(நாழாலமர் முயன்ற.) அநந்ய ப்ரயோஜநரான நம்மை உபேக்ஷிக்கின்ற எம்பெருமானுடைய சிந்தனை இனி நமக்கு ஏதுக்காக?
அவனைக் குறித்துப் பாசுரஞ் சொல்வது தான் இனி நமக்கு எதுக்கு? இனி நாம் வாயை மூடிக் கொண்டு கிடப்போம்- என்றிருக்கப் பார்த்தார் ஆழ்வார்;
எம்பெருமான் அவரை அப்படியே இருக்க வொட்டவில்லை; பாசுரம் பேசவே தூண்டி விட்டான்; இதென்ன அற்புதம்!
நாம் வாயை மூடிக் கிடப்போமென்று பார்த்தாலும் பர வசமாகவே வாய் பேசத் தொடங்குகின்றதே!
நமது முயற்சி இல்லாதிருக்கச் செய்தேயும் வாய் பேச எழும்புகிறதென்றால் இது யாருடைய செயலாக இருக்க வேணுமென்று ஆராய்ந்தார்;
”***- தோ விநாத்ருணாக்ரமபி ***- (அவ் வெம்பெருமானை யொழியத் துரும்பும் எழுந்தாடாது”) என்றிருப்பதனாலே,
அவ்வெம்பெருமானே இனி செய்விக்கிறானாக வேண்டும்;
அவன்றான் மறைந்து உறைந்திருந்து நம் வாயைக் கிளப்புகிறான் போலும் என்று நிச்சயித்து
‘இனி நாம் இவன் விஷயமாக வாய் திறப்பதில்லை’ யென்று உறுதியாக நாம் கொண்டிருந்த எண்ணத்தைப் போக்கி
வாயைக் கிளப்புகின்ற இவனுடைய ஸாமர்த்தியத்தை நாம் என்ன சொல்வோம்! என வியப்புற்று,
பண்டு இராவணமென்பானோரரக்கன் ‘நான் யார்க்கும் தலை சாய்ப்பதில்லை; நிமிர்ந்த தலையைக் குனியவே மாட்டேன்’ என்று
கொண்டு இறுமாப்புடனிருந்த நிலைமையைத் தொலைத்து அவனைப் பங்கப்படுத்தினான் இப் பெருமான் என்று
எல்லாரும் மிக்க புகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. அந்தோ! இஃதொரு புகழ்ச்சியோ இவனுக்கு?
இராவணனது உறுதியைக் காட்டிலும் வலிதான எனது உறுதியைச் சிதைத்து என்னை வாய் திறக்கப் பண்ணா நின்ற
இப்பெருமானுக்கு அது ஒரு அருந்தொழிலோ? என்று ஈடுபட்டு எம்பெருமானையே நோக்கி இதனைப் பேசுகிறார்.
நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-
பதவுரை
ஆழாத பாரும் நீ–(நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ–ஜலதத்வமும்*;
தீயும் நீ–தேஜஸ்தத்வமும் நீ;
காலும் நீ–வாயுதத்வமும் நீ;
வானும் நீ–ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ–இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ,
நாழால் அமர் முயன்ற–அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த
வல் அரக்கன்–கொடிய இராவணனுடைய
இன் உயிரை–இனிமையான பிராணனை
வாழா வகை–வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல்–கவர்ந்து கொண்டது
நின்வலியே–உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல.
நாழால் அமர் முயன்ற –
வணங்கா முடித்தனம் ஆகிற அஹங்காரத்தால் யுத்தம் செய்வதில் கை வந்த / வல்லரக்கன்-கொடிய ராவணனுடைய -/
இன்னுயிரை –இனிமையான பிராணனை -/
வாழா வகை வலிதல் -வாழ்ந்து இருக்க ஒட்டாமல்
கவர்ந்து கொண்டது/
நின் வலியே -உனக்கு ஒரு சூரத் தனமோ –வலியே -ஏகாரம் -வலி அல்ல என்றபடி
ஆழாத பாரு நீ –நீரில் அழுந்தாது இருக்கிற பூமியும் நீயே /
வானு நீ காலு நீ தீயு நீ நீரும் நீயாய்-நீரும் தீயும் காலும் வானும்–ஜல தத்வமும்-தேஜஸ் தத்வமும்-வாயு தத்வமும்-ஆகாச தத்வமும் நீ- /
நின்ற நீ -இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாய் நின்ற நீ
விருத்தமான விபூதிகளைச் சேர விட்டு அனுபவிக்கிற உனக்கு என்னைச் சேர விடுகை ஒரு பணியோ–
விபூதி சாமான்யங்களுக்கு நிர்வாஹகனாய்-அவற்றைச் சொல்லும் சப்தங்கள் உன் அளவில் வரும்படி நிற்கிற உனக்கு-
உனக்கே அசாதாரணமாய் உன்னால் அல்லது செல்லாதவர்களை சேர விடுகை ஒரு பணியோ
யஸ்ய பிருத்வி சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -என்று வேதங்கள் சொல்லக் கூடிய உனக்கு
அருமை என்று-சொல்லக் கூடிவது இல்லையே-
(திருமாலே!,) “ஆழாத பாரும் நீரும் தீயும் காலும் வானும் நீயாய் நின்ற நீ,
நாழலமர் முயன்ற வல்லரக்கனின்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே?” என்று அந்வயம்.
மண் நீர் எரி காற்று ஆகாயம் என்கிற பஞ்ச பூதமுமாய் நிற்கிற நீ என்றதற்குக் கருத்து யாதெனில்;
“விருத்தமான விபூதிகளைச் சேர விட்டு அநுபவிக்கிற வுனக்கு என்னைச் சேரவிடுகை ஒரு பணியோ;
விபூதி ஸாமாந்யங்களுக்கு நிர்வாஹகனாய் அவற்றைச் சொல்லுகிற சப்தம் உன்னளவும் வரும்படி நிற்கிற வுனக்கு,
உனக்கே அஸாதாரணமாய் உன்னால் அல்லது செல்லாதவர்களைச் சேரவிடுகை பணியோ வென்றுமாம்” என்பது
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
மண்ணானது நீரில் கரைந்துவிடும்; நீரானது தீயை அணைத்து விடும்; இப்படி பரஸ்பரம் விருத்த ஸ்வபாவங்களான
பஞ்ச பூதங்களை ஒன்று சேர சரீரமாகக் கொண்டு =
யஸ்ய ப்ருதிவீ சரீரம். யஸ்ய ஆபச் சரீரம்” என்று வேதங்கள் ஓதும்பட நிற்கிறவுனக்கு
அருமை யென்று சொல்லக்கூடிய காரியம் ஒன்றுமே யில்லை என்றவாறு.
ஆனாலும், நீ அருமையான காரியங்களைச் செய்கிறவன் என்று
பாராட்டிச் சொல்ல வேண்டுமானால் என்னுடைய உறுதியைப் போக்கடித்து என்னை வாய் திறக்கப் பண்ணின இக்காரியமொன்றே
அருமையாகப் பாராட்டிச் சொல்லவுரியது;
என் உறுதியைக் காட்டிலும் லகுவான உறுதியையுடையரான இராவணாதிகளைப்
பங்கப்படுத்தினாயென்பதை அருந்தொழிலாகப் பலரும் பாராட்டிச் சொல்லுகிறார்களே, அது பயனற்ற சொல் என்றாராயிற்று.
நாழாலமர்முயன்ற என்றது – வணங்கா முடித்தனமாகிற அஹங்கார தோஷத்தினால் உன்னை எதிரிட்டுச் சண்டை செய்வதாக
ஒருப்பட்டு வந்த என்றபடி அப்படிப்பட்ட வல்லரக்கனுண்டு- பெருமிடுக்கனான இராவணன்,
அவனுடைய தித்திப்பான பிராணனை
அந்த சரீரத்தில் வாழவொட்டாமல் கவர்ந்து கொண்டது உனக்கு மிடுக்கோ?
வலியே என்ற ஏகாரம்- வலியல்ல என்பதைக் காட்டும்.
என்னுடைய உறுதியைப் போக்கினது வலியே யன்றி அவனது உயிரைப் போக்கினது வலியல்ல காண் என்கை.
———————————————————————
(நீயன்றே யாழ்துயரில்.) கீழ் பத்தாம் பாட்டில் “திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நன் நெஞ்சே!,
நாமா மிகவுடையோம் நாழ்” என்று சொல்லி எம்பெருமானிடத்தில் நின்றும் பின் வாங்கப் பார்த்ததை நினைத்துக் கொண்டு.
அப்படியும் நமக்கொரு எண்ணம் தோற்றிற்றே! என்ன கஷ்ட காலம்!;
ஏகஸ்மிந்நப்யதிக்ராந்தே முஹூர்த்தே த்யாநவர்ஜிதே- தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திலும் க்ருணாம்”
(எம்பெருமானுடைய சிந்தனை யில்லாமல் ஒரு க்ஷண காலம் கழிந்து போனாலும், ஸர்வஸ்வத்தையும் கள்வர் கவர்ந்தால்
எப்படி முட்டிக்கொண்டழுவர்களோ அப்படி ‘பழுதே பல பகலும் போயின’ என்றும்
‘ஊமனார் கண்ட கனவிலும் பழுதாயொழிந்தன கழிந்த வந்நாள்கள்’ என்றுங் கதறியழவேண்டும்) என்று சொல்லிக் கிடக்கிறதே;
‘எம்பெருமானைச் சிந்தியாமலே யிருந்து விடுவோம்’ என்கிற ஒரு கெட்ட எண்ணம் நமக்கு உண்டாயிற்றே!
அந்த எண்ணமே நமக்கு நிலைத்திருக்குமாகில் துக்க ஸாகரத்திலே யன்றோ நாம் மூழ்கிக் கிடக்க வேண்டியதாகும்;
எம்பெருமான் றானே அருள் செய்து அந்த எண்ணத்தை ஒழிக்கவே இப்போது தேறினோம்;
அவன் அருள் செய்யா விடில் ஆழ்துயரில் அழுந்தியே போயிருப்போமே” என்றிப்படியெல்லாம் பலவாறாக வருத்தமுற்று,
‘இந்த கெட்ட எண்ணம் நமக்கு உண்டானதற்கு எது காரணம்?’ என்று பார்த்தார்;
மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:” என்று எல்லாவற்றுக்கும் நெஞ்சு தான் காரணமென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே
நமக்கு இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் தோன்றினது நெஞ்சில் குற்றமேயாம் என்று நிச்சயித்து.
அந்த நெஞ்சோடே வாது செய்யத் தொடங்கினார்-
நீயன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய் என்று
அதாவது-
“திருமாற்கு யாமார் வணக்கமா! ஏபாவம்!” என்று சொல்லி அகன்று துன்பக் கடலில் நான் விழுந்தேனாம்படி
என்னைக் கொலை செய்யப் பார்த்து பாவி நீயன்றோ நெஞ்சே! என்றார்.
யத் மனஸா த்யாயதி தத் வாசா வததி-என்றும் –
மன பூர்வோ வாக்குத்தர-என்றும்
நீ இல்லாமல் வாய் சொல்லுமா-
நீராக நன்னெஞ்சே சொன்னீரே -என்ன
முந்துற்ற நெஞ்சே -என்றும் சொன்னீரே-
இயற்றுவாய் எம்மோடு நீ கூடி என்று நியமித்து-
இப்பொழுது வாய் பேசினால் தடுக்காமல் இருந்தது என்ன என்று கேட்பது என்ன-
பகவத் அனுபவ குணத்துக்கு உசாத் துணையாம்படி-
இப்படி வாத பிரதிவாதங்கள் நியமித்தேனே ஒழிய-வீண் பேச்சுக்கள் ஒழியட்டும் என்கிறார்
நெஞ்சு விநேதயமாக நின்று ஸ்வாமி என்ன நியமனம் என்ன-
உபதேசம் தரினும் நீ என்றும் காழ்த்துக் கைக் கொள்ளாய் என்ன-ஷமிக்க வேணும்
அடியேன் கர்த்தவ்யம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்ய வேணும் என்ன
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு –
அயோக்யா நுசந்தானம் பண்ணாமல்-
எம்பெருமான் நம்மைத் தேடித் திரிவானாக-நாம் விமுகராய் பின் வாங்கலாமா-
அவன் திருவடிகளை வாழ்த்துவதே பிராப்யம் -காண் -என்கிறார்
நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
பதவுரை
நெஞ்சே–ஓ மனமே!
ஆழ் துயரில்–அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான்–என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே-இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றோ;
(என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயேயன்றோ.)
(உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்வித்துக் கொள்ளுகிறீர்’ என்ற நெஞ்சு பதில் சொல்ல
போய் ஒன்று சொல்லி என்–மேன்மேலும் நீயொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ–அது கிடக்கட்டும்.
உபதேசம்தரினும்-(எம்பெருமானுக்கு நம்பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும்
நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய்–நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை;
(உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல)
போய் ஒன்று சொல்லி என்-மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ–அது கிடக்கட்டும்.
(இப்போது முடிவாகச்சொல்கிறேன் கேள்;)-
கண்ணன் தான்–எம்பெருமானது திருவடிகளை
வாழ்த்துவதே–வாழ்த்துவதுதான்
வழக்கு–நியாயம்
(கண்டாய் – முன்னிலையசை)
நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்-நெஞ்சே –
ஒ மனமே-அநாதமான துக்க சாகரத்தில்-என்னைக் கொண்டு போய் தள்ளுவதாக
இடைவிடாமல் நின்று-யத்னம் பண்ணினது நீ அன்றோ
நான் இல்லை நீரே உம்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்-என்று நெஞ்சு பதில் சொல்வதாக கொண்டு-
போ என்று சொல்லி என்-மேன்மேலும் நீ ஓன்று நான் ஓன்று
வாத பிரதிவாதங்கள் போலே சொல்லுவதனால் என்ன பயன் / போ-அது கிடக்கட்டும்
உபதேசம் தரினும்-எம்பெருமானுக்கு நம் பக்கல் வாத்சல்யம் உண்டு என்று உனக்கு நான் உபதேசித்தாலும்-
நீ என்றும் காழ்ந்து கைக் கொள்ளாய்-நீ என் மேல் கோபம் கொண்டு-என்றைக்கும்
அந்த உபதேசத்தைக் குறிக் கொள்ளுகிறாய் இல்லை-
காழ்த்து-– கோபித்தல் உறைத்து பேசுதல்-த்ருடமாக நான் உபதேசித்தாலும் –
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு -எம்பெருமான் திருவடிகளை-வாழ்த்துவதே நியாயம்-
கண்டாய் -முன்னிலை அசை –
இதைக் கேட்ட நெஞ்சானது ஆழ்வாரை நோக்கி “ஓய்! என்ன சொன்னீர்? நானா உம்மை ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றது,
ஸாஹஸமாக நீர் இப்படி சொல்லி விடுவது யுக்தமன்று, ‘திருமாற்கு யாமர் வணக்கமார்‘ என்று சொன்ன பாசுரத்தை
மறுபடியும் ஆலோசித்துப் பார்த்து வார்த்தை சொல்லும்“ என்று சொல்லிற்று.
அது கேட்ட ஆழ்வார், ‘நெஞ்சே‘ எது நீ ப்ரமாதமாகக் கத்துகிறாய், “யத் மநஸா த்யாயதி, தத் வாசா வத்தி“ என்றும்.
மந, பூர்வோ வாகுத்தர.“ என்றும் ‘நெஞ்சு எதை நினைக்கிறதோ அதை வாய் சொல்லக்கடவது‘ என்று தானே சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது,
அனுபவமும் அப்படி தானே யுள்ளது, ஆன பின்பு நீ யில்லாமல் என் வாய் தானே? “திருமாற்கு யாமார் வணக்கமார்“ என்று சொல்லிவிட்டதோ? என்றார்.
இதைக் கேட்ட நெஞ்சானது, “ஆழ்வீர்! நீர் சொன்ன பாசுரத்தை மறுபடியும் சொல்லிப்பாரும்;
“திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னென்சே” என்றன்றோ சொல்லி யிருக்கிறீர்;
நன்னெஞ்சே! என்று என்னை அழைத்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீரே யொழிய உமக்கு நான் யாதொன்றும் சொல்ல வில்லையே;
நீராகவே என்னையழைத்து அயோக்கிதாநூஸந்தாநம் பண்ணிவிட்டு, இப்போது “நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்” என்று
என் தலை மேல் பழி சுமத்துவது என்ன தருமம்!’ என்று சொல்லிற்று.
அது கேட்ட ஆழ்வார், ‘நன்னெஞ்சே! என்று உன்னை நோக்கி நான் சொன்னேனென்பது உண்மையே;
அதை நான் இல்லை செய்ய வரவில்லை; நான் ‘யாமார் வணக்கமார்’ என்ற தப்பாகச் சொன்னால் அதை நீ ஏன் தடுக்கக் கூடாது?’
அதற்கு நீ இசைந்தாயன்றோ; ஆகையாலே “நீயன்றோ ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்” என்று நான் சொல்லுகிறேன்’ என்றார்.
அது கேட்ட நெஞ்சானது, ‘ஆழ்வீர்! பூர்வோத்தர விருத்தமாக நீர் இப்படி வார்த்தை சொல்லுவது உசிதமல்ல;
முதலிலேயே நீர் என்னை யழைத்து “முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று
உம்மோடே கூடிக் காரியம் செய்யும்படி எனக்குக் கட்டளையிட்டீர்; ‘நான் சொன்னால் அதை நீ தடுப்பதற்கென்ன?’ என்று இப்போது சொல்லுகிறீர்;
நான் போகிற வழிக்கே நீ தலையாட்ட வேண்டியதென்று எனக்கு நீர் முன்னாடியே நியமித்து விட்டு
இப்போது அதற்கு விருத்தமாகச் சொல்லுவது யுக்தமன்று’ என்றது.
அது கேட்ட ஆழ்வார், ‘நெஞ்சே! நான் எப்போதும் விருத்தமாக ஒன்றும் சொல்ல மாட்டேன்; “இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று
நான் சொன்னது உண்மையே; என்ன காரியத்திற்கு உன்னை நான் உடன்படச் சொல்லியிருக்கிறேன் தெரியுமா?
“நயப்புடைய நாவீன் தொடை கிளவியுள்” பொதிவோம் நற்பூவைப் பூவீன்றவண்ணன் புகழ் என்று தானே நான் சொன்னது;
பகவத்குணாநுபவத்திற்கு உசாத் துணையா யிருக்கும் படி உனக்கு நியமித்தேனே யொழிய “திருமாற்குயாமார் வணக்கமார்” என்கிற
அயோக்யதாநுஸந்த்திற்கோ உன்னை நான் துணை கூட்டினது?’ என்றார்;
இதைக் கேட்ட நெஞ்சானது, அதற்கும் ஏதோ மறுமொழி கூறுவதாகத் தொடங்க, அவ்வளவிலே ஆழ்வார்
‘இந்த வாத ப்ரதிவாதங்களுக்கு முடிவு எங்கே? இந்த வீணாண கக்ஷி ப்ரகக்ஷி வார்த்தைகளால் என்ன பயன்?’ என்று
நினைத்து நெஞ்சை நோக்கி, ‘போய் ஒன்று சொல்லி என் போ நெஞ்சே! = போதும் போதும்; நான் ஒன்று சொல்ல நீ ஒன்று சொல்ல
இப்படி மேன் மேலும் வாத ப்ரதிவாதங்களை வளர்த்துக் கொண்டு போவதில் என்ன பலன்? இந்த வீண் பேச்சுகள் ஒழியட்டும் என்கிறார்.
அதற்குமேல் நெஞ்சானது ஆழ்வாரை அடி பணிந்து விநயமுடன் நின்று ‘ஸ்வாமிந்! அடியேன்மீது தேவரீர்க்குச் சீற்றம் வேண்டா;
அடியேன் தேவரீர்க்கு நிதேயனான சேஷ பூதன்; ஆன பின்பு அடியேன் தேவரீர்க்கு உகப்பாக எப்படி நடந்து கொள்ள வேணுமோ
அப்படி உததேசித்தருளீர்; அதன்படியே நடந்து கொள்கிறேன்’ என்ன;
அதற்கு ஆழ்வார். “உபதேசம் தரிநம் நீ என்றும் காழ்த்துக் கைக் கொள்ளாய்= நெயஞபுசே! என் உபதேசத்தை நீ லக்ஷியம் பண்ணுகிறாயோ?
இதுவரை உனக்கு எத்தனையோ உத்தேசங்கள் செய்தாயிற்று. ஒன்றையும் நீ கைக் கொண்டாயில்லை; நீர் என்ன எனக்கு உபதேசிக்கிறது?’
என்று சீறி உதறித் தள்ளி விடுகிறாய்” என்று சொல்ல;
அதற்கு நெஞ்சானது ‘ஸ்வாமி! இதுவரை அடியேன் ஒருநாளும் இப்படி அபசாரப்பட்டதில்லை; பட்டிருந்தாலும் க்ஷமிக்கவேணும்;
இப்போது அடியேனுக்குக் கர்த்தவ்யத்தை ஸ்பஷ்டமாக உபதேசித்தருளீர்’ என்று வேண்ட,
அதற்கு உதபேசிக்கிறார் கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு என்று.
நானும் ஒரு நாளும் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி அகலப் பார்க்கலாகாது;
எம்பெருமான் நம்மையே தேடித் திரிவானாயிருக்க. நாம் விமுகராய்ப் பின் வாங்கலாமோ?
அவன் திருவடிகளை வாழ்த்துவதே நமக்கு ப்ராப்பதம் காண் என்றாயிற்று.
காழ்த்து – காழ்த்தலாவது கோபித்தல். உறைப்பாகச் சொல்லுதலுக்கும் பேருண்டு; அப்போது, காழ்த்து உபதேசம் தரினம் –
உனக்க நான் த்ருடமாக உபதேசிமத்தாலும் என்றவாறு. கைக்கொள்ளய் – முன்னிலை யெதிர்மறை வினைமுற்று.
————————————————————
(வழக்கொடு மாறுகொளன்று.) கீழ்ப்பாடடில் “கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு” என்று
திருவுள்ளத்திற்கு உபதேசித்தபடியே எம்பெருமானை வாழ்த்தத் தொடங்கினார்;
வாழ்த்துவதென்றால் விஷயத்தைக் கண்ணாலே நங்கு கண்டு வாழ்த்த வேணுமே;
அப்படிக்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ ஸேவை கிடைக்கவில்லை ஆழ்வார்க்கு;
அது கிடைக்காமல் என்ன வென்று வாழ்த்துகிறதென்று தடுமாறு, எம்பெருமானை நோக்கி
‘இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டியருள வேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.
வழக்கொடு மாறுகொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டு இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-
பதவுரை
வழக்கொடு மாறுகொள் அன்று–(இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று;
(அஃது என்னவெனில்)
அடியார் வேண்ட–(மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்
இழக்கவும் காண்டும்–(மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;
இறைவ–ஸ்வாமீ!
இழப்பு உண்டே–(என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)
யான் வேண்ட–என்னுடைய வேண்டுகோளுக்காக
எம் ஆள் கொண்டு ஆகிலும்–என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால்–எனது கண்களுக்கு
உன்மேனி சாய்–உனது திருமேனியின் ஒளியை
காட்டு–காட்டியருள வேணும்
வழக்கொடு மாறுகொள் அன்று-
இப்போது அடியேன் விஞ்ஞாபிக்கிற விஷயம்-நியாயத்தோடு மாறு பட்டது அன்று–அஃது என் என்னில்-
அடியார் வேண்ட-மேன் மக்களை நோக்கி கீழோர் ஓன்று பிரார்த்தித்தார்கள் ஆகில் –
சேஷ பூதர் சேஷியை அபேஷிக்க-நம் அடியார்கள் அன்றோ /இழக்கவும் காண்டு-மேன்மக்கள் கஷ்டப் பட்டாகிலும்
கார்யம் செய்வதை உலகில் காண்கிறோம் –
உமக்கு இழப்பு உண்டோ-நீர் மெய்யே அடியரோ -என்ன /
இறைவ -ஸ்வாமி -/
இழப்புண்டே–என் வேண்டுகோளை நிறை வேற்றுவதற்காக
நீ கஷ்டப் பட வேண்டியது ஏதேனும் உண்டோ-ஒன்றும் இல்லை –
எம்மாட் கொண்டாகிலும் –
எம்மை அடிமை கொண்டாகிலும்-என்னை அடிமை நீரே கொண்ட பின்
எத்தைக் கொண்டு என்ன / யான் வேண்ட-என்னுடைய வேண்டு கோளுக்காக –
ரஷ்ய அபேஷிதம் ப்ரதீஷதே-வாயாலே ஸ்வாமி இறை என்றேனே-உகந்து உம்முடைய அபேஷிதம் என்ன –
என் கண்கள் தம்மாற் -எனது கண்களுக்கு -கண்கள் தமக்கு /
காட்டுன் மேனிச்சாய் -உனது திரு மேனி ஒளியைக் காட்டி அருள வேணும்-
வழக்கொடுமாறுகொளன்று- அடியேன் பிரார்த்திக்கிற விஷயம் வழக்கோடு மாறுகொண்டதன்று; வழக்காவது நியாயம்;
நியாயத்தோடு மாறுபட்டதன்று; நியாத்திற்கு ஒவ்வாததை அடியேன் விண்ணப்பம் செய்கின்றிலேன்;
நியாயமானதையே சொல்ல வருகின்றேனென்றபடி.
வார்த்தை சொல்லத் தொடங்கும்போதே இன்ன விஷயமென்று சொல்லாமலே
‘அநியாயமாக நான் ஒன்றும் சொல்லவரவில்லை’ என்று ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான், ஆழ்வீர்! நீர் சொல்வது நியாயமோ அநியாயமோ விஷயத்தைக் கேட்டன்றோ நான் தெரிந்து கொள்ள வேண்டும்;
சொல்ல நினைத்த விஷயத்தைச் சொல்லிக் காணீர்’ என்ன;
அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும் என்கிறார். அதாவது-
சேஷபூதரா யுள்ளவர்கள் சேஷியை நோக்கி ஏதாவது அபேக்ஷித்தார்களாகில் சேஷியானவன் தான் நஷ்டப்பட்டாகிலும்
சேஷ பூதர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றக் காணா நின்றோம் உலகத்தில்- என்றபடி
(அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும்.)
‘நம்முடைய அடியார்களன்றோ நம்மை வேண்டுகிறார்கள்; இவர்களுக்கு நாம் உயிரை விட்டாகிலும் பரிந்து காரியம் செய்ய வேண்டாவோ’
என்று நெஞ்சு கனிந்து, பொருளையோ உடலையோ உயிரையோ எதையேனும் இழப்பதற்கும் இசைந்து
தங்கள் பேறாகக் காரியஞ் செய்யக் காண்கிறோமிறே என்கை.
இப்படி ஆழ்வார் சொன்னதைக் கேட்ட எம்பெருமான்,
‘ஆழ்வீர்! நன்றாகச் சொன்னீர்; உமக்காக என்னை உயிரிழக்கச் சொல்லுகிறீரோ இப்போது;
வார்த்தை அழகாயிருக்கிறது!’ என்றான்.
எம்பெருமான் இப்படி திருவுள்ளங் கன்றினாற்போல் அருளிச் செய்வதைக் கேட்ட ஆழ்வார் அநுதபித்து
இறைவ! இழப்புண்டே? என்கிறார்.
அதாவது- உலகில் நடக்கிறபடியை ஏதோ நான் எடுத்துக் காட்டினேனே யொழிய,
தேவரீருக்கு இழவு உண்டாக வேணுமென்று அடியேன் சொன்னேன் அல்லேன் ; தேவரீர் எதையும் இழக்க வேண்டா- என்கை.
இது கேட்ட எம்பெருமான், “ஆழ்வீர்! உலகத்தில் தலைவராயுள்ளவர்கள் அடியார் விஷயத்தில் உயிர் முதலியவற்றை இழந்தாகிலும்
காரியம் செய்கிறார்களென்று எடுத்துக் காட்டின் உம்முடைய கருத்து எனக்குத் தெரியாமை யில்லை; நீர் மறைப்பதில் என்ன பயன்?
உம்முடைய எண்ணப்படி நான் எதை வேணுமானாலும் இழந்து காரியம் செய்யத் தடையில்லை;
“அடியார் வேண்ட இழக்கவுங்காண்டும்” என்று நீர் சொல்லி யிருக்கிறீர்; நீர் மெய்யே அடியாராகிலன்றோ நான் காரியம் செய்வேன்;
நீர் அடியவர் தானோ?’ என்று கேட்டான்.
அதற்கு ஆழ்வார் எம் ஆட்கொண்டாகிலும் என்கிறார்.
நான் அடியவனோ அல்லேனோவென்று உனக்கு ஸந்தேஹமிருக்குமானால்
நீயே என்னை அடியவனாக்கிக் கொண்டாவது காரியம் செய்ய வேணும் என்கை.
எதைக் கொண்டு உம்மை நான் அடியவராக்கிக் கொள்வதென்று எம்பெருமான் கேட்க;
அதற்கு ஆழ்வார் யான் வேண்ட என்கிறார்.
ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது; ரக்ஷ்யனுடைய அபேக்ஷயை மாத்திரமன்றோ ரக்ஷகனான நீ எதிர்பார்த்திருப்பது;
நான் இப்போது அபேக்ஷிக்கிறேனன்றோ; இவ்வளவையே கொண்டு காரியம் செய்யலாமே என் வாயால் உன்னை இறைவ! என்று சொன்னேனே;
என்னுடைய அடிமைக்கு இசைந்தது தானே உன்னை இறைவனென்றேன்- என்றார்.
அது கேட்ட எம்பெருமான் ‘இந்த விபூதியில் இவ்வளவு வார்த்தை சொல்லுவார் ஆர்?’ என்று ஆச்சரியப்பட்டுத் திருவுள்ளமுவந்து
‘ஆழ்வீர்! உமக்கு என்னால் ஆக வேண்டிய காரியம் என்ன? சொல்லும்’ என்ன;
என் கண்கள் தம்மால் காட்டு உன்மேனிச்சாய் என்கிறார்.
உனது திருமேனியின் சாயலை என் கண்களுக்குக் காட்ட வேணுமென்னுமிவ்வளவே நான் வேண்டுவது என்றாராயிற்று.
கண்கள் தம்மால்- உருபு மயக்கம்; கண்கள் தமக்கு என்க.
அன்றி, மூன்றாம் வேற்றுமைப் பொருளைக் கொண்டு,
உன் மேனிச்சாயை என் கண்களால் நான் காணும்படி செய் என்றுரைக்கவுமாம்.
சாய் = (சாயா) என்ற வடசொல் சாயை எனத் திரிந்து சாய் எனச் சிதைந்தது.
இப் பாட்டுக்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்கியானத்தில் சிறிது வேறுவகையான பொருள் கொள்ளப்பட்டிருப்பது போல் தெரிகிறது.
அப்பொருளை வல்லார் வாய்க் கேட்டுணர்க.
—————————————————————–
(சாயற்கரியானை.) கீழ்ப் பாட்டில் “காட்டு உன் மேனிச் சாய்” என்று வடிவழகைக் காட்டுமாறு பிரார்த்தித்தார்;
அப்படியே இவர்க்கு வடிவழகைச் சிறிது காட்டுவோமென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினான்;
அஃதறிந்த ஆழ்வார் ‘அயோக்யனாகிய நான் பரம் பொருளை அநுபவிக்கப் பார்ப்பது தகுமோ?’ என்று பழையபடியே நைச்சியம் சிந்தித்து
‘நெஞ்சே!’ பகவத் விஷயத்தை நீ அநுபவிக்கப் பார்ப்பது அதனைக் கெடுக்கிறபடி யன்றோ;
பண்டு பூதனை யென்பவள் அவ்வெம்பெருமானைக் கிட்டி அவனைக் கெடுக்கப் பார்த்ததை ஒக்குமன்றோ உனது நினைவும்;
அந்தப் பூதனையொடு உனக்கும் உறவுறை உண்டு போலும்’ என்கிறார்.
ஐந்தாம் பாட்டிலும் பூதனை விருத்தாந்தம் உண்டே–
சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-
பதவுரை
நெஞ்சே–ஓ மனமே!
பேயார்–பூதனையானவள்,
சாயல் கரியானை–நிறத்தால் கரியனான கண்ணபிரானை
உன் அறியார் ஆய்–உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
(அப்பெருமானைக் கொன்றுவிட நினைத்து)
பேயார் ஆய்–அறிவுகெட்டவளாய்
முலை கொடுத்தார்–(விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்;
நீ ஆர்–அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆகவேண்டும்?
(இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;)
தேம்பு ஊண் சுவைத்து–ஆத்மா கெட்டுப்போம்படியான சப்தாதி விஷய போகங்களை நீ அநுபவித்து
ஊன் அறிந்து அறிந்தும்–(அதனால்) ஊனமடைந்திருக்கிறாயென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும்
போய்–நம்முடைய தாழ்வுக்குத் தகாததான சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய்
தீ வினை ஆம்பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி–அநர்த்தத்தை விளைக்கவல்ல பாம்பின் வாயிலே கை வீட்டுவாரைப் போலலே
பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே.
சாயல் கரியானை-நிறத்தால் கரியனான கண்ணபிரானை /
உள்ளறியாராய் -உள்ளே புகுந்து அனுபவிக்க அறியாதவளாய்-
இவன் சாஷாத் பரம புருஷன் நாம் யார் இவனை அழிக்க முயல்வது -உண்மையைத் தெரிந்து கொள்ளாதவளாய் என்றுமாம்
நெஞ்சே –ஒ மனமே -/ பேயார் –மீண்டும் பேயராய்-என்றது ஞான ஹீனராய் –
அறிவு கெட்டவளாய் -பெருமை தோன்ற பேயார்
உவப்பிலும் உயர்விலும் சிறப்பினும் செறலிலும் இழிப்பிலும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூல் சூத்ரம்
கோபத்தினால் இந்த இழிவு செயலை விளக்க ஆழ்வார் உயர் திணையில் அருளிச் செய்கிறார்/
முலை கொடுத்தார் –விஷம் தடவின முலையை-உண்ணக் கொடுத்தாள்
பேயராய்--நீ யார் -அவளுக்கு உறவு முறையில் நீ என்ன ஆகவேண்டும்-
அவளுக்கு முன் பிறந்தாயோ-பின் பிறந்தாயோ –
இப்படி கேட்பது -/ தேம பூண் சுவைத்த-தேம்பு ஊண் சுவைத்து-ஆத்மா கெட்டுப் போம்படியான-
சப்தாதி விஷய போகங்களை நீ அனுபவித்து –ஊன் அறிந்து அறிந்தும் –அதனால் ஊனம் அடைந்து இருக்கிறாய்
என்பதை நன்றாக நீ அறிந்து இருந்தும் –
போய்த்-தன்னுடைய தாழ்வுக்கு மிகவும் தகாததான சிறந்த-பகவத் விஷயத்தை அனுபவிப்பதே போந்து / தீ வினையாம் பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி –அனர்த்தத்தை விளைக்க வல்ல பாம்பின் வாயிலே
கை நீட்டுவாரைப் போலே-பகவத் அனுபவம் பண்ணி-முடியப் பார்க்கிறாயே
அயோக்யர் நாம் அவனை அனுபவிக்கப் பார்ப்பது அவனுக்கு அவத்யம்
நமக்கும் ஸ்வரூப நாசம் -உணரானால்-அதனால் பூதனைக்கு உறவாக இருக்க வேண்டும் என்கிறார்-
பூதனை கார்யத்தால் அவனுக்கு ஒன்றும் ஆகாதது போலே
இதுவும் அதி சங்கை
பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே-பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை -இறே-
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய சூரிகளோடு ஒக்கும் இறே
பாம்பின் வாய் என்னாமல் பாம்பர் வாய் -என்றது திணை வழுவமைதி
ஆர் -விகுதி கொடுமையின் கனத்தைக் காட்டும்
பார்த்தி முன்னிலை ஒருமை வினைமுற்று
இரா ஈற்றான இந்த வெண்பா முடிவு சந்தஸ பிரயோகம் போலே போற்றத் தக்கது-
பேயார் சாயால் கரியானை உள்ளறியாராய் பேயராய் முலை கொடுத்தார் = பேய்ச்சி முலை கொடுத்த வரலாறு ஐந்தாம் பாட்டினுரையிற் காணத்தக்கது.
“பேய் முலை கொடுத்தது” என்றாவது, “பேய்ச்சி முலை கொடுத்தாள்” என்றாவது சொல்ல வேண்டிருக்க,
பேயார் என்றும் கொடுத்தார் என்றும் பெருமை தோற்றக் கூறியது என்? எனில்;
“உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்புனும் பால்திணை இழுக்கினுமியல்பே” என்பது நன்னூற் சூத்திரம்.
ஆழ்வார்க்கு அப் பேய்ச்சியினிடத்துள்ள கோபத்தினாலும் அவளுடைய இழிவை விளக்க வேண்டியும் பேயார் என்றாரென்க;
பெருமைப்படுத்திக் கூறினாரல்லர்.
சாயால் கரியானை என்றது- கரிய சாயலை யுடையனான கண்ணபிரானை என்றபடி. சாய் -(சாயா) என்ற வடசொற் சிதைவு;
நிறம் எனப்பொருள்படுமிங்கு.
உள் அறியாராய் = இதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்;
நிறமழகிய பெருமானை நாம் கிட்டி நல்ல எண்ணத்துடன் பக்தியைச் செலுத்தி உள்ளூற அநுபவிக்கலாமென்று ஆசைப்படாதவளாய் என்னுதல்;
(அன்றி.)
உள் அறியாராய் = உண்மையைத் தெரிந்து கொள்ளாதவளாய்; ‘இவன் ஸாக்ஷாத் பரமபுருஷன்;
இவனைத் தொலைக்க நம்மாலாகாது; நாம் தொலைந்திடுவோமேயன்றி இவனைத் தொலைக்க நாமோர்?’ என்று
உண்மையுணராதவளாய் என்னுதல்.
பேயராய் முலை கொடுத்தார் = விவேகமற்றவளாய் முலைகொடுக்கிற வியாஜத்தாலே அப் பெருமானை அழிக்கப்பார்த்தாள் என்கை.
“உள்ளறியாராய்” என்றவளவே போதுமாயிருக்க, மீண்டும் “பேயராய்” என்றது அவளுடைய ஞான ஹீனத் தன்மையை நன்கு விளக்குதற்காகவாம்.
இங்ஙனே பூதனை செய்த செயலைச் சொன்னவுடனே “நீ யார்?” என் கையாலே ‘அந்தப் பூதனைக்கு நீ என்ன ஆக வேண்டும்?
அவளுக்கு நீ முன்னே பிறந்தாயோ? பின்னே பிறந்தாயோ?’ என்று கேட்பதாகப் பொருள்படுகின்றது.
நெஞ்சை நோக்கி நீ யார்? என்று கேட்ட ஆழ்வாரைப் பார்த்து அந்த நெஞ்சானது,
‘ஆழ்வீர்! படுபாவியான பூதனை செய்தாற்போலே நான் என்ன கொடுந் தொழில் செய்து விட்டேன்?
எனக்கு அவளை ஒப்புக் கூற வேண்டிய காரணம் யாது? சொல்லீர்” என்று கேட்க; அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார்
‘தேம்பூண் சுவைத்து ஊனறிந்தறிந்தும் தீவினையாம் பாம்பார்வாய் கைநீட்டல் பார்த்தி’ என்று.
ஊண் என்று இவ்விடத்தில், விஷயாந்தரங்களைச் சொல்லுகிறது. உண்ணப்படுவது ஊண்;
சப்தாதி விஷயங்கள் செவி வாய் கண் முதலிய இந்திரியங்களினால் உண்ணப்படுதல் (அநுபவிக்கப்படுதல்) பற்றி அவை ஊணெனப்படும்.
தேம்புதலாவது நாசமடைதல். தேம்பூண் என்றது- ஆத்மா நசிக்கும்படியான விஷயாந்தரங்கள் என்றபடியாயிற்று.
பகவத் விஷயத்தை அநுபவித்தாலே ஆத்மா ஸத்தை பெறுவதற்கு ஹேது வென்றும்,
மற்ற விஷயங்களை அநுபவித்தல் ஆத்மா நாசமடைவதற்கு ஹேதுவென்றும் உணர்க.
இப்படிப்பட்ட விஷயங்களைச் சுவைக்கையானவது இனிதாக அநுபவித்தல். அப்படி அநுபவிப்பதனாலே உண்டாவது ஊன்;
ஊநம் என்ற வடசொல் ஊனென்று கிடக்கிறது; குறைவு என்று பொருள்;
நெடு நாளாக விஷயாந்தரங்களை அநுபவித்து வருவதனாலே நீ மிகவும் குறைவு அடைந்துவிட்டாய்; (அதாவது) அயோக்யனாய் விட்டாய்;
இந்த அயோக்யதை உனக்குத் தெரியாமையில்லை; நன்கு தெரிந்திருந்தும், உன்னுடைய நிலைமைக்குத் தகாததொரு தப்புக் காரியத்தை
நீ செய்ய நினைப்பது இன்னமும் கெடுதியை விளைத்துக் கொள்ளப் பாம்பின் வாயிலே கை நீட்ட முயல்வது போலிரா நின்றது.
அயோக்யரான நமக்கு எம்பெருமானை யநுபவிக்க ஆசை பிறப்பது தப்பு; அது அப்பெருமானுக்கு அவத்யம்;
நமக்கும் ஸ்வரூப நாசம்- என்று தெளிந்து ஒதுங்கி யிருக்கவேண்டி யிருந்தும் நீ பகவதநுபவத்திற்கு நாக்கை நீட்டிச் செல்லுகிறாயே!
இதை விட வேறு தீவினை யுண்டோ? பாம்புபோலே அநார்த்தத்தை விளைக்க வல்ல தீவினையன்றோ இது.
இந்தப் பாம்பின் வாயிலே கை வைக்கவன்றோ நீ பார்ப்பது. ஆகையாலே பூதனைக்கு நீ உறவாகவே யிருக்க வேண்டுமன்றோ.
பூதனையானவள் தனக்குக் கேடு வரும்படியான காரியத்தை எப்படிச் செய்தாளோ,
அப்படி. நீயும் உனக்குக் கெடுதி விளைவிக்கும்படியான காரியத்தைச் செய்யப் பார்க்கிறாயாகையாலே பூதனையோடு ஒப்பாயன்றோ நீ…
பூதனையின் காரியத்தால் எம்பெருமானுக்கு யாதொரு கேடும் விளையாதது போல,
ஆழ்வாருடைய பகவதநுபவவிருப்பத்தாலும் பகவானுக்கு யாதொரு கெடுதியும் விளையமாட்டாது;
இவருடைய அதிசங்கை மாத்திரமேயுள்ளது- என்பதும் இதில் குறிப்பிடப்படுகிறது.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி:- “பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாளன்றே; பேயாகையாலே வஞ்சித்தாளத்தனையாயிறே;
உன்னைப் பார்த்தால் பூதனை நித்யஸூரிகளோடொக்குமிறே.”
“பாம்பின்வாய்” என்னாமல் பாம்பார் வாய் என்றது திணைவழுவமைதி; இங்கு ஆர் விகுதி கொடுமையின் கனத்தைக் காட்டும்.
பார்த்தி = முன்னிலை யொருமை வினைமுற்று.
——————————————————————-
(பார்த்தோரெதிரிதா.) கீழ்ப் பாட்டுக்கு எதிர்த் தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘
ஹேயரான நாம் பகவானை அநுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப்பாட்டில்;
இப்பாட்டிலோ வென்னில்;
எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது பாவங்களெல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்;
அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளைய மாட்டாது என்கிறார்.
பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண் வளர்வார் சீர்–15-
பதவுரை
நெஞ்சே–ஓ மனமே!
ஓதம்–கடலானது
ஆர்த்து–கோஷித்துக்கொண்டு
தம்மேனி தாள்–தம்முடைய திருமேனியையும் திருவடியையும்
தடவ–(அலையாகிற கையினாலே) தடவும்படியாக
தாம் கிடந்து–(அக்கடலில்) பள்ளி கொண்டருளி
தம்முடைய செம்மேனி கண் வளர் வார்–தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப்பெறுகின்றவரான பெருமாளுடைய
சீர்–திருக்குணங்களை,
படு துயரம் பேர்த்து ஓத–கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால்
பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை–அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய்விடுமென்பதில்லை;
எதிரிதா பார்த்து ஓர்–(இவ்விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்துகொள்.
ஓதம் ஆர்த்து -தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து-தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீரை-நெஞ்சே –
எதிர் எதிரா பார்த்து ஓர்-படு துயரம் பேர்த்து ஓதப்
பீடு அழிவாம் பேச்சில்லை –என்று அந்வயம்
கங்கையில் நீராடினால்-நாயின் பாபங்கள் தீரும் ஒழிய-கங்கையின் பெருமையில் ஒன்றுமே குறையாதே-அது போலே
உறங்குவான் போலே யோகு செய்த பெருமானை -நம்முடைய ரஷணத்துக்கு சிந்தனை பண்ணிக் கொண்டு இருப்பவனை-
அவனுடைய கல்யாண குணங்களை பேசி பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டாவோ-
எதிர் எதிரா பார்த்து -ஓர்-இவ்விஷயத்தை கண் எதிரே நிற்பதாகக் கொண்டு தெரிந்து கொள் –
நெஞ்சே-ஒ மனமே -/ படு துயரம் பேர்த்து ஓதப்-கொடிய துக்கங்கள் தீரும்படி
நாம் பேசுவதனால் -சம்சார துக்கங்களை பேர்த்து உதறி அவனுடைய கல்யாண குணங்களை ஆனந்தமாக பேச-
தீருவதற்காக -என்றுமாம் –பேர்த்து- எச்சம் திரிபாக கொண்டு
பீடு அழிவாம் பேச்சில்லை —அவனுடைய பெருமைக்கு-அழிவு உண்டாய் விடும் எனபது இல்லை -/
ஆர்த்தோதம் தம்மேனி தாள் தடவத் -ஆர்த்து ஓதம் தம்மேனி தாள் தடவ-
பெரிய கோஷத்துடன்-தம்முடைய திரு மேனியையும்-திருவடிகளையும்-அலையாகிற கைகளால் தடவும் படியாக /
தாம் கிடந்து-தாம் பள்ளி கொண்டு அருளி –
தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார்-தம்முடைய செந்நிறமான திருக் கண்கள்
வளரப் பெருகின்றவரான-பெருமாளுடைய -/ சீர் –திருக் கல்யாண குணங்களை –
இப்படி எதிர் எதிராக பாசுரங்கள்-நம்முடைய தாழ்ச்சியைப் பார்க்கும் இடத்து அயோக்யானுசந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும்
அவனுடைய விலஷணமான போக்யமான குணங்களை பார்க்கும் இடத்து
நம் வாயாலும் பேசி ஆனந்திப்போம் என்பதும்-மாறி மாறி வரும்-
ஒன்றோடு ஓன்று விருத்தம் இல்லை –
ஓதம் ஆர்த்து தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீரை நெஞ்சே! எதிரிதாப் பார்த்து ஓர்;
படு துயரம் பேர்த்து ஒதப்பீடு அழிவாம் பேச்சு இல்லை என்றும் அந்வயம்.
கடலானது ஆரவாரஞ் செய்துகொண்டு (தனது அலைகளாகிற கைகளாலே) திருவடிகளைத் தடவப்பெற்று இனிதாகத்
திருக்கண் வளர்ந்தருளாநின்ற பெருமானுடைய திருக் கல்யானகுணங்களை நெஞ்சே!
நம் கண்முன்னே நிற்பவனாகக் கொண்டு அநுஸந்தானம் செய்;
கங்கையில் நாய் நீராடினால் நாயின் பாவங்கள் தொலையுமே யன்றி, கங்கைக்கு உள்ள பெருமை குறைந்து விடாது;
அதுபோல, எம்பெருமானுடைய குணங்களை நாம் பேச, நமது பாவங்கள் தொலையுமே யன்றி, அவனுடைய பெருமைக்குக் குறைவு
நேரிடுமென்கிற பேச்சுக்கே இடமில்லை காண்;
திருப்பாற்கடலிலே சயனித்துக்கொண்டு . “உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை” (திருவாய்மொழி 5-4. 11) என்கிறபடியே
நம்முயை ரக்ஷணத்தையே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற பெருமானுடைய குணங்களை நாம் பேசி
நமது பாவங்களைப் பாற்றிக் கொள்ள வேண்டாவோ? அவனுடைய குணங்கள் நம்மால் மறக்க முடியுமோ?
கண்ணெதிரே நிற்பன போல் தோன்றுகின்றனவன்றோ என்றாராயிற்று.
எதிரிதா = எதிரில் உள்ளது எதிரிது. ஆ – ஆக என்பதன் குறை; எதிரிதாக என்றபடி.
படு துயரம் பேர்த்து ஓத = ஸம்ஸாரத்திலே நாம் படுகிற துக்கங்களை யெல்லாம் உதறிவிட்டு ஆநந்தமாக அக் குணங்களையே
பேசுகிற பக்ஷத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்;
‘நமது துக்கங்கள் தீருவதற்காக’ என்று பொருள் கொள்ளில், போர்த்து என்பதை எச்சத் திரிபாகக் கொள்ள வேண்டும்; போ என்றபடி.
பீடு அழி வுஆம் பேச்சு இல்லை = பீடு என்ற பெருமைக்குப் பெயர்; உயர்ந்தோருடைய குணங்களைத் தாழ்ந்தோர் பேசினால்
உயர்ந்தோருடைய உயர்த்திற்கு அழிவு உண்டாகுமோவென்று சங்கிக்கவேண்டிய பிரஸக்தியில்லை யென்றபடி.
செம்மேனிக்கண் = மேனி என்று இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. செந்தாமரையின் நிறம் போன்ற நிறத்தையுடைய திருக்கண் என்றவாறு.
நித்திரை செய்வதைக் கண்வளர்தலென்பர். சீர் என்னுஞ் சொல் பால்பகா அஃறிணைப் பெயராதலால் குணங்கள் என்று பன்மைப் பொருள்படும்;
இரண்டாம் வேற்றுமைத் தொகை யாதலால் குணங்களை என்க.
கீழ்ப்பாட்டில் ‘பகவதநுபவத்திற்கு நாம் அயோக்யர்’ என்று கருதி நெஞ்சைச் சீறி உரைத்தவர்
இப்பாட்டில் “சீர் ஓதப்பீடழிவாம் பேச்சில்லை” என்று உரைத்தல் கூடுமோ? என்று சங்கிக்க வேண்டா;
தம்முடைய தாழ்ச்சியை நோக்குமிடத்து அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும்,
அவனுடைய விலக்ஷணமாய் போக்யமான திருக் குணங்களை நோக்குமிடத்து
‘நம் வாயாலும் இக் குணங்களைச் சிறிது பேசி ஆநந்திப்போம்’ என்று ஒருப்படுவதும்
ஆக இவ்விரண்டும் மாறி மாறி வருமென்றும் இவை ஒன்றோடொன்று விருத்தமல்ல என்றும் கீழே பன்னி யுரைத்தோம்.
————————————————————————
(சீராற் பிறந்து.) “சீர் ஓதப் பீடழிவாம் பேச்சில்லை” என்றாரே கீழ்ப் பாட்டில்;
அப்படியே அவனுடைய திருக் குணங்களை ஓதத் தொடங்குகிறார்;
ஸ்ரீவாமநாவதார குணத்திலீடுபட்டு அருளிச் செய்யும் பாசுரம் இது.
சீர் ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை என்றார் கீழில்-இப்பொழுது சீர் பாடத் தொடங்குகிறார் –
ஸ்ரீ வாமனாவதாரத்தில் குணத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
யாசகனாக வர வேண்டுமோ-வாமனன் -குள்ள வடிவு கொண்டு வர வேண்டுமோ-
குள்ளன் என்றே திருநாமம் கொள்ள வேண்டுமோ-ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் போலே
சீராகப் பிறந்து சிறப்பாக வளர்ந்தவன் அன்றோ நீ –
சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-
பதவுரை
பேராளா–‘மஹாநுபாவனான பெருமானே!
சீரால் பிறந்து சிறப்பால் வளராது–சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல்
பேர் வாமன் ஆகாக்கால்–திருநாமம் வமானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால்
மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி-உன்னாலே மார்பால் அணையப்பட்டும் வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப்படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப்பூமியானது.
நீர் ஏற்பு அரிதே–தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப்பெற முடியாதோ?’
யாம் அறிய–இவ்விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
நீ சூழ்ந்து சொல்லு–நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.
சீரால் பிறந்து சிறப்பால் வளராது–
சிறப்புடனே பிறப்பதையும்-சிறப்புடனே வளர்வதையும் செய்யாமல்
சீரும் சிறப்பும் ஒரே பொருள்-
சீரால் சிறப்பால் பிறந்து வளராது என்றும் அந்வயம் கொண்டு-மிக்க சீருடன் பிறந்து வளர்ந்து
வளராது -இதில் உள்ள எதிர்மறை பிறந்து என்பதிலும் கொண்டு பிறவாது
சீரால் சிறப்பால் பிறவாமலும் வளராமலும்-வாமனன் ஆக ஆனாயே அப்படி ஆகாமல் போனால் -என்றபடி
பேர் வாமன் ஆக்காக்கால்-
திரு நாமமும் வாமனன் என்று-வைத்து கொள்ளாமல் இருந்தக்கால்
பேர் பெரிய -என்றுமாம்-
பெரிய வாமனன் -இதற்க்கு மேற்பட்ட குள்ளன் இல்லை
பேராளா –
1-மஹாநுபாவனான பெருமானே -பெருமை பொருந்தியவனே–
2–பல திரு நாமங்களை உடையவனே -என்றுமாம்
மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி-
உன்னாலே மார்பால் அணையப்பட்டும்-வயிற்றிலே வைக்கப்பட்டும்
பின்பு வெளிப்படுத்தப் பட்டும்-இப்படி ஸ்வ அபிமானமாய் இருந்த
இந்த பூமியானது –
ஸ்ரீ பூமிப் பிராட்டி திவ்ய மகிஷி என்பதால் மார்பாரப் புல்கி
மஹா வராஹத்தில் அண்ட பித்தியில் ஒட்டி கிடந்த பூமியை
கோட்டால் குத்தி எடுத்த பொழுது மார்பார புல்கி என்றுமாம்
நீர் ஏற்பு அரிதே-சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –
கூரத் ஆழ்வான் இந்த பாசுரக் கருத்தை ஸ்ரீ ஸூந்தர பாஹூ ஸ்த்வத்தில்
ஷிதிரியம் ஜனி சம்ஹ்ருதி பாலநை நிகிரண உத்கிரணோத்தரனை ரபி
வநகிரீச தவைவ சதீ கதம் வரத வாமன பிஷண மர்ஹதி -என்று
இந்த பூமியை படைப்பவனும் நீ–துடைப்பவனும் நீ-காப்பவனும் நீ
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனும் நீ
பிறகு வெளி நாடு காண புறப்பட விட்டவனும் நீ
ஆகையால் உனக்கே உடைமையாய் இரா நின்ற பூமியை
நீ பெற வேண்டி பிச்சை பெற்றது எங்கனே
உனக்கு திரு நாமங்கள் பலவாக இருக்க-
இந்த பெரிய வாமனன் மிகப் பெரிய குள்ளன் திரு நாமம் வைத்துக் கொள்ள வேணுமோ -என்றபடி-
எல்லா விதங்களாலும் உனக்கே அஸாதாரணமாக உரிமைப்பட்டதான இப் பூமியை நீ மாவலியிடமிருந்து பெற வேண்டில்,
அதற்காக யாசகனாக வர வேண்டுமோ? எல்லோரும் கண்டு ஏசும்படியான குள்ள வடிவமெடுத்துக் கொள்ள வேண்டுமோ?
குள்ளனென்றே திருநாமமும் தரிக்க வேண்டுமோ? ஸ்ரீராமனாகப் பிறந்து வளர்ந்த காலத்தும் ஸ்ரீகிருஷ்ணனாகப் பிறந்து வளர்ந்த
காலத்தும் எவ்வளவோ சீராகப் பிறந்து எவ்வளவோ சிறப்பாக வளர்ந்தவனன்றோ நீ;
அப்படியே பிறந்து வளராமலும், ஸ்ரீராமன் ஸ்ரீக்ருஷ்ணன் என்றாற்போலே சிறந்த திருநாமங்களை இட்டுக் கொள்ளாமலும்,
சீரும் சிறப்புமின்றிப் பிறந்து வளர்ந்து பரிஹாஸத்துக்கு ஆஸ்பதமான வாமநனென்ற நாமத்தையும் வஹித்து நின்றது. ஏதுக்கு?
இப்படியானால் நான் பூமியை ஸம்பாதித்துக் கொள்ள முடியுமென்றும் இல்லாவிட்டால் முடியாதென்றும் திருவுள்ளமோ? என்கிறார்.
இந்தப் பூமி உனக்கே உரிமைப்பட்டதென்பதை மார்பாரப் புல்கி நீ உண்டுமிழ்ந்த என்ற விசேஷணத்தால் விளங்குகின்றார்.
மார்பரப் புல்கி என்றது- பூமிப்பிராட்டி திவ்ய மஹிஷியாயிருப்பது பற்றி யென்க.
பண்டு அண்டபித்தியில் ஒட்டிக் கிடந்த பூமியை,
வராஹாவதாரம் பண்ணிக் கோட்டாற்குத்தி ஒட்டு விடுவித்தெடுத்தபோது மார்பாரப் புல்கி யெடுத்தானென்னவுமாம்.
இப்பாசுரத்தின் தாம்பரியத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ஸுந்தரபஹுஸ்தவத்தில் அருளிச் செய்துள்ள ச்லோகம்
(க்ஷிதிரியம் ஜநிஸம்ஹருதி பாலகை: நிகிரணோத்கிரணோத்தரனை ரபி- வநகிரீச! தவைவ ஸதீ கதம் வரத வாமந! பிக்ஷணமர் ஹதி?) என்பதாம்;
இப்பூமியைப் படைப்பவனும் நீ; துடைப்பவனும் நீ; காப்பவனும் நீ; பிரளயத்தில் திருவயிற்றில் வைத்து நோக்குபவனும் நீ;
பிறகு வெளிநாடு காணப் புறப்பட விடுமவனும் நீ; ஆகையாலே உனக்கே உடைமையா யிராநின்ற இந்தப் பூமியை
நீ பெற வேண்டிப் பிச்சை யெடுத்தது எங்ஙனே? என்று திருமாலிருஞ்சோலையழகரை நோக்கி விண்ணப்பஞ் செய்த ச்லோகம் இது.
அதிமாநுஷஸ்தவத்திலும் இங்ஙனே ஒரு ச்லோக முண்டு; அதாவது-
த்வந்நிர்மிதா ஜடாகாச தவ த்ரிலோகீ கிம் பிக்ஷணாதியம்ருமே பவதா துராபா?
மத்யே ததாது நவிசக்ரமிஷேஜகச் சேத் த்வத்விக்ரமை: கதமிவ ச்ருதி ரஞ்சி தாஸ்யாத்” என்பதாம்.
கீழ் எடுத்துக் காட்டிய ஸுந்தரபாஹு ஸ்தவச்லோகத்தின் பொருளை இந்த ச்லோகத்தில் பூர்வார்த்தத்தில் அடக்கி,
உத்தரார்த்தத்தால் அதற்கு ஸமாதாநமருளிச் செய்கிறார்.
குள்ளவடிவைக் கொண்டு முதலில் யாசித்துப் பிறகு பெரிய வடிவெடுத்து த்ரிவிக்ரமனாக நீ வளர்ந்திராவிடில்
உன்னடைய விக்ரமங்களாலே வேதம் எப்படி அலங்கரிக்கப்படும்;
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய” என்றும்
“த்ரிர் தேவ; ப்ருதி வீமேஷ ஏதாம்” என்றும்
உலகளந்த சரிகையைப் பேசி வேதம் புனிதமாவதற்காகவே நீ வாமநாவதாரம் செய்வதே யன்றி,
வேறு வழியால் பூமியை மாவலியிடத்தில் நின்றும் மீட்டுக்கொள்ள முடியாமல் செய்தாயல்லை;
பெரும்பாலும் பகவத் பக்தர்களுக்கு உபயோகமில்லாத விஷயங்களையே
(யஜ்ஞயாகம் முதலிய காம்ய கருமங்களையே) விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டு போகிற வேதத்தில் இந்த பவித்திரமான
சரித்திரத்தைப் பற்றின பேச்சு வருவதற்காகவே நீ வாமனனானாய் போலும் என்கை.
வேதத்தில் த்ரிவிக்ரமாவதாரத்தைப் பற்றிச் சொல்லிற்றேயொழிய வாமாவதாரத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே;
வாமநனாகப் பிறந்து பிச்சை யெடுப்பானேன் என்ற கேள்விக்கு இது எங்ஙனே ஸமாதாநமாகுமென்னில்; .
“நீளவான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண், தாளாலளவிட்ட” ( பெரிய திருமொழி 11-7-2) என்ற திருமங்கையாழ்வாரருளிச் செயலில்
“நீள்வான் குறளுருவாய்” என்று- த்ரிவிக்ரமனாக நீள்வதற்காகவே குறளுருவெடுத்ததாகச் சொல்லுகையாலே
வாமாநாவதாரம் திர்விக்ரமாவாதாரத்திற்கு சேஷ பூதமாயிற்றாதலால் இது ஸமாதானமாகக் குறையில்லையென்க.
“பேர்வாமனா காக்கால்… பூமிநீரேற்பரிதே?” என்று இங்கு எம்பெருமானை நோக்கி ஆழ்வார்கேட்ட கேள்விக்கே
கூரத்தாழ்வான் அதிமாநுஷ ஸ்தவத்தில் மேல் விவரித்த வண்ணம் ஸமாதநமருளிச் செய்தாரென்றுணர்க.
சீரால் பிறந்து சிறப்பால் வளராது = சீர் என்றாலும் சிறப்பு என்றாலும் பொருள் ஒன்றே.
“சீரால் சிறப்பால் பிறந்து வளராது” என்று அந்வயித்து, மிக்க சிறப்புடனே பிறந்து வளராமல் எனப்பொருள் கொள்க.
வளராது என்றவிடத்துள்ள எதிர்மறை, பிறந்து என்றவிடத்தும் கருதத் தக்கது; பிறவாமலும் வளராமலும் என்றவாறு.
“பிறவாமலும் வளராமலும் பேர் வாமனாகக்கால்” என்றால் கருத்து ஒட்டிவர வில்லையே என்று சிலர் மயங்குவர்;
‘சிறப்பால் பிறவாமலும் வளராமலும் வாமநனாக ஆனாயே, அப்படி ஆகாமற்போல்’ என்று விரித்துக் கொள்ள வேண்டுகையாலே
பொருந்தாமை யொன்றுமில்லையென்க.
பேர்வாமனாகாக்கால் = ‘வாமநன்’ எனச் சிதைந்தது. வாமநனென்று பேரிட்டுக் கொண்டு குள்ளனாகாவிடில் என்றபடி.
பேர் என்பதற்குத் திருநாமமென்று பொருள் கொள்ளாமல் ‘பெரிய’ என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.
பெரிய வாமனனென்றது- இவனுக்கு மேற்பட்ட குள்ளனில்லை யென்னும்படியான ஒப்பற்ற குள்ளன் என்றபடி.
பேராளா!= பெருமை பொருந்தியவனே! என்றும்,
பல திருநாமங்களையுடையவனே! என்றும் பொருள்படும்.
வாமனனென்று பேரிட்டுக்கொண்டது உன் பெருமைக்குத் தகுமோ? என்றும்,
பேரிட்டுக்கொள்ளப் பல திருநாமங்களிருக்கவும் இந்தத் திருநாமந்தானா உனக்கு அகப்பட்டது? என்றும் கேட்கிறார் போலும்.
————————————————————–
தாம் அபேஷித்த படியே அடியார்களாக அனைவரும் ஆகி விட்டால்
லீலா விபூதி ஆள் அற்று போகுமே-இத்தை நோக்குவோம் என்று உகந்து-
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்–17-
பதவுரை
எங்கும் சூழ்ந்து–நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு
அரக்கன்–இராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய–ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி
தாள் வரைவில் ஏந்தினார் தாம்–காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்
சூழ்ந்து–(இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டினக்கால்–‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும்–ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர்–திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்;
பின்னும்–எக்காலத்திலும்
தம் வாய் திறவார்–(பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக் கொள்ளமாட்டார்.
எங்கும் சூழ்ந்து-அரக்கன் வாள் வரைகள் போல வன் தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்-சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்
அடியார் -த்வம் மே அஹம் மே -வணங்கா முடி தனத்தால் அநாதரவு காட்டி
தோன்றாது விட்டாலும்-வாழ்ந்திடுவர்-பின்னும் தாம் வாய் திறவாதார் -என்று அந்வயம்
சூழ்ந்து –
இந்த லீலா விபூதியிலே வந்து-வளைத்துக் கொண்டு –
அடியார் வேண்டினக்கால்-
ஒ ஜனங்களே-நீங்கள் அடிமைப்பட வேண்டும் என்று விரும்பினால்
தோன்றாது விட்டாலும் –
ஒரு அடியவனாவது அகப்படாமல்-உபேஷிக்கப் பெற்றாலும் –
வாழ்ந்திடுவர்-
திரு உள்ளத்திலே வெறுப்பு இல்லாமல்-உகப்புடன் இருப்பார் –
பின்னும்-
எக் காலத்திலும்
தாம் வாய் திறவாதார் –
பிராட்டிமார் இடத்திலும்-இந்த மனக் குறையை-வாய் திறந்து சொல்லிக் கொள்ள மாட்டார் –
சூழ்ந்து எங்கும் –
நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு –
அரக்கன்-
ராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாமிடிய-
ஒளி பொருந்திய-மலைகள் போலே வலிதான-தலைகளானவை இற்று விழும்படி
தாள் வரை வில்லேந்தினார் தாம் –
காலுரைத்தை உடைத்தாய்-மலை போன்றதான-வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்-
ஸ்ரீ வசன பூஷனத்தில் மூன்றாம் பிரகரணத்தில்
பிராட்டி ராஷசிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதது போலே
தனக்கு பிறர் செய்யும் குற்றங்களை-பகவத் பாகவத் விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் -என்று அருளிச் செய்த பின்
அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே-சர்வஜஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது இறே –
என்று அருளிச் செய்தது இப் பாசுரத்தைக் கொண்டேயாம்
மா முனிகள் வியாக்யானம்
எதிர் சூழல் புக்கு என்றபடியே-தன்னுடைய சீல சௌலப் யாதிகளைக் காட்டி
சம்சாரி சேதனர்களை தப்பாமல் அகப்படுத்திக் கொள்வதாக-வந்து அவதரித்து
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்
நாம் இதற்க்கு உறுப்பாக பெற்றோமே இறே என்று-அது தானே போக்யமாக விரும்புவர்
அதற்கு மேல்
அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்கள் என்று-அவர்கள் குற்றத்தை பிராட்டிமார்க்கும் தனி இருப்பிலே அருளிச் செய்யார்
என்கிற-சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டிலே
சேதனர் செய்த குற்றங்களை தன திரு உள்ளத்தில் உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு
பிராப்தனான சர்வேஸ்வரனும் உட்பட-தன் திருப் பவளம் திறந்து அருளிச் செய்யாதே
தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் அறிய வல்ல சர்வஜ்ஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்று சொல்லா நின்றது இறே
அன்றிக்கே
அடியார் சூழ்ந்து வேண்டினக்கால்-
சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாமிடியத்-
தாள்வரை வில்லேந்தினார் தாம்-தோன்றாது-விடிலும்-அடியார் தாம் வாழ்ந்திடுவர்-என்று அந்வயித்து
அவன் திரு உள்ளமான படி ஆகக் கடவது என்று மகிழ்ந்து இருக்கக் கடவர்கள் அடியார்கள் என்றபடி-
ஆர்த்தியின் கனத்தாலே நாங்கள் ஓயாது புலம்பி வேண்டினாலும்
எங்களுக்கு சேவை சாதியாமல் இருப்பது என்று ஆஷேபிக்கவும்
வாய் திறக்கக் கடவர் அல்லர்
அபேஷிப்பது மாத்ரமே அடியவர்களின் கடைமையே அன்றி
அவனை எதிர்த்து வாய் திறக்க அதிகாரம் இல்லை -என்றபடி
முந்தின யோஜனையில் எம்பெருமான் உடைய ஸ்வரூபம் சொல்லிற்று
இதில் சேதனர் உடைய ஸ்வரூபம் சொல்லுகிறது-
(சூழ்ந்தடியார்.) ஆச்ரிதர்களிடத்தில் *எம்பெருமானுக்குள்ள வாத்ஸல்யத்தைப் பேசுகிறார்.
“எங்கும் சூழ்ந்து அரக்கன் வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில்லேந்தினார் தாம் சூழ்ந்து
அடியார் வேண்டினக்கால் (அடியார்) தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர்; பின்னும் வாய் திறவார்” என்று அந்வயம்.
இராவணனது தலைகளை அறுத்துத் தள்ள வலிய வில்லைக் கையிலேந்தி நின்ற இராமபிரானாகிய திருமால் இந்த லீலா விபூதியில்
வந்து சேர்ந்து இங்குள்ள ஸம்ஸாரிகளைச் சூழ்ந்து கொண்டு ‘எனக்கு நீங்கள் அடியாராக வேண்டும்’ என்று அபேக்ஷித்தவளவில்,
“த்வம் மே” என்றால் “அஹம் மே” என்கிற ஸம்ஸாரிகள் வணங்கா முடித் தனத்தினால் அநாதரவு காட்டி அடியவர்களாக ஆகா விட்டாலும்,
அதனால் திருவுள்ளத்தில் சிறிதும் வருத்தங் கொள்ளாமல் “நாம் அபேக்ஷித்தபடியே இந்த ஸம்ஸாரிகளெல்லாரும் அடியவர்களாக
ஆய்விட்ட பக்ஷத்தில் இந்த லீலாவிபூதி ஆளற்று அழிந்துபோய் விடுமன்றோ;
இஃது அழியாதபடி நோக்குவதற்கு இவர்கள் அமைந்தார்கள் என்று தேறி மகிழ்ந்தே செல்வர்;
ஏகாந்தமான ஸங்கதிகளை யெல்லாம் கூசாமல் சொல்லுகைக்குரிய பிரட்டிமாரிடத்திலும் இவ்விஷயத்தைச் சொல்லிக் கொள்ள வாய் திறக்கமாட்டார்;
‘ஸம்ஸாரிகள் என்னை அலக்ஷியம் பண்ணிக் கைவிட்டார்கள்” என்று ஒருபோதும் சொல்ல மாட்டார் என்றதாயிற்று.
ஸ்ரீவசநபூஷத்தில் (மூன்றாம் ப்ரகரணத்தில்- “பிராட்டி, ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதாப் போல,
தனக்குப் பிறர் செய்த குற்றங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவனல்லன்” என்றருளிச் செய்தபின்
“அறிவிக்க வுரியவனகப்பட வாய் திறவாதே ஸர்வஜ்ஞவிஷயங்களுக்கும் மறைக்குமென்னோநின்றதிறே” என்று அருளிச் செய்தது
இந்தப் பாசுரத்தைக் கொண்டேயாம். அவ்விடத்தில் ஸ்ரீமணவாள மாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:-
“எதி ர்சூழல் புக்கு’ என்கிறபடியே தன்னுடைய சீல ஸௌலப்யாதிகளைக் காட்டி ஸம்ஸாரி சேதநர்களைத் தப்பாமல்
அகப்படுத்திக் கொள்வதாக வந்தவதரித்துத் தமக்கு அடியார் வேணுமென்றபேக்ஷித்தால் அவர்கள் அப்படி அநுகூலமாய்த் தோன்றாதொழிந்தாலும்
‘இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்; நாம் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமிறே’ என்று அதுதானே போக்யமாக விருப்பர்;
அதுக்கு மேல், அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்களென்று அவர்கள் குற்றத்தைத் தனி யிருப்பிலே
பிராட்டிக்கு மருளிச் செய்யாரென்கிற சூழ்ந்தடியார் என்கிற பாட்டிலே, சேதநர் செய்த குற்றங்களைத் தன் திருவுள்ளத்துக்கு உகந்தவர்களுடன்
அறிவிக்கைக்கு ப்ராப்தனான ஸர்வேச்வரனுமுட்படத் தன் திருப்பவளம் திறந்து அருளிச் செய்யாதே,
தானருளிச் செய்யா தொழிந்தாலுமறியவல்ல ஸர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்குமென்று சொல்லா நின்றதிறே.” என்று.
இப் பாட்டை மற்றொரு வகையாகவும் பெரியவாச்சான்பிள்ளை உரைத்தருளினார்;-
“அடியார் சூழ்ந்து வேண்டினக்கால், சூழ்ந்தெங்கும் வாள் வரைகள் போலரக்கன் வன்தலைகள் தரமிடியத்
தாள் வரைவில் லேந்தினார் தாம் தோன்றாது விட்டாலும் (அடியார்) வாழ்ந்திடுவர்; பின்னும் தம் வாய் திறவார்” என்று அந்வயித்து,
அடியவர்களா யுள்ளவர்கள் எம்பெருமானைச் சூழ்ந்து கொண்டு எமக்கு நீ ஸேவை ஸாதிக்க வேணுமென்று வேண்டிக் கொள்ள
எம்பெருமான் அவர்களுக்கு முகங்காட்டாவிடினும், அவன் திருவுள்ளமானபடியே ஆகக்கடவது’ என்று மகிழ்ந்திருக்கக் கடவர்கள் அடியவர்கள்;
‘ஆர்த்தியின் கனத்தாலே நாங்கள் ஓயாது புலம்பி வேண்டினாலும் எங்களுக்கு ஸேவை ஸாதியாமலிருப்பது ஏன்?’ என்று ஆக்ஷேபிக்க
வாய் திறக்கவும் கடவரல்லர்; அபேக்ஷிப்பது மாத்திரம் அடியவர்களது கடமையே யன்றி அபேக்ஷித்தபடியே
அவன் காரியஞ் செய்யாவிடில் அவனை யெதிர்த்து வாய் திறக்க இவர்களுக்கு அதிகாரமில்லை- என்று
சேதநர்களின் ஸ்வரூபத்தை சிக்ஷித்தருளிச் செய்வதாக.
முந்தின யோஜநையில் எம்பெருமானுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது;
இந்த யோஜநையில் சேநருடைய ஸ்வரூபம் சொல்லுகிறது.
இரண்டு வகையும் பொருந்தக் குறையில்லை.
சூழ்ந்து எங்கும் = இலங்கை முழுவதையும் ஆக்ரமித்துக்கொண்டு என்றபடி.
வாள் என்பதும் வரைகள்போல் என்பதும்- அரக்கனது வன்தலைகட்கு விசேஷணங்கள்;
வாள்- ரத்னங்களிழைத்த கிரீடங்களணிந்திருக்கையாலே ஒளிபொருந்திய என்றபடி.
தாள் வரை வில் = விற்களுக்கு அடிப்பக்கம் உரத்திருக்க வேண்டியது அவசியமாதலால்; தாள்வில் எனப்பட்டது; காலுரமுடைய வில் என்றபடி.
மலை போல் பிறரால் சலிப்பிக்கவும் ஒண்ணாதபடி சிக்கென்றிருத்தல் பற்றி “வரைவில்” எனப்பட்டது.
——————————————————————-
(தாம்பாலாப்புண்டாலும்.)
ஸம்ஸாரிகள் அலக்ஷியம் பண்ணினாலும் எம்பெருமான் திருவுள்ளம் வெறுக்க மாட்டான் என்றது கீழ்ப் பாட்டில்;
அவ்வளவேயன்று;
ஸம்ஸாரிகள் எம்பெருமானுக்கு பலவகையான துன்பங்களை உண்டு பண்ணினாலும்
அப்போதும் அவன் தன் காரியத்தைத் தான் விடுவதில்லை யென்கிற மஹா குணத்தைப் பேசுகிறாரிதில்.
தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–
பதவுரை
தாம்பால் ஆப்புண்டாலும்–(அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும்
அத்தழும்புதான் இளக–அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால்–காளியனாகிய பாம்பினால்
ஆப்புண்டு–கட்டப்பட்டு
பாடு உற்றாலும்–கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது–(ஜகத் ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல்
இ பல் உருவை எல்லாம்–இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம்.
படர்வித்த–விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா–ஆதிமூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார்–உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு–நீயே சொல்லு.
நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்-ஊரார்கள் எல்லாரும் காண யுரலோடு
தீரா வெகுளியாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப-ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்
இது அனுகூலர் அன்பினால் கட்டின கட்டாகையாலே எம்பெருமானுக்கு சஹ்யம் –
காளியன் வாலால் கட்டின காய்ப்பு அசஹ்யம்
தாம்பால் ஆப்புண்டாலும் –
யசோதையினால் தாம்பு கொண்டு-அடிக்கப் பெற்றாலும்
அத் தழும்பு தான் இளக-
அத் தாம்பினால் கட்டினத்தால் உண்டான காய்ப்பு-அல்பம் என்னலாம் படி
பாம்பால் ஆப்புண்டு –
காளியன் ஆகிற-பாம்பினால் கட்டப்பட்டு
பாடுற்றாலும் –
கஷ்டங்களை அடைந்தாலும்-சிறிதும் திரு உள்ளம் வருந்தாமல்
சோம்பாது-
ஜகத் சிருஷ்டியிலே சோம்பல் படாமல் -நிக்ரஹிக்க நினையாமல்
சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் களிப்போம் என்று எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –
இப் பல்லுருவை எல்லாம் –
இவ் வுலகிலே காணப் படுகிற-பல பல பிராணிகளை எல்லாம்
படர்வித்த வித்தா-
விஸ்தாரமாக உண்டாக்கின-ஆதி மூலமே –
உன் தொல்லுருவை யார் அறிவார் –
உன்னுடைய ஸ்வரூபத்தை அறிவார் உண்டோ –
சொல்லு –
நீயே சொல்லு
இக்கருத்தை ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகத்தில்
சார்வ த்வத்கம் சகல சரிதம் ரங்க தாமன் துராசாபா சேப்யஸ் ச்யான்ன யதி ஜகதாம் சாது மூர்க்கோத்தராணாம்-
நிஸ் தந்த்ராளோஸ் தவ நியமதோ நர்த்து லிங்க ப்ராவாஹா
சர்க்கச்தே மப்ர ப்ருதிஷூ சதா ஜாகார ஜாகடீதி-
சேதனர் மேலே நப்பாசை கொண்டு சிருஷ்டித்து அருளுகிறான்-
சம்சாரிகள் நன்மையே நாடி இருக்கிற உன்னுடைய ஸ்வ பாவம் யாராலும் நிலை காண ஒண்ணாது –
ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்த காலத்து யசோதைப் பிராட்டியாகிற மாதாவானவள் “நீராமிது செய்தீரென்றோ நெடுங்கயிற்றால்,
ஊரார்களெல்லராருங் காண வுரலோடே தீரா வெகுளியனாய்ச் சிக்கன ஆர்த்தடிப்ப, ஆரா வயிற்றினோடாற்றாதான்” (சிறிய திருமடல்) என்றபடி.
வெண்ணெய் களவு கண்ட காரணத்திற்காகக் கண்ணி நுண் சிறுத் தாம்பினால் உரலில் பிணைத்து அடித்துப் பகவானுடைய
திருமேனியில் கஷ்டத்தை யுண்டு பண்ணினாள்;
“தாம்பே கொண்டார்த்த தழும்பு” (முதல் திருவந்தாதி 22) என்றபடி
அவள் தாம்பினால் கட்டினவிடம் காய்ப்புக் காய்த்துக் கிடந்ததென்றும் தெரிகிறது.
இது அநுகூலர் அன்பின் மிகுதியால் கட்டின கட்டாகையாலே எம்பெருமானுக்கு ஸஹ்யம் என்று கொண்டாலும்,
யமுனையில் ஒரு துறையிலிருந்து கொண்டு விஷத்தைக் கக்கி அனைவர்க்கும் கொடுமை புரிந்த காளிய நாகத்தோடு பிணங்க நேர்ந்த போது,
அந்த நாகம் கண்ணபிரானைத் தனது வாலால் கட்டிற்றென்றும், யசோதை கட்டின தாம்பினாலுண்டான காய்ப்பு அற்பமென்னும்படி
காளியன் வாலால் கட்டின காய்ப்பு வலிதாயிருந்த தென்றும் சொல்லப்படுகிறது.
இப்படி அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசியற எல்லாரும் அவனைக் கட்டி யடித்துத் துன்பப் படுத்துவதே
இந்த பிராகிருத லோகத்தின் காரியமாக இருக்கின்றது. இருந்தாலும் எம்பெருமான் தன்னுடைய கிருஷியில் நின்றும் கை வாங்குவதில்லை.
‘நமக்குத் துன்பத்தையே உண்டு பண்ணுகிற இவ் வுலகை அடியோடு ஒழித்திடுவோம்’ என்று நிக்ரஹிக்க நினையாமல்
“சென்று சென்றாகிலுங் கண்டு சன்மங் கழிப்பானெண்ணி ஒன்றியொன்றி யுலகம் படைத்தான்” (திருவாய்மொழி 3-9-10) என்றபடி
என்றைக்காவது ஒருநாள் இவ்வுலகம் சீர்படக் கூடுமென்றே திருவுள்ளம் பற்றிச் சிறிதும் சோம்பலடையாமல் பிரஜைகளைப்
படைக்கின்றானென்று இதனால் சொல்லிற்றாயிற்று.
இப்பாட்டின் கருத்தைக் கூரத்தாழ்வான திருக்குமாரரான ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் உத்தரசதகத்தில்-
ஸார்வ! த்வத்கம் ஸகலசரிதம் ரங்கதாமந்! துராசாபாசேப்யஸ் ஸ்யாந்ந யதிஜகதாம் ஜாது மூர்க்கோத்தராணாம்.
நிஸ்தந்த்ராளோஸ் தவநியமதோ நர்த்துலிங்க ப்ரவாஹா ஸர்கஸ்தேமப்ர ப்ருதிஷா ஸதாஜாகரா ஜாகடீதி.” என்ற
ச்லோகத்தால் அநுஸந்தித்தமை அறியத்தக்கது.
தாம்பாலாப்புண்டாலும் = நம்மாலே படைக்கப்படுகிறவர்கள் நம்மையே கயிற்றால் கட்டி நலிகின்றார்களே!;
இப்படிப்பட்ட பாவிகளை நாம் ஏன் ஸ்ருஷ்டிக்க வேணும்; இறகொடிந்த பறவை போலே கரணகளேபரங்களற்று ப்ரளய ஸீமாவில்
மங்கிக் கிடக்கிற சேதந வர்க்கங்கள் அப்படியே மங்கிக் கிடக்கட்டும்; அவற்றுக்குக் கையுங் காலும் உண்டாம்படி நாம் ஸ்ருஷ்டிக்கவே யன்றோ
அந்தக் கையையும் காலையுங் கொண்டு அவை நம்மையே புடைக்கின்றன; அவற்றை அப்படியே மங்கிப் போகும்படி போட்டு வைத்தால்
நம்மைக் கட்டி யடிப்பார் ஆருமில்லையே என்று கருதி எம்பெருமான் வெறுமனிருந்து விடலாம்;
ஆயினும் இந்த சேதநர்கள் பக்கல் உள்ள நப்பாசையானது அப்படி இருக்க வொட்டுகிறதில்லைஎன்று உணர்க.
அத்தழும்புதாளினகப் பாம்பலாப்புண்டு பாடுற்றலும் = காளியன் தனது வாலினால் கண்ணபிரானை அழுந்தக் கட்டி,
திருமேனி தழும்பேறும்படி வருத்தத்தை உண்டுபண்ணினன்; இந்தத் தழும்பின் முன்னே யசோதையின் தாம்பாலாப்புண்ட தழும்பு
அற்பமென்னவேண்டும்படி பாம்பாலாப்புண்ட தழும்பே வலிதாயிருந்ததென்பது விளங்க “அத்தழும்புதானிளக” என்றார்.
பாடு- வருத்தம்
வித்தா = உலகங்கட்கெல்லாம் வித்தாக இருப்பவனே! என்றபடி.
இப்படிப்பட்ட உன்னுடைய ஸ்வரூபத்தை அறியவல்லார் ஆர்? என்றது-
ஸம்ஸாரிகள் உன்னைப் பரிபவித்தாலும் அவர்கள் மேல்
ஆசாபாசம் விட்டு நீங்காமல் நன்மையையே நாடி யிருக்கையாகிற உன்னுடைய ஸ்வரூபம்
ஒருவர்க்கும் நிலை காண வொண்ணாதது என்றபடி.
————————————————————
(சொல்லில் குறையில்லை.)
பஞ்ச பாண்டவர்கள் விஷயத்தில் கண்ணபிரான் பக்ஷபாதியாயிருந்து செய்தருளின் செயல்களை
ஆலோசித்துப் பார்த்தால், அவன் அடியவர்களுக்கு எளியவன் என்பது நன்கு வெளியாகும்.
அந்த பஞ்சபாண்டவர்களைப் போல நாமும் அப்பெருமான் மீது அன்பு வைத்து அவனை ஸேவிக்க வேணுமென்று மெய்யே ஆசைப்பட்டால்
“மெய்யர்க்கே மெய்யனாகும்” அவன் ஸேவை ஸாதித்தே தீருவன்; அவனை ஸேவிப்பதற்கு இதுவே உபாயம்.
இப்படிப்பட்ட உபாயத்தைத் தெரிந்து கொள்ளாமல் நெஞ்சே நீ ஏன் வீணாகக் கவலைப் படுகிறாய்?
இப்போதாவது நான் சொல்வதைக் குறிக்கொள்; என்கிறார்.
சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-
பதவுரை
சூது அறியா நெஞ்சமே–செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே!
சொல்லில் குறை இல்லை–பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண்–அநாதியான இப்பூமியில்
மா தானைக்கு எல்லாம்–(துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக–பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி
எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை–இரவுபகலென்னாமல் எக்காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
(மெய்யே காண விரும்பினால்)
காண்டும்–காண்போம்!
நீ காண்–நீ காணலாம்.
சூதறியா நெஞ்சமே-
செய்ய வேண்டியது-இன்னது என்று அறியாமல் தளும்புகின்ற-மனமே
சூது -உபாயம்
மெய்யான விருப்பமே என்ற எளிய உபாயம் அறியாத மட நெஞ்சமே
சொல்லில் குறையில்லை-
பகவத் விஷயத்தை பேசினால் பேச்சில் குறை இல்லை –
எவ்வளவு பேசினாலும் சொல்லி முடிக்கும் படி அல்லவே எல்லை இல்லா அவனது கல்யாண குணங்கள்
அல்லது
நமக்கு ஒரு குறை இல்லை -நமது குறைகள் நீங்கி விடுமே பேசத் தொடங்கினாலும்
அப்படி கரை காண முடியாத ஒரு குணத்தை எடுத்துக் காட்டுகிறார்
தொல்லைக் கண்
அநாதியான இப்பூமியிலே
மா தானைக்கு எல்லாம் –
துரியோத நாதிகள் உடைய-பெரிய சேனைகளுக்கு எல்லாம் –
மலைபுரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் –
ஓர் ஐவரையே மாறாக –
பஞ்ச பாண்டவர்களே-எதிரிகளாம் படி –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –காத்தானைக்
இரவு பகல் என்னாமல்-எக் காலத்திலும்-ரஷித்துக் கொண்டு இருக்கும் பெருமானை –
மெய்யே காண விரும்பினால் –
காண்டும் –
காண்போம் –
நீ காண் –
நீ காணலாம் –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் காத்தானை–எல்லிப் பகல் என்னாது எப்போதும் நீ காண்
சொல்லில் குறையில்லை = இதற்குப் பல வகையாகப் பொருள் கொள்ளலாம்.
பகவத் குணங்களைப் பேசத் தொடங்கினால் அவற்றுக்கு ஓய்வே இல்லை; எவ்வளவு பேசினாலும் குறைவுபடாமல்
மேன் மேலும் பெருகுகின்ற குணங்கள் அவனுக்கு எல்லை யில்லாமலிருப்பதால் நாம் சொல்லி முடிக்கும் படியானவையல்ல
பகவத் குணங்கள் என்று கொள்ளலாம்.
பரமபுருஷனுடைய குணங்களை அயோக்யரான நாம் பேசினால் அவற்றுக்குக் குறைவு நேரிடுமென்பதில்லை என்றும் கொள்ளலாம்.
அவனுடைய குணங்களை நாம் சொல்லத் தொடங்கினோமாகில் நம்முடைய குறைகளெல்லாம் நீங்கிவிடும் என்பதாகவுங் கொள்ளலாம்.
நாம் கற்ற கல்விகளுக்கீடாகக் குறைவில்லாமல் பலபல பாசுரங்களைவிட்டு பகவத் குணங்களைப் பேசிவிடலாம்;
பேச்சில் குறையில்லை;
ஆனால் அந்தக் குணங்கள் எல்லையற்றவை யாதலால் அவற்றைக் கரை காண்பதில் குறை யுண்டு என்பதாகக் கொள்ளுதல் சிறக்கும்.
அப்படி கரை காண முடியாத குணங்களில் ஒரு குணத்தைச் சொல்லிக் காட்டுகிறார்-
பாண்டவ பக்ஷபாதித்வத்தை யருளிச் செய்கிற முகத்தாலே.
சூது அறியா நெஞ்சமே! = சூது என்பதற்குப் பல பொருள்களுண்டு; உபாயம் என்ற பொருள் இங்குக் கொள்ளத்தக்கது.
உபாயமறியாத நெஞ்சே! என்றபடி. எம்பெருமானை நாம் காண வேண்டில்,
மெய்யே காண வேணுமென்று விரும்புகிற பக்ஷத்தில் தவராமல் காண முடியும்;
ஆகையாலே நம்முடைய மெய்யான விருப்பமே அவனைக் காண்பதற்கு உபாயம் என்று தெரிந்து கொண்டு
அந்த வுபாயத்தால் அவனைக் காணலாமாயிக்க அது செய்யாத மட நெஞ்சே! என்கிறாரென்க.
மெய்யே காண வேணுமென்று விரும்பினால் காண்பதற்க எளியனோ அவன்? என்ன;
அவனுடைய எளிமையை எடுத்துக் காட்டுகிறார் மேல்.
தொல்லைக்கண் மாத்தானைக்கெல்லாம் ஓரைவரையே மாறாகக் காத்தவனன்றோ அவன்.
தொல்லைக் கண் என்றது அநாதியான இப்பூமியிலே என்றபடி.
“மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்” (பெரியாழ்வார் திருமொழி 2-1-2) என்றபடி
பாண்டவர்கட்கு எதிர்த் தலையில் திரண்ட சேனைகள் பிரபலமாகையால் மாத் தானைக்கெல்லாம் என்கிறார்.
தானை யென்று சேனைக்குப் பெயர்.
ஓர் ஐவரையே மாறாக = பல்லாயிரம் போர்வீரர்கள் திரண்டு கிடக்கிற சேனைகளுக்கெல்லாம்
எதிர்க்கக்ஷியில் பாண்டவர்கள் ஐந்து பேர் மாத்திரமே நின்று வெற்றி பெற்றார்களென்று உலகில் புகழ் கிளம்பும்படி ரக்ஷித்தமை சொல்லுகிறது.
எம்பெருமான்தானே துரியோதனாதியர்க்கு எதிரியாய் நின்று போர் செய்யக் கூடுமாயினும், அப்படி நின்றால் அவர்கள் போர்க்களத்திற்கே
வரமாட்டார்களென்று, தான் ஆயுத மெடுப்பதில்லையென்று ப்ரதிஜ்ஞையும் பண்ணி, பஞ்ச பாண்டவர்களே
போர் புரிந்து வெற்றி பெற்றனரென்று பாரோர் புகழச் செய்து வைத்தனனென்க.
காத்தானைக் காண்டும் நீ காண் = ‘அடியவர்கள் விஷயத்தில் இவ்வளவு பக்ஷபாதம் வைத்து ரக்ஷிப்பதில்
தீக்ஷிதனாயிருப்பவன் எம்பெருமான்’ என்று நாம் தெரிந்து கொண்டோமாயின், இனி நாம் அவøன் காண வேணுமென்று மெய்யே
விரும்ப வேண்டுமென்பதே யுள்ளது. அப்படி காண விரும்புகிற பக்ஷத்தில் கண்டே விடலாம்;
இதை நீ அநுபவத்தில் காண்பாய் என்று ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கி அருளிச் செய்தாராய்த்து.
எல்லிப்பகலென்னா தெப்போதும் என்பதை காத்தானை என்றவிடத்திலும் அந்வயிக்கலாம்,
காண் என்றவிடத்திலும் அந்வயிக்கலாம்.
இரவுபகலென்று பாராமல் ஸர்வ காலத்திலும் பாண்டவர்களை ரக்ஷித்துக் கொண்டிருந்தவனை என்று முந்தின யோஜகையில் பொருளாம்;
நெஞ்சே! அவனை நீ இரவு பகல் வாசியின்றி எப்போதும் காண் என்று பிந்தின யோஜகையில் பொருளாம்.
காண்டும் = தன்மைப் பன்மை வினைமுற்று. காண்போம் என்றபடி.
————————————————————-
(காணப் புகில்.)
ஸ்வத ஸ்வீகாரமென்றும் பரகத ஸ்வீகாரமென்றும் சாஸ்த்ரங்களில் இரண்டு வகையான பற்றுதல்கள் சொல்லப் படும்.
எம்பெருமானை நாம் சென்று பற்றுகிற பற்று ஸ்வத ஸ்வீகார மெனப்படும்.
அவன் தானே வந்து தம்மை ஸ்வீகரித்தருள்வது பரகத ஸ்வீகாரமெனப்படும்
இவ்விரண்டுள், எம்பெருமான் தானே நம்மை வந்து ஸ்வீகரிக்கையாகிய பரதக ஸ்வீகாரமே சிறந்த தென்பது ஸந்ஸம்ப்ரநாய ஸித்தாந்தம்.
“அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம்; அவத்யகரம்; அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” என்றார். பிள்ளை யுலகாசிரியரும்,
கீழ்ப் பாட்டில் ‘அவனை நாம் காண நினைத்தோமாகில் காணலாம்’ என்றருளிச் செய்த ஆழ்வார்;
‘அப்பெருமானை நாமாகக் காண நினைப்பது தகுதியன்றே, அவன் தானே வந்து நம்மை ஸ்வீகரிக்கும்படி
பார்த்திருக்கை யன்றோ ஸ்வரூப ப்ராப்தம்’ என்று தெளிந்து அந்தத் தெளிவை இப் பாட்டால் வெளியிடுகிறார்.
காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-
பதவுரை
அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம்–அறிவுடைய நல்ல நெஞ்சே
மாணி உரு ஆகிக்கொண்டு–வாமநரூபியாய்
உல்கம் நீர் ஏற்ற சீரான்–(மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்.
சென்று–தானே எங்கும் பரவி
திரு ஆகம–தனது திருமேனியினாலே
தீண்டிற்று–உலகங்களையெல்லாம் தீண்டினானென்பதை
காணப்புகில்–ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில்–நாம் பேசும் வார்த்தைகளுக்கு
நாணப்படும் அன்றே–வெட்கப்பட வேண்டுமன்றோ
காணப் புகில் –
ஆராய்ந்தோம் ஆகில் –
அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்-
அறிவை யுடைய நல்ல நெஞ்சே -நான் சொன்னதை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டாமோ
நாணப்படும் அன்றே –
வெட்கப் பட வேண்டும் அன்றோ –
நாம் பேசில் –
நாம் பேசும் வார்த்தைகளுக்கு –
மாணி யுருவாகிக் கொண்டு-
வாமன ரூபியாய் –
உலகம் நீரேற்ற சீரான் –
மாவலியிடம் சென்று-உலகங்களை நீர் ஏற்றுப் பெற்ற-சீர்மை பொருந்திய திருமால்
திருவாகம் தீண்டிற்றுச்-தனது திரு மேனியினாலே-உலகங்களை எல்லாம்-தீண்டினான் என்பதை –
சென்று –
தானே எங்கும் பரவி -நம்மை வந்து தீண்டி கைக் கொள்ளுகைக்கு சித்தமாய் இருக்க –
அபேஷை இல்லாமல் எல்லார் தலையிலும் திருவடியை கொண்டு வைத்தவன் அவனாய் இருக்க-
நம்முடைய முயற்சி காணத் தக்கது அன்றோ -என்கிறார்
அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்-நாணப்படும் அன்றே நாம் பேசில்
-மாணியுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான் திருவாகம்
தானே-சென்று தீண்டிற்று-இப்படி இருக்க-நாம்-காணப் புகில்-நாம் பேசில்
நாணப்படும் அன்றே-என்று அந்வயித்து
மாணியுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்-தானே-சென்று-தன்னுடைய திருவாகத்தால்-உலகத்தை தீண்டின விஷயத்தை
காணப் புகில்-ஆராயும் அளவில்
நாம் பேசில்-அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே-என்றும் அந்வயித்து பொருள் கொள்ளலாம்
யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய-தச்யைஷ ஆத்மா வ்ருணுதே தநூம் ஸ்வாம்-ஸ்ருதி
சேதனரான நாம் த்ரிவிக்ரம அவதாரம் அறிந்து இருந்தும்-நான் சென்று நாடி நறையூரிலே கண்டேனே –
கால ஷேபார்த்தம் தான் இவை-அவனுடைய ச்வீகாரமே ரஷகம்-
பிராட்டி அசோகவனத்தில் தரித்து இருக்க-பெருமாள் உடைய திருக் கல்யாண குணங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தது போலே
இந்த சம்சாரத்தில் உள்ள வரையில் பகவத் குணாநுபவம் செய்து பொழுது போக்குவது
அவசியம் ஆதலால் அதற்காக பாசுரங்கள் பேசுவது அயுக்தம் இல்லை-
அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் என்பது நெஞ்சை, நோக்கின அண்மை விளி; நெஞ்சே! நீ அறிவு இல்லாத அசேதந வஸ்துவன்றே;
அறிவு கொண்டிருப்பவனன்றோ; உன் அறிவுக்கு என்ன ப்ரயோஜநம்?
நான் ஒன்று சொன்னால் ‘இது தகும், தகாது’ என்பதை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டாவோ?
“காத்தானைக் காண்டும் நீ காண்” (கீழ்ப்பாட்டு) என்று நான் சொல்லி விட்டால் இதை நன்கு ஆராயாமல் காண முயல்வதுதானோ உனக்குத் தகுதி?
இப்படி யாகில் உன் அறிவுக்குப் பயனில்லையே; உன்னையும் அசேதநரமாகவே எம்பெருமான் படைத்திருக்கலாமே என்கிறார் போலும்.
நாம் காணப்புகில் பேசில் நாணப்படுமென்றே = எம்பெருமானை நாம் காணப் புகுவதும் பேசப் புகுவதும் வெட்கப் படத்தக்க விஷயமன்றோ.
ஏனென்றால், இதைப் பின்னடிகளில் விவரிக்கின்றார்.
எம்பெருமான் குறட் பிரமசாரியாகி மாவலி பக்கல் நீரேற்றுப் பெற்ற காலத்துத்
தானே தனது திருமேனியைக் கொண்டு இவ்வுலகத்தை யெல்லாம் தீண்டினான் என்பது உனக்குத் தெரிந்ததே யன்றோ.
ஆகையாலே நம்மை வந்து தீண்டிக் கைக் கொள்வதற்கு அவன் தானே ஸித்தனாயிருக்க, அதற்கு மாறாக அவனை நாம்
காணப் புகுவதும் பேசப் புகுவதும் தகாத காரியமன்றோ.
ஒருவருடைய அபேக்ஷையுமில்லாமல் எல்லார் தலையிலும் திருவடியைக் கொண்டு வைத்தான் அவனாயிருக்க.
நம்முடைய முயற்சி நாணத்தக்கதன்றோ என்கிறார்.
“மாணியுருவாகிக் கொண்டு உலகம் நீரேற்ற சீரானுடைய திருவாகமானது (தானே) சென்று தீண்டிற்று; (இப்படியிருக்க)
நாம் காணப் புகில் நாம் பேசில் நாணப்படுமன்றே” என்றும்,
“மாணியுருவாகிக் கொண்டு உலகம் நீரேற்ற சீரானானவன் தான் சென்று தன்னுடைய திருவாகத்தாலே உலகத்தைத் தீண்டின
விஷயத்தைக் காணப்புகில் – (ஆராயுமளவில்.) நாம் பேசில் அறிவுகைக் கொண்ட நன்னெஞ்சம் காணப்படுமன்றோ” என்றும்
அந்வயித்துப் பொருள் கொள்ள இடமுண்டு.
(யமேவைஷ வ்ருணுதே தேந லப்ப தஸ்லயஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்) என்ற வேத வாக்கியம் இங்கே நினைக்கத் தக்கது.
இதன் பொருள்:- இந்த எம்பெருமான் தானே எந்த சேதநனை ஸ்வீகரிக்கிறானோ, அந்த சேதநனாலே இவன் அடையத் தக்கவன்;
பரகத ஸ்வீகார நிஷ்டனான அப்படிப்பட்ட சேதநனுக்கே எம்பெருமான் தனது திருமேனியை வ்யக்தமாக ஸேவை ஸாதிப்பிக்கிறாள் என்பதாம்.
தைத்திரீய ஸம்ஹிதையில் முதற் காண்டத்தில் ஆறாவது ப்ரச்நத்திலும் –
ப்ரஜாபதிம் த்வோவேத ப்ரஜாபதிஸ் த்வம் வேத யம் ப்ரஜாபதிர் வேத ஸ புணயோ பவதி”) என்று சொல்லப்பட்டது.
இதன் பொருள் – ஒரு சேதநன் ஸர்வ சேக்ஷியான எம்பெருமானைப் பற்றுகிறான்;எம்பெருமான் ஒரு சேதநனை ஸ்வீகரிக்கிறான்;
(இவ் இருவர்களுள்) எம்பெருமானைப் பற்றுகிறவனைக் காட்டிலும் எம்பெருமானாலே பற்றப் படுகிறவனே புண்ணியனாகிறான் என்பதாம்.
எம்பெருமானே உலகங்களை யெல்லாம் தன் பேறாகச் சென்று தீண்டினான்(த்ரிவிகரமாவதார வ்யாஜத்தாலே) என்று நாம் தெரிந்து கொண்டால்,
அவனை நாம் பற்ற நினைப்பது தகாது; ஆகிலும் நாம் சேதநராகையால் வெறுமனிருக்க நேர்கின்றது;
எதையாவது வாயாலே சொல்லிக் கொண்டிருக்க நேர்கின்றது; அதனால் நாம் காண விரு ம்புவதாகவும் நாம் பற்றுவதாகவும்
ஏதோ போது போக்குக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோமத்தனை.
“நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே” என்றாற் போலே ஆழ்வார்கள் அருளிச் செய்வதும் காலக்ஷே பார்த்தமாகவே யொழிய வேறில்லை.
அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம். அசோக வனத்திலே பிராட்டி தரித்திருப்பதற்காகப் பெருமாளுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டிருந்தது
போல இந்த ஸம்ஸாரத்தில் நாம் உள்ள வரையில் பகவத் குணாநுபவம் பண்ணிப் போது போக்க வேண்டியது அவசியமாதலால்
அதற்காகப் பாசுரங்கள் பேசுவை அயுக்தமல்ல.
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்