Archive for the ‘திரு வேங்கடம் உடையான்’ Category

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்-திரு வாய் மொழி -3-3–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 4, 2011

உண்ட வைகாசிக்கு ஒப்பு —
ஆண்டாள் மதுர கவி எம்பெருமானாரை சேர்த்து மணவாள மா முனிகள் உபதேச ரத்ன மாலையில் அருளினார் ஆச்சர்யரே தெய்வம் என்று இருந்தவர்கள்-
மாதா பிதா -மாறனே–நம் பெருமாள் நம் ஜீயர் நம் பிள்ளை  நம் ஆழ்வார் என்பர் அவர் அவர் ஏற்றத்தால் –
கம்பரை- நம் சடகோபரை பாடினீரோ–விஞ்சிய ஆதாரத்தோடு கேட்டானே –
ராமனை பாடினவர் கற்பார் ராம பிரானை அன்றி மற்றும் கற்பரோ –அவரை பாட மறந்தேனே தேவில் சிறந்த தைவ புலவர் ஆழ்வார் —
குல பத்தி-பிர பன்ன குலம்–உண்டோ ஆவணி ரோகிணி ஒப்பு -சொல்லாமல் உண்டோ வைகாசி விசாகம் ஒப்பு -பிள்ளை லோகம் ஜீயர்–
ஒரு அர்ஜுனனை கூட திருத்த முடிய வில்லை- அழுதுண்டே தன் அடி சோதிக்கு போனானே –அவஜானந்தி மாம் மூடா —
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது ..வாழ்ந்திடிவர் பின்னும் தம் வாய் திறவார் —
ஊரும் நாடும் தன்னை போல் எம்பெருமான் பேரும் நாடும் பிதற்ற —
ஆழ்வார் பண்ணி வைத்து பொலிக பொலிக பொலிக போய் இற்று வல் உயிர் சாபம் —
கிருதே அத்ரி -ததத்ராயர் -சுத்த பரமர் அடுத்து -ராமன் ஷத்ரியன் கண்ணன் வைஸ்ய -கலியில் பராங்குசர் —
ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மகா பாரதம் அவனை பேச வந்து கங்கை காங்கேயன் கதை  சொல்லி எச்சில் வாய் ஆனதாம் –
பூசல் பட்டோலை–ஸ்ரீமத் பாகவதம் பாடி பிராய சித்தம் வியாசர் –செம் பொன் மாட திரு குருகூர்–உண்டோ இதற்க்கு ஒப்பு —
பக்தி அசைக்க ஒண்ணாது அங்கு பிறந்தாலே –கொசித் கொசித் -சுகர் பரிஷித் தாமர பரணி பிறப்பார் —
யோகி -நாய் -திறந்து கிடக்கும் வாசல் தோறும் நுழைந்து திரியும் –ஆழ்வார் திரு வீதி எச்சில் -உண்டு ஸ்ரீ வைகுண்டம் போவதை பார்க்க —
அந்த நோயோடு பேய்க்கும் வழி கொடுத்தால் பழுதோ – ஆழ்வாரை கேட்கிறார் யோகி–முப்புரி ஊட்டிய திரு நட்ஷத்ரம் –
பகவான் ஆழ்வார் ஆச்சார்யர் ஸ்வாதி- நரசிம்கர் –பெரியாழ்வார் பெரிய திரு மலை நம்பி //
ரோகிணி கண்ணன் திரு பாண் ஆழ்வார் திரு கோஷ்டியூர் நம்பி திரு வோணம்- பெருமாள்  பொய்கை ஆழ்வார் பிள்ளை லோகாச்சர்யர் –
விசாகம் -நம் ஆழ்வார் திரு வாய் மொழி பிள்ளை-குந்தி நகரம் ராஜாவாக இருந்தார்  -இஷ்வாகு குல ஆதி விசாகம் என்றான்- –
புனர்வசு ராமனே பிறந்தாலும் -ஆயில்யம் -லஷ்மணர் சத்ருணன் பிறந்த ஏற்றம் உண்டே —

ஆழ்வார் துவயம் அனுசந்திக்க -இரண்டு பதிகம் -ஒழிவில் காலம் எல்லாம் -ஸ்ரீ மதே நாராயணா நாம –
உத்தர வாக்ய அர்த்தம்-/உலகம் உண்ட பெருவாயா –ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிர பதயே -பூர்வ வாக்கியம் அர்த்தம்–
பெரிய வானுள் நிலாவுவரே பலன் சொல்லி ஒழிவில் காலம் திரு வாய் மொழி அருளுகிறார் ..–
சத்வ குணம்- ஆரோக்கியம் சாஸ்திரம்- வேதாந்தம் தத்வம் -அலை கடல் கடைந்தவன் போல் ஆத்மா ஷேமம்-
துவயம் மந்த்ரம்  தானே ..-அத்வீதியம் -ஒத்தர் மிக்கார் இலையாய மாமாயன் /இரண்டு வாக்கியம் /
மூன்று கண்டங்கள் -பிரித்து வியாக்யானம் /நான்கு நாலாவது பிருஷார்தம் கொடுக்கும் /அர்த்த பஞ்சகம் சொல்லும்/
சப்தங்கள் ஆரு/சப்த அரவனங்களின் சீர்மையும் உண்டு /எட்டு எழுத்து திரு மந்திர ராஜா
விவரணம் தான் மந்திர ரத்னம் ராஜா ரத்னம் விரும்புவான் -ரத்னம் ராஜாவை தேடி போகாது –
திரு மந்த்ரத்தில் விடஅர்த்தம் சொல்லும்  பட்ட -வ்யக்தமாகாத பிராட்டி சம்பந்தமுண்டு /நவ ரசம் ஷாந்தி கொடுக்கும் துவயம்

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேம்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே..3-3-1

நாமும் அழுது கைங்கர்யம் கேட்டு பெற வேண்டும் -பாரிப்பு இருக்க வேண்டும் -ஆழ்வார் -தன்னை தான் பாடி–
பெருமாள்  அனைவரும் வந்து கையில் தாளம் கொடுத்து தம்மை மங்களா சாசனம் பாட கேட்டு வாங்கி போவார்கள்–
எல்லா திவ்ய தேச பெருமாளும் ஆழ்வார் இடம் வந்து பெற்று போவது இன்றும் கருட சேவை அன்று சேவிகிறோம் —
ஸ்வாமி தானே சொத்தை தேடி போக வேண்டும் –வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் —
கைங்கர்யம் பண்ண பண்ண தான் கிட்டே போவோம் அபயம் கிட்டும் பயம் நீங்கும் —
புஷ்ப கைங்கர்யம் பெரிய கேள்வி  அப்பன் ஜீயர் இன்றும் பண்ணி கொண்டு இருக்கிறார்–
ஞப்தி-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -இரண்டாம் பத்தில் சொல்லி ஞப்தி பல முக்தி –முக்தி பல வியக்தி–
முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணா -என்னாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே -கதறினார் முந்தின பத்தில் —
இந்த்ரியங்கள் -ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றன –நித்யர் போலே ஆக்குவாய்-
இங்கே பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் இருகிறதே –நித்தியரும் தங்கள் இந்த்ரியங்களால் தொட முடியாத பெருமை –
உயர்வற உயர் நலம் உடையவன் என்று  நீரே பாடினீரே–என்னை அனுபவிக்க போக ஆசை படுகிறீரா பரம பதம் அனுபவிக்க போகிறீரா –
நீர் தானே நான் எங்கும் இருக்கிறேன் -பாடினீர் -நீர் ஆசை படுவது  போக்குவது முக்கயமா நான் ஆசை பட்ட திரு வேம்கடம் வரீரா கேட்டான் –
ஆழ்வார் சொரூபம் விரோதமாக கேள்வி கேட்டேனே -நிர்பந்திக்காமல் -நீ இட்ட வழக்காய் இருக்க வேண்டியவன் தானே —

இன்று என்னை பொருளாக்கி வைத்து அன்று என்னை  புறம் போக வைத்தது -வெட்கி தலை குனிந்து புது மண பெண்
காலால் தரையை கிழித்து கொண்டு இருந்தானாம் –சொரூபம் இழந்து கேள்வி கேட்டேனே என்றாராம் ஆழ்வார் –
தாகம் இருந்தனீர் ஏல நீர் கொடுத்தால் குடிப்பீரா என் தண்ணீர் எப்படி வந்தது கேட்கணுமா –
கொடுக்க வேண்டிய தண்ணீர் கொடுக்கிறவன்  கொடுக்கும் இடம் மூன்றும் சித்தமாக திரு மலையில் இருக்க –
உடனே சென்று மங்களாசாசனம் பண்ணுகிறார் –ஒழிவு இல்லா  காலம் எல்லாம்—கடந்த நிகழ் வரும் காலம்–மூன்றும் –
பிராட்டியை -பிரிந்த காலம் கொண்டு வர முடியாது பெருமாளே சொன்னார் –வாள் களாக நாள்கள் செல்ல —
பழுதே பல காலம் போயினே -இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கிறார்களே –பண்ணும் கைங்கர்ய அனுபவம் முன்பு
பண்ணாத கைங்கர்யம் நினைவே வராத படி கொடுக்க கேட்கிறார் ..உடனே- தேசத்தால் இடை யூறு இன்றி-
லஷ்மணன் பெருமாள் இன்றி இல்லையே -பின்பு பிறந்து முன்பே சரயுவில் இறங்கினாரே –அது போன்ற கைங்கர்யம் கொடு —
மன்னி- விட்டு பிரியாமல் கூடவே– திரை சேர்த்து ஏகாந்தம் தானே பிராட்டி குடன் -பள்ளி அறைக்கு லஷ்மணன் வர வில்லை–
அவன் என்று சொல்வதற்கு சொன்னேன் -எனக்கு ஏற்றம் -பள்ளி அறைக்கு திரை உண்டே விளக்கு உண்டே கட்டில் உண்டே
விதானமுண்டே சந்தனம் உண்டேஎதாவது ஒன்றாய் இருந்து கைங்கர்யம் கொடுக்க வேண்டும் ..–
அது போல் யாருக்கு –ஆதி சேஷன் பர்யங்கம் இருகிறாய்-சென்றால் குடையாம் ..மணி விளக்காம் -அரவு –கொடுத்து இருகிறாய்–

நிவாச -ஆளவந்தார்–நஞ்சீயர் சன்யாச ஆஸ்ரமம் தீஷை ஆச்சர்ய கைங்கர்யம் தடை -அனந்தாழ்வான் பட்டருக்கு பிரம ரதம்
தூக்கும் கைங்கர்யம் இழப்பீரே -கைங்கர்யத்துக்கு விரோதமாக இருந்தால் திரி தண்டம் உடைத்து வெள்ளை சத்தி கொள்வேன் என்றாராம் ..
துணை நூல் மார்பில் அந்தணராக இருக்க கூடாது பிரம ஞானம் வேண்டும் ..எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே-
அணைய ஊர -பெரு மக்கள் கேட்ப்பார்களே –மேல் வழி இலா -அடிமை வேண்டும் —
பரதன் நாட்டில் நின்ற கைங்கர்யமும் வேண்டும் -கூட வந்த லஷ்மணன் கைங்கர்யமும் வேண்டும் –
பார தந்த்ர்யமும் சேஷத்வம் இரண்டும் -வேண்டும் அஹம் சர்வம் கரிஷ்யாமி -அவர் ஆசைக்கே முக்கியம் —
செருக்கு கலவாத கைங்கர்யம் வேண்டும் ..பைம்கமல தண் தெரியல் பட்டர் பிரான் -ஆண்டாள் பெரியாழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும் –
பெரிய பெருமாள் ச்வாதந்த்ர்யம் கலந்து சுடுமாம் / வழு இலா -பிரபல விரோதி -அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் —
மற்றை நம் காமங்கள் மாற்று -லஷ்மணன் ஆனந்தம் –கைங்கர்யம் பண்ணி -அவர்கள் ஆனந்தம் கண்டு முகம் மலர்தல் –
சீதை ராமன் ஆனந்தம் -கைம்  கர்யம் கொண்டதால் ஆனந்தம் -பகவத் ப்ரீத்யர்த்தம் —
அர்ச்சைனையும் அவன் திரு நாமம் கேட்க தான் பண்ண வேண்டும் -அடிமை நித்ய கைங்கர்யம் -செய்ய வேண்டும் –

எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேம்கடத்து
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே —3-3-2

தனக்கு முன் பலரை  சொல்லி  கொள்கிறார் -அடியார் அடியார் . தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் .தம் அடியோங்களே
அடி நாயேன் நினைந்து இட்டேனே–பீதி விட்டு ப்ரீதி உடன் கைங்கர்யம் பண்ண வேண்டும் –குழந்தை போல நினைத்து கொண்டு–
அங்கு உள்ளவர் கூட இங்கு வந்து கைங்கர்யம் செய்கிறார்களே –விஷ்வக் சேனர் -நித்யர் உடன் வந்து -சிந்து -பூ –
அர்ச்சிக்கும் சமர்ப்பிக்கும் இல்லை–எளிமை கண்டு ஆச்சர்யம் பட்டார்கள் எத் திறம் மயங்கி -வானரங்கள் வேடர் அனைவருக்கும் சேவை-
பூ மகிழுமா –சேர்ப்பவனோ சேவியனோ மகிழலாம்-அங்கு -பரம பதம் -இருந்து கொண்டு வந்த புஷ்பம் திரு மலை ஸ்பர்சம் கிட்டி மகிழ்ந்ததாம் —
அதவா-இங்கு உள்ள புஷ்பம் போல் அங்கு இருக்காது –சூத்திர வதி-விஷ்வக் சேனர் பத்னி சொல்ல –
அங்கு இருந்து பறிக்காமல் இங்கு வந்து பறித்தார் –அவன் திருவடிகளுக்கு போவதால் மகிழ்ந்தனவாம் —
அந்தமில் புகழ்- முடிவு இல்லாத புகழ்–திரு வேம்கடத்தில் அந்தமில் என்றால் ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தம் உள்ள புகழாம்–நலம் அந்தமில் நாடு தானே அது —
சாம்யா பத்தி மோட்ஷம் கிட்டும் அங்கு –அப்ராக்ருத திரு மேனி -கல்யாண குணங்கள் -அவனை அனுபவிக்க —
அவன் பெருமைக்கு தக்க -இருந்தும் அனுபவித்து முடிக்க முடியாது –இங்கோ நம் பிரக்ருத சரீரம் கொண்டு அனுபவிக்க —
கார் எழில் அழகன் அலங்காரன்–குணம் இல்லை என்றாலும் அனுபவிக்க தக்க -காதுகண் இல்லை என்றாலும் விட ஒண்ணாத வடிவு அழகு ..
அண்ணலே –ஸ்வாமி பிராப்தன் பெத்த தாய் தந்தை ஒழிக்க ஒண்ணாதா சம்பந்தம் குணம் அழகு இல்லை என்றாலும் விட ஒண்ணாத –

அண்ணல் மாயன் அணி கொள் செம்தாமரை
கண்ணன் செம் கனி வாய்க் கரு மாணிக்கம்
தென் நிறை சுனை நீர் திரு வேம்கடத்து
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே 3-3-3

ஸ்வாமி /அழகாலும் குணங்களாலும் கலந்து ஆச்சர்ய பூதன் -அம்மான் பொடி-மந்திர வாதம் -குழந்தை பிடிக்க வசப் படுத்த –
அணி கொள் செம் தாமரை கண்ணன் -இது தான் வசிய பொடி தூது செய் திரு கண்கள் –ஜிதந்தே புண்டரீகாட்ஷா–
காண வாராய் காண வாராய் என்று துடிக்க வைப்பான் வச படுத்தியதும் மறைந்து ..
பர வாசு தேவனுக்கு இரண்டு திரு கண்கள் போதும் பகல் விளக்கு பட்டு இருக்கும் ..திரு பாற் கடல் நாதனுக்கு 20 வேண்டும்
ராமகிஷ்ணர் 200 வேண்டும் -ரெண்கனுக்கு ௨௦௦௦ வேண்டும் திரு மேனி முழுவதும் கண்ணாக நாடு பிடிக்க –
பெரிய வாகி -நீண்ட அப் பெரிய வாக கண்கள்–அலம்பனமாக பிடித்து கொள்ள திரு மண தூண்கள்–
அருள் கிருபை பிரவாகம் வந்து நம்மை தள்ளும் பொழுது ..-அதற்கும் வசியம் இல்லை என்றால்
செம் கனி வாய்- ஸ்மிதம் காட்டி –யானை கொன்று மல்லரை மாட்டி கஞ்சனை குஞ்சி பிடித்து  இழுத்து மாய்த்தது போலே–
கரு மாணிக்கம் -அவனே -மந்த ஸ்மிதம் தாண்டி வந்தால்- வியாக்யானம் பண்ணுகிறானாம் –
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள் -அஞ்சேல் என்று காட்டும் அபய ஹஸ்தம் —
கரு மணியை கோமளத்தை காட்டிய பின் -தோற்றே போவோம் -அடுத்து இதற்கும் தப்பி வந்தால் —
தெளிந்த நீர் சுனை நீர் திருவேம்கடம் –ஏழு மலைக்கு ஏற்றம் –எண்ணில் தொல் புகழ் -வானவர் ஈசனே –
குணம் தோஷம்  இரண்டையுமே எண்ண  முடியாது -நித்யர்களுக்கு கொடுத்த கைங்கர்யம் நமக்கும் கொடுப்பான்

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேம்கடத்தானுக்கு
நீசனேன்  நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே  3-3-4

நித்யர் விட நம் மேல் பாசம்- உயிர் ஆன பாசுரம் ஒளி விட்டு கொண்டு இருக்கிறான் –நீசனாய் இருக்கிறோம் —
நம் இடம் பாசம் வைத்தது தான் அவனுக்கு ஆனந்தம் –இதை விட்டு நித்யர் ஈசன் எனபது தேசம் —
நீசன் இருப்பதால் தான் வானவர்க்கு ஈசன் என்று சொல்லி கொண்டு இருக்கிறேன் அடுத்த நிர்வாகம்
சிறையில் இருந்தவன் சிம்காசனம் இருக்கும் பொழுது அதை நினைவு படுத்துவது போலே —
அங்குத்தை இருப்பு சிறையாம் இங்குத்தை இருக்கு சிம்காசனம் -நீசன் நிறை ஒன்றும் இல்லாதவன்
துவீத பரிகிரகம் பிடித்த விஷயம் அது மனைவி -விட்டு விட்டு அபிமத விஷயம் என் இடம் ஆழ்ந்து  இருக்கிறான் –
எங்கு ஆசையோ அதை பற்றி தான் சொல்ல வேண்டும் –சிறு பேர் அழைதனோம்  சீறி அருளாதே —
அறியாத பிள்ளைகள் அன்பினால் -மூன்று காரணம் அறியா தனம் சின்ன பிள்ளைகள் அன்பினால்-
இனி உன்னை–குறை ஒன்றும் இல்லா  கோவிந்தா என்றே -பசு மாடுகளின் பின் போகும் இடையனே –
இடை சாதி பிறந்து இடக் கை வலக் கை அறியாதவனே -ஆசாரம் இல்லாதவனே –
நாராயணன் பரமன் உத்தமன் பத்ம நாபன் மாயன் -போன்று எல்லாம் தெரியாமல் அழைத்தோம் ..–
அது போல் ஈசன் வானவர் என்றது -அர்ஜுனனும்  விஸ்வ ரூபம் கண்டதும் பழைய நான்கு திரு கைகளுடன்
தேனைவ ரூபேனே சதுர புஜத்துடன் சேவை சாதிக்க கேட்டனே –பாசம் வைத்த -அவன் என் இடம் வைத்து —
நானும் அவன் இடம் பாசம் வைக்கும் படி வைத்த இரண்டும் பண்ணி கொடுத்தானே–
பரம் சுடர் ஜோதி- கலந்த பின்பு தன ஒளி விட தொடங்கிற்றாம்–வெறுப்புடன் கலக்க வில்லை –
பாசம் வைத்ததால் வந்த பரம் சுடர் சோதி –தளிர் புரியும் திரு வடி என் தலை மேல் -மலர் புரியும் திரு வடி-
ஈசன் -தலைவன் -பாசம் -அன்பு -வானவர்க்கு பாசம் சொல்லியேன் கண் ஈசன் என்று சொல்லி இருக்கலாமே –
எனக்கு அன்பன் –அவர்களுக்கு தலைவன்- கணவன் ஸ்தானம் காதலன் நாயகன் அன்பன் போல –
மாம் ஏகம்-அங்கி திறந்து காட்டி-வெளுத்து கிடந்த -நீல மேக சியாமளன் கண்ணன் என்னும் கருத்த –
அவன் கூட வெளுப்பாகா மாறி சேராததால் –திரு மந்தரத்தால் நம்மை கொண்டவன் –கருமை காருண்யம் வள்ளல் தனம் நிறைந்த —

சோதியாகி எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ ?
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீதில் சீர் திரு வேம்கடத்தானையே 3-3-5

வேம்கடங்கள்  மெய்ம்  மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேம்கடத்து உறைவார்க்கு நம வென்ன
லாம் கடமை அது சுமந்தார்கட்கே 3-3-6

சாரா வாக்கியம் சேர்த்து -மாதவன் சொல்வதே ஒத்தின் சுருக்கு –மாதவன் என்று என்று  ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம்  சாரா —
ஸ்ரீ மன் நாராயணனே மாதவன் — சரண் அடைந்த பின்பு வினைகள் சேராது –வேம்கடங்கள்  மேல் வினை முற்றவும் சாரா எனபது மெய் என்றார் —
திரு கோஷ்டியூர் நம்பி வந்து இந்த அர்த்தம் ஆள வந்தார் சொல்ல கேட்டு இருக்கிறேன் ..
ஸ்ரீ ராமானுஜர் –நேராகா கடாஷித்து -திரு மாலை ஆண்டான் -ஆச்சார்யர் -வைத்தது -சத்தை பெற தான்–
பிள்ளை லோகாச்சர்யரும் இச்சால் நீயும் வேண்டாம் நானும் வண்டாம் பாபங்கள் தானே போகும் —

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று  எழும் திரு வேம்கடம் கம் கட்கு
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே 3-3-7

புஷ்ப மண்டபம் –போக மண்டபம் தியாக மண்டபம் –பூவும் பூசனையும் இவருக்கே -சடை முடியானுக்கு இல்லையே —
ஜீயர் கைங்கர்யம் இன்றும் –இதற்கே அருளிய பாசுரம் இது –நமன்று =சேவித்து -சமன் கொள் வீடு -சாம்யா பத்தி
ஒக்க சிம்காசனம் போட்டு -நமக்கும் பரமம் சாம்யம் கிடைக்கும் -ஐக் யா  பத்தி மோட்ஷம் சங்கரர் இரண்டற கலக்கிறான் –
அவனுக்கு நிகர் தான் -சக பிராமணம் சா தர்ம நிலை –எட்டு கல்யாண குணங்களில் —
அபஹத பாப்மா-விஜர -விமிர்த்து -விசோக- விஜிக்த்சக அபி பாதக -தாகம் இன்றி – சத்ய  காம சத்ய சங்கல்பம் —
வாசு தேவ சர்மம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் அவனே
நாஜி கேதசுக்கு இதை தான் யம தர்ம ராஜன் சொல்லி காண்பித்தான் —
தடம் குன்றம் –வீசி நடம் ஆடலாம் இங்கு போல் அங்கும் –பனி விடை செய்து நமக்கு ஆனந்தம் கொண்டு அவன் ஆனந்தம்–
திரு வேம்கடமே கொடுக்கும் –நங்கட்க்கு சமன் கொள் வீடு கொடுக்கும் திரு மலையே

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8

ஊரை காத்தவன் முதலில்-குன்றம் எடுத்து -காத்தானே  உலகம் காத்தவன் அடுத்து திரு விக்ரமன் -வந்து சேர்ந்த இடம் –
வராக ஷேத்ரம் –முதலில் எல்லாம் அவனுக்கு -அனந்தாழ்வான் புஷ்ப கைங்கர்யம் -கூப்பிட வர வில்லை கோபம் கொண்டு–
நீயும் வந்து சேர்ந்தவன்- சென்று சேர் -ஆழ்வாரை பாட வைத்தாயே -இருவரும் வந்து சேர்ந்தவர்கள் தானே ஆச்சார்யர் நியமனத்தால் வந்தேன் —
திரு விக்ரமனே திரு வேம்கடத்தான் –உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் –கோவர்த்தன கிரி தாரியே திரு வேம்கடத்தான்

ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி
வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி  தாமரை
வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9

பிணி -ஷட் பாவ விகாரம் அசதி -வினச்யதே இருக்கிறது பிறக்கிறது மாறுகிறது வளர் கிறது தேய் கிறது மாய்கிறது —
ஆயன் -போகுமாறு செய்வான் -வாயால் ஓவாது உரைக்கும் உரை -மறக்காமல் மனசில் வைத்து –அனுக்ரகத்தால் ஓயும் —
பாலை குடிக்க காலை பிடிப்பார் உண்டோ -வேப்பம் குடி நீரையா குடிக்க சொல்கிறார் இல்லையே –
சம்சாரிகளே என்கிறார் ஆழ்வார் -மலரை ஒத்த திருவடிகள்

வைத்த நாள் வரை எல்லை குறுகி சென்று
எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பு அனையான் திரு வேம்கடம்
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே   3-3-10

சோலை உடன் கூடிய குன்றில் வந்து சேர்ந்தான் பாம்பு அணை விட்டு வந்தான் –பலம் குறை முன்பு வைத்த நாள் வரை
காத்து இருக்காமல் -எல்லை குறுகி சென்று சரண் அடையாமல்–சரீரமும் நெஞ்சும்  -நின்றவா நில்லா நெஞ்சினை உடைத்து –
திரு நாரணன் தாழ் காலம் பெற சிந்தித்து இருமினோ–அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன் —
நினைவு பொறுப்பை-அஹம் ச்மாராமி மத பக்தம் -கொண்டு -நம்மை வாழ்விகிறான்

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்  சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11

தாள் பரப்பி -திரு விக்ரமன்-மண் தாவிய ஈசன்– பூமியில் நம் தலை கொதிக்க -தாமரை போன்ற திருவடிகளை வைத்தான் –
பொழில் சூழ்ந்த  திரு குருகூர் –திருவடி தீண்டிய -குடை பிடிக்கும் படி நீள் பொழில் -கேள் =ஒப்பு இல்லாதா ஆயிரம் பாசுரம்–
அதில் இப் பத்தும் ஒப்பு இல்லை –வாழ்வார் வாழ்வு எய்தி -கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற்று  வாழ்வார்கள் —
நான் என்றும் முடிவு இல்லா துன்பம் கொடுக்க அதை துடைக்க லஷ்மணன் என்றானே பரதன் -அது போலே வாழ்த்துவார்கள் —
லஷ்மணனை பெற்று இன்பம் பட்டேன் தசரதன் -ஞாலம் புகழவே –அது போலே நாமும் கைங்கர்யம் பண்ணி புகழ படுவோம்

————————————————-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்-
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-

ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி  தாமரை வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9-

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்  சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 4, 2011

திரு குரும் தாண்டகம் 19 திரு மங்கை ஆழ்வாருக்கு  /
நம் ஆழ்வார் திரு விருத்தம்- 99 நான் கண்ட நல்லதுவே /சஞ்சயன் மதிர் மம /மதுர கவி ஆழ்வார் அண்ணிக்கும் அமுதூரும் உயிரான பாசுரம்கள்

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திரு அரங்கம் மேய
செம்மையை கருமை தன்னை திரு மலை ஒருமை யானை
தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–திரு குறுந்தாண்டகம்- 9

இந்த லோகத்தில் தன்னை பற்றிய ஞான கை தா -நடுவே வந்து உய்ய கொண்டவன்–மறுமை தன்னை -கைங்கர்யம் கொடுப்ப
அவன் -எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மை-சத்யம்- -உபாயமாகவும் –சத்யமான வழி இது ஒன்றே —
திரு அரங்கம் மேய செம்மையை கருமை தன்னை–நான்கு யுகம் நான்கு வர்ணம் நிறம் வெளிது சிவந்து கரும் பச்சை கருமை–
கலி யுகம்  இயற்க்கை நிறம்-கேட்டு நிறம் மாற வேண்டிய காரணம் இல்லை–திரு மலை ஒருமையானை-
ஏக சொரூபம் கண்ணாவான்-மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்–நடுவில் திரு மலை மேல் நிற்ப்பதால்-
சௌலப்யம் தன்மை-இரட்டை குழந்தைக்கும் தாய் மார்பில் கொடுத்து கொண்டு–என் தன் தலை மேல்-
அடியார்க்கு அடியார் ..-தலை மிசை மன்னுவாரே -அவன் திருவடி விட்டு இவர்கள் திருவடி பற்றுகிறார்
திரு பாவை ஜீயர் போலே திரு நெடும் தாண்டகத்தில் பராசர பட்டார் ஈடு பாடு –நம் ஜீயரை  வென்றார் இதை கொண்டே — –
மாதவாசார்யர் இயல் பெயர்—திருத்திய பின் ஓரான் வழியில் பட்டருக்கு பின் குறு பரம்பரையில் இடம் கொடுத்தார் –
யக்ஜ மூர்த்தியை ஸ்வாமி–அருளாளா பெருமாள் எம்பெருமானார் திரு நாமமும் கொடுத்து
தன் கோவில் ஆழ்வார் திரு ஆராதன கைங்கர்யம் கொடுத்தார் –ஒன்பது திவ்ய தேசம் ஒரே பாசுரத்தில் அருளி இருக்கிறார்

நீரகத்தாய் நெடு வரியின் உச்சி மேலாய்
நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுல்லாய்
உள்ளுவார் உள்ளத்தாய்உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார் வானத்து உள்ளே கள்வா
காமரு பூம் காவிரியின் தென் பால் மன்னு
பேரகத்தாய் பேராது  என் நெஞ்சின் உள்ளே
பெருமான் உன் திருவடியே பேனினேனே–திரு நெடும் தாண்டகத்தில்-8

வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்–தாள் பரப்பி மண் தாவிய ஈசனே இங்கு சேவை–
ஒவ் ஒரு குணம் காட்ட இங்கு 9 திவ்ய தேசம் அருளி இருக்கிறார் ..

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
மழலையாய்மதில் கச்சி ஊராய் பேராய்
கொங்கத்தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன்
குல வரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற் கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்குற்றாய் எம் பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இங்கனமே உழி தருகேனே–திரு நெடும் தாண்டகத்தில்-9

பிரயோஜனாந்தரருக்கும் சாதனாந்தருக்கும் சேவை -கானமமும் வானரமும் வேடம் உடை வேம்கடம்

பொன்னானாய் பொழில் எழும் காவல் பூண்ட
புகழ் ஆனாய்  இகழ் வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னல் அல்லால்
என் அறிவன் ஏழையேன்? உலகம் ஏத்தும்
தென்னானாய் வடவானாய் குட பாலனாய்
குண பால மத யானாய் இமையோர்க்கும் என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தானாய் முதலானாயே -திரு நெடும் தாண்டகத்தில்-10

இகழ்ச்சி உண்டு இருந்தாலும் தொண்டன் -நீ தானே அடிமை தனம் காட்டி வளர்த்தாய் –யானை-சதா தர்சநீயம் —
தானே தூக்கி வைத்து கொள்ளும் -வேண்டானால் தள்ளி விடும்-பரதன் குகன் /ச்வாதந்த்ரம்-செருக்கு –மாலை யாருக்கும் போட்டு ராஜா ஆக்கும் —
குளித்து விட்ட உடனே மண்ணை தலையில் போட்டு கொள்ளும் –நெறி காட்டி நீக்குவான் பல நீ காட்டி படுப்பாயோ –
கையரை தானே எடுத்து கொடுக்கும் -பக்தி இவனே வளர்ப்பான் –கண் நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண பண்ணிய பெருமான் ..

பக்தி ஒன்றாலே அவனை அறிய முடியும் -நான்கு ஆனை கட்டினார் கலியன் உலகம் ஏத்தும் -தென் ஆனை-திரு மால் இரும் சோலை
வட ஆனை- -நித்யர் வானவர் மன்னவர் அனைவருக்கும் திரு வேம்கடம் -மேற்கு -திரு அரங்கம் -கிழக்கே திரு கண்ண புரம் –
வேலை மோதும் மதில் சூழ் -சமுத்திர கரை அன்று இருந்து இருக்கும் –குண பால மத யானை- உடையவர் மன்னனாரை அருளி செய்வார் –
பெரிய முதலியார் -நாத முனிகள் ஆளவந்தார் -அபிமானத்தால் -காட்டு மன்னார்  குடி கோவில் ராஜ மன்னாரை சொல்வார் —
காடும் மன்னார் ஸ்ரீ வைஷ்ணவ சப்ரதாய முதலிகளை காட்டி கொடுத்தவர்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கண புரத்து  என் கனியே என்றும்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திரு வேம்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் கலைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே–திரு நெடும் தாண்டகத்தில்-16

அடி தோறும் அர்ச்சை சேர்த்து அருளுவார் –திவத்திலும் பசு நிறை மேய்த்து உவத்தி -கன்று மேய்த்து இனிது உகக்கிறான்-
சரணாகதி பண்ணாதவர்க்கு காய்-பொழில் சூழ்ந்த -காய்த்து கனித்த பழமே சௌரி பெருமாள்–
மன்றம் அமர -பெரிய திரு நாள் முடிந்த பின்பும் -மேலே நடந்து கொண்டே இருக்கும் படியே தோன்றுவது போல் –
கூத்தாட்டம் முடிந்து கண்ணன் போன பின்பும் -ஆடுவது போலே தோன்றும் –அனைவரும் அவனுக்கு ஆடுவர்
தும்புரு நாரதர் அப்சரஸ் ஸ்திரீகள்- இவன் தானே ஆடி –மகிழ்ந்தான் -பார்த்தவர் மட்டும் இல்லை தானே மகிழ்ந்தான் –
பிராப்யமும் பிராப்தாவும் பிராப்திக்கு உகப்பானும் அவனே தான் ..-இங்கு ஊருக்கு கூத்தாடினது திரு வேம்கடத்தில் உலகத்துக்கு ஆடுகிறான்–
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி வலது திரு கையால் காட்டி -பாபம் வற்ற வைக்க கடி ஹஸ்தம் காட்டி –கூத்தாடி காட்டுகிறான்-
இங்கும் நடுவில் அவ் உலகம் இவ் உலகம் நடுவில் -அங்கு மன்றத்தில் அம்பலத்தில் நடு போலே மைந்தா -இளையவன் -காளை புகுத்த கனா கண்டேன் –

சிறிய திரு மடல்–25 திவ்ய தேசங்கள்- சீரார் திரு வேம்கடமே -முதலில் அருளுகிறார்
அவன் -குணங்கள் அழிக்க போகிறேன் என்று –தமிழில் மடல் எடுத்தவர் ஆழ்வார் மட்டுமே –
சிறிய திரு மடலில் விபவம் அழிக்க பெரிய திரு மடலில் அர்ச்சை அழிக்க –பறை அடித்து சொல்ல போகிறேன்
காரார் திரு மேனி காணும் அளவும் போய் சொல்ல போகிறேன் என்றவர்–
முதலில் திரு வேம்கடம் -நித்யர் சம்சாரி இருவருக்கும் உபய விபூதிக்கும் ஆள் ஆகா தா படி என் வடிவை காட்ட போகிறேன் —

பெரிய திரு மடல் -தென்னன்  உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்–பிராட்டிக்கு திரு முலை தடங்கள் –
மன்னர்கள் எல்லோரும்  -என்னது என்று அபிமானம் இருக்கும் படி தெற்கு திரு மலை -மேரு ஹிமாசலம் விந்தியா-காந்தன் விரும்பி கிடக்கும் இடங்களை தானே கொண்டாடனும் –என்று இவை– தென் கொள் திசைக்கு திலகம் ..-நாங்கள் குன்றம் கை விடான்–தெய்வ தன்மை பொருந்திய வடக்கு திரு மலை —
குபேரன் சித்ர ரதம் போலே ராமன் சித்ர கூடம் மலையில் அழகர் திரு மால் இரும் சோலை மலையில் ஆனந்தம் அடைவது போல் இருந்தானாம் ..
அழகரே வந்த இடம் தெய்வ வட மலையாம் -மின்னி மழை தவழும் வேம்கடத்து எம் வித்தகனே – –
குச்சி வழியே புக்கு –மேகம் ஆராதனம் பண்ணும் -ஆஸ்ரித வித்தகனே -மேகங்கள் மின்னலை கை வழக்காக கொண்டு வருமாம் —
மின்னகத்து மங்கையை திரு மார்பில் கொண்டவன்- மேகம் அவன் மின்னல் அலர் மேல் மங்கை

66 பாசுரங்கள் மொத்தம் அனுபவித்தார்-

————————————-

திரு குறுந்தாண்டகம்- 9-/திரு நெடும் தாண்டகத்தில்-9-10-16-/சிறிய திரு மடல்–25/பெரிய திரு மடல்-6-124/-ஆக -7-பாசுரங்கள் –

ஸ்ரீ கண்ணபிரான் இவன்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்   கடி பொழில் சூழ் கண புரத்து  என் கனியே என்றும்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் வட திரு வேம்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்– துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே–திரு நெடும் தாண்டகத்தில்-16

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்-பெரிய திரு மொழி-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 3, 2011

செம் பொன் செய் கோவில் -நாங்கை 4 நாங்கூர் 7 /நாங்கை நன் நடு வுள்– என்று அருளி இருக்கிறார் —
மணி மாட  கோவில் -சூர்யன் கிரணம் பெருமாள் திரு முகம் உத்தராயணம்  தட்ஷினாயணம் பொழுதும் இன்றும் /
இங்கு தான் கருட சேவை மங்களாசாசனம் /அனுபவம் பின்னாட்டி இங்கும் திரு வேம்கடம் அனுபவிகிறார்

அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேம்கட மலை மேல்
மேவிய வேத நல் விளக்கை
தென் திசை திலதம் அனையவர் நாங்கை
செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே—-4-3-8-

வணங்கி வாழ்ந்து ஒழிந்தேனே –பாலையும் சக்கரையையும் சேர்த்தல் போல செம் பொன் கோவிலையும் திரு வேம்கடத்தையும் சேர்த்து அனுபவிகிறார்
நந்த கோபாலன் யசோதை கண்ணன் -கட்டிலையும் தொட்டிலையும் பிடித்து யசோதை நடுவில் ..காவலுக்கு நந்தன் முதலில் ..
பேரனையே -அணிருத்னன்- கட்டில் உடன் கொண்டு போன இடம் /காமனை பயந்த காளை இவன் –சாஷாத் மன்மத மன்மதன் —
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபாலன்  குமரன் –பாணாசுரன் அறிந்த ரகசியம் ராவணன் அறிந்து
பிராட்டியையும் பெருமாளையும் சேர்த்து சிறை படுத்தி இருந்தால் பிழைத்து இருப்பான்
நேர் செறிந்தான்  கொடி கோழி கொண்டான் பின்னும் நேர் செறிந்தான் எறியும் அனலோன் அலம் போதும் —..
பின்னும் நேர் செறிந்தான் முக் கண் மூர்த்தியும் கார்த்திகை யானும் கரி முகத்தானும் அனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகு இட்டு மூ வுலகும் பூத்தவனே ..தீர்த்தனை ஏத்தும் ராமானுசன் -அன்றிய சீறி எதிர்த்து வந்தான்  —
ஈர் ஐநூறு துணித்தான் -வாணன் பிழை பொறுத்தான் —
கோவிந்தம் பஜம் மூடமதே -ஆதி சங்கர பகவத் -முதல் வைஷ்ணவர் தான் ..யாதவ பிரகாசர் இடம் ஸ்ரீ ராமானுஜர் கற்றாரே
பாகு பாடு இன்றி அவர்கள் இருந்தார்கள் –விரோதி போக்கும் -அவனே திரு வேம்கட மலை மேல் மேவிய  வேத நல விளக்கு —
சுயம் பிராகாசம் –பர பிரகாசம் மற்றவரால் விளக்க படுவது -அவன் தன்னை தானே காட்டி கொடுப்பான் ..
வேதத்தால் காட்ட படுபவன் வேத விளக்கு -இரண்டும் உண்டு வேததினாலே-சப்தம் ஒன்றாலே – –
பிரத்யட்ஷம் அனுமானம் இரண்டாலும் அறிய முடியாத –வேதம் கொடுத்து தன்னை தானே காட்டி கொடுக்கிறான்  —
தென் திசை திலகம் போல் இருக்கும் செம் பொன்  செய் கோவில் –மன்றம் -உயர்ந்தவர்கள் சேர்ந்து -பாகவத சேர்க்கை -பொலிய ஒலி வரும் படி

வேடார் திரு வேம்கடம் மேய விளக்கே!
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக்  குளத்தாய்
பாடா வருவான் வினையாயின பாற்றே  4-7-4

இவை அனைத்தையும்-சொரூப ரூப குணா விபவம் – திரு வேம்கடத்தில் கண்டு கொள்ளலாம் –
விளக்கு ஏற்ற கூடு போல வேடர்கள் சுற்றி காத்து இருக்கிறார்கள்
வேடர்கள் பரிவும் ரட்ஷிக்க ஆண்மை கொண்ட வேடர்கள் –இந்த விளக்கு திரு வெள்ள குளம் இருந்து வந்ததாம் —
வேதியர் மல்கி வாழும்  திரு நாங்கூர் —உன் அருகில் வந்து -பூ உடன் இருக்கும் நாறும் மணக்கும் -சர்வ கந்தன் –
பெரியோர் சகவாசம் குணம் நமக்கும் வருமே -சாம்யா பத்தி பிரார்த்திக்கிறார் -குமுத வல்லி நாச்சியார் பிறந்தகம் –
அண்ணன் கோவில் -என் பாபம் விரட்டி அடுப்பாய்

வாம் பரி யுக மன்னர் தம் உயர் செக ஐவர்கட்க்கு   அரசு அளித்த
காம்பினார் திரு வேம்கட பொருப்ப! நின் காதலை அருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் வாயது துவர் பெய்த
தீம் பலம் கனித் தேன் அது நுகர் திரு வெள்ளறை நின்றானே 5-3-4

எதிர்த்து வரும் குதிரைகள் வாழும் படி/ காம்பினார் மூங்கில்கள் சேர்ந்த -திரு வெள்ளறை கைங்கர்யம் பிரார்த்திக்கிறார் –
எடுத்த கார்யம் முடி -என்னை ஆழ்வார் ஆக்கினாய் கைங்கர்யம் கொடுக்க வேண்டாமோ — பொற்பு -மலை –
நின் காதலை அருள்-பூர்வ ஷணம் வேண்டிய -ஷேமுபுசி பக்தி ரூபம் -ஞானம் கலந்த பக்தி சுவாமி ராமானுஜர் பிரார்தித்தாரே –
மதி நலம் -ஞானம் கனிந்த நலமான பக்தி -பக்திச்த ஞான விசேஷம் -மடப்பம் கொண்ட குயில்–வாய் துவர்ப்பு –
மாம் பலம் குத்தி -துவர்ப்பு மாத்த -தீம் பல கனி பலா பழம் வாய் வைத்து -தேனில் உண்டு மாற்றி கொண்டதாம் —
பார்த்தன் தன தேர் முன் -மண் அஞ்ச பாரத போர் படை தொட்டான் -எந்த குதிரை கொன்றான் எந்த மன்னரை கொன்றான் –
ஐவர்கட்க்கு அரசு அளித்தான் எயவர்கத்க்கு திறன்கள் காட்டி இட்டு செய்த மாயம் –தானே கொன்று பெயரை அர்ஜுனன் –
கருவி தானே அவன் -விஸ்வரூபத்தில் காட்டினானே அதனாலே கண்ணனே கொன்றது போலே காட்டினான் –
கொல்லை அரக்கியை மூக்கு அறிந்திட்ட குமரனார் சொல்லும் பொய் ஆனால் போல லஷ்மணன் பெருமாள் திரு கரம் போலே
அர்ஜுனன் கண்ணனின் கருவி –விபவம் சொல்லி அர்ச்சை அருளி இருக்கிறார் –
ஸ்ரீ தேவி நாச்சியார் -ஆக உள்ள திரு வெள்ளறையும் திரு வேம்கடமும் சேர்ந்து அருளி இருக்கிறார்

வெருவாதாள் வாய் வெருவி
வேம்கடமே! வேம்கடமே! என்கின்றாளால்
மருவாளால் என் குடம் கால் வாள் நெடும் கண்
துயில் மறந்தாள் வண்டார் கொண்ட
லுருவாளன் வானவர் தம் உயிராளன்
ஒலி திரை நீர்ப் பைவம் கொண்ட
திருவாளன் என் மகளை செய்தனகள்
எங்கனம்  நான் சிந்திக்கேனே 5-5-1

திரு அரங்கம் 50 பாசுரங்கள் மங்களாசாசனம் –தாயார் வார்த்தை இதில்–அஞ்சாதவள் இவள் மகள்–மறைக்க தெரியாது —
ஐதீகம் பட்டார் கோஷ்டியில் தும்பிய ஒருவர் –அனந்தாழ்வான் இடம் சொல்லி மீண்டும் வந்து இந்த பாசுரம் சொல்லி  –
பட்டர் இது தாய் பாசுரம் தானே -மகள் திரு அரங்கமே சொல்லி இருப்பாள் -வாய் வெருவி தாயார் கேட்க்காமல்
வேம்கடமே என்று சொல்லி இருப்பதாக சொன்னாராம் –ராவணனை கொன்ற  ஸ்ரீ ராமன் தெற்கு வாசல் வழியாகாவும்
திரு வேம்கடத்தானே வடக்கு வாசல் வழியாக வந்து சயனித்தாராம் என்று பட்டார் நன்ஜீயருக்கு  சொல்லி —
அதனால் இவனே அவனே என்றாராம் -வேம்கடமே -அர்ச்சை -பர வியூகம் விபவம் அந்தர்யாமி விட்டு என்கின்றாள் —
இரண்டு தடவை இல்லை வெருவி கொண்டே தாமரை கண்களால் நோக்காய் நோக்காய் அரையர் சொல்லி கொண்டே இருக்க –
அரையர் ஆக்கி நோக்கினதால் தானே –இன்று நாம் இருப்பது அவன் நமக்கு கொடுத்த பரிசு
நாளை நாம் பண்ணுவது அவனுக்கு கொடுக்கும் பரிசு -சொல்லும் அழகுக்கு சொல்லி கொண்டு இருந்தாராம் அரையர் —
தாயார் நானும் சொல்லி பார்த்தேன் மகள் சொல்வது போல் இல்லை என்கிறாளாம்

அனந்தாழ்வான் திரு வேம்கடம் சொல்வது போலே பட்டார் அழகிய மணவாளன் சொல்வது போலே அரவிந்த லோசனன்
நம் ஆழ்வார் சொல்வது போலே திரு கண்ண புரம் திரு மங்கை ஆழ்வார் சொல்வது போலே சோமாசி ஆண்டான்
எம்பெருமானார் சொல்வது போலே இருந்ததாம் –இவளை பிரிந்து அவன் துடிப்பு இருக்க –
ஸ்ரீ ராமன் சீதை பிராட்டி பிரிந்து துடித்தது போலே /இங்கு இவள் துடிக்கிறாள் –மடியில் சேர பெறாமல்-
வாள் ஒத்த கூர்மை நெடும் கண் -பகவானை அகப் படுத்தி கொள்ள கூடிய கண்கள் இங்கு அவன் இடத்தில் அகப் பட்டு துடிக்கிறாள் —
வண்டார் -தேனீக்கள் படிந்த மேகம்–திரு வேம்கட மேகம் தேன் குடித்து இருக்குமாம்-அதை குடிக்க வண்டு படிந்து உள்ளதாம் —
திருவாளன் -ஸ்ரிய பதியாய் இருந்து மகளை துன்பம் படுத்துகிறானே —

சிந்தனையை தவ நெறியை திரு மாலை பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வட மலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்ந்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-7

முப்பிரி ஊட்டிய -திரு கோவலூர் திரு அரங்கம் திரு வேம்கடம்
மனோ ரதம் ஆசை படும் படி இருக்கும் பிராப்யம் /தவ நெறி -அதை அடைய வழியும் அவனே
நாராயணனே நமக்கே பறை தருவான் போலே –கண்ணே உன்னை காண எண்ணே கொண்ட -கண்ணாலே கண்ணை காண்பது —
திரு மாலே சிந்தனை திரு மாலே தவ நெறி –அடையும் வழியாக இருக்கும் பொழுதும் ஸ்ரீ தேவி சம்பந்தம் / சிந்தனை –
ஸ்ரீ மதே நாராயண கைங்கர்யம் பண்ணும் பொழுதும் அவள் வேண்டுமே –பிரியாது-வட மலையை பிரியாமல் இருந்த
எம்பெருமான் வந்து பிரியாமல் என் மனத்து இருந்தான் –வட மலையை -மலையானை இல்லை –மலையே திரு மேனி —
வட மா மலை உச்சியே அவனே –பொழில் கோவல்–இதையும் சொல்லி -உலகு அளந்த திருவடி நினைவு வர –
பிராப்யம் பிராபகம் இரண்டையும் சொன்னதும் இணை திருவடி நினைவு வர –அந்தணனை- பிராமண பிள்ளையாய் வாமனன் போனானே —
வினீத வேஷம் -ஸ்வாமி யாய் சொத்தை மீட்க்க போனான் -என் சேஷத்வம் பரி போகாமல் வந்து அருள்வாய் என்கிறார்—
தாள் பரப்பி மண் தாவிய ஈசனே திரு வேம்கடத்தான் -ஆழ்வார் –
பிரதி வாத பயங்கர அண்ணன் ஸ்வாமிகள் அருளிய சுப்ரபாதம் -லஷ்மி நிவாசன்–நிரவத்ய -தயைக சிந்தவ் –
குற்றம் இன்றி குணம் நிறைந்த -குணங்களுக்கு கொள்கலம்– இரண்டுக்கும் அவள் விட்டு பிரியாமல்  இருப்பதே காரணம் –
அகில  ஹேய பிரத்ய நீகன் கல்யாண குண   தாயகன் –சம்சார சாகர சமுத்திர அணைக்க சேது — தாண்டுவிக்கும் பாலம்–
அணை தடுக்கிறவன் – திரு வெக்கா வெக்கனை–தடுத்து நிற்கும் அணை மட்டும் இல்லை இக்கரை இல் இருந்து அக்கரை போக தாண்டுவிகிறான் —
போய் சேருமிடம் வேற அவன் வேறு இல்லையே –தாண்டி போகிற இடம் சேது இல்லையே
தயைக சிந்து என்பதால் சேது தாண்டி குண கடலில் சேருவோம் -பிராப்யமும் பிராபகமும் அவன் தான்–
பிராட்டி சம்பந்தம் இரு பக்கமும் உண்டு–வேதாந்த வேத்ய  நிஜ வைபவம் பக்த போக்ய
ஸ்ரீ வேங்கட சலபதே சொல்லி காடினதே -தனக்கும் தான் தன்மை அறிவரியான் –பக்த போக்யன்-கிட்டே வந்து சேவை சாதிகிறானே–

மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தாள் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேம்கடத்தானை
நான் சென்று நாடி நறை யூரில் கண்டேனே 6-8-1

திரு நறை யூரிலும் ஸ்ரீ நிவாசன் நாச்சியார் கோவில்-
கல் கருடன் சேவை–பிரம  சாரி வேஷம் -விபவம் சொல்லி அர்ச்சை சொல்வார்—மான் தோல் தோளில் கொண்டு–
மாணியாய்-பூர்வ ஜன்மமும் இரந்தே இருப்பது போல் கை ஏந்திய அழகாம் –மாவலி மண் -சொல்லலாமா -அவன் சொத்து தான் —
உலகம் முழுவதும் பேச வைத்தானே அதனால் -தான் கொண்டான் -உலகம் பேசும் படி கொண்டான் -ஒவ்தர்யம் வாரி கொடுத்தான்
கொடை யாளி பட்டமும் கொடுத்து –தாளால் -ஆழ்வார்கள் திரு முடி -தாயார் வருடும் திரு வடி –
இப்படி கல்லும் மண்ணும் கடலும் கடந்து அளந்தானே -பெருமான்–கொண்டு- தீர்த்தம் கொண்டு  அளந்தான் —
பெற்ற ஷணமே–அளந்து முடித்தான் –இரண்டு தீர்த்த தாரையும் ஒருசேர விழ –கங்கை நீரும்=திருவடி தீர்த்தமும்
குறை கொண்டு குண்டிகை நீரை –இந்த கையில் பட்ட தீர்த்தம் சிலீர் பூரிக்க வளர்ந்தானாம் அளந்தானாம்–
இரந்தவனே பெருமான்–இதனாலே வைபவம் –தாழ்ச்சியாலே பெயர் வாங்கி கொண்டவன் –சாரல்-தாள் வரை –
தேன் ஓடுகிறதாம் –திரு விக்ரமன் பின் பட்டார் சேவிக்க திரு வேம்கடம் -நான் நாடி -இத்தனை நாளும் வேறு எங்கேயோ
நாடி சென்று அவன் வரும் பொழுது விலக்கினவன் நான் சென்று நாடி –முதல் அடி அவனது தான் -தாளால் அளந்தவன் முதலில் –
அது பலித்தது நான் சென்று நாடி–விடாய்த இடத்தில் தண்ணீர் கிடைத்தது போலே –அருகாத பயணம்  போய் பரம  பதத்தில் காண்கை
அன்றிக்கே -இங்கேயே கிடைத்ததே –திரு வேம்கடம் நினைவு வர அங்கேயே போக வேண்டாம் படி திரு நறையூரில் கண்டேனே ..

தாரேன் பிறர்க்கு உன் அருள் என் இடை வைத்தாய்  ஆரேன் அதுவே பருகி களிகின்றேன்
காரேய் கடலே மலையே திரு கோட்டி  ஊரே உகந்தாயை உகந்து அடியேனே–திரு நறையூர் – பாசுரம் -7-1-3-

மலை- சொன்னாலே திரு மலை– திரு வேம்கடம் தான் –உன் அருளை என் இடம் வைத்தாய்-
எங்கும் பக்கம் நோக்கு அறியாத விசேஷ கடாஷம்– என் -நீசன்-நான் என்று பார்க்காமல்- உன்னையும் பார்க்காமல்–
தாரேன் பிறர்க்கு-  இன்பம் பகிர்ந்து உண்ண  வேண்டுமே அது கொடுக்க எனக்கு யோக்யதை இல்லை –கொடுக்க வேண்டியது நீ –
கிடைத்ததை உபதேசிப்பேன்– அனுபவித்து ஆர வில்லை–எக் காலத்து எந்தையாய் என்  உள் மன்னில் எக் காலத்தில் மற்று
யாது ஒன்றும் வேண்டேன் அக்கார கனியே– திரு மாலை ஆண்டான்- ராமானுஜர் -நிர்வாகம் —
ஒரு தடவை வந்து போனால் போதும் என்று இல்லை — எப் பொழுது இருக்க வேண்டும் தழுவனும் என்று இருப்பவர் ஆழ்வார்–
நம் போல் போய் கொண்டே சேவித்து சீக்கிரம் கிளம்பி கணக்கு பண்ணி சேவிப்பவர் இல்லையே —
ஆசை விடாமல்-இயல்புக்கு ஏற்று -விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்ட்டி- இல்லையோ –ஸ்வாமி 9/10 பாசுரங்களில் வேறு நிர்வாகம் அருளி இருக்கிறார் –
எக் காலத்திலும் மற்று யார் ஒன்றும் வேண்டேன்– நீ மனசில் இருப்பதை விட வேறு ஒன்றும் கேட்க மாட்டேன் –
திருக் கோஷ்டியூர் நம்பி இதை கேட்டதும் ஆளவந்தார் இதை அருளி கேட்டு இருக்கிறேன் என்றார் -ஆளவந்தார் கொடுத்த அர்த்தம் தான்—
அதுவே பருகி களிகின்றேன்–இதை கொடுக்க -கரி கடல்-திரு பாற்கடல்/மலையே -திருவேம்கடமே- திருக் கோஷ்டியூரே-
உகந்தாய்- நானும் உகந்தேன் அடிமை பண்பு கொண்டு-சௌகரி பல வடிவு கொண்டது போல –ஏ காரம்
தனித் தனியே இங்கு இருந்தது எல்லாம் 108 திவ்ய தேசங்களில் இருப்பதற்கு சமம்–தனி தனி ஏற்றம் –
சொவ்பரி முனிவர்  தவம் இருந்து மோட்ஷம் அடைய தனியாக நதியில் கீழ் இருந்து இருக்க –
கண் திறந்து பார்த்து தாய் மீன் 50 குட்டிகள் உடன் உளையாட மாந்தாதா ராஜா இடம் சென்று 50 பெண்களை கல்யாணம் பண்ணி
தனி தனி மாளிகை –ஒவ் ஒருவரும் தம் கூடவே இருப்பது போல் –
ஆபாச விருத்திக்கு ஐம்பது சரீரம்–ஆதி சேஷன் சென்றால் குடையாம்-கைங்கர்யத்துக்கு வடிவம் கொள்வது –
அது போல கடலே மலையே திரு கோஷ்டியூரே -108 திரு மேனி உடன் சேவை சாதிக்கிறான் பர கால நாயகியை கொள்ள

ஆங்கு வென் நகரத்து அழுந்தும் போது
அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை அன்ன பொன்னார் அடி
எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற
வேம்கடத்து அரியை பரி கீறியை
வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி
என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5

சரணாகதி அடைந்தவனை ரட்ஷிகிறான் -கர்ம பலன் அனுபவித்தே தீரனும் சாஸ்திரம் போய் ஆக்க முடியாது
பீஷ்மர் தம் தகப்பன் சாத்தனு பித்ரு பிண்டம் நேராகா கொடுக்காமல் சாஸ்திரம் படி கொடுத்த கதை /
தாங்கு தாமர அன்ன -ஆசன பத்மம் — அடி கொண்டு என்னின் தாங்கினான் -பொன் -சுத்த ச்வாபம்
தாமரை செவ்வி நாற்றம் குளிர்த்தி அழகு மிருது ச்வாபம்  இவற்றுக்கு –எனக்கு உபகாரகன் எம்பிரான் —
திருவடி காட்டி கொடுத்தானே –மோஷ இஷ்யாமி மா சுச –உம்பர்க்கு அணியாய் -சாமான்யன் இல்லை இவன் –
வேம்கடத்து -நமக்காக -அரியை-பகைவன் –பயம் உயர்ந்தவன் வெறுப்பு -சிம்ஹம் –அர்த்தம்–
பரி கீறியை கேசி ஹந்தன் கேசவன் –செஷ்டிதம் நினைவு வர -வெண்ணெய் உண்டான் உரல் இடை ஆப்புண்டான் –
கழித்து வந்து இதில் நிற்கிறார் –கண்ணன் அளவும் வந்து நவநீத சேஷ்டிதத்தில் நிற்கிறார் —
கரும்பினை தேனை நல் பாலினை –தனி வைபவம் மருந்தும் விருந்தும் போக்கியம் -ச்வாதந்த்ர்யம் -செருக்கு -தீம் கரும்பு–என்கிறார்

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை
வாசவர் குழலாள்மலை மங்கை தன்
பங்கனை பங்கில் வைத்து உகந்தான் தன்னைப்
பான்மையை பனி மா மதியம் தவழ
மன்குலை   சுடரை வட மா மலை
யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலை பகலை சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே 7-10-3

பெரும் புறக் கடல்- பெரிய திரு மேனி -காம் போட்ட புடவை சாத்துவார்கள் கருடனுக்கு  அமிர்த கலசம் –
இவனை என்றே சொல்லுவார் பத்து பாசுரங்களிலும் –அருள் செய்கின்ற ஈசனை–ருத்ரன் பார்வதிக்கு இடம் கொடுத்தவனை-
அவனுக்கு -தான் இடம் கொடுத்து –கூராளும் தனி உடம்பன்–உகந்தான் தன்னை -போக்கிடம் இன்றி இருக்கும் நமக்கும்
அபிமானியான ஈசனனுக்கும் ஒக்க அருள் புரிகிறான்–ச்வாபமிது –புழு மணல் மேட்டில் போகும் குறித்தால் போல அன்றி
கல் வெட்டில் பதித்தது போல –சந்தரன் தவழும் ஆகாசம் நிர்வாகன்-சூர்யா மண்டல மத்திய வர்த்தி-சுடரை–
வட மா மலை உச்சியை- தேடி நாம் வணங்க -அவனே கங்குல் பகல்–பிராபகம் பகல் சம்பாதிக்க கங்குல் அனுபவம் –
பிராபகம் பிராப்யம் அவனே-உன் தனக்கும் குரிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்–
பெரிய வாச்சான் பிள்ளையாக  கண்ணனே -ஆவணி ரோகினி -அவதரித்து நம் பிள்ளையாக திரு மங்கை ஆழ்வாரே அவதரித்து-
கார்த்திகை கார்த்திகை – அர்த்தம் சாதித்தார் –ஜகம் எல்லாம் ஆகாரம் –மலையான்- மலையை உச்சியை –மலையில் ஏக தேசம் அவன் —

அருவி சோர் வேம்கடம் நீர் மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருகின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ ? 8-2-3

மலை தாள் வரை என்பதால் தெண்ணீர் பாய் வேம்கடம் கொட்டி கொண்டே இருக்கும் –அகழி போலே அருவி சேர்த்து ரட்ஷனம் —
விரக தாபம் -தாய் பாசுரம் –வேங்கடம் அருவி உள்ளது வேம்கடம் உடையான் கருணை  அருவி பொழிய வில்லையே –
தாப ஹரம்-தன் விரகம் தீர்க்க –மலையே நீராக கொண்ட நீர் மலை சொல்லி பார்க்கிறாள்–
அபஹிருத ஹ்ருதர் -ஹிருதயம் பறி கொடுத்து உளருகிறாள் -மனசில் நினைத்து பேச முடியாதே வாய் வெருவி —
மெய்யம் சத்யன் வினவி இருக்கிறாள் -மூன்றும் மலை–இந்த பாசுரத்தில் —
குடவரை கோவில் திரு மெய்யம் ..சத்ய வ்ரத ஷேத்ரம் –திரு மெய்யம் கோடா வர வில்லை வினவி -பதில் இல்லாமல் இருக்கிறாள்-
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் -கேட்டு அநுஷ்டித்தார் போல -இங்கு வினவி பதில் வராமல் இருக்கிறாள் —
அடுத்து பெருகு  சீர் -நித்யம் சீர் கூடி கொண்டே -பேசினாள் -பேசுதலே உருகுதல் ஆடி ஆடி –அகம் கரைந்து –உள் மெலிந்தாள்-
ஜீவாத்மா உருகாத தத்வம்- வெட்டவோ  நனைக்கவோ முடியாதே –வேம் எமது உயிர் அழல் மெழுகில் ஒக்கு —
பகவத் விஷய காமம்–அச்சேதம் என்ன படுவது காற்றும் கட்டி அழ பத்தி நூல் வரம்பு இல்லை –ந சாஸ்திரம் ந க்ரமம்–
மதுரை சொன்னாலே  பாபம் போகும் என்றார்களே என் பெண் நான்கு திவ்ய தேச பெயர் சொல்லியும்
சரீரம்  இளைத்து  துக்கம் தான் வருகிறது என் பெண்ணுக்கு  என் செய்வேன் என்கிறாள் தாயார்

வடவரை நின்றும் வந்து இன்று கண புரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என்? கண் துயில் இன்று இவர் கொள்ளவே 8-2-6

அநுகரித்து பாடுகிறார் கோபிகள் அனுகரித்து இருந்தது போலே–கண்ணன் காளியன் போலேயும் —
ஆண்டாள் திரு ஆய்ப்பாடி பெண் போலே அநுகரித்து பாடினது போலே –பிரகலாதனும் ஜகமே நான் –
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -எல்லாம் நானே –ஆழ்வார் –வைதிக லோகாயுத மதம் —
சாரு வாக்- கண்ணால் பார்க்கிற உடம்பே மெய் அதை பேணி  கொள்ள வேண்டும் உடல் ஒழுங்கா இருக்க சாஸ்திரம்
பாபம் புண்யம் ஒன்றும் இல்லை என்பர் -அதனையும் அவன் -எனக்குள்ளும் அவன் -சரீர ஆத்மா பாவம் தெரிந்து பேசுகின்றார் —-
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை–கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே அனுகரித்தார் ஆழ்வார் —
இங்கு பர கால நாயகி–அறிந்தது எல்லாம் அர்ச்சை தானே -நானே திரு வேம்கடத்தில் நின்றேன் –
வட வரை =திரு வேம்கடம் –பூர்வர் நிர்வாகம் –அங்கு இருந்து வந்து திரு கண்ண புரம் இடமாக கொண்டேன் என்கிறாள் —
ஆப்பான் திரு அழுந்தூர்   அரையர் -அணுகார பிரகரணம் இல்லையே என்று கேட்க்க —
மகள் அநுகாரம்  பல செய்வதை தாயார்  ஒன்றை மட்டும் எடுத்து சொல்கிறாள் பட்டர்  -நிர்வாகம் —
காட்டில் வேம்கடம் கண்ண புர நகர் ஆண்டாள் -வடக்கு திரு மலை மூலம் திரு கண்ண புரம் –
ஸ்ரீ வைகுண்டம் விட்டு அங்கு வந்தான் சொல்ல வில்லையே —
திரு மால் வைகுந்தமே திரு வேம்கடமே எனது உடலே ஆழ்வார் அருளி இருக்கிறாரே –மடவரல்- மடப்பம் கொண்டவள்–
திரு ஆய்ப்பாடி போல் குற்றம் சொல்லி கொண்டு போக வில்லை என்கிறாள் தாயார் –
என் பேதை-பருவம்–கணவன் வீட்டு போகும் வயசு வர வில்லை–தூக்கம் பறித்து போனாரே –என் செய்வேன்

பண்ணுலா மென் மொழி பாவை மார் பணை முலை அணைத்தும் நாம் என்று
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உயக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீது இயன்ற வேம்கடதுளார் வளம் கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே ! 9-7-4

கோல பிரான் செல்ல கொழுந்து நாச்சியார் திரு வல்ல வாழ-கண்ட கர்ணனுக்கு சேவை –
பேசி வஞ்சம் செய்யும் பெண் முலை அணைய-ஆசை விட்டு  உய்ய –திரு மார்பு ஆலிங்கனம் பெருமாள் -திருவடி/
பரதன்–கண்ணன் -அக்ரூரர் /சௌலப்யம் அழகு உள்ள திரு வேம்கடம் -வல்ல வாழ சொல்லி மருவு என்கிறார் –

வலம் புரி ஆழியானை வரையார் திரள் தோளன் தன்னை
பலம் புரி நூல் அவனைப் பொழில் வேம்கட வேதியனை
சிலம்பியல் ஆறு உடை திரு மால் இரும் சோலை நின்ற
நலம் திகழ நாரணனை நணுகும் கொல்? என் நன் நுதலே 9-9-9-

ரட்ஷிக்க திவ்ய ஆயதங்கள் கொண்டவன் -தன பெண் எதை எல்லாம் கண்டு மயங்கினாள் என்று சொல்லி கொண்டு வருகிறாள் தாய் ..
இவை இன்றியும் ரட்ஷிக்க வல்ல தோள் வலிமை  கொண்டவன்– திண் தோள் கொண்ட இவர் தானே தோளை கொண்டாடலாம் —
திரண்ட தோள் கொண்ட தொண்டை மன்னனையும் கொண்டாடினாரே இவர் –புலம் புரி நூல் அவனை–அழகன் –
காதுகண் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு கொண்டவன் –இந்த்ரியங்கள் பறிக்க கூடிய யக்ஜா பவீதம் கொண்டவன் —
பொழில் வேம்கட வேதியன் -அழகையும் ரட்ஷனத்தையும் காட்ட இருக்கிறான்- வேதத்தால் கொண்டாட படுபவன் —
நூபுர கங்கை–மண்டூக மக ரிஷி–சிலம்பு இயல் -ச்வாபம் கொண்டவர் –பொன்னை மா மணியை அணி ஆர்ந்தோர்-

மின்னை  வேம்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆள் உடை ஈசனை எம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே–10-1-2

18 திவ்ய தேசங்களை ஒரே பதிகம் இதில் –பிறந்த வீட்டில் சொல்லி கொண்டு போகும் பெண் போல் ஜன்ம பூமி விட்டு
பரம பதம் போகும் பொது  தன பக்கம் உள்ள அர்ச்சை பெருமாள் எல்லோர இடமும் சொல்லி கொண்டு போகிறார் —
அழகான மின்னல் போன்றவன்பொன்னை போலவும் மா மணி போலவும் -முந்தானையில் கொண்டு கொள்ளலாம் படி—
இருப்பாரை மதிப்பாரை போல /இழந்தால் அழுது புரள வைக்கும் –எனக்கு நிர்வாகன்-கைங்கர்யம் கொள்பவன்-
எம் பிரான் -உபகாரன் -அழகை காட்டி என்னை திருதினவன் ஆதாரம் பெருக ஐயப்பாடு அறுக்க அழகன் —
திரு தண் கா -சேர்த்தார் திரு வேம்கடத்து உடையானையும்

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி
மால் விடை எழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க ஆனிரை காத்த
ஆண்மை கொலோ?அறியேன் நான்
நின்ற பிரானே! நீள் கடல் வண்ணா
நீ இவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
முன் கை வளை கவர்ந்தாயே 10-9-2-

நின்ற பிரானே -திரு வேம்கடம் என்றார் பெரிய வாச்சான் பிள்ளை–பூதனை முடித்து பஞ்ச லஷம் பெண்களுக்கும் கொடுத்தேனே என்று சொன்னான் –அதை சொல்லியே என் பெண்ணை படுத்த வேண்டாம் -இவ் ஊரில் கூத்தாடிநானே விடை கொன்றேனே -நப்பின்னை பிராட்டிக்கு –மலை சுமந்தது இல்லையோ –ஒரு மலை மேல் நின்று வருவார் உண்டா என்று எதிர் பார்த்து இருக்கிறேனே -என்றான் -நின்ற பிரான் திரு மலை-குன்றம் ஏந்தி குளிர் மலை காத்தவன்-பரன் சென்று சேர் திரு வேம்கடம் -நின்ற வேம்கடம் – கதை சொல்லி -மாயவர மதி நலம் அருளியவரின் தாயார் என்பதால் இவளுக்கும் ஆயானாகி வேயர் தோள் விரும்பிய நின்ற பிரான் -அர்ச்சையே -அடி தோறும் அருளுவாறே இவர் -அந்த கண்ணனே திரு வேம்கடம் உடையவன் -நின்ற பிரான் இவனை தான் சொல்கிறாள் என்று கொண்டாள்–

————————————————

4-3-8-/5-3-4-/5-6-7-/6-8-1-/ 7-1-3-/7-3-5-/7-10-3-/8-2-3-/8-2-6-/9-7-4-/9-9-9-/10-1-2-/ 10-9-2-/–ஆக -13-பாசுரங்கள்

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேம்கட மலை மேல்
மேவிய வேத நல் விளக்கை–4-3-8-
வாம் பரி யுக மன்னர் தம் உயர் செக ஐவர்கட்க்கு   அரசு அளித்த காம்பினார் திரு வேம்கட பொருப்ப! –5-3-4-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை எழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மை கொலோ?அறியேன் நான்
நின்ற பிரானே! நீள் கடல் வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா   முன் கை வளை கவர்ந்தாயே 10-9-2-

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தாள் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேம்கடத்தானை நான் சென்று நாடி நறை யூரில் கண்டேனே 6-8-1-
வட மலையை வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்ந்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-7-

இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்- பெரிய திரு மொழி-2-1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 3, 2011

தடை நீங்கிய பின்பு -மது கைடபர் ஒழித்து -தாய் மகிழ –திரு ஆலிங்கனம் பண்ணி கொண்டாள்-
மனோகர திவ்ய ரூபம் ஸ்ரீ ஸ்வாமினி -பிரதி யோகி தம்பதி –க்ருகிணிக்கு அன்றோ ஓலை எழுதி கொடுப்பது —
ஆஸ்ரித ஜன பிரியதான சீலே –ஜனனம் அறுத்து ஸ்வாமி கொடுப்பவள் –ஸ்ரீ வேம்கடேச  தயிதை–தவ சுப்ர பாதம் –
சேர்த்தியில் கைங்கர்யம் அடைய பிரார்த்தித்தார் -அடைந்தேன் அடியேனை ஆட கொண்டு அருள் -இனி யான் உன்னை விடேன் -சொன்னார் கீழ் –
நித்யர் சம்சாரி யாவரும் இப்படி இன்றி -குத்ருஷ்டிகள் பாக்யர்கள் உண்டியே உடையே போய் இருக்க -தனியன் —
மனசு தான் காரணம் உணர்ந்தார் கொண்டாடுகிறார் இதில் –

வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே! இனிது வந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்துஉறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேம்கடம் மேவி
மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே—2-1-1-

உறவு சுற்றம் ஓன்று இல்லா ஒருவன் உகந்தவர் தம்மை மண் மிசைப்
பிறவியே கெடுப்பான்  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்!
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேம்கடத்து
அறவன் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-2-

இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வான் இடைக்
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்!
வண்டு வாழ் வட வேம்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்க்குஅடிமை தொழில் பூண்டாயே 2-1-3-

பாவியாது செய்தாய் என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை  
மேவி ஆட் கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேம்கடமலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே 2-1-4-

பொங்கு போதியும் பிண்டியும் முடை புத்தர் நோன்பியர் பள்ளி வுள்ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என் நெஞ்சம் என்பாய்!
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேம்கடம் மேவி நின்று அருள்
அம் கண் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-5

துவரி யாடையர் மட்டையர் சமண்  தொண்டர்கள் மண்டி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்!
கவரி மாக் கணம் சேரும் வேம்கடம் கோவில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-6-

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்!
மருட்கள் வண்டுகள் பாடும் வேம்கடம் கோவில் கொண்டு அதனோடும் வான் இடை
அருக்கன் மேவி நிற்ப்பார்க்கு அடிமை தொழில் பூண்டாயே 2-1-7-

அருக்கன் மேவி நிற்பார்– சூர்ய மண்டல மத்திய வர்த்தி–தர்க்கத்தினால் -பேச நின்ற பிரமற்கு -தர்க்க சமணர்-
வேத சாஸ்திர விரோதி –வேத பாக்கிர் -சமணர் -வேத குருஷ்டிகள் வேதம் ஒத்து கொண்டு தப்பு அர்த்தம் –
சமண சப்த வாதம் -இல்லை என்று சொல்லலாம் /இருக்கு  என்று சொல்லலாம் /இல்லையும் இருக்கு என்று சொல்லலாம் /
சொல்ல முடியாது என்று சொல்லலாம் /இருக்கு என்று சொல்லாம் சொல்ல முடியாது என்று சொல்லலாம் /
இல்லை என்றும் சொல்லலாம் சொல்ல முடியாது என்றும் சொல்லலாம் /இல்லை என்று சொல்லலாம் சொல்ல முடியாது என்றும் சொல்லலாம் /
இருக்கு இல்லை என்று சொல்லலாம் சொல்ல முடியாது என்றும் சொல்லலாம் –
வைபாஷிகன்  சொவ்த்ராந்திகர் யோகாச்சர்யர் மாத்யமிகன் -புத்தன்-நான்கு விதம் –பிரத்யஷமாக தெரிந்து கொள்ளலாம்
பிரித்து ஆத்மா இல்லை ஞானம் இருக்கு அறிந்து கொள்ளும் லோகம் இருக்கு -ஞானம் க்ஷணம் தான் இருக்கும் நீடித்து இருக்கும்
என்று நினைத்தால் சம்சாரம் /அடுத்து அனுமானம் தான் /அடுத்து ஒன்றே போதும் ஞானம் மட்டுமே /
அடுத்து எல்லாமே பொய் -சூன்ய வாதம் /திரளை மிடற்று இடை இறுக்குவார்-நிறைய சாப்பிட்டு கொண்டு- துன்பம் அடைகிறார்கள் —
மருள் இசை வண்டு பாடும் -வேம்கடம் கோவில் கொண்டு அதனோடும் -சூர்ய மண்டல வர்த்தி இருப்பாற்க்கு அடிமை தொழில் பூண்டாயே-

———————-

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டு இருந்
தே என் நெஞ்சம் என்பாய்! எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேம்கடமலை கோவில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே  2-1-8

ஆயர் நாயகனுக்கு இன்று அடிமை பூண்டாய் -குற்றம் சிலர் சொல்வார்  பரம பத நாதன் -சேயன்–எட்டா கனி என்பர் –
அணியன் -சாமான்யன் /சிறியன் -விபவம் ராமன் கிருஷ்ணன் -மானுஷ ரூபம்-அர்ஜுனனுக்கே கை ஆள்  /
அந்தர்யாமி -பெரியன் -என்று பேச கேட்டு இருந்து -யாதானும் பற்றி நீங்கும் விரதம் –இதில் குத்ருஷ்டிகளை விட உயர்ந்த நெஞ்சம் —
என் இடம் ஒன்றும் சொல்லாமல்-அடிமை பூண்டாயே கொண்டாடுகிறார்  -வேய்கள் மூங்கில் -முத்து பொழிந்து மேவும் —

——————————————

கூடி யாடி உரைத்தாய் என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்
பாடி யாடி பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலர்
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்று ஏத்தும் வேம்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-9-

வேம்கடத்தில் ஆடும் கூத்தன் -மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் -இவன் நிற்பதே கூத்தாடுவது போல் –துணிந்து கேள் -நெஞ்சே என்கிறார்–
சாதனாந்தர பிரயோஜனான்தரர் விட ஏற்றம்– இதில் சொல்கிறார்  வேற வழியில் அவனை அடையாமல்/ வேற ஒன்றை கேட்காமல்/
அவனாலே அவனை அடைவதே வேண்டும் –இந்த இரண்டு கள்ளத்தனம் இன்றி இருக்க வேண்டும் —
தாமரையோன்-பிரம -ஆடுகை பெருமை/நடை ஆடுகை அதில் இருப்பது /உண்டாகுகி/ ஈசன் -ருத்ரன் அமரர் கோன் –
இந்த்ரன் நின்று ஏத்தும் -இவர்கள் கூட சேராமல்- பாடி ஆடி பணிந்து இருப்பவர் உடன் கூடாமல் /
காண்கிலார்-காண்கிலா ஆடு தாமரையோன் என்று பிரமனுக்கு விசெஷனம் -பரமனையே பார்த்தது இல்லை என்றும் கொள்ளலாம்-

————————————-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேம்கட மலை கோவில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த  அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே 2-1-10-

வான் உலகு தான் இடம் -பலன் சொல்லி தலை கட்டுகிறார்-கழுத்தே கட்டளையாக ஜாலம் கொண்ட மேகம்-
கண்ணுக்கு இலக்காக மின்னல்-தழுவும் திரு வேம்கடம் கருணை தான் -அவன் உண்டு கருத்து
அலர் மேல் மங்கை தாயார் -உறை மார்பன் –ஹம்ச அவதாரம் -அமரர் கோன் -கலி கன்றி கலி முடிக்கும் –
அழகிய தமிழால் -மன்னு பாடல் எம்பெருமான் திரு வுள்ளத்தில் மன்னி- வேதம் போல் பாவ கற்பமாக -நெஞ்சும் மன்னி கிடக்கும் –

—————————————
இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
வேம்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே—2-1-1-
இவனே ஸ்ரீ கண்ணபிரான்
வேம்கடத்து அறவன் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-2-
வேம்கடம் மேவி நின்று அருள் அம் கண் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-5-
வேம்கடமலை கோவில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே  2-1-8-
வேம்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-9-

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்- பெரிய திரு மொழி-1-10-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 2, 2011

இஷ்ட பிராப்தி பிரார்த்தித்தார் கீழ் இதில் அநிஷ்டம் நிவ்ருத்தி பிரார்த்திக்கிறார் –இஷ்டம் கிட்டியதே அநிஷ்டம் தொலைத்து தானே —
அறிவு பிறக்கும் நிலை முயற்சி  நிலை அடைந்து அனுபவிக்க பர பக்தி பர ஞானம் பரம பக்தி –
ஸ்வாமி கேட்டாதும் அஸ்துதே என்றானே நம் பெருமாளும் –சரீரம் தொலைத்து  அகம்காரம் மம காரம் தொலைத்து
கர்மம் தொலைத்து கேட்டதும் அதற்கும் அஸ்துதே என்றார்–ஸ்ரீ வைகுண்டம் துறந்து ஸ்ரீ வராக புஷ்கரணி வந்து சேவை சாதிகிறதே இதற்க்கு தானே .
.பிர பன்னனுக்கு பர பக்தி உண்டா –சத்யா உபாயம் கர்ம ஞான பக்தி யோகங்கள்– -பிரவ்ருத்தி மார்க்கம் சித்தோ உபாயம் பிர பத்தி —
அவன் திருவடிகளே உபாயம் உபேயம் -நிவ்ருத்தி மார்க்கம் -சரணாகதனுக்கும் கர்மம் ஞானம் பக்தி உண்டு ஆனால் அவை வழி இல்லை —
கர்மம் கைங்கர்யம் தான் –ஞானம் சம்பந்தம் அறிந்து உறவு கெட்டி பட –பக்தி ஆசை வளர்க்க –அவன் ஆனந்தத்துக்கு தான் இவை எல்லாம் –
அடையும் வழியாக இல்லை –திரு  வெள்ள குளம் பதிகமும்-அண்ணன் கோவில்  இது போல் தான் பாடல் அருளி இருக்கிறார் —

——————————-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன்
திண்ணாகம் பிளக்க சரம் செல உய்த்தாய்!
விண்ணோர் தொழும் வேம்கட மா மலை மேய
அண்ணா! அடியேன் இடரை களையாயே  1-10-1

திரு புள் குழி -ஸ்ரீ ராமன் திருவடி பட்டதால் இலங்கை  கொண்டாடுகிறார் –கண்ணார் கடல் -அழகிய –
அபிமானம் இதைக் கொண்டதால் –இலங்கைக்கு இறைவன் –கிரி துர்க்கம் வன  துர்க்கம் ஜல துர்க்கம் —
அவன் மார்பை பிளக்கும் படி சரம் உய்த்தாய்–விண்ணோர் தொழுவதே சரம் உய்த்த பின் தானே —
சீதை பிராட்டி துன்பம் களைந்தது போலே–சீதை ஆத்மா -அசோகா வனம் -உடல் -உப்பு கடல்-
சம்சார  இந்த்ரியங்கள் தலை மனசு ராவணன் -செய்தி தெரியாது பகவானைப் பற்றி ஆச்சார்யர் போல் ஹனுமான் –
பெருமாளுக்கு நம்மை தெரியும் மோதிரம்  சங்கு சக்கர லாஞ்சனை -ஆத்மா மனசுக்கு பணிந்தது இங்கு
அங்கு சீதை ராவணனுக்கு பணிய வில்லை இரண்டு வித்யாசம் –சென்று அங்கு தென் இலங்கை  செற்றாய் திறல் போற்றி —
கண்ணனும் தேர் தட்டில் முன் நின்று ரஷித்தானே -கலையும் சிலையும் –துணையாக –
மதிள் நீர் இலங்கை வாள்  அரக்கன் தலை பத்தும் -சந்திர காசம் வாளையும் நாளையும் நம்பி அவர்களுக்கு அந்தர்யாமி அவனை மறந்தான் —
தான் போலும் என்று எழுந்தான் தரணி ஆளன் அது கண்டு பொறுத்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் —
குன்றம் அன்ன இருபது தோள் துணித்தான் — ராவணன் வார்த்தை யாக கொள்ள வேண்டும் –இடர் களைதல் சம்சாரம் தொலைத்தல்

————————————–

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாளக் கொடி புள் திரித்தாய்!
விலங்கல் குடுமித் திரு வேம்கடம் மேய
அலங்கல் துளபா முடியாய்! அருளாயே 1-10-2

ரக்ஷண தீஷை மாலை போட்டு கொண்டு இருக்கிறான் -அலங்கல் துளப முடி -என்றும் இறையாய ராஷசர் —
பொல்லா அரக்கரும் உண்டு நல்ல அரக்கரும் உண்டு –அதனால் தான் விபீஷணன் அப்புறம் –புற்று என்றும் பாம்புக்கு இடம் போலே —
கும்பனோடு நிகும்பனும் பட்டான்- குலம் கெடுத்து -யானை குதிரை கால் ஆள் படை தேர் படை முடித்து -அரக்கர் குலம் முழுவதும் அழித்து–
ராவணன் முன்னால் வந்து இருந்தால் அவனோடு போய் இருக்கும் –கருட புள் கொடி -பொருள் அல்லா என்னை பொருள் ஆக்கி–

——————————–

நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏராலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்!
சீரார் திரு வேம்கட மா மலை மேய
ஆரா அமுதே!அடியேற்கு அருளாயே 1-10-3-

—————————————

உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-

———————————–

தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திரு வேம்கட மா மலை மேய
கோணா கணையாய்! குறிக் கொள் எனை நீயே–1-10-5-

——————————————–

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன் இன் அருள் செய்யும் தலைவன்
மின்னார் முகில் சேர் திரு வேம்கடம் மேய
என்னானை என் அப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

ஐந்து வரை  அருளாயே என்றவர் –ஆறாவது பாசுரம்  பிரார்த்தித்து நடந்தது —
என் நெஞ்சில் உளானே- என் மனம் குடி கொண்டு இருந்தாயே- என்கிறார் குறி கொள் -பிராப்யம் கொடுப்பாய் —
கோன் நாகணையாய்- ஸ்வாமி மிடுக்கன் -பேணாத அவுணன்- தூணாய் அரியாய் -வாசி இன்றி –
நெய் உண்டான் அகப்பட்டவன் நினைவு வர உரலும் கண்ணனும் வாசி இன்றி –
இருவரும் மேலும் கீழும் பெருத்து கருத்து அழுதது தான் வாசி -உரலினோடு ஏங்கி இருந்த எளிவு -இங்கு தூணோடு தூண் —
உள்ளே பிறந்த பொழுதே அரி இருந்தானாம் –அளந்திட்ட தூணை அவன் தட்ட –உளம் தொட்டு -பேணாத அவுணன்-
ஸ்ரீ வல்லபனை பேண வில்லை- ஆஸ்ரிதரை நலிதலே அவனை பேணாமல் இருப்பது —பிரகலாதனை நலிந்தவன் —
மம பிராணன் பாண்டவ –விதுர போஜனம் பண்ணும் கட்டத்தில் அருளினானே–
சம்பந்தம் அறிந்த  பின் கைங்கர்யம் பெற வேண்டுமே -இசைவு பார்த்து வருவான்-

—————————————–

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன் இன் அருள் செய்யும் தலைவன்
மின்னார் முகில் சேர் திரு வேம்கடம் மேய
என்னானை என் அப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6

குற்றம் அவனது இல்லை–என் ஆனை -சதா தர்சநீயம் —என் அப்பன்-உபகாரன்–என் நெஞ்சில் உளானே –
கைம்மாறு இல்லா உதவி –நிலை இல்லா மனிசர் பதவி நீக்கி தன் ஆக்கி -சாம்யா பத்தி மோஷம் கொடுத்து –
எட்டு கல்யாண குணங்களில்  சாம்யம் அபகத பாப்மா- பாபம் அண்டாது விசார-மூப்பு இல்லாமல்  வி சோக-சோகம் இன்றி
விஜிக்த்சக-பசி இன்றி  அபி பாச -தாகம் இன்றி சத்ய காம சத்ய சங்கல்பம் –தன் இன் அருள் தன் ஆனந்தத்துக்கு –
செய்யும் தலைவன் -இன்னும் ஒன்றும் பண்ண வில்லையே என்று சொல்லிக் கொள்வான் –மின்னல் உடன் சேர்ந்து முகில்-
அவன் தான் வேம்கடேசன் -நாச்சியார் உடன் -சேர்ந்து –சீதள காள மேகம் –சிகராலய காள மேகம் அவன் தானே-

———————————————

மானேய்  மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆன் எழ விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே! திரு வேம்கட மா மலை மேய
கோனே! என் மனம் குடி கொண்டு இருந்தாயே 1-10-7-

தனியாக வரவில்லை- நப்பின்னை பிராட்டி உடன் சேர்ந்து வந்தான் –குடி கொண்டு இருந்தான் –பேரேன் என்று —
நப்பின்னை திறத்து -அவளுக்குகாக தன் திறத்து எதிர் வந்த ஏழு ரிஷபங்களை-அவள் கண் அழகு –
இவன் தோள் அழகு காட்டி அணைத்தான் அணி வரை -அழகும் பலிஷ்டமும்-அவளுக்கு அழகு ரிஷபம் அடக்க வரை தோள் —
இனியவன்-தேன் -திரு நறையூர் -நாச்சியார் கோவில் நப்பின்னை பிராட்டிக்கு –தாயாருக்கு தான் முதலில் கண்டு அருள பண்ணுவார்கள் அங்கு –
கோவை வாயாள் பொருட்டு-கோட்டு இடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே ஒரு கொம்புக்காகா ஏழு கொம்பில் குதித்தான் —
தேன் வர்த்திக்கும் இடம் திரு வேம்கடம் -கோனே அடிமை கொள்ள –அகம் படி வந்து புகுந்தான் அரவிந்த பாவையும் தானும்-

———————————————–

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேம்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே 1-10-8

மடப் பாவை வந்த பின் ஆயன் -வந்து புகுந்த பின் கைங்கர்யம் -ஆயன் திரு வேம்கடத்தில் இருக்கிறான் —
பிரகாசம் -மூங்கில் வெடித்து முத்து ஒளி விட /சேயன் பிரதி கூலருக்கு எட்டா கனி அணியன் –
அநு கூலருக்கு -மெய்யன் ஆகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் பொய்யன் ஆகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம் —
என சிந்தையுள் நின்ற மாயன்–துளி பக்தி இருப்பதால் வந்து குடி புகுந்தான் -மற்று அறியேனே –
தை தவிர வேறு ஓன்று தெரியாது -இதரநிரபேஷணன் ஆனவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கல் வந்து புகுர –
சாபேஷனான நான் அவனை விட்டு போவேனோ –அபாத சமஸ்த காமன் என்னை நோக்கி வர –
அவன் திருவடி வேண்டும் என்று கொண்ட நான் வேறு எங்கும் போகேன்-

———————————————-

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்!
நந்தாத கொழும் சுடரே! எங்கள் நம்பீ!
சிந்தா மணியே! திரு வேம்கடம் மேய
எந்தாய்! இனி யான் உன்னை என்றும் விடேனே 1-10-9

பர பக்தியை பிரார்த்திக்கிறார் -வந்தாய் ஸ்ரீ வைகுண்டம் விட்டு வந்தாய் — என் மனம் புகுந்தாய்
இத்தனை நாளும் தடுத்து இருந்தேன் மன்னி நின்றாய் -நான் இசைய வில்லை அதனால் வந்து –
இப் பொழுதும் விலக்காமை-அனுமதியே பற்றாசாக -கறவை வராதே சொல்ல வில்லை என்பதால் பின்  போனானே –
இசைவு பார்த்து மன்னி நின்றான் நந்தா கொழும் சுடர் இப் பொழுது தான் ஒளி மிகுந்து அடியாரை அடைந்த  ஆனந்தம் —
அவிகாராய -அன்பால் கிருபையால் -தளிர் புரியும் திரு வடி என் தலை மேலே -அடியார் ஸ்பர்சம் பட்டதால் ..
நம்பீ குண பூரணன் -கட்டாம்தரையில் பாட்டம் மழை பொழிந்த பூரணன் -சிந்தா மணி- சகல பல பிரதன் –
நினைக்காமல் -சிந்திக்காமல்- கொடுப்பவன் சிந்தா மணி -கீழே போட்டாலும் சிந்தினாலும் உடையாமல் —
மணி –ஞானம் வந்த பின்பு தான் வேண்டும் என்று ஆசைப் பட வைக்க வேண்டிய மணி உலகத்து மணி ஞானம் வந்ததும் வேண்டாம்
இனி -வந்த பின்பு நான் உன்னை விட மாட்டேன்-

—————————————-

வில்லார் மலி வேம்கட மா மலை மேய
மல்லார் திரள் தோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரள் தோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் அவர் வானவர் ஆகுவர் தாமே 1-10-10

நித்யர் பெரும் பலன் இங்கேயே பெறலாம் வானவர் பெற்ற கைங்கர்யம் பெறுவார்கள் —
வில் கொண்ட வேடர்கள் நிரம்பிய திரு வேம்கடம் -அஸ்தான பய சங்கை ஆதி சேஷன் அழல உமிழும் அது கேட்டு சாம கானம் கேட்டு –..
இங்கு யாரும் வரலாமே —மணி வண்ணன் அழகு /கல் போல் மிடுக்கு உள்ளவர் —
ஆஸ்ரிதர் ரட்ஷிக்க மல்லார் அவன் இவரோ அடியார் அவன் வேடர் மூவரையும் ரஷிக்க –

—————————————–

இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்க சரம் செல உய்த்தாய்!
விண்ணோர் தொழும் வேம்கட மா மலை மேய அண்ணா! அடியேன் இடரை களையாயே  1-10-1-

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக் கொடி புள் திரித்தாய்!
விலங்கல் குடுமித் திரு வேம்கடம் மேய அலங்கல் துலாபா முடியாய்! அருளாயே 1-10-2-

இவனே ஸ்ரீ ஆலிலை துயின்ற பாலகன்
நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு ஏராலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்!
சீரார் திரு வேம்கட மா மலை மேய ஆரா அமுதே!அடியேற்கு அருளாயே 1-10-3-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-

மானேய்  மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆன் எழ விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே! திரு வேம்கட மா மலை மேய கோனே! என் மனம் குடி கொண்டு இருந்தாயே 1-10-7-

வேம்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே 1-10-8-

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்-
குறளாய் நிலம் ஈர் அடியாலே விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-

இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திரு வேம்கட மா மலை மேய கோணா கணையாய்! குறிக் கொள் எனை நீயே–1-10-5-

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்- பெரிய திரு மொழி-1-9-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 2, 2011

அடங்கா நெடும் பிறவி என்கிற நஞ்சுக்கு நல்ல அமுதம் -அஞ்சுக்கு இலக்கியம்- ஐந்து லஷனம் பொருந்தி ஆரண சாரம்
வேத சாரம் பர சமயம் -துவேஷிக்கும் பஞ்சுக்கு அனலின் பொறி போல் இவை -பர காலன் பனுவல்களே —
விஷ செடி அடி அறுத்து கொடுக்கும் அமுதம் நெஞ்சில் உள் இருக்கும் அறிவின்மை போக்கும் தீபம் /
எங்கள் கதியே ராமா னுச முனியே –சங்கை கெடுத்து ஆண்ட தவராசா -அவன் தவப் பயனாக  வந்து அவதரித்து
ஸ்வாமி பொங்கி புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கும் மனம் நீ எனக்கு தா –
ஏய்ந்த பெரும் கீர்த்தி –செம் தமிழ் வேதம் தரிக்க –வளர்த்த தாய்  ஸ்வாமி தானே –
பிள்ளான் தொடக்கமாகி வியாக்யானம் அருள வைத்து வளர்த்தாரே

திரு வேம்கட யாத்ரை அர்சிராத்ரி மார்க்கம் அக்ரூரர் யாத்ரை பாரிப்பு வேண்டும் –
புண்டரீகர் கடல் நீரை இறைத்து தல சயன பெருமாள்-
பக்தன் முயற்சி பலன் கொடுக்க -அருமா கடல் அமுதன் ஜல சயனம் தர்ப சயனம் திரு புல்லாணி–
திரு வேம்கடம் பாரிப்புடன்  ஆழ்வார் நெஞ்சம் கூட்டி வர -சேவை கிட்டாமல்-நெஞ்சம் -நொந்து கை வாங்க –வருத்தம் -உடன் அடுத்த பதிகம்–
அழுது அலற்றுகிறார் – திரு இந்தளூரில் சேவை கிடைக்காமல்-அங்கே இவர் -வாழ்ந்தே போம்- உம் அடியாரோடும் ஒக்க நினைந்தீர் நும்மை தொழுதோம்  இம்மைக்கு இன்பம் பெற்றோம் – இதை விட சூதாடி இருக்கலாம்-
வியாக்யானம்–அடியேற்கு இறையும் இரங்காயே –ஆண் பாவனை உடன் ஊடினார் அங்கு —
நெஞ்சம் ஆழ்வாருக்கு உபதேசம் பண்ணுகிறது இங்கு –கருணை அவனுக்கு உண்டு –
-நாம் பண்ணின  தோஷம் சொல்லி கொண்டு -தாய் தந்தை –நோய் பட்டு ஒழிந்தேன் சொல்ல சொல்ல அழுகிறார் —
சீதை பிராட்டி –மம அபி ச  துஷ்கிருதம் கிஞ்சித்த -மகத்து அசதி– இரண்டு ஓன்று அம்மான் இருக்க  அம்மானை கேட்டது-சின்ன குற்றம் –
சிறை தண்டனை- /அடுத்து லஷ்மணன் -பாகவத அபசாரம் -பெரிய அபசாரம்-//

—————————–

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் நுன்னை காண்பதோர் ஆசையினால்
வேப் பூம் பொழில் சூழ் விரையார் திரு வேம்கடவா
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டு அருளே 1-9-1-

ஏவ காரம் தாயே –தாய் அல்லாதவளை தாய் என்று –கொண்ட பெண்டிர் -அண்டினவர் என்றே அவரை விட்டு–
அண்டி இருக்கிறவரை விட வேண்டும் –அவன் அடியார் என்று பண்ண வேண்டும் நமக்கு பந்தம் என்று இல்லை–
பணம் காசு குறையும் பொழுது -இவர்கள் -ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகர் இல்லையே —
கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அவன் தானே அவன் பிரதி நிதி என்று கொள்ளலாம் —
பணம் கொடுத்து கொண்ட பெண்டிர் /
எல்லா உறவுமாக கொண்ட பெண்டிர் /இவளையே அனைத்து உறவாக கொள்கிறான்–
நண்ணாதார்  முறுவலிப்ப-நல் உற்றார் கரைந்து ஏங்க–இரண்டும் வேண்டாம்–
இது என்ன உலகு இயற்க்கை காரணம் பற்றி வரும் சம்பந்தம் வேண்டாம் —

லஷ்மணன் சுமந்த்ரன் இடம் -ராமனே எல்லாம் என்று இருந்தானே -கேட்டு தசரதன் மகிழ்ந்தான் —
சுமத்ரையும் அவன் இடம் சீதையே தாயார் என்று நினை ராமனே தந்தை –
சேலேய் கண்ணீரும் நல் மக்கள் -எல்லாம் அவனே-ஆழ்வார்  மாதா பிதா -ஆழ்வாரே ஆளவந்தார் —
நோயே பட்டு ஒழிந்தேன்–சம்சாரத்தில் இழிந்து –சம்சாரம் தீயது  அறிய -பிரத்யட்ஷம் ஈஸ்வரனை அறிய வேதம் வேண்டும் —
நோய் தெரிந்தால் அவன் இடம் ஆசை பிறக்கும் –வேய் ஏய்ந்த பூம் பொழில்கள் –நறு மணம்-இவை
சர்வ கந்தன் இருப்பதைக் காட்டிக் கொடுக்க அதனால் உள்ளே வந்தேன் -இவை இழுக்க  ஆசை உடன் வந்தேன் —
திரு வேம்கடவா -இதுவே ஸ்வரூப நிரூபக  தர்மமாக கொண்ட திரு நாமம் –
ஆழ்வாருக்கு பக்தி வளர்க்க இவர் இடம் அடிமை தனம் வளர்த்தான் —
நாயேன் வந்து –வெளியில் போக கல்லை விட்டு உள்ளே வந்தால் சொந்த காரனே தொட்டால் குளிக்கிறான்
ராஜ குமாரன் வேட்டை நாய் இடம் ஆசை கொள்வது போல –
ஆள் கொள்ள வேண்டும் -சகல கைங்கர்யம் கொள்ள வேண்டும் அஹம் சர்வம் கரிஷ்யாமி –

———————————————

மானே கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானா வித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனே  பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட கொண்டு அருளே 1-9-2-

போகம் வைக்க கூடாத பொருளில் போகம் வைத்தேன் –என் யானை என்கிறார்- தர்சநீயம்–
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை–
உள்ளே நஞ்சு மனம்– வெளியில் மான் போன்ற கண்கள் வஞ்சனை பேச்சில் மயங்கி —
செம் தாமரை கண்ணன் மயங்காமல் –நானே நானாவித நகரம் புகும் பாவம் செய்தேன் 32 வித நரகம் விஷ்ணு புராணம் உண்டு ..
பெரிய குற்றங்களை காணாக் கண் கொண்டு இருக்குமாம் யானை-

——————————————–

கொன்றேன் பல் உயிரை குறி கொள் ஓன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்து அறியேன்
குன்றே மேக மதிர் குளிர் மா மலை வேம்கடவா
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-3

உன் திரு உள்ளம் பிடிக்காத எல்லாம் பண்ணி இருக்கிறேன் —தப்பு பண்ணி அன்றே வந்து அடைந்தேன் —
மடி தடவாத சோறு- சுருள் நாறாத பூ -தூ மலர் தூவி தொழுது –நானோ கொன்று சொத்து பறித்தேன் —
பல் உயிரை-அனுதாபம் பிராய சித்தம் இன்றி கொன்றேன் -குறி கொள் ஒன்றும் இல்லை  —
தேக ஆத்மா விவேகம் இன்றி நீ ஸ்வாமி என்று அறியாமல் —
அவள் உடன் கூடி களித்த பின்பும் இரந்தார்க்கு இனிதாக உரைக்க கூட இல்லை–
கொடுக்காமலும் –இனிதாக பேசாமலும் -சுடு சொல் உடன் குடித்தனம் -உரைகிலேன் இல்லை உரைத்து அறியேன்-
இனிதாக பேசுவதே தெரியாமல் இருந்தேன் –நேர் எதிர் தட்டாக குன்றின் மேல் மேகம் இருந்து பொழிந்து
இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே என்று அதிர்கிறதாம் இங்கு –மேகமே இப்படி- அன்றே வந்து அடைந்தேன் –
கொன்ற ரத்த கரை உடன் வந்திருக்கிறேன் –சரண் அடைந்தேன் -குற்றம் பார்க்காமல் கொண்டு அருள வேண்டும்-

——————————–

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்தும் இலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திரு வேம்கடவா
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-4

குலம் தாம் எத்தனை -உன்னை  விட அதிகம் ஜன்மம் – நீ அவதாரம் என் பிறவி வெட்ட — நான் மேல் மேல் பிறவி சேர்க்க –
பிறவி தான் எத்தனை இல்லை குலம் தான் எத்தனை எல்லா தாழ்ந்த குலங்களிலும் பிறந்தே இறந்தே –இறந்தே பிறந்தேன் —
எய்த்து ஒழிந்தேன் -தளர்ந்து –இன்னும் பிறவி எடுக்க சக்தி இல்லை –நலம் ஒன்றும் இல்லை கர்மம் நிறைய உள்ளன
நலம் தான் ஒன்றும் இல்லை .நல்ல தோர் அறம் செய்தும் இலன் —
நிலம் தாய் -மேகம் நிறைய கணம் தாங்காமல் கீழே தோய்ந்தனவாம்–
இனி ஜன்மம் தோறும் திரிந்து அலந்து போனேன் ரஷித்து அருள்வாய்-

———————————————

எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிளேன்
செப்பார் திண் வரை சூழ் திரு வேம்கட மா மலை என்
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-5

அக்ருத்ய கரணம் கிர்த்ய அகர்ணம் –பகவத அபசாரம் –பாகவத அபசாரம் –தேக ஆத்மா விவாகம் இன்றி –
முக் குறும்பு அறுத்தவர் கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வைஷ்ணவன் ஒருவன் நெற்றி திரு மண் காப்பு கோணல் என்று நினைத்து இருப்பேன்
கண் போனது என்றாராம் -அசக்ய அபசாரம் என்னது தெரியாமலே பண்ணுவது –நானாவித அபசாரங்கள்-
அதி பாதகம்-கொடுமையான –மகா பாதகம் -அநு பாதகம்  உப பாதகம்  — பஞ்ச மகா பாதகம் —

மானச பாதகம் நிஷ்ட சிந்தனம் -பலவும் இவையே செய்து -பலன் அறிந்து பயந்தேன் –சக்தி படைத்தவனே –துப்பா –
அலை கடல் கடைந்த துப்பனே –உன் அடிகளை தொடர்ந்து ஏத்தவும் இல்லை அப்பா -சகல வித பந்து —
என் ரஷகதுக்கு ரட்ஷகம் உள்ளது -மதிள்கள் உண்டு –நின் அடி அடைந்தேன்

————————————————-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமும்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திரு வேம்கடவா
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-6

சரீரம் இருப்பதால் தானே பாபம் பண்ணினீர் –ஆத்மா சரீரம் என்று நினைத்து –மண் நீர் -பஞ்ச பூதம் -ஆக்கை -புண்ணார் ஆக்கை–
அன்னம் கொடுப்பது புண்ணுக்கு சந்தனம் பூசுவது போல ஸ்நானம் சேவை பண்ணி வஸ்த்ரம் சாத்துவது புண்ணுக்கு பட்டம் சூட்டுவது போல –
ஊனேறு செல்வத்து உடன் பிறவி –புறம் சுவர் ஓட்டை மாடம் –புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் –இன் நின்ற நீர்மை இனி யாம் உறாமை —
யாதாத்மா ஞானம் -யஷ பிரச்னம்-தர்ம புத்திரன் -ஆஸ்ர்யம் ஒன்பது துவாரம் இருந்தாலும் ஆத்மா உள்ளே இருப்பது தான்–
இப்படி போனவர்களை தூக்கி  கொண்டு போய் என்றும்  வாழலாம் -மின் நின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் —
வானம் வரை உயர்ந்த மலைகள்- நித்யரை கூப்பிடும் -அந்த கைங்கர்யம் கொடுக்க வேண்டும் –அண்ணா வந்து அடைந்தேன்-

————————————————

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்தும் விட்டேன்
பெரியேன் ஆயின பின் பிறக்கே உழைத்து ஏழை யானேன்
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேம்கடவா
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே  1-9-7–

தேகம் கொடுத்ததே தர்ம சாதனம் பண்ண தான் அவனை நினைந்து கைங்கர்யம் பண்ண தானே –நான் இவை ஒன்றும் பண்ணவில்லை–
போது எலாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் –பாலகனாய் தெரியாமல் –கொஞ்சம் ஞானம் வந்ததும் பல பாவம் /
பெரியேன் ஆனா பின் மற்றவர்க்கு உழைத்து -மானே நோக்கு பிறர் பெண்கள் இடம் -பிரகலாதன் துருவன் லஷ்மணன் நம் ஆழ்வார் போல
முளைக்கும் பொழுதே திரு துழாய் அங்குளிக்கும்–பால பக்த துருவ லஷ்மண சம்பத் –தொட்டிலிலே அழுது காண்பித்தானே–
கரி- யானை சேரும் -அரியே -பாபம் போக்குபவன் -ஆள் கொண்டு அருளே பிறர்க்கு உழைக்காமல் உனக்கே ஆக்கி கொள்ள வேண்டும்–
வந்து உனது அடி அடைந்தேன் -என்றீரே –ஆக்குவதற்கு உன் பிரயத்தனம் தான் –புத்திரன் பாக்கள் பித்ரு ஹ்ருதயம் கிடைக்குமா போலே –
உள்ளே கிடந்தது சத்தையே நோக்கி –தான் ஏற நாள் பார்த்து இருந்து-

——————————————————

நோற்றேன் பல பிறவி  நுன்னை  காண்பதோர் ஆசை யினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல்  தேன்  பாந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேம்கடவா
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-8-

பல பிறவி நோற்றேன் -பல பிறவி உண்டாகும் படி தான் நோற்றேன் –உன்னை காண்பதோர்  ஆசையால் —
நீ நல்லது தலையில் -நன்மை என்னும் பெயர் இடலாம் படியான தீமை தேடி –அடியார் ஒதுங்க நிழல் கொடுத்தாய்
பேரை சொன்னாய் ஊரை சொன்னாய் –மடி மாங்காய் இட்டு –பிராசங்கிதம்–உன் கடாஷம் பெற்று பிறப்பே இடர் உற்றேன் –
இந்த பிறப்பிலே ஜன்மம் த்யாஜ்யம் புரிந்து கொண்டேன் –எம்பெருமான்–தேன் பாய்ந்து ஒழுகும் -அதனால் வளரும் சோலை–
ஆற்றாமை தாங்க முடியாமல் வந்து அடைந்தேன்  உன் எதிர் பார்ப்பு ஆற்றாமை என் எதிர் பார்ப்பு கைங்கர்யம்-

——————————————————

பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல  சுனை வேம்கடவா
அற்றேன்  வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே 1-9-9-

நீ பண்ணிய நல்லதால் வந்ததை கொண்டு உன் திருவடி வந்து அடைந்தேன் -பிராட்டி முன்பாக சரணா கதி அடைகிறார்
மாதவன் திரு நாமம் சொல்லி –கல் தேன் குகையில் சேர்த்து வைத்த தேன் –உன் திரு வடிகளுக்கே ஆற்றேன்–
பற்றேன் ஒன்றும் இலேன் -பவம் செய்து பாவி ஆனேன் –ஜீவாத்மாவுக்கு அடையாளம் இவருக்கு பாபம்–
பாவமே செய்து புண்யம் ஆனவன் -சிசு பாலன் கண்ணன் பொய்யன் கண்ணன் திருடன் சொல்லியே மோஷம் பெற்றான் –
அது நடக்கும் என்று தெரிந்ததால் அதை கூட பண்ண வில்லை- அபராத ஆலயம்–எங்கள் மாதவனே பெரிய பிராட்டியார் ஸ்வாமி–

————————————————-

கண்ணாய்  ஏழு உலகுக்கு உயிராய  எம்  கார்  வண்ணனை
விண்ணோர்  தாம்  பரவும்  பொழில் வேம்கட  வேதியனை
திண்ணார்  மாடங்கள்  சூழ் திரு  மங்கையர்  கோன்  கலியன்
பண்ணார்  பாடல்  பத்தும்  பயில்வார்க்கு  இல்லை  பாவங்களே 1-9-10–

பத்து பாசுரம் பாடுவாருக்கு பாபம் இல்லை கண்ணாவான் மண்ணோர்க்கும் வின்னோர்க்கும்  நம் கண்ணன் அல்லது மற்ற கண் இல்லை
ரக்ஷகன் காள மேகம் போல் -வேம்கடாத்ரி சிகராலய காள மேகம் திரு வேம்கட வேதியன் ரிக் வேதம் சொலும் -மிடுக்கன் கலியன் –
விபீஷண ஆழ்வான் பெற்றது நால்வருக்கும் பெற்றது போல ஆழ்வார் பெற்றது நாம் அனைவருக்கும் கிட்டும்
பரதனுக்கு வருவான் ராமன் என்று அயோதியை மக்கள் இருந்தது போல ..
பார்வை யாக உயிர் ஆக இருக்கிறான்– காள மேகம் போல் இருக்கிறான்– வேதம் சொல்ல பட்ட பெருமை கொண்டவன்

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திரு மங்கை ஆழ்வார்- பெரிய திரு மொழி1-8-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 2, 2011

கொங்கு அலர்ந்த மலர் குருந்தம்  ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன்
பொங்கு புள்ளினை  வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர்  
செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடம் அடை நெஞ்சமே !–1-8-1

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! –1-8-2

கலி யுகம்- சேவை சாதிக்க கேட்க்க வில்லை இயற்க்கை நிறம் வெள்ளியான்  கரியான் மணி நிற வண்ணன்-
நாள் தோறும் தெள்ளியார் வணங்கும் மட நெஞ்சமே -படுத்து – திரு பாற்கடல்/நின்றது -திரு வேம்கடம்

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணை தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிதா நிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே !–1-8-3

குன்றம் எடுத்தவன்–நிற்கிறது மலை-கையில் கோவர்த்தன மலை- இரண்டும் ரஷிக்கும் —
ஓன்று ஆதார மலை- தாங்கிய மலை அது தாங்கும் மலை- ஆதேயம்-கோவர்த்தனம்–
முயற்சிகள்  தவறலாம் முயற்சிக்க தவற கூடாது —
இரண்டு மரம் – இரண்டில் நடுவே போன முதல்வாவோ–மா மருது இற்று வீழ- நின்ற அடை மொழி -அசுர ஆவேசத்துடன் நின்ற –
பெரிய -மா- உடையும் பொழுது கண்ணன் மேல் விழ கூடாதே- நினைத்து மா மருது என்கிறார்–
தானும் கண்ணனும் சேர்ந்து நிற்க -முதலில் நடந்தது -இதில் நடந்தது -தோஷம் இன்றி -முறிந்து விழ எண்ணம் இன்றி —
எல்லாம் அவன் சொத்து தானே–கல்மஷம் இன்றி–விட்டில் பூச்சிகள் விளக்கில் தாமே விழுந்து சாக —
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி  விளக்கு –
தசரதன் பெற்ற மணி தடம்-கழுத்தில் கல்லை கட்டி கொண்டு விழுந்தார்கள் அங்கு —
நேமியான்-கருது இடம் பொருத்தும் கை நின்ற சக்கரத்தான்-இவன் போக வேண்டுமா —
என்றும் கை தொழும்- தனியன் இல்லை இவன்–இணை தாமரை அடி-உபாயம் உபேயம்-பிராப்யம் பிராபகம்-
அடைவிக்கும் வழியும் அடைந்து அனுபவிக்கவும் இதுவே —
ஆத்தி கீரை கொண்டு பசு மாட்டை அழைத்து அதையே கொடுப்பது போல–ஆறும் பேரும் இதுவே —
எம்பிரான்-தனக்கு உதவினான்-புக்க பேரும் சோற்றை-அன்ன கூட உத்சவம்-பெரிய திரு பாவாடை உத்சவம்–

கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை- சொன்ன உடன் செய்தார்கள்–கடிது சென்று குன்றம் எடுத்தான்–
முதல் துளி படும் முன்-கேட்க்காமல் –கீழே நின்மலன்-பார்த்தோம்–இங்கு அவர்கள் கேட்க்கும் முன் தானே ரஷித்தான்

————————————–

பார்த்தற்க்காய் அன்று பாரதம்  கை செய் திட்டு வென்ற பரம் சுடர்
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இட எந்தை மேவிய எம்பிரான்
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! 1-8-4

அதி ரதர்களையும் வென்றான்–தீர்த்த நீர் தடம்–புனித பாவன அடைவிக்கும்–கை செய்திட்டு–தேர் ஒட்டி சைன்யம் அணி வகுத்தது –
வென்ற பரம் சுடர்-வெல்வித்தான் இல்லை–அர்ஜுனனை -சண்டை போட வைத்தானே– இவற்றை நினைக்க நினைக்க பரம் சுடர்-
துயர் அறு சுடர் அடி–நம் துயர் அறுக்கும் தானும் அரும்–விலகின சொத்து கிட்டியதால் வந்த இன்பம்–
அது போல வென்ற பர சுடர்–கிருத க்ருத்யன் வி ஜுரக ஸ்ரீ -ராமன்- திரு புல்லாணியில் பட்டாபிஷேகம் பண்ணி –
தம்பிகள் எல்லோரும் அரசு வேண்டாம்-சொல்ல -நின்னொடும்  எழுவர் ஆனோம் சொல்லி விட்டானே–
சேராத சேர்த்து- பரமாத்மாவும் ஜீவாத்மாவும்- குரவை கோத்ததும்–பிரதான்யம் இருவருக்கும்-என் கோவலன்–வைதிக காமம்–
ஏத்துவார் தம் மனத்து உள்ளான்–இட எந்தை மேவிய- நித்ய கல்யாண பெருமாள்–அரச்சை களை  சேர்த்தே அருளுவார் இவர்–

—————————————

வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! 1-8-5

ஆச்ரயிருக்கு இரந்தும்–என் கையான்- திரு அஷ்ட  புய கரத்தான் நினைவில்- இமையத்து உள்ளான்-
திரு பரிதி– திரு மால் இரும் சோலை–மூன்றையும் சேர்த்து இதில் திரு வேம்கடம் –அருளுக்கு இலக்கு ஆகினான் மா பலியை–
வண்மை இருந்ததால்–நிலம் மாவலி மூவடி–பருத்தி பட்ட 12 பாடு இவன் இடம் பட்டது மண் அதை போய் –
கொட்டை வாங்கி பண்ணி கோது விலக்கி சுருட்டி நூலாக்கி ௪ /பாவோடி-நெய்து -மடித்து விற்று -தோய்த்து உலர்த்தி உடுத்தி கிழித்து -12 பாடு—
சேர்ந்து கொண்டு பிரளயம் -விபக்தம் ஆக்கி- பிரித்து -பஞ்சி கிருதம் ஆக்கி -கலந்து -அண்டம் ஆக்கி -14 லோகம் -தேவாதி சரீரங்கள் ஆக்கி —
லோக விவஸ்திதி உண்டாக்கி –அவாந்தர ஸ்ருஷ்ட்டி பண்ணி- மூன்று லோகம் -ரஷித்து-ப்ரமாதிகளை ஆக்கி வருணன்  வாயு-
உண்டாக்கி-பிரளயத்தில் எயற்றில்  வைத்து வயிற்றில் வைத்து ரஷித்து உமிழ்ந்து சம்ஸ்க்ருதம் ஆக்கி —
இதை போய் இரந்து பெற்றானே –மரா மரம் ஏழும் எய்து–
துந்துபி சரீரம் முதலில் தூக்கி எறிந்த பின்பு-அடியவர்க்கு நம்பிக்கை ஊட்ட எல்லாம் பண்ணுவான் —
திண் கைமா துயர் தீர்த்தவன்–அதையும் ரஷித்தானே –கைமா துன்பம் கடிந்த பிரான்–நாம் ஜன்மங்கள் பல —
திரு மலை அப்பன்– பிற் பட்டாரை  ரஷிக்க காத்து இருக்கிறான்
அரை குலைய தலை குலைய வந்தானே –கருடனையும் தொக்கி கொண்டு –காரணத்வம் காட்டி கொள்ள —
வினதை பிள்ளை -கண்ணாடி போல வேதாத்மா –வந்த வேகத்துக்கு பல்லாண்டு- பட்டர்–திரு ஆபரணங்கள் மாற –
காலம் தாழ்த்த வந்தோமே வருந்தினானே -நாமும் ஜன்மம் பல -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –
கஜேந்த்ரனுக்கு 1000 தெரிந்தது –திரு வேம்கடம் நோக்க நடக்க சொல்கிறார்..

———————————————-

எண் திசைகளும் எழ உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இல்லை பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள எயற்றோடு
திண் திறல் அரியாயவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே  ! 1-8-6

அடுத்து உண்டு உமிழ்ந்த கதையும்  / நரசிம்கன் சரித்ரம் சொல்கிறார்  –சொன்ன நிமிஷமே தோன்றினவன்-
சித்தமாக காத்து இருந்தான்– இரந்ததை உண்ட சமர்த்தன் -வாமனனாய் இரந்தான் –
மண்ணையும் உண்டான் எழ உலகும் பிள்ளை வாயில் கண்டாள்–பொன் வயிறு- மண் போகிறதே ஆதாங்கம் —
ஆனந்தம் வல்லி -மானுஷ்ய -வேலை செயும் சக்தன் -அசன சீலத்வம் சாப்பிட்டதை ஜீரணிக்கும் சக்தி –கொண்டவன் –
ஆல் இலையில் பள்ளி கொண்டவன் -தாமரை டால் தாமரை எடுத்து தாமரையில் போட்டு கொண்டான் கையால் காலை வாயில்-
களத்து  மேடில் ஒரே அளவு கொண்டு —அளந்த திரு வடி கொண்ட அதே திரு வடி கொண்டு பார்த்தானாம் —
சந்தரன் சாபம் தீர்த்த-சூர்ய புஷ்கரணி கருடன் சந்நிதி பக்கம்–பிறை யின் துயர் தீர்த்தவன்–மதிக்கு இடர் தீர்த்தவன்-
பின்னை மரம்-உயர்ந்த -திருவாய் மொழி கேட்ட  உயர்த்தி பட்டர் -உரத்து உகிர் வைத்தவன்–
திறல் அவுணனுக்கும் அரியாய் இவருக்கும் பரியனாகி வந்த அவுணன் -வரத்தினில் சிரத்தை வைத்த –பிள்ளையை சீறி வெகுண்டு–
நாராயண -திரு மந்த்ரம் சொன்னதால் ரஷித்தான்- செய்தி சொல்கிறார் நமக்கும் ஆழ்வார் —
அரி-சிங்கம்-பாபம் போக்கும் -திரு வேம்கடத்தான் தீர்ப்பான் —

————————————————

பாரும் நீர் எரி காற்றினோடு  ஆகாசமும் இவை யாயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம்
காரும் வார் பனி நீள் விசும்பு இடை சோறு மா முகில் தோய் தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு வேம்கடம் அடை நெஞ்சமே !1-8-7

பிறந்ததையே அருளினார் இது வரை அவன் பிறப்பிலி அஜகன் -பகுதா விஜாய–  
நம்   போல் பிறக்க வில்லை கர்மத்தால் பிறக்க  வில்லை –தாய் தந்தை தேர்ந்து எடுத்து கொள்கிறான் –

——————————————-

அம்பரம் அனல் கால் நிலம் சலமாகி நின்ற அமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின அன்ன  இடை மட குற மாதர் நீளி தணம் தொறும்
செம்புனம் அவை காவல் கொள் திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! 1-8-8-

——————————-

பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய் திகழும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே ! 1-8-9-

இன் திரு நாமம் எட்டு எழுத்தும் பேசுமின் -பேசுமின்-தாய் அழைக்க யாருக்கும் யோகத்தை உண்டே –பொதுவாக சொன்னார்–
தாயே போல் திரு வேம்கடவா என்று அழைக்கிறார் — சொல்லி நின்று பின்னரும்  பேசுவார் தம்மை–
இனிமையால் திரும்ப சொல்ல வைக்கும் திரு நாமம் –உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் வசிக்கும் இடம் —
திரு வேம்கடம் தேசமாய்- திகழும் -திலகமாய் இருக்கும் –அடை நெஞ்சமே-மட நஞ்சமே — –
ஆக்கை புகாமை உய்ய கொள்வான் –ஜனனம் இன்றி -புனர் அபி ஜனனம் புனர் அபி மரணம்  பஜ கோவிந்தம்

——————————————–

செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலி கன்றி வண் தமிழ் செம்  சொல் மாலைகள்
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சம் அதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வான் உலகு ஆள்வரே 1-8-10

பல சுருதி -ஐயம் இன்றி தரித்து உரைத்து -தாரணம்- நெஞ்சில் இருத்தி -வையம் காவலர் ஆகி வான் உலகம் ஆள்வரே ..
செம் கயல் -திளைகின்றவாம்- குதித்து ஆட —இளமை யான மீன்–நித்யர் போல –அமிர்தம் உண்டு களித்து ஆனந்தம் அடைந்து –
இந்த அமிர்தம்  கைங்கர்யம் குறை அற கிடக்க பெரும் -தேவர் அமிர்தம் போல இல்லை–ரோகம் இன்றி இளமையாக இருப்பார்கள்–
தசரதன் ராமனை வா போ வந்து  ஒரு கால் கண்டு போ சொல்லி இளமை திரும்பி இருந்தது  அஹம் -புனர் தேவ குமாரர் ரூபம் என்றானே —
கரியான் ஒரு காளை புகுந்து –அது போல இங்கும் மீன்களும் திரு வேம்கடம் அனுபவித்து இளமையாக இருக்கின்றனவாம் —
செல்வன்-ஸ்ரியபதி ..மங்கை நாட்டுக்கு தலைவன் –மங்கை மார்களுக்கு தலைவன் அர்ச்சை திரு மேனி அழகன் –
கலி கன்றி -கலி முடிக்கும் –சங்கை இன்றி பாடினால் நிச்சயமாக பலன் கிட்டும் –இங்கும் அங்கும் செல்வம் பெறுவோம் —
திரு வேம்கடம் அடை நெஞ்சே -கிளப்பினார் நெஞ்சை–

—————————————

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
புள்ளினை  வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடம் அடை நெஞ்சமே–1-8-1
பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்
என்று எண்ணி நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே –1-8-2-
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணை தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே-1-8-3-

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-

இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5

இவனே ஸ்ரீ ஆலிலை பாலகன்
எண் திசைகளும் எழ உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆல் இல்லை பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள எயற்றோடு திண் திறல் அரியாயவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே -1-8-6

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 20, 2011

திரு பாண் ஆழ்வார் கார்த்திகை ரோகிணி-லோக சாரங்க முனிவர்– நம் பாடுவான் போல்- –

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட் படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேம்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திரு
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–1-

விண்ணவர் கோன்-பரத்வம்-சொல்லி -விரையார் பொழில் வேம்கடவன்-எளிமை– மேன்மை சொல்லித்தான் எளிமை சொல்வார்கள்–
அரங்கனை பாட வந்தவர்– பிள்ளை திரு நறையூர் அரையர் -பட்டார் ஐதீகம்- பரம பதம் வாடா மாத்திரை -திரு ஆய் பாடி -வரத்து சொல்கிறார்-
பரத்வம்- திரு மலை- திரு அரங்கம்- வடக்கு வாசல் வழியாய் வந்தான்-அர்ச்சை அவதாரத்துக்கு பொன் கால் இட்ட இடம் –

கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும்–திரு வேம்கடம்- அர்ச்சை பொன் கால் இட்ட இடம் -ஸ்வாமி நிர்வாகம் —
அரங்கன் அனுபவம் ஆழ்ந்து போனார் -பிடிக்க தெப்ப கட்டை-பார்த்து திரு வேம்கடம் பாட– இது முலம் கால் அங்கு கழுத்து அளவு–
அந்தர்யாமி போய் இருக்க வேண்டும் -தவிக்கிறார் –நறுமணம் மிக்க–

சர்வ கந்தன்- தேசம் எல்லாம் பரவ-விரையார் பொழில்–ஈர்க்க போனவரை -சௌலப்ய  காஷ்ட்டை —
16 காஷ்ட்டையும் உண்டு இந்த பாசுரத்தில் -பாட்டினால் கண்டு வாழும் பாணர்–அந்தமில் பேர் இன்பம் கொடுக்கும் மேன்மை-
வானவர் காடும் நீசனான நமக்கும் அந்த இன்பம் கொடுகிறானே –திரு கமலா பாத கமலம் ஆடை உந்தி–கண்கள் மேனி–
கண்டதால் வாழ்ந்தார்–காட்ட கண்டார்–அவன் காட்ட இவர் கண்டார்–கண்ட பாதம்- கண்ட கால் என்று நாம் போல்வார் -வகுத்த சேஷி எம்பெருமான்

மந்தி பாய் வட வேம்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்த தோர் எழில்
உந்தி மேல் அதன்றோ அடியேன் உள்ளத்தின் இன் உயிரே–3–

ஆடை இழுக்க அடுத்து உந்தி இழுந்தது –தாவினத்தை மந்தி பாய் வட வேங்கட மா மலை –மந்தி -தன்னையே–
அவயவம் தோறும் தாவி- நம்மையும் பல பலன்களை கேட்டு அவன் இடம் போவதால்–திரு மலை- வட வேம்கடம்-
தமிழ் தேச வட எல்லை–அகஸ்தியரால் வாழ்வு பெற்றது–தமிழ் ஆழ்வார் களுக்கு தொண்டு–அடியாரின்புற-
பெரும் தமிழன் அல்லேன் பெரிது–மா -அனுபவத்தில் மிக்கு பெரிய -ரட்ஷகனுக்கும் ரட்ஷிக்க பட வேண்டியவனுக்கும்
மா -நித்யர்களும் வந்து அனுபவிக்க மா மலை–உபய விபூதியும் மலையில் மூலையில் அடைக்க —
உபய விபூதிமானை அடக்கி கொண்டதால்–சந்தி செய்ய -பரத்வம் அனுபவிக்கும்- -நித்யர்-வந்து சௌலப்யம் காட்டுபவனை அனுபவிக்க —
கைங்கர்யம் பண்ண நின்றான்- ராம அவதாரத்தில் நின்றான்-தேவர்கள் தானே வானரங்கள்- பழைய நினைவால்
குரங்குகளுக்கும் தேவர்களுக்கும் -வாசி இன்றி -அவன் திரு உள்ளத்தில் வாசி இல்லை–நின்று இருந்து கிடந்தது–
திவ்ய தேசம் போல வாலி கொன்று ராவணனை கொன்று நின்றான் கிஷ்கிந்தை இருந்து சமுத்ரத்தில் கிடந்தது //
சீதை பிராட்டி ஆபரணம் தீண்டி வானரங்களால் பேரு பெற்றார்கள்–நித்ய அனபாயினி —
வானவர்களை பார்க்காமல் குரங்குகளை மட்டுமே -குருடர் தண்ணீர் பந்தலுக்கு கண் தெரிந்தவன் வந்தால்- -//
நிற்கிறான்-கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான்–உத்தியோகத்துக்கு நின்றான்-
மேல் ஏதோ செய்ய போகிறான்–கிளம்பி கிடக்க அரங்கத்து அரவின் அணையான்–

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 20, 2011

 திரு ஆடிப் பூரம்– -எமக்காக அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் –திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே –
14 பாசுரங்கள்-திரு வேம்கடம் உடையானுக்கு அருளி இருக்கிறாள் –
திரு துழாய் -புஷ்ப கைங்கர்யம்-கேசவ பிரிய=துளசி –மாநிடவர்க்கு  என்று பேசு படில் வாழ கில்லேன்-
கண்ணனுக்கே ஆம் அது காமம்–மல்லி நாடு ஆண்ட மட மயில்–
மெல் இயலாள் வேயர் பயந்த விளக்கு ஆயர் குல விளக்கு அடைந்தாள்–
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழ –பிராட்டி திருவடி காட்டி- திரு இட எந்தை –
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே–செல்வன் சொல்லுக்கு அஞ்சான்  -ஈன சொல் ஆயினும் ஆக –
யேனதுருவாய் இடந்த பிரான் –திரு பாவை- ராம கிருஷ்ண  திரு விக்ரமன் -விபவம் உண்டு-திவ்ய தேசம் இல்லை-
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் படி–கிள்ளி களைந்தான்–நரசிம்கன் என்று -ரசிகர் சொல்வார்கள்–

கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் !
தெண்ணீர் பாய் வேம்கடத்து என் திரு மலும் போந்தானே ?
கண்ணீர்கள் முலை குவட்டில் துளி சோர சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே 8-1

மா முத்த நிதி சொரியும் மாமுகில்காள்! வேம்கடத்து
சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே !
காமத் தீ உள் புகுந்து கதுவ பட்டு இடை கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்கை நான் இருப்பேனே–8-2

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை  எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடு அழிய போயின வால்
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் ! வேம்கடத்து
தன்னாக திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னாகத்து இளம் கொங்கை விரும்பித் தாம் நாள் தோறும்
பொன்னாகம் புல்குதற்க்கு என் புரிவுடைமை செப்புமினே–8-4

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்கள் வேம்கடத்து
தேன் கொண்ட மலர் சிதற திரண்டு ஏறி பொழி வீர்காள் !
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே -8-5

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில் காள் மாவலியை
நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள்
உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய  புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள்! வேம்கடத்து
செம் கண் மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மெல் கும்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்று உரையீரே –8-7

கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள்! வேம்கடத்து
போர் காலத்து எழுந்து அருளி பொருத வனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே–8-8

கொடியையே மாலையாக கட்டினாரே-மாலுக்கு -நாயகன்-அழகிய மணவாளன்-
ஒரு மகள் தன்னை உடையேன் திரு மகள் போல் வளர்த்தேன் செம் கண் மால் கொண்டு போனார் —
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே –கேசவ நம்பியை கால் பிடிக்க  -கற்பக கோடி-குல நந்தன –
எனக்கே தன்னை தந்த கற்பகம் -அவாக்யன்  அநாதரன்-ஒரு வார்த்தை கேளுன்கொள் மேகங்காள்—
தரிக்க போதும் ஒரு வார்த்தை–அனுபவிக்க நிறைய வேண்டும்–
மற்று எக்காலத்திலும் யாது   ஒன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும் அக்கார கனி —
என் உள் மன்னில்- -திரு மாலை ஆண்டான்-ஒரு தடவை வந்தால் ஆழ்வார் நிர்பந்திக்க மாட்டார்- -எம்பெருமானார் நிர்வாகம்–
எக்காலத்து எந்தையாய் என் உள் மன்னில் எக் காலத்திலும் -மற்று யாது ஒன்றும் -கூடினத்தை தவிர -வேண்டேன்-
ஒரு நாள் அவன் பட்ட பாடுக்கு -சீதை பிரிந்து -இன்று இவள் படுகிறாள்- கார் காலம்- சீரிய சிங்கம்–போர் காலம்-தோலாத தனி வீரன்-
ராமனை நினைந்தே அருளுகிறாள்–பேர் சொல்லி-நாம சங்கீர்த்தனம் சொல்லி -தரிக்க வழி தெரிந்து -சொல்லி இன்னும் தூண்டி விட –
ரட்ஷிக்காமல் பெயரை கெடுத்து கொண்டானே -இதுவே நீர் காலத்து எருக்கு இலை-தளர்ந்து ஒட்டி கொண்டு இருக்குமா போல–
விரக தாபம்-சருகாய் உலர்ந்து நாம சங்கீர்த்தனம் முதல் மழை–

மத யானை போல் எழுந்த மா முகில்காள்! வேம்கடத்தை
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே!
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9

 9 பாசுரம்-உயிர் ஆன பாசுரம்- யானை போன்ற மேகங்கள்–வேம்கடத்தான் ஆனந்தம்-
முக்தர் அங்கு பெரும் ஆனந்தம் இங்கு கிடைக்கும்–அசேதனம் -பெற்று போகுமாம் இங்கு–
அஹம் அன்னம் அஹம் அன்னம் –பத்தி-கதியாக -இருப்பிடம்–பிரம  உத்சவம் சேவித்து கிளம்பாமல் அங்கே இருப்பது போல–
மாசி வைகாசி ஆழ்வார்க்கு –பங்குனி சித்தரை பொலிந்து நின்ற பிரானுக்கு/
ஸ்ரீ ரெங்கத்தில் மாசி பங்குனி சித்தரை வைகாசி நான்கும்-மாசி மட்டும் தேர் இல்லை துவஜாராகோனும் இல்லை–
மேகம் பெற்ற பாக்கியம் நான் இழந்தேனே–பதியாக இருப்பீர்காள் -இல்லை- வாழ்வீர்காள்–இருக்கையே வாழ்வு —
தொழுது எழு– தொழுகையே எழுவது– ஆத்மா உஜ்ஜீவனம் கீழே விழும் பொழுது தானே–பாம்பணையான்-திரு வேம்கடத்தில் —
அந்தரங்கமாக ஒரே படுக்கை நினைவு வர–திரு கல்யாணம் பண்ணி கொள்கிறேன் என்று சொன்னானே –என்னே – 
சொன்ன விஷயம்  சொல்ல வில்லை–மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-வாசல் காப்பான் இடம்-
உம் ஸ்வாமி என் காலில் விழுந்த நாள் உண்டு–அது போல அந்தரங்கம்–இரண்டு ஆற்றுக்கு நடுவே இருக்கும் இருப்பு –
நல்லார் பலர் வாழும் நளிர் அரங்கம்–கதி-என்றும் தேவர் தானவர் அனைவருக்கும் நித்ய கதி-

தான் தான் கதி என்பதை கருதாமல்–என்னை விட்டானே–வதை செய்தானே–சேவை சாதிக்காமல் இருப்பதே வதை–
மீன் -ஜலம் விட்டால் வாழ்வு இல்லை போல -என் சினம் தீர்வன் நானே -ஆழ்வார்–கோபம் காட்டி தீர்த்து கொள்வேன்-அரையர்–
காலால் எட்டி உதைந்து கையால் அடிப்பது போல- ஆனந்தம் கொடுக்குமே -எம்பார் சொல்ல –முகம் திருப்பி–
துடிப்புடன் வருபவனை பார்க்காமல் இருப்பதே–வையகத்தார் மதியாரே-நம்ப மாட்டார்கள்-முதல் அர்த்தம்–
இனி மேல் மதிக்க தொடங்குவார்கள்–பிரி நிலை ஏ காரம்—அடுத்து -ஆழ்வார்கள் சொல்வதை மதித்து -ஏ காரம்-சொன்னது–
மழுங்காத -தொழும் காதல் — சுடர் ஜோதி மறை யாதே- போல காரணமே என்று அழைக்க மதி சக்கரம் நல வலத்தையாய்–
உண்டே -கேள்வி இல்லை- மறையும் -பிரி நிலை ஏ காரம்–மறையாமல் காத்தாய்–அது போல் இங்கும் –
மதிக்காமல் இருந்தால் நல்லது என்ற எண்ணம் ஆண்டாளுக்கு –பிரகிருதி சொரூபம்-தம் தம் அழிந்தாலும்
அத் தலைக்கு வரும் அவத்யம் பரிதவிக்கும் குடி- குறை வர விட மாட்டார்களே –விஞ்சி நிற்கும் தன்மை–பர்தா கேட்டவன் என்று நானே தேடி தருவேனோ–
ஞானம் பக்தி வைராக்கியம்- சொத்து பெற்ற -கிருஷ்ண பக்தி-ஐந்து குடிக்கு ஓர் சந்ததி இவள் தானே

நாகத்தின் அணையானை நன் நுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேம்கட கோன்  விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே  8-10–பல சுருதி சொல்லி தலை கட்டுகிறார்–

அவயவசோபை–நயந்து ஆசை கொண்டு–நாகத்தின் அனையான்–துடிப்பு உண்டு–அவனுக்கும் சேர்வதற்கு–
அறிவிக்கை ஒன்றே வேண்டுவது –படுக்கை தலை சாய்த்து இருகின்றான் நம் வரவை எதிர் பார்த்து -எழுந்தும் படுத்தும் –
திரு வேம்கடம் உடையான்- அரங்கன்–ரட்ஷிக்க அனுமதியே வேண்டும் -சத்யசங்கல்ப்பன்–நாரையை-
திரு கண்ண புரம் புக்கு–கீழே அணி அழுந்தூர் ஆ மருவி அப்பன்-இடம்
தூது  விட்டார்  திரு  நெடும்  தாண்டகம்
— வந்தவர்  தான்  தூது  விட்டார் – ஹனுமான் – அங்கே  மேகமும்  பதியாக  கொண்டு  இருந்தன  அதை  தான்  தூது  விட்டாள் —
திரு  வேம்கடத்தில்  நின்று  தூது   விடுவார்  யார்  என்று  தோதாக  இறங்கி  நித்ய  வாசம்  பண்ணுகிறான் —
மேகத்தை  வேம்கட  கோன்  விடு  தூதை —கொக்கு  நாரை  அங்கு  உயரமாக  போய்  இருக்காது  -உயரம்  இருவரும் —
திரு  அரங்கத்துக்கு  மேகம்  அனுப்ப  கூடாதே –அவசர  பிரதீஷனாக  இருக்கிறான் –பர்தா  மனைவி — சொல்லி  –
பெரியாழ்வார்  வயிற்றில்     பிறப்பை  நினைந்து  –ஜனன  பவன  -சமுத்ரம் – பெருமை  குறையாமல் – புக்ககம்  பெருமை  வளர்த்து  –
பரம  பதம்  பெருமை  சேர்கிறாய் –பட்டர் –போகத்தில்  வழுவாத  -கிருஷ்ண  அனுபவம் –ஒன்றும்  குறையாத  -அனைத்து  சேஷ்டிதங்கள் – நெஞ்சகம்  பால்  சுவர்  வழி  எழுதி  கொண்டேன் — அது  இது  உது  எல்லாம் — அடைய  பீஜம்  -புதுவையர்   கோன்  கோதை —
ஆகத்து  வைத்து  பாடுபவர்த்கள் — நெஞ்சில்  வைத்து  சொல்பவர்கள் —
ஆண்டாள்   பட்ட  பாட்டை மனசில்  வைத்து  -நிலையில்  -அடியார்  ஆகுவர் –நினைத்த பொழுதே இவள் போல தூது விடாமல் அனுபவிக்க பெறுவார்

பாடும் குயில்காள் ! ஈது என்ன பாடல்? நல வேம்கட
நாடார் நமக்கு ஒரு  ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருள கொடி வுடையார் வந்து அருள் செய்து
கூடுவர்  ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே–10-5-

அவனுக்கு நன்மை–இங்கு வந்ததால்–குயில்களை தான் குறை சொல்கிறாள் அவனை விட்டே கொடுக்க மாட்டாள்-
ஸ்ரீ வில்லி புத்தூர் வர காலம் பார்த்து இருக்கிறான்–சினை ஆறு பட்டால்போல –பெருக்காறு வரும் முன் —
வாழ்வு தந்தால்-இந்த்ரியங்களால் அவனை அனுபவிக்க -குயில்  பாடுவதை கேட்க்க காது இல்லையே –ஆடுகின்ற அசையும் –
கருட கொடு–வெற்றி –சூசுகம்–கருடனை பற்றி சொல்வது -இவள் இடம் கொண்டு சேர்க்க —
எப் பொழுதும்-சந்தோஷமாக இருக்கும் நித்யர்–எப் பொழுதும் துக்கம் சம்சாரிகள்- இரண்டும் வேண்டுமா —
யானை வரும் முன்னே -அவன் வருவதை– வந்து அருள் செய்ய வேண்டும்–அவனே வர வேண்டும் பர கத ச்வீகாரம்–
உகந்து வந்து அருளுவான் –ஆளவந்தார்- சிசுபாலனுக்கும் மோட்ஷம்–நமக்கும் –ஆசை ருசி உடன் பற்றினால் தான் மோட்ஷம் இனிக்கும்
இங்கு வைத்தால் இங்கு தாங்க மாட்டார்கள் என்று கொண்டு போனார்– ஐதீகம் பெரிய தேவ பிள்ளை- பட்டர் சிஷ்யர்-
வைத்து கொண்டே இருக்க கிழக்கே போக நஞ்சீயர் அகத்தில் உள்ளோர் பிழைத்தார்கள் –இங்கு இருந்து என் தலையே உருட்டலமே என்றார் பட்டர்

மழையே! மழையே! மண் புறம் பூசி உள்ளே நின்று
மெழுகுகூற்றினால் போல் ஊற்று நல் வேம்கடத்துள் நின்ற
அழகப்  பிரானார் தம்மை  என் நெஞ்சத்து அகப்பட
தழுவி நின்று என்னை தகைத்து கொண்டு ஊற்றவும் வல்லையே —10-8–

பெரிய திருமலை நம்பி இதையும் அடுத்த பாசுரமும் அநு சந்தித்து கண்ணும் கண்ணீருமாய் விச்தராய் இருப்பாராம்–
மண் குடம் போல சரீரம் இருக்கிறது –உள்ளே ஆத்மா கொண்டு போனான்- நெருப்பு அளித்தால் போல் அவன் அழகு–
ம்மை நெஞ்சத்து அகப்படை-கண்ணை திறந்தால்-தழுவு கொள்ளும் படி–கணையாழி- விரல்-கை -தோள்- ராமன்-கண்டு
சீதை பிராட்டி  ஆலிங்கனம் பண்ணி மகிழ்ந்தாள் போல -நெருக்கி–தகைத்து  கொண்டு–சேர்ந்து அனுபவிக்க-
உஷை-அநிருத்திரன் -சேர்த்து வைத்தால் போல மழையே சேர்த்து வை
மழையே மழையே– கேட்க்காது என்று இரண்டு தடவை கூப்பிடுகிறாள்

———————————–

1-3-/4-2-/-8- பதிகத்தில் -10-பாசுரங்கள் /–10-5-/ -10–8-/-14 / பாசுரங்கள்

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-

இவனே ஸ்ரீ உலகளந்த பெருமான்
மாவலியை நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள் உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய 
புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

திரு பல்லாண்டு –உண்டோ திரு பல்லாண்டுக்கு ஒப்பு–
வேதத்துக்கு ஒம் போல உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் தான் மங்களம் ஆதலால் –முதலிலும் முடிவிலும்–
இதன் விபரணமே மற்றவை எல்லாம்–தன்னை பார்க்காமல் அவனையே பார்த்து–
7 பாசுரங்கள்  திரு வேம்கடம் உடையான் மேல் அருளி இருக்கிறார்–
சீத கடலுள் அமுது அன்ன தேவகி பதிகம்–அவயவம் எல்லாம் அனுபவிக்க -பாத கமலங்கள் வந்து காணீரே-
தவழ்ந்த கண்ணன் -யசோதை பாவனை- அம்மம் ஊட்ட –
கண்ணன் வெண்ணெயோ பெண்ணையோ தானே எடுத்து கொள்வான் பிறர் ஊட்ட கொள்ளான் –

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பறந்து எங்கும்
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கட வாணன்  உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலி ! கடிதோடிவா 1-4-3-

தீர்த்தம் ஆடவும் கூப்பிட வேண்டும்–புளிதி அளைந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன்–
நப்பின்னை கானில் சிரிக்கும் -வா -என்பாள் யசோதை –அம்புலி காட்டி ஊட்டுகிறாள் —
நின் முகம் கண் உளவாகில் நோக்கி போ–கண் படைத்த பயன்–பார்த்த பின் போக முடியாதே —
தோகை கீதாசார்யன்-நடு பாகம் முக்கியம்-1 -10 வயசு வரை-அனைவரும் அனுபவிக்கும் பருவம் —
கை தலம் நோவாமே ஓடி வா–அவன் திரு முகம் ஒப்பு சொல்ல உன்னால் முடியாது–பிரயத்னம் எவ்வளவு செய்தாலும் முடியாது —
சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது–தேஜஸ் பதார்த்தங்கள் எல்லாம் அவன் திரு மேனியில் ஏக தேசம் கடன் வாங்கி-
ரசம் கந்தம் எல்லாமும் இப்படியே –பரம் ஜோதி –ஆஸ்ரித சேஷ்டிதங்கள் கொண்டவன்–வித்தகன்–
வேங்கட வாழ் நன் -வாணன் -நல்ல வாழ்வு-அனைவரையும் அவனை கூப்பிட இவன் உன்னை கூப்பிடுகிறான்
அவாக்யன்  அனாதரக –அவாத சமஸ்த காமன் –
நசிகேதஸ் -யமன் -இடம் கேட்டு-பரம பதம்-நலம் இல்லாதோர் நாடு–கால தத்வ்பம் இல்லை–சாம கான கோஷம்–

மோரைக் கண்டால் புருஷர்களையும் வயசான பெண் போல– ரஷணம் இவனே என்று இருக்கும் இளம் பெண்கள் போல–
ஆயர் சிறிமியறோம்– செல்வ ஸ்ரிமீர்கள்– சிறுவராக இருப்பதே செல்வம்–நெய் உண்ணோம் பால் உண்ணோம்-குடியோம் இல்லை–
எப்படி என்று பார்த்ததே இல்லை கண்ணன் பிறந்த பின்பு–ஏரார் இடைநோவ -கண்ணன் விட்டு பிறவாத இடை சீரார் வளை போல –
சங்கு தங்கு முன்கை நங்கை-பிரியாமலே இருப்பதால்–

————

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ  ! 1-8-9

தாடாளன்-ஓங்கி உலகு அளந்த உத்தமன்-நமுசி-பிள்ளை- பாணாசுரனும் பிள்ளை என்பர்–
மின்னு முடியன்–வேத அபகார குரு பாதக தைத்ய பீடா -பிரமன் ருத்ரன் இந்த்ரன் -ஆபத்துகள் போக்கி-இடர் கெடுத்த திருவாளன் –
ரமா பத்தி-நான்முகன் குறை கொண்டு குண்டிகை நீர் பேய்தான்-ஸ்ரீ பாத தீர்த்தம்–தானே பரத்வன்- முன்னும் முடி- இதனால்–
நிவந்த  நீள் முடியன்–அளந்த திருவடிக்கு பல்லாண்டு இல்லை –
சர்வாதிகன் என்பதால் திரு முடி–ஆதி ராஜ்ஜியம் அகில புவனானாம்–

———————

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற
மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா 2-6-9

கோல் கொண்டு  வா பதிகம்–திவத்திலும் பசு நிரை மெய்ப்பு உவத்தி -கன்று மேய்த்து உகந்த காளை–
கன்றுகளுக்கு நீர் குடிக்க குனிந்து கற்று கொடுப்பானாம்-மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா-
திரு வடி மதித்த  ஐஸ்வர்யம்–மின் இலங்கு பூண்-ஆபரணன் -அணிந்த விபீஷணன் நம்பி —
ராம பக்தி ப்ரேமம் கைங்கர்யம்-பூரணன்-நம்பி –

—————————-

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டை கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்! நீள் திரு வேம்கடத்து எந்தாய் !
பச்சைத்த மனகத்தொடு பாதிரி பூ சூட்ட வாராய் 2-7-3-

————–

போதார் கண்டாய் இங்கே போதார் கண்டாய்
போதரேன் என்னாதே போதார் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோது காலம் உடை குட்டனே! ஒ
குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா !
வேத பொருளே ! என் வேம்கடவா !
வித்தகனே ! இங்கே போதராயே  2-9-6-

———-

கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-

—————–

சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு
தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !
என்னையும் என் உடைமையும் உன் சக்கர பொறி ஒற்றி கொண்டு
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திரு குறிப்பே ? 5-4-1-

———————————————-

1-4-3-/1-8-9/2-6-9/2-7-3/ 2-9-6/ 3-3-4/5-4-1–ஆக ஏழு பாசுரங்கள் –

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ  ! 1-8-9-

————

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன்
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா — 2-6-9-

—————–

ஸ்ரீ கண்ணபிரான் இவன்
ஒ குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா ! வேத பொருளே ! என் வேம்கடவா ! வித்தகனே ! இங்கே போதராயே  2-9-6-
கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-
சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !– 5-4-1–

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.