார பூத
சர்வாவஸ்த ப்ரக்ருதி புருஷ வாஸிந ஸப்தா தத் பிரகார விஸிஷ்ட தயா அவஸ்திதே பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே
ஜீவாத்மவாஸி தேவ மனுஷ்யாதி சப்தவத் யதா தேவ மனுஷ்யாதி ஸப்தா தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷணாம்
ஜீவாத்ம பிரகார தயைவ பதார்த்தத்வாத் பிரகாரிணி ஜீவாத்மநி முக்ய தயா வர்த்தந்தே தஸ்மாத் ஸர்வஸ்ய
சிதசித் வஸ்துந பரமாத்ம சரீரதயா தத் பிரகாரத்வாத் பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே சர்வே தத் வாசகா ஸப்தா —

அவை ஈஸ்வரனுடன் பிரிவற்ற நிலை உடையவையாதலால் இவைகளைக் குறிக்கும் சொற்கள் யாவும் இவ்விருப்பினால் பரமாத்மாவையே உள்ளுறை பொருளாகக் காட்டுகின்றன-தேவ மனிதர்களின் பெயரும் உருவமும் அவற்றின் உள்ளுறையும் ஜீவாத்மாவைக் குறிப்பது போலே
அங்க -அங்கி நிலையினால் எல்லா சேதன அசேதன வஸ்துக்களும் அவற்றின் பெயர் உருவங்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருக்கும் தன்மையால் ஈஸ்வரனையே குறிக்கும் –

————-

82–அயமேவச ஆத்ம சரீர பாவ -ப்ருதக் சித்யநர்ஹ தாராதேய பாவ -நியந்த்ரு நியாமய பாவ -சேஷ சேஷி பாவஸ் ச
சர்வாத்மநா ஆதார தயா நியந்தரு தயா -சேஷி தயா ச ஆப்நோதீதி -ஆத்மா சர்வாத்மநா ஆதேய தயா நியாம்ய தயா சேஷ தயா ச
அப்ருதக் சித்த பிரகாரத்வாத்-அப்ருதக் சித்தம் -ஆகார சரீரம் ஏவமேவஹி ஜீவாத்மந-
ஸ்வ சரீர சம்பந்த ஏவமேவ பரமாத்மந-சர்வ சரீரத்வேந சர்வ சப்த வாச்யத்வம் —

இதுவே உடல் -உயிர்த் தொடர்பு uஎன்பது -தனித்து இயங்கும் தன்மையற்று மற்ற ஒன்றினால் தாங்கப்படும் நிலையுற்று
அதனால் இயக்குவோர் நிலையம் தொடர்பும் பெற்று இருப்பது
எல்லா விதத்தாலும் தாங்குவதாகவும் ஏவுவதாகவும் பணி கொள்வதாகவும் அதின் நின்றும் பிரித்து நிலை யற்றதாகவும் உயிர் உடலுடன் பொருந்தி இருக்கிறது இவ்வாறே பரமாத்மாவும் எல்லாவற்றையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் எல்லாச் சொற்களும் சுட்டிக் காட்டப்படுபவனாகவும் இருக்கிறான்

சேஷன் -இயக்கப்படுவோன் -தன்னை இயக்குவோனுக்காக மகிழ்வுடன் செயல் புரிவோன்
சேஷி -சேஷனைத் தன் விருப்பப்படி இயக்குபவன்-

(சரீராத்ம பாவம்-சர்வாத்மனா ஆப்நோதி -விசேஷ வியாப்தி -தேச கால அவஸ்தா வாசி இல்லாமல் -ஆதாரம் நியாம்யம் சேஷி அப்ருதக் சித்தம் -பிரகாரம்-சர்வ ஸப்த வாஸ்யன் இதனாலேயே-பர்யவசான வ்ருத்தி )

——————

83–ததாஹ ஸ்ருதி கண–சர்வே வேதா யத்பதமாமநந்தி -சர்வே வேதாயத்ரைகம் பவந்தி –(இந்த கட உபநிஷத் ஸ்ருதி -கீதை 2-8 அத்யாயத்திலும் ஸ்லோகம் இவற்றைக் கொண்டே உண்டே )

(ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—
৷৷2.70৷৷

எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ
அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை)

(புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்
—-৷৷8.22৷৷

நாரங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமே -அயனமே நாராயணன் -சர்வ ஆராதத்வம் தாரகன் –
எங்கும் வியாபித்து -உள்ளும் புறமும் -ஸர்வ வியாபகத்வம் -ஸர்வ அந்தர்யாத்மா-சரீர ஆத்மா -அந்தர்யாமி -நியமனம்)

இதி தஸ்ய ஏகஸ்ய வாஸ்யத்வா தேகார்த்த வாஸிநோ பவந்தி-இத் யர்த்த
ஏகோ தேவா பஹுதா சந்நிவிஷ்ட
சஹைவ சந்தம் நவிஜாநந்தி தேவா –இத்யாதி
தேவா இந்திரியாணி தேவ மனுஷ்யாதி நாமாந்தாயா மித்யா ஆத்மத்வேந நிவிஸ்ய -சஹைவ சந்தம் –
தேஷாம் இந்திரியாணி மந பர்யந்தாணி ந விஜாநந்தி இத்யர்த்த

(மனஸ் -ஏக ஆஸ்ரயம் அவனுக்கும் இந்திரியங்களுக்கும் -இருந்தாலும் இவை அறிய வில்லையே)

இப் பொருளையே வேதங்களும் கீழ்க் கண்டவாறு பகர்கின்றன
எல்லா வேதங்களும் அடையப்படும் இலக்காக எதை திரும்பத் திரும்ப பறைகின்றனவோ-எல்லா வேதங்களும் எந்த ஒருவனிடம் ஓன்று படுகின்றனவோ
அந்தப் ப்ரஹ்மம் ஒன்றே மெய்ப்பொருளாக விளங்குவதால் சொற்கள் யாவும் ஒரே பொருளை யுடையவை யாகின்றன என்பது பொருள்
ஒரே தேவன் பலவாக உள்ளுறைகிறான் -அவனை உடலுறையும் அறி புலன்கள் அறிவதில்லை
இங்கு தேவா என்பது மனத்துடன் சேர்ந்த ஞான இந்திரியங்கள்
தேவன் மனிதன் முதலிய சேதனப் பொருள்களில் உள்ளுறைவோனாக ஆத்மாவினுள் இருக்கும் அவனை அந்த ஆறு புலன்களும் அறிவதில்லை என்பது பொருள்

ததா ச பவ்ராணிகாநி வசாம்சி
நதா ஸ்ம சர்வ வசஸாம் பிரதிஷ்டா யத்ர ஸாஸ்வதீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-வாஸ்யேஹி வசச பிரதிஷ்டா காரணம் பூர்வம் வசஸாம் வாஸ்ய முத்தமும் -(ஜிதந்தே )
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வித்யா –இத்யாதீ நி ஸர்வாணி ஹி வாஸாம்சி ச சரீராத்ம விஸிஷ்ட -மாந்தர்யாமிணமேவ ஆசஷதே–
ஹந்த ஹபீமா திஸ் ரோதேவதா அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ஹி ஸ்ருதி –

அவ்வாறே புராணம் உரைப்பவர்களும் -எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் -அதன் மெய்ப்பொருளாய் நிலையாக விளங்குவோனை நாங்கள் வணங்குகிறோம் -என்றார்கள்
சொற்களின் முடிவு பொருளால் ஆகிறது -செயல்களுக்கு எல்லாம் முதல் காரணமும் -சொற்களுக்கு எல்லாம் பொருள் முடிவும்
வேதங்கள் யாவற்றாலும் அறியப்படுபவன் யானே என்றவாறு சொற்கள் யாவும் உருவ அமைப்பொடு கூடிய உயிரைக் காட்டி அவ்வாத்மாவில் உள்ளுறையும் பரமாத்மாவைக் காட்டி பொருள் முடிவு பெறுகின்றன
என்னே தானே நிலம் நீர் தீ இவற்றின் உட் புகுந்து பொருள்களுக்கு பெயர் உருவங்களைக் கொடுக்கிறேன் என்று வேதம் கூறுகிறது-

ததா ச மாநவம் வச–பிரசாசிதாரம் ஸர்வேஷா மணீயாம் ச மணீயசாம் ருக்மாபம்-ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத் து புருஷன் பரம்
அந்த பிரவிஸ்ய-அந்தர்யாமிதயா ஸர்வேஷாம் பிரசாசிதாரம் -நியந்தாரம் அணீயாம் ச ஆத்மாந க்ருத்ஸ்ரஸ்யா சேதநஸ்ய வ்யாபகதயா
ஸூஷ்ம பூதா தேஷாம் அபி வ்யாபகத்வாத் தேப்யோபி ஸூஷ்ம தர இத்யர்த்த ருக்மாப-ஆதித்ய வர்ண –
ஸ்வப்ந தீ கம்யம் ஸ்வப்ந கல்ப புத்தி ப்ராப்யம் விசத தம ப்ரத்யக்ஷதாபந்ந அநு த்யாநை கல்ப்ய-இத்யர்த்த –
ஏநமே கே வதந்த் யக்நிம் மருதோநய ப்ரஜாபதிம் இந்திரமேக பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் இதி ஏகே வேதா இத்யர்த்த
உக்தரீத்யா பரஸ்யைவ ப்ரஹ்மண-சர்வஸ்ய ப்ரசாசித்ருத்வேந சர்வ அந்தராத்மதயா ப்ரவிஸ்ய அவஸ்திதத்தவாத்
அஞ்ஞாய தயோபி ஸப்தா சாஸ்வத ப்ரஹ்ம சப்தவத் தஸ்யைவ வாசகா பவந்தி இத்யர்த்த –

பிறகு மனுவின் வாக்யமும்
பொருள்கள் யாவற்றினுள்ளும் நிலை பெற்று ஆள்பவனாகவும்
அணு அளவிலான பொருள்களையும் விட அணுவாய் இருப்பவனும்
பொன்னென ஒளிர்பவனும்
ஞானம் என்னும் உட் கண்ணால் -நம்மால் -கனவில் காண்பது போல் காணப்படக் கூடியவனுமான
பரம புருஷன் உள்ளுறைந்து
எல்லாவற்றையும் ஆள்பவன் -என்று கூறுகிறது –

பிராணிகளுக்கு உடல் முழுவதும் நீக்கமற உயிர் நிறைந்து இருப்பதால் ஆத்மா அணு அளவினன்
அவ்வாத்மாவின் உள்ளும் பரம புருஷன் புகுந்து நிறைவதால் சேதன அசேதன பொருட்களை விட அணுவள வினன் என்பது பொருள் –
கதிர் ஒளி கனவில் மனத்திற்குக் காணப் படுவது போல்
தெள்ளத் தெளிவாக நேரில் காண்பது போல் த்யானத்தில் காணத் தக்கவன் என்பது பொருள்
இவனை நெருப்பு என்றும் காற்று என்றும் பிரமன் என்றும் இந்திரன் என்றும் உயிர் மூச்சு என்றும் கூறப்படுபவனான
நிலையான மேலான ப்ரஹ்மம் என்று வேதங்கள் கூறுகின்றன -என்று பொருள்

பர ப்ரஹ்மம் எல்லாப் பொருட்களிலும் உள்ளுறைந்து அவற்றை ஆட்சி செய்வதால் தீ முதலிய சொற்கள் அவற்றுள் நிலை பெற்று இருக்கும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் சொற்களே என்பது இங்கு பொருள்

ததாச ஸ்ம்ருத் யந்தரம்
யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் சஹு தாசநாந் சர்வ பூத அந்தராத்மநாம் விஷ்ணுமே வ யஜந்தி தே இதி
பித்ரு தேவ ப்ராம்ஹண ஹுதாசநாதி ஸப்தா தந் முகேந ததந்தராத்ம பூதஸ்ய விஷ்ணோ ரேவ வாசகா இத்யுக்தம் பவதி —

அவ்வாறே ஸ்ம்ருதிகளிலும்
பித்ருக்களை தேவர்களை அக்னியுடன் சேர்ந்த அந்தணர்களைக் குறித்து யாகம் செய்பவர்கள் எல்லாப் பொருட்களுக்கும் உள்ளுறை பவனாகிய விஷ்ணுவையே குறித்து யாகம் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது
பித்ருக்கள் அந்தணர் அக்னி ஆகிய சொற்கள் தத் தத் முகமாக தமக்கு உள்ளுறைபவனான விஷ்ணுவையே குறிக்கும் சொற்கள் என்பதே சரியான கொள்கை –

—————————

84–அத்ரேதம் சர்வ ஸாஸ்த்ர ஹ்ருதயம் -ஜீவாத்மாந ஸ்வயம் அங்குசித அபரிச்சின்ன நிர்மல ஞான ஸ்வரூபா சந்த-
கர்ம ரூப அவித்யா வேஷ்ட்டிதா-தத் காம அநு ரூப ஞான சங்கோச மாபந்நா ப்ரஹ்மாதி ச தம்ப பர்யந்த விவித விசித்ர
தேஹேஷு ப்ரவிஷ்டா தத் தத் தேஹோசித லப்த ஞான பிரசரா தத் தத் தேஹாத்ம அபிமாந தத் உசித கர்மாணி குர்வாணா-
தத் அநு குண ஸூக துக்கோப போக ரூப சம்சார ப்ரவாஹம் பிரதிபத்யந்தே -ஏதேஷாம் சம்சார மோசனம்
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே இதி –

(கர்மாவும் அவித்யாவும் பகவத் நிக்ரஹ ரூபமே-வேஷ்ட்டிதா-மூடப்பட்டு)

ஸாஸ்த்ரங்கள் யாவும் கூறும் மையக் கருத்துப் பொருள் இதுவேயாகும்
ஜீவாத்மாக்கள் தன்னடையே குறைவற்ற அளவு கடந்த அப்பழுக்கு அற்ற ஞானத்தை யுடையவைகள்
தன் செயல்களினால் ஏற்பட்ட வினைப் பயனால் அறியாமை சூழப்பட்டு அவ் வினைகளுக்கு ஏற்ப ஞானக் குறைவின் பலனாக
பிரமன் முதல் புல் ஈறான பலவிதமான உருவமுடைய உடல்களில் நுழைந்து அவ் வமைப்புகளில் விருப்பம் கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்து கொண்டு அதனடியாய் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு முடிவற்ற பிறவிச் சுழலில் தடுமாறுகிறது
இப்படிப்பட்ட ஜீவன்களுக்கு பிறவிச் சுழலில் நின்றும் விடுபட பகவானிடம் சரண் அடைவது தவிர வேறு வழி இல்லை –

——————-

85–ததர்த்தம் பிரதம மேஷாம் தேவாதி பேத ரஹித ஞாநைக ஆகார தயா ஸர்வேஷாம் சாம்யம் ப்ரதிபாத்ய –
தஸ்யாபி ஸ்வ ரூபஸ்ய பகவச் சேஷதைக -ஸ்வரூபைக ரசதயா பகவதாத் மகதாமபி ப்ரதிபாத்ய -பகவத் ஸ்வரூபம்
ச ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந தயா சகல இதர விஸஜாதீயம் -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண ஆஸ்ரயம் –
ஸ்வ சங்கல்ப ப்ரவ்ருத்த ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாத தயா ஸர்வஸ்ய ஆத்ம பூதம் ப்ரதிபாத்ய
தத் உபாஸநம் சாங்கம் தத் ப்ராபகம் ப்ரதிபாத யந்தி சாஸ்த்ராணீதி —

அதன் பொருட்டு -முதற் கண் தேவன் முதலான வேறுபாடுகளுள்ள ஜீவன்கள் அனைத்தும் ஞானத்தளவில் ஒரே படிப்பட்டவையாய் இருத்தலைக் கூறி
அந்த ஞான உருவிற்கு இறைவனுக்கு அடிமைப்பட்டு இருத்தலே இயல்பான பண்பு என்றும்
இறைவனையே தன் ஆத்மாவாக உடையவை என்றும் கூறி
இறைத் தன்மை தீயக் குணங்கள் யாவற்றுக்கும் எதிர்த்தட்டாய் இருத்தலையும் நற் பண்புகள் யாவற்றுக்கும் உறைவிடமாய் இருத்தலையும்
தன்னை ஒழிந்த மற்றை யாவற்றின் நின்றும் மாறுபட்டு இருத்தலையும்
உயர்வற உயர் நலமுடையதாய் இருத்தலையும்
தன் வழுவாத வினைத் திட்பத்தால் சேதன அசேதன பொருட்கள் யாவினுள்ளும் ஆத்மாவாய் விளங்குவதையும் விளக்கி
அவனைக் குறித்த தியானத்தை அதன் அங்கங்களுடன் செய்தலே அவனை அடையும் நெறி என்பதையே சாஸ்திரங்கள் பகர்கின்றன

ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமம் –மாறா விருப்பம் நிறைவேற்றுவதற்கான வினைத் திடபம்

———————

86–யதோக்தம் -நிர்வாணமய ஏவாயமாத்மா ஞாநமய அமல -துக்க அஞ்ஞான மலா தர்மா ப்ரக்ருதேஸ்தே நசாத்மந
ப்ரக்ருதி சம்சர்க்கக் க்ருத கர்ம மூலத்வாத் ந ஆத்ம ஸ்வரூப ப்ரயுக்தா தர்மா
இத்யர்த்த ப்ராப்த அப்ராப்த விவேகேந ப்ரக்ருதி ரேவ தர்மா இத்யுக்தம் –

அவ்வாறே இந்த ஆத்மா வினைகளின் தொடர்பு அற்றவன் -ஆனந்த மயமானவன் -ஞான மயமானவன் தூய்மை யானவன் -துன்பம் அறியாமை ஆகிய கறைகள் உடல் தொடர்பால் மட்டுமே ஏற்படுகின்றன
இவை ஆத்மாவிற்குக் கிடையாது -உலகின் உடல் தொடர்பால் செய்யப்பட வினை விளைவாகவே இவை ஏற்படுகின்றன -ஆத்மாவின் இயல்பினால் அன்று -என்று பொருளாடும்
இதற்கு ஏற்படும் விளைவுகள் உலகின் இயல்பு என்பது வெளிப்படை –

—————————

87–வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணேகவி ஹஸ்திநி ஸூநி ஸைவ ஸ்வ பாகே ச பண்டித சம தர்சிந –ஸ்ரீ கீதை -5–18-இதி
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப ப்ரக்ருதி ஸம் ஸ்ருஷ்டஸ்ய ஆத்மந ஸ்வரூப விவேசநீ புத்தி ஏஷாம் தே பண்டிதா-
தத் ப்ரக்ருதி விசேஷ வி யுக்த ஆத்ம யாதாத்ம ஞான வந்த -தத்ர தத்ர அத்யந்த விஷம ஆகாரே வர்த்த மாநம் ஆத்மாநம்
சமாநா காரம் பஸ்யன்தீதி சம தர்சிந இத்யுக்தம்
ததிதமாஹ-இஹைவ தைர்ஜித ஸ்வர்க்கோ ஏஷாம் சாம்யே ஸ்திதம் மந நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தேஸ்திதா –
இதி நிர்தோஷம் தேவாதி ப்ரக்ருதி விசேஷ ரூப சம்சர்க்க தோஷ ரஹிதம் ஸ்வரூபேணா வஸ்திதம் சர்வம் ஆத்ம வஸ்து
நிர்வாண ரூப ஞான ஏக ஆகாரதயா சமம் இத்யர்த்த —

கல்வியும் அடக்கமும் நிறைந்த அந்தணன் பசு யானை நாய் அதை தின்னும் சண்டாளன் -இவர்களிடம் -ஆத்மாக்களிடம் -கற்றறிந்தோர் சமமான நோக்குடையவர்களாய் இருப்பார்கள்
தேவ விலங்கு மனித தாவர உடல்களால் உலகுடன் பிணைக்கப்பட்டு இருக்கும் ஆத்மாக்களை அவ்வுடல்களில் நின்றும் பகுத்து அறியும் இயல்புடையவர்களே பண்டிதர் -கற்றறிந்தோர் -சம நோக்குடையவர் -எனப்படுவர்
உலகியலின் தாழ்மை நீக்கி ஆத்மாவின் மெய்யியல் யறிந்து பலவகையான ஏற்றத் தாழ்வுகளுடன் கூடியிருக்கும் ஆத்மாக்களை ஓரு படிப்பட்டவர் என்று அறிவோரே சம நோக்குடையவர் எனப்படுவர்

எந்த ஞானிகள் மனத்தில் ஆத்மாக்கள் யாவும் சமம் என்ற எண்ணம் நிறைந்து இருக்கிறதோ அவர்கள் இவ்வுலகிலேயே துறக்கத்துக்கு ஈடான நிலையை அடைகின்றனர்
தேவன் முதலான உடல்களில் நின்றும் நீங்கிய ஆத்மா குற்றம் அற்றது
ஆத்மாக்கள் யாவும் தம் மெய்யுருவில் ஆனந்தத்தையும் ஞானத்தையும் சமமாக யுடையவர்கள் என்பது தெளிவு

சண்டாளன் -பிறவி செயல் இவற்றால் இழிந்து கொடூரமான செயல்களையே செய்பவன்

—————-

88–தஸ்யைவம் பூதஸ்ய ஆத்மந பகவஸ் சேஷதகை ரஸதா தந் நியாம்யதா ததேக ஆதாரதா ச தத் தத் சரீர –
தத் தநு ப்ரப்ருதிபிஸ் சப்தை-தத் சாமாநாதி கரண்யேந ச ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாச புராணாதிஷு
ப்ரதிபாத்யதே இதி பூர்வமேவ யுக்தம் —

இந்நிலையை யுடைய ஆத்மா பகவானுக்கு அடிமைப்பட்டு இருப்பவனாகவும் -அவனால் ஏவப்படுபவனாகவும் -அவனையே பற்றுக்கோடாக யுடையவனாயும் இருத்தலால்
அவ்வுடல் அமைப்புக்கள் அந்த ஸாமா நாதி கரணத்தால் பகவானையே காட்டுகின்றன என்பது
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் அறுதியிடப்பட்டு இருக்கிறது என்பது முன்பே விளப்பட்டு விட்டது

———

89–தைவிஹ்யேஷா குணமயி மம மாயா துரத்யயா
மாமேவயே பிரபந்த்யந்தே மாயா மேதாம் தரந்திதே –ஸ்ரீ கீதை -7-14–இதி
தஸ்யை தஸ்ய ஆத்மந கர்ம க்ருத விசித்ர குண மய ப்ரக்ருதி ஸம் சேர்க்க ரூபாத் சம்சாராத் மோக்ஷ
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே
இத்யுக்தம் பவதி நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதிபி ஸ்ருதி பிஸ் ச —

என்னுடைய அலகிலா விளையாட்டால் விளைந்த -முக் குணம் நிரம்பிய இந்தப் பிரக்ருதி மாயா -கடத்தற்கு அரியது
எவர்கள் என்னயே சரணம் அடைகிறார்களோ -பிரபத்தி செய்கிறார்களோ -அவர்கள் இந்தப் பிரக்ருதியைக் கடக்கின்றனர்
செய்த வினைகள் முக்குணத் தொடர்பு அவற்றின் நின்றும் கிட்டும் பல படித்தான பிரகிருதியின் தொடர்பு ஆகிய பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பகவானைச் சரண் அடைவதால் அன்றி -பிரபத்தி செய்வதால் அன்றி-மற்ற ஒன்றால் கிட்டாது எனக் கூறப்படுகிறது
மறை மொழியும் பரமாத்மாவை அடைய வேறு வழி கிடையாது எனப் பகர்கிறது-

————

90—மயாததமிதம் சர்வம் ஜகதவ்யக்த மூர்த்திநா
மத்ஸ்தாநி சர்வ பூதாநி ந சாஹம் தேஷ்வ வஸ்திதா –ஸ்ரீ கீதை
ந ச மத் ஸ்தாநி பூதாநி பாஷ்யமே யோகம் ஐஸ்வர்யம்
இதி சர்வ சக்தி யோகாத் ஸ்வ ஐஸ்வர்ய வை சித்ரியமுத்தம்
ததாஹ-விஷ்டப்யாஹமீதம் க்ருத்ஸனமேகாம் சேந ஸ்திதோ ஜகத் இதி
அநந்த விசித்ர மஹா ஆச்சர்ய ரூபம் ஜகத் மம அயுதாம் சாம்சேந ஆத்ம தயா பிரவிஸ்ய
சர்வம் மத் சங்கல்பேந விஷ்டப்ய அநேந ரூபேண அநந்த மஹா விபூதி அபரிமிதோதோர குண சாகர
நிரதிசய ஆச்சர்ய பூத ஸ்தித அஹம் -இத்யர்த்த –

கட் புலனாகாத என்னால் வியாபிக்கப் பட்ட இவ்வுலகும் பிராணிகளும் என்னிடத்தில் இருக்கின்றன -என்னால் தாங்கப்படுகின்றன -நான் அவைகளால் தாங்கப்படுவதில்லை –
மேலும் இயற்கையாகவே வருகின்ற அளவற்ற செல்வமுடைய என்னை இந்தப் பிராணிகள் அறிவதில்லை
இவ்வாறு ஈஸ்வரனின் எல்லா வல்லமையும் எல்லா ஐஸ்வர்யமும் பெற்றுள்ள ஆச்சர்யமான தன்மை விவரிக்கப் பட்டன
அவ்வாறு இவ்வுலகு முழுவதையும் என்னுடைய ஒரு சிறு பகுதியாலேயே தாங்குகிறேன்
முடிவற்ற ஆச்சர்யமான உருவுடைய இவ்வுலகு எனது சக்தியின் பத்தாயிரத்தின் ஒரு பகுதியின் ஒரு சிறு பகுதியாலேயே உயிரின் உயிராய் நிறைக்கப்பட்டு யாவும் எனது வழுவாத வினைத் திட்பத்தினாலே தாங்கப்படுகின்றன
எல்லை யற்ற ஆச்சர்யமுடைய இவ்வுலகையும் உயிர்களையும் எல்லையற்ற வள்ளன்மை யுடைய நான் செல்வமாகக் கொண்டிருக்கிறேன் என்பது பொருளாகும் –
ஐஸ்வர்யம் -செல்வம்
யோகேஸ்வரம் -இயற்கையாகவே செல்வங்களை உடையனாய் இருத்தல் –

————

91–ததிதமாஹ-ஏகத்வே சதி நாநாத்வம் நாநாத்வே சதி ஸைகதா -அசிந்த்யம் ப்ரஹ்மணோ ரூபம் கஸ்தத் வேதிதும் அர்ஹதி –
இதி பிரசாசி த்ருதவேந ஏக ஏவ சந் விசித்ர சித்சித் வஸ்துஷு அந்தராத்மதயா பிரவிஸ்ய–தத் தத் ரூபேண
விசித்ர பிரகார விசித்ர கர்ம காரயந் நாநா ரூபதாம் பஜதே-
ஏவம் ஸ்வ அல்பாம்சேந து ஸர்வாஸ்சர்யமயம் நாநா ரூபம் ஜகத் தத் அந்தராத்மதயா பிரவிஸ்ய
விஷ்டப்ய நாநாத்வேநா வஸ்திதோபி சந்
அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண -ஸர்வேச்வரேச்வர பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம நாராயண
நிரதிசய ஆச்சர்ய பூத நீல தோய்த்த சங்காச புண்டரீக தல அமலாய தேஷண-சஹஸ்ராம்ஸூ சஹஸ்ர கிரண
பரம வ்யோம்நி தத் அக்ஷரே பரமே வ்யோமந் -இத்யாதி ஸ்ருதி சித்த ஏக ஏவ அதிஷ்டதே —

ஒன்றாய் இருந்தும் பலவாகவும் பலவாறு இருந்தும் ஒன்றாகவும் திகழ்வதான சிந்தனைக்கு எட்டாததுமான ப்ரஹ்மத்தின் வடிவை யாரே அறியத்தக்கவர் –
ஆச்சர்யமான சேதன அசேதன பொருள்களில் உள் நுழைந்து அந்தந்த ஆச்சர்யமான உருவங்களைக் கொண்டு விசித்ரமான செய்கைகளை செய்வித்துத் கொண்டு ஒன்றாகவே இருந்து கொண்டு பலபடி பட்டதாகத் தோன்றும் யாவற்றையும் ஆள்கின்றனனாக -ப்ரஹ்மம் -விளங்குகிறான்-தனது அற்ப ஒரு சிறு பகுதியால் பல ஆச்சர்யங்கள் நிறைந்த பலபடிப் பட்ட உலகை உள்ளுறைந்து தாங்கிக் கொண்டு இருப்பவனாய்
எல்லையற்ற நற் குணங்களுடையவனாய் -ஈஸ்வரர்கள் யாவருக்கும் ஈஸ்வரனாய் -தேவாதி தேவனாய் பர ப்ரஹ்மமாய் எல்லையற்ற ஆச்சர்யங்கள் யுடையவனாய் அளவற்ற ஒளியுடையோனாய் நீருண்ட மேகம் போன்ற மேனியனாய் தாமரை இதழ் ஒத்த கண்களை உடையவனாய் புருஷோத்தமனான நாராயணன் பரமபதத்தில் ஏகாந்தமாக உளுந்து அருளியிருக்கிறான்
வேதங்களில் ஆழ்ந்த கருத்தாய் விளங்குபவன் -மறைந்த முழைகளில் இருப்பவன் பரம பதத்தில் இருக்கிறான் –
அழிவற்ற அவன் பரமபதத்தில் விளங்குகிறான் -இவ்வாறு ஸ்ருதிகளால் தேறிய பொருளாய் விளங்குவோன் ஒருவனே –

ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய கஸ்ய சித் பி வஸ்துந ஏக ஸ்வபாவஸ்ய -ஏக கார்ய சக்தி யுக்தஸ்ய –
ரூபாந்தரயோக ஸ்வ பாவாந்தர யோக -சக்தி யந்திர யோகஸ் ச நகடதே தஸ்ய ஏதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண-
சர்வ வஸ்து விஸாஜாதீய தயா சர்வ ஸ்வாபவத்வம் சர்வ சக்தி யோகஸ் சேதி ஏகஸ்யைவ விசித்ர அநந்த நாநா ரூபதா
ச புநரபி அநந்த அபரிபித ஆச்சர்ய யோகேந ஏக ரூபதா ச ந விருத்தா இதி வஸ்து மாத்ர சாம்யாத்
விரோத சிந்தந யுக்தா இத்யர்த்த –

ப்ரஹ்மம் தவிர்த்த மற்ற எப்பொருளுக்கும் ஒரு படிப் பட்ட பண்பு -ஒரு முகமான செயல் திறன் ஒரே உரு மட்டும் உண்டு -மாறாக மற்றோர் உருமாறு தன்மையும் மாறுபட்ட பண்புகளும் வேறு பட்ட செயல் திறனும் ஏற்படுதல் இல்லை தம்முள் மாறுபட்ட பல படிப்பட்ட பொருள்களின் பண்புடையவனாயும் செயல் திறன் யாவையும் யுடைய ஒன்றாய் எல்லை யற்ற பற்பல ஆச்சர்யமான உருக்கள் உள்ளதாய்
இப்படிப்பட்ட பண்புகள் அனைத்தையும் தன் எல்லையற்ற ஆச்சார்யமான இருப்பு நிலையால் தன் யோக சக்தியால் ப்ரஹ்மம் பெற்று இருத்தல் மாறுபாடு உடையது அல்ல –
பொருட்களில் மாறுபாட்டால் மட்டும் ப்ரஹ்மம் மாறுபாடு உடையது எனக் கொள்ளத் தகாது –

யதோக்தம்
சக்த்ய சர்வ பாவாநாம் அசிந்ய ஞான கோஸரா யாதோதோ ப்ரஹ்மணஸ் தாஸ்து சர்காத்யா பாவ சக்தய பவந்தி
தபாதாம் ஸ்ரேஷ்ட பாவ கஸ்ய யதோஷ்ணதா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இதி -ஏதத் யுக்தம் பவதி -ஸர்வேஷாம் அக்னி ஜலாதீநாம் பாவாநாம் ஏகஸ்மின்நபி பாவே த்ரஷ்டைவ சக்தி தத் விஸாஜாதீய
பாவாந்தரேபி இதி ந சிந்தயிதும் யுக்தா ஜலாதவ் அத்ருஷ்டாபி தத் விசாஜாதீயே பாவகே பாஸ்வரத்வ உஷ்ணத்வாதி சக்தி
யாதாருச்யதே ஏவமேவ சர்வ வஸ்து விஸாஜாதீயே ப்ரஹ்மணி சர்வ சாம்யம் நாநு மாதும் யுக்தம்
இதி அத விசித்ர அநந்த சக்தி யுக்தம் ப்ரஹ்ம இத்யர்த்த ததாஹ
ஜெகதே தந் மஹா ஆச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத் மந தேநாஸ்சர்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத்தை இதி –ஸ்ரீ பாகவதம் –

மேலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
தவசிகளில் சிறந்தவரே -மைத்ரேயரே -தீ நீர் போன்றவற்றில் அவற்றுக்கு என சிறப்பான பண்புகள் இருப்பது போல் நம் மனதிற்கு எட்டாத திறமைகள் யாவும் உடையதாயும் -அவ்வாறே ஆக்கல் அளித்தல் அழித்தல் திறன்களை யுடையதாயும் இருத்தல் ப்ரஹ்மத்திற்கே உரிய பண்பு -என்று கூறப்பட்டு உள்ளது
தீ நீர் போன்றவற்றிற்கு ஒவ்வொரு சிறப்புத் தன்மைகள் இருக்கின்றன
ஆயின் அவற்றின் நின்றும் வேறுபட்ட பொருள்களின் பண்புகள் அவற்றில் காணக் கிடைப்பதில்லை
நீருக்கு அதன் பண்பின் நின்றும் ஒளி விடும் திறன்
இல்லை -அவ்வாறே ஒளிர்தல் வெப்பமடைதல் எனும் பண்புகளை யுடைய தீயில் நீரின் பண்பு காணப்படுவதில்லை
ஆயின் ப்ரஹ்மம் ஒன்றில் மட்டும் இது போன்ற எல்லாப் பொருள்களின் பண்புகளும் திறன்களும் காணப்படும்
அதாவது -விசித்ரமான பண்புகளை யுடையது ப்ரஹ்மம் என்பது விளங்கும்
அவ்வாறே அக்ரூரரும் நம்பி மூத்த பிரானையும் கிருஷ்ணனையும் கோகுலத்தில் நின்றும் அழைத்துச் செல்லுகையில் -ஸ்ரீ மத் பாகவதம் -பல ஆச்சர்யமான உருக்களுடைய இவ்வுலகு உன் உரு -அந்த ஆச்சர்யமான உன் உருவில் கண்ணா நான் கலந்தேன் -என்றார்

————-

92-ததே தத் நாநாவித அநந்த ஸ்ருதி நிகர -சிஷ்ட பரிக்ருஹீத தத் வ்யாக்யான பரிஸ் ஸ்ரமாத் அவதாரிதம்
ததாஹி -பிரமாணாந்தரா பரி த்ருஷ்ட -அபரிமித பரிணாம-அநேக தத்வ நியத க்ரம விஸிஷ்டவ்
ஸ்ருஷ்ட்டி ப்ரலயவ் ப்ராஹ்மண அநேக விதா ஸ்ருதயோ வதந்தி

அப்படிப்பட்ட இது -ப்ரஹ்மம் -சான்றோர் களால் கைக் கொள்ளப் பட்ட எல்லை யற்ற பலபடிப்பட்ட வேதங்களின் திரள் கருத்தாய் அவர்களுடைய உரை நன்கு ஆராய்ந்து நிறுவப் பெற்றதுஅவ்வாறே வேதங்கள் தவிர்த்த மற்ற மெய்யுரைகளால் அறியப்பட முடியாததாயும் -எல்லையற்ற பரிணாமம் யுடையதாயும் பல தத்வங்களின் ஒழுங்கான விதி முறைகள் நிறைந்ததாயும் உள்ள ஆக்கல் அளித்தல் அழித்தல் தொழில்களைச் செய்யும் ப்ரஹ்மம் பலவிதமாக பல வேதங்களில் சொல்லப்படுகிறது –


நிரவத்யம் -நிரஞ்சனம் -விஞ்ஞானம் -ஆனந்தம் -நிர்விகாரம் -நிஷ்க்ரியம் -சாந்தம் -நிர்குணம் -இத்யாதிகா
நிர்குணம் ஞான ஸ்வரூபம் ப்ரஹமேதி காஸ்சந ஸ்ருதயோ அபி ததபி

குற்றமின்மை –தனித்தன்மை நிறைந்த அறிவுடைமை ஆனந்தமுடைமை மாறுபாடின்மை பிளவு படாமை செயலின்மை அமைதியுடைமை தீய பண்புகள் அற்ற தன்மை ஆகிய தீய குணங்கள் அற்ற அறிவுருவானது ப்ரஹ்மம் என்று சில வேதங்கள் மொழிகின்றன

நேஹ நாநாஸ்தி கிஞ்சன ம்ருத்யோஸ் ச ம்ருத்யு மாப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி
யத்ரத்வஸ்ய ஸர்வாத்மைவாபூத் தத்கேந கம்பஸ்யேத் தத்கேந கம் விஜாநீயாத்–இத்யாதிகா
நாநாத்வ நிஷேதவாதிந்ய சாந்தி காஸ்சந ஸ்ருதய

(நிரவத்யம் –கர்ம சம்பந்தம் அற்றது –நிரஞ்சனம்-கர்ம பல சம்பந்தம் அற்றது-நிஷ்க்ரிய-அதனால் நிர் அயவவம் )

(ஸாஸ்த்ர ஞானமும் ஞான பலனும் ஷாந்திக்கு ஹேது -கிரியைகளும் கிரியைகளின் பலமும் அஷாந்திக்கு ஹேது)

பலவாகத் தோன்றும் எதுவும் இல்லை -இதைப் பலவாகக் காண்பவன் அழிவின் நின்று மீண்டும் அழிவையே அடைகிறான்
இங்கு உள்ள பொரு ட் கள் யாவும் அவனே -அதுவே என்று இருக்கையில் அதை எவ்வாறு பிரித்துப் பார்க்க முடியும் எவ்வாறு பிரித்து உணர -அறிய முடியும் -என்று மறுத்துக் கூறும் பல சொற்களும் சில வேதங்களில் இருக்கின்றன –

யஸ் சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமாநி க்ருத்வாபி வதந் யதாஸ்தே –
சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத் புருஷா ததி-

எல்லாம் அறிந்தவன் -எல்லாவற்றிற்கும் அறிவானவன் -அறிவையே தவமாக -நெறியாக -உடையவன் -பொருட்கள் யாவற்றிற்கும் பெயர் உருவங்களைக் கொடுப்பவன் -மின்னொளி பெற்ற பரம புருஷனிடம் இருந்து -கால அளவுகள் -நிமிடங்கள் -தோன்றின

அபஹத பாப்மா விஜரோ வி மிருத்யு விசோகோ விஜிகத்ஸ்ஸோபிபாச சத்யகாம ஸத்யஸங்கல்ப இதி சர்வஸ்மிந்
ஜகதி ஹேய தயா அவகதம் சர்வம் குணம் ப்ரதிஷித்ய-நிரதிசய கல்யாண குண அநந்த்யாம்
சர்வஞ்ஞதாம் சர்வ சக்தி யோகம் சர்வ நாம ரூப வியாகரணம் ஸர்வஸ்ய ஆதாரதாம் காஸ்சந ஸ்ருதய ப்ருவதே

பாபங்கள் அற்றது -கிழத்தன்மை அற்றது அழி வற்று துயர மற்று பசியற்று தாகமற்று நிலை பெற்ற வினைத் திட்பம் யுடையவனாய் -அடைய வேண்டிய தேவைகள் ஏதும் அற்றவனாய்என்றும் உலகின் தீய குணங்களுக்கு எதிர்த்தட்டாய் -நற் குணங்கள் யாவும் நிறைந்தவனாய் -அளவற்ற நற் குணக் கடலாய் -யாவும் நிறைந்தவனாய் -யாவும் அறிந்தவனாய் -எல்லாம் அறிந்தவனாய் எல்லாவற்றிற்கும் பெயர் உருவம் கொடுப்பவனாய் -யாவற்றிற்க்கும் பற்றுக் கோடனாய் என்று சில வேத வாக்யங்கள் கூறுகின்றன –

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநி-
ஐததாத் மியமிதம் சர்வம் ஏகஸ்மிந் பஹுதாவிஜாரா இத்யாதிகா
ப்ரஹ்ம ஸ்ருஷ்டம் ஜகத் நாநாகாரேம் ப்ரதிபாத்ய தத் ஐக்யம் ச ப்ரதிபாத யந்தி காஸ்சந ஸ்ருதய

இவை யாவும் ப்ரஹ்மமேஅது இவற்றைப் படைத்து அழித்து காத்தலைச் செய்வதால் இவை யாவும் ஆதாரமாக உடையது -இவ்வாறு ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்ட இவ்வுலகு பலவிதமாக இருக்கிறது போன்றசில வேத மொழிகள் ப்ரஹ்மத்தின் படைப்பின் பல படித்தான் தன்மையைப் பேசி அதனுடன் ப்ரஹ்மம் ஒன்றி இருத்தலைச் சொல்கின்றன

ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வ
போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா
பிரஜாபதிரகாம யாத பிரஜா ஸ்ருஜயேதி
பதிம் விஸ்வ ஸ்யாத் மேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்
ஸர்வஸ்ய வசீ சர்வஸ் யேசாந இத்யாதிகா ப்ரஹ்மண சர்வஸ்மாத யந்யத்வம் ஸர்வஸ்ய ஈஸி தத் யத்வம் ஈஸ்வரத்வம்
ச ப்ரஹ்மண -ஸர்வஸ்ய சேஷதாம் பதித்வம் ச ஈஸ்வரஸ்ய காஸ்சந் ப்ரதிபாத யந்தி
அந்தப் ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜெநாநாம் சர்வாத்மா -ஏஷத ஆத்மா அந்தர்யாம் அம்ருத
ஆத்மாவையும் அதைத் தூண்டுவோனையும் தனித் தனியானவை என்று அறிவாயாக –
துய்ப்பவன் துய்க்கப்படும் பொருள் துய்க்கச் செய்பவன் இருப்பதை அறிவாயாக
ப்ரஜாபதி ப்ரஜைகளைப் படைக்க விரும்பினான்
உலகிற்கும் தனக்கும் தனிப் பெரும் தலைவன் -நிலையானவன் -மங்களமானவன் -அண்டினாரை நழுவ விடாதவன் –
ஈஸ்வரர்கள் என்று கூறப்படுபவர்களின் நின்றும் வேறுபட்ட மஹேஸ்வரன்
தேவர்கள் எனப்படுவோரிலும் வேறுthevanதேவன்
எல்லோரையும் தன் வசப்படுத்துவோன்-எல்லாருக்கும் தான் வசப்படாதவன் எல்லோருக்கும் ஆள்பவனாய் இருப்பவன் -எல்லாவற்றையும் தன் செல்வமாக உடைyentruyellaameஎல்லாம்
ப்ரஹ்மம் எல்லாவற்றிலும் உட் புகுந்து இருத்தலையும்
எல்லாவற்றுக்கும் தலைவனாக இருத்தலையும்
இவை யாவற்றையும் தன் செல்வமாக அடைந்து இருத்தலையும் விளக்கி ப்ரஹ்மத்தின் எல்லாவற்றையும் ஆளுதல்
எல்லாவற்றையும் செல்வமாக உடைமை
எல்லாவற்றுக்கும் தலைமை
ஆகிய சிறப்புக்களை சில மறை மொழிகள் பறை சாற்றுகின்றன
இந்த ஆத்மா எல்லாவற்றிற்கும் நிலை பெற்று இருப்பவன்
இந்த ஆத்மா உள் இருப்பவன் அமுதமானவன் அழிவற்றவன்

யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆப சரீரம் யஸ்ய தேஜஸ் சரீரம் இத்யாதி
யஸ்ய அவ்யக்தம் சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யு சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் இதி
ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ப்ரஹ்மணஸ் ச சரீராத்ம பாவம் தர்சயந்தி காஸ்சந இதி
நாநா ரூபாணாம் வாக்யாநாம் அ விரோத முக்யார்த்த பரித்யாகஸ் ச யதா சம்பவதி ததைவ வர்ணனீயம் –

எவனுக்கு நிலம் உடலோ -எவனுக்கு நீர் உடலோ -எவனுக்கு தீ உடலோ -என்றும்
எவனுக்கு மூலப் ப்ரக்ருதி -கட் புலனாகாதது -உடலோ -எவனுக்கு ஆத்மா உடலோ -எவனுக்கு அழியும் ம்ருத்யு யமன் -உடலோ -எவனுக்கு உலகு உடலோ -என்று
ப்ரஹ்மம் தவிர்த்த மற்றை யாவும் அதற்கு உடலாகவும் அது அவற்றுக்கு உயிராகாவும் உறையும் தன்மையை சில வேத வாக்யங்கள் காட்டுகின்றன –
இவ்வாறு பலவாறு ப்ரஹ்மத்தின் நிலை கூறும் மொழிகளில் ஒன்றுக்கு ஓன்று கருத்து மாறுபடாது -முக்யமான பொருளைக் கை -விடாது எவ்வாறு அதன் நிலை தேறுகிறதோ
அதை ஆராய்வோம் –

வர்ணிதம் ச -அதிகார ஸ்ருதய ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா–நிர்க்குண வாதாஸ் ச பிராகிருத ஹேய குண நிஷேத
விஷய தயா வ்யவஸ்திதா நாநாத்வ நிஷேத வாதாஸ் ச ஏகஸ்யைவ ப்ரஹ்மண சரீர தயா பிரகார பூதம் சர்வம் சேதன அசேதனம் வஸ்த்விதி
சர்வஸ்யாத் மதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்திதமிதி ஸூ ரஷிதா-சர்வ விலக்ஷணத்வ பதித்தவ ஈஸ்வரத்வ-கல்யாண குணாகரத்வ –
ஸத்ய ஸங்கல்பத்வாதி வாக்யம் ததப்யுபகமாதேவ ஸூ ரஷிதாம் ஞான ஆனந்த மாத்ர வாதிச -ச்ரவஸ்மாதந் யஸ்ய சர்வ கல்யாண
குணாஸ்ரயஸ்ய சர்வேஸ்வரஸ்ய சர்வ சேஷிணே -சர்வ ஆதாரஸ்ய சர்வ உத்பத்தி ஸ்திதி ப்ரலய ஹேது பூதஸ்ய
நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய சர்வாத்ம பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூபநி ரூபக தர்ம -மல ப்ரத்யநீக அநந்த ரூப
ஞானமேவேதி ஸ்வ பிரகாச தயா ஸ்வரூபமபி ஞானமேவேதி ச ப்ரதிபாதநாத் அநு பாலிதம் ஐக்ய வாதாஸ் ச
சரீராத்ம பாவேந சாமாநாதி கரண்ய -முக்யார்த்ததோப பாதநாதேவ ஸூஸ்திதா —

(இரண்டுமே சம ப்ராதான்யம் என்பதால் அபஹத பாப்மாதகாதிகளையும் சொல்லி ஸத்ய காமத்வம் ஸத்ய சங்கல்பத்துவம் ஒரே வாக்கியத்தில் சொல்லிற்று)

இது இவ்வாறு விவரிக்கப் படுகிறது
ப்ரஹ்மம் மாறுபாடு அற்றது என்னும் மொழிகளால் அதன் உள்ளுரு -ஆத்ம ஸ்வரூபம் -மாறு படாது இருத்தல் கருப் பொருளாய்க் கொள்ளப் படுகிறது
குணம் அற்றது என்று வாதிக்கும் மொழிகள் உலகியலின் இழி குணங்கள் சிறிதும் இன்மையைப் பேசுகின்றன
பலப்படிப் பட்டதாய் இருத்தலை மறுக்கும் வாக்கியங்களில் ஒரே ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதனப் பொருட்கள் நிலை பெற்று
அவற்றுள் நுழைந்து வதிதல் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
மற்றவற்றின் நின்றும் மாறுபட்டு அவை யாவற்றுக்கும் தலைவனாய் -அவற்றைத் தன் உடைமைகளாய்க் கொண்டு நற் பண்புகளின் கடல் எனத் திகழ்தல் -பிழை படா வினைத் திட்பம் உடைமை போன்ற சொற்களால் அதன் பண்புகள் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் மாறு பட்டது -நற் குணங்கள் யாவற்றுக்கும் இருப்பிடமானது -எப்பொருளையும் தன் உடைமையாய்க் கொண்டது -எதனையும் தன் அடிமை கொள்ள வல்லது – யாவற்றிக்கும் பற்றுக் கோடானது -யாவற்றிற்கும் ஆக்கல் அளித்தல் அழித்தலுக்கு காரணமானது குற்றங்கள் அற்றது -மாறு பாடு அற்றது -எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பது -என்றும்
தனது அறுதியிடும் பண்பாக மலங்கள் அற்றதும் -ஞான ஆனந்தமே உரு வெடுத்ததாய் -தானே ஒளிர்வதாய் -ஞான மயமாய் இருக்கும் தன்மையைக் கொண்டதாய் ஞான ஆனந்தம் உள்ளது என்றும் -ஞான ஆனந்தம் மட்டுமே ப்ரஹ்மம் என்று அறுதியிடும் சொற்களும் உறுதி செய்கின்றன
ஐக்ய வாதத்தால் -ஒன்றே உண்டு எனக் கொள்வதால் -உடல் உயிர் தொடர்பால் -ஸாமா நாதி கரணம் -ஆகுபெயர் திரள் பொருளாய் நன்கு விளங்குகிறது

—————–

93–ஏவம் ச சதி அபேதா வா போதோ வா வ்யாத்யாத்ம கதாயா வா -வேதாந்த வேத்ய-கோயம் அர்த்த சர்மர்த்திதோ பவதி ?<br>ஸர்வஸ்ய வேத வேத்யத்வாத் சாவம் சமர்த்திதம் -சர்வ சரீரதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்த்திதம் இதி -அபேத சமர்த்தித-<br>ஏகமேவ ப்ரஹ்ம நாநா பூத சித் அசித் வஸ்துப் பிரகாரம் நாநாத் வேந அவஸ்திதம் இதி பேதா பேதவ்<br>அசித் வஸ்து நஸ் ச சித் வஸ்து நஸ் ச ஈஸ்வரஸ்ய ச ஸ்வரூப ஸ்வபாவ வை லஷண்யாத் அசம்காராஸ் ச பேத சமர்த்திதா

இக் கூற்றுக்களால் ஓரே படித்தாய் இருத்தலா அபேதமா -பல படித்தாய் இருத்தலா பேதமா -இரண்டும் கலந்ததா -எது வேதாந்தத்தால் இங்கு நிறுவப்படுகிறது -என்று கேட்டால்
இவை யாவும் மறை மொழிகளாதலால் இவை aயாவுமே கொள்ளப் பட வேண்டும் எதுவும் தள்ளப்பட லாகாது –
எல்லாவற்றையும் உடலாகக் கொண்டு அவற்றின் நின்றும் பிரிவற்ற நிலையில் ப்ரஹ்மம் ஒன்றே உறைகிறது என்பதால் பேதமின்மையும் ஒரே ப்ரஹ்மம் பல உருவங்களுடைய சேதன அசேதன பொருள்களில் பலவகையாக உறைந்து விளங்குகிறது -என்பதால்
பேதா பேதமும்
சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் வேறுபட்டு அவற்றுக்கு உடமைகாரனாய் விளங்கி அவற்றின் நின்றும் உருவாலும் உயிராலும் வேறுபட்டு இருப்பதால் பேத வாதமும் ஒத்துக் கொள்ளப் படுகிறது

———–

94–நநு ச -தத்வமஸி ஸ்வேத கேதோ -தஸ்யதா தேவ சிரம் -இதி ஐக்ய ஞான மேவ பரம புருஷார்த்த லேசான மோக்ஷ சாதனம்
இதி கம்யதே நைத தேவம் -ப்ருதகாத்மாநம் பிரேரிதாரம் சமதவா ஜூஷ்டஸ்தஸ்தே நாம்ருதத்வமேதி
இதி ஆத்மாநம் பிரேரிதாரம் ச அந்தர்யாமிணம் ப்ருதக்மத்வா தத ப்ருதக்த்வ ஞானத்தோதோ தேந பரமாத்மநா ஜூஷ்ட அம்ருதத்வமேதி
இதி சாஷாத் அம்ருதத்வ பிராப்தி சாதனம் ஆத்மந நியந்துஸ் ச ப்ருதக்பாவ ஜினாமம் இத்யவகம்யதே
ஐக்ய வாக்ய விரோதாத் ஏதத் ஏதத் அபரமார்த்த ச குண ப்ரஹ்ம பிராப்தி விஷயமிதி அப்யுப கந்தவ்யம்
இதி சேத் ப்ருதக் ஞானஸ்யைவ சாஷாத் அம்ருதத்வப் பிராப்தி சாதனத்தவ ஸ்ராவணாத் விபரீதம் கஸ்மாத் ந பவதி –

அவ்வாறு இல்லை -நீயே அதுவாகிறாய் ஸ்வேத கேது -உபாஸிப்பவனுக்கு -அதுவரை hடான் -ஐக்ய ஞானம் அடையும் வரை தான் -கால விளம்பம் -உடலை நீத்தவுடன் ப்ரஹ்மமாகவே ஆகி விடுகிறான் என்று –
ஒன்றேனும் அறிவே பெறற்கு அரிய பேர் ஆனந்த மோக்ஷத்தை அடைவிக்கும் ஸாதனமாகிறது -என்று கூறுவீர்களாகில் -அத்வைதிகள்-அவ்வாறும் இல்லை –
ஆத்மாவையும் அதை ஆள்பவனையும் தனித் தனியானவர்கள் என அறிந்து -அவன் அருளுக்கு இலக்காகி -மோக்ஷம் அடைகிறான் -என்று ஆத்மாவின் உள்ளுறைவோனாய் -அதை ஆள்பவன் வேறுபட்டு விளங்குகிறான் என்பதை உணர்ந்து அந்த வேறுபட்ட ஞானத்தாலேயே அந்தப் பரமாத்மாவை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருக்கிறது
ஆயினும் உலகம் ஒருபடித்தானது என்ற அபேத ஞானத்தாலே மேலான மோக்ஷத்தை அடைகிறான் என்றும்
அதற்கு மாறாக உலகம் பல படித்தானது என்னும் பேத ஞானத்தாலே தாழ்ந்த குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை அடைதலாகும் என்பீராகில்
பேத ஞானத்தால் மோக்ஷத்தை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருப்பதால் -அபேத ஞானத்தால் அவ்வாறு கூறப்படவில்லை -அதற்கு aமாறுபாடான கருத்துக் கொள்வது விபரீதமாகும் ஆகையால் ஐக்ய ஞானத்தால் கிடைப்பது தாழ்ந்த மோக்ஷம் என்று ஏன் கொள்ளக் கூடாது –

ஏதத் யுக்தம் பவதி -த்வயோ துல்யயோ விரோதே சதி அவிரோதந தயோ விஷய விவேச நீய -இதி கதம விரோத இதி சேத்
அந்தர்யாமி ரூபேண அவஸ்தித தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண சரீர தயா பிரகாரத்வாத் ஜீவாத்மந-தத் பிரகாரம் ப்ரஹ்ம ஏவ தவம்
இதி சப்தேந அபி தீயதே ததைவ ஞாதவ்யம் இதி தஸ்ய வாக்யஸ்ய அர்த்த ஏவம் பூதாத் ஜீவாத் ததாத்மதயா அவஸ்தி தஸ்ய
பரமாத்மநோ நிகில தோஷ ரஹிததயா ஸத்யஸங்கல்பத்வாத் யநவதிக யதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரத்தவே
ந ச ய ப்ருதக்பாவ ஸோநுசந்தேய இதி அஸ்ய வாக்யஸ்ய விஷய இத்யயமர்த்த பூர்வமேவ அஸக்ருத் யுக்த –

இதை விளக்குவோம் -ஒத்த பலமுடைய இரு கருத்துக்கள் ஒன்றுக்கு ஓன்று மாறுபாடாகத் தோன்று மாகில் -அவற்றின் மாறுபாடுகளை விலக்கி -இரு கருத்துக்களுக்கும் ஏற்பப் பொருள் கொள்ளுதலே தகுந்தது –
மாறு பாடு எங்கே தோன்றுகிறது எனில்
ஆத்மாவில் உள்ளுறைவோனாக பர ப்ரஹ்மம் இருக்கிறது -அதற்கு உடல் என்னும் நிலையில் அதின் நின்றும் பிரிவற்றதாக ஆத்மா விளங்குகிறது
இது முறையே -தத் -அது -த்வம் -நீ என்ற சொற்களால் கூறப்படுகிறது-இதை அறிவதே மெய் ஞானம் என்பதே பொருள் -இவ்வாறு பிராணிகளின் உயிர்களுக்கும் அதன் உள்ளுறைவோனாகவும் குற்றங்களுக்கு எதிர்த்தட்டாயும் -மெய்யான வினைத் திட்பம் உடையோனாகவும் -எல்லையற்ற அதிசயமான நற் குணங்களை யுடையோனாகவும் -தனித்தன்மை இங்கு கொள்ளத் தக்கது –
இதுவே இவ் வாக்கியத்தின் பொருள் -இது முன்பே பலதடவை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது –

———–

95–போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா-இதி போக்ய பூதஸ்ய வஸ்துந அசேதனத்வம் பரார் தத்வம்-சதத விகாராஸ்ப தத்வம் –
இத்யாதய ஸ்வபாவா போக்து ஜீவாத்மநஸ் ச அமல அபரிச்சின்ன ஞான ஆனந்த ஸ்வ பாவஸ்யைவ அநாதி கர்ம ரூபா வித்யாக்ருத
நாநாவித ஞான சங்கோச விகாசவ் போக்ய பூதா சித் வஸ்து சம்சர்க்கஸ் ச பரமாத்மா உபாஸநாத் மேஷஸ் ச இத்யாதய
ஸ்வ பாவா ஏவம் பூத போக்த்ரு போக்யயோ அந்தர்யாமி ரூபேண அவஸ்தாநம் ஸ்வரூபேண
ச அபரிமித குணவ்க ஆஸ்ரயத்வேந அவஸ்தானம் இதி பரஸ்ய ப்ரும்ஹண த்ரிவிதா வஸ்தாநம் ஞாதவ்யம் இத்யர்த்த —

துய்ப்பவன்- துய்க்கப்படுவது -இவற்றைத் துய்க்கச் செய்பவன் -என்பதை அறிந்து என்பதால் துய்க்கப்படும் பொருட்கள் அறிவற்றவையாகவும் -பிறருக்கே யாகவும் -எப்பொழுதும் மாறுபாடு அடைந்து கொண்டு இருப்பவை யாகவும் இருத்தலே அவற்றின் பண்புகள் ஆகின்றன –
துய்ப்பவன் -ஜீவாத்மா -குற்றமற்று அளவற்ற ஞானத்தையும் -ஆனந்தத்தையும் -பண்புகளாய்க் கொண்டவனாய் -துவக்கற்ற வினையின் அடியாகப் பிறந்த -பல படித்தான ஞானச் சுருக்கையும் விரிவையும் உடையோனாய் அசேதன பொருட்களைத் துய்ப்போனாய் பரமாத்மாவை உபாஸித்து வீடு பேறு அடைதலைத் தன் செயல்களாக உடையவனாய் இருக்கிறான்
இவ்வாறு துய்ப்பவன் -துய்க்கப் படுவதற்கு உள்ளுறைவோனாக இருந்து கொண்டு -தன் மெய்யுருவில் அளவற்ற நற் குணங்களுக்கு இருப்பிடமாய் இருத்தல் ப்ரஹ்மத்தின் பண்பு -இவ்வாறு மூன்று படிப்பட்ட பொருள்கள் அறியத் தக்கவை என்பது பொருள்-

—————-

96 —தத்வமஸி -இதி சத் வித்யாயாம் உபாஸ்யம் ப்ரஹ்ம ச குணம் ச குண ப்ரஹ்ம பிராப்திஸ் ச பலம் –
இத்யபியுக்தை பூர்வாசார்யை வ்யாக்யாதம்

அது நீயாகிறாய் -தத்வமஸி -என்ற வாக்யத்திற்கு பண்புகளுடன் கூடிய உபாஸனையால் -பண்புகள் நிறைந்த ப்ரஹ்மத்தை இடையறாது தியானித்து உயர்வற உயர் நலம் உடைய ப்ரஹ்மத்தையே அடைதல் என்று முந்தையோர் உரைகளில் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது –
யதோக்தம் வாக்யகாரேன-யுக்தம் தத் குணக உபாஸநாத் -இதி வ்யாக்யாதம் ச த்ரமிட ஆச்சார்யேனே வித்ய விகல்பம் வததா-
யத்யபி சச்சித்தோ ந நிர்புக்ண தைவதம் குண கணம் மனசா அநுதாவேத் தாதாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே
இதி தத்ரபி ச குண ஏவதா ப்ராப்யதே -இதி சச்சித்த ஸத்வித்யா நிஷ்ட –
ந நிர் நிர்புக்ணதைவதம் குண கணம் மனசாநுதா வேத்-
அபஹத பாப்மத்வாதி கல்யாண குண கணம் தைவதாத் விபக்தம் யத்யபி தஹர வித்யா நிஷ்ட இவ
சச்சித்தோ நஸ்மரேத் ததாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே-தேவ ஸ்வரூப அநு பந்தித்வாத்-
சகல கல்யாண குண கணஸ்ய கேநசித் பரதேவதா அசாதாரண்யேந நிகில ஜகாத் காரணத்வாதிந குணேன உபாஸ்யமாநோபி
தேவதா வஸ்துந ஸ்வரூப அநு பந்தி சர்வ கல்யாண குண விஸிஷ்ட ஏவ உபாஸ்யதே அத ச குணம் ஏவ ப்ரஹ்ம
தத்ராபி ப்ராப்யம் இதி ஸத்வித்யா தஹர வித்யயோ விகல்ப இத்யர்த்த –

இதை ஒட்டியே வாக்யகாரரும் -அந்த குணங்கள் இடையறாது தியானிப்பதே தகுந்தது -எனக் கூறி யுள்ளார் –
உரையாசிரியர்களான த்ரமிடாச்சார்யரும் இதையே இடையறாத த்யான நெறிகளில் -வித்யைகளில் -மாறுபாடுகள் இல்லை என்கிறார் –
உபநிஷத்துக்களில் 32 ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -அவற்றில் ஸத் வித்யையும் தஹர வித்யையும் அடங்கும் –
ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் ப்ரஹ்மத்தின் செயல்பாட்டுப் பண்புகளை மனத்தில் கொள்கிறார்கள்
அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள்ப்ரஹ்மத்தின் வெளிப்படையான பண்புகளை நினைக்கிறார்கள் –
ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் பாபம் சிறிதும் அற்றல் போன்ற நற் குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை பக்தி செய்கிறார்கள் –
அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள் இந்த பண்புகளை நினைக்காமல் ப்ரஹ்மத்தின் உள்ளுறை பண்புகளை ஸ்துதிக்கிறார்கள் –
தேவனுடைய உள்ளுரு நற் குணங்கள் யாவும் நிறைந்தது என்பதால் அதன் சிறப்புக் குணங்களான உலகின் காரணப் பொருளாய் இருப்பது போன்றவைகளும் உள்ளுருவிற்கு எப்பொழுதும் யுடைய நற் குணங்கள் யாவும் இடையறாது த்யானிக்கப் படுகின்றன –
ஆகையால் எந்த விதமாக இடையறாத த்யானம் அமைந்தாலும் அதனால் உபாஸிக்கப் படுவதும் அவ்வாறு த்யானிக்கப் படுவதும் அதனால் அவர்கள் இறுதியில் அடைவதும் உயர்வற உயர்நலம் உடைய ப்ரஹ்மத்தையே நெறிகளில் மட்டும் மாறுபாடு உள்ளது என்பதே பொருள் –

————-

97–நநு ச ஸர்வஸ்ய ஐந்தோ பரமாத்மா அந்தர்யாமி தந் நியாம்யம் ச சர்வம் -இத்யுக்தம் –
ஏவம் ச சதி விதி நிஷேத சாஸ்த்ராணாம் அதிகாரி ந த்ருச்யதே ய ஸ்வ புத்யைவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸக்த-
ச ஏவம் குர்யாத் ந குர்யாதிதி விதி நிஷேத யோக்ய ந ஸைஷ த்ருச்யதே -சர்வஸ்மிந் ப்ரவ்ருத்தி ஜாதி
ஸர்வஸ்ய பிரேரக பரமாத்மா காரயிதா -இதி தஸ்ய சர்வ நியமனம் ப்ரதிபாதிதம் ஸ்ரூயதே ச ஏஷ ஏவ சாதுகர்ம காராயதி
தம்யமேப்யோ லோகேப்யே உந்நிநீஷதி ஏஷ ஏவ அசாது கர்ம காராயதி தம் யமதோ நிநீஷதி
இதி சாத்வ சாது கர்ம காரயித்ருத்வாத் நைர் க்ருண்யம் ச –

பிராணிகள் யாவற்றிலும் உள்ளுறைந்து அவற்றை ஏவல் கொள்கிறான் -என்பதால்
விதித்தல் தடுத்தல் ஆகிய வற்றைச் செய்பவர் என்று ஒருவரும் காணப்படுவதில்லை
பரமாத்மா தானே ஒருவரை ஒன்றில் ஈடுபடுத்தலும் விலக்கலும் செய்வதால் சில செயல்களைச் செய்விப்பவதும் செயல்களில் நின்றும் விலக்குதலும் ஆகிய விதித்தல் தடுத்தல் இங்கு காணப்படுவதில்லை ஏன் எனில் யாவற்றையும் செயல் படத் தூண்டுபவன் பரமாத்மாவே யாதலால் யாவும் அவன் செயல் என்று கொள்ளப்படும் –
வேதத்திலும் இப்படிப்பட்ட நற் கருமங்கள் செய்பவன் உலகில் உயர்த்தப் படுகிறான் -இப்படிப் பட்ட தீய செயல்களைச் செய்பவன் தாழ்த்தப் படுகிறான் என்று கூறப்பட்டுள்ளது -இவ்வாறு ஒருவரை நற் செயல்களும் மற்ற ஒருவரை தீய செயல்களைச் செய்யத் தூண்டுவதால் ஈஸ்வரனுக்கு நடு நிலைமை தவறுதல் ஏற்படும்

அதிர உச்யதே -ஸர்வேஷாமேவ சேதநாநாம் சிச் சக்தி யோக ப்ரவ்ருத்தி சக்தி யோக -இத்யாதி
சர்வம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரிகரம் சாமாந்யேந சம்பவித்தாய தந் நிர்வஹணாய-தத் ஆதாரோ பூத்வா அந்தப் பிரவிஸ்ய
அநுமந்த்ரு தயா ச நியமனம் குர்வந் -சேஷித்வேந அவஸ்தித பரமாத்மா ஏததாஹித சக்திஸ் ஸந் ப்ரவ்ருத்தி நிவ்ருத்யாதி
ஸ்வயமேவ குருதே-ஏவம் குர்வாண மீஷமாண பரமாத்மா உதாசீந ஆஸ்தே அத சர்வம் உபபந்நம் –

அது அவ்வாறு அல்ல -எல்லாச் சேதனப் பொருள்களுக்கும் உயிர் எனும் ஞானப்பொருள் காணப்படுவதால் அவற்றுக்கு -உடல் புலன்களைக் கொண்டு -ஒரு செயலை செய்வதற்கு திறமை ஏற்படுகிறது –
ஒரு செயலில் ஈடுபடுவதற்கும் அதினின்று விலகுவதற்கும் ஆன அறிவு ஏற்படுகிறது -இவற்றை அளித்த ஸர்வேஸ்வரன் உள்ளிருந்து கொண்டு ஆத்மா விரும்பிய செயலைச் செய்ய அனுமதி அளித்து தான் நடு நிலையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறான் –
இதனால் அவன் அளித்த உடல் புலன்கள் அறிவு இவை பலனுடையவை ஆகின்றன-

சாத்வ சாது கர்ம காரயித்ருத்வம் து வ்யவஸ்தித விஷயம் ந சர்வ சாதாரணம் –
யஸ்து பூர்வம் ஸ்வயமேவ அதி மாத்ரம் ஆநு கூல்யே ப்ரவ்ருத்த தம் பிரதி ப்ரீதி -ஸ்வயமேவ பகவான்
கல்யாண புத்தி யோகதானம் குர்வந் கல்யாணே ப்ரவர்த்தயதி
ய புந அதி மாத்ரம் பிராதி கூல்யே ப்ரவ்ருத்த தஸ்ய து க்ரூராம் புத்திம் ததந் ஸ்வயமேவ க்ரூரேஷ் வேவ கர்மஸூ பரேரயதி பகவாந்
நற் செயல்களைப் புரிதல் என்பது எல்லோருக்கும் ஏற்படுவது இல்லை
எவர் முற் பிறப்பில் ஸாஸ்த்ரங்களில் கூறியபடி-விதிக்கப்பட்டவற்றை பெரும் அளவில் செய்து இருக்கிறாரோ -அவருக்கு நற் புத்தியையும் -நற் செயல்களில் விருப்பத்தையும் ஏற்படுத்துகிறான் –
அப்படியே எவர் அதிக அளவில் தீயச் செயல்கள் செய்திருக்கிறாரோ அவருக்கு கொடுமையான புத்தியைக் கொடுத்து -தானே கொடுமையான செயல்களிலே ஈடுபடுத்துகிறான் –

யதோக்தம் பகவதா-தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் தாதாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே
தேஷாமேவாநுகம் பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாஸாயாம் யாத்ம பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா
தா நஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம் யஜஸ்ரம ஸூபாந் ஆஸூரீஷ் வேவ யோநிஷு இதி –

அவ்வாறே பகவத் கீதையில்
என்னிடம் எப்பொழுதுமே சேர்ந்து இருக்க விரும்புகிறவர்களுக்கும் பக்தி செலுத்துவோருக்கும் என்னை அடைவதற்கு வழி காட்டியான பரமாத்மா பற்றிய ஞானத்தை -பர ஞானத்தை -விருப்புடன் அளிக்கிறேன்
அப்படிப்பட்ட பக்தியில் ஒன்றி இருப்பவர்களிடம் என் அருளினாலேயே அவர்கள் மனதுக்கு உகப்பானவனாய் எனது ஞானமாகிற ஒளி விளக்கால் பண்டை வினைகளால் உண்டான அஞ்ஞானமாகிற அந்தகாரத்தை அழிக்கிறேன்
என்னை வெறுப்பவர்களை கொடியவர்களாய் மாந்தரில் கடையராய் அமங்கலமானவர்களாய் ஆகும்படி தொடர்ந்து பிறப்பு இறப்புகளைக் கொடுத்து அசுரப் பிறவிகளில் தள்ளுகிறேன் என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது

———————

98–சோயம் பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம நிரதிசய புண்ய சஞ்சயஷீண -அசேஷ ஜென்ம உபசித பாபராஸே
பரம புருஷ சரணாரவிந்த -சரணாகதி ஜெநித ததாபி முக்யஸ்ய -தத் ஆச்சார்ய உபதேச உப ப்ரும்ஹிதா சாஸ்த்ராதி கத
தத்வ யாதாத்ம்ய அவ போத பூர்வக -அஹர் அஹர் ரூப சீயமாந -சம தம தப ஸுவ்ஸ-ஷம-ஆர்ஜவ -பய அபய ஸ்தாந விவேக தயா –
அஹிம் சாத்யாத்ம குணா பேதஸ்ய-வர்ணாஸ்ரம உசித பரம புருஷ ஆராதன வேஷ-நித்ய நைமித்திக கர்ம உப சங்ஹ்ருதி –
நிஷித்த பரிகார நிஷ்டஸ்ய-பரம புருஷ சரணார விந்தை யுகள ந்யஸ்தா
ஆத்மாத்மீயஸ்ய தத் பக்தி காரிதா நவரதஸ்துதி -ஸ்ம்ருதி -நமஸ் கிருதி யதந கீர்த்தன குண ஸ்ரவண -வசந-த்யான –
அர்ச்சன பிரணாமாதி ப்ரீதி பரம காருணிக புருஷோத்தம பிரசாத வித்வஸ்தஸ்வாந் தஸ்ய அநந்ய ப்ரயோஜன
அநவரத நிரதிசயப் பிரிய விசத தம ப்ரத்யக்ஷதா பந்ந அநு த்யான ரூபக்த்யைக லப்ய —

இப்படிப்பட்ட பர ப்ரஹ்மமான புருஷோத்மன் -எல்லையற்ற நற் செயல்களைச் செய்தவனாய் -பிறப்பினால் வந்த வினைத்தொடர் சிறிதும் அற்றவனாய் -பரம புருஷனுடைய திருவடித் தாமரைகளையே சரணம் அடைந்தவனாய் -அதில் ஊற்றம் உடையோனாய் அதனால் தூண்டப்பட்டு ஓர் நல்லாசிரியனை அடைந்து அவனால் உபதேசிக்கப் பட்ட ஸாஸ்த்ரங்களின் அடியாக மெய்ப் பொருளை உணர்ந்தவனாய் தினம்தோறும் வளர்கின்ற புலன் அடக்கம் -புலன்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுதல் -ஸாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விரதங்களை மேற் கொண்டு மனத் தூய்மை யாதல் -உடல் சொல் செயலால் தூய்மையாய் இருத்தல் -மனம் மொழி மெய்களால் ஒருப்பட்டு இருத்தல் – அஞ்சுவது அஞ்சாமை பகுத்து அறிதல் -இரக்கம் பிறருக்குத் துன்பம் நினையாது இருத்தல் பொறை ஆகிய நற் குணங்கள் கைவரப் பெற்றவனாய் -தனக்கு ஏற்ப வர்ணாஸ்ரம நெறிகளைக் கடைப் பிடிப்பவனாய் பரம புருஷனை ஆராதிப்பவனாய் -நாள் தோறும் மற்றும் சிறப்பான நாட்களிலும் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்பவனாய் -விலக்கப்பட்ட செயல்களின் நின்றும் விலகியவனாய் -பரமபுருஷனுடைய திருவடித் தாமரைகளில் தனது உடல் உயிர்ச் சுமைகள் யாவையும் வைத்தவனாய் -அந்த பக்தி மேலீட்டில் இடைவிடாது ஸ்துதித்தல் -நினைத்தல் -வணங்குதல் -அதற்கான முயற்சிகளைச் செய்தல் -அவன் புகழ் பாடுதல் -அவன் பண்புகளைக் கேட்டல் -அவனைப் பற்றியே பேசல் -இடைவிடாது மனத்திருத்தல் அர்ச்சித்தல் தண்டன் இடுதல் -இவற்றால் மனம் உகந்து ஈசனால் தன் மன இருள் நீங்கியவனாய் -வேறு பலன்களை எதிர் நோக்காது -என்றும் எல்லாவற்றிலும் அன்புடையவனாய் -அவனுடைய திரு உருவை -மிகத் தெளிவாக நேரே காண்பது போன்ற நிலையை பக்தியுடன் கூடிய தியானத்தால் அடைய முடியும்-

————–

99–ததுக்கதம் பரம குருபிஸ் பகவத் யாமுனாச்சார்ய பாதவ் –
உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய -இதி ஞான யோக கர்ம யோக
ஸம்ஸ்க்ருத அந்தக் கரணஸ்ய–இத்யர்த்த –

அதை ஒட்டியே பரம ஆச்சார்யனும் மதிப்புக்கு உரியவரான யமுனாச்சார்யரும் -கர்ம ஞாந யோகங்களைச் செய்து -அதனால் தூய்மை யடைந்த மனத்துடன் ஒரே நினைவாக -நிலை நிற்கிறவராலேயே எம்பெருமான் அடையத் தக்கவன் -என்று கூறி இருக்கிறார் -ஞான கர்ம யோகங்களால் நன்கு பண் படுத்தப்பட்ட மனம் -என்று பொருள் –
ததாச ஸ்ருதி —
வித்யாஞ்ச அவித்யாஞ்ச யஸ் தத்வே தோபயம் ஸஹ அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ்நுதே –இதி –
அத்ர அவித்யா சப்தேந வித்ய இதரத் வர்ணாஸ்ரம ஆசாராதி பூர்வோக்தம் கர்ம உச்யதே
வித்யா சப்தேந பக்தி ரூபாபந்ந த்யானம் உச்யதே —

அவ்வாறே வேதமும் -ஞானம் கர்மம் இரண்டும் ஒன்று என்று அறிபவர் கர்மத்தினால் பிறவிச் சூழலைக் கடந்து ஞானத்தால் அழிவற்ற நிலை எய்துகிறார் –
இங்கு அவித்யை என்ற சொல்லால் வித்யையாகிற ஞானத்தின் நின்றும் வேறுபட்ட வர்ணாஸ்ரம தர்மங்களுக்கு ஏற்ற செயல்கள் சுட்டிக் காட்டப் படுகிறது
வித்யை என்பது பக்தியே உருவெடுத்த ஞானம் என்று சொல்லப்பட்டது –

யதோக்தம் -இயாஜஸோபி ஸூ பஷந் யஞ்ஞாந் ஞாந வ்யாபாஸ்ரய –
ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்த்தும் ம்ருத்யும் அவித்யயா இதி
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நாந்யப் பந்தா அயநாயா வித்யதே
ய ஏநம் விதுரம்ருதாஸ்தி பவந்தி –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி -இத்யாதி வேதந சப்தேந த்யானமேவா பிஹிதம்
நிதித்யாசி தவ்ய-இத்யாதிநா ஐக அர்த்யாத்-ததேவ த்யானம் புநரபி விசிநஷ்டி –
நாயமாத்மா ப்ரவசனேந லப்ய -நமேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷா வ்ருணுதே தேந லப்ய-
தஸ்யைஷா ஆத்மா விவ்ருணுதே தநும் ஸ்வாம் -இதி பக்தி ரூபா பந்ந அநு த்யாநேநைவ லப்யதே
ந கேவல வேதேந மாத்ரேண நமேதயா-இதி கேவலஸ்ய நிஷித்தத்வாத் ஏததுக்தம் பவதி –
யோயாம் முமுஷு வேதாந்த விஹித வேதந ரூப த்யாநாதி நிஷ்ட-யதா தஸ்ய தஸ்மிந் நேவ அநு த்யாநே
நிரவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ததைவ தேந லப்யதே பர புருஷ இதி –

(தத்வமஸி-மோக்ஷ சாதனா உபதேசம் -அத்வைதிகள் ஞான மாத்திரம் -ஐக்ய ஞான விசேஷம் உண்டான அனந்தரம் மோக்ஷம்
உபாஸனமே மோக்ஷ சாதனம் -பக்தி ஒன்றிய பக்தி -உடன் சேர்ந்து- துஷ்ட -குண அனுபவம்-பிராட்டி போல பிரிக்க முடியாமல் -)

யதோக்தம் பகவதா புருஷஸ்ய பரப் பார்த்தா பக்த்யா லப்யஸ் த்வந் அநந்யயா -பக்த்யாத்வ நந்யயா ஸக்ய
அஹமேத்வம் விதோர்ஜூந ஞானம் த்ருஷ்டும் ச தத்வேந பிரவேஷ்டும் ச பரந்தப பக்த்யாம் மாம் அபி ஜாநாதி

அதற்கு ஏற்ப தத்வ த்ரய ஞானத்தால் -ப்ரஹ்ம ஞானம் ஏறிடப்பட்டு கடமைகளை ஆற்றுவதாலே அழிவை விலக்கி ஞானம் நிரம்பியவராய் ஸுபமான யாகங்கள் பலவற்றை இறை வழிபாடாக செய்தார்அப் பரமாத்மாவை இவ்வாறு அறிபவன் இவ்வுலகிலேயே மோக்ஷம் அடைந்தவனாகிறான் -பரமாத்மாவை அடைவதற்கு வேறு வழிகள் ஏதும் இல்லை -எவர்கள் இந்தப் பரமாத்மாவை அறிகின்றனரோ அவர்கள் மோக்ஷம் அடைகின்றனர்ப்ரஹ்மத்தை அறிந்தவன் பர உலகை அடைகிறான் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் அந்தப் ப்ரஹ்மம் போன்றே ஆகிறான் -என்று கூறப் பட்டு இருக்கிறது -வேதனம் என்ற சொல் தியானம் செய்தல் இடைவிடாது நினைத்தல் இவற்றுடன் ஒத்த பொருள் கொண்டதாகிறது -இந்தப் பரமாத்மா நினைவிலே மட்டும் அடையப்படுவது இல்லை -தெளிந்த அறிவினாலும் அடையப்படுவதில்லை -பல கேள்வியிலும் அல்ல -எவனை பரமாத்மா விரும்புகிறானோ அவனாலேயே அடையப்படுகிறான் -அப்படிப்பட்ட ஆத்மாவிற்கு தன் திருமேனியை -இந்தப் பிரபஞ்சத்தை தானே காட்டிக் கொடுக்கிறான் -பக்தியே உருவெடுத்த ஞானத்தால் மட்டும் அடையப்படுகிறான் -வறட்டு தியானத்தால் அடையப்படுபவன் அல்ல -தெளிந்த அறிவினால் அல்ல என்பது அறிவு ஒன்றையே உடைய தியானத்தால் அல்ல -என்று விலக்குகிறது -இது கீழ் வருமாறு விளக்கப்படுகிறது -வீடு பேறு வேண்டி வேதாந்தத்தால் ஏற்பட்டு இருக்கும் தெளிவான ஞானத்தால் அதில் ஊற்றம் உடையவனாய் இருப்போன் அந்த தியானத்திலேயே எல்லையற்ற விருப்பம் கொண்டவனாகி அதனடியாகவே பரம புருஷனை அடைகிறான்அவ்வாறே பகவத் கீதையிலும்பார்த்தனே பரம புருஷனாகிய நான் -மற்றவைகளால் அல்லாது என்னிடமே செலுத்தப்படும் பக்தியால் மட்டுமே அடையத் தக்கவன் -எதிரிகளை வாட்டுபவனே அர்ஜுனா என்னைப் பற்றி மெய்யறிவு கொள்வதற்கும் -என்னைப் பார்ப்பதற்கும் என்னைத் துய்ப்பதற்கும் வேறொரு இடத்தில் அன்றி என்னிடமே செலுத்தப்படும் பக்தியாலே மட்டுமே இயலும் -11-54-
யாவாந் யஸ் சாஸ்மி தத்வத-ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததந்தரம் -இதி ததனந்தரம் மாம் தத ஏவ பக்கத்தே விசாதே
இத்யர்த்த பக்திர் அபி நிரதிசய ப்ரிய அநந்ய ப்ரயோஜன ஸ்வ இதர வை த்ருஷ்ண்யாவஹ ஞான விசேஷ
ஏவேதி தத் யுக்த ஏவ தேந பரேண ஆத்மநா வரநீயோ பவதீதி தேந லப்யதே இதி ஸ்ருதி யர்த்த

உள்ளுருவாலும் பண்புகளாலும் குணங்களாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவன் என்பதை பரம் பொருள் மீதான பக்தியாலே உள்ளபடி அறிந்து பிறகு அந்த பரபக்தியாலேயே என்னை முழுமையாக அடைகிறான் -என்று கூறப்படுகிறது -பிறகு இப்படிப்பட்ட பக்தியாலேயே என்னை நன்கு துய்க்கிறான் -என்பது பொருள்-பக்தி என்பது -எல்லையற்ற விருப்புடன் வேறு பயன் கருதாது மற்றைய விருப்பங்கள் யாவும் நீங்கியதாய் இருப்பது -வைராக்யம் -இதற்கேற்ப ஒழுகுபவர் பரமாத்மாவால் தன்னுடையவன் என்று கருதப்பட்டு அவனாலேயே தன்னிடம் சேர்த்துக் கொள்ளப் படுகிறார் என்பதே மறையின் பொருள்
ஏவம் வித பயபக்தி ரூப ஞான விசேஷஸ்ய உத்பாதாக -பூர்வ யுக்த அஹர் அஹர் ரூப ஸீயமாந ஞான பூர்வக –
கர்ம அநு க்ருஹீத பக்தி யோக ஏவ –

யதோக்தம் பகவதா பராசரேன
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமாந்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நாணய தத் தோஷகாரக -( ஸ்ரீ விஷ்ணு புராணம் -காண்டிக்ய கேசித்வஜ உபாக்யானம் -)

இப்படிப் பட்ட ஞானத்தால் தூண்டப்பட்டு முன்பே விளக்கிய தினம் தோறும் வளரும் ஞானத்திற்கு தான் கைக் கொண்ட வர்ணாஸ்ரம தர்மங்கள் வழியாகப் பெற்ற பக்தியாலே ஜீவனிடம் பக்தி யோகம் உண்டாகும்

அப்படியே பராசரரும் -மனிதர்கள் வர்ணாஸ்ரம தர்மங்கள் செய்வதன் மூலமாக விஷ்ணுவை ஆராதித்தே பரமபுருஷனை அடைய இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்கிறார் –
இதி நிகில ஜகத் உத்தாரணாய அவநிதளே அவதீர்ண பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம ஸ்வயமேவ ஏதத் உக்தவாந்
ஸ்வ கர்ம நிரதஸ் சித்தம் யதா விந்ததி தச் ச்ருணு -யத ப்ரவ்ருத்தி பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய சித்திம் விந்ததி மாநவ –இதி யதோதித க்ரம பரிணத பக்த்யேக லப்ய ஏவ —

இவ் வுலகை மேம்படுத்துவதற்காக அவதரித்த பர ப்ரஹ்மமான புருஷோத்தமனே இதைச் சொல்கிறான்
தன் கடமைகளைச் செய்பவன் எவ்வாறு வீடு பேறு அடைகிறான் என்பதைக் கேட்ப்பாயாக
எவனிடமிருந்து இப் பொருட்கள் யாவற்றிக்கும் தோற்றம் முதலியவை ஏற்படுகின்றதோ -எவனாலே இவை யாவும் நிறைக்கப்பட்டுள்ளதோ -அவனைத் தனக்குரிய வர்ணாஸ்ரமப்படி -கடைமைப்படி -ஆராதனையைச் செய்து மனிதன் மேலான வீடு பேற்றை அடைகிறான் –
இவ்வாறு தனக்கு உரிய கடைமைகளை முறையாகச் செய்து அதனால் தூண்டப்பட்ட பக்தியாலேயே பகவான் அடையப் படுகிறான்

—————-

100-பகவத் போதாயன -டங்க-த்ரமிட -குஹதேவ-கபர்தி -பாருசிப்ரபிருதி -அவிகீத-சிஷ்ட பரிக்ருஹீத –
புராதன வேத வேதாந்த வ்யாக்யான ஸூவ்யக் தார்த்த ஸ்ருதி நிகர நிதர்சிதோயம் பந்தா —
அநேந -சார்வாக -சாக்ய-ஓவ்லூக்ய -அஷபாத -ஷபனிக-கபில -பதஞ்சலி -மத அநு ஸாரினோ
வேத பாஹ்யா வேதா வலம்பி குத்ருஷ்ட்டி பிஸ் ஸஹ நிரஸ்தா –

போதாயன பகவான் -டங்கர் -த்ரமிடர் -குஹ தேவர் -கபர்தி -பாருசி -முதலான சிறந்த சான்றோர்களால் கைக் கொள்ளப் பட்ட பழமையான வேத வேதாந்த விரிவுரைகளில் வேதக்கூட்டங்களின் திரண்ட கருத்துக்கள் தெளிவாகக் காட்டப்பட்டு இருக்கின்றனஇதற்கு மாறான -ஸார்வாக -நாஸ்திக – சாக்ய -புத்த -ஓவ்லுக்ய-நியாய தர்க்க வாதிகள் அக்ஷ பாத-வைசேஷிகம் சமண கபில -சாங்க்ய – பதஞ்சலி-யோகம் ஆகியோருடைய கொள்கைகளைப் பின் பற்றுவோர் வேதங்களுக்குப் புறம்பானவர்கள் என்றும்அவைகளுக்கு உட்பட்ட பொருளைத் திரித்து கூறுவோர்கள் என்றும் விலக்கப் படுகின்றனர்
வேதா வலம்பிநாம் அபி யதா வஸ்தித வஸ்து விபர்யஸ்த த்ருஸாம் பாஹ்ய சாம்யம் மநுநைவ யுக்தம்
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யஸ்ஸ காஸ் ஸ குத்ருஷ்டய
சர்வஸ்தா நிஷ்பல ப்ரேத்ய தமோந் நிஷ்டா ஹி தா சம்ருதா இதி
ரஜஸ் தமோப்யாம ஸ்ப்ருஷ்டம் உத்தமம் சத்வமேவ ஏஷாம் ஸ்வாபாவிகோ குண தேஷாமேவ வைதிகீ ருசி –
வேதார்த்த யாதாத்ம்ய அவபோதஸ் ச இத்யர்த்த –

வேதங்களை மறுத்தோரும் -அவற்றுக்கு அவப்பொருள் கொள்வோரும் ஒரே படித்தானவர்கள் -என்று மநு கூறுகிறார்
வேதங்களையும் ஸ்ம்ருதிகளையும் மறுப்போரும் அவப்பொருள் கொள்வோரும் தமோ குணம் நிறைந்தவர்கள் என்றும்
அவர்களுடைய கருத்துக்கள் உடலை விட்டோடும் உயிருக்கு நற் பலன்களைத் தராதவைகள் என்பதும் பெரியோர்கள் கொள்கை –
ரஜஸ் தமஸ் இவைகளால் தீண்டப்படாத ஸத்வ குணம் நிறைந்த உத்தமர்களே வேதப் பொருளில் உண்மையான விருப்பம் கொண்டு அதனடியாக அவற்றின் மெய்ப் பொருளை அறிய முடியும் என்பது பொருள்

யதோக்தம் மாத்ஸ்யே —

ஸங்கீர்ணா சாத்விகாஸ் ஸைவ ராஜசா தமஸாஸ் தயா இதி கேசித் ப்ரஹ்ம கல்பா ஸங்கீர்ணா –
கேசித் சத்வ பிராயா -கேசித் ரஜஸ் பிராயா -கேசித் தமஸ் பிராயா -இதி கல்ப விபாக முத்தகா சத்வ ரஜஸ் தமோ மாயாநாம்
தத்வாநாம் மஹாத்ம்ய வர்ணனஞ்ச தத் தத் கல்ப ப்ரோக்த புராணே ஷு சத்வாதி குண மயேந ப்ரஹ்மணா க்ரியதே இதி ச யுக்தம் –
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா-தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ணயதே இதி

அவ்வாறே மத்ஸ்ய புராணத்தில்கலப்படமான ஸாத்விக ராஜஸ தாமஸ குணங்கள் மேலிட்ட படைப்புக் கால அளவுகள் ப்ரஹ்ம கல்பங்கள் உள்ளனபடைப்புக் கால அளவுகளில் சில கலந்த குணமுடையவை -சில aஸ்த்வ குணமுடையவை -சில ரஜஸ்ஸையும் சில தமஸ்ஸையும் கொண்டவைஅவைகளுக்கு ஏற்ப ஸத்வ ரஜ தமோ குணங்கள் நிறைந்த தேவதைகளின் பெருமை விவரிக்கப் படுகிறதுஅந்தந்த கல்பங்களில் தோன்றிய புராணங்களை ஸத்வ முதலான குணங்கள் நிறைந்ததாக ப்ரம்மா செய்தார் என்பது பொருள் -முன்பு எந்த எந்தக் கல்பங்களில் எந்த எந்தப் புராணங்கள் ப்ரம்மாவினால் சொல்லப் பட்டதோ அவைகள் அந்தந்த குண மேலீட்டான தேவதைகளைப் பரக்கப் பேசுகிறது –
விசேஷ தஸ் ச யுக்தம்
அக்ரேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தமசேஷு ப்ரகீர்த்யதே
ரஜஸே ஷு ச மஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ வித்து
சாத்விகேஷ்வத கல்ப்பேஷு மஹாத்ம்யம் அதிகம் ஹரே
தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம்
சங்கீர்ணேஷு சரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே–இத்யாதி
ஏதத் யுக்தம் பவதி–ஆதி ஷேத்ரஞ்ஞத்வாத் ப்ரஹ்மண தஸ்யாபி கேஷுசிதஹஸ் ஸூ சத்வம் உத்ரிக்தம் கேஷுசித் ரஜஸ் கேஷுசித் தமஸ்–

யதோ யுக்தம் பகவதா
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வாதிவிதேவே ஷு வா புந
சத்வம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபி ஸ்யாத்ரிபிர் குணை இதி –ஸ்ரீ கீதை
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச ச ப்ரஹினோதி தஸ்மை -இதி ஸ்ருதே
ப்ரஹ்மணோபி ஸ்ருஜ்யத்வேந ஸாஸ்த்ர வஸ்யத் வேந ச ஷேத்ரஞ்ஞத்வம் கம்யதே சத்வ ப்ராயேஷு அஹஸ் ஸூ தததிரோஷூ
ச யாநி புராணாநி ப்ரஹ்மணா ப்ரோக்தாநி தேஷாம் பரஸ்பர விரோதி சாதி சாத்விகாஹஸ் ப்ரோக்தம் புராணமேவ யதார்த்தம்
தத் விரோதி அந்யத் அத்யர்த்தம் -இதி புராண நிர்ணயாயைவ இதம் சத்வ நிஷ்டேந ப்ரஹ்மணா அபிஹிதமிதி விஞ்ஞாயதே இதி –

இதில் சிறப்பாகக் கூறப்படுவதாவது
அக்நி சிவன் பெருமை தமஸ் கல்பத்திலும்
ப்ரம்மாவின் புகழ் ராஜஸ கல்பத்திலும்
ஹரியின் பெருமை ஸத்வ கல்பத்திலும்
இவை கலந்த இடத்தில் ஸரஸ்வதி பித்ருக்கள் பெருமையும் சொல்லப்படுகின்றன என்று பெரியோர்கள் தெளிந்து அறிவித்து இருக்கிறார்கள் –
இது மேலும் முதல் ஜீவனான பிரம்மாவிற்கு சில காலங்களில் ஸத்வமும் சில ஸமயம் ரஜஸ்ஸும் சில பொழுது தமஸ்ஸும் தலை தூக்கியும் இருக்கும் -அவற்றுக்கு ஏற்ப புராணம் அமையும்
அவ்வாறே கீதையிலும்
பூமியிலும் வானிலும் இருக்கும் பொருள்கள் யாவும் மூலப் பிரக்ருதியின் தொடர்பின்றி விடுபட்டவை அல்ல என்று சொல்லப் பட்டுள்ளது –
வேதத்திலும் யார் பிரமனை முன்னதாகப் படைத்து அவனுக்கு வேதங்களை ஓதுவித்தாரோ என்று இருப்பதால் பிரமனும் படைக்கப்படும் ஸாஸ்த்ரங்களுக்கு உட்பட்டும் ஜீவாத்மாவாகிறான் –
ஸத்வ குணம் மேலோங்கிய நாட்களிலும் அதற்கு மாறுபட்ட நாட்களிலும் எந்த எந்தப் புராணங்களை ஓதுகிறானோ அவைகள் முறையே நற் குணங்களையும் அதற்கு முற்றிலும் மாறுபட்ட பண்புகளையும் கொண்டிருக்கும் புராணங்களின் கருத்துக்களில் மாறுபாடு தோன்றுமாயின் ஸத்வ புராணங்களின் பொருளே கொள்ளத் தக்கது என்றும் மற்றவை தள்ளத் தக்கது என்றும் அறுதியிடப் பட்டு இருக்கிறது –

———-

101–சத்வாதிநாம் கார்யஞ்ச ச பகவதைவ யுக்தம்
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம் -ரஜசோ லோப ஏவ ச பிரமாதமவ் ஹவ் தாமச பகவதோ ஞான மேவ ச

ஸத்வம் முதலான குணங்களின் செயல்களை aபகவானே விவரிக்கிறார்ஸத்வத்தினால் -ஆத்ம யாதாத்ம ஞானமும் -ராஜஸத்தினால் பேராசையும் தமஸ்ஸினால் கவனக் குறைவு மயக்கம் அஞ்ஞானம் ஆகியவையும் ஏற்படுகின்றன
ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்ய அகார்யே பய அபயே பந்தம் மோக்ஷம் ச யோ வேத்தி புத்திஸ் சா பார்த்த சாத்விகீ –
யயா தர்மம் அதர்மஞ்ச கார்யஞ்ச அகார்யமே வச-அயதாவத் பிரஜாநாதி புத்திஸ் சா பார்த்த ராஜஸீ
அதர்மம் தர்மம் இதியா மந்யதே தமஸா ஆவ்ருதா சார்வார்த்தாந் விபரீதாம்ஸ்
ச புத்திஸ் சா பார்த்ததாமஸீ இதி–ஸ்ரீ கீதை -18-30-/31-/32—

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே–
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்த்விகீ–৷৷18.30৷৷

பார்த்த –குந்தீ புத்ரனே
ப்ரவ்ருத்திம் ச –இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும்
நிவ்ருத்திம் ச –மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும்
கார்யாகார்யே –இந்தக் கர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும்(அடிப்படை தர்ம நெறி -ஆச்சாரம் -கார்யம்-உடல் பலம் வயசு ஆயுசு பொறுத்து கார்யம்)
பயாபயே–பயத்திற்கும் பயமின்மைக்கும் இடமாய் இருப்பவற்றையும்(பய ஸ்தானம் அபய ஸ்தானம் -எத்தைக் கண்டு அஞ்சுவோமோ அஞ்ச மாட்டாமோ அவற்றைச் சொன்னவாறு-ஸாஸ்த்ரம் பற்றி நடப்பது-அபயம் கொடுக்கும் மீறு நடப்பதும் கோரமானது முன்பே சொன்னானே)
பந்தம் மோக்ஷம் ச –சம்சாரத்தில் கட்டுப்படுவது அதில் இருந்து விடுபடுவது ஆகியவற்றைப் பற்றிய உண்மையையும்
யா வேத்தி –எந்த அறிவு அறிகிறதோ
புத்திஸ் ஸா ஸாத்த்விகீ–அந்த அறிவு ஸத்வ குணத்தால் உண்டானதாகும்

குந்தீ புத்திரனே -இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும் மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும் –
இந்த தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும் பயத்துக்கும் பயமின்மைக்கும்
இடமாய் இருப்பவற்றையும் சம்சாரத்தில் கட்டுப்படுவது -அதிலிருந்து விடுபடுவது -ஆகியவை பற்றிய உண்மையையும்
எந்த அறிவு அறிகிறதோ -அந்த அறிவு சத்வ குணத்தால் உண்டானதாகும்

பயக்ருத் பய நாஸன -அவனை அனுசந்திக்க அபயம்-நம் தோஷம் ஸம்ஸார தோஷம் அனுசந்திக்க பயம் –

சாத்விக புத்தி -பிரவ்ருத்தி மார்க்கம் இவ்வுலக இன்பம் ஸ்வர்க்கம் வரை -நிவ்ருத்தி மோக்ஷம் விஷயம் –
பயப்பட- வேண்டாதது -பந்தம் எது மோக்ஷம் -என்ற உறுதியான புத்தி –
இதனால் சாத்விக ஞானம் -அதனால் சாத்விக கர்மா -அதனால் சாத்விக பலன்

புத்தி அறிந்து கொள்கிறது தப்பு -நான் அறிந்து கொள்கிறேன் என்றே கொள்ள வேண்டும் -புத்தி உள்ளபடி உண்மையாக்க காட்டிக்கொடுக்கும் –

—————

யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–
அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ--৷৷18.31৷৷

பார்த்த–அர்ஜுனா
யயா -எந்த அறிவால்
தர்மமதர்மம் ச -தர்மத்தையும் அதர்மத்தையும் –கீழ் சொன்ன ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களைக் கொள்ள வேண்டும் –
கார்யம் சாகார்யமேவ ச–கார்யத்தையும் செய்யத் தக்கவையும் -செய்யத் தகாதவையும் -அடிப்படை ஆசாரம் பற்றியவை
அயதாவத் ப்ரஜாநாதி -தவறாக அறிகிறானோ -கீழே யதாவத் ஸ்பஷ்டமாக இல்லை -இங்கு இருப்பதால் அந்த அர்த்தம் தானாகவே கிட்டுமே -உள்ளபடி அறிந்து கொள்ளாமல் இருப்பவன் இங்கு
புத்திஸ் ஸா ராஜஸீ-அதுவே ராஜஸ புத்தி யாகும்

குந்தீ புத்திரனே – எந்த அறிவாலே தர்மத்தையும் அதர்மத்தையும் -செய்யத் தக்கத்தையும்-செய்யத் தகாததையும் –
தவறாக ஒருவன் அறிகிறானோ -அந்த அறிவு ரஜோ குணத்தால் உண்டானது –
தர்மம் அதர்மம் மயங்கி -ராக்ஷஸ புத்தி -செய்யத் தக்கவை தகாதவை தெரியாமல் மயங்கி –
புத்தி -உறுதி -தர்ம பூத ஞானம் தான் புத்தி என்பர் –

தர்மியில் மாறாட்டம் விபரீத ஞானம் தாமசம் -தர்மத்தில் மாறாட்டம் அந்யதா ஞானம் ராக்ஷஸம்

—————–

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸா வ்ருதா–
ஸர்வார்தாந் விபரீதாம்ஸ்ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.32৷৷

பார்த்த -குந்தீ புத்ரனே
யா -எந்த புத்தி
தமஸ ஆவ்ருதா–தமஸ்ஸால் -மூடப்பட்டு -ஞான பரப்பைத் தடுக்கப்பட்டு –
அதர்மம் தர்மமிதி -இது ஓன்று எடுத்துக்காட்டு -அதர்மத்தைத் தர்மம் என்று நினைக்கிறதோ-இருப்பதை இல்லாததாகவும் உயர்ந்த ஒன்றை தாழ்ந்ததாகவும் மாற்றி அறிபவன்-
ஸர்வார்தாந் –எல்லா அர்த்தங்களையும்
விபரீதாம்ஸ் ச மந்யதே-நேர் மாறாக அறிகிறதோ
புத்திஸ் ஸா தாமஸீ-தாமஸ புத்தி எனப்படும்

குந்தீ புத்திரனே – எந்த அறிவானது தமோ குணத்தால் சூழப் பட்டதாய் – அதர்மத்தை தர்மம் என்று அறிகிறதோ –
சித்தமாயும் சாத்யமாயும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் நேர் மாறாக அறிகிறதோ –
அந்த அறிவு தமோ குணத்தால் உண்டாகும் புத்தியாகும் –
தாமஸ புத்தி -அதர்மமே தர்மம் என்று உறுதி -கீழே மயக்கம் தான் -இங்கு அதர்மமே தர்மம் -என்று திட புத்தி —
எத்தனை அழிந்தாலும் மாற்றிக் கொள்ளாத புத்தி -தமோ குணத்தால் சூழ்ந்து -விபரீதமாக –
சித்தம் சாத்தியம் தப்பாக புரிந்து பூதம் பிரேத குணம் சாத்தியம் என்று கொண்டு -சூழல்

ஆவ்ருதா இங்கு மட்டும் -அப்பொழுது அப்பொழுது தமஸாலே சூழப்பட்டவனாய் என்றபடி

மனு -வேதத்தால் சொல்வதை மாற்றி அறியும் புற சமயிகள்-தமோ குணத்தால் சூழப்பட்டவர்கள்

————
சர்வான் புராணார்த்தாந் ப்ரஹ்மணஸ் ச காசாத் அதிகம் யைவ ஸர்வாணி புராணாநி புராண காரா சக்ரு யதோக்தம்
கதயாமி யதா பூர்வம் தஷாத்யை முநி சத்தமை பிருஷ்ட ப்ரோவாச பகவான் அப்ஜ யோநி பிதாக–இதி ஸ்ரீ விஷ்ணு புராணம்
அபவ்ருஷேயேஷு வேத வாக்யேஷூ பரஸ்பர விருத்தேஷு கதமிதிசேத் தாத்பர்ய நிஸ்சயாத் அவிரோத பூர்வமேவ யுக்த —

புராணங்கள் யாவும் பிரம்மனிடம் இருந்தே பெறப்பட்டதாக புராணக்காரர்கள் கூறி இருக்கின்றன
அதற்கு ஏற்ப ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தக்ஷர் முதலான முனிவர் தலைவர்கள் தாமரைப்பூவில் உதித்த பிரமனிடம் இருந்து கேட்க்கப்பட்டவைகளை உள்ளபடியே சொன்னார்கள் என்று கூறப்பட்டுள்ளது –
யாராலும் செய்யப்படாத வேத வாக்கியங்களில் ஒன்றுக்கு ஓன்று tமாறுபட்ட கருத்துக்கள் வருமாகில் அவற்றின் உண்மையான ஆழ் பொருள் அறிந்தால் அம் மாறுபாடு நீங்கும் -என்பது முன்பே சொல்லப்பட்டது-

————————-

102– யதபிசேதம் விருத்தமிவ த்ருஸ்சதே
ப்ராணம் மனசை ஸஹ கரணை நாதாந்தே பராத்மநி ஸம்ப்ரதிஷ்டாப்ய த்யாயீத ஈஸாநாம் ப்ரத்யாயீத ஏவம் ஸர்வமிதம்–அதர்வண சிகா
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே சர்வே ஸம்ப்ரா ஸூயந்தே ந கரணம்—
காரணம் து த்யேய–
சர்வைஸ்வர்ய சம்பன்ன சர்வேஸ்வர சம்பு
ஆகாச மத்யே த்யேய –அதர்வண சிகா
யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்திகஸ் சித் விருக்ஷ ஏவஸ் தப்தோ திவி திஷ்டத்
ஏக தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் ததோ யதுத்ர தரம் ததுரூப மநா மயம் ய ஏதத் விதுர ம்ருதாஸ்தே பவந்தி
அதேதர து ஸ்வ மேவாபி யந்தி சர்வாணன சிரோக்ரீவ சர்வ பூத குஹாஸய சர்வ வ்யாபிச பகவான் தஸ்மாத் சர்வ ததஸ் சிவ –அதர்வ சிகா
யதா தமஸ் தன்னாதிவா ந ராத்ரி ந சந் ந சாசச் சிவ ஏக கேவல ததஷரம் தத் ஸவிது வரேண்யம்
பிரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ –ஸ்வேதாசவதரா-
இத்யாதி -நாராயண பரம் ப்ருஹ்ம இதி ச பூர்வமேவ ப்ரதிபாதிதம் தேநாஸ்ய கதம விரோத —

ஒன்றுக்கு ஓன்று மாறுபாடான கருத்துக்களைக் கொண்ட வாக்யங்கள் பின் வருமாறு
1- உயிர் மூச்சை மனம் புலன்களுடன் niruththuநிறுத்தி பரமாத்மாவான ஈசானனை தியானிக்கக் கடவன்
2-ப்ரம்மா விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகியவர்கள் படைக்கப்படுகிறார்கள் அவர்கள் காரணமாக மாட்டார்கள்
எது காரணமோ அதுவே த்யானிக்கப்பட வேண்டும்
செல்வங்கள் யாவும் நிறைந்து எல்லோருக்கும் தலைவனாய் இருக்கும் சம்புவை ஹ்ருத யாகாச நடுவில் தியானிக்க வேண்டும்
3- எவரைக் காட்டிலும் மேம்பட்டோர் சிறிதும் இல்லையோ எவரைக் காட்டிலும் சிறியவர் பெரியவர் இல்லையோ
எவர் விண்ணில் உணர்வுகள் இன்றி மரம் போல் இருக்கிறாரோ அவரால் இவ்வுலகு நிறைந்து இருக்கிறது
அவருக்கு மேம்பட்டோர் யாருமில்லை
அவர் உருவம் அவயவம் அற்றவர்
இதை அறிபவர்கள் அழிவது இல்லை -அறியாதவர்கள் துயரம் அடைகிறார்கள் –
எல்லாப் பிராணிகளின் தலையிலும் கழுத்திலும் ஹிருதயக் குகையிலும் நிறைந்து இருப்பவர்
எல்லா வற்றிற்கும் கதியானவர் -அவரே சிவன்
4-எப்பொழுது தமஸ் பகல் இரவு சேதன அசேதனப் பொருள்கள் முதலியவை இல்லையோ அப்பொழுது சிவன் மட்டும் இருந்தான்
அவனே அழிவற்றவன்
ஞாயிற்றின் ஒளி யாவும் அறிந்தவன்
பழமையானவன்
இதற்கு நாராயணனே பர ப்ரஹ்மம் என்று முன்பே கூறப்பட்டு விளக்கப் பட்டு இருக்கிறது
அதற்கு இக் கூற்றுக்கள் மாறுபாடானவை அல்ல

———–

103–அத்யல்பமேதத்
வேதவித் ப்ரவரப்ரோக்த வாக்ய அந்யய உப ப்ரும்ஹிதா வேதாஸ் சாங்கா ஹரிம் பிராஹு ஜகாத் ஜென்மாதி காரணம்
ஜன்மாத்யஸ்ய யதஸ்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்ய அபி சம்விசந்தி தத் விஞ்ஞாசஸ்வ தத் ப்ரஹ்மா இதி
ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹமேத்யவ கம்யதே-தச்ச ஜகத் ஸ்ருஷ்ட்டி ப்ரலய ப்ரகரனேஷ் ஏவ அவ கந்தவ்யம்
ச தேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
இதி ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா ஜகாத் அந்தர்யாமிதாதி முகேந பரம காரணம் சச் சப்தேந ப்ரதிபாதிதம் –

இது மிகவும் அற்பமானது
ஹரியே உலகின் படைப்பு முதலியவற்றிற்குக் காரணம் என்று அங்கங்களோடு கூடிய வேதம் அறுதியிடுவதாக வேதம் அறிந்தோர்களில் தலையாயவர்கள் தங்கள் மொழிகளால் நிறுவியிருக்கின்றனர் –
இவ்வுலகிற்கு பிறப்பு முதலியவை எம்பெருமான் இடமிருந்தே உண்டாவதால் அந்த ப்ரஹ்மமே காரணம் –
எவனிடமிருந்து இந்த உயிர்கள் யாவும் உண்டாயினவோ அவ்வாறு உண்டானவை யாரால் வாழ்கின்றனவோ -எவரிடத்தில் அவை ஓடுகின்றனவோ -அதுவே அறியத்தக்கது -அதுவே ப்ரஹ்மம் என அறிவாயாக -என்று
உலகின் பிறப்பு முதலானவற்றிற்கான
காரணம் அறுதியிடப்பட்டுள்ளது
எங்கு உலகின் பிறப்புsoolappattசொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கிருந்தே ப்ரஹ்மமானது அறியப்பட வேண்டும்
குழந்தாய் ஸத் ஒன்றே முதலில் இருந்தது
ஒன்றாகவே பிரிது ஓன்று இல்லால் இருந்தது என்று
ஜகத்தின் பிறப்புக்கு மூலப்பொருள் செய்வோன் கருவி என உபாதான நிமித்த அதன் உள்ளுறைந்து இயக்கம் ஸஹகாரி -முகமாக எல்லாக் காரணமாகவும் ஸத் ஒன்றே சொல்லப்பட்டு இருக்கிறது –

அயமேவார்த்த-
ப்ரஹ்ம வா இதமே கமே வாக்ர ஆஸீத் -இதி சாகாந்தரே ப்ரஹ்ம சப்தேந ப்ரதிபாதித
அநேந சச் சப்தாபி ஹிதம் ப்ரஹமேத் யவகதம்
அயமேவார்த்த சாகாந்தரே
ஆத்மா வா இதமேக ஏவாக்ரா ஆஸீத் -நாந்யத் கிஞ்சந மிஷத்-இதி
ததா -சத் -ப்ரஹ்ம -சப்தாப்யாம்-ஆத்மைவ அபிஹித -இதயவ கம்யதே-
ததாச சாகாந்தரே
ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந நேமேத்யா வா ப்ருத்வீ -இத்யாதிநா
சத் ப்ரஹ்ம ஆத்மதி பரம காரண வாஸிபி சப்தை நாராயண ஏவ அபிதீயதே இதி நிஸ் ஸீயதே —

வேறொரு வேத சாகையில்
ப்ரஹ்மம் மட்டுமே இங்கு முதலில் இருந்தது -என்று ப்ரஹ்மம் காரணமாக் கூறப்பட்டு இருக்கிறது –
அதனால் ஸத் என்று கூறப்பட்டது ப்ரஹ்மம் என்றே தெரிகிறது –
மற்றொரு சாகையில்
முதலில் ஆத்மா ஓன்று மட்டுமே இருந்தது -மற்ற எதுவும் சிறிதும் இல்லை -என்று கூறப்பட்டு இருக்கிறது –
ஆகவே ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -என்ற சொற்கள் ஒரே பொருளைக் கொண்டவை எனத் தேறுகிறது –
அவ்வாறே நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரம்மாவும் இல்லை ஈசானனும் இல்லை வானமோ பூமியோ இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது
இவைகளால் ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா போன்ற முதல் காரணத்தைக் குறிக்கும் சொற்கள் -நாராயணன் -என்று மட்டுமே குறிக்கும் என அறுதியிடப்படுகிறது

—————-

104–ய மந்தஸ் சமுத்ரே கவயோ வயந்தி இத்யாரப்ய-நைந மூர்த்வம் நதிர் யஞ்சம் ந மத்யே பறி ஜக்ரபது –
ந தஸ்யேசே கஸ்சன் தஸ்ய நாம மஹாத் யசஸ்
ந சந்த்ருசே திஷ்டதி ரூப மஸ்ய ந சஷூஷா பச்யதி கஸ்ச நைநம் -ஹ்ருதா மநீஷா மனசா அபிக்லுப்தோ
ய ஏனம் விதுரம் ருதாஸ்தி பவந்தி -இதை சர்வ ஸ்மாத் பரத்வம் அசய ப்ரதிபாத்ய -நதஸ் யேசே கஸ்சன-
இதி தஸ்மாத் பரம் கிமபி ந வித்யதே இதி ச ப்ரதிஷித்ய
அத்ப்ய ஸம்பூதோ ஹிரண்ய கர்ப இத்யஷ்டவ இதி தேந ஏக வாக்யதாம் கமயதி தச்ச மஹா புருஷ பிரகரணம்-
ஹரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ இதி நாராயண எவேதி த்யோதயதி-

எவன் கடலில் இருப்பதாக ஞானிகள் கூறுகின்றனரோ என்று துவங்கி மேல் பக்கத்திலும்-கீழப் பக்கத்திலும் -இடைப் பக்கத்திலும் அறியப்படாதவன் –
அவனை யாரும் உள்ளிருந்தோ வெளியிருந்தோ ஏக முடியாது -மிகவும் புகழுடையவன் -அவனுடைய உருவம் கட் புலனாகாதது -அவனை யாரும் கண்களால் காண்பதில்லை -ஞான பக்திகளுடன் கூடியவர் மனத்தால் இருதயத்தில் காணப்படுபவன் -இவனை அறிபவர் சாகா நிலை அடைகின்றனர் -என்று யாவும் அறிபவனை இவ்வாறு விளக்கி
அவனுக்கு மேற்பட்டவன் யாருமில்லை என்று அவனுக்கு மேற்பட்டு அவனை ஏவக்கூடியவன் ஒருவரும் இல்லை என்பதைக் கூறி –
அத்ப்ய ஸம் பூததோ ஹிரண்ய கர்ப்ப -என்று தொடங்கும் எட்டு வாக்கியங்கள் முதலில் சொன்னதோடு சேர்த்துப் படிக்கப்பட வேண்டியவை –
ஒரே கருத்து உடையவை என்பது விளங்கும் –
அவை பரம் பொருளை காரண மஹா புருஷனைக் குறிப்பவை இதன் தொடர்பில் பூமி தேவி முதலானோரும் லஷ்மியும் உனக்கு மனைவிகள் என்று மிகத் தெளிவாக நாராயணனையே குறிக்கின்றன

—————-

105-அயமர்த்த-
நாராயண அநுவாகே பிரபஞ்சித -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இத்யாரப்ய-ச ப்ரஹ்ம ரஸசீவ சேந்த்ர ச அஷரா பரம் ஸ்வராட்
இதி சர்வ சாகாசூ பரதவ ப்ரதிபாதந பராந் அக்ஷர-சிவ -சம்பு -பர ப்ரஹ்ம பரஞ்சோதி -பரதத்வ -பாராயண -பரமாத்மாதி –
சர்வ சப்தாந் தத் குண யோகிந நாராயண ஏவ ப்ரயுஜ்ய தத் வ்யதிரிக்தஸ்ய சமஸ்தஸ்ய ததா யத்ததாம் —
தத் வ்யாப்யதாம் -தத் ஆதாரதாம்-தந் நியாம்யதாம்-தத் சேஷதாம் -ததாத்மகதாம்-ச ப்ரதிபாத்ய ப்ரஹ்ம சிவயோர் அபி
இந்திராதி சமாந ஆகார தயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதிதம்
இதம் ச வாக்யம் கேவல பாதத்வ ப்ரதிபாதந பரம் அந்யத் கிஞ்சிதபி அத்ர நவிதீயதே-அஸ்மின் வாக்யே ப்ரதிபாதி தஸ்ய
சர்வஸ்மாத் பரத்வேந அவஸ்திதஸ்ய ப்ரஹ்மண வாக்யாந்த்ரேஷு ப்ரஹ்ம விதாப் நோதி பரம் இத்யாதிஷு உபாஸநாதி விதீயதே —

இதன் பொருள் நாராயண அநுவாகத்திலே நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது
பல தலைகளை யுடையவன் என்று ஆரம்பித்து -அவனே பிரமன் இந்திரன் அழிவற்றவன் பரமாத்மா என்று எல்லா சாகைகளிலும் பரத்வத்தைச் சொல்லிய பிறகு அழிவற்றவன் சிவன் சம்பு பர ப்ரஹ்மம் பர தத்வ பராயண பரமாத்மா போன்ற சொற்களால் அந்தந்த பண்புகளால் நாராயணன் ஒருவனே காட்டப்பட்டு
அவனை ஒழிந்த மற்றவை rயாவும் அவனாலேயே படைக்கப்பட்டு-அவனாலே நிறைக்கப் பட்டு -அவனையே பற்றுக் கோடாகக் கொண்டு -அவனாலே ஏவப்பட்டு -அவனுக்கு கீழ்ப்பட்டு அவனையே ஆத்மாவாக யுடையதாகக் கூறப்பட்டு -ப்ரம்மா சிவன் முதலியோர் இந்திரனைப் போலவே அவனுடைய செல்வங்களாக கருதப் பட்டுள்ளனர்
இங்கு எடுக்கப்பட்ட வாக்யம் -நாராயணனின் மற்றப் பண்புகளையோ செல்வங்களையோ கூறாமல் அவனது ஒப்பில்லா உயர்ந்த பரத்வ நிலையை மட்டுமே விதிக்கிறது -இங்கு கூறப்பட்ட அவனுடைய யாவற்றுக்கும் மேம்பட்ட தன்மையை உடையதான ப்ரஹ்மத்தை இடையறாது தியானிப்பதன் மூலம் பரநிலையை அடையலாம் என்று இடையறாத் தியானத்தை விதிக்கிறது –

————

106–அத -ப்ராணம் மனசை ஸஹ கரணை -இத்யாதி வாக்கியம் சர்வ காரணே பரமாத்மநி காரண
பிராணாதி சர்வம் விகார ஜாதம் உப ஸம்ஹ்ருத்ய -தமேவ பரமாத்மாநாம் ஸர்வஸ்ய ஈஸாநாம் த்யாயீத இதி
பர ப்ரஹ்ம பூத நாராயணஸ்யை வத்யாநம் விதாதி-

பிறகு -உயிர் மூச்சையும் புலன் களுடன் கூடிய மனத்தையும் என்ற -வாக்யத்தால் -எல்லாவற்றிற்கும் காரணமான பரமாத்மாவை உயிர் மூச்சு புலன்கள் ஆகிய மாறுபடுபவைகளில் நின்று விலக்கி ஒரு முகப்படுத்தி அந்தப் பரமாத்மாவையே எல்லாவற்றிற்கும் ஈசன் என்று த்யானிக்கப் படவேண்டும் என்று பர ப்ரஹ்மமான நாராயணனையே தியானிக்க விதிக்கிறது-
பதிம் விஸ்வஸ்ய
ந தஸ்யேஹ கஸ்சந-இதி தஸ்யைவ சர்வேசாநதா ப்ரதிபாதிதா–அத ஏவ சர்வ ஐஸ்வர்ய சம்பந்ந
சர்வேஸ்வர சம்பு ஆகாச மத்யே த்யேய -இதி
நாராயணஸ்யைவ பரம காரணஸ்ய சம்பு சப்த வாஸ்யஸ்ய த்யானம் விதீயதே -கஸ்ச த்யேய -இத்யாரப்ய-காரணம் து த்யேய –
இதி கார்யஸ்ய அத்யே யதா பூர்வக காரணைக த்யேயதா பரத்வாத் வாக்யஸ்ய –
தஸ்யைவ நாராயணஸ்ய பரம காரணதா சம்பு சப்த வாச்யதா ச பரம காரண பிரதி பாதனைக பரே நாராயண
அநு வாக ஏவ பிரதி பந்நா இதி தத் விரோதி அர்த்தாந்தர பரி கல்பனம் காரணஸ்யைவ த்யேயத்வ விதி வாக்யே ந யுஜ்யதே –

உலகைக் காப்போன்
அவனுக்கு மேம்பட்டோன் யாரும் இல்லை -என்று அவனுடைய தனிப் பெரும் தலைமை பேசப்படுகிறது
மேலும் செல்வங்கள் யாவும் நிறைந்தவன்-எல்லாவற்றுக்கும் தலைவன் சம்பு -வானிடை விளங்குவோன் தியானிக்கப்படத் தக்கவன் -வேண்டும் என்று
நாராயணனையே பரம காரணமாக சம்பு என்னும் சொல்லால் தியானம் செய்ய விதிக்கிறது
எவன் த்யானிக்கப்பட வேண்டும் எனத் துவங்கி காரணமானவனே த்யானிக்கத் தக்கவன் -என்று காரியப் பொருட்களைத் த்யானிப்பதை விலக்கி காரணப் பொருளையே தியானிக்க வேண்டும் என விதிக்கிறது

அதனால் நாராயணனுடைய முதல் காரணத் தன்மையினால் சம்பு என்ற சொல்லுக்குப் பொருளாக முதல் காரணத் தன்மையைக் கூறி பிறகு நாராயண அநுவாகத்தில் கூறியதை விளக்கி அதற்கு மாறுபட்ட பொருள்களை விலக்கி காரணமே த்யானிக்கத் தக்கது என்று விதிக்கிறது –

——————-

107–யதபி–ததோ யதுத் தர தரம் -இத்யத்ர புருஷாதந் யஸ்ய பரதர தத்வம் பிரதீயதே -இத்யப்யதாயி -ததபி
யஸ்மாத் பரந் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்தி கஸ்சித்–இத்யத்ர
யஸ்மாத் அபரம்-
யஸ்மாத் அந்யத் கிஞ்சித் அபி பரம் நாஸ்தி கேநாபி பிரகாரேண புருஷ வ்யதிரிக்தஸ்ய பரத்வம் நாஸ்தி -இத்யர்த்த
அணீயஸ்த்வம் -ஸூஷ்மத்வம்-ஜ்யாயத்வம் -ஸர்வேஸ்வரத்வம் -சர்வ வ்யாபித்வாத் -சர்வேஸ்வரத்வாத்-அஸ்ய
ஏதத் வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி அணீயஸ்த்வம் ஜ்யாயஸ்த்வம் ச நாஸ்தி இத்யர்த்த
யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்சித்-இதி புருஷா தந்யஸ்ய கஸ்யாபி ஜ்யாயஸ்த்வம் நிஷித்தம் இதி –
தஸ்மாதந் யஸ்ய பரத்வம் ந யுஜ்யதே இதி ப்ரத்யுக்தம் –

இங்கு அதினின்றும் மேம்பட்டது -என்று பரம புருஷனை விட மேம் பட்ட உயர் நிலை கூறப்படுவது போல் காணப்படுகிறது –
யஸ்மாத் பரந்நா பர மஸ்தி கிஞ்சித் யஸ்மாந்நாணீயோ ந ஜ்யா யோஸ்தி கஸ்சித் -என்ற மந்திரத்துக்கு கீழ் வருமாறு பொருள் கொள்ள வேண்டும் –
யஸ்மாத் அபரம் -எதினின்றும் வேறுபட்ட து ஓன்று சிறிது அளவும் பெரியதல்லவோ –
அதாவது -எவ் வழியிலும் புருஷனை விடப் பெரியது எதுவும் இல்லை என்று பொருள் –
அணீயஸ் த்வம் –நுண்ணியதாய் இருத்தல்
ஜ்யாயஸ்த்வம் -எல்லாவற்றிற்கும் தலைமை
எங்கும் நிறைந்து இருப்பதால் -எல்லாவற்றிற்கும் தலைமையாய் இருப்பதால் அவனின்றும் வேறுபட்ட எதற்கும் நுண்மை முதன்மை ஆகியவை இல்லை என்பது பொருள் –
யஸ்மாந் நாணீயோ நா ஜ்யோஸ்தி கஸ்சித்-என்று புருக்ஷனைத் தவிர்த்து வேறு எதற்கும் முதன்மையாய் இருத்தல் மறுக்கப் படுகிறது
இதனால் புருஷனின்றும் வேறுபட்டது எதுவும் இல்லை என்பது வெளிப்படை –

கஸ்தர் ஹி அஸ்ய வாக்யஸ்ய அர்த்த ?
அஸ்ய பிரகரணஸ்யோபக்ரமே-தமேவ விதித்வாதி ம்ருத்யு மீதி -நாந்ய பந்தா வித்யதேயநாய -இதி
புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுதாம் -தத் வ்யதிரிக்தஸ்ய அபததாம் ச ப்ரதிஞ்ஞாய -யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் —
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –இத் யேததந்தேந புருஷஸ்ய சர்வ ஸ்மாத் பரத்வம் ப்ரதிபாதிதம்-
யத புருஷ தத்வமேவ உத்தர தரம் -ததோ யதுத் தரதரம் -புருஷ தத்வம் ததேவ அரூபாம் -அநாமயம்-ய ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி–
அதே தர துக்கமே வாபி யந்தி இதி புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுத்வம் ததிதரஸ்ய ச அபதத்வம்
ப்ரதிஞ்ஞாதம் ச ஹேதுகமுப ஸம்ஹ்ருதம் -அந்யதா உப க்ரமகத ப்ரதிஞ்ஞாப்யாம் விரூத்யேத

அப்படி என்றால் இந்த வாக்கியத்தின் பொருள் என்ன –இவ் வாக்கியத்தின் இடத்தையும் தொடர்பையும் ஆராய்வோமானால் துவக்கத்தில்அந்தப் பரம புருஷனையே இடையறாது தியானித்து பிறவிச் சுழல் எனும் கடலைத் தாண்ட வேண்டும் -வேறு வழி ஏதுமில்லை -என்று புருஷனை இடையறாது தியானித்து மோக்ஷம் அடையத் தகுந்த வழி -அதனினும் வேறு வழி ஏதுமில்லை என்று அறுதியிட்டு எவனைவிட மேம்பொருள் ஏதும் இல்லையோ அவனே முழுமையாவான் – எல்லோருக்கும் மேலான புருஷன் என்று புருஷ பரத்வம் கூறியது -அப்படியே அந்த புருஷத்வமே மிக உயர்ந்தது என்று விளக்கி பிறகு அதனினும் சிறந்த புருஷத்வம் வினைகளால் வரும் உருவம் அற்றது -செயலால் வரும் இன்ப துன்பங்கள் அற்றது -என்பதை அறிபவன் மோஷத்தை அடைகிறான் -அறியாதவன் துக்கத்தை அடைகிறான் -என்று புருஷத்வமே மோக்ஷ காரணம் என்றும் மற்றவை தாழ்ந்தவைகள் என்றும் கூறி துவக்கத்தில் கூறிய கருத்து அறுதியிடப் பெறுகிறதுஇதை மாறுபட்டு பொருள் கொண்டால் துவக்கமும் முடிவும் தொடர்பு அற்றவை யாகும் –
புருஷஸ் யைவ ஸூத்தி குண யோகே சிவ சப் தாபி -தே யத்வம் சாஸ்வதம் சிவமச்யுதம்–இத்யாதிநா
ஞாதமேவ புருஷ ஏவ சிவ சப்தாபி ஹித-இதி அநந்தரமேவ வததி–மஹாந் ப்ரபுர்வை புருஷ சத்வஸ்யைஷ ப்ரவர்த்தக இதி –

புருஷனுடைய தூய்மைப் பண்பாக சிவன் என்ற பதம் உபயோகப்படுத்தப் படுகிறது–நிலை பெற்றவன் -தூய்மையானவன் -அடியார்களை நழுவ விடாதவன் -என்பதும் நோக்கத் தக்கது -சிவ என்னும் பதத்தால் புருஷனே கடைசியிலும் கூறப்படுகிறான் -மேலும் அதனால் மஹா புருஷன் ஸத்வ குணத்தை நிதியாக உடையவன் என்று இக்கருத்தையே உறுதி செய்கிறது –

———————-

108–உக்த்தேநைவ ந்யாயேந -ந சந்ந சா சச் சிவ ஏவ கேவல –இத்யர்த்த சர்வம் நேயம்
கிஞ்ச-
அம்பஸ்ய பாரே –இத்யனு வாகே -ந தஸ்யேசே கஸ்சந இதி நிரஸ்த சாமாப்யதிக சம்பவாநஸ்ய புருஷஸ்ய –
அணோர் அணீயாந் -இத்யஸ் மிந்நதுவாகே வேத -ஆந்யந்தா ரூபதயா வேத பீஜ பூத ப்ரணவஸ்ய ப்ரக்ருதி பூத
அகார வாச்யதயா மஹேச்வரத்வம் ப்ரதிபாத்ய தஹர புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்திதயா உபாஸ்யத்வம் யுக்தம் –

இவ்வாறு விளக்கப்பட்ட aநியாயங்களால் ந ஸந்ந சாஸச் சிவ ஏவ கேவல-nஎனும் aவாக்யத்திலுள்ள சிவ என்னும் சொல் சிவனைக் குறிப்பதல்ல என்பது எவரும் அறிந்ததேமேலும் -அம்பஸ்ய பாரே -என்ற அநுவாகத்தில் -அவனுக்கு மேம்பட்டவன் யாருமில்லை -என்று மற்றவர்களை மறுத்து நிறுவப்பட்ட புருஷன் என்பவன் அணுவிலும் அணுவாக இருப்பவன் எனக் கூறப்பட்டு இருக்கிறதுஇந்த அநுவாகத்தில் வேதத்தை ஒதத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் ஓம் என்று சொல்லப்பட வேண்டும் -என்று விதித்துஅதன் பகுதியான அ என்னும் எழுத்தால் யாவருக்கும் மேன்மையான தன்மை கூறப்பட்டு அவனை ஹ்ருதயத் தாமரையில் உள்ள தஹர ஆகாசத்தில் இருப்பவனாகத் தியானிக்க விதிக்கிறது –
அயமர்த்த
சர்வஸ்ய வேத ஜாதஸ்ய ப்ரக்ருதி பிரணவ யுக்த -ப்ரணவஸ்ய ச ப்ரக்ருதி அகார -பிரணவ விகாரோ வேத ஸ்வ ப்ரக்ருதி பூதே
பிரணவ லீன -ப்ரணவோபி அகார விகார பூத ஸ்வ பிரகிருதவ்-அகாரே லீன -தஸ்ய பிரணவ ப்ரக்ருதி பூதஸ்ய-
அகாரஸ்ய-ய பர வாஸ்ய ச ஏவ மஹேஸ்வர இதி சர்வ வாசக ஜாத ப்ரக்ருதி பூத அகார வாஸ்ய சர்வ வாஸ்ய ஜாத
ப்ரக்ருதி பூத நாராயணோ ய ச மஹேஸ்வர -இத்யர்த்த –

இதன் பொருளாவது
எல்லா வேதங்களுக்கும் பிறப்பிடம் ஓம் எனும் ப்ரணவம்
அந்தப் ப்ரணவத்தின் பகுதி -வேர்ச்சொல் அ காரம் ப்ரணவத்தின் விரிவே வேதம் -ப்ரணவம் அகாரத்தின் விரிவு -அவ்வாறே அவைகள் முடியும் இடமும் லயம் -முறையே ப்ரணவம் அகாரம் ஆகின்றன –
இந்த அகாரத்தினால் அறுதியிடப் படுபவன் -எனவே அவனே மஹேஸ்வரன்
இதனால் சொற்கள் யாவற்றுக்கும் வேராக அகாரமும் அவைகளால் சுட்டப்படும் பொருள்கள் யாவற்றுக்கும் வேராக இருக்கும் -நாராயணனே மஹேஸ்வரன் -என்று தேறுகிறது

யதோக்தம் பகவதோ –
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகாத்தை பிரபவ ப்ரலயஸ் ததா மத்தப் பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய —
அக்ஷராணாம் அகாரோஸ்மி-ஸ்ரீ கீதை –

இக் கருத்தையே கீதையில் பகவான்-நான் இவ்வுலகு அனைத்துக்கும் உத்பத்தி இடமாகவும் முடிவு இடமாகவும் இருக்கிறேன்அர்ஜுனா என்னிலும் வேறுபட்ட எப் பொருளும் என்னை விட மேலானதாக இல்லை என்றும்எழுத்துக்களில் அகாரம் ஆகிறேன் என்றும் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறான் –
இதி அ இதி ப்ரஹ்ம இதி ஸ்ருதே –
அகாரேவை சர்வ வாக் -இதி ச வாசக ஜாதஸ்ய அகார ப்ரக்ருதித்வம் வாஸ்ய ஜாதஸ்ய ப்ரஹ்ம ப்ரக்ருதித்வம் ச ஸூ ஸ்பஷ்டம்

அ -என்பது ப்ரஹ்மம் என வேதம் கூறுகிறதுஅகாரத்தின் நின்றும் சொற்கள் யாவும் தோன்றுகின்றனசொற்கள் தோன்றுவதற்கு அ காரணமாக இருப்பது போலே அச் சொற்களின் பொருள்கள் யாவற்றிற்கும் அ காரத்தின் பொருளான ப்ரஹ்மம் என்பது வெள்ளிடை மலை
அத -ப்ரஹ்மண-அகார வாச்யதா ப்ரதிபாதநாத் அகார வாஸ்யோ நாராயண ஏவ மஹேஸ்வர -இதி சித்தம் –
தஸ்யைவ -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இதி கேவல பரதத்வ விசேஷ ப்ரதிபாதந பரேண-நாராயண அநு வாகேந சர்வ ஸ்மாத் பரத்வம் பிரபஞ்சிதம் –
அநேந அநந்ய பரேண ப்ரதிபாதிதமேவ பரதத்வம் -அந்ய பரேஷு சர்வேஷு வாக்யேஷு கேநாபி சப்தேந ப்ரதீயமாநம்
ததேவேதி அவகம்யதே-இதி -ஸாஸ்த்ர த்ருஷ்டயாதூபதேசோ வாமதேவ வைத்த –இதி ஸூத்ரா காரேண நீர்ணீதம்

பிறகு ப்ரஹ்மத்தை அகாரத்தால் கூறி -அதன் பொருளான நாராயணனே மஹேஸ்வரன் என்பது தன்னடையே கிடைக்கிறது -அவனையே ஆயிரம் தலைகள் உடையவன் -என்று பரத்வத்தை விளக்கிய பிறகு நாராயண அநுவாகத்தில் யாவற்றையும் விஞ்சினவாகக் கூறிஇவ்வாறு தனக்கு உவமை இல்லாதவன் -எனும் நிலையே பரத்வம் என்று நிறுவுகிறதுஇவ்வாறு தனக்கு உவமை மேலானவன் இன்மையைக் கூறி -தன்னிலும் வேறுபட்ட சொற்கள் யாவற்றிற்கும் மேம்பட்டு இருப்பது போல் அவனும் இருக்கிறான் என விளக்குகிறதுமற்றையோர் தனக்கு தனிப் பெரும் முதன்மை கூறிக் கொள்வது -ஸாஸ்த்ரங்கள் நன்கு அறிந்த வாம தேவர் -அவன் தன்னுள்ளும் இருப்பதை அறிந்து அவனே யாவும் செய்வதாகக் கூறிக் கொள்வது போன்றதுஇது ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நன்கு விளக்கப் பட்டு இருக்கிறது
ததேதத்க்வ பரம் ப்ரஹ்ம சித் ப்ரஹ்ம சிவாதி சப்தாவகதமிதி கேவல ப்ரஹ்ம சிவயோ ந பரத்வ பிரசங்க –
அஸ்மின் அநந்ய பரே னுவாகே தயோர் இந்திராதி துல்ய தயா தத் விபூதித்வ ப்ரதிபாதநாத் கசித் ஆகாய பிராணாதி சப்தேந
பரம் ப்ரஹ்மாபிஹிதம் இதி பூதாகாச பிராணாதே யதா ந பரத்வம் –

இவன் ஒருவனே பர ப்ரஹ்மமாய் இருக்க பிரம்மா சிவன் போன்ற சொற்களால் குறிக்கப் படுவோருக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்பது அதே நூலில்
வேறொரு இடத்தில் இந்திரன் போன்றோரும் இவ்வாறு கூறிக் கொள்ளுகையால் ஆகாயம் போன்ற சொற்கள் எவ்வாறு உத்பத்திக்குக் காரணமாகச் சொல்லப்பட்டு இருந்தாலும் அவை பர ப்ரஹ்ம்ம் அல்லவோ -அது போன்று இங்கும் சிவனுக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்று சொல்லப் படுகிறது –

———————-

109–யத் புநர் இதமா சங்கிதம்-
அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம -தஹரோஸ்மிந் நந்தராகாச -தஸ்மிந் யதந்தஸ் தந்வேஷ்டவ்யம்
ததுவாத விஜிஞ்ஞாசித்வயம்-இத்யத்ர ஆகாச சப்தேன ஜகதுபாதாந காரணம் ப்ரதிபாத்ய தத் அந்தரவர்த்திந –
கஸ்யசித்த தத்வ விசேஷஸ்ய அந்வேஷ்டவ்யதா ப்ரதிபாத்யதே அஸ்ய ஆகாசஸ்ய நாம ரூபயோ நிர்வஹகத்வ ஸ்ரவணாத்
புருஷ ஸூக்தே புருஷஸ்ய நாம ரூபயோ கர்த்ருத்வ தர்சநாஸ்ச-ஆகாச பர்யாய பூதாத் புருஷாத் அந் யஸ்ய அந் வேஷ்டவ்யதயா
உபாஸ்யத்வம் பிரதீயதே இதி

இது மற்ற ஒரு ஐயத்தைத் தோற்றுவிக்கிறதுபர ப்ரஹ்மத்திற்கு இருப்பிடமான இவ் வுடலில் ஹ்ருதயத்திலுள்ள தாமரை மலர் போன்ற இடத்திலுள்ள மிகச் சிறிய வெளியானது தேடி அறியத் தக்கது -அதுவே இடையறாது த்யானிக்கத் தக்கது -என்று உடலிலுள்ள ஆகாயம் குறிப்பிடப் படுகிறது -மேலும் அதனுள் உறைவதாயும் தன்னுடைய தொடர்பால் அதற்குச் சிறப்பளிப்பதாயும் -உலகிற்கு பருப்பொருள் காரணமானதாயும் வேறொன்று குறிக்கப்பிடப் பட்டு அது அந்த ஆகாசத்திற்கு பெயர் உருவம் அளிப்பதாயும் -அதற்கு மேலாண்மை யுடையதாயும் -புருஷ ஸூக்தத்தில் ஓதப்பட்டு இருக்கிறது -அதனால் ஆகாசத்தில் நின்றும் வேறுபட்டு புருஷன் என்ற பெயரும் உருவமுமுடைய ஒருவனே உபாஸிக்கத் தக்கவன் எனக் கொள்ளல் வேண்டும் -என முற் கூற்று கூறப்படுகிறது –
அநாதிதா வேதாநாம் அதிருஷ்ட ஸாஸ்த்ர விதாம் இதம் சோத்யம் -யத தத்ர ஸ்ருதிரேவ அஸ்ய பரிகார மஹா வாக்யகாரஸ் ச –

இக் கூற்றை தோற்றம் நிர்ணயிக்க முடியாத மறைகளாலும் ஸாஸ்த்ரங்களாலும் நுணுகி ஆராய்ந்தால் அவைகளில் இருந்தே தக்க விடையளிக்கும் மொழிகள் காணக் கிடைக்கின்றன –

தஹரோ அஸ்மின் நந்தர் ஆகாச -கிம் தத்ர வித்யதே யத் அந்வேஷ்டவ்யம் யத் வாவ விஜிஞ்ஞாசிதவ்யம் இதி சோதிதே-
யாவான் வா அயம் ஆகாச தாவநேஷோந்தர் ஹ்ருதய ஆகாச -இத்யாதிநா -அஸ்ய அகார சப்த வாஸ்யஸ்ய -பரம புருஷஸ்ய –
அநவதிக மஹத்வம் சகல ஜகத் காரணத்தயா -சகல ஜகத் ஆதாரத்வம் ப்ரதிபாத்ய -அஸ்மின் காமா ஸமாஹிதா
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ வி மிருத்யு ஸத்யஸங்கல்ப -இதி
அபஹதபாப்மத்வாதி -ஸத்யஸங்கல்பத்வ பயந்த குண அஷ்டகம் தஸ்மிந் நிஹிதம் இதி பரம புருஷவத்-பரம புருஷ குண அஷ்டகஸ்யாமி
ப்ருதக் விஜிஞ்ஞாசி தவ்யதா ப்ரதிபாதித யிஷயா தஸ்மிந் யதந்தஸ்ய தன்வேஷ்டவ்யம் இதயுக்தம் இதி ஸ்ருதியைவ சர்வம் பரிஹ்ருதம் —

ஏதத் யுக்தம் பவதி -கிம் ததத்ர வித்யதே யதந் வேஷ்டயம் இத்யஸ்ய சோத்யஸ்ய -தஸ்மிந் ஸர்வஸ்ய ஜகத ஸ்ரஷ்டத்வம்-ஆதாரத்வம் –
நியந்த்ருத்வம் -சேஷித்வம் -அபஹத பாப்மாதயோ குணாஸ் ச வித்யந்தே-இதி பரிகார இதி
தஹரம் என்பது ஹிருதயக் குகை -உள்ளுறை வெளி -அதனால் எது அறியப்படுகிறது -எது அறியத்தக்கது -எது ஆராயப்பட வேண்டியது என ஆராயின் கட் புலனாகும் வெளி எவ்வளவு பரந்ததோ அவ்வளவு இவ்வெளியும் பரந்ததே -என்று பரமபுருஷனுக்கு உரிய அளவற்ற விரிவும் -அவன் உலகிற்கு காரணமாதலும் -யாவற்றிற்கும் பற்றுக்கோடாக இருத்தலும் விளக்கப்பட்டு -இவனிடத்தில் விரும்பத் தக்கவை யாவும் நிறைந்து இருக்கின்றன
இந்தப் பரமாத்மா பாபம் அற்றவன் -மூப்பற்றவன் -அழிவற்றவன் – துயரமற்றவன் -பசியற்றவன் -தாகமற்றவன் -விருப்பங்கள் யாவும் அடையப் பெற்றவன் -தவறாத வினைத்திட்பம் உடையவன் -என எட்டுப் பண்புகளை உடையவன்
அவனையும் அவனுடைய இப் பண்புகளையும் தனித் தனியாக தியானிக்க வேண்டும்
அதுவே தஹராகாசம் என்று பரமாத்மாவையே தஹராகாசம் என்று நிலை நிறுத்துகிறது
இதன் விளக்கம்
இதில் என்ன உள்ளது -அது எவ்வாறுள்ளது என்று ஆராய்கையில் அகில உலகினையும் படைத்தல் -அவற்றிற்கு பற்றுக் கோடாதல் -அவற்றை அடக்கி ஆளுதல் -அவற்றைப் பணி கொள்ளுதல் -மேற் கூறிய எட்டுப் பண்புகள் இந்த ஆகாசத்தில் விளங்குகின்றன -என்பது தெளிவு –

ததாச வாக்யகார வசனம்–தஸ்மிந் யதந்த-இதி காம வ்யபதேச -இதி காம்யந்தே இதி காமா அபஹத பாப்மத் வாதயோ குணா இத்யர்த்த

அவ்வாறே ப்ரஹ்ம ஸூத்ரத்திலும்தஸ்மிந் யதந்த -என்ற இடத்தில் எல்லோரும் விரும்பும் குணங்களைக் குறிப்பிட்டு இருக்கிறதுஅதாவது பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள்
ஏதத் யுக்தம் பவதி -யத் ஏதத் தஹர ஆகாச சப்தாபி தேயம் -நிகில ஜகத் உதய விபவ லய லீலம்-பரம் ப்ரஹ்ம
தஸ்மிந்யத் அந்தர் நிஹிதம் அநவதிக அதிசயம் அபஹத பாப்மத்வாதி குண அஷ்டகம் தத் உபயமபி அன்வேஷ்டயம் விஜிஞ்ஞாசி தவ்யம் இதி
யதா ஆஹ-அதய இஹாத்மாந மனு வித்யா வ்ரஜயந்த்யே தாம்சச சத்யாந் காமாம் ஸ்தேஷாம் சர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி -இதி –

இதை மேலும் விளக்குவோம்
எது தஹாராகாஸம் எனப் படுகிறதோ அதுவே உலகு யாவையும் படைத்து காத்து அழித்து வினை புரியும் ப்ரஹ்மம்
அதனுடைய பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள் ஆகிய இரண்டையும் தேட வேண்டும் -மனத்தில் நிலை நிறுத்த வேண்டும் -எனக் கூறுகிறது
பிறகு எவர்கள் பரமாத்மாவையும் அவனுடைய இந்த எட்டுக் குணங்களையும் அறிந்து பரமபதம் செல்லத் தகுதியானவர்களோ அவர்களுக்குத் தாங்கள் விரும்பும் உலகுகளுக்குச் செல்லும் திறன் தன்னடையே ஏற்படுகிறது -எனக் கூறுகிறது –

——————

110–ய புந -காரணஸ்யைவ த்யேயதா ப்ரதிபாதந பரே வாக்யே-விஷ்ணோ அநந்ய பரவாக்ய ப்ரதிபாதித பரதத்வ பூதஸ்ய
கார்ய மத்யே நிவேச ச -ஸ்வ கார்ய பூதத்வ சங்க்யாபூரணம் குர்வத-ஸ்வ லீலயா ஜகத் உபகாராய ஸ்வ இச்சாவதார இத்யவ
கந்தவ்ய யதா லீலயா தேவ சங்க்யா பூரணம் குர்வத-உபேந்த்ரத்வம் பரஸ்யைவ யதாச ஸூர்ய வம்சோத்பாவ
ராஜ சங்க்யா பூரணம் குர்வதா -பரஸ்யைவ ப்ரஹ்மணோ தாஸாதி ரூபேண ஸ்வ இச்சாவதார –
யதா ச ஸோம வம்சங்க்யா பூரணம் குர்வதோ பகவத-பூ பாராவ் தரணாய
ஸ்வ இச்சயா வஸூ தேவ க்ருஹேவதாரா ஸ்ருஷ்ட்டிப் பிரளய ப்ரகாரனோஷு நாராயண ஏவ
பரம காரண தயா ப்ரதிபாத்யதே இதி பூர்வமே வோக்தம் —

மீண்டும் –
காரணம் ஒன்றே த்யானிக்கத் தக்கது என்று கூறி இருப்பதால் -அந்தக் காரணம் என்பது யாது என ஆராய்ந்தால்-மற்றை தேவதைகளைப் பற்றிக் குறிப்பிடாத நாராயண அநுவாகத்தில் பர தத்வமான காரணம் –
ஆயினும் அவன் கார்யமான மற்ற தேவதைகளுக்கும் ஏற்றத்தைக் கொடுக்க தன் விருப்பத்தாலேயே கீழ் இழிந்து -அவர்களில் ஒருவராக எண்ணப்படும் படி தன்னைத் தாழ விடுகிறான்
தன் அந்த எண்ணத்தின் படியே உபேந்த்ரன் போன்ற பிறப்புகளை எடுக்கிறான் -அவ்வாறே தன் இச்சையால் ஸூர்ய வம்ஸத்தில் தாஸரதியாகத் தோன்றுகிறான்
பூமி பாரம் நீக்க வாஸூ தேவன் வீட்டில் அவதரித்து சந்த்ர வம்சத்தில் வைத்து எண்ணப்படுகிறான்
படைப்பு பிரளய காலங்களில் பரம காரணமாக நாராயணனாக தன் நிலையில் இருக்கிறான்
இவ்வாறு கொள்வதால் மட்டுமே வேத வாக்யங்கள் ஓன்று படுகின்றன –

——–

111–யத் புந -அதர்வ சிரஸ் -ருத்ரேண ஸ்வ சர்வ ஐஸ்வர்யம் பிரபஞ்சிதம் தது-
சோ அந்தராதந்தரம் ப்ராவிசது-இதி பரமாத்ம பிரவேசாதுக்தம் -இதி ஸ்ருதியைவ வ்யக்தம் –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூபதேசா வாம தேவவத் -இதி ஸூத்ர காரேண ஏவமாதீநாம் அர்த்த ப்ரதிபாதித

மீண்டும் -அதர்வ ஸிரஸ் என்னும் வேதப் பகுதியில் ருத்ரனால் தனது செல்வங்கள் என்று பரக்கத் பேசப் படுபவைகள்நான் அகத்தின் அகத்தையும் நிறைப்பவன் -என்று பரமாத்மாவால் அவன் நிறைக்கப் பட்டு இருத்தலால் வேதக் கருத்துக்களுக்கு இசையும்வாம தேவர் போன்று ஸாஸ்திரம் நன்கு அறிந்தோர் செய்யும் உபதேசம் -என்று இது போன்ற சொற்களுக்கு பொருள் கொள்ள வேண்டும் என்று ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நிறுவப் பட்டு இருக்கிறது-
யதோக்தம் ப்ரஹ்லாதேநாபி –
சர்வ கத்வாதநந் தஸ்ய ச ஏவாஹ மவஸ்திதித–ஏரவாஹ மத்தஸ் சர்வம் மஹம் சர்வம் மயி சர்வம் சநாதநே–இத்யாதி

அவ்வாறே ப்ரஹ்லாதனும்எப்பொருளிலும் ப்ரஹ்மம் நிறைந்து இருப்பதால் அதாக நான் இருக்கிறேன் -என்னிடம் இருந்தே யாவும் தோன்று கின்றன – நானே யாவுமாய் ஆகிறேன் அழிவற்று இருக்கிறேன் -என்று சொல்கிறார்
அத்ர சர்வகத்வாத நந்தஸ்ய இதி ஹேதுருத்த ஸ்வ சரீர பூதஸ்ய ஸர்வஸ்ய சிதசித் வஸ்துந ஆத்மத்வேந சர்வகத பரமாத்மா
இதி சர்வே சப்தா சர்வ சரீரம் பரமாத்மாநாமே அபிதத தீத் யுக்தம் அத காம் இதி சப்த ஸ்வாத்ம பிரகாரிணம் பரமாத்மநமேவ ஆசஷ்டே
அத இதம் உச்யதே
ஆத்மேத்யேவ து க்ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தன்னிஷ்பதே இத்யாதிநா காம் க்ருஹண உபாஸநம் வாக்ய காரேண –
கார்யாவஸ்த காரணாவஸ்தாஸ் ச ஸ்தூல ஸூஷ்ம அசித் சித்த வாஸ்து சரீர பரமாத்மைவ இதி -ஸர்வஸ்ய தந்நிஷ் பத்தே -இத்யுக்தம்–
ஆதமேதி தூப கச்சந்தி க்ராஹயந்நி ச-இதி ஸூத்ரா காரேண ச —

இதற்குக் காரணம்
ப்ரஹ்மம் எல்லை யற்று யாவற்றின் உள்ளும் நுழைந்து இருத்தல் என விளக்கப் பட்டு இருக்கிறது –
ப்ரஹ்மம் சேதன அசேதன பொருட்களை தன் உடலாகக் கொண்டு ஆத்மாவாகக் கொண்டு நிறைந்து இருப்பதால்
எல்லாச் சொற்களும் யாவற்றையும் உடலாக யுடைய பரமாத்மாவையே குறிக்கும் என்பதே பொருள்
பிறகு நான் என்ற சொல்லும் தன் ஆத்மாவைக் காட்டி அதைத் தன் உடலாகக் கொண்டு அதனுள் விளங்கும் பரமாத்மாவையே குறிக்கிறது

பிறகு த்யானிக்கையில் நம் ஆத்மாவிற்குள் பரமாத்மா இருக்கிறான் என்றே தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லப்படுகிறது -ஏன் என்றால்
அவனே யாவற்றிற்கும் தோற்றக் காரணமாய் இருக்கிறான் என்றும் விளக்கப் படுகிறது
அவன் காரண நிலையில் கட் புலனாகாத சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் சேதனங்களையும் கார்ய நிலையில் கட் புலனாகிற சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் அவனிடமிருந்து யாவும் உண்டாகின்றன என்று கொள்வதே முறை
அவனை ஆத்மா உயிர் -என்றே உபாஸகர்கள் யாவரும் இடையறாது த்யானிக்கிறார்கள் –
ஸாஸ்த்ரங்களும் அவ்வாறே நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன என்பதே ப்ரஹ்ம ஸூத்ரகாரரின் கொள்கை –

———

112–மஹா பாரதே ச ப்ரஹ்ம ருத்ர சம்வாதே ப்ரஹ்மா ருத்ரம் ப்ரத்யாஹ-
தவாந் தராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்தா–இதி ருத்ரஸ்ய ப்ரஹ்மணஸ் ச-அந்யே ஷாஞ்ச தேஹினாம்
பரமேஸ்வரோ நாராயண அந்தராத்மதயா வஸ்தித -இதி-
ததாதத் ரைவ -விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச-தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் ச விஷேஹே மஹேஸ்வர –
இதி தத்ரைவை -ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் பிரசாத க்ரேதஜவ் ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் –
இதி அந்தராத்மதயா அவஸ்தித நாராயண தர்சித பதவ் ப்ரஹ்ம ருத்ரவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார கார்யகரவ்–இத்யர்த்த –

மஹா பாரதத்தில் -பிரம ருத்ர உரையாடலில் பிரம்மா உனக்கும் எனக்கும் உடல் படைத்த யாவருக்கும் அந்த பர ப்ரஹ்மமே அந்தராத்மா வாகிறான் என்று கூறுகிறார் –
ருத்ரனுக்கும் பிரம்மாவுக்கும் மற்றைய உடல் படைத்தோர் யாவருக்கும் பரமேஸ்வரனாய் இருப்பவன் நாராயணனே –
அவனே அந்தராத்மாவாக நிலை பெற்று இருக்கிறான்-என்று இதற்குப் பொருள்

அதிலேயே மேலும் -அளவற்ற தேஜஸ்ஸை யுடைய பவனுக்கு சிவனுக்கு -விஷ்ணுவே ஆத்மா என்றும்
தொடர்ந்து -இப்படிப் பட்ட தேவர்களில் சிறந்த ப்ரம்மா சிவன் ஆகியோர் நாராயணன் மகிழ்ச்சியுடனும் கோபத்துடனும் இருக்கையில் முறையே படைக்கப் பட்டார்கள் என்றும்
அவனால் வழி காட்டப்பட்டு படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்றும் சொல்லப் படுகிறது –

அந்தராத்மாவில் இருந்து கொண்டு நிலை பெற்ற நாராயணனால் தூண்டப் பட்டே ப்ரம்ம ருத்ரர்கள் படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்பது இதன் பொருள்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -முதல் பகுதி –பிரதிபக்ஷ நிரஸனம்-

July 14, 2024

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

——-

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: I
I–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

இனி மேலே கத்யமாகவே அருளிச் செய்கிறார் –

3–அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய -தத் பிராப்தி பல

(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னிட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத் யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)

உலகிலுள்ள அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் புரியும்படி நற் பொருளை நிலை நிறுத்து வதற்காக வேதக் கூட்டங்Thaliaதலை எனப்படும் உப நிஷத்துக்களில் நின்றும் இனி வரும் பொருள் நன்கு அறிவிக்கப் படுகிறது

ஜீவாத்மா அதன் மெய் நிலை பரமாத்மா அதன் மெய் நிலை இவற்றை அறிந்து வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்து அந்தப் பரம புருஷானின் இரு திருவடிthyaanaத்யானம் அர்ச்சனம் வணக்கம் இவைகளை அவனுடைய உகப்புக்காகச் செய்து அவனை அடைவதையே பலனாகக் கொள்ள வேண்டும் –

உபநிஷத்துக்களின்றும் இனி வரும் பொருள் நன்கு அறிவிக்கப்படுகிறது –
யாதாத்ம்ய ஞானமும் – வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப் பிடித்து பரம புருஷனின் திருவடித் தாமரைகளில் த்யானம் அர்ச்சனம் நமஸ்காரம் இவற்றை பகவத் ப்ரீதி அர்த்தமாகக் -கைங்கர்ய பரமாக -அவன் உகப்புக்காகச் செய்து இத்தையே ஸ்வயம் பிரயோஜனமாகக் கொள்ள வேண்டும்

அஸ்ய ஜீவாத்மநோ அநாத் யவித்யா ஸஞ்சித புண்ய பாப ரூப கர்ம ப்ரவாஹ ஹேதுக ப்ரஹ்மாதி ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மக சதுர்வித தேஹ ப்ரவேஸ க்ருத தத் தத் ஆத்மாபிமான ஜெனித அவர்ஜனீய பவபய வித்வம்ஸநாய தேஹாதி வ்யதி ரிக்த ஸ்வரூப -தத் ஸ்வ பாவ -தத் அந்தர்யாமி பரமாத்ம -தத் ஸ்வபாவ -தத் உபாஸன-தத் பல பூதாத்ம ஸ்வரூப ஆபிர்பாவ பூர்வக அனவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே ப்ரவ்ருத்தம் வேதாந்த வாக்ய ஜாதம்
தத்வமஸி
அயமாத்மா ப்ரஹ்ம
ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா ஸரீரம் ய ஆத்மான் அந்தரோ யமயதி ஸதே ஆத்ம அந்தர்யாம் யம்ருத
ஏஷ –ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண
தமேதம் வேத அநு வசனனேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஜேந தாநேந தபஸா நஸகேந
ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
தமேவம் வித்வானம் ருதமிஹ பவதி நான்யப்பந்தா அயனாய வித்யதே –
இத்யாதிகம்

இந்த ஜீவாத்மா உடன் தோன்றிய அசேதனப் பொருள்கள் அதன் ஆரம்பம் இல்லாத் தொடர்புகள் -புண்ய பாபங்கள் -அதன் அடியான ஜன்மங்கள் -ப்ரம்மா முதல் தேவர் மனிதர் விலங்கு ஸ்தாவரம் முதலான நான்கு விதப் பிறப்புக்கள்
அதனால் ஏற்பட்ட அந்தந்த சரீரங்களையே ஆத்மாவாக நினைத்து அதனால் ஏற்பட்ட பிறவிச் சுழல் பயத்தைப் போக்கி -உடலின் நின்றும் வேறுபட்ட ஆத்மா அதன் மெய் நிலை அதன் மெய்க்குணம் -அதற்க்கு உள்ளுறைவானாயுள்ள பரமாத்மா -அதன் மெய்நிலை குணம் இவற்றையும் அறிasthmஆத்ம மெய் நிலை எய்தி குறைவற்ற ப்ரஹ்மானந்தம் அடைதல் எனச் சொல்ல வந்தது வேதாந்தம்

ஆப்நோதி -ப்ரஹ்மத்தை அடைகிறான் -ஆனால் ப்ரஹ்மமாகவே ஆகிறான் என்ற அத்வைதிகளின் கொள்கை தவறாகக் கூறுகிறது

————–

4–ஜீவாத்மந ஸ்வரூபம்
தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷ ரூப நாநாவித பேத ரஹிதம்
ஞான ஆனந்த ஏக குணம்
தஸ்யை தஸ்ய கர்ம க்ருத தேவாதி பேத வித்வஸ்தே ஸ்வரூப பேதோ வாசா மகோசர ஸ்வ சம்வேத்ய
ஞான ஸ்வரூபம் இத்யேதாவ தேவ நிர்தேஸ்யம் தச்ச ஸர்வேஷாம் ஆத்மாநாம் சமாநம்

(மோக்ஷ தசையில் ஸ்வரூப பேதம் மட்டுமே இருக்கும் -எல்லா ஆத்மாக்களும் சமம் -தேவாதி பேத ஆகாரங்கள் போன பின்பும் வெவ்வேறே ஜீவன்)

(ஸ்வ சம்வேத்ய-ஸ்வயம் வேத்ய -ஸ்வயம் ப்ரகாஸம்)

ஜீவாத்ம மெய் நிலை–தேவ மனித விலங்கு ஸ்தாவரம் என்ற நான்கு பிறப்புகளில் தான் ஏற்று இருக்கும் அசேதன பொருளின் வேறுபாட்டுக்கு ஏற்ப பற்பல விதமாய் இருக்கும்
குணம் ஞானமும் ஆனந்தமும் எப்பொழுதும் கொண்டிருக்கும் -அந்த அப்படிப்பட்ட ஜீவாத்மாக்களுக்கு வினைகளால் ஏற்பட்ட புண்ய பாபங்களுக்கு ஏற்ப தேவர் முதலிய உருவ வேறுபாடு சொற்களுக்கு அடங்காது –
தானே அறியப்படுவது
ஆத்மாவுக்கு ஞானமும் ஆநந்தமுமே மெய் நிலை என்பது வெளிப்படை -இதனால் ஆத்மாக்கள் அனைத்தும் ஒருபடித்தானவை –

——

5-ஏவம் வித சித் அசித்தாத்மக பிரபஞ்சஸ்ய -(ஸ்ருஷ்டிக்கப்பட்ட ) உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்தன ஏக ஹேது பூத
ஸமஸ்த ஹேய பிரத்ய நீக தயா-அநந்த கல்யாணைக தான தயாஸ(ஏக தான தயா அனைத்துக்கும் ஏக ஆஸ்ரயம் இவனே )-(இரண்டாலும் விலக்ஷணன் )
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண
சர்வாத்ம
பர ப்ரஹ்ம
பரஞ்சோதி
பரமாத்மா
சதாதி சப்த பேதைர் நிகில வேதாந்த வேத்யோ பகவான் நாராயண புருஷோத்தம
இத் யந்தர்யாமி ஸ்வரூபம்

(ஸ்வரூபம் விளக்கி மேல் ஸ்வ பாவம்)

தஸ்ய ச வைபவ ப்ரதிபாதன பரா பேத ஸ்ருதய
ஸ்வ இதர ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாதாந்தர ஆத்ம தயா நிகில நியமனம்
தத் சக்தி -ததம்ச -தத் விபூதி -தத் ரூப -தத் சரீர -தத் தனு -ப்ரப்ருதிஸ் சப்தை தத் சாமாநாதி கரண்யேந ச ப்ரதிபாத யந்தி

(சக்தி ரூபம் -அகிலம் ஜகத்
அம்சம் -அம்சாதிகரணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம் -branch office போல்
விபூதி -விபூதிமான்
ரூப -சரீர -தனு)

இவ்வாறு சேதன அசேதன பொருள்கள் கலந்த பிரபஞ்சத்தின் படைப்பு காப்பு அழிப்பு ஆகிய பிறவிச் சூழலில் தள்ளும் தாழ்ந்த குணங்களுக்கு எதிர்த்தட்டாக முடிவற்ற குணங்களுக்கும் ஆனந்தத்திற்கும் இருப்பிடமாய்
தன்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பொருள்களிலும் சிறந்தவனாய்
அளவற்ற நற்குணங்கள் கூட்டங்கள் உள்ளவனாய்
ஸர்வாத்ம
பர ப்ரஹ்மம்
பரஞ்சோதி
பரதத்வம்
பரமாத்மா
ஸத்
என்று பலவகையான சொற்களால் எல்லா வேதங்களாலும் குறிப்பிடப் படுபவனாய் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீSakthiசக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்தவனாய் ஈர் ஏழு பதினான்கு உலகுகளையும் பரமபதத்தையும் உடையவன்
நாராயணன் புருஷோத்தமன் என்னும் சொற்களால் அறியப்படுபவன்

இப்படிப்பட்ட சிறப்புகளால் கூறப்படுவது ஜீவாத்மா பரமாத்மாவை வேறு படுத்திக் கூறும் வேதங்களுக்கு ஒத்து இருக்கும்
அவ்வாறே அந்த சக்தி -அந்த அம்சம் -அந்தச் செல்வம் -அந்த உருவம் அந்த உடல் என்று கூறும் சொற்கள் ஸாமா நாதி கரண்யத்தால் அவனுடைய ஆளுமையையே குறிக்கின்றன
ஆகவே எல்லாச் சொற்களும் அவனுடைய பெருமையைக் கூறுகின்றன என்பதில் முரண் இல்லை

————

6-தஸ்ய வைபவ ப்ரதிபாதன பராணாம் ஏஷாம் சாமாநாதி கரண்ய அதீநாம்

(ப்ரஹ்மம் வைபவம் காட்டும் சாமானாதிகார பரமான ஸ்ருதி வாக்கியங்கள் -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
சேஷ சேஷி -நியந்தரு நியாம்ய சரீரி சரீர- ஆதார ஆதியே பாவம்-ஒன்றும் ஒன்றியே இருக்கும்-
ஒன்றும் தேவும் யாதும் இல்லா அன்று –)

விவரணே ப்ரவ்ருத்தா கேசந(அநாதரணீயம் -ஐக்யம் சொல்லி மேல் மேல் )
நிர்விசேஷ ஞான மாத்ரமேவ ப்ரஹ்ம–(சின் மாத்ர -ஒன்றை விலக்க மாத்ர பத பிரயோகம் -சித் ஏவ -வேறே ஒன்றை விலக்கும்
சித் -ஞானம் ஒன்றே -ஞாதா -ஜேயமும் இல்லை )தச்ச நித்ய முக்த ஸ்வ பிரகாசம் அபி
தத்வமஸ்யாதி சாமாநாதி கரண் யவகத ஜீவ ஐக்யம்(தத் ஸப்த வாசியான ப்ரஹ்மம்- த்வம் ஸப்த வாசியான ஸம்ஸாரி ஜீவன் உடன் ஐக்யம் )
ப்ரஹ்மைவ அஞ்ஞம்  முச்யதேச (அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம் ப்ரஹ்மமே ப்ரஹ்மம் ஏவ பத்த ஜீவன் முக்த ஜீவன் ) நிர் விசேஷ சின்மாத்ராதி ரேகி
ஈஸ ஈஸிதவ்ய (பதார்த்த தாரதம்யங்களுக்கு உப லக்ஷணம் )அநந்த விகல்ப ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஜகத் மித்யா(கயிறு பாம்பு யாதாத்ம்ய ஞானத்தால் அறிவது போல் இதம் ப்ரஹ்மம்-ஞான நிவர்த்ய பதார்த்தம் மித்யா -ஞான மாத்திரம் மோக்ஷம் அவர் பக்ஷம் )
கஸ்சித் பத்த கஸ்சித் முக்த இதீயம் வ்யவஸ்தா ந வித்யதே(பந்தப்படுவதும் விடுபடுவதும் மித்யா-வ்யவஸ்தையும் மித்யா )
இத பூர்வம் கேசந முக்தா இத்யயம் அர்த்தோ மித்யா
ஏகமேவ சரீரம் ஜீவவத் நிர் ஜீவாநி தாராணி சரீராணி(ஓன்று மட்டுமே ஜீவன் உள்ள சரீரம் -மற்றவை ஜீவன் இல்லா சரீரங்கள்-நாநாவித தோற்றம் வாசனையால் -அநாதி )
தச்ச சரீரம் கிமிதி ந வ்யவஸ்திதம் ஆசார்யோ ஞானஸ் யோபதேஷ்டா மித்யா -ப்ரமாதா மித்யா –
ஸாஸ்த்ரம் ச மித்யா -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் ச மித்யா-
ஏதத் சர்வம் மித்யா- பூதேநைவ சாஸ்த்ரேணாவகதம் -இதி வர்ணயந்தி(இப்படி சிலர் வியாக்யானம் பண்ணுகிறார்கள் )

(ஞானம் -ஆச்சார்யன் இரண்டு இருக்க முடியாதே
ஞானத்துக்கு ஆஸ்ரயமான ஆச்சார்யன் -அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமான சிஷ்யன்-

ப்ரமாதா ப்ரமாணம் ப்ரமேயம் அனைத்தும் மித்யா-தத்வமஸி வாக்கியமும் ப்ரஹ்ம வ்யா வ்ருத்தி அதுவும் மித்யா )

அந்தப் பரமாத்மாவின் பெருமையைக் கூறுவதையே பொருளாக யுடைய ஸாமாநாதி கர்ணயத்தை விவரிக்க வந்த சிலர்
ப்ரஹ்மம் என்பது குணம் ரூபம் விபூதிகள் அற்ற தன்னொளி கொண்டது மட்டும் -அதற்கு நித்யர்கள் முக்தர்களைப் போல தன்னொளி கொண்டு இருந்தாலும் தத்வமஸி என்ற ஸாமாநாதி கரண்யத்தால் சொன்ன
ப்ரஹ்ம ஜீவ ஒருமை -ப்ரஹ்மமே அறியாமை நிறைந்தது -பிறவிச் சூழலில் கட்டுப்படுகிறது -அதினின்றும் விடுபடுகிறது -என்று பொருள் படுகிறது
குணங்கள் அற்ற ஞானம் மட்டுமே ப்ரஹ்மமானால் -ஆள்பவன் -ஆளப்படுபவன் -பிரபஞ்சம் முதலிய அநேக பிரிவுகளை யுடைய யுலகம் எல்லாம் பொய்
கட்டுப் பட்டவன் விடு பட்டவன் என்ற ஒழுங்கு இல்லை
இதற்கு முன் சிலர் முக்தி அடைந்தார்கள் iஎன்பது இல்லை
ஒரே சரீரத்தில் மட்டும் ஜீவன் இருக்கிறது -மற்றவை ஜீவன் அற்றவை -அந்த ஜீவனுடைய உடல் எது என்பது வரையறுக்கப் படவில்லை –
ஞானத்தை உபதேசிக்கும் ஆச்சார்யனும் அதை அறியும் சீடனும் பொய் -அறிய முயலுபவனும் பொய் -ஸாஸ்த்ரங்களும் அதனால் கிடைக்கும் அறிவும் பொய்
இது இவ்வாறு இருப்பது பொய்யான ஸாஸ்திரத்தாலேயே அறியப்படுகிறது -என்று வர்ணிக்கின்றனர்

——————–

அத பாஸ்கர பஷ சங்க்க்ஷேபம்
7-அபரே து–அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணோ பேதாமபி ப்ரஹ்ம -ஏதேனைவ ஐக்யாவ போதேந முச்யதே
நாநாவித அமல ரூப பரிணாம ஆஸ்பதம் ச இதி வ்யவஸ்திதா

(ப்ரஹ்மம் நிர் விசேஷம் அல்ல -ஜகத்தும் -மித்யை அல்ல -சத்யம் என்பர்-உபாதி -கல்பித்து -புண்ய பாப கர்மாவே உபாதி இவையும் சத்யம் மித்யை அல்ல
உபாதியால்  ப்ரஹ்மமே பரிணாமம் அடைந்து அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமாகி நாநா விதமாக தோன்றுகிறது என்பர்-ஏகமேவ அத்விதீயமாக இருக்க -உபாதி -ஸ்வா பாவிக தர்மத்துக்கு விபாகம் உண்டாக்கும் -முக்த தசையில் ஐக்யம் என்பர் -)

பாஸ்கரர் கொள்கைக்குச் சுருக்கம்

மற்றும் சிலர் -பாவங்கள் ஒட்டாத நற் குணங்களை யுடையது ப்ரஹ்மம் -என்று வேதம் சொல்லும் என்றாலும் -கூட உயிர் ப்ரஹ்ம பலன்கள் தொடர்பு முதலியவற்றோடு கட்டுப்படுதல் விடுபடுதல் முதலான பலவித குறைகளுடன் கூடி பரிணாமத்தை அடைகிறது என்று கூறுகிறார்கள்

பொருள் தன்மை குணம் வகை செயல் ஆகியவற்றைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளைக் காட்டினால்
சொற்கள் பலவாக இருப்பினும் பொருள் ஒன்றைக் கொள்வதாக ஸாமா நாதி கரணம் என்று வடமொழி இலக்கணத்துக்கு தமிழ் இலக்கணத்தில் அன் மொழித் தொகைக்கு நெருங்கியது –

————

அத யாதவ பிரகாச பஷ சங்க்க்ஷேபம்
8–அந்யே புந ஐக்யாவ போத யாதாத்ம்யம் வர்ணயந்த
ஸ்வாபவிக நிரதிசய அபரிமித உதார குண சாகரம் ப்ரஹ்மைவ -ஸூர நர திர்யக் ஸ்தாவர -நாரகி ஸ்வர்க்ய பவர்கி –
சேதனைக ஸ்வபாவம்– ஸ்வபாவதோ விலக்ஷணம் அவிலக்ஷணஞ்ச வியதாதி நாநாவித பரிணாம
ஆஸ்பதம்ச இதி ப்ரத்யவதிஷ்டந்தே

(நாரகி ஸ்வர்க்ய பவர்கி –நரகம்-ஸ்தான விசேஷம் இல்லை -நரக அனுபவம் செய்யும் ஆத்மா -நாரகி
பாப பல ரூப துக்க அனுபவம் செய்பவனாகவும் -புண்ய பல ரூப இன்ப அனுபவம் செய்பவனாகவும்

அபவர்க்கி -இதுவும் ஸ்தான விசேஷம் இல்லை -அனுபவத்தை சொன்னவாறு

ப்ரஹ்மமே ஸ்வரூபேண பரிணாமம் அடைகின்றது என்பர் )

யாதவ பிரகாசர் கொள்கைச் சுருக்கம்

வேறு சிலர் -தத்வமஸி போன்ற வாக்யங்கள் கலத்தலை எவ்வாறு உள்ளபடி சொல்வதாக வர்ணிக்கிறார்கள் என்றால்
இயற்கையாகவே ஒப்புயர்வற்ற அளவற்ற மேன்மையான குணங்களின் கடலாக இருக்கும் ப்ரஹ்மமே மனித விலங்கு ஸ்தாவர -நரகில் உழலும் -ஸ்வர்க்கத்தில் மகிழும் -முக்தியடைந்த அறிவின் தன்மையை அடைகிறது
இயற்கையாகவே சிறந்த தாழ்ந்த ஆகாயம் முதலானவைகளாக மாறுதலை அடைகிறது -என்று கூறுகிறார்கள் –

—————

அத சங்கர பஷ ப்ரதிஷேபம்
9–தத்ர பிரதம பக்ஷே ஸ்ருத்யர்த்த பர்யா லோசன பரா-துஷ் பரிஹராந் தோஷாந் உதாஹரந்தி

பிரகிருத பராமர்சி தச் ஸப்தாவக தஸ்ய ப்ரஹ்மண ஸ்வ சங்கல்ப கிருத ஜகத் உதய விபவ லயாதய
(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் வாக்கியம் )தத் ஐஷ்த பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாரம்ய
சந் மூலா (ஸத் ப்ரஹ்மமே மூலமாகக் கொண்டு )ஸோம்யேமாஸ் சர்வாஸ் ப்ரஜாஸ் சதாயதநாஸ் (ஆயதனம் இருப்பிடம் )சத் பிரதிஷ்டாஸ் (அதிலேயே லயம் )இத்யாதிபிஸ் பதைஸ்
ப்ரதிபாதிதாத் சம்பந்தி தயா பிரகாரணாந்தர நிர்திஷ்டா(இதே போல் வேறே பிரகரணங்களிலும் உண்டே )
சர்வஞ்ஞதா -சர்வ சக்தித்வ-(ஸங்கல்ப மாத்ரத்தால் செய்யும் சக்தி )சர்வேஸ்வரத்வ (நியந்த்ருத்வம் )-சர்வ பிரகாரத்வ -(சரீர சரீரீ பாவம் )சமாப்யதிக நிவ்ருத்தி -சத்ய காமத்வ -ஸத்ய ஸங்கல்பத்வ –
சர்வ அவபாசகத்வாத் (இவன் அதீனத்தாலே மற்ற தேஜஸ் பதார்த்தங்கள் )யநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா
அபஹதபாப்மா இத்யாதி அநேக வாக்யாவகத் நிரஸ்த நிகில தோஷதா ச சர்வே தஸ்மிந் பக்ஷே விஹன்யந்தோ –(நிர்விசேஷ ப்ரஹ்மம் ஸித்திக்காதே )

சங்கரர் கொள்கை சுருக்கம்

வேதப் பொருள்களை முன்னும் பின்னும் நன்கு ஆராய்ந்தவர்கள் –ஆளவந்தார் போன்றோர் -அந்த முதல் பக்ஷத்தில் உள்ள விலக்க முடியாத குற்றங்களை கீழ்க் கண்டவாறு எடுத்துக் காட்டுகிறார்கள்
இந்த இடத்தில் தத் என்று குறிப்பிடப் படும் சொல் ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது –
அந்தப் ப்ரஹ்மம் தானே செய்ய விரும்பியதாக உலகங்களின் தோற்றம் பாதுகாப்பு அழிவு முதலியவை ஆகின்றன –
நான் பலவாக ஆவேன் -என்று அது நினைத்தது -எனத் தொடங்கி -எல்லாம் அந்த ஸத் -தை ஆதாரமாகக் கொண்டவை அதனிடமே நிலை பெறுபவை -என்று பல சொற்களால் சுட்டிக் காட்டப்படும் -தத் -அது என்ற பதம் இவ்விடத்தில் அதனுடன் தொடர்புடைய எல்லாவற்றையும் அறியும் தன்மை யுடையது
எதையும் செய்யும் ஆற்றல் உடையது
எல்லாவற்றையும் ஆளும் தன்மை படைத்தது
எல்லாவற்றையும் சூழ்ந்து உள்ளது
தனக்கு ஒப்பும் மிக்கும் அற்றது
தன் ஒளியால் பிரகாசிப்பது போன்ற ஒப்பு மிக்கும் அற்ற -அளவற்ற கல்யாண குணங்களை யுடையது என்பது விளங்குவதாலும்
பாபங்கள் சிறிதும் அற்றது என்று பல இடங்களிலும் தாழ்ந்த குணங்கள் இன்மையைக் காட்டுவதாலும்
மேற்கூறிய பக்ஷம் அழிக்கப் படுகிறது –

ஸர்வ வேதாந்தப் ப்ரத்யயம் -ஸர்வ ஸாகாப் ப்ரத்யயம்
ஜகத் அஜகத் ஜகதா ஜகத் -விட்ட விடா விட்டு விடா
ஒன்றும் தேவும் -ஈடு வியாக்யானம் ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -ஸ்ருதி விளக்கம் உண்டு –

———–

10-அத ஸ்யாத் -(மேல் அத்வைதிகள் வாதம் )-உபக்ரமேபி (ப்ரகரண ஆரம்பத்தில் )ஏக விஞ்ஞாநேந-சர்வ விஞ்ஞான முகேன காரணஸ்யைவ சத்யதாம் ப்ரதிஜ்ஜாய(இது அனுப பன்னம் என்று சொல்ல மூன்று த்ருஷ்டாந்தங்கள்-ம்ருத் பண்டம் -நாம ரூபங்கள் அசத்தியம்-அழியுமே – மண் என்பதே ஸத்யம் -ஸ்வரூப மாத்ரம் ஸத்யம்- இதர ஸர்வம் மித்யா )
தஸ்ய காரண பூதஸ்யைவ சத்யதாம் விகார பூதஸ்ய ச அசத்தியதாம் ம்ருத் திருஷ்டாந்தேந தர்சியித்வா ஸத்ய பூதஸ்யைவ ப்ரஹ்மண
சதேவ ஸோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதி(சத்தாகவே இருந்தது விஜாதீயம் இல்லை -ஒன்றாகவே இருந்தது ஏகமேவ -சஜாதீயம் இல்லை -அத்விதீயம் ஸூவ கத பேதமும் இல்லை )
சஜாதீய விஜாதீய  நிகில பேத நிரசநேன–நிர்விசேஷ தைவ ப்ரதிபாதிதா –
ஏதச் சோதகாநி ப்ரகாராணந்தர வாக்ய அந்யபி
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
விஞ்ஞானம் -ஆனந்தம் -இத்யாதீனி சர்வ விசேஷ ப்ரத்யநீகைககாரதாம் போதயந்தி
ந ச ஏகாகார அவபோதநேபி பதாநாம் பர்யாயதா ஏகத்வேபி வஸ்துன சர்வ விசேஷ ப்ரத்ய
நிகாகாரத்வோபஸ்தாபநேந சர்வபதானாம் அர்த்வத்வாத் இதி

(ஞான ஸ்வரூபம்-ஸ்வயம் பிரகாசம் சேதனம் ஸஜாதீயம் -விஜாதீயம் அசேதனம் -ஸ்வ கத குணங்கள்-விசேஷணங்கள் இத்யாதி அனைத்துமே மித்யா

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-சத்யம் ப்ரஹ்மம் ஞானம் ப்ரஹ்மம் அநந்தம் ப்ரஹ்மம் -மூன்று ப்ரஹ்மம் ஆகும் என்பர் ஏகத்வம் போகும்
வேறுபட்டது என்று சொல்லவே வந்தது -என்பர்-விசேஷணமாகக் கொள்ளாமல் ஸ்வரூப பரமாகக் கொண்டு வியாக்யானம் செய்வர் –
நிர்விகாரம் சத்யம் -அஜடம் வேறுபட்டது -அளவு பட்டவையில் வேறு பட்டது -என்பர் )

(நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரவத்யம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
கள -அவயவம்- அவயவங்கள் இல்லாமல் -அதனால் கார்யங்கள் செய்யாமல் -ப்ரவ்ருத்தி இல்லாமல்-குணங்கள் இல்லாமல்
நிரவத்யம் -நிரஞ்சனம்-கர்ம சம்பந்தமும் பலமும் அற்ற குறை இல்லாமல் -திர்யக் கர்ம சம்பந்தம் இல்லாமல் கர்ம பல சம்பந்தம் மட்டுமே கொண்டது -)

அது அவ்வாறு அல்ல
துவங்குகையிலேயே எந்த ஒன்றை அறிவதால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ -அதைக் காரணமாகக் கொண்டு உறுதிப்பட்டு காரணப் பொருள் ஒன்றே உண்மை -அதின் நின்றும் வெளிப்படும் கார்யப் பொருள்கள் உண்மையல்ல -என்பதை
மண் -அதின் நின்றும் செய்யப்படும் குடம் காரணத்தைக் உண்மையானது ப்ரஹ்மம் மட்டுமே –
குழந்தாய் அந்த மெய்ப்பொருள் மட்டுமே முதலில் இருந்தது -தனியாக இருந்தது -இரண்டாவது ஒன்றும் இல்லை -என்று ஸஜாதீய பேதம் -ஒருபடிப்பட்ட மாறுபாடுகள் -பல தென்னை மரங்கள் இருப்பினும் ஒரு குறிப்பிட்ட மரத்தை மற்றைய தென்னை மரங்களில் நின்றும் வேறுபடுத்துவது –
விஜாதீய மாறுபாடான வேறுபாடு -பல மரங்கள் இருப்பினும் மா மரங்கள் இல்லை புளிய மரங்கள் உள்ள தோப்பு என்னுமா போல்
ஸ்வகத பேதம் -ஒரு பொருளின் உறுப்புக்கள் தம்முள் மாறுபடுவது -தலை கால் கண் போன்று அடிமரம் வேர் பூ போன்று -அனைத்து பேதங்களையும் நீக்கும் முகமாய் அது நிர் விசேஷம் குணங்கள் அற்றது என்று கூறப்பட்டு இருக்கிறது
இது போன்ற ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்லும் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்பதற்கு ப்ரஹ்மம் அஸத்யம் அற்றது அஞ்ஞானம் அற்றது அளவுபட்டது அன்று என்றும்
அவ யவம் அற்றது செயல் அற்றது குணம் அற்றது எதிலும் ஒட்டாதது என்றும்
அறிவு நிறைந்தது ஆனந்தம் உள்ளது போன்ற குணங்களைக் கூறும் பதங்களுக்கு எதிரிடையானது என்றும் பொருள் கூறப்பட்டு இருக்கிறது
இவ்வாறு கூறுகையில் நற் குணங்களைச் சொல்லி அதற்க்கு எதிரிடையான குணம் இல்லை என்று கூறுவதால் ஒரு பொருள் பன் மொழி ஆவதால் அவற்றைத் திரும்பத் திரும்பிச் சொல்லும் குற்றம் ஏற்படுகிறது
ஒரு முறை சொன்னால் நிறைவேறுமே என்ற வினாவிற்கு
பொருள் ஒன்றேயாயினும் குணங்கள் பலபட்டவை யாதலாலும் அவை யாவும் தனித் தனியே மறுக்கப் பட்டதாகிறது என்று அத்வைதிகள் ஸமாதானம் சொல்லுகிறார்கள்

ப்ரஹ்மத்தைப் பற்றிய ஸ்ருதி வாக்யங்கள் காரண வாக்யங்கள் என்றும் சோதக வாக்யங்கள் -அதன் குணங்களை ஆராயும் வாக்யங்கள் -என்றும் இருவகைப்பட்டு இருக்கும் –

———–

11-நைததேவம் (அவ்வாறு அல்ல )-ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞானம் ஸர்வஸ்ய மித்யாத்வே ஸர்வஸ்ய ஞாதவ்ய
ஸ்யாபாவாது நசேத்ஸ்யதி ஸத்ய மித்யாத்வயோ ஏகதா ப்ரஸக்திர்வா
அபிது ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிக்ஞா ஸர்வஸ்ய ததாத்மகத்வே நைவ சத்யத்வே சித்யதி –

(ஏவம் அஸ்தி விஞ்ஞானேந ஸர்வம் நாஸ்தி விஞ்ஞானேந அல்லவேஏக விஞ்ஞாநேன-கரண த்ருதியீ அல்ல -அபேதே த்ருதியீ -ஒன்றை அறிவதில் மற்றவற்றை அறிவது எல்லாம் அடங்கி இருக்கும் என்றவாறு )

இது இவ்வாறு இல்லை -ஒன்றை அறிந்து கொண்டு அந்த ஞானத்தினால் மற்ற ஒன்றுமே இல்லை என்று சொல்லப்படும் மற்றப் பொருள்களை எவ்வாறு அறிய முடியும் –
அல்லது உண்மை என்றே சொல்லும் பொய் என்ற சொல்லும் ஒரே பொருளைக் கொண்டு இருக்க வேண்டும் –
மாறாக இவ் வுலகம் உயிர் பொருள்களும் அவனுக்கு உடல் என்று கொண்டால் -உடல் உயிர் இவை தனித்தனியே இயங்காதவை யாகையால் -இவ்வுயிரை அறிவதால் அவ்வுடலை அறிந்ததாகும்

மீமாம்ஸம் அத்வைதத்தை உண்மையற்றது என்ற ஓலம் -அஸத்யப் பிரலாyenakkuஎனக் குறிப்பிடுகிறது –

————

12-அயமர்த்த-ஸ்வேத கேதும் ப்ரத்யாஹ
ஸ்தப்தோசி உததம ஆதேசம் பிராஷ்ய இதி
பரிபூர்ண இவ லஷ்யஸே தானாச்சார்யான் பிரதி தமப்ய ஆதேசம் ப்ருஷ்ட்வானசி
இதி ஆதிஸ்யதே அநேநேத்ய ஆதேச ஆதேச பிரசாசனம்

(ஆதேசம்-உபதேச விஷயம் -அத்வைத மதத்தில் -ஞானத்துக்கு விஷயம் மித்யை -ஞான பின்னம் ஜேயம்-
ஞான மாத்ரம் ஸத்யம் என்பர் -அறியப்படும் விஷயம் இல்லையே
ப்ரஹ்மம் தவிர மற்றவை மித்யை என்பதே உபதேச விஷயம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -தத்வமஸி -நீ த்வம் அல்ல -அந்த தத் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
அந்த விஷயத்தைக் கேட்டு அறிந்து கொண்டாயா –
ஏக விஞ்ஞானம் -இதர ஸர்வம் மித்யை
நாமோ ஆவேசம் -உபதேச அர்த்தம் இல்லை -ஆதேச கர்த்தா-சர்வ நியந்த்ருத்வம்-பகவத் பரமாகவே நாம் அர்த்தம்   -அவர்கள் கர்மணி –
நியமனம் ஏஷ ஆவேச -ஏஷ உபதேச -இரண்டும் சுருதி சொல்லும்
ஆ உப இரண்டும் -உபதேச பலம் சிஷ்யனுக்கு

(சதேவ -காரண ஸ்ருதி -ஸத்தில் இருந்தே உருவானது -ப்ரஹ்மம் ஒன்றும் மட்டுமே காரண அவஸ்தையில் -மற்றவை இதில் ஒன்றி –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று –
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -நாம ரூப ரஹிதம்-ஏகமேவ -அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மம் -அத்விதீயம் லோகத்தில் காண்பது போல் அல்லவே -ஸகல இதர விலக்ஷணம்-ஸர்வ ஸரீரத்வம் -ஸர்வ கல்யாண குணாத்மகம் அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமே -)

(அக்ரே இதற்கு முன்னால் -பூர்வ காலீத்வம் -சதேவ -ஸத் ஒரே பதார்த்தமாக இருந்து -அதுவே உபாதான காரணம்
சர்வஞ்ஞத்வ குண விஸிஷ்ட ப்ரஹ்மமே
ஏகமேவ -அதுவே நிமித்தமும் உபாதானமும் -அபின்ன நிமித்த உபாதான காரணம்
லோகத்தில் இது போல் இல்லையே என்ன இது அத்விதீயம்)

ஏதஸ்யவா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத இத்யாதிபிரை ததாச மாநவம் வச
பிரசாசிதாரம் ஸர்வேஷாம் இத்யாதி அத்ராபி ஏகமேவ இதி ஜகதுபாதாநதாம் ப்ரதிபாத்ய அத்விதீய –
பதேந அதிஷ்டாத்ரந்தர நிவாரணாத் அஸ்யைவ ப்ரதிபாத்யநே
அத -தம் பிரசாசிதாரம் ஜகத் உபாதான பூதமபி ப்ருஷ்ட்வானசி -யேந ஸ்ருதேந மதேந அஸ்ருதம மதம விஞ்ஞாதம்
ஸ்ருதம் மதம் விஞ்ஞாதம் பவதி -இத்யுக்தம் ஸ்யாத் -நிகில ஜகத் உதய விபவ விலயாதி காரண பூதம் ஸர்வஞ்ஞத்வ –
சத்ய காமத்வ-ஸத்ய ஸங்கல்பத்வாத்ய-அபரிமித உதார குண சாகரம் கிம் ப்ரஹ்ம த்வயா ஸ்ருதம் –இதி ஹார்த்தோபாவ —

ஸ்வேத கேதுவை -அவருடைய தந்தை வினவினார்
எல்லாம் அறிந்தவன் போல் காணப் படுகிறாயே –
அந்தக் கட்டளையின் -ஆதேசத்தின் -பொருளைக் கேட்டு அறிந்தாயா –
முழுமையாக்கும் இலக்கோடு உன்னுடைய ஆசானிடம் இருந்து அந்தக் கட்டளைப் பொருளை அறிந்து இருக்கிறாயா –
பரமாத்மாவால் நியமிக்கப் படுகிறது என்பதால் அதனை கட்டளை என்கிறோம் -ஆதேசம் என்றால் மீற முடியாத ஏவல்

அந்தப் பரமாத்மாவின் கட்டளைப் படி -ஹே கார்க்கி ஸூர்ய ஸந்த்ரர்கள் நிலை பெற்று இருக்கிறார்கள் -என்று ஒரே பொருளைக் கொள்ள வேண்டும்
அப்படியே மநு ஸ்ம்ருதியிலும் -எப்பொருளையும் உள்ளிருந்து நியமிப்பவன் என்று கூறப்பட்டு இருக்கிறது –
இங்கும் -ஸத் வாக்யத்திலும் -உலகின் உத்பத்திக் காரணம் ஒன்றே என்று காட்டி -இப்படி உள் புகுந்து நியமிப்பது வேறில்லை என்பதையும் எவன் உலகைப் படைப்பவனாய் இருப்பானோ –
எவனை அறிந்தால் -த்யானித்தால் -அறியப்படாதது அறியப்பட்டதாகவும் -கேட்கப்படாதது கேட்கப்பட்டதாகவும் ஆகுமோ -அவனை அறிந்தாயா என்பதே சரியான பொருளாகும் –
உலகின் படைத்தல் -காத்தல் -அழித்தல் -இவற்றுக்குக் காரணமானவனாயும் -எல்லாவற்றையும் அறிந்தவனாயும் -எந்த விருப்பங்களும் இல்லாதவனாயும் -எச் செயலையும் செய்ய வல்லவனாய் இருப்பவனாயும் –
ஆகிற குணக்கடலாய் இருப்பவனாகிய ப்ரஹ்மத்தை அறிந்து இருக்கிறாயா -கேட்டு இருக்கிறாயா -என்பதே அவருடைய மனப் பூர்வமான எண்ணம் –

————-

13–தஸ்ய நிகில காரணதயா காரணமேவ நாநா சமஸ்த்தான விசேஷ ஸம்ஸ்திதம் கார்யம் இதயுச்யத இதி காரண பூத
ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரக ப்ரஹ்ம விஞ்ஞாநேன கார்ய பூதம் அகிலம் ஜகத் விஞ்ஞாதம் பவதீதி ஹ்ருதி நிதாய –
யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம்-ஸியாத் இதி புத்ரம் பரதி ப்ருஷ்டவான் பிதா —

ஸ்வேத கேதுவின் கேள்வியும் உத்தாலகர் பதிலும்

அந்தப் ப்ரஹ்மம் உலகின் காரணமாகவும் பற்பல சிறப்பான நிலை வேறுபாடுகளை உடையதாகவும் இருப்பதால் உலகி காரணம் என்றும் கார்யம் என்றும் சொல்லப்படுகிறது –
சேதன அசேதனப் பொருள்களை உடலாக யுடைய கட்புலனாகாத காரணமான அவனை அறிவதால் கார்யமான பூத உலகை முழுமையாக அறிந்ததாகும் என்னும் கருத்தை மனத்தில் கொண்டு –
எதை அறிந்தால் கேட்கப்படாதது கேட்கப் பட்டதாகவும் அறியப்படாதது அறியப்பட்டதாகுமோ அதை அறிந்தாயா என்று தந்தை வினவினார்-

———-

14–ததேதத் சகலஸ்ய வஸ்து ஜாதஸ்ய ஏக காரணத்வம் பித்ரு ஹ்ருதி நிஹித மஜானன் புத்ர பரஸ்பர விலக்ஷணேஷு
அந்யஸ்ய ஞானேந ததந்ய ஞானஸ்ய கடமானதாம் புத்தா பரிசோத யதி –கதந்நு பகவஸ் ச ஆதேச இதி –

முன் சொல்லப்பட்ட ஒன்றை அறிவது எல்லாப் பொருள்களையும் அறிவதாகும் என்று ஒரே காரணமாய் இருக்கும் தன்மையை தந்தை மனதில் கொண்டிருக்கிறார் என்பதை அறியாத மகன்-ஒரே பொருளை அறிவதால் ஒன்றுக்கு ஓன்று மாறுபாடுடைய எண்ணற்ற பொருள்களை அறியும் நிலை எவ்வாறு ஏற்படும் என எண்ணி -அந்தக் கட்டளை எவ்வாறு உள்ளது தந்தையே -எனத் திருப்பிக் கேட்க்கிறான்

——–

15–பரிசோதித புந ததேவ ஹ்ருதி நிஹிதம் ஞானானந்த அமலத்வ ஏக ஸ்வரூபம் அபரிச்சேத்ய மஹாத்ம்யம் –
ஸத்ய சங்கல்பத்வ மிஸ்ரை அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணைர் ஜுஷ்டம் அதிகார ஸ்வரூபம்
பரம் ப்ரஹ்மைவ நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரம் -ஸ்வ லீலையைவ ஸ்வ சங்கல்பேந –
அநந்த விசித்ர ஸ்திரத் ரஸ ரூப ஜகத் சமஸ்த்தானம் ஸ்வாம் சேநாவஸ்தி தமிதி தத் ஞானேந அந்யஸ்ய
நிகிலஸ்ய ஞாததாம் ப்ருவன் லோக த்ருஷ்டம் கார்ய காரணயோர் அநந்யத்வம் தர்சயிதும் த்ருஷ்டாந்தமாஹ

இவ்வாறு வினவப்பட்ட தந்தை தனது மனக்கிடக்கையைத் தெளிவாகக் காட்டுவதற்காக -அளவிடற்கு அரிய ஞானம் மகிழ்ச்சி தூய்மை நிலை பெற்ற செயல்பாடுடைமை ஒப்பற்ற அளவற்ற நற் குணங்கள் தொகுப்பாய் மாறுபடாத உருவமுடைமை இவற்றுடன் கூடிய கட் புலனாகாத பிரிக்க இயலாப் பண்புள்ள ப்ரஹ்மமே தன் விளையாட்டில் தன் விருப்பப்படி அளவற்ற பலவகைப்பட்ட நிற்பன நடப்பன யாகிய பற்பல உயிர்களை தன் அம்சமாகப் படைக்கிறது என்ற அந்த அறிவினால் மற்றப் பொருள்களுடைய அறிவும் ஏற்படும் -என்பதை உலகியல் கார்ய காரண தொடர்பால் உணர்த்துகிறார் –

———-

16–யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந சர்வம் ம்ருண் மயம் விஞ்ஞாதம் ஸ்யாத் வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்
ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி ஏகமேவ ம்ருத் த்ரவ்யம் ஸ்வ ஏக தேசேந நாநா வியவஹாராஸ் பதத்வாய-
யதா கட சரா வாதி நாநா ஸமஸ்த்தாநா அவஸ்தா ரூப விகாரபந்நம் நாநா நாமதேயமபி ம்ருத்திகா சமஸ்த்தான விசேக்ஷத்வாத்
ம்ருத் த்ரவ்யமேவேதி வியவஸ்திதம் நவாஸ்த வந்தரம் இதி யதா ம்ருத் பிண்ட விஞ்ஞாநேன தத் சமஸ்த்தான விசேஷ

கட சராவாதி ரூபம் சர்வம் விஞ்ஞாதம் ஏவ பவ்தீத்யார்த்தா

குழந்தாய் -ஒரே மண்ணுருண்டையால் மற்று எல்லாம் மண்ணாலே ஆனது என்ற அறிவு ஏற்படுகிறது –
அது பல உருக்களாக மாறுபடும் போது பல பெயரிட்டு அழைக்கப் பட்டாலும் மண் என்னும் ஒரு பொருளே உண்மையாகிறது –
ஒரே மண் கட்டி அதன் ஒரு பகுதியால் பற்பல உருவங்கள் உள்ளதாகப் பேசப்படுகிறது
எப்படி குடம் வாணாய் போன்ற பல உருவ நிலை வேறுபாடுகளை உடைய வடிவ மாறுபாடுகளும் பற்பல பெயர்களையும் தன் நிலை வேறுபாட்டால் மண் கட்டி பெற்றாலும் மண் என்றே பேசப்படுகிறதோ -அந்த பற்பல பெயர்கள் அதற்கு நிலை வேறுபாட்டால் மட்டுமே ஏற்பட்டதோ -அப்படிப்பட்ட மண்ணுருண்டையை அறிவதால் அதன் பல வடிவ நிலை வேறுபாடுகளை குடம் வாணாய் என்று அறிந்ததாகும் என்பதே பொருள் –

———————

17–ததஸ் க்ருத்ஸ்ரஸ்ய ஜகதோ ப்ரஹ்ம ஏக காரண தாம ஜாநந் புத்ர ப்ருச்சதி -பகவாம்ஸ் த்வமேவ மே தத் ப்ரவீது-
இதி ததஸ் சர்வஞ்ஞம் சர்வசக்தி ப்ரஹ்ம ஏவ சர்வ காரணம் இத் யுபதிசந் சஹோவாச
சதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
இதி அக்ர இதம் இதி ஜகந் நிர்திஷ்டம்
அக்ர இதிச ஸ்ருஷ்டே பூர்வ கால தஸ்மிந் காலே ஜகத் சதாத்மகதாம்
சத் ஏவ இதி ப்ரதிபாத்ய தது ஸ்ருஷ்ட்டி காலே அப்யவிசிஷ்டம் இதி க்ருத்வா
ஏக மேவ இதி ஸ்தாபந் நஸ்ய ஜகத்-ததா நீம விபக்த நாம ரூபதாம் ப்ரதிபாத்ய தத் ப்ரதிபாத்தேநேந
ஏவ சதோ ஜகத் உபாதானத்வம் ப்ரதிபாதிதம் இதி ஸ்வ வ்யதிரிக்த நிமித்த காரணம் அத்விதீய பதேந ப்ரதிஷித்தம் இதி —

ஸத் -என்பது தான் ஜகத் காரணமாகிறது என்பதன் விளக்கம்

அளவில் அடங்கா உலகிற்கு ப்ரஹ்மமே ஒரே காரணமாகும் என்பதை அறிந்தால் மற்றவை எல்லாம் அறிந்ததாகும் என்பதை அறியாத மகன் -தேவரீரே எனக்கு அதைக் கற்ப்பிப்பீராக -என்று கேட்டான் –
அவர் -எல்லாம் அறிந்த -எல்லாம் வல்ல -ப்ரஹ்மமே உலகிற்கும் எல்லாக் காரணமும் ஆகிறது என்று உபதேசிக்கும் முகமாய்
ஒளி பொருந்திய முகமுடையவனே -அறிவுள்ள அறிவற்றவைகளால் நிறைந் த இவ்வுலகு படைப்புக்கு முன் -பிரளய காலத்தில் காரணப் பொருளாகிய ப்ரஹ்மத்துடன் வேறுபாடு இன்றி -கட் புலனாகாத நிலையில்-ஒன்றி பிறிது ஓன்று இல்லாமல் இருந்தது -என்றார்
அவ்வாறு காரணப் பொருளாகவே ஒன்றி இருந்ததால் -ஸதேவ -ஸத் ஆகவே -என்று குறிப்பிட்டு –
பிறகு படைப்புக் காலத்தில் அப் ப்ரஹ்மம் வெளிப்படையாக மட்டுமே இருந்ததால் ஏக மேவ -என்று கூறினார் –
இப்படிப் பின்பு பல உருவங்களோடு படைக்கப்பட்ட உலகிற்கு அந்த ஸத் என்பதே முதல் பொருள் ஆகையால் அதை ஒழிந்த வேறு ஒரு காரணம் இல்லை என்பதற்காக அத்விதீயம் என்னும் பதத்தால் நிலை நிறுத்துகிறார்

உபாதான காரணம்-மூலப்பொருள் -சித் அசித் விஸிஷ்ட பிரம்மா -அணு நிலையில் சேதன அசேதனப் பொருள்களுடன் சேர்ந்த ப்ரஹ்மம்
நிமித்த காரணம்-செய்வோன் -ஸூஷ்ம ப்ரஹ்மம் -அவற்றின் உயிராய் -உள்ளுறையும் -கட் புலனாகா செய்வோன் ப்ரஹ்மம்
ஸஹ காரி காரணம் -செய் கருவி -அதன் ஞான சக்திகள் -ப்ரஹ்மத்தின் -அறிவும் திறனும்

———–

18–தமாதேசம பிராஷ்யோ யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி -இதி ஆதாவேவ பிரசாசிதைவை ஜகத் உபாதானம் இதி
ஹ்ருதி நிஹிதம் இதாநீ மபிவ்யக்தம் ஏததேவோப பாதயதி–ஸ்வயமேவ ஜகத் உபாதானம் -ஜகந் நிமித்தம் ச சத்
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய –இதி ததேதத் ஸச் சப்த வாஸ்யம் பரம் ப்ரஹ்ம -சர்வஞ்ஞம்-சர்வசக்தி -ஸத்யஸங்கல்பம் –
அவாப்த ஸமஸ்த காமமபி லீலார்த்தம் -விசித்ர அநந்த சித் அசிந் மிஸ்ர ஜகத் ரூபேண காமேவ பஹுஸ்யாம் தளர்த்த ப்ரஜாயேய –
இதி ஸ்வயமேவ சங்கல்ப்ய ஸ்வாம்ஸைக தேசாதேவ வியதாதி பூதாநி ஸ்ருஷ்ட்வா புநரபி ஸைவ ஸச் சப்தா பிஹிதா பரா தேவதா
ஏவம் ஐஷத ஹந்தாஹா மிமா ஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்ம அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகர வாணி இதி –
அநேந ஜீவேந ஆத்மநா இதி ஜீவஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாத்ய ப்ரஹ்மாத்மக ஜீவ அநு ப்ரவேசாதேவ க்ருதஸ்நஸ்ய
அசித் வஸ்துநோ நாம ரூப பாத்தகம் இதிச தர்சயதி

பண்புடைப் ப்ரஹ்மத்தின் இருவகைக் காரணப் பொருத்தமும்
அது பல பெயர் உரு உடுப்பதன் விளக்கமும்

அந்தக் கட்டளையை அறிந்தால் கேட்க்கப் படாதது கேட்கப் பட்டதாகும் -என்று முன்பு நன்கு தீர்மானிக்கப் பட்ட உலகின் மூலப் பொருளையே தன் மனத்தில் கொண்டுள்ளார் என்பதை இங்கே வெளிப்படுத்துகிறார் –
உலகிற்கு மூலப் பொருள் காரணமான அந்த -ஸத் -செயலாற்ற நினைத்து
நான் பலவாக ஆகக் கடவேன் -பிரஜைகளைப் படைப்பேன் – என்று முனைந்தது
அப்படிப்பட்ட -ஸத் -என்பதால் விளக்கப்படும் பர ப்ரஹ்மம் தான் –
எல்லாம் அறிவதாகவும் –
எல்லாம் வல்லதாகவும் –
உண்மையான வினைத் திட்பம் யுடையதாகவும் –
வேறு பலன் எதையும் எதிர்பாராததாகவும்
அவா வற்று இருந்தும் தன் விளையாட்டு மகிழ்ச்சிக்காக மட்டுமே பல்வேறு வகைப்பட்ட எண்ணற்ற சேதன அசேதன பொருள்களோடு கூடிய உலகமாகத் தானே ஆவேன் என்று முடிவெடுத்து
தன் அம்சத்தில் ஒரு பகுதி -சேதன அசேதன பொருள்களை யுடைய தன் உடலின் ஒரு பகுதி -யால்
ஆகாயம் முதலான பூதங்களைப் படைத்தது
மீண்டும் அந்த ஸத் -நிலம் நீர் நெருப்பு என்பது போன்ற தேவதைகளாகி -பூதங்களாக ஜீவாத்மாக்களின் உட் புகுந்து
அவற்றுக்குப் பெயரும் உருவும் யுடையவைகளாக ஆக்குவேன் என்றது
ஜீவாத்மாக்கள் என்றதனால் ஜீவர்கள் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக யுடையவர்கள் என்பது காட்டப்படுகிறது –
ஜீவனை யுடலாகக் கொண்ட ப்ரஹ்மத்தினால் மட்டுமே எல்லா சேதனப் பொருள்களும் இருப்பைப் பெறுகின்றன –
இதனாலேயே எல்லாப் பொருள்களும் பெயர்களையும் குருக்களையும் அடைகின்றன –

————-

19–ஏதத் யுக்தம் பவதி (இவ்வாறு சொல்லப்பட்டது சாரம் )ஜீவாத்மாது ப்ரஹ்மண-சரீர தயா பிரகாரத்வாத் ப்ரஹ்மாத்மக
யஸ்ய ஆத்மா சரீரம் -இதி ஸ்ருத் யந்தராத்-ஏவம் பூதஸ்ய ஜீவஸ்ய சரீரதயா பிரகார பூதாநி
தேவ மனுஷ்யாதி ஸமஸ்த்தாநாநி வஸ்தூநி இதி ப்ரஹ்மாத்ம ஏகாநி தாநி ஸர்வாணி
அத தேவோ மனுஷ்ய யஷோ ராக்ஷஸ பஸூ ம்ருக பஷீ வ்ருஷோ லதா காஷ்டம் சிலா த்ருணம் கட பட இத்யாதயஸ்
சர்வே ப்ரக்ருதி ப்ரத்யய யோகேந அபிதாய கதயா பிரசித்தா ஸப்தா லோகே தத் த்ரவ்ய வாஸ்ய தயா பிரதீயமான
தத் தத் சமஸ்தான வஸ்து முகேந தத் அபிமாநி ஜீவ –
தத் அந்தர்யாமிப் பரமாத்மா பர்யந்தம் ஸங்காதஸ் யைவ வாசக –இதி –

இதை விவரிப்போம்
ஜீவாத்மா பரமாத்மாவுடன் பிரிக்க முடியாத உறவுடையதாக -ப்ரஹ்மத்துக்கு உடலாகிறது –
எதற்கு ஆத்மா உடலோ என்று வேதத்தில் கூறப்படுகிறது –
இப்படிப்பட்ட ப்ரஹமத்திற்கு ஜீவாத்மா உடலாய் இருப்பதால் -தேவன் மனிதன் போன்ற ஜீவாத்மாவின் உடலாகும் பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மத்திற்கும் உடலாகின்றன –
இவ்வுருக்கள் தேவர்கள் மனிதர்கள் யக்ஷர்கள் ராக்ஷஸர்கள் பசுக்கள் விலங்குகள் பறவைகள் மரங்கள் கொடிகள் கட்டை பாறைகள் புல் குடம் ஆடை என்று எல்லாம் பகுதி விகுதிகளால் குறிக்கப்படும் சொற்களாகி –
அவை சுட்டும் பொருளுக்கு உருவமாகி
அதனுள் உறையும் ஜீவாத்மாவையும்
அதை உடலாகக் கொண்ட பரமாத்மா வரை சுட்டிக் காட்டும் சொற்கள் ஆகின்றன –

ப்ருதக் ஸித்தம் -பிரிக்க முடியும் உறவு -விசேஷணம்
அப்ருதக் ஸித்தம் -பிரிக்க முடியாத உறவு -பிரகாரத்வம்

—————–

தத்வமஸி -ஸ்ருத்யர்த்தம்
20–ஏவம் சமஸ்தஸ்ய சித் அசித் ஆத்மகப் பிரபஞ்சஸ்ய சதுபாதாநதா -சந் நிமித்தா சத் ஆதாரதா –
சந் நியம்யதா-ஸச் சேஷதாதி சர்வம்ச -சந் மூலா ஸோம்யேமா சர்வா பிரஜா ஸதாயதநா சத் பிரதிஷ்டா -இத்யாதிநா
விஸ்தரேண ப்ரதிபாத்ய கார்ய காரண பாவாதி முகேந
ஏததாத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம்
இதி க்ருத்ஸ் நஸ்ய ஜகத்தை ப்ரஹ்மாத்மகத்வம் ஏவ சத்யம் இதி ப்ரதிபாத்ய க்ருத்ஸ் நஸ்ய ஜகத ச ஏவமாத்மா க்ருத்ஸ்நம்
சஜகது தஸ்ய சரீரம் தஸ்மாத் த்வம் சப்த வாஸ்யமபி ஜீவ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிஜ்ஞாதம்-
தத் த்வமாய் -இதி ஜீவ விசேஷ உப ஸம்ஹ்ருதம் -ஏதத் யுக்தம் பவதி
ஐதாத்ம்யம் இதம் சர்வம் -இதி சேதன அசேதன பிரபஞ்சம்
இதம் சர்வம்
இதி நிர்திஸ்ய-தஸ்ய பிரபஞ்சஸ்ய ஏஷ ஆத்மா இதி ப்ரதிபாதித பிரபஞ்ச உத்தேசேந
ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாதிதம் இத்யர்த்த —

(ஞானம் எல்லாம் அனுஷ்டான பர்யந்தமாக ஆக வேண்டும் அன்றோ -உபாசனத்துக்காக அளிக்கப்பட ஞானம் )

இவ்வாறு சேதன அசேதன பொருள்களின் திரளான பிரபஞ்சத்தின் ஆத்மாவான -ஸத்தையையே சொல்லுகிறது
ஸத்தாய் பொருள் காரணமாக யுடையதாயும் -அதுவே ஆக்குவோனாகவும் –அதனாலே தாங்கப்பட்டதாயும் -நிலை நிறுத்தப் பட்டதாயும் -அதனாலே ஏவப் படுவதாயும் -அதற்கு அடிமைப் பட்டதாயும் -இப்படி எல்லாவிதத் தொடர்புடையதாயும் -உள்ள அந்த ஸத்தை
குழந்தாய்
அதையே மூலமாக உடையவை யாவையும் மக்களும் அதையே இருப்பிடமாகக் கொண்டவை -அதிலேயே நிலை பெற்று இருப்பவை என்று பரக்கச் சொல்லி –
காரண கார்ய தொடர்பால் இங்குள்ள முழுமையான உலகு யாவையும் இதையே ஆத்மாவாகக் கொண்டு இருக்கின்றன –
அதுவே உண்மை என்று கூறி -இது ஒன்றே ஆத்மா உலகு முழுவதும் அதனுடைய உடல் –
உரையாடிக் கொண்டு இருக்கும் ஸ்வேத கேதுவைச் சுட்டிக் காட்டி –
அதனால் அது என்று குறிக்கப்படும் ஸத் உனக்கும் ஆத்மாவாக -நீ அதனின்றும் பிரிக்க முடியாத தொடர்புடையவனாக -பிரகாரமாக -இருக்கிறாய் என்பதை
தத்வமஸி என்று
உத்தாலகர் நிறுவுகிறார் –

———–

21–தத் இதம் ப்ரஹமாத் மகத்வம் கிம் ஆத்ம சரீர பாவேந –
உத ஸ்வரூபேண –
இதி விவேச நீயம்-ஸ்வரூபேண திசேத் ப்ரஹ்மண-ஸத்ய ஸங்கல்பத்வாதய
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத் யுபக்ரம அவகதா பாதிதா பவந்தி
சரீராத்ம பாவேந ச ததாத்மகத்வம் ஸ்ருத் யந்தராத் விசேஷதோ அவகதம் அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம்
சர்வாத்மா இதி பிரசாசி த்ருத்வ ரூபாத்மவேந ஸர்வேஷாம் ஜனாநாம்
ஆத்மா சர்வம் சாஸ்ய சரீரம் இதி விசேஷதோ ஞாயதே ப்ரஹமாத் மகத்வம்
ய ஆத்ம திஷ்டந் ஆத்மாநம் அந்தரோ யமயதி சதே ஆத்மா அந்தர்யாம் யம்ருத-இதிச –
அத்ராபி அநேந ஜீவேநாத்மநா இதி இதமேவ ஞாயத இதி பூர்வமே வோக்தம் —

(சரீராத்மா -என்பதால் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூபேணே இல்லை-ஸ்வரூபத்தால் ஒன்றானால் ஸ்ருதி வாக்கியங்கள் பாதகம் ஆகுமே )

இந்தப் ப்ரஹ்மம் ஆத்மாவாக இருப்பது எப்படி –
உடலுக்குள் உயிராய் உறைந்து இருக்கிறதா
அல்லது அதுவே மாறுபட்டு இந்த உருவாக ஆகியதா -என்று ஆராய்வோம் –
அது தானே மாறியது என்று கொண்டால் ப்ரஹ்மமானது -நான் பலவாக ஆகக் கடவேன்-மக்களைப் படைப்பேன் -என்று மெய்யான வினைத்திட்பம் கொண்டு அதனால் அது வினையாற்றியது எனத் துவக்கத்தில் சொல்லியது தவறாக ஆகும்
மாறாக உடை உயிர்த் தொடர்பு எனில் -அந்தப் ப்ரஹ்மத்தின் பொருள்களில் உள்ளுறையும் தன்மை மறைப் பொருள்களால் சிறப்பாக அறியப்பட்டு இருக்கிறது
உயிரிகளின் உள்ளுறைந்து ஆள்பவன் -எல்லாவற்றுக்கும் ஆத்மாவாகிறான் -என்றும்
நன்கு நிலை நிறுத்தப் பட்டவனாய் எல்லா உயிர்களுக்கும் உள்ளுறைந்து ஏவுகிறவனாய் இருக்கிறான் என்றும்
உள் நுழைந்து என்றும்
எல்லாவற்றுக்கும் ஆத்மா -என்றும்
எல்லா மக்களுக்கும் ஆத்மா -எல்லாம் அவனுடைசிறப்பாக அறியப்படும் ய உடல் -என்றும்
ப்ரஹ்மத்தின் உயிர் நிலைத் தொடர்பு சிறப்பாக அறியப்படும்
மேலும் ஆத்மாவில் ஆத்மாவாய் உள்ளிருந்து எவன் ஆள்கிறானோ -அந்த ஆத்மாவின் உள்ளுறைபவன் இனிமையானவர் -என்று
எல்லாம் சொல்லப்படுகின்றன

மேலும் இதே உபநிஷத்தில் -புறப்பாடு இன்று எல்லா உயிர்களிலும் என்றும் முன்பே சொல்லப்பட்டு இருக்கிறது –

——–

22–அத -ஸர்வஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம சரீரத்வாத் சர்வ சரீரம் சர்வ பிரகாரம் சர்வை சப்தை
ப்ரஹ்மைவாபி தீயத இதி-ததுத்வம் -இதி சாமாநாதி கரண்யே ந ஜீவ சரீரதயா ஜீவ பிரகாரம் ப்ரஹ்மை வாபிஹிதம் –
ஏவமபிஹிதே சதி அயமர்த்தோ ஞாயதே த்வம் இதிய பூர்வம் தேஹஸ் யாதிஷ்டாத்ருதயா பிரதித ச பரமாத்ம சரீரதயா
பரமாத்ம பிரகார பூத பரமாத்மா பர்யந்த ப்ருதக் ஸ்திதி -ப்ரவ்ருத்தி –அநர்ஹ—அத –த்வம்-இதி சப்த
தத் பிரகார விசிஷ்டம் தத் அந்தர்யாமிணமே வாசஷ்டே இதி அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வியகரவாணி –
இதி ப்ரஹ்மாத்மகதயைவ ஜீவஸ்ய சரீரிண ஸ்வ நாம பாக்த்வாத்
தது த்வம் இதி சாமா நாதி கரண ப்ரவ்ருத்தயோர் த்வயோரபி பதயோ ப்ரஹ்மைவ வாஸ்யம் -தத்ர -தது- பதம் –
ஜகத் காரண பூதம்-சர்வ கல்யாண குணாகரம் -நிரவத்யம்-நிர்விகாரமா சஷ்டே த்வம் இதிச -ததேவ ப்ரஹ்ம ஜீவ அந்தர்யாமி
ரூபேண ஸ்வ சரீர ஜீவ பிரகார விசிஷ்டமாசஷ்டே ததேவம் ப்ரவ்ருத்தி நிமித்த பேதேந ஏகாஸ்மின் ப்ரஹ்மணயேவ ததுத்வம் –
இதி த்வயோ பதயோர் வ்ருத்திருக்தா-ப்ரஹ்மணோ நிரவத்யத்வம் நிர்விகாரத்வம்
சர்வ கல்யாண குணாகரத்வம் ஜகத் காரணத்வம் ச அபாதிதம் –

தத்வமஸி -என்ற ஸ்ருதியின் பொருளை நிலை நிறுத்தல்

பிறகு ப்ரஹ்மத்திற்கு சேதன அசேதன வஸ்துக்கள் யாவும் உடலாய் -எல்லா வகையிலும் பிரிவற்ற தொடர்புடையதாய் இருப்பதால் எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்று கொள்ள முடியும்
அவ்வாறே அது -தது -நீ த்வம் -என்று ஸாமாநாதி கரண்யத்தால் -ஒரு பொருள் பன் மொழியால் -உயிரை உடலாக உயிருடன் பிரிவற்ற ப்ரஹ்மத்தையே காட்டுகிறது –

இவ்வாறு கூறப்படுவதால் கீழ்க்கண்ட விளக்கம் இதற்குப் பொருளாகக் கிடைக்கிறது
த்வம் -நீ -என்பதால் -எவன் முன்பே உடலுள் இருந்து ஏவுபவனாய் தோன்றுகிறானோ -இங்கு ஸ்வேத கேதுவின் ஆன்மா -அவன் பரமாத்மாவிற்கு உடலாதலால் -பரமாத்மாவின் நின்றும் பிரித்த நிலையற்றவனாய் -அவனைப் பிரிந்து இயங்க இயலாதவனாய் இருப்பதால் -அவனுடன் பிரிக்க இயலா தொடர்புடைமையால் அவனுள் இருக்கும் பரமாத்மாவையே இச்சொல் காட்டுகிறது

அது நீ -என்பது ஒரு பொருள் பன் மொழியால் பரமாத்மாவையே இரு சொற்களும் காட்டுகின்றன –
அது -தது -என்னும் பதம் உலகின் காரணமாய் -நற் குணங்கள் யாவும் கொண்டதாய் -இழி குணங்கள் அற்றதாய் -மாறுபாடு அடையாததாய் -இருக்கும் நிலையைக் காட்டுகிறது –
நீ-த்வம் -என்பதனால் -அதற்கு உடலாய் பிரிவற்ற நிலையை யுடைய ஜீவாத்மாவின் உயிராய் உள்ள பரமாத்மாவைக் காட்டுகிறது –
அதனால் அது என்னும் சொல் பொருள் காட்டும் தன்மையால் -ப்ரவ்ருத்தி நிமித்தம் -நீ என்னும் சொல்லுடன் ஒருபடிப்பட்டது

ஆகவே அது நீ என்னும் இரு சொற்களும் குறையற்றதும் மாறுபாடற்றதும் -நற் பண்புகள் யாவும் நிறைந்ததும் -உலகிற்குக் காரணமானதுமான ப்ரஹ்மமே என்று நிரூபிக்கப் பட்டது

ஸாமாநாதி கரணம்
பொருள் தன்மை குணம் வகை செயல் ஆகியவைகளைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளைக் காட்டினால்
சொற்கள் பலவாய் இருந்தாலும் பொருள் ஒன்றாகக் கொள்வது ஸாமாநாதி கரணம் என்று பெயர் –

————

23-அஸ்ருத வேதாந்தா புருஷா (சதாச்சார்ய உபதேசம் ஸ்ரவணம் பண்ணாதார்- )சர்வே பதார்த்தம் சர்வே ஜீவாத் மனஸ் ச ப்ரஹ்மாத்மகா இதி ந பஸ்யந்தி
சர்வ ஸப்தாநாம் ச கேவலஷு தத் தத் பதார்த்ததேஷூ வாஸ்யைக தேசேஷூ வாஸ்ய பர்யவஸாநம் மன்யந்தே
ஸ்ருத வேதாந்தஸ்து (கற்றார் அதயேவ நான்மறையாளர் ஆவார்)வேதாந்த வாக்ய ஸ்ரவணேன ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா
ச ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் சர்வ ஸப்தாநாம் தத் தத் பிரகார ஸம்ஸ்திதா ப்ரஹ்ம வாசித்வம் ச ஜாநந்தி —

(வாசக அர்த்தம் ப்ரஹ்மம் வரை பர்யவசிக்கும்-ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா-வேதத்தின் உட் பொருள் நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -பிரதான பரதந்தர அர்தம் )

வேதாந்தத்தைக் கேட்டு அறியாதவர்கள் ஆகையால் -பாமர மக்கள் எல்லாப் பொருள்களும் அதற்கு அபிமானியான ஜீவாத்மாவும் -அதை உடலாகக் கொண்ட பரமாத்மாவைக் காட்டும் என்று அறியார்கள்
அதனால் அவர்கள் சொற்கள் -அதனதனால் குறிப்பிடப்படும் பொருட்களை மட்டும் தனிப்பட்டுக் குறிக்கின்றன என்று கொள்கிறார்கள் –
வேதாந்தத்தைக் கேட்டு அறிந்தவர்கள் அதன் பயனாக பொருள்கள் ப்ரஹ்மத்தின் செயல் என்றும் ப்ரஹ்மத்தை உள்ளுறை பவனாக உடையது என்றும்
அதனால் சொற்கள் யாவும் அதனால் கொள்ளப்படும் பொருளையும் அதனுடன் பிரிவற்ற நிலையை யுடைய பரமாத்மாவையும் காட்டும் என்று அறிகிறார்கள்

———-

24–நந் வேவம் கவாதி ஸப்தாநாம் தத் தத் பதார்த்த வாசிதயா வ்யுத்பத்திர் பாதிதா ஸ்யாத்
நைவம் சர்வே ஸப்தா அசிஜ் ஜீவ விசிஷ்ட்ட பரமாத்மநோ வாசகர் இத்யுக்தம் நாம ரூபே வ்யாகரவாணி இத்யத்ர
தத்ர லௌகிகாஸ்து புருஷா சப்தம் வ்யவஹரந்தஸ் சப்த வாஸ்யே பிரதாநாம் சஸ்ய பரமாத்மன ப்ரத்யஷாத் யபரிசேத்யவாத்
வாஸ்யைகதேச பூதே வாஸ்ய சமாப்தி பர்யவசாதே வேதாந்த ஸ்ரவணேந ஹி வ்யுத்பத்தி பூர்யதே –
ஏகமேவ வைதிகாஸ் ஸப்தா சர்வே பரமாத்மா பர்யந்தாந் ஸ்வார்த்தாந் போத யந்தி —

அப்படி என்றால் பசு முதலிய சொற்கள் அந்த அந்த பொருட்களைக் குறிப்பதாகத் தானே உலகில் காணப்படுகிறது
அது அப்படி யல்ல –
பெயர் உருக்களைக் கொடுக்கக் கடவேன் என்று பரமாத்மா உள் நுழைந்து ஆக்குவதால் எல்லாச் சொற்களும் -சேதன அசேதன பொருட்களை உடலாகக் கொண்டு உள்ளுறையும் பரமாத்மாவைத் தான் காட்டுகின்றன –
ஆயினும் உலகில் உள்ள மாந்தர்கள் வழக்கில் உள்ள சொற்களைக் குறிக்கும் ஒரு பகுதியான கட் புலனாகும் பொருளை மட்டுமே கொண்டு கட் புலனாகாத ஜீவ பரமாத்மாக்களை நீக்கி
இதனாலேயே அச் சொற்களின் பொருள் முடிந்ததாகக் கருதுகிறார்கள்
இவ்வாறு மெய்ப்பொருள் அறியும் திறன் வேதாந்தஞானத்தாலேயே கிடைக்கும்
இவ்வாறே வேதச் சொற்கள் யாவையுமே பரமாத்மா வரையிலான பொருளைக் காட்டுகின்றன –

——-

25-வைதிகா ஏவ சர்வ ஸப்தா ஆதவ் வேதாதேவோத்ருத் யோத்ருத்ய பரேண ஏவ ப்ரஹ்மணா சர்வபதாதீந் பூர்வவத்
ஸ்ருஷ்ட்வா தேஷு பரமாத்ம பர்யந்தேஷு பூர்வவத் நாம தயா ப்ரயுக்தா ததாஹ மனு -1-21-
ஸர்வேஷாம் நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக் வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே இதி
சமஸ்தா சமஸ்தாநாநி ரூபாணீதி யாவது ஆஹ ச–பகவான் பராசர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-63-
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யா நாஞ்ச ப்ரபஞ்சனம் வேத சப்தேப்ய ஏவாதவ் தேவதீநாம் சகாரச -இதி ஸ்ருதிஸ் ச
ஸூர்ய சந்த்ர மசவ் ததா யதா பூர்வகமகல்பயத்-இதி
ஸூர்யாதீந் பூர்வவத் பரிகல்ப்ய நாமாநி ச பூர்வச் சகரேத் யர்த்த —

ஏவம் ஜகத் ப்ராஹ்மண ஓர் அநந்யத்வம் பிரபஞ்சிதம் -தேந ஏகேந ஞாநேந ஸர்வஸ்ய ஞாததா உபபாதிதா பவதி –
ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரியதா ப்ரதிபாதநேந ததாத் மகத்யைவ் சத்யத்வம் நான்யதேதி தத் சத்யம் –
இத் யுக்தம் யதா த்ருஷ்டாந்தே ஸர்வஸ்ய ம்ருத் விகாரஸ்ய ம்ருதாத்மநைவ சத்யத்வம் –

(தேவதாதிகரணம் இத்தையே விளக்கும்)

சொற்கள் யாவும் வேதத்தில் உள்ளவையே
ஏன் எனில் –
வேதத்தில் இருந்தே சொற்களைப் பொறுக்கி எடுத்து அதற்கு ஏற்ப முன் கல்பத்தில் இருந்தபடியே பிரம்மா படைத்தான் என்பதனால் அவைகள் பரமாத்மா வரை காட்டி பொருள் முடியும்
அப்படியே மனுவும் கூறுகிறார்
அந்தப் பகவான் பொருட்களுக்கு பலவகையான பெயர்களையும் உருக்களையும் முன்பு இருந்த படியே வேதச் சொற்களுக்கு ஏற்ப தனித் தனியாகப் படைத்தான் -1-21-
பராசரரும்
பெயரும் உருவம் யுடையதாயும் உயிர்களாலும் பொருட்களாலும் நிறைந்த உலகுகளை -பிரபஞ்சத்தை -தேவர்கள் முதலான வகைகளையும் -தத் தமக்குறிய செயல்களையும் வேதச் சொற்களைக் கொண்டே -அந்தப் ப்ரம்மா முதலில் படைத்தான் -என்கிறார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-63-
வேதமும்
முதலில் ஸூர்ய ஸந்த்ரர்களை -முன் -பூர்வ கல்பத்தில் -இருந்தபடியே பரமாத்மா படைத்தான் -என்கிறது
ஸூர்யன் முதலானவர்களும் முன்பு இருந்தபடியே படைக்கப்பட்டு அதன்படியே பெயரிடப் பட்டனர் என்று அறியலாம்

இவ்வாறே உலகும் ப்ரஹ்மமும் வேறுபட்டு இராமை நிரூபிக்கப் பட்டது-அதனால் ஒன்றை அறிவதால் மற்ற ஓன்று தானே அறியப் பட்டதாகிறது -எப்பொருளும் பரமாத்மாவின் செயல் என்று சொல்லப்படுவதால் -அதை ஆத்மாவாகக் கொண்டிருப்பதால் மட்டுமே அப் பொருளுக்கு இருப்பு -சத்யத்வம்-வஸ்துத்வம் -ஏற்படுகிறது-இவ் விருப்பு கொண்ட -அது உண்மை -உள்ளது -என்று கூறப்படுகிறது
அதையே இந்த எடுத்துக் காட்டால் இப்பொருள்கள் மண்ணின் மாறுபாட்டால் ஏற்படுபவை யாதலின் மண் என இருப்பது உண்மையே எனப் பேசப் படுகிறது

————-

26–சோதக வாக்ய அந்யபி (பரிசுத்தமாக ஸ்வரூபத்தை நிரூபிக்கும் வாக்கியங்கள் )நிரவத்யம் சர்வ கல்யாண குணாகரம் பரம் ப்ரஹ்ம சோதயந்தி

பண்புரைக்கும் சொற் தொடர்களும் -சோதக வாக்யம் -கூட குற்றமற்ற நற் பண்புகள் யாவும் கடலென நிறைந்துள்ள பரப் ப்ரஹ்மத்தையே ஆய்ந்து அமைகின்றன

———-

27–சர்வப் ப்ரத்யநீக ஆகாரதா போதநேபி தத் ப்ரத்யநீக ஆகாரதாயாம் பேதஸ்ய அவர்ஜனீயத்வாந்ந நிர்விசேஷத்வ ஸித்தி–

எல்லாக் குணங்களுக்கும் எதிர்த் தட்டான நிலையைச் சொன்னாலும் -அந்தவந்த மாறுதல்களைச் சொல்வதால் வெவ்வேறு பொருள்கள் கூறப்பட்டு விடும் -அதாவது குணங்கள் அற்றது என்பது விலக்கப்படும்

——–

அத்வைதப் பொருள்
ஒரு பொருளுக்கு இடப்படும் அடைமொழி அதை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்திக் காட்டும்
அவ்வாறே ப்ரஹ்மமும் -ஸத்யம் ஞானம் அநந்தம் -என்று குறிக்கப் படுகிறது
இதை அடைமொழிகள் என்று கொண்டால் ப்ரஹ்மமும் இவ்வடை மொழிகளுடைய ஒரு பொருள் என்று தோன்றுவதால் -அதனால் ப்ரஹ்மத்தின் இருப்பும் பண்புகளும் ஏற்படுவதால் அத்வைதிகள் இதை ஏற்பதில்லை
ஏன் எனில் அவர்கள் கருத்துப்படி ப்ரஹ்மம் குணமற்றது இருப்பற்றது உருவமற்றது
ஆகவே அவர்கள் இந்த மூன்று சொற்களுக்கும் பின்வருமாறு பொருள் கொண்டனர்
ஸத்யம் -அஸத்யம் அற்றது -இருப்பில்லாமை இல்லாதது
ஞானம் -அஞ்ஞானம் இல்லாதது -அறிவின்மை இல்லாதது
அநந்தம் -அளவு இல்லாதது

இதற்கு அபாவம் -இன்மை -என்பதே பொருளாவதால் மூன்று தனித் தன்மையான இன்மைகள் தேவையில்லை

இவ்வாறு கொள்வதால்
ப்ரஹ்மத்திற்குத் தனி உருவமும் குணங்களும் இல்லை என்றும்
அது ஞானம் மட்டுமே என்றும் கொள்கின்றனர்

விஸிஷ்டாத்வைதப் பொருள்
இங்கு இம் மூன்று பதங்களுக்கும் பின்வருமாறு பொருள் கொள்ளப் படுகிறது
1-ஸத்யம் –நிருபாதிக சத்தாயோதி -தன இருப்புக்கு வேறு ஒன்றின் துணை நாடாதது -என்றும்
நிர் விகார ஆஸ்பதம் -என்றும் மாறுபாடு அற்றது -என்றும்
மற்றைய உயிருள்-உயிரல் -பொருள்கள் பரமாத்மாவின் விருப்படி மாறுபாடு அடைபவை

2- ஞானம் -முக்காலங்களிலும் -எந்நிலையிலும் -அசங்குசித -குறைவடையாத அறிவு
ஆத்மாவுக்கும் ஞானம் குணமானாலும் -அது நித்யமானாலும் -குறைவுடையதாய் இருக்கும்
பத்தனுக்கு -எப்போதும் குறைபட்டது
முக்தனுக்கு -முன்பு குறைபட்டது
நித்யனுக்கு -பரமாத்மாவின் நினைவால் மட்டும் குறைவு படாது இருப்பது

3- அநந்தம் –அபரிச்சேத்ய -அளவிறந்தது -அளவு படுதல் இல்லாதது
இடம் காலம் பொருள்களால் -மூன்றாலும் அளவு படாதது
பரமாத்மா தவிர்ந்த மற்றவை இம்மூன்று வகையாலும் அளவு பட்டவை

அதாவது ப்ரஹ்மம்
தன் இருப்புக்கு வேறு ஒன்றின் துணை நாடாமலும்
என்றும் மாறுபாடு இல்லாமலும்
எக்காலத்தும் எந்நிலையிலும் குறைவடையாத ஞானத்தோடும்
இடம் காலம் பொருள்கள் எனும் மூன்று வகையாலும் அளவிட முடியாததாகவும் இருக்கிறது

————

28–நநு-
ஞான மாத்திரம் ப்ரஹமேதி ப்ரதிபாதிதே நிர் விசேஷ ஞான மாத்திரம் ப்ரஹமேதி நிஸ் ஸீயதே —
நைவம் ஸ்வரூப நிரூபண தர்ம ஸப்தா ஹி தர்ம முகேந ஸ்வரூபம் அபி ப்ரதிபாத யந்தி கவாதி சப்தவத்-ததாஹ ஸூத்ரகார
தத் குண சாரத்வாத் வ்யபதேச -ப்ராஞ்ஞவது -இதி
( ஞான குண சாரத்வாத் ஆத்மநோ ஞானம் இதி வியபதேச-யதா ப்ராஞ்ஜேந ப்ரஹ்மணா விபஸ்சிதா–யஸ் சர்வஞ்ஞ சர்வவித் –
இதி சர்வஞ்ஞ ஏவ ஞான குண சாரத்வாத் சத்யம் ஞானம் இதி வியபதிஸ்யதே )
யாவதாத்ம பாவித்வாச்ச ந தோஷ இதி ஞாநேந தர்மேன ஸ்வரூபம் அபி நிரூபிதம் நது ஞான மாத்ரம் ப்ரஹமேதி கதம்
இதமவகம்யத இதி சேத்-யஸ் சர்வஞ்ஞ ஸர்வவிது-இதி ஞாத்ருவத்வஸ்ருதே
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச
விஞாதாரம் அரே கேந விஜாநீயாத் –இத்யாதி ஸ்ருதி சதா சமதிகதமிதம்-ஞானஸ்ய தர்ம மாத்ரவாத் தர்ம மாத்ரஸ்ய
ஏகஸ்ய வஸ்துத்வ ப்ரதிபாதாந நுப பத்தேஸ் ச
அத ஸத்ய ஞாநாதி பதாநிஸ் வார்த்த பூத ஞானாதி விசிஷ்டமேவ ப்ரஹ்ம ப்ரதிபாத யந்தி

ப்ரஹ்மத்திற்கு பண்புகள் இல்லை என்பதை மறுத்தல்

மாறாக ஞானம் மட்டுமே ப்ரஹ்மம் எனில்
அடையற்ற ஞானமே ப்ரஹ்மம் என்று நிச்சயிக்கப் படும்
அறிவதும் அறியப்படுவதும் வேறு இல்லை என்றதாகும் –
அவ்வாறு இல்லை –
ஒரு பொருளை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்தும் அடைமொழிகள் அப்பொருளுக்கு உரிய பண்பு செயல் ஆகியவற்றால் அதை மற்றவற்றின் நின்றும் பிரித்துக் காட்டும் –
எடுத்துக் காட்டாக -பசு முதலியவை -மற்றைய நாலு கால் பிராணிகளின் நின்றும் அதன் பசுத்தன்மை-கோ தன்மை -அதை வேறு படுத்துகிறது –
இதைக் கூறும் இடத்து ப்ரஹ்ம ஸூத்ர காரரும் -எந்தக்குணம் ஒரு பொருளில் விஞ்சி இருக்குமோ அந்தக்குணத்தை யிட்டே அப்பொருளை அழைக்கலாம் என்கிறார்

ஞானத்தையே பண்பாக உடையதாதலின் ஆத்மாவுக்கு ஞானம் என்றே பெயர்
பரமாத்மா -வாலறிவன் -ஆனந்தம் -பரமாத்மா –
மேலும் எந்தக் குணம் ஒரு பொருள் உள்ள மட்டும் அதை விட்டு பிரியாமல் இருக்குமோ அதே குணத்தையிட்டு அதைக் குறிப்பதில் தவறில்லை –
அதனால் ஞானம் என்னும் பண்பினால் அதை யுடைய பரமாத்மாவும் குறிக்கப் படும்

அந்த ஞானமே பரமாத்மா என்பதில்லை -எப்படி எனில்
ஸர்வஞ்ஞ ஸர்வ வித் -எல்லாவற்றையும் அறிகிறான் -எல்லா விதத்தாலும் அறிகிறான் –

———–

29–தத் தவம் இதி த்வயயோர் அபி பதயோ -ஸ்வார்த்த ப்ரஹாணேந நிர்விசேஷ வஸ்து ஸ்வரூப உபஸ்தான
பரத்வே முக்கியார்த்த பரித்யாகச்ச-
நநு
ஐக்ய தாத்பர்ய நிஸ்ஸயாத் ந லக்ஷணா தோஷா ஸோயம் தேவ தத்த இதிவத் –
யதா ஸோ அயம் -இத்யத்ர ச இதி சப்தேன தேசாந்தர காலாந்தர சம்மந்தீ புருஷ பிரதீயதே
அயம் இதி ச சந்நிகித தேச வர்த்தமான கால சம்மந்தீ தயோ சாமாநாதி கரணேந ஐக்யம் பிரதீயதே
தத்ர ஏகஸ்ய யுகபாத் விருத்த தேச கால சம்பந்திதயா பிரதீதீர்ந கடத இதி த்வயோர் அபி பதயோ
ஸ்வரூப மாத்ரோப ஸ்தாபந பரத்வம் ஸ்வரூபஸ்ய ச ஐக்யம் ப்ரதிபாத்யதே இதி சேத் –

(தத் தவம் அஸி -அஹம் ப்ரஹ்மாஸ்மி -இது வரை நான் என்று பிரமித்தது இல்லை -இதுவே அத்வைதி வாதம்
கங்கா கோ சாலை லக்ஷணையால் கங்கைக் கரையில் –
இரண்டு பதங்களுக்கும் லக்ஷணையால் அமுக்கிய வாதம் கொள்ளக் கூடாதே)

(ஞானம் த்வி விதம்-முதலில் இந்திரியங்கள் மூலம் அறிந்த ஞானம் ஓன்று
ஸ்ம்ருதி -இந்திரிய ஸஹ காரம் வேண்டாம் இதுக்கு -ஸம்ஸ்காரம் -மனப் பதிவு ஒன்றுமே வேண்டும்
அனுபவம் பற்றிய நினைவு -ப்ரத்யக்ஷம் -விஷய சம்யோகத்தால் வந்தது
தேவ தத்தன் ஸகா தேவ தத்தா அயம் தேவ தத்தா -)

தத்வமஸி என்னும் வாக்கியத்திற்கு அத்வைதிகள் சொல்லும் பொருளுக்கு மறுப்பு
அது நீ -தத் த்வம் என்ற இரண்டு சொற்கள் அவை உண்மையாகக் குறிப்பிடும் பொருளை விட்டு -நேராகக் ஆட்டும் பொருளை மட்டும் கொண்டு அவை குணங்கள் அற்ற ஒரு பொருளைக் காட்டும் எனக் கொண்டால் அதன் மெய்ப் பொருளைத் தள்ள வேண்டி வரும்

மாறாக அத்வைதிகள் கூறுவது போல் -குணம் இன்மையால் இரண்டும் ஒன்றே என்று கொண்டால் இலக்கணை மீறும் குற்றம் ஆகிறது
எடுத்துக் காட்டாக
இவரே அந்த தேவதத்தன் என்று கூறுகையில்
இவர் என்பதனால் அப்பொழுது அவ்விடத்தில் காணப்படுபவரும்
அந்த என்பதனால் பிறிதொரு சமயத்தில் வேறொரு இடத்தில் காணப்பட்ட வரும் ஒருவரே என்பதாகிறது –
இங்கு தேவதத்தன் என்பவருக்கு கடந்த கால இடத் தொடர்புகளும் நிகழ் கால இடத் தொடர்புகளும் முக்கியமாகக் கொள்ளப் படாமல் தேவ தத்தன் என்னும் நபரே முக்கியமாகக் கொள்வது போல் பொருள் கொண்டு விட வேண்டும் என்பது அத்வைதிகள் முடிவு

இதம் ரஜதம் -ஒளி மிக்க பொருளைக் கண்ட வுடன் அது வெள்ளி என்று தோன்றுகிறது
அருகில் சென்று பார்த்த போது -ந இதம் ரஜதம் -இது வெள்ளி அல்ல சிப்பி -என்று முடிவாகிறது –
முதலில் அறிவு பாதிக்கப் பட்டு இருந்தது –
பிறகு மெய்யறிவு உண்டாகி அது இல்லை என்றதாயிற்று
இலக்கணைக் குற்றம் –எடுத்துக் காட்டு-மஞ்சாக்ரோதை -கட்டில்கள் சத்தம் போடுகின்றன -என்பதில் கட்டில்கள் என்பதற்கு அதில் அமர்ந்து இருக்கும் மனிதர்களை யென்றே கொள்ள வேண்டும் –
ஏன் எனில் தனியாகக் கட்டில்களுக்கு ஒலி எழுப்பும் திறனில்லை –
தச மத்வம் அஸி -அந்தப் பத்தாவது ஆள் நீ

————-

30–நைத வேதம்
சோயம் தேவதத்த-இத்யத்ராபி லக்ஷணா கந்தோ ந வித்யதே விரோத பாவாத் –
ஏகஸ்ய பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தோ ந விருத்த தேசாந்தர ஸ்திதி பூதா சந்நிஹித தேச ஸ்திதி வர்த்ததே
அத பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தி தயா ஐக்ய ப்ரதிபாதனம விருத்தம் தேச த்வய விரோதஸ் ச கால பேதேந பரிஹ்ருத
லக்ஷணாயாம் அபி ந த்வயோர் அபி பதயோர் லக்ஷணா ஸமாச்ரயணம் ஏகேநைவ லஷிதேந விரோதி பரிஹாராத் –
லக்ஷணாபாவ ஏவ உத்த தேசாந்தர சம்பந்தி தயா பூதஸ்யைவ அந்ய தேச சம்பந்தி தயா வர்த்தமானத்வா விரோதாத்
ஏவ மாத்ராபி ஜகத் காரண பூதஸ்யைவ பரஸ்ய ப்ரஹ்மண
ஜீவ அந்தர்யாமி தயா ஜீவாத்ம த்வம விருத்தமிதி ப்ரதிபாதிதம் -யதா பூதயோர் அபி ஹி த்வயோர் ஐக்யம்
சாமாநாதி கரண்யேந பிரதீயதே -தத் பரிந்யாகேந ஸ்வரூப மாத்ர ஐக்யம் ந சாமநாதி கரண்யஸ்யார்த்தா
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகஸ்மிந் நர்த்தே வ்ருத்திஸ் சாமாநாதி கரண்யம் (பதாஞ்சலி அருளிய லக்ஷணம் )-இதி ஹி
தத்வித ததா பூதயோர் ஏவ ஐக்யம் உபபாதிதம் அஸ்மாபி –

அது அவ்வாறு அல்ல
இவர் அந்த தேவதத்தன் என்பதில் இலக்கணைக் குற்றம் வராது -ஏன் எனில் இவர் அந்த என்ற சொற்களுக்கு மாறுபட்ட பொருளைக் குறிக்காமையால் ஒரு நபருக்கு -பொருளுக்கு -கடந்த காலத்தில் வேறொரு இடத்துடன் உள்ள தொடர்பு -நிகழ் காலத்தில் கண் முன் காணும் இடத்துடன் உள்ள தொடர்புக்கு மாறுபாடுடையதன்று
ஒருவருக்கு இரு வேறு பீடத்துடன் உள்ள தொடர்பின் கால மாறுபாட்டால் சமன் செய்யப்படுகிறது

இலக்கணையாகக் கொண்டாலும் இரண்டு பாதங்களும் இலக்கணையால் சுட்டிக் காட்டப்படும் ஒரே பொருளினால் அவ்விரண்டு சொற்களும் ஒன்றேயாக ஒரு பொருளுடையவையாக ஆகமாட்டா
இங்கு கடந்த காலத்தில் வேறோர் இடத்தில் தொடர்புடையதாக இருந்தமையும்
தற் சமயம் இங்கு காணப்படுதலும் ஒரு நபருக்கு இலக்கணைக் குற்றமாக முடியாது
அதே போல் உலகின் காரணமாய் இருக்கும் தன்மை யுடைய ப்ரஹ்மம் -தத் -ஆத்மாவின் உள்ளுறையாய் விளங்கி -அந்த ஆத்மாவின் நின்றும் வேறுபட்ட ஒரு ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது –
அவ்வாறு அந்த இரண்டு குணமுள்ள ப்ரஹ்மமும் ஒன்றே என்பதால் ஸாமாநாதி கரணம் –சமன் செய்து பொருள் கோடல் -கிடைக்கிறது
இப்படிக் கொள்வதைத் தவிர்த்து -தத் த்வம் -அது நீ என்ற இரு சொற்களும் தம் தம் பொருளைக் குறிக்காது –
தம்மின்றும் வேறுபட்ட ஒரே ஆத்மா -பரமாத்மா =ஜீவாத்மா -என்ற பொருளைத் தர இயலாது
வேறுபட்ட பொருள் காட்டும் இரு சொற்கள் தத் தம் நேர் பொருளை விட்டு ஒரே பொருளை -வஸ்துவை அடை மொழியினால் காட்டுதல் ஸாமா நாதி கரணமாகும் -சமன் செய்து பொருள் கோடலாகும் –
இதனால் இரு சொற்களாலும் ஒரே பொருள் -வஸ்து -குறிக்கப்படும் என்றே அறியப்பட்டது

இலக்கணை யாவது ஒரு சொல் தனக்குரிய நேர் பொருளைத் தவிர்த்து பழக்கத்தினாலோ -பண்பு மிகுதியினாலோ -அதினிலும் வேறுபட்ட ஒரு பொருளைக் கொள்வது
எடுத்துக் காட்டு
உலக வழக்கில் கம்பி நீட்டினான் என்று கூறுகையில் ஒரு கொல்லன் உலோகத்தைக் கம்பியாக நீட்டுவதைக் கொள்ளாது -ஒருவன் தப்பி ஓடி விட்டான் -என்பதையே கொள்கிறோம் –

இங்கு அது என்ற சொல் தொலைவில் இருக்கும் ஒன்றைக் காட்டும் –
நீ என்பது அண்மையில் கண் முன்னே காணப்படும் ஒருவனைக் குறிக்கும்
இவை இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பிட வேண்டுமானால் அவை இரண்டும் தத் தம் அடைமொழிகளால் மட்டும் காட்ட இயலும் –
இல்லை எனில் அது நீ என்ற இரண்டு சொல் ஒரு பொருள் பன் மொழி -ஆ -பசு -போலாகும்
அவ்வாறு கொள்வது தவறு –
அவற்றுக்கு அடை -விசேஷணம் -உண்டு என்றால் ப்ரஹ்மத்திற்குப் பண்புகள் உண்டு என்று ஏற்பட்டு தமது பண்பற்ற ப்ரஹ்மம் என்ற கொள்கை மாறுபடும் என்பதால் அத்வைதிகள் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் –

———

31–உபக்ரம விரோத உப சம்ஹாரே வாக்ய தாத்பர்ய நிஸ்ஸயஸ் ச ந கடதே உபக்ரமே ஹி
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத்யாதிநா
ஸத்ய ஸங்கல்பத்வம் ஜகத் ஏக காரணத்வம் அப்யுக்தம் தத் விரோதி ச அவித்யாஸ்ரயத்வாதி ப்ரஹ்மண

(ஸப்தம் -வாக்ய சேஷம் -அது பிரகரண சேஷம் – -அது ஸாஸ்த்ர சேஷம் –
லிங்கம் அடையாளங்கள் -1-உபக்ரமம் உபஸம்ஹாரம்-இதுவே பிரதானம் -2-அப்பியாசம் -3-அபூர்வ வத் -4-பலம் -5-அர்த்தவாதம் -6-உபபத்தி ஆறும் உண்டே
சரீராத்மா பாவத்துக்கு உபக்ரமம் உப சம்ஹாரம் ஏகார்த்தம்)

துவக்கத்தில் சொன்ன பொருளும் முடிவில் கொண்ட பொருளும் ஒன்றே என்பது முடியாது –
துவக்கத்தில் அது நினைத்தது பலவாகக் கடவேன் மக்களைப் படைப்பேன் என்று உண்மையான வினைத்திட்பம் கொண்டு இருந்ததே உலகிற்குக் காரணமாயிற்று என்பது வெளிப்படை
அதற்கு மாறாகக் கொண்டால் அந்த ப்ரஹ்மத்திற்கு மக்களைப் படைக்கும் திறனும் அதற்கான ஞானமும் இல்லை
அது அஞ்ஞானத்திற்கு இருப்பிடமானது என்றதாகும்

அத்வைதிகள் அறிவே ஞானமே ப்ரஹ்மம் என்று முதற் கொள்கையாய் கொண்டுள்ளனர்
அவித்யை என்பதனாலேயே அது தன்னை மற்றை உயிர்களாக நினைத்து மயங்குகிறது
அந்த மயக்கமே இந்தப் பொய்யான உலகு உண்மை போல் தோன்றும் காரணம் என்பது அவர்கள் முடிவு
உலகைப் படைக்கும் அறிவு ப்ரஹ்மத்திற்கு இல்லை என்றால் ப்ரஹ்மமே ஞானம் என்று கொண்டது பொருந்தாது
அதாவது அவர்களே தங்கள் முதற் கொள்கைக்கும் முடிவான இருப்புக்கும் மாறுபடுகின்றனர்-

———-

32–அபி ச அர்த்த பேத தத் சம்சர்க்க விசேஷ போதந க்ருத பத வாக்ய ஸ்வரூப லப்த பிராமண பாவஸ்ய சப்தஸ்ய
நிர் விசேஷ வஸ்து போதநா சாமர்த்யாத்ந நிர்விசேஷ வஸ்து நி சப்த பிரமாணம்
நிர் விசேஷ இத்யாதி சப்தாஸ்து கேந சித் விசேஷேண விஸிஷ்டதயா அபஹதஸ்ய வஸ்துநோ வஸ்த்வந்தராவகத விசேஷ
நிர்சேஷதக தயா போதகா இதரதா தேஷாமப்யநவ போதகத்வமேவ ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண பதஸ்யை அநேக விசேஷ
கர்பிதத்வாத் அநேக பதார்த்த சம்சர்க்க போதகதவாச்ச வாக்யஸ்ய-

(சப்தம் ப்ரக்ருதி ப்ரத்யாத்மகம் பகுதி விகுதி சேர்ந்தே இருக்கும் -பேத ப்ரதிபாத்யம் ஆகவே இருக்குமே -கடம் -வேறே ஒன்றை வியாவர்த்திக்கைக்காக சொல்கிறது-ஆத்மா ப்ரஹ்மம் -ஞான மாத்திரம் -ஞாத்ருத்வாதி விசேஷணங்கள் இல்லாமல் –
ஞானம் சப்தத்தால் வஸ்து நிர்த்தேசம் என்பர்)

மேலும் ஒவ்வொரு சொல்லும் பகுதி விகுதியாய் நின்று ஒரு குறிப்பிட்ட பொருளை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறது
அவ்வாறே பல சொற்களின் தொடையான சொல் தொடரும் தனக்கென ஒரு தனித்த பொருளையே காட்டும்
அவைகள் எக்காலத்தும் பண்புகள் அற்ற ஒரு பொருளைக் காட்டும் திறன் அற்றவை இவ்வாறு பொருள் காட்டும் தன்மையே நமக்குக் கொள்ளத் தக்கது

பண்புகள் அற்றது என்பது நாம் எடுத்துக் கொண்ட பொருள் மற்றவைகளுக்கு உள்ள பண்புகள் உடையதன்று என்று மறுதலிப்பதாகும்
சொற்கள் யாவும் தத் தமக்குரிய ஒரு குறிப்பிட்ட பொருளைக் காட்டும் என்பதும்
அப்பொருள் மற்றவற்றின் நின்றும் வேறுபட்டது என்பதால் பண்புகள் அற்ற சிறப்புற்ற பொருள் என்று எதுவும் சொற்களால் கிடைக்க முடியாது

உலகின் மொழிகள் யாவும் அவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குறிப்பிட்ட தன்மையையே காட்டுகின்றன –
அது பொருளாகவோ பண்பாகவோ வினையாகவோ இருக்கலாம்
அதனால் அச்சொல் தான் காட்டும் பொருளை மற்றச் சொற்களின் பொருள்களில் இருந்து வேறுபடுத்துகிறது
ஆதலால் பண்புகள் அற்ற பொருள் என்று ஓன்று இருக்க முடியாது –

————–

33–அத ஸ்யாத் -நாஸ்மாபி நிர்விசேஷ ஸ்வயம் பிரகாசேசே வஸ்துநி சப்த பிரமாண மித்யுச்யதே
ஸ்வதஸ் சித்தஸ்ய பிராமணன – பேக்ஷத்வாத் சர்வை சப்தை தது பராக விஷேஷா ஞாத்ருத்வாதய சர்வே நிவர்த்தயந்தே
சர்வேஷு விஷே சேஷு வஸ்து மாத்ரம் அநவச் சிந்நம் ஸ்வயம் பிரகாசம் ஸ்வத ஏவாவதிஷ்டதே -இதி –

பண்புகள் அற்ற ப்ரஹ்மத்தின் தன்னொனிர் தன்மை என்னும் வாதத்திற்கு மறுப்பு

அது அவ்வாறாயின் -நாங்கள் ப்ரஹ்மத்திற்கு சொற்கள் -ஸப்தம் -சாட்சி பிரமாணம்-என்று சொல்லவில்லை –
ப்ரஹ்மம் தானே வெளிப்படும் பொருள் என்பதால் அதனைப் பிற -சொற்கள் முதலியன -காட்டிக் கொடுக்க முடியாது –
ஸாஸ்த்ரங்களின் எல்லாச் சொற்களும் தங்களுக்குள்ள சிறப்பான போல் கூறும் தன்மையால் குணம் அற்ற ப்ரஹ்மத்தின் மீது ஏற்பட்டு இருக்கும் பண்புகள் யாவையும் விலக்குகின்றன என்கிறார்கள்

அது அவ்வாறு அல்ல -எந்தச் சொல்லால் அப்பொருள் -ப்ரஹ்மம் -சுட்டிக் காட்டப்பட்டு அதன் பண்புகள் விலக்கப் படுகின்றன –
ஞானம் மட்டும் என்ற சொல்லாலா
அதுவும் கூட பண்பு உள்ள பொருளையே காட்டுகிறது –
அச்சொல்லின் பகுதி விகுதிகளால் அது தனக்கு உரிய பொருள் கூறும் தன்மையால் பண்புகள் உள்ள பொருளையே காட்டுகிறது –
ஞா -அறிதல் என்ற பொருள் படுதலால் செய்கையைக் காட்டி -அதனால் செய்பவனையும் -செய்யப்படும் தொழிலையும் காட்டும் –
தி -இது பெண் பால் ஒருமை விகுதி

ப்ரஹ்மம் தானாகவே காட்டிக் கொடுக்கிறது என்றாலும் அதன் நிலைச் சிறப்பால் பண்பற்ற பொருளைக் காட்ட முடியாது
இங்கு ஞப் தே என்பதால் பிறர் துணை யன்றி இயற்கையாகவே ஞானமுடையது ப்ரஹ்மம் என்பது பெறப்படுகிறது –

———-

34–நைததேவம்
கேந சப்தேந தத் வஸ்து நிர்திஸ்ய தத் கதா விசேஷா நிரஸ்யந்தே –
ஞாப்தி மாத்ர சப்தேந -இதி சேத் –
ஸோபி ச விசேஷ மேவ வஸ்து அவலம்பதே ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண விசேஷ கர்ப்பித தத்வாத தஸ்ய –
ஞா -அவ போதநே இதி ச கர்மக-ச கர்த்ருதுக கிரியா விசேஷ க்ரியாந்தர வ்யாவர்த்தக-ஸ்வபாவ விசேஷஸ் ச
ப்ரக்ருதயா அவகம்யதே ப்ரத்யயேந லிங்க சங்க்யாதயா-
ஸ்வத ஸித்தாவபி ஏதத் ஸ்வபாவ விசேஷ விரஹே ஸித்திரே வநஸ்யாத் –
அந்ய சாதந ஸ்வ பாவதயா ஹி ஞப்தே ஸ்வதஸ் சித்தருஸ்யதே–

(ஞா -அவ போதநே-அறிதல் -ஏதாவது ஒன்றைப் பற்றியே இருக்க வேண்டும் -யார் அறிகிறான் -யாரை அறிகிறான் எதை அறிகிறான் கேள்வி வருமே
மாத்திரம் சப்தம் இவற்றை விவரிக்காதே -லிங்கம் அடையாளம் –)

பண்புகள் அற்றது -என்பது நாம் எடுத்துக் கொண்ட பொருள் மற்றவைகளுக்கு உள்ள பண்புகள் உடையதன்று என்று மறுதலிப்பதாகும் –
சொற்கள் யாவும் தத் தமக்கு உரிய ஒரு குறிப்பிட்ட பொருளைக் காட்டும் என்பதும் -அப்பொருள் மற்றவற்றின் நின்றும் வேறுபட்டது என்பதால் பண்புகள் அற்ற சிறப்பற்ற பொருள் என்ற எதுவும் சொற்களால் கிடைக்க முடியாது –

உலகின் மொழிகள் யாவும் அவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குறிப்பிட்ட தன்மையையே காட்டுகின்றன காட்டுகின்றன –
அது பொருளாகவோ பண்பாகவோ வினையாகவோ இருக்கலாம் -அதனால் அச்சொல் தான் காட்டும் பொருளை மற்றச் சொற்களின் பொருள்களில் இருந்து வேறுபடுத்துகிறது –
ஆதலால் பண்புகள் அற்ற பொருள் என்று ஓன்று இருக்க முடியாது –

—————

35–ப்ரஹ்ம ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஸர்வதா ஸ்வயமேவ ப்ரகாஸதே சேத் ந தஸ்மிந் அந்ய தர்மாத் யாச சம்பவதி –
ந ஹிரஜ்ஜூ ஸ்வரூபே அவபா சமாநே சர்ப்பத்வாதி அத்யஸ்யதே அத ஏவ ஹி பவத்பி
ஆச்சாதிகா அவித்யா -(ஆச்சாதிகா அவித்யா – பொருளை மட்டும் மறைத்தல் -விசேஷகா அவித்யா -பண்புகளை மறைத்தல் –
என்று இரண்டு வகை அவித்யா உண்டே – ) அப்யுபகம்யதே ததஸ் ச ஸாஸ்த்ரீய நிவர்த்தக ஞானஸ்ய ப்ரஹ்மணி திரோஹிதாம்ஸோ
விஷய அந்யதா தஸ்ய நிவர்த்திகத்வம் ச ந ஸ்யாத் -அதிஷ்டாநாதிரேகி ரஜ்ஜூத்வ ப்ரகாஸதேந ஹி சர்ப்பத்வம் பாத்யதே –
ஏகஸ்சேத் விசேஷோ ஞான மாத்ரே வஸ்துநி சப்தேந அபிதீயதே ச ச ப்ரஹ்ம விசேஷணம் பவதி இதி சர்வ ஸ்ருதி ப்ரதிபாதித
சர்வ விசேஷண விசிஷ்டம் ப்ரஹ்ம பவதி அத பிரமாணிகாநாம் ந கேநாபி ப்ரமாணே ந நிர்விசேஷ வஸ்து ஸித்தி —

(ஞானம் அந்நயாதீன ஸ்வயம் பிரகாசம்-ஸ்வ தர்மம் – -தன்னுடைய சம்பந்தத்தால் பிரகாசம் அற்ற சேதனப் பொருள்களை பிரகாசிக்கும்
ஒரு பொருளை விஷயீகரித்தால் தானே ஸ்வயம் பிரகாசம் ஆகும் –
நிர்விசேஷ வஸ்துவுக்கு ஸ்வயம் ப்ரகாஸத்வம் சாதிக்க முடியாதே
ஸ்வயம் பிரகாச வஸ்து மேல் பிரமம் உண்டாகவே முடியாதே)

(நான் வேடுவன் -நான் ப்ரம்மத்துக்கு விஷயம் அல்லவே -வேடுவன் தப்பாக அறிவதில் தானே பிரமம் ஆகலாம்
ஸ்வயம் பிரகாச வஸ்து பிரமத்துக்கு விஷயம் ஆகவே முடியாதே)

———–

36 —நிர்விகல்பக ப்ரத்யஷேபி ச விசேஷமேவ வஸ்து பிரதீயதே -அந்ய தா ச விகல்பகே ஸோயமிதி–
பூர்வாவகத பிரகார விஸிஷ்ட ப்ரத்யயா நுபபத்தே-
வஸ்து ஸமஸ்த்தாந விஷய ரூபத்வாத் கோத்வாதே -நிர்விகல்பக தசாயாமபி ச சமஸ்தானமேவ வஸ்து இத்தம்-இதி பிரதீயதே
த்விதீயாதி ப்ரத்யயேஷு தஸ்யைவ சமஸ்தாந விசேஷஸ்ய அநேக வஸ்து நிஷ்டதா மாத்ரம் பிரதீயதே சமஸ்தாந ரூப
பிரகாரக்யஸ்ய பதார்த்தஸ்ய அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து விசேஷணத்வம்
த்விதீயாதி ப்ரத்யயாவகம்ய மிதி த்விதீயாதி ப்ரத்யயா ச விகல்பகா இதயுச்யந்தே

பண்புகள் அற்ற மெய்ப்பொருட் காட்சி
பண்புகள் அற்ற பொருளைக் காட்ட முடியும் என்பதை மறுத்தல்

சிறப்புத் தன்மைகள் அற்ற மெய்ப்பொருள் காண் முறையும் -ஏதோ ஒரு பண்புடன் கூடிய பொருளையே காட்டும் –
இல்லையெனில் ஸ விகல்ப ஞானத்தில் சிறப்புள்ள மெய்ப்பொருள் காண் முறையில் -இவன் அதே தேவதத்தன் -என்று சொல்லும் போது முன்பு தேவதத்தனும் பின்பு அவனுடைய பண்புகளும் அறியப்பட்டன என்பது தவறாகும்
ஒருபடிப்பட்டதான பண்புகள் ஏதோ இருப்பதால் மட்டும் இவ்விதம் சொல்ல முடியும் –
ஒரு பிராணி அதன் உருவ அமைப்பு பண்புகள் முதலியவற்றால் -பசு -என்று அறியப்பட்டு பின்னர் அதைப்போன்ற பல பிராணிகளைக் காண்கையில் அவைகளும் பசுவே -என்று அறியப்படுகின்றன –
இரண்டாம் முறை அதே உருவ அமைப்புக் கொண்ட பல பொருள்கள் பார்க்கப்படுகின்றன –
இவ்வாறு உருவ அமைப்பு ஒற்றுமை கொண்ட பல பொருள்கள் சிறப்புக் குணமுடையதாய் இருத்தல் இரண்டாவது நோக்குதலில் ஆரியப் படுவதால் அது சிறப்புள்ள மெய்ப்பொருள் காண் முறை எனப்படுகிறது

ப்ருதக் ஸித்தம் –விசேஷணம் பிரிக்கப் படக் கூடியது
அப்ருதக் ஸித்தம் –குணம் -பிரகாரம் -பிரிவற்றது
நிர் விகல்பம் -ஒரு பொருளை மற்றவற்றில் நின்றும் பிரித்து அறிதல்
ஸ விகல்பம் -அதே போன்று பல பொருள்களை அறிதல்

ப்ரஹ்மத்தின் தனிப்பட்ட பண்புகள் உயர்வற உயர் நலம் உடைய நற் குணக்கடல்
தன்னை அடைந்தோரையும் அவ்வாறு ஆக்கும் வல்லமை படைத்தது
2-பசு என்னும் விலங்கு மற்ற விலங்கு வகைகளின் நின்றும் மாறுபடுவதை முதலாவதாகவும்
பல பசுக்கள் தமக்குள்ள சில வித்யாசங்களுடன் இருத்தலை அதன் பிறகும் அறிய முடியும்
3-இவன் அதே தேவ தத்தன் என்பது ப்ரத்யபிஞ்ஞா-நினைவு கூறுதல் –

————-

37–அத ஏவ ஏகஸ்ய பதார்த்தஸ்ய பின்னா பின்ன ரூபேண விருத்தம் வ்யத்யாத்மகத்வம் ப்ரத்யுக்தம் சமஸ்தானஸ்ய ஸம்ஸ்தானீன
பிரகாரதயா பதார்த்தாந்தரத்வம் பிரகாரத்வா -தேவ ப்ருதக் சித்யநர் ஹத்வம் -ப்ருதக் அநு பலம்பஸ் சேதிநத்வயாத் மகத்வ ஸித்தி –

பிறகு இந்த ஒன்றான பொருளின் மாறுபாடுள்ள மாறுபாடற்ற தன்மைகள் அவை உடைமை இன்மையாலேயே அறியப்படுகின்றன –
ஒரு அமைப்பும் அதை உடைய பொருளும் பிரிக்க முடியாமையால் ஓன்று மற்ற ஒன்றுக்கு அடையாகிறது-ஒன்றாகவே காணப்பட்டாலும் ஒரு பொருளும் அதன் அமைப்பும் தனித்து இயங்காமல் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தனிப்பட்டதாகும் -அதனால் ஸ விசேஷத்வம் பண்பு உடைமை வெளிப்படும்

எடுத்துக் காட்டு -குடமும் நிறமும்

———–

38–அபி ச நிர்விசேஷ வஸ்து வாதிநா ஸ்வயம் பிரகாச வஸ்துநி ததுபராக விசேஷா சர்வைஸ் சப்தை நிஷித்யந்தே
இதிவததா கே தே ஸப்தா நிஷேதகா -இதி வக்தவ்யம்-
வசாரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி விகார நாம தேயயோ வாசாரம் பண மாத்ரத்வாத்
யத் தத்ர காரண தயா உப லஷ்யதே வஸ்து மாத்ரம் ததேவ சத்யம் அந்யத சத்யமிதி இயம் ஸ்ருதிர் வததி இதி சேத்
நைததுப பத்யதே ஏகஸ்மின் விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஞாதம் பவதீதி ப்ரதிஞ்ஞாதே அந்ய ஞாநேந அந்ய ஞாநா சம்பவம்
மந்வாநஸ்ய ஏகமேவ வஸ்து விகாரத்ய வஸ்தா விசேஷண பாரமார்த்திகே நைவ நாநா ரூபமவஸ்திதம் சேத்
தத்ர ஏகஸ்மின் விஞ்ஞாதே தஸ்மாத் விலக்ஷண சமஸ்தானாந்தர மபி ததேவ வஸ்து இதி தத்ர த்ருஷ்டாந்தோயம் நிதர்சித–
நாத்ர கஸ்யசித் விசேஷஸ்ய நிஷேதக கோபி சப்த த்ருச்யதே வாசாரம்பண மிதி வாசா வ்யவஹாரேண-ஆரப்யதே இதி ஆரம்பணம் —
பிண்ட ரூபேண ஸம்ஸ்திதாயா ம்ருத்தி காயா நாமச அந்யத் வியவஹாரஸ் ச அந்ய கட சராவாதி ரூபேண அவஸ்தி தாயா
தஸ்யா ஏவ ம்ருத்திகாயா அந்யாநி நாமாநி வியவஹாரஸ் ஸ அந்யாத்ருசா தாதாபி ஸர்வத்ர ம்ருத்தி காத்ர வ்யமேகமேவ
நாநா சமஸ்தான நாநா நாமதேயாப்யாம் நாநா வ்யவஹாரேண ச ஆரப்யத இதி ஏததேவ சத்யம் -இத்யநேந
அந்ய ஞாநேந அந்ய ஞான சம்பவோ நிதர்சித நாத்ர கிஞ்சித் வஸ்து நிஷித் யத–இதி பூர்வமேவ அயமர்த்த பிரபஞ்சித

இங்கும் பொருள் குணங்கள் அற்றது என்று வாதிப்போர் கனமற்ற அப்பொருளின் மேல் ஏற்றிச் சொல்லப்படும் அடைகளினால் அதன் குணங்கள் விலக்கப் படுகின்றன என்று கூறும் நிலையில் தானே ஒளிரும் ப்ரஹ்மத்தில் அதில் ஏறிட்டுச் சொல்லப்படும் சொற்களால் அதன் குணங்கள் விலக்கப்படுகின்றன என்று கொண்டால் அவ்வாறு கூறப்படும் சொற்கள் யாவை என்று கேட்க்கிறோம்

மண்ணுருண்டை எடுத்துக் காட்டில் அது ஒன்றே உண்மை -அதனால் உண்டாகும் குடம் வாணாய் என்பவை உலகியலியல் பெயரிட்டு அழைப்பதற்கு மட்டுமே -என்று விடை அளிக்கப்படுகிறது –
ஏன் எனில் எந்தப் பொருளின் நின்றும் மற்றவை உருவாகின்றனவோ அப் பொருள் மட்டுமே உண்மை என்று கொள்வது நில்லாது -எப்படி என்றால் –
எந்த ஒன்றை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ -என்று கேட்கப்பட்டு இருப்பதால் ஒரே பொருள் -மாறுபாடு அடைந்து பல பொருள்களாக ஆகையில் -அந்த முதல் பொருளை அறிவதனால் அதன் மாறுபாடான மற்றப் பொருள்களையும் அறிய முடியும் என்று தான் பொருள் படும்
இங்கு எதிர்மறைச் சொற்கள் ஏதும் இல்லாமையாலே இவ்வாறு இல்லை என்று கொள்வது முடியாது
வாசம் -பேச்சு வழக்கில் ஆரம்பம் துவக்கப்படுத்தல் -அழைக்கப் படுதல் -மற்றையப் பொருள்களின் நின்றும் வேறுபடுத்தி என்பதற்காக பிண்டமாக இருந்த மண் பிண்டம் என்றும் மாறுதல் அடைகையில் குடம் வாணாய் என்றும் ஒவ்வொரு உருவுக்கும் தனிப்பெயர்களாக வருகின்றன –
இப்படி மண்ணின் நின்றும் வேறுபட்ட அமைப்பை யுடையவை யாயினும் இப்பொருட்கள் யாவ்ய்ம் மண்ணாலேயே ஆகி இருப்பதால் வை மண் என்பதும் உண்மை –
அவர் வேறுபொருட்களால் ஆக்கப்பட்டதல்ல என்றே ஆசானால் விளக்கப் படுகிறது -பிற பொருட்கள் எதுவும் இல்லை என்று எங்கும் கூறப்பட வில்லை

ஒரு பொருள் தான் இருக்கும் நிலையின் நின்றும் மாறுபட்டு மற்ற ஒரு நிலையை அடைவது விகாரம் எனப்படும் –

(ஏக பதார்த்த விஞ்ஞானம் காரண கார்ய பாவத்தால் சர்வ விஞ்ஞானம் என்பது அல்ல
ஏக விஞ்ஞானத்தில் அடங்கிய சர்வ விஞ்ஞானம் என்கிறார்
ஏக விஞ்ஞான பின்ன சர்வ விஞ்ஞானம் -அபி –
ஏகம் ம்ருத் பிண்டம் -ஸர்வ குடம் மடக்கு போல்வன-இவையும் ம்ருத் பண்டம் போல் ஸத்யம் தானே )

39–அபி ச யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இத்யாதிநா ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய மித்யாத்வம் ப்ரதிஞ்ஞாதம் சேத்
யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந –இத்யாதி த்ருஷ்டாந்த -ஸாத்யவிகலஸ்யாத் -ரஜ்ஜூ சர்ப்பாதிவத் ம்ருத்திகா விகாரஸ்ய
கட சராவத இதர சத்யத்வம் ஸ்வேத கேதோ ஸூஸ்ரூஷோ பிரமானாந்தரேண யுக்தயா ச அசித்தமிதி ஏததபிசிஷாத இஷிதமிதிசேத்
யதா இதி த்ருஷ்டாந்த தயா உபாதானம் ந கடதே-

இங்கும் எந்த ஒன்றைக் கேட்டால் கேட்கப்படாத மற்றவை கேட்டதாக ஆகுமோ -என்பதால் -வரஹ்மம் தவிர்த்த மற்றைப் பொருள்களின் இன்மை தெரிவிக்கப் படுகிறது என்று மாயா வாதிகள் கூறுவார்களானால் -எந்த மண்ணுருண்டையை அறிந்தால் குழந்தாய் மற்றவையும் அறிந்ததாகும் -என்ற எடுத்துக் காட்டால் அவர்கள் கூற்று பயன் அற்றதாகிறது
அதற்கு மாறாக பொய் என்று நன்கு அறியப்பட்ட கயிற்றில் பாம்பைக் காணுதல் போன்ற எடுத்துக் கட்டைத் தவிர்த்து மண்ணுருண்டையின் விகாரங்களே குடம் சாருவும் போன்றவை என்று காட்டப்பட்டு இருப்பதால் -அவை மண்ணாலேயே நிறைந்தவை -அவை யாவும் பொய் என்பது மறுக்கப் படுகிறது –

———-

40–சதேவ சோம்யா இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இத்யத்ர
சதேவ -ஏகமேவ -இதி அவதாரண த்வயேந-அத்விதீயம் -இத்யநேந-சந் மாத்ராதிரேகி -சஜாதீய -விஜாதீயா —
சர்வே விசேஷா நிஷித்யந்த இதி பிரதீயதே இதி சேத்
நைவ தேவம் -கார்ய காரண பாவா வஸ்தாத் வயாவஸ்தி தஸ்ய ஏகஸ்ய வஸ்துந ஏகா வஸ்தஸ்ய ஞாநேந அவசித்தாந்தர
அவஸ்தி தஸ்யாபி வஸ்த்வ ஐக்யேந ஞாததாம் த்ருஷ்டாந்தேந தர்சாயித்வா
ஸ்வேத கேதோரா பிரஞ்ஞாதம் ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரணத்வம் வக்தும்
சதேவ சோம்யேதம்–இத்யாரப்தம்-இதமக்ர சதேவா ஸீத் -இதி அக்ர இதி கால விசேஷ இதம் சப்த வாச்யச்ய பிரபஞ்சஸ்ய
சதா பத்தி ரூபம் க்ரியாம் சத்த்ரவ்யதாம் ச வததி
ஏகமேவ இதிச அஸ்ய நாநா நாம ரூப விகார ப்ரஹாணம்-ஏதஸ்மிந் ப்ரதிபாதிதே அஸ்ய ஜகத-சதுபாதநதா பிரதி பாதிதா பவதி-
அந் யாத்ரா உபாதான காரணஸ்ய ஸ்வ வ்யாதிரிக்தா திஷ்டாத்ரா பேஷா தர்சநேபி சர்வ விலக்ஷணத்வா தஸ்ய
சர்வஞ்ஞஸ்ய ப்ரஹ்மண சர்வசக்தி யோகோ ந விருத்த இதி
அத்விதீய-பதம் அதிஷ்டாத்ரந்தரம் நிவாரயதி சர்வ சக்தி யுக்தத் வாதேவ ப்ரஹ்மண-காஸ்சந ஸ்ருதய ப்ரஹ்மம் உபாதான காரணத்வம்
ப்ரதிபாத்ய நிமித்த காரணம் அபி ததேவேதி ப்ரதிபாத யந்தி யதேயம் ஸ்ருதி —

(ஜகத் காரணம் ப்ரஹ்மமே அறியாத ஸ்வேத கேதுவுக்கு அறிவிக்கும் வாக்யமே இந்த சுருதி வாக்கியம்)

சதேவ சோம்யா இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்-என்ற வாக்கியத்தில் -சதேவ-ஏகமேவ –என்ற இரு தெற்று ஏகாரங்களும் -அத்விதீயம்-இரண்டாவது அற்றது -என்பதாலும் -மற்ற எவையும் அற்ற -ஸத் -அதனுடன் ஒருபடிப்பட்ட-அதினின்றும் மாறுபட்ட -மற்ற குணங்கள் யாவற்றையும் விலக்குகிறது என்று கூறுவதாகவும் கொள்ள முடியாது –
செயல் விளைவு தொடர்பினால் ஒரே பொருளின் இரு வேறுபட்ட இரு நிலைகளில் ஒன்றை அறிவதால் மற்றது தானே அறியப்படும் என்பதைக் காட்ட
இந்த எடுத்துக் காட்டை ப்ரஹ்மம் ஒன்றே இவ்வுலகு அனைத்திற்கும் காரணம் என்பதை ஸ்வேத கேதுவிடம் -குழந்தாய் ஸத் ஒன்றே இருந்தது என்று தொடங்கி முதலில் ஸத் என்றே இருந்தது என்று கூறுகிறார்முதலில் என்பது ஒரு காலச் சிறப்பு -பிரளய நிலை –
இதம் என்பதற்குப் பொருள் இப்பிரபஞ்சம் -அதாவது படைப்புக்கு முன் இவ்வுலகு எல்லாம் ப்ரஹ்மத்துடன் ஒன்றி இருந்த நிலையையும் -ஸத் என்ற பெயருடனேயே இருந்ததையும் கூறுகிறது –
ஓன்றே என்பதால் இப்பொழுது காணப்படும் பற்பல பெயர்களும் உருவங்களும் அற்றும் இருந்தது என்று கூறி
இந்த உலகிற்கு அந்த ஸத் என்பதே மூலப்பொருள் காரணமாகவும் அதினின்றும் வேறுபட்ட ஒரு செய்வோன் எனும் நிமித்த காரணம் இன்றியும்
அதுவே தன்னுடைய எல்லாம் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாத் திறமைகளும் கை வரப் பெற்ற தன்மையால் அது ஒன்றாகவே -மற்றத் துணை ஏதும் இன்றி-உலகைப் படைத்தது என்பதைக் குறிக்க அத்விதீயம் -இரண்டாவது அற்றது – என்று கூறுகிறது –
எல்லாத் திறன்களும் இயற்கையாகவே உடையவன் என்பதால் ப்ரஹ்மமே மூலப்பொருளும் செய்வோனும் ஆயிற்று என்று கூறி சில ஸ்ருதிகளில் ப்ரஹ்மத்தை மூலப் பொருள் காரணமாகச் சொல்லி பிறகு செய்வோனாகவும் கூறப்படுவதையும் எடுத்துக் காட்டுகிறது

உலகில் மூலப்பொருள் ஒரு போதும் செய்வோன் ஆக முடியாது – இந்த வரையறை ப்ரஹ்மத்துக்குப் பொருந்தாது – ஏன் எனில் அது எல்லாத் திறன்களும் யுடையது

ஸதா பத்தி -ஸத் ஆபத்தி -உயிருள் -உயிரில் பொருள்களுடன் எப்போதும் கூடியிருக்கும் கட் புலனாகா நிலை –

———-

41-அந்யாஸ் ச ஸ்ருதய ப்ரஹ்மணோ நிமித்த காரணதாம நுக்ஞாய–தஸ்யைவ உபாதானதா தி கதமிதி பரிச்சோத்ய
சர்வசக்தி யுக்தத்வாத் உபாதான காரணம் ததிதரா சேஷோபகரணம் ச ப்ரஹ்மைவ இதி பரி ஹரந்தி
கிம் ஸ்வித்தனம்-க உ சவ்ருஷ ஆஸீத் –யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு-மனிஷினோ
மனசா ப்ருச்சேதேது தது யதத்ய திஷ்டத் புவநாநி தாரயந்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்மம் ச வ்ருஷ ஆஸீத் யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு மணீஷிநோ மனசாவிப்ரவீமி
வ ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயந் இதி சாமான்யதோ த்ருஷ்டேந விரோத மா சங்க்ய ப்ரஹ்மண
சர்வ விலக்ஷணத்வேந பரிகார யுக்த

வேறு சில ஸ்ருதிகள் ப்ரஹ்மத்தை செய்வோனாகவும் கொண்டு இதற்கு மூலப்பொருள் எது என ஆராய முற்பட்டு ப்ரஹ்மத்திற்கு திறமைகளும் உண்டு என அறுதியிட்டு அதனால் மூலப்பொருளாகவும் அதுவே ஆயிற்று என நிறுவின
ஞானிகளே இந்த பிரபஞ்சம் என்னும் மாளிகையை உருவாக்கியவர் யார் -அதற்கு மரம் எக்காட்டின் நின்றும் எடுக்கப் பட்டது -எந்த மரம் உபயோகிக்கப் பட்டது

ப்ரஹ்மாகிற காட்டில் ப்ரஹ்மமாகிற மரத்தால் இந்த மாளிகை ஆயிற்று
ஞானிகளே -நான் மனப் பூர்வமாகச் சொல்லுகிறேன் -ப்ரஹ்மம் உள் நுழைந்து யாவற்றையும் தாங்கிக் கொண்டு இருக்கிறது -பொதுவாக ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட மூலப் பொருள்கள் செய்வோன் காரணமாக ப்ரஹ்மம் இருக்க முடியுமோ-என்ற ஐயத்தை நீக்குகிறது –

———

42–அத சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் இத்யத்ராபி அக்ரே இத்யாத்யநேக விசேஷ ப்ரஹ்மண ப்ரதிபாதிதா-
பவதமிமத விசேஷ நிஷேத வாஸீ கோபி சப்த ந த்ருச்யதே ப்ரத்யுத ஜகத் ப்ரஹ்மணோ கார்ய காரண பாவ ஞாபநாய
அக்ர இதி கால விசேஷ சப்தாவ ஆஸீத் இதி கிரியா விசேஷ ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா
ச நிமித்த உபாதானயோர் பேத நிரசநேந தஸ்யைவ ப்ரஹ்மண சர்வ சக்தி யோகஸ்சேதி
அப்ரஞ்ஞாதா சஹஸ்ரஸோ விசேஷா ஏவ ப்ரதிபாதிதா

பிறகு -குழந்தாய் ஸத் ஒன்றே முதலில் இருந்தது என்ற இந்தவிடத்திலும் முதலில் போன்ற அடைமொழிகளால் ப்ரஹ்மம் நிரூபிக்கப் படுகிறது –
உங்கள் கருத்துப்படி ப்ரஹ்மத்தைக் குணங்கள் அற்றது என்று சொல்லி விளக்கும் சொற்கள் ஏதும் காணப்பட வில்லை -நேர் மாறாக ப்ரஹ்மத்திற்கும் உலகிற்கும் கார்ய காரணத் தொடர்பு உண்டு என்பதை முதலில் என்ற காலம் காட்டும் சொற்களாலும் –
இருந்தது என்ற சொற் சிறப்பாலும் உலகிற்கு மூலப் பொருளாகவும் செய்வோனாகவும் இருந்தது என்று கூறி -கார்ய காரணத்திற்கு உரிய மூலப்பொருள் செய்வோன் எனும் காரணங்களின் வேறு பாட்டை மறுத்து எல்லா சக்தியும் கைவரப் பெற்ற அந்த ப்ரஹ்மமே இரண்டுமாயிற்று என்று கூறி நாம் அறியாத ஆயிரக்கணக்கான சிறப்புகள் ப்ரஹ்மத்திடம் உள்ளன என்று நிரூபித்து இருக்கிறது

—————-

43–யதோ வாஸ்தக கார்ய காரண பாவாதி ஞாபநே ப்ரவ்ருத்தம் -அத ஏவ
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் -இதயாரப்ய அசத் கார்ய வாத நிஷேதஸ் ச க்ரியதே குதஸ்து கலுஸோம் யைவம் ஸியாத்
இதி பிராகஸத உத்பத்தி அஹேதுகா இத்யர்த்த ததேவ உபபாதயதி கதம்ம் சதஸ் சஜ்ஜாயதே
இதி அசத உப பந்நம் அசதாத்மகமேவ பவதி இத்யர்த்த யதாம்ருத உத் பந்நம் கடாதிகம் ம்ருதாத் மகம் –
சத உத்பத்திர் நாம வ்யவஹார விசேஷ ஹேது பூத அவஸ்தா விசேஷ யோக —

இங்கு கார்ய காரணத் தொடர்பைச் சுட்டிக் காட்ட வேண்டிய உண்மையான காரணம் என்ன என்னில்
இன்மையே முதலில் இருந்தது என்று துவங்கும் இன்மை வாதத்தை மறுத்து -குழந்தாய் இவ்வாறும் சிலர் சொல்லுகிறார்கள் இன்மையினின்றும் இன்மை தான் வர முடியும் என்று கூறுகிறார் –
எப்படி மண்ணின் நின்றும் பண்ணப்பட்ட குடம் முதலியவை மண்ணாகவே இருக்கின்றனவோ அப்படி அவற்றிற்கு பேச்சு வழக்கில் குறிக்கப் படுவதற்கு பெயர்கள் அம்மண்ணின் வேறுபட்ட நிலையில் ஏற்படுகின்றன என்று விளக்குகிறார் –

————

44–ஏதத் யுக்தம் பவதி -ஏகமேவ காரண பூத த்ரவ்யம் அவஸ்தாந்தர யோகேந கார்யமித்யுச்யத இதி
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞானம் ப்ரதிபாதயிஷிதம் தது அஸத்கார்யவாதே ந சேத்ஸ்யதி -ததாஹி நிமித்த சமாவாய்ய
சமாவாயி ப்ரப்ருதிபிஸ் காரணை அவயவ்யாக்யம் கார்யம் த்ரவ்யாந்தரமேவ ஆரப்யத இதி காரண பூதாத் வஸ்துந கார்யஸ்ய
வஸ்த்வந்த்ரத்வாத் ந தத் ஞாநேன அஸ்ய ஞாததா கதமபி சம்பவநீதி–கதம் அவயவி த்ரவ்யாந்தரம் நிரஸ்யதே
இதி சேத் காரணகதா வஸ்தாந்தர யோகஸ்ய த்ரயாந்தரோத்பத்திவாதிந சம்பிரதி பந்நஸ்யைவ ஏகத்துவ நாமாந்தர
வ்யவஹாராதே ரூப பாதகத்வாத் த்ரவ்யாந்தரா தர்சினாஸ் ச –
இதி காரணமேவ அவஸ்தாந்தரா பந்நம் கார்யம் இத்யுச்ய தே இத்யுக்தம் –

இதை விளக்குவோம் –
காரணமாகும் முதற் பொருள் -அதன் நிலை மாறு பாட்டால் -பிரிதொரு பொருளாக -காரியப் பொருளாக -மாறுகிறது –
அதனால் அக்காரணப் பொருளை நன்கு அறிவதன் மூலம் அதனடியாகப் பிறக்கும் கார்யப் பொருட்கள் அறியப்பட்டனவாகும் என்பது நிரூபிக்கப் படுகிறது –
முதற் பொருளான காரணப் பொருளே பொய்யானது எனில் அதினின்றும் கார்யாப் பொருட்கள் ஏதும் பிறப்பதில்லை
இங்கு ஒரு செயலுக்கு -உலகு படைத்த – செய்வோநின் அதன் இன்றியமையாக் காரணம்
பிரிக்க இயலும் காரணம் முதலியவை இன்மை என்பதினின்றும் எவ்வாறு உண்டாக முடியும்
பல உறுப்புக்களின் சேர்க்கையினாலேயே ஒரு முழுப்பொருள் உருவாகும் அந்நிலையில் அவ்வுறுப்புக்கள் அப்பொருள்களுக்குக் காரணமாகின்றன
உதாரணம் -நூலும் துணியும்
முழுமையான நிரையில் உறுப்புக்களின் தனிப் ர் பெய மறைந்து முழுப் பொருளின நிலைக்கும் ஆகவே காரணத்தை -உறுப்புக்களை -அறிவதால் -கார்ய முழுப்பொருள் அறியப்படும்

இன்மை என்பதின் நின்றே உலகு தோன்றியது என்னும் வைசேஷிகர்கள் கொள்கை இதனால் மறுக்கப் படுகிறது
அவர்கள் கொள்கைப்படி நூலே துணியாக மாறுகிறது என்று கொள்ளப் படும்

———

அசத் கார்ய வைசேஷிக வாத நிரசனம் –
45–நநு -நிரதிஷ்டானப்ரமா சம்பவ ஞாபநாய அஸத்கார்ய வாத நிராச க்ரியதே -ததாஹி -ஏகம் சித்ரூபம் சத்யமேவ
அவித்யாச்சாதிதம் ஜகாத் ரூபேண விவர்த்ததே இதி அவித்யாஸ்ரயத்வாய மூல காரணம் சத்யமித்யப் யுபகந்தவ்யம்
இதி அஸத்கார்யவாத நிராச
நை ததேவம் -ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த முகேந சத்காரியவாதஸ்யைவ ப்ரஸக்தத்வாத்
இத்யுக்தம் பவத் பக்ஷே நிரதிஷ்டான ப்ரமா சம்பவஸ்ய துரூப பாதத்வாச் சா யஸ்ய ஹி சேதநகதோ தோஷ
பாரமார்த்திக தோஷாஸ் ரயத்வம் ச பாரமார்த்திகம் தஸ்ய பாரமார்த்திக தோஷேண யுக்தஸ்ய
அபாரமார்த்திக கந்தர்வ நகராதி தர்சனம் உபபந்நம்
யஸ்யது தோஷஸ் ச அபாரமார்த்திக்க தோஷாஸ்ரயத்வம் ச அபாரமார்த்திகம் தஸ்ய அபாரமார்த்திகே
நாப்யாஸ்ரயேண தத் உப பந்நம் இதி பவத்பஷே நநிரதிஷ்டான ப்ரமா சம்பவ —

அல்ல -ஆதாரப் பொருள் ஒன்றி இன்றி அறிவு மயக்கம் உண்டாக முடியும் -என்ற இன்மை வாதம் -அத்வைதிகள் வைசேஷிகரோடு வாதிக்கையில் -மறுத்தல் செய்யப்படுகிறது
அவ்வாறே குணங்கள் ஏதுமற்ற ஞானம் ஓன்று மட்டும் -அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு உலகின் உருவில் காண்கிறது எனில்
அந்த அஞ்ஞானத்திற்கு ஆதாரமானது அந்த ஞானம் -ப்ரஹ்மம் -என்பதால் இன்மை வாதம் மறுக்கப் படுகிறது –
அவ்வாறு எனில் ஒன்றை அறிவதால் மற்ற எல்லாவற்றை அறிந்ததாகும் என்று கூறு முகத்தான் -உண்டு -என்னும் வாதமே சொல்ல வந்தது என்பதே சரி –
உங்கள் பக்கத்தில் ஆதாரமின்றி அறிவு மயக்கம் உண்டாக முடியும் எண்டு நிரூபிப்பது கடினம்
எந்தக் கொள்கையில் ஆதாரம் உண்மையானதாகவும் அதற்கு ஏற்பட்ட குறையும் அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பும் உண்மையானதாகவும் கொள்ளப்படுகிறதோ –அங்கு தான் அக்குறை பட்டால் -கந்தர்வ நகரம் -வானத்தில் மேகங்களின் அமைப்பு நகரம் போல் தோற்றுதல் – போன்ற பொய்த் தோற்றங்கள் உண்டாக முடியும் என்று அறிகிறோம் –
எங்கு குறைபாடும் பொய்யோ -அதற்கு ஆதாரமும் பொய்யோ – அங்கு பொய்யான பொருள்களில் பொய்த் தொடர்பால் -பொய்த் தோற்றம் ஆதாரம் இன்மையால் உங்கள் வாதத்தின் படி தோன்ற இயலாது –

————–

46–சோத கேஷ்வபி -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம —
ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி ஷு சாமாநாதி காரண்ய வ்யுத்பத்தி ஸித்தாநேக குண விசிஷ்டை கர்தாபிதாநம்
அவிருத்தமிதி சர்வ குண விசிஷ்டம் ப்ரஹ்ம அபிதீயத இதி பூர்வமேவோக்தம்

ப்ரஹ்மத்தின் குணங்களை ஆய்ந்து தெரிவிக்கும் வேத வாக்யங்களான -பரமாத்மா மட்டற்ற மகிழ்வே வடிவானது -ஸத்யம் ஞானம் -அநந்தம் –ஆனந்தோ ப்ரஹ்ம -என்றவைகளில் ஸமாநாதி கரண்யத்தால் பல அடைமொழிகளால் கூறப்படும் பரமாத்மா நற் குணங்கள் யாவும் யுடையவன் -என்பது முன்பே நிரூபிக்கப் பட்டு விட்டது –

—————

47–அதாத ஆதேஸோ நேதி நேதி இதி பஹுதா நிஷேதோ த்ருஸ்யத இதி சேத் கிமத்ர நிஷித்யத இதி வக்தவ்யம்
த்வேவாவ ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் சா மூர்த்த மேவச இதி மூர்த்தா மூர்த்தாத்மக பிரபஞ்ச ஸர்வோபி நிஷித்யத
இதி சேத் ப்ரஹ்மணோ ரூபதயா அப்ரஞ்ஞாதம் சர்வம் ரூபதயா உபதிஸ்ய புநஸ்ததேவ நிஷேத்தும யுக்தம் –
ப்ரஷால நாத்தி பங்கஸ்ய தூரதஸ்பர்சனம் வரம் இதி நியாயாத் கஸ்தர்ஹி நிஷேதக வாக்யார்த்த
ஸூத்ரகார ஸ்வயமேவ வததி -ப்ருகிருதை தாவத்வம் ஹி பிரதிஷே ததிததோ பரவீதி ச பூய –
இதி உத்தரத்ர அத நாமதேயம் சத்யஸ்ய சத்யமிதி பிராணாவை சத்யம் தேஷா மேஷ சத்யம்
இத்யாதிநா குண கணஸ்ய ப்ரதிபாதிதத்வாத் பூர்வ பிரகிருதை தாவந் மாத்ரம் ந பவதி ப்ரஹ்மேதி ப்ரஹ்மணா
ஏதாவாந் மாத்ரதா ப்ரதிஷித்யதே இதி ஸூத்ரஸ் யார்த்த–

ஆகையால் பிறகு கட்டளை இல்லை இல்லை என்று பலவிடங்களிலும் மறுக்கும் சொற்கள் காணப்படுகின்றனவே என்பீராகில் அவை எதை மறுக்கின்றன என்ற கேள்வி வரும் –
உருவமுள்ளது -கடினமானது -உருவமற்றது -கடினமற்றது -என்ற இரு உருக்கள் ப்ரஹ்மத்திற்கு உள்ளன என்று கடினமற்ற தன்மையுடைய ப்ரஹ்மத்தின் உருக்கள் மறுக்கப் படுகின்றனதா எனில் -இப் பிரபஞ்சத்திலுள்ள கடின கடினமற்ற பொருட்களுக்கு ப்ரஹ்மம் உயிராய் இருக்கிறது என்று கூறி பிறகு அப் பொருட்களே இல்லை -பொய் – என்று மறுப்பது சரியல்ல -கால் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சேற்றை மிதித்துச் செல்ல வேண்டும் என்பது போல் -இது நீதிக்குப் புறம்பானது அப்படியானால் அந்த மறுப்புகளுக்குப் பொருள் என்ன –
ஸூத்ரகாரர் -வ்யாஸர் – சொல்வது போல் ப்ரஹ்மம் காணப்படும் உலகின் அளவு மட்டுமே என்பதை அக்கட்டளை மறுக்கிறது
இவற்றின் பெயர்கள் உண்மை -உயிர்கள் உண்மை -இவற்றின் உள்ளிருக்கும் ப்ரஹ்மமும் உண்மை என்று மேலும் ஸூத்ரகாரர் கூறி ப்ரஹ்மத்தின் குணங்களை நிரூபித்தால் உலகளவு மட்டுமே ப்ரஹ்மம் என்பது மறுக்கப் படுகிறது –

———

48–நேஹா நா நாஸ்தி கிஞ்சன -இத்யாதிநா நாநாத்வ பிரதிஷேத ஏவ த்ருச்யதே இதி சேத்
அத்ராபி உத்ரத்ர ஸர்வஸ்ய வஸி ச்ரவஸ்யேசாந -இதி ஸத்ய ஸங்கல்பத்வ சர்வேஸ்வரத்வ ப்ரதிபாதநாத்
சேதன அசேதன வஸ்து சரீர ஈஸ்வர இதி ஸர்வ ப்ரகார ஸம்ஸ்தித சர்வேஸ்வர ச ஏக ஏவேதி தத் ப்ரத்யநீக
ப்ரஹ்மாத்மக நாநாத்வம் பிரதி ஷித்தம்–ந பவதபி மதம் சர்வாஸூ ஏவம் பிரகாராஸூ ஸ்ருதிஷு இயமேவஸ்திதி —
இதி நக்வசிதபி ப்ராஹ்மண ச விசேஷத்வ நிஷேத வாஸி கோபி சப்தோ த்ருச்யதே

இவ்வாறு பல சிறிதும் இல்லை -போன்று பலவாக இருப்பதை விளக்கும் சொற்கள் காணப்படுகிறதே என்பீராகில் அங்கும் இவ் வாக்கியத்தைத் தொடர்ந்து
எல்லோருக்கும் வசப்பட்டவன் எல்லோரையும் வசப்படுத்துவோனாகவும் என்று மெய்யான செயல் திறன் உடையவனாகவும் -எல்லாவற்றுக்கும் தலைவனாகவும் சொல்லப்படுவதால் உயிருள் உயிரில் பொருள்களை உடலாக உடைய தனிப்பெரும் தலைவன் அவன் ஒருவனே என்று கூறி அதற்கு எதிர்த் தட்டான அவனை நீங்கிய பல் பொருட்கள் இருப்பதாகக் கொள்வதைத் தான் மறுக்கிறது -உங்கள் கூற்றை அல்ல –
இவ்வாறே மற்ற வேதங்களிலும் இடங்களிலும் பொருள் கொள்ள வேண்டும்
இதனால் ப்ரஹ்மத்திற்கு குணம் ஏதும் இல்லை என்று கூறும் சொற்கள் ஏதும் வேதங்களில் இல்லை –

———

49–அபிச நிர்விசேஷ ஞான மாத்ரம் ப்ரஹ்மம் தச்ச ஆச்சாதிகா அவித்யா திரோஹித ஸ்வ ஸ்வரூபம்
ஸ்வகத நாநாத்வம் பச்யதி -இத்யயமர்த்தோம -ந கடதே-
திரேதாநம் நாம பிரகாச நிவாரணம் -ஸ்வ ஸ்வ ஸ்வரூபாதிரேகி பிரகாச தர்மா நப்யுபகமேந பிரகாசஸ்யைவ
ஸ்வரூபத்வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச பர்யாயம் ஞானம் நித்யம் ச ச பிரகாச -அவித்யா திரோஹித –
இதி பாலிச பாஷிதமிதம்-அவித்யா பிரகாச திரோஹித்த இதி பிரகாச உத்பத்தி பிரதிபந்தோவா வித்யமாநஸ்ய விநாஸோவா ?
பிரகாசஸ்யா நுத்பாத்யத் வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச நித்யோ நிர்விகாரஸ் திஷ்டதி -இதி சேத்
சத்யாயாமப்ய வித்யாயாம் ப்ரஹ்மணி ந கிஞ்சித திரோஹிதம் இதி நாநாத்வம் பாஸ்யதி
இதி பவதாமயம் வ்யவஹார சத்ஸூ அநிர்வசநீய ஏவ

மேலும் குணங்கள் சிறுதும் அற்ற ஞானம் மட்டுமேயாக உள்ள ப்ரஹ்மம் தன்னைச் சூழும் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு தன்னிடத்தில் இல்லாதவற்றை பலவாகப் பார்க்கிறது என்பது பொருந்தாது-
மறைப்பது என்பது ஒளியைத் தடுப்பது -அதினின்றும் -ப்ரஹ்மத்தின் நின்றும் -வேறுபட்ட ஒளியை மறைப்பது என்பதை -ஒளி ப்ரஹ்மத்தின் நின்றும் பிரிக்க முடியாத ஓர் அங்கம் -அத்வைதிகள் ஒத்துக் கொள்ளாததால் மறைப்பு என்பது ப்ரஹ்மத்துக்கே ஏற்பட்டு அது அழிந்து விடும் என்பதாகிறது
இங்கு ஒளி என்பது -ஒரு பொருள் பன் மொழியால் -ஞானம் -அது என்றும் அழியாதது -அந்த ஞானம் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டது எனக் கூறுதல் அறியாப் பிள்ளைப் பேச்சு
அவ்வாறே அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டது என்றால் -ஞானம் தோன்றுவதற்கு தடையாகிறதா -அன்றி முன்புள்ளது அழிக்கப் பட்டதா -ஞானம் நித்யம் -என்றும் உள்ளது -ஆக்க முடியாது என்பதால் அதன் அழிவு என்று கொள்ள வேண்டும் -ஞானம் என்றும் மாறு படாதது எனில் அஞ்ஞானம் அதை ஏறிட முடியாது -அதன் ஒளி மறைக்கப்படுவது இல்லை -அதனால் ப்ரஹ்மம் தானே பலவாறாகக் காண்கிறது என்னும் உங்கள் கூற்றை சான்றோர்கள் ஏற்க மாட்டார்கள் –

————–

இதுக்கு அத்வைதி வாதம்
50–நநு ச பவதாபி விஞ்ஞான ஆத்மா அப்யுப கந்தவ்ய -ச ச ஸ்வயம் பிரகாச –
தஸ்ய தேவாதி ஸ்வரூபாத்மாபிமாநே ஸ்வரூப பிரகாச திரேதாந மவஸ்யாஸ் ரயணீயம்-ஸ்வரூப ப்ரகாசே சதி
ஸ்வாத்மநி ஆகாராந்தராத்யசா யோகாதி அதோ பவதஸ்ச சமாநோ யம் தோஷ மிஞ்ச அஸ்மாக மேகஸ்மிந்நேவ ஆத்மநி
பவதுதீரிதும் துர்கடத்வம் வாதம் ஆத்மானந்த் யாப்யுபகமாத் சர்வேஷ்வயம் தோஷ பரிஹரணீய–

அன்று உங்கள் பக்கத்தில் நீங்கள் ஆத்மாவை விஞ்ஞான மயம் என்று கொள்கிறீர்கள் -அதுவும் தானே ஒளிருவது –அதற்கு தேவன் முதலான உடல்களில் இருந்து கொண்டு அவ்வுடலே தானாக மயங்கும் ஞான மறைப்பு ஏற்படுகிறது
தனக்குள் ஞானம் என்றும் குன்றாதவனாயின் ஆத்மா அது புகுந்து இருக்கும் உடலின் தன்மைகளை ஏறிட்டுக் கொள்ள முடியாது –
அது எங்கள் கொள்கைக்கு ஈடான குற்றமே -மேலும் நாங்கள் ஒரே ஆத்மா என்று கொண்டு இருப்பதால் இக்குறை அதன் மீது மட்டும் காணப்படும் -மாறாக உங்கள் கொள்கையில் அவை பலவாகையால் குறைகளும் பலவாக -அதிகமாக உள்ளதாகவே கொள்ளப்பட வேண்டும்
இதை எவ்வாறு மறுப்பீர்கள் -என்று அத்வைதி கிடக்கிறார் –

————-

இதுக்கு உத்தரம்
51—அதிர உச்யதே -ஸ்வ பாவத-மல ப்ரத்யநீக அநந்த ஞானாந்த ஏகம் ஸ்வரூபம்
ஸ்வாபாவிக அநவதிக -அதிசய அபரிமித உதார குண சாகரம்
நிமிஷ காஷ்டா கலா முஹுர்த்தாதி பரார்த்த பர்யந்த -அபரிமித வியவச்சேத ஸ்வரூப சர்வ உத்பத்தி ஸ்திதி விநாசாதி
சர்வ பரிணாம நிமித்த பூத கால க்ருத பரிணாமாஸ்ப்ருஷ்ட அநந்த மஹா விபூதி -ஸ்வ லீலா பரிகர ஸ்வ அம்ச பூத
அநந்த பத்த முக்த நாநாவித சேதன தத் போக்கிய பூத அநந்த விசித்ர விதித்த பரிணாமாஸ்பத சேதநே தர வஸ்து ஜாத
அந்தர்யாமித்வ க்ருத சர்வ சரீரத்வ சர்வ பிரகார வஸ்தாநாவஸ்திதம் பரம் ப்ரஹ்ம ச வேத்யம் தத் சாஷாத்கார ஷம
பகவத் த்வைபாயன -பராசர -வாலமீகி -மநு -யாஜ்ஞவால்க்ய -கௌதம–ஆபஸ்தம்ப -பரப்ருதி முனி கண பிரணீத-
வித்யர்த்தவாத மந்தரூப -வேத மூல -இதிஹாச புராண தர்ம சாஸ்த்ரோ உப ப்ரும்ஹண பரமார்த்த பூத அநாதி நிதந –
அவிச்சின்ன ஸம்ப்ரதாய -ருக் யஜுஸ் -சாம -அதர்வண ரூப அநந்த சாகம் வேதம்ச அப்யுகச்சதாமஸ்மாகம் கிம் நசேத்ஸ்யதி –

அது விளக்கப்படுகிறது
இயற்கையாகவே அழுக்குகளின் எதிர்த் தட்டாயும் -(மயக்கம் -ஞானம் -துக்கம் -ஆனந்தம் )அளவற்ற ஞான ஆனந்தத்தை தன் குணமாகவும் -இயற்கையாகவே உயர்வற உயர்ந்து -அளவற்று -ஈகையின் கடலாய் -நிமிடம் காஷ்டை கலை முஹூர்த்தம் பரார்த்தம் ஈறான காலக் கணக்குகளால் சிறிதும் அளவிட முடியாத நிலை யுடையனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல் காத்தல் அழித்தல் -இடையில் தோன்றும் வேறுபாடுகளுக்குக் காரணமான காலத்தின் தொடர்பு சிறிதும் அற்றவனாய் -அளவற்ற பெரும் செல்வம் யுடையவனாய் –
தனது விளையாட்டிற்கான தனது சாயலான அளவற்ற பக்த முக்த பலவித உயிர்ப் பொருள்களுடைய மகிழ்ச்சிக்கும் அவற்றுக்குத் தேவையான பொருள்களுக்கும் இடமும்
பலவகைப்பட்ட வேறுபட்ட உயிர் உயிரல் பொருள்களின் உள் நுழைந்து ஏவுகிறவனாய் -அவை யாவற்றையும் தனது உடலாகக் கொண்டு எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து விளங்குவது பர ப்ரஹ்மம் –
அதே நேராகக் கண்டு உணர்ந்த வ்யாஸர் வால்மிகி மநு யஜ்ஜ வல்க்யர் கௌதமர் ஆபஸ்தம்பர் போன்ற முனிவர்களால் இதிஹாஸங்கள் புராணங்கள் தர்ம ஸாஸ்த்ர துணை நூல்கள் போன்று உண்மையான வடிவான என்றும் நிலை பெற்ற ரிக் யஜுர் ஸாம அதர்வணம் ஆகிய பல சாகைகளை உள்ளடக்கிய வேதங்களையே மெய்யாகக் கொண்டும் தொடர்பு அறாத சான்றோர் நெறி ஒழுக்கம் எங்களுக்கு எது நிலைக்காமல் போகும் –

—————

52-யதோக்தம் -பாகவதர் த்வைபாயநேந -மஹா பாராதே
யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மஹேஸ்வரம்
த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அஷர ஏவச-ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த -அஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வ அந்ய
காலம் ச பசதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -ஏதேவை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந
அவ்யக்தாதி விசேஷாந்தம் பரிணாமர்த்தி சம்யுதம்-கிரீடா ஹரேரிதம் சர்வம் சாரம் இத்யாவதார்யதாம்-
கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாவ்யய–கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் –
இதி கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே இதி கிருஷ்ணஸ்ய சேஷ பூதம் இத்யர்த்த –

பகவதா பராசரேண-அப்யேவம் யுக்தம்
ஸூத்தே மஹா விபூத்யாக்யே பரே ப்ரஹ்மணி ஸ வ்த்யதே –
மைத்ரேய -பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸ் ய சேஷத-
பகவத் சப்த வாஸ்யாநி விநா ஹேயைர் குணாதிபி -ஏவமேஷ மஹா சப்தோ-மைத்ரேய பகவான் இதி பரம ப்ரஹ்ம பூதஸ்ய
வாஸூ தேவஸ்ய நாந்யக -தத்ர பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா சமந்வித -சப்தோயம் நோநசாரேண -த்வந் யத்ரஹ்யுபசாரத-
ஏவம் பிரகாரம் அமலம் நித்யம் வியாபகம் அஷயம்-ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண் வாக்யம் பரமபதம்

கலா முஹுர்த்தாதி மயஸ் ச காலோ நயத்வியூதே-பரிணாம ஹேது -கிரீடதோபாலகஸ் ஏவ சேஷ்டா -தஸ்ய நிசாமய -இத்யாதி மநூநாபி
பிரசாசி தாரம் ஸர்வேஷாம் அணீ யாம்சம் அணீயசாம் -இத்யாதி யுக்தம் யாஜ்ஞ வால்க்யேந அபி
ஷேத்ரஞ்ஞஸ் யேஸ்வர ஞாநாத் வி ஸூத்தி -பரமா மதா-இத்யாதி
ஆபஸ்தம்பேநாபி பூ பிராணிநஸ் சர்வ குஹாசயஸ்ய இதி சர்வே பிராணிந குஹாசயஸ் ச பரமாத்மந
பூ புரம் சரீரம் இத்யர்த்த பிராணிந இதி ஜீவாத்மக பூத ஸங்காத —

மேலும் கிருஷ்ண த்வைபாயனர்-வ்யாஸர் -மஹா பாரதத்தில் எவன் என்னை முதலும் முடிவும் அற்றவனாக உலகின் தனிப்பெரும் தலைவனாக அறிகிறானோ-ஸ்ரீ கீதை -15-16-17-என்று கூறுகிறார்
அழியும் ஷரன் என்னும் பத்தாத்மாவும் அழிவற்ற அஷரன் என்னும் முக்தாத்மாவும் புகழ் பெற்றவர்கள் என்றும்
இவர்களில் ஷர புருஷன் எல்லா பிராணிகளும் குடியிருப்பவன் அக்ஷர புருஷன் அத்தொடர்வு அற்றவன் என்றும்
இவர்களின் நின்றும் வேறு பட்டவனான தலை சிறந்த புருஷன் ஒருவன் இருக்கிறான்
அவன் காலத்தை மாறுபாடு அடையச் செய்பவனாயும்
தான் காலத்தால் மாறுபடுத்த முடியாதவனாகவும் இருக்கிறான் என்றும்
பரமாத்மாவின் அந்த சிறந்த இடமானது காலத்தின் இயல்பு செல்லாததாகவும் -அதனுடன் ஒப்பிடுகையில் இந்த்ர லோகம் முதலியவை நரகங்கள் என்னும் படி இருக்கும்
இவைகள் மூலப் பிரகிருதி தொடங்கி மஹான் போன்ற மாற்றங்களை யடைந்து வளர்ச்சி தாழ்ச்சி யாகிற மாறுபாடுகளை யுடைத்தாய் இருக்கும்
கிருஷ்ணன் இடத்திலேயே இவ்வுலகங்கள் தோன்றுகின்றன
கிருஷ்ணனுக்காகவே இவ்வுயிர்களும் உலகுகளும் படைக்கப் பட்டு இருக்கின்றன என்றும்
கிருஷ்ணனுக்காகவே செய்யப்பட்டது -என்றும்
ஸாஸ்திரங்களில் சொல்லப்படுவதால் இவை யாவும் கிருஷ்னனுக்கே அடிமைத் தொழில் பூண்டவை

பகவான் பராசரரும் -தூய்மையானவனாயும் பெரும் செல்வம் உள்ளவனாகவும் பர ப்ரஹ்மம் சொல்லப்படுகிறது
மைத்ரேயா எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமாய் இருப்பவனே பகவான் என்ற சொல்லால் குறிக்கப் படுபவன்
ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம்-அதாவது தன்னைத் தவிர பிற அனைத்தையும் -ஆன்மாக்கள் உட்பட தன் உடைமையாகப் பெற்று இருத்தல் -வீர்யம் தேஜஸ் ஆகிய குணங்களை யுடையவன் பகவான் என்ற சொல்லால் குறிக்கப்படுபவன்
தீக்குணங்கள் சிறிதும் அற்றவன் –
இந்த சிறந்த சொல்லல் குறிக்கப் படுபவன்
வாஸூ தேவன் ஆகிற பர ப்ரஹ்மத்தைத் தவிர மற்ற ஒருவர் இல்லை
பூஜிக்கத் தகுந்த சிலருக்கு உபசாரமாக இச்சொல் உயர் அடைமொழியாக வழங்கப் படுகிறது
அழுக்குகள் அற்ற என்றும் உள்ள எங்கும் இருப்பவனான விஷ்ணுவிற்கு மட்டுமே இப்பதம் பொருந்தும்
கலை முஹூர்த்தம் என்னும் அளவுகளை அளக்கப்படும் காலம் -இந்தப் பரமபதத்தில் மாறுபாடு அற்றது
பாலகன் விளையாடுவது போன்ற இந்த கிருஷ்ணனைப் பார் என்று கூறுகிறார்
மநுவும் எல்லோரையும் உள்ளிருந்து ஆள்பவன் அணுவான பொருள்களுக்குள்ளும் நிறைந்து இருப்பவன் என்று கூறுகிறார்
யஞ்ஞ வல்கியரும் ஜீவாத்மாவுக்குள் உள்ளுறைபவன் ஈஸ்வரன் என்ற ஞானத்தால் மேலான தூய்மை ஏற்படுகிறது என்று கூறுகிறார்
ஆபஸ் தம்பரும் புரம் எனப்படும் ஜீவாத்மாக்களின் ஹிருதயக் குகையில் இருப்பவன் -பரமாத்மா -என்று கூறுகிறார்
இதனால் எல்லாப் பிராணிகளிலும் வசிக்கிறேன் பரமாத்மா என்று அறியப்படுகிறது –

—————

53–நநு ச கிம் அநேந ஆடம்பரேண-சோத்யம் து ந பரிஹ்ருதம்
உச்யதே -ஏவம் அப்யுகச்சதாம் அஸ்மாகம் ஆத்ம தர்ம பூதஸ்ய சைதன்யஸ்ய ஸ்பாவிகஸ்யாபி கர்மணா
பாரமார்த்திகம் சங்கோசம் விகாசம் ச ப்ருபதாம்-ஸர்வமிதம் பரிஹ்ருதம்
பவதஸ்து பிரகாச ஏவ ஸ்வரூபமிதி பிரகாசோ ந தர்ம பூத தஸ்ய சங்கோஸோ -விகாசோ வா ந அப்யுகம்யதே
பிரகாச பிரஸ்ர அநுத் பத்திமேவ திரோதாந பூதா கர்மதயா குர்வந்தி-அவித்யா சேத் திரோதாநம் திரோதாந பூதயா தயா
ஸ்வரூப பிரகாச பூத நாச பூர்வமேவ யுக்த அஸ்மாகம் து அவித்யா ரூபேண கர்மணா ஸ்வரூப
நித்ய தர்ம பூத ஞான பிரகாச சங்குசித தேந தேவாதி ஸ்வரூப ஆத்ம அபிமாநோ பவதீதி விசேஷ —

இப்படிப் பல வகையான ஆடம்பர வர்ணனை எதற்கு -மறுப்புக்குப் பதில் ஏதும் இல்லையே ஏன் என்று கேட்பீராகில் முன்பு விளக்கப்பட்ட கொள்கைகளைக் கைக்கொள்ளும் எங்களுக்கு ஆத்மாவும் அதினின்றும் பிரிவற்ற குணமான ஞானமும் தன்னடையாக தன் வினைப்பயனாய் சுருக்கம் விரிவு ஆகியவற்றை அடைகிறது என்பதால் மேற் சொன்னவை யாவும் பதில் அளிக்கப் படுகிறது –
தங்களால் சொல்லப்படுகிற பொருளே ஒளிரும் -ஒளிர்வது அதன் குணமல்ல -அதற்கு குறை நிறைகள் ஏற்படுவதில்லை என்று தங்கள் சொல்வதனால் மறைப்பு என்பது அஞ்ஞானத்தால் ஆத்மாவே அழிக்கப் படுகிறது என்று பொருள் ஆகிறது –
இதற்கு மாறாக அதன் இயல்பான ஞானம் குன்றும் போது அவ் வாத்மா தன்னை யறியாது ஆத்மாவும் உடலும் ஓன்று என்று மயங்குகிறது
ஆனாலும் ஆத்மாவின் தான் எனும் தனித்தன்மை அழிவதே இல்லை –

———

54–யதோக்தம் -அவித்யா கர்ம சமஞாந்யா-த்ருதீய சக்திரிஷ்யதே–
யயாக்ஷேத்ர சக்திஸ் சா வேஷ்டித அந்ரூப சர்வகா -சம்சார தாபந் அகிலாந் அவாப்நோத்யதி சந்ததாத்தயா திரோஹித
த்வாச் சா சக்தி ஷேத்ரஞ்ஞ சம்ஜிதா சர்வ பூதே ஷுபூ பாலா தாரதம்யே நவர்த்ததே –
இதிநா ஷேத்ரஞ்ஞாம் ஸ்வ தர்ம பூத ஞாநஸ்ய கர்ம சம்ஞயா அவித்யயா சங்கோசம் விகாசம் ச தர்சயதி-

எவ்வாறு எனில் -ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது போல் -மேலான ஸக்தியான ஆத்மா மற்ற ஒரு ஸக்தியான ப்ரக்ருதி மூன்றாவது ஸக்தியான வினைப் பயன் என்பவை மூன்றும் விஷ்ணுவின் சக்திகள்
இந்த ஆத்மாவின் சக்தியால் எல்லாப் பிராணிகளும் சூழப்பட்டு இருக்கின்றன -இதனால் சூழப்பட்ட ஆத்மா பிறப்புச் சூழலில் கட்டுண்டு உழலுகிறான் -எல்லா உயிர்களிலும் இச்சக்தி ஏற்றத் தாழ்வுகளுடன் -வினைகளுக்கு ஏற்ப -விளங்குகிறது
இதனால் ஆத்மாவின் இயல்பான குணமான ஞானம் -குறைவு நிறைவு அடைந்ததாகக் காணப்படுகிறது –

————

55–அபி ச -ஆச்சாதிகா அவித்யா ஸ்ருதிபிஸ் ச ஐக்ய உபதேச பலாச் ச ப்ரஹ்ம ஸ்வரூப திரோதாந ஹேது தோஷ ரூபா
ஆஸ்ரீயதே தஸ்யாஸ் ச மித்யா ரூபத்வேந பிரபஞ்ச வத்-ஸ்வ தர்சன மூல தோஷாபேஷத் வாத் ந சா மித்யா தர்சன மூல
தோஷஸ்யாதிதி ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத்

தஸ்யாஸ் ச அநாதித்வேபி மித்யா ரூபத்வாதேவ-ப்ரஹ்ம த்ருஸ்யத்வேந ஏவ அநாதத்வாத் தத் தர்சன மூல
பரமார்த்த தோஷா நப்யுபகமாச் ச ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத் தஸ்ய நித்யத்வாத் நிர்மோஷ ஏவ ப்ரஸஜ்யதே

உங்கள் கொள்கையின் படி அஞ்ஞானத்தால் சூழப்பட்டு ப்ரஹ்மம் தன்னைப் பலவாகக் கண்டு திகைக்கிறது
இதற்கு வேதங்களில் வரும் அபேத வாக்கியங்களை-(எடுத்துக் காட்டு -கயிறு -பாம்பு -) துணை கொள்கிறீர்கள் –
அதாவது பொய்யான பிரபஞ்சம் எனப்படுவது -பொய்யான அல்லது இல்லாத அஞ்ஞானம் என்பதைக் கொண்டே நிரூபிக்கப் பட வேண்டும்
அப்படியானால் பொய்யான அஞ்ஞானத்தை வேறு எதைக் கொண்டு நிரூபிப்பது

இந்த அஞ்ஞானம் -அவித்யை -என்பது மிகப் பழமையானது -அதற்கு இன்மை என்பது கிடையாது என வாதிட்டால் அதன் பழமை ப்ரஹ்மத்துடன் ஓன்று எனக் கொள்ள வேண்டும்
அந்நிலையில் இந்த அஞ்ஞானத்திற்கு ப்ரஹ்மமே காரணமாகும் –
ஆகவே ப்ரஹ்மம் இருக்கும் வரை அஞ்ஞானம் இருக்கும்
ஆகவே அஞ்ஞானம் அழிய ப்ரஹ்மமும் அழிய வேண்டும் -இது ஏற்புடையது அல்ல –
ஆகவே அஞ்ஞானம் அழிக்க முடியாத ஓன்று என்றும்
ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்ட இரண்டாவது என்றும் ஒப்புக் கொள்ள வேண்டும் –

——-

56–அத ஏவ -இதம் அபி நிரஸ்தம் –
ஏக மேவ சரீரம் ஜீவவத் -நிரஜீவாநி இதராணி சரீராணி -யதா ஸ்வப்ந த்ருஷ்ட-நாநாவித சரீராணாம் நிர்ஜீவத்வம்-
தத்ர ஸ்வப்நே த்ருஷ்டு சரீரம் ஏவ ஜீவவத் -தஸ்ய ஸ்வப்ந வேலாயாம் த்ருஸ்ய பூத நாநாவித அநந்த சரீராணாம் நிர்ஜீவத்வமேவ –
அநேந கேநைவ அந்யேஷாம் ஜீவாநாம் சரீராணாம் ச பரிகல்பிதத்வாத் ஜீவா மித்யா பூதா இதி ப்ரஹ்மண-
ஸ்வ ஸ்வரூப வ்யதிரிக்தஸ்ய ஜீவ பாவஸ்ய சர்வ சரீராணாம் ச கல்பிதத்வாத் ஏகஸ்மிந்நபி சரீரே சரீராவத்
ஜீவ பாவஸ்ய ச மித்யா ரூபத்வாத் ஸர்வாணி சரீராணி மித்யா ரூபாணி தத்ர ஜீவ பாவஸ்ய மித்யா ரூப
இதி ஏகஸ்ய சரீரஸ்ய தத்ர ஜீவ ஸத்பாவஸ்ய ச ந கஸ்சித் விசேஷ அஸ்மாகம் து ஸ்வப்நேரு த்ருஷ்ருஸ் சரீரஸ்ய
தஸ்மிந் ஆத்ம ஸத்பாஸ்ய ச ப்ரபோத வேலாயாமபாதி தத்வாத் அந்யேஷாம் சரீராணாம் தத் கத ஜீவாநாம்
ச பாதி தத்வாத் தே சர்வே மித்யா பூதா ஸ்வ சரீர மேகம் தஸ்மிந் ஜீவ பாவஸ்ய பரமாத்த இதி விசேஷ —

(சரீரத்தில் ஒரே ஜீவன் -மற்றவை நிர்ஜீவ -அவற்றுக்கும் ப்ரவ்ருத்தி உண்டே -ஸுபரி 50 சரீரம் எடுத்தாலும் ஒரே ஜீவன் தானே –
சுக துக்க அனுபவம் எவ்வாறு –
தர்ம பூத ஞானம் இரண்டாவது ஒத்துக் கொள்ள மாட்டார்களே அத்வைதி –
ஸ்வப்னம் நித்யம் -ஒரே ஜீவன் -மற்றவை நிர் ஜீவன் உள்ள சரீரம் –
தர்ம பூத ஞானம் கொண்டே இவற்றை நிர்வஹிக்க முடியும்)

இக்காரணத்தாலேயே கீழ் வரும் ஒரே உடல் வாதமும் மறுக்கப் படுகிறது
ஒரே உடல் மட்டும் உயிருடன் கூடியிருக்கிறது -மற்றவை உயிர் அற்றவர்கள் -கனவில் பலரைக் கண்டாலும் அவர்கள் உயிர் அற்று பொய்யாகவும் அங்கு கனவு காண்பவன் ஒருவனே உயிருடன் இருப்பது போல் அவனால் கனவு காணப்படும் பல பிராணிகள் உயிர் அற்றவை
இவ்வாறு கனவில் தோன்றும் உயிர்களும் உடல்களும் கனவு காண்பவனுடைய கற்பனையே -யாவும் பொய்யானவை என்பது போல் ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை யாவும் பொய்யே -கற்பனையே -என்று சொன்னால் உலகில் ஒரு ஜீவாத்மாவும் அதன் உடலும் பொய்யாகத் தானே ஆகும்
அதனால் ஒரே உடலில் மட்டும் உயிர் இருக்கிறது என்ற உங்கள் கொள்கை எவ்வகையிலும் சிறப்புப் பெற்றதல்ல
கனவு காணும் உடலும் உயிரும் பாதிக்கப் பட்டவை யாகவும் மற்றைய உடல்களும் உயிர்களும் அஞ்ஞானத்தால் பாதிக்கப் படாதேவை யாகவும் மற்றைய உடல்களும் உயிர்களும் அஞ்ஞானத்தால் பாதிக்கப்பட்டவை யாகவும் இருப்பதால் கனவு காண்பவன்
அவனுடைய உடல் உயிர் ஆகியவை உண்மை என்று சொல்லும் எங்கள் கொள்கையே சிறப்பாகும்

———–

57–அபி ச கேநவா அவித்யா நிவ்ருத்தி ? சா ச கீத்ருஸீ-இதி விவேச நீயம்-
ஐக்ய ஞானம் நிவர்த்தகம் -நிவ்ருத்திஸ் ச அநிர் வசநீய ப்ரத்யநீக ஆகாரா இதி சேத் அநிர் வசநீய ப்ரத்ய நீகம் நிர்வசநீயம்-
தச்ச சத்வா ? அசத்வா ? த்வி ரூபம் வா ? கோட்யந்தரம் ந வித்யதே –

ப்ரஹ்ம வ்யதிரேகேண ஏததத்ப்யுகபமே புநரப்ய வித்யா ந நிவ்ருத்தா ஸ்யாத் ப்ரஹ்ம ஏவ சேந் நிவ்ருத்தி
ததுப்ராகப்ய விசிஷ்டமிதி வேதாந்த ஞாநாத் பூர்வ மேவ நிவ்ருத்திஸ்யாத் ஐக்ய ஞானம் நிவர்த்தகம்
ததபாவாத் சம்சார இதி வாத தர்சனம் விஹந்யேத –

(சத்தான ப்ரஹ்மமோ அசத்தான முயல் கொம்பு-ஆகாசத் தாமரை -மலடி மகன் – போல்வன துக்கம் தராதே
அநிர் வசன நீயமான மற்றவையே துக்கம் தருமவை
ப்ரஹ்மத்தை நிரூபிக்கும் பிரமாணங்களும் மித்யை என்றால் -ஸர்வ சூன்ய வாதிகளுக்கு ஒப்பர் ஆவாரே

அனைத்தும் அந்த அந்த தேச காலத்தில் சத்தியமே -அலைகள் இப்பொழுது இல்லை என்றாலும் முன்பு இருந்தது மித்யை அல்லவே )

அறியாமையின் நின்றும் நீங்குதல் எவ்விதம் இருக்கும் -அது எவ்வாறு காணப்படும் -என்பது ஆராயத் தக்கது
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலத்தல் -நீக்கம் -என்னும் விடுதலை நிலை சொற்களுக்கு அப்பால் பட்ட நிலைக்கு எதிர்த்தட்டானது எனில் சொற்களால் விவரிக்கப் படுகிறது என்றதாகும்
அப்படியாயின் அது உயிர்ப்பொருளா உயிரல் பொருளா -இரண்டும் கலந்ததா -பலபடிப்பட்டதா என அறிய முடியாதது

ப்ரஹ்மம் தவிர்ந்த மற்ற ஓன்று ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலக்கின்றது எனின் ப்ரஹ்மத்தின் நின்று வேறு பட்ட ஓன்று உள்ளது என ஒத்துக் கொள்ள வேண்டும் –
அப்போதும் அத்வைதம் நில்லாது
ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டு ஒன்று இருக்குமாயின் அது அறியாமை யுடனேயே கூடி இருக்க வேண்டும் -அதாவது அறியாமை அழியவில்லை என்றாகும்
மாறாக நீக்கம் என்பது ப்ரஹ்மத்தின் நின்றும் மாறுபட்டது அல்ல என்று கொண்டால் அது தான் ஓன்று என்ற அறிவு ஏற்படுவதற்கு முன்பும் இருப்பது -எனவே நீங்கும் அறிவு என்று ஓன்று கிடையாது என்பதாகவும் நீங்கும் அறிவு கிட்டா விட்டால் பிறவிச் சுழலே என்ற கூற்றுக்கு விரோதமாகவும் ஆகிறது
அவ்வாறு அன்றி நீக்கம் உண்மை யல்ல என்று கொண்டால் அது ப்ரஹ்மத்தின் நின்றும் மாறு பட்டதா அல்லவா எனக் கேள்வி வரும்
அப்படி யானால் முன்பே கூறியது போல் அதற்கு வேறொரு அஞ்ஞானம் துணை வேண்டும் -ஆகவே எந் நிலையிலும் அஞ்ஞானத்துக்கு நீக்கம் இல்லை என ஆகிறது –

———–

58–கிஞ்ச நிவர்த்தக ஞாநஸ்யாப்ய வித்யா ரூபாத்வாத் -தந் நிவர்த்தக ஞானம் ஸ்வேத ஸமஸ்த பேதம் நிவர்த்ய
க்ஷணிகத்வாதேவ ஸ்வயமேவ விநஸ்யதி -தாவாநல விஷ நாசந விஷாந்தரவத் இதி சேத் ந –
நிவர்த்தக ஞாநஸ்ய ப்ரஹ்ம வ்யாதிரிக்தத்வேந தத் ஸ்வரூப தத் உத்பத்தி விநாசாநாம் மித்யா ரூபத்வாத்
தத் விநாச ரூபா அவித்யா திஷ்டத்யேவேதி தத் விநாச தர்சனஸ்ய நிவர்த்தகம் மந்தவ்யமேவ –
தாவாக்ந்யா தீநாமபி பூர்வா வஸ்தா விரோதி பரிணாம பரம்பரையா அவ்ரஜ நீயைவ

ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை பொய் எனக் கொண்டால் வேத ஸாஸ்த்ரங்களால் ஏற்படும் -சான்றுகளால் ஏற்படும் -அறிவும் பொய்யாகும்
மற்ற ஒன்றான கட் புலனாதலால் ஏற்படும் அறிவும் என்றும் அழிவதில்லை
ஆகவே அஞ்ஞானம் தோன்ற வழியில்லை

இவ்விரண்டில் எந்த ஞானத்தால் -இந்த அஞ்ஞானத்தின் நின்றும் விடுதலை கிடைக்கிறது என ஆராய்வோம்
இந்த விடுதலை ஞானம் எல்லா அஞ்ஞானங்களையும் ஒரே கணத்தில் நீக்கி -தானும் அழிந்து விடுகிறது
காட்டுத்தீ விஷ முறிவு மருந்து போல் தன் தொழில் முடிந்தவுடன் தானும் அழிந்து விடுகிறது என்பீராயின் அது அவ்வாறு அல்ல
இந்த விடுதலை அறிவும் ப்ரஹ்மத்தின் நின்று மாறுபட்டு இருப்பதால் அதன் நிலை தோற்றம் அழிவு ஆகியவையும் பொய்யானவையே
ஏன் எனில் -அந்த விடுதலை அறிவு அழிந்த பின்பு அது அழிந்தது என்று கொள்ள வேண்டுமாகையால் அவ்வழிவு மெய் என்றதாகிறது
எடுத்துக் காட்டிய காட்டுது தீயும் விஷ முறிவும் தங்களது முந்தைய நிலையின் நின்றும் வேறுபட்டு வேறொரு நிலையை அடைந்து இருக்கின்றனவே ஒழிய அவைகளுக்கு அழிவு ஏற்படவில்லை

பிரமாண ஜன்ய ஞானம் –சான்றுகளால் ஏற்படும் அறிவு
ஸ்வரூப ஜன்ய ஞானம் –கட் புலனாதலால் ஏற்படும் அறிவு
அஞ்ஞானம் அவித்யை -பல் பொருள் காட்சி -பொய் யறிவு -பிறவிச் சூழல் -நீங்க வேண்டிய அறிவு

————–

59–அபி ச சிந் மாத்ர ப்ரஹ்ம வ்யதிரிக்த க்ருத்ஸ்ந நிஷேத விஷய ஞாநஸ்ய கோயம் ஞாதா ?
அத்யாச ரூப இதி சேத் -ந தஸ்ய நிஷேத்யதாயா நிவர்த்தக ஞாந கரமத்வாத் தத் கர்த்ருத்வ அநுப பத்தே
ப்ரஹ்ம ஸ்வரூபமேவ இதி சேத் ந ப்ரஹ்மண-நிவர்த்தக ஞானம் பிரதி ஞாத்ருத்வம் கிம் ஸ்வரூபம் உத அத்யஸ்தம் ?
அத்யஸ்தம் சேத் அத்யத்யாச தந் மூல அவித்யாந்தரம் ச நிவர்த்தக
ஞான விஷய தயா திஷ்டத்யேவ -தந் நிவர்த்தகாந்தராப்யுபகமே தஸ்யாபி த்ரி ரூபதயா அநவஸ்த்தைவ
ஸர்வஸ்ய ஹி ஞானஸ்ய த்ரி ரூபத்வ விரஹே ஞானத்வமேவ ஹீயதே -கஸ்ய சித் கஞ்சன அர்தவிஸேஷம் ப்ரதி ஸித்தி ரூபத்வாத்
ஞானஸ்ய த்ரி ரூபத்வ விரஹே பவதாம் ஸ்வரூப பூத ஞானவத் நிவர்த்தக ஞானமபி அநிவர்த்தகம் ஸ்யாத்
ப்ரஹ்ம ஸ்வரூபஸ் யைவ ஞாத்ருத்வாத் யப் யுபகமே அஸ்மதீய பக்ஷ ஏத பரி க்ருஹீதஸ்யாத்
நிவர்த்தக ஞான ஸ்வரூப ஞாத்ருத்வம் ச ஸ்வநிவர்த் யந்தர்கதம் –இதி வசனம்
பூதல வ்யதிரிக்தம் க்ருத்ஸ்னம் சின்னம் தேவ தத்தேன –இத் யஸ்யாமேவ சேதன க்ரியாயாம் அஸ்யா சேதன
க்ரியாயா சேத்ருத்வஸ்ய ச சேத் யாந்தர் பாவ வசனவத் உபஹாஸ்யம்

மேலும் ப்ரஹ்மம் ஞானமே வடிவானது -அது நீங்கிய யாவையும் பொய்யே என்றால் அறிபவன் என்பவன் யார் –
அந்த ப்ரஹ்மம் தானே ஜீவாத்மாவில் ஏறிட்டுக் கொள்கிறது எனில் -அவ்வாறு இருக்க முடியாது
ஏன் எனில் இந்த விடுதலை அறிவுக்கு அறிபவனாக எழுவாயாக -அவன் இருக்க முடியாது -ப்ரஹ்மத்தின் நின்றும் அவன் வேறுபடாமையால் –
ப்ரஹ்மமே இவ் வறிவைப் பெறுகிறது என்பதுவும் சரியில்லை -ஏன் எனில் இவ் வறிவு ப்ரஹ்மத்துக்கு இயல்பானதா அல்லது அதன் மேல் ஏற்றிச் சொல்லப் பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க இயலாது –
அது இயல்பானது எனில் அஞ்ஞானம் வர வழியில்லை –
ஏறிடப் பட்டது எனில் ப்ரஹ்மத்திடம் அதின் மேல் ஏறிடப் பட்ட அஞ்ஞானமும் அதனால் நான் அறிகிறேன் -என்ற நினைவும் இருக்கும்
ப்ரஹ்மம் ஒன்றே உண்மை யாதலால் இவை எப்பொழுதும் ப்ரஹ்மத்துடன் இருக்கும் –
இந்நிலையில் இவ்விரண்டும் வேறொரு ஞானத்தால் போக்கப்படும் எனில் அதற்கு காரணமானவன் யார்
அவ்வறிவு எத்தகையது
அதனால் அறியப்படுவது எது
என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது

இதற்கு மாறாக அறிதல் என்பது ப்ரஹ்மத்திற்கு இயல்பாகவே இருக்கிறது எனில் நீங்கள் எங்களுடைய கொள்கைகளை ஒத்துக் கொண்டதாக ஆகிறது
இந்த விடுதலை ஞானத்தால் எவை எல்லாம் அழிக்கப் படுமோ அதில் அந்த ஞானமும் அடங்கி யுள்ளது என்று கூறுவது நகைப்புக்கு இடமாகும்
இந்த பூமியைத் தவிர எல்லாவற்றையும் தேவதத்தன் தோண்டினான் என்ற கூற்றில் அவன் தோண்டக் கூடிய பூமியை விட்டு விட்டு தேவதத்தன் முடியாத பிறவற்றைத் தோண்டியதாக தோண்டினான் என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் கொள்வது போல் –

——–

60–அபி ச நிகில பேத நிவர்த்தகம் இதம் ஐக்ய ஞானம் கேந ஜாதம் இதி விவேசநீயம் ஸ்ருத்யைவ இதி சேத்
ந தஸ்யா ப்ரஹ்ம வ்யதிரக்த்தாயா அவித்ய பரிகல்பிதத்வாத் பிரபஞ்ச பாதக ஞான உத்பாதகத்வம் ந சம்பவதி –
ததாஹி துஷ்ட காரண ஜன்யமபி ரஜ்ஜூ சர்ப்ப ஞானம் துஷ்ட காரண ஜன்யேந -ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப –
இதி ஞாநேன நபாத்யதே ரஜ்ஜூ சர்ப்பயே வர்த்தமநே -கேநசித் ப்ராந்தேந புருஷேண ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப
இதி யுக்தேபி அயம் பிராந்த இதி ஞானதே சதி தத் வசனம் ரஜ்ஜூ சர்ப்ப ஞானஸ்ய பாதகம் ந பவதி –
பயம்ச ந நவர்த்ததே-ப்ரயோஜனவத் ஸ்ரவண வேலாயாமே வஹி ப்ரஹ்ம வ்யதிரிக்தத்வேந
ஸ்ருதே ரபி பிராந்தி மூலத்தவம் ஞாதம் இதி

(ஞானம் ஒருவருக்கு உண்டாக வேணுமே
ஞானம் போல் ஞானம் பெற்ற ஜீவனும் அழியும் -நிவர்த்தகம் யாருக்கு -நிவர்த்தக ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே)

இந்த ஜீவாத்மாவிற்கு உலகம் பரமாத்மாவினின்றும் வேறு பட்டு தோன்றும் அறிவைத் தவிர்த்து தான் ப்ரஹ்மத்துடன் ஒன்றிய ஓன்று என்ற அறிவு எதனால் ஏற்படுகிறது என ஆராய்வோம்
வேதத்தால் ஏற்படுகிறது என்றும் கொள்ள முடியாது –
ஏன் எனில்
வேதம் ப்ரஹ்மத்தின் நின்றும் வேறு பட்டது -அதனால் அது பொய் -அவித்யா -அதினின்றும் ப்ரபஞ்சம் பொய் என்றும் அறிவு ஏற்பட வாய்ப்பில்லை
எப்படி எனில்
பொய்யறிவினால் உண்டான கயிற்றில் பாம்பைக் காண்பதை மற்றொரு பொய்யறிவினால் உண்டான இது கயிறு இறே -பாம்பு அல்ல -என்ற எண்ணத்தினால் போக்கடிக்க முடியாதது போல் கயிற்றைப் பாம்பு என மயங்கி அச்சம் கொண்ட ஒருவனுக்கு அவனைப் போன்றே மயங்கிய அறிவுடைய ஒருவனால் வழங்கப்படும் பாம்பல்ல -கயிறு தான் -என்ற அறிவுரை முந்தையனவால் –
இவனும் நம் போல் மயங்கியவன் -இவனுடைய அறிவு கொள்ளத்தக்கது அல்ல என்ற எண்ணத்தால் -அவனுக்கு முன்பு தோன்றிய பாம்பு என்ற அறிவும் அதனடியாகப் பிறந்த பயமும் மாறாதது போல்
உலகம் பல படித்தானது என்று ஞானம் அழிவதற்காக வேதம் சொல்லும் சொற்களும் கேட்க்கப்படுகையிலேயே
இவை ப்ரஹ்மத்தின் நின்றும் வேறு பட்டன -ஆகவே மயக்கத்தை ஊட்டுவன என்ற அறிவு மாறாது

கிஞ்ச -நிவர்த்தக ஞானஸ்ய ஞாது தத் சாமக்ரீ பூத சாஸ்த்ரஸ்ய ச ப்ரஹ்ம வ்யதிரிக்த தயா யதி பாத்யத்வமுச்யதே
ஹந்த ஹந்த தர்ஹி பிரபஞ்ச நிவ்ருத்தே மித்யாத்வ மாபததீதி பிரபஞ்சஸ்ய ஸத்ய தாஸ்யாத்-
ஸ்வப்னந த்ருஷ்ட புருஷ வாக்யாவகத பித்ராதி மரணஸ்ய மித்யாத்வே ந பித்ராதி சத்யதாவத்
கிஞ்ச தத்வமஸ்யாதி வாக்யம் ந பிரபஞ்சஸ்ய பாதகம் பிராந்தி மூலத்வாத் ப்ராந்தப்ர யுக்த ரஜ்ஜூ சர்ப்ப பாதக வாக்யவத்

எந்த தெளிவுறுத்தும் அறிவும் அதை யுடையவனும் அதை அறிவதற்குத் துணையான கருவிகளும் ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டவை யாகையால் பொய் என்று கொள்ளப் படுகின்றனவோ அவ்வறிவு எவ்வாறு உண்டாக முடியும்
அதனால் ப்ரபஞ்சம் பொய் என்று காட்டும் அறிவே பொய்யாவதால் பிரபஞ்சம் மெய்யே என்றாகி விடும்
எடுத்துக் காட்டாகக் கனவில் ஒருவன் தனது தந்தையின் இறப்பை ஒருவர் மூலம் அறிந்து பிறகு விழித்த போது தந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு கனவில் வந்த நிகழ்ச்சி பொய் -பொய்யான தகவலால் உண்மை மாறுபடுவது இல்லை என்று அறிகிறான்
இவ்வாறே
தத்வமஸி -போன்ற சொற்களும் ப்ரபஞ்சத்தின் உண்மையை மறுப்பது இல்லை
அவைகளும் பொய்யான ஸ்ருதியால் சொல்லப்படுவதால்

ந நுச ஸ்வப்நே கஸ்மின் சித்பயே வருத்தமாநே ஸ்வப்நசாயாமேவ் -அயம் ஸ்வப்ந –
இதி ஞாதேஸ்தி பூர்வ பய நிவ்ருத்தி த்ருஷ்ட்வா தத்வ தத்ராபி சம்பவதி இதி நைவம் ஸ்வப்ந வேலாயாமேவ
ஸோ பி ஸ்வப்ந -இதி ஞாதே சாதி புனர் பய நிவ்ருத்திரேவ த்ருஷ்டேதி ந கஸ்சித் விசேஷ ஸ்ரவண
வேலாயாமேவ ஸோ அபி ஸ்வப்ந இதி ஞாத மேவேத் யுக்தம்

இல்லை எனில் கனவு காண்கையில் ஏற்பட்ட பயத்தை ஒருவன் தன் கனவில் தோன்றியது உண்மை யல்ல என்ற எண்ணத்தைக் கனவிலேயே கொண்டாலும் இரண்டாவதும் கணவாகையாலே கொள்ளத் தக்கதல்ல என்ற உணர்வால் அச்சம் விலகாது
அது போல் இச்சொற்களைக் கேட்பதால் மட்டும் ப்ரபஞ்சம் பொய் என்ற அறிவு எப்படி ஏற்படும் –

—————

61–யதபி சேத முக்தம் -ப்ராந்தி பரிகல்பிதத்வேந மித்யா ரூபமபி சாஸ்திரம் – சத் அத்விதீயம் ப்ரஹ்ம –
இதி போதாயதி-தஸ்ய சதோ ப்ரஹ்மணோ விஷயஸ்ய பஸ்ஸாத் ந பாத ந தர்சந நாத் ப்ரஹ்ம ஸூஸ்திதமேவ
இதி ததயுக்தம் -ஸூந்ய மேவ தத்வம் -இதி வாக்யேந தஸ்யாபி பாதிதத்வாத் இதம் ப்ராந்தி மூலம் வாக்யம்
இதி சேத் -சத் அத்விதீயம் ப்ரஹ்ம -இதி வாக்யமபி ப்ராந்தி மூலமிதி த்வயைவ யுக்தம் பஸ்ஸாத்த
ந பாத்தா தர்சனம் து சர்வ ஸூந்ய வாக்ய ஸ்யைவவேதி விசேஷ –

மயக்கத்தோடு கூடி இருந்தும் பொய் அவித்யை வடிவமாயினும் ஸாஸ்த்ரம் போதிக்கிற ப்ரஹ்மம் தவிர்த்த ஏதும் இல்லை -என்ற கொள்கை பிறகு அதற்கு மாறுபட்ட கருத்துக்கள் ஏதும் இல்லை யாதலால் அது ஏற்புடையதே
ஆயினும் இன்மையே சூன்யமே மெய்ப்பொருள் என்றும் ஒரு சொல் அதற்குப் பின் மாத்யமிக புத்த சமயிகளால் சொல்லப் பட்டு இருப்பதால் அது உண்மையாக முடியாது அவ்வாறு அல்ல
மாத்யமிகர் வாக்கியம் மயக்கத்துடன் கூடியது என்பீராயின் நீங்களும் ஸாஸ்த்ரம் மயக்கத்துடன் கூடியது என்றே கொள்கிறீர்கள்
ஒரு பொருள் இருக்கிறது என்று சொல்லி பிறகு அது இல்லாத போது அது இல்லை என்று எடுத்துக் கழிக்கும் சொல் வலுவானது
அதன் படி இன்மையே மெய்ப்பொருள் என்பது வலுவுடையதாகிறது

———-

62–சர்வ ஸூந்ய வாதிந ப்ரஹ்ம வ்யதிரிக்த வஸ்து மித்யாத்வ வாதிநஸ் ச ஸ்வ பஷ சாதனா பிரமாண பாரமார்த்யா
நப்யுபகமேந அபியுக்தை பாதாநதிகார ஏவ ப்ரதிபாதித –ஸர்வதாசது பாயாநாம் பாதமார்க்க ப்ரவர்த்ததே
அதி காரோ அநுபாயத்வாத் ந பாதே ஸூந்ய வாதிந இதி –

(ந சத் ந அஸத் ந ஸத்அஸத் -மாத்மிகன்-ஸர்வ சூன்ய வாதம் கண்டிக்க விரும்பாமல் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் -பிரசன்ன பவுத்தர் )

(விஷ நிவ்ருத்தி மருந்து விஷத்தை நிவர்த்தித்து தானும் நிவர்த்தியாவது போல்
ஞானம் அவித்யயை நிவர்த்தத்த பின்பு தானும் அழிந்து -ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் என்பர்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பட்டதா கேள்வி வராதே -)

யாவும் இன்மையே என்பருக்கும்
ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை யாவும் பொய்யே என்போர்க்கும்
தங்கள் வாதத்தை நிலை நிறுத்தக் காட்டுகின்ற சான்றுகள் யாவும் பொய்யாகவும்
யாவும் பாதிக்கப் பட்டவை யாகவும் ஆகி விடுகின்றன
உண்மையான சான்று உடையவர்களுக்கே வாதத்தில் -வாதம் செய்வதில் -எப்பொழுதும் அதிகாரம் உண்டு
யாவும் பொய் என்பவர்களுக்கு வாதத்தை அதிகாரம் இல்லை -என்றவாறு
(குமாரில பட்டர் சொன்னது )

———–

63–அபி ச ப்ரத்யக்ஷ த்ருஷ்டஸ்ய பிரபஞ்சஸ்ய மித்யாத்வம் கேந ப்ரமாணேந சாத்யதே-
ப்ரத்யக்ஷஸ்ய தோஷ மூலத்வேந அந்யதா ஸித்தி சம்பவாத் -நிர்தோஷம் சாஸ்திரம் அநந்யதா சித்தம் ப்ரத்யக்ஷஸ்ய பாதகம்
இதி சேத் கேந தோஷேண ஜாதம் ப்ரத்யக்ஷம் அநந்த பேத விஷயம் இதி வக்தவ்யம் –
அநாதி பேத வாசநாக்ய தோஷ ஜாதம் ப்ரத்யக்ஷம் இதி சேத் -ஹந்த-தர்ஹி அநேந ஏவ தோஷேண ஜாதம் ஸாஸ்த்ரம பீதி
ஏக தோஷ மூலத்வாத் ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷயோ -ந பாத்ய பாதக பாவ ஸித்தி
ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம்
சாஸ்திரம் து பிரத்யஷாத் யபரிச்சேத்ய சர்வாந்தராத்மத்வ சத்யத்வாத் அநந்த விசேஷேண விஸிஷ்ட ப்ரஹ்ம ஸ்வரூப
தத் உபாஸநாத் யாராதன பிரகார -தத் பிராப்தி பூர்வக தத் பிரசாத லப்ய பல விசேஷ ததநிஷ் கரண மூல நிக்ரஹ விசேஷ விஷயம் –
இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத
அநதி நிதன -அவிச்சின்ன பாட ஸம்ப்ரதாயதாத் யநேக குண விஸிஷ்டஸ்ய சாஸ்த்ரஸ்ய பலீயஸ்த்வம் வததா ப்ரத்யக்ஷ
பாரமார்த்ய மவஸ்யம் அப்யுப கந்தவ்யம் இதி அலமநேந ஸ்ருதி சத விததிவாத வேக பராஹத
குத்ருஷ்ட்டி துஷ்ட யுக்தி ஜால தூல நிரசநேன இத் யுபகம்யதே

(யாருக்கு உண்டாகிறது என்று கொண்டால் கூட நிவர்த்தக ஞானம் எதனால் உண்டாகிறது -அடுத்த கேள்வி
ப்ரத்யக்ஷத்தாலயா ஸ்ருதியாலாயா கேள்வி வருமே-ஸ்வயம் பிரகாசம் இல்லையே –
ஆகவே ப்ரமாணத்தால் தானே உண்டாகி இருக்க வேண்டும்
இதுக்கு ஸ்ருதி பிரமாணம் சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் அஹம் ப்ரஹ்மாஸ்மி ஐக்யம் போதக வாக்கியங்கள் என்பர்

ப்ரத்யக்ஷத்தால் பலவாக காண்கிறோமே என்னில்-தேக வாசனை -இந்திரியங்கள் குறையே காரணம் என்பர்-ஸ்ருதி ஒருவர் சொல்ல காதால் நாம் கேட்க்கிறோமே அதுவும் மித்யை -துஷ்ட இந்திரிய பலம் அர்த்த பிரதிபத்தி புத்தி மாறலாம் -ஸாஸ்த்ரம் நிர்தோஷமாக இருந்தாலும்- ஸ்வ பாவ தோஷங்கள் உண்டாகும் அன்றோ-ப்ரத்யக்ஷத்துக்கும் தோஷம் சொல்லக் கூடாது என்பதே நம் சம்ப்ரதாயம்  -ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம் -இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத-)

(பேதம் ப்ரத்யக்ஷம் நிரூபிக்கும் அபேதம் ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம்
சரீராத்மா பாவம் ஒன்றே சுருதி விஷயம் ஆகும் -பிரதிதந்தரம் நம் சம்பிரதாயத்துக்கு)

மேலும் நமக்குக் கண் கூடாய் இருக்கும் இப்பிரபஞ்சத்தின் பொய்மையை எந்த ப்ரமாணங்களைக் கொடு நிரூபிக்க முடியும்
நாம் நேரே காணும் இவ்வுலகில் காணப்படும் பல வேறுபாடுகள் குறைபாடுகளுக்கு நாம் தக்க காரணம் காட்ட முடியும்
ப்ரஹ்மம் ஒன்றே உண்மை -மற்றவை யாவும் பொய்யே என்று கூடும் ஸாஸ்த்ரத்தின் கூற்று நாம் நேரில் காண்பதை விட வலிது எனில் எக்குறை பாட்டால் நாம் காணும் பல் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறதே
மோக்ஷம் அடைய 32 ப்ரஹ்ம வித்யைகளைக் கூறுகிறதே
அப்படியாயின் அதுவும் உலகியலோடு ஒத்த குறைபாடுள்ள தாகையால் அதன் கருத்து நேரில் கட் புலனாவதை எவ்வாறு வெல்லும்
ஆகாயம் காற்று போன்ற பஞ்ச பூதங்களும்
அவைகளால் விளைந்த ஒலி தொடு உணர்வு போன்றவைகளும்
மனிதர்கள் முதலான பல் வேறு உடல் அமைப்புக் கொண்ட பிராணிகளும் கண்களால் காணப் படுகின்றன -உணரப் படுகின்றன
எல்லாவற்றையும் உள்ளிருந்து இயக்கல் உண்மையாக இருத்தல் போன்ற எண்ணற்ற நற் குணங்களோடு கூடிய பரமாத்ம நிலையும்
அதை ஆராதனம் மூலம் கொடை நல்லறம் ஆகியவை செய்து வழி பட்டு அதன் கருணையால் கிடைக்கும் வீடு பேறு போன்ற நான்கு பேறுகளும்
ப்ரஹ்மத்துக்கு உகப்பு அல்லாததைச் செய்து அதனால் வரும் கேடுகளும் தண்டனைகளும் ஸாஸ்த்ரங்களால் விளக்கப் படுகின்றன
ஆகவே இவை இரண்டும் வெவ்வேறு வகையான பொருள்களைக் கூறுவன வாகையால் ஒன்றால் மற்ற ஒன்றை எவ்வாறு பாதிக்கப் படும்
மேலும் கட் புலனாவது என்ற சான்றை நீங்களும் ஒத்துக் கொள்ள வேண்டும்
ஏன் எனில்
காதுகளால் கேட்டு
மனத்தில் நிறுத்திக் கொள்வதால் தான் ஸாஸ்த்ரங்கள் உள்ளவை என்ற நிலையைப் பெறுகின்றன

முதலும் முடிவும் அற்று தொடர்பு அறாது உபதேசத்தால் வந்த பல நலன்களோடு கூடிய ஸாஸ்த்ரம் வலுவுள்ளது என்று ஒப்பிய உங்களால் கண் கூடாகத் தெரியும் உலகமும் ஒத்துக் கொள்ளப் பட வேண்டும் –
முடிவாக நேர் அற்ற நோக்கு உடையோரால் அவர்களால் வாதிக்கப்படும் உக்திகளால் செப்பிடு வித்தை போல் காணப்படும் இப்பொய்மை வாதமாகிற பஞ்சு பல வேத வாக்யங்களால் நன்கு விளக்கப்பட்ட புயல் காற்றால் அடித்துச் செல்லப்படும் எனக் கூறி அமைகிறேன்

—————–

பாஸ்கர மத கண்டனம்
64–த்விதீயே து பக்ஷே உபாதை ப்ரஹ்ம வ்யதிரிக்த -வஸ்த்வாந்தராந் ப்யுபகமாத் ப்ரஹ்மண்யேவா உபாததி
சமசர்க்காத் ஓவ்பாதிகாஸ் சர்வே தோஷா ப்ரஹ்மண்யேவாபவேயு
ததஸ் ச அபஹதபாப் மத்வாதி நிர்தோஷ ஸ்ருத யஸ் சர்வா விஹந்யந்தே -யதா கடாகாசதே
பரிச்சின்னதயா மஹா ஆகாசாத் வை லக்ஷண்யம் பரஸ்பர பேதஸ் ச த்ருச்யதே -தத்ரஸ்தா தோஷாவா குணா வா
அநவச் சிந்நே மஹா ஆகாஸே ந சம்பந்யந்தே -ஏவம் உபாதை க்ருத பேத வ்யவஸ்தித ஜீவ கதா தோஷா
அநு பஹிதே பரே ப்ரஹ்மணி ந சம்பந் யந்தே இதி சேத் நைததுபத்யதே நிரவயவஸ்ய ஆகாசஸ்ய அநவச் சேத் யஸ்ய கடாதிபி –
சேதா சம்பவாத் -தேநை வாகாசேந கடாதயஸ் ஸம்யுக்தா இதி ப்ராஹ்மண உபாயச்சேத் யத்வாத் ப்ரஹ்ம ஏவ உபாதி ஸம்யுக்தம் ஸ்யாத் –
கட ஸம்யுக்தாகா ச பிரதேச அந்யஸ் மாதாகாச ப்ரதேசாத் பித்யதே-இதி சேத் ஆகாசஸ்யை கஸ்யைவ பிரதேச பேதேநே
கடாதி ஸம்யோகாத்-கடாதவ் கச்சதி தஸ்ய ச பிரதேசஸ்ய அநியம இதி ப்ரஹ்மண்யேவ
உபாதி ஸம்சர்க்க ஷணே ஷணே பந்தோ மேஷஸ் ச பவதீதி சந்த பரிஹஸந்தி–

(உபாதி சம்சர்க்கம் -ப்ரஹ்மத்துக்கு அபஹத பாப்மத்வாதிகள் சுருதி விருத்தம்
அபரிச்சின்ன ஆகாசம் -நடுவில் கடம் வைத்தால் கடாகாசம் -தோற்ற -இதன் குறைகள் மஹா ஆகாசத்தில் காணப்பட வில்லை
ஜீவர்கள் கடாகாசம் போல் -சேதிக்க முடியாதே -ஆகாசம் ஸூஷ்மம் -கடம் ஸ்தூலம் சேதிக்க முடியாதே -அதே போல் ப்ரஹ்மம் ஸூசமம் -உபாதி – ஸ்தூலம்

கர்மாக்கள் தர்ம பூத ஞான த்வாரா ஆத்மாவில் -ப்ரஹ்மத்துக்கு சங்குசித ஞானம் இல்லையே-விகார அநர்ஹம் -)

பாஸ்கரர் கொள்கைக்கு மறுப்பு
இரண்டாவது மதத்திலும் சூழலின் தாக்கம் -ப்ரஹ்மம் தவிர்த்த வேறு பொருள்கள் -ஒப்புக் கொள்ளப் படாமையால் ப்ரஹ்மத்தின் இடத்திலேயே சூழலின் தாக்கத்தால் வரக்கூடிய எல்லாக் குறைபாடுகளும் ப்ரஹ்மத்திலேயே ஏற்படுகின்றன
அதனால் பாபமற்ற தன்மை முதலான குறைகள் அற்றதாகப் ப்ரஹ்மத்தைக் கூறும் மறை வாக்கியங்கள் அழிக்கப்படும் -பொருள் அற்றவை யாகும் –
அவ்வாறே குடத்தினுள் உள்ள வெளி அளவு பட்டதாகவும் மற்றைப் பெரு வெளி அளவு படாததாகவும் ஒன்றுக்கு ஓன்று மாறுபட்டுத் தோன்றுகின்றன
அதனால் அளவு பட்ட வெளியின் நிறை குறைகள் பெரு வெளியின் தொடர்பு அற்றவை யாகின்றன
அது போலவே சூழலின் தாக்கத்தால் ஜீவனிடம் தோன்றும் குறை நிறைகள் ப்ரஹ்மத்தின் தொடர்பு அற்றது என்பீராகில் அது கொள்ளத் தக்கது அல்ல

அவயவங்கள் அற்ற பெரு வெளி குடம் போன்றவற்றால் பிளவு படுத்தக் கூடியது அல்ல
அது எப்போதும் குடத்தின் வெளியோடு கூடியே இருக்கும்
அது போல் ப்ரஹ்மமும் அவயவங்கள் அற்றதால் பிளக்கப்பட முடியாதலால் ஜீவனுடைய நிறை குறைகளையும் கொண்டு இருக்கும் –
குடத்தின் உள்ளிருக்கும் சிறு வெளியும் அது தவிர்த்த கூடத்திற்கு வெளியில் உள்ள பெரு வெளி எனக் கருதப் படுகிறது என்பது போல் இங்கும் கொள்ளலாம் எனில்
ஒரே வெளி குடத்தின் தொடர்பால் இரண்டாகக் கருதப் படுகையில் அக்குடம் உருண்டு செல்கையில் அதற்கு ஒவ்வோர் நிலையிலும் வெளியின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் தொடர்பும் தொடர்பின்மையும் ஏற்படுகிறது
இதனால் குடத்திலுள்ள சிறு வெளி இது என்று பிரித்துக் காண இயலாது
அதே போல் ப்ரஹ்மத்தின் எப்பகுதி சூழலை தயக்கத்துடன் தொடர்புடையது எப்பகுதி தொடர்பு அற்றது எனப் பிரித்துக் காண முடியாது
ஆகவே ஜீவனுக்கு உள்ள குறை நிறைகள் ப்ரஹ்மத்திலும் காணப்பட வேண்டும்
அதாவது உடல் புலன்கள் தொடர்பால் வரும் கட்டும் அது நீங்கினால் வரும் வீடும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நகைப்புக்கு இடமான நிலை ஏற்படும் –

உபாதி -சூழலின் தாக்கம் -அருகில் உள்ள ஒரு பொருளின் தொடர்பால் மற்றதில் ஏற்படும் மாறுதல்
எடுத்துக் காட்டு -வெள்ளை நிறப்பொருள் அருகில் உள்ள செம்பருத்திப் பூவினால் சிவப்பாகக் காணப்படுதல்

————–

65–நிரவயவஸ் யாகாசஸ் யைவ ஸ்ரோத்ர இந்த்ரியத்வேபி இந்திரிய வ்யவஸ்தாவத்
ப்ரஹ்மண்யபி வ்யவஸ்தா உபபத்யதே இதி சேத்
ந வாயு விசேஷ ஸம்ஸ் க்ருத கர்ண பிரதேச ஸம்யுக்தஸ்யைவ ஆகாச பிரதேசஸ்ய ஸஸ்ய இந்த்ரியத்வாத்
தஸ்ய ச பிரதேசாந்த்ராத் பேதா நியமேபி இந்திரிய வ்யவஸ்தா உபபத்யதே-
ஆகாசஸ்யது ஸர்வேஷாம் சரீரேஷு கச்சத்ஸூ அநியமேந சர்வ பிரதேச ஸம்யோக இதி
ப்ரஹ்மண்யாபி உபாதி ஸம்யோக பிரதேசா நியம ஏவ

(ஆகாசம் -சப்த குணகம் -காதில் நுழைந்து -ஸ்தோத்திரிய இந்திரியம் உணரும் -ஸம்யுக்த-ஸம்யோக)

அவயமற்ற ஆகாயம் செவிப்புலன் எனப்படுவது போல் ப்ரஹ்மத்திற்கும் புலன்கள் அற்று கட்டுப்பட்டு இருக்கும் நிலை ஏற்படலாம் எனில்
அது இயலாது
காற்றுடன் தொடர்புடையதாய் காதின் உள்ளிருக்கும் சிறு வெளி ஒலிகளை அறியக் காரணமாவதால் செவிப்புலன் எனப் பெயர் பெறுகிறது
அதை ஒழிந்த ஆகாயம் இவ்வாறு பகுதிகளாக பிரிக்கப்படாதது
மேலும் ஆகாயத்திற்கு காது மட்டும் அன்றி உடலின் எல்லாப் பகுதிகளுடன் தொடர்பு இருக்கிறது
அதனால் ஒரு குறிப்பிட்ட ஆகாயப் பகுதி ஒரு குறிப்பிட்ட புலனுடன் எப்பொழுதும் தொடர்பு கொண்டு இருக்கிறது என வரை யறுக்க முடியாது
ஆயினும் அது உடல்களின் தொடர்பால் எப்பொழுதும் இயங்கிக் கொண்டு இருப்பதால் அத் தொடர்பு நிலையுடையதாய் இருக்கிறது
இந்த செவிப் புலன் வெளியை மற்ற வெளியின் நின்றும் தனியாக பிரிக்கவோ குறிப்பிடவோ முடியாது
இவ்வாறு ப்ரஹ்மத்திற்குக் கொண்டால் ப்ரஹ்மம் எப்பொழுதும் சூழலின் தயக்கத்தோடு தொடர்பு யுடையதாக மட்டுமே இருக்க முடியும் –

66–ஆகாசஸ்ய ஸ்வரூபேண ஏவ ஸ்ரோத்ரிந்த் ரியத்வம் அப்யுபகம்யாமபி இந்திரிய வ்யவஸ்தா யுக்தா பரமார்த்த
தஸ்து ஆகாச நஸ்ர இந்திரியம் –
வைகாரிகாத் அஹங்காராத் ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஹி வைதிகா யதோக்தம்

செவிப்புலன் என்பது ஆகாயத்தின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்ற உங்கள் கருத்தை ஒத்துக் கொண்டு அதற்கு மேற்கூறியபடி பதில் அளித்தோம்
உண்மையில் ஆகாயம் செவிப்புலன் அல்ல
வைகாரிகம் போன்ற அஹங்காரங்களில் நின்றும் பதினோரு இந்திரியங்கள் உண்டாகின்றன என்பது வைதிகர்கள் கருத்து
உங்கள் கருத்து அதற்கு முரணானது –

பகவதா பராசரரேண-
தைஜசாநி இந்த்ரியாண்யாஹு -தேவா வைகாரிகா தச ஏகாதசம் மனஸ் ஸாத்ர தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி அயமர்த்த வைகாரிக தேஜச பூதாதி இதி த்ரிவிதோ அகங்கார -ச ச க்ரமாத் சாத்விக ராஜஸ தமசஸ் ச
தத்ர தாமஸாத் பூதாதே ஆகாசாதீநி பூதாநி ஜாயந்தே இதி ஸ்ருஷ்ட்டி க்ரம முக்த்வா -தைஜஸாத் ராஜஸ அஹங்காராத்
ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஸ்வ மத முச்யதே -தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி தேவா இந்திரியாணி ஏவம் ஆஹங்காரி காணாம்
இந்திரியாணாம் பூதைஸ் சாப்யாயநம் மஹா பாராதே உச்யதே

பராசரர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்
தைஜஸத்தின் நின்றும் -அதாவது ராஜஸ அகங்காரத்தின் நின்றும் -புலன்கள் உண்டாயின என்று சிலர் சொல்லுவர்
ஆயின் அவை பதினொன்றும் வைகாரிகத்தின் நின்றும் -அதாவது ஸாத்விக அஹங்காரத்தின் நின்றும் -உண்டாயின என்றும்
அதனால் அவற்றுக்கு வைகாரிகங்கள் என்று பெஅர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறோம்
இதன் பொருள் -வைகாரிகம் தைஜஸம் பூதாதி என்பவை மூன்று அஹங்காரங்கள்
இவைகள் முறையே ஸாத்விக ராஜஸ தாமஸங்களாகும்
இவற்றில் தாமஸ த்தின் நின்றும் ஆகாயம் முதலிய பூதங்கள் பிறக்கின்றன என்று படைப்பின் ஒழுங்கைக் கூறுகையில்
தைஜஸமாகிற ராஜஸ அகங்காரத்தின் நின்றும் பதினோரு புலன்கள் பிறக்கின்றன என்றும் கூறி
தனது கொள்கையாக புலன்கள் வைகாரிகத்தின் நின்றும் பிறக்கின்றன என்று நிறுவுகிறார்
தேவா என்பது புலன்கள்
இதையே அஹங்காரத்தின் நின்று புலன்கள் தோன்றி பஞ்ச பூதங்களால் வளர்க்கப் படுகின்றன என்று மஹா பாரதமும் சொல்கிறது –


பவ்தீகத்வேபி இந்திரியாணாம் ஆகாசாதி பூத விகாரத்வதேவ ஆகாசாதி பூத பரிணாம விசேஷா –
வ்யவஸ்திதா ஏவ சரீரவத் புருஷானாம் இந்திரியாணி பவந்தி இதி -ப்ரஹ்மணி அச்சேத்யே நிரவயவே-
நிர்விகாரேது அநியமேந அநந்த ஹேயோபாதி ஸம் சேர்க்க தோஷா துஷ் பரிஹர ஏவ இதி –
ஸ்ரத்ருதாநாநாமேவ அயம் பஷ இதி ஸாஸ்த்ர விதோ ந பஹுமந்யந்தே –
ஸ்வரூப பரிணாம அப்யுகமாத் அதிகார ஸ்ருதி பாத்யதே நிரவத்யதா ச ப்ரஹ்மண-சக்தி பரிணாம –
இதி சேத் கேயம் சக்திரித் யுச்யதே ? கிம் ப்ரஹ்ம பரிணாம ரூபா ? உத ப்ரஹ்மணோ அநந்யா கா அபி ?
இதி உபய பக்ஷே அபி ஸ்வரூப பரிணாம அவர்ஜனீய ஏவ —

பஞ்ச பூதங்களைப் பிறப்பிக்கிற பூதாதியின் மாறுபாடான இந்தப் புலன்கள் ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களின் துணையால் உடலை அடைந்து செயல்படுகின்றன என அறியப்பட்டது
மாறாக ப்ரஹ்மத்தின் பொறிகள் அற்ற மாறு பாடற்ற தன்மை பொறிகளின் தொடர்பால் பழுது படுகிறது என்னும் வாதம் சான்றோர்கள் முன்பு பாஸ்கரர் கொள்கையாக வைக்கப் படுகிறது

ப்ரஹ்மமே மாறுபாடு அடைந்து இவ்வாறாகிறது என்பீராகில் அதன் மேற்கூறிய தன்மைகள் பாதிக்கப்படும்
அவ்வாறு அன்றி தன் ஆற்றலால் ப்ரஹ்மம் மாறுபடுகிறது என்றால் அவ்வாற்றல் என்பது என்ன
அது ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டதா –
எவ்வாறு
இக் கேள்விகளுக்கு பதில் எதுவானாலும் ப்ரஹ்மத்தின் நிரையில் மாறுபாடு தோன்றுவதை ஒத்துக் கொள்ள முடியாது
ஏன் என்றால்
இவர்களுடைய ப்ரஹ்மத்துக்குத் தனியான குணங்கள் ஏதுமில்லை
ப்ரஹ்மம் தவிர்த்து மற்ற எப்பொருளும் இல்லை -என்னும் கொள்கையை இவர்களே மறுக்க நேரிடும் –

—————

யாதவ பிரகாச பக்ஷம் மறுப்பு
67–த்ருதீயே அபி பக்ஷே ஜீவ ப்ரஹ்மணோ பேதவதபேதஸ்ய சாப்யுபகமாத்-தஸ்ய ச தத் பாவாத்
ஸுவ்பரி பேதவத் ஸ்வ அவதார பேதவச் ச ஸர்வஸ்ய ஈஸ்வர பேதத்வாத் சர்வே ஜீவ கதா தோஷா தஸ்யைவ ஸ்யு —

(இவரும் பரிணாம வாதி -கீழ் உபாதியால் பரிணாமம் -இவர்கள் ஸ்வரூபத்தால் பரிணாமம் என்கிறார்கள்
நாமோ ஸ்வ பாவ -சரீரம் மாத்திரம் பரிணாமம்)

மூன்றாவது கொள்கை -ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் வேறுபாடின்மையையும் ஒருங்கே ஒத்துக் கொள்கிறது
ப்ரஹ்மத்துக்கு ஜீவ பாவத்தில் ஸுவ்பரி முனிவரின் ஈடுபாடு போன்றும் -(உயிர் ஒன்றாய் இருக்கச் செய்தே பல உடல்களைக் கொள்ள முடிவது போல் ஆகும் என்றவாறு )
ஈஸ்வரனுக்கு தன் அவதாரங்களில் ஈடுபாடு போன்றும்
(ஏற்பட்டு ப்ரஹ்மத்துடன் ஒன்றியவுடன் அது நீங்கி விடுகிறது ) தோன்றும் யாவையும் ப்ரஹ்மத்தின் வேறுபாடுகளே
இவ்வாறு கூறினால் ஜீவனுக்குள்ள குறைபாடுகள் ப்ரஹ்மத்திற்கும் ஏற்படும்

இதற்கு முன் கூறிய பாஸ்கரர் மற்றும் யாதவப் பிரகாசர் கொள்கைகளின் படி ஈஸ்வரனும் பிரபஞ்சமும் உண்மை
முற் கூற்றில் ஈஸ்வரனுக்கு உயிரல் பொருட்களின் தொடர்பால் ஜீவன் என்ற ப்ரமை ஏற்படுகிறது என்றும்
இரண்டாவதில் ஈஸ்வரனே ஜீவனாகவும் அசேதனமாகவும் மாறுகிறது என்றும் கொள்ளப் பட்டு இருக்கிறது
ராமானுஜர் அக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறார் –

—————

68–ஏகத் யுக்தம் பவதி –
ஈஸ்வர ஸ்வரூபேண ஏவ ஸூர நர திர்யக் ஸ்தாவராதி பேதேந அவஸ்தித இதி ஹி ததாத்மகத்வ வர்ணனம் க்ரியதே ?
ததா சதி ஏக ம்ருத் பிண்டாரப்த கட சராவாதி கதாந் யுதகாஹரணாதீதி சர்வ கார்யாணி யதா தஸ்ய ஏவ பவந்தி
ஏவம் சர்வ ஜீவ கத ஸூக துக்காதி சர்வம் ஈஸ்வர கதமேவ ஸ்யாத் இதி கட கரகாதி சமஸ்தாநா நுப யுக்த
ம்ருத்ரவ்யம் யதா கார்யாந்தராநந் விதம் ஏவ மேவ ஸூர பஸூ மனுஜாதி-ஜீவத்வ அநுப யுக்தேஸ்வர
சர்வஞ்ஞ ஸத்ய ஸங்கல்பத்வாதி குணாகர இதி சேத் சத்யம் -ச ஏவ ஈஸ்வர ஏகாநாம் சேந கல்யாண குணாகரக
ச ஏவ ச அந்யே நாம் சேந ஹேய குணாகர இத்யுக்தம் த்வயோரம் சயோ ஈஸ்வரத்வா விசேஷாத் —

(கடத்தால் தீர்த்தம் கொண்டு வரலாம்
ம்ருத் பண்டத்தால் முடியாதே
காரிய பதார்த்த குணங்கள் எல்லாம் காரணத்தில் இருக்க வேண்டியது இல்லையே
ஜீவ இன்ப துன்பங்கள் ஈஸ்வரனுக்கு இருக்க வேண்டியது இல்லை
ஆகார பேதம் -பிண்ட ஆகாரம் குட அகாரம்
ப்ரஹ்மம் நிர் அவயவம் -ஸ்வரூபமே பரிமாணம் என்பர் -ஆகவே இந்த த்ருஷ்டாந்தம் இதுக்கு சரி இல்லை என்பர்)

இத்தை விளக்குவோம்
ஈஸ்வரன் தானாகவே தேவ மனித மிருக ஸ்தாவரங்களாக பரிணாம அடைகிறான் என்றும்
அதே ப்ரஹ்மம் ஆத்மாவையும் இருக்கிறது என்றும் சொல்லப் படுகிறது
அப்படி என்றால் ஒரே மண் உருண்டையால் ஆன குடம் வாணை ஆகியவற்றுக்குள்ள நீர் கொணரும் தன்மை அந்த மண் உருண்டைக்கும் காரியமாக வேண்டும்
அதே போல் எல்லா ஜீவ காரியங்களும் அதன் இன்ப துன்பங்களும் ஈஸ்வரனுக்கு ஏற்பட வேண்டும்
ஆனால் ஈஸ்வரன் குறைபாடு அற்றவன் என்று வேதம் சொல்லி இருப்பதால் இக் கருத்து ஒப்புக் கொள்ளத் தக்க தல்ல

த்வாவம் ஸவ்யவஸ்திதவ் இதி சேத் கஸ்தேந லாப ? ஏகஸ்யைவ ஏகாநாம்சேந நித்ய துக்கித்வாத் அம்சாந்தரேண
ஸூகித்வமபி ந ஈஸ்வரத்வாய கல்பதே-யதா தேவதத்தஸ்ய ஏகஸ்மிந் ஹஸ்தே சந்தந பங்காநுலேப-
கேயூர கடக அங்குலீயக அலங்கார ஏதஸ்யை வாந் யஸ்மிந் ஹஸ்தே முத்கராபிகாத காலாநலஜ் வாலாநு பிரவே சஸ்ஸ
தத்வதேவ ஈஸ்வரஸ்ய ஸ்யாத் இதி ப்ரஹ்ம ஞான பஷாதபி பாபீயாநயம் பேதாபேத பஷ அபரிமித துக்கஸ்ய
பாரமார்த்திகத்வாத் ஸம்ஸாரிணாம் அநந்தத்வேந துஸ்தரத்வாச் ச தஸ்மாத் விலக்ஷனோயம் ஜீவாம் ச-
இதி சேத் ஆகதோ சி தர்ஹி மதீயம் பந்தாநம்
ஈஸ்வரஸ்ய ஸ்வரூபேண தாதாம்ய வர்ணநே ஸ்யாத் அயம் தோஷ ஆத்ம சரீர பாவேந து தாதாம்ய ப்ரதிபாதநே
நகஸ்சித் தோஷ -ப்ரத்யுத நிகில புவந நியமநாதி மஹாந் குண கண ப்ரதிபாதிதோபவதி சாமநாதி கரண்யம் ச முக்ய வ்ருத்தம்

இக்குறையை நீக்கும் முகமாய் ப்ரஹ்மம் இரண்டு பகுதிகளாய் -ஜீவனாக ஆவதாகவும் ப்ரஹ்மமாக ஆதலுமாக இருப்பதாகக் கொள்வீர்களாயின் அதனாலும் பயன் ஏதும் இல்லை
அவ்வாறு கொள்வதால் ஒரு பகுதி எப்போதும் துயரத்துடனும் மற்றொரு பகுதி எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் ஒன்றுக்கு ஓன்று கலவாததாயும் உள்ளது என்றதாகும்
இது ஈஸ்வரத் தத்துவத்துக்கு முரணானது
எப்படி தேவ தத்தன் என்று ஒரே மனிதனுக்கு ஒரு கையில் சந்தனக்காப்பு அணிவித்து அணிகள் பூண்டு இருத்தலும்
மற்றொரு கையில் உலக்கையால் இடித்தலும் தீயில் நுழைத்தலும் ஏற்படின் அவன் நிலை எவ்வாறு இருக்குமோ
அது போலவே ஒரு பக்கத்தில் அளவற்ற இன்பம் கிடைத்தாலும் உடலின் மறு பகுதி துன்புறும் போது அந்த இன்பம் நிலை நிற்காமல் போவது போலே ஈஸ்வரனுக்கு நீங்காத துயரமே உணர்வாகும்
இக்கொள்கை சங்கரரின் ப்ரஹ்ம அஞ்ஞானக் கொள்கையினின்றும் மாறுபட்ட பேதாபேதம் -பிரிவு பட்டும் பிரிவு ப்டாதுமாய் இருப்பது என்ற நிலையைக் கொள்வதால் உலகியலாரின் துன்பங்கள் யாவும் அளவற்றதாய் ப்ரஹ்மத்துக்கு ஏற்படும்
அவ்வாறு இன்றி இந்நிலையைத் தவிர்க்க ஈஸ்வரனின் ப்ரஹ்மப் பகுதி வேறு ஜீவப்பகுதி வேறு என்பீராயின் நீங்கள் எங்கள் கொள்கையைக் கைக்கொள்வீர்கள்

இக்கொள்கைகள் ஈச்வரனுடன் ஆத்மா உயிர் ஒன்றிய நிலையில் உள்ளது என்று கொள்வதால் இக்குற்றங்கள் ஏற்படுகின்றன
அஃதன்றி ஈசன் உயிராகவும் ஜீவாத்மா அதன் உடலாகவும் மாறி ஒரு நிலையில் இருக்கின்றன என்ற எங்கள் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்னும் கொள்கையைக் கொண்டால் இக்குற்றங்கள் யாவும் வாராது
மாறாக அண்டங்கள் யாவையும் ஆட்சி செலுத்தும் சிறப்பான கல்யாண குணங்களே வெளிப்படும்
இதனால் ஸாமா நாதி கரணமும் நன்கு பொருந்தும் –

——–

69–அபிச ஏகஸ்ய வஸ்துநோஹி பிந்நாபிந்நத்வம் விருத்தத்வாத் ந சம்பவதீதி யுக்தம்
கடஸ்ய படாதி பிந்நத்வே சதி தஸ்ய தஸ்மிந் ந பவா -அபிந்நத்வே சதி தஸ்ய ச பாவ -இதி ஏகஸ்மிந்தேசே ச ஏகஸ்ய ஹி
பதார்த்தஸ்ய யுகபத ஸத்பாவ-அ சத் பாவச் ச விருத்த ஜாதயாத்மநா பாவ வ்யக்தாத்மநா ச அபாவ இதி சேத்
ஜாதே முண்டேந வ்யக்தயா சா பேத சதி கண்டே முண்டஸ் யாபி ஸத்பாவ பிரசங்க கண்டேந சஜாதேஸ்ய பிந்நத்வே
ஸத்பாவ பிந்நத்வே அசத் பாவ அஸ்வே மஹிஷதஸ்யேவேதி விராதோ துஷ் பரிகார ஏவ

மேலும் ஒரே பொருளில் குறையும் நிறையும் இருத்தலும் -இன்மையும் இருக்கிறது என்பது ஒவ்வாதது –
குடத்தில் துணியின் தொடர்பின்மையால் துணியின்மை என்ற நிலை ஏற்படுகிறது
ஆயின் அவ்வாறில்லை என்று மறுக்கப்படுமானால் குடமும் துணியும் ஒரே பொருள் என்ற கிடைக்கும்
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே பொருளில் இருப்பும் இன்மையும் ஏற்பட முடியாது –
தொகுப்புக்கு ஜாதிக்கு -இருக்கும் குணங்கள் உறுப்புக்கு இல்லை எனில் தொகுத்துப் பார்க்கும் நிலையும் பகுத்துப் பார்க்கும் நிலையும் -ஜாதி வேறு -வ்யக்தி வேறு -என்று அறிந்தால் அன்றி கொம்புள்ளதும் மோழையும் ஓன்று எனவாகும்
கோமனுள்ளத்து எனில் தொகுப்புடன் ஜாதியுடன் -பிரிவற்ற தன்மையும் மோழை எனில் தொகுப்பினின்றும் ஜாதியினின்றும் பிரிவுறுதலும் தோன்றும்
ஆகவே பிரிவின்மையும் பிரிவும் ஒரே இடத்தில் இருக்கலாம் என்பது தவறான பாதமாகும்
குதிரையும் எருமையும் -கால்நடைகள் என்ற தொகுப்பில் இருந்தாலும் -அவைகள் தனித்த குணங்கள் உள்ளவை யாதலால் ஒரே ஜாதியில் பேதாபேதம் உண்டு என்று கொள்வதால் இரண்டும் ஒன்றாக ஆக முடியாது

ஜாதி -ஒரே ஒருபடித்தான அமைப்பும் பண்புகளும் உள்ள பொருள்களின் தொகுப்பு
வியக்தி -மேற்படி தொகுப்பில் உள்ள ஒரு பொருள் -தொகுப்பின் உறுப்பு

————–

70–ஜாத்யாதே வஸ்து சமஸ்தாந தயா வஸ்துந பிரகாரத்வாத் -பிரகாரப் பிரகாரினோச் ச பதார்த்தாந்தரத்வம்
பிரகாரஸ்ய ப்ருதக் சித்ய நர்ஹத்வம்-ப்ருதக் கநு பலம் பஸ் ச தஸ்ய ச சமஸ்தாநஸ்ய ச
அநேக வஸ்துஷு பிரகார தயா அவஸ்திதிஸ் ச இத்யாதி பூர்வமேவ யுக்தம்

ஒருபடித்தான உருவ குண அமைப்புடைய பொருள்களின் தொகுப்பு ஜாதி எனப்படுவதால் பொருளும் ஜாதியும் பிரகார பிரகாரி சம்பந்தம் உடையன எனப்படுவதால் பொருளும் ஜாதியும் பிரிவும் பிரிவற்ற தன்மையும் -பேத அபேத -உடையன என்று கூறுதல் தகாது
ஒரு பொருள் அதன் ஜாதியினின்றும் தனித்துப் பேசப்படுகையில் இந்த வாதம் பயன் அற்றது
இது முன்பே விளப்பட்டுள்ளது

பிரகாரம் -ஒரு பொருளினின்றும் வேறுபட்டதாயும்
அதினின்றும் தனித்து இயங்கும் தன்மை அற்றதாயும்
அப்பொருளை சிறப்பான அடையாகவும் இருத்தல்

பிரகாரி -அப்பண்பை யுடையது

உதாரணம் -நீலத்துணி என்னும் பொருளுக்கு நீலம் பிரகாரம் –

———————-

71–சோயம் இதி புத்தி பிரகார ஐக்யாத் அயமபி தண்டீ இதி புத்தி வத் -அயமேவ சஜாத்யாதி பிரகாரோ வஸ்துநோ பேத
இத் யுச்யதே தத் யோக ஏவ வஸ்துந பிந்நம் இதி வ்யவஹார ஹேது ரித்யர்த்த ச ச வஸ்து நோ பேத வ்யவஹார ஹேது
ஸ்வஸ்ய சம்வேதந வத் யதா சம்வேதநம் வஸ்துநோ வ்யவஹார ஹேது -ஸ்வஸ்ய வ்யவஹார ஹேதுஸ் ச பவதி –
அத ஏவ சந் மாத்ர க்ராஹி ப்ரத்யக்ஷம் பேத க்ராஹி இத்யாதிவாதா நிரஸ்தா ஜாத்யாதி சம்ஸ்தி ததஸ்யைவ
சமஸ்தாந ரூப ஜாத்யாதே பிரதியோக்ய பேஷயா பேத வ்யவஹார ஹேதுத்வாச் ச ஸ்வரூப பரிணாம தோஷஸ் ச
பூர்வமே வோக்த இதி மதாந்தரக் கண்டநாக்ய பூர்வ பாக ஸமாப்த —

அவனே இவன் என்ற அறிவு -பண்பு ஒருபடிப்பட்டு இருத்தலால் இவனும் தடியை யுடையவன் என்று அறிகிறது
இந்த ஜாதிப் பண்பினால் பொருள்களுள் பேதம் ஏற்படுகிறது
இவ்வாறு உலகில் காணப்படும் பொருள்கள் யாவும் ஜாதிவாரியாகப் பிரிக்கப் பட்டு இருப்பது கண் கூடு
ஒரு பொருளை அறிய ஜாதி காரணமாகிறது
ஞானம் தன் இருப்பையும் காட்டி -மற்றப் பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையுடன் காட்ட காரணமாகிறது –
ஒரு பொருளைப் பார்க்கையில் அப்பொருளை மட்டும் அறிவு அறிகிறது
அதன் அமைப்பு பண்புகளை அறிவதில்லை என்ற அத்வைதியின் வாதம் தள்ளப்படுகிறது
ஜாதிப் பிரிவுகள் உள்ள பொருள்களைத் தான் கண் அறிகிறது
பார்க்கப்படும் பொருள்களின் அமைப்பைக் கொண்டே அதின் ஜாதியும் -அது மற்றதின் நின்றும் வேறுபட்டது என்ற அறிவும் ஏற்படுகிறது –
இதனாலேயே ப்ரஹ்மம் தானே பரிணாமம் அடைகிறது என்பது மறுக்கப் பட்டது –

இத்துடன் பிற கொள்கை மறுப்பு என்னும் முதற் பகுதி முற்றுப் பெறுகிறது

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -சதுர்த  பாதம் –

March 6, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார தீப உத்த்ரியதே

——————————

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச–
ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஆநு மாநிகம் ப்ரதானமபி ஜகத் காரணத்வேந மஹத பரமவ்யக்தம் இத்யுச்யத இதி சேத் ந பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி இத்யாதிஷுபாஸநோபாயேஷு வஸீ கார்யத்வாய ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு சரீராக்ய ரூபக விந்யஸ்தஸ்யாத்ராவ்யக்த சப்தேந க்ருஹீதே –இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா இத்யாதிநா ஹி வஸீ கார்யத்வேந ஹி பரா உச்யந்தே ததா சோத்த ரத்ர ஸ்ருதி ரேவ தர்சயதி யச்சேத் வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதி நா –1-

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச
-கடவல்லீஷு இந்த்ரியேப்யஸ் பரா ஹ்யர்தா அர்த்தேப் யஸ்ச பரம் மனஸ் –மநஸஸ் ச பரா புத்திர் புத்தேர் ஆத்மா மஹான் பர மஹதஸ் பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான்ன பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதி -இத்யத்ர
கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் அவ்யக்த சப்தாபிதேயமுத நேதி ஸம்சய -ப்ரதாநம் இதி பூர்வ பக்ஷ -மஹத பரம் இத்யாதி தத் தந்தர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாநாத் புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி பஞ்ச விம்சக புருஷ அதிரிக்த தத்த்வ நிஷேதாச் ச –ராத்தாந்தஸ்து
ந அவ்யக்த ஸப்தேந ப்ரதாநம் இஹ க்ருஹ்யதே -பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச இத்யாதி நா உபாஸநா நிர்வ்ருத்தயே வஸ்யேந்த்ரியத்வா பாதாநாய யே ஆத்ம சரீர புத்தி மந -இந்திரிய விஷயா -ரதி ரத சாரதி ப்ரக்ரஹ ஹய கோசரத்வேந ரூபிதா தேஷு வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதி நோச்யந்தே -தத்ர சேந்த்ரி யாதய ஸ்வ ஸப்தேநைவ க்ருஹ் யந்தே ரதத்வேந ரூபிதம் ஸரீரம் இஹ அவ்யக்த -பரிணாமத்வேந அவ்யக்த ஸப்தேந க்ருஹ்யத இதி நேஹ தத்தந்த்ர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாந கந்த அவ்யக்தாத் புருஷ பர இதி ச ந பஞ்ச விம்சக –அபி து ப்ராப்ய பரமாத் மைவ அந்தர்யாமி தயோபாஸநஸ் யாப் யுபாய பூத இதி ஸ இஹ வஸீ கார்ய காஷ்டாத்வேந புருஷாந்ந பரம் கிஞ்சித் இத் யுக்த
ஸூத்ரார்தஸ்து – ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் -ஆநுமாநிகம் ப்ரதாநம் ஜகத் காரணத்வேந மஹத-பரம் அவ்யக்தம் இத்யாம் நாயதே இதி சேத் தந்ந அவ்யக்த ஸப்தேந சாரீராக்ய ரூபகவிந்யஸ் தஸ்ய க்ருஹீதே பூர்வத் ராத்மாதிஷு ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு ரதத்வேந ரூபி தஸ்ய சரீரஸ்யாத்ராவ்யக்த ஸப்தேந க்ருஹீதேரித் யர்த -அதோ வஸீ கார்யத்வே பரா இஹ உச்யந்தே –தர்சயதி சைநமர்தம் வாக்ய சேஷ இந்திரியாதீநாம் நியமன பிரகாரம் ப்ரதிபாதயன் யச்சேத் வாங்மநஸீ இத்யாதி –1-

111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்–ஸூஷ்மம் -அவ்யக்த மேவ ஸரீராவஸ்தம் கார்யார்ஹாமித் யவ்யக்த சப்தேந சரீரமேவ க்ருஹ்யதே –2-

கதம் அவ்யக்த ஸப் தஸ்ய சரீரம் வாஸ்யம் பவதீத்யா சங்க்யாஹ
111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்
 –து ஸப்தோ அவதாரணே –ஸூஷ்மம் அவ்யக்தம் ஏவ அவஸ்தாந்தரா பன்னம் சரீரம் பவதி தத் அவஸ்தஸ் யைவ கார்யார் ஹாத் வாத் -யதி ரூபக விந்யஸ்தா ஆத்மாதய ஏவ வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதிநா க்ருஹ் யந்தே –2-

யதி ரூபக விந்யஸ்தாமேவ க்ரஹணம் கிமர்த்தம் அவ்யக்தாத் புருஷ பர இத்யத ஆஹ

112–தத் அதீநத்வ அதர்தவத் –புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் உபாஸந நிர் வ்ருத்தயே பவதி –புருஷோ ஹ்யந்தர்யாமீ ஸர்வமாத்மாதிகம் ப்ரேரயந் உபாஸந உபாயத்வேந வஸீ கார்ய காஷ்டா ப்ராப்யஸ் சேதி ஸா காஷ்டா ஸா பரா கதி இத்யுச்யதே –3-

தர்ஹி அவ்யக்தாத் புருஷ பர புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி புருஷ க்ரஹணம் கிமர்த்த மித்யத ஆஹ
112–தத் அதீநத்வ அதர்தவத் 
-அந்தர்யாமி ரூபேண அவஸ்தித புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் –ப்ரயோஜநவத் பவதி –அத உபாஸந நிர் வ்ருத்தவ் வஸீ கார்ய காஷ்டா பரம புருஷ இதி ததர்தம் இஹ ரூபக விந்யஸ்தேஷு பரிக்ருஹ்யமாணேஷு பரஸ்யாபி புருஷஸ்ய க்ரஹணம் –உபாஸன நிர்வ்ருத்த யுபாய காஷ்டா புருஷ ப்ராப்யஸ் சேதி -புருஷாந்ந பரம் கிஞ்சித் சா காஷ்டா ஸா பரா கதி இத்யுக்தம் –பாஷ்ய ப்ரக்ரியயா வா நேய மிதம் ஸூத்ரம் –பரம புருஷ சரீர தயா தத் அதீனத்வாத் பூத ஸூஷ்மம் அவ்யாக்ருத மர்தவதிதி ததிஹாவ்யக்த ஸப்தேந க்ருஹ்யதே நா ப்ரஹ்மாத்மகம் ஸ்வ நிஷ்டம் தந்த்ர ஸித்தம் இதி –3-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச—அத்ராவ்யக்தஸ்ய ஜ்ஜேயத்வா வசநாச் ச ந காபில மவ்யக்தம் –4-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச –யதி தந்த்ர ஸித்த ப்ரக்ரியே ஹாபி ப்ரதோ ததா அவ்யக்தாஸ் யாபி ஜ்ஜேயத்வம் வக்தவ்யம் -வ்யக்த அவ்யக்தஜ்ஞ விஞ்ஞாநாத் இதி ஹி தத் ப்ரக்ரியா -ந ஹ்யவ்யக்த மிஹ ஜ்ஜேயத்வேநோக்தம் அதஸ் சாத்ர ந தந்த்ர ப்ரக்ரியாகந்த –4-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத்யாரப்ய நிசாய்ய தம் இதி வததீதி சேந்ந தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே இத்யாதி நா பிராகிருத ப்ராஜ்ஜோ ஹி நிசாப்ய தம் இதி ஜ்ஜேய உச்யதே –5-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத் யுபக்ரம்ய மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யத இதி ப்ரதாநஸ்ய ஜ்ஜேயத்வம் அந்தர மேவ வததீயம் ஸ்ருதிரிதி சேத் தந்ந அஸப்தம் அஸ்பர்சம் இத்யாதி நா ப்ராஞ்ஞ–பரம புருஷ ஏவ ஹ்யத் ரோச்யதே ஸோ அத்வேந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே –இதி ப்ராஜ்ஞஸ் யைவ ப்ராக்ருதத்வாத் –5-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச–உபாஸ்யோபாஸகாநாம் த்ரயாணாமேவாஸ்மிந் ப்ரகரணே ஜ்ஜேயத்வேந உபந்யாஸ ப்ரஸ்நஸ் ச ந ப்ரதாநாதே –அத்யாத்ம யோகாதிகமேந தேவம் மத்வா இத்யாதி ரூப ந்யாஸ யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே அஸ்தித்யேகே இத்யாதி கஸ்ச ப்ரஸ்ந –6-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச –அஸ்மின் ப்ரகரணே யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே–இத்யாரப்யா ஸமாப்தே பரம புருஷ தத் உபாஸன உபாஸகா நாம் த்ரயாணாம் ஏவைவம் ஜ்ஜே யத்வேந உபந்யாஸ ப்ரஸ் நஸ் ச த்ருஸ்யதே ந ப்ரதானாதேஸ் தாந்த்ரிகஸ்யாபி –அதஸ் ச ந ப்ரதான மிஹ ஜ்ஜேயத்வேந யுக்தம் –6-

116–மஹத் வச் ச – புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்தாத் யதா ந தாந்த்ரிகோ மஹாந் ததா அவ்யக்தமபீதி -—7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

116–மஹத் வச் ச –யதா புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்த ஸாமாநாதி கரண்யாந் மஹச் சப்தேந ந தாந்த்ரிகம் மஹத் தத்த்வம் க்ருஹ்யதே ஏவம் அவ்யக்த சப்தேநாபி ந தாந்த்ரிகம் ப்ரதாநம் —7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
 -அஜா மேகாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் இத்யத்ர ந தந்த்ர ஸித்தா ப்ரக்ருதி காரணத்வேநோக்தா -ஜன்மா பாவ யோக மாத்ரேண ந தஸ்யா ஏவ ப்ரதீதி அர்வாக்பிலஸ் சமஸ இதிவத் ப்ரகரணே விசேஷ காபாவாத் -யதேதம் தச்சிர இதி ஹி சமஸோ விசேஷ்யதே யவ்கிக ஸப்தாத் விசேஷ ப்ரதீதிர் ஹி விசேஷ காபேஷா –8-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
 –ஸ்வேதாஸ் வதரே அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் ஸ ரூபா –அஜோ ஹ்யேகோ ஜூக்ஷமாணோ அநுஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய இத்யத்ர கிமஜா சப்தேந தந்த்ர சித்தா ப்ரக்ருதிரபி தீயதே உத ப்ரஹமாத் மிகேதி ஸம்சய –
தந்த்ர ஸித்தேதி பூர்வ பக்ஷ அஜாமேகா மித்யஸ்யா அகார்யத்வ ப்ரதீதே பஹ்வீநாம் ப்ரஜாநாம் ஸ்வா தந்தர்யேண காரணத்வ ஸ்ரவணாச் ச –ராத்தாந்தஸ்து -ந தந்த்ர ஸித்தாயா ப்ரக்ருதே ரத்ர க்ரஹணம் ஜனன விரஹஸ்ரவண மாத்ரேண தந்த்ர சித்தாயா ப்ராக்ருதே ப்ரதீதி நியமாபாவாத் -ந ஹி யவ்கிகாநாம் ஸப்தாநாம் அர்த ப்ரகரணாதிபிர் விசேஷ்யவ்யவஸ்தாபகைர் விநா விஸேஷே வ்ருத்தி நியம ஸம்பவ ந சாஸ்யாஸ் ஸ்வாதந்தர்யேண ஸ்ருஷ்டி ஹேதுத்வமிஹ ப்ரதீதிம் அபி து ஸ்ருஷ்டி ஹேதுத்வ மாத்ரம் தத் ப்ரஹமாத்மிகாயாஸ் ச ந விருத்தம் -அத்ர து ப்ரஹ்மாத் மிகாய ஏவ ஸாகாந்தர ஸித்தயா ஏதத் ஸ ரூப மந்த்ரோதிதயா ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸைவேதி நிஸ்ஸீயதே –
ஸூத்ரார்தஸ்து –நாயமஜா ஸப்தஸ் தந்த்ர ஸித்த ப்ரதான விஷய –குத –சமஸவத விசேஷாத் யதா அர்வாக்பிலஸ் சமஸ இதி மந்த்ரே சமஸ சாதனத்வ யோகேந ப்ரவ்ருத்தஸ்ய சமஸ சப்தஸ்ய சிரஸி ப்ரவ்ருத்தவ் –யதேதம் தச்சிர ஏஷ ஹ்யர்வாக்பிலஸ் சமஸ இதி வாக்ய சேஷ விஸேஷோ த்ருஸ்யதே ததா அஜாமேகாமித்யஜாஸப்தஸ்ய தந்த்ர ஸித்த ப்ரதாநே வ்ருத்தவ் விஸேஷா பாவான்ந தத் க்ரஹணம் ந்யாய்யம் –8-

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம ப்ரஹ்ம காரணிகா இயமஜா ததா ஹி ப்ரஹ்ம காரணிகயா ஏவ ப்ரதிபாதக மேதத்ஸ ரூப மந்த்ரம் ச தைத்திரீயா அதீயதே –அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் இத்யாரப்ய அதஸ் ஸமுத்ரா கிரயஸ் ச இத்யாதி நா ஸர்வஸ்ய ப்ரஹ்மண உத் பத்த்யா ததாத் மகத்வ ப்ரதி பாதந ஸமயே அஜாமேகம் இதி படந்தி –அதஸ் தத் ப்ரத்யபிஜ் ஞாநாதியம் ப்ரஹ்ம காரணிகேதி நிஸ்ஸீயதே –9-

அஸ்தி து ப்ரஹ்மாத் மிகாயா ஏவ க்ரஹணே விஸேக்ஷ இத்யாஹ

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம யஸ்யா உபக்ரம –காரணம் ஸா ஜ்யோதி ரூப க்ரமா –து சப்தோ அவதாரணே –ப்ரஹ்ம காரணிகைவைஷா –அஜா –ததா ஹ்ய தீயத ஏகே யதா ரூபோ அயம் அஜாயா ப்ரதி பாதகோ மந்த்ர ததா ரூபமேவ மந்த்ரம் ப்ரஹ்மாத் மிகாயா தஸ்யா ப்ரதிபாதக மதீயத ஏகே ஸாகிந –அணோர் அணீயான் மஹதோ மஹீயான் இத்யாதி நா ப்ரஹ்ம ப்ரதிபாத்ய ஸப்த ப்ராணா -ப்ரபவந்தி தஸ்மாத் சப்தார் சிக்ஷஸ் ஸமித ஸப்த ஜிஹ்வா -ஸப்த இமே லோகா பேஷு சரந்தி ப்ராணா குஹாஸ யாந்தி ஹிதாஸ் ஸப்த ஸப்த –அதஸ் ஸ முத்ரா கிர யஸ்ச ஸர்வ இத்யாதி நா ப்ரஹ்மண உத் பன்னத்வேந ப்ரஹ்மாத்ம கதயா ஸர்வ அநுசந்தான விதாந ஸமயே -அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் இதி ப்ரதி பாத்யமாநா ப்ரஹ்மாத்மிகை வேதி தத் ப்ரத்யபிஜ் ஞாநாதி ஹாப்யஜா ப்ரஹ்மாத் மிகை வேதி நிஸ்ஸீயதே –9–

119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத –கல்பநா –ஸ்ருஷ்டி யதா ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இதி -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதியாதி நா ஸ்ருஷ்ட் யுபதேஸாத் அஜாத்வ ப்ரஹ்ம கார்யத்வேயோர விரோதஸ் ச ப்ரலய காலே நாம ரூபே விஹாய அசித் வஸ்த்வபி ஸூஷ்ம ரூபேண ப்ரஹ்ம சரீர தயா திஷ்டதீத் யஜாத்த்வம் ஸ்ருஷ்டி காலே நாம ரூபே பஜமாநா ப்ரக்ருதி ப்ரஹ்ம காரணிகா –யதா ஆதித்யஸ்ய ஸ்ருஷ்டி காலே வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் கார்யத் வஞ்ச தஸ்யைவ ப்ரலய காலே மதவாதி வ்யபதேஸா நர்ஹ -ஸூஷ்ம ரூபேண அவஸ்தாநம கார்யத் வஞ்சமது வித்யாயாம் ப்ரதீயதே அசவ் வா ஆதித்யோ தேவமது நைவோதேதா நாஸ்தமேதா ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இதி தத் வத் —10-இதி சமஸ அதி கரணம் –2-

அஜாத்வம் ஜ்சோதி ரூப க்ரமாத்வம் ச கதமுப பத்யதே இத்யத ஆஹ
119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத
 –கல்பநா –ஸ்ருஷ்டி ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இத்யாதி தர்சநாத் -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதி ஹி ஸ்ருஷ்டிரி ஹோபதிஸ்யதே –ப்ரலய வேலாயா மேஷா ப்ரக்ருதி பரம புருஷ ஆஸ்ரயா காரண அவஸ்தாதி ஸூஷ்மாவயவா ஸக்தி ரூபேண அதிஷ்டதே தத் அவஸ்தாபி பிராயேண அஸ்யா அஜாத்வம் -ஸ்ருஷ்டி வேலாயாம் புநஸ் தச் சரீராத் ப்ரஹ்மண ஸ்தூல அவஸ்தா ஜாயதே தத் அவஸ்தா ஜ்யோதி ரூப க்ரமேதி ந கஸ்ஸித் விரோத மத்வாதிவத் –யதா ஆதித்யஸ் யைகஸ் யைவ கார்ய அவஸ்தாயாம் -அசவ் வா ஆதித்யோ தேவமது இதி வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் தஸ்யைவ –அத தத ஊர்த்வம் உதேத்ய நைவோதேதர நாஸ்த மேதைகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா நாம ரூப ப்ரஹாணேந காரண அவஸ்தாயாம் ஸூஷ்மஸ் யைகஸ் யைவ அவஸ்தா நாம் ந விருத்யதே தத் வத் –10-இதி சமஸ அதி கரணம் –2-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
 –வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா இத்யத்ர பஞ்ச விம்சதி சங்க்யோப சங்க்ரஹாதபி ந தாந்த்ரி காண்யேதாநி யஸ்மின் இதி யச் ஸப்த நிரதிஷ்ட ப்ரஹ்மா தாரதயா தேப்ய ப்ருதக் பாவாத் ஏதேஷாம் தத்த்வாதி ரேகாச் ச யச் ஸப்த நிர் திஷ்டமாகாஸஸ் சேதி த்வயமதிரிக்தம் -ஸம் க்யோப ஸம் க்ரஹாதபி இத்யபி ஸப்தான் நாத்ர பஞ்ச விம்சதி ஸம் க்யா ஸம் க்ரஹ திக் ஸம்க்யே ஸம்ஜ் ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷயோ அயம் பஞ்ச ஜநா இதி –பஞ்ச ஜநா நாம கேசித் தே பஞ்ச பஞ்ச ஜநா இத் யுச்யந்தே –ஸப்த ஸப்தர் க்ஷய இதிவத் –11-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
 –வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித –தமேவ மந்ய ஆத்மாநம் வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இத்யத்ர கிம் சாங்க்யோக்தாநி பஞ்ச விம்சதி தத்தவாநி ப்ரதிபாத்யந்தே உத நேதி ஸம்சய –தாந்யே வேதி பூர்வ பக்ஷ
பஞ்ச பஞ்ச ஐநா இதி ஹி பஞ்ச ஸங்க்யாவிஸிஷ்டா -பஞ்ச ஐநா பஞ்ச விம்சதிஸ் ஸம்பத் யந்தே -கதம் -பஞ்ச ஐநா இதி ஸமாஹார விஷயோ அயம் ஸமாஸ பஞ்ச பூல்ய இதிவத் –பஞ்சபிர் ஜனைரா ரப்தஸ் ஸமூஹ -பஞ்ச ஜன பஞ்ச ஜனீத்யர்த லிங்க வ்யத்யய சாந்தஸ பஞ்ச ஐநா இதி பஹு வஸனாத் ஸமூஹ பஹுத்வம் சாவகம்யதே -தே ச கதீத்ய பேஷாயாம் பஞ்ச பஞ்ச ஐநா இதி பஞ்ச சப்த விசேஷிதா -பஞ்ச ஜன ஸமூஹா இதை பஞ்ச விம்சதிஸ் தத்தவாநி பவந்தி மோஷாதிகாராத் தாந்த்ரி காண் யேவேதி நிஸ்ஸீயந்தே -ஏவம் நிஸ்ஸிதே சதி தமேவ மன்ய ஆத்மாநம் -வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி பஞ்ச விம்சக மாத்மாநம் ப்ரஹ்ம பூதம் வித்வான் அம்ருதோ பவதீதி –ராத்தாந்தஸ்து –யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஐநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித -இதி -யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரத்வாத் ததாதேயாநாம் தத்த்வாநாம் ப்ரஹ்மாத்மகத்வ மவகம்யதே
யச்சப்த நிர் திஷ்டம் ச தமேவ மன்ய ஆத்மாநம் -இதி தச்சப்தேந பராம்ருஸ்ய ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி நிர்தேசாத் ப்ரஹ்மேதி நிஸ்ஸீயதே -அதோ ந தாந்த்ரிக ப்ரசங்க –ஸூத்ரார் தஸ்து –
பஞ்ச பஞ்ச ஐநா இத்யத்ர பஞ்ச விம்சதி ஸங்க்யோப ஸங்க்ரஹா தபி ந தாந்த்ரி காணீமாநி தத்தவாநி யஸ்மின் நிதி யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரதயா தாந்த்ரிகேப்யோ நாநா பாவாத் -ஏஷாம் தத்தவாநாம் ப்ருதக் பாவாதித்யர்த -அதி ரேகாச் ச -தாந்த்ரி கேப்யஸ் தத்வாதி ரேக ப்ரதீ தேஸ் ச யஸ்மிந் நிதி நிர் திஷ்ட மதிரிக்த மஹாஸஸ் ச -ந ஸங்க்யோப ஸங்க்ரஹாத பீத்யபி சப்தேன ஸங்க்யோப ஸங்க்ரஹோ ந ஸம்பவ தீத்யாஹ –ஆகாஸஸ் ய ப்ருதங் நிர்தேசாத் –அத பஞ்ச ஐநா இதி ந ஸமாஹார விஷய அபி து திக் ஸங்க்யே ஸம்ஜ்ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷய பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா கேசித் தே ச பஞ்சை வேதி ஸப்த ஸப்தர்க்ஷய இதிவத் –11-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா ப்ராணாதய -பஞ்ச இந்த்ரியாணீதி ப்ராணஸ்ய பிராணமுத சஷுஷஸ் சஷுஸ் இத்யாதி வாக்ய சேஷா தவ கம்யதே சஷுஷஸ் ஸ்ரோத்ர ஸாஹ சர்யாத் ப்ராணான் ந ஸப்தா வபி ஸ்பார்ஸநா தீந்த்ரிய விஷயவ் –12-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா பஞ்ச பதார்த்த ப்ராணாதய இதி வாக்ய சேஷாதவ கம்யதே –பிராணஸ்ய பிராணமுக சஷுஷஸ் சஷு ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரமந்நஸ் யான்நம் மனஸோ யே மநோ விது இதி ப்ரஹ்மாத்மகா நீந்திரியாணி பஞ்ச பஞ்ச ஜனா இதி நிர் திஷ்டாநி ஜநநாச் ச ஜநா –12-

122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்ய பஞ்ச ந்தே –ஏகேஷாம் ஸாகிநாம் -காண்வா நாம் அந் நஸ் யாந்தம் இத்யஸதி தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரித் யுபக்ரம கதேந ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி ஜ்ஞாயந்தே ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி -ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேத் யுக்த்வா அநந்தரம் பஞ்ச பஞ்ச ஜநா இத் யுக்தே ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி கம்யதே-—13-இதி ஸம் க்யோப ஸங்க்ரஹாதி கரணம் –3-

காண்வ பாடே அந்த வர்ஜிதாநாம் சதுர்ணாம் நிர்தேசாத் பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா நீந்த்ரியாணீதி கதம் ஞாயத இத்யத் ராஹ
122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்யந்தே
 –ஏகேஷாம் -காண்வா நாம் வாக்ய சேஷே அஸத்யன்ன சப்தே வாக்யோபக்ரம கதேந தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரிதி ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி விஞ்ஞாயந்தே –கதம் -ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி ப்ரஹ்மணி ப்ரதீயதே –நிர் திஷ்டே ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேதி கே தே ப்ரகாஸகா இத்ய பேஷாயாம் –பஞ்ச பஞ்ச ஜநா –இத்ய நிர்ஜ் ஞாதா விசேஷா பஞ்ச ஸம்க்யா ஸம்க்யாதா ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி அவகம்யதே –அத யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித இதீந்த்ரி யாணி பூதாநி ச ப்ரஹ்மணி ப்ரதிஷ்டிதா நீதி ந தாந்த்ரி கதத் த்வ கந்த —13-இதி ஸம் க்யோப ஸம் க்ரஹாதி கரணம் –3-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
 –ஆகாஸாதி ஷு கார்ய வர்கேஷு காரணத்வேந ஸர்வத்ர வேதாந்த வாக்யேஷு அஸத்வா இதமக்ர ஆஸீத் தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இத்யாதிஷ்வ நிர்ஜ்ஞாத விஸேஷே ஷு ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் ஸ ஈஷத லோகாந்து ஸ்ருஜை இதி விசேஷ வாசி வாக்ய நிர் திஷ்டஸ்யைவோக்தே ந தாந்த்ரிகா வ்யாக்ருதாதி காரணவாத ப்ரசங்க –14-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
 –ஜகத் காரணவா தீநி வேதாந்த வாக்யாநி கிம் ப்ரதான காரண தாவதைகாந்தாநி -உத ப்ரஹ்ம காரண தாவதைகாந்தாநீதி ஸம்சய –ப்ரதான காரண தாவாதை -காந்தா நீதி பூர்வ பக்ஷ -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் இதி க்வசித் ஸத் பூர்விகா ஸ்ருஷ்டிராம் நாயதே அந்யத்ர அசதேவேதே மக்ர ஆஸீத் -அஸத்வா இதமக்ர ஆஸீத் ததா தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இதி -அவ்யாக்ருதம் ஹி ப்ரதாநம் –அத ப்ரதான காரணதாவாத நிஸ்ஸயாத்ததே காந்தான்யேவ –ராத்தாந்தஸ்து –ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இத் யுபக்ரம்ய தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத இத்யாதிஷு சர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாத நாத்தஸ் யைவ ப்ரஹ்மண காரண அவஸ்தாயாம் நாம ரூப விபாக சம்பந்தி தயா ஸத் பாவா பாவாதஸத வ்யாக்ருதாதி சப்தேந வ்யபதேஸ இதி ப்ரஹ்ம காரண தாவாதை காந்தான்யேவ-ஸூத்ரார்தஸ்து-ஆகாஸாதி பத சிஹ்நிதேஷு தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இத்யாதிஷு ஸர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாதநாத் ஸர்வேஷு ஸ்ருஷ்டி வாக்யேஷு யதா வியபதிஷ்டஸ் யைவ காரணத்வே நோக்தே ப்ரஹ்ம காரண தாவாதை காந்தாநி –யதா வியபதிஷ்டம் –ஸார்வஜ்ஞயாதி -யுக்ததயா அஸ்மாபிர் வ்யபதிஷ்டம் –14-

124-ஸமா கர்ஷாத் –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பூர்வநிர்திஷ்டஸ் யைவ ஸர்வஜ்ஞஸ்ய அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாச் ச ஸ ஏவேதி கம்யதே –தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இதி நிர் திஷ்டஸ் யைவ ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்யஷு இத்யத்ர ஸமா கர்ஷாத் ஏஷ ஏவா வ்யாக்ருத இதி நிஸ்ஸீயதே-அஸத வ்யாக்ருத சப்தவ் ஹி ததா நீம் நாம ரூப விபாகாபாவாதுப பத்யேதே –15–இதி காரணத்வ அதி கரணம் –4-

ததா ஸதி -அஸத்வா இதமக்ர ஆஸீத் இதி கிம் ப்ரவீதீத்யத ஆஹ
124-ஸமா கர்ஷாத்
 –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பஹுபவந ஸங்கல்ப பூர்வகம் ஜகத் ஸ்ருஜதோ ப்ரஹ்மணஸ் ஸர்வஞ்ஞஸ்ய-அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாத் காரண அவஸ்தாயாம் நாம ரூப சம்பந்தி த்வா பாவேந அஸதிதி ப்ரவீதி –ஏவம் தத்தேதம் தர்ஹ்யவ்யாக்ருதம் ஆஸீத் இத்யாதிஷு -ஸ ஏஷ இஹாநு ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்ய சஷு இத்யாதி பூர்வாபரபர்யா லோசநயா தத்ர தத்ர சர்வஞ்ஞஸ்ய ஸமாகர்ஷோ த்ரஷ்டவ்ய —15–இதி காரணத்வ அதி கரணம் –4-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத் 
-ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர கர்ம சப்தஸ்யை தச் சப்த ஸாமாநாதி கரண்யேந க்ரியத இதி வ்யுத்பத்த்யா ஜகத் வாசித்வாத் பரமேவ ப்ரஹ்ம வேதி தவ்யதயோபதிஷ்டம் -16-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத்
 –கௌஷீதகி நாம் ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர வேதி தவ்ய தயோபதிஷ்ட –சாங்க்ய தந்த்ர ஸித்த புருஷ உத பரமாத்வேதி ஸம்சய -புருஷ ஏவ ப்ரக்ருதி வியுக்த இதி பூர்வ பக்ஷ –யஸ்ய வைதத் கர்ம இதி கர்ம சப்தஸ்ய க்ரியத இதி வ்யுத் பத்த்யா ஜகத் வாசித்வாத் க்ருத்ஸ்னம் ஜகத் யஸ்ய கார்யம் ஸ பரமபுருஷ ஏவ வேதிதவ்யதயோப திஷ்டோ பவதீதி –ஸூத்ரமபி வ்யாக்யாதம் –16-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் ––ஏதைராத்ம பிர் புங்க்தே அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி இதி ச ஜீவாதி லிங்காந் ந பர இதி சேத் ஏதத் ப்ரதர்தன வித்யாயா மேவ பரிஹ்ருதம் -பூர்வாபர பர்யா லோசநயா ப்ரஹ்ம பரத்வே நிஸ்ஸிதே ததநு குண தயா நேயமந் யல்லிங்கமிதி –17-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் –ஏவமே வைஷ ப்ரஜ்ஞாத்மைதைராத்ம பிர் புங்க்தே -இத்யாதி போக்த்ருத்வ ரூப ஜீவ லிங்காத் –அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இதி முக்ய ப்ராண லிங்காச் ச நாயம் பரமாத்மேதி சேத் –தஸ்ய பரிஹார ப்ரதர்தன வித்யாயாமேவ வ்யாக்யாத –பூர்வாபர ப்ரகரண பர்யா லோசநாய பரமாத்ம பரமிதம் வாக்யமிதி நிஸ்ஸிதே சத்யன்ய லிங்காநி தத் அநுகுணதயா நேதவ்யாநீத் யர்த –
நநு -தவ் ஹ ஸூப்தம் புருஷ மீயது மாஜக்மது இதி ப்ராண நாம பிரா மந்த்ரணா ஸ்ரவண யஷ்டிகா தோத்தாபநாதிநா சரீர இந்த்ரிய ப்ராணாத்யதிரிக்த -ஜீவாத்ம ஸத்பாவ ப்ரதி பாதந பரமிதம் வாக்யமித்யவகம்யத இத்யாதி உத்தரம் படதி–17-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே-தவ் ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது இத்யாதி நா தேஹாதி ரிக்த ஜீவ ஸத்பாவ ப்ரதிபாதநம் ததரிக்த பரமாத்மா ஸத் பாவஜ்ஞாப நார்தமிதி க்வைஷ ஏதத் பாலகே புருஷோ அஸ யிஷ்ட இதி ப்ரஸ்நாத் அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி ஸதா ஸோம்ய ததா ஸம் பன்னோ பவதி இதி வாக்ய ஸமாநார்தகாத் ப்ரதி வசநாச் சாவகம்யதே–ஏகே வாஜஸநேயிநோ அபி ஏதத் ப்ரதி வசன ரூபம் வாக்யம் ஸ்பஷ்ட மதீயதே ச க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ் தஸ் மிஞ்சேதே இத் யந்தம் –—18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே -து ஸப்தஸ் சங்கா நிவ்ருத்த் யர்த –ஜீவ ஸங்கீர்த்தந மந்யார்தம் –ஜீவாதிரிக்த ப்ரஹ்ம ஸத்பாவ ப்ரதி போதநார்த மிதி ப்ரஸ்ன ப்ரதி வசநாப்யாமவ கம்யதே -ப்ரஸ்னஸ் தாவஜ் ஜீவ ப்ரதி பாதநாநந்தரம் க்வைஷ ஏதத் பாலாகே புருஷோ அசயிஷ்ட இத்யாதிக –ஸூஷுப்த ஜீவ ஆஸ்ரய விஷய தயா பரமாத்ம பர இதி நிஸ்ஸித–ப்ரதி வசநமபி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இத்யாதி கம் பரமாத்ம விஷயமேவ -ஸூப்த புருஷ ஆஸ்ரய தயா ஹி ப்ராண ஸப்த நிர் திஷ்ட பரமாத்மைவ ஸதா ஸோம்ய ததா ஸம்பன்னோ பவதி இத்யாதிப்ய -ஜைமிநி க்ரஹண முக்தஸ்யார் தஸ்ய பூஜ்யத்வாய -அபி சைவ மேகே -ஏகே வாஜஸநேயிந இதமேவ பாலாக்ய ஜாத ஸத்ரு ஸம் வாத கதம் ப்ரஸ்ன ப்ரதி வசன ரூபம் வாக்யம் பரமாத்ம விஷயம் ஸ்பஷ்ட மதீயதே க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ்தஸ் மிஞ்சேத இத்யே ததந்தம் —18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 -ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதியாதி நோபதிஷ்ட பரமாத்மா அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந இத்யாரப்ய –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஜ்ஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் இத்யாதி யேநேதம் ஸர்வம் விஜாநாதி இத்யந்தஸ்ய க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் –19-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 –ப்ருஹ தாரண்யகே மைத்ரேயீ ப்ராஹ்மணே ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே
ஸ்ரோ தவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸி தவ்ய இத்யாதவ் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட புருஷ தந்த்ர ஸித்த உத பரமாத்மேதி ஸம்சய –தந்த்ர ஸித்த பஞ்ச விம்சக ஏவேதி பூர்வ பக்ஷ பதி ஜாயா புத்ரவித்த மித்ர பஸ்வாதி ப்ரிய சம்பந்த்யாத்மா ந பரமாத்மா பவிதுமர்ஹாதி –ஸ ஏவ ஹி ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே –ராத்தாந்தஸ்து –ந பத்யாதீ நாம் காமாய பத்யாதய ப்ரியா பவந்தி ஆத்மநஸ்து காமாய இத்யுக்த்தவா -ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி நிர் திஷ்ட ஆத்மா ஜீவாதிரிக்தஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -யத் ஸங்கல்பாயத்தம் பத்யாதீ நாம் ஸ்வ சம்பந்திந ப்ரதி ப்ரியத்வம் ஸ ஹி ஸத்ய ஸங்கல்ப பரமாத்மா -ஆத்மஜ் ஞாநேந ஸர்வஞ்ஞாநாதயோ அபி வஹ்யமாணா பரமாத்மந்யேவ சம்பவந்தி
ஸூத்ரார்தஸ்து –வாக்யஸ்ய க்ருத்ஸ் நஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட ஆத்மா பரமாத்மைவ –அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -இதம் ஸர்வம் யதயமாத்மா -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய நிஸ்வஸிதமேதத்யத் ருக்வேத -யேநேதம் ஸர்வ விஜாநாதி தம் கேந விஜா நீயாத் –இதி ஹி க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யந்வயோ த்ருஸ்யதே -19-

அஸ்மின் ப்ரகரணே ப்ரகாரணாந்தர ச ஜீவ வாசி சப்தேந பரமாத்மநோ அபிதாநே தத் ஸாமாநாதி கரண்யே ச காரணம் மதாந்தரேணாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
 –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே இத்யாதி நா பரமாத்ம ஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய தத் கார்ய தயா தஸ்மாதநதி ரிக்தத்வம் ஞாபயிதும் ஜீவ சப்தேந பரமாத்மாபி தாந மிதி யாஸ்ம ரத்ய -மதம் -20-

ஏதேப்யோ பூதேப்யஸ் சமுத்தாய தாந்யே வாநுவிநஸ்ய தீதி ஜீவ லிங்கஸ்ய மதாந்தரேண நிர்வாஹமாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
 –ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய பரமாத்ம கார்ய தயா பரமாத்மநோ அநந்யோ ஜீவ இதி ஜீவ சப்தேந பரமாத்மநோ அபி தாநம் இத்யாஸ்ம ரத்ய -மதம் -20-

130-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –உத் க்ரமிஷ்யத முஃதஸியை பரமாத்மா ஸ்வரூப 

130-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யத இதி சரீராத் உத் க்ரமிஷ்யத அஸ்ய ஜீவஸ்ய பரமாத்ம பாவாஜ் ஜீவ சப்தேந பரமாத்மநோ அபிதானம் இத் ஒவ்டு லோமி ஆசார்யோ மேநே –21-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தர இத்யாதிநா ஜீவாத்மநி பரமாத்மந ஆத்ம தயா அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ மதம் ஸூத்ர காரஸ் ஸ்வீக்ருதவாநிதி மதத்யவ முபயந் யஸ்ய தத் விரோத்யேததபிதாநாதன்யஸ்யாநபிதா நாச்ச நிஸ்ஸீயதே – –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் இத்யாதி பிர் ஜீவாத்மன் யந்தராத்ம தயா பரமாத்மநோ அவஸ்திதே -ஜீவாத்ம சப்தஸ்ய பரமாத்மநி பர்யவஸாநாஜ் ஜீவாத்ம சப்தேந பரமாத்மந அபிதாந மிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ ஸூத்ர காராபிமத மித்யவ கம்யதே த்ரயாணாம் அந்யோன்ய விரோதாத் இத பரம வசநாச் ச –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச 
-ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஜகத் உபாதாந காரணம் அபி பரம் ப்ரஹ்ம ந நிமித்த மாத்ரம் ஸ்தப்தோ அஸ்யுத தமாதேஸம ப்ராஷ்ய யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இதி யேநா தேஷ்ட்ரா நிமித்த பூதேந விஜ்ஞ்ஞாதேந சேதன அசேதநாத் மகம் க்ருத்ஸ்நம் ஜகத் விஜ்ஞாதம் பவதீதி ஆதேஷ்ட்ரு விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞா ததுபபாதந ரூபம்ருத் கார்ய த்ருஷ்டாந்தாநு பரோதாத் ஆதிஸ்யதே அநேநே த்யாதேஸ இத்யாதேச சப்தே நாதேஷ்டாபி தீயதே –ஆதேஸ ப்ரஸாஸநம் ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ இத்யாதி ஸ்ருதே –23-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச -ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் 
–பரம் ப்ரஹ்ம கிம் ஜகதோ நிமித்த காரண மாத்ரம் உதோ பாதான காரணமபீதி ஸம்சய –நிமித்த காரண மாத்ரமிதி பூர்வ பக்ஷ -ம்ருத் குலாலாதவ் நிமித்த உபாதாநயோ பேத தர்ச =நாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி பிர் பேத ப்ரதி பாதநாத் ப்ரஹ்மணோ அவிகாரத்வ ஸ்ருதி விரோதாச் ச –ராத்தாந்தஸ்து –யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி ப்ரஹ்ம விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதி ஞானான் யதாநுப பத்த்யா யதா ஸோம்யைகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண் மயம் இதி ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தேந ததுப பாத நாச்ச ஜகத் உபாதான காரணம் அபி ப்ரஹ்மைவேதி விஞ்ஞாயதே –ப்ரமாணாந்தரா வசித ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம் யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணஸ் சர்வஞ்ஞஸ்ய ஸர்வ சக்தே கார்ய காரண உபயா அவஸ்தாயாம் அபி ஸ்வ சரீர பூத சித் அசித் பிரகார தயா அவஸ்திதஸ்யைகஸ்யைவ நிமித்தத்வம் உபாதாநத்வம் சாவிருத்தம்
சரீர பூதா சித் வஸ்து கதோ விகார இதி கார்ய அவஸ்தா வஸ்திதஸ்யாபி சரீரண பரமாத்மந அவி காரித்வம் ஸித்த மேவ -சித் அசித் வஸ்து சரீரஸ்ய ப்ரஹ்மண ஏவோ பாதா நத்வே அபி ப்ரஹ்மண்ய புருஷார்த்த விகாராஸ்பர்ஸ ப்ரதர்சனாய ஹி அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் தஸ்மிம்ஸ் சான்யோ மாயயா சந்நிருத்த இதி வ்யபதேஸ ப்ரதிஞ்ஞாத்ருஷ்டாந்தாநு ப ரோதாத் உபா தாநம் ச ப்ரஹ்மைவேதி ஸூத்ரார்த –23-

133-அபித்யோபதேஸாச் ச –ததைஷத பஹுஸ்யாம் பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி நிமித்த பூதஸ்யேக்ஷிது விசித்ர சித் அசித் ரூபேண ஜகதாகாரே ணாத்மநோ பஹு பவந சங்கல்போப தேஸாச் ச உபாதாநம பீதி விஜ்ஞாயதே –24-

133-அபித்யோபதேஸாச் ச –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி ஸ்ரஷ்டுர் ப்ரஹ்மணஸ் ஸ்வஸ்யைவ ஜகதா காரேண பஹு பவந சிந்தநோபதேஸாச் ச ஜகத் உபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி நிஸ்ஸீயதே –24-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயன் இதி யுபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி ஸ்வ சப்தேந உபயாம்நா நாச் ச -25-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –கிம்ஸ் வித்வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் இத்யாதி நா ஜகத் உபாதாந நிமித்தாதவ் ப்ருஷ்டே ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் இத் யுபாதாநம் நிமித்தம் சோபயம் ப்ரஹ்மைவேதி ஹி ஸாஷாதாம் நாயதே -அதஸ் சோபயம் ப்ரஹ்ம -25-

135-ஆத்ம க்ருதே–ஸோ அகாமயத இதி நிமித்த பூதஸ்ய ஸ்வ ஸ்யைவ ஜகதாகாரேண க்ருதே ததாத்மாநம் ஸ்வயம குருத இத்யுபதிஸ்யமாநாயா பரம புருஷோ ஜகந்நிமித்தம் உபாதாநம் சேதி விஜ்ஞாயதே –26-

135-ஆத்ம க்ருதே -ததாத்மாநம் ஸ்வயமகுருத இதி ஸ்ரஷ்டுராத்மந ஏவ ஜகதாகாரேண க்ருதிருபதிஸ்யதே -அதஸ் சோபயம் ப்ரஹ்மைவ –நாம ரூப பாவாப்யா மேகஸ்ய கர்ம கர்த்ரு பாவோ ந விருத்த –26-

பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத்ய ஸத்ய ஸங்கல்பத் வாதே தத் விபரீத அநந்த அபுருஷார்த்த ஆஸ்ரய ஜகதாகாரேண ஆத்ம க்ருதேஸ் ச அவிரோத கதமித்யா சங்க்யாஹ
136-பரிணாமாத் -அத்ரோபதிஸ்ய மாநாத் பரிணாமாத் ததவிரோத ஏவ 
-அவிபக்த நாம ரூபாதி ஸூஷ்ம சிதசித் வஸ்து சரீரக காரண அவஸ்த பரம புருஷஸ் ஸ்வய மேவ ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயே இது விபக்த நாம ரூப சிதசித வஸ்து சரீரகோ பவேயம் இதி சங்கல்ப இதம் ஸர்வ மஸ்ருஜத யதிதம் கிம்ச இதி ஸ்வ சரீர பூத மதி ஸூஷ்மாம் சித் அசித் வஸ்து ஸ்வஸ்மாத விபஜ்ய தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் இதி ஸ்வஸ்மாத விபக்தே சிதசித வஸ்துநி ஸ்வய மேவாத்மதயா அநு ப்ரவிஸ்ய ஸச்ச த்யச்சா பவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச அநிலயநம் ச விஞ்ஞானம் ச அவிஞ்ஞானம் ஸத்யம் சாந்ருதம் ச ஸத்ய மபவத் இதி ஹி ஸ்வஸ்ய பஹு பவந ரூப பரிணாம உபதிஸ்யதே -அதோ ந கஸ்ஸித் விரோத -அவிபாகா வஸ்தாயாமபி ஜீவஸ் தத் கர்மா ச ஸூஷ்ம ரூபேண திஷ்டநீதி வஹ்யதி ந கர்மா விபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யுபலப்யதே ச இதி –27-

யத் யாத்மாந மேவ ப்ரஹ்ம ஜகதாகாரம் கரோதி தர்ஹி ப்ரஹ்மணோ அபஹத பாப்மத்வாதிகமநவதிகாதிஸய –ஆனந்த ஸ்வரூபத்வம் ஸர்வஞ்ஞத்வம் இத்யாதி ஸர்வம் விருத்யதே அஞ்ஞத்வ அஸூகித்வ கர்ம வஸ்யத்வாதி விபரீத ரூபத்வாத் ஜகத இத்யத உத்தரம் படதி

136-பரிணாமாத் –அஜ்ஞ ப்ரஹ்ம விவர்தவாதே -ஹி தத் பவத்யேவ -அஜ்ஞாநஸ்ய தத் கார்ய ரூபா நந்தா புருஷார் தஸ்ய ச வேதாந்த ஜன்யஜ் ஞான நிவர்த்யஸ்ய ப்ரஹ்மண்யேவா ந்வயாத் ததா ஸாஸ்த்ரஸ்ய ப்ராந்த ஜல்பிதத் வாபாதாச் ச -அவி பக்தா நாம ரூப ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கஸ்ய ப்ரஹ்மணோ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரத்வேந பரிணாமோ ஹி வேதாந்தேஷுபதிஸ் யதே -தத்தேதம் தர்ஹ்யயாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இத்யேவ மாதிபி -அபுருஷார்த்தாஸ் ச விகாராஸ் சரீர பூத சித் அசித் வஸ்து கதா –காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச ஆத்மபூதம் ப்ரஹ்ம அபஹத பாப்மத்வாதி குணகமேவ -ஸ்தூல ஸூஷ்ம அவஸ்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மத்வம் ய ப்ருதிவ்யாம் திஷ்டன் யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாரப்ய யஸ்யாவ்யக்தம் சரீரம் யஸ்யாஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யுஸ் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ இத்யேவமாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் அதஸ் ஸர்வம் அநவத்யம் –27-

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் இத்யாதி ஷு யோநிஸ்ஸகீயதே அத்ஸ் ஸ்சோபாதாநமபி –-28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் பரி பஸ்யந்தி தீரா கர்தாரம் ஈஸம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் இத்யாதிஷு ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய பரம புருஷ யோநித்வேந கீயதே -ஹி ஸப்தோ ஹேதவ் யஸ்மாத் யோநிரிதி கீயதே தஸ்மாச் சோபாதாநமபி ப்ரஹ்ம –யோநி ஸப்தஸ் சோபாதாந காரண பர்யய –28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
–ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நா ஏததந்தேந ந்யாயேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா த்விருக்திரத்யாய பரிஸமாப்தித்யோதநாய -29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
 –யதோ வா இமாநி –இத்யாதிஷுதா ஹ்ருதேஷு வாக்யேஷு ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நோக்த ந்யாய கலாபேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா –பதாப்யாஸோ அத்யாய –பரி ஸமாப்தித்யோத நார்த –29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம் –

March 6, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார தீப உத்த்ரியதே

——————————

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர –த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம்-ஆதார பரம புருஷ தமே வைகம் ஜாநதாத்மாநம் இத்யாத்ம ஸப்தாத் -நிருபாதிக ஆத்மத்வம் ஹி பரம புருஷஸ்யைவ –அம்ருதஸ்யைக்ஷ ஸேதுரிதி ததேவ த்ரடயதி –பஹுதா ஜாயமாந இதி பரத்வம் ந நிவாரயதி அஜாயமாநோ பஹுதா விஜாயதே இதி கர்ம பிரஜாயமாநஸ்யைவ ஆஸ்ரித வாத்சல்யாத் சந்ததோ ஜனனம் தஸ்ய ஹி ஸ்ரூயதே –1-1-3-

1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம் கிம் ஜீவ உத பரமாத்வேதி ஸம்சய ஜீவ இதி பூர்வ பக்ஷ மந ப்ரப்ருதீ ந்த்ரியாதார்த்தவ ஸ்ருதே உத்தரத்ர நாடீ சம்பந்தாத் ஜாயமாநத்வ ஸ்ருதேஸ் ச –ராத்தாந்தஸ்து -நிருபாதிக ஆத்மத்வ அம்ருத சேது த்வயோ -பரமாத்ம தர்மயோ ஸ்ரவணாத் பரமாத்மை வாயம் –ஸர்வம் நியந்தருதயா ஆப்நோ தீதி ஹ்யாத்மா –அம்ருதஸ்ய ப்ராபக தயா சேதுஸ் ச ஸ ஏவ நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வஞ்ச — ஸந்ததம் ஸிராபிஸ் து லம் பத்யாகோஸ ஸந்நிபம் அஜாயமாநோ பஹுதா விஜாயதே இத்யாதி ஷு ஸர்வ சமாஸ்ரயணீயத்வாய அஜஹத் ஸ்வ பாவஸ் யைவ பரமாத்ம நோ அபி த்ருஸ்யதே இதி ஸூத்ரார் தஸ்து –த்யு ப்ருதிவ்யாதீநாமாயதநம் பரமாத்மா ஸ்வ ஸப்தாத் –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச புண்ய பாப விநிர் முக்தாநாம் ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பர –2-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச பந்தான் முக்தஸ்ய ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பரமாத்மா –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –யதா ந பிரதாநமதச் ஸப்தாத் –ததா ந ப்ராண ப்ருத பீத் யர்த –3-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –ஆநு மாநம் –அநுமாந கம்யம் ப்ரதாநம் யதா தத் வாசி ஸப்தா பாவாத் ததிஹ ந க்ருஹ்யதே –ததா ப்ராண ப்ருத பீத் யர்த –அதஸ் சாயம் பரமாத்மா –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ப்ரத்யகாத்மநோ பேதேந வ்யபதேசாச் சாயம் பர –4-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ஜீவாத் பேதேந வ்யபதேசாச் சாயம் பரமாத்மா –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி பரஸ்ய ஹீதம் ப்ரகரணம் –5-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி நா பரமாத்மந ஏவ ப்ரக்ருதத்வாத் -5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி ஜீவஸ்ய கர்மபலாதந மபிதாய -அநஸ்நதோ தீப்யமா நஸ்ய ஸ்தித்யபிதா நாச்சாயம் பரமாத்மா- 6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1–

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி கர்மபலமநஸ்நத -பரமாத்மநோ தீப்ய மாந தயா ஸ்திதே -ஜீவஸ்ய கர்ம பரவசதயா தத் பலாதநாச்ச பரமாத்மநோ ஜீவாத் பேதாவகமாத் அம்ருத ஸேதுர்த் யுப்வாத்யாயதநம் ந ஜீவ -அத்ருஸ்யத்வாதி குணக இத்யநேந பரமாத்மத்வே ஸ்தாபிதே அபி நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வ லிங்காத் யா அவாந்தர ப்ரகரண விச்சேதா சங்கா ஸா நிராக்ருதா -த்யுப் வாத்யாயதநமிதி வைஸ்வா நரஸ்ய த்ரை லோக்ய சரீரத்வாதிநா பரமாத்மத்வ நிர்ணய இதி மத்யே வைஸ்வாநர வித்யா நிரூபிதா —6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
 –ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம் பூமைவ ஸூகம் இத் யுக்த்வா பூம்நஸ் ஸ்வரூபமாஹ யத்ர நான்யத் பஸ்யதி நாந்யஸ் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூமா இதி –யஸ்மின் ஸூகே அநு பூயமாநே தத் வ்யதிரிக்தம் கிமபி ஸூகத்வேந ந பஸ்யதி ந ஸ்ருணோதி ந விஜாநாதி ஸ பூமேத் யுச்யதே அத யாத்ரான் யத் பஸ்யதி அந்யஸ் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி ததல்பம் இதி வசநாத் –ததா ச மஹா பாரதே
திவ்யாநி காம சாராணி விமாநாநி சபாஸ் ததா
ஆ க்ரீடா விவிதா ராஜன் பத்மின்யஸ் சாம லோதகா
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந –இதி
ஏஷ து வா அதி வததி

ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதிவததி இதி ப்ரஸ்து தஞ்சாதி வாதித்வம் ஏவமேவ ஸமஞ்ஜஸம் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்ய புருஷார்தாதிக்ய வாதித்வம் -ததல்பம் இத்யல்ப ப்ரதியோகித்வேந பூமா இத்யுக்த பிரகார வைபுல்யாஸ்ரய ஸூக ரூப வாஸீ –அயம் பூம ஸப்த வ்யபதிஷ்ட பரமாத்மா ஸம் ப்ரஸாதாதத் யுபதேஸாத் ஸம் ப்ரஸாத -பிரத்யகாத்மா அத யா ஏஷ ஸம் ப்ரஸாத இத்யாதி ஸ்ருதே -ஏஷ து வா அதி வததி யஸ் சத்யேந இத்யாதி நா ப்ராண ஸப்த நிர் திஷ்டாத் ப்ரத்யகாத்மந ஊர்த்வமர் தாந்தரத்வேநாஸ்யோபதேஸாத் –7-

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத் 
–சாந்தோக்யே -யத்ர நான்யத் பஸ்யேதி நானயச் ஸ்ருணோதி நான்யத் விஜாநாதி ஸ பூமா இத்யத்ர பூம ஸப்த நிர்திஷ்டோ நிரதிசய வை புல்ய விஸிஷ்ட ஸூக ஸ்வரூப கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாத்மேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ –தரதி ஸோகமாத்மவித் இதி ப்ரக்ரம்ய நாமாதி பரம் பர யோத்தரோத்தர பூயஸ்த்வேந ப்ரஸ்ன பிரதி வசனாப்யாம் ப்ரவ்ருத்தஸ் யாத்ம யுபதேஸஸ்ய ப்ராண ஸப்த நிர் திஷ்டே ப்ரத்யகாத்மநி ஸமாப்த்தி தர்சநாத் ப்ரத்யகாத்மந ஏவ பூமஸம் ஸப்த நமிதி நிஸ்ஸீயதே –ராத்தாந்தஸ்து -யத்யபி ப்ரஸ்ன பிரதிவசநாப்யாம் உத்தர உத்தர பூயஸ்த்தவ வசனம் ப்ராணே பர்யவஸ்திதம் ததாபி பிராணாவேதிநோ அதிவாதித்தவம் உக்த்வா -ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதி வததி இதி து சப்தேன உபாஸக பேதம் ப்ரதிபாத்ய -தஸ்ய ஸத்ய உபாஸகஸ்ய பூர்வஸ்மாதாதிக்ய உபதேசாத் ஸத்ய சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ பூம விசிஷ்டம் இதி –ஸூத்ரார்தஸ்து -பூம குண விசிஷ்டம் பரம் ப்ரஹ்ம ஏவ ஸம் ப்ரசாதாதத் யுபதேசாத் –ஸம் ப்ரஸாத –ப்ரத்யகாத்மா ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத்ஸமுத்தாய பரம் ஜ்யோதி ரூப ஸம் பத்ய இத்யாதி உபநிஷத் ப்ரஸித்தே –ஏஷ து வா அதி வததி இதி ப்ரத்யகாத்மநோ அதிகதய உபதேசாத் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்யாதிக்ய வாதித்வம் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ ––ஸ பகவ கஸ்மின் ப்ரதிஷ்டித ஸ்வே மஹிம்நி இத்யாதா வுபதிஷ்டாநாம் ஸ்வ மஹிம ப்ரதிஷ்டித்தடவ -ஸர்வ காரணத்வ ஸர்வாத்மகத்வாதி தர்மாணாம் பரஸ்மின் நேவ உப பத்தேஸ் ச பூமா பர –8-இதி பூமாதி கரணம் –2-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ –ஸ்வ மஹிம ப்ரதிஷ்டிதத்வ -ஸர்வாத்மத்வஸர்வ உத்பத்தி ஹேதுத்வா தீநாம் பூம்நி ஸ்ரூய மாணாநாம் தர்மாணாம் பரஸ்மின் நேவ ப்ராஹ்மண் யுப பத்தேஸ் ச பூமா பரம் ப்ரஹ்ம ஏவ -8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–ஏதத் வை ததஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு இத்யாதிநா அபிஹித மக்ஷரம் பரம் ப்ரஹ்ம அக்ஷரம் அம்பராந்த த்ருதே யதூரத்வம் கார்கி திவ இத்யாரப்ய ஸர்வ விகாராதாரதயா நிர் திஷ்ட ஆகாஸ கஸ்மின் நோதஸ் ச ப்ரோதஸ் ச இதி ப்ருஷ்டே ஏதத்வை ததஷரம் இதி நிரதிஷ்டஸ் யாஷரஸ்ய வாயு மதம் பராந்த த்ருத ஸர்வ விகாராதாரோ ஹ்யய மஹாஸ வாயுமதம் பராந்த காரணம் ப்ரதாநம் தத் தாரகம் பரம் ப்ரஹ்ம –9-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
 –வாஜிநாம் கார்கி ப்ரஸ்நே ஸ ஹோவாசைதத்வை தத் அக்ஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்த்ய ஸ்தூல மநண் வஹ்ரஸ்வம தீர்கமலோஹிதமஸ் நேஹ மச்சாயம் இத்யத்ர அக்ஷர ஸப்த நிர் திஷ்டம் ப்ரதாநம் -ஜீவோ வா உத பரமாத்மா இதி ஸம்சய ப்ரதாநம் ஜீவோ வா ந பரமாத்வேதி பூர்வ பக்ஷ –கஸ்மின் து கல்வாகாச ஓதஸ் ச கல் வாகாச ஓதஸ் ச ப்ரோதஸ் ச இத் யுக்தே ஆகாசாதார தயோச்ய மாந மக்ஷரம் ப்ரதாநம் ஜீவோ வா ப்ரதா நஸ்ய விகாரா தாரத்வாஜ் ஜீவஸ்யா சித்வஸ்த்வாதாரத்வாத் ந பரமாத்வேதி –ராத்தாந்தஸ்து -யதூர்த்வம் கார்கி திவ இத்யாரப்ய காலத்ரய வர்திந க்ருத்ஸ்னஸ் யாதார தயா நிர் திஷ்ட ஆகாஸோ அவ்யாக்ருதமேவ ந வாயுமாநாகாஸ –தத பஸ்ஸாத் கஸ்மின்நு கல் வாகாச ஓதஸ்ஸ ப்ரோதஸ்ஸ இதி ப்ருஷ்டே ததா தராத யோஸ்யமாநமேதத் அக்ஷரம் ந ப்ரதாநம் பவிதும் அர்ஹாதி –நாபி ஜீவ -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ர மஸவ் வித்ருதவ் திஷ்டத இத்யாரப்ய ப்ரஸாஸ நாத் சர்வாதாரத்வ ஸ்ருதே –ஸூத் ரார் தஸ்து -ஏதத் வை ததஷரம் கார்கி இதி நிர்திஷ்டம் அக்ஷரம் பரமாத்மா அம்பராந்தத்ருதே –அம்பரம் வாயுமாநாகாஸ அம்பராந்த அம்பர பார பூதம் அம்பர காரண மிதி யாவத் காரணாபத்தி ரேவ ஹி கார்யஸ் யாந்த ஸ சாம்பராந்த அவ்யாக்ருதம் ப்ரதாநம் தஸ்ய த்ருதே –தாரணாத் –அவ்யாக்ருத்ஸயாபி த்ருதே ரக்ஷரம் பரமாத்மைவேத் யர்த –9-

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி –இத்யாதிநா -ப்ரக்ருஷ்டாஜ்ஞயா க்ரியமாணா ஸ்ரூயதே அத இதமக்ஷரம் ப்ரத்யமாத்மா ச ந பவதீத் யர்த –10-

ஏவம் தர்ஹி ஜீவோ பவிதும் அர்ஹாதி தஸ்ய ப்ரதான த்ருத் யுப பத்தேர் இத்யா ஸங்க்யாஹா

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் இதி ப்ரஸாஸ நாச்ச் ரூயதே -ப்ரஸாஸநம் -ப்ரக்ருஷ்டம் ஸாஸனம்அப்ரதிஹதாஜ்ஞா –ந சா ப்ரதி ஹதாஜ்ஞயா க்ருத்ஸ் நஸ்ய சித் அசித் ஆத்மகஸ்ய ஜகதோ த்ருதிர் ஜீவே உப பத்யதே –அதோ ந ஜீவ –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா பரமாத்மந அந்யத்வம் ஹ்யஸ்யா ஷரஸ்ய வ்யாவர்தயதி வாக்ய சேஷ -அதஸ் ச பர ஏவ —11-அக்ஷர அதிகரணம் –3-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அஸ்ய அக்ஷரஸ்ய பரம புருஷாதன் யத்வம் வ்யாவர்தயதி வாக்ய சேஷ –அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா ஸர்வைரத்ருஷ்ட மேததக்ஷரம் ஸர்வஸ்ய த்ரஸ்ட்ரித்யாதி ப்ரதான ஜீவா ஸம்பாவ நீயார்த ப்ரதிபாதநாத் —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
 –ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய-ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர -உத்தரத்ர தமோங்காரேணைவாயநே நாந்வேதி இதி வித்வான் யத் தச் சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி பரம புருஷ அசாதாரண தர்ம வ்யபதேஸாத் யத் தத் கவயோ வேத யந்தே இதி ததீயஸ் தாநஸ்ய ஸூரிபிர் த்ருஸ்யத்வ வ்யபதேஸாச் ச 12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
 –ஆதர்வணிகாநாம் ஸத்ய காம ப்ரஸ்நே ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய –ஸ ஸாம பிருந்நீயதே ப்ரஹ்ம லோகம் ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர த்யாதீ ஷதி கர்மதயா வ்யபதிஷ்ட பரம புருஷ கிம் ஹிரண்ய கர்ப –உத பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம இதி ஸம்சய –ஹிரண்ய கர்ப இதி பூர்வ பக்ஷ -பூர்வத்ரைக மாத்ரம் ப்ரணவம் உபாஸீநஸ்ய மனுஷ்ய லோக ப்ராப்திம் பலம் த்விமாத்ரம் உபாஸீநஸ் யாந்தரிக்ஷ லோக ப்ராப்திம் ச பலமபிதாயா நந்தரம் ய புந ரேதம் த்ரி மாத்ரேண இதி த்ரி மாத்ரம் ப்ரணவம் உபாஸீ நஸ்ய பலத்வே நோச்யமாந ப்ரஹ்ம லோகஸ்த புருஷே க்ஷண கர்ம பூதஸ் சதுர்முக ஏவேதி விஞ்ஞாயதே மனுஷ்ய லோகாந்தரிக்ஷ லோக ஸாஹசர்யாத் ப்ரஹ்ம லோகோ அபி ஷேத்ரஞ்ஞ லோக இதை நிஸ்ஸயாத்
ராத்தாந்தஸ்து –பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷதே இத் ஈஷதி கர்மதயா நிர் திஷ்ட புருஷ விஷயேஸ் லோகே –தமோங்காரேணை வாய நேநாத்வேதி வித்வான் யத் தச்சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி நிருபாதிக சாந்தத்வ அம்ருதத்வாதி வ்யபதேசாத் பரமாத்மை வாயமிதி நிஸ்ஸீயதே -ஏவம் பரமாத்மத்வே நிஸ்ஸிதே ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தத் ஸ்தானமேவ அபிததாதி இத்யவகம்யதே
தத் விஷய தயோதாஹ்ருதே ச ஸ்லோகே யத் தத் கவயோ வேதயந்த -தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய –இத்யேவமாதிபிஸ் ஸூரிபிர் த்ருஸ்யத்வ வசனம் ததேவ த்ரபயதி -ஸூத்ரார் தஸ்து –ஈஷதி கர்ம ஸ பரமாத்மா த்யாய தீஷத்யோ ரேக விஷயத்வேந த்யாயதி கர்மா அபி ஸ ஏவேத் யர்த -வ்யபதேசாத் -தத் விஷய கதயா சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரம் சேதி பரமாத்ம தர்மாணாம் வ்யபதேசாத் —12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய 
–-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர தஹராகாஸ நிர் திஷ்ட பரமாத்மா –உத்தரேப்ய வாக்யகதேப்ய தத் அசாதாரண தர்மேப்ய உத்தரத்ர தஹர ஆகாஸஸ்ய ஸர்வாதார தயா -அதி மஹத் த்வமபிதாய ஏதத் ஸத்யம் ப்ரஹ்மாக்யம் புரம் இதி நிர் திஸ்ய தஸ்மிந் ப்ரஹமாக்யே தஹர ஆகாஸே காமாஸ் ஸமாஹிதா இத் யுக்தே கோ அயம் தஹராகாஸ கே ச காமா –இத்யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப இத்யந்தேந தஹாராகாஸ ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத்வாதய தத் விசேஷண பூத குணா இதி ஹி ஜ்ஞாபயதி
தஹரோ அஸ்மின் நந்தராகாஸஸ் தஸ்மிந் யதந்த ததன்வேஷ்டவ்யம் இத்யத்ர தஹாராகாஸ தத் அந்தர் வர்தி ச யத் ததுபயம் அன்வேஷ்டவ்யமித் யுக்த மிதி விஞ்ஞாயதே அத ய இஹாத்மாநமநுவித்ய வ்ரஜந் த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் இதி ஹி வ்யஜ்யதே –13-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய –
-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர ஹ்ருதய புண்டரீக மத்ய வர்தீ தஹர ஆகாஸஸ் ஸ்ரூயமாண கிம் பூதகாச -உத ஜீவ அத பரமாத் வேதி ஸம்சய –ப்ரதமம் தாவத் பூதாகாஸ இதி யுக்தம் ஆஸ்ரயிதும் இதி பூர்வ பக்ஷ
ஆகாஸ சப்தஸ்ய பூதாகாஸோ ப்ரஸித்தி ப்ராசுர்யாத் ஆகாஸ அந்தர்வர்த்திநோ அந்யஸ்ய அன்வேஷ்ட வ்யதா ப்ரதீதேஸ் ச –ராத்தாந்தஸ்து –கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ்டவ்யம் இதி சோதிதே யாவான் வா அயமாகாச இத்யாராப்ய ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் இத் யந்தேந தஹர ஆகாஸஸ் யாதி மஹத்த்வ ஸர்வ ஆஸ்ரயத்வ அஜரத்வ சத்யத்வாத்ய பி தாய அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா இத்யாகாஸ அந்தர் வர்திநோ அன்வேஷ்டவ்யா காமா இதி ப்ரதிபாத்ய கோ அயம் தஹர ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட -கே தத் ஆஸ்ரயா காமா இத் யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய ஸங்கல்ப இத் யந்தேந ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத் வாதயஸ்தத் விசேஷண பூதா இதி ப்ரதிபாத யத் வாக்யம் அபஹத பாப்மத்வாதி விஸிஷ்ட பரமாத்மாநமாஹ –உபக்ரமே ச அன்வேஷ்ட வ்யதயா ப்ரதிஜ்ஞாத ஆகாஸ ஆத்மா ஏதத் விசேஷண பூதா அபஹத பாப்மத் வாதய காமா இதி வாக்யம் ஞாபயத் அத ய இஹாத்மாந மநுவித்ய வ்ரஜந்த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி இத் யுப ஸம்ஹரதி -அதோ அயம் தஹர ஆகாஸ அபஹத பாப்மத் வாதி விஸிஷ்ட பரமாத் மேதி நிஸ்ஸீயதே ந பூத ஆகாசாதிரிதி -ஏவம் தர்ஹ் யஸ்மிந் வாக்யே அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இதி ப்ரத்யகாத்ம ப்ரதீதே -தஸ்ய சோத்தரத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணகத்வாவகமாத் ப்ரத்யகாத் மைவ தஹராகாச இதி பூர்வ பஷீ மன்யதே –ராத்தாந்தீ து ப்ரத்யகாத்மா கர்ம பரவசதயா ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் த்யாத் யவஸ்தாபி திரோஹித அபஹத பாப்மத்வாதிக பரமாத்மநம் உப ஸம்பந்த தத் ப்ரஸாதாதாவிரர்பூத குணக பிரஜாபதி வாக்யே ப்ரதிபாதிந தஹர ஆகாஸஸ்த்வ திரோஹித நிருபாதிக அபஹத பாப்மத்வாதிக பிரத்யாகாத்மன்ய ஸம்பாவ நீய ஜகத் விதரண ஸமஸ்த சித் அசித் வஸ்து நியமநாத் யநந்த குணக பிரதிபன்ன இதி நாயம் ப்ரத்யகாத்மா தஹராகாஸ அபி து பரமாத்மை வேதி மன்யதே —
ஸூத்ரார்தஸ்து -தஹராகாச பரம் ப்ரஹ்ம உத்தரேப்ய –உத்தர வாக்யக தேப்ய அபஹத பாப்மத் வாதி பரமாத்மா அசாதாரண தர்மேப்யோ ஹேதுப்ய –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –ஏவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி இத்யஹரஹஸ் ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் தஹர ஆகாஸோ பரி கத்தி வர்தனம் தஹர ஆகாஸ ஸமாநாதி கரணோ ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சதஹர ஆகாஸ பரம் ப்ரஹ்மேதி ஞாபயதி -ததா ஹ்யன்யத்ர ஸர்வாஸாம் பரமாத்மோ பரிவர்த மாநத்வம் த்ருஷ்டம் தஸ்மிந் லோகாஸ்ஸ்ரிதாஸ் ஸர்வே ததஷரே பரமே ப்ரஜா இத்யாதவ் -ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சஏஷ ப்ரஹ்ம லோக இத்யாதவ் –அந்யத்ர தர்சன அபாவியாபி இதமேவ பர்யாப்த மஸ்ய பரமாத்மத்வே லிங்கம் யத் தஹராகாஸோபரி ஸர்வஸ்ய வர்தமாநத்வம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச –14

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –அஸ்மின் தஹாராகாஸே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் அஹரஹர்யா கதிஸ் ஸ்ரூயதே யஸ் ச தஹராகாஸாவமர்ஸ ருபை தச் ஸப்த ஸாமாநாதி கரண தயா ப்ரயுக்தோ ப்ரஹ்ம லோக ஸப்த தாப்யாம் தஹராகாச பரம் ப்ரஹ்மேத் யவகம்யதே -தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஞ்ஞா உபர்யுபரி சஞ்ச ரந்தோ ந விந்தே யுரேவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்த்ய ந்ருதேன ஹி ப்ரத்யூடா இதி ததா ஹி த்ருஷ்டம் –ததா ஹ்யன்யத்ர பரஸ்மின் ப்ராஹ்மண் யேவம் ரூபம் கமநம் த்ருஷ்டும் ஏவமேவ கலு சோம்யேமாசர்வா ப்ரஜாஸ் ஸதி சம்பத்ய ந விதுஸ் ஸதி ஸம்பத்ஸ் யாமஹ இதி –ததா ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச பரஸ்மின் ப்ரஹ்மண் யேவ த்ருஷ்ட –ஏஷ ப்ரஹ்ம லோகஸ் ஸம்ராடிதி ஹோவாச இதி லிங்கம் ச –மா பூதன்யத்ர தர்சனம் அஸ்மின் ப்ரகரணே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் ஸ்ரூயமாண மஹரஹர் கமநம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தஹராகாச ஸஸ்ய பரமாத்மத்வே பர்யாப்தம் லிங்கம் -ச ஸப்தோ அவதாரணே -ஏததேவ பர்யாப்தமித் யர்த –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அத ய ஆத்மா ஸ சேதுர்வித்ருதி இதி ஜகத் த்ருதே -பரமாத்மநோ ம்ஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேஸ் சாயம் பர ஸா ஹி பரமாத்ம மஹிமா ஏஷ ஸேதுர் விதரண இத்யாதி ஸ்ருதே –15-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அஸ்ய

த்ருத்யாக் யஸ்ய பரமாத்மநோ மஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேரயம் பரமாத்மா –த்ருதி -ஜகத் விதரணம் பரமாத்மநோ மஹிமேத் யன்யத்ராவகம்யதே –ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதிரேஷ பூத பால ஏஷ ஸேதுர் விதரண ஏஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –ஸா ச அஸ்மிந்தஹராகாஸ உப லப்யதே –அத் ய ஆத்மா ஸ ஸேதுர்வி த்ருதி ரேஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –15-

81-ப்ரசித்தேஸ் ச--ஆகாஸ சப்தஸ்ய யதேஷ ஆகாஸ ஆனந்த இதிபரமாத்மன்யபி ப்ரஸித்தேஸ் சாயம் பர ஸத்ய சங்கல்பத்வாதி குண ப்ருந்தோப ப்ரும்ஹிதா ப்ரஸித்தி பூதாகாஸ பிரஸித்தேர் பலீய ஸீத்யர்த –16-

81-ப்ரசித்தேஸ் ச –கோ ஹ்யேவாந் யாத்க ப்ராண்யாத் யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸாதேவ ஸமுத்பத்யந்தே இத்யாதிஷ் வாகாஸ சப்தஸ்ய பரஸ்மின் ப்ரஹ்மணி ப்ரஸித்தே ஆகாஸ ஸப்த ஏவ பரமாத்ம தர்ம விசேஷிதோ பூதகாச சங்காம் நிவர்த்தய தீத் யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ இதீ தரஸ்ய ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ப்ரக்ருதாகாஸஸ் இதி சேத் நைதத் உக்த குணாநாம் தத்ரா சம்பவாத் –17-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –பரமாத்மந

இதர ஜீவ அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இத ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ஏவ தஹாராகாச இதி சேத் தன்ன பூர்வோக்தாநாம் குணாநாம் தஸ்மிந் ந சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தரத்ர ய ஆத்மா அபஹத பாப்மா இதி ஜீவஸ்ய அபஹத பாப்மத்வாதி ஸ்ரவணாந் நா ஸம்பவ –ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் யாத்ய வஸ்தாஸூ வர்தமாநத்வாத் ஸ ஹி ஜீவ இதி சேத் நைதத் ஆவீர் பூத ஸ்வரூபஸ்து –கர்ம ஆரப்த சரீர சம்பந்தித் வேந திரோஹித அபஹத பாப்மத் வாதிக பஸ்ஸாத் பரஞ்ஜ்யோதி ரூப ஸம்பத் யாவிர் பூத ஸ்வரூப தத்ர அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவ ப்ரதிபாதித தஹாராகாஸஸ்து அதி ரோஹித கல்யாண குண சாகர இதி நாயம் ஜீவ –18-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தராத் –பிரஜாபதி வாக்யாத் அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவோ அவகம்யத இதி சேத் தன்ன ஜாகரி தாத்ய வஸ்தாபிர நாதி கால ப்ரவ்ருத்தாபி புண்ய பாப ரூப கர்ம மூலாபி திரோஹித குணக பர ப்ரஹ்மோபாஸ ஜெனிததுப ஸம்பத்த்யா ஆவீர் பூதஸ்வ ரூபோ அசவ் ஜீவஸ் தத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணக கீர்தித தஹராகாசஸ் த்வதி ரோஹித ஸ்வரூப அபஹத பாப் மத்வாதி குணக இத்யஸ்மிந்தஹராகாஸே ந ஜீவ சங்கா –18-

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-ஜீவாத்மநோ தஹராகாஸோப ஸம்பத்த்யா ஸ்வரூப ஆவீர் பாவா பாத்தன ரூபம் ஆஹாத்ம்ய ப்ரதிபாத நார்த அத்ர ஜீவ பராமர்ச –19-

தஹர வாக்யே ஜீவ பரா மர்ஸ கிமர்தமிதி சேத் தத்ராஹ

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-பரம் ஜ்யோதிஸ் ஸ்வரூப தஹராகாஸோப ஸம்பத்த்யா அஸ்ய ஜீவஸ்யா ந்ருத திரோஹித ஸ்வரூபஸ்ய ஸ்வரூப ஆவிபாவோ பவதீதி தஹராகாசஸ்ய ஜகத் விதரணாதிவஜ் ஜீவ ஸ்வரூப ஆவீர் பாவாபாதந ரூப ஸம்பத் விசேஷ ப்ரதி பாதநார்தோ ஜீவ பராமர்ஸ –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –அல்ப ஸ்தாநத்வ ஸ்வரூப அல்பத்வ ஸ்ருதேர் நாயம் பரமாத்மேதி சேத் -தத்தரோத்தர முக்தம் நிசாய்யத்வா தேவம் வ்யோமவச்ச இதி –20-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –தஹரோ அஸ்மின் நித்யல்ப பரிமாண ஸ்ருதி ராராக்ரப மிதஸ்ய ஜீவஸ்யைவோப பத்யதே ந து ஸர்வஜ் மாஜ் ஜ்யாயஸோ ப்ரஹ்மண இதி சேத் தத்ர யதுத்தரம் வக்த்வயம் தத் பூர்வமேவோக்தம் -நிசாய்யாத் வாதித்யநே ந –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச –அநு க்ருதி –தஸ்ய தஹராகாஸஸ்ய பரஞ்ஜ்யோதிஷ அநு கரண ஸ்ரவணாச் ச ஜீவஸ்ய ந ஜீவோ தஹராகாஸ ஸ தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடன் ரமமாண இத்யாதி ததுப ஸம்பத்த்யா ஸ்வச் சாந்த வ்ருத்தி ரூப தத் அநு காரஸ் ஸ்ரூயதே –21-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச -அநு க்ருதி –அநு கார தஸ்ய பரமாத்மநோ அநு காராத்தி ஜீவஸ்ய ஆவீர் பூத ஸ்வரூபஸ்ய அபஹத பாப்மத்வாதி குணகத்வம் அதோ அநு கர்து ஜீவாத் அநு கார்ய பர ப்ரஹ்ம பூதோ தஹாராகாச அர்த்தான்தர பூத ஏவ –தத் அநு காரஸ் ச தத் ஸாம்யாபத்திஸ் ஸ்ரூயதே யதா யஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் கார்தாரமீசம் புருஷன் ப்ரஹ்ம யோநிம் –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி இதி –21-

87-அபி ஸ்மர்யதே –இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

87-அபி ஸ்மர்யதே –ஸ்மர்யதே ச தத் உபாஸநாத் தத் ஸாம்யா பத்தி ரூபாநுக்ருதிர் ஜீவஸ்ய இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித 
– அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய இத்யாதவ் அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி சர்வேஸ்வரத்வ வாசி ஸப்தா தேவ –23-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித –
-கட வல்லீஷ்வாம் நாயதே —

அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே -ஏதத் வைதத் -உத்தரத்ர ச அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக -ததோ பரிஷ்டாத் அங்குஷ்ட மாத்ர புருஷோ அந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹ்ருதயே சந்நிவிஷ்ட இதி அத்ராங்குஷ்ட ப்ரமிதோ ஜீவாத்மா உத பரமாத்மேதி ஸம்சய -ஜீவாத் மேதி பூர்வ பக்ஷ –அந்யத்ர ஸ்வீக்ருத ஸ்பஷ்ட ஜீவ பாவே புருஷே அங்குஷ்ட ப்ரமிதத்வஸ்ருதே -ப்ராணாதி பஸ் ஸஞ்சரதி ஸ்வ கர்மபிர் அங்குஷ்ட மாத்ரோ ரவிதுல்ய ரூப இதி -ராத்தாந்தஸ்து –தத்ர ஸ்வ கர்ம பிர் இதி ஜீவ பாவ நிஸ்ஸயவதத்ராபி ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பூத பவ்யேஸித்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி -ஸூத்ரார்தஸ்து –ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி பூத பவ்யேஸி த்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி
ஸூத்ரார்தஸ்து ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பரமாத்ம வாசி ஸப்தாத்

89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் –அநவச் சிந்நஸ் யாபி உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வா பேஷ மங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸந ஸம்பாவ நயா தத் விக்ஷயத்வாச் ச சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

கதமநவச் சின்னஸ்ய பரமாத்மநோ அங்குஷ்ட ப்ரமிதத்வ மித்யா சங்க்யாஹ
89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் 
–உபாஸ நார்த்தம் உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வாத் உபாஸக ஹ்ருதயஸ்ய அங்குஷ்ட மாத்ரத்வாத் ததபேஷயேதம் அங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸ கத்வ ஸம்பாவநயா மனுஷ்யாநதி க்ருத்ய ப்ரவ்ருத்தத் வாச்சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்–
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத்
 –தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ் வப்யஸ்தி அர்த்தித்வ சாமர்த்யா சம்பவாத் –இதி பகவான் பாதராயண மேந –சம்பவஸ் ச பூர்வோபார்ஜிதஜ் ஞாநாவிஸ்மரணாத் மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹாதி மத்தயா ஸ்துதி தர்சநாத் ததுப பத்தயே தத் சம்பவே தேஷாமேவ ப்ராமாண்யேந விக்ரஹாதி மத்த்வாச் ச –25-

1-3-7-தேவாதி கரணம்
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத் –மனுஷ்யாதிகாரம்

ப்ரஹ்ம உபாஸந ஸாஸ்த்ரமித்யுக்தம் –தத் ப்ரசங்கேந தேவாதீ நாமபி ப்ரஹ்ம வித்யாயாம் அதிகாரோ அஸ்தி நவேதி சிந்த்யதே ந தேவாதீநாம் அதிகார அஸ்தீதி பூர்வ பக்ஷ –பரி நிஷ் பன்னே ப்ரஹ்மணி சப்தஸ்ய ப்ராமாண்ய சம்பவே அபி தேவாதீநாம் விக்ரஹாதி மத்த்வே ப்ரமாணா பவாத் மந்த்ரார்த்தவாதாநாம் -அபி விதி சேஷ தயா விக்ரஹாதி ஸத் பாவபரத்வா பாவாத் விக்ரஹவந் நிர் வர்த்யாஹரஹரநுஷ்டீயமாந விவேகாதி சாதன ஸப்தக ஸம்ஸ் க்ருதமநோ நிஷ் பாத்யோபாஸந நிர் வ்ருத்தவ் தேஷாம் ஸாமர்த்யா பாவாத்
ராத்தாந்தஸ்து –ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகரணேஷு நாம ரூப வ்யாகரண ஸ்ருத்யைவ தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வம் ஸித்யதி -தேவாதீ நாம் தேஹ இந்த்ரியாதி கரணமேவ ஹி நாம ரூப வ்யாகரணம் மந்த்ரார்த்த வாத யோஸ் ச ததுபலப்தே –தயோர் அநுஷ்டேய-ப்ரகாஸந ஸ்துதி பரத்வே அபி ததுப பத்தயே தத் ஸத் பாவே பிரமாணத்வாத் தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வ ஸித்தி -நஹி விக்ரஹாதி மத்தயா ஸ்துதி ப்ரகாஸநம் ச ததபாவே சம்பவதி —
அதஸ் ஸாமர்த்ய ஸம்பவாதஸ் த்யேவாதிகார –ஸூத்ரார்தஸ்து ததுபர்யபி தேப்ய –மனுஷ்யேப்ய உபரி வர்த்தமாநாநாம் தேவாதீநாமப்யதிகாரோ அஸ்தி
யத்வா தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ்வபி சம்பவதி தேஷாம் அபி ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாசன ப்ரகாரஜ் ஞாந தத் அர்த்தித்வதது பாதாந ஸாமர்த்ய சம்பவாத் –பூர்வோபார் ஜிதஜ் ஞாநா விஸ்மரணாத் ஞான ஸம்பவ தாபத்ரய அபிஹதி பூர்வக ப்ரஹ்ம குணஜ் ஞாநாச் சார்தித்வ ஸம்பவ –ஸ்ருஷ்டி வாக்ய மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹவத்த்வாதி தர்சநாத் ஸாமர்த்ய ஸம்பவஸ் சேதி பகவான் பாதராயணோ மன்யதே –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –விக்ரஹாதி மத்த்வே ஏகஸ்யாநே கத்ர யுகபத்ஸாந் நித்யா யோகாத் கர்மணி விரோத இதி சேந்ந ஸக்திமத்ஸூ ஸுபரி ப்ரப்ருதி ஷு யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –கர்மணி யாகாதவ் விக்ரஹ வத்த்வே ஸதி ஏகஸ்ய யுகபதநேகயாகேஷு ஸந்நிதான அநுப பத்தேர் விரோத ப்ரஸஜ்யதே இதி சேத் தன்ன ஸக்தி மதாம் ஸுபரி ப்ரப்ருதீநாம் யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –வைதிகே து ஸப்தே விரோத ப்ரஸக்தி தேஹஸ்ய சாவயத்வேநோத் மத்த்வாத் இந்த்ராதி தேவோத் பத்தே ப்ராக் விநாஸா தூர்த்வம் ச வைதிகேந்த்ராதி ஸப்தாநாம் அர்த ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாத் இதி சேந்ந –அத வைதிகா தேவேந்த்ராதி ஸப்தாதிந்த்ராத் யர்தஸ்ருஷ்டே -நஹீந்த்ராதி ஸப்தா வ்யக்தி வாஸகா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி வாசிந –பூர்வஸ் மின்னிந்த்ராதவ் விநஷ்டே வைதிகேந்த்ராதி ஸப்தாதேவ ப்ரஹ்மா பூர்வேந்த்ராத் யாக்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரம பராமிந்த்ராதிகம் குலாலாதிரிவ கடாதிகம் ஸ்ருஜதீதி ந கஸ்ஸித் விரோத -குத இதமவகம்யதே -ஸ்ருதி வேதேந ரூபே வ்யகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிமஸ்ருஜத இத்யாதி ஸ்ம்ருதிரபி
ஸர்வேஷாம் து ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்-வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே –இத்யாதி –27-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –விரோத இதி வர்ததே –மா பூத் கர்மணி விரோத -ஸப்தே து வைதிகே விரோத ப்ரஸஜ்யதே விக்ரஹத்த்வே ஹி தேஷாம் ஸாவ யவத்வே நோத்பத்தி விநாஸ யோகா துத்பத்தே ப்ராக் விநாஸா தூரத்வம் ச வைதிகாநாம் இந்த்ராதி ஸப்தாமாமர்தா ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாதிதி சேத் தன்ன அத ப்ரபவாத் அத வைதிகா தேவ ஸப்தாத் இந்த்ராதே ப்ரபவான் -பூர்வ பூர்வேந்திராதவ் விநஷ்டே வைதிகாதிந்ராத்யாக்ருதி -விசேஷ வாசிந ஸப்தா திந்ராத்யாக்ருதிவிசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரமபரமிந்த்ராதிகம் ஸ்ருஜிதி பிரஜாபதிரிதி வைதிகஸ்ய சப்தஸ்ய ந கச்சித் விரோத –
ந ஹி தேவதைத்தாதி ஸப்தவத் இந்த்ராதி ஸப்தா வ்யக்தி விசேஷ சங்கேத பூர்வகா ப்ரவ்ருத்தா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி விசேஷ வாசிந இதி தேஷாமபி நித்ய ஏவ வாஸ்ய வாசக பாவ வைதிகாதிந்த்ராதி சப்தாத் ததர்த்த விசேஷம் ஸ்ம்ருத்வா குலாலாதிரிவ கடாதிகம் பிரஜாபதிஸ் ஸ்ருஜதீதி குதோ அவகம் யதே -ப்ரத்யக்ஷ அனுமானாப் யாம் -ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமித்யர்த்த -ஸ்ருதிஸ் தாவத் வேதேந ரூபே வ்யாகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி –ததா ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிம ஸ்ருஜத இத்யாதிகா
ஸ்ம்ருதிரபி ஸர்வேஷாம் ச ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதுக் ப்ருதுக் வேத சப்தேப்ய ஏதாதவ் ப்ருதுக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே -நாம ரூபம் ச பூதாநாம் க்ருத்யா நாம் ச ப்ரபஞ்ச நம் -வேத சப்தேப்ய ஏவாதவ் தேவாதீ நாம் சகார ச இத்யாதிகா –29-

93-அத ஏவ ச நித்யத்வம் –யதோ ப்ரஹ்மா வைதிகாச் சப்தா தர்தாந் ஸ்ம்ருத்வா ஸ்ருஜதி அத ஏவ மந்த்ர க்ருதோ வ்ருணீதே விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதி இதி விச்வாமித்ராதீநாம் மந்த்ராதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டதி –அநதீத மந்த்ராதி தர்சந ஸக்தான் பூர்வ விச்வாமித்ராதீந் தத் தத் வைதிக சப்தை ஸ்ம்ருத்வா ததாகாராநபராந் தத் தச் சக்தி யுக்தான் ஸ்ருஜதி ஹி ப்ரஹ்மா நைமித்திக பிரளயானந்தரம்-தே சாநதீத்யைவ தாநேவ மந்த்ராதீந கலிதாந் படந்தி –அதஸ் தேஷாம் மந்த்ராதி க்ருத்த்வம் வேத நித்யத்வம் ச ஸ்திதம் –28-

93-அத ஏவ ச நித்யத்வம் –யத ப்ரஜாபதி வைதிகாச் சப்தா தர்தாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸர்வம் ஸ்ருஜதி -அதஸ் ச வஸிஷ்ட விஸ்வா மித்ராதீ நாம் மந்த்ர ஸூக்தாதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மயஸ்ய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டத்யேவ–ப்ரஜாபதிர் ஹி நைமித்திக பிரளயாந்தரம் மந்த்ர க்ருதோ வ்ருணீதே -விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதீத்யாதி வேத ஸப்தேப்யோ அநதீத மந்த்ராதி தர்சன சக்த வசிஷ்டாத்ய க்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா வசிஷ்டத்வாதி பத ப்ராப்தே அனுஷ்டித கர்ம விசேஷ அம்ஸா ஸ் அநு ஸ்ம்ருத்ய தத் ஆகார விசேஷான் தான் வஸிஷ்டாதீன் ஸ்ருஜதி -தே சாநதீத்யைவ வேதைகதேஸ பூத மந்த்ராதீன் ஸ்வரதோ வர்ணதஸ் சாஸ்கலிதான் படந்தி -ததேஷாம் மந்த்ராதி க்ருத்வே அபி வேத நித்யத்வம் உப பத்யதே –28-

ப்ராக்ருத பிரலயே து சதுர் முகே வேதாக்ய சப்தே ச விநஷ்டே கதம் வேதஸ்ய நித்யத்வமித்யத ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச -அத ஏவ ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாத் பிராகிருத பிரலயா வ்ருத்தாவபி ந விரோத -ஆதி கர்தா பரம புருஷோ ஹி பூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஜகத் ஸ்ம்ருத்வா ததாகாரமேவ ஜகத் ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வாநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருத்ய சதுர் முகாய ததாதீதி ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமாதி கர்தா பூர்வ வத் ஸ்ருஜதீத் யவகம்யதே-ஸ்ருதி ஸ்தாவத் ஸூர்யா சந்த்ர மஸவ் தாத்தா யதா பூர்வமகல் பயத் இத்யாதிகா யோ ப்ரஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச -ஸ்ம்ருதிரபி
யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே
த்ருஸ்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதி ஷு -இதி -வேதஸ்ய நித்யத்வம் ச பூர்வ பூர்வோச் சாரண க்ரம விஸிஷ்டஸ் யைவ ஸர்வதோச சார்ய மாணத்வம் ––29-இதி தேவதாதி கரணம் –7-

ப்ரஜாபதி ப்ரப்ருதிஷுஸர்வேஷு தத்த்வேஷ்வ வ்யாக்ருத பர் யந்தேஷு அவ்யாக்ருத பரிணாம ரூபேஷு சப்தமயேஷி வேதேஷு ச விநஷ்டேஷ்வ வ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தவ் கதம் வேதஸ்ய நித்யத்வ மித்யத்ர ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச –அவ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தா வபி ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாதேவ ந கஸ்ஸித் விரோத ஆதி சர்கே அபி ஹி பரம புருஷ பூர்வ ஸம்ஸ்தாநம் ஜகத் ஸ்மரன் ததைவ ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வ அநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருதயா ஹிரண்ய கர்ப்பாய ததாதீதி -பூர்வ ஸம்ஸ்தான மேவ ஜகத் ஸ்ருஜதீதி கதமவகம்யதே -தர்சநாத் ஸ்ம்ருதேஸ் ச –தர்சனம் ஸ்ருதி அஹோ ராத்ராணி விததத் விஸ்வஸ்ய மிஷதோ வஸீ ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வ மகல்பயத் திவம் ச ப்ருத்வீம் சாந்தரிஷமதோ ஸூவரிதி யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச ஸ்ம்ருதிராபை யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே –த்ருஸ்யந்தே தாநி தாந்யேவ ததா பாவா யுகாதிஷு -இதி ஏததேவ வேதஸ்ய நித்யத்வம் யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேணோச் சார்யத்வம் பரம புருஷோ அபி ஸ்வரூப ஸ்வா ராதன தத் பலயாதாத்ம்யாவ போதி வேதம் ஸ்வ ஸ்வரூபவந் நித்யமேவ பூர்வ அநு பூர்வீ விசிஷ்டம் ஸ்ம்ருத்வா ஆவிஷ்கரோதி -அதோ தேவாதீநாம் ப்ரஹ்ம வித்யாதி காரே ந கஸ்சித் விரோத –29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–மது வித்யாதி ஷு வஸ்வாதி தேவாநாமேவ உபாஸ்யதவாதத் ப்ராப்யத்வாச் ச தத்ர வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதேந உபாஸ்யத்வா சம்பவாத் -வஸூநாம் ஸதாம் வஸூ த்வம் ப்ராப்தமிதி ப்ராப்யத்வா ஸம்ப வாச்ச தத்ர வஸ்வாதீ நாமநதிகாரம் ஜைமிநிர்மேநே –30-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
 –சாந்தோக்ய அசவ் வா ஆதித்யோ தேவ மது இத் யுபக்ரம்ய –தத் யத் பிரதமம் அம்ருதம் தத்வஸவ உப ஜீவந்தி இத்யுக்த்வா ஸ ய ஏததேவம் அம்ருதம் வேத வஸூநாமேவைகோ பூத்வா அக்னி நைவ முகேநைத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யதி இத்யாதிநா ருக் யஜுஸ் ஸாமாதி வேதோதித கர்ம ஸம்பாத்ய ரஸாதாரதயா மதுமயஸ் யாதித் யஸ்ய பூர்வ தக்ஷிண பஸ்ஸிமோத்தரோர்த்வாம் ஸாந் வஸூ ருத்யாதித்ய மருத் ஸாத்யநாம்நாம் தேவ கணாநாம் போக்யத்வேந அபிதாய தைர்புஜ்யமாநாகாரேணாதித்யாம் ஸாநு பாஸ்யாநு பதிஸ்ய தாநேவாதித்யாம் ஸாம்ஸ் ததா பூதான் ப்ராப்யஅநு பதி ஸதி –ஏவமாதிஷு பாஸ நேஷுவஸ்வாதீநாம் உபாஸ்யாந்தர் கதத்வேந கர்ம கர்த்ரு பாவ விரோதாத் ப்ராப்யஸ்ய வஸூத் வாதே ப்ராப்தத் வாச்ச –ராத்தாந்தஸ்து –ப்ரஹ்மண ஏவ ததவஸ் தஸ்யோ பாஸ்யாதீநாம் ஸதாம் ஸ்வா வஸ்த ப்ரஹ்ம அநு ஸந்தாநா விரோதாத் கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்தத்வா விரோதாஸ் ச வஸ்வாதீநாம் அதிகார சம்பவதீதி –ஸூத்ரார் தஸ்து மது வித்யாதிஷு வஸ் வா தீநாம் அநதிகாரம் ஜைமிநிர் மன்யதே -அசம்பவாத் -வஸ்வாதீநாம் ஏவ உபாஸ்யாநாம் உபாஸகத்வ அசம்பவாத் வஸூத் வாதே ப்ராப்தத்வாதேவ ப்ராப்யத்வா சம்பவாச் ச –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணிதேவாநாம் ஸாதாரண்யேந ப்ராப்தத்வே அபி அதிகார மாத்ர பாவ வசநாத் அந்யத்ர வஸ்வாத் யுபாஸநே அநதிகாரோ ந்யாய ஸித்தோ கம்யதே–31-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணி தேவ மனுஷ்ய யோரதிகார ஸாதாரண்யே ஸத்யபி ஜ்யோதிஷாம் ஜ்யோதி —பரம் ப்ரஹ்ம தேவா உபாஸதே இதி விசேஷ வசனம் வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதாத்தேஷு தேஷாம் அநதிகாரம் த்யோதயதி -தேவா இதி ஸாமான்ய வசனம் ச -வஸ்வாதி விசேஷ விஷய மித்ய வகம்யதே -அந் யேஷாம விரோதாத் –31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –மது வித்யாதிஷ்வபி வஸ்வாதீ நாமதிகார பாவம் பகவான் பாதராயணோ மன்யதே –அஸ்தி ஹி வஸ்வாதீநாம் ஸதாம் ஸ்வாவஸ்த ப்ரஹ்மண உபாஸ்யத்வ ஸம்பவ கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்யத்வ சம்பாவஸ் ச –ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா ஆதித்யஸ்ய காரணா வஸ்தாம் ப்ரதிபாத்ய ய ஏதா மேவம் ப்ரஹ்மோப நிஷதம் வேத இதி மது வித்யா ப்ரஹ்ம வித்யாத்வமாஹ –அத கார்ய காரணோ பயாவஸ்தம் தத்ரோபாஸ்யம் -கல்பாந்தரே வஸ்வாதித்வ மநு பூய அதிகாராவஸாநே ப்ரஹ்ம ப்ராப்திர்ந விருத்தா –32–இதி மத்வதிகரணம்–8-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –து -ஸப்த பக்ஷம் வ்யாவர்த்தயதி –வஸ்வாதீ நாம் மது வித்யாதிஷு அதிகார ஸத் பாவம் பகவான் பாதராயணோ மன்யதே -அஸ்தி ஹி வஸ்வாதீ நாமேவோபாஸ் யத்வம் ப்ராப்யத்வம் ச இதாநீம் வஸூ நாமேவ ஸதாம் கல்பாந்தரே வஸூத் வஸ்ய ப்ராப்யத்வ சம்பவாத் ப்ராப்யத்வம் சம்பவதி -ஸ்வாத்மநாம் ப்ரஹ்ம பாவ அநு ஸந்தான ஸம்பவாது பாஸ்யத்வம் ச சம்பவதி -ய ஏதா மேவம் ப்ரஹ்ம உப நிஷதம் வேத இதி ஹி க்ருத்ஸ்நாயா மது வித்யாயா ப்ரஹ்ம வித்யாத்வ மவகம்ய தே –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ஆஜஹாரமாஸ் ஸூத்ர இத்யாதவ் ப்ரஹ்ம உபதேஸே ஸிஷ்யம் ப்ரதி ஸூத்ரேத்யா மந்த்ரணேந சிஷ்யஸ்ய ப்ரஹ்ம ஞானா ப்ராப்த்யா ஸூ க்சஞ்ஜாதேதி ஸூஸ்யதே –ஸோச நாச் சூத்ர -ந ஜாதி யோகேந குத –ததநாதர ஸ்ரவணாத் ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஸ்வாத்மா நம் ப்ரதி ஹம்ஸோக்தாநாதர வாக்ய ஸ்ரவணாத் ததைவாசார்யம் ப்ரதி ஆத்ரவணாத் –ஹி சப்தோ ஹேதவ் –யதஸ் ஸ்ரூத்ரேத்யா மந்த்ரணம் ந ஜாதி யோகேந அதஸ் ஸூத் ரஸ்ய ப்ரஹ்ம உபாஸநாதிகாரோ ந ஸூஸ்யதே –33-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி 
-ப்ரஹ்ம வித்யாயாம் ஸூத்ரஸ் யாப்யதிகாரோ அஸ்தி -நேதி ஸம்சய –அஸ்தீதி பூர்வ பக்ஷ –அர்தித்வ ஸாமர்த்ய சம்பவாத் –ஸூத்ரஸ்யாநக்நி வித்யத்வே அபி மநோ வ்ருத்தி மாத்ரத்வாத் உபாசனநஸ்ய சம்பவதி ஹி ஸாமர்த்யம் -ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாஸந ப்ரகாரஜ் ஞானம் சேதிஹாஸ புராண ஸ்ரவணாதேவ நிஷ்பத்யதே
அஸ்தி ஹி ஸூத்ரஸ் யா பீதிஹாஸ புராண ஸ்ரவணாநுஜ்ஞா -ஸ்ராவயேச் சதுரோ வர்ணாந் க்ருத்வா ப்ராஹ்மண மக்ரத இதி –ததா தத்ரைவ விதுராதீ நாம் ப்ரஹ்ம நிஷ்டத்வம் த்ருஸ்யதே -உபநிஷத் ஸ்வபி -ஆஜஹாரமாஸ் ஸூத்ரா நேநைவ முகே நாலாப யிஷ்யதா இதி ஸூத்ர சப்தேநா மந்த்ர்ய ப்ரஹ்ம வித்யோபதேஸ தர்சநாச் ஸூத்ரஸ்ய அபீ ஹாதிகாரஸ் ஸூஸ்யதே –ராத்தாந்தஸ்து –உபாஸநஸ்ய மநோ வ்ருத்தி மாத்ரத்வே அபி அநதீதவே தஸ்ய ஸூத் ரஸ்ய உபாஸநோபாய பூதஜ் ஞாநா சம்பவாத் ந சார்மத்ய ஸம்பவ -கர்ம விதிவத் உபாஸநா விதயோ அபி
த்ரை வர்ணிக விஷயாத்யயநக்ருஹீதஸ் வாத்யாயோத் பன்ன ஞாந மேவ உபாஸநோபாய தயா ஸ்வீ குர்வதே —
இதிஹாஸா தயோ அபி ஸ்வாத்யாய ஸித்த மேவ ஞானம் உப ப்ரும்ஹ யந்தீதி ததோ அபி நாஸ்ய ஞான லாப –ஸ்ரவாணானுஜ்ஞா து பாப ஷயாதி பலா -விதுராதீ நாம் து பவாந்தர வாஸநய ஞான லாபாத் ப்ரஹ்ம நிஷ்டத்வம் -ஸூத்ரேத்யா மந்த்ரணம் அபி ந சதுர்த்தி வர்ணத்வேந அபி து ப்ரஹ்ம வித்யா வைகல் யாச்சு கஸ்ய ஸம்ஜா தேதி –அதோ ந ஸூத்ரஸ் யாதிகார –ஸூத்ரார் தஸ்து -ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஹம்ஸோக்தா நாதர வாக்ய ஸ்ரவணாத்ததை வாசார்யம் ப்ரத்யாத்ரவ ணாச்சார்யே தஸ்ய ஸூஷ்ரூ ஷோர் வித்யா அலாப க்ருதா ஸூக் ஸூஸ்யதே –ஹி சாப்தோ ஹேதவ் –யஸ்மா தஸ்ய ஸூகே ஸூஸ்யதே அதஸ் ஸோச நாச் ஸூத்ர இதி க்ருத்வா ஆசார்யோ ரைக்வ ஜான ஸ்ருதிம் ஸூத்ரேத்யா மந்த்ரயதே ந ஜாதி யோகே நேத்யர்த –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்–உபக்ரமே பஹு தாயீ இத்யாதிநா தாந பதித்வ பஹு பக்வாந் நதாயித்வ பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஹி ஷத்ரியத்வம் கம்யதே –34-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –-அஸ்ய ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்வாவக தேஸ் ச ந ஜாதி யோகேந ஸூத் ரேத்தயா மந்த்ரணம் ப்ரகரண ப்ரக்ரமே ஹி பஹு தாயீ இத்யாதி நா தாந பதித்வ பஹு தர பக்வாந் நதாயித்வக்ஷத்த்ருப்ரேக்ஷண பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஜாந ஸ்ருதேஸ் ஸூஸ்ரூஷோ ஷத்ரியத்வம் ப்ரதீதம் –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகஞ்ச காபேய மபிப்ரதாரிணஞ்ச இத்யாதவ் –
அபி ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணாந்தரே ஹி காபேய ஸஹஸரிணஸ் சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதத்வம் ஷத்ரியத்வம் சாவகதம் ஏதேந சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச க்ஷத்ர பதிர ஜாயத இதி ச அதஸ் சாயம் சிஷ்ய ந சதுர்த –35-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகம் ச காபேய மபிப்ரதாரிணம் ச இத்யாதி நா –
அப் ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணா ந்தரே ஹி காபேய ஸஹஸரிண சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச
அதோ அஸ்யாம் வித்யாயாம் அந்விதோ ப்ராஹ்மண அதிதரோ ஞான ஸ்ருதி பிர் அபி ஷத்ரியோ பவிதும் அர்ஹாதி –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபக்ரமே உப த்வா நேஷ்யே இத் யுப நயன பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ அபிலாபாச்ச -ந ஸூத்ரஸ்ய ப்ரஹ்ம வித்யாதிகார ந ஸூத்ரே பாதகம் கிம்சித் ந ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஸம்ஸ்காரோ ஹி நிஷித்யதே –36-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபதேஸே உப த்வா நேஷ்யே இத் யுப நயன ஸம்ஸ் கார பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ சநாச்சாநதிகார -ந ஸூத்ர பாதகம் கிஞ்சிந்த ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேஸ் ச நாதிகார –37-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூஸ்ரூஷோர் ஜாபாலேஸ் ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேர் நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி நிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி ப்ரதிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத–39- இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தாண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ரமிதாதிகரண சேஷ
ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் அனுசரதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் இத்யாதி நா அபிஹிதாங்குஷ்ட ப்ரமித பிராண ஸப்த நிர்திஷ்ட ஜெனித பயாத் வஜ்ராதி வோத்யதாத் அக்நி வாயு ஸூர்ய இந்த்ர ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ இதி நிஸ்ஸீயதே –40-

ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் பரி ஸமா பயதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் மிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் -மஹத் பயம் வஜ்ரமுத்யதம் பயாதஸ்யாக்நிஸ்தபதி இத்யாதவ் ப்ராண ஸப்த நிர் துஷ்டாங்குஷ்ட ப்ரமித ஜெனித பய நிமித்தாக்நி வாயு ஸூர்ய ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் ஸ்ரூயமாணாதங்குஷ்ட ப்ரமித பரமாத்மை வேதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –தத் ப்ரகரணே ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய அநவதிக அதிசய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ –41—இதி ப்ரமித அதி கரண சேஷ

106-ஜ்யோதிர் தர்சநாத் –அஸ்மின்நேவ ப்ரகரணே தத் சம்பந்தி தயா ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி ஸர்வேஷாம் சாதகஸ்யா நவதிகாதி ஸயஸ்ய பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய ப்ரஹ்ம பூதஸ்ய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா –41—இதி ப்ரமித அதி கரணம்

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
 –சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம இத்யாதிநா நிர்திஷ்ட ஆகாஸ தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா இதி ப்ரக்ருதாத் ப்ரத்யமாத்மந பரி ஸூத்தாதரதாந்தர பூத பரம புருஷ நாம ரூபயோ நிர்வோட் ருத்வ தத ஸ்பர்ச ரூபார் தாந்தரத்வாம்ருதத்வாதி வ்யபதேஸாத் –42-

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத் 
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம ததம்ருதம் ஸ ஆத்மா இத்யத்ர ஆகாஸ ஸப்த நிர்திஷ்ட கிம் முக்தாத்மா உத பரமாத்மேதி ஸம்சய –முக்த இதி பூர்வ பக்ஷ -தூத்வா சரீர மக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவாமி இதி முக்தஸ்யாநந்தர ப்ரக்ருதத்வாத் –ராத்தாந்தஸ்து –நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா இதி ஸ்வயம் அஸ்ப்ருஷ்ட –நாம ரூப தயா நாம ரூபயோர் நிர்வோட்ருத்வேந ரூயமாணோ அயம் ஆகாசோ பக்த முக்தோபயா வஸ்தாத் ப்ரத்யகாத்மந அர்த்தாந்தரத் வாத் பரமாத்மைவ
ஸூத்ரார்த்தஸ்து –ஆகாஸ பரமாத்மா தஸ்ய நாம ரூபாயோர் நிர்வோட்ருத்வதத ஸ்பர்ச லக்ஷணார்த் தாந்தரத்வ வ்யபதேசா-ப்ரத்யகாத்மநோ ஹ்யர்த்தாந்தர பூத ஏவ நாம ரூபயோர் நிர்வோடா-பாத்தாவஸ்தஸ்தாவன் நாம ரூபாப்யாம் ஸ்ப்ருஷ்டஸ் தத் பரவஸஸ் சேதி ந நிர்வோடா முக்தஸ்யாபி ஜகத் வியாபார ரஹிதத் வான்ந நிரவோட் ருத்வம் –ஆதி சப்தேந நிருபாதிக ப்ரஹ்மத்வ அம்ருதத்வாத்மத்வா தீதி க்ருஹ்யந்தே தாநி நிருபாதிககாநி முக்தஸ்யாபி ந சம்பவந்தி –42-

தத்வமஸ்யாதிநா ஐக்ய வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ நார்தாந்தர பூத பரம புருஷ இத்யா சங்க்யாஹ

108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் ப்ராஜ்ஜே நாத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் பாஹ்யாந்தர விஷயா நபிஜ்ஞாத் ப்ரத்யகாத்மந ததாநீ மேவ ப்ராஜ்ஞ தயா பேதேந வ்யபதேஸாதர் தாந்தர பூத ஏவ –43-

நநு தத்வமஸ்யாதி நைக்ய வ்யபதேஸாத் நேஹ நாநாஅஸ்தீதி பேத ப்ரதிஷே தாச்ச ந ப்ரத்யகாத்மந அர்த்தாந்தர பூத பரமாத்மேத்யா சங்க்யாஹ
108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –வ்யபேதசாதிதி வர்த்ததே –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்த ப்ராஜ்ஜேநா ஆத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் லுப்த ஸகல விசேஷ விஞ்ஞாநாத் ப்ரத்யகாத்மநஸ் ததாநீ மேவ ஸர்வஞ்ஞதயா பேத வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத எவ் பரமாத்மா –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் அர்த்தாந்தர பூத- ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே
ஐக்யோபதேஸோ அபி அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இத்யநேந ஜீவஸ்ய சரீர பூதஸ் யாத்ம தயா அவஸ்தி தேரிதி ஸ்வய மேவ பரி ஹரிஷ்யதி –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத பரமாத்மா ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இத்யாதவ்
ஐக்யோபதேஸ பேத ப்ரதிஷேதவ் து ப்ரஹ்ம கார்யத்வ நிபந்தநா விதி –தஜ்ஜ லான் இதி -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதி ஸ்ருதி பிரேவ வ்யக்தவ் –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -த்வதீய பாதம் –

March 5, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார தீப உத்த்ரியதே

——————————

1-2-1-ஸர்வத்ர ப்ரஸித்தி யதிகரணம்
33-ஸர்வத்ர ப்ரஸித்தி உபதேசாத்
 -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி நிர் திஷ்டேந ஸாமாநாதி கரண்யேந நிர் திஷ்டம் ப்ரஹ்ம பரமாத்மா -குத –ப்ரஸித்த உபதேஸாத் –தஜ் ஜலாநிதி ஹேதுத ஸர்வாத்ம கத்வ உபதேஸாதித் யர்த -ப்ரஸித்தம் ஹி ஹேதுதயா வ்யபதிஸ்யதே -ஸகல உபநிஷத்ஸூ ப்ரஹ்மைவ ஹி ஜகஜ் ஜன்ம லய ஜீவன ஹேது தயா ப்ரஸித்தம் யதோ வா இமாநி இத்யாதிஷு –1-

1-2-1- ஸர்வத்ர ப்ரஸித்தி யதி கரணம்
33-ஸர்வத்ர ப்ரஸித்த உபதேஸாத் –
-சாந்தோக்யே ஸ்ரூயதே ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத –அத கலு க்ரதுமயோ அயம் புருஷோ யதா க்ரதுரஸ்மில்லோகே புருஷோ பவத் ததேத ப்ரேத்ய பவதி ஸ க்ரதும் குர்வீத மநோமய ப்ராண சரீர இதி —
அத்ர ஸர்வம் கல் விதம் ப்ரஹ்ம இதி ஸர்வாத்மகத்வேந நிர் திஷ்டம் ப்ரஹ்ம கிம் ப்ரத்யகாத்மா உத பரமாத் மேதி ஸம்சய –ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ –ஸர்வத்ர தாதாத்ம்யோபதேஸோ ஹி தஸ்யைவோப பத்யதே —
பரஸ்து து ப்ரஹ்மணஸ் ஸகல ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நஸ்ய ஸமஸ்த ஹேயாகர ஸர்வ தாதாத்ம்யம் விரோதாதேவ ந சம்பவதி –ப்ரத்யகாத்மநோ ஹி கர்ம நிமித்தோ ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த ஸர்வ பாவ உப பத்யதே -ஸ்ருஷ்ட்யாதி ஹேதுகத்வம் ச தத் தத் கர்ம நிமித்ததத்வேந ஸ்ருஷ்ட்யாதேருப பத்யதே –ப்ரஹ்ம சப்தோ அபி ப்ருஹத்வ குண யோகேந தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூப மந்நம் ச ஜாயதே இதிவத் தத்ரைவ வர்ததே –ராத்தாந்தஸ்து தஜ்ஜலான் இதி ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி தஜ் ஜன்ம ஸ்திதி லய ஹேதுகம் ததாத்மகத்வம் ப்ரஸித்தவந் நிர் திஸ்யமாநம் பரஸ்யைவ ப்ரஹ்மண உப பத்யதே -பரஸ்மாத் ப்ரஹ்மண ஏவ ஹி ஜகஜ் ஜன்ம ஸ்திதி லயா ப்ரஸித்தா ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதம் ஸர்வமஸ்ருஜத இத்யாதிஷு –ததா- ஸர்வாத்மகத்வம் ச ஜன்மாதி ஹேதுகம் பரஸ்யைவ ப்ரஹ்மண ப்ரஸித்தம் ஸந் மூலாஸ் ஸோம்யேமாஸ் ஸர்வா ப்ரஜாஸ் ஸதாயதநாஸ் ஸத் ப்ரதிஷ்டா ஐததாத்ம் யமிதம் ஸர்வம் இதி -ஹேய ப்ரத்ய நீக -கல்யாணைகதாநாத்ம நஸ் ச பரஸ்ய ஹேயாகர ஸர்வ பூதாத்மத்வமவிருத்தம் –ய ப்ருதிவ்யாம் திஷ்டன் யஸ்ய ப்ருதிவீ சரீரம் ய ஆத்மநி திஷ்டன் –யஸ்ய ஆத்மா ஸரீரம் ஸ த ஆத்மா அந்தர்யாம் யமருத இத்யாதிநா சரீராத்ம பாவேந சர்வாத்மத்வோபபாதநாத் –சரீராத்மநோஸ்ச ஸ்வபாவ வ்யவஸ்தாபநாத் -ஸர்வம் ப்ரஹ்மேதி ஸாமாநாதி கரண்ய நிர்தேஸஸ் ச ஸர்வ சப்தஸ்ய ஸர்வ சரீரகே ப்ரஹ்மண்யேவ ப்ரவ்ருத்தேருப பத்யதே –சரீர வாசீ ஹி ஸப்த ஸரீரிண்யாத்மந்யேவ பர்யவஸ்யதி–தேவ மநுஷ்யாதி ஸப்தவத் –ஸூத்ரார்தஸ்து –ஸர்வத்ர ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இதி நிர்திஷ்டே வஸ்துநி ஸர்வ ஸப்த வாஸ்யே ஸாமாநாதி கரண்யேந தாதாத்மதயா நிர்திஷ்டம் பரம் ப்ரஹ்மைவ -குத -ப்ரசித்தோபதேஸாத் –தஜ்ஜலாநிதி ஸர்வமிதம் ப்ரஹ்ம கலு இதி ப்ரஸித்தவத் தஸ்யோபதேஸாத் –ததேவ ஹி ஜகஜ் ஜந்ம ஸ்திதி லய ஹேதுத்வேந வேதாந்தேஷு ப்ரஸித்தம் –1-

34-விவஷித குணோப பத்தேஸ் ச -மநோ மயத் வாதிகாஸ் ஸத்ய ஸங்கல்பத்வ மிஸ்ரா விவஷிதா குணா பரஸ்மின்நேவோப பத்யந்தே –2-

34–விவஷித குண உபபத்தேஸ் ச –மநோ மயத்வாதிகாஸ் ஸத்ய ஸங்கல்பத் வாதயோ விவஷித குணா ப்ரஹ்மண்யேவோப பத்யந்தே –2-

35-அநுப பத்தேஸ் து சாரீர–துக்க மிஸ்ர பரிமித ஸூக லவபாகிநி ஸாரீரே த்வேஷாம் குணாநாம் அநுப பத்தேர்ந ஸாரீரோ அயம் -3-

35-அநுப பத்தேஸ் து ந சாரீர –ஏதேஷாம் குணாநாம நந்த துக்க மிஸ்ர பரிமித ஸூக லவ பாகிந் யஜ்ஜே கர்ம பரவஸே ஸாரீரே ப்ரத்யகாத்மந்யநுப பத்தேஸ் சாயம் ந சாரீர –அபி து பரமேவ ப்ரஹ்ம –3-

36-கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் -ச ஏதமித ப்ரேத்யாபி சம்ப விதாஸ்மி இதி அபி ஸம்பாவ்யாபி ஸம்பவித்ருத்வேந ப்ரஸ்துத பிரம்மா ஜீவயோர் வ்யபதேஸாத் அபி ஸம்பாவ்யம் ப்ரஹ்ம ஜீவாதர்தாந்தரம் –4-

36-கர்ம கர்த்ரு வ்யபதேசாச் ச –ஏதமித ப்ரேத்யாபி ஸம்பவிதாஸ்மி இதி ப்ராப்யதயோபாஸ்யோ நிர்திஸ்யதே ப்ராப்தருதயா ச ஜீவ –அதஸ் ச ஜீவாதந்யதேவேதம் பரம் ப்ரஹ்ம –4-

37-ஸப்த விசேஷாத் –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி சாரீரஷ் ஷஷ்ட்யா ப்ரதமயா ச ஜீவோ ப்ரஹ்ம ச வ்யபதிஸ்யதே ததஸ் சார்தாந்தரம் -5-

37-ஸப்த விசேஷாத் –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி சாரீரஷ் ஷஷ்ட்யா நிர் திஷ்ட -உபாஸ்ய ப்ரதமயா -அதஸ் ச ஜீவாதந்ய –5-

38-ஸ்ம்ருதேஸ் ச -அத்ராபி ப்ரதமயா நிர் திஷ்ட புருஷோத்தம இதி நிஸ்ஸீயதே -ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹனம் ச இதி ஸ்ம்ருதேஸ் ச –6-

38-ஸ்ம்ருதேஸ் ச –ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநம் அபோஹநம் ச இதி ஸ்ம்ருதேஸ் ச அதஸ் ச ஜீவாதந்ய உபாஸ்ய பரமாத்மா –6-

39-அர்ப் கௌகஸ்த்வாத் தத் வ்யபதேசாச் ச நேதி சேந்ந நிஸாய்யத்வா தேவம் வ்யோமவச்ச –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே அணீயான் வ்ரீஹே –இத்யாதிநா அல்ப ஆயதநத்வாத் ஸ்வரூப அல்பத் வஸ்ய வ்யபதேஸாச் ச நாயம் பர இதி சேந்ந உபாஸ்யத்வாத்தேதோ –ததா வ்யபதேஸ ந து ஸ்வரூப அல்பத்வேந வ்யோமவத் ஸ்வரூப மஹத்வம் சாத்ரைவ வ்யபதேஸ் யதே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் இத்யாதி நா –7-

39-அர்ப கௌகஸ்த்வாத் தத் வ்யபதேசாஸ் ச நேதி சேந்ந நிசாய்யத்வாதேவம் வ்யோமவச் ச –ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதய இதி அல்பஸ்தாநத்வாத் அணீயாந் வ்ரீஹேர்வா யவாத்வா இத்யல்பத்வ வ்யபதேசாச் ச ந பரம் ப்ரஹ்மேதி சேந்ந –நிசாய்யத்வாதேவம் ஏவமுபாஸ்யத் வாத்தே தோரல்பாயதநத் வால்பத்வ வ்யபதேஸ -ந ஸ்வரூப அல்பத்வேந ஜ்யாயாந் ப்ருதிவ்யா இத்யாதிநா ஸர்வஸ்மாஜ் ஜ்யாயஸ்த்வோபதேஸாத் –ஜ்யாயஸோ அப் யஸ்ய ஹ்ருதயாயதநாவச்சேதேந அல்பத்வாநு ஸந்தானமுப பத்யதே –வ்யோமவத் யதா மஹதோ அபி வ்யோம்நஸ் ஸூசிபதாதிஷ் வல்பத்வாநு சந்தானம் -ச சப்தோ அவதாரணே தத்வதேவேத்யர்த -ஸ்வாபா விகம் சாஸ்ய மஹத் த்வமத்ராபி தீயத இத்யர்த –ஜ்யாயான் ப்ருதிவ்யா ஜ்யாயான் அந்தரிஷாஜ் ஜ்யாயா யாந்திவோ ஜ்யாயா நேப்யோ லோகேப்ய இதி ஹ்யநந்தரமேவ வ்யபதிஸ்யதே –7-

40-ஸம்போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத் –பரோ அப்யந்தஸ் ஸரீரே வசதி சேத் ஜீவவத் ஸூக துக்க உப போக ப்ராப்திஸ் ஸ்யாதிதி சேந்ந ஹேதுவை சேஷ்யாத்-பரஸ்ய ஹி சந்ததோ ஜீவ ரஷாயை ஸரீராந்தர்வாஸ –8-இதி ஸர்வத்ர பிரஸித்தி யதிகரணம் –1-2-1-

40-ஸம் போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத்–யத் யுபாஸக ஸரீரே ஹ்ருதயே அயமயி வர்த்ததே ததஸ் தத்வ தேவாஸ்யாபி சரீர ப்ரயுக்த ஸூக துக்க ஸம்போக ப்ராப்திரிதிசேந்ந -ஹேதுவைசேஷ்யாத்-ந ஹி ஸரீராந்தர் வர்த்தித்தவமேவ ஸூக துக்க உப போக ஹேது –அபி து கர்ம பரவஸத்வம் -தத்துவபஹத பாப்மந பரமாத்மநோ ந ஸம்பவதி —8-இதி ஸர்வத்ர ப்ரஸித்தி யதி கரணம் –8-

1-2-2-அத்த்ரதிகரணம்
41-அத்தா சராசர க்ரஹணாத்
 –யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சோபே பவத ஓதந ம்ருத்யுர்யஸ்ய உபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ இதி –இத்யத்ர ஓதந உபஸேசந ஸூசிதோ அத்தா பரம புருஷ –ப்ரஹ்ம ஷத்ரோ பலஷி தஸ்ய சராசரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய ம்ருத்யூபஸேசநத்வேந அதநீய தயா க்ரஹணாத் –9-

1-2-2-அத்தரதி கரணம்
41-அத்தா சராசரக்ரஹணாத்
— கட வல்லீஷ்வாம் நாயதே யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சோபே பவத ஓதந -ம்ருத்யுர் யஸ்ய உபஸேச நம் க இத்தா வேத யத்ர ஸ இதி –அத்ரோதநோபஸேசந ஸூசிதோ அத்தா -கிம் ஜீவ உத பரமாத்மேதி ஸம்ஸய –ஜீவ இதி பூர்வ பக்ஷ –குத –போக்த்ருத்த்வஸ்ய கர்ம நிமித்தத்த் வாஜ்ஜீவஸ்யைவ தத் ஸம்பாவாத் –ராத்தாந்தஸ்து- ஸர்வ உப ஸம்ஹாரே ம்ருத்யூபஸேசநமத நீயம் சராசராத்மகம் க்ருத்ஸ்னம் ஜகதிதி தஸ்யை தஸ்யாத்தா பரமாத்மைவ –ந சேதம் கர்ம நிமித்தம் போக்த்ருத்த்வம் –அபி து ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி லய லீலஸ்ய பரமாத்மநோ ஜகத் உப ஸம்ஹாரித்வ ரூபம் போக்த்ருத்வம் –ஸூத் ரார்த –ப்ரஹ்ம ஷத்ரவ் தநஸ்யாத்தா பரமாத்மா -ப்ரஹ்ம க்ஷத்ர சப்தேந சராசரஸ்ய க்ருத்ஸ் நஸ்ய ஜகதோ க்ரஹணாத் –ம்ருத்யூபஸேசநோ ஹ்யோதநோ ந ப்ரஹ்ம க்ஷத்ர மாத்ரம் -அபி து ததுபல ஷிதம் சராசராத் மகம் க்ருத்ஸ்னம் ஜகதேவ –9-

42-ப்ரகரணாச் ச –மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந சோசதி நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா இதி பரஸ்யைவ ஹீதம்-இத்யாதிநா பரஸ்யைவ ப்ரக்ருதத்வாத் ஸ ஏவாயம் –10-

42-ப்ரகாரணாச் ச –மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஸோசதி நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா இதி பரஸ்யைவ ஹீதம் ப்ரகரணம் –அதஸ் சாயம் பரமாத்மா –10-

43-குஹாம் ப்ரவிஷ்டா வாத்மாநவ் ஹி தத் தர்சநாத் –அநந்தரம் ருதம் பிபன்னவ் ஸூக்ருதஸ்ய லோகே -குஹாம் ப்ரவிஷ்டவ் பரமே பரார்த்யே -இத்யாதிநா
ஜீவ பரமாத்மா நாவேவ ப்ரயோஜ்ய ப்ரயோஜக பாவேந கர்ம பலாஸநே அந்வயாதுப திஷ்டவ் –தயோரேவாஸ்மிந் ப்ரகரணே குஹா ப்ரவேஸ தர்சநாத் தம் துர்தர்ஸம் கூடமநு ப்ரவிஷ்டாம் குஹா ஹிதம் இதி பரஸ்ய குஹாம் ப்ரவிஸ்ய யா ப்ராணேந ஸம்பவத்யதிதிர் தேவதாமயீ திஷ்டந்தீ இதி ஜீவஸ்ய கர்ம பலாத நாததிதிர் ஜீவ –11-

நன்வ தந்தரம் ருதம் பிபன்னவ் ஸூக்ருதஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டவ் பரமே பரார்த்யே இதி த்வயோ கர்ம பலாதநாத ஸ்ரவணாத் பரமாத்ம நஸ்ச கர்ம பலாத நான்வயாத் அந்தக்கரண த்விதீயோ ஜீவ ஏவ தத்ராத் தேதி ப்ரதீயதே அதோ அத்ராபி ஸ ஏவ ஜீவோ அத்தா பவிது மர்ஹாதீத்யா சங்க்யாஹ –

43-குஹாம் ப்ரவிஷ்டா வாத்மானவ் ஹி தத் தர்சநாத் –குஹாம்ப்ரவிஷ்டவ் ஜீவாத்ம பரமாத்மாநவ் ஜீவ த்வதீய பரமாத்மைவ தத்ர பிரதீயத இத்யர்த –ஸ்வய மநஸ்நதோ அபி பரமாத்மந ப்ரயோஜக தயா பாநே அந்வயோ வித்யதே –ஜீவ த்வதீய பரமாத்மேதி கதமவகம்யதே–தத் தர்ச நாத் –தயோரேவ ஹ்யஸ்மின் ப்ரகரணே குஹாப்ரவேஸ் வ்யபதேஸோ த்ருஸ்யதே தம் துர் தர்சம் கூட மநு ப்ரவிஷ்டம் குஹா ஹிதம் கஹ்வ ரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதி கமேந தேவம் மத்வா தீரோ ஹர்ஷஸோகவ் ஜஹாதி இதி பரமாத்மந யா ப்ராணேந சம்பவத்யதிதிர் தேவதா மயீ குஹாம் ப்ரவிஸ்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யஜாயத இதி ஜீவஸ்ய –கர்ம பலாந் யத்தீத்யதிதி ஜீவ –11-

44-விசேஷணாச் ச –ஜீவ பரா வேவ ஹி ஸர்வத்ர அஸ்மின் ப்ரகரணே விசேஷ்யேதே -ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித் இத்யாதவ் ஜீவ அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் மஹாந்தம் விபுமாத்மாநம் நாயாமாத்மா ப்ரவசநேந -விஞ்ஞாந சாரதிர் யஸ்து மந ப்ரக்ரஹ வாந்தர ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் இத்யாதி ஷு பர –த்ரிபாதஸ் யாம்ருதம் தீவி அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்தமேஷு உத்தமேஷு லோகேஷு இதி விஸ்வத -ப்ராக்ருதாத் ஸ்தாநாத் பரம் விஷ்ணோ பரஸ்தாந மேவ ஹி ஸம்ஸாராத்வந பாரபூதம் முமுஷுபி ப்ராப்யம் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய ததஷரே பரமே வ்யோமன் க்ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே விஸ்வம் புராணம் தமஸ பரஸ்தாத் தே ஹ நாகம் மஹிமாநஸ் ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா இத்யாதி ஸகல உப நிஷத் ப்ரஸித்தம் –-12-அத்த்ரதிகரணம் –2–

44-விசேஷணாச் ச –அஸ்மின் ப்ரகரணே ஹ்யுப க்ரம ப்ரப்ருத்யோப ஸம்ஹாராஜ் ஜீவ பரமாத்மா நாவேவோபாஸ் யத்வ உபாஸ கத்வ ப்ராப்த்ருத்வாதிபிர் விஸிஷ்யதே மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஸோசதி-விஞ்ஞான சாரதிர் யஸ்து மந ப்ரக்ரஹவாந்தர ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் இத்யாதி ஷு அதஸ் சாத்தா பரமாத்மா –-12- இதி அத்த்ரதி கரணம் -2-

1-2-3-அந்தராதிகரணம்
45-அந்தர உப பத்தே 
–சாந்தோக்யே -ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே ஏக்ஷ ஆத்மேதி ஹோவாசைத தம்ருதமபய மேதத் ப்ரஹ்ம இத்யத்ர அஷ்யாதார
பரம புருஷ நிருபாதிக அம்ருதத்வ அபயத்வ ஸம்பத்வாமத்வாதீநாம் அஸ்மின் நேவோப பத்தே –13-

1-2-3-அந்தராதி கரணம்
45-அந்தர உப பத்தே
–சாந்தோக்யேய ஏஷோ அந்தரக்ஷிணி புருஷோ த்ருஸ்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாஸை ததம்ருதமபயமேதத் ப்ரஹ்ம இத்யத்ர அஷ்யாதார-புருஷ கிம் ப்ரதிபிம்பாத்ம ஜீவ தேவதா விசேஷாந்யதம உத பரமாதமேதி ஸம்ஸய -ஏஷ்வந்யதம இதி பூர்வ பக்ஷ –குத –ய ஏஷ த்ருஸ்யதே இதி ப்ரஸித்தவத் ஸாஷாத்கா நிர் தேஸாத் –ராத்தாந்தஸ்து –பரமாத்மைவாயமஷ்யாதார புருஷ -அஷி புருஷ சம்பந்தி தயா ஸ்ரூய மாணா நிருபாதிகாத்மத்வாம்ருதத்வ அபயத்வ ப்ரஹ்மத்வ ஸம்யத்வாமத் வாதய-பரமாத்மந்யேவோப பத்யந்தே –ப்ரஸித்தவந் நிர்த் தேஸ ஸஸ் ச யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாதி ஸ்ருத் யந்தர பிரஸித்தே ரூப பத்யதே –ஸாஷாத் காரஸ் ச ததுபாஸந நிஷ்டாநாம் யோகிநாம் –ஸூத்ரார்தஸ்து–அஷ் யந்தர பரமாத்மா -ஸம் யத்வாமத்வாதீ நாம் குணாநாமத்ரைவோப பத்தே –13-

46-ஸ்தாநாதிவ்ய தேசாச் ச--யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாததி நா ஸ்திதி நியம நாதீ நாம் வ்யபதேஸாச் சாயம் பர –14-

46-ஸ்தாநாதி வ்யபதேஸாச் ச –ஸ்தாநம் ஸ்திதி –பரமாத்மந ஏவ யஸ் சஷுஷி திஷ்டன் இத்யாதவ் சஷுஷி ஸ்திதி நியமநாதீநாம் வ்யபதேஸாச் சாயம் பரமாத்மா –15-

47-ஸூக விஸிஷ்டாபிதாநா தேவ ச -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இதி பூர்வத்ராஸ் யைவ ஸூக விஸிஷ்ட தயா அபிதாநாச் சாயம் பர –15

47-ஸூக விஸிஷ்டாபி தாநாதேவ ச –ப்ராணோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இதி ஸூக விஸிஷ்ட தயா ப்ரக்ருதஸ் யைவ பரஸ் யைவ ப்ரஹ்மணோ அஷ்யாதார தயா உபாஸ் யத்வாபிதா நாச் சாயம் பரமாத்மா -ஏவ காரோ அஸ்யைவ ஹேதோர் நைரபேஷ்யாவகமாய –15-

48-அத ஏவ ச ஸ ப்ரஹ்ம -யதஸ் தத்ர பவ பய பீதா யோபகோஸலாய ப்ரஹ்ம- ஜிஜ்ஞாஸவே கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இத்யுபதிஷ்ட யத்வா யதேவ கம் ததேவ கம் இதி ஸூக ரூப அதஸ் ஸூக சப்தாபிதேய ஆகாஸ பரமேவ ப்ரஹ்ம — -16-

ப்ராணோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம இத்யத்ர ஸூக விசிஷ்டம் பரமேவ ப்ரஹ்மாபி பிஹிதமிதி கதமிதமவ கம்யதே யாவதா நாமாதிவத் ப்ரதீகோபாஸ நமே வேத்யா சங்க்யாஹ

48-அத ஏவ ச ஸ ப்ரஹ்ம –யதஸ்தத்ர பவ பய பீதாயோபகோஸலாய ப்ரஹ்ம ஸ்வரூப ஜிஜ்ஞாஸவே கம் ச து கம் ச ந விஜாநாமி இதி ப்ருச்சதே யதேவ கம் ததேவ கம் ததேவ கம் யதேவ கம் இத்யந்யோன்ய வ்யவச்சேத கதயா அபரிச்சின்ன ஸூக ஸ்வரூபம் ப்ரஹ்மேத்யபிதாய பிராணம் ச ஹாஸ்மை ததாகாஸம் சோசு இத்யுக்தம் –அத ஏவ கஸ்ப்தாபிதேயஸ்ஸ ஆகாஸோ அபரிச்சின்ன ஸூக விசிஷ்டம் பரம் ப்ரஹ் மைவ –16-

49-ஸ்ருதோபநிஷத்க கத்யபிதா நாச்ச–ஸ்ருத ப்ரஹ்ம ஸ்வரூபாணாம் அதி கந்தவ்ய தயா அர்ச்சிராதி கதேரஷி புருஷம் ஸ்ருதவதே தேஅர்சிக்ஷமேசபை சம்பவந்தி இத்யாதி நா -அபிதாநாச் சாயம் பரம புருஷ –17-

49-ஸ்ருதோப நிஷத்க கத்யபிதா நாச்ச –ஸ்ருதோப நிஷத்கை –அதிகத ப்ரஹ்ம யாதாதம்யை ப்ரஹ்ம ப்ராப்தயே யா கதிர் அர்ச்சிராதி ரதி கந்தவ்யதயா அவகதா ஸ்ருத் யந்தரே தஸ்யாஸ் சேஹாஷி புருஷம்ஸ்ருதவதோ அதி கந்தவ்யதயா தேஅர்சிக்ஷமேவாபி சம்பவந்தி இத்யாதிநா அபிதாநாதக்ஷி புருஷ பரமாத்மா –17-

50-அந வஸ்தி தேர ஸம் பவாச் ச நேதர–பரஸ்மாதிதரோ ஜீவாதிர் நாஷ்யாதார –சஷுஷி நியமேந அனவஸ்திதே அம்ருதத்வாத்ய சம்பவாச் ச —18-அந்தராதிகாரணம்–3-

50-அந வஸ்தி தேர ஸம்பவாச் ச நேதர –பரமாத்மந இதர ஜீவாதிக தஸ்யாஷ்ணி நியமேன அந வஸ்திதே அம்ருதத்வ ஸம்யத்வாமத்வாதீநாம் சா ஸம்பவான்ந ஸோ அஷ் யாதார —18-இதி அந்தராதி கரணம் –3-

1-2-4-அந்தர்யாம் யதிகரணம்
51-அந்தர்யாம் யதிதைவாதி லோகாதிஷு தத் தர்ம வ்யபதேஸாத்
 –ப்ருஹ தாரண்யகே ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோ யம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயத்யேக்ஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –இத்யாதிஷு அதி தைவாதி லோகாதி பத சிஹ்நிதேஷு வாக்யேஷு ஸ்ரூயமாணோ அந்தர் யாமீ பரம புருஷ –ஸர்வ அந்தரத்வ ஸர்வ அவிதத்வ ஸர்வ ஸரீரகத்வ ஸர்வ நியந்த்ருத்வாதி பரமாத்ம தர்ம வ்யபதேஸாத் –19-

1-2-4-அந்தர்யாம் யதி கரணம்
51-அந்தர் யாம் யதிதைவாதி லோகாதிஷு தத் தர்ம வ்யபதேஸாத்
–ப்ருஹ தாரண்யகே -ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோ யம் ப்ருதிவீ ந வேத யஸ்ய ப்ருதிவீ ஸரீரம் ய ப்ருதிவீ மந்த்ரோ யமயத்வேஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத இத்யாதிஷு ஸர்வேஷு பர்யாயேஷு ஸ்ரூய மாணோ அந்தர்யாமீ கிம் ப்ரத்யகாத்மா உத பரமாத்மேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ
வாக்ய ஸேஷே த்ரஷ்டா ஸ்ரோதா மந்தா இதி த்ரஷ்ட்ருத்வாதி ஸ்ருதே –நான்யோ அதோ அஸ்தி த்ரஷ்டா இதி தராஷ்ட்ரந்தர நிஷேதாச் ச –ராத்தாந்தஸ்து -ப்ருதிவ்யாத் யாத்ம பர்யந்த ஸர்வ தத்த்வா நாம் ஸர்வைஸ்தைர த்ருஷ்டே நைகேந நியமனம் நிருபாதிக அம்ருதத்வாதிகம் ச பரமாத்மந ஏவ தர்ம இத்யந்தர்யாமீ பரமாத்மா –த்ரஷ்ட்ருத்வாதிஸ் ச ரூபாதி சாஷாத்கார –ஸ ச பஸ்யத்யசஷு இத்யாதிநா பரமாத்மநோ அப் யஸ்தி–நான்யோ அதோ அஸ்தி த்ரஷ்டா இதி ச ஜீவேநா த்ருஷ்டாந்தர்யாமி த்ரஷ்ட்ருத்வாத் அந்தர்யாமிணா அபி அத்ருஷ்ட த்ரஷ்டாந்தர நிஷேத பர —
ஸூத்ரார்த -அதிதைவாதி லோகாதி பத சிஹ்நிதேஷு வாக்யேஷு ஸ்ரூயமாணோ அந்தர் யாமீ பரமாத்மா – ஸர்வ அந்தரத்வ ஸர்வ அவிதத்வ -ஸர்வ சரீரகத்வ -ஸர்வ நியமன -ஸர்வாத்மத்வ அம்ருதத்வாதி பரமாத்ம தர்மாணாம் வ்யபதேஸாத் –19-

52-ந ச ஸ்மார்தம தத் தர்மாபி லாபாச் சாரீரஸ் ச –நாயம் ப்ரதாநம் ஜீவஸ் ச தயோர ஸம்பாவித ஸர்வ அவ்விதத்வாதி-தர்ம அபி லாபாத் –அஸம்பாவநயா யதா ந ஸ்மார்தம் ததா ஜீவோ அபீத்யர்த –20-

52-ந ச ஸ்மார்தம தத்தர்மாபி லாபாச் சாரீரஸ் ச –ஸ்மார்த்தம் ப்ரதாநம் -சாரீர ப்ரத்யகாத்மா -ஸ்மார்த்தம் ச சாரீரஸ் ச நாந்தர்யாமீ -தயோர ஸம்பாவித யுக்த தர்ம அபி லாபாத் –யதா ஸ்மார்தஸ்யா சேதனஸ்யா ஸம் பாவநயா நாந்தர்யாமித்வ ப்ரஸக்தி –ததா ப்ரத்யகாத்மநோ அபீத் யர்த –20-

53-உபயே அபி ஹி பேதே நைந மதீயதே –உபயே காண்வா மாத்யந்திநாஸ் ச யோ விஞ்ஞாநே திஷ்டன் -ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா ஸரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி இதி பிரத்யாகாத்மநோ பேதே நைநம் -அந்தர் யாமிண மதீயதே அத பர ஏவாயம் —21-இதி அந்தர்யாம் யதிகரணம் –1-2-4-

53-உபயே அபி ஹி பேதேநைநம தீயதே –உபயே காண்வா மாத்யந்திநா அபி யோ விஞ்ஞாநே திஷ்டன் -ய ஆத்மநி திஷ்டன் இதி யதஸ் ப்ரத்யகாத்மநோ பேதே நைநம் -அந்தர்யாமிண மதீயதே அதோ அயம் ததாதிரிக்த பரமாத்மா -21-இதி அந்தர்யாம் யதி கரணம் –4-

1-2-5-குணக அதிகரணம்
54-அத்ருஸ்யத்வாதி குணகோ தர்மோக்தே –ஆதர்வணே அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம்யதே யத் தத் அத்ரேஸ்யம் இத்யாராப்ய யத் பூத யோநிம் பரிபஸ் யந்தி தீரா -அஷராத் பரத பர இத்யாதவ் ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் ச அர்த்தாந்தர பூத பரமாத்மா ப்ரதிபாத்யதே –யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் இத்யாதி தர்மோக்த –22-

1-2-5-அத்ருஸ்யத்வாதி குணக அதி கரணம்
54-அத்ருஸ்யத்வாதி குணகோ தர்மோக்தே
–ஆதர்வணே -அத பரா யயா தத் அக்ஷரம் அதி கம்யதே யத் தத் அத்ரேஸ்யம் இத்யாராப்ய யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -அக்ஷராத் பர இத்யாதவ் -கிம் ப்ரதான புருஷவ் ப்ரதிபாத்யதே –உத பரமாத்மைவேதி ஸம்சய –ப்ரதான புருஷாவிதி -பூர்வ பக்ஷ
ப்ருதிவ்யாத்ய சேதன கத த்ருஸ்யத்வாதீநாம் பிரதி ஷேதாத் தஜ்ஜாதீய சேதனம் ப்ரதானமேவ பூதயோன்யஷரமிதி ப்ரதீயதே –ததா அக்ஷராத் பரத பர இதி ச தஸ்யாதிஷ்டாதா
புருஷ ஏவேதி –ராத்தாந்தஸ்து –உத்தரத்ர யஸ் ஸர்வஜ்ஞ்ஞஸ் ஸர்வ வித் இதி -ப்ரதான புருஷ யோர ஸம்பாவிதம் ஸார்வஜ்ஞயம் அபிதாய தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே இதி ஸர்வஞ்ஞாத் ஸத்ய சங்கல்பாஜ் ஜகத் உத்பத்தி -ஸ்ரவணாத் பூர்வோக்தம த்ருஸ்யத்வாதி குணகம் பூதயோன் யக்ஷரம் அக்ஷராத் பரத பர இதி ச நிர் திஷ்டம் தத் அக்ஷரம் பரம் ப்ரஹ்மைவேதி விஞ்ஞாயதே –ஸூத்ரார் தஸ்து–அத்ருஸ்யத் வாதி குணக பரமாத்மா -ஸர்வஞ்ஞத் வாதி தத் தர்ம யுக்தே –22-

55–விசேஷண பேத வ்யாபதேசாப்யாம் ச நேதரவ் –ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞான ரூப விசேஷண வ்யபதேஸாந்ந ப்ரதாநம் –அக்ஷராத் பரத பர இதி ப்ரதாநாத் பரத -ப்ரத்யகாத்மநோ அபி பர இதி பேத வ்யபதேஸாத் ந ப்ரத்யகாத்மா ச -அதவா ஸாமாநாதி கரண்யேந பரதோ அக்ஷராத் பஞ்ச விம்சகாத் பர இதி பேத வ்யபதேஸ –23-

55-விசேஷண பேத வ்யபதேஸாப்யாம் ச நேதரவ்–விஸிநஷ்டி ஹி ப்ரகரணம் ப்ரதாநாத் பூதயோந் யக்ஷரமேக –விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாநாதி நா -ததா அக்ஷராத் பரத -பர இதி அக்ஷராத் அவ்யாக்ருதாத் பரதோ அவஸ்த்திதாத் புருஷாத் பர இதி புருஷாச் சாஸ்ய பூதயோன்யஷரஸ்ய பேதோ வ்யபதிஸ்யதே –அதஸ் ச ந ப்ரதான புருஷவ் –அபி து பரமாத்மை வாத்ர நிர் திஷ்ட –23-

56-ரூபோ பந்யா ஸாச் ச –-அக்னிர் மூத்தா இத்யாதி நாத்ரை லோக்ய ஸரீரோபந்யாஸாச் ச பரமாத்மா –—24-இதி அத்ருஸ்யத்வாதி –குணக அதிகரணம் –5-

56-ரூபோபந்யாஸாச் ச– அக்னிர் மூத்தா இத்யாதிநா ஸமஸ்தஸ்ய சித் அசித் ஆத்மாக ப்ரபஞ்சஸ் ய பூதயோன் யக்ஷர ரூபத்வேன உபந்யாஸாச் சாயம த்ருஸ்யத்வாதி குணக பரமாத்மா —24- இதிஅத்ருஸ்யத்வாதி குண அதி கரணம் –5-

1-2-6–வைஸ்வாநர அதிகரணம்
57-வைஸ்வாநரஸ் ஸாதாரண ஸப்த விசேஷாத்
 –சாந்தோக்ய ஆத்மாந மேவேமம் வைஸ்வாநரம் இத்யாதவ் வைஸ்வாநர பரமாத்மா ஜாடராக்ந்யாதிஷு ஸாதாரணஸ்யாபி வைஸ்வாநரஸப்தஸ் யாஸ்மிந் ப்ரகரணே பரமாத்ம அசாதாரணை ஸர்வ ஆத்மகத்வ ப்ரஹ்ம ஸப்தாபி விசேஷ்யமாணத்வாத் –25-

1-2-6-வைஸ்வாநராதி கரணம்
57- வைஸ்வாநரஸ் ஸாதாரண ஸப்த விசேஷாத்
–சாந்தோக்யே ஆத்மாநமேவேமம் வைஸ்வா நரம் ஸம் ப்ரத்யத்யேஷி தமேவ நோ ப்ரூஹி இத்யாராப்ய யஸ்த்வேதமேவம் ப்ராதேஸ மாத்ரமபிவிமாநமாத்மாநம் வைஸ்வாநரம் உபாஸ்தே இத்யத்ர கிமயம் வைஸ்வாநர பரமாத்மேதி ஸக்ய நிர்ணய உத நேதி ஸம்சய -அஸக்ய நிர்ணய இதி பூர்வ பக்ஷ –வைஸ்வா நர சப்தஸ்ய ஜடாராக்நவ்-பூத த்ருதீயே தேவதா விஸேஷே பரமாத்மநி ச வைதிக ப்ரயோக தர்சநாத் அஸ்மின் ப்ரகரணே ஸர்வேஷாம் லிங்கோ பலப்தேஸ் ச –ராத்தாந்தஸ்து –கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம இதி ஸர்வேஷாம் ஜீவாநாம் ஆத்ம பூதம் ப்ரஹ்ம கிமிதி ப்ராக்ரமாத் உத்தரத்ர ச ஆத்மாநம் வைஸ்வாநரம் இதி ப்ரஹ்ம ஸப்த ஸ்தாநே ஸர்வத்ர வைஸ்வாநர ஸப்த பிரயாகாச் ச வைஸ்வாநராத்மா ஸர்வேஷாம் ஜீவாநாம் ஆத்ம பூதம் பரம் ப்ரஹ்மேதி விஞ்ஞாயதே –ஸூத்ரார்த –வைஸ்வாநர ஸப்த நிர் திஷ்ட பரமாத்மா வைஸ்வாநர ஸப்தஸ்யாநே கார்தஸாதாரணஸ்யாபி அஸ்மின் ப்ரகரணே பரமாத்மா ஸாதாரண விஸேக்ஷணை ஸர்வாத்மத் வாதிபி விசேஷ்யமாணத்வாத் –விஸேஷ்யதே இதி விஸேக்ஷ –25-

58-ஸ்மர்யமாணம் அநு மானம் ஸ்யாதிதி–த்யு லோக ப்ரப்ருதி ப்ருதி வ்யந்தம் ரூபம் அக்னிர் மூர்தா இத்யாதி ஷுக்தம் அத்ர ப்ரத்யபிஜ் ஞாயமாநமஸ்ய பரமாத்மத்வே அநு மாநம் லிங்கமித் யர்த –26-

58-ஸ்மர்யமாண மநுமாநம் ஸ்யாதிதி –ஸ்மர்யமாணம் –ப்ரத்யபிஜ் ஞாயமாநம் அநு மீயதே அநேநேதி அநுமாநம் –இதி ஸப்த ப்ரகார வசந இத்தம் ரூபம் ஸ்மர்யமாணம் வைஸ்வாநரஸ்ய பரமாத்மத்வே அநுமாநம் ஸ்யாத் த்யு ப்ரப்ருதி ப்ருதிவ்யந்தம் அவயவ விபாகேந வைஸ்வா நரஸ்ய ரூபமிஹோப திஷ்டம் –அக்னிர் மூர்தா சஷுஷீ சந்த்ர ஸூர்யவ் த்யாம் மூர்தாம் யஸ்ய விப்ரா வதந்தி இதி ஸ் ருதி ஸ்ம்ருதி ப்ரஸித்தம் பரம புருஷ ரூபமிஹ ப்ரத்யபிஜ் ஞாயமாநம் வைஸ்வாநரஸ்ய பரமாத் மத்வே லிங்கம் ஸ்யாதித் யார்த –26-

59-ஸப் தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்ச நேதி சேந்ந ததா த்ருஷ்ட் யுபதேசாத சம்பவாத் புருஷமபி சைநம தீயதே –ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநர இதி அக்னி ஸப்த ஸாமாநாதி கரண்யாத் ப்ராணா ஹூத் யாதாரத்வாதிபி –புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் இத்யாதேஸ் ச நாயம் பரமாத்மேதி சேத் நைதத் ஜாடராக்னி சரீர கத்வேநோபாஸ் யத்வோபதேஸாத் கேவல ஜாடராக்நே த்ரை லோக்ய சரீரகத்வாத்ய சம்பவாச் ச –ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநரோ யத் புருஷ இத்யேநம் வைஸ்வாநரம் புருஷமப்யதீயதே வாஜிந –நிருபாதிக புருஷ ஸப்தஸ் ச பரமாத்மநி நாராயணே ஏவ ஸஹஸ்ர ஸீர்ஷம் இத்யாரப்ய விஸ்வமேவேதம் புருஷ இத்யாதி ஷு ப்ரஸித்த –27-

59-ஸப் தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்ச நேதி சேந்ந ததா த்ருஷ்ட் யுபதேசாத சம்பவாத் புருஷமபி சைநம தீயதே -அநிர்ணயமா சங்க்ய பரிஹரதி –ஸப்தாதிப்யோ அந்த ப்ரதிஷ்டா நாச்சேதி -ஸப்தஸ் தாவத் வாஜிநாம் வைச்வாநர வித்யா ப்ரகரணே ச ஏஷோ அக்னிர் வைஸ்வாநர இதி வைஸ்வாநர ஸமாநாதி கரண அக்னி ஸப்த-அஸ்மின் ப்ரகரணே ச ஹ்ருதயே கார்ஹா பத்ய இத்யாரப்ய வைஸ்வாநரஸ்ய ஹ்ருத்யாதி ஸ்தாநஸ்ய அக்னி த்ரய பரி கல்பநம் ப்ராணா ஹுத்யாதாரத்வம் சேதி ப்ரதீயதே –வாஜி நாமபி ஸ யோ ஹ வை தமேவ மக்நிம் வைஸ்வாநரம் புருஷவிதம் புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் வேத இதி வைஸ்வாநரஸ்ய சரீராந்த ப்ரதிஷ்டி தத்வம் ப்ரதீயதே -அத ஏதை லிங்கை வைஸ்வாநரஸ்ய ஜாடராக்நித்வ ப்ரதீதே நாயம் பரமாத்வேதி ஸக்ய நிர்ணய இதி சேத் தந்ந –ததா த்ருஷ்ட் யுப தேஸாத் -திருஷ்ட்டி உபாஸனம் தத் உபாஸந உப தேசாதித் யர்த -ஜாடராக்னி சரீர தயா வைஸ்வாநரஸ்ய பரமாத்மாந உபாஸனம் ஹ்யத்ரோபதிஸ் யதே –அயம் அக்னிர் வைஸ்வாநர-புருஷோ அந்த ப்ரதிஷ்டித இத்யாதவ் -கதமவ கமயத இதி சேத் அசம்பவாத் -கேவல ஜாடராக்நே -த்ரை லோக்ய சரீரத் வாத்ய சம்பவாத் -புருஷமபி சைநமதீயதே -ச ஸப்த ப்ரஸித்தவ் -வாஜிநஸ் தத்ரைவ ஸ ஏஷோ அக்னிர் வைஸ்வாநரோ யத் புருஷ இதி ஏநம் வைஸ்வாநரம் புருஷமபி ஹ்ய தீயதே –புருஷஸ் ச பரமாத்மமைவ புருஷ ஏவேதம் ஸர்வம் புருஷாந்த பரம் கிஞ்சித் இத்யாதி ஷு பிரஸித்தே –27-

60-அத ஏவ ந தேவதா பூதம் ச –யதோ அயம் வைஸ்வாநர த்ரை லோக்ய சரீர புருஷ ஸப்த நிர் திஷ்டஸ் ச ததோ அயம் நாக்ந்யாக்ய தேவதா த்ருதீய மஹா பூதம் ச –28-

60-அத ஏவ ந தேவதா பூதம் ச –யத த்ரை லோக்ய சரீர அசவ் வைஸ்வாநர யதஸ் ச நிருபாதிக புருஷ ஸப்த நிர் திஷ்ட அத ஏவ நாக்ந் யாக்யா தேவதா மஹா புருஷத்ருதீயஸ்ச வைஸ்வாநரஸ் சங்க நீய –28-

61-சாஷாதப்ய விரோதம் ஜைமினி-நாவஸ்ய மக்னி சரீரகத்வேந உபாஸ்யத்வாயேத மக்நி ஸப்த ஸாமாநாதி கரண்யம் அக்ர நயநாதி யோகேந பரமாதமந்யே வாக்நி சப்தஸ்ய ஸாஷாத் வ்ருத்தேஸ் ஸாமாநாதி கரண்ய அவிரோதம் ஜைமிநி ராசார்யோ மன்யதே–29-

61-சாஷாதப்ய விரோதம் ஜைமினி -அக்னி சரீர தயா வைஸ்வாநரஸ்ய உபாஸ நார்த்தம் அக்னி ஸப்த ஸாமாநாதி கரண்ய நிர்தேச இத்யுக்தம் –விஸ் வேஷாம் நராணாம் நேத்ருத்வாதிநா சம்பந்தேந யதா வைஸ்வாநர ஸப்த பரமாத்மநி வர்ததே யதைவ அக்னி ஸப்தஸ் யாபி அக்ர நய நாதிநா யோகேந ஸாஷாத் பரமாத்மநி வ்ருத்தவ் ந கஸ்சித் விரோத இதி ஜைமிநி ராசார்யோ மன்யதே–29-

62-அபி வ்யக்தேர் இத்யாஸ் மரத்ய-யஸ்த்வேதமேவம் ப்ராதேஸ மாத்ரம் இத்யநவச் சிந்நஸ்ய த்யு ப்ரப்ருதி பரிச்சின்னத்வம் உபாஸகாபி வ்யக்த்யர்த மிதி ஆஸ்மரத்ய –30-

யஸ்த் வேத மேவம் ப்ராதேச மாத்ரமபி விமான மாத்மாநம் வைஸ்வாநரம் இதி த்யு ப்ரப்ருதி ப்ருதி வ்யந்த ப்ரதேச -சம்பந்திந்யா மாத்ரயா பரிச்சின்னத்வ மநவச் சின்னஸ்ய பரமாத்மந வைஸ்வா நரஸ்ய கதமுப பத்யத இத்யத் ராஹ

62-அபி வ்யக்தேர் இத்யாஸ் மரத்ய -அநவச் சின்னஸ் யைவ பரமாத்மந உபாஸநாபி வ்யக்த்யர்தம் த்யு ப்ரப்ருதி வ்யந்த ப்ரதேச பரிச்சின்னத்வம் இதி ஆஸ்மரத்ய ஆசார்யோ மன்யதே –30-

63-அநு ஸ்ம் ருதேர் பாதரி –த்யு ப்ரப்ருதி வ்யந்தாநாம் மூர்தாதி பாதாந்தாவயவத்வ கல்பநம் ததாநுஸ்ம்ருத்யர்தம் –ப்ரஹ்ம ப்ரதிபத்தய இதி பாதரி –31-

த்யு ப்ரப்ருதி ப்ரதேஸாவச் சேதேந அபி வ்யக்தஸ்ய பரமாத்மந த்யுப் வாதித்யாதீநாம் மூர் தாத்யவயவ கல்பநம் கிமர்தமிதி சேத் தத்ராஹ

63-அநு ஸ்ம் ருதேர் பாதரி –அநு ஸ்ம்ருதி உபாஸனம் –ப்ரஹ்ம ப்ராப்தயே வ்ரதோபாஸ நார்தம் மூர்த ப்ரப்ருதி –பாதாந்த தேஹ பரி கல்பந மிதி பாதரி ராசார்யோ மன்யதே –31-

அயம் வைஸ்வாநர பரமாத்மா த்ரை லோக்ய சரீர உபாஸ்ய உப திஸ்யதே சேத் உர ஏவ வேதிர் லோமாநிபர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹா பத்ய இத்யாதிநா உபாஸக சரீரா வயவாநாம் கார்ஹா பத்யாதி பரி கல்ப நம் கிமர்த மித்ய த்ராஹ

64-ஸம்பத்தேரிதி ஜைமினிஸ் ததா ஹி தர்சயதி–உர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹா பத்ய இத்யாதிநா உபாஸக ஹ்ருதயாதீநாம் வேத்யாதித்வ கல்பநம் வித்யாங்க பூதாயா ப்ராணா ஹுதே அக்னி ஹோத்ராத்வ ஸம்பாதா நார்த மிதி ஜைமினி –தர்சயதி ச ஸ்ருதி ய ஏததேவம் வித்வாநக்நி ஹோத்ரம் ஜூஹோதி இதி –ஏதே பஷாஸ் ஸ்வீக்ருதா பூஜார்தமா சார்யக் க்ரஹணம் –32-

64-ஸம்பத்தேரிதி ஜைமினிஸ் ததா ஹி தர்சயதி–வைஸ்வநர வித்யாங்க பூதாயா உபாஸகை -அஹரஹ க்ரியமாணாயா ப்ராணா ஹுதே -அக்னி ஹோத்ரத்வ ஸம்பாதநாய கார்ஹா பத்யாதி பரி கல்பந மிதி ஜைமினிரா சார்யோ மன்யதே –ததா ஹி அக்னி ஹோத்ர ஸம்பத்தி மேவ தர்சய தீயம் ஸ்ருதி ப்ராணா ஹுதிம் விதாய அத யா ஏவம் வித்வான் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி இதி -உக்தாநா மர்தாநாம் பூஜிதத் வக்யாப நாய ஆசார்ய க்ரஹணம் –32-

65-ஆம நந்தி சைந மஸ்மின் –ஏநம் பரமாத்மாநம் அஸ்மின் உபாஸித்ரு ஸரீரே ப்ராணாஹுதி –வேலாயாம் அநு ஸந்தா நார்தம் தஸ்ய ஹ வா ஏதஸ்ய மூர்தைவ ஸூ தேஜா இத்யாதி அமநந்தி ச உபாஸகஸ்ய மூர்தாதி ரேவாஸ்ய பரமாத்மநோ மூர்தாதிரித்யர்த- 33-இதி வைஸ்வாநர அதிகரணம் –1-2-6-

65-ஆம நந்தி சைந மஸ்மின் –ஏநம் பரம புருஷம் வைஸ்வா நரம் த்யுப்வாதி தேஹம் அஸ்மின் உபாஸக தேஹே ப்ராணாக்நி ஹோத் ரேணாராத்யத் வாயாம நந்தி ஹி –தஸ்ய ஹ வா ஏதஸ்ய வைஸ்வா நரஸ்ய மூர்தைவ ஸூ தேஜா இத்யாதி நா
உபாஸக மூர்தாதி பாதாந்தா ஏவ த்யு ப்ரப்ருதய பரம புருஷஸ்ய மூர்தாதய இதி ப்ராண அக்னி ஹோத்ர வேலாயா மநு ஸந்தேயா இத்யர்த —33-இதி வைஸ்வாநர அதிகரணம் –1-2-6-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -பிரதம  பாதம் –

March 5, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே
–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே
–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார- மூலஉத்த்ரியதே

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம்

ஸ்ரீ யகாந்தோ அநந்தோ வர குண கணைகாஸ் பத வபுஸ்
ஹதா சேஷாவத்ய பரகமபதோ வாங் மனஸயோ
அபூமிர் பூமிர்யோ நதஜந த்ருஸாம் ஆதி புருஷோ
மனஸ் தத் பதாப்ஜே பரி சரண ஸக்தம் பவது மே
ப்ரணம்ய சிரஸா ஆச்சார்யாம்ஸ் ததா திஷ்டேந வர்த்தமநா
ப்ரஹ்ம ஸூத்ர பதாந்தஸ்த வேதாந்தார்த ப்ரகாஸ்யதே

அத்ரேயம் ஏவ ஹி வேத விதாம் ப்ரக்ரியா –
அசித் வஸ்துநஸ் ஸ்வரூப தஸ் ஸ்வ பாவதஸ் ஸாத்யந்த விலக்ஷண -தத் ஆத்ம பூதஸ் -சேதனஸ் ப்ரத்யகாத்மா
தஸ்மாத் பத்தான் முக்தான் நித்யாச்ச –
நிகில ஹேய ப்ரத்ய நீக தயா -கல்யாண குணைக தாந தயா ச
ஸர்வ அவஸ்த சித் அசித் வ்யாபகதயா தாரக தயா -நியந்த்ரு தயா சேஷி தயா ஸாத்யந்த விலக்ஷண பரமாத்மா
யதோக்தம் பகவதா -த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச
ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத யோ லோக த்ரயம் ஆவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர யஸ்மாத் ஷர மதீதோ அஹம் அஷராத் அபி சோத்தம அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம இதி

ஸ்ருதிஸ் ச
ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம்
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்திதஸ் -இத்யாதிகா
கூடஸ்த -முக்த ஸ்வரூபம் யேத்வஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்த்யம் ச கூடஸ்தம் அசலம் த்ருவம் இத்யாதி வ்யபதேசாத்
ஸூத்ர காரஸ் சைவமேவ வததி நேதரோ அநு பபத்தே பேத வ்யபதேசாத் அநு பபத்தேஸ் து ந சாரீர கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் ச ஸப்த விசேஷாத் ஸம் போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத்
ந ச ஸ்மார்தமதத் தர்மாபிலாபாச் சாரீரஸ் ச உபயே அபி ஹி பேதேநைந மதீயதே விசேஷண பேதே வ்யபதேஸாபப்யாம்

ச நேதரவ் முக்தோபஸ்ருப்ய வ்யபேதஸாச் ச ஸ்தித்யத நாப்யாம் ச
இதர பரமர்ஸாத் ஸ இதி சேந்நா சம்பவாத் உத்தராச்சேதாவிர் பூத ஸ்வரூபஸ் து ஸூஷுப்த் யுத்க்ராந்த்யோர் பேதேந பத்யாதி ஸப்தேப்ய -அதிகம் து பேத நிர்தேசாத் அதி கோபதே ஸாத்து பாதாரயணஸ் யைவ தத் தர்சநாத் ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச இத்யாதிபி
ந ஸாவித்யா க்ருத முபாதி க்ருதம் வா பேதம் ஆஸ்ரித்யைதே நிர்தேஸா -இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா–சர்கே அபி நோப ஜயந்தி ப்ரலயே ந வ்யதந்தி ச ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி -முக்தோபஸ்ருப்ய வ்யபதாஸாச் ச உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூபஸ்து

ஸம்பத்ய ஆவீர்பாவஸ் ஸ்வேந ஸப்தாத் ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத் வாச் ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச இதி ஸர்வ அவித்ய உபாதி விநிர் முக்த மதி க்ருத்யைவ பேத உபபாதநாத்
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரேஷு ஸர்வத்ர பேதே நிர்திஷ்டே -சித் அசித் ஈஸ்வர ஸ்வரூப பேதஸ் ஸ்வா பாவிகோ விவஷித இதி நிஸ் சீயதே
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம –தஜ்ஜலா நிதி சாந்த உபாஸீத -வாசா ரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –
ஸ தேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமே அத்விதீயம் –ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத –சந் மூலாஸ் சோம்யேமாஸ் ஸர்வா ப்ரஜாஸ் ஸதாயதநாஸ் ஸத் ப்ரதிஷ்டா
ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்-

தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி ஸ்வேத கேதோ ஷேத்ரஞ்ஞம் ஷாபி மாம் வித்தி தத் அந்யத் வமாராம்பண ஸப்தாதிப்ய இதி பரஸ்ய ப்ரஹ்மண -காரணத்வம் க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய கார்யத்வம் காரணாத் கார்யஸ்ய அநந்யத்வம் சோஸ்யமாந மேவமேவோப பத்யதே
ஸர்வ அவஸ்தஸ்ய சித் அசித் வஸ்துந பரமாத்ம ஸரீரத்வம் பரமாத்மானஸ்சாத்மத்வம் யஸ் ப்ருதிவ்யாம் திஷ்டன்யஸ்ய ப்ருத்வீ ஸரீரம் -யஸ் ஆத்மநி திஷ்டன்யஸ்ய யாத்மா ஸரீரம் யஸ் ஆத்மநம் அந்தரோ யமயதி –யஸ்ய அவ்யக்தம் ஸரீரம் -யஸ்ய அக்ஷரம் சரீரம் –யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் -ஏஷ ஸர்வம் பூதம் அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -அந்த ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்ம இத்யாதி ஸ்ருத்ய ஏவ உப திஷ்டமிதி
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட பரமாத்மா காரணம் -ஸ ஏவ பரமாத்மா ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கார்யமிதி -காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச சித் அசித் வஸ்து சரீர கதயா தத் ப்ரகார பரமாத்ம ஏவ ஸர்வ ஸப்த வாஸ்ய இதி பரமாத்ம சப்தேந ஸர்வ ஸப்த சாமானதி கரண்யம் முக்ய மேவ உப பன்நதரம்
அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சாபவத் இத்யாதி ஸ்ருதி ரேவ மமர்த்தம் உப பாதயதி
ஸர்வம் ஆத்மதயா அநு ப்ரவிஸ்ய தச் சரீரத்வேந ஸர்வ ப்ரகார தயா ஸ ஏவ ஸர்வ ஸப்த வாஸ்யோ பவதீத் யர்த
பஹுஸ்யாம் இதி பஹு பவந சங்கல்போ அபி நாம ரூப விபாகா நர்ஹாதி ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கதயைகதா அவஸ்தி தஸ்ய விபக்த நாம ரூப சித் அசித் சரீர கதயா பஹு ப்ரகாரதா விஷய இதி வேதவித் ப்ரக்ரியா -யே புநர் நிர்விசேஷ கூடஸ்த ஸ்வ ப்ரகாஸ நித்ய சைதன்ய மாத்ரம் ப்ரஹ்ம ஞாதவ்யத யோக்தமிதி வதந்தி தேஷாம்
ஜந்மாத் யஸ்ய யத
ஸாஸ்த்ர யோநித்வாத்
தத் து சமன்வயாத்
ஈஷதேர் நா ஸப்தம் –இத்யாதே
ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத ஸ நந் நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
அநா வ்ருத்திஸ் ஸப்தாதந அநா வ்ருத்திஸ் ஸப்தாத் இத்யந் நஸ்ய ஸூத்ர கணஸ்ய ப்ரஹ்மணோ ஜகத் காரணத்வ பஹுபவந ஸங்கல்ப ரூபேஷணாத் யநந்த விசேஷ ப்ரதிபாதன பரத்வாத் ஸர்வம் ஸூத்ர ஜாதம் ஸூத்ர காரோதாஹ்ருதா
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இத்யாத்யா -ஸர்வ ஸ்ருதயஸ் ச ந சங்கச்சந்தே
அதோச்யேத யேநாஸ்ருதம் ஸ்ருதம் இத் யேக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞானம் ப்ரதிஜ்ஞாய -யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இத்யேகம் ம்ருத் பிண்டாரப்த கட ஸராவாதீநாம் தன் ம்ருத் பிண்டாத் அநந்ய த்ரவ்ய தயா தஜ் ஞாநேந தேஷாம் ஞாததேவ ப்ரஹ்ம ஞாநேந ததாரப் தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்ம கஸ்ய ஜகதஸ் தஸ்மாதநதிரிக்த வஸ்து தயா ஞாததா ஸம்பவ தீத் யுப பாத்ய
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதீதம் ஸப்த வாஸ்யஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய ஸ்ருஷ்டே பிராங் நிகில பேத ப்ரஹாணேந ஸச் ஸப்த வாஸ்யேநைகதா பத்திம் கட சராவாத் யுத்பத்தே ப்ராக் உத்பாதக ம்ருத் பிண்ட ஏகதா பத்திவத் அபிதாய ததைக்ஷத பஹுஸ் யாம் இதி ததேவ ஸச் ஸப்த வாச்யம் ப்ரஹ்ம சித் அசித் ஆத்மக ப்ரபஞ்ச ரூபேண ஆத்ம நோ பஹு பவநம் ஏக ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி ரூபேண பஹு பவந வத் சங்கல்ப்ய ஆத்மாந மேவ தேஜஸ் ப்ரப்ருதி ஜகத் ஆகாரேண அஸ்ருஜதேதி சாபிதாய ஐததாம் யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா தத்வமஸி இத்யபிதா நாத் ப்ரஹ்மைவா வித்யா க்ருதேந பாரமார்த்திகேந வோபாதிநா ஸம்பத்தம் தேவாதி ரூபேண பஹு பூத மதி வேதவித் ப்ரப்யுவ கந்தவ்யமிதி தத யுக்தம் ஞாஜ்ஜவ் த்வாவஜாவீ சனீஸவ் நித்யோ நித்யோநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் இத்யபி ஸ்ருதி பி
ஜீவா நாமஜத்வ நித்யத்வ பஹத்வ வசநாத் யதி கட சராவாதேருத் பத்தே ப்ராகேகீ பூதஸ்யைவ ப்ரஹ்மணஸ் ஸ்ருஷ்ட் யுத்தர காலீநம் நாநாவித ஜீவ ரூபேண பஹுத்வம் உச்யதே ததா ஜீவானாம் அஜத்வ நித்யத்வ பஹுத்வாதி விருத்யதே
ஸூத்ரவிரோதஸ் ச இதர வ்யபதேசாத் ஹிதா கரணாதி தோஷ ப்ரஸக்தி இதி ப்ரஹ்மைய தேவ மனுஷ்யாதி ஜீவ ஸ்வரூபேண பஹு பூதம் சேதாத்மநோ ஹித கரணாதி தோஷ ப்ரஸக்திரித் யுக்த்வா அதிகம் து பேத நிர்தேசாத் இதி ஜீவாத் ப்ரஹ்மணோ அர்த்தாந்தரத்வம் யுக்தம் –
ததா ச வைஷம்ய நைர்க்கருண்யே ஜீவா நாம் பூர்வ பூர்வ கர்ம அபேக்ஷத்வாத் விஷம ஸ்ருஷ்டே இதி பரிஹ்ருதே –
ததா ந கர்மாவிபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யு பலப்யதே ச இதி ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதி ஸ்ருஷ்டே பிராக விபாக வஸனாத் ஸ்ருஷ்டே ப்ராக் ஜீவா நாம பாவாத் தத் கர்ம ந ஸம்பவதீதி பரிசோத்ய ஜீவா நாம் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வாதிதி பரிஹ்ருதம் -நாத்ம ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இத்யாத்மந உத்பத்த்ய பாவஸ் சோக்தோ நித்யத்வம் ச ஸ்வாப் யுபகம விரோதஸ் ச
ஆமோஷாஜ் ஜீவ பேதஸ்யாநாதித்வம் ஸர்வை ரேவ ஹி வேதாந்தி ப்ரப்யுப கம்யதே -அதஸ் ஸ்ருதி விரோதாத் ஸூத்ர விரோதாத் ஸ்வாப்யுபக விரோதாஸ் ச ஸ்ருஷ்டே பிராகே கத்வாவதாரணம் நாம ரூப விபாகாபாவாபிப்ராயம் நாம ரூப விபாகா நர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து ஸக்தி பேத ஸஹம் சேதி ஸர்வைரப்யுப கம்யதே –இயாம்ஸ் து விசேஷ அவித்யா பரி கல்பநே அப்யுபாதி பரி கல்பநே அபி ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்யா வித்யா சம்பந்தி நஸ் சோபாதி சம்பந்தி ந சேதனஸ் யா பாவாத வித்யோபாதி ஸம்பந்தவ் தத் க்ருதாஸ் ச தோஷா ப்ரஹ்மண ஏவ பவேபுரிதி சந் மாத்ர ப்ரஹ்ம வாதே அபி ப்ராக் ஸ்ருஷ்டேஸ் சந் மாத்ரம் ப்ரஹ்மைக மேவ ஸ்ருஷ்ட் யுத்தர காலம் போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண த்ரிதா பூதம் சேத்
கட சராவ மணிக வஜ் ஜீவேஸ்வரயோர் உத்பத்தி மத்த்வம நித்யத்வம் ச ஸ்யாத் -அதை கத்வா பத்தி வேலாயாமபி போக்த்ரு போக்ய நியந்த்ரு ஸக்தி த்ரயம் அவஸ்திதம் இதி சேத் கிமிதம் ஸக்தி த்ரய ஸப்த வாஸ்யமிதி விவேச நீயம் –
யதி சந் மாத்ரஸ்யைகஸ் யைவ போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண பரிணாம ஸாமர்த்யம் ஸக்தி த்ரய -ஸப்த வாஸ்யம் ஏவம் தர்ஹி ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி பரிணாம சமர்த்தஸ்ய தத் உத்பாதகம் இவ ப்ரஹ்மண ஈஸ்வர அதீநாம் உத்பாதகத்வம் இதி தேஷாம நித்யத்வ மேவ அதேஸ் வராதீ நாம் ஸூஷ்ம ரூபேண அவஸ்திதி ரேவ ஸக்தி ரித் யுச்யேத தர்ஹி ததரிக்தஸ்ய சந் மாத்ரஸ்ய ப்ரஹ்மண ப்ரமாணா பாவாத் ததப் யுபகமே ச தத் உத்பாத்ய தய ஈஸ்வர அதீனாம் அநித்யத்வ பிரசங்காச் ச த்ரயாணாம் நாம ரூப விபாகா நர்ஹ -ஸூஷ்ம தஸா பத்திரேவ ப்ராக் ஸ்ருஷ்டே ரேகத்வா வதாரணாவ ஸேயேதி வக்தவ்யம்
ந ததா தேஷாம் ப்ரஹ்மாத்ம கத்வ அவதாரணம் விருத்யதே
அதஸ் ஸர்வ அவஸ்தா வஸ்தி தஸ்ய சித் அசித் வஸ்துந ப்ரஹ்ம சரீரத்வ ஸ்ருதேஸ் ஸர்வதா ஸர்வ சப்தைர் ப்ரஹ்மைவ கார்ய பூதம் ஜகத் நாம ரூப விபாகாநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம காரண மிதி ததேவ ம்ருத் பிண்டஸ்தாநீயம் -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இத்யுச்யதே -ததேவ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம கார்யமிதி ஸர்வம் சமஞ்ஜஸம்
ஸ்ருதி நியாய விரோதஸ்து தேஷாம் பாஷ்யே ப்ரபஞ்சித இதி நேஹ ப்ரதன்யதே -பாஷ்போதித அதிகரணார்த்த ச ஸூத்ரார்த்த விவரண ஸூக க்ரஹணாய ஸம் ஷேபண உபன்யஸ்தே

சாரீரக அத்யாய பதார்த்த ஸங்க்ரஹ
தத்ர ப்ரதமே பாதே -ப்ரதான புருஷா வேவ ஜகத் காரண தயா வேதாந்தா ப்ரதிபாத யந்தீத்யா சங்க்ய ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரவத்யம்-ஸமஸ்த கல்யாண குணாகரம் ப்ரஹ் மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யந்தீத் யுக்தம் –
த்விதீய த்ருதீய சதுர்த பாதேஷு காநிசித் வேதாந்த வாக்யாநி ப்ரதாநாதி ப்ரதிபாதன பராணீதி தன் முகேந ஸர்வ அசேஷபமா சங்க்ய தான்யபி ப்ரஹ்ம பராணீத் யுக்தம்
தத்ர அஸ் பஷ்ட ஜீவாதி லிங்க காநி வாக்யாநி த்விதீயே நிரூபிதாநி -ஸ்பஷ்ட லிங்ககாநி த்ருதீயே -சதுர்தே து ப்ரதாநாதி ப்ரதிபாதநச் சாயாநு ஸாரீணீத விசேஷ
அத பிரதம அத்யாயே ஸர்வம் வேதாந்த வாக்ய ஜாதம் -ஸார்வஞ்ய-ஸத்ய சங்கல்பத்வாதி யுக்தம் ப்ரஹ்மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யதீதி ஸ்தாபிதம்

த்வதீயே து ஸாங்க்யாதி வேத பாஹ்ய பக்ஷ ப்ரதிக்ஷேப முகேந தஸ்யை வாதரணீ யதா ஸ்திரீக்ருதா

த்ருதீய சதுர்த்யோ வேதாந்த வாக்யாநாமன்யோன்ய விப்ரதிஷேதாதி தோஷ கந்தாபாவக்யாபநாய வியதாதீநாம் ப்ரஹ்ம கார்யதா ப்ரகாரோ விசோத்யதே

தத்ர த்ருதீய பாதே ச சித் அசித் பிரபஞ்சஸ்ய ப்ரஹ்ம கார்யத்வே ஸத்யப்யசிதம் ஸஸ்ய ஸ்வரூபான் யதா பாவேந கார்யத்வம் சிதம்ஸஸ்ய ஸ்வ பாவான் யதா பாவேந ஞான சங்கோச விகாஸ ரூபேண கார்ய தோதிதா

சதுர்தே

து ஜீவ உபகரணாநாம் இந்த்ரியாதீநாம் உத்பத்தி ப்ரகார இதி ப்ரதமேநாத்யா யத்வயேந முமுஷுபிர் உபாஸ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிஸய அசங்க்யேய கல்யாண குண கணம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்மேதி ப்ரதிபாதிதம்
உத்தரேண த்வயேந ப்ரஹ்ம உபாஸன ப்ரகாரஸ் தத் பல பூத மோக்ஷ ஸ்வரூபம் ச சிந்த்யதே

தத்ர த்ருதீயஸ்தே பிரதம பாதே ப்ரஹ்ம உபாஸிஸிஷ உத்பத்த்யே ஜீவஸ்ய ஸம் ஸரதோ தோஷா கீர்திதா

த்விதீயே சோபாஸிஸிஷ உத்பத்த்யேஏவ ப்ரஹ்மணோ நிரஸ்த நிகில தோஷதா கல்யாண குணாகரதா ரூப உபய லிங்கதா ப்ரதிபாத்யதே

த்ருதீயே து ப்ரஹ்ம உபாஸன ஏகத்வ நாநாத்வ விசார பூர்வகம் உபாஸநேஷு உப ஸம்ஹார்ய அநுப ஸம்ஹார்யகுண விசேஷா பிரபஞ்சிதா

சதுர்த்தே து உபாசனஸ்ய வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாகத்வம் யுக்தம்

சதுர்த்த அத்யாயே ப்ரஹ்ம உபாஸனபல சிந்தா க்ரியதே

தத்ர ப்ரதமே பாதே ப்ரஹ்ம உபாசன பலம் வக்தும் உபாசன ஸ்வரூப பூர்வக உபாசன அநுஷ்டான ப்ரகாரோ வித்யா மஹாத்ம்யம் சோஸ்தே

த்விதீய து ப்ரஹ்ம உபாஸீநாநாம் ப்ரஹ்ம ப்ராப்தி கத் யுபக்ரமே பிரகார சிந்தித

த்ருதீயே த்வர்ச்சிராதிகதி ஸ்வரூபம் அர்ச்சிராதி நைவ ப்ரஹ்ம ப்ராப்திரிதி ச ப்ரதிபாத்யதே

சதுர்தே து முக்தஸ்ய ப்ரஹ்ம அநுபவ பிரகாரஸ் சிந்த்யதே –
அதோ முமுஷு பிர் ஞாதவ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா கரம் நிகில ஜகத் ஏக காரணம் பரம் ப்ரஹ்ம தஜ் ஞானம் ச மோக்ஷ சாதனம் அஸக்ருதாவ்ருத்த ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் உபாஸனாத்மகம் உபாஸன பலம் ச அர்ச்சிராதிநா பரம் ப்ரஹ்ம உபஸம்பத்ய ஸ்வ ஸ்வரூப பூத ஞானாதி குண ஆவிர்பாவ பூர்வக அநந்த மஹா விபூத்ய அநவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவோ அபுனரா வ்ருத்தி ரூப இதி சாரீரிக ஸாஸ்த்ரேண யுக்தம் பவதி

1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

அதிராயம் அத ஸப்த ஆனந்தர்யே வர்த்ததே -அதஸ் ஸப்த சிரஸ்கத்வாத் -அதஸ் ஸப்தஸ் ச பூர்வ வ்ருத்தஸ்ய ஹேதுபாவே -பூர்வ வ்ருத்தம் ச கர்மஜ் ஞானம் இதி விஞ்ஞாயதே ஆரிப்ஸிதஸ்ய ப்ரஹ்ம ஞானஸ்ய வேதார்த்த விஸாரைகதேஸத்வாத் –அதீத வேதஸ்ய ஹி புருஷஸ்ய கர்ம ப்ரதிபாதநோபக்ர மத்வாத் வேதாநாம் கர்ம விசார ப்ரதமம் கார்யம் இதி -அதாதோ தர்ம ஜிஜ்ஞாசா -இத்யுக்தம் -கர்மணாம் ச ப்ரக்ருதி விக்ருதி ரூபாணாம் தர்மார்த்தகாம ரூப -புருஷார்த்த சாதனதா நிஸ்ஸய -ப்ரபுத்வாதார்த்விஜ்யம் இத்யந்தேந ஸூத்ர கலாபேந ஸம் கர்ஷேணேந க்ருத –ஏவம் வேதஸ்யார்த –பரத்வே கர்மணாம் ச ததர்தத்வே தேஷாம் ச கேவலாநாம் த்ரிவர்க பலத்வே நிஸ்ஸிதே சதி வேதைகதேஸ பூத வேதாந்த பாகே கேவல கர்மணாம் அல்ப அஸ்திர பலத்வம் ப்ரஹ்ம ஞானஸ்ய ச அநந்த ஸ்திர பலத்வம் ஆபாததோ த்ருஷ்ட்வா அனந்தரம் முமுஷோ ரவதாரிதபரி நிஷ்பன்ன வஸ்து போத ஜனந ஸப்த சக்தே -புருஷஸ்ய ப்ரஹ்ம புபுத்ஸா ஜாயத இதி அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா இதி கர்ம விசார அநந்தரம் தத ஏவ ஹேதோர் ப்ரஹ்ம விசார கர்தவ்ய இத் யுக்தம் பவதி –ததிதமாஹ ஸ்ருதி –
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந்நாஸ்த்யக்ருத க்ருதேந தத் விஞ்ஞா நார்தம் ஸ குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் பிரசாந்த சித்தாய சமான்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாஸதாம் தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம் இதி
ப்ராஹ்மண -வேத அப்யாஸ ரத -கர்ம சிதான் –கர்மணா ஸம்பாதிதான் லோகான் –ஆராத்யக்ஷயிஷ்ணுத்வேந க்ஷயஸ்வபாவான் கர்ம மீமாம்ஸயா பரீஷ்ய அக்ருத -நித்ய பரம புருஷ க்ருதேந -கர்மணா ந ஸம்பாத்ய இதி யோ நிர்வேத மாயாத் ஸ தத் விஞ்ஞானார்தம் குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணி -ஸ்ரோத்ரியம் -வேதாந்த வேதிநம் ப்ரஹ்ம நிஷ்டம் -சாஷாத் க்ருத பரம புருஷ ஸ்வரூபம் -ஸ -குரு -ஸம்யகுபஸந்நாய தஸ்மை யேந வித்யா விஸேஷேண அக்ஷரம் –ஸத்யம் பரம புருஷன் வேத வித்யாத் -தாம் ப்ரஹ்ம வித்யாம் ப்ரோவாஸ –பரப்ரூயாத் இத்யர்த –ஸ குருமேவ அபி கச்சேத் –தஸ்மை ஸ வித்வான் ப்ரோவாஸ இத்யன்வயாத் அப்ராப்தத்வாச் ச விதாவபி லிடோ விதாநாத் –சந்தஸி லங் லிட் இதி –-1- இதி ஜிஜ்ஞாஸ அதிகரணம் –1-

க -க- க 1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-ஓம் அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா 

ப்ரஹ்ம மீமாம்ஸா விஷய ஸா கிம் ஆரம்பணீயா உத அநாரம்பணீ யேதி ஸம்சய -ததர்தம் பரஷ்யதே -வேதாந்தா கிம் ப்ரஹ்மணி ப்ரமாணம் உத நேதி
ததர்தம் பரி நிஷ்பந்நே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்ய அவதாரணம் சம்பவதி நேதி ந சம்பவதி இதி பூர்வ பக்ஷ
ஸம்பவதீதி ராத்தாந்த -யதா ந சம்பவதி -ததா பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்யா பாவாத் ஸித்த ரூப ப்ரஹ்மணி ந வேதாந்தா ப்ரமாணம் இதி தத் விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆராம்பணீயா யதா சம்பவதி ததா ஸித்த்யேப்யர்த்தே சப்தஸ்ய போதனா ஸாமர்த்ய சம்பவாத் வேதாந்தா ப்ரஹ்மணி பிரமாணம் இது சா சாரம்பணீயா ஸ்யாத் -அத்ர பூர்வ பக்ஷ வாதீ மன்யதே –வ்ருத்த வ்யவஹாராத் அந் யத்ர வ்யுத்பத்த்ய சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி பூர்வகத்வேந கார்ய ஏவார்த்தே ஸப்த சக்த்வ தாரணாத் பரி நிஷ் பன்னே அர்தே ப்ரஹ்மணி ந வேதாந்தா பிரமாண மிதி தத் விசாரரூபா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆரம்பணீயேதி -ஸித்தாந்தஸ்து பாலா நாம் மாதா பித்ரு ப்ரப்ருதி -அம்பாதாத மாதுல ஸிஸூ பஸூ பக்ஷி ம்ருகாதி ஷு அங்குல்யா நிர்திஸ்ய-தத் தத் அபிதாயிநஸ் ஸப்தான் ப்ரயுஞ்ஞாநை -க்ரமேண பஹுஸஸ் ஸிஷிதாநாம் தத் தச் ஸப்த ஸ்ரவண சம நந்த்ரம் ஸ்வாத்மநா மேவ ததர்த்த புத்தி யுத்பத்தி தர்சநாத் சப்தார்த்தயோ ஸம்பந்த அந்தரா தர்சநாத் சங்கே தயித்ரு புருஷாஜ் ஞாநாச் ச போத்ய போதக பாவ ஏவ சப்தார் தயோஸ் ஸம்பந்த இதி நிஸ் சின்வாநாநாம் பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதகத்வ அவதாரணம் ஸம்பவ தீதி ப்ரஹ்மணி வேதாந்த வாக்யா நாம் ப்ராமாண்யாத் ததர்த்த விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ஆராம்பணீயேதி
ஸூத்ரரார் தஸ்து –அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா –அத இத்யா நந்தர்யே-அத இதி ச வ்ருத்தஸ்ய ஹேதுபாவே ப்ரஹ்மணோ ஜிஞ்ஞாஸா ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–ஞாதும் இச்சா ஜிஞ்ஞாஸா=இச்சாயா இஷ்ய மாண ப்ரதாநத்வாதிஷ்ய மாணம் ஞானம் இஹாபிப்ரேதம்
பூர்வ வ்ருத்தாத் அல்ப அஸ்திர பல கேவல கர்மாதிகமாத நந்தரம் தத ஏவ ஹேதோர் அநந்த ஸ்திர பல ப்ரஹ்மாதிகம கர்தவ்ய –க —ஜிஞ்ஞாஸாதி கரணம் –க –

1-1-2-
2-ஜந்மாத் யஸ்ய யத
 -அஸ்ய விசித்ர சித் அசித் மிஸ்ரஸ்ய வ்யவஸ்தித ஸூக துக்க உப போகஸ்ய ஜகத- ஜன்ம ஸ்திதி லயா யத தத் ப்ரஹ்மேதி ப்ரதிபாதயதி ஸ்ருதிரித் யர்த –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி ஸம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இதி –ஸூத்ரே யத இதி ஹேதவ் பஞ்சமீ ஜனி ஸ்திதி லயாநாம் ஸாதாரணத்வாத் -ஜநி ஹேதுத்வம் ச நிமித்த உபாதான ரூபம் விவஷிதம் -யத இதி ஹி ஸ்ருதி -இஹ உபய விஷயா கதமிதி சேத் -யதோ வா இமாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் ச உபய விக்ஷயத்வாத் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -ததைஷத பஹுஸ் யாம் ப்ரஜாயேயேதி –தத் தேஜோ அஸ்ருஜத இத்யத்ர ஸதேவ இதம் அக்ர ஏகமேவ ஆஸீதிதி உபாதாநநாம் ப்ரதிபாத்ய –அத்விதீயம் இதி அதிஷ்டாத் ரந்த்ர நிவாரணாத் ஸச் ஸப்த வாஸ்யம் ப்ரஹ்மைவ நிமித்தம் உபாதாநம் சேதி விஞ்ஞாயதே –ததா ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாத்மந ஏவ விசித்ர ஸ்திரத்ரஸ ரூபேண பஹு பவநம் ஸம் கல்ப்ய ததைவ ஸ்ருஷ்டி வசநாச் ச –அதஸ் ஸ்ருதா வபி யத இதி ஹேதவ் பஞ்சமீ –அத் ரைவ ப்ரஹ்மணோ ஜகன் நிமித்த தத்வம் உபாதாநத்வம் ச ப்ரதிபாதநம் -அர்த விரோதாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி விசேஷ ஸ்ருத்யா சாஷிப்ய ப்ரக்ருதிஸ் ச ப்ரதி ஞாத்ருஷ்டாந்தாநு பரோதாத் அபித்ய உபதேஸாச் ச ஸாஷாச் சோபாயாம்நாநாத் ஆத்ம க்ருதே இத்யாதி பிர் ஸூத்ரை பரி ஹரிஷ்யதே –2–

நநு ச ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி ஸத்ய ஸங்கல்பம் நிரவத்ய தயா நிரஸ்த ஸமஸ்தா புருஷார்த்த கந்தம் ப்ரஹ்மைவாத்மாநம் விசித்ர சித் அசித் மிஸ்ரம் ஜகத் ரூபமிதம் ஸர்வமஸ்ருஐதேதி கதமுப பத்யதே –ததேதத் ஸூத்ர கார ஸ்வயமேவ பரி சோத்ய பரி ஹரிஷ்யதி –அபீதவ் தத்வத் ப்ரசங்காத ஸமஞ்ஸம் இதர வ்யபதேசாத்திதா கரணாதி தோஷ பிரசித்தி -இதி சோத்யம் -பரிஹாரஸ்து ந து த்ருஷ்டாந்த பாவாத் அதிகம் து பேத நிர்தேசாத் இதி ச –ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்ய ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந சாதிப க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷராத்மாநாவீஸதே தேவ ஏக அசித் வர்கம் ஸ்வாத்மநோ போக்யத்வேந ஹரதீதி போக்தா ஹர இத்யுச்யதே

த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச –ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத –யோ லோக த்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர

யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அக்ஷராதபி சோத்தம –அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம –இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி கணை ப்ரத்யகாத்மநோ அதிகமர்த்தாந்தர பூதம் ப்ரஹ்ம தச்ச ப்ரத்யகாத்ம சரீர கதயா தத் ஆத்ம பூதம் ப்ரத்யகாத்மநஸ் தச் ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மவத் வஞ்ச யா ஆத்மநி திஷ்டன் யஸ்ய ஆத்மா ஸரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் ஸ சரீரஸ் யாத்மந கார்ய அவஸ்தா ப்ராப்தா வபி குண தோஷ வ்யவஸ்திதே ர் த்ருஷ்டாந்த பாவாத் ப்ரஹ்மணி ந தோஷ ப்ரஸக்தி இதி நா ஸாமஞ்ஜஸ்யம் வேதாந்த வாக்யஸ்யே தி ந து த்ருஷ்டாந்த பாவாத் இத்யுக்தம் த்ருஷ்டாந்தஸ் ச தேவ மனுஷ்யாதி ஸப்த வாஸ்யஸ்ய ஸ சரீரஸ் யாத்மந மனுஷ்யோ பாலோ யுவா ஸ்தவிர இதி நாநாவஸ்தா ப்ராப்தா வபி பாலத்வ யுவத்வ ஸ்தவிரத் வாதய-சரீர கதா தோஷா நாத்மாநம் ஸ்ப்ருசந்தி ஆத்ம கதாஸ் ச ஞான ஸூகாதய ந சரீரமிதி -அத கார்யா வஸ்தாம் காரணா வஸ்தம் ச ப்ரஹ்ம ச ப்ரஹ்ம ப்ரத்யகாத்ம சரீர தயா தத் ஆத்ம பூதமிதி ப்ரத்யகாத்ம வாசிநா சப்தேந ப்ரஹ்ம அபிதாநே தச் ஸப்த ஸாமாநாதி கரண்யே ச ஹேதும் வக்தும் நிரஸ நீயம் மதத்வயம் ப்ரதிஞ்ஞா ஸித்தே லிங்கமாஸ்மரத்ய -உத்க்ர மிஷ்யத ஏவம் பாவாதித் யவ்டுலோமி இத் யுபந்யஸ்ய அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இதி ஹேதுருக்த தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் ஸச் ச த்யச்சா பவத் இத்யாதிநா ப்ரத்யகாத்மா ஆத்ம தயா அவஸ்தாநாத் ப்ரஹ்மணஸ் தச் சப்தேநாபிதாநம் –தத் ஸாமாநாதி கரண்யேன வ்யபதேசாச் சேத் யுக்தம் –ததா வைஷம்ய நைர் க்ருண்யே ந ஸாபேஷத்வாத் ந கர்மா விபாகா திதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப் யுபலப்யதே ச இதி தேவ மநுஷ்யாதி விஷம ஸ்ருஷ்டேர் ஜீவ கர்ம நிமித்தத்வம் ஜீவாநாம் தத் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வம் ச ப்ரதிபாத்ய ததநாதித்வம் ச நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஜ்ஞாஜ்ஜவ் த்வவ் இத்யாதி -ஸ்ருதி ஷுபலப்யத இத் யுக்த்வா தத நாதித்வ அபி ப்ரலய காலே சித் அசித் வஸ்துநோர் போக்த்ரு போக்யயோர் நாம ரூப விபாகா பாவாத் ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் – நான்யத் கிஞ்சந மிஷத் இத்யாதாவே கத்வாவதாரண முப பத்யதே இதி ஸூத்ர காரேண ஸ்வயமேவ யுக்தம் –ததா ச நாத்மா ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இதி ப்ரத்யகாத்மநோ நித்யத்வாதநுத் பத்தி முக்த்வா ஜ்ஜோ அத ஏவ இதி தஸ்ய ஞாத்ருத்வ மேவ ஸ்வரூப மித்யுக்தம் –
உத் க்ராந்திகத்யாகதீநாம் இத்யாதிநா அனுத்வம் சோக்தம் –தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேஸ ப்ராஜ்ஞவத் யாவதாத்ம பாவித் வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் இதி ஜ்ஞாது சப்தேந வ்யபதேஸோ ஞான குண சாரத்வாத் ஞாநைக நிரூபணீய ஸ்வ பாவத் வாச்சேத் யுக்தம்
நித்யோபலப்த்யநுபலப்தி பிரசங்கோ அந்நிய தர நியமோ வான்யதா இதி ஞான மாத்ர ஸ்வரூபாத்ம வாதே ஹேத்வாந்தராயத் தஜ் ஞாநவாதே ஸர்வ கதாத்மவாதே ச தோஷ உக்த –கர்தா ஸாஸ்த்ரார்த்த வத்த்வாத் உபாதாநாத் விஹாரோபதேஸாச் ச வ்யபதேஸாச் ச க்ரியா யாம் ந சேந்நிர்தேஸ விபர்யய உப லப்திவத நியம சக்தி விபர்யயாத் ஸமாத்ய பாவாச் ச -யதா ச தஷோ அபயதா இத்யாத்மந ஏவ ஸூபாஸூபேஷு கர்ம ஸூ கர்த்ருத்வம் ப்ரக்ருதேர கர்த்ருத்வம் ப்ரக்ருதேஸ் ச கர்த்ருத்வே தஸ்யாஸ் சாதாரணாத்வேந ஸர்வேஷாம் பல அநுபவ பிரசங்காதி ச ப்ரதிபாதிதம் –பராத்து தச் ஸ்ருதே –க்ருத ப்ரயத்நாபேஷஸ்து விஹித ப்ரதிஷித்தா வையர்த் யாதிப்ய -இத்யாத்மந ஏவ கர்த்ருத்வம் பரம புருஷாநுமதி ஸஹ க்ருத மித்யுக்தம்
அம்ஸோ நாநா வ்யபதேஸாத் அந்யதா சாபி தாஸகித வாதித்வ மதீயத ஏகே மந்த்ர வர்ணாத் அபி ஸ்மர்யதே ப்ரகாசாதி வத்து நைவம் பர ஸ்மரந்தி ச இதி அநீஸயா ஸோசதி முஹ்யமாந –ஜுஷ்டம் யதா பஸ்யத்யன்யமீஸமஸ்ய மஹிமாநமிதி வீத ஸோக -ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்நிய ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிம்ச ந வேத நாந்தரம் தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந் நந்யோ அபிசாக ஸீதி ஜ்ஞாஜ்ஜவ் த்வாவஜாவீஸ நீசவ் பிருதகாத்மாநம் ப்ரேரி தாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ்தேநாம்ருதத்வமேதி யதா பஸ்யஸ் பஸ்யதே ருக்ம வர்ணம் கர்தார மீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சந பரமம் ஸாம்யம் உபைதி -ஸ காரணம் கரணாதிபாதியோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந ஸாதிப -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் இத்யாதி ஷு ப்ரத்யகாத்மந -பரமாத்மநஸ் ச கர்ம வஸ்யத்வேந ஸோசித்ருத்வேநா ஸர்வஜ்ஞத்வேந உபாஸநாயத்த முக்தித்வேந நிர்வத்யத்வேந ஸர்வஞ்ஞத்வேந ஸத்ய சங்கல்பத்வேந சர்வேஸ்வரத்வேந ஸமஸ்த கல்யாண குணா கரத்வாதிநா ச ஸ்வரூபஸ்ய ஸ்வ பாவஸ்ய நாநத்வ வ்யபதேஸாத் –தயோரேவ தத்வமஸி அயமாத்மா ப்ரஹ்ம யோ அசவ் ஸோ அஹம் யோ அஹம் ஸோ அசவ் அத யோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்யோ அஸா வந்யோ அஹமஸ் மீதி ந ஸவேத அக்ருத்ஸ்நோ ஹ்யேஷ ஆத்மேத்யேவோபா ஸீத ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மேமே கிதவா இதி ச ஸர்வ ஜீவாத்ம வ்யாபித்வேநா பேத வ்யபதேஸாச் ச உபய வ்யபதேஸா விரோதேந பரமாத்மாம்ஸோ ஜீவாத்மேத் யப்யுப கந்தவ்யம்

ந கேவலம் ந்யாய ஸித்த மிதம் ஸ்ருதி ஸ்ம்ருதி ப்யாம் சாம்ஸத்வ முக்தம் ஜீவாத்மந -பாதோ அஸ்ய விச்வா பூதாநி மமைவ அம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூதஸ் ஸநாதந இதி -அம்சத்வம் நாம ஏகவஸ்த்வேகதேஸத்வம் –ததா ஸத் யுபயோ ரேக வஸ்துத்வேநா விரோதோ ந ஸ்யாதித்யா சங்க்ய ப்ரகாசாதி வத்து நைவம் பர இதி பரி ஹரதி
அந்நிய விஸேக்ஷணதைக ஸ்வபாவ ப்ரகாஸ ஜாதி குண சரீர விஸிஷ்டாநக்நிவ்யக்தி குண் யாத்மந -ப்ரதி ப்ரகாஸ ஜாதி குண ஸரீராணாம் யதா அம்சத்வம் ஏவம் பரமாத்மாநம் ப்ரத்யகாத்ம ஸரீரகம் ப்ரதி ப்ரத்யகாத்மநோ அசம்த்வம் ஏவமம்சத்வே யத் ஸ்வ பாவ அம்ச பூதோ ஜீவ நைவ மம்ஸீ பரமாத்மா ஸர்வத்ர விஸேக்ஷண விஸேஷ்ய யோஸ் ஸ்வரூப ஸ்வ பாவ பேதாத் –ஏவஞ்ச கர்தா சாஸ்த்ரார் தவத்வாத் பராத்து தச் ஸ்ருதி இத்ய நந்த ரோக்தம் ச ந விருத்யதே

ஏவம் ப்ரகாஸ சரீரவஜ் ஜீவாத்மநா மம்ஸத்வம் பராஸராதய ஸ்மரந்தி ச
ஏக தேச ஸ்திதஸ்ய அக்நேர் ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண ஸக்திஸ் ததேயமகிலம் ஜகத்
யத் கிம்சித் ஸ்ருஜ்யதே யேந சத்த்வ ஜாதேந வை த்விஜ
தஸ்ய ஸ்ருஜயஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரேஸ்தநு
தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோரம்ஸ ஸமுத்பவா இதி

அந்யதா பாரமார்த்திகா பாரமாத்திகோபாதி சமாஸ்ரயணேந ப்ரத்யகாத்மநோ அஸம்த்வே ப்ரஹ்மண ஏவ வேதாந்த நிவர்த்யா ஸர்வே தோஷா பவேயுரிதி ஆபாசா ஏவ ச இத்யாதி ஸூத்ரைருக்தம் -அதஸ் ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா ததாத்ம பூதமேவ ப்ரஹ்ம கதாசித விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் காரண அவஸ்தம் கதாசிச் ச விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் கார்ய அவஸ்தம் ப்ரஹ்ம -ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா தத் விஸிஷ்டத்வேத்மபி ப்ரஹ்மண பரிணாமித்வா புருஷார்த்த ஆஸ்ரயத்வே சரீர பூத சேதன அசேதன வஸ்து கதே ஆத்ம பூதம் ப்ரஹ்ம ஸர்வதா நிரஸ்த நிகில தோஷ கந்த அநவதிக அதிசய அஸங்க்யேய ஞான ஆனந்தாத் யபரிமித உதார குண சாகரம் அதிஷ்டத இதி ப்ரஹ் மைவ ஜகன் நிமித்தம் உபாதாநம் சேதி யதோ வா இமாநி இத்யாதி வாக்யம் ப்ரதிபாதயத்யேவேதி ஜந்மாத் யஸ்ய யத தத் ப்ரஹ்மேதி ஸூஷ்டூக்தம்

ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யஸ்ய சாயமர்த -யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய அவ்யக்தம் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதே -ப்ரஹ்மண ஸர்வதா சித் அசித் வஸ்து சரீரகத்வாத் சதேவேதமீதாநீம் ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கத்வேந விபக்த நாம ரூபம் அக்ரே ப்ரலய காலே ஸூஷ்ம தஸா பன்ன சித் அசித் வஸ்து சரீரகதயா நாம ரூப விபாக அநர்ஹாமேவ ஆஸீத் -ஸ்வயமேவ ப்ரஹ்ம ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி நிமித்தாந்தராநபேஷமத்விதீயம் சாதிஷ்டத்

ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி தன்நாம ரூப விபாகாநர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரகதயா ஏகமேவாவஸ்திதம் நாம ரூப விபாகார்ஹா ஸ்தூல தசாபத்த்யா பஹு ப்ரகாரம் ஸ்யாமிதி ஐக்ஷத –ஸ்யாம் ப்ரஜாயேய இதி வ்யஷ்டி சமஷ்டி வ்யபதேஸ –சித் அசிதோ பரஸ்ய ச ப்ரலய காலே அபி வ்யவஹாரா நர்ஹா ஸூஷ்ம பேத ஸர்வைர் வேதாந்தி ப்ரப்யுபகத அவித்யா க்ருத பேதஸ்ய உபாதி க்ருத பேதஸ்ய ச அநாதி த்வாப் யுபகமாத் இயாம்ஸ்து விசேஷ -ப்ரஹ்மைவாஜ்ஞம் உபாதை ஸம்பத்தம் சேதி ஸர்வ ஸ்ருதி ந்யாய விராதோ அந்யேஷாம் –ததபாவாத விரோதஸ் ச அஸ்மாகம் இதி —2-இதி ஜந்மாத் யதி கரணம் –2-க க உ –1-1-2-


உ -2- ஜந்மாத் யஸ்ய யத –
தைத்தரீயகே –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் ப்ரயந்த் யபி ஸம் விஸந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இத்யேதத் வாக்யம் விஷய
கிமேதஜ் ஜிஜ்ஞாஸ்ய தயா ப்ரதிஞ்ஞாதம் ப்ரஹ்ம ஜகஜ் ஜன்மாதி காரண தயா லக்ஷண தஸ் ப்ரதிபாத யிதும் சக்நோதி ந வேதி ஸம்சய -ந சக்நோ தீதி பூர்வ பக்ஷ —
குத -ஜகஜ் ஜன்மாதீநாம் உப லக்ஷண தயா விசேஷணதயா வா ப்ரஹ்ம லக்ஷணத்வா சம்பவாத்
உப லக்ஷணத்வே ஹ்யுபலஷ்யஸ் யாகாராந்தர யோகோ அபேக்ஷித -ந சேஹ ததஸ்தி அத உப லக்ஷணத்வம் ந சம்பவதி விசேஷணத்வே அபி அநேக விசேஷண விசிஷ்டதயா அபூர்வஸ்யை கஸ்ய ப்ரதிபாத கத்வம் ன் சம்பவதி விசேஷணாநாம் வ்யாவர்த்தகத்வேந விசேஷண பஹுத்வே ப்ரஹ்ம பஹுத்வ ப்ரஸக்தே
-ராத்தாந்தஸ்து ஏகஸ்மின் ந விருத்தா நாம் விசேஷணாநாம் அநேகத்வ அபி ஸ்யாமத்வ யுவத்வாதி விஸிஷ்ட –தேவ தத்தவஜ் ஜகஜ் ஜன்மாதி விசிஷ்டம் ப்ரஹ்மைக மேவ விசேஷ்யம் பவதி
உப லக்ஷணத்வே ஜன்மாதி பிருப லஷ்யஸ்ய ப்ரஹ்ம ஸப்தாவகத ப்ருஹத் த்வாத் யாகாராஸ் ச சந்தீதி ஜகஜ் ஜன்மாதி –காரணம் ப்ரஹ்மேதி லக்ஷணத ப்ரதிபாதயிதம் சக்நோ தீதி –ஸூத்ரார்த்த -அஸ்ய விவித விசித்ர போக்த்ரு போக்ய பூர்ணஸ்ய ஜகத யதோ ஜன்மாதி தத் ப்ரஹ்மேதி பிரதிபாதயிதும் சக்நோத்யே தத் வாக்யமிதி –உ–இதி ஜந்மாத் யதிகரணம் —

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வ அதி கரணம்
3 ஸாஸ்த்ர யோநித்வாத் –

ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விஸிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதாநத்வம் நிமிதத்வம் ச நாநுமாந கம்யமிதி ஸாஸ்த்ர ஏக ப்ராமாணகத் வாத்தஸ்ய யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயத்யேவேதி ஸித்தம் –3-இதி ஸாஸ்த்ர யோநித்வதி கரணம்

1-1-3- -ஸாஸ்த்ர யோநித்வாத்
யதோ வா இமாநி –இத்யாதி வாக்யமேவ விஷய
தத் கிம் ஜகாத் காரணே ப்ரஹ்மணி ப்ரமாணம் -உத நேதி ஸம்சய -நைதத் பிரமாணம் இதி பூர்வ பக்ஷ -அநுமான ஸித்த ப்ரஹ்ம விக்ஷயத்வாத்–பிரமாணாந்தரா விஷயே ஹி ஸாஸ்த்ரம் பிரமாணம் -ஜகதஸ் சாவ யத்வேந கார்யத்வாத் –கார்யஸ்ய ஸ்வ உபாதான உப கரண ஸம் ப்ரதான ப்ரயோஜனாத் யபிஜ்ஞ கர்த்ருகத்வாத் ஜகந் நிர்மாண கார்ய சதுர -கர்ம பரவஸ பரிமித ஸக்த்யாதி ஷேத்ரஞ்ஞ விலக்ஷணஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ ஸக்தஸ் ஸர்வேஸ்வர அநுமான ஸித்த இதி தஸ்மிந் யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் பிராமணம் இதி -ராத்தாந்தஸ்து -ஜகத கார்யத்வே -அப்யேகதைவைகேநைவ க்ருத்ஸ்னம் ஜகத் நிர்மித மித்யத்ர ப்ரமாணா பாவாத் -ஷேத்ரஞ்ஞாநா மேவ விலக்ஷண புண்யா நாம் ஞான ஸக்தி வைசித்ர்ய ஸம்பாவ நயா காதாசித் கஸ்ய சிஜ் ஜகத் ஏகதேச நிர்மாண ஸாமர்த்ய சம்பவாத் தததிரிக்த புருஷ அநுமானம் ந சம்பவதீதி ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மணஸ் தத் ப்ரதிபாதகத்வேந தஸ்மிந் -யதோ வா இமாநி பூதாநி –இத்யாதி வாக்கியம் -ப்ரமாணம் இதி —
ஸாஸ்த்ரம் யோநி -யஸ்ய காரணம் பிரமாணம் தத் ப்ரஹ்ம ஸாஸ்த்ர யோநி -பிரமாணாந்தர அவிஷயத்வேந ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மண தஸ்மிந் யதோ வா இமாநி இத்யாதி -வாக்யம் பிரமாணம் இதி ஸூத்ரார்த்த –3-இதி -ஸாஸ்த்ர யோநித்வாதி கரணம் –3

1-1-4-சமன்வய அதி கரணம்
4-தத் து சமன்வயாத் –

புருஷார்த தயா அந்வய ஸமன்வய சாஸ்த்ராக்ய ப்ரமாணஸ்ய புருஷார்த்த பர்யவசாயித்வே அபி ப்ரஹ்ம ஸ்வஸ்ய பரஸ்ய சாநுபவிது -அவிஸேஷேண ஸ்வரூபேண குணை விபூத்யா ச அநுபூயமாநம் அநவதிக அதிசய அநந்த ரூபமிதி புருஷார்தத்வேநாபி தேயதயா அந்வயாத் ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வ முபபந்ந தரமிதி நிரவத்யம் நிகில ஜகதேக காரணம் ப்ரஹ்ம வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுக்தம்-தஸ்யை கஸ்யை கதைவ க்ருத்ஸ்ன ஜகன் நிமித்தத்வம் தஸ்யைவோபாதாநதயா ஜகத் ஆத்மகத்வம் ச நாநுமாநாதி கம்யமிதி ஸாஸ்த்ரக பிரமாண கத்வாத் தஸ்ய ச அநவதிக அதிசய அநந்த ரூப தயா பரம புருஷார்தத்வாத் வேதாந்தா ப்ரதிபாத யந்த்யேவ இதி ஸ்திரீக்ருதம் –-4-இதி ஸமன்வய அதி கரணம் –4-

4- தத் து சமன்வயாத் 
ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி நேதி விசார்யதே –ந ஸம்பவ தீதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரவ்ருத்தி நிவ்ருத்த் யன்வய விரஹிணோ ப்ரஹ்மணி ஸ்வரூபேணா புருஷார் தத்வாத் புருஷார்த்த அவ போதகத்வேந ச ஸாஸ்த்ரஸ்ய ப்ராமாண்யாத்-மோக்ஷ சாதன ப்ரஹ்ம த்யான விதி பரத்வே அபி அஸத்யபி ப்ரஹ்மணி தத் த்யான விதாந சம்பவாத் ந ப்ரஹ்ம ஸத்பாவே தாத்பர்யமிதி ப்ரஹ்மண -ஸாஸ்த்ர ப்ரமாணகத்வம் ந சம்பவதி
ராத்தாந்தஸ்து அதிசயித குண பித்ரு புத்ராதி ஜீவனஜ் ஞானவத் அநவதிக அதிசய அநந்த ஸ்வரூப ப்ரஹ்ம ஞானஸ்ய நிரதிசய புருஷார் தத்வாத் தஸ்ய ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி -ஆனந்தோ ப்ரஹ்ம -யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இத்யாதிபிர் அநவதிக அதிசய அநந்தஸ்வரூபம் ப்ரஹ்மேதி ஹி ப்ரதிபாத்யதே –
அதோ ப்ரஹ்ம ஸ்வேந பரேண வா அப் யநுபூயமாநம் நிரதிசய அனந்த ஸ்வரூப மேதி தத் ப்ரதிபாதன பரஸ்யைவ ஸாஷாத் புருஷார்த்த அன்வய -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரஸ்ய து தத் ஸாத்ய பல சம்பந்தாத் புருஷார்த்த அந்வய இதி
ஸூத்ரார்த்த -து ஸப்த ப்ரஸக்தா சங்கா நிவ்ருத்யர்த்த –தத் பூர்வ ஸூத்ர உதிதம் ப்ரஹ்மண ஸாஸ்த்ர யோநித்வம் சமன்வயாத் ஸித்த்யதி –ஸம்யக் புருஷார்த்த தயா அந்வய ஸமன்வய -வேதி துர் நிரதிசய அநந்த ஸ்வரூபத்வேந பரம புருஷார்த்த ரூபே பரே ப்ரஹ்மணி வேதகதயா ஸாஸ்த்ரஸ்ய அந்வயாத் ப்ரஹ்மண ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சித்த்யத்யே வேதி —4- இதி சமன்வய அதிகரணம் -4-

———–

அத பரம் பாத ஸேஷேண ஜகத் காரண தயா ப்ரதான புருஷ ப்ரதிபாதநா நர்ஹாதயா ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரஸ்தாவித்யாதி -ஸமஸ்த தோஷ கந்தமபரிமிதோதார குண சாஹரம் ப்ரஹ்மைவ வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுச்யதே –தத்ர தாவத் ப்ரதாநம் வேதாந்த பிரதிபாதநா நர்ஹாமித்யாஹ

1-1-5-ஈஷத் யதி கரணம்
5- ஈஷதேர் நா ஸப்தம்
 –அஸப்தம் ஆநு மாநிகம் ப்ரதாநம் ந தத் வேதாந்த வேத்யம் –குத –ஈஷதே –ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் இதி ப்ரஸ்துத ஜகத் காரண வ்யாபாரவாசிந –ஈஷதேர்தாதோ ஸ்ரவணாத் ததைஷத பஹு ஸ்யாம் இதி –5-

1-1-5-ஈஷத் அதிகரணம்
5-ஈஷதேர் நா ஸப்தம்

யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி -ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் விஷய
தத் கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் –உத அநவதிக அதிசய அநந்தம் ப்ரஹமேதி ஸம்சய –ப்ரதானமிதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அன்வயேநாநுமாநாகார வாக்ய வேத்யத்வாத் –
யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதிநா -ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாநம் ப்ரதிஞ்ஞாய -யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இதி த்ருஷ்டாந்தேந ஹ்யுபபாத்யதே -ஏவம் அநு மானிகம் ஏவ ஏதத் வாக்ய வேத்யமிதி நிஸ் சீயதே –
ஸதேவ சோம்யேதம் இதி சச்சப்த ப்ரதான விஷய -ததைஷத பஹுஸ்யாம் இதி ச கௌணம் ஈஷணம் பவிதுமர் ஹாதி தத்தேஜ ஐஷத -இத்யாதி கௌணேக்ஷண ஸாஹசர்யாச் ச -ராத்தாந்தஸ்து –ததைக்ஷத பஹுஸ்யாம் இதி பஹு பவந ஸங்கல்ப ரூபேக்ஷண அந்வயாத் -ஸதேவ சோம்ய இதி காரண வாசி ஸச் ஸப்த விஷயோ நா சேதநம் ப்ரதாநம் -அபி து ஸார்வஜ்ஞய ஸத்ய சங்கல்பாதி யுக்தம் பர ப்ரஹ்மை வேதி நிஸ் சீயதே -ந ச அநு மானாகார மேதத் வாக்யம் ஹேதுத்வநு பாதாநாத்
அந்ய ஞாநேநாந்யஜ் ஞாநா ஸம்பவ பரிஜிஹீர்க்ஷயா து த்ருஷ்டாந்த உப பாதாநாம் –ந ச முக்யேக்ஷண சம்பவே கௌண பரிக்ரஹ ஸம்பவ –தேஜஸ் ப்ரப்ருதி சரீரகஸ் யாந்தர் யாமிணோ வாசகத்வாதிதி பரமேவ ப்ரஹ்ம ஜகத் காரண வாதி வேதாந்த வேத்யம் –இதை –
ஸூத்ரார்த்தஸ் ச –ஈஷதேரிதி ஈஷதிதாத்வர்தஸ் ஈஷணம் –ஸப்த ப்ரமாணம் யஸ்ய ந பவதி தத ஸப்தம் -பரோக்தமாநுமாநிகம் ப்ரதாநம் –
ஸதேவ சோம்யேதம் இதி ஜகத் காரண தயா ப்ரதிபாதித அந்வயிந ஈஷண வ்யாபாராந்நா சேதனம ஸப்தம் தத் அபி து ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் ப்ரஹ்மைவ ஜகத்காரணமிதி நிஸ் சீயதே –இதி –5-

6-கௌணஸ் சேந்நாத்ம ஸப்தாத் —
தத் தேஜ ஐஷத இத்யாதிஷ்வ சேதநே அபி வஸ்துநி ஈஷதிஸ் ஸ்ரூயதே தத்ர கௌண =ஏவமத்ராபி ப்ரதான ஏவேக்ஷதிர் கௌண இதி சேத் நைததுப பத்யதே ப்ரஸ்துதே ஸச் ஸப்த வாஸ்யே ஸ்ரூயமாணாச் சேதன வாசிந ஆத்ம ஸப்தாத் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேத கேதோ இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே -தேஜ ப்ரப்ருதிஷ்வபி ந கௌணமீ க்ஷணம் –தேஜ ப்ரப்ருதி ஸப்தைரபி தத் தச் சரீரகம் ப்ரஹ்மைவாபி தீயதே அநேந ஜீவேநாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ப்ரஹ்மாத்மக ஜீவ அநு பிரவேசா தேவ ஸர்வஸ்ய வஸ்துநோ நாம ரூப பாக்த்வாத் –தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய-ஸச் சத்யாச்சாபவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச –விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச –ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமபவத் இதி சேதனமசேதநம் ச ப்ருதங் நிர்திஸ்ய ததுபயமநு ப்ரவிஸ்ய சத்யச் ஸப்த வாஸ்யோ அபவதிதி ஹி ஸமாந ப்ரகரணே ஸ்பஷ்டமபிஹிதம்

6-கௌணஸ் சேந் நாத்ம ஸப்தாத்
தத்தேஜ ஐக்ஷத -இத்ய சேதனகத கௌணேக்ஷண சாஹசர்யாத் -ததைக்ஷத இத்யர்த ஈஷதிர் கௌண இதி சேந்ந ஆத்ம சப்தாத் –
ஸச் ஸப்தாபிஹிதே ஈஷிதரி ஐ ததாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா இதி ஸ்ரூயமாணாச் சேதன வாசிந –
ஆத்ம ஸப்தாதயமீக்ஷதிர் முக்ய ஏவேதி ப்ரதீயதே –ஐததாத்ம்யமிதம் ஸர்வம் இதி தேஜ ப்ரப்ருதீ நாமபி ததாத்மகத்வாவகமாத் தேஜ ப்ரப்ருதீ ஷணமபி முக்யமே வேத்யபி ப்ராய –6-

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேஸாத் –இதஸ் ச ப்ரதாநாதர் தாந்தர பூதம் ப்ரதாநாதர் தாந்தர பூதம் ஸச் ஸப்தாபி ஹிதம் ஜகத் காரணம் -ஸச் ஸப்தாபிஹித தத்த்வ நிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத் –தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஹி தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதிஸ்யதே -ப்ரதான காரணவாதி நாமபி ஹி ப்ரதான நிஷ்டஸ்ய மோஷோநாபிமத-7-

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத்
இதஸ் ச ஸச் ஸப்தாபி ஹிதம் ந ப்ரதாநம் அபி து பரமேவ ப்ரஹ்ம –தத்த்வமஸி இதி ஸதாத்மகதயா ப்ரத்யகாத்ம அநு ஸந்தான நிஷ்டஸ்ய தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யே அத ஸம்பத்ஸ்ய இதி மோக்ஷ உப தேசாத் தத் காரணம் பரமேவ ப்ரஹ்ம -7-

8-ஹேயத்வா வசநாச் ச –யதி ப்ரதானமத்ர விவஷிதம் ததா தஸ்ய ஹேயத்வாத் அத்யேயத்வமுச்யேத ந த்துச்யதே -மோக்ஷ சாதநதயா த்யேயத்வமே வாத்ரோச்யதே தத்த்வமஸி ஸ்வேத கேதோ இத்யாதிநா –8-

8-ஹேயத்வா வசநாச் ச —
யதி ப்ரதாநம் இஹ காரண தயா விவஷிதம் ததா தஸ்ய மோக்ஷ விரோதித்வாத்தே யத்வம் உச்யதே -ந சோஸ்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் –8-

இதஸ் ச ந ப்ரதாநம்
9-ப்ரதிஜ்ஞா விரோதாத் —

ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா விரோதாத் -ஸச் ஸப்த வாஸ்ய தத்த்வ ஞாநேந தத் கார்ய தயா சேதன அசேதன ஸர்வ வஸ்து ஞானம் யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி நா ப்ரதிஞ்ஞாதம் தத்தி ப்ரதான காரண வாதே விருத்யதே-சேதநஸ்ய ப்ரதான கார்யத்வாபாவாத் -ப்ரதாநாதர்தாந்தர பூத ப்ரஹ்ம காரண வாதே சித் அசித் வஸ்து சரீரம் ப்ரஹைவ நாம ரூப விபாகா விபாகாப்யாம் கார்யம் காரணம் சேதி ப்ரஹ்ம ஞாநேந க்ருத்ஸ்நஸ்ய ஞாததோப பத்யதே –9-

9-ப்ரதிஞ்ஞா விரோதாத்
ப்ரதான வாதே ப்ரதிஞ்ஞா ச விருத்யதே யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி வஹ்யமாண காரண விஞ்ஞாநேந சேதன அசேதன மிஸ்ர க்ருத்ஸ்ன ப்ரபஞ்ச ஞானம் ஹி ப்ரதி ஞாதம் -சேதன அம்சம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் தஜ் ஞாநேந சேதன அம்சோ ந ஞாயத இதி ந ப்ரதாநம் காரணம் -9-

இதஸ் ச ந பிரதானம்
10-ஸ்வாப்யயாத் –
-ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய விஜாநீஹி இதி –யத்ரை தத் புருஷஸ் ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி -ஸ்வம பீதோ பவதி தஸ்மாதேநம் ஸ்வபிதீத்யாசக்ஷதே -ஸ்வம் ஹ்யபீதோ பவதிஇதி ஜீவஸ்ய சேதனஸ்ய ஸூஷுப்தஸ்ய ஸதா சம்பந்நஸ்ய ஸ்வாப்யவசநாத் ப்ரதாநாதர்தாந்தர பூதம் ஸச் ஸப்த வாஸ்யமிதி விஞ்ஞாயதே –ஸ்வம பீதோ பவதி–ஆத்மாந மேவ ஜீவோ அபீதோ பவதீத்யர்தா -சித் வஸ்து சரீரகம் ததாத்ம பூதம் ப்ரஹ்மைவ ஜீவ சப்தேநாபி தீயத இதி நாம ரூப வ்யாகரண ஸ்ருத் யுக்தம் -தஜ் ஜீவ சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ ஸூஷுப்தி காலே அபி ப்ரலய கால இவ நாம ரூப பரிஷ்வங்காபாவாத் கேவல ஸச் சப்தாபிதேயமிதி ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வமபீதோ பவதி இத்யுச்யதே –ததாஸமாந ப்ரகரணே நாம ரூப பரிஷ்வங்காபாவேந ப்ராஜ்ஜேநைவ பரிஷ்வங்காத் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் இத்யுச்யதே -ஆமோஷாஜ் ஜீவஸ்ய நாம ரூப பரிஷ்வங்கதேவ ஹி ஸ்வ வ்யதிரிக்த விஷய ஞான உதய –ஸூஷுப்தி காலே ஹி நாம ரூபே விஹாய ஸதா ஸம் பரிஷ் வக்த -புநரபி ஜாகரதஸாயாம் நாம ரூபே பரிஷ் வஜ்ய தத் தன்நாம ரூபோ பவதீதி ஸ்ருத் யந்தரே ஸ்பஷ்டமபிதீயதே யதா ஸூ ப்த ஸ்வப்நம் ந கதஞ்சன பஸ்யதி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி -ஏதஸ்மாதாத்மந ப்ராணா யதாயதநம் விப்ரதிஷ்டந்தே ததா த இஹ வ்யாக்ரோ வா ஸிம்ஹோ வா வ்ருகோ வா வராஹோ வா யத் யத் பவந்தி இதி –10-

10-ஸ்வாப்யயாத்
ஸ்வம் அபீதோ பவதி -ஸதா சோம்ய ததா ஸம்பந்நோ பவதி இதி ஜீவஸ்ய ஸூஷுப் தஸ்ய ஸ்வாப்யயஸ் ஸ்ரூயதே -ஸ்வ காரணே ஹ்யப் யய ஸ்வாப்யய–ஜீவம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் ஸ்வாப்யய ஸ்ருதி விருத்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் அபி து ப்ரஹ்மைவ –10-

11-கதி சாமான்யாத் –ஸகல உபநிஷத் கதி ஸாமாந்யாதஸ் யாமப் யுப நிஷதி ந ப்ரதாநம் காரணமிதி ஞாயதே ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் ஸ ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி ஸ இமால் லோகாநஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்ஸிஜ் ஜநிதா ந சாதிப இத்யாதி ஸகல உப நிஷத்ஸூ ஸர்வேஸ்வர ஏவ ஹி ஜகத் காரணமிதி ப்ரதி பாத்யதே –11-

11-கதி சாமான்யாத்
இதர உப நிஷத் கதி சாமான்யா தஸ்யாம் சோபநிஷதி ந ப்ரதாநம் காரணம் விவஷிதம்
இதராஸூ சோபநிஷத்ஸூ -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித்–தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச ஸ காரணம் கரணாதிபாதிப ஆத்மநி கல்வரே விதிதே ஸர்வமிதம் விதிதம் -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய விஸ்வ ஸிதமேதத்யத்ருக்வேத புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் தஸ்மாத் விராட ஜாயத ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத்
ஸ இமான் லோகந ஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் =ஸ ஏகாகீ ந ரமேத இதி ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஏவ காரணதயா ப்ரதிபாத்யதே -அஸ்யாஸ் ச தத் கதி சாமான்யா தத்ராபி ஸ ஏவ காரண தயா ப்ரதிபாதன மர்ஹா தீதி ந ப்ரதாநம் –11–

12-ஸ்ருதத்வாச் ச –ஸ்ருதமேவ ஹ்யஸ்யாம் உப நிஷதி -ஆத்மத ப்ராண –ஆத்மந ஆகாஸ இத்யாதவ் ஆத்மந ஏவ ஸர்வ உத்பத்தி -அத ப்ரதாநாத சேதநாதர்தாந்தர பூதஸ் ஸர்வஞ்ஞ-புருஷோத்தம ஏவ ஜகத் காரணம் ப்ரஹ்மேதி ஸ்திதம் —12-இதி ஈஷத் யதி கரணம் –5-

12-ஸ்ருதத் வாஸ் ச
ஸ்ருதமே வாஸ்யாம் உப நிஷதி ஆத்மத ஏவேதம் ஸர்வம் இதி -அதஸ் ச ஸதேவ சோம்ய இத்யாதி ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் ந ப்ரதாநம் -ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் பரம் ஏவ ப்ரஹ்ம இதி ஸ்திதம் —இதி -ஈஷத் யதிகரணம் –5-

—————–

1-1-6-ஆனந்த மய அதி கரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸாத் 
–யத்யபி ப்ரதாநாதர்தாந்தர பூதஸ்ய ப்ரத்யகாத்மநஸ் சேதநஸ்ய ஈஷண குண யோக ஸம்பவதி ததா அபி ப்ரத்யகாத்மா பத்தோ முக்தஸ் ச ந ஜகத் காரணம் -தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாராப்ய தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யஸ்ய ஆனந்த மயத்வ ப்ரதி பாதநாத் காரண தயா வ்யபதிஷ்டோ அயம் ஆனந்த மய ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -குத அப்யாஸாத் ஆனந்த மயஸ்ய நிரதிசய தயா ஸிரஸ்காநந்த மயத்வேநாப்யாஸாத் தே யே சதம் ப்ரஜாபதேர் ஆனந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த யதோ வாஸோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ் சந இதி ஹி வேத்யத்வேநாயமாநந்த மயோ அநவதிக அதிசயோ அப் யஸ்யயதே –13-

1-1-6- ஆனந்த மய அதிகரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸத்

தைத்திரீயகே –தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இதி -ப்ரக்ருத்ய தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யத்ர ஜகத் காரண தயா அவகத -ஆனந்தமய -கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாதமேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ -குத -தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா இத் யாநந்த மயஸ்ய சாரீரத்வ ஸ்ரவணாத் –ஸாரீரோ ஹி சரீர சம்பந்தீ -ச ச ப்ரத்யகாத்ம ஏவ -தஸ்ய சேதநத்வேநேஷா பூர்விகா ஸ்ருஷ்டி ரூப பத்யத இதி -ராத்தாந்தஸ்து -ஸ ஏஷ ஆனந்தஸ்ய மீமாம்ஸா பவதி இத்யாராப்ய-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இதி நிரதிசய தஸா சிரஸ்கோ அப்யஸ்யமாந ஆனந்த ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய பரஸ்யைவ ப்ரஹ்மண இதி நிஸ் சீயதே -சாரீராத்மத்வம் ச பரமாத்மந ஏவ தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாகாஸாதி ஜகாத் காரண தயா அவகத ஏவான் நமயஸ்ய சாரீர ஆத்மேதி ப்ரதீயதே ஆத்மாந்தர நிர்தேசாத்
ஸ்ருத் யந்த்ரேஷு -ப்ருதிவ் யக்ஷராதீநாம் சரீரத்வம் பரமாத்மந ஆத்மத்வம் ச ஸ்ரூயதே யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாராப்ய-ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி
அன்னமயஸ் யாத்மைவ ப்ராண மயாதிஷு தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இத் யநுக்ருஷ்யத இதி ப்ரத்யகாத்மநோ விஞ்ஞான மயஸ்ய ச ஸ ஏவ சாரீர ஆத்மா -ஆனந்த மயே து தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இதி நிர்தேச -ஆனந்தமயஸ்யாநன்யாத்மத்வ ப்ரதர்சநார்த்த -அதோ ஜகத் காரண தயா நிர்திஷ்டம் ஆனந்தமய பரமாத்மைவேதி —
ஸூத்ரார்தஸ்து –ஆனந்த மய ஸப்த நிர் திஷ்ட ஆகாசாதி ஜகாத் காரணபூதஸ் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ் பரமாத்மா –
குத
தஸ் யாநந்தஸ்ய நிரதிசய ப்ரதீதி பலாத் -ஸ ஏகோ மாநுஷ ஆனந்த -தே யே சதம் இத்யாத் யப் யாஸாத் தஸ்ய ச ப்ரத்யகாத்மந்ய ஸம்பாவிதஸ்ய தததிரிக்தே பரமாத்மன்யேவ சம்பவாத் –13-

14-விகார ஸப்தாந்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஸ வா ஏஷ புருஷோ அந்நர ஸமய இதி விகாரார்த மயப் ப்ரகரணாத் ஆனந்த மய இத்யஸ்யாபி விகாரார்தத்வம் ப்ரதீயதே -அதோ அயம் ஆனந்த மய நா விகார ரூப பரமாத்மா இதி சேந்ந அர்த விரோதாத் பிராசுர்யார்த ஏவாயம் மயடிதி விஞ்ஞாயதே தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத இதி ஹ்ய விகார ஆத்மா ப்ரக்ருத –ப்ரகரணே ச விகாரார்தத்வம் ப்ராண மய ஏவ பரித்யக்தம் –உக்தேந ந்யாயேந ஆனந்த ப்ராசுர்யாத் பரம புருஷா ஏவாயமாநந்த மய –14-

14-விகார ஸப்தான்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஆனந்த மய -இதி விகாரார்த்தான் மயட் ஸப்தான்நாயம விக்ருத பரமாத்மா -அஸ்ய ச விகாரார்தத்வமேவ யுக்தம் அன்னமய இதி விகார உபக்ரமாதிதி சேந்ந-ப்ரத்யகாத்மநோ அபி ந ஜாயதே ம்ரியதே வா இத்யாதி விகார ப்ரதி ஷேதாத் ப்ராசுர்யார்த்த ஏவாயம் மயடிதி நிஸ்ஸயாத் -அஸ்மிம்ஸ் சா நந்தே யதோ வாசோ நிவர்த்தந்தே இத்யாதி வஹ்யமாணாத் பிராசர்யாதயமாநந்த ப்ரசுர பரமாத்மைவ -நஹ் யநவதிக அதிசய ரூப ப்ரபூதாநந்த ப்ரத்யகாத்மநி ஸம்பவதி –14-

15-தத் தேது வ்யபதேஸாச் ச –ஏஷ ஹ்யேவா நந்தயாதி இதி ஜீவான் ப்ரத்யா நந்த ஹேதுரயமா நந்தமயோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாயம் ந ப்ரத்யகாத்மா –15-

15-தத்தேது வ்யபதேசாச் ச -ஏஷ ஹ்யேவா ஆநந்தயாதி இதி ஜீவான் ப்ரதி ஆனந்த யித்ருத் வ்யபதேசாதயம் பரமாத்மைவ –15-

16-மாந்த்ர வர்ணிகமேவ ச கீயதே–ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதமேவ தஸ்மாத் வா ஏதஸ்மாத் இத்யாதி நா ஆனந்த மய இதி கீயதே –அதஸ் ச ந ப்ரத்யகாத்மா –16-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதம் ப்ரஹ்மைவ தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந இத்யாரப்ய ஆனந்தமய இதி ச கீயதே –ததஸ் சா ஆனந்த மயோ ப்ரஹ்ம -16-

17-நேதரோ அநுப பத்தே –இதர –ப்ரத்யகாத்மா மந்த்ர வர்ணோதித இதி நாசங்க நீயம் ஸோ அஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா இதி ப்ரத்யகாத்மநோ பத்தஸ்ய முக்தஸ்ய ச ஈத்ருஸ விபஸ்சித்த்வாநுப பத்தே –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி விசித்ர ஸ்திரத்ரஸ ரூப பஹு பவந ஸங்கல்ப ரூபமிதம் விபஸ்சித்த்வமிதி ஹ்யுத்தரத்ர வ்யஜ்யதே -முக்தஸ்ய ஸர்வஞ்ஞஸ்யாபி ஜகத் வ்யாபாராபாவாதீத்ருஸ –விபஸ்சித்த்வா ஸம்பவ –17–

ப்ரத்யகாத்மந பரி ஸூத்தம் ஸ்வரூபம் மந்த்ர வர்ணோதித மித்யா சங்க்யாஹ
17-நேதரோ அநுப பத்தே
 –பரஸ்மாத் ப்ரஹ்மண -இதர ப்ரத்யகாத்மா ந மந்த்ர வர்ணோதித -தஸ்ய விபஸ்சிதா ப்ரஹ்மணா இதி விபஸ்சித்வ அநுப பத்தே –விவிதம் பஸ்யச் சித்த்வம் ஹி விபஸ் சித்த்வம் தச்ச ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேய இத்யாதி வாக்யோதித நிருபாதிக பஹு பவந ஸங்கல்ப ரூபம் ஸர்வஞ்ஞத்வம்
தத்து ப்ரத்யகாத்மந பரி ஸூத்தஸ் யாபி ந சம்பவதி ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச இதி வஹ்ய மாணத்வாத் –அத பரம் ப்ரஹ்மைவ மாந்த்ர வர்ணிகம் –17-

இதஸ் ச
18-பேத வ்யபதேஸாச் ச
 –தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி ஹி விஞ்ஞாந மயாத் ப்ரத்யகாத்மநோ பேதே நாயமா நந்த மயோ வ்யபதிஸ்யதே –ந ச விஞ்ஞாந மய விஷய தயா உதாஹ்ருதஸ் லோகே விஞ்ஞானம் யஞ்ஞம் தநுதே இதி வ்யபதேஸாத் விஞ்ஞாந மயோ புத்தி மாத்ர மித்யா சங்க நீயம் -யதஸ் ஸூத்ரகார ஏவ இமாம் ஆசங்காம் பரி ஹரிஷ்யதி வ்யபதேசாச் ச க்ரியாயாம் ந சேந்நிர்தேஸ விபர்யயய இதி -விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே இதி யஜ்ஞாதி க்ரியாயாம் ஜீவஸ்ய கர்த்ருத்வ வ்யபதேஸாச் ச ஜீவ கர்தா –விஞ்ஞான சப்தேந ஜீவஸ்யா வ்யபதேஸே புத்தி மாத்ர வ்யபதேஸே ச விஞ்ஞாநேநேதி நிர்தேச விபர்யயஸ் ஸ்யாத் புத்தே கரணத்வாதிதி –18-

18-பேத வியபதேஸாஸ் ச –-பீஷாஸ்மாத் வாத பவதே இத்யாதிநா -அக்னி வாயு ஸூர்யாதி ஜீவ வர்கஸ்ய ஆனந்த மயாத் ப்ரஸாஸிது -ப்ரஸாஸி த்வயத்வேந பேதோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாநந்தமய பரமாத்மேதி –
யோஜனாந்தரம் -தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி விஞ்ஞாந மயாஜ் ஜீவாதா நந்த மயஸ்ய பேதோ வ்யபதிஸ்யதி –விஞ்ஞான மயோ ஹி ஜீவ ஏவ ந புத்தி மாத்ரம் -மயட் ச் சுருததே –அதஸ் சா நந்த மய பரமாத்மா –18-

இதஸ் ச
19-காமாச்ச நாநுமாநாபேஷா
 –ஸோ அகாமயத பஹுஸ்யாம் இதி ஸ்வ காமாதேவாஸ்ய ஜகத் ஸர்கஸ் ஸ்ரூயதே ப்ரத்யகாதமநோ ஹி யஸ்ய கஸ்ய சித் ஸர்கே ஆநு மாநாபேஷா த்ருஸ்யதே –அநு மாந காம்யம் ப்ரதாநம் ஆநு மாநம் –19-

19-காமாச் ச நாநுமாநாபேஷா –ஸோ அகாமயத இத்யாரப்ய இதம் ஸர்வமஸ்ருஜத இதி காமாதேவ ஜகத் ஸர்கஸ்ரவணாத் அஸ்ய ஆனந்த மயஸ்ய ஜகத் சர்கே நாநுமாந கம்ய ப்ரக்ருத்யபேஷா ப்ரதீயதே
ப்ரத்யகாத்மநோ யஸ்ய கஸ்ய சிதபி சர்கே ப்ரக்ருத் யபேஷாஸ்தி -அதஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அந்ய பரமாத்மா –19-

இதஸ் ச
20- அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி-
– அஸ்மின் ஆனந்த மயே அஸ்ய ப்ரத்யகாத்மந ஆனந்த யோகம் ஸாஸ்தி ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அத ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஜகத் காரண பூத ஆனந்த மய –20- இதி ஆனந்த மய அதி கரணம் –6-

20-அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி -ரஸோ வை ஸ -ரஸம் ஹ்யே வாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அஸ்மின் -ஆனந்த மயே ரஸ ஸப்த நிர்திஷ்டே அஸ்ய அயம் ஸப்த நிர்திஷ்டஸ்ய
ஜீவஸ்ய தல்லாபாதா நந்த யோகம் ஸாஸ்தி ஸாஸ்த்ரம் -ப்ரத்யகாத்மநோ பல்லாபாதா நந்த யோக -ஸ தஸ்மாதன்ய பரமாத்மை வேத்யா நந்த மய -பரம் ப்ரஹ்ம –20- இதி ஆனந்த மயாதிகரணம்–7-

————

1-1-7-அந்தராதிகரணம்
21-அந்தஸ் தத் தர்ம உபதேஸாத் –அயம்

ஜகத் காரண பூத விபஸ் சிதாநந்த மய கஸ்சிதுபசித புண்ய விஸேஷோ ஜீவ விஸேக்ஷ தேஹ யோகாத் விஞ்ஞாயதே நாயம் பரமாத்மேதி நா சங்க நீயம் -ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ இத்யாதவ் ஸ்ரூயமாண புருஷாகார பரமாத்மைவ –குத -தத் தர்ம உபதேஸாத் –ஸ ஏஷ ஸர்வேஷாம் லோகாநாமீஸ ஸர்வேஷாம் காமாநாம் தஸ்யோதிதி நாம ஸ ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உசித இதி நிருபாதிக ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வம் ஸ்வத ஏவா கர்மவஸ்யத்வம் ச ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய ஹி பரம புருஷஸ் யைவ தர்ம வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு த்ரி குணாத் மக ப்ரக்ருத்யநந்தர் கத அப்ராக்ருதஸ்வ அசாதாரண ரூப வத்த்வம் ச ஞானாதி குணவத்த்ஸ்யைவ ஹி ஸ்ரூயதே
ஞானாதயோ அபி -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச இத்யாதிஷு ஸ்ருதத்வாத் தஸ்ய குணா விஞ்ஞா யந்தே –ததா ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு அப்ராக்ருத ஸ்வ அசாதாரண ரூப ஸ்ரவணாத் தத்வத்தா ச விஞ்ஞாயதே -ததே தத் வாக்யகாரஸ் சாஹ -ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே இதை ப்ராஞ்ஞஸ் ஸர்வ அந்தரஸ் ஸ்யாத் லோக காமேஸோபதேஸாத் ததோதயாத் பாப்மநாம் இத்யுக்த்வா-தத் ரூபஸ்ய கார்யத்வம் மாயா மயத்வம் வேதி விசார்ய ஸ்யாத்ரூபம் க்ருதகமநுக்ர ஹார்தம் தச்சேத ஸாமைஸ் வர்யாத் இதி நிரஸ நீயம் மதமுபந்யஸ்ய ரூபம் வாதீந்த்ரியம் அந்தக்கரண ப்ரத்யக்ஷ நிர்தேசாத் இதி –வ்யாக்யாதம் ச த்ரமிடா சார்யை ந வா மாயா மாத்ரம் அஞ்ஞஸைவ விஸ்வஸ்ருஜோ ரூபம் தத்து ந சஷுஷா க்ராஹ்யம் மநஸா த்வ கலுஷேண சாதனாந்தர வதா க்ருஹ்யதே –ந சஷுஷா க்ருஹ்யதே நாபி வாஸா மநஸா து விஸூத்தேந இதி ஸ்ருதே –ந ஹ்யரூபாயா தேவ தாயா ரூபமுபதிஸ்யதே –யதா பூதவாதி ஹி ஸாஸ்த்ரம் –யதா மாஹார ஜனம் வாஸ –வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் இதி ப்ரகாரணாந்தர நிர்தேசாத் இதி -ஸாஷிண இதி ஹிரண்மய இதி ரூப ஸாமான்யாச் சந்த்ர முகவத் இதி ச வாக்யம் –தச்ச வ்யாக்யாதம் தைரேவ –ந மயடத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே அநாரப் யத்வாதாத்மந இத்யாதிநா –அத ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் சார்தாந்தர பூதோ நிருபாதிக விபஸ்சித் அநவதிக அதிஸய அநந்தோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்ய ரூப புருஷோத்தம பரம் ப்ரஹ்ம ஜகத் காரமும் இதி வேதாந்தை ப்ரதிபாத்யத இதி நிரவத்யம் –21-

1-1-7-அந்தராதிகரணம்
20-அந்தஸ் தத் தர்ம உபதேசாத் –சாந்தோக்யே ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே இத்யஷ் யாதித்யாதாரதயா ஸ்ரூயமாண புருஷ
கிம் ஜீவ விசேஷ உத பரம புருஷ இதி ஸம்சய–ஜீவ விசேஷ இதி பூர்வ பக்ஷ
குத -ஸ சரீரித் வாத் -சரீர ஸம் யோகோ ஹி கர்ம வஸ்யஸ்ய ஜீவஸ்ய ஸ்வ கர்ம பல போகாயேதி -ராத்தாந்தஸ்து –ஸ ஏஷ ஸர்வேப்ய பாப்மப்ய உதித இத்யாதிநா அபஹத பாப்மத்வ பூர்வக ஸர்வ லோக காமே ஸத்வ உபதேசாத் -தேஷாம் ச ஜீவேஷ்வ சம்பவாத் அயமஹ்யாதித் யாதார புருஷோத்தம ஏவ -ஸ்வ அசாதாரண விலக்ஷண ரூப வத்த்வம் ச ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண வத்தஸ்ய சம்பவதி -ஸ்ரூயதே ச தத் ரூபஸ்ய அப்ராக்ருதவம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் து பாரே இத்யாதவ் –ஸூத்ரார்தஸ்து –ஆதித்யாத் யந்தஸ் ஸ்ரூயமாண புருஷ பரம் ப்ரஹ்ம –தத் அசாதாரண அபஹத பாப்மத்வாதி தர்ம உபதேசாத் –21–

22-பேத வ்யபதேஸாச் சாந்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தரோ யமாதித்யோ ந வேத யஸ்ய யாதித்யஸ் ஸரீரம் ய ஆதித்ய மந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர் யாம் யம்ருத இத்யதி தைவதம் யஸ் சஷுஷி திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் இத்யத் யாத்மம் -யஸ் ஸர்வேஷு லோகேஷு திஷ்டன் நித்யதி லோகம் யஸ் ஸர்வேஷு பூதேஷு திஷ்டன் நித்யதி பூதம் யஸ் ஸர்வேஷு வேதேஷு திஷ்டன் நித்யதி வேதம் யஸ் ஸர்வேஷு யஜ்ஜேஷு திஷ்டன் நித்யதி யஜ்ஞம் இத் யந்தர்யாமி ப்ராஹ்மணே ஸூபாலோப நிஷதி ச ய பிருத்வீ மந்தரே ஸஞ்சரன் இத்யாரப்ய யோ அவ்யக்தம் அந்தரே ஸஞ்சரன் யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரன் யோ ம்ருத்யும் அந்தரே ஸஞ்சரன் யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் யம் ம்ருத்யுர் ந வேத ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி ஸர்வே தேவ ஸர்வ லோக ஸர்வ பூத ஸர்வ வேத ஸர்வஞ்ஞ ஸர்வாத்மோ பரிவர்தமாந தயா தத் தச் சரீர தயா தத் தத் அந்தராத்ம தயா தத் ததவேத்ய தயா தத் தன் நியந்த்ருதயா சைப்யஸ் சர்வேப்ய பேத வ்யபதேஸாச் சாயம் அபஹத பாப்மா நாராயண ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ்சார் தாந்தர பூதோ நிகில ஜகதேக காரணமித்தி ஸித்தம் –22-

22-பேத வியபதேசாச் சான்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தர –ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தர –இத்யாதிபிர் -ஜீவாத் பேத வியபதேசாச் சாயம் ஜீவா தன்ய பரமாத்மைவ –-22–இதி அந்தர் அதிகரணம் –

1-1-8-ஆகாஸ அதி கரணம்
1-1-9-ப்ராண அதி கரணம்
23-ஆகாஸஸ் தல்லிங்காத்
24-அத ஏவ ப்ராண

ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ்தம் யந்தி ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ அபி ஸம் விஸந்தி ப்ராண மேவ அப்யுஜ்ஜிஹதே இத்யாதவ் –ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் இத்யாதிநா சாமாந்யேன நிர் திஷ்டஸ்ய ஜகத் காரணஸ்ய பூதாகாஸ ப்ராண ஸஹசாரி ஜீவ வாசி ஸப்தாப்யாம் விசேஷ நிர்ணய சங்காயாம் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்திஸ்யமாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் பூதாகாஸ ஜீவாப்யாமர் தாந்தர பூத பரம புருஷ ஏவாத்ர ஆகாஸ ப்ராண ஸப்த நிர்திஷ்ட இதி நிஸ்ஸீயதே –தத் ப்ரஸித்திஸ் து –பஹு பவந ரூபேக்ஷண அநவதிக அதிசய அநந்த ஜீவ அநந்த ஹேதுத்வ விஞ்ஞாந மய விலக்ஷணத்வ நிகில புவந பயாபய ஹேதுத்வ -ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வ ஸர்வ பாப்மோதயா ப்ராக்ருத -ஸ்வ அசாதாரண ரூப விஸிஷ்டஸ்ய ரவிகர விகஸித புண்டரீக நயனஸ்ய ஸர்வஞ்ஞஸ்ய ஸத்ய ஸங்கல்பஸ்ய கரணாதிபாதி பஸ்ய பரம புருஷஸ்யைவ நிகில ஜகத் ஏக காரணத்வாதிதி ஸ ஏவ ஆகாஸ ப்ராண ஸப்தாப்யாம் ஜகத் காரணத்வேநாபி தீயதே இதி நிர்ணயோ யுக்த ஏவ —23-24-ஆகாஸாதி கரணம் -ப்ராண அதிகரணம் ச –8-9-

1-1-8-ஆகாஸாதி கரணம்
23-ஆகாஸஸ் தல் லிங்காத்
 –சாந்தோக்ய –அஸ்ய லோகஸ்ய கா கதி இத்யாகாஸ இதி ஹோவாஸ ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ் தம் யந்தி இத்யத்ர ஆகாஸ ஸப்த -நிர்திஷ்டம் -ஜகத் காரணம் -கிம் ப்ரஸித்த ஆகாஸ –உத ஸமஸ்த சித் அசித் வாஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ஆகாஸ -இதி பூர்வ பக்ஷம் –குத
ஆகாஸ சப்தஸ்ய லோகே தத்ரைவ வ்யுத்பத்தே -யதோ வா இமாநி பூதாநி இத்யாதி ஸாமான்ய லக்ஷணஸ்ய ஸதாதி ஸப்தாநாம் அபி சாதாரணத்வேந ஆகாஸதேவ ஸமுத்பத்யந்தே இதி விஸேஷே பர்யவஸாநாத் -ஈஷா –க்ஷணா தயோ அப்யாகாச ஏவ ஜகத் காரணமிதி நிஸ்சிதே ஸதி கௌணா வர்ணநீயா இதி –ராத்தாந்தஸ்து -ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் சேஷா பூர்வகத்வாத் சித் அசித் வஸ்து விலக்ஷணம் ஸர்வஞ்ஞம் ப்ரஹ்ம ஆகாஸ ஸப்த நிர்திஷ்டமிதி
ஸூத்ரார்தஸ்து –ஆகாஸ ஸப்த நிர்திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ப்ரஸித்த வந் நிர்திஸ்ய மாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் —23-இதி ஆகாஸாதி கரணம் –1-1-8-

1-1-9-ப்ராண அதிகரணம்
24-அத ஏவ ப்ராண –சாந்தோக்ய -ப்ரஸ்தோதர்யா தேவதா ப்ரஸ்தாவமந்வாயதா இதி பிரஸ்துத்ய கதமா ஸா தேவதேதி –ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராணமேவாபி ஸம் விஸந்தி -ப்ராண மப்யுஜ் ஜிஹதே ஸைஷா தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தர இத்யத்ர நிகில ஜகத் காரண தயா ப்ராண ஸப்த நிர் திஷ்ட-கிம் ப்ரஸித்த பிராண உதோக்த லக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ப்ராண இதி பூர்வ பக்ஷ –
குத -ஸர்வஸ்ய ஜகத ப்ராணாயத்தஸ்திதி தர்சநாத் ச ஏவ நிகில் ஜகதேக காரண தயா நிர்தேச மர்ஹாதீதி –ராத்தாந்தஸ்து ஸிலா காஷ்டாதி ஷு அசேதநேஷு சேதன ஸ்வரூபேஷு ச ப்ராணாயத்த ஸ்தித்யபாவத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்த வன்னிர்தேசா தேவ ஹேதோ ப்ராண ஸப்த நிர் திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ஸூத்ரமபி வ்யாக்யாதம் —24-இதி ப்ராண அதிகரணம் –1-1-9-

1-1-10-ஜ்யோதிர் அதி கரணம்
25-ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் 
–அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வ தத்யதி தமஸ்மிந் நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஸர்வஸ்மாத் பரத்வேந நிர்திஸ்யமாந தயா ஸகல காரண பூதஜ்யோதிக்ஷ -கௌஷேய ஜ்யோதி ஷைக்யாபிதாநாத் ஸ்வ வாக்யே விரோதி லிங்கா தர்ச நாச்ச ப்ரஸித்தமேவ ஜ்யோதிர் ஜகத் காரணத்வேந ப்ரதிபாத்யத இதி ஸங்காயாம் யத்யபி ஸ்வ வாக்யே விரோதி லிங்கம் ந த்ருஸ்யதே –ததா அபி பூர்வஸ்மின் வாக்யே பாதோ அஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி ப்ரதிபாதி தஸ்ய ஸர்வ பூத சரணஸ்ய பரம புருஷஸ்யைவ த்யு சம்பந்தி தயா அத்ராபி ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸ ஏவ ஜ்யோதிஸ் சப்தேந ஸர்வஸ்மாத் பரத்வேந ஸகல காரண தயா அபீதீ யதே -அஸ்ய ச கௌஷேய ஜ்யோதிஷைக்யாபிதாநம் பலாயோபதிஸ் யத இதி ந கஸ்ஸித் விரோத –அகில ஜகதேக காரண பூத பரம புருஷோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்யோ வர்ணோ திவ்ய ரூபஸ் தமஸ பரஸ்தாத் வர்தத இதி தஸ்யைவ நிரதிசய தீப்தி யோகாத் ஜ்யோதிஸ் ஸப்தாபிதேயத்வம் விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு வாஸஸ் ச யுஜ்யதே –25-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம்
25-ஜ்யோதிஸ் சரண அபிதாநாத்
 –சாந்தோக்ய அத யத்த பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வதா ப்ருஷ்டேஷ்வ நுத்தமேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வத்யதிதமஸ்மிந்நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஜகத் காரணத்வ வ்யாப்த நிரதிசய தீப்தி யுக்த தயா ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம்
கிம் ப்ரசித்த ஆதித்யாதி ஜ்யோதி உத பரமேவ ப்ரஹ்மேதி ஸம்சய -ப்ரஸித்த ஜ்யோதிரிதி பூர்வ பக்ஷ –குத
இதம் வாவ தத்யதி தமஸ்மின் நந்த புருஷ ஜ்யோதி இதி கௌஷேய ஜ்யோதிஷா பிரஸித்தே நைக்யாவகமாத் ஸ்வ வாக்யே
தததிரிக்த பர ப்ரஹ்ம அசாதாரண லிங்கா தர்ச நாச்ச -ராத்தாந்தஸ்து -ப்ரஸித்த ஜ்யோதிஷோ அந்ய தேவ பரம் ப்ரஹ்மேஹ நிரதிசய தீப்தி யுக்தம் ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் –குத –
பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்ய த்யு சம்பந்தி தயா நிர் திஷ்டஸ் யைவ சதுஷ் பதோ ப்ரஹ்மண -அத யதத பரோ திவோ ஜ்யோதி இத்யத்ர ப்ரத்யபிஜ் ஞாநாத் –தச்ச பரமேவ ப்ரஹ்மேதி விஞ்ஞாதம் ஸர்வேஷாம் பூதா நாம் தஸ்ய பாதத்வேந வியபதேசாத்
ஏவம் பர ப்ரஹ்மத்வே நிஸ்சிதே கௌஷேய ஜ்யோதிக்ஷ ததாத்மகதவ அநு சந்தானம் பலயோபதிஸ் யத இதி ஞாயதே –
ஸூத்ரார்த்தஸ்து -ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் பரம் ப்ரஹ்ம அஸ்ய ஜ்யோதிஷ பூர்வ வாக்யே ஸர்வ பூத் பாதத்வம் –ஸர்வ பூத பாதத்வம் ச பரஸ்யைவ ப்ரஹ்மண உப பத்யதே –25-

26-சந்தோபிதா நாந்தேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத் ததா ஹி தர்சனம் –பூர்வத்ர காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர் யாக்யச் சாந்த பிரஸ்துத மிதி நாத்ர பரம புருஷாபிதாநமிதி சேத் நைதத் பரம புருஷஸ் யைவ காயத்ரீ ஸாத்ருஸ்யஸ்யாநு ஸந்தாநோபதேஸத்வாத் தஸ்ய சந்தோ மாத்ரஸ்ய ஸர்வ பூதாத்மகத்வாநுப பத்தேரேவேதி நிகம்யதே –அந்யத்ராபி ஹ்யன்யஸ்ய சந்தஸ் சாத்ருஸ்யாத் சந்தோ நிர்தேஸா த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே இத்யாரப்ய சைஷா விராட் இத்யாதவ் –26-

26–சந்தோ அபிதாந் நாந்நேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத்ததாஹி தர்சனம் —காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர்யாக்யச் சந்தஸ ப்ராக்ருதத்வாத் ஸர்வ பூத பாதத்வேந காயதர்யா ஏவாபிதா நான்ந ப்ரஹ்மேதி சேத் நைதத் –
ததா சேதோ அர்பண நிகமாத் –காயத்ரீ யதா பவதி ததா ப்ரஹ்மணி சேதோ அர்பணோபதேஸாத் -காயத்ரீ ஸாத்ருஸ்யம் சதுஷ் பாத்த்வம்
ப்ரஹ்மண்யநு ஸம்தேயமித் யுபதிஸ்யதே -காயத்ர்யாஸ் ஸர்வாத்மகத்வ அநுப பத்தேரித் யர்த –ததா ஹி தர்சனம் ததா ஹ்யன் யத்ராபி ப்ய சந்தஸ ஏவ சாத்ருஸ் யாச் சந்தஸ் சப்தே நாபிதாநம் த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே தச சம்பத்யந்த இத்யாரப்ய சைஷா விராடன்னாத் இதி –26-

27-பூதாதி பாத வ்யபதேஸாப பத்தேஸ் சைவம் –பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயைஸ் சதுஷ்பதேதி வ்யபதேஸஸ் ச பரம புருஷ காயத்ரீ ஸப்த நிர் திஷ்டே ஹ்யுப பத்யத இதி பூர்வோக்த ப்ரகார ஏவ சமஞ்ஜஸா–27-

27-பூதாதி பாத வ்யபதேசோப பத்தைஸ் சைவம்- பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயாநி நிர்திஸ்ய சைஷா சதுஷ்பதா இதி பூதாதீ நாம் -பாதத்வ வ்யபதேஸோ ப்ரஹ்மண்யேவோப பத்யத இதி ப்ரஹ்மைவ காயத்ரீ ஸப்த நிர் திஷ்ட மிதி கம்யதே–27

28-உபதேஸ பேதான்நேதி சேந்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பூர்வத்ர த்ரி பாதஸ்யாம்ருதம் திவி இதி பரம புருஷோ வ்யபதிஸ் யதே –அத்ர அத யதத பரோ திவ இதி பஞ்சம்யா நிர் திஷ்ட த்யு சம்பந்தி ஜ்யோதிரிதி ந ப்ரத்யபிஜ்ஜேதி சேத் நைதத் உபயஸ்மிந் நபி வ்யபதேஸே விரோதா பாவாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரதஸ் ஸ்யேந இதி வ்யபதேஸ –அத்ர திவ பரத்வமேவ உபயத்ர விவஷித மித்யர்த —28-இதி ஜ்யோதிர் அதி கரணம் –10-

28-உபதேஸ பேதான்நேதி சேன்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பாதோ அஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்யோதிதம் பரம் ப்ரஹ்மை வாஸ்து –ததாபி அத யதத பரோ திவோ ஜ்யோதி –இதி த்யு ஸம்பந்த மாத்ரேண நேஹ தத் ப்ரத்யபிஜ் ஞாயதே தத்ர ஸாத்ர சவ்ய உபதேச பிரகார பேதாத் தத்ர ஹி திவி இதி த்யா ஸப்தம்யா நிர் திஸ்யதே இஹ ச திவ பரோ ஜ்யோதி இதி பஞ்சம்யா ததோ ந ப்ரதி ஸந்தானமிதி சேந்ந உபயஸ்மிந்நபி வ்யபதேஸ உபரிஸ்திதி ரூபார்தைக் யேந ப்ரதிஸம்தாநா விரோதாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரத ஸ்யேந இதி —28-ஜ்யோதிர் அதிகரணம் –1-1-10-

1-1-11-இந்த்ர ப்ராண அதி கரணம்-29-ப்ராணஸ் ததாநுகமாத் –ஆத்ம நாம் ஹித தம ரூப மோக்ஷ சாதநோபாஸந கர்ம தயா ப்ரஞ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்ய ப்ராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமா யுரம்ருதமித் யுபாஸ்ஸ்வ இதி விதாநாத் ஸ ஏவ ஜகத் காரணம் -காரணோபாஸநம் ஹி மோக்ஷ ஸாதனம் –தஸ்ய தாவமேவ சிரம் யாவன்ன வி மோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஸ்ருதேரிதி நா சங்க நீயம் –ப்ராண ஸப்த ஸமாநாதி கரணேந்த்ர ஸப்த நிர் திஷ்டோ ஜீவா தர் தாந்தர பூத யுக்த லக்ஷண பரமாத்மைவ–குத ததா அநு கமாத் -பரமாத்ம அசாதாரணாநந்தாஜராம்ருதாதிஷ் வஸ்ய இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ்யாநுகமோ ஹி த்ருஸ்யதே ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்ம அஜரோ அம்ருத இதி –29-

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம்
29-ப்ராணஸ் ததாநுகமாத்
 –கௌஷீதகீ ப்ராஹ்மணே ப்ரதர்தந வித்யாயாம் த்வமேவ வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ப்ரதர்தந யுக்த இந்த்ர பிராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இத்யாஹா –அத்ர ஹிததம உபாஸன கர்மதயா நிர் திஷ்ட இந்த்ர ப்ராண ஸப்தாபிதேய
கிம் ஜீவ –உத பரமாத் மேதி ஸம்சய –ஜீவ இதி பூர்வ பக்ஷ -குத
இந்த்ர சப்தஸ்ய ஜீவ விஸேஷே ப்ரஸித்தே –ப்ராண ஸப்தஸ் யாபி தத் ஸமாநாதி கரணஸ்ய -ஸ ஏவார்த இதி தம் மாமாயு ரம்ருதம் இத் யுபாஸ்வ இதி தஸ்யைவ உபாஸ்யத்வ உப தேஸா திதி –ரத்தாந்தஸ்து
இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டம் ஜீவாதர் தாந்தர பூதம் பரம் ப்ரஹ்ம ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஞ்ஞாத்மா ஆனந்தோ அஜரோ அம்ருத இதீந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் யைவ ஜீவேஷ்வ ஸம்பாவித அனந்தத்வ அஜரத்வ அம்ருதத்வ ஸ்ரவணாத்
ஸூத்ரார்தஸ்து –உபாஸ்யதய உபதிஷ்டம் இந்த்ர ப்ராண ஸப்த அபிதேயம் பரம் ப்ரஹ்ம -ததேதி பிரகார வசன பர ப்ரஹ்ம ப்ரகார பூதேஷ்வா நந்தாதிஷு அஸ்ய அநுகமாத் –29-

30-ந வக்துராத்மோப தேஸாதிதி சேதத் யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மிந் –உபக்ரமே ஹி மாமேவ விஜாநீஹி இதி த்வாஷ்ட்ரவதாதிநா பிரஜ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்யோபதேஸாத் உப ஸம்ஹாரஸ் ததநு குணோ வர்ண நீய இதி சேத் நைதத் அத்யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மின் –அத்யாத்மம் -பரமாத்ம தர்ம பரமாத்ம தர்ம ஸம்பந்த -பஹு த்வமஸ் மிந்த்ர ஸப்தாபிதேயே
வாக்யோபக்ரம ப்ரப்ருத்யோப ஸம் ஹாராத்த்ருஸ்யதே –யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ஹித தமோபாஸநம் ப்ராரப்தம் –தச்ச ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி -நா ஸர்வஸ்ய காரயித்ருத்வம் –ஏவமேவைதா பூத மாத்ரா இத்யாரப்ய பரஜ்ஞா மாத்ரா ப்ராணேஷ்வர்பிதா இதி ஸர்வாதாரத்வம் ததா ஆனந்தாதயஸ் ச ஏஷ லோகாதிபதி இத்யாதிநா சர்வேஸ்வரத்வம் ச –30-

30-ந வக்துர் ஆத்ம உபதேஸாதிதி சேதத் ஆத்ம ஸம்பந்த பூமாஹ் யஸ்மிந் –நாயம் உபாஸ்ய பரமாத்மா மாமேவ விஜாநீஹி தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இதி ப்ரஞ்ஞாத ஜீவஸ் யேந்த்ரஸ்ய வக்துஸ் ஸ்வாத்மந உபாஸ்யத்வ உபதேசாத் உபக்ரமே ஜீவ பாவ நிஸ்சயே ஸத் யுப ஸம்ஹாரஸ்ய தத் அநு குணதயா நேயத்வாதிதி சேந்ந —
அத்யாத்ம ஸம்பந்த தஸ்ய பூமா பஹுத்வம்
ஜீவாதர் தாந்தர பூதாத்மா அசாதாரண தர்ம ஸம்பந்த பஹுத்வம் அஸ்மின் ப்ரகரணே உபக்ரம ப்ரப்ருத்யோப ஸம்ஹாராது பலப்யதே –உபக்ரமே தாவத் யம் த்வம் மனுஷ்யாய ஹிததமம் மன்யஸே இதி ஹ்யநே நோச்யமானம் உபாஸனம் பரமாத்ம உபாசன மேவ தஸ்யைவ ஹித தமத்வாத் ததா ஈஷா ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி ஸாத்வ ஸாது கர்மணோ காரயித்ருத்வம் பரமாத்மந ஏவ தர்ம தத்யதா ரதஸ்யா ரேஷு நேமி ரர்பிதா நாபாவரா அர்பிதா ஏவமேவைதா பூத மாத்ரா ப்ரஞ்ஞா மாத்ராஸ் வர்பிதா ப்ரஞ்ஞா மாத்ரா ப்ராணோ அர்பிதா இதி ஸர்வா தாரத்வம் ச தஸ்யைவ தர்ம ஆனந்தாத யஸ் ச ஏஷ லோகாதி பதிரேக்ஷ ஸர்வேச இதி ச ஹீதி ஹே தவ் அத பர ப்ரஹ்மை வாயமித் யர்த –30-

31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தூபதேஸே வாம தேவவத் –நாம ரூப வ்யாகரணாதி சாஸ்த்ராத் ஸர்வ ஸப்தை பரமாத்மைவாபி தீயத இதி த்ருஷ்ட்யா தஜ் ஞாபநாயாய மிந்த்ரா சப்தேந பரமாதமோபதேஸ –ஸாஸ்த்ரஸ்தா ஹி வாமதேவாதய –ததைவ வதந்தி –தத்தை தத் பஸ்யந் ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர் யஸ் ச இதி –31-

பரமாத்மைவோ பாஸ்யஸ் சேத் கதமிந்த்ரோ மாம் உபாஸ்வ இத் யுபாதிதேஸேத்யத ஆஹ
31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாத் உப தேசோ வாமதேவவத்
 –இந்த்ரஸ்ய ஜீவஸ் யைவ ஸத -ஸ்வாத்மத்வேந உபாஸ்ய பூத பரமாத்ம உபதேஸோ அயம் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா –அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா –தத்த்வமஸி -ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா ஸரீரம் ய ஆத்மாநாம் அந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதீதி ஹி சாஸ்த்ராணி பரமாத்மாநம் ஜீவாத்மந ஆத்மதயோ பதிதிஸூ -அதோ ஜீவாத்ம வாசிநஸ் ஸப்தா -ஜீவாத்ம சரீரிகம் -பரமாத்மாநமேவ வதந்தீதி ஸாஸ்த்ர த்ருஷ்டார்தஸ்ய தஸ்ய மாமேவ விஜாநீஹிமாம் உபாஸ்ஸ்வ இதி ஸ்வாத்ம சப்தேந பரமாத்ம உபதேசோ அயம் ந விருத்த்யதே –யதா வாமதேவ ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா ஸ்வாத்ம சரீரிகம் பரமாத்மாநம் பஸ்யன்னஹமிதி பரமாத்மா நமவோசத்
தத்தை தத் பஸ்யன் ந்ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்ய்யஸ் சாஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர இதி –31

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சே ந்நோபாஸா த்ரை வித்யாதாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் த்ரி ஷீர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநம் யாவத் தயஸ்மின் சரீரே ப்ராணோ வஸதி தாவதாயு இத்யாதி ஜீவ லிங்கம் முக்ய ப்ராண லிங்கம் ஸாஸ்மின் த்ருஸ்யதே இதி நைவமிதி சேந்ந –உபாஸாத் த்ரை வித்யாத் ஹேதோ ஜீவ சப்தேந ப்ராண சப்தேந ச பரமாத்மநோ அபி தாநம் –அந்யத்ராபி பரமாத்மந ஸ்வரூபேணோபாஸநம் போக்த்ரு சரீர கத்வேந போக்ய போகோபகரண சரீர கத்வேந இதி த்ரி விதம் பரமாத்மோபாஸந மாஸ்ரிதம் –யதா ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி ஸ்வரூபேண -தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சா பவத் இத்யாதி –ஸத்யம் சாந்ரு தஞ்ச சத்யமபவத் இதி போக்த்ரு சரீரகத்வேந போக்ய போக உபகரண சரீரகத்வேநச இஹாபி தத் ஸம்பவாதேவமுபதேஸ -ஜந்மாத யஸ்ய யத இத்யாதிஷு ஸத் ப்ரஹ் மாத்மேதி ஸாமாந்ய ஸப்தைர் ஹி ஜகத் காரணம் ப்ரக்ருதி புருஷாப்யா மர்தாந்தர பூதமிதி ஸாதிதம் ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் இத்யஸ்மின் ஸூத்ரே புருஷ ஸூக்தோதிதோ மஹா புருஷோ ஜகத் காரணமிதி விசேஷதோ நீர்ணீதம்–ஸ ஏவ பரஜ்ஞாத ஜீவ வாசிபிரிந்த்ராதி ஸப்தைரபி க்வசித் க்வசித் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தத் தச் சரீர கதயா சோபாஸ்யத்வாயோபதிஸ் யத இதி ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூப தேஸோ வாம தேவவத் இதி உபாஸா த்ரை வித்யாத் இதி ஸாதிதம் —32- இதி இந்த்ர ப்ராண அதி கரணம் –11-

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சேந்நோபாஸா த்ரைவித்யா தாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் -த்ரி ஸிர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநமருந் முகான்யதீன் ஸாலா வ்ருகேப்ய ப்ராயச்சம் –யாவத் த்யஸ் மிஞ்சரீரே ப்ராணோ வசதி தாவதாயு இதி ஜீவ முக்ய ப்ராண லிங்காத் நாத்யாத்ம ஸம்பந்த பூம்நா பரமாத்மத்வ நிஸ்சய இதி சேந்ந -பரமாத்மந ஏவ ஸ்வா காரேண ஜீவ சரீரீகத்வேந ப்ராண சரீரீகத்வேந சோபாஸா த்ரை வித்யாத்தேதோ தத் தச் சப்தேநாபிதாந மிதி நிஸ்ஸீயதே -அந்யத்ராபி ப்ரஹ்ம உபாஸனே த்ரை வித்யஸ் யாஸ்ரிதத்வாத் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –ஆனந்தோ ப்ரஹ்ம இதி -ஸ்வா காரேண உபாஸ்யத்வம் ஸச்ச த்யச்சா பவத் இத்யாதிநா போக்த்ரு சரீரகத்வேந போக்ய சரீரகத்வேந ச
இஹ ப்ரதர்தன வித்யாயாமபி தஸ்ய த்ரை வித்யஸ்ய சம்பவாத் அத இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் பரமாத்மா —32-இதி இந்த்ர ப்ராண அதிகரணம் -1-1-11-

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த ஸாரம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -சதுர்த பாதம்

March 5, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச–
ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஆநு மாநிகம் ப்ரதானமபி ஜகத் காரணத்வேந மஹத பரமவ்யக்தம் இத்யுச்யத இதி சேத் ந பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி இத்யாதிஷுபாஸநோபாயேஷு வஸீ கார்யத்வாய ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு சரீராக்ய ரூபக விந்யஸ்தஸ்யாத்ராவ்யக்த சப்தேந க்ருஹீதே –இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா இத்யாதிநா ஹி வஸீ கார்யத்வேந ஹி பரா உச்யந்தே ததா சோத்த ரத்ர ஸ்ருதி ரேவ தர்சயதி யச்சேத் வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதி நா –1-

111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்–ஸூஷ்மம் -அவ்யக்த மேவ ஸரீராவஸ்தம் கார்யார்ஹாமித் யவ்யக்த சப்தேந சரீரமேவ க்ருஹ்யதே –2-

யதி ரூபக விந்யஸ்தாமேவ க்ரஹணம் கிமர்த்தம் அவ்யக்தாத் புருஷ பர இத்யத ஆஹ

112–தத் அதீநத்வ அதர்தவத் –புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் உபாஸந நிர் வ்ருத்தயே பவதி –புருஷோ ஹ்யந்தர்யாமீ ஸர்வமாத்மாதிகம் ப்ரேரயந் உபாஸந உபாயத்வேந வஸீ கார்ய காஷ்டா ப்ராப்யஸ் சேதி ஸா காஷ்டா ஸா பரா கதி இத்யுச்யதே –3-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச—அத்ராவ்யக்தஸ்ய ஜ்ஜேயத்வா வசநாச் ச ந காபில மவ்யக்தம் –4-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத்யாரப்ய நிசாய்ய தம் இதி வததீதி சேந்ந தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே இத்யாதி நா பிராகிருத ப்ராஜ்ஜோ ஹி நிசாப்ய தம் இதி ஜ்ஜேய உச்யதே –5-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச–உபாஸ்யோபாஸகாநாம் த்ரயாணாமேவாஸ்மிந் ப்ரகரணே ஜ்ஜேயத்வேந உபந்யாஸ ப்ரஸ்நஸ் ச ந ப்ரதாநாதே –அத்யாத்ம யோகாதிகமேந தேவம் மத்வா இத்யாதி ரூப ந்யாஸ யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே அஸ்தித்யேகே இத்யாதி கஸ்ச ப்ரஸ்ந –6-

116–மஹத் வச் ச – புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்தாத் யதா ந தாந்த்ரிகோ மஹாந் ததா அவ்யக்தமபீதி -—7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
-அஜா மேகாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் இத்யத்ர ந தந்த்ர ஸித்தா ப்ரக்ருதி காரணத்வேநோக்தா -ஜன்மா பாவ யோக மாத்ரேண ந தஸ்யா ஏவ ப்ரதீதி அர்வாக்பிலஸ் சமஸ இதிவத் ப்ரகரணே விசேஷ காபாவாத் -யதேதம் தச்சிர இதி ஹி சமஸோ விசேஷ்யதே யவ்கிக ஸப்தாத் விசேஷ ப்ரதீதிர் ஹி விசேஷ காபேஷா –8-

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம ப்ரஹ்ம காரணிகா இயமஜா ததா ஹி ப்ரஹ்ம காரணிகயா ஏவ ப்ரதிபாதக மேதத்ஸ ரூப மந்த்ரம் ச தைத்திரீயா அதீயதே –அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் இத்யாரப்ய அதஸ் ஸமுத்ரா கிரயஸ் ச இத்யாதி நா ஸர்வஸ்ய ப்ரஹ்மண உத் பத்த்யா ததாத் மகத்வ ப்ரதி பாதந ஸமயே அஜாமேகம் இதி படந்தி –அதஸ் தத் ப்ரத்யபிஜ் ஞாநாதியம் ப்ரஹ்ம காரணிகேதி நிஸ்ஸீயதே –9-

119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத –கல்பநா –ஸ்ருஷ்டி யதா ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இதி -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதியாதி நா ஸ்ருஷ்ட் யுபதேஸாத் அஜாத்வ ப்ரஹ்ம கார்யத்வேயோர விரோதஸ் ச ப்ரலய காலே நாம ரூபே விஹாய அசித் வஸ்த்வபி ஸூஷ்ம ரூபேண ப்ரஹ்ம சரீர தயா திஷ்டதீத் யஜாத்த்வம் ஸ்ருஷ்டி காலே நாம ரூபே பஜமாநா ப்ரக்ருதி ப்ரஹ்ம காரணிகா –யதா ஆதித்யஸ்ய ஸ்ருஷ்டி காலே வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் கார்யத் வஞ்ச தஸ்யைவ ப்ரலய காலே மதவாதி வ்யபதேஸா நர்ஹ -ஸூஷ்ம ரூபேண அவஸ்தாநம கார்யத் வஞ்சமது வித்யாயாம் ப்ரதீயதே அசவ் வா ஆதித்யோ தேவமது நைவோதேதா நாஸ்தமேதா ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இதி தத் வத் —10-இதி சமஸ அதி கரணம் –2-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
–வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா இத்யத்ர பஞ்ச விம்சதி சங்க்யோப சங்க்ரஹாதபி ந தாந்த்ரி காண்யேதாநி யஸ்மின் இதி யச் ஸப்த நிரதிஷ்ட ப்ரஹ்மா தாரதயா தேப்ய ப்ருதக் பாவாத் ஏதேஷாம் தத்த்வாதி ரேகாச் ச யச் ஸப்த நிர் திஷ்டமாகாஸஸ் சேதி த்வயமதிரிக்தம் -ஸம் க்யோப ஸம் க்ரஹாதபி இத்யபி ஸப்தான் நாத்ர பஞ்ச விம்சதி ஸம் க்யா ஸம் க்ரஹ திக் ஸம்க்யே ஸம்ஜ் ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷயோ அயம் பஞ்ச ஜநா இதி –பஞ்ச ஜநா நாம கேசித் தே பஞ்ச பஞ்ச ஜநா இத் யுச்யந்தே –ஸப்த ஸப்தர் க்ஷய இதிவத் –11-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா ப்ராணாதய -பஞ்ச இந்த்ரியாணீதி ப்ராணஸ்ய பிராணமுத சஷுஷஸ் சஷுஸ் இத்யாதி வாக்ய சேஷா தவ கம்யதே சஷுஷஸ் ஸ்ரோத்ர ஸாஹ சர்யாத் ப்ராணான் ந ஸப்தா வபி ஸ்பார்ஸநா தீந்த்ரிய விஷயவ் –12-

122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்ய பஞ்ச ந்தே –ஏகேஷாம் ஸாகிநாம் -காண்வா நாம் அந் நஸ் யாந்தம் இத்யஸதி தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரித் யுபக்ரம கதேந ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி ஜ்ஞாயந்தே ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி -ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேத் யுக்த்வா அநந்தரம் பஞ்ச பஞ்ச ஜநா இத் யுக்தே ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி கம்யதே-—13-இதி ஸம் க்யோப ஸங்க்ரஹாதி கரணம் –3-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
–ஆகாஸாதி ஷு கார்ய வர்கேஷு காரணத்வேந ஸர்வத்ர வேதாந்த வாக்யேஷு அஸத்வா இதமக்ர ஆஸீத் தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இத்யாதிஷ்வ நிர்ஜ்ஞாத விஸேஷே ஷு ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் ஸ ஈஷத லோகாந்து ஸ்ருஜை இதி விசேஷ வாசி வாக்ய நிர் திஷ்டஸ்யைவோக்தே ந தாந்த்ரிகா வ்யாக்ருதாதி காரணவாத ப்ரசங்க –14-

124-ஸமா கர்ஷாத் –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பூர்வநிர்திஷ்டஸ் யைவ ஸர்வஜ்ஞஸ்ய அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாச் ச ஸ ஏவேதி கம்யதே –தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இதி நிர் திஷ்டஸ் யைவ ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்யஷு இத்யத்ர ஸமா கர்ஷாத் ஏஷ ஏவா வ்யாக்ருத இதி நிஸ்ஸீயதே-அஸத வ்யாக்ருத சப்தவ் ஹி ததா நீம் நாம ரூப விபாகாபாவாதுப பத்யேதே –15–இதி காரணத்வ அதி கரணம் –4-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத்
-ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர கர்ம சப்தஸ்யை தச் சப்த ஸாமாநாதி கரண்யேந க்ரியத இதி வ்யுத்பத்த்யா ஜகத் வாசித்வாத் பரமேவ ப்ரஹ்ம வேதி தவ்யதயோபதிஷ்டம் -16-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் ––ஏதைராத்ம பிர் புங்க்தே அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி இதி ச ஜீவாதி லிங்காந் ந பர இதி சேத் ஏதத் ப்ரதர்தன வித்யாயா மேவ பரிஹ்ருதம் -பூர்வாபர பர்யா லோசநயா ப்ரஹ்ம பரத்வே நிஸ்ஸிதே ததநு குண தயா நேயமந் யல்லிங்கமிதி –17-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே-தவ் ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது இத்யாதி நா தேஹாதி ரிக்த ஜீவ ஸத்பாவ ப்ரதிபாதநம் ததரிக்த பரமாத்மா ஸத் பாவஜ்ஞாப நார்தமிதி க்வைஷ ஏதத் பாலகே புருஷோ அஸ யிஷ்ட இதி ப்ரஸ்நாத் அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி ஸதா ஸோம்ய ததா ஸம் பன்னோ பவதி இதி வாக்ய ஸமாநார்தகாத் ப்ரதி வசநாச் சாவகம்யதே–ஏகே வாஜஸநேயிநோ அபி ஏதத் ப்ரதி வசன ரூபம் வாக்யம் ஸ்பஷ்ட மதீயதே ச க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ் தஸ் மிஞ்சேதே இத் யந்தம் –—18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 -ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதியாதி நோபதிஷ்ட பரமாத்மா அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந இத்யாரப்ய –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஜ்ஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் இத்யாதி யேநேதம் ஸர்வம் விஜாநாதி இத்யந்தஸ்ய க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் –19-

அஸ்மின் ப்ரகரணே ப்ரகாரணாந்தர ச ஜீவ வாசி சப்தேந பரமாத்மநோ அபிதாநே தத் ஸாமாநாதி கரண்யே ச காரணம் மதாந்தரேணாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
–ஆத்மநி கல்வரே த்ருஷ்டே இத்யாதி நா பரமாத்ம ஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய தத் கார்ய தயா தஸ்மாதநதி ரிக்தத்வம் ஞாபயிதும் ஜீவ சப்தேந பரமாத்மாபி தாந மிதி யாஸ்ம ரத்ய -மதம் -20-

30-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –உத் க்ரமிஷ்யத முஃதஸியை பரமாத்மா ஸ்வரூப பாவாதாத்ம சப்தேந பரமாத்மாபிதாந மிதி ஒவ்டு லோமி –21-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தர இத்யாதிநா ஜீவாத்மநி பரமாத்மந ஆத்ம தயா அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ மதம் ஸூத்ர காரஸ் ஸ்வீக்ருதவாநிதி மதத்யவ முபயந் யஸ்ய தத் விரோத்யேததபிதாநாதன்யஸ்யாநபிதா நாச்ச நிஸ்ஸீயதே – –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச
-ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஜகத் உபாதாந காரணம் அபி பரம் ப்ரஹ்ம ந நிமித்த மாத்ரம் ஸ்தப்தோ அஸ்யுத தமாதேஸம ப்ராஷ்ய யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இதி யேநா தேஷ்ட்ரா நிமித்த பூதேந விஜ்ஞ்ஞாதேந சேதன அசேதநாத் மகம் க்ருத்ஸ்நம் ஜகத் விஜ்ஞாதம் பவதீதி ஆதேஷ்ட்ரு விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞா ததுபபாதந ரூபம்ருத் கார்ய த்ருஷ்டாந்தாநு பரோதாத் ஆதிஸ்யதே அநேநே த்யாதேஸ இத்யாதேச சப்தே நாதேஷ்டாபி தீயதே –ஆதேஸ ப்ரஸாஸநம் ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ இத்யாதி ஸ்ருதே –23-

133-அபித்யோபதேஸாச் ச –ததைஷத பஹுஸ்யாம் பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி நிமித்த பூதஸ்யேக்ஷிது விசித்ர சித் அசித் ரூபேண ஜகதாகாரே ணாத்மநோ பஹு பவந சங்கல்போப தேஸாச் ச உபாதாநம பீதி விஜ்ஞாயதே –24-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயன் இதி யுபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி ஸ்வ சப்தேந உபயாம்நா நாச் ச -25-

135-ஆத்ம க்ருதே–ஸோ அகாமயத இதி நிமித்த பூதஸ்ய ஸ்வ ஸ்யைவ ஜகதாகாரேண க்ருதே ததாத்மாநம் ஸ்வயம குருத இத்யுபதிஸ்யமாநாயா பரம புருஷோ ஜகந்நிமித்தம் உபாதாநம் சேதி விஜ்ஞாயதே –26-

பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத்ய ஸத்ய ஸங்கல்பத் வாதே தத் விபரீத அநந்த அபுருஷார்த்த ஆஸ்ரய ஜகதாகாரேண ஆத்ம க்ருதேஸ் ச அவிரோத கதமித்யா சங்க்யாஹ
136-பரிணாமாத் -அத்ரோபதிஸ்ய மாநாத் பரிணாமாத் ததவிரோத ஏவ
-அவிபக்த நாம ரூபாதி ஸூஷ்ம சிதசித் வஸ்து சரீரக காரண அவஸ்த பரம புருஷஸ் ஸ்வய மேவ ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயே இது விபக்த நாம ரூப சிதசித வஸ்து சரீரகோ பவேயம் இதி சங்கல்ப இதம் ஸர்வ மஸ்ருஜத யதிதம் கிம்ச இதி ஸ்வ சரீர பூத மதி ஸூஷ்மாம் சித் அசித் வஸ்து ஸ்வஸ்மாத விபஜ்ய தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் இதி ஸ்வஸ்மாத விபக்தே சிதசித வஸ்துநி ஸ்வய மேவாத்மதயா அநு ப்ரவிஸ்ய ஸச்ச த்யச்சா பவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச அநிலயநம் ச விஞ்ஞானம் ச அவிஞ்ஞானம் ஸத்யம் சாந்ருதம் ச ஸத்ய மபவத் இதி ஹி ஸ்வஸ்ய பஹு பவந ரூப பரிணாம உபதிஸ்யதே -அதோ ந கஸ்ஸித் விரோத -அவிபாகா வஸ்தாயாமபி ஜீவஸ் தத் கர்மா ச ஸூஷ்ம ரூபேண திஷ்டநீதி வஹ்யதி ந கர்மா விபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யுபலப்யதே ச இதி –27-

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் இத்யாதி ஷு யோநிஸ்ஸகீயதே அத்ஸ் ஸ்சோபாதாநமபி –-28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
–ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நா ஏததந்தேந ந்யாயேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா த்விருக்திரத்யாய பரிஸமாப்தித்யோதநாய -29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-