யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–
அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –
சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்
நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்
பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-
பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்
—————-
(நிர்விசேஷ அத்வைதம் அவர்கள் நம்மது ச விசேஷ அத்வைதம் -)
72–ய ப்ருதிவ்யாம் திஷ்டந் ப்ருதிவ்யாந்த ரோயம் பிருதிவி ந வேத யஸ்ய ப்ருதிவீ சரீரம்
ய ப்ருத்வீன் அந்தரோ யமயதி ஏஷத ஆத்மாந்தர் யாம்ருத –ஸூக்ல யஜுர் ப்ரு -கண்வ
ய ஆத்ம திஷ்டந் ஆத்மநோ யந்த ரோயம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மந அந்தரோ யமயதி
ச த ஆத்மாந்தர் யாம்ருத –ஸூக்ல மாந்யந்திந
(தத்வ அதிகரணம் அடுத்து பர தேவதா அதிகரணம் -பரமை காந்தி ஆவதற்கு தத்வத்துக்கும் மேல் ஸ்வரூபம் ரூபம் இத்யாதிகளை அறிய வேண்டுமே)
ய -ப்ருத்வீ மந்தரே சஞ்சரன் யஸ்யப் ப்ருத்வீ சரீரம் யாம் ப்ருத்வீ ந வேத இத்யாதி யோஷர மாந்தரே சஞ்சரன்
யஸ்யாஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத யோ ம்ருத் யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் யம் ம்ருத்யுர் ந வேத
ஏஷ சர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபாலோபநிஷத்
த்வா ஸூபர்ணா சாயுஜா சகாயா சமாநம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதி தயோர் அந்ய பிப்பலம்
ஸ்வா த்வத்ய நஸ்ரந் அநந்யோ அபிசாக ஸீதி –முண்டக-3-1-1-
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசது தத் அநு ப்ரவிஸ்ய-
ஸச் ஸத்யச் சா பவது இத்யாதி ஸத்யந்சாந்ரு தந் சாசத்யம பவது –தைத்ரியம்
அநேந ஜீவேநாத்மநா –இத்யாதி -சாந்தோக்யம்
ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேந அம்ருதத்வமேதி போக்தா போக்யம் ப்ரேரிதாரம்
ச மத்வா சர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம ஏதத் –மந்திரிகோ
நித்யோ நித்யாநாம் சேதநஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமாந் –கடவல்லி
பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச(பதி சேஷி -நியாந்தா குணங்கள் தேவையான பொழுது காட்டி )
ஞாஜெவ் த்வாவ் அஜவ் வீசனீசவ் இத்யாதி ஸ்ருதி சதை –மந்த்ரிகா
தத் உப ப்ரஹ்மண
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யாம் தேவ ஸூதா தலம்–ஸ்ரீ ராமாயணம் -அதிதி தேவி ஸ்துதி
யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந சத்வாஜா தேநவை த்விஜ தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூதவ்
தத் சர்வம் வை ஹரேஸ்தநு –ஸ்ரீ விஷ்ணு புராணம்
அஹமாத்மா குடா கேச சர்வ பூதாசய ஸ்திதி -ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ஸ்ம்ருதிர்
ஞாநம் அபோஹநம் ச –ஸ்ரீ கீதா
இத்யாதி வேத வித் அக்ரேஸர வால்மீகி–பராசர -த்வைபாயன -வாசோபிஸ் ச
பரஸ்ய ப்ரஹ்மண ஸர்வஸ்ய ஆத்மத்வா வகமாத்-சித் அசித் ஆத்ம கசிய வஸ்து ந தச் சரீரத்வாவகமாச் ச சரீரஸ்ய ச சரீரிணம்
பிரதி பிரகார தயைவ பதார்த்ததவாத் சரீர சரீரிணஸ் ச தர்ம பேதே அபிதயோர சங்கராத் சர்வ சரீரம் ப்ரஹ் மேதி
ப்ரஹ்மணோ வைபவம் ப்ரதிபாதயத்யபி சாமாநாதி கரண்யாதிபுபி முக்ய வ்ருத்தை –
சர்வ சேதந அசேதன பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபி தீயதே
(இப்படி வேதங்களை நன்கு அறிந்த சான்றோர்களில் தலையாயவர்களானparaasaraபராசரர் த்வைபாயனர் -வ்யாஸர் -ஆகியோர்
பரப்ரஹ்மத்துக்கு எல்லாப் பொருள்களுக்கும் உயிராய் இருக்கும் தன்மையும் சேதன அசேதனப் பொருள்களுக்கு அதன் உடலாய் இருக்கும் தன்மையும்
உயிரும் உடலும் மாறுபட்ட நிலை நெறிகளை உடையவையாயினும் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தொடர்புடைய ப்ரகாரத்துவமும் இருத்தலால்
ஸாமாநாதி கரணத்தால் திரண்ட பொருளாக ப்ரஹ்மத்து எல்லாப் பொருள்களுக்கு உயிராய் உறையும் தன்மை உணர்த்தப்பட்டது -)
(அஹம் கச்சாமி -அஹம் ஆத்மாவைக் காட்டாது -தேகத்துடன் சேர்ந்த ஆத்மாவையே காட்டும்)
(கார்யம் செய்ய சரீரம் சுகம் துக்கம் அனுபவிக்க ஆத்மா -ஞானம் இதுக்குத் தானே -ஆகவே இரண்டும் சேர்ந்ததும் அஹம்
அனுகூலமாக இருக்கும் பொழுது பேத வியவஹாரமும் -பிரதிகூலமாக இருக்கும் பொழுது அபேத வியவஹாரமும் செய்கிறோம்)
(சாமானாதி கரண்யம் -ஏகார்த்த ப்ரதிபாதிதம் -விசேஷண விசேஷ்ய கொள்ளாமல் சங்கரர்)
(பின்ன பிரவ்ருத்தி நிமித்த ஏகஸ்மின் அர்த்தே ப்ரதிபாதிதம் -பர்யாய சப்தங்கள் இல்லாமல் -ஒரே பதார்த்தத்தை வெவ்வேறே பிரகாரம்
ஸ்யாமோ யுவ தேவதத்தன் -இவனை வியாவ்ருத்திக்க இரண்டு பிரகாரங்கள்)
சாமா நாதி கரண்யம் ஹி த்வயோ பதயோ பிரகார த்வய முகேந ஏகார்த்தநிஷ் டத்வம்
தஸ்ய ச ஏதஸ்மிந் பக்ஷே முக்யதா ததாஹி -தது த்வம்-இதி சாமாநாதி கரண்யே –
தது-இத்யேந ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகரம் நிரவத்யம் ப்ரஹ்ம உச்யதே
த்வம் இதி ச சேதன சாமாநாதி கரண வ்ருத்தேந ஜீவ அந்தர்யாமி ரூபி -தச் சரீரம் ததாத்மதயா அவஸ்திதம்
தத் பிரகாரம் ப்ரஹ்ம உச்யதே
இதரேஷு பக்ஷேஷு சாமாநாதி காரண்ய ஹாநி ப்ரஹ்மண ச தோஷதாச ஸ்யாத் –
ஸாமா நாதி கரணம் என்பது இரண்டு சொற்களால் குறிக்கப்படும் இரு வெவ்வேறு பொருள்கள் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தன்மையினால் ஒரே பொருளைக் காட்டுதல் ஆகும்
வேதச் சொற்களுக்கு இவ்வாறு பொருள் கொள்வதே -அதாவது எல்லா வேத வாக்யங்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதே -எங்கள் தலையாய கொள்கை
அப்படியே ததுவம் என்ற வாக்யத்துக்கு ஸாமாநாதி கரணத்தின் படி
தது -அந்த -என்பதால் எல்லாவற்றுக்கும் முழு முதல் காரணமாயும்
எல்லையில்லா நன்னலம் உடையோனாகவும்
குற்றங்கள் சிறிதும் அற்றோனாகவும்
உள்ள ப்ரஹ்மமே -த்வம் -நீ என்ற சொல்லால் குறிப்பிடப்படும்
சேதனனுடன் பிரிக்க முடியாத தொடர்புடையதாய் ஜீவாத்மாவின் உள்ளுறைவதாய் -அதை உடலாக உடையதாய் -அதன் ஆத்மாவாக உறையும் ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது
மற்றை அத்வைதக் கொள்கைகளில் இரு மெய்ப் பொருள்கள்-ப்ரஹ்மம் தவிர்த்து இன்மையால் ஸாமா நாதி கரணம் வர வாய்ப்பில்லை
எனவே மற்றைக் கொள்கைகளில் இந்த சாமாநாதி கரண்யம் அழிகிறது
அதனால் ப்ரஹ்மத்துக்கு குற்றங்களின் தொடர்புடைமை வரும்)
—————
73–ஏதத் யுக்தம் பவதி
ப்ரஹ்ம ஏவ ஏவமவஸ்திதம் -இத்யத்ர -ஏவம் -சப்தார்த்த பூத பிரகார தயைவ விசித்ர சேதன அசேதநாத்மக
பிரபஞ்சஸ்ய ஸ்தூலஸ்ய ஸூஷ்மஸ்ய சத் பாவ -ததாச பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இதி அயமர்த்த ஸம்பந்நோ பவதி –
தஸ்யைவ ஈஸ்வரஸ்ய கார்ய தயா காரண தயா ச சமஸ்தான சமஸ்தி தஸ்ய சமஸ்தான தயா சித் அசித் வஸ்து ஜாதம வஸ்திதமிதி –
(பஹு -பல மட்டும் அல்ல -பரஸ்பர பின்னமான எல்லாமாகக் கொள்ள வேண்டும் நானே(ப்ரஹ்ம சரீரத்துக்கு -நானே )-ஸமஸ்த பதார்த்தமாக ஆகிறேன்)
இதை இவ்வாறு விளக்கலாம்
ப்ரஹ்மமே இவ்வாறு விளங்குகிறது -என்ற வேத வாக்யத்தில் -இவ்வாறு என்ற சொல்லின் கருப்பொருள் புலன்களால் உணரப்படும் உணரப்படாமலும் சேதன அசேதனப் பொருள்களால் பல படியாக நிறைக்கப்பட்டு இருக்கும் ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்துடன் பிரிவற்ற தொடர்புடையதாக இருத்தல் என்பது
அதனாலேயே -நான் பலவாக ஆவேன் மக்களைப் படைப்பேன் என்ற வாக்யம் பொருளுடையதாக ஆகும் –
பலபடித்தான உருவ அமைப்புள்ள சேதன அசேதன பொருள்களை தனது உடலாகக் கொண்டு அவை யாவற்றிலும் அந்த ஈஸ்வரனே கட் புலனாகும் கார்யமாகவும் கட் புலனாகாத காரணமாகவும் வஹிக்கிறான்
———
74 —நநு ச -சமஸ்தான ரூபேண ப்ரகாரதயா-ஏவம் -சப்தார்த்தத்வம் ஜாதி குணயோ ரேவ த்ருஷ்டம் –
ந த்ரவ்யஸ்ய ஸ்வ தந்த்ர ஸித்தியோக் யஸ்ய பதார்த்தஸ்ய ஏவம் சப்தார்த்ததயா ஈஸ்வரஸ்ய பிரகார மாத்ரத்வம யுக்தம்
இதி சேத்ப உச்யதே த்ரவ்யஸ்யாபி தண்ட குண்டலாதே த்ரவ்யாந்தர பிரகாரத்வம் த்ருஷ்டமேவ —
அவ்வாறு ஆகாது
உருவ அமைப்பால் பிரிவற்ற நிலை உடைமையால் இவ்வாறு என்ற சொற் பொருள் கொள்வதானால்
அதாவது-சேதனம் அசேதனம் ஆகியவை பொருள்களே -அவ்வாறு இருக்க அவை ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையை அடைதல் எவ்வாறு என்பது கேள்வி –
ஒரு பொருளுக்கு அடையாக அதன் ஜாதியையோ அல்லது குணத்தையோ தான் கொள்ள முடியும்
மாறாக மற்ற ஒரு பொருளை அதற்க்கு பிரிவற்ற நிலையை உடைய அடையாகக் கொள்ள வியலாது
இங்கு தனித்து இயங்கும் தன்மையுடைய சேதன அசேதன பொருள்களை ஈஸ்வரன் என்னும் பொருளுக்கு அடையாகக் கொள்ளுதல் பொருந்தாது என்பீராகில்
சில சமயங்களில் ஒரு பொருளும் மற்ற ஒரு பொருளுக்கு -அதை மற்றதனின்றும் பிரித்துக் காட்டும் அடையாக -தடியை உடையவன் தடிக்காரன் குண்டலம் அணிந்தோன் என்பது போல் வழங்கி வருவதைக் காண்கிறோம்
————————-
75–நநுச தண்டாதே ஸ்வ தந்த்ரஸ்ய த்ரவ்யாந்தர பிரகாரத்வே மத்வர்த்தீய ப்ரத்யயோ த்ருஷ்ட –
யதா தண்டி குண்டலீ இதி அத கோத்வாதி துல்ய தயா சேதன அசேதநஸ்ய த்ரவ்ய பூதஸ்ய வஸ்துந ஈஸ்வர பிரகார தயா
சாமாநாதி கரண்யே ந ப்ரதிபாதநம் ந யுச்யதே அத்ரோச்யதே –கவ்ரஸ்வோ மனுஷ்யோ தேவ இதி பூத சங்காதா ரூபாணாம்
த்ரவ்யாணாமேவ -தேவ தத்தோ மனுஷ்யோ ஜாத புண்ய விசேஷேண யஜ்ஜ தத்தோ கவ்ர் ஜாத பாபேந கர்மணா
அந்யஸ் சேதந புண்யாதிரேகேண தேவோ ஜாத இத்யாதி தேவாதி சரீராணாம் சேதன பிரகார தயா லோக
வேதயோ சாமாநாதி கரண்யே ப்ரதிபாதனம் திருஷ்டம்
அப்படி யல்ல -தடி போன்றவை தாங்கள் ஒரு பொருளாக இருந்து கொண்டே மற்ற ஒரு பொருளுக்கு -மனிதனுக்கு -த்வர்த்தீய ப்ரத்யயத் -vilankuவிளங்க முடியும்
உதாரணம் -தண்டி குண்டலீ –
மேலும் பசுத்தன்மை -பேசுவாய் இருத்தல் -போன்றவற்றுக்கு இணையாக சேதன அசேதன பொருள்கள் நிறைந்த ப்ரபஞ்சம் ஈசனுக்கு பிரிவற்ற நிலையில் உள்ளதால் ஸாமா நாதி கரண்யம் பொருந்தாது எனில்
பசு குதிரை மனிதன் தேவன் போன்ற உருவ அமைப்புக்கள் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆகின்றன
தனது நல் வினையின் பயனாக தேவ தத்தன் மனிதனாகப் பிறந்தான் -தன் தீ வினைகளின் விளைவாய் யஜ்ஜ தத்தன் பசுவாய் ஆனான்
வேறொரு உயிர் மிகுந்த நல்ல வினையின் பயனாய் தேவனாகப் பிறந்தான் என்றெல்லாம் மறை எல்லாம் உலக வழக்குகளில் உள்ளது
தேவன் முதலான உடல்களில் உயிரின் பிரிவற்ற நிலை உள்ளதையும் காண்கிறோம் -ஸாமாநாதி கரணம்
இங்கு உடலும் உயிரும் தனித் தனியான பொருள்கள் ஆயினும் ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையுள்ளவை
(த்ரவ்யம் த்ரயம் சம்யோகம்-யுவா ஸ்யாம தேவ தத்தன் அப்ருதக் சமஸ்தானம்
குண்டலி தேவதத்தன் ப்ருதக் ஸம்ஸ்தானம்-ஜீவன் அசேதனன் ப்ரஹ்மம் -மூன்றும் த்ரவ்யம் -அப்ருதக் ஆக பிரகாரங்கள் ஆக வேண்டுமே )
த்வர்த்தீய ப்ரத்யயம் -புவநாநி விஷ்ணு -விஷ்ணு இன்றி தனித்து இயங்காத புவனம்
மத்வர்த்தீய ப்ரத்யயம் –அப்ருதக் சித்தம் –இனிச் மான் வான் -பிரிவற்ற நிலை -ஸ்ரீ மந் -ஸ்ரீ மதே
——————————
76–அயமர்த்த -ஜாதிர் வா குணோ வா ந தத்ர ஆதரந-கஞ்சன த்ரவ்ய விசேஷம் பிரதி விசேஷண தயைவ
யஸ்ய சத் பாவ -தஸ்ய தத் அப்ருதக் சித்தே தத் ப்ரகாரதயா தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாதநம் யுக்தம்
யஸ்ய புந த்ரவ்யஸ்ய ப்ருதக் சித்தஸ்யைவ கதாசித் க்வசித் த்ரவ்யாந்தரப் பிரகாரத்வ மிஷ்யதே
தத்ர மத்வர்த்தீய ப்ரத்யய -இதி விசேஷ –
இதன் பொருள் –ஒரு பொருளுடன் பிரிவற்ற நிலையில் அடையாக இருப்பதற்கு -ஜாதியோ பொருளோ குணமோ முக்யமாகக் கொள்ளப் பட வேண்டாம்
எந்த ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் தொடர்பு அதற்கு பிரிவற்ற பண்பை ஏற்குமோ -அவற்றின் பிரித்து இயங்காத தன்மையால் அவ்விரு பொருள்களுக்கும் சாமா நாதி கரணம் உள்ளது என்று கொள்வதே பொருந்தும்
மீண்டும் எந்த பொருள் சாதாரணமாகத் தனித்தே இயங்கிக் கொண்டு எப்பொழுதாவது மற்ற ஒன்றிற்கு பிரிவற்ற அடையாக ஆகிறதோ அப்பொழுது அதற்கு மத்வர்த்தி ப்ரத்யயம் வர வேண்டும் என்பது சிறப்பு விதி –
—————
77–ஏவமேவ ஸ்தாவர ஜங்கமாத்மகஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ஈஸ்வர சரீரத்வேந தத் பிரகார தயைவ ஸ்வரூப சத் பாவ இதி
தத் பிரகாரீ ஈஸ்வர ஏவ தத் தத் சப்தேந அபிதீயதே இதி தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாத நம் யுக்தம்
ததே தத் பூர்வமேவ நாம ரூப வியாகரண ஸ்ருதி விவரனே பிரபஞ்சிதம் —
மேற்கூறிய படியே அனைத்து அசையும் அசையாப் பொருள்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருப்பதனால் அப் பிரிவற்ற பண்பினாலேயே அவற்றுக்கு இருப்பு ஏற்படுகிறது என்பதால் அவற்றிற்கு உரிமையானவன் ஈஸ்வரன் தத் என்று குறிப்பிடப் படுகிறான் என்று சாமா நாதி கரணத்தை அறுதியிடல் பொருந்தும்
இவையாவும் முன்பே நாம ரூப விளக்கத்தில் விரிவாகச் சொல்லப்பட்டன
———-
78–அத ப்ரக்ருதி புருஷ மஹத் அஹங்கார தந் மாத்ர பூதேந்த்ரிய -ததாரப்த-சதுர்தச புவநாத்மக ப்ரஹ்மாண்ட தத் அந்தர்வர்த்தி
தேவ திரியக் மனுஷ்ய ஸ்தாவராதி சர்வ பிரகார சமஸ்தாந ஸம்ஸ்திதம் கார்யமபி சர்வம் ப்ரஹ்ம ஏவ இதி காரண பூத
ப்ரஹ்ம விஞ்ஞாநாதேவ சர்வம் விஞ்ஞாதம், பவதீதி ஏக விஞ்ஞானம் உப பந்நதரம்-ததேவம் கார்ய காரண பாவாதி முகேந
க்ருஸ்த்ரஸ்ய சித் அசித் வஸ்துந பர ப்ரஹ்ம பிரகார தயா ததாத்மகத்வம் யுக்தம் –
மேலும் ப்ரக்ருதி புருஷன் மஹத் அஹங்காரம் தன் மாத்ரைகள் பஞ்ச பூதங்கள் பதினோரு புலன்கள் -அவைகளான பதினான்கு உலகங்கள் ப்ரஹ்மாண்டங்கள் அவற்றின் உள்ளுறையும் தேவ மனித விலங்கு ஸ்தாவரம் முதலான பலவகை அமைப்புடைய பொருள்களுக்கு -விளைவுகளுக்கு -காரணமாக ப்ரஹ்மம் இருத்தலால் -அந்த ஒன்றை அறிவதன் மூலம் மற்ற யாவையும் அறிந்ததாக ஆகும் என்பதே மிகப் பொருந்தும்
இவ்வாறு காரண காரியத் தொடர்பால் சேதன அசேதன பொருள்களுக்கு உள்ளுறை ஆத்மாவாய் இருக்கும் தன்மை ப்ரஹ்மத்திற்குச் சொல்லப்பட்டது –
————-
79–நநு ச பரஸ்ய ப்ராஹ்மண ஸ்வரூபேண பரிணாம ஆஸ்பதத்வம்-நிர்விகார நிரவத்ய ஸ்ருதி வ்யாகோப ப்ரசங்கேந நிவாரிதம்-
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் இதி ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஞ்ஞா
ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தாப்யாம் பரம புருஷஸ்ய ஜகாத் உபாதான காரணத்வம் ச ப்ரதிபாதிதம்
உபாதான காரணத்வம் ச பரிணாம ஆஸ்பதத்வ மேவ கத மிதமுபபத்யதே அத்ரோஸ்யதே -ச ஜீவஸ்ய பிரபஞ்சஸ்ய
அவிசேக்ஷண காரணத்வம் யுக்தம் தத்ர ஈஸ்வரஸ்ய ஜீவ ரூப பரிணாமாப் யுபகமே
நாத்மாஸ்ருதேர் நித்யத்வாச் ச தாப்ய–ப்ரஹ்ம சூத்ரம் -2-3-3-
இதி விருத்யதே-வைஷம்ய நைர் க்ருண்ய பரிகாரஸ் ச ஜீவாநாமநாதித் வாப்யுகமேன
தத் கர்ம நிமித்தயா ப்ரதிபாதித -வைஷம்ய நைர்க்ருண்யே ந சா பேஷத்வாத் -2-1 -34—
ந கர்ம விபாகதிதி சேண்ந அநாதித்வாது ப பத்யதே சாப்யு பலப்யதேச -2-1-35-இதி
அக்ருதாப்யாகம க்ருத் விபிரணாச பிரசங்கஸ் ச அநித்யத்வே அபிஹித
மாறாகப் பர ப்ரஹ்மத்திற்கு தன்னிலையில் நின்றும் மாறுபாடு அடைதல் ஒரு பொழுதும் இல்லை என்று சாற்றப்படும் -மாறுதல் அடையாத்தன்மை -குற்றங்கள் அற்ற நிலை போன்ற மறை மொழிகளால் அறுதியிடுதல் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு
ப்ரக்ருதிஸ் ச பிரதிக் நாத் ருஷ்டாந்தநு பரோதாத் –ப்ரஹ்ம ஸூத்தரம் -1-4-
ஒன்றை அறிதலால் எல்லாவற்றையும் அறிந்ததாகும் என மறை மொழியில் மறை மற்றும் அதை விளை பொருளை எடுத்துக் காட்டி பரம புருஷன் உலகின் கருப்பொருளாகும் தன்மை விளக்கம் தரப்படுகிறது
கருப்பொருள்கள் யாவும் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதால் இது எவ்வாறு பொருந்தும்
இதற்கு விடையாக
இந்த ஜீவன் ப்ரபஞ்சம் இவற்றுடன் ப்ரஹ்மத்துக்குள் பொதுப்படையான காரணம் கூறப்படுகிறது –
ஈஸ்வரன் ஜீவனாக மாறுகின்றான் எனக் கொண்டால்
மறை மொழிகளின் படி ஆத்மா உண்டாவது இல்லை -என்றும் உள்ளவன் எனத் தேறுகிறபடியால் –2-3-3-ஈசனுக்கு ஏற்றத்தாழ்வு -அருளின்மை -2-1-34-ஆகியவை ஏற்படாது –
ஜீவனுடைய பன்னெடுங்கால வினைப்பதொடர்பின் அடியாகப் படைப்பதால் ப்ரஹ்ம ஸூத்ரத்திலும் படைப்புக் காலத்தில் ப்ரஹ்மம் தவிர்த்த வேறில்லை என்பதால் வினையும் ஜீவனும் இல்லை என்று கொள்ள முடியாது
ஏன் எனில் ஜீவன் ஆரம்பம் அற்றது என்று கூறப்பட்டு இருப்பதால் -ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது என்பதே பொருந்தும் -ஜீவர்கள் நாம ரூபங்கள் இல்லாமல் ப்ரஹ்மத்தோடே ஒன்றி இருந்தனர் -என்பதால்
ஆரம்பம் இல்லாத அநாதியான ஜீவர்களின் வினைகளும் பன்னெடும் காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பொருந்தும்
இதுவே வேதத்தாலும் அறுதியிடப்பட்டது
வினைகள் படைப்புக்கு முன் இல்லை எனக் கொள்ளில் ஜீவர்கள் காரணம் இன்றித் துயர் உறுதலும் செய்யும் தீயச் செயல்கள் பலன் அளிக்காது போலும் ஏற்படும்
ததா ப்ரக்ருதே ரப்யநாதிதா ஸ்ருதிபி ப்ரதிபாதிதா –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் வஹ்நீம் ப்ரஜாம் ஜன யந்தீம் ச ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமானே நுசேதே
ஜஹாத்யேநாம் புக்த போகாம ஜோந்ய இதி ப்ரக்ருதி புருஷயோரஜத்வம் தர்சயதி–
இப்படியே ப்ரக்ருதியும் ஆரம்பம் அற்றது -அநாதி என்று வேதங்களால் அறுதிப்படுகிறது
பிறப்பு அற்றதும் -கருப்பு சிவப்பு வெளுப்பு நிறங்கள் கலந்ததுமான ப்ரக்ருதியை பிறப்பற்ற ஒருவன் அனுபவித்துக் கொண்டு அதன் வழி செல்கிறான்
பிறப்பற்ற மற்ற ஒருவன் அதை அனுபவிப்பதில்லை -என்று ப்ரக்ருதி புருஷர் -ஜீவர்களின் பிறப்பின்மை காட்டப்படுகிறது –
——————
80–அஸ்மாந் மாயி ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிந் சாந்யோ மாயயா சந்நிருத்த -மாயம் து ப்ரக்ருதிம் வித்யாந் மாயி நந்து மஹேஸ்வரம்
இதி ப்ரக்ருதிரேவ ஸ்வரூபேண விகாராஸ்பத மிதிச தர்சயதி-கௌரநாத் யந்தவதி ச ஜநித்ரி பூத பாவிநீ இதிசா
ப்ரக்ருதியை -மாயாவை -ஏவல் கொள்ளும் பரமாத்மா -மாயி -அந்தப் பிரக்ருதியைக் கொண்டு உலகைப் படைக்கிறான்
வேறொருவன் -ஜீவாத்மா அதில் அடைபடுகிறான்
மாயா என்பது பிரக்ருதியாகவும் மாயி என்பது சர்வேஸ்வரனாகவும் அறியப்படுகிறது
இவ்வாறு பிரக்ருதி தனது நிலை மாறுபாடு அடையக் கூடியதாகக் காணப்படுகிறது
ஸ்ருஷ்டியின் பசுவான மூலப்ப்ரக்ருதி -சமஷ்டி -ஆரம்பமும் முடிவும் அற்றது -ஸ்ருஷ்டியின் பூதங்களை வ்யஷ்டி உண்டாக்குகிறது என அறியப்படுகிறது
ஸ்ம்ருதிஸ் ச
ப்ரக்ருதிம் புருஷஞ்ச ஏவ வித்யாநாதி உபாவபி -பூமிர் ஆபோ அநலோ வாயு கம் -மநோந் புத்தி ரேவச அஹங்கார
இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிர் அஷ்டதா -அபரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் –
ஜீவ பூதாம் மஹா பாஹோ யாயேதம் தார்யதே ஜகத்
பிரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந புந மாயா த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் இத்யாதிகா
ஏவம் ச ப்ரக்ருதேரபி ஈஸ்வர சரீரவத் ப்ரக்ருதி சப்தோ அபி ததாத்ம பூதஸ்ய ஈஸ்வரஸ்ய தத் பிரகார சமஸ்திதஸ்ய வாசக
புருஷ சப்தோ அபி தத் ஆத்மக பூதஸ்ய ஈஸ்வரஸ்ய புருஷ பிரகார சமஸ்திதஸ்ய வாசக –
அத தத் விகாராணமபி தயைவ ஈஸ்வர -ஆத்மா -ததாக வ்யக்தம் விஷ்ணுஸ் ததா அவ்யக்தம் புருஷ கால ஏவச
ச ஏவ ஷோபகோ ப்ரஹ்மந் ஷோப்யஸ் ச பரமேஸ்வர -இதி அத ப்ரக்ருதி பிரகார சமஸ்திதே பரமாத்மநி பிரகார பூத
ப்ரக்ருதி அம்சே விகார பிரகார்யம்ஸோ நியாந்தா நிரவத்ய சகல கல்யாண குணாஸ்ரய ஸத்யஸங்கல்ப
ஏவ ததாச சதி காரண அவஸ்தோபி ச ஏவேதி கார்ய காரணயோர் அநந்யத்வம் சர்வ ஸ்ருதி விரோதஸ் ச பவதி-
ஸ்ம்ருதியும்
ப்ரக்ருதி புருஷன் ஆகியவைகள் ஆரம்பம் அற்றவை என அறிந்து கொள்
நிலம் நீர் நெருப்பு வளி வெளி மனம் புத்தி -மஹான் -அஹங்காரம் பத்து இந்திரியங்கள் ஆகிய எட்டு வகையாகி எனக்கு படைப்பில் துணை நிற்கின்றன
இவற்றின் நின்றும் வேறுபட்டதான ஜீவன் -அதனால் உலகு தாங்கப்படுகிறது என்று உயர்ந்த தோளாய் அறிவாயாக
என்னுடைமையான மூலப் பிரக்ருதியை எட்டு வித வேறுபாட்டை அடைவித்து பலவிதமாக உலகை மீண்டும் மீண்டும் படைக்கிறேன் –
அழியாத வினைத் திட்ப்பமுள்ள என்னால் ப்ரக்ருதியும் -அதிலுள்ள அசையும் அசையாய் பொருள்களும் நிறைக்கப்படுகின்றன என்று சொல்கிறது
இவ்வாறு மூலப்பிரக்ருதி ஈஸ்வரனின் உடலாய் இருக்கும் பண்பால் ப்ரக்ருதி என்னும் சொல்லும் -அதைக்குறிக்கும் சொற்கள் யாவும் -அதின் உயிர்நிலையான ஈஸ்வரனுடைய பிரிவற்ற நிலையைக் குறிக்கும்
அவ்வாறே ஆத்மா புருஷன் -என்ற சொல்லும் அதன் உயிர் நிலையாகவும் அதனுடன் பிரிக்க இயலா நிலை யுடையவனாயும் இருக்கும் ஈஸ்வரனையே குறிக்கும்
அவ்வாறே மஹான் மூலப்ப்ரக்ருதி காலம் ஆத்மா -யாவையும் விஷ்ணுவே -அவரே படைக்க முனபவர் படைப்படுவதும் -அவற்றில் உள்ளுறைபவரும் அவரே
பரமாத்மாவுக்கு அங்கமான ப்ரக்ருதியில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன
ப்ரக்ருதியை அங்கமாக வுடைய பரமாத்மாவின் மாறுபாடு ஏற்படுவதில்லை
இவ்வாறே ஜீவாத்மாவை அங்கமாக உடையனாதலின் அதில் ஏற்படும் குறைபாடுகள் உள்ளிருப்பவனாகவும் அங்கியாகவும் ஏவுவோனாகவும் விளங்கும் குறைபாடற்ற எல்லா நலன்களுக்கும் இருப்பிடமான வழுவாத முனைப்புடைய பரமாத்மாவிற்கு இல்லை
அங்கி-அங்கங்களை யுடையவன்
அதனாலேயே கட் புலனாகாத காரண நிலையாவோனும் அதைக் கருப்பொருளாய்க் கொண்டு கட் புலனாகும் காரியப் பொருளான உலகு முதலியவையாக ஆகுபவனும் ஈஸ்வரனே
இப்படிக் கொள்வதாலேயே காரண காரியப் பொருள்களில் வேறுபாடின்மை மறைக் கொள்கைகளுக்கு உள்ள உடன்பாடு கிடைக்கிறது –
——————–
81–ததேவம் நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்மத சாபந்ந பிரகிருதி புருஷ சரீரம் ப்ரஹ்ம காரணாவஸ்தம் –
ஜகத ததாபத்திரேவ ச ப்ரலய நாம ரூப விபாக விபக்த ஸ்தூல சிதசித் வஸ்து சரீரம் ப்ரஹ்ம கார்யாவஸ்தம் ப்ராஹ்மண
ததாவித ஸ்தூல பாவ ஏவ ஸ்ருஷ்ட்டி இத்யுச்யதே –
கட் புலனாகாத நிலையில் பெயர் உருவ மாறுபாடற்றசேதன அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரணம்இவ்வாறு இருக்கும் நிலைக்கே ப்ரளயம் என்று பெயர்இதினின்றும் தோன்றும் கட் புலனாகும் அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரியம்இந்தக் கட் புலனாகும் நிலை படைப்பு எனப்படும் –
யதோக்தம் பகவதா பராசரேண-பிரதான பும்ஸோரஜயோ -காரணம் கார்ய பூதயோ-இதி
இதை ஒட்டியே பகவான் பராசரரும் -பிறப்பற்ற மூல பிரகிருதி புருஷர்கள்-இவை காரண கார்யங்களாக ஆகின்றன -என்றார்
தஸ்மாத் ஈஸ்வர பிரகார பூத
சர்வாவஸ்த ப்ரக்ருதி புருஷ வாஸிந ஸப்தா தத் பிரகார விஸிஷ்ட தயா அவஸ்திதே பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே
ஜீவாத்மவாஸி தேவ மனுஷ்யாதி சப்தவத் யதா தேவ மனுஷ்யாதி ஸப்தா தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷணாம்
ஜீவாத்ம பிரகார தயைவ பதார்த்தத்வாத் பிரகாரிணி ஜீவாத்மநி முக்ய தயா வர்த்தந்தே தஸ்மாத் ஸர்வஸ்ய
சிதசித் வஸ்துந பரமாத்ம சரீரதயா தத் பிரகாரத்வாத் பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே சர்வே தத் வாசகா ஸப்தா —
அவை ஈஸ்வரனுடன் பிரிவற்ற நிலை உடையவையாதலால் இவைகளைக் குறிக்கும் சொற்கள் யாவும் இவ்விருப்பினால் பரமாத்மாவையே உள்ளுறை பொருளாகக் காட்டுகின்றன-தேவ மனிதர்களின் பெயரும் உருவமும் அவற்றின் உள்ளுறையும் ஜீவாத்மாவைக் குறிப்பது போலே
அங்க -அங்கி நிலையினால் எல்லா சேதன அசேதன வஸ்துக்களும் அவற்றின் பெயர் உருவங்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருக்கும் தன்மையால் ஈஸ்வரனையே குறிக்கும் –
————-
82–அயமேவச ஆத்ம சரீர பாவ -ப்ருதக் சித்யநர்ஹ தாராதேய பாவ -நியந்த்ரு நியாமய பாவ -சேஷ சேஷி பாவஸ் ச
சர்வாத்மநா ஆதார தயா நியந்தரு தயா -சேஷி தயா ச ஆப்நோதீதி -ஆத்மா சர்வாத்மநா ஆதேய தயா நியாம்ய தயா சேஷ தயா ச
அப்ருதக் சித்த பிரகாரத்வாத்-அப்ருதக் சித்தம் -ஆகார சரீரம் ஏவமேவஹி ஜீவாத்மந-
ஸ்வ சரீர சம்பந்த ஏவமேவ பரமாத்மந-சர்வ சரீரத்வேந சர்வ சப்த வாச்யத்வம் —
இதுவே உடல் -உயிர்த் தொடர்பு uஎன்பது -தனித்து இயங்கும் தன்மையற்று மற்ற ஒன்றினால் தாங்கப்படும் நிலையுற்று
அதனால் இயக்குவோர் நிலையம் தொடர்பும் பெற்று இருப்பது
எல்லா விதத்தாலும் தாங்குவதாகவும் ஏவுவதாகவும் பணி கொள்வதாகவும் அதின் நின்றும் பிரித்து நிலை யற்றதாகவும் உயிர் உடலுடன் பொருந்தி இருக்கிறது இவ்வாறே பரமாத்மாவும் எல்லாவற்றையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் எல்லாச் சொற்களும் சுட்டிக் காட்டப்படுபவனாகவும் இருக்கிறான்
சேஷன் -இயக்கப்படுவோன் -தன்னை இயக்குவோனுக்காக மகிழ்வுடன் செயல் புரிவோன்
சேஷி -சேஷனைத் தன் விருப்பப்படி இயக்குபவன்-
(சரீராத்ம பாவம்-சர்வாத்மனா ஆப்நோதி -விசேஷ வியாப்தி -தேச கால அவஸ்தா வாசி இல்லாமல் -ஆதாரம் நியாம்யம் சேஷி அப்ருதக் சித்தம் -பிரகாரம்-சர்வ ஸப்த வாஸ்யன் இதனாலேயே-பர்யவசான வ்ருத்தி )
——————
83–ததாஹ ஸ்ருதி கண–சர்வே வேதா யத்பதமாமநந்தி -சர்வே வேதாயத்ரைகம் பவந்தி –(இந்த கட உபநிஷத் ஸ்ருதி -கீதை 2-8 அத்யாயத்திலும் ஸ்லோகம் இவற்றைக் கொண்டே உண்டே )
(ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷
எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ
அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை)
(புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷
நாரங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமே -அயனமே நாராயணன் -சர்வ ஆராதத்வம் தாரகன் –
எங்கும் வியாபித்து -உள்ளும் புறமும் -ஸர்வ வியாபகத்வம் -ஸர்வ அந்தர்யாத்மா-சரீர ஆத்மா -அந்தர்யாமி -நியமனம்)
இதி தஸ்ய ஏகஸ்ய வாஸ்யத்வா தேகார்த்த வாஸிநோ பவந்தி-இத் யர்த்த
ஏகோ தேவா பஹுதா சந்நிவிஷ்ட
சஹைவ சந்தம் நவிஜாநந்தி தேவா –இத்யாதி
தேவா இந்திரியாணி தேவ மனுஷ்யாதி நாமாந்தாயா மித்யா ஆத்மத்வேந நிவிஸ்ய -சஹைவ சந்தம் –
தேஷாம் இந்திரியாணி மந பர்யந்தாணி ந விஜாநந்தி இத்யர்த்த
(மனஸ் -ஏக ஆஸ்ரயம் அவனுக்கும் இந்திரியங்களுக்கும் -இருந்தாலும் இவை அறிய வில்லையே)
இப் பொருளையே வேதங்களும் கீழ்க் கண்டவாறு பகர்கின்றன
எல்லா வேதங்களும் அடையப்படும் இலக்காக எதை திரும்பத் திரும்ப பறைகின்றனவோ-எல்லா வேதங்களும் எந்த ஒருவனிடம் ஓன்று படுகின்றனவோ
அந்தப் ப்ரஹ்மம் ஒன்றே மெய்ப்பொருளாக விளங்குவதால் சொற்கள் யாவும் ஒரே பொருளை யுடையவை யாகின்றன என்பது பொருள்
ஒரே தேவன் பலவாக உள்ளுறைகிறான் -அவனை உடலுறையும் அறி புலன்கள் அறிவதில்லை
இங்கு தேவா என்பது மனத்துடன் சேர்ந்த ஞான இந்திரியங்கள்
தேவன் மனிதன் முதலிய சேதனப் பொருள்களில் உள்ளுறைவோனாக ஆத்மாவினுள் இருக்கும் அவனை அந்த ஆறு புலன்களும் அறிவதில்லை என்பது பொருள்
ததா ச பவ்ராணிகாநி வசாம்சி
நதா ஸ்ம சர்வ வசஸாம் பிரதிஷ்டா யத்ர ஸாஸ்வதீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-வாஸ்யேஹி வசச பிரதிஷ்டா காரணம் பூர்வம் வசஸாம் வாஸ்ய முத்தமும் -(ஜிதந்தே )
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வித்யா –இத்யாதீ நி ஸர்வாணி ஹி வாஸாம்சி ச சரீராத்ம விஸிஷ்ட -மாந்தர்யாமிணமேவ ஆசஷதே–
ஹந்த ஹபீமா திஸ் ரோதேவதா அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ஹி ஸ்ருதி –
அவ்வாறே புராணம் உரைப்பவர்களும் -எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் -அதன் மெய்ப்பொருளாய் நிலையாக விளங்குவோனை நாங்கள் வணங்குகிறோம் -என்றார்கள்
சொற்களின் முடிவு பொருளால் ஆகிறது -செயல்களுக்கு எல்லாம் முதல் காரணமும் -சொற்களுக்கு எல்லாம் பொருள் முடிவும்
வேதங்கள் யாவற்றாலும் அறியப்படுபவன் யானே என்றவாறு சொற்கள் யாவும் உருவ அமைப்பொடு கூடிய உயிரைக் காட்டி அவ்வாத்மாவில் உள்ளுறையும் பரமாத்மாவைக் காட்டி பொருள் முடிவு பெறுகின்றன
என்னே தானே நிலம் நீர் தீ இவற்றின் உட் புகுந்து பொருள்களுக்கு பெயர் உருவங்களைக் கொடுக்கிறேன் என்று வேதம் கூறுகிறது-
ததா ச மாநவம் வச–பிரசாசிதாரம் ஸர்வேஷா மணீயாம் ச மணீயசாம் ருக்மாபம்-ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத் து புருஷன் பரம்
அந்த பிரவிஸ்ய-அந்தர்யாமிதயா ஸர்வேஷாம் பிரசாசிதாரம் -நியந்தாரம் அணீயாம் ச ஆத்மாந க்ருத்ஸ்ரஸ்யா சேதநஸ்ய வ்யாபகதயா
ஸூஷ்ம பூதா தேஷாம் அபி வ்யாபகத்வாத் தேப்யோபி ஸூஷ்ம தர இத்யர்த்த ருக்மாப-ஆதித்ய வர்ண –
ஸ்வப்ந தீ கம்யம் ஸ்வப்ந கல்ப புத்தி ப்ராப்யம் விசத தம ப்ரத்யக்ஷதாபந்ந அநு த்யாநை கல்ப்ய-இத்யர்த்த –
ஏநமே கே வதந்த் யக்நிம் மருதோநய ப்ரஜாபதிம் இந்திரமேக பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் இதி ஏகே வேதா இத்யர்த்த
உக்தரீத்யா பரஸ்யைவ ப்ரஹ்மண-சர்வஸ்ய ப்ரசாசித்ருத்வேந சர்வ அந்தராத்மதயா ப்ரவிஸ்ய அவஸ்திதத்தவாத்
அஞ்ஞாய தயோபி ஸப்தா சாஸ்வத ப்ரஹ்ம சப்தவத் தஸ்யைவ வாசகா பவந்தி இத்யர்த்த –
பிறகு மனுவின் வாக்யமும்
பொருள்கள் யாவற்றினுள்ளும் நிலை பெற்று ஆள்பவனாகவும்
அணு அளவிலான பொருள்களையும் விட அணுவாய் இருப்பவனும்
பொன்னென ஒளிர்பவனும்
ஞானம் என்னும் உட் கண்ணால் -நம்மால் -கனவில் காண்பது போல் காணப்படக் கூடியவனுமான
பரம புருஷன் உள்ளுறைந்து
எல்லாவற்றையும் ஆள்பவன் -என்று கூறுகிறது –
பிராணிகளுக்கு உடல் முழுவதும் நீக்கமற உயிர் நிறைந்து இருப்பதால் ஆத்மா அணு அளவினன்
அவ்வாத்மாவின் உள்ளும் பரம புருஷன் புகுந்து நிறைவதால் சேதன அசேதன பொருட்களை விட அணுவள வினன் என்பது பொருள் –
கதிர் ஒளி கனவில் மனத்திற்குக் காணப் படுவது போல்
தெள்ளத் தெளிவாக நேரில் காண்பது போல் த்யானத்தில் காணத் தக்கவன் என்பது பொருள்
இவனை நெருப்பு என்றும் காற்று என்றும் பிரமன் என்றும் இந்திரன் என்றும் உயிர் மூச்சு என்றும் கூறப்படுபவனான
நிலையான மேலான ப்ரஹ்மம் என்று வேதங்கள் கூறுகின்றன -என்று பொருள்
பர ப்ரஹ்மம் எல்லாப் பொருட்களிலும் உள்ளுறைந்து அவற்றை ஆட்சி செய்வதால் தீ முதலிய சொற்கள் அவற்றுள் நிலை பெற்று இருக்கும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் சொற்களே என்பது இங்கு பொருள்
ததாச ஸ்ம்ருத் யந்தரம்
யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் சஹு தாசநாந் சர்வ பூத அந்தராத்மநாம் விஷ்ணுமே வ யஜந்தி தே இதி
பித்ரு தேவ ப்ராம்ஹண ஹுதாசநாதி ஸப்தா தந் முகேந ததந்தராத்ம பூதஸ்ய விஷ்ணோ ரேவ வாசகா இத்யுக்தம் பவதி —
அவ்வாறே ஸ்ம்ருதிகளிலும்
பித்ருக்களை தேவர்களை அக்னியுடன் சேர்ந்த அந்தணர்களைக் குறித்து யாகம் செய்பவர்கள் எல்லாப் பொருட்களுக்கும் உள்ளுறை பவனாகிய விஷ்ணுவையே குறித்து யாகம் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது
பித்ருக்கள் அந்தணர் அக்னி ஆகிய சொற்கள் தத் தத் முகமாக தமக்கு உள்ளுறைபவனான விஷ்ணுவையே குறிக்கும் சொற்கள் என்பதே சரியான கொள்கை –
—————————
84–அத்ரேதம் சர்வ ஸாஸ்த்ர ஹ்ருதயம் -ஜீவாத்மாந ஸ்வயம் அங்குசித அபரிச்சின்ன நிர்மல ஞான ஸ்வரூபா சந்த-
கர்ம ரூப அவித்யா வேஷ்ட்டிதா-தத் காம அநு ரூப ஞான சங்கோச மாபந்நா ப்ரஹ்மாதி ச தம்ப பர்யந்த விவித விசித்ர
தேஹேஷு ப்ரவிஷ்டா தத் தத் தேஹோசித லப்த ஞான பிரசரா தத் தத் தேஹாத்ம அபிமாந தத் உசித கர்மாணி குர்வாணா-
தத் அநு குண ஸூக துக்கோப போக ரூப சம்சார ப்ரவாஹம் பிரதிபத்யந்தே -ஏதேஷாம் சம்சார மோசனம்
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே இதி –
(கர்மாவும் அவித்யாவும் பகவத் நிக்ரஹ ரூபமே-வேஷ்ட்டிதா-மூடப்பட்டு)
ஸாஸ்த்ரங்கள் யாவும் கூறும் மையக் கருத்துப் பொருள் இதுவேயாகும்
ஜீவாத்மாக்கள் தன்னடையே குறைவற்ற அளவு கடந்த அப்பழுக்கு அற்ற ஞானத்தை யுடையவைகள்
தன் செயல்களினால் ஏற்பட்ட வினைப் பயனால் அறியாமை சூழப்பட்டு அவ் வினைகளுக்கு ஏற்ப ஞானக் குறைவின் பலனாக
பிரமன் முதல் புல் ஈறான பலவிதமான உருவமுடைய உடல்களில் நுழைந்து அவ் வமைப்புகளில் விருப்பம் கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்து கொண்டு அதனடியாய் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு முடிவற்ற பிறவிச் சுழலில் தடுமாறுகிறது
இப்படிப்பட்ட ஜீவன்களுக்கு பிறவிச் சுழலில் நின்றும் விடுபட பகவானிடம் சரண் அடைவது தவிர வேறு வழி இல்லை –
——————-
85–ததர்த்தம் பிரதம மேஷாம் தேவாதி பேத ரஹித ஞாநைக ஆகார தயா ஸர்வேஷாம் சாம்யம் ப்ரதிபாத்ய –
தஸ்யாபி ஸ்வ ரூபஸ்ய பகவச் சேஷதைக -ஸ்வரூபைக ரசதயா பகவதாத் மகதாமபி ப்ரதிபாத்ய -பகவத் ஸ்வரூபம்
ச ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந தயா சகல இதர விஸஜாதீயம் -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண ஆஸ்ரயம் –
ஸ்வ சங்கல்ப ப்ரவ்ருத்த ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாத தயா ஸர்வஸ்ய ஆத்ம பூதம் ப்ரதிபாத்ய
தத் உபாஸநம் சாங்கம் தத் ப்ராபகம் ப்ரதிபாத யந்தி சாஸ்த்ராணீதி —
அதன் பொருட்டு -முதற் கண் தேவன் முதலான வேறுபாடுகளுள்ள ஜீவன்கள் அனைத்தும் ஞானத்தளவில் ஒரே படிப்பட்டவையாய் இருத்தலைக் கூறி
அந்த ஞான உருவிற்கு இறைவனுக்கு அடிமைப்பட்டு இருத்தலே இயல்பான பண்பு என்றும்
இறைவனையே தன் ஆத்மாவாக உடையவை என்றும் கூறி
இறைத் தன்மை தீயக் குணங்கள் யாவற்றுக்கும் எதிர்த்தட்டாய் இருத்தலையும் நற் பண்புகள் யாவற்றுக்கும் உறைவிடமாய் இருத்தலையும்
தன்னை ஒழிந்த மற்றை யாவற்றின் நின்றும் மாறுபட்டு இருத்தலையும்
உயர்வற உயர் நலமுடையதாய் இருத்தலையும்
தன் வழுவாத வினைத் திட்பத்தால் சேதன அசேதன பொருட்கள் யாவினுள்ளும் ஆத்மாவாய் விளங்குவதையும் விளக்கி
அவனைக் குறித்த தியானத்தை அதன் அங்கங்களுடன் செய்தலே அவனை அடையும் நெறி என்பதையே சாஸ்திரங்கள் பகர்கின்றன
ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமம் –மாறா விருப்பம் நிறைவேற்றுவதற்கான வினைத் திடபம்
———————
86–யதோக்தம் -நிர்வாணமய ஏவாயமாத்மா ஞாநமய அமல -துக்க அஞ்ஞான மலா தர்மா ப்ரக்ருதேஸ்தே நசாத்மந
ப்ரக்ருதி சம்சர்க்கக் க்ருத கர்ம மூலத்வாத் ந ஆத்ம ஸ்வரூப ப்ரயுக்தா தர்மா
இத்யர்த்த ப்ராப்த அப்ராப்த விவேகேந ப்ரக்ருதி ரேவ தர்மா இத்யுக்தம் –
அவ்வாறே இந்த ஆத்மா வினைகளின் தொடர்பு அற்றவன் -ஆனந்த மயமானவன் -ஞான மயமானவன் தூய்மை யானவன் -துன்பம் அறியாமை ஆகிய கறைகள் உடல் தொடர்பால் மட்டுமே ஏற்படுகின்றன
இவை ஆத்மாவிற்குக் கிடையாது -உலகின் உடல் தொடர்பால் செய்யப்பட வினை விளைவாகவே இவை ஏற்படுகின்றன -ஆத்மாவின் இயல்பினால் அன்று -என்று பொருளாடும்
இதற்கு ஏற்படும் விளைவுகள் உலகின் இயல்பு என்பது வெளிப்படை –
—————————
87–வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணேகவி ஹஸ்திநி ஸூநி ஸைவ ஸ்வ பாகே ச பண்டித சம தர்சிந –ஸ்ரீ கீதை -5–18-இதி
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப ப்ரக்ருதி ஸம் ஸ்ருஷ்டஸ்ய ஆத்மந ஸ்வரூப விவேசநீ புத்தி ஏஷாம் தே பண்டிதா-
தத் ப்ரக்ருதி விசேஷ வி யுக்த ஆத்ம யாதாத்ம ஞான வந்த -தத்ர தத்ர அத்யந்த விஷம ஆகாரே வர்த்த மாநம் ஆத்மாநம்
சமாநா காரம் பஸ்யன்தீதி சம தர்சிந இத்யுக்தம்
ததிதமாஹ-இஹைவ தைர்ஜித ஸ்வர்க்கோ ஏஷாம் சாம்யே ஸ்திதம் மந நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தேஸ்திதா –
இதி நிர்தோஷம் தேவாதி ப்ரக்ருதி விசேஷ ரூப சம்சர்க்க தோஷ ரஹிதம் ஸ்வரூபேணா வஸ்திதம் சர்வம் ஆத்ம வஸ்து
நிர்வாண ரூப ஞான ஏக ஆகாரதயா சமம் இத்யர்த்த —
கல்வியும் அடக்கமும் நிறைந்த அந்தணன் பசு யானை நாய் அதை தின்னும் சண்டாளன் -இவர்களிடம் -ஆத்மாக்களிடம் -கற்றறிந்தோர் சமமான நோக்குடையவர்களாய் இருப்பார்கள்
தேவ விலங்கு மனித தாவர உடல்களால் உலகுடன் பிணைக்கப்பட்டு இருக்கும் ஆத்மாக்களை அவ்வுடல்களில் நின்றும் பகுத்து அறியும் இயல்புடையவர்களே பண்டிதர் -கற்றறிந்தோர் -சம நோக்குடையவர் -எனப்படுவர்
உலகியலின் தாழ்மை நீக்கி ஆத்மாவின் மெய்யியல் யறிந்து பலவகையான ஏற்றத் தாழ்வுகளுடன் கூடியிருக்கும் ஆத்மாக்களை ஓரு படிப்பட்டவர் என்று அறிவோரே சம நோக்குடையவர் எனப்படுவர்
எந்த ஞானிகள் மனத்தில் ஆத்மாக்கள் யாவும் சமம் என்ற எண்ணம் நிறைந்து இருக்கிறதோ அவர்கள் இவ்வுலகிலேயே துறக்கத்துக்கு ஈடான நிலையை அடைகின்றனர்
தேவன் முதலான உடல்களில் நின்றும் நீங்கிய ஆத்மா குற்றம் அற்றது
ஆத்மாக்கள் யாவும் தம் மெய்யுருவில் ஆனந்தத்தையும் ஞானத்தையும் சமமாக யுடையவர்கள் என்பது தெளிவு
சண்டாளன் -பிறவி செயல் இவற்றால் இழிந்து கொடூரமான செயல்களையே செய்பவன்
—————-
88–தஸ்யைவம் பூதஸ்ய ஆத்மந பகவஸ் சேஷதகை ரஸதா தந் நியாம்யதா ததேக ஆதாரதா ச தத் தத் சரீர –
தத் தநு ப்ரப்ருதிபிஸ் சப்தை-தத் சாமாநாதி கரண்யேந ச ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாச புராணாதிஷு
ப்ரதிபாத்யதே இதி பூர்வமேவ யுக்தம் —
இந்நிலையை யுடைய ஆத்மா பகவானுக்கு அடிமைப்பட்டு இருப்பவனாகவும் -அவனால் ஏவப்படுபவனாகவும் -அவனையே பற்றுக்கோடாக யுடையவனாயும் இருத்தலால்
அவ்வுடல் அமைப்புக்கள் அந்த ஸாமா நாதி கரணத்தால் பகவானையே காட்டுகின்றன என்பது
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் அறுதியிடப்பட்டு இருக்கிறது என்பது முன்பே விளப்பட்டு விட்டது
———
89–தைவிஹ்யேஷா குணமயி மம மாயா துரத்யயா
மாமேவயே பிரபந்த்யந்தே மாயா மேதாம் தரந்திதே –ஸ்ரீ கீதை -7-14–இதி
தஸ்யை தஸ்ய ஆத்மந கர்ம க்ருத விசித்ர குண மய ப்ரக்ருதி ஸம் சேர்க்க ரூபாத் சம்சாராத் மோக்ஷ
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே
இத்யுக்தம் பவதி நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதிபி ஸ்ருதி பிஸ் ச —
என்னுடைய அலகிலா விளையாட்டால் விளைந்த -முக் குணம் நிரம்பிய இந்தப் பிரக்ருதி மாயா -கடத்தற்கு அரியது
எவர்கள் என்னயே சரணம் அடைகிறார்களோ -பிரபத்தி செய்கிறார்களோ -அவர்கள் இந்தப் பிரக்ருதியைக் கடக்கின்றனர்
செய்த வினைகள் முக்குணத் தொடர்பு அவற்றின் நின்றும் கிட்டும் பல படித்தான பிரகிருதியின் தொடர்பு ஆகிய பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பகவானைச் சரண் அடைவதால் அன்றி -பிரபத்தி செய்வதால் அன்றி-மற்ற ஒன்றால் கிட்டாது எனக் கூறப்படுகிறது
மறை மொழியும் பரமாத்மாவை அடைய வேறு வழி கிடையாது எனப் பகர்கிறது-
————
90—மயாததமிதம் சர்வம் ஜகதவ்யக்த மூர்த்திநா
மத்ஸ்தாநி சர்வ பூதாநி ந சாஹம் தேஷ்வ வஸ்திதா –ஸ்ரீ கீதை
ந ச மத் ஸ்தாநி பூதாநி பாஷ்யமே யோகம் ஐஸ்வர்யம்
இதி சர்வ சக்தி யோகாத் ஸ்வ ஐஸ்வர்ய வை சித்ரியமுத்தம்
ததாஹ-விஷ்டப்யாஹமீதம் க்ருத்ஸனமேகாம் சேந ஸ்திதோ ஜகத் இதி
அநந்த விசித்ர மஹா ஆச்சர்ய ரூபம் ஜகத் மம அயுதாம் சாம்சேந ஆத்ம தயா பிரவிஸ்ய
சர்வம் மத் சங்கல்பேந விஷ்டப்ய அநேந ரூபேண அநந்த மஹா விபூதி அபரிமிதோதோர குண சாகர
நிரதிசய ஆச்சர்ய பூத ஸ்தித அஹம் -இத்யர்த்த –
கட் புலனாகாத என்னால் வியாபிக்கப் பட்ட இவ்வுலகும் பிராணிகளும் என்னிடத்தில் இருக்கின்றன -என்னால் தாங்கப்படுகின்றன -நான் அவைகளால் தாங்கப்படுவதில்லை –
மேலும் இயற்கையாகவே வருகின்ற அளவற்ற செல்வமுடைய என்னை இந்தப் பிராணிகள் அறிவதில்லை
இவ்வாறு ஈஸ்வரனின் எல்லா வல்லமையும் எல்லா ஐஸ்வர்யமும் பெற்றுள்ள ஆச்சர்யமான தன்மை விவரிக்கப் பட்டன
அவ்வாறு இவ்வுலகு முழுவதையும் என்னுடைய ஒரு சிறு பகுதியாலேயே தாங்குகிறேன்
முடிவற்ற ஆச்சர்யமான உருவுடைய இவ்வுலகு எனது சக்தியின் பத்தாயிரத்தின் ஒரு பகுதியின் ஒரு சிறு பகுதியாலேயே உயிரின் உயிராய் நிறைக்கப்பட்டு யாவும் எனது வழுவாத வினைத் திட்பத்தினாலே தாங்கப்படுகின்றன
எல்லை யற்ற ஆச்சர்யமுடைய இவ்வுலகையும் உயிர்களையும் எல்லையற்ற வள்ளன்மை யுடைய நான் செல்வமாகக் கொண்டிருக்கிறேன் என்பது பொருளாகும் –
ஐஸ்வர்யம் -செல்வம்
யோகேஸ்வரம் -இயற்கையாகவே செல்வங்களை உடையனாய் இருத்தல் –
————
91–ததிதமாஹ-ஏகத்வே சதி நாநாத்வம் நாநாத்வே சதி ஸைகதா -அசிந்த்யம் ப்ரஹ்மணோ ரூபம் கஸ்தத் வேதிதும் அர்ஹதி –
இதி பிரசாசி த்ருதவேந ஏக ஏவ சந் விசித்ர சித்சித் வஸ்துஷு அந்தராத்மதயா பிரவிஸ்ய–தத் தத் ரூபேண
விசித்ர பிரகார விசித்ர கர்ம காரயந் நாநா ரூபதாம் பஜதே-
ஏவம் ஸ்வ அல்பாம்சேந து ஸர்வாஸ்சர்யமயம் நாநா ரூபம் ஜகத் தத் அந்தராத்மதயா பிரவிஸ்ய
விஷ்டப்ய நாநாத்வேநா வஸ்திதோபி சந்
அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண -ஸர்வேச்வரேச்வர பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம நாராயண
நிரதிசய ஆச்சர்ய பூத நீல தோய்த்த சங்காச புண்டரீக தல அமலாய தேஷண-சஹஸ்ராம்ஸூ சஹஸ்ர கிரண
பரம வ்யோம்நி தத் அக்ஷரே பரமே வ்யோமந் -இத்யாதி ஸ்ருதி சித்த ஏக ஏவ அதிஷ்டதே —
ஒன்றாய் இருந்தும் பலவாகவும் பலவாறு இருந்தும் ஒன்றாகவும் திகழ்வதான சிந்தனைக்கு எட்டாததுமான ப்ரஹ்மத்தின் வடிவை யாரே அறியத்தக்கவர் –
ஆச்சர்யமான சேதன அசேதன பொருள்களில் உள் நுழைந்து அந்தந்த ஆச்சர்யமான உருவங்களைக் கொண்டு விசித்ரமான செய்கைகளை செய்வித்துத் கொண்டு ஒன்றாகவே இருந்து கொண்டு பலபடி பட்டதாகத் தோன்றும் யாவற்றையும் ஆள்கின்றனனாக -ப்ரஹ்மம் -விளங்குகிறான்-தனது அற்ப ஒரு சிறு பகுதியால் பல ஆச்சர்யங்கள் நிறைந்த பலபடிப் பட்ட உலகை உள்ளுறைந்து தாங்கிக் கொண்டு இருப்பவனாய்
எல்லையற்ற நற் குணங்களுடையவனாய் -ஈஸ்வரர்கள் யாவருக்கும் ஈஸ்வரனாய் -தேவாதி தேவனாய் பர ப்ரஹ்மமாய் எல்லையற்ற ஆச்சர்யங்கள் யுடையவனாய் அளவற்ற ஒளியுடையோனாய் நீருண்ட மேகம் போன்ற மேனியனாய் தாமரை இதழ் ஒத்த கண்களை உடையவனாய் புருஷோத்தமனான நாராயணன் பரமபதத்தில் ஏகாந்தமாக உளுந்து அருளியிருக்கிறான்
வேதங்களில் ஆழ்ந்த கருத்தாய் விளங்குபவன் -மறைந்த முழைகளில் இருப்பவன் பரம பதத்தில் இருக்கிறான் –
அழிவற்ற அவன் பரமபதத்தில் விளங்குகிறான் -இவ்வாறு ஸ்ருதிகளால் தேறிய பொருளாய் விளங்குவோன் ஒருவனே –
ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய கஸ்ய சித் பி வஸ்துந ஏக ஸ்வபாவஸ்ய -ஏக கார்ய சக்தி யுக்தஸ்ய –
ரூபாந்தரயோக ஸ்வ பாவாந்தர யோக -சக்தி யந்திர யோகஸ் ச நகடதே தஸ்ய ஏதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண-
சர்வ வஸ்து விஸாஜாதீய தயா சர்வ ஸ்வாபவத்வம் சர்வ சக்தி யோகஸ் சேதி ஏகஸ்யைவ விசித்ர அநந்த நாநா ரூபதா
ச புநரபி அநந்த அபரிபித ஆச்சர்ய யோகேந ஏக ரூபதா ச ந விருத்தா இதி வஸ்து மாத்ர சாம்யாத்
விரோத சிந்தந யுக்தா இத்யர்த்த –
ப்ரஹ்மம் தவிர்த்த மற்ற எப்பொருளுக்கும் ஒரு படிப் பட்ட பண்பு -ஒரு முகமான செயல் திறன் ஒரே உரு மட்டும் உண்டு -மாறாக மற்றோர் உருமாறு தன்மையும் மாறுபட்ட பண்புகளும் வேறு பட்ட செயல் திறனும் ஏற்படுதல் இல்லை தம்முள் மாறுபட்ட பல படிப்பட்ட பொருள்களின் பண்புடையவனாயும் செயல் திறன் யாவையும் யுடைய ஒன்றாய் எல்லை யற்ற பற்பல ஆச்சர்யமான உருக்கள் உள்ளதாய்
இப்படிப்பட்ட பண்புகள் அனைத்தையும் தன் எல்லையற்ற ஆச்சார்யமான இருப்பு நிலையால் தன் யோக சக்தியால் ப்ரஹ்மம் பெற்று இருத்தல் மாறுபாடு உடையது அல்ல –
பொருட்களில் மாறுபாட்டால் மட்டும் ப்ரஹ்மம் மாறுபாடு உடையது எனக் கொள்ளத் தகாது –
யதோக்தம்
சக்த்ய சர்வ பாவாநாம் அசிந்ய ஞான கோஸரா யாதோதோ ப்ரஹ்மணஸ் தாஸ்து சர்காத்யா பாவ சக்தய பவந்தி
தபாதாம் ஸ்ரேஷ்ட பாவ கஸ்ய யதோஷ்ணதா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இதி -ஏதத் யுக்தம் பவதி -ஸர்வேஷாம் அக்னி ஜலாதீநாம் பாவாநாம் ஏகஸ்மின்நபி பாவே த்ரஷ்டைவ சக்தி தத் விஸாஜாதீய
பாவாந்தரேபி இதி ந சிந்தயிதும் யுக்தா ஜலாதவ் அத்ருஷ்டாபி தத் விசாஜாதீயே பாவகே பாஸ்வரத்வ உஷ்ணத்வாதி சக்தி
யாதாருச்யதே ஏவமேவ சர்வ வஸ்து விஸாஜாதீயே ப்ரஹ்மணி சர்வ சாம்யம் நாநு மாதும் யுக்தம்
இதி அத விசித்ர அநந்த சக்தி யுக்தம் ப்ரஹ்ம இத்யர்த்த ததாஹ
ஜெகதே தந் மஹா ஆச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத் மந தேநாஸ்சர்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத்தை இதி –ஸ்ரீ பாகவதம் –
மேலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
தவசிகளில் சிறந்தவரே -மைத்ரேயரே -தீ நீர் போன்றவற்றில் அவற்றுக்கு என சிறப்பான பண்புகள் இருப்பது போல் நம் மனதிற்கு எட்டாத திறமைகள் யாவும் உடையதாயும் -அவ்வாறே ஆக்கல் அளித்தல் அழித்தல் திறன்களை யுடையதாயும் இருத்தல் ப்ரஹ்மத்திற்கே உரிய பண்பு -என்று கூறப்பட்டு உள்ளது
தீ நீர் போன்றவற்றிற்கு ஒவ்வொரு சிறப்புத் தன்மைகள் இருக்கின்றன
ஆயின் அவற்றின் நின்றும் வேறுபட்ட பொருள்களின் பண்புகள் அவற்றில் காணக் கிடைப்பதில்லை
நீருக்கு அதன் பண்பின் நின்றும் ஒளி விடும் திறன்
இல்லை -அவ்வாறே ஒளிர்தல் வெப்பமடைதல் எனும் பண்புகளை யுடைய தீயில் நீரின் பண்பு காணப்படுவதில்லை
ஆயின் ப்ரஹ்மம் ஒன்றில் மட்டும் இது போன்ற எல்லாப் பொருள்களின் பண்புகளும் திறன்களும் காணப்படும்
அதாவது -விசித்ரமான பண்புகளை யுடையது ப்ரஹ்மம் என்பது விளங்கும்
அவ்வாறே அக்ரூரரும் நம்பி மூத்த பிரானையும் கிருஷ்ணனையும் கோகுலத்தில் நின்றும் அழைத்துச் செல்லுகையில் -ஸ்ரீ மத் பாகவதம் -பல ஆச்சர்யமான உருக்களுடைய இவ்வுலகு உன் உரு -அந்த ஆச்சர்யமான உன் உருவில் கண்ணா நான் கலந்தேன் -என்றார்
————-
92-ததே தத் நாநாவித அநந்த ஸ்ருதி நிகர -சிஷ்ட பரிக்ருஹீத தத் வ்யாக்யான பரிஸ் ஸ்ரமாத் அவதாரிதம்
ததாஹி -பிரமாணாந்தரா பரி த்ருஷ்ட -அபரிமித பரிணாம-அநேக தத்வ நியத க்ரம விஸிஷ்டவ்
ஸ்ருஷ்ட்டி ப்ரலயவ் ப்ராஹ்மண அநேக விதா ஸ்ருதயோ வதந்தி
அப்படிப்பட்ட இது -ப்ரஹ்மம் -சான்றோர் களால் கைக் கொள்ளப் பட்ட எல்லை யற்ற பலபடிப்பட்ட வேதங்களின் திரள் கருத்தாய் அவர்களுடைய உரை நன்கு ஆராய்ந்து நிறுவப் பெற்றதுஅவ்வாறே வேதங்கள் தவிர்த்த மற்ற மெய்யுரைகளால் அறியப்பட முடியாததாயும் -எல்லையற்ற பரிணாமம் யுடையதாயும் பல தத்வங்களின் ஒழுங்கான விதி முறைகள் நிறைந்ததாயும் உள்ள ஆக்கல் அளித்தல் அழித்தல் தொழில்களைச் செய்யும் ப்ரஹ்மம் பலவிதமாக பல வேதங்களில் சொல்லப்படுகிறது –
நிரவத்யம் -நிரஞ்சனம் -விஞ்ஞானம் -ஆனந்தம் -நிர்விகாரம் -நிஷ்க்ரியம் -சாந்தம் -நிர்குணம் -இத்யாதிகா
நிர்குணம் ஞான ஸ்வரூபம் ப்ரஹமேதி காஸ்சந ஸ்ருதயோ அபி ததபி
குற்றமின்மை –தனித்தன்மை நிறைந்த அறிவுடைமை ஆனந்தமுடைமை மாறுபாடின்மை பிளவு படாமை செயலின்மை அமைதியுடைமை தீய பண்புகள் அற்ற தன்மை ஆகிய தீய குணங்கள் அற்ற அறிவுருவானது ப்ரஹ்மம் என்று சில வேதங்கள் மொழிகின்றன
நேஹ நாநாஸ்தி கிஞ்சன ம்ருத்யோஸ் ச ம்ருத்யு மாப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி
யத்ரத்வஸ்ய ஸர்வாத்மைவாபூத் தத்கேந கம்பஸ்யேத் தத்கேந கம் விஜாநீயாத்–இத்யாதிகா
நாநாத்வ நிஷேதவாதிந்ய சாந்தி காஸ்சந ஸ்ருதய
(நிரவத்யம் –கர்ம சம்பந்தம் அற்றது –நிரஞ்சனம்-கர்ம பல சம்பந்தம் அற்றது-நிஷ்க்ரிய-அதனால் நிர் அயவவம் )
(ஸாஸ்த்ர ஞானமும் ஞான பலனும் ஷாந்திக்கு ஹேது -கிரியைகளும் கிரியைகளின் பலமும் அஷாந்திக்கு ஹேது)
பலவாகத் தோன்றும் எதுவும் இல்லை -இதைப் பலவாகக் காண்பவன் அழிவின் நின்று மீண்டும் அழிவையே அடைகிறான்
இங்கு உள்ள பொரு ட் கள் யாவும் அவனே -அதுவே என்று இருக்கையில் அதை எவ்வாறு பிரித்துப் பார்க்க முடியும் எவ்வாறு பிரித்து உணர -அறிய முடியும் -என்று மறுத்துக் கூறும் பல சொற்களும் சில வேதங்களில் இருக்கின்றன –
யஸ் சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமாநி க்ருத்வாபி வதந் யதாஸ்தே –
சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத் புருஷா ததி-
எல்லாம் அறிந்தவன் -எல்லாவற்றிற்கும் அறிவானவன் -அறிவையே தவமாக -நெறியாக -உடையவன் -பொருட்கள் யாவற்றிற்கும் பெயர் உருவங்களைக் கொடுப்பவன் -மின்னொளி பெற்ற பரம புருஷனிடம் இருந்து -கால அளவுகள் -நிமிடங்கள் -தோன்றின
அபஹத பாப்மா விஜரோ வி மிருத்யு விசோகோ விஜிகத்ஸ்ஸோபிபாச சத்யகாம ஸத்யஸங்கல்ப இதி சர்வஸ்மிந்
ஜகதி ஹேய தயா அவகதம் சர்வம் குணம் ப்ரதிஷித்ய-நிரதிசய கல்யாண குண அநந்த்யாம்
சர்வஞ்ஞதாம் சர்வ சக்தி யோகம் சர்வ நாம ரூப வியாகரணம் ஸர்வஸ்ய ஆதாரதாம் காஸ்சந ஸ்ருதய ப்ருவதே
பாபங்கள் அற்றது -கிழத்தன்மை அற்றது அழி வற்று துயர மற்று பசியற்று தாகமற்று நிலை பெற்ற வினைத் திட்பம் யுடையவனாய் -அடைய வேண்டிய தேவைகள் ஏதும் அற்றவனாய்என்றும் உலகின் தீய குணங்களுக்கு எதிர்த்தட்டாய் -நற் குணங்கள் யாவும் நிறைந்தவனாய் -அளவற்ற நற் குணக் கடலாய் -யாவும் நிறைந்தவனாய் -யாவும் அறிந்தவனாய் -எல்லாம் அறிந்தவனாய் எல்லாவற்றிற்கும் பெயர் உருவம் கொடுப்பவனாய் -யாவற்றிற்க்கும் பற்றுக் கோடனாய் என்று சில வேத வாக்யங்கள் கூறுகின்றன –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநி-
ஐததாத் மியமிதம் சர்வம் ஏகஸ்மிந் பஹுதாவிஜாரா இத்யாதிகா
ப்ரஹ்ம ஸ்ருஷ்டம் ஜகத் நாநாகாரேம் ப்ரதிபாத்ய தத் ஐக்யம் ச ப்ரதிபாத யந்தி காஸ்சந ஸ்ருதய
இவை யாவும் ப்ரஹ்மமேஅது இவற்றைப் படைத்து அழித்து காத்தலைச் செய்வதால் இவை யாவும் ஆதாரமாக உடையது -இவ்வாறு ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்ட இவ்வுலகு பலவிதமாக இருக்கிறது போன்றசில வேத மொழிகள் ப்ரஹ்மத்தின் படைப்பின் பல படித்தான் தன்மையைப் பேசி அதனுடன் ப்ரஹ்மம் ஒன்றி இருத்தலைச் சொல்கின்றன
ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வ
போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா
பிரஜாபதிரகாம யாத பிரஜா ஸ்ருஜயேதி
பதிம் விஸ்வ ஸ்யாத் மேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்
ஸர்வஸ்ய வசீ சர்வஸ் யேசாந இத்யாதிகா ப்ரஹ்மண சர்வஸ்மாத யந்யத்வம் ஸர்வஸ்ய ஈஸி தத் யத்வம் ஈஸ்வரத்வம்
ச ப்ரஹ்மண -ஸர்வஸ்ய சேஷதாம் பதித்வம் ச ஈஸ்வரஸ்ய காஸ்சந் ப்ரதிபாத யந்தி
அந்தப் ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜெநாநாம் சர்வாத்மா -ஏஷத ஆத்மா அந்தர்யாம் அம்ருத
ஆத்மாவையும் அதைத் தூண்டுவோனையும் தனித் தனியானவை என்று அறிவாயாக –
துய்ப்பவன் துய்க்கப்படும் பொருள் துய்க்கச் செய்பவன் இருப்பதை அறிவாயாக
ப்ரஜாபதி ப்ரஜைகளைப் படைக்க விரும்பினான்
உலகிற்கும் தனக்கும் தனிப் பெரும் தலைவன் -நிலையானவன் -மங்களமானவன் -அண்டினாரை நழுவ விடாதவன் –
ஈஸ்வரர்கள் என்று கூறப்படுபவர்களின் நின்றும் வேறுபட்ட மஹேஸ்வரன்
தேவர்கள் எனப்படுவோரிலும் வேறுthevanதேவன்
எல்லோரையும் தன் வசப்படுத்துவோன்-எல்லாருக்கும் தான் வசப்படாதவன் எல்லோருக்கும் ஆள்பவனாய் இருப்பவன் -எல்லாவற்றையும் தன் செல்வமாக உடைyentruyellaameஎல்லாம்
ப்ரஹ்மம் எல்லாவற்றிலும் உட் புகுந்து இருத்தலையும்
எல்லாவற்றுக்கும் தலைவனாக இருத்தலையும்
இவை யாவற்றையும் தன் செல்வமாக அடைந்து இருத்தலையும் விளக்கி ப்ரஹ்மத்தின் எல்லாவற்றையும் ஆளுதல்
எல்லாவற்றையும் செல்வமாக உடைமை
எல்லாவற்றுக்கும் தலைமை
ஆகிய சிறப்புக்களை சில மறை மொழிகள் பறை சாற்றுகின்றன
இந்த ஆத்மா எல்லாவற்றிற்கும் நிலை பெற்று இருப்பவன்
இந்த ஆத்மா உள் இருப்பவன் அமுதமானவன் அழிவற்றவன்
யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆப சரீரம் யஸ்ய தேஜஸ் சரீரம் இத்யாதி
யஸ்ய அவ்யக்தம் சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யு சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் இதி
ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ப்ரஹ்மணஸ் ச சரீராத்ம பாவம் தர்சயந்தி காஸ்சந இதி
நாநா ரூபாணாம் வாக்யாநாம் அ விரோத முக்யார்த்த பரித்யாகஸ் ச யதா சம்பவதி ததைவ வர்ணனீயம் –
எவனுக்கு நிலம் உடலோ -எவனுக்கு நீர் உடலோ -எவனுக்கு தீ உடலோ -என்றும்
எவனுக்கு மூலப் ப்ரக்ருதி -கட் புலனாகாதது -உடலோ -எவனுக்கு ஆத்மா உடலோ -எவனுக்கு அழியும் ம்ருத்யு யமன் -உடலோ -எவனுக்கு உலகு உடலோ -என்று
ப்ரஹ்மம் தவிர்த்த மற்றை யாவும் அதற்கு உடலாகவும் அது அவற்றுக்கு உயிராகாவும் உறையும் தன்மையை சில வேத வாக்யங்கள் காட்டுகின்றன –
இவ்வாறு பலவாறு ப்ரஹ்மத்தின் நிலை கூறும் மொழிகளில் ஒன்றுக்கு ஓன்று கருத்து மாறுபடாது -முக்யமான பொருளைக் கை -விடாது எவ்வாறு அதன் நிலை தேறுகிறதோ
அதை ஆராய்வோம் –
வர்ணிதம் ச -அதிகார ஸ்ருதய ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா–நிர்க்குண வாதாஸ் ச பிராகிருத ஹேய குண நிஷேத
விஷய தயா வ்யவஸ்திதா நாநாத்வ நிஷேத வாதாஸ் ச ஏகஸ்யைவ ப்ரஹ்மண சரீர தயா பிரகார பூதம் சர்வம் சேதன அசேதனம் வஸ்த்விதி
சர்வஸ்யாத் மதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்திதமிதி ஸூ ரஷிதா-சர்வ விலக்ஷணத்வ பதித்தவ ஈஸ்வரத்வ-கல்யாண குணாகரத்வ –
ஸத்ய ஸங்கல்பத்வாதி வாக்யம் ததப்யுபகமாதேவ ஸூ ரஷிதாம் ஞான ஆனந்த மாத்ர வாதிச -ச்ரவஸ்மாதந் யஸ்ய சர்வ கல்யாண
குணாஸ்ரயஸ்ய சர்வேஸ்வரஸ்ய சர்வ சேஷிணே -சர்வ ஆதாரஸ்ய சர்வ உத்பத்தி ஸ்திதி ப்ரலய ஹேது பூதஸ்ய
நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய சர்வாத்ம பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூபநி ரூபக தர்ம -மல ப்ரத்யநீக அநந்த ரூப
ஞானமேவேதி ஸ்வ பிரகாச தயா ஸ்வரூபமபி ஞானமேவேதி ச ப்ரதிபாதநாத் அநு பாலிதம் ஐக்ய வாதாஸ் ச
சரீராத்ம பாவேந சாமாநாதி கரண்ய -முக்யார்த்ததோப பாதநாதேவ ஸூஸ்திதா —
(இரண்டுமே சம ப்ராதான்யம் என்பதால் அபஹத பாப்மாதகாதிகளையும் சொல்லி ஸத்ய காமத்வம் ஸத்ய சங்கல்பத்துவம் ஒரே வாக்கியத்தில் சொல்லிற்று)
இது இவ்வாறு விவரிக்கப் படுகிறது
ப்ரஹ்மம் மாறுபாடு அற்றது என்னும் மொழிகளால் அதன் உள்ளுரு -ஆத்ம ஸ்வரூபம் -மாறு படாது இருத்தல் கருப் பொருளாய்க் கொள்ளப் படுகிறது
குணம் அற்றது என்று வாதிக்கும் மொழிகள் உலகியலின் இழி குணங்கள் சிறிதும் இன்மையைப் பேசுகின்றன
பலப்படிப் பட்டதாய் இருத்தலை மறுக்கும் வாக்கியங்களில் ஒரே ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதனப் பொருட்கள் நிலை பெற்று
அவற்றுள் நுழைந்து வதிதல் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
மற்றவற்றின் நின்றும் மாறுபட்டு அவை யாவற்றுக்கும் தலைவனாய் -அவற்றைத் தன் உடைமைகளாய்க் கொண்டு நற் பண்புகளின் கடல் எனத் திகழ்தல் -பிழை படா வினைத் திட்பம் உடைமை போன்ற சொற்களால் அதன் பண்புகள் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் மாறு பட்டது -நற் குணங்கள் யாவற்றுக்கும் இருப்பிடமானது -எப்பொருளையும் தன் உடைமையாய்க் கொண்டது -எதனையும் தன் அடிமை கொள்ள வல்லது – யாவற்றிக்கும் பற்றுக் கோடானது -யாவற்றிற்கும் ஆக்கல் அளித்தல் அழித்தலுக்கு காரணமானது குற்றங்கள் அற்றது -மாறு பாடு அற்றது -எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பது -என்றும்
தனது அறுதியிடும் பண்பாக மலங்கள் அற்றதும் -ஞான ஆனந்தமே உரு வெடுத்ததாய் -தானே ஒளிர்வதாய் -ஞான மயமாய் இருக்கும் தன்மையைக் கொண்டதாய் ஞான ஆனந்தம் உள்ளது என்றும் -ஞான ஆனந்தம் மட்டுமே ப்ரஹ்மம் என்று அறுதியிடும் சொற்களும் உறுதி செய்கின்றன
ஐக்ய வாதத்தால் -ஒன்றே உண்டு எனக் கொள்வதால் -உடல் உயிர் தொடர்பால் -ஸாமா நாதி கரணம் -ஆகுபெயர் திரள் பொருளாய் நன்கு விளங்குகிறது
—————–
93–ஏவம் ச சதி அபேதா வா போதோ வா வ்யாத்யாத்ம கதாயா வா -வேதாந்த வேத்ய-கோயம் அர்த்த சர்மர்த்திதோ பவதி ?<br>ஸர்வஸ்ய வேத வேத்யத்வாத் சாவம் சமர்த்திதம் -சர்வ சரீரதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்த்திதம் இதி -அபேத சமர்த்தித-<br>ஏகமேவ ப்ரஹ்ம நாநா பூத சித் அசித் வஸ்துப் பிரகாரம் நாநாத் வேந அவஸ்திதம் இதி பேதா பேதவ்<br>அசித் வஸ்து நஸ் ச சித் வஸ்து நஸ் ச ஈஸ்வரஸ்ய ச ஸ்வரூப ஸ்வபாவ வை லஷண்யாத் அசம்காராஸ் ச பேத சமர்த்திதா–
இக் கூற்றுக்களால் ஓரே படித்தாய் இருத்தலா அபேதமா -பல படித்தாய் இருத்தலா பேதமா -இரண்டும் கலந்ததா -எது வேதாந்தத்தால் இங்கு நிறுவப்படுகிறது -என்று கேட்டால்
இவை யாவும் மறை மொழிகளாதலால் இவை aயாவுமே கொள்ளப் பட வேண்டும் எதுவும் தள்ளப்பட லாகாது –
எல்லாவற்றையும் உடலாகக் கொண்டு அவற்றின் நின்றும் பிரிவற்ற நிலையில் ப்ரஹ்மம் ஒன்றே உறைகிறது என்பதால் பேதமின்மையும் ஒரே ப்ரஹ்மம் பல உருவங்களுடைய சேதன அசேதன பொருள்களில் பலவகையாக உறைந்து விளங்குகிறது -என்பதால்
பேதா பேதமும்
சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் வேறுபட்டு அவற்றுக்கு உடமைகாரனாய் விளங்கி அவற்றின் நின்றும் உருவாலும் உயிராலும் வேறுபட்டு இருப்பதால் பேத வாதமும் ஒத்துக் கொள்ளப் படுகிறது
———–
94–நநு ச -தத்வமஸி ஸ்வேத கேதோ -தஸ்யதா தேவ சிரம் -இதி ஐக்ய ஞான மேவ பரம புருஷார்த்த லேசான மோக்ஷ சாதனம்
இதி கம்யதே நைத தேவம் -ப்ருதகாத்மாநம் பிரேரிதாரம் சமதவா ஜூஷ்டஸ்தஸ்தே நாம்ருதத்வமேதி
இதி ஆத்மாநம் பிரேரிதாரம் ச அந்தர்யாமிணம் ப்ருதக்மத்வா தத ப்ருதக்த்வ ஞானத்தோதோ தேந பரமாத்மநா ஜூஷ்ட அம்ருதத்வமேதி
இதி சாஷாத் அம்ருதத்வ பிராப்தி சாதனம் ஆத்மந நியந்துஸ் ச ப்ருதக்பாவ ஜினாமம் இத்யவகம்யதே
ஐக்ய வாக்ய விரோதாத் ஏதத் ஏதத் அபரமார்த்த ச குண ப்ரஹ்ம பிராப்தி விஷயமிதி அப்யுப கந்தவ்யம்
இதி சேத் ப்ருதக் ஞானஸ்யைவ சாஷாத் அம்ருதத்வப் பிராப்தி சாதனத்தவ ஸ்ராவணாத் விபரீதம் கஸ்மாத் ந பவதி –
அவ்வாறு இல்லை -நீயே அதுவாகிறாய் ஸ்வேத கேது -உபாஸிப்பவனுக்கு -அதுவரை hடான் -ஐக்ய ஞானம் அடையும் வரை தான் -கால விளம்பம் -உடலை நீத்தவுடன் ப்ரஹ்மமாகவே ஆகி விடுகிறான் என்று –
ஒன்றேனும் அறிவே பெறற்கு அரிய பேர் ஆனந்த மோக்ஷத்தை அடைவிக்கும் ஸாதனமாகிறது -என்று கூறுவீர்களாகில் -அத்வைதிகள்-அவ்வாறும் இல்லை –
ஆத்மாவையும் அதை ஆள்பவனையும் தனித் தனியானவர்கள் என அறிந்து -அவன் அருளுக்கு இலக்காகி -மோக்ஷம் அடைகிறான் -என்று ஆத்மாவின் உள்ளுறைவோனாய் -அதை ஆள்பவன் வேறுபட்டு விளங்குகிறான் என்பதை உணர்ந்து அந்த வேறுபட்ட ஞானத்தாலேயே அந்தப் பரமாத்மாவை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருக்கிறது
ஆயினும் உலகம் ஒருபடித்தானது என்ற அபேத ஞானத்தாலே மேலான மோக்ஷத்தை அடைகிறான் என்றும்
அதற்கு மாறாக உலகம் பல படித்தானது என்னும் பேத ஞானத்தாலே தாழ்ந்த குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை அடைதலாகும் என்பீராகில்
பேத ஞானத்தால் மோக்ஷத்தை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருப்பதால் -அபேத ஞானத்தால் அவ்வாறு கூறப்படவில்லை -அதற்கு aமாறுபாடான கருத்துக் கொள்வது விபரீதமாகும் ஆகையால் ஐக்ய ஞானத்தால் கிடைப்பது தாழ்ந்த மோக்ஷம் என்று ஏன் கொள்ளக் கூடாது –
ஏதத் யுக்தம் பவதி -த்வயோ துல்யயோ விரோதே சதி அவிரோதந தயோ விஷய விவேச நீய -இதி கதம விரோத இதி சேத்
அந்தர்யாமி ரூபேண அவஸ்தித தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண சரீர தயா பிரகாரத்வாத் ஜீவாத்மந-தத் பிரகாரம் ப்ரஹ்ம ஏவ தவம்
இதி சப்தேந அபி தீயதே ததைவ ஞாதவ்யம் இதி தஸ்ய வாக்யஸ்ய அர்த்த ஏவம் பூதாத் ஜீவாத் ததாத்மதயா அவஸ்தி தஸ்ய
பரமாத்மநோ நிகில தோஷ ரஹிததயா ஸத்யஸங்கல்பத்வாத் யநவதிக யதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரத்தவே
ந ச ய ப்ருதக்பாவ ஸோநுசந்தேய இதி அஸ்ய வாக்யஸ்ய விஷய இத்யயமர்த்த பூர்வமேவ அஸக்ருத் யுக்த –
இதை விளக்குவோம் -ஒத்த பலமுடைய இரு கருத்துக்கள் ஒன்றுக்கு ஓன்று மாறுபாடாகத் தோன்று மாகில் -அவற்றின் மாறுபாடுகளை விலக்கி -இரு கருத்துக்களுக்கும் ஏற்பப் பொருள் கொள்ளுதலே தகுந்தது –
மாறு பாடு எங்கே தோன்றுகிறது எனில்
ஆத்மாவில் உள்ளுறைவோனாக பர ப்ரஹ்மம் இருக்கிறது -அதற்கு உடல் என்னும் நிலையில் அதின் நின்றும் பிரிவற்றதாக ஆத்மா விளங்குகிறது
இது முறையே -தத் -அது -த்வம் -நீ என்ற சொற்களால் கூறப்படுகிறது-இதை அறிவதே மெய் ஞானம் என்பதே பொருள் -இவ்வாறு பிராணிகளின் உயிர்களுக்கும் அதன் உள்ளுறைவோனாகவும் குற்றங்களுக்கு எதிர்த்தட்டாயும் -மெய்யான வினைத் திட்பம் உடையோனாகவும் -எல்லையற்ற அதிசயமான நற் குணங்களை யுடையோனாகவும் -தனித்தன்மை இங்கு கொள்ளத் தக்கது –
இதுவே இவ் வாக்கியத்தின் பொருள் -இது முன்பே பலதடவை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது –
———–
95–போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா-இதி போக்ய பூதஸ்ய வஸ்துந அசேதனத்வம் பரார் தத்வம்-சதத விகாராஸ்ப தத்வம் –
இத்யாதய ஸ்வபாவா போக்து ஜீவாத்மநஸ் ச அமல அபரிச்சின்ன ஞான ஆனந்த ஸ்வ பாவஸ்யைவ அநாதி கர்ம ரூபா வித்யாக்ருத
நாநாவித ஞான சங்கோச விகாசவ் போக்ய பூதா சித் வஸ்து சம்சர்க்கஸ் ச பரமாத்மா உபாஸநாத் மேஷஸ் ச இத்யாதய
ஸ்வ பாவா ஏவம் பூத போக்த்ரு போக்யயோ அந்தர்யாமி ரூபேண அவஸ்தாநம் ஸ்வரூபேண
ச அபரிமித குணவ்க ஆஸ்ரயத்வேந அவஸ்தானம் இதி பரஸ்ய ப்ரும்ஹண த்ரிவிதா வஸ்தாநம் ஞாதவ்யம் இத்யர்த்த —
துய்ப்பவன்- துய்க்கப்படுவது -இவற்றைத் துய்க்கச் செய்பவன் -என்பதை அறிந்து என்பதால் துய்க்கப்படும் பொருட்கள் அறிவற்றவையாகவும் -பிறருக்கே யாகவும் -எப்பொழுதும் மாறுபாடு அடைந்து கொண்டு இருப்பவை யாகவும் இருத்தலே அவற்றின் பண்புகள் ஆகின்றன –
துய்ப்பவன் -ஜீவாத்மா -குற்றமற்று அளவற்ற ஞானத்தையும் -ஆனந்தத்தையும் -பண்புகளாய்க் கொண்டவனாய் -துவக்கற்ற வினையின் அடியாகப் பிறந்த -பல படித்தான ஞானச் சுருக்கையும் விரிவையும் உடையோனாய் அசேதன பொருட்களைத் துய்ப்போனாய் பரமாத்மாவை உபாஸித்து வீடு பேறு அடைதலைத் தன் செயல்களாக உடையவனாய் இருக்கிறான்
இவ்வாறு துய்ப்பவன் -துய்க்கப் படுவதற்கு உள்ளுறைவோனாக இருந்து கொண்டு -தன் மெய்யுருவில் அளவற்ற நற் குணங்களுக்கு இருப்பிடமாய் இருத்தல் ப்ரஹ்மத்தின் பண்பு -இவ்வாறு மூன்று படிப்பட்ட பொருள்கள் அறியத் தக்கவை என்பது பொருள்-
—————-
96 —தத்வமஸி -இதி சத் வித்யாயாம் உபாஸ்யம் ப்ரஹ்ம ச குணம் ச குண ப்ரஹ்ம பிராப்திஸ் ச பலம் –
இத்யபியுக்தை பூர்வாசார்யை வ்யாக்யாதம்
அது நீயாகிறாய் -தத்வமஸி -என்ற வாக்யத்திற்கு பண்புகளுடன் கூடிய உபாஸனையால் -பண்புகள் நிறைந்த ப்ரஹ்மத்தை இடையறாது தியானித்து உயர்வற உயர் நலம் உடைய ப்ரஹ்மத்தையே அடைதல் என்று முந்தையோர் உரைகளில் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது –
யதோக்தம் வாக்யகாரேன-யுக்தம் தத் குணக உபாஸநாத் -இதி வ்யாக்யாதம் ச த்ரமிட ஆச்சார்யேனே வித்ய விகல்பம் வததா-
யத்யபி சச்சித்தோ ந நிர்புக்ண தைவதம் குண கணம் மனசா அநுதாவேத் தாதாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே
இதி தத்ரபி ச குண ஏவதா ப்ராப்யதே -இதி சச்சித்த ஸத்வித்யா நிஷ்ட –
ந நிர் நிர்புக்ணதைவதம் குண கணம் மனசாநுதா வேத்-
அபஹத பாப்மத்வாதி கல்யாண குண கணம் தைவதாத் விபக்தம் யத்யபி தஹர வித்யா நிஷ்ட இவ
சச்சித்தோ நஸ்மரேத் ததாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே-தேவ ஸ்வரூப அநு பந்தித்வாத்-
சகல கல்யாண குண கணஸ்ய கேநசித் பரதேவதா அசாதாரண்யேந நிகில ஜகாத் காரணத்வாதிந குணேன உபாஸ்யமாநோபி
தேவதா வஸ்துந ஸ்வரூப அநு பந்தி சர்வ கல்யாண குண விஸிஷ்ட ஏவ உபாஸ்யதே அத ச குணம் ஏவ ப்ரஹ்ம
தத்ராபி ப்ராப்யம் இதி ஸத்வித்யா தஹர வித்யயோ விகல்ப இத்யர்த்த –
இதை ஒட்டியே வாக்யகாரரும் -அந்த குணங்கள் இடையறாது தியானிப்பதே தகுந்தது -எனக் கூறி யுள்ளார் –
உரையாசிரியர்களான த்ரமிடாச்சார்யரும் இதையே இடையறாத த்யான நெறிகளில் -வித்யைகளில் -மாறுபாடுகள் இல்லை என்கிறார் –
உபநிஷத்துக்களில் 32 ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -அவற்றில் ஸத் வித்யையும் தஹர வித்யையும் அடங்கும் –
ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் ப்ரஹ்மத்தின் செயல்பாட்டுப் பண்புகளை மனத்தில் கொள்கிறார்கள்
அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள்ப்ரஹ்மத்தின் வெளிப்படையான பண்புகளை நினைக்கிறார்கள் –
ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் பாபம் சிறிதும் அற்றல் போன்ற நற் குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை பக்தி செய்கிறார்கள் –
அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள் இந்த பண்புகளை நினைக்காமல் ப்ரஹ்மத்தின் உள்ளுறை பண்புகளை ஸ்துதிக்கிறார்கள் –
தேவனுடைய உள்ளுரு நற் குணங்கள் யாவும் நிறைந்தது என்பதால் அதன் சிறப்புக் குணங்களான உலகின் காரணப் பொருளாய் இருப்பது போன்றவைகளும் உள்ளுருவிற்கு எப்பொழுதும் யுடைய நற் குணங்கள் யாவும் இடையறாது த்யானிக்கப் படுகின்றன –
ஆகையால் எந்த விதமாக இடையறாத த்யானம் அமைந்தாலும் அதனால் உபாஸிக்கப் படுவதும் அவ்வாறு த்யானிக்கப் படுவதும் அதனால் அவர்கள் இறுதியில் அடைவதும் உயர்வற உயர்நலம் உடைய ப்ரஹ்மத்தையே நெறிகளில் மட்டும் மாறுபாடு உள்ளது என்பதே பொருள் –
————-
97–நநு ச ஸர்வஸ்ய ஐந்தோ பரமாத்மா அந்தர்யாமி தந் நியாம்யம் ச சர்வம் -இத்யுக்தம் –
ஏவம் ச சதி விதி நிஷேத சாஸ்த்ராணாம் அதிகாரி ந த்ருச்யதே ய ஸ்வ புத்யைவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸக்த-
ச ஏவம் குர்யாத் ந குர்யாதிதி விதி நிஷேத யோக்ய ந ஸைஷ த்ருச்யதே -சர்வஸ்மிந் ப்ரவ்ருத்தி ஜாதி
ஸர்வஸ்ய பிரேரக பரமாத்மா காரயிதா -இதி தஸ்ய சர்வ நியமனம் ப்ரதிபாதிதம் ஸ்ரூயதே ச ஏஷ ஏவ சாதுகர்ம காராயதி
தம்யமேப்யோ லோகேப்யே உந்நிநீஷதி ஏஷ ஏவ அசாது கர்ம காராயதி தம் யமதோ நிநீஷதி
இதி சாத்வ சாது கர்ம காரயித்ருத்வாத் நைர் க்ருண்யம் ச –
பிராணிகள் யாவற்றிலும் உள்ளுறைந்து அவற்றை ஏவல் கொள்கிறான் -என்பதால்
விதித்தல் தடுத்தல் ஆகிய வற்றைச் செய்பவர் என்று ஒருவரும் காணப்படுவதில்லை
பரமாத்மா தானே ஒருவரை ஒன்றில் ஈடுபடுத்தலும் விலக்கலும் செய்வதால் சில செயல்களைச் செய்விப்பவதும் செயல்களில் நின்றும் விலக்குதலும் ஆகிய விதித்தல் தடுத்தல் இங்கு காணப்படுவதில்லை ஏன் எனில் யாவற்றையும் செயல் படத் தூண்டுபவன் பரமாத்மாவே யாதலால் யாவும் அவன் செயல் என்று கொள்ளப்படும் –
வேதத்திலும் இப்படிப்பட்ட நற் கருமங்கள் செய்பவன் உலகில் உயர்த்தப் படுகிறான் -இப்படிப் பட்ட தீய செயல்களைச் செய்பவன் தாழ்த்தப் படுகிறான் என்று கூறப்பட்டுள்ளது -இவ்வாறு ஒருவரை நற் செயல்களும் மற்ற ஒருவரை தீய செயல்களைச் செய்யத் தூண்டுவதால் ஈஸ்வரனுக்கு நடு நிலைமை தவறுதல் ஏற்படும்
அதிர உச்யதே -ஸர்வேஷாமேவ சேதநாநாம் சிச் சக்தி யோக ப்ரவ்ருத்தி சக்தி யோக -இத்யாதி
சர்வம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரிகரம் சாமாந்யேந சம்பவித்தாய தந் நிர்வஹணாய-தத் ஆதாரோ பூத்வா அந்தப் பிரவிஸ்ய
அநுமந்த்ரு தயா ச நியமனம் குர்வந் -சேஷித்வேந அவஸ்தித பரமாத்மா ஏததாஹித சக்திஸ் ஸந் ப்ரவ்ருத்தி நிவ்ருத்யாதி
ஸ்வயமேவ குருதே-ஏவம் குர்வாண மீஷமாண பரமாத்மா உதாசீந ஆஸ்தே அத சர்வம் உபபந்நம் –
அது அவ்வாறு அல்ல -எல்லாச் சேதனப் பொருள்களுக்கும் உயிர் எனும் ஞானப்பொருள் காணப்படுவதால் அவற்றுக்கு -உடல் புலன்களைக் கொண்டு -ஒரு செயலை செய்வதற்கு திறமை ஏற்படுகிறது –
ஒரு செயலில் ஈடுபடுவதற்கும் அதினின்று விலகுவதற்கும் ஆன அறிவு ஏற்படுகிறது -இவற்றை அளித்த ஸர்வேஸ்வரன் உள்ளிருந்து கொண்டு ஆத்மா விரும்பிய செயலைச் செய்ய அனுமதி அளித்து தான் நடு நிலையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறான் –
இதனால் அவன் அளித்த உடல் புலன்கள் அறிவு இவை பலனுடையவை ஆகின்றன-
சாத்வ சாது கர்ம காரயித்ருத்வம் து வ்யவஸ்தித விஷயம் ந சர்வ சாதாரணம் –
யஸ்து பூர்வம் ஸ்வயமேவ அதி மாத்ரம் ஆநு கூல்யே ப்ரவ்ருத்த தம் பிரதி ப்ரீதி -ஸ்வயமேவ பகவான்
கல்யாண புத்தி யோகதானம் குர்வந் கல்யாணே ப்ரவர்த்தயதி
ய புந அதி மாத்ரம் பிராதி கூல்யே ப்ரவ்ருத்த தஸ்ய து க்ரூராம் புத்திம் ததந் ஸ்வயமேவ க்ரூரேஷ் வேவ கர்மஸூ பரேரயதி பகவாந்
நற் செயல்களைப் புரிதல் என்பது எல்லோருக்கும் ஏற்படுவது இல்லை
எவர் முற் பிறப்பில் ஸாஸ்த்ரங்களில் கூறியபடி-விதிக்கப்பட்டவற்றை பெரும் அளவில் செய்து இருக்கிறாரோ -அவருக்கு நற் புத்தியையும் -நற் செயல்களில் விருப்பத்தையும் ஏற்படுத்துகிறான் –
அப்படியே எவர் அதிக அளவில் தீயச் செயல்கள் செய்திருக்கிறாரோ அவருக்கு கொடுமையான புத்தியைக் கொடுத்து -தானே கொடுமையான செயல்களிலே ஈடுபடுத்துகிறான் –
யதோக்தம் பகவதா-தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் தாதாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே
தேஷாமேவாநுகம் பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாஸாயாம் யாத்ம பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா
தா நஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம் யஜஸ்ரம ஸூபாந் ஆஸூரீஷ் வேவ யோநிஷு இதி –
அவ்வாறே பகவத் கீதையில்
என்னிடம் எப்பொழுதுமே சேர்ந்து இருக்க விரும்புகிறவர்களுக்கும் பக்தி செலுத்துவோருக்கும் என்னை அடைவதற்கு வழி காட்டியான பரமாத்மா பற்றிய ஞானத்தை -பர ஞானத்தை -விருப்புடன் அளிக்கிறேன்
அப்படிப்பட்ட பக்தியில் ஒன்றி இருப்பவர்களிடம் என் அருளினாலேயே அவர்கள் மனதுக்கு உகப்பானவனாய் எனது ஞானமாகிற ஒளி விளக்கால் பண்டை வினைகளால் உண்டான அஞ்ஞானமாகிற அந்தகாரத்தை அழிக்கிறேன்
என்னை வெறுப்பவர்களை கொடியவர்களாய் மாந்தரில் கடையராய் அமங்கலமானவர்களாய் ஆகும்படி தொடர்ந்து பிறப்பு இறப்புகளைக் கொடுத்து அசுரப் பிறவிகளில் தள்ளுகிறேன் என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது
———————
98–சோயம் பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம நிரதிசய புண்ய சஞ்சயஷீண -அசேஷ ஜென்ம உபசித பாபராஸே
பரம புருஷ சரணாரவிந்த -சரணாகதி ஜெநித ததாபி முக்யஸ்ய -தத் ஆச்சார்ய உபதேச உப ப்ரும்ஹிதா சாஸ்த்ராதி கத
தத்வ யாதாத்ம்ய அவ போத பூர்வக -அஹர் அஹர் ரூப சீயமாந -சம தம தப ஸுவ்ஸ-ஷம-ஆர்ஜவ -பய அபய ஸ்தாந விவேக தயா –
அஹிம் சாத்யாத்ம குணா பேதஸ்ய-வர்ணாஸ்ரம உசித பரம புருஷ ஆராதன வேஷ-நித்ய நைமித்திக கர்ம உப சங்ஹ்ருதி –
நிஷித்த பரிகார நிஷ்டஸ்ய-பரம புருஷ சரணார விந்தை யுகள ந்யஸ்தா
ஆத்மாத்மீயஸ்ய தத் பக்தி காரிதா நவரதஸ்துதி -ஸ்ம்ருதி -நமஸ் கிருதி யதந கீர்த்தன குண ஸ்ரவண -வசந-த்யான –
அர்ச்சன பிரணாமாதி ப்ரீதி பரம காருணிக புருஷோத்தம பிரசாத வித்வஸ்தஸ்வாந் தஸ்ய அநந்ய ப்ரயோஜன
அநவரத நிரதிசயப் பிரிய விசத தம ப்ரத்யக்ஷதா பந்ந அநு த்யான ரூபக்த்யைக லப்ய —
இப்படிப்பட்ட பர ப்ரஹ்மமான புருஷோத்மன் -எல்லையற்ற நற் செயல்களைச் செய்தவனாய் -பிறப்பினால் வந்த வினைத்தொடர் சிறிதும் அற்றவனாய் -பரம புருஷனுடைய திருவடித் தாமரைகளையே சரணம் அடைந்தவனாய் -அதில் ஊற்றம் உடையோனாய் அதனால் தூண்டப்பட்டு ஓர் நல்லாசிரியனை அடைந்து அவனால் உபதேசிக்கப் பட்ட ஸாஸ்த்ரங்களின் அடியாக மெய்ப் பொருளை உணர்ந்தவனாய் தினம்தோறும் வளர்கின்ற புலன் அடக்கம் -புலன்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுதல் -ஸாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விரதங்களை மேற் கொண்டு மனத் தூய்மை யாதல் -உடல் சொல் செயலால் தூய்மையாய் இருத்தல் -மனம் மொழி மெய்களால் ஒருப்பட்டு இருத்தல் – அஞ்சுவது அஞ்சாமை பகுத்து அறிதல் -இரக்கம் பிறருக்குத் துன்பம் நினையாது இருத்தல் பொறை ஆகிய நற் குணங்கள் கைவரப் பெற்றவனாய் -தனக்கு ஏற்ப வர்ணாஸ்ரம நெறிகளைக் கடைப் பிடிப்பவனாய் பரம புருஷனை ஆராதிப்பவனாய் -நாள் தோறும் மற்றும் சிறப்பான நாட்களிலும் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்பவனாய் -விலக்கப்பட்ட செயல்களின் நின்றும் விலகியவனாய் -பரமபுருஷனுடைய திருவடித் தாமரைகளில் தனது உடல் உயிர்ச் சுமைகள் யாவையும் வைத்தவனாய் -அந்த பக்தி மேலீட்டில் இடைவிடாது ஸ்துதித்தல் -நினைத்தல் -வணங்குதல் -அதற்கான முயற்சிகளைச் செய்தல் -அவன் புகழ் பாடுதல் -அவன் பண்புகளைக் கேட்டல் -அவனைப் பற்றியே பேசல் -இடைவிடாது மனத்திருத்தல் அர்ச்சித்தல் தண்டன் இடுதல் -இவற்றால் மனம் உகந்து ஈசனால் தன் மன இருள் நீங்கியவனாய் -வேறு பலன்களை எதிர் நோக்காது -என்றும் எல்லாவற்றிலும் அன்புடையவனாய் -அவனுடைய திரு உருவை -மிகத் தெளிவாக நேரே காண்பது போன்ற நிலையை பக்தியுடன் கூடிய தியானத்தால் அடைய முடியும்-
————–
99–ததுக்கதம் பரம குருபிஸ் பகவத் யாமுனாச்சார்ய பாதவ் –
உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய -இதி ஞான யோக கர்ம யோக
ஸம்ஸ்க்ருத அந்தக் கரணஸ்ய–இத்யர்த்த –
அதை ஒட்டியே பரம ஆச்சார்யனும் மதிப்புக்கு உரியவரான யமுனாச்சார்யரும் -கர்ம ஞாந யோகங்களைச் செய்து -அதனால் தூய்மை யடைந்த மனத்துடன் ஒரே நினைவாக -நிலை நிற்கிறவராலேயே எம்பெருமான் அடையத் தக்கவன் -என்று கூறி இருக்கிறார் -ஞான கர்ம யோகங்களால் நன்கு பண் படுத்தப்பட்ட மனம் -என்று பொருள் –
ததாச ஸ்ருதி —
வித்யாஞ்ச அவித்யாஞ்ச யஸ் தத்வே தோபயம் ஸஹ அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ்நுதே –இதி –
அத்ர அவித்யா சப்தேந வித்ய இதரத் வர்ணாஸ்ரம ஆசாராதி பூர்வோக்தம் கர்ம உச்யதே
வித்யா சப்தேந பக்தி ரூபாபந்ந த்யானம் உச்யதே —
அவ்வாறே வேதமும் -ஞானம் கர்மம் இரண்டும் ஒன்று என்று அறிபவர் கர்மத்தினால் பிறவிச் சூழலைக் கடந்து ஞானத்தால் அழிவற்ற நிலை எய்துகிறார் –
இங்கு அவித்யை என்ற சொல்லால் வித்யையாகிற ஞானத்தின் நின்றும் வேறுபட்ட வர்ணாஸ்ரம தர்மங்களுக்கு ஏற்ற செயல்கள் சுட்டிக் காட்டப் படுகிறது
வித்யை என்பது பக்தியே உருவெடுத்த ஞானம் என்று சொல்லப்பட்டது –
யதோக்தம் -இயாஜஸோபி ஸூ பஷந் யஞ்ஞாந் ஞாந வ்யாபாஸ்ரய –
ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்த்தும் ம்ருத்யும் அவித்யயா இதி
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நாந்யப் பந்தா அயநாயா வித்யதே
ய ஏநம் விதுரம்ருதாஸ்தி பவந்தி –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி -இத்யாதி வேதந சப்தேந த்யானமேவா பிஹிதம்
நிதித்யாசி தவ்ய-இத்யாதிநா ஐக அர்த்யாத்-ததேவ த்யானம் புநரபி விசிநஷ்டி –
நாயமாத்மா ப்ரவசனேந லப்ய -நமேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷா வ்ருணுதே தேந லப்ய-
தஸ்யைஷா ஆத்மா விவ்ருணுதே தநும் ஸ்வாம் -இதி பக்தி ரூபா பந்ந அநு த்யாநேநைவ லப்யதே
ந கேவல வேதேந மாத்ரேண நமேதயா-இதி கேவலஸ்ய நிஷித்தத்வாத் ஏததுக்தம் பவதி –
யோயாம் முமுஷு வேதாந்த விஹித வேதந ரூப த்யாநாதி நிஷ்ட-யதா தஸ்ய தஸ்மிந் நேவ அநு த்யாநே
நிரவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ததைவ தேந லப்யதே பர புருஷ இதி –
(தத்வமஸி-மோக்ஷ சாதனா உபதேசம் -அத்வைதிகள் ஞான மாத்திரம் -ஐக்ய ஞான விசேஷம் உண்டான அனந்தரம் மோக்ஷம்
உபாஸனமே மோக்ஷ சாதனம் -பக்தி ஒன்றிய பக்தி -உடன் சேர்ந்து- துஷ்ட -குண அனுபவம்-பிராட்டி போல பிரிக்க முடியாமல் -)
யதோக்தம் பகவதா புருஷஸ்ய பரப் பார்த்தா பக்த்யா லப்யஸ் த்வந் அநந்யயா -பக்த்யாத்வ நந்யயா ஸக்ய
அஹமேத்வம் விதோர்ஜூந ஞானம் த்ருஷ்டும் ச தத்வேந பிரவேஷ்டும் ச பரந்தப பக்த்யாம் மாம் அபி ஜாநாதி
அதற்கு ஏற்ப தத்வ த்ரய ஞானத்தால் -ப்ரஹ்ம ஞானம் ஏறிடப்பட்டு கடமைகளை ஆற்றுவதாலே அழிவை விலக்கி ஞானம் நிரம்பியவராய் ஸுபமான யாகங்கள் பலவற்றை இறை வழிபாடாக செய்தார்அப் பரமாத்மாவை இவ்வாறு அறிபவன் இவ்வுலகிலேயே மோக்ஷம் அடைந்தவனாகிறான் -பரமாத்மாவை அடைவதற்கு வேறு வழிகள் ஏதும் இல்லை -எவர்கள் இந்தப் பரமாத்மாவை அறிகின்றனரோ அவர்கள் மோக்ஷம் அடைகின்றனர்ப்ரஹ்மத்தை அறிந்தவன் பர உலகை அடைகிறான் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் அந்தப் ப்ரஹ்மம் போன்றே ஆகிறான் -என்று கூறப் பட்டு இருக்கிறது -வேதனம் என்ற சொல் தியானம் செய்தல் இடைவிடாது நினைத்தல் இவற்றுடன் ஒத்த பொருள் கொண்டதாகிறது -இந்தப் பரமாத்மா நினைவிலே மட்டும் அடையப்படுவது இல்லை -தெளிந்த அறிவினாலும் அடையப்படுவதில்லை -பல கேள்வியிலும் அல்ல -எவனை பரமாத்மா விரும்புகிறானோ அவனாலேயே அடையப்படுகிறான் -அப்படிப்பட்ட ஆத்மாவிற்கு தன் திருமேனியை -இந்தப் பிரபஞ்சத்தை தானே காட்டிக் கொடுக்கிறான் -பக்தியே உருவெடுத்த ஞானத்தால் மட்டும் அடையப்படுகிறான் -வறட்டு தியானத்தால் அடையப்படுபவன் அல்ல -தெளிந்த அறிவினால் அல்ல என்பது அறிவு ஒன்றையே உடைய தியானத்தால் அல்ல -என்று விலக்குகிறது -இது கீழ் வருமாறு விளக்கப்படுகிறது -வீடு பேறு வேண்டி வேதாந்தத்தால் ஏற்பட்டு இருக்கும் தெளிவான ஞானத்தால் அதில் ஊற்றம் உடையவனாய் இருப்போன் அந்த தியானத்திலேயே எல்லையற்ற விருப்பம் கொண்டவனாகி அதனடியாகவே பரம புருஷனை அடைகிறான்அவ்வாறே பகவத் கீதையிலும்பார்த்தனே பரம புருஷனாகிய நான் -மற்றவைகளால் அல்லாது என்னிடமே செலுத்தப்படும் பக்தியால் மட்டுமே அடையத் தக்கவன் -எதிரிகளை வாட்டுபவனே அர்ஜுனா என்னைப் பற்றி மெய்யறிவு கொள்வதற்கும் -என்னைப் பார்ப்பதற்கும் என்னைத் துய்ப்பதற்கும் வேறொரு இடத்தில் அன்றி என்னிடமே செலுத்தப்படும் பக்தியாலே மட்டுமே இயலும் -11-54-
யாவாந் யஸ் சாஸ்மி தத்வத-ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததந்தரம் -இதி ததனந்தரம் மாம் தத ஏவ பக்கத்தே விசாதே
இத்யர்த்த பக்திர் அபி நிரதிசய ப்ரிய அநந்ய ப்ரயோஜன ஸ்வ இதர வை த்ருஷ்ண்யாவஹ ஞான விசேஷ
ஏவேதி தத் யுக்த ஏவ தேந பரேண ஆத்மநா வரநீயோ பவதீதி தேந லப்யதே இதி ஸ்ருதி யர்த்த
உள்ளுருவாலும் பண்புகளாலும் குணங்களாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவன் என்பதை பரம் பொருள் மீதான பக்தியாலே உள்ளபடி அறிந்து பிறகு அந்த பரபக்தியாலேயே என்னை முழுமையாக அடைகிறான் -என்று கூறப்படுகிறது -பிறகு இப்படிப்பட்ட பக்தியாலேயே என்னை நன்கு துய்க்கிறான் -என்பது பொருள்-பக்தி என்பது -எல்லையற்ற விருப்புடன் வேறு பயன் கருதாது மற்றைய விருப்பங்கள் யாவும் நீங்கியதாய் இருப்பது -வைராக்யம் -இதற்கேற்ப ஒழுகுபவர் பரமாத்மாவால் தன்னுடையவன் என்று கருதப்பட்டு அவனாலேயே தன்னிடம் சேர்த்துக் கொள்ளப் படுகிறார் என்பதே மறையின் பொருள்
ஏவம் வித பயபக்தி ரூப ஞான விசேஷஸ்ய உத்பாதாக -பூர்வ யுக்த அஹர் அஹர் ரூப ஸீயமாந ஞான பூர்வக –
கர்ம அநு க்ருஹீத பக்தி யோக ஏவ –
யதோக்தம் பகவதா பராசரேன
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமாந்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நாணய தத் தோஷகாரக -( ஸ்ரீ விஷ்ணு புராணம் -காண்டிக்ய கேசித்வஜ உபாக்யானம் -)
இப்படிப் பட்ட ஞானத்தால் தூண்டப்பட்டு முன்பே விளக்கிய தினம் தோறும் வளரும் ஞானத்திற்கு தான் கைக் கொண்ட வர்ணாஸ்ரம தர்மங்கள் வழியாகப் பெற்ற பக்தியாலே ஜீவனிடம் பக்தி யோகம் உண்டாகும்
அப்படியே பராசரரும் -மனிதர்கள் வர்ணாஸ்ரம தர்மங்கள் செய்வதன் மூலமாக விஷ்ணுவை ஆராதித்தே பரமபுருஷனை அடைய இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்கிறார் –
இதி நிகில ஜகத் உத்தாரணாய அவநிதளே அவதீர்ண பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம ஸ்வயமேவ ஏதத் உக்தவாந்
ஸ்வ கர்ம நிரதஸ் சித்தம் யதா விந்ததி தச் ச்ருணு -யத ப்ரவ்ருத்தி பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய சித்திம் விந்ததி மாநவ –இதி யதோதித க்ரம பரிணத பக்த்யேக லப்ய ஏவ —
இவ் வுலகை மேம்படுத்துவதற்காக அவதரித்த பர ப்ரஹ்மமான புருஷோத்தமனே இதைச் சொல்கிறான்
தன் கடமைகளைச் செய்பவன் எவ்வாறு வீடு பேறு அடைகிறான் என்பதைக் கேட்ப்பாயாக
எவனிடமிருந்து இப் பொருட்கள் யாவற்றிக்கும் தோற்றம் முதலியவை ஏற்படுகின்றதோ -எவனாலே இவை யாவும் நிறைக்கப்பட்டுள்ளதோ -அவனைத் தனக்குரிய வர்ணாஸ்ரமப்படி -கடைமைப்படி -ஆராதனையைச் செய்து மனிதன் மேலான வீடு பேற்றை அடைகிறான் –
இவ்வாறு தனக்கு உரிய கடைமைகளை முறையாகச் செய்து அதனால் தூண்டப்பட்ட பக்தியாலேயே பகவான் அடையப் படுகிறான்
—————-
100-பகவத் போதாயன -டங்க-த்ரமிட -குஹதேவ-கபர்தி -பாருசிப்ரபிருதி -அவிகீத-சிஷ்ட பரிக்ருஹீத –
புராதன வேத வேதாந்த வ்யாக்யான ஸூவ்யக் தார்த்த ஸ்ருதி நிகர நிதர்சிதோயம் பந்தா —
அநேந -சார்வாக -சாக்ய-ஓவ்லூக்ய -அஷபாத -ஷபனிக-கபில -பதஞ்சலி -மத அநு ஸாரினோ
வேத பாஹ்யா வேதா வலம்பி குத்ருஷ்ட்டி பிஸ் ஸஹ நிரஸ்தா –
போதாயன பகவான் -டங்கர் -த்ரமிடர் -குஹ தேவர் -கபர்தி -பாருசி -முதலான சிறந்த சான்றோர்களால் கைக் கொள்ளப் பட்ட பழமையான வேத வேதாந்த விரிவுரைகளில் வேதக்கூட்டங்களின் திரண்ட கருத்துக்கள் தெளிவாகக் காட்டப்பட்டு இருக்கின்றனஇதற்கு மாறான -ஸார்வாக -நாஸ்திக – சாக்ய -புத்த -ஓவ்லுக்ய-நியாய தர்க்க வாதிகள் அக்ஷ பாத-வைசேஷிகம் சமண கபில -சாங்க்ய – பதஞ்சலி-யோகம் ஆகியோருடைய கொள்கைகளைப் பின் பற்றுவோர் வேதங்களுக்குப் புறம்பானவர்கள் என்றும்அவைகளுக்கு உட்பட்ட பொருளைத் திரித்து கூறுவோர்கள் என்றும் விலக்கப் படுகின்றனர்
வேதா வலம்பிநாம் அபி யதா வஸ்தித வஸ்து விபர்யஸ்த த்ருஸாம் பாஹ்ய சாம்யம் மநுநைவ யுக்தம்
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யஸ்ஸ காஸ் ஸ குத்ருஷ்டய
சர்வஸ்தா நிஷ்பல ப்ரேத்ய தமோந் நிஷ்டா ஹி தா சம்ருதா இதி
ரஜஸ் தமோப்யாம ஸ்ப்ருஷ்டம் உத்தமம் சத்வமேவ ஏஷாம் ஸ்வாபாவிகோ குண தேஷாமேவ வைதிகீ ருசி –
வேதார்த்த யாதாத்ம்ய அவபோதஸ் ச இத்யர்த்த –
வேதங்களை மறுத்தோரும் -அவற்றுக்கு அவப்பொருள் கொள்வோரும் ஒரே படித்தானவர்கள் -என்று மநு கூறுகிறார்
வேதங்களையும் ஸ்ம்ருதிகளையும் மறுப்போரும் அவப்பொருள் கொள்வோரும் தமோ குணம் நிறைந்தவர்கள் என்றும்
அவர்களுடைய கருத்துக்கள் உடலை விட்டோடும் உயிருக்கு நற் பலன்களைத் தராதவைகள் என்பதும் பெரியோர்கள் கொள்கை –
ரஜஸ் தமஸ் இவைகளால் தீண்டப்படாத ஸத்வ குணம் நிறைந்த உத்தமர்களே வேதப் பொருளில் உண்மையான விருப்பம் கொண்டு அதனடியாக அவற்றின் மெய்ப் பொருளை அறிய முடியும் என்பது பொருள்
யதோக்தம் மாத்ஸ்யே —
ஸங்கீர்ணா சாத்விகாஸ் ஸைவ ராஜசா தமஸாஸ் தயா இதி கேசித் ப்ரஹ்ம கல்பா ஸங்கீர்ணா –
கேசித் சத்வ பிராயா -கேசித் ரஜஸ் பிராயா -கேசித் தமஸ் பிராயா -இதி கல்ப விபாக முத்தகா சத்வ ரஜஸ் தமோ மாயாநாம்
தத்வாநாம் மஹாத்ம்ய வர்ணனஞ்ச தத் தத் கல்ப ப்ரோக்த புராணே ஷு சத்வாதி குண மயேந ப்ரஹ்மணா க்ரியதே இதி ச யுக்தம் –
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா-தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ணயதே இதி
அவ்வாறே மத்ஸ்ய புராணத்தில்கலப்படமான ஸாத்விக ராஜஸ தாமஸ குணங்கள் மேலிட்ட படைப்புக் கால அளவுகள் ப்ரஹ்ம கல்பங்கள் உள்ளனபடைப்புக் கால அளவுகளில் சில கலந்த குணமுடையவை -சில aஸ்த்வ குணமுடையவை -சில ரஜஸ்ஸையும் சில தமஸ்ஸையும் கொண்டவைஅவைகளுக்கு ஏற்ப ஸத்வ ரஜ தமோ குணங்கள் நிறைந்த தேவதைகளின் பெருமை விவரிக்கப் படுகிறதுஅந்தந்த கல்பங்களில் தோன்றிய புராணங்களை ஸத்வ முதலான குணங்கள் நிறைந்ததாக ப்ரம்மா செய்தார் என்பது பொருள் -முன்பு எந்த எந்தக் கல்பங்களில் எந்த எந்தப் புராணங்கள் ப்ரம்மாவினால் சொல்லப் பட்டதோ அவைகள் அந்தந்த குண மேலீட்டான தேவதைகளைப் பரக்கப் பேசுகிறது –
விசேஷ தஸ் ச யுக்தம்
அக்ரேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தமசேஷு ப்ரகீர்த்யதே
ரஜஸே ஷு ச மஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ வித்து
சாத்விகேஷ்வத கல்ப்பேஷு மஹாத்ம்யம் அதிகம் ஹரே
தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம்
சங்கீர்ணேஷு சரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே–இத்யாதி
ஏதத் யுக்தம் பவதி–ஆதி ஷேத்ரஞ்ஞத்வாத் ப்ரஹ்மண தஸ்யாபி கேஷுசிதஹஸ் ஸூ சத்வம் உத்ரிக்தம் கேஷுசித் ரஜஸ் கேஷுசித் தமஸ்–
யதோ யுக்தம் பகவதா
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வாதிவிதேவே ஷு வா புந
சத்வம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபி ஸ்யாத்ரிபிர் குணை இதி –ஸ்ரீ கீதை
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச ச ப்ரஹினோதி தஸ்மை -இதி ஸ்ருதே
ப்ரஹ்மணோபி ஸ்ருஜ்யத்வேந ஸாஸ்த்ர வஸ்யத் வேந ச ஷேத்ரஞ்ஞத்வம் கம்யதே சத்வ ப்ராயேஷு அஹஸ் ஸூ தததிரோஷூ
ச யாநி புராணாநி ப்ரஹ்மணா ப்ரோக்தாநி தேஷாம் பரஸ்பர விரோதி சாதி சாத்விகாஹஸ் ப்ரோக்தம் புராணமேவ யதார்த்தம்
தத் விரோதி அந்யத் அத்யர்த்தம் -இதி புராண நிர்ணயாயைவ இதம் சத்வ நிஷ்டேந ப்ரஹ்மணா அபிஹிதமிதி விஞ்ஞாயதே இதி –
இதில் சிறப்பாகக் கூறப்படுவதாவது
அக்நி சிவன் பெருமை தமஸ் கல்பத்திலும்
ப்ரம்மாவின் புகழ் ராஜஸ கல்பத்திலும்
ஹரியின் பெருமை ஸத்வ கல்பத்திலும்
இவை கலந்த இடத்தில் ஸரஸ்வதி பித்ருக்கள் பெருமையும் சொல்லப்படுகின்றன என்று பெரியோர்கள் தெளிந்து அறிவித்து இருக்கிறார்கள் –
இது மேலும் முதல் ஜீவனான பிரம்மாவிற்கு சில காலங்களில் ஸத்வமும் சில ஸமயம் ரஜஸ்ஸும் சில பொழுது தமஸ்ஸும் தலை தூக்கியும் இருக்கும் -அவற்றுக்கு ஏற்ப புராணம் அமையும்
அவ்வாறே கீதையிலும்
பூமியிலும் வானிலும் இருக்கும் பொருள்கள் யாவும் மூலப் பிரக்ருதியின் தொடர்பின்றி விடுபட்டவை அல்ல என்று சொல்லப் பட்டுள்ளது –
வேதத்திலும் யார் பிரமனை முன்னதாகப் படைத்து அவனுக்கு வேதங்களை ஓதுவித்தாரோ என்று இருப்பதால் பிரமனும் படைக்கப்படும் ஸாஸ்த்ரங்களுக்கு உட்பட்டும் ஜீவாத்மாவாகிறான் –
ஸத்வ குணம் மேலோங்கிய நாட்களிலும் அதற்கு மாறுபட்ட நாட்களிலும் எந்த எந்தப் புராணங்களை ஓதுகிறானோ அவைகள் முறையே நற் குணங்களையும் அதற்கு முற்றிலும் மாறுபட்ட பண்புகளையும் கொண்டிருக்கும் புராணங்களின் கருத்துக்களில் மாறுபாடு தோன்றுமாயின் ஸத்வ புராணங்களின் பொருளே கொள்ளத் தக்கது என்றும் மற்றவை தள்ளத் தக்கது என்றும் அறுதியிடப் பட்டு இருக்கிறது –
———-
101–சத்வாதிநாம் கார்யஞ்ச ச பகவதைவ யுக்தம்
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம் -ரஜசோ லோப ஏவ ச பிரமாதமவ் ஹவ் தாமச பகவதோ ஞான மேவ ச
ஸத்வம் முதலான குணங்களின் செயல்களை aபகவானே விவரிக்கிறார்ஸத்வத்தினால் -ஆத்ம யாதாத்ம ஞானமும் -ராஜஸத்தினால் பேராசையும் தமஸ்ஸினால் கவனக் குறைவு மயக்கம் அஞ்ஞானம் ஆகியவையும் ஏற்படுகின்றன
ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்ய அகார்யே பய அபயே பந்தம் மோக்ஷம் ச யோ வேத்தி புத்திஸ் சா பார்த்த சாத்விகீ –
யயா தர்மம் அதர்மஞ்ச கார்யஞ்ச அகார்யமே வச-அயதாவத் பிரஜாநாதி புத்திஸ் சா பார்த்த ராஜஸீ
அதர்மம் தர்மம் இதியா மந்யதே தமஸா ஆவ்ருதா சார்வார்த்தாந் விபரீதாம்ஸ்
ச புத்திஸ் சா பார்த்ததாமஸீ இதி–ஸ்ரீ கீதை -18-30-/31-/32—
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே–
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்த்விகீ–৷৷18.30৷৷
பார்த்த –குந்தீ புத்ரனே
ப்ரவ்ருத்திம் ச –இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும்
நிவ்ருத்திம் ச –மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும்
கார்யாகார்யே –இந்தக் கர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும்(அடிப்படை தர்ம நெறி -ஆச்சாரம் -கார்யம்-உடல் பலம் வயசு ஆயுசு பொறுத்து கார்யம்)
பயாபயே–பயத்திற்கும் பயமின்மைக்கும் இடமாய் இருப்பவற்றையும்(பய ஸ்தானம் அபய ஸ்தானம் -எத்தைக் கண்டு அஞ்சுவோமோ அஞ்ச மாட்டாமோ அவற்றைச் சொன்னவாறு-ஸாஸ்த்ரம் பற்றி நடப்பது-அபயம் கொடுக்கும் மீறு நடப்பதும் கோரமானது முன்பே சொன்னானே)
பந்தம் மோக்ஷம் ச –சம்சாரத்தில் கட்டுப்படுவது அதில் இருந்து விடுபடுவது ஆகியவற்றைப் பற்றிய உண்மையையும்
யா வேத்தி –எந்த அறிவு அறிகிறதோ
புத்திஸ் ஸா ஸாத்த்விகீ–அந்த அறிவு ஸத்வ குணத்தால் உண்டானதாகும்
குந்தீ புத்திரனே -இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும் மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும் –
இந்த தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும் பயத்துக்கும் பயமின்மைக்கும்
இடமாய் இருப்பவற்றையும் சம்சாரத்தில் கட்டுப்படுவது -அதிலிருந்து விடுபடுவது -ஆகியவை பற்றிய உண்மையையும்
எந்த அறிவு அறிகிறதோ -அந்த அறிவு சத்வ குணத்தால் உண்டானதாகும்
பயக்ருத் பய நாஸன -அவனை அனுசந்திக்க அபயம்-நம் தோஷம் ஸம்ஸார தோஷம் அனுசந்திக்க பயம் –
சாத்விக புத்தி -பிரவ்ருத்தி மார்க்கம் இவ்வுலக இன்பம் ஸ்வர்க்கம் வரை -நிவ்ருத்தி மோக்ஷம் விஷயம் –
பயப்பட- வேண்டாதது -பந்தம் எது மோக்ஷம் -என்ற உறுதியான புத்தி –
இதனால் சாத்விக ஞானம் -அதனால் சாத்விக கர்மா -அதனால் சாத்விக பலன்
புத்தி அறிந்து கொள்கிறது தப்பு -நான் அறிந்து கொள்கிறேன் என்றே கொள்ள வேண்டும் -புத்தி உள்ளபடி உண்மையாக்க காட்டிக்கொடுக்கும் –
—————
யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–
அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ--৷৷18.31৷৷
பார்த்த–அர்ஜுனா
யயா -எந்த அறிவால்
தர்மமதர்மம் ச -தர்மத்தையும் அதர்மத்தையும் –கீழ் சொன்ன ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களைக் கொள்ள வேண்டும் –
கார்யம் சாகார்யமேவ ச–கார்யத்தையும் செய்யத் தக்கவையும் -செய்யத் தகாதவையும் -அடிப்படை ஆசாரம் பற்றியவை
அயதாவத் ப்ரஜாநாதி -தவறாக அறிகிறானோ -கீழே யதாவத் ஸ்பஷ்டமாக இல்லை -இங்கு இருப்பதால் அந்த அர்த்தம் தானாகவே கிட்டுமே -உள்ளபடி அறிந்து கொள்ளாமல் இருப்பவன் இங்கு
புத்திஸ் ஸா ராஜஸீ-அதுவே ராஜஸ புத்தி யாகும்
குந்தீ புத்திரனே – எந்த அறிவாலே தர்மத்தையும் அதர்மத்தையும் -செய்யத் தக்கத்தையும்-செய்யத் தகாததையும் –
தவறாக ஒருவன் அறிகிறானோ -அந்த அறிவு ரஜோ குணத்தால் உண்டானது –
தர்மம் அதர்மம் மயங்கி -ராக்ஷஸ புத்தி -செய்யத் தக்கவை தகாதவை தெரியாமல் மயங்கி –
புத்தி -உறுதி -தர்ம பூத ஞானம் தான் புத்தி என்பர் –
தர்மியில் மாறாட்டம் விபரீத ஞானம் தாமசம் -தர்மத்தில் மாறாட்டம் அந்யதா ஞானம் ராக்ஷஸம்
—————–
அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸா வ்ருதா–
ஸர்வார்தாந் விபரீதாம்ஸ்ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.32৷৷
பார்த்த -குந்தீ புத்ரனே
யா -எந்த புத்தி
தமஸ ஆவ்ருதா–தமஸ்ஸால் -மூடப்பட்டு -ஞான பரப்பைத் தடுக்கப்பட்டு –
அதர்மம் தர்மமிதி -இது ஓன்று எடுத்துக்காட்டு -அதர்மத்தைத் தர்மம் என்று நினைக்கிறதோ-இருப்பதை இல்லாததாகவும் உயர்ந்த ஒன்றை தாழ்ந்ததாகவும் மாற்றி அறிபவன்-
ஸர்வார்தாந் –எல்லா அர்த்தங்களையும்
விபரீதாம்ஸ் ச மந்யதே-நேர் மாறாக அறிகிறதோ
புத்திஸ் ஸா தாமஸீ-தாமஸ புத்தி எனப்படும்
குந்தீ புத்திரனே – எந்த அறிவானது தமோ குணத்தால் சூழப் பட்டதாய் – அதர்மத்தை தர்மம் என்று அறிகிறதோ –
சித்தமாயும் சாத்யமாயும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் நேர் மாறாக அறிகிறதோ –
அந்த அறிவு தமோ குணத்தால் உண்டாகும் புத்தியாகும் –
தாமஸ புத்தி -அதர்மமே தர்மம் என்று உறுதி -கீழே மயக்கம் தான் -இங்கு அதர்மமே தர்மம் -என்று திட புத்தி —
எத்தனை அழிந்தாலும் மாற்றிக் கொள்ளாத புத்தி -தமோ குணத்தால் சூழ்ந்து -விபரீதமாக –
சித்தம் சாத்தியம் தப்பாக புரிந்து பூதம் பிரேத குணம் சாத்தியம் என்று கொண்டு -சூழல்
ஆவ்ருதா இங்கு மட்டும் -அப்பொழுது அப்பொழுது தமஸாலே சூழப்பட்டவனாய் என்றபடி
மனு -வேதத்தால் சொல்வதை மாற்றி அறியும் புற சமயிகள்-தமோ குணத்தால் சூழப்பட்டவர்கள்
————
சர்வான் புராணார்த்தாந் ப்ரஹ்மணஸ் ச காசாத் அதிகம் யைவ ஸர்வாணி புராணாநி புராண காரா சக்ரு யதோக்தம்
கதயாமி யதா பூர்வம் தஷாத்யை முநி சத்தமை பிருஷ்ட ப்ரோவாச பகவான் அப்ஜ யோநி பிதாக–இதி ஸ்ரீ விஷ்ணு புராணம்
அபவ்ருஷேயேஷு வேத வாக்யேஷூ பரஸ்பர விருத்தேஷு கதமிதிசேத் தாத்பர்ய நிஸ்சயாத் அவிரோத பூர்வமேவ யுக்த —
புராணங்கள் யாவும் பிரம்மனிடம் இருந்தே பெறப்பட்டதாக புராணக்காரர்கள் கூறி இருக்கின்றன
அதற்கு ஏற்ப ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தக்ஷர் முதலான முனிவர் தலைவர்கள் தாமரைப்பூவில் உதித்த பிரமனிடம் இருந்து கேட்க்கப்பட்டவைகளை உள்ளபடியே சொன்னார்கள் என்று கூறப்பட்டுள்ளது –
யாராலும் செய்யப்படாத வேத வாக்கியங்களில் ஒன்றுக்கு ஓன்று tமாறுபட்ட கருத்துக்கள் வருமாகில் அவற்றின் உண்மையான ஆழ் பொருள் அறிந்தால் அம் மாறுபாடு நீங்கும் -என்பது முன்பே சொல்லப்பட்டது-
————————-
102– யதபிசேதம் விருத்தமிவ த்ருஸ்சதே
ப்ராணம் மனசை ஸஹ கரணை நாதாந்தே பராத்மநி ஸம்ப்ரதிஷ்டாப்ய த்யாயீத ஈஸாநாம் ப்ரத்யாயீத ஏவம் ஸர்வமிதம்–அதர்வண சிகா
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே சர்வே ஸம்ப்ரா ஸூயந்தே ந கரணம்—
காரணம் து த்யேய–
சர்வைஸ்வர்ய சம்பன்ன சர்வேஸ்வர சம்பு
ஆகாச மத்யே த்யேய –அதர்வண சிகா
யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்திகஸ் சித் விருக்ஷ ஏவஸ் தப்தோ திவி திஷ்டத்
ஏக தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் ததோ யதுத்ர தரம் ததுரூப மநா மயம் ய ஏதத் விதுர ம்ருதாஸ்தே பவந்தி
அதேதர து ஸ்வ மேவாபி யந்தி சர்வாணன சிரோக்ரீவ சர்வ பூத குஹாஸய சர்வ வ்யாபிச பகவான் தஸ்மாத் சர்வ ததஸ் சிவ –அதர்வ சிகா
யதா தமஸ் தன்னாதிவா ந ராத்ரி ந சந் ந சாசச் சிவ ஏக கேவல ததஷரம் தத் ஸவிது வரேண்யம்
பிரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ –ஸ்வேதாசவதரா-
இத்யாதி -நாராயண பரம் ப்ருஹ்ம இதி ச பூர்வமேவ ப்ரதிபாதிதம் தேநாஸ்ய கதம விரோத —
ஒன்றுக்கு ஓன்று மாறுபாடான கருத்துக்களைக் கொண்ட வாக்யங்கள் பின் வருமாறு
1- உயிர் மூச்சை மனம் புலன்களுடன் niruththuநிறுத்தி பரமாத்மாவான ஈசானனை தியானிக்கக் கடவன்
2-ப்ரம்மா விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகியவர்கள் படைக்கப்படுகிறார்கள் அவர்கள் காரணமாக மாட்டார்கள்
எது காரணமோ அதுவே த்யானிக்கப்பட வேண்டும்
செல்வங்கள் யாவும் நிறைந்து எல்லோருக்கும் தலைவனாய் இருக்கும் சம்புவை ஹ்ருத யாகாச நடுவில் தியானிக்க வேண்டும்
3- எவரைக் காட்டிலும் மேம்பட்டோர் சிறிதும் இல்லையோ எவரைக் காட்டிலும் சிறியவர் பெரியவர் இல்லையோ
எவர் விண்ணில் உணர்வுகள் இன்றி மரம் போல் இருக்கிறாரோ அவரால் இவ்வுலகு நிறைந்து இருக்கிறது
அவருக்கு மேம்பட்டோர் யாருமில்லை
அவர் உருவம் அவயவம் அற்றவர்
இதை அறிபவர்கள் அழிவது இல்லை -அறியாதவர்கள் துயரம் அடைகிறார்கள் –
எல்லாப் பிராணிகளின் தலையிலும் கழுத்திலும் ஹிருதயக் குகையிலும் நிறைந்து இருப்பவர்
எல்லா வற்றிற்கும் கதியானவர் -அவரே சிவன்
4-எப்பொழுது தமஸ் பகல் இரவு சேதன அசேதனப் பொருள்கள் முதலியவை இல்லையோ அப்பொழுது சிவன் மட்டும் இருந்தான்
அவனே அழிவற்றவன்
ஞாயிற்றின் ஒளி யாவும் அறிந்தவன்
பழமையானவன்
இதற்கு நாராயணனே பர ப்ரஹ்மம் என்று முன்பே கூறப்பட்டு விளக்கப் பட்டு இருக்கிறது
அதற்கு இக் கூற்றுக்கள் மாறுபாடானவை அல்ல
———–
103–அத்யல்பமேதத்
வேதவித் ப்ரவரப்ரோக்த வாக்ய அந்யய உப ப்ரும்ஹிதா வேதாஸ் சாங்கா ஹரிம் பிராஹு ஜகாத் ஜென்மாதி காரணம்
ஜன்மாத்யஸ்ய யதஸ்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்ய அபி சம்விசந்தி தத் விஞ்ஞாசஸ்வ தத் ப்ரஹ்மா இதி
ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹமேத்யவ கம்யதே-தச்ச ஜகத் ஸ்ருஷ்ட்டி ப்ரலய ப்ரகரனேஷ் ஏவ அவ கந்தவ்யம்
ச தேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
இதி ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா ஜகாத் அந்தர்யாமிதாதி முகேந பரம காரணம் சச் சப்தேந ப்ரதிபாதிதம் –
இது மிகவும் அற்பமானது
ஹரியே உலகின் படைப்பு முதலியவற்றிற்குக் காரணம் என்று அங்கங்களோடு கூடிய வேதம் அறுதியிடுவதாக வேதம் அறிந்தோர்களில் தலையாயவர்கள் தங்கள் மொழிகளால் நிறுவியிருக்கின்றனர் –
இவ்வுலகிற்கு பிறப்பு முதலியவை எம்பெருமான் இடமிருந்தே உண்டாவதால் அந்த ப்ரஹ்மமே காரணம் –
எவனிடமிருந்து இந்த உயிர்கள் யாவும் உண்டாயினவோ அவ்வாறு உண்டானவை யாரால் வாழ்கின்றனவோ -எவரிடத்தில் அவை ஓடுகின்றனவோ -அதுவே அறியத்தக்கது -அதுவே ப்ரஹ்மம் என அறிவாயாக -என்று
உலகின் பிறப்பு முதலானவற்றிற்கான
காரணம் அறுதியிடப்பட்டுள்ளது
எங்கு உலகின் பிறப்புsoolappattசொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கிருந்தே ப்ரஹ்மமானது அறியப்பட வேண்டும்
குழந்தாய் ஸத் ஒன்றே முதலில் இருந்தது
ஒன்றாகவே பிரிது ஓன்று இல்லால் இருந்தது என்று
ஜகத்தின் பிறப்புக்கு மூலப்பொருள் செய்வோன் கருவி என உபாதான நிமித்த அதன் உள்ளுறைந்து இயக்கம் ஸஹகாரி -முகமாக எல்லாக் காரணமாகவும் ஸத் ஒன்றே சொல்லப்பட்டு இருக்கிறது –
அயமேவார்த்த-
ப்ரஹ்ம வா இதமே கமே வாக்ர ஆஸீத் -இதி சாகாந்தரே ப்ரஹ்ம சப்தேந ப்ரதிபாதித
அநேந சச் சப்தாபி ஹிதம் ப்ரஹமேத் யவகதம்
அயமேவார்த்த சாகாந்தரே
ஆத்மா வா இதமேக ஏவாக்ரா ஆஸீத் -நாந்யத் கிஞ்சந மிஷத்-இதி
ததா -சத் -ப்ரஹ்ம -சப்தாப்யாம்-ஆத்மைவ அபிஹித -இதயவ கம்யதே-
ததாச சாகாந்தரே
ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந நேமேத்யா வா ப்ருத்வீ -இத்யாதிநா
சத் ப்ரஹ்ம ஆத்மதி பரம காரண வாஸிபி சப்தை நாராயண ஏவ அபிதீயதே இதி நிஸ் ஸீயதே —
வேறொரு வேத சாகையில்
ப்ரஹ்மம் மட்டுமே இங்கு முதலில் இருந்தது -என்று ப்ரஹ்மம் காரணமாக் கூறப்பட்டு இருக்கிறது –
அதனால் ஸத் என்று கூறப்பட்டது ப்ரஹ்மம் என்றே தெரிகிறது –
மற்றொரு சாகையில்
முதலில் ஆத்மா ஓன்று மட்டுமே இருந்தது -மற்ற எதுவும் சிறிதும் இல்லை -என்று கூறப்பட்டு இருக்கிறது –
ஆகவே ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -என்ற சொற்கள் ஒரே பொருளைக் கொண்டவை எனத் தேறுகிறது –
அவ்வாறே நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரம்மாவும் இல்லை ஈசானனும் இல்லை வானமோ பூமியோ இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது
இவைகளால் ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா போன்ற முதல் காரணத்தைக் குறிக்கும் சொற்கள் -நாராயணன் -என்று மட்டுமே குறிக்கும் என அறுதியிடப்படுகிறது
—————-
104–ய மந்தஸ் சமுத்ரே கவயோ வயந்தி இத்யாரப்ய-நைந மூர்த்வம் நதிர் யஞ்சம் ந மத்யே பறி ஜக்ரபது –
ந தஸ்யேசே கஸ்சன் தஸ்ய நாம மஹாத் யசஸ்
ந சந்த்ருசே திஷ்டதி ரூப மஸ்ய ந சஷூஷா பச்யதி கஸ்ச நைநம் -ஹ்ருதா மநீஷா மனசா அபிக்லுப்தோ
ய ஏனம் விதுரம் ருதாஸ்தி பவந்தி -இதை சர்வ ஸ்மாத் பரத்வம் அசய ப்ரதிபாத்ய -நதஸ் யேசே கஸ்சன-
இதி தஸ்மாத் பரம் கிமபி ந வித்யதே இதி ச ப்ரதிஷித்ய
அத்ப்ய ஸம்பூதோ ஹிரண்ய கர்ப இத்யஷ்டவ இதி தேந ஏக வாக்யதாம் கமயதி தச்ச மஹா புருஷ பிரகரணம்-
ஹரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ இதி நாராயண எவேதி த்யோதயதி-
எவன் கடலில் இருப்பதாக ஞானிகள் கூறுகின்றனரோ என்று துவங்கி மேல் பக்கத்திலும்-கீழப் பக்கத்திலும் -இடைப் பக்கத்திலும் அறியப்படாதவன் –
அவனை யாரும் உள்ளிருந்தோ வெளியிருந்தோ ஏக முடியாது -மிகவும் புகழுடையவன் -அவனுடைய உருவம் கட் புலனாகாதது -அவனை யாரும் கண்களால் காண்பதில்லை -ஞான பக்திகளுடன் கூடியவர் மனத்தால் இருதயத்தில் காணப்படுபவன் -இவனை அறிபவர் சாகா நிலை அடைகின்றனர் -என்று யாவும் அறிபவனை இவ்வாறு விளக்கி
அவனுக்கு மேற்பட்டவன் யாருமில்லை என்று அவனுக்கு மேற்பட்டு அவனை ஏவக்கூடியவன் ஒருவரும் இல்லை என்பதைக் கூறி –
அத்ப்ய ஸம் பூததோ ஹிரண்ய கர்ப்ப -என்று தொடங்கும் எட்டு வாக்கியங்கள் முதலில் சொன்னதோடு சேர்த்துப் படிக்கப்பட வேண்டியவை –
ஒரே கருத்து உடையவை என்பது விளங்கும் –
அவை பரம் பொருளை காரண மஹா புருஷனைக் குறிப்பவை இதன் தொடர்பில் பூமி தேவி முதலானோரும் லஷ்மியும் உனக்கு மனைவிகள் என்று மிகத் தெளிவாக நாராயணனையே குறிக்கின்றன
—————-
105-அயமர்த்த-
நாராயண அநுவாகே பிரபஞ்சித -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இத்யாரப்ய-ச ப்ரஹ்ம ரஸசீவ சேந்த்ர ச அஷரா பரம் ஸ்வராட்
இதி சர்வ சாகாசூ பரதவ ப்ரதிபாதந பராந் அக்ஷர-சிவ -சம்பு -பர ப்ரஹ்ம பரஞ்சோதி -பரதத்வ -பாராயண -பரமாத்மாதி –
சர்வ சப்தாந் தத் குண யோகிந நாராயண ஏவ ப்ரயுஜ்ய தத் வ்யதிரிக்தஸ்ய சமஸ்தஸ்ய ததா யத்ததாம் —
தத் வ்யாப்யதாம் -தத் ஆதாரதாம்-தந் நியாம்யதாம்-தத் சேஷதாம் -ததாத்மகதாம்-ச ப்ரதிபாத்ய ப்ரஹ்ம சிவயோர் அபி
இந்திராதி சமாந ஆகார தயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதிதம்
இதம் ச வாக்யம் கேவல பாதத்வ ப்ரதிபாதந பரம் அந்யத் கிஞ்சிதபி அத்ர நவிதீயதே-அஸ்மின் வாக்யே ப்ரதிபாதி தஸ்ய
சர்வஸ்மாத் பரத்வேந அவஸ்திதஸ்ய ப்ரஹ்மண வாக்யாந்த்ரேஷு ப்ரஹ்ம விதாப் நோதி பரம் இத்யாதிஷு உபாஸநாதி விதீயதே —
இதன் பொருள் நாராயண அநுவாகத்திலே நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது
பல தலைகளை யுடையவன் என்று ஆரம்பித்து -அவனே பிரமன் இந்திரன் அழிவற்றவன் பரமாத்மா என்று எல்லா சாகைகளிலும் பரத்வத்தைச் சொல்லிய பிறகு அழிவற்றவன் சிவன் சம்பு பர ப்ரஹ்மம் பர தத்வ பராயண பரமாத்மா போன்ற சொற்களால் அந்தந்த பண்புகளால் நாராயணன் ஒருவனே காட்டப்பட்டு
அவனை ஒழிந்த மற்றவை rயாவும் அவனாலேயே படைக்கப்பட்டு-அவனாலே நிறைக்கப் பட்டு -அவனையே பற்றுக் கோடாகக் கொண்டு -அவனாலே ஏவப்பட்டு -அவனுக்கு கீழ்ப்பட்டு அவனையே ஆத்மாவாக யுடையதாகக் கூறப்பட்டு -ப்ரம்மா சிவன் முதலியோர் இந்திரனைப் போலவே அவனுடைய செல்வங்களாக கருதப் பட்டுள்ளனர்
இங்கு எடுக்கப்பட்ட வாக்யம் -நாராயணனின் மற்றப் பண்புகளையோ செல்வங்களையோ கூறாமல் அவனது ஒப்பில்லா உயர்ந்த பரத்வ நிலையை மட்டுமே விதிக்கிறது -இங்கு கூறப்பட்ட அவனுடைய யாவற்றுக்கும் மேம்பட்ட தன்மையை உடையதான ப்ரஹ்மத்தை இடையறாது தியானிப்பதன் மூலம் பரநிலையை அடையலாம் என்று இடையறாத் தியானத்தை விதிக்கிறது –
————
106–அத -ப்ராணம் மனசை ஸஹ கரணை -இத்யாதி வாக்கியம் சர்வ காரணே பரமாத்மநி காரண
பிராணாதி சர்வம் விகார ஜாதம் உப ஸம்ஹ்ருத்ய -தமேவ பரமாத்மாநாம் ஸர்வஸ்ய ஈஸாநாம் த்யாயீத இதி
பர ப்ரஹ்ம பூத நாராயணஸ்யை வத்யாநம் விதாதி-
பிறகு -உயிர் மூச்சையும் புலன் களுடன் கூடிய மனத்தையும் என்ற -வாக்யத்தால் -எல்லாவற்றிற்கும் காரணமான பரமாத்மாவை உயிர் மூச்சு புலன்கள் ஆகிய மாறுபடுபவைகளில் நின்று விலக்கி ஒரு முகப்படுத்தி அந்தப் பரமாத்மாவையே எல்லாவற்றிற்கும் ஈசன் என்று த்யானிக்கப் படவேண்டும் என்று பர ப்ரஹ்மமான நாராயணனையே தியானிக்க விதிக்கிறது-
பதிம் விஸ்வஸ்ய
ந தஸ்யேஹ கஸ்சந-இதி தஸ்யைவ சர்வேசாநதா ப்ரதிபாதிதா–அத ஏவ சர்வ ஐஸ்வர்ய சம்பந்ந
சர்வேஸ்வர சம்பு ஆகாச மத்யே த்யேய -இதி
நாராயணஸ்யைவ பரம காரணஸ்ய சம்பு சப்த வாஸ்யஸ்ய த்யானம் விதீயதே -கஸ்ச த்யேய -இத்யாரப்ய-காரணம் து த்யேய –
இதி கார்யஸ்ய அத்யே யதா பூர்வக காரணைக த்யேயதா பரத்வாத் வாக்யஸ்ய –
தஸ்யைவ நாராயணஸ்ய பரம காரணதா சம்பு சப்த வாச்யதா ச பரம காரண பிரதி பாதனைக பரே நாராயண
அநு வாக ஏவ பிரதி பந்நா இதி தத் விரோதி அர்த்தாந்தர பரி கல்பனம் காரணஸ்யைவ த்யேயத்வ விதி வாக்யே ந யுஜ்யதே –
உலகைக் காப்போன்
அவனுக்கு மேம்பட்டோன் யாரும் இல்லை -என்று அவனுடைய தனிப் பெரும் தலைமை பேசப்படுகிறது
மேலும் செல்வங்கள் யாவும் நிறைந்தவன்-எல்லாவற்றுக்கும் தலைவன் சம்பு -வானிடை விளங்குவோன் தியானிக்கப்படத் தக்கவன் -வேண்டும் என்று
நாராயணனையே பரம காரணமாக சம்பு என்னும் சொல்லால் தியானம் செய்ய விதிக்கிறது
எவன் த்யானிக்கப்பட வேண்டும் எனத் துவங்கி காரணமானவனே த்யானிக்கத் தக்கவன் -என்று காரியப் பொருட்களைத் த்யானிப்பதை விலக்கி காரணப் பொருளையே தியானிக்க வேண்டும் என விதிக்கிறது
அதனால் நாராயணனுடைய முதல் காரணத் தன்மையினால் சம்பு என்ற சொல்லுக்குப் பொருளாக முதல் காரணத் தன்மையைக் கூறி பிறகு நாராயண அநுவாகத்தில் கூறியதை விளக்கி அதற்கு மாறுபட்ட பொருள்களை விலக்கி காரணமே த்யானிக்கத் தக்கது என்று விதிக்கிறது –
——————-
107–யதபி–ததோ யதுத் தர தரம் -இத்யத்ர புருஷாதந் யஸ்ய பரதர தத்வம் பிரதீயதே -இத்யப்யதாயி -ததபி
யஸ்மாத் பரந் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்தி கஸ்சித்–இத்யத்ர
யஸ்மாத் அபரம்-
யஸ்மாத் அந்யத் கிஞ்சித் அபி பரம் நாஸ்தி கேநாபி பிரகாரேண புருஷ வ்யதிரிக்தஸ்ய பரத்வம் நாஸ்தி -இத்யர்த்த
அணீயஸ்த்வம் -ஸூஷ்மத்வம்-ஜ்யாயத்வம் -ஸர்வேஸ்வரத்வம் -சர்வ வ்யாபித்வாத் -சர்வேஸ்வரத்வாத்-அஸ்ய
ஏதத் வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி அணீயஸ்த்வம் ஜ்யாயஸ்த்வம் ச நாஸ்தி இத்யர்த்த
யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்சித்-இதி புருஷா தந்யஸ்ய கஸ்யாபி ஜ்யாயஸ்த்வம் நிஷித்தம் இதி –
தஸ்மாதந் யஸ்ய பரத்வம் ந யுஜ்யதே இதி ப்ரத்யுக்தம் –
இங்கு அதினின்றும் மேம்பட்டது -என்று பரம புருஷனை விட மேம் பட்ட உயர் நிலை கூறப்படுவது போல் காணப்படுகிறது –
யஸ்மாத் பரந்நா பர மஸ்தி கிஞ்சித் யஸ்மாந்நாணீயோ ந ஜ்யா யோஸ்தி கஸ்சித் -என்ற மந்திரத்துக்கு கீழ் வருமாறு பொருள் கொள்ள வேண்டும் –
யஸ்மாத் அபரம் -எதினின்றும் வேறுபட்ட து ஓன்று சிறிது அளவும் பெரியதல்லவோ –
அதாவது -எவ் வழியிலும் புருஷனை விடப் பெரியது எதுவும் இல்லை என்று பொருள் –
அணீயஸ் த்வம் –நுண்ணியதாய் இருத்தல்
ஜ்யாயஸ்த்வம் -எல்லாவற்றிற்கும் தலைமை
எங்கும் நிறைந்து இருப்பதால் -எல்லாவற்றிற்கும் தலைமையாய் இருப்பதால் அவனின்றும் வேறுபட்ட எதற்கும் நுண்மை முதன்மை ஆகியவை இல்லை என்பது பொருள் –
யஸ்மாந் நாணீயோ நா ஜ்யோஸ்தி கஸ்சித்-என்று புருக்ஷனைத் தவிர்த்து வேறு எதற்கும் முதன்மையாய் இருத்தல் மறுக்கப் படுகிறது
இதனால் புருஷனின்றும் வேறுபட்டது எதுவும் இல்லை என்பது வெளிப்படை –
கஸ்தர் ஹி அஸ்ய வாக்யஸ்ய அர்த்த ?
அஸ்ய பிரகரணஸ்யோபக்ரமே-தமேவ விதித்வாதி ம்ருத்யு மீதி -நாந்ய பந்தா வித்யதேயநாய -இதி
புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுதாம் -தத் வ்யதிரிக்தஸ்ய அபததாம் ச ப்ரதிஞ்ஞாய -யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் —
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –இத் யேததந்தேந புருஷஸ்ய சர்வ ஸ்மாத் பரத்வம் ப்ரதிபாதிதம்-
யத புருஷ தத்வமேவ உத்தர தரம் -ததோ யதுத் தரதரம் -புருஷ தத்வம் ததேவ அரூபாம் -அநாமயம்-ய ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி–
அதே தர துக்கமே வாபி யந்தி இதி புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுத்வம் ததிதரஸ்ய ச அபதத்வம்
ப்ரதிஞ்ஞாதம் ச ஹேதுகமுப ஸம்ஹ்ருதம் -அந்யதா உப க்ரமகத ப்ரதிஞ்ஞாப்யாம் விரூத்யேத
அப்படி என்றால் இந்த வாக்கியத்தின் பொருள் என்ன –இவ் வாக்கியத்தின் இடத்தையும் தொடர்பையும் ஆராய்வோமானால் துவக்கத்தில்அந்தப் பரம புருஷனையே இடையறாது தியானித்து பிறவிச் சுழல் எனும் கடலைத் தாண்ட வேண்டும் -வேறு வழி ஏதுமில்லை -என்று புருஷனை இடையறாது தியானித்து மோக்ஷம் அடையத் தகுந்த வழி -அதனினும் வேறு வழி ஏதுமில்லை என்று அறுதியிட்டு எவனைவிட மேம்பொருள் ஏதும் இல்லையோ அவனே முழுமையாவான் – எல்லோருக்கும் மேலான புருஷன் என்று புருஷ பரத்வம் கூறியது -அப்படியே அந்த புருஷத்வமே மிக உயர்ந்தது என்று விளக்கி பிறகு அதனினும் சிறந்த புருஷத்வம் வினைகளால் வரும் உருவம் அற்றது -செயலால் வரும் இன்ப துன்பங்கள் அற்றது -என்பதை அறிபவன் மோஷத்தை அடைகிறான் -அறியாதவன் துக்கத்தை அடைகிறான் -என்று புருஷத்வமே மோக்ஷ காரணம் என்றும் மற்றவை தாழ்ந்தவைகள் என்றும் கூறி துவக்கத்தில் கூறிய கருத்து அறுதியிடப் பெறுகிறதுஇதை மாறுபட்டு பொருள் கொண்டால் துவக்கமும் முடிவும் தொடர்பு அற்றவை யாகும் –
புருஷஸ் யைவ ஸூத்தி குண யோகே சிவ சப் தாபி -தே யத்வம் சாஸ்வதம் சிவமச்யுதம்–இத்யாதிநா
ஞாதமேவ புருஷ ஏவ சிவ சப்தாபி ஹித-இதி அநந்தரமேவ வததி–மஹாந் ப்ரபுர்வை புருஷ சத்வஸ்யைஷ ப்ரவர்த்தக இதி –
புருஷனுடைய தூய்மைப் பண்பாக சிவன் என்ற பதம் உபயோகப்படுத்தப் படுகிறது–நிலை பெற்றவன் -தூய்மையானவன் -அடியார்களை நழுவ விடாதவன் -என்பதும் நோக்கத் தக்கது -சிவ என்னும் பதத்தால் புருஷனே கடைசியிலும் கூறப்படுகிறான் -மேலும் அதனால் மஹா புருஷன் ஸத்வ குணத்தை நிதியாக உடையவன் என்று இக்கருத்தையே உறுதி செய்கிறது –
———————-
108–உக்த்தேநைவ ந்யாயேந -ந சந்ந சா சச் சிவ ஏவ கேவல –இத்யர்த்த சர்வம் நேயம்
கிஞ்ச-
அம்பஸ்ய பாரே –இத்யனு வாகே -ந தஸ்யேசே கஸ்சந இதி நிரஸ்த சாமாப்யதிக சம்பவாநஸ்ய புருஷஸ்ய –
அணோர் அணீயாந் -இத்யஸ் மிந்நதுவாகே வேத -ஆந்யந்தா ரூபதயா வேத பீஜ பூத ப்ரணவஸ்ய ப்ரக்ருதி பூத
அகார வாச்யதயா மஹேச்வரத்வம் ப்ரதிபாத்ய தஹர புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்திதயா உபாஸ்யத்வம் யுக்தம் –
இவ்வாறு விளக்கப்பட்ட aநியாயங்களால் ந ஸந்ந சாஸச் சிவ ஏவ கேவல-nஎனும் aவாக்யத்திலுள்ள சிவ என்னும் சொல் சிவனைக் குறிப்பதல்ல என்பது எவரும் அறிந்ததேமேலும் -அம்பஸ்ய பாரே -என்ற அநுவாகத்தில் -அவனுக்கு மேம்பட்டவன் யாருமில்லை -என்று மற்றவர்களை மறுத்து நிறுவப்பட்ட புருஷன் என்பவன் அணுவிலும் அணுவாக இருப்பவன் எனக் கூறப்பட்டு இருக்கிறதுஇந்த அநுவாகத்தில் வேதத்தை ஒதத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் ஓம் என்று சொல்லப்பட வேண்டும் -என்று விதித்துஅதன் பகுதியான அ என்னும் எழுத்தால் யாவருக்கும் மேன்மையான தன்மை கூறப்பட்டு அவனை ஹ்ருதயத் தாமரையில் உள்ள தஹர ஆகாசத்தில் இருப்பவனாகத் தியானிக்க விதிக்கிறது –
அயமர்த்த
சர்வஸ்ய வேத ஜாதஸ்ய ப்ரக்ருதி பிரணவ யுக்த -ப்ரணவஸ்ய ச ப்ரக்ருதி அகார -பிரணவ விகாரோ வேத ஸ்வ ப்ரக்ருதி பூதே
பிரணவ லீன -ப்ரணவோபி அகார விகார பூத ஸ்வ பிரகிருதவ்-அகாரே லீன -தஸ்ய பிரணவ ப்ரக்ருதி பூதஸ்ய-
அகாரஸ்ய-ய பர வாஸ்ய ச ஏவ மஹேஸ்வர இதி சர்வ வாசக ஜாத ப்ரக்ருதி பூத அகார வாஸ்ய சர்வ வாஸ்ய ஜாத
ப்ரக்ருதி பூத நாராயணோ ய ச மஹேஸ்வர -இத்யர்த்த –
இதன் பொருளாவது
எல்லா வேதங்களுக்கும் பிறப்பிடம் ஓம் எனும் ப்ரணவம்
அந்தப் ப்ரணவத்தின் பகுதி -வேர்ச்சொல் அ காரம் ப்ரணவத்தின் விரிவே வேதம் -ப்ரணவம் அகாரத்தின் விரிவு -அவ்வாறே அவைகள் முடியும் இடமும் லயம் -முறையே ப்ரணவம் அகாரம் ஆகின்றன –
இந்த அகாரத்தினால் அறுதியிடப் படுபவன் -எனவே அவனே மஹேஸ்வரன்
இதனால் சொற்கள் யாவற்றுக்கும் வேராக அகாரமும் அவைகளால் சுட்டப்படும் பொருள்கள் யாவற்றுக்கும் வேராக இருக்கும் -நாராயணனே மஹேஸ்வரன் -என்று தேறுகிறது
யதோக்தம் பகவதோ –
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகாத்தை பிரபவ ப்ரலயஸ் ததா மத்தப் பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய —
அக்ஷராணாம் அகாரோஸ்மி-ஸ்ரீ கீதை –
இக் கருத்தையே கீதையில் பகவான்-நான் இவ்வுலகு அனைத்துக்கும் உத்பத்தி இடமாகவும் முடிவு இடமாகவும் இருக்கிறேன்அர்ஜுனா என்னிலும் வேறுபட்ட எப் பொருளும் என்னை விட மேலானதாக இல்லை என்றும்எழுத்துக்களில் அகாரம் ஆகிறேன் என்றும் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறான் –
இதி அ இதி ப்ரஹ்ம இதி ஸ்ருதே –
அகாரேவை சர்வ வாக் -இதி ச வாசக ஜாதஸ்ய அகார ப்ரக்ருதித்வம் வாஸ்ய ஜாதஸ்ய ப்ரஹ்ம ப்ரக்ருதித்வம் ச ஸூ ஸ்பஷ்டம்
அ -என்பது ப்ரஹ்மம் என வேதம் கூறுகிறதுஅகாரத்தின் நின்றும் சொற்கள் யாவும் தோன்றுகின்றனசொற்கள் தோன்றுவதற்கு அ காரணமாக இருப்பது போலே அச் சொற்களின் பொருள்கள் யாவற்றிற்கும் அ காரத்தின் பொருளான ப்ரஹ்மம் என்பது வெள்ளிடை மலை
அத -ப்ரஹ்மண-அகார வாச்யதா ப்ரதிபாதநாத் அகார வாஸ்யோ நாராயண ஏவ மஹேஸ்வர -இதி சித்தம் –
தஸ்யைவ -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இதி கேவல பரதத்வ விசேஷ ப்ரதிபாதந பரேண-நாராயண அநு வாகேந சர்வ ஸ்மாத் பரத்வம் பிரபஞ்சிதம் –
அநேந அநந்ய பரேண ப்ரதிபாதிதமேவ பரதத்வம் -அந்ய பரேஷு சர்வேஷு வாக்யேஷு கேநாபி சப்தேந ப்ரதீயமாநம்
ததேவேதி அவகம்யதே-இதி -ஸாஸ்த்ர த்ருஷ்டயாதூபதேசோ வாமதேவ வைத்த –இதி ஸூத்ரா காரேண நீர்ணீதம்
பிறகு ப்ரஹ்மத்தை அகாரத்தால் கூறி -அதன் பொருளான நாராயணனே மஹேஸ்வரன் என்பது தன்னடையே கிடைக்கிறது -அவனையே ஆயிரம் தலைகள் உடையவன் -என்று பரத்வத்தை விளக்கிய பிறகு நாராயண அநுவாகத்தில் யாவற்றையும் விஞ்சினவாகக் கூறிஇவ்வாறு தனக்கு உவமை இல்லாதவன் -எனும் நிலையே பரத்வம் என்று நிறுவுகிறதுஇவ்வாறு தனக்கு உவமை மேலானவன் இன்மையைக் கூறி -தன்னிலும் வேறுபட்ட சொற்கள் யாவற்றிற்கும் மேம்பட்டு இருப்பது போல் அவனும் இருக்கிறான் என விளக்குகிறதுமற்றையோர் தனக்கு தனிப் பெரும் முதன்மை கூறிக் கொள்வது -ஸாஸ்த்ரங்கள் நன்கு அறிந்த வாம தேவர் -அவன் தன்னுள்ளும் இருப்பதை அறிந்து அவனே யாவும் செய்வதாகக் கூறிக் கொள்வது போன்றதுஇது ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நன்கு விளக்கப் பட்டு இருக்கிறது
ததேதத்க்வ பரம் ப்ரஹ்ம சித் ப்ரஹ்ம சிவாதி சப்தாவகதமிதி கேவல ப்ரஹ்ம சிவயோ ந பரத்வ பிரசங்க –
அஸ்மின் அநந்ய பரே னுவாகே தயோர் இந்திராதி துல்ய தயா தத் விபூதித்வ ப்ரதிபாதநாத் கசித் ஆகாய பிராணாதி சப்தேந
பரம் ப்ரஹ்மாபிஹிதம் இதி பூதாகாச பிராணாதே யதா ந பரத்வம் –
இவன் ஒருவனே பர ப்ரஹ்மமாய் இருக்க பிரம்மா சிவன் போன்ற சொற்களால் குறிக்கப் படுவோருக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்பது அதே நூலில்
வேறொரு இடத்தில் இந்திரன் போன்றோரும் இவ்வாறு கூறிக் கொள்ளுகையால் ஆகாயம் போன்ற சொற்கள் எவ்வாறு உத்பத்திக்குக் காரணமாகச் சொல்லப்பட்டு இருந்தாலும் அவை பர ப்ரஹ்ம்ம் அல்லவோ -அது போன்று இங்கும் சிவனுக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்று சொல்லப் படுகிறது –
———————-
109–யத் புநர் இதமா சங்கிதம்-
அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம -தஹரோஸ்மிந் நந்தராகாச -தஸ்மிந் யதந்தஸ் தந்வேஷ்டவ்யம்
ததுவாத விஜிஞ்ஞாசித்வயம்-இத்யத்ர ஆகாச சப்தேன ஜகதுபாதாந காரணம் ப்ரதிபாத்ய தத் அந்தரவர்த்திந –
கஸ்யசித்த தத்வ விசேஷஸ்ய அந்வேஷ்டவ்யதா ப்ரதிபாத்யதே அஸ்ய ஆகாசஸ்ய நாம ரூபயோ நிர்வஹகத்வ ஸ்ரவணாத்
புருஷ ஸூக்தே புருஷஸ்ய நாம ரூபயோ கர்த்ருத்வ தர்சநாஸ்ச-ஆகாச பர்யாய பூதாத் புருஷாத் அந் யஸ்ய அந் வேஷ்டவ்யதயா
உபாஸ்யத்வம் பிரதீயதே இதி
இது மற்ற ஒரு ஐயத்தைத் தோற்றுவிக்கிறதுபர ப்ரஹ்மத்திற்கு இருப்பிடமான இவ் வுடலில் ஹ்ருதயத்திலுள்ள தாமரை மலர் போன்ற இடத்திலுள்ள மிகச் சிறிய வெளியானது தேடி அறியத் தக்கது -அதுவே இடையறாது த்யானிக்கத் தக்கது -என்று உடலிலுள்ள ஆகாயம் குறிப்பிடப் படுகிறது -மேலும் அதனுள் உறைவதாயும் தன்னுடைய தொடர்பால் அதற்குச் சிறப்பளிப்பதாயும் -உலகிற்கு பருப்பொருள் காரணமானதாயும் வேறொன்று குறிக்கப்பிடப் பட்டு அது அந்த ஆகாசத்திற்கு பெயர் உருவம் அளிப்பதாயும் -அதற்கு மேலாண்மை யுடையதாயும் -புருஷ ஸூக்தத்தில் ஓதப்பட்டு இருக்கிறது -அதனால் ஆகாசத்தில் நின்றும் வேறுபட்டு புருஷன் என்ற பெயரும் உருவமுமுடைய ஒருவனே உபாஸிக்கத் தக்கவன் எனக் கொள்ளல் வேண்டும் -என முற் கூற்று கூறப்படுகிறது –
அநாதிதா வேதாநாம் அதிருஷ்ட ஸாஸ்த்ர விதாம் இதம் சோத்யம் -யத தத்ர ஸ்ருதிரேவ அஸ்ய பரிகார மஹா வாக்யகாரஸ் ச –
இக் கூற்றை தோற்றம் நிர்ணயிக்க முடியாத மறைகளாலும் ஸாஸ்த்ரங்களாலும் நுணுகி ஆராய்ந்தால் அவைகளில் இருந்தே தக்க விடையளிக்கும் மொழிகள் காணக் கிடைக்கின்றன –
தஹரோ அஸ்மின் நந்தர் ஆகாச -கிம் தத்ர வித்யதே யத் அந்வேஷ்டவ்யம் யத் வாவ விஜிஞ்ஞாசிதவ்யம் இதி சோதிதே-
யாவான் வா அயம் ஆகாச தாவநேஷோந்தர் ஹ்ருதய ஆகாச -இத்யாதிநா -அஸ்ய அகார சப்த வாஸ்யஸ்ய -பரம புருஷஸ்ய –
அநவதிக மஹத்வம் சகல ஜகத் காரணத்தயா -சகல ஜகத் ஆதாரத்வம் ப்ரதிபாத்ய -அஸ்மின் காமா ஸமாஹிதா
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ வி மிருத்யு ஸத்யஸங்கல்ப -இதி
அபஹதபாப்மத்வாதி -ஸத்யஸங்கல்பத்வ பயந்த குண அஷ்டகம் தஸ்மிந் நிஹிதம் இதி பரம புருஷவத்-பரம புருஷ குண அஷ்டகஸ்யாமி
ப்ருதக் விஜிஞ்ஞாசி தவ்யதா ப்ரதிபாதித யிஷயா தஸ்மிந் யதந்தஸ்ய தன்வேஷ்டவ்யம் இதயுக்தம் இதி ஸ்ருதியைவ சர்வம் பரிஹ்ருதம் —
ஏதத் யுக்தம் பவதி -கிம் ததத்ர வித்யதே யதந் வேஷ்டயம் இத்யஸ்ய சோத்யஸ்ய -தஸ்மிந் ஸர்வஸ்ய ஜகத ஸ்ரஷ்டத்வம்-ஆதாரத்வம் –
நியந்த்ருத்வம் -சேஷித்வம் -அபஹத பாப்மாதயோ குணாஸ் ச வித்யந்தே-இதி பரிகார இதி
தஹரம் என்பது ஹிருதயக் குகை -உள்ளுறை வெளி -அதனால் எது அறியப்படுகிறது -எது அறியத்தக்கது -எது ஆராயப்பட வேண்டியது என ஆராயின் கட் புலனாகும் வெளி எவ்வளவு பரந்ததோ அவ்வளவு இவ்வெளியும் பரந்ததே -என்று பரமபுருஷனுக்கு உரிய அளவற்ற விரிவும் -அவன் உலகிற்கு காரணமாதலும் -யாவற்றிற்கும் பற்றுக்கோடாக இருத்தலும் விளக்கப்பட்டு -இவனிடத்தில் விரும்பத் தக்கவை யாவும் நிறைந்து இருக்கின்றன
இந்தப் பரமாத்மா பாபம் அற்றவன் -மூப்பற்றவன் -அழிவற்றவன் – துயரமற்றவன் -பசியற்றவன் -தாகமற்றவன் -விருப்பங்கள் யாவும் அடையப் பெற்றவன் -தவறாத வினைத்திட்பம் உடையவன் -என எட்டுப் பண்புகளை உடையவன்
அவனையும் அவனுடைய இப் பண்புகளையும் தனித் தனியாக தியானிக்க வேண்டும்
அதுவே தஹராகாசம் என்று பரமாத்மாவையே தஹராகாசம் என்று நிலை நிறுத்துகிறது
இதன் விளக்கம்
இதில் என்ன உள்ளது -அது எவ்வாறுள்ளது என்று ஆராய்கையில் அகில உலகினையும் படைத்தல் -அவற்றிற்கு பற்றுக் கோடாதல் -அவற்றை அடக்கி ஆளுதல் -அவற்றைப் பணி கொள்ளுதல் -மேற் கூறிய எட்டுப் பண்புகள் இந்த ஆகாசத்தில் விளங்குகின்றன -என்பது தெளிவு –
ததாச வாக்யகார வசனம்–தஸ்மிந் யதந்த-இதி காம வ்யபதேச -இதி காம்யந்தே இதி காமா அபஹத பாப்மத் வாதயோ குணா இத்யர்த்த
அவ்வாறே ப்ரஹ்ம ஸூத்ரத்திலும்தஸ்மிந் யதந்த -என்ற இடத்தில் எல்லோரும் விரும்பும் குணங்களைக் குறிப்பிட்டு இருக்கிறதுஅதாவது பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள்
ஏதத் யுக்தம் பவதி -யத் ஏதத் தஹர ஆகாச சப்தாபி தேயம் -நிகில ஜகத் உதய விபவ லய லீலம்-பரம் ப்ரஹ்ம
தஸ்மிந்யத் அந்தர் நிஹிதம் அநவதிக அதிசயம் அபஹத பாப்மத்வாதி குண அஷ்டகம் தத் உபயமபி அன்வேஷ்டயம் விஜிஞ்ஞாசி தவ்யம் இதி
யதா ஆஹ-அதய இஹாத்மாந மனு வித்யா வ்ரஜயந்த்யே தாம்சச சத்யாந் காமாம் ஸ்தேஷாம் சர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி -இதி –
இதை மேலும் விளக்குவோம்
எது தஹாராகாஸம் எனப் படுகிறதோ அதுவே உலகு யாவையும் படைத்து காத்து அழித்து வினை புரியும் ப்ரஹ்மம்
அதனுடைய பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள் ஆகிய இரண்டையும் தேட வேண்டும் -மனத்தில் நிலை நிறுத்த வேண்டும் -எனக் கூறுகிறது
பிறகு எவர்கள் பரமாத்மாவையும் அவனுடைய இந்த எட்டுக் குணங்களையும் அறிந்து பரமபதம் செல்லத் தகுதியானவர்களோ அவர்களுக்குத் தாங்கள் விரும்பும் உலகுகளுக்குச் செல்லும் திறன் தன்னடையே ஏற்படுகிறது -எனக் கூறுகிறது –
——————
110–ய புந -காரணஸ்யைவ த்யேயதா ப்ரதிபாதந பரே வாக்யே-விஷ்ணோ அநந்ய பரவாக்ய ப்ரதிபாதித பரதத்வ பூதஸ்ய
கார்ய மத்யே நிவேச ச -ஸ்வ கார்ய பூதத்வ சங்க்யாபூரணம் குர்வத-ஸ்வ லீலயா ஜகத் உபகாராய ஸ்வ இச்சாவதார இத்யவ
கந்தவ்ய யதா லீலயா தேவ சங்க்யா பூரணம் குர்வத-உபேந்த்ரத்வம் பரஸ்யைவ யதாச ஸூர்ய வம்சோத்பாவ
ராஜ சங்க்யா பூரணம் குர்வதா -பரஸ்யைவ ப்ரஹ்மணோ தாஸாதி ரூபேண ஸ்வ இச்சாவதார –
யதா ச ஸோம வம்சங்க்யா பூரணம் குர்வதோ பகவத-பூ பாராவ் தரணாய
ஸ்வ இச்சயா வஸூ தேவ க்ருஹேவதாரா ஸ்ருஷ்ட்டிப் பிரளய ப்ரகாரனோஷு நாராயண ஏவ
பரம காரண தயா ப்ரதிபாத்யதே இதி பூர்வமே வோக்தம் —
மீண்டும் –
காரணம் ஒன்றே த்யானிக்கத் தக்கது என்று கூறி இருப்பதால் -அந்தக் காரணம் என்பது யாது என ஆராய்ந்தால்-மற்றை தேவதைகளைப் பற்றிக் குறிப்பிடாத நாராயண அநுவாகத்தில் பர தத்வமான காரணம் –
ஆயினும் அவன் கார்யமான மற்ற தேவதைகளுக்கும் ஏற்றத்தைக் கொடுக்க தன் விருப்பத்தாலேயே கீழ் இழிந்து -அவர்களில் ஒருவராக எண்ணப்படும் படி தன்னைத் தாழ விடுகிறான்
தன் அந்த எண்ணத்தின் படியே உபேந்த்ரன் போன்ற பிறப்புகளை எடுக்கிறான் -அவ்வாறே தன் இச்சையால் ஸூர்ய வம்ஸத்தில் தாஸரதியாகத் தோன்றுகிறான்
பூமி பாரம் நீக்க வாஸூ தேவன் வீட்டில் அவதரித்து சந்த்ர வம்சத்தில் வைத்து எண்ணப்படுகிறான்
படைப்பு பிரளய காலங்களில் பரம காரணமாக நாராயணனாக தன் நிலையில் இருக்கிறான்
இவ்வாறு கொள்வதால் மட்டுமே வேத வாக்யங்கள் ஓன்று படுகின்றன –
——–
111–யத் புந -அதர்வ சிரஸ் -ருத்ரேண ஸ்வ சர்வ ஐஸ்வர்யம் பிரபஞ்சிதம் தது-
சோ அந்தராதந்தரம் ப்ராவிசது-இதி பரமாத்ம பிரவேசாதுக்தம் -இதி ஸ்ருதியைவ வ்யக்தம் –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூபதேசா வாம தேவவத் -இதி ஸூத்ர காரேண ஏவமாதீநாம் அர்த்த ப்ரதிபாதித
மீண்டும் -அதர்வ ஸிரஸ் என்னும் வேதப் பகுதியில் ருத்ரனால் தனது செல்வங்கள் என்று பரக்கத் பேசப் படுபவைகள்நான் அகத்தின் அகத்தையும் நிறைப்பவன் -என்று பரமாத்மாவால் அவன் நிறைக்கப் பட்டு இருத்தலால் வேதக் கருத்துக்களுக்கு இசையும்வாம தேவர் போன்று ஸாஸ்திரம் நன்கு அறிந்தோர் செய்யும் உபதேசம் -என்று இது போன்ற சொற்களுக்கு பொருள் கொள்ள வேண்டும் என்று ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நிறுவப் பட்டு இருக்கிறது-
யதோக்தம் ப்ரஹ்லாதேநாபி –
சர்வ கத்வாதநந் தஸ்ய ச ஏவாஹ மவஸ்திதித–ஏரவாஹ மத்தஸ் சர்வம் மஹம் சர்வம் மயி சர்வம் சநாதநே–இத்யாதி
அவ்வாறே ப்ரஹ்லாதனும்எப்பொருளிலும் ப்ரஹ்மம் நிறைந்து இருப்பதால் அதாக நான் இருக்கிறேன் -என்னிடம் இருந்தே யாவும் தோன்று கின்றன – நானே யாவுமாய் ஆகிறேன் அழிவற்று இருக்கிறேன் -என்று சொல்கிறார்
அத்ர சர்வகத்வாத நந்தஸ்ய இதி ஹேதுருத்த ஸ்வ சரீர பூதஸ்ய ஸர்வஸ்ய சிதசித் வஸ்துந ஆத்மத்வேந சர்வகத பரமாத்மா
இதி சர்வே சப்தா சர்வ சரீரம் பரமாத்மாநாமே அபிதத தீத் யுக்தம் அத காம் இதி சப்த ஸ்வாத்ம பிரகாரிணம் பரமாத்மநமேவ ஆசஷ்டே
அத இதம் உச்யதே
ஆத்மேத்யேவ து க்ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தன்னிஷ்பதே இத்யாதிநா காம் க்ருஹண உபாஸநம் வாக்ய காரேண –
கார்யாவஸ்த காரணாவஸ்தாஸ் ச ஸ்தூல ஸூஷ்ம அசித் சித்த வாஸ்து சரீர பரமாத்மைவ இதி -ஸர்வஸ்ய தந்நிஷ் பத்தே -இத்யுக்தம்–
ஆதமேதி தூப கச்சந்தி க்ராஹயந்நி ச-இதி ஸூத்ரா காரேண ச —
இதற்குக் காரணம்
ப்ரஹ்மம் எல்லை யற்று யாவற்றின் உள்ளும் நுழைந்து இருத்தல் என விளக்கப் பட்டு இருக்கிறது –
ப்ரஹ்மம் சேதன அசேதன பொருட்களை தன் உடலாகக் கொண்டு ஆத்மாவாகக் கொண்டு நிறைந்து இருப்பதால்
எல்லாச் சொற்களும் யாவற்றையும் உடலாக யுடைய பரமாத்மாவையே குறிக்கும் என்பதே பொருள்
பிறகு நான் என்ற சொல்லும் தன் ஆத்மாவைக் காட்டி அதைத் தன் உடலாகக் கொண்டு அதனுள் விளங்கும் பரமாத்மாவையே குறிக்கிறது
பிறகு த்யானிக்கையில் நம் ஆத்மாவிற்குள் பரமாத்மா இருக்கிறான் என்றே தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லப்படுகிறது -ஏன் என்றால்
அவனே யாவற்றிற்கும் தோற்றக் காரணமாய் இருக்கிறான் என்றும் விளக்கப் படுகிறது
அவன் காரண நிலையில் கட் புலனாகாத சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் சேதனங்களையும் கார்ய நிலையில் கட் புலனாகிற சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் அவனிடமிருந்து யாவும் உண்டாகின்றன என்று கொள்வதே முறை
அவனை ஆத்மா உயிர் -என்றே உபாஸகர்கள் யாவரும் இடையறாது த்யானிக்கிறார்கள் –
ஸாஸ்த்ரங்களும் அவ்வாறே நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன என்பதே ப்ரஹ்ம ஸூத்ரகாரரின் கொள்கை –
———
112–மஹா பாரதே ச ப்ரஹ்ம ருத்ர சம்வாதே ப்ரஹ்மா ருத்ரம் ப்ரத்யாஹ-
தவாந் தராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்தா–இதி ருத்ரஸ்ய ப்ரஹ்மணஸ் ச-அந்யே ஷாஞ்ச தேஹினாம்
பரமேஸ்வரோ நாராயண அந்தராத்மதயா வஸ்தித -இதி-
ததாதத் ரைவ -விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச-தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் ச விஷேஹே மஹேஸ்வர –
இதி தத்ரைவை -ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் பிரசாத க்ரேதஜவ் ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் –
இதி அந்தராத்மதயா அவஸ்தித நாராயண தர்சித பதவ் ப்ரஹ்ம ருத்ரவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார கார்யகரவ்–இத்யர்த்த –
மஹா பாரதத்தில் -பிரம ருத்ர உரையாடலில் பிரம்மா உனக்கும் எனக்கும் உடல் படைத்த யாவருக்கும் அந்த பர ப்ரஹ்மமே அந்தராத்மா வாகிறான் என்று கூறுகிறார் –
ருத்ரனுக்கும் பிரம்மாவுக்கும் மற்றைய உடல் படைத்தோர் யாவருக்கும் பரமேஸ்வரனாய் இருப்பவன் நாராயணனே –
அவனே அந்தராத்மாவாக நிலை பெற்று இருக்கிறான்-என்று இதற்குப் பொருள்
அதிலேயே மேலும் -அளவற்ற தேஜஸ்ஸை யுடைய பவனுக்கு சிவனுக்கு -விஷ்ணுவே ஆத்மா என்றும்
தொடர்ந்து -இப்படிப் பட்ட தேவர்களில் சிறந்த ப்ரம்மா சிவன் ஆகியோர் நாராயணன் மகிழ்ச்சியுடனும் கோபத்துடனும் இருக்கையில் முறையே படைக்கப் பட்டார்கள் என்றும்
அவனால் வழி காட்டப்பட்டு படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்றும் சொல்லப் படுகிறது –
அந்தராத்மாவில் இருந்து கொண்டு நிலை பெற்ற நாராயணனால் தூண்டப் பட்டே ப்ரம்ம ருத்ரர்கள் படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்பது இதன் பொருள்
—————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply