Archive for the ‘பெரிய திரு அந்தாதி –’ Category

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -61-72–திவ்யார்த்த தீபிகை –

September 17, 2014

(இறைமுறையான்.) ஆழ்வார் இவ்விருள் தருமாஞாலத்தின் தன்மைகளைச் சிந்திக்கிறபோது ஒன்றுந்தோன்றாமல்
ஆகாசத்தை நோக்கிக் கிடப்பண்டு;
“நலத்தால்மிக்கார் குடத்தைக் கிடந்தாய்! உன்னைக் காப்பான் நானலாப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் தோழுவனே” என்ற
திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு;
ஏதோவொரு காரணத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நக்ஷத்ரமயமாகக் காணப்பட்டது;
உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத் ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்திற்கு
விஷயமாகுமேயன்றி ஸாமாந்யமான லௌகிக வஸ்துவாக விஷயமாகா தாகையாலே இந்த நக்ஷத்ரங்களிலும் பகவத் ஸம்பந்தத்தை
முன்னிட்ட உத்ப்ரேக்ஷை திருவுள்ளத்திற்படவே அந்த அத்ப்ரேக்ஷையை இந்தப் பாசுரத்தினால் வெளியிடுகிறார்.

நஷத்ரங்கள் விஷ்ணு பதம் என்னும் ஆகாசத்தில் நிரம்பி-உலகு அளந்த திருவடிகளிலே தாது நிறைந்த புஷ்பங்களை-
தூவினது போலே
-ஆழ்வார் திரு உலகு அளந்த விருந்தாந்ததிலே ஊறி இருந்த படி –

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61

பதவுரை

தாழ் விசும்பின் மீது–வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன்–விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான்-ஸ்வாமியான முறைமையை யுடைய எம்பெருமான்
மண் அளந்த அந்நாள்–உலகளந்த அக்காலத்திலே
வான் நாடர்–வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி–கும்பல் கூடி
சே அடி மேல்–(அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால்–வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ–தாதுக்களாலே விளங்கா நின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின்–முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே–தெளிந்தாற் போன்றுள்ளன வன்றோ?

இறை முறையான்
ஸ்வாமியான முறைமையை-உடைய எம்பெருமான்

சேவடி மேல் –
செவ்விய திருவடிகளின் மேலே

மண்ணளந்த வந்நாள்
உலகு அளந்த அக்காலத்திலே

மறை முறையால் வானாடர் கூடி –
வேதங்களில் சொல்லிய-விதிப்படி-வானுலகத்தில் உள்ள எல்லாரும் கும்பலாகக் கூடி

-முறை முறையின்
முறை முறையாக

தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே –
தாதுக்களால் விளங்கா நின்றுள்ள-புஷ்பங்களை தெளித்தால் போல்-உள்ளது அன்றோ

தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
வெளியான ஆகாசத்திலே-விளங்கா நின்ற நஷத்ரங்கள் ஆனவை –

எம்பெருமான் முன்பு உலகளந்தருளின காலத்திலே மேலுலகத்திலுள்ளறாரெல்லாருங்கூடி அப்பெருமானது திருவடியின் மேல்
புஷ்பங்களைத் தூவினார்களன்றோ; அந்தப்பூகஙகள் போன்றுள்ளன இந்த நக்ஷத்திரங்கள் என்று உத்பரேக்ஷித்தபடி.
நக்ஷத்திரங்கள் சிறமுல்லைப்பூக்கள் போலேயிருத்தலாலும், விஷ்ணு பதமென்னப்படுகிற ஆகாசத்திலே நிரம்பியிருக்கையாலும்,
ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே எப்போதும் உலகளந்தவரலாற ஊன்றிக்கிடக்கையாலும் இங்ஙனே உத்ப்ரேக்ஷிக்கலாயிற்று.

இப்பாட்டின் வியாக்கியானத்திலே –
“லோக யாத்ரையை அநுஸந்திக்கப்புக்காலும் அவனைமுன்னாகவல்லது காணமாட்டாமை சொல்லுகிறது.” என்றும்;
“சிறியாச்சான் ‘சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதாப்போலே ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீளமாட்டார்கள்’
என்று பிள்ளைக்குப் பணித்தான்” என்றும் உள்ள ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.

——————————————————————–

(மீனென்னுங்கம்பின்.) கீழ்ப்பாட்டில் “இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்தவந்தந்நாள்” என்று
உலகளந்த வரலாற்றைச் சிறிது பிரஸங்கிக்கவே, பின்னையும் அதனை ஒருவாறு வருணித்ததுப் பாசுரங்பேச விருப்பமுண்டாகி
ரூபகாலங்கார (உருவகவணி) ரீதியிலே அருளிச்செய்கிறார்.
ஆகாசம் குடையாக அருளிச் செய்ய பொருத்தமான வற்றை அருளிச் செய்கிறார் –

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

பதவுரை

மீன் என்னும் நம்பின்–நக்ஷத்திங்களாகிற நம்புகளையுடையதும்
வெறி என்னும் வெள்ளி வேய்–சந்தினாகிற வெள்ளிக்குழையையுடையதும்
வான் என்னம்–ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா–ஒருநாளும் அழிவில்லாததுமான
வான் குடைக்கு–பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து–ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான்–உலகளந்தவனான பெருமாள்
பின்–மேலுள்ள காலமெல்லாம்
நங்கள் பிணிக்கு–நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம்–சிறந்த ஔஷதமாவன்

மீன் என்னும் கம்பில்
நவ ரத்னங்கள் ஆகிற கம்புகளை உடைத்தும்-ஆகாசம் நஷத்ரங்கள் நிறைந்து
முத்துக்கள் அழுத்தின கம்பு போலே நஷத்ர சமூஹம் தோன்றுமே
குடையில் மேல் துணியைத் தாங்கும் கம்பிகள் –

வெறி என்னும் வெள்ளி வேய்
சந்தரன் ஆகிற வெள்ளிக்-குழையை யுடைத்தும்-வெறி என்று வட்ட வடிவத்துக்கு பெயர்
இலக்கணையால் சந்த்ரனைக் குறிக்கிறது
வான் என்னும்-
ஆகாசம் என்னும் பெயரை உடைத்தும்

கேடிலா வான்குடைக்கு
ஒரு நாளும் அழிவில்லாத-பெரிய குடைக்கு

தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து
ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போலே வளர்ந்து

மண்ணளந்தான் –
உலகு அளந்தவனான பெருமான்

நாங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
மேல் உள்ள காலம் எல்லாம்-நம்முடைய சம்சாரம் ஆக்கி வியாதிக்கு-சிறந்த ஔ ஷதம் ஆவான் –
ஆகவே, ஆகாசமாகிற குடைக்குத் தனது திருவடியாகிற காம்பைக் கோப்பதென்பகிற வியாஜத்தினால்
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித்-தாரகையின் புறம் தடவி
அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை யானவன்-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-

எம்பெருமான் பண்டு உலகளப்பதற்காக ஒரு திருவடியை ஆகாசததேறத் தூக்கினது எங்ஙனே சொல்லலாம்படியிருக்கின்ற தென்றால்
ஆகாசமாகிற ஒரு பெரிய குடைக்கு நீலரத்நமயமான காம்பு கோப்பது போல் போசலாயிருந்ததென்கிறார்.
ஆகாசத்ததைக் குடையாக்க கூறுதற்கு உள்ள பொருத்தங்களை முதலடியிற் கூறுகின்றார்.
மீனென்னும் கம்பின் = உலகத்தில் சிறந்த குடையானது முத்துக்களழுத்தின பல கம்புகளையுடைத்தாயிருக்கும்;
ஆகாசமும் பல பல நக்ஷத்திரங்கள் விளங்கப்பெற்றிருக்கையாலே, தனித்தனி நக்ஷத்ரங்கள் முத்துக்கள் போலவும்.
நக்ஷத்ரஸமுக்ஷங்கள் முத்துக்கள் அழுத்தின கம்புகள் போலவும் காணப்படாநின்றன.
(முத்துக்களுக்கு வாசகமான பதம் மூலத்தில் இல்லை யெனினும், மீன் என்று நக்ஷத்திரங்களைச் சொன்னதற்கிணங்க
உபமேய கோடியில் முத்துக்கள் விவக்ஷிதமென்க.) கம்பாவது – குடையின் மேல் துணியைத் தாங்குவதற்காகப் போடும் கம்பிகள்.

வெறியென்னும் வெள்ளிவேய் = வெறி என்று வட்ட வடிவத்திற்குப் பெயர்; அஃது இங்க இலக்கணையால் சந்திரனைக் குறிக்கின்றது.
குடைக்காம்பின் நுனியில் வெள்ளிக்குழை போடுவதுண்டே; ஆகாசமாகிற இக்கடைக்குச் சந்திரன் வெள்ளிக்குழை போன்றுளனாம்.
ஆக இவ்வகைகளாலே குடையென்று சொல்லத்தக்கதும், சில நாளிருந்து அழிந்துபோகும் குடை போலன்றியே சாச்வதமாயிருக்கக்கூடிய
குடையென்று சொல்லத்தக்கதுமான ஆகாசத்திலே நீலமணி மேனியனான எம்பெருமானுடைய திருவடி நீண்டு சொருகப்பெற்றநது
மணிக்காம்பு கோத்தது போலலாகுமிறே.

—————————————————————

(பின்துரக்கும்காற்றிழந்த) முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்றுவகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்;
தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத்திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் ததலையும்தடிந்து
அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற
விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில்.
இதில் பின்னடிகளை உபமேயவாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; –
(அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேயலாக்கியம்;
“பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமானவாக்கியம்.
இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்துமுடித்து
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்;
கடலில் மேகமானது காற்றுத்தள்ளத்தள்ள மேலே நடந்துகொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்துவிடுகிறதோ
அங்கிருந்து (மேகம்) மேலே செல்லமுடியாமல் அந்தக்கடலிலேயே வந்து விழுந்திடுமே; அதுபோலேயிராநின்றது என்றபடி.
இக்கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல்தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராயவேண்டும்.
பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை
‘வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர்திணைக்குச் சேராதிறே.
ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொருவகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்;
(அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்றபதத்தோடு ‘படி’ என்கிற ஒரு பதத்தை வருவித்துக் கூட்டிக்கொண்டு
“பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணை மாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள்.
ஆனாலும் இந்த யோஜநையில் – மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற
அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்;
இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநை தான் இங்க நாம் பதவுரையில் காட்டினது.

கீழ்ச்சொன்ன இரண்டு யோஜனைகளில் எம்பெருமானை உபமேயமாகவும் காளமேகத்தை அபமாநமாகவும் நிறுத்தி உரைக்க வேண்டியதாயிற்று.
இப்போது அங்ஙனம் வேண்டா. மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம்.
இப்போது பாசுரத்தின் கருத்தை நெஞ்சிலே விளக்கக் கொள்ளுங்கள்:-

கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-
அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-
பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்-
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்

பின் துரக்கும் காற்று இலோந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

பதவுரை

பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல்–பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது
(எப்படி யிருக்கின்றதென்றால்)
திரு செய்ய நேமியான்–அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும்,
தீ அரக்கி–கொடிய ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கும்–மூக்கையும்
பரு செலியும்–பருத்தகாதுகளையும்
அன்று–ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த–அறுத்தொழித்தவனுமான
பரன்–ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய்–(அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து–பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல்
பின்பு பற்றித் தள்ளுகிற காற்றை இழந்து-கடலிலே போய் சேர்ந்த காளமேகமானது
எப்படி இருக்கிறது என்றால்

பேர்ந்தும் போய்
திருவவதார கார்யத்தை முடித்த பின்பு-மறுபடியும் சென்று

வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே
பெரிய திருப்பாற் கடலிலே-வந்து சேர்ந்த படியை-ஒத்து இருக்கின்றது

அன்று
ஸ்ரீ ராமாவதாரத்திலே

திருச் செய்ய நேமியான்
அழகிய சக்கரத்தை உடையவனும்

தீ அரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்ந்த பரன்
கொடிய ராஷசியினுடைய -சூர்பணகையின் மூக்கையும்-பருத்த செவிகளையும்
பரிச் செவி-என்றும் பாடபேதம் குதிரை காத்து போன்ற காதுகள் உடையவள் –
அறுத்து ஒழித்தவனுமான-ஸ்ரீ ராம பிரான்-

ஆழ்வார் எம்பெருமானை அநுபவிக்குந்திறத்தில் நித்ய ஸூரிகளுக்கு மேற்ப்பட்டவராயிருந்தாலும் இவர் தாம் எழுந்தருளியிருப்பது
பிரகிருதி மண்டலத்திலேயாகையாலே பிராகிருத பதார்த்தங்களிலும் கண்வைக்க நேருவதுண்டு;
அவற்றில் கண் வைத்தாலும் பகவத்விஷயத்தை முன்னிட்டுப் பேசும்படியாயிருக்குமேயொழிய, பகவத்விஷய ஸம்பந்தமின்றியே
பிராகிருத பதார்த்தத்தன்மையாக மாத்திரம் பார்ப்பதும் பேசுவதும் இவ்வாழ்வார்க்கு அஸம்பாவிதம் என்பது கீழ் அறுபத்தோராம்பாட்டிலும் நன்கு விளங்கியதே.

அதுபோலவே இப்பாட்டிலும் பிராகிருதபதார்த்தங்களில் ஆழ்வார் தமது திருக்கண் ஒட நேர்ந்தபோது,
ஒரு மேகமானது கடலில் சென்றிறங்கிக் கழுத்தே கட்டனையாக நீரை முகந்து கொண்டு மேலே கிளம்பி, காற்றுத் தள்ளத்தள்ள
ஆகாசத்திலே வந்து கொண்டிருக்கும்போது அந்தக் காற்று ஓய்ந்துவிட்டது; காற்றின் உதவியில்லாமல் மேகம் மேலே
நடைபயிலகில்லாமல் மீண்டும் அக்கடலிலேயே போய்ச்சென்றது; இதனைக் கண்ணுற்ற ஆழ்வார்க்கு நல்ல பொருத்தமான
உபமானம் நினைவுக்க வந்தது. பண்டொருகால், இராமபிரானாகிற காளமேகம் கருணாரஸமாகிற நீரைப் பரிபூர்ணமாக
முகந்து கொண்டு திருப்பாற்கடலினின்றும் புயப்பட்டு, தேவதைகளின் பிரார்த்தனையாகிற காற்று தூண்டத் தூண்ட
நிலவுலகத்தே நடந்து வந்து துஷ்டநிக்ரஹம், சிஷ்ட பரிபாலநம், தர்ம ஸம்ஸ்தாபநம் முதலிவற்றைச் செய்துமுடித்து,
அவ்வளவிலே தேவதைகளின் பிரார்த்தனை ஈடேறிற்றாக, (தூண்டும்காற்று ஓய்ந்தமையாலே) மறுபடியும்
திருப்பாற்கடலிலலே போய்ச் சேர்ந்தான் என்கிற செய்தி பொருத்தமான த்ருஷ்டாந்தமாக நினைவுக்கு வரவே அதனைப் பேசி அநுபவித்தாராயிற்று.

“பின்துரக்குங்காற்றிழந்த சூலு“கொண்டல்” என்ற உபமேயவாக்கியத்தில், மேகம் உபமேயமாக நின்றாலும்,
“பின்துரக்குங் காற்றிழந்த” என்ற விசேஷணத்தின் ஸாமர்த்தியத்தினால், மீண்டும் அம்மேகம் கடலில் போய்ச் சேர்ந்ததுவே
உபமேயமாக அநுஸந்திக்கத் தகும். பின்னாலே தள்ளிக்கொண்டு வந்த காற்றை மேகம் இழந்ததென்றால் –
மேகம் கடலில் போய்ச் சேர்ந்துவிட்டது என்ற தாமத்தனையிறே. (காற்றாடியின் கதியைநினைக்க) சூல் கொண்டல்- பூர்ணகர்ப்பமுடைய மேகம் என்கை.

“தீயரக்கிமூக்கும்பருச்செவியுமீர்ந்த” என்று சூர்ப்பணகாபங்கம் மாத்திரமே சொல்லப் பட்டிருந்தாலும் ராவணவதம் வரையிலுள்ள
ஸகலராக்ஷஸநிரஸநமும் இதில் அடங்கும். ஸகல ராக்ஷஸர்களையும் நிரஸிக்க நேர்ந்ததற்கு சூர்ப்பணகையின் பங்கமே
முதற்கிழங்காதலால் அதனைச் சொல்லவே மேலுள்ளதெல்லாம் சொல்லிற்றாகுமென்று ஆழ்வார் சுருங்கச்சொன்னபடி.
அரக்கி- ‘ராக்ஷஸீ’ என்ற வடசொற்சிதைவு. “பரிச்செவியும்” என்ற பாடமாகில், பரி என்று குதிரைக்குப் பெயராகையாலே,
குதிரையின் காதுபோன்ற காதை’ என்று பொருளாகும்.

நம்பிள்ளை காட்டியருளின இந்த யோஜநையில் மூலம் ஒழுங்காக அந்வயிக்கப்பெறுவது தவிர, மேகத்தை உபமேயமாக நிறுத்தி
யுரைத்தலாகிற ஸவாரஸ்யாதிசயம் போற்றத்தக்கது. ஆழ்வார்க்கு லோக யாத்திரையும் பகவதநுபவத்திலே அந்வயிக்கிறதென்கைக்குப் பாங்கு.

———————————————————————-

(பரனாமவனாதல்.) கீழ்ப்பாட்டில் ஸ்ரீராமாவதார விஷயம் ப்ரஸ்துதமாகவே, எம்பெருமான் நம்மைத் திருத்திப்பணி
கொள்ளவேண்டி ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே மநுஷ்யஸஜாதீயனாய்ப்பிறந்து “உங்களைப்போலே நானும் ஒரு மநுஷ்யனே”
என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், மராமரமேழெய்தது, புள்ளி ஸ்வாய் கீண்டது முதலிய அருமையான
திவ்ய சேஷ்டிதங்களையும் இடையிடையே காட்டிக் கொண்டிருந்தானாதலால் அவற்றை நோக்கி
‘இவன் நம்மைப்போன்ற ஸமாந்ய மநுஷ்யனல்லன்; இவன் பராத்பரனான பரமபுருஷனேயாவன்’ என்று கொண்டு
அவன் பக்கல் பக்திபண்ண வேண்டியிருந்தும், அவஜாநந்தி மாம் மூடா: மாநுஷ்யம் தநுமாச்ரிதம்”
(நான் மநுஷ்யயோநியிற் பிறந்தேனென்று என்னை மூடர்கள் அவமதிக்கின்றார்கள்) என்று கீதையில் அப்பெருமான் தானே
சொல்லி வருந்தும்படியாக அநியாயமாய் அவமதித்துப் பாவிகளாய்க் கெட்டுப் போனார்களே ஸம்ஸாரிகள்;
அப்படி அவமதியாமல் அவனே பரமபுருஷனென்று பாவித்திருப்பர்களாகில் அவர்களைத் தேவர்களெல்லாரும்
கையெடுத்துக் கும்பிட்டிருப்பர்களன்றோ?- என்று அநுதபிக்கிறார்.

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனாய் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப்  புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழவே கலந்து–64-

பதவுரை

அன்று–முற்காலத்தில்
மரம் ஏழ் எய்தானை–(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை–பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல்–‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை
உõனால்-தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில்–அநுஸந்திப்பர்களேயானால்
(அப்படிப்பட்ட விவேகிகளை)
அமரர் கை-தேவர்களின் கைகளானவை
கலந்து–ஒன்றுசேர்ந்து
ஒரு மூன்று போதும்–எப்போதும்
தொழாவே–ஸேவிக்க மாட்டாவோ.

பரனாம் அவனாதல்
அவன் பரனாம் ஆதல்-அந்த ஸ்ரீ ராமபிரானும் ஸ்ரீ கண்ண பிரானும்-நம்மைப் போன்ற மனுஷ்யர் அல்லர் –
சாஷாத் பரம புருஷரே ஆவார் என்கிற விஷயத்தை-அனுசந்திப்பவர்களை-தேவர்கள் கை எடுத்து தொழுவார்கள்
அன்றிக்கே
தேவர்களே தங்கள் அஹங்காரம் ஒழித்து-கை தொழுவார்கள் என்றுமாம்

பாவிப்பராகில்
அனுசந்திப்பர்களே ஆனால்

உரனாய் ஒரு மூன்று போதும்
தங்களுடைய மனத்தினாலே எப்போதும்
உரஸ் -மார்வுக்கு வாசகம் -நெஞ்சையும் சொல்லும்
உரம் -வலி என்றுமாம் -அத்யாவசாயம் உறுதியாக கொண்டால்

மரம் ஏழு அன்று எய்தானைப்
சுக்ரீவன் உடைய நம்பிக்கைக்காக-சப்த சால வருஷங்களை எய்த ஸ்ரீ ராமபிரான் என்ன

புள்ளின் வாய் கீண்டானையே
பகாசுரன் வாயைக் கிழித்து எறிந்த-ஸ்ரீ கண்ணபிரான் என்ன-இவர்களையே

அமரர் கை தான் தொழவே கலந்து-
தேவர்கள் கைகள் ஓன்று சேர்ந்து-சேவிக்க மாட்டாவோ-

உரனால் = ‘உரஸ்’ என்னும் வடசொல் மார்வுக்கு வாசகமாய் நெஞ்சையும் சொல்லக்கடவது; அச்சொல் உரம் எனத் திரிந்து;
மகானகரப் போலியுண்டாகையாலே உரன் என்று கிடக்கிறதிங்கு எதுகையின்பம் நோக்கி,
இங்ஙனன்றிக்கே உரம் என்று தனியே ஒரு தமிழ்ச் சொல்லுமுண்டு; அதற்கு வலி என்று பொருள்;
இங்கு அத்யவஸாயத்தைச் சொன்னபடி ‘அவன் பரமபுருஷனேயென்று உறுதியாகப் பாவித்திருப்பர்களாகில்’ என்றபடி.

மரமேழன்றெய்தானை என்பதனால் ஸ்ரீராம வதாரத்தையும், புள்ளின்வாய்கீண்டயானை என்பதனால் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தையும் குறித்தது-
மற்றும் இப்படிப்பட்ட பல விபாவாவதாரங்களையுங்காட்டினபடி
“அமரர்கைதான் தொழாவே கலந்து” என்பதற்கு இங்கு நாம் உரைத்த பொருளாவது- ‘மநுஷ்யாவதாரம் பண்ணின எம்பெருமான்
திறத்திலும் பரத்வபுத்தியை யார் வஹிக்கின்றார்களோ அவர்களை அமரர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள்’ என்று உரைத்தோம்.
மூலத்தின் நிலைமைக்கு நன்கு சேரும்படி வேறொருவகையாகவும் உரைக்கலாம்;-
அமரர் என்றது அஹங்காரிகளான தேவதைகளைச் சொன்னபடியாய்; ஸம்ஸாரிகள் விபவாவதாரங்களிலெம்பெருமான்களை
அலக்ஷியம் செய்யாமல் பரத்வத்தையே பாவித்துப் பணிந்திருப்பர்களாகில் அஹங்காரிகளான தேவர்களும் தங்களுடைய
அஹங்காரத்தை யொழித்துவிட்டுக் கூடவே தொழுது உஜ்ஜீவித்திருப்பர்களன்றோ? என்றுரைக்கவுமாம்.

மரமேழன்றெய்த வரலாறு:- ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின்
பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும், துந்துபியின் உடலெலும்பை
ஒரு போஜனை தூரம் தூக்கி யெறிந்ததையும் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவனைவெல்வது ஸாத்யமாகுமோ?
என்று சொல்ல அது கேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு விச்வாஸம் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்ற, ஸுக்ரீவன்
‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புபோலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது ஸந்தேஹமுண்டாகின்றது;
எழுமரா மரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும்’
என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்காமறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான்
துந்துபியின் உடலெலும்புக்குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து போஜனை தூரத்துக்கு அப்பால் எறிய,
அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலரா திருக்கையில். வாலி இதனைத் தூக்கியெறிந்தான்;
இப்போது உலர்நதுபோன இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை
ஏழு மராமரங்களின்மேல் ஏவ,அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலங்கங்களையும் துளைத்துச் சென்று மீண்டும்
அம்புறாத் தூணியை அடைந்தது- (மராமரம்- ஆச்சாமரம்.)

புள்ஸின்வாய் கீண்ட வரலாறு:- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர்கின்ற கண்ணபிரான் மீது
கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியுமாறு நியமிக்கப்பட்ட ஓரஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று
யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போலே எரிக்கவே,
அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்தநினைக்கையில்,
கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றிக் கிழித்திட்டனன் என்பதாம்.

——————————————————————

(கலந்துநலியும்.) இது முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு நன்மை உபதேசித்தருளுகிறார்.
நெஞ்சே; நம்முடன் கூடவேயிருந்து நம்மைத் துன்பப்படுத்துகின்றனவாய், அநுபவித்தே ஒழிக்க வேண்டுமமையான
பாவங்களை முகஞ்சிதறப்புடைத்து, பின் பொருகாலும் நம்மருகே நாடவொட்டாமல் துரத்த வேண்டுமானால்
எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு–65-

பதவுரை

நெஞ்சே-வாராய்மனமே!
கலந்து-நம்மோடு கூடவேயிருந்து
நலியும்–ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை–கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான்–முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலங்கல் போல்–மலை போன்றவனும்
தொல் மாலை–அநாதி காலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை–சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை–ஸ்ரீமன் நாராயணனும்
மாதவனை–திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை–பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும்–ஸர்வகாலமும்
குட்டு–ஸமர்ப்பி.

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
வாராய் மனமே -நம்முடன் கூடவே இருந்து-ஹிம்சிக்கின்ற கடுமையான துக்கங்களை
துயர்  – துக்கங்களும் காரணமான பாபங்களும் -சொல்லும்-
மலங்க அடித்தல் அசம்பாவிதம் ஆயினும் தோஷத்தைக் காட்ட-அருளிச் செய்கிறார்

மலங்க வடித்து மடிப்பான்
முகம் சிதறப் புடைத்து துரத்த வேண்டில்

விலங்கல் போல்
மலை போன்றவனும்-பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரபிரதிஷ்டையாய் இருப்பவன் –
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா வென்று கூவும்
-திருவாய் மொழி –

தொல்மாலைக்
அநாதி காலமாக நம் மேல் வ்யாமோஹம் உடையவனும்-
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய-
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே –
திருவாய்மொழி

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

நாரணனை
ஸ்ரீ மன் நாராயணனும்

மாதவனை
திருமகள் கேள்வனுமான-பெருமான் விஷயத்திலே

சொல்மாலை எப்பொழுதும் சூட்டு
பாசுரங்கள் ஆகிற மாலைகளை-சர்வ காலமும் சமர்ப்பிப்பாய்
அடியவர்கள் வாய்ச் சொல்லை பூ போலே தனது தலையிலே சூட்டிக் கொள்பவன்
தலை துலுக்கிக் கொண்டு கொண்டாடுவான் –
சூட்டு
சூட்டினேன் சொல்மாலை –பொய்கையாழ்வார்-
உலகில் மாதர்களுக்கு மலர்களால் அழகு உண்டாவது போலே-பராத்பரனுக்கு அருளிச் செயல்களால் அழகு உண்டாகுமே

துயர் என்று துக்கங்களையும் துக்கங்களுக்குக் காரணமான பாவங்களையுஞ் சொல்லும்.
அசேதநங்களான பாவங்களை மலங்கவடித்தால் அஸம்பாவிதமாயினும், அவற்றினிடத்துத் தமக்குள்ள
ரோஷத்தைக் காட்டினாராமித்தனை. மடிப்பான்- ஆன்விகுதிபெற்ற வினையெச்சம்.

விலங்கல்போல்தொன்மாலை = ‘விலங்கல்’ என்று மலைக்குப்பெயர்; மலையானது ஒருவராலும் அசைக்க முடியாமல்
ஸ்திரப்ரதிஷ்டையாக இருப்பதுபோல, எம்பெருமான் குத்ருஷ்டிகள் முதலான மாதாந்தரஸ்தர்களுடைய
எப்படிப்பட்ட குத்ஸிதவாதங்களாலும் சலிப்பிக்க முடியாமல் வேதவேதாந்தங்களில் ஸ்திரப்ரதிஷ்டையையுடையனாயிருத்தல் பற்றி
மலையை உவமையாகச் சொல்வார்கள். மற்றும் பல காரணங்களுமுண்டு.
“நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே’ வாவென்றுகூவும்” என்ற திருவாய்மொழியும் இங்கு அநுஸந்திக்கத்தகும்.
மால் என்பதற்கு ‘மோஹமுடையவன்’ என்று பொருள்; ‘தொல் மால்’ என்றது – நெடுநாள் முதற்கொண்டே நம்மேல் மோஹமுடையவன் என்றபடி:
“எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கேயருள்கள் செய்ய, விதிசூழ்ந்ததால் எனக்கேலெம்மான் திரிவிக்கிரமனையே.” என்று
திருவாய் மொழியிலருளிச் செய்வது காண்க.

கேசவன் என்பதற்கு- சிறந்த மயிர்முடியையுடையவன் என்றும், பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன் என்றும்,
கேசி யென்னும் பெயரையுடையவனாய்க் குதிரை வடிவங்கொண்டு நலியவந்த அசுரனைக் கொன்றவனென்றும்
மூன்றுவகையாகப் பொருள் கூறுவதுண்டு.

சொல்மாலை சூட்டு = அடியார்களின் வாயில் நின்றும் வருகிற பாசுரம் எம்பெருமானுக்குப் பூமாலைபோன்று பரமபோக்யமாயிருத்தலால் ‘
சொல்மாலை’ என்பது வழக்கம். பூமாலையைத் தலைமேலணிந்து மகிழ்வது போல, இப்படிப்பட்ட அருளிச்செயல்களையும்
எம்பெருமான் தலைதுலுக்கிக்கொண்டாடுவன் என்பது தோன்ற ‘சூட்டு’ எனப்பட்டது.
“சூட்டினேன் சொல்மாலை’ என்றார் பொய்கையாழ்வாரும் உலகில் மாதர்கட்குப் பூமாலையினால் அழகு உண்டாவது போலே
எம்பெருமானுக்கு அருளிச் செயல்களினால் அழகு உண்டாகுமென்க.

————————————————————————–

(சூட்டாய நேமியான்.) நெஞ்சே! நீ ஸாமாந்யமாக மற்றையோருடைய நெஞ்சாக இராமல் என்னுடைய நெஞ்சாக அமைந்தபடியாலும்,
நான் ஒரு வழிபோனால் நீ ஒருவழி போகையன்றியே சாலவும் எனக்கு நீ உடன்பட்டிருக்கையாலும்
உனக்கு ஒருவிசேஷார்த்தம் சொல்லுகிறேன் கேள்;
உலகத்திலே உணர வேண்டும் பொருள்கள் பலவுள்ளனவென்று பலர் நினைத்திருப்பர்களாயினும்,
நினைத்திருப்பதாவது உணரவேண்டும் பொருள் ஒன்றே; அஃதாவது பகவத்விஷயம்.
“ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” என்று பொய்கையாழ்வாரும் அருளிச் செய்தாராகையால்
பகவத்விஷயமொன்றே நமக்கு உணரத்தக்கது; அதனையே நீ உணர்; இதனை நான் மற்றையோர்க்குச் சொன்னால் ஏசுவார்கள்;
ஆகையாலே ஒருவருக்கும் இதை நான் சொல்வதில்லை, உனக்கே சொன்னேன்- என்கிறார்.

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

பதவுரை

நெஞ்சை–ஓ மனமே!
சூடு ஆய நேமியான்–(ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும்
மாட்டே–அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த–துன்பப்படுத்தின
மாயவனை–ஆச்சர்யனும்
ஈட்ட–திரண்ட
வெறிகொண்ட–பரிமளம் மிக்க
தண் துழாய்–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன்உயிரை–வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
வேதியனை–வைதிகனுமான எம்பெருமானை
அறிகண்டாய்–அநுஸந்தித்திரு;
அது சொன்னேன்–ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன்.

சூட்டாய நேமியான்
சூடு ஆய நேமியான்-திவ்யாயுதமாயும்-திவ்யாபரணமாயும் அலங்காரமாக இருக்கிற
திரு ஆழியை உடையவனும்-வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு

தொல்லரக்கன் இன்னுயிரை
வெகு காலமாக தீமைகளே செய்த-இராவணன் உடைய இனிய உயிரை-

மாட்டே துயர் இழைத்த
அவன் பக்கல் இருந்து கொண்டே துன்பப்படுத்தின-
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே ராஷேச்வர
-வால்மீகி-ஸ்ரீ ராம பாணங்களை நினைந்தே ராவணன் உரு அழிந்தான் –

மாயவனை –
ஆச்சார பூதனும்

ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை
திரண்ட -ஈண்ட எனபது எதுகைக்காக ஈட்ட -வல் ஒற்று
இது பரிமளத்துக்கும்-துழாய்க்கும் விசேஷணம்-பரிமளம் மிக்க-குளிர்ந்த-
திருத் துழாய் மாலை அணிந்த-வைதிகனுமான எம்பெருமானை

நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது
நெஞ்சே – அறி கண்டாய் -அது சொன்னேன் -ஒ மனமே -அனுசந்தித்து இரு
ஒருவருக்கும் சொல்ல ஒண்ணாத இந்த விஷயத்தை உனக்குச் சொன்னேன்
என்னுடைய நெஞ்சு என்பதாலும்-உடன்பட்ட நெஞ்சு என்பதாலும்-இது ஒன்றே உணர வேண்டிய பொருள்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –பொய்கையார்
சொன்னேன் இது என்னாமல் அது -என்றது அர்த்த கௌரவம் தோற்ற அருளிச் செய்கிறார்-

மூன்றடிகளால் பகவத்விஷயத்தை வருணிக்கிறார். சூட்டாய நேமியான் -சூடா” என்றகிற வடசொல் ‘சூடு’ என விகாரப்பட்டு,
அலங்காரமென்று பொருள் பெற்றுக்கிடக்கிறது. எம்பெருமானைக் கொண்டு அஸுரராக்ஷஸ ஸம்ஹாரம் முதலிய காரியங்களைக்
கொள்ள நினைப்பவர்கள் திருவாழியாழ்வானை ஆயுதமாகக் கருதுவார்கள்
அங்ஙனன்றிக்கே அநந்யப்ரயோஜநராய் “வடிவார்சோதி வலத்துறையுஞ்சுடாழியும் பல்லாண்டு” என்று திருப்பல்லாண்டு பாடுமவர்கள்
எம்பெருமானுடைய திவ்யாயுதங்களெல்லாவற்றையுமே திருவாபரணகோடியிலே அநுஸந்திப்பர்களாதலால்
அது தோன்ற இங்கு சூட்டாயநேமியான் என்றார். நேமி- திருவாழியாழ்வான்.

தொல்லாக்கனின்னுயிரை மாட்டே துயரிழைத்த மாயவன்- எம்பெருமான் அடியவர்களுக்கு அநாதிகாலமாகவே
நன்மைகளைச்செய்து வருவது போல, இராவணன் பாகவதர்களுக்கு அநாதிகாலமாகத் தீமைகளியற்றிவருதலால் தொல்லரக்கன் எனப்பட்டான்.
அவனுடைய இன்னுயிர்க்குத் துயருண்டாகின மாயவன் இராம பிரான். மாட்டே என்றது ஸமீபத்திலே யிருந்துகெண்டு என்றபடி.
“மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. =ஸ்மாக் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேச்வர:” என்று-
இராவணன் இராமபிரானுடைய அம்புகளை நினைந்து நினைந்து உருவழிந்தானென்று ஸ்ரீவால் மீகிபகவான் பேசினபடியை இங்கு நினைப்பது.

“ஈட்ட வெறிகொண்ட” என்றவிடத்து, ‘ஈண்ட’ என்றிருக்கவேண்டுவது எதுகையின்பம் நோக்கி ‘ஈட்ட என்று வல்லொற்றாய்க் கிடக்கிறதென்ப.
திரண்ட என்றபடி. இது வெறி (பரிமளத்து)க்கு விசேஷணமாகவுமாம்; துழாய்க்கு விசேஷணமாகவுமாம்
வேதியன் = ‘வைதிக:’ என்ற வடசொல்லிகாரம். “சொன்னேனிது” என்ன வேண்டியிருக்க, “சொன்னேன் அது” என்றது அர்த்த கௌரவர் தோற்றவாம்.

————————————————————————–

(அதுவோநன்றென்று) உபய விபூதியையும் எளிதில் தந்தருளவல்ல எம்பெருமான் திருவடிகளையே வாழ்த்து நெஞ்சமே! என்கிறார்.
தேவதாங்தரங்கள் தம் தம் அடியவர்களுக்குச் சில அபேக்ஷிதங்களைத் தாக்கடவனவாகிலும் பரமபதத்தைத் தருவது
எந்த தேவதைக்கும் முடியாதகாரியம்; எம் பெருமானுக்கோ அது பரமஸுலபமானது;
ஆகையாலே, நெஞ்சமே! நீ பரமபதந் தவிர மற்றதெல்லாம் தீது என்று விட்டிட்டு,விலக்ஷணமான அப்பரமபதமொன்றையே விரும்புவாயாகிலும்,
அது எம்பெருமானுடைய திருவருளால் எளிதில் கிடைக்கக்கூடியதே; அதனைத் தருவதில் அவனுக்கு அருமையேயில்லை அவனுக்கு
இது ஒரு சரக்கேயன்று காண்;
அங்ஙனல்லாமல் பாவோ நாந்யத்ரா கச்சதி” என்று திருவடிசொன்னாற்போலலே அந்தப் பரமபதத்தையும் உபேக்ஷித்துவிட்டு
இந்த மண்ணுலகத்திலேயே நிலைபெற்று நின்று அநுபவிக்க வேணுமென்று விரும்பினாயாகிலும்
இதுவும் அவனால் எளிதில் தரக்கூடியதே; ஆகையால் ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தமும்
எம்பெருமானால் நாம் எளிதில் பெக்கூடியதே; ஆன பின்பு இப்படி ஸர்வேசக்தனான
எம்பெருமானுடைய திருவடிகளையே வாழ்த்தப்பாராய்- என்றாராயிற்று.
(பரமபதாநுபவத்திலும் இஹலோக போகத்திலும் விருப்பம் வைத்திடாமல்
கண்ணன் கழிலிணை வாழ்த்துவதொன்றிலேயே நோக்காக இருக்கக்கடவை என்பது உள்ளுறை.)

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

பதவுரை

மடநெஞ்சே–அறிவுகெட்ட மனமே!
அதுவோ நன்று என்று–(இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில்–அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும்–இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும்–அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே–அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து–அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன்–ஆகவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வாழ்த்துவதே–மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல்–அப்பஸிக்கக்கடவாய்.

அதுவோ நன்று என்று
இவ்வுலகம் இருப்பை விட-அந்த பரமபத அனுபவம் சிறந்தது என்று கொண்டு

அங்கு அமருலகோ வேண்டில்
அந்த பரம பதத்தை-விரும்புகிற பஷத்தில்-ஒ காரம் – பரமபத வைலஷண்யம் காட்டும்
ஸ்வர்க்க லோகம் விரும்புகிற பஷத்திலும் என்றும் கொள்ளலாம்

அதுவோர் பொருள் இல்லை அன்றே
அதனைக் கொடுப்பது-எம்பெருமானுக்கு ஒரு அசாத்தியமான-கார்யம் அல்லவே -ஒரு சரக்கே அன்று –
அதுவோ பொருள் பாட பேதம்

அது ஒழிந்து
அந்த பரமபத அனுபவத்தை உபேஷித்து விட்டு

மண்ணின் நின்று ஆள்வேன் எனினும்
இந்த மண்ணின் மேல் நின்று-ஐஸ்வர்யத்தை ஆள வேணும் என்று விரும்பினாய் ஆகிலும்-
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
-மண்ணிலே இருந்து பகவத் விஷயத்தை அனுபவிக்க என்றுமாம்

கூடும்
அதையும் அவன் எளிதிலே அருளக் கூடும்

மட நெஞ்சே

கண்ணன் தாள் –
ஆக-இப்படி உபய விபூதியையும் அளிக்க வல்ல-எம்பெருமானுடைய திருவடிகளை
ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தத்தையும் அளிக்க வல்லவன்

வாழ்த்துவதே கல்
மங்களா சாசனம் பண்ணுவதையே-அப்யசிக்கக் கடவாய்-உபய விபூதியையும் அபேஷியாமல்
கண்ணன் கழல் இணை வாழ்த்துவதே
-இது ஒன்றிலேயே –
நோக்காக இருக்கக் கடவை-

“அதுவோநன்று” என்றவிடத்து ஓகாரம் பரமபதத்தின் ஸவலக்ஷண்யத்தைக் காட்டும்.
“அமரருலகு” என்பது ‘அமருலகு’ எனக் குறைந்து கிடக்கிறது.
“அதுவோ பொருளில்லை” ‘அதுவோர் பொருளில்லை” என்பன பாடபேதங்கள்.

மண் நின்று ஆள்வேனெனிலும் = இதற்கு இரண்டுவகையாகப் பொருள்கொள்ளலாம்;
இந்த மண்ணுலகத்திலேயே யிருந்து கொண்டு பகவத்விஷயத்தையநுபவிக்க விரும்பினாலும் என்பது ஒருபொருள்.
“ஒரு நாயகாமய் ஒடவுலகுடனாண்டவர்” (திருவாய்மொழி 4-1-1-) என்கிறபடியே இவ்வுலகத்தில் ஐச்வரியத்தை
யநுபவிக்கவிரும்பினாலும் என்பது மற்றொரு பொருள். விரும்பும் பலன் எதுவாயினும் பகவானுடைய திருவடிகளை வாழ்த்துவதே
யாத்திரையாயிருக்க வேணுமென்று விளக்கியவாறு.
முதலடியில் “அமருலகோ வேண்டில்” என்றதக்கும் ‘ஸ்வர்க்கலோக புருஷார்த்தத்தை விரும்பினாலும் என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.
திவிவா புவிவா மாமஸ்து வாஸோ நரகேவா நரகாந்தக! ப்ரகாமம்- அவதீரித சாரதாரவிந்தௌ சரணௌ தே மரணேபி சிந்தயாநி” என்ற
முகுந்தமாலையை ஒரு புடையொக்குமிப்பாசுரம்.

கல்- முன்னிலை எவலொருமை வினைமுற்று.

——————————————————————–

(கல்லுங்கனைகடலும்.) கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார்.
அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை
இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார்.
எம்பெருமான் திவ்யமங்கள விக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில்.

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–68-

பதவுரை

வெல்ல நெடியான்–மிகவுயர்ந்தவனும்
நிறம் கரியான்–நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்
உள் புகுந்து–உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான்–அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை;
(ஆகையாலே)
கல்லும்–திருவேங்கடமலையும்
கனை கடலும்–கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம்–வைகுண்டமென்கிற
வான் நாடும்–வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல்–அல்பமாய் விட்டன போலும்;
ஏ பாவம்–ஐயோ பாவம்!

கல்லும்
திருவேங்கட மலையும்

கனைகடலும்
கோஷிக்கின்ற திருப்பாற் கடலும்-எம்பெருமான் உறைவதால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக கோஷிக்குமே

வைகுந்த வானாடும்
ஸ்ரீ வைகுண்டம் என்கிற-வானுலகமும்

புல்லென்று ஒழிந்தன கொல்
அல்பமாய் விட்டன போலும்-போக்கு வரத்து அற்ற படியால் புல் மூடிப் போயின இவ்விடங்கள்

ஏ பாவம்
ஐயோ பாவம்-இரக்கம்  தோற்ற அருளிச் செய்கிறார் –

வெல்ல நெடியான்
மிக உயர்ந்தவனும்-நாம் எவ்வளவு முயன்றாலும் எட்டாமல் இருப்பவன் –

நிறம் கரியான்
நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்-வந்து புகுந்ததாக தோற்றம் மட்டும் இல்லை
மெய்யே வந்து புகுந்தான்

உள் புகுந்து
உள்ளே பிரவேசித்து

நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய உள்ளத்தை விட்டு நீங்குகிறான் இல்லை –
அகலகில்லேன் இறையும் என்று உருச் சொல்லிக் கொண்டே-ஸ்தாவர பிரதிஷ்டையாக உள்ளான்-

அங்குத்தை வாஸம் உபாயம்-மெய்யடியார் ஹிருதய கமலமே பரம உத்தேச்யம் அவனுக்கு-
கல்லும் கனை கடலும் வைகுந்த வானோடும் புல்லென்று ஒழிந்தன கொல்
என்கிற ஈரச் சொல் பாவியேனுடைய நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்பட பெறுவதே
ஆழ்வார்கள் அனுபவம் எங்கே நம்முடைய அனுபவம் எங்கே-ஏதோ பாக்ய விசேஷத்தால் நாமும் சொல்லப் பெற்றோமே-
இரவில் பள்ளி கொள்ளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுசந்திக்க வேண்டிய பாசுரம்

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு -தடவரைவாய் மிளிந்து மின்னும் –
இரண்டு பாசுரங்களும் இதில் இரண்டாம் அடிக்கு எதிர் நில்லா-என்பர் அழகிய மணவாள சீயர்-

வெல்ல நெடியான் = ‘வெல்ல’ என்றது (மிகவும்) என்றபடி. நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாதிருப்பவன் என்கை.
அவன் தானே தன்னருளாலே எளியனாகில் தடை செய்வாரில்லாமையாலே நிர்ஹேதுக க்ருபையாலே வந்து புகுந்தானென்கிறது.
(வெல்ல- வெல்வதற்கு, நெடியான்- முடியாதவன்; ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்று பொருள் கூறுதல் சிறவாது.)
வந்து புகுந்ததாகத் தோன்றிவிடுதல் மாத்திரமல்ல; மெய்யே வந்து புகுந்தானென்கைக்காக நிறங்கரியான் என்று
திருமேனியையுங்கண்டறிந்து பேசுகிறார் போலும்.
பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று
தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து
“அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே,
எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்”
என்று உருகிச் சொல்லிக் கொண்டு கிடக்கிறானென்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று அருளிச்செய்யுமழகு காண்மின்.

எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் திருமலை பெருமான்கோயில் முதலான
உகந்தருளினவிடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகின்றானெற்றும்,
ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும்,
இது ஸித்தித்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் ஆதரம் மட்டமாய் விடுமென்றும்
ஸ்ரீவசநபூஷணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச்செய்ததெல்லாம்
இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டேயென்றுணர்க.
“கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை என்சொல்வோம்?
இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியோமான நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே!
ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவ்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு.
ஆயினும், ஏதோ பாக்யவிசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ
சற்றுப்போது நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இவ்விருள் தருமாஞாலத்திடைய பெற்றதொரு கனத்த பேறாம்.

ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப்
பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.

கல்லும் = கல் என்று ஸாமாந்யமாக மலையைச் சொல்லிற்றாய், அது இங்கே சிறப்பாய்த் திருவேங்கடமலையைச் சொல்லிற்றாகிறது.
கனைகடல் = எம்பெருமான் எப்போதும் தன்னிடத்து உறைகின்றானென்ற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்கின்ற கடல் என்கை.
“புல்லென்றொழிந்தனகொல் = புல்லென்று – அற்பத்தனமடைந்து.
எனது நெஞ்சின் முன்னே அவையெல்லாம் அற்பமாய்விட்டன போலும் என்றவாறு.
அவ்விடங்களில் போக்குவரத்து அடியோடு அற்றுப்போனபடியாலே அவை புல்மூடிப்போயினவோ என்கிறார்- என்றரைப்பார் சிலர்.
ஏபாவம்! = சிறந்த ஸ்தலங்களென்று கொண்டாடப்படுகிற அவ்விடங்களுக்கு இப்படிப்பட்ட அவஸ்தையா வந்துவிட்டது!
ஐயோ பாவம்!! என்று இரங்கந் தோற்றப் பேசுகிறபடி.

பெரியாழ்வார் திருமொழியின் முடிவிலுள்ள “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு” “தடவரைவாய் மிளிர்ந்து மின்னும்”
என்ற இரண்டு பாசுரங்களும் இப்பாசுரத்தின் இரண்டாமடிக்கு எதிர்நில்லா என்று அழகிய மணவாளச்சீய ரருளிச் செய்யும்படி.

——————————————————————-

(அகஞ்சிவந்த கண்ணினராய்) இப்படி என்னுள்ளே மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து வாழ்கின்ற
திருமாலின் திருக்குணங்களை அநுஸந்திக்கப் பெறுகையாகிற ஏற்றமுடைய என்னை ஒருவராலும்
திரஸ்கரிக்க முடியாதென்று மகிழ்ச்சியின் கனத்தாலே மார்பு தட்டிப் பேசுகிறார் போலேயிருக்கிறது இப்பாசுரம்.
எம்பெருமான் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்–

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

பதவுரை

வல்வினையர் ஆவார்–கடுமையான பாவங்களானவை
(தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே)
அகம் சிவந்த கண்ணினர் ஆய்–(கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய்
முக்கி–வருந்தி
முகம் சிதைவராம் அன்றே–முகம் வாடியிருக்கின்றனவல்லவோ?
மிகும்–எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால்–திருமாலினுடைய
சீர் கடலை–கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த–உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை–சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே–செவ்வையாக
அடர்ந்து–நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம்–யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)

அகம் சிவந்த கண்ணினராய்
கோபத்தினால் உள்ளே சிவந்த-கண்களை யுடையனவாய்-முன்பு போலே தனிக் கொல் செலுத்த முடியாமையினாலே

வல்வினையாராவார்
கடுமையான பாபங்களானவை-உயர் திணை யாகவும் கண்ணும் மூக்கும் உள்ளன போலும் பேசி-அவற்றின் கொடுமையை விளக்குகிறார்

முகம் சிதைவராம் அன்றே
முகம் வாடி இருக்கின்றன அல்லவோ

முக்கி
வருந்தி-வாய் விட்டு சொல்ல முடியாமல்-வெறுமனே இருக்க முடியாமல் முக்கி

மிகும் திரு மால்
எல்லாரிலும் மேம்பட்ட வனான-திருமாலினுடைய-மிகச் சிறியவனான உள்ள என்னுள்ளும் வந்து இருக்கச் செய்தேயும்-
விசாலமான இடங்கள் போலே உடல் பூரிக்கின்ற திருமால்-என்னவுமாம் –
சீர்க்கடலை யுள் பொதிந்த
கல்யாண குணங்கள் ஆகிற-கடலை உள்ளே அடக்க் கொண்ட-அவனது கல்யாண குணங்களை இடைவிடாமல் அனுசந்தித்து

சிந்தனையேன் தன்னை
சிந்தனையை உடையேனான என்னை

ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து
செவ்வையாக நெருக்கி-யாரால் உபத்ரவிக்க முடியும்-ஒருவராலும் என்னை திரஸ்கரிக்க முடியாது-

இதற்கு முன்பு என்னை மிகவும் வருத்தின கொடிய கருமங்கள் இப்போது முன்பு போலே தனிக்கோல் செலுத்தி
நலிய முடியாமையா லுண்டான சீற்றத்தாலே கண்கள் குதறிப்போய்,
“இதற்கு முன்பு செருக்கராய்த் திரிந்தநாமோ இப்போது இப்படி பரிபவப்படநின்றோம்” என்று வாய்விட்டுக் கதறவும்
கதறாதிருக்கவும் மாட்டாமல் ஊமைகள் உளறுமாபோல உளறிக் கொண்டு முகபங்கமடைகிறபடியைக் காணுங்கொள் என்கிறார் முன்னடிகளில்,
அசேதநங்களான கருமங்களை “வல்வினையராவார்” என உயர்திணைபோலக் கூறுவதும்,
அவற்றுக்குக் கண்ணும் முகமும் உள்ளனபோலக் கூறுவதும், ஆழ்வாருடைய தற்போதைய மகிழ்ச்சியினாலாய கற்பனைகளென்க.
முக்குதல்- வாய்விட்டுச் சொல்லமாட்டாமையும் வெறுமனிருக்கமாட்டாமையும்.

இனிமேல் எப்படிப்பட்ட கருமங்களும் தம்மை அடர்க்கமாட்டாவென்பதையும் அதன் காரணத்தையும் பின்னடிகளிற் பேசுகிறார்.
மிகும் திருமால் = மிகச் சிறிய என்னுள்ளே வந்திருக்கச் செய்தேயும் விசாலமான விடங்களிற்போல உடல் பூரிக்கின்ற திருமால் என்னவுமாம்.
சீர்க்கடலை உள்போதித்தலாவது- அப்பெருமானது அளவற்ற திருக்குணங்களை இடைவிடாது அநுஸந்தித்தல்.
பகவத்குணாநுபவம் பண்ணப்பெற்ற யான் இனி யார்க்கும் சளைக்கமாட்டேன்;
ஒன்றையும் பொருட்படுத்தாமல் எனது காரியமே கண்ணாயிருப்பேன் என்றாராயிற்று.

————————————————————–

(அடர்பொன்முடியானை.) வல்வினைகள் இனிமேல் என்னை அடர்க்கதில்லா என்றார் கீழ்ப்பாட்டில்.
இனி அந்த வல்வினைகள் என்னை என்ன செய்தாலும் எனக்கு வருவதொரு கெடுதியில்லையென்கிறாரிதில்.
எம்பெருமானே ஸகலவித பந்துவுமாவன் என்று உறுதியான அத்யவஸாயம் கொண்டேனான பின்பு
இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை யென்கிறார்.
இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான
தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;
பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்;
சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள்.
ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ? பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும்
தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
பகவத் குணங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்குப் புறம்பான லாப நஷ்டங்களொன்றும் கணிசிக்கப்பட மாட்டாவாகையாலே ஆழ்வாரும்
“யாதாகில் யாதேயினி” என்று மிடுக்குத் தோற்றமொழிகின்றார்.

சர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே
இனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்–

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர்ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதேயினி–70-

பதவுரை

அடர்பொன் முடியானை–அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும்
ஆயிரம் பேரானை–ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆழியானை–(சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக–துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன்–என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி–இனிமேல்
யாது ஆகில் யாதே–(எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?

அடர் பொன் முடியானை
அடர்ந்த பொன்மயமான திரு அபிஷேகத்தை உடையவனும்-
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திரு ஆழிகளும் கிண்கிணியும்
அரையில் தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்-
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்
-என்றபடி அனைத்து திவ்ய பூஷணங்களுக்கும் உப லஷணம்
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே -என்றபடி
அவனுடைய விலஷணமான-திவ்ய ஆயுதங்கள்-திவ்ய ஆபரணங்கள்-திரு நாமங்கள்
இவற்றை சிந்திக்கப் புக்கால்-இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் நெஞ்சிலே ஒரு பொருட்டாக படுமோ –

ஆயிரம் பேரானை
சஹச்ர நாமங்களால் பிரதி பாதிக்கப் படுபவனும்

சுடர் கொள் சுடர்ஆழியானை
சந்திர சூர்ய சுடர்களை வென்று-விளங்குகின்ற திரு ஆழியை உடையவனுமான
எம்பெருமானை
திரு ஆழி முன்னால் எல்லா தேஜஸ் பதார்த்தங்களும் இருள் போலே கிடக்குமே
பாநோ பா நோ த்வதீயா ஸ்புரதி-ஸூ தர்சன சதகம் -16- ஸ்லோஹம்

இடர் கடியும் மாதா பிதுவாக எனதுள்ளே வைத்தேன்
துக்கங்களைப் போக்க வல்ல-தாயும் தந்தையுமாக-என்னுடைய ஹிருதயத்திலே நிறுத்தினேன்-
மாதா பிதா-வாக என்று திருத்த வேண்டாம்
பித்ரு -என்பதை பிது என்கிறார்

யாதாகில் யாதேயினி
இனி மேல் எனக்கு-என்ன நேர்ந்தால் என்ன –

அடர்பொன் முடியானை = இங்குத் திருவபிஷேகத்தை மாத்திரம் சொல்லி யிருப்பது
“செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர் திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும்,
தாளநன்மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும், மங்கல வைம்படையுந் தோள்வளையும்
குழையும் மக்கரமும் வாளிகளும் சுட்டியும்” (பெரியாழ்வார் திருமொழி 1-5-10) என்கிற மற்றுமுள்ள திவ்ய பூஷணங்கள்
பலவற்றுக்கும் உபலக்ஷணமென்க. “பலபலவேயாபரணம் பேரும் பலபலவே” என்றபடி எம்பெருமானுடைய விலக்ஷணமான
திருவாபரணங்களையும் திருநாமங்களையும் திவ்யாயுதங்களையும் சிந்திக்கப் புகுந்தால்
இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் ஒரு பொருளாக நெஞ்சிற்படுமோ என்பது உள்ளுறை.

சுடர்கொள் சுடராழி = உலகில் சந்திரன் ஸூர்யன் நக்ஷத்திரங்கள் அக்நி முதலிய சுடர்ப் பொருள்கள் எத்தனையுண்டோ
அவையெல்லாவற்றினுடையவும் தேஜஸ்ஸைக் கவர்கின்ற ஆழி;
திருவாழியின் முன்னே அவையெல்லாம் இருள் மூடினாற்போலே கிடக்குமென்றபடி.
பாநோ! பா நோ த்வதீய ஸ்புருதி” என்ற (13) ஸுநர்சநசதக ச்லோகத்தில் இது விரித்துரைக்கப்பட்டது.

மாதாபிதுவாக = “மாதா பிதாவாக” என்றிருக்க வேணுமென்று சிலர் பாடத்தைத் திருத்துவார்கள்;
அதுவேண்டா; வடமொழியில் பிதா என்னும் பதத்தின் பகுதியான பித்ரு என்பதை இங்கே பிது எனப் பிரயோகித்துள்ளார்.

—————————————————————-

(இனி நின்று நின்பெருமை) எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில்.
இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே,
என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற;
பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.

ஆழ்வீர் எல்லா உறவாகவும் பற்றினீரே-என்னை பற்றி சொல்லிக் காணும் என்ன
என்னால் உனது பெருமைக்கு ஈடாக சொல்ல முடியுமோ-என்கிறார்-

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

பதவுரை

தனி நின்ற–தானொருவனுமே காரணமாய் நின்றவனும்
சார்வு இலா–வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான
மூர்த்தி–எம்பெருமானே!
அகத்து பனி நீர் உலவு செம்சடையான்–உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன்.
ஆகத்தான்–உன் திருமேனியை ஆச்ரயித்து வாழ்பவன்;
நான்கு முகத்தான்–நான்முகக் கடவுள்
நின் உந்தி முதல்–உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்;
இனி–இப்படியான பின்பு
நின் பெருமை–உனது மேன்மையை
யான் நின்று உரைப்பது என்னே-தான் முயன்று சொல்வது எங்ஙனே?
(என்னால் சொல்லப்போகாதென்கை)

இனி நின்று நின் பெருமை
இப்படியான பின்பு-உனது மேன்மையை

யான் உரைப்பது என்னே
நான் முயன்று சொல்வது எங்கனே -என்னால் சொல்லப் போகாது -என்கை –

தனி நின்ற
தான் ஒருவனே காரணமாய் நின்றவனும்

சார்விலா
வேறு ஒருவரை தனக்கு-ஆதாரமாக உடைத்தாகாதவனுமான-ஏகோஹைவ நாராயணா ஆஸீத் –
தனியனாக இருந்தானே-வேறு ஒருவரையும் சாராமல் –

மூர்த்தி –
எம்பெருமான்

பனி நீர் அகத்துலவு செஞ்சடையான்
அகத்து பனி நீர் உல வு செஞ்சடையான் -உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற
சிவந்த ஜடையை உடையனான சிவன்

ஆகத்தான்-
உனது திரு மேனியை ஆச்ரயித்து வாழ்பவன்-ஒரு சமய விசேஷத்தில் இடம் கொடுத்ததைக் கொண்டு-
ஆழ்வார்கள் இதை அடிக்கடி அருளிச் செய்வார்கள்

நான்கு முகத்தான் நின்னுந்தி முதல்
நான் முகக் கடவுள்-உனது திரு நாபி கமலத்தை-மூல காரணமாக உடையவன்
நின் உந்தியை முதல் காரணமாக -அன்மொழித் தொகை-பஹூ வ்ரீஹ சமாசம்
அடங்கியது-உந்தியிலே பிறந்து உலகுக்கு எல்லாம் முதல் காரணம் என்றுமாம்

ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும்-கூறாளும் தனிவுடம்பன் –திருவாய்மொழி -என்றும்
அக்கும் புலியனகளும் உடையாரவர் ஒரு பக்கம் நிற்க நின்ற பண்பர் -பெரிய திருமொழி –என்றும்

தனி நின்ற சார்விலாமூர்த்தி = காரியப் பொருள்கள் யாவும் அழிந்த காலத்து
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்” (நாராயண னொருவனே இருந்தான்.) என்று உபநிஷத்தில் சொன்னபடியே
தனியனாக இருந்தவனே என்கிறது= தனிநின்ற என்பதனால் அக்காலத்தில் கீழ்ப்பட்ட தெய்வங்களெல்லாம்
மேற்பட்ட தெய்வங்களைச் சரணம்புக, எல்லாருமாக ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைச் சரணம் புகுந்து ஸத்தைபெற்றார்களென்று
சொல்லிற்றே யொழிய, நாராயணன் மற்றொருவனைப்பற்றி ஸத்தை பெற்றதாகச் சொல்லாமையாலே சார்விலா மூர்த்தி என்றார்;
நான் மற்றொரு தெய்வத்தைச் சாராதமூர்த்தி என்கை. மூர்த்தி-= அண்மைவிளி; ஸ்வாமியே! என்று விளித்தவாறு.

(பனிநீர் இத்யாதி.) கங்கையைச் சடையிலே கொண்ட சிவன் உன்னுடைய திருமேனியில் ஏகதேசத்தை இருப்பிடமாகக் கொண்டு ஸத்தை பெற்றான்;
நான்முகனோ உனது நாபிக் கமலத்தில் நின்றும் பிறந்து ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவானான்;
இப்படியிருக்க உனது பெருமையை புல்லியனான நான் பேசுவதென்று ஒன்றுண்டோ?- என்றாயிற்று.

ஆகத்தான் = ஆகமாவது சரீரம் ஒரு ஸமய விசேஷத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு எம்பெருமான் தனது திருமேனியின்
ஒருபுறத்திலே இடம் கொடுத்து உதவினன் என்கிற இதைப் பெரிய குணமாகக் கொண்டு ஆழ்வார்கள் இதனை அடிக்கடி அருளிச்செய்வார்கள்;
“ஏறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனியுடம்பன்” என்பர் திருவாய்மொழியிலும்;
“அக்கும் புலியினதளுமுடையாரவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றார் பெரிய திருமொழியிலே திருமங்கையாழ்வார்.

நின்னுந்திமுதல் = அன்மொழித்தொகை; (பஹுரீஹிஸமாஸமடங்கியது) நின் உந்தியை முதற்காரணமாக வுடையவன் என்று பொருள்படுதலால்.
நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல்லாம் முதற்காரணமாயிருப்பவன் என்றுரைத்தலுமாம்.

————————————————————————–

(முதலாந்திருவுருவம்.) கீழ்ப்பாட்டில் பிரமனுடையவும் சிவனுடையவும் பேச்சு வந்தமையாலே பரத்வ விஷயமாகப்
பிறர் சொல்லுகிற வாதங்கள் நினைவுக்கு வந்து, அவற்றைத் தள்ளி ஸித்தாந்தம் அருளிச் செய்கிறாரிதில்.

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

பதவுரை

முதல்வா–ஸகலகாரண பூதனான பெருமானே!
மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர்–பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்;
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர்–‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள்.
நிகர் இலகு கார் உருவா–மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே!
புகர் இலகு தாமரையின் பூ–தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது
நின் அகத்தது அன்றே–உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிடவல்லது என்றவாறு.)

முதலாம் திருவுருவம் மூன்று என்பர்
ப்ரஹ்ம விஷ்ணு சிவன் என்று-மூன்று திவ்ய மூர்த்திகள்-தலைவராவர் என்பர் சிலர்
அரி அயன் அரன் மூவரும் சமம் என்பர் பிறர்

ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
மூன்றுக்கும் ஒன்றே முதலாகும் என்பர்-மேல் சொன்ன மூவருக்கும்-வேறு ஒரு மூர்த்தி தலையாக
இருக்கும் என்பர் சிலர்-துரீய ப்ரஹ்ம வாதிகள்

முதல்வா
சர்வ காரண பூதனான பெருமானே-ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம் தோன்ற முதல்வா என்று விளிக்கிறார்

நிகரிலகு காருருவா
மேகம் என்று சொல்லலாம் படி -அதனோடு ஒத்து விளங்கா நின்ற-திருமேனியை உடையவனே -சேவிக்கும் பொழுதே சகல தாபங்களும் ஆறும்படி
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ ஓன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவம் கண்ட போதே ஓன்று ஆம் சோதி முகில் உருவம் எம்மடிகள் உருவம் தானே -திரு நெடும் தாண்டகம்

நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ
தேஜஸ் மிக்கு நின்ற தாமரைப் பூவானது-உன்னிடத்தில் உள்ளது அன்றோ-
திரு நாபி கமலமே உன்னுடைய பரத்வத்தை வெளியிட வல்லது -என்றபடி
சிவன் பிரமன் இடமும் அந்த பிரமன் உன்னிடமும் இருந்து தோன்றி -நீ அன்றோ பராத்பரன் –

பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்
த்ரயோ தேவாஸ் துல்யா த்ரியதயமித மத்வைதம் அதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி
விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா விதி சிவ நிதானம் பகவத்
தத் அந்யத் ப்ருபங்கீ பாவ திதி சித்தாந்தயாதி ந-என்று அருளிச் செய்கிறார்

த்ரயோ தேவாஸ் துல்யா
அரி அயன் அரன் மூன்று தெய்வங்களுக்கும் சாம்யம் சொல்வார்கள் -த்ரி மூர்த்தி சாம்ய வாதம்-
வஸ்துக்களின் பேதம் ஒத்துக் கொண்டு அவற்றுக்கு ஏற்ற தாழ்வு இல்லாததை சொல்வது சாம்ய வாதம்
த்ரியதயமிதம் அத்வைதம்-இம் மூன்று தெய்வங்களும்வேறு வேறு அல்ல
ஒன்றே என்பர் சிலர் –ஐக்ய வாதம்
வஸ்துக்களின் பேதத்தையே ஒத்துக் கொள்ளாமை-அதிகம் த்ரிகாதஸ்மாத் தத்வம் பரம் -இம்மூவரில் மேம்பா துரீய ப்ரஹ்மமே பரதத்வம் என்பர்
இதி விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா இத்யாதி
நாபி பத்மம் முதல் கிழங்காய் இருந்து கொண்டு-சித்தாந்தம் நமக்கு அறிவிக்கின்றது-

(முதலாந்திருவுருவம் மூன்றென்பர்.) ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்கிற மூன்று மூர்த்திகளும் துல்யமாகவே
உலகுக்குத் தலைவர்கள் என்று கொள்ளுகிற சிலருடைய கொள்கையை இதனால் அநுவதித்தபடி,
அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளும் பரஸ்பரம் ஏற்றத்தாழ்வின்றியே ஸமாநராயிருப்பரென்று சிலர் சொல்லுவார்கள்-
என்றவிதனால் அது ஸ்வஸித்தாந்தமல்ல, பரபக்ஷம் என்பது விளங்கும்.

(ஒன்றே முதலாகும் மூன்றுக்குமென்பர்.) உத்தீர்ணவாதிகனென்று சிலருண்டு; அவர்களுடைய கொள்கை இது;
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களிற்காட்டில் வேறுபட்ட நான்காவது தத்துவம் ஒன்றுண்டு;
அதுவே இம்மூன்று தத்துவங்கட்கும் நிர்வாஹகமாகனது என்பராமவர்கள்; அவர்கள் துரீய ப்ரஹ்மவாதிகளெனப்படுவார்கள்.
அவர்களுடைய பக்ஷமும் ஸ்வஸித்தாந்தமல்லவென்று இதனால் காட்டப்பட்டது.
ஸ்ரீமந்நாராயணனொருவனே பரதத்துவமென்பது தோன்ற முதல்வா! என விளிக்கின்றார் காண்மின்.
ஸேவிக்கும்போதே ஸகலதாபங்களும் ஆறும்படியான திருமேனிகொண்ட தெய்வமே பரதத்துவம் என்பது விளங்க நிகரிலகுகாருருவா! என்றும் விளிக்கின்றார்.
“ஒருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்று மாகடலுருவம் ஒத்துநின்ற, மூவுருவுங் கண்டபோது ஒன்று ஆங்சோதி முகிலுருவமெம்மடிகளுருவந்தானே” என்று திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்தில் பரதத்துவநிர்ணயம் பண்ணும் பாசுரத்தில் அருளிச் செய்தமை காண்க.

ஸ்ரீமந்நாராயணனே பரத்துவமென்பது நன்கு பொருந்துமாறு விஷயம் காட்டுகிறார்
நின்னகத்ததன்றே புகலிலகு தாமரையின்பூ என்பதனால் சிவன் பிரமனிடத்துத் தோன்றியவனென்றும்;
அந்தப் பிரமன் உனது திருநாபிக் கமலத்தில் தோன்றியவனென்றும் காஸ்த்ரங்களிற் சொல்லியிருக்கும்போது
அந்தத் தாமரையைத் திருநாபியிலேயுடைய நீயேயன்றோ பரதத்துவமாக இருக்கத் தகதியுண்டென்ற காட்டியவாறு.

இந்தப் பாசுரத்தையே பட்டர் ஸ்ரீரங்ராஜஸ்தவ – பூர்வசதகத்தில் பெரியவொரு ச்லோகமாகப் பன்னியுரைத்தார்” அதாவது
த்ரயோ தேவாஸ்துல்யா:, த்ரிதயமிதமத்வைதம், அதிகம் த்ரிகா தஸ்மாத்தத்வம் பாரமிதி விதர்க்காந் விகடயந்-
விபோர் நாபீபத்மோ விதிசிவநிதாநம் பகவத: ததந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந: ” என்பதாம்.
இந்த ச்லோகத்தின் பொருளையும் சிறிது விவரிப்போம்;
(த்ரயோ தேவாஸ் துல்யா.) அரி அயன் அரனென்றம் மூன்று தெய்வங்களும் ஸாம்யஞ்சொல்லுவர் சிலர்.
(த்ரிதயமிதம் அத்வைதம்.) இம்மூன்று தெய்வங்களும் வெவ்வேறல்ல; ஒன்றேயென்பர் சிலர். கீழே சொன்னது த்ரிமூர்த்திஸாம்யவாதம்;
இது ஐக்யவாதம். வஸ்துக்களின் பேதத்தை ஒப்புக்கொண்டு அவற்றுக்கு ஏற்றத் தாழ்வுகளில்லாமை சொல்லுவது ஸாம்யவாதமெனப்படும்.
வஸ்துக்களுக்கு பேதத்தையே ஒப்புக்கொள்ளாமை ஐக்யவாதமெனப்படும். இந்த ஐகய்வாதம் இப்பாட்டில் அநுவதிக்கப்படவில்லையாகிலும்
அதனை நிரஸிப்பதும் ஆழ்வார்க்குத் திருவுள்ளமே யென்றணர்ந்த பட்டர் அதனையும் எடுத்துக் கூறினாரென்க.
(அதிகம் த்ரிகாதஸ்மாத் தத்வம் பரம்.) இம்மூன்று தெய்வங்களிற் காட்டிலும் மேற்பட்டதான துரீயப்ரஹ்மமே
பரதத்துவமென்று உத்தீர்யவாதம் பண்ணுவர் சிலர்..
(இதி விதர்க்காந் விகடயந் விபோ: நாபீபத்ம: இத்யாதி.) இப்படிப்பட்ட சங்கைகளை யெல்லாம் அடியறுக்கின்ற
திருநாபிக்கமலமானது ப்ரஹ்மருத்ரர்களுக்கும் முதற்கிழங்காயிருந்துகொண்டு
‘உலகமெல்லாம் எம்பெருமானுடைய புருவநெறிப்புக்குப் பரவசப்பட்டது’ என்கிற ஸித்தாந்தத்தை நமக்கு நன்கு தெரிவிக்கின்றது- என்றாராயிற்று.
ஆகையாலே இப்பாசுரத்தின் மொழிபெயர்ப்பாயிருக்கும் இந்த ச்லோகமென்ற அநுஸந்திக்கக்கடவது.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -51-60–திவ்யார்த்த தீபிகை –

September 17, 2014

(மனமாளுமோரைவர்.)
கீழ்ப்பாட்டில் “மாவாய் பிளந்தார் மனம்- அந்தோ! வலிதே கொல்” என்று
எம்பெருமானைக் கல் நெஞ்சனாகச் சங்கித்தார்; உடனே தம் ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தார்;
சேஷியான எம்பெருமான் விஷயத்திலே சேஷ பூதர். இப்படிச் சொல்லத் தகாதென்று விவேகமுற்று,
எம் பெருமான் திருவுள்ளமானபடியே செய்யக் கடவன்; அவனை நாம் நிர்ப்பந்திப்பதென்பது தகுதியன்று;
நம்முடைய இந்திரியங்களையெல்லாம் அவன் பக்கலில் ஊன்ற வைத்து அவனது திருவடித் தாமரைகளை ஸேவித்துக்
கொண்டிருப்பதேயன்றோ நமக்கு ஸ்வரூபம்” என்று அருளிச் செய்கிறார் இப் பாட்டில்.

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு –51-

பதவுரை

மனம் ஆளும்–மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர்–ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை–பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து–கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து–(பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,
புனம்மேல் தண் துழாயான் அடியை–தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை
தாம் காணும் அஃது அன்றே–ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ
வண் துழாம் சீரார்க்கு மாண்பு–அழகிய விசாலமான நற்குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.

மனமாளும் ஓர் ஐவர்
மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி-ஆளுமையான-ஒப்பற்ற
பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற-
எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது
ஆத்மாவுக்கு மனஸ் சேஷப்பட்டது-
மனசுக்கு இந்த்ரியங்கள் சேஷப்பட்டன

இந்த முறை மாறி மனசை தமக்கு அடிமை ஆக்கிக் கொண்டனவே
கொடுமையை பற்றிய கோபத்தினால் ஐவர் -உயர் திணை யாக அருளிச் செய்கிறார்
கோவாய் ஐவர் என் மெய் குடி யேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து போகார் நான்-
அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட் கொடியாய் நெடுமாலே –
திருமங்கை ஆழ்வார்

வன் குறும்பர் தம்மை
பிரபலமான துஷ்டர்களை

சினமாள்வித்து
கோவம் அடையச் செய்து-
காமாத் க்ரோதாத் அபிஜாயதே

விஷயங்கள் அல்பம் என்பதால் ஆசை-அடங்காமல் கோபம் உண்டாகும்
பகவத் விஷயம் அள்ள அள்ள கொள்ளக் குறை யற்ற இன்பம் தருவதால்
இரை போர வில்லையே என்கிற கோபம் மாண்டு போகுமே
பூர்ண திருப்தி உண்டாகும் படி பகவத் விஷயத்தில் பிரவணமாக்கி என்றபடி

ஓர் இடத்தே சேர்த்து –
பகவத் விஷயமாகிய-ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி

புனமேய தண் துழாயான் அடியைத்
தன் நிலத்திலே பொருந்திய-குளிர்ந்த திருத் துழாய் மாலையை அணிந்துள்ள
அப்பெருமானது திருவடிகளை –

தான் காணும் அஃது அன்றே –
சேவித்துக் கொண்டே இருப்பது அன்றோ

வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு
அழகிய விசாலமான-நற் குணங்களை யுடைய-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு

இங்கன் அன்றி
அவன் மனம் கல் எனபது ஸ்வரூபம் அன்று
துழாம்-என்றது துழாவும் -என்றபடி –
துழாவுகை –பரம்புகை -விசாலமான என்றபடி

அவன் திரு உள்ளம் ஆனபடி ஆயிடுக என்று இருப்பதே தகுதி –
வெறுத்தல் கூடாது என்றவாறு-

(மனமாளும் ஓரைவர்.)
எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது; ஆத்மாவுக்கு மநஸ்ஸு சேஷப்பட்டது;
மநஸ்ஸுக்கு இந்திரியங்கள் சேஷப்பட்டவை; அதாவது-
மனம் போன வழியே செவி வாய் கண் முதலிய இந்திரியங்கள் போகக் கடவன- என்றிப்படி ஒரு நியதி உண்டு;
இந்த நியமம் குலைந்து, இந்திரியங்களானவை மனத்தைத் தம் வழியிலே இழுக்கின்றனவாம்.

மனத்தையும் தங்கள் வசத்திலே யாக்கி ஆளுகின்ற வன் குறும்பர்களான ஐவருண்டு- பஞ்சேந்திரியங்கள்- செவிவாய் கண் மூக்கு உடல் என்பவை,
அவற்றை வலி யடக்கி பகவத் விஷயத்திலே ஊன்ற வைக்க வேணுமென்கிறார் முன்னடிகளால்.

அசேதனங்களான இந்திரியங்களை ஐவர் என்று உயர்திணையாகக் கூறுதல் அவற்றின் கொடுமையைப்பற்றிய கோபத்தினாலென்க.
“கோவாய் ஐவரென்மெய் குடியேறிக் கூறை சோறியை தாவென்று குமைத்துப் போகார்,
நான் அவரைப் பொறுக்ககிலேன் புனிதா! புட்கொடியாய் நெடுமாலே!” (பெரிய திருமொழி 7-8-9) என்ற திருமங்கையாழ்வார் பாசுரமுங் காண்க.
வன் குறும்பர் என்ற விசேஷணத்தினாலும் இந்திரியங்களின் கொடுமை நன்கு விளக்கப்பட்டது.

சினம் மாள்வித்து-
** காமாத் க்ரோதோபிஜாயதே” (ஒரு பொருளில் ஆசை உண்டாகி அது கைகூடா விடில் பிறகு கோபம் உண்டாகிறது)
என்று கீதையிலே சொல்லியிருக்கிறபடி அந்த இந்திரியங்களுக்கு உண்டான கோபத்தை மாளந்செய்து என்கை;
இதன் கருத்து யாதெனில்
இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அநுபவித்துப் புகுந்தால் அவ்விஷயங்கள் அற்பமாகையாலே
தங்களுக்கு இதை போரவில்லை யென்று கோபமுண்டாகும்;
அந்த இந்திரியங்களுக்கு பகவத் விஷயாநுபவத்தை இரையாக்கிவிட்டால், அவ்விஷயம் கனத்ததாகையாலே தங்கள் பசி
நன்றாகத் தீருமாதலால் கோபமுண்டாக ப்ரஸக்தியில்லை;
இரை போரவில்லையே என்கிற கோபம் மாண்டு போம்;

ஆகவே “சினம் மாள்வித்து” என்பதை எச்சத் திரிபாகக்கொண்டு,
‘கோபத்தைத் தணிக்க’ என்றுரைத்தல் பொருந்தும்.
பஞ்சேந்திரியங்களுக்கு விஷயாந்தராநுபவத்தில் வயிறு நிறைய வில்லையே யென்கிற கோபம் தீரும்படி (பூர்ணத்ருப்தி உண்டாகும்படி)
அவற்றை பகவத் விஷயத்திலே ப்ரவணமாக்கி- என்றதாயிற்று.

புனமேய தண்துழாயானடியைக் காணுமஃதன்றே =
புனமாவது நிலம்; எந்த வஸ்துவும் தன்னிலத்தை விட்டுப் பிரிந்தால் செவ்வி குன்றுமாதலால்,
அப்படியல்லாமல் தன்னிலத்திலேயே இருக்கிற திருத்துழாயானது எவ்வளவு செழிப்பாக இக்குமோ அவ்வளவு செழிப்பாகத்
தனது திருமேனியிலே அத் துழாய்மாலை விளங்கப்பெற்ற பரமபேரிக்யனான அப்பெருமானுடைய திருவடிகளே
நமக்குத் தஞ்சம் என்று கொண்டு அவற்றை ஸேவித்துக் கொண்டிருப்பதேயன்றோ

வண்துழாம்சீரார்க்கு மாண்பு- பரமவிலிக்ஷணரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீர்மை;
இங்ஙனன்றி ‘எம்பெருமானுடைய மனம் கல்லோ’ என்று சொல்லுதல் தகுதியன்று;
கல்லாகவே யிருந்தாலும் அவனுடைய திருவடிகளே தஞ்சமென்றிருத்தலே ஸ்வரூபம் என்றாராயிற்று.

வண்துழாம் சீரார்க்கு என்றது- ஆத்மகுணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு என்றபடி.
துழாம் என்றது- துழாவும் என்றபடி; துழாவுகை- பரம்புகை; விசாலமாயிருத்தலைச் சொன்னபடி;
அழகிய விசாலமான நற்குணங்களமைந்த பாகவதர்களுக்கு என்கை.

இப்படிப்பட்ட ஆத்ம குணங்கள் நிறைந்த ஸாதுக்களாயிருந்தால் ‘அவன் திருவுள்ளமானபடியே ஆயிடுக’ என்றிருப்பதே தகுதி;
வெறுத்தல் கூடாது என்றவாறு.

———————————————————–

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

பதவுரை

அஞ்ஞான்று–முன்னொரு காலத்தில்
மாண்–வாமாவேஷத்தை
பாவித்து–பாவனை செய்துகொண்டு
மண் இரந்தான்–(மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவன்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு–(முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது–உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம்–விலக்ஷணமான திருமேனியை
காண்பான்–ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா–நமது ஆண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா–வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய்தான்–வாக்கானது
சீர் பரவாது–(அவனது) திருக்குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று–வேறொன்றை (சோற்றை)
உண்ண-உண்பதற்கு
உறுமோ–விரும்புமோ?

(மாண் பாவித்து)
நம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயத்திலே ஆழ்ந்தபடியைப் பேசுகிறார்.
இந்திரனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக வாமந வேஷம் பூண்டு கொண்டு மாவலி பக்கலிற் சென்று
மூவடி மண்தரவென்று இரந்தவனும்,
தான் கிருஷ்ண சிசுவாயிருக்கும்போது கம்ஸனுடைய தூண்டுதலால்
தன்னைக் கொல்வதற்காகத் தாய் வடிவு கெணண்டு முலை கொடுக்க வந்த பூதனியினுடைய முலையைச் சுவைத்துண்கிற பாவனையிலே
அவளுயிரை உறிஞ்சியுண்டவனுமான எம்பெருமானுடைய
விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தைக் காணவேணுமென்கிற ஒரு விருப்பமே நமது கண்களுக்குள்ளது;
வேறு எந்த அற்புதமான வஸ்துவையும் இக்கண்கள் காண விரும்புகின்றில.

வாய்தானும் அப்பெருமானுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசதலொன்றிலேயே ஊற்றமுடையது;
சோறு திண்பதிலும் வாய்க்கு விருப்பமில்லை- என்றாராயிற்று.

மாண்- மாணியின் தன்மை; வாமாநத்வம். பாவித்து – வடமொழியில் ***-
பூ- ஸந்தாயம்” என்ற தாதுவடிவாகப் பிறந்த வினையெச்சம்
அஞ்ஞான்று- அக்காலத்தில்; முன்பொரு காலத்திலென்றபடி.
(ஞான்று- காலம். ‘நான்று’ என்பதுமுண்டு; ஞகரநகரப்போலி.)

————————————————————-

(ஒன்றுண்டு செங்கண்மால்.)
கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தம்முடைய இந்திரியங்கள் எம்பெருமான் விஷயத்திலே
ஆழ்ந்தபடியைப் பேசி ‘இனிமேல் தமக்கு ஒரு குறையுமில்லை; தாம் க்ருத க்ருத்யாக ஆய்விட்டார்’ என்று தோற்றுமாறு
இருந்ததைக் கண்ட எம்பெருமான், ‘அந்தோ! ஆழ்வார் இவ்விருள் தருமா ஞாலத்தில் இருந்து கொண்டே இப்படி களிக்கிறாரே;
இவ்வநுபவம் இவர்க்கு நித்தியமாய்ச் சொல்லுமோ? ஸ்ரீவைகுண்டம் பெற்றாலன்றோ அநுபவ பூர்த்தியுள்ளது’ என்று
திருவுள்ளம் பற்றி அந்த ஸ்ரீவைகுண்டத்தையும் ஆழ்வார்க்குத் தந்தருள்பவன் போல விளங்கினான்;

அதனைக் கண்ட ஆழ்வார் “இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகாமளுமச்சுவை பெறினும் வேண்டேன்” என்றாற்போல
‘இந்த குணாநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானே!’ என்கிறார்.

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

பதவுரை

செம்கண் மால்–(அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே;
யான் உரைப்பது–அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு–ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு–இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளுமி வான்–ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ–நீயோ வென்றால்
உன் அடியார்க்கு–உனது அடியார்களுக்கு
(எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்)
என் செயவன் என்றே இருத்தி–இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் இனிதோ–உனது திருக்குணங்களிலேயே ஊன்றியிருக்கப்பெற்ற தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?

ஓன்று உண்டு
ஒரு விஷயம் உண்டு -கலங்கினவனுக்கு தெளிவிக்க வேண்டுமே-
சர்வஞ்ஞனுக்கும் ஓன்று அறிவிக்க வேண்டும்

செங்கண் மால்
அடியார்கள் மேலே வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை-உடைய திருமாலே
வ்யாமோஹத்தாலே சிவந்து உள்ள திருக் கண்கள்

யான் உரைப்பது-
அடியேன் விண்ணப்பம் செய்வது –

உன் அடியார்க்கு –
உனது அடியவர்களுக்கு

எத்தனை நன்மைகள் செய்து அருளினும் திருப்தி பெறாமல்
நீ
நீயோ வென்றால்

என் செய்வன் என்றே இருத்தி –
இன்னமும் என்ன நன்மைகள் செய்வோம் என்றே-பாரித்து இரா நின்றாய்

நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ
உனது திருக் குணங்களிலே ஊன்றி இருக்கப்-பெற்ற-தமது சிந்தையில் காட்டிலும்
நீ-இப்படிப் பாரிக்கின்ற நீ-யவர்க்கு-அவ்வடியார்களுக்கு

வைகுந்தம் என்று அருளும் வான்
ஸ்ரீ வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லுகின்ற-பரமபதமானது
நீ ஒருவன் தான் வைகுந்தம் வைகுந்தம் என்று சிறப்பாக சொல்லிக் கொண்டு இருக்கிறாய்-
பாவோ நான்யத்ர கச்சதி
என்று -உள்ளார்கள் இங்கேயே பலர் உண்டே

இப்போது சித்தமான குணாநுபவம்-சித்திக்கப்  போவது ஸ்ரீ வைகுண்டம்
பிரதிபந்தங்கள் மலிந்து கிடக்கும் இங்கே குணாநுபவம்
பிரதி பந்தங்களே இல்லா அங்கே அனுபவிக்கை  ஏற்றமோ

எனக்கு என் செய்வன் என்றே இருத்தி தன்மையில் சொல்லாமல்
அடியார்க்கு அவர்க்கு படர்க்கையாக சொல்லி இருந்தாலும்-தன்மை பொருளே விவஷிதம்
திருப்பாவை -மாற்றமும் தாராயோ வாசல் திறவாதே -முன்னிலையாக சொல்லும் இடத்து படர்க்கை பிரயோகம்

இனி இனி என்று கதறும் ஆழ்வார் இப்படி அருளிச் செய்வது-ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்-
இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் ஒன்றே முக்கியம் என்றதாயிற்று-

ஆழ்வார் திறத்திலே எதேனுமொன்றைச் செய்ய வேணுமென்று ஸ்யாமோஹத்தினாலே எம்பெருமானுடைய
திருக் கண்கள் செவ்வியவாயிருந்ததால் செங்கண்மால்! என் விளிக்கின்றார்.

யானுரைப்பது ஒன்றுண்டே = நீ ஸர்வஜ்ஞனாயினும், உனக்கும் நான் தெரிவிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு காண் என்கை.
இப்பொழுது நீ வியாமோஹத்தாலே கலங்கி யிருக்கிறாயதலால் ‘கலங்கினவர்களைத் தெளிந்திருப்பவர்கள் தெளிவிக்கக் கடவர்கள்’
என்னும் நீதியிலே உன்னை நான் தெளிவிக்க வேண்டி உனக்கொன்று சொல்லுகிறேன் கேளாய் என்றார் போலும்
எம்பெருமான் தெளிவழிந்து கலங்கி நிற்கும்படியை வெளியிடுகிறார்.
உன்னடியார்க்கு என்செய்வனென்றே இருத்தி நீ
என்பதனால் உன்னடியவர்களுக்கு நீஎவ்வளவு நன்மைகளைச் செய்து வைத்தாலும்
‘ஐயோ! ஒன்றும் செய்யவில்லையே, ஒன்றும் செய்யவில்லையே’ என்றே அமைந்து
‘என்ன நன்மை செய்வோம், என்ன நன்மை செய்வோம்’ என்றே அலைபாயா நின்றாய்;
இஃது உன்னுடைய கலக்கமன்றோ என்கை.

ஆழ்வார் இப்படி சொன்னதைக் கேட்ட எம்பெருமான்
‘நான் இப்படி கலங்கி யிருக்கிறேனென்பதை நீர் எதுகொண்டு தெரிந்து கொண்டீர்?’ என்று கேட்க;

அதற்கு ஆழ்வார்,
‘எப்போதும் உன்னுடைய குணாநுபவமே போது போக்காம்படி என்னை இவ்வளவு அநுக்ரஹித்து வைத்தும் ஒரு நன்மையும்
எனக்குச் செய்யவே யில்லையாக நினைத்துக் கொண்டு, இன்னமும் ஏதோ செய்வதாகப் பாரித்திருக்கிறா யன்றோ,
இதுகொண்டே உன்னுடைய வ்யாமோஹத்தைத் தெரிந்து கொண்டேன்’ என்ன;

அதற்கு எம்பெருமான் ‘ஆழ்வீர்! உண்மையில் உமக்கு நான் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தேனாகிலும்,
பரிபூர்ணாநுபவத்திற்குப் பாங்கான பரமபதத்தைக் கொடுக்காத வளவில் ஒரு நன்மையும் செய்யவில்லையென்று தானே அர்த்தம்;
அந்தப் பரமபதந்தன்னையே உமக்குக் கொடுப்பதாகப் பார்த்திருக்கின்றேன்;
இதனால் என்னைக் கலங்கினவனாகக் கொள்ளலாகுமோ?’
என்றருளிச் செய்ய;

அதன்மேல் ஆழ்வார் நின்புகழில் வைகுந்தம் தம்சிந்தையிலும் நீயவர்க்க வைகுந்தமென்றருளும் வான் இனிதோ? என்கிறார்;
இப்போது ஸித்தமான குணாநுபவத்திற்காட்டிலும்
இனி மேல் ஸித்திக்கக் கடவதான வைகுந்தம் சிறந்ததல்லா கிடாய் என்கை.
பிரதிபந்தகங்கள் மலிந்து கிடக்கிற இவ்விருள் தருமா ஞாலத்திலிருந்துகொண்டு குணாநுபவம் பண்ணுவதிற்காட்டிலும்
பிரதிபந்தகமற்ற தேச விஷேத்திலேயிருந்து கொண்டு அநுபவிக்கை ஏற்றமோ? என்பதும் உள்ளுறை.

“நீ அவர்க்கு அருளும் வைகுந்தம்” என்றாவது, “நீ அவர்க்கு அருளும் வான்” என்றாவது சொல்லலாமாயிருக்க,
அங்ஙனே சொல்லாது
“நீ அவர்க்கு வைகுந்தமென்ற அருளும் வான்” என்று அருளிச் செய்ததன் கருத்து யாதெனில்;
நின்புகழில் வைகும் சிந்தையினோர் வைகுந்தத்தை ஒரு பொருளாகவும் மதிக்க மாட்டார்கள்;
பாவோ நாந்யத்ர கசசதி” என்று திருவடி சொன்னாப்போல சொல்லி விடுவர்கள்;
நீ ஒருவன் தான் ‘வைகுந்தம் வைகுந்தம்’ என்ற வெகு சிறப்பாகச் சொல்லிக் கொண்டு கிடக்கிறாய் என்பதாகக் கருத்து தோன்றும்.

“உன் அடியேற்கு என் செய்வனென்றேயிருத்தி நீ” என்றும்
“நீ எனக்கு வைகுந்தமென்றருளும் வான்” என்றும்
தன்மையாகச் சொல்லிக் கொள்ளாமல்
‘அடியார்க்கு’ என்றும் ‘அவர்க்கு’ என்றும் படர்க்கையைச் சொல்லி யிருந்தாலும்
தன்மைப் பொருளே இங்கு விவக்ஷிதமென்க.
திருப்பாவையில் “மாற்றமும் தாராயோ வாசல் திறவாய்” என்று முன்னிலையாகச் சொல்ல வேண்டுமிடத்துப்
படர்க்கையாகச் சொல்லியிருப்பதுபோல.

“பொய்ந்நின்ற ஞானமுமம் பொல்லாவொழுக்கும் –இந்நின்ற நீர்மை யினியாமுறாமை-
அடியேன் செய்யும் விண்ணப்பமே” (திருவிருத்தம் –முதற்பாட்டு) என்று தொடங்கி அடிக்கடி வைகுந்தத்தையே
பிரார்த்திக்கின்ற ஆழ்வார் இப்பாட்டில் வைகுந்தத்தை வெறுத்துரைப்பது ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்.
‘இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் முக்கியம்’ என்ற அர்த்தத்தை விளக்கியவாறு.

—————————————————————-

(வானோ மறிகடலோ)
கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தம் இனிதன்றே’ என்றுரைத்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்,
‘இவ்வீபூதியில் எவ்வளவுதான் குணாநுபவம் பண்ணினாலும் பிரதீபந்தகங்கள் கூடவே யிருக்கிற நிலமாதலால்
இவ்வநுபவம் நிலைநிற்கக் கூடியதன்றே; பிரதிபந்தகங்களுக்கு அஞ்சி யிருக்க வேண்டியதுதானே’ என்று சொல்ல;
பகவத் விஷயத்தில் நான் இழிந்தவறே பிரதிபந்தகங்கள் போன விடம் தெரியவில்லை என்கிறார்.

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும்  கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

பதவுரை

ஆன் ஈன்ற கன்று–பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை
உயர எறிந்து–(விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து
காய் உதிர்த்தார்–(அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய
தாள்–திருவடிகளை
பணிந்தோம்–ஆச்ரயித்தோம் (அதன் பிறகு)
வன் துயரை–வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம்–ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று–(அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ–ஆகாசமோ?
மறி கடலோ–மடிந்து மடிந்து அலையெறிகிற கடலோ?
மாருதமோ–காற்றோ?
தீயகமோ–நெருப்போ?
கானோ–காடோ?
(இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;)
ஆ ஆ ஆல்–ஐயோ பாவம்.

வானோ
ஆகாசமோ-ஆகாசத்தில் மறைந்து போயினவா

மறி கடலோ
மடிந்து மடிந்து அலை எரிகிற-கடலோ-கடலில் ஒளிந்து போயினவா

மாருதமோ
காற்றோ-காற்றில் உரு மாய்ந்து போயினவோ

தீயகமோ
நெருப்போ-நெருப்பிலே விழுந்து நசித்துப் போயினவோ

கானோ
காடோ-வனவாச யாத்ரை போயினவோ-

அவை என்னருகில் இல்லை என்றதாயிற்று-
இன்ன இடத்தில் மறைந்து போயின என்று தெரியவில்லை

ஒருங்கிற்று
அப்பாபங்கள் மறைந்து போன இடம்
ஒருங்கிற்றும் -பாட பேதம்

ஆ ஈன்ற கன்று
பசுவினால் பெறப்பட்ட வத்சாசுரனை

உயரத் தாம் எறிந்து
விளா மரத்தின் மேலே வீசி எறிந்து

காய் உதிர்த்தார் –
அவ விளா மரத்தின் காய்களை உதிர்த்த-கண்ணபிரான் உடைய

தாள்
திருவடிகளை

பணிந்தோம்
ஆஸ்ரயித்தோம்-

அதன் பிறகு-
வன் துயரை
வலிய நம் பாபங்களை

ஆ ஆ ஆல்
ஐயோ பாவம்

மருங்கு கண்டிலம்
சமீபத்தில் காணோம் –

முள்ளைக் கொண்டே முள்ளைக் களைவது போல எம்பெருமான் பிரதிபந்தகங்களைத் தொலைப்பதில் மிக்க நிபுணன் என்று
காட்டுதற்காகக் கன்றினால் விளவெறிந்த கதையை இங்கு அருளிச் செய்கின்றார்;

கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் கபித்தாஸுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன் கீழ் வரும்பொழுது மேல் விழுந்து
கொல்லுவதாக எண்ணி வந்து நிற்க;
அதனை யறிந்து கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக் கொல்லும் பொருட்டுக்
கன்றின்வடிவங் கொண்டு வந்த வத்ஸாஸுரனைப்
பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் எறிய,
விளவும் கன்றுமாகிய இருவரும் சிதைந்து தமது அசுர வடிவத்துடனே விழுந்து இறந்தனர் என்பது கன்றுயரவெறிந்து காயுதிர்த்த வரலாறு.

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளைப் பணிந்த மாத்திரத்திலே எனது பிரதிபந்தக பாபங்களெனல்லாம் இன்ன விடம்
போயினவென்று தெரியாதபடி பாறிப் பறந்து போயின; ஆகாசத்திலே மறைந்து போயினவோ, கடலில் ஒளிந்து போயினவோ,
காற்றில் உருமாய்ந்து போயினவோ, நெருப்பிலே விழுந்து நசித்ததுப் போயினவோ, அன்றி
வனவாஸ யாத்திரை சென்றனவோ அறிகின்றிலேன்; அவை என்னருகில் இல்லை- என்றாயிற்று.

மறிகடல்= மறிதலாவது- அலைகள் மடிந்தும் மடிந்து வீசப்பெறுதல்.
மாருதம்- வடசொல்.
“ஒருங்கிற்றும்” என்றும் ஓதுவர்.
கண்டிலம்- தன்மைப் பன்மை யெதிர்மறை வினைமுற்று.
ஆல்- அசை; வியப்புக்குறிப்பிடைச் சொல்லுமாம்.
ஆனீன்றி கன்று= ‘பசுவினால் பிரஸவிக்கப்பட்ட கன்று’ என்று சொல்வதன் கருத்து யாதெனில்;
‘வத்ஸாஸுரன்’ என்று ஒருவன் திடீரென்று ஆகாசத்தின் நின்றும் வந்து குதித்து விடவில்லை;
அவ்விடத்திலுள்ள பசுவின் கன்றானவொன்றின் மேலே வந்து ஆவேசித்தனன் என்பதைக் காட்டுதலாம்.
காயுதிர்த்தான் = ஆறாம் வேற்றுமைத் தொகை.
ஆவா- ‘ஹா ஹா!’ என்ற வடமொழி அவ்யயங்களிரண்டு சேர்ந்து ஆவாவெனத் திரிந்தது.

————————————————————————–

(மருங்கோதமோதும்.)
எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும்,
அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால்
எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார்.

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-

பதவுரை

வரவு–(தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார்–(நமது) மனத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மருங்கு ஓதம் மோதும்–ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார்–மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும்–(ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்
எமக்கு–நமக்கு
அவரை–அப்பெருமானை
உன்னால்–மனத்தினால்
ஒருங்கே–ஒரே தன்மையாக
எப்பொழுதும் காணலாம்–எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.

மருங்கோத மோதும்-
சமீபத்திலே கடலை மோதும் படியாகவும்-திருப் பாற் கடலிலே

மணி நாகணையார்
மாணிக்கத்தை உடைய-திரு வநந்த ஆழ்வானை படுக்கையாக உடையவருமான பெருமாள்-
தென் திரை வருடத் திருப் பாற் கடலில் திரு வநந்த ஆழ்வான் மேல் திருக் கண் வளருமவர்
என்றபடி

மருங்கே வர அரியரேலும்
ஒருவர்க்கும் ஸ்வ பிரயத்னத்தாலே அணுகி வந்து-கிட்ட முடியாதவராயினும்

ஒருங்கே எமக்கு அவரை உள்ளால் எப்பொழுதும்-
ஒரே தன்மையாக
நமக்கு-அப்பெருமானை-மனத்தினாலே-எப்போதும் கண்டு அனுபவிக்கக் கூடும்

மனக் கவலை தீர்ப்பார்
நமது மனத்தில் உள்ள துன்பங்களை தொலைப்பவரும்

வரவு
தம்முடைய வருகையினாலே-மூன்றாம் வேற்றுமை உருபு தொங்கி கிடக்கிறது
வரவினால் என்றபடி

அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே-எனது நெஞ்சிலே புகுந்து-எப்பொழுதும் சேவிக்க
எளியனாய் இருக்கிறான்-என் உள்ளத்திலே உறையும் அவனைக் காண அருமை உண்டோ –

“வரவு மனக் கவலை தீர்ப்பார்”= ‘வரவு’ என்பதில் மூன்றாம் வேற்றுமையுருபு தொக்கிக் கிடக்கிறது; வாயினாலே என்றபடி.

தானாகவே வந்து மனக் கவலையைத் தீர்க்கும் பெருமான் என்கை

ஓதம் மருங்கு மோதும் மணி நாகணையார்
தெண்திரை வருடத் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளருமவர் என்றவாறு.

இப்படிப்பட்ட பரமபுருஷன்.
மருங்கே வர அரியரேலும்= ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அணுக முடியாதவனாயினும்;

உள்ளால் நமக்கு அவரைக் காணலாம்
என்னுள்ளத்துள்ளே உறைகின்றவனைக் காண எனக்கு அருமையுண்டோ? என்கிறாராயிற்று

————————————————————-

(வரவாறொன்றில்லையால்.)
எல்லார்க்கும் அருமைப் படுமவன் உமக்கு எளியனானது எப்படி? என்று சிலர் கேட்க;
அவனுடைய நிர்வேஹதுக க்ருபைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று
என்னாலும் நிரூபிக்க முடியாது.
காரணம் எதுவானாலென்ன? வாழ்ச்சி நன்றாயிருக்கின்றதத்தனை என்கிறார்.

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

பதவுரை

ஒருவன்–எந்த சேனனும்
ஒரு ஆறு–எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு–பிரவேசிக்க வேண்டாதபடி
(அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)
உரு மாறும்–தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
ஆயவர் தாம்–ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம்–ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பொருநாள் உலகங்களைத் தாவி யளந்தவனும்
மாயவர் தாம்–ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி–காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று–இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது–பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே–ஆச்சரியம்

வரவாறு ஓன்று இல்லையால்
இன்ன வழியாக வந்தது என்று தெரியாது

வாழ்வு இனிதால் எல்லே
பலன் போக்யதாய் இரா நின்றது-ஆச்சர்யம்

ஒருவாறு ஒருவன்
எந்த சேதனனும்-எந்த உபாயாந்தரத்திலும்

புகாவாறு
பிரவேசிக்க வேண்டாதபடி

-உருமாறும்
தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாங்களை மாற்றிக் கொள்ளுகிற

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ-அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச
தானே தலை மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கும் கண்ணபிரான் –

அன்றிக்கே
உருமாறும்-
பரஞ்சோதி உருவை விட்டிட்டு
அழுக்கு மானிட உருவை-ஏற்றுக் கொண்ட
கோபால கிருஷ்ணன் என்றுமாம்

ஆயவர் தாம்
ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனும்

சேயவர் தாம் –
ஆசூர பிரக்ருதிகளுக்கு-எட்ட முடியாதவனும்

பாண்டவர்களுக்கு அணியனாயும்
துரியோத நாதிகளுக்கு தூரஸ்தநாயும்
ஒரு கால விசேஷத்திலே அனைவருக்கும் சமீபஸ்ததானாக இருப்பவன் -என்பதை
அன்று உலகம் தாயவர் தாம் – என்கிறது அடுத்து

அன்று உலகம் தாயவர் தாம்
முன்பு ஒரு கால்-உலகங்களைத் தாவி அளந்தவனும்

மாயவர் தாம்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனுமான-எம்பெருமான் –

இப்படி சேயனாயும் அணியனாயும் இருப்பது பற்றி மாயவர் தாம் என்கிறது

காட்டும் வழி
காட்டுகிற உபாயம்-

ஒருவன் ஒரு ஆறு புகாவாறு உருமாறும் ஆயவர் தாம் -ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ;
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யமி மாசுச:” என்ற சரமச்லோகததின் பொருளை அநுஸந்தித்தபடி.

கருமம் ஞானம் முதலிய எந்த உபாயங்களிலும் யாரும் இறங்க வேண்டாதபடி அவரவர்களுடைய காரியங்களைத் தான்
தன் தலை மீது ஏறிட்டுக்கொண்டு நோக்கும் கண்ணபிரான் என்கை.

(“உருமாறும்.”) உலகத்தில் எவன் பலனை அநுபவிக்க வேண்டியவனோ அவன் உபாயாநுஷ்டாகம் பண்ணவேணு மென்றிருக்க,
பலனை, அநுபவிப்பவனான சேதநனை ஒரு உபாயமும் அநுஷ்டிக்க வேண்டாவென்று விலக்கி,
பலனை அநுபவியாத தான்
அவன் செய்ய வேண்டிய காரியங்களைத் தன் மீது ஏறிட்டுக் கொண்டு செய்கை உருமாறுகையிறே.

இனி, உருமாறுமாயவர் என்றது-
பரஞ்சோதி யுருவை விட்டிட்டு அழுக்கு மானிட சாதி யுருவை ஏற்றுக் கொண்ட கோபால க்ருஷ்ணன் என்றபடியாம்.

சேயர்தாம்-
பாண்டவர் போல்வார்க்கு அணியனாயிருக்கச்செய்தேயும், துரியோதநன் போல்வார்க்கு தூரஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது.

ஒரு காலவிசேஷத்திலே எல்லார்க்கும் ஸமீபஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது அன்று உலகம் தாயவர் தாம் என்று.

இப்படி ஒருகால் அணியனாய்
மற்றொருகால் சேயனாய்,
சிலர்க்கு அணியனாய் சிலர்க்குச் சேயனாய் இருப்பது பற்றி
மாயவர்தாம் என்கிறது.

இப்படிப்பட்ட எம்பெருமான் தன் இன்னருளாலேதானே காட்டும் வழி (உபாயம்) நிர்ஹேதுகமாகையாலே
இன்னமார்க்கமாக வந்ததென்று நமக்குத் தெரியாதாயினும், போக்யமாக அநுபவித்துக் கொண்டு ஆநந்தக் கடலிலே மூழ்கியிராநின்றோம்;
வாழ்ச்சியில் குறையில்லை; எல்லே- ஆச்சரியம்.

உலகத்தில் ஒருவனுக்கு மிகுந்த செல்வம் வந்தால் ‘இஃது நமக்கு எந்த வழியாலே வந்த’தென்று ஆராய்தல் அவசியமன்றோ;
ஆநந்தத்தை அநுபவிப்பதன்றோ ப்ராப்தம்.

அதுபோல ஆழ்வாரும் ‘பகவத்க்ருபை எனக்கு எந்தக் காரணத்தாலே வந்தாலென்ன?
ஆநந்தம் அளவற்றிராநின்றது காண்மின்’ என்கிறார்.

———————————————————————-

(வழித் தங்கு வல் லினையை.)
இவ் விருள் தரு மா ஞாலத்தில் உள்ளவரைக்கும் ப்ரதிபந்தகங்கள் மேலிட்டுக் கொண்டேயிருக்குமே!
என்று ஆழ்வாருடைய நெஞ்சு தளும்ப.
அதனை ஆழ்வார் ஸமாதானப்படுத்துகிறார் இதில்

அவ் வெம்பெருமானுடைய சக்தி எப்படிப்படட்து தெரியுமோ வுனக்கு?
ஆச்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்;

அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ?
தொலைத்தே யருள்வன்;
நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று.

பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப சமாதானம் படுத்துகிறார் இதில்–

கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -பெரியாழ்வார்–

வளை யுகிர் ஒளி மொய்ம்பில் மறவோனது ஆகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள எழ விட்ட குட்டமது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே -திரு மங்கை ஆழ்வார்

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இ க்கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ் விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ் வடங்க மார்விடந்த மால் –57-

பதவுரை

நெஞ்சே–நெஞ்சமே!
போர்–யுத்த பூமியிலே
அவுணன் தன்னை–இரணியாசுரனை
தழீஇக் கொண்டு–அழுந்தக் கட்டிக்கொண்டு,
புலால் வெள்ளம்–ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி–பள்ள நிலங்கள் பக்கமாக
எங்கும் சுழித்து உகள–கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும்படியாக
வாழ்வு அடங்கா–(அவ்விரணியனுடைய) வாழ்ச்சி முடியும்படி
மார்வு இடந்தமால்–அவனது மார்பைப் பிளந்த பெருமான்,
வழி தங்கு வல்வினையை–இடைவழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை
மாற்றோனோ–(போக்கியருள மாட்டானோ? (போக்கியேவிடுவன்.)

வழித்தங்கு வல்வினையை
இடை வழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற-பிரதிபந்தகமான வலிய பாபங்களை

மாற்றானோ
போக்கி அருள மாட்டானோ –
போக்கியே விடுவன்

நெஞ்சே
நெஞ்சமே

தழீ இ க்கொண்டு
அழுந்தக் கட்டிக் கொண்டு

பேராவுணன் தன்னை
யுத்த பூமியிலே-ஹிரண்யாசுரனை

சுழித்து எங்கும் உகள
கண்டவிடம் எங்கும் சுழுத்திக் கொண்டு-அலை எறிந்து கிளம்பும்படியாக

தாழ்விடங்கள் பற்றி –
பள்ள நிலங்கள் பக்கமாக

புலால் வெள்ளம்
ரத்த பிரவாஹமானது

வாழ்வடங்க
அந்த இரணியன் உடைய வாழ்ச்சி முடியும்படி

மார்விடந்த மால்
அவனது மார்பை பிளந்த பெருமாள் –

வழித்தங்கு வல்வினை =
பிரதிபந்தகமொன்றுமில்லாவிடில் வழியில் எங்கும் தங்காமல் நேராகச் சென்று நற்கதி காணலாம்;
பிரதிபந்தகமான பாவங்கள் உள்ளவர்கள் இடைவழியிலே தங்க நேர்ந்துவிடும்,
ஆகவே இங்கு, வழியிலே தங்கப் பண்ணுகிற வல்வினையென்று
ப்ராப்தி ப்ரதிபந்தகாமன பாவங்களைச் சொன்னபடி.

மாற்றானோ என்றது- போக்கியே விடுவேன் என்றபடி.

தழீஇக் கொண்டே- தழுவிக்கொண்டு
இரணியனைக் கொன்ற கோரச்செயலை வருணித்துக் கூறுகின்றார் சழித்தெங்கும் என்று தொடங்கி.
இரணியனைக் கொன்ற போது அவனுடம்பிலிருந்து கொழித்துக் கிளர்ந்த ரத்த வெள்ளமானது அங்கே ஸமீபத்திலிருந்த
பள்ள நிலங்கள் யாவும் நிறையும்படி பெருகிற்று என்றவிதனால் அவனுடைய உடல் தடிப்பு சொல்லிற்றாயிற்று.

“கோளரியினுருவங் கொண்டு அவுணனுடலம் குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்” என்றார் பெரியாழ்வார்;
திருமங்கையாழ்வாரும் பெரிய திருமொழியில் (11-4-4.) “வளையுகிராளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது சென்றொருசொல்.
பிளவெழவிட்ட குட்டமது வையமூடு பெருநீரில் மும்மை பெரிதே” என்றருளிச் செய்தார்;

இரணியனைப் பிளந்தபோது உண்டான ரத்த வெள்ளக் குழியானது
மஹா ப்ரளய ஸமுத்ரததிற் காட்டிலும் மூன்று மடங்கு பெரிது என்றாரிறே.

————————————————————

(மாலே படிச்சோதி மாற்றேலினி.)
கீழ்ப் பாட்டில் “அவு ணன்றன்னை மார்விடந்தமால் – வழித்தங்க வல்வினையை மாற்றானோ நெஞ்சே!”
என்று தமது நெஞ்சை நோக்கி ஆழ்வார் சொன்னதை எம்பெருமான் கேட்டருளி
‘ஆழ்வீர்! நான் * வழித்தங்கு வல்வினையை மாற்றுவது மாத்திரமோ செய்வேன், உம்மைப் பரமபதத்திலே கொண்டு
சேர்ப்பதும் செய்வேன் காணும்’ என்றருளிச் செய்ய;

அது கேட்ட ஆழ்வார் ‘பிரானே! அடியேன் பரமபதத்தை விரும்புகின்றேனல்லேன்;
இதுவரை * மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்தது போலவே இன்னமும் பலபிறவிகள் பிறக்கப்பெறினும் வருத்தமில்லை;
அடியேனை இனிப் பிறவாதபடி பண்ணித் திருநாட்டிலே வைத்து
அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக் கொள்ள வேணுமென்று வேண்டுகின்றேனல்லேன்;
நீ என்னை மறவாதிருக்க வேணும், உன்னை நான் மறவாதிருக்கவேணுமென்னு மித்தனையே அடியேன் விரும்புவது.

நீ என்னை மறாவதிருக்கையாவது – உன்னுடைய திவ்யாத்ம குணங்களையும் திவ்ய மங்கள் விக்ரஹ குணங்களையும்
இப்போது நானநுபவிக்குமாறு எங்ஙனே அருள் செய்திருக்கிறாயோ இப்படியே மேலுள்ள காலமும் அருளி செய்கையேயாம்;

உன்னை நான் மறவாதிருக்கையாவது- இப்போது உன்னை அநுபவிப்பது போலவே எந்நாளும்மநுபவிக்கையாம்.

ஆக இவ்வளவே அடியேன் பிரார்த்திக்கும் ஸம்பத்து – என்கிறார்.

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

பதவுரை

மாலே–திருமாலே!
உனது–உன்னுடைய
பால்போல் சீரில் பழுந்தொழிந்தேன்-பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
இனி–இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று–வீடுபெற்று
அடிக் கீழ்–(உனது) திருவடிவாரத்திலே
குற்றவேல்–கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று–அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிச் சோதி–(உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை
மாற்றேல்–எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நிற்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால்–மேலுள்ள காலத்திலே
(உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை.)
மறப்பு இன்மை–உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான் வேண்டும் மாடு–அடியேன் ஆசைப்படும் செல்வம்.

மாலே
திருமாலே

படிச் சோதி மாற்றேல்-
உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜசை -எனக்கு ஒரு காலும் மாற்றாமல்
நித்ய அனுபவ விஷயம் ஆக்க வேணும்

படி -என்று திரு மேனிக்கு பெயர்
உனது திருமேனி ஒளியை இப்போது அனுபவித்துக் கொண்டு இருப்பது போலே
என்றைக்கும் மாறாமல் அனுபவித்துக் கொண்டே இருக்கும் படி அருள வேணும் –

இனி –
இனிமேல்

உனது-
உன்னுடைய –

பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன்
பால் போல் பரம போக்யமான-திருக் கல்யாண குணங்களிலே-ஆழ்ந்து விட்டேன் –

இத்தால்
குணானுபவமே
முக்கியமே ஒழிய
கைங்கர்யம்-அவ்வளவு முக்கியம் இல்லை என்றபடி

மேலால் –
மேலுள்ள காலத்தில் –

பிறப்பின்மை பெற்று –
வீடு பெற்று

அடிக்கீழ் குற்றேவல்
உனது திருவடி வாரத்திலே-கைங்கர்யம் பண்ணுவது

யான் வேண்டும் மாடு அன்று
நான் அபேஷிக்கும் செல்வம் அன்று

மறப்பின்மை
உன்னை மறவாது இருத்தலே வேண்டுவது

இது ஒன்றே யான் வேண்டும் மாடு
சமத்காரமாக அருளிச் செய்கிறார்

அவி ச்ம்ருதிஸ் தவச் சரணார விந்தே பாவே பாவே மேஸ்து
பவத் பிரசாதாத் -முகுந்த மாலை ஸ்ரீ ஸூக்தியை போலே –

மாலே! படிச்சோதி மாற்றேலினி = படி என்று திருமேனிக்குப் பெயர்; அதனடைய சோதியை மாற்றவேண்டா என்றது –
உனது திருமேனியின் ஒளியை இப்போது நான் அநுபவித்துக் கொண்டிருப்பது போலவே என்றைக்கும் மாறாமல்
அநுபவித்துக் கொண்டே யிருக்கும்படி அருளி புரிய வேணுமென்றபடி.

உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் = உன்னுடைய பரம போக்யமான திருக்குணங்களிலே நன்றாக ஆழ்ந்துவிட்டேன் என்கை
ஆதலால் எனக்குக் குணாநுபவம் முக்கியமே யொழிய, கைங்கரியம் அவ்வளவு முக்கியமன்று என்று காட்டினவாறு.
பிறப்பின்மை – பிறவாமை; அதாவது ஸம்ஸார நிவ்ருத்தி; பரமபதத்தைச் சொன்னபடி.
அங்கே சென்று குற்றேவல் செய்கையாகிற செல்வத்தை அடியேன் வேண்டவில்லை;
எங்கிருந்தாலும் உன் திருக்குணங்களை மறவாமலிருக்குமத்தனையே வேண்டுவது.

பரமபதம் சென்று அங்கே நித்ய கைங்கரியம்பண்ணவேணுமென்கிற அளவற்ற ஆசையும்
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்ததில் வருத்தமும் வெறுப்பும் ஆழ்வார்க்குப் பூர்த்தியாக இருக்கச் செய்தேயும்
இப் பாட்டில் இப்படி அருளிச்செய்வது ஒருவகைச் சமத்காரமே யென்க.

இருக்கிறவரையில் எம்பெருமானை மறவாதிருத்தல் நன்று என்கிற சாஸ்த்ரார்த்தத்தை இதனால் வெளியிட்டபடி.
“அவிஸ்ம்ருதிஸ்த்வச் சரணாரவிந்தே பவேபவே மேஸ்து பவத் ப்ராஸாதாத்” என்ற முகுந்தமாலையை இங்கே அநுஸந்திப்பது.

குறுமை+ஏவல்= குற்றேவல்; சிறிய கைங்கரியம்.
மாடு-செல்வம்; “மாடு பொன் பக்கம் செல்வம் ” என்பது நிகண்டு.

———————————————————————

(மாடே வரப்பெறுவர்.)
இவ்விருள் தருமா ஞாலத்திலே எப்படிப்பட்ட ஞானியர்களும் ப்ரக்ருதி ஸ்வபாவங்களை உதறித் தள்ளிவிட்டு
எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுபவித்துக் கொண்டே யிருந்தாலும்,இடையிடையே இந்நிலத்தின் காரியம் நிகழ்ந்தே தீருமிறே.
இல்லாவிடில் இருள் தருமாஞாலமென்று இவ்விபூதியின் பெயர் பொய்யாகுமே; இருள் இடையிடையே கலந்து பரிமாறுமிறே.

கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு
இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று;
தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-;

திருப்பாற்கடலிலே அலைகள் துடைகுத்தத் திருக்கண் வளாந்தருளாநின்ற திருமாலின் திருநாமங்களை நாம்
அநுஸந்திக்க வேணுமென்று சிந்தித்த மாத்திரத்திலே யிருக்க
இன்னமும் இவ்விடத்திலேயே சுற்றுக் காலிட்டுக்கொண்டு திரிகின்றனவே,
முன்போல இன்னமும் நம்மிடத்திலேயே தங்கியிருக்கலா மென்று நினைத்திருக்கின்றனவோ? என்கிறார்.

கீழ் ஐம்பத்து நான்காம்பாட்டில் “வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோவொருங்கிற்று” என்று
வல்வினைகள் போனவிடம் தெரியவில்லை யென்றருளிச்செய்த ஆழ்வார் திருவாக்கிலே மீண்டும்
“வல்வினையார் காடானுமாதானும் கைக்கொள்ளார்” என்கிற இப்பாசுரமும் வெளி வரும்படியாயிருக்கிறகிறே
இவ்விருள் தருமாஞாலத்தின் கொடுமை!.

இருள் தரும் மா ஞாலத்திலே இருள் இடை இடையே கலந்து-பரிமாறும் இறே-
பகவத் குணங்களை அனுபவித்த ஆழ்வார்-
சம்சார தண்மை தோன்றத் தொடங்க திரு உள்ளம் நொந்து பேசுகிறார் –

மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

பதவுரை

பேர் ஓதம்–விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடேபோய்–சிதறி விழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பேராளன்–எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓத–அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க–நினைத்த மாத்திரத்திலே,
வல்வினையார்–கொடிய பாவங்கள்
பேர்ந்து–நம்மைவிட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக்கொள்ளார்–காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப்பெறுவராம் என்றே?–இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?

மாடே வரப் பெறுவாராம் என்றே
இன்னமும் நம்மிடத்திலே-வாழப் பெறலாம் என்ற-எண்ணத்தினாலோ

கீழே மாடு -செல்வம் அர்த்தம்
இங்கே பக்கம்
மாடு -பொன் பக்கம் செல்வம்
-நிகண்டு
என்றே சொல் நயத்தால் வாராமை காட்டி அருளுகிறார்
இனி நம்மிடம் வல் வினைகள் தங்க இடம் இல்லை என்றபடி –

வல் வினையார்
கொடிய பாவங்கள்

காடானும் ஆதானும் கைக் கொள்ளார் –
காடுகளிலோ மற்று ஏதேனும் ஓர் இடத்திலோ-போய்ச் சேராமல் இருக்கின்றனவோ

கீழே வானோ மறி கடலோ –என்று அருளிச் செய்த ஆழ்வார்-இப்பொழுதும்
மீண்டும் இப்படி அருளிச் செய்யும்படி-இருள் தரும் மா ஞாலத்தின் கொடுமை

பேரோதம் –
விசாலமான கடலிலே

சிந்து திரை ஊடே போய்
சிதறி விழுகின்ற-அலைகளின் உள்ளே சென்று

கண் வளரும் –
திருக் கண் வளர்ந்து அருளா நின்றுள்ள –

பேராளன் –
எம்பெருமானுடைய

பேரோதச் சிந்திக்கப் –
திரு நாமங்களை சிந்திக்க வேணும்-என்று நினைத்த மாத்ரத்திலே

பேர்ந்து
நம்மை விட்டு கிளம்பி –

கீழ்ப்பாட்டில் மாடு என்பதற்கு செல்வம் என்று பொருள்;
இப்பாட்டில் அப்பதமே பக்கமென்ற பொருளில் வந்தது.
(“மாடு பொன்பக்கம் செல்வம்” என்பது நிகண்டு.)
வரப்பெறுவராமென்றே? என்ற சொல் நயத்தினால்,
இனி அவ் வாசைக்கு இடமில்லை;
வல்வினைகட்கு இனி நம்மிடத்தில் தங்க முடியாது- என்பது விளக்கப்பட்டதாம்.

—————————————————————-

(பேர்ந்து ஓன்று)
வல்வினைகள் தம்மை அடர்க்க நினைக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்;
அவை அடர்ந்தாலும் தம்முடைய அத்யவஸாயம் ஒரே உறுதியாயிருக்கும் படியைப் பேசுகிறாரிதில்.

நெஞ்சே! திருத்துழாய் மாலையை அணிந்தள்ள திருமாலின் போக்யதையில் நீ பழகினவனன்றோ?
உனக்கு நான் புதிதாக உபதேசிக்க வேண்டுவதன்றே? அந்த போக்யதையில் நீ யீடுபட்டு வேறு எந்த வஸ்துவிலும் கண் செலுத்தாமல்
அவ்வெம்பெருமானொருவனையே பின்பற்றி நிற்க வேண்டியது உன் கடமை; இந்த ஸ்வரூபம் கெடாதபடி நின்றாலும் நில்லு;
நிற்காமல் லிஷயாந்தாங்களைப்பற்றி முடிந்து போவதானாம் போ; உன்னை நான் நிர்ப்பந்திக்க மாட்டேன்;
ஆனால், நம்மை நரகத்துக்குப் போகாதபடி தடுத்துக் காத்தருளவல்ல கடவுள் அவனைத் தவிர வேறொருவன்
எங்குமில்லை யென்பதை மாத்திரம் உனக்கு உறுதியாய்ச் சொல்லுவேன்;
இதனை விச்வஸித்து நீ அப்பெருமானையே அநுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாயாகில் உகக்கிறேன்;
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும் என்று வெறுத்திருக்கிறேன் = என்றராயிற்று.

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது–வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின்நிற்பாய்–போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய்–அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை–அநாதியாய்
மா–பெரிதாய்
வெம்–கடினமான
நரகில்–நரகத்திலே
சேராமல்–போய்ப் புகாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை–வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண்–ஓரிடத்திலுமில்லைகிடாய்.

பேர்ந்து ஓன்று நோக்காது-
வேறு ஒன்றையும் கணிசியாமல்

ஈன் துழாய் மாயனையே பின்னிற்பாய்-
போக்யமான திருத் துழாய் மாலையை-அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி-நின்றாலும் நில்லு

நில்லாப்பாய் –
அப்படி அவனைப் பற்றாது ஒழியினும் ஒழி-

என்னெஞ்சே

தொல்லை –
அநாதியாய்-பரமபதம் போலே நரகமும் அநாதியே
சுக்ல கிருஷ்ண கதீ ஹ்யதே ஜகதஸ் சாஸ்வதே மதே-இரண்டுமே நித்யமாக சொல்லப் பட்டதே-

ஸ்தானம் நித்யம் எனபது இரண்டுக்கும் ஒக்கும்
பரம பதம் சென்றார் நச புன ஆவர்த்ததே எனபது மட்டும் வாசி

மா வெந்நரகில்-
பெரிதாய் கடினமான நரகிலே –

சேராமல்
போய்ப் புகாமல்

காப்பதற்கு
நம்மை ரஷிப்பதற்கு –

-பேர்ந்து எங்கும் இல்லை காண் மற்றோர் இறை
பேர்ந்து மற்று ஓர் இறை எங்கும் இல்லை காண்
வேறு ஒரு ஸ்வாமியும் வேறு இடத்தில் இல்லை காண் –

தொல்லைமாவெந்நரகில்= நித்யவிபூதியென்று சொல்லப்படுகிற பரமபதம் மாத்திரமே யன்றோ ஆதியந்தமற்றது;
நரகமும் அப்படிப்பட்டதோ? தொல்லை நரகம் என்னலாமோ? என்று சிலர் சங்கிப்பர்கள்;

பகவத் கீதையில் = சுக்லக்ருஷ்ணகதீ ஹ்யதே ஜகதச் சாச்வதேமதே” என்று இரண்டுமே நித்யமாகச் சொல்லப்பட்டுள்ளமை காண்க.

பரம பதஞ் சென்றவர்கள் திரும்பி வருதலில்லாமையால் அதனை விசேஷித்து நித்யவிபூதி யென்கிறது.
ஸ்தாநம் நித்யமென்பது இரண்டுக்குமொக்கும்.

காப்பதற்கு இல்லை காண் மற்றொரிறை = “எருத்துக் கொடியுடையானும் பிரம்மனுமிந்திரனும் மற்றுமொருத்தரும்
இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை” என்று பெரியாழ்வார் திருமொழியும்,

“நீளரவைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தென்னரகைப் பற்றிக் கடத்தும் படை” என்ற பொய்கையார் பாசுரமும்
இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -41-50–திவ்யார்த்த தீபிகை –

September 16, 2014

(வலியமென நினைந்து)
பூதனையை முடித்த விஷயத்தைக் கீழ்ப் பாட்டில் பேசவே, அத்தோடு ஒரு கோவையான
மல்ல வத சரித்திரமும் நினைவுக்குவர, அதனை இப்பாட்டில் பேசுகிறார்.
முரட்டு மல்லர்களோடு நீ போர் செய்ய நேர்ந்த காலத்து
உனது ஸூ குமாரமான திருக் கைகளாலே அந்த மல்லர்களை நீ புடைக்கும் போது இவ்வுலகில் கண் இருந்த படுபாவி ஜனங்களெல்லாம்
“ஐயோ! நமது சரண்யனுக்கு என்ன தீங்க விளைந்திடுமோ!” என்று சிறிதும் வயிற்றெரிச்சல் படாதே கல்லாகக் கிடந்தவனே!
அந்தோ! என்று இன்று தாம் வயிற்றெரிச்சல் படுகிறார்.

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

பதவுரை

வலியம் என நினைந்து–நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு
வலிய முடி–வலிதான தலைகள்
இடிய–சிதறியொழியும்படி
வாங்கி–போக்கடித்து
நின்–உன்னுடைய
வலிய பொன் ஆழி கையால்–வலிதாயும் அழகிய திருவாழியையுடையதாயுமுள்ள திருக்கையாலே
புடைத்திடுதி–(அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்;
வந்து எதிர்த்த மல்லர்–எதிரிட்டு வந்த மல்லர்களுடைய
(நீ கை நோவக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்)
இப்பார்–இவ்வுலகமானது
கீளாதே–வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்
பல் நாளும் நிற்கும்–சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)

வலியம் என நினைந்து-
நாமே பல சாலிகள் என்று நினைத்துக் கொண்டு –

வந்து எதிர்ந்த மல்லர் –
எதிரிட்டு வந்த மல்லர்களுடைய

வலிய முடி யிடிய –
வலிதான தலைகள்-சிதறி ஒழியும்படி –

வாங்கி –
போக்கடித்து

-வலிய நின் பொன்னாழிக் கையால்
உன்னுடைய வலிதாயும்-அழகிய திரு ஆழியையும்-யுடைத்தாய் இருந்துள்ள
திருக் கையாலே

புடைதிடுதி –
அந்த மல்லர்களை அடித்து விட்டாய் –

நீ கை நோவ கார்யம் செய்தததை கண்ணாலே கண்டு வைத்தும்-கீளாதே பல் நாளும் நிற்குமிப்பார்-
இந்த உலகமானது-வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்-சிரஞ்சீவியா இருக்கின்றதே
என்ன நல்ல நெஞ்சே –

அன்றிக்கே
வலிய நின் பொன்னாழிக் கையால் கீளாதே புடைதிடுதி
இரணியனது மார்வைக் கீண்டு எறிந்தது போலும்-
கேசியின் வாயைக் கீண்டு எறிந்தது போலும்
மல்லர்களைக் கீண்டு எறியாமல் மல் போர் செய்யும் முறைமைக்குத் தகுதியாக
திருக் கைகளாலே புடைத்திட்டாய்
அப்படி புடைத்திரா விட்டால் இந்த உலகம் அஸ்தமித்து போயிருக்கும்
அந்த மல்லர்களை புடைத்திடவே நீயும் பிழைத்து-இவ்வுலகமும் நிலை பெற்று -நிற்கிறது-என்றுமாம்-

ஸ்ரீக்ருஷ்ண பலராமர்களை எவ்வகையினாலாவது கொன்றிட வேணுமென்று கறுக் கொண்ட கம்ஸன் வில்விழாவென்கிற
ஒரு வியாஜம் வைத்து அவர்களைத் தனது படைச் சாலைக்கு வரவழைத்தான்; அப்போது அவர்கள் அவனது ஸபையிற் செல்லுகையில்
அவர்களை யெதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவி நிறுத்தப் பட்டிருந்த சாணூரன் முஷ்டிகள் முதலிய பெரு மல்லர்கள்
சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும் போர் செய்ய, அவர்களை யெல்லாம் அவ் யாதவ வீரரிருவரும் மற்போரினாலேயே
கொன்று வென்றிட்டனர் என்பது மல்லரைப் புடைத்த வரலாறு.

அன்றி, கண்ணன் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிடஞ் சென்ற பொழுது
துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபா மண்டபத்தில் மிகக் பெரிய நிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை
ஆயுத பாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறிய வொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலே மூடி
அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை யமைத்து அவ் வாஸனத்திற் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல,
அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன் மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற்
செல்லுமளவில் அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துக் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே,
அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர் என்பதொரு கதையும் உண்டு.

நாங்களே மஹா பலசாலிகள் என்ற செருக்குற்று எதிரிட வந்த மல்லர்களுடைய வலிமிக்க முடிகள் சிதறிப்போம்படி நீ
உனது அழகிய திருக்கைகளால் புடைக்கச்செய்தே அதனைக் கண்டு கொண்டிருந்த இவ்வுலகமானது
வயிறுவெடித்து மாய்ந்து போகாமல் சிரஞ்சீவியாயிருந்ததே! என்ன கல் நெஞ்சே! என்றாயிற்று.

பின்னடிகட்கு மற்றொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்;
வலியநின் பொன்னாழிக்கையால் கீளாதே புடைத்திடுதி=
இரணியனது மார்வைக் கீண்டெறிந்தது போலும்
கேசியின் வாயைக் கீண் டெறிந்தது போலும் மல்லர்களையும் கீண்டெறியாமல் மற்போர் செய்யும் முறைமைக்குத் தகுதியாகத்
திருக்கைகளாலே புடைத்திட்டாய்; அப்படி புடைத்திராவிடில் இந்த உலகம் அஸ்தமித்துப் போயிருக்கும்.
அந்த மல்லர்களை நீ புடைத்திடவே (நீயும் பிழைத்து) இவ்வுலகமும் நிலை பெற்று நிற்கிறது என்னவுமாம்.

—————————————————————-

கீழ்ப் பாட்டில் இப் பார் என்ற இவ் வுலகத்தின் ப்ரஸ்தாவம் வரவே உலகிலுள்ள பிராணிகளின் தன்மைகளில்
ஆழ்வார்க்கு ஆராய்ச்சி சென்றது. ஸ்ரீமந்நராயணனையே ஸர்வ ஸ்வாமியென்ற கொண்டு பற்றாமல்
கண்ட தெய்வங்களின் காலிலே விழுந்து அலைந்து திரியும் ராஜஸ தாமஸப் பிராணிகள் விஞ்சி யிருக்கக் கண்டார்.
திருவுள்ளத்திலே பரிதாபம் தோன்றி, ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமைப்பட்டிருக்கை தவிர
வேறொன்றும் தகுதியல்ல என்பதைக் காரணத்துடன் வெளியிடுகிறார்.

வேதங்களும் வைதிகர்களும் பல பல செயல்களை செய்து அருளினவன்-
ஸ்ரீ மன் நாராயணனே என்று சொல்ல-சர்வ பிரகாரங்களாலும் அவனே ரஷகனாய் இருக்க-
மற்று ஒருவருக்கு சேஷப்பட்டு இருக்க வழி இல்லையே –

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

பதவுரை

(ஸ்ரீமந் நாராயணனே)

பார் உண்டான்–(பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்;
பார் இடந்தான்–(மஹா வராஹமாகிப்) பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தான்;
பார் அளந்தான்–(திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்;
முன்–முதல்முதலாக
பார் இடம் படைத்தான்–இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான்
என்பர்–என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்;
பார் உமிழ்ந்தான்–(பிறகு) அதைப் புறப்படவிட்டான்;
பார் இடம் ஆவானும் தான்–அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வருபியாகவுமிருக்கிறான்;
ஆனால்–ஆனபின்பு (நமக்கு)
இடம் ஆர்–ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை)
அவை–இவ்வுலகங்கள்
மற்று ஒருவர்க்கு–ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு
ஆவான் புகா–சேஷப்பட்டிருக்க மாட்டா.

பாருண்டான்
பிரளய காலத்தில் பூமியை விழுங்கினான்

பாருமிழ்ந்தான் –
பிறகு அதைப் புறப்பட விட்டான் –

பாரிடந்தான்
மகா வராஹமாய்-பூமியை ஓட்டுவித்து எடுத்தான்

பாரளந்தான்
திரு விக்ரமனாய் பூமியை அளந்து கொண்டான்

பாரிடம் முன் படைத்தான்
முதல் முதலாக இப் பூமியை எல்லாம் உண்டாக்கினான்

என்பரால் –
என்று சாஸ்திர ஞானிகள் சொல்லுகிறார்கள்

பாரிடம் ஆவானும் தான்
அவனே சகல பிரபஞ்ச ஸ்வ ரூபியாகவும் இருக்கிறான் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -உபநிஷத்-எல்லா பொருள்களும்-
ப்ரஹ்மத்தை-
ஆதாரமாகவும்-
ரஷகமாகவும்
சேஷியாகவும்-
தாரகமாகவும் -கொண்டவை -என்றபடி

ஆனால்
ஆன பின்பு –

ஆரிடமே
ஆர் இடம்-நமக்கு ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு ஆர் -யாரும் இல்லை

அவை
இவ்வுலகங்கள்

மற்று ஒருவர்க்கு
ஸ்ரீ மன் நாராயணனைத் தவிர-மற்று ஒரு தெய்வத்துக்கு

ஆவான் புகா
சேஷப்பட்டு இருக்க மாட்டா –

ஆவான் புகுதல்
அடிமைப்பட நேர்தல்-
இவன் அவனுக்கு ஆனான் என்றது இவன் அவனுக்கு அடிமைப் பட்டான் -என்றபடி
புகா -பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினை முற்று
கீழ்ச் சொன்ன செயல்கள் எம்பெருமான் தவிர மற்று ஒருவர் இடமும் பொருந்த மாட்டா -என்றபடி-

பிரளயங் கொள்ளாதபடி உலகங்களைத் திரு வயிற்றிலே வைத்து நோக்கினவன் நாராயணன்;
அவற்றை மறுபடியும் வெளிப்படுத்தினவனும் அவனே;
பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு போன ஹிரண்யாக்ஷனை
மஹாவராஹமாகிக் கொன்று அப்பூமியை மீட்டுக் கொணர்ந்தவனும் அவனே;
மற்றொருகால் மஹாபலியின் அஹங்காரத்தை அடக்கி அவன் பக்கலில் நின்றும் இவ்வுலகை ஸ்வாதீநப்படுத்திக் கொண்டவனும் அவனே;

இங்ஙனே பல் பல சொல்வதேன்?
இப்புவனி முழுவதையும் உண்டாக்கினவன் அவனே;
இவ்விஷயம் நான் உத்ப்ரேக்ஷித்துச் சொல்லுகிறதல்ல;
வேதங்களும் வைதிகர்களும் சொல்லுவது இதுவே.

ஆக இப்படி எம்பெருமான் இவ்வுலகத்திற்கு ஸர்வ ப்ரகாரங்களாலும் ரக்ஷகனாயிருப்பதுபற்றி சாஸ்திரங்களில்
“எம்பெருமானே இவ்வுலகம், இவ்வுலகமே எம்பெருமான்” என்ற ஒற்றமை நயந் தோன்றச் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆகையாலே இவ்வுலரகங்கட்கு அப்பெருமாளைத் தவிர்த்து வேறொருவரும் ஆச்ரயமாயிருக்க முடியாது;
இவ்வுலகமும் அவனுக்கன்றி மற்றொருவர்க்கு சேஷப்பட்டிருக்க வழியில்லை என்றாயிற்று.

பாரிடமாவானம் தான் =
உபநிஷத்தில்- ஸர்வம் வல்விதம் பரஹ்ம்” என்று சொல்லிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.
எல்லாம் பரப்ரஹ்மே யென்றது- எல்லாப் பொருள்களும் ப்ரஹமத்தையே ஆதாரமாகவும் ரக்ஷகமாகவும் சேஷியாகவும்
தாரகமாகவுங் கொண்டவை என்றபடி.

ஆனால் ஆர் இடமே = எல்லாவுலகமும் ஸ்ரீமந்நாராயணனிட்ட வழக்காயிருக்கும்போது
வேறொருவர் புகலிடமாயிருக்கக்கூடுமோ? என்கை.

ஆனால் என்றது ஆனதால் என்றபடி.
இரண்டாமடியிலும் நான்மகாமடியிலும், ஆல்- அசைச்சொல்.

அவை மற்றொருவர்க்கு அவனுக்கு ஆனான்” என்றால் ‘இவன் அவனுக்கு அடிமைப்பட்டான்’ எனப்பொருள்படுதல் காண்க.
புகா -பலவின் பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று.
பாருண்கை, பாருமிழ்கை முதலிய கீழ்ச்சொன்ன செயல்களெல்லாம்
எம்பெருமானிடத்தில் தவிர மற்ற தெய்வங்களிடத்துப் பொருந்தமாட்டா என்னவுமாம்.

——————————————————————-

(அவயமென நினைத்து)
ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை என்று கீழ்ப்பாட்டிற் சொன்னதையே மற்றொரு முகத்தாலும்
ஸ்தாபித்துக் கொண்டு அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்பவர்கட்கன்றி
மற்றையோர்க்குத் துன்பங்கள் நீங்க வழியில்லை யென்கிறார்.
ஸாமாந்யரான உலகர்கள் எந்தத் தெய்வங்களைப் பரதேவதை யென்று கொள்ளுகின்றார்களோ
அந்தத் தெய்வங்களும் தங்கள் தங்களுக்கு ஆபத்து நேருங் காலங்களில் ஸ்ரீமந்நாராயணனையே அடி பணிந்து
உய்ந்து போகின்றன என்பதை முன்னடிகளில் அருளிச்செய்கிறார்.

அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத்துயரை மாய்க்கும் வகை–43-

பதவுரை

அவயம் என நினைத்து வந்த–அபயம் வேண்டிவந்து சரணமடைந்த
சுரர் பால்–தேவதைகளிடத்திலுள்ள
நவையை–குற்றங்குறைகளை
நளிர்விப்பான் தன்னை–போக்கடிக்கு மெம்பிரானை
சுவை இல் மனத்து–ஒரு படிப்பட்ட மனத்திலே
உயர வைத்து இருந்து–பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து
வாழ்த்தா தார்க்கு–மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு
மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?– தங்கள் மனத்திலேயுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது?

அவயம் என நினைந்து வந்த
அபயம் வேண்டி வந்து சரணம் அடைந்த –
சக்ருதேவ பிரபன்னாய தவாச்மீ திச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம-
அபய பிரதானம் தேடி வருகின்ற தேவதைகள்-அபயம் -அவயமாக திரிந்து
அவையம் -அந்தாதிக்கு சேர பாட பேதம் -அப்போது இடைப் போலி

சுரர் பாலே –
தேவதைகள் இடத்திலே

நவையை –
குற்றம் குறைகளை -துக்கமும் நவை

நளிர்விப்பான் தன்னை –
போக்கடிக்கும் எம்பெருமானை-
நளிர்வித்தல்
-நடுங்கச் செய்தல்
பகைவர்களை நடுங்க செய்து அருளி ஒழித்து அருளி -செய்பவன் தன்னை

வேத அபஹார -மது கைடபர்கள் கையிலே பறி கொடுத்த ப்ரஹ்மன் துயரமும்
குரு பாதாக -ப்ரஹ்மஹத்தி தோஷம் பீடித்த ருத்ரன் துயரமும்
தைத்ய பீடா -மகா பலி இடம் பறி கொடுத்த இந்திரன் துயரம் என்ன
மற்றும் பலவற்றையும் தீர்த்து அருளிய பிரான் ஸ்ரீ மன் நாராயணனே –

கவையில் மனத்துயர வைத்திருந்து
ஒருபடிப் பட்ட மனத்திலே-பரிபூர்ணமாக வைத்துக் கொண்டு இருந்து
கவை -இரண்டு பட்டு இருத்தல்

கவை இல்லாமை -ஒருப் படி பட்டு இருத்தல்
அனந்யா சிந்த யந்தோ மாம் -ஸ்ரீ கீதை –
எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவும் துணிந்து இருக்கை
எவை கொல் அணுகப் பெருநாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே -திருவாய்மொழி-9-8-3-

வாழ்த்தார்க்கு-
மங்களா சாசனம் பண்ணாதவர்களுக்கு

உண்டோ -மனத் துயரை மாய்க்கும் வகை
மனத்துயரை மாய்க்கும் வகை -உண்டோ-தங்கள் மனத்தில் உள்ள துக்கங்களை
போக்கிக் கொள்ள வழி ஏது-

சுரர்பாலே என்றவிடத்து
ஸுரா: என்ற வடசொல் சுரர் எனத் திரிந்து கிடக்கிறது. தேவதைகள் என்று பொருள்.
இங்கே, பிரமன் சிவன் முதலிய ப்ரதாந தேவதைகளை நினைக்கிறது.
வேதங்களை மதுகைடவர் முதலான அசுரர் கையிலே பறிகொடுத்துவிட்டு அழுதுகொண்டே வந்து சரணம்புகுந்து நின்ற பிரமனென்ன,
ப்ரஹ்மஹத்தி சாபத்தால் கண்ட இடமெங்குந் திரிந்து எங்கும் புகலற்று வந்துநின்ற பரமசிவனென்ன,
மாவலிபோல்வார் கையிலே தகர்ப்புண்டு பரிபவப்பட்டு வந்துநின்ற இந்திரனென்ன
இவர்கட்கும் மற்றும்பல தெய்வங்கட்கும் துன்பறந் தவிர்த்த பிரான் ஸ்ரீமந்நாராயணனேயிறே.

அவயமென நினைந்துவந்த =
“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாசதே- அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று
கடற்கரையிலே ஸ்ரீவிபீஷணாழ்வாரை நோக்கி அப்யமளித்ததை நெஞ்சிலே கொண்டு
“அஞ்சேலென்ற கைகவியாய்” என்றும்“
அடைக்கலம் புகுந்தவென்னை அஞ்சலென்ன வேண்டுமே” என்றும் அபய ப்ரதானம் வேண்டிவருகின்றனராம் தேவர்கள்.
அப்படிப்பட்டவர்கள் திறத்திலே திருவருள்செய்து அவர்களுடைய நவையை நளிர்விப்பவன் எம்பெருமான்;
நவையாவது குற்றம்; துக்கமுமாம். நளிர்வித்தலாவது நடுங்கச்செய்தல்;
பகைவரை நடுங்கச் செய்கிறானென்றால் பகைவரை ஒழிக்கிறானென்று கருத்தாகுமிறே.

அபயம் என்ற வடசொல் அவயமெனத் திரிந்தது. அந்தாதித் தொடைக்க நன்கு சேரும்படியாக அவையம் எனப் பாடமென்பாருமுண்டு;
அப்போது இடைப்போலி.

இப்படி ஸர்வரக்ஷகனான எம்பெருமானைக் கவை இல் மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு
மனத் துயரை மாய்க்கும்பகை உண்டோ? = கவை என்று இரண்டுபட்டிருக்கைக்குப் பெயர்;
கவையில்லாமையாவது ஒருபடிப்பட்டிருக்கை; “அநந்யாச் சிந்தயந்தோ மாம்” என்று கீதையில் சொல்லுகிற நிலைமை வாய்ந்திருக்கை.
எம்பெருமானையே உபாயமாகவும் உயோகமாகவும் துணிந்திருக்கையைச் சொன்னபடி.
பரமைகாந்திகளாய்க் கொண்டு அவனை வாழ்த்தாதவர்களுக்கு மனத்துன்பங்களை நீக்கிக்கொள்ள வழியில்லை யென்தாயிற்று.

திருவாய்மொழியில் (9-8-3) “எவை கொலணுகப் பெறுநாள்” என்ற பாட்டில்,
நவை, கவை என்ற பதப் பிரயோகம் காண்க.

—————————————————————

(வகைசேர்ந்த நன்னெஞ்சும்)
இப்பாட்டுக்குப் பிள்ளைதிருநறையூரரையர் ஒரு படியாகவும்
பட்டர் ஒருபடியாகவும் நிர்வஹிப்பராம்.
அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனமே யென்னில்; –
வகை சேர்ந்த நல்நெஞ்சும் = எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்திரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும்,
அந்த ஒரு குண சேஷ்டிதத்தையே பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கம் அப்பெருமானுடைய
எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அநுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும்,
எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகல குணங்களிலும் ஸகல சரித்திரங்களிலும் நெஞ்சு பொருந்தும்படி செய்து கொண்டு
ஸர்வேச்வரனை அநுபவித்து மங்களாசாஸநம் பண்ண வேண்டியிருக்க,
அங்ஙனே பண்ணாதிருக்கிறார்கள் ஸம்ஸாரிகள் ;
இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த பாவமே இதற்குக் காரணம் – என்பதாக அரையர் நிர்வாஹம்.

பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; –
ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ரஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசுகைக்கு
யோக்யமான நாவோடு கூடினவாயும் ரஜோகுணமும் தமோகுணமும் மிக்க ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற் படிந்தவில்லையே யாகிலும்,
‘நம்மை ஈச்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக் கை கால் முதலிய கரண களேபரங்களைக் கொடுத்தது ஏதுக்கு?’ என்று
ஆராய்ச்சி செய்து பகவத் விஷயத்திலே பல்லாண்டு பாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள்
பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே, இதுவரையில் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா?
இனி மேலாவது நல்ல வழி போகத் தேடலாகாதா?
மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளா யிருப்பதற்கே யன்றோ இப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்! – என்பதாம்.

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இதுவன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

பதவுரை

வகை சேர்ந்த நல்நெஞ்சும்–(ஞானத்திற்கு) மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்
மிக வாய்ந்து வீழா எனினும்–(எம்பெருமானை) நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும்,
தாம்–சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள்
மிக ஆய்ந்து–நன்றாக ஆராய்ச்சி பண்ணி
நா உடைய வாயும்–(எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும்
மாலை–எம்பெருமானை
வாழ்த்தாது இருப்பர்–வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்
மேலை தாம் செய்யும் வினை இது அன்றே–மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது.

வகை சேர்ந்த நல் நெஞ்சம்
ஜ்ஞானதிற்கு மார்க்கமாக ஏற்ப்பட்டு இருக்கிற நல்ல நெஞ்சமும்

நாவுடைய வாயும் –
எம்பெருமானை பேசுவதற்கு உறுப்பான-நாவொடு கூடிய வாக்கும்

மிக வாய்ந்து வீழா வெனிலும்-
எம்பெருமானை நன்றாக கிட்டி-அனுபவிக்கா விட்டாலும்

மிக வாய்ந்து மாலைத்-
நன்றாக ஆராய்ச்சி பண்ணி-எம்பெருமானை –

தாம்
சேதனராய் பிறந்து இருக்கிற தாங்கள்

வாழ்த்தாது இருப்பார் –
வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்

இதுவன்றே மேலைத் தாம் செய்த வினை
மேலைத் தாம் செய்த வினை இது வன்றே-மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காக
தாங்கள் செய்து கொள்ளுகிற-பாபம் அன்றோ இது –

————————————————————

மாறி மாறி பல பிறவிகள் எடுத்து இருந்தாலும்-
இனி மேல் பிறவாமைக்கு வழி தேடிக் கொண்டேன்
என்கிறார் –

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-

பதவுரை

விளையார்–பாவங்கள்
தர முயலும்–நமக்கு உண்டு பண்ண நினைக்கிற
வெம்மையை அஞ்சி–கொடிய துன்பங்களுக்கு அஞ்சி
தினை ஆம் சிறிது அளவும்–தினையளவு சிறிய அற்ப காலமும்
செல்ல நினையாது–வீணாகக் கழிய விரும்பமாட்டாமையினாலே,
நான்–அடியேன்
வானோர்–நித்யஸூரிகள்
தொழுது இறைஞ்சும் நாயாகத்தான்–தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய
பொன் அடிகள்–திருவடிகளை
வாசகத்தால் ஏத்தினேன்–சொற்களாலே துதிக்கின்றேன்.

வினையார் தர முயலும்-
பாபங்கள் நமக்கு உண்டு பண்ண நினைக்கிற

வெம்மையை அஞ்சி –
கொடிய துன்பங்களுக்கு அஞ்சி

தினையாம் சிறிது அளவும்
தினை யளவு சிறிய அல்ப காலமும்-அதி அல்ப காலமும்

செல்ல -நினையாது
வீணாகக் கழிய விரும்ப மாட்டாமையினாலே

வாசகத்தால் ஏத்தினேன் –
சொற்களாலே துதிக்கின்றேன்

வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான்
நித்ய ஸூ ரிகள் தொழுது வணங்கும்-பெருமை வாய்ந்த பெருமானுடைய

பொன்னடிகள்
திருவடிகளை –

நான் –
அடியேன்-

(வினையார் தர முயலும்.)
நானும் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்தவனேயாகிலும் இனிமேல் பிறவாதபடிக்கு ஒரு வழி தேடிக் கொண்டேனென்கிறார்.
எம்பெருமானோடு இடைவிடாது சேர்ந்திருக்கை புண்ய பலமென்றும் அவனைப் பிரிந்து வருந்துகை பாப பலமென்றும் நூல்கள் கூறும்.
நாம் இனிமேலும் பாவமே செய்வோமாகில் இன்னமும் வெவ்விதான பகவத் விச்லேஷ துக்கமே நமக்கு நேர்ந்திடும் என்று அச்சமுண்டாயிற்று;
அவனைப் பிரிந்து ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்க மாட்டாமையினாலே,
வானோர் தொழுதிறைஞ்சும் பெருமை வாய்ந்த அப்பெருமானுடைய பொன்னடிகளை நான் வாய்கொண்டு துதித்துப் போருகின்றேன் என்றாராயிற்று.

வினையார் = திணைவழுவமைதி; கோவத்தினால் உயர்த்திக் கூறுகிறபடி. வெம்மை = கடூரமான துக்கம்.
நினையாம் சிறிதளவும் =
தானியங்களுள் தினையாம் சிறிதளவும் =
தானியங்களுள் தினையென்பது மிகச்சிறதாதலால் அதனை உவமையாக எடுத்துக்கொண்டபடி;
அத்யல்ப காலமும் என்றபடி. நாயகம்- பெருமை.

—————————————————————–

உபாய உபேயங்கள் இரண்டும்-எம்பெருமான் ஒருவனே என்னும் உறுதியை
அருளிச் செய்கிறார் –

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங்கண் மால் -நீங்காத
மா கதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

பதவுரை

தேங்கு ஓதம் நீர் உருவன்–ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திருநிறத்தையுடையவனும்.
செம் கண்-செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான
மால்–ஸர்வேச்வரன்
நீங்காத–ஒருநாளும் விட்டுப்பிரியக்கூடாத
மா கதி ஆம்–சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,)
வெம்நரகில்–கொடியஸம்ஸாரத்திலே
சேராமல்–பொருந்தாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
கதி ஆம்–உபாயமாகவும் இராநின்றான்;
நெஞ்சே நினை–நெஞ்சே! (இதை) நீ அநுஸந்திக்கக்கடவை;
நாள் நாளும்–நாள்தோறும் (உடனுக்கு) நான்
நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே–சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண்.

கதி -கமன சாதனம்
கதி –கந்தவ்ய ஸ்தலம்

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
நாள் தோறும் நான் உனக்கு சொல்லும் சொல்லாவது-இவ்வளவே காண்
கூற்று– சொல்– கூறப்படுவது- கூற்று

தேங்கோத நீருருவம்-
ஓடாமல் தேங்குகின்ற-கடல் போன்ற திரு நிறத்தை யுடையவனும்

செங்கண் மால் –
செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடையவனுமான-சர்வேஸ்வரன்

நீங்காத மா கதியாம்-
ஒரு நாளும் விட்டுப் பிரியக் கூடாத-சிறந்த உபேயமாய் இரா நின்றான் –

அவ்வளவும் அல்லாமல்

வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
கொடிய சம்சாரத்திலே பொருந்தாமல்-நம்மை ரஷிப்பதற்கு
சம்சாரம் -வெந்நரகம்

கதியாம்
உபாயமாகவும் இரா நின்றான்

நெஞ்சே-நீ- நினை
நெஞ்சே நீ இத்தை-அனுசந்திக்கக் கடவை –

(நான் கூறும் கூற்றாவது.)
உபாய உபேயங்களிரண்டும் எம்பெருமானே யென்னும் உறுதியை உரைக்கின்றார்.
கடல் வண்ணனாய்ச் செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீமந்நாராயணனே மீட்சியில்லாதபடி நம்மைச் சேர வொட்டாமல்
செய்தருள வல்ல உபாயமும் அவனே;
ஆகையாலே அவனைத் தவிர்த்து வேறொரு உபாய வஸ்துவும் உபேய வஸ்துவும் நமக்கு இல்லை என்கிற இவ்வுறுதியையே மனமே!
நீ எப்போதும் சிக்கனக் கொண்டிரு. இவ்வளவே உனக்கு நான் உபதேசிக்க வேண்டிய விஷயம்.
இந்த ஒரு வார்த்தையையே நான் உனக்கு நாள் தோறும் சொல்லிக் கொண்டிருப்பேன்- என்று
தம் திருவுள்ளத்தை நோக்கி அருளிச் செய்தாராயிற்று.

கூற்று – சொல்; கூறப்படுவது கூற்று.
நாணாளும் என்பது முதலடியிலேயே சேர்ந்து அந்வயிக்க
வேண்டிய பதமாகையால் அதனை இரண்டாமடியோடு கூட்டி ஓதுவது அஸம்ப்ரதாயமென்க.
இப்பாட்டில் கதி என்ற சொல் மூன்றாமடியிலும் நான்காமடியிலும் உள்ளது.
இது வடசொல் விகாரம் கதி என்ற வடசொல் வ்யுத்பத்தி பேதத்தால்
கமநஸாதநம் என்கிற பொருளையும்
கந்தவ்ய ஸ்தலம் (அடைய வேண்டுமிடம்) என்கிற பொருளையும் தரக்கடவது.
அதாவது- உபாயம் உபேயம் என இரண்டையுஞ் சொல்லக் கடவது.
ஆகவே, இங்கு மூன்றாமடியிலுள்ள கதி சப்தம் உபேயப் பொருளது;
ஈற்றடியிலுள்ள கதி சப்தம் உபாயப்பொருளது
“நீங்காத மாகதியாம் வெந்நரகில்” என்று கூட்டி ஓதுதல் ஒவ்வாது;
‘மாகதி ஆம்’ என்று முற்று;
வெந் நரகுக்கு விசேஷணமல்ல. ஸம்ஸாரத்தை ‘வெந்நரகு’ என்கிறது.

————————————————————————–

(நினைத்திறைஞ்சி மானிடவர்.)
கீழ்ப்பாட்டில் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்ற உறுதியை வெளியிட்ட
ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! இப்படிப்பட்ட உறுதி உமக்கு மாத்திரமே யன்றோவுள்ளது; மற்றையோர்க்கு இல்லையே.
எல்லாரும் என்னை உபாயமாக மாத்திரம் பற்றுகிறார்களே யன்றி உபேயமாகவும் பற்றுகிறார்களில்லையே.
‘ஸம்பத்தைக் கொடு. ஸந்தனத்தைக் கொடு’ என்று சில க்ஷுத்ர புருஷார்த்தங்களை வேண்டிப் பெற்றுக் கொண்டு
ஒழிந்து போகிறார்களே யல்லது ‘நீயே எமக்கு வேணும்’ என்று என்னையே புருஷார்த்தமாக விரும்புவாரைக் கிடைக்க வில்லையே!;
உமக்காவது இதை வுறுதி நிலைத்து நிற்குமா?” என்று கேட்க;
அதற்கு உத்தரமாக அருளிச் செய்கிற பாசுரம் போலும் இது.

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47

பதவுரை

மாலே–ஸர்வேச்வரனே!
மானிடவர்–“இவ்வுலகத்தவர்கள்
நினைத்து இறைஞ்சி–நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி
ஒன்று–ஏதாவதொரு அற்ப பலனையாவது
இரப்பர்–நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்
என்றேயும்–என்று கூட
நீ நினைத்திட வேண்டா–நீ நினைக்க வேண்டா;
(இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய
அவற்றுக்காகவும் உன்னருகு வரமாட்டார்கள்; இப்படியான பின்பு.)
நேரே நினைத்து இறைஞ்ச–(இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு
எவ் அளவர்–என்ன அறிவுள்ளவர்கள்?
என் இடத்தோர்–அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ? (இருள் தருமாஞானத்திலுள்ளவர்களன்றோ.)
எமக்கு–உன்னுடைய நிர்ஹேதுந கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோவென்றால்
அது தானும்–கீழ்சொன்ன மானிடவர்களுக்குமான துர்ப்புத்தி
எவ்வளவும்–சிறிதேனும்,
உண்டோ–உண்டாகக் கூடியதோ?
(உபாயமும் உபேயமும் நீயேயென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.)

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர்-
இவ்வுலகத்தவர்கள் நம்மை-ஒரு பொருளாக நினைத்து வணங்கி-
ஏதாவது ஒரு அல்ப பலனையாவது-நம்மிடத்தில் வேண்டிக் கொள்வார்கள் –

என்றே நினைத்திடவும் வேண்டா
என்று கூட நீ நினைக்க வேண்டா

இப் பாவிகள் அல்ப பலன்களைக் கேட்டு அதுக்கும் உன் இடம் வராமல்
தேவதாந்த்ரங்கள் பக்கல் ஒடுமவர்கள் –
ஆரோக்கியம் தேடி ஆதித்யனை பற்றி
செல்வம் வேண்டி சிவனைத் தொழுது-
ஆயுளை வேண்டி அயனை அடைந்து
இப்படி உன்னை உபாயமாக கூட பற்றாமல் இருக்க –
இப்படியான பின்பு

நீ நேரே -நினைத்து இறைஞ்ச
இவர்கள் உன்னையே உபாயமாகவும்-உபேயமாகவும் நினைத்து-தொழுவதற்கு

எவ் வளவர்-
என்ன அறிவுள்ளவர்கள் –

எவ் விடத்தோர்
அப்படிப் பட்ட அறிவு உடையோர்கள் இடத்தில் தான்-உள்ளார்களா
இருள் தரும் மா ஞாலத்தில் அன்றோ இருக்கிறார்கள்

நேரே நினைத்து இறைஞ்ச
எவ்விடத்தோர் முதலில் சொல்லி-அப்புறம் எவ்வளவர்

மாலே –
சர்வேஸ்வரனே

அது தானும் –
கீழ் சொன்ன மானிடர்கள் போன்ற துர் புத்தி

எவ்வளவும் உண்டோ
சிறிதேனும் உண்டாகக் கூடியதோ-
உபாய உபேயம் நீ தான் என்ற உறுதி
எமக்கு நிலை பெற்றது அன்றோ

எமக்கு
உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு பாத்ரமான
அடியோங்களுக்கு என்றால்

இத்தால்-
உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு இலக்காகும்படி அதிகாரம் இருந்தால் கடைத்தேறலாம்
-என்றபடி-

“மாலே!, மானிடவர் நினைத்து இறைஞ்சி ஒன்று இரப்பர் என்றெயும் நீ நினைத்திட வேண்டா” என்று முன்னடிகளை
அந்வயித்துக் கொள்ள உலகிலுள்ள மனிதர்கள் ஐச்வர்யம் ஸந்தானம் முதலிய க்ஷுத்ர புருஷர்த்தங்களையாவது
உன்னிடத்திலே வந்து விரும்பினால், அவர்கள் உன்னிடத்திலே
உபாயத்வ புத்தியையாவது வஹித்திருக்கின்றனர் என்று ஒருவாறு மகிழ்ந்திருக்கலாம்;

அக்கேடுமில்லை. “ஆரோக்கியம் வேண்டி ஆதித்தியனைப் பணிகின்றேன்; செல்வம் வேண்டிச் சிவனைத் தொழுகின்றேன்;
ஆயுள் வேண்டி அயனை யடைகின்றேன்” என்றிப்படி ஒவ்வொரு பலனை வேண்டி ஒவ்வொரு தேவதாந்தரத்தைப் பணிய
ஓடுமவர்களாயிருக்கின்றார்களே யொழிய,
அந்த க்ஷுத்ர பலன்களை விரும்பியாகிலும் உன்னிடத்தில் வருகிறவர்களைக் காணோமே.

ஆகவே மானிடவர் உன்னை உபாயமாகவும் பற்றாதிருக்க,
உபேயமாகப் பற்றுகைக்கு என்ன ப்ரஸக்தியுளது?
அடியோம் அப்படியல்ல;
அவர்களுடைய துர்ப்புத்தி அடியோமுக்குச் சிறிதுமில்லை என்றாராயிற்று.

நேரே நினைத்திறைஞ்ச என்றவிடத்து
நேரே என்றது
உள்ளபடியாக என்றபடி.

உன்னை உபாயமாகவும் கொள்ளாத பாபிகள்
உபாயோபேயங்களிரண்டுமாக உன்னை எப்படி கொள்வார்கள் என்று கைமுதிக நியாயத்தாற் காட்டுகிறபடி.

எவ்வளவரெவ்விடத்தோர் என்றதில், “எவ்விடத்தோர்” என்று முன்னே அந்வயித்து எவ்வளவர்’ என்று பின்னே
அந்வயிருக்கவேணுமென்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்போலும்.
இது தன்னிலே ஸ்வாரஸ்யமுமுண்டு.
“நேரே நினைத்திறைஞ்ச எவ்விடத்தோர்?” = இவ்விருள்தருமான ஞாலத்திலே பிறந்து வைத்து உன்னை உள்ளபடி
நினைத்திறைஞ்ச எப்படி முடியும்? என்றார் முதலில்.

அதற்கு மேல்,
இவ்விருள் தருமா ஞாலத்திலேயே பிறந்திருக்கிற தமக்கு மாத்திரம் இந்த அத்யவஸாயம் எங்ஙனே உண்டாயிற்று?
என்று பிறர் சங்கிக்கக்கூடுமே யென்றெண்ணி
அந்த சங்கைக்குப் பரிஹாராமக. எவ்வளவர்? என்கிறார்;
இவ்விருள் தருமாஞாலத்திலே பிறந்து வைத்தாலும் உன்னுடைய நிர்ஹேதுக கிருபைக்கு இலக்காகும்படியான
அதிகாரமாவது இருந்தால் கடைந்தேறலாம்;
அதுதானுமுண்டோ என்றவாறு.

அதுதானுமெவ்வளவுமுண்டோ எமக்கு? =
“நேரே நினைத்திறைஞ்ச எவ்வளவரெவ்விடத்தோர்” என்று இகழ்ந்துரைக்க
வேண்டும்படியான நிலைமை அடியேனுக்கு இதுவரையிலுமில்லை,
இனி மேலுமுண்டாகப்போகிறதில்லை என்றபடி.

——————————————————————-

இப்பாட்டிலும் தமது உறுதியை பேசுகிறார் –
பரமபதம் பாரித்து இருந்தோம் என்றும்-வேண்டாம் என்று இருந்தோம்
பாவோ நான் யத்ர கச்சதி –
அச்சுவை பெறினும் வேண்டேன்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் போலேவும்-

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

பதவுரை

அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ–மூங்கில்போல் பருத்து விளங்குகின்ற
மெல்லிய தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வெம்கோடு ஏழ் ஏறு–கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை
உடனே–ஒரு நொடிப்பொழுதில்
சொன்றானையே–முடிந்த எம்பெருமானையே
மனத்துகொண்டு–சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம்–அடியோம்
விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை–மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரமபதத்தை
எமக்கு அமைத்திருந்தோம்–எமக்கு (ப்ராப்யபூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அஃது அன்றே ஆம் ஆற–அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது.

யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அடியோம்-மேல் உலகங்களுக்கு எல்லாம் மேலான பரமபதத்தை

எமக்கு அமைத்து இருந்தோம்-
எமக்கு பிராப்ய பூமியாக பாரித்துக் கொண்டு இருந்தோம்

அஃது அன்றேயாம் ஆறு
அப்படி இருப்பது அன்றோ-முமுஷூத்வத்திற்கு ஏற்று இருப்பது

அமைப்பொலிந்த மென்தோளி காரணமா –
மூங்கில் போலே பருத்து விளங்குகின்ற-மெல்லிய தோள்களை உடையளான
நப்பின்னை பிராட்டிக்காக –
அமை -மூங்கில் -திரண்டு உருண்டு இருக்க திருஷ்டாந்தம்

வெம்கோடு ஏறு ஏழுடனே
கொடிய கொம்புகளை உடைய-ஏழு காளைகளை -ஒரு நொடிப் பொழுதிலே –

கொன்றானையே மனத்துக் கொண்டு
முடித்த எம்பெருமானையே-சிந்தையிலே த்யானித்துக் கொண்டு

கண்ணபிரான் குண சேஷ்டிதங்களையே மனத்தில்-த்யானித்து கொண்டு இருக்கும்
அடியேனுக்கு பரமபதம் எதற்கு என்னவுமாம் –

(எமக்கியாம் விண்ணாட்டுக்கு) இப்பாட்டிலும் தம்முடைய உறுதியையே பேசுகிறார்.
இப்பாட்டுக்கு இரண்டுபடியாகப் பொருளுரைக்க இடமுண்டு.
ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவவதரித்து நப்பின்னைப் பிராட்டியைத் திருமணம்
புணர்வதற்காக ஏழு ரிஷபங்களை வலி யடக்கின எம்பெருமானையே நான் எப்போதும் உள்ளத்திற் சிந்தனை செய்து
கொண்டிருக்கிறேனாகையால்
அப்பெருமானுடைய நித்யாநுபவத்திற்குப் பாங்கான பரமபதத்திற் சென்று
அநுபவிக்க வேணுமென்பதையே மநோ ரதித்துக் கொண்டிருக்கிறேன்;
ஸம்ஸாரத்தில் காலூன்றி நிற்க மாட்டாத முமுக்ஷுக்களுக்கு இதுவே யன்றோ தகுதி- என்பது ஓர் அர்த்தம்.

இப்பொருளில், வீட்டை அமைத்திருந்தோம் என்பதற்கு,
பரமபதம் பெறப் பாரித்திருக்கின்றோம் என்று அர்த்தமாகும்;

இனி, அமைத்திருந்தோம் என்பதற்கு ‘
வேண்டாமென்றிருந்தோம்’ என்றும் பொருளுண்டாகையாலே,
கீழ்க்கூறிய கருத்துக்கு நேர் மாறாக மற்றொரு தாத்பர்யமுங் கொள்ளலாம்;
அதாவது-
ஸ்ரீராம குணங்களில் ஈடுபட்ட சிறிய திருவடி
“ஸ்நேஹோ மே பரமோ ராஜத்! த்வயி நித்யம் ப்ரதிஷ்டித: பக்திச்ச நியதா வீர! பாவோ நந்யத்ர கச்சதி” என்று –
இங்குற்ற அநுபவத்தை விட்டுப் பரமபதம் போகவும் என் மனம் விரும்புவதில்லை என்றாற் போலவும்,
“பச்சை மா மலை போல் மேனிப் பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா அமரரேறே ஆயந்தங்கொழுந்தே யென்னும்,
இச் சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்,அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே.” என்று
தொண்டரடிப் பொடியாழ்வாரருளிச் செய்தாற்போலவும்
ஸ்ரீ கிருஷ்ணகுண சேஷ்டிதங்களின் அநுபவத்திலே மிக்க விருப்பமுடைய
இவ்வாழ்லார் தாமும் பரமபதத்தை வேண்டாவென்கிறார் என்க.
‘எம்மாவீட்டுத் திறமும் செப்பம்.” (2-9-1) என்று திருவாய்மொழியிலும் இங்ஙனே அருளிச்செய்தவரிறே.

அமை என்று மூங்கிலுக்குப் பெயர், மூங்கில்போலே திரண்டு உருண்டு விளங்குகின்ற தோள்களையுடையவளான
நப்பின்னைப் பிராட்டிக்காகக் கொடிய ஏழு ரிஷபங்களை உடனே முடித்தவனான கண்ணபிரானையே நான்
மனத்திற் கொண்டிருப்பதனால் அந்த குண சேஷ்டிதத்தில் ஈடுபட்டிருக்கிற எனக்குப் பரமபதம் எதுக்கு? என்கிறார் காணும்.

எமக்கு + யாம், எமக்கியாம்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல் விண்ணாட்டுக்கு உச்சமதாம்
வீட்டை = இங்கு விண்ணாடென்று பரம பதத்திற்குக் கீழ்ப்பட்ட மேலுலகங்களைச் சொல்லுகிறது.
அவற்றிற் காட்டில் உச்சமதானவீடு- பரமபதம் உச்சம்- வடசொல்.

————————————————————–

இங்கே இருந்து குணாநுபவம் செய்து கொண்டு இருந்தாலும்
திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க ஆசை உண்டாகுமே
அத்தால் அலமாப்பு அடைகிற படியை அருளிச் செய்கிறார் –

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருரு என்று எம்மைப் பிரிந்து –49-

பதவுரை

கொண்டல் தான்–மேகங்களையும்
மால் வரை தான்–பெரிய மலைகளையும்
மா கடல்தான்–கருங்கடலையும்
மற்று கார் உருவம்தான்–மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும்
கண்ட நாள்–பார்க்குங் காலத்தில்
காண்தோறும்–பார்க்கும்போதெல்லாம்
கூர் இருள் தான்–செறிந்த இருளையும்
வண்டு அறா பூவைதான்–(தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும்
நெஞ்சு–என் மனமானது
கண்ணனார் பேர் உரு என்று–இவை கண்ணபிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி
எம்மை பிரிந்து–என்னைவிட்டு நீங்கி
ஓடும்–அங்கே ஓடும்.

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
மேகங்களையும்-கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் என்றும்-
ஒக்கும் மால் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும்

தொக்க மேக பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -என்றும்

பெரிய மலைகளையும்-நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலோ வென்று கூவும்-
கரும் கடலையும்-கடல் வண்ணன் என்றே திருநாமம் இறே
செறிந்த இருளையும்-தானோர் இருளன்ன மா மேனி எம்மிறையார்
இருள் விரி சோதிப் பெருமான் -திருவாசிரியம்

வண்டு அறாப் பூவை தான்-
தேனில் நசையாலே வண்டுகள் விட்டு நீங்காத-பூவைப் பூவையும்
பூவைப் பூ வண்ணா -என்னும்

மற்றுத்தான் -காருருவம்-
மற்று கார் உருவம் தான் -மற்றுள்ள-குவளை குயில் மயில் முதலிய
கறுத்த உருவங்களையும் –
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறுமலர்காள் ஐம் பெரும் பாதகர்காள்
அணி மால் இரும் சோலை நின்ற எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே –நாச்சியார் திரு மொழி -9-4-

கண்ட நாள்
பார்க்கும் காலத்தில்

காண்டோரும்
பார்க்கும் போது எல்லாம்-பிரமம் என்று இல்லாமல் காணும் தோறும் எல்லாம் இப்படியே

நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து
என் மனமானது-இவை கண்ணபிரான் உடைய-அழகிய திருமேனி என்று எண்ணி
என்னை விட்டு நீங்கி அங்கே ஓடும்-

கொண்டல்தான் =
(“கருவுடை மேகங்கள் கண்டாலுன்னைக் கண்டா லொக்குங் கண்கள்” (பெரியாழ்வார் திருமொழி 2-7-2.) என்றும்,
“ஒக்குமம்மானுருவமென்று உள்ளங்குழைத்து நாணாளும் தொக்க மேகப்பல்குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான்” (திருவாய்மொழி 8-5-6) என்றும்
சொல்லுகிறபடியே
மேகங்களைக் காணும்போது கண் ஓடுகின்றது.

மால்வரைதான் = “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலேவாவென்று கூவும்” (திருவாய்மொழி 4-4-4) என்கிறவரிறே இவ்வாழ்வார்.
பெரிய மலையைப் பார்க்கும் போது பெருமாளைக் கண்டாற்போலே ஓடுவர்.

மாகடல்தான் =கடல்வண்ண னென்றே எம்பெருமாலுக்குத் திருநாமமிறே.
கடலைக் கண்டால் எம்பெருமானைக் கண்டாற்போலே விரும்பி ஓடுவர்.

கூரிருள்தான் = “தானோரிருளன்ன மாமேனி எம்மிறையார்” என்று கீழுமருளிச் செய்தாரிறே.
“இருள் விரிசோதிப் பெருமான்” என்றார் திருவிருத்தத்திலும்.
இருளைக் கண்டால் எம்பெருமானைக் கண்டாற்போலே மகிழ்வர்.

வண்டறாப்பூவைதான் = பூவைப்பூவாவது காயம்பூவில் ஒருவகைப் பூ;
“பூவைப்பூவண்ணா வென்னும்”
‘காயாம்பூவண்ணங் கொண்டாய்” என்று எம்பெருமானுடைய நிறத்திற்குப் பூவைப்பூவை ஒப்புச் சொல்வதுண்டிறே.

மற்றுத்தான் என்றது- எம் பெருமான் திருநிறத்திற்குப் போலியாகக் கூடிய
கருநெய்தற்பூ குயில், மயில், கருவிளை, களங்கனி முதலிய பலவற்றைச் சொன்னபடி.
“பைம்பொழில்வாழ் குயில்காள் மயில்காள் ஒண்கருவிளைகாள், வம்பக்களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்கள்,
ஐம்பெரும்பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலை நின்ற, எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கென் செய்வதே?” என்ற
நாச்சியார் திருமொழிப் (9-4) பாசுரங்காண்க.

ஆகிய இப்பொருள்களைக் காணும்போதெல்லராம் கண்ணபிரானுடைய திருவுருவையே ஸாக்ஷாத்தாகக் கண்டதாக நினைத்து
என்னுடைய நெஞ்சு என்னைப் பிரித்து அவ்வப்பொருள்களினருகே ஓடுகின்றது என்றாராயிற்று.
நெஞ்சானது தம்மைப் பிரிந்து ஓடுவதாகச் சொல்லுகிற விது ஒருவகைக் கவிமரபு.
“கண்ட நாள் நெஞ்சோடும்” என்றதே போதுமாயிருக்க, காண்தோறு என்றது ஏதுக்கென்னில்;
ஒரு நாளிரண்டுநாள் இப்படி பார்த்துவிட்டு ‘இது ப்ரமம்’ என்று பிறகு வெறுமனிருப்பதில்லை;
காருருவங்களைக் காண்கிற போதெல்லாம் இந்த ப்ரமம் உண்டாகியே தீரும் என்பதற்காக.

——————————————————–

(பிரிந்தொன்று நோக்காது.)
எம்பெருமானுடைய திருவுருவத்திற்குப் போலியான பொருள்களைக் கண்ட போதெல்லாம் தாம்
பாவநா ப்ரகர்ஷத்தாலே அவற்றினருகே போய் அநுபவிக்கப் பாரிக்கிற படியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்.

அருகே சென்றவாறே அவை உபமான பதார்த்தங்களாகவே
(அதாவது- மேகமாகவும் கடலாகவும் இருளாகவும் பூவைப் பூவாகவும்)
இருக்குமே யன்றி உபமேயமான எம்பெருமானாக இருக்க மாட்டாவே;

“ஐயோ! நாம் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப் பெற்றோமென்று களித்திருந்தோமே;
இப்படி அந்யதா ஜ்ஞாநமாகவா முடிந்து விட்டது!” என்று வருத்தமுண்டாகி,

‘எம்பெருமான் நம்மை இப்படியே வருத்தப் படுத்தி வருகிறானே யொழிய ஒரு காலும் அவன் திருவுள்ளத்தில்
இரக்கம் பிறப்பதில்லையே!; என்ன கல் நெஞ்சோ!’ என்று வெறுக்கிறார்.

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மாவாய் பிளந்தார் மனம்–50-

பதவுரை

பிரிந்து–தம்மைவிட்டுப் பிரிந்து
ஒன்று நோக்காது–வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே–தம்மோடு கூடவே
திரிந்து உழலும்–அலைந்துகொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை–என் நெஞ்சினாரை
ஒரு கால்–ஒரு காலாகிலும்
புரிந்து–அன்புகூர்ந்து
ஆ ஆ என இரங்கார்–ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்);
அந்தோ–கஷ்டம்!;
மா வாய் பிளந்தார் மனம்–கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு
வலிதே கொல்–கடினமோ;

பிரிந்து ஓன்று நோக்காது
தம்மை விட்டு பிரிந்து-வேறு ஒன்றில் கண் வையாமல்

தம்முடைய பின்னே திரிந்து உழலும்
தம்மோடு கூடவே அலைந்து கொண்டு திரிகிற

சிந்தனையார் தம்மை
என் நெஞ்சினாரை

புரிந்து ஒரு கால்
ஒரு காலாகிலும் அன்பு கூர்ந்து

ஆவா வென இரங்கார்
ஐயோ என்று அருள் புரிகின்றிலர்-பகவான் –

அந்தோ

வலிதே கொல் மாவாய் பிளந்தார் மனம்
கேசி வாயைப் பிளந்த-அப்பெருமான் உடைய நெஞ்சு கடினமோ
ஆஸ்ரிதர்க்காக கேசி வதம் செய்து அருளின பிரான் திரு உள்ளம்
என் விஷயத்தில் கல் நெஞ்சாக உள்ளதே –

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
இரக்கம் அற்றவன் சொல்லக் கூசி
அந்தோ வலிதே கொல் என்று அருளிச் செய்கிறார்-

ஆவாவென = ‘ஹா ஹா’ என்கிற வடமொழி அவ்யயம் ஆவாயென்று கிடக்கிறது.
இரக்கக் குறிப்பிடைச்சொல்.

மாவாய் பிளந்தவரலாறு :- கம்ஸனாலேவப்பட்ட அஸுரர்களில் கேசி யெனபவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சி
நடுங்கும்படி கனைத்துத் துரத்திக் கெண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி
அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களை யுதிர்த்து உதட்டைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவால் வகிர்ந்து தள்ளினள் என்பதாம்.

ஆச்ரிதர்கட்காகக் கேசிவதம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்து பரம காருணிகள் என்று பேர் பெற்றிருப்பவன்
என் விஷயத்திலே கல் நெஞ்சனாவதே! என்று வெறுக்கிறார்.

“உயர்வற வுயர் நலமுடையவன்” என்று ஸமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாகத் தம் வாயாலே சொல்லத் தக்க எம்பெருமானை
‘இரக்கமற்றவன்’ என்று உறுதியாகச் சொல்லக்கூசி,
“அந்தோ! வலிதே கொல்?” என்று சங்கிப்பது போலக் கூறினபடி.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -31-40–திவ்யார்த்த தீபிகை –

September 15, 2014

(அழகுமறிவோமாய்.)
வல்வினையைத் தீர்ப்பான் அழகுமறிவோமாய், குடங்கள் தலைமீதெடுத்துக் கொண்டு சுழல ஆடி அன்று
அத்தடங்கடலை மேயார் தமக்கு நிழலும் அடிதாறும் ஆனோம் என்று அந்வயிப்பது.
கீழ்ப்பாடடில்
“வல்வினையார் தாமீண்டடி யெடுப்பதன்றோ அழகு” என்று பாவங்களை யெல்லாம் துரத்தித் தள்ளுபடியானார்.
“நெடுநாளாகப் பாவங்களின் கீழே அமுக்குண்டிருந்த உமக்கு இன்று இப்படிப்பட்ட சக்தி எங்ஙனே உண்டாயிற்று?’ என்று யாராவது கேட்கக் கூடுமே;
அவர்களுக்கு ஸமாதாநமாம்படி இப் பாட்டு அருளிச் செய்கிறார்.

வல்வினைகளைத் துரத்தித் தள்ளுவதற்கு அழகான ஒரு உபாயமறிந்தோம்;
அஃது என்னென்னில்;
எம்பெருமானுக்குத் திருவடி நிழல் போலவும் திருவடி ரேகை போலவும் விட்டு நீங்காது அத்தாணிச் சேவகமானோம்.
ஆகவே, காரியம் கை கூடிற்று என்கிறார்.
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யா கதோ மதுராம் புரிம் -என்றபடி-
திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-குடக்கூத்தாடி-அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-
இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறும் ஆனோம்

அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-

பதவுரை

நல்வினையை தீர்ப்பான்–வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக
அழகும் அறிவோம் ஆய்–அழகிய உபாயத்தை அறிந்தோமாக,
குடங்கள்–குடங்களை
தலை மீது எடுத்துக்கொண்டு–தலையின் மேலே எடுத்து வைத்துக்கொண்டு
சுழல ஆடி–ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி
அன்று–முற்காலத்திலே (அக்குடக்கூத்தாடினவிடாய் தீர்வதற்காக)
அத் தட கடலை மேயார் தமக்கு–(முதலில் விட்டு வந்த) அப்பெரிய திருப்பாற்கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு
நிழலும் அடி தாறும் ஆனோம்–பாது நிழலாகவும் பாதரேகையாகவும் உடன்பட்டோமானோம்.
(வல்வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.)

அழகும் அறிவோமாய்
அழகிய உபாயத்தை அறிந்தோமாக-பிரகரண பலத்தால் இங்கு உபாயம் அர்த்தம்

வல் வினையைத் தீர்ப்பான்
வலிய பாபங்களைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக
வல் வினையும் தீர்ப்பான் -பாடபேதம்

நிழலும் அடி தாறும் ஆனோம்-
பாத நிழலாகவும்-பாத ரேகையாகவும்-உடன் பட்டோம் ஆனோம்
நிழல் ஆனோம் என்று முதல் அருளினார்-அதில் திருப்தி அடைய வில்லை
உலகில் நிழல் வ்யக்தியை விட்டு தனிப் படவும் காணப் படும்
அப்படி இல்லாமல் உடன் பட்டே காணப்படும் பாத ரேகை என்பதால் அதையும் சேர்த்து அருளிச் செய்கிறார்

நம் சம்ப்ரதாயத்தில்
ஸ்ரீ எம்பார் -எம்பெருமானார் உடைய திருவடி நிழல் –ராமானுஜ பதச்சாயா
ஸ்ரீ வானமா மலை சீயர் -மணவாள மா முனி உடைய பாத ரேகை -ரம்யஜா மாத்ரு யோகீந்திர பாத ரேகாமயம்
ஸ்ரீ முதலி ஆண்டான் -எம்பெருமானார் பாதுகை –பாதுகே எதிராஜச்ய

குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டு
குடங்களை தலையின் மேலே எடுத்து வைத்துக் கொண்டு –

சுழல ஆடி
ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி

அன்று –
முற்காலத்திலே
அக்குடக் கூத்து ஆடின விடாய் தீருவதற்காக

அத் தடங்கடலை மேயார் தமக்கு –
முதலிலே விட்டு வந்த-அந்த பெரிய திருப் பாற் கடலிலே-போய்ச் சேர்ந்த பெருமானுக்கு-

திருவாய்ப்பாடியிலே கோபால க்ருஷ்ணனாய்த் திருவவதரித்துக் குடக் கூத்தாடின சரிமையிலே ஈடுபட்டுப் பேசுகிறது மூன்றாமடி.
அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ் செய்வது போல இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப்
போக்கு வீடாகக் குடக் கூத்தாடுவர்கள். கண்ணபிரானும் சாதி மெய்ப்பாட்டுக்காக
“குடங்களெடுத் தேறி விட்டுக் கூத்தாடவல்ல வெங்கோவே” (பெரியாழ்வார் திருமொழி 2-7-7) என்றபடி அடிக்கடி குடக் கூத்தாடுவது வழக்கம்.
தலையிலே அடுக்குக் குடமிருக்க, இரு தோள்களிலும் இரு குடங்களிருக்க, இரு கைகளிலும் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து
ஆடுவதொரு கூத்து இது என்பர். இதனைப் பதினோராடலிலொன்றென்றும் அறுவகைக் கூத்திலொன்றென்றும் கூறி,
“குடத்தாடல் குன்றெடுத்தோனாட லதனுக்கடைக்குப வைந்துறுப்பாய்ந்து” என்று மேற்கோளுங்காட்டினர் சிலப்பதிகாரவுரையில் அடியார்க்குநல்லார்.

‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந; நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்” என்றபடி
திருப்பாற்கடலில் நின்றும் எழுந்தருளி ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவவதரித்துக் குடக்கூத்தாடி. அந்த ஆட்டத்தினாலுண்டான விடாய் தீர
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்து சயனித்து இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறுமானோம் என்கிறார்.

“அத்தடங்கடலை” என்றவிடத்து அகரச் சுட்டு- எந்தத் திருப்பாற்கடலில் நின்றும் வந்து அவதரித்தாரோ
அந்தத் திருப்பாற்கடலிலேயே போய்ச்சேர்ந்தாரென்கைக்காக. மேயார்- மேவியவர்.

அழகுமறிவோமாய் = அழகு என்பதற்கு உபாயம் என்ற மட்டும் பொருள் கொண்டது பிரகரணபலத்தினாலென்க.

“வல்வினையும் தீர்ப்பான்” என்றும் பாடமுண்டு. தீர்ப்பான்- பான் விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சம்.

நிழலுமடிதாறுமானோம் = ‘நிழலானோம்’ என்று முதலில் சொன்னார்; அதில் த்ருப்தி பிறக்கவில்லை;
உலகத்திலே நிழலானது வ்யக்தியை விட்டுத் தனிப்படவும் காணப்படும்.
அப்படியல்லாமல் வ்யக்தியோடு உடன்பட்டே காணக்கூடியது பாதரேகையாகையால் “அடிதாறுமானோம்” என்று பின்னே சொன்னார்.
தாறு என்று அளவுக்கும் ரேகை (கோடு)க்கும் பேராகையாலே, பாதத்தளவான பாதுகையென்றும் பாத ரேகையென்றும் பொருள் கொள்ளலாம்.
ஸம்ப்ரதாயத்திலே எம்பாரைச் சொல்லும்போது ‘எம்பெருமானாருடைய திருவடி நிழல்’ என்றும்,
ஸ்ரீவானமா மலைச்சீயரைச் சொல்லும்போது ‘ஸ்ரீமணவாளமாமுனிகளுடைய திருவடிரேகை’ என்றும்,
முதலியாண்டானைச் சொல்லும்போது ‘எம்பெருமானாருடைய பாதுகை’ என்றும் அவர்களுடைய தனியன்களில்
அநுஸந்திக்கப்பட்டு வருமாறு காண்க.
(“ராமாநுஜ பதச்சாயா” “ரம்யஜாமாத்ருநோகிந்தர் பாதரேகாமயம்” “பாதுகே யதிராஜஸ்ய” இத்யாதிகள் தனியன்கள்.)

மூன்றாமடியிலும் நான்காமடியிலும் “குடங்கடலை” “தடங் கடலை” என யமகம் அமைந்தமை காண்க.

———————————————————————–

(தமக்கடிமை வேண்டுவோர்.)
கீழ்ப்பாட்டில் “நிழலுமடிதாறுமானோம்” என்று தாம் எம்பெருமானோடு ஐக்கியப் பட்டமையைப் பேசினாரே;
உடனே இவருடைய நெஞ்சானது பழையபடியே நைச்சியம் பாவித்துப் பின் வாங்கத் தொடங்கிற்று. அந்த நிலைமையைக் கண்டு ஆழ்வார்;
‘அந்தோ! என் செய்வேன் நெஞ்ச அநுகூலித்து வரும் போது எம்பெருமான் அருமைப் படுகிறான்,
எம்பெருமான் எளியனாம் போது நெஞ்சு பின் வாங்குகிறது; இந்த இழவுக்கு என்ன செய்வேன்?’ என்று அலமருகின்றார்.
பாயை விரித்து விட்டுக் கணவனை அழைத்து வரப்போனாளாம் ஒரு நாயகி; கணவனை அழைத்து வருவதற்குள்ளே பாய் சுருட்டிக் கொள்ளுமாம்;
மறுபடியும் பாயை விரிக்கப் பார்ப்பாளாம்; அந்த க்ஷணந்தன்னிலே நாயகன் ஓடிப் போவானாம்.
பாயை விரிப்பதற்கும் கணவனை யழைத்து வருவதற்குமே அவளுடைய போது சரிப்போகுமாம்.
அப்படியே ஆழ்வார்க்கு நெஞ்சை இணக்கிக் கொள்வதற்கும் எம்பெருமானை இழுத்துப் பிடிக்க நினைப்பதற்குமே போது சரிப் போகிறது போலும்.
இவர்க்கு இப்படியே அடிக்கடி சிரமம் உண்டாவது பற்றி அந்த வருத்தம் தோன்ற
“யான் செய்வதில்விட்த்திங்கியாது” என்று தீந ஸ்வரப் பாசுரம் பேசுகிறபடி காண்மின்.

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது–32-

பதவுரை

தமக்கு அடிமை வேண்டுவார்–தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான
தாமோதரனார் தமக்கு–தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு
அடிமை செய் என்றால்–(நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால்
நெஞ்சினார்–எனது நெஞ்சானது
செய்யாது–அப்படியே அடிமை செய்யாமல்
எமக்கென்று–என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி
தாம் செய்யும தீ வினைக்கே–(வெகுகாலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே
தாழ்வுறுவர்–ஊன்றியிருக்கின்றது;
இங்கு–இப்படிப்பட்ட நிலைமையில்
யாம் செய்வது யாது–நான் செய்யத்தக்கது என்னோ?

தமக்கு அடிமை வேண்டுவார்-
தமக்கு அடிமையாய் இருப்பதற்கு ஆசைப் படுமதான

தாமோதரனார் தமக்கு-
தாம்பால் ஆப் புண்ட பெருமானுக்கு

தாம் பிறருக்கு அடிமை செய்ய ஆசைப் படுவான் எம்பெருமான்
தமக்கு அடிமை செய்வார் வேணும்  என்றும் ஆசைப் படுவான் எம்பெருமான்
அடிமை -சேஷத்வம் -சேஷபூதர்-தமக்கு அடிமையை உகக்குமவர் -அது எங்கே கண்டோம் என்னில்

தாமோதரனார் –
அனுகூலையான தாயாருக்கு அடி உண்பது கட்டுண்பது வானவிடத்திலே கண்டோமே
இதனால் எம்பெருமானுக்கு சேஷத்வத்திலே விருப்பமுடைமை அறிகிறோம்
ஐக ஏக  சேஷியாக இருக்க இட்டுப் பிறந்த எம்பெருமானே சேஷத்வத்தில் ஆசை கொள்ளுவதாக இருக்க-
சேஷத்வதுக்கு இட்டுப் பிறந்த என் நெஞ்சானது இதன் ரசம் அறியாதே பிற்காலிக்கிறதே
ஸ்வா தந்த்ர்யம் கொண்டு-
நெடும்காலம் நைச்ச்ய அனுசந்தானம் பண்ணிப் போந்த வாசனையாலே பிற் காலிக்க
எம்பெருமானோ மேல் விழுகிறான்-இந்த அவஸ்தையில் என்ன செய்வது -அலை பாய்கிறார்

அடிமை செய் என்றால்-
நெஞ்சே நீ அடிமை செய் என்றால் –

நெஞ்சினார் செய்யாது –
எனது நெஞ்சானது-அப்படியே அடிமை செய்யாது –

எமக்கென்று –
என் வார்த்தை கேளாத ஸ்வா தந்த்ர்யம் பாராட்டி-நெஞ்சினார் என்ற பன்மைக்கு ஏற்ப –எமக்கென்று –

தாம் செய்யும் தீ வினைக்கே –
வெகு காலமாக தாம் செய்து வருகிற-தப்புக் கார்யத்திலே –

தாழ்வுறுவர் –
ஊன்றி இருக்கின்றது

யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது –
இப்படிப் பட்ட நிலையில்-நான் செய்யத் தக்கது என்னோ –

தாம் செய்த பாபங்களை நினைத்து-இப்படி பாபியான நாமோ பகவானை அனுபவிப்பது என்று தாழ்வுறுவர்-நைச்ச்யம் கொண்டாடி –
திருவாய் மொழியில் நைச்ச்யம் பாராட்டி இருந்தாலும் இங்கே அடிக்கடி வருகிறது
அவன் தனது சௌலப்ய குணத்தை எவ்வளவு தான் காட்டினாலும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்-உடையவர்களுக்கு
ஸ்வ தோஷமே-நெஞ்சில் பட்டு கூச்சம் உண்டாகும்
-என்று காட்டப் படுகிறது-

“தமக்கடிமை வேண்டுவோர்” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்;
‘தாம் பிறர்க்கு அடிமை செய்ய ஆசைப்படுவன் எம்பெருமான்’ என்கிற ஒரு பொருளும்,
‘தமக்கு அடிமை செய்வார் வேணுமென்று எம்பெருமான் ஆசைப் பட்டிருப்பான்’ என்கிற மற்றொரு பொருளும் செவ்வனே கிடைக்கும்.
அடிமை என்ற பதத்திற்கு சேஷத்வம் என்றும், சேஷ பூதர் என்றும் அர்த்தமுண்டாகையாலே இவ்விரண்டு யோஜநைகளும் ஒக்கும்.
தனக்கு சேஷத்வத்தை வேண்டுகையாவது- தான் தாஸனாயிருக்க விரும்புகை.
தனக்கு சேஷ பூதரை வேண்டுகையாவது- தான் ஸ்வாமியாயிருக்க நினைக்கை
எம்பெருமானுக்கு ஸ்வாமித்வம் அஸா தாரணமாயிருக்கச் செய்தேயும் சேஷத்வத்திலே அவனுக்கு ஆசையாம்.
ஏனென்னில்;

தனக்கு அடிமைப்பட்டவர் பரமாநந்தமடைகிறபடியைத் தான் காண்கையினாலே,
தான் ஸ்வாமியாயிருக்கு மிருப்பிலே அவ்வளவு ஆநந்தமில்லை யென்றும் சேஷப்பட்டிருக்கு மிருப்பிலேயே ஆநந்த மிகுதியுண்டென்றும் கை கண்டு,
சேஷித்வத்திற் காட்டிலும் சேஷத்வத்திலே மிக்க விருப்பமுடையனா யிருக்கிறானாம் எம்பெருமான்.

இங்கு இவ்வர்த்தத்தையே பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்கிறார்- “தமக்கு அடிமையை உகக்குமவர்;
அது எங்கே கண்டோமென்றால் (தாமோதரனார்) அநுகூலையான தாயார்க்கு அடியுண்பது கட்டுண்பதானவிடத்திலே கண்டோம்”
என்பது வியாக்கியமான ஸ்ரீஸூக்தி.

தாமோதரனார் என்ற சொற் சேர்க்க க்கு ஏற்ப இவ்வர்த்தமே இங்குப் பொருந்தும்.
தாமோதான் என்றால் கயிற்றை வயிற்றிலே உடையவன் என்று பொருள் அதாவது – வெண்ணெய் களவு கண்ட காரணத்திற்காக
யசோதைப் பிராட்டியினால் கண்ணி நுண் சிறுத்தாம்ப கொண்டு க ]ட்டப்பட்டவன என்கை.
இதனால், எம்பெருமானுக்கு, சேஷத்வத்திலே விருப்பமுடைமை விளங்குமிறே. இங்கே இவ்விசேஷண மிடுவதற்குப் பயன் யாதெனில்;
சேஷியாக இருப்பதற்கே இட்டுப் பிறந்த எம்பெருமானும் அந்த சேஷித்வ நிலைமையை உபேக்ஷித்து விட்டு சேஷ வ்ருத்தி செய்ய ஆசைப்படுகிறான்;
என்னுடைய நெஞ்சோமென்றால் சேஷி வ்ருத்தி செய்வதற்கே இட்டுப் பிறந்து வைத்தும் இந்த ரஸமியாதே பிற்காலிக்கின்றது! என்கைக்காகச் சொல்லுகிறபடி.
தமக்கு அடிமை வேண்டுவராகிய தாமோதரனார் தமக்கு (நெஞ்சே நீ) அடிமை செய்’ என்று நான் உரைத்தால்,
அந்தப் பாவி நெஞ்சானது அதைக் கேளாமல், அப்படி அடிமை செய்யாமல் ஸ்வாதந்திரியங்கொண்டு, நெடுநாளாகத் தான் செய்து வருகிற
(நைச்சியாநு ஸந்தாநம் பண்ணிப் பின் வாங்குகையாகிற) தப்புக் காரியத்தையே செய்யப்பார்க்கின்றது!.
எம்பெருமானோ மேல் விழுகிறான், நெஞ்சோ பின் வாங்குகின்றது; இந்த அவஸ்தையில் இன்னது செய்வதென்று எனக்குத் தோன்றவில்லையே!
எம்பெருமான் வழியே போவதா? நெஞ்சு போம் வழியே போவதா? என்ன செய்த்தக்கது என்று அலை பாய்கின்றாராழ்வார்.

(எமக்கென்று.) நெஞ்சானது எனக்கு சேஷப்பட்டதாகையாலே நான் சொன்னபடியே கேட்கக் கடமைப்பட்டிருந்தும்
பாரதந்திரியம் வஹியாமையால் தான் போன போக்கே போம்படியாக ஸ்வாதந்திரியம் வஹிக்கின்றது.
உனக்கென்றிருக்கையன்றியே எமக்கென்றிருக்கை ஸ்வாதந்திரிய காரியமாதலால் இங்கு எமக்கென்று என்பதற்கு ஸ்வதந்த்ரமாகி’
என்று பொருளுரைக்கப்பட்டது. ‘எனக்கென்று’ என்ன வேண்டுமாயினும் நெஞ்சினார் என்ற பன்மைக்குச் சேர எமக்கென்று எனப்பட்டது.

தாம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் = இதற்கு இரண்டு படியாகப் பொருளுரைக்கலாம்; நெஞ்சினார் தாம் செய்கிற பாவங்களையே நினைத்து,
இப்படி பாவியான நாமோ பகவானை அநுபவிப்பது! என்று கொண்டு, தாழ்வுறுவர் – நைச்சியம் பேசிப் பின் வாங்குகின்றார் என்னலாம்.
அன்றி,
எம்பெருமான் நெருங்கினவாறே நெஞ்சினார் தாம் பின்வாங்கிக் போவதாகிற ஒரு பாபத்தை அடிக்கடி செய்வது வழக்கமாயிற்றே.
அந்தப் பாபத்திலேயே இப்போதும் ஊன்றுகின்றார் என்றும் உரைக்கலாம்.
இந்த யோஜகையில், தாழ்வுறுதலாவது – ஆஸக்தியை யுடைத்தாயிருந்தால் “விஷயங்களிலே கால் தாழ்ந்தான்” என்றால்
விஷய ப்ரவணனானான் என்று பொருள்படுமிறே.
தீவினைக்கே என்றது- தீவினையிலேயே என்றபடி.
முந்தின யோஜநையில், தான் செய்த பாவங்களை நினைத்தே என்றபடி. நெஞ்சினார் என்ற பன்மை கோவத்தினாலாயது.

இங்கு + யாது, இங்கி யாது; “உயிர்வரினுங்குறல் மெய்விட்டோடும், யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல்.

எம்பெருமான் அணுகி வரும் போது ஆழ்வார் நைச்சியம் பேசிப் பின்வாங்குதலென்பது திருவாய்மொழியிலும்
(“வளவேழுலகின் முதலாய” என்ற [1-5-1] திருவாய்மொழி காண்க.) வந்தாலும், இப்பிரபந்தத்தில் அடிக்கடி வருகின்றது.
பரம புருஷன் தனது பரத்துவத்தை மறைத்து ஸௌலப்ப குணத்தை எவ்வளவுதான் காட்டினாலும்,
*பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பு முடையவர்களுக்கு ஸ்வ தோஷமே அடிக்கடி நெஞ்சில்பட்டுக்
கூச்சமுண்டாகுமென்பது இதனால் காட்டப்படுகின்ற தென்றுணர்க.

——————————————————————–

(யாதானுமொன்றறியில்.) நைச்சியர் கொண்டாடி அகலுகிற நெஞ்சுக்கு நன்மை சொல்லுகிறது போலேயிருக்கிறது இப்பாட்டு.
நெஞ்சு என்றும் ஆத்மா என்றும் பர்யாயம் போலோ கொள்ளுங்கள்.
ஜ்ஞாநாநந்த மனஸ்த்வாத்மா” என்று ஞானமும் ஆந்தமும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அதைப் பிடித்துக்கொண்டு அருளிச் செய்கிற பாசுரம் இது.
இந்த நெஞ்சு அசேதநப் பொருளல்ல; சேதநப் பொருள்; அதாவது அறிவையும் ஆநந்தத்தையும் உடைய பொருள்.
இது அறிவில்லாத வஸ்துவாயிருந்தால் இதைப்பற்றிக் கவலையில்லை.
எப்போது அறிவுடையதாயிற்றோ அப்போதே எம் பெருமானைப் பற்றினதாகவே ஆய்விட்டது.
“ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” (முதல் திருவந்தாதி 67) என்கையாலே ஞானமாகில்
பகவத் விஷயத்தைப் பற்றித்தானேயிருக்கும். ஆகையாலே இந்த நெஞ்சு பகவத் விஷயத்தைக் கண்டு பின்வாங்குவது எப்படி சேரும்?
அது கிடக்கட்டும் ஞானம்போலே ஆநந்தமும் ஒரு தன்மையாக இருக்கிறது இதற்கு.
ஆநந்தமுண்டாகில் பகவத் விஷயத்தைப் பற்றாமல் எப்படி ஆநந்தம் ஸித்திக்கும்? ஸித்திக்கமாட்டாது.
ஆகவே, ஞானம் ஆநந்தம் என்கிற இரண்டு தன்மைகள் இதற்கு உள்ளபோதே இது பகவத் விஷயத்தைப் பற்றினதாகவே ஆகா நிற்க.
அந்தோ ‘அந்த பகவானை அணுகமாட்டேனென்று ஓடுகிறதே! இஃது என்ன பேதைமை! என்கிறார்.

ஆழ்வார் ஸ்வ அனுபவ ரூபத்தால் சாஸ்திர அர்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார்-

யாதானும் நேர்ந்து-யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

பதவுரை

யாதானும் தேறும் ஆ செய்யா அசுரர்களை–கொஞ்சமும் விச்வஹிக்கும்படியான செயலைச் செய்யாதவர்களான அஸுரர்களை
(எப்போதும் தீங்கையே செய்பவர்களை)
நேமியால்–திருவாழியினாலே
பாறு பாறு ஆக்சினான் பால்–துண்டம் துண்டமாகத் துணித்தொழித்த எம்பெருமான் பக்கலில்
யாதானும் நேர்ந்து–எதையாவது ஸமர்ப்பித்து
அணுகா ஆறுதான் என்கொல்–கிட்டாமலிருப்பது என்னோ?
(சிறந்த பெருமானை அயோக்யமான நாம் கிட்டவாமோ என்னில்)
யாதானும் ஒன்று அறியில்–எதையாவது ஒரு வஸ்துவை அறியக்கூடிய சைதந்யத்தையுடைத்தாயிருந்து வைத்தும்
தான் உகக்கில்–தான் ஆநந்தப்படுவதைத் தன்மையாக உடைத்தாயிருந்து வைத்தும்
அணுகாவாறு தான் என்கொல்?

அணுகா வாறு தான் என் கொலோ-
யாவதாவது சமர்ப்பித்து கிட்டாமல் இருப்பது தான் என்னோ -சிறந்த பெருமானை அயோக்யரான நாம் கிட்டலாமோ என்ன-

யாதானும் ஓன்று அறியில்-
எதையாவது ஒரு வஸ்துவை அறியக் கூடிய-சைதன்யத்தை-யுடைத்தாய் இருந்து வைத்தும்

தன் உகக்கில் –
தான் ஆனந்தப் படும் அத்தன்மையை யுடைத்தாய் இருந்து வைத்தும்

-யாதானும் தேறுமா செய்யா வசுரர்களை-
கொஞ்சமும் விச்வசிக்கும் படியான-செயல்களை-செய்யாதவர்களான அசுரர்களை
எப்போதும் தீங்கையே செய்பவர்களை –

நேமியால் –
திரு ஆழியினாலே-

பாறு பாறாக்கினான் பால் –
துண்டம் துண்டமாக துணித்து-ஒழித்த எம்பெருமான் பக்கலிலே-

“யாதானுமொன்றறியில் தன்னுகத்தில். யாதாணுந்தேறுமா செய்யாவசுரர்களை நேமியால் பாறு பாறாக்கினான்பால்
யாதானும் நேர்ந்து அணுகாவாறுதான் என் கெடலோ” என்று அந்வயிப்பது.
எம்பெருமான்றனக்கு விச்வாஸ முண்டாகும்படி ஒரு நல்ல காரியத்தையும் செய்யாத அசுரர்களைத் திருவாழியினாலே
துண்டு துண்டாகத் துணித்துப் பொகட்ட அப்பெருமான் விஷயத்திலே இந்த நெஞ்சானது ஏதாவதொன்றைச் செய்து
(ஆத்ம ஸமர்ப்பணமாவது செய்து) அணுகாமலிருப்பது என்னோ? என்று கரைகின்றார்.
நம்முடைய குற்றங் குறைகளைக் கண்டு நாம் பின் வாங்குவதேன்? எம் பெருமான் கையில் திருவாழி இல்லையோ?
அசுரர்களை எல்லாம் துணித்தாற்போலே நம்முடைய விரோதியான பாபங்களையும் அவன்றானே அவ்வாழிகொண்டு துணித்திடானோ?
ஏதுக்கு நைச்சியம் பேசிப் பின்வாங்க வேணும்? என்கை.

நைச்சியங் கொண்டாடிப் பிற்காலிக்க நேரிடுங் காலத்து எம்பெருமானுடைய அபார சக்தியை அநுஸந்தித்துத்
தேறுதலடைந்து அணுக முயலவேண்டும் என்று உணர்த்துவதுபோலும் இப்பாட்டு.

ஆழ்வார் ஸ்வாநுபவரூபத்தாலே சாஸ்த்ரார்த்தங்களையன்றோ நமக்கு வெளியிடுகிறார்.

————————————————————

(பாலாழி.) நைச்சியங்கொண்டாடி அகலப் பார்ப்பது தகாது, எப்படியாவது அவனை அணுகப் பார்ப்பதே நன்று என்று
கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார் தாம் அணுகி அநுபவிக்க இழிந்தார்;
திருப்பாற் கடலிலே திருமால் பள்ளி கொள்ளுந் திறத்தை அநுபவிக்கத் தொடங்கும்போதே தாம் விகாரப்படும்படியைப் பேசுகிறார் இதில்.

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

பதவுரை

நீலாழி சோதியாய்–நீலக்கடல் போன்ற நிறத்தையுடையவனே!
ஆதியாய்–முழுமுதற் கடவுளே!
எம்பால் தொல் வினை கடியும் நீதியாய்–எம்மிடத்திலே யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்குமியல்வுடையவனே!
யாம்–அடியோம்
நின்-உன்னை
சார்ந்து நின்று-அணுகி,
நீ பால் ஆழி கிடக்கும் பண்பை–நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை
கேட்டேயும்–காதாற்கேட்ட மாத்திரத்திலும்
கால் ஆழும்–கால்கள் தடுமாறுகின்றன;
நெஞ்சு அழியும்–நெஞ்சு சிதிலமாகா நின்றது;
கண் சுழலும்–கண்கள் சுழலவிடா நின்றன.

பாலாழி நீ கிடக்கும் பண்பை-
நீ திருப்பாற் கடலிலே-சயனித்து இருக்கும் அழகை  –
ஒரு வெள்ளைக் கடலிலே கரும் கடல் சாய்ந்தால் போலே
நீல மணி வண்ணன்-கிடந்ததோர் கிடைக்கையை
நீலாழி சோதியாய் -பாலாழி நீ கிடக்கும் பண்பை -பரபாக சோபை ரசம் பார்க்க

யாம்-
அடியோம் –

கேட்டேயும் –
காதால் கேட்ட மாத்ரமேயும்-சாஸ்திரம் அறிந்த மகான்கள் சொல்லக் கேட்டேயும்

காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் –
கால்கள் தடுமாறுகின்றன-நெஞ்சு சிதிலமாகா நின்றது-கண்கள் சுழலமிடா நின்றன
கால்நடை தாராமல் ஆழ்ந்து போகவும்-நெஞ்சு நீர்ப்பண்டமாய் கரைந்து அழிந்து போகவும்-
கண்கள் ஒரு வஸ்துவையும் கிரஹிக்க முடியாமல் சுழல விடவும்

-நீலாழிச் சோதியாய் –
நீலக் கடல் போன்று நிறத்தை யுடையவனே

ஆதியாய்-
முழு முதல் கடவுளே –

தொல்வினை எம்பால் கடியும் நீதியாய் –
என்னிடத்தில்  உள்ள-பழைய பாபங்களை தொலைக்கும்-இயல்பு யுடையவனே
நைச்ச்யம் கொண்டாடி பிற்காலிக்கும் பழைய பாபம் என்றுமாம்

நின் சார்ந்து நின்று –
உன்னை அணுகி -நின் சார்ந்து -நைச்ச்யம் பார்த்து பின் வாங்குகை  தவிர்ந்து
அணுகினேன்-சரிதை கேட்க ஆசை கொண்டேன்
ஷீராப்தி விருத்தாந்தம் விஷயமாக சிறிது கேட்டேன்
விகாரம் அடைந்தேன்
கேட்டதற்கு இவ்வளவு விகாரம் ஆனால்-கண்ணால் காண பெற்றால் என் படுவேனோ-

ஒரு வெள்ளைக் கடலிலே ஒரு கருங்கடல் சாய்ந்தாற்போல், நீலமணி வண்ணானான நீ திருப்பாற்கடலிலே கிடந்ததோ கிடக்கையை
சாஸ்த்ரமறிந்த மஹான்கள் சொல்ல நான் காதாற்கேட்ட மாத்திரத்திலும் ‘இப்படியும் ஒரு அழகுண்டோ!’ என்று ஈடுபட்டு,
கால் நடைதாராமல் ஆழ்ந்து போகவும், நெஞ்சு நீர்ப்பண்டமாகக் கரைந்து அழிந்து போகவும்,
கண்கள் ஒரு வஸ்துவையும் க்ரஹிக்க முடியாமற் சுழலமிடவும் பெற்றேன் என்கிறார்.

“நீலாழிச் சோதியாய்! பாலாழி நீ கிடக்கும் பண்பை” எனச் சேர்த்து அந்வயித்துப் பரபாக சோபா ரஸத்தைப் பாங்காக அநுபவிக்க.
நீலம் என்பது நீல் எனச் சிதைந்தது என்றாவது, நீல + ஆழி, (நீலவாழி என்றாகாமல்) வடமொழித் தீர்க்க சந்திபெற்றுக் கிடக்கிறது என்றாவது கொள்க.
நின் + சார்ந்து, நிற் சார்ந்து, நைச்சியம் பேசிப் பின்வாங்குகை தவிர்ந்து உன்னை அணுகினேன்;
அணுகினவாறே உன் சரிகைகளைக் கேட்க ஆவல் கொண்டேன்; க்ஷீராப்திசயன வ்ருத்தாந்த விஷயமாகச் சிறிது கேட்டேன்;
கேட்டவுடனே விகாரமடைந்தொழிந்தேன். காதால் கேட்டதற்கே இவ்வளவானால் கண்ணால் காணப்பெற்றால் என்படுவேனோ அறியேன் என்றாராயிற்று.

“தொல்வினை எம்பாற்கடியும் நீதியாய!” என்பதற்கு- நைச்சியம் கொண்டாடிப் பிற்காலிக்கையாகிற
பழைய பாவத்தைப் போக்கடிக்கு மியல்வினனே! என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

———————————————————————

(நின்றிமிருந்தும்.) கீழ்ப்பாட்டில் “பாலாழி நீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான
சரிதைகளைக் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான சரிதைகளைக் கேட்பதில்
தமக்கு முயற்சி உண்டானமையைக் கூறினாரே; அவ்வளவிலே எம்பெருமான்
“இவ்வாழ்வாருடைய காதலை மேன்மேலும் வளரச் செய்யவேணும்” என்று திருவுள்ளம் பற்றி
இவருடைய நெஞ்சிலே படுகாடு கிடக்கத் தொடங்கிவிட்டான்; அதைப் பேசுகிறாரிதில்

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என் நெஞ்சு அகலான் -அன்று அம்கை
வன்புடையால்  பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
ஆன்புடையன் அன்றே அவன்–35-

பதவுரை

அன்று–முற்காலத்தில்
அம் கை வன் புடையால்–அழகிய திருக்கைகளாலே ஓங்கி அறைந்ததனால்
பொன் பெயரோன் வாய் தகர்ந்து–இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து
நின்றும்–(என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும்
இருந்தும்–வீற்றிருந்தும்
கிடந்தும்–சயனித்திருந்தும்
திரிதந்தும்–எழுந்துஉயாலியும்
ஒன்றும்–கொஞ்சமும்
மார்பு இடந்தான் அவன்–(அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்.
அன்பு உடையான் அன்றே–(ஆச்ரிதர் திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ;
(ஆனது பற்றியே)
ஓவாற்றான்–திருப்தியடைகிறானில்லை;
என் நெஞ்சு அகலான்–என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்குகிறானில்லை.

நின்றும்
என் நெஞ்சிலே நின்று கொண்டு இருந்தும்-நின்று நின்று திருவடிகள் ஓய்ந்து போனால்
இருந்தும் –
வீற்று இருந்தும்-இருந்தது எந்தை பாடகத்து -போலே
வீற்று இருக்கும் இருப்பில் இளைப்பு உண்டானவாறே
கிடந்தும்-
சயனித்து இருந்தும்-அன்று வெக்கணைக் கிடந்தது
அதிலும் சிரமம் தோன்றினால்
திரி தந்தும்
எழுந்து உலாவியும்

ஒன்றுமோ வாற்றான் –
ஒன்றும் ஒவாற்றான்-கொஞ்சமும் திருப்தி அடைகிறான் இல்லை –
ஒய்வு ஆற்றான் -ஒய்வதை சஹிக்க மாட்டான் -என்றபடி-அதாவது ஓயா மாட்டான் என்றபடி
அன்றிக்கே ஒ ஆற்றான் ஆறி இருக்க மாட்டான்-இன்னும் ஏதாவது செய்ய பாரித்து இருந்தப்படி

இவை எல்லாம் நெஞ்சிலே செய்யப் பட்டமை என்று கொள்ளாமல்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை முதலிய தேசங்களில்
செய்து இருப்பதை சொன்னதாகவுமாம்
இங்கே எல்லாம் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் நடந்ததும் எல்லாம்
என் நெஞ்சை பெற யத்னம் செய்தவை
நெஞ்சை பெற்ற பின்பு-இந்த திருப்பதிகளை மறந்து ஒழிந்து
என் நெஞ்சையே பற்றிக் கிடக்கிறான்
நொடிப் பொழுதும் நீங்காமல் நெஞ்சையே பற்றி இருக்கிறான்
இவ்வளவு செய்து அருளியபின்பும் -ஒன்றுமே செய்யாதவனாக நினைத்து இரா நின்றான்
என்நெஞ்சு அகலான் –
என்னுடைய நெஞ்சை விட்டு நீங்குகிறான் இல்லை-இது புதிதான கார்யம் இல்லையே அவனுக்கு-
ஆஸ்ரித வ்யாமுக்தன்

அன்று-
முற்காலத்திலே

ம்கை வன்புடையால்
அழகிய திருக் கையாலே-ஓங்கி அறைந்ததனால்

பொன் பெயரோன் வாய் தகர்த்து
இரணியாசுரனுடைய-ப்ரஹ்லாத ஆழ்வானை அதட்டின-வாயைப் புடைத்து –

மார்விடந்தான்
அந்த இரணியனுடைய மார்பை-கிழித்து எறிந்த பெருமான்

அன்புடையன் அன்றே அவன்
ஆஸ்ரிதர் திறத்தில் மிக்க அன்புடையவன் அன்றோ-

நின்ற தெந்தை யூரகத்து” (திருச்சந்தவிருத்தம் 64) என்றபடி திருவூரகத்தில் நிற்கிறாப்போலே என்னெஞ்சில் நிற்கிறான்.
நின்று நின்று திருவடிகள் ஓய்ந்து போனால் “இருந்த தெந்தை பாடகத்து” என்றபடி
திருப்பாடகத்தில் வீற்றிருக்கிறாப்போலே என்னெஞ்சில் வீற்றிருக்கிறான். வீற்றிருக்குமிருப்பிலும் இளைப்பு உண்டானவாறே
“அன்று வெஃகணைக் கிடந்தது” என்றபடி திருவெஃகாவிலே சயனித்தருளுகிறாப்போலே என்னெஞ்சில் சயனித்தருளுகிறான்.
அதிலும் சிரமம் தோன்றினால் எழுந்து உலாவுகின்றான்;

இப்படியே நிற்றல் இருத்தல் கிடைத்தல் திரிதல் என்னும் தொழில்களை ஓயாமல் செய்துகொண்டு என்னெஞ்சை விட்டுப் போகிறானில்லை.
ஆனால், பக்தர் திறத்தில் எம்பெருமான் இவ்வளவு அன்பு கொண்டிருக்கிறானென்பது புதிதான ஒரு ஆச்சரிய விஷயமல்ல.
பண்டே ப்ரஹ்லாதாழ்வான் பக்கலில் அன்பு பூண்டு அரியன செய்து காட்டிய பெருமானுக்கு இவை ஒரு வியப்போ?
அன்பின் மிகுதியினால் இத்தனையும் செய்கிறான் என்றாயிற்று.

முதலடியில் சொன்ன நிற்றலிருத்தல் திரிதல்கள் ஆழ்வாருடைய நெஞ்சிலே செய்யப்பட்டவையென்று கொள்ளாமல்
கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை முதலிய திவ்ய பிரதேசங்களிலே செய்திருப்பவற்றைச் சொல்வதாகக் கொண்டு உரைப்பதும் ஒக்கும்.
அந்தந்த திவ்யதேசங்களிலே நின்றது மிருந்ததும் கிடந்ததும் திரிந்தது மெல்லாம் ஸமயம்பார்த்து என்னெஞ்சைப் பெறுகைக்காகவே;
என் நெஞ்சைப் பெற்றானான பின்பு அந்தந்தத் திருப்பதிகளையெல்லாம் மறந்தொழிந்து என்னெஞ்சையே பற்றிக் கிடக்கிறான்;
இதைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் நீங்குவதில்லை; இவ்வளவும் செய்தும் ஒன்றுஞ் செய்யாதானாக நினைத்திராநின்றான் என்றபடி.

ஒன்றுமோவற்றான் = ஓவு அற்றான் எனப்பிரித்து, ஓய்வதை ஸஹிக்கமாட்டான் (அதாவது = ஓயமாட்டான்.) என்று பொருள் கொள்ளலாம்.
அன்றி, ஓ ஆற்றான் எனப்பிரித்து,ஓ என்பதை ஆச்சரியக் குறிப்பிடைச் சொல்லாகக் கொண்டு, ஆற்றான் – ஆறியிருக்கமாட்டான்
(இன்னமும் ஏதேதோ செய்ய வேணுமென்று பாரித்திராநின்றான்) என்று முரைக்கலாம்.

——————————————————————-

(அவனாமிவனாம்.) சில சமயங்களில் எம்பெருமான் ஸுலபன் என்று தோற்றும்; சில ஸமயங்களில் அவன் துர்லபன் என்று தோற்றும்;
மற்றுஞ் சில ஸமயங்களில் ‘அவன் ஸுலபனுமல்வன், துர்லபனுமல்லன்; நடுத்தரமாயுள்ளவன்’ என்று தோற்றும்.
பின்னையும் சில ஸமயங்களில் ‘அப்பப்ப! அவன் மிக உயர்ந்தவன், மேலோர்க்கும் மேலானவன், அவனைப் பெறுதல் கூடுமோ’ என்று தோற்றம்.
ஆக இப்படியெல்லாம் பலபடியாகத் தோற்றும் தோற்றங்களைத் தொலைத்திட்டு அப்பெருமானுக்கு ஸௌலப்யமொன்றே
அஸாதரணமான வடிவு என்று தெளிந்த ஞானத்தைப் பெற்று அக்கண்ணபிரானுக்கே ஆட்பட்டுவிட்டால்
அவன் நமக்கு ஸகலவித பந்துவமாய் நின்று எல்லா நன்மைகளையும் செய்தருள்வான் என்கிறார்.

இவனாம் -என்ற இடத்தில் சந்தேக நிவ்ருதியை சொல்லி சொல்லி அருளுகிறார் -அவன் சுலபனே -திட விசுவாசம்-

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-

பதவுரை

அவன் ஸர்வேச்வரனானவன்
அவன் ஆம்–துர்பலனாயிருப்பனோ?
இவன் ஆம்–ஸுலபனாயிருப்பனோ?
உவன் ஆம்–மத்யஸ்தனாயிருப்பனோ?
மற்று உம்பரவன் ஆம்–அல்லது, மிகவும் உயர்ந்தவனாய் எட்டாதேயிருப்பனோ?
என்று இராதோ–என்றிப்படி பலவகையான ஸந்தேஹங்கள் கொண்டிராமல்
அவன் அவனே ஆம் என தெளிந்து–எம்பெருமானுடைய ஸ்வரூபமே லௌலப்யம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு
கண்ணனுக்கே தீர்ந்தால்–அந்த ஸௌவப்யத்தை க்ருஷ்ணாவதார முகத்தாலே விளங்கக் காட்டிய அவனுக்கே ஆட்பட்டால்
அவனே–அப்பெருமானே
எவனேலும் ஆம்–எல்லாவுறவுமுறையுமாவன்.

அவனாம்
தூரச்தனாய் இருப்பானோ

இவனாம்-
சுலபனாய் இருப்பானோ

உவனாம் –
மத்யச்தனாய் இருப்பானோ

மற்று உம்பர் அவனாம்-
அல்லது மிகவும் உயர்ந்தவனாய்-எட்டாதவனாய் இருப்பானோ

அவன் என்று இராதே –
சர்வேஸ்வரன்-இப்படி என்று என்று எல்லாம் நினைத்து இராதே

அவனாம் அவனே எனத் தெளிந்து
எம்பெருமான் உடைய ஸ்வரூபமே-சௌலப்யம் என்று தெளிந்து கொண்டு
அவன் என்ற சொல்லே சௌலப்யம் ஆழ்வார்கள் படி இதுதானே
ஆம் அவன் நமக்கு கையாளாக இருப்பவன்-பரதந்த்ர்யமே வடிவு என்றபடி

கண்ணனுக்கே தீர்ந்தால் –
அந்த சௌலப்யத்தை-கிருஷ்ணாவதார முகத்தாலே-விளங்கக் காட்டி அருளிய அவனுக்கே ஆட்பட்டால் –

அவனே எவனேலுமாம் –
அப்பெருமானே எல்லா உறவு முறையும் ஆவான்-
யஸ்ய மந்த்ரீச கோப்தாச சூஹ்ருத்சைவ ஜனார்த்தன -அர்ஜுனனுக்கு ஆனால் போலே –
ஆஸ்ரயணீயன் சிவனோ ப்ரஹ்மணோ விஷ்ணுவோ இவர்களிலும் மேம்பட்ட தெய்வமோ-என்கிற சங்கை தெளிந்து-
வேதாந்தங்களில்  -சொல்லப் பட்ட தெய்வம் கண்ணபிரான் ஒருவனே என்று தெளிந்து பற்றினால்-
அந்த அந்த தேவதாந்த்ரங்கள் அளிக்கும் பலன்களையும்-மேலாக கைங்கர்ய சாம்ராஜ்ய பலனையும்-அவனே அளித்து அருளுவான் என்றதாயிற்று-

அவனாமிவனாமுவனாம் = அவன் என்றும் அது என்றும்- கைக்கு எட்டாத தூரத்திலுள்ள பொருள்களைச் சொல்லுவது வழக்கம்.
ஆகவே இங்கு அவனாம் என்றது – கைக்கு எட்டாமல் துர்பலனாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.
இவன் என்றும் இது என்றும் கைக்கு எடடின பொருளைச் சொல்லுவது வழக்கமாகையாதே இங்கு இவனாம் என்றது ஸுலபனாம் என்றபடி.
எம்பெருமானை துர்லபனாக நினையாமல் ஸுலபனாக நினைக்கவேணுமென்று சொல்லுகிற இப்பாட்டில்

“அவனாமென்றிராதே; உவனாமென்றிராதே, உம்பரவனாமென்றிராதே” என்று சொல்லுதல் மாத்திரமேயன்றோ பொருந்தும்.
“இவனாமென்றிராதே” என்றும் சொல்லுதல் எப்படி பொருந்தும்?
எம்பெருமான் ஸுலடன் என்று நினையாதே என்று சொல்லுதல் இப்பாட்டுக்குச் சோராதன்றோ? என்னில்; கேண்மின்;

அவனாமிவனாமென்று தொடங்கிச் செல்லுவதெல்லாம் அவரவர்கள் ஸந்தேஹிக்கிறபடிகளைச் சொல்லுகிறது. அதாவது-
அவன் துர்லபனோ. ஸுலபனோ, மத்தியஸ்தனோ, மிகவும் துர்லபனோ என்றிப்படி ஸந்தேஹப்படாதே என்று ஸந்தேஹ நிவ்ருத்தியை
முன்னடிகளிலே விதித்து,மேலே ‘அவன் ஸுலபனே’ என்கிற நிச்சய வுணர்ச்சி பெறுமாறு விதிக்கிறது.

அவனாம் அவனேயெனத் தெளிந்து என்றதை அவன் அவனேயாம் எனத் தெளிந்து’ என்று இயைத்துக் கொள்க.
அவன் அவனேயாகையாவது என்ன வென்றால், எம்பெருமானுடைய ஸ்வரூபமே ஸௌலப்யம் என்று தெரிவித்தபடி.
எம்பெருமான் நம்மால் உணரப்படும்போதே ஸௌலப்ய குணவிசிஷ்டனாகவே உணரப்படுவான்.
இதிஹாஸ புராணங்களைக்கொண்டு எம்பெருமானை நாம் தெரிந்து கொள்ளும்போது முந்துற முன்னம் ஸௌலப்ய குணமே
தெரிய வருவதனால் அவன் என்கிற சொல்லில் ஸௌலப்ய குணமே பொருளாகப் பொதிந்துகிடக்கிறதென்று
ஆழ்வார் திருவுள்ளம் பற்றி அவன் அவனேயாம் என்று இங்கு அருளிச்செய்யும்மழனா அற்புதமானது.

“அவன் ஆமவனே எனத் தெளிந்து” என்று கொண்டு, அவன்- எம்பெருமான், ஆமவனே- நமக்கே கையாளரீயிருப்பவன் என்று பொருள் கொள்வாருமுளர்.
ஆக, அவன் அரியனோ எளியனோ என்கிற ஸந்தேஹங்களையெல்லாம் அறவே யொழித்து,
அவனுக்குப் பாரதந்திரியமே வடிவு என்று துணிந்து, அக்குணம் நிறைந்த கண்ணபிரானுக்கே நாம் ஆட்பட்டால்,
அவனே எவனேலுமாம் = எவனேலும்’ என்றது மாதாவாகவோ பிதாவாகவோ உடன்பிறந்தவனாகவோ, உயிர்த்தோழனாகவோ
மற்றும் எவ்விதமான உறவு முறையாக வேணுமானாலும் எல்லாவுறவும் அவனே ஆய்விடுவன் என்றபடி.

அர்ஜுநன்போல்வார்க்கு –யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹருக்சைவ ஜநார்தக!” என்னும்படி எல்லாவுறவுமாக அமைந்தவனிறே கண்ணபிரான்.

இப்பாட்டுக்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவாருளர்; –
நம்மால் ஆச்ரயிக்க வேண்டியவனாக சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட தேவன் சிவனோ பிரமனோ விஷ்ணுவோ?
இவர்களினும் மேற்பட்ட வேறொரு தெய்வமோ? என்றிப்படியெல்லாம் ஸந்தேஹப்படாமல் வேதாந்தங்களில்
ஸ என்றும் தத் என்றும் சொல்லப்பட்டுள்ள தெய்வம் கண்ணபிரானே என்று தெளிந்து அவனைப் பற்றினால்,
அப்பெருமானே தேவதாந்தரங்கள் அளிக்கும் பலன்களையும் வேண்டுவார்க்கு அளித்திடுவான் என்பதாக.

————————————————————–

(ஆமாறறிவுடையார்.) கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைப் பேசினார்; அது நம் நெஞ்சுக்கு மிகவும் ரஸித்தது.
அந்த ஸௌலப்யத்தையே நெஞ்சு அநுஸந்தித்து ஆநந்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆழ்வார் அந்த நெஞ்சை நோக்கி
“இப்படிப்பட்ட ஸௌலப்யம் எம்பெருமானுக்குள்ளதென்று நீ நன்கு அறிந்து கொண்டாயன்றோ;
இந்த அறிவு எல்லார்க்கும் எளிதாக உண்டாமதன்று; ஏதோ எம்பெருமானது இன்னருளாலே நமக்கு உண்டாகப் பெற்றோம்;
ஆகையாலே இனி ஒருகாலும் நைச்சியம் பாவித்துப் பின்வாங்கப் பாராதே
அப்பெருமானுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு அவனை வாழ்த்துவதே தகும் என்கிற
அத்யவஸாயத்தைத் திண்ணியதாகக் கொள்” என்று உபதேசிக்கிறார்.

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது–யுக்தமான அறிவை உடையவராக ஆவது
அரிது அன்றே–(உலகில் யார்க்கும்) அருமையன்றோ;
அது–அப்படிப்பட்ட அறிவை
நாமே உடையோம்–(பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்;
(ஆகையால் நீ செய்யத்தக்கது என்னவென்றால்)
பூ மேய் மதுகரம் மே தண் துழாய்–பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயையுடையனாய்
மாலாரை–(ஆச்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை
வாழ்த்து ஆம் அது–வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே
அன்பால்–பக்தியுடன்
கரமே–திண்ணமாக
அமை–ஊன்றியிரு.

ஆமாறு அறிவுடையார் ஆவது –
யுக்தமான அறிவுடையார் ஆவது-சாமான்யமான அறிவு ஆம் அறிவு அல்ல

அரிதன்றே-
உலகில் யாவர்க்கும் அருமை அன்றோ

நாமே யதுவுடையோம் –
நாம் பகவத் கிருபையாலே-அத்தைப் பெற்று இருக்கிறோம்-இது தற் புகழ்ச்சி அல்லவே
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற-அவனது இன்னருள் பெறப் பெற்ற – சந்தோஷ மிகுதியாலே பேசி அருளுகிறார்

ஆகையால் நீ செய்யத் தக்கது என்ன வென்றால்-

நன்னெஞ்சே —
நல்ல மனமே -மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா –
நெஞ்சை பாராட்டி விளிக்கிறார் எப்பொழுதும் நன்மையே புரிவதற்காக

பூ மேய மதுகரமே தண் துழாய் –
பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள-குளிர்ந்த திருத் துழாயை உடையராய் –

மாலாரை-
ஆஸ்ரிதர் திறத்தில் வ்யாமோஹம் யுடையரான-பெருமாளை

வாழ்த்தாம் அது-
வாழ்த்துதல் ஆகிய-அக்கார்யம் ஒன்றினாலாயே –

கரமே அன்பால் அமை –
அன்பால் கரமே அமை-பக்தி உடன் திண்ணமாக ஊன்றி இரு-
கரம் வடசொல் த்ருடம் -பொருள்

கீழே சௌலப்யம் சொல்லி அருளி-இதில் அவனது போக்யதையும் காட்டி அருளுகிறார்
மாலாரை -சீல குணமும் உண்டே-என்றும்    காட்டி அருளுகிறார்-

ஆமாறறிவுடையாராவது அரிதன்றே = ஸாமாந்யமாக அறிவு என்பது எல்லார்க்குமிருந்தாலும் அஃது ஆமாறறிவு அல்ல;
ஸத்தை பெறுதற்கு உறுப்பான அறிவு அல்ல என்றபடி.
எம்பெருமானுடைய உத்தம குணத்தை அநுஸந்திப்பதாகிற நல்லறிவு எல்லார்க்கும் உண்டாகக்கடவதன்றே;
தைவாதீனமாக அது நமக்கே உண்டாகப்பெற்றோம் என்கிறார். “நான் அறிவில்லாதவன்” என்று சொல்லிக் கொள்ள வேண்டியதன்றோ ஸ்வரூபம்;
அப்படியிருக்க “நாமே நல்லறிவு உடையோம்” என்று சொல்லிக் கொள்ளுதல் தற்புகழ்ச்சியாகதோ? எனின்; ஆகாது.
“மயர்வற மதிநல மருளினன் யவனவன்” என்று முதலடியிலே அருளிச் செய்தது தற்புகழ்ச்சியாமாகில் இதுவும் அங்ஙனேயாம்.
எம்பெருமானது திருவருளாலே பெற்ற பேற்றை ஸந்தோஷ மிகுதியாலே வெளியிடுகிறாரித்தனை.

நல் நெஞ்சே! –மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷியோ” என்ற நல் வழி போவதற்கும் தீ வழி போவதற்கும்
அவரவர்களுக்கு நெஞ்சே காரணம் என்று சாஸ்த்ரம் சொல்லியிருப்பதனால், நெஞ்சைப் பாராட்டி விளிக்கின்றார்:
எப்போதும் தமக்கு நன்மையே புரிவதற்காக.

(பூ மேய் இத்யாதி.) பூவிலே பொருந்தும் வண்டுகள் சேர்ந்திருந்துள்ள திருத்துழாயை அணிந்திராநின்ற ஸர்வேச்வரனை
அன்பினால் மங்களாசாஸநம் பண்ணுகையாகிற ஒரு காரியத்தையே சிக்கனப் பிடித்துக்கொள் என்று தம் திருவுள்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று.

கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸௌலப்யம் சொன்னாரே; அது மாத்திரமல்ல; அவனுடைய போக்யதையும் ஒப்பற்றது என்கிறார் இதில்.
மாலாரை என்றதனால் ஆச்ரிதர் திறத்திலே வ்யாமோஹங் கொண்டிருக்கையாகிற சீலகுணம் சொல்லுகிறது.
வடசொல் இங்கே கரமெனத் திரிந்தது. அவ்வடசொல்லுக்கு த்ருடம் என்று பொருள்.

————————————————————–

(அமைக்கும் பொழுதுண்டே.) அவனுடைய குணங்களை வாழ்த்துவதே ப்ராப்தம் என்று நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப் பாட்டில்.
அவனுடைய ஸௌலப்பத்தை வாழ்த்துவதென்றால் அபசாரத்தில் போய் முடியுமே;
‘வெண்ணெய் திருடினான், இடைச்சி கையில் அகப்பட்டுக் கொண்டான். தாம்பினால் கட்டுண்டான், உரலோடு பிணிப்புண்டான்.
அடி யுண்டு அழுது ஏங்கினான்” என்று இப்படிப்பட்ட கதைகளைச் சொல்லி வாழ்த்துவது தானே ஸௌலப்ய குணத்தை வாழ்த்துகையாவது;
இவை பேசினால் சிசுபாலாதிகளோடு ஒப்போமன்றோ; இது நமக்குத் தகுமோ? என்று நெஞ்சு இறாய்க்க அதனை ஸமாதாகப்படுத்துகிறார் இதில்.

பரத்வம் அனுசந்திக்க -அந்த பெரியவன் எங்கே
நான் நீசன் -நைச்யம் பண்ணி விலகப் பார்க்க
சௌலப்யம் அனுசந்திக்க அபசாரம் ஆகுமே என்று இறாய்க்க
எம்பெருமான் பற்றிய பேச்சு ஏதாகிலும்
ஏத்துதலோ ஏசுதலோ ஏதாயினும் ஆயிடுக
எம்பெருமான் விஷயம் எனபது ஒன்றே போதும் பேசாய் என்கிறார்

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஆராயில்–ஆராய்ந்து பார்த்தால்
இமைக்கும் பொழுதும்–ஒரு க்ஷண காலமாகிலும்
அமைக்கும் பொழுது உண்டே–வீண்போது போக்க முடியுமோ?
இடைச்சி குமை திறங்கள்–யசோதையின் கையிலே அகப்பட்டு இவன் நலிவுபட்ட பாடுகளை
ஏசியே ஆயினும்–பரிஹா ஸோக்தியாகச் சொல்லியாவது
ஈன் துழாய் மாயனையே–போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானைப் பற்றியே
பேசியே–(எதையாவது) பேசிக்கொண்டே
பிழை–உனது பாவங்களை
போக்காய்–போக்கிக் கொள்ளப்பார்.

அமைக்கும் பொழுது உண்டே
வீண் போது போக்க முடியுமோ

ஆராயில் நெஞ்சே
ஒ மனமே ஆராய்ந்து பார்த்தால்

இமைக்கும் பொழுதும் –
ஒரு ஷணம் காலம் ஆகிலும் –ஏகஸ் மின்னப் யதிகிராந்தே முஹூர்த்தே த்யான வர்ஜிதே-
தஸ்யபிர் முஷிதே நேவ யுகத மாக்ராந்திதும் ந்ருணாம்

அவனை விட்டு ஒரு நொடிப் பொழுது பிரிந்து இருந்தாலும் கள்ளர் வந்து சர்வ சொத்தையும் அபஹரித்தால் போலே கதற வேண்டும்

இடைச்சி குமைத் திறங்கள்-
யசோதையின் கையிலே அகப்பட்டு-இவன் நலிவு பட்ட பாடுகளை-யசோதை பிராட்டி மாத்ரம்  –
அல்லது ஜாதி வசனமாக  எல்லா ஆய்ச்சிகளையும் சொல்லிற்றாகவுமாம்

ஏசியே யாயினும்
பரிஹாச உக்தியாகச் சொல்லியாவது-
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்-காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்பும் உண்டான் -போல்வனவும்
வண்ண கரும் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் காணேடி -என்பனவும் போல்வன

ஈன் துழாய் மாயனையே
போக்யமான திருத் துழாய் மாலை சாத்தி உள்ள-அப்பெருமானைப் பற்றியே

பேசியே போக்காய் பிழை
ஏதாவது பேசிக் கொண்டே-உனது பாபங்களைப் போக்கிக் கொள்ளப் பாராய்
போக்காய் பிழை
ஈன் துழாய் மாயனை ஏசிப் பேசியே யாகிலும் காலத்தை போக்காயாகில் அது பிழை
பிழை பிசகு
ஏசிப் பேசியே யாகிலும் பிழையைப் போக்கிக் கொள்ளுகிறாய் இல்லை என்றும்
பிழைகளைப் போக்கிக் கொள் என்றும் பொருள் கொள்ளலாம்-

பரத்வம் என்றும் ஸௌலப்யம் என்றும் இரண்டு தன்மைகள் எம்பெருமானுக்கு உள்ளன;
நெஞ்சே! பரத்வத்தை அநுஸந்திக்க நீ யோக்யனல்லை; அவன் பரம புருஷன் என்று தெரிந்தவாறே ‘நான் நீசன் நான் நீசன்’
என்று நெடுந்தூரம் ஒடப் பார்க்கிறாய்; ஆகையாலே பரத்வத்தைப் பற்றின பேச்சு உனக்கில்லை.
இனி, ஸௌலப்யத்தைப் பேசு என்றால் அபசாரமாகுமே யென்கிறாய். ஆக இரண்டையும் விட்டு விட்டால் வேறு எதைச் சொல்லிப்போது
போக்கலாமென்றிருக்கிறாய் நெஞ்சே! ஒரு நொடிப் பொழுதாகிலும் வீண் போகலாமோ? கீழே அநாதி காலம் பாழே கழிந்தது போராதோ?
அவனுடைய ஸௌலப்ய குணத்தைப் பேசினால் ஓரிடைச்சியாகிய யசோதையினிடத்தில் அவன்பட்ட பரிபவங்களையெல்லாம்
பேச வேண்டியதாமமாகையால் அது அபசாரமாமென்கிறாய்;
அபசாரமாயினும் ஆயிடுக ஏதாகிலும் எம்பெருமான் விஷயமான பேச்சாயிருந்தால் போதுமானது;
அவனை ஏசின சிசுபாலாதிகளும் முடிவில் நற்கதிபெற்று உயர்ந்தனர் காண்;
(“ஏசினாருய்ந்துபோனார்” என்றார்(திருக்குறுந்தாண்டகம் 17.) திருமங்கையாழ்வாரும்) ஆகையாலே, ஏத்துதலோ ஏசுதலோ எதுவாயினும் ஆகுக.
எம்பெருமான் விடியமென்பதொன்றே போரும்; பேசாய் என்கிறார்.

நெஞ்சே! ஆராயில் இமைக்கும்பொழுதும் அமைக்கும்பொழுது உண்டே?
ஏகஸ்மிந்நய்ப்யதிக்ராந்தே முஹூர்த்தே த்யாநவர்ஜிதே – தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திதும் ந்ருணாம்”
(எம்பெருமானைப் பற்றின சிந்தையின்றியே ஒரு நொடிப் பொழுது கழிந்தாலும், கள்ளர் வந்து ஸர்வஸொத்தையும் கொள்ளை
கொண்டால் எப்படி கதறுவோமோ அப்படிக் கதற வேண்டும்) என்று சொல்லுகிற பிரமாணத்தை ஆராய்ந்தால்
ஒரு நிமிஷமாவது வெறுமனிருக்க வொண்ணுமோ என்றபடி. அமைத்தல் – அடங்கியிருத்தல், வாய் மூடியிருந்தல்.

இடைச்சி குமைத்திறங்களேசியேயாயினும் = இங்கே இடைச்சியென்று யசோதைப் பிராட்டியை மாத்திரம் சொல்லிற்றாகலாம்;
அன்றியே ஜாத்யேகவசநமாய் மற்றும் பல இடைச்சிகளையும் சொல்லிற்றாகலாம்.
குமைத்திறங்களாவன – இடைச்சிகள் கையிலே அகப்பட்டுக் கொண்டு துன்பப்பட்ட விதங்கள். அவற்றைச் சொல்லி ஏசுகையாவது-
( நாச்சியார் திருமொழி 12-8 ) “கற்றினம் மேய்க்கலும் பெற்றான் காடு வாழ்சாதியுமாகப்பெற்றான். பற்றியுரலிடை யாப்புமுண்டான்”
“வண்ணக் கருங்குழலாய்ச்சியால் மொத்துண்டு, கண்ணிக்குறுங்கயிற்றால் கட்டுண்டான்காணேடீ” (பெரிய திருமொழி 11-5-5) என்றாற்போலே வசை கூறுகை.

போக்காய்பிழை = ஈன்துழாய் மாயனை ஏசிப்பேசியேயாகிலும் (காலத்தைப்) போக்காயாகில் (அது) பிழை = பிசகு என்றும்,
ஏசிப் பேசியேயாகிலும் பிழைகளைப் போக்கிக் கொள்ளுகிறாயில்லை என்றும், பிழைகளைப் போக்கிக்கொள் என்றும் உரைக்கலாம்.

——————————————————————-

(பிழைக்க முயன்றோமோ) “ஈன்துழாய்மாயனையே ஏசியே யாயினும் பேசியே போக்காய் பிழை” என்று
பகவத் கீர்த்தனமே பண்ணும்படி கீழ்ப்பாட்டில் நெஞ்சுக்கு உபதேசித்தார்.
“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்ருடம்பும், இந்நின்ற நீர்மை யினியாமுறாமை” (திருவிருத்தம் -1) என்று
முதலடியிலே விண்ணப்பம் செய்தபடி இந்நிலம் அடித் கொதித்துப் பரமபரத்திலே விரைந்து சென்று
அங்கே நித்ய கைங்கரியம் பண்ண வேண்டியது ப்ராப்தமாயிருக்க அது செய்யத் தேடாமல் இங்கே இருந்து கொண்டு
அவனது திருக் குணங்களைப் பேசிக்கொண்டிருப்பது எதுக்கு? என்று திருவுள்ளத்தில் பட்டதாக, அதனை அநுவாதம் செய்கிறார் இப்பாட்டில் –

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை–தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத் திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து
அழைத்து–கூப்பிட்டு
ஒருகால்–அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே
போய்–பரமபதத்திலே சென்று
பொலிய–நன்றாக
உபகாரம்–கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை
கொள்ளாது–கொள்ள முயலாமல்
அவன் புகழே–அப்பெருமானது திருக்குணங்களையே
வாய் உபகாரம் கொண்ட–வாயாலே சொல்லிக்கொண்டருக்கையாகிற
வாய்ப்பு–இந்த நேர்பாடு
பிழைக்க முயன்றோமோ–தப்பு செய்ததாமோ?
பேசாய்–நீ சொல்வாய்.

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தப்புச் செய்தோமோ -மனமே-நீ சொல்லாய் -குணாநுபவம் இங்கும் அங்கும் ஆக இரண்டுமே உண்டு-
தம்முடைய நிஷ்கர்ஷம் துணிந்து செய்ய மாட்டாமல்
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே -என்கிறார் –
பிழைக்க -என்றது பிழை செய்ய -என்றபடி-நாம் தப்பாக செய்கிறோமோ என்கிற
ஸ்வர வகையில்-இது தப்பு அல்ல என்றும்-இது தப்பு ஆகலாம் -என்றும் தோற்றுமா நிற்கும்

தழைக்கும் துழாய் மார்வன் தன்னை –
தழைத்து ஓங்குகின்ற திருத் துழாய் மாலையை-திரு மார்விலே உடையனான எம்பெருமானைக் குறித்து –
ஒரு வாடல் மாலையை இட்டாலும் அது தன்னிலத்தில் காட்டிலும் அதிகமாக தழைத்து விளங்குவதற்கு இடமான திரு மார்வு –

அழைத்து –
கூப்பிட்டு-கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றால் போலே கதறி அழுது கூப்பிட்டு –

அங்கும் இங்கும் குணானுபவமே-ஆனால் இங்கு-இருள் தரும் மா ஞாலம் என்பதால்
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சி-பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போலே தாங்காது உள்ளம் –
அடிக் கொதித்து அங்கேயே சென்று பண்ணத் தோன்றும்

ஆக இரண்டு வகையாகவும் தோற்றும்

ஒரு கால் –
அவனுக்கு திரு உள்ளமான ஒரு காலத்திலே-
நாம் எவ்வளவு கதறினாலும் பேறு அவன் திரு உள்ளப்படியே தானே

போய் –
பரம பதத்திலே சென்று –

யுபகாரம் பொலியக் –
நன்றாக கைங்கர்யங்கள் செய்கை யாகிற-உபகாரத்தை –

கொள்ளாது –
கொள்ள முயலாமல் –

அவன் புகழே-
அவனது திருக் கல்யாண குணங்களையே –

வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –
வாயாலே சொல்லிக் கொண்டே இருக்கை யாகிற-இந்த நேர்பாடு –

ஜ்ஞானம் பிறந்த பின்பு அடிமைக்கு அனுகூலம் அல்லாத சம்சார சம்பந்தம் விட்டு நீங்குவது எப்போதோ-என்று இந்நிலம் அடிக் கொதித்து
அனுகூலமான பரம பதத்திலே சென்று பரிபூர்ணமாக அனுபவித்து அடிமை செய்து வாழ்வோம் என்று அங்கே போகப் பாரியாமல்
இங்கே குணானுபவ மாத்ரத்திலே திருப்தி பிறந்து இருக்கை யாவது
பகவத் விஷயத்திலே கண் அழிவு அற்ற ருசி இல்லாமை இறே-என்று தாத்பர்யம் –

தழைக்குந்துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால் போய் உபகாரம் பொலியக் கொள்ளாது
அவன் புகழே வாயுபகாரங்கொண்ட வாய்ப்பு, நெஞ்சமே பிழைக்க முயன்றோமோ பேசாய என்று அந்வயிப்பது.

ஒரு வாடல்மாலையை இட்டாலும் அது தன்னிலத்திற் காட்டிலும் அதிகமாகத் தழைத்து விளங்குதற்கிடமான திருமார்விலே
அம்மாலையை அணிந்துள்ள ஸர்வேச்வரனை நோக்கிக் “கூவிக்கொள்ளுங் கால மின்னங்குறுகாதோ?” என்றாற்போலே
கதறியழைத்தால் ஒருகால் அவன் நம்மைப் பரம பதத்திலே சேர்த்துக் கொண்டு ஸகலவித கைங்கரிய ஸாம்ராஜ்யங்களைக் கொடுத்தருள்வன;
ஆகையாலே அப்படி கதறி அக்கைங்கரியங்களைக் கொள்ளப் பாராமல் இங்கிருந்துகொண்டு அவனது
திருப்புகழ்களையே வாய் வெருவிக் கொண்டிருப்பதும் ஒரு வாய்ப்பான விஷயமேயாகிலும்
ஓ நெஞ்சே! இது தப்போ சரியா? எனக்குத் தெரியவில்லை. நீ சொல்லாய் என்கிறார்.

பரமபதத்திற் சென்றாலும் குணாநுபவமே யாத்திரையாகையாலே அதனை இங்கிருந்து செய்தாலென்ன? அங்கிருந்து செய்தாலென்ன?
என்று தோன்றும்போது இங்கிருந்து செய்யுமிக்குணாநுபவம் அயுக்தமல்ல என்று தோற்றும்.
இந்நிலத்தில் குணாநுபவம் நடந்தாலும் இது இருள்தருமாஞால மாகையாலே
“ஆற்றங் கரைவாழ் மரம்போ லஞ்சுகின்றேன்” “பாம்போடொரு கூரையிலே பயின்றற்போல் தாங்காதுள்ளம் தள்ளும்” என்று
ஞானிகள் அஞ்ச வேண்டிய நிலமாயிருப்பதால் இங்கிருந்து குணாநுபவம் செய்வதில் விருப்பமற்று இங்கே அடிக்கொதித்து
அங்கே போய்ச் சேரவேணுமென்று விரைவு உண்டாம்போது இங்கிருந்து செய்யுமிக்குணாநுபவம் யுக்தமல்ல என்று தோற்றும்.

ஆக இரண்டு வகையாகவுந்தோற்ற இடமுண்டாகையாலே ஆழ்வார் தம்முடைய நிஷ்கர்ஷத்தைத் துணிந்து சொல்லமாட்டாமல்
“பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே!” என்கிறார்; பிழைக்க என்றது- பிழை செய்ய என்றபடி.
‘நாம் தப்பாகச் செய்கிறோமோ’ என்று சொல்லுகிற ஸ்வரவகையில் ‘இது தப்பு அல்ல, என்றும் ‘இது தப்பவு ஆகலாம்’ என்றும் தோற்றுமாறிருக்கும்.

“ஜ்ஞாநம் பிறந்த பின்பு அடிமைக்கு அநுகூலமல்லாத ஸம்ஸார ஸம்பந்தம் விட்டு நீங்குவது எப்போதோவென்று
இந்நிலமடிக்கொதித்து அடிமைக்கு அநுகூலமான பரமபதத்திலே போய்ப் பரிபூர்ணமாக அநுபவித்து அடிமை செய்து
வாழ்வோமென்று அங்கே போகப் பாரியாமல் இங்கே குணாநுபவ மாத்ரத்திலே த்ருப்தி பிறந்திருக்கையாவது
பகவத் விஷயத்தில் கண்ணழிவற்ற ருசியில்லாமையிறே என்று தாத்பர்யம்” என்று முன்னோர் வாக்கியம் நோக்கத்தக்கது.

ஒருகால் போய் = நாம் எவ்வளவு கதறினாலும் எம்பெருமான் திருவுள்ளமிரங்கின காலத்திலன்றிப் பரமபதம் செல்ல
முடியாதாகையாலே அவனுக்குத் திருவுள்ளாமனதொரு காலத்திலே அங்குச் சென்று என்றபடி.

—————————————————————–

(வாய்ப்பொலிதுவொப்ப.) எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஆழ்வார் தமக்குண்டான ருசியின்
மிகுதியை வெளியிடுகிறாரிப்பாட்டில். நெஞ்சே! இப்படிப்பட்டதொரு வாய்ப்பு நமக்கு வேறொன்றில்லை;
இவ்வுலகத்திலுள்ளாரெல்லாரும் தங்கள் தங்கள் வாயவந்தபடி கண்ட விஷயங்களையும் பாடிக்கொண்டு திரிபவர்களாயிருக்க,
நாம் மாத்திரம் அப்படியிராமே பகவானுடைய புகழ்களைப் பேசும்படியானவிது இவ்விருள் தருமாஞாலத்தில் ஸம்பவிக்கக் கூடியதோ? அல்ல;
ஆயினும் “விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர் ” என்னுமாபொலே தெய்வ யோகத்தாலே நமக்கு இப்பெரும்பாக்கியம் வாய்த்தது.
ஆனால் பகவத் குணங்களின் தூய்மையையும் நமது நாவின் எச்சில் தன்மையையும் நோக்கும்போது
‘வாக்குத் தூய்மையிலாயினாலே மாதவா வுன்னை வாய்க்கொள்ளமாட்டேன்” (பெரியாழ்வார் திருமொழி 5-1-1) என்றாற்போலே
இறாய்த்து நிற்கத் தோன்றுவதுண்டு; அப்படி நைச்சியம் பாவித்து பகவத் குணங்களைப் பேசாதிருப்பதானது சாஸ்த்ரங்களில்
ப்ரஸித்தமான நரகங்களிற் காட்டில் மிகக் கொடிய நரகமேயாம் என்று கருதவேண்டும்.
அப்படிப்பட்ட நரகத்தில் என்னை நீ தள்ளப்பாராமல் அவனுடைய சரிதைகளில் ஏதேனுமொன்றைச் சொல்லிக்கொண்டேயிருக்கப்பார்;
கஞ்சனாலேவப் பட்டுக் கண்ணபிரானைக் கொல்லக்கருதி முலையில் விஷந்தடவிக் கொண்டு பேய்வேஷத்தை மறைத்துத்
தாய் வேஷத்தோடு வந்து முலைகொடுத்த பூதனையைப் பாலுண்கிற பாவனையிலே முடித்த சரிதையைச் சொல்லிப் புகழப்பார்;
அவளுயிரை முடித்தாற்போலே நமது நைச்சியத்தையும் முடிக்க வல்லவன் அப்பெருமான் என்று கொண்டு
அவ்வரலாற்றைச் சொல்லி ஏத்தப் பார் என்று தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறபடி.

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

பதவுரை

வா நெஞ்சே–வாராய் மனமே!
இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை–இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்கமாட்டாது காண;
வெம் நரகில்–(நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே
பூவியேல்–கொண்டு தள்ளி விடாதே;
தீ பால–தீயதான தன்மையையுடையலான
பேய் தாய்–தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய
உயிர்–பிராணனை
பால்–அவளது முலைப்பாலோடே
கலாய்–கலந்து
உண்டு–அமுது செய்து
அவன் உயிரை மாய்த்தானை–அப்பூதனையினது உயிரை முடித்த பெருமானை
வாழ்த்தே–வாழ்த்துதலே
வலி–நமக்கு மிடுக்காம்.

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை-
இப்போது நமக்கு வாய்த்து இருக்கிற மாதிரி-மற்று எப்போதும் வாய்க்க மாட்டாது காண்

-வாய்ப்பு -சித்தி சிறப்பு தகுதி நயம் பேறு வளமை

திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே நாமா மிக வுடையோம் நாழ்
இப்படி அடிக்கடி நைச்சயம் பாவித்து வழக்கமாதலால்-இனி மேல் அது வேண்டாம் என்கிறார்-

வா நெஞ்சே –
வாராய் மனமே –

போய்ப் போய்-
மறுபடியும் மறுபடியும்

தேமாங்காய் சீர் -போய்ப் போ ஒய் -என்று அருளிச் செய்கிறார்
போய்ப்போய்-என்றால் தேமா சீர் ஆகுமே-வெண்டளை பிறளாமைக்காக

வெந்நரகில்-
நைச்ச்யம் பேசி பின் வாங்குவதாகிற-கொடிய நரகத்திலே

பூவியேல்-
கொண்டு தள்ளி விடாதே-பூவியேல் -புகுவியேல்-எதிர்மறை வினைமுற்று

-தீப்பால
தீயதான தன்மையை யுடையளான

பேய்த்தாய்
தாய் வடிவு கொண்டு வந்த-பூதனையின் யுடைய

உயிர் கலாய் பாலுண்டு
பிராணனை-அவளது முலைப் பாலோடு கலந்து-அமுது செய்து- களாய் என்பர் அத்யாபகர்கள்

அவள் உயிரை மாய்த்தானை –
அப் பூதனையினுடைய உயிரை முடித்த பெருமானை –

வாழ்த்தே வலி
வாழ்த்துதலே நமக்கு மிடுக்காம்

அவளை முடித்தவனை வாழ்த்துவதே மிடுக்கு
மாய்த்தவனை வாழ்துகையிலே துணிவு கொள்
மாயவனை வலிதாக நன்றாக வாழ்த்துக -என்றுமாம்

யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா-போலே
எம்பெருமானை யேத்துகை ஸ்வர்க்கம் ஏத்தாது இருக்கை நரகம்
நமனும் உத்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி –அனுசந்தேயம்

வாய்ப்பு = ஸித்தி, சிறப்பு,தகுதி, நயம், பேறு, வளமை.
போய்ப்போய் வெந்நரகில் பூவியேல் = “திருமாற்கு யாமார் வணக்காமர் ஏபாவம் நன்னெஞ்சே! நரமாமிகவுடையோம் நாழ்”
(இப்பிரபந்தத்தில் பத்தாம் பாட்டு) என்று அடிக்கடி நைச்சியம் பாவித்துப் பின்வாங்குவது வழக்கமாகையால் இனி அப்படி வேண்டாமென்கிறார்.
வெந்நாகு = ** யஸ் த்வய ஸஹ ஸ்வாக்கோ நிரயோ யஸ் திவ்யா விநா” என்று எம்பெருமானோடு கூடியிருப்பது சுவர்க்கம்.
அவனைப் பிரிந்திருப்பது நரகம் என்று இளையபெருமாள் (ஸ்ரீராமாயணத்தில்) கூறினது இங்கு உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கது.
எம்பெருமானை ஏத்துகை சுவர்க்கம்; ஏத்தாதிருக்கை நரகம் என்கைக்கும் உபலக்ஷணம்.
“நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க. நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி” என்ற திருமாலைப் பாசுரமும் இங்கு அநுஸந்திக்கத்தகும்.

வெண்டளை பிறழாமைக்காக இரண்டாமடியின் முதற்சீர் தேமாங்காய்ச் சீராக அமையவேண்டுதல் பற்றிப் “போய்ப் போ ஓய்” என்றருளிச் செய்யப்பட்டது.
“போய்ப்பேய்” என்னில் தேமாச் சீராய் தளை தட்டுமே. “காய்முன் நேரும் மாமுண் திரையும் விளமுண்நேரும் வருவது வெண்டளை.”

பூவியேல் = ‘புகுவியேல்’ என்ற எதிர்மறை வினைமுற்று மருவியிருக்கின்ற தென்னலாம்.
உயிர் கலாய் பாலுண்டு = உயிரைப் பாலோடே கலந்து உண்கையாவது பாலுண்கிற பாவனையிலே உயிரை முடிப்பதாம்.
கலாய்-கலந்து. “களாய்” என்பர் அத்பாபகர். அவளுயிரை மாயத்தவனான எம்பெருமானை வாழ்த்துவதே நமக்கு மிடுக்கு என்றாவது,
மாய்த்தவனை வாழ்த்துகையிலே துணிவுகொள் என்றாவது; மாய்த்தவனை வலிதாக (நன்றாக) வாழ்த்து என்றாவது உரைக்கலாம்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -21-30–திவ்யார்த்த தீபிகை –

September 15, 2014

எம்பெருமானுடைய-உலகளந்த திருவடி-தானாகவே ஆழ்வார் திரு உள்ளத்திலே
வந்து சேர்ந்தன -என்று அருளிச் செய்கிறார்-
எதற்காக என்றால்-அங்கு வெந்நரகில் சென்று சேராமல் காப்பதற்காக –

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப-ஒருகாலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து-
எண் மதியும் கடந்து அண்டமீது போகி-இரு விசும்பினூடு போய் எழுந்து
மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை –
சிறியேனுடைச் சிந்தைக்குள்-எல்லா உலகும் அளந்த திருவடிகள் அடங்க போதுமான இடம் அன்றாகிலும்-
நெருக்குப் பட்டாலும் ஆழ்வார் திரு உள்ளத்துக்குள் இருந்திட வேண்டும் என்கிற சங்கல்பம் கொண்டு-வந்து நிற்கிறான் –
என்னுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவே இவ்வளவும் செய்து அருளினான் –

யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிர்யோ யஸ் த்வயா வினா-கூடி இருக்கை ஸ்வர்க்கம்
அவனை விட்டு பிரிந்து இருந்தால் நரகம் –
திருவடிகளை என்  நெஞ்சினுள் அமைத்தான்-என்னவுமாம்

சென்று அங்கு வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

பதவுரை

அன்று–முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு–அந்த மாவலியின் யாக பூமியிற் சென்று
பார் உருவும்–பூமியாகிற வஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும்–அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜலதத்துவமும்
கண் புதைய–மறையும்படி
கார் உருவன் தான் நிமிர்த்த கால்–காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள்
அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு–கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு
இன்று–இப்போது
இங்கு–இவ்விடத்தில்
என் நெஞ்சால்–என்னுடைய நெஞ்சிலே
இடுக்குண்ட–நெருக்குப் பட்டுக் கிடக்கின்றன.

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
அங்கு வெந்நரகில்-சென்று சேராமல்-காப்பதற்கு-என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு –

இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட
இப்போது-இவ்விடத்திலே-என்னெஞ்சிலே-நெருக்குப் பட்டு கிடக்கின்றன
அன்று விஸ்தார இடங்களிலே சுகமாக வளர்ந்து விளங்கின அத் திருவடிகள்
இன்று இவ்விடத்திலே இந்த சிறிய நெஞ்சினால் இடுக்கப் பட்டன –

அன்று-
முன்பு மகா பலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்குப்
அந்த மகாபலியின் யாக பூமியிலே சென்று
பாருருவும்
பூமியாகிற வஸ்துவும்
பார் வளைத்த நீருருவும்
அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற-ஜல வஸ்துவும்

கண் புதைய
மறையும்படி
காருருவன் தான் நிமிர்த்த கால்
காள மேகத் திருவுருவனான எம்பெருமான்-நிமிர்த்து அருளிய திருவடிகள்-

(சென்றங்கு வெந்நரகில்)
எம்பெருமானுடைய உலகளந்த சேவடியானது தானாகவே வந்து தம்முடைய திருவுள்ளத்தில் குடிகொண்ட தென்கிறார்.
அன்று அங்குப் பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண் புதையக் காருருவன் தான் நிமிர்த்த கால்
இன்று இங்கு என்னெஞ்சா லிடுக்குண்ட;
(ஏதுக்காக வென்னில்;) அங்கு வெந்நரகிற் சென்று சேராமல் காப்பதற்கு.
“ஒண்மிதியில் புனலுருவி யொருகால் நிற்ப ஒருகாலும் காமரு சீரவுணனுள்ளத் தென்மதியுங் கடந்து அண்டமீது போகி
இருவிசும்பினூடு போயெழுந்து, மேலைத் தண்மதியுங் கதிரவனுந் தவிர வோடித் தாரகையின் புறந்தடவியப்பால் மிக்கு,
மண்முழுது மகப்படுத்து நின்றவெந்தை” (திருநெடுந்தாண்டகம்-5) என்றபடி
ஸகல லோகங்களையும் ஆக்கிரமித்து நின்ற
திருவடிகள் இன்று என்னுடைய நெஞ்சினுள்ளே வந்து சேர்ந்து நெருக்குண்டிரா நின்றது.
எல்லா வுலகங்களையும் அளாவின திருவடிகள் எவ்வளவு பெரிதாயிருக்க வேண்டும்;
சிறியேனுடைச் சிந்தையானது அவை அடங்குவதற்குப் போதுமான இடமன்றாகிலும்
‘நெருக்குப் பட்டாகிலும் ஆழ்வார் நெஞ்சினுள்ளே இருந்திட வேண்டியது’ என்ற ஸங்கல்பத்தினால் அப்பெருமான் அப்பெரிய திருவடிகளை
இந்த நெஞ்சினுள் கஷ்டப்பட்டுப் புகுவித்து நிற்கின்றான்; இப்படி செய்தருளாவிடில் நான் நற்கதிபெற்று உஜ்ஜீவிக்க
வழியில்லை யாகையால் என்னுடைய உஜ்ஜீவநார்த்தமாகவே இவ்வளவு காரியம் செய்தான் என்கிறார்.

நரகு = நரகம் என்ற வடசொல் விகாரம். கும்பீபாகம், ரௌரவம் முதலிய கொடிய நரகங்களைக் கருதி வெந்நரகு என்கிறார்.
யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா”
(எம்பெருமானோடு கூடியிருக்கை ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருக்கை நரகம்) என்றபடி
நான் தன்னை விட்டுப் பிரிந்திருக்கக்கூடாதென்று திருவுள்ளம் பற்றித் தனது திருவடிகளை என்னெஞ்சினுள் அமைத்தான் என்னவுமாம்.

இன்று இங்கு என்னெஞ்சால் இடுக்குண்ட = விஸ்தாரமான இடங்களிலே அன்று ஸுகமாக வளர்ந்து விளங்கின அத்திருவடிகள்
இன்று இவ்விடத்திலே இந்தச் சிறிய நெஞ்சினால் இடுக்குப்பட்டன.
இடுக்குண்ட என்றது – இடுக்குண்டான என்றபடி; வினைமுற்று.
கால் என்பது பால்பகா அஃறிணைப் பெயராதலால் கால்கள் எனப் பொருள்படும்.

—————————————————————

(காலே பொதத் திரிந்து.)
எம்பெருமானுடைய திருவடிகள் தமது திருவுள்ளத்தில் வந்து சேர்ந்தனவாகக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்.
அவயவியான வ்யக்தியை விட்டு அவயவமான திருவடிகள் தனியே வந்து சேரமாட்டாவாகையால், எம்பெருமானே தமது திருவுள்ளத்தில்
வந்து சேர்ந்தமையைக் கூறினபடி யாய்த்து.
அதை இப்பாட்டில் “மாலார் குடி புகுந்தார் என் மனத்தே” என்று வ்யத்தமாக அருளிச் செய்து,
இன்று வரையில் என்னுடைய நெஞ்சினுள் துக்கங்களும் பாவங்களும் நித்யவாஸம் பண்ணிக் கொண்டு செங்கோல் செலுத்திக் கிடந்தன;
இப்போது ,இவற்றுக்கு இங்கு இடம் கிடையாமையாலே ‘எங்கே போய்க் குடியிருக்கலா’மென்று
அவை அலைந்து திரிந்து வருந்துகின்றன என்று அருளிச் செய்கிறார்.

காலே பொதத்திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-

பதவுரை

என் மனத்தே–எனது நெஞ்சினுள்ளே
மாலால் குடி புகுந்தார்–திருமால் வந்து சேர்ந்து விட்டார்;
வல் வினையார் தாம்–(இதுவரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.
வீற்றிருக்கும் இடம் காணாது–(இனிமேலும்) அதிகாரம் செலுத்திக்கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்
கால் பொத திரிந்து–கால் நோவத் திரிந்து அலைந்ததனால்
மேலால்–முன்பெல்லாம்
தருக்கும்–என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும்–பெருமையோடே
இளைத்து–வருத்தமுற்று
இன்நாள்–இப்போது
கத்துவாரம்–கத்திக் கொண்டு கிடக்கின்றன போலும்.

காலே பொதத்திரிந்து –
கால் நோவத் திரிந்து-அலைந்ததினால்-பொலிக பொலிக பொலிக -போயிற்று வல்லுயிர் சாபம்—
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று எங்கும் இருப்பதால்

கத்துவராம்-
கத்திக் கொண்டு கிடக்கின்றன போலும் –

இன நாள் –
இப்போது –
இந்நாள் -என்றும் பாட பேதம்

மாலார் குடி புகுந்தார்-
திருமால் வந்து சேர்ந்து விட்டார்
அடியவர்கள் இடம் வ்யாமோஹம் கொண்ட எம்பெருமான்-இன்று என் நெஞ்சிலே குடி புகுந்தார்-
இருள் மூடி கிடந்த இடத்திலே பிரகாசம் வந்து சேர்ந்தால் போலே –

என் மனத்தே –

-மேலால் –
முன்பு எல்லாம்-இனி மேல்- இதற்கு முன்பு -இரண்டும் பொருள் உண்டே
இது வரையில் நெருக்கிக் கொண்டு இருந்த இவை-இப்படியே இருக்க இடம் கிடைக்காமல்-
இனிமேல் ஹிம்சித்துக் கொண்டு இடம் காணாமல் -என்றபடி –

தருக்கும்-
என்னைத் துன்பம் படுத்திக் கொண்டு இருந்த –

இடம் -பாட்டினொடும்-பெருமையோடு –
இடம்பாடு -பெருமை –

வல்வினையார் தாம் –
இது வரையில் இங்கே குடியிருந்த கொடிய பாபங்கள் –

வீற்று இருக்குமிடம் காணாது –
இனி மேலும் அதிகாரம் செலுத்திக் கொண்டு-தங்கி இருக்க இடம் காணாமல் –
வீற்று இருத்தல் வீறு தோற்ற இருத்தல்-விழுந்து கிடக்க இடம் இல்லாமல் என்பதை மாற்றி அருளுகிறார்

இளைத்து –
வருத்தமுற்று –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற -என்பதால்-
அவற்றுக்கு இடம் கிட்டாதே-என் செய்வோம் என்று கத்துகின்றன –
சீற்றமும் இழிவும் தோற்ற வல் வினையார் -உயர் திணையாக
துஷ்டர்களைக் கண்டால் ஸ்வாமி எழுந்து அருளினார் என்னுமா போலே –

என் மனத்தே மாலார் குடிபுகுந்தார் = அடியவர்களிடத்திலே மிக்க மோஹங் கொண்டிருக்கின்ற எம்பெருமான் இன்று
என்னுடைய நெஞ்சினுள்ளே குடி புகுந்து விட்டார்; இருள் மூடிக்கிடந்தவிடத்தில் ப்ரகாசம் வந்து சேர்ந்தால் பிறகு இருள் தன்னடையே
விலகிப் போய் விடுவது போல், இதுவரையில் இங்கே குடியிருந்த பாவங்கள் இனி இவ்விடத்தில் தங்க மாட்டாமல் கிளம்பிப் போய் ‘
இனி நாம் எங்கே சுகமாக வாழலாம்’ என்று இடந்தேடுகின்றன.
“ஊரும் நாடு முலகமும் தன்னைப்போல், அவனுடைய பேருந் தார்களுமே பிதற்ற” (திருவாய்மொழி – 6, 7, 2) என்றபடி
நான் வாழ்கிற வூரிலே எல்லாரும் என்னைப் போலவே யிருப்பர்களாதலால் அவை குடி புகுவதற்கு எங்கே இடம் கிடைக்கும்?
கால் பாவி நிற்க எங்கும் இடங்கிடைக்காமையினால் பரிச்ரமப்பட்டுத் திரிந்து அலைந்து பார்த்தன. எங்கும் இடம் வாய்க்கவில்லை;
“ஐயோ! இதுவரையில் ஆழ்வாருடைய நெஞ்சில் செங்கோல் செலுத்திக் கொண்டு வாழ்ந்த வெமக்கு இன்று இக்கதி நேர்ந்து விட்டதே!
என் செய்வோம்!” என்று கத்துகின்றன.

“வல்வினையார் தாம் மேலால் தருக்குமிடம் பாட்டினொடும் வீற்றிருக்குமிடம் காணாது
காலே பொதத் திரிந்து இளைத்துக் கத்துவர்” என்று அந்வயித்துக் கொள்க.

அசேதநங்களான வல் லினைகளை வல் வினையார் தாம் என்று சிறப்பித்துக் கூறுவது ஏன்; என்னில்;
“உவப்பினுமயிர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்பினும் பால் திணை விழுக்கினுமியல்வே” என்பர் நன்னூலார்;
இழிவு தோற்றச் சொல்ல வேண்டும் போதும் சீற்றந்தோற்றச் சொல்ல வேண்டும்போதும் பால் திணைகளை மாறாடிச் சொல்லலாம்
என்றிருப்பதனால், சீற்றமும் இழிவும் தோற்ற இங்கு வினையார் என உயர் திணையாகக் கூறுகின்றாரென்க.
துஷ்டர்களைக் கண்டால் ‘ஸ்வாமி எழுந்தருளுகிறார்” என்று சொல்லுவதுண்டிறே, அதுபோலக் கொள்க.

மேலால் தருக்குமிடம் பாட்டினொடும் வீற்றிருக்குமிடம் காணாது =
மேலால் என்பதற்கு. இனிமேல் என்றும், இதற்கு முன்பு என்றும் பொருள் கொள்ளலாம்.
இதுவரையிலும் என்னை நெருக்கிக் கொண்டு பெருமதிப்போடு எழுந்தருளியிருந்த இந்த வல்வினையார்கள் இப்படியே இன்னமும்
எழுந்தருளியிருக்க இடம் காணாமல் என்றபடி,
இனிமேல் பிறரை ஹிம்ஸித்துக் கொண்டு வைபவமாகக் குடியிருப்பதற்கு உரிய இடம் காணாமல் என்றுமாம்.
இடம்பாடு- பெருமை.

வீற்றிருக்குமிடம் = வீற்றிருத்தலாவது வீறு தோற்ற இருந்தால்; வீறு- பெருமை. தனது பெருமைக்குக் குறையில்லாமல்
மேனாணிப்போடே யிருத்தல் வீற்றிருத்தலெனப்படும்.
‘தாங்கள் விழுந்துகிடக்க இடம் கிடைக்காமல்’ என்று
இழிவாகச் சொல்ல வேண்டியதை இப்படி மாற்றி யருளிச் செய்தாரென்க.

எப்படியாவது ஓரிடத்தில் குடியிருந்து தீர வேண்டியவர்கள் ஓரிடத்தில் இடம் கிடைக்காவிடினும் மற்றுமெங்கேயாவது கிடைக்குமோவென்று
பலவிடங்களிலும் திரிந்தலைந்து தடுமாறிப் பார்ப்பது போல இப்பாவங்களும் கால் நோவப் பலவிடங்களிலும் திரிந்து பார்த்தனவென்கிறார்.
காலே போதத் திரிந்து என்பதனால், அப்படி திரிந்து பார்த்தும்,
“பொலிக பொலிக பொலிக! போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியுங்கெடுங் கண்டு கொண்மின்
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல், மலியப் புருந்திசை பாடி பாடி யுழிதரக் கண்டோம்.” (திருவாய்மொழி, 5-2-1) என்னும்படியான
இந்நிலத்திலே கால் பாவுவதற்கு எங்கும் இடம் நேராமையாலே,
கத்துவராம் = ‘ஐயோ! எங்கள் குடியிருப்புப் போயிற்றே!’ என்று வாய்விட்டுக் கதறுகின்றனவாம்.

இன்று எம்பெருமான் என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே எழுந்தருளினமையால் என்னைப் பற்றிக் கிடந்த பாவங்களெல்லாம்
பறந்து போயின என்று சொல்ல வேண்டியதை இங்ஙனே ஒரு சமத்காரமாக விரிந்துரைத்தாரெனக் கொள்க.

“இனநாள்” என்றும் “இந்நாள்” என்றும் பாட பேதங்களுண்டு; பொருள் ஒன்றே .

————————————————————

(இளைப்பாயிருப்பாய்.)
எம்பெருமான் சில ஸமயங்களில் தனது பொருளைப் பிரகாசப்படுத்துவான்;
சில ஸமயங்களில் உதாஸீநஸாப்போலே உபேக்ஷையாயிருந்திடுவன்.
அவன் எப்படி யிருந்தாலும் நம்முடைய அத்யவஸாயம் மாத்திரம் மாறக் கூடாது;
அவன் நம்மை ரக்ஷிக்கும் போதோடு ரக்ஷியாத போதோடு வாசியற அவனையே நாம் ஸகல வித பந்துவுமாகக் கருதி
விச்வஸித்திருக்க வேணும்- என்கிற சாஸ்த்ரார்த்தத்தைத் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிற முகத்தாலே
அஸ்மதாதிகளுக்குத் தெரிவிக்கிறார் இதில்.

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல் காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
நமன் தமர்கள்–யமபடர்கள்
இளைக்க பற்றி–பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த–அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய்தந்து மோதாமல்–நாய்களை ஏவி நலியாமற்படி
நல்குவான் நல்காப்பான்–(எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யாவிட்டாலும் சரி;
தான்–அந்த எம்பெருமான்தான்
எவ்வுயிர்க்கும்–எல்லாப் பிராணிகளுக்கும்
தாய் தந்தை–தாயும் தமப்பனுமாவன்;
சொன்னேன்–(இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்;
இளைப்பாய் இளைப்பாய்–இனி நீ அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு.

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே-
ஒ மனமே-இனி நீ அனர்த்தப் பட்டாலும் படு-சுகப்பட்டாலும் படு –
இந்த அத்யாவசாயம் குலையாது இருந்தால் நீ தளராமல் இருக்கலாம்-
குலைந்தால் தளர்வடைவாய்-உள்ள விஷயம் உனக்கு சொல்லி விட்டேன்
இனி நீ தளர்ந்தாலும் தளர்-தளராமல் ஒழிந்தாலும் ஒழி-என்கிறார் –

சொன்னேன் –
இந்த உண்மையை உனக்குச் சொல்லி விட்டேன் –

இளைக்க நமன் தமர்கள் பற்றி –
நமன் தமர்கள் இளைக்கப் பற்றி-யம படர்கள்-பிடிக்கும் பிடியிலே நாம் துடிக்கும் பற்றி
நம்மை பிடித்து –
காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –

இளைப்பெய்த –
அதுக்கு மேலும் அதிகமாக துடிக்கும் படி –

நாய் தந்து மோதாமல்-
நாய்களை ஏவி நலியாமற்படி –

நல்குவான் நல்காப்பான் –
எம்பெருமான் நமக்கு அருள் செய்தாலும் சரி-அருள் செய்யா விட்டாலும் சரி
நல்குதல் -அருள் புரிதல்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
என்று இருப்பதே நமக்கு ஸ்வ ரூபம் –என்கிறார்

தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான்
அந்த எம்பெருமான் தான்-எல்லா பிராணிகளுக்கும்-தாயும் தகப்பனும்  ஆவான் –
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-

நமன் தமர்கள் இளைக்கப் பற்றி, இளைப்பு எய்த நாய் தந்து மோதாமல் (எம்பெருமான்) நல்குவான் நல்காப்பான்;
தானே எவ்வுயிர்க்கும் தாய் தந்தை; (இதை) நெஞ்சமே! (உனக்குச்) சொன்னேன்; (இனி) இளைப்பாய் இளைப்பாய்.

*“காவலிற் புலனை வைத்துக் கலி தன்னைக் கடத்தப் பாய்ந்து நாவவிட்டுழி தருகின்றோம் நமன்றமர் தலைகள்மீதே” (திருமாலை 1)
என்றபடி யமகிங்கரர்களை நாம் தகர்க்கும் படியும் அவர்களால் நமக்கு எள்ளளவு துன்பமும் நேரிடாதபடியும் எம்பெருமான் நம்மைக் காத்தருள்பவன்.
அப்படி அவன் நம்மைக் காத்தருளாவிடினும் அவனிடத்தில் நம்முடைய ப்ரதிபத்தி குலையக்கூடாது;
*சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரேயினி யாவாரே” (திருவாய்மொழி 5-1-8) என்றபடி
அவனையே நாம் ஸகலவித பந்துவுமாக விச்வஹித்திருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அவன் நம்மை ரக்ஷிக்கும்போதுதான் அவனிடத்தில் நாம் ப்ரதிபத்தி வைக்க வேண்டியது, உபேக்ஷித்த காலத்தில் நாமும் அவனை
உபேக்ஷித்து விட வேண்டியது என்று ஒருகாலும் கருத வொண்ணாது.
நெஞ்சமே! இவ்விஷயம் எல்லார்க்கும் எளிதில் தெரிய மாட்டாது; ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை அன்பினால் உனக்குக் காதுபடச் சொன்னேன்;
இந்த என் வார்த்தையை நீ உறுதியாகக் கடைப்பிடித்திருப்பாயாகில் உனக்கு ஒருபோதும் இளைப்பு நேரிடாது;
இந்த வார்த்தையை நீ அலக்ஷியம் செய்து விச்வாஸம் குலைய நின்றாயாகில் உனக்கு மிக்க இளைப்பு நேரிடும்.
உண்மை இது; இனி நீ உன் கருத்தின்படி ஒழுகலாம் என்றாயிற்று..

யமபடர்கள் நம்மை வந்து பிடிக்கும்போதே நமக்கு மிக்க க்லேசம் உண்டாகும்படி பிடிப்பார்களாதலால் “நமன்றமர்கள் இளைக்கப்பற்றி” என்றார்.
அவர்கள் நம்மைப் பிடித்துக்கொண்டு போய், செந்நாய் கருநாய் வெறிநாய் முதலியவற்றை ஏவி நம்மை அளவற்ற க்லேசத்துக்கு
ஆளாக்குவர்களாதலால் “இளைப்பெய்த நாய் தந்து மோதாமல்” என்றார்.

நல்குவான் நல்காப்பான் = நல்குதலாவது அருள் புரிதல்; அருள் செய்தாலும் செய்வன். அருள் செய்யாவிடினும் செய்யா தொழிவன் என்றபடி.
அவன் எது செய்தாலும் ‘களைவாய் துன்பங் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” (திருவாய்மொழி, 5-8-8) என்றிருப்பதே
நமக்கு ஸ்வரூபம் என்கிறார் ஈற்றடியால்.

இளைப்பாய் இளையாப்பாய் = எக்காலத்திலும் அவனே எவ்வுயிர்க்கும் தாய் தந்தை’ என்கிற அத்யவஸாயம் குலையாதிருந்தால்
நீ தளர்வடையாமலிருக்கலாம்; அந்த அந்யவஸாயம் குலைந்தால் தளர்வடையாய்;
உள்ள விஷயத்தை உனக்கு நான் சொல்லி விட்டேனாகையால் இனி நீ தளர்ந்தாலும் தளர், தளராதொழிந்தாலும் ஒழி என்கிறார்.

——————————————————–

(தானே தனித்தோன்றல்.)
“தாய் தந்தை யெவ்வுயிர்க்குத் தான்” என்றார் கீழ்ப்பாட்டில்.
அப்படி சொல்லிவிடலாமோ? மற்றும் பல தேவதைகளும் ரக்ஷகராயிருக்கலாமேயென்று நெஞ்சு நினைக்க,
அதைக் கண்டித்து, எம்பெருமானை ரக்ஷகன் என்பதை நன்கு நிலை நாட்டிப் பேசுகிறாரிதில்.

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

பதவுரை

தானே தனி தோன்றல்–அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்;
தானே தன் அனப்பு ஒன்று இல்லாதான்–அவனே ஒப்பற்றவன்;
இளைக்கில்–(ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில்
பார்–இவ்வுலகமானது
கீழ்மேல் ஆம்–தலைகீழாக விபரீதமாய்வீடும்;
பிறர் தானே கட்கும் தற்றேன்றல்–அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்;
(தானே)–இப்படிப்பட்ட எம்பெருமான்றானே
மீண்டு அமைப்பான் ஆனால்–(தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப்புகுந்ததால்
பாரின் மேல் ஆர் அளக்கிற்பார்–இப்பூமியில் ஆர்தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிடவுரியர்?

தானே தனித் தோன்றல்
அவ் வெம்பெருமான் ஒருவனே-புருஷோத்தமன் –
தோன்றல்
ஆண் மகன் -அரசன் -பெருமையில் சிறந்தவன் -வெளிப்படுவதற்கும் பெயர்
கருமத்தால் அன்று ஸுய இச்சையால்
அஜாயமானோ பஹுதா விஜாயதே தஸ்ய தீர பரிஜாநந்தி யோநிம்
நிர்ஹேதுக கிருபையாலே அவதரித்து அருளுபவன்
அன்றிக்கே
தானே தனித் தோன்றல்
விருப்பம் இருந்தால் மட்டும் சேவை சாதிப்பவன்

தன் அளப்பு ஓன்று இல்லாதான்
அவனே ஒப்பற்றவன் –
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பிலா என்னப்பா என்கின்றாளால்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -உலகம் முழுவதும் இவன் ஒருவனாலே என்னும் பொழுது யார் ஒப்பார் உளர்

தானே பிறர்கட்கும் தற்தோற்றல் –
அவனே மற்று எல்லா பொருள்களிலும்-வியாபித்து இருப்பவன் –
அந்தர்யாமியாய் இருந்து சத்தையை நோக்குபவன்
கருதரிய யுயிருக்கு யுயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம்

தானே –
இப்படிப் பட்ட-எம்பெருமான் தானே –

இளைக்கில்-
ரஷிக்கும் தொழிலில் சளைத்து நிற்கும் பஷத்தில்

பார் கீழ் மேலாம் –
இவ்வுலகம் தலை கீழாய்-விபரீதமாகி விடும் –

மீண்டு அமைப்பான் ஆனால்-
இப்படி தலை கீழான அவற்றை-சரிப்படுத்த புகுந்தால்-அமைத்தல் ஒழுங்கு பட நியமித்தல்
ஈண்டு -இவ்வண்ணம்-இவ்வுடன் –சீக்கிரம் என்றுமாம்
மோனைக்கு சேரும்-பொருள் சுவை கருதி மீண்டு -பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார்

அளக்கிற்பார் பாரின் மேலார்
இந்த பூமியில் யார் தான்-அவனுடைய ரஷகத்வத்தை-அளவிட வுரியர் –
அவனுடைய ரஷண சாமர்த்தியமே அளவிட ஒருவராலும் இயலாத பொழுது
வேறு ரஷகர் இல்லை எனபது சொல்லவும் வேணுமோ –

தானே தனித் தோன்றல் என்பதற்குப் பலவகையாகப் பொருள் கொள்ளலாம்;
தோன்றல் என்று ஆண்
மகனையும் அரசனையும் பெருமையிற் சிறந்தவனையும் சொல்லும்; அவ்வெம்பெருமானொருவனை புருஷோத்தமன்;
அவனே உலகங்கட்கெல்லாம் இறைவன்; அவனே பெருமையிற் சிறந்தவன். இனி, தோன்றல் என்று வெளிப்படுதலுக்கும் பேராகையாலே,
அவன் மற்றவர்களைப்போலே கருமங்களால் பிற்பவனல்லன்; தன்னருளால் தானே தோன்றுதலையுடையவன் என்று முரைக்கலாம்.
அஜாயமாநோ பஹுநா விஜாயதே; தஸ்ய தீரா பரிஜாநந்தியோநிம்” என்று வேதம் கூறும். இதன் பொருள்:-
எம்பெருமான் பிறப்பு இல்லாதவனாயினும் பல பிறவிகள் பிறக்கிறான்; அப்படி அவன் பிறப்பதற்குக் காரணம் இன்னதென்பதை
ஞானிகள் அறிவர் என்பதாம்.

இனி, தானே தனிந்தோன்றல் என்பதற்கு எம்பெருமான் தன்னுடைய விருப்பமிருந்தால் மாத்திரம்
பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பவனே யொழிய,
வேறொரு காரணங் கொண்டு ஸேவை ஸாதிப்பவனல்லன் என்பதாகவுங் கருத்துரைக்கலாம்.

தன் அளப்பு ஒன்றில்லாததான் = தனக்கு வேறொருவரையும் ஒப்பாக உடைத்தாகாதவன்.
“ஒருவரையொருவர் நின்னொரப்பாரொப்பிலாவென்னப்பா வென்கின்றளால்” (பெரிய திருமொழி, 8-1-2) என்றது காண்க.
உலக முழுவதும் இவனாலே படைக்கப்பட்டு இவனாலே காக்கப்பட்டு இவனாலே அழிக்கப்படுதலால்,
இவனோடு உபமானமாகப் போருவதற்கு யாருளர்?

தானே பிறர்கட்கும் தற்றோன்றல் = எந்த வஸ்துவிலும் அவன் அநுப்ரவேசித்திருப்பவன்; அவனில்லாமல் ஒரு துரும்பும் எழுந்தாடாதாகையால்
எல்லாப் பொருட்கட்கும் தான் அந்தர்யாமியாயிருந்து அவற்றின் ஸத்தையை நோக்குமவன் என்கை.
கருதரிய யுயிர்க்குயிராய்க் கரந்தெங்கம் பரந்துறையுமொரு தனி நாயகம்” (திருவரங்கக கலம்பகம், 1) என்றபடி.

தானே இளைக்கில் பார்கீஅமேலாம் = இப்படி தனி நாயகனாய் நின்ற எம்பெருமான் தான் ரக்ஷிக்குந் தொழிலில் சோம்பிக் கைவாங்கி
நிற்பனாகில் இவ்வுலகம் முழுவதும் அநாதமாய்த் தலைகீழாக விகாரப்பட்டுவிடும்.
அமைப்பானானால் பாரின்மேல் அளக்கிற்பார் ஆர் = அவரவர்களை அந்தந்த நிலைமைகளிலே நிறுத்திக் காப்பாற்றுதல்.
இது செய்வதற்கு எம்பெருமானே சக்தன்; அவன் இப்படி நியமித்து ரக்ஷிக்குமாகில் அந்த ரக்ஷகத்வத்தை
எல்லை காணக் கூடியவர்கள் இவ்வுலகில் அருளர்? அவனுடைய ரக்ஷண ஸாமர்த்தியம் இப்படிப்பட்டதென்று பரிச்சேதித்தறிவதற்கே
இங்கு ஆளில்லை யென்னும் போது, வேறு ரக்ஷகரில்லையென்பது சொல்லவும் வேணுமோ? என்று கருத்து.

மூன்றாமடியில் “பார் கீஅ மேலாமீண்டமைப்பானானால்” என்றவிடத்து, மீண்டு எனப் பிரிப்பதிற்காட்டிலும் ஈண்டு எனப்பிரித்தல்
மோனையின்பத்திற்குச் சேர்ந்திருக்கும். ஈண்டு – இவ்வண்ணம், இவ்விடம், சீக்கிரம்,
மீண்டு என்று பிரித்தலின் பொருட்
சுவையிருப்பதுகொண்டு பெரியவாச்சான்பிள்ளை மீண்டெனப் பிரித்தெடுத்துரைத்தருளினர்
பார் கீழ்மேலான நிலைமையின் நின்றும் மீட்டு அமைப்பானாகில் என்கை…

————————————————————-

(ஆரானுமாதானுஞ் செய்ய.)
கீழ்ப்பாட்டில் விரித்துரைத்தபடி எம்பெருமானே ஸர்வ ரக்ஷகனாயிருக்கவும்
இதனைப் பலர் தெரிந்து கொள்ளாமல் புறந்தொழுகின்றபடியைக் கண்ட ஆழ்வார்,
இவ் வுண்மைப் பொருளைப் பலர்க்கும் உபதேசித்துத் திருத்துவோம் என்று முயன்றார்;
“கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே” (திருமாலை 11) என்றபடி ஜாயமாந கடாக்ஷமில்லாதார் பலருளராகையால்
அவர்கள் திருந்தி வரக் கண்டிலர்;
“சொன்னால் விரோதமிது ஆகிலுஞ் சொல்லுவன் கேண்மினோ” (திருவாய்மொழி 3-9-1) என்று நாம் கெஞ்சிக் கெஞ்சி
உபதேசித்தவிடத்திலும் பாழும் ஸம்ஸாரிகள் திருந்தாவிடில் நாம் என் செய்வோம்? யானைக்குக் கோமணங்கட்ட யாரால் முடியும்?
அளவில்லாமல் பரந்து கிடக்கிற இவ்வுலகத்திலுள்ளா ரெல்லாரையும் திருத்துவதென்றால் இது நம்மாலாகக்கூடிய காரியமோ?
நம்மாலானது நாம் நன்மை சொல்லலாம்; ஆனவளவு சொல்லிப் பார்த்தோம்;
பாக்கியமுள்ளவர்கள் திருந்துவார்கள்; கர்பதுர்ப்பாக்யசாலிகள் இழப்பர்கள்;
யார் எப்படி வேணுமானாலும் செய்யட்டும் என்று முன்னடிகளில்,
ஸம்ஸாரிகள்மேல் வெறுப்புத் தோற்ற அருளிச் செய்கிறார்.

இந்த இருள் தருமாஞாலத்திலே இவர்களைப் போல் தான் கெட்டுப் போகாமல்
எம்பெருமானை யடி பணிந்து வாழப்பெற்றேனென்று தம்முடைய நிலைமைக்குத் தாம் உகக்கிறார் பின்னடிகளில்
வழிப் போக்கர்களின் கைப்பொருள்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுங்கள்வர் நிறைந்த காட்டிலே மற்றெல்லாரும் பறிகொடுத்து நிற்க,
ஒன்றும் பறிகொடாமல் தப்பிப்போன வொருவன் “தெய்வாவாதீனமாய் நாம் தப்பப் பெற்றோமே!” என்று உகப்பதுபோல,
ஆழ்வாரும், எல்லாரையும் மதி கெடுக்கின்ற இவ்விருள் தருமாஞாலத்திலே
முந்துற முன்னம் நாம் தப்பிப் பிழைக்கப் பெற்றோமே’ என்று உகக்கிறாராய்ந்து.

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-

பதவுரை

ஆரானும் ஆதானும் செய்ய–யாராவது எதையாவதுசெய்து கொள்ளட்டும்;
அகல் இடத்தை ஆராய்ந்து–விசாலமான இப்பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே—அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ?
யான்–நானோவென்றால்
சீர் ஆர் மனத்தலை–(எனது) சிந்த மனத்திலுள்ள
வன் துன்பத்தை–வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால்–நித்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ணபிரானால்
மாற்றினேன்–நீக்கிக்கொண்டேன்.

ஆரானும் ஆதானும் செய்ய –
யாராவது–எதையாவது செய்து கொள்ளட்டும் –
கற்றவர்கள் உடன் கல்லாதவர்கள் உடன் வாசி அற-தேவதாந்தர பஜனம் என்ன-
உபாயாந்தரங்களை அனுஷ்டிப்பார் என்ன
பிரயோஜனாந்தரங்களை நச்சுவார் என்ன -எக்கேடு கெட்டாலும் கெடட்டும் என்று
வெறுக்கும் தந்தை போலே அருளிச் செய்கிறார்-

அகலிடத்தை ஆராய்ந்து –
விசாலமான இப் பூமியை ஆராய்ந்து

அது திருத்தல் ஆவதே –
அவர் அவர்கள் கார்யங்களை திருத்தல் நம்மால் ஆகுமோ –

சீரார் மனத்தலை –
எனது சிறந்த மனத்தில் உள்ள -திருந்தப் பெற்ற மனம் ஆதாலால் சீரார் மனம் –என்கிறார்

வன் துன்பத்தை –
வலிய துன்பங்களை –

மாற்றினேன் –
நீக்கிக் கொண்டேன் –

வானோர் இனத் தலைவன் கண்ணனால்-
நித்ய ஸூரிகள் திரளுக்கு தலைவனான-கண்ணபிரானால் –

யான் –
யானோ என்றால் -துன்பங்களுக்கு நிலமான இந்த விபூதியிலே-
யான் ஒருவன் ஆகிலும் இன்பம் பெற நேர்ந்ததே என்று-ஆனந்திக்கிறார் –
வானோர் இனத் தலைவன் -பரத்வம்
கண்ணபிரான் -சௌலப்யம் –

ஆரானும் ஆதானும் செய்ய = கற்றுணர்ந்தவர்களோடு கல்லாதவர்களோடு வாசியற எல்லாருமே இந் நிலத்தில் கலங்குவார்களாதவால்
ஆரானும் என்கிறார். தேவதாந்தரபாஜநம் பண்ணுவார் சிலர், உபாயாந்தரங்களை அநுஷ்டிப்பார் சிலர்.
ப்ரயோஜநாந்தரங்களை நச்சுவார் சிலர் என்றிப்படி தப்புச் செய்கைகள் பல இருப்பதால் ஆதானும் என்கிறார்.

ஸம்ஸாரிகளையெல்லாம் திருத்துவதற்கென்றே திருவவதரித்த ஆழ்வார் தாமும் “அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே!” என்று
திருவுள்ளம் வெறுத்துச் சொல்லும்படி யாய்த்து ஸம்ஸாரிகளின் பொல்லாங்கு.
வழி தப்பி நடக்கும் பிள்ளையின் பக்கல், பெற்ற தகப்பனும் சில ஸமயங்களில் மனம் வெறுத்து
“அது எக்கேடு கெட்டாலும் கெடட்டும்” என்று சொல்லிக் கைவாங்கியிருப்பதுண்டிறே.

மனத்தலை என்றவிடத்து, தலை- எழனுருபு; மனத்திலே என்றபடி.
தம்முடைய நெஞ்சு திருந்தப்பெற்ற ஸந்தோஷத்தினால் “சீரார் மன” மென்கிறார்.
“வானொரினத்தலைவன்” என்று பரத்வமும் “கண்ணனால்” என்று ஸௌலப்யமும் சொல்லிற்று.

நித்யஸூரிகளுக்கு நிர்வாஹனாயிருக்கையாகிற மேன்மையைப் பாராமல்
இடக்கை வலக்கை யறியாத இடையர்களுக்குள்ளே
ஒருவனாக வந்து பிறந்து காட்டியருளின ஸௌலப்யகுணத்திலே நான் ஈடுபட்டு
என்னுடைய மனத் துன்பங்களை யெல்லாம் போக்கிக் கொண்டேன்;
துன்பங்களுக்கே நிலமான இவ்விபூதியில் நானோருவனாகிலும் இன்பம் பெற நேர்ந்ததே யென்று ஆநந்திக்கின்றேனென்றாராயிற்று.

—————————————————————

(யானுமென்னெஞ்சும்.)
கீழ்ப் பாட்டில் “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று துன்பங்களைத் தாம் போக்கிக் கொண்டதாக அருளிச் செய்தார்;
ஆராய்ந்து பார்த்தவாறே, “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று சொன்னது அவ்வளவு பொருத்தமான தல்ல வென்றும்
தமக்குக் கர்த்ருத்வம் தோன்றாமல் எம்பெருமானுடைய திருவருளுக்கே கர்த்ருத்வம் தோன்றும்படி
ஸ்வரூபாநுரூபமாகப் பாசுரத்தைச் சிறிது மாறுபடுத்திச் சொல்ல வேணுமென்றும் திருவுள்ளமுண்டாகி,
கீழ்ப்பாட்டின் பின்னடிகளிற் கூறிய அர்த்தத்தையே ப்ரக்ரியா பேதத்தாலும் சப்த பேதத்தாலும் அருளிச் செய்கிறார்.

யானும் என்நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

பதவுரை

ஓர் இருள் தான் அன்ன மாமேனி–இருள்தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய
எம் இறையார்–எம்பெருமான்
தந்த–அளித்த
அருள் என்னும் தண்டால்–க்ருபையாகிற ஒரு தடியினாலே
வல்வினையை–கொடிய பாவங்களை
அடித்து–புடைத்து,
கானும் மலையும் புக–(அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக
கடிவான்–தூரத்துவதற்கு
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்–நானும் என் மலாமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் –
நானும்-என் மனமும் ஆகிற-இருவருமே இசைந்து நின்றோம் –
உடன் பட்டு இருந்ததே கர்த்தவ்யம்
-வேறு ஒன்றும் இல்லை –

வல் வினையைக் -கானும் மலையும் புகக் –
அவை காடுகளிலும் மலைகளிலும் சென்று-புகும்படி –
உருத் தெரியாத அதருஷ்ட ரூபமான வஸ்து-எம்பெருமான் உடைய நிக்ரஹம்
ஒழிந்தமை சமத்காரமாக கவிகள் பேசுவர்-
பெரியாழ்வார் நெய்க்குடத்தை பற்றி -திரு மொழியில்
இங்கனம் பன்னி உறைத்து அருளிச் செய்கிறார்

கடிவான் –
துரத்துவதர்க்காக –

தானோர் -இருளன்ன மா மேனி –
இருள் தானே வடிவு கொண்டால் போலே-இருக்கிற விலஷணமான-திருமேனியை உடைய -கண்டவர்கள்
நெஞ்சை குளிரச் செய்ய வல்ல-ஸ்ரமஹரமான திரு மேனி

எம்மிறையார் –
எம்பெருமான் –

தந்த அருள் என்னும் தண்டால்-
கிருபையாகிற தடியினாலே –
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி எறிந்தேன்
-திரு மங்கை ஆழ்வார்

அடித்து –
புடைத்து –

அவன் அனுக்ரஹிக்க மேல் விழுந்த பொழுது இறாய்த்து பின் வாங்காமல்
அனுமதி பண்ணி இருந்தேன்
-என்கை –

ஓரிருளன்னமா மேனி யெம்மிறையா தான் தந்த அருளென்னுந் தண்டால் வல்வினையை அடித்துக்
கானும் மலையும் புகக் கடிவான் யானும் என்னெஞ்சு மிசைந்தொழிந்தோம்- என்று அந்வயம்.

எம்பெருமான் தனது நிர்ஹேதுக கருணையினால் என் பாவங்களைத் தொலைக்கத் தொடங்கின போது
அடியேனும் அடியேனுடைய நெஞ்சும் அக் காரியத்திற்கு உடன்பட்டிருந்தோமத்தனை;
நான் செய்த காரியம் வேறொன்றுமில்லை என்கிறார்.

இருளன்னமாமேனி என்றது-
கண்டவர்கள் நெஞ்சைக் குளிரச் செய்ய வல்ல ச்ரமஹரமான திருமேனி யென்றபடி.
அப்படிப் பட்ட தனது திருமேனியைக் காட்டின போதே பாவங்கள் அஞ்சி ஓடத் தொடங்கின போலும்.
உலகத்தில் ஒருவனை அடித்துத் துரத்த வேண்டில் கொம்பு தடி முதலியன இன்றியமையாதனவாதலால்,
இவ்விடத்தில் பாவங்களைத் துரத்தித் தள்ளுவதற்கு எம் பெருமானுடைய திருவருளாகிற தடி ஸாதனமாயிற்றென்றார்.
“நீ பணித்தவருளென்னு மொள்வாளுருவி யெறிந்தேன்” (பெரிய திருமொழி, 6-2-4) என்ற திருமங்கையாழ்வா ரருளிச்செயல் இங்கு ஸம்மரிக்கத்தகும்.

“வல்வினையைக் காணும் மலையும் புகக் கடிவான்” என்றவிடத்து ஒரு ஆக்ஷேபம் தோன்றும்;
வல் வினையென்பது உருத்தெரியக் கூடிய ஒரு வஸ்து வல்லவே; எம்பெருமானுடைய அநுக்ரஹமே புண்யமென்றும்,
அவனுடைய நிக்ரஹமே பாபமென்றுமன்றோ சொல்லப்படுகிறது.
ஆகவே பாபமென்பது உருத் தெரியாத அத்ருஷ்ட ரூபமான ஒரு வஸ்துவென்று தேறுகிறது. இப்படிப்பட்ட பாபத்தைத் தண் டாலடித்துக்
காடுகளிலும் மலைகளிலும் ஓடிப்போய் விடும்படி துரத்துவதென்பது பொருந்தாத பேச்சாயிருக்கின்றதே! என்று சங்கிக்கக்கூடும்.
எம்பெருமானுடைய நிக்ரஹம் ஒழிந்து விட்டது என்று சொல்ல வேண்டியதை இப்படி சமத்காரமாகப் பேசுவார்கள். கவிகள் என்று தெளிக.
பெரியாழ்வாரும் “நெய்க்குடத்தைப்பற்றி” என்கிற திருமொழியிலே இங்ஙனம் பன்னி யுரைத்தா ரென்றுணர்க.

“யானும் என்னெஞ்சுமிசைத் தொழிந்தோம் =
அவன் அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றி மேல்விழுந்து வந்தபோது நான்
இறாய்த்துப் பின்வாங்காமல் அவனுடைய அநுக்ரஹத்துக்கு அநுமதி பண்ணியிருந்தேனென்கை.

—————————————————————-

(அடியால் படிகடந்த.)
கீழ்ப்பாட்டில் “யானுமென் னெஞ்சு மிசைந்தொழிந்தோம்” என்று ஆழ்வார் பேசின பாசுரத்தைத்
திருச் செவி சாத்தின எம்பெருமான் “இவ் விபூதியிலே இப்படிப்பட்ட வார்த்தை சொல்லுவாருமுண்டாவதே!;
த்வம் மே என்றால் அஹம் மே என்கிற இந் நிலத்திலே “யானுமென்னஞ்சுமிசைந்தொழிந்தோம்” என்று
அழகாக ஒரு பாசுரம் செவிப்படுவது அற்புதமே!” என்று கொண்டு பரமாநந்தப்பட்டான்!
அதனை ஞானக் கண்ணாலே கண்டறிந்த ஆழ்வார், எம்பெருமானே! இப்போது உனது திருவுள்ளத்தில் ஓடுகிற ஆநந்தம் பண்டு
உலகளந்த காலத்து உண்டான ஆநந்தத்தோடு ஒக்குமோ? அன்றி அவ் வானந்தத்தினும் மேற்பட்டதோ? என வினவுகின்றார் போலும்.

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

பதவுரை

நெடியாய்–பகவானே!
செறி கழல் கொள் தான் நிமிர்த்து–செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி
உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று–கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரிஸிக்கிரமாவதாரத்திலே
அடியால் படி சடந்த முத்தோ–திருவடியால் பூமி முழுவதையும் அளந்துகொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அது அன்றேல்–அல்லது
முடியால் விசும்பு அளந்த முத்தோ–திருவடியால் மேலுலகத்தையெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அறிகிலம்–அவ்விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.

அடியால் படிகடந்த முத்தோ –
திருவடியால் பூமி முழுவதும்-அளந்து கொண்டதால் உண்டான-சந்தோஷமா -/ 
அது அன்றேல் –
அல்லது –

முடியால் விசும்பு அளந்த முத்தோ –
திரு முடியால் மேல் உலகத்தை எல்லாம்-அளந்து கொண்ட சந்தோஷமா –
முத் ப்ரீதி ப்ரமதோ ஹர்ஷ -அமர கோசம் –முத் -சந்தோஷம்
அதுவே தமிழ் முத்து என்கிறார்/
முத்து -அழகு-இந்த செயல் அழகா அந்த செயல் அழகா என்றுமாம்
இரண்டுமே சந்தோஷம் அழகு என்பதால் –

அன்றிக்கே
நவரத்னங்களில் சேர்ந்த முத்து என்றுமாம்/
திருவடியில் வீரக் கழலில் சாத்திய முத்துக்களா–
திரு முடியில் கிரீடத்தில் உள்ள முத்துக்களா எவை அளந்தன என்றுமாம்
பரம போக்யமாக இருப்பதால் -அவயவங்கள் கண்ணுக்கு தோற்றாமல் முத்துக்களே தோன்றியதால் என்னவுமாம்

ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி-திருமங்கை ஆழ்வார்-
மா முதலடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முகுதும் அகப்படுத்தி
ஒண் சுடர்ப் போது ஓன்று விண் செலீஇ -என்றும் இவரே அருளிச் செய்தபடி
ஒரு திருவடியே மேல் உலகங்களையும் அளந்தாய் இருக்க
முடியால் விசும்பு அளந்த என்றது-திருவடி உடன் திரு முடியும் ஓங்கி வளர்ந்த படியாலும்
எல்லா செயல்களுக்கும் திருவடியைச் சொன்னால் கண் எச்சில் படும் என்பதாலும்

நெடியாய் –
பகவானே –

நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் –
செறிந்த வீரக் கழலை அணிந்த-திருவடிகளை நீட்டி-
செறி கழல்கள் தாள்
-என்றும் பாட பேதம்-
நெறி கழல் கோள் தாள்
-என்பதே சிறக்கும் என்பர் அழகிய மணவாள சீயர்

சென்று உலகம் எல்லாம் நீ யளந்த யன்று –
உலகம் எல்லாம் சென்று நீ யளந்த யன்று -கீழ் உலகம் மேல் உலகம் எங்கும் வியாபித்து
அளந்த காலமாகிய-திருவிக்கிரம அவதாரத்திலே -/ 

அறிகிலமால்-
இந்த இரண்டில் எந்த சந்தோஷம் உனது நெஞ்சில் ஓடுகிறது-என்பதை அறிகிறோம் இல்லை –

நெடியாய்!
நீ செறிகழல்கொள் தாள் நிமிர்ந்து உலகமெல்லாம் சென்று அளந்தவன்று அடியால்படி கடந்த முத்தோ?
அதன் றேல் முடியால் விசும்பளந்த முத்தோ? அறிகிலும் என்று அந்வயம்.

‘செரி கழல்கள் தாள்” என்று இக்காலத்தில் பாடம் வழங்கி வந்தாலும்
“செறிகழல் கோள்தான்” என்றே ப்ராசீக பாடமென்று
அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்வர். அதுவே நன்கு பொருந்தும்.
நெருங்கின வீரத் தண்டைகளை அணிந்துள்ள திருவடிகளை நீட்டி உலகங்களை அளந்த காலத்தில் திருவடியாலே
பூமிப் பரப்பை யெல்லாம் ஆக்ரமித்து ஸ்வாதீனப்படுத்திக் கொண்டதனால் ஒரு ஸந்தோஷமும்,
திருமுடியை நிமிர்த்தி மேலுலகங்களையெல்லாம் அளாவி ஸ்வாதீனப்படுத்திக் கொண்டதனால் ஒரு ஸந்தோஷமும்
ஆக இரண்டு ஸந்தோஷங்கள் உண்டாயின;
அவற்றுள் எந்த ஸந்தோஷத்தோடொக்கும் இப்போதைய உன்னுடைய ஸந்தோஷம்? என்று கேட்கிறபடி

(முத் ப்ரீதி : ப்ரமதோ ஹர்ஷ:) என்ற அமர கோசத்தின்படி வடமொழியில் முத் என்று ஸந்தோஷத்திற்குப்பெயர்;
அச் சொல்லே இங்குத் தமிழிலக்கணப்படி முத்து என்றிருக்கிறது.

முடியால்லிசும்பளந்தமுத்தோ” = இவ்விடத்தில் ஒரு சங்கை உதிக்கக்கூடும்;
“ஒரு குறளாயிருநில மூவடி மண்வேண்டி உலகனைத்து மீரடியாலொடுக்கி” (பெரிய திருமொழி 3-4-1) என்று திருமங்கையாழ்வாரும்,
“மாமுதலடிப்போதொன்று கவிழ்த்தலர்த்தி மண் முழுதுமகப்படுத்து, ஒண்சுடரடிப்போதொன்று விண்செவீ இ” (திருவாசிரியம் 5) என்று
இவர்தாமும் அருளிச்செய்தபடி மேலே நீட்டப்பட்ட ஒரு திருவடியே மேலுலகங்களையெல்லாம் அளந்ததாயிருக்க,
முடியாமல் விசும்பளந்த என்று இங்கே இவர் அருளிச் செய்வானேன்? என்று. (இதற்கு ஸமாதாநம்:-)
ஒரு திருவடியே மேலுலகங்களையும் அளந்ததென்பது உண்மையே; அந்தத் திருவடியோடு கூடத் திருமுடியும் ஓங்கி வளர்ந்தபடியாலும்,
எல்லாச் செயலையும் திருவடிக்கே சொன்னால் கண்ணெச்சிலாகுமென்று ஒரு செயலைத் திருவடியிலேறிட்டுச் சொல்லுவோமென்று
ஆழ்வார் திருவுள்ளம் பற்றினபடியாலும் முடியால் லிசும்பளந்த என்றவிதில் அநுபபத்தி ஒன்றுமில்லை யென்றுணர்க.

முத்து என்பதற்கு அழகு என்கிற பொருளும் கொள்ள இடமுண்டாகையால் அப்பொருள் கொண்டு,
எம்பெருமானே! நீ அடியால் பூமியையெல்லாம் அளந்தது அழகிய தா?
அன்றி முடியால் மேலுலகங்களையெல்லாம் அளந்தது அழகியதோ?
இரண்டு காரியங்களில் எது அழகியது? சொல்லாய் என்று கேட்கிறாரென்றுரைக்கவுமாம்.
இரண்டும் அழகியதே என்று வெளியிடுவதே இக்கேள்வியின் கருத்தாரும்.
அளந்த என்றது அனந்தது என்றபடி.
இப் பொருளில், உலகளந்தபடியைப் பரம போக்யாமக அநுபவிக்கிறார் என்று அவதாரிகை ஆகக் கடவது.

இனி, முத்து என்பதற்கு நவரத்னங்களிற் சேர்ந்து முத்துக்கள் என்றே பொருள்கொண்டு உரைப்பதும் ஒரு புடையுண்டு.
திருவடியிலணிந்த வீரக்கழலி“ சாத்தியுள்ள முத்துக்களே பூமியை அளந்துவிட்டனவோ?
திருமுடியில் சாத்தியுள்ள முத்துக்களே விசும்பை அளந்து விட்டனவோ? என்கை.
இப்பொருளில், கடந்த என்பதும் அளந்த என்பதும் ஈறுகெட்ட வினை முற்றுக்கள்.
முத்தோ அடியால்படி கடந்தன, முத்தோ முடியால் விசும்பளந்தன? என்றபடி.
உலகளந்த காலத்தில் திருவடியும் திருமுடியும் முத்து மயமாயிருந்த படியால் அவயவங்கள் கண்ணுக்குத் தோன்றாமல்
முத்துக்களே தோற்றின என்பதை வெளியிடுதல் இக் கேள்விக்குக் கருத்தாகும்.

——————————————————————-

(அன்றே நங்கண் காணும்.)
கீழ்ப்பாட்டில் உலகளந்த வரலாற்றைச் சிறிது ப்ரஸ்தாவம் செய்யவே.
ஓங்கி யுலகளந்த உத்தமனுடைய அந்த விலக்ஷணமான திருவுருவத்தை ஸேவிக்கப் பெறவேணு மென்று ஆழ்வார்க்கு ஆசை கிளர்ந்தது.
கிளர்ந்தாலும் பரம பக்தி தலையெடுத்தாலன்றி அவன் ஸேவை ஸாதிக்க மாட்டானாகையால், அந்தப் பரமபக்தி தலையெடுக்கும்போது
விகஸிக்கக் கூடியதான நெஞ்சென்னு முட்கண்ணுக்கு விஷயமாகக் கடவதான பரம்பொருள் நமது புறக்கண்ணாகிய
மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு இப்போது எப்படி விஷயமாகுமென்று தம்மில் தாமே ஸமாதானப்படுகிறார் போலும்.

பரம பக்தி தலை எடுத்தால் அன்றி-கீழே பிரச்துதமான அந்த விலஷணமான -திருமேனியை-சேவிக்க பெறாதே-
தம்மில் தாமே சமாதானப் படுத்திக் கொள்கிறார்
ந மாம்ஸ சஷூர் அபி வீஷதே தம் -என்றும்
ந சஷூஷா பஸ்யதி கச்ச நைனம் -என்றும் சொல்லுகிறபடியே-புறக் கண்ணால் காண்கைக்கு என்ன ப்ரசக்தி –

கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்-என் கண்ணனை நான் கண்டேனே
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும் –
மானஸ சாஷாத்காரமே அருளிச் செய்கிறார்-

கமலக் கண் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற பத்தும்
உட் கண்ணாலேயே
-ஆச்சார்ய ஹிருதயம்-
அகக் கண் விகசிக்கப் பெற்றவர்கள் புறக் கண்ணாலும் காணப் பெறுவார் என்பர் சிலர்-
அங்கன் அன்றி-அவன் பரிஹ்ரஹித்து கொள்ளும்
திவ்ய மங்கள விக்ரஹம் மாத்ரம்  பரம பக்தர்களுக்கு புலப்படுமே அன்றி-
திவ்யாத்ம ஸ்வரூபம் புறக் கண்ணுக்கு புலப்படாது
என்பர் பெரியோர்-அகக்கண் கொண்டு திவ்யாத்மா ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கப் பெற்றோம் ஆகில்-புறக்கண் கொண்டு திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்கப் பெறுவோம் என்பதே கருத்து –

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

பதவுரை

என்றேனும்–எக்காலத்திலும்
கண் கண்ணால்–வெளிக்கண்ணாலே
நாணாக–காணக்கூடாத
அவ்வுருவை–அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து காணுமேல்–நெஞ்சாகிற அகக்கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,
அன்றே–அப்போதே,
ஆழியான் கார் உருவம்–திருவாழியை நிரூபகமாகவுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை
நம் கண் காணும்–நமது புறக்கண்ணும் காணப்பெறும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே–நாம் அவ்வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக்கண் மலராத இப்போது மாத்திரமே.

அன்றே –
அப்பொழுதே –

நம் கண் காணும் –
நமது புறக் கண்ணும் காணப் பெறும்

ஆழியான் காருருவம் –
திரு ஆழியை நிரூபகமாக வுடையனான-எம்பெருமான் உடைய கரிய திரு மேனியை –

இன்றே நாம் காணாது இருப்பதுவும் –
நாம் அவ்வுருவத்தைக் காணாமல்-வருந்திக் கிடப்பது-அகக் கண் மலராத இப்போது மாத்ரமே

என்றேனும் –
எக் காலத்திலும்

கட் கண்ணால் –
வெளிக் கண்ணாலே

காணாத வவ் வுருவை –
காணக் கூடாத-அப்படிப் பட்ட விலஷணமான திரு வுருவத்தை –

நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து –
நெஞ்ஜாகிற அகக் கண் விகசித்து-சாஷாத் கரிக்குமாகில்-

என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண் உணர்ந்து காணுமேல் அன்றே
ஆழியான் காருருவம் நம் கண் காணும்; நாம் காணாதிருப்பதுவும் இன்றே- என்று அந்வயம்.

(ந மாம்ஸ =க்ஷுரபிவீக்ஷதே த் = அந்த எம்பெருமானை மாம்ஸக் கண் காணப்பட்டாது) என்றும்,
(ந சக்ஷû பச்யதி கச்சநைநம் = ஒருவனும் இவ் வெம்பெருமானைக் கண்ணால் காண மாட்டான்) என்றும்
வேதங்களிற் சொல்லுகிறபடியே யாராலும் ஒரு நாளும் புறக் கண்ணால் காணமுடியாத பரமாத்ம ஸ்வரூபத்தை
அகக் கண்ணால் காண முயன்றால் காணலாமத்தனை யொழிய புறக் கண்ணால் இப்போது காண்கைக்கு என்ன ப்ரஸக்தி?

ஆழியான் காருருவம் அன்றே நம் கண் காணும் = நெஞ்சென்னுமுட்கண் காணுமேல் அன்றே ஆழியான் காருருவத்தை நம் கண் காணும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே = நெஞ்சென்னுமுட்கண் காணப்புகாமையால் இன்று நாம் காணாதிருக்கின்றோம்.

கட்கண்ணால் = கண் என்று உலகத்தில் ஸாமாந்யமாக வ்பவஹரிக்கப்படுகிற கண்ணாலே என்றபடி.
இந்த மாம்ஸசக்ஷஸ்ஸாலே எம்பெருமானுடைய திருவுருவம் காணப்படாது என்னில்,
“கமலக் கண்ணனென் கண்ணினுள்ளான்” “என் கண்ணனை நான் கண்டேனே”
‘தேவர்கட்கெல்லாங் கருவாகிய கண்ணனைக் கண்டுகொண்டேனே” என்றிப்படி பலகாலும் கண்டதாகத் திருவாய்மொழியில்
ஆழ்வார் அருளிச்செய்வானேன்? என்றால்,
அவயிடங்களெல்லாம் மாநஸ ஸாக்ஷாத்காரத்தையே சொல்லுகின்றனவாகையால் ஒரு குறையுமில்லை.
“கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதி கண்டேனென்ற பத்தும் உட்கண்ணாலேயாய” என்று
ஆசர்யஹ்ருதய முடிவில் அருளிச் செய்ததுகாண்க.
அகக்கண் எனப்படுகிற ஞானக்கண் விகஸிக்கப்பெற்றவர்கள் புறக்கண்ணாலும் பரம்பொருளைக் காணவரல்லராவர் என்பர் சிலர்.
அங்ஙனன்றி எம்பெருமான் தன்னுடைய விருப்பத்தாலே பரிக்ரஹித்துக் கொள்ளுகிற திவ்யமங்கள விக்ரஹம் மாத்திரம்
பரம பக்தர்களுடைய புறக் கண்ணுக்குப் புலப்படுமேயன்றி அவனுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஒருகாலும் புறக்கண்ணுக்குப் புலப்படாதென்பர் பெரியோர்.

இப்பாட்டில் “அன்றே நம் கண்காணும்” என்கிறாரே,
இங்குக் கண் என்றது புறக்கண்ணோ அகக்கண்ணோ? என்னில்; புறக்கண் என்று கொள்க.
அகக்கண் திறந்து திவ்யாத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றோமாகில் பின்பு புறக்கண்ணாலே
திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கப் பெறுவோம் என்பதே இப்பாட்டின் கருத்தாகக் கொள்ளத் தக்கது.

——————————————————————-

(உணரவோருவர்க்கு.)
“இன்றே நாம் காணதிருப்பதுவும்” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் பேசின பேச்சு
எம்பெருமானது திருச் செவியில் விழுந்தவாறே “ஆழ்வாருடைய திரு வாயினாலே இப்படி சொல்லும்படி நாம் அருமைப் பட்டிருக்கலாமோ?
‘நான்காணாதிருப்பதுவும்’ என்கிற வார்த்தை சொல்ல வேண்டியவர்கள் *
உண்டியே உடையே உகந்தோடும் ஸம்ஸாரிகளே யொழிய,
*உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன் என்றிருக்கிற ஆழ்வார் இவ் வார்த்தை சொல்லும்படி ஆகலாமோ?
ஆழ்வார்க்கு நாம் எளிமைப்பட்டு நம்மை அவர்க்குக் காட்டிக் கொடுக்க வேண்டாவோ” என்று திருவுள்ளங் கொண்ட எம்பெருமான்
தன்னுடைய ஸௌலப்ய குணத்தை ஆழ்வார் நெஞ்சிலே பிரகாசப்படுத்த, அதனை அநுபவித்துப் பேசுகிறாரிதில்.

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

பதவுரை

இணரும் துழாய் அலங்கல் எந்தை–(திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன்மேலும் தழைத்தோங்கு கின்ற திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமான்
தனக்கு எளியர்–தனக்கு அடிமைப்பட்டவர்கள்
எவ்வளவர்–(தன்மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ
அவ்வளன்–தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்)
ஒருவர்க்கு–(தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது
செவ்வே–நேராக
உணர எளியனே?–அறியக்கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக்கூடியவைனல்லனாயினும்)
ஆனால்–ஆகையினாலே
இங்கு–இவ்விடத்தில்
எம்பெருமான்–எம்பெருமான்
எனக்கு–என்னாவறிந்து
உணர எளியன்–கொள்ளக்கூடியவன்.

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே –
தாமாகவே முயற்சி செய்பவர்களில்-ஒருவர்க்காவது-நேராக-அறியக் கூடுவனோ
அன்பு அற்றவர்க்கு ருஜூ வாக அறியக் கூட அரியவன் என்றபடி
பக்தி இல்லாத அளவில் எவ்வளவு கற்றவர்களுக்கும் ப்ரஹ்ம ஞானம் உண்டாகாதே
யே து த்வன்க்ரி சரசீருஹ பக்தி ஹீன தேஷாம் அமிபிரபி நைவ யதார்த்த போத
பித்தக்ன மஞ்ஞா மநாப்ஷி ஜாது நேத்ரே நைவ ப்ரபாபிரவி சங்கசி தத்வ புத்தி -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

இணரும் துழாய் அலங்கல் எந்தை –
திரு மேனியின் சம்பந்தத்தாலே-மேன் மேலும் தழைத்து ஓங்குகின்ற-திருத் துழாய் மாலையை யுடைய எம்பெருமான் –
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான்
தன்னிலத்தில் காட்டிலும் இவன் தோளில் விகசியா நிற்கும்-தேவர்கள் தோளில் மாலை வாடாது-
சர்வாதிகன் ஆகையாலே இவன் தோளில் இட்டது அரும்பியா நிற்கும்
இணர்தல்-கொத்து கொத்தாக அலர்தல் –

ஒருவருக்கும் அறியக் கூடுபவன் அல்லன் ஆயினும் -உணரத்-
தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால்
-தமக்கு எளியர்-தமக்கு அடிமைப் பட்டவர்கள் -எளியவர் -சேஷ பூதர் என்றபடி-
எவ்வளவர்-தன் மேல் எவ்வளவு அன்பு உடையவரோ-அவ்வளவர்
அவர்களுக்கு தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் திருமால் ஆகையினாலே –
பேசுவர் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாயான் வடிவு -பேயாழ்வார்

ஆனால் இங்கு
அதனாலே இவ்விடத்திலே

எனக்கு உணர எளியன் எம்பெருமான்
எம்பெருமான் என்னால் அறிந்து கொள்ளக் கூடியவர்-
என்னுடைய அன்புக்கு தக்கபடி எளியனாக காட்டிக் கொடுப்பதில் தட்டில்லையே –

இணருந்துழாயலங்கெலந்தை ஒருவர்க்கு செவ்வே உணர எளியனே? (எளியனல்லன்.) (ஆனபோதிலும்)
எம்பெருமான் தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவன்; ஆனால் எனக்கு இங்கு உணர எளியன் என்று அந்வயம்.

“தோளிணை மேலும் நன்மார்பின்மேலுஞ் சுடர்முடிமேலும் நாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்” என்றபடி
திருத்துழாய் மாலைகளைப் பரம போக்யமாக அணிந்து கொண்டுள்ள எம்பெருமான் யாராலாவது உள்ளபடி அறிந்து கொள்ளக்கூடியவனோ?
ஸ்வ ப்ரயத்நத்தால் ஒருவராலும் அறிந்துகொள்ளக் கூடியவனல்லன்;
ஒருவனுடைய ஞானத்துக்கும் எம்பெருமான் விஷயமாகிறதில்லை என்று சொல்லி விட்டால், ஆகாசத் தாமரை, முயற் கொம்பு, மலடி பிள்ளை
முதலான வஸ்துக்கள் போல் ப்ரஹ்மமும் அடியொடு இல்லாத பொருள் என்று தேறி விடுமே என்று நினைக்க வேண்டா;
ஒருவருடைய ஞானத்துக்கும் எம்பெருமான் விஷயமாகிறதில்லை யென்று யாரும் சொல்ல வரவில்லை.
எவரெவர்கள் எவ்வௌவெவ்வளவு அன்பு பாராட்டுவர்களோ அவரவர்களுக்கு அவ்வளவவ்வளவு எம்பெருமான் தன்னைக் காட்டிக் கொடுப்பவன்
என்றே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருப்பதால் நானும் என்னுடைய அன்புக்குத் தக்கவளவு எம்பெருமானை லபிக்க உரியேன் என்கிறார்.

முதலடியில் “ஒருவர்க்குச் செவ்வே உணர எளியனே” என்றது- அன்பு அற்ற ஒருவர்க்கும் ருஜுவாக அறியக் கூடாதவன் என்றபடி.
புத்தி சாதுரியத்தாலே சாஸ்த்ரங்களை யெல்லாம் ஸந்தேஹமறக் கற்றுணர்ந்தவர்களுக்கும் பக்தியில்லாத யளவில்
ப்ரஹ்ம ஜ்ஞான முண்டாகாமட்டதென்ற பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
யெது க்வதங்க்ரி ஸரஸருஹபக்தி ஹீநா தேஷாம் அமீபிரபி நைவ யதார்த்தபோத:-
பித் தக்க மஞ்ஜந மநாபுஷி ஜாது நேத்ரே நைவப்ரபாபிரபி சங்கஸிதத்வபுத்தி:” (எம்பெருமானே! உனது திருவடித் தாமரைகளில்
அன்பு இல்லாதவர்கள் எவரோ அவர்களுக்கு சாஸ்த்ரங்களாலும் உண்மை யுணர்ச்சி உண்டாக மாட்டாது; பித்தம் கொண்டவனுடைய
கண்ணில் பித்த ஹரிமான அஞ்ஜனம் இடாவிடில் ஆயிரம் ஸூரியர்கள் காய்ந்தாலும் சங்கு மஞ்சள் நிறமாகக் காணப்படுமேயன்றி
வெண்ணிறமாகக் காணப்படாதன்றோ, அதுபோல.) என்று ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் கூரத்தாழ்வானருளிச் செய்தது இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

இணருந்துழாயலங்கல் என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த அர்த்த விசேஷம் குறிக்கொள்ளத்தக்கது;
(இணரும்) தன்னிலத்திற் காட்டிலும் இவன் தோளில் விகஸியா நிற்கும்; தேவர்கள் தோளில் மாலை வாடாது;
ஸர்வாதிகனாகையாலே இவன் தோளிலிட்டது அரும்பியா நிற்கும்” என்று.
தேவர்கள் மாலை அணிந்துகொண்டால் அந்த மாலை தோளில் வாடாமல் வதங்காமல் விளங்கிக் கொண்டிருக்கும் என்பது மாத்திரமேயுள்ளது;
ஸர்வாதிகனான எம்பெருமானுடைய திருத்தோளிலோ வென்னில், மாலை வாடாதிருப்பது மாத்திரமே யன்று;
மேன் மேலும் அரும்புவிட்டு விகஸிப்பதும் செய்யும் என்று, இணரும் என்ற பதஸ்வாரதஸ்யத்தை நோக்கி இங்ஙனே அருளிச் செய்யப்பட்டதென்க.
இணர்தலாவது கொத்துக் கொத்தாக அலர்தல்.

எம்பெருமான் தனக்கு எளியர் எவ்வளவர்; (தானும்) அவ்வளவன் =
“ பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே பாச மலர்த்துழாய் மாலையான் – வடிவு.” என்று பேயாழ்வாரருளிச் செய்ததை
ஒரு புடையொத்திருக்கின்றது இதுவும்.
தாழ்ந்தவர்களைச் சொல்வதான எளியர் என்ற சொல் இங்கு தாத்பர்ய வ்ருத்தியால் சேஷ பூதர்களைச் சொல்லுகிறது.
தனக்கு அடிமைப்பட்டவர்கள் எவ்வளவு அன்பை யுடையவர்களாக இருக்கின்றார்களோ அவ்வளவாகத் தானிருப்பன்;
“பசிக்குத்தக்க ப்ரஸாதம்” என்னமாபோலே, ஸ்நேஹத்துக்குத்தக்க ஸ்வரூபாவிஷ்காரஞ் செய்வனாம் எம்பெருமானும்.
ஆனால் எனக்கெளியனென்பெருமானிங்கு = ஆனால் என்றது ஆனதால், என்றபடி. அன்புக்குத் தக்கவளவு தன்னைக்
காட்டிக் கொடுப்பவனாகையாலே என்னுடைய அன்புக்குத் தக்க வளவு எனக்கு அவன் எளியனாகத் தடையில்லை என்றாராயிற்று.

————————————————————————–

(இங்கில்லை பண்டு போல்)
கீழ்ப்பாட்டில் “எனக்கெளிய னெம்பெருமானிங்கு” என்று எம்பெருமானுடைய ஸௌல்ப்ய குணத்தை அநுஸநதித்தார்;
அந்த குணாநுபவம் வர வர அதிகரித்துத் திருவுள்ளத்தில் தாங்க முடியாதபடி விஞ்சிற்று; விஞ்சவே,
அந்த ஆநந்தத்தினால் பாவங்களைக் குறித்துப் பேசுகின்றார். ஓ பாவங்களே! பகவத் குணாநுபவத்திற்கே என் நெஞ்சில் இடம் போரவில்லை;
அதற்கே இன்னும் இடம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது; அப்படியிருக்கும் போது உங்களுக்கு இங்கே இடம் ஏது?;
ஒரு மூலையில் சுருங்கிக் கொண்டு கிடக்கிறோமென்று நீங்கள் சொல்லக் கூடும்;
அப்படி வருத்தப்பட்டுக் கொண்டு இங்கு இருக்க வேண்டா; விசாலமாகக் கிடப்பதற்குரிய வேறிடந் தேடி ஓடிப்போங்கள் என்கிறார்.

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

பதவுரை

இங்கு–என்னுடைய இந்த நெஞ்சில்
பண்டுபோல்–இத்தனை நாளும் போலே
என்னுடைய செம் கண் மால்–என்மேல் வாத்ஸல்யத்தாலே வெந்த திருக்கண்களையுடையனான பெருமானுடைய
சீர்க்கும்–கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது–எனது நெஞ்சு இடம்போராத தாயிருக்கின்றது.
அங்கே–முன்பு விசாலமாக வாழ்ந்தவிடத்திலே
வீற்றிருத்தல் இல்லை–(பாவங்கள் இனி) தங்கியிருக்க முடியாது (ஏனென்றால்)
வல்வினையார் தாம்–கொடிய பாவங்கள்
மடி அடக்கி நிற்பதனில்–துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதைவிட
ஈண்டு–இவ்விடத்தில் நின்றும்.
அடி எடுப்பது அன்றோ அழகு–கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.

இங்கு இல்லை பண்டு போல்
என்னுடைய இந்த நெஞ்சில்-இத்தனை நாளும் போலே-

வீற்று இருத்தல் –
பாபங்கள் தங்கி இருக்க முடியாது –
உயர்வற உயர் நலம் உடையவன் எவனவன் -கல்யாண குணங்களுக்கே நெஞ்சில் இடம் அல்பமாய் இருக்குமே

என்னுடைய செங்கண் மால்
என் மேல் வாத்சல்யத்தாலே-சிவந்த திருக் கண்களை உடைய பெருமான் உடைய

சீர்க்கும் –
கல்யாண குணங்களுக்கே-

சிறிது உள்ளம் –
உள்ளம் சிறிது-என் நெஞ்சம் இடம் போராததாய் இருக்கின்றது

அங்கே
முன்பு விசாலமான வாழ்ந்த இடத்திலே

மடி யடக்கி நிற்பதனில் –
துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக இருப்பதை விட-
ஒரு மூலையில் மழைக்கு ஒதுங்கி நிற்பாரைப்  போலே

வல் வினையார் தாம்
கொடிய பாபங்கள் –வல்வினைகாள்-முன்னிலையாக முன்பு அருளிச் செய்து
இங்கு வல்வினையார் -படர்க்கையாக அருளிச் செய்கிறார்
கோபமும் த்வேஷமும் நன்கு விளங்கும்-முகம் நோக்கி வார்த்தை சொல்லக் கூசுகிறபடி

ஈண்டு –
இவ் விடத்தில் நின்றும்-
சீக்கிரமாகவும் என்றுமாம்
மீண்டு -என்றும் பாடம் –

அடி எடுப்பதன்றோ அழகு –
கால் பேர்ந்து வெளிக் கிளம்பி போவது அன்றோ அழகியது-

பண்டு போல் வீற்றிருந்தால் இங்கில்லை = பாவங்களே! இது வரையில் நீங்கள் என்னுடைய நெஞ்சை உங்களுக்கு
வாஸஸ்தானமாக ஆக்கிரமித்துக் கொண்டு உங்களுடைய பெருமை யெல்லாந் தோற்ற விசாலமாகக் கிடந்தீர்கள்;
நான் பக்வத் விஷய வாஸநை யறியாத காலத்தில் நீங்கள் என் நெஞ்சில் குடியிருந்தீர்களத்தனை; இனி அப்படியிருக்க முடியாது;
ஏனென்றால், இப்போது என்னெஞ்சு பகவத் குணாநுபவம் பண்ணத் தொடங்கி விட்டது.
*“உயர்வறவுயர் நலமுடையவன்” என்றபடி அநந்த கல்யாண குணாத்மகனான அப்பெருமானுடைய குணங்களுக்கே
இங்கு இடம் அற்பமாயிருக்கும் போது உங்களுக்கு இங்கே இடம் கிடைக்க ப்ரஸக்தி எது? – என்றிப்படி ஆழ்வார்

பாப ராசிகளை சேதநஸ மாதியாலே விளித்துச் சொன்னவாறே.
அவை “ஆழ்வீர்! நெடுநாள் இங்கே பழிக்கிடந்த எங்களை இன்று இப்படி அடித்துத் துரத்தி விடலாகாது;
உமது நெஞ்சில் எங்களுக்கு முன் போல் விசாலமாக இடம் கிடைக்காவிட்டாலும் ஒரு மூலையில் பதுங்கி நிற்கும்படி
மிக்க சுருக்காமன இடம் கிடைத்தாலும் எங்களுக்குப் போதும்; அரைத் துணிகளை இடுக்கி நெருக்கிப் பிடித்துக் கொண்டு
ஒரு மூலையிலே மழைக்கு ஒதுங்கி நிற்பாரைப் போலே நாங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டாகிலும் ஒரு பக்கமாகக் கிடக்கிறோம்;
எங்களை விலக்காமல் இடங்கொடுத்துக் காத்தருள வேணும்” என்று பணிந்து வேண்டிக் கொள்ள,
பின்னடிகளால் அதற்கு மறுமொழி கூறுகின்றார்- பெருமை தோற்ற நன்றாக வாழ்ந்தவர்கள் அப்படி வாழ முடியாமல்
கஷ்டப்பட நேர்ந்த காலத்துக் கண் மறைய ஓடிப்போய் விடுவதன்றோ அழகு என்கிறார்.

வல்வினைகாள்! என்று முன்னிலையாகக் கூறாமல் வல்வினையார் தாம் என்று படர்க்கையாகக் கூறியதனால்
அவற்றின் மேல் ஆழ்வார்க்குள்ள கோபமும் த்வேஷமும் நன்கு விளங்கும். முகம் நோக்கி வார்த்தை சொல்லக் கூசுகின்றாரென்க.

“இங்கே மடியடக்கி நிற்பதனில்” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று சிலர் சொல்லுவர்; அது வேண்டா;
அங்கே என்றிருப்பதே அழகியது ஆழ்வாருடைய நெஞ்சுக்கும் பாவங்களுக்கும் இப்போது நெடுந்தூரம் உள்ளமை உணர்க.
தூரமான இடத்தைக் குறிப்பிடும்போது அங்கே என்றே குறிப்பிட வேண்டும்.
தவிரவும்,
“அங்கே மடியடக்கி நிற்பதனில் மீண்டடியெடுப்பதன்றோ வழகு” என்று உலக வழக்கச் சொல்லாகவும் கருதத் தக்கது.
‘தாங்கள் பெருமையாக வாழ்ந்த விடத்திலே தங்களுக்கொரு குறை நேரிட்டால் அவ் விடத்திலேயே பிறர் சிரிக்கும்படி
வருந்தி வாழ்வதிற் காட்டிலும் அவ்விடத்தை விட்டுக் கண் மறைய ஓடிப்போவது நலம்’ என்று உலகில் ஸாமாந்யமாக வழங்குவதுண்டிறே;
அந்த வார்த்தையை அநுவதிக்கிற படியாகவுமிருக்கின்றது.

இங்கு, மடியடக்கி நிற்பதனில் என்றது எங்ஙனே பொருந்தும்? ‘பாவங்களுக்கு மடியென்று ஒன்றுண்டாகின்லன்றோ
அதை யடக்கி நிற்க வேண்டா என்னலாம்- என்று சிலர் சங்கிக்கக் கூடும்;
வல்வினையார் என்று உயர்திணையாகச் சொன்னதுக்குச்
சேர உலகவழக்க சொல்லையும் கூட்டிக் கொண்டு அருளிச் செய்கிறபடி

மூன்றாமடியின் இறுதியில் மீண்டு என்றும் ஈண்டு என்றும் பதம் பிரிக்கலாம்.
ஈண்டு என்பதற்கு சீக்கிரமாக என்றும் பொருள் கொள்ளலாம்.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –தனியன்/-அவதாரிகை/பாசுரங்கள் 1-10–திவ்யார்த்த தீபிகை –

September 14, 2014

அதர்வண வேத சாரமாகும் –

குணங்களால் பெருமை எனபது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

————————————–

தனியன் -எம்பெருமானார் அருளிச் செய்தது –
முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
நல்ல விஷயங்களிலே-முற்பட்டு செல்லுகிற-ஒ மனமே
நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில்
உத்சாகம் கொண்டு-என் நிலைமையை ஆழ்வார் இடம் விஞ்ஞாபித்து

முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -என்றே தொடங்கும் பிரபந்தம் –

வந்தித்து வாயார வாழ்த்திச் –
தண்டன் சமர்ப்பித்து-
வாய் படைத்தது சபலமாம் படி வாழ்த்தி
வாயார வாழ்த்தியே -வெண்டளை பிறழாத பாடம் –

முருகூரும் -சந்த சோலை சூழ் –
தேன்  பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும்

மொய் பூம் பொருநல்-
நெருங்கிய-அழகிய-தாமர பரணியை உடையதுமான

குருகூரன் –
திரு நகருக்குத் தலைவரான

மாறன் பேர் கூறு –
நம் ஆழ்வார் உடைய திரு நாமங்களை நீ சொல்லு

————————————————————————–

அவதாரிகை-

ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க
-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-
பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -திரு விருத்தம் –

சித்ரகூடம் சென்று பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை திருவாசிரியம்

நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை
இந்த பெரிய திருவந்தாதி

திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதை கண்டு
ஸ்வரூப அனுரூபமான பேறு பெற்ற நிலை திருவாய்மொழி –

————————————————————————–

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற்பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

பதவுரை

முயற்சி சுமந்து–எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே உத்ஸாஹம் பூண்டு
எழுந்து–கிளம்பி
முந்துற்ற நெஞ்சே–(அவ்விஷயத்தில் என்னைவிட) முற்பட்டிருக்கிற மனமே!
நீ எம் எம்மொடு கூடி–நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து
இயற்றுவாய்–காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்)
நல் பூவைப்பூ ஈன்ற வண்ணன்–(அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தையுடையனான எம்பெருமானுடைய
புகழ்–திருக்கல்யாணகுணங்களை
நயப்பு உடைய–அன்பு பொதுந்திய
நா ஈன்–நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற
தொடை கிளவியுள்–சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே
பொதிவோம்–அடக்குவோமாக.
(இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.)

முயற்றி சுமந்து –
எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை

எழுந்து –
கிளம்பி

முந்துற்ற நெஞ்சே –
அவ் விஷயத்திலே என்னை விட முற்பட்டு இருக்கிற மனமே –
நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டு போது போக்க உசாத் துணை நெஞ்சு ஒன்றே தானே-
இந்த இருள் தரும் மா ஞாலத்தே-
யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்
-என்பார் மேலே

இயற்றுவாய் –
கார்யத்தை நடத்த வேண்டும்

எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து –

இருவரும் கூடி நடத்த வேண்டிய கார்யம் என்னவென்றால்
நற்பூவைப்பூ வீன்ற வண்ணன் புகழ் –
அழகிய காயாம் பூவில் உண்டான-நிறம் போன்ற நிறத்தை உடையனான
எம்பெருமான் உடைய-திருக் கல்யாண குணங்களை –

நயப்புடைய –
அன்பு பொருந்திய-

இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்
ஆசை கொண்ட நாவினால்-
அன்பு கொண்ட சொற்களால்

நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-
நாவினாலே கனனம் செயப்படுகிற –
ஈனுதல்
-உண்டாக்குதல் –
சேர்க்கைப் பொருத்தம் உடைய சொற்களாலே-அடக்குவோமாக –
பதங்களுக்கு ஒன்றோடு ஓன்று அமையும் சேர்த்தி அழகு தொடை
பதா நாம் சௌ ப்ராத்ராத நிமிஷ நிஷேவ்யம் ச்ரவண்யோ -ஸ்ரீ குணரத்ன கோசம் –

(முற்று சுமந்து.) ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிப் பேசுகிறார்.
தமது நெஞ்சானது தம்மைவிட்டுத் தனித்துப் போய் விட்டதாம் பகவத் விஷயாநுபவத்திற்கு;
அப்படி முற்பட்டுப் போன நெஞ்சைக் கூறி ‘என்னையுங் கூடக் கூட்டிக்கொள்’ என்கிறார்.

நெஞ்சு பிரிந்து போய்விட்ட தென்பதும் அதனை அழைத்து வார்த்தை சொல்லுகிறதென்பதும் அஸம்பாவிதமன்றோ?
நெஞ்சு போய்விட்ட தென்றால் வார்த்தையே சொல்ல முடியாதன்றோ;
நெஞ்சு நினைத்ததையன்றோ வாய் சொல்லும்;
“முந்துற்ற நெஞ்சே; இயற்றுவாய் எம்மொடு நீகூடி; என்று இப்போது சொல்லுகிற ஆழ்வார்
நெஞ்சு அற்றவரென்று எப்படிக் கொள்ள முடியும்?
நெஞ்சோடு கூடியிருந்ததுதானே இந்த வார்த்தை சொல்லி யிருக்க வேண்டும்;
அப்படியிருக்க “முந்துற்ற நெஞ்சே!- நீ எம்மொடுகூடி இயற்றுவாய்” என்று அருளிச் செய்வது
எங்ஙனே பொருந்தும்? என்று சங்கிக்க வேண்டா;

தம்மிற்காட்டில் நெஞ்சை வேறுபடுத்திச் சொல்லுதல் கவி மரபு.
நெஞ்சைத் தூது விடுவதாகவுஞ் சொல்லுவர்களிறே.
நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போது போக்குவதற்கு இவ் விருள் தரு மா ஞாலத்தில் வேறு யாரும் உடன்படாமல்
உண்டியே உடையே உகந்தோடு கிறவர்களாயிருப்பதால், உசாத்துணையாவது நெஞ்சு தவிர வேறில்லாமல்
அந்த நெஞ்சை நோக்கித் தானே வார்த்தை சொல்ல வேண்டும்.
“யானும் என்னெஞ்சும் இசைந்தொழிந்தோம்” என்று மேலே அருளிச் செய்யப் போகிறார்.
ஆகையாலே நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவதென்பது பக்தர்களுக்கு ஒரு நற்போது போக்காக அமைந்ததாம்.
நெஞ்சு பிரிந்து போயிற்றதாகச் சொல்வதும் அப்படியே; நெஞ்சு விடுதூதாகச் சொல்வதும் அப்படியே. இது நிற்க.

இப்பாட்டின் கருத்தை ஆழ்வார்க்கும் நெஞ்சுக்கும் ஸம்பாஷணையாக வைத்து எழுதுவோம்;-

ஆழ்வார்:- ஓ நெஞ்சே! நீ எனக்கும் முன்னாடி வெகு உத்ஸாஹமாகக் கிளம்புகிறாயே;
என்ன செய்யப் போவதாக உத்ஸாஹங் கொண்டிருக்கிறாய்?

நெஞ்சு: ஆழ்வீர்! நான் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் போகிறேன்;
அதில் எனக்கு வெகு உத்ஸாஹமிருப்பதால் என்னைத் தடை செய்ய வேண்டா.

ஆழ்வார் :- உன்னை யாரும் தடை செய்வாரில்லை;
என்னோடே சேர்ந்து காரியம் நடத்தினாயாகில் நல்லது என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

நெஞ்சு:- நீர் செய்வதாக உத்தேசித்திருக்கும் காரியம் யாது?
நான் மேற் கொண்ட காரியத்தோடு அது விரோதப்படாத காரியமாயிருந்தால் பார்ப்போம்.

ஆழ்வார்:- நீ கொண்ட காரியமே நானும் கொண்டது; வேறில்லை;
காயாம்பூப் போல் அழகிய கறுத்த திருநிற முடையனான எம்பெருமானுடைய திருக் கல்யாண குணங்களை
நல்ல சொல் தொடைகளிலே சேர்த்துப் பாடி அநுபவிக்கப் பாரிக்கின்றேன்;
அதற்கு நீ துணை செய்ய வேணும் – என்கிறார்.

முயற்றி யாவது முயற்சி; அதனைச் சுமப்பதாவது மேற்கொள்ளுகை; ப்ரயத்னப்படுகை என்றபடி…
இயற்றுதல்- காரியம் நடத்துதல்.

நயப்புடைய= (நயப்பாவது – ஆசை.)
இந்த விசேஷணம் நாவிலும் அந்வயிக்கலாம்; கிளவியிலும் அந்வயிக்கலாம்.
எம்பெருமானைத் துதிக்க ஆசைக் கொண்ட நாக்கினால் கவனம் செய்யப்படுகிற என்றபடி,
கிளவியில் அந்வயிருக்கும் போது- அன்பு மிகுதியினாலுண்டாகிற சொற்கள் என்றதாம்.
நாவீன் என்றவிடத்து ஈனுதலாவது உண்டாக்குதல்.

தொடை கிளவியுள்- ***- பதாநாம் ஸௌப்ராத்ராதிநிமிஷநி ஷேல்யம் ச்ரவணயோ:” (ஸ்ரீகுணரத்நகோசம்) என்றபடி-
பதங்களுக்கு ஒன்றோடொன்று அமையும் சேர்த்தி அழகுக்குத் தொடை என்று பெயர்.
ஆகவே, சேர்த்தி யழகு பொருந்திய இனிய சொற்களிலே பகவத் குணங்களை அமைத்துப் பாடும்படி நெஞ்சே!
நீ அநுகூலிக்க வேணுமென்றதாயிற்று.
இப்பிரபந்தம் முழுவதும் வெண்பாவினாலமைந்தது.

————————————————————————–

(புகழ்வோம்.) “நற்பூவைப் பூவின்ற வண்ணன் புகழை நயப்படைய நாவீன் தொகை கிளவியுள் பொதிவோம்”
என்று கீழ்ப்பாட்டில்,
எம்பெருமானைத் துதித்துக் கவி பாடுவதாகத் தொடங்கின ஆழ்வார்
“இப்போது நாம் எடுத்துக் கொண்ட காரியம் என்ன?” என்று சிறிது ஆராய்ந்து பார்த்தார்;

எம்பெருமானைப் புகழ்வது என்கிற காரியத்தையா நாம் எடுத்துக்கொண்டோம்;
ஹா ஹா!’ இப்படியும் நமக்கொரு மதிக்கேடு இருக்குமோ?
எம்பெருமானைப் புகழ்வது நம்முடைய காரியமாமோ?
வேதங்களே புகழத் தொடங்கி முடியாதென்று மீண்ட விஷயத்தை ‘நாமோ புகழக் கடவோம்!
ஒருவனைப் புகழ்வதென்றால், அவனிடத்துள்ள குணங்களை யனைத்தையும் ஒன்றுவிடாமற் சொல்லித் தீர்த்து,
மேலேயும் சில குணங்களை அதிகப்படியாக இட்டுச் செல்லுவதன்றோ புகழ்வதாவது;
எம்பெருமானிடத்து அது செய்ய ஆரால் ஆகும்?
சிற்றறிவாளரான நாம் என்ன சொல்ல வல்லோம்!;

“கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே” (திருவாய்மொழி 3-1-7) என்னுமா போலே
அறிவிற் சிறந்த அரன் முதலானோர் புகழ்ந்தாலுங்கூட
அது பகவத் குணங்களுக்கு இகழ்ச்சியாய் தலைக்காட்டா நிற்க,
எமது ஊத்தை வாய் கொண்டு பேசுவது என்னாகும்!
“பகவானுடைய குணங்கள் இந்த அற்பன் பேசும்படியான அளவிலேயோ இருக்கின்றன?”
என்று பலரும் இழிவாக நினைக்க வன்றோ காரணமாகும் நாம் புகழ்வது- என்றெண்ணி
அந்த எண்ணத்தை வெளியிடா நின்று கொண்டு எம்பெருமானை நோக்கிச் சொல்லுகிறார் இதில்.

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

பதவுரை

எம் கண்–எங்களிடத்தில்
மால்–வ்யாமோஹகத்தை யுடைய
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான பெருமானே,
புகழ்வோம்–(ஒருவராலும் புகழ்ந்து முடிக்க வொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்
பழிப்போம்–(அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்;
புகழோம்–(இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில்
பழியோம்–உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்;
மதிப்போம்–உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும்
இகழ்வோம்–உன்னை அகௌரவப்படுத்தினவர்களாக ஆய்விடுவோம்;
மதியோம்–அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில்
இகழோம்–அகௌரவப்படுத்தாதவர்களாக ஆவோம்;
(ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது
இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத்தான் போகிறோம்.)
நீ சீறல்–நீ கோபங்கொள்ளலாகாது;
இவை–புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை
தீ வினையோம் எங்கள் மால் கண்டாய்–மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம்.

நற் பூவீன்ற பூவை வண்ணன் புகழை –நயப்புடைய –பொதிவோம்
என்றார் கீழ்-

கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாக கிளர்ந்து சூழ்த்த அமரர் துதித்தால்-
உன் தொல் புகழ் மாசூணாதோ –இந்த நீசன் புகழலாமா –

புகழ்வோம் பழிப்போம்
ஒருவராலும் புகழ்ந்து முடிக்க முடியாத உன்னை-அற்ப ஞானிகளான நாங்கள்
புகழ்வோம் ஆகில்-அயோக்யர் புகழ்வது புகழ்ச்சி அன்று ஆதலால்
உன்னை நாங்கள் பழித்தவர்கள் ஆக ஆகி விடுவோம் –
ஆசார ஹீனன் வசிஷ்டர் நல்ல ஆச்சார்ய சீலர் -என்னுமா போலே

புகழோம் பழியோம் –
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு புகழாது இருந்தோம் ஆகில்
உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம் –
மேல் அருளிய அர்த்தத்தையே ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார்

இகழ்வோம் மதிப்போம்-
மதிப்போம் இகழ்வோம்-உன்னை சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோம் ஆகில்
உன்னை அகௌரவப் படுத்தினவர்களாக ஆகி விடுவோம் –

மதியோம் -இகழோம் –
அப்படி நெஞ்சால் நினையாது இருந்தோம் ஆகில்-அகௌரவப் படுத்தாதவர்களாக ஆவோம்-
வாயால் புகழா விட்டாலும் நெஞ்சால் நினைப்பதும் இகழ்வாகும்

ஆக-இவற்றை அறிந்து இருந்தும் புகழாமலோ மதியாமலோ இருக்க மாட்டோம்
அப்படி புகழ்ந்தாலும் மதித்தாலும்

மற்று எங்கள் மால் செங்கண் மால்-சீறல் நீ தீ வினையோம் –
நீ கோபம் கொள்ளல் ஆகாது –

திரு நா வீறுடைய பிரானான ஆழ்வார் இப்படி அருளிச் செய்ததும்-ஆசை கொண்டு இருந்த எம்பெருமான்-
அந்த ஆசை ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழியும்படி
ஆழ்வார் நைச்ய அனுசந்தானம் பண்ணி -சொல்லவும் இன்றிக்கே நினைக்கவும் கூடாது -என்ன
உண்ணும் சோற்றை எதிர் பார்த்து இருந்த பசியன் சோறு தடுமாறிப் போனால்

கண்கள் சிவந்து கோபம் கொண்டதும்-அந்த நிலைமையை கண்ட ஆழ்வார்
எங்கள் மால் செங்கண் மால் என்று விளிக்கிறார் –

ஆழ்வீர் நினைக்கவும் சொல்லவும் மாட்டீர் என்றீரே
ஏன் அழைக்கிறீர் போம் போம் என்று சீற்றம் தோன்ற திரு முகத்தை மாற வைக்க

அநந்ய கதியான என் மேலே சீறுவதே-என்ன
ஆழ்வீர் நீர் புகழவும் நினைக்கவும் மாட்டேன் என்று சொன்ன இதுக்கு சீறாமலும் இருக்க வேணுமோ -என்று-
எம்பெருமான் திரு உள்ளமாக

தீவினையோம் எங்கள் மால் கண்டாய் இவை –-என்கிறார்
புகழவும் நினைக்கவும் பார்த்தால் என் அந்தராத்மா சீறுகிறது-இல்லையேல் நீர் சீறுகிறீர்-
இந்த பாவத்துக்கு என்ன பண்ணுவேன்-யான் என் செய்வேன் என்கிறார்

எங்கள் மால் கண்டாய் இவை
இப்படி புகழ நினைப்பதும்-புகழாமல் பின் வாங்குவதும்-மகா பாபிகளான எங்களுடைய பிரமமே யாகும்-

புகழ்வோம் பழிப்போம் = திருமாலே! உன்னை நான் புகழ்ந்தேனாகில் பழித்தவனாவேன்;
என்னுடைய புகழ்ச்சி உனக்குப் பழிப்பேயாம் என்றபடி. ஆசார ஹீநனான ஒரு பயல் வஸிஷ்டனைப் பற்றிப் பேசத் தொடங்கி
‘வஸிஷ்ட முனிவர் நல்ல ஆசார சீலர்’ என்று புகழ்வதானது எப்படியோ,
அப்படியே யன்றோ குண ஹீகனான நீசனேன் குணக் கடலாகிய தேவரீரைப் புகழ்வதும்.

புகழோம் பழியோம் = நான் தேவரீரைப் புகழாதிருக்க பக்ஷத்தில் பழித்தவாக ஆக மாட்டேன்.
இவ்வர்த்தம் “புகழ்வோம் பழிப்போம்” என்றதிலேயே கிடைக்கக் கூடுமானாலும்
ஸுஸ்பஷ்டமாகச் சொல்ல விரும்பினரென்க.
உன் திருநாமத்தையே நான் எடுக்காதிருப்பின் யாதொரு பழிப்புமில்லை யென்றவாறு.

இகழ்வோம் மதிப்போம் = ‘மதிப்போ மிகழ்வோம்’ என மாற்றி அந்வயித்துக் கொள்வது.
இதன் கருத்தாவது- வாய் விட்டுப் புகழ்வதென்கிற விஷயம் அப்படி கிடக்கட்டும்;
தேவரீரை நாயினேன் நெஞ்சால் நினைப்பதாவது தகுதியோ என்று பார்த்தால், அதற்கும் யோக்யதை யில்லை;
நெஞ்சால் நினைப்பதுதானும் இகழ்ந்தவாறாகும் என்றபடி.

மதியோம் இகழோம் = உன்னை நான் நெஞ்சாலும் நினையாதிருக்கில் இகழ்ந்தவனாக ஆக மாட்டேனென்கை.

ஆழ்வார் இப்படி சொன்னதும், எம்பெருமான் திருவுள்ளஞ் சீறிக் கண் சிவந்து நின்றான்; ஏனென்னில்;
‘திருநாவீறுடைய பிரானாகிய இவ் வாழ்வார் ஏதோ பாசுரம் சொல்வதாகத் தொடங்கினாரே,
நல்லது, செவிக்கு இனிதாகக் கேட்போம்’ என்று மிக்க ஆசை கொண்டிருந்தான் எம்பெருமான்;

அந்த ஆசை *ஊமனார்கண்ட கனவிலும் பழுதா யொழியும்படி ஆழ்வார் அயோக்கியதா நுஸந்தாந்ம் பண்ணி,
‘நான் புகழத் தகாது, நெஞ்சால் நினைகக்வுந் தகாது’ என்று பேசவே
உண்ணுஞ் சோற்றை எதிர்பார்த்திருந்த பசியனுக்குச் சோறு தடுமாறிப் போனால் கண் சிவந்து கோபமுண்டாவது போல
எம்பெருமானுக்கும்
* செவிக்கினிய செஞ்சொல் கேட்டுக் களிக்கப் பாக்கியமில்லாமற் போகிறதே யென்று கோபம் மேலிட்டுக் கண்கள் சிவந்தன;
அந்த நிலைமையைக் கண்ட ஆழ்வார் “எங்கண்மால் செங்கண்மால்” என விளிக்கின்றார்
பிரானே! நீ எங்களிடத்து இயற்கையாகவே வ்யாமோஹ முடையவனல்லையோ;
இப்படி கண்கள் சிவக்கச் சீறலாமோ? என்ற கருத்து உள்ளுறை.

செங்கண்மால்! என்று ஆழ்வார் அழைத்தவாறே எம்பெருமான்
“ஒய்! என்னை எதுக்கு அழைக்கிறீர்?
என்னை நெஞ்சால் நினைத்தாலும் இகழ்ந்தாகும் என்று சொல்லிவிட்டீரே;
அப்படியிருக்க, என்னை நெஞ்சாலும் நினைத்து வாயாலும்
ஏன் அழைக்கிறீர்? போம் போம்” என்று சீற்றந் தோற்ற முகத்தை மாற வைத்தான்;
ஆழ்வார் அது கண்டு சீறல் நீ என்கிறார்;
நாயனே! அநந்ய கதியான என் மேலோ நீ சீறுவது; சீற வேண்டா என்கை.

“புகழ்வோம் பழிப்போம் புகழோம் இகழ்வோம் மதிப்போம்- மதியோ மிகழோம்” என்று வெகு அழகாக நீர் சொன்ன வார்த்தைக்கு
நான் சீறாமலுமிருக்க வேணுமோ? என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
அதற்கு ஸமாதானம் போல்
“தீவினையோம் எங்கண்மால் கண்டாயிவை” என்கிறார் இதன் கருத்து:-

தேவரீரைப் புகழ்வோமென்றால் என்னுடைய அந்தராத்மா சீறுகிறது;
புகழாதிருப்போமென்றால் தேவரீர் சீறுகிறது;
இந்தப் பாவத்திற்கு என்ன பண்ணுவேன்; இது பெரிய தீவினையாயிரா நின்றதே!

ஒரு விதத்தில் பார்த்தால் தேவரீரைப் புகழ நா எழும்பவில்லை;
ஒரு விதத்தில் பார்த்தால் புகழாதிருக்க முடியவில்லை;
ஆகையாலே, புகழ வேண்டியதாயுமிருக்கிறது; நாமோ புகழ்வதென்று பின்வாங்க வேண்டியதாயுமிருக்கிறது;
இது என்னுடைய ப்ராந்தி நிலைமை காணீர்* யான் என்ன செய்வேன் என்றாயின்று.
பின்னடிகளின் கருத்தை வேறு வகையாகவும் உரையிடலாம்.

————————————————————————–

(இவையன்றே நல்ல.) “சீறல் நீ” என்று திருவுள்ளத்தில் இரக்கமுண்டாம்படி பிரார்த்திக்க ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்-,
“ஆழ்வீர்! என்னுடைய சீற்றம் கிடக்கட்டும்; நீர் என்ன தீர்மானம் செய்து கொண்டீர்? ‘புகழ்வது தகுதிதான்’ என்று கொண்டீரா?
அல்லது புகழத் தகாது என்றே கொண்டீரா? அதை நிஷ்கர்க்ஷித்துச் சொன்னீராகில்; பிறகு பார்ப்போம்” என்றான்;

அதற்கு உத்தரமாயிருக்கிறது இப்பாட்டு. இதில் சொல்லுகிறது யாதெனில்;
எம்பெருமானே! இது யுத்தம், இது அயுக்தம் என்கிற விஷயம் அடியேனுக்குத் தெரியாமையில்லை;
அற்ப ஞானிகள் உன்னைப் புகழ்வது அயுக்தம். புகழாதிருப்பது யுக்தம்- என்பதை அடியேன் நன்று அறிவேன். அதில் ஸம்சயமில்லை;

ஆனால், அறிந்தபடியே அநுஷ்டிக்க என்னாலாகாது. நான் அறிந்திருக்கிறபடியே அநுஷ்டிக்க வேணுமானால்,
உன்னைப் புகழ்வதை விட்டுப் புகழாமையைப் பற்றவேணுமிறே இந்த வீடு பற்றுக்கள் என்னால் செய்யப் போகாது.
(உன்னைப் புகழாதிருக்க என்னால் முடியாது என்றபடி.)

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

பதவுரை

இறையவனே–எம்பெருமானே!
இவை அன்றே நல்ல–உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவையன்றோ நல்லது;
இவை அன்றே தீய–உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவையன்றோ கெட்டது;
இவை இவை என்று அறிவனேலும்–(ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும்
இவை எல்லாம்–புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவையெல்லாம்
என்னால்–என்னாலே
அடைப்பு நீக்கு ஒண்ணாது–பற்றவும் முடியாது, விடவும் முடியாது;
என்னால் செயற்பாவது என்–(சபலனான) என்னாலே செய்யக்கூடியது என்ன இருக்கிறது?

சீறல் நீ -என்று பிரார்த்த ஆழ்வார் இடம்-
அது கிடக்கட்டும் -நீர் என்ன தீர்மானம் செய்து உள்ளீர் என்ன –
இவை அன்றே நல்ல

உன்னை புகழாமையும் சிந்திப்பாமையும் -இவை -அன்றோ நல்லது –

இவை அன்றே தீய –
உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதும் -இவை -அன்றோ கெட்டது –

இவை என்று இவை அறிவனேலும் –
இவை இவை என்று அறிவேனேலும்-
ஆகவே இப்பது இப்படிப் பட்டது என்று உண்மையாக-நான் தெரிந்து கொண்டு இருந்தேன் ஆகிலும்

இவை எல்லாம் –
புகழாமையும் மதியாமையும் -புகழ்தலும் மதித்தாலும் -ஆகிய
ஆகிற இவை எல்லாம் –

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா –
என்னாலே-பற்றவும் முடியாது-விடவும் முடியாதே –
அடைப்பு -பரிஹரித்தல் / நீக்கல் -பரித்யஜித்தல்

இறையவனே என்னால் செயற்பாலது என் –
சபலனான என்னால் செய்யக் கூடியது-என்ன இருக்கிறது –
என்னுடைய எண்ணம் ஒன்றும் பலிக்கிறது இல்லை –

என் நா முதல் வந்து புகுந்து நல்லீன்கவி-தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன
என் வாய் முதல் அப்பன்
-என்றபடி-
என் வாக்குகளுக்கு பிரவர்த்தகன் நீ —
ஆகையால்-புகழ்வதோ இகழ்வதோ உன் கார்யம் தான்-என்னால் செயற்பாலது என்
அன்பு செய்கிறது ஒழிய வேறு ஒன்றும் இல்லை -என்றபடி-

என்னால் செயற்பாலது என்? = என்னுடைய இஷ்டப்படி காரியம் நிறைவேறுமாகில் உன்னைப் புகழாமலிருந்து விடுவேன்;
அதில் தடையில்லை; *“என் நா முதல் வந்து புகுந்து நல்லீன்கவி, தூ முதல் பத்தர்க்குத்தான் தன்னைச் சொன்ன
என்வாய் முதலப்பன்” (திருவாய்மொழி 7-9-3) என்றபடி என்னுடைய வாக்குக்களுக்கு ப்ரவர்த்தகன் நீ யாகையாலே,
அது புகழ்வதோ இகழ்வதோ உன் காரியமே யொழிய என்னுடைய காரியமாக யாதொன்று மில்லை காண் என்றவாறு.

இனி, “என்னால் செயற்பாலதென்” என்பதற்கு –
எனது அன்பு செய்கிறதே யொழிய நான் செய்வதொன்றுமில்லை என்பதாகவும் உரைக்கலாம்.

நல்ல, தீய- பலவின்பால் குறிப்பு வினை முற்று.
அடைப்பு நீங்கொண்ணாது = அடைப்பாவது பரிக்ரஹித்தல்; நீங்காவது பரித்யஜித்தல்-
பரிக்ரஹி தக்கதான புகழாமையைப் பரிக்ரஹிக்கவும், பரித்யஜிக்கத் தக்கதான புகழ்வதைப் பரித்யஜிக்கவும் என்னாலாகாது என்றபடி,
ஏன் உம்மாலாகாது? என்னில்; அதற்கு சமாதானம் என்னால் செயற்பாலதென்? என்பதாம் –

————————————————————————–

(என்னில் மிகு புகழார்.) முதற் பாட்டில், ஆழ்வார் எம்பெருமானைப் புகழத் தொடங்கி,
இரண்டாம் பாட்டில், அவனை நாமோ புகழ்வதென்று பின் வாங்கி,
மூன்றாம் பாட்டில்- புகழாதிருக்க முடியாமையைச் சொல்லி முடித்தார்.

அவனைப் புகழ்வது நமக்குத் தகாதென்று நாம் அயோக்யதையால் பின் வாங்க நினைத்தாலுங்கூட
ஏதேனுமொருபடியாலே
அவனது புகழ்களைப் பற்றி நம் வாயால் சில பாசுரங்கள் பேசியே தீர வேண்டியதாகிறதே!
ஹா ஹா! நம்முடைய பாக்கியமே பாக்கியம்;நம்மைவிட பாக்கியசாலிகள் வேறு யாமுளர்?
எம்பெருமானுடைய சில திருக்குணங்கள் நம் வாயிலும் புகுந்து புறப்படும்படியான நல்ல காலம் வாய்த்ததே! என்று மகிழ்கிறார் இதில்.

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-

பதவுரை

என்ன–என்னுடையவனான
கரும் சோதி கண்ணன்–கறுத்த நிறத்தையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்
கடல் புரையும் சீலன்–கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும்
பெரும் சோதிக்கு–மிகப் பெரிய சோதி வடிவமானவனுமான எம்பெருமானுக்கு
என் நெஞ்சு ஆள் பெற்று–என்னுடைய நெஞ்சானது அடிமைப்பட்டதனால்
என்னில்–என்னைவிட
மிகு புகழார் யாவரே–மிக்க புகழுடையவர் யார் கொல்?
மற்று பின்னையும் எண்ணில்–இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில்
மிரு புகழோன் யான் அல்லால்–மிக்க புகழுடையவன் தவிர வேறு யாருமில்லை.

“என்னில் மிகு புகழார் யாவரே” என்பதில் சொல்லுகிற அர்த்தமே
“பின்னையும் மற்றெண்ணில் மிகு புகழேன்யானல்லால்” என்பதிலும்
கிடந்தாலும் ஸந்தோஷாதிசயத்திலே இரட்டித்துச் சொல்லுகிறபடி “
இல்லையெனக்கெதி ரில்லைனெக்கெதி ரில்லையெனக்கெதிரே” என்பது போல.
இவ்விடத்தில் இவர் நினைக்கிற புகழாவது- பாக்யசாலி என்கிற கீர்த்தியாம்.
ஆகவே. என்னைவிட பாக்யசாலி வேறு யார்? என்றதாயிற்று.

‘உமக்கிப்போது என்ன பாக்கியம் வந்து விட்டது?’ என்ன, பின்னடிகளில் அந்தப் பாக்கியத்தை விவரிக்கிறார்;- என்ன
கருஞ்சோதிக்கண்ணன் கடல்புரையுஞ் சீலப் பெருஞ்சோதிக்கு என்னெஞ்சு ஆளாகப் பெற்றதனால்
“என்னில் மிகு புகழார் யாவரே?” என்ன வேண்டியதாயிற்று என்கிறார்.

என்ன என்றது- என்னுடைய என்றபடி
தன்னுடைய வடிவை எனக்கு அநுபவிக்கக் கொடுத்தருளின கண்ணபிரான் என்கை.
கடல் புரையும் சீலன் என்றது கடல் போன்ற கம்பீர ஸ்வபாவமுடையனென்றபடி.
சீலம் என்ற வடசொல் – ஸ்வபாவமென்றும் நல்லொழுக்கமென்றும் பொருள்படும்.
“சீலப்பெருஞ் சோதிக்கு” என்றவிடத்து சீலன் என்று பிரியும்;
“சில விகாரமாமுயர்திணை” என்பது நன்னூல்.
ஆள் பெற்று என்றது – ஆளாகப் பெற்றது காரணமாக என்றபடி.
எம் பெருமானை நெஞ்சால் நினைத்தாலும் கெடுதியாமென்ற கொண்டிருந்த கொள்கை நீங்கி
அப்பெருமான் விஷயத்திலேயே இன்று என்னெஞ்சு ஆழ்ந்து அவகாஹிக்கப் பெற்றதனால் நான் மஹாபாக்ய சாலியானேன் என்றாயிற்று.

இதென்ன விசித்திரம்; எம்பெருமானை நீசனேன் நெஞ்சால் நினைப்பதும் கெடுதல் என்று சில ஸமயங்களில் சொல்லுகிறார்;
மற்றுஞ் சில ஸமயங்களிலோ ‘அவனை நினைப்பது மஹா பாக்யம்’ என்கிறார்;
இவ் விரண்டு வார்த்தைகளும் ஒன்றோடொன்று சேர வில்லையே;
‘நினைத்தல் கூடும்’ என்பது ஸித்தாந்தமா? ‘கூடாது’ என்பது ஸித்தாந்தமா? என்று சிலர் சங்கிக்கக் கூடும்.
இரண்டும் ஸித்தாந்தமே யென்று கொள்ளக் கடவது. இப்படியுமுண்டோ? என்னில்; கேண்மின்;

“நீ சனேன் நிறையொன்றுமிலோன்” என்னும்படியான தம்முடைய தாழ்வு நினைவுக்கு வந்துவிட்டால்,
அப்போது, ‘நாயிலுங்கடை கெட்ட நாமோ பரம் பொருளை நினைப்பதற்கும் புகழ்வதற்கும் தகுதி யுடையோம்?
இதில் ப்ரவர்த்திக்க நமக்கு என்ன யோக்யதை?’ என்று பின் வாங்க வேண்டியதாகிறது. இதுவும் தகுதியே.

எம்பெருமானடைய வடிவழகும் போக்யதையும் நோக்கப்படுமிடத்து நெஞ்சையும் வாயையும் கட்டி வைத்திருக்க முடிகிறதில்லை;
பர வசமாகவே ப்ரவ்ருத்தி உண்டாய் விடுகிறது. அந்த ஆநந்தத்தினால் தலைதடுமாறாகக் கூத்தாடிக் கொண்ட
“என்னில் மிகு புகழார் யாவரே” என்றும்
“யானே தவஞ் செய்தேன்” என்றும்
“எனக் காரும் நிகரில்லையே” என்றம் பலவாறு பேச வேண்டியதாகிறது. இதுவும் தகுதியே.
ஆகையால் இரண்டுக்குங் குறையில்லையென்க.

ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும்,
பண்ணின பிறகு அநுதாபங் காட்டுதலுமாகிற இரண்டும் அவிருத்தமென்று கொள்வது போல இதனையுங் கொள்க.

என்ன கருஞ்சோதிக் கண்ணன் -என்னுடைய வனான  கறுத்த நிறத்தை உடைய ஸ்ரீ கிருஷ்ணனும்-
கடல் புரையும் சீல -கடல் போன்ற கம்பீர ஸ்வபாவம் உடையவனும் –
தன்னுடைய வடிவை ஆழ்வாருக்கு அனுபவிக்கக் கொடுத்தவனும் –

————————————————————————–

(பெற்ற தாய் நீயே) எம்பெருமானை நினைப்பதற்கும் துதிப்பதற்கும் நான் யோக்யதை யற்றவன் என்று
பின் வாங்கப் பார்த்த அடியேனை அந்த எண்ணம் நீங்கி ப்ரவர்த்திக்கும்படி செய்தருளிற்றே;
இப்படி மஹோபகாரம் செய்கிற மஹாநுபாவர் தேவரீர் தவிர வேறு யாருளரெனக்கு?
தாயும் தகப்பனும் ஆசாரியனுமாகிற உபகாரர்களை யாவரும் அடியேனுக்கு தேவரீரேயாயிற்று! என்று
எம்பெருமானை நோக்கி உருக்கமாகப் பேசுகிறார்.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5

பதவுரை

மாய–மாயவனே!
அம்மா–ஸ்வாமியே!
பேசில்–உன்னால் நான் பெய்ய உபகாரங்களைப் பேசப் புகுந்தால்
பெற்ற தாய் நீயே–பெற்றதாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே;
பிறப்பித்த தந்தை நீ–உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே;
மற்றையர் ஆவாரும் நீ–மற்றும் ஆசாரியரும் நீயே;
மா மாயவளை மாய–மஹத்தான வஞ்சனையையுடைனான பூதனையை முடிப்பதற்காக
முலை–(அவளது விஷந்தடவின) முலையை
வாய் வைத்த நீ–அமுது செய்த நீ
காட்டும் நெறி–எனக்குக் காட்டின வழிகள்
எற்றே ஓ–என்ன ஆசாரியமானவை ( என்று உருகுகிறார்.)

பெற்ற தாய் நீயே –
பெற்ற தாய் போலே-பிரியமானதையே செய்பவனும் நீயே –
நைச்ய பாவம் மாற்றி பிரவர்த்திப்பிக்கும் படி செய்து அருளிற்றே-

பிறப்பித்த தந்தை நீ –
உண்டாக்கின பிதாவை போலே-ஹிதமானதையே செய்பவனும் நீயே –

மற்றையார் யாவாரும் நீ –
ஆத்மாவுக்கு நன்மைகள் செய்து-விலஷண ஜென்மத்தைக் கொடுக்கிற
மற்றும் ஆசார்யரும் நீயே
உன்னை புகழாமல் இருந்தால் என் சத்தையே போய் விடும்
அது போகாதபடி காப்பாற்றி அருளின உபகாரகர்

பேசில்
உன்னால் நான் பெற்ற உபகாரங்களைப் பேசப் புகுந்தால்

எற்றேயோ –
எற்றே ஒ -எனக்கு ஆச்சர்யமானவை-என்று உருகுகிறார் –

மாய –
மாயவனே –

மா மாய வளை மாய-
மகத்தான வஞ்சனை உடைய வளான-பூதனையை முடிப்பதற்காக

முலை –
அவளது விஷம் தடவின முலையை –

வாய் வைத்த நீ-
அமுது செய்த நீ –

யம்மா –
ஸ்வாமியே –
அந்த ஆச்சர்ய செயல் போலே-
அடியேனுடைய நைச்ச்ய பாவம் மாற்றி
புகழ வைத்து அருளினாயே-
உன் பக்கலிலே அவஹாகிக்கும் படி வழி காட்டிற்றே

காட்டும் நெறி –
எனக்குக் காட்டின வழிகள்-

பேசில் – நீ பண்ணின உபகாரத்தை வாய்விட்டுப் பேசத் தொடங்கினால், நீயே பெற்ற தாய், நீயே பிறப்பித்த தந்தை;
நீயே மற்றையாராவரும்- வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெறுகிற தாயும், பிறப்பிக்குமவனான தகப்பனும்,
ஆத்மாவுக்கு உற்ற நன்மைகளைச் செய்து விலக்ஷண ஜன்மத்தைக் கொடுக்கிற ஆசார்யனும் ஆகிய
ப்ரஸித்தர்களான உபகாரர்கள் மூவரும் அடியேனுக்கு தேவரீர் தாம்.
அயோக்யனென்று பின் வாங்கி தேவரீரை அடியேன் போய் விடும்; அது போகாதபடி காப்பாற்றி யருளின உபகாரகர் தேவரீரே யாதலால்,
ஸத்தைக்கு ஹேது பூதர்களான தாய் தந்தை ஆசாரியர்கள் மூவரும் தேவரீரோயாயிற்றன்றோ என்கை.

மூன்றாமடியின் முதலிலுள்ள மாய என்பது ஸம்போதநம் (விளி);
உன்னுடைய ஆச்சரிய சேஷ்டிதத்தை என்ன சொல்லுவேனப்பா! என்று கருத்து.
“புகழ்வோம் பழிப்போம்” என்ற கொண்டிருந்த எண்ணத்தைத் தவிர்த்து
“என்னில் மிகு புகழார் யாவரே” என்னும்படி பண்ணினவிது என்ன ஆச்சரியம்! என்கிறார் போலும்.

மாமாயவளை மாய முலைவாய்வைத்த என்று பூதனையின் முலையைச் சுவைத்த வ்ருத்தாந்தத்தை எடுத்துக் காட்டியது-
பிள்ளையாயிருந்து முலை யுண்சிற பாவனையிலே அப் பூதனையின் உயிரை முடித்தது எப்படி ஆச்சரியமோ
அப்படியே காண் இதுவும் ஒரு ஆச்சரியம் என்றபடி.
உன்னைக் கொல்வதாக வந்த அவளை நீ கொன்று
உலகுக்கு ஒருயிரான உன்னை ரக்ஷித்தத் தந்த உபகாரம் போலே இதுவும் ஒரு உபகாரங்காண் என்றதாகவுமாம்.

மாயவள் மாய முலைவாய்வைத்த வரலாறு:- கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய்
அக் கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்கிறானென்பதை யறிந்து
அக் குழந்தையை நாடி யுணர்ந்து கொல்லும் பொருட்டுப் பல அஸூ ரர்களை ஏவுகிற கிரமத்திலே அவர்களில் ஒருத்தியான
பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக் கொண்டிருந்த
கண்ணனாகிய குõந்தையை எடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல,
பகவானாக குழந்தை அவ் வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துக் பாலுண்ணுகிற பாவனையிலே
அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

நீ காட்டும் நெறி எற்றேயோ? = அயோக்கிதாநுஸந்தானம் பண்ணிப் பின்வாங்கப் பார்த்த வென்னை வசப்படுத்தி
உன் பக்கலிலேயே அவகாஹிக்கும்படி ஒரு வழி காட்டிற்றே! இஃது என்ன ஆச்சரியம்! என்கை.
எற்றே என்பது அதிசய இரக்கச் சொல்;
எற்று – எத் தன்மையது!

————————————————————————–

(நெறி காட்டி.) ‘நம்மை விட்டுப் பின் வாங்கப் பார்த்த இவ் வாழ்வாரை நாம் உபாயமாகப் பொருந்த விட்டுக் கொண்டோம்;
இனி இவர் நம்மை நினைப்பதும் துதிப்பதும் செய்து கொண்டிருக்கப் போகிறார்; அப்படியே யிருக்கட்டும்;
அல்லும் பகலும் அழுது கதறிக் கொண்டிருக்கட்டும்;
நம்மைக் கிட்டி அநுபவிக்க விரும்பினாராகில் கருமம் ஞானம் முதலிய
ஸாதநங்களை அனுட்டித்து மெதுவாக வந்து சேரட்டும்’ என்ற எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருப்பதாகத் தெரிந்துகொண்ட
ஆழ்வார் அப்பெருமானையே நோக்கிக் கேள்வி கேட்கிறார்; –

பெருமானே! உனக்கு ஸ்வாதந்திரியம் என்கிற ஒரு குணமும்-, நிர்ஹேதுக க்ருபை என்கிற ஒரு குணமும் உண்டு;
எந்த குணத்தைச் செலுத்தி நீ காரியம் செய்ய நினைத்தாலும் செய்யக் கூடும்.
சிலரிடத்தில் ஸ்வாதந்திரியத்தைச் செலுத்திக் கைவிடப் பார்ப்பாய்;
சிலரிடத்தில் நிர்ஹேதுக கருணையைச் செலுத்தி வலி கட்டாயமாகக் கைக்கொள்ளப் பார்ப்பாய்.
இப்படி எத்தனையோ செய்துமிருக்கிறாய்.

இப்போது அடியேன் விஷயத்தில் செய்யத் திரு வுள்ளம் பற்றியிருப்பது எது?
ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப்பார்க்கிறாயோ?
அல்லது, திருவருளைக் காட்டி அழகிய திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ?
எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் உடன்படி வேண்டியவர்களே யன்றி உன்னை நியமிக்க வல்லார் ஆருமில்லை;
ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதி வாய் திறந்து சொல்லிவிட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்- என்கிறார்.

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-

பதவுரை

கண்ணனே–எம்பெருமானே!
நெறி காட்டி நின்பால் நீக்குதியோ–கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி (இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கைவிட்டு விடப் பார்க்கிறாயோ? (அல்லது)
கரு மா முறி மேனி காட்டுதியோ–கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற (உனது) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுப்ரஹிக்க நினைக்கிறாயோ?
மேல் நாள்–அநாதி காலமாக
அறியோமை–அறியாதவர்களான எங்களை
என் செய்வான் எண்ணினாய்–என்ன செய்வதாக திருவுள்ளம் பற்றியிருக்கிறது?
ஈது உரையாய்–தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;
என் செய்தால்–நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்
யாம் என் படோம்–யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.

எம்பெருமான் இடம்-ஸ்வா தந்த்ர்யமும்-நிர்ஹேதுக கிருபா குணம்-இரண்டுமே உண்டே
நெறி காட்டி-நின்பால்- நீக்குதியோ –
கர்மம் ஞானம் போன்ற உபாயாந்தரங்களைக் காட்டி-இவற்றை அனுஷ்டித்து பலன் பெறுவாய் என்று-சொல்லி
என்னை கை விடப் பார்க்கிறாயோ —
நெறி காட்டுகையும் -நீக்குகையும் பர்யாயம் போலும் இவருக்கு -உன்னை ஒழிய
வேறு ஒரு உபாயத்தைக் காட்டி-உன் பக்கலில் நின்றும்-என்னை அகற்றப் பார்க்கிறாயோ -அல்லது –

கரு மா முறி மேனி காட்டுதியோ –
கறுத்த மா மரத்தின் தளிர் போன்ற உனது திரு மேனியை-சேவை சாதிப்பித்து
அனுக்ரஹிக்க நினைக்கிறாயோ –
நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ச்ருதேன
யமேவைஷ வ்ருணதே தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-
அனுக்ரஹிக்க திரு உள்ளம் பற்றி இருப்பவர்க்கு பூரணமாக காட்டி அருளுவான்

முறி -என்று தளிர்க்குப் பெயர் -முறிக்கப் படுவது முறி
மா முறி -மாந்தளிர் -அது போல் ஸூகுமாரமாயும்
கரு -ச்யாமளமாயும்-இருக்கிற திருமேனியைக் கட்டி அருளுவாயோ –

மேனாள் –
மேல் நாள் -அநாதி காலமாக –

அறியோமை –
அறியாதவர்களான எங்களை -அஞ்ஞான் அசக்தன் -நெறி காட்டினால் உபயோகிக்க ஞானாதிகர் இல்லையே-
அதனால் நிர்ஹேதுக கிருபை ஒன்றே வேணும்

என் செய்வான் எண்ணினாய்
என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறாய்

கண்ணனே ஈதுரையாய் –
தேவரீர் உடைய திரு உள்ளம் இன்னது-என்பதை அருளிச் செய்ய வேண்டும் –

என் செய்தால்–
நீ எமக்கு எந்த நன்மை செய்தாலும் –

என்படோம் யாம் –
1-யாம் எந்த அனர்த்தத்தைத் தான்-அனுபவிக்க மாட்டோம் -நீ எது செய்தாலும் அதன் படி உடன்படத் தக்கவன் அடியேன் –
அன்றிக்கே
2-நன்மை செய்தாலும் யானையை குளிப்பாட்டி-உடனே அது அழுக்கை தலையிலே போட்டுக் கொள்வது போலே-
நீ செய்து அருளும் நன்மையையும் ஏற்றுக் கொண்டு
தீமையையும் ஏறிட்டுக் கொள்வேன் -என்றுமாம் –

நெறிகாட்டி நீக்குதியோ நின்பால்? =நெறி யென்றால் வழி; வழியாவது உபாயம்;
பகவத் கீதையில் சரம ச்லோகத்துக்குக் கீழே விஸ்தாரமாகச் சொல்லப் பட்டுள்ள கர்ம ஜ்ஞாநாதி ஸாதநாந்தரங்களை இங்கு நெறி யென்கிறது.
எம்பெருமான் யாரை அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றுகிறானோ அவர்களை நோக்கி “நீங்கள் எவ்விதமான அலைச்சலும் படவேண்டா;
என்னையே தஞ்சமாக உறுதி கொண்டு மார்விலே கை வைத்து உறங்குங்கள்” என்பன்;
எவர்களைக் கைவிட நினைக்கிறானோ அவர்களுக்கு அருந்தொழில்களை அளவில்லாதபடி விதித்து
‘இவற்றைச் சரியாகச் செய்து பேறு பெறுங்கள்’ என்பன். ஆகையாலே நெறிகாட்டுகை யென்பதும் நீக்குகை யென்பதும் பர்யாயம்.

நெறியைக் காட்டுகையாவது – ‘இது கார்மயோம், இது ஜ்ஞாநயோகம். இது பக்தி யோகம்; இவற்றுள் எது உமக்கு ஸாத்யமோ
அதனை அநுஷ்டிக்கக் கடவீர்’ என்று சொல்லி, தான் உதாவஸீகனாய் விடுகை.
நெறிகாட்டி நின்பால் நீக்குதியோ? = உன்னை யொழிய றேறொருபாயத்தைக் காட்டி உன் பக்கலில் நின்றும் என்னை
அகற்றப் பார்க்கிறாயோ என்றவாறு.

நள மகாராஜன் தமயந்தியை உடுத்த புடவையிலே ஒரு தலையையறுத்து ‘இது விதர்ப்பதேசம் போகிற வழி.
இது கோஸலதேசம் போகிற வழி; எந்த வழியில் வேணுமானாலும் போய்க்கொள்; என்று
சொல்லிவிட்டு அகன்ற கதையை இங்கு நினைப்பது.

கருமா முறி மேனி காட்டுதியோ?= நிர்ஹேதுக விஷயீ காரத்திற்கு அடியேனை ஆளாக்கப் பார்க்கிறதோ என்கை.
நாயமாத்யா ப்ரவசநேய ஸப்யோ ந மேதயா ந பஹுநா ச்ருதேந. யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய;
தஸ்யைஷ ஆத்ம விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்று உபநிஷத்திலே சொல்லப்பட்டிருக்கிறபடி-
எவனை அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றுகிறானே அவனுக்குத் தனது திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பரிபூர்ணாநுபவ விஷயமாகக்
காட்டிக் கொடுக்கக் கடவனாகையாலே, மேனி காட்டுதியோ யென்கிறார்.
முறியென்று தளிர்க்குப் பெயர்; முறிக்கப்படுவது முறியென்று காரணப்பெயர். மாமுறி-மாந்தளிர்;
அதுபோல் ஸுகுமாரமாயும், கரு- ச்யாமளமாயுமிருக்கிற திருமேனியைக் காட்டி யருள நினைக்கிறாயோ?

கண்ணனே! மேனாள் அறியோமை என்செய்வா னெண்ணினாய்?=
அநாதி காலமாக அவிவேகியாய்க்கிடக்கிற அடியேன் திறத்தில்
எது செய்ய நினைத்திருக்கிறது? நிக்ரஹமோ? அல்லது அநுக்ரஹமோ? சொல்ல வேணும்.
மேனாளறியோமை என்றதன் கருத்து யாதெனில்;
ஒன்றிலும் அறிவில்லாத அடியேனுக்கு உபாயாந்தரங்களை விதித்தால் என்ன செய்ய முடியும்?
தேவரீருடைய நிர்ஹேதுக க்ருபைக்கு அஜ்ஞரும் அசக்தருமன்றோ இலக்கு;
ஞானமுள்ளவர்களும் சக்தியுள்ளவர்களும் தங்களுடைய ஞான சக்திகளைக் கொண்டு கரையேறி விடக் கூடும்;
அறிவில்லாதவர்களும் அசக்தர்களுமே தேவரீருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்குப் பாத்திராமகக் கூடியவர்களாதலால்
அஜ்ஞனான அடியேன் நெறிகாட்டி நீக்குவதற்கு உரியவனல்லேன்;
கருமாமுறிமேனி காட்டுவதற்கே உரியேன்- என்று எம்பெருமான் திருவுள்ளத்தில் படும்படி சொல்கிறாரென்க.

என்செய்தாலென்படோம் யாம்- இதற்கு இரண்டு வகை பாகப் பொருள் கொள்ள இடமுண்டு;
நீ ஸ்வாதந்திரியத்தைக்காட்டி அகற்றப் பார்த்தாலும் ஸரி; அநுக்ரஹித்துத் திருமேனியை ஸேவை ஸாதிப்பித்தாலும் ஸரி;
திருவுள்ளமானபடி எனது செய்தாலும் அதன்படி அடியேன் உடன் படத்தக்கவனே யொழிய
வேறு என்ன தடை செய்யப்போகிறேன்- என்கிறார் என்னலாம்.

அன்றி,
நீ என்ன நன்மை செய்தாலும் அதைத் தாங்கிக்கொள்ள என்னால் முடியப்போகிறதோ?
யானையைக் குளிப்பாட்டி வைத்தாலும் நொடிப் பொழுதில் தும்பு தூசிகளையே வாரி மேற்கொள்ளுமாபோகே,
நீ செய்யும் நன்மையையும் கெடுத்துக் கொண்டு தீமையையே ஏறிட்டுக் கொண்டவனாவேன்- என்கிறார் என்னவுமாம்.

————————————————————————–

(யாமே அருவினையோம்.) “கருமா முறிமேனி காட்டுதியோ?” என்றாரே கீழ்ப் பாட்டில்.
ஆழ்வீர்! இதோ என்னுடைய கருமாமுறிமேனியைப் பாரும்’ என்று எம்பெருமான் சொல்லப் போகிறானென்றும்
திருமேனி ஸேவை கிடைக்கப்போகிறதென்றும் ஆவல் கொண்டிருந்தார்;
நெஞ்சுக்கு மாத்திரம் ஸேவை ஸாதித்தபடியே யொழிய, கட் கண்ணால் காணும்படியாகவும்
கைகளாலே அணைத்துக் களிக்கும்படியாகவும் ஸேவை ஸாதிக்கப் பெறவில்லை.
அப்படிப் பெறாததனாலே தமக்குண்டான கஷ்டத்தைக் கூறுகின்றாரிதில்.

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு –7-

பதவுரை

பூ மேய–தாமரைப்பூவில் பொருந்தியிருக்கிற
செம் மாதை–*ஹிரண்ய வர்ணையான பிராட்டியை
நின் மார்வில் சேர்வித்து–உனது திருமார்விலே சேர்த்துக் கொண்டானாயும்
பார் இடந்த–(பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தியெடுத்தவனாயுமிருக்கிற
அம்மா–ஸ்வாமீ!
நின் பாதத்து அருகு–தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே
என் நெஞ்சினார் தாமே–என்னுடைய நெஞ்சதானே
அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார்–அந்தரங்கமாகச் சென்று சேர்ந்துவிட்டது;
அரு வினையோம்–போக்க முடியாத பாவத்தைப் பண்ணியுள்ள
யாமே–நாங்கள் மாத்திரம்
சேயோம்–தூரத்திலிருக்கிறோம்.

யாமே அருவினையோம் –
போக்க முடியாத பாவத்தைப் பண்ணி யுள்ள-நாங்கள் மாத்திரமே –
நெஞ்சுக்கு மட்டும் சேவை-கட் கண்ணால் காண வில்லை
கைகளால் அணைத்து களிக்கும் படியாகவும் சேவை சாதிக்கப் பெற வில்லை –

பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த அம்மா –
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய் நின் பாதத் தருகு -சார்ந்து ஒழிந்தார் –
அருவினையோம் யாமே சேயோம் -என்று அந்வயம்

என்னை சேர்த்து கார்யம் செய் என்ற சொல்லிய எனது சொல்லை லஷ்யம் செய்யாமல்
தான் மாதரம் அந்தரங்க அணுக்கராக திரு வடிகளில் சேர்ந்து விட்டது –

நல்ல பேறு  பெற்றதே-தாம் மட்டும் இருள் தரும் மா ஞாலத்திலே உழல
அவர் திரு உள்ளம் பாதார விந்தத்திலே அழுந்தி விட்டதே –

நெஞ்சினார் சார்ந்து ஒழிந்தார்-
உயர் திணை-திருவடிகளில் அழுந்தி ஆழம் கால் பட்டதால்-உயர்த்தி அருளிச் செய்ய வேண்டுமே
அணுக்கர் -அந்தரங்கர் -சமீபத்தில் உள்ளவர் –சேயோம் -தூரத்தில் இருக்கிறோம் –

என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் –
பூ மேய –தாமரைப் பூவிலே பொருந்தி இருக்கிற –செம் மாதை
ஹிரண்ய வர்ணனையான-பிராட்டியை —நின் மார்வில் சேர்வித்து –
உனது திரு மார்பிலே சேர்த்து கொண்டவனாயும் -கடல் கடைந்து பெண்ணமுதம் கொண்டானே-
பாரிடந்த –
பிரளயத்தில் அழுந்திக் கிடந்த பூமியைக்-குத்தி எடுத்தவனுமாய்-இருக்கிற -வராஹாவதார அனுபவம் –
அம்மா –
ஸ்வாமி-நின் பாதத்தருகு –தேவரீர் உடைய திருவடிகளின்-சமீபத்திலே –

“பூமேய செம்மாதை நின்மார்வில் சேர்வித்துப் பாரிடந்த அம்மா!,
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய் நின்பாதத்தருகு சார்ந்தொழிந்தார்; அருவினையோம் யாமே சேயோம்” என்று அந்வயம்.

முதலிலேயே நான் எனது நெஞ்சைக் கூவி “முயற்சி சுமந்தெழுந்து முந்துற்று நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று
என்னோடு சேர்ந்து நீ காரியத்தை நடத்து என்று சொல்லி வைத்திருந்தும் என் சொல்லை லக்ஷியம் பண்ணாத
அந்த நெஞ்சானது என்னை நெடுந்தூரத்திலே தனிப்பட விட்டுவிட்டுத் தான் மாத்திரம் எம்பெருமானுடைய திருவடிகளுக்கு
அந்தரங்கமாக அணுகி அங்கேயே லயித்து விட்டது; அது நல்ல பேறு பெற்று விட்டது;
நான்தான் இப்படி தூரஸ்தனாய் வருந்திக் கிடக்கிறேன்; நான் பண்ணின பாவமிது! என்கிறார்.
ஆழ்வார் நம்மைப் போலே இவ்விருள் தருமா ஞாலத்திலே ஸம்ஸாரிகளுடைய மத்தியில் இருந்தாலும்
அவருடைய திருவுள்ளம் மாத்திரம் பகவத் பாதாரவிந்தத்திலேயே அழுந்தி யிருக்குமென்பது இதனால் அறியத்தக்கது.

சேயோம் = சேய்மை என்னும் பண்படியாப் பிறந்த தன்மைப் பன்மை வினைமுற்று = சேய்மையாவது தூரம்;
தூரத்திலுள்ளவன் சேயோன்; சேயோம் என்றது- தூரத்திலிருக்கிறோம் என்றபடி
“என்னெஞ்சு சார்ந்தொழிந்தது” என்ன வேண்டியிருக்க, நெஞ்சினார் என்றும் சார்ந்தொழிந்தார் என்றும் உயர் திணையாகக் கூறியது-
எம்பெருமானிடத்துத் தமக்குள்ள கௌரவத்தினால் அவனிடத்து ஆழங்காற்பட்ட மனத்தை உயர்த்திக் கூறவேணுமென்ற கருத்தினாலாம்.
அணுக்கர்- அந்தரங்கர். ஸமீபத்திலுள்ளவர்.

“பூமேயே செம்மாதை நின்மார்வில் சேர்வித்து” என்ற விடத்துக் கடல் கடைந்த வரலாற்றையும்,
“பாரிடந்த” என்றவிடத்து வராஹ அவதார வ்ருத்தாந்தத்தையும் அநுஸந்திப்பது..

—————————————————————-

(அருகுஞ்சுவடும்.) எம்பெருமான் நெஞ்சுக்கு மாத்திரம் விஷயமானானே யன்றி,
கண்களால் காணவாவது கைகளாவணைக்கலாவது
விஷயமாகவில்லை என்றார் கீழ்ப் பாட்டில்.
அப்படி கண்ணால் காணப் பெறாதிருக்கச் செய்தேயும்,
கண்ணால் கண்ட விஷயங்களிற்போல அன்பு அதிகரித்து வருகின்றதே, இதற்கு என்ன காரணம்?
சொல்லாய் என்று அப்பெருமானையே கேட்கிறார்.

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பதவுரை

பருகலாம் பண்பு உடையீர்–வாய்மடுத்துப் பானம் பண்ணுதற்கு உரிய திருக்குணங்களையுடையவரே!
பார் அளந்தீர்–(த்ரிவிந்தரமாவதாரத்தால்) பூமியெல்லாமனந்தவரே!
பாவியேம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர்–பாவிகளான எங்களுடைய கண்களாலே காண முடியாத வைவக்ஷண்யத்தை யுடையவரே!
நும்மை–உம்மை
அருகும்–கிட்டுவதையும்
சுவடும்–சிட்டுவதற்கான உபாயத்தையும்
தெரிவு உணரோம்–(நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை; (அப்படியிருக்கச் செய்தேயும்)
நுமக்கே–உம் விஷயத்திலேயே
அன்புமிக பெருமை–(எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது;
இது என்–இதற்கு என்ன காரணம்?
பேசீர்–நீர்தாம் சொல்லவேணும்.

“பருகலாம் பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்!
நும்மை அருகும் சுவடும் தெரிவுணரோம்;
(அப்படியிருந்தும்) நுமக்கே அன்பு மிகப் பெருகும்; இது என்? பேசிர்” என்றுஅந்வயம்.

அருகும்-கிட்டுவதையும் / சுவடும் -கிட்டுவதற்கு உபாயத்தையும் -/ தெரி யுணரோம்-
நாங்கள் பகுத்து அறிந்தோம் இல்லை -அப்படி இருக்கச் செய்தேயும் –
நும்மை நுமக்கு – அன்பே பெருகும் மிக-
உம் விஷயத்திலேயே-எமக்கு ஆசையானது மிகவும் பெருகா நின்றது —
பருகலாம் பண்புடையீர்-
வாய் மடுத்து பானம் பண்ணுவதற்கு உரிய
திருக் கல்யாண குணங்களை உடையவரே -பொதுவாக சொன்னாலும் சௌசீல்யம் குணத்தில் நோக்கு–
சாரங்கன் தொல் சீரை ஓவாத உணவாக ஊண்-
என்று மேலே
அருளிச் செய்கிறபடியால்-பகவத் குணங்களை உணவாக கொள்கிறவர் –
அப்படிக் காட்டி அருளின இடம் மேலே அருளுகிறார் –

பாரளந்த்தீர்-திரு விக்ரமனாய் பூமி எல்லாம் அளந்து அருளினவரே –
பாவியேம் கண் காண்பரிய
-பாவிகளான எங்களுடைய கண்களாலே-காண முடியாத வைலஷண்யத்தை உடையவரே –
கருதரிய உயிர்க்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம்
-என்றபடி-
நீ எங்கும் நிறைந்து இருந்தாலும் அருகில் இருப்பதாக தெரிந்து -கொள்ள வில்லை –
நீ அருகில் வந்து சேவை சாதிக்க வில்லை -என்றபடி –

இப்போது அறிந்து கொள்ள வில்லை என்றாலும் மேலும் அறிந்து கொள்ள வழி உண்டோ என்னில்-
சுவடும் தெரிந்து யுணரோம்-சேவை கிடைக்கும் என்கிற அடையாளமும் இல்லையே
அடியேன் இடம் யோக்யதையும் இல்லை என்னவுமாம்-சுவடு -யோக்யதை

நுண்புடையீர்-பிராட்டி 12 ஆண்டு காலம் இருந்து அனுபவித்தால் போலே
ஆயினும் அன்பு மாத்ரம் வளர்ந்து சென்று கொண்டே இருக்கிறதே-
இது என் பேசீர் -இதுக்கு என்ன காரணம்-நீர் தான் சொல்ல வேணும் –

பருகலாம் பண்புடையீர் = பண்பு என்று பொதுவாகக் குணத்தைச் சொல்லுகிறது;
இவ்விடத்தில், ஸௌசீல்யம் ஸௌலப்யம் என்கிற குணங்களின் நோக்கு.
“கணைநாணில் ஓவாத்தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே!, ஓவாத ஊணாக வுண்” என்று மேலே அருளிச் செய்கிறபடி
பகவத் குணங்களை உணவாகக் கொள்ளுகிறவராதலால் பருகலாம் பண்புடையீர் என்கிறார்.

அப்படிப்பட்ட பண்பு உலகளந்த சரிதையில் விளங்கிற்றென்பார் போல அடுத்தபடியாகப் பாரளந்தீர் என்கிறார்.
(பாவியேம் இத்யாதி.) பாவிகளான என் போன்ற ஸம்ஸாரிகளுடைய கட்புலனுக்கு இலக்காகாத வைலக்ஷண்யத்தை யுடையவரே! என்றபடி.
நம்மை அருகும் தெரிவுணரோம், சுவடும் தெரிவுணரோம் =
“கருதரிய வுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனிநாயகம்” (திருவரங்க்க கலம்பகம் 1) என்றபடி
நீ எங்கணும் நிறைந்திருந்தாலும் அருகில் இருப்பதாக உன்னை நான் தெரிந்து கொள்ளவில்லை;
(நீ எனக்கு ஸமீபத்தில் வந்து ஸேவை ஸாதிக்கவில்லையென்றபடி.)

இப்போது அப்படி தெரிந்து கொள்ளாவிட்டாலும்,
இனி என்றேனு மொருநாள் தெரிந்துகொள்ள வழியுண்டோ என்னில்;
சுவடுந் தெரிவுணரோம் = சுவடாவது அடையாளம்; உன்னுடைய ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைப்பதற்குரிய
அடையாளமு மொன்றும் கண்டிலேன். என்னிடத்தில் ஏதாவது யோக்யதையிருந்தால் அந்த யோக்யதை நிமித்தமாக
உன் ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைக்க வழியுண்டு; அப்படிப்பட்ட யோக்யதை ஒன்றும் என் பக்கம் இல்லாமையாலே
அந்த நினைவுக்கு ப்ரஸக்தியில்லை யென்கை. சுவடு என்பதற்கு போக்யதை என்கிற பொருளுங்கொள்ளலாம்.

திருவயோத்தியில் பிராட்டி இராமபிரனோடு பன்னிரண்டாண்டு கலந்திருந்து அவனுடைய ராஸிக்யத்தை அறிந்தாற்போலே
நான் உன்னோடு கலந்தவனுமல்லேன், உனது ராஸிக்யத்தை அறிந்தவனுமல்லேன்;
ஆயினும், அன்பு மாத்திரம் எனக்கு உன் மீதே வளர்ந்து செல்லுகின்றதே!
இதற்கு என்ன காரணம்? சொல்ல வேணும்- என்கிறாராகவுமாம்.

ஆச்சார்யஹிருதயத்தில் -10 சூர்ணிகை-அருகும் சுவடும் -மா முனிகள் வியாக்யானம்-
உம்முடைய அருகு வருதல்-உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க
உம்மளவிலே ச்நேஹமானது அறமிக்கு வாரா நின்றது –
இதுக்கு அடி அருளிச் செய்ய வேணும் -என்று இந்த பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்

பாட்டின் முடிவில் நும்மை நுமக்கு -என்று இருக்கிறதே-அதற்கு எங்கே அந்வயம் என்று
நஞ்சீயர்-பிள்ளை திரு நறையூர் அரையரைக் கேட்க-நும்மை அருகும் சுவடும் –
நுமக்கு அன்பே பெருகும் மிக -என்று அன்வயித்து பொருள் உரைக்கலாம் என்று அருளிச் செய்தாராம்-

————————————————————————–

(நுமக்கடியோம்.) எம்பெருமானுடைய திருமேனியை ஸேவிக்கப் பெறவேணுமென்று ஆசை கொண்ட தம்முடைய மநோரதப்படியே
அவன் ஸேவை தந்தருளாமையால் அவனிடத்தில் வீணாக அன்பு வஹிப்பதில் என்ன பயன்? என்று நினைத்த ஆழ்வார்
‘இனி நாம் எம்பெருமானை நோக்கிப் பஞ்சைப் பாட்டுகள் பாடுவது அநாவச்யகம்; “எனக்கு நீயே கதி, எனக்கு நீயே கதி” என்று
பலகாலும் சொல்லுவதில் என்ன ப்ரயோஜனம்? எவ்வளவு கதறினாலும் அந்தப் பெரியவர் நம்மை லக்ஷியம் பண்ணுகிறதில்லை;
ஆகையால், இனி நாம் அப்பெருமானை நோக்கி “நுமக்கு அடியோம்” என்று சொல்வதை நிறுத்தி விட வேண்டியது- எனக் கருதி
அக்கருத்தை இப்பாட்டில் முன்னடிகளில் வெளியிடுகிறார்.

அதற்கு மேல், இந்த உறுதியுடனே நாம் இருந்து விட முடியுமா’ என்று ஆலோசித்துப் பார்த்தார்;
க்ஷண காலமும் இப்படி யிருந்திட முடியாதென்று துணிந்து, நெஞ்சை நோக்கி
‘நெஞ்சே! அப்பெருமாள் நம்மை அநுக்ரஹித்தாலும் அநுக்ரஹிக்கட்டும், நிக்ரஹித்தாலும் நிக்ரஹிக்கட்டும்:
திருவுள்ளமானபடி செய்திடட்டும். நீ மாத்திரம் சிந்தனையை அவர் விஷயத்திலேயே செலுத்திக்கிட’ என்கிறார் பின்னடிகளில்.

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
(மாலார்) அவர் தாம்–எம்பெருமானாகிற அப்பெரியவர் தாம்
சார்வு அரியர் ஆனால்–நமக்குக்கிட்ட முடியாதவராயிருக்கும்போது
நொந்து உரைத்து என்–வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்?
இனி–இன்று முதலாக
எமக்கு ஆதானும் ஆகிடு காண்–நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்;
மாலார் தமக்கு–அவ்வெம்பெருமானை நோக்கி
நுமக்கு அடியோம் என்று என்று–“நாங்கள் உமக்கு அடிமைப்பட்டவர்கள்” என்று பல தடவை
அவர் திறத்தே–அப்பெருமான் விஷயமாகவே
யாதானும் சிந்தித்து இரு–எதையாவது சிந்தித்துக்கொண்டு கிடப்பாயாக.

அந்த எம்பெருமான் நம்மை அனுக்ரஹித்தாலும் அனுக்ரஹிக்கா விடிலும் போகட்டும்
திரு உள்ளம்,ஆன படி செய்யட்டும்-நெஞ்சே-நீ  மாத்ரம் அவர் திறத்தில் செய்திடுக
மாலார் அவர் தாம்-எம்பெருமான் ஆகிற அப் பெரியவர் தாம்  /-சார்வரியரானால்-
நமக்கு கிட்ட முடியாதவராய் இருக்கும் பொழுது-ஆர்த்தி உடன் கத்தினாலும் சேவை சாதிக்காமல் இருப்பவன்

மாலார் தமக்கு –-அவ் வெம்பெருமானை நோககி –
ஆஸ்ரிதர் பேரில் வ்யாமோஹமே வடி எடுத்தவர்-என்று பேர் மாத்ரமே கொண்டவர் / 
நுமக்கு அடியோம் என்று என்று-
நாங்கள் உனக்கு அடிமைப் பட்டவர்கள் என்று பல தடவை -/ நொந்து உரைத்தென்
வாய் நோவச் சொல்வதில் என்ன பலன்-/ இனி-இன்று முதலாக

எமக்கினியாதானும் ஆகிடு-நமக்கு எது வேணுமாகிலும் நடக்கட்டும் / அவர் திறத்தே
அப் பெருமான் விஷயமாகவே /யாதானும் சிந்தித்து இரு-எதையாவது
நல்ல என் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என் -என்றபடி-
அவர் நெறி காட்டி நீக்கினாலும் நீக்கட்டும்-

கரு மா முறி மேனி காட்டினாலும் காட்டட்டும் நீ அவர் விஷயமாக ஏதாவது சிந்தித்து இரு

பேறும் இழவும் இரண்டும் ஒக்க எண்ணி இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன-
அவனே வேண்டும் என்றது அவனுடைய அனுக்ரஹம் வேண்டும் என்றபடி-
சத்தைக்கு இது எல்லாம் வேண்டா காண்-
அவன் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும்-
நம்முடைய சத்தைக்கு அவன் சத்தை இறே காரணம்-

அவனுடைய அனுக்ரஹம் போலே நிக்ரஹமும் நமக்கு அனுசந்தேயமே
நம்மைப் பற்றி எம்பெருமான் திரு உள்ளத்தில் பட்டிருக்க வேண்டும் -அதுவே அபேஷிதம்-
கூவிக் கூவி நெஞ்சுருகி கண் பனி சோர நின்றால் பாவி நீ என்று என்று சொல்லாய் பாவியேன்
காண வந்தே
-திருவாய்மொழி -4-7-3-
விருப்போ வெருப்போ கண் முன்னே வந்து தோற்றி அருளிச் செய்ய வேணும் என்பதே அருளிச் செய்கிறார்-

ஆண்டாளும்-செம்மை உடைய திரு மார்பில் சேர்த்தானேலும்-
ஒரு நான்று மெய்ம்மை சொல்லி முகம் நோககி விடை தான் தருமேல் மிக நன்றே-

கை விடப் போகிறேன் என்ற சொல்லை யாவது முகம் நோக்கிச் சொல்வான் ஆகில்
அப்போது சேவை யாவது கிடைக்குமே-கண்ணிலே தென் பட்டான் ஆகில்
அப்போது உபாயங்களால் ஸ்வாதீனப் படுத்திக் கொள்ளலாமே
நல்ல அபிப்ராயமோ தீய அபிப்ராயமோ-நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்து அன்றோ உண்டாக வேண்டும்
அந்த நினைவு தானே நமக்கு போதுமானது -என்கிறார்

“மாலார் தாம் சார்வரியரானால்
(அந்த) மாலார் தமக்கு நுமக்கடியோமென்றென்று நொந்து உரைத்து என்?” என்று முன்னடிகளின் அந்வயம்.
மாலார்தாம்-
ஆச்ரிதர்களிடத்தில்யாமோஹமே வடிவு கொண்டவர்’ என்று பேர் மாத்திரமேயா யிருக்கிற அவர் என்றவாறு.
சார்வு அரியரானால் என்றது-
நமக்கு நெருங்கியநுபவிக்கக் கூடாதவராயிருக்கையினால் என்றபடி நாம் ஆர்த்தியோடே
நுமக்கடியோம் நமக்கடியோம் என்று எத்தனை தடவை சொன்னாலும் அவர் ஸேவைஸாதியாதிருக்குமளவில்
அந்த வார்த்தையை நாம் வாய் நோவ வீணாகப் பலகால் சொல்லிக் கதறுவதில் யாது பயன்?
நெஞ்ச உலரக் கத்துவது எதுக்கு? என்கை.
நொந்து உரைத்தலாவது- ஆர்த்தியோடே சொல்லுதல்; வாய் நோவச் சொல்லுதலுமாம்.
பசித்த போது சோறிடாதவனை நோக்கிச் சோறு சோறு என்று பலகால் கத்தினாலும் வாய் தானே நோகும்.

நெஞ்சே! எமக்கு இனி யாதானுமாகி காண்; அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு=
“நல்லவென் தோழி!நாகணைமிசை நம்பரர், செல்வர் பெரியர், சிறுமானிடவர் நாம் செய்வதென்?” (நாச்சியார் திருமொழி 10-10)
என்றாற்போலே, மிக்க பெரியவரான அவரை இன்னபடி செய்கவென்று நியமிக்க ஆராலாகும்;
அவர் – நெறிகாட்டி நீக்கினாலும் நீக்கட்டும்,- கருமாமுறிமேனி காட்டினாலும் காட்டட்டும்; நீ அவர் விஷயமாகவே எதையாவது சிந்தித்திரு.

இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்:-
(அவர் திறத்தேயாதானும் சிந்தித்திரு.) பேறும் இழவும் இரண்டு மொக்குமென்றிருக்கலாமோ?
நம்முடைய ஸத்தைக்கு (அவன் வேணுமேயென்றது- அவனுடைய அநுக்ரஹம் வேணுமே என்றபடி)
அவன் வேணுமேயென்ன; ஸத்தைக்கு இதெல்லாம் வேண்டா காண்;
அவர் நம்மை வேண்டா வென்றத்தை நினைத்திருக்கவமையும்;
நம்முடைய ஸத்தைக்கு அவர் ஸத்தையிறே காரணம்.” என்று.

இந்த ஸ்ரீஸூக்திகளின் ஆழ் பொருளை என் சொல்வோம்.
‘எம்பெருமானுடைய அநுக்ரஹத்தை நினைத்துக் கொண்டிருந்தால் தானே நமக்கு ஸத்தை; அவன் நம்மை அநுக்ரஹியாது
நிக்ரஹித்து விட்டாலும் அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமென்று சொல்லலாமோ?
“எமக்கினியாதானு மாகிடுகோண்” என்று எப்படி சொல்லலாம்? என்னில்;

அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.
நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.
அது அநுக்ரஹ ரூபமாகவோ நிக்ரஹ ரூபமாகவோ எதுவாகிலுமாகலாம்.
திருவாய் மொழியிலும் (47-3.) “கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீ யென்றென்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே” என்றருளிச் செய்ததன் கருத்து நோக்கத் தக்கது.

எம் பெருமான் விருப்பான வார்த்தையோ வெறுப்பான வார்த்தையோ எது சொன்னாலும் அதில் ஒரு நிர்பந்தமில்லை;
கண் முன்னே வந்து தோற்றிச் சொல்ல வேணுமென்பதொன்றே வேண்டுவது என்கிறாரன்றோ.

ஆண்டாளும் ·“செம்மையுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடைதான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9) என்றாள்; –

கண்ணபிரான் தனது திருமார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக் கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற
என் விருப்பத்திற்படி அவன் அணைத்துக் கொள்வனேல் நன்று;
அப்படி அணைத்துக்கொள்ளத் திருவுள்ள மில்லையாகில்,
என் முகத்தை நேராகப் பார்த்து ‘எனக்கு உன்மேல் அன்பு எள்ளளவுமில்லை, உன்னைக் கை விட்டேன், நீ போ’
என்று வாய் திறந்தொன்று சொல்லி விடட்டும்; அஃது எனக்கு மிகவும் ப்ரியம் என்றாளன்றோ.

உன்னைக் கைவிட்டேனென்று சொல்லுகிற வார்த்தையையாவது அவன், முகம் நோக்கிச்சொல்லுவனாகில்
அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும் கண்ணிலே தென்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால்
ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வழியுண்டாகலா மென்றும் நினைத்துச் சொல்லுகிறபடியிறே இவை.

அதுபோல, இவ்விடத்திலும் ‘அவன் திருவுள்ளத்தில் அநுக்ரஹமில்லாமல் நிக்ரஹமே கொண்டிருந்தாலும்
அதையாகிலும் சிந்தித்துக் கொண்டிரு’ என்றது-
நல்ல படியாகவோ தீய தீயபடியாகவோ ஏதேனுமொருவிதமாக நம்மைப்பற்றின
எண்ணம் அவனது திருவுள்ளத்தே பட்டிருக்குமாகில் அதுவே போதுமானது.
நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது நம்மை ஒரு வயக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்;
அந்த நினைவுதானே நமக்கும் போதுமானது என்கை.

ஆகிடு – ஆகிடுக. காண் – முன்னிலையசை.

————————————————————————–

(இரு நால்வர்.) எம்பெருமானைச் சிந்திப்பதற்கும் துதிப்பதற்கும் அர்ஹரல்லாத நாம் நிறக் கேடாக அவனைச் சிந்தித்தல் செய்து
‘அவன் நமக்குத் திருமேனியை ஸேவை ஸாதிப்பிக்க வில்லையே!’ என்று கை யொழிந்து கிடப்பதே நல்லதன்றோ என்று
திருவுள்ளம் பற்றின ஆழ்வார், பழைய அயோக்யதா அநு ஸந்தாநமே பண்ணுகிறார் இதில்.

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

பதவுரை

இரு நால்வர்–அஷ்ட வஸுக்கவென்ன
ஈரைந்தின் மேல் ஒருவர்–ஏகாதசருத்ரர் களென்ன
எட்டோடு ஒரு நால்வர்–த்வாதசாதித்யர்களென்ன
ஓர் இருவர் அல்லால்–அச்ஸிநீ தேவர்களென்ன ஆகிய முப்பத்துமூவரமரர்கள் தவிர (மற்றவர்களான)
யாம்–நாம்
திருமாற்கு–எம்பெருமானைப் பணிவதற்கு
ஆர். எவ்வளவு மணிசர்?–
வணக்கம் ஆர்–நம்முடைய பணிவுதான் எத்தன்மையது!
ஏ பாவம்–அந்தோ!;
நல் நெஞ்சே–நல்ல மனமே!
நாமா–நாமோ வென்றால்
மிக நாழ் உடையோம்–மிகவும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோமிறே.

நாம் அயோக்யர் என்று கை வாங்கி இருப்பதே நல்லது-என்று நைச்யானுசந்தானம் செய்து-
ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தேவர்கள் அன்றோ துதிக்க அர்ஹ்யர்
ஒரு குணமுமே அன்றி குற்றமே வடிவாக உள்ள நாம்-எம்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு என்பதற்கும்-
நம்முடைய வணக்கம் என்பதற்கும் இங்கே என்னே விஷயம் இருக்கிறது-எதற்காக வீணாக நாக்கை  நீட்டி
இருக்கிறாய் –
என்கிறார் நெஞ்சை பார்த்து-
இதற்கு வேறு படியாகவும் அவதாரிகை உண்டு –

நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காணலுமாம் கொலோ என்றே –
எம்பெருமான் வடிவு அழகில் சிறிதும் ஈடுபாடு இன்றியே
உப்புச் சாறு கேட்டு -சாவாமைக்கு கடலைக் கடைந்து கொடு-மாவலியைக் கொல்லு இரணியனைக் கொல்லு -என்று-நிர்பந்திக்கிற
பிரயோஜனாந்திர பரர்களுக்கு சேவை கிடைக்குமே ஒழிய-உம் வடிவு அழகின் அனுபவமே பரம பிரோஜனம் என்று
இருக்கும் நமக்குக் கிடைக்குமோ நெஞ்சே
-பிரயோஜனாந்திர பரர்களுக்கே கார்யம் செய்யக் கடவோம் என்று
சங்கல்பித்து கொண்டு இருக்கிற அந்த பெரியவருக்கு
நம்முடைய அநந்ய பிரயோஜனத்வம் தோஷமாக அன்றோ திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது-நமக்கு அவனுடைய அனுக்ரஹம் கிடைக்குமோ-என்று இன்னாப்பாகச் சொல்லுகிறார் என்னவுமாம்

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் –முதல் திருவந்தாதி –
அவர் அஷ்ட வசுக்களை எண்மர் என்றார் இவர்– இரு நால்வர் -என்கிறார்
அவர் ஏகாதச ருத்ரர்களை பதினொருவர் -என்றதை இவர்
ஈரைந்தின் மேல் ஒருவர் என்கிறார்
அவர் த்வாதச ஆதித்யர்களை ஈரறுவர் என்றதை இவர் எட்டொரு நால்வர் என்கிறார்
அச்விநீ தேவதைகளை இருவரும் ஓரிருவர் -என்கிறார்கள்–/

ஆண்டாளும்முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -என்றாள் இ றே-

வேதமும் -த்ரயஸ் த்ரிம்சத் வைதேவா -என்று பல இடங்களும் ஓதா நின்றது
ஆக-ஆழ்வார் நிச்சய அனுசந்தானமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்கிறார்-

இரு நால்வர்-அஷ்ட வசுக்கள் என்ன/ ஈரைந்தின் மேல் ஒருவர் -ஏகாதச ருத்ரர்கள் என்ன –
எட்டோ டொரு நால்வர்
-த்வாதச ஆதித்யர்கள் என்ன –ஓர் இருவர் அல்லால் –
அஸ்விநீ தேவர்கள் என்ன-ஆகிய முப்பத்து மூன்று அமரர்கள் தவிர மற்றவர்களான

திரு மாற்கு யாமார் –நாம் எம்பெருமானை பணிவதற்கு-எவ்வளவு மனிசர் -/ 
வணக்கமார்-
வணக்கம் யார் -நம்முடைய பணிவு தான் எத்தகையது -பிறப்பு ஒழுக்கம் இவற்றால் அயோக்யரான நாம்-
ரஷ்ய வர்க்கத்தில் சேர்ந்தவர்கள் அல்லோம் -அயோக்யரான நம்முடைய ஆஸ்ரயணம் தான் எங்கனே-
அயோக்யரான நாம் ஆஸ்ரயித்தோம் எனபது அவனுக்கு ஒரு பொருளா –

பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாக இருந்து ஏத்த வீற்று இருந்த இது வியப்பே -என்னும்படியாக உள்ள அவனுக்கு
அறிவொன்றும் இல்லாத நம்முடைய வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டு எண்ணத் தக்கதோ -என்றபடி
வணக்கம் எது -என்னாது–
வணக்கம் ஆ
ர் -என்று உயர் திணையாக அருளிச் செய்தது ஒரு வகைக் கவி மரபு

ஏ பாவம் –அந்தோ –இரு நிலத்தோர் பழி படித்தேன் ஏ பாவமே -திரு நெடும் தாண்டகம்

நன்னெஞ்சே –நல்ல மனமே -/நாமா மிகவுடையோம் நாழ் –
நாமோ என்றால் ‘குற்றம் உள்ளவர்களாக-இருக்கிறோம் இறே-புருஷோத்தமனான அவன் முன்னே ஒரு பதார்த்தமாக நிற்பதும்-
வணங்கினோம் என்பதும்-எவ்வளவு ஹேய விஷயம் –நாமாமிக வுடையோம் நாழ்-நாமா -நாமோ என்றபடி
நைச்யம்-பண்ணும் பஷத்தில் -அபராத சஹச்ர பாஜனம்-வெறுத்து அருளுகிற பஷத்தில்-பிரயோஜனாந்தர பரர்களுக்கே
கார்யம் செய்வதாக திரு உள்ளத்தில் சங்கல்பம் கொண்டவர்-குற்றமாக கொண்ட அநந்ய பிரயோஜனத்வத்தை கொண்ட நாமோ -என்றபடி-

ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தூயரான முப்பத்து முக்கோடி தேவர்களன்றோ அவனுக்கு அடிமைசெய்ய அர்ஹதை யுடையார்;
ஒரு குணமுமின்றிக் குற்றமே வடிவான நாம் அப்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு?.
நாம் என்பதற்கும் நம்முடைய வணக்கமென்பதற்கும் இங்கே என்ன விஷயமிருக்கிறது! என்று
தம்முடைய அயோக்யதையைக் கூறி அகலப் பார்க்கிறார்.
பகவதநுபவம் விலக்ஷணர்க்கே கிடைக்குமத்தனை யல்லது நம்மைப் போன்ற பாவிகளுக் கிடையாது காண் நெஞ்சே!,
நீ ஏன் வீணாக நாக்கை நீட்டிக் கிடக்கிறாய்? என்கிறார் போலும்.

இதற்கு மற்றொரு படியாகவும் கருத்துரைக்க இடமுண்டு;-
“நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றிலொன்று காணலு மாங்கோலென்றே?” (திருவிருத்தம்- 92)
என்றபடி எம் பெருமானுடைய வடிவழகில் சிறிதும் ஈடுபாடின்றியே; எங்களுக்குச் சாவாமைக்கு மருந்து கொடுக்கக் கடலைக்கடை;
மாவலியைக் கொல்லு; இரணியனைக் கொல்லு; இராவணனைக் கொல்லு’ என்று உடம்பு நோகக் காரியம் செய்யுமாறு நிர்பந்திக்கிற
ப்ரயோஜநாந்தர பரர்களான தேவதைகளுக்கு அப்பெருமானுடைய அநுபவம் எளிதாகக் கிடைக்குமே யன்றி

ப்ரயோஜநாந்தர மொன்றையும் வேண்டாதே.
‘உன் வடிவழகின் அநுபவமே எமக்குப் பரம ப்ரயோஜநம்’ என்றிருக்கிற நமக்குக் கிடைக்குமோ நெஞ்சே;
ப்ரயோஜநாந்தர பரர்கட்குத்தான் காரியம் செய்யக் கடவோமென்று ஸங்கல்பித்துக் கொண்டிருக்கிற அப் பெரியவர்க்கு நம்முடைய
அநந்ய ப்ரயோஜநத்வம் தோஷமாக வன்றோ திருவுள்ளத்திற்பட்டுக் கிடக்கிறது;
இப்படிப்பட்ட தோஷம் நிறைந்துள்ள நமக்கு அவருடைய அநுக்ரஹம் கிடைக்குமா என்ன?
கிடைக்காது தான்- என்று இன்னாப்பாகச் சொல்லுகிறார் என்றுரைக்கவுமாம்.

ப்ரயோஜ நாந்தரங்களை நச்சினவர்களும் உபாயாந்தரங்களைப் பற்றினவர்களுமான தேவதைகட்குக் காரியம் செய்கிற எம்பெருமான்
அநந்ய ப்ரயோஜநராயும் அநத்யோபாயராயுமுள்ள ஆழ்வார் தமக்குக் கடுகக் காரியஞ் செய்யவில்லை யென்றால்
இப்படித்தானே சொல்ல வேண்டும்.

“எண்மர் பதினொருவ ஈரறுவரோரிவர்” என்று முதல் திருவந்தாதியில் பொய்கையார் அருளிச்செய்த முப்பத்துமூன்று
தேவர்களையே இவரும் சப்த பேதத்தாலே அருளிச் செய்கிறார்.
அவர் அஷ்டவஸுக்களை எண்மர் என்றார்; இவர் இருநால்வர் என்கிறார்;
அவர் ஏகாதச ருத்ரர்களைப் பதினொருவர் என்றார்; இவர் ஈரைந்தின்மேலொருவர் என்கிறார்;
அவர் த்வாதசாதித்யர்களை ஈரறுவர் என்றார்; இவர் எட்டோடொரு நால்வர் என்கிறார்;
அச்விநீதேவர்களை ஓரிருவர் என்றது மாத்திரம் இருவர்க்குமொத்தது.
ஆக முப்பத்துமூன்று தேவர்களைச் சொன்னது
ஸமஸ்த தேவர்களையும் சொன்னபடியாமென்பர்;

ஆண்டாளும் “முப்பத்து மூவரமரர்க்கு முன் சென்று” என்றருளிறே.

வேதமும் ***-=த்ரயஸ்த்ரிம்சத்வைதேவா” என்று பலவிடங்களிலும் ஓதாநின்றது.
முப்பத்து மூலரமரர்கள் தாம் எம்பெருமானுக்கு உரியவர்கள்;

நாம் ஆர், நம்முடைய வணக்கமென்பது யாது? என்று ஸநச்யர்னுஸந்தான்யமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்தாராயிற்று.
யாம் ஆர் = பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் அயோக்யரான நாம் அவனுக்கு எந்த வகுப்பில் சேர்ந்தவர்கள்?
ரக்ஷ்ய வர்க்கங்களுள் ஒரு வகுப்பிலும் சேர்ந்தவர்களெல்லாம் என்றபடி.

வணக்கம் ஆர் = அயோக்யரான நம்முடைய ஆச்ரயணந்தான் அவனுக்கு எங்ஙனே?
நாம் ஆச்ரயித்தோமென்பது அவனக்கொரு பொருளோ?

“பிறையேறு சடையானும் நான் முகனுமிந்திரனும், இறையாக விருந்தேத்த வீற்றிருத்தலிது வியப்பே” (திருவாய்மொழி 3-1-10.)
என்னும்படியாயுள்ள அவனுக்கு, அறிவொன்றுமில்லாத நம்முடைய வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டெண்ணத்தக்கதோ வென்றபடி.

“வணக்கம் எது” என்னாமல் “வணக்கம் ஆர்” என்று அஃறிணைச் சொல்லுக்கு
உயர்திணை வினாச்சொல் இட்டுச் சொன்னது ஒரு வகைக் கவிமரபு.

ஏபாவம் = வடமொழியில் *** (அஹஹ)* (ஹந்த) ** (பத) என்னும் அவ்வயயங்கள் போலே
தமிழில் இது ஒரு இரக்கக் குறிப்பிடைச் சொல்போலும் ‘
இருநிலத்தோர் பழிபடைத்தேன் ஏபாவமே” என்ற திருநெடுந்தாண்டகமுங்காண்க.

திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம்! = புருஷோத்தமனாகிய அவன் முன்னே நாம் ஒரு பதார்த்தமாக நிற்பதும்,
அவனை நாம் வணங்கினோமென்பதும் எவ்வளவு ஹேயமான விஷயம்!- என்று தம்மில் தாம் கர்ஹித்துக் கொள்ளுகிறபடி.
ஏன் இப்படி சொல்லுகிறீர்? என்ன;
நாமா மிகவுடையோம் நாழ் என்கிறார். நாமா என்றது- நாமோ வென்றால் என்றபடி.
நாம் அளவற்ற குற்றமுடையவர்களன்றோ; ஆனது பற்றி “நாமார் வணக்கமார்” என்றோம் என்கை.

இப் பாட்டில் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணுகிறாராகக் கொள்ளும் பக்ஷத்தில் “நாமாமிகவுடையோம் நாழ்” என்றது.
அபராத ஸஹஸ்ர பாஜநம்” என்றுமாபோலே ஸ்வரூபமாகச் சொல்லிக் கொண்டதாம்.
அங்ஙனன்றி,
ப்ரயோஜநாந்தரபரர்கட்கு அவர் காரியம் செய்வரேயன்றி அநந்ய ப்ரயோஜநரான நமக்குக் காரியம் செய்வரோ? என்று
வெறுப்பாகச் சொல்லுகிறரென்று கொள்ளும் பக்ஷத்தில், இங்கு நாமா மிகவுடையோம் நாழ் என்றது-
ப்ரயோஜநாந்தர பரர்களுக்கே காரியஞ் செய்கிறவரான அவருடைய திருவுள்ளத்தாலே குற்றமாகத் தீர்மானிக்கப்பட்ட
அநந்ய ப்ரயோஜநத்வத்தை நாம் உடையோமென்றோ? என்றவாறு. நாழ்- குற்றம்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளி செயல் அரங்கம் -பெரிய திரு அந்தாதி -சாரம் ..

December 10, 2011

ஸ்ரீ யபதி -என் செவி வழி வந்து மனசில்புகுந்து –யான் பெரியன் -நீ பெரியன் என்பதை  யார் அறிவர்

நான் உன்னை விழுங்க -நீரால் உருகி- தான் முன்னம்பாரித்து  என்னை முற்ற பருகினான்-
அவனுக்கு அடக்கம் தான் -ஆழ்வார் .
சிறிய திரு அந்தாதி வேற இல்லை- பெரிய சிறிய திரு மடல் போல் –
முன் உரைத்த திரு விருத்தம் முறையில் வரும் திரு ஆஸ்ரியம் -அடுத்து பெரிய திரு அந்தாதி
பகவத் அனுபவ விரோதி –சம்சாரம் விலக்க முதலில்அசோகா வனம் பிராட்டி இருந்தது போல் .-
பிரகிருதி சம்பந்தம் நீக்கி- இனி யாம் உறாமை-அடியேன் செய்யும் விண்ணப்பமே –
உபக்கிரமம் உபசம்காரம்-பொல்லா அருவினை –அழுந்தார் சொல்லி தலை கட்டினார் ..
திண்ணம் அழுந்த கட்டி -என்னை போர வைத்தார் புறமே –
தன் ஸ்வரூப ரூப குண விபூதி  சேஷ்டிதங்களை  அனைத்தையும் காட்டி அவரை தரிக்க வைத்தான் –
திரு ஆஸ்ரயத்தில் இது நடக்க –அடுத்து பெரிய திரு அந்தாதி
ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை -நான்கு பிரபந்தங்களுக்கும்மூன்றாவது ஸ்ரீ யபதியில்
கைங்கர்ய விரோதி – தவித்த தவிப்பு போல் திரு விருத்தம் –
சித்ர கூடம் சென்று -அனைவரையும் கூட்டி -தரித்து போனானே -திரு ஆஸ்ர்யம்
ஸ்ரீ பாதுகை பெற்று -நந்தி கிராமம் -அடி சூட்டும் அரசு-நாள்களை தள்ளி -பெரிய திரு அந்தாதி
முடி சூடிய பின்பு தனக்கு வகுத்த -நிழலும் அடி தாறும் போல் -இருக்க திரு வாய் மொழி
மனசு வெதுப்பு-பெருமாளுக்கு முடி சூட்ட -அவர் திரு அடி தான் சிரஸில் வைத்து -ஆறினதே-
அப்யாசம் பண்ணி குண அனுபவத்தில் ஆழ்ந்த  பிரபந்தம்..
பெரிய -comperative -இல்லை absolute
அவன் கல்யாண குணம்-அனவதிக அஸங்க்யேய- கல்யாண குணம்- போல் இந்த பிரபந்தம் .-
கல்யாண குணம்பரி பூர்ண அனுபவம்-இதில்-என்பதால் பெரிய திரு அந்தாதி .
இதை உணர்ந்து -தான் அனுபவித்து -நமக்கும் காட்டிய ஆழ்வார் பெரியவர்
புவியும் இரு விசும்பும் நின் அகத்தே -உபய விபூதிகளும் உன் இடம் -என்கிறார்
நீ என் செவியின் வழிபுகுந்து என் உள்ளாய்–  –ஹிருதயத்தில் இருக்கிறாய்
அவி வின்றி-சங்கை இன்றி –யான் பெரியன் -இங்கே -இத்தை நீர்த்தேசித்த பின்பு  -மேலே – நீ பெரியை யார் அறிவர்-
நிர்ணயமான அர்த்தம் ஆழ்வார் பாசுரங்களில் .உண்டே

உள்ளு -நீ யே ஆராய்ந்து பார்த்து கொள் -சொல் என்று  சொல்ல வில்லை ..

ஆதி-மத்யம்-அந்தி -மூன்றிலும் குண அனுபவம்
முந்துற்ற நெஞ்சே -தனியன்
வந்தித்து வாயார வாழ்த்தி -வாழ்த்தியே -பாடமும் உண்டு
முயர்தீ-முயன்று கொண்டு -தரித்து -மனசுக்கு
தொழுது எழுது என் மனனே போல் இங்கும்
பரி பூர்ண பகவத் அனுபபம் பரி வாகம்-சக காரி மனஸ் தானே –
உற்சாகத்துடன் முதலில் போகும் நெஞ்சை கொண்டாடுகிறார்
நெஞ்சமே நல்லை நல்லை -நீ பெற்ற பேறு போலே எனக்கும் வேண்டுமே –
முருகு -அழகு –மாறன் பெயரை சொல்லு -தனியன்-நம் நெஞ்சுக்கு –
முன்புற்ற நெஞ்சே—எம்மோடு கூடி இயற்றுவாய் -ஆழ்வார்
நல் பூவை -பூவை பூ-மேய்த்த வடிவு திவ்ய ரூபம்-புகழ்-கல்யாண குணம்
நயப்பு -ஆசை -உடைய நாக்கு-துள்ளியும் ஆடியும் பண்ண வைக்குமே –
நயப்புடைய நா ஈன்ற தொடை கிளவி-சப்த கூட்டம் –உள் பொதிவோம்-உள் புகுந்து அவகாசித்து
புகுந்துகுடைந்து ஆடி-அனுபவிக்க -குண அனுபவ பூர்த்தி -த்ருஷ்ண அனுபவம் –
ஸ்வரூப அனுகுணமாக பயந்து-ஸ்ருதிகள் கைவிட்டு போனதே-
நைச்ய அனுசந்தானம் -பூஷணம் இது தானே –புகழ்வோம் பழிப்போம் -பாசுரம்
தகுதி இல்லை இருந்தாலும் செய்கிறேன் ஷமா ரூபமாக இதையும் அருளுகிறார் ..
மனக்குற்றம் மாந்தர் பழிக்கில் புகழ்-போல் -அமுதனார் –
புகழோம்  பழியோம்எங்கள் மால்-பொருள் படுத்தாதே -அத்யந்த வியாமோகம் கொண்டவன்
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பு தானே
எங்கள் மால் செம் கண் மால்-பார்த்து அறிந்தோம் –
என் செய்ய தாமரை-நான்கு காரணம்-
1-ஐஸ்வர்யம்
2-வியோமகம்
3- விரோதி சினம்-
4-ஆழ்வார் போல்வாரை பிரிந்த -ஆக இந்த நான்கு காரணங்கள்.
சீறேல்-கோபித்துக் கொள்ளாதே -சீறி அருளாதே
இவை அன்றே நல்ல  இவை அன்றே தீமை அறிவன்-அடுத்து சொல்கிறார்
அடைப்பு நீக்க ஒண்ணாது -பற்றவும் முடியாது தவிர்க்கவும் முடியாது என்கிறார் –
என்னில் புகழ் மிக்கர் யாரே-என்றும் நான் தானே -சாத்விக அகங்காரம் .
கரும் சோதி கண்ணன்-சீல பெரும் சோதி
கடல் புரையும்-அபரி சின்னமான கல்யாண குணம் –
வேட்கை மிக்கு அருளி –
என் நெஞ்சினாரை கண்டு இதுவோ தகவு-அடுத்த தூது அங்கே-
தாமே அணுக்கராய் தான் ஒழிந்தார் – யாமே அரு வினையோம்-
சேயோம்-அகன்று இருக்க -மனஸ் அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார்
பிராட்டி சேர்த்து வைத்ததால்-பாரிடந்த அம்மான் பாதம்-
54 பாசுரம் அனுபவித்து
55 தன் பெற்ற பேறை சாதிக்கிறார்
அனுபவ விரோதி நீங்கி-வானோ மறி கடலோ -ஆன் ஈன்ற கன்று –
மாருதமோ தீயகமோ கானோ-பஞ்ச பூதமும் சாதித்து –
நொடியார்-வடிவார் மாதவன் போக்கி தருவானே நொடி பொழுதில்
குண அனுபவ நிஷ்டர்
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் -என் நினைந்து போக்குவார் -இறுதியில்
 ஸ்வாபிகமாக-தன்னை போல் -வாயும் திரை உகளும் காற்றையும் கழியையும்  கட்டி அழுதாரே  –
நன்மையே ச்வாபம் தர்மன் திரி யோதனன்-இருவராலும் கெட்டவன் ஒருவனை
கொண்டு வர முடியவில்லையே அது போல்
சூழ் வினையின் ஆழ் துயரை இதை கொண்டு போக்காமல் எப்படி
 இருப்பார்கள்- என் நினைந்து பொழுது போக்குவார்கள்
திரு மேனி சோபை-கண்டும் -திவ்ய ஆயுத சேர்க்கை-திவ்ய ஆபரணம் போலே தானே இவை-
பார்கலந்த பல் வயிற்றான்-பிரளயத்தில் வைத்து -ஆபத் சகத்வம் காட்டியும்
பாம்பணையான்-சர்வ சேஷி காட்டி கொடுக்க –
சீர் கலந்த சொல் நினைந்து -இந்த பிரபந்தம் –
கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் -ஸ்ரீமத் ராமாயணம்
கை கலந்த ஆழியான் சீர் கலந்த சொல் -தம் அத்புதம்-கையில் அனைத்தும் -சர்வ அவதாரம்-
 கிருஷ்ணா அவதாரம் -ஸ்ரீ பாகவதம் போல்வன
பார் கலந்த பல் வயிற்றான் சீர் கலந்த சொல் -சிருஷ்டி ஸ்திதி  பிரளயம் மூன்றும் இவன் தொழில்
தத் பிரம -சுருதி -வியூகன் -பாஞ்சராத்ரம் போல்வன

பாம்பணையான் சீர் கலந்த சொல் –நித்ய விபூதி -முக்த போக்ய முகுந்தன் –ஸ்ருதிகள் அனைத்தும்

இப்போதும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே
ஆழ்வார் அடுத்து சொல்கிறார்
இன்னும் இனி சிறிது சென்றாலும் இதையே சொல்லி கொண்டு இருப்பேன்-
எப்பொழுதும் கை நழுவா நேமியான் நம் மேல்வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்வாய்
இப்படி பிரித்து அனுபவம் -அனைத்தும் சொல்லும் பெரிய திரு அந்தாதி
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .