ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –
———-
ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக க்ரஹிக்கப் பார்த்தால்
அவகாசம் பெற்று அன்றோ க்ரஹிப்பது -என்கிறது
(இடுக்குண்ட என்றதைப் பற்ற அவதாரிகை அருளிச் செய்கிறார்
என் நெஞ்சிலே அகப்படுகையாலே புறம்பே போகத் திருவடிகளுக்கு அவகாசம் இல்லாமையால்
சம்சாரிகள் ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக திருவடிகளை உள்ளே க்ரஹிக்கிறோம்
என்றாலும் இனிப் போகாது என்றபடி -)
(பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )
சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-
பதவுரை
அன்று–முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு–அந்த மாவலியின் யாக பூமியிற் சென்று
பார் உருவும்–பூமியாகிற வஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும்–அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜல தத்துவமும்
கண் புதைய–மறையும்படி
கார் உருவன் தான் நிமிர்த்த கால்–காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள்
அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு–கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி
என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு
இன்று–இப்போது
இங்கு–இவ்விடத்தில்
என் நெஞ்சால்–என்னுடைய நெஞ்சிலே
இடுக்குண்ட–நெருக்குப் பட்டுக் கிடக்கின்றன.
சென்று அங்கு வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
வெந் நரகு -என்று அகலுகைக்குப் பேர்
சம்சாரத்துக்கும் பேர்
அறிவார்க்கு நரகமாவது -ஸம்ஸாரம் இறே
(நின் பிரிவிலும் சுடுமோ காடு -உன்னை விட்டுப் பிரிவதே நரகம்
நரகத்தை நகு நெஞ்சே -ஆழ்வார் )
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட –
நினைவு இன்றிக்கே என்னுடைய நெஞ்சிலே நெருக்குண்டது
(என்னைப் பிடிக்கவே ஊராக வளைத்தான் )
அன்று அங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய காருருவன் தான் நிமிர்த்த கால்
இன்று இங்கன் நெஞ்சால் இடுக்குண்டது
(அன்று அங்கு) பூமியும் பூமியடையச் சூழ்ந்த ஜலங்களும் மறையும்படி பரம்பின மேகம் போலே ஸ்யாமமான
வடிவை யுடையவனுடைய திருவடிகள் (இன்று இங்கன்) என் நெஞ்சிலே இடுக்குண்டது
(அன்று உலகம் அளந்தாய் அடி போற்றி
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் )
அன்று அங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
தான் நிமிர்த்த
காருருவன்
கால்
அங்கு
சென்று வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட
என்று அந்வயம்
————
நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் கால் பொதும் படி-
(வெடிக்கும் படி -முள்ளுத் தைக்கையுமாம் )
தடுமாறிக் கூப்பிட்டுத் திரியும் அத்தனை இறே இன நாள் என்கிறார்
(மாலார் தானே குடி புகுந்தார் -பர கத ஸ்வீ காரம்
நாம் அடைய முற்பட்டால் வலிய வினைகளை போக்கியே அடைய வேண்டும்
அவர் நம்மை அடைய வந்ததுமே இவை தன்னடையே போகுமே )
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-
பதவுரை
என் மனத்தே–எனது நெஞ்சினுள்ளே
மாலால் குடி புகுந்தார்–திருமால்-ஸர்வேஸ்வரன் – வந்து சேர்ந்து விட்டார்;-பரிகரங்களோடே வந்து சேர்ந்தார் –
வல் வினையார் தாம்–(இது வரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.
வல்வினையார் -கொடுமைக்குக் கொடுத்த மதிப்பு / மாலார் பெருமைக்கு கொடுத்த மதிப்பு
வீற்றிருக்கும் இடம் காணாது–(இனி மேலும்) அதிகாரம் செலுத்திக் கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்
வீறு கொண்டு வேற்றுமை தோன்ற இருத்தல் வீற்று இருத்தல்
கால் பொத திரிந்து–கால் நோவத் திரிந்து அலைந்ததனால்
மேலால்–முன்பெல்லாம்-அவனை விலக்கி புக ஒட்டாமல் பழுதே போன பல காலம் முன்பு எல்லாம்
தருக்கும்–என்னைத் துன்பப் படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும்–பெருமையோடே-செல்வச் செருக்குடன்
இளைத்து–வருத்தமுற்று
இன நாள்–இப்போது
கத்துவாரம்–கத்திக் கொண்டு கிடக்கின்றன போலும்.
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே –
அரவத்து அமளியினோடும் இத்யாதிப்படியே
ஸர்வேஸ்வரன் என் மனஸ்ஸிலே புகுந்தான்
மேலால் தருக்கும் இடம் பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று இருக்குமிடம் காணாது இளைத்து
பண்டு நம்மை ஹிம்ஸித்துப் போந்த அளவுடைமையோடே கூட வல் வினையார் விஸ்திருதமாக
இருக்கும் இடம் காணாதே இளைத்துக்
கால் தேயும்படி தடுமாறிக் கூப்பிட்டுக்
கொடு திரியும் அத்தனை இறே இன நாள்
தருக்குகை -நெருக்குகையாய்
ஹிம்ஸிக்கை –
என் மனத்தே
மாலார் குடி புகுந்தார்
வல் வினையார் தாம்
மேலால்
தருக்கும் இடம்
பாட்டினொடும்
வீற்று இருக்குமிடம் காணாது இளைத்து
காலே பொதத் திரிந்து
இன நாள்
கத்துவராம்
என்று அந்வயம்
———
(இதில் வியதிரேகத்தில் அருளிச் செய்து
அடுத்த பாட்டில் அவன் ரக்ஷிக்காமல் விடமாட்டான் என்று
அந்வய முகத்தால் அருளிச் செய்து த்ருடீ கரிக்கிறார் )
(பற்றினாலும் பற்றா விட்டாலும் அவன் ரக்ஷகன்
அவர் ரஷிக்கா விட்டாலும் நீ பற்றுதலை விடாய்
அவனைப் பற்றினால் இளைக்க மாட்டோம்
உலக விஷயங்களைப் பற்றினால் இளைப்போமே
அவனைப் பற்றாமல் இருந்தால் இளைப்போமே
உலக விஷயத்தால் பற்றாமல் இருந்தால் இளைக்க மாட்டோம்
மாதா நாராயணா பிதா நாராயணா -ஸ்வாபாவிக பந்து அந்தோ
தானே தாயும் தந்தையும் ஆவான் –
சேலேய் கண்ணியரும் –மேலாத் தாய் தந்தையரும் –மற்றும் யாவரும் அவரே
ரக்ஷிக்கா விட்டாலும் தந்தை தந்தை தானே
இத் தந்தையோ ரக்ஷிக்காமல் போக மாட்டான் )
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-
பதவுரை
நெஞ்சமே–ஓ மனமே!
நமன் தமர்கள்–யம படர்கள்
இளைக்க பற்றி–பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த–அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய் தந்து மோதாமல்–நாய்களை ஏவி நலியாமற்படி
நல்குவான் நல்காப்பான்–(எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யா விட்டாலும் சரி;
தான்–அந்த எம்பெருமான் தான்
எவ் வுயிர்க்கும்–எல்லாப் பிராணிகளுக்கும்
தாய் தந்தை–தாயும் தமப்பனுமாவன்;-ஸ்வா பாவிக பந்துத்வம் இவன் இடம் தானே –
சொன்னேன்–(இவ் வுண்மையை உனக்குச்) சொல்லி விட்டேன்;
இளைப்பாய் இளையாப்பாய்–இனி நீ அநர்த்தப் பட்டாலும் படு; சுகப் பட்டாலும் படு.
இளைப்பாய் இளையாப்பாய்
பற்றுவாய்
பற்றாது ஒழிவாய்
அவனைப் பற்றிலும் பற்று
விஷயத்தைப் பற்றிலும் பற்று
நெஞ்சமே சொன்னேன்
ஈஸ்வரனே சர்வ வித பந்து -என்னும் இடம் ஒருத்தருக்கும் சொல்லுமது அன்று
அத்தை யுனக்குச் சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி –
பற்றும் போதே இளைக்கும்படிக்கு ஈடாகப் பற்றி
இளைப்பெய்த நாய் தந்து மோதாமல்
இளைக்கும் படிக்கு ஈடாக நாய்களை விட்டு மோதாதபடி
நல்குவான் நல்காப்பான்
ரக்ஷிக்கிலும் ரக்ஷிக்கிறான்
ரஷியாது ஒழியிலும் ஒழிகிறான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான்
ஸர்வ ரக்ஷகனானவன்
ரக்ஷகன் ரக்ஷணத்திலே நெகிழ நின்றான் என்று அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
களைவாய் துன்பம் களையாது ஒழி வாய் களைகண் மற்று இலேன் -என்னும்படியே –
(வேறே ஒருவரை ரக்ஷகராகப் பற்ற ஒண்ணாது என்னாமல் அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
என்பதால் இவரை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபந்த பரித்ராணத்தில் அருளிச் செய்தார் )
(ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை–நூற்று நாற்பத்து ஆறாம் வார்த்தை
ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் —
பெரிய பிள்ளையையும் -(பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் )-
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் –
இவள் சோகார்த்தையாக —
ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன
அநாதி காலம் பாப வாசனைகளாலே –
ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன
கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் –
உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ –
அவதரிக்க வேண்டுமோ –
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் –
சம்பவாமி யுகே யுகே என்றும் –
ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் -)
————–
அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் அவனே ரக்ஷகன் என்கிறது
இளைக்கில் என்றது வ்யதிரேகம்
மீண்டு அமைக்க -என்று அந்வயம்
தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-
பதவுரை
தானே தனி தோன்றல்–அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்;-
இவர் ஒருவரே கர்மாதீனமாக தோன்றாமல் கிருபாதீனமாக
இச்சா பரிக்ருஹீத பிறப்பில் பல் பிறவி பெருமான் அன்றோ
ஒப்பற்ற அவதாரங்கள் உடையவன் -இதில் ஒப்பற்றவன்
தானே தன் அளப்பு ஒன்று இல்லாதான்–அவனே ஒப்பற்றவன்;அளவு என்பதே அளப்பு -விகாரம்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல்–அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்;
உள்ளே அந்தர்யாமியாய் இருந்து ஸர்வ நியாமகனாய் இருந்து ரக்ஷிக்காமல் போவானோ
ஸர்வஸ் அஹம் ஹ்ருதய நிவாஸி
(தானே)–இப்படிப்பட்ட எம்பெருமான்றானே
இளைக்கில்–(ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில்
பார்–இவ்வுலகமானது
கீழ் மேல் ஆம்–தலை கீழாக விபரீதமாய் விடும்;
மீண்டு அமைப்பான் ஆனால்–(தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப் புகுந்ததால்
பாரின் மேல் ஆர் அளக்கிற்பார்–இப் பூமியில் ஆர் தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிட வுரியர்?
அவனது ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே
தானே தனித் தோன்றல்
ஒரு ஹேத் வந்தரத்தாலே-(கர்மத்தால் பிறக்குமவன் அன்றே)
தோன்றுமவன் அல்லன்
தன் அளப்பு ஓன்று இல்லாதான்
உபமான ரஹிதன்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் –
அல்லாதார்க்கும் சத்தை அவனே
தச் சப்தம் -அந்தர்யாம் யம்ருத-என்ற ப்ரஸித்தியைப் பற்ற
(சத்தை என்றாலே ஸ்திதி நிவ்ருத்தி பிரவிருத்தி அனைத்துமே இவன் அதீனமே )
தானே இளைக்கில் பார் கீழ் மேலாம்
அவன் ரக்ஷணத்திலே நெகிழ நிற்கில் பூமி அத ரோத்தரையாம் (அதர உத்தரமாகும் )
மீண்டு அமைப்பான் ஆனால்
அவன் தானே திரியட்டும் ரக்ஷிப்பானாகில்
அளக்கிற்பார் பாரின் மேலார்
பூமியில் அவனைப் பரிச்சேதிக்க வல்லார் உண்டோ
(அவனது உபகார பரம்பரைகள் ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே )
———–
பூமியில் உள்ளாரை எல்லாம் நம்மாலே திருத்தப் போமோ
நாம் முன்னம் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் பெற்றோம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார்
வழி பறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்த்து
இது தப்பப் பெற்றோமே -என்று உகப்பாரைப் போலே –
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-
பதவுரை
ஆரானும் ஆதானும் செய்ய–யாராவது எதையாவது செய்து கொள்ளட்டும்;
அகல் இடத்தை ஆராய்ந்து–விசாலமான இப் பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே—அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ?
யான்–நானோ வென்றால்
சீர் ஆர் மனத்தலை–(எனது) சிறந்த மனத்திலுள்ள
பகவத் குணங்கள் இருக்கும் இடம் சீரார் மனம்
வன் துன்பத்தை–வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால்–நித்ய ஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ண பிரானால்
மாற்றினேன்–நீக்கிக் கொண்டேன்.
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே –
எல்லாரும் ஏதேனும் செய்க
பூமிப் பரப்பு எல்லாம் நம்மாலே ஆராய்ந்து திருத்தப் போமோ
சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத்
தன்னை இதர சஜாதீயனாக்கி
ஸூலபனான கிருஷ்ணனாலே
பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே
தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன்
எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –
(திருவாசிரியத்திலும் ஓ ஓ உலகின் இயல்பே என்று தொடங்கி
தாம் தப்பினோமே என்று நிகமிக்கிறார் )
வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன்
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே
என்று அந்வயம்
————–
மாற்றினேன் என்று கர்த்ருத்வம் தோற்றச் சொன்னார்
அந்த கர்த்ருத்வமாவது
அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே -என்கிறார் –
(கர்த்தா சாஸ்திரார்த்வாத் -ஸாஸ்த்ரம் கர்த்தாவுக்கு தானே உபதேசிக்க வேண்டும் –
நீ கர்த்தா இல்லை கீதையில் உபதேசம்
இதில் கர்த்தா என்றாலே தடுக்காமல் இருந்ததே என்கிறார்
பரத்வ சவுந்தர்ய ஸுலப்யம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -காருணிகர் பகவான்
எளிமை சுருக்கம் தெளிவு மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் பெரியவாச்சான் பிள்ளை பரம காருணீகர் )
யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-
பதவுரை
ஓர் இருள் தான் அன்ன மாமேனி–இருள் தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியை யுடைய
எம் இறையார்–எம்பெருமான்
தந்த–அளித்த
அருள் என்னும் தண்டால்–க்ருபையாகிற ஒரு தடியினாலே
வல் வினையை–கொடிய பாவங்களை
அடித்து–புடைத்து,
கானும் மலையும் புக–(அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக
கடிவான்–துரத்துவதற்கு
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்–நானும் என் மனமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.
யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம்
இத் தலையில் குறைவற்றது
பொருந்தாத தலையும் பொருந்திற்று
பொருந்துமவன் பொருந்தச் சொல்ல வேண்டா இறே
தானோர் இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து
மற்று ஓன்று காணாமல் ஸ்ரம ஹரமான வடிவை யுடைய என் ஸ்வாமியுடைய
ப்ரஸாதமாகிற தண்டாலே ஹிம்ஸித்து
(மற்று ஓன்று காணாமல்-வினையைப் போக்குகைக்கு வேறே ஒரு உபாயம் காணாமல்
அவன் அருளாலே போக்கினான் என்றபடி )
வல் வினையைக் கானும் மலையும் புகக் கடிவான்
அவன் பிரிவாகிற மஹா பாபத்தைக்
காட்டிலும்
மலையிலும் புகும்படி ஒட்டும்படிக்கு ஈடாக
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –
(மற்றை நம் காமன்கள் மாற்று பிரபல தர விரோதி -கைங்கர்யத்தில் ஸூவ போக்த்ருத்வ புத்தி
இங்கும் நைச்யத்தால் பிரிந்த வல்வினை
பரிமித ஸ்வா தந்தர்யமே ஜீவனுக்கு இசைவது மாத்திரமே )
————–
இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே –
தம் தலையிலே குறை யற்றது
அருள் என்னும் தண்டால் -என்கையாலே
பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று
இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம்
ஆகையாலே அநுபவிக்கிறார்
(முன்பு இருந்த குறை -இசையாமல் இருந்தது
நெஞ்சு இசைந்து ஒழிந்த பின்பு
அருள் என்னும் தண்டாலே பிரதிபந்தகங்கள் போன பின்பு
நானும் வேண்டாம் நீயும் வேண்டா -தன்னடையே போகும் அன்றோ
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி பின்பு அனுபவம் தன்னடையே வரும் அன்றோ )
அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-
பதவுரை
நெடியாய்–பகவானே!-த்ரிவிக்ரமனே -சர்வாதிகனே-
செறி கழல் கொள் தான் நிமிர்த்து–செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி
உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று–கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரி விக்கிரமாவதாரத்திலே
அடியால் படி சடந்த முத்தோ–திருவடியால் பூமி முழுவதையும் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
ஆமோதம் -முத்தோ
அது அன்றேல்–அல்லது
முடியால் விசும்பு அளந்த முத்தோ–திருவடியால் மேலுலகத்தை யெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அறிகிலம்–அவ் விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.
காரணம் அறியோம் -ஸூ கமாக அனுபவிக்கிறோம் அவனது கிருபை அடியாகவே
அடியால் படி கடந்த முத்தோ –
முத்து என்று மவ்க்த்யமாய் -(பிள்ளைத்தனமாய் )
அத்தாலே -லக்ஷணையாலே -அழகாய்
அடியாலே பூமியை அளந்த அழகோ
அது அன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ –
திரு முடியாலே ஆகாசத்தை அளந்த அழகோ -என்னவுமாம்
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – திரு விருத்தம்-50-
சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ———மூன்றாம் திருவந்தாதி —90-
செறி கழல் -என்கையாலே
திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்
நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே
திரு முடியிலே முத்து உண்டாகையாலும்
அடியிலே படியை அளந்தன முத்துக்களோ
முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ
சிலம்பும் செறி கழலும் (மூன்றாம் திரு –90)-என்று
இதுக்கு உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் –
சாத்தின முத்தாதல்
நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று
அறிகிறி லோம்
ஆல் ஆச்சர்யம்
இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –
திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ
திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ -என்றுமாம்
அடியாலும் முடியாலுமோ என்னுதல்
அவற்றில் உண்டான முத்தாலேயே என்னுதல்
முத்து என்றது
அழகாதல்
முத்துத் தான் ஆதல்
நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
நீ யளந்த யன்று
அடியால் படி கடந்த முத்தோ –
அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ
அறிகிலமால்
என்று அந்வயம்
—————
திரு உலகு அளந்து அருளின வடிவை அநுஸந்திக்கையாலே அவனைக் காண ஆசைப் பட்டு
அது கிடையாமையாலே வெறுத்தவர்
அவன் பக்கல் குறை யுண்டோ
நம்முடைய குறை இறே என்று திருப்தராகிறார்
(திருப்தி சொல்லுகையாலே வெறுப்பு அர்த்தாத் வந்தது
நெஞ்சு என்னும் உள் கண்ணாலே உணர்ந்தால் இன்றும் காணலாம்
அது இல்லாமையாலே காணப் போகாது
ஆகையாலே அவன் பக்கல் குறை யுண்டோ
நம்மது அன்றோ குறை என்று திருப்தராகிறார் -என்றபடி )
(பர பக்தி பர ஞானம் பர பக்தி -ஞானம் தர்சனம் பிராப்தி -அறிவு கங்கை அடைகை
உள் கண்ணால் -தர்சன சமனாத்கார சாஷாத் காரம்
பரம பக்தி வந்தால் மோக்ஷம்
சூழ் விசும்பு பரஞானம்
முனியே நான் முகனே-பரமபக்தி
இன்னும் வர வில்லை
அடுத்த பாசுரத்தில் பரபக்தி வந்தமையை அருளிச் செய்கிறார் )
அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-
பதவுரை
என்றேனும்–எக் காலத்திலும்
கண் கண்ணால்–வெளிக் கண்ணாலே(பெயர் மட்டும் உடைய கண் )
காணாக–காணக் கூடாத
அவ் வுருவை–அப்படிப்பட்ட விலக்ஷணமான திரு வுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து காணுமேல்–நெஞ்சாகிற அகக் கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,
அன்றே–அப்போதே,
ஆழியான் கார் உருவம்–திருவாழியை நிரூபகமாக வுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை
நம் கண் காணும்–நமது புறக் கண்ணும் காணப் பெறும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே–நாம் அவ் வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக் கண் மலராத இப்போது மாத்திரமே.
அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம் இன்றே நாம் காணாது இருப்பதுவும் –
ஸர்வேஸ்வரன் கறுத்த திருமேனியை நம்முடைய கண் அன்றே காணும்
என்றேனும் கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து
ஒரு நாளும் பகவத் விஷயத்தைக் காணாமையாலே
பீலிக்கண் -என்றவோபாதி
கண் என்று பேரான கண்ணால் காணப் போகாத அவனுடைய திருமேனியை
நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணுமாகில் அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்
(கட் கண் -மீமிசையாலே கண் என்று பேராய் இருக்கிற கண் என்றபடி
ஞானம் உண்டால் காணலாம்
இல்லாத போது காணப் போகாது என்றபடி )
இன்றே நாம் காணாது இருப்பதுவும்
நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணாத இன்றே நாம் காணாது இருப்பது
உணர்ந்து காணும் அன்று நம் கண் காணும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று சொன்னாராகில்
உள் கண் காணாது ஒழிகை யாவது என் என்னில்
பரம பக்தி பிறந்து அவ்வஸ்துவை ஒழியச் செல்லாமை யாதொரு போது பிறக்கும்
அப்போது காணும் நம் கண்
அவ் வஸ்துவை ஒழியச் செல்லும் இன்று காணப் போகாது என்கிறது
கட் கண் என்றது -பீலி போலேயான புறக்கண்
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண உணர்ந்த
அன்றே நம் கண் காணும்
உணராத இன்றே நாம் காணாது இருப்பதுவும்
என்று அந்வயம்
————
எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது
எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் –
எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது –
எளியர் ஸ்நேஹிகள் –
(இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )
உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-
பதவுரை
இணரும் துழாய் அலங்கல் எந்தை–(திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன் மேலும் தழைத்தோங்கு கின்ற
திருத் துழாய் மாலையை யுடைய எம்பெருமான்
தனக்கு எளியர்–தனக்கு அடிமைப் பட்டவர்கள்
எவ் வளவர்–(தன் மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ
அவ்வளன்–தானும் தன்னை அவ் வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்)
ஒருவர்க்கு–(தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது
செவ்வே–நேராக
உணர எளியனே?–அறியக் கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக் கூடியவனல்லனாயினும்)
ஆனால்–ஆகையினாலே
இங்கு–இவ்விடத்தில்
எம்பெருமான்–எம்பெருமான்
எனக்கு–என்னால் வறிந்து
உணர எளியன்–கொள்ளக் கூடியவன்.
உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
ஒருத்தருக்கும் ஈத்ருக் தயா-த்ருஷ்டாந்த தயா –
இயத்தயா-இவ்வளவு என்று
பரிச்சேதித்து – உணரப் போகான்
யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஞ்ஞாதம் விஜாநதாம்
(உபமான ராஹித்யன்
த்ரி வித அபரிச்சேத்யன் அன்றோ )
இணரும் துழாய் அலங்கல் எந்தை –
அபரிச்சின்ன வஸ்துவினுடைய லக்ஷணம்
திருத் தோளில் திருத் துழாய் மாலையை யுடையவனாகை
இணரும்
தன் நிலத்திலும் இவன் தோளில் விகஸியா நிற்கும்
தேவர்கள் தோளில் மாலை வாடாது
சர்வாதிகன் ஆகையாலே இவன் தோளில் இட்டது அரும்பியா நிற்கும்
உணரத் தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர்
தனக்கு நல்லவர்கள் உணர எவ் வளவர்-அவ் வளவனாய் நிற்கும்
ப்ரியோ ஹி ஞாநிநோத் யர்த்தம் 7-14-
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் -என்னும்படியே
ஆனால் எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு
தனக்கு நல்லவர்கள் நினைத்த அளவிலே யமைக்கும் ஆகையாலே
என் ஸ்வாமி எனக்கு எளியன் –
(தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:–7-14-
தேஷாம் நித்யயுக்த-அவர்களில் நித்திய யோகம் பூண்டு,
ஏகபக்தி: ஜ்ஞாநீ விஸிஷ்யதே-ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்,
ஹி ஜ்ஞாநிந:-ஏனெனில் ஞானிக்கு,
அஹம் அத்யர்தம் ப்ரிய:-நான் மிகவும் இனியவன்,
ஸ ச மம ப்ரிய:-அவன் எனக்கு மிகவும் இனியன்.
அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்.
ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.
————-
அவன் அருமையும் பெருமையும் கிடக்க கிடீர்
நம்மை நலிந்து போந்த பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு
நம்முடைய பக்கல் இருப்பிடம் இல்லை என்கிறார் –
இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-
பதவுரை
இங்கு–என்னுடைய இந்த நெஞ்சில்
பண்டு போல்–இத்தனை நாளும் போலே
என்னுடைய செம் கண் மால்–என் மேல் வாத்ஸல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனான பெருமானுடைய
சீர்க்கும்–கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது–எனது நெஞ்சு இடம் போராத தாயிருக்கின்றது.
அங்கே–முன்பு விசாலமாக வாழ்ந்த விடத்திலே
வீற்றிருத்தல் இல்லை–(பாவங்கள் இனி) தங்கி யிருக்க முடியாது (ஏனென்றால்)
வல் வினையார் தாம்–கொடிய பாவங்கள்
மடி அடக்கி நிற்பதனில்–துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதை விட
ஈண்டு–இவ்விடத்தில் நின்றும்.
அடி எடுப்பது அன்றோ அழகு–கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.
இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல்
பண்டு போல் இங்கு விஸ்திருதமாக இருக்க ஒண்ணாது
வீற்று இருக்க ஒண்ணாது
என்னுடைய செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் –
வகுத்த விஷயத்துக்கு இடம் போராது
ஐஸ்வர்ய வாத்ஸல்ய ஸூசகமான கண்களை யுடைய ஸர்வேஸ்வரனுடைய
குணங்களுக்கு என்னுள்ளம் சிறிது
(சீர்க்கும் -குணங்கள் இருக்க இடம் ஒழிய பாபத்துக்கு இடம் இல்லை -என்றபடி
குண ஸ்மரணத்தாலேயே பாபம் போம் என்று தாத்பர்யம் )
அங்கேமடி யடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு அடி எடுப்பதன்றோ அழகு
அங்கே ஒரு மூலையிலே ஒதுங்கித் திரிந்தாலோ என்னில்
முதன்மை செய்த வூரிலே புடைவையை ஒதுக்கிக் கொடு திரிவதில்
அங்கு நின்றும் சடக்கெனக் கால் வாங்குகை யன்றோ அழகு
மடி -முந்தானை –
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply