Archive for December, 2025

ஸ்ரீ திருவடிகள்-திருமேனி -திருவதரம் -திருக்கண்கள்-திரு நாமம் திருமுடி -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய் -5-சர்வ ரஷகமுமாய் இருப்பதை விளக்கும் ஸ்ரீ அருளிச் செயல்கள்

December 4, 2025

வார்த்தை -438-
திருவடிகள் -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய்(விரஹ தாபத்தால் பாதகமாகுமே) -5-சர்வ ரஷகமுமாய்
இருக்கும் -எங்கனே என்னில் –

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -திருவாய்மொழி -1-1-1- என்கையாலே
சேஷித்வம் சொல்லிற்று

ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி -5-7-10-என்கையாலே
உபாயத்வம் சொல்லிற்று

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று

அழித்தாய் வுன் திருவடியால் -திருவாய்மொழி -6-2-9- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் -திருவாய்மொழி -5-3-3- என்கையாலே சர்வ
ரஷகத்வம் சொல்லிற்று -(தனக்கும் தனது திருவடியையே ரக்ஷகத்வம் -ஆகவே ஸர்வ ஸப்த பிரயோகம்)

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-துயரறு-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி-சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்-இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது –அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-பிராப்தமுமாய் போக்யமுமான திருவடிகள் –சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர்பவிஷ்யதி -என்னும் என் சென்னிக்கு போக்யமுமாம் –தாரகாதிகளுக்கும் உப லக்ஷணம்-குரை -பரப்பு -போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுதல் -ஆபரண த்வனியை சொல்லுதல்–ஒன்றும் வாராயாகிலும்,-
குசஸ்த்தலே நிலசதி சச ப்ராத ரிஹைஷ்யதி-என்று புறப்பட்டான் அங்கே -இங்கே விட்டான் என்று வருகைக்கு பிரசங்கம் ஒன்றும் இல்லையே யாகிலும்-நாம க்ராஹஞ்ச நாதஸ்ய சீதல காஹள த்வனி –என்ன கடவது இறே-வாராய் யாகிலும் கோலமாம் என்பான் என் என்னில்-வாராது ஒழிகை கூடாது -கூடிலும் என் நினைவு இது என்கிறார் -என்னை இப்படிஆக்கினாய் என்று கருத்து –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9–அழித்தாய் உன் திருவடியால்;-உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ-தகவு செய்திலை;-நிர்த்தயர் செய்வதைச் செய்தாய் -பிரிந்த போதே பிரணயித்தவம் போயிற்று இறே -நீர்மை யுடையார் செய்வதுவும் செய்திலை-நான் செய்த குறை என் என்ன –எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு-நின்-முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இறே -உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்மா நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இறே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-பூதனை விஷயமாகவும் சகடாசூரன் விஷயமாகவும் பண்ணின சேஷ்டிதங்களாலே -அவர்கள் நிரஸனம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு என்னுடைய ஸ்த்ரீத்வத்தை இழந்தேன் என்கிறாள் –பருவம் நிரம்பி ப்ரணயத்தில் தேசிகனாய்ச் செய்தவை ஒழிய பால சேஷ்டிதங்களும் தனக்காக செய்தான் என்று இருக்கிறாள் –அவதரித்தது தனக்கு என்று இருக்கையாலும்-ஸ்நேஹம் சத்தா ப்ரயுக்தம் ஆகையால்-ஊர் சகடம் அன்று -ஊர்ந்த சகடம் – அது செய்தது எல்லாம் செய்தற்றது -இவன் மௌக்கியத்தாலே அகப்பட்டான்-திருவடிகளினுடைய அவதானத்தாலே பிழைத்தான் அத்தனை –தாயார் ரக்ஷகமாக நிறுத்தின சகடம் -பாடி காப்பாரே களவு காண்பாரைப் போலே இறே நலிந்து –
உதைத்த பாதத்தன்--ஸ்தன்யார்த்தீ ப்ரருரோத ஹா -என்று -முலையை நினைத்து சீறிச் திருவடிகளை நிமிர்த்தான் -மேல் விழுந்த சகடம் துகளாகப் போயிற்று -இது பக்வ தசை என்னும் படி இறே பூதனை நிரசன தசை

——————————–

திரு மேனியும் -1-ருசி ஜனகமுமாய் -2-உபாயமுமாய் -3-உபேயமுமாய் -4-சேஷியுமாய் -5-பாதகமுமாய் இருக்கும்
எங்கனே என்னில் –
காரார் திருமேனி கண்டதுவே காரணமா சிறிய திருமடல் -55 -என்கையாலே -ருசி ஜனகத்வம் சொல்லிற்று –(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

வண்ண மருள் கொள் -திருவாய்மொழி -6-10-3-என்கையாலே உபாயத்வம் சொலிற்று -(பாசுரம் தோறும் திருவடி பிரயோகம் -அனைத்துமே உபாய பரமாகவே இருக்கும்)

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -திருவாய்மொழி -5-3-4-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று(ஆழ்வாரது பக்தி சாத்திய ஸஹஜ பக்தி -ஆகையால் -விளைவித்த -பத பிரயோகம் -ஆகவே இது உபேயத்வம் தானே)

எம் மண்ணல் வண்ணமே யன்றி வாய் உரையாது -பெரிய திருமொழி -7-3-7-என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று

சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும் -திருவாய்மொழி -9-9-6-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3–நிறமானது கண்டார் நெஞ்சை அறிவு கெடுக்கும் படியான அழகிய மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையவனே -வண்ணம் உண்டு -படி -ஸ்வபாவம் -அது அருள் கொண்டு இருக்கும் -கொள்வார் அளவன்றிக்கே கொடுக்கும் ஸ்வபாவனாய் இருக்கை-வண்ணமானது – வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம்.
மைப்படி மேனி” திருவிருத்தம், 94.-அன்றோ. –மருள்-மேகத்துக்கும் எம்பெருமானுக்கும் விசேஷணம்-மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான திருவருளின் மிகுதி இருக்கிறபடி

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன்
தோழீ! கடியனே?–5-3-4-பேரமர் காதல்--ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -ஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –
ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காமகடல் புரைய விளைவித்த-
அப்ரமேயோ மஹாத-என்ற கடல் ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் -பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-
சம்ருத்தமான ஜலத்தை உடைத்தாய்-ஜல சர சத்வங்கள் தன்னில் கூடி விளையாடா நிற்கிற
கடல் போலே இருக்கிற நிறத்தை உடையனாய் பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –இந் நிறத்தைக் காட்டி-என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –(ஐயப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் அழகன் அன்றோ )

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து –எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனாள் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன
எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே -தோழிமார் உடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரித்தாலோ என்ன –ஆருக்கு-வடுகருக்கு தமிழர் வார்த்தை போலே சொல்லும் வார்த்தைக்கு அதிகாரிகள் யார் -வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தோழிமார் எனக்கு முன்னே அழிந்தார்கள்-என் சொல்லுகேன் -கேட்ப்பாரைப் பெற்றால் சொல்லுகைக்கு பாசுரம் தான் உண்டோ-அன்னைமீர்காள்–தோழிமார் அழிந்தார்கள் –நாட்டார் அந்நிய பரர் — சேஷித்து கோள் நீங்களாய் இருத்தி கோள் -உங்களுக்குச் சொல்லவோ –

—————

திருவதரமும் –1-தாரகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-ப்ரப்யமுமாய் -4-போக்யமுமாய்
5-பாதகமுமாய் இருக்கும் -எங்கனே என்னில் –

அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே –
நாச்சியார் திருமொழி -13-4-என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று –

பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ -பெரியாழ்வார் திருமொழி -3-4-6- என்கையாலே
ப்ராப்யத்வம் சொல்லிற்று

கனி இருந்தனைய செவ்வாய் -திருமாலை 18 என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று

முறுவல் எனதாவி யடும் -திருவாய்மொழி -7-7-5- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே--13-4-இவளுடைய விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி -சஞ்சீவி மலை மூலிகைகள்-மார்பில் பட்ட அம்புகளை எடுக்கவும்-அதனால் பட்ட புண்களை ஆற்றவும்-ஆராவமுதம் அனையான் -கண்ணன் —விசல்ய கரணி -அவன் வாயில் ஊறிய நீர் -சந்தான கரணி இவளுக்கு-மார்வில் கொணர்ந்து புரட்டீர் -என்றது-எல்லாம் பெற்றதில்லை யாகிலும் -பல அவயவ சம்பந்தம் கொண்ட மாலை அன்றோ – அவனுடைய ஒரோ அவயவத்தில் உள்ளதைக் கொடு வந்தாகிலும் –புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே– இது சருகாய்ப் போகாமே -அந் நீரைக் கொடு வந்து தெளித்து பருகும் படி பண்ணி-உமிழ் நீர் மருந்தாகத் தீரும் காணும் என் நோய்-அவ்யவதா நேன என் தசைக்கு அவனைக் கொடு வர வேணும் இறே – அது செய்ய ஒண்ணாத பின்பு-இத்தாலே என் இளைப்பைப் பரிஹரித்துக் கொண்டு நிற்கப் பாருங்கோள்-வாய் மருந்திட்டு தீர்க்க வேண்டும் நோய் இறே இது –

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் –என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது –இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்-பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து –திரளிலே நாம் அவனை வளைக்கும் படி என் – என்று நீ நினைக்க வேண்டா – நாங்கள் விளையாடுகிற போது எங்கள் பந்தைப் பறித்து கொண்டு போனான் -என்று சொல்லி போகாதபடி தடுத்து வைத்து-பவள வாய் முறுவலும் காண்போம் தோழி –நாம் இப்படி செய்தவாறே அவன் கால் வாங்கிப் போகாமே நின்று மந்த ஸ்மிதம் பண்ணுமே –அப்போது அவனுடைய பவளம் போல் இருக்கிற திரு அதரத்துக்கு பரபாகமான முறுவலையும்-தோழி-நாம் கண்டு அனுபவிக்க கடவோம் -என்று மனோரதிக்கிறாள்

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-18-சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –கனி இருந்தனைய செவ்வாய்–அக் கண்ணாலே நிர்மமர் ஆனார்க்கு அனுபாவ்யமான விஷயம் இருக்கிறபடி –கண்ட போதே நுகரலாம் கனி போலே யாய்த்து திரு அதரத்தில் போக்யதை இருப்பது –இருந்து -என்றது அச் செவ்வி என்றும் ஒக்க ஏக ரூபமாய் இருக்கிறபடி – சதைக ரூபரூபாய -என்னக் கடவது இறே-கண்ணனை-பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால்
அவதாரத்துக்கு பிற்பாடர்க்கு உதவுவதற்காக கிருஷ்ணனாய் வந்து கண் வளர்ந்து அருளுகிறான் -என்று ஸ்மரிக்கலாம் படி யாய்த்து இருப்பது –கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன்– அண்டர் கோ னணிய ரங்கன் திருப்பாணாழ்வாரும்.-யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும் படி வளர்ந்த மொசு மொசுப்பு எல்லாம் தோற்றி இருக்கும்-பெரிய பெருமாளைக் கண்டால் -என்றும் வசிஷ்டாதி களாலே ஸூசிஷிதராய் வார்ந்து வடிந்த விநயம் எல்லாம் தோற்றும்படியான சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் நம் பெருமாளைக் கண்டால் -என்றும்
பட்டர் அருளிச் செய்வர் –

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5–மலையை எடுத்து மழையிலே நோவு படாத படி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது,
என் ஒருத்திக்கும் பாதகமாகா நின்றது.‘பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில்,
‘‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப் பார்த்து’ என்னக் கடவது அன்றோ?
மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம் படி
புன்முறுவல் செய்து கொண்டாயிற்று நின்றது.கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனுடைய முறுவல் என்னுடைய பிராணனை நலியா நின்றது -பிரிவால் பட்ட நலிவு எல்லாம் தீரும்படி பெண்கள் முகங்களில் பண்ணின ஸ்மிதம் எனக்கு ஒருத்திக்குமே பாதகம் ஆகா நின்றது -இவை நலியாத இடத்தில் போனாலோ என்னில்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.-ஒன்றும் அறிகின்றிலேன்-இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

—————–

திருக்கண்களும் -1-ரக்ஷகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-உபாயுமுமாய் –4-உபேயமுமாய் -5-பாதகமுமாய் -இருக்கும்
எங்கனே என்னில்
உயிர்க்கெல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-1-9-என்கையாலே ரக்ஷகத்வம் சொல்லிற்று -அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனை -6-7-10- என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று
அமலங்களாக விளிக்கும் -திருவாய் 1-9-9- என்கையாலே உபாயத்வம் சொல்லிற்று
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -திருவாய் -7-3-3-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று –
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ-திருவாய் -10-3-1- -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

(அச்சேத்யம் என்னும் அது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த வென்னப் பட சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க கரணங்கள் முடியானேயில் அவையாக உடலம் ஆத்ம தர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி அழக் கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே —சூரணை –132-)

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –7-1-9-ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே-சர்வ பூத ஸூ ஹ்ருதாய்-ஆனுகூல்யம் பண்ணினாரோடு-பிரதி கூல்யம் பண்ணினாரோடு-வாசி அற-எல்லாருக்கும் ஒக்க நன்மையைப் பண்ணுகையால்
வந்த பாவ சுத்தியை உடையவனே –சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே –சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –அன்றிக்கே-சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் – அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும் திருக் கண்களை உடையவனே -என்னுதல் –

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10–இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது. ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ; அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;-உபய விபூதி உக்தன் என்கிற இடத்தை கோட் சொல்லுகிற கண்களை உடையவனை –இவள் நெடுங்கண் இளமான்-அவன் அரவிந்த லோசனன் –அவன் கண் ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -அவனையும் கூட விளாக் குலை கொள்ளும் கண் இவளது-அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.-கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர் கிடந்து போமத்தனை.- காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் – புண்டரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான்.
ந சஷூஷா க்ருஹீயதே ‘இறைவன் கண்ணுக்குப் புலப்படுமவன் அல்லன்,’ என்னும் மரியாதை குலைந்தது.-அவன் அவ் வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயமாக்கினான் ஆகில், நீர் பின்னைச் செய்வது என்?’ என்னில்,-காண்பன் –நானும் கண்டு அனுபவியா நின்றேன்.உலகத்திற்கே வேறுபட்ட -விலக்ஷண இறைவனை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரானபடி எங்ஙனே?’ எனின்,-அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் –அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்-தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,-‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1–நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–

————————————————————————————————-

வார்த்தை – 439-
திரு நாமமும் திருமுடியும்
1-பாவனமுமாய் -2-தாரகமுமாய் -3-போக்யமுமாய் -4-பாதகமுமாய் இருக்கும்-எங்கனே என்னில் –
மாயனை –தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்-திருப்பாவை -5-என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே-நாச்சியார் என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று
ஆயர் கொழுந்தே என்னும் இச்சுவை -திருமாலை -2-என்கையாலே பரம போக்யத்வம் சொல்லிற்று

கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-
உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே –இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்-பூர்வமாகிறது –ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாக பண்ணின பாவம்-உத்தாரகம் ஆவது –
பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு பின்பு பிரகிருதி வாசனையால் பிராமாதிகமாகச் செய்யுமது –தீயினில் தூசாகும் –நெருப்பில் இட்ட பஞ்சே போலே ஆம்-அர்த்தம்-பெரியாழ்வார் மகள் ஆகையால் இடைச்சியான பின்பும் பின்னாட்டுகிற படி –

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-என் –-இப்போது வந்திலன் ஆகிலும்
முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இறே-கோவிந்தன்-சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே-குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது-பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-மேன்மைக்கு எல்லை யானவர்களுக்கு நியாமகனாய் இருக்குமா போலே-தாழ்வுக்கு எல்லையான இடையருக்கும் பசுக்களுக்கும் ஸூலபன் ஆனபடி-வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் ஒரு பசும் கூட்டமாய் இறே பரத்வம் இருப்பதுஎன்னும் – இஸ் ஸ்வபாவங்களை அனுபவித்தோ உமக்கு இவ்வினிமை பிறந்ததோ என்னில்-அங்கன் அன்று-திரு நாமத்தின் உடைய உக்தி மாத்ரத்திலே வந்த இனிமை –இச்சுவை தவிர –இந்த ரசத்தை விட்டு-சுவை -ரசம் –
கைப்பட்டதை விட்டு இவ் அறு சுவைக்கு வேறு ஒரு சுவை இருந்த இடம் தேடித் போகச் சொல்லுகிறாயோ –இவருடைய அறு சுவை இருக்கிறபடி –திரு நாமத்தை உம் நாக்கிலே இட்டுப் பாராமை இறே நான் உபதேசிக்க வேண்டி இருக்கிறது –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –இங்கே இருந்து திரு நாமம் அனுபவிக்கும் இனிமைக்கு பரம பத அனுபவமும் சத்ருசம் அன்று என்னும்படி தமக்கு திரு நாமம் ரசித்த படியை சொல்லிற்று ஆய்த்து-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-தீரா மாற்றாலே நெஞ்சைப் புண் படுத்தி வைக்கும் கிருஷ்ணன் திரு நாமங்களையே அவ்யக்தமாகச் சொல்லி முடித்தி கோள் -ம்ருத சஞ்சீவனமான ராம குணங்களை ஒரு காள் சொல்லலாகாதோ-

—————-

திருமுடியும் -(குழல்) -1-பாவனமுமாய்–2–ரக்ஷகத்வமுமாய்-3–சேஷியுமாய்04-போக்யமுமாய் -5-பாதகமுமாய்
இருக்கும்–எங்கனே என்னில் –
கெடும் இடராயவெல்லாம் கேசவாய என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்–திருநெடும் தாண்டகம் -16-என்கையாலே -ரக்ஷகத்வம் சொல்லிற்று
முடியானே மூ வுலகும் தொழும் சீர் அடியானே–என்கையாலே-சர்வ சேஷித்வம் சொல்லிற்று
பூந்துழாய் முடியார்க்கு –திருவடி மூழிக் களத்தார்க்கு -9-7-என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று
சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் –7-7-10-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் -பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –
கேசவா வென்ன -ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்– என்கிறபடியே -சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் – பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி – இராவணன் ஒருவனும் தீ வினை செய்ய-இராக்கச சாதியாக அழிந்தால் போலே –இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்- முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்-என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா –யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –நாளும்-கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்-நாள் தோறும் குரூரமான வ்ருத்தியைப் பண்ணும் யமபடரும் கிட்ட மாட்டார் –ஸ்வ புருஷம் –இத்யாதி -தாஸ் யஞ்ஞ வராஹஸ்ய –இத்யாதி –கில்லார் -சக்தர் அல்லர் – எரிகிற நெருப்பில் ஏறச் சக்தர் யுண்டோ –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-நம்பி உடைய திருக் குழலையும் வடிவையும் சொல்கிறது – அற நெருங்கி இருண்ட குழலையும்-காளமேக நிபச்யாமமான வடிவையும் உடைய என் துணையே –தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக் கண் கனிவாய்
காள மேகத்தை யன்றி மற் றொன்றிலம் கதியே-இறே இவர்கள் துணையாகப் பற்றுவது –
இந்தக் குழலிலும் வடிவிலும் போலே காணும் தான் அகப்பட்டது – பிராட்டியைத் தேடி திரிகிற காலம் திருக் குழல் பேணாமையாலே ஜடையாய் கிடந்தது-கண்டவாறே அவள் கையாலே வகிர்ந்து பேணின குழல் ஆகையாலே துன்று குழல் -என்கிறது –என் துணையே –ஸ்நிக்த நீல குடில குந்தளம் என்கிற மயிர் முடியையும் வடிவில் ஸ்ரமஹரதையும் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்கினவனே –ப்ரஷஸ்த கேஸ பாஸம்-ப்ரஷஸ்த ஸ்நிக்த நீல குடிலை குண்டல -புகழப் படும் -வழுவழுப்பான -கறுத்த -சுருண்ட திருக் குழல் கற்றை-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-ஆதிராஜ்ய ஸூ சகமாய் உபய விபூதிக்கும் தவித்த முடி இ றே-சேஷ பூதனுக்கு சேஷித்வம் இறே முதல் காணப்படுவது-அவன் சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகத்தில் முந்துறக் கண் வைக்கிறார் -தர்ச நீயமான திரு அபிஷேகம்-ஆயின், சிவன் முதலானோர்க்கும் முடி உண்டே?’ எனின்,-அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது?
மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே –உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது?  இவருடைய அபிநிவேச அதிசயம் இசையின் ஓசையிலே அறியும் அத்தனை மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! –அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு

ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-பூந்துழாய் முடியார்க்கு –திருமுடிக்கு ஒப்பனையான வளையம் இருக்கிற படி–பாண்டியன் கொண்டை -வளையம் திருத் துழாய் மேலே சாத்தி –-பொன் ஆழிக் கையார்க்கு-திரு முடிக்கு வளையம் போலே யாய்த்து திருக்கைக்கு திரு வாழி –திரு மூழிக் களத்தார்க்கு–வளையம் போலேயும் ஆபரணம் போலேயும் அவ் வூரில் நிலையும் அழகுக்கு உடல் என்று இருக்கிறாள் -அவை விக்ரஹத்துக்கு ஆபரணம் ஆனால் போலே -சீலம் ஸ்வரூபத்துக்கு ஆபரணம் இ றே -அழகும் குணமும் ஒரு தலைத்த விஷயம் இறே

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?–7-7-10-
நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களின் ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒருப்பட்டது என்னுதல் -அங்கே விலை செய்து கொடுத்தது என்னுதல் -ஒற்றுமை -ஒருமை-ஒருப்பட்டது தத்பரமானது ஐகாந்த்யம் –ஈடுபட்டு கிரயம் பண்ணிக் கொடுத்தது –‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே, அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி.

—————————-——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வட வேவேங்கட நாராயாண சதகம்‌ -மூலமும்‌ உரையும்‌-ஸ்ரீ நாராயண தாசர்–

December 3, 2025

நஞ்சு வினைக்கா மமுத நமதுயிர்க்காம்‌
செஞ்சொல்லினேர் சதகஞ்‌ செப்பியது–விஞ்சபுகழ்‌
நாராயண தாசர்‌ நன்றாக நானிலத்தே
பாராயணம் செய்பவர்க்கு.

இந்தப்‌ பூமியினிடத்து நன்றாகப்‌ பாராயணஞ்‌ செய்பவர்க்கு உபயோகமாகும் பொருட்டு மிகுந்த புகழை யுடைய நாராயண தாசர் என்பவர் செஞ்சொற்களினாலே திருவாய் மலர்ந்தருளியதாகிய ஓப்பற்ற நாராயண சதக மென்னும்‌ பாமாலையானது நம்‌முடைய ஊழ் வினையை யழிக்கத் தக்க நஞ்சாகும்‌; நமது உர்க்கோ காக்‌கத்தக்க அமுதமாகும்‌ என்றவாறு

நல்ல வட வேங்கடத்து நாராயண சதகம்‌
சொல்ல எனக்குத் துணையாமே -மல்லற்
பணையான திண் புயத்‌துப்‌ பாண்டவர்க்கு முன்னம்
துணையான பாதம் துணை-
-காப்பு
.
அழகிய வடக்கின் கணுள்ள திருவேங்கடத்தி லெழழுந்தருளிய ஸ்ரீமந் நாராயணன்‌ விஷயமாக ஓர்‌ சதகமென்னும்‌ பாமாலை பாடுதற்கு மாலையின்‌ வளம் பொருந்திய பருமையான வலியுள்ள புயங்களைப் படைத்த பாண்டவர்க்கு முற் காலத்தில்‌ துணையாயிருந்த அவருடைய பாதங்கள்‌ துணையா யிருப்பது மன்றி என்னுயிர்க்‌கும்‌ ௮வைகளே துணையாகும்‌ என்றவாறு.

நீர் கொண்டு தண்‌ மலர் கொண்டு நன்‌னெறி கொண்டு நின்‌ குறி கொண்டு வண்‌,
சீர் கொண்டு வந்‌தனை செய்துனைச்‌ செறிவார்களென்‌ பெருவார்களோ,
பேர் கொண்டிலன்‌ பொறி கொண்டிலன்‌ பெரியோர்களா லருள் கொண்டிலன்‌,
நார் கொண்டு கண்‌டருள் சோதியே நாராயணா நாராயணா–

பரிசுத்தமான தீர்த்தங்களையும்‌ குளிர்ச்சி பொருந்திய புஷ்பங்களையும்‌ கொண்டு நன் மார்க்கத்தை யறிந்து தேவரீருடைய சொருபத்தைத்‌ தெறிந்து அழகிய “ஞானத்தைப்‌ பொருந்தித் தண்டஞ்‌ சமர்ப்பித்து உம்மை ஆராதனை செய்து அடைத்த பேர்களெல்லாம்‌
என்ன பலனைப்‌ பெறுவார்களோ அறிய கில்லேன்‌; நாயினேன்‌ தாஸ்ய நாம முதலிய பஞ்ச சம்ஸ்காரத்தையும்‌ பாகவதாராலே கிருபையையும்‌ கொண்டவணே அல்லன்‌; ஆதலால்‌ ௮ன்பு சுரந்து சந்தோஷித்து இரஷித்தருள வேண்டும்‌; சோதி மயமாகிய ஸ்ரீமந் நாராயணனே-

பர காரியம்‌ பல செய்துனைப்‌ பணியாமலே பிணிபான பின்‌
விரகாயிருந் தழு தாவதென்‌ வெறியார் குணங் குறியார்களோ
உரகாரிமே லுபகாரியா யொரு சாரியா வுலவாரியா
நரகாரியே முர காரியே நாராயணா நாராயணா–

கொலை, களவு , காமம்‌, பொய்‌, வஞ்சனை இவை முதலாகிய அநேக துஷ்ட க்ருத்யங்களைச் செய்து தேவரீரைப்‌ பணியாமல்‌ பிணியானது சம்பவித்த பிற்பாடுங்‌ கபடமாயிருக்து அழுததினாலே உண்டாகிய காரியம்‌ ஒன்றுமில்லை; ஆதலால்‌, பயித்தியக்காரர்
குணங்களை நல்லோர்களே யறிந்து இரஷிப்பது கடன்‌; ௮த் தன்மை போல அடியேனை இரஷிப்பது உமக்கே கடன் -சர்ப்பங்களுக்குப்‌ பகையாகிய கருடவாகன மீதிலெழுந்தருளி அடியார்களுக் குபகாரமாக ஓப்பில்லாச் சேவையாய்‌ உலாவி வந்தாருளா நின்ற ஐயனே ! நரகாசுரனுக்கும்‌ வைரியாகிய ஸ்ரீமந் நாராயணனே-

சிவனீ தலம்‌ புயனீதலிந் திரனீ தல்‌சந் திரனீ தலா
தவனீ தல் விண்‌ ணவரீதன் மா தவரீதலோ டெவரீ தலும்‌
அவநீ தலந் தனிலெண்ணினுன்‌ னடியாரடிப்‌ பொடி யாகுமோ
நவநீத முண்‌ கரு மேகமே நாராயணா நாராயணா-

சிவனும்‌ பிரமாவும்‌ இந்திரனும் சந்திரனு ஸூரியனும்‌ தேவர்களும்‌ ரிஷிகளும்‌ ஆகிய இவர்களுடனே பின்னும்‌ யாவர்களுங்‌ கொடுக்கா நின்ற பலன்களை யெல்லாம்‌ பூதலத்தில்‌ எண்ணிப்‌ பார்க்குமிடத்தில்‌ அவை தேவரீருடைய அடியார்கள்‌ திருவடித்‌ துகளுக்கும்‌
ஓப்பாக மாட்டா; ஆதலால்‌ அவர்களை நினைப்பதே யில்லை; கோபாலர்‌
கிரஹத்திலே வெண்ணெயை யுண்டருளும்‌ நீல மேக வண்ணனாகிய
ஸ்ரீமந் நாராயாணனே,

அலசத்தகும் பிணிவந்து நா னலையாமலே யமரர்க்கிடுங்,
கலசத்திலோர் துளி நல்கியென் கவி யைக்கொளாய் கருணாகரா,
குலசக்கரன் சலசேக ரன் குலசேகரன் புகழ்சாகரா, நலசக்கரா
சலசக் கரா நாராயணா நாராயணா.       4

தேகமானது வருத்தத்தை யடையும்படியான நோய்வந்து அடியேன் அலையாம லிருக்கத் தேவர்களுக்குக் கொடுத்தருளா நின்ற கலசத் தமிர்தத்திலே ஒரு துளி கடாட்சித்தருளி அடியேனுடைய கவிதையைக் கைக்கொள்ளவேணும். கருணைத் திருமேனியனே! வச்சிரபாணியும் கங்காதரனுங் குலசேகரராகிய ஆழ்வாரும் தோத்திரம் பண்ணா நின்ற கீர்த்தியாகிய சமுத்திரத்தையும் நல்ல சக்கரத்தையும் தாமரைமலர் போன்ற திருக்கரங்களையும் உடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா

எதிரும்பெரும் பிணியும்பரந் திரையுஞ்செறிந் தெழிலும்பறந்,
துதிரந்திரிந் துடலங்கொளுந் துயரந்தெளிந் துனை நம்பவா,
மதியங்கிடந் தொ ளிருஞ்சடா மகுடந்தொறுந் தொனியும்பவா,
னதிவந்தெழும் பதபங்கயா நாராயணா நாராயணா.       5

[இ-ள்.] தேகத்திலே எதிர்த்து வராநின்ற பெரிதாகிய நோய் மிகுந்து இரைப்பு நெருங்கி
அழகு குலைந்து உதிரமுறிந்து கொள்ளா நின்ற துக்கமானது தெளிந்து போய்த் தேவரீரை அடியேன் நம்பும்படியாகப் பிரசன்னமாக வேண்டும். சந்திரன் வாசமாய்ப் பிரகாசியா நின்ற சிவனுடைய சடாமகுடந்தோறும் முழக்கம் நிறைந்திட ஆகாய கங்கையானது வந்தருளா நின்ற திருவடித் தாமரைகளை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
—————

எல்லாருமுன் னுதரத்துளே யென்னோடுமங் குறைகின்றபேர்,
அல்லாதுவே றில்லாமையா லனைவர்க்குமோ ரருளல்லவோ,
வல்லாருளார் மாட்டாருளார் வறியாருளார்வாழ்வாருளார்,
நல் லாருளார் பொல்லாருளார் நாராயணா நாராயணா.       6

[இ-ள்.] அடியேனுடனே ஆத்மகோடிகளெல்லாந் தேவரீருடைய குட்சிக்குள்ளே வாசம் பண்ணுகிறதேயல்லாமல் வேறேயிடமில்லை யாதலால் யாவருக்குஞ் சமானமான கிருபையே யன்றிப் பேதமில்லையே; அத்தன்மையாயிருக்க, இதிலே வலியரென்றும் மெலியரென்றும் தாழ்வினரென் றும் வாழ்வினரென்றும் நல்லவரென்றும் பொல்லாதவரென்றும் உண்டாகிய தென்ன மாயமோ ஸ்ரீமந் நாராயணா எ-று.
——-

நீகாசுதா நீதூசுதா நீயாடுதா நீமாடுதா,
போகாதபேர்க் கிடுசோறெனப் புலையர்க்குநெஞ் சுருகச் சொனேன்,
ஆகாதகாரியமென்னிடத் தள வற்ற துண் டவையாய்வையோ,
நாகாசலா நாகா லயா நாராயணா நாராயணா.       7

[இ-ள்.] பணம் வஸ்திரம் ஆடு மாடுஞ் சாதமும் இவைகளை நீங்கள் கொடுங்களென்று சொல்லுவதற்கு யோக்கியமில்லாத பேர்களாகிய மிலேச்சருடையநெஞ்சானது உருகும்படியாய்க் கவிதை பாடித் தேடிக்கொண்ட பொல்லாத காரியங்கள் கணக்கில்லாமல் அடியேனிடத்தி லிருக்கின்றன. அவைகளை யாராய்ந்து பாராமல் இரட்சிக்க வேண்டும், சேஷமலையையும் சேஷனாகிய கோவிலையும் பெற்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

அயனாரெழுத் தளவன்றியே யதிகங்கணப் பொழுதாயினும்,
பயனாயிருப் பவரில்லையிப் படி மீதிலப் படியன்றியே,
வியனாயுனைத் தொழுவார் களவ் விதிவெல்வராய் மறை சொல்லுமே,
நயனா ரதன் புகழ்சோதியே நாராயணா நாராயணா.       8

[இ-ள்.] பிரமதேவனானவன் எழுதின பிரகார மேயல்லாமல் அதிகமாக க்ஷணப்-போதாகிலும் இந்தப் பூமியிலே பிரயோசனப்பட்டிருப்பவர் இல்லை யென்றாலும், அப்படி அல்லவென்று சந்தோஷமாகத் தேவரீரைத் தொழுதபேர்களெல்லாம் அந்த விதிவசத்தைக் கடந்திருப்பர்களென்று வேதங்கள் முறையிடுகின்றதே; நயத்தோடுங்-கூடிய நாரத மகாமுனிவர் தோத்திரம் பண்ணா நின்ற சோதிமயமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 8
————

ஓமங்களால் விரதங்களா லுயர் தீர்க்தயாத் திரை கோடியால்,
ஏமங்கள் கன்னியரீதலா லெழு பாரையுஞ் சுழல்கின்றதால்,
ஆமைம்புலன் கடி கின்றதா லடை புண்ணியங் கணமேனு நின்,
நாமமபுகன் றதுபோலுமே நாராயணா நாராயணா.       9

[இ-ள்.] ஓமங்களாலேயும் விரதங்களாலேயும் உயர்ச்சிபெற்ற கோடி தீர்த்த யாத்திரைகளாலேயும் சுவர்ணங்களுடனே கன்னிகா தானங்களாலேயும் ஏழுபூமியையும் பிரதட்சணம் வந்ததினாலேயும் உண்டாகிய பஞ்சவிந்திரியங்களை நீக்கினதினாலேயும் வரா நின்ற புண்ணியங்களெல்லாம் தேவரீருடைய திருநாமத்தை க்ஷணப்போதாகிலுஞ் சொல்லிய புண்ணியத்திற்கு ஒப்பாக மாட்டாது ஸ்ரீமந் நாராயணா எ-று.
———

பாடேனலோ கவிசிந்தனைப் பணியேனலோ பலகாலெழுந்,
தாடேனலோ பலிபீடமுன் னணு கேனலோசடகோபமே,
சூடேனலோவலமாகவே சுழலேனலோ கதியென் றுனை,
நாடேனலோ கொடியேனலோ நாராயணா நாராயணா.       10

[இ-ள்.] தேவரீரைக் கவிதைகளாலே பாடினதுமில்லை, தண்டஞ் சமர்ப்பித்ததுமில்லை, பல காலமுமெழுந்து ஆடினதுமில்லை, பலிபீடத்தின் முன்னே வந்ததுமிலலை, சடகோபத்தை முடியிலே சூடினதுமில்லை, வலமாகச் சூழ்ந்ததுமில்லை, கதியென்று உன்னை நினைத்ததுமில்லை, இத்தன்மையான பாவியானவன் கடைத்தேறும் மார்க்கமுளதோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 10
————

அறவைக்கெலா மடிமூல நா னருளுக்கெலா மடிமூல நீ,
பிறருக்கெலாம் பெறுவித்ததும் பெறு விப்பதும்பிணை தட்டிலே,
உறவைக்கிலென்னுயிர் காவலுக் கொவ்வா வா துரை செய்வனோ,
நற வத் துழா யணிமார்பனே நாராயணா நாராயணா.       11

[இ-ள்.] லோகங்களுக்கெல்லாம் அடிவேராகியிருப்பது யானேயன்றி வேறில்லை; கிருபைகளுக் கெல்லாம் மூலகாரணமா யிருப்பது தேவரீரே யன்றி வேறில்லை; அயலார்களுக்கு நீர்செய்த பலனையும் இனிச் செய்கின்ற பலனையுந் தராசினுடைய தட்டுகளிலே பொருந்தவைத்தால் என் னுடைய உயிரை இரட்சிக்கிற பலனுக்கு அவை சரியாகமாட்டாது. ஆதலால் வாது பேசுவதில்லை, தேன் பொருந்துத் திருத்துள வந்தரித்த திருமார்பை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 11
————

பசியா தமந் திரமேவரும் பழியாதமந் திர மந்தகன்,
விசியாதமந் திரநோயிலே விழியாத மந திரநெஞ்சிலே,
முசியாதமந் திரமோதுவார் முதலானமந் திரமொன்றிலே,
நசியாதமந் திர மோ நமோ நாராயணா நாராயணா.       12

[இ-ள்.] பசியை எழுப்பாதது, எவர்களாலேயும் பழிப்பில்லாதது, எமன் பாசத்திற் கட்டுப் படாதது, நோயைப் பார்க்காதது, நெஞ்சிலே கெடுதலில்லாதது, ஓதுவார்க்கெல்லாம் முதன்மையானது, ஒன்றினாலேயும் நாசமில்லாதது. அது யாதெனில், ஓம் நமோ நாராயணா வென்னுந் திருமந்திரமே யல்லது வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 12
———-

அபராதமா கியபல்சரக் கடலாகவோ டம தேற்றியே,
விபரீதநோ யலையிற்குளே விட நின்ற தூழ் வினையென்செய்வேன்,
இபராசனைக் கரை யேற்று நீ யெனையேற்றலிங் கரிதல்லவே,
நபரா சனே சுபராசனே நாராயணா நாராயணா.       13

[இ-ள்.] அபராதங்களாகிய பல சரக்குகளை நெருக்கமாகத் தேகமென்னும் ஓடத்திலே ஏற்றி விபரீத நோயாகிய கடலுக்குள்ளே ஊழ்வினையானது தள்ளி நின்றது. என்செய்வேன்; கஜேந்திரனைக் கரையேற்றின தேவரீர் அடியேனைக் கரையேற்றுதற்கு இவ்விடத்தில் அரிதல்லவே; தேவர்களுக்குஞ் சுபங்களுக்குங் கர்த்தாவாகிய ஸ்ரீமந்
நாராயணா எ-று. 13
————-

வான் சொல்லுமே புவிசொல்லுமே மறை சொல்லுமே நிறைசேடன்வாய்,
தான் சொல்லு மே முனிவோர்பெருஞ் சபை சொல்லுமே சசி சொல்லுமே,
தேன் சொல்லிபங்கிறை சொல்லுமே திசைசொல்லுமே திகையாமலே,
நான் சொல் லவே அவுமாவெனோ நாராயணா நாராயணா.       14

[இ-ள்.] தேவர்களுடைய நாவும், உலகத்தோருடைய நாவும், வேதங்களுடைய நாவும், கல்வி நிறைந்த ஆதிசேடனுடைய இரண்டாயிரம் நாவும், பெரிதாகிய சபையோடுங்-கூடிய முனிவருடைய நாவும், சந்திரன் முதலாகிய நவக்கிரகங்களுடைய நாவும், தேன்போலுஞ் சொல்லினை யுடைய பார்வதி பாகத்திலிருக்கும் ருத்திரனுடைய நாவும், திக்குப்பாலகருடைய நாவும் தோத்தரிக்கும்படியான தேவரீருடைய கீர்த்தியை மாறு படாமல் அடியேனுடைய நாவினாலே சொல்லுவதற்குக் காரணமாவேனோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 14
———–

சுருக்காமருந் துடற்கூறியே சுழற்றாமருந் தழற்றீயிலே,
உருக்காமருந் துலர்த் துண்டையா வுருட்டாமருந் துழக்கெண்ணெயில்,
கருக்கா மருந் திகற்கையிலே கசக்காமருந் திருகல்லிலே,
நருக்காமருந்திருக்கின்றதே நாராயணா நாராயணா.       15

[இ-ள்.] வெயிலிலே சுருங்காதது, உடலிலே யூறினாற் சுழற்றாதது, அக்கினியிலே யுருகாதது, உண்டையாக வுருட்டி உலர்த்தாதது, உழக்கெண்ணெயிலே கருக்காதது, வலிய கைகளிலே கசக்காதது, இரண்டு கல்லிலே நெருக்காதது, இத்தன்மையைக் கொண்ட மருந்தானது இருக்கின்றது. அது யாதெனில் அஷ்டாட்சரமே யன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று: 15
————-

தகவாயுனைப் புகழாமலே சலமே தொடுத் திகல் பேசுவார்,
முகவாயிலே புழுவீழுமே முனை யந்தகன் கிளைமோதுமே,
ககவாகனா மிகுமோகனா கனகன்களே பரமார்பெலாம்,
நகவாளினா லரிசீய மே நாராயணா நாராயணா.       16

[இ-ள்.] மேன்மையாகத் தேவரீரைத் தோத்திரஞ்செய்யாமல் கோபமே பொருந்திப் பகையாக இழிவுபேசுவாருடைய முகத்தோடுங்கூடிய வாய்களிலே புழுக்கள் சொரிவதுமல்லாமல் எதிர்க்கா நின்றயமதூதர் மோதுவார்கள். கருடவாகனனே! போகசொரூபனே! இரணியனுடைய மார்பையும் திவனது சேனைகளையும் நகமென்னும் ஆயுத நனாலே சங்கரியா நின்ற நரசிங்கரூபமாகிய ஸ்ரீமந் தாராயணா எ-று. 16
————-

தலமேழையும்படமோதினுஞ் சலமோ விடா தகிலாண்ட நற்,
பலம்யாவுமென் மனை சேரினும் பசைபோதிடா திசைமாதரார்,
குலம்யாவுமின் பமதீயினுங் குறுகாதுமால் பெறுகாயமே,
நலமே வுமோ பொலமேவுமோ நாராயணா நாராயணா.       17

[இ-ள்.] ஏழுலோகத்தையும் அழியும்படியாய்ப் போர் பண்ணினாலும் கோபங்கள-டங்குவதில்லை, அகிலாண்டங்களிலே யிராநின்ற நன்மையான பாக்கியங்களெல்லாம் என் வீட்டிலே நிறைந்தாலும் ஆசைக ளொழிவதில்லை, பெண்களென் றிசைந்த சாதிகளெல்லாம் இன்பத்தைக் கொடுத்தாலும் காமங்கள் நீங்குவதில்லை. இத்தன்மையைக் கொண்ட என்னுடைய தேகமானது எந்தத் தன்மையைப்பெறுமோ அறியகில்லேன் பிரகாசியா நின்ற மேகவண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 17
————-

பண்டிட்டதா மரையுந்தியிற் படி வார் நினக் கடியாரெனத்,
தொண்டிட்டு நின் றொழில்கொள் வதோ துயரத்திலே யடைவிப்பதோ,
கொண்டிட் டநின் புகழ் நிற்கவே குறையாளரைப் புகழ்கின்ற வாய்,
நண்டிட்டபாழ் வளையொக்குமே நாராயணா நாராயணா.       18

[இ-ள்.] பழமையா யிரா நின்ற தேவரீருடைய நாபிக்கமலத்திலே பொருந்தின உயிர்களை யெல்லாம் அன்பராகும்படி அடிமை கொண்டு கைங்கரியத்தைக் கொள்ள வேண்டுமேயல்லாமல் துக்கங்களடையச் செய்யலாமோ, வேதங்கள் கொண்டிரா நின்ற உம்முடைய கீர்த்தியைவிட்டுக் குறைச்சலான தெய்வங்களைப் புகழா நின்ற வாய்களெல்லாம் நண்டிட்டுத் தோண்டி விட்ட பாழ்வளைக்கு ஒப்பாவதே யன்றிப் பிரயோசனமில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 18
————–

பகையானவன் பிணிசெய்ததோர் பதினாயி ரம்பிழையுண்டு நான்,
வகையா நினக் குரைசெய்கி லேன் வருநோயுநின் னருளாதலால்,
மிகையான பின் முறையிட்டனன் விடுவித்திடாய் விளையாடி னால்,
நகையார்களோ குறையார்களோ நாராயணா நாராயணா.       19

[இ-ள்.] அடியேனுடைய தேகத்திலே பகையாகிய பொல்லாத பிணியானது செய்யா நின்ற உபத்திரவங்கள் பதினாயிரமுண்டு. அதனை இன்ன விதங்களென்று தேவரீருக்கு விண்ணப்பஞ் செய்கிலேன். வரா நின்ற இந்த நோயானது உமது கிருபையேயல்லாமல் வேறில்லை. ஆதலால் துன்பம் மிகுந்த பிற்பாடு முறையமிட்டேன். இதை நீக்கிவிடாமல் விளையாடினால் உலகத்தார் நகைப் பதுமல்லாமல் இகழ்ச்சியும் பண்ணுவார்கள்
ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

குப்புற்ற கன் றுடனாகெலாங் குழுவாகவோர் குழலூதவே,
மப்புக்கொளுந் தொனிகா திலவ் வழியேகுபுட் களுமுண்ணவே,
துப்புக்குமோர் தயிர்வெண்ணெய்பால் சொரிகைக்குமவ் விடை நங்கைமார்,
நட்புக்குமா டியகண்ணனே நாரா யணா நாராயணா.       20

[இ-ள்.] துள்ளின கன்றுகளுடனே பசுக்களெல்லாங் குவிந்திருக்கவும், ஆகாயவழியிலே செல்லா நின்ற பட்சிகளுடைய காதுகளிலே கேட்கவும், ஒப்பில்லாத வேணுகுழலூதித் தொனியாக மப்புக்கொட்டின துமல்லாமல் அங்கிருக்கும் இடைப்பெண்கள் பொழியா நின்ற நெய்க்கும் மோருக்கும் தயிருக்கும் வெண்ணெய்க்கும் பாலுக்கும் அவர்களுடைய நட்பினுக்கும் நடனஞ் செய்த கண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 20
——–

தாயற்றபேர் தாயாகுவாய் தமரற்றபேர் தம ராகுவாய்,
சேயற்றபேர் சேயாகுவாய் செயலற்ற பேர் செயலாகுவாய்,
வாயற்றபேர் வாயாகுவாய் மலைபோலுநோய்க் குனை நம்பினால்,
நாயிற்று முன் பனி நிற்குமோ நாராயணா நாராயணா.       21

[இ-ள்.] தாயில்லாத பேர்களுக்குத் தாயாகவும், சுற்றமில்லாத பேர்களுக்குச் சுற்றமாகவும், பிள்ளையில்லாத பேர்களுக்குப் பிள்ளையாகவும், உதவியில் லாத பேர்களுக்கு உதவியாகவும், வாக்கில்லாத பேர்களுக்கு வாக்காகவும், அருளா நின்ற தேவரீரை அடியேன் மலைபோலுங் கொண்ட நோய் தீருதற்கு நம்பினால் சூரியன் முன்னே பனி நீங்கு மாப்போலே நீங்குமேயன்றி நிற்குமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று.
——-

மந்தன் புதன் குருவெள்ளிசேய் மதிராகுகே தரி நாடொறுந்,
தந்தம்பொலா விட மேவினுஞ் சகலேச நின சரணண்டினால்,
எந்தம்பிரா னிவ னென்று கொண் டேகாதசப்பலனீவரே,
நந்தன் சுதா நம்புபதா நாராயணா நாராயணா.       22

[இ-ள்.] சனி புதன் குரு சுக்கிரன் செவ்வாய் சந்திரன் ராகு கேது சூரியன் இவர்கள் நாடோறும் தங்கள் தங்கள் பொல்லாத இராசிகளிலே யிருந்தாலும், சகலத்துக்கும் ஈசனே! தேவரீருடைய திருவடியை யடைந்தால் எங்களுடைய தம்பிரான் இவனேயென்று அன்பு கொண்டு பதினோராமிடத்துப் பலனைக் கொடுப்பார்கள். நந்த கோபனுடைய திருக்குமாரா! நாயினேன் நம்பா நின்ற பரமபதத்தை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
———

ஆற்றாமையொன் றமையாமையொன் றறி யாமையொன் றருளாமை யொன,
றேற்றாமை யொன் றிசையாமையொன் றின்னாமை யொன் றிருதாளையும்,
போற்றாமையொன் றடியாருடன் பொலியாமையொன் றொருமெய்யிலே,
நாற்றாய் விளைந் திடலாகுமோ நாராயணா நாராயணா.       23

[இ-ள்.] அயலார் வாழ்வைக்கண்டு அவதிப் படுதல், பொறுமை நீங்குதல், பேதைமை வளர்த்தல், ஈதன்மறுத்தல், முயற்சியடைதல், இங்கிதம் ஒழித்தல், பொறாமை மிகுதல், திருவடிப் புகழ் விடுதல், அடியாருடன் கூடாதிருத்தல் இவைக ளெல்லாம் நாயினேனுடைய ஒரு தேகத்துக்குள்ளே நாற்றுக்கள் போல வளரலாமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

தன்மைக்கு நீ யடியேனுடைச் சலிகைக்கு நீ பொலிகைக்கு நீ,
மேன்மைக்கு நீ வன்மைக்கு நீ மிகுதிக்கு நீ தகுதிக்கு நீ,
புன்மைக்கு நீ புலமைக் கு நீ பொறுமைக்கு நீமறுமைக்கு நீ,
நன்மைக்கு நீ தின்மைக்கு நீ நாராயணா நாராயணா.       24

[இ-ள்.] அடியேனுடைய ஒழுக்கத்துக்கும் சலிகைக்கும் பிரகாசத்துக்கும் மெலிமைக்கும் வலிமைக்கும் குற்றத்திற்கும் முயற்சிக்கும் பொல்லாங்குக்கும் அறிவுக்கும் பொறுமைக்கும் மோட்சத்துக்கும் நன்மைக்கும் தின்மைக்குஞ் சகலத்துக்குந் தேவரீரேயல்லாமல் வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

வேட்பித்ததுன் பெருநெஞ்சமே வியப்பித்த துன் விளையாடலே,
கேட்பித்ததுன் பல நூல் களே கிளர்ப்பித்ததுன் பதிவாசமே,
பேட்பித்த துன் கனசத்தியே பிழைப்பித்தவெம் பிணிப்பித்த வாழ்,
நாட்பிச்சையுந் தரவேண்டுமே நாராயணா நாராயணா.       25

[இ-ள்.] உமது திருவுள்ளமே எனக்கு இன்பம் தந்தது, உமது திருவிளையாடலே எனக்குச் சந்தோஷஞ் செய்வித்தது, உமது திவ்வியப் பிரபந்தமுதலாகிய புராணங்களே எனக்குக் கேட்கப் பண்ணியது, உமது திருப்பதிகளே எனக்கு வாசத்தை யுண்டாக்கியது, உமது கனம் பொருந்திய வலிமையே எனக்கு ஆதரவுபுரிந்தது. ஆதலால் அடியேனுடைய குற்றத்தையும் வெவ்விதாகிய நோயையும் நீக்கிவிட்டு இனி வாழ் நாளாகிய பிச்சையுந் தரவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 25
———

பூரிக்கு நின் கொடியென்னவே புளகிக்குநின் சனமென்னவே,
ஈரிக்கு நின் சபையென்னவே யிரதிக்கு நின் புகழென்னவே,
ஆரிக்குணம் பெறு கேவர்தா மடியாருளந் தானந்தமே,
நாரிக்குவில் லொடியச் செய்தாய் நாராயணா நாராயணா.       26

[இ-ள்.] உமது கருடக் கொடியே யென்றால் எனது தேகப் பூரிக்கும், உமது அடியார்களே யென்றால் எனது மயிர் புளகிக்கும், உமது சபையேயென்றால் எனது கண்களிலே ஆனந்த பாஷ்பம் பெருகும், உமது புகழேயென்றால் என்மனது ரம்மிக்கும். ஆகலால் இத்தன்மையான குணத்தைத் தேவர்களிலே எவர்கள் தான் பெற்றார்கள். பாகவதருடைய இருதயத்தில் ஆனந்தமானவனே! ஜானகிக்காக உருத்திரன் வில்லை ஒடியச் செய்தருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று. 26
————-

தேன் பாடிதா வனமாலையுந் திருவாழிசங் கமுமேந்தியே,
தான்பாடி நாரதனாடுமுன் சபை மானிடர்க் கதிதூரமே,
வான்பாடியுட் புயலென் று தான் வருமென்று வா டுவதென்னவே,
நான் பாடினால் வரவேண்டுமே நாராயணா நாராயணா.       27

[இ-ள்.] நாரதமுனியானவர் பாடியாடா நின்ற தேவரீருடைய சபையானது மானிடர்களுக்கு அதிக தூரமாக விருக்கும். ஆதலாலவாக்கூடாது. வானம்பாடியென்னும் பட்சியானது நீருண்ட மேகங்கள் என்றைக்கு வருமோவென்று மனது வாட்டங்கொள்வது போல அடியேன் வருந்தப் பாடினால் அத்தன்மை போல வந்து இரட்சித் தருளவேண்டும் வண்டு பாடித்து ராவா நின்ற துளபமாலையும் திருச்சக்கரமும் சங்கமும் ஏந்திய ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

மானோயு நின னருளுற்ற நாள் வாய் நீர்மருந் தாயங்ஙனே,
தானோடு நின் னருளற்ற நாள் சஞ் சீவியைத் தளியேறுமே,
தானோரையண் டின பேர் கடா ரடியாருளத தானந்தமே,
நானோதவா ஞானோதயா நாராயணா நாராயணா.       28

[இ-ள்.] மகத்தாகிய நோய்களெல்லாந் தேவரீருடைய கிருபையைப் பெற்ற நாளையிலே உமிழ் நீரே மருந்நாகி அங்ஙனே ஓடிப்போகும். உமது கருணை யில்லாத காலத்திலே சஞ்சீவியைக் கொடுத்தாலுந் தள்ளிவிட்டு அதிகமாகுமாதலால் இதை யறிந்தபேர்கள் சுகத்தைப் பெறுவார்கள். அடியார்கள் இருதயத்தில் ஆனந்தமானவனே! நாயினேன் ‘தோத்திரம்’ பண்ணினால் ஞான உதயஞ் செய்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

ஈசன்பரன் பிரமன் பிதா விறைவிண்டுவண் இறைதண்டுழாய்,
வாசன சரா சரனென்று நின் வழியன்பர்வாழ் பதிதன்னிலே,
தீசங்கடம் பிணி தாழுமே சிறைசண்டைவஞ்சனை வீழுமே,
நாசங் கடந் துயிர்வாழுமே நாராயணா நாராயணா.       29

[இ-ள்.] ருத்திரனுக்குப் பரமனே யென்றும், பிரமனுக்குத் தந்தையேயென்றும், கர்த்தனே யென்றும், விஷ்ணுவே யென்றும், வண்டுகளுடனே குளிர்ச்சி பொருந்தா நின்ற திருத்துழாயினிடத்தில் வாசனேயென்றும், சராசரங்களான வனேயென்றும், தேவரீரைத் தோத்திரம் பண்ணி வழிபடா நின்ற அடியவர்கள் வாழ்ந்தருளும் தலங்களிலே பொல்லாத சங்கடங்களும் நோய்களும் சிறைகளும் போர்களும் வஞ்சனைகளும் இவை முதல் குற்றங்கள் யாவும் நீங்கி மற்றவுயிராக ளெல்லாட வாழ்ந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

ஆபாதவா யுனைவையுமே யடியாருடன் படைபண்ணுமே,
மாபாவ நூல் பலகற்குமே மறைபன னுவாதியர்தம்மினும்,
ஓபாவியேனிவை நின்முனேயுரை செய்தனன் விரைசெய்தபூ,
நாபா பரா பரனேயரீ நாராயணா நாராயணா.       30

[இ-ள்.] அபத்தம் நிறைந்த என்னுடைய வாயானது தேவரீரை வைதுகொண்டேயிருக்கும். அடியார்களுடன் போர் பண்ணிக்கொண்டே யிருக்கும். மகத்தாகிய பாப சாஸ்திரங்களையே கற்கும். ஆதலால் வேதத்திலே சொல்லா நின்ற விரோதிகளைப் பார்க்கிலும் அதிகரித்திரா நின்ற விரோதி யாகிய நாயினேன் தேவரீர் சந்நிதானத்திலே விண்ணப்பஞ் செய்துவிட்டேன். உமது சித்தம் எனது பாக்கியம். வாசனை சேர்ந்த நாபிக்கமலம் பொருந்தா நின்ற பராபரனென்னும் அரியாகிய ஸ்ரீமந நாராயணா எ-று.
————

காற்பாலினிற் கடவாதவன் கலிகாலமே திரை யாடிடுந்,
தோற்பாவை நா னதுமெச்சவே தொடு சூத்திரத துறைகாரணீ,
மேற்பாவபுண் ணிய மான நல் வினை தீவினைக் கெவராகுவார் ,
நாற்பாலி னுக் கொருமூலமே நாராயணா நாராயணா.       31

[இ-ள்.] கடலிலே உதித்துவரா நின்ற சூரியனாலே அறியும்படியான காலப் பிரமாணத்தோடுங் கூடிய கலிகாலமே திரையாகவும், ஆடா நின்ற தோற்பதுமை யானாகவும், மனது மெச்சும்படி யாகத் தொடுக்கா நின்ற சூஷ்திரத்துறைக்காரர் தேவரீரானால் மேலே வாரா நின்ற பாப புண்ணியங்களுக்கு அதிகாரிகள் எவராகுவார்கள்? இந்த நியாயத்தைத் தெரியப்படுத்தவேண்டும். பறப்பன ஊர்வன நடப்பன இருப்பனவாகிய நான்குவித சாதிகளுக்கெல்லாஞ் சமானமான ஆதரவு தேவரீரேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 31
————-

இரைபாலெழுஞ் சுவரான நா லிருசாணுடம் பிடியாமலே,
கரையாமலே தகராமலே கழலாமலே யழலாமலே,
திரையாமலே வினைமூடி கண் டிறவா மலே வகையென்னைதா,
னரையாதசோ றிடுமை யனே நாராயணா நாராயணா.       32

[இ-ள்.] ஆகாரத்திலே வளராநின்ற எண்சா ணுடம்பாகிய சுவரானது கரைந்து போகாமலும் இடிந்து போகாமலும், அதிர்ந்து போகாமலும், உதிர்ந்து போகாமலும், வெந்து போகாமலும், திரைந்து போகாமலும், வினையினாலே இறந்து போய் மறுபடியும் பிறந்து விழிதிறவாமலும் இருக்கும் வகையாதெனில், நரை திரை மூப்பில்லாத அமுதத்தைக் கொடுத்தருள வேண்டும் என் ஐயனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

புற்கொண்டுவாழ் பசுவாரெடார் புலியாழ் கிணற்றிடைவீழினுங்,
கற்கொண்டுவா தடி கொண்டுவா கடி தென்பரப் படுபாவி நான்,
ஏற்கொண்ட நோய்க் கெவராகுவா ரினி நீயலா திலை யெட்டியும்,
நற்கொண்டலால் வளர்கின்றதே நாராயணா நாராயணா.       33

[இ-ள்.] புல்லையுண்டுவாழா நின்ற பசுவானது கிணற்றிலே விழுந்தால் கண்டவர்கள் யாரேனும் எடுத்து விடுவார்கள். புலியானது விழுந்ததானால் சீக்கிரமாய் கற்களுந் தடிகளுங்கொண்டு கொல்லுவார்கள். அத்தன்மைபோலப் படுபாவியான என்னுடைய தேகத்திலே கொண்ட நோயைத் தீர்க்க எவரிருக்கிறார்கள்? இனி தேவரீரையன்றி வேறு இல்லை. மழையினாலே எட்டிச்செடியும் வளர்வது போல உம்முடைய கிருபையினாலே அடியேனும் வளரவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 33
————-

அரசன் கையா லபயம்பெறா ரயலாளுமன் னரையண்டினால்,
விரசென்றுவந் திடமீவர் நீ வினவாதசீ விகளண்டினால்,
வரசங்கரா தியாஞ்சு வார் வருகென்னமேல் வகையென்ன தான்,
நர சிங்கனே முரபங்கனே நாராயணா நாராயணா.       34

[இ-ள்.] தாங்கள் நம்பியிருக்கும் அரசனாலே பிரயோசன மில்லையென்று மறு மன்னவரிடத்திலே சேர்ந்தால் சந்தோஷித்து எதிரே வந்து இடங்கொடுத்து இரட்சிப்பார்கள். அத்தன்மையாகத் தேவரீரை நம்பினபேர்கள் யாவரேனும் உம்மை வினவாமல் வெறுத்துப் பக்கத்திலே சென்றால், முக்கியமான சங்கரன் முதலாகிய தேவதைகளானாலும் இரட்சிக்கப் பயப்படுவார்கள். ஆதலால் கதிவேறில்லை. அடியேனை வாவென்றழைக்க வகையென்ன வெண்ணி யிருக்கிறீரோ தெரியாது. நரசிங்கரூபனே! முரகாசுரனைக் கொன்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

கோட்சொல்லுவேன் வசைசொல்லுவேன் குறை சொல்லுவேன் முறை சொல்லுவேன்,
கீட் சொல்லுவேன மிகைசொல்லுவேன் கிலிசொல் லுவேன் வலி சொல்லுவேன்,
சூட்சொல்லுவே னயனூழி நாள் சொலவேண்டினுஞ் சிறிதுன்னை யோர்,
நாட்சொல்லலென் நறிகின்றிலேன் நாரா யணா நாராயணா.       35

[இ-ள்.] பிரமகற்பபரியந்தம் அடியேனுடைய நாவானது கோள்களும் வசைகளும் குறைகளும் முறைகளும் கீழ்மைகளும் குற்றங்களும் பயங்களும் வலிமைகளும் வஞ்சனைகளும் இவைகளைச சொல்லுமேயன்றிக் கொஞ்சமாகிலும் தேவரீர் நாமத்தை ஒரு நாளையிலேனுஞ் சொல்லும்படியா யறிந்ததேயில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 35
———

ஆளாகி நின் னிரு நாலெழுத் தறியாத நா ளறிவார்களைக்,
கேளாத நாள் செவியூறவே கடை யாத நா ளதிலாசையே,
மூளாத நா ணிலமீது தான் முதனாள்லங் கெழுதாத நாள்,
நாளாகுமோ வாளாயுதா நாராயணா நாராயணா.       36

[இ-ள்.] ஆசாரியனுடைய திருவடிகளுக்கு ஆளாகத் தேவரீருடைய திருமந்திரத்தை அறியாத நாளும், தெரிந்த பாகவதரைக் கேளாத நாளும், செவிகளிலே யூறும்படியாய்க் கிடையாத நாளும், அதிலே ஆசையானது பெருகாத நாளும், அஞ்சாவது வயதில் முதல் நாளையிலே பள்ளிக்கூடத்தில் அரியென்று நிலவெழுத்தாகிலும் எழுதிவையாத நாளும் பல நல்ல நாளாகுமோ? வாளாயுதத்தையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 36
————

வீட்டுக்குளே துணையாவதும் வெளியிற் குளே துணையாவதும்,
கூட்டுக்குளே துணையாவ துங் குன்றுக்குளே துணையாவதும்,
காட்டுக் குளே துணையாவதும் கடலுக்குளே துணையாவதும்,
நாட்டுக்குளே துணையாவதும் நாராயணா நாராயணா.       37

[இ-ள்.] வீட்டினுக்குள்ளே துணையா யிருப்பவனும், வெளியினுக்குள்ளே துணையா யிருப்பவனும், சந்திரனுக்குள்ளே துணையாயிருப்பவனும், மலையினுக்குள்ளே துணையா யிருப்பவனும், காட்டினுக்குள்ளே துணையாயிருப்பவனும், கடலினுக் குள்ளே துணையா யிருப்பவனும், நாட்டினுக்குள்ளே துணையா யிருப்பவனும் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

வாய்க்கின்றதேன் பகையுண்ணலா மணக் கின் றசாந் தரையுண்ணலாங்,
காய்க்கின்றமா வெறியுண்ணலாங் கறக்கின்றவர்க் கட்டுண்ணலாப் ,
தோய்க்கின்றபால் குடையுண்ணலாஞ் சுவை கெட்டமா னிடவாலிலா,
நாய்க்கிந்தவா தனையேனையா நாராயணா நாராயணா.       38

[இ-ள்.] தேன்கூண்டினுக்குப் பகைத்தலும், சந்தனக்கட்டையினுக்குத் தேய்த்தலும், பழுத்த மரத்தினுக்குக் கல்லெறிதலும், கறக்கும் பசுவினுக்குக் கயிறணைத்தலும், தோய்த்த தயிரினுக்கு மத்தால் குடைத்தலும், இவைகளுக்கு இந்த உபத்திரவமுண்டாகல் பிறருக்குபகாரமாகும். உருசியும் வாலுமில்லாத மானிட மென்னும் நாயினுக்கு இந்த வாதனையைக் கொடுத்தீரே இதனாலே உமக்கென்ன பிரயோசனமுண்டு. தெரியச் சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

தும்பிக்கையா னையுமைவர்முன் றுகிலோடி வாடிய நங்கையும்,
தம்பிக்கையா மகயோகருந் தா நிற்கவே சதுர்வேதியன்,
கம்பிக்கையா லரனுக் கு நீ கனியையிட் டினியையமேன்,
நம்பிக்கையா கிய தெய்வமே நாராயணா நாராயணா.       39

[இ-ள்.] கஜேந்திரனையும் பாண்டவரையும் வஸ்திரம் நீங்குதென்று வாடின துரோபதையும் ஸ்தம்பிதமாயிருந்து தவம்பண்ணா நின்ற மகத்தாகிய யோகிகளையும் இரட்சித்திருக்கட்டும். நான்கு வேகத்தையு முடைத்தாகிய பிரமனுடைய சிரத்தைக் கிள்ளின சிவனுக்கும் பிச்சையிட்டுச் சாபத்தைத் தீர்த்தபிற்பாடும் இனி பரத்துவம் வேறே யென்று ஐயப்படலாமோ? நம்பிக்கையான தெய்வம் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா. எ-று.
————-

பாலாவதோ, தேனாவதோ பழமாவதோ பாகா வதோ,
மேலானசர்க் கரையாவதோ விரையாரு நல் லமுதாவதோ,
கோலாகலப் பிணிதீரவே குளி யங்களோ வனமூலியோ,
நாலாவதோ நின்பேர் சொலாய் நாராயணா நாராயணா.       40

[இ-ள்.] அடியேனுடைய தேகத்திலே காலா கலஞ் செய்யா நின்ற நோயைத் தீர்க்கும்படியான தேவரீருடைய திருநாமமானது பாலாகியதோ? தேனாகியதோ? பழமாகியதோ? பாகாகியதோ? மேலாகிய சருக்கரையாகியதோ? வாசனை சேர்ந்த நல்லமிர்தமாகியதோ? வன மூலிகை யாகியதோ? இவையல்லாமல் மணிமாதிரம் ஒளடதம் இவை மூன்றுக்கு மேலாகியதோ? என்னென்று சொல்லுவோம் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

பூவுக்கு நல லது சொல்லவோ பொலிசீதளப் புதுவாசமே,
தேவுக்கு நல லது சொல்லவோ செவியார்முனே யெதிர் நிற்பதே,
ஆவுக்கு நல் லது சொல்லவோ வதுசாதுவா யமுதீவதே,
நாவுக்கு நல்லது சொல்லவோ நாராயணா நாரா யணா.       41

[இ-ள்.] புட்பங்களுக்குள்ளே நல்லது சொல்லவேண்டுமானால் காந்தியும் குளிர்ச்சியும் புதிய வாசனையும் உண்டாகிய புட்பமேயன்றி வேறில்லை. தெய்வங்களுக்குள்ளே நல்லது சொல்லவேணடு மானால் முறையத்தைக் காதிலே கேட்குமுன்னமே அடியார்களுக்குப் பிரசன்னமாகிய தெய்வ மேயன்றி வேறில்லை. பசுக்களுக்குள்ளே நல்லது சொல்லவேண்டுமானால் அது வெகு சாதுவா யமுதத்தைக் கொடுக்கும் பசுவேயன்றி வேறில்லை. நாவுகளுக்குள்ளே நல்லது சொல்லவேண்டு மானால் தேவரீருடைய திருநாமக்தைச் சொல்லிய நாவேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 41
—————

ஆனந்தமா யழுவார்முனே மலர்சூடியே தொழுவார்முனே,
மோனந்தனிற் கரைவார் முனே முகிலென்னவே புகழ்வார்முனே,
தானந் தவம் புரிவார் முனே சரணென றுனை யடைவார் முனே,
நானென் செய்கே னிவையொன்றிலே நாராயணா நாராயணா.       42

[இ-ள்.] தேவரீருடைய திருவடியை நினைத்து ஆனந்த பாஷ்பங்களைக் கண்களிலே பெருக்குவார்களுக்குமுன்னே, புட்பங்களை யலங்காரஞ்செய்து தண்டஞ் சமர்ப்பிப்பார்களுக்கு முன்னே, மௌனத் தியானத்தினாலே உள்ளங் கரைந்திடுவார்களுக்கு முன்னே, பசுங்கொண்டலே யென்று புகழ்ந்திடுவார்களுக்கு முன்னே, தானங்களுந் தவங்களுஞ் செய்திடுவார்களுக்கு முன்னே, சரணாகதி செய்திடுவார்களுக்கு முன்னே , அடியேன் இவைகளிலே ஒன்றாகிலும் செய்யமாட்டு வேனோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 42
————

செரிக்கின்றவூணுகர்வேனலேன் சிரிக்கின்ற காரியமே செய்வேன்,
கரிக்கின்றகண் படையேன் வெறுங் கழப்பன் கொடுங்கடுவஞ்சகன்,
பரிக்கின்ற நின் னடியாரொடும் பழகேனலேன் படர்வந்த பின்,
நரிக்கின்றனே னினியென் செய்வே நாரா யணா நாராயணா.      43

[இ-ள்.] ஜீரணமாகும்படியான ஆகாரத்தைக் கொள்ளாமல் நகைக்கும்படியான காரியமே செய்து தெரிசன அபேட்சையான கண்ணையும் படையாமல் அன்பைப் பரிக்கா நின்ற அடியாருடனேயுங் கூடாமல் விருதாவாகிய கழப்பனாகவும் பொல்லாத விஷம்போலும் வஞ்சகனாகவு மவதரித்துத் துன்பம் வந்த பிற்பாடு, அவதியைக் கொள்ளா நின்ற நாயினேன் இனி என் செய்வேன்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 43
———-

ஆதாரதே வதையென்பனோ வடியேனையா ளரசெனபனோ,
ஓதா துணர்ந திடலன்புகூ ருப தேசதே சிகனென்பனோ,
மாதாபிதா வுடலாவி நீ மனைகாணிபொன் வலிசெய்வ நீ,
நாதாவு நீ தாதாவு நீ நாராயணா நாராயணா.       44

[இ-ள்.] ஆதாரமாகிய தேவதையே யென்பனோ? அடியேனையாளுங் கர்த்தனே யென்பனோ? பல நூல்களை யோதாமல் தன்னிலே யறிந்திட நட்பு செய்யா நின்ற, உபதேசகுருவே யென்பனோ? என்னென்று சொல்வேன்? தாயும் தந்தையும் தேகமும், உயிரும், பெண்சாதியும், காணியும், திரவியமும், வலிமையும், செல்வமும், நாதனும், பிரபுவும் நீயேயன்றி வேறில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 44
———

வடு நிந்தையே னிடுவந்தியேன் மருள் விஞ் சினே னருளஞ்சினேன்,
அடுசிந்தையே னெடு விந்தையே னலைபண்பினே னுனை நம்பினேன்,
விடு துன்பினேன் முடுகன்பிலேன் வினைமண் டினே னுனையண்டினேன்,
தடுவொன்றிலே மிடைகுன்றுமோ நாராயணா நாராயணா.      45

[இ-ள்.] குற்றம் பொருந்திய நிந்தையையும், இடுவந்தியையும், மிகுந்த மயக்கத்தையும், அருளில்லாத பொல்லாத இருதயத்தையும், பலவித துர் நடத்தையையும், காரியமென்கிற அலைச்சலையும் , தீவினையையும் இவைகளைக் கொண்டிரா நின்ற நாயினேன் இரக்கத்திலே பயந்தவனாக, அன்பிலே துரிதமில்லாதவனாகி, துன்பம் ஒழிவில்லாமல் தேவரீரை யடைந்தேன். மத்தியிலே இன்னமொரு விதத்தினாலே எனது வருத்தம் நீங்குமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 45
————

குடி நீர் கொடீர் முகவேதிடீர் குடவெண்ணெ யை வடியீர்பிரம்,
படியீர்வெணீ றெறியீர்விழிக் கதிகோரவஞ் சனமேயிடீர்,
கடியீர்வயித் தியரால் வரா கமதாடுகுக் குடமிட்டுளே,
நடியீரெனிற் பிணியஞ்சுமோ நாராயணா நாராயணா.       46

[இ-ள்.] குடிக்கும்படியாய் கிஷாயங்கள் நீர் கொடுங்களென்றும், முகத்துக்கு வேதுபிடியுங்க ளென்றும், குடத்திலே எண்ணெயை காய்ச்சிக் கொடுங்க ளென்றும், பிரம்பு கொண்டு அடித்து வெளுத்த விபூதியை எறியுங்களென்றும், கண்களுக்கு அதிகோரமாகிய கலிக்கம் போடுங்களென் றும், வயித்தியருக்குக் காட்டித் தீருங்களென்றும், பன்றியும் ஆடும் கோழியும் பலி கொடுத்துச் சன்னகமாட்டிப் பாருங்களென்றுஞ் சொல்லினால் இவைகளாலே நோய் தீர்வதுண்டோ ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 46
———-

பிரம்புக்கு முள் ளிடுமா தரைம் பிணிகட்கு நீள் பிணியுற்றவென்,
உரம்புக்குளே யறியா ததெ னுலகத்தெலாமுறைசோதிதோல்,
வரம்புக்குளே யெலும்புக்குளே வழும்புக்குளே தழும்புக்குளே,
நரம்புக்குளே யுகவெட்கியோ நாராயணா நாரா யணா.       47

[இ-ள்.] முள்ளுகளோடுங் கூடிய பிரப்பம்புதரு களுக்குந் தாமரைப் பிணையல்களுக்கும் மிகுந்த நோய்கொண்டிரா நின்ற என்னுடைய நெஞ்சுக்குள்ளே நீ நுழைந்தறியாம லிருப்பதென்னே? உலகத்திலிருக்கும் எல்லா வுயிர்கள் தோறும் வாசம் பண்ணாநின்ற சோதி நீயன்றி வேறில்லை. ஆதலால் இது தோலுடம்பும் எலும்பும் வழும்பும் தழும்பும் நரம்பும்கூடி நாற்றமானபடியினாலே புகுந்தறிதலுக்கு வெட்கமாகியதோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 47
————-

மன்றாடிய வதிசோபன மழைவண்ணனே விசயங்கரா,
வென்றாய்சயஞ் செயுமச்சுதா மிக வாழிகே சவனேசுபங்,
கன்றால்விள வெறிந்தாய் பெருங் கலியாணமங் கலமாதவா,
நன்றாகவேங் கடநாயகர் நாராயணா நாராயணா.       48

[இ-ள்.] கோபிகா ஷ்திரீகளுடைய சபையிலே நடனம் பண்ண நின்றவனே! உனக்கு அதிக சோபனம், மேகவண்ணனே! உனக்கு விசயம். முதலையை வென்றவனே! உனக்கு செயம். அச்சுதனே! உனக்கு மிதந்த வாழி கேசவனே! உனக்குச் சுபம். கன்றால் விளாங்கனி யெறிந்தவனே! எனக்குப் பெரிதாகிய கலியாண மாதவனே! உனக்கு மங்களம். வேங்கட நாயகா! நீ இத்தன்மையாக நன்றாயிருக்கவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 48
———–

இந்தாவெனாவென திச்சை நீ யெளி நீவையே லிழிவாகுமோ,
சந்கானமா மலராலருச் சனை செய்தவார் தவிர்வார்களோ,
வந்தானபேர் துதி யார்களோ வசுதேவர்சீர்குறையாகுமோ,
நந்தாத பெண் ணகை செய்வளோ நாராயணா நாராயணா.       49

[இ-ள்.] அடியேனுடைய இச்சையானபடியே இங்கே வாவென்று தேவரீர் எளிதாகப் பலனைக் கொடுத்தருளினால் உமக்கு இகழச்சியாகுமோ? கற்பக மலரினாலே அருச்சனை செய்யா நின்ற தேவர்கள் விட்டுவிடுவார்களோ? சந்நிதானத்தில் வந்தபேர்கள் துதியார்களோ? வசுதேவருடைய உடைமையிலேகுறைந்து போகுமோ? அழிவில்லாத ஸ்ரீமகா லட்சுமி நகைப்பாளோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

சிற்றப்பனோ துருவற்கு நீ தெதிபாண்டனார் பெரியப்பனோ,
கற்றத்தைதேவகி தங்கையோ கண் டாகனன் மிதிலேசனோ,
சுற்றத்தரோ பெறுவோ ரெலாந் தொடுவேன்வழக் கிடுவேன் விடேன்,
நற்றப்படும் பொருடந்துபோ நாராயணா நாரா யணா.       50

[இ-ள்.] தேவரீர் முன்னாளையிலே இரட்சித்த பேர்களுக்குள்ளே துருவ மகாராஜனுக்கு நீ சிற்றப்பனே? தெதிபாண்டனென்னும் குயவன் உமக்குப் பெரியப்பனோ? கல்லுருவம் போக்கிக் கிளி போலப் பேசப்பண்ணாநின்ற அகலிகையானவள் தேவகிக்குத் தங்கையாகிய உமது சிறிய தாயாரோ? கண்டாகன னென்னும் விரோதியானவன் உமக்குப் பெண் கொடுத்த மிதிலைச் சனக மகாராசனாகிய அம்மானோ? இன்னம் பேறு பெற்ற பேர்களும் பெறும் பேறுகளும் உமக்கு உறவின் முறையார்களோ? ஆதலால் சம்பந்தமில்லாத பேரையெல்லாம் இரட்சித்தபடியினாலே தேவரீருக்கும் அடியேனுக்கும் வழக்கு விடுவதில்லை. ஆசைப்பட்ட பலனைக்கொடுத்து அப்புறம் போகவேண்டுமே யன்றிப் போகக்கூடாது ஸ்ரீமந் நாராயணா எ-று.
——–

தன்னெட்டெழுத் தயன் மத்தகந் தனிலே பொறித் தடி நாவிலே,
உன்னெட்டெழுத் தெழுதாமையா லுலகத்துளோ ரவனைத்தொழார்,
கன் னெட்டிடத் தருநெட்டிடக் கனனெட்டிடக் கன காலிபின்,
நன்னெட்டெலாந் தொடர்பாதனே நாராயணா நாராயணா.       51

[இ-ள்.] பிரமதேவனானவன் உலகத்திலேயுள்ள மானிடர்களுடைய தலைகளிலே தனது நெட்டெழுத்தை மாத்திரம் எழுதி அடி நாவுகளிலே தேவரீருடைய அஷ்டாட்சரத்தை எழுதாமற் போன படியினாலே அவனை ஒருவருந் தேடுகிறதே யில்லை. முல்லை நிலத்திலே கல்லுகள் நெட்டிடவும், விருட்சங்கள் நெட்டிடவும், அக்கினிகள் நெட்டிடவும், விஸ்தாரமாகிய பசுக்கள் பின்னாலே நன்மைபெற நெடிதான தூரமெல்லாம் நடந்தருளா நின்ற திருவடியை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 51
————

உரலுக்குமோ ருறுபஞ்சமோ வுனை நச்சினே னெனையச்சமன்,
விரலிட்டுதேர் வினைவல்லனோ விதிகைக்குளவ் விரலோசையால்,
பொரலுற்ற நோய் கழலப்பணாய்ப் புதிதாமருந் தொரு தூத னால்,
நரலைக்குளாய் வரவேண்டுபோ நாராயணா நாராயணா.       52

[இ-ள்.] குத்தா நின்ற உரலினுக்கு ஒருகாலத்திலேயும் தரித்திரம் வருவதில்லை. அத்தன்மை போலத் தேவரீரிடத்திலே நிரம்பிய ஐசுவரியமே யன்றி இல்லாததில்லையே. ஆதலால் உம்மிடத்திலே இச்சை கொண்டேன். இனி என்னை அந்த யமனானவன் விரல் விட்டுக்காட்டி யறிந்து வினை செய்யமாட்டுவனோ? பிரமாவினுடைய கைகளிலே யிரா நின்ற விரலும் என் றலையிலே எழுத அசைய மாட்டாது. வருத்தத்தைச் செய்யா நின்ற என் நோய் தீரும்படியாய்ச் செய்வதற்கும் புதிதாய் ஒப்பில்லாத சஞ்சீவியானது ஸ்ரீ அனுமாராலே வரவேண்டுமோ? ப்ராப்தி வாசனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 52
————

சமையாதிதே வதையென்பதுஞ் சமையாதி நின் பெயரென்பதும்,
உமையாளுடன் பரமன் பரிந் துனைமாமறைப் பொருளென்பதும்,
தமை யாள்வதென் றிமையோர் திலோத் தமையாதிபன் புகழ்கின்றதும்,
நமையாமலே யெனையாளுவாய் நாராயணா நாராயணா.       53

[இ-ள்.] சம்பங்களுக்கெல்லாம் அதிதேவதை நீயேயென்றும், எச்சமயத்துக்கும் உரியது உம்முடைய பெயரேயென்றும், மகத்தாகிய வேதப் பொருள் நீயேயென்று உமையவளுக்குச் சிவன் பரிந்து நிச்சயம்பண்ணினதும், தேவதைகளுக்கும் திலோர்த்தமைக்கும் அதிபனாகிய தேவேந்திரன் தங்களை இரட்சிக்குங் கர்ததனே யென்று புகழ்கின்றதுங் கெடாமற்படி என்னை இரட்சித் தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 53
———–

நீயண்டரா லடிபட்ட நா ணினைவில்லை நின் னுதரத்துளே,
போயண்டகோ டியிலெந்தவூர் புரையிற்குளே விளையாடினேன்,
மாயங்கடந் தறி வேனெனில் வரதன் கெடீர் வானோர்க்கெலாம்,
நாயன் கெடீர் விடுமென்பனே நாராயணா நாராயணா.       54

[இ-ள்.] தேவரீர் அசோதை முதலாகிய இடையராலே அடிபட்ட நாளையிலே அடியேனுக்கு நினைவில்லாமற் போயது. அது எதனாலேயென்றால், உமது குட்சிக்குள்ளே இரா நின்ற அண்ட கோடிகளிலே எந்த சந்துகளுக்குள்ளேயோ விளையாடினேன். நீர் செய்யும் மாயம் நீங்கி யறிந்தே னேயானால் தேவதைகளுக் கெல்லாம் உம்மை வரதனென்றும், நாயகனென்றும். அந்த இடையர்களுக்குத் தெரியப்படச் சொல்லிக் கெடுவீர்கள். விட்டுவிடுங்கோளென்று நீக்கிவிடுவேன். திருமேனி என்னவிதமாக நொந்ததோ? இப்போது பெரியோர்களாலே யறிந்தேன் – அறிந்துஞ் சமயத்திலே உதவாதே போனேன். இனி வருந்தி என்ன பிரயோசனம்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 54
————-

காசிக்குளுங் கயையிற்குளுங் கழியாதபா தக னாகையால்,
கூசிக்குலைந் துனைவந்தியேன் குறை யாகுமோ வினையென்பதோர்,
வாசிக்குவந் தருள் செய்குவாய்வயிரத்திராவணன்றங்கைதன்,
நாசிக் குவா ளெறியையனே நாராயணா நாராயணா.       55

[இ-ள்.] காசியினிடத்திலேயும் கயாவினிடத்திலேயும் வாசமபண்ணினாலும் நீங்காத பாவியான படியினாலே மனது கூசக் கலைந்து தேவரீரைத் தோத்திரம் பண்ணாமல் விட்டுவிட்டேன். அதினாலே உமக்குக் குறைவாகுமோ? அடியேனுடைய வினையென்னும் வாசி தீரும்படியாய்வந்து கிருபை செய்தருள வேண்டும். முன்னாளிலே வயிபத்தோடுங் கூடிய இராவணன் தங்கையாகிய சூர்ப்பனகையினது மூக்கறும்படியாய்ச் செய்த வாளாயுதத்தையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 55
———-

தாளுக்கவா விய நாவினுஞ் சலியாதுவா சனி யானநோய்,
ஆளைக் கெடா தின்றைக்குவா வசை யாமலே யன்றைக்குவா,
தோளுக்குவா ளியை யெய்தவன் துயர்கண்டிரா வணனின்று போய்,
நாளைக்குவா .வெனுமையனே நாராயணா நாரா யணா.       56

[இ-ள்.] தேவரீருடைய திருவடிகளுக்கு ஆசை கொள்ளா நின்ற எனது நெஞ்சிலேயும் நாவிலேயும் வருத்தமில்லாமல் வரவேண்டும். சனியான நோயானது அடிமையைக் கெடுத்துவிடாமல் இன்றைக்கே வரவேண்டும். சரமதிசையிலே யமனைக்கண்டு சஞ்சலிக்கு முன்னமே அன்றைக்கு வரவேண்டும். முன்னாளையில் பாணங்களைத் தோள்களிலே யழுந்தும்படியாய் எய்து அவனது துயரத்தைக்கண்டு, வயிரத்தையுடைய இராவணா! நீ இன்றைக்குச் சென்று நாளைக்கு வாவென்று கிருபை பண்ணாநின்ற என்னையனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

விக்கற்கிடம் பொருமற்கிடம் விடுமூச்சுமே லெழுதற்கிடம்,
கக்கற்கிட மிருமற்கிடங் கருதற் கிடந்திருகற்கிடம்,
சொக்கற்கிடங்குளிர் தற்கிடஞ் சுடுதற்கிடம் வெருவற்கிடம்,
நக்கற்கிடந் தரு மெய்யருள் நாராயணா நாராயணா.       57

[இ-ள்.] விக்கலென்றும், பொருமலென்றும், மேல்மூச்சென்றும், கக்கலென்றும், இருமலென்றும், கருகலென்றும், திருகலென்றும், சொக்குத லென்றும், குளிர்தலென்றும், சுடுதலென்றும், பயப்படுதலென்றும், நக்கலென்றும் சொல்லா நின்ற அந்தப் பீடைகளுக்கெல்லாம் இடங் கொடுத்திரா நின்ற தேகத்தையுடைத்தாகிய அடியேனை இரட்சித்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 57
————-

துளசீதளத் துளசீதளத் தூய் நீரதே குடி நீ ரதாம்,
உளதாயிரம் பெயரெண்ணு நூற் றொரு கோடிமந் திரமேலதாம்,
வளமார்பின்மா மணி யென்னவே மணியாமெனைப் பிணியென் செயும்,
நளகூபரன்பகைவென்றவா நாராயணா நாராயணா.       58

[இ-ள்.] திருத்துழாயினது தளங்களிலே பொருந்துங் குளிர்ந்த நீரே குடிக்குங் கஷாயங்களுக் கெல்லாம் மேலாகிய கிஷாய நீராகவும், நிலை பெற்றிரா நின்ற ஆயிரந் திருநாமங்களும் நூற்றொருகோடி மந்திரங்களுக்கு மேலாகிய மந்திரமாகவும், வளம் பொருந்தா நின்ற திருமார்பிலே யிருக்கும் கவுஸ்துவமணியே மணிகளுக் கெல்லாம் மேலாகிய மணியாகவும் இருக்கின்றன. ஆராயுமிடத்தில் இதுவே மணிமந்திர அவுஷதமாக விருக்கப் பிணியானது அடியேனை என்ன செய்யும்? நளகூபரனுடைய சாபத்தைத் தீர்த் தருளிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 58
———–

சுவையோசையூ றொளிமாமணந் தொடரா மனஞ் சுழல் கெண்டையும்,
கவைமானுமானையும் விட்டிலுங் களிவண்டுமே விளிகின்றபோல்,
இவை தூயவென் றிவை தீயவென் றினியுண் டிலே னினியென் செய்வேன்,
நவைதீரவேயருள் செய்குவாய் நாராயணா நாராயணா.       59

[இ- ள்.] ஆகார வுருசையினாலே கெண்டையும், மணியோசையினாலே கிளைமானும், தேகப் பரிசத்தினால் யானையும், தீபப் பிரகாசத்தினாலே விட்டிற்பூச்சியும், வாசனையினாலே மதர்த்த வண்டும், இவை ஐந்தும் மனந் தொடர்ந்து சுழன்று விழுந்து இறந்து போவது போலே எனது பஞ்ச இந்திரியமும் இது நன்மையென்றும், இது தீமை யென்றும் தெரிந்து புசிப்பதில்லை. இனி யென் செய்வேன்? இந்தக் குற்றந் தீரும்படியாய்க் கிருபைசெய்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று
———–

நெட்டேணியின் படியெட்டுமோ நின்னெட் டெழுத் தெழிலண்டமேல்,
எட்டாமெனும் பத மெட்டவே யிரதித்தசர்க் கரையேயதின்,
வட்டே பசும் பழமேசதா மதுரித்தவா ரமுதேயெனும்,
நட்டேயருட் புனல்கட்டுவாய் நாராயணா நாரா யணா.       60

[இ-ள்.] மூங்கில்களாலே நெடியகாயமைத் திரா நின்ற ஏணியினது படிகளிலே ஏறினால் பரம பதம் எட்டமாட்டாது. ஆதலால் ஏழு அண்டத்துக்குமேல் எட்டாவதாகிய அந்தப் பரமபதத்துக்கு ஏறிவர உபாயமுண்டு. அது யாதெனில், நினது திருமந்திரமாகிய எட்டெழுத்தையும் எனது நெஞ்சிலே நட்டு, இரம்மியமான சருக்கரையுங் கற்கண்டும் கனிந்த முப்பழமும் நித்திய மதுரமாகிய ஆராவமிர்தமும் இவைகளுடைய சுவைபோலே பரவும்படியாகக் கிருபைப்புனல் கட்டினால் ஏறிவருவேன் ஸ்ரீமந் நாராயணா எ-று.
————-

காணுங்கணே குவியுங்கையே கருதுள்ளமே கனலாஞ்சனம்,
பூணும்புயம் புளகாங்கமே புகழ் நாவதே திகழ்கேள்வியே,
ஆணும் பெணுஞ் சரணென்பதே யவையல்லனா ளபராதிகாண்,
நாணும் பெயர்க் காதாரமே நாராயணா நாராயணா.       61

[இ-ள்.] தேவரீர் திருவடியைக் காணா நின்ற கண்களும், குவியா நின்ற கைகளும், நினையா நின்ற உள்ளங்களும், மந்திராக்கினிபொருந்திய சங்கு சக்ர வாஞ்சனம் பூணாநின்ற புஜங்களும், புளகங்கொள்ளா நின்ற தேகங்களும், புகழா நின்ற நாவுகளும், கேட்கா நின்ற செவிகளும் இவைகள் பொருந்திக் குடும்பத்துடனே சரணாகதி பண்ணா நின்ற அடியார்களைப்போலப் பொருந்தினவன் நானல்லன்; மிகுந்த அபராதத்தை யுடையவன். ஆதலால் தரிசனம்பண்ண வெட்கத்தை யடைந்தேன். இத்தன்மையான வெட்கத்தை யடைந்த பேர்களுக்கெல்லாம் ஆதாரமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

கவி நல்லதோ கவிதீயதோ கனமூடனான் விதைவித்திடும்,
புவி நல்லதேல் விளைவெய்துமே புகழ் நல்லதேல் புகர்கேட்கவென்,
செவி நல்லதே லருணல்லதே செயனல்லதே லியனல்லதே,
நவி நல்லதே வரினாவிலே நாராயணா நாராயணா.       62

[இ-ள்.] மிகுந்த மூடனானவன் பாடா நின்ற கவிதையானது நன்மையாயதோ? தீமையாயதோ? தெரியவராது. விதைக்கா நின்ற விதையானது பூமி நல்லதாயிருப்பின் விளையுமேயன்றி விளையாமற் போவதில்லை. ஆதலால் உமது புகழும் கிருபையுஞ் செயலும் இயலும் நல்லதானபடியினாலே அதை என் காதிலே கேட்டு நாவினாலே தோத்திரம் பண்ணினால் நன்மை வருமேயன்றித் துன்பம் வருவதில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 62
————-

பசைகொண்டபா கவதாகமம் பருகா துகா துருகாது நெஞ்,
சசை கொண்டபா தக நீரிலே யமிழ்வேனையா ணவமாதியாம்,
கசைகொண்ட மோ துகைதாக்குமோ களவுள்ள தா னுன தன்பி லேன்,
நசைகொண்டகா ரியமாகுமோ நாராயணா நாராயணா.       63

[இ-ள்.] தேவரீரிடத்திலே அன்பு பொருந்தா நின்ற பாகவதாள் சொல்லிய ஆகம சாஸ்திரங்களை எனது காதானது கேட்பதுமில்லை. நெஞ்சானது உருகுவதுமில்லை. அலையா நின்ற பாதகக் கடலிலே விழுந்த என்னைக் காமம் வெகுளி மயக்க மென்சிற பிரமை எடுத்துக்கொண்டு வினையானது மோதி யடிக்கும். திருட்டு மனத்தை யுடைத்தான வனாய் உம்மிடத்திலே பத்தியில்லாமல் பரமபதத்துக்குக் காதல் கொண்டதால் அந்தக் காரிய மாகுமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 63
———–

பலகூறுபட் டொருநெஞ்சினன் பரிசென்ன வெங் கணுமானவா,
விலகூறு கொண் டெனை விண்டதென் விரனீக்கிமோர் நுகர்வார்களோ,
மலகூறலாய் நீதானு மென் மதிதன்னைவிட் டெனையொத்தனை,
நலகூறுவார் சுரதேனுவே நாராயணா நாராயணா.       64

[இ-ள்.] அடியேன் பலவிதமான இடையூறு பட்ட ஒரு நெஞ்சை யுடையவனானேன். தேவரீர் வாய்வு பரிசம்போலே எங்கும். நிறைந்தவ ரானீர். ஆதலால் என்னை மாத்திரம் நீங்குப்படி யான குற்றத்தைத் தேடிவிட்டதென்னோ ? விரல் நீக்கி மோரைக் குடிக்கிற பேர்களுமுளரோ? கிருபையுற்றுப் பெருகிய உண்மையான இருதயத்திலே என்னை மறந்துவிட்ட படியினாலே தேவரீரும் அடியேனுஞ் சமானமேயன்றி அதிசயம் இல்லை. நன்மையாகத் தோத்திரம் பண்ணாநின்ற தேவர்களுக்குக் காமதேனுவாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 64
—————–

வாஞ்சித்ததே வதையாகுநீ வடவேங்கடந் தனினிற்கவும்,
நீஞ்சித்திரிந் தனன் வீணிலே நிழல்கண்டபின் வெயினிற்பரோ,
காஞ்சித்தலத் தருளாளனே கனகோபுரக் கொடியாடுமொண்,
நாஞ்சிற்றிருப் பதிவள்ளலே நாராயணா நாரா யணா.       65

[இ-ள்.] அடியேனுடைய நெஞ்சிலே ஆசை கொள்ளா நின்ற தெய்வமாகிய தேவரீர் இந்தத் திருவேங்கடத்தில் தானே எழுந்தருளி யிருப்பது தெரியாமல் வீணிலே உலகமெல்லாந் திரிந்து அலைந்தேன். இனி நிழல்கண்டபேர்கள் வெயிலிலே நிற்பதுண்டோ ? கனம் பொருந்திய கோபுரங்களிலே கொடிகளாடா நின்ற அழகிய மதில்களோடுங் கூடிய காஞ்சித்தலமுதலாகிய நூற்றெட்டுத் திருப்பதிகளிலேயும் அருளாள ரென்றும் வள்ளலென்றும் விளங்கிய ஸ்ரீமந் நாராயணா. எ-று.
—————–

மை நாகமா ழியையண்டிவரழ் வகையென்ன நின் னருள்வெள்ளலாஞ்,
சையினாலிருந்ததிலூ றவே சமைவேனுறத் தருமாறெவன்,
கையினா லறிந் திடரண்ணிய கலி தீர நீ யருள் செய்திடும்,
நைனாரினிற் சரியாவனோ நாராயணா நாராயணா.       66

[இ-ள்.] மை நாகமலையானது சமுத்திரத்திலே முழுகி வாழுந் தன்மைபோலே தேவரீருடைய கிருபாசமுத்திரத்திலே ஆசையாயிருந்து ஊறும் படியாய்ப் பொருந்தின எனக்கு வரத்தைக்கொடுக்கும்படியான மார்க்கம் எவ்விடத்திலேயோ தெரிய வராது. நான் பிரமாவினுடைய சிரத்தைக் கிள்ளிப் பொருந்தா நின்ற தரித்திரம் தீரும்படியாய்த் தேவரீர் கிருபை பண்ணா நின்ற ருத்திரனுக்குச் சமானமாக மாட்டுவேனோ? ஸ்ரீமந் நாராயணா. எ-று.
————-

எமக்கென்று வாழ் குடுப்பத்திலே யிழுப்புண் ணுவாரெமதாதையர்,
தமக்கொன்றைவைத் தில ரென்பரே சழக்குள்ளபேர் வழக்குள்ள பேர்,
சுமக் கின்றவச் சுமையாளனச் சுதன்மற்றையச் சுமை கட்கெலாம்,
நமக்கென்னகா ரியமென்பரே நாரா யணா நாராயணா.       67

[இ-ள்.] எமக்கென்று வாழா நின்ற குடும்பத்திலே அவதிப்படும் பேர்களாகிய பாவிகள் நம்முடைய அவதி தீரும்படியாய் நம்முடைய பிதாக்கள் நமக்கு ஒன்றையும் வையாமற் போனார்களே யென்று அழுவார்கள். இந்தச் சம்சாரமாகிய சுமையைச் சுமக்கா நின்ற புருஷன் அச்சுதனாகையாலே அந்தச் சுமைகளைத் தாங்க நமக்கென்ன காரியமென்று அறிவுடையோர் சந்தோஷிப்பார் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

பசுக்கட்குமா யினைபாடியிற் பலபாடியா டியு மாயர் தம்,
சிசுக்கட்குமாயினைமைந்தனாய்த் திருட் டுக்குமா யினையன்று தான்,
முசுக்கட்குமா யினை நாயினேன் முசிப்புக்குமா யருள்பூவையே,
நசுக் கிப்பின்வா சனைகொள்வரோ நாராயணா நாரா யணா.       68

[இ-ள்.] ஆயர்பாடியிலே யிரா நின்ற பசுக்கூட்டங்களுக்கு இரட்சக கர்த்தாவாகியும், இடைப் பிள்ளைகளுக்குப் பாடலுடனே ஆடல்காட்டியும், சிறுபிள்ளைகளாகி வெண்ணெய் திருடுந் தொழிலுக்கு இசைந்ததுமல்லாமல் முன்னாளையிலே குரங்குகளுக்கு நேசமாகி இரட்சித்த தேவரீர் நாயினேனுடைய தளர்ச்சிக்குக் கிருபை பண்ணாமல் புட்பத்தை நசுக்கி முகர்வாரைப்போல உபேக்ஷை பண்ணலாமோ? ஸ்ரீமந் நாராயணா எ-று. 68
———–

குலங்காணவே குடிகாணவே குணங்காணவே பழுதாயினும்,
பலங்காணுநின னடியாரெனிற் பவசாகரப் பரப்பென்னுளங்,
கலங்காமலே கலங் காணுமே கழலாமலே கழல்காணுமே,
நலங்கா மலே நலங்காணுமே நாராயணா நாராயணா.       69

[இ-ள்.] குலவண்மையும் குலத்தின் நிலைமையும் குணப்பெருமையும் இவைகளைக் காணுமிடத்தில் பழுதாயிருந்தாலும் தேவரீருக்கு அடிமைப் பட்டார்களேயானால் மேன்மை பெறுவார்கள். ஆதலால் பாவ சமுத்திரப் பரப்புக்குள்ளே என்னுடைய நெஞ்சானது கட்டுவிட்டுக் கலங்கி ஒதுங்கி நலங்காமல் நலங்காணும் கப்பலைப் போன்ற திருவடியைக்காணும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 69
—————–

ஈன்றோனு நீ யலனானுமவ் வியலுந்தியண் டினனல்லனிற்,
போன்றோனெவன் பெறுபிள்ளை யைப் போபோபிதா வினவா திரான்,
சான்றோர் முனே யினிநோயை நீ தவிராயெனிற் சபதங் கெடும்,
நான்றோரைவீ சியவாளனே நாராயணா நாராயணா.       70

[இ-ள்.] என்னைப் பெற்றவனும் நீயல்லவோ? நானும் அருமையான இயல் பொருந்திய உமது உந்தியிலே யிருந்தவனுமல்லவோ? உம்மைப் போலே இரக்கமில்லார் எவரிருக்கிறார்கள்? போ போ! பிதாவானவன் பெற்ற பிள்ளையை வினவா திருப்பானோ? பெரியோர்கள் முன்பாக என்னுடைய நோயை இனி தீராமற் போனீரானால் உமது சரணாகதி சம்ரட்சணை என்கிறநெறி கெட்டுப்போகும். பகைஞரை வீசிய வாளாயுதத்தை யுடைத்தாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 70
————-

கஞ்சப்பதந் தனையங்ஙனே கட்டிக்கரைந் தவசத்தராய்,
நெஞ்சத்து நா ரணவென்று தா னியமித்து நித்திரைகொள்ளுவார்,
கொஞ்சத்தை நின் றளவாக்குவாய் குணபத்தைவாழ் குடியாக்கு வாய்,
நஞ்சத்தையா ரமுதாக்குவாய் நாராயணா நாராயணா.       71

[இ-ள்.] தேவரீருடைய தாமரைபோலும் திருவடியை உள்ளத்திலே நினைந்து ஞானக் கயிற்றினாலே அங்ஙனே கட்டிக் கரைந்துருகிப் பரவசத்தையடைந்து ஸ்ரீமந் நாராயணனே யென்று நிச்சயம்பண்ணி ஆனந்த நித்திரை கொள்ளுவார்கள். துரும்புபோலே யிருநதாலும் அவர்களை மகாமேருவாகச் செய்தருளுவாய். இதுவுமல்லாமல் புழுக்களை ஐஷ்வரியத்தை யுடைத்தாகிய குடும்பங்களாகவும், விஷத்தை அமிர்தமாகவும் செய்தருளா நின்ற மகிமையை யுடைய ஸ்ரீமந் நாராயணா எ -று. 71
———-

எழுநெட்டிருப் பருமேனிவந் தென்கைக் ககப்படுமென்று நான்,
தழுவிக்கொளத் திரிகின்ற னன் சகலச்சரா சரமாகு நீ,
வழுவிக்கொடங் கிங் கோடியே வர நல்கமுன் வரவஞ்சியே,
நழுவிக் கொடே திரிகின்றதென் நாராயணா நாராயணா.       72

[இ-ள்.] நெடியதாய் வளர்ந்திரா நின்ற உமது பருத்த திருமேனியானது எனது கைக்குள்ளே வந்து அகப்படுமென்று நான் தழுவிக்கொள்ளத் திரிகின்றேன். சகல சராசரங்களாகிய தேவரீர் என் முன்னேவந்து வரத்தைக் கொடுக்கப்பயந்து
அங்கு மிங்கும் ஓடி வழுவிக்கொண்டும் நழுவிக் கொண்டும் திரிகின்றது என் சொல்லும்? ஸ்ரீமந் நாராயணா எ-று. 72
—————

எனைக்காக்க நீ வரன் மேன்மையென் றிருப் பாய்பராக் கதுவுண்டு நின்,
றனைக்காத்தவா கன மில்லையோ தகுசேனைகா வலனில்லையோ,
நினைக் காத்தசே டனுமில்லையோ நினைவில்லையோ விமையோர்பிரா,
ணனைக்காத்தமாருதியில்லையோ நாராயணா நாராயணா.       73

[இ-ள்.] அடியேனை இரட்சிக்கவருதல் மேன்மையென் றெண்ணியிருப்பீர்; அவ்வாறு இருக்கு மெண்ணத்தில் பராக்கு வந்ததோ? அல்லது தேவரீருக்கு வாகனமாகவும் துணையாகவும் காத்துக்கொண்டிரா நின்ற கருடனும் சேனைக்காவலனும் ஆதிசேஷனும் தேவர்களாகிய வானவர்களுயிரை இரட்சிக்கச் சஞ்சீவி கொண்டுவந்த அனுமானும் இவர்களில்லாமற் போனார்களோ? அல்லது திருவுள்ளத்தில் ஞாபக மில்லையோ? சொல்லும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
———–

கண்பொன்று கோ மகன்மாற்றவன் கடுகொத்த பொய்க் கிருள் பார்த்ததோர்,
பண்பொன்ற நூலுரைசெய்ய நான் பலபொய்ச்சொலால் விளை யாடினேன்,
மண்பொன்றி நீரனல்பொன்றிவிண் வளிபொன்றவே வருமன்று நின்,
நண்பொன்று நீ தரல்வேண்டுமே நாராயணா நாராயணா.       74

[இ-ள்.] கண்பார்வைபோன திருதராஷ்டிரன் குமாரனாகிய துரியோதனனுக்குப் பகைவனான தர்மராசன் கடுகளவு பொய் சொன்னதினாலே இருள் சூழ்ந்த நரகத்தைப் பார்த்தானென்று ஒப்பில்லாத பண்பு போன்ற சாஸ்திரஞ் சொல்லும் போதும் நான் அநேகமான பொய்களை விளையாட்டாகச் சொல்லினேன். ஆதலால் எனக்கு என்ன கதியோ தெரியவராது. பிரிதிவு, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் தேவரீர் குட்சியில் அடங்குங்காலத்திலே அடியேனும் வந்து சேருவேன். அப்போதாகிலும் உமது நண்பொன்று மாத்திரம் வைத்து இரட்சித்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 74
————

போகேந்திரன் சிரமேந்து நின் பூதேவி புல் லரையேந்தவே,
ஆகேனெனா வுரைசெய்வனே லடியேனையேந் துகைவேண்டுவாய்,
மாகேந்திரன் றன தம்பியே வடவேங்கடா சலவள்ளலே,
நாகேந்தியே நகமேந்தியே நாராயணா நாராயணா.       75

[இ-ள்]. சர்ப்பங்களுக்கு இராசனாகிய ஆதிசேஷன் முடிகளிலே ஏந்தா நின்ற உமது தேவியாகிய பூமிதேவியானவள், பாபிகளைத் தாங்குதற்கு வருத்தமாயிருக்கிறதென்று தேவரீருடைய திருக்செவியிலே விண்ணப்பஞ் செய்தருள்வாளாகில், அடியேனை-மாத்திரம் தாங்கிக் கொள்ளும் படியாய் வேண்டிக்கொள்ளவேண்டும். தேவேந்திரனுக்குத் தம்பியாகவும், திருவேங்கடமலைக்கு நாயகனாகவும் பொருந்திய வள்ளலே! பாஞ்ச சன்னியத்தையும் கோவர்த்தனகிரியையும் ஏந்தி யருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
————

ஊழிற்பிறந் திடுபாவநோ யுடலைத்தொடா வகைதந்திடாய்,
வாழிக்கு நா யகனிந்திரன் மனு வின்பதம் பெறவிச்சியேன்,
ஆழிக்கையுன் கொடைமிக்கதென் றடியேன்மிகப்பெறலாகுமோ,
நாழிக்குடங் கலங்கொள்ளுமோ நாராயணா நாரா யணா.       76

[இ-ள்.] இகத்திலே மனுச்சக்கரவர்த்தியினுடைய பதமும், பரத்திலே வாழ்வுக்கு நாயகனாகிய இந்திரனுடையபதமும் இச்சையாக வேண்டுவதில்லை. ஆதலால் ஊழ்வினையினாலே பிறந்திடா நின்ற பாவநோயானது அடியேனுடைய தேகத்திலே சேராவகை செய்தருளிய பரமபதத்தைத் தேவரீர் கடாட்சித்தருளவேண்டும். திருவாழி தரித்த திருக்கரத்தை யுடையவனே! உம்மிடத்திலே மிகுந்த தியாகம் உண்டென்று நானிச்சை கொண்டதினாலே மிகுந்து வருமோ? என்பிராப்தி எவ்வளவோ அவ்வளவே முடியும். அது எத்தன்மையென்றால், நாழிக்குடத்தைக் கொண்டுபோய்ச் சமுத்திரத்திலே யமிழ்த்தினால் நாழிகொள்ளுமேயன்றி கலங் கொள்ளுவதில்லை ஸ்ரீமந் நாராயணா எ-று. 76
———

தனுவுக்குளே யுளராறுபேர் சலிகைக்கு நா யகருன்னை நான்,
பனுவற்சொலா வகைதட்டுவார் பழகிச்சதா நெறிகட்டுவார்,
அணுவற்றசோ ரரையெற்றியேயடியேனையாளர சென்னவே,
நணு கிக்கொடே திரிகின்றனன் நாராயணா நாராயணா.       77

[இ-ள்.] என்னுடைய தேகத்துக்குள்ளே இரா நின்ற காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்று சொல்லா நின்ற இந்த ஆர்பேர்களுண்டு. அவர் சலிகைக்கு நாயகராகிய தேவரீருக்குக் கவிதைகள் பாடாதவகை தட்டுவார். நித்தியமும் பழகின மார்க்கத்தையுங் கெடுப்பார். ஆதலால் கிரமம் நீங்கிய அத்திருடர்களைக் கொன்று அடியேனை ரட்சித்தருளும் கர்த்தனே யென்று அடுத்துக்கொண்டு திரிகின்றனன் ஸ்ரீமந் நாராயணா எ-று. 77
————–

உடைச்சேலைதா குழைக்கோலைதா யுணச் சோறு தா பணப்பேறுதா,
கடைப்பூவடா வடைக் காயடா கறிக்காசடா கடைக்கோளனே,
கிடைக் கோடிவா முடிச்சேதடா கிறுப்பாவையார் வெறுப் பார்பொலா,
நடைக்காசையா யிறுத்தேன லோ நாராயணா நாராயணா.       78

[இ-ள்.] உடுக்கிறதற்குச் சேரலை தாடாவென் றும், காதுக்குப் பொன்னோலை தாடா வென் றும், உண்கிறதற்குச் சோறு தாடாவென்றும், மிகுந்த பணங்களைத் தாடா-வென்றும், கடைப் புஷ்பங்களை வாங்கித்தாடா வென்றும், பாக்கு வெற்றிலை தாடா வென்றும், கறிக்குக் காசுதாடா வென்றும், கடைப்பட்ட கோளனே யென்றும், படுக்கைக்கு ஓடிவடாவென்றும், அடிச்சோம னிலே முடிச்சேதடாவென்றும், கிறுதாகப் பேசி வெறுத்துக் கொள்ளா நின்ற வேசியருடைய பொல்லாத நடத்தைகளிலே ஆசையாய்த் திரவியத்தையெல்லாம் இழந்துவிட்டு விழலனானேன் ஸ்ரீமந் நாராயணா எ.று. 78
————

கன்னிப்பெருங் கடலோடுவான் கம்பத்திலே விளையாடுவான்,
உன்னிக்கொளும் பயமென் னநோ யொருபட்டுநெஞ் சொருமிக்கிலேன்,
என் னிற்பயந தெளிவித்திடா யல்லோர்க்குமீந் தென் மட்டிலே,
நன்னிக்குணம் பிடிபட்டதே நாரா யணா நாராயணா.       79

[இ-ள்.] பெரிதாகிய கடலிலே நீந்தவும், கம்பத்திலேறி விளையாடவும், பொருந்திய இளம் புத்தியையுடையவன் சென்ற பிற்பாடு நினைத்துக் கொள்ளா நின்ற பயங்களைப்போலே நோயானது வருத்தியும் எனது நெஞ்சு ஒருமித்ததில்லை. ஆகையால், என்னிடத்திலே உண்டாகிய பயத்தைத் தெளிவித்தருள வேண்டும்; யாவருக்குங் கிருபை செய்கிற நீ என் மட்டுஞ் செய்தருள உமக்கு லோபகுணம் பிடிபட்டதோ? ஸ்ரீமந் நாரா யணா எ-று.
————–

புட்புள்ளவன் கொடியென்னவே பொற் பொன்னவன் கலையென்னவே,
கட்புண்டரீ கம லத்தினேர் கண்ணென்னவே கரைகின்றிலேன்,
சட்புள்ளவுன் சமயத்திலே சலமண்டினேன் சர ணண்டினேன்,
நட்புள்ளதோ பகையுள்ளதோ நாராயணா நாராயணா.       80

[இ-ள்.] பட்சிரூபமாகிய கருடக்கொடியனே யென்றும், வன்மைபெற்ற சுவர்ணவஷ்திரனே யென்றும், தேனோடுகூடிய சிவந்த தாமரைக்கண்ணனே யென்றும், கரைந்துருகாத பாவியான வன் உமது சமயத்தில் வயிராக்கியம் பொருந்தித திருவடி யடைந்தேன். அடியேனிடத்திலே நேச மிருக்குமோ? பகையிருக்குமோ? தெரியவராது ஸ்ரீமந் நாராயணா எ-று. 80
—————-

கச்சுப்பிதிர்ந் தெழுகொங்கையார் கடைவாள் விழிப் படைகோடிகள்,
தச்சுக்கிடந் திடுநெஞ் சிலே தனியம்புதைத் தவருய்வரோ,
பிச்சுத்தயா பரனான நீ பெருமந்திரந் தனிலாற்றுவாய்,
நச் சுப்பெருஞ் சுதைவேலையாய் நாராயணா நாரா யணா.       81

[இ-ள்.] கச்சடங்காமழெழுந்த கொங்கைகளை யுடைய கன்னியர் கடைக்கண் பார்வையாகிய ஆயுதகோடிகள் எனது நெஞ்சிலே தைத்துருகிப் புண்ணாகியது. அந்த நோயை என் சொல்வேன்? ஒருபாணம் பட்டவர்கள் பிழைப்பதில்லையே? ஆதலால் நித்தியபரனாகையினாலேயே இந்தப் பாணங்களைப் பிடுங்கிப் புண்களை உமது பெரிதாகிய திருமந்திரத்தினாலே ஆறும்படி செய்தருளவேண்டும் ஆசையுடனே உயர்ந்த அமிர்தக்கடலிலே மேவும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 81
————

எய்தாரிருந் திடவம்பைநோ மிழிவாளர் போற் பழிபாதகம்,
செய்தாரிறுத் திடலன்றியே தெய்வந்தனைச சிதைவாகவே,
வைதாவதென் விதனத்திலே வழிதப்புமே வாய்பாறுமே,
நைதா துவின் பரகாரனே நாராயணா நாராயணா.       82

[இ-ள்.] பாணத்தை யெய்தவனிருக்க, அம்பை நோகா நின்ற இழிவாளர்போல பழிபாதகஞ் செய்த நானல்லவோ அனுபவிக்கவேண்டும். அதுவன்றித் தேவரீரை விதனத்தினாலே கெடுதலாக வைதென்ன பிரயோசனம்? இதனால் நன்மார்க்கமுஞ் சத்தியமுங் கெட்டுப்போகுமேயன்றி வெறில்லை. சரமதிசையிலே நைந்துபோகா நின்ற தாதுவுக்கு வயித்தியனாகிய ஸ்ரீமந்நாராயணா எ-று.
—————–

முகிலுக்குளே யடிபட்டவோர் முதுமக்கள் போற்றுணிவிக்குநோய்,
மிகவற்பமோ விடுவித் திடாய் விமலத்த நீர் மடுவுக்குளே,
துகிலைக் கொடாய் துகில்விட்டிடாய் தொழவெட்கமே விய மைக்கணார்,
நகிலுக்குள் வீழ் நகையச்சுதா நாரா யணா நாராயணா.       83

[இ-ள்.] மேகவருஷத்திலடிபட்ட கிழவர்கள் வருத்தத்தை யடைந்து, இறக்குமாப்போலே அடியேனிறக்கும்படியாய்த் துணிந்து செய்யா நின்ற நோயானது பெருகுதல் சொற்பமல்லவே. ஆதலாலது நீங்கும்படிக்குக் கடாட்சித்தருள வேண்டும். முன்னாளையிலே, பரிசுத்தமான சலத்தோடுங்கூடிய யமுனா நதியிலே ஸ்நானம் பண்ணா நின்ற கோபிகா ஸ்திரீகளுடைய வஸ்திரங்களை அபகரித்துக் கொண்டுபோய்க் கொடாமலும், விட்டுவிடாமலும், நின்றகாலத்திலே அவர்களும் மைத்தொழுது கேட்க வெட்கத்தை யுடையவர்களாய் மை தீட்டிய கண்பார்வையானது, தங்கள் கொங்கையிலே படியத் தக்கதாய்த் தலையைக் கவிழ்த்துக்கொள்ள நகைத்தருளா நின்ற ஸ்ரீமத் நாராயணா எ-று. 83
—————–

கமலத்தைவந் தயல்வண்டுணுங் கருதாத தேரைக ளொக்கவே,
அமலத்தை நீரிடைவாழினு மதுபோலவே, யயலாரெலாம் ,
நிமலப்பதந் தொழுமூரிலே நிலைபெற்றிருந் துனைவந்தியேன்,
ஞமலிக்குமோ றருள் செய்திடு நாராயணா நாராயணா.       84

[இ-ள்.] பரிசுத்தமான சலத்தோடுங்கூடிய தடாகத்திலே யிரா நின்ற தாமரையினுடைய பெருமையை அத்துடனே பிறந்த தவளை யறிய மாட்டாது; பக்கங்களிலேயிருந்து வண்டுகளதின் தேனை சாப்பிட்டுச் சந்தோஷத்தையடையும்.அது போல தேவரீர் நிலைபெற்றிரா நின்ற ஊரிலே, அடியேனிருந்து தேவரீரைத் தோத்திரம் பண்ணிக் கனடத்தேற வறியேன். அயலிலே இராநின்ற பிரம்மாமுதலாகிய பேர்களெல்லாந் தேவரீருடைய பரிசுத்தமான திருவடியைத் தொழுது கடைத்தேறுகிறார்கள், கடை கெட்ட சுவானத்துக்கும், கிருயை செய்தருளின ஸ்ரீமந் நாராயணா எ-று. 84
—————-

என் மாடுவீ டென்பிள்ளை பெண் டென் காணி மண் ணென் சொம்மெனும்,
தன்மாலிலே யறியாத பேர் தமதாகுமோ தானாவதார்,
வன்மாயமென் றதுகண்டு நின் வடவேங்கட பதிவைகியே,
நன் வானுயர் நிலை நிற்பரோ நாராயணா நாராயணா.       85

[இ-ள்.] என்மாடென்றும். என்வீடென்றும், என் பிள்ளையென்றும், என் பெண்சாதியென்றும், என்காணி மண்ணென்றும், என்னுடைமையென்றும், தங்கள் மயக்கத்தினால், மூடரான பேர் சொந்தமென் றிருப்பார்கள், அவைகள் தங்கள தாகுமோ? அவைகளுக்கும், இவர்களுக்கும், சம்பந்தமென்ன? இவையெல்லாம் வலிய மாய்கை யென்று தெளிந்து நன்மை பெற்ற மானிடரெல்லாந் தேவரீருடைய திருமலையை நித்தியபதார்த்த மென்று நினைத்துத் தங்கி உயர்ந்த நிலைபெறு வார்கள் ஸ்ரீமந் நாராயணா எ-று. 85
————-

பரலோகமும் பரரூபமும் பரபோகமும் பர மாயுவும்,
சுரலோகமுஞ் சுரரூபமுஞ் சுரபோக முஞ் சுரராயுவும்,
திரலோகமென் றிவையாவை யுந் திருவேங்கடந் தனிலுள்ள தால்,
நரலோகமே மிக நன்று கா நாராயணா நாராயணா.       86

[இ-ள்.] பரமபதமும், திவ்விய திருமேனியும், நித்தியானந்தமும், நித்திய தத்துவமும், மற்ற இமையவர் நாடும், இமையவர் மேனியும், இமையவர் ஆயுளும் இமையவர் போகமும், இமை யவர்களுக்கு நாயகனாகிய இந்திரனுடைய பதவியும் இவைகள் முதலாகிய ஜசுவரியங்களெல்லாந் தமது திருவேங்கடத்தை யடைந்த பேர்களுக் கெல்லாமுண்டாகிய தன்மையினாலே இந்த நர லோகமே மிகுந்த நன்மையானது. ஸ்ரீமந் நாரா யணா எ-று.
———-

அசவா தவன் பறிவேடரா ரடியேனுடம் பிணி நோயெலாம்,
கசவாது தின்பவர்போலவே கவ ராமலிங் கருள் கூறு வாய்,
குசவாயுதா சிறு கோவலா குறுவேதியா குலமன்னவா,
னசவா வியிற் பயிலன்னமே நாராயணா நாராயணா.       87

[இ-ள்.] அசைவில்லாமல் வலியபழியைச் செய்யா நின்ற வேடரானவர்கள், தயவில்லாமல் மிருகங்களைக்கொன்று தின்னுமாப்போலே அடியேனுடைய தேகத்தைப் பிணியானது பிடுங்கித் தின்னாமல் இவ்விடத்திற் கிருபை செய்தருள வேண்டும். கலப்பையாயுதத்தை யுடையவனே! இளமையாகிய கோபாலனே! குட்டனாகிய வாமனே! சூரியகுல மன்னவனே! மானச மடுவிலே விளையாடா நின்ற அன்னரூபமாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 87
————-

மீன்கூருமங் கிடிபாதியாண் மிருகங்குறள் பரசாளிகோ,
மான் கூறலா யுதனாயன் மேல் வரு வாகியும் பெருவாசியோ,
தேன் குருமா கமசார முஞ் சிறுபோகமோ கமசாரமும்,
நான்கூருரை குருபத்தனே நாராயணா நாராயணா.       88

[இ-ள்.] மச்சமென்றும், கூர்மமென்றும், வராகமென்றும், நரசிங்கமென்றும், வாமனமென்றும், பரசுராமனென்றும், ஸ்ரீராமனென்றும், பலராமனென்றும், ஸ்ரீகிருஷ்ணனென்றும், வந்ததல்லாமல் மேலும் கற்கியாய் வருவதினாலே உமக்குப் பெரிதாகிய பலனுண்டோ? மதுரம் பொருந்திய ஆகம சாஸ்திரமுஞ் சிற்றின்பமாகிய காம சாரமும் நான்குசாரமும் ஓதுவித்த குருவாகிய சாந்திபருக்குப் பக்தனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.
—————

மிறுக்கத்தகா தெனதாவியின் விளக்கிற்கு நின் னருணெய்யிடாய்,
பொறுக்கத்தகா ததுமெய் யுடல் புழுக்கத்தகா தொருபோரிலே,
குறுக்கிட்ட பேர் நடுக்கிட்டிடக் குலைவாணனார் திரடோ ளெலாம்,
நறுக்கிக்கையோர் துணைவிட்டவா நாராயணா நாராயணா.       89

[இ-ள்.] அவமாகிய எனதுதேகமானது புழுக்கங்கொண்டு பொறுக்கத் தகாமல் இறத்து போகிறது தகுதியான காரியமல்லவே. ஆதலால் உயிராகிய விளக்கானது அவிந்து போகாமல், தேவரீர் கிருபையாகிய நெய்யமுது பெய்தருளவேண்டும். ஒப்பில்லாத யுத்தமுகத்தில் குறுக்கிட்ட சிவன் முதலாகியபேர் நடுக்கங்கொள்ளப் பொல்லாத வாணாசுர்னுடைய விஸ்தாரமான தோள்களை யெல்லாஞ் சக்கரத்தினாலே நறுக்கி இரண்டு கையை மாத்திரம் விட்டருளிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 89
—————

புன்சொல்லிலே யகப்பட்டதும் போதாமலே யவமேற்றெனர்,
கென்சொல்லுவோ மென வெண் ணியோ யாதோவெ னக்கீயாது நீ,
தென் சொல் லிலே வடசொல்லிலே திருவாய்மொழிச் சதுர் வேதமா,
நன்சொல்லிலே விளையாடுவாய் நாரா யணா நாராயணா.       90

[இ-ள்.] அடியேனுடைய மூடபுத்தியினாலே பாடா நின்ற புல்லி தாகிய கவிதைச் சொல்லிலே அகப்பட்டதும் போதாமல், எனது அக்கியா னத்தையெல்லாம் ஏற்றபடியினாலே இவனுக்கு என்ன சொல்லுவோ மென்று திருவுள்ளத்தி லெண்ணியதோ என்னமோ கிருபை செய்தரு ளாமலிருப்பதை அறிகலேன். தமிழாகிய தென் சொல்லிலேயுங் கிரந்தமாகிய வடசொல்லிலேயுந் திருவாய்மொழி யென்னும் நான் குவேதத்தி னுடைய நன்மைபெற்ற சொல்லிலேயுந்திருவிளை யாடல் செய்தருளா நின்ற ஸ்ரீமந் நாராயணா எ-று.
———-

மெலியாமையுந் திருஞானமு மிகுபோகமுந் திடதேகமும்,
சலியாமையும் பகை நாசமுந் தன ராசியுந் தகுசீலமும்,
கலியாணமும் பெற நீதரக் கடனாளியாற் பினுமுன்னை நான்,
நலியாமலே யருள் கூறுவாய் நாராயணா நாராயணா.       91

[இ-ள்.] மெலிதலில்லாமையும், அழகிய ஞானமும், மிகுந்த போகமும், வலிய தேகமும், சலியாமையும், பகை நாசமும், திரவியராசியும், யோக்கியமான ஆசாரமும், கலியாணமும், இவையெல்லாந் தேவரீரிடத்தில் பெறும்படியான கடனாளி யானதால், இனி உம்மை நான் வருத்தாமல் பூரணமான கிருபை செய்தருள வேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று.
—————

சமர்த்தேது நல் லறமேதருந் தயையே தருந் தவமேதுமிக்,
கமைத்தே துமே லடைவேதுகா ரணமேதுபூ ரணமேதுசங்,
கமத்தே துரா கத மேது சொல் கமையேது சொல் கதியாவு நீ,
நமத் தேதுவாரகைவாசனே நாராயணா நாராயணா.       92

[இ-ள்.] சாமர்த்தியங்கள் தானேது? நல்ல தருமங்கள் தானேது. அருமையான தயவுகள் தானேது? அரிய தவங்கள் தானேது? மிகுந்த அமைப்புகள் தானேது? மேலாகிய அடைவுகள் தானேது? காரணங்கள் தானேது? பூரணங்கள் தானேது? கூட்டங்கள் தானேது? ஆணவங்கள் தானேது? சொல்லிய பொறுமைகள் தானேது? சொல்லா நின்ற மோட்சங்கள் தானேது? இவைகள் யாவும் தேவரீருடைய கிருபையே யன்றிரையும்
வேறில்லை. ஆதலால் உமது திருவடிகளுக்கே நமஸ்காரஞ்செய்து நின்றேன் துவாரகாவாசனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று. 92
———–

பித்தங்கயஞ் சொறிதே மல்கம் பிதமீளைகா மாலைபாண்டுவுன்,
மத்தஞ்சுரஞ் சளிசன்னிகால் வலிசூலைவிக் குதல்கக்குவா,
யுத்தம்பனந் தலை நோவுமற் றுளநோயெலாந் தொடராமலாள்,
நத்தன் முதற் கொருகாலனே நாராயணா நாராயணா.       93

[இ-ள்.] பித்தம் – க்ஷயம் – சொறி – வெள்ளைப் பாண்டு – நரை – ஈளை -காமாலை-பாண்டு உன்மத்தம். சுரம் – சளி – சன்னி – கால்வலி – சூலை-விக்கல்-கக்கு வாய்- தம்பனம் தலைநோய் மற்றுஞ் சொல்லா நின்ற நோய்களெல்லாம் அடியேனைத் தொட ராமல் இரட்சித்தருள வேண்டும். நத்தன் முதனுக்கு ஒரு இயமனாகிய ஸ்ரீமந் நாராயணா எ-று.(93)
———–

துறையூருமா முதலைக்குலச் சுனையொத்த மன்னவர் வாசலில்,
குறையூர்வதுங் கசைசாடவே குலைக்கின்றதுந் தலைசோரியாய்,
முறையூர்வதும் பிறகுன்னையே முனிபாவமுந் தெரியேனலன்,
நறையூரனே கருடாசலா நாராயணா நாராயணா.       94

[இ-ள்.] முதலைக் குலஞ் சஞ்சரியா நின்ற துறையையுடைய சுனைபோலேயிரா நின்ற துஷ்ட மன்னர் வாசலிலே குறைவுகளைச் சொல்லுமிடத்தில், அவர்கள் தருமம் விசாரியாமல் நேர்ந்த படிக்குப் பிரம்புகளாலே அடித்திடத் தேகம் நொந்து தலைகளிலே உதிரம் பெருகும் போது முறையமிட்டுக் கேள்வியில்லாமல் பிற்பாடு தேவரீரைத் தெய்வமேயென்று வெறுத்துக் கொள்பவருடைய பாவந் தீர்வதேயில்லை. ஆதலால் தேவரீர் சந்நிதானத்திலே முன்னம் முறையமிட் டேன்; திருநறையூரிலேயுந் திருவேங்கடமாகிய கருடாசலத்திலேயும் நிலைபெற்ற ஸ்ரீமந் நாரா யணா எ-று. 94
———–

பிணிவிட்டதே விதியாவையும் பிழைவிட்டதே சுகசீவியாய்,
பணிவிட்டதே தமனாரெனும் பகை விட்டதே பலபூசலும்,
தணிவிட்டதே யதி ஞானமே தகவிட்டதே யுனையோதவாய்,
நணி விட்டதே யென்மட்டிலே நாராயணா நாராயணா.       95

[இ-ள்.] அடியேனுடைய சனனங்கள் தோறுந் தொடரா நின்ற பிணிகளையும், விதிகளையும், எமன் பகைகளையும், மன்மதன் சண்டைகளையும், இவை முதலாகிய யாவையும் நீக்கிச் சுகசீலியாகவும், அதிக ஞானியாகவும், வாக்கினாலே உம்மைஓதும படியாகவும், என்மட்டிலே பொருந்துதலாகத் தேவரீருடைய கடாக்ஷ வீட்சணியஞ் செய்தருளியது ஸ்ரீமந் நாராயணா எ-று. 95
———

வாய்செய்தபுண் ணியங்கோடியென், வழி செய்த புண்ணியங்கோடியென் ,
தாய் செய்த புண் ணியங்கோடி தந்தையர் செய்த புண்ணியங்கோடி யென்,
பாசெய்த புண்ணியங்கோடியென் பதி செய்த புண்ணியங்கோடியென்,
நான் செய்த புண் ணியங்கோடிகாண் நாராயணா நாராயணா.       96

[இ-ள்.] எனது வாக்கும், எனது மரபும், எனது மாதாவும், எனது பிதாவும், எனது பாடலும், எனது ஊரும், எனது நாவும், இவைக ளெல்லாஞ் செய்த புண்ணியம் அநேகங்கோடி யானபடியினாலே தேவரீரைப் பிரசன்னமாகக் காணக்கிடைத்தது ஸ்ரீமந் நாராயணா எ-று. 96
———–

உன் கோயிலென் கால் சூழவு முன்பாதமென் கண்காணவும்,
நின்பாடலென் வாய்பாடவு நின் காரியங் கை செய்யவும்,
என்காது நின் புகழ் கேட்கவு மென்நெஞ்ச நின் னினைவுன்னவும்,
நன காக நல் லரமேயருள் நாராயணா நாராயணா.       97

[இ-ள்.] உமது திருக்கோயிலை என் கால் சூழவும், உமது திருவடியை என் கண் காணவும், உமது சரித்திரத்தை என் வாய் பாடவும், உமது கைங்கரியத்தை என்கை செய்யவும், உமது புகழை எனது காது கேட்கவும், உமது தியானத்தை என்னெஞ்சு செய்யவும், இத்தன்மையாகிய நல்ல வரத்தைக் கொடுத்தருளவேண்டும் ஸ்ரீமந் நாராயணா எ-று. 97
————
இற்கண்ணெலா நாராயணா வெங்கெங்கணு நாராயணா,
சொற்கண்ணெலா நாராயணா தொழி லெங்கணு நாராயணா,
முற்கண்ணெலா நாரா யணா முகமெங்கணு நாராயணா,
நற்கண்ணெலா நாராயணா நாராயணா நாராயணா.       98

[இ-ள்.] வீடுகள் யாவையினும் வெளிகள் யாவை யினும், சொல்லுகள் யாவையினும், தொழில்கள் யாவையினும், முன்னிடங்கள் யாவையினும், முகங்கள் யாவையினும், நல்லிடங்களெல்லாவற்றிலும், பரிபூரணமா யிருப்பது தேவரீர் சொரூபமேயன்றி வேறொருவருண்டோ ஸ்ரீமந் நாராயணா எ-று. 98
————

தேறுந்திருப் பதிவேங்கடா தெரிசித்து நாரணவென்று தான்,
நூறும்படிப் பவர்பன்னுவார் நூறும்மிருந் துலகாண்டபின்,
பேறும் பெறும் பிள்ளைப்பெறும் பெருமைப்பெறும் பெறுவிப் பையே
நாறுந்துழா யணிமார்பனே நாராயணா நாராயணா.       99

[இ-ள்.] வேதமுடிவிலே தேறா நின்ற திரு வேங்கடமென்னுந் திருப்பதியைத் தரிசித்து ஸ்ரீமந் நாராயண சதகம் நூறுபாடலையும், படிப்பவர்களும், அர்த்தங்களா-ராய்பவர்களும் நூறு வருஷமிருந்து பிள்ளைகள் முதலாகிய உலகாட்சி யினது பலனை அனுபவித்த பிற்பாடு அவர்களுக்குப் பெருமையைப் பெற்ற பரமபதத்தைக் கடாட்சித் தருள்வாய், பரிமளிக்குத் திருத்துழாயணிந்த திருமார்பையுடைய ஸ்ரீமந் நாராயணா எ-று. 99
———–

நனிவாழி நின் பல்கோயிலு நனிவாழி நின் பலதேவிமார்,
நனிவாழி நின் னடியாரெலா நனி வாழி நின் பல்லைபவம்,
நனிவாழி நின் வட வேங்கட நவிவாழி நின் களிகற்றபோ,
நனிவாழி நின் கவிகேட்டபேர் நாராயணா நாராயணா.       100

[இ-ள்.] சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும், மலை நாட்டிலும், நடு நாட்டிலும், தொண்டை நாட்டிலும், வட நாட்டிலும், தேவரீர் நித்திய வைபவமாய் விளங்கா நின்ற திருவரங்கம் பெரிய கோயில் முதல் பரமபதம் அந்தியமாகவிரா நின்ற நூற்றெட்டுத் திருப்பதியிலும், பாகவதர்கள் உச்சீவிக்கத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிரா நின்ற தேவரீருடைய திருக்கோயில்களெல்லாம் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது; தேவரீருடைய வக்ஷஸ்தலத்தி லின்பமுற்று வீற்றிரா நின்ற மகாலட்சுமியும், பூமிபிராட்டியும், நீளாதேவியும், பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. திரிகாலங்களிலும், இடை விடாமல் தமது திருவுள்ளமே ஆலயமாகச் செய்து கொண்டு தேவரீரைத் தியானஞ்செய்யும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தின்-கண்ணுள்ள பரம பாகவதர்கள் யாவரும் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. தேவரீருடைய மகிமை யுற்று விளங்கும் வைபவங்கள் பல்லாண்டு வாழவும், சமஸ்கிருத பாஷைக்கும், திராவிட பாஷைக்கும், எல்லையாகியும், சதுர்வேதங்களும், மற்ற சாஸ்திரங்களும் சொல்லப்பட்ட பொருள்களுக் கெல்லாம் முடிவாகியும், தர்மமே சொரூபமாகியும், பூமிதேவிக்கு மணிமுடியாகியும், தனக்கொப் பில்லாமல் பெருமை பொருந்திய சொர்ணமயமாகியும், ஓங்கிய தேவரீர் எழுந்தருளியிரா நின்ற வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையும், பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது. திரிகாலக்கியானிகளாகிய வசிஷ்ட வாமதேவ விஸ்வாமிதர வியாச பராச சவுனகாதி ரிஷிகளும், மகாத்துமாக்களாகிய நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களும், பதோத்தாரகராகிய இராமாநுஜாசாரியரும், வரகவிகளான தண்டிபவுபதி காளிதாசன் கம்பர் முதலாகிய கவிசக்ரவர்த்திகளும், பரம பாகவதோத்தமர்களாகிய அழகிய மணவாள பிள்ளைப் பெருமாளையங்கார் முதலாகிய பரமபாகவதர்களாற் செய்தருளிய வேதங்களும், வைணவாகமங்களாகிய ஸ்ரீபாஞ்சராத்ர வைகாசனங்களும் இதிகாச ராமாயண பாரதங்களும், வாமம்வராகம் முதலிய புராணங்களும், மற்றுமுள்ள நூல்களாசிய இவைகளில் சொல்லப்பட்டிருக்கிற தேவரீருடைய நித்யகல்யாண குணங்களை அத்தியயனஞ் செய்த பாகவதர்கள் யாவரும் மிகுதியாக வாழக் கடவது. இவ்வாறு மகிமையுற்ற தேவரீர் விஷயமாக செய்தருளிய கவிகளை சிரவணாந்தத்துடன் கேள்வியுற்ற பாகவதர்களியாவரும் பல்லாண்டு பல்லாண்டு மிகுதியாக வாழக்கடவது ஸ்ரீமந் நாராயணா எ-று. 100

வடவேங்கட நாராயணசதகம் மூலமும் உரையும் முற்றிற்று.

————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி வைபவம் -ஸ்ரீமத் பாகவதம் -ஸ்ரீ நாராயணீயம் -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்-ஸ்ரீ அருளிச் செயல்கள் -ஸ்ரீ ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்–

December 2, 2025

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம்- 24-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி திருவவதாரம்

ராஜோவாச
ப⁴க³வன் ஶ்ரோதுமிச்சா²மி ஹரேரத்³பு⁴தகர்மண꞉ .
அவதாரகதா²மாத்³யாம்ʼ மாயாமத்ஸ்யவிட³ம்ப³னம் .. 1..

யத³ர்த²மத³தா⁴த்³ரூபம்ʼ மாத்ஸ்யம்ʼ லோகஜுகு³ப்ஸிதம் .
தம꞉ப்ரக்ருʼதி து³ர்மர்ஷம்ʼ கர்மக்³ரஸ்த இவேஶ்வர꞉ .. 2..

ஏதன்னோ ப⁴க³வன் ஸர்வம்ʼ யதா²வத்³வக்துமர்ஹஸி .
உத்தம ஶ்லோகசரிதம்ʼ ஸர்வலோக ஸுகா²வஹம் .. 3..

ஸூத உவாச
இத்யுக்தோ விஷ்ணுராதேன ப⁴க³வான் பா³த³ராயணி꞉ .
உவாச சரிதம்ʼ விஷ்ணோர் மத்ஸ்ய ரூபேண யத்க்ருʼதம் .. 4..

ஶ்ரீஶுக உவாச
கோ³ விப்ர ஸுர ஸாதூ⁴னாம்ʼ ச²ந்த³ஸாமபி சேஶ்வர꞉ .
ரக்ஷாமிச்ச²ம்ʼ ஸ்தனூர்த⁴த்தே  த⁴ர்மஸ்யார்த²ஸ்ய சைவ ஹி .. 5..

உச்சாவசேஷு பூ⁴தேஷு சரன் வாயுரிவேஶ்வர꞉ .
நோச்சாவசத்வம்ʼ ப⁴ஜதே நிர்கு³ணத்வாத்³ தி⁴யோ கு³ணை꞉ .. 6..

வாயு -எங்கும் நிறைந்து -துர்நாற்றம் ஒட்டாதது போல் -அகிலேஹேய ப்ரத்யநீக கல்யாணை ஏக ஸ்தானன் -திவ்யம் -அப்ராக்ருதம் -ஆதியம் சோதி யுருவை அங்கே வைத்து இங்கே பிறந்த

ஆஸீத³தீத கல்பாந்தே ப்³ராஹ்மோ நைமித்திகோ லய꞉ .
ஸமுத்³ரோபப்லுதாஸ் தத்ர லோகா பூ⁴ராத³யோ ந்ருʼப .. 7..

காலேநாக³தநித்³ரஸ்ய தா⁴து꞉ ஶிஶயிஷோர்ப³லீ .
முக²தோ நி꞉ஸ்ருʼதான் வேதா³ன் ஹயக்³ரீவோ (அ)ந்திகே (அ)ஹரத் .. 8..

ஹயக்ரீவன் காரணப்பெயர் குதிரை முகத்தான் –அசுரனுக்கு இதே பெயர் –

ஜ்ஞாத்வா தத்³தா³னவேந்த்³ரஸ்ய ஹயக்³ரீவஸ்ய சேஷ்டிதம் .
த³தா⁴ர ஶப²ரீரூபம்ʼ ப⁴க³வான் ஹரிரீஶ்வர꞉ .. 9..

ஶப²ரீரூபம்ʼ–மத்ஸ்ய மீன் ரூபம்-பிரார்த்தனை பண்ணாமலேயே தானே திருவவதரித்த திருவவதாரம்-இச்சா மீன-தேசிகர்-

தத்ர ராஜ ருʼஷி꞉ கஶ்சின்நாம்னா ஸத்ய வ்ரதோ மஹான் .
நாராயண பரோ(அ)தப்யத்தப꞉ ஸ ஸலிலாஶன꞉ .. 10..

மதுரை -க்ருதமாலா நதிக்கரையில் சத்யவ்ரதர் பாண்டிய அரசனுக்கு காட்சி-ஸ ஸலிலாஶன꞉தண்ணீர் மட்டுமே உண்டு தவம் இருந்து ராஜரிஷி யானவள் -முன்பு ராஜரிஷி -ஸூர்ய மகன் -விவஸ்வனனுக்கு பிள்ளை ஸ்ராத்தா தேவனே -வைவஸ்ஸ மனுவாக இப்பொழுது உள்ளான்

யோ(அ)ஸாவஸ்மின் மஹாகல்பே தனய꞉ ஸ விவஸ்வத꞉ .
ஶ்ராத்³த⁴தே³வ இதி க்²யாதோ மனுத்வே ஹரிணார்பித꞉ .. 11..

ஏகதா³ க்ருʼதமாலாயாம்ʼ குர்வதோ ஜலதர்பணம் .
தஸ்யாஞ்ஜல்யுத³கே காசிச்ச²ப²ர்யேகாப்⁴யபத்³யத .. 12..

ஸத்யவ்ரதோ(அ)ஞ்ஜலிக³தாம்ʼ ஸஹ தோயேன பா⁴ரத .
உத்ஸஸர்ஜ நதீ³தோயே ஶப²ரீம்ʼ த்³ரவிடே³ஶ்வர꞉ .. 13..

தமாஹ ஸாதி கருணம்ʼ மஹா காருணிகம்ʼ ந்ருʼபம் .
யாதோ³ப்⁴யோ ஜ்ஞாதிகா⁴திப்⁴யோ தீ³னாம்ʼ மாம்ʼ தீ³ன வத்ஸல .
கத²ம்ʼ விஸ்ருʼஜஸே ராஜன் பீ⁴தாமஸ்மின் ஸரிஜ்ஜலே .. 14..

தமாத்மனோ(அ)னுக்³ரஹார்த²ம்ʼ ப்ரீத்யா மத்ஸ்ய வபுர்த⁴ரம் .
அஜானன் ரக்ஷணார்தா²ய ஶப²ர்யா꞉ ஸ மனோ த³தே⁴ .. 15..

தஸ்யா தீ³னதரம்ʼ வாக்யமாஶ்ருத்ய ஸ மஹீபதி꞉ .
கலஶாப்ஸு நிதா⁴யைனாம்ʼ த³யாலுர்னின்ய ஆஶ்ரமம் .. 16..

ஸா து தத்ரைகராத்ரேண வர்த⁴மானா கமண்ட³லௌ .
அலப்³த்⁴வா(ஆ)த்மாவகாஶம்ʼ வா இத³மாஹ மஹீபதிம் .. 17..

நாஹம்ʼ கமண்ட³லாவஸ்மின் க்ருʼச்ச்²ரம்ʼ வஸ்துமிஹோத்ஸஹே .
கல்பயௌக꞉ ஸுவிபுலம்ʼ யத்ராஹம்ʼ நிவஸே ஸுக²ம் .. 18..

ஸ ஏனாம்ʼ தத ஆதா³ய  ந்யதா⁴தௌ³த³ஞ்சனோத³கே .
தத்ர க்ஷிப்தா முஹூர்தேன ஹஸ்த த்ரய மவர்த⁴த .. 19..

ந ம ஏதத³லம்ʼ ராஜன் ஸுக²ம்ʼ வஸ்துமுத³ஞ்சனம் .
ப்ருʼது² தே³ஹி பத³ம்ʼ மஹ்யம்ʼ யத்த்வாஹம்ʼ ஶரணம்ʼ க³தா .. 20..

தத ஆதா³ய ஸா ராஜ்ஞா க்ஷிப்தா ராஜன் ஸரோவரே .
ததா³வ்ருʼத்யாத்மனா ஸோ(அ)யம்ʼ மஹா மீனோ(அ)ன்வவர்த⁴த .. 21..

நைதன்மே ஸ்வஸ்தயே ராஜன்னுத³கம்ʼ ஸலிலௌகஸ꞉ .
நிதே⁴ஹி ரக்ஷா யோகே³ன ஹ்ரதே³ மாமவிதா³ஸினி .. 22..

இத்யுக்த꞉ ஸோ(அ)நயன் மத்ஸ்யம்ʼ தத்ர தத்ராவிதா³ஸினி .
ஜலாஶயே(அ)ஸம்மிதம்ʼ தம்ʼ ஸமுத்³ரே ப்ராக்ஷிபஜ் ஜ²ஷம் .. 23..

க்ஷிப்யமாணஸ்தமாஹேத³மிஹ மாம்ʼ மகராத³ய꞉ .
அத³ந்த்யதிப³லா வீர மாம்ʼ நேஹோத்ஸ்ரஷ்டு மர்ஹஸி .. 24..

ஏவம்ʼ விமோஹிதஸ்தேன வத³தா வல்கு³பா⁴ரதீம் .
தமாஹ கோ ப⁴வானஸ்மான் மத்ஸ்ய ரூபேண மோஹயன் .. 25..

நைவம்ʼ வீர்யோ ஜல சரோ த்³ருʼஷ்டோ(அ)ஸ்மாபி⁴꞉ ஶ்ருதோ(அ)பி ச .
யோ ப⁴வான் யோஜன ஶதமஹ்நாபி⁴வ்யானஶே ஸர꞉ .. 26..(1-யோஜனை -10 மைல்)

நூனம்ʼ த்வம்ʼ ப⁴க³வான் ஸாக்ஷாத்³த⁴ரிர்நாராயணோ(அ)வ்யய꞉ .
அனுக்³ரஹாய பூ⁴தானாம்ʼ த⁴த்ஸே ரூபம்ʼ ஜலௌகஸாம் .. 27..

அக்னி பகவான் ஒளிந்து கொண்டதைக்காட்டிக்கொடுத்ததால் வலையால் பிடிக்கும் படி சாபம்-அக்னி சாபத்தால் நிந்திக்கப்பட்ட மீன்களை உஜ்ஜீவிக்கவே அவதாரம் -உண்மையாக இருந்தாலும் நன்மையைச் தராவிட்டால் சொல்லக்கூடாது -நன்மை செய்யும் உண்மை -உபதேசம் செய்யவேணும் அவதாரம் -பாண்டியர் கொடியில் வைத்ததே இதனால் தான் –

நமஸ்தே புருஷ ஶ்ரேஷ்ட² ஸ்தி²த் யுத்பத் யப்யயேஶ்வர .
ப⁴க்தானாம்ʼ ந꞉ ப்ரபன்னானாம்ʼ முக்²யோ ஹ்யாத்மக³திர்விபோ⁴ .. 28..

ஸ்தி²த் யுத்பத் யப்யயேஶ்வர .-generation operation destruction God

ஸர்வே லீலாவதாராஸ்தே பூ⁴தானாம்ʼ பூ⁴தி ஹேதவ꞉ .
ஜ்ஞாது மிச்சா²ம்யதோ³ ரூபம்ʼ யத³ர்த²ம்ʼ ப⁴வதா த்⁴ருʼதம் .. 29..

(அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-ஸ்ரீ தயா சதகம்-35)

பொய் சொன்னால் ஏழு ஜென்மங்கள் மீனாகப்பிறக்க வேண்டும் -தாயார் தூண்ட இவனை பெரிய மீனாக அவதரிக்க தூண்டி அவதாரம்-என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக-மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல் சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –

தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.-இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான். ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான்.
இது உனது கட்டளையால் அல்லவா?)

ந தே(அ)ரவிந்தா³க்ஷ பதோ³பஸர்பணம்ʼ
ம்ருʼஷா ப⁴வேத் ஸர்வஸுஹ்ருʼத் ப்ரியாத்மன꞉ .
யதே²தரேஷாம்ʼ ப்ருʼத²கா³த்மனாம்ʼ ஸதாமதீ³த்³ருʼஶோ
யத்³வபுரத்³பு⁴தம்ʼ ஹி ந꞉ .. 30..

அ)ரவிந்தா³க்ஷ-பர ப்ரஹ்ம சிஹ்னம்-பங்கஜம் -சேற்றில் மலரும் செந்தாமரை அஜோபிசன் –பெருமை குன்றாமல் அவதாரம்-வழிபாடு எதுவும் வீணாகாதே

ஶ்ரீஶுக உவாச
இதி ப்³ருவாணம்ʼ ந்ருʼபதிம்ʼ ஜக³த்பதி꞉
ஸத்யவ்ரதம்ʼ மத்ஸ்யவபுர் யுக³க்ஷயே .
விஹர்து காம꞉ ப்ரலயார்ணவே(அ)ப்³ரவீ-
ச்சிகீர்ஷுரேகாந்த ஜனப்ரிய꞉ ப்ரியம் .. 31..

ஶ்ரீப⁴க³வானுவாச
ஸப்தமே(அ)த்³யதநாதூ³ர்த்⁴வ மஹன்யேத த³ரிந்த³ம .
நிமங்க்ஷ்யத் யப்யயாம் போ⁴தௌ⁴ த்ரைலோக்யம்ʼ  பூ⁴ர்பு⁴வாதி³கம் .. 32..

த்ரிலோக்யாம்ʼ லீயமானாயாம்ʼ ஸம்ʼவர்தாம்ப⁴ஸி வை ததா³ .
உபஸ்தா²ஸ்யதி நௌ꞉ காசித்³ விஶாலா த்வாம்ʼ மயேரிதா .. 33..

த்வம்ʼ தாவதோ³ஷதீ⁴꞉ ஸர்வா பீ³ஜான் யுச்சாவசானி ச .
ஸப்தர்ஷிபி⁴꞉ பரிவ்ருʼத꞉ ஸர்வ ஸத்த்வோப ப்³ருʼம்ʼஹித꞉ .. 34..

ஆருஹ்ய ப்³ருʼஹதீம்ʼ நாவம்ʼ விசரிஷ்யஸ்யவிக்லவ꞉ .
ஏகார்ணவே நிராலோகே ருʼஷீணாமேவ வர்சஸா .. 35..

தோ³தூ⁴யமானாம்ʼ தாம்ʼ நாவம்ʼ ஸமீரேண ப³லீயஸா .
உபஸ்தி²தஸ்ய மே ஶ்ருʼங்கே³ நிப³த்⁴னீஹி மஹாஹினா .. 36..

அஹம்ʼ த்வாம்ருʼஷிபி⁴꞉ ஸாகம்ʼ ஸஹனாவமுத³ன்வதி .
விகர்ஷன் விசரிஷ்யாமி யாவத்³ப்³ராஹ்மீ நிஶா ப்ரபோ⁴ .. 37..

மதீ³யம்ʼ மஹிமானம்ʼ ச பரம்ʼ ப்³ரஹ்மேதி ஶப்³தி³தம் .
வேத்ஸ்யஸ்யனுக்³ருʼஹீதம்ʼ மே ஸம்ப்ரஶ்னைர்விவ்ருʼதம்ʼ ஹ்ருʼதி³ .. 38..

பிரளயத்தில் ஸூர்ய சந்திர நக்ஷத்திரங்கள் இல்லாவிட்டாலும் சப்த ரிஷிகள் ப்ரஹ்ம தேஜஸ் ஒளி கொண்டு பார்த்து-ப்ரசண்ட மாருத புயல் வருமே என்ன-1000 மைல் நீளம் மீன் இப்பொழுது -அதை விட -பெரிய மீனாக வரும் -ஒற்றைக்கொம்பு -வாசுகி கொண்டு படகைக்காட்டு -நான் வழி நடத்துவேன் -பிரளய காலம் -1000 சதுர்யுகமும் நான் உங்களைக் காப்பேன் -ஞான உணவு ஊட்டுவேன்-கேள்வி கேட்டு அறிந்து கொள்

இத்த²மாதி³ஶ்ய ராஜானம்ʼ ஹரிரந்தரதீ⁴யத .
ஸோ(அ)ன்வவைக்ஷத தம்ʼ காலம்ʼ யம்ʼ ஹ்ருʼஷீகேஶ ஆதி³ஶத் .. 39..

ஆஸ்தீர்ய த³ர்பா⁴ன் ப்ராக்கூலான் ராஜர்ஷி꞉ ப்ராகு³த³ங்முக²꞉ .
நிஷஸாத³ ஹரே꞉ பாதௌ³ சிந்தயன் மத்ஸ்ய ரூபிண꞉ .. 40..

சொல்லி மறைந்து போக -அந்த ஏழு நாள்களும் பார்த்த மத்ஸ்ய சூபியைத் த்யான பண்ணி -பெரிய மத்ஸ்ய ரூபியைத் தரிசிக்க காத்து இருந்தார்

தத꞉ ஸமுத்³ர உத்³வேல꞉ ஸர்வத꞉ ப்லாவயன் மஹீம் .
வர்த⁴மானோ மஹா மேகை⁴ர் வர்ஷத்³பி⁴꞉ ஸம த்³ருʼஶ்யத .. 41..

த்⁴யாயன் ப⁴க³வதா³ தே³ஶம்ʼ த³த்³ருʼஶே நாவமாக³தாம் .
தாமாருரோஹ விப்ரேந்த்³ரைராதா³ யௌஷதி⁴வீருத⁴꞉ .. 42..

தமூசுர்முனய꞉ ப்ரீதா ராஜன் த்⁴யாயஸ்வ கேஶவம் .
ஸ வை ந꞉ ஸங்கடா த³ஸ்மாத³விதா ஶம்ʼ விதா⁴ஸ்யதி .. 43..

ஸோ(அ)னு த்⁴யாதஸ் ததோ ராஜ்ஞா ப்ராது³ராஸீன் மஹார்ணவே .
ஏக ஶ்ருʼங்க³ த⁴ரோ மத்ஸ்யோ ஹைமோ நியுத யோஜன꞉ .. 44..

ஹைமோ நியுத யோஜன꞉-பொன்நிறம் 10 லக்ஷணம் மைல் நீளம்

ஸ கோ³ நா ஸம்ʼ கோ³ கோ³
நிப³த்⁴ய நாவம்ʼ தச்ச்²ருʼங்கே³ யதோ²க்தோ ஹரிணா புரா .
வரத்ரேணாஹினா துஷ்டஸ் துஷ்டாவ மது⁴ஸூத³னம் .. 45..

ராஜோவாச
அநாத்³யவித்³யோபஹ தாத்ம ஸம்ʼவித³ஸ் தன் மூல ஸம்ʼஸார பரிஶ்ரமாதுரா꞉ .
யத்³ருʼச்ச²யேஹோபஸ்ருʼதா யமாப்னுயுர் வி முக்திதோ³ ந꞉ பரமோ கு³ருர் ப⁴வான் .. 46..

ஸ்துதிக்கிறார் -அநாதி அவித்யை -பொய் நின்ற ஞானம் -அழுக்கு உடம்பில் உழன்று-யாதிருச்சியா ஸூஹ் ருதம் -நாமும் அறியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் தானே அறிந்து -என் பேரைச் சொன்னாய் -பிரதம குரு -பீதகவாடைப்பிரானார் -லஷ்மீ நாதன் ஞானப்பிரான்

ஜனோ(அ)பு³தோ⁴(அ)யம்ʼ நிஜகர்ம ப³ந்த⁴ன꞉ ஸுகே²ச்ச²யா கர்ம ஸமீஹதே(அ)ஸுக²ம் .
யத்ஸேவயா தாம்ʼ விது⁴னோத்ய ஸன்மதிம்ʼ க்³ரந்தி²ம்ʼ ஸ பி⁴ந்த்³யாத்³த்⁴ருʼத³யம்ʼ ஸ நோ கு³ரு꞉ .. 47..

யத்ஸேவயாக்³னேரிவ ருத்³ரரோத³னம்ʼ புமான் விஜஹ்யான்மலமாத்மனஸ்தம꞉ .
ப⁴ஜேத வர்ணம்ʼ நிஜமேஷ ஸோ(அ)வ்யயோ பூ⁴யாத்ஸ ஈஶ꞉ பரமோ கு³ரோர்கு³ரு꞉ .. 48..

சர்வஞ்ஞனே அஞ்ஞாராகிய நம்மை வழி நடத்த வேண்டும்

ந யத்ப்ரஸாதா³யுதபா⁴க³லேஶமன்யே ச தே³வா கு³ரவோ ஜனா꞉ ஸ்வயம் .
கர்தும்ʼ ஸமேதா꞉ ப்ரப⁴வந்தி பும்ʼஸ- ஸ்தமீஶ்வரம்ʼ த்வாம்ʼ ஶரணம்ʼ ப்ரபத்³யே .. 49..

அசக்ஷுரந்த⁴ஸ்ய யதா²க்³ரணீ꞉ க்ருʼதஸ்ததா² ஜனஸ்யாவிது³ஷோ(அ)பு³தோ⁴ கு³ரு꞉ .
த்வமர்கத்³ருʼக்ஸர்வத்³ருʼஶாம்ʼ ஸமீக்ஷணோ வ்ருʼதோ கு³ருர்ன꞉ ஸ்வக³திம்ʼ பு³பு⁴த்ஸதாம் .. 50..

ஜனோ ஜனஸ்யாதி³ஶதே(அ)ஸதீம்ʼ மதிம்ʼ யயா ப்ரபத்³யேத து³ரத்யயம்ʼ தம꞉ .
த்வம்ʼ த்வவ்யயம்ʼ ஜ்ஞானமமோக⁴மஞ்ஜஸா ப்ரபத்³யதே யேன ஜனோ நிஜம்ʼ பத³ம் .. 51..

த்வம்ʼ ஸர்வலோகஸ்ய ஸுஹ்ருʼத்ப்ரியேஶ்வரோ ஹ்யாத்மாகு³ருர்ஜ்ஞானமபீ⁴ஷ்டஸித்³தி⁴꞉ 
ததா²பி லோகோ ந ப⁴வந்தமந்த⁴தீ⁴-ர்ஜானாதி ஸந்தம்ʼ ஹ்ருʼதி³ ப³த்³த⁴காம꞉ .. 52..

தம்ʼ த்வாமஹம்ʼ தே³வவரம்ʼ வரேண்யம்ʼப்ரபத்³ய ஈஶம்ʼ ப்ரதிபோ³த⁴னாய .
சி²ந்த்⁴யர்த²தீ³பைர்ப⁴க³வன் வசோபி⁴-ர்க்³ரந்தீ²ன் ஹ்ருʼத³ய்யான் விவ்ருʼணு ஸ்வமோக꞉ .. 53..

(எட்டு ஸ்லோகங்கள் -நீயே குரு -ஞானக் கண் அளித்து -ஆசை இருப்பதைக் காட்ட வேண்டுமே –ஸ்ரீ மத்ஸயவதாரம் –

211-குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –

அத₂ மத்ஸ்ய அவதார꞉ । அஸேஷ வித்₃யா பரமாசார்யக꞉ குரு--இனி மத்ஸ்ய அவதாரம் கூறப்படுகிறது=சத்ய விரத மனு -வைகை நதிக்கரையில் -மத்ஸ்ய அவதாரம்-ஏக ஸ்ருங்கம்–இச்சா மீனா இத்யாதி -மத்ஸ்ய கமல லோஷணா –கடாக்ஷத்தாலே ரக்ஷணம் -மத்ஸ்ய புராணம் உபதேசித்து அருளினார் –3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்)

ஶ்ரீஶுக உவாச
இத்யுக்த வந்தம்ʼ ந்ருʼபதிம்ʼ ப⁴க³வாநாதி³பூருஷ꞉ .
மத்ஸ்ய ரூபீ மஹாம் போ⁴தௌ⁴ விஹரம்ʼஸ்தத்த்வ மப்³ரவீத் .. 54..

புராண ஸம்ʼஹிதாம்ʼ தி³வ்யாம்ʼ ஸாங்க்²ய யோக³ க்ரியாவதீம் .
ஸத்ய வ்ரதஸ்ய ராஜர்ஷேராத்ம கு³ஹ் யமஶேஷத꞉ .. 55..

திவ்யமான மாத்ஸ்ய புராணம் -முதலில் சாங்க்ய -தத்வ உபதேசம் -26 தத்வங்கள்-அடுத்து -யோக -பக்தி யோகம் -யுஜ் -சேர்ந்து -த்யானம் -அடுத்து கிரியாவதம் -ஸ்வ வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -மனஸ் ஸூத்தி -பெற -1000 சதுர்யுகம் முழுவதும் உபதேசம்

அஶ்ரௌஷீத்³ருʼஷிபி⁴꞉ ஸாகமாத்ம தத்த்வ மஸம்ʼஶயம் .
நாவ்யாஸீனோ ப⁴க³வதா ப்ரோக்தம்ʼ ப்³ரஹ்ம ஸனாதனம் .. 56..

அதீத ப்ரலயாபாய உத்தி²தாய ஸ வேத⁴ஸே .
ஹத்வாஸுரம்ʼ ஹயக்³ரீவம்ʼ வேதா³ன் ப்ரத்யாஹரத்³த⁴ரி꞉ .. 57..

ஸ து ஸத்ய வ்ரதோ ராஜா ஜ்ஞான விஜ்ஞான ஸம்ʼயுத꞉ .
விஷ்ணோ꞉ ப்ரஸாதா³த் கல்பே (அ)ஸ்மின்னாஸீத்³ வைவஸ்வதோ மனு꞉ .. 58..

ஸத்ய வ்ரதஸ்ய ராஜர் ஷேர் மாயா மத்ஸ்யஸ்ய ஶார்ங்கி³ண꞉ .
ஸம்ʼவாத³ம்ʼ மஹதா³க்²யானம்ʼ ஶ்ருத்வா முச்யேத கில்பி³ஷாத் .. 59..

அவதாரோ ஹரேர்யோ (அ)யம்ʼ கீர்தயே த³ன்வஹம்ʼ நர꞉ .
ஸங்கல்பாஸ் தஸ்ய ஸித்⁴யந்தி ஸ யாதி பரமாம்ʼ க³திம் .. 60..

ப்ரலயபயஸி தா⁴து꞉ ஸுப்த ஶக்தேர் முகே²ப்⁴ய꞉ ஶ்ருதி க³ணமபனீதம்ʼ ப்ரத்யுபாத³த்தஹத்வா 
தி³திஜமகத²யத்³யோ ப்³ரஹ்ம ஸத்ய வ்ரதானாம்ʼதமஹ மகி²ல ஹேதும்ʼ ஜிஹ்ம மீனம்ʼ நதோ(அ)ஸ்மி .. 61..

இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹா புராணே வையாஸக்யா மஷ்டாத³ஶ ஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயா மஷ்டம ஸ்கந்தே⁴ மத்ஸ்யாவதார சரிதானுவர்ணனம்ʼ
நாம சதுர் விம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 24..

.. இத்யஷ்டமஸ்கந்த⁴꞉ ஸமாப்த꞉ ..

———————————

பரீக்ஷித் பகவானின் ஆதி அவதாரமாகிய மத்ஸ்யாவதாரத்தைப் பற்றிக் கூறும்படி சுகரிடம் கேட்டான்.
சுகர் கூறியது.
பிரம்மாவின் இரவில் ஏற்படுவது நைமித்திக ப்ரளயம் . அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன் பிரம்மா துயிலுறும் போது
வேதங்களைக் கவர்ந்து சென்றுவிட்டான். பகவான் மத்ஸ்ய உருவெடுத்து அவனைக் கொன்று சமுத்திரத்தில்
ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை வெளிக்கொணர்ந்தார் . இதுதான் மத்ஸ்யாவதாரம்.

முன்னொரு காலத்தில் சத்ய வ்ரதன் என்ற அரசன் சித்தத்தை நாராயணனிடம் வைத்துத் நீரை மட்டும் உட்கொண்டு தவம் செய்து வந்தான்.
ஒருநாள் அவன் நதியில் அர்க்கியம் விடும்போது அந்த கையளவு நீரில் ஒரு சிறு மீன் இருக்கக் கண்டான்.
அதை நதியில் விட நினைக்கையில் அந்த மீன் தன்னை நதியில் விட்டால் பெரிய மீன்கள் விழுங்கிவிடும் என்று கூறியதால்
அதைத் தன் கமண்டலுவில் ஆஸ்ரமத்திற்கு எடுத்துச்சென்றான்.

அந்த சிறிய மீன் விரைவில் கமண்டலு கொள்ளாமல் வளர்ந்து தன்னை அதைவிட பெரிய இடத்தில் விடுமாறு கூறியது.
படிப்படியாக ஒன்றை விட ஒன்று பெரியதான நீர் நிலையத்தில் அதை சேர்க்க அது பெரியதாகிக் கொண்டே வந்தது.
கடைசியில் அதை சமுத்திரத்திற்கு எடுத்துப் போகையில் அந்த மீன் இங்கு தன்னைவிடப் பெரிய சுறாமீன் முதலை போன்றவைகள்
தன்னைத் தின்று விடும் எனக்கூற அப்போது சத்யவ்ரதன் வியப்புற்று மீன் வடிவில் தன்னை மயக்குவது யார் எனக் கேட்டான்.

சத்ய வ்ரதன் கூறியது.
“ஒரே நாளில் நூறு யோஜனை பரப்புள்ள ஏரியை நிறைத்த நீங்கள் நிச்சயமாக நான் வணங்கும் நாராயணனே .
இந்த அற்புத வடிவை எடுக்க க் காரணம் என்ன என்று கூறியருள வேண்டும்” என்றான்.

பகவான் அவனிடம் அன்றைய தினத்தில் இருந்து ஏழாவது நாள் பூமி பிரளய ஜலத்தில் முழுகப்போகிறது என்றும்,
அப்போது பெரிய ஓர் ஓடம் மத்ஸ்ய ரூபியான தன்னால் செலுத்தப்பட்டு அங்கு வரும் என்றும்,
அதில் சத்ய வரதன் எல்லாவிதமான ஔஷதிகளையும் விதைகளையும் எல்லாப் பிராணிகளையும் நிரப்பிக் கொண்டு
சப்த ரிஷிகளுடன் பயமின்றி சஞ்சரிப்பான் என்றும் ,
அப்போது அவனுடைய எல்லா சந்தேகங்களுக்கும் விடை அளித்து பிரம்ம ஞானத்தை அருளுவதாகக் கூறினார்.

பகவானால் கூறப்பட்ட அந்தக் காலத்தில் பெரும் மேகங்கள் மழை பொழிய பூமி முழுகுவதைக் கண்டான்.
அப்போது பகவான் வாக்குப்படி ஒரு ஓடம் வர அதில அவர் சொன்னபடி எல்லா பொருள்களுடனும் சப்த ரிஷிகளுடனும் ஏறினான்.
அங்கு பகவான் மத்ஸ்ய ரூபத்தில் பொன் நிறமுடன் ஓர் லக்ஷம் யோசனை நீண்டு ஒற்றைக் கொம்புடன் காட்சியளிக்க
அவருடைய கொம்பில் அவரால் முன்னமே சொல்லப்பட்டவாறு ஓடத்தை வாசுகியை கயிறாகக் கொண்டு கட்டினான்.
பிறகு மகிழ்ச்சி பொங்க பகவானைத் ஸ்துதித்தான்.

“ தேவ ஸ்ரேஷ்டரும் உலகுக்கெல்லாம் நண்பரும் பிரியமானவரும் ஆத்மாவும் அறிவையும் இஷ்ட சித்தியையும் அளிப்பவரான
உம்மை குருடர்களைப் போல் உலக மக்கள் அறிந்து கொள்வதில்லை. ஈஸ்வரராகிய உம்மை அறிவின் விளக்கத்திற்காக சரண் அடைகிறேன்

ரஹஸ்யார்த்தங்களின் விளக்குப்போன்ற சொற்களால் இருதயத்தின் முடிச்சுகளை சேதித்து உமது உண்மையான
ஸ்வரூபத்தைக் காட்டியருள வேண்டும்,”இவ்வாறு கூறிய அரசனிடம் பகவான்
பிரளய ஜலத்தில் விளையாடியபடியே தத்துவத்தை உபதேசித்தார்.

அப்படிப்பட்ட மாயா மத்ஸ்ய ஸ்வரூபியான அவரை வணங்குவோமாக.

எட்டாவது ஸ்கந்தம் முடிவுற்றது

——————————

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 32–ஸ்ரீ மத்ஸ்யாவதாரம் –

இத்துடன் ஸ்ரீ மத் பாகவதம் 8 ஸ்கந்தம் நிறைவு அடையும்
1-2-5-6-7-8- உபஜாதி மீட்டர் –
3-4-9 இந்திர வஜ்ரா
10 -உபேந்த்ர வஜ்ரா

———

புரா ஹயக்ரீவ மஹா ஸூரேண ஷஷ்டாந்தரான் தோத் யதகாண்ட கல்பே
நித்ரோந் முக ப்ரஹ்ம முகாத் ஹ்ருதேஷு வேதேஷ் வதித்ஸ கில மத்ஸ்ய ரூபம் –1-

ஆறாவது மன்வந்தரத்தின் முடிவிலே -நைமித்திக பிரளயம் ஏற்பட்டது -அப்போது தூங்கிக் கொண்டு இருந்த பிரமதேவனின்
முகத்தில் இருந்து ஹயக்ரீவன் என்ற அரசன் வேதங்களைத் திருடிச் சென்றான் –
அப்போது ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தியாக திரு அவதாரம் செய்ய விரும்பினீர்கள் அல்லவா –

வைவஸ்வர மன்வந்தரம் ஏழாவது இப்பொழுது
ஆகவே புரா -தொடங்கி இந்த ஸ்லோகம்-குதிரை முக அசுரன் என்பதால் ஹயக்ரீவன்

முகாத்-முகம் என்பது இங்கு வாயைக் குறிக்கும்

எழுதாக் கிளவி வேதம் -ஸ்ருதி -ஓதுவித்து ஓதுவதால் இந்தப் பெயர்-

———

ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதி பர்துர் நதீ ஜலே தர்பய தஸ்ததா நீம்
கராஞ்சலவ் சஞ்ஜ வலிதா க்ருதிஸ் த்வம் அத்ருஸ்யதா கஸ்சந பால மீந –2-

தமிழ் நாட்டில் கிருதமாலை என்ற நதியில் ஸத்ய வ்ரதன் என்ற அரசன்-(ராஜரிஷி-ஜடபரதர் அரசனாக இருந்து தவம் செய்தது போல் இவனும் )தர்ப்பணம் செய்து
கொண்டு இருக்கும் போது கூப்பிய அவனுடைய கைகளிலே தாங்கள் –பால மீந –மீன் குஞ்சாகத் தோன்றினீர்கள்

த்ரமிலா-த்ரமிடா -லகார டகார பேதம்

க்ருதமாலா என்பது வேறே கிளை நதி -வைகையே என்றுமே சொல்வர்

மீன் கொடி பாண்டியருக்கு இதனால் தான் -சத்யவ்ரதன் முதல் பாண்டிய மன்னன்

கராஞ்சலவ்-திருக்கைக்கள் அஞ்சலி முகமாக கூப்பிய போது

————-

க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய நிந்யே அம்பு பாத்ரேண முனி ஸ்வ கேஹம்
ஸ்வல்பை ரஹோபி க்லஸீம் ச கூபம் வாபீம் சரஸ் சாந சிஷே விபோ த்வம் –3-

உடனே தங்களை நீரிலே விட்டான் -பயந்த உம்மைத் தன் –அம்பு பாத்ரேண-தீர்த்த பாத்திரத்தில் விட்டு –ஸ்வ கேஹம்-தன் வீட்டுக்குக் கொண்டு சென்றான்
எங்கும் நிறைந்தவனே -சில நாள்களுக்குள் தங்கள் தீர்த்த பாத்திரத்தையும் கிணற்றையும்
குளத்தையும் ஏரியையும் விட பெரிதாக வளர்ந்து விட்டீர்கள் –

அம்பு பாத்ரம் கமண்டலம் -குடம் -கலசம் -கிணறு கூபம் -குளம் வாபி -ஏரி -ஸரஸ் -இவற்றை விடக் கடந்து வளர்ந்தாயே

————

யோக ப்ரபாவாத் பவதா ஜ்ஞயைவ நீதஸ்ததஸ்த்வம் முனிநா பயோதிம்
ப்ருஷ்டோ அமுநா கல்ப தித்ருஷு மேநம் ஸப்தாஹம் ஆஸ்வேதி வதன் நயாஸீ –4-

பிறகு தங்கள் கட்டளைப்படி ஸத்ய வ்ரதன் தன் யோக மகிமையால் (தபஸ் சக்தியால் இவன் உணர்ந்து  கேட்க – நீர் ஆணை இட்ட படி )மீனான தங்களைக் கடலில் கொண்டு –பயோதிம்-சேர்த்தான்
அவன் பிரளயத்தைக் காண விரும்புகிறேன் என்று தங்கள் இடம் சொல்ல
ஏழு நாட்கள் பொறுத்து இரு என்று சொல்லி –நயாஸீ-மறைந்தீர்கள்

————

ப்ராப்தே த்வத் யுக்தே அஹநி வாரி தாரா பரிப்லுதே பூமி தலே முனீந்திர
சப்த ர்ஷிபி சார்தம் அபார வாரிண் யுத் கூர்ணமாந சரணம் யயவ் த்வாம் –5-

தங்கள் குறிப்பிட்ட –அஹநி-நாளும் வந்தது –வாரி தாரா-மழை பெய்து –பரிப்லுதே பூமி தலே-பூமி முழுவதும் நீரில் மூழ்கியது
ஸத்ய வ்ரதன் ஸப்த ரிஷிகளுடன் நீரில் சுழன்று கொண்டு தங்களைச் சரண் அடைந்தான் –

அபார வாரிண்-எல்லை காண முடியாத ப்ரளயக் கடலில்

———–

தராம் த்வத் ஆதேச கரீம் ஆவாப்தாம் நவ் ரூபிணீம் ஆருரு ஹுஸ் ததா தே
தத் கம்ப கம்ப்ரேஷு ச தேஷு பூயஸ் த்வம் அம்புதேர் ஆவிரபூர் மஹீ யான் –6-

தங்களுடைய கட்டளைப் படியே தராம்-பூமி தோணியாக வந்தது -அவர்கள் அனைவரும்
தோணியில் ஏறினார்கள் -தோணி ஆடியதால் நடுங்கினார்கள்
அப்பொழுது தாங்களும் மறுபடியும் கடலில் இருந்து மிகப் பெரிய மீனாகத் தோன்றினீர்கள் –

———-

ஜஷாக்ருதம் யோஜன லக்ஷ தீர்க்காம் ததாம் உச்சைஸ் தர தேஜஸம் த்வாம்
நிரீஷ்ய துஷ்டா முனயஸ் த்வத் உக்த்யா த்வத் துங்க ஸ்ருங்கே தரணிம் பபந்து –7-

லக்ஷ யோஜனை (1 யோஜனை 10 mile )நீளம் உள்ள –ஜஷாக்ருதம்-மீன் உருவத்தில் மிகப் பிரகாசமாய் விளங்கினீர்கள் –
அதைக் கண்டு மகிழ்ந்த அவர்கள் தங்கள் சொல்படி அந்தத் தோணியை மிகப் பெரிய
தங்கள் கொம்பின் நுனியில் கட்டினார்கள் -(துங்க ஸ்ருங்கே-உயர்ந்த கொம்பிலே )

———–

ஆ க்ருஷ்ட நவ்கோ முனி மண்டலாய பிரதர்சயன் விஸ்வ ஜகத் விபாகாந்
ஸமஸ்தூய மாநோ ந்ரு வரேண தேந ஞானம் பரம் ச உபதி சன்ன சாரீ –8-

ஆ க்ருஷ்ட நவ்கோ-படகை இழுத்துக் கொண்டு சென்றாய்

ஓடத்தை இழுத்துக் கொண்டு –முனி மண்டலாய-அவர்களுக்கு –பிரதர்சயன் விஸ்வ ஜகத் விபாகாந்-உலகின் பல வேறு பிரிவுகளைக் காண்பித்தீர்கள் –
அரசனும் தங்களை –ஸமஸ்தூய மாந-ஸ்துதித்தான் -அவனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்தீர்கள் –

மாத்ஸ்ய புராணம் இவர் உபதேசித்தது
இப்பொழுது உள்ள மாத்ஸ்ய புராணத்தில் சில மாறு பாடுகள் உள்ளன

———-

கல்பாவதவ் ஸப்த முநீந் புரோவத் ப்ரஸ்தாப்ய ஸத்ய வ்ரத பூமிபம் தம்
வை வஸ்வ தாக்யம் மநு மாத தாந க்ரோதாத் ஹயக்ரீவம் அபி த்ருதோ அபூ –9-

கல்பாவதவ்-பிரளயத்தின் முடிவில் அந்த ரிஷிகளை-புரோவத்-முன்பு போலவே ஸப்த ரிஷிகளின் ஸ்தானத்தில் இருக்கச் செய்து -ஸத்ய வ்ரதனை வைவஸ்வத மனுவாக ஆக்கினீர்கள்
பிறகு மிகுந்த கோபத்துடன் ஹயக்ரீவன் என்ற அசுரனைத் தொடர்ந்து சென்றீர்கள் –

பிரளயம் ஆனபின்பு வேறே கல்பம் வரும் -விவஸ்வான் பிள்ளை என்பதால்-வை வஸ்வ-இந்தப் பெயர்
சாஷுச மன்வந்தரம் முந்திய ஆறாவது மன்வந்தரம்

மனு ஸ்ம்ருதி இந்த வைவஸ்ய மனு வழங்கியது

சரீர ஆத்ம பாவம் முதல் அத்யாயம் விளக்கும்
மேல் தர்மங்களை விளக்கும்
நாராயணன் உகப்புக்காக செய்யும் தர்மங்கள் என்பதால் முதலில் அவன் பெருமைகளை சொல்லும்

———–

ஸ்வ துங்க ஸ்ருங்க ஷத வக்ஷஸம் தம் நிபாத்ய தைத்யம் நிகமாத் க்ருஹீத்வா
விரிஞ்சயே ப்ரீத ஹ்ருதே ததாந பிரபஞ்ச நாகார பதே ப்ரபாயா –10-

குருவாயூரப்பா தங்களுடைய மிகப் பெரிய கொம்பா-துங்க ஸ்ருங்க- அந்த அசுரனுடைய பிளந்து சாய்த்து(வேத ஞானம் ஹ்ருதயத்தில் தானே இருக்கும் -)
நிகமாத் க்ருஹீத்வா-வேதங்களை மீட்டு வந்து-விரிஞ்சயே ப்ரீத ஹ்ருதே ததாந- பிரமன் இடம் கொடுத்து அருளிய தாங்கள் (பிரபஞ்ச நாகார-வாயு ஆகாரம்)-அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

ப்ரம்மா ஜீவாத்மா
குதிரை அசுரன் ஐம் புலன்கள்
ஞானம் இழந்து இருக்க
சரண் அடைந்து
ஞான உபதேசம் பெறுகிறோம்பொய்களை மன்னிக்க பிராட்டி
பொய் சொன்னால் மீனாகப் பிறக்க வேண்டுமே
நீயே பிறந்து இவனை ரக்ஷிக்க பிரார்த்திக்க -அதனால் மத்ஸ்ய அவதாரம்

அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-தயா தசகம்–35-

என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —
நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக
மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல்
சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –

தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.
இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான்.
ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான்.
இது உனது கட்டளையால் அல்லவா?

———————————

ஸ்ரீ மத்ஸயவதாரம் –

211-குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –

3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்

அவதாரிகை
அத₂ மத்ஸ்ய அவதார꞉ । அஸேஷ வித்₃யா பரமாசார்யக꞉ குரு--இனி மத்ஸ்ய அவதாரம் கூறப்படுகிறது

சத்ய விரத மனு -வைகை நதிக்கரையில் -மத்ஸ்ய அவதாரம்-ஏக ஸ்ருங்கம்–இச்சா மீனா இத்யாதி -மத்ஸ்ய கமல லோஷணா –கடாக்ஷத்தாலே ரக்ஷணம் -மத்ஸ்ய புராணம் உபதேசித்து அருளினார் –

3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்

211- குரூர் குரு தம–குரு தம குரு -பரமாச்சார்யன் –அனைவருக்கும் குரு இவரே

க்ருக்₃ரோருச்ச, இதி கு ப்ரத்யய ꞉ உகாரஶ் சாந்தாதே ₃ஸ ꞉ । தஸ்யைவ விஸேஷணம்

உணாதி ஸூத்ரம் –குரோர் உச்ச –-செய்வது என்ற பொருள் தருகின்ற –க்ரு -பேசுதல் என்ற பொருள் தருகின்ற க்ரு
ஆகிய இரண்டிலும் உள்ள  என்ற ப்ரத்யயம்

கு₃ருதம꞉
ந ஸ்வதந்த்ர நாமத்வமஸ்ய ;குரு தம என்பது தனிச்சொல் அல்ல -குரு பதத்தை மேலும் விவரித்து உயர்ந்த குரு என்கிறது

ச பூர்வேஷாம் அபி குரு இதி ஹிரண்ய கர்ப்ப–இவனே பழைமையான குரு என்று ஹிரண்ய கரப்பன் கூறினான்

* பூஜ்யஶ்ச கு₃ருக₃ரீயான் இதி –ஸ்ரீ கீதை -11-43-
அனைவரையும் விட மேம்பட்ட பூஜிக்கத்தக்க குருவாக நீயே உள்ளாய்

கு இருள் ரு போக்கி -அஞ்ஞானம் போக்கி -இதற்கு அடை மொழி குரு தம

அறியாக் காலத்துள்ளே அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
பிதா மகராண ப்ரஹ்மனுக்கும் வேதங்கள் வெளிட்டு உபதேசித்து அருளினவன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -பெரியாழ்வார் -5-2-8-

மத்ஸ்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால்
ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

ஓம் குரவே நம:

ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும்

ஸர்வேஶாம் அனைவரையும் (அனைத்தையும்)

ஜனகத்வாத்வா தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும்

குரு: பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———

குருர் குருதம – ஆசான்களில் முதன்மையானவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் குருர் மற்றும் குருதமாவை இரண்டு வெவ்வேறு நாமங்களாகக் கருதுகிறார், ஆனால் ஸ்ரீ பராசர பட்டர் அவற்றை ஒரே நாமமாகக் கருதுகிறார். குருர் குருதமஹ். சுவாரஸ்யமாக, ஸ்ரீ பராசர பட்டர் ‘வாசஸ்பதி’ மற்றும் ‘உதாராதீ’ ஆகிய இரண்டு தனி நாமங்களாகக் கருதுகிறார், ஸ்ரீ ஆதி சங்கரர் அவற்றை ஒரு நாமமாகக் கருதுகிறார். இருப்பினும், ஒட்டுமொத்த பெயர் எண்ணிக்கையும் இதனால் பாதிக்கப்படவில்லை. ஸ்ரீ பராசர் பட்டர், மேலே குறிப்பிட்டுள்ளபடி, குருர் குருதமாவை ஒரே கூட்டுப் பெயராகக் கொண்டு, ‘குரு-தமா’ என்ற சொற்றொடரை குருவின் பெயரடையாக விளக்குகிறார், அதாவது, சிறந்த குரு. அனைத்து குருக்களின்.

குரு என்றால் ‘ஆன்மீக போதகர்’ மற்றும் தமா என்பது ஒரு உயர்ந்தது, அதாவது சிறந்தது. சமஸ்கிருதத்தில் வார்த்தையின் முடிவில் ‘தமா’ சேர்த்தால் அது உயர்ந்த பட்டம். எனவே குருதமா என்பது அனைத்து ஆசான்களிலும் உயர்ந்தது அல்லது முதன்மையானது.

ஸ்ரீஆதிசங்கரர் இதை இரண்டு நாமங்களாகக் கருதுகிறார், குரு மற்றும் குரு-தமம். அவர் நாம ‘குரு’வை இரண்டு வெவ்வேறு அர்த்தங்களில் விளக்குகிறார், ஒருவர் சிறந்த ஆசிரியர் என்றும் மற்றவர் உலகளாவிய தந்தை என்றும். அவர் கூறுகிறார் ‘சர்வ வித்யாநாம் உபதேஷ்த்ருத்வாத் சர்வேஷாம் ஜனகத்வாத் வா – அவர் அனைத்து அறிவுக்கும் சிறந்த ஆன்மீக ஆசிரியராக இருப்பதால் அவர் குரு என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் பிரபஞ்சத்தின் தந்தை அல்லது படைப்பாளர் என்பதால்.

‘விரிஞ்சயாதீனாம் அபி பிரம்மவித்யா ஸம்ப்ரதாயகத்வாத் குருதமாஹ் – பிரம்மனைப் பற்றிய அறிவை பிரம்மனுக்குத் தானே கற்பிக்கிறார்’ என்று அவர் இதை நியாயப்படுத்துகிறார். இந்த யோசனை ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் (6.18) பிரதிபலிக்கிறது, இது ‘யோ ப்ரம்ஹாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாங்க ப்ரஹிணோதி தஸ்மை– பிரம்மத்தை உண்டாக்கி அவருக்கு வேதத்தை வழங்கியவர்’ என்று கூறுகிறது.

இதே போன்று மஹா நாராயண உபநிஷத் (8.15) ‘குருஹ் கா இதி | குரு சாக்ஷாத்-ஆதிநாராயணா – இறுதி குரு ஸ்ரீ ஆதி நாராயணா’. குரு-சிஷ்ய பரம்பரையின் ஆரம்பம் நர மற்றும் நாராயணருடன் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

தர்மச் சக்கரத்தில், எழுத்தாளர் குரு-தமஹ் என்று கூறுகிறார், ஏனென்றால் அவர் எல்லாவற்றிலும் வியாபித்து, எங்கும் இருக்கிறார், அவருடைய போதனைகளைப் பெற நாம் செய்ய வேண்டியது எல்லாம், அதற்காக நாம் ஏங்குவதுதான். உண்மையான அறிவை (ஞானத்தை) அடைவதற்காக முன்னேற அவரது அருளுக்கான தேடுதலே தேவை.

—————

212-தாம –
இருப்பிடம் – மநு என்கிற பக்தன் இடம் அனைத்தையும் தன் கொம்பில் கட்டி விட சொல்லி ரஷித்தவன்-மீனாய் வந்து உய்யக்கொண்டவன் –

ஸம்ஹார நஶ்வர சராசர பீ₃ஜ ஆதா₄ர நவ்கர்ண (படகு-நாவாய் முகுந்தன்  )தா₄ரத்வேந ததா₃ஶ்ரயத்வாத்
தா₄ம । தா₄ஞ꞉
* ஸர்வதா₄துப்₄யோ மநிந், இதி மநிந் ப்ரத்யய ꞉ ॥

உணாதி ஸூத்ரம் –ஸர்வ தாதுப்ய —மனிந்-தாக்குவது என்ற பொருள் கொண்ட தா என்பது அனைத்து
வினைகளுடன் உள்ள போது அத்துடன் மதின் என்பது இணையும்
தாம +மன் +இன் =தாமன்

மீனாய் ஆமையுமாய்-2-1-10-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் -பெரிய திருமொழி -8-8-10-
தேவுடை மீனாய் ஆமையாய் -பெரியாழ்வார் -4-9-9-
முன்பு 62 த்ரி ககுத் தாம பார்த்தோம்

சராசரங்கள் அனைத்தையும் தாங்குபவர் -பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும்
கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

ஓம் குருதமாய நம:

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோருக்கும்

ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால்

குருதம: பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

தம என்றால் ‘உயர்ந்த’ அல்லது ‘சிறந்த’ என்று பொருள். குருதம: என்றால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று பொருள்.

‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதன் முதலில் நான்முகனைப் படைத்தாரோ…

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————

தாம – உறைவிடம்

தாம என்பதற்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன:

  1. வசிக்கும் இடம்;
  2. உச்ச ஒளி; மற்றும்
  3. அனைத்து விரும்பிய பொருட்களின் உறைவிடம்.

தாம முதலில் ‘த்ரி-ககுட்-தாம‘ என்று நாம 62 ஆகத் தோன்றியது. அதே விளக்கங்கள் இங்கேயும் பொருந்தும். ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை முந்தைய நாமத்துடன் இணைத்து மத்ஸ்ய அவதாரத்தைக் குறிப்பிடுகிறார். பிரளய வேளையில் அசையும் மற்றும் அசையாத அனைத்துப் பொருட்களின் விதைகளைச் சுமந்து கொண்டு படகைச் செலுத்தும் தலைவன் போல இருப்பதால், பகவான் தாமனாக இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ சங்கரர் நாமத்தை உச்ச முன்னணி ஒளியாக விளக்குகிறார். அவரது கருத்துப்படி, நாராயண ஸூக்தம் ‘நாராயண பரோ ஜோதிஹ் – நாராயணனே இறுதி ஒளி’ என்று கூறுவதால் இந்த அர்த்தம் பொருத்தமானது.

ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா தனது கீதா பாஷ்யத்தில் (அத்தியாயம் 10 வசனம் 12) பரம் ப்ரஹ்ம பரம் தாம என்று கூறுகிறார், தாம – தாம சப்தோ ஜோதிர்வாசனஹ் – பரம் ஜோதிஹ் என்ற வார்த்தைக்கு “உச்ச ஒளி” என்று பொருள் தருகிறார். தர்ம சக்கரத்தில் எழுத்தாளர் “உச்ச ஒளி” என்ற வார்த்தையை மேலும் விரிவாகக் கூறுகிறார். சூரியனிடமிருந்து வரும் ஒளியைக் கண் பார்க்கிறது. ஆனால் சூரியனின் ஒளியோ அல்லது கண்ணோ அல்டிமேட்டைப் பார்க்க முடியாது. அதற்கு பகவானின் அருள், உள்ளொளி என்னும் ஒளி வேண்டும். இதுவே மஹா விஷ்ணு, தாமா என்பது உச்ச ஒளி, வேறு எந்த ஒளியும் செய்ய முடியாததை வெளிப்படுத்தும். அவரை அடைய வேண்டும் என்ற தீவிர ஆசையின் கண்தான் இந்த ஒளியைக் காண முடியும், வேறு எந்தக் கண்ணாலும் பார்க்க முடியாது.

கொடுக்கப்பட்ட பிற விளக்கங்கள் அடங்கும்

  • விரும்பிய பொருள்கள் அனைத்திற்கும் அவன் உறைவிடம்,
  • அவர் ஆசைகள் அனைத்திற்கும் இருப்பிடம்,
  • கர்மங்கள் முதலிய எல்லாவற்றுக்கும் அவனே இருப்பிடம்.

ஸ்வ அமி சின்மயாஆனந்தா, “உச்ச ஒளி” என்பதன் விளக்கத்திற்கு கூடுதலாக, அவர் இறுதி இலக்கு (தாமா அல்லது சிகரம்) என்பதால் அவர் தாமா என்று மாற்று விளக்கம் கொடுக்கிறார்.

தற்செயலாக, சார் தாம் பற்றிய குறிப்பு (அதாவது: ‘நான்கு வசிப்பிடங்கள்/இருக்கைகள்) என்பது இந்தியாவில் உள்ள நான்கு புனிதத் தலங்களின் பெயர்கள் ஆகும், அவை இந்துக்களால் பரவலாக மதிக்கப்படுகின்றன. அவை பத்ரிநாத், துவாரகா, ராமேஸ்வரம் மற்றும் ஜகன்னாத் புரி. ஒருவர் வாழும் காலத்தில் சார் தாம் தரிசனம் செய்வது இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.


213-ஸத்ய
நல்லவன் மநு போன்ற பக்தர்களுக்கு நல்லவன் -107-871-(873)

மந்வாதி₃ஷு தத் கால ஸமாஶ்ரிதேஷு ஸத்ஸு ஸாது₄ரிதி
ஸத்ய ꞉ ॥
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-6/7

தாஸ சத்யன் அடியவர்க்கு மெய்யன் திரு வஹீந்திர புரம்-பிரியம் மட்டும் செய்தால் பொய்யன்–ப்ரயோஜனாந்தர பரர்களும் வேண்டியதைத் தந்து அருளுபவர் -கோவிந்த ஸ்வாமி விரும்பியபடியே இங்கேயே இருந்து பின் வா என்று அருளினார் அன்றோ -ஹிதம் அருளி தன்னுடன் சேர்த்துக் கொள்ளுபவன் மெய்யன் –

பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

ஓம் தாம்னே நம:

தாம ஜ்யோதிதாம என்றால் ஒளி (ஜ்யோதி) என்று பொருள்

நாராயண பரோ ஜ்யோதி:’(நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாராயணரே உன்னதமான ஒளியாவார்

இதி மந்த்ர வர்ணாத் இந்த மந்திரத்தின் படி

தாம: பகவான் ‘ தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாம என்றால் ஒளி மிக்கது என்று பொருள். மிகச்சிறந்த ஒளி வடிவினராக இருப்பதால் பகவான் ‘தாம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா அனைத்து ஆசைகளும் சென்றடையும் இடமாக இருப்பதால்

தாம: பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றன. அனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றன. எனவே, பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரம் ப்ரஹ்ம பரம் தாம‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரப்ரஹ்மமே அனைத்தும் சென்றடையும் இடமாக இருக்கிறார்.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———

சத்யா – நல்லது

இந்த நாமம் முன்பு நம 107 ஆக இருந்தது, மேலும் ஒரு முறை நம 873 ஆக நிகழும். இந்த நாமத்தின் பொருளின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  1. அவர் தூய உண்மை.
  2. அவர் பிராணன், பொருள் மற்றும் சூரியனால் ஆனது.
  3. அவர் உன்னத ஆன்மாக்கள் மீது நல்ல மனநிலை கொண்டவர்.
  4. கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் அவர் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் அந்த நேரத்தில் தனது உதவியை நாடிய மனு போன்ற சத்-புருஷர்களுக்கு நல்லவராக இருந்ததால் அவர் சத்யா என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்ரீஆதிசங்கரர், ‘சத்யஸ்ய சத்யம்-அனைத்து உண்மைக்குப் பின்னும் உள்ள சத்தியம்’ என்று அனைத்தையும் சுருக்கமாகக் கூறுகிறார். சத்யா என்பது பாணினி சூத்திரம் 4.4.98 இன் அடிப்படையில் சத்தில் ‘சிறப்பாக’ இருப்பவர்.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், பகவான் கிருஷ்ணரின் வார்த்தைகளில் ‘சத்’ என்பதன் வரையறைக்காக பகவத் கீதையை (அத்தியாயம் 17 வசனங்கள் 26 மற்றும் 27) குறிப்பிடுகிறார்.

ஸத் பாவே ஸாது பாவே ச ஸதித்யேதத் ப்ரயுஜ்யதே |
ப்ரஷஸ்தே கர்மணி ததா சச்-சப்தஹ் பார்த்த உச்யதே || (17.26)

ய~ஜ்னே தபஸி தநே ச ஸ்திதிஹ் சதிதி கோச்யதே |
கர்ம சைவ ததார்த்தீயம் ஸதித்யேவ அபிதீயதே || (17.27)
சத்‘ என்ற சொல் இருப்பு, நன்மை, நல்ல செயல்கள், தியாகத்தில் உறுதிப்பாடு, துறவு, வரங்கள் அல்லது அத்தகைய நோக்கங்களுக்காகச் செய்யும் செயல்களைக் குறிக்கிறது. இவை அனைத்திலும் சிறந்தவர் அல்லது இந்த வழியில் செயல்படுபவர்களுக்கு சிறந்தவர் (அதாவது ஆதரவளிப்பவர்) சத்யா ஆவார்.


214-ஸத்ய பராக்கிரம
வஞ்சனை அற்ற ஆற்றல்

தேஷு ஸத்யோ(அ)கைதவ ꞉ பராக்ரமோ வ்ருத்திரஸ்யேதி
ஸத்ய பராக்ரம꞉

பொய் கலவாமல் -பொய் கலவாது மெய்கலந்தான் வெண்ணெய் இடமும் ஆழ்வார் இடமும்

தீய புந்திக் கஞ்சனை வஞ்சனை செய்தவன்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சன் -பெரிய திருமொழி -7-10-8-

அஹம் வேத்மி –மஹாத்மாநம் ராமம் சத்ய பராக்ரமம்

மெய்யன் மெய்ய மலையான் சங்கு ஏத்தும் கையன்

மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்திய வசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

ஓம் ஸத்யாய நம:

ஸத்ய வசன உண்மைக் கூற்றுக்களாகவும்

தர்ம ரூபத்வாத் அறமே வடிவானவராயும் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கெங்கெல்லாம் உண்மையும், அறமும் நிலைத்திருக்கிறதோ, அங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார். மேலும், அவர் (வேதங்களின் வடிவில்) உண்மையான கூற்றாகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

புராணங்கள், அறத்தை நான்கு கால்கள் கொண்ட ஒரு எருதாக உருவகப் படுத்துகின்றன. அந்த நான்கு கால்களில் உண்மையும் ஒன்றாகும். முதல் யுகமான க்ருத யுகத்தில் நான்கு கால்களுடன் இருந்த அறமானது, இந்தக் கலியுகத்தில் வாய்மை என்னும் ஒரே காலில் மட்டும் நின்று கொண்டிருக்கிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு மெய்யம் என்னும் திருத் தலத்தில், பகவான் ‘ஸத்ய மூர்த்தி’, ‘மெய்யன்’ என்ற திருநாமத்துடனே எழுந்தருளியிருக்கிறார்.

தஸ்மாத் ஸத்யம் பரம் வதந்தி

வேதங்களிலும்உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ளது: ஆகவே, அந்த (என்றும் மாறாது இருக்கும்) உண்மையான தத்துவத்தையே பரம்பொருள் என்று கூறுகின்றனர்.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்யஸ்ய உண்மையான பொருட்கள் அனைத்திற்குள்ளும்

ஸத்யமிதி வா உண்மையின் வடிவாய் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உண்மை எங்கிருந்தாலும், எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும். பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லை. அவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராணா வை ஸத்யம் தேஶாம் ஏஶ ஸத்யம்‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஜீவாத்மா என்றும் மாறாத உண்மைப் பொருளாகும். அதற்குள்ளும் (அதனிலும் மேம்பட்ட) உண்மையாக பரமாத்மாவே இருக்கிறார்.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———

ஓம் ஸத்யபராக்ரமாய நம:

ஸத்ய: அவிதத: உண்மையான, என்றும் வீணாகாத

பராக்ரமோ யஸ்ய ஸ

வீரத்தை உடையவராதலால்

ஸத்ய பராக்ரம: பகவான் ‘ஸத்யபராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்தியும், வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லை. எனவே, அவர் ‘ஸத்யபராக்ரம:’ (உண்மையான வீரமுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

சத்ய-பராக்ரமா – தவறாத வீரம்

பராக்ரம் என்றால் வீரம். எனவே சத்திய பராக்கிரமம் உண்மையான வீரம் கொண்ட ஒன்றாகும். ஆதி சங்கரரின் வார்த்தைகளில், ‘சத்யஹ் அவிதாத: பராக்ரமோ யஸ்ய சஹ் – உண்மையான மற்றும் தடையற்ற வீரம்’.

ஸ்ரீ பராசர பட்டர், மத்ஸ்ய அவதாரத்தின் அடிப்படையில் நமஸ்ஸின் இந்த வரிசையின் விளக்கத்தைத் தொடர்கிறார், மனு மற்றும் பிறரிடம் துணிச்சலான செயல்களை பகவான் உண்மையாகச் செய்ததற்கான உதாரணத்தைக் கூறுகிறார். தர்மச் சக்கரத்தில் எழுத்தாளர் இரண்டு வகையான வீரம் இருக்க முடியும் என்று சுட்டிக்காட்டுகிறார், ஒன்று ஸ்ரீ ராமனுடையது போன்ற மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றொன்று சக்தியை வெளிப்படுத்தவும் மற்றவர்களைக் காயப்படுத்தவும் பயன்படுகிறது. என்று அரக்கன் ராவணன். மஹா விஷ்ணுவை தியானிப்பது சரியான வகையான வீரத்தை வளர்க்கும் திறனை அளிக்கிறது.


215-நிமிஷ –
கண் மூடி -அநாஸ்ரிதரை கடாஷியாதவன்-நிமி வம்சம் சீதா பிராட்டி -காணாக் கண் இட்டு இருப்பது -வேறே -உயர்ந்த விஷயம்

தத்₃விரோதி₄ஷு நிமிஷதி – ந கடாக்ஷய தீதி
நிமிஷ꞉ ॥

சந்தமர் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன்
நின்றான் -பெரிய திரு மொழி -2-3-6-

நஷ்டம் பராக் தத் அலாபஸ் த்ரிலோகம் –ஸம்பத் அநயோதயம் -சதுஸ் ஸ்லோகி

சத்வ அசத்வ நிதானம் இருள் தரும் அமலங்களாக வென்னும் ஜன்ம ஜாயமான கால கடாஷங்கள்-

சத்வ நிதானம் இருள் தரும் வென்னும்
ஜன்மம்
ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்-

சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் –
அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———

ஓம் நிமிஶாய நம:

நிமிலிதே மூடியுள்ளன

யதோ நேத்ரே எவரது (அவரது) கண்கள்

யதோ யோக நித்ராரதஸ்ய யோக நித்திரையின் பொழுது

அதோ நிமிஶ: எனவே, பகவான் ‘நிமிஶ:’ (கண்களை மூடியுள்ளவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளன. எனவே, அவர் ‘நிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நிமிஷா – கண்களை மூடியவர்

ஆதி சங்கரரின் கூற்றுப்படி இதன் பொருள் ‘நிமீலிதே யதோ நேத்ரே யோகநித்ரா ரதஸ்ய அதோ நிமிஷா – அவரது கண்கள் யோகநித்ரா அல்லது யோக உறக்கத்தில் மூடப்பட்டிருக்கும், எனவே அவர் நிமிஷா’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் இதை ‘ந ஈக்ஷதே இதி நிமிஷாஹ்‘ என்று விளக்குகிறார். அவரை எதிர்ப்பவர்கள் மீதும் அல்லது அவரது பக்தர்கள் மீதும் அவருடைய அருள் பார்வை படுவதில்லை.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் அவர் நிமிஷா (மூடிய கண்களுடன்) என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் அவருக்குப் பார்க்க அவரது கண்கள் தேவையில்லை.

அவர் எங்கும், நம் ஒவ்வொருவரிடமும், எல்லா நேரத்திலும் இருப்பதால், கண்கள் இல்லாமல் எல்லா இடங்களிலும் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதால், அவர் தனது மூடிய கண்களால் அனைத்தையும் பார்க்கிறார் என்று தர்ம சக்கரம் எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார்.

விஷ்ணுவின் யோக நித்ராவைப் பற்றி சிந்திப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த நிலையில் (பொதுவாக, நம் கண்கள் திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும், அவர்கள் அலைந்து திரிவார்கள்) உலக எண்ணங்கள்!).


216-அநிமிஷா –
மீன் பார்வையாலே முட்டைகளை வளரச் செய்யும்-கீழ் தன்மைகளை சொல்லி இங்கு அவதார திரு நாமம்

க ஏவம் ?
அநிமிஷ꞉ ;
ஸத்ஸு ந நிமிஷதி ஜாக₃ர்தீதி
அநிமிஷ꞉,
தி₃வ்ய மீந தநு꞉ ॥

ஆஸ்ரிதர்களை குளிரக் கடாஷித்து அருளி
மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -8-8-1-

சபரி -விதுரர் -ரிஷி பாதணிகளை பூதராக்கும் நெடு நோக்கு கொள்ளும்

கற்பார் ராமபிரானை அல்லால் -விதியைச் சொல்லி உத்தரம் வார்த்தை அறிபவர் சரம ஸ்லோகம் கீதாச்சார்யர்

சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில்
இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

ஓம் அநிமிஶாய நம:

நித்ய எப்பொழுதும்

ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் விழிப்புடன் இருப்பதால்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் விழிப்புடனே இருக்கிறார். நம்மைப் போன்று அவர் தூங்குவதில்லை. எனவே, அவர் ‘அநிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரபுத்த என்ற சொல்லிற்கு பல பொருட்களுள் உண்டு. அவற்றுள் ‘விழிப்புடன் இருத்தல்’, ‘அறிவொளியோடு இருத்தல்’ என்பவையும் அடங்கும். இங்கு பகவான் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்று பொருள். யோக நித்திரையில் கண்களை மூடி இருந்தாலும், விழிப்புடனேயே இருக்கிறார். மேலும், அவரது அறிவானது என்றும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.

மத்ஸ்யரூபதயா வா மீனாக அவதரித்ததனாலும்

ஆத்மரூபதயா வா (அனைவருக்குள்ளும்) உறையும் ஆத்மாவாக இருப்பதனாலும்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் முதலில் மீனாய் திருவவதாரம் செய்தார். மீன்கள் இயற்கையாகவே தம் இமைகளை மூடாது. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மேலும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கிறார். புலன்கள் தூங்கினாலும் (அடங்கினாலும்) ஆத்மா தூங்குவதில்லை. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.

மத்ஸ்யாவதார வரலாறு:

முந்தைய கல்பத்தின் முடிவில் (அதாவது, ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுதின் முடிவில்) ஹயக்ரீவன் என்ற அசுரன் ப்ரஹ்மாவிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றான். ப்ரஹ்மாவின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் அந்த வேதங்களை மீட்க முடிவெடுத்தார். அச்சமயம், ஸத்யவ்ரதன் என்றொரு த்ராவிட தேசத்து அரசன் இருந்தான். அவன் (இன்றைக்கு நாம் ‘வைகை’ என்று அழைக்கும்) க்ருதமாலா நதிக்கரையில் நீராடும் வேளையில் பகவான் அவன் கைகளில் ஒரு சிறு மீனாகத் தோன்றினார்.

பெரும் திமிங்கலங்களும், முதலைகளும் வாழும் சமுத்திரத்தில் தம்மால் வாழ இயலாதென்றும், தம்மை காக்குமாறும் அந்த மீன் (பகவான்) வேண்ட, ஸத்யவ்ரதன் அந்த மீனை தன் கமண்டலத்தின் கொண்டு சென்றான். அவன் அரண்மனையை அடையும் பொழுதே அந்த மீன் அவனது கமண்டலம் வரையிலும் வளர்ந்தது. அவன் அதை ஒரு தொட்டியில் விட, தொட்டில் வரையிலும் வளர்ந்தது. பின்னர் குளம், ஏரி ஆகியவற்றில் விட அந்த மீன் அந்தந்த அளவிற்கு வளர ஸத்யவ்ரதன் இது ஒரு சாதாரண மீன் அல்ல என்று உணர்ந்தான்.

அவன் வேண்ட, பகவான் அவனுக்கு காட்சியளித்தார். ‘அன்றிலிருந்து ஏழாவது நாளில் பூமி ஒரு பெருமழையால் மூழ்கும் என்றும் அப்பொழுது ஒரு படகு தோன்றுமென்றும், அப்படகில் ஸத்யவ்ரதன், ஸப்த ரிஶிகள் மற்றும் அனைத்து வகை மூலிகைகள் மற்றும் விதைகளை ஏற்றிக் கொண்டு அந்த படகை (மீனான) தனது கொம்பில் வாசுகி என்னும் பாம்பைக் கொண்டு கட்டி விடுமாறும்’ கூறிவிட்டு மறைந்தார்.

அவ்வாறே, ஏழாம் நாள் பெருமழை பொழிய, ஒரு படகும் தோன்றியது. ஸத்யவ்ரதனும் பகவான் கூறியபடியே ஸப்தரிஷிகள் மற்றும் மூலிகைகளையும் அந்த படகில் ஏற்றிக் கொண்டு, வாசுகியை பகவானின் (மத்ஸ்யாவதார மூர்த்தியின்) கொம்பில் கட்டினான். பகவான் ஸத்யவ்ரதனுக்கும், ஸப்தரிஷிகளுக்கும் வேதார்த்தங்களை உபதேசித்த படியே ப்ரளய ஜலத்தில் அந்த படகை வழி நடத்தி சென்றார்.

முடிவில், கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவனைக் கொன்று அவனால் கவரப்பட்ட வேதங்களை மீட்டு ப்ரஹ்மாவிடம் தந்தருளினார்.

இந்த ஸத்யவ்ரதனே இந்த கல்பத்தின் மனுவாக நியமிக்கப்பட்டார்.

———-

அனிமிஷா – எப்போதும் விழித்திருப்பவர்

ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை மத்ஸ்ய அல்லது வான மீன் அவதாரத்தின் அடிப்படையில் விளக்குகிறார். இந்த அவதாரத்தில், அவர் ஒருபோதும் தனது கண்களை மூடுவதில்லை மற்றும் அவரது பக்தர்களை எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பார் (மீன்களுக்கு கண் இமைகள் இல்லை, எனவே அவற்றின் கண்களை மூடவே இல்லை).

ஸ்ரீ ஆதிசங்கரர் இரண்டு கூடுதல் விளக்கங்களைத் தருகிறார் – அவர் தனது ஞானத்தின் காரணமாக எப்போதும் விழித்திருக்கிறார், அல்லது அவர் ஆத்மா ஸ்வரூபம், மற்றும் ஆத்மா ஒருபோதும் தூங்குவதில்லை. ‘நித்ய ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் அனிமிஷா மத்ஸ்யரூபதாயா வா ஆத்மாரூபதாயா வா அனிமிஷா’ என்கிறார்.

என் அமுதினைக் கண்ட கண்கள் மாதொன்றினைக் காணவே” என்ற அமலன்ஆதிபிரானில் திருப்பனாழ்வாரின் நிறைவுப் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருக்கோயிலில் இறைவனின் அழகை வர்ணிக்கும் போது ஆழ்வார் இதைப் பாடிய போது, ​​அகக் கண்களுக்கும் பொருந்தும்.

இந்த நாமத்தை தியானிப்பவர் ஆன்மீக ரீதியில் எப்போதும் விழிப்புடன் இருப்பார் என்றும், கெட்ட எண்ணங்கள் மற்றும் உலக கவனச்சிதறல்கள் அவரது மனதில் நுழையாது என்றும் இந்த பெயரின் முக்கியத்துவத்தை தருகிறார் தர்ம சக்கரம் ஆசிரியர்.


217-ஸ்ரக்வீ
பரத்வ ஸூ சகமான மாலை அணிந்தவன் -வைரம் முத்து போன்ற  ஐந்து வித வைஜயந்தி மாலை-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் வைஜயந்தி அம்ச அவதாரம்

திர்யக்த்வே (அ)பி பரத்வ ஸூசிநீ வைஜயந்தீ ஸ்ரக₃ரஸ்ய நித்ய யோகி₃நீதி
ஸ்ரக்₃வீ ।
* அஸ்மாயா மேகா₄ஸ்ரஜோ விநி꞉ இதி விநி

அஷ்டாத்யாயீ –அஸ் மாயா மேதா ஸ்ரஜஸ் விநி —
மாயா–மேதா –ஸ்ரத் என்பதுடன் சேர்ந்து இருத்தல் என்பதை உணர்த்தும் விநி என்பது உண்டாகும்

கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை மினுங்க நின்று விளையாட -நாச் -14-2-
திருத் துழாய் மாலையைச் சொல்லிற்றாகவுமாம்
தோளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடைய அம்மான் -1-9-7-

மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக -பஞ்ச பூத ஸூஷ்மங்கள் சேர்ந்ததான-வைஜயந்தி என்னும் வன மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் வன மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————

ஓம் ஸ்ரக்விணே நம:

பூததன்மாத்ரரூபாம் பஞ்ச பூதங்கள், மற்றும் தன்மாத்திரைகளின் வடிவமான (அதாவது புலன்களின் சூட்சுமமான நிலை)

வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ என்ற பெயருடைய

ஸ்ரஜம் மாலையை

நித்யம் என்றும் (எக்காலத்திலும்)

பிபர்த்தீதி தாங்கியிருப்பதால் (அணிந்திருப்பதால்)

ஸ்ரக்வீ பகவான் ‘ஸ்ரக்வீ” (மாலையை அணிந்திருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பஞ்சபூதங்கள், மற்றும் அனைத்து தன்மாத்திரைகளின் வடிவான ‘வைஜயந்தி’ என்ற மாலையை எப்பொழுதும் அணிந்துள்ளார். எனவே, அவர் ‘ஸ்ரக்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்மாத்திரைகள்  இவை நம் புலன்களின் சூட்சும வடிவங்களாகும். இந்த தன்மாத்திரைகளே நமது புலன்களுக்கு அதன் சக்தியை வழங்குகிறது (உதாரணமாக, ஶப்த தன்மாத்திரையிலிருந்து நமக்கு கேட்கும் திறன் கிடைக்கிறது).

நித்யம்  எப்பொழுதும். பகவான் வைஜயந்தி மாலையை எப்பொழுதும், எல்லா அவதாரத்திலும் (நமக்குத் தெரியாவிடினும்) அணிந்துள்ளார். சங்கு, சக்கரம் போன்று வைஜயந்தி மாலையும் பகவானுடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு அடையாளமாகும்.

ஸ்ரக்வீ – மாலையால் அலங்கரிக்கப்பட்டவள் (வைஜயந்தி)

ஸ்ரக் என்ற சொல் மாலையைக் குறிக்கிறது. ஸ்ரக்வீ ஒரு மாலையால் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டவர். பாணினியின் அஷ்டாத்யாயி 5.2.121 படி – மாயா மேதா ஸ்ரஜோ விநிஹ் – ஸ்ரஜுக்குப் பின் வரும் ‘வின்’ என்ற இணைப்பு ‘உடன் இணைந்து’ என்பதைக் குறிக்கிறது. எனவே இங்கு பொருள் ‘எப்பொழுதும் மாலையால் அலங்கரிக்கப்பட்டவர் – ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் வைஜயந்தி மாலையைக் குறிக்கிறது.

பூத தன்மாத்ர ரூபம் வைஜயந்த்யாக்யம் ஸ்ரஜம் நித்யம் பிபாரதி இதி ஸ்ரக்வீ – தன்மாத்ரங்களின் ஐந்து அடிப்படை கூறுகளை (சுவை, பார்வை, ஒலி, வாசனை மற்றும் உணர்வு) குறிக்கும் வைஜயந்தி என்ற மாலையை எப்போதும் அணிந்திருப்பதால் அவர் ஸ்ரக்வீ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி விஷ்ணு புராணத்தின் குறிப்பைக் கொடுக்கிறார் –
பஞ்ச ஸ்வரூப யா மாலா வைஜயந்தி கதா பிரிதா |
ச பூத ஹேது ஸங்காதா பூதா மாலா ச வை த்விஜா || (1.2.72)

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டா என்பது ‘ஸ்ரிஜ்’ என்பதிலிருந்து தொடங்கும் அர்த்தம், ‘உருவாக்க அல்லது அமைக்க’. நட்சத்திரங்கள், சூரியன் முதலான படைப்புகள் அனைத்தும் அவனுடைய படைப்புகள் என்பதால், அவன் ஸ்ரக்வீ. ஒரு மாலையில், பல்வேறு வகையான பூக்கள் இருக்கலாம், ஆனால் அவை மாலையின் ஒரு பகுதியாக இருக்கும்போதே தங்கள் அடையாளத்தை இழக்கின்றன. மேலும், இந்த வெவ்வேறு படைப்புகள் அனைத்தும் ஸ்ராக்வீ அல்லது பகவான் விஷ்ணுவைப் போல ஒன்றாக உள்ளன. அல்லது, நம் சமுதாயத்தில் உள்ள ஒரு சிறந்த நபரின் கழுத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம் போல, பகவான் இந்த தனித்துவமான மாலையால் அவரது இறைவனையும் மேன்மையையும் குறிக்கிறார்.

முத்து, மாணிக்கம், மரகதம், நீலம், வைரம் ஆகிய ஐந்து விலையுயர்ந்த ரத்தினங்களால் ஆனது வைஜயந்தி என்று பேராசிரியர் ஏ. சீனிவாச ராகவன் குறிப்பிடுகிறார்.

தர்ம சக்கரத்தில் உள்ள எழுத்தாளர், விஷ்ணுவின் சேவையில் நமது அனைத்து தனமாத்ரங்களையும் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் (ரங்கநாதருக்கு அது போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் தன்னை மலர் மாலையால் அலங்கரித்த ஆண்டாள் உதாரணத்தை கூறுகிறார்)


218-வாசஸ்பதி –
சொல்லுக்கு அதிபதி-மேலும் இந்த நாமம் வரும் –

ஸ ஏவ ஶ்ரீமந் மாத்ஸ்ய புராணேந வேத₃உப ப்₃ரும்ஹணாத்₃
வாஸ ஸ்பதி꞉ ।
ஷஷ்ட்₂யா அலுக்,
* ஷஷ்ட்₂யா ꞉ பதி புத்ர இத்யாதி₃ நா ஸத்வம் ॥

சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்ல வல்லரே -திருச்சந்த -118-

மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர்-வாக்கு என்னும் சொல்லுக்கு அதிபதி -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

ஓம் வாசஸ்பதய உதாரதியே நம:

வாசோ வித்யாயா ‘வாச’ என்றால் அனைத்து வகையான அறிவையும் குறிக்கும்

பதிஅவற்றின் தலைவர் (அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றவர்)

வாசஸ்பதி‘வாசஸ்பதி:’ என்று அழைக்கப்படுகிறார்

ஸர்வார்த்தவிஶயாதீர் அனைத்து பொருட்களையும் உள்ளபடி அறியும்

புத்திரஸ்யேத்யுதாரதீஅறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார்

வாசஸ்பதிருதாரதீ: எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாச’ என்றால் அனைத்துவித ஞானத்தையும் (அறிவையும்) குறிக்கும். வாசஸ்பதி என்றால் ‘அறிவின் தலைவர்’ என்று பொருள். அனைத்தையும் உள்ளபடி அறியும் அறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார். எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இத்யேகம் நாம | பொருள் தனித்தனியே இருப்பினும் ‘வாசஸ்பதி’, ‘உதாரதீ’ ஆகியவை இணைந்து ‘வாசஸ்பதிருதாரதீ’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்பட்டுள்ளது.

———

வாசஸ்பதி – பேச்சின் இறைவன் 

ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீமத் மத்ஸ்ய புராணத்தின் மூலம் வேத அறிவை எடுத்துரைத்ததால், அவர் வாசஸ்பதி என்று கூறுகிறார். மத்ஸ்ய புராணத்தில் உள்ள வெளிப்பாட்டின் சக்தியே வாச்சஸ்பதியின் குணத்தை வெளிப்படுத்துகிறது.

ஸ்ரீஆதிசங்கரர் இந்த நாமத்தையும், அடுத்த நாமத்தையும் – உதாரதிஹ், ஒரு நாமமாக விளக்குகிறார். அவர் விளக்குகிறார் ‘வாச்சோ வித்யாயாஹ் பதிஹ் வாசஸ்பதி; ஸர்வார்தவிஷயா தீஹ் புத்திஹ் அஸ்ய இதி உதாராதீஹ், வாசஸ்பதி ருதாராதீ இதி ஏகம் நாம – அவர் அனைத்து அறிவுக்கும் அதிபதி, அற்புதமான புத்திசாலி.’ இவ்வாறு இது பகவானின் இரண்டு தொடர்புடைய பண்புகளை இணைத்து ஒரு பெயர். ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், பகவான் வித்யா அல்லது வேதத்தின் மாஸ்டர் என்பதைக் குறிக்க, வாசஸ்பதி என்ற சொல்லை விளக்குகிறார்.


219- உதார தீ
சிறந்த ஞானம் உடையவன் -சர்வஞ்ஞன் -எல்லையில் ஞானத்தன் -கம்பீர ஸ்வபாவன்-தயாளு ஞானவான்

ஏவம் ஸர்வ உப ஜீவ்ய ஸார்வஜ்ஞ்யாத்₃
உதா₃ரதீ₄꞉

ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-9-

ஞானக் கை தா காலக் கழிவு செய்யாமல்-

யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர் -ஸர்வஞ்ஞர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் –
வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் –
உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

உதார-தீஹ் – பரந்த அறிவைக் கொண்டவர்.

இங்கு ‘தீ’ என்றால் புத்தி அல்லது புத்தி. உதாரா என்றால் தாராளமான, உன்னதமான, புகழ்மிக்க, முதலியன. உதாராதீஹ் என்றால் தன் பக்தர்களிடம் தாராள மனப்பான்மை கொண்டவர், அல்லது எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் கைப்பற்றக்கூடிய புகழ்பெற்ற அல்லது அற்புதமான புத்திசாலித்தனம் கொண்டவர்.

ஸ்வாமி சின்மயாநந்தா, பகவான் தனது பக்தர்களின் இதயத்தின் பலவீனத்தைப் பாராட்டுவதற்குப் பெரிய மனதுடன் சகிப்புத்தன்மை கொண்டவர் என்றும், பொதுவாக பாவிகளிடம் மிகுந்த அனுதாபத்தையும் அளவற்ற கருணையையும் வெளிப்படுத்துகிறார் என்றும் விளக்கம் தருகிறார். கண்மூடித்தனமான மற்றும் சமரசமற்ற உடல் இயற்கையின் விதிகளைப் போலல்லாமல், நம்முடைய மீறல்களைக் கவனிக்க அவருக்கு போதுமான தந்தையின் கருணை உள்ளது.


211-குருர் குருதம-
மத்ச்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால் ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

212-தாம –
பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும் கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

213-சத்ய –
பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத்   தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————-

214-சத்ய பராக்ரம-
மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

————————————————————

உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்தியவசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

215-நிமிஷ –
சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் -அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

216-அநிமிஷ-
சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம  ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில் இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

217-ஸ்ரக்வீ-
மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக வைஜயந்தி மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

218-வாசஸ்பதி –
மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

219-உதாரதீ –
யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர்  -ஸ்ரீ பராசர பட்டர் –

வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் -வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் -உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———

‘குருதமோ குரு:’ என்றால் குருவுக்கெல்லாம் குருவாக விளங்குபவர் என்று பொருள். அவ்வாறு குருவுக்கெல்லாம் குருவாக விளங்கி
நடாதூர் அம்மாள் போன்ற குருமார்களை எல்லாம் உருவாக்கியபடியால், மத்ஸ்யாவதாரப் பெருமாள் ‘குருதமோ குரு:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 211-வது திருநாமம்.

“குருதமோ குரவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்வழிகாட்டும் சிறந்த
குருநாதர் அமையத் திருமால் அருள் புரிவார்.

ஊழிக் காலத்தில், பாருக்கெல்லாம் (அனைத்துலகுக்கும்) பாராக (இருப்பிடமாக) இருந்த படியால், மத்ஸ்ய மூர்த்தி ‘தாம’ என்றழைக்கப்படுகிறார்.
‘தாம’ என்றால் அனைவருக்கும் இருப்பிடமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 212-வது திருநாமம்.
“தாம்னே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் எப்போதும் புகலிடமாக இருந்து அவர்களைக் காத்தருள்வார்.

உயர்ந்த உண்மைகளையும் ரகசியங்களையும் அடியார்களுக்கு மத்ஸ்யபுராணம் மூலமாகவும்,
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மூலமாகவும் வெளியிட்ட மத்ஸ்ய மூர்த்தி, ‘ஸத்ய:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸத்ய:’ என்றால் அடியார்களிடத்தில் உண்மையாக இருப்பவர் – அதாவது, வெறும் உண்மையைச் சொல்லாமல்,
மிகச்சிறந்த நன்மை பயக்கும் உண்மையை வெளியிடுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 213-வது திருநாமம்.
“ஸத்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் எந்நாளும் வாய்மையிலிருந்து வழுவாதபடி திருமால் அருள்புரிவார்.

மெய்யடியார்களுக்குத் தனது வீர தீர பராக்கிரமங்களை நன்கு காட்டி அருளுவதால்,
மத்ஸ்யமூர்த்தி ‘ஸத்யபராக்ரம:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸத்ய:’ என்பது மெய்யடியார்களைக் குறிக்கிறது. அவர்களிடத்தில் தனது பராக்கிரமங்களை வெளிப்படுத்திக் காட்டும் திருமால்
‘ஸத்யபராக்ரம:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 214-வது திருநாமம்.
“ஸத்யபராக்ரமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் தனது மேன்மைகளை நன்கு காட்டியருள்வார்.

வடமொழியில் ‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடிக் கொள்ளுதல் என்று பொருள்.
அறவழியில் வாழும் அடியார்களுக்கு மட்டும் கண் திறந்து அருள்புரிந்து விட்டு,
அறவழிக்குப் புறம்பாக வாழ்வோரைக் கண்ணால் பாராமல் கண்களை மூடிக் கொண்டதால்,
மத்ஸ்ய மூர்த்திக்கு ‘நிமிஷ:’ என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 215-வது திருநாமம்.

“நிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அறநெறியிலிருந்து வழுவாத படித் திருமால் காத்தருள்வார்.

“அடியார்களின் மேல் கண்களின் கடாட்சத்தை நன்கு பொழிவதற்கு நாமே மீனாகப் பிறப்பது தான் சிறந்த வழி!” என்று கருதிய திருமால்,
மத்ஸ்யாவதாரம் செய்து, பிரம்மா, மனு, சப்தரிஷிகள், சத்தியவிரத மன்னன் உள்ளிட்ட மெய்யடியார்களின் மீது
தனது அருட்பார்வையை நன்கு பொழிந்தார். ஒருநொடி கூட கண்களை இமைக்காமல் தொடர்ந்து அவர்களைக் கடாட்சித்தார்.

‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடுதல், அல்லது இமைத்தல்.
கண்களை இமைக்காது தொடர்ந்து அடியார்களைக் கடாட்சித்தபடியால், மத்ஸ்யமூர்த்தி ‘அநிமிஷ:’ கண்களை இமைக்காதவர்
என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர
நாமத்தின் 216-வது திருநாமம்.

“அநிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமாலின் அருட்பார்வை பரிபூரணமாகக் கிட்டும்.

மத்ஸ்ய மூர்த்தியைத் திருமாலின் அவதாரம் என்று சத்தியவிரதர் அடையாளம் கண்டுகொள்ள ஏதுவாகக் கழுத்தில்
வைஜயந்தி வனமாலையுடன் தோன்றியதால், மத்ஸ்யமூர்த்தி ‘ஸ்ரக்வீ’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘ஸ்ரக்’ என்றால் மாலை, ‘ஸ்ரக்வீ’ என்றால் மாலையை அணிந்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 217-வது திருநாமம்.

“ஸ்ரக்விணே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி, திருவரங்கத்தில் தசாவதார சந்நதியில் உள்ள
மத்ஸ்ய மூர்த்தியைத் தியானித்து வரும் அன்பர்களின் இல்லங்களில்,
விரைவில் மாலை மாற்றும் வைபவம் நடக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

‘வாக்’ என்றால் பேச்சு. ‘வாசஸ்பதி:’ என்றால் பேச்சுக்கு அதிபதி என்று பொருள்.
கூறுவதற்கரிதான பற்பல வேத ரகசியங்களை எல்லாம் மத்ஸ்யபுராணத்தில் விளக்கி அருளியதால்
மத்ஸ்யமூர்த்தி ‘வாசஸ்பதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 218-வது திருநாமம்.

“வாசஸ்பதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல பேச்சாற்றலைத் திருமால் அருள்வார்.

பக்தர்களின் பாபங்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் இனி பிறவாமல் காப்பதற்காகவும், திருமால் கருணையோடு பூமிக்கு இறங்கி
வந்து மீன் போன்ற வடிவங்களில் அவதாரங்கள் எடுக்கிறார்.
இத்தகைய அவதாரங்கள் செய்ய வேண்டுமென்றால், அந்த இறைவனுக்கு எவ்வளவு பரந்து விரிந்த கருணை இருக்க வேண்டும்?
அதனால் தான் மத்ஸ்யமூர்த்தி ‘உதாரதீ:’ என்றழைக்கப்படுகிறார்.

பரந்த மனப்பான்மையை வடமொழி யில் ‘உதாரம்’ என்று சொல்வார்கள்.
‘உதாரதீ:’ என்றால் விசாலமான கருணை உள்ளத்தை உடையவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 219-வது திருநாமம்.“உதாரதியே நமஹ” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்களின் மீது திருமால் தனது விசாலமான கருணையைப் பொழிவார்.

—————

ஸ்ரீ மத்ஸ்ய அவதார பரமான அருளிச் செயல்கள்

அன்னமும் மீன் உருவுமாய் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் யசோதை உகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே -1 5-11 –வேத பிரதமான ஹம்சமும் – பிரளய ஆபத் சகமான மத்ஸ்யமும்- ஹிரண்ய நிரசன அர்த்தமான நரசிம்ஹமும் –இந்திர அபேஷித சம்விதானம் பண்ணும் வாமனனும்-மந்திர ஆதாரமான கூர்மமும் ஆனவனே -இத்தால் –-ஆஸ்ரித சம்ரஷித அர்த்தமாக -அசாதாரண திவ்ய விக்ரகத்தை அழிய மாறிக் கொண்டு – அவ்வவ தச குண அநு குணமாக -ரஷிக்கும் அவன் என்கை-உம்மைத் தொகை ஒவ்வொன்றுக்கும் -அந்த அந்த சேஷ்டிதங்கள் தனித்தனியே ஆகர்ஷணமாக இருப்பதால்

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3 -3-7 –பூமி உத்தாரணம் பண்ணின வராஹமும் –மந்தர ஆதாரமான கூர்மமும் – பிரளய ஆபத் சகமான மத்ஸ்யமும் ஆன-(நரசிம்ம வாதி அவதாரங்கள் இருக்க இம்மூன்றையும் ஒரு கோவையாக அருளிச் செய்தது ) இத்தால் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை அழிய மாறி  – திர்யக் சஜாதீயம் ஆக்கிக் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணி அருளின நீர்மையை சொல்லுகிறது-வராஹ அவதாரத்தை முற்படச் சொல்லிற்று -பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை எடுத்த அளவு அன்றிக்கே -சம்சார ஆர்ணவ மக்நரான சேதனரை உத்தரிப்பைக்காக
தத் அநுரூப உபாயங்களை உபதேசித்த ஏற்றத்தைப் பற்ற –-ஏனத் துருவாய்  இடந்த பிரான் –  ஞானப் பிரான்-(திரு விருத்தம் -99-) -என்றார் இறே ஆழ்வாரும்-திரு மங்கை ஆழ்வாரும் -ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான் ( 2-7-)-என்ற அநந்தரம்-ஞானத்தின் ஒளி உருவை -என்றார் இறே-இவர் தாமும் –எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து-( 4-2 ) -என்று மேலே அருளி செய்கிறார் இறே-மத்ஸ்யாதி அவதாரங்கள் பிரஸித்தமாய் இருக்கச் செய்தேயும்-அன்னமும் மீன் யுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே-(ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-5-11) என்பது–ஆனாயன் ஆனான் மீனோடு ஏனமும்-(திருவாய் -1-8-) என்பது-இப்படியே பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய என்று மாறாடி அனுசந்திப்பது-மீனோடு ஆமை கேழல் -(8 -10-10-)என்று அடைவே அனுசந்திப்பது ஆகிறது –-யுகே யுகே ஸம்பவாமி -என்கிற நியாயத்தையும்-வையம் காக்கும் உருவும் பேரும் செய்கையும் –ஊழி தோறு ஊழி வேறவன் (திருவாய்-7-3-11 ) -என்கிற அவதார ரஹஸ்யங்களையும் விஸதமாக அறிந்தவர்கள் ஆகையாலே இறே –

தேவுடைய மீனமாய்  யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய்
முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-தசாவதாரமாய் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணுமவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது-தேவுடைய–திவு -காந்தி -தேஜஸ்—தேவுடைய-த்யோதமாந குணங்களை யுடையவனாய்
ஆபத் ரக்ஷகங்களுமான–(மீனமாய் )பிரளயத்தை வற்றுவித்து-வானோரளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வந்து உய்யக் கொண்ட மத்ஸ்ய அவதாரமாய்——-முடிப்பான் கோயில் அவ் வவதாரங்களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் இழக்க வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற கோயில் –

அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –35-ஜலத்தில் உள்ள மீனுமாகியும்-மிகுந்த அன்பையும் காட்டியும் அருளி-பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -எனவே மிக்கதாய் –

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் –-இன் தொண்டர்க்கு இன் அருள் புரிந்த உபகாரம் தாஸோஹம் என்று அறிய வைத்த அருள்–இப்படிப் பட்ட ருசியை உடையராய் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக திருவிடவெந்தையில் வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –

கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்  அண்டமும் சுடரும் அல்லா  ஆற்றலும் ஆய எந்தை  ஒண் திறல் தென்னன் ஓட  வட அரசு ஓட்டம் கண்ட  திண் திறலாளர் நாங்கூர்த்  திருமணிக்கூடத்தானே.  –4-5-6- ஸ்ரீ மத்ஸ்யமும் ஸ்ரீ வாமனனும் ஸ்ரீ அன்னமும் ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரசிம்ஹமும் ஸ்ரீ ஹயக்ரீவரும்–அவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து அவ் ஊரில் உள்ளார் இருப்பது (ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் இவர்களே செய்ய வல்லவர்கள் )

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு  ஏறுகைக்காக-வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்-அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்-மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்-இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்-நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம் என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

கொழுங் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன்
எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி  வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2—மிக்க ஜலமானது பூமியை அடையக் கொண்ட காலம் – கொழு விதமான-த்ருடமான கயலாய்-குல வரைக்கு மேலே போய் அண்ட பித்தி அளவும் செல்லத் துள்ளி ஸ்வைரமாக லீலா ரசம் அனுபவிக்கும் ஸ்வ தந்த்ரன்  –

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்

தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில்  கண்டேனே—6-8-2-மீனாய் பிரளயம் கொண்ட பூமியை ரஷித்த படி-மூழ்த்த நாள் –லோகத்தை பிரளயம் கொண்ட காலத்து –அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத் –அந்நீர் தானே -பாடி காப்பாரே களவு காணுமா போலே-
ஜகத்தை அடையக் கோக்க ஒரு மத்ஸ்யமாய் அத்தை தன்னுடைய செலுவிலே ஏக தேசத்திலே அடக்கினான் ஆய்த்து –கடல் கடைகைக்கு தேவர்களையும் அசுரர்களையும் கூட்டி-தானான மேன்மை குறையாதே நிற்க வேண்டிற்று – ஜகத்துக்காக வந்த பிரளயத்தை பரிகரிக்கிற இடத்தில்-அங்கன் ஒரு சகாயமும் இன்றிக்கே-தானும் தன்னைக் குறைய விட்டு நிற்கும் அளவிலே ஆய்த்து-ஓன்று செய்யும் இடத்தில் அநேகம் பேரைக் கூட்டி கொண்டு செய்யவும் வல்லனாய்-தனியேயும் செய்ய வல்லனுமாய் இருக்கும் பெருமானை – சர்வாதிகன் உடைய செயல் இறே –

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே —7-8-10-ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாமையும் ரஷிக்குமவன் ஆய்த்து –பூமியை சிருஷ்டித்து பன்றியாய் இத்யாதிகளால் காத்து -அத்தை ரஷித்து-திரியவும்
பிரளயம் வர -வயிற்றிலே வைத்து – திரிய வெளிநாடு காணப் புறப்பட விட்டு-இப்படி சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார் மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்

தார் மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-கடலிலே அக் கடல் கண் செறி இட்டால் போலே(நெருக்கமாக வியாபித்து ஒரு லக்ஷம் யோஜனை-10 லக்ஷம் mile)
இருக்கிற வடிவை உடைய மத்ஸ்யமாய் –அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -(11-4-)-என்னக் கடவது இறே –கடலிலே நீர் குழம்பிச் சேறாம் படி இறே கொண்ட வடிவின் பெருமை –
அன்றிக்கே-ஜலசர ஜாதியுமான வடிவை உடைய ஆமையாய் –(தண்ணீரில் நீந்தும் -ஜலத்தில் பிறந்த இரண்டு உருவங்கள் என்றுமாம் )

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்

ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-தேவர்கள் எல்லை அளவும் செல்லக் கடல் வெள்ளம் பரந்த நாள் அத்தை அடைய தன்னுடைய ஒரு   செலுவிலே அடக்க வல்ல மிடுக்கை உடைய மத்ஸ்யமாய் வந்து –வியந்துய்யக் கொண்ட –நாம் ரஷகமாக விட்ட கடல் தானே பாதகம் ஆவதே-இருந்த படி என் விஸ்மயப்பட்டு -என்னுதல் –
அன்றிக்கே-வேறுபட்டு ஜகத் காரண பூதனான தான் ப்ரஹ்மாதி அளவிலே தன்னை அமைய விட்டால் தான் நின்ற நிலைக்கு இது சேராதாய் இருக்கும் இறே –(இணைவனாம் -ஸஜாதீயனாக -ஸூலபனாய்-சர்வ பிரகாரியாய் சர்வ சரீரீயாய் இருந்தும் எந்நின்ற யோனியுமாய் பிறந்து ) அங்கனும் அன்றிக்கே –விஜா தீயமான வடிவை உடையவன் ஆகையாலே வந்த நெடு வாசியைச் சொல்லிற்று ஆகவுமாம் –தண் தாமரைக்கண்ணன் –
மத்ஸ்ய கமல லோசன
-என்னக் கடவது இறே –ஆனா வுருவிலானா யவனை-சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –(சதைக ரூப ரூபாயா -ஸ்வரூபமும் உருவமும் மாறாதவை அன்று )-ஆனாத வுரு -கெடாத வுரு என்றபடி –

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி-ஜகத் ரஷணம் பண்ணின தன்னை –(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்-2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்-4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்-8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம் 9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )

வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரி யகட்டு ஒளித்தோன்

போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —-9-1-3-எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட ஆகாசமும் பூமியும் குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட -இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-இழந்த வேத சஷூசை மீட்டுக் கொடுக்கைக்கு ஈடான அன்னமாயும்-ஸ்ரீ வராக புராணத்தை அருளிச் செய்தும் ஸ்ரீ மத்ஸ்ய புராணத்தை அருளிச் செய்தும் (ஸ்ருதி ஸ்ம்ருதி -வேதம் ஸ்ரீ வராஹ புராணம் -மத்ஸ்ய புராணம் )இப்படி தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த
ஜகத் காரண பூதனானவன் –(தான் உண்டாக்கிய ஜகத்தை ரக்ஷணம் தானே தானே பண்ண வேண்டும் ) திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –

நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே
–11-4-1-நிலை கொள்ளலாவதொரு இடமும் இன்றிக்கே ஆழம் காலாய்   இருக்கிற -என்னுதல் –
ஓர் இடத்திலே நில்லாதே அலைஞ்சு வருகிறது -என்னுதல்
இது கீழ் இது நடுவு இது மேல் -யென்று பரிச்சேதிக்க ஒண்ணாத மஹா பிரளயம் –லோகத்துக்கு ரஷகரான தேவர்கள் குடி இருப்பையும் கூட மேலிட –நாம் ரஷகராம் எல்லை கழிந்தது -யென்று தேவர்கள் கவிழ்  தலை இட –-அன்றிக்கே –தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன – மேலாய் இருப்பதொரு  இருப்பிடம் அற்று எங்களுக்கு ரஷகர் இல்லை யென்ன –நான் உளனாய் இருக்க நீங்கள் அஞ்ச வேணுமோ – நான் ரஷகனாய் இருக்கிறேன் – என்னும் படியான  கிருபையாலே –ஷூபிதமாய் வருகிற கடல் குழம்பாம் படியாக தன் கீழ் வயிற்றிலே அலை எறியும் படியாகவும்-ஆகாசத்தில் ப்ரஹ்மாதிகள் குடி இருப்பிலே வீசும் படியாக தன் திரு முதுகிலே-மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம்  தாரகமான வஸ்துவை –சர்வாதிகனான சர்வேஸ்வரனை –அவன் அப்படி தன்னுருக் கொடுத்து-வேற்றுருக்  கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் -( பக்தானாம் ப்ரஸாததே ) உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை-( இதுவே அரிய சேவை நமக்கு -இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ 

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே
–1-8-8-சர்வாதிகனான தானே இறே திர்யக் சஜாதீயன் ஆனான்-அவன் க்ரமத்திலே பிறக்கச் செய்தேயும் – அனுசந்தானத்தில் பதற்றத்தாலே ஏக காலத்திலே இரண்டு அவதாரம் போலே சொல்லுகிறார்-வடிவும் சொலவும் செயலும் ஜாதிக்கு அடுத்தவையாய் இருக்கை-இதுக்கு ஹேது என் என்னில்-என் பக்கல் தனக்கு உண்டான சங்காதிசயத்தாலே என்னுதல் என்னைக் குறித்து தான் பண்ணின அவதாரங்கள் சங்கம் என்கிற மஹா சங்க்யைக்குப் போரும் என்னில் என்னைக் குறித்து -தானாய தானவை -சங்கே -சங்கத்து அளவே அன்று இறே

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-
வித்யா ப்ரவர்த்தகமான அவதாரங்கள்-அனுஷ்ட்ட்டே யதார்த்த ப்ரகாசகமான ராம கிருஷ்ணாத் யாவதாரங்கள்–அகர்ம வச்யனானவன் கர்ம வச்யரோடு ஒக்கப் பிறந்தாயிற்று-இப்படி செய்கின்றவன் தான் ஆர் என்னில்-ப்ரஹ்மாதிகளுக்கு ஆதி தேவர்களான நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் கிடீர் இப்படி தாழ நின்றான் என்கை –
இந்த்ராதிகளும் பூமியில் துர்க்கந்தாதிகள் பொறுக்க மாட்டாதே ஒரு யோஜனத்துக்கு அவ்வருகு இ றே நிற்பது –நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை-அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்-என்னை பிரயோஜ நான்தர பரதையை தவிர்த்தவன் –
நான் இழிந்து ஆடும் துறை என்றுமாம் –

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-
ஞான ப்ரதானார்த்தமான ஜல சர சஜாதீயன் ஆனான் –தாரண அர்த்தமாக கூர்ம ரூபி யானான் -சடக்கென விரோதியைப் போக்குகைக்கு இரண்டு வடிவைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான் -கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு ஆர்த்தி யானான் –சம்சார ஆர்ணவத்தின் நின்றும் எடுக்கைக்கு வராஹ ரூபத்தைக் கொண்டான் –மனுஷ்யர் நடையாடாத காட்டில் மிகவும் வர்த்திக்கும் வராஹம் –என் கார்யம் சமைந்த பின்பும் -சம்சாரத்தின் நின்றும் கால் வாங்கும் தனையும் -இவருக்கு என் வருகிறதோ என்று கொண்ட குதை மீண்டிலன் –
மேல் வரும் விரோதத்தை போக்குகைக்கு இன்னமும் கல்கியாக இருந்தான் -நான் தன்னைத் தப்புகைக்காக பிறந்த அளவும் போரும்-அவன் ரஷிக்கைக்காக பிறந்த பிறவி -நான் கர்மத்தால் பிறந்தவை அடங்க அனுக்ரஹத்தாலே பிறந்தான் –வர்ஷூகவலாகஹம் போலே இருக்கிறான் அத்தனை -வர்ஷித்தானாய் இருக்கிறிலன்-

மீனாமை கோலநெடு நரசிங்கமாகி நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு நாராயணாய நமவே 
(மகாபாரதம், சல்லிய பருவம். 1) 
என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.

————————————————

(ஸூந்தர பாஹு ஸ்தவம -மத்ஸ்ய அவதார பரமான ஸ்லோகமும் – ஓசையும் பொருளும் நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1–ஒட்டியே இருக்கும்

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந
ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் ஸ்வ க்ருபயா
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீநதநு ரத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–92-

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் –பிரளயத்தில் உண்டான பெரு வெள்ளத்தால் நிரப்பட்ட தம் தாம் இருப்பிடங்களை உடையவர்களாய் –-அத ஏவ மிக வருந்தின முகத்தை உடையவராய் –
தடுமாறினவர்களாய் – நாதன் அற்றவர்களாய் – புகலிடம் விரும்புவர்களான தேவர்களுக்குத் தஞ்சமாகக் கொண்டு
1-பரிபூரி தஸ்வ நிலய-2- அவசந் நவ தந-3-ப்ரமத் -4- அசரண்ய பூத -5-சரணார்த்தி-ஆகிய ஐந்தும் நாகிகளுக்கு விசேஷணங்கள்

சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீந தநுர
–இவற்றை ஸமஸ்த பதமாகக் கொள்ளவுமாம் –இடையில் உள்ள –
கலுஷீ க்ரியாட்ய கமன என்று விஸர்க்க அந்தமாக்கி -அதை ஒருபதமாகவும்
மேல் உள்ளதை ஒரு பதமாகவும் கொள்ளலாம் -பொருளிலும் கருத்திலும் வாசி இல்லை
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச-என்றதற்கான கருத்தை –
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனமாலை-என்றதற்கான கருத்தை –
ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா சலகுல ஏஷ மீநதநு-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
கொந்தளிக்கின்ற கடல் நீர் வெள்ளத்தை எல்லாம் கலக்கிக் கொண்டு அதனுள்ளே சஞ்சரிப்பவரும் –முதுகிலே மலைத் திரள்களைத் தாங்கிக் கொண்டு இருந்தவருமான மத்ஸ்யவதாரப் பெருமாள்
அத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–இங்கே திருமாலிருஞ்சோலை மலை உறையும்
சுந்தரத் தோளராக சேவை சாதித்து அருளுகிறார் -என்கை –)

தேவோ ந ஸூபமாத நோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைர் அத்யஷிதோ பாவுகை
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ் வநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா -1-

யாருடைய அவதாரங்களில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் வெவ்வேறான பொருத்தமான அவதாரங்களை தானே எடுத்துக் கொண்டு
பல வடிவங்களை அவனது தர்மங்களோடு ஒத்த தர்மங்களுடன் இவ்வுலகில் விளையாடுகிறாளோ
அந்த அரங்கன் பத்து வித அவதாரங்களின் வேஷத்தை எடுத்துக் கொண்டு முழுமையான மகிழ்ச்சி அடைந்த பக்தர்களால்
திருவரங்கம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் காணப்படுபவனான திருவரங்கன் நம் எல்லாருக்கும் மங்களத்தை அருள வேண்டும் –

தேவோ-விளையாட்டுடை -திவு காந்தி தேஜஸ் –
ந ஸூபமாத நோது -ஸூபம் ஆத நோது -விஸ்தாரமாக ஸூபம் கொடுக்கட்டும் –
தசதா நிர்வர்த்தயன் பூமிகாம் -பத்து விதமாக வேஷம் எடுத்து கொண்டு -பூமிகா -அவதாரம் -மூர்த்தி பேதம் —
ரங்கே தாமனி -நாடக மேடை ஸ்ரீரங்கம்
லப்த நிர்பர-கிடைக்கப் பெற்ற பூரணமான
ரஸைர் அத்யஷிதோ பாவுகை-ரசிகர்கள் -ஸ்ரீ ரெங்க வாசிகளால் – -சேவிக்கப் பெற்றவர் யாரோ
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ்வ-வேவேறே விதங்களில் அவனுக்கு தக்க
அநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ -அனுகுண மாக தானும் எடுத்துக் கொண்டு
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா-பஹு வித ரூபங்களை கொண்டு ஆனந்த ரசம் அனுபவிக்கும்

சகல மனுஷ நயன விஷயம் ஆவதற்கு -அவதாரணம் -இறங்கி -இடமும் -நிலையம் – -அவதார கந்தம் பாற் கடல் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராபதி நிகேதன–இத்யாதி –
பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -அவதரிக்கிறார் -அஜோபிசன்-இத்யாதி – -ஆமையான கேசனே –
முதல் அவதாரம் பிரதமஜ விஷ்ணு -இணைவனாம் இருவர் அவர் முதல்வர் தாம் –
புராணம் வராஹர் முதல் அவதாரம் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது
கிணற்றில் விழுந்தாரை தூக்கி எடுக்க அன்றோ அவதாரம் -கிருபையா கேவலம் -கோரம் அனந்தர சம்சார சாகரம் –
நாடக மேடை -அரங்கம் -ஸுசீல்ய குணம் வெளியிட்டு அருள
ஸ்ரீ ரங்கம் பிராட்டி க்காக அவன் இருக்கும் திவ்ய தேசம் -காவேரி தாயார் -சீர் கொடுக்க பாரித்து வந்து –
மணல் மேட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து –
அவதாரமே வேஷம் தானே -மறைத்துக் கொண்டு அவதரிக்கிறார் –
வில்லால் அன்றோ ஆணை கட்டினான் -குரங்குகளை கொண்டு -வேஷம் இருந்தாலும் பரத்வம் பீறிடுமே
அவன் திரு மேனியே ஸூ பாஸ்ரயம் -ஞானம் தானே ஸூ பம் -ஆனந்தம் ஸூ பம் –
அவன் ஒளியால் அவனே சேவை சாதிக்கிறான் அவள் உடன் சேர்ந்து -நாம் ரசிக்க -மேகம் மின்னல் –
பரிபூரணமான ரசம் -அனுபவிக்க தெரிந்த -அவனே பிரதானம் இவர்களுக்கு –
180 நாள் புறப்பாடு உள்ள திவ்ய தேசம் அன்றோ -சதா பஸ்யந்தி பண்ணுபவர்கள் -மால் கொள்ளும் சிந்தையர்கள் –
கண்ண நீர் சேறு -அவனுக்கே பித்தராவார்கள் –
பதின்மர் பாடும் பெருமாள்
ராக்வத் சீதை – கிருஷ்ணன் நப்பின்னை –வராகன் பூமி பிராட்டி –தேவ்தவே தேவி -யத் பாவேஷூ-மனசுக்கும் அணு குணமாக
-அதே தர்மம் உதவ -கிருபை ஆன்ரு சம்சயம் -புருவ நெருப்பே பிரமாணம் –

ஸூபம் சொல்லி அருளும் ஸ்லோகங்கள் என்பதால் அரக்கர் அசுரர் வார்த்தைகளே இல்லையே –

———————————————————————————–

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா தத்த ஷணைர் வீக்ஷணை
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் யவ்தன்வா தீ நா மபாம்
நிஷ் ப்ரத்யூக தரங்க ரிங்கண மித ப்ரத்யூட பாதஸ் சடா
டோலாரோஹ சதோ களம் பகவதோ மாத்ஸ்யம் வபு பாதுந–2-

கடலுக்குள் மூழ்கிய வேதத் தொகுதிகளைத் தேடும் வேளையிலே கறுத்துப் பொதிந்த -திருக் கண்களின் கடாக்ஷங்களால் –
கடலின் நீருக்கு உள்ள தாமரைக் கூட்டங்களைப் படைப்பது போலே தடை இல்லாத அலை வீசுதலால்
ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்ட நீர்த் தொகுதி என்னும் ஊஞ்சலிலே ஏறுவதில்லை உத்ஸாகம் கொண்ட
எம்பெருமான் மீன் வடிவம் நம்மைக் காக்கட்டும் –

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா -ஆழ்ந்த -அமிழ்ந்த வேதக் கூட்டங்கள் -தேடும் அவதாரம்
ஹயக்ரீவன் அசுரன் கடலிலே மறைக்க -மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் அன்றோ
தசா -நான்கு திசைகளிலும் -மீனுக்கு கண்கள் சுழலும்
தசா தத்த ஷணைர் வீக்ஷணை -தேடும் கண்கள் -கவனத்துடன் -பார்வைகளால் -தேட
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் -உள்ளே -அரவிந்த கஹானான் தாமரைக்கு காடு ஆனதே -உருவாக்கும் படி –
கப்யாசம் புண்டரீகாக்ஷணம்
யவ்தன்வா தீ நா மபாம்-சமுத்திரம் -ஆப தண்ணீர் உடைய
நிஷ் ப்ரத்யூக தரங்க-தடங்கல் இல்லாத அலைகள் -கரையே இல்லையே பிரளயத்தில்
ரிங்கண மித ப்ரத்யூட -ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்டு -மேலே எழும்பி
பாதஸ் சடா -பய சமூகம் தண்ணீர் கூட்டம்
டோலாரோஹ சதோ களம் பகவதோ -டோலோஸ்த்வம் -பிரளயம் அன்றோ –தானே ஏற்பாடு -செய்து கொண்டு அருளி –
ஊஞ்சல்-ஆரோஹனம்-சதோ கதம் -பாட பேதம் -ஆசை உடைய -ஸ்ரீ ரெங்கநாதனுடைய
வால் பகுதி கொண்ட அசைந்து செதில்கள் அசைந்து -பெரிய திரு மேனி
மாத்ஸ்யம் வபு-திருமேனி -மத்ஸ்ய அவதாரம்
பாதுந-நம்மை ரக்ஷிக்கட்டும் –

சாளக்கிராமம் திரு மேனி -மத்ஸ்யம் -கண்களால் ரக்ஷணம் -நைமித்திக பிரளயம் மூன்று உலகம் -ப்ரஹ்மா தூக்கம் –
வேதம் கண்கள் போலே ப்ரஹ்மாவுக்கு -மூச்சுக்காற்று -அந்தணர் மாடு -ஹயக்ரீவன் அசுரன் திருடி போக
உச்சாரண அநு உச்சாரண -சப்த ரூபம் -பிரளயத்தில் மறைக்க -மீனாக தானே அவதரிக்க வேண்டும் –
நேராக பெரிய திரு மேனி கொள்ளாமல் -சத்யவ்ரதன் ராஜ ரிஷி உதவ -க்ருதமாலா நதி –
காவேரி பயஸ்வினி கொசித்-கொசித் -திராவிடேஷூ -பிரமாதாக்கள் அவதாரம் இங்கே
க்ருதமாலா நதி கரையில் நித்யப்படி ஜல தர்ப்பணம் பண்ண -சிறு குட்டி மீன் கையிலே வர –
விடும் பொழுது பேசி -தீன வத்சலா -என்று கூப்பிட்டு –
வியப்பாயா வியப்பு தத்ர ஏக ராத்திரியில் வர்த்தமான கமண்டலம் -அளவு வளர்ந்து -ஒரே முஹூர்த்தம் ஹஸ்த த்ரயம் அளவு வளர்ந்து –
சரோவரில் விட -அது போகாத படி வளர்ந்து -பெரிய ஏரி கடல் -சமுத்திரம் அளவு வளர -யோஜனம் சத்தம் 800 மைல் -அளவு
-ஹரி நாராயணன் புரிந்து கொண்டார் –
7 நாள் உனக்கு கர்தவ்யம் உண்டு -பிரளயக் கடலில் மூழ்கும் ரக்ஷிக்க வேண்டும் -என்னால் தூண்டப்படும் படகு-ஒற்றைக் கொண்புடன் வர
வாசுகி பெரும் பாம்பை கொண்டு என்னை கட்டி -ஒன்றைக் கொம்பால் -மத்ஸ்ய புராணம் –கட்டுவிக்க
இந்த முடிச்சு சம்சார முடிச்சு அவிழ்க்க -மாயா மத்ஸ்யம் உபதேசிக்க -சத்யாவிரதர் –
திரு நறையூர் பதிகம் –கொழும் கயலாய் –விளையாடும் ஈசன் -எழுந்து இனிது விளையாடும் –
வானோர் அளவும் -முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவில் -மீனாய் வந்து உய்யக் கொண்ட -தண் தாமரைக் கண்ணன்
-இத்தையே தேசிகன் -பார்த்த இடம் எல்லாம் தாமரை ஆனதே
அலை கடல் -நீர் குழம்ப –அக்கடாத ஓடி -வரு மீனை -மறவாது நினை இறைஞ்சு என் நெஞ்சே –
வேத அபஹார -குரு பாதக –தைத்ய பீடா -ஆபத் விமோசன -பிரஜா பதி உமா பதி இந்திரா பதி -ரமாபதி அனுக்ரஹித்து
வேதம் பரம சஷூஸ் -கண்ணைத் தொலைத்தார் -மீனாக
கடல் நிசப்தம் என்பதால் மறைத்து வைத்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதால்
கண்ணை சிமிட்டாமல் -மீன் -கவனம் -இமையவர் இப்படியே -ஸ்வா பாவிக-
ஆமை நினைவால் ரக்ஷிக்கும் / சம்ஸ்பர்சம் -பறவை ரக்ஷிக்கும் /சங்கல்ப சூரியோதயம்

—————————————————————

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப்பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

இச்சா மீன விஹார கச்சப-ஆசைப்பட்டு கொண்ட மத்ஸ்ய மூர்த்தி -விளையாட்டாக கொண்ட விஹாரம் கூர்மம் –
மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே -பூமா தேவி கிடந்த பெரும் கேழலார் –
நரத்வம் ஹரி -ஆளரி-தலை பிரதானம் என்பதால் ஹரே என்கிறார் -யாதிருச்சாயாக தோன்றினார் –
அங்கே அவன் வீயத் தோன்றிய சிங்க பிரான்
விளிச் சொற்கள் இவை எல்லாம் -ஹே ஹே -என்று கூப்பிட்டு புண்ய கடைகள் நிறைந்தது என்றவாறு
திரு நாம சங்கீர்த்தனம் -முளைக் கதிரை போலே
ரஷா வாமன -ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ வாமனன்
ரோஷ ராம -ரோஷம் உருவாக்க கொண்ட
கருணா காகுத்ஸ்த-கருணையே -ராம சொல்லி -வாசி புரியாமல் இருக்க காகுத்ஸதா –
ஹேலா ஹலின் -ஹலம் கலப்பை
க்ரீடா வல்லவ -கோபி ஜன வல்லபன் -விளையாட்டுக்காக நாதன்
கல்க வாஹன தசா -கல்கிந்நிதி ப்ரத்யஹம் -கல்கம் வாகனமாக கொண்ட கல்கி தினப்படி
ஜல்பந்த புருஷா-ஜல்பம் உளறிக் கொண்டே சந்நிபதரைப் போலே சொல்ல சொல்ல
புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா-
புண்யங்கள் கிடைக்கும் -மேலே மேலே கிட்டும் -புவனங்களை புனிதம் ஆக்கி
அலையாக வரும் புண்ணியங்கள் வியாபார பொருள் -விற்கும் கடையாக திரு நாமம் சொல்பவர்கள் –
இச்சா மீனா -வேதம் திரும்பி மீட்டி -வேதம் கற்பதும் அதன் படி நடப்பதும் விலை போலே ஒவ் ஒன்றுக்கும்
பாகவத அபசாரம் செய்யாமல் -திருவடி தீண்ட ஆசைப் பட்டு
விலக்காமை ஒன்றே வேண்டும் அத்வேஷம் -கருணை மழை பொழிய சேர்த்து கொள்ள வேணும்
விளையாட்டு நினைத்து கால ஷேபம் செய்வதே வேண்டும்
வெள்ளை உருண்டை கங்கையில் மீனுக்கு சமர்ப்பித்து
ஸ்ரீ கூர்மம் –
முசுதேவ கோரிக் கிழங்கு
நரசிம்மம் பானகம்
வாமனன் -கேளா செவி அல்ல –

இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சா
ஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://


இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.”
– (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)

ஸ்ரீ தசாவதார-ஸ்தோத்ரம் (கீதா-கோவிந்தத்திலிருந்து) ஜெயதேவ கோஸ்வாமி–இது ஒவ்வொன்றும் எட்டு வரிகள் கொண்ட வசனங்களில் எழுதப்பட்டிருப்பதால், இது அஷ்ட பதி என்றும் அழைக்கப்படுகிறது.(1)
பிரளய-பயோதி-ஜலே த்ரிதவான் அசி
வேதம் விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம்
கேசவ த்ரித-மின-சரீர ஜெய ஜகதீச ஹரே

கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! மீனாக உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! பேரழிவின் கொந்தளிப்பான கடலில் மூழ்கிய
வேதங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காகவே ராட்சத மீன் வடிவில் படகாக எளிதாகச் செயல்பட்டாய் .(2)

வேதாந் உத்தாரதே ஜகந்தி வஹதே பூ-கோலம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே ஹலம் அத்ஸயந்துர்வதேக் உப்யம் நமঃ

ஓ பகவான் கிருஷ்ணரே, இந்தப் பத்து அவதாரங்களின் வடிவங்களில் தோன்றிய உமக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். மத்ஸ்ய வடிவில் நீ வேதங்களைக் காப்பாற்றுகிறாய், கூர்மமாக மந்தார மலையை உன் முதுகில் தாங்குகிறாய். வராஹாவாக நீ உன் தந்தத்தால் பூமியை உயர்த்துகிறாய், நரசிம்ம வடிவில் தைத்ய ஹிரண்யகசிபுவின் மார்பைக் கிழிக்கிறீர்கள். வாமன வடிவில் தைத்ய மன்னன் பாலியிடம் மூன்றடி நிலம் மட்டும் கேட்டு ஏமாற்றி, உனது படிகளை விரிவுபடுத்தி முழு பிரபஞ்சத்தையும் அவனிடமிருந்து பறித்து விடுகிறாய். பரசுராமராக நீங்கள் தீய சத்திரியர்கள் அனைவரையும் கொன்று, ராமச்சந்திரனாக ராக்ஷச மன்னன் ராவணனை வெல்கிறீர்கள். பலராமன் வடிவில் நீங்கள் கலப்பையை ஏந்தி, துன்மார்க்கரை அடக்கி, யமுனை நதியை உங்களை நோக்கி இழுக்கிறீர்கள். பகவான் புத்தராகிய நீங்கள் இவ்வுலகில் துன்புறும் அனைத்து ஜீவராசிகள் மீதும் கருணை காட்டுகிறீர்கள், கலியுகத்தின் முடிவில் நீங்கள் கல்கியாக தோன்றி மிலேச்சர்களை [தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மனிதர்களை] திகைக்க வைக்கிறீர்கள். ஜெயதேவ கோஸ்வாமி அல்லது அனைத்து வைஷ்ணவ ஆச்சார்யர்களின் பஜனைகளுக்குத் திரும்பு .

” மீனோடாமை கேழல் கோளரியாய் வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில் துன்னிய பரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும் மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர் வானாரின்ப மிங்குற வருதி.” (மும்மணிக்கோவை. 4)

[கேழல் – வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி – பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)

மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்க வுற்றனை.– (நவமணிமாலை. 2)

(மகரம் – மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் – இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் – இரணியகசிபு, மதலை – பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் – அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் – இராவணன் ; வரை – கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டாத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸஹஸ்ர நாம ராமாயணம்–

December 1, 2025

ஸ்ரீ ஸஹஸ்ர நாம ராமாயணம்.--“ஸ்ரீ ராமாவதாரத மென்றால் பட்டர் போர பக்ஷ பதித்திருப்பார்” என்று நம் ஆசார்ய கோஷ்டியில் ஸுப்ரஸித்தமாகையாலே ஸ்ரீராம பக்ஷபாதியான பட்டர் தம்முடைய ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் *ராமோ விராமோ விரத * இத்யாதி திரு நாமங்களுக்கு முன்னே ‘ பரர்த்தி பரம ஸ்பஷ்ட “ என்னுமிடத்தில் ” அத ம்ருத ஸஞ்ஜீவநம் ராம சரிதம் ” என்றருளிச் செய்துள்ளார். (பரர்த்தி } என்கிற திருநாமம் முதலாக ம்ருத ஸஞ்ஜீவினயான ராம கதை சொல்லப்படுகிறது என்றபடி. பரர்த்தி, பரம ஸ்பஷ்ட துஷ்டா புஷ்ட: சுபேக்ஷண ராம விராமக விரத மார்க்க நேய நய அநய?, வீர சக்தி மதாம் ச்ரேஷ்ட: தர்ம: தர்ம விதுத்தம:- வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண என்கிற 32 திரு நாமங்களும் ராம சரித்திரங்களைத் தெரிவிப்பன

ஸ்ரீ ராம அவதார -390-421-திரு நாமங்கள்–32-திரு நாமங்கள்-மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் ஸ்ரீ இராமன் –

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43-

வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது
ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-44-

ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ
உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண –45-

391-பரர்த்தி:, 392. பரமேஸ்பஶ்ட:, 393. துஶ்ட:, 394. புஶ்ட:, 395. ஸுபேக்ஷண: ||396-ராம:, 397. விராம:, 398. விரத:, 399. மார்க:, 399. நேய:, 400. நய:, 401. அனய:|402-வீர:, 403. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 404. தர்ம:, 405. தர்மவிதுத்தம: ||406-வைகுண்ட:, 407. புருஶ:, 408. ப்ராண:, 409. ப்ராணத:, 410. ப்ரணவ:, 411. ப்ருது: |412-ஹிரண்யகர்ப்ப:, 413. ஶத்ருக்ன:, 414. வ்யாப்த:, 415. வாயு:, 416. அதோக்ஷஜ: ||417-ருது:, 418. ஸுதர்ஶன:, 419. கால:, 420. பரமேஶ்டீ, 421. பரிக்ரஹ:

பரர்த்தி: — உயர்வற உயர்நலம் கொண்டவர்; சகல கல்யாண குணங்களும் உடையவர்-சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது — அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –-(சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர்) –(பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
பரம ஸ்பஷ்ட: — மஹா யோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –(வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் )–(மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
துஷ்ட: – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –பேரானந்த  வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
புஷ்ட: — குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
சுபேக்ஷண: — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,-பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,-முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,-அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர் – மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர்-தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்-மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும் ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்-தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ராம: — நித்திய ஆனந்தமாய், யோகிகள் எல்லையற்று ஈடுபடும் பரம்பொருள்; உத்தமமான தன் குணங்களாலும் திருமேனி அழகாலும்-அனைவரையும்- பக்தர்களின் மனத்தை மகிழ்விப்பவர் – ராமர்- குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர்-நித்ய ஆனந்த ரூபியான தம்மிடம் யோகிகள் மகிழும் படி இருப்பவர் –
தம் இச்சையால் மிகவும் அழகிய திருமேனியைக் கைக் கொண்டவர்-ஸ்ரீ லஷ்மீ தேவியின் மணவாளர் -யோகிகள் மகிழும்படி இருப்பவர்

விராம: — யாரிடம் ஈடுபடுவதால், யாருடைய சரிதத்தைக் கேட்பதால் நம் உலகக் கவலைகள் முடிவுக்கு வருகிறதோ அந்தப் பரம புருஷர்-தான் செயல் படும் போது வரம் கொடுத்த தேவர்கள் -வரம் பெற்ற இராவணன் -கொடுக்கப் பட்ட சாகா வரம் ஆகிய அனைத்தும் ஓயுந்து போகும்படி செய்தவர்-பிறரை ஓயச் செய்பவன்-வரத்துக்கு ஒய்வு -வரம் கொடுத்த பிரமனுக்கு ஒய்வு – வரம் பெற்ற ராவணனுக்கு ஒய்வு -தேவர்களுக்கு ஒய்வு கொடுத்தவன்-வரங்களை அளிக்கும் பிரம்மாதி தேவர்களும் -அந்த வரங்களும் -அவற்றைப் பெற்ற ராவணாதிகளும் தம்மிடம் ஓய்ந்து போகும்படி இருப்பவர்-அனைத்துப் பிராணிகளும் முடிவில் அடையும் இடமாய் இருப்பவர்-மேன்மை யுடைய லஷ்மியை உடையவர் -கோபிகைகள் பலரை யுடையவர் – பிரளயத்தில் ஜனங்களை முழுகச் செய்பவர்


விரத: — வைராக்கியம், தியாகமே உருவாய் இருப்பவர் -அரசில் பற்று இல்லாதவன்-ராஜ்யம் முதலியவற்றில் ஆசையற்று இருப்பவர் விஷய ஸூகங்களில் ஆசையில்லாதவர் தோஷங்கள் அற்றவர் -விரஜ -என்ற பாட பேதம்-
மார்க: — முக்திக்கான உன்னத வழியாக இருப்பவர்–பரத்வாஜர் முதலான முனிவர்களால் தேடப்படுபவன்(விராதோமார்க–ஒரே நாமமான போது -குற்றம் இல்லாத வழியைக் காட்டுபவர்)-பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் -தம்மை அறிவதே முக்திக்கு வழியாக இருப்பவர் -ஸ்ரீ நரசிம்ஹம்-திருவவதரித்து சிங்க திரு முகம் யுடையவர்

நேய: — வேதாந்த ஞானத்தால் முக்திக்கு வழிநடத்துபவர்-அன்பு கொண்ட ரிஷிகள் கட்டளை இடும்படி அடங்கி இருப்பவர்-நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்-தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர்-
நய: — -ரிஷிகளைக் கர்ப்பத்தைப் போலே பாதுகாப்பவர் –-வழிநடத்துபவரெனினும், பக்தியால் கட்டுண்டு பின் தொடர்பவர்(திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் திருவீதி எழுந்தருளும் போது வேதங்கள் பின்தொடர்வதையும்,-பெருமாள் திவ்யப் பிரபந்தத்தைப் பின் தொடர்ந்து செல்வதையும் நினைவு கொள்ளலாம்)
அநய: — தம்மை வழிநடத்தத் தக்க தலைமை ஒரு போதும் இல்லாதவர்-பகைவர்களால் நடத்தப்பட முடியாதவர் 
வீர: — அசுரர்கள் அஞ்சி நடுங்கும் பெருவீரர்-ராஷசர்களை அச்சத்தில் நடுங்க வைப்பவர் –
சக்திமதாம் ச்ரேஷ்ட: — ஆற்றலும், வீரமும் கொண்டோரில் சிறந்து ஒப்பாரில்லாதவர்-வலிமை மிக்க தேவர்களை விட சிறந்தவர் –
தர்ம: — சநாதன தர்மமாய்த் தாமே இருப்பவர்-தர்மத்தின் உருவானவர் -இவ்வுலக அவ்வுலக பேற்றைக் கொடுத்து ஜீவர்களை தாமே தாங்குபவர் –
தர்ம விதுத்தம: — தர்மம் சூக்ஷ்மமானது ஆகையாலே எது தர்மம் என்பதை அறிவதில் அவரே பிரமாணம் ஆனவர்-தர்மம் அறிந்தவர்கலான ரிஷிகளை விடச் சிறந்தவர் –

வைகுண்ட: — குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர்-பக்தர்களை விலகாமல் தம்மிடம் சேர்த்துக் கொண்டவர் –தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான்-பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் 
புருஷ: — அந்தர்யாமியாய் நின்று ஜீவர்களின் பாபங்களைப் பொசுக்கித் தூய்மை நல்குபவர்-பாவச் சுமையை எரிப்பவர் -சராசரங்களுக்கு முன் செல்பவர் –முதல்வன் -பண்களை எரிப்பவர் -காப்பாற்றுபவர் -விருப்பங்களை நிரப்புகிறவர் -எல்லாருக்கும் முன் செல்பவர் புருஷோத்தமன் -யாவருக்கும் சேஷி புனிதத் தன்மை யுள்ளவர் –பாவங்களை எரிப்பவர் -எல்லோர்க்கும் முற்பட்டவர் -சரீரம் -புரம் -அதில் வசிப்பவர் -பூர்ணர் -காப்பவர் -எல்லோருக்கும் முன்னவர் -எல்லா தோஷங்களை அளிப்பவர் -எல்லா சரீரங்களில் வசிப்பவர்-
ப்ராண: — மோக்ஷத்திற்காக அனைவருக்கும் வாழ்வு நல்குபவர்-அனைவரையும் உய்விக்கும் மூச்சுக் காற்றானவர் –எல்லாவற்றையும் உய்விப்பவர் -ஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர்-முக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர் 
ப்ராணத: — சோர்ந்து போகும் ஜீவர்களுக்குப் புத்துயிரூட்டி முத்திவழியில் தூண்டுபவர் -உயிர் அளிப்பவர்-இராமன் வனம் சென்ற போது மரங்களும் வாடிப் போயின-பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர்-சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர்  -துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –
ப்ரணவ: — வேதங்களிலேயே பரம்பொருளுக்கான மிகச்சிறந்த ஸ்துதியாக இருக்கும் ப்ரணவமாக இருப்பவர்-அனைவரும் தம்மை வணங்கும் படி இருப்பவர் -தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர்-தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் -நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் –மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்
ப்ருது: — எல்லையற்று விரியும் மஹிமையுடையவர்-பெரும் புகழாளர் –மிகவும் விரிந்த புகழை யுடையவர்-பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர்-பிரசித்தமாக இருப்பவர்
ஹிரண்யகர்ப: — திவ்யமான சௌந்தர்யத்துடன் இதய கர்ப்பத்தில் குடிகொண்டிருப்பவர்-அவதாரங்களின் பிற்பட்டவர்களின் உள்ளங்களிலும் பொன் போலே வசிப்பவர் –பொன் புதையல் போன்றவன்–த்யேயம்-த்யான விஷயம் பின்னானார் வணங்கும் சோதி-மனத்துக்கு இனியாய் -சிந்தனைக்கு இனியானாய் இருந்து-உள்ளூவார் உள்ளத்து உளன் கண்டாய்-
சத்ருக்ந: — இதயத்தில் எழுந்தருளியிருந்து காமம், குரோதம், லோபம் முதலிய ஆறு சத்ருக்களையும் அழிப்பவர்-தன்னை த்யாநிப்பவர்களின் தறி கெட்டோடும் புலன்களை பகுத்தறிவை அருளி அடக்குபவர் –
வ்யாப்த: — அத்தனை உயிர்களின் இதயத்திலும் இருந்து தந்தை தம் மக்களைக் காப்பது போல் காப்பவர்-பக்தர்கள் இடம் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் விரயமான அன்பு காட்டுபவர் –
வாயு; — காற்று போல் தாமே அனைவர்பாலும் சென்று வாழ்விப்பவர்-சபரி குஹன் பரத்வாஜர் போன்ற அன்பர்களின் இருப்பிடத்துக்கு தேடிச் செல்லும் காற்று போன்றவர் –
அதோக்ஷஜ: — ஆரா அமுதாய்ப் பெருகும் ஆனந்தர்-யாவரும் அனுபவித்து பயன்படுத்தினாலும் கடல் போன்று பெருமை குறையாதவர் –

ருது: — பருவங்கள் வடிவிலான காலமாக இயற்கையில் இருப்பவர்; பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிக நன்மைகளைத் தரும் பக்குவக் காலமாகவும் இருப்பவர்-பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் -பக்தர்களை வளர்க்கும் கிளர்ந்து வரும் குண வரிசைகளை உடையவர் -அணுகுபவன் – –
ஸுதர்சந: — தம்மைக் காண்பதாலேயே உயர்ந்த நன்மைகள் பெருகும்படி இருப்பவர்-தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன்-இராமனின் பெருமை அறியாதவரும் அவன் திரு மேனியைக் கண்டவுடன் ஈடுபடும் அழகு உடையவர்
கால: — காலம் என்ற வடிவில் அனைத்தையும் அளந்து அடக்குபவர்-அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன்-தன் நற்பண்புகளால் அனைவரையும் தம்மிடம் இழுத்துக் கொள்பவர் 
பரமேஷ்டீ — பரமபதத்தைத் தம் உயர்ந்த ஸ்தானமாகக் கொண்டவர்-தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் -இராமாவதாரம் முடிந்த பின்பு திரும்பவும் வைகுந்தத்தில் இருப்பவர் –
பரிக்ரஹ: — தம்மோடு தொடர்பு கொண்ட அனைத்திற்கும் மோக்ஷம் தரும் இயல்பினர்-எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன்-இராமன் இவ்வுலகை விட்டு வைகுந்தம் சொல்லும் போது அயோத்தி மக்களையும் மரங்களையும் எங்கும் ஏற்றுக் கொண்டவர் –

———————————————————–

391-பரர்த்தி-சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது — அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –-(சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர்) –(பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –

பற்பல மங்கல குணங்கள் நிறைந்தவனாக ராமன் இருப்பதால், அவன் ‘பரர்த்தி:’ என்று அழைக்கப்படுகிறான்.‘பர’ என்றால் உயர்ந்த மங்கல குணங்கள் என்று பொருள். ‘ரித்தி:’ என்றால் நிறைந்திருத்தல்.-பர + ரித்தி = பரர்த்தி: என்றால் மிக உயர்ந்த மங்கல குணங்கள் நிறைந்தவன் என்று பொருள்.-அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 391-வது திருநாமம்.
“பரர்த்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நற்குணங்களோடு விளங்கும்படி ஸ்ரீராமன் அருள் புரிவான்.

பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கியமான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குண பெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினா விடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹா ப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குண ஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங் கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பர ஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.

அத ம்ருத சஞ்சீவினம் ராம சரிதம் –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -3-6-8-
தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் -திருப்பாவை
நீ பற்று கண்ணன் -நான் விடேன் ராமன் -மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று தேவை இடாதார் –பாவனத்வம் சர்வ லோக த்வமேவ ரகு நந்தன -அகஸ்தியர் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -9-5-8-

ஆழ்வார் மற்ற அவதாரத்தில் தலை நீட்டுவது ப்ராப்யமாக –
தஞ்சமாக பற்றுவது சக்ரவர்த்தி திருமகனையே -ப்ராப்யமாக -போக்யத்தில் இவனுக்கு இவனே சமம்
மனத்துக்கு இனியான் -போக்யத்வம்
ராமாவதாரம் பக்ஷ பாதி -பட்டர் -தூது போகவில்லையே -இன்னார் தூதன் என்று நின்றான் –
இஷ்வாகு வம்சரை தூது போக விடுவார் இல்லை காண் -சிறியாத்தான் இடம் பட்டர்

பிறர் செழிப்பை தனக்கு வாழ்வாகக் கொள்பவன் ராமன் என்றுமாம் -பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனமாக இருப்பவர்- இத்யாதி -391-பரர்த்தி –
மேலான குண பூர்த்தி உள்ளவன்–விபீஷணனை அங்கீ கரித்த பின்பு க்ருதக்ருத்ய ததா ராம -விஜ்வரஸர்வ ஐஶ்வர்யாத₃பி பரா(அ)ஸ்ய கல்யாண கு₃ண ஸம் ருத்₃தி₄ரிதிபரர்த்₃தி₄꞉ ।(பரனுடைய ருத்தியை அபர ருத்தி ஆக்கும் படி ராமனுக்கு ஐஸ்வர்யம்)பராவஸ்த₂ஸ்யாபி ஹி ராமஸ்ய அவர ஸோமாதி₃ தே₃வ கு₃ணைகதே₃ஶ நித₃ர்ஶநம் க்ரியதே (ஒரு துளி சமமான சந்திரனுக்கு ஒப்பு சொல்லும்படி எளிமை நிறைந்தவன் )। யதா₂விஷ்ணு நாம் சத்ருஸோ வீரயே சோமவத் ப்ரிய தர்சன–பால காண்டம் வீரியத்தில் இராமனுக்கு நிகரான தேவதை யாரும் இல்லை-ஆகவே அவனை விஷ்ணுவுக்கு நிகராக உரைத்தார்-ஏதத் தத் யுக்தம் அவ்யக்தம் அக்ஷரம் ப்ரஹ்ம சம்மிதம் தேவா நாம் ஹ்ருதயம் ஸுவ்ம்ய க்ருஹ்யம் ராம பரந்தப–யுத்த காண்டம்-இப்படியாக உரைத்த இராம தத்வம் என்பது யாராலும் எளிதில் அறிய இயலாதது ஆகும்-அது எந்தவிதமான தோஷமும் இல்லாத ஒன்றாகும்-ப்ரஹ்மத்துக்கு நிகரானதாகும் -தேவர்களின் இருதயத்தில் எப்போதும் இருப்பதாகும் எதிரிகளை வாட்டமுறச் செய்வதாகும்-பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –அயோத்யா காண்டம்-தசரதனனே உனது புத்திரனான இராமனிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பொருந்தி உள்ளன

ப₄க₃வதே இதி ஸ்வ மந்த்ர வர்ணாச்ச

பரமர்த்தி -பாட பேதம்பரா மேலான-ருத்திர்விபூதிர் ‘ருத்தி’ அதாவது செல்வம்

அஸ்யேதி பரர்த்தி: உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேலான செல்வம் உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. பரார்த்திஹ் – அவர் உச்ச வெளிப்பாடு

ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘பரா ரித்திஹ் விபூதிஹ் அஸ்ய இதி பரார்த்திஹ் – அவர் செழுமை அல்லது ஐசுவரியத்தின் உச்ச வெளிப்பாட்டைப் பெற்றுள்ளார்’ என்று விவரிக்கிறார். இங்கு குறிப்பிடப்படும் செழுமை என்பது தனிப்பட்ட பண்புகளையும் பொருள் செல்வத்தையும் குறிக்கிறது.

ரித்தி என்பது செழிப்பு மற்றும் சக்தியின் கலவையை குறிக்கிறது என்று சுவாமி சின்மயாநந்தா குறிப்பிடுகிறார். பகவானின் ரித்தி அல்லது விபூதி பற்றிய முழு விளக்கமும் பகவத் கீதையின் 10 ஆம் அத்தியாயத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது, அங்கு கிருஷ்ணர் மலைகளுக்கு மத்தியில் இமயமலை, ஒளிரும் பொருட்களில் சூரியன், கடல் போன்ற அனைத்து உயிரினங்களின் உச்சியையும் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை விவரிக்கிறார். நீர் மற்றும் விலங்குகளில் சிங்கம். 40வது வசனத்தில், ‘நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதீனாம் பரமதப – என் பெருவாழ்வின் வெளிப்பாடுகளுக்கு முடிவே இல்லை, நான் உங்களுக்கு ஒரு சிறிய மாதிரியைக் கொடுத்தேன்’ என்று கூறுகிறார்.

ஸ்ரீ வி.வி.ராமானுஜன், ராம அவதாரத்தில் இருப்பது போல், வேறு எந்த அவதாரத்திலும், மங்களகரமான குணங்களின் பரிபூரணத்தை நாம் காணவில்லை என்றால் அது மிகையாகாது என்று கருத்துரைக்கிறார். அவர் ஒரு கூடுதல் விளக்கம் தருகிறார்: ‘பரேஷாம் ரித்திரேவ ரித்திஹ் யஸ்ய – மற்றவர்களின் நிறைவைத் தன் சொந்தமாகக் கருதுபவர்’. விபீஷணனுக்கு முடிசூட்டப்பட்ட பிறகு, பகவான் ராமர் தனது வார்த்தையை நிறைவேற்றியதன் மூலம் மகிழ்ச்சியடைந்தார் – ‘கிருத கிருத்யஹ் ததா ராம’. ‘உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி– குடிமக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ​​தன் குழந்தையின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடையும் தந்தையைப் போல மகிழ்ச்சியாக உணர்கிறார்’ என்றும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் ராமாயணத்தில் இருந்து இந்த குணங்கள் சில விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. வால்மீகி முனிவர் 1.1.8 முதல் 1.1.18 வரை ஸ்லோகங்களில் இந்த குணங்களைப் பற்றிய ஒரு கவிதை விளக்கத்தை அளித்துள்ளார். கடைசி இரண்டு ஸ்லோகங்கள் இங்கே உதாரணங்களாக கொடுக்கப்பட்டுள்ளன:
சமுத்ரா இவ காம்பீர்யே தைரியேண ஹிமவாநிவ |
விஷ்ணுநா சத்ரிஷோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஷனஹ் ||

காலாக்னி-ஸத்ரிஷா க்ரோதே க்ஷமாயா ப்ரிதிவீ ஸமஹ் |
தனதேன ஸம்ஸ் த்யாகே ஸத்யே தர்ம இவாபரஹ் ||
இராமனுக்குப் பெருங்கடலின் மகத்துவம், ஹிமவானின் வீரம், விஷ்ணுவின் வலிமை, சந்திரனின் இனிய தோற்றம், பிரளய அக்னியின் கோபத்திற்கு ஒப்பான கோபம், பூமித் தாயின் பொறுமை, குபேரனின் தானம், தர்ம தேவதையின் உண்மை ஆகியவை உள்ளன.

பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கிய மான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குணபெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினாவிடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹாப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குணஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங்கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பரஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.

———–

392-பரம ஸ்பஷ்ட -தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –(வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் )–(மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –

சிறந்த அடியார்களுக்கும் மகான்களுக்கும் தனது பெருமையைத் தெளிவாக உள்ளபடி காட்டுவதால், ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸ்பஷ்ட’ என்றால் தெளிவாக என்று பொருள். ‘பரம’ என்றால் மேன்மை.-தனது மேன்மையை ஸ்பஷ்டமாக தெளிவாக அடியார்களுக்குக் காட்டும் ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 392-வது திருநாமம்.“பரமஸ்பஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தெளிவான ஞானத்தோடு திகழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்

பரம ஸ்பஷ்ட: * ந சக்ஷஷா பச்யதி கச்சநைநம் * ந மாம்ஸ சக்ஷ ரபீவிக்ஷதே தம் * என்றேனும் கட்கண்ணால் காணாதவவ்வுரு * இத்யாதிப்படியே ஒருவர் கண்ணுக்கும் காணவொண்ணாதிருந்த வடிவத்தை அனைவரும் கண்டுகளிக்கும்படி மிகவும் ஸ்பஷ்டமாக்கிக் கொடுத்தவ னென்கை. ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (10) ” ோதீயஸோபி ஹி ஜநஸ்ய க்ருதே க்ருதீ த்வம் அத்ராவதீர்ய நநு லோசந்கோசரோபூ ” என்றருளிச் செய்ததை இங்கே அநுஸந்திப்பது . பரம ஸ்பஷ்டா என்பதற்கு- பரமத்வம் ஸ்பஷ்டமாயிருக்கப் பெற்றவர் என்கிற பொருள் பட்டருடைய பாஷ்யத்தில் விளங்குமது. ‘பரத்துவத்தை யொளித்து வந்து அவதரித்திருக்கச் செய்தேயும் அது சிலர்க்கு ஸ்பஷ்டமாக விளங்கா நின்ற தென்பதை ஸ்ரீராமாயணத்தினாலறிகிறோம். பெருமாளுடைய வநவாஸ ப்ரஸங்கத்தில் கிலேசப்படா நின்ற கௌஸல்யாதேவியைத் தேற்றுகின்ற ஸுமித்திரை “ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய தைவதம் தேவதாநாஞ்ச” இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தைத் தான் ஸ்பஷ்டமாகக் கண்டறிந்து பேசுகிறாள். இராவணன்மாண்ட பிறகு ப்ரேத பூமியிலே வந்து புலம்புகின்ற மந்தோதரி *வயக்தமேஷ மஹாயோகீ பரம த்மா ஸநாதந, அநாதி மத்யநிதந தமஸ் பரமோ தாதா சங்கசக்ர கதாதர:.ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்யச் சாச்வதோ திருவ: மா நுஷம் ரூபமாஸ்தாய விஷ்ணுஸ் ஸத்ய பராக்ரம்:*இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தை அதிஸ்பஷ்டமாகக் கண்டு பேசுகிறாள். பம்பாதீரத்தில் முதன்முதலாகப் பெருமாளைக் காணவந்த திருவடி “ஆயதாச் ச ஸூவ்ருத்தாச் ச பாஸவ: பரிகோபமா, ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா.? *‘ என்று கேட்கிறார். இங்கு ஆயதெள ச ஸு வ்ருத்தெள சபா அ தே பரிகோபமௌ‘ என்று த்வி வசனமாக சுலோகம் கூடுமதாயிருக்க பஹு வசனமிட்டுச் சொன்னதுபற்றி கோவிந்தராஜர் எழுதுகிறார்.- ஹநுமதோ பக்தத்வேந் தஸ்ய சதுர்ப்புஜவேஷேண திருச்யோபவத்” என்று (அதாவது) திருவடி பரம பக்தராகையாலே அவர்க்கு நிஜ ரூபத்தைக்காட்டினாரென்றபடி . அன்றியும் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணத்தில் பெருமாள் தலையணையாக வைத்துக் கொண்ட பா வைவருணிக்கின்ற வான்மீகி முனிவர் “புஜை: பரமநாரி ம் அபிம்ருஷ்ட மநேகதா” என்கிறார். இங்கு பரமநாரிகளாகச் சொன்னது ஸ்ரீதேவீ பூதேவீ நீலாதேவிகளை யென்று வியாக்கியானம். ஆகவே வான்மீகி முனிவரும் பெருமாளுடைய பரத்வ வேஷத்தை ஸ்பஷ்டமாகக் கண்டவரென்று விளங்கும். ஆக இவ்வளவால் பெருமாளுடைய பரம ஸ்ஷ்டத்வம் நிரூபிதமாயிற்று.

பரம ஸ்பஷ்ட
வெளிக் காணும் மேன்மை உடையவன் -பரத்வம் தலை நீட்டிக் காட்டும்

கிஞ்ச பரம ஸ்பஷ்ட꞉,
ஸ்பஷ்ட ப்ரத்யக்ஷ த்₃ருஷ்ட ஸ்வ பாரம்ய꞉ । யதா

வ்யக்தமேஷ மஹா யோகோ பரமாத்மனா சநாதன–யுத்த காண்டம் மண்டோதரி
ராமன் மஹா யோகீ -பரமாத்மா -எப்போதும் உள்ளவன் –

ஆரானும் அல்லேன் அறிந்தேன் அவனை நான் –உமக்கு அறிய கூறுவேன் -கலியன் இந்த ஸ்லோக தமிழ் ஆக்கம்

தருணவ் சூர்ப்பணகை
அப்ரமேயஸ்ய -தாரை

ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய-அயோத்யா காண்டம்
ஸூரியனுக்கும் ப்ரகாஸம் அளிக்கும் ஸூர்யனாக உள்ளவன் இராமன்-சுமத்ரா தேவி கௌசல்யைக்கு சொல்லி சமாதானம் படுத்திகிறாள் –

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்

கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் -காகுத்தா

அஹம் வேத்மி ராமம் ஸத்ய பராக்ரமம் -விசுவாமித்திரர்
சமுத்திரம் அணை கட்டி -ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் -சபல சித்த குரங்கு முதலிகள் கொண்டு –
சடாயு மோக்ஷம் இக்கரையில் விபீஷண பட்டாபிஷேகம் -பரத்வம் ஸ்பஷ்டம்

  1. ஓம்பரமஸ்பஶ்டாயநம:

பரா மேலான

மா ஶோபா ‘மா’ அதாவது அழகு

அஸ்யேதி பரம: பகவான் ‘பரம:’

ஸர்வோத்க்ருஶ்டோ வா அனைவரிலும் மேலானவர்

அனன்யாதீனஸித்தித்வாத் எந்தவொரு காரியத்திற்கும் மற்றோரை அண்டாதவர்

ஸம்விதாத்மதயா பேரறிவே உருவாய் இருப்பதாலும்

ஸ்பஶ்ட: பகவான் ‘ஸ்பஶ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்

பரமஸ்பஶ்ட: இவ்விரண்டும் சேர்ந்திருப்பதால் பகவான் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மேலான அழகு படைத்தவர், அனைவரைக் காட்டிலும் மேலானவர், எந்த ஒரு காரியத்திற்கும் வேறெவரையும் அண்டாதவர், பேரறிவே (ஞான) வடிவானவர். எனவே அவர் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. பர்மாஸ்பஷ்டா – அவரது மகத்துவம் முற்றிலும் தெளிவாகத் தெரிகிறது

ஸ்பஷ்டா என்பது வெளிப்படையான அல்லது மிகவும் வெளிப்படையான ஒன்றைக் குறிக்கிறது. பரமா என்றால் உச்சம் என்பதுடன், லட்சுமி தேவியை (“பர மா”) தன்னுடன் வைத்திருப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த இரண்டு அர்த்தங்களையும் தனது பின்வரும் விளக்கத்தில் ‘பரமா ஷோபா அஸ்ய இதி அஸ்ய இதி பரமஹ, ஸர்வோத்க்ரிஷ்டா வா அனன்யாதீன சித்தித்வாத் ஸம்விதாத்மதாயா ஸ்பஷ்ட பரமஸ்பஷ்டஹ் – ஒட்டுமொத்தமாக உயர்ந்தவராக இருப்பதால் பரமனாக இருக்கிறார் அல்லது ஸ்பஷ்ட லக்ஷ்மி தேவியால் அலங்கரிக்கப்பட்டவராக இருக்கிறார். என்பது வெளிப்படையாகத் தெரிகிறது அல்லது அவர் அறிவு ஆளுமைப்படுத்தப்பட்டவர்.

ஸ்பஷ்ட (பிரத்யக்ஷா, த்ரிஷ்டா) பாரம்யஹ் பரம-ஸ்பஷ்டா – அவருடைய மகத்துவம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஸ்ரீ பராசர பட்டர் ராமாயணத்தைக் குறிப்பிடுகிறார் – வ்யக்தமேஷ மஹா-யோகி பரமாத்மா சனாதன – (யுத்த காண்டம் – 114.4). போர்க்களத்தில் இராவணனை வதம் செய்த பிறகு ராமனைப் பார்த்த மண்டோதரியின் வார்த்தைகள் இவை. அதேபோல, தாரா (வாலியின் மனைவி) ராமரைக் கண்டவுடனேயே அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்து, மனித உருவில் கடவுளாகப் போற்றுகிறார் – ‘த்வம் அப்ரமேயஶ்ச துராஸதஷ்ச…..மனுஷ்ய தேஹாப்யுதம் விஹாய திவ்யேன தேஹாபிதாயேன யுக்தா’ (ராமாயணம் 4.324).

சுமித்ராவின் வார்த்தைகளில்: “சூர்யஸ்யாபி பவேத் சூர்யா” – அவர் சூரியனை விட பிரகாசமாக பிரகாசிக்கிறார், மேலும் அவர் சூரியனுக்கு பிரகாசத்தை அளிப்பவர். பகவான் ராமரின் மகத்துவத்தைப் பற்றிய மற்ற குறிப்புகள், அவர் “பும்ஸாம் த்ரிஷ்டி சித்தாபஹாரிணம்”, “ரூப சம்ஹானாநாம் லக்ஷ்மிம் தத்ரிஷுர் விஸ்மிதாகாரா”, முதலியன.

நாராயண சூக்தம் அவரை ‘நாராயண பரோ ஜோதிஹ் ஆத்மா நாராயணா பரஹ் – அவர் உச்ச ஒளி மற்றும் உயர்ந்த சுயம்’ என்று பிரகடனம் செய்கிறது.

இந்த வெளிப்படையான மகத்துவமே பரதனை ராஜ்யத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ராமரிடம் பக்தி கொள்ளச் செய்தது என்று தர்மச் சக்கரம் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். ராமரின் வசீகரம், லக்ஷ்மணனை மறுபடி யோசிக்காமல் அவருடன் வரச் செய்தது, மேலும் அவர் 14 ஆண்டுகள் காட்டில் அவருக்கு சேவை செய்தார். ஹனுமான் ராமரைப் பார்த்த உடனேயே அவரிடம் ஈர்க்கப்பட்டார் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கு சேவை செய்தார். அவருடைய டிராவின் சக்தி அப்படித்தான் இருந்தது.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், ‘ஸ்பஷ்’ – பிணைத்தல் (ஸ்பஷதி – பத்னாதி) என்ற மூலச் சொல்லின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான விளக்கத்தைத் தருகிறார், மேலும் பரமஸ்பஷ்டத்திற்கு “எல்லாவற்றையும் சிறந்த முறையில் பிணைப்பவர்” என்று பொருள் தருகிறார். சிக்கலான மனித உடல், அதன் உள் சிக்கலான போதிலும் அதன் அழகான தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் உதாரணம், உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஆதரவாக பின்வரும் மேற்கோள்களை வழங்குகிறார்: அஸ்ய ஸ்பஷோ ந நிமிஷாந்தி (ரிக் வேதம் 9.73.4), திவா ஸ்பஷா பிரசாரந்தி (அதர்வ வேதம் 4.16.4), முதலியன.


393-துஷ்ட -தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –பேரானந்த  வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

தசரதன் மகனா’கத் திருமால் அவதரித்தது தான், எல்லா பக்தர்களும் அவரை அணுகுவதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.எனவே தன்னை எப்போதும் ‘தசரதன் மகன்’ என்று சொல்லிக் கொள்வதிலே மகிழ்வாராம் ஸ்ரீராமன்-இப்படித் தசரதன் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு மகிழ்வதால் ராமன் ‘துஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.‘துஷ்ட:’ என்றால் மகிழ்பவர் என்று பொருள். தசரதனின் மகனாகி, அதனால் எல்லோராலும் எளிதில் அணுகப்படக் கூடியவராய் ஆகி,மகிழ்ச்சி பெற்றதால், ராமனுக்கு ‘துஷ்ட:’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 393-வது திருநாமம்.“துஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.

துக்க ஸம்வேதநாயைவ ராமே சைதந்ய மாஹிதம்”[உத்தரராமசரிதே.] என்று பெருமாள் தாமே சொன்னதாக பவபூதிகவி யெழுதுகிறார். இவற்றால் பெருமாளுடைய திருவுள்ளம் ஸந்தோஷமற்றிருக்கும் போலுமென்று நினைக்க இடமுள்ளது. உண்மை அப்படியில்லை. ஸம்ஸாரிகளின் ஸமுஜ் ஜீவனார்த்தமாக வந்து அவதரிக்கப் பெற்றோமிறே யென்று திருவுள்ள முகந்தே யிருப்பர்.முடி புனைந்து நாட்டையாளப் பாரித்திருக்கையில் சடை புனைந்து மரவுரி யுடுத்துக் காட்டுக்குச் செல்ல நியமனம் பெற்றபோது எவ்வளவோ துக்கமாகத் தானே யிருந்திருக்குமென்று பலர் நினைக்கக் கூடும். அப்போதும் பரம ஸந்தோஷத்தையே யாயிற்று பெருமாள் கொண்டது. ராஜ்யம் வா வநவாஸோ வா வநவாஸோ மஹோதய? ” என்றவரன்றோ பெருமாள். இவ்விடத்தில் கம்பருடைய வாக்கு மிக வற்புதமானது. ” இப்பொழு தெம்மனோரால் இயம்புதற்கெளிதோ? யாரும் செப்பருங் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கின், ஒப்பதே முன்பு பின்பு வாசக முரைக்கக் கேட்ட, அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.” என்பது அவருடைய ஆச்சரியமான செய்யுள். வனவாஸக் கட்டளை பெறுவதற்கு முன்னே இராமபிரானுடைய திருமுக மண்டலம் தாமரை போன்றிருந்ததாம்; அக்கட்டளை பெற்றவாறே அத்திருமுகம் அப்போதலர்ந்த செந்தாமரையை வென்றிட்டதாம். கொடிய வனம் போக நேர்ந்ததே யென்று சிறிதும் சோகியாமல்,புண்ணிய புனல்களாடவும் புண்ணிய புருஷர்களைத் தொழவும் வாய்ப்பு கிடைத்தமைக்குப் பரம ஸந்தோஷ மெய்தினானென்கை. உத்ஸவேஷ ச ஸர்வேஷ பிதேவ பரிதுஷயதி * என்று பௌர ஜனங்கள் நேரில் கண்டு சொன்னபடியே தனது நாட்டிலுள்ளவர்களுக்கு நேரும் ஸந்தோஷத்தைத் தன்னுடைய ஸந்தோஷமாகக் கொண்டு மகிழ்பவன். ” அபிஷிச்ய விபீஷணம் விவர ப்ரமுமோத ஒற” என்கிற படியே அன்பர்களை ஸந்தோஷப்படுத்தித் தான் ஸந்தோஷாதிசய மடைபவன்-

———————–

393- துஷ்ட
பிறந்து படைத்த சம்பத் -மகிழ்ச்சி நிறைந்தவர் –பிரமுதோஹா-திவத்திலும் பசு நிரை மேய்த்து உகப்பு போல் இங்கும்

அதி₄ க்ருதாதி₄காராத் பரத்வாத₃பி அதிஶயேந ஸமஸ்த மநுஷ்யாத்₃யதி₄காரயோர்
தா₃ஶரதி₂ த்வ ஜக₃த் பாலந யோர் லாபா₄த் ப்ரீத꞉
துஷ்ட꞉ । யதா₂

பிதராம் ரோசயாமாச சதா தசரதன் ந்ருபம்–பால
தசரதனைத் தனது தந்தையாக ஏற்றதை எண்ணி மகிழ்ந்தான்

குலோசித மதி ஷாத்ரம் தர்மம் ஸ்வம் பஹு மந்யதே -அயோத்யா
தான் திரு அவதரித்த ஷத்ரிய குலத்துக்கு ஏற்ற ஸங்கல்பம் கொண்டவனாக அந்தக் குலத்தில் அதிக மதிப்புடன் இருந்தான்

ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் -யுத்த
நான் என்னை சாதாரண மனிதனாகவும் தசரதனின் புத்ரனாமாகவும் மட்டுமே எண்ணுகிறேன்

கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே மைதிலி தன் மணவாளா சனகன் திரு மருகா தாசரதி
தயரதன் குல முதலாய் –பெருமாள் திரு -8-

தசரதர் பெற்ற மரகத மணித்தடம்–மனுகுல மணீ பால –பட்டர் -ஒன்பது ராமர் சந்நிதி நம்பெருமாளைச் சேர்த்து திருவரங்கத்தில் –

———

  1. ஓம்துஶ்டாயநம:

பரமானந்தைக பேரின்பமே

ரூபத்வாத் உருவானவராய் இருப்பதால்

துஶ்ட: பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்ப வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தின் ‘த’காரத்தை  ‘து’ (அதாவது வடமொழியில் உள்ள முதல் ‘த’) என்று உச்சரிக்கவேண்டும். துஶ்ட: என்றால் த்ருப்தியடைதல் என்று பொருள். பகவான் அனந்த வடிவினராய் இருப்பதால் அவர் எப்பொழுதும் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

  1. துஷ்ட – மனநிறைவு கொண்டவன்

‘துஷ்’ என்றால் மனநிறைவுடன் இருப்பது மற்றும் தேவைகள் மற்றும் ஆசைகளிலிருந்து விடுபடுவது. ஸ்ரீ ஆதிசங்கரர் இந்தப் பெயரை ‘பரமானந்த ஸ்வரூபத் துஷ்டா – அவர் பரம ஆனந்தம் மற்றும் அவர் துஷ்டர்’ என்று விளக்குகிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே தன்னுடன் இருக்கக்கூடிய ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்காமல், பகவான் தசரத மன்னனுக்கு மனிதனாகப் பிறக்கத் தேர்ந்தெடுத்தார், அதனால் அவர் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருந்தார். தேவர்கள் அவருடைய ராம அவதாரத்தில் அவர் முன் தோன்றி, அவரை பகவான் என்று போற்றியபோது, ​​அவர் தன்னை ஒரு மனிதனாக, தசரதனின் மகனாகக் கருதுவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர்களிடம் கூறினார் –ஆத்மானம் மாநுஷம் மன்யே ராமம் தசரத் ஆத்மஜம். நாம் முன்பு பார்த்தது போல், அவர் தனது குடிமக்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது ஒரு சாதனை படைத்த குழந்தையின் தந்தையைப் போல மகிழ்ச்சியாக இருந்தார் – பிதேவ பரிதுஷ்யதி – விபீஷணனிடம் சொன்னதை மட்டும் நிறைவேற்றி, லங்காவின் அரசனாக முடிசூட்டுவதன் மூலம் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தவர் – பிரமுமோத ஹா.

ஸ்வாமி சின்மயாஆனந்தா அவர் துஷ்டர் என்று விளக்குகிறார் – சிறிய பிரசாதங்களாலும் மகிழ்ச்சி அடைபவர். அவர் நம்மை பகவத் கீதை அத்தியாயம் 9 வசனம் 26:
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா பிரயச்சதி |
ததாஹம் பக்த்யுபஹৃதம் அஷ்நாமி ப்ரயதாத்மனঃ ||
அன்பான பக்தியுடன் யார் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, தண்ணீரையோ சமர்பிக்கிறார்களோ, அந்தத் தூய உள்ளம் கொண்ட அந்த பக்தியை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

பகவத் கீதை அத்தியாயம் 2 வசனம் 55, ‘ஆத்மனி ஏவாத்மனா துஷ்டா ஸ்திதா-ப்ரஜ்னஸ் டோடோச்யதே – தன்னில் மட்டுமே திருப்தி அடைகிறாரோ, அவர் உண்மையான ஞானம் பெற்றவர் அல்லது உண்மையான யோகி’ என்று கூறுவதன் மூலம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.

பிற உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் ஆளாகாததால் பகவான் துஷ்டர் என்று தர்மச் சக்கரம் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இராமன் அரசனாக முடிசூட்டப்பட்டபோது உடனடி மகிழ்ச்சியை உணரவில்லை, 14 வருடங்கள் காட்டுக்குச் செல்லும்படி கேட்கப்பட்டபோது வருத்தப்படவில்லை.

துஷ்டனாகவோ அல்லது எப்போதும் திருப்தியாகவோ, நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தாலும், யோகியின் மனநிலையுடன் அவற்றுடன் இணைந்திருக்காமல் இருப்பதே பகவானை உணர்ந்து கொள்வதற்கான சரியான வழியை இந்த நாமம் விளக்குகிறது.


394-புஷ்ட -நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

புஷ்ட = கீழே துஷ்டஎன்கிற திருநாமத்தினால் சொன்ன ஸந்துஷ்டதையை நன்கு நிலைநாட்டுகின்றது இந்தத் திருநாமம். தான் அடையும் ஸந்தோஷம் வடிவிலே காணலாம்படி யிருப்பவன். உள்ளத்தின் மகிழ்ச்சி உடலிலே தெரியும்’ என்பராதலால் ஹ்ருதய தமான ஸந்தோஷத்தைத் திருமேனி கோட்சொல்லித்தரக் கடவதாயிருக்கும். வனவாஸக் கட்டளை ப்ராப்தமானது “வநவாஸோமஹோதய ” என்று சொன்னது க்ருத்ரிமமென்று நினைக்கவொண்ணாதபடி திருமேனி புகர்த்துக் காட்டுமென்கை. வனவாஸம் ப்ராப்தமாவது பரம ஸந்தோஷத்திற்கே ஹேதுவென்று சொன்னதைச் சிறிது சோதிக்குமளவில் அது அஹ்ருதயோக்தியே யொழிய ஸஹ்ருதயோக்தி யன்றென்று அறுதியிடலாமா யிருக்கும்.(எங்ஙனேயென்னில்) மேலே ஆரண்யகாண்டத்தில் ஸ்தாவியோகம் நேர்ந்தபோது துக்கபரவசராய்க் கதறுகின்ற பெருமாள் *ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸோ நஷ்டாஸ்தா ஹதோ த்விஜ : ஈத்ருசீயம் மமாலக்ஷ்மீ: நிர்தஹேதபி பாவகம் என்று சொல்லிப் புலம்புகிறார். ‘ஐயோ! ராஜ்யத்தை யிழந்தேனே! காட்டிலே வந்து வளிக்கவும் நேர்ந்ததே!’ என்று சொல்லுவது வநவாஸோ மஹோதய;, என்றதற்கு நேர்முரணல்லவா? வனவாஸக்கட்டளை ஸந்தோஷகரமா யிருந்தால் ‘ராஜ்யாத்ப்ரம்ச:’ என்றும் வநேவாஸ: என்றுஞ் சொல்ல வாயெழும்புமோ? ஈத்ரு இயம் மமஅலக்ஷ்ம் ‘ என்று ராஜ்ய ப்ரம்ச வனவாஸங்களை தெளர்ப்பாக்ய மாகவன்றோசொல்லுகிறார். இவை பொருந்தும்படி எங்ஙனேயென்று விசிகித்ஸை பண்ணுவார்கள்-இதற்கு நம்பிள்ளை யருளிச்செய்வது பாரீர்;*ராஜ்யநாசோபகர்ஷதி* வநவாஸோ மஹோதய:* என்று சொல்லிப் போந்தவற்றை இப்போது அனர்த்தமாகச் சொல்லுகிற தென்னென்னில்,ஆச்ரித ஸம்ச்லேஷத்துக்கும் ரிஷிகளை நோக்குகைக்கு மென்றிறே போந்தது; அத்தோடே விரோதிக்கையாலே சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும் பெரியவுடையாரை யிழக்கையாலும் இவற்றுக்கு அடியானவையும் இப்போது அனர்த்தமாகத் தோற்றின்படி .”என்பது நம்பிள்ளை ஸ்ரீஸூக்தி. (இதைச் சிறிது விவரிக்கிறேன்) வனத்திற்குப் புறப்படும்போது எதனால் ஸந்தோஷமென்னில்: பிராட்டியோடு ஏகாந்தவாஸம் பண்ணப் பெறுவோம், பரம்பாகவதர்களோடே ஸஹவாஸம் பண்ணப்பெறுவோம் என்றிங்ஙனே பாரித்ததனால் ஸந்தோஷமுண்டாயிற்று. பாரித்தபடியே பேறு கிடைத்து வந்தது. வைதேஹி! ரமஸே கச்சித் சித்ரகூடேமயா ஸ என்று வாய் வெரும்படி பிராட்டியோடே கூடியிருந்து குளிரப்பெற்றது .இஹ வத்ஸ்யாமி ஸெளமித்ரே! ஸார்த்தமேதேந ப ா என்று ஐடாயு மஹாராஜருடைய சிறகின் தீழே யொதுங்கி வர்த்திக்கவும் பெற்றது.இந்த நிலைமையில் “ஹா ஹந்த ஹந்த நலிநீம் கஜ உஜ்ஜஹார” என்னும்படியாகப் பிராட்டியைப் பிரியவும் ஜடாயுமஹா ராஜரை அறவே யிழக்கவும் நேர்ந்தது. இந்த துக்கம் சொல்லுவித்த வார்த்தையன்றோ” ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸ :” என்பது. இதனால்காட்டுக்குப் புறப்படும் போதே ஸந்தோஷமில்லாமல் வருந்தியே புறப்பட்டதாக எண்ணத்தகுமோ? பரம குதூஹலத்தோடு மஹோத்ஸவம் ஸேவிக்கத் திருவேங்கடமலை சென்றவர் அங்கு இடமும் சோறும் தண்ணீரும் பெறாமல் அப்பன் ஸேவையும் பெறாமல் வெய்யிலிலும் மழையிலும் பரிதபித்துக் கிடக்க நேர்ந்ததென்று கொள்வோம்; அப்போது’ஏதுக்கு வீட்டைவிட்டு இங்கே வந்து வருந்துகிறோம்!’ என்று தளர்ந்தால் இதனால் ஊரைவிட்டுப் புறப்படும்போதிருந்த குதூஹலத்தை இல்லைசெய்யவொண்ணுமோ? இலங்கை சென்ற திருவடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டவாறே “அநயாஹீந; ப்ரபு:, தாரயதி ஆத்மநோ தேஹம் ந சோகேந அவஸ்ததி’ என்று சொன்னது பெருமாளை கர்ஹிக்குமாபோலே யிருந்தாலும் (புஷ்ட ) என்னுமிந்தத் திருநாமத்தை வியாக்கியானம் பண்ணுமாபோலவே யிராநின்றது. வாடாமல் வதங்காமல் புஷ்டராகவே யிருக்கிறார் பெருமாள்’ என்று காட்டினபடியாகக் கொள்ளலாம். இல்லையாகில் ஜீவதி’ என்று மூன்றெழுத்தோடே முடிக்கலாமே; ”தாரயதி ஆத்மநோ தேஹம் ‘ என்ற விரிவு தேஹபுஷ்டியை அந்தரங்கமாகக் காட்டவே போலும்

394-புஷ்ட
நிரம்பியவன் –மகா குணங்களால்-விஸ்வம் ஆரம்பித்ததே கல்யாண குணங்களால் பூர்ணம் புஷ்டியாக இருப்பவன்

ஏவம் மஹா கு₃ணை ꞉ பரி பூர்ண꞉
புஷ்ட꞉ ।
* தமேவம் கு₃ண ஸம்பந்நம் இதி ॥ -பால
இப்படியாக கல்யாண குணங்கள் கொண்டவன்

குணங்களுக்கு இருப்பிடம் -நிகரில் புகழாய் இத்யாதி
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மாற்று இனிதோ நீ அருளும் வைகுண்டம்

இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————-

  1. ஓம்புஶ்டாயநம:

ஸர்வத்ர எங்கும், எப்பொழுதும், எதிலும்

ஸம்பூர்ணத்வாத் முழுமையானவராய் இருப்பதால்

புஶ்ட: பகவான் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும், எப்பொழுதும், எதிலும் முழுமையானவராய் இருப்பதால் அவர் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. புஷ்டா – உன்னத குணங்கள் நிறைந்தவன்

ஆதி சங்கரர் சொல்வது போல், ‘சர்வத்ர சம்பூர்ணத்வாத் புஷ்தா – அவர் எல்லா வகையிலும் பரிபூரணமானவர் அல்லது முழுமையானவர், எனவே அவர் புஷ்தா’ என்று அழைக்கப்படுகிறார். உபநிடதங்களால் விவரிக்கப்பட்டுள்ளபடி அவர் பூர்ணா அல்லது சரியானவர். ஒவ்வொரு பகுதியும் கூட சரியானது. ஒவ்வொரு அவதாரமும் அல்லது அவதாரமும் சமமாக சரியானவை. முழுமை என்பது உடல் வடிவம், உடல் வலிமை மற்றும் மன மற்றும் அறிவுசார் பண்புக்கூறுகள் அனைத்திற்கும் நீண்டுள்ளது.

ஸ்ரீ சத்யதேவோ வாசிஷ்டர் இந்த அர்த்தத்தை விரிவுபடுத்துகிறார், ஏனென்றால் அவர் புஷ்டா என்று பரிந்துரைக்கிறார், ஏனென்றால் அவர் தனது படைப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான வழிகளைக் கிடைக்கச் செய்வதன் மூலம் அவற்றை நிறைவேற்றுகிறார் – புஷ்ணாதி இதி புஷ்டா.

—————–

395-சூபேஷண- மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர்-தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள்  -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்-மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும் ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்-தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

சுபேக்ஷண : =பெருமாளுடைய திருக்கண்ணழகிலே யீடுபட்டவர்கள் சக்ரவர்த்தியும் சபரியும் திருவடியுமாவர்கள். ‘என் வேள்வியைக்காக்க உன் பிள்ளையைப் போரவிடாய்’ என்று விச்வாமித்ர முனிவன் வேண்டினபோது *ஊந: ஷோடசவர்ஷோ மே ராமோ ராஜீவலோசந: * என்று விடையிறுத்த சக்ரவர்த்தியின் கருத்துகள் பலவுண்டு; அவற்றுள் ஒரு கருத்து இக்கண்ணழகனை விட்டுப் பிரிந்து எங்ஙனம் தரித்திருப்பேனென்கை: சபரி தன்னாசரமத்தேறப் போந்து பெருமாளைக் கண்டவாறே சக்ஷ ஷ தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகுநந்த ! * என்று அவருடையகண்ணழகிலே தான் ஈடு பட்டமையைத் தெரிவித்துக்கொண்டாள்.இவற்றுக்கெல்லாம் மேம்பட்டது திருவடியின் வார்த்தை. அதாகிறது] ரா ம: கமலபத்ராக்ஷஸ்ஸர்வஸத்வமநேரஹர *) திருவடியோடு ஸம்பாஷணை செய்யும் பிராட்டி “ யாநிராமஸ்ய சிஹநாநி.. தாநி பூயஸ் ஸமாசக்ஷ்வ ந மாம் சோக : ப்ரத யதி‘ என்றுபெருமாளுடைய அடையாளங்களைச் சொல்லும்படி கேட்டவாறே முந்துறமுன்னம்” ராம: கமல பத்ராக்ஷ: “ என்றான். அக்கண்ணழகு செய்யுமது என்? என்ன;
[ ஸர்வஸத்வமநோஹர: ] பிராணிகளென்று பேர்பெற்றாரெல்லாருடையவும் நெஞ்சைக்
கொள்ளை கொள்ளுமதாயிற்று அவ்வழகு என்கிறார் திருவடி. இங்கே விமர்சிக்கவேணும்; திருவடி பெருமாளுடைய கண்ணழகை ஓருபெரியநகரத்திலே கண்டாரல்.லர் .நிர் நமானதொரு வனத்திலே ஒரு மூலையிலே கண்டுவைத்து ‘ஸர்வஸத்வ
மநோஹர :
, என்று எதுகொண்டு சொல்லிற்றென்று ஆராயவேணும். இங்கு நம்
பிள்ளை யருளிச் செய்வது, “திர்யக் ஜாதீயனாய்ப் பணையோடு பணைதத்தித் திரிகிற
என்னுடைய நெஞ்சையும் அபஹரித்ததே”
என்று. இத்தால் பெருமாளுடைய
கண்ணழகு ஸர்வ ஸத்வமநோஹர மென்னுமிடம் கைமுதிக ந்யாஸித்தமென்கை. இதைக்கணிசித்தே கம்பர், அனுமன் இராமபிரானைக் காணும் போதே “ மஞ்செனத்திரண்ட கோலமேனிய!. மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகையவாகி நளிரிரும்பனிக்குத் தேம்பாக், கஞ்சமொத்தலர்ந்த கண்ண!” என்று கூறினதாகப் பாடினர்.

(சுபேக்ஷண 🙂 இதற்கு பாஷ்யமருளிச்செய்யாநின்ற பட்டர் “ஸ்வகர்த்ருகம் ஸ்வகர்மகஞ் சி தர்சநம் அதிசுபம் அஸ்ய” என்பதோர் அர்த்தமு மருளிச்செய்கிறார். இராமனைப் பிறர் காண்பதும் இனிது, இராமன் பிறரைக் காண்பதும் இனிது என்றதாயிற்று. ஈக்ஷண சப்தமானது கண் என்கிற பொருளையும், காண்கையென்கிற பொருளையும் காட்ட வல்லது. கண் என்கிற பொருளைக்கொண்டு கீழே விவரணம் செய்தேன். இப் போது காண்கை யென்கிற பொருள்கொண்டு விவரிக்கிறேன். [*யச் ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி. நிந்திதஸ் ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே ] (ஸ்ரீ ரா. அயோ. 17-14 ) இராமனைக் காணாதவனும் இராமனால் காணப்படாதவனும் உலகில் நிந்திக்கப்பட்டவனாவன்; உலகத்தார் நிந்திப்பது கிடக்கட்டும்; தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளவேண்டியதுமாகும் என்றபடி. இதனால் இராமனைக் காண்பதுபோல இராமனால் காணப்பெறுவதும் புருஷார்த்தமென்று தேறுவதால் சுபேக்ஷண: என்பதற்கு இருவகைப் பொருளையும் பட்டர் திருவுள்ளம் பற்றினது சாலச் சிறக்கும். இந்த சுபேக்ஷண மஹார்த்த ப்ரஸ்தாவத்தில், அசோகவனத்தில் புலம்பாநின்ற பிராட்டி “ தம் பத்மதலபத்ராக்ஷம் ஸிம்ஹ விக்ராந்த காமிநம். தந்யா பச்யந்தி மே நாதம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதிநம்.” என்று சொன்ன விந்த சுலோகமும் சிந்தைசெய்யத் தக்கது. இதில் பத்மதளபத்ராக்ஷ மென்றுள்ளது. இங்கு பத்ம தளமென்றோ பத்மபத்ரமென்றோ ஒன்று சொன்னால் போதும்; ” பத்ரம் பலாசம் ச்சதனம் தளம் பர்ணம் ச்சத : புமாந்” என்ற அமரகோசத்தின்படி தளம் பத்ரம் என்பன பர்யாயமே யாதலால் தளபத்ராக்ஷ மென்று இரண்டையும் கூட்டிச் சொன்னது புநருக்தமாகாதோவென்று சிலர் சங்கிப்பதுண்டு. சங்கை யுக்தமானதே. இங்குப் பெரியார் கூறும் ஸமாதானம் சுவை மிக்கது. வடமொழியில் அக்ஷமென் கிற சொல்லுக்கு ” அக்ஷமிந்த்ரிய காயயோ:” என்கிற நிகண்டின்படி கண்ணென் றும் வடிவென்றும் இருபொருள்களுள்ளமை ப்ரஸித்தம். இரட்டுறமொழிதலென் னும் தமிழ் மரியாதையினால் பத்மதளபத்ராக்ஷ மென்றவிவ்விடத்தில் அக்ஷபதத்திற்கு இவ்விரண்டு பொருள்களையுங் கொண்டு ‘பத்மதளம்போன்று விசாலமான கண் ணழகுடையவர், பத்மபத்ரம் போன்ற [தாமரையிலை போல் பசுமையுள்ள ] திரு மேனியையுடையவரென்றதாகக் கொள்ளக்கடவது .நம்மாழ்வார் திருவாய்மொழி யில் * செக்கமலத்தலபோலுங் கண்கைகால் செங்கனிவாய், அக்கமலத்திலை போலுந்திருமேனி * என்றருளிச்செய்தது மேலே விவரித்த பொருளைத் திருவுள்ளம் பற்றியே.

395-ஸூபேஷண-
சோபனமான பார்வை யுடையவர்-ஸூ ப–ஈஷண கண்கள் கடாக்ஷம் உள்ளவர்
முன்பு 346 பத்ம நிபேஷன –348-அரவிந்தாஷ

ஏவம் வித₄ஐஶ்வர்ய ஶீலாதிஶய பிஶுந (கோள் சொல்லிக் கொண்டு இருக்கும் )ஶீதல விஶால உதா₃ர தீ₃ர்க₄ ராஜீவ லோசந ꞉
ஶுபே₄க்ஷண꞉ । யதா

ஸூ ப்ரூஸ் ஆயத தாம்ராக்ஷ சாஷாத் விஷ்ணுரிவ ஸ்வயம் இதி ।
ஸ்வ கர்மகம் ஸ்வ கர்த்ரு கஞ்ச த₃ர்ஶநம்  அதி ஶுப₄மஸ்யேதி வா ஶுபே₄க்ஷண –அயோத்யா

ராமன் அழகான புருவங்கள் -கண்கள் யுடையவன்
இதனாலே விஷ்ணு என்றும் கூறப்படுபவன்
தன்னுடைய தோற்றம் -தான் மற்றவர்களைக் காணும் போது உண்டாகும் மேன்மை ஆகியவற்றின் காரணமாகத்
தனது திரு உள்ளத்துக்கும் அவன் தானே மகிழ்வு ஏற்படுத்துவதால் ஸூப ஈஷண-எனப்படுகிறான்

யஸ் ச ராமம் ந பஸ்யேத்து யம் ச ராமோ ந பஸ்யதி நிந்திதஸ் ஸ வஸேல் லோகே ஸ்வாத்மா அப்யேநம்
விகர்ஹதே இதி -அயோத்யா –

யார் ஒருவன் இராமனைக் காண்பது இல்லையோ
யார் ஒருவனை இராமன் காண்பது இல்லையோ
அவன் அனைவராலும் ஒதுக்கப் படுகிறான் –

பூப்போலே செங்கண் -செங்கண் சிறு சிறிதே விழியாவோ -ஒரே பாசுரத்தில் -கண்களும் கடாக்ஷமும்
தான் காண்பதும் தன்னைக் காண்பதும்

செக்கமலத் தவர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத் திலை போலும் திருமேனி யடிகளுக்கே -9-7-3-

தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –
குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்

மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும்
ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்

தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———-

  1. ஓம்ஸுபேக்ஷணாயநம:

ஈக்ஷணம் தர்ஶனம் யஸ்ய பகவானின் ‘ஈக்ஷணை’ அதாவது அருட்பார்வையானது

ஶுபகரம் அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது

முமுக்ஷூணாம் மோக்ஷதம் முக்தியை விழைவோருக்கு முக்தியையும்

போகார்த்தினாம் போகதம் இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது

ஸர்வஸந்தேஹவிச்சேதகாரணம் நம் அனைத்து ஐயங்களையும் தீர்க்கவல்லது

பாபினாம் பாவனம் பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது

ஹ்ருதயக்ரந்திர்விச்சேதகரம் நமது உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் அனைத்து முடிச்சுகளை அவிழ்க்கவல்லது

ஸர்வகர்மணாம் க்ஷபணம் அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது

அவித்யாயாஸ்ச நிவர்த்தகம் நமது அறியாமையை போக்கவல்லது

ஸ ஸுபேக்ஷண: எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் அருட்பார்வை அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது, முக்தியை விழைவோருக்கு முக்தியையும், இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது, நமது ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கவல்லது, பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது, நம் உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் முடிச்சுக்களை அவிழ்க்கவல்லது, அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது மற்றும் நமது அறியாமையை போக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ (நற்பார்வை கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பித்யதே ஹ்ருதயக்ரந்தி:’ (முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

“(காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால்) இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது”

இத்யாதிஶ்ருதே: || இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஷுபேக்ஷனா – மங்களகரமான கண்களை உடையவர்

ஷுபா என்றால் மங்களகரமானது மற்றும் ஈக்ஷணம் என்றால் கண் பார்வை அல்லது பார்வை என்று பொருள், எனவே சுபேக்ஷனா என்பது யாருடைய பார்வை மங்களகரமானது, அதாவது பக்தரைப் பார்த்து தனது ஆசிகளைப் பொழிபவர்.

ஸ்ரீஆதிசங்கரர் இதை ஒரு விரிவான வர்ணனை மூலம் விளக்குகிறார்:
ஈக்ஷணம் தரிசனம் யஸ்ய ஶுபம் ஶுபகரம் முமுக்ஷூணாம் மோக்ஷதாம் போகார்த்தினாம் போகதாம் ஸர்வஸந்தேஹவிச்சேத காரணம் பாபிநாம் பாவனாம் ஹ்ருதயக்ரந்தேர் விச்சேதகாரம் ஸர்வக்ஷபங்கர்மணாம் ஸர்வக்ஷபங்கர்மணாம். அவனுடைய வெறும் பார்வையே மிகவும் மங்களகரமானது, அது எல்லா உயிர்களுக்கும் நல்வாழ்வை அளிக்கும்; அது ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு மோக்ஷத்தையும், அவர்களை விரும்புபவர்களுக்கு இன்பத்தையும், பாவங்களைச் சுத்தப்படுத்துகிறது, அனைத்து கர்மாக்களையும் எரிக்கிறது மற்றும் அனைத்து அறியாமையையும் நீக்குகிறது, எனவே அவர் சுபக்ஷணன் என்று அழைக்கப்படுகிறார், மங்களகரமான கண்களைக் கொண்டவர். இது இறைவனைக் காண்பதற்கும் இறைவனால் காணப்படுவதற்கும் பொருந்தும்.

முண்டக உபநிஷத்தின் (2.2.8) மேற்கோளையும் அவர் தருகிறார்:
பித்யதே ஹிருதய-கிரந்தி: சித்யந்தே ஸர்வ ஸம்ஷாயா க்ஷீயந்தே
சாஸ்ய கர்மானி தஸ்மின் த்ரிஷ்டே பரவாரே
அவரது பார்வையில் இதயத்தின் முடிச்சுகள் அறுந்து, எல்லா கெட்ட கர்மாக்களும் அகற்றப்படுகின்றன. சுத்தப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் நம்மை அயோத்தியா காண்டம் என்று குறிப்பிடுகிறார்:
யச்ச ராமம் ந பஷ்யேத் து யம் ச ராமோ ந பஷ்யதி |
நிந்திதஹ் ச வசேத் லோகே ஸ்வாத்மா’பி ஏனம் விகர்ஹதே ||(அயோத்தி 17.14)
ராமனைப் பார்க்காதவர் அல்லது ராமர் யாரைக் காணவில்லையோ, அந்த நபர் இந்த உலகில் கண்டிக்கப்படுகிறார், மேலும் அவரது சுயமும் அவரைக் கண்டிக்கிறது..

அனுமன் ராமரை சீதா தேவியிடம் விவரித்தார் “ராமஹ் கமலா பத்ராக்ஷ: ஸர்வ ஸத்த்வ மனோரதஹ் – அங்கு அவர் தனது கண்களின் மகத்துவத்தையும் அவரது கண்களால் பார்க்கப்படுவதையும் விவரிக்கிறார். சீதா, ஸ்ரீ ராமரை இவ்வாறு விவரிக்கிறாள் – தம் பத்ம தல பத்ராக்ஷம் .. தன்யா பஷ்யந்தி மே நாதம் – தாமரை போன்ற அழகான என் நாதரின் கண்களைக் காண்பவர்கள் பாக்கியவான்கள். 

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஈக்ஷனா என்ற சொல்லுக்கு சங்கல்பம் என்று பொருள். இந்த சங்கல்பம் ஒரு நல்ல முடிவு ஆனது, இதன் விளைவாக இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் ஏற்பட்டது. அவர் சுப ஈக்ஷனா அல்லது ஸம்கல்பத்தை உடையவர் என்பதால், அவர் சுபேக்ஷனா. இந்த விளக்கத்தை ஆதரிக்க ஸ்ரீ சாஸ்திரிகள் பின்வரும் ஸ்ருதிகளை வழங்குகிறார்கள்:

  • ததைக்ஷதா பாஹு ஸ்யாம் ப்ரஜாயேதி (சாந்தோக்ய உபநிஷத் 6.2) – அவர் பலராகவும் உருவாக்கவும் விரும்பினார்;
  • சேயம் தேவதைக்ஷதா ஹந்தஅஹமிம்ஹ திஸ்ரோ தேவதா அனேன ஜீவேன ஆத்மா’நுப்ரவிஸ்ய நமரூபே வ்யாகரவாணி (சாந்தோக்ய உபநிஷத் 6.3) – அந்த பகவான் பார்த்து, ‘உண்மையில், ஜீவா ஆன்மாவுடன் ,  நான் இந்த மூன்று கூறுகளை உருவாக்கி, பெயர்களையும் வடிவங்களையும் விரிவுபடுத்துகிறேன். ஒவ்வொரு தனிமத்தின் மும்மடங்கு தன்மையை நான் வெளிப்படுத்துவேன்.
  • ஆத்மா வா இடமேக ஏவாக்ர அசித் நன்யத் கிஞ்சனா மிஸத் ச இக்சத லோகான் நு ஸ்ரீஜ இதி (ஐதரேய உபநிஷத் 1.1.1) – பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு முன்பு அனைத்தும் அவருக்குள் இருந்தன, அனைத்தும் அவருக்குள் இருந்தன, அந்த நேரத்தில் எதுவும் தனித்தனியாக இல்லை. ஜீவாத்மாக்கள் (தனிப்பட்ட ஆன்மாக்கள், ததஸ்தா சக்தி) மற்றும் வெளிப்புற சக்தியான மாயா இன்னும் அவருக்குள் இருந்தது. அதனால் அந்த இறைவன் என் மூலம் அனைத்து உலகங்களையும் வெளிப்படுத்த விரும்பினான்;
  • ச இக்ஷாசக்ரே, கஸ்மின்னஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி (பிரஷ்ண உபநிஷத் 6.3) – புருஷன் பிரதிபலித்தார்: “நான் எந்த வழியால் உடலை விட்டுப் பிரிந்து செல்வேன்? நான் எதன் மூலம் உடலில் தங்குவேன்?”

தர்ம சக்கரம் எழுத்தாளர், பகவான் அவர்கள் மீது விழுவதைப் பார்த்த மாத்திரத்தில் பயனடைந்த பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார். குஹா, ஹனுமான், ஷபரி மற்றும் விபீஷணன் ஆகியோர் ராமரின் தெய்வீக பார்வை மற்றும் அருளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சிலரை குறிப்பிடலாம்.

———————–

ராம –யாவரும் மகிழும்படி இருப்பவன்–தான் விளையாடி ஆனந்தம் அடைபவர் என்றுமாம்-ரூப -குண -சேஷ்டிதங்களால் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-ம்யமத (அ)ஸ்மிந் ஸதா₃ ஸர்வைர் கு₃ண ரூப வஶீ க்ருதைரிதிராம꞉ (குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர்)। யதாரம்யதே அஸ்மின் சதா சர்வை குண ரூப வசீக்ருதை—-அயோத்யா -53-1-திருக் கல்யாண குணங்கள் — திருமேனியின் எழில் ஆகியவற்றால் பரவசம் அடைந்த அனைவருக்கும் எப்போதும் இராமனால் ஆனந்தம் கிட்டுகிறது –ராமோ ரம்யதாம் ஸ்ரேஷ்ட -அயோத்யா -53-1--மற்றவர்களை மகிழும்படி செய்வதில் சிறந்தவன் இராமன்-குணாபிராமம் ராமம் ச -சபா பர்வம் -58-42- சிறந்த குணங்கள் நிரம்பி உள்ளதால் அனைவரையும் மகிழும்படி செய்யும் இராமன்-ஸ்யாமோ யுவா லோஹிதாஷோ மாதங்கா நாம் இவ ரிஷப-மழை மேகம் போன்று நிறம் கொண்டவனும் -இளம் வயதில் உள்ளவனும்
தாமரை போன்ற அழகான கண்கள் கொண்டவனும்-யானைகளின் நடுவில் உள்ள ஆண் யானை போன்றவனுமான இராமன்–ததா சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்ஜநனை பிது குணைர் விருருசே ராமோ தீப்த ஸூர்ய இவாம் சுபிர் –அயோத்யா -1-33- தனது நாட்டு மக்களால் மிகவும் விரும்பப்படுபவனும்-தசரதனுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனும்
சிறந்த கல்யாண குணங்கள் கொண்டவனும் ஆகிய இராமன் தனது தேஜஸ் மூலம் ஸூர்யன் போன்று ஒளியுடன் நின்றான்-சரத் இந்தீவரத்விஷே அபி ராம சரீராயேதி ஸ்வ மந்த்ர லிங்கா₃ச்ச-இராமனின் திருமேனி சரத் காலத்தில் தோன்றிய நீலோத் பல மலர்கள் போன்று மனத்தைக் கவர்ந்ததாக இருந்தது –மனத்துக்கு இனியான்-தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –10-1-8-சேண சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்தி காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பி -6-6-9-

ஓம் ராமாய நம:நித்யானந்தலக்ஷணேSஸ்மின் அந்தமில் பேரின்ப வடிவினராய்-யோகினோ யோகிகளை-ரமந்த இதி மனமகிழ செய்பவராதலால்-ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-ரமந்தே யோகிநோ யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி |இதி ராமபதேநைதத் பரம் ப்ரஹ்மாபிதீயதே  || (பத்ம புராணம்)-எந்த அந்தமில் பேரின்ப வடிவான, ஞான மயமான இறைவனில் யோகிகள் மனமகிழ்கின்றனரோ, அந்தப் பரம்பொருள் ‘ராம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். ஸ்வேச்சயா  தன்னிச்சைப்படி- ரமணீயம் மிக அழகிய-வபுர்வஹன்வா திருமேனி உடையவராய்-தாசரதி தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்) அவதரித்ததால்-ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அல்லது, தன்னிச்சையால் தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்), அழகிய திருமேனி உடையவராய் அவதரித்ததால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ்ரீராம நாமம் தாரக மந்திரமென்று அழைக்கப்படும். இந்த திருநாமத்தை உச்சரிப்போருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். காசியில் மரிப்போரின் காதுகளில் (அவர்களின் கடைசி தருணத்தில்) பரமசிவனே ‘ராமநாமத்தை’ உச்சரிக்கிறார். எனவே தான் காசியில் மரிப்போருக்கு மறுபிறப்பென்பதில்லை.

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டெழுத்தினால் –
கம்ப ராமாயணம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலா புல்லெறும்பாதி ஒன்றின்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
(திருவாய்மொழி 7.5.1)

ராம நாமத்தை உச்சரிப்பது ஸஹஸ்ரநாமத்தை முழுமையாக பாராயணம் செய்த பலனைத் தரும் என்று பரமசிவன் பார்வதியிடம் கூறுகிறார் ஸ்ரீராம ராம ராமேதி ராமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே – இனிய முகம் கொண்டவர்! ராம நாமத்தை 3 முறை உச்சரித்தால், அது விஷ்ணுவின் 1000 நாமங்களைச் சொன்னதற்குச் சமம்.

தருணௌ ரூப ஸம்பன்னௌ சுகுமாரௌ – புண்டரீக விசாலக்ஷௌ – தாமரை போன்ற கண்களுடன் இனிமையான வடிவம் மற்றும் அழகான தோற்றம்.-‘ராமு-க்ரீதாயாம்’ (விளையாட்டுகளைக் குறிக்கும்) என்ற மூலச் சொல்லைக் குறிப்பிடுகின்றனர் – அவருடைய லீலாக்களால் இன்பம் பெறுபவர்’ அல்லது அவரது கிரீடத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்பவர் ராமர்.ராம நாமம் ‘தாரக மந்திரம்‘ அல்லது சம்சாரப் பெருங்கடலைக் கடந்து முக்தி அல்லது மோட்சத்தை அடைய பக்தர்களுக்கு உதவும் ஒன்று என்று அழைக்கப்படுகிறது. அஷ்டாக்ஷரி மற்றும் பஞ்சாக்ஷரி ஆகிய இரண்டு சக்தி வாய்ந்த மந்திரங்களின் கலவையாக ராம நாமம் கருதப்படுகிறது.-“ஓம் ந மோ ந ரா யா ந யா” என்ற அஷ்டக்ஷரி (8 எழுத்துக்கள்) மந்திரத்திலிருந்து ‘ர’ என்ற எழுத்து தேர்ந்தெடுக்கப்பட்டது – என்ற எழுத்து பஞ்சாக்ஷரி (5 எழுத்துக்கள்) மந்திரமான “ந ம சி வா ய” இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. அஷ்டாக்ஷரியில் இருந்து ”ர’‘ என்ற எழுத்து புறக்கணிக்கப்பட்டால், மந்திரம் ‘ஓம் ந மோ ந  யா ந யா‘ (விஷ்ணு வடிவம் இல்லாதது) ஆகிவிடும். இதேபோல், பஞ்சாக்ஷரியில் இருந்து மA’ என்ற எழுத்து புறக்கணிக்கப்பட்டால், மந்திரம் “ந  சி வா ய” (சிவன் வடிவம் இல்லாதது) ஆகிவிடும். எனவே ‘ராம’ நாமம் என்பது உயிர் கொடுக்கும் இரண்டு எழுத்துக்களின் (ஜீவாக்ஷரம்) கலவையாகும், எனவே இது ‘தாரக மந்திரம்‘ என்று கருதப்படுகிறது.

எப்பொழுதும் ஸ்ரீராமனைத் தியானிப்பதன் மூலம் அனுமன் தனது சக்தியைப் பெற்றார். வால்மீகி ராம நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் கொள்ளையனாக இருந்து தன்னை ஒரு துறவியாக மாற்றிக்கொண்டார் (உண்மையில், வால்மீகிக்கு ‘ராம’ என்று உச்சரிக்க முடியவில்லை என்றும், ‘மாரா மரா’ என்று தொடர்ந்து சொல்ல நாரத முனிவரால் அறிவுறுத்தப்பட்டதாகவும், வால்மீகி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஒரு கொள்ளையனாக!

ராம:- ரமதே’ இதி ராம: ரமு- ரீடாயாம் என்று தாதுவாகையாலே விளையாடுபவன் என்று பொருள்படும்.” த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி கர்மஸூத்ரோப பாதிதை ஹரே! விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஐந்துபி ‘ என்று நாரத முனிவர் கூறினபடியே, சிறுவர்கள் பந்துகளைக் கொண்டு விளையாடுமாபோலே எம்பெருமான் பிராணிகளை வைத்துக்கொண்டு விளையாடுகிறான். பந்தானது வெளுப்பு நூல் கருப்புநூல் சிவப்பு நூலாகிய மூன்றுநிற நூல்களாலே கட்டப்பட் டிருப்பது போல பிராணிகளும் ஸத்வரஜஸ்தமஸ்ஸுக்களாகிற மூன்று நிறமுள்ள குணங்களமைந் திருப்பர்கள். பந்தானது விஹாரகாலத்தில் மேலே போவதும் கீழே விழுவதுமா யிருப்பது போல, பிராணிகளும் ” தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யேமர்த்யலோகம் விசந்தி’ என்கிறபடியே மேலே போவதும் கீழே விழுவதுமாயிருப்பர்கள். இங்ஙனே விளையாடும் பரமபுருஷன் இராமனாகத் திருவவ
தரித்து “ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹு ரு தூந்” என்றுவான்மீபேசும்படி பிராட்டி யொருத்தியோடே விளையாடினான். “ ராமஸ் ஸ ஸீதயாஸார்த்தம் ” என்னாதே (ராமஸ்து) என்றது ஸாபிப்ராயம். (து) என்னு மவ்யயம் வ்யாவ்ருத்தியைச் சொல்லும். இதுவரையில் பெருமாள் பித்ரு சுச்ரூஷையிலும் தர்மப்ரவர்த்தனத்திலும் தேவதா ஸாமாராதனத்திலும் புகழ்படைத்திருந்தவர்-இப்போது பிராட்டியோடே சேர்ந்தவாறே வேறுபட்டார். சருங்கார கேளிகளிலே பரம ரஸிகரன்று புகழ்பெற்றபடியைச் சொல்லுகிறது.

அன்றியே, ராம்:- ராமதே என்பதற்கு உள்ளம் குளிரப் பெறுபவரென்பதும்
பொருளாகையாலே அப்பொருளைக் கொண்டு அநுபவிப்பதும் பாங்கு. அன்பர்
களோடு கலக்கப் பெற்றும் அன்பர்களின் காரியத்தைத் தலைக்கட்டியும் உள்ளம்
குளிருபவர் பெருமாள். குஹேந ஸஹிதோராம ராமன் குஹனோடு சேர்ந்தானென்று
இதற்குப் பொருளன்று; குஹேந ஸஹிதஸ் ஸந்ராம குஹனோடு சேர்ந்த பின்பு
ராமனானானென்றே ஆசாரியர்களருளிச் செய்வது. குஹனோடு சேர்ந்து உள்ளங்
குளிர்ந்தா னென்கை. மற்றோரிடமுங் காணலாம்; (க்ருத க்ருத்யஸ் ததா ராம
*அபிஷிச்ய சா லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம். கருதக்ருத்யாஸ் ததா ராம *

விபீஷணாழ் வானுக்கு முடிசூட்டித் தன் காரியம் தலைக்கட்டிற்றாக நினைத்து [ தா
ராம ]
அப்போது தான் ரதியை யடைந்து ராமனாயின னென்கை. பெருமாள்
செய்தருளின ஒவ்வொரு காரியமும் அவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குளிரச்
செய்ய வல்லதே யாயிற்று. குஹஸுக்ரீவ மாருதி வி ஷணதிகள் பக்கலிலே
காட்டின அனுக்ரஹ விசேஷத்தினால் திருவுள்ளம் குளிர்ந்தது போல, தா காதா
கேயவிராத கரதூஷண ராவணதிகள் பக்கலிலே காட்டின நிக்ரஹத்தினாலும்
ஆசரித விரோதிகள் தொலையப் பெற்றோமென்று திருவுள்ளம் குளிர்ந்திருக்கக்
குறையில்லை. ஆக, ரமதே இது ராம ‘ என்கிற வ்யுத்பத்தியினால் ஸ்ரீராமாயணத்தில்
பல ப்ரகரணங்கள் ஸங்க்ருஹீதங்களாகும்.

அன்றியே ராம : ரமயதீதி ராம ‘ என்கிற வ்யுத்பத்தியும் பொருந்தும். தன்னைக் காண்பவர்களையும் தன் சரிதை கேட்பவர்களையும் மகிழ்விப்பவர் பெருமாள்.உலகத்தில் அதிகாரிகள் வெவ்வேறு பட்டிருப்பர்களாதலால் ஒரே குணத்தினால் எல்லாரையும் ஏக ரூபமாக மகிழ்விக்க முடியாது.” ஸத்யேந லோகந் யதி தீநாந்தாநேந ராகவ;. குரூந் சுச்ஷயா வீர தநுஷா யுதி சாத்ரவாந்.’ என்றாப்போலே ஒவ்வொருவர் பக்கலிலே ஒவ்வொரு குணத்தைச் செலுத்தி மகிழ்விப்பது ஸ்ரீ ராமாயண ப்ரஸித்தம். ஸௌசீல்யம் ௌலப்யம் ஸெளந்தர்யம் பொறுமை தயவு வாத்ஸல்யம் வீரம் என்றிவை முதலான பல திருக்குணங்கட்குக் கடலாயிருக்கின்ற பெருமாள் திருநாட்டிலே விலை செல்லகில்லாத திருக்குணங்களை விலை செல்லச் செய்வதற்காகவே இம்மண்ணுலகில் வந்து அவதரித்தபடியினால் அத்திருக்குணங்களிலே அவரவர்களை யீடுபடுத்தி மகிழ்விக்கச் சொல்ல வேணுமோ? குஹப்பெருமாளை ஸௌசீல்யத்தாலே மகிழ்வித்தான் ஸௌசீலய மென்பதும் சீலமென்பதும் பர்யாயம். தன் மேன்மை பாராதே தண்ணியரோடும் கலந்து பரிமாறுகை சீல குணத்தின் காரியம். இக்குணத்தினால் காரியங் கொண்டது தான் ஸ்ரீ ராமாயணத்தில் அதிகம். ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களாலே தண்டாகாரண்ய வாஸிகளான மஹர்ஷிகளை யீடுபடுத்தினது பெரியதன்று. காதும்மூக்குமறுப்புண்டு கதறி யழுதுகொண்டே சுரதூஷணாதிகளிடம் செல்லலுற்ற சூர்ப்பணகை” தருணெள ரூபஸம்பந்நௌ ஸுகுமாரெள… புண்டரீக விசாலாக்ஷெள சீரக்ருஷ்ணாஜிநாம்பரெள, கந்தர்வராஜ ப்ரதிமௌ பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதெள “என்று சொல்லிச் சொல்லிப் புலம்பும்படி செய்ததே சிறப்பு. இங்ஙனே ஓரோ குணங்களைக் கட்டி ஒவ்வொருவரையும் ரமிப்பித்தது பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.

——————-

விராம –பிறரை ஓயச் செய்பவன்-வரத்துக்கு ஒய்வு -வரம் கொடுத்த பிரமனுக்கு ஒய்வு – வரம் பெற்ற ராவணனுக்கு ஒய்வு -தேவர்களுக்கு ஒய்வு கொடுத்தவன்-ஓம் விராமாய நம:விராமோ அவஸானம் ‘விராம’ என்றால் முடிவாக தங்கும் இடம் ப்ராணினாம்  அஸ்மின்  இதி  -அனைத்து உயிரினங்களுக்கும் அவரே ஆதலால்-விராம: பகவான் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவானே அனைத்து உயிரினங்களும் முடிவில் சென்றடையும் இடமாக இருக்கிறார். எனவே அவர் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அவர் இறுதி ஓய்வெடுக்கும் இடம்ந ஹி தஸ்மாத் மனஹ் கஷ்சித் சக்ஷுஷீ வா நரோத்தமான் | நரஹ் ஷக்நோத்யபாக்ரஷ்டும் அதிக்ராந்தே அபி ராகவே || ( 2.18.13)-ராமரைப் பார்த்தவர்கள் அல்லது அவர் மீது தங்கள் எண்ணங்களைச் செலுத்துபவர்கள் முயற்சித்தாலும் இந்த சங்கத்திலிருந்து வெளியேற முடியாது

ராமன் மற்றும் விரமா என்ற இரண்டு நாமங்களை ‘ரமந்தே அஸ்மின் இதி ராம, விரமாந்தி அஸ்மின் இதி விரமா – மக்கள் யாரை மகிழ்விக்கிறார்களோ, அவர் ராமர், மற்றும் யாரிடம் இறுதி சாந்தியைக் காண்கிறார்களோ, அவரே விரமா’ என்பதில் அழகாக விளக்குகிறார். ஆனந்தத்தின் மூலமும் ஆனந்தத்தின் முடிவுதான் – யத்ர ரமணாம் தத்ர ராமநாவாசனம். படைப்பாளி அவனே, படைப்பை முடிப்பவனும் அவனே.-தஸ்மிந் இடம் சம் ச விசைதி ஸர்வம் ச ஓம் ப்ரோதாஶ்ச விபு ப்ரஜாஸு (யஜுர் 32.8)-யோ மராயதி பிராணயதி யஸ்மாத் ப்ராணந்தி புவனாநி விஸ்வா (அதர்வா 13.3.3)-காலேனோதேதி ஸூர்யஹ் காலே நிவிசதே புனஹ் (அதர்வா 19.54.1)-யத்ராஅமிர்தம் ச மிருத்யுஷ்ச புருஷே’தி ஸமாஹிதே (அதர்வா 10.5.17)

விராம 1-ரமய திராம:’ என்கிறாப்போலே ‘விரமயதீதி விராம? என்றாகும்.
வீராமமாவது ஓய்வு: (1) பிறருடைய செளர்யவீர்ய பராக்ரமங்களை ஓயச் செய்பவர்
(2) பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர் என்று இருபொருள் கொள்ளலாம்.
முந்தின பொருளைப்பற்றி விசேஷமாக விவரணம் காட்ட வேண்டியதுண்டோ?
ப்ரஹ்மாஸ்வம்பூச் சதுராநநோ வா ருத்ரஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா, இந்த்ரோ மஹேந்த்ரஸ் ஸுரநாயகோ வா த்ராதும் நசக்தா யுதி ராமவத்யம்-என்ற திருவடியின் வார்த்தை யொன்றே போதும். பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர்-என்ற இரண்டாவது பொருளுக்குச் சேரச் சிலவிடங்களை யெடுத்துக்கா ட்டுதும். ஆரண்ய காண்டம் ஆறாவது ஸர்க்கத்தில், தண்டாகாரண்யவாளிகளான முனிவர்கள் அரக்கர்களினால் தங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களை இராமபிரானிடம் விஜ்ஞாபித்துச் சரணமடைந்தபோது இராமன் அம்முனிவர்களுக்கு அபயமளித்த வரலாறு வருணிக்கப்பட்டது. பிறகு ஒன்பதாவது ஸர்க்கத்தில் ஸ்தா பிராட்டி இராமபிரானை நோக்கித் தர்க்கித்துப்பேசினாள். (அதாவது) நீர் முனிவேடம் பூண்டு காட்டுக்கு வந்திருக்கிறீர்; புண்ணிய புனல்களாடிச் சுகமாக அயோத்திசென்று சேரவேண்டியது பிராப்தம். அப்படியிருக்க நீர் முனிவர் முன்னிலையில் பரஹிம்ஸை செய்வதாகப் பிரதிஞை செய்தது எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. க்ஷத்ரியர்
களுக்கு இது தருமமானாலும் இப்போது நீர் க்ஷத்ரிய தருமத்தைக் காக்கவேண்டிய நிலைமையில் இல்லாதபடியாலும்,”தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவம் மேற்கொண்டு” காட்டுக்கு வந்திருப்பதாலும் ஆயுதங்களைக்கொண்டு செய்யுஞ்செயலை நீர் நெஞ்சாலும் நினைக்கவே தகாது ‘ உமக்குத் தெரியாததொன்றுமில்லை;உமக்கு நான் தருமம் உபதேசிக்க வந்ததாக நினைக்கவேண்டா; திருத்தம்பியாரோடும் ஆலோசித்து யுக்தமானபடி செய்யக்கடவீர்- என்றுரைத்தாள். இதைக் கேட்ட இராமன் (பத்தாவது ஸர்க்கத்தில்) அந்த ஸீதா பிராட்டியின் வாதத்தைஓயச் செய்திருப்பதைக் காணவேணும். அதில் ஸரமான விஷயம் இவ்வளவே.-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே! ஸலக்ஷ்மணாம், ந ஹி பரதிஜ்ஞாம் ஸம்ச்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத:* இத்யாதிகளைச் சொல்லி அவளுடைய வாதத்தை விராமமடையச் செய்தனனென்பது. வாலி ”அரக்கரோரழிவுசெய்து கழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத்தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ?” என்றாப்போலே சில வாதங்களைச் செய்தபோது பெருமாள் அவன் வாயினாலேயே க்ஷமைவேண்டும்படி செய்து அவனை விராமமடையச் செய்ததும்
இங்ஙனே பலவுங் காண்க.

——————

நிஸர்க-ஸ்வா பாவிகமாக இயற்கையாக  –விரத-ஆசை பற்று இல்லாமல்-அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது அம்மா-ராஜ்ய நாசம் இருள் கூட கூட ராம சந்த்ர ஒளி விஞ்சி இருந்ததே-நிஸர்க₃ நைரபேக்ஷ்யேண க்ருபணாத்₃ராஜ்யாதே ₃꞉விரத꞉
பாராளும் படர் செல்வம் பரத தம்பிக்கே யருளி அரும் கானம் அடைந்தவன் -பெருமாள் திரு 8-5-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவிய யெம்மிராமன் எம்பெருமான் -பெருமாள் திரு -9-2-ஓம் விரதாய நம:விகதம் பற்றுதலின்றி (நாட்டமின்றி) இருக்கிறார்-ரதமஸ்ய விஶயசேவாயாமிதி ‘ரதம்’ அதாவது ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்)-விரத: எனவே பகவான் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்) நாட்டமின்றி இருக்கிறார். எனவே அவர் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-இந்த திருநாமத்தை துஶ்ட:, புஶ்ட: ஆகிய திருநாமங்களோடு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். பகவான் தானே பேரின்ப வடிவினராய் இருக்கிறார் (துஶ்ட:) மற்றும் எப்பொழுதும் எதிலும் த்ருப்தியோடு இருக்கிறார். அவருக்கு நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்றுமில்லை. எனவே, அவர் உலக இன்பங்களில் நாட்டம் கொள்வதில்லை.-ந ச அஸ்ய மஹதீம் லக்ஷ்மீம் ராஜ்ய நாஷோ’பகர்ஷதி |
லோக-காந்தஸ்ய காண்டத்வம் ஷீதா ரஷ்மேரிவ க்ஷபா ||
” (அயோத்தியா 19.32)அவர் ராஜ்யத்தை இழந்தபோது, ​​​​குளிர்ச்சியான சந்திரனின் அழகை இரவினால் பறிக்க முடியாதது போல, அது அவரது சிறப்பை இழக்கவில்லை-தர்ம ஆபதேசாத் த்யஜாதஹ் ச ராஜ்யம் | மாம் ச அபி ஆரண்யம் நயதஹ பதாதீம் | ந ஆஸீத் வ்யதா யஸ்ய ந பீஹ் ந ஷோகஹ் | கச்சித் ச தைரியம் ஹ்ருதயே கரோதி” || (சுந்தர 36.29)சீதா பிராட்டியின் வார்த்தைகளில்: “ஸ்ரீராமன் தர்மத்தின் கீழ் ராஜ்யத்தைத் துறந்து, நான் கால் நடையாகச் செல்ல வேண்டிய காட்டிற்கு என்னை அழைத்துச் சென்றபோது, ​​ராமனிடம் ஏமாற்றமோ, துக்கமோ, பயமோ இல்லை”.

விரஜோ-மார்கா என்று படிக்க வேண்டும், இதன் பொருள் அவர் குறையற்ற பாதையைக் காண்பிப்பவர்.-தன்னைப் பிரிந்திருந்தாலும் எல்லோரும் தேடும் பாதை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.-விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு —சரணம் அடைந்தவர்களுக்கு மோக்ஷம் அற்ற புருஷார்த்தங்களையும் மோக்ஷத்தையும் அளிப்பவன்

விரத = தம்முடைய ஸமீசீன வாதங்களாலே பிறருடைய வாதங்களை விராமமடையச் செய்யுமாற்றல் விராம; என்ற கீழ்த்திருநாமத்தில் அநுபவிக்கப்பட்டது.பிறருடைய ஸமீசீன வாதங்களாலே தாம் விராமமடைவதும் விதண்டாவாத வைதேசிகரான பெருமாள் பக்கலிலே காண்பதுண்டு. தாம் பிடித்ததே பிடிவாத மாக இராமல் “யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம்” என்று கொண்டு தம்முடைய வாதத்திற்கு விச்ராந்திக்கொள்பவர் பெருமாள். அல்லது, காரண விசேஷத்தாலே தாம் நிக்ரஹிக்கப் புகுந்தாலும், உடனே நன்மை கண்டு நிக்ரஹத்தில் நின்றும் விரக்தராகி அநுக்ரஹோந்முகராமவர் என்பதையுங் கொள்ளலாம். இவ்விரண்டையும் அடைவே விவரிக்கிறேன். அயோத்தியா காண்டம் இருபத்தாறாம் ஸர்க்கத்தில் இராமபிரான் தாய் தந்தையர் சொற்படி காட்டுக்குச் செல்ல நேர்ந்ததை ஸ்தா பிராட்டியிடங்கூறி அவளை நகரத்திலேயே வாழுமாறு திட்டம் செய்ய, (ஸர். 27) அதற்குபிராட்டி தன்னையும் உடனழைத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்க, (ஸர். 28) அவளுக்கு இராமன் காட்டின் கொடுமைகளைக்கூறி ‘நீ காட்டுக்கு வரவே தகாது;என்று வலிதாகத் தர்க்கித்தான். அதற்குமேல் பிராட்டி (29, 30 ஸர்க்கங்களில்) பிரணயாரோஷம் தலையெடுத்து “ராமா! உன்னிடத்தில் அழகு மட்டுமேயுள்ளது;அதைக்கண்டு அனைவரும் மயங்கிவிடுகிறார்கள்; உனக்கு ஆண்மையென்பது சிறிதுமில்லை; என்னொருத்தியைக் காக்க முடியாமல் என்னை நிறுத்தி நீ காட்டுக்குப் போனாயென்று என் தந்தையார் கேள்விப்பட்டாராகில் ‘ஹா! புருஷவேஷம் பூண்டுவந்த வொரு பெண்பிள்ளைக்கா என் மகளைக் கொடுத்தேன்! ‘ என்று மிகவும் மனம் நொந்து கொள்வர்; என்னைக் கட்டிலே காக்கமாட்டாத கா புருஷனா நீ? என்று இனைய பலவும் சொல்லித் தர்க்கிக்க, இராமன் தன்னுடைய பிடிவாதத்தில் நின்றும் விரதனாகி அவளையும் உடனழைத்துச் செல்ல இசைந்தனன்.

காரண விசேஷத்தாலே நிக்ரஹிக்கப்புகுந்து நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்த படியையும் இரண்டிடங்கொண்டு காட்டுவோம். கிஷ்கிந்தா காண்டத்தில் (ஸர்.30) ஸுக்ரீவ மஹாராஜர் வர்ஷாகாலத்திலே பெருமாள் ஒய்வு கொடுத்ததை வியாஜமாகக் கொண்டு விஷயபோகங்களிலே ஊன்றிக்கிடக்க. காலம்கடந்தும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாராமையைக்கண்ட பெருமாள் சீறிச்சிவந்து நிக்ரஹிக்கத் திருவுள்ளம்பற்றினபடியை இளையபெருமாள் முகமாகத் தெரிவிக்கவெண்ணி ” ந ச ஸங்குசித: பந்தா யேந வாலீ ஹதோ கத: ” மா வாலிபதமந்வகா; ”« ஹநிஷ்யாமி ஸபாந்தவம் ” இத்யாதிகளைச் சொல்லி அச்சமுறுத்தினார். ஸுக்ரீவன் குடும்பத்தோடு மாண்டுவிட்டானின்று என்றே நினைக்கும்படியாயிருந்தது. இந்த பிரபலமான நிக்ரஹ ஸங்கல்பம் என்னாயிற்று? “ராம ஸுக்ரீவயோரைக்யம் தேவ்யேவம் ஸமஜாயத” என்று பிராட்டி பக்கலிலே திருவடி சொல்லும்படியாகவன்றோ ஆயிற்று” வாநராணாம் நராணாஞ்ச கதமா த் ஸமாகம்:?” என்று பிராட்டி திருவடியைக் கேட்டாள். பணைத்த்தித்திரிகிற குரங்கினங்களுக்கும் புருஷோத்தமர்களுக்கும் சேர்க்கையுண்டானபடி எங்ஙனேயென்று கேட்டாள். அதற்குத் திருவடி சொன்னது, வெறும் ஸமாகமமன்று; ராமனும் ஸுக்ரீவனும் ஏகதத்வமென்னும்படி யாகவன்றோ குழைந்தார்களென்று. ஆக, நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்தபடியாலே விரதனென்றது ஓக்கும். மற்றோரிடம் யுத்தகாண்டத்தில் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணமாகும்.”பா ம் புஜக போகாபமுபதாயாரி ஸுதந்: ‘ அஞ்ஜலிம் ப்ராங்
முக: க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோததே:”
என்னும்படி கடலரசனை வழிவேண்டி மூன்றுநாள் தரைக்கிடை கிடந்தார் பெருமாள். அவனோ முகங்காட்டிற்றிலன்;*சாபமாநய ஸௌமித்ரே சராம்ச்ச ஆசீவிஷோபமாந், ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா : * என்று பலவுஞ்சொல்லி உலகில் ஜலதத்வமே யில்லா தபடி செய்துவிடுகிறேனென்று சீற்றத்தினெல்லையில் நின்றார் பெருமாள்.பிறகு என்னாயிற்று? அக்கடலரசன் சிறிது ஆபிமுக்க்யம் காட்டினவாறே ஸமுத்ரராஜனே! இவ்வம்பு உனக்காகத் தொடுத்ததன்று; உன் பகைவர்மேலேவிடத் தொடுத்ததத்தனை ; உன் பகைவர்களைக் கட்டிக் கொடு’ என்று கூறி அவன் காட்டிக்கொடுத்த திருமகுல்யமென்கிற விடத்திலே அம்பைச் செலுத்தி அநுக்ரஹ சீலராகி நிக்ரஹத்தில் நின்றும் விரதராயினர். (யுத்தகாண்டம் ஸர்க்கம் 22காண்க… . மேலே ராவணனோடு முலமான யுத்தம் நடக்கும்பொழுது அவன்-சால சாபஞ்ச முமோச வீர:* என்னும்படி கமாண்டு நின்றவாறே ” கச்சஅநுஜாநாமி “ என்று சொல்லி விடை கொடுத்துப் போகவிட்டு அப்போது யுத்தத்தில் நின்றும் விரதரானார் பெருமாள்- என்பதும் இங்கு (விரத 🙂 என்னும் திருநாமத்தின் பொருளாகக் கொள்ளத்தகும்.

————————

மார்க்க-தேடப்படுபவன்-த₄ர்மாபதே ₃ஶாத் த் யஜதஶ்ச ராஜ்யம் மாம் சாப்ய ரண்யம் நயத꞉ பதா₃திம், இத்யாதி₃ । ப₄ரத்₃வாஜாதி₃முநிபி₄ர் மார்க₃யத இதிமார்க₃꞉ ।-நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் உய்த்தனன்-பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் –விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு தோஷம் அற்ற வழியைக் காட்டுபவர்-விரஜோ மார்க₃ இதி பாடே ₂ விரஜா꞉ – அபாம்ஸுலோ நிர்தோ₃ஷஸ் தத்₃த₃ர்ஶிதோ மார்க₃ இதி –யா கதிர் யஜ்ஜ சீலா நாம் ஆஹிதாக் நேச்ச யா கதி-(ஜடாயுவுக்கு மோக்ஷம் காட்டிய பெருமாள் ) யஜ்ஜ்ங்கள் இயற்றுவோரின் உயர்ந்த கதி ஐந்து அக்னியை வைத்து வழிபடுவோரின் கதி।-ஆவஹத் பரமாம் கதிம் –ஸூந்தர-17-8- ஜடாயு நீ நான் கூறும் பரம கதிஅடைவாயாக- யதா₂ந ச அஸ்ய மஹதீம் லஷ்மீம் ராஜ்ய நாச அபகர்ஷதி லோக காந்தஸ்ய காந்தத்வாத் சீத ரஸ்மே இவ ஷபா–அயோத்யா -19-32-இராமனின் திருமுகத்தில் லஷ்மீ என்னும் சோபை அதிகமாகவே உள்ளது-ராஜ்யம் கை விட்டுப் போனாலும் அந்த சோபையை நீக்க இயலாது உலகிற்கு ஒளியை அளிக்க வல்லதும் -காண்பவர்களுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லதும் ஆகிய சந்திரனின் சோபையை இருள் எவ்வாறு நீக்க இயலும்-ச பிதுர் வசனம் ஸ்ரீ மாந் அபிஷேகாத் பரம் பிரியம்-வனவாஸம் செய்வதற்கு அனுமதி அளித்த தயரதன் சொற்கள் பட்டாபிஷேகம் என்பதைக் காட்டிலும் இராமனுக்கு மிகவும் பிரியமாக இருந்தன-தர்ம உபதேசாத் த்யஜதச்ச ராஜ்யம் மாம் சாப்யரண்யம் நயத பித்தாதிம் –ஸூந்தர-36-29– தர்மத்தின் வழியைக் கடைப்பிடிக்க எண்ணியவராக ராஜ்யத்தைத் துறந்து மென்மையான சரீரம் கொண்ட என்னை அடர்ந்த கானகத்தில் நடத்தியபடி வந்தார்-இதனால் எனக்கு வருத்தம் உண்டாகவில்லை

ஓம் மார்காய நமயம் விதித்வா எவரை (எந்த பரம்பொருளை) அறிவதால்-அம்ருதத்வாய  கல்பந்தே பிறவா நிலையை அடைகின்றனரோ-யோகினோ  முமுக்ஷவ: முக்தியை விழையும் யோகிகள்-ஸ ஏவ பந்தா: அவர் (பகவான்) ஒருவரே (முக்தியை) அடையக்கூடிய வழியாவார்-மார்க: எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘நான்ய: பந்தா வித்யதேSயனாய’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.15)-எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ.

மார்க்க:= மார்க்யதே’ இதி மார்க்க; மார்க்கணமாவது தேடுதல். தேடப்படுகிறவர் என்றபடி. தேடுகிறவர் என்கிற பொருளும் பொருந்தும். தேடப்படுகிறவர் என்னும் பொருளை முன்னம் விவரிப்போம். வேதாந்தங்களிலே “ஸோந்வேஷ்ட ய :” என்றுஓதியுள்ளது. பகவான் தேடத் தகுந்தவன் என்றபடி. இந்தச் சுருதியையடியொற்றியே திருமங்கையாழ்வார் “நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன்” என்றும். ” நான்மறைகள் தேடியென்றுங் காணமாட்டாச் செல்வன்என்று மருளிச்செய்தார். உத்தர ஸ்ரீராமாயணத்திலே ‘சம்பூகவதம் என்றொரு
கெட்டம்.தவம்புரியத் தகாத ஜாதியிலே பிறந்தானொருவன் தண்டகார ணியத்திலே கொடுந்தவம் புரிய,அதனாலே அயோத்தியில் ஒரு அந்தணனுடைய குழந்தை இறந்துபோக, அந்த சூத்ரதபஸ்வியைக்கொன்றாலன்றி இந்த பிராமண சிசு உயிர்பெறாதென்றறிந்த பெருமாள் அவனை வதைக்கத் திருவுள்ளம்பற்றிக் கையுங்கத்தியுமாகத் தண்டகாரணியத்திற்கெழுந்தருளுகிறார். (பெருமாள் திரு மொழியில் செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டு என்றநுஸந்திககப்பட்ட கதை இது.) காடேறச் செல்லாநின்ற பெருமாள் ”சம்புகனென்கிற சூத்திரன் தம் புறானாமே; எங்கே எங்கே?”என்று கேட்டுக்கொண்டே அவனைத் தேடிக்கொண்டு செல்லுகின்றார்; சென்று அவனையணுகினபோது அவன் சொல்லுகிறான்* அந்வேஷ்டவ்யோ யதஸி புவைநர் லோசுநாதச் சாண்ய மாம் அந்விஷ்யந்…” [உத்தரராமசரிதே பவபூதி: என்றான். உலகர்களாலே தேடத்தக்கவனாக வேதங்களில் சொல்லப்படுகிற மஹாப்ரபுவே, நீ என்னைத் தேடிக்கொண்டு வந்தனையே, நான் எவ்வளவு பாக்யசாலி! என்றான்.இங்கு கர்த்தரியர்த்தம் கர்மணியர்த்தம் ஆகிய இரண்டு பொருளும் காணலாம். மாரீச மாயா ருகத்தை வதைத்து மீண்டபின் பாணசாலையில் பிராட்டியைக் காணாமல் அவளைத் தேடிக்கொண்டு திரிந்தது, தனுகபந்தனுடைய சொல்லின்படி சபரியையும் ஸுக்ரீவனையும் தேடிப்போந்தது என்னுமிவற்றையும் கொள்ளலாம். மார்க்க: என்பதற்கு வழியாயிருப்பவன், வழிகாட்டுபவன் என்கிற பொருள்களுங்கொள்ளலாம். வழியென்றாலும் நெறியென்றாலும் பரியாயம்.நம்மாழ்வார் பெரிய திரு வந்தாதியில் *நெறிகாட்டி நீக்குதியோ? என்கிற பாசுரத்தில் உபாயமென்னும் பொருளில் நெறியென்னுஞ் சொல்லைப் பிரயோகித்திருப்பதனால் மார்க்க; என்னும் வடசொல்லும் உபாயவாசகமாகக் குறையில்லை. முகுந்தமாலையில் “கரசரண ஸரோஜே காந்திமந் நேத்ரமீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே,ஹரிஸரஸி விகாஸ்ய…” என்ற சுலோகத்தில் ‘அகாதமார்க்கே என்றவிடத்தில் மார்க்க சப்தம் உபாயார்த்தமாகவே பிரயோகிக்கப்பட்டுள்ளது. ‘உபாயோபேயத்வே ததி தவ தத்வம் ந து குணௌ” என்று ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் பட்டர் அருளிச்செய்தபடி எம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகையாலே உபேய பூதனான தானே உபாயமுமாயிருக்கும்படியைச் சொல்லிற்றாகிறது. ராவண வதமான பிறகு பிரமன்வந்து செய்யும் துதியில் “சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: “ என்றதனால் மூதலிக்கப்பட்ட அர்த்தமேயன்றோ இது. இனி, வழிகாட்டுகிறவன் என்னும் பொருளுக்கு ஸமந்வயம் பெரியவுடையார் (ஐடாயு) பக்கலிலே காணலாம். *மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்* என்று சொல்லிச் சடாயுவுக்கு வைகுந்தத்தேற வழிகாட்டினவரன்றோ பெருமாள். * யா கதிர் யஜ்ஞ சீலாநாம் * இத்யாதியாகச் சொன்ன ராம வாக்யத்தில் (கதி 🙂 என்பதற்கு மார்க்க மென்பது தானே பொருள். பகவத் கீதையில் (8-86) *சுக்ல க்ருஷ்ணே கதீ ஸ்யேதே” என்றவிடத்தில் கதிசப்தார்த்தம் மார்க்கமேயன்றே.

————————

நேய-நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்–ஸுஹ்ருதா₃ம் நியோகா₃ர்ஹத்வாத்
நேய꞉ (தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர்)। யதாஆஞ்ஞாய அஹம் தபஸ்வி நாம் –ஆரண்ய – முனிவர்களே உங்கள் துன்பம் பற்றி இனி கூற வேண்டாம் -ஆணை இடுங்கள்-ஆவாசம் து அஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ காநேந -ஆரண்யம் –
இந்த தண்டகாரண்யத்திலே நான் தங்க வேண்டிய இடத்தை கூறுங்கோள்-அங்கேயே நான் தங்குகிறேன்-ஸூஹ்ருதாம் சர்வ க்ருஸ்ரேஷு யுக்தம் புத்திமதா சதா சமர்த்த நாபி சந்தேஷ்டும் ஸாஸ்வதீம் பூதிமிச்சதா –யுத்த-ஒருவன் மிகச் சிறந்த புத்தி உள்ளவனாகவும் -சிறந்த எண்ணம் கொண்டவனாயும் மற்றவர்களின் துன்பங்களை நீக்க வல்லவனாயும் இருக்கக் கூடும் அப்படிப்பட்டவன் தனது நண்பர்களுக்கு உண்டாக வல்ல துன்பங்களை தனது சாமர்த்தியத்தால் நீக்குவதே சிறந்தது மேலும்  அவர்களின் துன்பங்களை நீக்கி ஐஸ்வர்யம் கிட்டும்படிச் செய்தால் மேலும் சிறப்பானது –யஐஸ்வ அபீப்சிதம் யஜ்ஜம் மயி ஸ்ரேயசி அவஸ்திதே நியுங்ஷ்வச அபி மாம் க்ருத்யே சர்வம் கர்த்தாஸ்மி தே வச–சபா பர்வம் -33-25- கிருஷ்ணன் தர்மர் இடம் நான் உங்களுக்கு நன்மைகளை செய்வேனாகவே உள்ளேன் ஆகவே நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்யுங்கோள்-உங்களுக்கான உதவி தேவைப்படும் போது என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கோள் உங்கள் சொற்களைக் கேட்டு நான் அப்படியே செய்கிறேன்-அயமஸ்மி மஹா பாஹோ வ்ரூஹி யத் தே விவஷிதம் கரிஷ்யாமீஹ தத் சர்வ யத் த்வம் வஷ்யஸி பாரத –உத்யோக பர்வம் — நீண்ட புஜங்கள் கொண்டவனே -பாரத குலத்தில்வந்தவனே –
நீ எதனைச் செய்ய எண்ணுகிறாயோ அதனைச் செய்ய நான் தயாராக உள்ளேன்-உன்னுடைய கட்டளைகளை ஏற்கிறேன் தர்மர் கிருஷ்ணன் இடம்-வாயு ஸூநோ ஸூஹ்ருத்வேந பக்த்யா பரமயா ச ச சத்ரூணாம் அப்ரகம்பிய அபி லகுத்வம் அகமத் கபே –யுத்தகாண்டம்-லஷ்மணன் இராவணனால் அடி பட்டு விழுந்தவுடன் அவனை இராவணன் தூக்கிச் செல்ல முயன்றான் அவனால் இயல வில்லை ஆனால் அனுமனோ லஷ்மணன் மீது கொண்ட அன்பினால் ஒரு குழந்தையைத் தூக்குவது போன்று எளிதாக்கத் தூக்கிச் சென்றான் –கூன் உருவில் கொடும் தொழுததை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு கானகமே சென்றவன் -பெருமாள் திரு -9-1–சிற்றவை பணியால் முடி துறந்தான் -பெரிய திரு மொழி -2-3-1–ஓம் நேயாய நம:மார்கேன ஸம்யக்ஞானேன பேரறிவான ஞானத்தின் வழியாக-ஜீவ: ஜீவாத்மா-பரமாத்மதயா பரமாத்ம தன்மைக்கு-நீயத அழைத்துச் செல்லப்படுகிறான்-நேய: எனவே பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நேய = நாயகனென்னும் பொருளதான தேதாவென்னுஞ் சொல்லுக்கு எதிரான சொல் (நேய ) என்பது. கட்டளையிடுபவனை நேதா என்போம்; கட்டளை யிடப் பெறுபவனை (நே ) என்போம். ” யஸ்ய விச்வ உபாஸதே ப்ரசிஷம் யஸ்ய தேவா:”என்று வேதமோதியுள்ளபடியும், * ஆணை மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி (திருவாசிரியம்) என்று ஆழ்வாரருளிச் செய்தபடியும்* மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவனாகிய தான் ஸகலதேவர்களையும் கட்டளையிட்டுப் பணிகொள்ளத் தக்கவனாயிருந்து வைத்தும் பிறர் தன்னைக் கட்டளையிடும் படியாக வாயிற்று ஸ்ரீராமாவதாரம் செய்தருளிற்று. விச்வாமித்ர முனிவன் தான் ஒரு வேள்வி செய்வதாகத் தொடங்கி அதனை இடையூறின்றி நிறைவேற்றுதற் பொருட்டுத் தசரதமன்னவனிடம் வந்து இராமனைத் தருகவென்று இரந்தனன்.அதற்கு மன்னவன் உடன்படவில்லை. அரக்கார்களோடு போர்புரியத்தக்க பருவமின்றிக்கே மிக இளையவனான என் சிறுவனை நான் உம்மோடுகூட அனுப்பமாட்டேனென்றனன். அதற்கு முனிவன் மன்னவனை நோக்கி இவனது பெருமையை நீ அறிந்திலை; அறப்பெரியோனான இவனை மிகச் சிறியவனாக நீ நினைத்திருக்கிறா யத்தனை ; வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று வேதம் பேசின பெருமைவாய்ந்த மஹாபுருஷனன்றோ இவன்; இவனை உள்ளபடியே யானறிவேன்; நான் மட்டுமல்ல;இதோ உன்னெதிரில் வீற்றிருக்கின்ற நற்றவமாமுனிவர்களும் நன்கறிவர்கள் என்று இனைய பலவுஞ்சொல்லி ஸ்ரீராமலக்ஷ்மணர்களைக் கொண்டு சென்றான்.தந்தையாரிடம் இங்ஙனே முனிவன் பேசின பேச்சுக்களை யெல்லாம் ஏகாந்தமாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமபிரான் ‘சேஷபூதனாய்ப் பரதந்திரனாய்ப் பிறக்க வேணுமென்று ஆசைப்பட்டு வந்து பிறந்த நம்மைப் பரமாத்மாவென்று வெளி யிட்டுவிட்டாரே! இது நமது நினைவுக்குத் தகுதியன்றே; மேலும் இந்த விச்வாமித்திரர் இதுவரையில் எத்தனையோ அரியபெரிய வேள்விகளையும் தவங்களையும் இயற்றியிருக்கிறார்; அப்போது ஒருவரையும் துணைவேண்டினவரல்லரிவர்; இப்போது இவர் மிகச் சிறிதாகச்செய்ய நினைத்திருக்கிற ஆறு நாளைய வேள்விக்குத் துணை வேண்டிவந்தது வெறுமனல்ல; நம் தந்தையார் சதுரங்க பலத்தோடு தாம் வந்து அவலீலையாக வேள்வியைக் காத்துத் தருவதாகச் சொல்லவும் அதையும் மறுத்து நம்மையே வேண்டிக் கொணர்ந்த விம்முனிவர்க்கு ஏதோ விசேஷமான தொரு கருத்து இருக்க வேண்டும். நம்மை ஏவிக் காரியங்கொள்ள நினைத்தே (அதாவது நாம் ஆசைப்பட்ட சேஷத்வத்தை உலகமறியச் செய்யக் கருதியே) நம்மை வேண்டிக் கொணர்ந்தார் போலும்’ என்று மருமமறிந்துகொண்டு இராமன் அம் முனிவரிடம் கைகூப்பி ஒன்று விண்ணப்பஞ்செய்தான் – இமௌ ஸ்ம முதிசார்தூல!கிங்கரௌ ஸமுபஸ்திதௌ, ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் கரவாவ கிம்” என்றான். இதன் பொருளாவது. முநிஸார்வபௌமரே! நானும் என் தம்பியான லக்ஷ்மணனும் உம்முடைய கட்டளைப்படி நடந்துகொள்ள வந்தவர்கள் ; எப்போதும் உமது அருகிலேயே யிருந்து நீர் நியமிக்கும் குற்றேவல்களைச் செய்ய நாங்களிருவரும் காத்திருக்கிறோம்; நீர் கூசாமல் எங்களுக்கு எவ்விதமான கட்டளையுமிடலாம்;உமக்கு என்ன பணிவிடை செய்யப் பெறுவோமென்று எதிர்பார்த்திருக்கிறோமென்பதாம். ஆக, ஆஜ்ஞாபகனான தான் ஆஜ்ஞாப்யனாகைக்கு ஆசைப்பட்டது தான் (நேய ) என்பதனால் தெரிவிக்கப்பட்டதாகிறது.

———————–

நய –நடத்துமவன் நயாமி பரமாம் கதிம்தே ச ததா₂(அ)ஸ்மிந் நீயந்த இதி
நய꞉ । தே ஹ்யாஹு(கர்ப்பத்தில் வைத்துக் காப்பது போல்– அந்த ரிஷிகளையும் காப்பவர்)ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்யபூதா தபோதனா –ஆரண்ய-தவத்தை மட்டுமே பெரும் செல்வமாகக் கொண்ட ரிஷிகள் வயிற்றில் உள்ள சிசு போலே ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள்-பாண்டவானாம் பவாந் நாதோ பவந்தம் ச ஆஸ்ரிதா வயம் -சபா பர்வம்
பாண்டவர்களாகிய எங்களுக்கு நீயே ரக்ஷகன் -உன்னை அண்டிய எங்களை நீயே காக்க வேண்டும்-சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –நயாமி பரமாம் கதிம் -ஈர்த்து அழைத்துச் செல்பவன்(எல்லாவற்றையும் நடத்துபவர் -வழி-நடத்தப் படுபவர் -நடத்துபவர் ஆகிய மூன்று ரூபங்களில் அறியப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(மேலான இடத்திற்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்)ஓம் நயாய நம:நயதீதி அவ்வாறு ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை தன்னிடம் வந்து சேருமாறு வழிநடத்திச் செல்வதால்-நய: பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-நேதா தலைவராய் இருந்து-மார்கோ வழியாகவும்-நேயோ வந்தடையும் ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும்-நய வழிநடத்திச் செல்லும் தலைவராகவும்-இதி த்ரிரூப: இவ்வாறு மூன்று வடிவத்திலும்-பரிகல்ப்யதே பரம்பொருள் விளக்கப்படுகிறார்.-பரம்பொருளான பகவான் முக்தியை அளிக்கும் வழியாகவும், (அந்த முக்தியை அடையத்தகுந்த) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும், அந்த ஜீவாத்மாவை வழிநடத்திச் செல்லும் தலைவராகவும், மூன்று வடிவில் இந்த மூன்று திருநாமங்களால் விளக்கப்படுகிறார்.

நய= அந்யாந் ஸர்வாந் ஸ்வயம் நயதீதி நய;. பிறருடைய கட்டளையைத்தான் எதிர்பார்த்து அப்படியே நடத்துகொள்வதாகக் கீழ்த்திருநாமம் காட்டிக்கொடுத்தது. பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் என்று ஓதப்படுகிற பகவானுக்கு அந்த நேயத்வம் [ஆஜ்ஞாப்யத்வம்] ஸ்வேச்சையினாலாயது; நிருபாதிகமாகவுள்ள தன்மையைச் சொல்லுமிடத்து ஸர்வநிர்வாஹகத்வமேயன்றோ அஸாதாரணமாகச் சொல்லுகிறது . இராமபிரான் தன்னைப்பற்றித் தன்வாக்காலே சொல்லிக்கொள்ளும்போது ஆத்மாநம் மாநுஷம் ம யேராமம் தசரதாத்ம ம் இத்யாதியாக எங்ஙனே சொல்லிக்கொண்டாலும், பிறர் சொல்லும்போது அவனுடைய பெருமையைப் பரக்கச் சொல்லியிருக்கவில்லையா? * சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: – ஜகத் ஸர்வம் சரீரம் தே.-இத்யாதி யாவன்றோ-பிரமன் சொல்லிவைத்தது. ஆகவே (நேய ) என்கிற கீழ்த்திருநாமத்திற்கு எதிர்த்தட்டான (நேதா) என்னுந் திருநாமத்தின் அர்த்தமே (நய ) என்பதிலுள்ளதென்று கொள்ளலாம். அன்றிக்கே, நயதீதி நய:-கொண்டு போகிறவன் என்றபடி.இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்போது தான் ஒருவனாக எழுந்தருளவில்லையே; “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி* என்று ஸ்ரீகுலசேகரப் பெருமாளருளிச் செய்தபடியே சராசரங்களையுமன்றோ உடன் கொண்டு சென்றது (இதனைச் சிறிது விவரிப்போம்;) முனிவன் வேண்டத் திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் தன்னை* என்று குலசேகரர் பணித்தபடியே இளையபெருமாளை விட்டுப் பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் கிலேசமடைந்த இராமபிரான் ராஜ்யத்தைவிட்டு எழுந்தருளத்தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து ‘தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்’ என்று பிரார்த்திக்க. ஸ்ரீராமன் அவர்களது பத்திப்பெருங்காதலைக் கண்டு அப்படியே யாகட்டும்’ என்றருளிச்செய்து அனைவரையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பயணப்பட்ட வளவிலே. அந்நகரத்திலிருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து பெருமாளைப் பின் செல்ல,இங்ஙனம் பலரும் புடைசூழ பகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கெழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும் பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே மீட்சியில்லாததான ஸாந்தானிக மென்னும் உலகத்தையளித்தனரென்பது இதிஹாஸம். இங்ஙனே நயனம் பண்ணின படியைக் காட்டும் (நய 🙂 என்கிற திருநாமம். வராஹ சரமச்லோகத்தில் ”அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்” என்று சொன்னவரேயன்றோ.

———————–

அநய –ப்ரதிகூலர் அணுக முடியாதவன்-ஸ ஏவ, அஸுஹ்ருத்₃பி₄ர்ந நயோ (அ)ஸ்யாஸீதி₃தி
அநய꞉ । யதா₂ ராவணேந ꞉விரோதிகளால் நடத்தப்பட முடியாதவர் –யுத்தத்தில் வெல்லப்பட முடியாதவர் என்பது -உலகிற்கு நன்மை செய்பவர் தம்மைத் தவிர வேறு எவரும் இல்லாதவர்-ஹிமவான் மந்தரோ மேரு த்ரை லோக்யம் வா சஹாமரை சக்யம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந சங்க்யே பரதானுஜ–யுத்த
இமயமலை மந்த்ர மலை மேரு மலை மூன்று உலகங்கள் போன்ற பலவற்றையும் தனது தோள்களால் தூக்கும் வலிமை பெற்ற ராவணனால் யுத்தத்தில் அடிபட்டுக் கிடந்த பரதனின் தம்பியான லஷ்மணனைத் தூக்க இயலவில்லை-யத்வா -அன்றிக்கே-அய ஸூபாவஹோ விதி -அய -ஸூபத்தைக் கொண்டு வரும் வஸ்து –அவனைத் தவிர வேறு யாராலும் ஸூபம் கொண்டு வர இயலாது -என்பதை –அநய  -சொல்லும்-ஏதே வயம் சேர்வை சம்ருத்த காமா யேஷாமயம் நோ பவிதா ப்ரஸாஸ்தா –அயோத்யா அவன் நம்முடைய யஜமானனாகவும் ரக்ஷகனாகவும் உள்ளதால் நமது விருப்பங்கள் அனைத்தும் கைகூடும்படி உள்ளன –(தாம் யாவராலும் நடத்தப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –)(முக்கிய பிராணனை பூமிக்கு அனுப்பி வைப்பவர் -தாமே மிக உயர்ந்தவர் –தம்மை நடத்தும் மற்று ஒருவர் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் அநயாய நம:நாஸ்ய நேதா வித்யத (இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானை) தன்னை வழிநடத்தும் தலைவர் வேறவரும் இல்லை-இதி அனய: எனவே பகவான் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவானின் அனைத்து சக்திகளும் அவருக்கு இயற்கையாக, என்றும் உள்ளது. அவருக்கு ஈடானவரோ, மேலானவரோ வேறெவரும் இல்லை.-‘ததேஜாதி தனைஜாதி’, அனேஜதேகம் மனஸோ ஜவீயோ (ஈசாவாஸ்ய உபநிஷத்)ஆரம் காமாயா ஹரயோவதன்விரே ஸ்திராய ஹிந்வன் ஹரயோ ஹரீ துரா (ரிக் வேதம் 10.96)-வசிஷ்ட முனிவர் உட்பட அனைவரும் அவரை ராஜ்யத்தை ஏற்கவும் ஆட்சி செய்யவும் அவரை வற்புறுத்த முயன்றனர், ஆனால் ராமர் தர்மத்தின் பாதையில் இருந்து விலகவில்லை, யாரும் அவரை வழிநடத்தாமல் அதை ஏற்றுக்கொண்டார்.-

அநய:=இதற்கு பாஷ்யத்தில் பட்டர் அருளிச்செய்திருக்கும் ரஸவத்தரமான பொருளை முன்னம் விவரிக்கிறேன். ” அய : சுபாவஹோ விதி:; ஸ: அஸ்மசத் அந்யோ
ஜகதாம் தாஸ்தி இதி அநய:
” என்பது பகவத்குணதர்ப்பண ஸ்ரீஸூக்தி. அமரகோசத்தில் “அயர் சுபாவஹோ விதி:” என்னப்பட்டது. நன்மைபயக்கும் செயலுக்கு அயமென்று பெயர்; இராமனைக் காட்டிலும் நன்மை செய்வார் வேறுயாருமிலர்வன்பது தாற்பரியமாகத் தேறும். ஸ்தோத்ரரத்னத்தில் அநுத்தமம் பாத்ரமிதம்தயாயா : என்றவிடத்தில் ‘அநுத்தமம் என்பதற்குப்போல இங்கு ‘அநய?’ என்பதற்கும் பஞ்சமீ பஹுவ்ரீஹிஸமாஸம் பொருத்த முடையதேயாம். தீங்கிழைப்பவர்களுக்கும் நன்மை புரிவதையே தன்மையாகக் கொண்டவரன்றோ பெருமாள்.-*நஸ்மரத்யபகாராணம் சதம யாத்மவத்தயா, கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி என்றன்றோ அயோத்யாவாஸி ஜனங்கள் ராமகுணகீர்த்தநம் பண்ணிற்று.-மேலெடுத்த சுலோகத்தில் [கதஞ்சிதுபகாரேண] என்றதன் பொருளை ஆழ்ந்து அறியவேணும். பிறர் செய்வது உண்மையில் உபகாரமன்று; அவர்கள் செய்தது அபகாரமாகவேயிருந்தாலும் கதஞ்சித் உபகாரமாக ஆக்கிக்கொள்ளப் படுகின்றதென்கை.-இதனை ஸ்ரீவசனபூஷணத்தில் (4-1) “நன்மையென்று பேரிடலாவதொரு தீமையுங் காணாதே. .தனக்கேற இடம் பெற்றவளவிலே என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள்விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்றாப்போலே சிலவற்றையேறிட்டு மடிமாங்காயிட்டு ..” இத்யாதி திவ்ய ஸூக்திகளாலறிக. இப்படியாக ஏறிட்டு அநுக்ரஹித்தது ராமாவதாரத்திலுண்டோவென்னில்; ஓரிடம் காட்டுவோம். ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் வாயஸரக்ஷணத்தை யருளிச்செய்யுமிடத்து “தாத் ருசோ வாயஸஸ்ய ப்ரணத இதிதயாலு: ‘ என்றருளிச்செய்தார். இங்கு “ப்ரணதஸ்யவாயஸஸ்ய தயாலு* என்னாதே[ப்ரணத இதி தயாலு ; என்றதன் உட் கருத்தையறிந்து ஸ்தோத்ர பாஷ்யத்தில் பணித்திருப்பது – தயார்த்ரபுத்த்யா ப்ரணதத்வேந பரிக் ருஹ்ய இத்யர்த்த: ‘ என்று. அதாவது, ப்ரணதியை யுத்தேசித்துக்காகம் வந்ததில்லை; எங்குந்திரிந்து செயல் மாண்டு புகலிடமற்று வந்துவிழுந்ததத்தனை. அந்த வீழ்ச்சி யையே ப்ர ணதியாகக்கொண்டு பெருமாள் காத்தருளினர் என்கை. விபீஷண அபயப்ரதாந ப்ரகணத்தில் “ந த்யஜேயம் கதஞ்ச “ என்றது இங்கு சிகரமாக நினைக்கத்தக்கது.

அதவா, அநய : என்பதற்கு ‘ந வித்யதே நய; யஸ்மிந்ஸ:’ என்று கொண்டு நயமில்லாதவர் என்கிற பொருளுங்கொள்ளலாம்.நயமாவது நீதி: இராமனை நீதி யற்றவரென்று சொல்லலாமோ கோபிகள் கண்ணனை நோக்கி “நீரிலே நின் றயர்க்கின்றேம் நீதியல்லாதன செய்தாய்” என்கிறார்கள். அப்படி இராகவனை நோக்கி யாரும் சொன்னதில்லையே; வாலி போல்வார் சொல்வது பரமார்த்தமாகக் கொள்ளத் தகுமோ? என்று சங்கை தோன்றும். அநியாயமான செய்கையைச் செய்பவரென்று பொருளன்று. நீதியாவது நியதி; இராமபிரானுடைய செயல் ஒரு நியதியிலே [வ்யவஸ்தையிலே] அடங்குமதன்று என்று தாற்பரியங் கொள்க. (இதன் விவரணம் கேண்மின்.) பரமபூஜ்யரான பரத்வாஜ மஹர்ஷியின் ஆச்ரமத்திலே அமுதுசெய்தாரென்று கேள்விப்படுமாபோல சபரி கையாலே அமுது செய்தருளினாரென்றுங் கேள்விப்படுகிறோம். விச்வாமித்ரமுனியை நாதராகக் கொண்டாரென்று கேள்விப்படுமாபோலே *ஸுக்ரீவம் நாதமிச்சதியென்றும்-ஸுக்ரீவம் சரணம் கத?* என்றும் கேள்விப்படுகிறோம். இப்படியாக ஒரு நியதி யில்லையாயிற்று ராமகாரியங்களில்.ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ‘ பகவதி பரத் வாஜே புக்திஸ் ததா சபரீகரே” இத்யாதி பணித்திருப்பதைக் கொண்டு ரஸிக ஹ்ருதயங்கமமாக நிர்வஹிக்கும்படி இது.

——————-

வீர –எதிரிகளை பயத்தால் நடுங்க செய்பவன்-சத்ருக்களால் கொண்டாடப்படும் வீரத்தைக் கொண்டவன்-வீர ஸூர பராக்கிரமம் -ஜெய ஜெய மஹா வீர-(தினகர –குல கமல திவாகரன் )ரக்ஷஸாம் அதிப₄ய சலந ஹேதுத்வாத்₃வீர꞉ ।-அரக்கர்களை மிகவும் பயத்தினால் நடுங்கும்படி செய்பவர் 
“அஜ க₃தி ஷேபணயோ ꞉”
* ஸ்பா₂யிதஞ்சிவஞ்சி, இத்யாதி₃நா ரக்
* அஜேர் வ்யக₄ஞபோ ꞉ இதி வீபா₄வ꞉। யதா₂ப்ரஹ்ம தண்ட ப்ரகாசானாம் வித்யுத் சத்ருச வர்சஸாம் ஸ்மரன் ராகவ பாணானாம் திவ்யதே ராஷசேஸ்வர–யுத்த -60-3-
நான்முகனின் தண்டம் போன்றும் மின்னல் போன்றும் ஒளி உள்ளதுமான ராம பாணங்களை எண்ணிய மாத்திரத்திலேயே அசுரர்களின் அரசனான ராவணன் கலங்கினான்-மாதங்க இவ ஸிம்ஹேன கருடேநேவ பந்நக அபிபுத அபவத் ராஜா ராகவேணா மஹாத்மநா –யுத்த -60-2- ஸிம்ஹத்தைக் கண்ட யானை பயந்து ஓடுவது போன்றும் கருடனைக் கண்ட நாகம் பயந்து ஓடுவது போன்றும் மஹாத்மாவான இராமனைக் கண்ட இராவணன் அச்சம் கொண்டான்-வ்ருஷே வ்ருஷே ச பஸ்யாமி சீர க்ருஷ்ணாஜி தாம்பரம் க்ருஹீத தனுஷும் ராமம் பாஸ ஹஸ்தமிவ அந்தரங்கம் –ஆரண்ய -39-14--இராவணன் இடம் மாரீசன்-இங்கு காணப்படும் ஒவ்வொரு மரத்திலும் நான் மரவுரியும் கிருஷ்ணாஜினம் என்னும் மான் தோலும் அணிந்த இராமனைக் காண்கிறேன்
தனது கைகளில் வில்லுடன் கூடிய இராமனை நான் பாசக்கயிற்றுடன் நிற்கும் எமனாகவே காண்கிறேன் –அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச்சந்த -116-வேந்தர் பகை தடிந்த வீரன் -பெருமாள் திரு -10-3-பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை-வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்(மீண்டும் 664 வரும்)

விக்ரம சாலித்வாத் வீரஹ் – வீரம் மற்றும் வீரத்தால் வீரன்’ என்று விளக்குகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தனது கட்டளையை நிறைவேற்றத் தயாராக இருக்கும் தனது ஆயுதங்களை களைவதன் மூலம் பக்திமான்களுக்கு துன்பத்தைத் தருபவர்களை அழிக்கிறார். அவர் தனது எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.வீர்ய என்பது எதிரிகளின் உள்ளத்தில் பயங்கரத்தை உண்டாக்கும் குணம்; சௌர்யா என்பது சூரா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது – எதிரிகளின் அணிகளுக்குள் ஒற்றைக் கையால் ஊடுருவி அழிவை ஏற்படுத்தும் திறன்; பராக்ராமன் என்பது எதிரிகளின் பக்கத்திற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் திறன், அதே நேரத்தில் தன்னை சிறிது கூட காயப்படுத்தாது. –“யஸ்மாத் ஸ்வ மஹிம்னா ஸர்வான் லோகான் ஸர்வான் தேவான் ஸர்வான் ஆத்மநঃ ஸர்வாணி
பூதானி விரமதி விரமாயதி அஜஸ்த்ரம் ஸ்ரீஜதி விஸ்ரிஜதி வாஸயதி,
யதோ வீரகர்மண்ய ஸுদৃக்ஷோ த◌ேগাய யுக்தாயதே- நான் இது”.-அவரை எதிர்க்க முடியாது, வெல்ல முடியாது, அவருடைய திறமைகள் சுயமாகத் தெரியும் மற்றும் எப்போதும் அவரது எதிரிகளை தானாகவே அடக்குகிறது.

வீர = பகவானுடைய திருக்குணங்களில், வீர்யம், செளர்யம், பராக்ரமம் என மூன்று குணங்கள் சேர்த்து அநுஸந்திக்கப்படுவதுண்டு. இம்மூன்று சொற்களுக் கும் பொருளில் வாசியில்லைபோல் தோன்றினாலும் வாசியுண்டு.எதிரிகளின் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதைக்கண்டு அஞ்சாமை (1), அந்தச் சேனை யினுள்ளே ஒருவனாகவே புகுந்து எதிரிகளை அநாயாஸமாகக் கொன்று முடிக்கும் வல்லமை (2), அப்படிச் செய்யுமளவில் தனக்குச் சிறிதளவேனும் பங்கம் நேராத படி ஸகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சாரநிற்றல் (3), என்றிங்ஙனே மூன்று வகையான ஆற்றல்கள் பெரும் போர் வீரர்களுக்கு இருக்க வேண்டியவை யுண்டு. இம்மூன்றையுஞ் சொல்லும் சொற்களாக வீர்ய செளர்ய பராக்ரம சப்தங்களைக் கொள்ளலாம். இங்கு வீர: என்று வீர்யமொன்று மாத்திரமே சொல்லப்பட்டிருந்தாலும் மற்றை யிரண்டும் உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கன அல்லது உள்ள சொல்லிலேயே (அதாவது வீர: என்ற சொல்லிலேயே) அம்மூன்று பொருள்களையும் சேர அநுஸந்தானம் செய்யவுமாம். ஸ்ரீராமாயணத்திலும், மற்றும் இராமபிரானைப்பற்றிப் பேசும்பல நூல்களிலும் இராமனை வீரனென்றும் சூரனென்றும் ”பராக்ரமசாலியென்றும் பாராட்டிக்கூறுவது விசேஷமாகக் காணத்தக்கது. இராமனுக்கு மஹாவீரனென்றே ஒரு திருநாமமுண்டு. “ஐயஜய மஹாவீர!” என்றே ரகுவீரகத்யத்தின் தொடக்கம். வீரராகவனென்றே ஒரு திவ்யதேசத்தில் திருநாமம்பெற்று விளங்குகின்றமை ப்ரஸித்தம். பவபூதிமஹாகவி மஹாவீரசரிதமென்றே பெயரிட்டு நூலியற்றினான். ஆழ்வார்கள் இராமனது செயலைச் சொல்லி வீரனென்றே வாய் வெருவுவர்கள்; “இலங்கை மன்னனைந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க கூன்று சென்று கொன்று வென்றிகொண்ட வீரனே! ””மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை நீறு செய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனுர் என்றுமுள்ள (திருச்சந்த விருத்தம் பாசுரங்கள் காண்க. இவை யெல்லாவற்றிலுங்காட்டிலும் எதிரி கையாலே விடுதீட்டென்னுங் கணக்கிலே இராவணனே வியந்துபோற்றும் வீரியம் இராமனுக்குள்ளது. (வால்மீகி. யுத்த. 106-6] “சத்ரோ:ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்நீயஸ்ய விக்ரமை:” என்பது இராவணனுடைய மொழி. இராமனை ப்ரக்க்யாத வீர்யனென்று இராவணன் தன்வாயினால் போர்க்களத்திற் சொல்லுவதானது அந்த வீர்யத்தைத் தான் மிக நன்றாக வநுபவித்தத்னாலன்றோ! ‘விக்ரமை:ரஞ்ஜநீயஸ்ய” என்றும் அடுத்தபடியே சொல்லுகிறான். இங்ஙனே சொல்லும்படியாக இராமன் செய்தவீரச்செயல்கள் பலபல விருப்பினும் ஒன்றெடுத்துக் காட்டுவோ மிங்கு. யுத்த காண்டத்தில் தொண்ணூற்று நான்காம் ஸர்க்கம் காண்க. அங்கு மூலபலம் திரண்டவன்று இராமனுடைய அதிமாநுஷப் போர்வல்லமையைப்பேச வான்மீகி முனிவரும் தடுமாறுகின்றார். “ச்சிந்நம் பித்தம் சரைர் தக்கம் ப்ரபக்நம் சஸ்த்ரபீடிதம்.பலம் ராமேண தத்ருசுர் ந ராமம் சீக்ரகாரிணம்” என்று, இராமனால் பலவாறு தகர்ப்புண்ட அரக்கரது சேனைகளைக் கண்டார்களொழிய பம்பரமாகச் சுழல்கின்ற இராமனை ஒருவரும் காணமாட்டிற்றிலர் என்கிறார். மேலே *தே து ராமஸஹஸ்ராணி ரணே பச்யந்தி ராக்ஷஸா * என்று ஆயிரக்கணக்காண ஸ்ரீராமமூர்த்திகளைக் கண்டார்களென்கிறார்.உடனே புந; பச்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே என்று, அந்தப் போர்க்களத்தில் இராமனொருவனையே கண்டார்களென்கிறார் . இராமனைக் காணவேயில்லை யென்பது, ஆயிரக்கணக்காண ராமர்களைக் கண்டார்களென்பது, ஒரு ராமனையே கண்டார்களென்பது – ஆகவிப்படி ஒன்றோடொன்று சேராத வண்ணம் பேசும்படியாக வன்றோ பெருமாள் மிக விசித்திரமான போர்த்தொழில் நிகழ்த்திற்று.-திருவாய்மொழியில் (8-6-3) ஒருவரிருவரோர் மூவரென நின்று, உருவு கரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான் என்ற பசுரத்திற்குப் பூருவாசாரியர்கள் பொருள் நிர்வஹித் திருக்கிறவிதம் இதர பண்டிதர்களின் புத்திக்குச் சிறிதும் எட்டமாட்டாதது. ஒருவரிருவரோர் மூவரென நின்றதும் உருவு கரந்ததும் எப்போதென்று தெரிந்து கொள்ளமுடியாதபடி ஆழ்வாருடைய பாசுரம் தோன்றியுள்ளது. இதற்குக் கீழ்ப்பாட்டு செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக் கெடவாளிபொழிந்த வொருவனே என்று முடிந்திருக்கிறது. மேற்பாட்டின் முன்னடிகட்குக் கீழ்ப்பாட்டின் பின்னடிகளோடு அந்வயமென்று கண்டு உரை செய்தருளியுள்ளார்கள். இங்குப்பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இவை காண்மின்- ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து-உருக்கெடவாளி பொழிந்தவொருவன் என்று கீழோடே அந்விதமாகக்கடவது.மூலபலம் சாம்படி அருளுகிறவன்று முந்துற ஒருவனாய்த்தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த்தோற்றி, வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூபக்ரஹணம் அரிதாகி உருக்கெட வாளிபொழிந்த வொருவனென்று அந்வயம். வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்குப் பிடிபடாதொழிகை” என்று. இதனால் இராமனது வீரம் வாசாமகோசர மென்றதாயிற்று.

———————–

ஶக்தி மதாம் ஸ்ரேஷ்ட-பரசுராமரை -வென்றவன் –ஶக்தி மதாம் ஸுராதீ₃நாம் அதிஶயேந ப்ரஶஸ்ய இதி ஶக்தி மதாம் ஶரேரஷ்ட₂꞉ (சக்தியுடைய தேவர்கள் முதலியோர்க்கும் சிறந்தவர் )। யதா₂(ஆ)ஹ பரஶு பரி கர்மா ராம꞉அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரேஸ்வரம் –பால -76-17-மது என்னும் அரக்கனை அழித்த தேவனாகவே உன்னைக் காண்கிறேன் -பரசுராமனின் புகழ்ச்சி-கதம் தேவ கண ஸ்ரேஷ்ட நாத்மநம் அவபுத்யஸே –யுத்த -120-6-நான்முகன் ராமன் இடம் –உன் பெருமையை நீயே ஏன் தெரிந்து கொள்ள வில்லை-தேவாச் சா தைத்யாச் ச நிசாச ரேந்த்ர கந்தர்வ வித்யாதர நாகயஸா ராமஸ்ய லோக த்ரய நாயகஸ்ய ஸ்தாதும் ந சக்தா சமரேஷு சர்வே –ஸூந்தர-51-44--அனுமன் இராவணனிடம்-அரக்கர்களின் அரசனே தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் வித்யாதரர்கள் நாகர்கள் யக்ஷர்கள் என்று யாராக இருந்தாலும் மூன்று உலகங்களுக்கும் நாயகனான இராமனை எதிர்த்து நிற்க இயலாது-சர்வான் லோகான் ச ஸம்ஹ்ருத்ய ஸம்ஹ்ருதான் ச சராசரான் புனரேவ ததா ஸ்ரஷ்டும் சக்தோ ராமோ மஹா சரை–ஸூந்தர-51-40- இராமனால் தனது பாணங்கள் மூலமாக அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த இந்த உலகில் உள்ள அனைத்தையும் அழித்து படைக்கவும் இயலும் –மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7-முப்பத்து மூவருக்கு முன் சென்று கப்பம் தீர்ப்பவன் -தேவர்களுக்கும் தேவன் -தேவாதி தேவன் -நாராயண ஸ்ரீ மான்ஓம்ஶக்திமதாம் ஶ்ரேஶ்டாயநம:விக்ரமஶாலித்வாத்  வீரமும், பராக்ரமும் நிறைந்த வராதலால்-வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஶக்திமதாம் பலம்பொருந்தியோரான-விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும்-ஶக்திமத்வாத் மிகுந்த பலமுடையவராதலால்-ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட: பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பலம் பலாவதாம் சாஹம் – பகவத் கீதையில் (அத்தியாயம் 7 வசனம் 11)-நான் வலிமை மிக்கவர்களின் வலிமை’.

சக்திமதாம் ச்ரேஷ்ட = அபரிமித சக்தியுக்தனென்கை. இராமன் மஹாசக்திமானாயிருக்கும் போது இராவணனை ஒரு நொடிப்பொழுதில் கொன்றிருக்கலாமே அங்ஙனங்கொல்லாது வெகு ப்ரயாஸங்கள் பட்டதாகத் தெரிகிறதே. அஃது என்?என்று சிலர் கேட்கக்கூடும்.கேண்மின்; ” பொல்லாவரக்கனைக் கிள்ளிக்களைந்தானை”<என்று ஆண்டாளும் “சதுரமாமதிள் சூழிலங்கைக் கிறைவன் தலைபத் துதிரவேரட்டி ஓர்வெங்கணையுத்தவன்” என்று திருப்பாணாழ்வாரு மருளிச்செய்தபடியே ராவண ஸம்ஹாரத்தைப் பெருமாள் அவலீலையாகவேதான் செய்தார். அதில் ஐயமொன்று மில்லை. எப்படியாவது ராவணன் உடன்பட்டுவழிபட்டு உஜ்ஜீவிக்கவும் ஜீவிக்கவும் ப்ராப்தமாமோ? ” என்கிற நசை பெருமாளுக்கு இருந்தமையினாலேயே அவனை ஸம்ஹரிப்பதில் காலதாமதம் செய்யப்பட்டதென்கிற தத்துவம் உணரத்தக்கது.இராவணனைக் காட்டிலும் பன்மடங்கு வலிமைமிக்கவனென்று ப்ரஸித்தி பெற்றிருந்த வாலியை அநாயாஸமாக முடித்தவர் பெருமாள். (ஸுந்தரகாண்டம் ஸர்.51 ச்லோ.11 திருவடி இராவணனுக்கு ஹிதோபதேசம் செய்கையில் *த்வயாவிஜ்ஞாதபூர்வச் ச வாலீ வாதரபுங்கவ:, ராமேண ஹதஸ் ஸங்க்யே சரேணைகேந வாநர: * என்று,அப்பா ராவணா! வாலியென்கிற வாநரேச்வரரை ஏற்கெனவே நீ அறிவாயன்றோ;அவர் இராமனால் ஒரே அம்பினால் முடிக்கப்பட்டார்காண்’ என்கிறார். அன்றியும் இராவணனைப் பலவாறு பங்கப்படுத்தியவன் கார்த்தவீரியார்ஜுனன்; அன்னவனைப் பரசுராமன் தனது கோடாலிப்படையினால் ஆயிரங்கைகளையும் வெட்டிக் கொன்றவன். அப்பரசுராமன் இராமபிரானிடம் பட்டபாடு தெரிந்ததே.இத்தகைய ஒப்புயர்வற்றை ஆற்றல்பெற்ற இராகவன் இராவணனைச் சங்கரிக்கச் சிரமப்படவேணுமோ? சிரமப்பட்டதாகக் கதையிலே கண்டால் ஸத்யஸங்கல்பனும் மஹாவீரனுமான இராமன் எதற்காக இப்படிச் சிரமப்பட்டாரென்று ஆராய ேண்டுமன்றோ சூர்ப்பணகை மூக்கறுப்புண்டு ஜனஸ்தானத்திலிருந்த தன் தமையனாகிய கரனிடஞ்சென்று செய்தியறிவித்துப் புரண்டழுது அவனுக்குக் கோபத்தையுண்டாக்க. அவன் பதினாலாயிரம் ஸேனாதிபதிகளையும் ஸேனைகளையும் இராமனோடு போர்புரியவனுப்ப, இராகவன் அவர்களத்தனை பேரையும் தாம் ஒருவராகவே கொன்று வென்றிட, பிறகு கரந்தானே நேரில் வந்து எதிர்க்க-இராமன் “ அஸஹாயசூர! என்று ரகுவீரகத்யத்தில் விளிக்கும்படியாக லக்ஷ்மணனையும் துணைகொள்ளாமல் ஏகாகியாய் அவனது தலையை யறுத்திட்டதும் ப்ரஸித்தம். ‘சதுர்தச ஸஹஸ்ராணி ரக்ஷஸாம் பீமகர்மணம், ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி!” என்று வயிறு பிடித்த மஹரிஷிகளும் வியக்கும்படி அவலீலையாகவன்றோ நீறு செய்தது. அத்தகைய பேராற்றல்பெற்ற பெருவீரனுக்கு இராவணன் ஒரு பதார்த்தமோ? ஒரேயடியில் அவனைத் தொலைக்கமாட்டாமையில்லை; எவ்வகையினா லாவது அவன் அபிமுகனாக வருகிறானோவென்று பார்த்திருந்தாரத்தனை.

———————

தர்ம –தர்மமே வடிவு எடுத்தவன்–தர்ம ஸம் ஸ்தாபநார்த்தம் -விசேஷ தர்மமான தன்னை நிலை நாட்டவே அவதாரம் -ஸாஷாத் தர்மம் இவனே-அப்₄யுத₃ய நி꞉ஶ்ரேய ஸாப்₄யாம் ஸர்வஸ்ய ஸாக்ஷாத்₃ த₄ரணாத் த₄ர்ம꞉ ।செல்வத்தையும் மோஷத்தையும் கொடுத்து ஜீவர்களைத் தாமே நேரில் தாங்குபவர்-உணாதி பாதம் –அர்ஸ்தி ஸ்து ஸூஹுஸ் ருத்ருஷி ஷு பா யா வா பதி யக்ஷி நீ ப்யோ மந் –அர்த்தி -ஸ்து -ஸூ -ஹு ஸ்ரு த்ரு ஷி ஷு பா யா வா பதி யக்ஷி நீ போன்ற தாதுக்களைத் தொடர்ந்து-மந் -என்னும் ப்ரத்யயம் உண்டாகும் என்னும் ஸூத்ரத்துக்கு ஏற்ப த்ரு என்பதன் பின்னே மந் இணைந்து தர்ம என்று ஆனது-இது போன்றே ஸோம –507 திரு நாமங்களை உண்டான-தமேவ ப்ரஹ்ம ப்ரஹ்ம விதாம் வர –லோகாநாம் த்வாம் பரோ தர்ம —நான்முகன் இவனது கீர்த்தி -ப்ரஹ்ம வித்துக்களின் தலைவனே நீயே உயர்ந்த தர்மம் ஆகிறாய் என்றான்-தர்மாத்மா ஸத்ய சந்தச்ச ராமோ தாசாரதிர் யதி பவ்ருஷே ச அப்ரதி த்வந்த்வ சரைநம் ஜஹி ராவணிம்–யுத்த -120-14-
லஷ்மணன் -ஏ பாணமே -தசரதன் புத்திரனான இராமன் தர்மம் மிக்கவனாயும்
ஸத்யமே வடிவு எடுத்தவனாயும் ஈடில்லா பராக்ரமம் கொண்டவனாயும் இருப்பது உண்மை என்றால் நீ சென்று இராவணன் மகன் இந்திரஜித்தை அழிப்பாயாக –யே ச வேத வேதோ விப்ரா -யே ச அத்யாத்ம விதோ ஜனா -தே வதந்தி -மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்ம சனாதனம் –ஆரண்ய -88-25-வேதங்களை அறிந்த அந்தணர்கள் -ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் போன்ற பலரும் கிருஷ்ணனையே எப்போதும் நிலையான தர்மம் என்று கூறுகின்றனர்-புண்யா த்வாரவதீ தத்ர யத்ராஸ்தே மது ஸூதந –வன பர்வம் -88-24-
துவாரகை மிகவும் புண்ணியமானது ஏன் என்றால் அங்கு தான் மது என்ற அசுரனை கிருஷ்ணன் அழித்தான்-சாஷாத் தேவ புராண அசவ் ச ஹி தர்ம சனாதன –ஆரண்ய -88-24-
அவனே மிகவும் பழமையானவன் -அவனே தர்மமும் ஆவான்-சாஷாத் ராமாத் வி நிர்வ்ருத்த தர்மச்சாபி ஸ்ரியா ஸஹ –அயோத்யா -2-29-தர்மம் என்பது செல்வத்துடன் கூடியதாக்க இராமனையே அடைந்தது –கருமமும் கரும பலனுமாகிய காரணன் -3-5-10-
கண்ணன் தர்மம் அறியாக் குறும்பன் -நாச் 11-6-தார்மிகன் -செய்வது எல்லாம் தர்ம கார்யம்(எல்லாவற்றையும் தாங்குபவர் -எல்லாத் தர்மங்களாலும் ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(எல்லாவற்றையும் தாங்குபவர் -அடையப்படும் தர்மமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்)ஓம் தர்மாய நம:ஸர்வ பூதானாம் அனைத்து உயிரினங்களையும்-தாரணாத்  தாங்குவதால்-தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘அணுரேவ தர்ம:’இதி ஶ்ருதே -(அந்த) தர்மமானது மிகவும் நுண்ணியது.-தர்மைர் தர்மத்தாலே-ஆராத்யத இதி வா வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்)தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு.நாமத்தால் அழைக்கப்படுகிறார்.-சஹஸ்ரநாமத்தின் பலஸ்ருதியில் நாம் ஆராயும் ‘ஆச்சாரப்ரபவோ தர்மா தர்மஸ்ய பிரபுர் அச்யுதஹ் – பண்பாட்டிலிருந்து தர்மம் பிறந்தது, அச்யுதா தர்மத்தின் இறைவன்-தாரயதி இதி தர்மா – தர்மத்தை ஆதரிக்கும்,  தாரயதே வா யேன ஜகத் இதி தர்மா – இந்த பிரபஞ்சம் யாரால் ஆதரிக்கப் படுகிறதோ அவர் தர்மா ஆவார்.“தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா, தர்ம ஏவ ஹதோ ஹந்தி” – தர்மம் அதைக் காப்பவர்களைக் காக்கிறது, அழிப்பவர்களை அழிக்கிறது 

தர்ம = ஸ்ரீராமபிரானை ஸாக்ஷரத் தர்மமாகச் சொல்லியிருப்பது பலவிடங் களில். இராவணன் இலங்கையிலிருந்து பஞ்சவடிக்கு ஓடிவந்து ஸ்தாபஹாரத் திற்குமாரீசனைத் துணைவேண்டினபோது அவன் ராவணனுக்குப் பலவாறு ஹிதோப் தேசங்கள் செய்கிறான். அதனிடையில் (ஆரண்.37-13) *ராமோ விக்ரஹவாத் தர்ம:* என்றான். ‘கைகால் முளைத்து நடையாடும் தருமம் இராமன்’ என்று ஆஸுர ப்ரக்ருதியான மாரீசன் சொல்லுகிறான். ராவணவதானந்தரம் இலங்கையிலே வந்து துதிக்கின்ற தேவவர்க்கத்தில் பிரமன் *பவாந் நாராயணே தேவ: *என்றபின் *லோகா நாம் த்வம் பரோ தர்ம: * என்றான். கீதையில் “தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்ப வாமியுகேயுகே’ என்று தர்மஸ்தாபனத்திற்காகத் தான் அவதரிப்பதாகச் சொன்ன பரமபுருஷன் *ஸர்வதர்மாந்பரித்யஜ்ய* என்று ஸகல தருமங்களையும் விடும்படி சொன்னது கூடாது; விட்டுவிடு என்றதோடு நிற்காமல் “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று தன்னைப் பற்றச் சொல்லுகையாலே ஸாக்ஷாத் தர்மம் தானே யென்கிற தத்துவம் வெளியிடப்பட்டதாகிறதன்றோ. நாம் சிரமப்பட்டு ஸாத்திக்க வேண்டிய தர்மம் ஸாத்ய தர்மமெனப்படுகிறது. அங்ஙனன்றிக்கே எப்போதும் ஸித்தமாயிருக்கிற தர்மம் எம்பெருமான். ஸாத்யதர்மம் அபாய பஹுளமென்றும், ஸித்ததர்மம் நிரபாயமென்றும் அறியத்தக்கது. தசரதசக்ரவர்த்தி ஸ்ரீ ராம பிரானைப் பிள்ளையாகப் பெறப்பெற்றபாக்யசாலியாயிருந்தும் ஒரு தெளர்ப்பாக்ய முடையனாயினன். ஆஸர ப்ரக்ருதியான மாரீசனுக்குத் தெரிந்த தத்துவம் அந்தோ! அவனுக்குத் தெரியாமன்றோ போயிற்று. *ராமோ விக்ரஹவாந் தர்ம.* என்று அவன் சொன்னபடி வடிவெடுத்த ஸித்த தர்மமான இராமனோடு கூடினன்றோ வாழ்வதை விட்டு ஆபாஸ தர்மமான ஸத்ய வசனத்தைப் பற்றி நின்று இழந்தா அம்மன்னவன். முமு ப்படியில் ஸர்வதர்மாந் பரித்யஜ்ய * என்றவிடத் தில் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்குறுப்பு” என்றவிடத்து மணவாளமாமுனி களின் ஸ்ரீஸூக்திரத்னங்களை அநுபவிப்பது. க்ருஷ்ணாவதாரத்தில் ததி பாண்ட னுடைய கதையை அறியாதாரில்லை: தாயெடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி சொல்லி வந்த கண்ணனை மறைத்திட்டுவைத்து ‘உன்மகன் இங்கில்லை’ என்று பொய் ஸபரிகரமாக மோக்ஷம் பெற்றுப் போனான்; தசரதன் ஸத்யவாதியென்று
ஸாக்ஷாத் பேர்படைத்து நரக பாயாயமான ஸ்வர்க்கத்தையே பெற்று நின்றான். ராமனே தர்மமென்று அறியப் பெறாத்தனாலான தன்றோவிது.-பெருமாள் பிராட்டியோடு கூடியிருந்தகாலத்தில் செய்தவுபந்யாஸங்களில் சிறந்தவுபந்யாஸமாக வொன்றைத் திருவடியிடம் சொல்லுகிறாள் பிராட்டி-(ஸ ந்தர 38-41.) *ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம த்வத்த ஏவ மயர ச்ருத * என்று.ஆந்ரு சமஸ்யமாவது இரக்கம்; அதுதான் பரமதர்மமென்று பெருமாள் உபந்யளிப்பது வழக்கமாம். ‘கருணையே வடிவெடுத்தவன் காகுத்தன்‘ என்று ப்ரஸித்தம். தசாவதார ஸ்தோத்ரத்தில் இச்சாமீந விஹாரகச்சபேத்யாதி ச்லோகத்தில் ஒவ்வோரவதாரத்தையும் ஒவ்வொரு விசேஷணமிட்டுச் சொல்லிவருகையில் இராமனைக் கருணாகாகுத்ஸ்த! என்று கூறியிருப்பது குறிக்கொள்ளத்தக்கது. வாலிவதமான பிறகு *ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ மு ர்த்தம் விமநா பபூவ* என்னும்படி நின்ற பெருமாளைக் கருணாகாகுத்தனென்றுதானே சொல்லவேண்டும், 

—————–

தர்ம விதுத்தம –தர்மம் அறிந்தவரில் முதல்வன் –த₄ர்ம வித் ஸூ உ த்தமோ
த₄ர்ம விது₃த்தம꞉,த₄ர்மஜ்ஞாநே வஸிஷ்ட₂ வாமதே₃வ மார்கண்டே ₃- யாதீ₃நாம் ஶிஷ்யோ (அ)ப் யுப ஜீவ்ய꞉ ।தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் வசிஷ்டர் வாம தேவர் மார்க்கண்டேயர் முதலியவர்களின் சிஷ்யராக இருந்தும் அவர்களுக்கும் தர்மம் தெளிவிப்பவர் –யதா ஸர்வதா அபிகத சத்தி சமுத்திர இவ ஸிந்துபி–பால -1-56-கடல் -நதிகளால் சூழப்பட்டும் அண்டப்பட்டும் உள்ளது போலே பெரியோர்களால் சூழப்பட்ட ராமன்-ராம சாஹரம்-தர்மஞ்ஞ ஸத்ய ஸந்தம்ச –பால -1-12--தர்மத்தை அறிந்தவன் -ஸத்யம் என்னும் தர்மத்தைக் கடைப்பிடிப்பவன்-வேத வித்பி ஸூ பூஜித –ஸூந்தர-35-14-வேதங்களை நன்கு அறிந்தவர்களால் எப்போதும் பூஜிக்கப் படுபவன்-யதாவத் ச அங்க வேத வித் –அயோத்யா –1-20-வேதங்களை அதன் ஆறு அங்கங்களுடன் அறிந்தவன்-த்வம் அப்ரமேயச் ச துராசதச் ச ஜிதேந்த்ரியச் ச உத்தம தார்மிகச் ச அக்ஷய்ய கீர்த்தீச் ச விஸேணச் ச ஷிதி ஷமாவான் ஷத ஷோபமாஷா –கிஷ்கிந்தா –24-31-தாரை இராமனிடம்-நீ எல்லையற்ற மேன்மை யுடையவன்
எதிரிகளால் நெருங்க இயலாதவன்-இந்திரியங்களை வென்றவன்-சிறந்த தர்மம் கொண்ட வீரன்-குறையாத புகழ் யுடையவன்-திறமை யுள்ளவன்-பூமி போன்று பொறுமை கொண்டவன்-இரத்தம் போன்று சிவந்த திருக் கண்கள் கொண்டவன் –ஓம்த ர்ம விதுத்தமாய நம:ஶ்ருதய: ‘ஶ்ருதிகளான’ வேதங்களும்-ஸ்ம்ருதியஸ்ச அந்த வேதங்களின் பொருளை உணர்ந்து மற்றோரால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளும்-யஸ்யாஞாப்ருதா: எவரது ஆணைகளால் (கட்டளைகளால்) உருவானதோ-ஸ ஏவ அந்த பகவான் ஒருவரே-ஸர்வதர்மவிதாம் அனைத்து அறங்களையும் அறிந்தோருக்குள் உத்தம: மிகச் சிறந்தவராக இருக்க முடியும்இதி தர்மவிதுத்தம: எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-(வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் அவரது கட்டளையாக இருப்பதால் தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –)(தர்மம் அறிந்தவர்களில் மேலானவர் -தர்மமான தன்னை அறிந்தவர்களை உயர்ந்தவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-) ஸ்ருதிஸ்-ஸ்மிருதி மமைவாக்னியே (76.31).‘சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ 

16. தர்மவிதுத்தம்:. தர்மஜ்ஞர்களில் தலைவன் இராமபிரான் என்றவாறு. தர்
மத்தை நன்கறிந்தவனென்கை. ஆண்டாள் கண்ணபிரானுக்குத் *தருமமறியாக்
குறும்பனென்று பிருதுசாத்தினாள். அதற்குநேர்மாறாக இராமபிரான் தர்மஜ்ஞர்களில் தலைவனாயிருப்பன். பிராட்டி இராவணனுக்கு ஹிதமுபதேசித்தருளுங்காலத்தில்* விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ:* என்று பெருமாளை தர்மஜ்ஞரென்று கூறியிருப்பது ப்ரஸித்தம். அவள் திருவுள்ளம்பற்றின தருமம் இன்னதென்பதை அவள்தானேஅடுத்தபடியாகக் கூறுகின்றாள் *சரணாகத வத்ஸல:* என்பதனால், சரணாகதர்களிடத்திலே
அன்பு பூண்டிருப்பதுதான் பெருமாள் கடைப்பிடித்த தருமமென்றும் அதை அவர்
நன்கறிந்தவரென்றும் சொல்லிற்றாயிற்று. நன்கறிந்தவரென்றால் அறிந்திருப்பதுமட்டும் பொருளன்று. அறிவுக்குப் பயன் அனுட்டானமாதலால் அந்த தருமத்தைநன்கு அனுட்டிப்பவர் என்கிறவரையில் பொருளாகத் தேறும். ஸ்ரீராமாயணத்தில்சரணாகதி செய்தவர்கள் யார் யார்? அவரவர்களிடத்திலே பெருமாள் காட்டினவாத்ஸல்யம் எத்தகைத்து? என்று விமர்சிக்கவேண்டும். இதற்குமுன் சரணாகதியாவது என்? என்கிற விமர்சம் மிக முக்கியமானது. ஸாரமாகத் தெரிவிப்போமிங்கு.-சரணாகதியென்றாலும் ப்ரபத்தியென்றாலும் ஒன்றே.நூற்கொள்கையை ஆய்ந்து ஆழ்ந்துபார்க்குமளவில் ” பகவத் ப்ரவருத்திவிரோதி ஸ்வப்ரவருத்திநிவ்ருத்திதான் ரபத்தியாகத் தேறுகிறது” என்கிற பூர்வாசார்ய ஸித்தாந்தமே தஞ்சமாகும். கஜேந்த்ராழ்வான் ப்ரபந்தன், த்ரெளபதி ப்ரபந்மை என்கிறோம். இவர்கள் பக்கலிலே மேலே சொன்ன லணந்தான் ஸமந்விதமாகும். ‘கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே” என்னும்படியாக கஜேந்திராழ்வான் தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்வதாக ஸ்வப்ரவ்ருத்திபரனாயிருக்கு மளவும் அவன் மீது பகவானுடைய கருணை ப்ரஸரிக்கவில்லை. அந்த ப்ரவருத்தி ஓய்ந்தவாறே அரை குலையத்தலைகுலைய ஓடிவரும்படியான பதற்றம் எம்பெருமானுக்கு உண்டாயிற்று த்ரெள
பதியினிடத்திலும் இத்தன்மையே பார்க்கலாம்.” இரு கையும் விட்டேனோ த்ரெளபதியைப் போல” என்னும்படியான நிலைமை அவளுக்கு உண்டான பின்புதான்அவள் ரக்ஷை பெற்றாள். தன்மானத்தைத் தானே காத்துக்கொள்வதாக முயன்றுதன் சேலையைத் தான் இறுகப்பிடித்துக் கொண்டிருந்த நிலைமையுண்டே அதுதான்பகவத் ப்ரவருத்தி விரோதியான ஸ்வப்ரவருத்தியாயிருந்தது. அது கழிந்தவுடனேயன்றோபுடவை சுரக்கும்படியான பகவத் க்ருபை தோன்றிற்று. இந்த மருமத்தைஸ்ரீராமாயணத்திலே காட்டுகிறேன் காண்மின்; காகம் சரணாகதி செய்ததாகச்சொல்லப்படுகிறது. அந்த சரணாகதியின் தன்மையை விமர்சித்துப் பார்த்தால்,மேலே விவரித்த ரீதிதான் தேறும். *ஸ தம் நிபதிதம் பூமெள * என்றபடி எங்கும்தரிப்பற்று வந்து நிலத்திலேவிழுந்தமை யுண்டே,அதுவே யன்றோ அவனுடைய சரணாகதியாக ஆசாரியர்களால் நிஷ்கர்ஷிக்கப்பட்டது. அவனுக்கும் ரக்ஷணம் நேர்ந்தது.காகத்தினுடையதான இந்நிலை ராவணனுக்குமுண்டு; பிரபலமான யுத்தம் நடைபெறுகிற காலத்திலே *யோ வஜ்ரபாதாசநி. சசால் சாபஞ்சமுமோச வீர:* என்னும்படியான நிலைமை ராவணனுக்கு உண்டாயிற்று. அப்போது பெருமாள்• கச்சாநுஜாதாமி-புறப்பட்டுப்போ, விடைதருகிறேன்” என்று சொல்லி விட்டருளின துண்டே, அது தத்கால ரக்ஷணத்தில் சேர்ந்ததேயாகும். ஆத்யந்திகரக்ஷணமே
பண்ணவேணுமென்கிற திருவுள்ளமும் பெருமாளுக்கு இருந்ததுண்டு; அவன் விதி
வசத்தாலே மீண்டும் யுத்தத்திலே மூண்டு பகவத் பரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்
ருத்தி நிஷ்டனாகித் தொலைந்து போனான். அவனுக்கும் ரஷணமே செய்தருளினார்
பெருமாள் என்பது ஸ்ரீ ராமாயணத்தில் அந்தரங்க பரமார்த்தம். அவனுக்கு சரம
ஸம்ஸ்காரம் பண்ணமாட்டேனென்று பிடிவாதமாயிருந்த விபீஷணாழ்வானை நிர்ப்
பந்தப் படுத்தி அது செய்யுமாறு கட்டளையிட்ட பெருமாள் ‘அவனுடைய தேஹத்திற்கு நன்மை செய்ய நினைத்த நமது நினைவு நிறைவேறாதொழிந்தாலும் அவனுடைய ஆத்மாவுக்காவது நன்மை செய்யப்பெற்றோமே!’ என்று மகிழ்ந்தபடியை
நினைப்பது.*மரணாந்தாநி வைராணி நிர்வருத்தம் ந: ப்ரயோஜநம், க்ரியதாமஸ்ய
ஸம்ஸ்கார: யதா ஹ்யேஷ ததா மம * என்கிற பெருமாளுடைய சுலோகத்திற்கு நம்பிள்ளையின் ரஸகனமான வியாக்கியானத்தை நமது அபூர்வ ராமாயணத்திலே
நாம் விசதீகரித்திருப்பது காண்க.

————————

வைகுண்ட –குடி -தடை -இத்தை போக்குபவன்-தடை போனால் தன்னிடம் சேர்வார்கள் -தானே நடக்கும்–ஸர்வேஷாம் ஸம்ஶ்லேஷயித்வை குண்ட₂꞉ ।“குடி₂ க₃தி ப்ரதிகா₄தே ” । ஸ ச அத்ர ஸம்ஶ்லேஷ விகா₄த꞉ ।ஸ ச விக₃தோ யேஷாம் தே விகுண்டா₂:, தேஷாமேவ வைகுண்ட₂꞉ ।-தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் —மயா ஸம்ஸ்லேஷிதா பூமி அத்பி வ்யோம ச வாயுநா தேஜஸா சார்த்த வைகுண்டத்வம் ததோ மம –சாந்தி பர்வம் -343-50-பூமியானது நீருடனும் –ஆகாயம் காற்றினுடனும் –வாயு தேஜஸ்ஸுடனும் என்னால் கலக்கப் பட்டன
இதனால் வைகுண்டன் என்னும் பெயர் வந்தது-(பகவான் கூறுகிறார்): நான் நிலத்தை நீரோடும், வான்வெளியை காற்றோடும் (வாயுவோடும்), காற்றை (வாயுவை) நெருப்போடும் கலந்தேன். எனவே, என்னிடத்தில் ‘வைகுண்டத்வம்’ இருக்கிறது.-ராமமேவ அநு பஸ்யந்தீ நாப்ய ஹிம்ஸன் பரஸ்பரம் ததஸ் நிதவ் பரஸ்பர நிர் வ்யபேஷா ஹி தத்ரத்யா யதா ஆஹு பவ்ர்ய பதீன் –அயோத்யா -48-5- இராமன் அயோத்தியில் இருந்த போது ஜனங்கள் ஒருவருக்கு ஒருவன் அன்யோன்யமாக இருந்தனர்-அவன் அயோத்தியை விட்டு அகன்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் விரும்பாதவர் ஆனார்கள்-ராகவம் வா அநு கச்சத்வம் அஸ்ருதிம் வா அபி கச்சதஇராமன் கானகம் நோக்கி புறப்பட்ட வுடன் அயோத்யையில் இருந்த பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் நீங்களும் இராமனைப் பின் தொடர்ந்து கானகம் செல்லுங்கோள்
அல்லது கைகேயியின் பெயர் கேட்க்காத இடம் செல்லுங்கோள் என்றனர்-வ்யஸ்ருஜன் கபலான் நாகா காவோ வத்ஸான் ந பாயயன்-இராமன் சென்ற பின் யானைப் பாகன்கள் அளித்த உணவை யானைகள் உண்ண வில்லை-பசுக்கள் தங்கள் கன்றுகளுக்கு பால் அளிக்க வில்லை-நஷ்டம் த்ருஷ்வான் நாப்ய நந்தத் விபுலம் வா தநா கமம்
புத்ரம் பிரதமஜம் லப்தவா ஜநநீ நாப்ய நந்ததா-அவர்கள் தங்கள் செல்வங்களை இழந்த போது வருந்த வில்லை-தனக்குப் பிறந்த முதல் குழந்தையைக் கூடப் பார்த்தும் எந்தத் தாயும் மகிழ வில்லை-ஸ்தந் யார்த்திந ஸூதா ஸ்த்ரீனாம் பர்த்தாரோ ப்ராதரஸ் ததா சர்வம் சர்வே பரித்யஜ்ய ராமமேவ அந்வ யுஸ் ததா-குழந்தைகள் தாய் விஷயத்திலும் -கணவன்மார்கள் மனைவி விஷயத்திலும் சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் விஷயத்திலும் அன்பு இல்லாதவர்கள் ஆயினர்-அனைத்தையும் துறந்தவர்களாக இராமனையே எண்ணியபடியே வருந்தியபடியே இருந்தனர் –தேவ தேவனை தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனை -3-6-2-வைகுந்தா மணி வண்ணனே செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமை செய்குந்தா -2-6-1—ஓம் வைகுண்டாய நம:குண்டா கதே: ‘குண்டா’ என்றால் போக்கு-ப்ரதிஹதி: (அவற்றை)  தடை செய்வது விகுண்டா ‘விகுண்டா’ எனப்படும்-விகுண்டாயா: கர்த்தேதி அவ்வாறு தடை செய்பவராதலால்-வைகுண்ட: பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஜகதாரம்பே இந்தப் ப்ரபஞ்சம் உருவான பொழுது (அதன் தொடக்கத்தில்)விஶ்லிஶ்டானி -ஒன்றோடொன்று கலவாது) பிரிந்திருந்த-பூதானி (நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய) ஐம்பூதங்களை-பரஸ்பரம் ஒன்றோடொன்று-ஸம்ஸ்லேஶயன் கலக்கும்படி செய்து-தேஶாம் கதிம் அவற்றின் போக்கை-ப்ரதிபத்னாதீதி (பகவான்) தடை செய்தார் (எனவே அவர் ‘வைகுண்ட:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்).பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒன்றோடொன்று கலவாதிருந்த ஐம்பூதங்களை அவை ஒன்றோடொன்று கலக்கும் படி செய்து அவற்றின் போக்கைத் தடுத்தார். இவ்வாறு வெவ்வேறு (விவித) போக்குகளை (குண்டா) தடுத்ததால் பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-விகதா குந்தா தஸ்யா கர்த்தா என்று விளக்குகிறார் – தடையின்றி விடப்பட்டால் தங்கள் சொந்த வழியில் செல்ல முனைபவர்களை ஒழுங்குபடுத்துபவர்- ஐந்தாவது மன்வந்திரத்தில் சுப்ரனுக்கும் விகுந்தனுக்கும் பிறந்ததால் பகவான் வைகுண்டன் என்று அழைக்கப்படுகிறார். பின்னர் அவர் லக்ஷ்மியை மணந்து, அவளது இன்பத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளுக்கு இணங்கினார், மேலும் இந்த இடம் வைகுண்டம் என்று அழைக்கப்பட்டது. அவரே இந்த வைகுண்டம். இந்தக் கருத்தை விஷ்ணு புராணம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆதரிக்கிறது.

———–

407-புருஷ –தூய்மை அளிப்பவன்-ச யத் பூர்வ அஸ்மாத் சர்வ ஸ்மாத் பாப்மன ஒஷஸ் தஸ்மாத் புருஷ , இதி பரம பாவநத்வாத்-புருஷ꞉ — அனைத்து விதமான பாபங்களில் இருந்து விடுவிப்பவன் என்பதால் புருஷன் எனப்படுகிறான்-பரம பாவநன் என்பதாலும் புருஷன் எனப்படுகிறான்-முதல்வன் -பண்களை எரிப்பவர் -காப்பாற்றுபவர் -விருப்பங்களை நிரப்புகிறவர் -எல்லாருக்கும் முன் செல்பவர் புருஷோத்தமன் -யாவருக்கும் சேஷி புனிதத் தன்மை யுள்ளவர் –அகஸ்தியர் பாவன சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தனதவாஹம் சஷுஷா ஸுவ்மய பூதா ஸுவ்மயேந மாநந –சபரி வார்த்தை-உனது அழகான திருக் கண்களின் திருக் கடாக்ஷம் அடியாக நான் தூய்மை பெற்றேன் –ச ஹி ராம ஸர்வதா புருஷ இஷ்யதி-இராமனே அனைத்து விதத்தாலும் புருஷன் எனப்படுகிறான்-ராகவம் சோபயந்யேத ஷட் குணா புருஷோத்தமம்-அயோத்யா-புருஷர்களின் உயர்ந்தவனாகிய இராமனை கருணை இரக்கம் ஸாஸ்த்ரம் ஒழுக்கம் தமம் சமம் போன்ற ஆறு குணங்களும் அலங்கரிக்கின்றன-சார்ங்க தந்வா ஹ்ருஷீகேச புருஷ புருஷோத்தம–யுத்த
சார்ங்கம் என்னும் வில்லைக் கொண்டவன்-இந்திரியங்களை நியமிப்பவன்-புருஷன்
புருஷோத்தமன் –அமலன் விமலன் நிமலன் நின்மலன்-

ஓம் புருஶாய நம:ஸர்வ ஸ்மாத் புரா ஸதனாத் அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால்-ஸர்வ பாபஸ்ய ஸாதனாத்வா அனைத்து பாவங்களையும் போக்குவதாலும்-புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ யத்பூர்வோஸ்மாத் ஸர்வ ஸ்மாத் ஸர்வான்பாப்மன ஒளஷத் தஸ்மாத்mபுருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.1)-அவர் (பரப்ரஹ்மம்) அனைவருக்கும் முதலானவர் (முதலாகத் தோன்றியவர்). அனைவரின் பாபங்களையும் அழிப்பவர். எனவே, அவர் ‘புருஶ’ என்றறியப்படுகிறார்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.-புரி ‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள்-ஶயனாத்வா ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்)புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ வா அயம் புருஶ: ஸர்வாஸு பூர்ஶு புரிஶய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.18)அனைத்து உடல்களுக்குள்ளும் உறைவதால் (பரப்ரஹ்மமான பகவான்) புருஶ: என்று அழைக்கப்படுகிறார்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன-புருஷ – தூய்மையாக்குபவன் புரு சநோதி இதி புருஷ – தாராளமாகக் கொடுப்பவர்-புரா அஸ்தி இதி புருஷஹ் – எதற்கும் முன் இருந்தவர்.-பூரயதி இதித் புதுஷா – எங்கும் இருப்பதை நிறைவு செய்து நிறைவு செய்பவர்.-சர்வபாபஸ்ய சாதனாத் – அவர் எல்லா பாவங்களையும் எரிக்கிறார்.-பரிஷயனாத் புருஷ – அவர் எல்லா உயிர்களின் உடலிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.

——————

417-ருது –அணுகுபவன் –ஸதா₃(அ)ப்ய பூர்வைஸ் ஸர்வ உல்லா ஸகரைர் உத்தர உத்தரைர் கு₃ண பர்யாயைர் ருச்ச₂தீதி ருது꞉ । அரத்தேஸ் து இதி து இதோ ஹி வஸந்த ஶிஶிராதீ₃நாமபி ருதுத்வம் । (எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின் உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும் ருதுக்கள் என்று கூறப் படுகின்றன )யதா₂கர்மாபி தப்தா பர்ஜன்யம் ஹ்லாத யந்தமிவ பிரஜா –அயோத்யா -3-29 – ஸூர்யனின் உஷ்ணத்தால் தவிப்பவர்கள் நீர் கொண்ட மேகத்தைக் கண்டால் மகிழ்வது போன்று இராமனை எத்தனை நேரம் பார்த்தாலும் திருப்தி அடைவது இல்லை –வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7
வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ –பெரிய திருமொழி -1-10-9- –(ருது என்னும் காலச் சொல்லால் கூறப்படுபவர் —ஸ்ரீ சங்கரர்) –(மோஷத்திற்கு சாதனமாக இருப்பவர் -தம் ஸ்வரூபத்தை தாமே தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)

ஓம்ருதவேநம:காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்-ருதுஶப்தேன ‘ருது’ என்ற-லக்ஷ்யத இதி குறிக்கிறது-ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.‘ருது’ என்ற சொல் பகவான் கால வடிவினன் என்பதைக் குறிக்கிறது. எனவே அவர் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். பகவான் ரிதுஹ் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் எல்லா வகையான பருவங்களிலும் இருக்கிறார்.உஷா தாஹே புரூன் ஸர்வான் ஓஷதி தஹதி இதி வா புருஷஹ் – அனைவரையும் மிஞ்சுபவர்.-பிபார்தி ப்ரணாதி பாலயதி பூரயதி இதி வா புருஷஹ் – ப்ரி பாலன பூரணாயோவிலிருந்து பாதுகாத்து போஷிப்பவன்-பூரா + குஷன் (புரா அக்ரகமனேயிலிருந்து புருஷா) – புரா அக்ரகமனேபுரதி அக்ரகாம்ஐ பவதி இதி வா புருஷஹ் – தலைவர் அல்லது முன்னணியில் இருப்பவர்.-பூர்வா அஸ்மாத் விஷ்வாத் தத் ஆதிகாரணத்வாத் இதி புருஷ – உலகத்தின் மூல காரணமானவன்.-புருணி புவனானி சம்ஹார சமயே ஸ்யதி அந்தம் நயதிதி புருஷா – பிரளய காலத்தில் உலகங்களை அவற்றின் முடிவுக்கு அழைத்துச் செல்பவர்.-

———–

408-பிராண –ஸர்வ ப்ராணநாத்ப்ராண꞉-பிராணனாய் இருப்பவன்-எல்லாவற்றையும் உய்விப்பவர் – –என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5-சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1–(முன்பே 57- 321 பார்த்தோம்-)என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொண்ட நாதனைஓம் ப்ராணாய நம:ப்ராணிதி உயிர் வாழ்கிறார்-ஒத்தாய் எப்-பொருளுக்கும் உயிரை (திருவாய் மொழி 2.3.2)- எல்லா உயிர்களிலும் உயிர் சக்தி;க்ஷேத்ரக்ஞ ரூபேண க்ஷேத்ரக்ஞரின் வடிவில் (அனைவருக்குள்ளும்)-ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் அனைவருக்குள்ளும் (அனைத்தையும் அறியும் உள்ளுறை ஆத்மாவாக) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் உயிர்வாழ்கிறார். எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்-ப்ராணாத்மனா ப்ராண வாயுவின் வடிவில்-சேஶ்ட்யன்வா அனைவருக்குள்ளும் (எங்கும்) செல்கிறார்-ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-அல்லது, பகவான் ப்ராண வாயுவின் வடிவில் அனைவருக்குள்ளும் செல்கிறார் (அனைவரையும் செயல்பட வைக்கிறார்). எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘சேஶ்டாம் கரோதி ஸ்வஶனஸ்வரூபி’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)-மூச்சுக் காற்றின் வடிவில் அனைத்தையும் செயல்படுத்துகிறார் (அனைவருக்குள்ளும் செல்கிறார்).ப்ரணீதி க்ஷேத்ரஜ்ஞ ரூபேண இதி ப்ராணஹ் – வெளி உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வு அல்லது உணர்வின் வடிவில் அவர் உடலை உயிர்ப்பிக்கிறார்.-பிராணாத்மனா சேஷ்டயான் இதி வா பிராணஹ் – உயிர் கொடுக்கும் காற்று அல்லது ஆக்ஸிஜன் வடிவில் உடலுக்கு இயக்கம் கொடுக்கிறார். ‘யத்-வை ப்ரணீதி ச பிராணஹ் – அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார், எனவே அவர் பிராணன்’ (சாண்டோக்ய உபநிஷத் 1.3) என்று குறிப்பிடுகிறார்.

————–

409-பிராணத-உயிர் அளிப்பவன் -–வெகு சிலருக்கு பிராணன் -அனைவருக்கும் பிராணன் அளிப்பவர் –உயிர் அளிப்பான்–ப்ரஸித்₃தா₄ந பி ப்ராணான் த₃தா₃தீதி ப்ராணத₃꞉ । அதோ ஹி தத்₃விரஹே-பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர்-அகால பலிநோ வ்ருஷா -அபி வ்ருஷா பரிம் லாநா ச புஷ்ப அங்குர கோரகா –அயோத்யா-இராமன் கானகம் சென்றதும் அயோத்யையில் மலர்களுடன் கூடி இருந்த அனைத்து மரங்களும் அவனது பிரிவு தாளாமல் வாடின-பரிசுஷ்க பலாசாநி வநாந் யுபவ நாநி ச –அயோத்யா-கானகத்தில் இருந்த அனைத்து மரங்களும் காய்ந்த இலைகளும் இலைகள் இல்லாமலேயும் இருந்தன –உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -திரு மாலை -11
(முன்பே 66-322 பார்த்தோம் -மேலும் 956 பார்ப்போம் –)ஓம் ப்ராணதாய நம:கண்டயதி அழிக்கிறார்-ப்ராணினாம் உயிரினங்களின்-ப்ராணான் உயிரை (அல்லது உயிர்மூச்சை)ப்ரளயாதிஶ்விதி ப்ரளயம் முதலிய அழிவுக்காலங்களில்-ப்ராணத: எனவே பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-பகவான் ப்ரளயம் முதலான அழிவுக்காலங்களில் உயிரினங்களின் உயிரை அழிக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ப்ராணான் ததாதி இதி ப்ராணதா – உயிர் கொடுப்பவர்-ப்ராணான் த்யாதி இதி ப்ராணஹ் – மரணத்தின் போது உயிர் வாயுக்களை அகற்றுபவர்-பிராணன் தீபயதி – உயிர் காற்றுகளை சுத்திகரித்து பிரகாசமாக்குபவர்.-கண்டயாதி பிராணினாம் ப்ராணான் ப்ரளயாதிஷு இதி – இறுதிப் பிரளயத்தின் போது உயிரிலிருந்து உயிர்வாழிகளைத் தடுத்து நிறுத்துகிறார்’(சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –)(துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)

——

ப்ரணம –வணக்கத்துக்கு உரியவன்–ப்ரணா மயதீதி ஶ்ரௌத்யா நிருக்த்யா ஸ்வ கு₃ணைஶ் சராசரநாமநாத் ப்ரணம꞉ । யதா ஹ்ருதயாநி அமமந்தே ஜனஸ்ய குணவத்தயா –அயோத்யா–தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர்-இராமன் கானகம் சென்ற போது அயோத்யையில் இருந்த மக்களின் ஹிருத்யங்கள் மத்தினால் கடையப்பட்டது போன்று குழம்பின-ஓம் ப்ரணவாய நம:ப்ரணௌதீதி ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால்-ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ஓம்’ என்ற ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதீ’-‘ஓம்’ என்று கூறி வணங்கவேண்டும்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன-ப்ரணம்யதே வணங்கப்படுவதால்-இதி வா ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அல்லது, (வேதங்களாலும், அனைத்து தேவர்களாலும்) வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ப்ரணமந்தீஹ யம் வேதாஸ்தஸ்மாத்ப்ரணவ உச்யதே’  இதி ஸனத்குமாரவசனான்-அவரை வேதங்கள் கைகூப்பி வணங்குகின்றன. எனவே அவர் ப்ரணவ என்று அழைக்கப்படுகிறார்.-இது ஸனத்குமாரரின் கூற்றாகும்-பிரணவ – பிறரை வணங்கச் செய்பவன்‘ப்ரணௌதி இதி பிரணவஹ் – ஓம்’ (பிரணவ மந்திரம்) என்ற சப்தத்துடன் பிறரை வணங்கச் செய்கிறார். அவர் ‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதி – எனவே ஓம் மூலம் அவரை வணங்குகிறார்-‘ப்ரணம்யதே இதி வா பிரணவஹ் – அவர் வழிபடத் தகுந்தவர் ஆதலால் அவர் பிரணவா’. அவர் சனத்குமாரனிடமிருந்து ஒரு மேற்கோளைத் தருகிறார், இது ‘ப்ரணமந்தி இஹ வை வேதாஹ் தஸ்மாத் ப்ரணவ உச்யதே – வேதங்களில் அவருக்கு சாஷ்டாங்கங்கள் செய்யப்பட்டுள்ளன’.(தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் – மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –)

இலை துணை மற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை
       

————–

ப்ருது-பிரசித்தன் பெரும் புகழான் –த்வம் அக்ஷய கீர்த்திஸ் சயஶஸாபி விஸ்தீர்ண இதி
ப்ருது₂꞉ |“ப்ரத₂ ப்ரக்₂யாநே ”,* ப்ரதி₂ம்ரதி₃ப்₄ரஸ்ஜாம் ஸம் ப்ரஸாரணம் ஸலோபஶ்ச, இதி கு ப்ரத்யய꞉ ।–மிகவும் விரிந்த புகழை யுடையவர் –ப்ருது ஸ்ரீ பார்த்திவாத்மஜ –பால-தசரதனின் புத்திரனான இராமன் பெரும் புகழ் கொண்டவன்-ராமோ நாம ஜனை ஸ்ருத–பால-அவன் ராமன் என்று அனைவராலும் கொண்டாடப் படுபவன்-தேஷாம் அதியசா லோகே ராம –பால
அவர்களில் ராமன் பெரும் புகழுடன் விளங்கினான்-யசஸச்ச ஏக பாஜநம் -கிஷ்கிந்தா-புகழின் ஒரே இருப்பிடமாக இராமன் இருந்தான் -தாரை வாக்கியம்-நிகரில் புகழாய்(திருவாய் மொழி 6.10.10).   இஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோ நாம ஜனை ஸ்ருத யசஸ் வீ ஜ்ஞாநாசம் பந்ந –(பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –)(பிரசித்தமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் ப்ருதவே நம:ப்ரபஞ்சரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்-விஸ்த்ருதத்வாத் விரிவடைந்து இருப்பதால்-ப்ருது: பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ப்ருது என்ற சொல்லிற்கு மிகப்பெரிய, அகலமான என்ற பொருள்கள் உண்டு. இங்கு ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்துள்ளதால் பகவான் ப்ருது-‘பிரத் விஸ்தரே – பரவுவதற்கு, விரிவடைய’. மஹாவிஷ்ணுவின் விஸ்வரூபம் இரண்டு அர்த்தங்களிலும் பிருதுவின் உதாரணம் – அவரது விராட் ஸ்வரூபத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் அல்லது அவரது விராட் ஸ்வரூபத்தில் பிரபஞ்சம் முழுவதும் பரவியவர்.-கிருஷ்ணராக தனது ஒன்பதாவது அவதாரத்தில், அவர் பிருத்வியின் தந்தையான பிருது மகாராஜாவின் வடிவத்தை எடுக்கிறார். இது ஸ்ரீமத் பாகவதம் 1. 3. 14 – ரிஷிபிர்-யாச்சிதோ பீஜே நவமம் பார்திவம் வபுஹ் – முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் பிருதுவின் வடிவத்தில் தோன்றினார்.-

————–

ஹிரண்ய கர்ப்ப –(கீழ் -71)அவதார அஸம கால வர்திநாம் அபி த்₄யாநாதி₃ந உப காரித்வ மாஹஹிரண்ய க₃ர்ப₄꞉,ஹித ரமணீ- யஸ்ய த்₄யாத்ரு ஹ்ருத₃யஸ்ய ஶுபா₄ஶ்ரயத்வேந
நிகீ₃ர்யத்வாத்₃ ஹிரண்ய நிதி₄ -ஸாம்யாத்₃வா।மந்த்ர வர்ணத்தில் –த்யேயஸ் ஸ விஸ்வாத்மா–அவனே அனைத்து ஆத்மாவாகவும் த்யானிக்கத் தக்கவன்-தமக்கு ஹிதமாகவும் -இனிமையாகவும் உள்ள தியானிப்பவர் மனங்களினால் அமுதம் போலே அனுபவிக்கப் பெறுபவர் –பொற் புதையல் போல் போன்றவர் -அவதார காலத்திற்குப் பிறபட்டவர்களுக்கும் அவர்கள் செய்யும் தியானம் முதலியவற்றால் உபகாரம் செய்வது கூறப்படுகிறது-ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:ஹிரண்ய கர்ப்ப ஸம்பூதிகாரணம் ஹிரண்ய கர்ப்பர் என்று அழைக்கப்படும் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் பிறப்பிடமான-ஹிரண்மயமண்டம் பொன்மயமான முட்டையானது-யத்வீர்யஸம்பூதம் எவருடைய சக்தியிலிருந்து தோன்றுகிறதோ-ததஸ்ய கர்ப்ப இதி (அந்த) பகவான் ப்ரஹ்மாவிற்கும் கர்ப்பமாகிறார்-எனவே பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-அவர் அழகான உறைவிடத்தில் இருப்பவர். பரம பதம்;-நிறைவு அல்லது மகிழ்ச்சியின் பொருளாக இருக்கும் அனைத்தையும் தோற்றுவிப்பவர்.-ஹிரண்ய என்பது தங்கத்தைக் குறிக்கிறது . இங்குள்ள ஒப்புமை என்னவென்றால், தங்கம் தூய்மையானது, கவர்ச்சியானது, பளபளப்பானது மற்றும் மிகவும் விரும்பத்தக்கது என்பது போல, பரம பதம் என்பது சுத்த-சத்வமாகும், எனவே ஹிரண்யத்தைக் குறிக்கிறது. பெரிய அனைத்தையும் உருவாக்குபவர் ஹிரண்ய-கர்ப்பன்-பூமியின் இதயத்தில் தங்கம் மறைந்திருப்பது போல, அவர் தனது பக்தர்களின் இதயங்களில் மறைந்துள்ளார். இந்த அர்த்தத்திலும் அவர் ஹிரண்யகர்ப்பரே. சிருஷ்டியின் அடிப்படையில் வைகுண்டத்தில் தொடங்கி ஹிரண்ய கர்பத்தில் முடிவடையும் நாமங்களின் இணைக்கப்பட்ட கணக்கை ஸ்ரீ சாஸ்திரி தருகிறார். தடைகளை நீக்கும் வைகுண்டமாகிய பகவான், தனது மகத்தான ஆற்றலுடன், பரம புருஷராகிய தனது நிலையிலிருந்து இறங்கி, வைகுண்டமாக இருப்பது போல் உடலில் புருஷ வடிவில் இந்த பிரபஞ்சத்தில் வசிக்க முடிவு செய்தார். பின்னர், பிரகிருதியை இயக்கும் பிராண சக்தியை உயிரினங்களை ஆதரிக்கும் வடிவமாக மாற்றினார், இதனால் பிராணதாவாக மாறினார். இதன் விளைவாக இந்த பிரபஞ்சம் ஏற்பட்டது, ஆகாஷா பூதங்களில் முதன்மையானது (தஸ்மாத்-வா ஏதஸ்மாத் ஆத்மானா ஆகாஷஸ் ஸம்பூதஹ்).முதலில் பிரணவத்தின் பெரும் ஒலி அதாவது ‘ஓம்’ விளைந்தது. இந்த ஆகாஷாவிலிருந்து, பின்னர் காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி போன்ற பிற பூதங்களின் விளைவாக அவர் பிரபஞ்சமாக (ப்ரிதுஹ்) விரிவடைந்தார். இந்த பிருதுஹ் இந்த பிரபஞ்சத்தின் தந்தை. இந்த பிருதுவின் மகள்தான் பிருத்வி. மொத்த (ஸ்தூல) வடிவத்திலிருந்து தொடங்கி, நுட்பமான (சூக்ஷ்மா) வடிவத்தை வழங்குவதன் மூலம், அவர் தனது படைப்புகளுக்கு ஹிரண்ய-கர்ப்பமாக பிராணமயம், மனோமயம் மற்றும் விஞ்ஞானமய கோஷங்களை வழங்கினார். இவ்வாறு, நாம வைகுண்டத்தில் தொடங்கி, நாம ஹிரண்ய-கர்ப்பம் வரை, சிருஷ்டி ரகசியம் படிப்படியாக விரிவடைகிறது.

————-

சத்ருக்ந –சத்ருக்களை முடிப்பவன் –விவேக ஶரைர் ஹந்தி-புலன்களை அடக்குபவன்-விஷ யேஷு விஷேபணாத் தேஷாம் ராவணவச் ச₂த்ரு மிந்த்₃ரிய வர்க₃ம் விவேக ஶரைர் ஹந்தி
ஶமயதீதி ஶத்ருக்₄ந । *அமநுஷ்ய கர்த்ருகே ச இதி டக், * க₃மஹந , இத்யாதி₃நோபதா₄லோப꞉
* ஹோ ஹந்தே ꞉, இதி குத்வம் ।-விஷயங்களில் ஈடுபடுவதால் ராவணன் போலப் பகைகளாக உள்ள இந்த்ரியங்களை விவேகம் என்னும் அம்பினால் அழிப்பவர்-தச இந்த்ரியனானாம் கோரம் யோ மநோ ரஜனீசரம் விவேக சரஜாலேந சமம் நயதி யோகிநாம் தத் த்யாநே –ஈஸ்வர சம்ஹிதை-யோகிகளின் மனம் மற்றும் பத்து இந்திரியங்களை இராமன் எவ்விதம் இராவணனின் பத்துத் தலைகளை அழித்தானோ அதே போன்று விவேகம் என்பதன் மூலம் அழிக்கிறான்–காமம் (காமம்), க்ரோதா (கோபம்), மோகம் (மாயை), லோபா (பேராசை), மதம் (பெருமை), மாத்சார்யம் (பொறாமை), மனஸ் (மனம்), புத்தி (புத்தி), சித்தம் (விருப்பம்) மற்றும் அஹம்காரம் (அஹங்காரம்) அழிக்கிறான்)-வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -பெருமாள் திரு -10-2-மாறில் போரரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10–பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டான் -பெரிய திரு மொழி -2-3-1-தேவர்களின் எதிரிகளை அழிப்பவர்-விரோதிகளை அழிப்பவர்-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–
7-1-9-

ஓம் ஶத்ருக்னாய நம:த்ரிதஶ (முப்பத்து முக்கோடி) தேவர்களின்-ஶத்ரூன் எதிரிகளான அஸுரர்களை-ஹந்தீதி கொல்வதால்-ஶத்ருக்ன: பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவானுக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் இல்லை-

——–

வ்யாப்த –நிரம்பியவன் –முக்₃த₄ வ்ருத்₃த₄ ப₄த்ரு ப்₄ருத்ய ஶத்ர மித்ராதி₃ஷு வாத்ஸல்ய -அவிஸேஷாத் வ்யாப்த꞉ । (தியானிப்பவர்களிடம்-இளையவன் முதியவன் தலைவன் அடிமை பகைவன் நண்பன் முதலிய வேறுபாடு இல்லாமல் ஒரே விதமான அன்பால் நிரம்பி இருப்பவர் –)யதா-பவ்ரான் ஸ்வ ஜனவத் நித்யம் குசலம் பரப்ருச்சதி புத்ரேஷ் வக்நிஷு தாரேஷு ப்ரேஷ்ய சிஷ்ய கணேஷு ச நிகிலேந ஆநு பூர்வ்யாச் ச பிதா புத்ரா நிவ ஓவ்ரசாந் –அயோத்யா —அயோத்யா நகர மக்கள் தசரதனிடம் உமது புத்திரனான இராமன் தனது உறவினர்களை விசாரிப்பது போன்று எங்கள் அனைவரையும் அன்புடன் விசாரிக்கிறான்
ஒரு தந்தை தனது புத்ரனைக் கவனித்துக் கொள்வது போன்று இராமன் இங்கு வாழ்கின்ற மக்களைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் அக்னி வேள்விகளைப் பற்றியும்
மனைவிமார்கள் வேலையாட்கள் பற்றியும் மாணவர்கள் பற்றியும் விசாரிக்கிறான்-ரிபூணாம் அபி வத்ஸல–யுத்த-சத்ருக்களிடம் கூட இராமன் அன்பு பூண்டவன்–ஓம் வ்யாப்தாய நம:காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம்-ஸர்வ கார்யாணாம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்)வ்யாபனாத் பரவி இருப்பதால்-வ்யாப்த: பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-(அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) பரவி இருப்பதால் பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.(பிரம்மா முதலிய தேவர்களுக்கு வேண்டியவர் -கருடனுக்கு வேண்டியவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)அவர் பொருள்களின் உலகிலும், கருத்துகளின் உலகிலும் எங்கும் நிறைந்தவர். நாராயண சூக்தம் சொல்வது போல் ‘அந்தர் பஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா ஸ்திதா – நாராயணன் உள்ளேயும் வெளியேயும் வியாபித் திருக்கிறான்’.‘நீச்ச பூஜ்ய அவிஷேஷேன வியாபநாத் வியாப்த உச்யதே –

———————————

வாயு-செல்பவன் -அடியார் உள்ள இடம் தானே -குகன் பரத்வாஜர் சபரி-பரகத ஸ்வீ காரம்-ஸ்வயமேவ தத்ர தத்ர தான் க₃ச்ச₂தீதிவாயு꞉ ।* க்ருவாபாஜிமி இத்யாதி₃நோண் ।தம்மைத் தியானிப்பவர் இருக்குமிடம் தேடி ஆங்காங்கு செல்பவர் –சோபியகச்சத் மஹா தேஜா சபரீம் சத்ரு ஸூதந -பால-எதிரிகளை அழிக்கும் ராமன் சபரியின் இடத்துக்குச் சென்று பெருமை அளித்தான்-பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா–பால பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றான்-குஹம் ஆஸாத்ய தர்மாத்மா–பால-குகனை மேன்மைப் படுத்தினான் –ஏழை ஏதலன் -வியாப்யம் – இன்னருள் சுரந்து வாயு-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி சென்று நின்று ஆழி தொட்டான் –(நல்ல மனத்தை உண்டாக்குபவர் —ஸ்ரீ சங்கரர் )(உயிரைத் தாங்கக் காரணமாக இருப்பவர் -வலிமை கொண்டவராய் சஞ்சரிப்பவர் -எல்லாவற்றையும் அறிபவர் –பரவுபவர் -விரும்பப் படுபவர் -எல்லாரும் இயங்கக் காரணமானவர் -உயர்ந்தவர் -சம்சாரத்தில் கட்டுபவர் –சம்சாரத்தில் இருந்து விடுவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் வாயவே நம:வாதி கந்தம் கரோதீதி ‘வாதி’ அதாவது மணத்தை உண்டாக்குகிறார்-வாயு: எனவே பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.9)– வதி ஸர்வத்ர கதோ பவதி இதி வாயு – விஷ்ணு – இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் பரவியிருக்கிறார். இந்த உலகில் காற்று நுழையாத அல்லது இல்லாத இடமே இல்லை. இந்த நாமம் பகவானின் எங்கும் நிறைந்திருப்பதைக் குறிக்கிறது.-அவர் வெறும் ‘காற்று’ மட்டுமல்ல, ‘காற்று’க்குப் பின்னால் உள்ள உயிர் கொடுக்கும் சக்தி-வாயுரஸ்மை புண்யம் கந்தம் ஆவாஹதி – பகவான் வாயுவிற்கு அந்தர்யாமி-வாயுர்வை கௌதம தத்-சூத்திரம், வாயுநா வை கௌதமசூத்ரேணாயாம் ச லோகா பராஷ்ச லோகஹ் ஸர்வாணி ச பூதானி சந்த்ரிப்தானி பவந்தி (பிருஹதாரண்யகா 3.5.2) – இதன் பொருள் ‘வாயு இந்த உலகத்தை ஒரு மிருகத்தைப் போல ஒன்றாக வைத்திருக்கும் நூல்; இது இல்லாமல் உலகம் உடைந்த சரம் கொண்ட சங்கிலியைப் போல உடைந்து விடும்; பகவானே இந்த சக்தி.-யோ வாயௌ திஷ்டன்-வாயோரந்தரோ யாம் வாயுர்-ந வேத யஸ்ய வாயுஹ் ஷரீரம் யோ வாயும் அந்தரோ யமாயதி, ஏஷ தே ஆத்மாந்தர்யாம்யாமிரிதா (பிருஹதாரண்யகா 3. 7. 7. ) – காற்றில் வசிக்காதவர், காற்றில் யார் வசிக்கிறார் என்பதை அறிவார். காற்று, மற்றும் காற்றை உள்ளே இருந்து கட்டுப்படுத்துபவர், உள் ஆட்சியாளர், உங்கள் சொந்த அழியாத சுயம்.-வாயுர்வாவ ஸம்வர்கோயதா வா அக்னிருத்வாயதி, வாயுமேவாப்யேதி, யதா சூர்யோ’ஸ்தமேதி வாயுமேவாப்யேதி, யதா சந்திரோ’ஸ்தமேதி வாயுமேவாப்யேதி, யதாபா உச்சுஷ்யந்தி வாயுமேவாபியந்தி. சௌக்ரீவாயந்தி3. ) – சூரியன், சந்திரன், நெருப்பு மற்றும் நீர் அனைத்தும் வாயுவில் இணையும் போது மறைந்துவிடும்;-கிம் தத்-விஷ்ணோர்-பலம் ஆஹுஹ் |வாதாத்-விஷ்ணோர்-பலம் ஆஹுஹ் (தைத்திரீய 1. 8. 3) – பகவான் விஷ்ணு தனது விபூதி மூலம் வாயுவாக பூமியைத் தாங்குகிறார்.-உணவு, தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் வாழலாம், ஆனால் வாயு இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழ முடியாது. அதுபோல பகவானின் அருள் இல்லாமல் நாம் வாழ முடியாது. நாம் தேடாமலேயே வாயு நம்மிடம் வருகிறது; பகவானும் அவ்வாறே – அவர் தனது பக்தர்களைத் தேடி அவர்களைப் பின்தொடர்கிறார். வாயு எந்த வகையிலும் மக்களை வேறு படுத்துவதில்லை; அதனால் பகவான் எல்லாருடனும் சமமான மனப்பான்மையுடன் பழகுகிறார்.-இந்த பிரபஞ்சத்தின் இருப்பு மற்றும் உயிர்வாழ்வில் அதன் முக்கிய பங்கை கொண்ட வாயு பகவானுக்கு வாயு என பெயரிட காரணமாகும்.

——————-

அதோஷஜ--குறையாதவன் –யாவரும் அனுபவித்து உபயோகித்தாலும் அமுதக் கடல் போலே ஒரு காலும் வற்றிக் கீழே போகாமல் இருப்பவர் ––ஏவம் அம்ருத உத₃தி₄வத் ஸர்வைஸ் ஸதோ₃ப யுஜ்யமாநோ (அ)பி-அதோ ந ஷீயதே ஜாது யஸ்மாத் தஸ்மாத் அதோஷஜ –உத்யோக பர்வம்–எப்பொழுதும் தன்னிலையினின்று நழுவாதவராதலாலும், எவ்வித குறைகளுமற்று இருப்பதாலும் பகவான் ‘–அதோஷஜன் -எனப்படுகிறான்-அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரோத்தமம் –பால –பரசுராமன் கூற்று–மது என்னும் அரக்கனை அழித்தவனே -தேவர்களின் தலைவனே –
நீ குறையாதவன் என்று அறிவேன்-அக்ஷய்ய கீர்த்திச்ச–கிஷ்கிந்தா –24-31-தாரை வார்த்தை-குறையாத கீர்த்தி கொண்டவனே –யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப -4-3-10-(மேல் உலகத்திற்கும் பூமிக்கும் இடையில் விராட் ரூபத்துடன் வியாபிப்பவர் –ஒரு போதும் தாழ்ந்து அழியாதவர் ஆதலின் அதோஷஜர் எனபது உத்யோகபர்வம் —ஸ்ரீ சங்கரர் –)(இந்த்ரியங்களை அடக்கிய வஸூ தேவர் முதலியோர்க்கு மகனாக திரு வவதரித்தவர் –அஷகுமாரனை வென்ற ஹனுமானால் தெரியப் படுத்தப் பெற்றவர் –தம்மைத் தாழ விட்டு அனைவருக்கும் காட்டியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் அதோக்ஷஜாய நமத்யௌரக்ஷம் ஆகாயம் (த்யௌ) அக்ஷம் என்று அழைக்கப்படுகிறது-ப்ருதிவீ சாத: பூமி (ப்ருதிவீ) அத என்று அழைக்கப்படுகிறது-தயோர் யஸ்மாத்  அஜாயத  மத்யே அவற்றிற்கு இடையே தோன்றுவதால்-வைராஜ ரூபேண இதி வா தனது விராட் ரூபத்தில்-அதோக்ஷஜ: பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.அதோப்ருதே உள் முகமாக, உயர்ந்ததை நோக்கி திருப்பும்போது-ப்ரத்யக் ப்ரவாஹிதே நுகர்ச்சியை நோக்கி ஓடுவதை தவிர்த்து அதன் எதிர்திசையில்-அக்ஷகணே இந்திரியங்களை-ஜாயத இதி வா தோன்றுகிறார்-அதோக்ஷஜ: எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அத (அதோப்ருதே) + அக்ஷ (அக்ஷகணே) + ஜ (ஜாயதே) = அதோக்ஷஜஅதோ பூதே ஹ்யக்ஷகனே ப்ரத்யக்-ரூப-ப்ரவாஹிதே | ஜாயதே தஸ்ய வை ஞானம் தேன அதோக்ஷஜ உச்யதே ||அதஹ் – ஜ்ஞாத்ரித்வபாவாத் ஹீனம், அக்ஷஜம் ஞானம் யஸ்ய ச அதோக்ஷஜா – எங்கும் எல்லாவற்றிலும் இருந்தாலும், கண்கள் போன்ற இந்திரியங்களால் அடையாளம் காண முடியாதவர். அவர் எங்கும் நிறைந்தவர்.-பாகவதத்தில் (4.17.6-7) அதோக்ஷஜா பற்றிய குறிப்பு உள்ளது – ‘பக்தாய மே அனுரக்தாய தவ ச அதோக்ஷஜஸ்ய ச வக்தும் அர்ஹஸி யஹ் அதுஹ்யாத் வைன்ய-ரூபேண காம் இமாம்’ – நான் எப்போதும் உனது பக்தனாகவும், இறைவனின் பக்தனாகவும் இருக்கிறேன். அதோக்ஷஜா என்று அறியப்படுகிறது. எனவே, ப்ருது மன்னனின் கதைகள் அனைத்தையும் கூறுங்கள், அவர் வேன மன்னனின் மகனின் வடிவத்தில், பசு வடிவ பூமியில் பால் கறந்தார்.

யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும்
ஏத்திலும் தன்னை எட்ட எட்ட எங்கே எய்தும்?
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகி-திட்டிப்ப
யானும் எம்பெருமானையே ஏத்தினேன் யானுய்வானே

—————–

ருது –அணுகுபவன் –ஸதா₃(அ)ப்ய பூர்வைஸ் ஸர்வ உல்லா ஸகரைர் உத்தர உத்தரைர் கு₃ண பர்யாயைர் ருச்ச₂தீதி ருது꞉ । அரத்தேஸ் து இதி து இதோ ஹி வஸந்த ஶிஶிராதீ₃நாமபி ருதுத்வம் । (எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின்
உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும் ருதுக்கள் என்று கூறப் படுகின்றன)யதா₂கர்மாபி தப்தா பர்ஜன்யம் ஹ்லாத யந்தமிவ பிரஜா –அயோத்யா -3-29 – ஸூர்யனின் உஷ்ணத்தால் தவிப்பவர்கள் நீர் கொண்ட மேகத்தைக் கண்டால் மகிழ்வது போன்று இராமனை எத்தனை நேரம் பார்த்தாலும் திருப்தி அடைவது இல்லை –வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி -1-10-9–ஓம் ருதவே நம:காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்-ருதுஶப்தேன ‘ருது’ என்ற லக்ஷ்யத இதி குறிக்கிறது-ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ர்கதி-பிரபனயோஹ்’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘போவது’. ர்ச்சதி இதி ர்துஹ் – ரிதுஹ் என்ற சொல் பருவங்கள் ஒன்றையொன்று தள்ளி இடையூறு இல்லாமல் புதியதாக வருவதைக் குறிக்கிறது.-வசந்தா, கிரீஷ்மா, வர்ஷா, ஷரத், ஹேமந்தா மற்றும் சிசிர ரிதுஹ். காலச் சுழற்சியில் இந்த ரிட்டஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக தடையின்றி நகர்வதை உள்ளடக்கியது. இந்த நாமம் பகவான் காலத்தின் வடிவில் இருப்பதையும், பருவங்களின் சுழற்சியின் பின்னால் இருப்பதையும் குறிக்கிறது.-ரிதுர்-ரிதுனா நுத்யமானா வின்னாதா அபிதாவா – ஒரு பருவம் மற்றொன்றை தூண்டிவிட்டு அதன் வருகையை உரத்த குரலில் அறிவிக்கிறது. இந்த நாமம், பகவான் காலத்தின் வடிவத்தில் இருக்கிறார், இது பருவங்களின் சுழற்சியின் பின்னால் இருப்பதைக் குறிக்கிறது -பகவான் ரிதுஹ் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் எல்லா வகையான பருவங்களிலும் இருக்கிறார்.-

—————–

418-ஸூ தர்சந –பார்வைக்கு இனியவன் -நல்ல மார்க்கம் காட்டி அருளுபவர் -அழகைக் காட்டி –ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைப்பவன்கு₃ண ப்ரபா₄வாநபி₄ஜ்ஞாநாமபி த₃ர்ஶந மாத்ர மேவாஸ்ய ஸோப₄நமிதி ஸுத₃ர்ஶந꞉ ।குணங்களின் பெருமை அறியாதவர்களும் பார்த்தவுடன் நன்மை பெறும்படி அழகிய திருமேனியுடையவர் –சோமவத் பிரிய தர்சன –பால -1-18--சந்திரன் போன்று அழகான ரூபம் கொண்டவன்-சதைக பிரிய தர்சன –பால -1-16-எப்பொழுதும் மகிழ்ச்சியை அளிக்கும் திரு மேனி கொண்டவன்-சந்திர காந்தா நனம் ராமம் பிரிய தர்சனம் –பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிகாண் பெரும் கோலத்து என் காகுத்த நம்பி -6-6-9-கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணி -ராகவனே –பெருமாள் திரு -8-2-நம்பியை தென் குறுங்குடி நின்ற -அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தியை – -என் சொல்லி மறப்பேன் –காதுகனாய் இருந்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு-தருணவ் ரூப சம்பன்னவ்-சூர்ப்பணகை

ஓம் ஸுதர்ஶனாய நம:ஶோபனம் மங்களமான-நிர்வாண ஃபலம் முக்தியை அளிக்க வல்லது-தர்ஶனம் ஞானமஸ்யேதி தர்ஶனம் அதாவது பகவானைப் பற்றிய ஞானம்-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவானின் தர்ஶனம், அதாவது அவரைப் பற்றிய ஞானமானது மிகவும் மங்களகரமான முக்தியை அளிக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.ஶுபே மங்களகரமான-தர்ஶனே ஈக்ஷணே ‘தர்ஶனம்’ அதாவது திருக்கண்களை உடையவராதலால்-பத்மபத்ராயதே அஸ்யேதி தாமரை இதழ்களைப் போன்ற-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவான் தாமரை இதழ்களை போன்ற  அழகிய, மங்களகரமான திருக்கண்களை உடையவராதலால் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.–சுதர்ஷனா – அவரது தரிசனம் மோட்சத்திற்கு வழிவகுக்கிறதுஷோபனம் நிர்வாண பலம் தரிசனம் ஞானம் அஸ்ய இதி சுதர்ஷனஹ் – யாருடைய மங்களகரமான பார்வை அல்லது அறிவு முக்தி அல்லது மோட்சத்திற்கு வழிவகுக்கும்’–சுபே தர்ஷனே ஈக்ஷணே பத்மபத்ராயதே அஸ்ய இதி சுதர்ஷனா – தாமரையின் இதழ்களை ஒத்த அழகிய கண்களை உடையவர்’.–ஸுகேன த்ரிஷ்யதே பக்தைரிதி சுதர்ஷனஹ் – அவர் பக்தர்களுக்கு எளிதில் புலப்படுகிறார், எனவே அவர் சுதர்ஷனா’.தாமரை இதழ் போல் நீண்டு அழகிய இரு கண்கள் யுடையவர் -பக்தர்களால் சுகமாகக் காணப்படுபவர் –தம்மைப் பற்றிய ஞானமானது மோஷ பலம் தருவதாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

ஸுகேன இன்பமே (சுகமே) வடிவானவராய்-ருஶ்யதே காட்சி அளிக்கிறார்  பக்தைரிதி வா  தனது அடியவர்களுக்கு-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் தனது அடியவர்களுக்கு என்றுமே இன்பமே வடிவானவராய் காட்சி அளிக்கிறார். எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-அல்லது அவரது அடியவர்களுக்கு பகவானைக் காண்பதை போன்ற இன்பம் வேறொன்றுமில்லை 

தனது ‘நேத்ரா’ (கண்கள்) மூலம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தெளிவாகவும் முழுமையாகவும் பார்க்கவும் அறியவும் பகவானின் திறனைக் குறிக்கிறது என்று கவனிக்கிறார். மேலும், அவர் ஒவ்வொரு வடிவத்திலும் அந்தர்யாமியாக (உள்ளே) இருப்பதால், அவர் எல்லாவற்றையும் மற்றும் அனைவரையும் பார்க்கிறார்.-இந்த நாமத்தை முந்தைய நாமத்துடன் தொடர்புபடுத்தி தற்போதைய நாமத்தை சுதர்சன சக்கரத்திற்கான தெய்வத்தைக் குறிப்பிடுவதாக -காலம் ஆறு பருவங்களின் வடிவில் இடையறாது சுழன்று கொண்டிருப்பது போல் ஆறு முனைகள் கொண்ட சுதர்சன சக்கரம் சக்தி வாய்ந்ததாகவும் இடையூறு இன்றியும் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுதர்சன சக்கரத்திற்கு பகவானே தேவதா.

————

419-கால-தன்னிடம் ஈர்ப்பவன் –ஏவம் பூ₄தைர் கு₃ணைர் ஆத்மநி சராசர ஸங்கலநாத்
கால꞉ ॥இப்படிப்பட்ட குண விசேஷங்களினால் சராசரங்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -1-6-8-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு உசாகுவேன்-ஓம் காலாய நம:கலயதி இயங்குகிறார் (இயக்குகிறார்)-ஸர்வமிதி வா அனைத்தையும்-கால: எனவே, பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-எப்பொழுதும் இயங்குவதால், அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.கால: கலயதாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)இதி பகவத்வசனாத் |இயங்குனவற்றில் காலம் நான்.-கலயத என்ற சொல்லிற்கு எண்ணுதல் (கணக்கெடுத்தல்) என்றும்  பொருள் உள்ளது. இதுவும், இந்த திருநாமத்திற்கு பொருத்தமானதே. பகவான் காலத்தின் வடிவில் அனைவரின் வாழ்நாளையும் கணக்கிடுகிறார்.-எல்லாவற்றையும் எண்ணுபவர் -ஸ்ருஷ்டியில் உள்ள எல்லாப்பொருள்களின் கணக்குகளையும் அறிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –அவரவர் தகுதிக்கு ஏற்ற சுகத்தை அழிப்பவர் -உலகைக் காலத்தினால் கட்டுப்படுத்துவதனாலும் பிரிப்பதனாலும் அறிவதனாலும் காலமாக இருப்பவர் -சுகத்தை முழுமையாக தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –காலா – அவர் எல்லா வற்றிற்கும் வரம்புகளை அமைக்கிறார்-இந்த நாமத்திற்கு பல அர்த்தங்கள் உள்ளன, அதாவது.-பிரளயம் அல்லது பிரளய காலத்தில்) அனைவரையும் தன் பக்கம் இழுப்பவன்;-அளந்து அனைத்திற்கும் வரம்பு நிர்ணயிப்பவர்;-அவர் தனது எதிரிகள் அனைவருக்கும் மரணம் அல்லது அழிவு;-எல்லோருடைய கர்மாவையும் அளந்து பலனைச் செய்பவன்.

காலாய நம: நம என்பது ‘கால சம்க்யானே’ என்ற மூலத்திலிருந்து அளக்க அல்லது எண்ணுவதற்காக உருவானது.-காலோஸ்மி லோகக்ஷயக்ரித் ப்ரவ்ருத்தோ – காலத்தின் வடிவில் நான் உலக அழிவைக் கட்டுப்படுத்துகிறேன்’.-‘அநர்த-ப்ரேப்சுதாயா கணயாதாம் மத்யே காலா மிருத்யு அஹம் – துன்பங்கள் அல்லது பேரழிவுகளை ஏற்படுத்தும் விருப்பத்துடன் எண்ணுபவர்களில், நான் மரணத்தின் கடவுள்’.-சர்வேஷ்வரோ விஷ்ணுரேவ காலோ, யதோ ஹி ச கலயதி கணயதி ஸமஸ்த-ப்ராணி-கர்மாணி, ததனுகூல பல-பிரதாய.காலோ ஹினாம பகவான் ஸ்வயம்புஹ் அனாதி மத்ய நிதானஹ் – பகவான் ஆரம்பம், நடு அல்லது முடிவு இல்லாத நேரமே.-ஸ ஸூக்ஷ்மாம் அபி காலம் ந லீயதே இதி காலாஹ் |ஸம்கலயதி காலயதி வா பூதானி இதி காலா (சுஷ்ருத சூத்ரம் 6. 3).

——–

பரமேஷ்டீ-மிக உன்னதமான பரம பதத்தில் உள்ளவன்-அவதாரத்தில் செய்ய வேண்டியவற்றை முடித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளும் பெருமாள்-ஏவம் ராக்ஷஸ ம்ருக₃யயா (ராக்ஷஸர்களை வேட்டையாடி முடித்து )ஜக₃த்₃ரக்ஷணேந (குகன் சபரி விபீஷணாதிகளுக்கு ஸம்ஸ்லேஷ ரஸம் அளித்த பின்பு )சாத்ர விஹ்ருத்ய புந꞉ பரமே ஸ்தா₂நே திஷ்ட₂தீதி பரமேஷ்டீ₂ ।* பரமே கித், இதீ நி ப்ரத்யய꞉,* அம்பா₃ம்ப₃ இத்யாதி₃நா ஷத்வம்*ஹல த₃ந்தாத் இதி ஸப்தம்யா அலுக் । யதாவிவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீரஸ் மஹ அநுக –உத்தர -110-12- விஷ்ணு லோகத்துக்கு -தனது திவ்ய மங்கள விக்ரஹம் மற்றும் சரீர பூதங்களான அனைவருடன் அடைந்தான்-ஏவமேஷ மஹா பாஹு இஷ்வாகு குல வர்த்தன ராவணம் ச கணம் ஹத்வா திவம் ஆக்ரமிதா பிரபு –சபா பர்வம் -55-47-
நீண்ட திருக் கரங்களைக் கொண்டவனும் -இஷ்வாகு குலத்தின் நாயகனுமான இராமன்
இராவணன் கூட்டத்தை முடியுடன் அழித்து விட்டு மேலுலகம் சென்றான் –மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட விற்றிட்டுப் போய் விண் மிசைத் ததாமமே புக மேவிய சோதி -6-4-10-
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமமேவி சென்று இனிது வீற்றிருந்த அம்மான் -பெருமாள் திரு -10-10-பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –இப்படி அரக்கர்களை வேட்டையாடியும் உலகைக் காத்தும் விளையாடிய பின்பு உயர்ந்த ஸ்தானமான பரமபதத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஓம் பரமேஶ்டினே நம:பரமே ப்ரக்ருஶ்டே ‘பரம’ அதாவது உயர்ந்ததான-ஸ்வே  மஹிம்னி  தன்னுடைய (இயற்கையான) மகிமையால்-ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள்-ஸ்தாதும் நிலைபெற்றிருக்கும்-ஶீலமஸ்யேதி தன்மை யுடையவராதலால்-பரமேஶ்டி பகவான் ‘பரமேஶ்டி’ என்ற என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-அங்கு இருப்பது  அவரது இயல்பான தன்மையுமாகும் (ஶீலம்).-‘பரமேஶ்டி விப்ராஜதே’ – மிகச்சிறந்த தன்மையுடன் வீற்றிருக்கிறார்.-இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘பரமேஶ்டி’ என்று அழைக்கப்படுகிறார்).- உச்ச ஸ்தலத்தில் (வைகுந்தம்) வசிப்பவர்.-ஸ்ரீ வைகுந்தத்தில் வசிப்பவர்;-இதயத்தின் உச்ச குகையில் வசிப்பவர்.-‘பரமே ப்ரகரிஷ்டே ஸ்வே மஹிம்னி ஹ்ருதயகாஷே ஸ்தாதும் ஷீலம் அஸ்ய இதி பரமேஷ்தீ – அவர் தனது எல்லா மகிமையிலும் இதயத்தின் முதன்மையானவர், எனவே அவர் பரமேஷ்டி என்று அழைக்கப்படுகிறார்’ என்று விளக்குகிறார். வேத மந்திரம் கூறுகிறது ‘பரமேஷ்தீ விப்ரஜதே’ – பரம கடவுள் பிரகாசம் மற்றும் தாமரை வடிவ இதயத்தின் மத்தியில் வசிக்கிறார்.

பத்மகோஷ பிரதீகாஷம் ஹ்ருதயம் சாப்யதோமுகம் – தாமரை மலரின் தலைகீழ் மொட்டுக்கு ஒப்பிடக்கூடிய இதயத்தின் ஈதரில் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார்;தஸ்ய மத்யே மஹாநாக்னி-ர்விஸ்வர்சி-ர்விஸ்வதோமுகஹ் – இதயத்தில் உள்ள அந்த இடத்தில் அக்கினியின் பெரும் ஜ்வாலை, அழியாத, அனைத்தையும் அறிந்த, நாக்குகள் எல்லா திசைகளிலும் விரிந்து, எல்லா இடங்களிலும் முகங்களைத் திருப்பிக் கொள்கிறது-தஸ்யாஹ் ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்திதா – அந்தச் சுடரின் நடுவில் பரமாத்மா வசிப்பவர்.-நாராயண ஸூக்தம்–​​கடோபநிஷத்தின் “பரமே வ்யோம்னி ப்ரதிஷ்டிதா” – இதயத்தின் உச்சமான குகையில் மையமாக இருப்பவர் மற்றும் அனுபவத்தைப் பெறக்கூடியவர்.

———————

421-பரிக்ரஹ –-சௌசீல்யமே ஸ்ரீ ராமாவதார முக்கிய குணம் –குணவான் இத்தையே –ஆஸ்ரித வாத்சல்யம் கண்ணனுக்கு –அஸ்ய ஸௌஶீல்யம் தத்த்வம் ॥அத்ர தத்ர ச பரிதோ க்₃ரஹோ (அ)ஸ்யேதிபரிக்₃ரஹ꞉,ஸ்வ ஸம்ப₃ந்தி₄ பௌர ஜாநபதே₃ தத் ஸம்ப₃ந்தி₄நாம் தத்₃தே₃வதா தத் ஆராம தரு தூ₃ர்வாதே ₃ரபி பரமபத₃ ப்ராபணாத் -நகர மக்கள் தேச மக்கள் அவர்களுடைய சுற்றத்தார் அவர்களுடைய தேவதைகள் தோட்டத்தில் உள்ள மரம் புல்
முதலியவற்றையும் பரமபதம் சேரும்படி அங்கீ கரித்தவர்-யே ஹி பாகவதம் சேஷு அநு ராகின–சராசரங்களையும் கூட்டிச் சென்ற ஸுவ்லப்யம்-தரு தூ₃ர்வாதே-மரங்களையும் வேர்களுடனே-யாவற்றையும் தன்னுடன் சேர்த்து கொள்பவன்-தத்கால மக்களுக்கு பெருமாள் -அனைவருக்கும் ராமானுஜர்புற்பா முதலா புல்லெரும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
-7-5-1-ஓம் பரிக்ரஹாய நம:ஶரணார்த்திபி: தம்மை சரணடைந்த அடியவர்களால்-பரிதோ எல்லாவிடங்களிலும்-க்ருஹ்யதே  அடையப்படுகிறார்-ஸர்வகதத்வாத் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால்-பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் அவரை சரணடைந்த அடியவர்கள் அவரை எல்லாவிடங்களிலும் அடைகின்றனர் (கிரஹிக்கின்றனர்). எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஞாயதே இதி வா அறியப்படுகிறார்-பத்ரபுஶ்பாதிகம் இலைகளையோ (துளசி), பூக்களையோ-பக்தைரர்பிதம் தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும்-பரிகிருஹ்ணாதீதி முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்-பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் இலை (துளசி), பூக்கள் முதலிய எளிய பொருட்களையும் பகவான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பரிகிரஹா – அவர் அனைத்தையும் தன்னுள் உள்வாங்குகிறார்-அனைத்தையும் தன்னுடன் அழைத்துச் செல்பவர்;-ன்னிடம் அடைக்கலம் தேடுபவர்களால் எல்லாப் பக்கங்களிலும் பற்றிக்கொள்ளப்பட்டவர்;-தன் பக்தர்களின் எந்தப் பிரசாதத்தையும் மனப்பூர்வமாக அளிக்கும் போது ஏற்றுக்கொள்பவர்;இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.

ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த நாமத்திற்கு மூன்று விதமான விளக்கங்களை தருகிறார். முதல் பொருள் ‘சரணார்த்திபிஹ் பரிதோ க்ரிஹ்யதே ஸர்வகதத்வாத் – அவரை அடைக்கலம் தேடுபவர்களால் எல்லாப் பக்கங்களிலும் அவர் பற்றிக் கொள்ளப்படுகிறார்’. அவர் வழங்கிய இரண்டாவது பொருள் ‘பரிதோ ஜ்ஞாயதே – எல்லா அணுகுமுறைகளிலிருந்தும் அவரைத் தேடுவதன் மூலம் அவர் உணரப்படுகிறார்’. மூன்றாவது பொருள் ‘பத்ரபுஷ்பாதிகம் பக்தைஹ் அர்பிதம் பரிக்ரிஹ்ணாதி இதி பரிக்ரஹஹ் – அவர் தனது பக்தர்கள் செய்யும் மலர்கள் மற்றும் இலைகள் போன்ற எந்தவொரு பிரசாதத்தையும் ஏற்றுக்கொள்வதால் அவர் பரிக்ரஹர்’.-பத்ரம் புஷ்பம் ফலம் தோயம் யோ மே ভக்த்யா ப்ரயச்சதிதத் அஹம் பக்தி-உபஹர்தம் அஸ்நாமி ப்ரயதாத்மனஹ் ||–9-25-அன்புடனும் பக்தியுடனும் எனக்கு ஒரு இலை, ஒரு பூ, பழம் ஒரு தண்ணீர் வழங்கினால், அந்தத் தூய்மையான உள்ளம் கொண்ட அந்த பக்தியை நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.-சரணம் அடைபவர்களால் எல்லாவகைகளாலும் கொள்ளப் படுபவர் -பல வழிகளால் அறியப் பெறுபவர் –அடியவர் சமர்ப்பிக்கும் இலை பூ முதலியவற்றை ஏற்பவர் –ஸ்ரீ சங்கரர் –-பரிக்ரஹ – பரிதா ஸர்வதா கிரஹணம் – இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனது சக்தியின் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று விளக்கம் தருகிறார்.-பக்தர்களை அனுக்ரஹித்து ஏற்றுக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்