ஸ்ரீ பெரிய திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

ஸ்ரீ பெரிய திருவந்தாதி–—அதர்வண வேத சாரமாகும் –

குணங்களால் பெருமை எனபது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஸ்ரீ ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட ஸ்ரீ பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

ஸ்ரீ ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
மேலும் பல ஸ்ரீ பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-
அந்த அனுபவம்-அந்த ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார்
இந்த ஸ்ரீ பிரபந்தத்தில் –

ஸ்ரீ பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -ஸ்ரீ திரு விருத்தம் –
ஸ்ரீ சித்ர கூடம் சென்று ஸ்ரீ பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை ஸ்ரீ திருவாசிரியம்
ஸ்ரீ நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை இந்த ஸ்ரீ பெரிய திருவந்தாதி
ஸ்ரீ திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதை கண்டு ஸ்வரூப அனுரூபமான
பேறு பெற்ற நிலை ஸ்ரீ திருவாய்மொழி –

———————–

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற்பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

முயற்றி சுமந்து –
ஸ்ரீ எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை

எழுந்து –
கிளம்பி

முந்துற்ற நெஞ்சே –
அவ்விஷயத்திலே என்னை விட முற்பட்டு இருக்கிற மனமே –
நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டு போது போக்க உசாத் துணை நெஞ்சு ஒன்றே தானே-
இந்த இருள் தரும் மா ஞாலத்தே-யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்பார் மேலே

இயற்றுவாய் –
கார்யத்தை நடத்த வேண்டும்

எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து –

இருவரும் கூடி நடத்தவேண்டிய கார்யம் என்ன வென்றால்
நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –
அழகிய காயாம்பூ வில் உண்டான-நிறம் போன்ற நிறத்தை உடையனான
ஸ்ரீ எம்பெருமான் உடைய-திருக் கல்யாண குணங்களை –

நயப்புடைய –
அன்பு பொருந்திய-இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்
ஆசை கொண்ட நாவினால்-அன்பு கொண்ட சொற்களால்

நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-
நாவினாலே கனனம் செயப்படுகிற –ஈனுதல் -உண்டாக்குதல் –
சேர்க்கைப் பொருத்தம் உடைய சொற்களாலே-அடக்குவோமாக –
பதங்களுக்கு ஒன்றோடு ஓன்று அமையும் சேர்த்தி அழகு தொடை
பதா நாம் சௌ ப்ராத்ராத நிமிஷ நிஷேவ்யம் ச்ரவண்யோ -ஸ்ரீ குணரத்ன கோசம் –

————————————————————————–

கால ஷேப அர்த்தமாக-ஸ்ரீ பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்-என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

கார் கலந்த மேனியான்
மேகத்தோடு ஒத்த திரு மேனியை-யுடையவனும்

கை கலந்த வாழியான்
திருக் கையோடு சேர்ந்த திரு வாழியை-யுடையவனும்

பாரளந்த வல் வயிற்றான்-
பிரளய காலத்தில் உலகம் எல்லாம் வந்து சேரப் பெற்ற-வலிய திரு வயிற்றை யுடையவனும்

பாம்பணையான் –
திரு வநந்த ஆழ்வானைப்-படுக்கையாக யுடையவனுமான-ஸ்ரீ எம்பெருமானுடைய

சீர் கலந்த சொல்-
திருக் குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூக்திகளை-
ஸ்ரீ ராமாயணம்
ஸ்ரீ மகா பாரதம்
ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
அருளிச் செயல்கள்

நினைந்து
அனுசந்தித்து

சூழ் வினையின் ஆழ் துயரை -போக்காரேல்-
கொடிய பாபங்களினால் யுண்டாகும்-மிக்க துன்பங்களை போக்கிக் கொள்ளார்கள் ஆகில்-ஒழியட்டும்

என்னினைந்து போக்குவார் இப்போது
வேறு எதை அனுசந்தித்து இந்தப் போதை-போக்குவார்கள்

————————————————————————–

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading