ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -மூன்றாம் பகுதி –113-148–

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
 I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II
–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

113–நிமித்த உபாதாநஸ்து பேதம் வதந்த-வேத பாஹ்ய ஏவஸ்யு–
ஜன்மாத்யஸ்ய யத–
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா திருஷ்டாந்த அநு பரோத்யாத்–இத்யாதி
வேதவித் ப்ரணீத ஸூத்ர விரோதாத்
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ப்ரஹ்ம வநம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் ததோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு-
ப்ரஹ்மத் யாத்ய திஷ்டத புவநாநி தாரயந்
சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி
ந தஸ்யேசே கஸ்ஸன் தஸ்ய நாம மஹாத்யச
நேஹ நாநாஸ்தி கிஞ்சன
ஸர்வஸ்ய வஸி ஸர்வஸ் யேசாந
புருஷ ஏவேதம் சர்வம் யத் பூதம் யச்ச பவ்யம்
உதாம்ருதத் வஸ்யே சாந
நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதி சர்வ ஸ்ருதி கண விரோதாஸ் ச —

செய்வோன் செயப்படு பொருள் வேறுபட்டவை எனில் அக் கருத்து வேதத்திற்கும் புறம்பாகும் ஏன் என்றால் -எந்தப் பொருளின் நின்றும் -பரம புருஷனிடம் இருந்து படைப்பு இருப்பு அழிப்பு ஏற்படுகிறதோ -என்றும்
செயப்படு பொருளும் செய்வோனும் ஆன காரணங்கள் அவனே-ஏன் எனில் முதல் கொண்ட கருத்துடன் மாறுபடாது இருக்க -என்றும்
குழந்தாய் -ஸத் ஒன்றே முதலில் இருந்தது -மற்றை இரண்டாவது ஏதும் இல்லை என்றும் –
ப்ரஹ்மமாகிற காட்டில் உள்ள ப்ரஹ்மம் ஆகிற மரத்தால் -இம் மாளிகை -ஆனது நான் மனப் பூர்வமாகச் சொல்லுகிறேன் -இதைப் போலவே ப்ரஹ்மமே உள் நுழைந்து -உயிர்களை ஆள்கிறான் -என்றும்
காலம் மின்னொளி படைத்த ப்ரஹ்மத்தின் நின்றும்
உண்டானது என்றும்
புகழ் மிக்க அவன் யாராலும் ஏவப்படுவது இல்லை -அவனை நீங்கிய பொருள் ஏதும் இல்லாததால் பல பொருட்கள் என்பது இல்லை -என்றும்
யாவற்றையும் தன் வசத்தில் வைத்திருப்பவன் -யாவற்றிற்கும் தலைவன் என்றும்
இறந்தகால நிகழ் கால வருங்காலப் பொருyaanumயாவும் இந்தப் புருஷனே என்றும்
அவனே மோக்ஷத்திற்கு -அம்ருதம் -காரணமாகிறான் -அவனை அறிய வேறு வழியில்லை-என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றன –

—————–

114–இதிஹாச புராணே ஷு ச ஸ்ருஷ்ட்டி ப்ரலய பிரகரணயோர் இத மேவ பர தத்வம் இத்யவகம்யதே-
யதா மஹா பாரதே
கேந ஸ்ருஷ்டம் இதம் சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம்-பிரலயே ச கமப்யேதி தந்மே ப்ருஹி பிதா மஹ-இதி ப்ருஷ்டா
நாராயணோ ஜெகன் மூர்த்தி அநந்தாத்மா சநாதன –இத்யாதி ச வதந்
ருஷய பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ ஜங்கமாங் ஜங்கமம் சேதம் ஜெகன் நாராயண உத்பவம் -இதி ச

இதிஹாஸ புராணங்களிலும்
படைப்பு அழிப்பு செய்பவருக்கு ஒப்பற்ற உயர் நிலை இவ்வாறே நிரூபிக்கப்பட்டு இருக்கிறது
பாரதத்தில்
யுதிஷ்ட்ர பீஷ்ம ஸம்வாதத்தில்-எவரால் இவ்வுலகின் நிற்பனவும் நகர்வனவும் படைக்கப்பட்டன -பேர் அழிவில் யாரிடம் ஒடுங்குகின்றன என்பதை எங்களுக்குச் சொல்ல வேண்டும் –
நாராயணனே உலகை உடலாக உடையவன் -எண்ணற்ற இப் பொருள்களுக்கு ஆத்மா யாராலும் படைக்கப் படாதவன் –
ரிஷிகள் பித்ருக்கள் தேவர்கள் பஞ்ச பூதங்கள் தாதுக்கள் நிற்பன திரிவன யாவும் நாராயணன் இடமிருந்தே உண்டாயின -என்று சொல்லப் படுகிறது –

ப்ராஸ்ய -உதீஸ்ய -தஷிணாத்ய–பாஸ்சாத்ய சர்வ சிஷ்டை -சர்வ தர்ம -சர்வ தத்வ -வ்யவஸ்தாயாம் –
இதமேவ பர்யாப்தம்–இதயவிகீத பரிக்ருஹீதம்-ஸ்ரீ வைஷ்ணவம் ச புராணம்
ஜெந்மாத் யஸ்ய யத -இதி ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹ்மேத் யவகம் யதே –
தது ஜென்மாதி காரணம் கிமதி ப்ரஸ்ன பூர்வகம் -விஷ்ணோ சாகாசாதுத் பூதம் -இத்யாதிநா
ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ ப்ரதிபாதந ஏக பரதயா ப்ரவ்ருத்தம் இதி சர்வ சம்மதம் ததாததத்ரைவ
ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணீ
புருஷஸ் சாப்யுபாவேதவ லீயதே பரமாத்மநி
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர
விஷ்ணு நாமாச வேதேஷு வேதாந்ததேஷு ஸகீயதே -இதி
-( என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தலைக் கட்டி அருளுகிறார் )

சர்வ வேத வேதாந்ததேஷு சர்வைஸ் சப்தைஸ் பரம காரண தயா அயமேவ கீயதே இத்யர்த்த –

கிழக்கு வடக்கு தெற்கு மேற்கிலுள்ள சான்றோர்கள் யாவரும் நன்னெறிகளை தத்வங்கள் இவற்றை நிலை நாட்டுகையில் உயர்ந்த மஹான்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
பிறப்பிக்கக் காரணமானது எது என்று ஆராய்கையில் உலகின் காரணம் ப்ரஹ்மமே என்று நிறுவி அதுவே போதுமான காரணம் என்று கொள்ளப் பட்டது –
இவ் வுலகிற்குக் காரணம் எது என்ற கேள்விக்கு விடையிறுக்கும் முகமாக விஷ்ணுவிடமிருந்தே யாவும் உண்டாயின என்று ப்ரஹ்ம ஸ்வரூபத்தை அறுதியிட்டுக் காட்டவே இப் புராணம் தோன்றியது என்பது எல்லாராலும் ஏற்கப்பட்ட ஓன்று
அவ்வாறே அதைத் தலைக் கட்டுகையில்
மைத்ரேயா வெளிப்படை உள்ளுறையாயுள்ள எந்த மூலப்பிரக்ருதி என்னால் விளக்கப் பட்டதோ அதுவும் புருஷனும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன
ஒப்பு மிக்கும் அற்ற பரமாத்மாவே எல்லாவற்றையும் தாங்குபவராகவும் ஏவுகின்றவனாகவும் இருக்கிறார் அவரே விஷ்ணு என்று வேத வேதாந்தங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது

இதனால் எல்லா வேதாந்தங்களிலும் உள்ள சொற்களின் படி அவனே காரணமாகிறான் என்பது பொருள்-
யதா சர்வ ஸூஸ்ருதி ஷு கேவல பர ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ ப்ரதிபாதநாயைவ ப்ரவ்ருத்தோ நாராயணானுவாக

ததா இதம் வைஷ்ணவஞ்ச புராணம்
ஸோஹம் இச்சாமி தர்மஞ்ஞ ஸ்ரோதும் த்வத்தோ யதா ஜகத் பபூவ பூயாஸ் ச யதா மஹா பாக பவிஷ்யஸி
யந் மாயம் ச ஜகத் ப்ரஹ்மந் யதைஸ் சைத சராசரம் லீநமா ஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ரச–
இதி பர ப்ரஹ்ம கிமிதி பிரக்ரமய
விஷ்ணோ சகாசாதுத் பூதம் ஜதத் தத்ரைவை ச ஸ்திதம் ஸ்திதி சம்ய மகர்த்தாஸை ஜகதோஸ்ய ஜகச் சச

இவ்வாறே வேதங்கள் அனைத்திலும் பர ப்ரஹ்ம மெய்நிலையை சிறப்பாக நிறுவ வந்த நாராயண அநுவாகத்திலும் விளக்கப் பட்டு இருக்கிறது -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -தர்மம் அறிந்தவரே -உலகு முதலில் எவ்வாறு இருந்தது -எவ்வாறு இருக்கப் போகிறது-எதனால் நிறைந்து இருக்கிறது -எவரிடம் இருந்து தோன்றிற்று -எங்கு எவ்விதம் ஒடுங்கி இருந்தது -இனி எவ்விதம் ஒடுங்கும் -என்பதை அந்தணரே உம்மிடமிருந்து அறிய விரும்புகிறேன் -என்று மைத்ரேயரை வினவினார்பர ப்ரஹ்மம் என்பது யார் -எவ்விதம் இருப்பார் -என்ற இந்த வினாக்களுக்கு -விஷ்ணுவிடமிருந்தே உண்டாயிற்று -அவரிடமே லயித்து இருந்தது -அவராலேயே நிறைந்து இருக்கிறது -ஆக்கி அளித்து அழிப்பபவன் விஷ்ணுவே –
பர பரணாம் பரம பரமாத்மாத்ம ஆத்ம ஸம்ஸ்தித
ரூப வர்ணாதி நிர்தேச விசேஷண- விவர்ஜித
அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜென்மபி வர்ஜித்த சக்யதே வக்தும் ய சதாஸ் தீதி கேவலம்
சர்வதராசவ் சமஸ்தம் ச வசத்யத்ரேதி வையத ததஸ் ச வாஸூ தேவேதி வித்வத்பி பரிபட்யதே
தத் ப்ரஹ்ம பரம் நித்யம் அஜம் அஷயம் அவ்யயம் ஏக ஸ்வரூபம் ச சதா ஹேய அபாவாச் ச நிர்மலம்
ததேவ சர்வமே வைதத் வ்யக்த அவ்யக்த ஸ்வரூபவத் ததா புருஷ ரூபேண கால ரூபேண ச ஸ்திதம்-

மேலானவர்களுக்கு எல்லாம் மேலானவனான அவனே தனக்கும் மற்றை யோர்க்கும் ஆத்மாவாய் இருப்பவன் -உருவம் நிறம் இவற்றால் சுட்டிக் காட்ட முடியாமல் இருப்பவன் -தேய்வு அழிவு மாறுபாடு வளர்ச்சி பிறப்பு அற்றவன் எப்பொழுதும் இருப்பவன் என்று மட்டுமே சொல்லத் தக்கவன்எல்லாவற்றிலும் இவன் வசிக்கிறான் -இவனிடம் யாவும் வசிக்கின்றன -இதனால் அவன் வாஸூ தேவன் என்று ஞானிகளால் சொல்லப் படுகிறான் -அவனே ப்ரஹ்மம் -மேலானவன் -என்றும் இருப்பவன் -பிறப்பு அழிவு மாறுதல் அற்றவன் -ஒருபடிப்பட்டவன் -எப்பொழுதும் எல்லாத் தீக் குணங்களில் நின்றும் விடுபட்டு மாசற்றவன் -அவனே இந்த கட் புலனாகும் -புலனாகாத பொருள்களாய் இருப்பவன் -அவ்வாறே மெய் நிலை ஆன்ம நிலையிலும் காலம் எனும் நிலையிலும் நிலைத்து இருப்பவன் –
ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாராந் குணாதி தோஷாஞ்ச முநே வ்யதீத
அதீத சர்வா வரணோ அகிலாத்மா தேநா ஆஸ்ருதம் யத் புவநாந்த ராலே
ஸமஸ்த கல்யாண குணாத்ம கோசவ் ஸ்வ சக்தி லேசோ த்ருதா பூத வர்க
இச்சா க்ருஹீதாபி மதோரு தேஹ சம்சாதிதா சேஷ ஜகத்தி தோசவ்

தேஜோ பல ஐஸ்வர்யா மஹா வபோத ஸ்வ வீர்ய சக்த்யாதி குணைக ராசி
பர பரானாம் சகலா ந யத்ர க்லேசாதயஸ் சந்தி பராவரேசே
ச ஈஸ்வரோ வ்யஷ்டி சமஷ்டி ரூப வ்யக்த ஸ்வரூப பராவரேசே
ச ஈஸ்வரோ வ்யஷ்டி சமஷ்டி ரூப பிரகட ஸ்வரூப சர்வேஸ்வர சர்வ த்ருக் சர்வ வேத்தா ஸமஸ்த சக்தி பரமேஸ்வராக்ய
சம்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வாதது ஞானம் அஞ்ஞானம் அதோ அந்ய துக்தம்
இதி பர ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ நிர்ணயாயைவ ப்ரவ்ருத்தம் –
அக்யாநி சர்வ புராணாநி அந்ய பராணி ஏதத் அவிரோதேந நேயாநி அந்ய பரத்வஞ்ச தத் தத்
ஆரம்ப பிரகாரை அவகம்யதே சர்வாத்மநா விருத்தாம் ச தாம சத்வாத் அநா தரணீய –

அவன் உயிர்கள் யாவற்றிற்கும் மூல காரணம் -மூல பிரகிருதியின் த்ரிபான குணங்களைக் கடந்தவன்-அவன் நிலையு உலகிற்கு ஆத்மாவாகிறான் -அவனாலேயே உலகின் பொருள் கள் யாவும் நிறைக்கப் பட்டு இருக்கின்றன –
அவன் -இந்தப் பரமாத்மா -எல்லா நற் குணங்களையும் இயற்கையாகவே உடையவன் -தனது ஆற்றலின் soruசிறு பகுதியாலேயே உலகைப் படைக்கிறான் -தன் விருப்பப்படியே பல உடல்களை எடுக்கிறான் -உலகிற்கு எப்பொழுதும் நன்மையே செய்பவன் -தேஜஸ் முதலான குணங்களின் குவை -மேலோர் யாவர்க்கும் மேலோன் -அவனிடம் துக்கம் முதலானவை இல்லை

அந்த ஈசன் காரண காரியமாகவும் பொருள்கள் யாவற்றின் தன்மையையும் -அவற்றின் திறன்களையும் உடையவனாகவும் விளங்கும் பரமேஸ்வரன் ஆகிறான் –
எந்த அறிவினால் தூய்மை எல்லா வற்றிற்கும் மேம்பட்ட தன்மை -அப்பழுக்கு இன்மை -ஒருபடிப்பட்டு இருத்தல் -ஆகியவை ஒருங்கே பொருந்திய ப்ரஹ்மம் அறியப் படுகிறதோ -அதுவே மெய் ஞானம் -அந்த அறிவினால் பர ப்ரஹ்மம் கட் புலனாகும் பொருட்கள் போல் மனக் கண்ணால் நேராகக் கண்டு அனுபவிக்கப் படுகிறது -மற்றைய அறிவுகள் யாவும் அஞ்ஞானம் எனப்படுகிறது –

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பர ப்ரஹ்மம் இயல்புகளை நன்கு அறுதி யிடுவதற்காகவே இவ்வாறு கூறப்பட்டது
மற்றைய புராணங்களில் ப்ரஹ்ம நிலையை கூறுமிடத்தும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும்
அவைகளில் மாறுபாடான பொருள் கிடைக்குமானால் அப் புராணங்கள் பர ப்ரஹ்மத்தை விளக்க வந்தவை யல்ல எனவாகும் –
இக் கருத்து அவற்றின் துவக்கத்திலேயே நன்கு தெரியும் -இக் கருத்துக்கு முற்றிலும் விரோதமான கருத்தை உடையவை தாமஸ புராணங்கள் என்று தள்ளத் தக்கவையாகும் –

————————-

115–நந்வஸ்மிந்நபி
ஸ்ருஷ்ட்டி ஸ்தித் யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ச சக் ஞாம்யாதி பகவான் ஏக ஏவ ஜநார்த்தந-
இதி த்ரி மூர்த்தி சாம்யம் பிரதீயதே நைததேவம்
ஏக ஏவ ஜனார்த்தன -இதி ஜனார்த்தனஸ் யைவ ப்ரஹ்ம சிவாதி க்ருத்ஸ்ன ப்ரபஞ்சதாத்ம்யம் விதீயதே-
ஜகஸ் ச ச இதி பூர்வ உக்தமேவ விவ்ருணோதி -ஸ்ரஷ்டா ஸ்ருஜதி சாத்மாநம் விஷ்ணு பால்யம் ச பாதிச
உப ஸ்ம்ஹ் ரியதே சாந்தே ஸம்ஹர்த்தா ச ஸ்வயம் பிரபு
இதி ஸ்ருஷ்டத்வேந அவஸ்த்திதம் ப்ரஹ்மாணம் ஸ்ருஜ்யம்ச ஸம்ஹர்த்தாராம்–சம்ஹார்யம் ச யுகபந் நிர்திஸ்ய –
ஸர்வஸ்ய விஷ்ணு தாதாம்ய உபதேசாத்-ஸ்ருஜ்ய ஸம்ஹார்ய பூதாத் வஸ்துந ஸ்ருஷ்ட்ட சம்ஹத்ரோ ஜனார்த்தன
விபூதி த்வேந விசேஷோ த்ருச்யதே -ஜனார்த்தன விஷ்ணு சப்தயோ பர்யாயத்வேந-
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் -இதி விபூதி மத ஏவ ஸ்வ இச்சையா லீலார்த்த விபூதி யந்திர பாவ உச்யதே –

மும் மூர்த்திகளும் சமம் என்பதற்கு விடை
இதே புராணத்திலும் அந்த பகவான் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகியவற்றைச் செய்யும் பிரமன் திருமால் சிவன் என்று பெயர்களை அடைகிறான் -என்று கூறப்பட்டு இருந்தாலும் -அவர்கள் யாவரும் ஒருவரேயான ஜனார்த்தனனே -என்று மும் மூர்த்திகள் ஸமத்வம் தோன்றும்படி கூறி இருந்தாலும் அது சரியல்ல -ஜனார்த்தனன் ஒருவனே யாகிறான் -என்று பிரமன் சிவன் ஆகிய உலகுக்கும் -அவனுடைய உடல் -ஜனார்த்தனன் ஆத்மாவாய் இருத்தல் விதிக்கப் படுகிறது –
உலகு முதல் யாவும் அவனே என்பது முன்பே விளக்கப் பட்டு இருக்கிறது –

படைத்தல் படைப்பு காத்தல் காக்கப் படுவது -அழித்தல் அழிக்கப் படுவது ஆகியவை அவற்றிற்கு ஆத்மாவாய் இருக்கும் விஷ்ணுவினாலேயே ஆகிறது –

இதனால் படைப்பு தொழில் செய்யும் பிரமனும் அவன் படைப்பும் அழிப்பவன் அழிக்கப் படுவது யாகிய யாவும் விஷ்ணு ஆத்மாவாய் விளங்குவதாலேயே நடக்கிறது –
படைக்கப்படும் அழிக்கப்படும் பொருட்கள் அவனுடைய செல்வமாக உடையோன் -பொருள் உடைமையாக ஜனார்த்தனனுடைய சிறப்பு அமைகிறது –
ஜனார்தனன் என்பது விஷ்ணுவையே ஒரு பொருள் பன்மொழியாகக் காட்டும் விஷ்ணுர் நாராயண கிருஷ்ண வைகுண்ட ஜனார்த்தன -அமர கோசம்
பிரமன் விஷ்ணு சிவன் இவர்களுக்கு ஆத்மாவாகி இவர்களைத் தன் ஏவலுக்கு உட்பட்ட செல்வமாய் தன் விருப்பப் படியான விளையாட்டிற்கு உறுப்புகளாக்கி தான் மகிழ்கிறான் –

பிருதிவி ஆபஸ் ததா தேஜஸ் வாயுர் ஆகாச ஏவ ச -சர்வ இந்திரிய அந்தக்கரணம் புருஷாக்யம் ஹி யஜ் ஜகத்
ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யதோவ்யய
சர்க்யதேதம் அநந்தரம் ஏவ உச்யதே
கா தினம் ததோஸ்யைவ பூதஸ்தம் உபகாரகம்
ச ஏவ ஸ்ருஜ்ய ச ச சர்க்ககர்த்தா ச ஏவ பாத்யத்தி சபால்யதேச
ப்ரஹ்மத்யவஸ்தா ப்ரசேஷ மூர்த்தி விஷ்ணு வரிஷ்டோ வரதோ வரேண்ய இதி —

இது பின் வருமாறு விளக்கப் படுகிறது
நிலம் நீர் ஒளி வளி வெளி புலன்கள் மனம் ஜீவாத்மாவுடன் கூடிய உலகு யாவும் அவனே –
அவனே எல்லா உயிர்களிலும் உடல் களிலும் இருக்கிறான்-உலகையே உடலாகக் கொண்டு இருப்பினும் மாறுபாடு அற்றவன் -அனைத்து உயிர்களையும் ஆக்கி அளித்து அழித்தல் யாவும் அவன் செயலே
அவனே படைப்பவன் படைப்பு காப்பவன் காக்கப்படும் பொருள் அழிப்பவன் அழிக்கப் படுவது பிரமன் முதலான பல உருக்களைக் கொண்டு -விளங்குபவன்
உயர்ந்தோனானான வரம் அளிப்பவன் விஷ்ணுவே –

அத்ர சாமாநாதி காரண்ய நிரதிஷ்ட ஹேய மிஸ்ர பிரபஞ்ச தாதத்ம்யம் நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய
ஸமஸ்த கல்யாண குணாகாரஸ்ய-ப்ரஹ்மண கதம் உபபத்யதே ? இத்யா சங்க்யா-
ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யத அவ்யயய –இதி ஸ்வயமேவ உபபாதயதி–
ச ஏவ -ஸர்வேச்வரேச்வர -பர ப்ரஹ்ம பூத விஷ்ணுரேவ சர்வம் ஜகத் -இதி ப்ரதிஞ்ஞாய –

சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யதோவ்யய –
இதி ஹேது ருக்த–சர்வ பூதாநாம் அயமாத்மா விஷ்வா சரீரோ -யதோவ்யய -இத்யர்த்த
வஷ்யதிச–தத் சர்வம் வை ஹரேஸ் தநு -இதி –

இவ்வாறு -குறையுள்ள ப்ரபஞ்சத்திற்கும் குறையற்ற அவனுக்கும் பொருத்தம் -ஸாமா நாதி கரண்யத்தால் சுட்டிக் காட்டப்பட்ட ப்ரபஞ்சத்துடன் ஒருபடிப்பட்டு இருப்பது மாறுதல் இல்லாத நிறை குறையற்ற குற்றமற்ற நற் குணக் கடலான ப்ரஹ்மத்திற்கு எவ்வாறு பொருந்தும் என்று ஐயுறின் -இவற்றின் ஆத்மாவாக இவன் விளங்குவதால் விகாரம் அடைவதில்லை என்று தானே விளக்குகிறார்ஸர்வ -ஸர்வேஸ்வரனான பர ப்ரஹ்மமான விஷ்ணுவே உலகு முழுதுமாகிறான் என்று தேற்ற ஏகாரத்தால் அறுதிப்படுகிறதுஸர்வ பூத —–அவ்யய என்று காரணம் கூறினார்எல்லாவற்றிற்கும் இவன் ஆத்மாவாய் இருந்து உலகைத் தன் உடலாகக் கொண்டு இருக்கிறான்அதனால் உடல் உலகு மாறுபட்டாலும் அவன் மாறுதல் இல்லாதவன்உலகுகள் யாவும் ஹரிக்கு உடல் என்றும் சொல்லப்பட்டது
ஏதத் யுக்தம் பவதி –
அஸ்ய அவ்யயஸ் யாபி பரஸ்ய ப்ரஹ்மண விஷ்ணோ விஸ்வசரீரதயா தாத்ம்யம விருத்தம் இதி –
ஆத்ம சரீரயோஸ் ச ஸ்வபாவா வ்யவஸ்திதா ஏவ —

ஏவம் பூதஸ்ய-சர்வேஸ்வரஸ்ய விஷ்ணோ பிரபந்த அந்தர் பூத நியாம்ய கோடி நிவிஷ்ட ப்ரஹ்மாதி தேவ திர்யக் மனுஷ்யே
தத் தத் ஸமாச்ரயணீயத்வாய ஸ்வ இச்சாவதார பூர்வ யுக்த –
ததே தத் ப்ரஹ்மாதிநாம் பாவநாந்தரய அந்வயேந கர்ம வஸ்யத்வம்
பகவத பர ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நிகில ஜகத் உபகாராய ஸ்வ இச்சையா ஸ்வேநைவ ரூபேண
தேவாதி ஷு அவதார இதி ச ஸ்பஷ்டாம்சே ஸூபாஸ்ரய பிரகரேண ஸூ வ்யக்தம் யுக்தம்
அஸ்ய தேவாதி ரூபேண அவதாரேஷ் வபி நப்ரா க்ருதோ தேஹ இதி மஹா பாரதே –
ந பூத சங்க சமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந-இதி ப்ரதிபாதிதே –
ஸ்ருதிஸ் ச
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -இதி
கர்மா வஸ்யாநாம் ப்ரஹ்மாதீனம் நிஸ்ஸதாம் அபி தத் தத் கர்ம அநு குண ப்ரக்ருதி பரிணாம ரூப பூத சங்க சமஸ்தான
விசேஷ தேவாதி சரீர பிரவேச ரூபம் ஜென்ம அவர்ஜநீயம்
அயம் து சர்வேஸ்வர ஸத்யஸங்கல்ப பகவான் ஏவம் பூத ஸூயேதர ஜென்ம அகுர் வன்னபி ஸ்வ இச்சையா
ஸ்வநைவ நிரதிசய கல்யாண குண ரூபேண தேவாதி ஷு ஜகத் உபகாராய பஹுதா ஜாயதே –
தஸ்யை தஸ்ய ஸூவ இதர ஜென்ம பஹுதா யோநிம் பஹுவி ஜென்ம தீரா தீமதாம் அக்ரேஸரா ஜா நந்தி இத்யர்த்த –

அவன் உயிராய் விளங்குவதால் அவனை உடலின் மாறுபாடுகள் ஒட்டுவதில்லை -இதனால் ப்ரஹ்மத்திற்கும் உயிர்கள் உடல்களும் உள்ள உயிர் உடல் தொடர்பு விளக்கப் பட்டதாகிறது
விகாரம் இல்லாதவனாயினும் ஸர்வேஸ்வரன் விஷ்ணு யாவற்றுடனும் உயிர் உடல் தொடர்பு கொண்டு இருப்பதால் பொருட்கள் யாவையும் அவனாகக் கொள்ளுதல் குற்றமன்று
இப்படிப்பட்ட விஷ்ணுவிற்கு ப்ரபஞ்சத்துடன் சேர்ந்த ஏவப்படும் குழுவில் உள்ள பிரமன் தேவன் விலங்கு மனிதன் போன்றோர் தன்னை வந்து பற்றும் படி தன் விருப்பால் அவதரிக்கிறான் என்பது முன்பே விளக்கப் பட்டுள்ளது
இது பிரமன் முதலானோர் கர்ம வசப்பட்டு இருத்தல் வாஸூதேவன் உலகில் நன்மை பொருட்டு தன்னிச்சையால் அவதரித்தல் என்பதால் ஸ்ரீ விஸ்ணு புராணத்தில் 6 அம்சத்தில் கபாஸ்ரய ப்ரகரணத்தில் விளக்கிச் சொல்லப்பட்டுளளது
இவன் தேவன் முதலான உருவெடுத்தாலும் அவன் உலகின் தொடர்பு இன்மையால் மாறுதல் இல்லாதவன் ஆகிறான் –
பாரதத்தில் இந்த பரமாத்மாவின் உடல் 24 தத்வங்களால் ஆனதல்ல -என்று கூறப்பட்டுள்ளது
மறைகளிலும் பிறப்பற்ற இவன் சிறப்பாக அவதரிக்கிறான் -அவனுடைய பிறப்பை ஞானிகளின் தலைவர்கள் அறிகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது
பிரமன் முதலியோர் வினையடியாக தங்கள் விருப்பம் இன்றியே உலகிற்கேற்ற ஏற்ற உடல் மாறுபாடுகளுடன் பிறப்பிக்கப் படுகின்றனர்
தேவர் முதலான பிறப்புகளில் பிறப்பதை இவர்கள் தடுக்க இயலாதவர்கள் -இவ்வாறு தாழ்ந்த பிறப்புகளை அடையாத -மெய்யான வினைத்திட்பமுடைய ஸர்வேthamathuதனது விருப்பப்படியே தானாகவே எல்லையற்ற நற் குணங்களுடம்பி உலகில் நன்மையின் பொருட்டு பலபடியாகப் பிறக்கிறான்
அவனுடைய இப் பிறப்புகளை ஞானிகளின் தலைவர்களாய் இருப்பவர்கள் மட்டுமே அறிகிறார்கள் என்பது பொருள் –

——————–

116–ததே தந் நிகில ஜெகன் நிமித்த உபாதான பூதாத்
ஜந்மாத் யஸ்ய யத–1-1-2-
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பராதாத்-1-4-7–இத்யாதி ஸூத்ரை
ப்ரதிபாதி தாத் பரஸ்மாத் ப்ரஹ்மண பரம புருஷாத் அந் யஸ்ய கஸ்யசித் பரத்வம்
பரமதஸ் சேதூந்மாந சம்பந்த பேத வ்யபதேசேப்ய-3-2-30–
இத்யா சங்க்யா –
(பர ப்ரஹ்மம் அணை-இரு கரைகளை இணைப்பதால் அளவு பட்டது -இரண்டு கரைகளிலும் வேறுபட்டது
வேறு ஓன்று உண்டு என்ற சங்கை போக்க )
சாமாந் யாத் து
புத்யர்த்த பாதவாத
ஸ்தான விசேஷாத் ப்ரகாசாதிவத்
உப பத்தேஸ் ச
ததாந்ய பிரதிபேதாத்
அநேந சர்வ கதத்வ மாயாம சப்தாதிப் ய
இதி ஸூத்ரகார ஸ்வயமேவ நிராகரோதி–

உலகுகள் யாவற்றிற்கும் அவனே பொருள் காரணமாகவும் -செய்வோனாகவும் இருப்பவன் என்பது
உலகின் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகிய செய்பவனே செய்பவனே ப்ரஹ்மம் என்று ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் கூறி -1-1–2-
அவனே பொருள் காரணமாகவும் ஆகிறான் என்பது கொள்கையாலும் எடுத்துக் காட்டாலும் விளங்குகிறது என 1-4-7- –132–தெளிவாக விளங்குவதால் அவனுக்கு மேம்பட ஒரு பொருள் இல்லை -என நிறுவுகிறார்

இக் கருத்துக்கு மாறுபாடாக- பரம் பொருள் ஒரு அணை-இரு கரைகளை இணைப்பதால் அளவுபட்டது -அவ்விரு கரைகளில் நின்றும் வேறுபட்டது வேறு ஓன்று உண்டு –3-2-30- — 344என எழுந்த ஐயத்தை
1- இவ்வணை இரு புறங்களிலும் உள்ள பொருட்கள் கலந்து விடாமல் காக்கிறது -3-2-30—345
2-ப்ரஹ்மம் -அளவு பட்டதாகத் தோன்றுவது -அது தன்னைத் த்யாநிப்போருக்கு எளிதாக இருப்பதற்காக –
சொல் முதலியவற்றை ப்ரஹ்மத்திற்கு கால்கள் என உவமித்து இருப்பது போலே –3-2-31–346
3- அளவற்ற ப்ரஹ்மம் -பொருளோடு தொடர்பு கொள்ளும் போது அளவுடையது போல் காணப்படுகிறது
எடுத்துக் காட்டாக -சாளரத்துடன் தொடர்பு கொள்ளும் ஸூர்ய வெளிச்சம் போல் -பானைக்குள் காணப்படும் வெளி போல் -3-2-32-347
4-எல்லாம் வல்ல பரம் பொருள் தன்னை அடையத் தானே வழியாய் இருத்தலும் பொருத்தமே –3-2-33–348
5- அதை ஒழிந்த வேறு பொருள் இல்லை –3-2-34–349
6- இந்தப் ப்ரஹ்மத்தாலேயே உலகுகள் யாவும் நீக்கமற நிறைக்கப் பட்டுள்ளன
என்று எல்லாம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பண்பு கூறப்படுவதால்
மேற் சொன்ன கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்களை நீக்குகின்றன என ஸூத்ரம் அருளிச் செய்த வியாசரும் தானே அறுதியிட்டுள்ளார்

——————–

117–மாந வேச சாஸ்த்ரே
பிராதுரா ஸீத்தமோநுத
சிச்ருஷு விவிதா பிரஜா
அப ஏவ ச சர்ஜாதவ் தாஸூ வீர்யமபா ஸ்ருஜத்
தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா –இதி ப்ரஹ்மணோ ஜென்ம ஸ்ரவணாத்
ஸ்ரேத்த ஞாத்வமேவ அவகம்யதே ததா ச ஸ்ருஷ்டு -பரம புருஷஸ்ய தத் விஸ்ருஷ்டஸ்ய ச ப்ரஹ்மண-
அயநப் தஸ்யதா பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருதி
தத் விஸ்ருஷ்ட ச புருஷ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே-இதி நாம நிர்தேசஸ்
ஸ–மனு ஸ்ம்ருதி –ஸ்லோகங்கள் -6-/11-

ததா வைஷ்ணவே புராணே
ஹிரண்ய கர்ப்பாதீநாம் பாவநாத்ரய அந்வயாத் அ ஸூத்தத்வேந ஸூபாஸ்ரயத்வா
நஹர்த்வோப பாதநாத் ஷேத்ரஞ்ஞத்வம் நிஸ்ஸீயதே –

மநு ஸ்ம்ருதியிலும் -ஸ்லோகங்கள் 6-11-
ப்ரக்ருதியை ஏவுகிறவராக ஸ்வயம்புவானவர் ப்ரகாசித்தார் -பலபடியான உயிர்களைப் படைக்க விரும்பினார்
நீர் முதலான தத்வங்களைப் படைத்து அவற்றில் உயர்களைச் சேர்த்தார் –
தானே ப்ரம்மாவைப் படைத்தார் என்று பிரமனின் படைப்பு சொல்லப்படுகிறது
அந்த சரீரம் என்ற ஜலத்தைப் படைத்து அதில் வசித்தலால் நாராயணன் என நினைக்கப் படுகிறார் -அவரால் படைக்கப் பட்ட அந்த ஆத்மா உலகில் ப்ரம்மா என்ற பெயருடன் நிலவுகிறது -என்ற பெயரும் நுட்பப்படுவதை விவரிக்கிறது

அவ்வாறே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
ஹிரண்ய கர்ப்பன் -ப்ரம்மா -போன்றவர்கள் முக்குணச் சேர்க்கை உடையவர்களாய் கூறப்பட்டு இருத்தலால் அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிறார்கள்
ஆகவே அவர்கள் பரிசுத்த ஆத்ம நிலையினர் அல்லர்
பரிசுத்த ஆன்ம நிலையே தியானத்திற்கு பற்றுக்கோடு ஸூ பாஸ்ரயம் -ஆகிறது -அவர்களும் ஜீவாத்மாக்களே ஆகிறார்கள் –

—————-

118–யதபி கைஸ்சித் யுக்தம்
ஸர்வஸ்ய சப்த ஜாதஸ்ய வித்யர்த்தவாத மந்த்ர ரூபஸ்ய கார்யாபிதா யித்வேநைவ ப்ராமாண்யம் வர்ணனீயம்
வ்யவஹாராதந் யத்ர சப்தஸ்ய போதகத்வ சக்த்ய வதாரணா சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி மூலத்வாத்
கார்ய ரூப ஏவ சப்தார்த்த அத நபரி நிஷப்ந்நே வஸ்துநி சப்த பிரமாணம் இதி –

(விதி அர்த்த வாதம் மந்த்ரம் -இவை தேர்ந்த மற்ற ஸ்ருதி வாக்கியங்கள் பிரமாணம் இல்லை என்று
மீமாம்சகர் -கொள்கையை சொல்லி அடுத்து சித்தாந்தம் –)

சிலர் கொள்கைப்படி -எல்லா சொற் கூட்டங்களும் -விதி -அர்த்தவாதம் -மந்த்ரம் -என்று ஒரு செயலில் ஈடுபடுத்துவதால் மட்டுமே பொருள் உள்ளவையாய் கொள்ளப்படுகின்றன –
இவ்வாறு நடைமுறையில் செயலில் ஈடுபடுத்தப்படாத சொற்களுக்குப் பொருள் காட்டும் தன்மை ஏற்படுவதற்கு இல்லை –
நடைமுறையில் செயலைச் செய்யும் அறிவு -அதனால் விளையும் செயல் -இவற்றின் வழியாகவே சொற்களின் பொருள் கிடைக்கும் -இவ்வாறு காட்டப்பட்ட பொருள்களைத் தவிர்த்த uமற்றவை அறுதி இட்டனவாகக் பிரமாணமாகக் -கொள்ள முடியாது
ஆகையால் இவ்வாறு செயலில் ஈடுபடுத்த முடியாத ப்ரஹ்மத்தை வேதாந்த சொற்கள் காட்டாது
அவ்வாறன்றி -சுட்டிக் கட்டப்பட்டு -அல்லது இடுகுறிச் சொற்களால் அறியப்படும் பொருட்கள் -ஸித்த வஸ்துக்கள் -முன்பே அறியப்பட்டவை -அல்லது செயலால் அறியும் தேவை அற்றவை –

————

119—அத்ரோச்யதே
ப்ரவர்த்தக வாக்ய வ்யவஹாராதேவ சப்தாநாம் அர்த்த போதகத்வ சக்த்யவதாரணம் கர்த்தவ்யம் இதி கிம் இதம் ராஜாஞ்ஞா ?
சித்த வஸ்துஷு சப்தஸ்ய போதகத்வ சக்தி கிரஹணம் அத்யந்த ஸூகரம்
ததாஹி
கேந சித் ஹஸ்த சேஷ்டாதிநா -அபவர்கே தண்ட ஸ்திதா –இதி தேவ தத்தாயா ஞாபயேதி ப்ரேஹித
கஸ்சித் தது ஞாபநே ப்ரவ்ருத்த -அபவர்கே தண்ட ஸ்திதா-இதி சப்தம் ப்ரயுங்க்தே-மூகவத் ஹஸ்த சேஷ்டா மிமாம்
ஜாநந் பார்ஸ்வஸ்யோந்ய ப்ரக வ்யுத்பன்னோபி ஏதஸ்யார்த்தஸ்ய போதநாய அபவர்கே தாண்ட ஸ்தித –
இத்யஸ்ய சப்தஸ்ய பிரயோக தர்சநாத் -அஸ்ய அர்த்தஸ்ய அயம் சப்தோ போதக -இதி ஜாநாதி –
இதி கிம் அத்ர துஷ்கரம்–

ஸித்தாந்தம்
இது இவ்விதம் பதில் அளிக்கப் படுகிறது –
நடப்பு உரையாடல் மூலமாக மட்டுமே சொற்கள் அனைத்தும் பொருள் உள்ளவைகளாக ஆகின்றன என்பது ஏதாவது அரசு கட்டளையா -ஸித்த வஸ்துக்களை சுட்டிக் காட்டி அறியப்படுதல் மிக இலகுவானது
அவ்வாறே ஒருவன் வாய் பேசாது கை செய்கையாலேயே வீட்டு மூலையில் தடி வைக்கப்பட்டுள்ளது-என்று கூற
அவனும் அதை நன்கு புரிந்து கொண்டு தன்னை அனுப்பிய தேவதத்தனிடம் -வீட்டு மூலையில் தடி வைக்கப்பட்டுள்ளது என்று கூறி விளங்க வைத்தல் வழக்கில் இருக்கின்றது
அவ்வாறே ஊமையும் கைச்சாடையினால் விளங்க வைப்பது போல் ஒருவன் சைகையால் சொல்ல வந்த பொருளை முன்பு அதை அறியாத இரண்டாமவன் புரிந்து கொள்ள முடிகிறது
அவன் அவ்வாறு அறிவதில் என்ன கெடுதல் ஏற்படுகிறது

———————

120–ததா பால –
ததோ யம் -அயம் அம்பா -அயம் மாதுல-அயம் மனுஷ்ய -அயம் ம்ருக-சந்திரோதயம் -அயம் ச ஸூர்ய -இதி
மாதா பித்ரு ப்ரப்ருதிபி சப்தை சரை அங்குல்யா நிர்த்தேசேந-தத்ர தத்ர பஹு ச -ஸிஷித-தைரேவ சப்தை –
தேஷ் வரத்தேஷு-ஸ்வாத் மனஸ் ச யுத் பத்திம் த்ருஷ்ட்வா தேஷ் வரத்தேஷு தேஷாம் சப்தாநாம் –
அங்குல்யா நிர்தேச பூர்வக பிரயோக சம்பந்தாந்த்ர பாவாத் சங்கேத யித்ரு புருஷா ஞாநாச்ச போதகத்வ நிபந்தன-
இதி க்ரமேண நிஸ்ஸித்ய புநர் அபி அஸ்ய சப்தஸ்ய அயமர்த்த-இதி பூர்வ விருத்தை -ஸிஷித சர்வ சப்தாநாம் மர்த்தம்
அவகம்ய ஸ்வம் அபி சர்வம் வாக்ய ஜாதம் ப்ரயுங்க்தே –
ஏகமேவ சர்வ பதாநாம் ஸ்வார்த்த அபிதா யத்வம் ஸங்காத விசேஷானாம் ச யதா வஸ்தித சம்சர்க்க விசேஷ போதகத்வம்
ச ஜாநாதி இதி -கார்யார்த்த ஏவ வ்யுத்பத்தி இத்யாதி நிர்பந்தோ நி நிர்பந்தந —
அத
பரி நிஷ்பன்னே வஸ்துநி சப்தஸ்ய போதகத்வ சக்த்ய வதாராநாத் சர்வானி வேதாந்த வாக்யானி
சகல ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகாரம் யுக்த லக்ஷணம் ப்ரஹ்ம போதயந்த்யேவ —

இது போலவே குழந்தைகளுக்கும் -இது அம்மா -இவர் மாமா -இவர் மனிதர் -இது விலங்கு மான் -இது சந்திரன் இது ஸூர்யன் என்று
தாய் தந்தையர் கையால் சுட்டிக்காட்டி பலவற்றை அறிவிக்கிறார்கள் -அவ்வாறு பயிற்றுவிக்கப் பட்ட அக் குழந்தை பிற் காலத்தில் இன்ன இன்ன சொற்களுக்கு இன்ன இன்ன பொருட்கள்Mikaமிக எளிதாக அறிந்து கொள்கின்றது
இவ்வாறு அறிந்து கொள்வதற்கு ஒரு பொருள் அதைச் சுட்டும் சொல் -என்று சொல் பொருள் – தொடர்பின்றி வேறு ஏதும் காரணமாக முடியாது –
சொல் அறிவிக்கும் இயல்புடையதாயும் பொருள் அறியப்படுதலையும் பெற்றுள்ளது
இவ்வாறே அக் குழந்தை பல சொற்களை அறிந்து அவற்றைத் தானும் வழக்கில் உபயோகித்தல் என்பது உலகு எங்கும் காணப்படுகிறது
இவ்வாறே சொற்கள் யாவும் தம் தம் பொருளைத் தொடர்புச் சிறப்பால் அறிவித்து -அவற்றின் கூட்டத்தால் வாக்கியங்களாக விரித்து ஒருவருடைய மனக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றன என்பதால் செயல் காட்டும் சொற் களால் மட்டுமே பொருள் அறியப்படுகிறது என்பது தவறு -இது கட்டாயமில்லை –
ஆகவே எல்லா வேதாந்தங்களிலும் உள்ள ப்ரஹ்மத்தைக் குறிக்கும் சொற்கள் ப்ரஹ்மம் உலகின் காரணமாதலையும் குணங்கள் யாவற்றையும் பெற்று இருப்பதையுமே காட்டுகின்றன –

————————–

121—அபி ச கார்யார்த்த ஏவ வ்யுத்பத்தி ரஸ்து வேதாந்த வாக்யாநி உபாஸநா விஷய கார்யாதி க்ருத விசேஷண பூத
பலதவேந -துக்காசம் பிந்ந தேச விசேஷ ரூப ஸ்வர்க்காதி வத்ராத்ரி சத் ப்ரதிஷ்டாதி வத் அபகோரண சதயாதந
ஸாத்ய சாதனா பாவவச்ச கார்ய உபயோகி தயைவ சர்வம் போதயந்தி

ததாஹி
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -இத்யத்ர ப்ரஹ்ம உபாஸந விஷய கார்யாதி க்ருத விசேஷண பூத
பலத்வேந ப்ரஹ்ம பிராப்தி ஸ்ரூயதே
ப்ர பிராப்தி காமோ ப்ரஹ்ம வித்யாத் -இதி அத்ர ப்ராப்ய தயா ப்ரதீயமாநம் ப்ரஹ்ம ஸ்வரூபம் தத் விசேஷணம்
ச சர்வம் கார்ய உபயோக்யதை வசித்தம் பவதி –தத் அந்தர் கதமேவ-ஜகத ஸ்ருஷ்டத்வம்- ஸம்ஹார்த்ருத்வம்–ஆதாரத்வம் –
அந்தராத்மத்வம் -இத்யாதி யுக்தம் அனுக்தம் ச ஸர்வமிதிந கிஞ்சித் தநுப பந்நம் –

மேலும் செயல் தொடர்புடைய பொருளை மட்டும் சொற்கள் அறிவுறுத்தும் எனில் -இங்கு ப்ரஹ்மம் என்னும் சொல் -இடையறாத் த்யானமாகிற செயலால் -மோக்ஷமாகிற நம் விருப்பத்தைக் கொடுக்கும் என்று நம்பி – அடையப்படும் இலக்கு என்பது வேதாந்த வாக்யங்களால் தெளிவாகிறது
துக்கம் கலவாத நாடான ஸ்வர்க்கத்தை -ஜ்யோதிஷ்டோமம் செய்து -அடைவதற்கும் நிலை பெற்று இருப்பதற்கும் ராத்ரி சத்ரம் போன்ற யாகங்கள் செய்ய வேண்டும் –
அந்தணரை பழித்தோர் நூறு பொற் காசு தண்டம் விதிக்கப்பட வேண்டும் -இல்லை எனில் நரகம் புக்க நேரும் -என்பன போன்ற நெறியும் இலக்கும் ஆகிய செயல் பயன்பாடு தெரிவது போல் இங்கும் காணப்படுவதால் இச் சொற்களும் பொருள் பொதிந்தவை யாகின்றன

அவ்வாறே இடையறாது த்யானிப்பவன்பலம் -பரம் -அடைகிறான் என்று ப்ரஹ்ம உபாஸநம் -கேட்டல் -பார்த்தல் மனத்தில் நிலை இருத்தல் இடையறாது சிந்தித்தல் -இச்செயல்களில் ஈடுபடும் உபாசகரின் சிறப்பால் அதன் பயனாகிய ப்ரஹ்மத்தை அடைதல் ஏற்படுகிறது
பலத்தில் விருப்பமுடையவன் ப்ரஹ்மத்தை இடையறாது தியானிக்கக் கடவன் என்று விதிக்கப்பட்டு இருக்கிறது
இதனால் குணங்களோடு கூடிய ப்ரஹ்மம் மெய் நிலை ஒரு செயலுக்கு இலக்காக அமைந்து இருக்கின்றன
மேலும் ப்ரஹ்மம் உலகுகளை ஆக்கி அளித்து அழித்து அவற்றைத் தாங்கி யாவற்றிலும் உயிராக உள் நுழைந்து இயக்குதல் போன்ற செயல்களும் செய்வதால் இது சிறிதளவும் தவறு என்று கொள்ள முடியாது –

—————–

122–ஏவம் ச சதி மந்த்ர அர்த்தவாத கதா ஹ்ய விருத்தா அபூர்வாஸ் ச சர்வே விதி சேஷ தயைவ சித்தா பவந்தி-
யதோக்தம் -த்ரமிட பாஷ்யே–ருணம் ஹிவை ஜாயதே -இதி ஸ்ருதே -இத் யுபக்ரம்ய யத்யாப்யவதாந ஸ்துதி பரம் வாக்யம்
ததாபி நாசதா ஸ்துதி ரூப பத்யதே இதி-
ஏதத் யுக்தம் பவதி –
சர்வோ ஹயர்த்த வாத பாக -தேவதாராதன பூத யாகாதே சாங்கஸ்ய ஆராத்ய தேவதாயாஸ் ச அதிருஷ்ட ரூபான்-குணாந் –
சஹஸ்ரசோ வதந்-கர்மணி ப்ராசஸ்த்ய புத்திம் உத்பாதயதி தேஷாம ஸத்பாவே ப்ரஸாஸ்த்ய புத்திரேவ நஸ்யாத்-
இதி கர்மணி ப்ரஸாஸ்த்ய புத்யர்த்த குண ஸத்பாவமேவ போதயதி இதி –
அநயைவதிசா சர்வ மந்த்ரார்த்தவாத கதா ஹ்யார்த்தா சித்தா —

(ச குண ப்ரஹ்மம் நிர் குண ப்ரஹ்மம் இரண்டு இல்லையே
சத் வித்யையிலும் ச குண ப்ரஹ்மமே உபாசிக்கப்படுகிறான்
இதுவே அபி யுக்தர் -வாக்யகாரர் –
சங்கல்பாதி நிர் குண ப்ரஹ்மம் செய்ய முடியாதே)

இவ்வாறு இருக்கையில் மந்த்ரம் அர்த்தவாதம் முதலானவை ஒன்றுக்கு ஓன்று முரண் இன்றி இலக்கை அடைவிக்கின்றன -விதி -இலக்கு
இதற்கு ஏற்ப த்ரமிட பாஷ்யத்திலும் -தமிழர் உரையிலும் -குணம் ஹி வை ஜாயதே -என்று துவங்கி விளங்கும் மந்த்ரம் ஹோமத்திற்கான ஹவிஸ்ஸின் நின்றும் தமது பங்கைப் பிரித்து எடுத்துக் கொள்வதை ஸ்துதிக்கிறது ஸ்துதி என்பது உள்ளதைச் சொல்வது -இல்லாததைச் சொல்வது ஸ்துதி அல்ல –
அர்த்த வாதப்பகுதிகள் யாவும் தேவதைகளை ஆராதிக்கும் முகமாய் -யாகம் போன்ற செயல்களில் அங்கமாக -ஆராதிக்கப்படும் தேவதைகளின் கட் புலனாகாத பண்புகளை ஆயிரக் கணக்கில் விவரிக்கின்றன –
அதனால் அந்த யாகம் செய்வது சிறந்தது என்ற எண்ணம் தூண்டப் படுகிறது –
இவ்வாறு அர்த்த வாதங்கள் இல்லை எனில் செயலின் சிறப்பு புலப்படாது -ஆகவே அவை உள்ள பண்புகளையே தெரிவிக்கின்றன
அதே போல் எல்லா மந்திரங்களும் அவற்றின் பொருளும் முன்பே அறியப்பட்டவை ஆகின்றன -ஸித்த வாக்யம்
ஆகவே அவை விதி வாக்யத்திற்குத் துணை செல்லும் –

———————–

123–அபிச கார்ய வாக்யார்த்தவாதிபி
கிமிதம் கார்யத்வம் நாம -இதி வக்த்தவ்யம்–க்ருதிபாவ பாவிதா க்ருத யுத்தேஸ்யதா ச இதி சேத்
கிமிதம் க்ருத யுத்தேஸ்யத்வம் –
யதகதி க்ருத்ய க்ருதி -வர்த்ததே தது க்ருத யுத்தேஸ்யத்வம் –
இதி சேத் புருஷ வியாபார ரூபாயா க்ருதே கோயம் அதிகாரோ நாம ?
யத் பிராப்தீச்சயா க்ருதிம் உத்பாதயதி புருஷ -தத் க்ருத யுத்தேஸ்யத்வம் இதி சேத் –
ஹந்த-தரஹி இஷ்டத்வமேவ க்ருத யுத்தேஸ் யத்வம் –

ஒரு செயலுக்கு இலக்காக இருப்பதே சொல்லின் பொருள் என்பீராயின் -செயல்படுதல் என்றால் என்ன -என்ற கேள்வி எழும்
மனத்தில் ஏற்படும் எண்ணம் -அதனடியான முயற்சி -அதன் விளைவான வெளிப்பாடு செயல் என்று பதில் வரும் –
ஒரு பயனைக் கருதி செயல்படுவது செயல் எனில் கருதிச் செயல்படுவது என்பது யாது -என்ற கேள்வியும் எழும் –
ஒரு இலக்கை அடைவதற்கு என்னால் செய்யப்படத் தக்கது என்று எது செயல் படுத்தப் படுகிறதோ அது என்பீராயின் அதைச் செய்யத் தகுதி உள்ளோர் யார் -என்ற கேள்வியும் எழும் -அதற்கு விடை
(எண்ணமுடையோன் என்பதால் அசேதனப் பொருள்களுக்கு எண்ணம் கருத்து ஏற்பட வழியில்லை )
இச்செயல் என் விருப்பத்தை நிறைவேற்றும் என்று எண்ணமுடைய மனிதனே ஆவான் -அதாவது -ஒன்றை அடைவதில் விருப்பமுடைய மனிதனே அதற்குத் தகுதியுள்ளவன் என ஆகிறது
அவனது விருப்பமே செயலுக்குப் பலன் என்பதே தீர்ந்த முடிவு -அந்தோ இதை -விருப்பமானதை அடையச் செய்யும் முயற்சியே செயல் -எனச் சொல்லி இருக்கலாமே
இது அவனுடைய விருப்பம் என்பதைத் தவிர வேறு ஆகாது

————–

124–அதைவம் மனுபே-இஷ்டஸ்யைவ ரூப த்வய -மஸ்தி –இச்சா விஷய தயாஸ்திதி -புருஷப் பிரேரகத்வம் ச –
தத்ர பிரேரகத்வார க்ருத யுத்தேஸ் யத்வம் இதி -சோயம் ஸ்வ பஷாபி நிவேச காரிதோ வ்ருதாஸ்ரம-
ததாஹி -இச்சா விஷய தயா ப்ரதீதஸ்ய ஸ்வ ப்ரயத்ந உத்பத்தி மாந்தரேண அசித்தி -பிரேரகத்வம் தாத்தா ஏவ ப்ரவ்ருத்தே –
இச்சாயம் ஜாதாயாம் -இஷ்டஸ்ய ஸ்வ ப்ரயத்ந உத்பத்தி மந்தரேண அசித்தி -பிரதீயதே சேத் –
தத சிகீர்ஷா ஜாயதே தத ப்ரவர்த்ததே புருஷ -இதி தத்வ விதாம் ப்ரக்ரியா தஸ்மாத் இஷ்டய க்ருத்யதீநாத்
மலாபத் வாதிரேகி க்ருத யுத்தேஸ் யத்வம் நாம கிமபி ந த்ருச்யதே –

விருப்பம் என்பது இரண்டு நிலைகளில் இருக்கிறது -பலனில் விருப்பமும்
அதற்கான செயலில் ஊக்கமும்
இதில் பலனில் விருப்பம் முதன்மையானது -அதுவே செயலில் ஊக்கம் அளிக்கிறது
ஆகவே செயல் பாடு என்பது தன் விருப்பத்தினால் அடையக் கூடியது
மாறாக செயலில் ஊக்கமே முதன்மை யானது என்று கொள்வீராகில் அது நீங்கள் உங்களுடைய கொள்கையின் பால் கொண்ட பிடிப்பால் மட்டுமே கொள்ள முடியும் –
அவ்வாறாயின் விரும்புவதின் இச்சையின் இலக்காகத் தோன்றுவதை விருப்பத்தை நம் முயற்சி இன்றி அடைய முடியாது -அதனால் தான் நம் விருப்பங்களை அடைய செயல் புரிகிறோம்
விரும்புவதில் இருந்து பிறந்த விருப்பத்தை தன் முயற்சியால் அடையமுடியும் என்பது தவறு என்றால் -உலகில் முயற்சியால் விருப்பமும் அதனடியான செயல்பாடும் உள்ளதை மெய்யறிவுடையோர் யாவரும் நன்கு உணர்ந்து இருக்கின்றனர்
அதனால் ஆத்ம லாபத்திற்காக மற்ற ஒன்றைக் கருதாத -உபாஸனம் முதலான -செயல்கள் என்பது எவ்வாறு காணப்படாமல் இருக்கும் –

————

125–அதோஸ்யதே–இஷ்டாதா ஹேதுஸ் ச புருஷ அநு கூலதா -தத் புருஷ அநு கூலத்வம் க்ருத யுத்தேஸ்யத் -வமிதி —
நைவம் -புருஷ அநு கூலம் -ஸூகம்-இத் யநரத்த அந்தரம் ததா புருஷ பிரதி கூலம் துக்க பர்யாயம் –
அத ஸூக வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி புருஷ அநு கூலத்வம் ந சம்பவதி –
நநு ச துக்க நிவ்ருத்தேர் அபி ஸூக வ்யதிரிக்தாயா-புருஷ அநு கூலதா த்ரஷ்டா ?
நைதத் -ஆத்ம அநு கூலம் ஸூகம் -ஆத்ம பிரதி கூலம் துக்கம் -இதி ஹி ஸூக துக்கயோ-விவேக –
தத்ர ஆத்ம அனுகூலம் ஸூகம் -இஷ்டம் பவதி -தத் பிரதி கூலம் துக்கம் ச அனிஷ்டம் –
அத துக்க சம்யோகஸ்ய அஸஹ்யதாய தந் நிவ்ருத்திர் அபி இஷ்டாபவதி -தத ஏவ இஷ்ட தா சாமியாத் அநு கூலதாப்ரம –
ததாஹி -ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டஸ்ய ஸம்ஸாரின புருஷஸ்ய அநு கூல சம்யோக பிரதி கூல சம்யோக ஸ்வரூபேணா வஸ்திதி –
இதி திஸ்ர அவஸ்தா தத் பிரதி கூல சம்பந்த நிவ்ருத்தி அநு கூல சம்பந்த நிவ்ருத்தி ஸ்வரூபேண அவஸ்த்திதி ரேவ–
தஸ்மாத் -பிரதி கூல சம்யோகே வர்த்தமாநே தந் நிவ்ருத்தி ரூபா ஸ்வரூபேண அவஸ்திதிரபி இஷ்டா பவதி –
தத்ர இஷ்டதாசாம்ய அநுகூலதா ப்ரம-அத ஸூக ஸ்வரூபத்வ அநு கூல தயா நியோகஸ்ய
அநு கூல தாம் வதந்தம் பிரமாணிகா பரிஹஸந்தி-

ஒரு பொருள் தனக்கு விருப்பமாய் இருப்பதற்குக் காரணம் -அது தனக்கு அநுகூலமாய் இருப்பது -அதுவே விருப்பமான செயலுக்கும் காரணமாகிறது –
அதாவது தனக்கு எது நன்மை அளிக்கிறதோ அது சுகம் என்று கூறத் தடை யில்லை -எது நன்மை அளிக்க வில்லையோ அது துக்கம் -சுகத்தின் நின்றும் வேறுபட்ட யாவும் ஒருவனுக்கு அநுகூலமாக இருக்க முடியாது –
மாறாக துக்கம் கழிதல் என்பது சுகத்தின் நின்றும் வேறுபட்டதாயினும் நன்மை அளிப்பதாகக் காணப் படுகிறதே எனில் தனக்கு நன்மை அளிப்பது சுகமாகவும் விருப்பமாகவும் இருக்கிறது -மாறாக தீமையை அளிப்பது துக்கமாகவும் விருப்பம் அற்றதாகவும் இருக்கிறது –
பிந்தையது விருப்பத்திற்கு மாறானது -ஆகையால் அது கழிதல் சுகம் போல் தோன்றுவதால் விருப்பமாகிறது –
அதனாலேயே துக்கம் ஏற்பட்ட பிறகு அது தங்க முடியாமல் இருத்தலால் அது கழிதல் நன்மை அளிப்பதாகிறது
அவ்வாறே உலகின் தொடர்பால் பிறவியில் கட்டுண்டவர்களுக்கு சுகம் துக்கம் இரண்டுமற்ற நிலை என மூன்று நிலைகள் உண்டு -இதில் மூன்றாவது நிலையில் ஆத்மா தன்னிலையால் விளங்குகிறது -அதனால் தீமை அளிக்கும் தொடர்பால் துக்கமும் -அது கழிந்தால் தன் இயல்பான நிலைக்குத் திரும்புகிறது -அதனால் தீமை அளிக்கும் தொடர்பு கழிதல் ஆத்மாவின் இயல்பான நிலைக்கு விருப்பமாகிறது –

————–

126–இஷ்டஸ்ய அர்த்த விசேஷஸ்ய நிர்வர்த்தக தயைவ ஹி நியோகஸ்ய நியோகத்தவம் –
ஸ்திரத்வம் அபூர்வத்வம்ச பிரதீயதே
ஸ்வர்க்க காமோ யஜதே இத்யத்ர கார்யஸ்ய க்ரியாதிரிக்த்தா ஸ்வர்க்க காம பத சமாபி வ்யாஹாரேண
ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸயாதேவ பவதி –

விருப்பம் என்னும் சொல் அதன் பொருள் சிறப்பால் -விரும்புவோனை -ஒரு செயலில் ஈடுபடுத்தி -ஒரு செயலில் ஈடுபடுத்துவது நியோகத்தவம் -செயலில் விருப்பம் ஏற்படுத்துதல் –
அது நிறைவு பெற்றவுடன் அதினின்றும் நீங்கி விருப்பத்தைக் கொடுப்பதால் அந்த செயலில் விருப்பம் ஏற்படுகிறது -அதனால் அபூர்வமும் விளைகிறது
யாகம் செய்வோர் நோக்கம் ஸ்வர்க்கமே ஒழிய அபூர்வமில்லையே
இசைவித்து அடியேனை உனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் அன்றோ

———————-

127—ந ச வாஸ்யம் -யஜேத-இத்யத்ர பிரதமம்-நியோக -ஸ்வ பிரதான தயைவ பிரதீயதே ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹாராத்
ஸ்வ ஸித்தயே ஸ்வர்க்க சித்த யனுகூல தாச்சி நியோகஸ்ய இதி யஜேத-இதிஹி -தாதவர்த்தஸ்ய புருஷ பிரயத்தன சாத்யதா பிரதீயதே ?
ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹாராதேவ தாத்வர்த்தாதிரேகினோ நியோகத்வம்-ஸ்திரத்வம் -அபூர்வத்வம்-ச இத்யாதி அவகம்யதே –
தச்ச ஸ்வர்க்க சாதனத்வ ப்ரதீதி நிபந்தம் -சமாபி வ்யாஹ்ருத ஸ்வர்க்க காம பதார்த்த அந்வய யோக்யம்
ஸ்வர்க்க சாதனமேவ கார்யம் லிங்காதயோபி தததீ இதிஹி லோக வ்யுத்பத்திரபி திரஸ் க்ருதா —
ஏதத் யுக்தம் பவதி –
சமபி வ்யாஹ்ருத -பதாந்தர வாஸ்ய அன்வய யோக்யமேவ இதரபத ப்ரதிபாத்யம் இதி அன்விதாபிதாயி பத ஸங்காத ரூப
வாக்ய ஸ்ரவண சமந்தரமேவ பிரதீயதே தச்ச ஸ்வர்க்க சாதன ரூபம் அத க்ரியாவத் அநன்யார்த்த தாபி விரோதாதேவ பரித்யக்தா இதி
அத -கங்காயாம் கோஷ-இத்யாதவ் கோஷ பிரதிவாஸ யோக்யார்த்த உபஸ்தான -பரத்வம் கங்கா பதஸ்ய ஆஸ் ரீயதே-
பிரதமம் கங்கா பதேந கங்கார்த்த ஸ்ம்ருத இதி -கங்கா பதார்த்தஸ்ய உபேயத்வம் ந வாக்யார்த்த அந் வயீ பவதி –
ஏவமாத்ராபி -யஜேத-இத்யேதா வந் மாத்ர ஸ்ரவனே கார்யம் அநன்யார்த்த ஸ்ம்ருதமிதி வாக்யார்த்த அன்வய ஸமயே
கார்யஸ்ய அன்யார்த்ததா நாவாதிஷ்டதே-
கார்யாபிதாயி பத ஸ்ரவண வேலாயாம் பிரதமமம் கார்யம் அநன்யார்த்த ப்ரதீதம் இத்யேததபி ந சங்கச்சதே வ்யுத்பத்தி காலே
கவா நயநாதி க்ரியாயா துக்க ரூபாயா இஷ்ட விசேஷ சாதன தயைவ கார்யதா ப்ரதீதே–

ஸ்வர்க்கத்தை விரும்புபவன் யாகத்தைச் செய்யட்டும் என விதிக்கிறது -இதில் முக்கியமான செயல்பாடு யாகம் செய்தல் -நோக்கம் ஸ்வர்க்கம் அடைதல் -ஆனால் செயல்பாடான யாகம் செய்தல் அது முடிந்தவுடன் முடிந்து விடுகிறது -ஆனால் செய்தவன் இறந்த பிறகு தான் அவனுடைய ஸ்வர்க்கம் கிட்டும் -இந்த இடைப்பட்ட காலத்தில் அதைப் பெற்றுத் தரக் காரணமாக இருப்பது -அபூர்வம் என்ற கட் புலனாகாத ஓன்று -இது யாகம் செய்தவனின் நோக்கம் அன்று -எனினும் தானே விளைகிறது -உண்மையில் ஸ்வர்க்கத்தைப் பெற்றுத் தருவதற்குத் தானே சக்தியற்ற யாகமாகிற செயலில் ஈடுபடுத்துகிறது -விதியுடன் சேர்த்தப் பார்க்கையில் அபூர்வம் முக்யமானதன்று -ஆயினும் அதுவே ஸ்வர்க்கத்தைப் பெற்றுத் தருகிறது –
உதாரணமாக -கங்கையில் இடைச்சேரி என்ற சொல் தொடருக்கு கங்கையின் நீர்ப் பெருக்கைத் தவிர்த்து அதன் கரை என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பதே முறை –
இதே போல் யாகம் செய்க -என்பது ஸ்வர்க்கத்தை அடைவிப்பதை நேரடியாகக் காட்டும் செயல் என்று கொள்ள முடியாது -அதனால் மட்டும் யாகம் ஸ்வர்க்கம் என்ற சொற்கள் பொருளுடையவையாக ஆகின்றன எனக் கொள்ள முடியாது -ஆனால் ஸ்வர்க்கத்தில் விருப்பமுடையவன் என்ற விருப்பத்தை நிறைவேற்ற அது வழி என்று ஏற்படுகிறது
அதனால் ஒருவன் செய்ய வேண்டிய காரியத்தையும் அதன் தொடர்புடைய பலனையும் சேர்த்தே தான் உணருகிறான்
அதனால் செயல் இலக்கை அடையும் வழி மட்டுமே ஆகுமே யன்றி செயல் புரிவதே நோக்கமாகாது
ஒரு செயலைக் குறிக்கும் வாக்யங்களைக் கேட்டவுடன் செயலை மட்டும் வேறு எதையும் எதிர்பாராது அறிகிறான் என்பது கொள்ளத் தக்கதில்லை
மேலும் அவ்வாக்கியத்தின் பொருளை அறிகையில் பசு முதலியவற்றைக் கொண்டு வருதல் முதலான செயல்கள் மெய் வருந்திச் செய்ய வேண்டி இருப்பதால் அச் செயல் பாட்டின் முகமாய் ஏதோ ஒரு விருப்பம் நிறைவேறும் செயல் நடை பெறும் என்பதே அறியக் கிடக்கிறது –

—————-

128–அத நியோகஸ்ய புருஷ அநு கூலத்வம் சர்வ லோக விருத்தம் -நியோகஸ்ய ஸூக ரூப புருஷ அநு கூலதாம் வதத –
ஸ்வ அநுபவ விரோதஸ் ச கரீர்யா வ்ருஷ்டி காமோ யஜேதா –இத்யாதி ஷு சித்தேபி நியோக வ்ருஷ்டியாதி சித்தி நிமித்தஸ்ய
வ்ருஷ்டி வ்யதிரேகேன நியோகஸ்ய அநு கூலதா நாநு பூயதே யத்யபி அஸ்மின் ஜென்மநி வ்ருஷ்ட்யாதி சித்தேர நியம –
ததாபி அநியமா தேவ நியோக சித்தி அவஸ்ய ஆஸ்ரயணீயா தஸ்மிந் அநு கூலதா பர்யாய ஸூக அநு பூதி ந வித்யதே –
ஏவம் உக்தரித்யா க்ருதி சாத்யேஷ்டத்வாதிரேகி க்ருத யுத்தேஸ் யத்வம் ந த்ருஸ்யதே–

பிறகு யாகத்தின் காரணமாய் ஏற்படும் கார்யமான அபூர்வம் செய்தவனுக்கு உறு துணையாகவும் ஸூகமாகவும் இருக்கிறது என்பது உலகு இயற்க்கைக்கு ஒவ்வாது -அவ்வாறு அந்த ஸூகத்தைத் துய்த்தவர் யாருமில்லை -மழை வேண்டுவோர் காரீரி என்ற யாகத்த்ச் செய்க என்று விதிக்கையில் -காரீரம் என்ற மூங்கில் தளிர் வாடினால் காரீய என்னும் யாகம் செய்யத்தக்கது என்றும் கொள்ளப்படும்-யாகம் முடிந்த உடனேயே மழை பொழிந்து விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை -ஏன் எனில் இந்த யாகத்தில் குறை ஏதும் ஏற்பட்டு இருந்தால் செய்தவருடைய பிறவி முழுவதுமே மழை பெய்யாது போகலாம் -அதனால் மீமாம்ஸகர்கள் சொல்லும் அபூர்வம் யாகம் செய்தவனுக்கு சுகமாகவோ அனுகூலமாகவோ இருப்பதில்லை எனத் தெளிவாகிறது –
ஆகவே-அபூர்வம் -மக்களுக்கு நல்லது -அதனால் யாகம் செய்ய வேண்டும் -என்று மீமாம்ஸகர்கள் சொல்வது நேராது -மாறாக அது -யாகம் -செய்ய முடிந்தது -செய்யும் விருப்பத்தைத் தூண்டுவது என்றவை மட்டுமே கிடைக்கும்

—————-

129–க்ருதிம் பிரதி சேஷித்வம் க்ருத யுத்தேஸ் யத்வம் இதி சேத் -கிமிதம் சேஷித்வம் ?-கிம் ச சேஷத்வம் ? இதி வக்தவ்யம்
கார்ய பிரதி சம்பந்ததீ சேஷ -தத் பிரதி சம்பந்தத்வம் சேஷத்வம் இதி சேத் -ஏதம் தர்ஹி கார்யத்வமேவ சேஷித்வம்
இத் யுக்தம் பவதி -கார்யத்வமே ஹி விசார்யதே ? பர உத்தேச ப்ரவ்ருத்த க்ருதி வ்யாப்த் யர்ஹத்வம் சேஷத்வம்
இதி சேத் கோயம் பர உத்தேசோ நாமேதி அயமேவ ஹி விசார்யதே ?
உத்தேஸ் யத்வம் நாம ஈப்சித சாத்யத்வம் இதி சேத் கிமீப்ஸி தத்வம் ?
க்ருதி பிரயோஜனத்வம் இதி சேத் புருஷஸ்ய க்ருத்யாரம்ப ப்ரயோஜனமேவ ஹி க்ருதி ப்ரயோஜனவம் ?
ச ச இச்சா விஷய க்ருத்யதீன ஆத்ம லாப இதி பூர்வ யுக்த ஏவ —

முயற்சியை ஆள்வது செயல் ஊக்கம் தான் எனில் ஆள்வது -சேஷி -யார் -ஆளப்படுவது -சேஷன் யார் என்ற வினா எழும்
ஒரு செயலால் எது நிறைவேறுகிறதோ அதுவே அந்தச் செயலுக்கு-சேஷன் -ஆண்டான் சேஷி ஆகிறது என்பீராயின்
செயல் -அதைச் செய்வோன் -சேஷன் -அச் செயலால் நிறைவேறுகிறது -சேஷி -ஆண்டான் என்பது அதன் பலனை நுகர்ச்சி செய்வோனே யாகும் –
மற்ற ஒன்றிற்காக செய்யப்படும் இலக்கு-சேஷி -ஆண்டான் -இந்த இலக்கு -அச் செயலால் அடையப் படக் கூடியதாயும் செய்வோனால் செய்யத் தக்கதாயும் இருத்தல் எனில் -ஸ்வர்க்கத்தை விரும்பி யாகம் செய்பவனுக்கு -அவன் செய்யும் யாகத்தினால் ஏற்படும் விளைவு -அபூர்வம் இலக்கல்ல -அதனால் அவனுக்கு மகிழ்ச்சியும் ஏற்படுவதில்லை -ஆகவே அவனை எந்த இலக்கு செயல்படத் தூண்டுகிறதோ-எது அவனால் அடைய முடியுமோ அதுவே ஆள்வோன் சேஷி ஆகவேண்டும் -இது முன்பே விளக்கப் பட்டு இருக்கிறது –

————–

130–அயமேவ ஹி ஸர்வத்ர சேஷ சேஷி பாவ
பரகத அதிசய ஆதாநே இச்சாயா உபாதேயத்வ மேவ யஸ் ஸ்வரூபம் -ச சேஷ -பர சேஷீ -பல உத்பத்தி இச்சாயா யாகதே–
தத் பிரயத்தனஸ் யச உபா தேயத்வம் -யுகாதி சித்தி இச்சாயா அந்யத் சர்வம் உபாதேயம்-ஏவம் கர்பதாஸாதீநாம் அபி
புருஷ விசேஷாதி சாயாதாநேச் சயா உபாதே யத்வமேவ சேதந அசேதநாத்ம கஸ்ய நித்யஸ்ய அநித்யஸ்ய ச ஸர்வஸ்ய வஸ்துந –
ஸ்வரூபம் இதி சர்வம் ஈஸ்வர சேஷ பூதம் -ஸர்வஸ்ய ச ஈஸ்வர சேஷீதி -ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்ய ஈஸாந
பதிம் விஸ்வஸ்ய –இத்யாதி யுக்தம்
க்ருதி ஸாத்யம் பிரதானம் -யத் தத் கார்யம் அபி தீயதே -இதயயமர்த்த -ஸ்ரத்தூதாநேஷ் வேவ சோபதே —

சேஷன் சேஷி தொடர்பு எல்லாவிடத்திலும் இவ்வாறே காணப்படுகிறது -மற்ற ஒன்றின் மேல் ஏற்படும் விருப்பத்தால் எது -செயல் -செய்யப்படுகிறதோ -அது சேஷம் -மற்ற ஓன்று சேஷி -பலன் கிடைக்கும் என்ற விருப்பத்தால் -யாகம் போன்றவை -அதற்கான முயற்சிகள் கைக் கொள்ளத் தக்கவை -அதனுடன் தொடர்புடைய செயல்களும் கொள்ளத் தக்கவையே -அவ்வாறே பிறப்பாலேயே அடிமையான ஆத்மாக்களை ஆண்டானாகிய இறைவன் தன் மகிழ்ச்சிக்காகவே பெற்றுக் கொள்கிறான் –
அதே போல் பிறப்பிலேயே அடிமையான அழிவற்ற அழிவுள்ள சேதன அசேதனப் பொருட்கள் ஈஸ்வரனுடைய மகிச்சிக்காகவே அவனால் கைக் கொள்ளப் படுகின்றன –
இவ்வாறு இருத்தலே அப் பொருள்களின் மெய் நிலை -ஸ்வரூபம் -ஆகவே இவைகள் யாவும் நுகர் பொருள்கள் -சேஷன் -அவன் நுகர்வோன் -சேஷி -எப் பொருள்களையும் தன் வசமுடையவன் -எல்லாவற்றையும் நடத்துவோமன் -உடையவன் -என்றும் -உலகிற்கு ஒரே தலைவன் என்றும் -வேதத்தில் சொல்லப் படுகிறது –
முயற்சியால் பெறத் தக்க தலையாயது என்பது -அபூர்வம் என்று மீமாம்ஸகர் சொல்வது -அறிவுடையோர் குழுவில் ஏற்கத் தக்கது அல்ல –

———————-

131—அபி ச ஸ்வர்க்க காமோ யஜேத-இத்யாதி ஷு லகார வாஸ்ய கர்த்ரு விசேஷ சமர்ப்பண பரானாம்
ஸ்வர்க் காமாதி பதாநாம் நியோஜ்ய விசேஷ சமர்ப்பண பரத்வம் சப்த அநு சாசன விருத்தம் கேந அவகம்யதே ?
ஸாத்ய ஸ்வர்க்க விசிஷ்டஸ்ய ஸ்வர்க்க சாதநே கர்த்ருத்வ அந்வயோ ந கடேத இதி சேத் –
நியோஜயத்வ அந்வயோபி ந கடதா இதி ஹி ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸய -ச து ஸாஸ்த்ர சித்தே கர்த்ருத்வ அந்வயே
ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸய -க்ரியதே –
யதா போக்து காமோ தேவதத்த க்ருஹம் கச்சேத் இத் யுக்தே-போஜன காமஸ்ய தேவதத்த க்ருஹ கமநே
கர்த்ருத்வா ஸ்ரவனா தேவ ப்ராகஜாதமபி போஜன சாதநத்வம் தேவ தத்த க்ருஹ கமநஸ்ய அவகம்யதே –
ஏவம த்ராபி பவதி -நஹி க்ரியாந்தரம் ப்ரதி கர்த்ரு தயா ஸ்ருதஸ்ய க்ரியாந்தரே கர்த்ருத்வ கல்பநம் யுக்தம் –
யஜேத-இதி ஹி யாக கர்த்ரு தயா ஸ்ருதஸ்ய புத்தவ கர்த்ருத்வ கல்பனம் நியதம் -புத்தே கர்த்ருத்த மேவ ஹி நியோஜ்யத்வம் ?
யதோக்தம்
நியோஜ்ய ச ச கார்யம் ய ஸ்வ கீய த்வேந புத்யதே இதி
யஷ்ட்டத்வ அநு குணம் தத் போக்த்ருத்வம் இதி சேத் தேவ தத்த பசேத் இதி பாக கர்த்ருதயா ஸ்தருதஸ்ய தேவ தத்தஸ்ய
பாகார்த்த கமனம் பாக அநு குணமிதி கமநே கர்த்ருத்வ கல்பனம் ந யுஜ்யதே —

இங்கும் ஸ்வர்க்கத்தை விரும்புபவன் யாகம் செய்யக் கடவன் -என்னும் விதி வாக்கியம் யாகம் செய்பவனைக் குறிக்கிறது
மீமாம்ஸகர் -இது யாகம் செய்யும் செயலை முன்னிலைப் படுத்துகிறது என்கின்றனர்
இந்த விதி வாக்யம் எல்லோரையும் யாகம் செய்தலான செயலில் ஈடுபடுத்தவில்லை
இச் செயலைச் செய்வதற்கு ஸ்வர்க்கத்தின் மீது விருப்பம் என்ற தகுதியை செய்பவனுக்கு விதிக்கிறது
இவ்வாறு கொள்வதே இலக்கணத்திற்குப் பொருந்தும் அதுவன்றி பொதுவாக ஒருவரை யாகம் செய்யத் தூண்டுகிறது என்னும் வாதம் இதற்கு மாறானது –இதற்கு விடையாக விதி வாக்யம் செய்பவனையே கூறுகிறது –
அவனுக்குள்ள தகுதி என்பதில் ஐயமில்லை -ஆயின் யாகம் நேராக ஸ்வர்க்கத்தைத் தராதலால் இடைப் பட்டதான அபூர்வத்தையே இலக்கணையாகக் குறிக்கும் -ஸ்வர்க்க விருப்பம் என்பது அபூர்வத்தை அவ்வாறே காட்டும் என்கின்றனர் –
நேரிடையாக ஸ்வர்க்கத்தைத் தராத இலக்கணப் பிழையான வாக்யத்தைக் கைக் கொண்டு அதுவே விதி என்று சொல்லும் குற்றம் உங்களுக்கு ஏற்படுகிறதே என்றால் அதற்கு விளக்கமாக எப்பொழுது ஸ்வர்க்கம் அடைவதற்காக யாகம் செய்தலில் இறங்கினானோ அப்பொழுதே அச் செயல் அவன் மனத்தில் இந்த யாகம் ஸ்வர்க்கத்தைக் கொடுக்கும் இதை நான் செய்கிறேன் என்ற உணர்வு ஏற்பட்டு விடும் -ஆகவே அந்த உணர்வு தான் செய்வோனாக ஆகிறது என்கின்றனர் -இது தவறு
செய்பவன் தான் கர்த்தா இதற்கு மாறுபாடு கொள்வது உலகியலுக்கு ஒவ்வாதது -எடுத்துக் காட்டாக தேவதத்தன் சமைக்கிறான் என்று சொல்லும் போது சமையலுக்குத் தொடர்புடைய சாமான்கள் வாங்கி வருவதைச் செய்தாலும் அவனுடைய முக்கியமான பணி சமைத்தலே ஆகும் -ஆகவே சமைத்தல் என்பதையே நாம் செயலாகவும் தேவதத்தனையே செய்வோனாகவும் கொள்ள வேண்டும் –

உணவை விரும்புவோர் தேவதத்தன் இல்லத்திற்குச் செல்க -என்னும் விதி வாக்கியத்தில் உணவை விரும்புதல் என்னும் சிறப்பு அங்கு செல்ல வேண்டியவர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது –

—————

132—கிஞ்ச லிங்காதி சப்த வாஸ்யம் ஸ்தாயி ரூபம் கிமிதி அபூர்வம் ஆஸ் ரீயதே ?-
ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹார அநு ப பத்தே இதி சேத் கா அத்ர அநுப பத்தி ?
சிஷாதயிஷித ஸ்வர்க்கோஹி ஸ்வர்க்க காம தஸ்ய ஸ்வர்க்க காமஸ்ய காலாந்தர பாவி ஸ்வர்க்க ஸித்தவ் க்ஷண
பங்கினீ யாகாதி கிரியா ந சமர்த்த இதி சேத்

வினை யுருபுகளுடன் சேர்ந்த வினைச் சொற்கள் நிலை பெற்று எவ்வாறு அபூர்வத்தைச் சுட்டிக் காட்டுகின்றன -ஸ்வர்க்கத்தை அடையும் வழியைச் சொல்வதால் எனில் அவ் வழி எது -எவன் ஸ்வர்க்கத்தை விரும்புகிறானோ அவனுக்கு அவன் இறந்த பிறகு கிடைக்கும் ஸ்வர்க்கத்தை கண நேரத்தில் அழிந்து விடும் யாகம் பெற்றுத்தர வல்லதல்ல -அதனால் அபூர்வத்தைக் கற்பிக்கிறோம் என்பீராகில்
அநாக்ராத வேத வித் அக்ரேசரோ ஐயம் அநுப பந்தி -சர்வை கர்மபி ஆராதித பரமேஸ்வர பகவான் நாராயண
தத்திஷ்டம் பலம் ததாதி இதி வேத வைத்தோ வதந்தி

குறைவு படாத வேதத்தால் நிறுவப்பட்ட இடையறாத த்யான வழி எல்லாச் செயல்களுக்கும் ஆராதனைகளுக்கும் இலக்கான பரமேஸ்வரனான பகவான் நாராயணன் அவர்களுடைய விருப்பத்தைக் கொடுக்கிறான் -என்று வேதத்தைக் கரை கண்டவர்கள் அறுதியிடுகிறார்கள்

யதா ஆஹு வேத வித் அக்ரேஸரா த்ரமிடாச்சார்யாபல சம்பிபந்த் சயா கர்மபிராத்மாநாம் பிப்ரீஷந்தி சப்ரிதோலம் பலாய-இதி ஸாஸ்த்ர மர்யாதா -இதி
பல சம்பந்தேச்சயா கர்மபி யாக தான ஹோமாதிபி -இந்திராதி தேவதா முகேந தத் தந்தர்யாமி ரூபேண அவஸ்திதம்
இந்த த்ராதி சப்த வாஸ்யம் பரமாத்மநாம் பகவந்தம் வாஸூ தேவம் ஆரிராதயிஷ்யந்தி –
ச ஹி கர்மபிராராதிதா -தேஷாம் இஷ்டாநி பலாநி பிரயச்சத்தி இத்யர்த்த –

அவ்வாறே வேதம் அறிந்தோரில் தலையாய த்ரமிடாச்சார்யார் கூற்றுப்படி ஜீவாத்மா ஒருவன் தான் விரும்பியதைப் பெறும் ஆசையினால் யாகம் தானம் ஹோமம் செய்து இந்திரன் முதலான தேவதைகள் மூலமாக அவர்களின் உள்ளுறைவோனான வாஸூ தேவனை திருப்த்திப்படுத்தி விரும்பிய பலன்களை அடைகிறார்கள் என்பது ஸாஸ்த்ரத்திற்கு ஏற்புடையது –
அதாவது பலன் தொடர்புடைய செய்கைகள் யாகம் தானம் போன்றவை இந்திரன் முதலிய தேவதைகள் மூலமாக அவைகளுக்கு உள்ளு றைவோனாக விளங்கும் பரமாத்மாவான வாஸூ தேவனை ஆராதிக்கிறார்கள் -அவனும் அவ்வாறு ஆராதிக்கப்பட்டு விரும்பிய பலன்களைக் கொடுக்கிறான் என்று பொருள்

ததா ச ஸ்ருதி
இஷ்டா பூர்த்தம் பஹுதா ஜாதம் ஜாயமானம் விஸ்வம் விபர்த்தி புவனஸ்ய நாபி -இதி இஷ்டா பூர்த்தம் –
இதி சகல ஸ்ருதி ஸ்ம்ருதி சோதித்தம் கர்மா உச்யதே -தது விஸ்வம் விபர்த்தி –
இந்திர அக்னி வருணாதி சர்வ தேவதா சம்பந்தி தயா பிரதீயமானம் தத் தத் அந்தராத்மா தயா அவஸ்தித
பரம புருஷ ஸ்வயமேவ விபார்த்தி -ஸ்வயமேவ ஸ்வீ கரோதி-
புவனஸ்ய நாபி
ப்ரஹ்ம க்ஷத்ராதி சர்வ வர்ண பூர்ணஸ்ய புவனஸ்ய தாரக
தைஸ்தை கர்மா பிராராதித–தத் தத்திஷ்ட பல பிரதாநேந புவனானாம் தாரக இதி நாபி இத்யுக்த
அக்னி வாயு ப்ரப்ருதி தேவதாந்தராத்மதயா தச் தச் சப்தாபி தேய அயமேவேத்யாஹ-
ததே வாக்நிஸ் தத் வாயுஸ் தத ஸூர்யஸ் தாது சந்த்ரமா -இதி

அவ்வாறே வேதத்திலும் வேதங்களில் கூறப்பட்ட வினைகளை இந்திரன் அக்னி வருணன் ஆகியோருடன் உயிர் உயில் தொடர்புடன் உறையும் பரம புருஷன் தானே ஏற்றுக் கொள்கிறான்
அந்தணர் அரசர் முதலிய எல்லா வர்ணங்களும் கொண்ட உலகு அனைத்தையும் தாங்குவோன் அவ்வாறே செயல்களால் ஆராதிக்கப்பட்டு அந்தந்த பலன்களைக் கொடுத்து உலகில் உள்ள அனைவரையும் தாங்குவோன்
இவனே அக்னி வாயு தேவர்களின் உயிராக உறைந்து அவ்வ்ப் பெயர்களால் ஆராதிக்கப் படுபவன்
அவனே அக்னி அவனே வாயு அவனே ஸூர்யன் அவனே சந்த்ரன் என்று வேதமும் சொல்லிற்று

யதோக்தம் பகவதா–ஸ்ரீ கீதையிலும் -7-21–/22-
யோயோ யாம் யாம் தநும் பக்த ஸ்ரத்தாயா அர்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யா சலாம் ச்ராத்தம் தாமேவ விததாம் யஹம்
ச தயா ஸ்ரத்தயா யுக்த தஸ்யா ஆராதன மீஹதே
லபதேச தத காமான் மயைவ விஹிதாந் ஹி தாந்
யாம் யாம் தநும்
இந்த்ராதி தேவதா விசேஷம் தத் தத் அந்தர்யாமிதயா அவஸ்திதஸ்ய பகவத-
தநவ–சரீராணி இத்யர்த்த
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச இத்யாதி
பிரபுரேவ ச இதி சர்வ பலாநாம் ப்ரதாதா சேத்யர்த்த –

ஸ்ரீ கீதையிலும் -என்னுடைய உடலான இந்திரன் முதலான தேவர்களை எந்த பக்தர்கள் முயற்சியுடன் அர்ச்சிக்கிறார்களோ அவர்களுக்கு அவரவர்கள் விரும்பும் பலனை நானே கொடுக்கிறேன் -அந்த தேவதைகளன் மேல் நம்பிக்கையை வளர்க்கிறேன்
அந்த பக்தன் அந்த நம்பிக்கை யுடன் அந்த தேவதைகளுக்கு ஆராதனம் செய்து தான் விரும்பிய
பலன்களை என்னால் கொடுக்கப்பட்டு அடைகிறான் -என்று பகவான் சொல்கிறார்
இதில் இந்திரன் முதலிய தேவர்கள் தனக்கு சரீரம் என்று விளக்கமாகக் கண்ணன் கூறியிருக்கிறான்
நானே யாகங்களுக்கு எல்லாம் உள்ளுறைபவன் -அநுபவிப்பவன் -பலன் அளிப்பவன்
இவ்வாறு என்னை சிலர் உள்ளபடி அறியாமல் முக்கிய பலனில் இருந்து நழுவி விடுகிறார்கள்

யதாச
யஜ்ஜைஸ் த்வம் இஜ்யஸே நித்யம் சர்வ தேவ மயா ஸ்யுத
யைஸ்வ தர்ம பரைநார்த்த நரைராராதிதோ பவாந்
தே தரந்த்யகிலா மேதாம் மாயாமாத்ம வி முக்தயே இதி –ஸ்ரீ விஷ்ணு புராணம்

அவ்வாறே ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
தங்களுக்கு உரிய தர்மத்தைக் கைக் கொண்டு அந் நெறி பிறழாமல் எந்த சிறந்த மனிதர்கள் யாகங்களை தேவதைகளை அச்சுதனால் நிறைக்கப் பட்டவர்களாய் அறிந்து தினமும் ஆராதிக்கிறார்களோ அவர்கள் இந்த உலக வாழ்க்கை எனும் மாயையின் நின்றும் ஆத்ம விடுதலை பெறுகிறார்கள் –

சேதிஹாச புராணேஷு -சர்வேஷ்வேவ வேதேஷு –
ஸர்வாணி கர்மாணி சர்வேஸ்வர ஆராதன ரூபாணி தைஸ்தை கர்ம பிராராதித புருஷோத்தம தத்ததிஷ்ட பலம்
ததாதி இதி தத்ர தத்ர பிரபஞ்சிதம்
ஏவமேவ ஹி சர்வஞ்ஞம் -சர்வ சக்திக்கு -சர்வேஸ்வரன் -பகவந்தம்-இந்திராதி தேவதாந்தர்யாமி ரூபேண
யாக தான ஹோமாதி -வேதோதித சர்வ கரமானாம் போக்தாரம் சர்வ பலானாம் பிரதாதாரம் ச சர்வா ஸ்ருதயோ வதந்தி –
சதுர் ஹோதாரோ யத்ர சம்பதம் கச்சந்தி தேவை இத்யாத்யா
சதுர் ஹோதார யஜ்ஞா -யத்ர பரமாத்மநி தேவேஷ் வந்தர்யாமிதயா அவஸ்தித -தேவை சம்பந்தம் கச்சந்தி இத்யர்த்த –
அந்தர்யாமி ரூபேண அவஸ்தி தஸ்ய பரமாத்மாந சரீரதயா அவஸ்திதாநாம் இந்த்ராதிநாம் யுகாதி சம்பந்த இத்யுக்தம் பவதி

இவ்வாறே இதிஹாஸ புராணங்களிலும் எல்லா வேதங்களிலும்எல்லாச் செயல்களும் ஸர்வேஸ்வரனையே ஆராதிப்பதாக உள்ளன -அந்தந்தச் செயல்களால் ஆராதிக்கப்பட்ட புருஷோத்தமன் அவரவர்களின் விருப்பங்களைக் கொடுக்கிறான் என்று பல இடங்களில் நன்கு விளக்கப் பட்டு இருக்கிறது -அதனாலேயே யாவும் அறிந்தவனும் யாவற்றிக்கும் தலைவனும் பகவானும் இந்த்ரன் முதலிய தேவர்களுக்கு உள்ளுறைவோனாக இருந்து கொண்டுயாகம் தானம் ஹோமங்களான -வேதத்தால் விதிக்கப்பட்ட எல்லாச் செயல்களையும் அனுபவிப்பவனும் எல்லா வற்றிற்கும் பலன் அளிப்பவனுமாக அவனே இருக்கிறான் -என வேதங்கள் கூறுகின்றனநான்கு அங்கங்களை வுடைய யாகங்களின் பலனாக நன்மைகள் தேவரீராலேயே அளிக்கப்படுகின்றனஉள்ளுறைவோனாக விளங்கும் பரமாத்மா அவனது உடலாக விளங்கும் இந்திராதி தேவர்கள் மூலமாக யாகங்களுடன் தொடர்புடையவன் ஆகிறான் என்று கொள்வதால் சிறந்தது
யதோக்தம் பகவதா –ஸ்ரீ கீதையிலும்
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் சர்வலோக மஹேஸ்வரம் இதி தஸ்மாத் அக்னியாதி தேவதாந்தர்யாமி பூத
பரம புருஷ ஆராதன பூதாநி ஸர்வாணி கர்மாணி ச ஏவ ச அபிலஷித ப்ரதாயி
இதி கிமத்ர அபூர்வேன வ்யுத்பதி பததூர வர்த்திநா வாச்யதயா அப்யுகதேந கல்பிதேந வா பிரயோஜனம் ?-

இதை ஒட்டியே கீதையிலும்
யாகம் தவம் முதலியவற்றால் அடையப்படுபவன் -எல்லா உலகுகளுக்கும் தலைவனான மஹேஸ்வரன் -என்று கூறப்படுகிறது
ஆகவே அக்னி முதலான தேவர்களின் உள்ளுறைபவனான பரம புருஷனை ஆராதிக்கும் எல்லாச் செயல்களுக்கும் அவனே இலக்காகி பலன் அளிக்கிறான் எனும் போது அபூர்வம் என்ற இலக்கணத்திற்கு ஒட்டாததும் சொல்லால் விளக்க முடியாததுமான ஒன்றைக் கற்பித்துக் கொள்வதால் என்ன பயன் –

——————-

133–ஏவஞ்ச சதி லிங்காதே -கோயமர்த்த -பரிக்ரஹீதோ பவதி ?
யஜ தேவ பூஜா யாம் -இதி தேவதாராதன பூத யாகாதே -ப்ரக்ருத்யர்தஸ்ய-கர்த்ரு வபாரசாத்யதாம் வ்யுத்பத்தி சித்தாம்
லிங்காதய அபி தததி இதி ந கிஞ்சித் தநுபபந்நம் -கர்த்ரு வாசிநாம் ப்ரத்யயாநாம் ப்ருக்ருத் யர்த்தஸ்ய
கர்த்ரு வியாபார சம்பந்த பிரகாரோ ஹி வாஸ்ய ?
பூத வர்த்தமாநாதிகம் அந்யே வதந்தி லிங்காத யஸ்து கர்த்ரு வியாபார சாத்யதாம் வதந்தி —

இங்கு தேவர்களை ஆராதிப்பாயாக என்ற வியங்கோள் வினை முற்றால் தேவர்கள் மகிழ்ச்சியடைய யாகம் முதலிய செயல்களைச் செய்வாயாக என்ற கட்டளை இருக்கிறது –
யஜ -யஜ் அ -யாகம் செய்வாயாக எனப்பொருள் கொடுப்பதால் இது ஒருவரால் செய்யப்பட வேண்டும் என பகுதி விகுதி சேர்க்கையால் செய்வோனையும் செயலையும் இலக்கணைப் பிழையின்றிக் காட்டுகிறது –
இந்தப் பகுதி செயலையும் விகுதி காலத்தையும் காட்டி இது ஒருவனால் செய்யப்பட வேண்டும் என விதிக்கிறது –

————–

134–அபி ச காமிந -கர்த்தவ்ய தயா கர்மா விதாய கர்மனோ தேவதா ஆராதன ரூபதாம் தத் த்வாரேண பல சித்திம்
ச தத் தத் கர்மா விதி வாக்ய அன்யேவ வதந்தி –
வாயவ்யம் ஸ்வேத மால பேதபூதி காம -வாயுர் வை ஷேபிஷ்டா தேவதா -வாயுமேவ ஸ்வேந பாகதேயேநோ பதாவதி
ச ஏவைநம் பூதிம் கமயதி இத்யதிநி நாத்ரா பல சித்யநுப பத்தி காபி த்ருச்யதே இதி பல சாதனத்வா வகதி ஒளபதாநிகீ-
இத்யபி ந சங்கச்சதே வித்யபேஷிதம் யாகாதே பல சாதனத்வப் பிரகாரம் வாக்ய சேஷ ஏவ போதாயாதி இத்யர்த்த —

மேலும் விதி வாக்யங்கள் -விரும்புவோர் விருப்பத்திற்கு ஏற்ப பல தேவதைகளை ஆராதிக்கும் முகமான செயல்களை விதிக்கின்றன
அவற்றிக்கு அந்த அந்த தேவதைகள் பலன் கொடுப்பர் என்றும் கூறுகின்றன –
எடுத்துக் காட்டாக -பொருளை வேண்டுவோன் வெள்ளக் குதிரையைப் பலி கொடுத்து ஹோமம் செய்வதாக ஆராதிக்கக் கடவன் -அந்த வாயு மிக வேகமாகச் செல்லுபவன் -அவனைத் தன் ஹவிஸ் உணவால் திருப்திப்படுத்தக் கடவன் -அவனே இவனுக்கு செல்வத்தை அடைவிக்கிறான் -என்று
இங்கு ஒருவன் விரும்பிய செல்வத்தை இச்செயலின் மூலம் வாயுவே அளிக்கிறான் என்று கொள்வது சாலச் சிறந்தது –
விதி வாக்கியத்தில் இது வெளிப்படையாகக் காணப்படா விடிலும் அர்த்த வாதத்தில் சொல்லப்பட்டதை உள்ளுறை பொருளாக -அர்த்தா பத்தி நிறுவுவதால் பலனில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை –

தஸ்மாத் -ப்ராஹ்மணாய நா பகுரேத் -இத்யத்ர அபகோரண—நிஷேத விதி பர வாக்ய சேஷே ஸ்ரூயமாணம்
நிஷேத் யஸ்ய அபகோரணஸ்ய சத யாதநா சாதநத்வம் நிஷேத வித்யுபயோகி இதி ஹி ஸ்வீ க்ரியதே ?
அத்ர புந காமிந கர்த்தவ்ய தயா விஹிதஸ்ய யாகாதே காம்ய ஸ்வர்காதி சாதனத்வ பிரகாரம் வாக்ய சேஷா வகதம்
அநாத்ருத்ய கிமிதி உபாதேநேந யாகதே பல சாதனத்வம் பரிகல்ப்யதே-
ஹிரண்ய நிதி மபவரகேநிதாய யாசதே கோத்ரவ்யாதி லுப்த க்ருபணம் ஜனம் இதி ஸ்ரூயதே ததேதத் யுஷ்மாஸூ த்ருச்யதே –

அவ்வாறே அந்தணனைக் கொல்ல முயற்சிக்காதே -என்று கொல்லும் முயற்சியைத் தடுத்து விதித்து -பிற் பகுதியில் அவ்வாறு தடுக்கப்பட்ட செயலைச் செய்தால் -நூறு சவுக்கடி தண்டமாகக் கிடைக்கும் -என்று அவ்விதியால் அடையப்படும் பலனையும் கூறுகிறது –
இங்கு தண்டனையாகிற பலனுக்குக் கொல்லும் முயற்சி என்ற செயல் காரணமாகிறது –
ஆகவே அதைத் தடுத்த விதி தொடர்ந்து வரும் அர்த்த வாதத்தால் தான் பொருளுடைய தாகிறது என்பது வெளிப்படை –
அது போலவே ஸ்வர்க்கம் முதலிய விருப்பங்களை அடைவதற்காகச் செய்யப்படும் யாகங்களும் பொருள் கொள்வதில் தடையில்லை –
இவ்வாறு நேரடியாகப் பொருள் கொல்வதைத் தவிர்த்து அபூர்வத்தைக் கற்பித்தல் தங்கப் புதையலை வீட்டில் வைத்திருக்கும் ஒருவன் தெருவில் பிச்சை எடுத்தல் போன்ற கஞ்சத் தனத்தையே காட்டுகிறது –

சதயாதநா சாதனத்வம் அபி ந அத்ருஷ்டத் வாரேண-சோதிதாந்யநுதிஷ்டத -விகிதம் கர்மா குர்வத–நிந்திதாநி ச குர்வத–
ஸர்வாணி ஸூகாநி துக்காநி சபரம புருஷ அநு க்ரஹ நிக்ரஹாப்யா மேவ பவந்தி-

ஏஷ ஹ்யேவாநந்தயாதி
அத சோ பயங்கதோ பவதி
அத தஸ்ய பயம் பவதி
பீஷாஸ்த்மா வாதா பவதே பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்த்மா தக்நி சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி —
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசசநே கார்க்கி –ஸூர்ய சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே
கார்க்கி -தததோ மனுஷ்யா ப்ரஸஸந்தி யஜமானம் தேவா தர்வீம் பிதரோந் வாயத்தா இத்யாத்யேந கவிதா ஸ்ருதய சந்தி –

விலக்கப்பட்ட செயல்கள் தண்டனை நிந்தனையைப் பெற்றுத் தருவதும் -விதிக்கப்பட்ட செயல்கள் நன்மையை ஏற்படுத்தித் தருதலும் போலே எல்லா இன்ப துன்பங்களும் பரம புருஷனுடைய மகிழ்வு கோபத்தாலேயே ஏற்படுகின்றன
இப் பரம் பொருள் எல்லோரையும் மகிழ்ச்சி அடைவிக்கிறான் -பிறகு அவனே பயத்தை நீக்குகிறான் – அவனை அடையாதவன் பயத்தை அடைகிறான் -அவனிடத்து உள்ள பயத்தாலேயே காற்று வீசுகிறது -ஸூர்யன் உதிக்கிறான் -தீ ஒளிர்கிறது -இந்திரன் செயல் படுகிறான் -ஐந்தாவதாக யமனும் செயல்படுகிறான் –
ஹே கர்க்கி இந்த எம்பெருமானின் கட்டளையின் படியே ஸூர்ய ஸந்த்ரர்கள் தாங்கப் படுகிறார்கள் –
ஹே கர்க்கி அழிவற்ற இந்த எம்பெருமானுடைய ஆணையினாலேயே அந்தந்த மனிதர்கள் யாக காரியங்களில் தேவர்களையும் பித்ருக்களையும் நினைத்து ஹோமம் செய்யும் பாத்திரத்தில் கொடுத்து ஸ்துதிக்கிறார்கள் என்பது போலப் பலவகையான வேத வாக்கியங்கள் இருக்கின்றன –

யதோக்தம் த்ரமிட பாஷ்யே-
தஸ்ய ஆஞ்ஞாய தாவதி வாயு -நத்ய -ஸ்ரவந்தி -தேந ச க்ருதஸீமாநோ ஜலாசயா சமதா இவ மேஷ விசர்ப்பிதம் குர்வந்தி-
இதி தத் ச கல்ப்பநி பந்தநா ஹி இமே லோகா நஸ்ய வந்தே நஸ் புடந்தி-ஸ்வ சாசன அநு வரத்தினம் ஞாத்வா
காருண்யாத் ச பகவாந் வர்த்தயேத வித்வான் கர்ம தக்ஷ -இதி ச –

பரம புருஷ யாதாத்ம ஞான பூர்வகம் தத் உபாசாநாதி-விஹித கர்ம அனுஷ்டாயின-தத் ப்ரஸாதாத்
தத் பிராப்தி பர்யந்தாநி ஸூகாநி அபயம் ச யதாதிகரம் பவந்தி-தத் ஞான பூர்வகம்
தத் உபாஸநாதி விஹிதம் கர்ம அகுர்வத-நிந்திதாநி ச குர்வத தந் நிக்ரஹாதேவ தத் பிராப்தி பூர்வகா
பரிமித துக்காநி பயம் ச பவந்தி –

திரமிடாச்சார்யரும் இதை விளக்கும் முகமாய் -அவனுடைய ஆணையால் வாயு வீசுகிறான் -நதிகள் ஓடுகின்றன -வரம்புக்கு உட்பட்டு நீர் நிலைகள் விளங்கி ஆடுகள் நகர்வது போல் கட்டுக்கு அடங்கி இருக்கின்றன -என்கிறார்
மேலும் அவனுடைய ஆணையாலேயே -ஸங்கல்பத்தாலேயே -இவ்வுலகங்கள் நழுவுவதில்லை -வெடிப்பதில்லை -தன் கட்டளைகளை மேற் கொள்வோரை அறிந்து அவர்களுக்கு அறியும் தன்மையை கருணை கூர்ந்து aவளர்க்கிறான் -என்றும் கூறுகிறார் –
மிக்க இறை நிலையை ஞானத்தால் அறிந்து -அவனை இடையறாது தியானித்தல் முதலிய விதிக்கப் பட்ட கர்மங்களைச் செய்வோருக்கு அதன் பலனாக பிறவிச் சூழல் பயத்தை நீக்கி தன்னையே அடைவிப்பது வரையிலும் நன்மைகளை அளிக்கிறான் –
மாறாக அறியாமையில் உழன்று விதிக்கப் பட்ட செயல்களைச் செய்யாதவருக்கும் நிந்திக்கப்பட்ட செயல்களைச் செய்தவனுக்கும் அவனது தண்டனையாக அவனை அடைய முடியாமையாகிற பயமும் ஏற்படுகிறது –

யதோக்தம் பகவதா -ஸ்ரீ கீதையிலும் –
நியதம் குரு கர்மத்வம் கர்மஜ்யாயோ ஹ்ய கர்மண –இத்யாதிநா க்ருத்ஸ்நம் கர்மா ஞான பூர்வகம் அநுஷ் டேயம் விதாய –
மயி ஸர்வாணி கர்மாணி சந் யஸ்ய -இதி சர்வஸ்ய கர்மண ஸ்வ ஆராதநுதாம் ஆத்மநாம் ஸ்வ நியாம்யதாம் ச ப்ரதிபாத்ய
யே மே மதமிதம் நித்யம் அநு திஷ்டந்தி மாநவா
ஸ்ரத்தா வந்தோ அந ஸூயந்தோ நாநு திஷ்டந்தி மே மதம்
சர்வஞ்ஞான வி மூடாம் ஸ்தாந் வித்தி நாஷ்டாந சேதச —
இதி ஸ்வ ஞான அநு வர்த்திந ப்ரஸஸ்ய விபரீதாந் விநிந்த்ய -புநரபி ஸ்வ ஞான அநு பாலநம் அகுர்வதாம்
ஆஸூர ப்ரக்ருத் யந்தர்பாவம் அபிதாய அதமாகதிஸ் ச யுக்தா
தாநஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம்ய ஜஸ்ரமஸூபாந் மூடா ஜென்மநி ஜென்மநி –
யாமப்ராப் யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் தீம் இதி –
சர்வ கரமண்யபி சதா குர்வானோ மப்த்யபாஸ்ரய
மத் பிரசாதாதவாப் நோதி சாஸ்வதம் பதமவ்யயம்
இதி ச ஸ்வ ஞான அநு வர்த்தி நாம் சாஸ்வதம் பதம் ச யுக்தம் —

அஸ்ருதா வேதாந்தாநாம் கர்மணி அஸ்ரத்தா மா பூத் -இதி தேவதாதி கரேண திவாதா-க்ருதா கர்மமாத்ரே
யதா ஸ்ரத்தா ஸ்யாத் இதி சர்வம் ஏக சாஸ்திரம் இதி வேதவித் சித்தாந்த –

இதற்கு ஏற்ப கீதையிலும்
செயல்படாது இருத்தலை விட விதிக்கப்பட்ட செயல்களைச் செய்தல் சாலச் சிறந்தது -என்பதால் செயல்கள் யாவும் மனப் பூர்வமாகச் செய்யப்பட வேண்டும் என்று விதித்து
எல்லாச் செயல்களையும் பலன்களையும் -என்னிடமே அர்ப்பணிப்பாயாக என்றும்
அவைகள் தன்னால் விதிக்கப் பட்டவை -தனக்கு ஆராதனையானவை என்றும் சொல்லி
எவர்கள் இந்த என் கொள்கையை தினமும் செயலாற்றுகிறார்களோ அதில் விருப்பமுடையவர்களாய் இருக்கிறார்களோ -அதில் பொறாமையற்று இருக்கிறார்களோ
அவர்கள்-மூவரும் எல்லாப் புண்ய பாபங்களில் நின்றும் விடுபடுகிறார்கள்
மாறாக எவர்கள் இவ்வாறு செயல்படுவதில்லையோ விருப்பமின்றி இருக்கிறார்களோ -பொறாமை கொள்கிறார்களோ -அவர்கள் மூவரும் அறிவுகள் யாவும் நீங்கினவர் என்றும்
அதனால் பலவற்றையும் இழந்தவர்கள் என்றும் -அறிவாயாக
தனது விதிகளை -கொள்கைகளை கைக் கொள்வோரைக் கொண்டாடி மாறானவர்களை நிந்தித்து அதனால் அவர்களுக்கு அசுரத்தன்மை ஏற்படுவதைக் கூறிக் கீழ் நிலை pஅடைவிபத்தைச் சொல்கிறான்
என்னை வெறுப்பவர்களாய் கொடியவர்களாய் -மனிதரில் கடைப்பட்டவராய்-நலன்கள் அற்றவராய் உள்ள அவர்களை நான் இடைவிடாது அசுரப்பிறவிகளில் தள்ளுகிறேன்
குந்தீ புத்ரனே அரக்கப் பிறவி யடைந்த இவர்கள் பிறவிகள் தோறும் என்னைப் பற்றிய மெய்யறிவு அற்று அடுத்தடுத்துத் தாழ்ந்த பிறவிகளையே அடைகிறார்கள்
எல்லாச் செயல்களையும் என்னிடத்தில் அர்ப்பணித்து எப்போதும் என் அருளாலே குறைவற்ற என்னை நிலையாக அடைகிறான்
இவ்வாறு தனது ஆணைகளை நிறைவேற்றுவோர்க்கு நிலையான பதத்தை அடைவிக்கிறான்
வேதம் அறியாதோருக்கு பற்று விடாது இருக்கவே அவ் வாறு மீமாம்சை பூர்வ மீமாம்ஸை தேவதைகளை மிகவும் புகழ்ந்துள்ளது
அவை பூர்வ உத்தர மீமாம்சைகள் இரண்டும் ஒரே ஸாஸ்த்ரம் என்பது வேதம் அறிந்தோர் கொள்கை –

—————–

135–தஸ்யை தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ நாராயணஸ்ய -அபரிச்சேத்ய ஞான ஆனந்த அமலத்வ ஸ்வரூபவத் –
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜ ப்ரப்ருத்ய -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண வத் –
ஸ்வ சங்கல்ப ப்ரவர்த்ய –ஸ்வேதா ஸமஸ்த சிதசித் வஸ்து ஜாதவத்–
ஸ்வ அபிமத -ஸ்வ அநு ரூப -ஏக ரூப திவ்ய ரூப -ததுசித -நிரதிசய கல்யாண -விவித அநந்த பூஷண –
ஸ்வ சக்தி சத்ருச -அபரிமித -அனந்த -ஆச்சர்ய -நாநா வித ஆயுத –
ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப விபவ ஐஸ்வர்ய சீலாத்யா அநவதிக மஹிம மஹிஷி –
ஸ்வ அநு ரூப கல்யாண ஞான கிரியாத்ய அபரிமேய குண ஆனந்த பரிஜன பரிச்சத
ஸ்வ உசித நிகில போக்ய போக உபகரணாத் அனந்த மஹா விபவ –
அவாங் மனஸ் கோசர ஸ்வரூப ஸ்வபாவஸ் திவ்யாஸ்தாநாதி நித்யதா நிரவத்யதா கோசாராஸ் ச சஹஸ்ர ச ஸ்ருதய சந்தி

பர ப்ரஹ்மமான நாராயணனுடைய பண்புகள் செல்வம் முதலியன இங்கு சுருக்கித் தரப்படுகின்றனஅளவற்ற ஞானம் -ஆனந்தம் -தூய்மை உடைமைஞானம் -வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அண்டங்கள் யாவற்றிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் யாவற்றையும் ஒரு சேர அறிதல்சக்தி -கூடாதவற்றை கூட்டுவிக்கும் திறன்பலம் -ஆக்கி அளித்து அழித்தல் ஆகிய செயல்களை சிறிதும் வருந்தாது விளையாட்டாகச் செய்தல் ஐஸ்வர்யம் -அழியக்கூடிய இவ்வண்டங்களையும் அழிவே யற்ற பரமபதத்தையும் தன் செல்வமாக உடைமைவீர்யம் -யாவற்றினுள்ளும் நீக்கமற நிறைந்து இருந்தாலும் அவற்றின் தீக்குணங்கள் தன்னுடன் ஒட்டாது இருத்தல் தேஜஸ் -தனக்கு ஒரு துணை இன்றி தானே யாவற்றையும் செய்து முடிக்கும் திறன்மற்றையோருக்கு இந்த ஆறு குணங்கள் நிறைந்த பகவத் சப்தம் அடைமொழியாக மரியாதை நிமித்தமாகவே பயன்படுத்தப்படுகிறதுபரப்ருத்ய -ப்ரு -பாழ் -ப்ருத் -நுழைந்துள்ளமூலப் ப்ரக்ருதி என்னும் பாழை நிரப்புபவன் -சேதனப் பொருள்களாகவும் விளங்குவான்இத்தகைய எண்ணற்ற நற் பண்புகள் உடைமைசேதன அசேதன பொருட்கள் யாவற்றையும் படைத்தல்தன் மனத்துக்கு இசைந்து தனக்கு என்றும் துணையாய் இருக்கும் தெய்வத்தன்மை பொருந்திய திவ்ய மங்கள விக்ரஹமும் -அதற்கேற்ற நாநா வித அணிகலன்களும் தன் திறமைக்கு ஏற்ற பலவகையான வியப்பூட்டும் அளவற்ற படைக்கலன்களும் உடைமைதனக்கு என்றும் உடன்பாடாய் எப்பொழுதும் தனக்கு ஒத்த மனம் மொழி மெய்களால் குறைவற்ற பெருமை செல்வம் இவற்றையுடைய தேவிமார்களும்அளவற்ற நற் பண்புகள் ஞாநம் செயல் முதலியவற்றைப் பெற்று தன் விருப்பத்தை மனம் அறிந்து நடத்தும் பணியாளர்களையும் பெற்று இருத்தல்தன் விருப்பங்கள் யாவும் நிறைவேறப் பெற்றவனாயும் அதற்கு ஏற்ப பலவித விளையாட்டிடங்களை உடையவனாய் இருத்தல்மனதிற்கு எட்டாத அமைப்பை யுடைய அழிவு அறியாத குறையேதுமற்ற ஆயிரக் கணக்கான தெய்வத்தன்மை பொருந்திய இருப்பிடங்களை உடையவனாய் இருத்தல்ஆகியவை அவனுடைய சிறப்புக்கள் என வேதங்கள் ஒதுகின்றன –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத்
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவும் மஷிணீ

அறப் பெரியவனும் பகலவனை ஒத்த நிற ஒளி யுடையவனும் அஞ்ஞானம் சிறுதும் இல்லாதவனுமாக இருந்த புருஷனை அறிகிறேன்-எவன் ஸூர்யனின் உள்ளுறைபவனும் பொன்னிறம் கொண்டவனுமான புருஷனோ அவன் ஸூர்யனால் அலர்த்தப்பட்ட தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனாய் இருக்கிறான்
ச யே ஏஷ யந்திர் ஹ்ருதய ஆகாச தஸ்மிந் நயம் புருஷோ மநோ மய
அம்ருதோ ஹிரண்மய
மநோ மய–இதி மனசைவ விஸூத்தேந க்ருஹ்யதே இத்யர்த்த
சர்வே நிமேஷா ஜஜிரே

அந்த விஷ்ணுவின் பரமபதத்தில் நித்யர்கள் இடைவிடாது அவனைக் காண்கிறார்கள்ராஜஸ குணம் நிறைந்த ப்ரக்ருதிக்கு மேல் அவனுடைய இருப்பிடம் விளங்குகிறது -அவனுக்கு அழிவற்ற புதிய உலகெல்லாம் நிறைந்த கட் புலனாகாத உலகுகளுக்கு மேம்பட்ட உருவம் உள்ளதுஎவன் பரம ஆகாஸமான பரமபதத்தில் உள்ளவனை -ஹ்ருதயத்தில் குகையான தஹர ஆகாஸத்தில் விளங்குகிறவனை அறிகிறானோ அவன் பரமாத்மாவை அடைந்து அவனுடைய கல்யாண குணங்களில் திளைக்கிறான் -எதிர் நிகழ் கழிவு ஆகிய முக்காலங்களிலும் உலகுகள் பரமாத்மாவின் உடல் ஆகின்றன -அவன் பரமாகாசமான பரமபதத்தில் வசிக்கிறான்இப்படிப்பட்ட நூற்றுக் கணக்கான வேத வாக்யங்கள் அவனுடைய குணம் உருவம் இருப்பிடம் போன்றவற்றை விளக்குகின்றனஎந்தப் புருஷன் இதயத்தின் தஹர ஆகாசத்தில் உறைகிறானோ அவனே தூய்மையான மனத்தால் அறியப்படுபவன் -அவன் பொன்னிறமானவன் -அழிவற்றவன்இங்கு மநோ மயம் என்பது மிகத் தூய்மையான மனத்தால் மட்டும் அறியப்படக் கூடியவன் என்று பொருள்மின்னொளி படைத்த இப்புருஷன் காலங்கள் யாவற்றையும் பிறப்பிக்கிறான்

வித்யுத புருஷா ததி–வித்யுத் வர்ணாத் புருஷாதித்யர்த்த
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
மத்யஸ்த நீல தோயதா வித்யுல்லேகேவ சோயம் தஹர புண்டரீக மத்யஸ்தா ஆகாச வர்த்திநீ வஹ்நி சிகா –
ஸ்வ அனந்தர்நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபாதி இத்யர்த்த —
மநோ மய
பிராண சரீர
பா ரூப சத்ய காம ஸத்ய ஸங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்மா சர்வ காம சர்வ கந்த சர்வ ரஸ சர்வம் இதம் அம்யாத்தோ
அ வாக்ய அநாதா
மஹா ரஜனம் வாச இத்யாத்யா
அஸ்யே சாநா ஜகதோ விஷ்ணு பத்னீ
ஹ்ரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய –
ஷயம் அந்த மஸ்ய ரஜஸ பராகே
யதேகம் அவ்யக்தம் அனந்த ரூபம் விஸ்வம் புராணம் தமஸஸ் பரஸ்தாத்
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
யோ அஸ்யாத் யக்ஷய பரமே வ்யோமந்
ததேவ பூதம் ததுபவ்யமா இதம் தத் அக்ஷரே பரமே வ்யோமந்
இத்யாதி ஸ்ருதி சத நிஸ்ஸிதோ அயமர்த்த –

இதய கமலத்தில் உள்ள தஹர ஆகாசத்தில் விளங்கும் அக்னி ஜ்வாலையுள் நீல நிறமான பரமாத்மா விளங்குவதால் அது நீல மேகத்தைத் தன்னுள் கொண்ட மின்னல் போல் ஒளிர்கிறது
தூய மனத்தால் மட்டும் அறியத் தக்கவன் -உயிர்களைத் தனக்கு உடலாக உடையவன் -நன்கு ஒளிரும் அமரத் திருமேனி யுடையவன் –
தடைபடாத விருப்பங்களும் தடையற்ற செயல்பாடுகளும் யுடையவன் -நுண்ணியவன் -தானும் ஒளிர்ந்து மற்றைவற்றையும் ஒளி விடச்செய்யும் ஆகாசத்திற்கும் உள்ளுறைபவன் -உலகங்கள் யாவிலும் நடக்கும் செயல்களை நடத்துவிப்பவன் –
தானே எல்லா விருப்பங்களுமானவன் –உலகியலின் அழுக்கு கலவாத வாசனைகளையும் சுவைகளையும் யுடையவன் -எல்லாவற்thamathதனது செல்வமாக உடைமையால் பேச்சற்று இருப்பவன் -அவனுடைய அழகிய உருவம் மஞ்சள் வெண்மை இந்திரகோபப் பூச்சி போன்ற செந்நிறம்
அக்னி ஜ்வாலையின் வண்ணம் தாமரையின் நிறம் போன்ற வண்ணங்கள் பெற்று மின்னலை விஞ்சி ஒளிர்கிறது
அவனுக்கு உலகின் ஈஸ்வரியான விஷ்ணு பத்னி இருக்கிறாள் -பூமி தேவியும் இலக்குமியும் அவனுக்கு மனைவிகள் ஆகின்றனர்

—————-

136–தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி விஷ்ணோ -பரஸ்ய ப்ரஹ்மண-பரமம் பதம் -சதா பஸ்யந்தி ஸூரய -இதி வசநாத்
சர்வ கால தர்சனவந்த பரிபூர்ண ஞானா -கேசந சந்தி இதி ஞாயதே -யே ஸூரய –
தே சதா பஸ்யந்தி -இதி வசன வ்யக்தி யே சதாஸ் யந்தி தே ஸூரய -இதி வா -உபய பக்ஷப் யநேக விதாநம்
ந சம்பவதி இதி சேத் ந -அபிராப்தத்வாத் ஸர்வஸ்ய சர்வ விசிஷ்டம் பரமம் ஸ்தானம் விதீயதே-
யதோக்தம் –
தாது குணாஸ் து விதியேரந் அவி பாகாத் விதாநாத்தே ந சேதந்யேந சிஷ்டா இதி –
யதா யதாக்நேயோஷ்ட கபால -இத்யாதிக் கர்ம விதேந கர்மனோ குணா நாஞ்ச அப்ராத்வேந ஸ்வே குண விசிஷ்டம் கர்ம விதீயதே-
ததா அத்ராபி ஸூரிபி சதா த்ருஸ்யத்வேந விஷ்ணோ பர ஸ்தானம் பிராப்தம் ப்ரதிபாதயதி இதி ந கஸ்சித் விரோத —

தத் விஷ்ணோ பரமம் பதம் -என்பதால் பர ப்ரஹ்மமான விஷ்ணுவின் மேலான இடம்
சதா பஸ்யந்தி ஸூரய -என்கையால் -எல்லாக் காலங்களிலும் ஸேவித்துக் கொண்டு இருப்பவர்களாய் -குறைவற்ற ஞானமுடையவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள் என்பது பொருளாகிறது-
எவர்கள் நித்யர்களோ அவர்கள் எப்பொழுதும் சேவிக்கிறார்கள் என்று வாக்கியத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் -இல்லாவிடில் எவர்கள் எப்பொழுதும் சேவிக்கிறார்களோ அவர்கள் நித்யர்கள் என்றும் கொள்ளலாம் –
இவ்விறுவிதமாக பொருள் கொள்வதிலும் பல பொருட்களை ஒரே வாக்கியம் கூறுவதிலும் அநேக விதானம் என்ற குற்றம் ஏற்படாது -ஏன் எனில்
எப்பொழுதும் சேவிக்கிறவர்களான நித்யர்களைக் கொண்ட பரமபதம் -என்று நித்யர்கள் சேவித்தலை பரமபதத்துக்கு அடை ஆக்கிக் கொள்ளலாம்
பூர்வ மீமாம்ஸையிலும் ஒரே வாக்கியத்தில் ஒரு செயலையும் அதன் பல அங்கங்களையும் விவரித்து -அவை வேறு தொடர்புடைய வாக்கியங்களில் காணப்படாது இருந்தால் அதில் ஒன்றை மற்ற ஒன்றிற்கு அடை ஆக்கிக் கொள்ளலாம் -என விதித்து இருக்கிறது
எடுத்துக்காட்டாக -எட்டு பானை உடைவுகளில் யதாக்கனயோ அஷ்ட கபால மந்திரத்தில் அந்த பாகத் தேவதையான அக்னியை 1-எட்டு கபாலங்களில் -2- hமந்திரத்தோடு வைக்கப்பட்ட புரோடாசத்தை -3- அமாவாஸ்யை பவ்ர்ணமாவாஸ்யைகளில் 4- யாகம் செய்ய வேண்டும் என விதிக்கிறது
இதனால் பல பொருட்கள் ஒரே வாக்யத்தால் கிடைக்கிறது அவ்வாறே இங்கும் நித்யர்கள் இடைவிடாது நோக்கியவாறு விஷ்ணுவின் மேலான இடத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று ஆவதால் விதிகளுக்கு முரண்படவில்லை –

—————–

137–கரண மந்த்ரா க்ரியமானாநுவாதி ந -ஸ்தோத்ர சஸ்த்ர ரூபா -ஜபாதி ஷு வி நியுக்தாஸ் ச ஸ்வார்த்தம்
சர்வம் யதா வஸ்தித மேவ அபிராப்தம விருத்தம் ப்ராஹ்மணவது போத யந்தி இதிஹி வைதிகா ?
(பிரகீத மந்த்ர ஸாத்ய குணி நிஷ்ட குணா பிதாநம் -ஸ்தோத்ரம்
அப்ரகீத மந்த்ர ஸாத்ய குணி நிஷ்ட குணா பிதாநம் -சஸ்திரம்)
விநி யுக்தார்த்த பிரகாசிநாம் ச தேவதாதி ஷு அபிராப்த விருத்த குணவிரேஷா ப்ரதிபாதனம் விநியோகாநு குணமேவ

ஒரு செயலைக் கூறும் மந்திரங்கள் அச் செயலை அனுசரித்து -ஸ்தோத்திரம் சத்திரம் -என இருவகைப்படும் ஜபம் போன்றவற்றில் உபயோகிக்கப் பட்டு அவ்வவ்விடத்தில் சொல்லப்பட்டதாயும் மற்ற இடங்களில் சொல்லப்படாததாயும் -தன் pமுழுப்பொருளையும் உள்ளபடி காட்டி தேவையற்றதை விலக்கி தெளிவிப்பதும் சஸ்திரம் என வைதிகர்கள் கொள்கிறார்கள்
இசையுடன் மந்திரத்தின் தேவதையை வர்ணிப்பது ஸ்தோத்ரம் -இசையின்றி உரைநடையில் கூறுதல் சத்திரம் -யாகங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தேவதைகள் முரண்பாடற்று இருக்கும் பண்புகள் இவற்றை விளக்குதல் -விநியோக விதி -எனப்படுகிறது –

—————-

138—நேயம் ஸ்ருதி -முக்த ஜன விஷயா-தேஷாம் சதா தர்சன அநு பத்தே -நாபி முக்த ப்ரவாஹ விஷயா -சதா பஸ்யந்தி இத்யேகைக
கர்த்ரு விஷய தயா ப்ரதீதே -ஸ்ருதி பங்க பிரசங்காத் மந்த்ரார்த்த வாத கதா ஹ்யர்த்தா -கார்யபரேத்வே அபி சித்த யந்தி இத்யுக்தம் –
கிம் புந சித்த வஸ்துந்யேவ தாத்பரியே வ்யுத்பத்தி சித்தே இதி சர்வம் உப பந்நம் —

இந்த ஸ்ருதி முக்தர்களைப் பற்றியதல்ல -ஏன் எனில் அவர்களுக்கு எப்பொழுதும் ஸேவித்தல் ஏற்புடைத்தல்ல -அல்லது எப்பொழுதும் முக்தர்களால் தொடர்ந்து ஸேவிக்கப்பட்டுக் கொண்டிருத்தலும் அல்ல -எப்பொழுதும் பார்க்கிறார்கள் என்பதால் இடையீடின்றி நோக்குகிறார்கள் என்பதற்கு மாறுபடும் மந்த்ரங்கள் அர்த்த வாதங்களில் இருந்து ஒரு செயலுடன் தொடர்புடைய சொற்களையே அறிய முடியும் என்பது முன்னமேயே விளக்கப்பட்டு இருக்கிறது -இயற்கையாகவே அறியப்படும் -ஸித்த வஸ்துக்கள் -பொருள்களைச் செயல் வாக்கியங்கள் முடியாது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ –

—————-

139–நநு -சாத்ர–தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி பர ஸ்வரூபமேவ -பரமபத சப்தேந அபிதீயதே –
ஸமஸ்த ஹேய ரஹிதம் -விஷ்ண வாக்யம் பரம் பதம் -இத்யாதி ஷு அவ்யதிரேக தர்சநாத்

இங்கு பர நிலையே -தாழ்ச்சி ஏதுமற்ற விஷ்ணுவாகிய பரநிலை என்று விஷ்ணுவும் பரநிலையும் பிரிவின்றி ஒன்றாகவே படிக்கப்பட்டு இருக்கிறது -என்பீராயின்
மைவம் –
ஷயந்தமஸ்ய ரஜஸப் பராகே
தத் அக்ஷரே பரமே வ்யோமந்
யோஸ்யாத் யஷ பரமே வ்யோமந்
யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமந் –இத்யாதி ஷு பர ஸ்தானஸ்யைவ தர்சநாத்
விஷ்ணோ பரமம் பதம் -இதி வ்யாதிரேக நிர்த்தேசச் ச -விஷ்ண வாக்யம் பரமம் பதம் -இதி விசேஷணாத்
அந்யதாபி பரம் பதம் வித்யதே இதி தேநைவ ஞாயதே ததிதம் பர ஸ்தானம் ஸூரிபி -சதா த்ருச்யத்வேந ப்ரதிபாத்யதே –

அவ்வாறு அல்ல
ராஜஸ குணம் நிறைந்த உலகிற்கு மேற்பட்ட நிலையில் பரமபதத்தில் உள்ள அவன் -அழிவற்ற பரமாகாசத்தில் அவன் வகிக்கிறான் –
எவன் இதயக்குகையில் இருக்கும் பரமனை அறிகிறானோ அவன் பரமபதத்தை அடைகிறான் -என்று
அவன் வசிக்கும் இடம் விளக்கப்பட்டு இருப்பதால் விஷ்ணு பரமபதம் என்ற இரண்டும் தனித்தனியானவை என்று விளங்குகிறது –
விஷ்ணுவாகிய பரமம் பதம் என்பதால் அவ்வாறு மற்றொரு பரமபதம் இருக்கிறதா எனில் -இல்லை ஏன் எனில் வேறு எங்கணும் நித்யர்களால் பார்க்கப்படுத்தல் இல்லை

ஏதத் யுக்தம் பவதி –
க்வசித் பரம் ஸ்தானம் பரம பத சப்தேந ப்ரதிபாத்யதே –
க்வசித் ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபம் –
க்வசித் பகவத் ஸ்வரூபம் -தத் விஷ்ணோ பரம் இதி பர ஸ்தானம் –
சர்க்க ஸ்தித் யந்த காலேஷு த்ரி தேவம் ஸம்ப்ரவர்த்ததே -குண ப்ரவ்ருஸ்யா பரமம் பதம் தஸ்யா குண மஹத் –
இத் யத்ர ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபம் -ஸமஸ்த ஹேய குண ரஹிதம் விஷ்ண வாக்யம் பரமம் பதம் –
இத் யத்ர பகவத் ஸ்வரூபம் -தரீண்யாப்யேதாநி பரம ப்ராப்யத்வேந பரம பத சப்தேந ப்ரதிபாத யந்தே –

கதம் த்ரயாணாம் பரம ப்ராப்யத்வ மிதிசேத் -பகவத் ஸ்வரூபம் -பரம ப்ராப்யத்வாதேவ பரமம் பதம் இதர யோரபி –
பகவத் பிராப்தி கர்பத்வாதேவ பரம பதத்வம் -ஸ்வர்க்கம் பந்த விநிர்முக்த ஆத்ம ஸ்வரூபா வாப்தி –
பகவத் பிராப்தி கர்ப்ப இதி -த இமே சத்யா -காமா -அந்ருதா பிதாநா இதி பகவதோ குண கணஸ்ய
திரோதாயகத்வேந அந்ருத சப்தேந ஸ்வ கர்மண ப்ரதிபாதநாத் –

இதை விளக்குவோம்
சில இடங்களில் மேம்பட்ட இடம் என்று பரம என்ற சொல்லினால் சொல்லப்படுவதும் -சில இடங்களில் உலகின் நீங்கிய முக்தர்கள் உறையும் இடம் என்றும் சில இடங்களில் இறைவன் உருவம் என்றும் பொருள் படும் அந்த விஷ்ணுவின் பரமபதம் என்ற சிறந்த இடம் -மூன்று குணங்கள் அற்ற பிறப்பு -நிலை -முடிவு விடுபட்ட – ஜீவர்களின் உருவமும் பரமபதம் ஆகும் –
கடைசியாக எல்லாக் குற்றங்களில் நின்றும் நீங்கிய விஷ்ணுவினுடைய பரமம் பதம் என்னும் விஷ்ணு ஸ்வரூபம் என்று மூன்று வஸ்துக்களாகப் பரமபதம் விவரிக்கப் பட்டுள்ளது
இப்படி மூன்று படிப்பட்டு இருந்தாலும் இறை உருவம் எல்லாவற்றினும் மேலானது -அடையத் தக்கது -என்பதில் ஐயமில்லை -அந்த பரமபதத்தை அடைகையில் eஜவான் மிகத் தூய்மை யடைந்து தூய்மையான ஆத்ம நிலையை யடைந்து பின்னும் அவனோடு ஒத்த உருவத்தையும் அடைகிறான் –
ஆகவே இவை மூன்றும் ஒன்றாகவே அமையப்படுகின்றன
இதுவரை அவனுடைய திருக் கல்யாண குணங்கள் இவனுடைய வினைகளால் மறைக்கப்பட்டு இருந்தன என்று இவனது வினைகள் திரைகளாயின என்று கூறப்படுகிறது

அந்ருத ரூபா திரேதாநம் ஷேத்ரஞ்ஞ கர்மேதி கதம் அவகம்யதே இதி சேத்
அவித்யா கர்ம சம்ஞ்ஞா அந்யாத்ரி தீயா சக்திரிஷ்யதி
யயா ஷேத்ரஞ்ஞ சக்தி சாவேஷ்டிதா ந்ரூப சர்வகா
சம்சாரதாபாநகிலாந் அவாப்நோத் யதி சந்த தாந்
தயாதி ரோஹித த்வாச்ச–இத்யாதி ஸ்ரீ விஷ்ணு புராண வஸனாத்
பர ஸ்தான பிராப்திரபி பகவத் பிராப்திகமைவ இதி ஸூ வியக்தம் –

வினையால் ஏற்படும் இம் மறைப்பு ஆத்மாவிற்கு எப்படி ஏற்படுகிறது எனில் -வினையின் அடியாகப் பிறந்த அறியாமை மூன்றாவது சக்தியாகிறது -இதனால் பற்பல உடல்களில் உள்ள ஆத்மாக்களின் ஜீவ சக்தி மூடப்பட்டுள்ளது -இதனால் அவ்வுயிர்கள் பிறப்பு சிறப்புகளில் உழல்கின்றன என்ற ஸ்ரீ விஷ்ணு புராண வசனத்தின் படி பரமபதத்தைக் கிட்டிய பின் இத்திரை விலகுகிறது என்று தெளிவாகிறது-

ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே இதி ரஜஸ் சப்தேந த்ரி குணாத்மிகா ப்ரக்ருதி ருச்யதே -கேவல்ய ரஜசோநவ ஸ்தநாத் இமாம்
த்ரி குணாத் மிகாம் ப்ரக்ருதி மதிக்கரம்யா ஸ்திதேஸ்தாநீ ஷயந்தம்-வசந்தம் -இத்யர்த்த –
அநேந த்ரி குணாத் மகாத் ஷேத்ரஞ்ஞஸ்யா போக்ய போதாத் வஸ்துந -பரஸ்த்தாத் விஷ்ணோ வாச ஸ்தானம் இதி கம்யாதே

ரஜோ குணத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் அவனுடைய இடம் இருக்கிறது -என்று ரஜோ குணத்தால் முக்குணத் தொடர்பையும் காட்டி -அதை யுடைய பிரக்ருதியையும் காட்டி -இப்படி முக்குணத்தோடு வசிக்கும் ஜீவனைப் போல் அன்றி-அவற்றைக் கடந்து வசிப்பவன் என்று பொருள் படும் -அதனால் அந்த விஷ்ணுவின் இருப்பிடம் முக் குணமுடைய ஜீவனுடைய இருப்பிடத்தைக் காட்டிலும் வேறானது என்பது தெளிவு –
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத் -இத் யத்ராபி தமஸ் சப்தேந
சைவ ப்ரக்ருதி உச்யதே கேவலஸ்யத மச -அநவஸ்தாநா தேவ ரஜஸ பராகே ஷயந்தம்-இத்யநேந
ஏக வாக்யத்வாத்-தமஸ பரஸ்தாத் வசந்தம் ஆதித்ய வர்ணம் புருஷம் அஹம் வேத இதயயமர்த்த அவகம்யதே –

சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மா
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
தத் அஸ்ஹர் பரமே வ்யோமந்
இதி தத் ஸ்தானம் அதிகார ரூபம் பரம வ்யோம சப்தாபிதேயமிதி ச கம்யதே
அக்ஷரே பரமே வ்யோமந் –
இத்யஸ்ய ஸ்தானஸ்ய அக்ஷரத்வ ஸ்ரவணாத் ஷர ரூபா -ஆதித்ய மண்டலாதய-ந பரம வ்யோம சப்தாபிதேயா
யத்ர பூர்வே ஸாத்ய சாந்தி தேவா
யத்ருஷய பிரதம ஜாயே புராணா
இத்யாதி ஷு ச தா ஏவ ஸூரய இதி கம்யாதே
தத் விப்ராசோ வி பந்யவோ ஜாக்ரு வாம்ச சமிந்ததே விஷ்ணோர்யப் பரமம் பதம் –
இத்யத்ராபி விக்ராஸ மேதாவிந -விபந்யவ -ஸ்துதி ஸீலோ
ஜாக்ரு வாம் ச -அஸ் கலித ஞானா தா ஏவ அஸ் கலிதா ஞானா தத் விஷ்ணோ பரமம் பதம்
சதா ஸ்துவந்த ச பந்ததே -இத்யர்த்த –

ஸூர்ய ஒளி படைத்தவனாயும் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாயும் அழிவற்றவனாயும் இருக்கும் அப்புருஷனை நான் அறிகிறேன் -என்னும் இடத்தில்
தமஸ் என்னும் சொல்லால் பிரகிருதி கூறப்பட்டது ஏன் எனில் தமஸ் மட்டும் தனித்து எங்கும் இருப்பதில்லை
இந்த வாக்யத்துடன் ரஜஸ்ஸுக்கு மேற்பட்ட இடத்திலுள்ள வசிப்பிடம் என்பதும் ஒரே பொருளாகக் கொள்ளக் கூடியது
தமஸ்ஸுக்கு மேற்பட்ட இடத்தில் வசிக்கும் கதிரொளி படைத்த புருஷனை நான் அறிகிறேன் என்று பொருள் தெளிவாகிறது –

விகாரமற்ற தன்னொளி படைத்த அழிவற்ற ப்ரஹ்மம் என்று எவன் அறியப் படுகிறானோ அவன் பரமாகாசத்தில் மறைந்து வசிக்கிறான்
அழிவற்ற பரமாகாசம் என்று எல்லாம் அவ்வவ்விடங்களில் விகாரமற்ற பரமாகாசம் என்ற பதத்தாலும் குறிக்கப்படுகிறது –
அழிவற்ற பரமாகாசம் என்பதில் அழிவற்ற என்ற பதம் அடை கொண்டு இருப்பதால் அழியும் தன்மையுள்ள கட் புலனாகும் ஸூர்ய மண்டலம் பரமாகாசம் ஆகாது
எங்கு முன்னரே தேவர் அடைந்து வணங்குகிறார்களோ எங்கு முன்னரே ஞானிகள் இருக்கிறார்களோ என்பதனால் அவ்விடம் நித்யர்களால் அடையப்படுகிறது எனப் பொருள் அந்த மனத்தால் அறிந்து நிலை பெற்ற அறிவுடைய மேதைகள் இருந்து ஸ்தோத்தரித்துக் கொண்டிருக்கும் தடையற்ற ஞானமுடையவர்கள் கூடியிருக்கும் விஷ்ணுவின் பரமபதம் என்பதாலும் மேற்கண்ட பொருளே குறிக்கப்படுகிறது –
விப்ராஸ -மேதைகள்
விபன்ய வ -ஸ்தோத்தரிப்பவர்கள்
ஜாக்குவாரும் ஸ -தடையற்ற ஞானமுடையவர்கள் –
இவர்கள் தடையற்ற ஞானமுடையவர்களாய் அந்த விஷ்ணுவின் பரமபதத்தில் இடையறாது ஸ்தோத்தரிக்கிறார்கள் என்பது பொருள் –

——————

140–ஏதேஷாம் பரிஜன ஸ்தானதீநம்
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யத்ர ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண கணவத் பர ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர் பூதத்வாத் –
சதேவ –ஏகமேவ அத்விதீயம் –இதி பிரம்மா அந்தர் பாவ –அவகம்யதே-
ஏஷாம் அபி கல்யாண குணைக தேச தத்வாதேவ சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் -இத்யத்ர இதம் இதி சப்தஸ்ய
கர்ம வஸ்யா போக்த்ரு வர்க்க மிஸ்ர- தத் போக்ய பூத விக்ஷயத்வாச்ச- சதா பஸ்யந்தி ஸூரய-
இதி சதா தர்சித்வேந ச தேஷாம் கர்ம வஸ்யாநந்தர் பாவாத் -அபஹத பாப்மா –இத்யாதி அபி பாஸே இத்யந்தேந
ஸ்வ லீலோபகரண பூத த்ரிகுணாத்மகா ப்ரக்ருதி பிராகிருத ததஸ்ம்ஸ்ருஷ்ட புருஷ கதம் ஹேயா ஸ்வ பாவம்
சர்வம் ப்ரதிஷித்ய சத்யகாம -இத்ய நேந ஸ்வ போக்கிய போக உபகரண ஜாதஸ்ய ஸர்வஸ்ய நித்யதா ப்ரதிபாதிதா–

சத்யா காம யஸ்ய அ சவ்
சத்ய காம–காம் வந்தே –இதி காமா –தேந பரேண ப்ரஹ்மணா ஸ்வ போக்ய ததுபகரணாதய-ஸ்வாபிமதா -யேகாம் வந்தே –
தே சத்யா -நித்யா -இத்யர்த்த -அந் யஸ்ய லீலோபகரணஸ் யாபி வஸ்துந
பிராமண சம்பந்த யோக்யத்வே சத்யபி விகராஸ் பதத்வேநா -அஸ்திரத்வாத் தத் விபரீதம் ஸ்திரத்வம் ஏஷாம் ஸத்ய பதேந உச்யதே
ஸத்ய சங்கல்ப இதி ஏதேஷு போக்ய தத் உப கரணாது ஷு நித்யேஷு நிரதிசயேஷு ஆனந்தே ஷு சத்ஸ்வபி அபூர்வாணாம்
அபரிமிதானாம் அர்த்ததானாம் அபி சங்கல்ப மாத்ரேண சித்தம் வததி-
ஏஷாம் ச போக உபகரணாநாம் லீலா உபகரணாநாம் சேதநாநாம் அசேதநாநாம் ஸ்திராணாம் அஸ்திராணாம்
சதத் சங்கல்பாதயாத் ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி பேதாதி சர்வம் வததி ஸத்ய சங்கல்ப இதி –

இப்படிப்பட்ட குடி படைகளுடைய இருப்பிடங்கள் -சந்திரனை ஒத்த முகமுடையவனே -ஸ்வேதகேதுவே -முதலில் ஸத் ஆகவே இருந்தது -என்று ஞானம் பலம் ஐஸ்வர்யம் முதலான குணங்களைக் கொண்ட பர ப்ரஹ்மத்தில் உள் வைக்கப்பட்டு இருந்தது என்னும் பொருள் பட -ஒன்றே இருந்தது -இரண்டாவது இல்லை -என ப்ரஹ்மத்தில் ஒடுங்கி இருந்தது தெரிவிக்கப்பட்டது –
இங்கும் நற் குணங்கள் அனைத்திற்கும் இருப்பிடமாவது போல் ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் -என்பதில் இதம் கட் புலனாகிற வினைகளுக்கு ஏற்ப பலன் துய்ப்பதான உலகைக் காட்டி அதற்கு எதிர் தட்டாக ஞானிகள் எப்பொழுதும் பார்க்கிறார்கள் என்பது இடைவிடாது நோக்கல் என்பதால் அவர்கள் வினைகட்க்கு ஆட்பட்டவர்கள் அல்ல என்பதையும்
பாபங்கள் அற்ற தொடங்கி தாகமற்ற ஈறான தனது அலகிலா விளையாட்டிற்கு உறுப்பான முக் குணக் கலவையான உலகின் தாழ்ச்சி சிறிதும் தொடாத நிலையையும் விளக்கி –
ஸத்ய காம -என்று அவனுடைய துய்ப்பிடம் அதன் உறுப்புக்கள் ஆகியவற்றின் நித்யத்வம் அழிவின்மை சொல்லப்படுகிறது –
விரும்பும் பொருட்கள் அப்பரம் பொருளின் மகிழ்ச்சிக்கான பொருட்களும் -அதன் உறுப்புகளும் அவனது விருப்பத்திற்கு ஏற்ப அமைந்திருத்தல்
மேலும் அவை அழிவற்றவை -மாறு பாடு அற்றவை -மற்றவர்களின் விருப்பத்திற்கான பொருள்களின் நிலையாமைக்கு எதிர்த்தட்டாய் இருத்தல் என்பது ஸத்யம் என்னும் பதத்தால் விளக்கப் படுகிறது –

இப்படிப்பட்ட மனமகிழ் பொருள்களை அழிவற்றையாகவும் -எல்லையற்றவவையாயும் -எண்ணில் அடங்காமலும் இதுவரை இல்லாதவையாகவும் பற்பல பெயருடையதாகவும் தனது எண்ணத்தினாலேயே படைத்துக் கொள்ளும் திறமை கூறப்படுகிறது
இந்த நுகர் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளுமான சேதன அசேதனப் பொருட்கள் நிலைத்து இருப்பவை அளிப்பவை யாவும் தனது எண்ணத்தினாலேயே படைத்து காத்து அழிக்கும் திறமையால் அழிவற்ற வினைத்திடபம் உடையவன் எனப்படுகிறான் –

——————-

141—இதிஹாச புராணயோ வேத உப ப்ரும்ஹண யோஸ்ச அயமர்த்த உச்யதே
தவ்து மேதாவினவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரிநிஷ்டிதவ் வேத உப ப்ரும்ஹணதயா பிரார்ப்பதே
ஸ்ரீ ராமாயணே
வ்யக்தமேஷ மஹா யோகி பரமாத்மா சனாதன அநாதிமத்ய நிதந மஹத பரமோ மஹான்
தமசப் பரமோ தாதா சங்க சக்ர கதா தர -ஸ்ரீ வத்ச வஷாஸ் நித்ய ஸூரி அஜய்ய சாஸ்வதோ த்ருவ-என்றும்

சரா நாநாவிதாஸ் சாபி தனுராயத விக்ரஹம் -அந்வகச் சந்த காகுத்ஸ்த்தம் சர்வே புருஷ விக்ரஹா –
விவேச வைஷ்ணவம் தாம ச சரீர சஹானுக –ஸ்ரீ மத் வைஷ்ணவே புராணே –
சமஸ்தா சக்த்யஸ் சைதா ந்ருப யத் ப்ரதிஷ்டிதா–தத் விஸ்வ ரூபா வை ரூப்யம் ரூபமந் யத்தரேர் மஹத் –
மூர்த்தம் ப்ரஹ்ம மஹா பாக -சர்வ ப்ரஹ்ம மயோஹரி –
நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அந பாயிநி
யதா சர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம
தேவத்வே தேவ தேவோயம் மனுஷ்யத்வே ச மானுஷீ –
விஷ்ணோ தேஹானு ரூபாம்வை கரோத்யேஷா ஆத்மநஸ் தனும்-
ஏகாந்தின சதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகிநோ ஹியே –
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யதவை பஸ்யந்தி ஸூரய —
கலா முஹுர்த்தாதி மயஸ் ச கால -நயத்விபூதே பரிணாம ஹேது

மஹா பாரதே ச
திவ்யம் ஸ்தாநம் அஜாம் சா ப்ரமேயம் துர் விஜ்ஜேயம் சாகமைர்கம்ய மாத்யம்
கச்ச ப்ரபோ ரக்ஷ சாஸ்மாந் ப்ரபந்நான் கல்பே கல்பே ஜாயமான ஸ்வ மூர்த்யா –
காலஸ் சபசயதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -இதி –

இப் பொருள் வேதத்தை விளக்க வந்த -உப ப்ரும்ஹணங்களான -இதிஹாசங்களிலும் புராணங்களிலும் விளக்கப்பட்டுள்ளது
வேதங்களில் நன்கு தேர்ந்தவர்களான -மேதைகளான -அவ் விருவர் -லவ குசர் -களையும் கண்டு வேதங்களில் உட் கருத்தை விளக்கும் பொருட்டு -ஸ்ரீ ஸீதா ராம சரிதங்களை -விரிவாகப் பாடினார்கள் -பலகாண்டம் -4-6-
வேதம் மற்றும் உப ப்ரும்ஹணத்தின் ஆரம்பம் என்பது ஸ்ரீ ராமாயணம் –
இந்த ஸ்ரீ ராமன் பெரிய யோகியாய் -பரம் பொருளாய் -என்றும் இருப்பவராய் -முதல் நடு முடிவு அற்றவராய் -பெரியவை யாவற்றிலும் பெரியவரானவர் –
மூலப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானவர் -தாங்குபவர் சங்கு சக்கரம் இவற்றைத் தரித்தவர் – ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவையும் இணை பிரியாத மஹா லஷ்மியையும் திரு மார்பில் உடையவர் –
வெல்ல முடியாதவர் விகாரமற்றவர் நிலையானவர் -யுத்த காண்டம் –114-தனி ஸ்லோகம்
பலவிதமான அம்புகளும் வில்லும் உருக் கொண்டு
மஹா புருஷனான ககுத்ஸ்தனை பின் தொடர்ந்தன -உத்தர காண்டம்
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -பத்த முக்த சேதனர்களின் சக்தி -அசேதனப் பொருட்களின் சக்தி வினைப்பயன் ஆகிய சக்திகள் யாவும் எவருடைய திரு மேனியில் நிலை பெற்று இருக்கின்றனவோ அத்திருவுரு மற்றவர்களின் நின்றும் வேறு பட்டதாயும் – உலகியல் தொடர்பு அற்றதாயும் -மிகப் பெரியதாகவும் உள்ளது
அந்த உருவுடைய ப்ரஹ்ம்ம் எல்லா ஜீவன்களையும் தனது உடலாகக் கொண்டது -என்றென்றும் இருப்பவளும் உலகிற்கு எல்லாம் தாயானவளும் ஆகிய ஸ்ரீ அவனை விட்டு ஒரு பொழுதும் பிரிவதில்லை -அவனைப் போல் எங்கும் வியாபித்து உள்ளாள் -அவன் தேவனாக அவதரித்தால் இவளும் தேவ உடலுடனும் மனிதனாகில் மனித உடலுடனும் அவன் எடுக்கும் அவதாரங்களுக்கு ஏற்ப தானும் அவதரிக்கிறான்
ஒரே மனமுடையவர்களும் யோகிகளும் இடைவிடாது ப்ரஹ்மத்தைத் த்யானித்துக் கொண்டு அந்த மேலான ஸ்தானத்தில் எப்பொழுதும் அவனையே -கண் அமையாது -நோக்கிக் கொண்டு இருக்கின்றனர்
கலை முஹூர்த்தம் என்னும் கால அளவைகள் அவனுடைய ஏவலுக்கு உட்பட்டவை
பரமபதத்தில் அவைகளுக்கு இருப்பு இல்லை -அவை மாறு பாட்டிற்குக் காரணமாகின்றன -அவை இவ்வுலகில் மட்டுமே உண்டு
மஹா பாரதத்திலும் -இறைத் தன்மை பெற்றதும் மூப்பற்றதும் பிரமாண நூல்களால் அறிதற்கு அரியதுமான அந்த மேலான உலகிற்குச் செல்வீராக -எங்களைக் காப்பதற்குக் கல்பம் தோறும் அவதரிப்பீராக -இவ்வுலகில் பொருட்களை மாறுதல் அடைவிக்கும் -காலத்திற்கு அங்கு பரம பதத்தில் -எந்த சக்தியும் கிடையாது -என்றும் கூறப்பட்டு இருக்கிறது –

———————–

142–பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபவத்வம் ஸூத்ரகாரச் ச வததி
அந்தஸ் தத் தர்மோபதே ஸாத்-1-1-21-இதி
யோ அசாவாதித்ய மண்டலாந்தர் வர்த்தி தப்தகார்த்த -ஸ்வர கிரிவரப்ரப —
சஹஸ்ராம் ஸூ சத சஹஸ்ர கிரண
கம்பீராம்ப ஸமுத்பூத -ஸ்ம்ருஷ்ட நாள ரவி கர விகசித புண்டரீக தல -அமலாய தேஷண-
ஸூப்ரூ லலாட –
ஸூ நாஸ-
ஸூஸ்பிதாதர வித்ரும ஸூ ருசிர கோமல கண்ட கம்புக்ரீவ
சமுந் நதாம் ச விலம்பி ஸூ ரூப திவ்ய கர்ணகி சலய
பீந விருத்தாயத புஜ சாருதர ஆதாரம்ர கரதலானு ரக்தாங்கு லிபி -அலங்க்ருத –
தனு மத்யே விசால வக்ஷஸ்தல சமா வி பக்த சர்வாங்க அநிர்தேஸ்ய திவ்ய ரூப சம்ஹ நத-
ஸ் நிக்த வர்ண-பிரபுத்த புண்டரீக சாரூ சரண யுகள -ஸ்வ அநு ரூப பீதாம்பரதர
அமல கிரீட குண்டல ஹார கௌஸ்துப கேயூர கடக நூபுரோதர பந்தநாத் யபரிமித ஆச்சர்ய அனந்த திவ்ய பூஷண
சங்க சக்ர கதா சி சார்ங்க ஸ்ரீ வத்ச வனமாலா அலங்க்ருத அநவதிக அதிசய ஸுவ்ந்தர்யாஹ்ருத
அசேஷ மாநோ த்ருஷ்ட்டி வ்ருத்தி லாவண்யாம் ருதபூரித அசேஷ சராசர பூத ஜாத
அத்யத் புதாசிந்த்ய நித்ய யவ்வன -புஷப ஹாஸ ஸூ குமார புண்ய கந்த வாசித அநந்ததி கந்த ரால
த்ரை லோக்யாக்ரமண ப்ரவ்ருத்த கம்பீர பாவ கருணானுராக மதுர லோசந அவலோகிதாஸ்ரித வர்க்க –
புருஷவரோ தரீத் ருஸ்யதே —

ச ச நிகில ஜகத் உதய விபவ லய லீல நிரஸ்த ஸமஸ்த ஹேய ஸமஸ்த கல்யாண குண நிதி –
ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண பரமாத்மா பரம் ப்ரஹ்ம நாராயண இத்யவகம்யதே
தத் தர்மோபதேசாத்
ச ஏஷ ஸர்வேஷாம் லோகாநாம் ஈச-ஸர்வேஷாம் காமாநாம்
ச ஏஷ சர்வேப்ய பாப் மப்ய உதித-இத்யாதி தர்சநாத்
தஸ்யை தே குணா ?
சர்வஸ்யா வசீ சர்வஸ்யேசாந
அபஹத பாப்மா விஜர–இத்யாதி ஸத்யஸங்கல்ப இத்யந்தம்
விஸ்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம்
பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் -இத்யாதி வாக்யப் பிரதி பாதித–

பர ப்ரஹ்மத்தின் உருவத்தை ஸூத்ர காரரும் விவரிக்கிறார்
அந்தஸ் தர்மோபதேஸாத் –1-1-21—ஸூர்யனுக்கு உள்ளே இருப்பவன் -அந்த பரமாத்மாவிற்கே உரிய தன்மைகளைக் கொண்டு இருக்கிறான்
ஸூர்ய மண்டலத்தில் இருப்பவன் எவன் எனில் -உருக்கி வார்த்த பொன் மலையின் ஒளி படைத்தவன் -நூறாயிரம் ஸூர்ய ஒளி படைத்தவன் -ஆழமான நீர் நிரம்பிய தடாகத்தில் பருத்த தண்டுள்ள -ஸூர்யனால் மலர்விக்கப்பட்ட பெரிய தாமரை மலரின் இதழ் போன்ற தூய்மையான கண்கள் உடையவன் –
அழகிய புருவமுடைய நெற்றி -கூரிய மூக்கு -புன்னகை புரியும் பவளம் போன்ற இதழ்கள் -அழகிய மென்மையான கன்னங்கள் -சங்கை ஒத்த கழுத்து -உயர்ந்த தோள்கள் வரை தொங்கும் தளிர் போன்ற காதுகள் பருத்து உருண்டு நீண்ட தோள்கள் -மிக அழகிய விரல்களால் அலங்கரிக்கப் பட்ட கைகள் அழகிய இடை பரந்த மார்பு ஒத்த அளவுள்ள அவயவங்கள் -விவரிக்க இயலாத தெய்விக உரு ஒளி சிந்தும் வண்ணம் நன்கு மலர்ந்த தாமரை போன்ற திருவடிகள் -அவனுக்கே பொருந்தும் மஞ்சள் நிறப் பட்டாடை தூய்மையான தலைமுடி -குண்டலம் மாலை தோள்வளை -வளைகள் காற் சதங்கை -ஒட்டியாணம்-அளவிறந்த பற்பல அழகிய அணி கலன்கள்-சங்கு சக்கரம் கதை வாள் கௌஸ்துபம் வனமாலை இவைகளால் அலங்கரிக்கப்பட்டு -உயர்ந்த எழிலுடன் தன் அவயவங்களால் எல்லாருடைய பார்வைகளையும் கொள்ளை கொள்பவன்
இவ் வெழில் அழகால் நிறைக்கப்பட்டு சேதன அசேதனப் பொருட்களின் மனங்களை நிறைப்பவன் -மிக அற்புதமான மனத்திற்கு எட்டாத அழிவற்ற இளமையுடைய அன்று அலர்ந்த பூவின் மென்மையுடைய -தன் மணத்தால் திசைகள் யாவையும் நிரப்பும் மணமுடையவன் -மூன்று உலகங்களையும் நிறைக்கும் கம்பீரம் உடையவன் -இரக்கம் அன்பு இனிமை நிரம்பிய பார்வைகளால் அடியார் கூட்டத்தைப் பார்ப்பவன் -ஆண் ஏறு -ஸூர்ய மண்டலத்தினு காணப்படுகிறான் –

அவனே உலகுகளை ஆக்கி அளித்து அழித்துச் செய்யும் விளையாட்டுடையவன் -குற்றங்கள் அற்றவன் -நற் குணங்களின் குவை -மற்றப் பொருட்கள் யாவற்றன் நின்றும் வேறுபட்டவன் -பரமாத்மா பர ப்ரஹ்மம் நாராயணன் -என்று அறுதிப்படுகிறது –

இப்பண்புகளால் குறிக்கப் படுபவன்-அவனே எல்லா உலகிற்கும் ஈசன் -எல்லா விருப்பங்களையும் அளிப்பவன் -எல்லோருடைய பாபங்களையும் நீக்குபவன் -என்று காட்டப்படுகிறது –

இப்படிப்பட்ட இயல்புகள் உடையவன் -எல்லோரையும் தன் வசப்படுத்துவோன் -uயாவர்க்கும் ஈசன் -குற்றங்கள் -பாபங்கள் சிறிதும் அற்றவன் -மூப்பின்மை முதல் எண் குணங்கள் -உண்மையான வினைத்திட்பம் உடைமை ஈறான குணங்கள் -உலகுகட்க்கு மேலானவனாய் அழிவற்ற பெரியனான நாராயணன் -ஹரி -உலகுகள் யாவற்றிற்கும் தலைவனாய் அவற்றின் உட் புகுந்து நியமித்து அவற்றைத் தனது உடைமைகளாக உடையவன் என்று படு வாக்யங்களால் சொல்லப்படவோன் நாராயணனே –

————-

143–வாக்ய காராஸ் சைதது ஸூ ஸ்பஷ்டமாஹ-
ஹிரண்மய புருஷோத்ருச்யதே இதி -ப்ராஞ்ஞ சர்வ அந்தரஸ்யாத் -லோக காமே சோபதேசாத் ததோதயாத் பாப்மநாம் இத்யாதிந —

வேத ரிஷியும் இதைத் தெளிவாக விளக்குகிறார் -பொன் நிறமான புருஷன் காணப்படுகிறான் -விதி என்னும் சிறந்த ஞானமுடைய இந்த எம்பெருமான் யாவற்றிலும் உள் நிறைந்து இருக்கிறான் -உலகம் அனைத்துக்கும் விருப்பங்களை நிறைவேற்றுகிறான் -அவன் பாபங்கள் அற்றவன் -என்றும் கூறியிருக்கிறார் –
தஸ்ய ரூபஸ்ய அநித்யதாதி வாக்ய காரேனைவ ப்ரதிஷித்தம்
ஸ்யாத் ரூபம் க்ருதக மனுக்ரஹார்த்தம் தச்சேதாநாநாம் ஐஸ்வர்யாத்-இதி உபாசிது–
அநு க்ரஹாரத்தை பரம புருஷஸ்ய ரூப ஸங்க்ரஹ -இதி பூர்வ பக்ஷம் க்ருத்வா -ரூபம் வா அதீந்த்ரிய மந்தகரண ப்ரத்யக்ஷம்
தந் நிர்தேசாத் -இதி யதா ஞானதயா-பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூப தயா நிர்தேசாத் ஸ்வரூப பூதா குணா –
ததா இதமபி ரூபம் ஸ்ருத்யா ஸ்வரூபதயா நிர்தேசாத் ஸ்வரூப பூதம் இத்யர்த்தா —

இப்படிப்பட்ட அவனுடைய உருவம் அழியக்கூடியது என்பதை வேத ரிஷியே -வாக்யகாரரே -மறுத்திருக்கிறார் -அவ் வுருவம் தன்னுடைய உபாஸகர்களை மகிழ்விப்பaதற்காக அவனால் -அந்த எம்பெருமானால் எடுத்துக் கொள்ளப் பட்டது -என்னும் முற் கூற்றிற்கு அவ்வுரு பொறிகளுக்கு எட்டாதது-என்று கூறி -ஞானத்தால் மட்டும் இப்படிப்பட்ட உரு இன்னோரன்ன குணங்கள் என்று அறுதியிட்டு இவ்விதமாகவே மறைகளில் விளக்கப்பட்டு இருக்கிற உருவமுள்ளது என்று பொருள்

பாஷ்யகாரேண ஏதத் வ்யாக்யாதம்
அஞ்ஞசைவ விஸ்வ ஸ்ருஜா ரூபம் -தத்து ந சஷுஷா க்ராஹ்யம் -மனசா த்வக் கலுஷேன சாதனாந்தரவதா க்ருஹ்யதே –
ந சஷுஷா க்ருஹ்யதே -நாபி வாசா மனசாது விஸூத்தேந -இதி ஸ்ருதே-
நஹி அ ரூபாயா தேவதாயா ரூபம் உபதிஸ்யதே-யதா பூதவாதி ஹி சாஸ்திரம் –
மஹா ரஜனம் வாச –
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்-ஆதித்ய வர்ணம் தமசப் பரஸ் ஸாத் -இதி ப்ரகாரனாந்தர நிர்தேசாஸ் ச ஸாக்ஷிண-இத்யாதிநா —

உரையாசிரியரும் இதை விளக்குகிறார்உண்மையான உலகுகளைப் படைக்கும் அவனுடைய உருவம் மாயா ஜாலமல்ல -அது கட் புலனாகாது -நன்கு கற்று உணர்ந்த மனத்தால் மட்டுமே அறியப்படுகிறது -கண்ணால் காண முடியாதது -வாக்கினாலும் அறிய முடியாதது -தூய்மையான மனத்தால் மட்டும் அறியப்படும் -என்று மறையும் கூறுகிறது -இல்லாத தேவதைக்கு ஸாஸ்த்ரம் உருவத்தை விவரிக்கிறது என்பது தவறு -இல்லாத ஒன்றை ஸாஸ்த்ரம் எப்பொழுதும் கூறுவதில்லை -வண்ண ஆடையை அணிந்து இருப்பவன் -ப்ரக்ருதிக்கு மேற்பட்ட ஸூர்யனின் ஒளியுடைய அந்த புருஷனை மஹான்கள் இவ்வாறு அறிகிறார்கள் என்று பலவிடங்களில் அவனுடைய உருவுடைமை அறுதியிடப் பட்டிருப்பதே சாட்சிகள் ஆகும்
ஹிரண்ய மய –
இதி ரூப சாமான்யான் சந்த்ர முகவத் -நம யத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே -அநாரப் யத்வாதாத் மந-இதி –
யதா ஞானாதி கல்யாண குண அனந்த்ய நிர்தேசாத் அபரிமித கல்யாண குண விசிஷ்டம் பரம ப்ரஹமேத் யாவகம்யதே –
ஏவம் -ஆதித்ய வர்ணம் -புருஷம் -இத்யாதி நிர்தேசாத்
ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப கல்யாண தம ரூப -பர ப்ரஹ்ம பூத -புருஷோத்தமோ -நாராயண இதி ஞாயதே –
ததா அஸ்யேசாந –
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
சதா பஸ்யந்தி ஸூரய
தமசப் பரஸ்தாத்
ஷயந்தம் அஸ்ய ரஜஸப் பராகே —
இத்யாதிநா பத்னி பரிஜன ஸ்தானாதீநம் நிர்தேசா தேவததை வசந்தீத் யவகம் யதே –
யதாஹ பாஷ்யகார
யதா பூதவாதி ஹி சாஸ்திரம்

தங்க மயமான -என்பதில் மயம் -என்பது தங்கத்தாலானது என்று குறிப்பிடாது -மாறாக மதிமுகம் என்பதிலுள்ளது போல் சிறந்த ஒளி என்பதற்கு உவமிக்கப் பட்டு இருக்கிறது –
ஞானம் முதலிய நற் குணங்களால் அளவற்றது என்று அறுதியிடப் படுவதால் அளவற்ற நற் குணங்களுடையது பர ப்ரஹ்மம் என்று வேதம் அறிவிக்கிறது -அவ்வாறே ஸூர்யனின் ஒளி -புருஷம் -என்று விளக்கி -அந்த உருவம் பர ப்ரஹ்மம் தனது விருப்பத்திற்கு என்றே கொள்ளப்பட்ட நற் குணங்களே நிறைந்த புருஷோத்தமனான நாராயணனின் உருவம் என்றும்-அவனே ஈசன் இலக்குமியை மனைவியாக உடையவன் -சான்றோர்கள் இவனை இடையறாது பார்க்கிறார்கள்
தமஸ்ஸுக்கு மேற்பட்டவன் ரஜஸ்ஸுக்கு மேற்பட்ட இடத்தில் வசிப்பவன் என்றெல்லாம் மனைவி பரிவாரங்கள் போன்றவற்றையும் அறுதியிட்டு அவனது உருவுடைமையை உறுதி செய்கின்றன -உரை யாசிரியரும் முன்பு கூறப்பட்ட உருவுடைமையையே ஸாஸ்த்ரம் வலியுறுத்துகிறது -என்றார்

இதி ஏதத் யுக்தம் பவதி–யதா
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -இதி நிர்தேசாத் பரமாத்ம ஸ்வரூபம்-ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீக –
அநவதிக அனந்தைக தாநதயா அபரிச்சேதயதயா ச சகல இதர விலக்ஷணம் ததா
யஸ் சர்வஞ்ஞ சர்வவித்
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே
ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச
தமேவ பாந்த மதுபாதி சர்வம் தஸ்ய பாஸா சர்வம் இதம் விபாதி –
இத்யாதி நிர்தேசாத் நிரதிசய அசங்க்யேயாஸ் ச குணா சகல இதர விலக்ஷணா –
ததா ஆதித்ய வர்ணம் -இத்யாதி நிர்தேசாத்
ரூப பரிஜன ஸ்தாநாதயஸ் ச சகல இதர விலக்ஷண ஸ்வ அசாதாரணா அநிர்தேஸ்ய ஸ்வரூபம் ரூபஸ்வ பாவா இதி –

இதை இவ்வாறு விளக்கலாம்
எப்படி மாறுபாடாற்ற அழிவற்ற ஞானம் ப்ரஹ்மம் என்று அதனுடைய -திவ்யாத்ம ஸ்வரூபத்துடைய -தெய்விக ஆன்ம நிலை எல்லாத் தீய குணங்களுக்கும் எதிர்த் தட்டாய் விளங்குவது போலவே அளவற்ற ஆனந்தமுடைமை அளவின்மை -எல்லா நற் குணங்களும் பொருந்தி மற்றவர்களின் நின்றும் வேறுபட்டு இருத்தல் அவ்வாறே எல்லாம் அறிதல் எல்லாவற்றிக்கும் காரணமாதல் இயல்பாகவே அவனுடைய திறன் ஏனையவைகளுடைய அவற்றினின் நின்றும் மேம்பட்ட அறிவு செயல் இவற்றில் விளங்குகிறது என்று அறுதி இடப் படுகிறதோ அவ்வாறே அவனது தெய்விகத் திருமேனி ஸூர்யன் போன்ற வண்ணம் முதலியவற்றால் மற்றவைகளின் நின்றும் வேறு பட்டு அவனுக்கே உரித்தாய்-இன்னது என்று வரையறுக்க முடியாததாய் இருக்கும் –

———–

144–வேதா பிரமாணம் சேத் வித்யர்த்த வாத மந்த்ர கதம்
சர்வம் அபூர்வம் அவிருத்தம் அர்த்த ஜாதம் யதா வஸ்திதமேவ போதயந்தி
ப்ராமாண்யம் ச வேதாநாம்
ஒவ்த்பத்தி கஸ்தி சப்தஸ்யார்த்தேந சம்பந்த -இத்யுக்தம் ததா
அக்னி ஜலாதீநாம் ஓவ்ஷ்ண்யாதி சக்தி யோக ஸ்வாபாவிக- யதா ச சஷுராதீநாம் இந்த்ரியானாம் புத்தி விசேஷ
ஜனன சக்தி ஸ்வாபாவிகி ததா சப்தஸ் யாபி போதகத்வ சக்தி ஸ்வாபாவிகீ –

ந ச ஹஸ்த சேஷ்டாதிவது சங்கேத மூலம்-சப்தஸ்ய போதகத்வம் இதி வக்தும் சக்யம்
அநாத்யநுசந்தான விச்சேதேபி சங்கேதயித்ரு புருஷா ஞானாத் யாநி சங்கேத மூலாநி தானி சர்வானி சாஷாத்வா
பரம் பரயாவா ஞாயந்தே –

வேதங்கள் பிரமாணம் எனக் கொண்டால் விதி அர்த்தவாதம் மந்த்ரம் இவற்றால் விளக்கப்படும் புதிய பொருள்கள் நாம் கண்களால் காண்பது முதலான உய்த்துணரும் பொருள்களுக்கு மாறுபாடின்றி இருக்குமேயாகில் அவையும் கொள்ளத் தக்கவையேஏன் எனில்வேதங்கள் எப்பொழுதும் உண்மையான பொருள்களைத் விளக்கும் -அது அவ்வாறு இருந்தால் தான் உண்மையாகும் -அப்படியே தீ நீர் முதலியவற்றுக்கு வெப்பம் முதலியவை இயற்கையாக இருப்பது போல் கண் முதலான புலன்களுக்கு இயற்கையாகவே தன்னுடன் தொடர்புடைய பொருட்களுடைய நிலையை அறிவுறுத்தல் இயற்கையாகும்மேலும் கைச்செய்கை குறியீட்டு மூலமும் ஒரு பொருளை விளக்கும் திறன் உள்ளது -அவ்வாறே நெடு நாட்களாக வழக்கில் இருக்கும் சொற்களுக்கும் அதனதன் பொருளைத் தெரிவிக்கும் ஆற்றல் உண்டு
ந ச தேவ தத்தாதி சப்தவத் கல்பயிதும் யுக்தம் -தேஷு ச சாஷாத் வா பரம்பரயா வா ஸங்கேதோ ஞாயதே –
கவாதி சப்தாநாம் து அநாத் யநுஸந்தான விச்சேத அபி ஸங்கேதா ஞானாதேவ போதகதவை சக்தி ஸ்வாபாவிகீ —

அத -அக்னீயாதீநாம் ஓவ்ஷ்னாதி சக்திவத் இந்த்ரியானாம் போதகத்வ சக்தி வச்ச சப்தஸ் யாபி போதகத்வ சக்தி -ஆச்ரயணீயா

தொடர்ந்து தேவதத்தன் போன்ற பெயரைக் குறிக்கும் சொற்கள் நெடுநாளாக வழி வழியாக ஒரு குறிப்பிட்ட பெயராகவே வழங்கப்பட்டு வருகின்றன -அவ்வாறே பசு முதலிய சொற்கள் வழக்கில் ஒரு குறிப்பிட்ட பொருளையே சுட்டிக் காட்டுகின்றன-அதனால் தீக்கு வெப்பம் புலன்களுக்கு தத்தம் அறிவு போன்று சொற்களுக்கும் பொருளை அறிவித்த்ல் தன்னடையே உண்டு என்றே கொள்ள வேண்டும்
ந னு ச
இந்த்ரியவத்-சப்தஸ் யாபி போதகத்வம் ஸ்வா பாவிகம் சம்பந்த கிரஹணம் போதகத்வாய கிமதி அபேக்ஷதே ?
லிங்க வத் இத்யுச்யதே-
யதா ஞாத ஸம்பந்த நியம் தூமாதி அக்னியாதி விஞ்ஞான ஜனகம்-
ததா ஞாத ஸம்பந்த நியம சப்தோபி அர்த்த விசேஷ புத்தி ஜனக –
ஏவம் தர்ஹி சப்தோபி அர்த்த விசேஷஸ்யா லிங்க மிதி அனுமானமேவ ஸ்யாத் -நைவம் சப்தார்த்தயோ –
ஸம்பந்த போத்ய போதக பாவ ஏவ தூமாதீநா து சம்பந்தாந்தரமிதி –
தஸ்ய ஸம்பந்தஸ்ய ஞான த்வாரேண புத்தி ஜனகத்வமிதி விசேஷ
ஏவம் க்ருஹீத சம்பந்தஸ்ய போதகத்வ தர்ஸனாத் அனாதி யநுசந்தான விச்சேதே பி ஸங்கேதா
ஞானாத் போதகத்வ சக்தி ரேவேதி நிஸ்ஸீயதே —

தொடர்ந்து தேவதத்தன் போன்ற பெயரைக் குறிக்கும் சொற்கள் நெடுநாளாக வழி வழியாக ஒரு குறிப்பிட்ட பெயராகவே வழங்கப்பட்டு வருகின்றன -அவ்வாறே பசு முதலிய சொற்கள் வழக்கில் ஒரு குறிப்பிட்ட பொருளையே சுட்டிக் காட்டுகின்றன-
அதனால் தீக்கு வெப்பம் புலன்களுக்கு தத்தம் அறிவு போன்று சொற்களுக்கும் பொருளை அறிவித்தல் தன்னடையே உண்டு என்றே கொள்ள வேண்டும்

———

145–ஏவம் போதகாநம் -பத சங்காதாநாம் சம்சர்க்க-விசேஷ போதகத்வேந-வாக்ய சப்தாபிதேயநாம் உச்சாரண க்ரமோ
யத்ர புருஷ புத்தி பூர்வக
தே பவ்ருஷேயா –சப்தா இத் யுச்யந்தே -யத்ர து உச்சாரண க்ரம பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார பூர்வக
ஸர்வதா அபவ்ருஷேயா தே ச வேதா இத் யுச்யந்தே-
ஏததேவ வேதாநாம் அபவ்ருஷே யத்வம் நித்யத்வம் ச யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்காரேண
தமேவ க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யா மாணத்வம் –

பொருள் கூறல் -சொற்களின் கட்டமைப்பு -பொருள் தொடர்பு -சொல்லப்படும் முறை -இவைகளால் சிறப்புடையது -ஒருவரால் அமைக்கப்படும் வாக்யம் உச்சரிப்பு முறை முன்னோர் வழியாக வழங்கி வருதல் -ஒருவரால் இயற்றப்படாமை -எப்பொழுதும் ஒரு புருஷனால் ஆக்கப்படாது இருத்தல் போன்ற சிறப்புடையவை வேதங்கள் எனப்படுகின்றன –

இவ்வாறு வேதங்கள் ஒரு மனிதரால் ஆக்கப் படாமையும் -என்றும் நிலையாக இருத்தலும் -முன்னோர் சொன்ன முறை தவறாமல் கேட்டு உச்சரித்தல் -மாறாத சொற் கட்டமைப்பு போன்ற நியமங்களுக்கு உட்பட்டே கற்கப்படுவன
தேச ஆனு பூர்வ விசேஷேண ஸம்ஸ்திதா அக்ஷர ராசயோ வேதா -ரிக் யஜுஸ் சாம அதர்வ பேத பிந்நா –
அநந்தாஸ் சாகா வர்தந்தே-தேச வித்யர்த்தவாத மந்த்ர ரூபா வேதா பர ப்ரஹ்ம பூத நாராயண ஸ்வரூபம்
தத் ஆராதனபிரகாரம் ஆராதிதாத் பல விசேஷம் ச போதயந்தி
பரம புருஷவத் தத் ஸ்வரூப தத் ஆராதந -தத் பல ஞாபக வேதாக்ய சப்த ஜாதம் நித்யமேவ –
வேதாநாம் அந்நதத்வாத் துரவகாஹத் வாச்ச பரம புருஷ நியுக்தா பரமர்ஷய கல்பே கல்பே நிகில ஜகத் உபகாரார்த்தம்
வேதார்த்தம் ஸ்ம்ருத்வா வித்யர்த்தவாத மந்த்ர மூலாநி தர்ம சாஸ்த்ராணி இதிஹாச புராணாநி ச சக்ரு
லௌகிகாச்ச சப்தா வேதராசே உத்ருத்யைவ தத் தத் அர்த்த விசேஷ நாம தயா
பூர்வ வத் ப்ரயுக்தா பாரம்பர்யேண ப்ரயுஜ்யந்தே —

நநுச வைதிகா ஏவ சர்வே வாசகா சப்தாஸ் சேத் -சந்தஸ்யேவம் பாஷாயாமேவம் -இதி லக்ஷண பேத கதம் உப்பத்யதே
உச்யதே தேஷாமேவ சப்தாநாம் தஸ்யாமேவ ஆநு பூர்வ்யாம் வர்த்தமாநாநாம் ததைவ பிரயோக
அந் யத்ர ப்ரயுச்யமாநா நாமந்யதேதி நகஸ் சித்தோஷ–

அவைகள் இச்சிறப்பினால் முதலில் இருந்தபடியே உள்ளன -ருக் யஜுஸ் ஸாம அதர்வண என்ற பிரிவுகளோடு எண்ணிறந்த கிளைகளை உடையவனாய் விளங்குகின்றன -அவைகள் விதி அர்த்தவாதம் மந்திரம் ஆகிய வடிவில் இருக்கின்றன -அவைகள் பரப் ப்ரஹ்மமான நாராயணனின் தெய்விக ஆன்ம நிலை -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -தெய்வீகத் திருமேனி -திவ்ய மங்கள விக்ரஹம் -அவற்றை ஆராதிக்கும் முறை அதனால் கிடைக்கும் பலன் இவற்றை அறிவுறுத்துகின்றன –

பரம புருஷன் -பெருமாள் -அவன் நிலை அவனுடைய ஆராதனம் – அதன் பலன் இவைகளை விளக்கும் வேதச் சொற்களின் கூட்டம் என்றும் அழியாதவை

வேதங்கள் அளவற்றவையாகவும் ஸுலபமாகப் பொருள் கொள்ள அரியவையாகவும் -பரம புருஷனால் செய்யப்பட்டதாகவும் -ரிஷிகளால் காணப்பட்டதாயும் -கல்பங்கள் தோறும் உலகு அனைத்திற்கும் நலன் கருதி நினைக்கப்பட்டு விதி அர்த்தவாதம் மந்திரம் மூலமாகவும் தர்ம ஸாஸ்ரங்களாயும் இதிஹாஸ புராணங்களாகவும் செய்யப்படுகின்றன

உலகியல் சொற்கள் வேதச் சொற்களில் இருந்தும் எடுக்கப்பட்டு அதன் பொருள் சிறப்பால் முன்பு போல பரம்பரையாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன –
அவ்வாறு எனில் சொற்கள் யாவும் வேதச் சொற்களா எனில் -இல்லை -தன் வரிசை ஒழுங்கு மாறாதது வேதம் உலகியல் மொழி அவ்வாறு அல்லாதது என்று வேறு படுத்தப் படுகிறது -ஆனால் சொற்களின் பொருள்களில் சிறிதே வேறுlபாடுள்ளது என்று இலக்கண நூலில் விளக்கப் பட்டுள்ளது -ஆகவே அச் சொற்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை –

——–

146–ஏவம் இதிஹாச புராண தர்ம சாஸ்த்ர உப ப்ரும்ஹித சாங்க வேத வேத்ய-பர ப்ரஹ்ம பூத நாராயண –
நிகில ஹேய ப்ரத்ய நீக -சகல இதர விலக்ஷண –
அபரிச்சின்ன நாநாந்தைக ஸ்வரூப -ஸ்வாபாவிக அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குணாகர-
ஸ்வ சங்கல்ப அநுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேத-சிதசித் வஸ்து ஜாத அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ –
அனந்த மஹா விபூதி நாநாவித அனந்த சேதந அசேதநாத்மக பிரபஞ்ச லீலோபகரண இதி ப்ரதிபாதிதம்

புருஷனால் செய்யப்பட்டதாகவும் -ரிஷிகளால் காணப்பட்டதாயும் -கல்பங்கள் தோறும் உலகு அனைத்திற்கும் நலன் கருதி நினைக்கப்பட்டு விதி அர்த்தவாதம் மந்திரம் மூலமாகவும் தர்ம ஸாஸ்ரங்களாயும் இதிஹாஸ புராணங்களாகவும் செய்யப்படுகின்றன

உலகியல் சொற்கள் வேதச் சொற்களில் இருந்தும் எடுக்கப்பட்டு அதன் பொருள் சிறப்பால் முன்பு போல பரம்பரையாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன –
அவ்வாறு எனில் சொற்கள் யாவும் வேதச் சொற்களா எனில் -இல்லை -தன் வரிசை ஒழுங்கு மாறாதது வேதம் உலகியல் மொழி அவ்வாறு அல்லாதது என்று வேறு படுத்தப் படுகிறது -ஆனால் சொற்களின் பொருள்களில் சிறிதே வேறுlபாடுள்ளது என்று இலக்கண நூலில் விளக்கப் பட்டுள்ளது -ஆகவே அச் சொற்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை –

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
ஐததாத்ம்யம் இதம் சர்வம்
தத்வமஸி ஸ்வேத கேதோ
ஏநமேக வதந்யக்நிம் மாருதோந்யா பிரஜா பதிம்
இந்திரமேகே பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம்
ஜ்யோதிம்ஷி ஸூக்லாநி ச யாநி லோகே த்ரயோ லோகா லோக பாலா த்ரயீ ச
த்ரயோக்நயஸ் சாஹு தயஸ் ச பஞ்ச சர்வே தேவா தேவகீ புத்ர ஏவ
த்வம் யஜ்ஞ த்வம் வஷட்கார த்வம் வ ஓங்கார -பரந்தப
ரிததாமா வஸூ -பூர்வ வஸூநாம் த்வம் பிரஜாபதி –
ஜகாத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வஸூதா தலம்
அக்னி கோப பிரசாதஸ் தே ஸோம
ஸ்ரீ வத்ச லக்ஷண
ஜ்யோதீம் ஷி விஷ்ணு புவநா நி விஷ்ணு வநாநி விஷ்ணு
கிரயோதிசாஸ் ச நத்ய சமுத்ராஸ் ச ச ஏவ சர்வம் யதஸ்தியந் நாஸ்தி ச விப்ரவர்ய –இத்யாதி
சாமாநாதி கரண்ய பிரயோகேஷு சர்வை சப்தை -சர்வ சரீர தயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபிதீயதே இதி ச யுக்தம் –

இவை யாவும் ப்ரஹ்மத்தால் செய்யப்பட்டவை- இவையாவும் அவனை ஆத்மாவாக உடையது
நீயும் -ஸ்வேத கேதுவே -அதுவே -சில இடங்களில் வேதத்தில் இவனை அக்னி என்றும் காற்று என்றும் -உயிர்களுக்குத் தலைவன் என்றும்
இந்திரன் என்றும்
உயிர் என்றும்
நிலையான ப்ரஹ்மம் என்றும் கூறுகின்றன –
உபநிஷத்தில் -இவ்வுலகில் ஒளிரும் மூன்று ஒளிகளும் மூன்று லோக பாலகர்களும் மூன்று வேதங்களும் முத்தீயும் ஐந்து ஆஹுதிகளும் தேவர்கள் அனைவரும் தேவகியின் மகனே
கூடாரை வெல்லும் நீரே யஜ்ஜம்-வஷட்காரம் ஓங்காரம் யாவும் ஆகிறீர்-உலகின் தலைவர் என்பவர்களான வஸூ க்களில் ருததாமா என்பவர் ஆகிறீர்
உலகு அனைத்துக்கும் உமக்கு உடல் -இங்கு நிலைத்து இருப்பவை யாவும் உமக்கு அடிமை -உமது சினம் தீ ஆகிறது -மகிழ்ச்சி ஸ்ரீ வத்ஸம் போன்ற மறு மறுவுடைய சந்த்ர ஆகிறது -ஒளிகள் யாவும் உலகுகள் யாவும் வனங்கள் யாவும் மலைகள் யாவும் விஷ்ணுவே நதிகளும் கடலும்-இருப்பவை இல்லாதவை யாவும்விஷ்ணுவே -என அந்தணரின் சிறந்தவரே அறிவீராக –
இவ்வாறு ஸாமாநாதி கரணத்தால் பொருட்கள் யாவையும் சொற்கள் யாவையும் தனக்கு அடிமைப்பட்ட- பிரிவற்ற உடலாக ப்ரஹ்மம் கொண்டுள்ளது என்பதையே விளக்குகிறது -எனக் கொள்வதே சரியான பொருட்கோளாகும் –

ஸத்ய ஸங்கல்பம் பரம் ப்ரஹ்ம ஸ்வயமேவ
பஹு பிரகாரம் ஸ்யாம் –இதி சங்கல்ப்ய அசித் சமஷ்டி ரூப மஹாபூத ஸூஷ்மம் வஸ்து போக்த்ரு வர்க்க ஸமூஹம்
ச ஸ்வஸ்மிந் ப்ரலீநம் ஸ்வயமேவ விபஜ்ய-தஸ்மாத் பூத ஸூஷ்மாத் வஸ்துந மஹா பூதாநி ஸ்ருஷ்ட்வா தேஷு
போக்த்ரு வர்க்கமாத்ம தயா பிரவேஸ்ய-தை-சித் அதிஷ்டிதை–மஹா பூதை-அந்யோந்ய ஸம்ஸ்ருஷ்டை –
க்ருத்ஸ்னம் ஜகத் விதாய-ஸ்வயமபி ஸர்வஸ்ய ஆத்ம தயா பிரவிஸ்ய பரமாத்மத்வேந அவஸ்திதம்
சர்வ சரீரம் பஹு பிரகாரம் அதிஷ்டதே –
யதிதம் மஹா பூத ஸூஷ்மம் வஸ்து -ததேவ ப்ரக்ருதி சப்தேந அபிதீயதே -போக்த்ரு வர்க்க ஸமூஹ ஏவ புருஷ சப்தேந உச்யதே
தவ் ச பிரகிருதி -புருஷவ் பரமாத்ம சரீர தயா பரமாத்ம பிரகார பூதவ் தத் பிரகார -பரமாத்மவை ப்ரக்ருதி புருஷ சப்தாபிதேய
சோ காம யத பஹுஸ் யாம் பிரஜா யேயேதி –தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிசத்–
தத் அநு பிரவிஸ்ய –சச்ச த்யச்சா பவத்
நிருக்தஞ்சா நிருக்தஞ்ச நிலயனஞ்ச அநிலயனஞ்ச விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச சத்யஞ்சா ந்ருதம் ச சத்யம் அபவது –
இதி பூர்வ யுக்தம் சர்வம் அநயைவ ஸ்ருத்யா வ்யக்தம் –

நினைத்தவைகளைச் சாதிக்க வல்ல பர ப்ரஹ்மம் தானே பலவாக ஆகக் கடவேன் என எண்ணி அசேதனப் பொருள்களின் மூலப்பிரக்ருதித் திரளும் சேதனக் கூட்டங்களையம் தன்னிடம் லயித்து இருந்த கட் புலனாகாத நிலையின் நின்றும் பிரித்து -பஞ்ச மஹா பூதங்களையும் ஐந்தொழில் முறையால் கலந்து அதனால் உலகில் காணப்படும் அசேதனப் பொருட்களைப் படைத்து-ஆத்மாவை அவைகளின் வினைக்கு ஏற்ப அவற்றுள் புக விட்டு தானும் அவையவையிலும் உள்ளுயிராகப் புகுந்து நிலைத்து இருப்பதால் இவ்வுலகு அவனுக்கு உடலாகிறது –

இங்கு மஹா பூதம் என்னும் சொல் மூலப் பிரக்ருதி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது -புருஷன் அல்லது ஆத்மா -போக்த்ரு வர்க்க ஸமூஹம் -நுகர்வோரின் திரள் என்ற பொருளில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது –
அதனால் ப்ரக்ருதி புருஷர்கள் பரமாத்மாவின் உடலாய் -அவனிடமிருந்து பிரிந்த நிலை அற்றவர்களாய் உள்ளனர்
என்பதால் பரமாத்மாவும் அச் சொற்களால் காட்டப்படுகிறான் -அவன் படைக்க விரும்பினான் -பல உயிர்களாக ஆனான் – அவன் படைத்தான் அவன் உயிர்களை நுழைப்பித்தான் -தானும் நுழைந்தான் உயிர் உள்ளதாகவும் அல்லாதாகவும் ஆனான் -சுட்டிக் காட்டப் படுவதும் அல்லாததுமாக ஆனான் -தாங்கப்படுவதும் தாங்குவோனாகவும் ஆனான் -அறிவுள்ளதும் அல்லாததுமாக ஆனான் -மாறுபாடு அற்றதாகவும் aமாறுபாடு உடையதாகவும் ஆனான் -தான் மாறுபாடு அடையாது இருந்தான் -என்ற
மறை வாக்கியங்கள் முன்பு கூறிய அனைத்தையும் அறுதியிடுகின்றன

ஸோகாமயத -ஸ -அகாம -அதி -அவன் படைக்க விரும்பினான்
ஸச்ச த்யச்ச அபவது -ஜீவனுள்ளதும் அல்லதுமாக ஆனான்
ஸத்யம் -விகாரமடையாத ஆத்மா
அன்ருதம் -ஒரே நிலையற்ற உடல்

——–

147–ப்ரஹ்ம ப்ராப்த் யுபாயஸ் ச
சாஸ்த்ராதி கத -தத்வ ஞான பூர்வக -ஸ்வ கர்ம அநு க்ரஹீத -பக்தி நிஷ்டா ஸாத்ய
அநவதிக அதிசய ப்ரிய விசததம ப்ரத்யக்ஷதா பந்ந -அநு த்யான ரூப -பர பக்தி ரேவ இத் யுக்தம் –
பக்தி சப்தஸ் ச ப்ரீதி விசேஷே வர்த்ததே -ப்ரீதிஸ் ச ஞான விசேஷ ஏவ —

நநு ச ஸூகம் ப்ரீதி–இத்ய நர்த்தாந்தரம்–ஸூகம் ச ஞான விசேஷ ஸாத்யம் பதார்த்தாந்தரம் இதி லௌகிகா–
நைவம் யேந ஞான விசேஷேண தத் ஸாத்யம் இத் யுச்யதே -ச ஏவ ஞான விசேஷ ஸூகம் –

ப்ரஹ்மத்தை அடையும் நெறி –ஸாஸ்த்ரங்களைக் கற்று அதனடியாகப் பிறந்த ஞானத்தால் தன் கடைமைகளைச் சரிவரச் செய்து -பக்தி மேலீட்டால் கிடைக்கும் எல்லையற்ற அன்பினால் மிகத் தெளிந்து நேரேயே காண்பது போன்று மனத்தின் இடையறா நினைவு பரபக்தி எனப்படும்
பக்தி எனும் சொல் சிறந்த அன்பு -காதல் -என்பதைக் குறிக்கும்-அன்பு என்பது மனத்தின் அறிவின் சிறப்பே

மாறாக இன்பம் விருப்பம் என்னும் சொற்களை ஒன்றாகக் கொள்ளலாம் -இங்கு இன்பம் என்பது மனத்தின் நிலையால் மட்டும் அறியப்படுவது என்பது உலகியலில் காணலாம் -அப்படிப்பட்ட அறிவினால் ஏற்படுiம் இன்ப நிலையே ஸுகம் –

ஏதத் யுக்தம் பவதி
விஷய ஞானாநி ஸூக துக்க மத்யஸ்த சாதாரணாநி தாநி ச விஷயாதீநா விசேஷாணி ததா பவந்தி –
யேந விஷய விசேஷேண விசேஷிதம் ஞானம் ஸூகஸ்யா –ஜனகம் இத்யபிமதம் –
தத் விஷய ஞான மேவ ஸூகம் -தத் இதிரேகி பதார்த்தந்தரம் நோப லப்யதே –
தேநைவ ஸூகித்வ வ்யவஹாரோப பத்தேஸ் ச –

ஏவம் வித ஸூக ரூப ஞானஸ்யா விசேஷ கத்வம் -ப்ரஹ்ம -வ்யதிரிக்தஸ்ய வஸ்து ந சாதிசயம் அஸ்திரம் –
சப்ரஹ்மணஸ் து அநவதிக அதிசயம் ஸ்திரம் ச இதி ஆனந்தே ப்ரஹ்ம -இத் யுச்யதே
விஷயா யத் தத்வத் ஞானஸ்ய ஸூக ரூப தயா ப்ரஹ்ம ஏவ ஸூகம்-

ததிதமாஹ
ரஸோவை ச -ரசம் ஹ்யே வாயம் லப்த்வாநந்தீ பவதி -இதி ப்ரஹ்ம ஏவ ஸூகம் இதி ப்ரஹ்ம லப்த்வா ஸூகீ பவதீத் யர்த்த –
பரம புருஷ ஸ்வேநைவ ஸ்வம் அநவதிக அதிசய ஸூகஸ் சந் -பரஸ்யாபி ஸூகம் பவதி ஸூக ரூபாத்வா விசேஷாத்
ப்ரஹ்ம யஸ்ய ஞான விஷயோ பவதி ச ஸூகீ பவதி இத்யர்த்த —

ததேவம் பரஸ்ய ப்ரஹ்மண
அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரஸ்ய நிரவத்யஸ்ய அனந்த மஹா விபூதே
அநவதிக அதிசய ஸுவ்சீல்ய வாத்சல்ய ஸுவ்ந்தர்ய ஜலதே சர்வ சேஷித்வாத் ஆத்மந –
சேஷத்வாத் பிரதிசம்பந்தி தயா அநு சந்தீயமானம் அநவதிக அதிசய ப்ரீதி விஷயம்
சத் பரம் ப்ரஹ்ம ஏவ ஏந மாத்மாநம் ப்ராபயதி–இதி –

இதை விளக்குவோம் -பொருள்களால் கிடைக்கும் அறிவு மகிழ்ச்சி துயரம்
இரண்டுக்கும் இடைப்பட்டது
இரண்டும் அற்றது -என்று பிரிக்கப் படுகிறது –
அது அப்பொருட்களின் நிலையைப் பொறுத்து மனத்தில் ஏற்படும் உணர்வு –
எந்தப் பொருளால் மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அப்பொருள் மேல் விருப்பமும் பிறக்கிறது -அந்த விருப்பமே இன்பமாகிறது
இப்படி யல்லாத பொருட்கள் மேல் விருப்பம் ஏற்படுவதில்லை -மேற் கூறியது போன்று மனத்திற்கு கிடைக்கும் இன்பமே ஒருவரை மகிழ்ச்சி யடைந்தவர் எனக் கூறக் காரணமாகிறது –
இவ்வாறு மகிழ்ச்சி தரும் பொருட்கள் என்று வேறுபடுத்திப் பார்க்கும் அறிவுத் திறத்தால் ப்ரஹ்மத்தைத் தவிர்த்த மற்றப் பொருட்கள் அளவுபட்டதாயும் -நிலையற்றதாயும் இருத்தலால் ப்ரஹ்மம் ஒன்றே எல்லையற்ற இன்பமுடையதாயும் நிலையாயும் இருப்பதால் அதைப் பற்றிய மறை மொழிகளும் -ஆனந்தே ப்ரஹ்மம் என்று முடிக்கின்றன –
பொருளைப் பொறுத்து மகிழ்ச்சி அமைவதால் ப்ரஹ்மம் ஒன்றே மகிழ்வு தருவது என்பது முடிவு –
அது எவ்வாறு எனில்
அவன் -ப்ரஹ்மம் -இனிமையானவர் -இவன் -ஜீவன் -அந்த இனிமையை அறிந்து ஆனந்தம் அடைகிறான் -இதனால் ப்ரஹ்மமே இனிமை என்பதும் -அதை அடைதலே ஆனந்தம் என்றும் பெறப்படுகிறது
எம்பெருமான் தன்னடையே எல்லையற்ற ஆனந்தமுடையவன் -ஆதலால் பிறர்க்கும் சுவையன் -அவன் அவ்வாறு இருப்பதால் அவனைத் தன் மனத்தால் அறிபவன் நீங்காத ஆனந்தம் அடைகிறான் –
அந்த ப்ரஹ்மம் -எல்லையற்று நற் குணங்களின் கடலாக இருப்பதாலும் குறைகள் ஏதும் அற்றவனாய் இருப்பதாலும் -அளவற்ற செல்வம் உடையவனாய் இருத்தலாலும் -இவ்வுலகுகள் அனைத்தையும் எல்லையற்ற நீர்மை அன்பு அழகு இவற்றின் கடலாக இருப்பதாலும் எல்லாவற்றையும் அடிமை கொள்வோனாகவும் உயிர்கள் யாவையும் அவனுக்கு தன்னடையே அடிமைகளாய் இருத்தலாலும் உள்ள பரஸ்பரத் தொடர்பினால் அவனே எப்பொழுதும் நினைக்கத் தக்கவன் -அவனே எல்லையற்ற மகிழ்ச்சிக்கும் பொருளானவன் -அந்த பர ப்ரஹ்மத்தையே இந்த ஆத்மா அடைய வேண்டும் -அவனே இவனால் ஜீவாத்மாவால் அடையத் தக்கவன்

———–

148—நநுஸ–அத்யந்த சேஷதைவ ஆத்மந -அநவதிக அதிசயம் ஸூகம் இத் யுக்தம் பவதி -ததே தத் சர்வ லோக விருத்தம் –
ததாஹி-
ஸர்வேஷாமேவ சேதநாநாம் ஸ்வா தந்தர்யமேவ இஷ்ட தமம் த்ருச்யதே -பாரதந்தர்யம் துக்கதாம் ஸ்ம்ருதிஸ் ச –
சர்வம் பரவசம் துக்கம் சர்வாத்மா வசம் ஸூகம் -ததாச- சேவா ஸ்வ வ்ருத்தி -ராக்யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜ யேத் -இதி –

திரு அணுக்கத் தொண்டனாய் இருத்தலே ஆத்மாவிற்கு எல்லையற்ற மகிழ்ச்சி என்பது உலகியலுக்கு மாறுபாடானது -அவ்வாறே உலகிலுள்ள உயிர்கள் யாவற்றுற்கும் அவைகள் ஸூதந்திரமாக இருத்தலே மிக விருப்பமாகக் காணப்படுகிறது பிறருக்கு அடிமைப்பட்டு இருத்தல் மிகத் துயரமாகவே இருக்கிறது -மறைகளிலும் -யாவருக்கும் பிறருக்கு வசப்பட்டு இருத்தல் துயரம் -தனக்கு மட்டுமே வசப்பட்டு இருத்தல் இன்பம் என்றும் பிறருக்கு அடிமை நாய்த் தொழில் ஒத்தது -அதை விலக்க வேண்டும் -என்றும் கூறப்பட்டு இருக்கிறது
ததிதம்-அநவதிக -தேஹாதிரிக்தாத்ம ஸ்வரூபாநாம் சரீராத்ம அபிமான விஜ்ரும்பிதம் –
ததாஹி
சரீரம் ஹி மனுஷ்யத்வாதி ஜாதி குணாஸ்ரய பிண்ட பூதம் ஸ்வ தந்திரம் பிரதீயதே -தஸ்மிந்நேவ –
அஹம் – இதி ஸம்ஸாரிணாம் ப்ரதீதி -ஆத்ம அபிமாநோ யாத்ருச-தத் அநு குண ஏனைவ புருஷார்த்த ப்ரதீதி –
ஸிம்ஹ வ்யாக்ர வராஹ மனுஷ்ய யஷ ரக்ஷ பிசாசா தேவ தாநவ ஸ்தீரி பும்ஸ வ்யவஸ்தித ஆத்ம அபிமாநாநாம்
ஸூகாநி வ்யவஸ்திதாநி தாநிச பரஸ்பர விருத்தாநி தஸ்மாத் ஆத்ம அபிமாந அநு குண
புருஷார்த்த வியவஸ்த்தயா சர்வம் ஸமாஹிதம் —
ஆத்ம ஸ்வரூபம் து தேவாதி தேஹ விலக்ஷணம் ஞான ஏக ஆகாரம் -தச்ச பர சேஷதைக ஸ்வரூபம் –
யதா வஸ்திதாத்ம அபிமாநே தத் அநு குண ஏவ புருஷார்த்த ப்ரதீதி -ஆத்மா ஞான மய அமல-இதி ஸ்ம்ருதே–
ஞான ஏக ஆகாரதா பிரதிபந்நா –
பதிம் விஸ்வஸ்ய-இத்யாதி ஸ்ருதி கணை பரமாத்ம சேஷதைக ஆகாரதயா ச ப்ரதிபாதிதா–
அத ஸிம்ஹ வ்யாக்ராதி சரீர ஆத்ம அபிமானவத் ஸ்வா தந்தர்ய அபிமாநோபி
கர்ம க்ருத விபரீத ஆத்ம ஞான ரூபோ வேதி தவ்ய —

உடலினின்றும் வேறுபட்ட உயிரை உணராதவர்கள் -உடலே உயிர் என்று மயங்குவோருக்கே இப்படிப்பட்ட எண்ணம் தோன்றும்
இக்கருத்தப் படி சுதந்திரம் என்பது மனிதர் முதலிய இனங்களுக்கு உரிய தன்மை போன்ற பண்புகளையும் -சதைப்பிண்டம் ஆகிற உடலையும் -தான் என்று நினைத்தால் -இவ்விதம் நினைப்பவர்கள் அதற்கு ஏற்ப இலக்குகளை அடைய முயல்கின்றனர்
சிங்கம் புலி பன்றி மனிதர் யக்ஷர் ராக்ஷஸர் பிசாசர் போன்ற வேறுபாடுகளையும் -அதில் ஆண் பெண் போன்ற வேறுபாடுகளையும் -உடையவர்களாய் -அவ்வுடலையே ஆத்மா என்று எண்ணி இருப்பவர்களுடைய இன்பம் அளவுபட்டது
இதுவும் ஒன்றுக்கு ஓன்று மாறுபட்டதாகவும் இருக்கிறது -அது அந்தவந்த ஆத்மாவின் எண்ணத்திற்கு ஏற்ப அமைகிறது -ஆகவே ஸுகம் துக்கம் என்பவை தானாக ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உணர்வே –
ஆத்மாவின் உண்மையான நிலை தேவர்கள் முதலிய உடல்களின் நின்றும் மாறுபட்டது -ஞானமே வடிவெடுத்தது -அது பரன் ஒருவனுக்கே அடிமைப்பட்டது -இம்மெய்யறிவு பெற்றோர் அதற்கு ஏற்ப இலக்கை அடைகிறார்கள் -ஆத்மா குற்ற மற்ற ஞான வடிவானவன் -என்று மறை ஓதுகிறது –
ஆத்gnaanaஞான வடிவினனாகக் குறிப்பிடும் -உலகின் தனிப்பெரும் தலைவன் போன்ற வேத வாக்கியங்கள் அது பரமாத்மாவின் தொண்டனாக ஆத்மா இருத்தலையும் அறுதியிடுகின்றன
சிங்கம் புலி முதலிய உடலை ஆத்மா எனக் கொள்ளுவோர் அந்தந்த ஆத்மாவின் வினையடியாக அதற்கு ஒவ்வாத நிலைகளை அடைகிறார்கள் –

அத -கர்ம க்ருத மேவ பரம புருஷ வ்யதிரிக்த விஷயானாம் ஸூகத்வம் -அத ஏவ தேஷாம் அல்பத்வம்-அஸ்திரத்வம் –
ச பரம புருஷஸ் யைவ ஸ்வத ஏவ ஸூகத்வம் -அத ததேவ ஸ்திரம் -அநவதிக அதிசயம் ச –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம —
ஆனந்தோ ப்ரஹ்ம –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –இதி ஸ்ருதே–
ப்ரஹ்ம வியதிரிக்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வஸ்துந ஸ்வரூபேண ஸூகத்வாபாவ –
கர்ம க்ருதத்வேந ச அஸ்திரத்வம் பாகவதர் பாராசரேண யுக்தம் –

நரக ஸ்வர்க்க சம்ஜே வை பாப் புண்யே த்விஜோத்தம –
வஸ்த்வேகமேவ துக்காய ஸூகாயேர்ஷ் யாகமாய ச கோபாய ச யதஸ் தஸ்மாத் வஸ்து வஸ்வாத்பகம் க்ருதா
ஸூக துக்காத் யேகாந்த ரூபேண வஸ்துனோ வஸ்துத்வம் குத ?
ததே காந்ததா புண்ய பாபா க்ருதேத்யர்த்த–
ஏவம் அநேக புருஷ அபேக்ஷயா கஸ்யஸித் துக்கம் பவதி இத் யவஸ்தாம் ப்ரதிபாத்ய ஏகஸ்மின்நபி புருஷே நவ்ய வஸ்தித மித்யாஹ
ததேவ ப்ரீதயே பூத்வா புந துக்காய ஜாயதே
ததேவ கோபாய தத் ப்ரஸாதாய ச ஜாயதே
தஸ்மாத் துக்காத் மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் -ஸூகாத் மகம் –
இதி ஸூக துக்காத் மகத்வம் ஸர்வஸ்ய வஸ்து ந -கர்ம க்ருதம் ந வஸ்து ஸ்வரூப க்ருதம் -அத கர்ம வசாநே ததவைதி இத் யர்த்த –

பரம புருஷனைத் தவிர்த்து வினையடியாகக் கிடைக்கும் மற்ற இன்பங்கள் அற்பமானதாகவும் அளவுபட்டதாகவும் இருக்கும்பரம புருஷனோ தன்னடையே இன்பமாவான்-அதுவே அழிவற்றது -எல்லை யற்றதும் ஆகும் -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -ப்ரஹ்மம் மாறுபாடாற்ற அழிவற்ற ஞானமே ப்ரஹ்மம் -என்றும் வேதம் மொழிகிறதுப்ரஹ்மம் நீங்கிய மற்ற பொருட்கள் யாவும் இயற்கையான இன்பம் அற்றதாயும் -வினைக்கு ஏற்ப நிலை அற்றதாயும் இருக்கும் என்பதைப் பகவான் பராசரரும் சொல்கிறார் -நரகமும் ஸ்வர்க்கமும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப விளைகின்றன -இரு பிறப்பாளரே பொருள் ஒன்றாகவே இருப்பினும் அதுவே சில சமயம் இன்பமாகவும் பிறிதொரு சமயம் துன்பமாகவும் ஆகிறது -அதுவே சிலருக்கு கோபத்திற்கும் காரணமாகிறது -இன்பம் துன்பம் இரண்டும் கலக்காத பொருட்களுக்கு இருப்பு என்பது ஏது-அவை யாவும் தனது புண்ய பாபங்களுக்கு ஏற்பவே அமைகிறதுஅதே போல் சிலருக்கு இன்பமாக இருக்கும் பொருள் சிலருக்குத் துன்பத்திற்கு காரணமாகிறது -மேலும் ஒரே பொருள் ஒருவருக்கே எப்போதும் சுகத்தைத் தருவதில்லை -இதப் பராசரர் கூறுகிறார்எது விருப்பமானது தோன்றுகிறதோ அதே பொருள் பிறகு துயரத்திற்கு காரணமாகிறது -அதுவே கோபத்திற்கும் பிறிதொரு சமயத்தில் மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது -அதனால் துயரமே தரும் பொருள் என்றோ இன்பமே தரும் பொருள் என்றோ எதுவும் இல்லை -மகிழ்ச்சி அளிப்பதோ துயரம் அளிப்பதோ பொருட்களின் குணம் அன்று -அதை அடைவோரின் வினைகட்க்கு ஏற்ப அமைகிறது -அவரவர் வினைகட்க்கு ஏற்ப பொருள்களில் இம் மாறுபாடு தோன்றுகிறது –
யத் து –சர்வம் பரவச துக்கம்– இத் யுக்தம்-தத் பரம புருஷ வ்யதிரிக்தாநாம்-பரஸ்பர சேஷ சேஷீ பாவ அபாவாத்
தவ் வ்யதிரிக்தம் பிரதி சேஷதா–துக்கமேவ இத் யுக்தம்
சேவா ஸ்வ வ்ருத்தி -ராக்யாதா -இத் யத்ராபி அசேவ்ய சேவா -ஸ்வ விருத்தி ரேவ இத் யுக்தம்
சஹ்யாஸ் ரமை சதோபாஸ்ய சமஸ்தை ஏக ஏவது -இதி சேர்வை ஆத்ம யாதாம்ய வித்பி ஸேவ்ய புருஷோத்தம ஏக ஏவ —

அவ்வாறே -பிறருக்கு அடிமையாகிறவருக்குத் துயரம் என்பது பரம புருஷனைத் தவிர்த்த மற்றவைகளுக்குள்ள ஏவுபவன் -ஏவப்படுபவன் தொடர்பு
அவனைத் தவிர்த்த மற்றோருக்கு அடிமை துக்கமே எனப்படும் -தொண்டு செய்தல் நாய்ப் பிழைப்புக்ச் சமம் -என்பது -தொண்டு கொள்ளத் தகாதவர்களுக்குத் தொண்டு செய்வது என்பது பொருந்தும்
எல்லா ஆஸ்ரமங்களில் உள்ளவர்களாலும் தொண்டு செய்யத் தக்கவன் அவன் ஒருவனே -என்று கூறியவாறு -ஆத்ம மெய்ப் பொருளை அறிந்த எல்லோராலும் வணங்கத் தக்கவன் அவன் ஒருவனே-

யதோக்தம் பகவதா –ஸ்ரீ கீதையிலும் -14-26-
மாம் ச யோ வ்யாபிஸாரேண பக்தி யோகநே சேவதே
ச குணாந் சமதீத்யைதாந் ப்ரஹ்ம பூயாய கல்பதே–இதி
இயமேவ பக்தி ரூபா சேவா
ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி –இத்யாதி ஷு வேதநா சப்தேநாபி தீயதே இத் யுக்தம்
யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய-இதி விசேஷணாத்
யமேவைஷா வ்ருணுதே-இதி பகவதா வரணீயத்வம் பிரதீயதே வரணீ யஸ்ஸ ப்ரியதம யஸ்ய பகவதி
அநவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ச ஏவ பகவத ப்ரிய தம-தத் யுக்தம் பநவதைவ
ப்ரியோஹி ஞாநிநோத் யர்த்தம் அஹம் ச ச மம ப்ரிய -7–17-இதி
தஸ்மாத் பர பக்தி ரூபா பந்நமேவ வேதனம் தத்வத்தோ பகவத் பிராப்தி சாதனம்

அவ்வாறே-பகவானும் கீதையில் -14-26-பிறர் பிற பலன்கள் இவற்றில் சிறிதும் ஆசையின்றி என்னொருவனையே பக்தி யோகத்தினால் எவன் ஆராதிக்கிறானோ அவன் இம்முக் குணங்களையும் கடந்து ப்ரஹ்மத்துக்கு இணையாக இருக்கும் தன்மையை அடைவிக்கிறேன் -என்கிறார்
இதுவே பக்தியுடன் கூடிய தொண்டு -ப்ரஹ்மத்தை அறிபவன் பர ப்ரஹ்மத்தை அடைகிறான் -ப்ரஹ்மம் இவ்வாறு உள்ளது என்று அறிபவன் சாகா நிலையடைகிறான் –
ப்ரஹ்மத்தை அறிபவன் ப்ரஹ்மத்துக்கு ஒப்பாகிறான் – என்ற வாக்கியங்களில் -அறிதல் -ஞானம் -என்ற சொல் பக்தியை விளக்குகிறது –
எவனை அthereதேர்ந்து எடுக்கிறானோ அவனாலேயே அடையத் தக்கவன்-என்பதால் சிறப்பாக அவனால் வரிக்கப்படுதலைக் கூறி அதுவே சிறந்த இன்பம் -எவனை எல்லையற்ற இன்பமுடைய பகவான் விரும்புகிறானோ அவன் அடைவதே இன்பத்தின் எல்லை
அதை ஒட்டியே-பகவானும் -கீதையில் -7-17- ஞானிக்கு நான் எல்லையற்ற விருப்பமானவன் -அவ்வாறே அவனும் எனக்கு மிகவும் விருப்பமானவன் -என்பதால் பக்தியே வடுவெடுத்த இடையறாத மனத்தின் நினைவே உண்மையில் இறை மகிழ்ச்சிக்கு உரிய நெறியாகும் –

யதோக்தம்
பகவதா த்வை பாயநேந மோக்ஷ தர்மே சர்வ உப நிஷத் வியாக்யான ரூபம்-
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பச்யதி கஸ்ஸனநநம்
பக்த்யா ச த்ருத்யா ச ஸமாஹி தாத்மா ஞான ஸ்வரூபம் பரி பஸ்யதீஹ–இதி
த்ருத்யா ஸமாஹி தாத்மா பக்த்யா புருஷோத்தமம் பச்யதி -சாஷாத் கருதி ப்ராப்நோதி
இத் யர்த்த பக்த்யாத் வநந்யயா சக்ய-இத்யநேந ஐகார்த்யாது
பக்திஸ் ச ஞான விசேஷ ஏவ இதி சர்வம் உப பந்நம்
சார அசார விவேகஞ்ஞா கரீயாம்சோ விமத்சரா
பரமாணதந்த்ரா சந்தீதி க்ருதோ வேதார்த்த ஸங்க்ரஹம்

அதனாலேயே பகவான் வியாஸரும்
மோக்ஷ தர்மத்தில் -எல்லா உபநிஷதங்கள் பொழிப்புரையாக -அவனுடைய உருவம் கட் புலனாகாதது -யாரும் அவனைக் கண்ணால் கண்டதில்லை -அடக்கமும் மனப் பூர்வமான ஈடுபாடும் நிலையான மனமும் உடையவரால் மட்டுமே அந்த ஞான உரு அறியப்படும் -என்கிறார்
அடக்கம் -நிலையான மனது -பக்தி இவற்றால் மட்டுமே புருஷோத்தமன் பார்க்கப்படுகிறார் நேராகக் காணப்படுகிறான் -அடையப்படுகிறான் என்பதே பொருள் பக்தியால் அன்றி மற்றவைகளால் அடையப்படுபவன் அல்லன் -என்பதும் இத்துடன் ஒத்த பொருள் கொண்டது
பக்தி என்பது ப்ரஹ்மத்தைப் பற்றிய சிறப்பான அறிவு -ஞானம் -என்பதே எல்லா விதத்திலும் பொருந்தும்

இதி பகவத் ஸ்ரீ ராமானுஜ விரசித வேதார்த்த ஸங்க்ரஹ ஸமாப்தம்–

அகிலப் பொருட்கள் யாவையும் அடிமை கொண்டு ஆள்பவனாம்
அமலன் நற் குணக் கடலாவான் அனந்தன் மேலே துயில்பவனாம்
அலர் மேல் மங்கை நாயகனாம் அடியாருக்கு என்றும் எளியவனாம்
அகிலம் எங்கும் நீக்கமற வசிக்கும் விஷ்ணு துணை நமக்கே –

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
 I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II
–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி -அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

——————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading