மதுர மா வண்டு பாட மா மயிலாட ரங்கத்தம்மான்

அமலனாதிபிரானில் நானகாவதுபாசுரத்தில் மூன்றா மடி மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான் என்பது. இங்குக் கூறிய வண்டும மயிலும் ஸ்ரீரங்கநாதனே யென்று பட்டர் திருவுள்ளம் பற்றுகிறார். அவர் அருளிச்செய்த ஸ்ரீரஙகராஜ ஸ்தவத்தில் ( லோ.1-10) லக்ஷ்மீகல்பலதோத்துங்கஸ்த நஸ்தபகசஞ்சல:, ஸ்ரீரங்கராஜப்ருங்கோ மே ரமதாம் பாநஸாம்புஜே என்ற சுலோகத் தில் ஸ்ரீரங்கநாதன் வண்டாகவும்,மேலே (ச்லோ.-2-44 ) பரலயஸமயஸுபதம… அநு சிகிநி சிகீவ க்ரீட்ஸி ஸ்ரீஸமக்ஷ என்ற சுலோகத்தில் அப்பெருமானே மயிலாக வும கூறப்பட்டிருப்பது காண்க.

லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே
–1-10-

லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கற்பகக் கொடியில் உள்ள உன்னதமான திரு முலைத் தடமாகிற பூங்கொத்தில் சுழலமிடா நின்ற
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே –ஸ்ரீ ரெங்கநாதனாகிற வண்டு அடியேனுடைய நெஞ்சு ஆகிற தாமரைப் பூவில் உகந்து வாழ்ந்திடுக

வண்டு தாமரை மலரைக் கண்டால் உள் புகுந்து அதி மோகத்தோடே ரமியா நிற்குமே –
எனவே -ஸ்தபக சஞ்சல–என்றும் –அம்புஜே ரமதா -என்றும் சொல்லிற்று –

பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–
44-

ஹே வரத

பிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன

சித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான

ஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை

ஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே

விஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு

அநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே

கலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை

கசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே

சிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே

க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்

ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு

கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –

அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

பிரளயத்தில் ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -ஆண் மயில் பல நிறங்களுடன் கூடிய அழகிய தோகையை
பெண் மயிலுக்கு விரித்துக் காட்டுவது போலே
நீயும் பெரிய பிராட்டியார் இடம் காண்பித்தாய்-

ஸ்ருதிகள் படி நிமித்த காரணத்வம் மாத்திரம் அன்றிக்கே உபாதான காரணத்வமும் உண்டாகையாலே
பிரளயத்தில் நாம ரூப விபாகம் இன்றிக்கே ஸூன்யமாய் -நிர் வியாபாரமாய் இருக்க

தேவரீர் சரிர ஏக தேச சேதன அசேதனங்களை ஸ்வ இச்சையால்-ஜகத் ரூபேண பரிணமிப்பியா நின்று கொண்டு –
விஸ்தரிப்பியா நின்று கொண்டு மயில் தனது நா நா வர்ணமான தோகையை விரித்து தன் பேடைக்கு முன்
க்ரீடிக்குமா போலே
தேவரீரும் பிராட்டி முன்பு க்ரீடிக்கிறீர் -என்கிறார் –

சித்திரம் என்பதால் தார்ஷ்டாந்தித்தில் சத்வாதி குண பேதமும் ஸூஸிதம்

——————

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே
—-4-

மதுர மா வண்டு பாட
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன

மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை
ருஷிகள் கொண்டைக் கோல் கொண்டு ஆடுகை தவிர்ந்து மயில்கள் ஆடப் புக்கன
குரங்குகள் கூத்தாட்டாதல் இவற்றின் கூத்தாட்டாதல் என்றும் திர்யக் யோநிகளுக்கு நிலமாகை-

வண்டு பாட மா மயில் ஆடு
ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்ய ஸூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-

கோயிலிலே சோலைகள் நித்ய வசந்தமாய் மது ஸ்பீதமாய் இருக்கையாலே
அந்த மதுவே கழுத்தே கட்டளையாக பானம் பண்ணி-அந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக வண்டுகள் ஆனவை கலவியால் வரும் அருமை இல்லாமையாலே பாட்டை மதுரமாம் படியாக –தென்னா தெனா -என்று முரலா நிற்க சிந்துக்கு ஆடுவாரைப் போலே ஸ்லாக்யமான மயில்கள் ஆனவை -இவ் ஊரில் சோலை கொண்டல் மீது அணவும் சோலை யாகையாலே ஆலித்து ஆடா நிற்கும்-இவ் ஊரில் வர்த்திக்குமவர்களுக்கு சாரஸ்யமும் செருக்குமேயாய் யிருக்கும் யத்தனை-பராவஸ்தனான போது நித்ய முக்தரும் தன்னை அனுபவித்து ஹாவு ஹாவு ஹாவு என்று களிப்பார்கள்-அவதீர்ணன் ஆனபோது காயந்தி கேசித் க்ருத்யந்தி கேசித் -என்று முதலிகள் ஆடுவது பாடுவது ஆவார்கள்
அர்ச்சா ரூபியாக கோயிலிலே கண் வளர்ந்து அருளப் புக்கவாறே வண்டுகளும் மயில்களும் பாடுவது ஆடுவதாக நிற்கும்

ராவண வதம் பண்ணின வீர லஷ்மி யுடனே நின்ற அழகைக் கண்டு ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ்ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே  – ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட – பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள் ந்ருத்தம் பண்ண – இக் கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading