(மனமாளுமோரைவர்.)
கீழ்ப்பாட்டில் “மாவாய் பிளந்தார் மனம்- அந்தோ! வலிதே கொல்” என்று
எம்பெருமானைக் கல் நெஞ்சனாகச் சங்கித்தார்; உடனே தம் ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தார்;
சேஷியான எம்பெருமான் விஷயத்திலே சேஷ பூதர். இப்படிச் சொல்லத் தகாதென்று விவேகமுற்று,
எம் பெருமான் திருவுள்ளமானபடியே செய்யக் கடவன்; அவனை நாம் நிர்ப்பந்திப்பதென்பது தகுதியன்று;
நம்முடைய இந்திரியங்களையெல்லாம் அவன் பக்கலில் ஊன்ற வைத்து அவனது திருவடித் தாமரைகளை ஸேவித்துக்
கொண்டிருப்பதேயன்றோ நமக்கு ஸ்வரூபம்” என்று அருளிச் செய்கிறார் இப் பாட்டில்.
மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு –51-
பதவுரை
மனம் ஆளும்–மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர்–ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை–பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து–கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து–(பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,
புனம்மேல் தண் துழாயான் அடியை–தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை
தாம் காணும் அஃது அன்றே–ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ
வண் துழாம் சீரார்க்கு மாண்பு–அழகிய விசாலமான நற்குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.
மனமாளும் ஓர் ஐவர்
மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி-ஆளுமையான-ஒப்பற்ற
பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற-
எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது
ஆத்மாவுக்கு மனஸ் சேஷப்பட்டது-
மனசுக்கு இந்த்ரியங்கள் சேஷப்பட்டன
இந்த முறை மாறி மனசை தமக்கு அடிமை ஆக்கிக் கொண்டனவே
கொடுமையை பற்றிய கோபத்தினால் ஐவர் -உயர் திணை யாக அருளிச் செய்கிறார்
கோவாய் ஐவர் என் மெய் குடி யேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து போகார் நான்-
அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட் கொடியாய் நெடுமாலே –திருமங்கை ஆழ்வார்
வன் குறும்பர் தம்மை
பிரபலமான துஷ்டர்களை
சினமாள்வித்து
கோவம் அடையச் செய்து-
காமாத் க்ரோதாத் அபிஜாயதே –
விஷயங்கள் அல்பம் என்பதால் ஆசை-அடங்காமல் கோபம் உண்டாகும்
பகவத் விஷயம் அள்ள அள்ள கொள்ளக் குறை யற்ற இன்பம் தருவதால்
இரை போர வில்லையே என்கிற கோபம் மாண்டு போகுமே
பூர்ண திருப்தி உண்டாகும் படி பகவத் விஷயத்தில் பிரவணமாக்கி என்றபடி
ஓர் இடத்தே சேர்த்து –
பகவத் விஷயமாகிய-ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி
புனமேய தண் துழாயான் அடியைத்
தன் நிலத்திலே பொருந்திய-குளிர்ந்த திருத் துழாய் மாலையை அணிந்துள்ள
அப்பெருமானது திருவடிகளை –
தான் காணும் அஃது அன்றே –
சேவித்துக் கொண்டே இருப்பது அன்றோ
வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு
அழகிய விசாலமான-நற் குணங்களை யுடைய-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு
இங்கன் அன்றி
அவன் மனம் கல் எனபது ஸ்வரூபம் அன்று
துழாம்-என்றது துழாவும் -என்றபடி –
துழாவுகை –பரம்புகை -விசாலமான என்றபடி
அவன் திரு உள்ளம் ஆனபடி ஆயிடுக என்று இருப்பதே தகுதி –
வெறுத்தல் கூடாது என்றவாறு-
(மனமாளும் ஓரைவர்.)
எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது; ஆத்மாவுக்கு மநஸ்ஸு சேஷப்பட்டது;
மநஸ்ஸுக்கு இந்திரியங்கள் சேஷப்பட்டவை; அதாவது-
மனம் போன வழியே செவி வாய் கண் முதலிய இந்திரியங்கள் போகக் கடவன- என்றிப்படி ஒரு நியதி உண்டு;
இந்த நியமம் குலைந்து, இந்திரியங்களானவை மனத்தைத் தம் வழியிலே இழுக்கின்றனவாம்.
மனத்தையும் தங்கள் வசத்திலே யாக்கி ஆளுகின்ற வன் குறும்பர்களான ஐவருண்டு- பஞ்சேந்திரியங்கள்- செவிவாய் கண் மூக்கு உடல் என்பவை,
அவற்றை வலி யடக்கி பகவத் விஷயத்திலே ஊன்ற வைக்க வேணுமென்கிறார் முன்னடிகளால்.
அசேதனங்களான இந்திரியங்களை ஐவர் என்று உயர்திணையாகக் கூறுதல் அவற்றின் கொடுமையைப்பற்றிய கோபத்தினாலென்க.
“கோவாய் ஐவரென்மெய் குடியேறிக் கூறை சோறியை தாவென்று குமைத்துப் போகார்,
நான் அவரைப் பொறுக்ககிலேன் புனிதா! புட்கொடியாய் நெடுமாலே!” (பெரிய திருமொழி 7-8-9) என்ற திருமங்கையாழ்வார் பாசுரமுங் காண்க.
வன் குறும்பர் என்ற விசேஷணத்தினாலும் இந்திரியங்களின் கொடுமை நன்கு விளக்கப்பட்டது.
சினம் மாள்வித்து-
** காமாத் க்ரோதோபிஜாயதே” (ஒரு பொருளில் ஆசை உண்டாகி அது கைகூடா விடில் பிறகு கோபம் உண்டாகிறது)
என்று கீதையிலே சொல்லியிருக்கிறபடி அந்த இந்திரியங்களுக்கு உண்டான கோபத்தை மாளந்செய்து என்கை;
இதன் கருத்து யாதெனில்
இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அநுபவித்துப் புகுந்தால் அவ்விஷயங்கள் அற்பமாகையாலே
தங்களுக்கு இதை போரவில்லை யென்று கோபமுண்டாகும்;
அந்த இந்திரியங்களுக்கு பகவத் விஷயாநுபவத்தை இரையாக்கிவிட்டால், அவ்விஷயம் கனத்ததாகையாலே தங்கள் பசி
நன்றாகத் தீருமாதலால் கோபமுண்டாக ப்ரஸக்தியில்லை;
இரை போரவில்லையே என்கிற கோபம் மாண்டு போம்;
ஆகவே “சினம் மாள்வித்து” என்பதை எச்சத் திரிபாகக்கொண்டு,
‘கோபத்தைத் தணிக்க’ என்றுரைத்தல் பொருந்தும்.
பஞ்சேந்திரியங்களுக்கு விஷயாந்தராநுபவத்தில் வயிறு நிறைய வில்லையே யென்கிற கோபம் தீரும்படி (பூர்ணத்ருப்தி உண்டாகும்படி)
அவற்றை பகவத் விஷயத்திலே ப்ரவணமாக்கி- என்றதாயிற்று.
புனமேய தண்துழாயானடியைக் காணுமஃதன்றே =
புனமாவது நிலம்; எந்த வஸ்துவும் தன்னிலத்தை விட்டுப் பிரிந்தால் செவ்வி குன்றுமாதலால்,
அப்படியல்லாமல் தன்னிலத்திலேயே இருக்கிற திருத்துழாயானது எவ்வளவு செழிப்பாக இக்குமோ அவ்வளவு செழிப்பாகத்
தனது திருமேனியிலே அத் துழாய்மாலை விளங்கப்பெற்ற பரமபேரிக்யனான அப்பெருமானுடைய திருவடிகளே
நமக்குத் தஞ்சம் என்று கொண்டு அவற்றை ஸேவித்துக் கொண்டிருப்பதேயன்றோ
வண்துழாம்சீரார்க்கு மாண்பு- பரமவிலிக்ஷணரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீர்மை;
இங்ஙனன்றி ‘எம்பெருமானுடைய மனம் கல்லோ’ என்று சொல்லுதல் தகுதியன்று;
கல்லாகவே யிருந்தாலும் அவனுடைய திருவடிகளே தஞ்சமென்றிருத்தலே ஸ்வரூபம் என்றாராயிற்று.
வண்துழாம் சீரார்க்கு என்றது- ஆத்மகுணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு என்றபடி.
துழாம் என்றது- துழாவும் என்றபடி; துழாவுகை- பரம்புகை; விசாலமாயிருத்தலைச் சொன்னபடி;
அழகிய விசாலமான நற்குணங்களமைந்த பாகவதர்களுக்கு என்கை.
இப்படிப்பட்ட ஆத்ம குணங்கள் நிறைந்த ஸாதுக்களாயிருந்தால் ‘அவன் திருவுள்ளமானபடியே ஆயிடுக’ என்றிருப்பதே தகுதி;
வெறுத்தல் கூடாது என்றவாறு.
———————————————————–
மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–
பதவுரை
அஞ்ஞான்று–முன்னொரு காலத்தில்
மாண்–வாமாவேஷத்தை
பாவித்து–பாவனை செய்துகொண்டு
மண் இரந்தான்–(மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவன்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு–(முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது–உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம்–விலக்ஷணமான திருமேனியை
காண்பான்–ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா–நமது ஆண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா–வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய்தான்–வாக்கானது
சீர் பரவாது–(அவனது) திருக்குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று–வேறொன்றை (சோற்றை)
உண்ண-உண்பதற்கு
உறுமோ–விரும்புமோ?
(மாண் பாவித்து)
நம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயத்திலே ஆழ்ந்தபடியைப் பேசுகிறார்.
இந்திரனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக வாமந வேஷம் பூண்டு கொண்டு மாவலி பக்கலிற் சென்று
மூவடி மண்தரவென்று இரந்தவனும்,
தான் கிருஷ்ண சிசுவாயிருக்கும்போது கம்ஸனுடைய தூண்டுதலால்
தன்னைக் கொல்வதற்காகத் தாய் வடிவு கெணண்டு முலை கொடுக்க வந்த பூதனியினுடைய முலையைச் சுவைத்துண்கிற பாவனையிலே
அவளுயிரை உறிஞ்சியுண்டவனுமான எம்பெருமானுடைய
விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தைக் காணவேணுமென்கிற ஒரு விருப்பமே நமது கண்களுக்குள்ளது;
வேறு எந்த அற்புதமான வஸ்துவையும் இக்கண்கள் காண விரும்புகின்றில.
வாய்தானும் அப்பெருமானுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசதலொன்றிலேயே ஊற்றமுடையது;
சோறு திண்பதிலும் வாய்க்கு விருப்பமில்லை- என்றாராயிற்று.
மாண்- மாணியின் தன்மை; வாமாநத்வம். பாவித்து – வடமொழியில் ***-
பூ- ஸந்தாயம்” என்ற தாதுவடிவாகப் பிறந்த வினையெச்சம்
அஞ்ஞான்று- அக்காலத்தில்; முன்பொரு காலத்திலென்றபடி.
(ஞான்று- காலம். ‘நான்று’ என்பதுமுண்டு; ஞகரநகரப்போலி.)
————————————————————-
(ஒன்றுண்டு செங்கண்மால்.)
கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தம்முடைய இந்திரியங்கள் எம்பெருமான் விஷயத்திலே
ஆழ்ந்தபடியைப் பேசி ‘இனிமேல் தமக்கு ஒரு குறையுமில்லை; தாம் க்ருத க்ருத்யாக ஆய்விட்டார்’ என்று தோற்றுமாறு
இருந்ததைக் கண்ட எம்பெருமான், ‘அந்தோ! ஆழ்வார் இவ்விருள் தருமா ஞாலத்தில் இருந்து கொண்டே இப்படி களிக்கிறாரே;
இவ்வநுபவம் இவர்க்கு நித்தியமாய்ச் சொல்லுமோ? ஸ்ரீவைகுண்டம் பெற்றாலன்றோ அநுபவ பூர்த்தியுள்ளது’ என்று
திருவுள்ளம் பற்றி அந்த ஸ்ரீவைகுண்டத்தையும் ஆழ்வார்க்குத் தந்தருள்பவன் போல விளங்கினான்;
அதனைக் கண்ட ஆழ்வார் “இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகாமளுமச்சுவை பெறினும் வேண்டேன்” என்றாற்போல
‘இந்த குணாநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானே!’ என்கிறார்.
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-
பதவுரை
செம்கண் மால்–(அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே;
யான் உரைப்பது–அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு–ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு–இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளுமி வான்–ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ–நீயோ வென்றால்
உன் அடியார்க்கு–உனது அடியார்களுக்கு
(எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்)
என் செயவன் என்றே இருத்தி–இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் இனிதோ–உனது திருக்குணங்களிலேயே ஊன்றியிருக்கப்பெற்ற தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?
ஓன்று உண்டு
ஒரு விஷயம் உண்டு -கலங்கினவனுக்கு தெளிவிக்க வேண்டுமே-
சர்வஞ்ஞனுக்கும் ஓன்று அறிவிக்க வேண்டும்
செங்கண் மால்
அடியார்கள் மேலே வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை-உடைய திருமாலே
வ்யாமோஹத்தாலே சிவந்து உள்ள திருக் கண்கள்
யான் உரைப்பது-
அடியேன் விண்ணப்பம் செய்வது –
உன் அடியார்க்கு –
உனது அடியவர்களுக்கு
எத்தனை நன்மைகள் செய்து அருளினும் திருப்தி பெறாமல்
நீ
நீயோ வென்றால்
என் செய்வன் என்றே இருத்தி –
இன்னமும் என்ன நன்மைகள் செய்வோம் என்றே-பாரித்து இரா நின்றாய்
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ
உனது திருக் குணங்களிலே ஊன்றி இருக்கப்-பெற்ற-தமது சிந்தையில் காட்டிலும்
நீ-இப்படிப் பாரிக்கின்ற நீ-யவர்க்கு-அவ்வடியார்களுக்கு
வைகுந்தம் என்று அருளும் வான்
ஸ்ரீ வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லுகின்ற-பரமபதமானது
நீ ஒருவன் தான் வைகுந்தம் வைகுந்தம் என்று சிறப்பாக சொல்லிக் கொண்டு இருக்கிறாய்-
பாவோ நான்யத்ர கச்சதி என்று -உள்ளார்கள் இங்கேயே பலர் உண்டே
இப்போது சித்தமான குணாநுபவம்-சித்திக்கப் போவது ஸ்ரீ வைகுண்டம்
பிரதிபந்தங்கள் மலிந்து கிடக்கும் இங்கே குணாநுபவம்
பிரதி பந்தங்களே இல்லா அங்கே அனுபவிக்கை ஏற்றமோ
எனக்கு என் செய்வன் என்றே இருத்தி தன்மையில் சொல்லாமல்
அடியார்க்கு அவர்க்கு படர்க்கையாக சொல்லி இருந்தாலும்-தன்மை பொருளே விவஷிதம்
திருப்பாவை -மாற்றமும் தாராயோ வாசல் திறவாதே -முன்னிலையாக சொல்லும் இடத்து படர்க்கை பிரயோகம்
இனி இனி என்று கதறும் ஆழ்வார் இப்படி அருளிச் செய்வது-ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்-
இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் ஒன்றே முக்கியம் என்றதாயிற்று-
ஆழ்வார் திறத்திலே எதேனுமொன்றைச் செய்ய வேணுமென்று ஸ்யாமோஹத்தினாலே எம்பெருமானுடைய
திருக் கண்கள் செவ்வியவாயிருந்ததால் செங்கண்மால்! என் விளிக்கின்றார்.
யானுரைப்பது ஒன்றுண்டே = நீ ஸர்வஜ்ஞனாயினும், உனக்கும் நான் தெரிவிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு காண் என்கை.
இப்பொழுது நீ வியாமோஹத்தாலே கலங்கி யிருக்கிறாயதலால் ‘கலங்கினவர்களைத் தெளிந்திருப்பவர்கள் தெளிவிக்கக் கடவர்கள்’
என்னும் நீதியிலே உன்னை நான் தெளிவிக்க வேண்டி உனக்கொன்று சொல்லுகிறேன் கேளாய் என்றார் போலும்
எம்பெருமான் தெளிவழிந்து கலங்கி நிற்கும்படியை வெளியிடுகிறார்.
உன்னடியார்க்கு என்செய்வனென்றே இருத்தி நீ
என்பதனால் உன்னடியவர்களுக்கு நீஎவ்வளவு நன்மைகளைச் செய்து வைத்தாலும்
‘ஐயோ! ஒன்றும் செய்யவில்லையே, ஒன்றும் செய்யவில்லையே’ என்றே அமைந்து
‘என்ன நன்மை செய்வோம், என்ன நன்மை செய்வோம்’ என்றே அலைபாயா நின்றாய்;
இஃது உன்னுடைய கலக்கமன்றோ என்கை.
ஆழ்வார் இப்படி சொன்னதைக் கேட்ட எம்பெருமான்
‘நான் இப்படி கலங்கி யிருக்கிறேனென்பதை நீர் எதுகொண்டு தெரிந்து கொண்டீர்?’ என்று கேட்க;
அதற்கு ஆழ்வார்,
‘எப்போதும் உன்னுடைய குணாநுபவமே போது போக்காம்படி என்னை இவ்வளவு அநுக்ரஹித்து வைத்தும் ஒரு நன்மையும்
எனக்குச் செய்யவே யில்லையாக நினைத்துக் கொண்டு, இன்னமும் ஏதோ செய்வதாகப் பாரித்திருக்கிறா யன்றோ,
இதுகொண்டே உன்னுடைய வ்யாமோஹத்தைத் தெரிந்து கொண்டேன்’ என்ன;
அதற்கு எம்பெருமான் ‘ஆழ்வீர்! உண்மையில் உமக்கு நான் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தேனாகிலும்,
பரிபூர்ணாநுபவத்திற்குப் பாங்கான பரமபதத்தைக் கொடுக்காத வளவில் ஒரு நன்மையும் செய்யவில்லையென்று தானே அர்த்தம்;
அந்தப் பரமபதந்தன்னையே உமக்குக் கொடுப்பதாகப் பார்த்திருக்கின்றேன்;
இதனால் என்னைக் கலங்கினவனாகக் கொள்ளலாகுமோ?’
என்றருளிச் செய்ய;
அதன்மேல் ஆழ்வார் நின்புகழில் வைகுந்தம் தம்சிந்தையிலும் நீயவர்க்க வைகுந்தமென்றருளும் வான் இனிதோ? என்கிறார்;
இப்போது ஸித்தமான குணாநுபவத்திற்காட்டிலும்
இனி மேல் ஸித்திக்கக் கடவதான வைகுந்தம் சிறந்ததல்லா கிடாய் என்கை.
பிரதிபந்தகங்கள் மலிந்து கிடக்கிற இவ்விருள் தருமா ஞாலத்திலிருந்துகொண்டு குணாநுபவம் பண்ணுவதிற்காட்டிலும்
பிரதிபந்தகமற்ற தேச விஷேத்திலேயிருந்து கொண்டு அநுபவிக்கை ஏற்றமோ? என்பதும் உள்ளுறை.
“நீ அவர்க்கு அருளும் வைகுந்தம்” என்றாவது, “நீ அவர்க்கு அருளும் வான்” என்றாவது சொல்லலாமாயிருக்க,
அங்ஙனே சொல்லாது
“நீ அவர்க்கு வைகுந்தமென்ற அருளும் வான்” என்று அருளிச் செய்ததன் கருத்து யாதெனில்;
நின்புகழில் வைகும் சிந்தையினோர் வைகுந்தத்தை ஒரு பொருளாகவும் மதிக்க மாட்டார்கள்;
பாவோ நாந்யத்ர கசசதி” என்று திருவடி சொன்னாப்போல சொல்லி விடுவர்கள்;
நீ ஒருவன் தான் ‘வைகுந்தம் வைகுந்தம்’ என்ற வெகு சிறப்பாகச் சொல்லிக் கொண்டு கிடக்கிறாய் என்பதாகக் கருத்து தோன்றும்.
“உன் அடியேற்கு என் செய்வனென்றேயிருத்தி நீ” என்றும்
“நீ எனக்கு வைகுந்தமென்றருளும் வான்” என்றும்
தன்மையாகச் சொல்லிக் கொள்ளாமல்
‘அடியார்க்கு’ என்றும் ‘அவர்க்கு’ என்றும் படர்க்கையைச் சொல்லி யிருந்தாலும்
தன்மைப் பொருளே இங்கு விவக்ஷிதமென்க.
திருப்பாவையில் “மாற்றமும் தாராயோ வாசல் திறவாய்” என்று முன்னிலையாகச் சொல்ல வேண்டுமிடத்துப்
படர்க்கையாகச் சொல்லியிருப்பதுபோல.
“பொய்ந்நின்ற ஞானமுமம் பொல்லாவொழுக்கும் –இந்நின்ற நீர்மை யினியாமுறாமை-
அடியேன் செய்யும் விண்ணப்பமே” (திருவிருத்தம் –முதற்பாட்டு) என்று தொடங்கி அடிக்கடி வைகுந்தத்தையே
பிரார்த்திக்கின்ற ஆழ்வார் இப்பாட்டில் வைகுந்தத்தை வெறுத்துரைப்பது ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்.
‘இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் முக்கியம்’ என்ற அர்த்தத்தை விளக்கியவாறு.
—————————————————————-
(வானோ மறிகடலோ)
கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தம் இனிதன்றே’ என்றுரைத்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்,
‘இவ்வீபூதியில் எவ்வளவுதான் குணாநுபவம் பண்ணினாலும் பிரதீபந்தகங்கள் கூடவே யிருக்கிற நிலமாதலால்
இவ்வநுபவம் நிலைநிற்கக் கூடியதன்றே; பிரதிபந்தகங்களுக்கு அஞ்சி யிருக்க வேண்டியதுதானே’ என்று சொல்ல;
பகவத் விஷயத்தில் நான் இழிந்தவறே பிரதிபந்தகங்கள் போன விடம் தெரியவில்லை என்கிறார்.
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-
பதவுரை
ஆன் ஈன்ற கன்று–பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை
உயர எறிந்து–(விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து
காய் உதிர்த்தார்–(அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய
தாள்–திருவடிகளை
பணிந்தோம்–ஆச்ரயித்தோம் (அதன் பிறகு)
வன் துயரை–வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம்–ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று–(அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ–ஆகாசமோ?
மறி கடலோ–மடிந்து மடிந்து அலையெறிகிற கடலோ?
மாருதமோ–காற்றோ?
தீயகமோ–நெருப்போ?
கானோ–காடோ?
(இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;)
ஆ ஆ ஆல்–ஐயோ பாவம்.
வானோ
ஆகாசமோ-ஆகாசத்தில் மறைந்து போயினவா
மறி கடலோ
மடிந்து மடிந்து அலை எரிகிற-கடலோ-கடலில் ஒளிந்து போயினவா
மாருதமோ
காற்றோ-காற்றில் உரு மாய்ந்து போயினவோ
தீயகமோ
நெருப்போ-நெருப்பிலே விழுந்து நசித்துப் போயினவோ
கானோ
காடோ-வனவாச யாத்ரை போயினவோ-
அவை என்னருகில் இல்லை என்றதாயிற்று-
இன்ன இடத்தில் மறைந்து போயின என்று தெரியவில்லை
ஒருங்கிற்று
அப்பாபங்கள் மறைந்து போன இடம்
ஒருங்கிற்றும் -பாட பேதம்
ஆ ஈன்ற கன்று
பசுவினால் பெறப்பட்ட வத்சாசுரனை
உயரத் தாம் எறிந்து
விளா மரத்தின் மேலே வீசி எறிந்து
காய் உதிர்த்தார் –
அவ விளா மரத்தின் காய்களை உதிர்த்த-கண்ணபிரான் உடைய
தாள்
திருவடிகளை
பணிந்தோம்
ஆஸ்ரயித்தோம்-
அதன் பிறகு-
வன் துயரை
வலிய நம் பாபங்களை
ஆ ஆ ஆல்
ஐயோ பாவம்
மருங்கு கண்டிலம்
சமீபத்தில் காணோம் –
முள்ளைக் கொண்டே முள்ளைக் களைவது போல எம்பெருமான் பிரதிபந்தகங்களைத் தொலைப்பதில் மிக்க நிபுணன் என்று
காட்டுதற்காகக் கன்றினால் விளவெறிந்த கதையை இங்கு அருளிச் செய்கின்றார்;
கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் கபித்தாஸுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன் கீழ் வரும்பொழுது மேல் விழுந்து
கொல்லுவதாக எண்ணி வந்து நிற்க;
அதனை யறிந்து கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக் கொல்லும் பொருட்டுக்
கன்றின்வடிவங் கொண்டு வந்த வத்ஸாஸுரனைப்
பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் எறிய,
விளவும் கன்றுமாகிய இருவரும் சிதைந்து தமது அசுர வடிவத்துடனே விழுந்து இறந்தனர் என்பது கன்றுயரவெறிந்து காயுதிர்த்த வரலாறு.
இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளைப் பணிந்த மாத்திரத்திலே எனது பிரதிபந்தக பாபங்களெனல்லாம் இன்ன விடம்
போயினவென்று தெரியாதபடி பாறிப் பறந்து போயின; ஆகாசத்திலே மறைந்து போயினவோ, கடலில் ஒளிந்து போயினவோ,
காற்றில் உருமாய்ந்து போயினவோ, நெருப்பிலே விழுந்து நசித்ததுப் போயினவோ, அன்றி
வனவாஸ யாத்திரை சென்றனவோ அறிகின்றிலேன்; அவை என்னருகில் இல்லை- என்றாயிற்று.
மறிகடல்= மறிதலாவது- அலைகள் மடிந்தும் மடிந்து வீசப்பெறுதல்.
மாருதம்- வடசொல்.
“ஒருங்கிற்றும்” என்றும் ஓதுவர்.
கண்டிலம்- தன்மைப் பன்மை யெதிர்மறை வினைமுற்று.
ஆல்- அசை; வியப்புக்குறிப்பிடைச் சொல்லுமாம்.
ஆனீன்றி கன்று= ‘பசுவினால் பிரஸவிக்கப்பட்ட கன்று’ என்று சொல்வதன் கருத்து யாதெனில்;
‘வத்ஸாஸுரன்’ என்று ஒருவன் திடீரென்று ஆகாசத்தின் நின்றும் வந்து குதித்து விடவில்லை;
அவ்விடத்திலுள்ள பசுவின் கன்றானவொன்றின் மேலே வந்து ஆவேசித்தனன் என்பதைக் காட்டுதலாம்.
காயுதிர்த்தான் = ஆறாம் வேற்றுமைத் தொகை.
ஆவா- ‘ஹா ஹா!’ என்ற வடமொழி அவ்யயங்களிரண்டு சேர்ந்து ஆவாவெனத் திரிந்தது.
————————————————————————–
(மருங்கோதமோதும்.)
எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும்,
அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால்
எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார்.
மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-
பதவுரை
வரவு–(தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார்–(நமது) மனத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மருங்கு ஓதம் மோதும்–ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார்–மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும்–(ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்
எமக்கு–நமக்கு
அவரை–அப்பெருமானை
உன்னால்–மனத்தினால்
ஒருங்கே–ஒரே தன்மையாக
எப்பொழுதும் காணலாம்–எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.
மருங்கோத மோதும்-
சமீபத்திலே கடலை மோதும் படியாகவும்-திருப் பாற் கடலிலே
மணி நாகணையார்
மாணிக்கத்தை உடைய-திரு வநந்த ஆழ்வானை படுக்கையாக உடையவருமான பெருமாள்-
தென் திரை வருடத் திருப் பாற் கடலில் திரு வநந்த ஆழ்வான் மேல் திருக் கண் வளருமவர் என்றபடி
மருங்கே வர அரியரேலும்
ஒருவர்க்கும் ஸ்வ பிரயத்னத்தாலே அணுகி வந்து-கிட்ட முடியாதவராயினும்
ஒருங்கே எமக்கு அவரை உள்ளால் எப்பொழுதும்-
ஒரே தன்மையாக
நமக்கு-அப்பெருமானை-மனத்தினாலே-எப்போதும் கண்டு அனுபவிக்கக் கூடும்
மனக் கவலை தீர்ப்பார்
நமது மனத்தில் உள்ள துன்பங்களை தொலைப்பவரும்
வரவு
தம்முடைய வருகையினாலே-மூன்றாம் வேற்றுமை உருபு தொங்கி கிடக்கிறது
வரவினால் என்றபடி
அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே-எனது நெஞ்சிலே புகுந்து-எப்பொழுதும் சேவிக்க
எளியனாய் இருக்கிறான்-என் உள்ளத்திலே உறையும் அவனைக் காண அருமை உண்டோ –
“வரவு மனக் கவலை தீர்ப்பார்”= ‘வரவு’ என்பதில் மூன்றாம் வேற்றுமையுருபு தொக்கிக் கிடக்கிறது; வாயினாலே என்றபடி.
தானாகவே வந்து மனக் கவலையைத் தீர்க்கும் பெருமான் என்கை
ஓதம் மருங்கு மோதும் மணி நாகணையார்
தெண்திரை வருடத் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளருமவர் என்றவாறு.
இப்படிப்பட்ட பரமபுருஷன்.
மருங்கே வர அரியரேலும்= ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அணுக முடியாதவனாயினும்;
உள்ளால் நமக்கு அவரைக் காணலாம்
என்னுள்ளத்துள்ளே உறைகின்றவனைக் காண எனக்கு அருமையுண்டோ? என்கிறாராயிற்று
————————————————————-
(வரவாறொன்றில்லையால்.)
எல்லார்க்கும் அருமைப் படுமவன் உமக்கு எளியனானது எப்படி? என்று சிலர் கேட்க;
அவனுடைய நிர்வேஹதுக க்ருபைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று
என்னாலும் நிரூபிக்க முடியாது.
காரணம் எதுவானாலென்ன? வாழ்ச்சி நன்றாயிருக்கின்றதத்தனை என்கிறார்.
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—
பதவுரை
ஒருவன்–எந்த சேனனும்
ஒரு ஆறு–எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு–பிரவேசிக்க வேண்டாதபடி
(அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)
உரு மாறும்–தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
ஆயவர் தாம்–ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம்–ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பொருநாள் உலகங்களைத் தாவி யளந்தவனும்
மாயவர் தாம்–ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி–காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று–இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது–பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே–ஆச்சரியம்
வரவாறு ஓன்று இல்லையால்
இன்ன வழியாக வந்தது என்று தெரியாது
வாழ்வு இனிதால் எல்லே
பலன் போக்யதாய் இரா நின்றது-ஆச்சர்யம்
ஒருவாறு ஒருவன்
எந்த சேதனனும்-எந்த உபாயாந்தரத்திலும்
புகாவாறு
பிரவேசிக்க வேண்டாதபடி
-உருமாறும்
தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாங்களை மாற்றிக் கொள்ளுகிற
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ-அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச –
தானே தலை மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கும் கண்ணபிரான் –
அன்றிக்கே
உருமாறும்-
பரஞ்சோதி உருவை விட்டிட்டு
அழுக்கு மானிட உருவை-ஏற்றுக் கொண்ட கோபால கிருஷ்ணன் என்றுமாம்
ஆயவர் தாம்
ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனும்
சேயவர் தாம் –
ஆசூர பிரக்ருதிகளுக்கு-எட்ட முடியாதவனும்
பாண்டவர்களுக்கு அணியனாயும்
துரியோத நாதிகளுக்கு தூரஸ்தநாயும்
ஒரு கால விசேஷத்திலே அனைவருக்கும் சமீபஸ்ததானாக இருப்பவன் -என்பதை
அன்று உலகம் தாயவர் தாம் – என்கிறது அடுத்து
அன்று உலகம் தாயவர் தாம்
முன்பு ஒரு கால்-உலகங்களைத் தாவி அளந்தவனும்
மாயவர் தாம்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனுமான-எம்பெருமான் –
இப்படி சேயனாயும் அணியனாயும் இருப்பது பற்றி மாயவர் தாம் என்கிறது
காட்டும் வழி
காட்டுகிற உபாயம்-
ஒருவன் ஒரு ஆறு புகாவாறு உருமாறும் ஆயவர் தாம் -ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ;
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யமி மாசுச:” என்ற சரமச்லோகததின் பொருளை அநுஸந்தித்தபடி.
கருமம் ஞானம் முதலிய எந்த உபாயங்களிலும் யாரும் இறங்க வேண்டாதபடி அவரவர்களுடைய காரியங்களைத் தான்
தன் தலை மீது ஏறிட்டுக்கொண்டு நோக்கும் கண்ணபிரான் என்கை.
(“உருமாறும்.”) உலகத்தில் எவன் பலனை அநுபவிக்க வேண்டியவனோ அவன் உபாயாநுஷ்டாகம் பண்ணவேணு மென்றிருக்க,
பலனை, அநுபவிப்பவனான சேதநனை ஒரு உபாயமும் அநுஷ்டிக்க வேண்டாவென்று விலக்கி,
பலனை அநுபவியாத தான்
அவன் செய்ய வேண்டிய காரியங்களைத் தன் மீது ஏறிட்டுக் கொண்டு செய்கை உருமாறுகையிறே.
இனி, உருமாறுமாயவர் என்றது-
பரஞ்சோதி யுருவை விட்டிட்டு அழுக்கு மானிட சாதி யுருவை ஏற்றுக் கொண்ட கோபால க்ருஷ்ணன் என்றபடியாம்.
சேயர்தாம்-
பாண்டவர் போல்வார்க்கு அணியனாயிருக்கச்செய்தேயும், துரியோதநன் போல்வார்க்கு தூரஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது.
ஒரு காலவிசேஷத்திலே எல்லார்க்கும் ஸமீபஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது அன்று உலகம் தாயவர் தாம் என்று.
இப்படி ஒருகால் அணியனாய்
மற்றொருகால் சேயனாய்,
சிலர்க்கு அணியனாய் சிலர்க்குச் சேயனாய் இருப்பது பற்றி
மாயவர்தாம் என்கிறது.
இப்படிப்பட்ட எம்பெருமான் தன் இன்னருளாலேதானே காட்டும் வழி (உபாயம்) நிர்ஹேதுகமாகையாலே
இன்னமார்க்கமாக வந்ததென்று நமக்குத் தெரியாதாயினும், போக்யமாக அநுபவித்துக் கொண்டு ஆநந்தக் கடலிலே மூழ்கியிராநின்றோம்;
வாழ்ச்சியில் குறையில்லை; எல்லே- ஆச்சரியம்.
உலகத்தில் ஒருவனுக்கு மிகுந்த செல்வம் வந்தால் ‘இஃது நமக்கு எந்த வழியாலே வந்த’தென்று ஆராய்தல் அவசியமன்றோ;
ஆநந்தத்தை அநுபவிப்பதன்றோ ப்ராப்தம்.
அதுபோல ஆழ்வாரும் ‘பகவத்க்ருபை எனக்கு எந்தக் காரணத்தாலே வந்தாலென்ன?
ஆநந்தம் அளவற்றிராநின்றது காண்மின்’ என்கிறார்.
———————————————————————-
(வழித் தங்கு வல் லினையை.)
இவ் விருள் தரு மா ஞாலத்தில் உள்ளவரைக்கும் ப்ரதிபந்தகங்கள் மேலிட்டுக் கொண்டேயிருக்குமே!
என்று ஆழ்வாருடைய நெஞ்சு தளும்ப.
அதனை ஆழ்வார் ஸமாதானப்படுத்துகிறார் இதில்
அவ் வெம்பெருமானுடைய சக்தி எப்படிப்படட்து தெரியுமோ வுனக்கு?
ஆச்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்;
அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ?
தொலைத்தே யருள்வன்;
நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று.
பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப சமாதானம் படுத்துகிறார் இதில்–
கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -பெரியாழ்வார்–
வளை யுகிர் ஒளி மொய்ம்பில் மறவோனது ஆகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள எழ விட்ட குட்டமது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே -திரு மங்கை ஆழ்வார்
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இ க்கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ் விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ் வடங்க மார்விடந்த மால் –57-
பதவுரை
நெஞ்சே–நெஞ்சமே!
போர்–யுத்த பூமியிலே
அவுணன் தன்னை–இரணியாசுரனை
தழீஇக் கொண்டு–அழுந்தக் கட்டிக்கொண்டு,
புலால் வெள்ளம்–ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி–பள்ள நிலங்கள் பக்கமாக
எங்கும் சுழித்து உகள–கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும்படியாக
வாழ்வு அடங்கா–(அவ்விரணியனுடைய) வாழ்ச்சி முடியும்படி
மார்வு இடந்தமால்–அவனது மார்பைப் பிளந்த பெருமான்,
வழி தங்கு வல்வினையை–இடைவழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை
மாற்றோனோ–(போக்கியருள மாட்டானோ? (போக்கியேவிடுவன்.)
வழித்தங்கு வல்வினையை
இடை வழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற-பிரதிபந்தகமான வலிய பாபங்களை
மாற்றானோ
போக்கி அருள மாட்டானோ –
போக்கியே விடுவன்
நெஞ்சே
நெஞ்சமே
தழீ இ க்கொண்டு
அழுந்தக் கட்டிக் கொண்டு
பேராவுணன் தன்னை
யுத்த பூமியிலே-ஹிரண்யாசுரனை
சுழித்து எங்கும் உகள
கண்டவிடம் எங்கும் சுழுத்திக் கொண்டு-அலை எறிந்து கிளம்பும்படியாக
தாழ்விடங்கள் பற்றி –
பள்ள நிலங்கள் பக்கமாக
புலால் வெள்ளம்
ரத்த பிரவாஹமானது
வாழ்வடங்க
அந்த இரணியன் உடைய வாழ்ச்சி முடியும்படி
மார்விடந்த மால்
அவனது மார்பை பிளந்த பெருமாள் –
வழித்தங்கு வல்வினை =
பிரதிபந்தகமொன்றுமில்லாவிடில் வழியில் எங்கும் தங்காமல் நேராகச் சென்று நற்கதி காணலாம்;
பிரதிபந்தகமான பாவங்கள் உள்ளவர்கள் இடைவழியிலே தங்க நேர்ந்துவிடும்,
ஆகவே இங்கு, வழியிலே தங்கப் பண்ணுகிற வல்வினையென்று
ப்ராப்தி ப்ரதிபந்தகாமன பாவங்களைச் சொன்னபடி.
மாற்றானோ என்றது- போக்கியே விடுவேன் என்றபடி.
தழீஇக் கொண்டே- தழுவிக்கொண்டு
இரணியனைக் கொன்ற கோரச்செயலை வருணித்துக் கூறுகின்றார் சழித்தெங்கும் என்று தொடங்கி.
இரணியனைக் கொன்ற போது அவனுடம்பிலிருந்து கொழித்துக் கிளர்ந்த ரத்த வெள்ளமானது அங்கே ஸமீபத்திலிருந்த
பள்ள நிலங்கள் யாவும் நிறையும்படி பெருகிற்று என்றவிதனால் அவனுடைய உடல் தடிப்பு சொல்லிற்றாயிற்று.
“கோளரியினுருவங் கொண்டு அவுணனுடலம் குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்” என்றார் பெரியாழ்வார்;
திருமங்கையாழ்வாரும் பெரிய திருமொழியில் (11-4-4.) “வளையுகிராளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது சென்றொருசொல்.
பிளவெழவிட்ட குட்டமது வையமூடு பெருநீரில் மும்மை பெரிதே” என்றருளிச் செய்தார்;
இரணியனைப் பிளந்தபோது உண்டான ரத்த வெள்ளக் குழியானது
மஹா ப்ரளய ஸமுத்ரததிற் காட்டிலும் மூன்று மடங்கு பெரிது என்றாரிறே.
————————————————————
(மாலே படிச்சோதி மாற்றேலினி.)
கீழ்ப் பாட்டில் “அவு ணன்றன்னை மார்விடந்தமால் – வழித்தங்க வல்வினையை மாற்றானோ நெஞ்சே!”
என்று தமது நெஞ்சை நோக்கி ஆழ்வார் சொன்னதை எம்பெருமான் கேட்டருளி
‘ஆழ்வீர்! நான் * வழித்தங்கு வல்வினையை மாற்றுவது மாத்திரமோ செய்வேன், உம்மைப் பரமபதத்திலே கொண்டு
சேர்ப்பதும் செய்வேன் காணும்’ என்றருளிச் செய்ய;
அது கேட்ட ஆழ்வார் ‘பிரானே! அடியேன் பரமபதத்தை விரும்புகின்றேனல்லேன்;
இதுவரை * மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்தது போலவே இன்னமும் பலபிறவிகள் பிறக்கப்பெறினும் வருத்தமில்லை;
அடியேனை இனிப் பிறவாதபடி பண்ணித் திருநாட்டிலே வைத்து
அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக் கொள்ள வேணுமென்று வேண்டுகின்றேனல்லேன்;
நீ என்னை மறவாதிருக்க வேணும், உன்னை நான் மறவாதிருக்கவேணுமென்னு மித்தனையே அடியேன் விரும்புவது.
நீ என்னை மறாவதிருக்கையாவது – உன்னுடைய திவ்யாத்ம குணங்களையும் திவ்ய மங்கள் விக்ரஹ குணங்களையும்
இப்போது நானநுபவிக்குமாறு எங்ஙனே அருள் செய்திருக்கிறாயோ இப்படியே மேலுள்ள காலமும் அருளி செய்கையேயாம்;
உன்னை நான் மறவாதிருக்கையாவது- இப்போது உன்னை அநுபவிப்பது போலவே எந்நாளும்மநுபவிக்கையாம்.
ஆக இவ்வளவே அடியேன் பிரார்த்திக்கும் ஸம்பத்து – என்கிறார்.
மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-
பதவுரை
மாலே–திருமாலே!
உனது–உன்னுடைய
பால்போல் சீரில் பழுந்தொழிந்தேன்-பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
இனி–இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று–வீடுபெற்று
அடிக் கீழ்–(உனது) திருவடிவாரத்திலே
குற்றவேல்–கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று–அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிச் சோதி–(உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை
மாற்றேல்–எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நிற்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால்–மேலுள்ள காலத்திலே
(உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை.)
மறப்பு இன்மை–உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான் வேண்டும் மாடு–அடியேன் ஆசைப்படும் செல்வம்.
மாலே
திருமாலே
படிச் சோதி மாற்றேல்-
உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜசை -எனக்கு ஒரு காலும் மாற்றாமல்
நித்ய அனுபவ விஷயம் ஆக்க வேணும்
படி -என்று திரு மேனிக்கு பெயர்
உனது திருமேனி ஒளியை இப்போது அனுபவித்துக் கொண்டு இருப்பது போலே
என்றைக்கும் மாறாமல் அனுபவித்துக் கொண்டே இருக்கும் படி அருள வேணும் –
இனி –
இனிமேல்
உனது-
உன்னுடைய –
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –
பால் போல் பரம போக்யமான-திருக் கல்யாண குணங்களிலே-ஆழ்ந்து விட்டேன் –
இத்தால்
குணானுபவமே முக்கியமே ஒழிய
கைங்கர்யம்-அவ்வளவு முக்கியம் இல்லை என்றபடி
மேலால் –
மேலுள்ள காலத்தில் –
பிறப்பின்மை பெற்று –
வீடு பெற்று
அடிக்கீழ் குற்றேவல்
உனது திருவடி வாரத்திலே-கைங்கர்யம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று
நான் அபேஷிக்கும் செல்வம் அன்று
மறப்பின்மை
உன்னை மறவாது இருத்தலே வேண்டுவது
இது ஒன்றே யான் வேண்டும் மாடு
சமத்காரமாக அருளிச் செய்கிறார்
அவி ச்ம்ருதிஸ் தவச் சரணார விந்தே பாவே பாவே மேஸ்து
பவத் பிரசாதாத் -முகுந்த மாலை ஸ்ரீ ஸூக்தியை போலே –
மாலே! படிச்சோதி மாற்றேலினி = படி என்று திருமேனிக்குப் பெயர்; அதனடைய சோதியை மாற்றவேண்டா என்றது –
உனது திருமேனியின் ஒளியை இப்போது நான் அநுபவித்துக் கொண்டிருப்பது போலவே என்றைக்கும் மாறாமல்
அநுபவித்துக் கொண்டே யிருக்கும்படி அருளி புரிய வேணுமென்றபடி.
உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் = உன்னுடைய பரம போக்யமான திருக்குணங்களிலே நன்றாக ஆழ்ந்துவிட்டேன் என்கை
ஆதலால் எனக்குக் குணாநுபவம் முக்கியமே யொழிய, கைங்கரியம் அவ்வளவு முக்கியமன்று என்று காட்டினவாறு.
பிறப்பின்மை – பிறவாமை; அதாவது ஸம்ஸார நிவ்ருத்தி; பரமபதத்தைச் சொன்னபடி.
அங்கே சென்று குற்றேவல் செய்கையாகிற செல்வத்தை அடியேன் வேண்டவில்லை;
எங்கிருந்தாலும் உன் திருக்குணங்களை மறவாமலிருக்குமத்தனையே வேண்டுவது.
பரமபதம் சென்று அங்கே நித்ய கைங்கரியம்பண்ணவேணுமென்கிற அளவற்ற ஆசையும்
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்ததில் வருத்தமும் வெறுப்பும் ஆழ்வார்க்குப் பூர்த்தியாக இருக்கச் செய்தேயும்
இப் பாட்டில் இப்படி அருளிச்செய்வது ஒருவகைச் சமத்காரமே யென்க.
இருக்கிறவரையில் எம்பெருமானை மறவாதிருத்தல் நன்று என்கிற சாஸ்த்ரார்த்தத்தை இதனால் வெளியிட்டபடி.
“அவிஸ்ம்ருதிஸ்த்வச் சரணாரவிந்தே பவேபவே மேஸ்து பவத் ப்ராஸாதாத்” என்ற முகுந்தமாலையை இங்கே அநுஸந்திப்பது.
குறுமை+ஏவல்= குற்றேவல்; சிறிய கைங்கரியம்.
மாடு-செல்வம்; “மாடு பொன் பக்கம் செல்வம் ” என்பது நிகண்டு.
———————————————————————
(மாடே வரப்பெறுவர்.)
இவ்விருள் தருமா ஞாலத்திலே எப்படிப்பட்ட ஞானியர்களும் ப்ரக்ருதி ஸ்வபாவங்களை உதறித் தள்ளிவிட்டு
எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுபவித்துக் கொண்டே யிருந்தாலும்,இடையிடையே இந்நிலத்தின் காரியம் நிகழ்ந்தே தீருமிறே.
இல்லாவிடில் இருள் தருமாஞாலமென்று இவ்விபூதியின் பெயர் பொய்யாகுமே; இருள் இடையிடையே கலந்து பரிமாறுமிறே.
கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு
இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று;
தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-;
திருப்பாற்கடலிலே அலைகள் துடைகுத்தத் திருக்கண் வளாந்தருளாநின்ற திருமாலின் திருநாமங்களை நாம்
அநுஸந்திக்க வேணுமென்று சிந்தித்த மாத்திரத்திலே யிருக்க
இன்னமும் இவ்விடத்திலேயே சுற்றுக் காலிட்டுக்கொண்டு திரிகின்றனவே,
முன்போல இன்னமும் நம்மிடத்திலேயே தங்கியிருக்கலா மென்று நினைத்திருக்கின்றனவோ? என்கிறார்.
கீழ் ஐம்பத்து நான்காம்பாட்டில் “வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோவொருங்கிற்று” என்று
வல்வினைகள் போனவிடம் தெரியவில்லை யென்றருளிச்செய்த ஆழ்வார் திருவாக்கிலே மீண்டும்
“வல்வினையார் காடானுமாதானும் கைக்கொள்ளார்” என்கிற இப்பாசுரமும் வெளி வரும்படியாயிருக்கிறகிறே
இவ்விருள் தருமாஞாலத்தின் கொடுமை!.
இருள் தரும் மா ஞாலத்திலே இருள் இடை இடையே கலந்து-பரிமாறும் இறே-
பகவத் குணங்களை அனுபவித்த ஆழ்வார்-
சம்சார தண்மை தோன்றத் தொடங்க திரு உள்ளம் நொந்து பேசுகிறார் –
மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-
பதவுரை
பேர் ஓதம்–விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடேபோய்–சிதறி விழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பேராளன்–எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓத–அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க–நினைத்த மாத்திரத்திலே,
வல்வினையார்–கொடிய பாவங்கள்
பேர்ந்து–நம்மைவிட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக்கொள்ளார்–காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப்பெறுவராம் என்றே?–இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?
மாடே வரப் பெறுவாராம் என்றே
இன்னமும் நம்மிடத்திலே-வாழப் பெறலாம் என்ற-எண்ணத்தினாலோ
கீழே மாடு -செல்வம் அர்த்தம்
இங்கே பக்கம்–
மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு
என்றே சொல் நயத்தால் வாராமை காட்டி அருளுகிறார்
இனி நம்மிடம் வல் வினைகள் தங்க இடம் இல்லை என்றபடி –
வல் வினையார்
கொடிய பாவங்கள்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் –
காடுகளிலோ மற்று ஏதேனும் ஓர் இடத்திலோ-போய்ச் சேராமல் இருக்கின்றனவோ
கீழே வானோ மறி கடலோ –என்று அருளிச் செய்த ஆழ்வார்-இப்பொழுதும்
மீண்டும் இப்படி அருளிச் செய்யும்படி-இருள் தரும் மா ஞாலத்தின் கொடுமை –
பேரோதம் –
விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடே போய்
சிதறி விழுகின்ற-அலைகளின் உள்ளே சென்று
கண் வளரும் –
திருக் கண் வளர்ந்து அருளா நின்றுள்ள –
பேராளன் –
எம்பெருமானுடைய
பேரோதச் சிந்திக்கப் –
திரு நாமங்களை சிந்திக்க வேணும்-என்று நினைத்த மாத்ரத்திலே
பேர்ந்து
நம்மை விட்டு கிளம்பி –
கீழ்ப்பாட்டில் மாடு என்பதற்கு செல்வம் என்று பொருள்;
இப்பாட்டில் அப்பதமே பக்கமென்ற பொருளில் வந்தது.
(“மாடு பொன்பக்கம் செல்வம்” என்பது நிகண்டு.)
வரப்பெறுவராமென்றே? என்ற சொல் நயத்தினால்,
இனி அவ் வாசைக்கு இடமில்லை;
வல்வினைகட்கு இனி நம்மிடத்தில் தங்க முடியாது- என்பது விளக்கப்பட்டதாம்.
—————————————————————-
(பேர்ந்து ஓன்று)
வல்வினைகள் தம்மை அடர்க்க நினைக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்;
அவை அடர்ந்தாலும் தம்முடைய அத்யவஸாயம் ஒரே உறுதியாயிருக்கும் படியைப் பேசுகிறாரிதில்.
நெஞ்சே! திருத்துழாய் மாலையை அணிந்தள்ள திருமாலின் போக்யதையில் நீ பழகினவனன்றோ?
உனக்கு நான் புதிதாக உபதேசிக்க வேண்டுவதன்றே? அந்த போக்யதையில் நீ யீடுபட்டு வேறு எந்த வஸ்துவிலும் கண் செலுத்தாமல்
அவ்வெம்பெருமானொருவனையே பின்பற்றி நிற்க வேண்டியது உன் கடமை; இந்த ஸ்வரூபம் கெடாதபடி நின்றாலும் நில்லு;
நிற்காமல் லிஷயாந்தாங்களைப்பற்றி முடிந்து போவதானாம் போ; உன்னை நான் நிர்ப்பந்திக்க மாட்டேன்;
ஆனால், நம்மை நரகத்துக்குப் போகாதபடி தடுத்துக் காத்தருளவல்ல கடவுள் அவனைத் தவிர வேறொருவன்
எங்குமில்லை யென்பதை மாத்திரம் உனக்கு உறுதியாய்ச் சொல்லுவேன்;
இதனை விச்வஸித்து நீ அப்பெருமானையே அநுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாயாகில் உகக்கிறேன்;
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும் என்று வெறுத்திருக்கிறேன் = என்றராயிற்று.
பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60–
பதவுரை
என் நெஞ்சே–எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது–வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின்நிற்பாய்–போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய்–அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை–அநாதியாய்
மா–பெரிதாய்
வெம்–கடினமான
நரகில்–நரகத்திலே
சேராமல்–போய்ப் புகாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை–வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண்–ஓரிடத்திலுமில்லைகிடாய்.
பேர்ந்து ஓன்று நோக்காது-
வேறு ஒன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின்னிற்பாய்-
போக்யமான திருத் துழாய் மாலையை-அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி-நின்றாலும் நில்லு
நில்லாப்பாய் –
அப்படி அவனைப் பற்றாது ஒழியினும் ஒழி-
என்னெஞ்சே
தொல்லை –
அநாதியாய்-பரமபதம் போலே நரகமும் அநாதியே
சுக்ல கிருஷ்ண கதீ ஹ்யதே ஜகதஸ் சாஸ்வதே மதே-இரண்டுமே நித்யமாக சொல்லப் பட்டதே-
ஸ்தானம் நித்யம் எனபது இரண்டுக்கும் ஒக்கும்
பரம பதம் சென்றார் நச புன ஆவர்த்ததே எனபது மட்டும் வாசி
மா வெந்நரகில்-
பெரிதாய் கடினமான நரகிலே –
சேராமல்
போய்ப் புகாமல்
காப்பதற்கு
நம்மை ரஷிப்பதற்கு –
-பேர்ந்து எங்கும் இல்லை காண் மற்றோர் இறை
பேர்ந்து மற்று ஓர் இறை எங்கும் இல்லை காண்–
வேறு ஒரு ஸ்வாமியும் வேறு இடத்தில் இல்லை காண் –
தொல்லைமாவெந்நரகில்= நித்யவிபூதியென்று சொல்லப்படுகிற பரமபதம் மாத்திரமே யன்றோ ஆதியந்தமற்றது;
நரகமும் அப்படிப்பட்டதோ? தொல்லை நரகம் என்னலாமோ? என்று சிலர் சங்கிப்பர்கள்;
பகவத் கீதையில் = சுக்லக்ருஷ்ணகதீ ஹ்யதே ஜகதச் சாச்வதேமதே” என்று இரண்டுமே நித்யமாகச் சொல்லப்பட்டுள்ளமை காண்க.
பரம பதஞ் சென்றவர்கள் திரும்பி வருதலில்லாமையால் அதனை விசேஷித்து நித்யவிபூதி யென்கிறது.
ஸ்தாநம் நித்யமென்பது இரண்டுக்குமொக்கும்.
காப்பதற்கு இல்லை காண் மற்றொரிறை = “எருத்துக் கொடியுடையானும் பிரம்மனுமிந்திரனும் மற்றுமொருத்தரும்
இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை” என்று பெரியாழ்வார் திருமொழியும்,
“நீளரவைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தென்னரகைப் பற்றிக் கடத்தும் படை” என்ற பொய்கையார் பாசுரமும்
இங்கு அநுஸந்திக்கத்தக்கன.
—————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply