Archive for the ‘ஸ்ரீ ராமானுஜர்’ Category

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–22-28–

December 9, 2021

எம்பெருமானார் ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்து
கார் போலே தம்மை ஆட்க்கொண்டு அருளியதை மேல்
எட்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –

வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –என்று உபக்ரமித்து
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –என்று நைச்யம் பாவித்து
இன்று கண்டு உயர்ந்தேன்– இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –என்று தேறி
நீ என்னை யுத்த பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 –என்று
போக்யதையில் ஆழங்கால் பட்டு
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர் அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –என்று
ததீய சேஷத்வ நிஷ்டையில் ஆழ்ந்து
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-என்று
மீண்டும் நைச்யம் தலையெடுத்துப் பேசி
பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 – என்று ஹ்ருஷ்டமாய் அருளிச் செய்கிறார் –

———–

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

கீழ் கூறிய ஆழ்வார் -நாத முனிகள் -ஆளவந்தார் -இவர்கள் பர தேவதையாக வழி பட்ட கண்ணன் இடத்தில் –
அவருக்கு உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –இந்த பாசுரத்தில் –

அமுதனார் -இங்கே முதுகிட்டு -போற்றிட -என்னும் சொல் அமைப்பாலே
முதுகிட்டமையால் பிரபாவத்தை அறிந்து -போற்றினதை உய்த்து உணர வைத்தார் –
போற்றிட வாணன் பிழை பொறுத்த -என்றமையின் போற்றின முக் கண்ணனுக்காக வாணன் பிழை
பொறுத்தமை தோற்றுகிறது
மூ வுலகும் பூத்தவனே என்று போற்றிட –
இந்த மூ வுலகு எனபது -பூ லோகம் -ஸ்வர்க்க லோகம்-பாதாள லோகம் என்னும் மூ வுலகைக் குறிப்பிட வில்லை –
எல்லா வுலகும் கண்ணன் படைப்பு ஆதலின் -ஆனவே அணைத்து உலகங்களையும் அடக்குவதற்காக –
கிருதகம்-அகிருதகம் -கிருதகா கிருதகம் –என்னும் மூ வகைப்பட்ட வுலகம் என்று கொள்ள வேணும் –
இந்த அண்டத்தையே -என்றதாயிற்று –
மூ வுலகும் பூத்தவனே -பொறுத்து அருள்க -எனபது சொல் எச்சம் -பிறப்பித்தவன் நீ -பிறந்தவர்கள் நாங்கள் –

தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே
அனுபவித்தோ அல்லது பிராயச்சித்தம் செய்தோ தீர்க்க வேண்டிய அபராதங்களையும் பகைவர் திறத்தும்
போக்கியும் போக்கி அவர்களை தூயராக்கிய தூய்மையை கருதி -தீர்த்தன் -என்கிறார் –
ஆபத்துக் காலத்திலேயே உதவிய கண்ணனது தூய்மையினை ஏத்தும் எம்பெருமானாரோ
எனக்கு ஆபத்து காலத்தில் உதவுவதற்காக சேமித்து வைத்த செல்வம் என்றார் ஆயிற்று –

———-

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

வைப்பாய –இராமானுசனை –
மது சூதனையே ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே –
நல்லன்பர் எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர் என்க —
எனக்கு எய்ப்பினில் வைப்பினை -பெரிய திரு மொழி – 7-10 4- – -என்றபடி
மற்ற நிதி , வைப்பு, எல்லாம் பயன் படுத்த பயன் படுத்தக் குறைந்து போகும்.
எம்பெருமானார் என்னும் நிதி அள்ள அள்ளக் குறையாது .

நல்லன்பர்
என்னைப் போல வஞ்ச நெஞ்சர் அல்லர் இவ்வன்பர் -குற்றம் அற்றவர் -என்றபடி –
இனி நல்லதான அன்பை உடையவர் என்னலுமாம் –
அன்புக்கு நன்மையாவது -வேறு பயன் ஒன்றும் கருதாமை

மனத்தகத்தே வைக்கும் –
அருமை தெரிந்து அன்பு பூண்டவர் ஆதலின் -சீரிய பொருளை செப்பிலே வைப்பது போலே
உள்ளே வைத்து பேணுகின்றனர் -என்க

எப்போதும் வைக்கும் –
அல்லும் பகலும் என்றபடி-
எக்காலத்திலும் வெளியே வைக்கத் தக்க பொருள் அன்றே இது –
எப்போதும் -அகிஞ்சனராகிய நம்மைக் காப்பவர் எம்பெருமானாரே என்று
ப்ரீதி உடன் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்-எனபது கருத்து –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் –
வஞ்சிப்பது பிறரை மாத்ரம் அன்று -எம்பெருமானாரையே வஞ்சிக்க வல்லது என் நெஞ்சு என்கிறார் –
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -திருவாய் மொழி – 5-1 3- –

————–

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

விஷயங்களுக்கே இடம் கொடுத்து –
வஞ்சகனாகவே இருந்தேன் -அந்நிலையிலே எம்பெருமானாரை வைப்பாய வான் பொருளாக
வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவதாக நடித்தேன் -நெஞ்சில் வைத்ததும் -வாழ்த்தியதும் –
பொய்யே யாயினும் எம்பெருமானார் தன் வண்மையினால் தன்னை உள்ளபடி காட்டி
இந்நிலையை உண்மை நிலை யாக்கி விட்டார் -அவர் காட்டக் கண்ட நான் இப்பொழுது உயர்ந்தவனாகி
விட்டேன் -என்கிறார் அமுதனார் இப்பாசுரத்தில் –
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி மெய்யே பெற்று ஒழிந்தேன் -திருவாய் மொழி – 5-1 1- –

அடை மொழி இட்டு காரனைய இராமானுசனை என்றோ கூறாது -இராமானுசன் என்னும் கார் தன்னையே -என்று
மேக மாகவே வருணிப்பது இவ் உபகாரத்தின் முக்கிய தன்மையை அமுதனார் கருத்தில் கொண்டு உள்ளார்
என்று நமக்கு புலப்படுகிறது –வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய் – 27- என்று மேலே இதனை
வெளிப்படையாக இவரே கூறுவதும் காண்க –

ஈஸ்வர விபூதியில் ஒருவனை ஹிம்சித்தாரை சொல்லுகிற பாபங்களுக்கு அவதி இல்லை -ஈஸ்வரனையும் –
ஈஸ்வர விபூதியையும் -அஞ்ஞா நாசியாலே -அறியாமை என்னும் வாளாலே -அழிக்கப் பார்க்கிறவர்கள் இறே-
புலை சமயம்-நீச சமயம்
நீச சமயங்கள் மாண்டன –என்பர் மேலும் –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் தன்னை வாழ்த்துபவனாக நடிக்கும் என்னை -உள்ளபடி தன்னைக் காட்டி
மெய்யே நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்தும்படி -உபகரித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை
என்னும் கருத்துடன் புலைச் சமயங்கள் நிலத்து அவிய கைத்த மெய்ஞ் ஞானத்தராக அமுதனார் அவரைக் கூறினார் என்க

———–

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

நின் அருளின் தன்மை-
இராமானுசா என்று விளித்து கூறி-நின் -என்று மேலும் -கூறுவதால் அருள் உடைய அவரது சிறப்பு தோற்றும் –
இறைவனது அருளின் தன்மை அறிவு எளிதாயினும் எம்பெருமானாரது அருளின் தன்மை அறிவு அரிதே –என்றபடி –
இறைவனது அருள் ஸ்வா தந்த்ரியத்தால் தடை படுவதற்கு உரியது –
எம்பெருமானார் அருளோ -தடை ஏதும் இன்றி என்றும் பெருகும் தன்மையது -என்க –
தானாக வந்து என் அல்லல்களை தீர்த்து தன் பேறாக என்னை ஏற்று அருளினார்-

வந்து நீ என்னை உற்ற பின் -என்னும் இடத்தில்
வந்தமையால்-சௌலப்யமும்
அல்லல் உள்ள இடத்தில் வந்தமையால்-வாத்சல்யமும்
என்னை உற்றமையால்-சௌசீல்யமும்-
தன் பேறாக ஹேது எதுவும் இன்றி -என்னை உற்றமையால்-ஸ்வாமித்வமும்
கருணை இராமானுசா -என்றமையால் வருவதற்கு ஹேதுவான கிருபையும் –
எம்பெருமானார் இடம் உள்ளமை தோற்றுகிறது –

உன் சீரே –அடியேற்கு இன்று தித்திக்கும் –
உன் சீர் –இறைவனுடைய சீர்கள் அல்ல –
உயிர்க்கு உயிராய் -ஆத்மாவுக்கு உயிராய் –தாரகமாய் -ஜீவனமாய்
இதனால் தாரகமும் போஷகமும் சீரே என்றது ஆயிற்று
தித்திக்கும் என்கையாலே போக்யமும் அதுவே என்றது ஆயிற்று –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்றார் நம் ஆழ்வார் –
அமுதனார் அவை எல்லாம் எம்பெருமானார் குணங்களே என்கிறார் –

அடியேற்கு
இயல்பான அடிமை இன்பம் உணரப் பெற்ற எனக்கு –
இனி சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு- என்கையாலே
கீழ் கூறிய சௌலப்யாதி குணங்களுக்கு தோற்று -அடிமை யானதும் தோற்றுகிறது –
இன்று –
எங்கோ என்றோ போய் சரீர சம்பந்தம் நீங்கின பிறகு பெரும் பகவத் குணா அனுபவம் அன்று –
இங்கேயே இப்பொழுதே இவ் உடலோடேயே ஆசார்ய குணம் அனுபவம் ஆகிற பெரும் பேறு
வாய்க்க பெற்றேன் என்று களிக்கிறார் –

————-

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

மெய்க் குற்றம்
ஆளவந்தார் போன்ற முன்னவர் சொன்ன நைச்ய அனுசந்தானம் போன்றது -அன்று –
மெய்யாகவே உள்ள குற்றம்
சரீர சம்பந்தத்தால் வரும் அஹங்கார மமகாரங்கள் ஆகிற குற்றம் என்னலுமாம் –
அப்பொழுது வினையாம்-என்பதற்கு
வினையினால் உண்டான -என்று பொருள் கொள்ள வேண்டும் –
என்னால் செய்யப்பட்ட கர்மங்களினால் ஆகிய தேக சம்பந்தத்தால் உண்டான அஹங்காராதி தோஷத்தை
என்றது ஆயிற்று –

விளங்கிய மேகத்தை
சேதன லாபம் ஈச்வாரனுக்கு என்னுமா போலே , அமுதனார் கிடைக்கப் பெற்று எம்பெருமானார் உகந்தார்.
இதைத்தான் விளங்கிய மேகம் என்று எம்பெருமானரைக் குறிக்கிறார் அமுதனார்

மேவும் நல்லோர் –என்னை ஆட் கொள்ளுமே –
மேவுதல்-நிழல் போலே விட்டுப் பிரியாது இருத்தல்-
எம்பெருமானாரை மேவுகையே நலம்
அத்தகைய நலம் வாய்ந்தவர் நல்லோர்
அந் நலத்தினால் அவர் பால் இருந்த குறை -அறிவினாலோ பிறப்பினாலோ -நடத்தையினாலோ-
ஏற்ப்பட்டு இருபினும் அதுவும் நலமாகவே ஆக்கப்பட்டு -என்னை ஆட் கொண்டு விடுகிறது -என்கிறார் –

வாத்சல்யத்தால் நம்மை அறிவுறுத்தி -அவ் வழிப் படுத்துவதற்காகவே –
அந் நல்லோர் அறிவு பிறப்பு நடத்தைகளில் இழிவான தன்மைகளை தங்கள் இடம் ஏறிட்டு கொண்டு நம்மை அணைந்து உள்ளனர் –
ஈஸ்வரன் தானே தன் இச்சையால் தாழ விட்டுக் கொள்வது போலே –
இவர்களும் தம்மைத் தாழ விட்டுக் கொண்டு உள்ளனரே அன்றி -கர்மத்தால் இன் நிலைக்கு உட்பட்டவர்கள் அல்லர்
என்று அமுதனார் கருதுவதால்-
ஈஸ்வரனுடைய எளிமையினுக்கு அடியார்கள் ஆட்படுவது போலே –
இவர்கள் உடைய எளிமையினுக்கும் அவர் ஆட்படுகின்றார் -என்க
வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க வராஹா கபாலரைப் போலே –
இவரும் நமக்நரை-உயர்த்த தாழ இழிந்தார் –சூரணை -84 – என்று ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூறியபடி

இராமானுசனை மேவும் நல்லோர் -அஹங்காரத்துக்கு ஹேது ஆதலின் –
உயர் குடிப்பிறப்பும் – அறிவுடைமையும் -ஒழுக்கம் உடைமையும் -தள்ளத்தக்கன –
அஹங்காரத்துக்கு இடம் தராத இழி குலப் பிறப்பும் -அறிவின்மையும் -ஒழுக்கம் இன்மையுமே அமையும் என்று கருதுகின்றனர்

அவ் இயலவே -ஏகாரத்தை அக்குற்றமே அப்பிறப்பே என மற்றை இரண்டுடன் கூட்டுக –
இதனால் ஒவ் ஒன்றே ஆள் கொள்ளுவது புலனாம் –

———-

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

இராமானுசன் என்னும் கார் -தன் வள்ளன்மையால் -தன்னைக் காட்டி நான் கண்டு -உயரும்படி செய்தது என்றார் கீழ்-
இங்கே காட்டியதோடு அமையாமல் -நெஞ்சத்திலே தன்னை நிரந்தரமாக நிலை நாட்டியதன் மூலம் –
அவ் வள்ளல் தன்மை கொழுந்து விட்டு ஓங்கினமை புலன் ஆகிறது -என்கிறார் –

வெள்ளை சுடர் –இழுக்கு இது என்று –
என் சிறுமையையும் -தன் பெருமையையும் -ஒப்பிட்டு பாராதே உட் புகுந்தது அவருக்கு இழுக்காய் முடியுமே
என்று பயப்படுகிறார் -தான் மிக உயர்வது பற்றி அமுதனார் மகிழ் உற வில்லை –
எம்பெருமானார் பெருமைக்கு மாசு நேர்ந்து விடல் ஆகாதே என்று கலங்குகிறார் –

தள்ளுற்று இரங்கும் தனி நெஞ்சமே –
அச்சத்தால் தள்ளாடிய நெஞ்சம் துணையாக -தேற்றுவார் இன்றி தத்தளிக்கிறது என்கிறார் –
இனி -எம்பெருமானார் தாமே வந்து வல் வினையை லஷ்யம் செய்யாது புகுந்த
நெஞ்சம் வேறு ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம் -என்றார் ஆகவுமம் –
இனி தமக்கு வரும் சீர்மைக்கு மகிழாது -பிறருக்கு நேரும் இழுக்குக்காக தள்ளாடும் நெஞ்சம்-
மற்று ஓன்று இன்மையின் –தனி நெஞ்சம்-என்றார் ஆகவுமாம்

————–

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்
சொல் அளவில் கறை கண்டு கை விடாதே -நெஞ்சில் பொல்லாங்கு சோதித்து அறிந்த பின்னரே –
காய்ந்து கை விடுகிறான் கண்ணன்-
கைக் கொள்ளும் இடத்து -கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று-என்று அறிந்தால் அல்லது கை விடான்-
தீங்கு நினைந்த -கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்-நெருப்பு அன்ன நின்ற நெடுமாலே – என்றாள்
ஆண்டாள் திருப்பாவை யிலே –
உன்னைச் சிந்தனையால் இகழ்ந்த இரணியனது அகல் மார்பம் கீண்ட என் முன்னைக் கோளரியே –
திரு வாய் மொழி – 2-6 6- –என்றார் நம் ஆழ்வாரும் –

கஞ்சனைக் காய்ந்த -என்றமையின்
சீறின-மாத்திரத்தில் ஆயுதம் இன்றி தானே எதிரியை அழித்தமை தோற்றுகிறது -சக்கரவர்த்தி திருமகன் போலே
ஆளிட்டு -அனுமனைக் கொண்டு –தென்னிலங்கையை தீக்கு இரையாக ஊட்டுதல் –
வாளியினால் மாளச் செய்தல் இல்லாமல் -தானே நெருப்பாக கஞ்சன் வயிற்றில் பற்றி நின்றும் –
குஞ்சி பிடித்து இழுத்து -மஞ்சத்தில் இருந்து -அக்கஞ்சனை கீழே தள்ளி -அவன் மேலே தானே விழுந்தும்-
வதம் செய்தமையால் –கண்ணன் தூயன் ஆனான் –என்னும் கருத்துடன் –காய்ந்த நிமலன்-என்றதாகவும் கொள்ளலாம்

பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் –பெரிய திருமொழி -3 4-4- –
என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தியையும் –
ஆளிட்டு செய்தல்–ஆயுதத்தால் அழிய செய்தல்-செய்கை அன்றிக்கே -ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற
வேலாலே அழிய செய்து -அத்தாலே வந்த சுத்தியை -உடையவன்-என்று அதன் வியாக்யானமும் அனுசந்திக்க தக்கன –

நிமலன் -என்பதால்-ஹேய பிரத்யநீகத்வமும் -குற்றம் ஒழிக்கும் பெற்றிமையும் –
காதலன்-என்பதால்-நல் குணம் உடைமையும் பேசப்படுகின்றன –

பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் –
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே -திரு வாய் மொழி 10-4 3- – -என்றபடி..
திருவடிகளைக் கண்டு தலை மேல் புனைதற்கு காமுறாது கண்ணன் திறத்து பர தந்திரனான -உரியனான –தன்னை –
ஆத்மா ஸ்வரூபத்தை -ஸ்வ தந்திரனாக -தனக்கே உரியனாக -கொள்வது வஞ்சம் ஆயிற்று –
இதுவே ஆத்ம அபஹாரம் எனப்படும்
தன்னை உணர்ந்து ஆட் செய்தற்கு இசைபவரே எம்பெருமானாரைக் கிட்டுதற்கு அருகதை உடையவர் –என்பது கருத்து –

புகழ் அன்றி பரவ கில்லாது –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி –
அமுதனாரோ குழந்தை மழலை மொழியிலே அடைவின்றிக் குழறுவது போலே அன்பு ததும்ப
எம்பெருமானார் புகழையே-என் வாய் புகழ்ந்து யேத்துமே -அன்றி -மற்று ஒன்றான –
பின்னை தன் காதலன் புகழையும்-பரவ கொள்ளாது -என்கிறார் –
இதனால் தனது சரம பர்வ நிஷ்டை வெளி இட்டபடி –

அவர் பாதம் அன்றிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணாது –
அவர் புகழ் அன்றி அவன் புகழ் பரவ கில்லாத நிலை எய்தப் பெற்றேன்-
என்னே எனக்கு இன்று கிடைத்த வாழ்வு -என்று வியக்கிறார் –
பிரதம பர்வமும் அறியாத நான்-எதிர்பாராது சரம பர்வத்தின் எல்லை நிலம் எய்தப் பெற்றது-
வியக்க தக்கது என்பது கருத்து –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது–1-ஆத்ம சித்தி –

November 30, 2021

ஸ்ரீ நாதமுனிகளால் பிரவர்த்தனம் -ஸ்ரீ ஆளவந்தாரால் போஷணம் -ஸ்ரீ ராமானுஜரால் வர்த்திக்கப்பட்ட விசிஷ்டாத்வைதம்

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மாநத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீசாநத் தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ எம்பெருமான் சித்தாந்தம் ஆகிய பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு கீழே உள்ள பலவும் பிரமாணமாக உள்ளன –
அவை யாவன –ஆகம ப்ராமண்யம் -மஹா புருஷ நிர்ணயம் -ஆத்ம சித்தி -சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி ஆகிய சித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -சதுஸ் ஸ்லோஹீ -ஸ்தோத்ர ரத்னம் ஆகிய எட்டும்
இவை அனைத்தையும் யாதிபதியான எம்பெருமானார் எந்த ஆளவந்தாரது அஷ்ட கிரந்தங்கள் என்று
நித்ய அனுசந்தானம் செய்தாரோ அந்த யாமுனாச்சார்யரை ஸ்தோத்ரம் செய்கிறோம்

ஆளவந்தார் ஆத்ம சித்தியில் -உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஆத்ம ஸித்தி – ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)
நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —
யதா சோழ நிரூப சம்ராட அத்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூராஸூரநர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிது –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ர ப்சவிப்ருஷ-
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –

————

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப்படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்தமயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

தைத்ரிய உபநிஷத்தில் அன்னமய, ப்ராணமய மனோமயங்களுக்கு அவ்வருகே சரீரம், ப்ராணன், மனம்
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டுள்ள ஜீவாத்மாவை அறிவு நிறைந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உணர்வற்ற பொருள்களைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உண்டான வேறுபாட்டினை வேதம் விஜ்ஞாநமயன் என்று காட்டியது.
ப்ரபந்நஜனகூடஸ்தரான நம்மாழ்வாரும்
“சென்று சென்று பரம்பரமாய்” என்னூனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே
என்று ஆத்மாவின் நிலையை உணர்த்துகிறார்.

ஸம்ஸார துக்கங்கள் அநாதி காலமாகச் செய்த கர்மத்தின் பயனாய் வந்தேறியுள்ளது.
பகவானை சரணமடைந்து அவனுடைய கருணைப் பெருக்கினால் கர்ம பந்தம் நீங்கி,
எம்பெருமானுக்கு தொண்டு செய்து உகப்பிக்கும் நிலை ஏற்படும்.
ஜீவாத்மாவின் உண்மைநிலை பகவத்குண அனுபவத்தைப் பண்ணி, உகந்து பணி செய்து களித்திருப்பதே ஆகும்.

ஸித்தி த்ரயம் – ஈஸ்வர ஸித்தி
ஈஸ்வர ஸித்தியில் அகில உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் இறைவனுக்கு உட்பட்டதே
என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிவுருத்த எல்லாம் அறிந்தவனும், எல்லாம் வல்லவனும்,
ஸத்யஸங்கல்பனுமான இறைவன் ஒருவன் உளன் என்பதை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகிறது.

வேதத்தை ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டு, ஆனால் வேத வேத்யனான பரமபுருஷனை ஒத்துக் கொள்ளாமல்,
யாகம் முதலிய கர்மங்களே ஸ்வர்கம் முதலிய பயனைக் கொடுக்கின்றது. ஆகையால் உலகிற்குக் காரணமாய்,
கர்ம பலன்களைக் கொடுக்கும் இறைவனால் ஒரு பயனுமில்லை என்று கூறும் கர்மமீமாம்சகர் கூறும் கூற்றைத் தவிர்த்து,
ப்ரளயத்தில் அழுந்திக் கிடந்த அகில உலகையும் ஸ்ருஷ்டி காலத்தில் மறுபடியும் படைத்து காத்தருளும்
ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்று நிலைநாட்டுகிறார்.

மேலும் எவனுடைய ஆராதனங்களான யாகம் முதலியவை ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ,
அவை எம்பெருமானுடைய அருளாலேயே பயனை கொடுக்கின்றன. அந்தப் பரமன் இல்லாதபோது, கர்மமும் கர்ம பலமும் சித்திக்காது.

எனவே ஜகத் ச்ரஷ்டாவாய் (உலகைப் படைப்பவனாய்), ஸர்வகர்ம ஸமாராத்யனாய் (அனைத்து கர்மாக்களாலே வழிபடப்படுபவனாய்),
ஸர்வ பலப்ரதனான (அவற்றிற்கு பயனும் அளிப்பவனான) பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியிலே
அங்கீகரித்தே(ஏற்றுக்கொள்ள) வேண்டும் என்று பலபடிகளாலே நிரூபித்து,
“கருமமும் கருமபலனுமாகிய காரணன் தன்னை” என்ற நம்மாழ்வாரின்
ஸகல வித்யா சர்வஸ்வம் என்று போற்றுதற்குரிய திருவாய்மொழியைக் கொண்டு பரம்பொருளை ஈஸ்வர ஸித்தியில் அறுதியிடுகிறார்.

ஸித்தி த்ரயம் – ஸம்வித் ஸித்தி
ஸம்வித் ஸித்தியில் அத்வைத வாதமும் மாயா வாதமும் கண்டிக்கப்படுகிறது. உளதான பொருள் ஒன்று தான்.
அநேகமில்லை என்று கூறும் வாதத்தையும், ஜ்ஞானம் ஒன்றே உள்ளது;
அறியப்படும் பொருளும், அறிகிறவனும் வேறில்லை என்று கூறுபவர்களுடைய வாதத்தையும் கண்டித்து;
அறிவு, அறியப்படும் பொருள், அறிகின்றவன் என்ற மூன்றும் உள்ளன.
இப்படியே சித், அசித், ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் உள்ளன என்பதை நிரூபிக்கிறார் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்.
மேலும் பரம்பொருளுக்கு குணம், ரூபம், ஐஸ்வர்யம், ஆகிய ஒன்றுமில்லை என்ற அத்வைதிகள் கூற்றைத் தகர்த்து
எம்பெருமானுக்கு நற்குணங்களும், திவ்ய ரூபங்களும், வைபவங்களும் பல பல உண்டு.
கணக்கில்லாத நற்குணங்களுக்கு இருப்பிடமாக எம்பெருமான் போற்றப்படுகிறான்.
ஆதலால் எம்பெருமான் ஒருவனே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாய், தானே அனைவருக்கும் பிரதானனாயிருக்கிறான்
என்பதை அறுதியிட்டு நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் கொள்கைகளை நிலைநாட்டியுள்ளார் நம் ஸ்வாமி.

“ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்ற வாக்கியம் அத்வைதக் கொள்கைக்கு முக்கியமானது.
இதற்கு ப்ரஹ்மம் தவிர வேறேதும் உண்மையில் இல்லை என்பதே அத்வைதிகள் கூறும் பொருள்.

ஸ்ரீ ஆளவந்தாரின் விவரணம் பின்வருமாறு:
நாம் ப்ரத்யக்ஷமாகக் காணும் காரியப் பொருள்கள் யாவும் உண்மை.
“பரம்பொருள் ஒன்றே” என்பதால் உலகம் பொய் என்றாகாது. உண்மையாக உள்ள பரம்பொருளையும்,
இல்லாததான உலகத்தையும் ஒரு பொருளாகக் கூறமுடியாது.

இப்படிச் சொன்னால் (பொய்யான உலகில்) இல்லாத உலகில் உள்ள பரம்பொருளும் இல்லாததாகும்.
எனவே பரம்பொருள் ஒன்றே! இரண்டல்ல” என்று பொருள் கொள்ளவேணுமே ஒழிய உலகில்லை
(உலகு பொய் என்று பொருள் கொள்ள முடியாது ) என்பது ஸ்ரீ ஆளவந்தார் கூற்று.
ஆக அத்விதீயன் என்றால் பரம்பொருளைப் போன்ற மற்றொருவர் கிடையாது என்பதே ஆகும்.
உலகும், மக்களும், தேவர்களும் எம்பெருமானுடைய செல்வத்தில் அடங்கியவையே ஆகும்.
ஆக எம்பெருமானே புருஷோத்தமன் ஆவான் என்று தெளிவாகக் காட்டுகிறார் நம் ஸ்வாமி.

இதே போன்று தத் த்வம் அஸி என்ற வாக்கியத்திற்கு பொருள் கூறும் அத்வைதிகள்
ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒரே பொருள் என்பதாகும்.
இதற்கு நம் ஸ்வாமி அறிவுக் களஞ்சியமான பரம்பொருளையும், குறுகிய ஞானமுடையனாய்
சம்சாரியாய் துக்கப்படுபவனான ஜீவாத்மாவோடு ஒன்று படுத்திப் பேசுவது
ஒளியையும், இருளையும் ஒன்று என்பது போல் ஆகிவிடும் என்கிறார்.

——

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது
வேதார்த்தம் ஸ்தாபிக்க -சத் சித்தாந்தம் -வைதிக தர்மம் –
சித்தி -ஞானம் -1-ஆத்ம 2-சம்வித் -3-ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
பிரமாணம் -பிரமாதா -பிரமேயம் -மூன்றும்
அசேதனம் பற்றியும் ஞானி பற்றியும் சர்வஞ்ஞான் பற்றியும்-இப்படி மூன்றும்
மாதா -பிரமாதா -ஆத்மா
மேயம் பிரமேயம் ஈஸ்வரன்
ஏற்படும் ஞானம் பிரமேதி -தர்ம பூத ஞானம்
பாஹ்ய குத்ருஷ்டிகள் உக்திகளைக் கொண்டு -பரமார்த்தம் ஸ்தாபிக்க முடியாதே –
சாஸ்த்ர யுத்தம் எளிமை –4-ஸ்தோத்ர ரத்னம் –5-சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ த்வயார்த்தம் -ஸ்ரீ பெருமை தனியாக
6-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்
7-மஹா புருஷ நிர்ணயம்
8-ஆகம பிராமண்யம்
ஆக எட்டு நூல்கள் அருளிச் செய்துள்ளார் – முதலில் அருளிச் செய்த கிரந்தங்கள் இவை

கை விளக்காகக் கொண்டே ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீ ஸூ க்திகள்–
உத்தமூர் வீர ராகவாச்சார்யர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
திரு நாங்கூர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
கத்யமும் ஸ்லோகமும் இவற்றில் உண்டே –
ஸ்ரீ உடையவர் ஒன்பது கிரந்தங்கள்
ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் -அஹம் -ஆத்மதத்வம் –
ஆத்ம சித்தி சம்வித் சித்தி கொண்டு நிர்ணயம்
சித்தி -ஞானம் -ஆத்ம சம்வித் -ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
சம்வித் என்றாலும் ஞானம்
சம்வித் -தர்மபூத ஞானத்தை குறிக்கும் -உத்பத்தி நாசம் கூடி இருக்கும் –
ஆத்மாவே ஞானம் -உத்பத்தி விநாசம் இல்லையே

ஞானம் ஏற்படும் சாதனம் -ஞான த்ரயம்
பிரஸ்தாபனம் -ஸ்ரீ பெரும்புதூர் ஆஸூரி ராமானுஜாச்சார்யார் -பல முகேன உபாய-
ஆயுள் நெய் -தலையிலே ப்ராப்யம் ஏற்றி சொல்வது –
சித்தி த்ரயம் நூலே ஞான த்ரயம் வருவது நிச்சயம் -சடக்கென தடங்கல் இல்லாமல் கிடைப்பதால் -உபச்சாரமாக சொல்வது
சாதனத்தில் பல விபதேசம்-
பல அபேதம் முகேன -சாதனத்தை சாத்தியம் -விளம்பம் இல்லாமல் -விட்டுப் போகாமல் -நிச்சயமாக ஏற்படுத்தும்
ஆத்மதத்வம் இவை கொண்டே நிர்ணயம் மஹா சித்தாந்தத்தில்
ஈஸ்வர சித்தி கொண்டே -சாஸ்த்ர யோனித்வ அதிகரணம் –
ஆகம ப்ராமாண்யம் -அடி ஒற்றி ப்ரஹ்ம மீமாம்ச அந்தக்கதை -பாஞ்சராத்ர ஆகமம் பரம பிராமணியம்
கீதார்த்த ஸங்க்ரஹம் கொண்டே ஸ்ரீ கீதா பாஷ்யம்
வேதார்த்த ஸங்க்ரஹம் தீபம் சாரம் இவை -மஹா புருஷ நிர்ணயம் கொண்டே-சாதித்தார்
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ் ஸ்லோகி கொண்டே கத்ய த்ரயம்
ஆ முதல்வன் -நிர்ஹேதுக கடாக்ஷம்
ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் -திரு அவதாரம் -74-ரூபங்கள் ஸ்ரீ நரசிம்மர் -மதகுகளை -74-வைதிக சம்ப்ரதாயம் காட்டிக் கொடுத்த கோயில் –

823-ஸ்ரீ மந் நாதமுனிகள் திரு அவதாரம்/ யமுனைத்துறைவன் பெயர் சாத்த -ஈஸ்வர முனிகள் திருத்தந்தை
ஆக்கி ஆழ்வான்-மஹா பாஷ்ய பட்டர் இடம் சிஷ்யர் -பிரதிவாதி வாரணம் பிரகட ஆடோபம் – விபாசனம் ஷம-
ஆ சைலாத் ஹிமாசலம் தொடங்கி -உப கண்டாதி மலை தாழ்வாரை வரை -அத்ரி கன்யா சரண கீதாலயா
கொழுந்து போன்ற திருவடி ஸ்பரிசத்தால் -பாக்யம் பெற்ற தாழ்வாரை –
ஆ ரஷோணீதா சீதா முக கமலம் சமுல்லாசாத ஹேது -சேது வரை –மாத்ருஸ அ ந்யா -என்னை ப் போலே கிடையாது தேடலாம்
அவதாம்சம் -ராக்குடி -கிழக்கு பர்வதம் சூர்யன் -அஸ்தமாத்ரிக்கு சந்திரன் -தேடினாலும் மீமாம்ச சாஸ்த்ரா யுக்ம –
அவற்றிலே புத்தி செலுத்தி நம்மைப் போலே -ஆளவந்தார் பேர் பெற்றார்
மணக்கால் நம்பி -தூது வளைக்கீரை கொடுத்து –கா பிஷா -போட வந்தேன் -கீதா பிரமாணம் பிரமேயம் காட்டி –
பெரிய பெருமாளை காட்டச் சொல்லி
ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்த பிரகாசம் -விமானம் பிராணாவாகாரம் —
சேவித்து மற்றவை விட்டார் -சந்யாச ஆஸ்ரமம் -கஜேந்திர தாசர் காட்டிக் கொடுக்க ஆ முதல்வன் கடாக்ஷித்து -விட்டு
தேவப்பெருமாள் -சரணாகதி –
ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம் கொண்டே ராமானுஜர் -பெரிய நம்பி உடன் வர -சரம திருமேனி சேவித்து திரும்ப
மதுராந்தகம் மகிழமரம் அடியில் சமாஸ்ரயணம்
நாஸ்திகர் –
அநாதி நிதன அவிச்சின்ன -பாட சம்ப்ரதாயம்-ஸூத பிராமண பூதம்- -வேத ஸாஸ்த்ர யுக்த அர்த்தேஷு நாஸ்தி என்பவன்

வேறே வேறே வித நாஸ்திகர்களை ஒரே சப்தத்தால் விளக்கி
சரீரம் தாண்டி வேறே பிறவி என்பது இல்லை -இஹ லோகம் பர லோகம் -கர்மங்களால் கட்டுப்படுத்தலாம் –
சாரு வாகர் -கண்ணாலே பார்ப்பதே உண்மை -அயம் லோக -நாஸ்தி பர /
புத்தன் -க்ஷணிகம் -ஸூந்யா -க்ஷணிக விஞ்ஞான சைதன்யம் பிரவாஹா ரூபேண அனுவர்த்திக்கும் -சைதன்யம் –
ஞானம் ஞாதா ஜே யம் மூன்றும் ஒன்றே அறிவு அறியப்படும் பொருள் அறியுமாவான் சேர்ந்தே -மூன்று இல்லை
நையாயிகன்-வேதம் பிரமாணம் ஒத்துக் கொண்டு -பாஷாண கல்பம் ஆத்மா அடைந்தாள் மோக்ஷம் -அசேஷ விசேஷ குண இல்லாமல் –
சைதன்யம் மாத்திரம் ஞானமே ஆத்மா -அடுத்து -யுக்தியால் வாதங்கள் –
அநிஷ்டம் போனது கல் இஷ்ட பிராப்தி ஆனந்தம் இல்லையே -புருஷார்த்தம் இல்லையே
சங்கர பாஸ்கர யாதவர் மூன்று குத்ருஷ்டிகள் –
பர ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் -வேதார்த்த ஸங்க்ரஹம் மங்கள ஸ்லோகம் இரண்டாவது -விஜயதே யமுனா முனி
தமஸா ஹார்த்தும் -சத் அசத் விவேகம் அறிய காருணிகோ ஈஸா ப்ரதீவம் ததாதி பட்டர் -ரெங்கராஜா ஸ்தவம்
சரபம் சலபமாகி வீட்டில் பூச்சி போலே கூரத்தாழ்வான்
ஆத்ம பரமாத்மா சம்வித் பிரமாணம் கொண்டு ப்ரதிஷ்டிதம் யுக்தி கொண்டே பாஹ்ய நிரசனம் -பிரதானம் -பரமாச்சாரியார் கையாண்டார்
உன் ஸ்திதி என் ஆதீனம் -பிரமாணம் கொண்டே ப்ரமேயம் -திரை விலக்கி சேவை சாதித்தான் திருவேங்கடமுடையான்
-நியாய சாஸ்திரம் -சத்காரியவாதிகள் –
பிரதிபக்ஷ -நிரசன பூர்வக ஆத்மதத்வ நிர்ணயம் -வேத ஸாஸ்த்ர அனுகூல தர்க்கங்கள் கொண்டே –
தேகாதி விலக்ஷணம் -அஜடம் -நித்யம் ஞானானந்த குணகம் -பர ப்ரஹ்ம குண அனுபவ தாஸ்யைக ரசம்
பர ப்ரஹ்ம சேஷ பூதர் -முக்தி பிரசாதத்தால் பெற்ற ஆத்மதத்வம் –
ஆத்மசித்தி கடைசியில் -இது -நாம் அறிந்தவை –
த்வைதம் -சரீராத்மா பாவம் இல்லாமல் சேஷ சேஷி கைங்கர்யம் எல்லாம் உண்டே என்பர்
ஈஸ்வர சித்தி -நிரீஸ்வர வாதி -நிரசித்து -த்ரையந்த வேத பிரமாணம் கொண்டே ஸ்தாபித்தார்
சம்வித் சித்தி -மாத்ரு-பிரமாத மேய -ப்ரமேயம் -பிரமித்தி ஞானம் -பிரமிதி ரூபம் -ப்ரமேயத்தை தத்வம் ஸ்தாபிக்க
பரமார்த்ததக ஸ்வரூப பேதம் இம்மூன்றுக்கும் -தர்மபூத ஞானம் -சங்கோச விகாசம் அடையும் -அர்ஹமாய் இருக்கும் –
இவை இல்லாமல் பரமாத்மா -உபநிஷத்தால் -சச்சிதானந்த ரூபம் ஸ்ரீ மான் புருஷோத்தமன் -உபநிஷத்தால் சொல்லப்படுபவர்
மாயாவதி இத்யாதிகளுடைய கற்பனைகளை தகர்த்து –
யத் பத த்யானம் அசேஷ கல்மஷன்கள் அழிக்கப் பட்டு அஹம் அவஸ்துவாய் இருக்க -பொருளாக்கின யாமுனாச்சார்யரை வணங்குவேன்

ஸ்ரீ மங்களா சரண வஸ்து நிர்தேசங்கள் இரண்டு ஸ்லோகங்கள் உண்டு
பிரகிருதி புருஷ கால வ்யக்த முக்த
பிரகிருதி அவ்யக்தம் -மாறி வ்யக்தம்
புருஷ சப்தம் தனியாக -பத்த ஜீவர்கள் —
யத் இச்சாம் அனுவிததி நித்யம் -சங்கல்பத்தை பின் தொடர்ந்து
நித்தியமாக பின் தொடர்ந்து செல்லும்
இது வரை லீலா விபூதி
நித்யம் நித்ய சித்தர் அநேகர்- எப்போதும் தொடரப்பட்டு
ஸூ பரிசரண போகை-கைங்கர்ய ரசம் யாத்திரை
ஸ்ரீ மதி-ஸ்ரீ யபதி இடத்தில் பிரியமான பிரியம் காட்டப்படுபவர் -பூருஷ பரம புருஷன் பரஸ்மின் -ஒரே வேற்றுமை –
மம பக்தி பூமா -பவது
அகில ப்ரஹ்மணி –ஸ்ரீ நிவாஸே-பரஸ்மின் -பக்தி ரூபா அங்கும் இப்படியே

பிரகிருதி -மாயாந்து பிரகிருதி வித்தி -அவ்யக்தம் -தத் கார்யாணி-வ்யக்தம் -காரியம் –
ப்ரக்ருதி பிராகிருத பரிணாமம் -ஹேது- காலம் தூண்ட -நடக்கும்
தத் பத்த-புருஷ -மூன்றையும் வசப்படுத்தி வைக்கும் காலம் -காலத்தாலும் வ்யக்த்ததாலும் பந்தம் -சரீரத்தாலும் காலத்தாலும்
முக்த -பகவத் உபாசனை பிரபாவாத் -பாவ பந்தனாத் -கர்மா -முக்தா -நிர்முக்தா விநிர்முக்தா -திரும்பி வராத அளவுக்கு –
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் சங்கல்பம் பின் தொடர்ந்து
சைதன்யம் இல்லாமல் பிரக்ருதியும் வ்யக்தியும் எப்படி -என்றால்
ஞானம் இருந்தால் தடுப்போம் -அவை கேட்க்காதே-லீலா ரசம் -அலகிலா விளையாட்டுடையார் -லீலே-ஏவம் லீலா விபூதி யோகம்
நித்ய விபூதி யோகம் -கூடி இருத்தல் யோகம் -நித்யம் மத்திய மணி நியாயம் –
ஸ்ரீ யபதி ஸ்ரீ வைகுண்டம் -நித்ய கைங்கர்யம் ரசம் -அனுபவ ஜெனீத ப்ரீதி காரித்த அசேஷ சேஷ வ்ருத்தி –
அகாத போகம் அநந்தம் -அனந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் -நிரதிசய ப்ரீதி –
ஸ்ரீ வல்லபன் புருஷோத்தமன் -பர ப்ரஹ்மணி -பக்தி -கடல் ஏற்படுத்த வேண்டும்
ஸ்ரேயஸ்-ஸ்ரீயப்பதியிடம் பக்தி ரேவ -பக்தியை பிரார்த்திதுப் பெற்றால் தானே வைகுந்தம் தரும் – பாரம்யம்-இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
அன்பை உள்ளடக்கிக் கொண்ட உபாசனம் பக்தி -அவிச்சின்ன பூர்ண பகவத் அனுபவ கர்ப்ப சேவா கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
ஸூவ அபிமதம் பிரகாரணார்த்தம்-முதல் ஸ்லோகமே ஸங்க்ரஹம் –
அசேதன சேதன பரமாத்மா பேதங்கள் உண்மை -தத்வத்ரயம் -பாரம்யம் ஸ்ரீ மந் நாராயணனே –
சர்வ சேதன அசேதனங்கள் விபூதியாய் இருக்கும் -சார்ந்தே விட்டுப் பிரியாமல் -உபாசனமே அபவர்க்க ஹேது –
திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்

விருத்த மதம் அநந்தம்
ஆத்ம சித்தி விரித்து இவற்றை நிரசித்து–ஆத்ம பரமாத்மா விஷயங்களில் முரண்பாடுகள் -பரிசோதனம் பண்ணி –
நாநா விப்ரபுத்தி -முமுஷுக்கு தானே இவற்றின் யாதாம்ய ஞானம் வேண்டும் –
தோஷ நிரசனம்-சாஸ்திரமும் உக்திகளையும் கொண்டு -தர்க்கம் -கவி தார்க்கிக–ஸ்ரீ தேசிகர்-
நியாய மீமாம்ச வ்யாக்ரண சாஸ்திரங்களில் அவகாஹித்து தத்வ நிர்ணயம் –
பர அவர ஆத்மா -இரண்டையும் யாதாவாக ஸ்தாபித்து -பர பாஷ ப்ரதிஷேப பூர்வகமாக -நிர்ணயம் சாஷாத் நோக்கம் –
ஆத்மாவை பற்றியே சொல்ல வந்தது -பரமாத்வாவுக்கு சேஷி என்று சொல்ல வேண்டுமே –
தர்ம பூத ஞானம் -ஈஸ்வர -இரண்டையும் அடுத்து அருளிச் செய்து –
ஞானத்தால் அறிந்து அவனையே பற்றி அவன் இடமே கைங்கர்யம்- ஸ்ரேயஸ் அடைய

-285-வருஷம் கழித்து பஞ்சாங்கம் மாறும் –அயனாம்சம் -2160-ராசி மாறும் —
பங்குனி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு ஆகும் -2545-வருஷங்கள் கழித்து

அனுபந்தி சதுஷ்ட்யம் -விஷயம் -ஆத்மாவைப்பற்றி /பிரயோஜனம் -ஆத்ம விஷய யாதாம்யா ஞானம் /
சம்பந்தம் பிரதிபாத்ய பிரதிபாதக / அதிகாரி விஞ்ஞாஸூ இந்த நாலும்
முக்கிய க்ருத்யம் -தர்க்கம் சொல்வது -சாஸ்திரங்களை அனுகூலமான தர்க்கம் -சுருதி நியாயம் இரண்டுக்கும் விருத்தமாக இருப்பதை போக்கி -/
ஸ்தாபனம் -அனுமானம் கொண்டு –
இரண்டாவது ஸ்லோகம்

மேலே கத்யம் –
வேதாந்த வாக்ய கூட்டங்கள் பர அபர ஞானமே -அபவர்க்கத்துக்கு மோக்ஷத்துக்கு சாதனம் –
சர்வ சமயேஷு இத்தை ஒத்துக் கொள்ளப்பட்டது -நின் கண் வேட்க்கை எழுவிக்கவே-
ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாநாம் -மத்வ – அம்ருதத்வம் -அறிந்தவன் மோக்ஷம்
சோகமான சம்சார சாகரம் தாண்ட -ஆத்ம ஞானம் வேண்டும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -நன்கு அறிந்தவன் அவனை அடைகிறான் –
சோகம் சரீரகதம் -வேறே அறிந்தால் சோகம் போகுமே
வேதாந்த வாக்ய கூட்டங்கள் இப்படி சொல்லி இருக்க
சங்கை இருந்தால் தானே யுக்தி -நியாயம் பிரவ்ருத்தம் ஆகும் –
வேற தரிசனங்கள் -அவைதிக தரிசனங்கள் -வேதம் ஒத்துக் கொண்டாலும் ப்ரஹ்மம் ஒத்துக்கொள்ளாதவர் மீமாம்சகர் போல்வார் -அபூர்வம் கல்பித்து –
ஆந்திர அஞ்ஞானம் மலத்தை ஒழித்து -தத்வ ஞானம் சுத்தமாக தெளிவாக கொடுக்க -தர்சனம்
சாங்க்யர் வைசேஷிக -இத்யாதி –
சாருவாக்கர் புத்தர் ஜைனர் மூவரும் அவைதீகர்
மீமாம்ஸகர் -பூர்வ உத்தர -பட்ட பிரபாகர் -வைசேஷிகன் -மூவரும் வைதிகர் –
தேகமே ஆத்மா -கண்டதே கோலம் -சாருவாகர்-முதல் -சாரு வாக் -அழகாகப் பேசுவார் -ப்ரத்யக்ஷமே எல்லாம்
இந்த்ரியங்களே ஆத்மா -மனமே ஆத்மா -பிராணனே ஆத்மா –
போத மாத்திரம் -ஸுகத்தர்கள் -ஜீவாத்மா ஞானமாக தான் ஞாதாவாக இல்லை -ஞானம் உடையவர் இல்லை
ஞாதா பாவம் ஏறிடப்பட்டு-ஞாத்ருத்வம் அத்யர்த்தம் -ஞானம் ஒன்றே உண்மை
அநஹங்காரம்-அஹம் சொல்லுக்கு கோசாரமாக மாட்டார் -இத்தையே சொல்லுகிறது -அஹம் புத்தி சப்த அவிஷயம்
அஹம் -அந்தக்கரணம் இவர்கள் மதம்
ஞானத்தை ஞாதா என்று வாசனையால் சொல்லுகிறார் என்பர்

அடுத்தவர் -அஹம் -ஆத்மா என்பர் -ஆகந்துகம் -வரும் போகும் -பாஷாண கல்பம் மோக்ஷம் –
தேக இந்திரிய மந ஞானம் விலக்ஷணன் -அசாதாரணமான குணாகாரம் -என்பர் -சாஸ்திரம் அறிந்தவர் இவர் –
ஆகாசாத்வதி அசித் தானே பிரகாசிக்காது என்பர் -ஸ்வஸ்மை-ஸ்வயம் பிரகாசிக்கும் இரண்டும் உண்டே நம் சம்ப்ரதாயம்
இவர்கள் ஜடப்பொருள் போலே என்பர் -தார்க்கிகள் இவர்கள் -கணாத-கௌதம மதம் –

சாங்க்யர் -செம்பருத்தி பூ படிக்கல் -இயற்க்கை இல்லாமல் சன்னிதானம் ஏறிட்டு -பிரகிருதி ஆத்மா -வெளுப்பு –
சோக துக்கங்கள் இவர் மேலே ஏறிட்டு -மனஸ் பாலம் – வேறே வேறே ஞானம் வந்தால் இவை வாராது என்பர் –
இதுவே மோக்ஷம் -கபிலர் மதம்
உபாதி சன்னிதானம் உபாதானம் உபாதான விசேஷ ஆபாதக-தன்மை ஏறிடப்பட்டு பாதிக்கப்பட்டும் -செம்பருத்தி பூ ஸ்படிக மணி த்ருஷ்டாந்தம்
பிரகிருதி கார்ய சரீரம் -மனம் அந்தக்கரணம் உபாதி -ஆத்மாவில் ஏறிடப்பட்டு -நிர்பாதம் தோற்றும் -ராக த்வேஷ சோக துக்காதிகள்-
தோற்றம் மறைவு இல்லாத ஸ்வரூப பிரகாசம் -ஸ்வஸ்மை பிரகாசம் ஸ்வயம் பிரகாசம் – இரண்டும் -உண்டே –
மனம் வேலை இழந்த நேரம் இருந்தாலும் தான் அவருக்குத் தோற்றும் -தர்மி ஞானம் தனக்கு பிரகாசம் ஸ்வஸ்மை பிரகாசம்-
ஸ்ரீ வைகுண்டம் -அசித் -இருந்தாலும் ஸ்வயம் பிரகாசம் –

மீமாம்சகர் -ஞான ஆனந்த ஸ்வ பாவம் -வடிவம் -சித்தாந்தி போலே -போத விசேஷம் -ஆஸ்ரய ஆனுகூல்ய ஞானமே ஆனந்தமும் ஸூ கமும் –
பிரதிகூல்ய ஞானம் துக்கம் -பேரிடப்பட்டு உள்ளது –
சம்சாரித்வ ஸூகம் துக்கம் -கர்மா உபாதி

பிரமாணங்கள் -அனுமானம் -சமாதிகம்யம் -தார்க்கிக்கரும் -ஸுத்ராந்திக புத்த பக்ஷம் –
மாத்யத்மீகன்-சர்வம் சூன்யம் -உண்மையான புத்த மதம் -யோகாச்சாரன் அடுத்து -ஞானம் உண்டு –
ஞானத்துக்கு விஷயம் இல்லை -அடுத்து
ஸுத்ராநதிக்க பக்ஷம் -ஞானம் உள்ளது -விஷயமும் உண்டு -அனுமானித்து தெரிந்து கொள்ள வேண்டும் –
அடுத்து வைபாஷிகன் -ஞானம் உள்ளது விஷயம் உண்டு பிரத்யக்ஷம் பிரமாணம்-இப்படி நால்வரும்
தார்கிகர் -நீல பீத-வர்ணம் -ஞானம் -அஹம் விஞ்ஞானம் சாலம்பனம் விஞ்ஞானத்வாத் -நான் என்கிற அறிவுக்கு பற்றுக்கொம்பு –
ஆகவே ஆத்மா இருக்க வேண்டும் -அனுமானித்து
இதம் -இது சொல்ல ஆலம்பனம் வேண்டாமே –
விலக்ஷண ஆத்மா பரமாத்மா அனுமானித்து தெரிந்து கொள்ளலாம் -என்பர்
ஆகமத்தால் -அறியலாம் -வேதத்தால் -சாஸ்திரீய கம்யம் -பூத சங்காதம் ஏற்பட்டாலே பரார்த்தம் -பரன் ஆத்மாவுக்காக –
பட்டார்-தார்க்கிகர் பக்ஷம் -மானஸ ப்ரத்யக்ஷம் -நான் -எனக்கு என்னைப் பற்றி தெரியும் -நான் பிரகாசிக்கிறது எனக்கு –
அஹம் சப்த கோசாரம் அந்த அந்த ஆத்மாவுக்கு -மானஸ ப்ரத்யக்ஷ வேதம் –
பிரபாகர் -பக்ஷம் -குடம் -அறிவது -அயம் கட-இது குடம் -பிரமேயம் குடம் -பிரமாணம் -பிரமாதா இல்லை -மானம் மேயம் தான் ஒளி விடும்
கடம் அஹம் ஜானாமி -அறிகிறேன் -பிரமிதி உண்டே இதில் –
பாட்டர் அஹம் கடம் முதலில் அப்புறம் அஹம் கடம் ஜானாமி இப்படி இரண்டு படிக்கட்டுக்கள் என்பர்

சகல விஷய வித்தி -க்ராஹதயா ஏவ -கிரகிக்கும் இருந்தால் தானே கிரகிக்கப்படும் –
அடுத்து சாங்க்யர் -ஞான ஸ்வரூபம் -பிறப்பு இறப்பு இல்லாமல் ஸ்வயம் ஜோதி
ஸ்வம் பாவம்- சோ பாவ- தன் பாவம் ஸ்வபாவம் -தானே ஒளி -இதர அநதீனம்-
வேதாந்தி -ஆகமம் -அனுமானம் -மானஸ ப்ரத்யக்ஷம் மூன்றுக்கும் இடம் உண்டு
ஆத்மா வார்த்தை வியவகாரம்-நான் கையால் எடுத்தேன்-சங்கை -நான் எடுத்தேன் -நான் வேறே அஹம் வேற –
கீதா படித்து அறிந்து -ஸ்திரப்பட -என்ன அளவு -தெரியாதே -ப்ரத்யக்ஷம் இல்லை -அணு சாஸ்திரம் சொல்ல -நம்பி –
அடுத்து நித்யம் என்று அறிந்து –
தனக்கு தோன்றி -சாஸ்திரம் மூலம் உறுதி -தர்க்கம் யுக்தி மூலம் ஸ்திரப்படுத்தி -மனம் புத்தி ஆத்மாவை –
விளக்கினை விதியினால் காண -ப்ரத்யக் விஷயம் -த்யானம் -யோகஜம் –
வ்யவகாரிகம் ஆகம வேத்யம் யுக்தி யோகஜம் நான்கும் –
ப்ரத்யக்ஷமாக மட்டும் இல்லை -இப்போது இல்லை இங்கே இல்லை -அப்போது அங்கே -அறிந்து செய்ய வேண்டியது
சேஷபூதன் என்று அறிந்த பயன் பகவத் ஏக சரண்யம் -பகவத் ஏக போக்யம் என்று அறிந்து -சரணம்
ச சொன்ன உடன் கூட்டிக் கொண்டு பிரத்யக்ஷம்
சாம்யாபத்தி-அடைந்து -இப்படி ஐந்து நிலைகள் -தோன்றியதை தகவல் உடன் அறிந்து ஸ்திரப்படுத்தி –
ஸ்வ இதர விலக்ஷணன் -விசத-ஆகமம் விசததரம்-அனுமானத்தால் – விசததமம் -உபாசனம் மூலம்
அபரோஷம்-நித்யம் அணு ஞாத்ருத்வம் ஆகமத்தால் -அறிந்து -க்ருஹீதோயம் முக்த –
சங்கை இல்லாமல் நேராக அனுபவம் அங்கே

தார்க்கிகர் ஆத்மா விபு -பரம மஹான் என்பர் -இவரைப் போலே ஸ்வரூபத்தால் வியாப்தி -நையாயிகன்
வேதாந்தி அணு பரிமாணம் -வாலாக்ரா சத பாகம் சததா –வியாப்தி தர்மபூத ஞானம் –
உடம்பில் எல்லா அவயவ வலியும் உணரலாம் -சைதன்ய மாத்திரம் வியாப்தி
ஜைனர் -தேகம் அளவு-சரீர பரிமாணம் -நிர்விகாரத்வம் பாதிக்கும்
சாங்க்யர் மனஸ் அளவு-அந்தகாரணத்தால் அளவுபடுத்துகிறது உபாதியால்

ஞானத்து அளவு வியாபகத்வம் -ஸுவ்பரி -50 -சரீரத்து அளவும் வியாப்தி -ஒரே ஆத்மாதான் -அங்கும் –
யோகத்தால் பல சரீரங்களுக்கும் வியாப்தி -ஸ்வ பாவத்தால் வியாப்தி -தர்ம பூத ஞானத்தால் வியாப்தி
ஸ்வரூபத்தால் வியாப்தி நையாயிகர்
ததா ஷணிக-புத்தன் -க்ஷணிக விஞ்ஞானம் -ஞானம் உண்டு என்றாலும் க்ஷணம் தோறும் மாறும்
சாருவாகர் சரீரத்தில் சூடு இருக்கும்வரை இருக்கும் ஆத்மா -யாவது சரீரத் உஷமா
பிராகிருத பிரளயம்–மொத்தமும் அழிந்து – -ப்ரஹ்மதேவர் ப்ரஹ்ம தத்த-வரை
ஆ மோக்ஷம் -வரை ஆத்மாவுக்கு காலம் ஓவ்டுலோமி-சொல்வார்
கூடஸ்த்தர் -நிர்விகாரம் -கொல்லம்பட்டறை இருப்பது த்ருஷ்டாந்தம் -ஆத்மா நிர்விகாரம் நித்யம் -சித்தாந்தி நையாயிகர்
எல்லா சரீரத்தில் ஒன்றே என்பர் சிலர் -ப்ரீத்தி க்ஷேத்ரம் நாநா பூத சித்தாந்தி -சரீரம் தோறும் உண்டே
ஏக ஜீவ வாதம் -மாயாவாதியில் ஒரு சாரார் –
ச -அணுகாத சமுச்சயம் -இன்னும் பல மதி விகற்ப்புக்கள் உண்டே

இதே போலே பரமாத்மா -சர்வஞ்ஞன் சர்வசக்தன் -ஆதி காரணம் ஒருவனை
சாருவாகர் புத்தர் ஜைனர் -இல்லை -என்பார்
பூர்வ பக்ஷிகளுக்கும் மதிப்பு கொடுத்து அவமதியாமல் கேசித் அந்யா என்று சப்த பிரயோகம்
ஒத்துக்கொள்பவர்களும் –
அத்வைதி ஒரு சாரார் -அஸ்தமனம் இல்லாமல்-வேறுபாடு இல்லாமல் -மிதி -பிரமித்தி மேயம் மானம் மாதா இவற்றுள்ளும்
ஈஸ்வர ஈஸித்வய -மான -பேத விகற்பம் -கற்பனை என்பர் –
ஞான மாத்ர ரசமாக இருப்பர்-ஆகாசாதிகளும் கற்பனை -அவனும் கற்பனை -அநாதி அவித்யா -உபாதியால் -தோற்றப்பட்ட
உப தர்சித-வியாதி பேதம் -ஆகாசாதிகள் வேறுபாடு போலே -ஞான ஐஸ்வர்யாதி மஹிமை விகல்பயாதி –
ஆத்மா என்பதை உண்மை -ஆத்மா ஜீவாத்மா என்றால் பரமாத்மா சொல்ல வேண்டி இருக்குமே
இரண்டும் ஏறிடப்படுகிறது-என்பர் –
முத்துச்சிப்பி வெள்ளி பிரமித்து போலே -அவித்யையின் ஆதிக்யத்தால் -ஈசன் ஈஸித்வய
ஏதோக்த ஸ்வரூபம் -அவித்யா -மூலம் காம க்ரோதம் தோன்ற ஜீவன் -செல்லப்படுகிறார் -மாயை தொடர்பால் பரன் –
தத் குணசாரதயா-ப்ரஹ்மாதி ஸ்தாவரம் -வேறுபாடு இல்லாத ஒன்றுக்கு -ப்ரகல்பிதம் விவித ஜீவ பேதம்-
ஸ்வா தீந விவித விசித்திர -விவர்த்த ஸ்வபாவம் மாயையால் -பரன்
ஹிரண்யகர்ப்ப ப்ரவர்த்தகன் யோகமதம்-மரபு அணுக்கள் கூட்டம் -அறிவின் பேதம் –
மரம் ஜங்கமம்-மகரந்த சேர்க்கை குரங்கு சிங்கம் யானை மனுஷ்யன் பிரம்மன் -விஞ்ஞானிகள் கொள்கை
ப்ரக்ருதி பிராகிருதம் -அசேதன அம்சமே அறிவு -என்பர் -தனித்து மனம் ஒத்துக்க கொள்ள மாட்டார்கள்
பிராகிருத ப்ரக்ருஷ்ட சத்வம் -அதிகமான சத்வம் உள்ள பகுதி ஆத்மா என்பர் -உபாதான நிமித்த ஸ்வ தந்த்ர பிரகிருதி என்பர்
நாம் ஸ்வ தந்த்ர ஈஸ்வரன் பிரகிருதி கொண்டு
பரிணாம விஷய மாத்திரமே ஈஸ்வரன் என்று பெயர் என்பர் -ஸ்வ தந்த்ர இல்லையானால் ஆட்டிப் படைக்க பரமாத்மா இருக்க வேண்டுமே –
நித்ய உத்ரிக்த்த சத்வ பகுதி -ப்ரக்ருஷ்ட சத்வ -அதனால் சம்பாதிக்கப்பட்ட ஈஸ்வர பெயர் -என்பர் –

நியாய வைசேஷியர் –
சாங்க்ய யோக கபிலர் ஹிரண்யகர்ப்பர்
பூர்வ உத்தர மீமாம்சை
ஸ்வ தந்த்ர பிரகிருதி -பிரதானம் -சத்வ குணம் உயர்ந்த பகுதி ஆத்மாவாகி -என்பர் ஆத்மா பேரில் ஏறிட படுகிறான்
ஈஸ்வரன் உள்ளார் இல்லார் -ஆத்மாவை தவிர்ந்த இல்லையா -அஞ்ஞானம் -உபாதி -பல வாதங்கள்
பரிணாம வாதி -யாதவ பிரகாசர் பக்ஷம் -கடல் -நுரை -நீர் குமிழி அலைகள் -பேதங்கள் -எதனுடன் சேராமல் –
கடலில் வேறுபட்டவை இல்லை -பரிணாமம் போலே ஆத்மாவே பரிணாமம் -ஜடம் ஜீவ ஈஸ்வர ரூபமாய் -ஆகும் என்பர்
ஞானம் உள்ள ஆத்மா -கடல் -நுரையா அலையா நீர் குமிழியா நீரா -பிரித்து பார்க்க முடியாதது போலே –
பரிணாம வாதம் யாதவ பிரகாசர் வாதம் -ஜடம் ஆத்மா பரமாத்மா மூன்றும் உண்டு என்பவர் இடரும்

அடுத்து -அ பரிணாம வாதி
பிரதி பிம்பம் -வாதிகள் -ஆத்மாவே உள்ளது -மாயையால் பிரதிபலிக்கிறது -ஈஸ்வரன் என்று தோற்றி –
அந்தக்கரணத்தில் பிரதிபலித்து ஆத்மா -ஆத்மா உள்ளது -பரமாத்மா ஜீவாத்மா பேதம் இல்லை என்பர் –
இரண்டு பிரதிபம்பங்களே இவை
ஸூ மாயா -விசித்திர அந்தக்கரணம் -இரண்டிலும் பிரதிபலித்து
விசித்திரம் -வேறே வேரேகா காட்டும் -ஒரு சமயம் அனுகூலமாகவும் ஒரு சமயம் பிரதிகூலமாயும் இருக்குமே
ஆகவே விசித்திரம் என்கிறார் –

சித்தாந்தி -அன்யே து -இதற்கும் இந்த சப்தம் -ஸ்வ ஆதீன த்ரிவித-சேதன –
பத்த முக்த நித்ய -மூன்றும் -அசேதன -சுத்த சத்வ மிஸ்ர தத்வ காலம் -அபிமானி தேவதைகளுக்கு
குண சம்சர்கம் உண்டு என்பதால் நல்ல காலம் இத்யாதி
ஞாத்ருத்வம் இல்லாமையான நித்ய விபூதி பிரகிருதி காலம் மூன்றும் அசேதன த்ரயம்
ஞாத்துருத்வம் உள்ள பத்த முக்த நித்ய மூன்றும் சேதன த்ரயம்
ஞானம் உடைமையால் வேறுபாடு -ஞான ஸ்வரூபத்தால் வேறு பாடு இல்லை
புஸ்தகம் -ஞானமும் ஞானம் உடைமையும் இல்லை
நித்ய விபூதி -ஞான மாத்திரம் ஞானம் உடைமை இல்லை
ஆத்மா ஞானமும் ஞானம் உடைமையும் உண்டே
இவற்றின் ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஈஸ்வர அதீனம்
ஸ்வா பாவிக-இயற்கையான -நிரவதிக எல்லை அற்ற -அதிசய மேன்மை -ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் –
சகல கல்யாண குண ஆர்ணவம் -புருஷ விசேஷம் -சர்வேஸ்வரன் -இத்தகையவர் என்று சொல்லி –

ஸ்வரூப ஸ்வாபாவ சங்கைகளை கீழே பார்த்தோம் -இனி யார் -மத பேதங்கள்
ஹரி ஹர விரிஞ்சு பாஸ்கராதி -தத் தத் மூர்த்தி பரித்யாக -த்ரி மூர்த்தி வாதிகளும் உண்டு -த்ரய தேவா துல்யா-
மூர்த்தி விசேஷ விஷயம் -திருமேனி -பற்றியும் வாதங்கள் –
நித்யத்வ -அநித்ய -ரூபம் -இங்கு -ஸ்வரூபம் ஏற்றுக் கொண்டாலும் -பாதிக்கத்தவ பஞ்ச பூதங்களால் என்றும்
பிராகிருத அப்ராக்ருத -ஸ்வாரத்த பரார்த்தம் என்றும் -பக்தானாம் ப்ரகாஸதே-இப்படி விசாரங்கள்

பரிஜன பத்னிகள்-விசாரம் -ஸ்தான விசேஷ விசாரம் -இப்படி பலவும் உண்டே

பிரமாணம் -வேதம் மட்டுமே -/ ஆகம -அனுமானம் இரண்டையும் என்பாரும் உண்ட –
வேதம் கொண்டு அறிந்து அனுமானம் கொண்டு உறுதிப்படுத்தி த்யானம் -மானஸ சாஷாத்காரம்-
பிரேம பூர்வக -விசிஷ்ட ப்ரத்யக்ஷ சமானா காரம் –
ஆத்மா பரமாத்மா சம்பந்தத்திலும் பல வாதங்கள்
அநாதி அவித்யா உபாதியால் பேதமாக தோற்றம் -சங்கரர் -ஈசன் ஈஸித்வய தொடர்பு -கயிறு பாம்பு –
ஜீவாத்மாவாகவும் பரமாத்மாவும் மாற்றி தோற்றும் தன்மை -அவித்யை -பேதத்துக்கு இடம் கொடுக்கும் –
அபேதம் உண்மை -ஏக தத்துவமே பரமார்த்தம் –
பரமார்த்தம் -ஜகாத் பத்தி இரண்டையும் நாம் சொல்வதால் -ஒருவனே ஜகாத்தும் உண்மை –
சரீரமாக உண்மை -பிரகாரமாக உண்மை –
ஒருவன் -நிகர் அற்றவன் -ஏக சப்தம் -நம் சம்ப்ரதாயம் -..

இரண்டு தத்வ வாதிகள் –
நான் பிம்பம் இரண்டும் தெரியும் -தத்வம் ஓன்று -இரண்டாவது இல்லை – –
வ்யதிரேகம் உண்டு -பிரதிபிம்பம் இருப்பதால் –நேராகவும் சேவித்து கண்ணாடி சேவையும் சேவிக்கிறோமே –
ப்ரதிபிம்ப வாதிகள் -இரண்டு என்று சொல்ல இடம் கொடுக்கிறதே –

பாஸ்கர பக்ஷம் -ஸ்வஸ்தி ஐக்கியம் -உபாதியால் பேதம் பேத அபேத வாதம் -இயற்க்கை அபேதம் –
உபாதியால் பேதம் -ஸ்வரூபத்தால் அபேதம் என்றவாறு

நாநாதவம் யாதவ பிரகாசர்-வேறே வேறே தத்வங்கள் -அபேதமும் உண்டு -வேறு படாமையும் உண்டு –
அம்சம் அம்சி பாவம் -உடல் -கை கால் பல உண்டே -அதே போலே –
சித்தாந்தி -பரதந்த்ரா லக்ஷணை-நாநா சம்பந்த -ஜீவ பர சம்பந்தம் -பிதா -சேஷி -ஸ்வாமி -சேவக சேவகி இத்யாதி நவவித சம்பந்தம்
அப்ருதக் சித்த விசேஷணம் -சமவாயம் -வைசேஷிகர் சொல்வது இல்லை –
பரகத அதிசய ஆதேயன இச்சையா -சேஷத்வ லக்ஷணம்

ப்ராப்தியிலும் வாதங்கள் உண்டே -மரணம் -இயற்க்கை எய்தினார் பாஞ்ச பவ்திகம் -பரமபதித்தார் -ஸ்தானம் –
இறைவன் அடி சேர்ந்தார் -கைங்கர்ய -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -ஆசார்யர் திருவடி அத்ரபரத்ர
சாருவாகர் -சர்வ சூன்யம் -ஆத்ம ஸ்வரூப அழிந்து மோக்ஷம் –
அவித்யா அஸ்மயத்தி லக்ஷணம் யோகாசாரம் அத்வைதிகள் -ஐக்கியம் –
நியாய வைசேஷகர் -ஞானம் ப்ரதயத்னம் போன்ற குணங்கள் போனால் மோக்ஷம்
சாங்க்யம் கைவல்யம் மோக்ஷம் –
சத் பாவ ப்ரஹ்ம பாவ சா தர்ம லக்ஷணம்-அத்வைதிகள் -ஒரு சிறு பகுதி நமக்கு அஷ்ட குண சாதரம்யம்
சாந்தி தேஜஸ் இவனுக்கும் வருமே
முகில் வண்ணனுக்கு நிழல் – பாட வல்லார்-சாயை போலே அணுக்கர்களே -இது வேறே
மீமாம்சகர் -ஸ்வரூப ஆவிர்பாவம் -நம் போலே -ஸ்வேந ரூபேண -இவர்கள் ஈஸ்வரனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
ஸ்வரூப ஆவிர்பாவமே மோக்ஷம்
சத் குண அனுபவ ஜனித–நிரதிசய ஸூக சம் உன்மேஷ -தூண்டப்பட்ட ஏகாந்திக ஆத்யந்திக-ப்ரஹ்மமே விஷயம்
இடைவிடாமல் -அவிச்சின்னத்வம் – -கிங்கரத்வ லக்ஷணம் -மோக்ஷம் -மேலைத்தொண்டு உகந்து –

சாதனம் -இதிலும் பல வகை
கர்ம யோகம் -ஞான யோகம் லப்யத -அன்யதர அநுக்ரஹீத அன்யதர -அங்கம் அங்கி மாறுபடும் -தரம் இரண்டில் ஓன்று –
கர்ம ஞான யோகங்களில் ஓன்று அங்கி ஓன்று அங்கம்
உபய லப்யம் -ஞான கர்ம சமுச்சயம் -அவித்யா வித்யாஞ்ச -அவித்யா ம்ருத்யம் -கர்மத்தால் சம்சாரம் தாண்டி வித்யையால் மோக்ஷம்
பக்தி யோகமே -ஞான கர்ம அங்கங்கள் -உபய பரிகர்மித்த ஸ்வாந்தம் மனஸ் -சம்ஸ்காரம் இவற்றால் –

பக்ஷங்களில் பலாபலன்கள் அறியாமல் சங்கை -குழம்பி இருக்க –
யாவது- ஆத்மா பரமாத்மா ஸ்வரூபம் சம்பந்தம் பிராப்தி சாதனம் -நிர்ணயத்துக்கு பிரமாணம் கொண்டு –
இவற்றைத் தெளிவு படுத்தவே இந்த பிரபந்தம் –

ப்ரஹ்ம மீமாம்ஸா இவற்றை விளக்க வந்தவை -இந்த கிரந்தம் மூலம் இவற்றை விளக்கி பரியாப்தி பிறவாமல்
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய மநோ ரதித்து பின்பு ஸ்ரீ பாஷ்யகாரர் அத்தை நிறைவேற்றி அருளினார்

பகவத் பாதராயணர் -ப்ரஹ்ம சூத்ர காரர்
விவரணம் -வாக்ய காரர் த்ரவிடாச்சார்யார் -விருத்தி காரர்
போதாயனர் குறிப்பு உரை
பரிமித கம்பீர பாஷாணம் –
ஸ்ரீ வத் சாங்க மிஸ்ரர் -இன்னும் விரித்து -இவர் கூரத்தாழ்வான் இல்லை
பார்த்திரு ப்ரபஞ்சர் -பார்த்திரு மிஸ்ர சங்கரர் போன்றவர் எழுதி -ஸ்புடமாகவும் அஸ்புடமாகவும்
தெளிந்து தெளிவு இல்லாமலும் -அந்யதா ப்ரதிபாதகமாய் -மதாந்தரம்-
பிரகரண கிரந்தம் -இது -ஆத்ம சித்தி -யதாவத்தாக காட்டி அருள -ப்ரதிஜ்ஜை –
ப்ரஹ்ம சூத்ரத்துக்கு -ஒரு பகுதி சாரம் பிரகரண கிரந்தம்-என்றபடி

ஸாஸ்த்ர ஏக தேச அர்த்தம் –ஒரு பகுதி மட்டுமே -ப்ரதிபாதனம் -சாஸ்த்ரார்த்த முழுவதும் அரிய உபயோகப்படும் –
பிரதமம் -ஆத்ம தத்வம் இப்படிப்பட்டது -என்று -சித்தாந்தம் -வேதாந்த தாத்பர்யம்
ஸ்வரூபம் –1-தேக இந்திரிய மன பிராணன் தீ -புத்தி -ஐந்தையும் விட அந்நிய
புத்தி ஞானம் -விஷய பிரகாசனம் -தர்ம பூத ஞானம் வேறே தர்மி வேறே -ஆத்மாவே ஞானம் -ஞான ஸ்வரூபம்
2-அநந்ய சாதனா —ஸ்வயம் பிரகாசம் -3-உத்பத்தி விநாசம் இல்லாதது -4-வியாபி -தேகங்கள் தோறும் புகுர சக்தி உண்டே –
அணு மாத்ரம் -அவன் சர்வ வியாபகம் –
5-பிரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னம்-வேறே வேறே -6-ஸ்வ தஸ் ஸூகி –எப்போதும் அனுகூல புத்தி இயற்க்கை –
ஸ்வா பாவிக ஆனந்தத்வம் –துக்கித்தவம் உபாதி அடியாகவே
கர்மத்தால் ஜென்மத்தால் முக்குண சேர்க்கையால் துக்கம் -இப்படி ஆறு பெருமைகள்

நான் என்கிற உணர்வுக்கு உடலே விஷயம் என்பர் -அதிகரணம் ஸ்தானம் இருப்பிடம் -ஸமான -அதிகரணம்
நான் என்றால் அறிவாளி அன்றோ உடம்பில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்ந்து நாக்கு சிவப்பு ஆகும்- அவயவ சேர்க்கையால் வந்த ஞானம்
அது போனால் முக்தி என்பர் –
உபசார வார்த்தை -போரில் புலி -புலி போன்ற வீரம் மட்டும் அந்வயம் -சாஷாத் –
நாம் அஹம் தேக விஷயத்தில் உபசாரம் -ஆத்மாவில் பர்யவாசிக்கும் சொல்ல
சாஷாத்தாகவே சொல்லலாம் முக்கிய வ்ருத்தி முடியாவிட்டால் தானே பர்யவசான வ்ருத்தி என்பர் -ப்ரத்யக்ஷமாக தேகம் குறிக்கும்
நான் -தேக அவயவங்களை குறிக்க வில்லையே -நான் பேசுகிறேன் -ஏக தேசம் தானே –
கிரியைக்கு உள்ள அவயவத்தையே தானே குறிக்கும்-அவயவி யான தேகத்தை குறிக்காதே -என்று ஆக்ஷேபிக்க –
உடலைப் பற்றிய அறிவு அம்சங்களைப் பற்றி இருக்க வேண்டாமே -நான் அறிகிறேன் மனசால் தானே என்னும் போது
அவயவங்களை கிரஹிக்க வேண்டாமே என்பான் -இந்திரியங்களுக்கு புலப்படாத பரம அணுக்கள் சேர்ந்து –
சேர்ந்த பின்பு -அவயவி பிரத்யஷிக்கிறோம்-
வாயு ஸ்பரிசத்தால் -வந்ததை அறிகிறோம் -ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
நான் ஆத்மாவை குறிப்பதாக சொன்னால் ததீய குணங்களை க்ரஹிப்பது இல்லையே
ரூபம் கந்தம் ரசம் விசேஷ குணம் –காரணங்கள் சேர்ந்து கார்யம் -காரண பூர்வகமாக இருக்கும் நியாயம்
ஞானம் சரீரத்துக்கு விசேஷ குணம் என்பர் -காரணத்தில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க -அனுமானத்தை ப்ரத்யக்ஷம் வெல்லும் என்பர் –
பரம அணு தோறும் ஞானம் உண்டு என்பார் ஆகில் சரீரத்தில் பல சேதனர்கள் உண்டாக வேணுமே -என்றும் ஆக்ஷேபிக்க -ப்ரத்யக்ஷ பாதிதம்-
விருப்பம் -தேகம் பண்பு -இந்திரியங்களுக்கு உண்டு -அசைதன்யம் கடாதிகள்-இவற்றுக்கு இல்லையே –
புடவை வேறே உடம்பு வேற -இடுப்பு உறுத்த வேறே நூல் புடவை உடுத்தி கொள்கிறோம் –
அத்யந்த வ்யாவர்த்தம் சரீரத்துக்கு சைத்தன்யம் பொருந்தும் என்பர்
தேகத்துக்கு ஞானம் அழகாக பொருந்தும் -என்பர் –
தேகம் ஏவ ஆத்மா -ப்ரத்யக்ஷமாக தெரிகிறதே -சாருவாக வாதம் -நான் அறிகிறேன் -அஹம் ஜானாமி -எத்தை அறிகிறீர் –
பருத்தவன் என்று -உயரம் சிகப்பு எங்கே இருக்கு -கண்ணுக்கு உடம்பு தானே படுகிறது -தேகத்தின் பண்புகள் –
ஆகவே நான் சொல்வது சரீரத்தை குறிக்கும் என்பர்
அஹம் சப்த கோசாரம் ஆத்மா வேதாந்தம் -அஹங்கார கோசாரம் தேகம் -ஸ்தூலோஹம் இதி தர்சநாத் –
வேறே சொல்வீர்கள் ஆகில் பிரத்யக்ஷ விரோதம் என்பர்
சேர்க்கை விசேஷத்தால் தேகத்தில் சைதன்யம் தோன்றும் -வெத்தலை பாக்கு -சிகப்பு உதாரணம்
சம்யோகம் -மட்டும் இல்லை -வாயில் மெல்லுதல் – உஷ்ணம் வர சிகப்பாக என்று ஆக்ஷேபிக்க –

துணி சித்ரம் வர்ணம் -த்ருஷ்டாந்தம் -நூலில் இல்லாத ஹம்சம் சித்திரத்தில் பார்க்கிறோம் –
மயில் கண் நூலில் இல்லா விட்டாலும் பார்க்கிறோம் –
ஆகவே காரண பூர்வகம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை -விசேஷ குணம் சேர்க்கையில் பார்க்கிறோம் –
அதே போலே தேகத்துக்கு ஞானம் இருக்கலாம் என்பர் –
விசேஷ குண காடின்யம் -பனிக்கட்டியில் -ஜல பிந்துவில் இல்லையே -காரண பூர்வகம் இல்லையே –
அடர்த்தியாக சேர்ந்ததால் வந்த தண்மை -சம்யோக விசேஷம் என்று சொல்ல
அறிவுக்கு இலக்காக உள்ள தேகம் அறிவுக்கு இருப்பிடமாக எப்படி -தேகம் அறிகிறது -தேகத்தை அறிகிறோம் -விரோதி வருமே என்றால்
கர்மாவாகவும் கர்த்தாவாகவும் –
ஆத்மா பக்ஷத்தில் இதே ஆஷேபம் வருமே என்பர்
ஞாத்ருத்வம் -மனம் கர்த்தா -தர்மி ஞானம் நான் -தன்னை உணர்ந்து –
பிருத்வி வாயு தேஜஸ் நீர் -ஆகாசம் இல்லா நான்கும் சேர்ந்து ஞானம் வரும் -கள்ளுக்கு மயக்கம் –
அதன் காரண பொருள்களில் இல்லையே -என்பர் சாருவாகர்
தேகம் விழுந்தால் மோக்ஷம் -தனித்து இல்லை

நான்கு -ஆகாசம் தவிர -மற்ற கூட்டரவே சரீரம் -சைதன்யம் ஞானம் வரலாம்–பிருத்வி அப்பு தேஜஸ் வாயு –
இவற்றில் ஞானம் இல்லா விட்டாலும் –
பனை கள்ளில் மயக்கும் சக்தி இருப்பது போலே -பூர்வ பக்ஷம் -சாருவாக லோகாயுத மதம்

மேலே சித்தாந்தம்
பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு விரோதம் –
அஹம் இதன்காரவ் -நான் இது சொல்லுகிறோம் -தேகம் ஆத்மா அல்லவே -அஹம் வேறே இதம் வேறே –
ஒரு பொருளில் இரண்டுக்கும் இருக்காதே -நான் உயரமானவர் -அஹம் தத்வம் வேறே இதம் வேறே அன்றோ
பிரத்யக் அர்த்தம் அஹம் -பராக் அர்த்தம் இதம் அன்றோ
என்னுடைய கை சொல்கிறோம்
இதம் -என்னும் சொல்லால் கிரஹிப்பத்து கை வீடு போலே -சரீரத்தை ஆத்மா இடம் பிரித்தே அறிய வேண்டும் –
ஸ்வ ஆத்ம கோஸரா -தானாகிய ஆத்மாவை பொருளாகக் கொண்டது அஹம் சொல்
ஸ்வ அந்யா கோசரத்வம் இதம் –
ஒரே விஷயத்தில் அஹம் இதம் இரண்டும் பொருந்தாதே –
இதம் சரீரம் கௌந்தேய -கிருஷ்ணன் மட்டும் இல்லை -நாமும் இதே பிரயோகம் செய்கிறோம்
இத்தை மேலும் விளக்குகிறார் –

நான் அறிகிறேன் -அஹம் ஞானாமி -ஞானத்துக்கு ஆஸ்ரயம் –
இது குடம் என்னும் அறிவுக்கு இருப்பிடம் ஆத்மா -விஷயம் குடம் –
ஞானத்துக்கு ஆஸ்ரயம் வேறே விஷயம் வேறே -ஆத்மா சரீரம் வேறே தானே இதே போலே
ப்ரத்யக் விருத்தி தன்னைப்பற்றிய அறிவு -இதங்கார கோசாரம் சரீரம் –பராக் —
அகங்கார கோசாரம் ஆத்மா -நிஷ்க்ருஷ்டமேவ -பிரித்தே அறிய வேண்டும்
சேமுஷி -ஞானம் -அறிவு வேறே அறிபவன் வேறே –

ஒரே விஷயத்தில் தன்மை மாறினால் -பிதாவே புத்திரனாக –அகார பேதம் ரூப பேதம் போலே
அஹம் இதம் ஒரே வ்யக்தியிலே -சொன்னால் என்ன என்றால் இது ப்ரத்யக்ஷ விரோதம் ஆகுமே –
சாருவாகன் இடம் வாதம் ஸாஸ்த்ரம் கொண்டு சொல்லமுடியாதே -அவன் அத்தை ஒத்து கொள்வது இல்லையே –
ப்ரத்யக்ஷம் கொண்டே சாதிக்கிறார்
தேவதத்தன் -தண்டம் -அஹம் தண்டி -தண்டம் பிடித்து கொண்டு இருப்பவன் -நான் கோலைக் கொண்டவர்

மனசைக் கொண்டே ஆத்மாவை அறிகிறோம் -கண்களுக்கு விஷயம் இல்லை –
நியமித பஹிர் இந்திரிய வ்ருத்தி -வெளிப்புலன்களையும் அடக்கி மனசையும் அடக்கி –
ஆத்மாவை அறியும் பொழுதே -உடம்பு தெரியாதே -அவயவ கிரஹணம் இல்லையே -ஸ்தூலமாக இருந்தாலும் –
நீ சொல்வது போலே ஒன்றாக இருந்தால் இது தெரியுமே

இதுக்கு ஆஷேபம் -நையாயிகர் பரம அணு -த்வய அணு–இப்படி மூன்று -த்ரய அணுகம் -இத்தையே ஜகத் காரணம் என்பர் –
த்ரய அணுகம் கிரஹிக்கிறோம் -அவயவம் த்வ அணுகமோ பரம அணுவோ கண்ணில் படவில்லையே –
அசேதனங்களுக்குள் சின்னதாக த்ரய அணுகம்
ஜன்னலை திறக்க -சூர்ய கிரணங்கள் -மூலம் கண்ணுக்கு தெரியும் த்ரய அணுகம் -ப்ரத்யக்ஷ யோக்ய அவயவம் -இதுவே

வெளி இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படும் அவயவி -அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹிக்கப் படும்
மனசால் நான் என்னும் சரீரத்தை அறியும் பொழுது அவயவங்கள் உடன் அறிய வேண்டும் -என்பர் பூர்வ பஷி
வ்யாப்தியை குறைக்க பிரமாணம் இல்லையே –
மனசால் கிரஹிக்கப்படும் வஸ்து வெளிப்புலன்களால் கிரஹிக்கப்படும் வஸ்து இரண்டும் இருக்க வேண்டுமே –
மனசுக்கு வெளி இந்திரியங்கள் உதவியால் மட்டுமே கிரகிக்க முடியும் -எல்லாமே அது தான் –
விசேஷணம் வேண்டாமே -நீ சொல்வதும் அங்கே போய் முடியுமே –
ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு -ஸ்பர்சத்தால் மட்டுமே அறிகிறோம் -வாயுவுக்கு அவயம் இல்லையே –
கடம் படம் -இவற்றில் அவயவங்கள் உண்டே

ஸ்தூலோஹம் -நான் பருத்தவன்–சரீரத்தின் குணத்தை ஆத்மாவிடம் சொல்லுகிறோம் –
ஸ்தூலமான சரீரத்தை ஏற்றுக் கொண்ட நான் என்று சொல்ல வில்லையே
இப்படி சொல்லும் பொழுதும் சரீரத்துக்குள்ளே அஹம் ஆகாரம் -வஸ்து தானே அஹம் கோசாரம் –
தேகத்தை அஹம் என்ற சொல் சொல்லாதே –
ஸ்தூலம் பால்யம் இவை ஆத்மா பர்யந்தம் பர்யவசிக்கும் -எனவே தேகமும் ஆத்மாவும் ஓன்று என்பார்
ஓன்று இல்லை -இரண்டு தத்துவங்களே அப்ருதக் சித்தம் என்பதால் –விட்டுப்பிரியாமல் -பர்யவசான வ்ருத்தி -அன்றோ இது –
உபசாரத்துக்காகவா முக்கியமாகவா –அதுக்குள்ளும் பரமாத்மா -இது தனி விசாரம் –

மமேதம் க்ருஹம் -பேத ப்ரதிபாதம் உண்டே -வ்யவஹாரத்திலும் காணப்படுகிறதே
என்னுடைய ஆத்மா சொல்லக்கூடாதே -சொன்னால் -நானாகிய ஆத்மா என்பதையே சொல்கிறோம் –
நடு மதியத்தில் இருக்கிறோம் சொல்வது போலே -அப்ரதானம் -உபசார வார்த்தை என்றபடி
என்னுடைய தேகம் -வ்யவஹாரம் -நானே தேகம் சாருவாகர் பக்ஷம் -உபசாரமாக சொல்வதாக கொண்டால் என்ன என்று ஆஷேபம் –
ப்ரத்யக்ஷ விரோதி ஆகுமே சிலா புத்ரேக சரீரம் அதாவது -பொம்மையின் சரீரம் –சொல்லும் பொழுது
பொம்மை ஒரு வஸ்து சரீரம் வஸ்து இரண்டு இல்லையே -இதம் அர்த்தமே பொம்மையும் சரிரமும்
மம அயம் ஆத்மா -என்னுடைய இந்த ஆத்மா –உபசார வார்த்தை -உபய பஷத்திலும் உபசார பிரயோக சம்மதம்
என்னுடைய ஆத்மா -அஹம் சப்தம் என் -மம -வந்த பின்பு மீண்டும் ஆத்மா -உபசார
என்னுடைய தேகம் -என் -என்றால் தேகம் -அஹம் சப்த கோசாரம் தேகம் ஆகுமே –
நீ இதம் சப்தம் தானே தேகம் என்றாய் -இது வரை -ஆகவே நீ உபசாரமாகக் கொள்ள முடியாதே -என்று சமாதானம் –
நான் உயரமானவர் -தேகம் உயரம் -லக்ஷணையால் தேகத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மாவையே நான் குறிக்கும் என்றவாறு

இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது அவி விவேகிகள் -ஒன்றாக பார்ப்பது -எதற்க்காக என்றால் –
அபேத பிரமம் -பிராந்தி -வேறுபாட்டை கிரஹிக்க முடியாமல் –
பாஹ்ய விஷயம் -பரஸ்பர வ்ருத்தம் ரூபம் -பரிமாணம் -சங்க்யா எண்ணிக்கை-சந்நிவேசம் ஆகாரம் –
வேறுபாடு -கிரஹிக்கிறோம் -வ்யதிரேகம் புற விஷயங்களில்
ஆனால் ஆத்மாவில் -ஆத்மாக்களுக்குள் வாசி இல்லை –
சாத்ருசம்-வெள்ளி முத்துச் சிப்பி -பாம்பு கயிறு -பிரமிக்க சில ஒற்றுமைகள் இருக்க வேண்டுமே
ஆத்மா -தேகம் இரண்டுக்கும் பொது தன்மைகள் ஒன்றுமே இல்லையே –
இரண்டும் வேறே வேறே இல்லை வஸ்து ஒன்றே என்பான் பூர்வ பஷி
இதுக்கு சமாதானம்

இச்சைக்கு தகுந்த வியாபாரம் -நான் அங்கே போக நினைக்க -தேகம் -முயன்று -இச்சா சங்கல்பம் —
இரண்டும் ஆத்மா இடம் -பிரயத்தனம் -தேகத்திடம் –
இச்சா அனுவியாதி-அதன் வழி செல்லும் தொடர்பு உண்டே -பொதுத்தன்மை -சாத்ருசம் உண்டே –
இதுவே அபேத பிரமத்துக்கு காரணம் –

பிரனீஹித மனஸ்- யோகிகள் வாசியை நன்றாக அறிகிறார்கள் -அஹம் -அவயவம் இல்லாததாக -ஆத்மாவையையும்
இதம் -அவயவம் கூடி -ஸ்தூலம் தேகம் -வேறு பட்டதாக ப்ரத்யக்ஷத்தாலே காண்கிறார்கள் –

அனுமானம் -மேல் -நான் அறிகிறேன் -அறிவுக்கு -உடம்புக்கு இல்லை -வேறு பட்ட ஒன்றுக்கே -விஷயம்
அப்ரகாசமான தத் அவயவ ப்ரதிபாத்யத்வாத் –
எந்த அறிவு சரீரத்தை கிரஹிக்கறதோ அது அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹித்து அறியும்
நான் அறிகிறேன் -வேறு பட்ட ஆத்மாவை இலக்காக கொண்டதே ஆகும் –
அறிவுக்கு அவயவங்கள் பிரகாசிக்காதே –
யாது ஒரு அறிவு சரீரத்தின் அவயவங்களை இலக்காகாமல் உருவாகிறது அது ஆத்மாவுக்கே -இது முதல் அனுமானம்

சரீரம் அஹம் -என்பதுக்கு இலக்காகாது -இது என்று கிரஹிக்கிறபடியால் -இது கடம் -இது சரீரம் –
அஹம் சொல்லுக்கு பொருளை ஆகாதே -இரண்டாவது அனுமானம்

மூன்றாவது அனுமானம் -பாஹ்ய இந்திரியங்களுக்கு புலப்பட்டால் -சரீரம் -அவயவங்கள் உடன் கூடி இருப்பதால்
சப்தத்துக்கு சப்த ஸ்வரம் -இத்யாதிகள் உண்டே –
கடம் முதலானவை கண்ணால் கிரஹிக்கிறோம் -அவயவம் அற்ற ஆத்மா -கண்ணால் கிரஹிக்கப்படாதது –

எம்மா வீட்டில் எம்மா வீடு –
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
தேஹே கதம் ஆத்ம -பரார்த்தம் தேஹே

அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்–பிறருக்காக இருப்பதே இல்லை -ஸ்வ தந்த்ரன் -தனக்காகவே இருக்கும் -எல்லா பொருள்களும்
சரீரம் பிறருக்காகவே இருக்கும் -ஆத்மா மொத்தம் தனக்காகவே இருக்கும் –
அவயவங்கள் உடன் கூடி இருந்தால் பிறருக்காக இருக்கும்

ஸர்வஸ்ய பாஹ்ய ஆத்யந்த்ர போக்யம்-சப்த ஸூக -இரண்டும் ஆத்மாவின் பொருட்டே –
ஆத்மா அநன்யார்த்தம் -ஸர்வஸ்ய சேஷி -தனக்காகவே –
சரீரம் பிறர்க்காகவே ஏன் என்றால் கூட்டரவாக இருப்பதால் –
படுக்கை -ரத்தம் -நாற்காலி -அவயவங்கள் உடன் -பிறர்க்காகவே -பிறர் யார் -ஆத்மா
அவன் சரீரம் தானே ரதத்தில் -இருக்குமே -பிறர் சரீரமாக அவயவத்துடன் இருந்தாலும் என்பான் பூர்வ பஷி –
யாது ஓன்று மற்ற ஒன்றை தன் உபயோகத்துக்காக கொள்ளுமோ அதுவும் சேர்த்தி பொருள்
ஆத்மா சேர்த்தி பொருளை உபயோகமாக கொள்ளுவதால் அதுவும் சேர்த்தி பொருள் -அவயவங்கள் உடன் கூடியது என்பான் பூர்வ பஷி
அப்பொழுது ஆத்மாவும் பிறருக்காக இருக்கும் -பிரத்யக்ஷ விரோதம் பிறக்கும்
இது அறிந்து தானே சேஷி -அஹம் போகி- நானே எல்லாம் யானே என் தனதே என்று இருக்குமே —
ஆழ்வார் அத்தை சொன்னது பூர்வ பக்ஷம்
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
ஆத்மாநாம் அந்யத்-மேலே ஈஸ்வர சித்தியில் விளக்கம் கிட்டும் –

ஆத்மா கார்ய பொருளே இல்லையே -உருவாவதே இல்லை -அவயவமே இல்லை
கார்ய குண பூர்வகமாக இல்லையே -தேகத்துக்கு ஞானம் வாதம் எடுபடாதே –
கல்லில் மத சக்தி -காரண பொருள்களில் இல்லாவிட்டாலும் காரண பொருளில் இருக்கலாமே
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து மென்னால் சிகப்பு வருகிறதே –
கூட்டுறவு-சங்காதம்- -தனக்கே -தேகம் பிறருக்கே யாக இருக்கும் –
ரதம் கட்டில்-சரீரத்துக்காக உள்ளதை பார்க்கிறோம் -பிறரும் குற்றவாகவே இருக்க வேண்டும் – இது வரை பார்த்தோம் –

பரார்த்தம் –சங்காதம் -அநவஸ்தா நிலை வரும்
போக்தா வேறே போக உபகரணம் வேறே பிரித்து சமாதானம் -அனுபவிப்பவர் அன்றோ
ஆத்மா பிறருக்காகவே இல்லை சங்காதமும் இல்லையே
சங்காதம் என்று கொண்டால் வேறு ஒருவருக்காக இருக்க வேண்டும் –அதற்கும் அந்த சட்டம் வருமே –
த்ருஷ்டாந்தகத்தில் உள்ள எல்லாம் தார்ஷ்டாந்தகத்தில் வர வேண்டாமே -பக்ஷம் ஹேது ஸாத்யம்
மலை புகை நெருப்பு போலே-அனுமானம்
த்ருஷ்டாந்த த்ருஷ்ட தர்மம் மாத்திரமே கொள்ள வேண்டும் -இல்லா விட்டால் அனுமானம் வராதே

ப்ரத்யக்ஷத்தால் பேதம் -சரீர ஆத்மா -தெளிவாக இல்லா விட்டாலும் அனுமானத்தால் அறியலாம் என்பான்
தத் அசம்பாவித -ஞான அசம்பாவித சரீரே
சரீரே அபுஷ்டஸ்வேதே பேதஸ்ய-தஸ்ய அசம்பவாத் –
தஸ்மிந் அசம்பவாத்-சரீரத்தில் ஞானம் ஏற்படாதே எதனால் என்றால் —
தத் குணாந்தர -சரீர குணாந்தர வைதர்மயாதபி –பருமன் இளமை போன்றவை ஞானம் போல இல்லவே –
ஞானம் சரீரத்துக்கு குணம் ஆகாதே –
ஞானம் இருந்தால் சுகம் துக்கம் -இந்த சத்தர்மம் ஆத்மாவுக்குத்தானே
தேகம் தவிர்ந்த சங்காதம் பரார்த்தம்
தேகம் ஆகிற சங்காதம் பரார்த்தமாக இருக்காது தனக்காக இருக்கும் -பூர்வ பக்ஷி-
இப்படி இருந்தால் ஞானம் தேகத்துக்கு சொல்லலாமே என்பர்
ஆனால் தேகத்தின் மற்ற குணங்களுடன் பொருந்தாதே -என்று சித்தாந்தம்
சரீரத்தில் ஞானம் உதிக்கவே அவகாசம் இல்லையே -யோக்யதையே இல்லையே
இத்தை காரிகை -ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

காரண குண பூர்வகம் விசேஷ குணம் –அவயவத்தில் இருப்பது அவயவியில் ஏற்படும்- நூலில் உள்ள நிறம் புடவையில் –
விசேஷ குணம் -16-சாமான்ய குணம் -8-ஆக மொத்தம் -24-
கார்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் இருந்தால் காரண குண பூர்வகத்வம்
சாமான்ய குணத்துக்கு வேண்டாம்
சரீரத்துக்கு ஞானம் சொன்னாய் ஆனால் -காரண குண பூர்வகம் இல்லையே –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி –ஹேதுக
தந்து -நூல் -படம் -சமவாயி காரணம் -உபாதான காரணம் நாம் சொல்வது போலே

சமவேத குணம் சேர்ந்து இருக்கும் குணம் நூலில் -இதுவே துணியில் இருக்கும் ரூபத்துக்கு காரணம் அசமவேத குணம் ஆகும் –
சமவாயி -அசமவாயி -நூலில் சேர்க்கை -சமவாயி காரணம் –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி சமவேத குண அசமவாயிக ஹேதுவாக கொண்டு – -நூலில் வாசனை -துணியில் ரூபம் –
ரூபத்துக்கு வாசனை காரணம் இல்லையே -இத்தையே சஜாதீயம் -வி சஜாதீயம் -என்கிறது
இதே போலே சரீரம் -ஞானம் -சரீரத்தில் உள்ள குணங்கள் ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே –
சிகப்பு கருப்பு நீளம் இவை ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே
சாமான்ய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் -கொண்டே சாதிக்கிறார்

சாருவாகர் -ஆகாசம் ஒத்து கொள்ளவில்லை -நாம் அதுவும் த்ரவ்யம் -சூர்ய சந்த்ரராதிகள் இங்கே இருப்பதால்
கள்-த்ருஷ்டாந்தம் -சொல்வது பொருந்தாது –
சக்தி விசேஷ குணமே அல்லவே
சாமான்ய குணம் -தானே
ரூபம் கந்த ஸ்பர்ச ரசம் சிநேகம் சம்பசிதிகோ த்ரவ்யம் புத்தி -சுகம் துக்கம் இச்சா ப்ரயத்னம் -பாவனா -16-விசேஷ குணங்கள்
சங்க்யா பரிமாணம் பரத்வம் அபரத்வம் குருத்வம் -8-குணங்கள்
மீமாம்சகர் சக்தி -சர்வ த்ரயேஷு–கார்யம் செய்வதை கொண்டு ஊகிக்க படும் —
கார்யதவே உண்டாகும் ஒரு புலனால் அறியப்படும் ஞானம் விசேஷ குணம்
சக்தியை விசேஷ குணம் சொன்னால் என்ன என்பன்–காரண குண பூர்வகம் ஆகும் –
த்ரவ்யங்களை கலந்து த்ரவ்யத்திலே மத சக்தி உண்டாகும் என்று சொல்லலாம் என்று சமாதானம்
அணுவில் மத சக்தி வரும் என்றவாறு –
வெத்தலை பாக்குக்கும் இதே கதை -தாம்பூல ராகத்துக்கும் சிகப்புக்கும் இதே வாதம் –
இதே போலே தனித்தனி அவயவங்களுக்கும் ஞானம் இருக்கு -என்றால் பொருந்தாது –
ஒரே சரீரத்தில் பல ஞானவான்கள் சேர்ந்து ஒரு கார்யம் செய்ய முடியாதே –
அங்கி அங்க பாவமே போகுமே –
சித்ர ரூபம் பல வண்ணங்களின் சேர்க்கை -நூலில் பல வண்ணங்களின் சேர்க்கை இருந்தால் தானே முடியும் –
நாநா வண்ணம் –அந்த துணியானது பல வண்ணங்களாலான நூல்களால் ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால்
என்ன பொருந்தாமை வரும் –
அகாரண குண பூர்வகம் -ஒவ் வொரு நூலிலும் பலவண்ணங்கள் காணா விட்டாலும் –

சரீர குணங்கள் பிரத்யக்ஷமாக அறியும்படி இருக்கும் -ஆனால் ஞானம் அளவை அறிய முடியாதே —
ஞானம் சரீரத்தின் குணமாக இருக்க முடியாது என்றவாறு -ஸாத்யம் -இதுவே –
கிஞ்ச
தேகம் ஆத்மா அல்ல -குடம் போல்வன போலே
உத்பத்தி -உருவாகிறதே -இது போலே ஆத்மா இல்லையே
பிறர் பயனுக்காக –வேதாந்தத்தில் ஆத்மா தனக்காக
அவயவ சேர்க்கை –
ரூபமாதி குணம் உண்டே –
பூதத்வாத் பஞ்ச பூதங்கள் சேர்க்கை

ஸச் சித்ரத்வாத் -ஓட்டை நவ த்வார பட்டணம் -ஆத்மாவில் இல்லை
அதேகித்வாத் -இவர் தேகம் -தேஹி இல்லையே -சாருவாகரும் தேகம் என்றே சொல்லுவான்
தேகமாக
ம்ருத தேகத்வாத் -இறந்து போன உடல் போலே ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே
தேக ஆத்மா வாத நிரசன பிரகரணம் -முடிந்து இந்திரியம்

இந்திரியம் -ஸ்தூலம் இல்லை -அவயவங்கள் உடன் கூடியது இல்லையே -இத்தையே ஆத்மா
இதம் -சப்தம் அர்த்தம் –பாஹ்ய இந்திரிய க்ராஹ்யம் -வெளி புலன்களுக்கு விஷயம் -வேறே அஹம் சப்த அர்த்தம் –
உள் புலன் மனஸ்ஸூ க்கு தானே விஷயம்
அதீந்த்ரியம் -இந்திரியங்கள் -அதிஷ்டான தேசம் இந்திரியங்களால் கிரகிக்க முடியும் -மாம்ச பிண்டம் சஷுர் கோளகம் –
குணங்கள் -ரூபம் ரசம் இத்யாதிகளை இல்லையே -உத்பூத குணங்களாக இருக்காது -பிருத்வியில் காந்தம் நன்றாக தெரியும்
சப்தம் ரூபம் -ஸூ ஷ்மங்களில் தெளிவாக வெளிப்படாமல் இருக்கும்
இந்திரிய ஸூஷ்மம் தானே –மூக்கு நுனியில் தான் இருக்கு –
ஒன்றின் வியாபாரம் -பலன் -முயன்றவர் இடம் -அத்யயனம் பண்ணினவன் இடமே -யத் வியாபார பலம் யதி தத் தன்னிஷ்டம் –
அர்த்த சன்னிகர்ஷம் -நேர் ஆதி தொடர்பு ஞானத்தின் மூலமாக -ஞானம் த்ரவ்யம் குணம் இரண்டு ஆகாரம் -நம் சம்பிரதாயத்தில்
தண்டம் -சக்கரம் -உண்டான குடம் தண்டத்திடம் இல்லையே -த்ரவ்யத்துக்கு இந்த சட்டம் இல்லை
குளித்தால் சரீர சுத்தி புக்கியம் -த்ரவ்யம் இல்லை –
ஞானம் -சாருவாகனுக்கு த்ரவ்யம் இல்லையே
தண்டம் வைத்து குடத்தை உடைத்தால் -அபாயம் தண்டத்தில் இல்லையே -சூரணமாக இருப்பதில் குடத்தில் இல்லாமை இருக்குமே –
பிறப்பது என்றாலே போகுமே -ஸ்ரீ கீதை –
குடம் -அபாயம் -சூர்ணத்தின் அவஸ்தையில் தொடக்கம் -கட்டத்தில் சூர்ணத்தின் அழிவு -இப்படித்தானே
த்ரவ்யத்தில் அபாவத்திலும் பொருந்தாதே –
ஞானம் அபாயம் இல்லை -த்ரவ்ய பின்னம் தானே ஆகவே பொருந்தும் என்பான்
த்ரஷ்டா சஷூஸ் பார்ப்பவர் கண் -கர்த்தா -ஞாதா -ஞானம் குணம் ஆகும் -ஆப்த வாக்கியம் சத்யதபா முனிவர் வார்த்தை
மேலே சமாதானம் -தது ந –சொல்லி மேலே விளக்குகிறார்

விகல்பம்–ஒவ் ஒரு இந்திரியம் தனி தனி ஆத்மாவா -ஐந்தும் சேர்ந்து ஒரே ஆத்மாவா –
ப்ரத்யேகம் -என்றால் -ப்ரதிஸந்தானம் -ஒவ் ஒன்றும் ஆத்மா -கண்ணால் பார்த்த நான்
பழம் கொடுத்தேன் சொல்ல முடியாதே -அவர் வேறே இவர் வேறே -பொருந்தாதே –
எதை நான் பார்த்தேனோ அதை நான் தொடுகிறேன் சொல்ல முடியாதே
சேர்ந்தே ஆத்மா என்றாலும் -பொருந்தாதே -ஒரு இந்திரியம் இல்லாமல் வாழ முடியாதே -பிரத்யக்ஷ விரோதம் வரும் –
கண் போனால் முன்பு பார்த்தவர் நினைவு வரக் கூடாதே கண்ணுக்கு ஞானம் என்றால் –
வியாபார பலன் வாதமும் தப்பு -சாஸ்த்ரத்தால் வெட்டினால் பாபம்–த்ரவ்யம் இல்லை -அபாயமும் இல்லை –
உன் சட்டம் செல்லுபடி ஆகுமே – கத்திக்கு போகாமல் ஆத்மாவுக்கு அன்றோ
ஆப்த வசனம் -அவர் சொன்னது -இந்திரனும் ஸ்ரீ மந் நாராயணன் பேச உபநிஷத் கதை –
வராஹம் வேடன் வேஷன் -போட்டு வர -ரிஷிகள் -இருக்கு இல்லை சொல்ல முடியாமல் -யா பச்யதி ந ப்ரூயதே
-கண் பார்த்தது அது பேசாதே -பேசுவது பார்க்க வில்லை -வேடனே கண்ணு பேசுமா வாக்கு காணுமோ –
த்ரஷ்டா கண் தானே -என்ற இடம் -அனிதா வேறு பயனுக்காக சொன்னது -சரணாகாத பரித்ராயணத்துக்காக சொன்னது –
இந்திரியங்கள் ஆத்மா அல்ல -என்று நிரூபணம் –

மனமே ஆத்மா -அடுத்து
முன்பு சொன்ன தோஷங்கள் வராதே -உத்ப்பூதம் ஸ்தூலம் –
பலவா ஒன்றா வம்பு இங்கு இல்லையே –
வெறும் கருவி தானே -ஆத்மா தானே கர்த்தா -ஆத்மாவின் தர்மா தானே கர்த்ருத்வம் –
இந்திரியங்களின் தலைவர் மனஸ் -தெரிகிறது லோகத்தில் -பிரதி சந்தானம் குறை வராதே –
ஞானம் பதிவது மனசில் -ஞான ஆஸ்ரயம் -தரிசன அனுசந்தான ஆதாரம் -பார்ப்பதும் நினைவும் -இங்கே தானே –
ஒரு இந்திரியம் போனாலும் வாழலாம் -அந்த குறையும் இங்கு இல்லையே –

தத் அபி ந -முதல் ந -அப்புறம் தத் ந
மனம் கர்த்தா அல்ல -கரணமான படியால் -கண்ணைப் போலே சிந்திக்கும் கருவி
எனவே ஞானம் இல்லை -ஞானத்துக்கு இருப்பிடம் வேறே கருவி வேறே அன்றோ
பாஹ்ய ஆந்திர சகல விஷய சம்வேதன ஞானம் அறிவிக்கும் கருவி தானே மனஸ்ஸூ
பாஹ்ய இந்திரிய அதன் அதன் விஷயம் -தொடர்பு -யுகபத் ஒரே காலத்தில் -அனைத்து ஸ்ருஷ்ட்டி போலே –
யுகபாத் ஏவ சர்வ விஷயமும் தோன்றாதே -எதனுடைய உதவி இல்லாத போது வஸ்து பிரகாசிக்காதோ –மனஸ் தானே க்ரஹிக்க வேண்டும் –
ஸூகம் போன்றவை -இவற்றுக்கும் கருவி வேணும் -கிரியை -என்றாலே கரணமும் கர்த்தாவும் வேணுமே -ஆத்மாவும் மனசும் வேண்டுமே –
ஞான கருவியே மனஸ்ஸூ -கர்த்தா அல்ல என்றதாயிற்று -ஞான ஆஸ்ரயம் ஆகாதே
கர்த்தா என்றாலே ஸ்வதந்த்ரர் -கருவி மற்றவர் விருப்பம் படிதானே

மேலே ஸ்வா தந்தர்யம் விளக்கம் –விருப்பம் தகுந்த-கார்யம் செய்யும் கருவி கொண்டு -அடைய
தன இடத்தில் உள்ள இச்சையால் செயல்படுவது ஸ்வ தந்தர்யம் –
பர அதிஷ்டானம் பிறர் நியமனத்தால் -செய்யும் மனஸ் -ஆத்மாவாகாதே -பரஸ்பர விருத்தம்-
மனம் ஆத்மா அவருக்கு கரணம் என்றால் -கர்த்தா கரணம் வேறே வேறே ஒத்துகே கொண்டாலே –
உன் சித்தாந்தம் பலிக்காதே -பேரிலே தான் வாதம் —
ஏவ கண்களால் ரூபம் -சுகாதிகளை மனசாலே க்ரஹிக்கிறார் ஆத்மா
லோக வியாபாரத்துக்கு ஒத்து போகாதே -மனம் கரணமே பரதந்த்ரமே ஞானம் இல்லை ஆத்மா இல்லை
அஹம் சப்த கோசாரம் ஆகாதே –
மன ஆத்மவாத கண்டன பிரகாரணம் முற்றிற்று

மேலே மனஸ் என்ன என்று விவரிக்கிறார்
சம்பிரதாயம் பகவான் இடம் மட்டுமே ஸ்வா தந்தர்யமும் தானே ஏறிட்டுகே கொண்ட பாரதந்தர்யமும் உண்டே
வேறு ஒரு வியக்தியில் இரண்டும் இல்லையே –

அதிஷ்டானம் -நியமனம் என்றபடி இருக்கிறது மட்டும் இல்லை —ஒரே ஆத்மா தான் நியமிப்பான் -சரீரத்துக்குள் பல உண்டே —
தேகம் மனம் இந்திரியம் -மூன்றும் கர்மத்துக்கு அனுஷ்டானம் -கர்ம சாபேஷத்தால் ஈஸ்வரன் நியமிக்கிறார் –
மன வைத்தியர் -கண் வைத்தியர் போலே -அனைவரும் மனோ வியாதிக்கு ஆள்பட்டு இருப்பதால் –
கண்ணுக்கு உபகரணம் கண்ணாடி –கண்ணே கரணம் தானே -மனசுக்கு என்ன பண்ணலாம் –
மற்ற கரணங்களுக்கு மனஸ் சஹகாரி வேண்டும் —

விஷயங்களை இந்திரியங்களை கிரகிக்க -மனஸ் இந்திரியம் விட வலிமை –
புத்தி விவேக ஞானம் அத்தை விட வலிமை -அதிருஷ்ட ரூபமான அனுக்ரஹம் -த்யான ரூபமான கர்மம் –
சத்வம் வளர்ப்பதே மனசுக்கு உப கரணம் –
சத்வ குணம் –கர்மம் பண்ண -ஞான யோகம் -பகவத் பிரீதி வந்து -மனஸ் வியாதி போகும் –
மனஸ் சமாதானம் கோயில் சேவை -வளர்க்க வளர்க்க -ஆகார சுத்தி -சத்வ சுத்தி -துர்குணங்கள் போக்க –
காமம் போக்க வைராக்யம் கோபம் போக்க பணிவிடை செய்து -இதுவே மாற்று மருந்து –
மனசுக்கு பிரகரணம் கண் காது இத்யாதி -மன நோய் மருத்துவர் தூங்க வைப்பர் இதன் அடிப்படையில் –
நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் -நோய் முதல் நாடி தீர்ப்பது -அதுவே அத்தை அறிவது கஷ்டம் தானே குழம்புகிறோம்
ஆந்திர ஞான கரணம் –உள் இந்திரியம் -உள் அறிவு புலன் -த்ரவ்யம் –
யுகபத் ஞான-ஒரே காலத்தில் ஏற்படாதே -கண் காது -சுவைப்பதும் கேட்பதும் பார்ப்பதும் ஒரே அளவிலே பதிவாகாதே –
புலன் உடன் தொடர்பு கொண்டு மனஸ் கிரகிக்கிறது -அதுவே மனசுக்கு லிங்கம் அடையாளம் –
ஞானம் -அறிவு -ஸ்மரணம் -நினைவு -சம்ஸ்காரம் -மனப்பதிவு -விஷய சுகம் ஏக காலத்தில் –
பதித்தது அனைத்தும் ஏக காலத்தில் நினைவுக்கு வர வில்லையே –
யுகபத் ஞானம் -வேறே
யுகபத் ஸ்மரணம் –பண்பு பதிவுகள் –நினைவும் மனசும் ஒன்றா வேறே வேறாயா -அவன் கேள்வி –
கொஞ்சம் கொஞ்சம் எப்போதோ எப்போதோ நினைவுக்கு வருகிறதே –
பதிக்கப்பட்ட வரிசையில் நினைவு வருகிறதா -இல்லையா –
மனசை ஒருமைப்படுத்தினாலும் நினைவு வரிசைகளை மாற்ற முடியாதே –
அனுபவித்த சகல விஷய நினைவுகளும் ஒரே காலத்திலேயே வராதே –
சுக துக்க ரூப கர்மங்கள் –அதிருஷ்டம் –வாயிலாக என்று கொள்ளலாமா -என்றால் –
ஆத்ம ஸ்வ பாவமே க்ரமமாகவே ஞானம் கொடுக்கும் -இப்படி இரண்டு விகல்பம்
இரண்டும் ஒத்து வராது –

துணி -சமவாயி தந்து -அசமவாயி நூலுக்கும் நூலுக்கும் சேர்க்கை -நிமித்தம் -உண்டை பாவி -நையாயிகர் இந்த மூன்று காரணங்கள்
சுக துக்கம் ஏற்படும் -சுக ஞானம் துக்க ஞானம் -இதுக்கு -சமவாயி காரணம் -ஆத்மா -நிமித்தம் –
வெளி விஷயங்கள் -அதிருஷ்டம் -அசமவாயி -சமவாயி உடன் தொடர்பு-சம்யோகத்துக்கு ஓன்று வேண்டுமே அது மனஸ்
மனம் த்ரவ்யம் சித்திக்கும் என்பான் –அது பொருந்தாது -தார்க்கீகன் -மனஸ் ஒன்பதாவது தத்வம்
சுக -துக்க -பூர்வ கால ஜென்ம ஞானம் இருக்க வேண்டுமே அபிமத அநபிமத விஷய தொடர்பு ஞானம்-நெருப்பு -உஷ்ணம் அறிந்து தொட்டால் சுடும் –
இந்த ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மாவில் -இதனால் சம்யோகம் -இதுவே அசமவாயி காரணம் -மனஸ் வேண்டாமே –
விஷய ஞானத்துக்கு அசமவாயி -அதுக்கு அசமவாயி -இப்படி மேலே மேலே எவ்வளவு கேட்டாலும் மனஸ் வேண்டாம் என்பான் –
விஷயத்துடன் தொடர்பு உள்ள வெளிப்புலன் அதன் உடன் தொடர்பு கொண்ட -ஆத்மா–அது தான் அசமவாயி –
வெளிப்புலன் தொடர்பு -சப்தாதிகள் இந்திரிய தொடர்பு –
மனசை ஒத்து கொள்ளாதவன் அன்றோ –
இந்திய பொருள் சம்பந்தத்துக்கு அசமவாயி இந்திரிய கிரியா செயல்பாடு
அதுக்கு இந்திரிய ஆத்ம சம்பந்தம் –
அதுக்கு அதிருஷ்டம் கர்மமும்
அதுக்கு பிரயத்னம் அசமவாயி
அதுக்கு கர்தவ்யதா ஞானம் –

சுக துக்கம் அனுபவிக்க த்ரவ்யாந்தரம் -மனசை கல்பிக்க வேண்டாமே -என்பன் பூர்வ பக்ஷி –
நித்ய த்ரவ்யம் -விசேஷ குணம் –த்ரவ்யாந்தர சம்யோகம் தேவை –
மாங்காய் -நாலு நாள் கழித்து மாம்பழம் -பார்த்திப -பிருதிவியின் -பரம அணு –
தேஜஸ் சம்பந்தம் பட்டு கட்டியாக இருந்தது மெலிதாக -சுவையும் மாறி-பச்சை மஞ்சள் – –
அனுமானித்து சம்பந்தம் -தேஜஸ் சம்பந்தம் உணர்கிறோம்
ஆத்மா -சுக துக்கம் -விசேஷ குணம் -இதுக்கு மனஸ் -என்று சொல்லப் போனால் இதுக்கும் வேண்டாமே என்பான்
இஷ்டம் கிடைத்தது தெரிந்தால் சுகம் -அநிஷ்டம் கிடைத்தது தெரிந்தால் துக்கம் -பிராப்தியும் அறிவும் வேணுமே–
இத்தை அசமவாயியாக கொள்ளலாமே என்பான் -மாங்காய் மாம்பழம் நேராக பார்த்து அறிகிறோம் –
பிரத்யக்ஷமாக சம்பந்தம் தெரியாமல் அனுமானிக்கிறோம்
இங்கு அது வேண்டாமே என்பான்
துணி -தந்து -சமவாயி காரணம் -நூலுக்குள் சம்பந்தம் அசமவாயி -தறி உண்டை பாவு நிமித்தம் –
இங்கு காரணம் கிடைப்பதால் அனுமானிக்க வேண்டாமே என்பான் -பூர்வ பக்ஷி

வ்யாப்தியில் தப்பு இல்லையே -நித்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் கிடைக்க த்ரவ்யாந்தர சம்பந்தம் வேணும் –
என்கிற வ்யாப்தியில் குற்றம் இல்லையே –
த்ரவ்யாந்தரம் இருக்க ஒத்துக் கொண்டால் மனசை கல்பிக்கலாமே –
த்ரவ்யாந்தம் ஒத்துக் கொண்டு –அக்னி -சரீரம் தொடர்பால் -மாறுதல் -ஸ்பர்சத்துடன் கூடிய த்ரவ்யந்தரம் -பவ்திகமாகவும் இருக்க வேண்டும் –
மனசை தொட முடியாதே –
ஸ்பர்ச வைத்த த்ரவ்யாந்தரம் -ஆத்மா தேகம் சொல்லலாமே -மனஸ் கண்ணுக்கு தெரியாதே -தேகம் காணலாம்
தேகத்துக்கு தானே சுகம் துக்கம் -அவயவங்களுடன் இருப்பதால் –
கண்ணுக்கு ஸூஷ்மமும் பாஹ்ய குழகமும் உண்டே -மனசுக்கு வலிக்காதே
மனஸ் பவ்திக்கமா இல்லையா விசாரம்
பஞ்ச பூதங்களை விட வேறுபட்டதா இல்லையா –
அனுமானத்தால் வேறுபட்டது என்று சாதிக்கலாம் -மனஸ் சேர்ந்தால் தானே-சப்தம் -ஆகாச குணம் -கிரஹிக்கும்–
ஆகாசம் பிரதானமாக கொண்ட காது -மற்ற ஒன்றை கிரகிக்காதே
ஆகாசாத் வாயு -கண் அக்னி -ஜாலம் -நாக்கு -பிருத்வி மூக்கு -கிரஹித்து அவ் இந்திரியம் அதில் இருந்து உருவானது –
பவ்திக்க இந்திரியம் தனக்கு உள்ளதை தான் கிரகிக்க வேண்டும் வேறே ஒன்றை கிரகிக்கக் கூடாதே
பூதாந்த்ர குணம் கிரகிக்கக் கூடாதே -ஆகவே மனஸ் அபவ்திகம்
நாக்கை போலே இருக்க கண் இல்லை -இது போன்று ஐந்தும் இல்லை -மனம் -ஐந்தையும் கிரகிப்பதால் –
சரீரம் போலே பாஞ்ச பவ்திகம்-என்னலாமே-எண்ணில் —
காது -ஆகாசம் மட்டும் இல்லை பஞ்சீ கரணம் -மற்ற நான்கும் தொட்டு கொண்டு இருக்குமே
மனம் அன்ன மயம் சோம்ய–வேதம் -உபாதானமாக கொண்டது என்று சொல்ல வில்லை -தத் ஆதீன வ்ருத்தி -என்றவாறு –
அன்னத்தால் போஷிக்கப்பட்டுள்ளது என்றவாறு –
ஆபோ மயப்பிராணன் -பிராணன் தண்ணீர் மயம் சொல்வது போஷிப்பதால் -அதனால் ஆக்கப்பட்டது இல்லை
மோக்ஷ தசையில் மனஸ் உண்டு
மனசான் யேதான் காமான் காம ரூபியான் சஞ்சரன் –சாந்தோக்யம் –அபவர்க்க தசையில் மன அநுவிருத்தி –
அப்ராக்ருத மண்டலம் அன்றோ -ஆகவே பிராகிருதம் இல்லை –
மனமே திவ்யமான கண் -சுருதி -அது போலே இங்கும் என்பான்
பரமாத்மாவுக்கு மனசால் சங்கல்பித்தது என்கிறதே எனவே பவ்திகமாக இருக்க முடியாதே என்பான்
நீ சொன்னதில் பாதியை ஒத்துக்கொள்கிறேன் –
த்ரவ்யாந்தரம் கல்பிக்காமல் -பவ்திகமே
புத்தியே மனஸ் -நல்ல புத்தி உடையவன் மனசே
புத்தி -ஞானம் -மனஸ் கரணம் -என்று வாதிப்பான்
நிலை வேறுபாடு -கலக்கமான மனஸ் -தெளிந்த மனஸ் -சந்தோஷிக்கும் மனஸ் சொல்கிறோம் –
புத்தி அகங்காரத்தை சொல்கிறது என்பான் -பூர்வ பஷி
உச்யதே –ஆத்மா மனமா இல்லையா என்று தானே பேச வந்தோம் –
புத்தியே மனமாக இருந்தாலும் -சேதனத்வம் ஞாத்ருத்வம் இல்லையே -புத்தி என்றாலும் ஞாத்ருத்வம் வராதே –
ஆத்மா மனஸ் இல்லை என்று நிகமித்தார்

அடுத்து -பிராணன் -தான் ஆத்மா என்பான் -ஜீவன் பிராணன் கூடிய சரீரத்தை சொல்கிறோம்
உத்க்ரந்தி -லோகாந்த்ர கமனம் -நகர ஸ்பர்சம் வேணுமே புது சட்டம் -வாயுவுக்கு ஸ்பர்சம் உண்டே –
ஆத்மா கிலாபத்தை சுருதி சொல்லுமே –
பிராணன் உடன் இருந்தால் தானே ஜீவதி-என்றும் -இல்லா விட்டால் ஆத்மா இல்லை என்றும் சொல்கிறோமே –
இது சரி இல்லை
வாயுவான படியால் பொருந்தாது -சைதன்யம் இல்லையே வாயுவுக்கு -வெளியில் உள்ள வாயு போலவே உள்ளே இருக்கும் பிராணனும்
நிர் வியாபாரம் -தூங்கும் பொழுதும் – ஆத்மா தூங்கும் பொழுதும் பிராணன் வேலை பார்த்து -வ்ருத்தி உண்டே
உண்டது ஜெரிப்பதும் பிராணன் -சப்த தாதுக்கள் -ரத்தம் இத்யாதி -இதனாலே -வைவரானாக்னி ஜடாராக்கினி —
நாலு வித அன்னம் தளிகை பண்ணுகிறேன் – முழுங்குவது போன்றவை -பிராணாயாமம் முக்கியம் –
வாதம் பித்தம் கபம் மூன்றும் சமமாக ஆக்குவதே ஆயுர்வேத வைத்தியம்
உண்டதும் பருகினதும் பரிமாணம் –பிராணன் வேலை செய்வதால் –
சுவாசம் -வெளி மூச்சு நடப்பது ப்ரத்யக்ஷம் அன்றோ தூங்கும் பொழுதும்
கோஷ்ட்ய மாருதம் -பிராணன் -அபான சமாயுக்த –
தண்ணீராலே நன்றாக எறியும் வாயு வயிற்றுக்குள்ளே –
கடலுள் பாடவாகினி உண்டே -அதே போலே –
பஞ்ச வ்ருத்தி பிராணன் -வேலைக்கு தக்க பெயர் -ஒரே வாயு -கண்டம் முகம் மூக்கு -உள்ளே சென்று –
வெளியில் வந்து பூரகம் ரேசகம் கும்பகம் நிறுத்துவது –
தோலால் தொட்டுப்பார்க்கலாம் -ரேஸிகத்தை வெளியில் வரும் காற்றை தொடலாமே -கடத்தை போலே -ஆகையால் -ஆத்மா இல்லையே –
தேக ஆத்ம ஒன்றே நிரசன வாதமே இதுக்கும் உண்டே தனியாக நிரசிக்க வேண்டாமே
பிரயாணம் -ஸ்பர்சம் -சொன்னாயே -கதி ஆகதி-ஆத்மா அணு வாக இருக்கும் -ஸ்பர்சம் இல்லாமலும் இருக்கும்
பிரயத்தனம் -கர்ம-இவற்றால் தூண்டப்பட்ட -மனசை போலே உதக்ராந்தி-மனஸ் ஸூஷ்மம் இருந்தாலும்
ஸ்பர்சம் இல்லாமல் இருந்தாலும் மனசு செல்வதை பார்க்கிறோமே
ஸ்தூலமாக இருந்தால் தாள் கதி க்கு ஸ்பர்சம் வேண்டும் –
ஆத்மாவுடைய பரிமாணம் மேலே விரிவாக சொல்லுவேன் –
இதி பிராண ஆத்மா ஒன்றே வாத நிரசனம்

அடுத்து சம்பவித்தே ஞானம் -புத்த மதம் நிராசனம் -அயம் கட-உத்பத்தி விநாசத்துடன் கூடிய ஞானத்தை சொல்கிறான் –
தர்ம ஞானத்தை சொல்கிறான் -தர்மி ஞானத்தை இல்லை
பாட்டன் மீமாம்சகர் அனுமானித்தே ஞானம் இருப்பதை அறியலாம்
அஜடத்வாத்–ஸ்வயம் பிரகாசம் -தானே விளங்கும் –மற்று ஒன்றினால் பிரகாசம் ஜடம் –
விளக்கும் ஜடம் -ஞானத்தை பயன்படுத்தியே விளக்கு என்று அறிகிறோம் -தேஜஸ்ஸை சொல்லவில்லை –
வ்யவஹார ஹேதுவை பிரகாசம் என்கிறோம் இங்கு
ஆத்ம ஞானம் தானே பிரகாசிக்கும் -பரமாத்மா -ஸ்ரீ வைகுண்டம் ஞானம் இவையும் ஸ்வயம் பிரகாசம்
புத்தர் ஞானமே ஆத்மா அது க்ஷணிகம்
அத்வைதி ஞானமே ஆத்மா நித்யம்
ஆத்மா அஜாதம் ஸ்வயம் பிரகாசம் சுருதி சொல்லும் -சம்வித்தும் அப்படியே -ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஒன்றே
மடப்பள்ளி போலே புகை இருந்தால் நெருப்பு -அன்வயம்
ஆத்மா போலே வேறு அஜாதம் இருந்தால் தானே சொல்ல முடியும்
அன்வய வ்யாப்தி சொல்ல முடியாதே
எங்கு எங்கு நெருப்பு இல்லையோ அங்கு அங்கு புகை இல்லை
யத்ர யத்ர அநாத்மத்வம் தத்ர தத்ர ஜடத்வம்
யத்ர யத்ர அஜடத்வம் அங்கு அங்கு ஆத்மத்வம் -சொல்ல முடியாதே
இதுக்கு த்ருஷ்டாந்தம் -கடத்தைப் போலே-
ஞானம் ஸ்வயம் பிரகாசம் -அசித் ஸ்ரீ வைகுண்டம் போலே
ஜீவனும் பரமாத்மாவும் ஸ்வயம் பிரகாசமும் சித்தும் –
ஞானத்துக்கு அஜடத்வம் சத்தையாலே பிரகாசிக்கும் -பிரத்யக்ஷம் –
சம்வித் இருக்கும் பொழுது விளங்க வில்லை என்பது இல்லையே -சதி சம்வித் –

அதுக்கு -பட்டார் மீமாம்சகர் -ஆபேஷம் -அனுமானம் -ஞானமே அனுமானித்தே அறிவோம் என்போம் –
நீலக் குடத்தை பார்த்து –நீலம் என்றும் குடம் என்றும் விஷய மாத்திரம் -அநீதம் அதீத ரூபம் –
அறிகிறோம் ஞானம் என்று ஓன்று தனியாக இல்லையே
அனுமானித்தே ஞானம் என்று அறிகிறோம்
இது குடம் -குடம் அறியப்பட்டது -குடத்தில் ஒரு தன்மை அறியப்பட்டது தன்மை வைத்து அறிவு வந்ததாக அனுமானம் –
ஸ்வரூப சத்தையால் இல்லை -இந்திரியம் -அர்த்த சன்னிகர்ஷம் வந்தாலே கிட்டும்
கண் குடத்தை -பார்த்தது என்ற ஞானம் வரவில்லை —
ப்ரத்யக்ஷம் — இந்த்ரியமும் பொருளை தொடர்பு வந்ததும் ஞானம்
அனுமானத்தின் அப்படி இல்லை -எங்கு எங்கு புகை அங்கு நெருப்பு -ஞானமும் வேணும் த்ருஷ்டாந்தமும் வேணும்
இருந்தால் தானே நெருப்பை அனுமானிக்கலாம்
எங்கு எங்கு எல்லாம் அறியப்பட்ட தன்மை உள்ளதோ -என்று பார்த்த குடத்தில் தன்மை ஏறிட்டு –
அதனால் ஞானம் அனுமானித்து அறிகிறோம்
குடத்தில் அதிசயம் -இந்த அறியப்பட்ட தன்மை -ஞாததா – ஆகந்துக பிரகாசத்தால் தரிசனத்தால் -பிரத்யக்ஷம் –
சம்வித் ஆத்மா இல்லை -இவரும் நம்மைப்போல் –
இரண்டு பக்ஷமும் தப்பு –பிரத்யக்ஷத்தாலே -ஸ்தாபித்து -ஞானம் உடையவன் தான் ஆத்மா ஞானம் ஆத்மா இல்லை –
இது தர்ம ஞானத்தை பற்றி -தர்மியும் தர்மமும் வேறே வேறே தானே
நன்றாக பார்க்கிறவர் -ஞானத்தை தவிர்ந்து ஞதாதா பார்ப்பவர் யாரும் இல்லையே -அர்த்த தர்மம் -ஞதாதா
ரூபம் தான் பார்க்கிறோம் -ஞதாதா உடன் இருந்ததை யாரும் பிரத்யக்ஷமாக காண முடியாதே
ஞானத்தைக் கொண்டே சகல வியாபாரமும் பொருந்தும் ஞத்தாவை கற்பிக்க வேண்டாமே
இது குடம் -ஆத்மாவுக்கு ஞானம் -ஞாதா ஞானம் ஜேயம் மூன்றும்
வித்தி -விதித்திரு ஞாதா பிரதிபாத சூன்யம் -இது குடம் -என்பதில் ஞானமும் இல்லை ஞாதாவும் இல்லையே –
இது குடம் என்றாலே நான் குடம் இருப்பதை பார்க்கிறேன் என்பதே தான்
வேறே வேறே பிரயோகம்
இது குடம் எனக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை யாரும் சொல்ல மாட்டார்
தசரதன் ராமன் தந்தை -தசரதன் இடம் ஞாததா ஏற்பட்டு அறியவில்லை
கல்கி இது போலே -விஷய கிரஹணம் -அனுமானிக்க முடியாதே –
ஞானத்தால் வியவகாரம்- வாக்கால் பேசுவோம் -மாற்றி சொல்ல முடியாதே
என்னால் நினைக்கப்பட்டது வாக் வியாபாரம் -பூர்வகம் -ஞானம் -இருக்க வேண்டும் –
முன்பு வேடு பறி உத்சவம் பார்த்ததை-ஸ்ம்ருதி -அப்புறம் வாக்கால் சொல்லுகிறோம் –
அன்யோன்ய ஆஸ்ரம தப்பு வரும் -வெட்கம் இல்லாதவன் தான் நான் வியவஹாரம் செய்வதால் ஞானம் அனுமானிப்பான் –

பிரகட புத்தர் -அனைத்தும் சூன்யம் –
அத்வைதி மறைந்த புத்தர் –
ஞானம் அனுமானித்து அறிகிறோம் என்கிற மீமாம்சகர் பக்ஷம் –
இதில் அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வரும் என்பதை பார்த்தோம்
மீமாம்ச பக்ஷம் நிரசித்த பின்பு மாற்று இருவரையும் நிரசிக்க வேண்டும் ஞானமே ஆத்மா -ஞாதா ஜேயமும் பொய் என்பர் –
இது குடம் -விஷயம் மட்டும் -அறிவாளியை பற்றும் அறிவையும் பற்றியும் இல்லை
நான் குடத்தை அறிகிறேன் -மூன்றும் உண்டே
பேதம் பிராந்தி மயக்கம் -என்பர் –

புத்தன் சொன்ன ஹேதுவை அத்வைதி -முன் முன் க்ஷணிக ஞானம் —
தண்டம் -தண்டி -தண்டி பிள்ளை -க்ஷணிக விஞ்ஞானம் -ஒரு வினாடி ஞானம் அப்புறம் இருக்காது –
ஆத்மாவே ஞானம் என்றால் ஆத்மா வேறே வேறேயா -நேற்று மண்டபத்தை பார்த்த நான்
இன்று அங்கு இருந்து உண்கிறேன் –நேற்று மண்டபம் எல்லாம் பொய்
இத்தை அத்வைதி கண்டனம் –

ஸ்வயம் பிரகாசம் -ஞானம் -அஜடம்-வேறு ஒன்றின் உதவி வேண்டாம் -ஆத்மாவும் ஸ்வயம் பிரகாசம் –
எந்த வஸ்துவின் தொடர்பால் -அர்த்தாந்தரே வேறு பொருளில் வியாவஹாரமோ தர்மம் வேறுபாடு ஏற்பட்டால்
அது அந்த பொருளில் ஸ்வரூபமாகவே இருக்கும் –
வெள்ளைப்பசு -பார்க்க -கண்ணால் வெள்ளையை கிரகிக்க வெள்ளையே காரணம் -பசுவை கிரகிக்க வெள்ளை வேணும் –
வெண்மைக்கு -வேறு ஒன்றின் உதவி இல்லாமல் பிரகாசிப்பதால் ஸ்வயம் பிரகாசம் என்று சொல்லலாமே என்பர் –
அஸ்தி -சொல்ல சத்தா இருப்பே காரணம் -இது தான் வியவஹாரம்
சத்தா அஸ்தி இருப்பு இருக்கு -அந்த இருப்பு எப்படி சத்தத்தையே காரணம் -அது தான் ஸ்வரூபம்

பூமி இருக்கு -சொல்ல இருப்பு காரணம் -இருப்புக்கு அதுவே காரணம் -நிறத்தினால் -இத்தையே ரூபத்தினால் -என்பர் –
தொடர்பால் கண்ணால் பார்க்கிறோம்
குடம் பிரகாசிக்க -அறிவு வர -அதற்கு வேறு ஒன்றின் தேவை இல்லை –
ஆகவே அறிவு ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஆத்மா என்பர்
ஞானம் இருந்து ஞாதா -தனியாக கல்பிக்காமல் –ஞானமே இல்லை என்றால் ஞானம் ஞாதா இரண்டையும் சொல்ல வேண்டாமே –
ப்ரத்யக்ஷ விரோதம் வரும் -நான் அறிகிறேன் சொல்லுகிறோம்-அறிவு வேறே நான் வேறே அன்றோ -ஞானத்துக்கு ஆஸ்ரயம் தானே ஆத்மா
சத்யம் -உண்மை -/ பிரத்யக்ஷம் -விகல்பம் உடன் உள்ள -ப்ரத்யக்ஷம் -நிர்விகல்பிக்க பிரத்யம் -இரண்டு வகை –
பேதத்துடன் பார்ப்பது பிரமத்துக்கு மூலம் –
வஸ்து மாத்திரம் -வஸ்து இருந்தால் தான் கண்ணாடி நீலம் இத்யாதி உண்டே -ஏற்றி சொல்கிறோம்
வஸ்துவை கிரஹித்து மற்றவற்றை அதிலே ஏத்தி –
நான் அறிகிறேன் சொல்வதே பொய் -ச விகல்பிக்க ரத்யக்ஷம்
நான் அறிவு என்பதே நிர்விகல்பிக்க ப்ரத்யக்ஷம் என்பன்

ஞாதாவே ஞானம் -ஒன்றாகவே கிரகிக்கப்படும் -ஸஹ-/ ஒன்றை விட்டுப் பிரியாமல் இருக்கும் -ஸஹ உபலம்பம் –
ஞாதா சொல்லும் பொழுது ஞானத்துடன் தானே –
குடம் அறிவு இருந்தால் தான் குடம் அறிபவர் சொல்ல முடியும் -எனவே ஒன்றே தான் என்பன் -ஸஹ உபலம்ப நியாயம்
அப்ரகாச ஆத்மா என்று ஓன்று இல்லையே -அடுத்த காரணம் –பேத ஞானத்தை பிரமாணமாக கொண்டாலும் –
தெரிய வருவதால் ஞானமே தானே –
இரண்டாலும் ஞானமே ஆத்மா என்பான் –
ஜடமாக உள்ள அஹம் அர்த்தம் சித்திக்காதே -ஸம்வித்தை விட வேறு பட்ட ஆத்மாவை அறியவே முடியாதே

க்ராஹ விகல்பம் இல்லை
க்ராஹ்ய விகல்பம் -விஷயத்தை தனியாக சொல்லாமல் -கட ஞானம் -ஞானத்துடன் சேர்ந்தே விஷயம்
பிரகாச யோகமே ஞானம் –
வாசனையால் -புத்த வாதம் -முன் முன் தப்பாக அறிந்த அறிவு –
சமானந்தர ஞானம் முன் அடுத்து மாறி மாறி வருமே -தண்டம் -தண்டி இத்யாதி –
பொய் நின்ற ஞானம் -சதத பரிணாமம் ஆழ்வார்-விகாரத்தைப் பற்றி -இவனோ க்ஷணிகம் –
அநாதி அவித்யாதி வசப்பட்டு பேதம் -அத்வைதி பக்ஷம்
அந்த அவித்யாவும் பொய்யான -என்பர் அத்வைதி -வேறே ஒன்றையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பிரமத்துடன் பார்ப்பார்வர்கள் தான் க்ராஹ்ய க்ராஹக ஞான வாசி அறிவார்கள்
மூன்றிலும் வேறுபாடு இல்லை -தோற்றமே –
ஜகத் ஜநநீ-அவித்யை -அதனாலே தோற்றும் -சுத்தமான ஞானம் சின் மாத்திரமே ப்ரஹ்மம் -பிரபஞ்சம் மித்யை –
சுத்தம் நித்யம் பரமார்த்தம் -பிரபஞ்சத்துக்கு உபாதானமாக சொன்னால் சம்சாரத்தில் இருந்து மோக்ஷம் எப்படி –
ஒரே ஆத்மா தானே அவர்கள் பக்ஷம் -மாயா ஏவ ஜநநீ -என்பர்
பிரகட பிரசன்ன புத்தர்கள் இருவர் வாதங்கள் இவை

அத்வைதி -மற்ற பிரகட புத்த வாத கண்டனம் அடுத்து -க்ஷணிகம் -பிரதி விஷயம் வேறே வேறே ஞானம் –
படம் கடம் -முன் பார்த்தவர் இன்று பார்க்கிறவர் எப்படி வரும் -அவரே இவர் -அதுவே இது சொல்ல முடியாதே

அதே நான் அதே பொருளை இன்று வேறு ஒரு நாளில் பார்க்கிறேன் -பொருந்தாதே என்னில் –
நிராலம்பன –ஞானத்துக்கு ஆலம்பனம் விஷயமே இல்லை – நேற்று நன்றான பசுவைப் பார்த்தேன் –
இன்று சோர்ந்த பசுவைப் பார்க்கிறேன்
நேற்று ஞானத்துக்கு விஷயம் இல்லை
நேற்று இன்று கிடையாது
ஞானம் மட்டுமே -மற்ற அனைத்தும் மித்யா
கற்பனையே என்பான்

ப்ரத்யக்ஷம் விரோதம் வரும் -நிராலம்பனம்-எல்லா ஞானமும் விஷயம் அற்றவை என்றால் –
இந்த வார்த்தை யாலே வரும் ஞானத்துக்கு விஷயம் உண்டா இல்லையா
கேள்வியால் ஸ்ரீ ஆளவந்தார் நிரசனம் எளிதாக செய்தார்
பூர்வ மீமாம்சை –1-1- உத்தர மீமாம்சை -2-2-
தர்க்க பாதத்திலும் நியாய தத்வம் நாத முனிகள் இவற்றை காட்டி உள்ளார் -அங்கு கண்டு கொள்க

க்ஷணிக ஞானமே ஆத்மா -பிரகட புத்தன்
அநித்யமான ஞானம் உடையவன் ஆத்மா -இரண்டாம் பக்ஷம் -அனுபவம் ஸ்மரணம் இருப்பதால் –
நித்தியமான ஞானமே ஆத்மா -அத்வைதி
தர்ம பூத ஞானம் அழியும் அநித்தியம் -ஞானம் வேறே ஆத்மா வேறே -சித்தாந்தம்
ஞான சந்தானம் -வினாடிக்கு வினாடி ஏற்படும் ஞான புள்ளி -பல புள்ளிகள் -வரிசையே ஆத்மா –
தொடர் சங்கிலி ஞானமே ஆத்மா -ஞானம் உடையவர் இல்லை -இது புத்தவாதம் –
பிரவாகமாக நித்யம் -அதனால் ஸ்மரணம்-என்பன்–தீப த்ருஷ்டாந்தம்
இப்படி சாதிப்பாய் ஆகில் -அது முடியாது -ஏன் என்றால் – தீபம் -பார்ப்பவன் ஒருவன் -ஒன்றாக தெரிவது சாத்ருசம்-அதுவே இது –
இங்கு பார்க்கிற ஆத்மாவே மாறினால் எப்படி -போன நிமிஷ ஞானம் வேறே ஆத்மா வேறே உனது பக்ஷம் படி –
க்ஷண விஞ்ஞானம் -சந்தானம் -சந்தானி புள்ளி -கோக்க வேண்டும் -அவயவம் சமுதாயம் –இரண்டா ஒன்றா -கேள்வி –
சந்தானி சந்தானம் -ஞானம் ஞானத்து ஆஸ்ரயம் இரண்டு வருமே -ஞானமே ஆத்மா பக்ஷம் பழிக்காதே
ஒன்றானால் -ஸ்மரணம் வராதே –
நிலையாக நின்றால் தானே நினைக்க முடியும் -அனுசந்தாயி நிலைக்கவராக இருக்க வேண்டுமே –
அனுபவிதா-அனுசந்தாதா -வேறே வேறே வ்யக்தி -உன் மதத்தில் –தெரியவே வாய்ப்பு இல்லை –
சாத்ருசம் வந்தால் தானே பிரமம் வரும் -வந்து போகும் சந்தான ஆஸ்ரயம் -ஞான தொடர்ச்சி இருப்பிடம்
என்றால் ஞானம் வேறே ஆத்மா வேறே -என்றதாகுமே -க்ஷணிக வாத நிரசனம்

அடுத்து -ஞானம் நித்யம் -அத்வைதி -அதுவே ஆத்மா -பரமாத்மா -ஞானம் -ப்ராக் அபாவம் –
முன்னால் இருக்கும் நிலை இல்லாதபடியால் –
ப்ரத்வம்சா அபாவம் -இருந்தது இப்பொழுது இல்லை -பானை துவம்சம்
அத்யந்த அபாயம் -ஆகாச தாமரை -முயல் கொம்பு போல்வன
ஞானம் அநித்தியம் என்பது சித்திக்காது -தானே பிரகாசிக்கிறபடியால் -தானே தோன்றுகிறபடியால்
ஞானத்துக்கு ப்ராபக பாவம் இல்லை -இன்மை பாவம் -தன்னால பிறராலோ கிரகிக்க முடியாதே –
இன்மை கிரகிக்க இன்மை இருக்க வேண்டுமே -இருப்பதால் இன்மை அபாயம் இல்லையே -க்ராஹ்யம் இல்லை ஆகுமே
நான் இல்லாத போது கிரகிக்கலாமா என்றால் யார் கிரகிப்பார் -க்ராஹகம் இல்லை –
இன்னும் ஒருவர் கிரகிக்கிறார் என்றால் ஜடமாகுமே -தனது அபாவம் வேறு ஒருவரால் கிரகிக்க முடியாதே-
இன்னொருவர் ஞானம் நமது பாஷையில் -அத்வைதி இன்னும் ஒரு ஞானத்துக்கு விஷயம் என்பார் –

ப்ராபக பாவம் இல்லை உத்பத்தி இல்லை ஆகவே நித்யம்
மேலே -உத்பத்தி இல்லை என்றாலே மற்ற ஐந்து விகாரங்களை இல்லையே –
ஜென்மம் இல்லா விட்டால் அஸ்தி பரிணமதே இத்யாதிகளும் வராவே –
நாநாத்வமும் தள்ளப்பட்டது -கட ஞானம் வெள்ளை ஞானம் —
யத்ர அஸ்தித்வம் முதலான பாவ விகாரங்கள் உண்டோ அங்கு தானே உத்பத்தி உண்டு
எங்கு உத்பத்தி இல்லையோ அங்கு இவை இல்லையே
பலவாக உள்ள தன்மை இருந்தால் உத்பத்தி இருக்க வேண்டுமே

ஞானத்து விஷயம் ஆனால் -ரூபம் நிறம் -அது ஞானத்தின் தர்மம் ஆகாதே –
யத்ர யத்ர ஞான விஷயத்வம் -தத்ர தத்ர சமவித்து தர்மம் ஆகாதே
அதே போலே -விகாரம் -பேதங்கள் -இவை ஞானத்துக்கு விஷயம் தானே -ஞானத்துக்கு தர்மம் ஆகாதே –
ஞானத்துக்கு பேதமோ விகாரமோ இல்லை -சஜாதீய விஜாதீய ஸூ கத பேதங்கள் இல்லை
சஜாதீயம் -வேறே வேறே மரங்கள் -ஒரே ஜாதி
விஜாதீயம் -மலை -மரம் –
ஸூ கத பேதம் -மரத்தில் உள்ள கிளை இலை பழம்
மூன்று பேதங்களும் உண்டு சம்ப்ரதாயம்
ஞானம் உடைமை -ஆத்மா பரமாத்மா -பேதம் உண்டே
விஜாதீயம் -ப்ரக்ருதி -பரமாத்மா
ஸூகத -திருமேனியும் குணங்களும் உண்டே
நலம் உடையவன் –ஸூகத
அயர்வரும் அமரர்கள் அதிபதி -சஜாதீய
மயர்வற மதி நலம் -விஜாதீய –
மூன்றுமே முதலிலே காட்டி அருளினார்
அத்வைதி -மூன்று பேதங்களும் இல்லை -தவிர்ந்து வேறே இல்லை நிர்விசேஷ சின் மாத்திரம் ப்ரஹ்மம்
உத்பத்திமத்வம் நிவ்ருத்தி யானால் வியாப்தமான நாநாத்வமும் சித்திக்கும்
விபாகம் இருந்தால் பிறப்பிலியாக இருக்க முடியாதே
யாருமே கிரகிக்கா விடில் வஸ்துவே இல்லையாகும்

ஞானம் உண்டு -ஞானத்துக்கு தர்மம் இல்லை -என்பர் அத்வைதி –
நிகில பேத விகல்ப–நீர் தர்ம -பிரகாச மாத்ரமாய் இருப்பதாய் -பிரகாசத்தை உடையது இல்லை –
தத்தாக இருக்கும் தத்வமாக இருக்காது
கூடஸ்த-விகாரம் அற்ற – நித்தியமான – சம்வித் ஞானமே ஆத்மா -அதுவே பரமாத்மா -அத்வைதி –
வேதாந்தத்தின் கருத்து என்கிறார் -வேதாந்த சப்தம் சொல்லாது -தாத்பர்யம் என்பர் –
ஞானாந்த கோசாரம் -அறியப்படுவதாக இருக்க முடியாதே -வேறு ஒரு ஞானத்துக்கு விஷயம் ஆகாதே –
வேதாந்தம் நினைக்கும் பேதம் -புரிந்தால் அத்வைதி ஞானம் -ப்ரஹ்மம் சத்யம் -ஜகத் மித்யா -என்பர்

எந்த சம்பவித்தானது -உண்டாகாதோ -அஜத்வம் -வேறு ஒரு ஞானத்தால் அறியப்படாத அமய -அநந்தம் -அழியாததாய் -விநாச ரஹித்யம் –

சம்வித் -அஜா-பிறக்காதது அமேயர் வேறு ஒன்றால் அறிய முடியாதது -ஆத்மா இதி -வேதாந்த வாக்ய தாத்பர்யம் இதுவே –
ஞானம் மாத்திரம் -நிர் விசேஷம் –
வேறு ஒன்றைக் கல்பிக்க வேண்டாம் –
ஞானம் -கொண்டே பிரமாணம் அறிகிறோம் -கடம் படம் பிரமேயம் -லௌகிகத்தில்-
இந்திரிய ஜன்ய ஞானம் பலம் -கட ஞானம் பலம் -பராக் அர்த்தம் –
வேதாந்தத்தில் இதுவே-ஞானமே – ப்ரமேயம் என்பர் – வேதாந்தம் பிரமாணம் –
அமேயா-என்பது -கருத்தால் -சப்தம் சொன்னதாக சொன்னால் பிரமாணம் ப்ரமேயம் இரண்டையும் ஒத்துக் கொள்ள வேண்டுமே –
நிர்விசேஷ -நித்ய விஞ்ஞானமே ஆத்மா -அத்வைதிகள் -புத்தன் க்ஷணிக விஞ்ஞானமே ஆத்மா என்பான் –

ஞாதா இல்லை ஜேயம் இல்லை ஞானம் மாத்திரமே – கடம் அஹம் பார்க்கிறேன் -சொல்ல மாட்டார்கள் -மூன்றையும் சொல்லாமல்
ஞானம் மாத்திரம் உண்மை -மற்ற இரண்டும் மீதியை -ஞானமே ஆத்மா -நிர்விசேஷ சீன மாத்திரமே ஞானம்
அஹம் -ஞானம் உடையவன்
அஹம் -அந்தக்கரண -ஞானத்துக்கு கோசாரம் -அவித்யையால் கடம் இத்யாதி பிரதிபலிக்கிறது –
அந்தக்கரணமும் கடம் இவை எல்லாம் மித்யை பொய்–அவித்யை பட்ட சிதறல் மறைந்து -அதுவே முக்தி -பலவாக தோற்றம் சம்சாரம் –
ப்ரத்யக்ஷத்துக்கு தேவையான இந்திரியம் -இவற்றுக்கு அதீனப்பட்டு மனஸ் -கண்ணுக்கு ஆட்பட்டு காண்கிறது உண்மை இல்லை –
பிரதிபலிப்பது போலே -இவை -அவித்யை காரணம் -மனம் -உபாதி -கண்ணாடி போலே -அனைத்தும் மித்யை

ஆத்மாவை அறிந்தவர் -அலௌகீகம் அவைதிக தர்சனம் -என்பர் உனது அத்வைதத்தை
சம்வித் -தர்மம் பிரசித்தம் -தர்மி இல்லையே –
எப்படி இருக்கும் -ஆச்ரயித்து இருக்கும் ஆத்மாவுக்கு -தானாகவே பிரகாசிக்கிப்பித்துக் கொண்டே இருக்கும் –
ஞான -அவனது -அனுபூதி பர்யாய சொற்கள் -கர்மா -படம் கடம்-பலத்தை நறுக்கினேன் -படத்தை பார்த்தேன்
இரண்டாம் வேற்றுமை உள்ளது கர்மா -முதல் வேற்றுமை கர்த்தா
தர்மம் வேறே தர்மி வேறே –
சர்வ பிராண -உயிர் உள்ள அனைவரும் இப்படியே சொல்வர் -சர்வ பூத ராசியும் -அனுபவம் இப்படியே இருக்கும் –
நான் இதை அறிகிறேன் -ஞானம் ஏற்படும் இருக்கும் அழியும் -நித்யம் இல்லை நீ சொன்னபடி
உத்பத்தி கண்ணுக்கு தெரியுமே -சுகம் துக்கம் வரும் போகும் அதே போலே ஞானமும் -ப்ரத்யக்ஷ சித்தம் –
தூங்கும் பொழுது ஞானம் இல்லை -பின்பு ஸ்மரிக்கிறோமே -அநித்தியம் வரும் போகும் -ஆத்மா நித்யம் -எப்படி இரண்டும் ஒன்றாகும்

மரணம் -நரக வேதனை -கர்ப்ப விசனம் -மூன்றாலும் மறக்கலாம் -பழைய ஜென்ம வாசனை இல்லையே –
யாவது அனுபூதி எல்லாம் ஸ்மரிக்க–சம்ஸ்காரம் -மனப்பதிவு -இந்த மூன்றாலும் விச்சேதம் -ஆகும் –
அத்வைதி தூங்கும் பொழுதும் ஞானம் உண்டு ஆனால் மறக்கிறோம் என்பான் -இது சரி இல்லை –
முன் சொன்ன மூன்றாலும் தான் மறக்கிறோம் -ஆகவே தூங்கும் பொழுது ஞானம் இல்லை -அனுபவம் இல்லை –

ஞானம் -விஷயம் -அந்தக்கரணம் தொடர்பு வந்தால் தான் சம்ஸ்காரம் ஏற்படும் –
தூங்கும் பொழுது விஷயமும் அந்தக்கரணமும் இல்லை அதனால் சம்ஸ்காரம் இல்லை –
ஞானம் இருந்தாலும் ஸ்மரிக்க முடியவில்லை என்பான் –
விஷயம் இல்லை -அந்தக்கரணம் நாசம் அதனால் நினைவு வரவில்லை என்பான்
இது பொருந்தாது –
ஞானம் இருந்தாலே பிரகாசமாக தானே இருக்கும் -ஸ்வயம் பிரகாசம் தானே
நீ சொல்வது சரி இல்லை -ஸ்வயம் பிரகாசம் வேறு ஒன்றை எதிர்பார்க்காதே –
மூன்று சேர்க்கை -தனி தனி ஸம்ஸ்காரத்தை ஏற்படுத்தும் -ஞானம் ஜேயம் ஞாதா –
கடம் அஹம் அறிகிறேன் த்ரிதயம் -பார்த்த பார்த்த அம்சம் தனித்தனியே சம்ஸ்காரம் -ஏற்படுத்து ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆகும்
அஹம் சொல்லுக்கு மனம் என்று சொல்லி அது இல்லை என்கிறாயே
நான் தூங்கும் பொழுது வைத்த மாத்திரை தூங்கி எழுந்த பின் இல்லை என்றால்
நான் -முன்பும் தூங்கும் பொழுதும் அப்புறமும் இருப்பதால் -நான் நித்யம் -இதுவே அஹம் அர்த்தம்

கட பட ஞானம் அநித்யமாகவே இருக்கட்டும் -வேறு ஒரு ஞானம் நித்யம் அதை ஆத்மா என்கிறேன் என்பான் –
நிர் விஷய நிராசரயமாய் -விஷயம் இல்லாமல் -கர்மா கர்த்தா இரண்டும் இல்லாமல் -சம்வித் -ஞானம் என்பதே இல்லையே –
ப்ரத்யக்ஷத்தில் இல்லை என்றால் அனுமானிக்கலாம் என்றால் -முடியாது –
சப்தார்த்தம்–பிதா என்றாலே புத்ரன் இருக்கும் சம்பந்தி எதிர்பார்க்கும்
ஞானம் சொன்னால் -கர்மா கர்த்தா தேடும் எத்தை பற்றி யாருடையது வருமே
இல்லாமல் பிரயோகம் இல்லையே –
ஞா தாது பிரயோகப்படுத்தினால் இரண்டும் கூடவே இருக்க வேண்டுமே –
சம்வித் ஞானம் பிரகாசம் அனுபூதி சப்தங்கள் சம்பந்தத்தை எதிர்பார்த்தே இருக்கும்
சதம்வந்தி சப்தம் தானே இது –

தர்மி ஞானம் -தர்ம ஞானம் -தானே விளங்கும் தனக்கு விளங்கும் -ஸ்வரூப ஞானம் -எல்லாத்தையும் விளக்கும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா வராது -கர்மா மட்டும் இருக்கலாம் -ஞானத்துக்கு விஷயம் உண்டு –
ஆஸ்ரயம் இல்லை -ஆனால் விஷயம் ஆத்மா -நான் நான் என்று ஆத்மா தானே விஷயம்
நான் சொல்லும் பொழுதே ஏகத்துவம் -நாங்கள் இல்லை நான் ஒருவன் தோன்றும் –
அடுத்து நான் எனக்கு அனுகூலமானவன் என்றும் தோன்றும் -வேண்டியவன்
அடுத்து நான் வெளியில் இல்லை உள்ளே -பாராக்த்வம் இல்லை -இப்படி மூன்றும் உண்டே

ஆஸ்ரயம் இல்லாமல் இருந்தாலும் விஷயம் இருக்குமே -இரண்டும் ஞானம் -ஒன்றுக்கு ஆஸ்ரயம் இல்லை -இரண்டா
கோ சப்தம் மாடு பூமி வாக்கு மூன்றையும் குறிக்கும் -வாக்கு சொல்லும்பொழுது நான்கு கால்கள் இருக்க வேண்டாமே
அதே போலே ஞானம் இரண்டு பிரயோகத்தில் இந்த இரண்டும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா இல்லை கர்மா உண்டு
தர்ம ஞானத்துக்கு இரண்டும் உண்டு என்பதில் விருத்தம் இல்லையே -சம்பந்தி –அசம்பந்தி -இரண்டும் இந்த தர்ம தர்மி ஞானங்கள் –
ஞானம் நித்தியமாக இருந்தால் அதுக்கு சம்ஸ்காரம் ஏற்படுத்தி ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆக வேண்டுமே

நான் குடத்தை பார்த்தேன் -கர்த்தா நான் ஆத்மா -ச கர்ம -சேர்ந்தே ஞானம் இருக்கும் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–ஸ்ரீ வேதாந்த தீப–மங்கள ஸ்லோகங்கள்–

November 29, 2021

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

வேதங்களும் அவற்றின் இறுதியான வேதாந்தமும்
உலகம் யாவும் நன்றாய் இருக்க அவச்யமான ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன.

இதன் மூலம், ஸ்வாமி அனைத்து வேதங்களின் நோக்கமே முழு சமுதாயத்தின் மங்களமே என அறுதியிடுகிறார்.
வேதாந்தத்தைக் கற்பதன் மூலம் ஒரு சரியான பொருளைப புரிந்து கொள்ள முடியும்.

வேதாந்தத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதை ஸ்வாமி மறுக்கிறார்.

ஒரு தனிப்பட்ட ஆத்மா, பரமாத்மா இரண்டுமே துல்யமாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும்.
அதன்பின், ஆத்மா, பரமாத்மா இரண்டைப் பற்றிய அறிவோடு
ஒவ்வொருவரும் தந்தமக்குள்ள ஸமூஹ நிலை,
வகுப்புக்கேற்ப மனோபாவத்தோடு செயல் முறையில் ஈடுபட வேண்டும்.
இந்தச் செயல்பாடே பக்திக்கு வழி வகுக்கும்.

உலகம் முழுதுக்கும் மங்கள ஹேதுவானதால்
வேதாந்தம் மக்களை முற்றும் துறத்தல் போன்ற தீவிர துறவு நிலைகளை
ஏற்கச் சொல்வதாக நினைக்கவில்லை.

ப்ரத்யக்ஷ வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இலக்குமுண்டு என்பதை மறக்கலாகாது.
ஒரு துறவிகூட, உலகியலில் உள்ள பிறர் வாழ்வோடு இயையாமல் இருக்க முடியாது.

சங்கரர் போன்றோர் உலகியல் ஜீவனத்துக்கு ஒரு ப்ரத்யக்ஷ வாழ் முறையும்,
ஆத்மோஜ்ஜீவனத்துக்கு பந்தங்கள் அறுபட்ட இன்னொரு முறையையும் இருவேறு வாழ்வுகளாகக் கண்டனர்.

இதில் முன்னது தாழ்ந்த நிலை,
பின்னது உயரிய நிலை என்று அபிப்ராயம்.

அசேஷ ஜகத் –நான்கு வித புருஷார்த்தங்களையும் –
ஒன்றில் பற்று கொண்ட பலவகைப்பட்ட அதிகாரிகளும் –

ஹித அநு சாசன -ஹிதத்தை தெளிவாகவும் விவரமாகவும் சொல்லும் வேதங்கள்
முக் குணத்தவர்களுக்கும் வேதம் உபதேசிக்கும் –

ஸ்வாமி வாழ்க்கையை இப்படி இரு கோடுகள் போட்டுப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.

மாறாக, ப்ரத்யக்ஷ உலகியல் வாழ்வும், உஜ்ஜீவனம் தேடும் ஆன்மீக வாழ்வும் ஒன்றெனக் கருதினார்

பந்தங்களினின்று விடுபட ப்ரத்யக்ஷ வாழ்வை அவஸ்யம் விடவேண்டும் என்று அவர் கருதவில்லை.
மாறாக,
இவ்வாழ்க்கையை வாழ்ந்தபடியே நம் லக்ஷ்யத்துக்குச் செயல்பட வேண்டும்.

ஒரு வேதாந்திக்கும் ஒரு ஞானமற்றவனுக்கும் உள்ள வேறுபாடு, மனத்தளவில் ஆனதே.

ஒரு வேதாந்தி ஆத்மா பரமாத்மா இரண்டையும் புரிந்து கொண்டு செயல்படுகிறார்,

ஒரு ஸாமான்யர் வெறும் உணர்ச்சிகள், ஆசைகள், குழப்பத்தோடு செயல்படுகிறார்.

ஆத்மா பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த சிந்தையோடு
தார்மீகமாக இலக்கில் வாழ்க்கையை நடத்துபவர்க்கு தெய்வீகக் காதல்,

பக்தி தானே ஏற்பட்டு அவரை எம்பெருமானிடம் அழைத்துச் செல்கிறது.
பக்தியே வேதாந்தத்தின் இறுதிச் செய்தி.

அபிசாராதி யாகங்களைச் செய்து நாளடைவில் புத்தி மாறி
சாத்விகர்கள் ஆவரே

இவ்வாறு சகல ஜனங்களுக்கும் வேதம் வாத்சல்யம் காட்டி ஸ்ருதி –
அழிவற்ற நித்ய அபவ்ருஷேயத்வத்தால் -சுடர் மிகு ஸ்ருதி –

ஸ்ருதி நிகரம் -வேத சமூகம் -சிரஸீ – வேதாந்தம் –
அயமர்த்த சமதி கத –சொல்ல இருக்கும் பொருள் நன்கு அறியப் படுகிறது –

இவை ஜீவ பரமாத்ம யாதாம்ய ஞான பூர்வக –
சேஷி சேஷ சம்பந்த ஞானமும்
சகலமும் ப்ரஹ்ம சரீரம் –
அவன் உள்ளே புகுந்து நியமிக்கிறார் என்ற ஞானமும் வருமே –

வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக –
யாதாம்யா ஞானத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும்

வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் கொண்டு -உபாசனம் –
த்யான அர்ச்சன ப்ரணாமங்கள் -செய்து ப்ரஹ்ம பிராப்தி அடைய உபதேசிக்கும் –

கர்ம அனுஷ்டானம் ப்ரஹ்ம உபாசன இச்சையைப் பிறப்பிக்கும் –

கர்ம யோகம் ஒன்றாலேயே –
ஞான யோகம் ஒன்றாலேயே –
ப்ரஹ்ம பிராப்தி என்பது ஸ்ரீ பாஷ்யகாரர் பக்ஷம் இல்லையே

நாம் செய்யும் கர்ம யோகம் பகவத் ஆராதனம் ஆகும் –
அதனால் ரஜஸ் தமஸ் அழிந்து சத்வம் வளர்ந்து பக்தி பிறந்து
பக்தி யோகமாக வளர்ந்து மோக்ஷ சாதனம் ஆகுமே –

எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் வைக்கும் உறுதியான அன்பே பக்தி.
இதுவே த்யானம், தொழுகை, ஸ்மரணம், கீர்த்தனம் என வெவ்வேறு நிலை அடைகிறது.

ஸ்வாமியின் திருவுளத்தில் அறியப்படாத ஒன்றின்மேல் அறிவுணர்வின்றிச் செய்வது பக்தி அன்று.

ஞானியர் சிலர் பக்தி ஞானம் இரண்டும் வெவ்வேறு பாதைகள் போலக் காட்டினர்.

சிலர் தம் ப்ரத்யக்ஷ அநுபவத்திலிருந்து பக்தியைவிட ஞாநமே உயர்ந்தது என்றும் கருதுவர்.

ஆனால் ஸ்வாமிக்கு பக்தி ஞானம் இரண்டும் ஒன்றே.
ஞானமே பக்தியாக முதிர்கிறது,
அன்பே மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது.
ஆழ்ந்த அன்பு முதிர்ந்து தளைகளிலிருந்து விடுவித்து எம்பெருமானுடன் பிணைக்கிறது.

எம்பெருமானின் இணையடித் தாமரைகளை அடைவிக்கும் மங்களமே
வேதாந்தம் சொல்லித்தரும் பாடம்.

பரம புருஷ சரண யுகள -“இணை யடித் தாமரைகள்” என்பதால்
ஸ்வாமி ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்டவன் என உணர்த்துகிறார்.

எத் தடையுமின்றி எல்லா வகையிலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதே பந்தத்திலிருந்து விடுதலை.
அன்பின் மகிழ்ச்சி கைங்கர்யத்தில் உள்ளது.
உகப்பைத் தருவது ஒன்றே நோக்காய்,
பிரதிபலன் எதிர்பாராமல் பிறர் மகிழ்ச்சிக்காகவே செய்யப்படும் பணியே கைங்கர்யம்.

ஈஸ்வரானுபவமானது
அவனுக்கு அவன் உகக்கக் கைங்கர்யம் செய்யும் அவா மிகுதலே.
கைங்கர்யம் என்பது கட்டாயத்தின் பேரிலன்று,

ஈஸ்வரானுபவத்தினாலே தானே கிளர்ந்தெழும் அவா.

இக்கருத்துகளின் மூலம் ஸ்வாமி செயல்பாடு ஆன்மிகம் இரண்டையும் வெகு எளிதாகப் பிணைக்கிறார்.
ஒருவரின் செயல்பாடு அவரது ஞானம், அநுபவம் இரண்டினாலேயே அமைகிறது

ஒருவரின் ஞானம் பிழையற வளர்க்கப்பட்டால்,
அவரது அநுபவமும் முழுக்க ஈச்வராநுபவமாயின் செயல்பாட்டுக்கு அஞ்சவோ அதைத் தள்ளவோ வேண்டா.

ஆகவே ஸ்வாமியின் திருவுள்ளப்படி பந்த ஜீவனத்தில் செயல்பாடோ அல்லது மோக்ஷமோ
இரண்டிலுமே (கைங்கர்யமாகிற) செயல்பாடு இருக்கவே செய்கிறது.
கர்மம் இல்லாமல் இல்லை, செயல் இன்றி இருப்பதுமில்லை.

அத்யர்த்த ப்ரிய-பூர்வக த்யான அர்ச்சன பிரணாமாதிகள் -ஆதி சப்தம் -திரு நாம சங்கீர்த்தனம் -யஜனம் –
இவை அனைத்தும் பிரதிபந்தகங்களையும் போக்க வல்லவை –
தத் பிராப்தி பலம் -இவற்றுக்கு உண்டே

இந்த ஆரம்ப வாக்யங்களால் ஸ்வாமி ஆத்மா, இறைவன், பந்தம், மோக்ஷம், அன்பு, ஞானம், கர்மம் (செயல்பாடு), கைங்கர்யம்
ஆகிய யாவற்றையும் ஒரு கோப்புக்குள் கொணர்ந்து அவை ஒன்றுக்கொன்று
இயல்பாகத் தொடர்புடையவை என்பதை அழகாகக் காட்டுகிறார்.

ஆத்மாக்கள் சரீர பயத்தில் உள்ளன. தேவர், மனிதர், என்பன போன்ற உயிர் வாழிகளாய் சரீரத்தில் அவை படும் துயர்களால்
சரீரத்தை ஆத்மா என்று மயங்கியுள்ளன.
இம்மயக்கமே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்.

சரீரத்தை ஆத்மா என்று மயங்குவதே சரீரம் எடுக்கவும் துயரப்படவும் ஹேது. துயரத்தால் பயம்.

வேதாந்த வாக்யங்கள் இவ் வச்சத்தைப் போக்குவதிலேயே உத்பத்தி ஆகின்றன.

அவை ஆத்மாவின் உண்மை சாரம்,
இறைவனின் உண்மை நிலை,
ஈச்வரனை வணங்கும் வகை,
ப்ரஹ்மத்தை உணர்வதின் பேரின்பம் இவற்றை அறிவுறுத்தி இவ்வச்சத்தைப் போக்குகின்றன.

அஸ்ய ஜீவாத்மா –பரமாத்மாவுக்கு சரீர பூதன் -சேஷ பூதன் -அவனில் வேறு பட்டவன் –
இத்தால் ஐக்கியம் மறுக்கப் படுகிறது

அநாதி அவித்யா சஞ்சித -என்று
அவித்யை அடியாகவே சரீரம் –

கர்ம ப்ரவாஹ ஹேதுக-ப்ரஹ்மாதி ஸூர நர ஸ்தாவராத்மக சதுர்வித தேக பிரவேச க்ருத –
தத் தத் ஆத்ம அபிமான ஜெனித அவர்ஜனீய பவ பய வித்வம்ஸனாய –
விலக்க முடியாத சம்சார பயத்தைப் போக்க
தேக வ்யதிரிக்த ஆத்ம ஸ்வரூப -ஞான ஆனந்த லக்ஷணம் -ஸ்வ பாவம் –
அநந்யார்ஹ சேஷ பூதன்-என்பதை அறிந்து
தத் அந்தர்யாமி பரமாத்ம ஸ்வரூப -சர்வ சேஷி -ஸ்வ பாவம் -ஆஸ்ரித ஸூலபன் -சரணாகத வத்சலன் -என்பதையும் அறிந்து
தத் உபாசன -தத் பல பூத -ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாக பூர்வக
அனவதிக அதிசய ஆனந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே–அநு சாஸந -சப்தமும் ஞாபநே-சப்தமும் ஒன்றே –

ஸ்வாமி தொடங்கும் போதே
வேதாந்தத்தின் நோக்கம் ஸர்வ ஜன சுகம் என்பதை விளக்கினார்.

வேதாந்தம் ஆத்ம ஞானத்தைப் போதித்து
சரீர பயத்தையும் துயரத்தையும் நீக்குகிறது.

துயரத்தை மறுப்பது மட்டுமன்று,
பேரின்பத்தை அநுபவிப்பதும் வேதாந்தத்தின் பயனாகும்.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள்–/ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய அஷ்ட திக் கஜங்கள் —

November 29, 2021

ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள்–

1–ஸ்ரீ சொட்டை நம்பி -ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருக்குமாரர் –இவரது திருக்குமாரர் ஸ்ரீ என்னாச்சான்-அவரது திருக்குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்
2–ஸ்ரீ புண்டரீகர் -ஸ்ரீ பெரிய நம்பி திருக்குமாரர்
3–ஸ்ரீ தெற்கு ஆழ்வான் -ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குமாரர்
4–ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்-ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக்குமாரர்
5–ஸ்ரீ ராமானுஜன் -ஸ்ரீ பெரிய திருமலை நம்பி யுடைய திருக்குமாரர்- ஸ்ரீ திருமலை நம்பி என்ற இவரது திருக்குமாரரும்

6–ஸ்ரீ கூரத்தாழ்வான்-அவரது திருக்குமாரர் -ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ஸ்ரீ ராம பட்டர்
7–ஸ்ரீ முதலியாண்டான் -அவரது திருக்குமாரர் -ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
8–ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
9–ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான்
10–ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்

11–ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்
12–ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
13–ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
14–ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
15–ஸ்ரீ அனந்தாழ்வான்

16–ஸ்ரீ மிளகு ஆழ்வான்
17–ஸ்ரீ நெய்யுண்டாழ்வான்
18–ஸ்ரீ சேட்டலூர் சிறிய ஆழ்வான்
19–ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான்
20–ஸ்ரீ கோயில் ஆழ்வான்

21–ஸ்ரீ உங்கள் ஆழ்வான்
22–ஸ்ரீ ஆரண புரத்து ஆழ்வான்
23 –ஸ்ரீ எம்பார்
24–ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்
25–ஸ்ரீ கணியனூர் சிறிய ஆச்சான்

26–ஸ்ரீ ஈச்ச்சம்படி ஆச்சான்
27–ஸ்ரீ கொங்கில் ஆச்சான்
28–ஸ்ரீ ஈச்சம்படி ஜீயர்
29–ஸ்ரீ திருமலை நல்லான்
30–ஸ்ரீ சட்டாம்பள்ளி ஜீயர்

31–ஸ்ரீ திரு வெள்ளறை ஜீயர்
32–ஸ்ரீ ஆட் கொண்ட வல்லி ஜீயர்
33–ஸ்ரீ திரு நகரி பிள்ளான்
34–ஸ்ரீ காராஞ்சி சோமாஜியார்
35–ஸ்ரீ அலங்கார வேங்கடவர்

36–ஸ்ரீ நம்பி கருந்தேவர்
37-ஸ்ரீ சிறு புள்ளி தேவராஜா பட்டர்
38–ஸ்ரீ பிள்ளி உறாந்தை உடையார்
39–ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
40–ஸ்ரீ பெரிய கோவில் வள்ளலார்

41–ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
42–ஸ்ரீ ஆசூரிப் பெருமாள்
43–ஸ்ரீ முனிப் பெருமாள்
44–ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
45–ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்

46–ஸ்ரீ மாற்று ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான்
47–ஸ்ரீ சோமாசியாண்டான்
48–ஸ்ரீ ஜீயர் ஆண்டான்
49–ஸ்ரீ ஈஸ்வர் ஆண்டான்
50–ஸ்ரீ ஈயுண்ணிப் பிள்ளை ஆண்டான்

51–ஸ்ரீ பெரியாண்டான்
52–ஸ்ரீ சிறியாண்டான்
53–ஸ்ரீ குறிஞ்சியூர் சிறியாண்டான்
54–ஸ்ரீ அம்மங்கி ஆண்டான்
55–ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்

56–ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
57–ஸ்ரீ தொண்டனூர் நம்பி
58–ஸ்ரீ மருதூர் நம்பி
59–ஸ்ரீ மழுவூர் நம்பி
60–ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி

61–ஸ்ரீ குருவை நம்பி
62–ஸ்ரீ முடும்பை நம்பி
63–ஸ்ரீ வடுக நம்பி
64–ஸ்ரீ வங்கீபுரத்து நம்பி
65–ஸ்ரீ பராங்குச நம்பி

66–ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
67–ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
68–ஸ்ரீ உக்கலம் அம்மாள்
69–ஸ்ரீ சொட்டை அம்மாள்
70–ஸ்ரீ முடும்பை அம்மாள்

71–ஸ்ரீ கொமாண்டூர்ப் பிள்ளை
72–ஸ்ரீ கொமாண்டூர் இளையவல்லி
73–ஸ்ரீ கிடாம்பி பெருமாள்
74–ஸ்ரீ காட்டுப் பிள்ளான் –

———————

1-ஸ்ரீ சொட்டை நம்பி தனியன்
மகரே சைகபாத்யேச யாமுநாச்சார்ய நந்தநம்
கூர நாதோ குரோ ஸிஷ்யம் ஸேவே ஸூப குணார்ணவம் –

தாய் பூரட்டாதி திரு அவதாரம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரார்
இவற்றால் தனக்கு ஸ்ரீ பரமபதம் நிச்சயம் -அங்கு சென்றாலும் ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகம்
ஸ்ரீ நம்பெருமாள் திரு முகம் போல் குளிர்ந்து இரா விடில் அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே திரும்புவேன் என்றாராம்
ஸ்ரீ பராசர பட்டர் போல் இவரும் இவ்வாறு அருளிச் செய்தார் என்பர் –
இவருடைய திருக்குமாரர் -ஸ்ரீ என்னாச்சன் -இவர் திருக்குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்

——-

2-ஸ்ரீ புண்டரீகர்
இவரை ஸ்ரீ பெரியநம்பி திருக்குமாரர் -ஸ்ரீ அத்துழாயின் திரு சகோதரர் –
ஆடி உத்தராடம் திரு அவதாரம் -ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்

இவர் தனியன் –
ஸூசவ் மாஸ் யுத்தரா ஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸூதாம்
யதி ராஜாங்க்ரி ஸத் பக்தம் புண்டரீகாக்ஷம் ஆஸ்ரயே –

இவர் ஸஹவாஸ தோஷத்தால் போகக்கூடாது இடம் போக
ஸ்ரீ உடையவர் நீர் நம்மை விட்டாலும் நான் விட்டேன் என்று தாமே அங்கு சென்று திருத்திப் பணி கொண்டார்

————–

3-ஸ்ரீ தெற்கு ஆழ்வான்
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி உடைய திருக்குமாரர் –காஸ்யப கோத்ரம் -ஆடி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ தேவகிப் பிராட்டியின் திரு சகோதரர்

கர்கடே ஸ்ரவணே ஜாதம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
காஸ்ய பாந்வய ஸம் பூதம் நாராயண குரும் பஜே

இவருக்கு அவ்வளவு ஆசாரம் கிடையாது -இவருக்கு ஸ்ரீ கோளரி ஆழ்வான் நண்பர் இருந்தார்
நாம் குளிப்பதால் பாபங்கள் போகாது -ஸ்ரீ சிங்கப்பிரானின் ஸ்ரீ சக்ராயுதத்தால் மட்டுமே
பிரதிபந்தங்கள் போகும் என்ற வார்த்தை கேட்டு ஸ்ரீ பட்டர் மகிழ்ந்தார்

———————

4-ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்

ஸ்ரீ திருமாலை ஆண்டான் உடைய திருக்குமாரர்
இவருக்கு ஸ்ரீ பெரியாண்டான் என்ற திரு நாமமும் உண்டாம்
காஸ்யப கோத்ரம்
சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம் திரு அவதாரம்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகர் திருக்கோயில் புரோகிதர்

இவர் தனியன்
மாலா தார குரோ புத்ரம் ஸுந்தர்ய புஜ தேசிகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் வந்தே வர கருணா நிதிம்

இவருடைய மூதாதையர்களில் ஒருவர் -கண்ணுக்கு இனியான் -திருமாலிருஞ்சோலை அழகரை
ரக்ஷணம் பண்ணியதால் இந்த வம்சத்துக்கு ஆண்டான் பட்டப்பெயர் வந்தது
இவர் திரு சகோதரர் சிறியாண்டான்
இவர் வம்சத்தில் வந்த ஸ்ரீ யமுனாச்சார்யர் -ஸ்ரீ ப்ரமேய ரத்னம் கிரந்தம் சாதித்து அருளி உள்ளார்
இவர் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் சிஷ்யர்
யோக சாஸ்திரத்தில் மேதாவி –

————-

5-ஸ்ரீ பிள்ளைத் திருமலை நம்பி
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி உடைய திருக்குமாரர்
வைகாசி விசாகம் திரு அவதாரம்
இவருக்கு ஸ்ரீ ராமானுஜன் என்ற திரு சகோதரரும் உண்டு

தனியன்
வ்ருஷே விசாக ஸம் பூதம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
ஸ்ரீ சைல பூர்ண ஸத் புத்ரம் ஸ்ரீ சைலார்யம் அஹம் பஜே

இவருடைய சகோதரியின் கணவர் -ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் திருக்குமாரர் ஸ்ரீ அலங்கார வேங்கடவர்
இவரும் -74- சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர் -வரிசை -35-
இவருடைய மருமகன் புகழ் பெற்ற -ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாசாரியார் –

———-

6-ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

தனியன்
யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ஸ மஹாம் புதி
மந் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம்

ஸ்ரீ கண்ணபிரான் யது குல புரோகிதர் கர்க்கர் வம்சம்
ஸ்ரீ திருநாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் உடன் இருந்தவர்
அங்கே ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சிக்கு ஸ்ரீ சொட்டை அம்மாளுக்கு ஸ்ரீ பாஷ்யம் சாதித்தவர்
அவர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க உபதேசித்தவர்

எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் திருவரங்கம் எழுந்து அருளினார்
தம்மை ஆஸ்ரயித்த
மாறு ஒன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
அரண புரத்து ஆழ்வான்
ஆஸூரிப் பெருமாள்
முனிப் பெருமாள்
அம்மங்கிப் பெருமாள்
முதலானோரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தவர்
இவர்கள் யாவருமே 74 ஸிம்ஹாஸனாதி பத்திகளில் ஒருவராக நியமிக்கப் பட்டனர்

ஸ்ரீ மா முனிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீ பரவஸ்து பட்டர் ஜீயர் இவர் வம்சமே
இவருடைய வம்ஸ பரம்பரை
நடுவில் ஆழ்வான்
ஆழ்வான்
வைத்த மா நிதி
அழகிய மணவாளர்
வரதாச்சார்யர்
வேங்கடத்து உறைவார்
சடகோபாச்சார்யர்
போரேற்று நாயனார்
கோவிந்தாச்சார்யார்
கிருஷ்ணமாச்சார்யார்
ராமானுஜாச்சார்யார்
கோவிந்த தாஸர் அப்பர் என்ற பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயருக்கு பூர்வாஸ்ரம வம்சம்
அண்ணன் பரவஸ்து அழகிய மணவாளர்
பரவஸ்து நாயனார்
சடகோபாச்சார்யர்
வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயரானார் –

———–

ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ச மஹாம் புதி
மன் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம் –தனியன் –

இவர் கண்ணன் -யது வம்ச புரோஹிதரான கர்கர் வம்சத்தவர்
மேல்கோட்டையில் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளின காலத்தில் உடனே இருந்த ஸ்வாமி
இவர் ஸ்ரீ பாஷ்யம் சாதித்த காலத்தில் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீ சொட்டை அம்மாளும் கேட்டு
அற்புதமாக இருந்தது என்றார்களாம்
இவர்கள் இடம் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ மா முனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் வம்சத்தவர்
எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் ஸ்ரீ திருவரங்கம் எழுந்து அருளினார்

எம்பெருமானார் தன்னை ஆஸ்ரயித்த
ஸ்ரீ மாருதி ஆண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் -முதலானவரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தார்
இவர்கள் அனைவரும் -74- ஸிம்ஹாஸனாபதிகள்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ ஆழ்வான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ அழகிய மணவாளர் –
ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ வேங்கடத்து உறைவார்
ஸ்ரீ சடகோபாச்சார்யார்
ஸ்ரீ போர் ஏற்று நாயனார்
ஸ்ரீ கோவிந்தாச்சார்யார்
ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
ஸ்ரீ கோவிந்த தாஸப்பர் என்னும் ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் திருப் பேரானார் பிள்ளை லோகம் ஜீயர் –

————————————————-

7-ஸ்ரீ கோமடத்து ஆழ்வான்
இவர் ஸ்ரீ கோமடத்து பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவருடைய சிஷ்யர் காக்கைப்பாடி ஆச்சான் பிள்ளை
இவருடைய வம்சத்தில் தான் ஸ்ரீ மணவாள மா முனிகள் அவதாரம்
ஸ்ரீ மா முனிகளின் திருத்தகப்பனார் -திரு நாவீறுடைய தாஸர் அண்ணர்
ஸ்ரீ மா முனிகளின் பூர்வாஸ்ரம திருப்பேரானார் -ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் அண்ணனுடைய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர் –

—————

8-ஸ்ரீ பிள்ளைப் பிள்ளான் ஆழ்வான்
இவர் ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய சிஷ்யர்
பாகவதர்களைக் கடுமையாகப் பேசி அபசாரப்பட்டு –
ஸ்ரீ கூரத்தாழ்வான் தானே தானம் கேட்டு திருத்திப் பணி கொள்ளப் பட்டவர்
வீரசுந்தர ப்ரஹ்மராயர் இவர் திருமாளிகையை பிடிக்கவே தான் ஸ்ரீ பட்டர் திருக்கோஷ்டியூர் எழுந்து அருளி
நமக்கு திருப்பாவை தனியன் கிடைக்கப் பெற்றோம் –
புள்ளும் சிலம்பின் -காலை வேளையில் பறவைகளின் ஒலி நமக்கு மிகவும் உத்தேச்யம் என்பார்
குழந்தை தாய்ப்பால் பருகி அவள் முகம் நோக்குவது போல்
திருவடிகளை முன்னிட்டு திரு மேனி கல்யாண குணங்களில் ஈடுபடுவோம் என்பார்

————–

9-ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்

தனியன்
யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரேணதுர் நிஷ் க்ராம
தேவ நிததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத் ப்ரிய பாகி நேயம் வந்தே
குரும் வரத விஷ்ணு பதாபிதானம்

ஐவரும் ஸ்ரீ ராமானுஜரின் திரு மருமகன்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -திருக்காஞ்சியில் திருவவதாரம் -வரத விஷ்ணு என்றும் திரு நாமம்
ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனபதி-என்று ஸ்ரீ பாஷ்யகாரரால் பட்டம் சூட்டி அருளப்பட்டராவர்
திரு வெள்ளறை எங்கள் ஆழ்வான் இவருடைய சிஷ்யர்
நடாதூர் அம்மாள் எனப்படும் வாத்ஸ்ய வரதாச்சார்யர் இவருடைய திருப்பேரானார்
இவர் மாந யாதாத்ம்ய நிர்ணயம் -என்னும் கிரந்தம் அருளி உள்ளார்
திரு வெள்ளறையில் இவரது அர்ச்சா திருமேனி உள்ளது –

———-

10-ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ சங்க மாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத பரேண
நோ சேத் மமாபி யதி சேகர பாரதீ நாம் பாவா கதம் பவிது மர்ஹதி வாக் விதேயா

சீராரும் வெள்ளறையில் சிறந்து உதித்தோன் வாழியே
சித்திரை ரோஹிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார் புகழும் எதிராஜர் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பணியுமவன் வாழியே
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திரு அருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்து உரைப்போன் வாழியே
தரணியில் விஷ்ணு மதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்கள் ஆழ்வான் தாளிணைகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் அருளியவர் –
ஸ்ரீ நஞ்சீயர் ஆயர் தீவு இவர் கனவில் நாவல் பழம் கேட்ட ஐதிக்யம்
திரு நாராயண புரத்தில் இருந்தும் திரு வரங்கம் வந்த ஸ்ரீ பாஷ்ய காரருக்கு ஸ்ரீ பாஷ்யம்
எழுத உஸாத் துணையாக இருந்தவர் –
அதனாலேயே எங்கள் ஆழ்வான் என்று பெயர் இடப் பெற்றவர்
ஸ்ரீ பாஷ்யகாரரை விட 80 வயசு சிறியவர்
ப்ரமேய ஸங்க்ரஹம்
சங்கதி மாலா
கத்ய வியாக்யானம் எழுதியவர்
இவர் திருக்குமாரத்தி செங்கமல நாச்சியார்
இவர் மாப்பிள்ளை வரதாச்சார்யர் –

———–

11-ஸ்ரீ மிளகு ஆழ்வான்
வித்வத் பரிக்ஷைக்கு இவரை நீர் வைஷ்ணவர் ஆதாலால் நுழைய முடியாது என்ன-
ஸ்ரீ வைஷ்ணவர் என்று சொன்னதாலேயே கொண்டாடினவர்
வித்வான் ஆகையால் ஸ்ரீ முதலியாண்டானை வாதத்துக்கு அழைத்து தோற்று அவரை தோளில் சுமந்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் இவரை ஸ்ரீ உடையவர் இடம் கூட்டிச் சென்று ஆஸ்ரயிக்க வைத்தார்
திருவானைக்கா சென்று பகவத் வைபவம் பேசி திருத்திப் பணி கொள்வேன் என்று சொல்ல
அப்படி திருந்தினவர்கள் உண்டோ என்ன
நான் அனைவரையும் ஸ்ரீ மன் நாராயண சம்பந்திகளாகவே நினைக்கிறேன்
ப்ரக்ருதி சம்பந்திகள் அல்ல -அப்ருதக் ப்ரஹ்ம வஸ்துக்கள் இல்லையே என்பாராம் –

————————-

12-உக்கல் ஆழ்வான்
இவர் ஸ்ரீ ராமானுஜர் மடத்தில் பிரசாத கலம் எடுக்கும் கைங்கர்யம் பெற்றவர்

————-

13-ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
இவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சிஷ்யர் -போசள நாட்டில் இருந்து வந்தவர்
பசும் புல்லைக் கூட மிதிக்காத சாது
இட்டீரிட்டு விளையாடும் -வார்த்தையை ரசிப்பவர் –
கன்றுகள் உடன் விளையாடும் கண்ணன் மேல் மிகவும் பரவசப் பட்டவர்
சிறந்த அனுஷ்டானம் கொண்டவர் -உடம்பில் தழும்பு வரும் படி தொழுபவர்
மேனி சிறுத்து பெரிய ஞானம் கொண்ட சிறு மா மனுஷர் என்று ஸ்ரீ கூரத்தாழ்வானால் புகழப் பெற்றவர்
சத்யம் சத்யம் புனர் சத்யம் யதிராஜோ ஜகத் குரோ
ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந சம்சய -இவர் சொன்னதாகவும் சொல்வர்
ராமபிரான் தூது போக வில்லையே எதனால் என்று பட்டர் இடம் கேட்டவர் –
அனுப்புவார் இல்லையே -க்ஷத்ரியர் ஆகையால்
மன்மதனையும் சுப்ரமண்யனையயும் ராமனுக்கு அழகுக்கு ஒப்பாக சொல்லி ருஷி கரி பூசுகிறார்
என்று பட்டர் வாயால் கேட்கப் பெற்றவர்

—————

14-ஆட் கொண்ட வில்லி ஜீயர்

ஞான வைராக்ய சம்பந்தம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
சதுர்த்த ஆஸ்ரம சம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம் –

சித்திரை திருவாதிரை இவர் திரு அவதாரம்
ஸ்ரீ எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ முதலி ஆண்டான் திருக்குமாரர் ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
இவரை ஆஸ்ரயித்தார்
இவர் நஞ்சீயரை வணங்கி தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ருசி இல்லை என்றும்
பாகவதர்களைக் கண்டால் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அன்று தான் பகவத் ருசி ஏற்படுகிறது
என்று அர்த்தம் என்றும் தெரிவித்தார் –

———————-

15- ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்

ஸிம்ஹே ம்ருக ஸ்ரோத் பூதம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
த்ராவிடாம் நாய தத்வஞ்ஞம் குருகாதிபம் ஆஸ்ரயே –

த்ராவிட ஸாரஞ்ஞம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
ஸூ தியம் குருகேசார்யம் நமாமி சிரஸான் வஹம்

ஆவணி மிருக சீர்ஷம் திரு அவதாரம்
இவர் ஸ்ரீ பெரிய திருமலையின் திருக்குமாரர்
ஸ்ரீ ராமானுஜரின் அபிமான புத்திரர்
பிள்ளான் என்ற இவருக்கு திருக் குருகைப் பிரான் பிள்ளான் என்று ஸ்ரீ உடையவரே
திரு நாமம் சாத்தி அருளினார்

திருக்கோட்டியூர் நம்பிக்கும் திருக்குருகைப் பிரான் என்ற திரு நாமமும் உண்டே
இவர் சிறு புத்தூரில் எழுந்து அருளி சோமாசி ஆண்டான் இவர் இடம் மூன்று முறை
ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளினார்

அவர் இவர் இடம் தனக்குத் தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்று
கேட்ட பொழுது இவர் நீர் பாட்டம் பிரபாகரம் மீமாம்ஸை இவை அனைத்துக்கும் கர்த்தா
பாஷ்யம் வாசித்தோம் என்று மேன்மை அடித்து இராதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
என்று அருளிச் செய்தார்

ராமானுஜர் ஆணைப்படியே ஆறாயிரப்படி சாதித்து அருளி உள்ளார்
இவர் இடம் ஸ்ரீ எங்கள் ஆழ்வான் அருளிச் செயல்கள் அர்த்தம் கேட்டு அருளினார்
இவரே ஸ்ரீ ராமானுஜருக்கு சரம கைங்கர்யம் செய்து அருளினார்
இவர் கொங்கில் நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்யன் திரு நாமத்தைச்
சொல்லாமல் எம்பெருமான் திரு நாமத்தைச் சொல்ல அங்கு இருந்து வெளி ஏறினார்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று ஸ்ரீ உடையவர் கொண்டாடும் படி இருந்தவர்
இவருடைய இறுதிக் காலத்தில் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று
சொல்லக் கேட்ட நஞ்சீயர் அழத் தொடங்க
அப்போது இவர் சீயரே நீர் கிடந்து அழுகிறது என் -அங்கு போய் பெறுகிற பேறு
இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ என்று அருளிச் செய்தாராம்

———————————-

16- ஸ்ரீ திருக் கண்ண புரத்து எச்சான்
செறு வரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்து -பாசுரம் அருளிச் செய்ய
உடனே ஒரு நொடியிலே விரோதிகளை அழித்து விடுவேன் என்று எம்பெருமானும் சொன்னாராம்

——–

17- ஸ்ரீ அம்மங்கிப் பெருமான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு பால் அமுது காய்ச்சித் தரும் கைங்கர்யம் –

———————-

18- ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு திருக்கை சொம்பு பிடிக்கும் கைங்கர்யம்

—————-

19- ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்

ஞாதும் கூர குலாதிபம் க்ருமி களாத் ப்ராப்தா பதம் ப்ரேஷிதே
ஸ்ரீ ராமா வர ஜேந கோஸல பாதாத் த்ருஷ்ட்வா ததீ யாம் ஸ்திதம்
ஸம் ப்ரதாஸ் த்வரயா புராந்தக புராத் கல்யாண வாபீ தடே
யோ அசவ் மாருதி ரித்ய ஸம் சத வயம் தஸ்மை நமஸ் குர்மஹே

இவர் மடத்துக்கு அமுது படி -கனி அமுது -பால் -நெய் முதலியவை வாங்க ஏற்பாடு செய்யும்
கைங்கர்யம் செய்து வந்தார்
இவரையும் சிறிய ஆண்டானையும் அம்மங்கி அம்மாளையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அனுப்ப
இவர் அங்கே சென்று ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதையும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் கண் இழந்ததையும் ஸ்ரீ உடையவருக்குத் தெரிவித்தார்

———————-

20-ஸ்ரீ சோமாசி ஆண்டான்

நவ்மி லஷ்மண யோகீந்த்ர பாத சேனவக தாரகம்
ஸ்ரீ ராம க்ரது நாதார்யம் ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாகரம் –

சித்திரை திருவாதிரை திரு அவதாரம்
இயல் பெயர் -ராம மிஸ்ரர்
அவதார ஸ்தலம்: காராஞ்சி
ஸோம யாகம் செய்து சோமாசி ஆண்டான் பெயர்

எம்பெருமானாரே சரணம் -இவர் சொல்வது போல் யாராலும் இனிமையாக சொல்ல முடியாதே
கண்ண புரம் -திருமங்கை ஆழ்வார் –அழகிய மணவாளன் -பட்டர் –
திருத் தொலை வில்லி மங்கலம் -நம்மாழ்வார் -சொல்லுவது போலே அன்று இதுவும்
திரு நாராயண செல்வப்பிள்ளைக்கு அந்தரங்கர் -பாட்டுப்பாடி மகிழ்விப்பவர்

பாடினத்துக்கு ஆடினேன் -மோக்ஷம் ராமானுஜரை விஸ்வசித்துப் பற்றினால் உண்டாகும் என்று
அருளிச் செய்ய பற்றினார்
இவர் வம்சத்தவர்களே ஸ்ரீ ரெங்க வாக்ய பஞ்சாங்கம் மிராசு பெற்றவர்கள் –
ஸ்ரீ பாஷ்ய விவரணம்
ஸ்ரீ குரு குணா வளி-(எம்பெருமானார் பெருமை பேசுவது),
ஸ்ரீ ஷடர்த்த ஸம்க்ஷேபம் ஆகிய கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார் –

க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை இவரது
குரு குணாவளி ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபதப்ரபந்நாந் ஸ்வகீயகாருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ் ததைவ ஸத்பி: பரிகீர்த்யதேஹி ||

ஆசார்யன் தன்னுடைய பெருங்கருணையால், தன்னிடய் சரணடைந்த சிஷ்யனை ரக்ஷித்து உஜ்ஜீவிக்கிறான் –
அந்த ஆசார்யனே முக்யமானவன். இவ்விஷயம் ஆப்த தமர்களால் காட்டப்பட்டுள்ளது.

சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்குச் செய்த பெருங்கருணை விளக்கப் படுகிறது.

எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த ஸ்ரீ சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து,
திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் ஸ்ரீ எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க,
தம் வழிபாட்டுக்கு ஒரு ஸ்ரீ எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக,
சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார்.

அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து,
”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே.
நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில்
இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ,

விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து
ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார்.
ஸ்ரீ எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார்.
ஸ்ரீ உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம்.
நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால்
உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு
இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார் –
இவ்வாறு நம் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்வர்.

ஸ்ரீ வார்த்தா மாலையிலும் ஸ்ரீ சோமாசியாண்டான் விஷயமான சில ஐதிஹ்யங்களுண்டு:

126 – ஸ்ரீ சோமாசியாண்டான் ப்ரபன்னருக்கு எம்பெருமானே உபாயம், பக்தியோ ப்ரபத்தியோ அன்று என்று நிலை நாட்டுகிறார்.
பகவான் நம்மைக் கைகொள்ள, நம்மைக் காத்துக்கொள்வதில் நம்முடைய முயற்சியை நாம் கைவிட வேண்டும்.
பக்தியோ ப்ரபத்தியோ உண்மையான உபாயம் அன்று. நாம் சரணடையும் எம்பெருமானே உயர்ந்த பலத்தை அளிப்பதால்,
அவனே உண்மையான உபாயம்.
279 – ஸ்ரீ சோமாசி யாண்டானை விட வயதில் குறைந்த ஆனால் ஞானம் அனுஷ்டான மிக்க அப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர்,
ஆண்டானிடம்,”ஸ்வாமி! தேவரீர் வயதிலும், ஆசாரத்திலும் சிறந்தவர்; ஸ்ரீபாஷ்யம் பகவத் விஷயாதி அதிகாரி;
இருந்தாலும், பாகவத அபசாரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கு உம் வேஷ்டியில் ஒரு முடிச்சு முடித்துக்கொள்ளும்!” என்று கூறினாராம்,
பாகவதாபசாரம் மிகக் கொடிது என்பதே விஷயம் – எத்தனை பெரியவராக இருந்தாலும், அபசாரங்களை விலக்க வேண்டியதின்
முக்கியத்துவத்தை அப்பிள்ளை இங்கு எடுத்துரைத்தார்.
304 – ஸ்ரீ வைஷ்ணவன் விஷய சுகத்தில் ஆசை கொள்ளக் கூடாது என்கிறார் ஆண்டான். ஏனெனில்:
ஜீவாத்மா முற்றிலும் பெருமாளை நம்பியுள்ளது என்பதாலும்
நம் லக்ஷ்யம் பெருமாளை அடைவதொன்றே, வேறல்ல என்பதாலும்
எம்பெருமானுக்கு நமக்குமுள்ள சம்பந்தமே உண்மை, வேறல்ல என்பதாலும்
எம்பெருமான், அவன் சம்பந்தம் மட்டுமே சாஸ்வதம், மற்றவை நிலையற்றவை என்பதாலும் விஷய சுகம் தள்ளுபடி.
375 – ஓர் இடையன் பால் திருடியதற்காகத் தண்டிக்கப் பட்டான் என்று கேட்ட ஆண்டான் மூர்ச்சை ஆனாராம்!
கண்ணன் எம்பெருமான் யசோதையால் தண்டிக்கப்பட்டதை நினைவு படுத்தியதால் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாராம்.

———————————————

21- ஸ்ரீ சிறியாண்டான்
இவர் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் உடன் ஸ்ரீ ரெங்கம் வந்து
செய்தி திரு நாராயண புரத்தில் அருளிச் செய்தவர்

————–

22-ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ தொண்டனூரில் பாகவத கைங்கர்யமே நிரூபகமாகக் கொண்டவர் –
ஸ்ரீ திருக் கோட்டியூரில் செல்வ நம்பியைப் போலவே
சைவப்பண்டாரம் ஒருவன் ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -சொல்லி -இவர் பிச்சை அளிக்க –
மற்றவர் குறை சொல்ல -இவர் திரு நாம வைபவம் எடுத்து விளக்க
பின்பு அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆனானாம்

இவர் ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜர் இடம் விண்ணப்பித்து விட்டல தேச ராஜன் மக்களது பிசாச பீடையைப்
போக்குவித்து அருளினார் –

—————-

23- ஸ்ரீ மருதூர் நம்பி
இவர் ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

————-

24- ஸ்ரீ மழுவூர் நம்பி

இவர் ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

—————–

25- ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்ரீ ராமானுஜ சம்ய தீந்த்ர சரணம் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன ப்ரியம்
சேவ அஹம் வரதார்ய நாம கமமும் ஸூ க்த்யா ப்ரிஸித்தம் முதா
பால்யாத் பரி பூர்ண போத சடஜித் காதா ராகோஜ்ஜ்வலம்
வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆஸ்ரித நிதிம் வாத்சல்ய ரத்நாகரம் –

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர பத பங்கஜ ஷட் பதம்
முடும்பை பூர்ண மநகம் வந்தே வரதஸம் கஞகம்

ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
ஸ்ரீ காஞ்சீ புரம் அருகில் ஸ்ரீ முடும்பையில் திரு அவதாரம்
இயல் பெயர் -ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சகோதரி கணவர்
இவர் திருக் குமாரர் -ஸ்ரீ ராமானுஜ நம்பி
அவர் திருக்குமாரர் -ஸ்ரீ முடும்பை ஆண்டான் -என்னும் ஸ்ரீ தாசாரதி
இவர் முடும்பையில் இருந்து ஸ்ரீ ரெங்கம் குடி பெயர்ந்தார்
இவர் வம்சம்
ஸ்ரீ தாசரதி
ஸ்ரீ தேவப் பெருமாள் என்னும் ஸ்ரீ வரதார்யர்
ஸ்ரீ இளையாழ்வார் என்னும் ஸ்ரீ லஷ்மண ஆச்சார்யர்

இவருக்கு இரண்டு திருக்குமாரர்கள்
ஒருவர் ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை –
அவருக்கு ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் ஸ்ரீ நாயனாரும் திருக்குமாரர்கள்
மற்ற ஒருவர் ஸ்ரீ வரதாச்சார்யர்
இவருக்கு திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ குரு
அவருக்குத் திரு குமாரர் ஸ்ரீ அழகப்பயங்கார்
அவருக்கு திருக்குமாரர் தேவராஜ குரு என்னும் பேர் அருளாலே ஸ்வாமி
அவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் மாமுனிகள் சிஷ்யர் -வான மா மலை ஜீயரின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ ஆதி நாதன் ஸ்வாமி
ஆழ்வார் திரு நகரியில் கீழத் திரு மாளிகை மேலத் திரு மாளிகை வடக்குத் திருமாளிகை என்று இவர் வம்சம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் ஸ்ரீ முடும்பை வம்சமே

————-

26-ஸ்ரீ வடுக நம்பி

ஸைத் ரேத் வஸ்வநி ஸஞ்ஜாதம் ஸம்ஸார ஆர்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி-1047-
அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா
ஆசார்யன்: ஸ்ரீ எம்பெருமானார்-பால் அமுது கைங்கர்யம்
இவருடைய திரு மடியிலே திரு முடியை வைத்து ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஸ்ரீ பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்

கிரந்தங்கள்: ஸ்ரீ யதிராஜ வைபவம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளிய போது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று,
ஸ்ரீ முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில்
நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி.
இவர் ஸ்ரீ எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது.
ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார்.
அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.

ஸ்ரீ வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார்.
தினமும் இவர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர்.
ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த
ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று
கடிந்த போது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

ஸ்ரீ எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி,
அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின்
திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர,
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”
(அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது)
என்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின்,
கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம்
செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார் கேள்வி எழுப்பவே,
ஸ்ரீ நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை
ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ,
“தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம்.
அதைக் கேட்ட ஸ்ரீஎம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள,
ஸ்ரீ எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, ஸ்ரீ வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார்.
அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால்,
என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு,
ஸ்ரீ முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார்.
ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுள்ளம் பற்றினார்.
ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில்
ஸ்ரீ திருக்குறுங்குடி சேர்ப்பித்து விட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க
இன்னும் ஸ்ரீ திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க,
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார்.
பின்னர் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து ஸ்ரீ எம்பெருமானார் க்ரந்தங்களைக்
காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும்,
எப்பொழுதும் ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல்
ஆசார்ய நிஷ்டையோடே ஸ்ரீ எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.

ஸ்ரீ வடுக நம்பியின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 4.3.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம்.
இப்பதிகம் “நாவகாரியம்” – சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லுதல்.
வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம்.
ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை,
பிள்ளை லோகாசார்யரும் ஸ்ரீ வசன பூஷணம் 274வது ஸூத்ரத்தில், “ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்” என்று அருளினார்.

பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு எய்தினார் என்று
ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று
கூற வேண்டும் என்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருத்தி யருளினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி யதிராஜ வைபவம் என்றோர் அழகிய நூல் சாதித்துள்ளார்.
அதில் எம்பெருமானாரோடு 700 சன்யாசிகளும், 12000 ஸ்ரீ வைஷ்ணவர்களும், கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவிகளும் இருந்தனர் என்கிறார்.
தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி தனிச் சிறப்புள்ளது,
அது ஸ்ரீ எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில்
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில்,
மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார்,
ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த
ஸ்ரீ வடுக நம்பிகளைப் போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார்.
ஸ்ரீ வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், ஸ்ரீ எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை.
ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும்.
ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை.
இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப் புகல்.

——————-

27- ஸ்ரீ வங்கி புரத்து நம்பி

பாரத்வாஜ குல உத்பூதம் லஷ்மணார்ய பத ஆஸ்ரிதம்
வந்தே வங்கீ புராதீஸம் ஸம்பூர்ணார்யம் கிருபா நிதிம்

இவர் ஸ்ரீ திருவாய் மொழியின் சாரம் அர்த்த பஞ்சகம் என்று அருளிச் செய்வர்
பிராட்டியின் பதியாய் இருப்பதே எம்பெருமானுக்குப் பெருமை –
ஸ்ரீ வைஷ்ணவ மதத்தின் பெருமையும் அதுவே என்று அடித்து அருளிச் செய்வர்
ஸ்ரீ எம்பெருமானே ஸ்ரீ நம்மாழ்வாராக அவதரித்தார் என்பாராம் –

ஸ்ரீ மணக்கால் நம்பி சிஷ்யரான ஸ்ரீ வங்கி புரத்து ஆய்ச்சியின் திருக்குமாரர் –
ஸ்ரீ சிறியாத்தான் இவரது சிஷ்யர் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத –நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய —
ஆகதோ மதுராம் புரீம்
சர்வ நியாந்தா
ஸ்ரீ கிருஷ்ணனாய் பிறந்து
நியாம்யனாய் இருந்த வ்ருத்தாந்தம் – பெரிய திருமொழி -6-7-4-
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பல காலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ ஆழ்வானுக்கும் நம்பி ஸ்ரீ ஹனுமந்தத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

ஸ்ரீ நம் பெருமாள் வீதி உலாக்கில் பால் உண்பீர் பழம் உண்பீர் என்று இடையர்கள் –
விஜயீ பவ -இவர் சொல்ல ஸ்ரீ முதலியாண்டான்
முரட்டு சம்ஸ்க்ருத குறை சொல்லி அவர்கள் அவர்களே நாம் நாம் தான் என்று
ஆய்ச்சிகளின் பக்தியை மெச்சி அருளிச் செய்தாராம்

நமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது –உன்னை அருள் புரிய வேண்டும் என்ற
க்ஷத்ர பந்துவின் வார்த்தை -என்று எம்பெருமானார் சொல்ல
உன்னை வணங்கத் தெரியாத எனக்கு கிருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும் என்ற
காளியன் வார்த்தை என்றாராம்
இவர் நிர்ஹேதுக கிருபையின் பெருமையை விளக்க இந்த சம்வாதம்

———————–

28-ஸ்ரீ பராங்குச நம்பி

கோவிந்த ராஜான் வயஜோ மநீஷீ பரங்குசோ யாமுனவை மநஸ்யம்
அபாசகார பிரசபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்த மணி ப்ரதீப –

இவர் ஸ்ரீ எம்பாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டரின் திருக்குமாரர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்ரீ புத்தருடைய சிஷ்யர்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ எம்பாரிடம் ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமத்தைச் சாத்தகி சொல்ல இந்த திரு நாமம் –
தமிழில் வல்லவர்
ஸ்ரீ கூரத்தாழ்வான் இவரை பாலேய் தமிழர் என்பாராம் –

————

29- ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
இவர் ஒரு சமயம் ஸ்ரீ நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்திரிக்கப்பட்ட யந்திரத்தை அவர்
கையில் வைக்க முற்பட அவர் அத்தை ஏற்க மறுத்தார்
இவர் ஸ்ரீ மழுவூர் நம்பி ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் சென்று வந்தார் –

இவர் நீதிப்பாடல்கள் பாடி மகிழ்விப்பாராம் –
இவரது சரம தசையில் ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை அறிய வந்து அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -ஸ்ரீ பெரிய திரு மொழி -3-6-9–என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்-

——————–

30- ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்

ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ திருக்கோவலூர் சென்று அங்கு இருந்து
ஸ்ரீ காஞ்சி புரம் நோக்கி நடக்க அதில் இரண்டு வழிகள் பிரிய -அங்குள்ள இடையர்கள்
ஓன்று ராஜஸரான எச்சான் இடத்துக்குப் போகும் வழி என்றும் –
மற்ற ஓன்று சாத்விகரான இவர் இடத்துக்குப் போகும் வழி என்று சொல்ல
அதன் வழி இவர் இடத்துக்கு வந்தவர் -அங்கு அவர் இல்லாமல் அவர் தேவிமார் சரியான புடவை இல்லாமல்
வெளியே வர முடியாமல் இருக்க அறிந்த ஸ்ரீ உடையவர் தனது உத்தரீயத்தை எடுத்து எறிய –
அத்தைக் கட்டிக் கொண்டு வந்து வணங்க அவரைத் தளிகை பண்ணும்படி சொல்ல
பண்ணி முடித்ததும் அவள் கணவர் வந்து தண்டம் சமர்ப்பித்து ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து
அனைவரும் அமுது செய்தார்கள்
இவர் தேவிக்கு தீங்கு நினைத்த வைசியன் ஒருவனை ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து
இவர் திருத்திப் பணி கொண்டார் –

—————————

31- ஸ்ரீ உக்கல் அம்மாள் ஸ்வாமி
ஸ்ரீ உடையவருக்கு திரு ஆல வட்ட கைங்கர்யம் செய்தவர்

———–

32- ஸ்ரீ சொட்டை அம்மார் ஸ்வாமி
இவர் ஸ்ரீ திரு நாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் ஸந்நிதியில்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான் இடம் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சி உடன் ஸ்ரீ பாஷ்யம் கேட்டவர்
அவர் இவர்களை ஆசீர்வதித்து ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று
இருங்கோள் -என்று அருளிச் செய்தார் –

————-

33-ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள் ஸ்வாமி
இவர் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன் சேர்ந்து திரு மடப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்
ஸ்ரீ பாஷ்யம் முடித்த பின்பு ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாஷ்ய கோசத்துடன் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன்
காஷ்மீர் சென்று சாரதா பீடத்தில் வைத்து அங்கீ காரம் பெறச் செய்தார்

————————–

34-ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சான் ஸ்வாமி

ஸ்ரீ ஈச்சம்பாடி ஸ்ரீ திரு மலைக்கு அருகில் உள்ளது
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ சுந்தர தேசிகர் என்ற ஸ்ரீ அழகப் பிரான் –
திருத்தாயார் -ஸ்ரீ திருமலை நம்பியின் திருக்குமாரத்தில்
இருவரும் ஸ்ரீ ஆளவந்தார் நியமனப்படி திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார்கள்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளிய போது அவருக்கு ஸ்ரீ சுந்தர தேசிகர்
ஸ்ரீ தாப நீய உபநிஷத்தையும் ஸ்ரீ நரஸிம்ஹ நிமந்த்ரத்தையும் உபதேசித்தார்
அவருக்கு 1026 தை மாசம் ஹஸ்தம் இவர் பிறக்க
ஆச்சான் ஸ்ரீ நிவாஸாசார்யார்-என்ற பெயர் சாற்றி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தர்சன ப்ரவர்த்தனம் செய்து அருளினார் –

ஏராரும் தை யத்தம் இங்கு உதித்தான் வாழியே
சுந்தரேசன் திரு மகனாய் துலங்குமவன் வாழியே
பார் புகழும் யதி ராஜன் பதம் பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார் மகிழும் பாடியத்தை பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் தொல் புகழோன் வாழியே
தொண்டர் குழாம் கண்டு உகக்கும் தொல் புகழோன் வாழியே
நல் ஈச்சம்பாடி வாழ் நம் ஆச்சான் வாழியே

——————

35- ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஸ்வாமி

இவர் ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சானின் இளைய சகோதரர்
இவர் 1030 ஆனி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ வேங்கடேசன் திரு நாமம் இயல் பெயர்
ஐவரும் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தரிசன பிரவர்தனம் செய்து கொண்டு இருந்தார்
அவர் இடமே சந்யாச ஆஸ்ரமம் ஸ்வீ காரம் பெற்று ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஆனார்

ஆனி தனில் ஓணத்தில் அவதரித்தான் வாழியே
வேங்கடத்தைப் பாதியாக விரும்புமவன் வாழியே
பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர் கலை உட் பொருளை பகருமவன் வாழியே
அநவரதம் அரி யுருவன் அடி தொழுவோன் வாழியே
எப்பொழுதும் யதி பதியை ஏத்துமவன் வாழியே
முக்தி தரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில் ஈச்சம் பாடி உறை ஜீயர் தாள் வாழியே –

————

36–ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார் ஸ்வாமி

இவர் ஸ்ரீ உடையவரை ஆஸ்ரயித்தவர்
ஸ்ரீ உடையவர் இருக்கும் இடம் சென்று கைங்கர்யம் செய்ய இவர் மனைவி இடம் தராததால்
ஸ்ரீ உடையவர் விக்ரஹம் பண்ணி பூஜை செய்ய விரும்பினார்
விக்ரகம் சரிவர அமையாததால் அதை அழித்து வேறே ஒரு விக்ரஹம் பண்ணினார்
ஒரு நாள் இரவில் ஸ்ரீ உடையவர் ஸ்வப்னத்தில் தோன்றி ஏன் இப்படி செய்கிறீர் -என்று கேட்டார்
கண் விழித்து நேரே ஸ்ரீ ரெங்கம் புறப்பட்டுச் சென்று ஸ்ரீ உடையவராய் தண்டம் சமர்ப்பித்து நடந்தத்தைச் சொன்னார்
ஸ்ரீ உடையவர் முறுவல் செய்து அபயம் அளித்து இவருடைய கவலைகளைத் தீர்த்தார்

——————-

37-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் ஸ்வாமி

இவருக்கு ஆஸூரித் தேவர் -ஆஸூரி புண்டரீகாக்ஷர் -என்ற திரு நாமங்கள் உண்டு
ஹாரித கோத்ரம்
ஸ்ரீ நடுவில் ஆழ்வானுடைய சிஷ்யர்
ஸ்ரீ திரு நாராயண புரம் இருந்து தர்சன நிர்வாஹம் செய்து வந்தார்
இவரது திருவம்சத்தில் திரு அவதரித்தவர் ஸ்ரீ ஆய் ஜெகந்நாதாச்சார்யார் -என்ற பிரசித்தி பெற்ற வர் –

—————-

38- ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமி

ராமானுஜ பதாம் போஜ யுகளீ யஸ்ய தீமத
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்

ஆஸ்திகா அக்ரேசரம் வந்தே பரிவ்ராட் குரு பாஸகம்
யாசிதம் குரு கேசேந ப்ரணதார்த்தி ஹரம் குரும்

சித்திரை ஹஸ்தம்
ஆத்ரேய கோத்ரம்
தளிகைக் கைங்கர்யம் -திருக் கோட்டியூர் நம்பி நியமனம் பிரசித்தம்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடைய அத்தை கணவர்
ஸ்ரீ திரு விருத்தத்துக்கு தனியன் சாதித்து உள்ளார்

அபராத ஸஹஸ்ர பாஜநம் –அகதிம் -சொல்ல அழகர் நீ ராமானுஜன் அடியவராக இருக்க
அகதி சொல்லக் கூடாதே என்று அருளிச் செய்த விருத்தாந்தம் –
தீர்த்தம் சாதிக்க -பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -பாசுரம் சொல்லி
கிருதஜ்ஜை தெரிவித்துக் கொண்டாரே
பட்டர் இடம் தாழ்ந்து பரிமாற்ற -வயசில் மூத்த ராமானுஜர் அடியாராய் இருக்க இவ்வாறு செய்வது என் என்று கேட்க
நம்முடைய அடங்கலும் நம்மை நினைத்து இருக்குமா போல் பட்டரை நினைத்து இருக்க –
எம்பெருமானார் அருளிச் செய்தது உண்டே என்றாராம்
ஸ்ரீ பாஷ்ய கோசம் இவரையே காஷ்மீருக்கு சென்று சரஸ்வதி தேவி பாஷ்யகாரர் பட்டம் சாதித்த விருத்தாந்தம்
இவருக்கு வேதாந்த உதயனன் என்ற விருதை ஸ்ரீ உடையவர் வழங்கினார்
நியாய சாஸ்திரத்தில் உதயனன் பிரபல வித்வானாய் இருந்தார்

இவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ராமானுஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ரங்க ராஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்
அவர் திரு சகோதரி ஸ்ரீ தோத்தாத்ரி அம்மையார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ வேதாந்த தேசிகன்
இவர் வம்சமே ஸ்ரீ சிங்கப் பெருமாள் ஸ்வாமியும்
அவருடைய ஸ்வீ கார புத்ரருமான காரப்பங்காடு வேங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் –1906-1971-

———-

39-ஸ்ரீ அலங்கார வேங்கடவர் ஸ்வாமி

ஸ்ரீ மத் தயாபால முநேஸ் த நூஜம் தத் பாத ஸேவாதி கத ப்ரபோதம்
ஸ்ரீ மத் யதீந்த்ர அங்க்ரி நிவிஷ்ட சித்தம் ஸ்ரீ கௌசிகம் வேங்கட ஸூரி மீடே

ஸ்ரீ ராமானுஜ பாத பத்ம யுகளம் ஸம்ஸ்ருத்ய ஸத் கோஷ்டிஷு
ப்ரேம்ண அலங்க்ருத வேங்கடேச குரு இத்யாக்யாம் பராம் ப்ராப்தவான்

யோ அசவ் கௌசிக தேசிகோ குண நிதி ஸ்ரீ விஞ்ச புர்யாம் ஸ்தி தஸ்
தத் பாதாப்ஜ யுகம் நமாமி ஸததம் ஸம்ஸார சந்தாரகம்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானா உடைய திருக்குமாரர்
கௌசிக கோத்ரம்
மார்கழி திருவாதிரை
இவர் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருப்புதல்வியை மணந்தார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாச்சாரியார்

திரு மருவும் விஞ்சை நகர் செழிக்க வந்தோன் வாழியே
ஸ்ரீ பாஷ்யகார் அடி சேர்ந்து உய்ந்தோன் வாழியே
அருளாள மா முனிவன் அருள் மைந்தன் வாழியே
அரு மறை நூல் மாறன் உரை ஆய்ந்து உரைப்போன் வாழியே
மருளில் திருமலை நம்பி மணவாளன் வாழியே
மார்கழியில் ஆதிரை நாள் மகிழ்ந்து உதித்தோன் வாழியே
திருவரங்கர் தாளிணை யின் தம் பகர்வோன் வாழியே
திரு வேங்கட ஆசிரியன் திருவடிகள் வாழியே

————-

40-ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமி-

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ர ஆஸ்ரிதம் ஆஸ்ரயே
ஞானப் பரமேய சார அபி வக்தாரம் வரதம் முனிம்

ஞான பக்த்யாத்த வைராக்யம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
பஞ்சம உபாய ஸம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம்

தயா பாலந தேவாய ஞான சாரா ப்ரதாயி நே
ப்ரமேய சாரம் தததே நமோஸ்து ப்ரேம ஸாலி நே

யஜ்ஞ மூர்த்தியாய் இருந்து -18 நாள் வாதம் -செய்து –
திரு ஆராதனை கைங்கர்யம்
ஞான சாரம் ப்ரேம சாரம்
தம் மடத்தை இடித்த விருத்தாந்தம்
ஸ்ரீ உடையவர் தம்மை ஆஸ்ரயிக்க வந்த
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ எச்சான்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி –ஆகியவர்களை இவர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்

ஸ்ரீ வடுக நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதாக சொல்ல -அப்படிச் சொல்லக் கூடாது
ஸ்ரீ உடையவர் திருவடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும் என்றார் –
இவர் சரம காலத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ உறங்கா வில்லி தாஸரும் எழுந்து அருள
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு விரும்பியவருக்கு ஸ்ரீ பரமபதம் சாதிக்க சக்தி இருந்தும் தான் இப்படி
கஷ்டப்பட வைக்கிறார் என்று எண்ணி தான் சீக்கிரம் ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகள் சேர வேணும் என்று பிரார்த்தித்தார் –
சிறு மா மானிடராய் -8-10-3-மேனி சிறுத்து கீர்த்தி பெருத்து இருந்த
ஸ்ரீஅருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் என்று காட்டியது –

திரு வாழும் தென்னரங்கம் சிறக்க வந்தோன் வாழியே
தென் அருளாளன் அன்பால் திருந்தினான் வாழியே
தரு வாழும் எதிராசன் தாள் அடைந்தோன் வாழியே
தமிழ் ஞான ப்ரமேய சாரம் தமர்க்கு உரைப்போன் வாழியே
தெருளாரு மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு பொலி மடம் தன்னை சிதைத்திட்டோன் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன் தாள் வாழியே
அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே –

————–

41-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி ஸ்வாமி

ஸ்ரீ கௌசிக அந்வய மஹாம் பூதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ பாஷ்ய கார ஜநநீ ஸஹஜா தூ நூ ஜம்
ஸ்ரீ சைல பூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீ பால தன்வி குரு வர்யம் அஹம் பஜாமி

ஸ்ரீ யதீந்த்ர மாத்ஷ்வ ஸ்ரீய ப்ரதி தார்ய பதே ஸ்திதஸ்
மூல பத கௌசிகா நாம் தம் வந்தே பால தந்விதம்

சித்திரை ரேவதி நஷத்ரம் திரு அவதாரம்
கௌசிக கோத்ரம்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சிறிய திருத் தாயாருடைய திருக் குமாரர்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் மருமகன்
ஸ்ரீ பால தந்வி -வட மொழி திரு நாமம்
இவர் வம்சம்
ஸ்ரீ பால தந்வி –சித்திரை ரேவதி
ஸ்ரீ திரு விக்ரம குரு
ஸ்ரீ ராமானுஜ குரு
ஸ்ரீ வரத்தார்ய குரு –கும்ப மூலம்
ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பை -ஆவணி அவிட்டம் -இவர் ஸ்ரீ மா முனி சிஷ்யர்

————————————

ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வைபவம்

ஸ்ரீ திருவரங்கத்தில் இருந்து ஸ்ரீ அழகிய மணவாளனும்
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் இருந்து ஸ்ரீ நம்மாழ்வாரும் -கலாபத்துக்கு பிறகு -1323- தம் தம்
ஸ்தானங்களை விட்டு கோழிக்கோடு முந்திரிப்பூ காடு வழியாக கர்நாடக -திருக் கணாம்பி -என்னும் ஊரில் எழுந்து அருளினார்கள்
கலாபத்துக்கு பின்பு ஸ்ரீ திருக் குருகூர் புனர் நிர்மாணம் பண்ணி அருளினார்
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்னும் ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை

நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மனே ப்ரஸாத லப்த
பரம ப்ராப்ய கைங்கர்ய சாலி நே

சீர் உற்ற செஞ்சொல் திருவாய் மொழிப்பிள்ளை செம்முகமும் தார் உற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்து
பூரித்து வாழும் மணவாள மா முனிகள் பொன்னடிகள் பாரில் தரித்து அடியேன் பற்றினனே –ஸ்ரீ கந்தாடை அண்ணன்

ஸ்ரீ பகவத் விஷய உபதேச மார்க்கம் தமக்கு திருவாய் மொழிப்பிள்ளை பேர் அருளாலே வந்த படியை
தமக்கு உள்ள பேர் அன்பாலே பாசுரம் இட்டு அருளுகிறார் மா முனிகளும்

திரு அருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றான் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிராற்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேசர் பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் பத்ம நாதர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே – –

1301-1406-இவர் விபவ வருஷம் வைகாசி விசாகத்தில் பூர்வ சிகை ஸ்ரீ வைஷ்ணவ குலத்தில் திரு அவதாரம் –
மதுரைக்கு அருகில் குந்தீ -இப்பொழுது மருவி கொந்தகை என்று அழைக்கப் படுகிறது –

திரு நாமங்கள்
ஸ்ரீ சைலேசர்
திருமலை ஆழ்வார்
திருவாய் மொழிப்பிள்ளை
காடு வெட்டி ஐயன்
சடகோப தாசர்
ஸ்ரீ நாத முனிகள் சிஷ்யர் உய்யக் கொண்டார் வம்சத்தவர் என்பர்

திருத்தாயார் சாத்விகை அம்மையார்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் இடம் பஞ்ச சம்ஸ்காரம்
பாண்டிய ராஜ புரோகிதர் -பின்பு ராஜாவாகவும் ஆனவர்
பிள்ளை லோகாச்சார்யார் ஜோதிஷ் குடியில் அழகிய மணவாளரை பாது காத்து
அருளும் பொழுது இவருக்கு 40 திரு நக்ஷத்ரம்

பிள்ளை லோகாச்சார்யார் திருமலை ஆழ்வாரை அனுவர்த்தித்து
ஸ்ரீ கூர குலோத்தமை தாசரை ரஹஸ்யார்த்தங்களை ப்ரசாதிக்கும் படியாகவும்
திருக் கண்ணங்குடி பிள்ளைக்கும் திருப் புட் குழி ஜீயருக்கும் திருவுவாய் மொழிப் பொருளை உபதேசிக்கும் படியாகவும்
மற்றும் உள்ள மூவாயிரம் வியாக்கியானங்களை உபதேசிக்கும் படி நாலூர்ப்பிள்ளைக்கும்
ஸ்ரீ வசன பூஷண சாரார்த்தமான ஸப்த காதை முதலான அர்த்த விசேஷங்களை
விளாஞ்சோலைப் பிள்ளைக்கும் நியமித்து அருளினார் –

கூர குலோத்தமை தாசர் திருவடிகளே சரணம் என்று அநவரதம் சொல்லக் கேட்டு
ராஜ மஹிஷி இவருக்கு அரசுப் இருந்து ஒய்வு வழங்கி விட்டார்

கூர குலோத்தம தாசர் திரு வரசு சிக்கில் கிடாரத்தில் உள்ளது
இங்கு திருவாய் மொழிப்பிள்ளை தங்கி இருந்த திரு மாளிகை சேஷமும் இன்றும் உள்ளது
குந்தீ -கொந்தகையில் வீற்று இருந்த திருக்கோலத்துடனும் செங்கோலுடனும் சேவை சாதித்து அருளுகிறார்

நம்மாழ்வாரை முந்திரிப்பூ பள்ளத்தாக்கில் இருந்து எழுந்து அருளப்பண்ணி –
அங்கேயே பரமபதம் அடைந்த தோழப்பர் திருக்குமாரர் -அப்பன் பிள்ளைக்கு -ஆறுதல் கூறி
ஆழ்வார் உம்மை புத்ரராக கொண்டார் -இன்றும் ஆழ்வார் தோழப்பர் -அருளப்பாடு -உண்டே

நம்மாழ்வாரை திருக்கணாம்பி எழுந்து அருளப்பண்ணி -இருந்த கோயிலிலே மேலே கருட பக்ஷி கூடு கட்டி இருந்தது
ஆழ்வாரை சேவிக்க திருவனந்த புரம் திருவட்டாறு திருவண் பரிசாரம் திருவல்லவாழ் திவ்ய தேச நம்பூதிரிகள் போத்திமார்கள் வந்து
உதய காலத்தில் திரு மஞ்சனம் செய்து அருளி
தத்யோந்நம் நெய் தோசைப்படி பாகு கூட்டின கட்டிப்பொரி -பால் கஞ்சிக் கடாரம் அமுது செய்து அருளி
மத்தியானம் நாயக அலங்காரம் -சம்பா அவசரம் திருப்பணியாரங்கள் –
சாயங்காலம் திருவாராதனம் கண்டு அருளி
அஸ்தமன சமயத்தில் உப்புச் சாத்தமுது -சம்பா -தோசைப்படி -பொரி அமுது செய்து அருளி
பிற்பாடு அத்தாளமுது செய்து அருளி
இராக்காலமாய் ஸ்ரீ பலிதுடி -திரு உற்ற சாதம் -அரவணை -சுக்கு கஷாயம் அமுது செய்து அருளி
போத்திமார் திட்டம் பண்ணி நடத்திப் போந்தார் –

பேர் அருளாளர் நியமனம் அடியாக கச்சி மா நகரில் ஆச்சான் பிள்ளை திரு மலை ஆழ்வாருக்கு
ஈடும் நாலாயிர பொருள்களையும் சாதித்து அருளினார்

காடு வெட்டி நாடாக்கி -நல்லார் பலர் வாழ் குருகூர் என்னும்படி குடியேறி திருக் கணாம்பியில் இருந்து
திருநகரிக்கு எழுந்து அருளப்பண்ணி -குருகூர் சடகோபன் என்னும்படி
உறங்கா புளி நிழலிலே ஏறி அருளப் பண்ணி சேவித்து நின்றார்

நம்மாழ்வார் சடகோப தாசர் -திருநாமம் யதார்த்தமாம் படி பிரசாதித்து அருளினார்
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே -என்னும் படியும்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் -என்னும் படியும்
புகழ் வண் குருகையும் பொற் கோபுரமும் புரிசை சூழ் கழனி
தண் பொருனை மன் ஆழ்வார் மறைத் தமிழ் ஆயிரமும் திகழும் படி செய்த
ஸ்ரீ சைலேசர் என்னும் படி கைங்கர்யமே நிரூபகமாக இருந்தார்

1371-விஜய நகர மன்னர் வீர கம்பண்ணர் -செஞ்சி மன்னன் கோபணார்யன் –
விஜய நகர் படைத்தலைவன் சாளுவ மங்கி ஆகியோரின் பெரு முயற்சியால்
நம்பெருமாள் பரிதாபி ஆண்டு வைகாசி -17- நாள் திருவரங்கத்துக்கு எழுந்து அருள
அருணோதயம் போல் 1370 சாதாரண வருஷம் ஐப்பசி திரு மூலம் -மா முனிகள் திரு அவதாரம்

திருவாய் மொழிப்பிள்ளை உடைய திரு ஆராதனப் பெருமாள் -இன வாயர் கொழுந்து –

இவர் சிஷ்யர்கள்
பெரிய ஜீயர்
நம்மாழ்வார் கோயில் எம்பெருமானார் ஜீயர்
எம்பெருமானார் கோயில் சடகோபர் ஜீயர்
தத்வேச ஜீயர்
இவர் 105 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்
திரு அத்யயனம் வைகாசி கிருஷ்ண அஷ்டமி

————

ஸ்ரீ மா முனிகளின் வைபவம்

ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான் -7 th ஸிம்ஹாஸனாதி பதி
ஸ்ரீ கோ மடத்துப் பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவர் சிஷ்யர் காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளை -மூன்று தட்வை ஸ்ரீ பாஷ்யம் கேட்டாராம்
இவரது வம்சமே ஸ்ரீ திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய தாஸர் அண்ணர் –
ஸ்ரீ மா முனிகளின் திருத் தகப்பனார் –
ஸ்ரீ மா முனிகளின் திருப் பேரனார் ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் உடைய அஷ்ட திக் கஜங்களில் ஒருவர் –

ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜனிஷ்யத்த பரோ முனி ததஸ்ரஸ் யாஸ் ஸதாச்சாரா சாத்விகாஸ் தத்வ தர்சன —
தேவப் பெருமாள் கந்தாடை தொழப்பர் ஸ்வப்னத்தில் மா முனிகள் அவதாரம் பற்றிய ஸ்ரீ ஸூக்தி

கிடாம்பி ஆச்சான் சிஷ்யர் கிடாம்பி நாயனார் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார் -திருவாய் மொழிப் பிள்ளை ஆணைப் படி –
ஒரு தடவை கால ஷேபம் செய்து அருளிச் செயல்களில் மட்டுமே பொழுது போக்காகக் கொண்டார் –
செல்வ நாயனார் -ஐகள் அப்பா -இருவரும் கிடாம்பி நாயனார் உடன் கால ஷேபம்
ஆதி சேஷன் உருவம் கண்டார்கள்

யதோத்தகாரி சந்நிதியில் வியாக்யான முத்திரை உடன் இன்றும் சேவை உண்டே

பிரணவம்
ஆழ்வார் -அகாரம்
எம்பெருமானார் -உடையவர் –
ஜீயர் -மணவாள மா முனிகள் -மகாரம்

மன்னிய சீர் மாறன் கலையை உணவாகப் பெற்றோம் -திருவாய் மொழி ஜீயர் எண்ணலாமே
கிடாம்பி ஆச்சான் -ஸ்ரீ பாஷ்யம் சாதித்தவர் -ஈடு அனுசந்தானம் செய்து கொண்டே இருக்கும் ஜீயர் -என்று உண்டே

இயல் பெயர் -அழகிய மணவாள பெருமாள் நாயனார்-
திருத் தகப்பனார் -திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணர் –
அவதார வருஷம் -சாதாரண வருஷம் -துலா மாதம் –26- நாள் – in AD 1370.–திரு மூலம் -கௌண்டிந்ய கோத்ரம் –
சிக்கில் கடாரம் திரு அவதாரம் இருந்தாலும் ஆழ்வார் திரு நகரியிலே வளர்ந்து கற்றார் –
திருக்கல்யாணம் –15 திரு நக்ஷத்திரத்தில் –1386 AD (February)-க்ரோதன ஸம்வத்சரம் –மகர மாசம் –
சந்யாச ஆஸ்ரமம் –விஜய நாம சம்வத்சரம் –1415-AD -(APRIL ) -பெரிய திரு மண்டபத்தில் -ஸ்ரீ சடகோப முனி ஜீயரால் –

திருக்குமாரர் -எம் ஐயன் ராமானுஜன்
அவர் உடைய திருக் குமாரரர்கள் -ஜீயர் நாயனார் -வேதப்பிரான் பட்டர் ஸ்ரீ ஜீயர் நாயனார்-
24 th வம்சத்தவர் -ஸ்ரீ கோமடம் எதிராஜ சம்பத் குமாராச்சார்யர் –
இப்பொழுது ஸ்ரீ ரெங்கம் மா முனி சந்நிதி கைங்கர்யம்
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ கோமடம் சடகோபாச்சார்யர்

1443-ஆனி மூலம்
ஸ்ரீமான் வகுள தர ஸாஸ்த்ர பாவம் ஸ்ரீ சைலே பத்ர் -எறும்பி அப்பா
அப்புள்ளார் -சம்பிரதாய சந்திரிகை -ஆனந்த வருஷம் முன் நாள் திங்கள் பவுர்ணமி மூலம் -ப்ரமாதித வருஷம்
12-JUNE -1433-மாலை
அரங்கர் தாமே வந்து தனியன் செய்து தலைக் காட்டினார்
பானு வாரம் –
கூட இருந்த ஸ்வாமிகள் பட்டோலை
மாப்பிள்ளை -மணவாளப்பிள்ளை ஜா மாதா
ரம்ய -அழகிய
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாள மா முனி ஜீயர்
ஸ்ரீ சைலேச -திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப் பிள்ளை
முனிம் -ஐந்தாவது பெருமை தனியனில்
தனியன் -மற்ற ஸ்தோத்ரங்களில் இருந்து எடுத்தவை
சுக்ரீவன் சைலேச தயா பாத்திரம் -நாதம் இச்சதி -சரணம் கத
மதங்க முனிவர்

தவம் புரிந்து உயர்ந்த மா முனி -வால்மீகி
வான் தமிழ் மா முனி -அகஸ்தியர்
சாந்தீபன் அடி பணிந்து அடி பட்டு மனம் வருந்தி
ஆர்ணவம் -லவ ஆர்ணவம்
தன்னை உற்றாரை அன்றி தன்மை உற்றாரை -யதீந்த்ரர் திருவடி விட யதீந்த்ர பிரவணர் திருவடி

அஸ்மத் ஆச்சார்யர் -கூரத்தாழ்வான் -லஷ்மீ நாத சமாரம்பாம் -நாத யமுனா மத்யமாம்
அஸ்மத் குரு சமாரம்பாம் யதி சேகர மத்யமாம் -லஷ்மீ வல்லன பர்யந்தாம் -குரு பரம்பரை -சொல்லி ஆழ்வார்
இதுக்கு முன்பு சொல்லி
இது வந்த பின்பு இத்தை சொல்வது -க்ரமம் பெரிய பெருமாளே ஏற்பாடு
ஒருவரைச் சொல்லி பின்பு குரு பரம்பரை -எல்லா ஆச்சார்யர்களையும் காட்டும் தனியன்

அனைவருக்கும் அன்வயித்து அர்த்தம் சொல்லலாம் படி பொதுவான
ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம்
திருமலை -ஸ்ரீ சைலம் -ஈசன் -தயைக்கு பாத்திரம் நம்மாழ்வார் –
ஸ்ரீ நம் பெருமாள் இங்கே தங்கி -ஸ்ரீ ரெங்க மண்டபம் -22-வருஷங்கள்
1371 திரும்பி -பரிதாபி வருஷம்
1370 மா முனிகள் அவதாரம் -பின்பே வர தைர்யம்

ஸ்ரீ சைலத்தை தனக்கு பாத்திர பூதமாகி –
தீ ஞானம்
பக்தி -அவனுக்கு உண்டோ -ஸ்நேஹ பூர்வ அநு த்யானம்
பகவத் பக்தி -நமக்கு -பக்தர்கள் இடத்தில் -பக்த வத்சலன் அன்றோ
யதீந்த்ரர் இடம் ப்ராவண்யம் -அறிவோம் -அரையர் மூலம் கூட்டி வந்து –
யதீந்த்ர ப்ராவண்யம் தன்னிடம் கொண்டவர்
ரம்யா ஜாமாதரம் -இவனுக்கும் பொருந்தும்
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாளன் இயல் பெயரை மாற்ற வேண்டாம் —
சடகோப ஜீயர் ஆசைப் பட்டார் என்று -முன்புள்ள திரு நாமமே வைத்து நடத்தும்
மா முனி -மட்டும் சேர்த்து
ஆச்சார்யர் திரு நாமம் பின்பு சிஷ்யன் வகுக்க வேண்டும் -மாற்ற வேண்டாமே என்பதால் இப்படி
மனன சீலன் -முனியே இவனே
பிராட்டிக்கும்
அகலகில்லேன் -பாத்ர பூதை
எம்பெருமானார் இடம் ஈடுபாடு -வித்யாசல வேடன் வேடுவிச்சி
அவருக்கும் இவள் இடம் ப்ராவண்யம்
ரம்யா ஜா மாதாவை எப்பொழுதும் த்யானம்

சேனை முதலியார்
வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும்
எம்பெருமானார் இவரே தேசிகன் -சப்ததி
பிரம்பு -த்ரி தண்டம்

நம்மாழ்வாருக்கும் பொருந்தும்
மாரி மாறாத –
த்வய சாரம் -பூர்வ உத்தர திரு வேங்கடம் விஷயம்
இருவருக்கும் ஈடுபாடு வாசா மகோசரம்
மதி நலம் -தீ பக்தி
பவிஷ்யதாச்சார்யர்
அவர் ப்ராவண்யம் இவர் இடமே
மாறன் அடி பணிந்து
பராங்குச பாத பத்மம்
இப்படி அனைவருக்கும் பொருந்தும்

திரு முடி சம்பந்தம் திருவடி சம்பந்தம் -அனைவருக்கும் யதீந்த்ர ப்ராவண்யம்
எம்பெருமானாருக்கு ஆளவந்தார் மீதும் அவருக்கு இவர் மீதும் ப்ராவண்யம் உண்டே
அனைத்து ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் அறிந்தவர் இவர் ஒருவரே –
ஆளவந்தாருக்கு ஸ்ரீ பாஷ்யம் தெரியாதே
சகல பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற சாகர சந்த்ரன் அன்றோ இவர் –
தனி ஒருவர் இல்லை
முன்னவர் தாம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் —
embodiment of all

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு –தான் -நண்ணார் அவர்கள்
அன்பு தன் பால் -என்று தன் -அவரைச் சொல்லி
தன் குரு -மா முனிகள் தானே
ஐந்து கார்யம் சிஷ்யன் ஆச்சார்யருக்கு செய்ய வேண்டும்
தனியன் சமர்ப்பித்து
திரு நாமம் வகித்து
சொத்தை சமர்ப்பித்து -ஆதி சேஷனையே கொடுத்து அருளி -ஆச்சார்ய சம்பாவனை -சேஷ பீடம்
திரு நக்ஷத்ரம் -தீர்த்தம் கொண்டாடி
நேர் சிஷ்யர்கள் தானே திரு அத்யயனம் –
வேறே எவருக்கும் இல்லாமல் -மாசி சுக்ல பக்ஷம் துவாதசி இன்றும்
எம்பெருமானாருக்கு எம்பார் பண்ணி பின்பு அவர்க்கு பின்பு பண்ணுவார் இல்லை
என்றும் இறவாத எந்தை அன்றோ இவர் சிஷ்யர்
உச்சிக்கால பூஜை அப்புறம்
சுருள் அமுது கண்டு அருள மாட்டான் இன்றும் –
குரு பிரகாசம் -எங்கும் ஓலை அனுப்பி ஏற்பாடு –

இந்த ஒன்றை அனுசந்தித்தால் அனைவரையும் அனுசந்திப்பதாக இருப்பதால்
வைதிகம் விதி பிரேரிதம் இல்லாமல் எங்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்
தாமரை உடன் இருக்கும் தவளை அறியாத ஏற்றம் வண்டு உணரும்
தெய்வ வண்டு காட்டக் கண்டு அனுபவிப்போம்

———————

மூலம் –19 நக்ஷத்ரம் -ஆச்சார்யர் வரிசைகளில் –19–
எம்பெருமானார் -திருப்பாவை ஜீயர் -ஆச்சார்யர் வரிசைகளில் -9-
திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யர் வரிசைகளில்-18-

தென் திசை இலங்கை நோக்கி -இலக்காக நோக்கி -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
எழுந்து அருளிய ஆழ்வார் திரு நகரியையே நோக்கி -ரக்ஷண அர்த்தமாக –
இவர் அவர்களுக்கு ரக்ஷணம் -அவர்கள் இவனுக்கு ரக்ஷணம்

நான்கு யானைகள் வட பாலானாய் -அவனுக்கு -ஆச்சார்யருக்கு இரட்டை சம்பாவனை -அஷ்ட திக் கஜங்கள்

11 பட்டம் -12 பட்டம் மா முனிகள் அலங்கரித்த 1428-சீலக வருஷம் -ஸுவ்மய வருஷம் சாதாரண –
மூன்று வருஷம் -58–61-திரு -சாதாரண -நடுவில் -ஷஷ்ட்டி அப்த பூர்த்தி அங்கு
திருவேங்கட ராமானுஜ ஜீயர் சின்ன ஜீயர் –
இவரே பெரிய ஜீயராகி அவர் சிஷ்யர் சின்ன ஜீயர்
பெரிய சின்ன சேஷ வாகனங்கள் எம்பெருமானார் பெரிய ஜீயர் அடிமை ஸ்மாரகம்
திருவாய் மொழி நூற்று அந்தாதி ஸ்பஷ்டமாக திருவேங்கடம் பிராட்டி பெருமாள் நினைவாக –மா முனிகளின் ஈடுபாடு –

பத்து ஒற்றுமைகள் -ஸ்ரீ பராங்குச முனிக்கும் நம் மா முனிகளுக்கும் –

1-ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம் -திருமலையான் கருணையில் மூழ்கி
த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இங்கேயே
எங்கும் திருவேங்கடத்தான் சந்நிதி ஆழ்வார் திருநகரியை சூழ்ந்து
கண்ணாவான் -வேங்கட வெற்பனே முதலில் திவ்ய தேசம்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் நின்றானை
பக்கம் நோக்கு அறியாமல் பராங்குசன் மேல் ஒருங்கே கடாக்ஷம்
2-மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள் இருவரும்
என் மனனே அப்புறம் -இங்கு யாருக்கு அருளினான் -அருளி சத்தை பெற்றதால்
மா முனிகள் -தீ பக்த்யாதி குண அர்ணவம் -ஆதி -சரம பர்வம் -நிஷ்டையில் முழுவதும் –
திவ்ய தேசம் திரு அவதரித்த நாள்களையும் காட்டி அருளி உபதேச ரத்ன மாலையில் –
3-திருக் குருகூரில் அவன் அருளால் தோன்றி -தானே யான் என்னும் படி –
வரகுண பாண்டியன் -இசை -ஹேம நாத பாகவதர் -பாடி -சம்பாவனை -பாண்டிய நாட்டையே கொடுக்கும் படி -வாய் வார்த்தை –
குடி மகன் பேச்சு வேறே -சிம்காசன பேச்சு வேறே -எனக்கு நிகராக உன் நாட்டு பாடகர் பாடினால் கொடுக்க
பாண பத்ரர் -மீனாட்சி பக்தி -இசைத்தமிழே -சாதாரி பண்ணில் -பந்து வராளி –
விறகு வெட்டுபவராக -பாண பத்ரர் சிஷ்யராக கொள்ளாத நான் –
அகஸ்திய முனிவர் -வண் தமிழ் மா முனி -குறுங்குடி நம்பி இடம் -போக –
விஷ்வக்ஸேனராக நம் ஆழ்வார் தென் பாண்டி சீமையிலே -திரு விளையாடல் புராணம் –
பண் தரு மாறன் பசும் தமிழ் -சாம வேதம் -இன்னிசை பாடித் திரிவேனே
ஆதியிலே அரவசரை –மா முனிகளும் இவரால்
புக்ககம் இருந்து பிறந்தகம் போவதாக மா முனிகளே சொல்லிக் கொள்கிறார்
4-ஸ்ரேஷ்ட முனி இருவரும்
நாத யமுன ராமானுஜ முனிகள் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் அதுவே பொழுது போக்காகப் பெற்றோம் என்று
தானே சொல்லும் படி -மா முனி -முன்னோர் ஸ்ரீ ஸூ க்திகள் அனைத்தும் இவர் இடமே
5-யதீந்த்ர ப்ரவணர்கள் -பொலிக பொலிக -உடையவருக்கு நண்பராகி
அகில புவன -ஜென்ம -ஸ்தேம பங்காதி லீலைகளில் பொழுது போக்கு -இதுவே உலகம் என்று-இருந்த ஆழ்வார்
இது கொண்டு சூத்திரங்களை ஒருங்க விடுவார்
செயல் நன்றாக திருத்திப் பணி கொள்ள -ரக்ஷ ஏக தீக்ஷை
அவனோ தீர்ந்த அடியாரை
உயர்ந்த ஸ்ரீ நிவாஸன் -கைங்கர்ய ஸ்ரீ யைப் பெற்றவர்
பக்தி ரூபா பன்ன ஞானம் இவர் இடம் பெறவே ஸ்ரீ பாஷ்யம் மங்களா சாசனம்
வண்ணான் பிள்ளைகளை கூப்பிட்ட ஐ திக்யம் –
கஷ்டப்பட்டால் அவன் மோக்ஷம் இஷ்டப்பட்டால் மோக்ஷம் -ராமானுஜர் –
அதிகாரம் இருந்தால் அரங்கர் இரங்குவார்-நம் ஐயன் ராமானுஜன் இவர் திருக்குமாரர்
6-வாக்கு வன்மை -வேதம் தமிழ் செய்த மாறன் -விசத வாக் சிரோமணி
உளன் எனில் உளன் -இலன் எனில் அவ்வருவம் அவன் உருவம்
god is no where- god is now here
7-வேதம் விளக்கிய சாம்யம் – பஞ்சகம் -தமிழ் வேத நான்முகன் நம்மாழ்வார் -தானான -தலைவி தோழி தாய் –
உடல் மீசை உயிர் எங்கும் பரந்துளன் -யஸ்ய ஆத்ம சரீரம் -உடல் -நியாந்தா -ஆனால் அறியாமல் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –
அந்த தமிழ் வேதத்தை மூ உள்ள காளியே -காளி க்கு மங்களா சாசனம் தப்பாக –
முப்பத்தாயிர பெருக்கர் -ஈடு சதா அனுசந்தானம் -நூற்று அந்தாதி –
2000 நாக்குகள் -1000 வாய்கள் -ஆற்றில் கரைத்த புளி ஆகாமல்
8-ரஹஸ்யார்த்த விளக்கம் -த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி
நாலாம் பத்து -முழுவதும் ஸ்ரீ மன் நாராயண சரணவ் ஐந்தாம் பத்து சரணம் -ஆறாம் பத்து பிரபத்யே –
ஸ்ரீ மதே -செல்வ நாராயணன் -முதல் பத்து -நாராயணாயா -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே –
நம -மூன்றாம் பத்து வழு இலா அடிமை -ததீய சேஷத்வம் பயிலும் சுடர் ஒளி
9-பெரியவர் -பூமா -பஹு -மா -வார்த்தை பேச்சு மனஸ் உறுதி புத்தி த்யானம் விஞ்ஞானம் உடல் வலிமை
உணவு தண்ணீர் ஒளி ஆகாசம் நினைவு ஆற்றல் ஆர்வம் ஆத்மா -இப்படி ஒன்றுக்கு மேல் ஓன்று பூம வித்யை
நம்பெருமாளுக்கும் ஆச்சார்ய -பெருமை -ஆதி சேஷன் ஆசனம்
10-ஸச் சிஷ்யர் கூடவே
மதுர கவி நாதமுனிகள் உடன் ஆழ்வார்
இவரோ அஷ்ட திக் கஜங்கள்

—- —————

அகஸ்தியர் விசுவாமித்திரர் மந்த்ர உபதேசம் -அவர்களுக்கும் மா முனி சப்தம் அருளிச் செயல்களில் உண்டே
அதே போல் இவரும் உபதேசித்ததால் மா முனி
நாயனார் -நாயனார் ஆச்சான் பிள்ளை -இவ்வாறு வேறு படுத்தி
வடக்கு திரு வீதிப்பிள்ளை திருக்குமாரரும் பெரியவாச்சான் பிள்ளை திருக்குமாரரும்
இவருக்கு மட்டுமே அதே திரு நாமம்
ஆகவே சந்யாச ஆஸ்ரமம் ஏற்றுக் கொண்ட பொழுது திரு நாமம் மாற்ற வேண்டாம் என்று அரங்கன் நியமனம்
ஆச்சார்யர் திரு நாமம் சிஷ்யர் கொள்ள வேண்டுமே
இவரை ஆச்சார்யராக கொள்ள நினைப்பதால் -அந்த திருநாமம் வஹிக்க வேண்டுமே
மணவாள மா முனி தானே வர வர மா முனி
வரன் -மாப்பிள்ளை மணவாள பிள்ளை சுருக்கி
மணவாள பெண் மாட்டுப்பெண்
வர ஸ்ரேஷ்டம்

——————

ஸ்ரீ மா முனிகள் அஷ்ட திக் கஜங்கள் –

1-ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர்
2-ஸ்ரீ திரு வேங்கடம் ஜீயர்
3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –இவர் ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் -இவர் ஸ்ரீ முதலி ஆண்டான் வாசம்
5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
6-ஸ்ரீ எறும்பி அப்பா -இவரும் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ அப்பிள்ளார்
8-ஸ்ரீ அப்பிள்ளை

——————

ஸ்ரீ ஒன்றான வானமாமலை ஜீயர் வைபவம்

1. ‘பொன்னடிக்கால் ஜீயர்’ என்று பெயர் பெற்ற ஒன்றான வானமாமலை ஜீயர்
அவதார திருநக்ஷத்ரம் புரட்டாசி மாதம் புனர்பூச நக்ஷத்ர
2. ஸ்ரீமணவாளமாமுனிகள் நியமித்தருளிய அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர்.
3. பிரம்மசாரியாய் இருந்தபோதே ஸந்யாச ஆச்ரமத்தை ஏற்றார்.
4. அழகிய வரதர் என்பது இவருடைய பூர்வாச்ரம திருநாமமாகும்.
5. ஸ்ரீமணவாளமாமுனிகளின் நியமனத்தின் பேரில் வடநாட்டு யாத்திரை செய்து,
தோதாத்திரி ராமானுஜ ஸிம்மாஸனத்தை நிறுவி, மஹந்துக்களை நியமித்து
விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தை வளர்த்தவர்.
6. வடநாட்டில் ஆச்ரயித்த மஹான்களில் ஸ்ரீஸ்வாமி ராமானந்தர் முக்கியமானவர்.
7. திருப்பதியிலிருந்து ஸ்ரீவரமங்கை நாச்சியாரை எழுந்தருளப் பண்ணி ஸ்ரீ தெய்வநாயகப் பெருமானுக்கு
விவாஹம் செய்வித்து ஜனகரைப் போலவும், பெரியாழ்வாரைப் போலவும்
எம்பெருமானுக்கு மாமனாராக இருக்கும் பெருமை பெற்றவர்.
8. திருப்பாவைக்கு ஸ்வாபதேச வ்யாக்யானம்.
நாச்சியார் திருமொழிக்கு அமைந்துள்ள கோலச் சுரிசங்கை தனியன் ஆகியவை இவர் இயற்றியவையாகும்.
9. ஸ்ரீமணவாளமாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்கள்.
1) ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர்.
2) திருவேங்கட ஜீயர்.
3) பட்டர்பிரான் ஜீயர்.
4) கந்தாடை அண்ணன்
5) எறும்பியப்பா
6) பிரதிவாதி பயங்கரம் அண்ணன்.
7) அப்புள்ளார்
8) அப்பிள்ளை ஆகியோர் ஆவர்.
10. இதை எளிதாக நினைவாற் கொள்வதற்காக,
“பாராரு மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடையண்ணன் எறும்பியப்பா
ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார் வாதிபயங்கரரென்
பேரார்ந்த திக்கயஞ்சூழ் வரயோகியைச் சிந்தியுமே”.
என்ற பாடலை அனுஸந்திப்பதன் மூலம் அஷ்டதிக் கஜங்களின் திருநாமங்களை நினைவில் கொள்ளலாம்.
11. வானமாமலையிலே உயர்குடியிலே தோன்றி மிகுந்த வைராக்ய சீலராக நின்று உலக வாழ்வு என்றால்
திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதானா? அனைவருக்கும் உதவுமாறு உலக வாழ்வைத் துறந்து வாழமுடியாதா?
என்ற எண்ணத்துடன் வானமாமலைப் பெருமாளை ஆச்ரயித்து துறவறத்தை மேற்கொண்டவர் இவர்.
12. ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு அவருடைய நிழல் போல் வாழ்ந்து
மாமுனியின் அனைத்து கைங்கர்யத்திலும் பங்கு கொண்டார்.
13. இவர் சிஷ்யரான பின்பு தான் ஸ்ரீமணவாளமாமுனிக்கு சிஷ்யர்கள் பெருகினராம்.
ஏன் அரங்கநாதனே சிஷ்யனாகி விட்டானே!! அதனால் இவர் திருவடி பொன்னடி எனப்பட்டது.
14. பெருமாள் திருவடி-ஸ்ரீசடகோபம் (சடாரி)
நம்மாழ்வார் திருவடி-உடையவர்,
உடையவர் திருவடி-முதலியாண்டான்,
மணவாளமாமுனி திருவடி- பொன்னடியாம் செங்கமலம் என்று அழைக்கப்படுகின்றன.
15. ஒன்றான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்டதிக்கஜங்கள்.
1. அப்பாச்சியாரண்ணா.
2. போரேற்று நயினார்
3. சுத்த ஸத்வம் அண்ணா
4. ராமாநுஜம் பிள்ளை
5. சண்டமாருதம் மஹாசாரியர்
6. திருக்கோட்டியூரையன்
7. பள்ளக்கால் சித்தர்
8. ஞானக்கண் ஆத்தான் ஆகியோர்.
16.வானமாமலை மடத்து ஜீயர்கள் , வானமாமலைப் பெருமாளுக்கு பல திவ்யதேசங்களிலும் கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர்.
17. ஸ்ரீவானமாமலை மடத்தின் கிளைகள் (வட நாட்டில் தோத்தாத்திரி மடம் என்றழைக்கப்படும்) இந்தியாவெங்கும்
அமைந்துள்ளன. லட்சணக்கணக்கான சிஷ்யர்களைக் கொண்டது இந்த மடம்.
18. ஸ்ரீசைலேச தயாபாத்ரம் என்று தொடங்கும் தனியனை நம்பெருமாள் அருளிச் செய்திட அதுகண்டு மகிழ்ந்த
ஒன்றான வானமாமலை ஜீயர்
“இரண்டு முலைக் காம்பிலும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகக் பருகுவார் நாமே யன்றோ?” என்று அருளிச் செய்தார்.
19. பொன்னடிக்கால் ஜீயரை ஸ்ரீவானமாமலைக்கு காரிய நிமித்தமாய் அனுப்பி வைப்பதற்காகத் திருவுள்ளம் கொண்டு
நம்பெருமாள் கோயில் கொண்டிருக்கும், பூபாலராயனிலே எழுந்தருளியிருந்த அரங்க நகரப்பனை
ஸ்ரீவானமாமலை ஜீயர் திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் ஸ்ரீமணவாளமாமுனிகள்.
20. ஒன்றான வானமாமலை ஜீயரும் மங்கள வாத்தியங்களுடனே அரங்க நகரப்பனை கோயிலாழ்வாரிலே எழுந்தருளப்பண்ணி ஆராதித்து வந்தார்.
21. இன்றும் ஸ்ரீவானமாமலை மடத்தில் ஆராத்யப்பெருமாளாய் அரங்கநகரப்பன் எழுந்தருளியிருப்பதை அனைவரும் ஸேவித்து மகிழலாம்.
22. ஸ்ரீமணவாளமாமுனிகள் பரமபதித்தபோது வடநாட்டு யாத்திரை நிமித்தமாக எழுந்தருளியிருந்த
ஸ்ரீவானமாமலை ஜீயர் உடனிருக்கவில்லை. இதனால் பல நாட்கள் துயருற்றிருந்தார் வானமாமலை ஜீயர்.
23. திருவரங்கத்தில் கீழைச் சித்திரை வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீவானமாமலை மடம். ***

——————————

ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயரின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா -இவர் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
2-ஸ்ரீ போர் ஏற்று நாயனார் -இவரும் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
3-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணா -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம்
4-ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
5-ஸ்ரீ சண்ட மாருதம் மஹாச்சார்யார் -இவர் ஸ்ரீ இளைய வள்ளி வம்சம்
6-ஸ்ரீ ஞானக் கண் ஆத்தான் -இவர் முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ திருக் கோட்டியூர் அரையர்
8-ஸ்ரீ பள்ளக் கால் சித்தர்

———-

2-ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பத பங்கே ருஹாஸ்ரிதம்
ஸ்ரீ வேங்கட ரகூத்தம்ஸ ஸோதரம் மநைவை முனிம்

ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த மட முதல் பட்ட ஜீயர் ஸ்ரீ அப்பன் சடகோப ராமானுஜ ஜீயர் –1119-1173-
ஸ்ரீ மா முனிகள் –12 th பட்டம் -1428-1431-
அதன் பின்பே ஸ்ரீ பெரிய கேள்வி ஜீயர் -ஸ்ரீ சின்ன ஜீயர் கள் எழுந்து அருளி உள்ளார்கள்

————–

3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத சேவ ஏக தாரகம்
பட்ட நாத முனிம் வந்தே வாத்ஸல்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
வர யோகி பதாதாரம் பட்ட நாதம் முனிம் பஜே

வர யோகி பதாதாரம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
பட்ட நாதம் முனிம் வந்தே தீ பக்த்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் வர யோகி பதாஸ்ரிதம்
கார்க்ய வம்ஸ ஸமுத் பூதம் பட்ட நாத முனிம் பஜே

ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
கார்த்திகை புனர்பூசம் திரு அவதாரம்
திருத் தகப்பனார் -ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
இயல் பெயர் -ஸ்ரீ கோவிந்த தாஸர் அப்பன்
இவருக்கு ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாளைத் திரு ஆராதனத்துக்குக் கொடுத்து அருளிச் செய்தார்
இவர் ஒரு திருவாடிப் பூரத்தில் சூடிக் கொடுத்து அருளிய நாச்சியார் பிரசாதம் கொண்டு வந்து சமர்ப்பிக்க
ஸ்ரீ மா முனிகள் இவருக்கு ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் தாசர் -என்ற திரு நாமம் இட்டு அருளினார்
இவர் பின்பு ஸ்ரீ மா முனிகள் இடமே சந்யாச ஆஸ்ரமம் பெற்று
ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்-என்று திரு நாமம் இடப் பெற்றவர்

இவர் அந்திம உபாய நிஷ்டை -பிரபந்தம் அருளிச் செய்துள்ளார்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ கோவிந்த தாசர் அப்பன் -ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
ஸ்ரீ பரவஸ்து நாயனார்
ஸ்ரீ சட கோபாச்சார்யார்
ஸ்ரீ வரதாச்சார்யார் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் -1525- சித்திரை திருவோணம்
ஸ்ரீ ஸ்தல சயனத் துறைவார் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ திருவல்லிக் கேணியில் அத்யாபகராக உள்ளார்

இன்னுலகில் கச்சி தனில் வந்து உதித்தோன் வாழியே
எழில் கார்த்திப் புனர் பூசித்து இங்கு உற்றான் வாழியே
மன்னு மறைத் தண் தமிழை மகிழ்ந்து உரைத்தான் வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன் அனுஷ்டானம் அறிவித்தோன் வாழியே
பாரில் அட்ட திக் கயத்தில் பேர் பெற்றான் வாழியே
சொன்ன நெறி மதுர கவி போலுமவன் வாழியே
தூய்மை மிகு பட்டர் பிரான் துணை அடிகள் வாழியே

—————–

4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்க த் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டாம் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமி

கர்கடே புஷ்ய சஞ்சாத் வாதி பீகரம் ஆஸ்ரயே
வேதாந்தா சார்யா ஸத் சிஷ்யம் வர யோகி பதாஸ்ரிதம்

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிந கருண ஏக பாத்ரம்
வத்ஸ அந்வயம் அநவத்யா குணை ருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்

முடும்பை வம்சம்
1361-ஆடி -பூசம் -ஸ்ரீ காஞ்சியில் திரு அவதாரம்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
இயல் பெயர் ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதர் அண்ணா
திருத்தகப்பனார் -ஸ்ரீ அனந்தாச்சார்யார்
திருத்தாயார் -ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ தேசிகன் திருக்குமாரர் ஸ்ரீ நயன வரதாச்சார்யர் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார்
க்ருஹஸ்தாஸ்ரமம் ஸ்வீ கரித்து –திருமஞ்சனத்துக்கு சாலைக் கிணறு தீர்த்த கைங்கர்யம்
கைங்கர்யம் செய்து வந்தார்
நரஸிம்ஹ மிஸ்ரன் மாயாவதி இவற்குருவான ஸ்ரீ நாயந வரதாச்சார்யரை வாதத்துக்கு அழைக்க
அவர் இவரை அனுப்ப வென்றதால் பிரதிவாதி பயங்கரர் விருது பெற்றார்

இவருக்கு
ஸ்ரீ ஸ்ரீ நிவாசார்யார்
ஸ்ரீ அநந்தாச்சார்யார்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் -மூன்று திருக்குமாரர்கள்
ஆந்திர ராஜா வீர நரஸிம்ஹ ராயன் -இவரது சிஷ்யன்
ஸ்ரீ திருமலையில் ஸ்ரீ ஆகாச கங்கையில் இருந்து திரு மஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்து வர
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ மா முனிகள் பிரபாவம் பேச அத்தைக் கேட்டு ஏலக்காய் இத்யாதிகள் சேர்க்க மறக்க
ஸ்ரீ திருவேங்கடமுடையானோ அர்ச்சக முகேந இன்று தீர்த்தம் மிக்க மணத்துடன் இருந்தது என்று அருளிச் செய்ய
ஸ்ரீ மா முனிகளின் பிரபாவம் கேட்டதாலே நடந்த விசேஷம் என்று தெரிந்து மகிழ்ந்து
ஸ்ரீ ரெங்கம் சென்று ஆஸ்ரயிக்க ஆசை கொண்டார் –

ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ கூரத்தாழ்வானைப் போலவே ஸ்ரீ மா முனிகளுக்கு இவர் உஸாத் துணையாக இருந்தார் –
ஸ்ரீ மா முனிகள் உடன் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களா சாசனம்
அருளிச் செய்யும் படி செய்து நித்ய அநுஸந்தான ஏற்பாடு செய்ய வைத்து அருளினார் –
ஸ்ரீ ரெங்கம் திரும்பி சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் சாதிக்கும் படி செய்து அருளி ஸ்ரீ அண்ணாவை
ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபிஷேகம் செய்து ஸ்ரீ பாஷ்யாச்சார்யர் என்ற பட்டமும் வழங்கி அருளினார் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாட்டுக்கு எழுந்து அருளின பின்னர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி
கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீ பரவஸ்து ஸ்ரீ நிவாஸாச்சார்யார் போல்வாருக்கு
ஸாஸ்த்ர அதி வர்த்தனங்கள் செய்து அருளினார் –

இவர் அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ பாகவதம் -ஸ்ரீ ஸூ பால உபநிஷத் -ஸ்ரீ அஷ்ட ஸ்லோஹீ –
ஸ்ரீ யதிராஜ விம்சதி -இவற்றுக்கு வியாக்யானங்களும்
ஸ்ரீ வர வர முனி சதகம்
ஸ்ரீ வர வர முனி ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ 108 திவ்ய தேச ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களம்
ஸ்ரீ ராமானுஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ கிருஷ்ண மங்களம்
ஸ்ரீ பிரபத்தி யோக காரிகை
ஸ்ரீ ப்ரசார்ய சப்ததி ரத்ன மாலை
ஸ்ரீ நித்ய ஆராதனை விதி
ஸ்ரீ விஜய த்வஜம்
ஸ்ரீ ஜீயர் வாழித் திரு நாமம்
ஸ்ரீ இருபது வார்த்தை
ஸ்ரீ பெரிய ஜீயர் பாதாதி கேசாந்த மாலை
ஸ்ரீ வ்ருத்தி ஸ்தவம் –ஆகியவை –

92 வருஷங்கள் வாழ்ந்து -1453-பங்குனி சுக்ல பக்ஷ நவமி புஷ்ய நக்ஷத்திரத்தில்
ஸ்ரீ திருநாடு எழுந்து அருளினார் –

————

6-ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்

துலா ரேவதி ஸம்பூதம் வர யோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம் பூர்ணம் அப்பாசார்யம் அஹம் பஜே

ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -ஸ்ரீ முடும்பை வம்சம் -ஐப்பசி ரேவதி –
ஸ்ரீ சோளிங்கர் அருகில் சித்தூர் சாலையில் எறும்பியில் திரு அவதாரம்
திருத்தகப்பனார் -ஸ்ரீ பெரிய சரண்யாச்சார்யர் -ஐயை -என்றும் ஸ்ரீ ரெங்கராஜர் என்றும் திரு நாமங்கள்
இயல் பெயர்-ஸ்ரீ தேவ ராஜர்
திரு ஆராதனப் பெருமாள் -ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் -இவர் சங்கல்பித்த படியே
ஸ்ரீ கோயில் அண்ணன் மூலம் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயித்தார்

அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பூர்வ தினசரி
ஸ்ரீ உத்தர தினசரி
ஸ்ரீ சைலேச அஷ்டகம்
ஸ்ரீ வர வர முனி சதகம்
மேலும் 10 கிரந்தங்கள்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -மன்னுயிர் காள் இங்கே -பாசுரமும் இவர் அருளிச் செய்ததே

———————-

7- ஸ்ரீ அப்பிள்ளார்
இயல் பெயர் -ஸ்ரீ ராமானுஜன்
ஸ்ரீ ஸம்ப்ராய சந்திரிகை -11-பாடல்கள் உள்ள கிரந்தம் அருளிச் செய்துள்ளார்
இவர் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலில் தீர்த்தகாரர்கள் –
ஸ்ரீ நாதமுனி சந்நிதி கைங்கர்யம் செய்து கொண்டு உள்ளார்கள்
ஸ்ரீ மா முனிகள் திருக்கைச் செம்பை உருக்கி இவரால் செய்யப்பட ஸ்ரீ மா முனிகள் அர்ச்சா விக்ரஹம்
இன்றும் ஸ்ரீ ரெங்கம் பல்லவ ராயன் மடத்தில் உள்ள ஸ்ரீ மா முனிகளின் சந்நிதியில்
திரு ஆராதனம் செய்யப் பட்டு வருகிறது –

————————-

8- ஸ்ரீ அப்பிள்ளை
இயல் பெயர் -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹரர்
இவர் ஐந்து ஸ்ரீ திருவந்தாதிகளுக்கும்
ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கும் உரை சாதித்து உள்ளார்
பத்து ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் மேலும்
மூன்று பாடல்களுடன் 15 பாடல்களுடன் வாழித் திரு நாமங்கள் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ மா முனிகளைப் பற்றிய செய்ய தாமரைத் தாளிணை வாழியே -என்ற
பாசுரமும் இவர் அருளிச் செய்ததே –

—————-———————————————

என் மூலம் அஸ்வயுஜம் அஸ்யாவதார மூலம் காந்தோ பயந்த்ருயமினா கருணைக ஸிந்தோ
அசிதஸத்சு கணிதஸ்ய மாம் அபி சதாம் மூலம் ததேவ ஜகத் உபயதயைக மூலம்
யதாவதாரண மூலம் முக்தி மூலம் ப்ரஜாநாம் சடாரிபு முனி த்ருஷ்டா ஆம்னாய சாம்ராஜ்ய மூலம்
கலி கலுஷா சமூலோன் மூலாநே மூலமிந்தே ச பவது வரயோகி ந சமஸ்தர்தா மூலம்

மாற்று அற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்

ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது பரமார்த்த தர்ம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவதி குசலி ஹோ பிபோ மா ஸஹாய
திவ்யார்த் தஸ்மை திசத்து விபவத் தேசிகோ தேசிகானாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களானி

மாசற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

திரு மூலமே நமக்கு மூலம்
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?
பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?
தூத்தூர வந்த நெடுமாலோ
மணவாள மா முனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது

திரு மண் பெட்டி சொம்பு – இரண்டு திரு மேனி -வீற்று இருந்த திரு மேனிதிரு அரங்கம்
நின்று இருந்த திரு மேனி ஆழ்வார் திரு நகரி

பல்லவராய மண்டபம்-ஸ்வாமி மண வாளமா முனிகள் சந்நிதி ஸ்ரீ ரெங்கம்
திரு பரியட்டம் திரு மாலை சாத்துபடி
பொன் அடியாம் செம் கமலம்-மா முனிகள் திரு அடி பிரசாதம்
ரகஸ்யம் விளைந்த மண் இன்றும் சேவிக்கலாம் கால ஷேப கூடத்தில்
தொட்டி பிரசாதம்-தயிர் சாதம் உப்பு இன்றி

சேற்றுக்கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொலும் நல்ல அந்தணர் வாழ்வு இப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

கிருபயா பரயாச ரங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாசயன்
லுலுபே ஸ்வயம் ஏவ சேதஸா வரயோகி ப்ரவரச்ய சிஷ்யதாம் -ஸ்ரீ சைல அஷ்டகம்

முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை

தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-

ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் –
அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்

போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்

ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின்பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் —12-

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

” செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே”

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது
பரமம் தாமம் தேஜோ நிதானம்
பூமா தஸ்மிந் பூ மா சஹாயா குஸலீ பவது
திவ்யம் தஸ்மை ஜகது விபவம் வர வர முனி தேசிகோ தேசிகா நாம் மங்களானி கல்பயன்
ரெங்க தேசிகன் பெரிய பெருமாள் லஷ்மீ நாதன் -மா முனிகளோ தேசிகோ தேசிகா நாம்-

திருமாலவன் கவி நம்மாழ்வார்
நம்மாழ்வார் கவி மதுரகவி
அமுதனார் ராமானுஜர் கவி
எறும்பி அப்பா வர வர முனி கவி -ஷட் பதமாக -தேவராஜம் –
காட்டில் இருந்தாலும் -வண்டு போல் அல்லவே மண்டூகம் தாமரை அருகில் இருந்தாலும்
வண்டே கமல மது உண்ணும்
அண்டே பழகி இருந்தாலும் தவளை இதன் ஏற்றம் அறியாதே –
திவ்ய ஞானம் -ம முனிகள் திருவடிகளைப் பற்றுவதையே காட்டி அருளினார்

மூலம் சடரிபி முக ஸூ க்தி விவேசனாயா
கூலம் காவேரி கரையில் –
மம ஆலம்பநஸ்ய -பற்றுக்கோடு
ஜன்மஸ்ய மூலம்
சதுலம்-அளவோடு கூடியது -அர்த்தம் இல்லை -துலா மாச மூலம் அர்த்தம்
அதுலஸ்ய சித்தம் -அளவில்லாதது
சதுலம்
துங்கம் ரெங்கம் ஜெயது
பூமா ரமா மணி பூஷணம் ஜெயது
வரத குரு (கோயில் அண்ணன் ) சஹா சுப அநுவர்த்த ஸ்ரீ மன் ராமானுஜ ஏவ ஜெயது

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்–

November 28, 2021

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

1- ஸ்ரீ நிவாஸனுக்கு லோகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் விளையாட்டு போல் எளிதானவை
2-சிந்தனை எப்போதும் அடியார்களை ஸம் ரக்ஷணம் செய்வது மட்டுமே
3- வேதாந்தங்களில் இரத்தினம் போல் ஒளிவிடும் ப்ரஹ்மம் அவனே
4- மென்மையான அவனிடம் எனக்கு பக்தி ரூபாபன்ன ஞானம் உண்டாக அவன் அருளட்டும்

———-

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே-உத்பத்தி ஸ்திதி விநாசம் -லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூப -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்

———–

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.

இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.

ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோஷ ப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோஷ ப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.

அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.

ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

பக்தி -சாத்திய -சாதனா -இரண்டும் உண்டே-நான்கு விசேஷணங்கள்-ப்ரஹ்மணி
ஸ்ரீநிவாசே -நான்கு விசேஷணங்களோடு கூடிய பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்று பேசி
தனக்கு பக்தி ரூபாபன்ன ஞானத்தை பிரசாதிக்க வேண்டும் என்று இதிலே பிரார்த்திக்கிறார்.

வ்யாவர்த்திகம் இதர பின்ன -காட்ட விசேஷணங்கள் வேண்டுமே –
அகில புவந ஜன்ம ஸ்தேம பங் காதி லீலே
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெருத்தலும் நீக்கலா அலகிலா விளையாட்டுடையார் என்று
ஆதி சப்தத்தால் மோக்ஷ பிரதன் பிரஹ்மமாகிற அந்த ஸ்ரீநிவாசன் என்பதை சேர்த்துச் சொல்கிறார்.

சமன்வயா அத்யாயம் -முதலில் –
அவிரோதயா அத்யாயம் -இரண்டாவது –
சாரார்தம் இந்த பாதம் காட்டுமே –

வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே

இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர் வாழிகள்-ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரம பதம் அடைகிறது.

இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11),
எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.

வினத விவித பூத வ்ராத ரஷகைத தீஷே
பூதம் -ஸ்தாவர ஜங்கமம்
வினத -நமஸ்காரம் சரணம்
விவித -அநேக விதங்கள் உண்டே

அபய பிரதான சாரம் –சரணகத வத்சலன் சரம ச்லோகார்த்தங்கள்
சுர நர திர்யக் ஸ்தாவர ரக்ஷண பிரதீக்ஷேனாய் உத்தியோகித்திருப்பவன் அவன்.
1.ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் – அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாமி கதம்
2.ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் – ந த்யஜேயம்
3.ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் – மோக்ஷ யிஷ்யாமி
என்று தன்னைத் துதிப்பவர்களை கைவிடாமல் கரையேற்றுகிறேன் என்பதான ரக்ஷண தீக்ஷை அவனுடையது.
சாதனா பல அத்யாய சாரம்
மேதா விலாசம் -இத்தால் அறியலாம் பிரதிபை யும் அறியலாம்

ஸ்ருதி ஸ்ரசி விவீப்தே
வேதாந்தம் -வேத சித்தாந்தம் -ஸ்ருதி ஸிரசி-
வேத ஸிரோ பாகமான உபநிஷத்துக்களில் போரப் பொலிகின்றவன் அவன் என்பதும்
வேதம் அனைத்தும் பூர்வ பாகம் -பிரதான்யம் இல்லை சிலர் சொல்வார்கள் –
பிரமாணம் அதிலும் காட்டி ஸ்ரீ பாஷ்யம் அருளுகிறார்
வேதார்த்த சங்கரகம் வேதாந்தாரார்த்த சங்கரகம் பெயர் வைக்க வில்லை –
உபநிஷத் தனி வியாக்யானம் ராமானுஜர் செய்து அருள வில்லை
வேதார்த்த சங்க்ரகம் இதையும் சொல்லி அருளி –
தாத்பர்யம் முழுவதும் இதிலே அருளி இருக்கிறார் –
பிரஸ்தான த்ரயம் -அத்வைதிகள் கீதா உபநிஷத்-மூன்றும் சேர்ந்தே ஒரே பிரஸ்தானம்
கீதை ப்ரஹ்ம சூத்ரம் உபநிஷத் மூன்றும் ஒன்றே

ஸ்ரீநிவாச

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பக்தி ரூபா சேமுஷீ பவது

ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை.
ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ
ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது,
ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” .
அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது,
பக்தி என்பது ஸ்ரீ எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார்.
ஸ்ரீ ஆழ்வார் காட்டிய நெறியை ஸ்ரீ எம்பெருமானார் நன்கு பின்பற்றினார்.
அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

தீப்தே -தீபம் காட்டும்-சாஸ்திர யோநித்வாத் – வேதைக சர்வைஸ்தி-அவனைக் காட்டும் பிரகாசிக்கும்
பிரகாசம் அவன்-நமக்கு உபநிஷத் காட்டுமே
விதீப்தே
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே -ஸ்ரியபதித்வம்
ப்ரஹ்மணி– யௌகிகா ரூடிக அர்த்தம் -ஸ்ரீநிவாசன் திருமலை பெருமாளே குறிக்கும்
பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –

பரஸ்மின் –
உத்தேச விதய பாவம் -வார்த்தை மாற்றி
கரும்பு சாறு போலே –
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே பரஸ்மின் -மூன்றையும் வைத்தே நிறைய விஷயங்கள்-பரம் ப்ரஹ்மா

பகவான்
ராமானுஜர் போதாயனர் -வால்மீகி பகவான்
பரஸ்மின் ஒருவனே
விசிஷ்டாத்வைதம் காட்டும் இந்த பாதம் –
ஐந்து விசேஷணங்கள் ஸ்ரீனிவாச பரஸ்மின் இரண்டையும் சேர்த்து-பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கட்டும் என்று அருளுகிறார்

ஷேமுசி பவது – ஞானம் உண்டாகட்டும்
ஞானான் மோஷா உபநிஷத்
தமேவா வித்வான் அமிருதோ பவதி
ஞான மார்க்கம் -பக்தி மார்க்கம்
அவ்யக்த மார்க்கம் -நேதி நேதி மார்க்கம்
இது இல்லை இது சொல்லி சொல்லி -அவ்யக்த மார்க்கம் ஞான மார்க்கம்
பக்தி வ்யக்த மார்க்கம் -கீதை -அவ்யக்த மார்க்கம் துக்கம் விளைக்கும் –
பக்தி ரூபமான ஞானம் –
அவ்யக்த மார்க்கம் சாங்க்ய மார்க்கம்
பக்தி யோகம் யோகம் மார்க்கம் -யோக சாஸ்திரம்
பக்தி ரூபா ஷேமுசி -உண்டாகட்டும் -மம பவது

அத்வைதிம் -moniyisam -இல்லை நான்- dualisam
நிர் விசேஷ அத்வைதிம்
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டாத்வைதம் பெயர் அப்புறம் வந்தது
வடுக நம்பி அஷ்டோத்ரா நாமாவளி -செய்யும் பொழுது -விசிஷ்டாத்வைத பாரக
நிர் விசேஷ ப்ரஹ்மம்-வஸ்து அத்வைதி
விசேஷம் சகிதம் ப்ரஹ்மம்
குண -விக்ரக- விபூதையக-
குணம் உள்ளதால் ஸ்தோத்ரம் செய்கிறோம்
ஸ்தோத்ரம் -குணி நிஷ்டா குண அதிதானம் –
குணி இடம் உள்ள குணங்களை சொல்வதே ஸ்தோத்ரம்
விக்ரகம் -ஆகாரம் உண்டே
விராகாரம் பர ப்ரஹ்மம் அத்வைதி
அதை இல்லை என்று நாம் சொல்ல வில்லை –
நிரகாரம் மட்டும் இல்லை -ஆகாரமும் உண்டு -நம் அபிப்ராயம்
த்யானம் தைல தாராவது அபிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி -விக்ரகம் வேண்டுமே இதுக்கு
ஆலம்பனம் -அர்ச்சை -த்யானத்துக்கு-ஆலம்பனம் –
விபூதி -பூதிர் ஐஸ்வர் யம்-உபய விபூதி நாதன் –
மேலே highly evolved வைகுண்டம் – பிராமாணிகம் இவையும்

அத்வைதி எல்லாம் மித்யை
பாதோச்ய -திரிபாதி –
வைகுண்ட கத்யம் -தர்சனம் -பெற்று அருளி –
ஸ்தவ்ய ஸ்தவ பிரிய -ஸ்தோத்ரம் பண்ண – சேர்த்தி உள்ளதை காட்ட வியாஜ்யம்
என் கோயில் வலம் வந்தாய் –
தன்னுடைய அம்சம் தன்னிடம் சேர்ந்தால் மகிழ்வான்
அசித் அவிசிஷ்டா ஜந்து -பிரளயம் -dormant stage உபாசனம் செய்ய முடியாதே
ஜாத நிர்வேதம் கொண்டானாம்
கரண களேபரங்கள் கொடுத்து அருளி —

சித் அசித் -சரீரம் விசிஷ்டம் ப்ரஹ்ம ஏக மேவ அத்வதீயம் –
தத்வ த்ரயம் சித் அசித் ஈஸ்வர –
ஏக மேவ தத்வம்-ஸ்வதந்திர தத்வம் ஒன்றே விரோதம் இல்லையே இரண்டுக்கும்

அத்வைத பரமான மஹா வாக்கியங்கள் :

1. தத்வமஸி – சாந்தோக்கியம் .
2. அஹம் பிரஹ்மாஸ்மி – பிரஹதாரண்யம் .
3. பிரக்ஞானம் பிரஹ்ம .
4. அயமாத்மா பிரஹ்ம – மாண்டூக்யம்

விசிஷ்டாத்வைத பரமான வாக்கியம் :
1. போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா ஸர்வம் பிரோக்தம் திரிவிதம் பிரஹ்ம எதது – ஸ்வேதாஸ்வேத உபநிஷத்.

தத்வ த்ரயம் சொல்லும் போக்தா போக்யம் ப்ரேரிதா-ப்ரஹ்மமே மூன்று விதமாக

மங்கள ஸ்லோகம் -இவற்றை விவரிக்கிறதே
தடைகளை நீக்கி –நமஸ்கிரிய-வஸ்து நிர்த்தேசம் – ஆசீர் ரூபா மங்களம்-பக்தி ரூபாபன்ன ஞானம் பவதி –

அதா -சப்தம் ஓம்காரம் போலே முக்கியம்
சூத்திர கிரந்தங்கள் எல்லாம் அதா -சப்தத்தால் ஆரம்பிக்கும்
மங்களார்த்தம் -இதுவும்
நிகில சகல அகில பர்யாய-அகாரோ வாசுதேவச்தோ வாக்கியம்-அகாரம் -சப்தங்களுக்கு மூலம்
சகல -விட அகில -அனைத்தையும் குறிக்கும்
ஆதி -சப்தம் –மோஷ பிரதானம்-ஜென்மாதி சூத்ரம் விவரம் அப்புறம் வரும்
வினத -நமஸ்காரம் விசேஷண பிரபத்தி
விவித பூத -beings -நான்கு – தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம-சமூகம் – வ்யாஜ்யமாக சரணாகதி
ரஷைகத தீஷை -காக்கும் இயல்பினான் கண்ணன்
பிரகிருதி அம்சம் புருஷ அம்சம் இரண்டும் பிரதானம்
இடது வலது பக்கம்
பரமாத்மா -ஆண் –
ஸ்வாமித்வ சேஷத்வ -பும்சத்வம்
ஸ்திரீ ஸ்தானம் இதர சர்வம்
புருஷ சப்தம்
புருஷோத்தோம உத்தமன் பாகவதம்

ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச சர்க்க கர்த்தா -ஸ்ருஷ்டி ப்பவனும்-ஸ்ருஷ்டிக்கப் படுபவனும் அவனே
விசிஷ்டாத்வைதம்
விசிஷ்டஸ்ய அத்வைதம் -சேதன அசேதனங்கள் -சரீரம் -ஸூஷ்ம -ஸ்தூல -அவஸ்தைகளிலும்
பஹுஸ் யாம் ப்ரஜா யேவ
மத்தஸ் சர்வம்
அஹம் சர்வம்
மாநா தீநா மேய ஸித்தி
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம்

வேத வேத்ய பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத ப்ரா சேதஸா தா ஸீத் ஸாஷாத் ராமாயணாத் மநா
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம்
நான்கையும் நான்கு அத்யாயங்களால் சாரீரிக மீமாம்ஸை சொல்லுமே

நலம் உடையவன் -காரணத்வத்துக்கு அஷிப்தங்களான கல்யாண குணங்கள்
உயர்வற -அபாத்யத்வம் -வருத்தம் அற்ற உயர்வு -லீலையாக அனைத்தும் செய்து அருளுபவர் -லோகவது லீலா கைவல்யம்
மயர்வு -ஜீவ ஸம்ஸார தோஷம்
மதி நலம் -பக்தி -உபாயம் மூன்றாம் அத்யாய கருத்து
அருளினான் -உப பத்தே -ஸித்த உபாயம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அர்ச்சிராதி கதிகள் ஸூசகம்
துயர் அறு -உத்தர பூர்வா கயோ –ஸூ த்ர அர்த்தம் அவித்யா நிவ்ருத்தி

சுடர் அடி தொழு -சம்பத்ய ஆவிர்பாவம் –

தே ந விநா த்ருணம் பிந சலதி –அவன் அன்றி ஒரு துரும்பும் அசையாது –
கர்த்தா காரயிதா ச ஸஹ -அவனே எல்லாம் செய்கிறவன் -செய்விக்கிறவன் –

——————————————————–——

அதே மங்கள ச்லோகம்
ஸ்ரீ நம்மாழ்வாரையும் எப்படிக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே

அகில புவன ஸ்தேம பங்காதியாய் இருப்பவன் ஸ்ரீ எம்பெருமான்.
தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த ஸ்ரீஎம்பெருமானோடு அவனாகிய லீலையை விளையாடுபவர் ஸ்ரீ ஆழ்வார்.
ஆகவே அகில புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா எனும் அடைமொழி ஸ்ரீ ஆழ்வாரைக் குறிக்கிறது.

ஸ்ரீ எம்பெருமானுடனான விளையாட்டை ஸ்ரீ ஆழ்வாரே பாடுகிறார்
”என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” என்றும்,
விளையாடப் போதுமின் என்னப் போந்தமை” என்றும்.

இந்தச் சொற்களின் தேர்வு இன்னொரு விளக்கத்துக்கும் ஹேதுவாகிறது –
புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா அகிலம் யஸ்ய. புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலையே இவ்வண்ட சிருஷ்டியின் ப்ரதான காரணம்,
அதாவது ஸ்ரீ எம்பெருமான். இவன் யாருக்கு இப்படி எல்லாமாய் இருக்கிறான் எனில், ஸ்ரீ ஆழ்வாருக்கே.
ஏன் எனில் அவர் ஒருவரே “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றார்.
நமக்கு உயிர் பிழைக்கச் சில, வளர்ச்சி பெறச்சில, இன்பம் அனுபவிக்கச் சில எனப் பொருள்கள் தேவை.
ஆனால் ஸ்ரீ ஆழ்வாருக்கு ஸ்ரீ கிருஷ்ணனே இம் மூன்றுமாய் உள்ளான்.

விநத-விவித-பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே

இவ்வெல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமானே. ஆயினும் பக்தன் நோக்கில் ஸ்ரீ எம்பெருமான் பூரணமாகத் தேவைப்படுவதில்லை.
ஸ்தனன்ஜயப் ப்ரஜைக்கு அதன் பசி தீரப் பால் கிடைப்பதால் அதன் நோக்கு தாயின் ஸ்தனத்திற்போலே
ஸ்ரீ எம்பெருமானை வணங்கும் அடியானுக்கு அவன் திருவடியிலேயே கைங்கர்யம் பற்றி நோக்கு.

ஸ்ரீ எம்பெருமானின் திருவடி நிலைகளே ஸந்நிதிகளில் ஸ்ரீ சடாரி அல்லது ஸ்ரீ சடகோபம் என ஆழ்வார் பேராலேயே வழங்கப் பெறுகிறது.
ஆகவே ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ எம்பெருமான் திருவடிக்கும் வேறுபாடில்லை.
ரக்ஷை வேண்டும் அடியாருக்குத் திருவடிகளாகிய ஸ்ரீ ஆழ்வாரே கிடைக்கிறார்.

ஸ்ருதி சிரஸ்ஸாவது வேதாந்தம். ஸ்ருதி சிரஸி விதீப்தே எனில் வேதாந்தத்தில் நன்கு உணர்ந்தவர்,
வேதாந்தம் ஸ்ரீ எம்பெருமானை அறியவே என்று உணர்ந்தவர் ஸ்ரீ ஆழ்வார். ஆகவே இச்சொற்றோடரும் அவர்க்கு இசையும்.

வேதமே ஆழ்வாரை, “தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ரவாக்ம்ஸஸ் ஸமிந்ததே” விப்ரா எனும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்.
“ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதா ஸ்ம்ருதா” என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உழல மாட்டார்.
“பண ஸ்துதௌ” என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக் குணங்களைப் பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடிய ஆழ்வாரையே குறிக்கும்.
“தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்”.
ஜாக்ர வாக்ம் ஸ” என்பது எப்போதும் விழிப்புணர்ச்சியோடிருப்பது. எம்பெருமானையன்றி வேறொன்றும் பாராது,
அவனையன்றி மற்றொன்று உணராது நினையாது அவனையே அனுபவித்திருக்குமவரான
ஆழ்வாரே இச்சொற்றொடருக்கு இலக்கும் இலக்கியமும். தானே ஸத்தையாயும் எப்பொருளாயும் இருந்து ஒளிரும்
எம்பெருமான் விஷயமாகவன்றோ ஆழ்வார்
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று பாடினார்?
இவ்வேத வாக்யத்துள்ள “வி” என்பதை ஸ்ரீபாஷ்யச்லோக இறுதிச்சொல்லான ஸமிந்ததேவிலுள்ள “ஸம்” காட்டுகிறது.

ப்ரஹ்மணி

எல்லா விதத்திலும் பெரியது எனக்காட்டும் “ப்ரு” எனும் சொல்லின் அடியாக வந்த சொல் ப்ரஹ்மம்.
பரப்ரஹ்மமே அவரிடம் கட்டுண்டுள்ளதென்பதே ஆழ்வாரின் பெருமை.
பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் இதனை,
“யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்” என்று காட்டுகிறார்.
ஆகவே ப்ரஹ்மம் என்பதன் சரியான பரியாயம் பெரியன்.

ஸ்ரீநிவாஸே

இதெல்லாம் சரி….ஆனால், ஸ்ரீநிவாசே என்பதை ஆழ்வார் பரமாக நிர்வஹிக்க முடியாது,
ஏனெனில் ஆழ்வார்க்கு ச்ரிய:பதித்வம் இல்லையே எனலாம்.

ச்ரிய:பதித்வம் எம்பெருமானின் ஏகதேசமான உரிமைதான், எனினும் ஆழ்வார் ஸ்ரீ நிவாசனே
மேலும் சம்பிரதாயத்தில் ஸ்ரீநிவாசர்கள் பலர் உளர்.

லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன – லக்ஷ்மணன் லக்ஷ்மியை உடையவன்,

ஸ து நாக வர ஸ்ரீமான் – கஜேந்த்ரனும் ஸ்ரீமான்,

அந்தரிக்ஷ கத ஸ்ரீமான் – விபீஷணன் நடு வானில் நின்றவன் ஸ்ரீமான் ஆனான்.

இவ்வொவ்வோரிடத்திலும் ஸ்ரீ அல்லது லக்ஷ்மி என்பது வெவ்வேறு பொருள் தருவதாகும்.
லக்ஷ்மணனுக்கு ஸ்ரீ கைங்கர்யம்,
கஜேந்திரனுக்கு ஸ்ரீ அவன் கைம்மலரை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க விரும்பிய மனத்தூய்மை,
விபீஷணனுக்கு ஸ்ரீ அவன் மனதில் துயரம் இருப்பினும் எல்லா செல்வமும் விட்டுப் பெருமாளை சரண் புக்கது.

ஆழ்வார் விஷயமாகவோ எனில் வ்யாக்யாதாக்கள் அவரிடம் ஸ்ரீ இருப்பது போக அவரே ஸ்ரீ, பிராட்டி என்றார்கள்.
ஆழ்வார் முன் சொன்ன பிரபன்னாதிகாரிகளின் ஒவ்வொரு குணமும் நிரம்பப் பெற்றதால் ஸ்ரீநிவாசர்,
தாமே பிராட்டி போலானதாலும் ஸ்ரீநிவாசர் என்று எண்ணத்தகும்.

இவ்வாறாக, எம்பெருமானார் எம்பெருமானை அனுபவிக்கு முகமாக இச்லோகத்தால் ஆழ்வாரை அனுபவித்தார் என்பது தெளிவு.
ஆழ்வார் ப்ரபாவம் ஸ்ரீ பாஷ்யம் முதலில் தொடங்கி, இறுதி வரை, ஆம் கடைசி ஸூத்ர பாஷ்யம் வரை செல்கிறது.

ஸ்ரீ பாஷ்யம் விவரிக்கும் கடைசி ஸூத்ரம் “அநாவ்ருத்தி அநாவ்ருத்திஸ் சப்தாத்” என்பது.
இதில் அநாவ்ருத்தி சொல்லின் பொருளாவது, விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இம்மாயாவுலகுக்கு வருவதில்லை என்பது.

திரும்ப வராததற்குக் காரணம், சப்தாத், அதாவது இவ்வாறு வேதம் சொல்வதால்.
வேதம், “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிறது:விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இவ்வுலகுக்கு வருவதில்லை.

பரம சேதனன் சேதனனைக் காதலோடு ஆரத்தழுவும் நிலை.
ஜீவனின் நிலையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வெறும் ஆதாரமாய் இருக்கும் நிலையன்றி,
பரம சேதனன் சேதனனை அடையப் பல வடிவுகளும் முயற்சிகளும் ஏற்கிறான்.
அவன் ஆரா அன்புள்ள காதலன், ஒருபோதும் கைவிடாத காதல் கொண்டவன்.
“ஸ ச மம ப்ரிய:” என்று சொல்பவன். ஜீவன் என் அன்புக்குரியவன் எனும் இதைப் பொருளில்லாமல் சொல்வானா?

ஆழ்வார் அநுபவத்தை முன்னாகக் கொண்டு ஸ்வாமி,
“ந ச பரமபுருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்தயிஷ்யதி”.

நழுவாத ஸங்கல்பங்கொண்ட பரமபுருஷன் தனக்கு மிகப்ரியமான மயர்வறப்பெற்ற சேதனனை மிக்க பரிச்ரமத்துடன்
அடைந்தபின் விடுவானா? கிருஷ்ணனை வெண்ணெய் திரும்பத் தா எனில் தருவானோ?

சேதனனை அடைந்து அநுபவிப்பதில் எம்பெருமானுக்குள்ள ஆசையை ஆழ்வார்,
“என்னை முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” என்கிறார், அவன் என்னை முழுதுமாக அநுபவித்தான்.
இந்தக் காதலை வார்த்தைகளால் விளக்கமுடியாது, உணரவே முடியும்.
இவ்வாறான திருத்தவொண்ணாத காதல் நோயாளன் பெற்ற சேதனனைத் திரும்பவிடுவனோ!

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தை ஒரு பேருரையாய் நிகமிக்கிறார் –
”வாசுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:” எனும் கண்ணன் எம்பெருமானின் தன்னை விட்டு விலகும்
சேதனனைப் பற்றிய நிர்வேத ப்ரகடணத்தை உதாஹரிக்கிறார்.
ஸ்ரீ எம்பெருமான் உத்தராயணத்தில் கிளம்பிச் சென்றபின் ஸ்ரீ ஆழ்வார் தக்ஷிணாயனத்தில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனக்
கண்ணனே எனக்கு எல்லாமும் எனச் சொல்லிப் போந்தார்.
ஸ்ரீ கண்ணனின் திருப்பவளம் உதிர்த்த சொற்களே ஸ்ரீ ஆழ்வார் பாசுரமாக வந்தன.

——————-

ஆசீர்வாதம் -நிர்தேச ரூபம் -நமஸ்கார ரூபம் -மூன்றாலும் அருளிச் செய்கிறார்
அ இதி பகவதோ நாராயணஸ்யா பிரதமாபிதானம்
அகாரம் பிரயுஞ்ஞாநேன கின்நாம மங்களம் ந க்ருதம்
அகாரத்தோ விஷ்ணு ஜகத் உதய ரஷாப்ளய க்ருத்-பட்டர்
ப்ரபத்யே பிரணவாகாரம் பாஷ்யம் –

அகில புவன -அகாரமும்
உக்தம் -அத்யாயம் 3 பாதம்
சர்வம் சமஞ்ஜசம் – முடிவில் மகாரமும் அருளி உள்ளார்
ஆதி -மோஷ பிரதானம் -தனியாகவே அருளுவதால்
ஜகத் உத்பத்தி ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதாய -போலேயும்
ஜகத் ஜன்ம ஸ்திதி த்வம்ச மகா நந்தைக ஹேதவே-போலேயும்
உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்த நைக ஹேது பூத -வேதார்த்த சந்க்ரகம் -போலேயும்
ஆதி -அந்த பிரவேச நியமனாதிகள் –
இதை ஸ்ரீ பாஷ்ய காரரே
ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம் -என்று விவரித்து அருளிச் செய்கிறார்-

லீலா சப்தம் பரி பூரணன்
அப்ரமேய அநியோஜ்யச்ச யத்ர காமகாமோ வசீ மோததே பகவான் பூதை பால க்ரீட நகை இவ -மகா பாரதம்
லீலா நாம ஸுவயம் பிரயோஜனதயா அபிமத அநாயாச வியாபார
பஹுஸ்யாம் -உபாதான காரணத்வம்
லீலை -நிமித்த காரணத்வம்
விநத -விசேஷண நதா
வ்ராத -சமுதாயம் சமுகம் கூட்டம்
ஏக தீஷா-த்ருட வ்ரதம் -ரஷகம் -அநிஷ்ட நிவ்ருத்தம் இஷ்ட பிராப்தம்

முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் -இரண்டாவது அதிகரணம் -ஜன்மாத்யதிகரணம் -ஜன்ம ஸ்தேம பங்க –
லீலை -அவிரோதாத்யாயம்
முதல் பாதம் கடைசி அதிகரணம் -பிரயோஜனவத்வாதிகரணம் -லோகவத்து லீலா கைவல்யம் -ஸூத்ரம்
மூன்றாம் அத்யாயம் சாதனாத்யாயம் -விநத பதத்தால் ஸூசிப்பிக்கிறார்
ரஷா பதம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் அருளுவதை -நான்காம் அத்யாய சுருக்கம் அருளுகிறார்
ஜகத் காரண த்வ மோஷ பிரதத்வங்கள் -சத்ர சாமரங்கள் போலே பர ப்ரஹ்மத்துக்கு அசாதாரண சின்னங்கள்
ஸ்ருதி ஸிரசி -பிரமாணம் காட்டி அருளி
விதீப்தே -விசேஷண தீப்தத்வம் -பூர்வ பாகம் தேவாதி ரூபமாகவும் -ஸுவயம் நிரதிசய ஆனந்த மயன்
ப்ரஹ்மணி -சத் ப்ரஹ்மாதி சப்தங்களை குறிக்கும்
ஸ்ரீநிவாசே -விசேஷ பதம் -நாராயண ஆதி சப்தங்களை குறிக்கும்

பரஸ்மின் –பராதிகரணம் -3-2-7-சர்வ உத்க்ருஷ்டன்
உபய லிங்காதி கரணத்தில்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ரஹி -3-2-11
ஸே மு ஷீ -உபாய ஸ்வரூபம் -சாமான்ய சப்தம்
பக்தி ரூபா -விசேஷ சப்தம்
பக்த்யா து அநந்யயா சக்ய
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
பர பக்திக்கு காரண பூதமாயும்
ஜ்ஞான தர்சனாதிகளுக்கு சாதனமான பக்தியும்
மம
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலயம் -ஸ்வாத்மானம்
பவது உண்டாகட்டும்

————————————————————————————————————————

இரண்டாவது மங்கள ச்லோஹம்-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

1-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது
2- ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட பிரானாகிய பராமாதவிடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது
3-பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது
4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன
5- இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருக்கட்டு

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார் – மோஷம் கிடைக்க இவர் வார்த்தை –
உபநிஷத் -ஷீர சமுத்ரம் -மதனம் -செய்து கிடைத்த அமிர்தம்
சம்சார அக்னி விதீபனம் விபகத பிராண ஆத்மா சஞ்சீவினி -தாபம் த்ரயம் –
ஆதி பௌதிகம் -தாபம் –பிராணிகள் மூலம்
ஆதி தெய்விக -தாபம் -பூகம்பம் வெள்ளம் போன்றவை
ஆத்யாமிகம் -மனஸ் சரீரம் புத்தி மூலம்
சஞ்சீவி பிராணன் மீண்டு கொடுத்தது போலே

பூர்வாச்சார்யர் நன்றாக ரஷணம் செய்து கொடுத்து அருளி –
பகுமதி -வெவ்வேற -தான் தோன்றியான வியாக்யானம் வ்யாயாத தூரஸ்தயாம்
ஸ்வேன-நிஜ -ஸ்வா-நான் அடியேன் -போலே
அஹம் மயா-கர்மணி பிரயோகம்-வினயத்துடன் சொல்லி அருளி ஐந்து விசேஷணங்கள் -அருளி –
இரண்டு ஸ்லோகங்கள் –பகவான் ஸ்மரணம்–ஆச்சார்யர் ஸ்மரணம்
நாஸ்திகர் கூட குருக்களுக்கு செய்வார்களே–பகவானுக்கு முதலில்
பூர்வர்களுக்கு -பாராசரர் வசஸ்ததாம் பூர்வாச்சார்யா சு ரஷிதம் அடுத்து அருளி –

கிரந்த வைலஷண்யம்
வியாசர் சொல்லாமல் பாராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளி ஸ்ரீ பராசர மக ரிஹி புத்திரன்
ஸ்ரீ ஆளவந்தார் -மூன்று விரல்கள்
ஸ்ரீ வியாசர் ஸ்ரீ பராசரர் பெருமை அனைவர்க்கும் அறிய
உபநிஷத் -பிரதானம் ஆரண்ய -ஷீர-ஆனந்தம் -சமுத்ரம் அந்தம் தெரியாதே
வேதாக அநந்த சாகரம்-அதில் இருந்து எடுக்கப் பட்ட
சுமனதாக -சாராசாரங்கள் அறிந்தவர்கள் –
பௌமாகா-பூமியில் உள்ளவர்கள் எல்லாரும்
அனுபந்த -நான்கு விதம் -சதுஷ்டயம் –
விஷயம் -முதலில் தெரிந்து கொண்டு –
பிரயோஜனம் -அடுத்து -மந்த புத்தி உள்ளவர் கூட பிரயோஜனம் இன்றி செய்ய மாட்டார்கள்
நிஷ் பலமான கார்யம் செய்யக் கூடாதே
க்ரீடா -ஜல தாரை -சாமான்யமான கார்யத்தில் இறங்க கூடாது சான்றோர்கள்
அதிகாரி -மூன்றாவது –கர்ம ஜன்ம -யாரை உத்தேசித்து –
சம்பந்தம் -பிரதிபாத்ய -இதை எழுத தகுதி உண்டா
யோக சாஸ்திரம் பதஞ்சலி முதலில் செய்து அருளி –
பகவத் ஆஞ்ஞையால் செய்து அருளினார் ஸ்ரீ பாஷ்யம் –
கியாதி லாப பூஜைக்காக செய்து அருள வில்லையே –

விஷயம் பாராசர -அம்ருத ரூபமான வார்த்தை
பிரயோஜனம் சம்சார அக்னி –சஞ்சீவினி-உபாய உபேயம் அவனே அறிந்து மோஷம் பெற
அதிகாரி –
பௌமாகா அனைவரும் -சுமனச -நல்ல மனஸ் உள்ளவர்கள்
பிரமாணிக -ஆசை கொண்டு – துர்புத்தி இன்றி -உள்ளவர்கள்-சாராசார விவேகிகள் –

பாராசர்யா வச ஸூதாம்
உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம்
பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாம் து நிஜா ஷரை
ஸூ மநசோ பௌமா
பிபந்து அந்வஹம்

ஸ்துதி ரூப குரு உபாசநாதி மங்களா சாரமும் அர்த்தாத் செய்யப் பட்டு அருளுகிறார்
ஆச்சார்ய சம்பந்தம் பகவத் கடாஷத்தால் அல்லது சித்தியாதே என்பதால் முதலில் பகவானை உபாசித்தார்
1-ஈஸ்வரஸ்ய சௌஹார்த்தம்
2-யத்ருச்சா ஸூ க்ருதம் ததா
3-விஷ்ணோ கடாஷம்
4-அத்வேஷம்
5-அபிமுக்யம் ச
6-சாத்விகை சம்பாஷணம்
ஷடே தாநி-ஆசார்ய பிராப்தி ஹேதவ-
யஸ்ய தேவே பராபக்தி யதா தேவே ததா குரௌ-

பாராசர்யர்-வியாசர்-பராசரர் புத்ரர் -சஹோவாச வியாச பாராசர்ய-ஸ்ருதி பிரசித்தம்
பாதாராயணர் என்கிற திரு நாமமும் உண்டே
பாராசர மக ரிஷி -சத்யவதி –
ஸூத்ரம்-என்றாலே ப்ரஹ்ம ஸூத்ரம் ஒன்றையே குறிக்கும் பெருமை உண்டே –

வச ஸூ தாம்
வச -சப்தம் அதன் அர்த்தம் குறிக்கும்
ஸூ தா -சப்தம் போக்யமாய்-

உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
உபநிஷத் –
ப்ரஹ்ம விஷயத்வம் சத்வாரகமானது
பகவான் இடத்தில் நெருங்கி வர்த்திப்பதால் உபநிஷத்
விகர்தா கஹநோ குஹ-சகஸ்ரநாமம் -கஹந சப்தம் –
துக்த –
ஷீரம்-சாரமானது
அப்தி –
சமுத்ரம் போல அனந்தங்கள் உபநிஷத் என்கிறார்
மத்யே
முக்யார்த்தம் -சார தமம்
உத்த்ருத –
ஆழமான
ப்ரஹ்மபரம்

சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
சம்சார –
ஜென்மாதி ப்ரவாஹங்கள்
புண்ய பாப கர்மாக்கள்
சம்சார ஏவ அக்நி-
தாப த்ரய ரூபம் -சம்சாரம்
விதீபநம்-
விவிதம் தீபநம்-தாப த்ரயம் மூன்றிலும் சாரீரம் மானசம் வாசிகம் பலவகை பட்டு இருக்குமே

வ்யபகத
வி அப கத -விசேஷதோ அபகத-வ்யாவ்ருத்ததயா துர்தர்ச -தூரத்தில் உள்ளவன் –

பிராண சப்தம் -பரமாத்மாவை குறிக்கும்
பிராண பிராணி நாம் பிராண ஹேது பரமாத்மா
பிராணஸ்ய பிராணா

அப -ஜ்ஞான தர்சன பிராப்திகளில் ஒன்றையும் லபிக்காமல் அலாபமும் பலவிதமாக இருக்கும் என்றது ஆய்த்து-

சஞ்சீவனம்
ஜீவனம்
கர்ம வாசனை ருசி பிரகிருதி சம்பந்தளோடு போக்கி
கைவல்யமும் இன்றி
மோஷம் அருளி உஜ்ஜீவிக்க செய்பவன்

இத்தால் தர்ம பூத ஞான சங்கோசம் நிவ்ருத்தியை சொல்லிற்று

பூர்வா சார்ய ஸூ ரஷிதாம்
ஓராண் வழியாக -சத் சம்ப்ரதாயமாக –
உபதேசித்து
ரஷித்து
மேலும் கிரந்தங்கள் சாதித்து அருளி –

பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
முரண்பட்ட வெவ்வேற மதியால்

ஆநீதாம்
இந்த ப்ரஹ்ம ஸூத்தரத்துக்கு தம் கிரந்தம் விஷயம் என்கிறார் –

நிஷா ஷரை –
ஸூ த்ர அஷரை
மித்யா வாதிகள் அஷரத்துக்கு பொருந்தாத அர்த்தம் பண்ண
ஸூ த்ர அஷரங்களுக்கு பொருந்திய அர்த்தம் அருளப் பட்டது-

ஸூ மனச பௌமா
சாத்விக குணம் நிறைந்த பிராமணர்கள்
நிஷா ஷரம் வேத அஷரம்
திவம் ஸூ பர்ணோ கத்வா சோம மாஹரத் –ஸூபர்ணன் கருத்மான் சோமத்தை கொண்டு வந்தான்
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்மை ஸூபர்ணனாக -தம் இஷ்டம் சித்திக்க கருதி
ஆஞ்சநேயர் சமுத்ரம் தாண்ட ஸூபர்ணம் இவ ச ஆத்மானம் மேனே ச கபி குஞ்சர -தம்மை நினைத்தது போலே
கருத்மான் உடைய க்ருத்யத்தை ஆரோபணம் பண்ணி
நிஷா ஷரங்களால் அம்ருதத்தை கொடு வந்து அருளினார்

———

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———–

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

-——————————————————————————–——————————————————————————–——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -அதிகரண-ஸூத்ரங்கள் தொகுப்பு —/அதிகரண அர்த்த ஸாரங்கள் —

November 28, 2021

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

————————-

545 ஸூத்ரங்கள் -(சங்கரர் -555-ஸூத்ரங்கள் / மாதவர் -546- ஸூத்ரங்கள்)
நான்கு அத்தியாயங்கள் -சமந்வய–அவிரோத -சாதனா -பல அத்யாயங்கள் –
545 ஸூத்ரங்கள் –138 +149+182+76
156 அதிகரணங்கள்—–35+33+55+33

————-

அதிகரணம் -விசாரணை களம்
விஷயம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -உண்டே -சித்தி அந்தம் -இறுதி முடிவு -பிரயோஜனம் ஐந்தும் –
தஹராதி கரணம் -உள்ளத்தே உறையும் மால் -விசாரம்
ஓட்டை மாடமே ப்ரஹ்ம புரமாகும் –

————-

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம் –35–அதிகரணங்கள் –138 ஸூத்ரங்கள்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் -33–அதிகரணங்கள் –149 ஸூத்ரங்கள்

முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் -பிராண பாதம் –8-அதிகரணங்கள் –29-ஸூத்ரங்கள்-

மூன்றாம் அத்யாயம் – சாதன அத்யாயம் 55-அதிகரணங்கள் –182-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

நான்காம் அத்யாயம் – பல அத்யாயம் -33-அதிகரணங்கள் –76-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் – 11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் – –11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
மூன்றாம் பாதம் -கதி பாதம் -— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் முக்தி பாதம் –6 அதிகரணங்கள் 22-ஸூத்ரங்கள்

————————————————————–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –
1-1-1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச -ப்ரஹ்மத்தை அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம்-
அத அத -என்று கர்ம விசாரத்துக்கு பின்பே -கர்ம விசாரத்தாலே -என்றபடி

1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திறமை எவனிடம் உள்ளவோ அவனே ப்ரஹ்மம் –

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே
1-1-5- ஈஷதேர் நா சப்தம் -ஈஷ் என்பதம் மூலம் ப்ரஹ்மமே காரணம் -பிரகிருதி இல்லை என்கிறது
1-1-6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் -ஆத்மா ப்ரஹ்மத்தையே குறிக்கும் -சத் என்பதும் ப்ரஹ்மமே
1-1-7-தந் நிஷ்டஸ்ய மோஷ உபதேசயாத் -சத் என்பவன் தன்னை உபாசிக்குமவர்களுக்கு மோஷம் அளிப்பவனே அதனால் ப்ரஹ்மமே –
1-1-8-ஹேயத்வா வச நாத் ச -சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
1-1-9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் -சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
1-1-10 –ஸ்வாப்யயாத்–தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம் சத் ப்ரஹ்மமே
1-1-11-கதி சாமான்யாத் -சத் எனபது ப்ரஹ்மமே பல உபநிஷத்துக்களும் இத்தையே சொல்லும் –
1-1-12- ஸ்ருதத்வாச்ச –

1-6-ஆனந்தமயாதிகரணம் -ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –
1-1-13- ஆனந்தமய அப்யாசாத் –
1-1-14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
1-1-15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச –
1-1-16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே
1-1-17-ந இதர அநுபபத்தே –
1-1-18-பேத வ்யபதேசாத் ச-
1-1-19-காமாத் ச ந அநுமாநாபேஷா –
1-1-20-அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் சாஸ்தி –

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .
1-1-21-அந்த தத்தர்மோபதேசாத் -கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-
1-1-22- பேத வ்யபதேசாத் ச அந்ய –

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –
1-1-23-ஆகாஸ தல் லிங்காத் —

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-1-24-அத ஏவ பிராண –

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –
1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
1-1-26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்
1-1-27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்
1-1-28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –

1-11-இந்திர பிராணா அதிகரணம் -இந்த்ரன் பிராணன் எனபது ப்ரஹ்மமே –
1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –
1-1-30- ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-
1-1-31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –
1-1-32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத ந உபாசாத்ரை வித்யாத் ஆ ஸ்ரீ தத்வாத் இஹ தத் யோகாத் –

———————

இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே
1-2-1- சர்வத்ர பிரசித்த உபதேசாத்-
1-2-2-விவஷித குணோபபத்தே –குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம பொருளைக் குறித்தே ஆக வேண்டும்
1-2-3-அநுபபத்தே து ந சாரீர –
1-2-4-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –
1-2-5-சப்த விசேஷாத் –
1-2-6-ச்ம்ருதேச்ச-ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –
1-2-7-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ
1-2-8-சம்போக ப்ராப்திரிதி சேத ந வை சேஷயாத்–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே
1-2-9-அத்தா சராசர க்ரஹணாத்–அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே
1-2-10-ப்ரகரணாத் ஸ -இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –
1-2-11-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —
1-2-12-விசேஷணாத் ச –

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –
1-2-13-அந்தர உபபத்தே –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
1-2-15-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –
1-12-16-அத ஏவ ச ச ப்ரஹ்ம —
1-2-17-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –
1-2-18-அனவஸ்திதே அசம்பவாத் ச

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்-
1-2-20-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
1-2-21-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-
1-2-23-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-
1-2-24-ரூப உபன்யா சாத் ச –

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-
1-2-25-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-
1-2-26-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –
1-2-27-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –
1-2-28-அத ஏவ ந தேவதா பூதம் ச –
1-2-29-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –
1-2-30-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-
1-2-31- அநு ச்ம்ருதே பாதரி-
1-2-32-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –
1-2-33-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –

——————————-

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
1-3-1-த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
1-3-2-முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –
1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –
1-3-4-பேத வ்யபதேசாத் –
1-3-5- பிரகரணாத்–
1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –

1-3-2-பூமாதி கரணம் -பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-3-7-பூமா சம்ப்ரசாதாத் தத் உபதேசாத் –
1-3-8-தர்மோபபத்தே ச-

1-3-3-அஷர அதி கரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-
1-3-10-சா ச பிரசாச நாத் –
1-3-11-அந்ய பாவ யாவ்ருத்தே ச –

3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே
1-3-12-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –

3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே
1-3-13-தஹர உத்தரேப்ய-
1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –
1-3-15-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –
1-3-16-பிரசித்தே ச –
1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –
1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –
1-3-19-அன்யார்த்த ச பராமர்ச –
1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –
1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –
1-3-22- அபி ஸ்மர்யதே-

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–
1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-
1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–
1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-
1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —
1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு
1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-
1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –
1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூ த்ரர்களுக்கு ப்ரஹ்ம விதியை இல்லை –
1-3-33-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –
1-3-34-ஷத்ரியத்வ கதே -ச
1-3-35-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —
1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –
1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —
1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —
1-3-39- ச்ம்ருதே ச-

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்
1-3-40-கம்ப நாத் –
1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-
1-3-42-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —
1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –
1-3-44-பத்யாதி சப்தேப்ய —

———————

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை
1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –
1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –
1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –
1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச
1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்
1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –
1-4-7-மஹத்வத் ச –

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி
1-4-8-சமசவத் அவிசேஷாத்-
1-4-9-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –
1-4-10-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –
1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –
1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-
1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –
1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
1-4-15-சமாகர்ஷாத் –

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –
1-4-16-ஜகத் வாசித்வாத்
1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –
1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –
1-4-19-வாக்ய அந்வயாத்
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-
1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி
1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –
1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
1-4-24-அபித்யோப தேஸாத் ச-
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச
1-4-26-ஆத்மக்ருதே
1-4-27-பரிணாமாத்–
1-4-28-யோ நிஸ்ஸ கீயதே ஹி-

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-
1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –9-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1. ஸ்ம்ருதி பாதம்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்
2-1-1 ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்க: இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத்
2-1-2 இதேரஷாம் ச அநு பலப்தே :

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்
2-1-3 யேதேந யோக: ப்ரத்யுக்த:

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்
2-1-4 ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததாத்வம் ச ஶப்தாத்
2-1-5 அபிமாநி வ்யபேதஶஸ் து விசேஷ அநு கதிப்யாம்
2-1-6 த்ருஶ் யேத து
2-1-7 அஸத் இதி சேத் ந ப்ரதிஷேத மாத்ரத்வாத்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்
2-1-10 ஸ்வபஷ தோஷாச்ச
2-1-11 தர்கா ப்ரதிஷ்டாநாத் அபி
2-1-12 அந்யதா அநு மேயம் இதி சேத் ஏவம் அபி அநிர் மோக்ஷ ப்ரஸங்க:

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்
2-1-13 ஏதேந ஶிஷ்ட அபரிக்ரஹா அபி வ்யாக்யாதா:

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்
2-1-14 போக்த்ராபத்தே அபி பாக சேத் ஸ்யாத் லோகவத்
2-1-6. ஆரம்பண அதிகரணம்
2-1-15 தத் அநந்யத்வம் ஆரம்பண ஶப்தாப்ப்ய:
2-1-16 பாவே ச உபலப்தே
2-1-17 ஸத்த்வாத் ச அபரஸ் ய
2-1-18 அஸத் வ்யபேதஶாத் ந இதி சேத் ந தர்மாந்தேரண வாக்யாசே ஶஷாத் யுக்தே சப்தாந்தராச்ச
2-1-19 படவச்ச
2-1-20 யதா ச ப்ராணாதி

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்
2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்
2-1-23 அஶ்மாதிவத் ச தத் அநுபபத்தி

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்
2-1-24 உபஸம்ஹார தர்ஶநாத் ந இதி சேத் ந ஷீரவத் ஹி
2-1-25–தேவாதி வத் அபி லோகே

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்
2-1-26 க்ருத்ஸ்ந ப்ரஸக்த நிரவயவத்வ ஶப்த கோபோ வா
2-1-27 ஶ்ருதேஸ் து ஶப்த மூலத்வாத்
2-1-28 ஆத்மநி ச ஏவம் விசித்ராத் ச ஹி
2-1-29 ஸ்வ பஷ தோஷாச்ச
2-1-30 ஸர்வா பேதா ச தத் தர்ஶநாத்
2-1-31 விகரணத்வாந் ந இதி சேத் தத் உக்தம்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்
2-1-32 ந ப்ரேயாஜநவத்த்வாத்
2-1-33 லோகவத் து லீலா கைவல்யம்
2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
2-1-36 ஸர்வ தர்ம உபபத்தேஶ் ச

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-தர்க்க பாதம்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்
2-2-1 ரசநா அநுபபத்தேஶ் ச ந அநுமாநம் ப்ரவ்ருத்தேஶ் ச
2-2-2 பயோ அம்பு வத் சேத் தத்ராபி
2-2-3 வ்யதிரேக அநவஸ்தி தேஶ் ச அந பேஷத்வாத்
2-2-4 அந்யத்ர அபாவாத் ச ந த்ருணாதிவத்
2-2-5 புருஷ அஶ்மவத் இதி சேத் ததாபி
2-2-6 அங்கித்வ அநுபபத்தேஶ் ச
2-2-7 அந்யதா அநு மிதவ் ச ஜ்ஞஶக்தி வியோகாத்
2-2-8 அபி உபகேமபி அர்த்த அபாவாத்
2-2-9 விப்ரேதி ஷேதாச்ச அஸமஞ்ஜஸம்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்
2-2-10-மஹத் தீர்கவத்வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம்
2-2-11-உபயதா அபி ந கர்மாத: தத் அபாவ:
2-2-12-ஸமவாய அப்யுபகமாத் சஸாம்யாத் அநவஸ்திதே
2-2-13-நித்யேமவ ச பாவாத்
2-2-14-ரூபாதி மத்த்வாத் ச விபர்யேயா தர்ஶநாத்
2-2-15-உபயதா ச தோஷாத்
2-2-16-அபரிக்ரஹாத் ச அத்யந்தம் அநேபேஷா

2-2-3- -ஸமுதாய அதிகரணம்
2-2-17- ஸமுதாய உபயே ஹேதுக அபி தத் அப்ராப்தி –
2-2-18- இதேரதர ப்ரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந ஸங்காதபாவா நிமித்தத்வாத்
2-2-19- உத்த உத் பாதே ச சர்வ நிரோதாத்
2-2-20- அஸதி ப்ரதி ஜ்ஜோபேராேதோ ஓவ்யகபத்யம அந்யதா
2-2-21- ப்ரதி ஸங்க்யா அப்ரதி ஸங்க்யா நிரோத அப்ராப்தி அவிச்சேதாத்
2-2-22- உபயதா ச தோஷாத்
2-2-23- ஆகாேஶ ச அவி சேஷாத்
2-2-24- அநு ஸ்ம்ருதேஶ் ச
2-2-25- ந அஸேதா த்ருஷ் டத்வாத்
2-2-26- உதாஸீ நாநாம் அபி ச ஏவம் சித்தி

2-2-4- உபலப்தி அதி கரணம்
2-2-27- நாபாவ உபலப்தே
2-2-28- வைதர்ம்யாத் ச ந ஸ்வப்நாதி வத்
2-2-29- ந பாவோ அநு பலப்தே

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்
2-2-30-ஸர்வதா அநு பபத்தேஶ் ச

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்
2-2-31-ந ஏகஸ்மிந் அஸம்பவாத்
2-2-32-ஏவம் சஆத்மா கார்த்ஸ்ந்யம்
2-2-33-ந ச பர்யாயாத் அபி அவி விராேதா விகாராதிப்ய
2-2-34-அந்த்யாவஸ்தி தேஶ் ச உபய நித்யத்வாத் அவி சேஷ

2-2-7- பசுபதி அதி கரணம்
2-2-35-பத்யுர் அஸமஞ்ஜ ஸ்யாத்
2-2-36-அதிஷ்டாந அநு பபத்தேஶ் ச
2-2-37-கரணவத் சேத் ந போகாதிப்ய
2-2-38-அந்த வத்த்வம் அஸர்வஜ்ஞதா வா

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்
2-2-39-உத்பத்தி அஸம்பவாத்
2-2-40-ந ச கர்து கரணம்
2-2-41-விஜ்ஞாந அதி பாவே வா தத் அப்ரதி ஷேத
2-2-42-விப்ரேதி ஷேதாத் ச

————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்
2-3-1-ந வியத் அஶ்ருதே
2-3-2-அஸ்தி து
2-3-3-கௌண்ய ஸம்பவாத் ஶப்தாச்ச
2-3-4-ஸ்யாத் ச ஏகஸ்ய ப்ரஹ்ம ஶப்தவத்
2-3-5-ப்ரதிஜ்ஞா ஹாநி: அவ்யதி ரேகாத்
2-3-6-ஶப்தேப்ய:
2-3-7-யாவத் விகாரம் து வி பாகோ லோகவத்
2-3-8-ஏதே ந மாதரிஶ்வா வ்யாக்யாத:
2-3-9-அஸம்பவஸ் து சதோ அநுபபத்தே

2-3-2-தேஜஸ் அதிகரணம்
2-3-10-தேஜோ தஸ் ததாஹி ஆஹ
2-3-11-ஆப:
2-3-12-ப்ருத்வீ
2-3-13-அதிகார ரூப ஶப்தாந்தேரப்ய:
2-3-14-ததபி த்யாநாத் ஏவ து தல் லிங்காத் ஸ:
2-3-15-விபர்யயேண து க்ரேமா அத உபபத்யேத ச
2-3-16-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரேமண தல் லிங்காத் இதி சேத் ந அவி சேஷாத்
2-3-17-சராசர வ்யாபாஶ்ரய து ஸ்யாத் தத் வ்யபேதஶத அபாக்த தத் பாவபா வித்வாத்

2-3-3. ஆத்மா அதிகரணம்
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்
2-3-19- ஜ்ஜோ அத ஏவ
2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்
2-3-21- ஸ்வாத்மநா ச உத்தரேயா:
2-3-22- ந அணுர் அத: ச்ருதேரிதி சேத் ந இதர அதி காராத்
2-3-23- ஸ்வ ஶப்தோந் மாநாப்யாம் ச
2-3-24- அவி ரோதஶ் சந்தநவத்
2-3-25- அவஸ்திதி வைவேஶஷ்யாத் இதி சேத் ந அப்யுபகமாத் ஹ்ருதி ஹி
2-3-26- குணாத் வா ஆலோகவத்
2-3-27- வ்யதி ரேக: கந்தவத் ததா ச தர்ஶயதி
2-3-28- ப்ருதக் உபேதஶாத்
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்
2-3-31- பம்ஸ் த்வாதி வத் அஸ்ய சதோ அபி வ்யக்தி யோகாத்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா

2-3-5- கர்த்ரு அதி கரணம்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா

2-3-6- பர ஆயத்த அதிகரணம்
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:

2-3-7- அம்ஶ அதி கரணம்
2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச
2-3-47-அநுஜ்ஞா பரிஹாரவ் தேஹ ஸம்பந்தாத் ஜ்யோதிர் ஆதிவத்
2-3-48-அஸந்த தேஶ் ச அவ்யதிகர:
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்

———————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்
2-4-1- ததா ப்ராணா:
2-4-2- கௌண்ய ஸம்பவாத் தத் ப்ராக் ஶ்ருதேஶ் ச
2-4-3- தத் பூர்வகத்வாத் வாச:

2-4-2- ஸப்தகதி அதி கரணம்
2-4-4- ஸப்த கதே விசேஷி தத்வாத் ச
2-4-5- ஹஸ்தா தயஸ்து ஸ்திதே அதோ ந ஏவம்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்
2-4-6- அணவஶ் ச
2-4-7- ஶ்ரேஷ்டஶ் ச

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்
2-4-8- ந வாயு க்ரிேய ப்ருதக் உபேதேஶாத்
2-4-9- சஷுராதி வத் து தத் ஸஹ ஶிஷ் ட்யாதிப்ய:
2-4-10- அகரணத்வாத் ச ந ேதாஷ: ததாஹி தர்ஶயதி
2-4-11- பஞ்சவ்ருத்தி : மநோ வத் வ்யபதிஶ் யதே

2-4-5- ஶ்ரேஷ் ட அணுத்வ அதி கரணம்
2-4-12- அணுஶ் ச

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்
2-4-13- ஜ்யோதிராதி அநுஷ் டாநம் தத் ஆமநநாத் ப்ரணவதா ஶப்தாத்
2-4-14- தஸ் ய ச நித்யத்வாத்

2-4-7- இந்த்ரிய அதி கரணம்
2-4-15- த இந்த்ரியாணி தத் வ்யபேதஶாத் அந்யத்ர ஶ்ரேஷ் டாத்
2-4-16- பேத ஶ்ருதே வைலஷண்யாத் ச

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்
2-4-17- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரிவ்ருத் குர்வத உபேதஶாத்
2-4-18- மாம்ஸாதி பவ்மம் யதா ஶப்தம் இதரயோஶ் ச
2-4-19- வைசேஷ்யாத் து தத் வாத: தத் வாத:

———————-

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-வைராக்ய பாதம்

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்
3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தவ் ரம்ஹதி ஸம்பரிஷ் வக்த: ப்ரஶ்ந நிரூபணாப்யாம்
3-1-2-த்ர்யாத்மகத்வாத் தூ பூயஸ் த்வாத்
3-1-3-ப்ராண கதேஶ் ச
3-1-4-அக்ந்யாதி கதி ஶ்ருதே: இதி சேத் ந பாக் தத்வாத்
3-1-5-ப்ரதேம ஶ்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே
3-1-6-அஶ்ருதத்வாத் இதி சேத் ந இஷ்டாதி காரிணாம் ப்ரதீதே
3-1-7-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்ஶயதி

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்
3-1-8- க்ருதாத்யேய அநு சயவாந் த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் யேததம் அநேவம் ச
3-1-9- சரணாத் இதி சேத் ந உபஷாணார்தேதி கார்ஷ்ணா ஜிநி:
3-1-10- ஆநர்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்
3-1-11- ஸூக்ருத துஷ் க்ருதே ஏவ இதி பாதரி:

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்
3-1-12- அநிஷ் டாதி காரிணாம் அபி ச ஶ்ரு தம்
3-1-13- ஸம்யமேந அ-2ய இதேரஷாம் ஆேராஹ அவேராஹ தத் க தர்ஶநாத்
3-1-14- ஸ்மரந்தி ச
3-1-15- அபி ஸப்த
3-1-16- தத்ராபி ச தத் வ்யாபாராத் அவி ரோத:
3-1-17- வித்யா கர்மநோ இதி ப்ரக்ருதத்வாத்
3-1-18- ந த்ருதீயே ததா உபலப்த:
3-1-19- ஸ்மர்யதே அப் ச லோகே
3-1-20- தர்ஶநாத் ச
3-1-21- த்ருதீய ஶப்த அவேராத: ஸம்ஸோக ஜஸ்ய

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்
3-1-22- தத் ஸ்வாபாவ்யாபத்தி : உபபத்தே

3-1-5- ந அதி சிர அதி கரணம்
3-1-23- ந அதி சிரேண விசேஷாத்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்
3-1-24- அந்யாதிஷ்டதேஷு பூர்வ வத் அபிலாபாத்
3-1-25- அஸூத்தம் இதி சேத் ந ஶப்தாத்
3-1-26- ரேத: சிக்யாே கோ அத
3-1-27- யோநே ஶரீரம்

———————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்
3-2-1- ஸந்த்யே ஸ்ருஷ்டி ஆஹ ஹி
3-2-2- நிர்மாதாரம் ச ஏகே புத்ராதயத் ச
3-2-3- மாயாமாத்ரம் து கார்த்ஸ்ந் யேந அபிவ்யக்த ஸ்வரூபத்வாத்
3-2-4- பராபி த்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயவ்
3-2-5- தேஹ யோகாத்வா ஸோ அபி
3-2-6- ஸூசகஶ் ச ஹி ஶ்ருதே ஆசஷதே ச தத்வித:

3-2-2- தத் அபாவ அதி கரணம்
3-2-7- தத் அபாேவா நாடீ ஷு தத் ச்ருதே ஆத்மநி ச
3-2-8- அத: ப்ரேபாேதா அஸ் மாத்

3-2-3- கர்ம அ ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்
3-2-9- ஸ ஏவ ச கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதிப்ய:

3-2-4- முக்த அதி கரணம்
3-2-10- முக்தே அர்த ஸம்பத்தி பரிசேஷாத்

3-2-5- உபய லிங் க அதி கரணம்
3-2-11- ந ஸ்தாநதோ அபி பரஸ ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி
3-2-12- ந பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத்வசநாத்
3-2-13- அபி ச ஏவம் ஏகே
3-2-14- அரூபவத் ஏவ ஹி தத் ப்ரதா நத்வாத்
3-2-15- ப்ரகாஶவத் ச அவையர்த்யாத்
3-2-16- ஆஹச தந்மாத்ரம்
3-2-17- தர்ஶயதி வா அதோ அபி ஸ்மர்யதே
3-2-18- அத ஏவ ச உபமா ஸூர்ய காதிவத்
3-2-19- அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம்
3-2-20- வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய ஸாமஞ்ஜஸ் யாத் ஏவம்தர்சநாத் ச
3-2-21- ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதி ச பூய:
3-2-22- தத்அவ்யக்தம் ஆஹ ஹி
3-2-23- அபி ஸம்ராதேந ப்ரத்யஷ அநு மாநாப்யாம்
3-2-24- ப்ரகாசாதி வத் ச அவைசேஷ்யம் ப்ரகாச ச கர்மணி அப்யாஸாத்
3-2-25- அத: அநந்தேந ததா ஹி லிங்கம்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்
3-2-26- உபய வ்யபேதஶாத் து அஹி குண் டலவத்
3-2-27- ப்ரகாஶ ஆஶ்ரயவத்வா தேஜஸ் த்வாத்
3-2-28- பூர்வ வத்வா
3-2-29- ப்ரேதி சேஷதாத் ச

3-2-7- பர அதி கரணம்
3-2-30- பரமத: சேதூந் மாந ஸம்பந்த பேத வ்யபேதேஶப்ய:
3-2-31- ஸாமாந்யாத் து
3-2-32- புத்த்யர்த: பாதவத்
3-2-33- ஸ்தாநே விசேஷாத் ப்ரகாஶாதி வத்
3-2-34- உபபத்தேஶ் ச
3-2-35- தத: அந்ய ப்ரதி ஷேதாத்
3-2-36- அநேந ஸர்வகதத்வம் ஆயாம ஶப்தாதிப்ய:

3-2-8- பல அதி கரணம்
3-2-37- பலமத உபபத்தே :
3-2-38- ஶ்ருதத் வாச்ச
3-2-39- தர்மம் ஜைமினி ரத ஏவ
3-2-40- பூர்வம் பாதராயேணா ஹேது வ்யபேதேஶாத்

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் ஸோதநாதி அவி சேஷாத்
3-3-2- பேதாந் ந இதி சேத் ஏகஸ்யாம் அபி
3-3-3- ஸ்வாத்யாயஸ்ய ததாத்வே ஹி ஸமாசாரே அதிகாராத் ச ஸவவத் ச தந் நியம:
3-3-4- தர்ஶயதி ச
3-3-5- உபஸம்ஹார: அர்த்தா பேதாத் விதி சேஷவத் ஸமாேந ச

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்
3-3-6- அந்யதாத்வம்ஶப்தாத் இதி ந அவி சேஷாத்
3-3-7- ந வா ப்ரகரண பேதாத் பவோ வரீயஸ் த்வாதி வத்
3-3-8- ஸம்ஜ்ஞாதஶ் சேத் தத் உக்தம் அஸ்தி து தத் அபி
3-3-9- வ்யாப்தேஶ் சஸமஞ்ஜஸம்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்
3-3-10- ஸர்வ அபேதாத்அந்யத்ர இமே

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
3-3-11- ஆநந்தாதய: ப்ரதாநஸ் ய
3-3-12- ப்ரிய ஶிரஸ் த்வாத்ய அப்ராப்தி : உபசயா அபசெயௗ ஹி பேத
3-3-13- இதரே அர்த்த ஸாமாந்யாத்
3-3-14- ஆத்யாநாய ப்ரேயாஜந அபாவாத்
3-3-15- ஆத்ம ஶப்தாத்ச
3-3-16- ஆத்ம க்ருஹீதீ : இதரவத் உத்தராத்
3-3-17- அந்வயாத் இதி சேத் ஸ் யாத்அவதாரணாத்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்
3-3-18- கார்ய ஆக்யாநாத் அபூர்வம்

3-3-6- ஸமாந அதி கரணம்
3-3-19- ஸமாந ஏவம் ச அபேதாத்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்
3-3-20- ஸம்பந்தாத் ஏவம் அந்யத்ர அபி
3-3-21- ந வா விசேஷாத்
3-3-22- தர்ஶயதி ச

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்
3-3-23- ஸம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத:

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்
3-3-24- பு ரு ஷ வித்யாயாம் அபி ச இதேரஷாம் அநாம்நாநாத்

3-3-10- வேதாதி அதி கரணம்
3-3-25- வேதாத்ய அர்த்த பேதாத்
3-3-11-ஹாநி அதி கரணம்
3-3-26- ஹாநவ் உபாய ந ஶப்த சேஷத்வாத் குஶச் சந்தஸ் ஸ்துதி உபகாநவத் தத் உக்தம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்
3-3-27- ஸாம்பராேய தர்த வ்யாபாவாத் ததா ஹி அந்யே
3-3-28- சந்தத உபய அவி ரோதாத்
3-3-29- கதே அர்த்தவத் த்வம் உபயதா அந்யதா ஹி விரோத:
3-3-30- உபபந்நஸ் தல்லஷாணார்த உபலப்தேர் லோகவத்
3-3-31- யாவத் அதி காரம் அவஸ்திதி : ஆதிகாரிகாணாம்

3-3-13-அநியம அதி கரணம்
3-3-32- அநியம: ஸர்வே ஷாம் அவிரோத: ஶப்த அநுமாநாப்யாம்

3-3-14- அஷரதி அதி கரணம்
3-3-33- அஷரதியாம் து அவிரோத: ஸாமாந்ய தத் பாவாப்யாம் ஔபஸதவத் தத் உக்தம்
3-3-34- இயத் ஆமநநாத்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்
3-3-35- அந்தரா பூத க்ராமவத் ஸ்வாத்மந: அந்யதா பேதாந் உபபத்தி : இதி சேத் ந உபேதசவத்
3-3-36- வ்யதி ஹாரோ விஶிம் ஷந்தி ஹி இதரவத்
3-3-37- ஸ ஏவஹி ஸத்யாதய:

3-3-16- காமாதி அதி கரணம்
3-3-38- காமாதி இதரத்ர தத்ர ச ஆயதநாதிப்ய:
3-3-39- ஆதராத் அலோப:
3-3-40- உபஸ்தி தே அத: தத் வசநாத்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்
3-3-41- தந்நிர்தாரண அநியமஸ் தத் த்ருஷ்டே ப்ருதக் அப்ரதி பந்த: பலம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்
3-3-42- ப்ரதாநவத் ஏவ தத் உக்தம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்
3-3-43- லிங்க பூயஸ்த்வாத் தத் ஹி பலீயஸ் தத் அபி

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்
3-3-44- பூர்வ விகல்ப: ப்ரகரணாத் ஸ்யாத் க்ரியா மாநஸவத்
3-3-45- அதி தேஶாத் ச
3-3-46- வித்ய ஏவ நிர்தாரணாத் தர்ஶநாத் ச
3-3-47- ஶ்ருத்யாதி பலீயஸ் த்வாத் ச ந பாத:
3-3-48- அநுபந்தாதிப்ய: ப்ரஜ்ஞாந்தர ப்ருதக் த்வவத் த்ருஷ் டஶ் ச ததுக்தம்
3-3-49- ந ஸாமாந்யாத் அபி உபலப்தேர் ம்ருத்யு வந்ந ஹி லோகாபத்தி :
3-3-50- பரேணச ஶப்தஸ்ய தாத் வித்யம் பூயஸ் த்வாத் அநுபந்த:

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீேர பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந து உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரவேதம்
3-3-54- மந்த்ராதிவத் வா அவிரோத:

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-21-சரீரே பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீரே பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதிகரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரதி வேதம்
3-3-54- மந்த்ராதி வத் வா அவிரோத:

3-3-23- பூம ஜ்யாயஸ்த்வ அதிகரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதிகரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-25-விகல் ப அதி கரணம்
3-3-57- விகல்போ அவிஶிஷ் ட பலத்வாத்
3-3-58- காம்யாஸ் து யதா காமம் ஸமுச்சீ யேரந் ந வா பூர்வ ஹேது பாவாத்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்
3-3-59- அங்கேஷு யதாஶ்ரய பாவ:
3-3-60- ஶிஷ் டேஶ் ச
3-3-61- ஸமாஹாராத்
3-3-62- குண ஸாதாரண்ய ஶ்ருதேஶ் ச
3-3-63- ந வா தத் ஸஹ பாவா ஶ்ருதே
3-3-64- தர்ஶநாச் ச

———————–

நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

அதிகரணம்–3-4-1-புருஷார்த்த அதிகரணம்
3-4-1-புருஷார்த்த அத சப்தாத் இதி பாதராயண –
3-4-2-சேஷத்வத் புருஷார்த்த வாத யதா அன்யேஷூ இதி ஜைமினி —
3-4-3-ஆசார தர்சநாத் —
3-4-4-தத் ஸ்ருதே –
3-3-5-சமன்வ ஆரம்பணாத் –
3-3-6-தத்வத விதா நாத் –
3-4-7-நியமாத் –
3-4-8-அதிக உபதேசாத் து பாதராணஸ்ய ஏவம் தத் தர்சநாத் —
3-4-9-துல்யம் து தர்சனம் –
3-4-10-அசாவத்ரீகீ —
3-4-11- விபாக சதவத் –
3-4-12-அத்யாப ந மாத்ரவத்
3-14-13-நா விசேஷாத் –
3-4-14-ஸ்துதயே அநுமதிர் வா —
3-4-15-காம காரேண ச ஏகே
3-4-16-உபமர்த்தம் ச
3-4-17-ஊர்த்வ ரேதஸ் ஸூ ச சப்தே ஹி
3-4-18-பராமர்சம் ஜைமினி அசோத நாத் ச அபவததி ஹி –
3-4-19-அனுஷ்டேயம் பாதராயண சாம்ய ஸ்ருதே
3-4-20-விதி வா தாரணவத்-

அதிகரணம் -3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்
3-4-21-ஸ்துதி மாதரம் உபாதா நாத் இதி சேத் ந அபூர்வத்வாத்
3-4-22-பாவ சப்தாத் ச

அதிகரணம் -3-4-3- பாரிப்லவாதி கரணம்
3-4-23-பாரிப்லவ அர்த்தா இதி சேத் ந விசேஷி தத்வாத் –
3-4-24-ததா ச ஏக வாக்ய உப பந்தாத் —

அதிகரணம் -3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்
3-4-25-அத ஏவ ச அக்நீ இந்த நாதி அநபேஷா –

அதிகரணம் -3-4-5-சர்வ அபேஷாதி கரணம்
3-4-26-சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அச்வவத் —

அதிகரணம் -3-4-6- சம தமாத்யாதிகரணம்
3-4-27-சம தமாத் யுபேத ஸ்யாத் ததாபி து தத்விதே –ததங்க தயா தேஷாம் அபி அவஸ்ய அநுஷ்டே யத்வாத்

அதிகரணம் -3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்
3-3-28-சர்வ அன்ன அநு மதி -ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் –
3-3-29-அபாதாத் ச –
3-4-30-அபி ஸ்மர்யதே-
3-4-31-சப்தஸ் ச அத அகாமகாரே —

அதிகரணம் -3-4-8- விஹி தத்வாதி கரணம்
3-4-32-விஹிதத்வாத் ச ஆஸ்ரம கர்ம அபி
3-4-33-சஹ காரித்வேன ச
3-4-34-சர்வதா அபி த ஏவ உபய லிங்காத் —
3-3-35-அநபி பவம் ச தர்சயதி —

அதிகரணம் -3-4-9-விதுராதிகரணம்
3-4-36-அந்தரா ச அபி து தத்ருஷ்டே
3-4-37-அபி ஸ்மர்யதே –
3-4-38-விசேஷ அனுக்ரஹ ச –
3-4-39-அத து இதர ஜ்யாயா லிங்கா ச்ச

அதிகரணம்–3-4-10-தத் பூதாதிகரணம்
3-3-40-தத் பூதஸ்ய து ந அதத்பாவ ஜைமிநே அபி நியமாத் தத் ரூபா பாவேப்ய —
3-4-41-ந ச ஆதி காரிகம் அபி பதநாநுமாநாத் தத் அயோகாத்
3-4-42- உப பூர்வம் அபி இதி ஏகே பாவம் அசனவத் தத் உக்தம் –
3-4-43-பஹிஸ்த உபயதா அபி ஸ்ம்ருதே ஆசாராத் ச –

அதிகரணம் –3-4-11-ஸ்வாம்யதிகரணம்
3-4-44-ஸ்வாமி ந பலஸ்ருதே இதி ஆத்ரேய
3-4-45-ஆர்த்விஜ்யம் இதி ஔடுலொமி –தஸ்மை ஹி பரிக்ரீயதே

அதிகரணம் –3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்
3-4-46-சஹகார்யந்திர விதி பஷேண த்ருதீயம் தத்வதோ வித்யாதிவத்
3-4-47-க்ருத்சன பாவாத்து க்ருஹிணா உபாசம்ஹார
3-4-48-மௌனவத் விதைக்கு அங்கம் என்றதாயிற்று அபி உபதேசாத்

அதிகரணம் -3-4-13-அநாவிஷ்கராதி கரணம்
3-4-49-அநாவிஷ் குர்வன் அந்வயாத்

அதிகரணம் -3-4-14-ஐஹிகாதிகரணம் –
3-4-50-ஐஹிகம் அப்ரஸ்நுத பிரதிபந்தே தத் தர்சநாத்

அதிகரணம் -3-4–15-முக்தி பலாதிகரணம்
3-4-51-ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே

—————–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –
11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
———————————————————————————————————————————————————————-
அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–
ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

4-1-1-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது
4-1-2- லிங்காத் ச-லிங்கம் ஸ்ம்ருதி அனுமானம் ஸ்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்ஸ்ம்ருதி எனபது லிங்கம்ஆகும்

———-

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்-
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –
4-1-3-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் -வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி –

————–

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—
பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-4-ப்ரதீகே ந ஹி ஸ –மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல -உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –
4-1-5-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது-

———————

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–
உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-
4-1-6-ஆதித்யாதி மத்ய ஸ அங்கே உபபத்தே —

—————-

அதிகரணம் -5-ஆஸிநாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-
அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–
4-1-7-ஆஸிந சம்பவாத் —அமர்ந்து கொண்டு மட்டுமே -ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் -மன ஒருமைப்பாடு உண்டாகும்
4-1-8-த்யா நாத் ஸ —நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்தவித எண்ணமும் தோன்றாதபடி இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்
4-1-9-அசைலம் ஸ அபேஷ்ய-அசையாமல் இருப்பதே த்யானம்
4-1-10-ஸ்மரந்தி ஸ –ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
4-1-11-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்

—————–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-
மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-12-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்–மரண காலம் வரையில் –ஏன் -ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-

—————-

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்-
ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

——————

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–
முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-14-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —

——————–

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் –
பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-1-15-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன

———————-

அதிகரணம் -10-அக்னி ஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் –
பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-16-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –அக்னிஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
4-1-17-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –அக்னிஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால்
4-1-18-யதேவ வித்யயேதி ஹி —வித்யையின் மூலமாக

————————–

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-
பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-19-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –
பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –

—————————————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் –
மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-1- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும்
4-2-1- அத ஏவ சர்வாணி அநு

————

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-
மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-3-தத் மன பிராணா உத்தராத் —

——————-

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–
பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-4-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —

—————–

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-5-பூதேஷு தச்ச்ருதே –
4-2-6-நைகஸ்மின் தர்சயதோ ஹி —

——————

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-
வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-7-சமா நா ச ஆஸ் ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —
4-2-8-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —
4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –
4-2-10-ந உப மர்த்தே ந அத
4-2-11-அஸ்ய ஏவ சோபபத்தே
4-2-12-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —
4-2-13-ச்மர்யதே ச

————

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-
தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-14-தாநி பரே ததா ஹ்யாஹ

—————

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் –
பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை
4-2-15-அவிபாகோ வசநாத் —

——————–

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-
மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-16-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா

————–

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -–1 ஸூத்ரம்-
சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-
4-2-17-ரச்ம்ய நு சாரீ-

———————-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் –
இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-18-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –

———————

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் -2–ஸூத்ரங்கள்–
தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-19-அத ச அயநே அபி தஷிணே –
4-2-20-யோகிந ப்ரதி ச்மர்யேதே ச்மார்த்தே சைதே

———————————————————

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

—————

அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் –
சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —
4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்–
தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

——————

அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் –
அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-
4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

————————

அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-
ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது
4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே
4-3-7- விசேஷி தத்வாத் ச
4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –
4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —
4-3-10-சம்ருதேச்ச
4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்
4-3-12-தர்ச நாத் ச —
4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —
4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத்க்ரது ச
4-3-15-விசேஷம் ச தர்சயதி

—————————————————–

முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் –
முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —
4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —
4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

—————–

அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-4-அபிபாகே ந த்ருஷ்டத்வாத் –

————————–

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் –
ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-
4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —
4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வபாவாத் அவிரோதம் பாதாராயண –

———————

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-
தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

———————–

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-
முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –
4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –
4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –
4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –
4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —
4-4-14-பாவே ஜாக்ரவத் –
4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி
4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

———————————

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-
ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன
2-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
2-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே-
2-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-
4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-
4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச-
4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

——————————————————————————–

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

———————-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-

அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள் —33 ஸூத்ரங்கள் –

1-ஸர்வத்ர பிரதீ ஸித்த அதிகரணத்தில் -தனக்கு அதீனமாக ஜகத் ஸ்தித்யாதிகளைக் கொண்டு
ஸர்வ பாவத்துடன் இருக்கும் கல்யாண குணம் அனுசந்தேயம்
2-அத்த அதிகரணத்தில் -உலகமுண்ட பெரு வாயன் என்னும் மங்கள குணம்
3-அந்தர் அதிகரணத்தில் -கண்களில் என்றும் நிலை பெற்று இருத்தல் என்ற திருக்குளம்
4-அந்தர்யாமி அதிகரணத்தில் சர்வத்தையும் சரீரமாகக் கொண்ட கல்யாண குணம்
5-அத்ருஸ்யத்வ அதிகரணத்தில் கல்பிதமான அக்னியாதி சரீரிகத்வ கல்யாண குணம்
6- வைச்வானர அதிகரணத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை அங்கமாகக் கொண்ட
வைச்வானர பதத்துக்கு விஷயமாகும் கல்யாண குணம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 10 அதிகரணங்கள்–44 ஸூத்ரங்கள் –

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

————

இரண்டாம் அத்யாயம் –முதல் பாதம் -இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன

1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால்
காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்

———-

இரண்டாம் அத்யாயம் –இரண்டாம் பாதம்-

முதல் அதிகரணம் –ரசனா னுப பத்தி -காபிலர்கள் செய்த விரோதம்
இரண்டாம் அதிகரணம்-மஹத் தீர்க்கம் –காணாதர்கள் செய்த விரோதம்
மூன்றாம் அதிகரணம் -சமுதாயம் -வ்ருத்த வைபாஷிகன் செய்த விரோதங்கள்
நான்காம் அதிகரணம் –உபலப்தி -யோகாசாரர் செய்த விரோதங்கள்
ஐந்தாம் அதிகாரணம் -ஸர்வதா அனுபபத்தி -மாத்யமிக சூன்ய வாதி ப்ரசக்தி
ஆறாம் அதிகரணம் —ஏகஸ்மின்ன ஸம்பவம் -ஜைனர்கள் செய்த விரோதங்கள்
ஏழாம் அதிகரணம் -பசுபதி -பசுபதி மதஸ்தர் செய்த விரோதங்கள்
இவற்றைக் கண்டித்த பின்
எட்டாம் அதிகரணம் –உத்பத்ய சம்பவம் -பாஞ்சராத்ரம் -பாஞ்ச ராத்ரமே வேதாந்த மார்க அநுசாரி என்று ஸ்தாபித்தார்

——-

இரண்டாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் -ஏழு அதிகரணங்களின் சாரம்

1-வ்யத் அதி கரணத்தில் ஆகாசத்துக்கு க்லுப்தியும் உத்பத்தியும் பேசப்பட்டன
2-தேஜ அதிகரணத்தில் க்ரமமாகத் தோன்றும் மஹத்தாதி காரியங்களுக்கு
முந்தைய தத்வ விசிஷ்டனான ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்றதாயிற்று
3-ஆத்ம அதிகரணத்தில் நித்யனான ஜீவனுக்கு உத்பத்தி லயங்களாவன
தேஹச் சேர்க்கையும் தேஹ வியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டமையும் பேசப்பட்டன
4-ஞாத் அதிகரணத்தில் ஜீவனுக்கு ஞான குணாகாதவமும் ஞாத்ருத்வமும் பேசப்பட்டன
5-கர்த்ரு அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பேசப்பட்டது
6-பராயத் அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பகவத் அதீனம் என்று பேசப்பட்டன
7-அம்ச அதிகரணத்தில் -குணங்களும் தேஹங்களும் -குணம் ஜீவனுக்கு அம்சமாய் இருப்பது போல்
ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் ரூபமான ஜகத்தும் அம்சமானது என்று

———

இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் -எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாகாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்––

———-

மூன்றாம் அத்யாயம் — முதல் பாதம் —ஆறு அதிகரணங்களின் பொருள்களை

1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும்
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே

—–

மூன்றாம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்

————

மூன்றாம் அத்யாயம் — மூன்றாம் பாதம் -28-அதிகரண சாரங்கள்

1-சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்–வித்யை ஐக்யம்
2-அந்யதாத்வ அதிகரணம்–இரு விதப்பிரிவு
3-சர்வாபேத அதிகரணம்–பிராண வித்யை ஐக்யம்
4-ஆனந்தாத் யதிகரணம் –சர்வ வித்யைகளிலும் ஸ்வரூபம் போலே ஆனந்தாதிகள் ஸ்வரூப நிரூபக தர்மத்திற்கு தொடர்ச்சி
5-கார்யாக்யா நாதிகரணம்-ப்ராணனுக்கு வஸ்திரம் என்று அப்பை ஜலத்தை -த்ருஷ்டி செய்தல்
6-சமா நாதிகரணம்-சாண்டில்ய வித்யை ஐக்யம்
7-சம்பந்தாதி கரணம்-அஹஸ் -அஹம் ஸப்தங்கள் பிரித்து நிலை பெறுதல்
8-சம்ப்ரு யதிகரணம்-சம்ப்ருத்யாதி குணங்களுக்கு ஸ்தான நியமம்
9-புருஷ வித்யாதிகரணம்–புருஷ வித்யா பேதம்
10-வேதாத்யதிகரணம்–சன்னோ மித்ர மந்திரங்களுக்கு பரஸ்பர சம்பந்தம்
11-ஹான்நயதி கரணம்-புண்ய பாப ஹான உபாதானங்களுக்குப் பரஸ்பர சம்பந்தம்
12-சாம்பராய திகரணம்-ஹான உபாதானங்களுக்கு ப்ராப்த காலங்கள்
13-அநிய மாதிகரணம்-அர்ச்சிராதி கதிகள் எல்லா வித்யைகட்க்கும் பொதுவாதல்
14-அஷரத்யதி கரணம்-எல்லா வித்யைகளிலும் அஸ்தூலத்வாதி குணச் சேர்க்கை
15-அந்தரத்வாதிகரணம்-பல சிஷ்யர்கள் கேட்ட அர்த்தங்களுக்குப் பரஸ்பரம் வ்யதிஹாரம்
16-காமாத் யதிகரணம் -தஹர வித்யைகளுக்கு ஐக்யம்
17-தந் நிர்த்தாரணா நியமாதி கரணம்-உத்கீத உபாசனத்தின் குண பல விதி
18-பிரதாணாதிகரணம்-அபஹத பாப்மத்வாதி உபாசனங்களில் எங்கும் குணியின் ஆவ்ருத்தி
19-லிங்க பூயஸ்த்வ அதிகரணம்- நிகில பர வித்யைகளிலும் அறியத் தக்கது
20-பூர்வ விகல்பாதி கரணம்-மனச் சித் ப்ரப்ருதிகளான அக்னிகள் வித்யாமயங்களாயும் வித்யாமய க்ரத்வ அனு ப்ரவேசிகளாயும் உள்ளமை –
21-சரீரே பாவதி கரணம்-சுத்தனான ஷேத்ரஞ்ஞன் சிந்த நீயன்
22-அங்காவபத்தா திகரணம்-க்ரிய அங்க பூத ஸர்வ உத் கீதங்களிலும் உபாசன விதி
23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம்-வைச்வானர வித்யையில் ஸமஸ்த உபாஸனமே கார்யம்
24-சப்தாதி பேதாதி கரணம்-வித்யைகளின் நாநாத்வம் -பேதம்
25-விகல்பாதிகரணம்-மோஷார்த்த வித்யைகளில் விகல்பம்
26-யதாச்ரய பாவ அதிகரணம்–கீழ்ச் சொன்ன உத்கீத உபாசனத்திற்கு சொன்ன அநீயதையை யுக்திகளால் உறுதிப்படுத்தி ஸ்தாபித்தல்

————–

மூன்றாம் அத்யாயம் — நான்காம் பாதம் —15-அதிகரண சாரங்கள்

1-புருஷார்த்தாதி கரணம் -வித்யை கர்மாக்களை அங்கமாகக் கொண்டது –
2-ஸ்துதி மாத்ராதிகரணம் –உத்கீதையில் அப்ராப்தையான ரசதமத்வாதி த்ருஷ்டி விதிக்கப் படுகிறது –
3- பாரிப்லவாதி கரணம் – வித்யா விதி யுடன் கூடிய ஆக்யான சம்சனங்கள் வித்யா ஸித்த்யர்த்தங்கள் –
4- அக்நீந்த நாத்யாதி கரணம் -அந்தந்த ஆஸ்ரயம தியத தர்மங்களால் ஊர்த்தவ ரேதஸ்ஸுகளுக்கு சங்கா வித்யை உண்டு
5-சர்வ அபேஷாதி கரணம் –க்ருஹஸ்தனின் வித்யையும் யஜ்ஞ தானாதிகளை அபேக்ஷிப்பது –
6- சம தமாத்யாதிகரணம் –க்ருஹஸ்தனுக்கும் சாந்த்யாதிகள் தேவை
7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –ஆபத்து இல்லாக் காலத்தில் வித்வானுக்கும் அன்ன சுத்தியாலே யோக ஸித்தி
8- விஹி தத்வாதி கரணம் —ஒரு கர்மமே வித்யார்த்தமாகவும் ஆஸ்ரம அர்த்தமாகவும் ஆகலாம்
9-விதுராதிகரணம்-விதுரனுக்கும் வித்யா சம்பந்தம் உண்டு
10-தத் பூதாதிகரணம் —ப்ரஹ்மசர்யம் இழந்த நைஷ் டிகாதிகளுக்கு வித்யையில் அதிகாரம் இல்லை
11-ஸ்வாம்யதிகரணம் –
12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -க்ரத்வங்கங்களில் ரஸ தமத்வாதி தர்சனம் ருத்விக் கர்த்ருகம்
13-அநாவிஷ்கராதி கரணம்-த்யான ஸித்த்யர்த்தமாக ஸூபாஸ்ரய தாரணா ரூபமான மௌனம் விதிக்கப் படுகிறது
14-ஐஹிகாதிகரணம் —காரணமான ஸூஹ்ருத துஷ்ஹ் ருதங்கள் பிரபல கர்மாந்தரங்களால்
தடைப்படா விடில் இம்மையில் ப்ரஹ்ம வித்யை உண்டாகிறது
15-முக்தி பலாதிகரணம் –அப்ரஹ்ம வித்யை போலவே ஸூஹ்ருதங்களும் பாகவத அபசாராதிகளால்
பிரதிபந்தகம் ஏற்பட்டால் ப்ரஹ்ம வித்யை உண்டாக்க மாட்டாது

———-

நான்காம் அத்யாயம் — முதல் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ப்ரஹ்ம வித்ய உபாசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று உபாஸிக்க வேண்டும் –
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –ப்ரதீகங்களான மனம் முதலியவற்றில் அஹம் மன -என்று உபாஸிக்கக் கூடாது –
அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதத்தில் ஆதித்யாதி த்ருஷ்டி செய்ய வேண்டும்
அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —ஆசனத்தில் வசதியாய் அமர்ந்தே உபாஸிக்க வேண்டும்
அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -வித்யா யோனியான சரீரம் உள்ளதனையும் தினமும் இடைவிடாது சிந்திக்க வேண்டும்
அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -வித்யையின் மஹிமையால் பூர்வ உத்தர ஆகங்களுக்கு அஸ்லேஷ விநாசம் என்றும்
அதிகரணம் -8-இதராதிகரணம்–ஸ்வர்க்காதி சாதனமான புண்யத்துக்கும் அஸ்லேஷ விநாசங்கள் கூடும்
அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–பிராரப்த கர்மாக்களுக்கு போகத்தாலேயே நாசம்
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-வர்ணாஸ்ரம தர்மங்கள் அவஸ்யம் அநுஷ்டேத்யத்வம்
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –ப்ராரப்த்த கர்மத்தின் முடிவில் மோக்ஷம்

————-

நான்காம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-வாகாதி கரணம்–வாக்கு முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு மனஸ்ஸில் சம்பத்தியும்
அதிகரணம் -2- மநோதிகரணம் – இந்த்ரிய விஸிஷ்ட மனஸ்ஸுக்கு பிராண வாயுவில் ஸம்பத்தியும்
அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -ப்ராணன்களுக்கு தேஹாத் யக்ஷனான ஜீவனிடத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுக்குப் பூத ஸூஷ்மத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வித்வானுக்கும் மற்றோருக்கும் – அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமம் என்னும் ஸம்பத்தியும்
அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –பூத ஸூஷ் மம் தழுவிய ஜீவனுக்குப் பரமாத்மாவிடம் களைப்பாற ஸம்பத்தியும்
அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–பரமாத்மாவிடம் ஸம்பத்தி என்றது ஸம்பந்தமே என்றும்
அதிகரணம் -8-ததோகோதி கரணம் –வித்வானுக்கு ப்ரஹ்ம நாடீ வழியே உத் க்ராந்தியும்
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -அர்ச்சிராதி கமனம் ஸூர்ய கிரணங்களை பற்றி என்றும்
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் ம்ருதனான வித்வானுக்கும் முக்தி உண்டு என்றும்
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாயணத்தில் ம்ருதனான முமுஷுக்கும் முக்தி உண்டு என்றும்

———-

நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —5 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம வித்யா பிரகரணங்களில் கூறிய அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே என்றும்
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-அந்தரிக்ஷத்தில் அடங்கிய வாயுவே தேவ லோகம் என்று வழங்கப்படுகிறது என்றும்
அதிகரணம் -3–வருணாதி கரணம் –வித்யுத்துக்கு மேலே வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு நிவேசம் என்றும்
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-அர்ச்சிஸ் முதல் வித்யுத் வரை உள்ளவர் பரமபதத்தைச் சேர்ப்பிப்பவர் என்றும்
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களுக்கே அர்ச்சிராதி கதி என்றும்

——–

நான்காம் அத்யாயம் — நான்காம் பாதம் —ஆறு அதிகரணங்களின் சாரம் –

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -அபஹத பாபமத்வாதி த்ருஷ்டி விஸிஷ்டமாக
ஸ்வரூப ஆவிர்பாவம் என்றும்
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு என்றும்
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—ஞான ஸ்வரூபமாக சுருதியில் கூறப்பட்ட முக்தனுக்கு
அபஹத பாபமத்வாதி குணங்களாகிற பிரகாரங்களுடன் ஸ்வ அனுபவமும்
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –தன் சங்கல்பத்தாலே ஞாத்யாதிகளை அடைதலும்
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –முக்தனுக்கும் தேஹ பரிக்ரஹத்தில் நியமம் இன்மையும்
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ப்ரஹ்ம சாம்ய ப்ரபத்தியில்
ஜகத் காரணத்வாதிகளான ப்ரஹ்ம லக்ஷண வர்ஜனமும்

——————————————————————————–——————————————————————————–——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — நான்காம் பாதம் —

November 28, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரம பததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

இப்படி இவ் வத்தியாயத்தில் முதல் பாதத்தில்
பாபத்தின் அஸ்லேஷ விநாஸ ரூபமான ப்ரஹ்ம வித்யா பலத்தை நிரூபித்து

இரண்டாம் பாதத்தில்
ஸ்தூல தேஹ ஹானி ரூபமான வித்யா பலத்தையும்

மூன்றாம் பாதத்தில்
அர்ச்சிராதி மார்க்கத்தால் ப்ரக்ருதி மண்டலத்தை அதி க்ரமித்து -விரஜையைத் தாண்டிய பிற்பாடு –
ஸூஷ்ம தேஹ தியாக ரூபமான வித்யாஸத்தையும்
நிரூபித்தார்

இனி நான்காம் பாதத்தில்
ப்ரக்ருதி மண்டலத்தைக் கடந்த வித்வானுக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் ஆனந்த மய திவ்ய ரத்ன மண்டபத்திலே
திவ்ய ஸூரிகளின் குழாத்தில் பராங்குசாதி பூர்வாச்சார்யர் முன்னிலையில் திரு வனந்தாழ்வான் எனும் பர்யந்தத்தில்
எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ யபதியான ஸ்ரீ மன் நாராயணனின் ஸாமீப்யம் ஸாலோக்யம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம்
முதலியவற்றை அடைந்து பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் என்னும் ஆனந்த பரிவாஹ மாகிய
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளுக்கும் ஏற்ற ஸகல கைங்கர்யங்களையும்
நிரூபிக்கிறார் என்று பாத சங்கதி –

———————————————————————————————————————————-

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் –
முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2-அவிபாகே ந த்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் –
ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும்
முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-
தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-
முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-
ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -என்பது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன-

———————————————————————————————————————————–

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் –

முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது-

4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —

சாந்தோக்யம் -8-112-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை-

பரம் ஜ்யோதிஸ்ஸை அடைந்த ஜீவனுக்கு ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் விளக்கப் படுகிறதா
ஸாதிக்கப்படும் வேறு ரூபத்தோடு சம்பந்தம் விளக்கப் படுகிறதா
என்று சம்ஸயம்

ஸ்வரூபத்திற்கு ஸூஷுப்த்யாதி தசையில் ஆனந்த அனுபவம் இல்லாமையாலும்
ஸ்வரூபம் மட்டும் எப்போதும் ஆவிர்பூதமாகையாலும்
ஸ்வர்க்காதிகள் போல் ஸாத்யமாயும் ஸூ கத்திற்கே உறைவிடமாயும் உள்ள தேகத்தோடு சம்பந்தம் விளக்கப் படுகிறது –
அதனால் அபி நிஷ் பத்யதே என்ற ஸப்தம் முக்ய அர்த்தம் உள்ளதாகும்
என்பது பூர்வ பஷி
புதிதான ரூபம் என்பர் –
துக்கத்தின் நீக்கம் என்பதே புருஷார்த்தம் ஆகாது என்பர் –

இத்தை நிரஸிக்கிறார் –

முக்தி பெரும் ஜீவனுக்கு அதிக சுக அனுபவம் உண்டு என்பதை
சாந்தோக்யம் -2-8–ச ஏகோ ப்ராஹ்மண ஆனந்த ச்ரோத்ரி யஸ்ய ச அகா மஹதச்ய-

அது மட்டுமே ப்ரஹ்மத்தின் ஆனந்தம் -வேதங்களில் வல்ல அந்தணன் போகங்களுக்கு ஏங்குவது இல்லை என்றும்

தைத்ரியம் -2-7-ரசம் ஹி ஏவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி -என்றும் சொல்லிற்றே

சித்தாந்தம் –
ஸ்வரூபத்தின் விளக்கமே –
ஸ்வேன ரூபேண –ரூப பதத்துக்கு ஸ்வ விசேஷணம்-
ஞானம் விரிவு பெற்ற நிலையே -ஸ்வரூப விளக்கம் என்றது –

சம்பத்ய -பரம் ஜ்யோதிஸ்ஸை அடைந்து ஸ்ரீ வைகுண்டத்தில் ஆனந்தமய திவ்ய மணி மண்டபத்தில்
திருவநந்தாழ்வான் ஆகிற திவ்ய பர்யங்கத்தின் நடுவே எழுந்து அருளி இருக்கும்
பரம புருஷனை ஸ்ரீ தேவியுடன் நெருங்கி
ஆவிர்பாவ -அபஹத பாப்மத்வாதி குண விசிஷ்டமான ஜீவன் ஸ்வ ஸ்வரூபத்துக்கு கர்ம க்ருத
தேஹ சம்பந்தம் மூலமாக திரோதானம் அற்று சுருக்கம் அற்ற ஞான குணகனாய்த் தோன்றுவர் என்று ஸ்ருதியால்
ப்ரதிபாதிக்கப் படுமே தவிர ஸாத்யமான தேகத்தின் சம்பந்தம் அன்று
ஏன் எனில்
ஸ்வேந சப்தாத்-ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்ற இடத்தில் –
ஸ்வேந-என்ற விசேஷண வாசக ஸப்தம் இருப்பதால் என்றபடி

இதனால் இங்கு ஸாத்யமாக ரூப சம்பந்தம் கருதப்பட்டதால் -அந்த ரூபமும் தனக்கு அசாதாரணம் ஆகையாலே –
ஸ்வேந-என்று விசேஷிப்பதால் பயனில்லை என்ற நிலை ஏற்படும் என்று கருத்து
ஆத்மாவுக்கு ஸ்வபாவ ஸித்தமான ரூபமே ஸ்வ ஸப்தார்த்தம் என்று கருத்து
இவ்வர்த்தத்தை மேல் இரு ஸூத்ரங்களும் விளக்கும்

ஸ்வ ஸ்வரூபம் மட்டும் -அஹம் ஜானாமி -என்று நித்யமாய் ஆவீர் பூதமாகையாலே
பரம் ஜ்யோதிஸ்ஸை அடைந்த பிறகு ஸ்வ ஸ்வரூப பிராப்தி என்பது பொருந்தாதே
என்று சங்கித்துப்
பரிஹரிக்கிறார் –

———————————————————

4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —

விடு பட்ட ஸ்வரூபமே -இப்படியே உறுதியாகிறது –
ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே என்று
கர்மத்தின் தொடர்பு காரணமாக மறைவாக இருந்த ஸ்வரூபம் வெளிப்பட்டது
என்று உறுதி படக் கூறியது –

யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதான ஜென்மாதி காரணம்
ஸமஸ்த வஸ்து விலக்ஷண -சர்வஞ்ஞ -ஸத்ய சங்கல்ப-ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதி –
பரம காருணிக -நிரஸ்த சமாப்யதிக சம்பாவன பர ப்ரஹ்மா பிதாவ பரம புருஷோஸ் தீதி சப்தாத் வகம்யதே-

முக்த -கர்ம சம்பந்தத்தாலான தேகத்தில் இருந்து விடுபட்ட ஜீவனே -ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே-
என்று சொல்லப்படுகிறான் -தேஹியான ஸம்ஸாரி ஜீவன் அல்லன்
பிரதிஜ்ஞா நாத் —ஏதம் த்வேவ தே பூயோனு வ்யாக்யாஸ் யாமி -என்று கர்ம சம்பந்தத்தாலான
தேஹ சம்பந்த க்ருதமான ஜாக்ரதாதி தசைகளில் இருந்தும் விடுபட்ட ஸ்வரூபமுள்ள ஜீவனே
இங்கு பேச வேண்டியவனாக ப்ரதிஜ்ஜை செய்ததால் என்றவாறு

இங்கு அவன் ஜீவ ஸ்வரூபம் நித்ய ப்ராப்தமானாலும் கர்மம் என்னும் அவித்யையால் மறைக்கப் பட்டவனுக்கு
மறைவின் நீக்கமே-அபிநிஷ்பத்தி – எனப்படுகிறது என்பதாம்

இப்படி ஸ்வரூப ஆவிர் பாவத்திலும் யுக்தியால் இவ்வர்த்தம் அபிநிஷ்பன்னம் ஆகிறது –
அபிநிஷ்பத்யதே -என்னும் இடத்தில் போலே அபிநிஷ்பத்தி -என்ற சொல்லின் பிரயோகத்தினைக் காணலாம்
ஆனாலும் ஸ்வரூப மாத்ர ஆவிர்பாவத்திற்கு புருஷார்த்தம் எப்படிக் கூடும் என்பதற்கு விடை அளிக்கிறார் –

——————————————————————————-

4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா -விஜர-விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்யகாம சத்ய சங்கல்ப -என்றது
பரமாத்மாவை குறித்து அல்ல ஜீவாத்மாவைக் குறித்தே -என்று
ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-18-உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூப வஸ்து -விளக்கத்திலே பார்த்தோம்

இதனையே சௌநக பகவான் –
யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரஷாள நாத்மணே
தோஷ ப்ரஹாணான் ந ஜ்ஞான மாத்மந க்ரியதா ததா
யதோதபா ந காணாத் க்ரியதே ந ஜலாம்பராம்
ஸ்வேத நீயதே வ்யக்திம் அசத சம்பவ குத
ததா ஹேய குணத் வம்சாத் அவ போத தயோ குணா
பிரகாச்யந்தே ந ஜ்ஞாயந்தே நித்யா ஏவ ஆத்மா நோ ஹி தே -என்று

வைரம் அழுக்கு நீக்கி புதிதான ஒளி வராதே
கிணறு வெட்டி நீரை விட வேண்டாமே
தாழ்வான குணங்கள் நீங்க இயல்பான ஆத்மா ஸ்வரூபம் வெளிப்படும்
எனவே பரமாத்மாவை அடைந்து புதிதான ஸ்வரூபம் அடையாமல் தன்னுடைய ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் –

ஆத்மா -தேஹாதிகளை விட்ட ஸ்வரூபத்தோடு உள்ள ஆத்மா ஸ்வரூபத்தால் அபஹத பாப்மாத்வாதிகளான
எட்டு குணங்கள் உள்ளவனாக பிரஜாபதி வாக்யத்தால் சொல்லப் படுகிறான்
அத்தகைய ஆத்மாவுக்கு இங்கு ஆவிர்பாவம் கூறப்படுகிறது
ப்ரகரணாத் -அத்தகைய ஆத்மாவையே-ஏதம் த்வேவ தே பூயோனு வ்யாக்யாஸ் யாமி-என்று
ஏதம் என்று சொல்லும் பிரகரணத்தால் என்றபடி

ஆகையால் தானே குண அஷ்டகம் உடையவனானாலும் கர்மம் என்னும் அவித்யையால் மூடப்பட்ட
ஸ்வரூபத்தைக் கொண்டவனாகையாலே பரஞ்சோதியை அடைந்தே மறைவு நீங்கப் பெறுகிறான் –
ஆகவே ஆவிர்பாவம் என்று இங்கே சொல்கிறது என்றவாறு –

ஞான சுருக்கம் என்னும் அசுத்தம் விலகிப் பெற்ற ஸித்த ஸ்வரூபமே -ஸாத்யமான முக்தி
எப்படி – ஸித்தமான வ்ரீஹீ போல்வன ப்ரோஷணத்தால் சாத்யமாகிறதோ அதே போல் இங்கும்
ஆனால் அபி நிஷ் பத்தி சப்தத்துக்கு அர்த்தமாவது -முதலில் ஒரு பொருள் அனுகூலமாகவும்
பின்பு அனுபவத்தால் மிகவும் அனுகூலமாகவும் ஆவது போல்
ஸூக ஸ்வரூபனான ஆத்மா முக்தி தசையில் மிக்க அனுகூலமாகத் தோன்றுகிறான் என்று கருத்து

ஞானச் சுருக்கம் நீங்கி ஞான மலர்ச்சியை அபி வ்யக்தி யாகும் –
இந்த ஞானம் மீண்டும் சுருங்க ஹேதுவே இல்லை யாகையால் இந்த ஞான மலர்ச்சி நித்யம்
இப்படி தர்ம பூத ஞான மலர்ச்சியை இட்டு தர்மியைச் சொல்வதில் குறை இல்லை –

———————————————————————————————————————

அதிகரணம் -2-அவி பாகேந த்ருஷ்டவாதிகரணம் –

முக்தி தசையில் எல்லா பந்தங்களில் நின்றும் விடுபட்ட ஜீவன் தன்னை
பரமாத்மாவை விட வேறுபட்டவனாக அனுபவிக்கிறானா
அல்லது அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்றா -என்று சம்சயம்
இதுவே சங்கதி –

முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது

4-4-4-அபி பாகேந த்ருஷ்டத்வாத் –

வேறுபடாமல் உள்ளதாகவே காணப் படுகிறது –
அவனுக்கு பிரகாரமாக உள்ளதால் தன்னைத் தனிப்படாமல் உள்ளதாகவே அனுபவிக்கிறான்

தைத்ரியம் -ஸோ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா –
முக்தன் சர்வஜ்ஞனான ப்ரஹ்மத்துடன் இருந்து அனைத்து குணங்களையும் அனுபவிக்கிறான் –

முண்டக -3-1-3-யதா பச்ய பச்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரேசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்று
பொன் போன்ற அழகிய திருமேனி கொண்டவனும் இந்த உலகின் காரணமானவனும் –
அனைத்தையும் நியமிப்பவனும் -புருஷன் என்று அழைக்கப் படுபவனும்
எப்போதும் அனைத்துக்கும் காரணமாக உள்ளவனும் ஆகிய பரமாத்மாவை முக்தாத்மா எப்பொழுது காண்கிறானோ
அப்போதே தனது புண்ய பாபங்களை விடுகிறான்
தோஷம் அற்றவனாக பாபங்கள் இல்லாத உள்ளிட்ட எட்டு குணங்கள் நிறையப் பெற்றவனாக மாறுகிறான் –
ப்ரஹ்மத்துடன் ஒற்றுமை அடைகிறான் –

ஸ்ரீ கீதை -14-2- இதம் ஜ்ஞானம் அபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா-சர்க்கே அபி நோபஜாயந்தே பிரளயே ந வ்யதந்தி ச -என்று
இப்படிப்பட்ட அறிவைப் பெற்றவர்கள் என்னை ஒத்த குணங்களை அடைகின்றார்கள் –
அவர்கள் சிருஷ்டியின் போது தோன்றுவதும் இல்லை -பிரளயத்தின் போது துன்பம் அடைவதும் இல்லை

நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-என்றும்
மம சாதர்ம்யம் ஆகதா-என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகள்
பிரித்துச் சொல்வதால் முக்தன் தன்னைத் தனிப் பட்டவ்வனாகவே அனுபவிக்கிறான்
என்பர் பூர்வ பஷி

அப்படி அல்ல –
முக்தன் தன்னைத் தனிப் படாதனாகவே அனுபவிக்கிறான் –
தனது ஆத்மாவை உள்ளபடி காண்கிறான் –

அபி பாகேந -முக்தன் தன் ஆத்மாவுக்கும் ஆத்மாவாய் -ஸர்வ அந்தர்யாமியாய் உள்ள பரமாத்மாவை
அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று தன்னோடு இரண்டற சேர்ந்தவனாகவே அனுபவிக்கிறான்
த்ருஷ்டத்வாத் –ஆத்மேதி தூப கச்சந்தி க்ராஹ யந்திச -என்ற நியாயப்படி
உபாஸன தசையில் உள்ளது உள்ளவாறு பரமாத்மாவை ஆத்மாவாகக் கொண்ட
ஸ்வ ஆத்மாவை ஸாஷாத் கரிப்பதால் என்றபடி

ஆகவே உபாசனம் செய்தபடியே பலன் ஆகையால் பல திசையிலும் முக்தன் அஹம் ப்ரஹ்மாஸ்மி
என்று அனுபவிக்கக் குறையில்லை
தத் த்வம் அஸி
அயமாத்மா ப்ரஹ்ம -என்று ஜீவனுடன் சாமானாதி கரண்யமும் -விசேஷண விசேஷ்ய பாவம் –
ய ஆத்மனி திஷ்டன்
யஸ்ய ஆத்மா சரீரம் -என்று சொல்லப்பட்ட சரீராத்மா பாவத்தை அடிப்படையாகக் கொண்டது

இங்கு ஸ்வரூப ஐக்யம் பொருள் அல்ல
ஸாம்யத்தையே சொல்கிறது
பிரகார பூதனாய் இருந்தே ஸகல கல்யாண குண விசிஷ்டனாய் அனுபவிக்கிறான்
என்று அர்த்தத்தைச் சொல்கிறது –

ப்ரஹ்மத்துடன் ஜீவனுக்கு உள்ள ஒற்றுமை
சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸி–அந்த பரம் பொருள் நீயே -என்றும் –

ப்ருஹத் -2-5-19-அயம் ஆத்மா ப்ரஹ்ம -இந்த ஆத்மா ப்ரஹ்மம் -என்றும்

சாந்தோக்யம் -6-8-7-ஜகத் ஆத்ம்யமிதம் சர்வம் -அனைத்தும் ஆத்மாவை பிரகாரமாகக் கொண்டது -என்றும் –

சாந்தோக்யம் -3-14-1-சர்வம் கல்மிதம் ப்ரஹ்ம -இவை அனைத்தும் ப்ரஹ்மம் -என்றும்

அவனது பிரகாரமாகவே -அவனை ஆத்மா என்றும் தன்னை சரீரமாகவும் உணர்கிறான் –

சதபத ப்ரஹ்மணம்-ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநி அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மா நமந்தரோ யமயதி ச த ஆத்மா அந்தர்யாம்ருத -என்று
எந்த பரம் பொருள் ஜீவனின் உள்ளும் புறமும் பரவி உள்ளானோ -யார் இப்படி உள்ளதை ஜீவன் அறியாமல் உள்ளானோ
யாருக்கு இந்த ஜீவன் சரீரமோ -யார் ஜீவனின் உள்ளே புகுந்து நியமிக்கிறானோ-
அழிவு இல்லாத அந்தப் பரம் பொருளே உனக்கு அந்தர்யாமி -என்றது

தைத்ரிய ஆனந்த வல்லி-அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்று
அனைவருக்கும் ஆத்மாவாக உள்ள பரம் பொருள் ஜீவனின் உள்ளே புகுந்து நியமிக்கிறான் -என்றும்

இதையே ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-22-அவஸ்தி தேரிதி காச க்ருதஸ்ந -என்று முன்பே பார்த்தோம் –

ஆகவே முக்தி பெற்றவன் -அஹம் பிரஹ்மாஸ்மி–நான் ப்ரஹ்மமாகவே உள்ளேன் என்ற எண்ணத்துடன்
ப்ரஹ்மத்தை விட்டு அகலாமல் அனுபவிக்கிறான்

ப்ரஹ்ம ஸூத்ரம் –
4-4-8-சங்கல்பா தேவதத் ஸ்ருதே -என்றும்

2-1-2-அதிகம் து பேத நிர்த்தேசாத் -என்றும் –

3-4-8-அதிகோப தேசாத்-என்றும்

ஜீவனைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறு பட்டவனே -என்று பார்த்தோம் –

—————————————————————————————————-

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்-

அவித்யை நீங்கி ஸ்வரூபம் ஆவிர்பாவம் சொல்லிற்று
எந்த ஸ்வரூப ஆவிர்பாவம் -இரு வகை சுருதிகள் -இரு வகை விளக்கம் உண்டே -என்று சங்கதி
இந்த ஜீவனின் ஸ்வரூபம் அபஹத பாப்மாத் வாதி அஷ்ட குணங்களுடன் கூடிய சைதன்ய மாத்ரமா
அல்லது இவ்விரண்டும் ஸ்வபாவ ஸித்தமா என்று சம்சயம்
குண விஸிஷ்ட பக்ஷத்தை முதலில் காட்டுகிறார் –

ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் –
அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-

ப்ரஹ்மத்தின் குணங்களால் என்று உபன்யாசம் காணப் படுவதால் -இப்படியே ஜைமினி கருதுகிறார்
பாவங்கள் அற்ற தன்மை போன்றவை உண்டு என்று தஹர வித்யை சொல்லும்

சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப -என்று சொல்லிற்று

உபன்யாசாதிப்ய -ஆதி சப்தம் -உண்ணுதல் போன்ற செயல்களை சொல்லும்

இத்தையே சாந்தோக்யம் -2-12-3-ஜஷன் கிரீடன் ரமமாண –
உண்ணுதல் விளையாடுதல் மகிழ்தல் -என்றது-

இதனால் அறிவு மாத்ரம் உள்ள ஸ்வரூபம் அல்ல –
இதுவே ஜைமினி கருத்தாகும் –

ப்ராஹ்மேண ஜைமினி -குண விஸிஷ்ட முக்த ஸ்வரூப ஆவிர்பாவம் என்று ஜைமினி திரு உள்ளம்
ஏன் எனில்
உபன்யாசாதிப்ய-பிரஜாபதி வாக்கியத்தில் ஜீவனுக்கும் இந்த குணங்கள் உபந்யஸிக்கப் படுவதால் என்றபடி
ஆதி -பதத்தால் -ஜஷன் கிரீடன் ரமமாண-என்பது போன்ற ஸ்ருதிகளாலும்
முக்தனுக்கு ஸத்ய சங்கல்பாதிகள் தோன்றுகின்றன -என்று கருத்து

இரண்டாவது பக்ஷத்தை உபந்யஸிக்கிறார்

—————————————————————————————————————

4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —

குணங்கள் இல்லாத ஞான மயமாக -மட்டுமே ஓதப்படுதலால் -ஔடுலொமி இப்படியே கருதுகிறார் –
பிரத்யகாத்மா ஜ்ஞான மாத்ர ஸ்வரூபம்

ப்ருஹத் -4-5-13-ச யதா சைந்தவகதந அனந்தர அபாஹ்ய க்ருத்சன ரசகன ஏவ ஏவம் வா அரே
அயம் ஆத்மா அந்தர -அபாஹ்ய க்ருத்சன ப்ரஜ்ஞாநகந ஏவ -என்று
உப்புக்கட்டி எவ்ப்படி உள்ளும் புறமும் நடுவிலும் உப்பாகவே உள்ளது போன்றே ஆத்மாவும் ஞான மயமாகவே உள்ளும் புறமும் நடுவிலும் -என்றும்

ப்ருஹத் -2-4-12-விஜ்ஞான கந ஏவ -என்று
ஆத்மா முழுவதும் ஞான மயமாகவே உள்ளது என்றும் சொல்லிற்றே

அபஹதபாப்மா மூலம் மாற்றம் மூப்பு வருத்தம் பசி தாகம் போன்றவை இல்லை என்றே சொல்லப்பட்டது ஒழிய
எட்டு தன்மைகள் உண்டு என்று கூறப்பட வில்லை –

எனவே ஞான மாத்ரமே என்பர் ஔடுலோமி-

சிதி தந்மாத்ரேன -ஜீவனுக்கு சைதன்யம் மாத்ரமே ஸ்வரூபமாதலின் அந்த ரூபத்துடன் ஆவிர்பாவம்
இதி ஔடுலொமி — என்று இவர் திரு உள்ளம்
ததாத்மகத்வாத் -விஞ்ஞான கன ஏவ -என்று விஞ்ஞான ஸ்வரூபத்வம் தவிர
வேறு குணங்கள் தடுக்கப்பட்டு இருப்பதால்

இவ்விரு மதங்களையும் நிரஸித்து ஸ்வ மதத்தை ஸ்தாபிக்கிறார் –

—————————————————————————

4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வ பாவாத் அவிரோதம் பாதாராயண –

ஞான மாத்ரம் என்பதை ஏற்றாலும் மற்ற தன்மைகள் உள்ளதாகக் கொள்வதில் முரண்பாடு இல்லை –
இப்படியே பாதராயணர் எண்ணுகிறார் –

ஏவம் அபி உபன்யாசாத் -ஆத்மா சித் ஸ்வரூபனே ஆனாலும் பிரஜாபதி வாக்கியத்தில்
குணங்களை உபந்யஸித்து இருப்பதால்
பூர்வபாவாத் -முன் உள்ள எட்டு குணங்களும் உள்ளவை என்று தோன்றுவதால்
இரண்டு ஸ்வரூபங்களுக்கும்
அவிரோதம் பாதாராயண –விரோதம் இல்லை என்பதே இவர் திரு உள்ளம்

விஞ்ஞான கன ஏவ -என்ற சுருதியில் ஏவ -வேறு ஸ்ருதிகளில் காட்டிய குணங்களைத் தடுக்காது
சைந்தவ ரஸ கன ஏவ என்பதில் லவணம் என்ற பொருளையும் ஸ்பர்சம் போன்ற குணங்களையும் காட்டுமா போலே
இங்கு ஏவ காரம் -மாம்பழம் ஒரு பக்கம் இனிப்பாயும் புளிப்பாயும் போல் இல்லாமல் ஒரே மாதிரி சுவை என்பது போலே
இங்கும் ஆத்ம ஸ்வரூபம் முழுவதும் ஸ்வயம் ப்ரகாசமாதலால் ஜடம் போல் இல்லாமல் ஞானமே வடிவானது என்று
அயோக வியச்சேதமே பொருள்

ஆகவே இரு ஸ்ருதிகளுக்கும் விரோதம் வாராமல் இரு ஸ்வரூபமும் உண்டு என்று ஒப்புக் கொண்டு
முக்தி தசையில் இவ்விரு ஸ்வரூபங்களுடனே ஆவிர்பாவம் என்று ஸாதிக்கிறார் –

இதுவே வாக்யத்தில் கூறப்பட்டதாலும்
முன்னரே உள்ளதாலும் –
இரண்டு பிரமாணாங்களும் சமம் –
ஞான மாத்ரமே வேறு ஏதும் இல்லை என்பதை உபநிஷத் வாக்கியம் ஏற்க வில்லை

விஜ்ஞான கந ஏவ என்பதில் -ஏவ என்பது
ஆத்மாவின் முழு பாகமும் ஜட தொடர்பு இல்லாமல் தானாகவே பிரகாசிக்க வல்லது என்றும்
இந்த பிரகாசத்தின் சிறிய பாகம் கூட மற்றவற்றை சார்ந்தது இல்லை என்பதையே காட்டும் –

ச யதா என்று ப்ருஹத் -4-5-13- இத்தையே காட்டுகிறது –

—————————————————————-

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –

ஞான ஸ்வரூபனாயும் குண விசிஷ்டனாயும் முக்தன் ப்ரஹ்மத்தை அடைகிறான் என்றது கீழ்
இப்போது முக்தனைக் குறித்து சொல்லப்பட்ட ஸத்ய ஸங்கல்பத்வம்
ப்ரயத்னம் எதையும் எதிர்பாராமல் செயலாற்றல் என்று ஸ்தாபிக்கப் படுகிறது
என்று சங்கதி –

முக்தனுக்கு விரும்பும் ஞாதிகள் போன்றோர் எதிர்வரக் கிடைப்பது வெறும் சங்கல்பத்தாலேயா
அல்லது வேறு ப்ரயத்னத்தை அபேக்ஷிக்குமா
என்று சம்சயம்

உலகில் பிரயத்தனாந்தரத்தை எதிர்பார்த்தே கார்யகரம் பார்க்கிறோம்
அதே போல் இங்கும் வேறு சிறிய முயற்சியை எதிர்பார்த்தே ஸங்கல்பத்தால் கார்ய சித்தி –
விஞ்ஞான கன ஏவ போல் ஸங்கல்பாத் ஏவ -என்பர் பூர்வ பக்ஷி

அதனை நிரஸிக்கிறார்

தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன் விருப்பங்களை அடைகிறான்
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –

சங்கல்பத்தால் மட்டுமே -என்கிறது
சாந்தோக்யம் -8-2-1-
ச யதி பித்ரு லோகே காமோ பவதி சங்கல்பாதேவ பிதர -அஸ்ய சமுத்திஷ்டந்தி -என்று
முக்தன் பித்ருக்களை காண வேண்டும் என்று விரும்பினால்
அவனது சங்கல்பத்தால் பித்ருக்கள் காட்சி அளிப்பார்கள் என்றது

சங்கல்பாத் ஏவ -சங்கல்பத்தினால் மட்டுமே என்றபடி –

சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –சங்கல்பத்தாலேயே பித்ரு தேவதைகள் இவன் எதிரில்
வந்து விடுகிறார்கள் என்று ஸ்ருதி சொல்வதால்
விஞ்ஞான கன ஏவ போல் சுருக்கத்தைப் பொறுக்காது இங்கு ஏவ ஸப்தம்
ஏன் எனில்
அங்கு வேறே ஸ்ருதியால் வரும் குண விசிஷ்டத்தை தடுக்க சாமர்த்தியம் இல்லை
இங்கு வேறு எதையும் அபேக்ஷித்து இருக்க பிரமாணம் இல்லை
பரம புருஷன் ஸத்ய ஸங்கல்பன் -அவன் அருளால் பெற்ற சமயத்தால் முக்தனும் ஸத்ய சங்கல்பன் -என்றவாறு –

————————————————————————————–

4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

சர்வேஸ்வரனைத் தவிர முக்தன் யாருக்கும் வசப் பட்டவன் அல்லன் –
மற்றவருக்கு வசப்பட்டால் சத்ய சங்கல்பத்வம் தடைப்படும்

அத ஏவ ச -அபஹத பாப்மா -இத்யாதி ஸ்ருதியாலே
அநந்ய அதிபதி-பகவானைத் தவிர்ந்து வேறு கர்மா போல்வாரை அதிபதியாகக் கொண்டவன் ஆலன்
இதுக்கு இந்த ஸ்ருதியே பிரமாணம்

கர்ம வசப்பட்டவன் அல்லன் என்பதை
சாந்தோக்யம் -7-25-2-ச ஸ்வராட் பவதி -கட்டுப் படாதவன் -என்றது –

———————————————————————————–

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –

முக்தனுக்கு தேஹ இந்திரியங்கள் உண்டா இல்லையா என்ற சம்சயம் வந்தால்
விருப்பப்படி சரீரம் எடுத்துக் கொள்ளலாம் என்று இங்கு சாதிக்கிறார்
என்று சங்கதி
இவை உண்டா -இல்லையா -சங்கல்பத்துக்கு ஏற்ப அவை அநியதங்களா -என்று சம்சயம்

சரீராதிகள் இல்லை என்பது முதல் பக்ஷம்
உண்டு என்பது இரண்டாவது பக்ஷம்
அநியதம் என்று மூன்றாவது பக்ஷம்

முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும்
சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது —

4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –

சரீரம் போன்றவை முக்தாத்மாவுக்கு இல்லை என்று பாதரி கூறுகிறார் –
வேதங்களும் இப்படியே ஒதுகின்றன –

சாந்தோக்யம் -8-12-1-ந ஹ வை ஸ சரீரஸ்ய சத் ப்ரியாப்ரியயோ அபஹதிரஸ்தி அசரீரம் வாவ
சந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருசத -என்று
ஒருவன் சரீரத்துடன் இருந்தால் இவ்வுலக இன்ப துன்பங்கள் அவனை விட்டு விலகவில்லை –
சரீரம் இல்லாமல் உள்ளவனை மட்டுமே இவை அண்டுவதில்லை -என்றது

மேலும் சாந்தோக்யம் -8-12-3-அஸ்மாத் சரீராத் சமுத்தாயா பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே –என்று
இந்த சரீரத்தை விட்டு வெளியேறி பரஞ்சோதி யான பரமாத்வை முக்தன் அடைந்து தனது ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான் –
என்றதால் சரீரம் முக்தனுக்கு இல்லை
என்பர் பூர்வ பஷி

சரீராதிகள் முக்தனுக்கு இல்லை என்பர் பாதிரி

அடுத்து உண்டு என்ற பக்ஷம்

———————————————————————————–

4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –

முக்தாத்மாவுக்கு சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் உண்டு என்று ஜைமினி கருதுகிறார் –
அவன் பலவிதமாக உள்ளதால்

சாந்தோக்யம் -7-26-2- ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா சப்ததா -என்பதால் –
கர்மம் அடியாக இல்லை –
கர்மம் தொடர்பற்ற சரீரத்தை முக்தாத்மா எடுத்துக் கொள்கிறான் என்கிறார்-

பாவம் ஜைமினி –முக்தனுக்கு சரீராதிகள் உண்டு என்பர் ஜைமினி
விகல்பாமந நாத்-விவித கல்ப விகல்ப -பலவகையாக கூறப்படுவதால் என்கிறார்
ஒரே ரூபத்துடன் பிணைக்க முடியாத முக்த ஸ்வரூபத்தை பல ரூபங்கள் எடுத்துக் கொள்ளலாம்
என்று ஸ்ருதி உண்டே
எனவே தேஹாதிகள் முக்தனுக்கு நியதம் என்பர் ஜைமினி –

———————————————————————————-

4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –

முன்பு இரண்டு பூர்வ பஷ ஸூத்ரங்களுக்கு
சித்தாந்த ஸூத்ரம் இது

அத -என்றது சங்கல்பாத் ஏவ -சங்கல்பம் காரணமாக மட்டும் என்கிறது

இரண்டு வாக்யங்களும் பொருந்த இருவிதமாகவும் உள்ளான் என்கிறார்

த்வாதசாஹம் -என்ற யாகத்தில் உள்ள விதி வாக்கியம் போலே

த்வாதசாஹம் ருத்திகாமா உபேயு-என்று
செழிப்பை விரும்புவர்கள் த்வா தசாஹம் யாகத்தை இயற்ற வேண்டும் என்றும்

த்வா தசா ஹே ந பிரஜாகாமம் யாஜயேத்-
குழந்தையை விரும்பும் ஒருவனுக்கு த்வா தசாஹம் யாகம் செய்விக்க வேண்டும் என்று

முதல் வாக்கியம் மூலம் பல எஜமானர்கள் செய்யும் யாக ரூபமும் –
இரண்டாம் வாக்கியம் மூலம் ஒரு யஜமான் செய்யும் யாக ரூபமும் கூறப் பட்டது போலே –

அத –இருவித ஸ்ருதிகளும் இருப்பதால்
மனத்திலே அந்த லோகத்தில் எல்லாக் காமங்களையும் கண்டு மகிழ்கிறான் என்று ஒரு ஸ்ருதி
ஒன்றோ இரண்டோ மூன்றோ பல சரீரங்களை எடுத்துக் கொள்கிறான் என்பது மற்ற ஒரு ஸ்ருதி
உபயவிதம் பாதராயண -இதனால் முகத்தனை சரீரகனாகவும் அசரீரிகனாகவும் என்பர்

இதற்கு உதாஹரணமாக
த்வா தசா ஹவத் -ஒரே யாகம் -12 நாள் செய்யும் யாகம் சத்திரம் என்றும் அஹீனம் என்று பெயர் பெறுவது போல்
சங்கல்பத்துக்கு ஏற்ப இரண்டும் பொருந்தும் என்கிறார்

உபைதி என்ற வினைச் சொல்லால் விதிக்கப்படுவது ஸத்ரம் என்றும்
யஜதி -என்ற வினைச் சொல்லால் அஹீனம் என்றும் வேறுபாடு கூறுவதும் உண்டு

மேல் முக்தனுக்குச் சொன்ன சரீராதி சித்தியும் முக்தனுடைய சங்கல்பத்தால் மட்டும்
ஏற்படுவது அல்ல என்கிறார் –

———————————————————————————————————————————————–

4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —

முக்தன் எப்போது சர்வேஸ்வரனை அனுபவிக்கத் தக்க சரீரம் தேவை என்று எண்ணுகிறானோ
அப்போது அந்த சரீரம் முக்தனால் படைக்கப் படுகிறது என்ற விதி முறை இல்லை என்கிறார்

சரீரம் இல்லை என்றால் கனவு போன்று பொருந்தும் –
பரமாத்மா மூலமாகப் படைக்கப் பட்ட சரீரம் போன்றவை மூலமாக பகவத் அனுபவம் கிட்டும்

ப்ருஹத் -4-3-10-அத ரதான் ரத யோகன் பத ஸ்ருஜதே -என்று
கனவு நிலையில் தேர்கள் மற்றும் அவற்றில் பூட்டப் பட்ட குதிரைகள் அந்த தேர்கள் செல்லும் வழிகள்
ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் என்று தொடங்கி

அத வேசாந்தான் புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா -என்று
குளங்கள் நதிகள் ஆகியவற்றை பரமாத்மா படைக்கிறான் -காரணம் அவனே படைக்கிறான் என்றது

மேலும் கட உபநிஷத் -2-2-8-ய ஏஷ ஸூ ப்தேஷூ ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண ததேவ சுக்ரம்
தத் ப்ரஹ்ம ததேவாம்ருத முச்யதே தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சன -என்று
யார் ஒருத்தன் அனைத்தும் உறங்கிய நிலையில் உள்ள போது தான் விழித்த படி இருந்து சங்கல்பித்து
சங்கல்பித்துப் படைக்கிறானோ அவனை அமிர்தம் என்றே கூறுகின்றனர் –
அவனையே அனைவரும் அண்டி உள்ளனர் -என்றது

அது போன்று தனது விளையாட்டுக்காகப் படைக்கப் பட்ட பித்ரு லோகம் போன்றவை மூலம்
முக்தாத்மா அனுபவித்த படி உள்ளான் என்கிறது –

தன்வ பாவே -தன்னால் படைக்கப்பட்ட சரீராதிகள் இல்லாவிட்டாலும் பரமபுருஷனால் படைக்கப்பட்ட
சரீரத்தால் பொருத்தம் ஏற்படுவதால் போகம் உசிதமானதே
எவ்வாறு எனில்
சந்த்யவத் உபபத்தே-ஸ்வப்னத்தில் போலே

ஸ்வப்னத்தில் பரம புருஷன் படைக்கும் ரதாதி உபகரணங்களைக் கொண்டு ஜீவன் இன்ப துன்பங்களை அனுபவிப்பது போல்
முக்தனும் லீலையில் ஈடுபட்ட பரமபுருஷனால் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்ட பித்ரு லோகாதிகளாலே போகத்தை அனுபவிக்கிறான் –

——————————————————————————————————————————–

4-4-14-பாவே ஜாக்ரவத் –

சரீரம் உள்ள போது விழித்து இருக்கும் ஜீவன் போன்றே –
பித்ரு லோகம் போன்றவற்றை அனுபவிப்பது விழித்து இருக்கும் ஜீவன் போலே என்றும் –
தனது சங்கல்பத்தாலும் லீலைகள் அடங்கிய பித்ரு லோகத்தை தாங்களே சிருஷ்டித்து அனுபவிப்பார்கள்

ஆகவே இரண்டும் பொருந்தும்-

பாவே -தன் சங்கல்பத்தால் படைக்கப்பட்ட அனைத்தும் இருக்குமாகில்
ஜாக்ரவத் –விழித்து இருக்கும் அரசர் போன்றோர் தன் சங்கல்பத்தால் தேடிய ஐஸ்வர்யத்தால் போகத்தை அனுபவிப்பது போல்
முக்தனும் தன் சங்கல்பத்தால் கிடைத்த பித்ரு லோகாதிகளைக் கொண்டு போகத்தை அனுபவிக்கிறான்
போகமானது லீலா ரஸம்

தனது லீலைக்காக தசரத வஸூ தேவாதிகளைப் படைத்து தானும் மனிதனாய் அவதரித்து லீலா ரஸத்தை அனுபவிப்பது போலே
முக்தர்களுக்கும் தன் லீலை சித்திக்கவே பித்ரு லோகாதிகளை ஸ்ருஷ்டித்து அனுபவிக்கச் செய்கிறான்

ஒரு சமயம் முக்தனும் ஸத்ய ஸங்கல்பனாக ஸ்வ பித்ரு லோகாதிகளைத் தானே ஸ்ருஷ்டித்து மகிழ்கிறான்

இதனால் ப்ரஹ்ம அனுபவ ஏகதானத்வம் கெடாது என்பாதாம்

முக்தனுக்கு சரீரவத்வம் தோன்றுவதால் ஸ சரீரம் என்று கூறும் ஸ்ருதி
கர்மக்ருத சரீரம் இல்லை என்ற கருத்துடையதாகும் என்று கருத்து –

ஆமாம் -ஆத்மா அணு என்று கூறப்பட்டது
அப்படியானால் ஒரே ஆத்மாவுக்கு பல சரீரங்களில் ஆத்மாவாய் ஒரே காலத்தில் இருப்பு எப்படிப் பொருந்தும் –
அவற்றில் ஆத்மாபிமானம் எப்படிப் பொருந்தும்
என்ற சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

————————————————————————–

4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி-

ஆத்மா அணு அளவே என்பதால் பல சாரீரங்கள் உள்ளதாக எண்ணுவது
எப்படி -பூர்வ பஷி

விளக்கு போன்று ஆத்மா பரவி இருப்பதால் -வேதம் இப்படியே கூறுவதால்
தர்ம பூத ஞானம் மூலம் பல சரீரங்களிலும் பரவலாமே
முக்தி பெறாத நிலையில் கர்ம வசத்தால் பல சரீரங்களில் பரவ முடியாது –
முக்தனுக்கு தடை இல்லையே

ஸ்வேதாஸ்வதர -5-9- வாலாக்ர சதபாகச்ய சததா கல்பி தஸ்ய ச பாகோ ஜீவ ச விஜ்ஞேய ச சா நந்த்யாய கல்பதே-என்றது
ஜீவனின் அணுத்வம் பற்றி நெல்லின் நுனியை நேராக வெட்டி அதில் ஒரு பாகத்தை நூறாக்கி -அந்த அளவு என்றது –

பூர்வ பஷி –
பர ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் உள்ளும் புறமும் உள்ள விஷயங்களை அறியாத
ஞான ஸூன்யனாக உள்ளான் என்பர்

ப்ருஹத் -4-3-21-ப்ராஜ்ஞேந ஆத்மநா ஸம்பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சஞ வேதநாந்தரம் -என்று
ஸ்ருதி உள்ளதால்
முக்தன் பல சரீரங்களில் வியாபித்து எங்கனம் செயல் படுவான் என்பர் –

ப்ரதீபவத் ஆவேச -விளக்கு ஒளி போல் தர்மபூத ஞான பிரகாசம் -வியாப்தி —
தேகாந்தரங்களுக்கும் கூடலாம் என்று கருத்து
ததா ஹி தர்சயதி-இவ்வாறே ஸ்ருதி காண்பிக்கிறது –

நாணு ரதத் ஸ்ருதே -என்ற ஸூத்ரத்திலே பர ப்ரஹ்மத்துக்கே மஹத்வம் சொல்லுகையாலே
ப்ரத்யகாத்மாவுக்கு அணுத்வமே ஸ்வரூபம் என்பதே ஸூத்ரகாரர் திரு உள்ளம் –

ஆமாம் -பர ப்ரஹ்மத்தை அடைந்தவருக்கு உள் -வெளி ஞானம் எல்லாம் அற்றுப் போவதாகச் சொல்வதால்
அவனுக்கு ஞானத்தின் ஆனந்த்யம் எவ்வாறு கூறலாம்
என்ற சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

———————————————————————————–

4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

அந்த ஸ்ருதி வாக்கியம் உறக்க நிலை அல்லது மரண நிலை இரண்டில் ஒன்றை மட்டும் கூறுகிறது

ஸ்வாப்யய -என்றது ஆழ்ந்த உறக்கம் –சம்பத்தி -மரணம் –
சாந்தோக்யம் -6-8-6-வாங்க மனஸூ சம்பத்த்யதே –என்று தொடங்கி –
தேஜ பரஸ்யாம் தேவதா யாம் -என்று மரண காலத்தில் ஜீவன் பரமாத்மா உடன் சேர்ந்து உள்ளான் -என்று முடித்தது –
இந்த நிலைகளில் ஞானம் என்பதே கூறப்பட்டது
முக்தனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவும்
முக்தி அற்றவனுக்கு இரண்டு நிலைகளிலும் அறிவு அற்று போவதும் உண்டே

சாந்தோக்யம் -8-11-1-நாஹ கல்வயம் சம்ப்ரத்யாத்மானம் ஜா நாதி அயமஹமச்மீதி நோ ஏவேமா நி பூதா நி
வி நாசமே வாபீதோ பவதி நாஹம் அத்ர போக்யம் பஸ்யாமி-என்றும்

முக்தாத்மாவைக் குறித்து -8-12-5-6- ஸ வா ஏஷ திவ்யேந சஷூஷா மனசைதான் காமான் பஸ்யன்
ரமதே ய ஏதே ப்ரஹ்ம லோகே -என்று மோஷ நிலையில் அனைத்தும் அறிந்த தன்மை சொல்லப் பட்டது –

சாந்தோக்யம் -7-26-2-சர்வம் ஹ பச்ய பச்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்று முக்தன் அறியும் நிலையும்

ப்ருஹத் -2-4-12- ஏதேப்ய பூதேப்ய சமுத்தாய தான்யேவா நுவி நச்யதி-
ஞானச் சுருக்கம் அடைந்து எதனையும் காண்பதில்லை -என்றது –

ஆகையால் அணுவான முக்தனுக்கு தர்மபூத ஞான வ்யாப்தியாலே ஆனந்த்யம் கூறியது உக்தமே

சங்கல்ப ஏவ என்னும் அதிகரணத்தில் முக்தன் தனது ஸங்கல்பத்தினால் அனைத்தும் அடைகிறான் என்று கூறப்பட்டது
இப்போது இந்த அபவாதிகரணத்திலும் ஸங்கல்பத்தாலேயே தேஹத்தைக் கொள்கிறான் எனப்படுகிறது
இது கூறியது கூறியதாகாதா என்ன
இதில் முக்தன் ஒரு சமயம் தனது சங்கல்பத்தால் பெறலாம் என்றும்
வேறு ஒரு சமயத்தில் பரமபுருஷன் சங்கல்பத்தால் பெறலாம் என்று அர்த்த பேதம் இருப்பதால்
கூறியது கூறவில்லை என்பது ஸூத்ர காரரின் திரு உள்ளம்

———————————————————————————————————————————————————–

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் –

இனி ஜகத் ஸ்ருஷ்டியாதி உடைய சர்வேஸ்வரனாகவும் ஆகக்  கூடுமா
அல்லது இவை அற்று ப்ரஹ்ம அனுபவ மாத்திரத்திலான சாம்யமா
என்ற சம்சயம் சங்கதி

ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன –

4-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —

நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -முண்டகம் -3-1-3- என்றதாலும்
சத்ய சங்கல்பத்வம் உள்ளவன் என்றதாலும்
சர்வேஸ்வரத்வம் முக்தனுக்கும் உண்டு
என்பர் பூர்வ பஷி
எனவே உலகை படைத்தல் என்னும் ஐஸ்வர் யமும் உண்டு என்பர்-

அப்படி அல்ல
தைத்ரியம்–3-1–யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம -என்று
ப்ரஹ்மத்துக்கே உரிய சர்வேஸ்வரத்வ லஷணம் பொருந்த வேண்டுமே

இன்னும் அநேக ஸ்ருதி வாக்யங்கள் –
சாந்தோக்யம் -6-2-2/3-சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் தத் ஐஷத
பஹூச்யாம் பிரஜா யேயேதி தத் தேஜ அஸ்ருஜத-என்றும்

ப்ருஹத் -1-4-11-ப்ரஹ்ம வா இதம் ஏவம் ஏவ அக்ர ஆஸீத் தத் ஏகம் சன்ன வ்யபவத் தச்ச்ரேயோ ரூபமத்ய
ஸ்ருஜத ஷத்ரம் யான்யேதானி தேவத்ரா ஷத்ராணீந்த்ரோ வருண சோமோ ருத்ர பர்ஜன்யோ யமோ ம்ருத்யு ரிசாந–என்றும்

ஐதரேயம் -1-1/2–ஆத்ம வா இதம் ஏக ஏவ அத்ர ஆஸீத் நாந்யத் கிஞ்சன மிஷத் ச ஈஷத
லோகாந்து ஸ்ருஜ இதி ச இமான் லோகா ந ஸ்ருஜத -என்றும்

மஹா நாராயண உபநிஷத் ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந நேமே த்யாவா ப்ருதிவீ
ந நஷத்ராணீ ந ஆப ந அக்னீ ந சோம ந ஸூ ர்ய ச ஏகாகீ ந ரமதே தஸ்ய
த்யாநாந்தஸ் தஸ்ய ஏகா கன்யா தசேந்த்ரியாணி -என்றும்

சதபத ப்ராஹ்மணம் -14-6-7-7-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர -என்றும் –

14-7-7-30-ய ஆத்மநி திஷ்டன் -என்றும் பரம் பொருளுக்கே என்றது –

ஜகத் வ்யாபார வர்ஜம்–முக்தனுக்கு ஜகத்தின் ஸ்ருஷ்ட்டி நியமனம் முதலிய லீலைகளைத் தவிர
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ மாத்ரத்திலே பரம ஸாம்யம் உள்ளது
ப்ரகரணாத் -யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம-இத்யாதி
ஸ்ருதிகளால் பர ப்ரஹ்மத்தை மட்டும் உத்தேசித்து ஜகத் வியாபாரம் ஸ்ருதம் ஆகையால் என்றபடி
அசந்நிஹிதத்வாத் ச-அந்தந்த ப்ரகரணத்தில் முக்தனுக்கு இடம் இல்லாமையாலும்
ஜகத் வியாபாரம் நீங்கலாகவே ப்ரஹ்ம அனுபவ மாத்திரத்திலேயே பரம ஸாம்யம் என்று ஸித்தம் –

——————————————————————————————————————————————————————-

4-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே

முக்தனுக்கு நான்முகன் போன்றவர்களின் உலக போகங்களும் கூறப்பட்டதே என்பதால்
ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் உண்டு
என்பர் பூர்வ பஷி

அப்படி அல்ல –
சாந்தோக்யம் -7-25-2-ஸ ஸ்வராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்று
எங்கும் சஞ்சரிக்கலாம் என்றும்

தைத்ரியம் -3-10-5-இமான் லோகன் காமான்நீ காமரூப்ய நுசஞ்சரன் -என்று
விரும்பிய லோகங்களில் விரும்பிய உருவம் எடுக்கலாம் என்றதே என்பர்

அப்படி அல்ல
கர்ம தொடர்பு நீங்கியதால் தடைபடாத ஞானம் கொண்ட முக்தனுக்கு
அனைத்து செல்வங்களும் அனுபவிக்கக் கிட்டும் என்பதே கருத்து

ஜகத் வியாபாரம் போன்றவை இல்லாமல் இருத்தலே இவனது ஐஸ்வர்யம் என்றும்
ஜகத் வியாபாரம் இல்லை என்றும் தெளிவாகிறது –

பிரத்யஷ உபதேசாத் –ஸ்ருதி -தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்றும்
இமான் லோகன் காமான்நீ காமரூப்ய நுசஞ்சரன்-என்றும்
உள்ள ஸ்ருதிகளால் முக்தனுக்கும் ஜகத் வியாபாரம் உபதிஷ்ட்டமாகையாலே
இதி சேத் ந -ஜகத் வியாபாரம் இல்லை என்றால் அது தவறு –

ஏன் எனில்
அதிகாரிக -பரமபுருஷனால் லோகத்தை நியமனம் செய்ய ஏற்படுத்தப் பட்டுள்ள ஹிரண்ய கர்ப்பாதிகளில்
மண்டல ஸ்தோக்தே-லோகங்களில் உள்ள போகங்களில் முக்தனுக்கு இச்சை இருக்குமாகில்
அங்கங்கே இச்சா அனுகுணமாக பரம புருஷ அனுக்ருஹீதனாயக் கொண்டு அங்கு உள்ள போகங்களை
முக்தன் அனுபவிக்கிறான் என்று அந்த ஸ்ருதியால் கூறப்பட்டதால் படி
காமான்நீ என்றும் காம சரோ பவதி என்றும் காம போகாதிகள் மாத்ரமே ஸ்ருதி சித்தங்களே தவிர
நியுங்க்தே என்ற ஸ்ருதி இல்லாமையால் முக்தனுக்குக் கிடையாது என்பதாம் –

உத்பத்தி யாதிகளான விகாரங்களுக்கு உரியதாதலின் தோஷங்கள் கலந்ததும் அதி யல்பமுமான
சதுர்முக லோகத்தின் போகங்கள் முக்தனுக்கு எப்படிக் கூடும்
என்ற சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————————–

4-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-

மாற்றங்கள் உள்ள அல்ப இன்பம் அனுபவிக்கிறான் என்றால்
முக்தனின் செல்வமும் அல்பம் என்றது ஆகுமோ என்னில்
மாற்றம் இல்லாத பர ப்ரஹ்மத்தையும் அனுபவிக்கிறான் என்கிறது

தைத்ரியம் -2-7-யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே அநிக்ருதே அநிலயநே அபயம்
பிரதிஷ்டாம் விந்ததே அத ச அபயம் கதோ பவதி -என்றும்

ரசோவை வை ச ரசம் ரசம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தி பவதி என்றும்

கட -தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சந-என்றும்

சாந்தோக்யம் -7-25-2- சர்வேஷூ லோகேஷூ காம சார -என்றும்

அனைத்து செல்வங்களுடன் கூடிய பர ப்ரஹ்மத்தை அனுபவிக்கும் பொழுது
அனைத்தையும் அனுபவிப்பதாகவே கூறப்பட்டது

இதனை விடுத்து ஜகத் வியாபாரம் போன்ற எதுவும் அங்கே கூறப் பட வில்லையே

ஸ-ஸப்தம் உறுதிப் பொருளைக் காட்டுவது
விகாராவர்த்தி ஸ -உத்பத்தியாதி விகாரங்கள் இல்லாத பர ப்ரஹ்மமே தான் முக்தர்களுக்குப் போக்யம்
ஏன் எனில்
ததா ஹி சிததிமாஹ-நிர்விகாரமாயும் -அனவதிக அதிசய ஆனந்த ரூபமாயும் உள்ள பர ப்ரஹ்மத்தில்
முக்தனுக்கு அனுபவிப்பவனாக இருப்பைக் கூறுவதும் ஸ்ருதி என்ற காரணத்தால் என்பதாம்
யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் அத்ருச்யே -என்ற வாக்யப்படி
ரசோவை வை ச ரசம் ரசம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தி பவதி -என்றும்
ஸ்ருதிகளிலே இவ்வாறு கூறப்படுகிறது என்பதாம்

முக்தனுக்கு இதனால் சதுர்முக லோகாதிகளில் மிக அற்பமான ஸூக போகாததால்
வர இருந்த தோஷத்துக்குப் பரிஹாரம் எப்படி எனில்
தஸ்மின் லோகா ச்ரிதா சர்வே தது நாத்யேதி கச்சந-என்று ஸ்ருதி சொல்லுகிறபடி
உபய விபூதிகளுக்கும் ஆதாரமான ப்ரஹ்மமே முக்த ப்ராப்யமாகையாலே
பூர்வம் கர்ம வசத்தால் ஹேயமாய்த் தோன்றிய லீலா விபூதியில் உள்ள பதார்த்தங்கள்
அடியோடு கர்மாக்கள் அழியப் பெற்ற முக்தனுக்கு ப்ரஹ்மத்தின் விபூதியாக
மிக்க அனுகூலமாய்த் தோன்றுவதால்
ப்ரஹ்மத்தின் விபூதியில் உள்ளடங்கிய சதுர்முக லோகாதிகளில் உள்ள பதார்த்தங்களின் போகத்தையும்
ப்ரஹ்ம அனுபவத்தைச் சார்ந்ததாகவே முக்தன் அனுபவிக்கிறான் என்று இவ்வர்த்தத்தையே கூறுகிறது
சர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி என்னும் ஸ்ருதி
ஆகையால் தோஷம் இல்லை என்று கருத்து –

—————————————————————————————-

4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-

ப்ரத்யஷம் -ஸ்ருதி
அநுமாநே-ஸ்ம்ருதி
இவைகள் இவ்வாறு
தர்சயத ச ஏவம் -ஜகத் வியாபாராதிகள் பகவானுக்கே உரியவை -முக்தனுக்குக் கிடையாது -என்றும்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமே அவனுக்கு உள்ளது என்றும்
இத்தகைய அர்த்தங்களைக் காட்டுகின்றன

ஜகத் வியாபாரம் பரம புருஷனுக்கே உரியவை என்று ஸ்ருதிகள் கூறுமே

தைத்ரியம் -2-8- பீஷாச்மாத்வாத பவதே பீஷோதேதி ஸூ ர்ய பீஷாஹ்மாத் அக்னிச்ச இந்த்ரச்ச ம்ருத்யுர்தாவதி பஞ்சமா இதி -என்றும்

ப்ருஹத் -3-8-9-ஏதஸ்ய வா அஷரச்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத -என்றும்

ப்ருஹத் -2-4-22-ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ஏஷ பூதபால ஏஷ சேதுர்விதரண ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய -என்றும்

ஸ்ரீ கீதை –
9-10-மாயத்யஷேண பிரகிருதி ஸூ யதே ச சராசரம் ஹேது நாகேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்

10-42-விஷ்டாப்யாஹமிதம் க்ருத்ச்னம் ஏகாம் சேன ஸ்திதோ ஜகத் -என்றும்

இது போலே முக்தனின் சங்கல்பம் ஆனந்தம் அனைத்துக்கும் பர ப்ரஹ்மமே காரணம் என்று ஸ்ருதிகள் முழங்கும்

தைத்ரியம் -2-7-ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்

ஸ்ரீ கீதை –
14-26-மாம் ச யோ அவ்யபிசாரேண பக்தி யோகேன சேவதே ச குணான் சமதீத்ய ஏதான் ப்ரஹ்ம பூபாய கல்பதே -என்றும்

14-27-ப்ரஹ்மணோஹி பிரதிஷ்டாஹம் அம்ருதச்ய அவ்யயச்ய ச சாச்வதச்ய ச தர்மஸ்ய ஸூ கஸ்ய ஏகாந்தி கஸ்ய ச -என்றும்

அனைத்தும் அவன் இச்சை சங்கல்பம் அடியாகவே என்றதாயிற்று

—————————————————————————————

4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச

ப்ரஹ்ம அனுபவம் என்னும் போகம் மூலமாகவே முக்தனுக்கு ப்ரஹ்மத்துடன் சாம்யம் கூறுவதால்
ஜகத் வியாபாரம் இல்லாமல் உள்ளதே முக்தனின் ஐஸ்வர்யம் என்றதாயிற்று

ப்ரஹ்மத்துடன் கூடி இருந்தே முக்தன் அனுபவிக்கிறான் என்கிறது

தைத்ரியம் -2-1- சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறது –

———————————————————————————-

4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

ஜகத் காரணத்வம் -ஜகன் நியந்த்ருத்வம் முதலியவை பரம புருஷனுக்கே அசாதாரணமானவை என்றால்
இவ்வாறு ஸ்வ தந்த்ர குண ஸர்வேஸ்வரன்
முக்தனை மீண்டும் ஒரு கால் சம்சாரி யாக்கக் கூடுமே என்கிற
சங்கைக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

பரமாத்மாவாலே முக்தனின் ஐஸ்வர்யம் என்றால் அவன் ஸ்வ தந்த்ரன் அன்றோ –
சம்சாரத்துக்கு தனது சங்கல்பத்தினால் அனுப்புவானோ என்னில்

அகில ஹேய ப்ரத்ய நீகன்
சமஸ்த கல்யாண குணகன்
ஆதி ஸ்வாமி எங்கும் வியாபித்து உள்ளவன் சத்ய சங்கல்பன்
சர்வஜ்ஞன் வாத்சல்யம் மிக்கவன் பரம காருணிகன்
ஒப்பார் மிக்கார் இல்லாதவன்
தானே கர்ம பலன்களை நீக்கி தன்னை அனுபவிக்கப் பண்ணுபவன்
இவற்றை எல்லாம் ஸ்ருதி மூலமே அறிகிறோம்

அதே ஸ்ருதி மீண்டும் அனுப்புவது இல்லை என்கிறதே-

அநாவ்ருத்தி சப்தாத்
இங்கு ஆவ்ருத்தி யாவது பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவத்தை விட்டு சம்சாரி ஆதல்
அநாவ்ருத்தி -ஒரு காலும் அவ்வாறு சம்சாரத்துக்குத் திரும்பாமை
பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவத்துக்கு இடையூறு இல்லாது இருக்கை
சப்தாத் -இது முக்தனுக்கு சப்தத்தால் தெரிகிறது

பகவானுக்கு ஸ்ரஷ்டத்வம்-நியந்த்ருத்வம் முதலியவை ஸ்ருதியால் தெரிவது போலவே
ஏதேந ப்ரதிபத்ய மாநா இமாம் மாநவ மா வர்த்தம் நா வர்த்தந்தே என்றும்
ச கல்வேவம் வரத்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே ந புனராவர்த்ததே-என்றும் ஸ்ருதியிலும்
இதம் ஞானம் உபாச்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா சர்க்கேபி நோப ஜாயந்தே பிரளயே நவ்ய சந்திச-என்று ஸ்ம்ருதிகளாலும்
முக்தனுக்கு ஆவ்ருத்தி இல்லை என்று தெரிகிறதே –

சாந்தோக்யம் -8-12-1-ச கல்வேவம் வரத்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே ந புனராவர்த்ததே -என்றும்

ஸ்ரீ கீதை –
8-15-மாமுபேத்ய புனர்ஜன்ம துக்காலய சாஸ்வதம் நாப் நுவந்தி மஹாத்மன சம்சித்திம் பரமாம் கதா -என்றும்

8-16-ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன மாமுபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே -என்றும்
சொல்வதால் அவன் அனுப்ப மாட்டான்

பர ப்ரஹ்மத்தையே அனுபவிக்கும் சுருக்கம் இல்லாத ஞானம் கொண்ட முக்தன்
வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாமல் இருக்க மீண்டும் பிறப்பான் என்ற அச்சம் தேவை இல்லை

தனக்கு மிகவும் பிரியமான ஞானி
ஸ்ரீ கீதை –
7-17-ப்ரியோ ஹி ஜ்ஞாநின அத்யர்த்தம் அஹம் ச ச மம்ப்ரிய -என்றும்

‘7-18-உதாராஸ் சர்வே ஏதைவி ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் -என்றும்

7-19- பஹூ நாம் ஜன்மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே வாஸூதேவஸ் சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர்லப

இப்படி கிடைப்பதற்கு மிகவும் அரியவன் நான் விடுவேனோ

ஸ்ரீ பாஷ்யம் நியமிக்கப் படுவதால் இரண்டு தடவை -அநாவ்ருத்தி சப்தாத் –அநாவ்ருத்தி சப்தாத் —

இங்கு பாஷ்யத்தில் அபிமதமான நான்கு வகை சங்கைகளுக்கும் பரிஹாரம் வருமாறு

1-பரமபுருஷன் ஓத்தார் மிக்கார் இல்லாதவன்
ஆதலால் அவனை விட உயர்ந்த புருஷனால் ஆவ்ருத்திக்கு சங்கை இல்லை
2-அநவதிக அதிசய ஆனந்த ரூபமான ப்ரஹ்மத்தை அனுபவிப்பவனுக்கு அந்ய அபேக்ஷை இல்லாததாலே
ஸ்வ இச்சையாலும் புநர் ஆவ்ருத்தி சங்கிக்க இயலாது
3-இவனுக்கு வாஸனையோடே கர்ம சமுதாயம் நசித்த படியாலே கர்ம மூலமாகவும் புநர் ஆவ்ருத்தி சங்கிக்க இயலாது
4-பரம புருஷன் ஸ்வ தந்திரனானாலும் ஸத்ய ஸங்கல்பனாகவும் இருப்பதால் முக்தனைத் தான்
திரும்பி அனுப்ப மாட்டேன் என்ற ஸங்கல்பம் மீற மாட்டாதவன் ஆகையால் புநர் ஆவ்ருத்தி சங்கிக்க இயலாது

ஆகையால் காலதத்வம் உள்ளவரையும் முக்த ஐஸ்வர்யம் நிலை பெற்றதாகிறது –

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள்
யதா–நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி

சேதனலாபம் எம்பெருமானுக்கு பரமபுருஷார்தம் அன்றோ

வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே -9-6-10-

எல்லாம் மிகவும் ஸமஞ்சஸம்

இந்த கடைசி ஸூத்ரத்தை தனி அதிகாரணமாக சிலர் கொள்கிறார்கள்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு அது திரு உள்ளம் அன்று
இது பூர்வ அதிகரண சேஷமாகவே கொள்ளத் தக்கது

ஆகவே
ஸர்வ ஸ்வாமியான பரம புருஷனுக்கு அசாதாரண சிஹ்ன மான
ஜகத் காரணத்வம்
மோக்ஷ ப்ரதத்வம்
ஸ்ரீ யபதித்தவம்
சேஷ ஸாயித்த்வம்
முதலியவற்றுடன்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும்
ஸர்வ வித கைங்கர்யமே முக்தனுக்கு உரியது
என்று இந்த அதிகரணத்தின் அர்த்தம் நிலை பெற்றது –

————–

ஆறு அதிகரணங்களின் சாரம் –

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -அபஹத பாபமத்வாதி த்ருஷ்டி விஸிஷ்டமாக ஸ்வரூப ஆவிர்பாவம் என்றும்
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு என்றும்
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—ஞான ஸ்வரூபமாக சுருதியில் கூறப்பட்ட முக்தனுக்கு
அபஹத பாபமத்வாதி குணங்களாகிற பிரகாரங்களுடன் ஸ்வ அனுபவமும்
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –தன் சங்கல்பத்தாலே ஞாத்யாதிகளை அடைதலும்
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –முக்தனுக்கும் தேஹ பரிக்ரஹத்தில் நியமம் இன்மையும்
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ப்ரஹ்ம சாம்ய ப்ரபத்தியில் ஜகத் காரணத்வாதிகளான ப்ரஹ்ம லக்ஷண வர்ஜனமும்

ஆகியவை விளக்கப் பட்டன

மங்களம் ஸ்ரீ பாஷ்காராய மஹநீய குணாப்தயே
மங்களம் பூர்வ பாச்சாத்ய குருப்யோ அஸ்து நிரந்தரம் –

————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —

November 27, 2021

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூப

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

————————

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

வித்வானுக்கு அர்ச்சிராதி மார்க்கத்தில் ஆதி வாஹிக தேவதைகளால் செய்யப்படும் உபசார ரூபமான
ப்ரஹ்ம வித்யா பலத்தை மூன்றாம் பாதத்தில் நிரூபிக்கிறார் என்று சங்கதி

இப்படி தேகத்தில் இருந்து வெளிக் கிளம்பிய வித்வானுக்கு மூர்த்தன்ய நாடியாலே
கதி தொடங்குவது முன் பாதத்தில் கூறப்பட்டது
இந்தப் பாதத்தில் மார்க்கம் நிர்ணயிக்கப் படுகின்றது என்று சங்கதி –

———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-
அனைத்து ப்ரஹ்ம வித்யை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம்
மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் –
சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர்
வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —

அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்–
தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் –
அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-
ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் –

சாந்தோக்யத்தில் உபகோஸல வித்யையில் அர்ச்சிராதி கதி சொல்லப்பட்டு
மீண்டும் எட்டாம் அத்தியாயத்தில் தஹர வித்யையிலும் சொல்லப்படுகிறது

கௌஷீதகி சாகையிலும் வேறு விதமாக அர்ச்சிராதி கதி சொல்லப்படுகிறது

ப்ரஹ்தாரண்யத்திலும் இரண்டு இடங்களிலும் உண்டு

இவை எல்லாம் ஒன்றா பலவா
வித்வான் ஒரே மார்க்கத்தில் செல்கிறானா
இவ்வாறு பல மார்க்கங்களில் செல்கிறானா என்று சம்சயம் –

அந்தவந்த மார்க்கங்களுக்கு ப்ரஹ்ம ப்ராப்தியில் பரஸ்பர அபேக்ஷை இல்லை –
பற்பல மார்க்கங்கள் தோன்றுவதால் விகல்பமே-
என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம்
மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –

4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

அர்ச்சிராதி கதி மூலமே -அதற்கே பிரசித்தம் உள்ளது –

சாந்தோக்யம் -4-15-5/6-
அத யது ச ஏவ அஸ்மின் சவ்யம் குர்வந்தி யது ச ந அர்ச்சிஷமேவ அஹ-அன்ஹ -அபூர்யமாண பஷம்
அபூர்யமாண பஷாத் யான் ஷடுதங்நேதி மாசாம்ஸ்தான் மாசேப்ய-சம்வத்சரம் சம்வத்சரான் ஆதித்யம்
ஆதித்யான் சந்த்ரமசம் சந்திர மசோ வித்யுதம் தத்புருஷோ அமாநவ ச ஏதான் ப்ரஹ்ம கமயதி
ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந பிரதிபத்யமா நா இமம் மா நவம் ஆவர்த்தம் நா வர்த்தந்தே -என்கிறது

இதே உபநிஷத்தில் எட்டாவது ப்ரபாடகத்தில் -8-6-5-
அத ஏதைரேவ ரச்மிபி ஊர்த்வம் ஆக்ரமதே -என்று
ஸூர்ய கிரணங்கள் மூலமாகவே கிளம்புகிறான் என்கிறது –

கௌஷீதகீ -1-3- ச ஏதம் தேவயாநம் பந்தா நம் ஆபத்ய அக்னி லோகம் ஆகச்சி ச வாயு லோகம் ச வருண லோகம்
ச ஆதித்ய லோகம் ச இந்திர லோகம் ச பிரஜாபதி லோகம் ச ப்ரஹ்ம லோகம் -என்கிறது

ப்ருஹதாரண்யகம் –
6-2-15-
ய ஏவமேவ விது-ஏ ச கிமே அரண்யே ஸ்ரத்தாம் சத்யம் உபாஸ்தே தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹ –
அஹ்ந ஆபூர்யமாண பஷம் ஆபூர்யமாண பஷாத் யான் ஷண்மாசான் உதங் ஆதித்ய ஏதி மாசேப்ய தேவலோகம் தேவ லோகாத்
ஆதித்யம் ஆதித்யாத் வைத்யுதம் வைத்யுதாத் புருஷோ மானச ச ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி -என்றும்

5-10-1-
யதா வை புருஷ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமா கச்சதி தஸ்மை ச விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன
ச ஊர்த்வம் ஆக்ரமதே ச ஆதித்யமாகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீதே யதா ஆடம்பரச்ய கம் தேன ச
ஊர்த்வமாக்ரமதே சந்த்ரமசம் ஆகச்சதி தஸ்மை ச தத்த விஜிஹீதே யதா துந்துபே கம் -என்கிறது

இப்படி அனைத்து இடங்களிலும் அர்ச்சிராதி கதி பிரசித்தம் –
சில இடங்களில் கூட்டியும் குறைத்தும் சொல்லப் பட்டாலும்
அர்ச்சிராதி கதி அக்னி ஸூர்யன் போன்றவை ஓன்று போலே படிக்கப் படுகிறது –

அர்ச்சிராதி நா -வித்வான் அர்ச்சிராதி மார்க்கத்தில் தான் போகிறான்
தத்ப்ராதிதே –எல்லா ஸ்ருதிகளிலும் அதற்கே ப்ரஸித்தி இருக்கிற படியால்

ஆதித்யாதர்கள் விளக்கப்படுவதால் அனைத்தும் ஒரே மார்க்கமே
ஒன்றில் கூறிய விசேஷங்களை கூறப்படாத இடத்தில் உப சம்ஹாரம் செய்து
சேர்த்து அனுசந்தானம் செய்யப்பட வேண்டும்

சிலருக்கு ப்ரஹ்ம பிராப்தி இம் மார்க்கம் இல்லாமலும் உண்டு என்பதே பாஷ்ய காரர் திரு உள்ளம்
சிசுபாலாதிகள் -அயோத்யையில் வாழும் சராசரங்கள் -புண்டரீக பீஷ்மாதிகள் –
விபவ அவதார வ்யூஹ அவதார லோகத்தவர் -ப்ரஹ்மாக்கள் -அவர்கள் புத்ரர்கள் -போல்வார்
அதிகாரத்துக்கு ஏற்ப வேறு மார்க்கங்கள் உண்டே –

————————————————————————————————–

அதிகரணம் -2-வாய்வதிகரணம் –

அர்ச்சிராதி மார்க்கத்தால் வித்வான் போகிறான் என்றது கீழ்
இப்போது அர்ச்சிராதி மார்க்கத்துக்கு கிரமத்தை நிரூபிப்பதே சங்கதி –

சாந்தோக்யத்தில் ஸம்வத்ஸரத்துக்கும் ஆதித்யனுக்கும் நடுவிலே வாயு நிரத்திஷ்டன்
ப்ரஹதாரண்யத்தில் மாசத்திற்குப் பிறகு வாயு நிரத்திஷ்டன்
இவ்விடத்தில் சாந்தோக்யத்தில் சொன்ன சம்வத்சரத்தை மாதத்திற்குப் பிறகு வைக்க வேண்டும்
இப்படி இரண்டு இடத்திலும் மதியத்தில் நிர்த்திஷ்டையான வாயு தேவ லோக சப்தங்கள்
ஒரே பொருள் உள்ளவையா
வெவ்வேறு பொருள் உள்ளவையா என்று சம்சயம்

அவை வெவ்வேறு பொருள் உள்ளவை யாதலின்
வாயுவிற்கு பின் தேவ லோகம் சென்று பின் ஆதித்யனை அடைகிறான்
என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்

சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர்
வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது

4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

சாந்தோக்யம் -4-15-5-மாசேப்ய சம்வத்சரம் சம்வத்சராத் ஆதித்யம் -என்றும்

ப்ருஹத் -6-2-15-மாசேப்யோ தேவ லோகம் தேவ லோகாத் ஆதித்யன் -என்றது

வாஜச நேயகத்தில் -5-10-1-யதா வை புருஷோ அஸ்மாத் லோகாத் ப்ரைதி ச வாயுமாகச்சதி தஸ்மை ச தத்ர
விஜிஹீதே யதா ரதசக்ரச்ய கம் தேன ச ஊர்த்வமாக்ரமதே ச ஆதித்யமாகச்சதி -என்றது

சம்வத்சரத்தின் பின்னரே வாயுவை அடைகிறான் –
தேவ லோகம் என்பதும் வாயுவைக் குறிக்கும்

வாயுச்ச தேவா நாம் ஆவாச பூத -என்றும்

யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் க்ருஹ –
வீசுகின்ற காற்று-வாயு தேவர்களின் இருப்பிடம் என்றதே-

வாயும் அப்தாத் -சம்வத்சரத்துக்கு மேலேயும் ஆதித்யனுக்குக் கீழும் வாயுவை மட்டும் வைக்க வேண்டும்
ஏன் எனில்
அவிசேஷ விசேஷாப்யாம்-பொதுவாயும் சிறப்பாயும் உள்ள சொற்களால் என்றபடி

இங்கு தேவலோக ஸப்தம் ஸாமான்யம்
வாயு ஸப்தம் விசேஷம்
தேவ லோக ஸப்தத்தால் தேவர்களின் வாசஸ் ஸ்தானம் என்ற காரணத்தால் வாயுவே கூறப்படுகிறது –
அதுவே விசேஷமாகும்
இரண்டும் ஒரே பொருளைக் கூறுவதால் ஸம்வத்சரத்துக்கு மேல் வாயுவை மட்டிலும்
அதற்கு மேல் ஆதித்யனையும் குறிப்பதே சரியான க்ரமம் என்றதாயிற்று
யோ அயம் பவதே ஏஷ தேவா நாம் ப்ரிய -என்பதே இதற்குப் பிரமாணம் –

—————————————————————————————–

அதிகரணம் 3-வருணாதி கரணம் –

இங்கும் ஆதி வாஹிக க்ரம சிந்தனையே என்று சங்கதி –

தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் –
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

மின்னலுக்கு பின் வருணன் -தொடர்பு உள்ளதால் –

கௌஷீதகீ-1-3- -அக்னி வாயு வருண ஆதித்ய இந்திர பிரஜாபதி ப்ரஹ்ம லோகங்கள் என்று வரிசைப் படுத்தியது

ஆனால் ப்ருஹத் -6-2-15-தேவ லோகம் ஆதித்யன் மின்னல் வருணன்

வாயு வின் பின்னாலா வருணளின் பின்னாலா

சாந்தோக்யத்திலும் வாஜஸ நேயத்திலும் ஸர்வ ஸாகா பிரத்யய நியாயத்தாலே
அர்ச்சஸ் அஹஸ் பூர்வ பக்ஷம் உத்தராயணம் சம்வத்சரம் வாயு ஆதித்யன் சந்திரன் மின்னல்
வருணன் இந்திரன் பிரஜாபதி -ஆக 12 தேவதைகளும் அர்ச்சிராதிகள் என்று ப்ரஸித்தர்கள்

அவற்றுள் வாயு வரை ஸ்ருதி க்ரமம் கூறப்பட்டது
வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு மேலே மின்னலுக்கு இடம் குறிப்பது சரியா என்று சம்சயம்

கௌஷீ தகியின் பாட க்ரமம் படி -வாயுவுக்கு மேல் வருணனுக்கு
வருணனுக்கு மேல் இந்த்ர ப்ரஜாபதிகளுக்கும்
வாய்ப்பு பொருந்தும் என்பது பூர்வ பக்ஷம்

இத்தை நிரஸிக்கிறார்

மின்னலுக்கு பின்பே வருணன் -என்கிறது சித்தாந்தம் தொடர்பு உள்ளதால்

அமானவன் வித்யுத் புருஷன் ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறான் –
அமானவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் இடையே வருணன் இந்த்ரன் பிரஜாபதி -என்று கொள்ள வேண்டும் –

தடித- அதி வருண -சம்பந்தாத் —
வருண-தடித- அதி–வருணன் மின்னலுக்கு மேல் வைக்கத் தக்கவன் –
சம்பந்தாத் —இருவருக்கும் சம்பந்தம் இருப்பதால்
மின்னல்கள் மேகத்திலும் இருப்பதால் -அதிலே இருக்கும் ஜலத்துக்கு வருணன் அதிஷ்டான தேவதை யாதலின்
இருவருக்கும் சம்பந்தம் தோன்றுகிறது

ஆகையால் கௌஷீதகி பாடக்ரமத்தைக் காட்டிலும் -மேகத்தினுள் இருப்பு என்ற சம்பந்த க்ரமம் பலமுள்ளதாதலின்
மின்னலுக்கு மேல் தான் வருணனை வைக்க வேண்டும்
அதனால் ஸ ஏநாத் ப்ரஹ்ம கமயதி -என்கிறபடி
வித்யுத் தேவதையான அமானவனுக்குச் சொன்ன ப்ரஹ்ம கமயித்ருத்வம் -ப்ரஹ்மத்தை அடைவிக்கும் தன்மை –
வருணனை வைப்பதால் இடையீட்டைப் பொறுக்கக் கூடியது என்று தோன்றுகிறது
ஆகையால் இந்த்ராதிகளுக்கு வருணனுக்கு மேலே இடம் வைப்பது உசிதம்

ஆகவே அக்னி தொடங்கி பிரஜாபதி வரை 12 ஆதி வாஹிக தேவர்களுக்கும் க்ரம விசேஷம் ஸித்திக்கிறது –

—————————————————————————————————————

அதிகரணம் -4-ஆதி வாஹாதி கரணம் –

அர்ச்சிராதிகள் மார்க்கத்தின் அடையாளமானவர்களா
அல்லது போக ஸ்தானங்களா
அல்லது ப்ரஹ்மத்தை அடையும் வித்வான்களை அழைத்துச் செல்லும் ஆதி வாஹிகர்களா
என்று சிந்திக்கப் படுகின்றது என்று சங்கதி

அடையாளமானவர் என்பர் பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார் இதில்

அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள்
என்று நிரூபிக்கப் படுகிறது –

4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-

இவர்கள் ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள்-
இப்படியாக ப்ரஹ்மத்தால் நியமிக்கப் பட்டவர்களே அடையாளங்கள் உண்டே –
அதி வஹ -அழைத்து செல்பவர்கள்

சாந்தோக்யம் -4-15-5-/5-10-2-தத் புருஷ அமானவன் ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி –
இறுதியில் சொன்னதால் முன்பே கூறப்பட்டவர்களும் ஆதி வாஹர்கள் என்றே கொள்ள வேண்டும்

அர்ச்சிஸ் பதங்கள் அபிமான தேவதைகளையே குறிக்கும்

மின்னலுக்கு பின் படிக்கப் பட்ட வருணன் இந்த்ரன் பிரஜாபதிகளை விட்டு
வித்யுத் புருஷன் மட்டும் என்பர்
பூர்வ பஷி –

சித்தாந்தம் அப்படி அல்ல
பரமபுருஷனால் நியமிக்கப் பட்ட அபிமானி தேவதைகள்
ப்ரஹ்மத்திடம் வித்வான்களை அழைத்துச் செல்பவர்கள்
ப்ரஹ்மத்திடம் சேர்ப்பிப்பதற்கு அங்கங்கள் உண்டே

—————————————————————-

4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

வருணன் உள்ளிட்டவர்கள் அமாநவ புருஷனுக்கு இந்த பணியில் உதவி செய்கிறார்கள் –

இந்த அர்ச்சிராதிகள் அக்னியாதி தேவதைகளுக்கும் அதிஷ்டாதாக்களான நித்ய ஸூரிகள் என்று ஒரு பக்ஷம்
வைத்யுதன் மட்டும் நித்ய ஸூரி என்று ஒரு பக்ஷம் உண்டு என்பது ஸ்வாமி தேசிகன் திரு உள்ளம்

அர்ச்சிராதி மார்க்கத்தால் ஸூர்ய பிராப்தி போலே
தூமாதி மார்க்கத்தால் சந்த்ர பிராப்தி கூறப்படுகிறது
இது கர்மபலனை அனுபவிக்க ஆனதால் முன் கூறிய சந்த்ர ப்ராப்தியை விட வேறானது

அப்படியே புருஷ வித்யையில் ப்ரஹ்ம வித்துக்களுக்கும் தஷிணாய மானத்தால்
சந்திரனை அடைதல் ஆகிய பலன் கூறப்படுகிறது
இதுவும் வேறு தான்

இந்த அதிகரணத்தில் தஷிணாயணத்திலும் உத்தராயணத்தில் இறந்த ஸர்வ ப்ரஹ்ம வித்துக்களுக்கும்
சாதாரணமாக ஆதி வாஹிக க்ரமத்தில் எட்டாவதாக சந்த்ர பிராப்தி கூறப்படுகிறது

இதுவும் முன் சொன்ன இரு வகை சந்த்ர ப்ராப்திகளிலும் வேறு பட்டதாய் அபவர்க்கம் செல்பவர்கள்
அனைவருக்கும் பொதுவாய் உள்ளது என்று நுண் அறிவுள்ளோரால் அறியத்தக்கது என்று
அதிகரண சாராவளியில் ஸ்வாமி தேசிகன் காட்டி அருள்கிறார் –

———————————————————————————————————————————————————

அதிகரணம் -5-கார்யாதிகரணம் –

இதில் இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தால் ப்ராப்யமான ஸ்தான விசேஷத்தை
நிஷ் கர்ஷிக்கிறார்
என்று அதிகரண சங்கதி –

இந்த ஆதி வாஹ்யகர்களின் கூட்டம் பர ப்ரஹ்மத்தின் படைப்பான
ஹிரண்ய கர்ப்பனின் உபாசகர்களை சேர்ப்பிக்கிறார்களா
அல்லது பர ப்ரஹ்ம உபாசகர்களையா
அல்லது ஜீவனை -ப்ரத்யகாத்மாவை -ப்ரஹ்மாத்மகமாக உபாசிக்கும் பஞ்சாக்னி நிஷ்டர்களையும்
ஸ்வ ஆத்மாவை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாசிப்பவர்களான சத் வித்யா தஹர வித்யா நிஷ்டர்களையா
என்று மூன்று வித சங்கைகள் –

இதில் கார்யமான ஹிரண்யகர்ப்ப உபாசகர்களையே ஹிரண்ய கர்ப்ப லோகத்தில் சேர்ப்பிக்கிறது
என்பது பூர்வ பக்ஷம்
இவ்விஷயம் ஐந்து ஸூத்ரங்களால் விளக்கப்படுகிறது –

ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள்
என்பது நிரூபிக்கப் படுகிறது –

4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே

ஹிரண்ய கர்ப்பனான நான்முகனை உபாசிப்பவர்களையே –
என்பர் பூர்வ பஷி –

பரிபூர்ணான ப்ரஹ்ம உபாசகனுக்கு ஒரு இடம் தேடி செல்ல வேண்டியது இல்லையே
எங்கும் உளன் ஆதலால்-

பின் பர ப்ரஹ்ம உபாசனம் இவர்களுக்கு எதற்கு எனில்
அவித்யையின் நிவ்ருத்திக்கே யானது
ப்ரஹ்ம ப்ராப்திக்கு ஆனதல்ல
இந்த பாதிரி மதமே சங்கர மதத்துக்கு ஆதாரம் –

எனவே கார்ய ப்ரஹ்மமான நான்முகனை உபாசிப்பவர்களையே
அமானவன் கூட்டிச் செல்கிறார்கள் என்பர் –

———————————————————————————–

4-3-7- விசேஷி தத்வாத் ச

ப்ருஹத் -6-2-15-புருஷ மானஸ ஏத்ய ப்ரஹ்ம லோகன் கமயதி –
ப்ரஹ்ம லோகம் அழைத்து செல்கிறான் என்பர்

சாந்தோக்யம் -8-14-1-ப்ரஜாபதே சபாம் வேச்ம ப்ரபத்யே –
பிரஜாபதியின் அரச சபையை அடைகிறேன் -என்பர்

அப்படி ஆகில் –
சாந்தோக்யம் 4-15-5/5-10-2-தத்புருஷ அமாநவ ச ஏ நான் ப்ரஹ்ம கமயதி –
என்றது பொருந்தாதே

ப்ரஹ்ம சப்தத்தில் நபும்சக லிங்கம் பொருந்தாதே –

ப்ரஹ்மாணம் கமயதி என்று அன்றோ இருக்க வேண்டும் –

——————————————————————————–

4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –

ப்ரஹ்ம சப்தத்தில் நபும்சக லிங்கம்-நான்முகனைக் குறிக்கும் என்பர்
நெருக்கமாக உள்ளவன் என்பதால் இப்படியே கூறப்படுகிறது

சாந்தோக்யம் -6-18-யோ ப்ரஹ்மாணம் விததாதி –
பிரமனை யார் படைக்கின்றானோ

சாந்தோக்யம் -4-15-6-
ஏஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதே ந பிரதிபத்யமா நா இமம் மானவமவர்த்ததம் நாவர்த்தந்தே -என்றும்

கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-/தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி -என்றும்
திரும்புதல் இல்லை என்றதே

ஆனால் ஸ்ரீ கீதை-8-16- -ஆ ப்ரஹ்ம புவனால்லோகே புனராவர்த்தின அர்ஜுன -என்று
நான்முகன் இருப்பிடம் வரை சென்ற அனைத்தும் திரும்புகின்றன என்றதே

இரண்டு பரார்த்தங்களின் முடிவில் நான்முகனுக்கும் முடிவு உண்டே

——————————————————————————–

4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —

ப்ரஹ்ம லோகம் நான்முகன் அழியும் போது உபாசகன் அங்கு இருந்து
பர ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது

மஹா நாராயண உபநிஷத் -12-3-
தே ப்ரஹ்ம லோகே து பராந்த காலே பராம்ருதாத் பரிமுச்யந்தி சர்வே -என்றதே –

இப்படி ஹிரண்ய கர்ப்பனின் ஸ்தானமே ப்ராப்யமானால்
அது நசிக்கக் கூடியதாதலால்
அமும் லோகம் நாவர்த்தந்தே என்று அபுநா வ்ருத்தியைச் சொல்லுகிற ஸ்ருதிக்கு உப பத்தி யாது என்றால்
கார்யாத்யயே -கார்யமான பிரமலோகம் நசித்த போது
ததத்ய ஷேண ஸஹ -அந்த லோகத்தின் தலைவருடன்
அத பரம் -அவனை விடச் சிறந்த ப்ரஹ்மத்தை அடைகிறான்
அவிதா நாத் —பாரமான அம்ருதத்வத்தை அடைந்து முக்தியை அடைகிறான் என்பதாம் –

———————————————————————————

4-3-10-ஸ்ம்ருதேச் ச

ஸ்ம்ருதியிலும் இவ்வாறே கூறப்படுகிறது –

ஸ்ரீ கூர்ம புராணம் -12-269-ப்ரஹ்மணா சஹ தே சர்வே சம்ப்ராப்தே பிரதிசஞ்சரே பரஸ் யாந்தே
க்ருதாத்மனா ப்ரவி சந்தி பரம் பதம் -என்கிறது-

பிரளயத்தின் முடிவில் சதுர்முகனின் ஆயுள் முடிந்ததும் அவருடன் சேர்ந்த அனைவரும் பரமபதத்தை அடைகின்றனர்
ப்ரதி சஞ்சாரம் -பிரளயம் -நான்முகனின் ஆயுள் முடிவு

இப்படியாக பல ஸூத்ரங்களால் நான்முகனை உபாசிப்பவர்களையே அழைத்து செல்வதாக
பாதரி என்னும் ஆச்சார்யர் உரைத்தார்

இனி ஜைமினி அடுத்த 3 ஸூத்ரங்களால் தனது கருத்தை உரைக்கிறார் –

————————————————————————————-

4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்

பரம் பொருளை உபாசிப்பவர்களையே அழைத்துக் கொண்டு செல்வதாக ஜைமினி கூறுகிறார் –
முக்கியமாக உள்ளதால்

பர ப்ரஹ்மம் எங்கும் இருந்த போதிலும் பரமபதம் சென்ற பின்னரே ப்ரஹ்ம ஞானிக்கு
தனது ஸ்வரூபம் மறைக்கும் கர்மங்கள் அழியும்

அவித்யை நீங்கி ப்ரஹ்ம அனுபவம் ஏற்படும் –
ப்ருஹத் -ப்ரஹ்ம லோகன் -என்றது
ப்ரஹ்மமாக உள்ள லோகம் என்று பர ப்ரஹ்மத்தையே குறிக்கும்
லோகான் என்ற பன்மை கௌணமாகும்

———————————————————————————————————

4-3-12-தர்ச நாத் ச —

ஸ்ருதியிலும் காணலாம் –

சாந்தோக்யம் -8-3-4-
ஏஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஞோதி ரூப சம்பந்தய ஸ்வேண ரூபேண அபி நிஷ்பத்யதே

நான்முகனை அடைதல் தள்ளப் பட்டது

————————————————————————————————————————

4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —

அர்ச்சிராதி மார்க்கத்தால் சென்ற வித்வானுக்கு
கார்யே-கார்யமான சதுர்முக லோகத்தில்
ந ச பிரத்யபி சந்தி-ஆர்வம் இல்லை
ஏன் எனில்
ப்ராப்யமான லோகம் நித்யம் என்று விசேஷிதம் ஆகையால்

சாந்தோக்யம் -8-14-1-யசோஹம் பவாமி ப்ரஹ்மணாநாம்-
அனைத்துக்கும் ஆத்மாவாக பரமாத்மா உள்ளதாக எண்ணுவதால் அவித்யை நீங்கப் பெற்று
இந்த எண்ணம் நிலைக்கப் பெற்று உள்ளான் –

சாந்தோக்யம் -8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூயபாபம் சந்திர இவராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம்
அக்ருதம் க்ருத்தாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றது

நித்தியமான பர ப்ரஹ்ம லோகத்தையே -நான்முகனின் பிரமலோகம் அல்ல –

——————————————————————————————————————————————————————————

4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத் க்ரது ச

ப்ரஹ்மத்தின் அவயவமான சித் மற்றும் அசித்துக்களை பிராப்யமாகக் கொண்டு உபாசிக்காதவர்களை
அர்ச்சிராதி மார்க்கமாக அழைத்து செல்கின்றனர் -என்பர் பாதராயணர்

இவ்விதம் கூறாமல் மற்ற இரண்டு வாதங்களிலும் தோஷங்கள் உள்ளன –
இதனையே தத் க்ரது நியாயம் கூறும்

பிரதீகம் -ப்ரஹ்மத்தின் அவயவம்சித் அசித் -போன்றவை –

ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை என்கிறார்

பர ப்ரஹ்மத்தை உபாசிப்பவர்கள் அனைவருக்கும் மோஷ பிராப்தி இல்லையே –
ஐஸ்வர்யம் கைவல்யம் வேண்டுவாரும் அவனையே உபாசிப்பதால்

ஜீவாத்மா ஸ்வரூபத்தை பஞ்சாக்னி வித்யையின் படி -பரமாத்மாவின் ஸ்வரூபமே ஆத்மா என்று உணர்ந்து –
உபாசிப்பவர்களும் மோஷம் அடைகிறார்களே

இவர்களும் பூர்ண ப்ரஹ்ம உபாஸகர்களே
உபாசனத்தில் விசேஷண விசேஷ்ய பாவத்தில் மட்டுமே வேறுபாடு உள்ளது
இதனால் எந்தக் குறையும் இல்லை

அதாவது
ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொண்ட ஆத்மா -என்று உணர்ந்து
உபாசனையின் படியே பலம் என்பதையே தத் க்ரதுச்ச தத்க்ரது -என்கிறது –

——————————————————————————————————————

4-3-15-விசேஷம் ச தர்சயதி

ப்ரதீகங்களை உபாசிப்பவர்களுக்கு அல்ப பலமே கிட்டும் –

சாந்தோக்யம் -7-1-5-யாவன் நாம் நோ கதம் தத்ர அஸ்ய காமசாரோ பவதி –

அளவான பலனே கிட்டும்
அர்ச்சிராதி மார்க்கம் கிட்டாது

பராந்த காலே – சரம தேஹ அவசான காலத்தில்
பராம்ருதாத் -உபாசன ப்ரீதனான பரமாத்மாவின் மூலமாக
பரிமுச்யந்தே சர்வே -வேதாந்த விஞ்ஞானத்தால் மயர்வற்று தெளிவு பெற்று
பந்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள்

——————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம வித்யா பிரகரணங்களில் கூறிய அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே என்றும்
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-அந்தரிக்ஷத்தில் அடங்கிய வாயுவே தேவ லோகம் என்று வழங்கப்படுகிறது என்றும்
அதிகரணம் -3–வருணாதி கரணம் –வித்யுத்துக்கு மேலே வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு நிவேசம் என்றும்
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-அர்ச்சிஸ் முதல் வித்யுத் வரை உள்ளவர் பரமபதத்தைச் சேர்ப்பிப்பவர் என்றும்
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களுக்கே அர்ச்சிராதி கதி என்றும்

ஐந்து அர்த்தங்களை ஸ்தாபித்து அருளினார் இப்பாதத்தில் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

November 27, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்

—————————————————————-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரம பததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

———————————————————————————————————————————-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் –

முன் பாதத்தில்
ஸ்தூல தேகத்தில் இருக்கும் போது பாபங்கள் அஸ்லேஷமும் விநாசமும் வித்யா பலமாகக் காட்டி
இரண்டாம் பாதத்தில்
அர்ச்சிராதி கதிக்கு உபக்ரமாயும்
அழியும் நிலையில் உள்ள ஸ்தூல தேகத்தில் இருந்து உத் க்ராந்தியை -புறப்பாட்டை -முடிவாகவும் கொண்ட
வித்யா பலத்தைச் சிந்திக்கிறார் என்று பாத சங்கதி –

கதிக்குத் தொடக்கமான உத் கிராந்தி கூறப்படுவதால்
அதிகரண சங்கதி

ஆமாம்
வைராக்ய பாதத்தில் ஜீவனின் ஜாக்ரத் தசை முதலியன நிரூபிக்கப் பட்டமையால்
அத்துடனேயே இந்திரியாதிகளின் குழப்ப நிலையான மரணம் பற்றியும் பேச வேண்டி இருக்க
இங்கு தனியே யது பற்றிச் சொல்வதன் கருத்து யாது என் எனில்

ப்ரஹ்ம வித்தின் உத் க்ராந்தியில் மூர்த்தன்ய நாடி மூலமாக கமனம் சொல்வதற்காக
வைராக்ய பாதத்தில் பொதுவாக உத் க்ரமணத்தைக் கூறி
இங்கு விசேஷத்தைக் கூறியபடி யாம் –

முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –

11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் –
மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-
மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–
பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-
வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும்
மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-
தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் –
பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-
மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் –
சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் –
இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –ஸூத்ரங்கள்–
தஷிணாயநத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது

——————————————————————————————————

அதிகரணம் -162-வாகாதி கரணம் -4-2-1-

உத் க்ராந்தத்தைப் பற்றிய ஸ்ருதி வாக் இந்த்ரி யத்துக்கு மனஸ்ஸில் லயத்தைச் சொல்லுகிறதா –
என்று சம்சயம்
வாக்கானது மனத்தை மூலமாகக் கொள்ளாமையால் ப்ரக்ருதியை விட்டு வேறு ஒன்றில்
எதற்கும் லயம் கூடாமையாலே
வாக் வ்ருத்தி மாத்ரத்தின் லயத்தை இது சொல்கிறது
என்று பூர்வ பக்ஷம்
இதனை நிராகரிக்கிறார் –

மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது
என்று நிரூபிக்கப் படுகிறது

497- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –4-2-1-

காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும் –
சாந்தோக்யம் -6-8-6-அஸ்ய சோம்ய புருஷஸ்ய ப்ரயத வாங்மனஸி சம்பத்யதே மன ப்ராணே
ப்ராணா தேஜஸி தேஜ ப்ரச்யாம் தேவதாயாம் -என்று
உடலை விட்டுக் கிளம்பும் உபாசகனின் வாக்கு இந்த்ரியம் மனதை அடைகிறது –
மனம் பிராணனிலும் -பிராணன் தேஜச்சிலும்-தேஜஸ் உயர்ந்த வஸ்துவிலும் சேர்கின்றன -என்றது

இந்த்ரியமா– செயல்பாடா– சங்கை

பூர்வ பஷி செயல்பாடு என்பர் –
செயல்பாட்டுக்கு மனம் பிரதான கார்யம் என்பதால் –

அப்படி அல்ல
ஸ்வரூபமே இணைகிறது –
வாக் செயல்பாட்டை இழந்த பின்னரும் மனம் தொடர்ந்து இயங்குவதைக் காண்கிறோம்

பூர்வ பஷி வாதம் போலே
மனம் வாக் இந்த்ரிய காரணம் அல்ல
எனவே லயிக்கிறது எனபது பொருந்தாது –
சுருதி வாக்யத்தின் படி -சென்று சேருகிறது என்றே கொள்ள வேண்டும் –

வாக் மனஸி -வாக் இந்திரியம் மனஸ்ஸில் லயிக்கிறது
தர்சநாத் -வாக் இந்திரியம் ஒய்வு அடைகையில் மனத்தில் செயல் காணப்படுவதால் என்றபடி
வாக் வ்ருத்தி அனைத்துக்கும் லயம் கூறினாலும் இது பொருந்தும் என்றால்
அது அல்ல
சப்தாத் ச-வாங் மனஸி ஸம்பத்தே -என்று வாக் இந்த்ரியதிற்கே மனதில் லயத்தைக் கூறும் ஸப்தத்தால் என்றபடி –
வாக் வ்ருத்திக்கே லயம் என்ற பஷத்திலோ அதற்கான ஸப்தம் இல்லாமையாலே
அகாரணத்தில் ஸம்பத்தி -லயம் – வராது என்ற தோஷம் சமமாகையால் அந்த பக்ஷம் கூடாது
ஸம்பத்தி என்பது சம்யோகத்தைக் குறிப்பதால் அகாரணத்தில் லயத்தைக் கூறவில்லை
ஆதலின் விரோதம் இல்லை என்று கருத்து –

————————————————————————————————————————————

499- அத ஏவ சர்வாணி அநு-4-2-1-

எக் காரணத்தால் வாக் இந்த்ரியத்திற்கு மனசில் சம்யோகம் மட்டும் சம்பத்தில் என்ற சொல்லால் கூறப்பட்டதோ
லயம் என்று கூறப்பட வில்லையே
அதே காரணத்தால் அது சர்வ இந்திரியங்களும் வாக்கை அனுசரித்து
மனசில் சம்பந்திக்கின்றன என்னும் அர்த்தத்தைச் சொல்லும் –
ஸ்ருதி வசனம் இதுக்குப் பொருந்துகிறது என்று கருத்து

ப்ரசன உபநிஷத் -3-9-தஸ்மாத் உபசாந்தா தேஜா புனர்பவம் இந்த்ரியை மனஸி சம்பத்ய மானை–
உஷ்ணம் குறைந்து மனதுடன் இந்த்ரியங்கள் இணைந்து மறு பிறவி அடைகிறான் -என்கிறது

—————————————————————————————-

அதிகரணம் -163- மநோதிகரணம் -2-4-2-

வாங் மனஸி சம்பத்யயே -வாக் ப்ராணே -என்கிற ஸ்ருதி க்ரமத்தை அனுசரித்து சிந்திப்பதால்
சங்கதி வெளிப்படையாய் உள்ளது

மன ப்ராணே -என்னும் ஸ்ருதியில் -பிராண ஸப்தத்தால்-
அப்பு -நீர் -சொல்லப்படுகிறதா -பிராணன் தானா
என்று சம்சயம்

பிராணன் மனத்தில் இருந்து நேரில் இல்லாத போதிலும்
அன்ன மயம் ஹி சோம்ய மன -என்று
மனதிற்கு அன்ன விகாரத்வம் ஸ்ருதமாகையால்
அன்னம் என்பதன் பொருளான பிருத்விக்கு ஜலம் காரணமாகையாலே
ஆபோ மய பிராணா -என்னும் ஸ்ருதியால் ப்ராணனுக்கு ஜலமயத்வம் தோன்றுவதாலும்
பரம்பரையாக ப்ராணனுக்கு ப்ரக்ருதியான ஜலத்தில் பரம்பரையாகவே மனசின் லயம் யுக்தமாகையால்
பிராணன் என்ற சொல்லால் ஜலம் அப்பு சொல்லப்படுகிறது
என்று பூர்வ பக்ஷம்
இத்தை நிரஸிக்கிறார் –

மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

500-தத் மன பிராணா உத்தராத் —4-2-3-

சாந்தோக்யம் -6-8-6- மன ப்ராணே சம்பத்யதே -என்பதால்
முழுமையாக சேர்கின்றன செயல்பாடுகள் மட்டும் அல்ல –

இதற்கு பூர்வ பஷி –
மனம் உபாதான காரணமாக உள்ள பிருத்வீ தத்தவத்தின் மூலமாக
பிராணனின் உபதானக் காரணமான ஜல தத்துவத்தில் லயிக்கிறது என்று
பொருள் கொள்ள வேண்டும் என்பர்

சாந்தோக்யம் –
6-5-4-அன்ன மயம் ஹி சோம்ய மன –
மனம் அன்னத்தால் ஆனது -என்றும்

6-2-4-தா அன்னம ஸ்ருஜந்த–
அன்னத்தை நீர் உண்டாக்கியது –

6-4-4-ஆபோ மய ப்ராணா –
ஜல தத்வத்தில் இருந்து பிராணன் உண்டானது என்பர்

சித்தாந்தம்
மனம் அன்னத்தால் போஷிக்கப் படுகிறது –
பிராணன் ஜலத்தால் போஷிக்கப் படுகிறது என்று
வளர்க்கும் பொருள் அன்றி காரணப் பொருள் அல்ல

மனம் -அஹங்காரத்தின் மாறுபாடு என்றும்
பிராணன் ஆகாசத்தின் மாறுபாடு என்றும் சொல்வர்

ஆக
மனம் பிராணனுடன் சேர்க்கிறது என்பதே கருத்து –

தத் மன பிராணா-ஸர்வ இந்த்ரியங்களுடன் கூடிய மனனமானது ப்ராணனுடன் ஸம்யோகிக்கிறது
உத்தராத்-மன ப்ராணே என்ற அடுத்த வாக்கியமும்
முக்கிய ப்ராணனுடன் மனத்தின் சம்பந்தத்தைச் சொல்வதால் என்றபடி

இங்கு
அன்ன மயம் ஹி சோம்ய மன
ஆபோ மய ப்ராணா – என்ற ஸ்ருதியால்
மன ப்ராணன்களுக்கு மனமே ப்ரக்ருதி என்பதும் அப்பே ப்ரக்ருதி என்பதும் இவை சொல்லப்பட வில்லை
ஏன் எனில்
மனஸ்ஸு அஹங்காரத்தில் இருந்து தோன்றியதாலாலும்
அன்னத்தால் மனத்திற்குத் திருப்தியும்
ஜலத்தால் பிராணனுக்குத் திருப்தியும்
சொல்லப்படுகின்றன –
ஆகையால் முக்ய பிராணன் இடத்தில் மனஸ்ஸு சமயோகிக்கின்றது என்று தேறிற்று –

————————————————————————–

அதிகரணம் -164- அத்யஷாதி கரணம் –4-2-3-

மன ப்ராணே -ப்ராண தேஜஸி -என்ற ஸ்ருதி க்ரமத்தை அனுசரித்து சிந்திப்பதால்
சங்கதி ஸ்பஷ்டம்

பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

501-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —4-2-4-

ஜீவனுடன் பிராணன் ஒதுங்குகிறது –
சாந்தோக்யம் -6-8-6-பிராணஸ் தேஜஸி-என்பதால்
தேஜஸ்ஸில் ஒதுங்கும்
என்பர் பூர்வ பஷி –

அப்படி அல்ல

ப்ருஹத் -4-3-38-ஏவமேவ இமம் ஆத்மானம் அந்தகாலே சர்வே ப்ராணா அபி சமா யாந்தி -என்று
அரசனை வேலையாட்கள் பின் தொடர்வது போலே அனைத்து பிரானங்களும் ஜீவனை பின் தொடர்கின்றன –

இது போலே ப்ருஹத் -4-4-2-தம் உத்க்ராமந்தம் பிராண அநூதக்ரமாதி -என்று
அந்திம காலத்தில் வெளிக் கிளம்பும் ஜீவனைத் தொடர்ந்து பிராணனும் கிளம்புகிறது

பிராணஸ் தேஜஸீ-மூலம் பிராணன் ஜீவன் உடன் சேர்ந்து கொண்டு
அதன் பின்னர் தேஜஸ்ஸில் சேர்க்கிறது

யமுனை கங்கையில் சேர்ந்து
கடலில் சேர்வது போலே
ஸ்ருதிகளுக்கு விரோதம் வாராமைக்காக
ஜீவனிடம் பிராணனுக்கு சம்யோகத்தை அங்கீகரித்துப் பின்னர்
தேஜஸ்ஸில் ஸம்யோகம் சொல்வது பொருந்தும் என்று கருத்து –

——————————————————————————————————–

அதிகரணம் -164-பூதாதிகரணம் -4-2-4-

பிராணன் தேஜஸ் என்று ப்ராண சம்யுக்தனான ஜீவனுக்கு தேஜஸ்ஸிலே
ஸம்யோகம் -ஸம்பத்தி -சொல்லப்பட்டது
அந்த ஸம்பத்தி தேஜோ மாத்ரத்திலா
போதாந்தரங்களோடு சம்பந்தம் கொண்ட தேஜஸ்ஸிலா
என்ற சிந்தையால் சங்கதி

தேஜஸி -என்ற வசனத்தால் தேஜோ மாத்ரம்
என்று பூர்வ பக்ஷம்

இதனை நிரசிக்கிறார் –

ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ்ஸில் சேர்க்கிறது
என்று நிரூபிக்கப் படுகிறது –

502-பூதேஷு தச்ச்ருதே –4-2-5-

அனைத்து பூதங்களிலும் சேர்க்கிறது
தேஜஸ்ஸில் மட்டும் இல்லை –
ப்ருஹத் -4-4-5-ப்ருதிவீ மய ஆபோ மய தேஜோ மய –
இதன் படி ஜீவனுடன் கூடிய பிராணன்
பஞ்ச பூதங்களின் கூட்டத்தில் சென்று சேர்க்கிறது –

ப்ராண விசிஷ்ட ஜீவன் பூத ஸூஷ்மங்களில் ஸம் பன்னன் ஆகிறான்
ஸர்வ பூத மயத்வம் ஸ்ருதி ஸித்தமாகையால் -என்றபடி –

————————————————————————-

503-நைகஸ்மின் தர்சயதோ ஹி —4-2-6-

ந ஏகஸ்மின் -பிறவற்றுடன் கலவாத பூதங்கள் தனித் தனியே எக் காரியத்துக்கும் பயன்படாதவை யாதலின்
ஒவ்வொரு பூதத்தில் க்ரமமாக சம்பந்திக்கிறது என்பது கூடாது
தர்சயதோ ஹி-தனித்தனியே கார்ய அஷமங்கள் என்ற அர்த்தத்தை ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் காண்பிக்கின்றன –
ஆகையால் ப்ராணஸ் தேஜஸி -என்று தேஜஸ் ஸப்தத்தால் பூதாந்தரங்களுடன் கலந்த தேஜஸ்ஸே சொல்லப் படுகிறது –

பூதங்கள் தனித் தனியே தங்கள் செயலைச் செய்யும் வலிமை அற்றவை –

சாந்தோக்யம் -6-3-2-3-அநேந ஜீவே நாத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி
தாஸாம் த்ரிவிருத்தம் த்ரிவிருத்தம் ஏகைகாம் கரவாணி -என்று
ஜீவ சரீகனான என்னால் உள்ளே புகுந்து பெயர் மற்றும் சரீரம் அளிக்கப் படுகின்றன –
அவற்றை மூன்று மூன்று என நான் சேர்க்கிறேன் -என்று
பஞ்சீ கரணம் செய்த பின்னரே இவற்றை அறியலாம் –

இது போன்று ஸ்ரீ விஷ்ணு புராணமும்
நா நா வீர்யா ப்ருதக்பூதா தத தே சம்ஹதிம் விநா -நா சக்துவன் பிரஜா ஸ்ரஷ்டும் அசமாகம்ய க்ருத்சனச
சமேத்யே அந்யோந்ய சம்யோகம் பரஸ்பர சமாஸ்ரயா மஹதாத்யா விசேஷாந்தா ஹ்யண்டம் உத்பாதயந்தி தே -என்று
தேஜஸ் எனபது மற்ற பூதங்களுடன் ஒன்றாக உள்ள தேஜஸ் என்பதையே குறிப்பதாகக் கொண்டு
பிராணன் அனைத்து பூதங்களுடன் சென்று ஒடுங்குவதாகவே கொள்ள வேண்டும் –

—————————————————————————————————————————————————–

அதிகரணம் -165-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -4-2-5-

இந்த உத் கிராந்தி வித்வானுக்கும் அவித்வானுக்கும் சமமா
அல்லது வித்வானுக்கு மட்டுமா –
என்று சிந்திக்கப் படுகின்றது என்று சங்கதி –

வித்வானுக்கு இங்கேயே அம்ருதத்வ பிராப்தி என்று ஸ்ருதி கூறுவதால்
அவித்வானுக்குத் தான் என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார் –

வெளிக் கிளம்புதல் -உத்க்ராந்தி என்பது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும்
மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது –

504-சமாநா ச ஆ ஸ்ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —4-2-7-

ப்ரஹ்ம ஞானிக்கு உக்ராந்தி இல்லை என்பர் பூர்வ பஷி –
அவன் சரீரத்தில் உள்ள போதே மோஷம் என்பதை
கட உபநிஷத் -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமா யேச்ய ஹ்ருதி ஸ்திதா –
அத மர்த்யோ அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமஸ்நுதே-என்று
அனைத்து ஆசைகளும் விலகின உடனே மோஷம் அடைகிறான் -என்பதால் –

அப்படி அல்ல –
நாடி வழியாகவே சென்று மோஷம் அடைகிறான் என்பதை
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ந ஹ்ருதயச்ய நாட்ய தாஸாம் மூர்த்தானம் அபி நி ஸ்ருதைகா
தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி விஷ்வக் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றும்

ப்ருஹத் உபநிஷத் -நே ந பிரத்யோத நைஷ ஆத்மா நிஷ்காமதி சஷூஷோ வா மூர்த்நோ வான்யேப்யோ வா சரீர தேசேப்ய-என்பதால்
ப்ரஹ்ம ஞாநிக்கு மூர்த்த்ன நாடி தலை மூலமும்
மற்றவர்களுக்கு கண்கள் மற்ற த்வாரங்கள் மூலமோ வெளிக் கிளம்புவதை உணர்த்தும்

அம்ருதோ இஹ பவதி -என்றது
இந்த சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் இவனை விட்டு நீங்காமல் இருந்த போதிலும்
புண்ய பாபங்கள் ஒட்டாத தன்மை மற்றும் அவற்றின் அழிவே அம்ருதத்வம் எனப்பட்டது

இத்தைக் கருத்தில் கொண்டே
யதா சர்வே பிரமுச்யந்தே -அனைத்தும் நீங்கிய பின் என்றும்
அத்ர ப்ரஹ்ம சமச்நுதே -இங்கேயே ப்ரஹ்மத்தை அடைகிறான் என்றது –

ஸ்ருத்-கதி
ஆ ஸ்ருத் யுபக்ரமாத்-அர்ச்சிராதி கதி ஆரம்பிக்கும் வரை
சமாநாச யுபக்ரமாத் -வித்வானுக்கும் அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமமாகும்
மூர்த்தன்ய நாடீ ப்ரவேஸாத் பூர்வம் -என்று கருத்து

அம்ருதத்வம் ச -அத மர்த்யோ அம்ருதோ பவதி -இங்கு கூறப்பட்ட அம்ருதத்வமானது
அநு போஷ்ய ச -ச என்று உறுதிப் பொருளில் வந்தது
சரீர இந்திரியாதி தாகம் இன்றி -அவை இருக்கும் போது காமாதி விமோக ரூபமாயும்
உபாசன நிஷ்பத்தி ரூபமாயும் உள்ள அம்ருதத்வம் தான்
இங்கு அடையப்படுவதே தவிர ஜீவன் முக்தி என்பது இல்லை –

வித்வானுக்கு அர்ச்சிராதி கதியாலே ப்ரஹ்ம பிராப்தி ஸ்ருதமாய் இருப்பதால்
இங்கேயே முக்தி சொன்னால் ஸ்ருதி விரோதம் வரும்

இதயத்தில் உள்ள காம க்ரோதிகள் எக்காலத்தில் விடப்படுகின்றனவோ அதே காலத்தில்
உபாசனம் ஆரம்பிக்கப் படுகிறபடியால்
காமாதி விமோசனத்தின் பிறகு புருஷன் இங்கேயே அம்ருதத்வம் பெற சாதனமான உபாசனத்தை அடைகிறான் –
பின் அர்ச்சிராதி கதியாலே ப்ரஹ்மத்தை அடைகிறான் -என்பதாகும்

இதில் மற்ற ஓரு விளக்கப்படி இங்கு தானே உபாசனத்தில்
நிரதிசய போக்யமான ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் என்றும் பொருள் –

—————————————————————————————————–

505-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —4-2-8-

சம்சாரத்தில் உள்ள போதே மோஷம் –
ப்ரஹ்மத்தை அடையும் வரையில் சம்சாரம் –
அர்ச்சிராதி மார்க்கம் வழியாக ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்த பின்னரே புருஷார்த்தம்
அது வரை சரீரத்தின் தொடர்புள்ள சம்சாரம் நீடிக்கும்

சாந்தோக்யம் –
6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே-என்றும்

8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம்
அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றும் சொல்லிற்று –

தத் -அந்த அம்ருதத்வமானது -முன் சொன்ன பிரகாரமே தவிர வேறு பிரகாரம் அன்று
ஏன் எனில்
ஆ பீதே சம்சார வ்யபதேசாத்-ப்ரஹ்ம பிராப்தி வரை சம்சாரம் என்றே
சரீர சம்பந்தம் அடியாக வழங்கப் படுவதால் என்றபடி –

ஸ்தூல தேகத்தில் இருந்து உத் க்ராந்தனுக்கு சரீர சம்பந்தம் எப்படி என்றால் அது பற்றிக் கூறுகிறார் –

————————————————————————————

506-ஸூஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –4-2-9-

ஸூஷ்மம் -ஸூஷ்ம சரீரமானது அனுவர்த்திக்கிறது
இந்த அனுவர்த்தனம் அர்ச்சிராதி கதி பற்றிச் சொல்லியதால் மட்டும் தோன்றவில்லை
பிரமாணத ச -பிரமாணத்தாலும்
ததா உபலப்தே -ஸூஷ்ம சரீரம் உள்ளவனாகக் காணப்படுவதால் என்றபடி
சந்திரனுடன் சம்வாதம் ஸ்ருதமாகையால் ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது என்று கருத்து –

ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது –
அர்ச்சிராதி மார்க்கம் வழி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்

கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –
சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூஷ்ம சரீரம் உள்ளது –
சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்

————————————————————————————-

507-நோப மர்த்தே ந அத–4-2-10-

இந்த காரணங்களால் –
கட -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமோ யேச்ய ஹ்ருதி ஸ்திதா அத மர்த்யோ
அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமச் நுதே -என்றது
பந்தங்கள் நீங்கி அதன் பின்னர் உண்டாகும் மோஷம் குறித்து ஏதும் கூற வில்லை-

அத -முன் சொன்ன காரணங்களால்
நோப மர்த்தே ந அத-அதமர்த்யோ அம்ருதோ பவதி என்ற வசனம் சரீர உப மர்த்தத்தால் உண்டான
அம்ருத்வத்தைச் சொல்லவில்லை
உபாசன ஆரம்பாதி ரூப அம்ருதத்வம் பற்றியே சொல்கிறது – என்பதாம்

——————————————————————–

508-அஸ்ய ஏவ சோபபத்தேர் ஊஷ்மா -4-2-11-

ப்ரஹ்ம உபாசகனுக்கு ஸூஷ்ம உடல் உஷ்ணம் இருப்பதால்
ப்ரஹ்ம உபாசகனுக்கும் உக்ராந்தி உண்டு என்கிறது –

அஸ்ய -இந்த ஸூஷ்ம சரீரத்துக்கு
ஏவ ச உபபத்தேர் -ஓர் இடத்தில் இருப்பதாகிய உக்தியாலும் என்றவாறு
இத்தால் தேஹ சம்பந்த உபமர்த்தத்தால் உண்டான முக்தி அன்று
ஸூஷ்ம தேகம் உள்ளத்தில் பிரமாணம்
ஊஷ்மா-மரணத்துக்குத் தயாரான வித்வானின் ஸ்தூல சரீர ஏக தேசத்தில் தோன்றும்
ஊஷ்மாவானது -வெப்பமானது ஸ்தூல சரீர குணம் அன்று
ஏன் எனில்
ஸ்தூல தேகத்தில் -தேகாந்தரத்தில் ஊஷ்மா-புலப்படாமையால் -என்று கருத்து
இப்படி ஸித்தமான ஏதோ ஓர் இடத்தில் உள்ள ஊஷ்மாவினால் அனுமானிக்கப்பட்ட
ஸூஷ்ம சரீரத்துடன் உத் க்ராந்தியை அடைகிறான் என்பதாம் –

————————————————————————–

508-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —4-2-12-

ஞானி அல்லாதவனது உத்க்ராந்தியை
ப்ருஹத் -4-4-2-ச ஏதா தேஜோ மாத்ரா சமப்யாததாநோ ஹ்ருதய மேவ அன்வக்ராமதி-என்று
வாக்கு ஆத்மாவை அடைந்து ஆத்மா இதயத்தை அடைகிறது -என்றது

முன்னர் -4-4-1-தே ந பிரத்யோ தே ந ஆத்மா நிஷ்க்ராமதி தமுத்க்ராமந்தம் ப்ராணோ நுத்க்ராமதி -என்று
இதயத்தில் உள்ள த்வாரம் பிரகாசிக்கிறது –
ப்ரஹ்மத்தால் பிரகாசம் பெற்ற த்வாரத்தைக் கொண்டு ஆத்மா வெளிக் கிளம்பும் போது பிராணனும் வெளிக் கிளம்பும் -என்றும்

இதை முடிக்கும் பொழுது -4-4-4-அந்யத் நவதரம் கல்யாண தரம் ரூபம் குருதே -என்று
பழைய பொன் மூலம் தட்டான் புது ஆபரணம் பண்ணுமா போலே ஆத்மா வேறு சரீரம் எடுக்கிறான் –

4-4-6-ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத்கிஞ்ச இஹ க்ரோத்யயம் தஸ்மாத் லோகாத் புன –
ஏதி அஸ்மை லோகாய கர்மணே இது து காமாய மா ந –ஸ்வர்க்கம் அனுபவித்து திரும்புகிறான் என்றும்

4-4-6-அத ஆகாமயமா ந யோ அகாம நிஷ்காம அப்தகாம ஆத்மகாம ந தஸ்ய பிராண உத்க்ராமந்தி
ப்ரஹ்மைவ சந் ப்ரஹ்மாப்யேதி–
ப்ரஹ்ம ஞானிக்கி பிராணன் வெளிக் கிளம்புவது இல்லை

இது போன்று ஆத்ம பாதர் என்பவர் யாஜ்ஞ வல்க்யர் இடம் கேட்டு பெற்ற பதிலிலும்
பிராணன்கள் போவது இல்லை இங்கேயே சேர்க்கப் படுகின்றன என்பர்

இது தவறான வாதம் –

இங்கு பிராணன் ஜீவன் இடம் இருந்து வெளிக் கிளம்புவது இல்லை என்றே சொல்லப்பட்டது
சாரீரத்தில் இருந்து பிராணன் வெளிக் கிளம்புவது பற்றி இங்கும் ஏதும் கூறப்பட வில்லை

ஜீவன் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பிரமத்தை அடைகிற வரை பிராணன் பிரிவது இல்லை என்பதையே
ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி என்றது –

திரும்பவும் வித்வானுக்கு உத் க்ராந்தி கிடையாது என்று சங்கித்து விடை கூறப்படுகின்றது
இதி சேத் ந -முன் சொன்ன உத் க்ராந்தி வித்வானுக்கும் பொருந்தும் என்பதாம்
ஏன் எனில்
சாரீராத் -சாரீர குண ஜீவனிடம் இருந்து ப்ராணன்களுக்கு விசேஷம் ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி
என்றுள்ள ஸ்ருதியில் நிஷேதிக்கப் பட்டு இருப்பதால் என்பதாம்
தஸ்ய -அகா மயமானனான வித்வான்களின் பிரயாணங்கள் அவனை விட்டுப் பிரிவது இல்லை
ஆனால் தேவையான மார்க்கத்தில் செல்லும் வித்வானின் உபகாரங்களாகக் கூடவே போகின்றன
என்பது ஸ்ருதியின் பொருள்
இதனால் ஜீவனின் உத் க்ராந்தி நிஷித்தை அன்று என்பதாம் –
ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம்-இவ்வர்த்தம் மாத் யந்தின சாமிகளின் பாடத்தில் ஸ்பஷ்டமாவே காணப்படுகிறது
ஆத்ம காம -பரம புருஷ பிராப்தி காமன் என்றபடி –

———————————————————————————

509-ஸ்மர்யதே ச–4-2-13

ஸ்ம்ருதியிலும் இப்படியே உள்ளது –
யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி -3-167-ஊர்த்வம் ஏக ஸ்திதஸ் தேஷாம் யோ பித்வா
ஸூர்ய மண்டலம் ப்ரஹ்ம லோகம் அதிக்ரம்யதேந யாதி பராம் கதிம்-என்றது

வித்வானுக்கு மூர்த்தன்யா நாடியால் உத் க்ராந்தி ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தம்

—————————————————————-

அதிகரணம் -166-பர சம்பத்த்யதிகரணம் -4-2-6-

இந்திரிய சமூகத்தோடும் பிராணனோடும் கூடின ஜீவனுக்கு உத் க்ராந்தி வேளையில்
தேஜஸ் முதலிய பூத ஸூஷ் மங்களில் ஸம்யோகம் சொல்லப்பட்டது
அந்த சம்யோகம் வித்யானுக்குக் கிடையாது என்று சங்கித்துப் பரிஹரிக்கப் பட்டது
இப்போது அந்த பூத ஸூஷ்மங்கள் ஜீவனுடன் தழுவியவையாய் -அவனவன் செய்த கர்மத்தையும் வித்யையும்
அனுசரித்துத் தங்கள் கார்யத்துக்காகப் போகின்றனவா
அல்லது பரமாத்மாவிடம் ஸம் பன்னங்கள் ஆகின்றனவா
என சிந்திக்கப் படுகிறது என்று சங்கதி –

பரமாத்மாவிடம் சம்பத்தி ஏற்பட்டால் ஸூக துக்க போகம் என்னும் கார்யம் இல்லாமையால் அந்த உபயோகத்தை அனுசரித்து
அவனவன் கர்மத்துக்கும் வித்யைக்கும் பொருத்தமாகவே பூத ஸூஷ்மங்கள் போகின்றன
என்று பூர்வ பக்ஷம்
எல்லா பதார்த்தங்களுமே பர தேவதா கார்யமாகையாலே தத் ஆத்மகங்கள் ஆகையால்
சேர வேண்டிய இடமும் தேஜ பரஸ்யாம் தேவதாயாம்-என்று சொல்லப்படுகின்றது என்று உப பத்தி

இத்தை நிரஸிக்கிறார்

தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

510–தாநி பரே ததா ஹ்யாஹ–4-2-14-

பூத ஸூஷ்மங்கள் அனைத்தும் பரமாத்மாவுடனே சேருகின்றன –

சாந்தோக்யம்-6-8-6-தேஜ பரஸ்யாம் தேவதாயாம்
இன்ப துன்பங்களால் வரும் களைப்பு உறங்கும் பொழுது போவது போலே
சிருஷ்டி காலத்தில் அனுபவித்த இன்ப துன்பங்களின் களைப்பால்
இளைப்பாறும் பொருட்டு பிரளய காலத்தில் பரமாத்மாவிடம் சென்று மறைவது போன்று
என்று கொள்ள வேண்டும்

உத் கிராந்தியால் ஏற்பட்ட ஆயாசம் தீருவதே ஜீவனுக்குப் பரமாத்மா சம்பத்தியான பலன்
என்று கல்பித்து ஸ்ருதி அர்த்தம் பொருந்தும் –

———————————————————————————————-

அதிகரணம் -167-அவிபாகாதி கரணம் -4-2-7-

கீழ்ச் சொன்ன பரமாத்மாவிடம் சம்பத்தி என்பது பிராகிருத லயம் போலே
காரண பத்தி ரூபமா அல்லது
வாக் மனஸ் சம்பாத்தி போலே பிரிக்க முடியாத தன்மையா என்று சம்சயம்

பரமாத்மா சர்வ காரணமாகையாலும்
அதில் சம்பத்தி செல்வதாலும்
காரணா பத்தியே என்று பூர்வ பக்ஷம்

இதனை நிரஸிக்கிறார்

பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

511-அவிபாகோ வசநாத் —4-2-15-

பிரித்துக் கூற இயலாதபடி சேர்க்கை மட்டுமே -இப்படியே கூறப்பட்டது –
பூர்வ பஷி லயிப்பது போன்றே என்பர்
உபாதான காரணமாக பர ப்ரஹ்ம் என்பதால்

இது தவறு
லயம் என்றால் அழிவு
சம்பத்யதே -பிரிக்க இயலாதபடி சேர்க்கை என்றே கொள்ள வேண்டும் –

அவசனாத் -என்று இங்கு மறுபடி ஸ்ருஷ்டி பற்றிய வசனம் இல்லாமையால்
விட்டுப் பிரியாமையே ஸம்பத்தி என்று தாத்பர்யம் –

————————————————————————————

அதிகரணம் -168-ததோகோதி கரணம் -4-2-8-

இவ்வாறு கைமணம் தொடங்கும் வரை வித்வானுக்கும் அவித்வானுக்கும்
உத் கிராந்தி பிரகாரம் சமமாகவே கூறப்பட்டது
இப்போது வித்வானுக்கு ஒரு விசேஷம் கூறப்படுகிறது
என்று சங்கதி –

நாடிகள் மிக நுட்பமாய் இருப்பதால் பிரித்து அறிவது கடினம் -ஆதலின் நியமம் கூடாது
இந்த ஸ்ருதி வசனம் யதேச்சையாக ஏற்படும் ப்ரஹ்ம நாடீ வழியையே அனுவாதம் செய்கிறது
என்பர் பூர்வ பக்ஷி

இத்தை நிரசிக்கிறார் –

மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு
வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

512-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி
யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா–4-2-16-

வித்யையின் சாமர்த்தியத்தால்
தத்தேஷ தத் அ நு ஸ்ம்ருதி யோகாச்ச –அந்த வித்யைக்கு அங்கமான அர்ச்சிராதி கதி சிந்தனையால் ப்ரீதி அடைந்த பரமாத்மா
ஹார்த்தா நுக்ருஹீத-ஹ்ருதய கமல அந்தரவர்த்தியாலே அனுக்ரஹிக்கப் பட்டவனாய்
ததோக-அந்த ஜீவனின் ஸ்தானமாகிய ஹ்ருதயம்
அக்ர ஜ்வலநம் -முன்புறம் பிரகாசம் உள்ளதாகிறது
தத் பிரகாசி தத்வாரோ -அவ்வாறு ப்ரகாசப்படுத்தப்பட்ட நாடி துவாரம் உடையவனாய்
வித்யா சாமர்த்யாத் க்சதாதிகயா-மூர்த்தம் நாடியாலே செல்கிறான் -என்றவாறு –

ப்ரஹ்ம வித்யையால் மகிழ்ந்த எம்பெருமான் அருள -அவன் வசிக்கும் இதயம் ஒளி வீச –
அந்த ஒளி மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான
ஸூஷூம்நை நாடி மூலம் கிளம்புகிறான்

இந்த சிறப்பான உத்க்ராந்தி
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ச ஹ்ருதயச்ய நாட்ய –தாஸாநாம் மூர்த்தா நாம் அபி நிஸ்
ஸ்ருலதகா தயோர்த்தவாமாயன் அம்ருதத்வமேதி விஸ்வன் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றது
மிகவும் நுண்ணியமான நாடி –

சர்வேஸ்வரனின் அனுக்ரஹம் அடியாகவே இவ்விதம் செல்கிறான் என்கிறது-

—————————————————————————————————————–

அதிகரணம் -169-ரச்ம்யநு சாராதி கரணம் -4-2-9-

ஹ்ருதயத்தில் இருந்து மூர்த்தம் நாடி வழியாக வெளிவந்த வித்வானுக்கு
ஸூர்ய கிரணங்களைத் தொடர்ந்து கமனம் சிந்திக்கப் படுகின்றது
என்று சங்கதி –

இரவில் இறந்த வித்வானுக்கு ஸூர்ய கிரணம் சம்பவிக்காது
ஆதலின் இந்த நியமம் கூடாது என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரஸிக்கிறார்

ஸூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான்
என்று நிரூபிக்கப் படுகிறது

513-ரச்ம்ய நு சாரீ-4-2-17-

சாந்தோக்யம் -8-6-5-அத யத்ர தஸ்மாத் சரீராத் உத்க்ராமதி அதி ஏதைரவி ரச்மிபி ஊர்த்வமாக்ரமதே -என்று
ஏவகாரத்தால் ஸூர்ய கிரணங்கள் வழியாகவே செல்கிறான் –
இரவிலும் ஸூர்ய கிரணங்கள் உண்டே

நாடிகளுக்கும் ஸூர்ய கிரணங்களுக்கும் தொடர்பு –
சாந்தோக்யம் -8-6-2-தத் யதா மஹா பத ஆத்த –உபௌ க்ராமௌ கச்சதி இமம் ச அமும் ச ஏவ
மேவைத ஆதித்யச்ய ரச்மய உபௌ லோகு கச்சந்தி
இமம் ச அமும் ச அமுஷ்மாத் ஆதித்யான் ப்ரதா யந்தே தா ஆஸூ நாடீஷூ ஸ்ருப்தா
ஆப்யோ நாடீப்யோ ப்ரதா யந்தே தி அமுஷ்மின் ஆஹித்யே ஸ்ருப்தா -என்று சொல்லிற்று –

———————————————————————————————–

அதிகரணம் -170-நிசாதிகரணம் -4-2-10-

இரவில் இறந்தவனுக்கும் கதிக்கு சாதனமாக ஸூர்ய கிரணங்கள் இருக்கட்டும்
ஆயினும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு இரவில் மரணம் ஸாஸ்த்ர நிஷித்தம் ஆகையால்
அவர்களுக்கு இரவில் மரணம் சம்பாவிக்காது
என்ற சங்கையால் சங்கதி

இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –

514-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –4-2-18

இரவில் மரணம் அடைந்தாள் மோஷம் இல்லை எனபது சரியல்ல –
கர்மத்தின் சம்பந்தம் சரீரம் உள்ள வரையிலும் தான்

பூர்வ பஷி
திவா ச சுக்ல பஷ ச உத்தராயண மேவ ச முமூர்ஷதாம் பரசஸ்தா நி விபரீதம் து கர்ஹிதம் -என்றதே

அப்படி அல்ல –
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே -என்று
ப்ரஹ்ம ஞானிக்கு சரீரம் விடும் வரை மட்டுமே கால தாமதம் என்றதே-

நிசி நேதி சேத் ந -இரவில் மரித்தவனுக்கு முக்தி இல்லை என்பது சரி இல்லை
ஏன் எனில்
சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் -அநாரப்த கார்யங்களான சஞ்சித கர்ம சம்பந்தங்கள்
வித்யையால் வசித்த போதும் பிராரப்த கர்மங்களின் சம்பந்தம் இறுதி வரை நிற்பதாதலின்
அவ்வுடலின் இறுதி இரவிலும் சம்பவிக்கலாம்
ஆதலின் இதற்கு மேலான பந்தகம் இல்லாமையாலும்
இரவில் இறந்தவனுக்கும் ப்ரஹ்ம ப்ராப்தியில் விரோதம் இல்லை
தர்சயதி ச–தஸ்ய தாவ தேவ சிரம் என்ற ஸ்ருதியே இவ்வர்த்தத்தைக் காட்டுகிறது
இரவில் மரணம் தடுக்கப்பட்டது அவித்வானுக்களுக்கே அன்றி ப்ரஹ்ம வித்துக்களுக்கு அல்ல –

———————————————————

அதிகரணம் -171-தஷிணாயநாதி கரணம் –4-2-11-

தஷிணாயணத்தில் இறந்தாலும் பந்த ஹேதுக்கள் இல்லாமையாலே ப்ரஹ்ம ப்ராப்தியில் விவாதம் இல்லை
தஷிணாயணத்தில் மரித்தவனுக்கு சந்த்ர ஸாயுஜ்ய பிராப்தி என்பது விஸ்ரம ஸ்தானத்தைக் குறிப்பதேயாகும்
வித்வானுக்குத் திரும்பி வருவது என்பது இல்லாமையாலே திரும்பி வருதல் என்னும் வசனம்
அவித்வான்களைப் பற்றியதே யாகும்

தஷிணாயணத்தில் இறந்தவன் திரும்பி வருவதாக ஸ்ருதி ஸ்ம்ருதி -கீதா வாக்கியங்கள்
உள்ளனவே என்பார் பூர்வ பக்ஷி

தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது –

515-அத ச அயநே அபி தஷிணே –4-2-19-

பூர்வ பஷி காட்டும் பிரமாணம் –
மஹா நாராயண உபநிஷத் -25-1-
அதயோ தஷிணே பிரமீயதே பித்ருணா மேவ மஹிமானம் கத்வா சந்திர மசஸ் சாயுஜ்யம் கச்சதி -என்றும்

ப்ருஹத் –
6-2-16-யதா தத்பர்ய வௌதி-அது முடிந்த பின்னர் –

5-10-5-அத ஏவமேவ அத்வானம் புநர் நிவர்த்தந்தே –
சம்சார மண்டலத்துக்கே திரும்புகின்றனர்

மேலும் பீஷ்மர் போல்வார் உத்தராயண காலத்துக்கு காத்து இருந்தனரே என்பர்

இது தவறு
சந்திர மண்டலம் செல்வது ஒய்வு எடுக்கவே –
இத்தை மஹா நாராயண உபநிஷத் 24-2/25-1-தஸ்மாத் ப்ராஹ்மணோ மஹிமாநம் ஆப் நோதி-
ஆகவே அவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது –

ஸ்ரீ கீதை –
8-23-யத்ர காலே த்வ நாவ்ருத்திம் ஆவ்ருத்திம் சைவ யோகிந ப்ரயாதா யாந்தி தம் காலம் வஷ்யாமி பரதர்ஷப -என்றும்

8-24-அக்னிர் ஜ்யோதி ரஹஸ் சுக்ல ஷண் மாஸா உத்தராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா

8-25-தூமோ ராத்ரி ததா கிருஷ்ண ஷண் மாஸா தஷிணாயநம் தத்ர சந்த்ரமசம் ஜ்யோதி யோகீ ப்ராப்ய நிவர்த்ததே -என்றும்

8-26-சுக்ல கிருஷ்ணே கதீ ஹ்யதே ஜகதச் சாச்வதே மதே ஏகயா யாத்ய நாவ்ருத்திம் அன்யயா ஆவர்த்ததே புந-என்றும்

தஷிணா யானத்தில் மரணம் அடைந்தால் ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்பர் பூர்வ பஷி –

இதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார் மேல்

——————————————————————————————————-

516-யோகிந ப்ரதி ஸ்மர்யேதே ஸ்மார்த்தே சைதே–4-2-20-

இவை யோகிகள் குறித்து தேவயான மற்றும் பித்ருயான மார்க்கங்கள் பற்றி உணர்த்தவே கூறப்பட்டன –
இத்தையே ஸ்ரீ கீதையில் -8-26-
நை தே ஸ்ருதீ பார்த்தஜாநத் யோகீ முஹ்யதி கச்சன தஸ்மாத் சர்வேஷூ காலேஷூ யோக யுக்தோ பாவர்ஜுனா-என்று
யோகிகள் மயங்க மாட்டார்கள் நீ அர்ச்சிராதி மார்க்கத்தை எண்ணி இருப்பாயாக என்றான்

8-24-
அக்னிர் ஜ்யோதி –

8-25-தூமோ ராத்ரி —என்பவை
தேவயானம் பித்ரு யானம் பற்றியே குறிக்கும்

8-26-யத்ர காலேது –
அபிமான தேவதையான ஆதி வாஹிகர்களை கால பதம் குறிக்கும்

ப்ருஹத் -6-2-15-தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி –
அவர்கள் அர்ச்சையில் செல்கின்றார்கள் என்பதால்
அத்தையே எண்ணி இருப்பார்கள் –

யோகிந ப்ரதி -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களைக் குறித்து
ஸ்மர்யேதே ஸ்மார்த்தே சைதே-இந்த தேவ யானம் பித்ரு யானம் என்ற வழிகள் ஸ்மரிக்கப் படுகின்றன
தினம் தோறும் நினைக்கத் தக்கவைகளாக ஸ்ம்ருதிகள் கூறுகின்றன –

யத்ர காலேத்வநா வ்ருத்திம் ஆ வ்ருத்திஞ்சைவ யோகி ந -என்று தொடங்கி
நைதே ஸ்ருதீ பார்த்த ஜானன் யோகீ முஹ்யதி கச்ச ந
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு யோக யுக்தோ பவார்ஜுன-என்று
தினமும் சிந்திக்கத்தக்கவை என்று ஸ்ம்ருதியில் விதிக்கப்படுகின்றவை

இதனால் முமுஷுவுக்கு மரணகாலம் விதிக்கப்பட வில்லை

யத்ர காலே என்பதில்
காலே என்ற பதம் காலத்துக்கு அபிமானியான ஆதி வாஹிக தேவதையைக் குறிக்கிறது

இந்த ஸூத்ரத்தில் யோகி பதம் நான்கு வகை யோகிகளைக் குறிக்கிறது
முமுஷு யோகிக்கு -தேவயான சிந்தனமும்
ஐஸ்வர்யாத் யர்த்திக்கு யோகிக்கி -பித்ரு யான சிந்தனமும் என்று பிரிவு

யோக யுக்தோ பவார்ஜுன-என்கிற இடத்தில்
யோக சப்தம் மார்க்க அனுசந்தானம் ஆகிய யோகத்தைக் குறிப்பது என்பது திரு உள்ளம் –

—————-

அதிகரணம் -1-வாகாதி கரணம்–வாக்கு முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு மனஸ்ஸில் சம்பத்தியும்
அதிகரணம் -2- மநோதிகரணம் – இந்த்ரிய விஸிஷ்ட மனஸ்ஸுக்கு பிராண வாயுவில் ஸம்பத்தியும்
அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -ப்ராணன்களுக்கு தேஹாத் யக்ஷனான ஜீவனிடத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுக்குப் பூத ஸூஷ்மத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வித்வானுக்கும் மற்றோருக்கும் – அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமம் என்னும் ஸம்பத்தியும்
அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –பூத ஸூஷ் மம் தழுவிய ஜீவனுக்குப் பரமாத்மாவிடம் களைப்பாற ஸம்பத்தியும்
அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–பரமாத்மாவிடம் ஸம்பத்தி என்றது ஸம்பந்தமே என்றும்
அதிகரணம் -8-ததோகோதி கரணம் –வித்வானுக்கு ப்ரஹ்ம நாடீ வழியே உத் க்ராந்தியும்
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -அர்ச்சிராதி கமனம் ஸூர்ய கிரணங்களை பற்றி என்றும்
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் ம்ருதனான வித்வானுக்கும் முக்தி உண்டு என்றும்
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாயணத்தில் ம்ருதனான முமுஷுக்கும் முக்தி உண்டு என்றும்

இப்பாதத்தில் விளக்கப்பட்டன –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————

ஸ்வர்க்க காமோ யஜேத-என்னும் இடத்தில்
பலா வம்சம் முதலில் ஏற்படுவதானாலும் பலவாப்தி என்பது
சாதன உத்பத்தியை அங்கீ கரிக்க வேண்டி இருப்பதாலும்
இதில் உத்பத்தி க்ரமத்தை அனுசரித்து
முதல் அத்தியாயத்தில் சங்கமான வித்யை நிரூபிக்கப் பட்டது –
இப்போது அந்த வித்யையின் பலத்தை நிரூபிக்கிறார்
‘என்று நான்காம் அத்யாயத்துக்கு சங்கதி

அந்த வித்யா பலன்களாக
1- உத்தர பாபம் ஒட்டாமையும்
2-பூர்வ பாப விநாசமும்-ஸ்தூல தேகத்தில் இருந்து உத்க்ரந்தியும்
3- அர்ச்சிராதி கதியும்
4-தேச விசேஷம் சென்று புறப்படும் பர ப்ரஹ்ம அனுபவம்
என்ற நான்கு பொருள்களும் நான்கு பாதங்களால் முறையே காட்டப்படுகின்றன என்று பாதங்களின் சங்கதி –

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் –
முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது

கதி பாதம் –
பரம பதத்துக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது

முக்தி பாதம் –
ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

முதல் இரண்டு பாதங்களால்
வித்யா பலமான பாப அஸ்லேஷ விநாசமும்
உத் க்ரணமும்
கூறப் படுகின்றன

பின் இரண்டு பாதங்களால்
உத் க்ராந்தனான ஜீவனுக்கு அர்ச்சிராதி மார்க்க கமனமும்
ப்ரஹ்ம பிராப்தியும்
முறையே பேசப்படுகின்றன என்று த்வீக சங்கதி –

முதல் பாதம் முதல் அதிகரணத்தில் -வித்யைக்கு முன் சொல்லப் படாதவையான
த்யான
உபாசன
பக்தி
தர்சன
சாமானாகாரத்வம்
என்னும் ரூபங்களை நிரூபிக்கிறார் என்று அதிகரண சங்கதி –

ஆனாலும் இவ்வர்த்தத்தை சாதன அத்யாயத்தில் நிரூபிக்காமல்
பல அத்யாயத்தில் காட்டுவது பொருந்தாது என்றால்
அது இல்லை –
உபாசனத்திற்கும் முக்திக்கும் -ஸாத்ய சாதன பாவம் தோன்றவும்
பக்தி என்பது நிரதிசய ப்ரீதி ரூபை யாகையாலே பல கோடியிலும் அடங்கும் என்று காட்டவும்
இங்கு நிரூபிப்பதில் தோஷம் ஒன்றும் இல்லை என்பதாம் –

———————————————————————————————————————————-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –

உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –

11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–

———————————————————————————————————————————————————————-

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–
ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்-
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—
பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–
உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-
அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-
மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்-
ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–
முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் –
பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் –
பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-
பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது

———————————————————————————————–

151-ஆவ்ருத்தி அதிக ரணம்-4-1-1-

ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது

471-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –4-1-1-

ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது

தைத்ரியம் -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –
ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்ததை அடைகிறான் என்றும்

ஸ்வேதாச்வதர -3-8- தமேவ விதித்வாதி ம்ருத்யுமேதி –
ப்ரஹ்மத்தை அறிவதால் மட்டும் மரணத்தை கடந்து செல்கிறான் -என்றும்

முண்டக -3-2-9-ப்ரஹ்ம வேதி ப்ரஹ்ம ஏவ பவதி –
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான் –

முண்டக -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் –
பொன் நிறமான ப்ரஹ்மத்தைக் கண்டவன்

உமி நீங்கும் வரை தானே நெல்லைக் குத்த வேண்டும்
ஒரு முறை ப்ரஹ்மத்தை அறியும் வரை உபாசனம் போதும்
என்பர் பூர்வ பஷி
ஜ்யோதிஷ்டோமம் ஒரு முறை அனுஷ்டித்து பலம் பெறுவது போலே என்பர்

இது சரி அல்ல –
த்யானம் உபாசனம் போலவே வேதனமும் –
உபாஸ்தி த்யாயதி பதங்கள் மூலம் வேதனமும் உணர்த்தப் படுகிறது

ஆவ்ருத்தி அசக்ருத் -வேதனம் அடிக்கடி ஆவ்ருத்தி செய்யப்பட்டே மோக்ஷத்திற்கு சாதனமாகும்
உபதேசாத்-தியானத்திற்கும் உபாசனத்திற்கும் பர்யாயமான சமமான -வேதன -ஸப்தத்தால் -உபதேசிப்பதால் என்றவாறு –

சாந்தோக்யம் -3-8-1-மநோ ப்ரஹ்ம இதி உபாசீத –
மனசை ப்ரஹ்மமாக உபாசிக்க வேண்டும் -மூலம் அறியலாம்

சாந்தோக்யம் -3-18-3-பாதி ச தபதி ச கீர்த்யா யசச ப்ரஹ்ம வர்ச்ச சேன ய ஏவம் வேத –
இப்படி அறிந்து கொள்கிறவன் ப்ரஹ்ம தேஜஸ் அடைகிறான் -இங்கு வேதன சப்தம்

சாந்தோக்யம் -4-1-4-யஸ்தத்வேத யத் ச வேத சமயைதத் உகத –
ரைக்வர் எதனை அறிகிறாரோ அதனையே மற்றும் உள்ள அனைவரும் அறிகின்றனர் –
என்று தொடங்கப் பட்டதில் வேதன சப்தமும்
முடியும் பொழுது -4-2-2-அநும ஏதாம் பாகவோ தேவதாம் சாதியாம் தேவதாம் உபாஸ் ஸே -என்று
மூத்தவரே நீர் எந்த தேவதையை உபாசனம் செய்கின்றீரோ அதையே எனக்கு உபதேசிக்க வேண்டும் –
என்று உபாசன பத பிரயோகம் உண்டே

இது போலே தைத்ரியம் -2-1-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –
ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்ததை அடைகிறான் என்றும்

ப்ருஹத் -2-4-5-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -என்று
உயர்ந்த அந்த பரமாத்மாவே காணப் படத்தக்கது த்யானிக்கப் பட வேண்டியது எண்ணப்பட வேண்டியது ஆகும் என்றும்

முண்டக -3-1-8-ததஸ்து தம் பஸ்யதே நிஷ்கலம் த்யாயமான –
த்யானத்தில் உள்ளவன் அவனைக் காண்கிறான் -என்றும்

த்யானம் இடைவிடாமல் நினைப்பதே –
உபாசனையும் அவ்விதமே –
வேதனமும் இவற்றைப் போன்றதே –

முண்டக -3-2-9-ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி –
ப்ரஹ்மத்தை அறிபவன் அவனையே அடைகிறான்

ஸ்வேதாச்வதர -1-8-ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை
அதனை அறிந்தவன் அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபடுகிறான் –

———————————————————————————————————————————

4-1-2- லிங்காத் ச–4-1-2-

லிங்கம் ஸ்ம்ருதி
அனுமானம் ஸ்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்
ஸ்ம்ருதி எனபது லிங்கம் ஆகும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-91-
தத்ரூப ப்ரத்யயே சைகா சந்ததிச் சான்ய நிஸ் ஸ்ப்ருஹா தத் த்யானம்
பிரதமை -ஷட்பி அங்கை –நிஷ்பாத்யதே ததா -என்று

தாரணை மூலம் கிட்டும் ப்ரஹ்மத்தின் திரு மேனி குறித்த ஞானம் என்பதில்
வேறு விதமான அறிவு கலக்காமல் ஒரே எண்ணமாக இருப்பதே த்யானம்

அதற்கு முன்பு யமம் -நியமம் ஆசனம் பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் மற்றும் தாரணை
ஆகிய ஆறு அங்கங்களாக ஏற்படுகிறது-

ஸ்ரீ கீதையும்
மாம் த்யா யந்த உபாஸதே தேஷாம் அஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார சாகராத் யேத்
வஷரம நிர்த்தேச்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே –

இவ்வாறு பலமுறை ஆவ்ருத்தி செய்யப்பட பக்தி ரூப வேதனமே முக்தி சாதனம் என்று தேறிற்று

ஆக வேதனம் என்பது ஒரு முறை அல்லாமல்
பல முறை செய்யப்பட வேண்டியது என்றதாயிற்று –

————————————————————————————————————–

அதிகரணம் -152-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்-4-1-2-

உபாசன விஷயனான பரமபுருஷனை தன் அந்தர்யாமி என்றே
உபாஸிக்க வேண்டும் என்று சமர்ப்பிக்கிறார்
என்று சங்கதி –

தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது

475-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –4-1-3-

தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் –

உபாசகனான ஜீவனைக் காட்டிலும் உபாஸ்யனான ப்ரஹ்மம் வேறு
என்று பல ஸூத்ரங்கள் உள்ளதால்
வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும்
என்பர் பூர்வ பஷி –

ப்ரஹ்ம ஸூத்ரம் –
2-1-2-அதிகம் து பேத நிர்தேசாத் -வேறு பட்டது -என்றும்

3-4-8-அதி கோபதேசாத்–அதிகமான உபதேசம் உள்ளதால் -என்றும்

1-1-14-நேதரோ நுபபத்தே —

தத்க்ரது நியாயம் -சாந்தோக்யம் -3-14-1-யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி தத்த ப்ரேத்ய பவதி –

இங்கு எவ்விதம் உபாசிகின்றானோ அப்படியே அவ உலகிலும் அனுபவிக்கின்றான்

ஆக ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பட்டவனாகவே உபாசிக்க வேண்டும் என்பர்

ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச
து -சப்தம் -ஏவ பொருளில் -ஆத்மாவாக மட்டுமே உபாசிக்க வேண்டும் –
தன் சரீரத்துக்கு தான் ஆத்மாவாக இருப்பது போலேவே
ஆத்மேதி து -ஆத்மா என்றே -உபாஸகன் உபாஸ்யத்தைத் தன் ஆத்மா என்றே உபாஸிக்கத் தகும்
வேறு ஒன்றாய் அல்ல -ஏன் எனில்
உபகச்சந்தி –சுருதிகள் கூறும் படி பழைய உபாசகர்கள் இவ்வாறே கருதினார்கள்
க்ராஹயந்தி ச-சில ஸ்ருதி வாக்கியங்கள் வேறாகக் கூறினாலும் அவை ப்ரஹ்மத்தை அந்தர்யாத்மாவாகவே கூறுவதால் –
மேலும் அதி கந்து பேத நிர்தேசாத் போன்றவையும் ப்ரஹ்மம் அந்தர்யாமி அல்ல என்று தெரிவிக்க வில்லை
ஸ்வரூபத்தால் வேறுபாட்டையே கூறுகின்றன
இப்படி உபாசகன் பரமாத்மாவின் சரீரம் என்றும்
பரமாத்மா ஆத்மாவுக்கு ஜீவ பூதம் என்றும் செல்வதாலும்
ஜீவன் ப்ரஹ்மத்துக்கு அதீனமான ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி இத்யாதிகள் என்றும்
தனக்கு ஆத்மாவாகையாலேயே -அஹம் ப்ரஹ்மாஸ்மி –என்றே அனுசந்திக்க வேண்டும் -பிரகார பிரகாரி பாவம் உண்டே –

பரமாத்மா தனக்கு ஆத்மா -ஏன் என்றால் இப்படியே உபாசிப்பவர்கள் செய்துள்ளார் –
த்வாம் வா அஹமசி புகவோ தேவதே அஹம் வை த்வம் அஸி-என்று
நீயே நான் ஆகிறேன் நானே நீ ஆகிறாய் –

சதபத ப்ராஹ்மணம்–14-16-7-30-ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந-அந்தரயமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்ம நமந்தரோ யமயதி ச த ஆத்மா அந்தர்யாம்யம்ருத -என்று
யார் ஒருவன் ஆத்மாவின் உள்ளும் புறமும் வியாபித்து -யாரை ஆத்மா அறியாமல் உள்ளதோ –
யாருக்கு ஆத்மா சரீரமோ -யார் ஆத்மாவின் உள்ளே புகுந்து நியமனம் செய்கின்றானோ –
யார் அழிவற்றவனோ-அவனே உனக்கு ஆத்மாவாக உள்ள அந்தர்யாமி என்றும்

சாந்தோக்யம் -6-8-6-சந்மூலா சோம்யேமா சர்வா பிரஜா சதாயதநா -சத்ப்ரதிஷ்டா ஐததாத்ம்யமிதம் சர்வம் -என்று
இவை அனைத்தும் சத் எனப்படும் ப்ரஹ்மத்தின் இடம் உத்பத்தியான பின்னர் அதனிடம் வாழ்ந்து
அதனிடமே லயித்து விடுகின்றன -இவை அனைத்தும் ஆத்மாவாகவே உள்ளன –

சாந்தோக்யம் -3-14-1-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் –
ப்ரஹ்மத்திடம் தோன்றி அதிலே லயித்து விடுவதாலும் அதனிடமே வாழ்வதாலும் இவை அனைத்துமே ப்ரஹ்ம் ஆகும் –

அனைத்து அறிவுகளும் ப்ரஹ்மத்திடமே சேர்வதால் அனைத்து சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் –

ப்ருஹத் -1-4-10-அத யோன்யம் தேவதா முபாஸ்தே அந்ய அசாவந்ய அசமஸ்மீதி ந ஸ தேவதே -என்று
யார் ஒருவன் தன்னைக் காட்டிலும் வேறான தேவதையை -நான் வேறு அது வேறு -என்று உபாசிக்கிறானோ
அவன் ஏதும் அறியாதவனாக இருக்கிறான் –

ப்ருஹத் -1-4-7-அக்ருத்ஸ் நோ ஹி ஏஷ ஆத்மேத்யே வோயா சீத-
இந்த ஜீவன் பூர்ணம் அல்ல ஆகவே பூரணமான ஜீவனை உபாசிக்க வேண்டும்

ப்ருஹத் -2-4-6-சர்வே தம் பராதாத்யோ அந்யத் ராத்மனா சர்வே வேத -என்று
ஆத்மாவைக் காட்டிலும் அனைத்தையும் வேறுபடுத்திக் காண்பவனை -மற்றவை அனைத்தும் வேறுபடுத்தித் தள்ளிவிடும்

இந்த வரிகளும்
ஸ்வேதாச்வதர 1-5-ப்ருதகாத்மானம் ப்ரேரிதம் ஸ மத்வா -என்று
தன்னை விட வேறுபட்டதான நியமிப்பவனை -என்றதும் முரண்பட்ட வரிகள் அல்ல

ஆகவே
உபாசகனின் ஆத்மாவாகவே உள்ள ப்ரஹ்மமே உபாசனை செய்யப்பட வேண்டும் என்றும்
தனது ஆத்மாகவே ப்ரஹ்மத்தை எண்ணி உபாசிக்க வேண்டும் என்றும் தெளிவாகக் காட்டப் பட்டது –

அஹம் சப்தமும் பரமாத்மாவிலேயே பர்யவசாயம் -முடிவு அடையும்
இதனால் அஹம் ப்ரஹ்ம என்றே உபாஸிக்க வேண்டும் என்றதாயிற்று –

———————————————————————————

அதிகரணம் -153 ப்ரதீகாதி கரணம் -4-1-3-

இப்படி ப்ரஹ்ம உபாஸனத்தில் ஸ்வ ஆத்மா என்று உபாஸனம் இந்த்ர ப்ராண அதிகரணத்தில் சொல்லப்பட்டது
ஆனாலும் அஹம் புத்தி ஸப்தங்களுக்கு பரமாத்மா என்ற பொருளிலேயே முடிவு என்ற அர்த்தத்தை
உறுதிப் படுத்த இங்கு சொல்லப் பட்டது –
இவ்வாறு மநோ ப்ரஹமேத் யுபா ஸீத முதலிய ப்ரதீக உபாஸனங்களில் ப்ரஹ்ம உபாஸனம் ஆகையாலே
ஸ்வ ஆத்மா என்ற புத்தியில் உபாசனம் செய்யத் தக்கது என்ற சங்கையால் சங்கதி

மநோ ப்ரஹ்மேதி -முதலிய ப்ரதீக உபாஸனங்களிலும் மநோ அஹம் அஸ்மி என்று மனம் முதலியவற்றிலும்
உபாசனத்திற்கு ப்ரஹ்ம உபாசனம் ஸமமாகையால் ஆத்ம தயா அனுசந்தானம் செய்யத் தக்கது
என்பது பூர்வ பக்ஷம்
இத்தை நிரஸிக்கிறார் –

பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல –
இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது

474-ப்ரதீகே ந ஹி ஸ –4-1-4-

சாந்தோக்யம் -3-11-1-மநோ ப்ரஹ்ம இதி உபாசீத –
மனத்தை ப்ரஹ்மம் என்று உபாசிப்பனாக -என்றும் –

சாந்தோக்யம் -7-1-5-ஸ யோ நாம ப்ரஹ்ம இதி உபாஸ்தே-
நாமத்தை ப்ரஹ்மம் என்று உபாசிப்பவன்

ந ப்ரதீகே -மனம் முதலியவற்றில் ஆத்மாவை ஏற்றி உபாசனை செய்வது பொருந்தாது
ஏன் என்றால்
ந ஹி ஸ -அத்தைய மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல
உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –

ப்ரதீக உபாஸனத்திலே பிரதீகம் தான் உபாஸ்யம் -ப்ரஹ்மம் அன்று –ப்ரதீகமாவது அங்கம் –
சித் அசித் சரீரக ப்ரஹ்மத்தில் அசித்தும் ஏகதேசமான அங்கம் -என்று கருத்து
ப்ரதீக உபாஸனம் -ப்ரஹ்மம் அல்லாதவற்றில் -ப்ரஹ்மம் என்று த்ருஷ்டியில் விதிப்பதால் –
ப்ரஹ்மம் என்று அனுசந்தானம் என்று கருத்து –

இங்கு மனம் முதலியவை அல்ப சக்தி உள்ளவை யாதலால் அவற்றை ப்ரஹ்மம் என்ற த்ருஷ்டியுடன்
உபாஸனம் செய்யச் சொல்வது சரியில்லை
ஆகையால் ப்ரஹ்மமே மனம் முதலிய த்ருஷ்டியால் உபாஸிக்கத் தக்கது
என்ற பக்ஷத்திற்கு விடை அளிக்கிறார் –

—————————————————————————————————-

478-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –4-1-5-

ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது –
மனம் முதலானவற்றில் ப்ரஹ்ம திருஷ்டியை ஏற்கலாம் –
ப்ரஹ்மத்திடம் மனம் போன்றவற்றின் த்ருஷ்டி பொருந்தாது

வேலைக்காரனை அரசன் என்று புகழ்ந்தால் அவன் சில நன்மைகள் செய்வான்
அரசனை வேலைக் காரன் என்றால் தண்டனை தானே கொடுப்பான் –

ஆகையால் தீமையை விளைவிக்கும்
இவ்விஷயம் பூம வித்யையிலும் உள்ளது –

————————————-

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் –

கடந்த அதிகரணத்தில் கீழான பொருளில் மேலானவனே த்ருஷ்ட்டி செய்யத் தக்கது எனப்பட்டது
அப்படியாகில்
பல சாதனத்வேன உத்க்ருஷ்டமான உத்கீதாதியில் ஆதித்யாதி திருஷ்ட்டி செய்யத்தக்கது
என்னும் சங்கையால் சங்கதி –

உத்கீதம் போன்றவற்றையே ஸூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் –
என்று நிரூபிக்கப் படுகிறது –

479-ஆதித்யாதி மதய ஸ அங்கே உபபத்தே —4-1-6-

உத்கீதாதிகளில் ஆதித்ய த்ருஷ்டி செய்யத்தக்கதா
ஆதித்யாதிகளில் உத்கீதாதிகள் த்ருஷ்டி செய்யத்தக்கதா
என சம்சயம்
தாழ்ந்தவன் இடமே உயர்ந்தவனாகவே த்ருஷ்டி செய்ய வேண்டும் அன்றோ என்ற நியாயத்தாலே
பல சாதனம் என்பதால் உயர்ந்த கர்மத்தை விட கர்ம சேஷ பூதமான ஆதித்யாதி தேவதை த்ருஷ்டமான படியால்
ஆதித்யாதிகள் இடம் உத்கீதாதி த்ருஷ்டி செய்வதே மேல்
என்ற பூர்வ பஷத்தை இங்கு நிரஸிக்கிறார்

சாந்தோக்யம் -1-3-1-ய ஏவ அசௌ தபதி தம் உத்கீதம் உபாசீத -என்று
யார் இப்படி ஒளிர்கிறானோ அவனையே உத்கீதமாக உபாசிக்க வேண்டும்

யாகங்களின் அங்கமான உத்கீதம் உயர்ந்ததா ஸூரியன் போன்றார்கள் உயர்ந்தவர்களா சங்கை

இதில் ஸ சப்தம் ஏவகாரம் உறுதியைச் சொல்கிறது
அங்கே – க்ரதுவின் அங்கமான உத்கீதா திகளில்
ஆதித்யாதி மதய ஸ -ஆதித்ய த்ருஷ்டியே செய்யத்தக்கது
ஏன் எனில்
உபபத்தே-கர்மங்கள் பலனை அளிப்பதும் ஆதித்யாதி தேவதை ப்ரீதியை முன்னிட்டே வருகிறபடியால்
அத்தேவதைகளே உயர்வு பொருந்துவதாதலின் முன் கூறிய நியாயத்தாலே
கர்ம அங்க உத்கீதாதியில் தான் ஆதித்யாதி த்ருஷ்டிகள் செய்யத் தக்கன –

தேவர்களை ஆராதிப்பதால் அன்றோ கர்ம பலன்கள் –
அவர்கள் மகிழ்ந்து அளிக்கின்றார்கள் –
ஆகவே உத்கீதம் முதலான வற்றை ஸூரியன் போன்றாராக எண்ண வேண்டும் –

சுத்தியில் இது வெள்ளி -அந்யதா க்யாதி ஞானம் -ராஜதத்வ பிரகார ரூப ஏக தேசத்தால் போலவே
பிரகார பிரகாரி ஐக்யத்தால் கொள்ளலாமே
ஸத் க்யாதி -யதார்த்த ஞான பக்ஷம்
பஞ்சீ கரண ப்ரக்ரியையால் -ரஜத்வ ஏக தேசம் இதில் உண்டே
நான் கருடன் -உத்கீதமே ஸூர்யன் மனமே ப்ரஹ்மம் -இவற்றுக்கு
தேகாத்ம பிரமம் போல் அஹம் த்வ பிரகார கருடனாகவும் கருடத்வ பிரகார கருடனாகவும் -இரண்டு ஞானங்கள்
பேதத்தை க்ரஹிக்காமை –
ஞானமும் வியவஹாரமும் அயதாவஸ்திதம் என்பர் பிறர்
விவகார மட்டும் அயதாவஸ்திதம் என்பது நம் ஆச்சார்யர்களின் திரு உள்ளம் –

——————————————————————————————-

அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் –

கீழ் ப்ரதீக அதிகரணமும் ஆதித்யாதி மத்ய அதிகரணமும் ப்ராசங்கிகம்
இதில் முதலில் கூறிய பகவத் உபாசனத்திற்கு அபேக்ஷிதமான ஆஸனாதிகள் சிந்திக்கப்படுகின்றன
என்று சங்கதி

விசேஷமாக ஏதும் கூறப்படாமையாலே நியமம் ஏதும் இல்லை என்கிற பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறார்

அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

4-1-7-ஆஸிந சம்பவாத் —4-1-7-

ஆஸிந -உட்கார்ந்து கொண்டே உபாஸிக்க வேண்டும்
சம்பவாத்-உட்கார்ந்தவனுக்கே மனஸ்ஸூ ஒருமைப் படுவதால் என்றபடி
ஒருமை இல்லா விட்டால் உபாஸனம் சம்பவிக்காதே

அமர்ந்து கொண்டு மட்டுமே -அப்போது தான் கை கூடும் –
ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் –
மன ஒருமைப்பாடு உண்டாகும்

———————————————————————————

483-த்யா நாத் ஸ —4-1-8-

நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்த வித எண்ணமும் தோன்றாதபடி
இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்

——————————————————————————

484–அசைலம் ஸ அபேஷ்ய-4-1-9-

அசையாமல் இருப்பதே த்யானம் –

சந்தோக்யம் -7-6-1-த்யாய தீவ ப்ருத்வீ த்யாய தீவ அந்தரிஷம் த்யாய தீவ த்வயௌ த்யாய தீவ ஆப
த்யாயந்தீவ பர்வதா -போலே அந்த நிலை அவசியம் –

பூமி த்யானிக்கிறது
ஆகாசம் த்யானிக்கிறது
என்று பூம வித்யையில் உள்ளது இவற்றைப் போலவே அசலத்வம் ஸ்திதி மூலமாகவே சம்பவிக்கும் என்று கருத்து –

————————————————————————

485-ஸ்மரந்தி ஸ –4-1-10-

ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
சுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆசனம் ஆத்மந நாத் யுச்சரிதம் நாதி நீசம் சேலாஜி நகு சோத்தரம்-என்றும்

தத்ர ஏகாக்ரம் மன க்ருத்வா யத சிந்தேந்த்ரிய க்ரிய உபவிச்யாசதே யுஜ்ஞ்யாத் யோகம் ஆத்ம விசுத்தயே-என்றும் சொல்லிற்றே-

ஆஸீனம் -உட்கார்ந்தவனுக்கே தியானத்தை இவற்றில் ஸ்மரிக்கிறார்கள்

—————————————————————————

486-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–4-1-11-

மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்

ஸ்வேதாச்வதர -2-10-சமே சுசௌ சர்க்கராவஹ் நிவாலுகா விவர்ஜிதே –
சம தளம் -மணல் நெருப்பு சிறுகற்கள் இல்லாத இடம் -மநோ அனுகூலே -மனத்து ஏற்ற இடம் தேவை –

யத்ர -எந்த தேச காலங்களில் மனதிற்கு
யகாக்ரதா -ஒருமித்த தன்மை ஏற்படுகிறதோ
தத்ர -அதே தேசத்தில் காலத்தில் உபாஸனம் செய்ய வேண்டும்
அவிசேஷாத்-மணல் முதலியன இல்லாமலும் -மனதுக்கு அனுகூலமாகவும் சுத்தமமாயும் உள்ள தேசத்தில்
என்ற வாஜஸ நேயத்தில் மனத்தின் ஓர்மை தவிர மற்ற தேச கால விவரணங்கள் ஏதும் இல்லை யாதலால்
மன ஒற்றுமைக்கு அனுகூலமான தேசமும் காலமும் உபாஸன அனுகூலங்கள் என்றதாயிற்று

இதனால் ஆஸன ஸ்திதி காமனாதிகளுக்குள் ஆசனத்தை மட்டும் சொல்வதால்
உட்கார்ந்தே உபாஸனம் செய்ய வேண்டும் என்று தேறிற்று –

வித்ய அங்க பாதத்தில் வித்யையின் அங்கங்கள் எல்லாம் சொல்லப்பட்டு விட்ட படியால்
திரும்பவும் ஆசனாதிகள் அங்கங்கள் பற்றி இங்கு ஏன் சிந்தை என்றால்
தைல தாராவத் ஸ்ம்ருதி சந்ததி ரூபையான த்யானம் -பக்தி -தினமும் மென்மேலும் கவனத்துடன் சாதிக்கத் தக்கது
அது ஆசனாதி அங்கங்களுடன் மனதின் ஓர்மை யுடன் இதரங்களைப் பற்றிய அனைத்து முயற்சிகளுடன்
இருக்கா விடில் ஸித்தியாதே என்பதால் ஸூத்ரகாரரால் மீண்டும் இங்கு செய்யப்பட்டுள்ளது

————————————————————————-

அதிகரணம் -156-ஆப்ரயாணாதி கரணம் -4-1-6-

ஒரே நாளில் செய்தாலே ஸாஸ்த்ர பலன் சித்தித்து விடுவதாலும்
ஆயுள் உள்ளவரை செய்ய வேண்டும் என்ற ஸ்ருதியிலோ விதியைக் குறிக்கும் பதங்கள் இல்லாததாலும்
அவை பலத்தைக் குறிப்பதாகவே கொள்ளத்தாகும்
என்பர் பூர்வ பக்ஷி
இத்தை நிரஸிக்கிறார்

மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

488-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்–4-1-12-

மரண காலம் வரையில் –
ஏன் –
ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-

சாந்தோக்யம் -8-15-1-ஸ கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே -என்று
ஆயுள் உள்ள வரையில் உபாசனத்தையும் தர்மத்தையும் கடைப்பிடித்து
ப்ரஹ்ம லோகம் அடைகிறான் -என்கிறது –

இந்த ஸ்ருதியில் விதி ப்ரத்யயம் இல்லாவிட்டாலும்
உபாஸனம் ஆவ்ருத்தி வேறே ப்ரமாணத்தால் கிடைக்காததால்
உபாசன ஆவ்ருத்தி விதியை ஏற்க வேண்டும் என்று கருத்து –

————————————————————————————–

அதிகரணம் -157-ததிகமாதிகரணம் – 4-1-7-

இப்படி ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபத்தை நிரூபித்து
தத் பலங்களான
பாப சம்பந்தம் இன்மை
பாபத்தை நாசம்
இவற்றை மேல் நான்கு அதிகரணங்களாலே நிரூபிக்கிறார்
என்று பேடிகா சங்கதி

ப்ரஹ்ம வித்யை ஸ்வதா ஆனந்த ரூபை யாகையாலே பலமாகவே சேர்க்கத் தக்கது
ஆதலின்
அதன் ஸ்வரூபத்தை ஆராய்வதும் இந்த பல அத்தியாயத்திலேயே பொருந்துவதாகும்

ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன
என்று நிரூபிக்கப் படுகிறது –

490-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —4-1-13-

சாந்தோக்யம் -4-14-1-தத்யதா புஷ்கர பலாசா அபோ ந ச்லிஷ்யந்தே ஏவம் ஏவம் விதி பாவம்
கர்ம ந ச்லிஷ்யதே-என்று-தாமரை இலை மேல் நீர் ஒட்டாது போலே ஒட்டாது என்றும்

ப்ருஹத் -4-14-23-தஸ்யை வாத்மா பதவித் தம் விதித்வா ந கர்மணா லிப்யதே பாபகேந-என்று
ஆத்மாவை அறிந்தவனை கர்மங்கள் தீண்டாது என்றும் –ஒட்டாதவற்றையும்

சாந்தோக்யம் -5-24-3-தத்யதா இஷீக தூலம் அக்னௌ ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –
துடப்பத்தின் நுனியில் பஞ்சு போன்ற பகுதி தீயில் அழிவது போலே ப்ரஹ்ம உபாசகனின் பாவங்கள் அனைத்தும் அழியும் என்றும்

ஷீயந்தே ஸ அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று
உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கண்டதும் இவனது பாவ கர்மங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன -என்றும் சொல்லிற்றே

பூர்வ பஷி –
ப்ரஹ்ம வித்தின் வித்யா ஆரம்பத்திற்குப் பின்னால் வரும் பாபங்கள் சம்பந்திக்காமையும்
முன்புள்ள பாபங்களுக்கு விநாசமும்
ஏற்படுமா ஏற்படாதா என்று சம்சயம்

ந புக்தம் ஷீயதே கர்ம-என்று சொல்லுகையாலே
அஸ்லேஷ வி நாச ஸ்ருதி –ஸ்துதிக்காக ஏற்பட்டது என்பதால் உண்மையில்
அஸ்லேஷமும் விநாஸமும் ஸம்பவிக்க மாட்டா
என்பது பூர்வ பக்ஷம் –

இவை இரண்டும் சரி அல்ல
எதனால் என்றால்-
ப்ரஹ்ம வைவர்த்த புராணம் -நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி என்ற
சாஸ்திர வாக்யங்களுக்கு முரணாக இருப்பதால் –
இவை அர்த்த வாதங்களே –
வித்யையை புகழவே சொல்லப்பட்டவை

வித்யை ப்ரஹ்மத்தை அடைய மட்டுமே என்று
தைத்ரியம் -2-1- ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் –
முண்டகம் -3-2-9-ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி -என்றும் தானே சொல்லிற்று என்பர்

அப்படி அல்ல –

தததிகமே -ப்ரஹ்ம வித்யை அனுஷ்டித்த போது
உத்தர பூர்வாகயோ –வித்ய அனுஷ்டானத்தின் முந்தைய பிந்தைய பாபங்களுக்கு
அஸ்லேஷ வி நாசௌ -அஸ்லேஷமும் விநாசமும் வரும்
ஏன் எனில்
தத் வ்யபதேசாத் —அவ்வாறு ஸ்ருதி சொல்வதால்

இப்படியாகில் ந புக்தம் ஷீயதே கர்ம-என்று ஸ்ருதி சொல்வது என் எனில்
செய்த கர்மாக்களுக்கு ப்ரஹ்ம வித்யாதிகளால் பிராயச்சித்தம் செய்து கொள்ளா விடில்
கர்ம பலன்களை அனுபவித்தே தீர்க்க வேண்டும் என்கிறது
ஆகவே விரோதம் இல்லை

வித்யையின் மஹாத்ம்யம் குறித்து –
சாந்தோக்யம் -4-14-3-ஏவம் விதி பாபாம் கர்ம ந ச்லிஷ்யதே-என்று
இப்படி அறிந்தவனை பாவங்கள் தீண்டுவது இல்லை என்றும்

சாந்தோக்யம் -5-24-3-ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –என்றது
நெருப்பு எரிக்கிறது என்பதற்கும் தீ அணைக்கும் என்பதரும் முரண்பாடு இல்லையே

பரம புருஷனின் ஆராதனத்தால் முன்பு செய்த பாவங்களால் உண்டான ப்ரஹ்மத்தின் அப்ரீதியை மாற்றி
ப்ரீதியை யுண்டாக்குவதாலே முன்பு செய்த பாவங்கள் அழியும்

அஸ்லேஷம் புத்தி பூர்வகமாக செய்யப்படாத தெரியாமல் செய்யும் பாவங்களையே குறிக்கும்
ஏன் எனில்

கட உபநிஷத் -2-24-நா விரதோ துச்சரிதாத் -என்று
முரணான ஒழுக்கத்தில் இருந்து விலகாதவன் பரமாத்மாவை அடைய முடியாது -என்பதால் –

ஆகையால் மரண காலம் வரை தொடரும் வித்யை நாள் தோறும் வலிமை அடைந்து –
தவறான செயல்கள் அழிவதால் -மாறிக் கொண்டே வரும் என்றதாயிற்று-

இப்படியானால் ப்ரஹ்ம வித்யை ஸர்வ பாப ப்ராயச்சித்த ருபை யாதலின்
ஸ்வர்க்கார்த்தம் சாதனமாக யாகத்தை அனுஷ்டிப்பது போலே முக்திக்காக வேறு சாதனத்தை
அனுஷ்ட்டிக்க வேண்டாவோ என்னில்

ஸ்வர்க்கனுபவம் கர்மாவை உபாதியாகக் கொண்டது -ஆதலால் கர்மாவை அனுஷ்ட்டிக்க வேண்டும்
முக்தியோ ஞான சங்கோச நிவ்ருத்தியை முதல் கொண்ட ப்ரஹ்ம அனுபவத்திற்குத் தடையான
எல்லா பாபங்களும் பிராயச்சித்தமாக வித்யா அனுஷ்டானத்தால் சமனமானவுடன்
சங்கோச காரணம் இல்லாததாலும்
ஞான சங்கோச நிவ்ருத்தியே முக்தி யாதலாலும் ஸ்வ பாவத்தால் ஸித்தித்த
விசிஷ்ட ப்ரஹ்ம அனுபவ சக்தி தோன்றுகையால் ஸ்வர்க்காதிகளில் இருந்து வேறுபாடு ஸித்தமாகையாலே
வேறு சாதனம் தேவையில்லை என்று கருத்து –

அஸ்லேஷம் என்பது கர்ம சக்தி உண்டாகாமை
பாப விநாசம் என்பது உண்டான கர்ம சக்திகளின் அழிவு
கர்ம சக்தி புண்ய பாபங்களுக்கு ஏற்றபடி பலனைக் கொடுக்கும் பகவானின் நிக்ரஹமும் அனுக்ரஹமுமே
இவ்வாறானால் -நிமித்தம் இருப்பின் நைமித்திகம் உண்டு என்னும் நியாயத்தாலே
முன் பாபங்கள் தோன்றியவை யாதலின் அவற்றுக்கு ப்ரஹ்ம வித்யை பிராயச்சித்தம் ஆகட்டும்
பிந்திய பாபம் உண்டாகாமையால் அதற்கு ப்ரஹ்ம வித்யை எப்படி பிராயச்சித்தம் ஆகும் என்னில்

அபுத்தி பூர்வகமான பாபத்திற்கும் ப்ரஹ்ம வித்யை நைமித்திக பிராயச்சித்தம்
என்பது ஸூத்ரகாரர் திரு உள்ளம் அன்று
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அபுத்தி பூர்வ பாபம் பாபமே என்று என்பதே திரு உள்ளம்
ஆகவே ப்ரஹ்ம நிஷ்டனுக்கு புத்தி பூர்வக உத்தராகம் சம்பவிக்காது –
அப்படித் தோன்றினாலும் அந்த பாபத்தைப் பிராயச்சித்தத்தால் போக்கடிக்க வேண்டும் –
அது செய்யா விடில் விரைவில் பாப பலனை அனுபவித்தே முக்தி பெறுவான்

இந்த வ்ருத்தாந்தம் வ்ருத்ராதிகள் இடம் கண்டோம்
ஆகவே புத்தி பூர்வ ஆகத்துக்கு அவசியம் பிராயச்சித்தம் பண்ணியே யாக வேண்டும் என்றதாயிற்று –

———————————————————————————-

அதிகரணம் -158-இதராதிகரணம்–4-1-8-

முன்பு
பாபத்திற்கு அஸ்லேஷமும் விநாஸமும் கூறப்பட்டன
இங்கு
ஸூஹ் ருதத்துக்கும் அஸ்லேஷமும் விநாஸங்கள் கூறப்படுகின்றன என்று
அதிதேசத்தால் சங்கதி

முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும்
இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –

491-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —4-1-14-

சாந்தோக்யம் -8-4-1-சர்வே பாப்மான அதோ நிவர்த்தந்தே -என்றும் –

கௌஷீதகீ -1-4- தத் ஸூ க்ருத துஷ்க்ருதே தூ நுதே –என்று
புண்ய பாவங்களை உதறுகிறான்

புண்ய பலன்கள் மழை உணவு போன்றவை
உபாசனம் முழுவதும் இயற்ற வேண்டுமே-அழிவு பற்றி கூறலாமோ என்ன

பாதே து – சரீரம் விழும் நேரத்தில் அந்த புண்ய பலன்கள் அழிகின்றன –
ப்ரஹ்ம ப்ராப்திக்கு தடையாக உள்ளதால் –

புண்ய பலம் ஸூக ரூபமாகையாலே ப்ரஹ்ம வித்துக்கு அநிஷ்டம் இல்லாமையாலும்
புண்யத்தின் அஸ்லேஷ விநாசங்கள் கூடா என்பது பூர்வ பக்ஷம்
அதனை நிரஸிக்கிறார்

இதரச்ய அபி -பாபத்தின் வேறான புண்யத்துக்கும்
ஏவம் அசம்ச்லேஷ பாதே து-பாபத்தைப் போலவே அஸ்லேஷ விநாசங்கள் ஸமமானவை
புண்ய பலமான ஸ்வர்க்கமும் முமுஷுக்கு அநிஷ்டமே
வித்யைக்கு ஏற்ற மழை உணவு ஆரோக்யம் போன்றவையும் சரீரம் விழுந்தபின் அநிஷ்டங்களே
உத்தர புண்ய ஸ்வேஷம் எவ்வாறு சொல்லக் கூடும் என்றால் வித்ய உத்பத்திக்காக செய்த
ஸூஹ் ருதங்களுக்குள் உப யுக்தமான எஞ்சிய சிஷ்ட ஸூஹ்ருதத்துக்கும்
மோஹத்தால் வேறு பலத்துக்காகச் செய்த ஸூஹ் ருதத்துக்கும் பிரபலமான கர்மாக்களால் தடை வரும்

ஆதலால் அப்போது பலனைக் கொடுக்காத அந்தக் கர்மமும் வித்வானின் விஷயத்தில் ஸ்நேஹத்தால்
பிறர் செய்த ஸூஹ்ருதமும் வித்வானுக்கு அநிஷ்டங்கள் ஆகையாலே
இவையே அஸ்லேஷ -அசம்பந்த -விஷயங்களாகக் கூடும் –

———————————————————————————–

அதிகரணம் -159-அநாரப்த கார்யாதிகரணம் -4-1-9-

ப்ரஹ்ம உத்பத்திக்கு முன்னும் பின்னுமுள்ள ஸூஹ்ருத துஷ் ஹ்ருதங்களுக்கு
அஸ்லேஷமும் விநாசமும் கூறப்பட்டன
இப்போது வித்யைக்கு முன்புள்ள ப்ரார்ப்தே தரமான ஸூஹ்ருத துஷ் ஹ்ருதங்களுக்கு மட்டும்
வித்யா மஹாத்ம்யத்தாலே விநாசம் இங்கே சமர்த்திக்கப் படுகிறது

பிராரப்தத்தினைத் தவிர்ந்த கர்மங்களுக்கு மட்டுமா அஸ்லேஷ விநாசங்கள்
என்று சம்சயம் இங்கு

சர்வ பாப்மாந பிரயந்துதே –என்று பொதுவாகக் கூறி இருப்பதால்
எல்லா பாபங்களும் விநாசம் கூடும் என்பது பூர்வ பக்ஷம்
அத்தை நிரசிக்கிறார்

பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன
என்பது நிரூபிக்கப் படுகிறது –

492-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –4-1-15-

இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன –

சர்வ பாப்மாந பிரயந்துதே –
அனைத்து பாவங்களும் அழியும் என்றால் சரீரம் மட்டும் எவ்விதம் இருக்கும்

சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய -என்று
பலன் அளிக்கத் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடியும் வரையில் சரீரத்தின் தொடர்பு உள்ளது என்றது-

து ஸப்தம் பக்ஷத்தை விலக்குவது
பூர்வே -அநாரப்த கார்யே ஏவ-வித்ய உத்பத்திக்கு முந்திய ப்ராரப்தம் அல்லாத கர்மங்களே நசிக்கின்றன
ஏன் எனில்
ததவதே-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய-என்று வித்யை பூர்த்தியானவனுக்கு
உடலை விடும் வரை விளம்பம் உண்டு என்று வேதம் கூறுவதால்
சர்வ கர்மங்களும் அழிந்திட்டால் சரீர ஸ்திதியே ஸம்பவிக்காதே

ஆதலின் சரீரத்தைத் தரிப்பதற்குக் காரணமான பிராரப்த கர்மம் தவிர
மற்ற அபிராரப்த கர்மங்களுக்கே நாசம் என்று தேறிற்று –

——————————————————-

அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம் -4-1-10-

வித்யா பலத்தால் ஸூஹ்ருதங்களும் அஸ்லேஷம் கூறப்பட்டது
அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய நைமித்திகமான தம் தம் ஆஸ்ரம தர்மங்களும்
பொதுவாக ஸூஹ்ருதத்தில் அடங்குவதால்
அவற்றின் பலன்களுக்கும் அஸ்லேஷம் வரத் தோன்றுவதால் பலத்தில்
விருப்பம் இல்லாதவனுக்கு அனுஷ்டானம் சம்பவிக்காது
என்ற சங்கையால் சங்கதி –

ஆகவே அக்னிஹோத்ராதிகள் வித்வானால் அனுஷ்ட்டிக்கத் தக்கவை அல்ல
என்று பூர்வ பக்ஷம்

பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை
இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது

493-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –4-1-16-

அக்னி ஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
ப்ரஹ்ம விதியை -4-1-14-இதரஸ் யாப்யேவம் அசம்ச்லேஷ -என்று
ப்ரஹ்ம வித்யைக்கு பின்புள்ள புண்ய பாவங்கள் ஒட்டாமல் போகும் என்றால்
பலன் இல்லாத கர்மாக்களை யார் இயற்றுவார்கள்

து பதம் அக்னிஹோத்ரம் போன்றவை அன்றாடம் இயற்றப்பட வேண்டும்
தத் கார்யாயைவ -வித்யா உத்பத்தி என்னும் கார்யத்துக்காகவே அனுஷ்ட்டிக்கத் தக்கது என்றவாறு
தா தர்சநாத் இப்படி வேதங்களில் சொல்வதால் வித்யை வளரும் பொருட்டு நித்யம் இயற்றியே ஆக வேண்டும்
அப்படி அனுஷ்ட்டிக்கா விடில் வித்யையே உண்டாக மாட்டாது என்று கருத்து
இல்லையேல் அதனால் வரும் பாவம் மன உறுதியைக் குலைத்து விடும் –
உபாசனை செய்ய இயலாமல் போய் விடும்-

அனுஷ்டித்த கர்மத்துக்கு பலம் ஏற்பட பிரதிபந்தம் ஏற்படுமா ஏற்படாதா என ஸந்தேஹித்து
ஏற்படலாம் என்று முன் கூறியதைக் காட்டுகிறார் –

————————————————————————

புண்ய பாவங்கள் அனுபவித்தே கழிக்க வேண்டி இருக்குமாகில்
சாட்யாயன சாகை -ஸூக்ருத சாதுக்ருத்யாம் -என்று
ஏன் கூற வேண்டும்

494-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –4-1-17-

அக்னி ஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால் –
ப்ரஹ்ம வித்யைக்கு முன்பும் பின்னும் பலன் மீது விருப்பம் கொண்டு செய்யப்பட புண்ய கர்மங்களுக்குள்
வலிமையான பாவ கர்மங்களால் தடைப்பட்ட ஏராளமான புண்ணியங்கள் இருக்கக் கூடும்

அத -வித்யைக்குக் காரணமான அக்னி ஹோத்ராதி தர்மத்தைக் காட்டிலும் வேறான
அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ-இது வரை பலன் தராத கர்மாக்களும் உள்ளனவே
என்று சில சாமிகளின் மதம் உண்டு –

இவற்றையே அழிகின்ற
பூர்வ புண்யங்களும் ஒட்டாமல் போகும் உத்தர புண்யங்களும் என்றது

——————————————————————————-

495-யதேவ வித்யயேதி ஹி —4-1-18-

ஹி-எதனால்
யதேவ வித்யயேதி -யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்யவத்தரம்-என்று
உத்கீத உபாசனத்தாலே க்ரது பலமான
ஸ்வர்க்காதிகளுக்கு கர்மாந்தரங்களால் பிரதிபந்தம் ஏற்படாமை கூறப்பட்டதோ
அதே காரணத்தால் பலம் பிரதிபந்தம் அடைந்த சாது க்ருதயங்கள் உண்டு என்று
வசனத்துக்கு முன் கூறியதே விஷயம் என்று –

வித்யையின் மூலமாக –
சாந்தோக்யம் -1-1-10-யதேவ வித்யயா கரோதி ததேவ வீர்யவத்தரம் -என்று
எந்த கர்மத்தை உத்கீத வித்யையுடன் இயற்றுகின்றானோ அதுவே தடையின்றி பலன் தரும்

இவையே உபாசகனின் நண்பர்களுக்கு சென்று சேரும் –

ஸர்வ அபேஷா ச-என்ற அதிகரணத்தில்
கர்மாக்கள் அங்கம் எனப்பட்டன
இங்கும் கர்மாக்களுக்கு அங்க பாவத்தை ஏன் கூறுகிறார் என்றால்
முன் பாதத்தில் வித்யை எதையும் எதிர்பாராதது என்று சங்கித்து
சா பேஷம் -எதிர்பார்ப்பதே -என்று சாதிக்கப்பட்டது
இதில் ஸூஹ்ருதம் ஒட்டாது என்ற பிரசங்கத்தில் அக்னி ஹோத்ராதிகளும் ஸூஹ்ருதம் ஆகையால்
அவற்றை விட்டு விடலாம் என்று சங்கதி
அவை அவசியம் அனுஷ்ட்டிக்க வேண்டியவை என்று ஸ்தாபிக்கப் போவதால்
கூறியது கூறல் என்ற தோஷம் இல்லை யாம் –

———————————————————————–

அதிகரணம் -161-இதர ஷபணாதி கரணம் -4-1-11-

பலன் கொடுக்கத் தொடங்காத புண்ய பாபங்களுக்கு வித்யையாலே விநாசம் சொல்லப் பட்டது
இப்போது பிராரப்த கர்மங்களுக்கு வித்யை தோன்றின சரீரத்தின் முடிவிலேயோ
பிராரப்த கார்ய சரீராந்தரத்தின் முடிவிலோ விநாசம் என்று அநியமத்தை ஸ்தாபிக்கிறார்
என்று சங்கதி –

பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள்
ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது –

496-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –4-1-19-

ப்ரஹ்மத்தை அடைய சரீர மாத்ரத்தால் விளம்பம் ஸ்ருதமாகையாலே
வித்யா உத்பத்தியான சரீரத்தின் முடிவிலேயே அழிகின்றன
என்று பூர்வ பக்ஷம்
இத்தை நிரசிக்கிறார்

து ஸப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குகிறது
இதரே-ஆரப்த கார்யங்களான புண்ய பாபங்களை
போகேந ஷபயித்வா -பல அனுபவத்தால் போக்கடித்து
அத -பிறகு -பிராரப்த கர்ம அவசானத்தில்
சம்பத்யதே -ப்ரஹ்ம வித்தானவன் பர ப்ரஹ்மத்தை அடைகிறான் என்பதால்
ஸ்ருதியும் பிராரப்த கர்மத்தின் முடிவிலேயே மோக்ஷம் என்று கூறுகிறது

புண்ய பாபங்கள் எவ்வளவு சரீரங்களாலே அனுபவிக்கத் தக்கனவோ அவ்வளவு சரீரங்களைப் பரிக்ரஹித்து
புண்ய பாபங்களை அனுபவித்துத் தீர்த்த பின்னரே முக்தனாகிறான் என்று கருத்து –

பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-
அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –

தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்ய-என்பதால்
பிராரப்த கர்மாக்கள் முடிந்த பின்னரே ப்ரஹ்மத்தை அடைகிறான் –

—————————

இப்பாத அதிகரண பொருள்களை ஒரே ஸ்லோகத்தால் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார் –

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ப்ரஹ்ம வித்ய உபாசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று உபாஸிக்க வேண்டும் –
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –ப்ரதீகங்களான மனம் முதலியவற்றில் அஹம் மன -என்று உபாஸிக்கக் கூடாது –
அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதத்தில் ஆதித்யாதி த்ருஷ்டி செய்ய வேண்டும்
அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —ஆசனத்தில் வசதியாய் அமர்ந்தே உபாஸிக்க வேண்டும்
அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -வித்யா யோனியான சரீரம் உள்ளதனையும் தினமும் இடைவிடாது சிந்திக்க வேண்டும்
அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -வித்யையின் மஹிமையால் பூர்வ உத்தர ஆகங்களுக்கு அஸ்லேஷ விநாசம் என்றும்
அதிகரணம் -8-இதராதிகரணம்–ஸ்வர்க்காதி சாதனமான புண்யத்துக்கும் அஸ்லேஷ விநாசங்கள் கூடும்
அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–பிராரப்த கர்மாக்களுக்கு போகத்தாலேயே நாசம்
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-வர்ணாஸ்ரம தர்மங்கள் அவஸ்யம் அநுஷ்டேத்யத்வம்
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –ப்ராரப்த்த கர்மத்தின் முடிவில் மோக்ஷம் என்றும்

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-