ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

குணங்களால் பெருமை என்பது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸர்வேஸ்வரன்
நிர்ஹேதுகமாக ஆழ்வாரைக் கடாக்ஷித்து
இமையோர் தலைவா என்று பேசலாம் படி
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
(கிருபையே காரணம் -கண்டு என்பதால் ஜீவாத்மா விலக்காமல் கிருபைக்கு பாத்ர பூதனாய் )
தன்னை அனுபவிக்கைக்கு அனுகூலமான தேசத்தையும் அனுகூலமான ஞானம் வ்ருத்தம்
உள்ள -தேகத்தையும் காலத்தையும்
இங்கே இல்லாமல்
சதா அனுபவ அனுபவம் பண்ணும் நித்ய ஸூ ரிகளையும் கண்டு
தமக்கு அவர்களோபாதி அவன் பக்கல் உண்டான பிராப்தி உண்டாவதை உணர்ந்து
இவ்வனுபவத்துக்கு பிரதிகூலமான ஞான வ்ருத்த தேகங்களை தாம் உடையராய் இருக்கிறபடியும்
பிரதிகூலமான சம்சாரத்தில் இருக்கும் இருப்பையும் உணர்ந்து
தத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி சம்பந்தம் போக்கித் தர
இனி யாம் உறாமை -என்று
இமையோர் தலைவா என்று சொல்லத் தெரிந்தாலும் அனுபவிக்க யோக்யதை இல்லாமல்
கொண்டாட்டமும் குத்தலுமாக
எனக்குத் தலைவனாக வேண்டாமா
என்றார் திரு விருத்தத்தில்

திரு விருத்தத்தில் நூறு பாட்டுக்கும் இதே அர்த்தமாக வேணும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று -உபக்ரமித்து
அழுந்தார் பிறப்பாம் பொல்லா மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே — என்று உப ஸம்ஹரித்து
அடியேன் செய்யும் விண்ணப்பம் உபக்ரமித்து
மாறன் விண்ணப்பம் செய்த என்று தலைக் கட்டுகையாலும்

உறாமை யோடே உற்றேன் என்று சொல்ல மாட்டாமல் கர்மங்களைத் தொலைத்தாலும் கிருபையால் இங்கே வைத்தார்
ஆற்றாமையால் சொல்லியவையே நடுவில் உள்ள பாட்டுக்கள்

ஸ்ரீ ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
ஸ்ரீ திரு விருத்தம்
இமையோர் தலைவா -விளிக்கிறார்
அவன் தனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி அனைத்தையும் விஸத தமமாகக் காட்டி அருள

நித்ய ஸூரிகள் நித்ய விபூதியில் அனுபவிக்க
நித்ய சம்சாரிகள் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து உழலும் படியைக் கண்டு –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று -உபக்ரமித்து
அழுந்தார் பிறப்பாம் பொல்லா மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே — என்று நிகமித்து
இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பமே–என்பதைக் காட்டி அருளினார் ஸ்ரீ திருவிருத்தத்தில்-

பிரபந்தங்கள் தலைக்கட்டவும் –
நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் –
ஆர்த்தி விளைவிக்கவும் –
தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-
அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை

தான் நினைத்த கார்யங்கள் தலைக்கட்டவே பீஷ்மர் சர கல்பத்தில் கிடைக்க அவரைக்கொண்டு நாட்டுக்கு தர்மங்களை உபதேசம்-
தர்மபுத்ரனை வியாஜ்ய மாத்ரம்
ஆழ்வாரை சம்சாரத்தில் இருக்க வைத்ததும் இத்துடன் ஒக்குமே
திருவாய் மொழி பர்யந்தமாகப் பாடுவித்து நாட்டை வாழ்விக்க வேண்டும் என்றே
இவருக்கு தான் சேஷியாய் இவர் சேஷ பூதராய் விரோதி நிவ்ருத்தி பண்ணுவாரும் தானேயாய் இருக்க
ஸ்ரீ வைஷ்ணவர்களை சேஷியாக தலைமக்களாக சொல்லுவான் என்
1-ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவனைப் பெருக்கைக்கு உபகாரகர்கள் என்பதாலும் த்வார சேஷிகள் -நாயகனாய் நின்ற
2- -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு நாளும் பிரிகிலேன் –ஸ்ரீ பெரிய திரு மொழி -7-4-4- – -பர தசையில் ப்ராப்யர் ஆகையாலும்
இங்கே உபகாரகர் -புருஷகார பூத்தார் அங்கு ப்ராப்யர்
3- போதயந்த பரஸ்பரம் இதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்களை
என்றபடி அவர்களையே தம் திரு விருத்தத்தில் முக்கியமாக அருளுகிறார் –
மச் சித்தா மத் கதா பிராணா போத யந்த பரஸ்பரம் -கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –ஸ்ரீ கீதை -10-9-
விருத்தமான சம்ச்லேஷத்துக்கு உசாத்துணை ஆவார்கள் என்பதால் அவர்களைத் தலைமகனாக அருளிச் செய்கிறார்

திருவாசிரியத்தில்
தான் நினைத்த கார்யம் தலைக்கட்டவும்
(எல்லாமும் பண்ணக் கூடாது ஒன்றுமே பண்ணாமல் இருக்க முடியாது )
ப்ரக்ருதி சம்பந்தம் அருத்திலன் ஆகிலும்
நின்ற நிலையில் காட்டில் சிறிது விசேஷம் பண்ணிக்க கொடாவிடில் இவர் தரிக்க மாட்டாரே
ப்ரக்ருதி சம்பந்தம் அற்றார் அனுபவிக்கும் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதியை
பிரக்ருதியிலே இருக்கும் போதே அனுபவிக்கும் படி ஞான வைஷ்யத்தை அருளிச் செய்தார்
(ஞானம் விளங்க விளங்க தானே அனுபவம் -ஹர்ஷம் -கைங்கர்யம் அனைத்தும் கிட்டும்
ஸாஸ்த்ரம் புறம்பானாலும் ஸத்யஸங்கல்பன் எதுவும் செய்யலாமே )
ஆழ்வார் அனுபவித்து திருவாசிரியம் அருளிச் செய்தார்

இதில் -பெரிய திருவந்தாதியில் –
இதர விஷயங்கள் அனுபவிக்கும் பொழுது ஓன்று அன்றிக்கே
அனுபவித்தாலும் இன்னது அனுபவித்தோம் என்று சொல்வதற்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும் –
ஆனால்
பகவத் விஷயத்தில் -இப்படி இன்றிக்கே –
அனுபவித்த விஷயம் சொல்லி முடிக்க முடியாமல்
அநுபூத விஷயம் தோற்றாமல்
அனுபாவ்ய அம்சம் பெருத்து இருக்குமே -அனுபவிக்க வேண்டிய விஷயம் விஞ்சி இருக்குமே
ஆகையால்
முயற்றி சுமந்து (1)என்று தொடங்கி உத்ஸாகத்துடன் –
நின்ற நிலையிலே மொய் கழலே ஏத்த முயல்–(87) என்று தலைக் கட்டுகையாலே
விஷய அனுரூபமாக அபி நிவேசம் பெருகுகிற படி சொல்கிறது
ஆனால் அபி நிவேசம் வளர்ந்து முடிந்தது என்று சொல்ல முடியாதே

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்ரீ பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -ஸ்ரீ திரு விருத்தம் –

ஸ்ரீ சித்ரகூடம் சென்று பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை ஸ்ரீ திருவாசிரியம்

ஸ்ரீ நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை இந்த ஸ்ரீ பெரிய திருவந்தாதி

ஸ்ரீ திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதைக் கண்டு
ஸ்வரூப அனுரூபமான பேறு பெற்ற நிலை ஸ்ரீ திருவாய்மொழி –

திரு விருத்தம் -பர பக்தி
திருவாசிரியம் -பரஞானம்
பெரிய திருவந்தாதி -பரம பக்தி
திருவாய் மொழி -பிராப்தி -என்றுமாம்

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
ஆழ்வாருக்கு தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளை நித்ய ஸூரிகளுக்குப் போலவே இங்கேயே காட்டி அருள
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த ஹர்ஷ அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்வ கீயாம் பகவத் அநுபவே ஸ்போதயாமாச தீவ்ரம் ஆசாம்-
பெரிய த்வரை உடன் அவனையே மடி பிடித்து
ஆர்த்தியை வெளியிட்டு அருளுகிறார் இதில் –

விஷய கௌரவரத்தால் இது பெரிய திருவந்தாதி –

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம்
தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி–56—

அவனுடைய நிர்ஹேதுக கிருபைக்கு அடி அறிய ஒண்ணாதே-காரணம் எதுவாய் இருந்தால் என்ன-
வாழ்ச்சி நன்றாக இருக்கிறது அத்தனை-என்கிறார் இதில்-

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-

உகந்து அருளின நிலங்களை எல்லாம் விட்டு உம்முடைய நெஞ்சில் அன்றோ
நித்ய வாஸம் செய்கிறோம் என்ன-

அது கேட்டுத் தேறி
ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்கிறார் இதில்

ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-

எம்பெருமானுக்கு நிழலும் அடி தாறும் ஆனோம்-விட்டு நீங்காது அத்தாணிச் சேவகம் செய்யப் பெற்றோம்-
ஆகையாலே கார்யம் கை கூடிற்று –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய
ஹ்யா கதோ மதுராம் புரிம் -என்றபடி-

திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-
குடக்கூத்தாடி-
அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-
இளைப்பாறுகின்ற பெருமானுக்கு
நிழலும் அடிதாறும் ஆனோம்

வெந் நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை–60–
வல் வினைகள் அடர்த்தாலும்-தமது அத்யாவசாயம் குலையாமல் இருப்பதை அருளிச் செய்கிறார் இதில்-

நெஞ்சே உனக்கு புதிதாக உபதேசிக்க வேண்டியது இல்லை
அவனை விஸ்வசித்து அவனையே அனுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாய் ஆகில் உகக்கிறேன்
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும்
என்று வெறுத்து இருக்கிறேன் -என்கிறார்

மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-

மாலார் குடி புகுந்தார் என் மனத்தே – –22-
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ யம்மா காட்டும் நெறி —-5–
நல் காப்பான் தாய் தந்தை எவ் வுயிர்க்கும் தான் –23-

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான் தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால் அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

சீறேல் நீ –2-அபராத ஷாமணம்
உன் அடியார்க்கு என் செய்வேன் என்றே இருத்தி நீ -53-
நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூசசா –

இவ்வாறு பலவாறும் தாஸஸ்த்வம் அருளிச் செய்வதாலும் இது பெரிய திருவந்தாதி –

ஸ்வரூப ஞானம் பெற்று குணக் கடலுள் அழுந்தி குள்ளக் குளிர நீராட கடாக்ஷ லேசத்தாலே
அருளுவான் என்றதை எடுத்துக் காட்டியதால் பெரிய திருவந்தாதி-

அதர்வண வேத சாரமாகும் –

(அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –
தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்
ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185
பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

————-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-என்று தொடங்கி

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-என்று நிகமிக்கிறார் –

இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் -குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading