Archive for January, 2024

ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ வேதாந்த அர்த்தமும்–ஸ்ரீ பகவத் கீதையும், ஸ்ரீ கோதா கீதையும் (ஸ்ரீ திருப் பாவையும்)–

January 29, 2024

ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ வேதாந்த அர்த்தமும்

நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் ஸித்தம்
தன்னுடையதாய் இருந்துள்ள உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தினை
மந்தரப் ப்ரஹ்மணி மத்யமேந நமஸா பும்சஸ் ஸ்வரூபம் -என்கிறபடியே
ஆத்மாவுக்கு நிலை நின்றதாய்-ஸ்வமாய் இறே பாரதந்த்ர்யம் தான் இருப்பது

அத்யா பயந்தீ-
பதிம் விஸ்வஸ்ய-யஸ்யாஸ்மி -என்று ஓதிக் கிடக்கிற
சேஷ சேஷி பாவம் அனுஷ்டிப்பார் இல்லாமையாலே அவனும் மறந்து கை விட்டு இருக்க
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்–என்று அவனை மறித்து வைத்து
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் – என்று ஒதுவித்தாள்-

தனியனில் பரார்த்யம் ஸ்வம் என்று பட்டர் அருளிச் செய்தார். “அகாரேண உச்யதே விஷ்ணூ “என்பதால் பிரணவத்தினுடைய அர்த்தம் உபநிஷத்தில் காட்டப்பட்டபடியால் அதன் விசேஷத்தை ஆண்டாள் இங்கு அருளிச் செய்தாள். கம்பன் சுமித்திரை வாயிலாக, “பின்னும் பகர்வரள் மகனே இவன்பின செல் தம்பி, என்னும்படி அன்று, அடியார்க்கு ஏவல் செய்து” என்று இப்பொருளை வெளியிட்டான். இந்த பிரணவத்தின் அர்த்தங்களை அர்ஜுனன் ரதத்திலும் அக்ரத: ப்ரயயோ ராம: என்கிற ஸ்லோகத்திலும் கண்டு கொள்வது என்கிறார் வேதாந்த தேசிகன் “அபிரக்ஷிதும் அக்ரத: ஸ்திதம் த்வாம்” என்று பரமார்த்த ஸ்துதியிலும் சொன்னார்.

———

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம்–இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பா மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு –ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்த தனியன் –

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய்–நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு

—————

மார்கழி திங்கள்–மாஸாநாம் மார்க்க சீர்ஷோஹம்–சைத்த்ரச் ஸ்ரீ மான் அயம் மாஹ -என்று-ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-
அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

நீராட-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்-என்று பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே

செல்வச் சிறுமீர்காள்– லஷ்மணோ லஷ்மி சம்பன்ன–அந்தரி ஷக்த ஸ்ரீ மான்–சது நாகவர ஸ்ரீ மான்

சிறுமீர்காள்–துல்ய சீல வயோ வ்ருத்தாம்

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம்
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -ஸ்ரீ பரமபத அனுபவம் -ஸூ சகம்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

நாராயணனே நமக்கே பறை தருவான் – சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம்
தநூம் மக் நான் உத்தரதே லோகான் –உத்தாராக ஆச்சார்யர் அன்றோ

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே-திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –ஸ்வரூப-உபாய-புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –

ஆகையால் இப் பாட்டு-திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப் பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது

——————

வையத்து வாழ்வீர்கள் -வாழ்ச்சி உள்ளது இங்கே இறே–ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ்-என்று நீங்களும் அவனும் ஒரே மண்ணிலே பிறக்கப் பெற்றி கோளே-கிருஷ்ணன் ஒளிக்க வேண்டும் ஆணாகாதே பெண்ணாகப் பெற்றி கோளே- அதுக்கு மேலே பருவம் கழிந்த பெண்களாகாதே அவன் உகக்கும் பருவத்தில் பெண்ணாகப் பெற்றி கோளே –
காக்கா ஓட்டுகிற மந்த்ரம் -காக்கை பின் போவதே —ஹாவு ஹாவு ஹாவு–

கேளீரோ-சம்ச்ரவே மதுரம் வாக்யம்-என்னும்படியே-ஸ்ரவணம் தானே-பிரயோஜனமாய் இருக்கிற படி-ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் -என்று தொடங்கி-புருஷார்த்தோ அயமேவைகோ யத்தா ஸ்ரவணம் ஹரே -என்றான் இறே –
வைசம்பாயன பகவான் இடம் சிஷ்யன் ஜனமேஜயன் தனக்கு புருஷார்த்தமாக சொல்லியது

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி-இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறதுஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும் மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —-ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம்துயின்ற பரமன்–ஸ்ரீ மான்–ஸூக ஸூப்த-பரந்தப–மயா போதித

மை இட்டு எழுதோம் –அஸி தேக்ஷணைகளாகையாலே வேண்டுவது இல்லைபக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ – அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ

உய்யுமாறு எண்ணி-எண்ணி உகந்து –மநோ ரத வேளையே தொடங்கி ரசிக்கிற படி
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம்–அசன்னேவ ச பவதி -என்று இறே முன்பு கிடந்தது –
சந்த மேனம் ததோ வித்து என்கிறபடி யாகை

வையத்து வாழ்வீர் என்ற பாசுரத்தில் ஸாங்க பிரபதன அனுஷ்டானம் சொல்லப்படுகிறது. உய்யும் ஆறு எண்ணி என்று சொல்வதால் அங்கங்கள் கூறப்பட்டது. மோக்ஷத்துக்காக அனுஷ்டிக்கும் சரணாகதியில் பிரசித்தமான ஐந்து அங்கங்களுடன் பலத்யாகம் என்கிற அங்கம் அதிகம் இருப்பதை மனதில் வைத்து ஆறு என்று சொன்னாள்.
த்வயம் என்கிற மந்திரத்தைச் சொல்லி ப்ரபத்தியை அனுஷ்டிக்கிறோம். அம்மந்திரத்தில் ஆறுபதங்கள் இருக்கின்றன. அதையும் நினைவு படுத்துகிறாள்

—————

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி-அஷ்டாக்ஷரம் -மார்கழி
த்வயம் வையத்து –சரம ஸ்லோகம் ஓங்கி-புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் –அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் –மூன்று மட்டுமே அடியாரின் ஆத்ம ஸூத்திக்கு போதுமானவை;

பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே–ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –

முதலில் ஏஷ நாராயணன் -அடுத்து ஷீராப்தி நிகேதன் -பின்பு  ஆகதோ மதுரா நிலையன் –
நேராக சொல்லாமல் த்ரிவிக்ரமன் -ராமன் -கிருஷ்ணன் -இப்படி மூன்று பாசுரங்கள் –
இது முதல் பேர் பாடுதல் தொடக்கம்-பேர் பாடி-திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை-நாமம் நாமியாலும் அறிவிக்க முடியாத சம்பந்தம் உணர்த்துமே-தன் சரண் தந்திலன் தான் அது தந்து

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று-திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் –நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே
ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் -அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்
நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்
நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்
மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –

உத்தமன் பேர் என்கிறது திருமந்த்ரத்தை
முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் -சப்தம் சொல்லி
இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்-
இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான-த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும்-திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –

ஸ்ரீ நாராயண பரப்ரஹ்ம ! தத்வம் நாராயண பர: !
நாராயண பரஞ்சோதி ! ஆத்ம நாராயண பர: !
நாராயணனே பரப்ரஹ்மம் ! நாராயணனே பரதத்வம் !
நாராயணனே மேலான ஜோதி ! நாராயணனே பரமாத்மா !–இத்தையே நாராயணன் -பையத் துயின்ற பரமன்ஓங்கி உலகளந்த உத்தமன்

ஓங்கி உலகளந்த உத்தமன்–பரம பதத்தின் நின்றும் திருப் பாற்கடலிலே சாய்ந்து அருளி-
ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷனாய் இருக்கிற காலத்தில்
ஒருவனுக்கு ஆகஸ்மிக ஸ்வ கடாஷத்தாலே-சத்வ உத்ரேகம் பிறந்து அஹங்கார அபிபூதரான நமக்கு ரஷகன் ஆவான் ஆர் -என்று- ரஷக அபேஷை பிறந்தவாறே-சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம்-அதுவே விளை நீராக அபி விருத்தனாய்–ஓங்கி – பிறர் கார்யம் செய்ய -என்றால் பணைக்கும் இறே -பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக் கண்டால் எழுமா போலே-பிறர் கார்யம் செய்கை சத்தா ப்ரயுக்தம் -என்கை

நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே-இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை

மும்மாரி பெய்து –ரஹஸ்ய த்ரயம்–ஷட்க த்ரயம்-தத்வ த்ரயம்-ஆகார த்ரய ஜ்ஞானம்-அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யார்த்வம் -அநந்ய போக்யத்வம் 

பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப– ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்–இடங்களிலே ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்- பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்–
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே- ஸூகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர ––

————–

ஆழி போல் மின்னி-வலம்புரி போல் நின்று அதிர்ந்து–-ஒளியும் ஒலியும் – இரண்டுமே இப்பாசுரத்தில் -பர்ஜன்யனும் நான் செய்ய வேண்டும் அடிமை என் என்று கேட்க
அவனை நியமிக்கிறார்களாய் இருக்கிறது –

ஊழி முதல்வன்-அத்வாரக ஸ்ருஷ்டி
பற்பநாபன்-சத்வாரக ஸ்ருஷ்டி

த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய:
யத் கீர்த்தநாத் ஸோ த்புத ரூப கேஸரீ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி-தர்மோத்தர புராணம்

தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு-அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி –தைத்ரியம் சிஷா வல்லி -இவர்கள் ஆராதிக்கிறார்கள் தஸ்ய யஞ்ஞவராஹஸ்ய –தேஷாமபி நமோ நம-எம்பெருமானுக்குப் பண்ணும் அஞ்சலியே இறே இவர்களும் பண்ணுவது

ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
உனக்கே -என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
நாம்-என்றும் –-யாம் -என்றும் –மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

முதல் மூன்று பாசுரங்களால் ரஹஸ்ய த்ரயங்களும் -இதில் ஆச்சார்ய உபதேசமும் என்றவாறு –உபதேச திரு வாக்கு -ஓங்கார த்வனியும் -ஆழி போன்ற பிரகாசமும் உண்டே நம் ஆச்சார்யர்களுக்கு –பஞ்ச சம்ஸ்காரம் -லாஞ்சனை உண்டே

ஆழி மழைக் கண்ணார் என்கிற மேகம் நம்மாழ்வார்–உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள் –ஆளவந்தார் ஆறு -எம்பெருமானார் ஏரி –74 சிம்ஹாசானாதிபதிகள் மூலம் -நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து-என்றவாறு –

இப் பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.

ஆழி மழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்-ஒன்று நீ கை கரவேல் – மூன்று மகா மந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்-ஆழியுட் புக்கு – வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து-முகந்து கொடு – அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து-ஆர்த்தேறி – கம்பீரமாக எழுந்து-ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து – கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால்,-ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்!ஆழி போல் மின்னி – திவ்ய ஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற-ஆச்சார்யர்கள் (ஞானத்தால் ஒளி பெற்றதால்!) திருச் சக்கரமாகவும் உருவகப் படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!–வலம்புரி போல் நின்றதிர்ந்து – ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்-தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் – ஞானத்தை மழை போல் பொழிந்து-நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் – (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில்
நாங்கள் சரண் புகுந்தோம் (“மார்கழி நீராட” என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)

———–

மாயனைத் தாமோதரனைச் செப்பு –1-மாயனைச் செப்பு –2-மன்னு வட மதுரை மைந்தனைச் செப்பு-3-தூய பெருநீர் யமுனைத் துறைவனைச் செப்பு-4-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைச் செப்பு-5-தாயைக் குடல் விளக்கம் செய்தவனைச் செப்பு-6-தாமோதரனைச் செப்பு-குடிக்கிற குடி நீர்கள் (ஓவ்ஷதம் ) இவை –இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு-உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே-பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –

மாயனை –ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் –உபய விபூதி உக்தனாய் –ஸ்ரீ யபதியாய்-ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

யதோ வாசோ நிவர்த்தந்தே–-யஸ்ய அமதம் தஸ்ய மதம்- அவிஞ்ஞாதம் விஜா நதாம்–
பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும் வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் – இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –

வட மதுரை -மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
(மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )

தூய பெரு நீர் யமுனை –யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்-என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம்
பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே
கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படி

கவிபாடுவார்க்கு ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால்,
வடமதுரை மைந்தனை” என்று ஊரும்,-“தாமோதரனை” என்று பேரும்,“யமுனைத் துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன.

தோன்றும் -“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,”-கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது

நாராயணன் -என்றும் – பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் – ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் – ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியேஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –

ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –

இது சரம ஸ்லோக விவரணம் –

———–

புள்ளரையன்-அவனுக்கு நிரூபக தர்மம்-ஆஸ்ரிதர் தனக்கு நிரூபகம் ஆம்படி இறே இவர்களுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் –
பகவத் விஷயத்தில் வழியே இழியுமவர்கள் ஆகையாலே-பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள் –
ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச—அகஸ்திய ப்ராதரம்- நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே
வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே

கஜேந்திர ஆபத்தை ஹரிபரியாகப் போக்குவித்த ஹரி-பரத்வாதிகள் பஞ்ச-கஜேந்திர மோக்ஷம் ஆகிய -ஆறு விஷயங்களையும் ஆறாம் பாட்டில் –-ஜகத் த்ராணம் மறந்து கஜத் த்ராணம் பண்ண வந்த ஜகன் நாதன் -ஹரி திரு நாமம் கொண்டவன் -ஹரி நாமம் சொல்லவே ஜெயம் கிட்டும்

ஹரி ஹரி என்கை யாவது –ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதானாம் ஹரி –( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே-உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

————

காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து-வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்- ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ–உத்காய தீனாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நாநாம் திவமஸ்பர்ச்ச த்வனி தத் நசச நிர்மந்தந ச சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேன திஸாம் மங்களம் –

அவன் கண் அழகிலே தோற்றுப் பாடுகிற த்வனியும் –இவர்கள் காலில் சிலம்பின் த்வனியும் –குழல்களில் வண்டுகளின் த்வனியும் – ஆபரணங்கள் தன்னில் தான் கல கல வென்கிற ஒலியும் கைகளில் வளைகளின் ஒலியும் தயிர் கடைகிற ஓசையோடே கலசி கிளர்ந்து பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே பரிமாறா நிற்க இவ்வுயரத்தில் என்ன இருப்பு இருக்கிறிகோள்-என்று அங்குள்ளாரை வசை பாடுவாரைப் போலே இருக்கிற த்வனியும் கேட்டிலையோ –

————

வந்து நின்றோம் –உத்தரம் தீர மாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டித்த -என்னும் படியே
உன் பக்கலிலே வந்து நின்றோம் – கால்கள் தரையிலே பாவி நிற்கப் பெற்றோம் விபீஷணன்  -வடக்கு திக்கில் வந்து கரை அடைந்து -ஆகாசத்தில் பொறுமையுடன் நின்றானே -முதலிகள் புருஷகாரத்துக்கு -வந்து நின்றோம் இரண்டுக்கும் பிரமாணம்

தேவாதி தேவனை–ஜாதோசி தேவ தேவேச சங்கு சக்ர கதாதர –-ஸோஹம் தே தேவதேவேச (அர்ச்சனை பண்ண அறியோம் கிருபா மாத்ரத்தால் அருளாய் ) அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –

————

உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ–தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாயா–ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1)ஸ்வ பிரயத்ன சாமான்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபாய அத்யவச்யத்தாலே நிஷ்டனாய் இருக்கை —

மாமன் மகளே–அங்குத்தைக்கு உறவு ஸ்ரீ மாலா காரர் –-தானும் ஒரு மாலா காரர் மகள் இறே(ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹவ் உபாகதவ் — மாலாகார: க்ருபாகார: கோகிலஸ்வரபூஷண: I … மஹாதே’வி வஸேத்தஸ்ய க்ருஹே ஸதா)

——-

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்-ஸ்வ கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் –அறிதல் வித்வான் வேதனம் முக்கியம்-தியானித்து ஆனந்தமயன் என்று அறிந்து பேறு
இதுக்கே மேல் படி ஏஷஹ்யேவா நந்தயாதி-பர கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மம் ஊட்டுகிறது -இதில் ப்ரஹ்மமே காரணம் )-

ஏஷ ஹ்யேவாऽऽநந்த³யாதி । யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்³ரு’ஶ்யேऽநாத்ம்யேऽநிருக்தேऽநிலயநேऽப⁴யம்
ப்ரதிஷ்டா²ம் விந்த³தே । அத² ஸோऽப⁴யம் க³தோ ப⁴வதி ।

ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.

சித்த சாதனையாள் இருப்பாள் ஒருத்தி – விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜந் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா–ஸர்வ வேத ஸர்வ ஸாஸ்த்ர -எல்லாமே கண்ணன்-செய்த வேள்வியர் -அனைத்தையும் செய்தவன் ஆகிறான்
யோமா மேவம சம்மூடோஜா நாதி புருஷோத்தமம்-ச சர்வவித் பஜதிமாம் சர்வ பாவே நபாரதே —க்ருத க்ருத்யாச்ச பாரத -க்ருத க்ருத்யா பிரதீஷந்தே –

——–

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து-செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே-முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே இவையும் இளகிப் பதித்து இருக்கும் –

கற்றுக் கறவை –பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே -என்று-சக்கரவர்த்தி இளகினால் போலே-வா போகு–பின் ஒரு கால் வந்து போகு -முன்னிலும் பின் அழகு
இப் பாட்டில் ஈஸ்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு மிகவும் ஆதரணீய விஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்

கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே ஆபீஜாத்யம் உடையாளாய்
ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

(கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில்-விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம்ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம்

———–

அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –பேர் உறக்கம் இதில் -இவளும் உபாய பாவத்தில் அவளைப் போல் -ஆனால் கைங்கர்ய பாவத்தில் கண் துயில் அறியாள்

பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளை போலே
கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து-கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-

அவர்களுடைய அனுஷ்டானமும்-இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –
விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் – விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்

———-

புள்ளின் வாய் கீண்டானை–இதிலும் அடுத்த பாசுரத்தில்-போதரிக் கண்ணினாய் –ஞானம் தனக்கு உஜ்ஜீவனம்-நா உடையாய் -எடுத்துச் சொல்லும் சாமர்த்தியம் -மற்றவர் உஜ்ஜீவிக்க-இரண்டும் ஆச்சார்யருக்கு வேண்டுமே

கீர்த்திமை பாடி– சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய ரஞ்சநீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகளும் மேல் எழுத்து இடும் படியான வீரம் இறே
உகவாதற்கும் விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –

கள்ளம் தவிர்ந்து-சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று-சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ள இக் குற்றம் அவன் பொறுக்கத் தீரும்
சேஷித்வத்தை அபஹரித்தால் சேஷியுடைய குற்றம் பொறுத்தோம் என்பார் இல்லையே
குற்றம் நின்று அனுபவித்தே போம் அத்தனை

(இந்த பெண் தானே இவளுக்கு சேஷி-பெருமாள் பக்தாநாம் -இருப்பை விட்டு தன்னைக் காட்டாமல் இருப்பதே அவனுக்கு கள்ளத்தனம்-அதே போல் இவள் இவர்களுக்கு காட்டாமல் இருப்பது கள்ளத்தனம் ஆகுமே )

———-

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்- ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய மத்யே வர்த்திக்கிற நமஸிலே பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வதந்த்ர்யம் தலை மடிந்தது காண்

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –யதஹரேவ விவ்ரு ஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத் (ஜாபால உபநிஷத் )–என்று பரமாத்மனி யோரக்தோ விரக்த அபரமாத்மனி -என்று பகவத் விஷயத்தில் சக்தராய்
இதர விஷயங்களில் விரக்தராய் -காஷாய வஸ்த்ரங்களைத் தவிர்த்து –
போக்கிய த்ரவ்யங்களில் விரக்தராய் சாத்விகராய் இருக்கும் சந்நியாசிகள் சந்த்யா வந்தனங்களைப் பண்ணி அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம்

நாவுடையாய்-ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்-நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்-சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்-நீ எல்லாம் படுத்தினாலும் உன் பேச்சின் இனிமை கேட்க்கும் படி நா வீறுடையவள் அன்றோ –

பங்கயக் கண்ணானைப் பாட-உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் – (இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

—————

நானே தானாயிடுக”-“ரூஹ்ராணி ஸ்ருண்சந்வை ததா பாகவதேரி தாந். ப்ரணாமபூர்வகம் வந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ஸ:” என்று ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் சொல்லுகிற பிரமாணத்தில் பிரஸித்தம்”மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத்  வன பிரவேச ரகுநந்தனஸ்ய என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைகையே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவத்வம்

————-

நாயகனில் -16–அம்பரமே –17 –-இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்கிற ஸ்ருதியினுடைய உப ப்ரும்ஹண மான அபய பிரதானத்திலே நிவேதயதமாம்-என்கிற ஸ்லோகத்தில் அவனைப் பெறும் இடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்று சொன்ன அர்த்தத்தை இப் பாட்டாலே சொல்லுகிறது

பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரசீத மத் வ்ருத்தம சிந்தயித்வா -என்றார் ஆளவந்தார்
சர்வ சாஸ்திரங்களையும் ஆராய்ந்தவர் ஆகையால் பெருப் பெருத்த உபாயங்களை பார்த்த இடத்தில் – தன் தலையால் அவனைப் பெறலாய் இருந்தது இல்லை –
பகவத் சம்பந்தம் உடையார்யோட்டை சம்பந்தமே பகவத் கடாக்ஷத்துக்கு உறுப்பு என்றார்
அதாகிறது -இவன் அத்யாவசியம் போட்கனாய் (கிருத்ரிமமாய் )இருக்கும் புருஷகாரம் வலிதாக அதுவே கார்யகரமாம் என்கை –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே- வாஸத் தடம் இறே உள்ளுக் கிடக்கிறது
க்ரீஷ்மே சீதமிவஹ்ருதம் -என்கிற தண்ணீருக்கு கொடி அணி நெடு மதிலும் வாசலில் வானவரும் வைக்குமா போலேயும் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு
பதாகாபிர் அலங்க்ருதாம் –தத்ர காஷாயி நோ வ்ருத்தான் என்று கொடியும் காவலும் கடை கட்டினால் போலேயும்

வாய் நேரந்தான்-ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
ராமோ த்விர் நாபி பாஷதே என்றும் –
அந்ருதம் நோக்த பூர்வம் மே என்றும் –
க்ருஷ்ணே ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ -(நேர்த்திக் கடன் போல் பிரதிஜ்ஜை தப்பாதே )

அறம் செய்யும்

ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ வேதாந்த அர்த்தமும்

நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் ஸித்தம்
தன்னுடையதாய் இருந்துள்ள உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தினை
மந்தரப் ப்ரஹ்மணி மத்யமேந நமஸா பும்சஸ் ஸ்வரூபம் -என்கிறபடியே
ஆத்மாவுக்கு நிலை நின்றதாய்-ஸ்வமாய் இறே பாரதந்த்ர்யம் தான் இருப்பது

அத்யா பயந்தீ-
பதிம் விஸ்வஸ்ய-யஸ்யாஸ்மி -என்று ஓதிக் கிடக்கிற
சேஷ சேஷி பாவம் அனுஷ்டிப்பார் இல்லாமையாலே அவனும் மறந்து கை விட்டு இருக்க
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்–என்று அவனை மறித்து வைத்து
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் – என்று ஒதுவித்தாள்-

———

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம்–இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பா மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு –ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்த தனியன் –

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய்–நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு

—————

மார்கழி திங்கள்–மாஸாநாம் மார்க்க சீர்ஷோஹம்–சைத்த்ரச் ஸ்ரீ மான் அயம் மாஹ -என்று-ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-
அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

நீராட-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்-என்று பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே

செல்வச் சிறுமீர்காள்– லஷ்மணோ லஷ்மி சம்பன்ன–அந்தரி ஷக்த ஸ்ரீ மான்–சது நாகவர ஸ்ரீ மான்

சிறுமீர்காள்–துல்ய சீல வயோ வ்ருத்தாம்

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம்
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -ஸ்ரீ பரமபத அனுபவம் -ஸூ சகம்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

நாராயணனே நமக்கே பறை தருவான் – சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம்
தநூம் மக் நான் உத்தரதே லோகான் –உத்தாராக ஆச்சார்யர் அன்றோ

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே-திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –ஸ்வரூப-உபாய-புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –

ஆகையால் இப் பாட்டு-திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப் பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது

——————

வையத்து வாழ்வீர்கள் -வாழ்ச்சி உள்ளது இங்கே இறே–ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ்-என்று நீங்களும் அவனும் ஒரே மண்ணிலே பிறக்கப் பெற்றி கோளே-கிருஷ்ணன் ஒளிக்க வேண்டும் ஆணாகாதே பெண்ணாகப் பெற்றி கோளே- அதுக்கு மேலே பருவம் கழிந்த பெண்களாகாதே அவன் உகக்கும் பருவத்தில் பெண்ணாகப் பெற்றி கோளே –
காக்கா ஓட்டுகிற மந்த்ரம் -காக்கை பின் போவதே —ஹாவு ஹாவு ஹாவு–

கேளீரோ-சம்ச்ரவே மதுரம் வாக்யம்-என்னும்படியே-ஸ்ரவணம் தானே-பிரயோஜனமாய் இருக்கிற படி-ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் -என்று தொடங்கி-புருஷார்த்தோ அயமேவைகோ யத்தா ஸ்ரவணம் ஹரே -என்றான் இறே –
வைசம்பாயன பகவான் இடம் சிஷ்யன் ஜனமேஜயன் தனக்கு புருஷார்த்தமாக சொல்லியது

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி-இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறதுஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும் மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —-ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம்துயின்ற பரமன்–ஸ்ரீ மான்–ஸூக ஸூப்த-பரந்தப–மயா போதித

மை இட்டு எழுதோம் –அஸி தேக்ஷணைகளாகையாலே வேண்டுவது இல்லைபக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ – அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ

உய்யுமாறு எண்ணி-எண்ணி உகந்து –மநோ ரத வேளையே தொடங்கி ரசிக்கிற படி
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம்–அசன்னேவ ச பவதி -என்று இறே முன்பு கிடந்தது –
சந்த மேனம் ததோ வித்து என்கிறபடி யாகை

—————

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி-அஷ்டாக்ஷரம் -மார்கழி
த்வயம் வையத்து –சரம ஸ்லோகம் ஓங்கி-புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் –அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் –மூன்று மட்டுமே அடியாரின் ஆத்ம ஸூத்திக்கு போதுமானவை;

பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே–ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –

முதலில் ஏஷ நாராயணன் -அடுத்து ஷீராப்தி நிகேதன் -பின்பு  ஆகதோ மதுரா நிலையன் –
நேராக சொல்லாமல் த்ரிவிக்ரமன் -ராமன் -கிருஷ்ணன் -இப்படி மூன்று பாசுரங்கள் –
இது முதல் பேர் பாடுதல் தொடக்கம்-பேர் பாடி-திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை-நாமம் நாமியாலும் அறிவிக்க முடியாத சம்பந்தம் உணர்த்துமே-தன் சரண் தந்திலன் தான் அது தந்து

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று-திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் –நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே
ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் -அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்
நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்
நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்
மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –

உத்தமன் பேர் என்கிறது திருமந்த்ரத்தை
முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் -சப்தம் சொல்லி
இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்-
இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான-த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும்-திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –

ஸ்ரீ நாராயண பரப்ரஹ்ம ! தத்வம் நாராயண பர: !
நாராயண பரஞ்சோதி ! ஆத்ம நாராயண பர: !
நாராயணனே பரப்ரஹ்மம் ! நாராயணனே பரதத்வம் !
நாராயணனே மேலான ஜோதி ! நாராயணனே பரமாத்மா !–இத்தையே நாராயணன் -பையத் துயின்ற பரமன்ஓங்கி உலகளந்த உத்தமன்

ஓங்கி உலகளந்த உத்தமன்–பரம பதத்தின் நின்றும் திருப் பாற்கடலிலே சாய்ந்து அருளி-
ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷனாய் இருக்கிற காலத்தில்
ஒருவனுக்கு ஆகஸ்மிக ஸ்வ கடாஷத்தாலே-சத்வ உத்ரேகம் பிறந்து அஹங்கார அபிபூதரான நமக்கு ரஷகன் ஆவான் ஆர் -என்று- ரஷக அபேஷை பிறந்தவாறே-சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம்-அதுவே விளை நீராக அபி விருத்தனாய்–ஓங்கி – பிறர் கார்யம் செய்ய -என்றால் பணைக்கும் இறே -பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக் கண்டால் எழுமா போலே-பிறர் கார்யம் செய்கை சத்தா ப்ரயுக்தம் -என்கை

நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே-இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை

மும்மாரி பெய்து –ரஹஸ்ய த்ரயம்–ஷட்க த்ரயம்-தத்வ த்ரயம்-ஆகார த்ரய ஜ்ஞானம்-அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யார்த்வம் -அநந்ய போக்யத்வம் 

பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப– ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்–இடங்களிலே ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்- பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்–
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே- ஸூகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர ––

————–

ஆழி போல் மின்னி-வலம்புரி போல் நின்று அதிர்ந்து–-ஒளியும் ஒலியும் – இரண்டுமே இப்பாசுரத்தில் -பர்ஜன்யனும் நான் செய்ய வேண்டும் அடிமை என் என்று கேட்க
அவனை நியமிக்கிறார்களாய் இருக்கிறது –

ஊழி முதல்வன்-அத்வாரக ஸ்ருஷ்டி
பற்பநாபன்-சத்வாரக ஸ்ருஷ்டி

த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய:
யத் கீர்த்தநாத் ஸோ த்புத ரூப கேஸரீ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி-தர்மோத்தர புராணம்

தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்-
பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு-அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-

சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி –தைத்ரியம் சிஷா வல்லி -இவர்கள் ஆராதிக்கிறார்கள் தஸ்ய யஞ்ஞவராஹஸ்ய –தேஷாமபி நமோ நம-எம்பெருமானுக்குப் பண்ணும் அஞ்சலியே இறே இவர்களும் பண்ணுவது

ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
உனக்கே -என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
நாம்-என்றும் –-யாம் -என்றும் –மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

முதல் மூன்று பாசுரங்களால் ரஹஸ்ய த்ரயங்களும் -இதில் ஆச்சார்ய உபதேசமும் என்றவாறு –உபதேச திரு வாக்கு -ஓங்கார த்வனியும் -ஆழி போன்ற பிரகாசமும் உண்டே நம் ஆச்சார்யர்களுக்கு –பஞ்ச சம்ஸ்காரம் -லாஞ்சனை உண்டே

ஆழி மழைக் கண்ணார் என்கிற மேகம் நம்மாழ்வார்–உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள் –ஆளவந்தார் ஆறு -எம்பெருமானார் ஏரி –74 சிம்ஹாசானாதிபதிகள் மூலம் -நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து-என்றவாறு –

இப் பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.

ஆழி மழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்-ஒன்று நீ கை கரவேல் – மூன்று மகா மந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்-ஆழியுட் புக்கு – வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து-முகந்து கொடு – அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து-ஆர்த்தேறி – கம்பீரமாக எழுந்து-ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து – கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால்,-ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்!ஆழி போல் மின்னி – திவ்ய ஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற-ஆச்சார்யர்கள் (ஞானத்தால் ஒளி பெற்றதால்!) திருச் சக்கரமாகவும் உருவகப் படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!–வலம்புரி போல் நின்றதிர்ந்து – ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்-தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் – ஞானத்தை மழை போல் பொழிந்து-நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் – (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில்
நாங்கள் சரண் புகுந்தோம் (“மார்கழி நீராட” என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)

———–

மாயனைத் தாமோதரனைச் செப்பு –1-மாயனைச் செப்பு –2-மன்னு வட மதுரை மைந்தனைச் செப்பு-3-தூய பெருநீர் யமுனைத் துறைவனைச் செப்பு-4-ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைச் செப்பு-5-தாயைக் குடல் விளக்கம் செய்தவனைச் செப்பு-6-தாமோதரனைச் செப்பு-குடிக்கிற குடி நீர்கள் (ஓவ்ஷதம் ) இவை –இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு-உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே-பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –

மாயனை –ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் –உபய விபூதி உக்தனாய் –ஸ்ரீ யபதியாய்-ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

யதோ வாசோ நிவர்த்தந்தே–-யஸ்ய அமதம் தஸ்ய மதம்- அவிஞ்ஞாதம் விஜா நதாம்–
பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும் வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் – இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –

வட மதுரை -மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
(மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )

தூய பெரு நீர் யமுனை –யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்-என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம்
பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே
கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படி

கவிபாடுவார்க்கு ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால்,
வடமதுரை மைந்தனை” என்று ஊரும்,-“தாமோதரனை” என்று பேரும்,“யமுனைத் துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன.

தோன்றும் -“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,”-கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது

நாராயணன் -என்றும் – பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் – ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் – ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியேஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –

ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –

இது சரம ஸ்லோக விவரணம் –

———–

புள்ளரையன்-அவனுக்கு நிரூபக தர்மம்-ஆஸ்ரிதர் தனக்கு நிரூபகம் ஆம்படி இறே இவர்களுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் –
பகவத் விஷயத்தில் வழியே இழியுமவர்கள் ஆகையாலே-பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள் –
ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச—அகஸ்திய ப்ராதரம்- நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே
வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே

கஜேந்திர ஆபத்தை ஹரிபரியாகப் போக்குவித்த ஹரி-பரத்வாதிகள் பஞ்ச-கஜேந்திர மோக்ஷம் ஆகிய -ஆறு விஷயங்களையும் ஆறாம் பாட்டில் –-ஜகத் த்ராணம் மறந்து கஜத் த்ராணம் பண்ண வந்த ஜகன் நாதன் -ஹரி திரு நாமம் கொண்டவன் -ஹரி நாமம் சொல்லவே ஜெயம் கிட்டும்

ஹரி ஹரி என்கை யாவது –ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதானாம் ஹரி –( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே-உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

————

காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து-வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்- ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ–உத்காய தீனாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நாநாம் திவமஸ்பர்ச்ச த்வனி தத் நசச நிர்மந்தந ச சப்த மிஸ்ரிதோ நிரஸ்யதே யேன திஸாம் மங்களம் –

அவன் கண் அழகிலே தோற்றுப் பாடுகிற த்வனியும் –இவர்கள் காலில் சிலம்பின் த்வனியும் –குழல்களில் வண்டுகளின் த்வனியும் – ஆபரணங்கள் தன்னில் தான் கல கல வென்கிற ஒலியும் கைகளில் வளைகளின் ஒலியும் தயிர் கடைகிற ஓசையோடே கலசி கிளர்ந்து பரமபதத்தில் சென்று கிட்டி கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே பரிமாறா நிற்க இவ்வுயரத்தில் என்ன இருப்பு இருக்கிறிகோள்-என்று அங்குள்ளாரை வசை பாடுவாரைப் போலே இருக்கிற த்வனியும் கேட்டிலையோ –

————

வந்து நின்றோம் –உத்தரம் தீர மாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டித்த -என்னும் படியே
உன் பக்கலிலே வந்து நின்றோம் – கால்கள் தரையிலே பாவி நிற்கப் பெற்றோம் விபீஷணன்  -வடக்கு திக்கில் வந்து கரை அடைந்து -ஆகாசத்தில் பொறுமையுடன் நின்றானே -முதலிகள் புருஷகாரத்துக்கு -வந்து நின்றோம் இரண்டுக்கும் பிரமாணம்

தேவாதி தேவனை–ஜாதோசி தேவ தேவேச சங்கு சக்ர கதாதர –-ஸோஹம் தே தேவதேவேச (அர்ச்சனை பண்ண அறியோம் கிருபா மாத்ரத்தால் அருளாய் ) அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –

————

உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ–தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாயா–ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1)ஸ்வ பிரயத்ன சாமான்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபாய அத்யவச்யத்தாலே நிஷ்டனாய் இருக்கை —

மாமன் மகளே–அங்குத்தைக்கு உறவு ஸ்ரீ மாலா காரர் –-தானும் ஒரு மாலா காரர் மகள் இறே(ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹவ் உபாகதவ் — மாலாகார: க்ருபாகார: கோகிலஸ்வரபூஷண: I … மஹாதே’வி வஸேத்தஸ்ய க்ருஹே ஸதா)

——-

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்-ஸ்வ கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் –அறிதல் வித்வான் வேதனம் முக்கியம்-தியானித்து ஆனந்தமயன் என்று அறிந்து பேறு
இதுக்கே மேல் படி ஏஷஹ்யேவா நந்தயாதி-பர கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மம் ஊட்டுகிறது -இதில் ப்ரஹ்மமே காரணம் )-

ஏஷ ஹ்யேவாऽऽநந்த³யாதி । யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்³ரு’ஶ்யேऽநாத்ம்யேऽநிருக்தேऽநிலயநேऽப⁴யம்
ப்ரதிஷ்டா²ம் விந்த³தே । அத² ஸோऽப⁴யம் க³தோ ப⁴வதி ।

ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.

சித்த சாதனையாள் இருப்பாள் ஒருத்தி – விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜந் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்த்தா–ஸர்வ வேத ஸர்வ ஸாஸ்த்ர -எல்லாமே கண்ணன்-செய்த வேள்வியர் -அனைத்தையும் செய்தவன் ஆகிறான்
யோமா மேவம சம்மூடோஜா நாதி புருஷோத்தமம்-ச சர்வவித் பஜதிமாம் சர்வ பாவே நபாரதே —க்ருத க்ருத்யாச்ச பாரத -க்ருத க்ருத்யா பிரதீஷந்தே –

——–

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து-செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே-முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே இவையும் இளகிப் பதித்து இருக்கும் –

கற்றுக் கறவை –பவாமித் ருஷ்ட்வாச புநர் யுவவே -என்று-சக்கரவர்த்தி இளகினால் போலே-வா போகு–பின் ஒரு கால் வந்து போகு -முன்னிலும் பின் அழகு
இப் பாட்டில் ஈஸ்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு மிகவும் ஆதரணீய விஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்

கிருஷ்ணன் ஊருக்கு ஒரு பிள்ளையானால் போலே ஆபீஜாத்யம் உடையாளாய்
ஊருக்கு ஒரு பெண் பிள்ளையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

(கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில்-விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம்ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம்

———–

அனந்தல் -ஆற்ற அனந்தல் -உறக்கம் -பேர் உறக்கம் -நான்கு பாசுரங்கள்
பிரதம ஸ்வ கத -பர கத -சரம ஸ்வ கத பர கத ஸ்வீ காரங்கள் நான்கையும் சொன்னவாறு –பேர் உறக்கம் இதில் -இவளும் உபாய பாவத்தில் அவளைப் போல் -ஆனால் கைங்கர்ய பாவத்தில் கண் துயில் அறியாள்

பெருமாளை பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளை போலே
கிருஷ்ணனை அல்லது அறியாதே பின் தொடர்ந்து-கிருஷ்ண விஷயத்தில் போரப் பரிவனாய் இருப்பான் ஒருவனுடைய தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-

அவர்களுடைய அனுஷ்டானமும்-இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –
யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –
விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் – விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்

———-

புள்ளின் வாய் கீண்டானை–இதிலும் அடுத்த பாசுரத்தில்-போதரிக் கண்ணினாய் –ஞானம் தனக்கு உஜ்ஜீவனம்-நா உடையாய் -எடுத்துச் சொல்லும் சாமர்த்தியம் -மற்றவர் உஜ்ஜீவிக்க-இரண்டும் ஆச்சார்யருக்கு வேண்டுமே

கீர்த்திமை பாடி– சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய ரஞ்சநீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகளும் மேல் எழுத்து இடும் படியான வீரம் இறே
உகவாதற்கும் விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –

கள்ளம் தவிர்ந்து-சோரேண ஆத்ம அபஹாரிணா-என்று-சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை க்ஷமை கொள்ள இக் குற்றம் அவன் பொறுக்கத் தீரும்
சேஷித்வத்தை அபஹரித்தால் சேஷியுடைய குற்றம் பொறுத்தோம் என்பார் இல்லையே
குற்றம் நின்று அனுபவித்தே போம் அத்தனை

(இந்த பெண் தானே இவளுக்கு சேஷி-பெருமாள் பக்தாநாம் -இருப்பை விட்டு தன்னைக் காட்டாமல் இருப்பதே அவனுக்கு கள்ளத்தனம்-அதே போல் இவள் இவர்களுக்கு காட்டாமல் இருப்பது கள்ளத்தனம் ஆகுமே )

———-

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்- ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய மத்யே வர்த்திக்கிற நமஸிலே பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வதந்த்ர்யம் தலை மடிந்தது காண்

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –யதஹரேவ விவ்ரு ஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத் (ஜாபால உபநிஷத் )–என்று பரமாத்மனி யோரக்தோ விரக்த அபரமாத்மனி -என்று பகவத் விஷயத்தில் சக்தராய்
இதர விஷயங்களில் விரக்தராய் -காஷாய வஸ்த்ரங்களைத் தவிர்த்து –
போக்கிய த்ரவ்யங்களில் விரக்தராய் சாத்விகராய் இருக்கும் சந்நியாசிகள் சந்த்யா வந்தனங்களைப் பண்ணி அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம்

நாவுடையாய்-ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்-நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்-சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்-நீ எல்லாம் படுத்தினாலும் உன் பேச்சின் இனிமை கேட்க்கும் படி நா வீறுடையவள் அன்றோ –

பங்கயக் கண்ணானைப் பாட-உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் – (இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

—————

நானே தானாயிடுக”-“ரூஹ்ராணி ஸ்ருண்சந்வை ததா பாகவதேரி தாந். ப்ரணாமபூர்வகம் வந்த்யா யோ வதேத் வைஷ்ணவோ ஹி ஸ:” என்று ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் சொல்லுகிற பிரமாணத்தில் பிரஸித்தம்”மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத்  வன பிரவேச ரகுநந்தனஸ்ய என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-இல்லாத குற்றத்தை உண்டு என்று ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே உண்டு என்று இசைகையே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவத்வம்

இதில் நானேதான் ஆயிடுக என்பது சாரம். இதில் பாகவத ப்ராதான்யமும் விசிஷ்டாத்வைதமதமும் காட்டப்படுகிறது. ப்ரஹ்லாதன் தன்னை எம்பெருமானாகவே நினைத்து “அவனேநான்” என்று சொன்னான். “த்வம்வா அஹமஸ்மி பகவோ தேவதே” என்றது உபநிஷத்து.
ஸோம்ஹ, ஸோம்ஹ என்பது உபாசன பிரகாரம். இவ்வாறு ஸோஹம், ஸோஹம் என்று சொல்லிக் கொண்டே வந்தால் ஹம்ஸ என்று மாறி விடுகிறது. இதனால் தான் பரமஹம்ஸம் என்று உபாசனம் செய்பவர்களை சொல்வது, தாஸத்வம் என்பது ஜீவனுக்கு ஏற்படும். ஆக ஸோஹம் என்பது தாஸோஹம் என்பதில் முடியும். ஜீவாத்மாவிக்கும் பரம் பொருளுக்கும் ஒருவகையில் அபேதம் ஒருவகையில் பேதம் என்பது இங்கு புலப்படும். பேதம், அபேதம் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் ஆனபடியால் பொருத்தம் உள்ளதாக ஆகாதே என்று ஆத்மபாவத்தை முன்னிட்டு அபேதமும் வரலாம். விருத்தமான இந்த இரண்டும் ஓரிடத்திலே இருப்பது இயலாதது. ஆயினும் நரசிம்மம் என்று ஒருவரையே நரம் என்றும் சிம்மம் என்றும் கூறுகின்றோம். அதுபோல் இங்கும் நான் என்று சொல்லக்கூடிய பொருளும். இதை பட்டர் “விருத்தே வையக்ரீ ஸுகடித ஸமாநா திகரணே ந்ரஸிம்த்வே பிப்ரத் வரத பிபரா மாஸித ஜகத்” என்பதால் ஸூசிப்பித்தார். ஆகையாலே தத்துவமன்று. தத் = அந்தப்ரம்மம். த்வம் = நீ அன்று என்று சொல்லப்பட்டது.

————-

நாயகனில் -16–அம்பரமே –17 –-இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்கிற ஸ்ருதியினுடைய உப ப்ரும்ஹண மான அபய பிரதானத்திலே நிவேதயதமாம்-என்கிற ஸ்லோகத்தில் அவனைப் பெறும் இடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்று சொன்ன அர்த்தத்தை இப் பாட்டாலே சொல்லுகிறது

பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரசீத மத் வ்ருத்தம சிந்தயித்வா -என்றார் ஆளவந்தார்
சர்வ சாஸ்திரங்களையும் ஆராய்ந்தவர் ஆகையால் பெருப் பெருத்த உபாயங்களை பார்த்த இடத்தில் – தன் தலையால் அவனைப் பெறலாய் இருந்தது இல்லை –
பகவத் சம்பந்தம் உடையார்யோட்டை சம்பந்தமே பகவத் கடாக்ஷத்துக்கு உறுப்பு என்றார்
அதாகிறது -இவன் அத்யாவசியம் போட்கனாய் (கிருத்ரிமமாய் )இருக்கும் புருஷகாரம் வலிதாக அதுவே கார்யகரமாம் என்கை –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே- வாஸத் தடம் இறே உள்ளுக் கிடக்கிறது
க்ரீஷ்மே சீதமிவஹ்ருதம் -என்கிற தண்ணீருக்கு கொடி அணி நெடு மதிலும் வாசலில் வானவரும் வைக்குமா போலேயும் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு
பதாகாபிர் அலங்க்ருதாம் –தத்ர காஷாயி நோ வ்ருத்தான் என்று கொடியும் காவலும் கடை கட்டினால் போலேயும்

வாய் நேரந்தான்-ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
ராமோ த்விர் நாபி பாஷதே என்றும் –
அந்ருதம் நோக்த பூர்வம் மே என்றும் –
க்ருஷ்ணே ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ -(நேர்த்திக் கடன் போல் பிரதிஜ்ஜை தப்பாதே )

அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா-பாலாபி சந்தி ரஹிதமாக ஆந்ரு சம்சயத்தாலே கொடுக்கைமஹதா தபஸா ராம -என்று சக்கரவர்தியைப் போலே
அவதாரத்துக்கு அதிருஷ்ட யத்னம் பண்ண வேண்டா இறே-எடுத்த பேராளன் ஆகையால்(சாத்விக தானம் லக்ஷணம் கீதையில் -பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் –
பிரயோஜனம் கருதாமல் -கண்ணன் திரு உள்ளம் உகக்கும் என்றே கொடுப்பதே)

எம்பெருமான்-பெண்களுக்கு கிருஷ்ணனைப் பெற்றுத் தந்தவன் – ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ –என்றும் –உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று என்றே – எல்லாமாய் இருக்குமவர்களுக்கு அவ்வொன்றையும் தாராய்-

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
பொற் கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –-பலதேவன் என்று திரு நாமம்-செல்வா பட்டம் – பலை கதா மநி -(ஆளவந்தார் )
அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்-
இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )

சந்தேசை சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர் விதை – ராமேண ஆஸ்வாசிதா கோப்ய ஹரிணா ஹ்ருத சேதச -என்கிறபடியே-எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ-திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்-சென்றால் குடையாம் -இத்யாதியாக வேண்டாவோ –
உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –(நாரங்களுக்கு ஆஸ்ரயம்-நாராயணனே எங்கள் படுக்கை நீ தான் தர வேண்டும் என்கிறார்கள்)

செந்தாமரைக் கையால்-அவனும் ஆசைப்படும் கை – அவன் உகக்கும் அணி மிகு தாமரைக் கை – அவனுடையது தாமரைக் கை இறே
ததவ் பாஹு (ராஸக்ரீடை களைப்பு -சாய்ந்து கண்ணன் தோள் உடன் இணைந்து )எங்களை –எங்களை மா ஸூச என்னும் கை
நீங்கள் பண்ணுகிற பாபத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டா நான் உள்ளேன் -என்கிற
இப் பெருமாளுடைய அஞ்சேல் என்ற கை
பவேயம் சரணம் ஹி வ -(ராக்ஷஸிகளுக்கும் மா ஸூச )என்னும் கை-
ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டா என்கிறது பெரிய பிராட்டியார் அஞ்சல் என்ற கை(‘மாதர் மைதிலி ராக்ஷஸீஸ்த்வயிததை வார்த்ராபராதாஸ்த்வயா ரக்ஷந்த்யாபவநாத்ம ஜால்லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா’ -அவள் கையை உன் கையால் பிடி ஜனகனும் முதலில் -)

முப்பத்து மூவர் இத்யாதி–வேத அபஹார -குரு பாதக -தைத்ய பீடாதி துக்க நிவ்ருத்தியை ஆசைப்பட்டார்க்கோ உதவலாவது
நீ உணரும்படி காண ஆசைப்பட்டார்க்கு உதவலாகாதோ(நீ உணர்ந்தாலே நடுக்கமும் போய் இன்பமும் பெறுவோம்

நீராட்டு தாரா பித்ரு க்ருதா இதி -என்று பெருமாள் பிராட்டியுடைய சவுந்தர்யாதிகள் கிடக்க பிராட்டியை உகப்பது ஐயர் பண்ணிய விவாஹம் என்று ஆய்த்து – அப்படியே இவள் தந்த கிருஷ்ணன் என்று இவர்களும் உகப்பார்கள் ஆயிற்று –உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்

அம்பரமே, உந்து, முப்பத்து இதில் பிரணவார்த்தம் அ, உ, ம என்று பிரணவத்தை ஸூசிப்பித்துக் கொண்டு விளக்கப்படுகிறது.
அமலனாதி, உகந்த உள்ளத்தனாய், மந்திபாய் என்று அமலனாதி பிரானில் உள்ளது போல் உந்தன்னோடு உறவேல் நமக்கு எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பதில் நன்றாக விளக்கப்பட்டுள்ளது.
புருஷகார ப்ரதிபாதனம். குத்து, முப்பத்து இந்த இரண்டு பாசுரத்திலும் வரிசையாக த்வயத்தில் சொல்லப்பட்ட இரண்டு கண்டங்கள் சொல்லப்படுகின்றன. முதல் பாசுரம் ப்ராபகத்வபரம், இரண்டாவது ப்ராப்யத்வபரம். உக்கமும் தட்டொளியும் என்று அங்கு கைங்கர்யம் சொல்லப்பட்டது.
முப்பத்து மூவர் என்கிற பாசுரம் பரித்ராணாய சாதூனாம் என்கிற கீதையில் சொன்ன அர்த்தம் சொல்லுவதற்காக வந்தது.

த்வயத்தில் பூர்வ வாக்யார்த்தம் குத்து விளக்கு–உத்தர வாக்யார்த்தம் ஏற்ற கலங்கள்

மாற்றாதே பால் சொரியும்-பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணு மே பரமம் வச–என்றும்
யத் தேஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித காம்யயா -ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் இதஞ்ச ச ச்ருணு மைத்ரேய -என்றும் ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று ஊற்று மாறாதே பால் சொரியும்

மகனே அறிவுறாய் ஒரு தடவை–சுடரே துயில் எழாய்–ஒரே பாசுரத்தில் இரண்டு தடவை-அறிவுறாய் -மதுரையில் அவதரித்து இங்கே நந்த கோபன் மகனாக வந்த பிரயோஜனம் ஆராய்ந்து பாராய்-

பெரியாய் – யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –
யஸ்ய அமதம் தஸ்ய மதம் –
அவ்விஞ்ஞாதம் விஜாநதாம் என்றும்
பிரமாணங்களுக்கு-இவ்வளவு என்ன ஒண்ணாத படி இருக்கை  -அபரிச்சின்ன ஸ்வரூப குண விபூதிகளை உடையவனே –

கடோகநிஷத்தில் உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ரபோதத, நிசாமயத என்று எழுந்து இருத்தல், விழித்தல், அறிவு, பெறுதல், பார்த்தல் என்று சொல்லப்பட்டது. இவை திருப்பாவையில் உள்ளன. எழுந்திருக்கும்போது ஹரிநாம கீர்த்தனம் செய்ய வேண்டும். நடந்து செல்லும்போது கேசவனைப் பாடவேண்டும். சாப்பிடும்போது கோவிந்தனை, தூங்கும்போது மாதவனை என்றது ஸாஸ்திரம். இதிலும் ஹரி என்ற பேரரவம், கேசவனைப் பாடவும், கோவிந்தா உந்தன்னைப் பாடி, வங்கக் கடல் கடைந்த மாதவனை என்று சொல்லி இருப்பதை நோக்கவும். காலை, பகல், மாலை மூன்று வேளையிலும் சந்தியாவந்தனம் முடிந்தவுடன் ரங்கநாதனையும் திருவேங்கடமுடையானையும் தேவப் பெருமானையும் யதுகிரி நாதனையும் வணங்கவேண்டும் என்பது சாஸ்திரம்.
ஸ்ரீரங் மங்கலநிதிம் கருணா நிவாஸம் ஸ்ரீவேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம் ஸ்ரீசம் நவாமி சிரஸா யதுசைல தீபம்

இங்கும் “பையத்துயின்ற பரமனடி” “வெள்ளத்தரவில்” “இங்ஙநே போந்தருளி என்பதில் ரங்கநாதன் துதிக்கப்பட்டார். “செல்வ திருமாலால்” என்பதால் திருவேங்கடமுடையானும் தேவாதிராஜனை என்பதாலும் புள்ளரையன் கோயில் என்பதாலும் தேவப் பெருமாள் சொல்லப்பட்டார். ஏற்றக் கலங்கள் பாட்டில் ஆற்றப் படைத்தான் மகனே என்பதால் செல்வப்பிள்ளை சம்பத்குமாரன் சொல்லப்பட்டான்.

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலேசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-

1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ச்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதிகாரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக்கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –

திங்களும் ஆதித்யனும்–உபய வேதாந்தம்–ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் -அருளிச் செயல் கால ஷேபம்-இப்படிச் சொல்வதும் ஊற்றத்தைப் பற்ற —பரசமய நிரசன பூர்வகம் அது -செவிக்கு இனிய செஞ்சொல் இது–சஷூஸ் மத்தா து சாஸ்த்ரேண

கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம்

திங்களும் ஆதித்யனும் போலே–அங்கண் இரண்டும்-ஆசார்யர் கண் பகவான் கண் இரண்டும் வேண்டுமே–கர்ப்பம் கடாஷம் ஆசார்யரை காட்டும் கடாஷம்-

போந்தருளி -சதுர்க் கதி (ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் )இறே
கஜ சிம்ஹ கதீ வீரவ்-சார் தூல வ்ருஷ போபமவ் -புண்டரீக விசாலாக்ஷவ் கட்க தூணீ தநுர் தரவ் -இத்யாதிப் படி இறே
நடை அழகில் ருஷபத்தினுடைய செருக்கும் –
மத்த கஜத்தினுடைய திமிர்ப்பும் –
புலியினுடைய உறட்டும்-
சிம்மத்தினுடைய பராபி பாவன சாமர்த்தியமும் தோன்றி இருக்கும்
இது எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம்(ஸிம்ஹ ரிஷப வியாக்ர கஜ சர்ப்ப ஹம்ஸ கருட மஸ்தக -நடை அழகுகள் )

ஜகத் சிருஷ்டியில் உத்யோகித்து-தன்னோடு அவிபக்த நாம ரூபங்களாய்-ஸ்வா வயங்களான சேதனாசேதனங்களை-விபக்த நாம ரூபங்கள் ஆம்படி பண்ணி
இப்படி ஸ்வா வயவ விசிஷ்டனான தான் தண்டாகாரமாய் நீண்டு பிண்டாகாரமாய் நிமிர்ந்து
மகா சம்ப்ரமத்துடனே மகதாதி ரூபேண பிரகிருதியில் நின்றும் வேறு பட்டு வருமா போலே-

———-

இங்கு போற்றி என்று ஆறு ரஸம் சொல்லப்படுகிறது. நம்மால் உட்கொள்ளப்படும் பொருள்களின் சுவை ஆறு வகை.
(1) பக்ஷ்யம், போஜ்யம், சோஷ்யம், லேக்யம், காத்யம், பேயம்.
(1) பக்ஷணம், ஹவிஸ், வற்றல், துகையல், காய்கறி, பாயஸம், ஒளபசாரிகம், அர்க்யாதி.
(2) ஸாம்ஸ்பர்சிகம் – புஷ்பம், சந்தனம் முதலியவை
(3) ஸாந்த்ருஷ்டிகம் – தீபம், கற்பூர ஹாரத்தி, தூபம்
(4) ஆப்யவ்யவஹாரிகம் – போஜனம். இப்படி போஜனத்தில் ஆறு ரசங்கள்.

ஒருத்தி மகனாய் பிறந்து-தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம் ஸ்ரீவத்ச லக்ஷ்மம் ஸ்ரீவத்ச லக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம்பீதாம்பரம் சாந்த்ர பயோத லௌபகம் மஹார்ஹ வைடூர்ய கிரீட குண்டலத்விஷா பரிஷ் வக்த சஹஸ்ர குந்தலம் உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிஹி விரோசமாநம் வசுதேவ ஜக்ஷத

தேவகி பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர் பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானு-ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தவன் இறே -(ஏஷ நாராயண ஸ்ரீ மான்–ஆகாதோ மதுராம் புரம்)

————–

கீழே சம்யா பத்தி -உபகரணங்கள் பிரார்த்தனை
சா யுஜ்யம் -யுக -சேர்ந்து இருந்து கல்யாண குண அனுபவம் இதில்-
கூடி இருந்து குளிர்ந்து மகிழ்ந்து சாயுஜ்யம் -ஸம்மானம் பிரார்த்தனை
ஆக இரண்டு பட்டாலும்-சாம்யா பத்தியும்-குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது

யாம் பெரும் சம்மானம்-பதி சம்மாநிதா சீதா -என்று தோளில் மாலையை வாங்கியிட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்-பட்டர் -பிரணயித்வத்தாலே காலைப் பிடித்து நில் என்றார் என்பர்

சூடகமே —காப்பே
தோள் வளையே —திரு இலச்சினையே
தோடு —திரு மந்த்ரமே
செவிப்பூவே–த்வயமே
பாடகமே–சரம ஸ்லோகமே
இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் —பகவத் சம்பந்தத்யோதகங்களாய் -இருப்பன
இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே -திருமந்த்ரத்தை சொல்லுகிறது –
செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –
பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான-சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –
இம் மூன்று ரகச்யங்களாலும்-ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞானபரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு-பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ச்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்–ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –

இத்திருப்பாவையில் முதல் பாசுரத்தில் “கார்மேனிச் செங்கண்” என்றும், “செங்கண் சிறுச் சிறிதே” என்றும் “செங்கண் திருமுகத்து” என்றும் மும்முறை செங்கண் என்று சொல்லப்பட்டுள்ளது. இதிலிந்து மூன்று கண்களை உடைய எம்பெருமானான அழகிய லக்ஷ்மிநரஸிம்ஹனிடத்தில் ஆண்டாளுக்கு பக்தி அதிசயம் காட்டப்பட்டாகிறது. “தபன இந்து அக்னி நயன..” என்று ஸ்வாமி தேசிகன் மூன்று கண்ணை உடையவன் லக்ஷ்மி நரஸிம்ஹன் என்று சொன்னார் காமாஸிகாஷ்டகத்தில்.
“கோவிந்தா என்பதையும் இத்திருப்பாவையில் மூன்று முறை உபயோகித்திருக்கிறாள். “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா”, “குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா”, “பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா” என்று

இத்திருப்பாவையில் செங்கண், கோவிந்தா என்பதை மும்முறை சொன்னதுபோல் நாராணா என்ற நாமமும் மும்முறை சொல்லப்பட்டிருக்கிறது.
1. நாராயணனே நமக்கே பறை தருவான். 2. நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
3. நாற்றத்துழாய் முடி நாராணன் என்ற இடங்களில்.

திருப்பாவையில் ஆண்டாளால் காட்டப்பட்ட பன்னிரண்டு திருநாமம் ஒன்று உண்டு. (1) நாராணன் (2) ஓங்கி உலகளந்த உத்தமன் (வாமனன்) (3) தாமோதரன் (செய்த தாமோதரனை) (4) கேசவன் (கேசவனைப் பாடவும்) (5) தேவாதிதேவன் (6) மாதவன் (7) வைகுந்தன் (8) முகில் வண்ணன் (9) பங்கயக் கண்ணன் (10) மணிவண்ணன் (11) கோவிந்தன் (12) நெடுமால் இவைகள்.
மாயனை என்பது திருப்பாவையில் நான்கு முறை சொல்லப்பட்டிருக்கிறது (1) மாயனை மன்னு (2) மாமாயன் மாதவன் (3) மாயனைப்பாடு (4) அறைபறை மாயன் என்று. நான்கு வேதங்களின் ஸாரார்த்தத்தை காட்டுகிறது.

ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் என்பது மோக்ஷத்தின் நாலுவகை. ஸாயுஜ்யம் என்பதுதான் முக்யமான மோக்ஷம். முந்தியவை இதற்கு முன்தசைகள். (லோகேஷு) கோபிகைகளுக்கு கோகுலவாசம் சாலோக்யம். நந்தகோபனுடைய இல்லத்தை சேருதல் சாமீப்யம். மாலே மணிவண்ணா, கூடாரையிலும் ஸாமீப்யமும் ஸாயுஜ்யமும் சொல்லப்படுகின்றன.
கூடாரையில் சதம் மாலா ஹஸ்தா: சதம் அஞ்சன ஹஸ்தா: சதம் சூர்ணவஸ்தாக: சதம் வாஸோ ஹஸ்தா: என்று உபநிஷத்தில் மாலை, மை, மணத்தூள், ஆடை, ஆபரணம் இவைகள் ஒவ்வொன்ளையும் நூறு நூறு பெண்மணிகள் எடுத்து வந்து முக்தனை அலங்கரிக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட விஷயம் கூறப்படுகிறது. தம் பிரும்மகந்த: பிரவிசதி, பிரும்மரஸ: பிரவிசதி. பிரும்மதேஜ: பிரவிதி, பிரக்ஞயா விபஸ்யதி என்று ஐந்து குணங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. “என்றனைய பல்கலனும் என்பதால் அபஹதபாப்மா என்ற சொல்லப்பட்ட எட்டு குணங்களுக்கு ஆவரிபாவம் காட்டப்படுகிறது. ஆடையுடுப்போம் என்பதால் எம்பெருமானுக்கு தாம் செய்யும் தொண்டுகளுக்குப் பொருத்தமான கரணகளேபரம் இந்திரியம் சரீரம் முதலியவைகளை எடுத்துக் கொள்வது விளக்கப்பட்டது. பால்சோறு என்பதால் அமுதமாகிய பிராட்டியுடன் கூடின எம்பெருமானாகிற ஷாட்குண்யமான அன்னம் தெரிவிக்கப்படுகிறது. “ஸோச்நுதே சர்வாந்” என்று வேதத்தில் சொல்லப்பட்ட விஷயம் கூடியிருந்து என்பதால் பாட்டப்பட்டது. காமாநீ, காமரூபீ, அனுஸஞ்சரன் என்பதும் இங்கு அறியத்தகுந்தது. குறிர்ந்து என்பதால் “ஏஷ பிரும்ம பிரவிஷ்டோஸ்மி கிரீஷ்மே சீதமிவ ஸ்ரதம்” என்கிற விஷயம் சொல்லப்பட்டது. ஆக வைகுண்டத்தில் முக்தனுக்கு ஏற்படும் ஸாயுஜ்யம் இந்த பாசுரத்தில் ஆண்டாளால் நன்கு வெளியிப்பட்டது. அத்துடன் ஸார்ஷ்டிதையும் சொல்லப்பட்டது. அதாவது “ஸார்ஷ்டி தாதத்ர போகஸ்ய தாரதம்ய விஹீனதா” என்று சொல்லுகிறபடி ஏற்றத்தாழ்வு இல்லாமல் அநுபவிப்பது.

அறிவொன்றும் இல்லாத -1-அறிவில்லை-2-அறிவு ஓன்று இல்லை3-அறிவு ஒன்றும் இல்லை-இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –
ந தர்மோஷ்டமி ந பக்திமான்–நோன்ற நோன்பிலேன்–குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதி – இவை அன்றோ அறிவுடையோர் வார்த்தை

திருமந்திரத்தில் பிறந்து, கிருஷ்ண சரம ஸ்லோகத்தில் வளர்ந்து துவாயார்த்த நிரதராய் வர்த்திக்கை ஸ்வரூபம்.
திருமந்திரம் ஜ்ஞான பிரதானமான மந்திரம் என்றால், சரம ஸ்லோகம் விதி ரஹஸ்யம். துவய மஹாமந்திரம் அனுஷ்டான பரமான மந்திரம்.
திருமந்திரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது.
சர்ம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே பேறு என்கிறது.
துவயத்தில் பிராட்டியாலே பேறுஎன்கிறது.
ஆசார்ய சம்பந்தம் பெற்று ரஹஸ்ய த்ரிய உபதேசமும் பெற்று அனுஷ்டாதாவாய் போருகைக்கு
துவயார்த்தம் நன்றாக நெஞ்சில் பட வேண்டும். அதில் பூர்வகண்ட வாக்கியம் உபாயத்தையும்,
உத்தர கண்ட வாக்கியம் பலம்-புருஷார்த்தத்தையும் சொல்லுகிறது.
இதன் விளக்கமாக அவதரித்த ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் 27, 28 இரண்டும்.
ஆக , கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் பாசுரம் உபாய சுவீகாரமும், 29ம் பாசுரம்
சிற்றம் சிறுகாலை கைங்கர்ய பிரார்த்தனையையும் சொல்லுகின்றன.

அனன்ய ஸாத்யே ஸாபீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
ததேக உபாயதா யாஞ்சா –இதி பிரார்த்தனா மதி : சரணாகதி 

ந வேதாந்தாது சாஸ்திரம்-ந மதுமதனாது தத்வம் அகிலம்-ந ஸத்வாது ஆரோக்கியம்-ந துவயவசனத : க்ஷேமகரம்

செல்வத் திருமாலால்-உபய விபூதி யுக்தனான ஸ்ரீ யபதி யாலே
இப் பாட்டில் உபக்ரம உப சம்ஹாரங்களில் (மாதவனை கேசவனை –செல்வத் திருமாலால் )த்வயத்தில் போலே பிராட்டி சம்பந்தம் சொல்லிற்று ஆய்த்து-மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீ மன்
செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே

காலையில் எழுந்தவுடன் நாம் ஹரிநாம சங்கீர்த்தனத்தை ஏழுமுறை செய்யவேண்டும். இவ்விஷயம் ஆஹ்னிக க்ரந்தத்தில் காட்டப்பட்டுள்ளது. நாம் ஹரி என்கிற நாமத்தை உச்சரிக்கிறோம். ஹரி என்கிற ராமன், நமக்கு புருஷகார பூதையாயும் அவனுக்கு தர்ம பத்நியாயும் அமைந்துள்ள சீதாதேவியை காலையில் எழுந்தவுடன் நினைக்கிறான். “சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதி புத்யதே” என்பது ராமாயணம். திருப்பாவையிலும் பிராட்டியை சொல்லக்கூடிய திரு என்கிற சொல் ஏழுமுறை சொல்லப்பட்டுள்ளது. நாம் ஏழுமுறை பகவானை சொல்வதுபோல் அவனும் ஏழுமுறை திரு என்று பிராட்டியை சொல்கிறான். நித்ய விபூதியில் உள்ள பிராட்டியானவள் புருஷகாரபூதை ஆகிறாள். ராமாவதாரத்தில் சீதை அப்படி ஆகிறாள். கிருஷ்ண அவதாரத்தில் நீளா தேவி. அர்ச்சனையிலே நமக்கு ஆண்டாள் புருஷகாரம்.

திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகன் என்றும்
ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று

ஸ்ரீ கேசவ நம்பியையைக் கால் பிடித்து
இயம் கோதா –மம ஸூதா –பத்ரம் தே -ஸஹ தர்ம சரீதவ-ஜகத் ரக்ஷண தர்மம்
ஸ்ரீ பட்டருக்கு அபகரித்த ஸ்ரீ பட்டர் பிரான்
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்-கொம்பினுக்கும் அஃதே
ஸ்ரீ ரெங்க மன்னார் -ஸ்ரீ ஆண்டாள் –தரணியே பாக்யம் -தவம் உடைத்து
பல்லாண்டு பல்லாண்டு என்று ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்க மன்னாருக்குப் பாடிக் கொண்டே கால ஷேபம் செய்வோம்

–———————————-

Bagavath Geethaiyum
Thiruppavai
ஸ்ரீ பகவத் கீதை
ஸ்ரீ கோதா கீதை–ஸ்ரீ திருப்பாவை
1 உலகுக்குத் தந்தையான கிருஷ்ணனால் உபதேசிக்கப்பட்டது
2.தேவர்க்கும் தேவனான பகவானாலே உபதேசிக்கப்பட்டது
3.அர்ஜுனனை வியாஜமாக்கி உலகத்துக்கு உபதேசிக்கப்பட்டது
4.அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து அதன் மூலமாக அவனுக்கு ஆசார்யனாலே உபதேசிக்கப்பட்டது,
5 தனது க்ஷத்ரிய தர்மத்தை இழந்த அர்ஜுனனைக் குறித்து உபதேசிக்கப்பட்டது.
6 இதில் உபதேசம் செய்ததால் பலர் மாண்டனர்.
7 சர்வக்ஞனான பகவானால் உபதேசம் செய்யப்பட்டிருந்தும் அர்ஜுனன் மறந்தான்.
8 பாரதத்தில் சொல்லப்பட்டிருந்தும் பகவத்கீதை உபநிஷத்தாக கருதப்படுகிறது.
9 அர்ஜுனன் எனும் புருஷனான தோழனைக் குறித்து கிருஷ்ணன் உபதேசித்தது.
10 கிருஷ்ணன் சரம உபாயமான ப்ரபத்தியை கடைசியில் உபதேசம் செய்தான்.
11 கீதையை மக்களுக்கு உபதேசம் செய்து ஜகதாசார்யன் ஆனான் கண்ணன்.
12 ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி பல அல்லல்களை அடைந்து, வாடிக்கிடக்கும் மக்களுக்கு, தத்வஞானம் உண்டாவதற்காக கண்ணனால் உபதேசம் செய்யப்பட்டது. ஆக சோகநிவிருத்திக்காக ஏற்பட்டது கீதை.

13 விஜயனுக்கு மூன்று வகையில் சோகங்கள் ஏற்பட்டன. 1. பந்துக்களை அழிப்பதால் பாபம் ஏற்படும் என்ற சோகம். 2. தைவ ஸம்பத்து உள்ளவனுக்குத் தான் நற்கதி, ஆஸுர ஸம்பத் உள்ளவனுக்கு இல்லை என்று சொல்வதின் மூலம் நாம் ஆஸுர ஸம்பத்தில் சேர்ந்திருந்தால் என் செய்வது? என்ற சோகம். 3. கடினமான கர்ம, ஞான, பக்தி யோகஙஙகளை உபதேசமாகப் பெற்றதால், தம்மால் அவற்றை செய்ய முடியாதே என்ற சோகம். இம் மூன்றையும் ஸ்ரீகிருஷ்ணன் கீதோபதேசம் மூலமாகப் போக்கடித்தான்.

1 உலகத்துக்குத் தாயான ஆண்டாளால் உபதேசிக்கப்பட்டது.
2 கிருஷ்ணனுக்கு உபதேசித்து அவனுக்கும் ஆச்சார்ய பூதையான ஆண்டாளாலே உபதேசிக்கப்பட்டது.
3 கிருஷ்ணனை ?ியாஜமாகக்கி உலகதத்துக்கு உபதேசிக்கப்பட்டது.
4 கிருஷ்ணனுக்கு உபதெசித்து அவனுக்கும் ஆசார்ய பூதையான ஆண்டாளாலே உபதேசிக்கப்பட்டது.
5 ஜகத்ரக்ஷணத்தை தர்மமாக கொண்டு இருந்தும், அதை அடியோடு விட்ட பகவானைக் குறித்து உபதேசிக்கப்பட்டது.
6 இதில் உபதேசம் மூலம் மக்கள் அனைவரும் உஜ்ஜீவித்தனர்.
7 இங்கு ஆண்டாளால் உபதேசிக்கப்பட்ட அனைவரும் மறந்தார்கள் அல்லர். வழி தொடர்ந்தார்கள்.
8 திவ்ய பிரபந்தத்தில் சேர்ந்து திருப்பாவையும் உபநிஷத்தாக கருதப்படுகிறது. த்ரமிட உபநிஷத்துகளாக கருதப்பட்டாலும், உபநிஷத்துக்கும் வித்து ஆன படியால் மிகச் சிறந்த உபநிஷத்து.
9 பெண்களான தோழிகளைக் குறித்து, ஆண்டாள் உபதேசிக்கிறாள். ஏலோ ரெம்பாவாய் ஏல் = ஏற்றுக்கொள்! ஓர் = இதன் பொருளை தெரிந்துகொள்!. எம்பாவாய் = எனது தோழியே! என்பதும் பொருள் திருமங்கை மன்னனின் 11-5 திரு மோழியான மானமரும் மென்னோக்கி” என்பதில் தோழியை குறித்து சொல்வது போல் இங்கும் உணர்க.
10 அதே உபாயத்தை ஆண்டாள் முதலிலேயே மார்கழி என்பதால் உபதேசம் செய்தாள். மார்கழி மார்கசீர்ஷம் தலையான உபாயம்.
11 ஜகதாசார்யனான கண்ணனுக்கும் ஆசார்யை சிறுவர்களுக்கு வேதங்களை பயிற்றுவிப்பது போல், வேதாந்த அர்த்தங்களை உபதேசித்து ஆசார்யை ஆனாள்.
12 தஜ்வாலையுடன் கூடிய ஒரு பள்ளத்தில் சிக்குண்டு தவிக்கும் ஜீவர்கள் நற்கதி அடைய, வராஹ எம்பெருமானிடம் இருந்து உபதெசம் பெற்று, இவள் உபதேசித்தாள். ஆக சோக நிவருத்திக்காக ஏற்பட்டது இதுவும்.
13 இங்கும் மூன்று வகையில் சோகங்கள் ஏற்பட்டன.
1. இங்கும், ஆயர்பாடியில் துர்பிக்ஷம் ஏற்பட்டதால், இதை விலக்க, நோன்பு செய்தனர். இதனால் துர்பிக்ஷத்தால் ஏற்பட்ட சோகம் நோன்பின் மூலம் அகன்றது. 2. ஆயர்ப பெண்கள் நந்தனுடைய புதல்வனான கண்ணனைக் கணவனாக வரிக்க வேண்டும் என்று யமுனைக் கரையில் அர்ச்சித்தார்கள். கண்ணனைக் கணவனாக அடையாமையைப் பற்றிய சோகம். இதுவும் நோன்பால் அகன்றது. 3. மக்கள் உண்டியே உடையே என்கிற வகையில் திரிந்து கொண்டும் தவிக்கின்றனர். நற்கதியை அடைய இவர்களுக்கு வழி அறியாமல் இருந்தபடியால் சோக ஸமுத்ரத்திலேயே மூழ் இருந்தனர். அந்த சோகமும், இதனால் நிவ்ருத்தமானது. நோன்பு, கண்ணனை பர்த்தாவாக அடைவது, தத்வங்களை உணர்த்துவது இவை மூன்றும் இத் திருப்பாவையில் உபதேசிக்கப் பட்டபடியால், மேல் கூறிய மூன்று சோகங்களும் அகன்றன.

திருப்பாவை
1. மேன்மை பொருந்திய பாவையால் சொல்லப்பட்டது.
2. பாவைக்காக = நோன்புக்காக சொல்லப்பட்டது.
3. பாவையின் பொருட்டு (தோழியின் பொருட்டு) சொல்லப்பட்டது.
4. பாவையை – பெண்களை அழைத்து சொல்லப்பட்டது.
5. பாவையை அடைய (புருஷ காரார்தம்) சொல்லப்பட்டது
6. பாவை மூலம் (லக்ஷமி மூலம் = நீளாதேவியின் மூலம்) பகவானை அடைய சொல்லப்பட்டது.
7. பாவை = வழி (சரணாகதியைச் சொல்ல ஏற்பட்டது.
8. பாவை = பலத்தை அடைய சொல்லப்பட்டது.
இப்படி பல வகையில் பொருள் கொள்ளலாம்.

———-

திருப்பாவை – அடிவரவில் விசேஷம்:

திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களுக்கும் அடிவரவு முன்னிட்டு விலக்ஷணமான வேதாந்த விழுப்பொருள் ஒன்று வரைகின்றோம்.
1. மார்கழி வையத்து(ள்) ஓங்கி நிற்கிறது. மார்கசீர்ஷமான ப்ரபத்தி, பூலோகத்தில் சிறந்து விளங்குகிறது.
2. ஆழிமாயனை புள்ளும் கீசு கீசு (க்ருஷ்ண க்ருஷ்ண) என்று அழைக்கின்றது.
3. கீழ்வானம் வெள்ளென்றது. ஆசார்யனை அடைந்தது முதல் மோக்ஷம் அடையும் வரையுள்ள ப்ரபாத காலம் – அறிவுற்றகாலம்.
4. தூமணி (ஜீவன்) நோற்று சுவர்கம் புகும்.
5. கற்றுக் கறவை (ஆசார்யர்) கனைத்தது இளம் கன்றுக்கே. (சிஷ்யர்க்கே).
6. புள்ளின் வாய்க்கீண்டானை, உங்கள் புழைக்கடைத் தோட்டத்து (ஹ்ருதயம்) வாவியுள் காணலாம்.
7. எல்லே (என்ன ஆச்சர்யம்)!
8. நாயகனாய் நின்றவன், அம்பரம் (ஹ்ருதய ஆகாசம்)!
9. உந்து மதகளிற்றன் (யானை போன்றவன்) அவனே குத்து விளக்கு (நிலையான விளக்கு)!
10. முப்பத்து மூவர் அமரர்க்கு முன் செல்ல ஏற்றவன் (எல்லா தேவர்களுக்கும் அரசன்)!
11. (அவனை) அங்கண் மாஞாலத்தரசர் (ஜீவர்கள் தங்களது) மாரிமலை முழைஞ்சில் (ஹ்ருதயத்தில்) அன்று த்யானித்தார்கள்.
12. ஒருத்திமாலே! (நிகரற்ற ஆண்டாளிடத்தில் மோகமடைந்த திருமால்).
13. கூடாரை (பாவங்களை) வெல்லும் சீர் உடையவன் அவன்!
14. கறவைகள் (ஆசார்யர்கள்) பின் சென்று சிற்றஞ்சிறுகாலான (பிரபத்தியைச் செய்து) வங்கக் கடல் கடைந்த மாதவனால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.

——————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ துளசி தாஸ் அருளிச் செய்த-ஸ்ரீ ராமசரிதமானஸ்

January 28, 2024

ஆந்திரம் -ரெங்கநாத ராமாயணம் -புத்த கோண ரெட்டி -900 வருஷங்கள் முன்பு
அஸ்ஸாம் மாதவ கண்டலி ராமாயணம் -800 வருஷங்கள் முன்பு கவிராஜா மாதவ கண்டலி
ஒரிசா ஜக் மோஹன் ராமாயணம் -பல ராமதாஸ் -600 வருஷங்கள் முன்பு
பெங்கால் -ஸ்ரீ ராம் பாகாலி -கிரதிபஸ் ஓஜா -600 வருஷங்கள் முன்பு
கர்நாடக -தோரவே ராமாயணம் –நரஹரி -எழுதியது 500-வருஷங்கள் முன்பு
ராம் சரித்திர மாநஸ் -துளசிதாஸ் -500 வருஷங்களுக்கு முன்பு
மஹாராஷ்ட்ரா -பாவார்த்த ராமாயணம் -ஏக் நாத் –500 வருஷங்கள் முன்பு

மலையாளத்தில் எழுத்தச்சனும்,

வடமொழி இராமாயண நூல்கள்
யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (பொ.ஊ. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)
அத்யாத்ம இராமாயணம் (பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)[10]
அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)
ஆனந்த இராமாயணம் (பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.

இந்தோனேசியாவில் காகவின் ராமாயணம் என்பது இந்திய ராமாயணத்தின் தழுவலாக உள்ளது. இது 8-9 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. இது பழைய ஜாவானீஸ் மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர, இந்தோனேசியா பதிப்பில் பல பூர்வீக தெய்வங்களும் உள்ளன. இந்தோனேசியாவின் புகழ்பெற்ற கேகாக் நடனம் ராமாயணத்தின் காட்சிகளையும் உள்ளடக்கியது.

தாய்லாந்தில் ராமாயணத்தை ராமாகியன் என கூறுகின்றனர். ராமாகியன் தாய்லாந்தின் தேசிய காவியங்களில் ஒன்றாகும். மேலும் இது ராமாயணத்தின் மற்றொரு பதிப்பு மற்றும் கொண்டாட்டமாகும். இந்த பதிப்பில் ராவணனின் பாத்திரம் தோசகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த கதை 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது

மியான்மரில் ராமாயணத்தை யம ஜடாவ் அல்லது யமயானம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இது வெறும் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பாக இல்லாமல், பழம்பெரும் காவியத்தின் தனித்துவமான தழுவலாக உள்ளது.

இந்தியாவின் ராம்லீலாவைப் போலவே, யமா ஜடாவும் ஒரு நாடகத் தழுவலாகும். இது பொதுவாக மத விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இது நாட்டுப்புறவியல் மற்றும் பௌத்தத்தின் கூறுகளையும் கொண்டுள்ளது. இதன் அசல் இந்திய பதிப்பிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.

ராமாயணத்தை போல உள்ள கதை கம்போடியாவில் ரீம்கர் என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய காவியத்தின் மற்றொரு பிராந்திய பதிப்பாகும். இது பௌத்த மதத்தின் சுவாரஸ்யமான பதிப்பாக அமைகிறது.

அதே சமயம் இந்திய ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையும் ராமர், சீதை மற்றும் ராவணனை மையமாகக் கொண்டது. முக்கிய வேறுபாடு என்னவென்றால், கதாபாத்திரங்கள் மனிதர்களாகக் கருதப்படுகின்றன. இந்திய இதிகாசங்களைப் போல கடவுள்களின் அவதாரங்களாகக் குறிப்பிடப்படவில்லை

இந்தோனேசியாவில் காகவின் ராமாயணம் என்பது இந்திய ராமாயணத்தின் தழுவலாக உள்ளது. இது 8-9 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. இது பழைய ஜாவானீஸ் மொழியில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர, இந்தோனேசியா பதிப்பில் பல பூர்வீக தெய்வங்களும் உள்ளன. இந்தோனேசியாவின் புகழ்பெற்ற கேகாக் நடனம் ராமாயணத்தின் காட்சிகளையும் உள்ளடக்கியது.

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட ஒரு புத்தக விற்பனையாளர் ரூ.1.65 இலட்சம் மதிப்பிலான ராமாயண புத்தகத்தை கோயிலுக்குப் பரிசாக வழங்கவுள்ளார். இதுவே உலகில் உள்ள இராமாயண புத்தகங்களில் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து அந்த புத்தக விற்பனையாளரான மனோஜ் சாத்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: “வால்மீகி எழுதிய இராமாயணப் புத்தகம், கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றை நமக்குக் கூறும் அருமையான புத்தகமாகும்.

தற்போது உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தை நான் உருவாக்கியுள்ளேன். இதன் மதிப்பு ரூ.1.65 லட்சமாகும். 3 அழகான பெட்டிகளில் அச்சிட்டு இந்தப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் 3 அடுக்குகளாக அமைவதைக் குறிக்கும் பொருட்டு 3 பெட்டிகளில் புத்தகம் தயாராகியுள்ளது.

இந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கான காகிதம் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காகிதம் மீது அமிலத்தை வீசினாலும் அழியாது. புத்தகத்தின் அட்டைப் பகுதியானது இறக்குமதி செய்யப்பட்ட கச்சாப் பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தை அச்சிடுவதற்கான மை, ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் அமெரிக்காவிலுள்ள வால்நட் மரம், குங்குமப்பூ மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் எடை 45 கிலோ கிரமாக இருக்கும். இது 400 வருடங்கள் ஆனாலும் அழியாது.

நான்கு தலைமுறைகளுக்கும் மேல் இந்தப் புத்தகத்தை படிக்க முடிக்கும். தற்போது மிகவும் அழகான அயோத்தி நகரை அடைந்துள்ளோம். மிகவும் விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தைப் போலவே, அயோத்தி நகரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே அயோத்தியில் மிகவும் அழகிய ராமாயணம் இருக்கிறது என்று சொல்லலாம். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வித்தியாசமான டிசைன்கள் இருக்கும். கோயில் நிர்வாகத்திடம் புத்தகத்தை விரைவில் வழங்கவுள்ளோம்” என மனோஜ் சாத்தி கூறினார்.

——————-

ஸ்ரீ ராமச்சரித் மனஸ்

இது இராமரின் மேல் அதீதமான பக்தி கொண்ட இந்தியாவைச் சேர்ந்த கோஸ்வாமி துளசிதாஸ் என்பவரால் 16ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. “இராமசரிதமானஸ் என்பதற்கு இராமரின் செயல்களை தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள். இது ஹிந்தி இலக்கியத்தில் ஒரு மிக பெரிய நூலாக கருதப்படுகிறது. இந்த நூல் “வாழும் இந்திய கலாச்சாரத்தின் தொகுப்பு ” , “இடைக்கால அதிசய இந்திய சரித்திர தோட்டத்தின் உயரமான மரம்” , “பக்தி இலக்கியத்தின் மிகச் சிறந்த நூல்”, “இந்திய மக்களின் அசையாத நம்பிக்கைக்கு அத்தாட்சியாக விளங்கும் நூல் “என்று பெருமையாகக் கூறப்படுகிறது

இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் ஏழு காண்டங்களைக் (அத்தியாயங்கள் அல்லது பாகங்கள்) கொண்டது. துளசிதாசர் இந்த ஏழு காண்டங்களையும் புனிதமான மானசரோவர் ஏரிக்கு அழைத்துச் செல்லும் ஏழு படிக்கட்டுகளுக்கு ஒப்பிடுகிறார். இவை இரண்டுமே உடலையும் மனதையும் ஒரு சேர தூய்மை படுத்தும் ஆற்றல் படைத்தவை என்பதால் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

இராமசரிதமானஸ் நூலின் தனித்துவமான சிறப்பு என்னவென்றால், இந்த நூலின் எல்லா வரிகளிலும் ச்,ர்,த்,ம் (சீதாராம) என்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள பிரார்த்தனைப் பகுதி–

இராமசரிதமானஸ் நூலின் ஒவ்வொரு அத்யாயமும் மங்களசரணம் அல்லது பிரார்த்தனைப் பகுதியுடன் தொடங்குகிறது. இவ்வாறு இறைப்பிரார்த்தனையுடன் நூலைத் தொடங்குவது இந்தியப் பரம்பரியமும் கூட. ஒவ்வொரு காண்டத்தின் முதல் மூன்று அல்லது நான்கு வரிகள் பிரார்த்தனைப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.

பால காண்டம் அறிவு, ஞானம், பேச்சு மற்றும் மங்களத்திற்குரிய ஹிந்துக் கடவுளான சரஸ்வதி மற்றும் கணபதியின் புகழைப் பாடும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

அயோத்யா காண்டம் சிவனைப் பிரார்த்திக்கும் பாடலுடன் தொடங்குகிறது. எவருடைய மடியில் மலையரசியின் மகள் பொலிவுடன் அமர்ந்திருக்கிறாளோ, எவர் ஆகாய கங்கையைத் தனது தலையில் சுமக்கிறாரோ, எவருடைய பிறையில் அந்த பிறைச்சந்திரன் ஓய்வெடுக்கிறானோ, எவருடய தொண்டை ஆலகால விஷத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதோ, எவருடைய மார்பு சர்பத்திற்கு இடமளிக்கிறதோ, எவருடைய உடலைச் சாம்பல் அலங்கரிக்கிறதோ, எவர் எல்லா கடவுளுக்கும் தலைவனாக விளங்குகிறரோ, எவர் இந்த உலகத்தை அழிக்கும் வல்லமை படைத்தவரோ, அப்படிப்பட்ட எங்கும் நிறைந்த சந்திரனைப் போன்ற சிவபெருமான் என்றும் என்னைக் காக்கட்டும்

ஆரண்ய காண்டத்தின் முதல் பாடல் மீண்டும் சிவபெருமானைக் குறித்த பாடலாக அமைந்துள்ளது. இறைவன் சங்கரனை நான் வணங்குகிறேன். அவர் பிரம்மாவின் சந்ததியைச் சேர்ந்தவர், கருணையுடையவர், அன்பானவர், ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் மேல் அபிரிதமான பக்தி வைத்திருப்பவர், அறிவு எனும் கடலுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற முழுச் சந்திரனைப் போன்றவர், சாந்தம் எனும் தாமரையைத் திறக்கும் திறவுகோலான சூரியனைப் போன்றவர், அஞ்ஞானம் எனும் மேகத்தைக் கலைக்கின்ற காற்றைப் போன்றவர், பாவம் மற்றும் காமம், குரோதம், மோஹம் போன்றவற்றை அழித்து, பழியை நீக்குபவர்.

கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாகத் தொடங்குகிறது. மல்லிகை மற்றும் நீலத் தாமரைப் போன்ற மலர்ச்சி உடையவர்;அளவில்லா வீரம் கொண்டவர் ;அறிவுக் களஞ்சியமாக விளங்குபவர்; கருணையுடையவர்;வில் வித்தையில்;வேதங்களால் போற்றப்படுபவர்;பசு மற்றும் பிராமணர்கள் மீது பற்று கொண்டவர்;அரச குலத்தில் ரகுவரனாக மானிடனாகப் பிறவிஎடுத்தவர்;அந்த ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் சீதாபிராட்டியும் நமக்கு பக்தியை வழங்கட்டும்.

சுந்தர காண்டம் இராமனைக் குறித்த துதியுடன் தொடங்குகிறது. உலகத்தின் தலைவரான ஸ்ரீராமனை வணங்குகிறேன்; அவர் அரச குலத்தின் மாணிக்கத்தைப் போன்றவர்;கருணையுடையவர்; பாவங்களை அழிக்க வல்லவர்;மானிடனாகப் பிறவி எடுத்தவர்; கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; வேதங்கள் மற்றும் உபநிடதங்களால் அறியப்படுபவர்;படைப்புக் கடவுளான பிரம்மாவாலும், அழிக்கும் கடவுளான சிவனாலும்,ஆதிசேஷனாலும் முக்காலும் வணங்கபடுபவர்;பாவத்தை அழித்து வாழ்வில் பேரின்பத்தையும் அமைதியையும் வணங்க வல்லவர்

இலங்கா காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்;அவர் மிகவும் உன்னதமானவர்; உலகில் உள்ள எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தவர்; அன்பு மிகுந்த அழிக்கும் கடவுளான சிவனாலும் போற்றி வணங்கப் படுபவர்;மறுபிறவி பயத்தைப் போக்க வல்லவர்; மத யானை எனும் இறப்பை அடக்குகின்ற சிங்கம் போன்றவர்;ஞானத்தால் அடையக்கூடியவர் ;யோகிகளின் தலைவர்;நல்ல வழக்கங்களைக் கொண்டவர்;யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்;பிறப்பு இறப்பு இல்லாதவர்;அதர்மத்தை அழிப்பவர் ;பிராமணர்களைக் காப்பவர்;நீர்த்திவலைகளால் மூடப்பட்ட மேகத்தைப் போன்ற அழகு உடையவர்; தாமரை போன்ற கண்களை உடையவர்; மானிடனாக அரச குலத்தில் அவதாரம் எடுத்தவர் 

உத்தர காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் இடைவிடாது வணங்குகிறேன்;அவர் ஜனகரின் புதல்வியான சீதாபிரட்டியால் வணங்கப்படுபவர்; மயில் கழுத்து நீல நிறமுடையவர்;பிரம்மாவின் தாமரை போன்ற பாதங்களுடையவர்;கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; மஞ்சள் நிற உடையில், தாமரை மலர் போன்ற கண்களுடன், கையில் வில் அம்புடன் புஷ்பக விமானத்தில் தம்பி இலக்குவனுடனும் வானரங்களுடனும் வலம் வருபவர் 

காண்டத்தின் முடிவு

துளசிதாசர் எல்லா காண்டத்தையும் ஒரே போலவே முடிக்கிறார்.

எல்லா காண்டங்களும் முறையாக ஆசிரியர் கோஸ்வாமி துளசிதசாரால் இயற்றப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாக முடிகிறது:”இதி ஸ்ரீராமசரிதமானஸ் சகல கலி கலுசவே த்வம்சேந சதுர்தஹ் சோபனஹ சமாப்தாஹ்

மொழிபெயர்ப்பு : “இவ்வாறாக ஸ்ரீஇராமசரிதமானஸின் நான்காவது காண்டம் மானசரோவர் ஏரியின் நான்காவது படியையும் ஸ்ரீராமர் கலியுகத்தின் அதர்மங்களை அழிப்பார் என்பதையும் கூறி முற்றிற்று.” இதில் சதுர்தஹ் எனும் சொல் நான்கு என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு அத்யாயமும் அந்த எண்ணை மட்டும் குறித்து முற்றுப் பெறுகிறது.

கதை
இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் மூன்று உரையாடலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
அவை சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல் ,
முனிவர்கள் பாரத்வாஜருக்கும் யாக்யவல்க்கியருக்கும் இடையே நடந்த உரையாடல்,
கக்புஷுன்டிக்கும் கருடனுக்கும் இடையே நடந்த உரையாடல்.
மேலும், சில கவிஞர்கள் இதனூடே துளசிதாசருக்கும் பகவான் இராமருக்கும் இடையே நடந்த உரையாடலும் இடம் பெற்று இருப்பதாகக் கூறுகிறார்கள் .-

பால காண்டம்
குழந்தை அத்யாயம்
துளசிதாசர் இந்த அத்தியாயத்தை தனது குரு மற்றும் முனிவர்கள் : தனக்கு முன் வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் வாழப்போகிறவர்களை வணங்கி தொடங்குகிறார்.
இதில் வால்மீகியை இராமாயணத்தை இராம பக்தர்களுக்காக எழுதியதற்காகக் குறிப்பிட்டு வணங்குகிறார்.
அதன் பின்னர், ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களின் பெருமையையும் எடுத்துக் கூறுகிறார்.
முதலாவதாக, ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி மாநகரத்தின் பெருமையைக் கூறுகிறார்.
பின்னர், இராமரின் தந்தை தசரதன் மற்றும் தசரதனின் மனைவி கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோரின் பெருமைகளை எடுத்து கூறுகிறார்.
பின்னர், அவர், சீதையின் தந்தை ஜனகரின் பெருமைகளைக் கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து, இராமரின் சகோதரர்களான பரதன், இலக்குவன், சத்ருக்னன் மற்றும் இராமனுக்கு உதவிய வானர வீரன் அனுமன்,சுக்ரீவன்,கரடிகளின் தலைவன் ஜாம்பவானைப் பற்றி பாடுகிறார்.
பின்னர் இராமரையும் சீதையையும் அறிமுகப்படுத்துகிறார்.

இராமசரிதமானஸின் கதை பின்னரே தொடங்குகிறது. அது முனிவர்கள் யாக்யவல்க்கியர் மற்றும் பரத்வாஜர் சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது.
பரத்வாஜர் யாக்யவல்க்கியரிடம் இராமரின் கதையைக் கூறுமாறு கேட்கிறார்.
யாக்யவல்க்கியர் சிவன் இந்த கதையைப் பார்வதிக்குக் கூறியதிலிருந்து தொடங்குகிறார்.
(சதியின் தற்கொலை, அவள் தந்தை தக்ஷனின் தியாகம், பார்வதியாக சதியின் மறுபிறவி, பார்வதி சிவன் திருமணக் கதை).
சிவன் இராமன் பூமியில் அவதாரம் செய்ததற்கான ஐந்து காரணங்களைக் கூறுகிறார். இதில் ஒவ்வொரு கதையும் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது.
இதில், இராமர் ஒவ்வொரு முறையும் பூமியில் அதர்மத்தை அழிப்பதற்காகவே அவதரித்ததாகக் குறிப்பிடுகிறார்.
பின்னர், இராவணன் மற்றும் அவரின் தம்பிகளின் பிறப்பைப் பற்றி விவரிக்கிறார்.
இதன் பின்னர் இந்த கதை சிவன், யாக்யவல்க்கியர், கக்புஷுந்தி மற்றும் துளசிதசரின் பார்வையிலிருந்து கூறப்படுகிறது.

கதை பிரம்மலோகத்திற்ககு நகர்கிறது. பிரம்மா மற்றும் பிற தேவர்கள் இராவணனின் கொடுமை தாளாமல்
அவனை அழிப்பதற்கு வழிகள் ஆலோசித்துக் கொண்டி
ருக்கின்றனர். வழி காண இயலாமல், சிவனைக் குறித்து இராவணனை அழிக்கக் கூடிய கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு தவம் செய்கிறார்கள்.
சிவன் அவர்களிடம் அந்த கடவுள் எல்லாருடய இதயத்திலும் இருப்பதாக கூறுகிறார்.
பின்னர், அனைத்து தேவர்களும் பிரம்மத்தை நோக்கி தவம் இயற்றுகிறார்கள். அப்போது, பிரம்மன் மனமிரங்கி அவர்கள் முன் வானில் தோன்றி,
இராவணனை அழிக்கக் கூடிய பரம்பொருள் சூரிய குலத்தில் தோன்றுவான் எனக் கூறி மறைகிறார்.

கதை அயோத்திக்கு நகர்கிறது. ஒரு நாள், தசரதன், அயோத்தியின் மன்னன் தனக்கு வயதாகி விட்டதாலும்,
தன்னுடய அரியணைக்கு வாரிசு இல்லை என்பதாலும் கவலை கொள்கிறார்.
இதைத் தனது குடும்ப குருவான வசிஷ்டரிடம் கூறி, இதற்கு ஒரு வழி கூறுமாறு கேட்கிறார்.
அதற்கு வசிஷ்டர், தசரதனுக்கு நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறார்.
பின்னர், ரிஷ்ய சிருங்கரை அழைத்து குழந்தை பாக்கியம் அருளும் புத்ராகம் யாகத்தைச் செய்யுமாறு கூறுகிறார்.
துளஸிதாஸர் இராமர் சித்திரை மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் பிறந்ததாகக் கூறுகிறார்.

கதையில் இப்போது இராமரும் அவரது சகோதரர்களும் இளம்பாலகனாகக் காட்டப்படுகிறார்கள்.
அப்போது விஷ்வமித்ரர் தசரதனின் அரண்மனைக்கு வருகிறார்.
அவரை தசரதன் அன்புடன் வரவேற்கிறார். முனிவர் விஷ்வமித்ரர் காட்டில் பல்வேறு யாகங்களைச் செய்து வசிக்கிறார்.
அப்பொழுது, மாரீசன் மற்றும் சுபாகு என்று இருவர் அந்த யாகங்களைக் கெடுப்பதாகவும், இராமன் அதர்மத்தை
அழிப்பதற்காகவே பூமியில் அவதரித்தார் என்பது தனக்கு தெரியும் என்றும்,
தசரதனின் மகன்களை அந்த அரக்கர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளதாகக் கூறுகிறார்.
தயங்கிய தசரதன், பின்னர் ஒருவாறு அனுப்புகிறார். இராமர் மாரீசனையும் இலக்குவன் சுபாகுவையும் வதம் செய்கிறார்கள்.

இராமர் சீதையை மணம் செய்ய வில் முறிப்பதை விஸ்வாமித்ரர் பார்க்கிறார்.
கதையில் பின்னர் ஆசிரியர் அகல்யையின் சாபவிமோசனத்தைப் பற்றி விவரிக்கிறார்.
அது முடிந்த பின்னர், இராமர், இலக்குவன் மற்றும் விஷ்வமித்ரார் விதேக நாட்டின் அழகான தலைநகரமான மிதிலையை அடைகிறார்கள்.
அங்கு, மிதிலை மன்னன் ஜனகர் அவர்களை அன்புடன் வரவேற்கிறார். அவருக்கு இராமரின் பிறவி காரணத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
பின்னர், சகோதரர்கள் இருவரும் அந்த அழகான நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள்.
அங்கு, ஜனகரின் தோட்டத்தில் இராமரும் சீதையும் முதல் முறை சந்திக்கிறார்கள்.

இதனிடயே, ஜனகர், சீதைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார். இராமரை முதன்முதலாக பார்த்த உடனேயே அவர் மேல்
காதல் வயப்பட்ட சீதை கௌரி மாதாவிடம் இராமரே தனக்கு கணவனாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.
ஜனகரும் சுயம்வரத்திற்கு, இராமரையும் இலக்குவனையும் அழைத்தார். அங்கு, சீதையை மணக்க விரும்புபவர்
சிவனின் தனுசை முறிக்க வேண்டும் என்று நிபந்தனை அமைத்தார். பலர் முயன்றும் முடியாது போக, ஜனகர் இந்த பூமியில்
வீரம் மிக்க ஆண்மகனே இல்லையா என வியந்து கூறினார். இதனால் சினந்த இலக்குவன், சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்கள்
இருக்கும் கூட்டத்தில் இவ்வாறு பேசலாகாது எனக் பதில் கூறினான். அவனை சாந்தப்படுத்திய இராமர், அந்த தனுசை முறித்தார்.
அதனால் வந்த சப்தத்தில் தவம் கலைந்த பரசுராமர், சிவனின் தனுசை முறித்தது யார் என்ற கோபத்துடன் சுயம்வரம் நடக்கும் இடத்திற்கு வந்தார்.
அங்கு இலக்குவனும் பரசுராமரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சாந்தப்படுத்திய இராமர், நடந்ததை அவரிடம் எடுத்துக் கூறினார்.
இராமரின் பிறவி நோக்கத்தை அறிந்த பரசுராமர் அவரை வணங்கி விட்டு அங்கிருந்து தவம் செய்யச் சென்றார்.
சுயம்வரத்தின் முறைப்படி சீதை வெற்றி மாலையை இராமர் கழுத்தில் சூடி இராமரை மணந்தாள்.

எனினும், தந்து அன்பு மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்த ஜனகர் எண்ணினார்.
எனவே, தசாதரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இராமர் சீதை திருமணம் குறித்து அயோத்திக்கு தூது விடுத்தார்.
அளவிடற்கரிய சீர் வரிசையுடன், இராமரின் கும்பத்தினர், நண்பர்கள், நல விரும்பிகள், மானிட ரூபத்தில்
பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவர்கள் உட்பட அனைவரும் மிதிலையை நோக்கிச் சென்றனர்.

இதுவரை இந்த உலகம் கண்டிராத அளவிற்கு திருமணம் நடந்த பின்னர், இராமரும் சீதையும் கொண்டாட்டங்களுடன் குதூகலத்துடன் அயோத்திக்குத் திரும்பினர்.

அயோத்தி காண்டம்
அயோத்தி அத்யாயம்
அயோத்தி நகரம் இராமரும் சீதையும் மிதிலையிலிருந்து திரும்பி வந்ததால் பூமியிலுள்ள சொர்க்கம் போன்று இருப்பதாகக் கூறுகிறார் துளஸிதாஸர்.
வயது முதிர்ந்த தசரதன் இராமரை மன்னராக பட்டாபிஷேகம் செய்ய எண்ணினார். இது தேவர்களை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கியது.
ஏனெனில், இராமர் அயோத்தியில் தங்கி விட்டால் இராவண வதம் நடக்காது என்று அவர்கள் எண்ணினர். ஆதலால், அவர்கள் சரஸ்வதி தேவியை வணங்கினர்.

மன்னர் தசரதனுக்கு மூன்று மனைவிகள். அதில் கோசலை தான் பிரதான இராணி. கைகேயி பரதனின் தாய்; சுமித்ரா சத்ருக்னன் மற்றும் இலக்குவனின் தாய்.
சரஸ்வதி தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, கைகேயியின் சேவகியான மந்தரையின் மனம் மாற்றினாள்.
மந்தரை கைகேயியிடம், இராமர் மன்னராவத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், பரதன் மன்னர் ஆவதே மிகச் சிறந்தது என்றும் கூறினாள்.
அப்பொழுது பரதன் கைகேயியின் நாட்டில் தனது மாமனைச் சந்திக்கச் சென்றிருந்தான். மந்தரையின் போதனையால் கைகேயியும் மனம் மாறினாள்.
மந்தரை தசரதன் கைகேயிக்கு தர வேண்டிய இரு வரங்களை நினைவு கூறினாள். கைகேயி அரசவையில் தசரதனுக்காகக் காத்திருந்தாள்.
எல்லோரும் மகிழ்ச்சியாக பட்டாபிஷேக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது, கைகேயி அரசவையில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட தசரதன் வியந்தான்.
கைகேயி கடுமையான குரலில், தசரதன் தனக்கு அளிக்க வேண்டிய இரு வரங்களை நினைவு படுத்தினாள்.
அவற்றை இப்போது கேட்பதாகவும் பரதன் நாடாள வேண்டும்; இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்று கூறினாள்.
தசரதன் மன்றாடியும் கைகேயி கேட்காது போக, சுமந்த்ரனை அழைத்து இராமரை வரச் செய்தார்.

இராணி கைகேயி இராமரிடம் அந்த வரத்தைப் பற்றி கூறினாள். இராமர் திருமாலின் அவதாரம் எனினும், அவதாரத்தின் நோக்கத்தை
இவ்வாறே நிறைவேற்ற இயலும் என்று தன்னுடைய சித்தியின் வார்த்தையை ஏற்றுக்கொண்டார்.
மக்கள் கைகேயிக்கு எதிராக தங்களுடைய வெறுப்பைப் பதிவு செய்தார்கள். இராமர் எவ்வளவோ மறுத்தும் இலக்குவனும் சீதையும் உடன் வருவோம்
என்று கூறியதால் அவர்களையும் அழைத்துச் சென்றார். மூவரும், தசரதனை வணங்கிச் சென்றனர்.

இராமர், இலக்குவன், சீதை பிரயாக் நகரில் பரத்வாஜ முனிவரைச் சந்தித்தனர்..
அயோத்தி மக்களும் இவர்களுடன் வருவோம் என்று கூற, மூவரும், சுமந்த்ராவும் மக்களைச் சமாளித்து, நடு இரவில் காட்டிற்குச் சென்றனர்.
அங்கு, ஸ்ரீங்கவெரபுராவைத் தாண்டிச் சென்ற போது நிஷத நாட்டு மன்னன் குகனைக் கண்டனர்.
பின்னர், கங்கை, யமுனை​​ ஆறு|யமுனை], சரஸ்வதி சந்திக்கும் ப்ரயாக் நகரை அடைந்தனர்.
அங்கு இராமர் பரத்வாஜரைச் சந்தித்தார். அங்குள்ள யமுனா நதிக்கரை மக்கள் தன்மீது வைத்துள்ள அன்பால் மிகவும் பூரிப்படைந்தார்.
பின்னர், இராமாயணத்தின் ஆசிரியரான வால்மீகி மகரிஷியை அவரது ஆஷ்ரமத்தில் சந்தித்தார்.
வால்மீகி இராமரின் சுயரூபம் அறிந்து இராமரைப் பாடல்களால் துதித்து வணங்கினார். இந்த இடத்தில், சித்ரகூட நகரத்தின் அழகை மிக அழகாக துளசிதாஸர் வர்ணிக்கிறார்.

பின்னர், இராமர் சுமந்த்ராவை அயோத்திக்கு அனுப்பினார். சுமந்த்ரவிற்குத் திரும்பிச் செல்ல விருப்பமும் இல்லை,
திரும்பிச் சென்றால் மக்கள் ஏசுவர் என்று வருந்தினான். திரும்பி வந்த அவனைப் பார்த்த தசரதன், இராமரைக் குறித்து விசாரித்தார்.
இராமரைப் பிரிந்த துயர் தாளாமல், இராமரின் பெயரைக் கூறியவாறே தசரதன் இறந்தார்.

முனிவர் வசிஷ்டருக்கு இராமர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்ததால், பரதனையும் சத்ருக்கனனையும் அழைத்து வரச் செய்தார்.
நடந்தது அனைத்தையும் அறிந்த பரதன், தான் அயோத்தியில் இல்லாது போனதே எல்லாவற்றிற்கும் காரணம் என்று கூறி, தாயின் மேல் கோபம் கொண்டான். சத்ரருக்னன்
ஆத்திரத்தால், மந்தரையைத் தாக்கினான். பின்னர்,கோசலையின் நிலை கண்டு மிகவும் மனம் வருந்தி,மன்னிப்பு கோரினார்.
கோசலை அவர்கள் இருவரையும் நாட்டை ஆளுமாறு கூறினாள். பரதன் தன்னால் ஒரு போதும் இராமரின் இடத்தில் நாடாள முடியாதென்றான்.
தசரதனின் இறுதிச் சடங்குகள் முடிந்து, பரதனும், சத்ருகனனும் நாட்டிற்கு இராமரை அழைத்து வரச் சென்றார்கள்.
அவர்களுடன், அரச குடும்பமும், நாட்டு மக்கள் பலரும் சென்றனர்.

பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்றுக் கொள்கிறான்.
மக்கள் படையைக் கண்ட நிஷத நாட்டு மக்கள் இராமரைத் தாக்க வந்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டனர்.
குகன் பரதனிடம் படையோடு காட்டிற்கு வந்த காரணத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான். பரதன் இராமரிடம் கொண்ட அன்பைக் கண்டு குகன் நெகிழ்ந்து போனான்.
பின்னர், மக்கள் சித்ரகூடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கு இலக்குவனும் பரதனின் படையைக் கண்டு சந்தேகித்து பரதன் மேல் கோபம் கொண்டான்.
அங்கு வந்த இராமர், பரதனைப் புகழ்ந்து பேச, இலக்குவன் தன் எண்ணத்தை எண்ணி நாணினான்.
சகோதரர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடினர். தந்தையின் பிரிவை எண்ணி அனைவரும் வருந்தினர்.

பரதன் எவ்வளவோ முயன்றும், இராமர் தன் தந்தை மற்றும் சித்தியின் சொல்லின் பேரில், காட்டிலேயே இருப்பதாகக் கூறினார்.
எனவே பரதன், தன்னால் நாடாள முடியாது என்று கூறி, இராமரின் பாதுகைகளை வைத்து நாடாளுவேன் என்று அவைகளை பெற்றுச் சென்றான்.
மிகுந்த மனவருத்ததுடன் அயோத்தி திரும்பிய பரதன், இனி இராமர் வரும் வரை நந்திக்ராமத்தில் இருக்கப் போவதாகக் கூறினான்.

——————–

ஆரண்ய காண்டம்
கானக அத்யாயம்
சீதையைக் கடத்திச் செல்லும் இராவணனுடன் ஜடாயு சண்டையிடும் காட்சி.
இராமர், சீதை, இலக்குவன் காட்டில் நடந்து அத்ரி என்ற ஒரு முனிவரின் குடிலை அடைகிறார்கள்.
அத்ரி அவர்களை அன்புடன் வரவேற்கிறார். அத்ரியின் மனைவி அனுஸ்யா சீதாதேவியை வரவேற்றாள்.
அனுஸ்யா மனைவியின் கடமைகளை சீதையிடம் விவரிக்கிறார்.

இராமர், சீதை, இலக்குவன் காட்டினுள் மேலும் நடந்து விராதனைச் சந்திக்கிறார்கள். விராதன் சீதையைச் சிறை பிடிக்க முயற்சித்தான்.
இராமர் அவனைக் கொன்று ஒரு பள்ளத்தில் புதைக்கிறார். பின்னர், அவர்கள் சரபங்க முனிவரின் ஆஷ்ரமத்திற்குச் செல்கிறார்கள்.
அந்த முனிவர் கூறியபடி, சுதீக்ஷ்ண முனிவரின் ஆஷ்ரமத்தில் தங்குவதற்காக செல்கிறார்கள்.
அங்கே தவம் கலைந்து எழுந்த முனிவர், இராமரின் வருகைக்காகவே அவர் காத்திருந்ததாகவும்,
அதற்காக வேற்று கிரகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வந்தும் செல்லாது இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

பின்னர், மூவரும் அகஸ்த்ய முனிவரைச் சந்தித்து வணங்குகிறார்கள். அவர் தெய்வீகமான ஆயுதங்களை இராமருக்கு அளித்து தண்டகா வனம் செல்லும் போது தேவைப்பட்டால் உபயோகிக்குமாறு கூறினார்.
அங்கே இராமர், ஜடாயுவைச் சந்தித்தார். ஜடாயு அந்த மூவருடன் அகஸ்த்யரின் சொல்லுக்கேற்ப மிக அழகான பஞ்சவடி என்ற கிராமத்தை அடைந்தனர்.
இலக்குவனுக்கு நடந்தது அனைத்தும் நினைவுக்கு வர, கைகேயியைத் தகாத வார்த்தைகளால் பேசினான்.
அவ்வாறு பேசலாகத்து என இராமர் சமாதானம் கூறினார்.

அப்போது, அரக்கன் இராவணனின் தங்கை சூர்ப்பனகையைக் கண்டனர்.
இராமரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மேல் காதல்வயப்பட்டாள் அவள். இராமரிடம் இனிமையாக பேசியபோது, இராமர் தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றார்.
இலக்குவனும் அவளை நிராகரிக்க, சீதையைத் தாக்கத் தொடங்கினாள் அவள். வெகுண்ட இலக்குவன் அவள் காது மடல்களையும் மூக்கையும் அறுத்தான்.
அவமானப்பட அவள், தன்னுடைய சகோதரர்கள் கர, துசானா, திரிசிரா இருக்கும் இடத்தைச் சென்றடைந்தாள்.
அவளின் கோலத்தைக் கண்ட அவர்கள், இராமரைக் கொல்ல முயற்சித்தனர். இராமர் அவர்கள் மூவரையும் வென்றார்.

வருந்திய சூர்ப்பனகை இலங்கையிலுள்ள இராவணனைச் சந்தித்தாள். இராவணன் தன்னுடைய பால்ய ஸ்நேகிதனான மாரீசனை அழைத்தார்.
மாரீசன் தங்க மானாக மாறினால், சீதையைக் கடத்தி விடலாமென்று சதி செய்தான். மாரீசன் இராமரின் பலத்தை அறிந்தவனாதலால், (பால காண்டம்)
பயம் கொண்டு இருப்பினும், செய்யாது போனால், இராவணன் கொன்று விடுவான் என்பதால், ஒப்புக்கொண்டான்.
இராவணனும் மாரீசனும் இராமர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.

மாரீசன் மாய மானாக மாறி சீதையின் கவனத்தை ஈர்த்தான். இராவணனின் எண்ணத்தை அறிந்திருந்த இராமர், சீதையின் நிழலை அவ்விடத்தில் இருக்கச் செய்து, சீதையை ஒளிந்திருக்குமாறு கூறினார்.
சீதை மீண்டும் மீண்டும் அந்த மாய மான் தனக்கு வேண்டுமென்று நச்சரித்தாள். இராமர் அந்த மானைத் தேடி ஆஷ்ரமத்திலிருந்து வெகு தூரம் சென்றார்.
இராமரின் குரலில், மாரீசன் இலக்குவனிடம் உதவி வேண்டுமென்று குரல் கொடுத்தான். சீதை அந்த குரலைக் கேட்டு, கதறி அழுதாள்;
இலக்குவனை இராமருக்கு உதவுமாறு ஆணையிட்டாள். அந்த சமயம், இராவணன் ஒரு யாசிக்கும் இசைவாணராக சீதையிடம் வந்தார்.
யாசகம் அளிக்க வந்த சீதையை இராவணன் கடத்திச் சென்றான். அதைக் கண்ட ஜடாயு இராவணனோடு போரிட்டான்.
இராவணன் மிகுந்த பலசாலி ஆதலால்,இராவணன் ஜடாயுவின் சிறகை வெட்டி வீழ்த்தினான். இராமரும் இலக்குவனும் திரும்பி வந்து சீதை இல்லாததைக் கண்டு வருந்தினர்.
சீதையைத் தேடிச் செல்லும்போது, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டனர். ஜடாயுவின் வாயிலாக உண்மை அறிந்த அவர்கள், ஜடாயுவிற்கு மோட்சம் அளித்தனர்.
பின்னர், செல்லும் வழியில் சபரியின் ஆஷ்ரமத்தைக் கண்டனர். சபரி தன்னுடய கண்ணீரால், இராமரின் பாதங்களைக் கழுவினாள்.
பின்னர், சுவைத்துப் பார்த்து இனிக்கும் பழங்களை மட்டுமே இராமருக்குக் கொடுத்தாள். இராமர் அவளுக்கும் மோட்சம் அளித்தார்.
சகோதரர்கள் இருவரும் பாம்பாசரோவர் ஏரியை நோக்கி நடந்து சென்றனர்.

கிஷ்கிந்தா காண்டம்
கிஷ்கிந்தா அத்யாயம்
தாரா, சுக்ரீவன், அனுமனை கிஷ்கிந்தா நகரில் சந்திக்கும் இலக்குவன் ரிஷ்யமுக மலையின் உச்சியிலிருந்து, சுக்ரீவன் இராமரும், இலக்குவனும், மலையின் அடிவாரத்தில் இருப்பதைக் கண்டார்.
அனுமனிடம், தன்னுடைய சகோதரன் பாலி அனுப்பிய ஆட்களாக இருப்பரோ என வினவினார். அனுமன் பிராமணனாக வடிவம் எடுத்து அவர்களை அணுகினார்.
இராமரின் சுயரூபத்தை அறிந்த அனுமன் அவரின் புண்ணிய பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். இதை சுக்ரீவனிடம் எடுத்துக் கூறிய அனுமன், அவர்களோடு சேர்ந்து சீதையைத் தேடும் பணியில் இறங்கினார்.
அப்பொழுது, சுக்ரீவன் தன்னுடைய தமையன் பாலியால் தான் ஏமாற்றப்பட்டத்தைக் கூறினார். இராமர் பாலியை வாதம் செய்து,
கிஷ்கிந்தா நாட்டின் மன்னராக சுக்ரீவனையும், இளவரசாரக பாலியின் மகன் அங்கதனையும் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
அதோடு சீதையைக் கண்டுபிடிக்க உதவுவதாக அளித்த உறுதியை சுக்ரீவன் மறந்தான். இராமர் கடுங்கோபம் கொண்டு, இலக்குவனை சுக்ரீவனை அழைத்து வருமாறு சொன்னார்.
இலக்குவன் அரசவையில் நுழைந்து அந்த நகரைச் சாம்பலாக்குவதாக சபதமிட்டார். பயந்த சுக்ரீவன், இராமரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார்.
சுக்ரீவன் உடனே, கரடிப் படையையும் குரங்கு படையையும் எல்லா திசைகளிலும் தேடுமாறு ஏற்பாடு செய்தார். அனுமனால் மட்டுமே சீதையைக் கண்டுபிடிக்க இயலுமென்று இராமர் எண்ணினார்.
எனவே, இராமர் அனுமனிடம், சீதையின் பிரிவு தன்னை மிகவும் வாட்டுவதாகக் கூறி கணையாழியைக் கொடுத்தார்.
அங்கதன், நளன், கேசரி, ஜாம்பவான் மற்றும் அனுமன் தெற்குத் திசையை நோக்கிச் சென்றனர். கரையை அடைந்த அவர்கள், ஜாம்பவானும் அங்கதனும் கரையின் அருகே ஒரு குகையைக் கண்டனர்.
அந்த குகையில் ஜடாயுவின் அண்ணனான சம்பாதி வசிப்பதைக் கண்டனர். சம்பாதி வானரப் படையிடம் சீதை அசோக வனத்தில் இலங்கையில் இருப்பதாகக் கூறினார்.
அந்த தீவு 400 மைல் தொலைவில் இருப்பதாகவும், அந்த தூரத்தைக் குதித்துத் தாண்டக் கூடிய ஒருவரால் மட்டுமே அங்கே சென்றடைய முடியுமென்று கூறினார்.
அனுமனால் மட்டுமே அதைச் செய்ய முடியுமென்று ஜாம்பவான் முடிவு செய்தார்.

————-

சுந்தர காண்டம்
மகிழ்ச்சியான காண்டம்
இராமரும் வானர வீரர்களும்.
ஜாம்பவானின் கருத்தை ஏற்று அனுமன், அருகிலிருந்த மலையின் உச்சியின் மீதேறி, வானில் பறக்கலானர்.
இடையில் பாம்புகளின் தாயான சுரசையின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சமுத்ர அரக்கி அனுமனை பறவை என்றெண்ணி பிடிக்க நினைத்தது.
அவளை வென்று அனுமன், இலங்கையின் கரையில் இறங்கினார். அங்கு மிக அழகான தோட்டங்களையும், குளங்களையும், எரிகளையும் கண்டார்.
அனுமன் இராமரை எண்ணி சிறிய உருவம் எடுத்து இலங்கையில் நுழைந்தார். அங்கு அரக்கி லங்கினியை கைககளால் தாக்கி பூமியில் விழச் செய்தார்.
அனுமன் அரண்மனைகளிலும் தோட்டங்களிலும் தேடினார். பின்னர் ஸ்ரீ ஹரியின் நாமம் கேட்கும் இடத்தை நோக்கி நடந்தார்.
அது இராவணனின் தம்பி விபீஷணனுடையது. அங்கு சென்று, இராமரின் புராணத்தை அனுமன் கூறினார். பின்னர் அசோக வனத்தில் சீதையைக் கண்டார்.
சீதை அமர்ந்திருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து, அடுத்து என்ன செய்வதென்று யோசித்தார்.

இராவணன் சீதையை நோக்கி வருவதையும் தன்னை ஒரு முறை பார்க்குமாறு கெஞ்சுவதையும் கண்டார். இராவணன் சீதையின் தலையை அறுப்பதாக் கூறியும் சீதை அஞ்சவில்லை.
இராவணனின் மனைவி மண்டோதரி அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள். அனுமன், இராவணன் மீதிருந்த சினத்தை மிகுந்த பிரயாசைக்குப் பின் அடக்கிக் கொண்டார்.
பின்னர், அனுமன், இராமரின் துதிகளை மெல்லிய குரலில் பாடினார்.பின்னர் தான் யார் என்று சீதையிடம் கூறி, கணையாழியை அளித்தார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் சீதை அனுமனை ஆசீர்வதித்து பல வரங்கள் அளித்தாள்.

அனுமன் சீதையிடம் தான் மிகுந்த பசியுடன் இருப்பதாகக் கூறி, அந்த தோட்டத்திலிருந்து பழங்கள் புசிக்க அனுமதி கேட்டார்.
பாதி பழங்கள் உண்டு, பலவற்றை அழித்தார். இராவணனுடைய மகன் அக்ஷயாவை வதம் செய்தார்.
வேண்டுமென்றே இந்த்ரஜீத்திடம் பிடிபட்டுக்கொண்டவர், இராவணனின் அரண்மனைக்குச் சென்றார். அங்கே இராவணன் அனுமனைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.
விபீஷணன் அனுமன் ஒரு தூதன், தூதனைக் கொல்லக் கூடாதென்று நினைவுகூர, இராவணன் அனுமனை அவமானப்படுத்த அனுமனின் வாலிற்குத் தீ வைத்தான்.
அனுமன் ராம நாமாவைக் கூறக் கூற, அனுமனின் வால் நீண்டுக்கொண்டே சென்றது. அதனைக் கொண்டு இலங்கைக்கு தீ வைத்தார்.
பின்னர், கடலில் தீயை அணைத்து, சீதை நலமாக இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டார். சீதையிடம் மறுமுறை இராமருடன் சந்திப்பதாக உறுதி அழைத்தார்.
பின்னர், இராமர், அங்கதன், ஜாம்பவாநனிடம் நடந்ததைக் கூறி இலங்கை நோக்கி படையுடன் கிளம்பினார்.

இதனிடையே, இலங்கையில்,மண்டோதரியும் விபீஷணனும் சீதையைத் திருப்பி அனுப்புமாறு இராவணனை வேண்டினார்.
இராவணன் விபீஷணனை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பினார். விபீஷணன் இராமருடன் சேர்ந்து கொண்டார்.
விபீஷணன் இராமரின் பாதங்களில் வீழ்ந்து ஆசிபெற்று, இராமரிடம் அடைக்கலம் கோரினார். கடலை எவ்வாறு கடக்கலாமென்று அனைவரும் ஆலோசித்தனர்.
அப்போது கடல் தேவதைகள், இராமரிடம் வானர சகோதரகள் நிலா மற்றும் நளா கடலைத் தாண்ட வரம் பெற்றிருப்பதாகக் கூறினார்.

இலங்கா காண்டம்
இலங்கா அத்யாயம்
ஸ்ரீலங்கவை இணைக்கும் ராமர் சேது கட்டப்பட்டது
ஜாம்பவான் அந்த சகோதரர்கள் நிலா மற்றும் நளாவைப் பாலம் காட்டுமாறு ஆணையிட்டடார்.
அவர்கள் அந்த மலை முழுவதையும் கொண்டும் பாலம் அமைத்தார்கள். இராமர் சிவனுக்காக இராமேஸ்வரத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டுமென்று எண்ணினார்.
பால வேலை முடிவடைந்தவுடன், இராமரின் படைகள் பாலத்தைக் கடந்து, இலங்கை அடைந்து, சுவேலா என்ற மலையின் அருகில் ஓய்வெடுத்தனர்.
இதை அறிந்த இராவணன் மேலும் கோபம் கொண்டான். மண்டோதரி இராவணனின் உயிருக்கு ஆசைப்பட்டு, சீதையைத் தீர்ப்பி அனுப்பி விடுமாறு கோரினாள்.
இராவணன் இராமரின் பலத்தை உதாசீனப்படுத்தி, மண்டோதரியைச் சாந்தமாக்கினான். பின்னர், அவன் மகன் பிரகஸ்தானும், தாயைப் போன்றே கூற, அது பலனில்லாது போனது.

இதனிடயே, இராமர் ஜாம்பவானிடம் என்ன செய்வது என்று கேட்டார். ஜாம்பவான் அங்கதனைத் தூது அனுப்பலாமென்று கூறினார்.
இராவணனின் அரசவையில் அங்கதன் சென்று, இராவணன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இதுவே தருணம் என்றும்,இல்லை எனில் போர் தொடங்கும் என்றான்.

முதல் நாள் போர் மிகவும் கொடுமையாக நடந்தது. இராவணன் தன்னுடைய படையில் பாதியை இழந்தான்.
இராவணனின் மகன் இந்த்ரஜித், இலக்குவனை சிறந்த ஆயுதத்தால் தாக்க, இலக்குவன் படுகாயமடைந்தான்.
அனுமன் சுஷேனா என்ற மருத்துவரை அழைத்து வந்தார். அவர் இலக்குவனைக் குணப்படுத்த இமாலய மலையில் கிடைக்கும் சஞ்சீவினி மூலிகையை எடுத்து வர வேண்டுமென்றார்.
அனுமன் அதனை எடுத்து வருவதாக இராமருக்கு உறுதி அளித்தார். அவரைத் தடுத்து நிறுத்த இராவணன் காலநேமி என்ற அரக்கியை அனுப்பினார்.
அவளை எளிதில் வென்ற அனுமன், மலையை கண்டு, மருந்து அதில் கண்டுபிடிக்க இயலாது போக, மலையைச் சுமந்து இலங்கை அடைந்தார்.

அனுமன் சஞ்சீவனி மூலிகையைத் தேடுகிறார்.
அனுமன் மிகுந்த வேகத்தோடு இலங்கை வந்து கொண்டிருக்கும் போது, நந்திக்ராமம் அருகில் பராதனால் தவறுதலாகத் தாக்கபட்டார்.
பின்னர், நினைவு திரும்பி, பரதன் இராமரின் தம்பி என்று அறிந்து கொண்டார். இலங்கையில் , சஞ்சீவனி மருந்தினால் சூஷேனா இலக்குவனைக் குணப்படுத்தினார்.
இராமர் மிகுந்த அன்புடன் அனுமனை ஆரத் தழுவினார். இலக்குவனின் உடல்நிலை சரி ஆனதை அறிந்த இராவணன் சினம் கொண்டு கும்பகர்ணனை எழுப்பினார்.
இராமர் ஒரே அம்பால் அவனை வீழ்த்த, இராவணன் பயந்து போனான். பல்வேறு சக்திகளை வேண்டி இந்த்ரஜித் தவம் மேற்கொண்டான். அனுமனும் அங்கதனும் அதனை முறியடித்தனர்.
இலக்குவன் இந்த்ரஜித்தை வதம் செய்தான். இராமர் எத்தனையோ அம்புகள் எய்தும் இராவணன் மரிந்து போகாது போக,
அவனை எவ்வாறு கொள்ள வேண்டும் என்று விபீஷணனிடம் வினவினான். பின்னர், அவ்வாறே இராவணனைக் கொன்றான்

இராவணனுடைய இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், விபீஷணனிற்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.
அனுமன் இந்த் செய்தியை அசோக வனத்திலிருக்கும் சீதையிடம் சென்று கூறினார். முடிவில், இராமரும் சீதையும் ஒன்று கூடினர்.
அனைவரும் அயோத்திக்குத் திரும்ப எண்ணினர். இராமர், சீதை, இலக்குவன் மற்றும் சில மூத்த வானரர்கள் இராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றனர்.[53]

உத்தர காண்டம்
இராமரின் குடும்பம்
இன்று, இராமர் அயோத்திக்குத் திரும்பி வருவதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. தம்பி பரதன் மிகுந்த கவலயோடு இருக்கிறான்.
அவன் 14 ஆண்டுகள் நந்திக்ராமத்தில் கண்ணீர் விட்டபடியே வாழ்ந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.அனுமன் பரதனைச் சந்தித்து அவர்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
பரதன் இந்த நற்செய்தியை அயோத்திக்குச் சென்று அனைவரிடமும் கூறினான். புஷ்பக விமானம் வந்து இறங்கியவுடன், மக்கள் அனைவரும் “ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு ஜெயம்” என்று கூவினர்.
இராமரும், சீதையும் இலக்குவனும் வசிஷ்டரின் பாதம் தொட்டு ஆசி பெற்றுக்கொண்டனர். இறுதியில் , இராமர் பரதனை ஆரத் தழுவிக் கொண்டார்.
பின்னர், பட்டாபிஷேகத்தில் இராமர் மன்னராக முடி சூடிக் கொண்டார். அப்போது, சிவன் வந்து அந்த விழாவைக் கௌரவித்தார்.
பின்னர், எந்நாளும் இராமரின் பக்தனாக தான் இருக்க வேண்டுமென்று வாரம் பெற்றுக்கொண்டார். முடிவாக,
இராமருக்கு இரட்டைக் குழந்தைகள் இலவன், குசன் இருக்கிறார்கள் என்றும், மற்ற சகோதரர்களுக்கும் இரு புதல்வர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாரத முனிவரும் சனக முனிவரும் அயோத்திக்கு வந்து அந்த அழகான நகரத்தைக் கண்டனர். பின்னர், கக்புஷுன்டியின் சுயசரிதையில், கலியுகம் எவ்வாறு இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
இதனுடன் பார்வதியும் சிவனும், கக்புஷுன்டியும் கருடனும் உரையாடலை முடித்துக் கொண்டனர். யாக்யவல்க்கியரும் பரத்வாஜரும் உரையாடலை முடித்துக் கொண்டதாகக் கூறப்படவில்லை.
இதனுடன், துளஸிதாஸர் இந்த நூலை முடித்துக் கொள்கிறார்.

சமஸ்க்ருதத்திலுள்ள ருத்ராஷ்டகம் இந்த காண்டத்தின் ஒரு பகுதி.

இராமசந்த்ரரின் அவதாரம்
பால காண்டத்தில், சிவன் இராமரின் கதையை பார்வதி தேவியிடம் கூறுவதாக எழுதப்பட்டிருந்தது.
அப்பொழுது இராமர் பூமியில் அவதரித்ததற்கான ஐந்து காரணங்களைக் கூறுகிறார்.

படைப்புத் தொழிலின் சமன்பாடு
எப்பொழுதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் உலகில் பெருக்கத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் ஒரு அவதாரத்தில், பூமியைக் காப்பாற்றுவான் என்று பார்வதியிடம் சிவன் கூறுகிறார்.
அந்த அரக்கர்களை அழித்து, பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவான் இறைவன் என்கிறார். இதுவே இராமாவதாரத்தின் முதன்மையான நோக்கம்.

ஜயன் விஜயன்
சகோதரர்கள் ஜயன் விஜயன் இருவரும் பகவான் விஷ்ணுவின் வாயிற்காப்போர்கள்.
சனக முனிவர் மற்றும் அவரின் சகோதரர்களின் சாபத்தால் இருவரும் அரக்க குலத்தில் பிறக்க நேரிடுகிறது.
அவர்கள் ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்ஷனும் ஆவர். இறைவன் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனையும், நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவையும் அழித்தார்.
ஹரி தானே இவர்களை அழித்த போதும், சாபத்தின்படி இவர்கள் மூன்று பிறவி எடுக்க வேண்டுமென்பதால், இவர்கள் மோட்சம் அடையவில்லை.
எனவே அவர்கள் இராவணனாகவும் கும்பகர்ணனாகவும் மறுபிறவி எடுத்தனர். ஹரி, இவர்களை அழிக்க இராமராக மனிதப் பிறவி எடுத்தார்.

நாரத முனியின் சாபம்
நாரத முனி பகவான் விஷ்ணுவை நினைத்துக் கொண்டே இமாலய மலையில் நடந்து சென்றார். அங்கு அவர் ஆழ்ந்த தியானத்திற்குச் சென்றார்.
அவரின் தவத்தைக் கண்ட இந்திரன் எங்கே தனது இந்திரலோகப் பதவிக்கு அபாயம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்தான்.
இந்திரன் காமதேவனை அழைத்து, நாரதரின் தவத்தைக் கலைக்குமாறு கூறினார். அவர் நறுமணமுள்ள மலர்கள், தென்றல், தேவலோகத்துப் பெண்கள் கொண்டும் கலைக்க முயற்சித்தார்.
ஆனால், அவை எதுவும் நாரதரைக் கலைக்கவில்லை. தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, நாரதரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார் காமதேவன்.
இதை சிவனிடம் பெருமையாக நாரதர் கூறினார். சிவன் இக்கதையை ஹரியிடம் சொல்லக் கூடாதென்றார்.

விஷ்ணுவைச் சந்தித்த நாரதர், கர்வத்தோடு சிவனின் வார்தையையும் மீறி இக்கதையைக் கூறினார்.
விஷ்ணு மேலும் நாரதரைப் புகழ, அளவில்லா கர்வத்தோடு நாரதர் கிளம்பினார். ஹரி லக்ஷ்மி தேவியிடம் தான் ஒரு திட்டம் வகுத்திருப்பதாகக் கூறி மாயையைத் தொடங்கினார்.
விஷ்ணு ஒரு மிக அழகான நகரத்தை உருவாக்கினார். அந்த நகரத்தின் மன்னர் ஷீலாநிதி, அவரின் அழகான மகள் விஷ்வமோகினி.
நாரதர் ஆர்வத்துடன் அந்த நகரைச் சென்றடைந்தார். அங்கே அந்த மன்னனின் மகள் மீது காதல் கொண்டார்.
மன்னர் ஒரு தகுதியானவற்கே தன் மகளைத் தருவதாகக் கூறினார். நாரதர் இளவரசி தன்னைத் தேர்ந்தெடுக்க திட்டம் தீட்டினார்.

நாரதர் ஹரியிடம் அளவில்லா அழகை வரமாகக் கேட்டார். ஹரி நாரதருக்கு எது நன்மையோ அதையே செய்வதாகக் கூறினார்.
உண்மையில், இராமர், நாரதரை ஒரு குரங்கைப் போல மாற்றினார். அரசவையிலிருந்த அனைவரும் அதைக் கண்டும் ஏதும் கூறவில்லை.
கோபம் கொண்ட இளவரசி நாரதரை வெறுத்தாள். கண்ணாடியில் தன் முகம் கண்ட நாரதர், வைகுண்டத்திற்குச் சென்று ஹரியைத் தகாத வார்தைகளால் பேசினார் :
“ஒரு குரங்கைப் போல நீ என்னை மாற்றியதால் குரங்குகள் உன்னுடைய தோழர்கள் ஆவார்கள். என்னை நீ வருத்தியதால், உன் மனைவியைப் பிரிந்து வருந்துவாய்” என்றார்.
ஹரியும் அதனை ஏற்றுக் கொண்டு, மாயையைக் கலைத்தார்.

நாரதர் விஷ்வமோகினி உட்பட அனைத்தும் மாயை என்று அறிந்து கொண்டு சாபத்தை அழிக்குமாறு கூறினார்.
ஹரி அது தனது விருப்பம் என்று கூறி, எல்லா பாவங்களில் இருந்து விடுபட, ஹரி நாமாவைச் சொல்வதே சிறந்தது என்றார்.
நாரதர் தன்னுடைய இடத்திற்குச் சென்று நாமஸ்மரணை செய்யத் தொடங்கினார்

ஸ்வயம்புவா மனுவும் ஷதரூபாவும்
ஸ்வயம்புவா மனுவின் மனைவி ஷதரூபா. மனு பல ஆண்டுகள் உலகை ஆண்டு, இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றினான்.
ஹரியின் பக்தனான அவன், ராஜ்யத்தை மகனிடம் கொடுத்து விட்டு, மனைவியுடன் காட்டில் சென்று தவம் செய்ய எண்ணினான்.
இருவரும் சரயு நதிக்கரையில் அமர்ந்து பன்னிரெண்டு எழுத்து மந்திரத்தை ஜபித்தனர்.
சிலர் அந்த மந்திரம் ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்ற மும்மூர்த்திகளை அழைக்கும் மந்திரம் என்கிறார்கள்
இராமபத்ராசார்யா அந்த மந்திரம் இராமருக்கும் சீதைக்குமான மந்திரம் என்கிறார்.

இருவரும் முதலில் உணவையும், நீரையும் தியாகம் செய்தனர். பின்னர், காற்றைத் தியாகம் செய்ய எண்ணினர்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களை அழைத்தும், முடிவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அப்பொழுது, சொர்க்கத்திலிருந்து என்ன வரம் வேண்டுமென்று ஒரு குரல் கேட்டது.
இராமரும் சீதையும் அழகான உருவத்தில் அவர்கள் முன் தோன்ற, பெருமகிழ்ச்சி அடைந்த இருவரும் தங்களுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறி விட்டதாகக் கூறினர்.
இறுதியாக, தனக்கு ஒரு நெடு நாள் ஆசை இருப்பதாகவும், இறைவன் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்பதே அது என்றும் கூறினான் மனு.

இறைவன் அதை நிறைவேற்றுவதாகக் கூறினார். ஷதரூபாவும் அதுவே தன்னுடைய ஆவல் என்றாள்.
இறைவன் அவர்கள் இருவரையும் இந்திரனின் தலைநகரத்தில் வசிக்கச் செய்தார்.

பின்னர், இருவரும் சிறிது காலத்திற்குப் பின், அயோத்தி மன்னன் தசரதானாகவும் கோசலையாகவும் பிறப்பார்கள் என்றார் இறைவன்.
அவர்கள் இருவருக்கும் மகனாக தானே அவதரிப்பதாகவும் கூறினார்.

மன்னன் பிரதாப்பானுவின் கதை
இராமர் பிறப்பதற்கு முன், யாக்யவல்க்கியர் பரத்வஜாரிடம் பிரதாப்பானுவின் கதையைக் கூறினார். கைக்கெய் என்ற நகரத்தின் மன்னன் சத்யகேது.
அவருக்கு, பிரதாப்பானுவ, அரிமர்த்தனா என்று இரு புதல்வர்கள். அவரின் பிரதான மந்திரி தர்மருசி. சத்யகேது தனது ராஜ்யப் பொறுப்பை பிரதாப்பானுவிடம் ஒப்புவிக்க, பிரதாப்பானு உலகையே வெல்கிறார்.

ஒரு முறை அவர் கானகத்திற்குச் செல்லும் போது ஒரு கொடிய கரடியைக் கண்டார். அந்த கரடி காலகேது;அது அவரை விட்டு வெகு தூரம் செல்கிறது.
பிரதப்பானு அதனைத் துரத்திக் கொண்டு வெகு தூரம் செல்கிறார். அப்போது தாகம் எடுக்க, அருகிலிருக்கும் ஒரு போலி முனிவரின் ஆஷ்ரமத்திற்குச் செல்கிறார்.
முன் நடந்த ஒரு சம்பவத்தால் கோபம் கொண்டிருந்த முனிவர், அவரை அவமானப்படுத்த எண்ணினார்.
முனிவரை அடையாளம் காணாத மன்னர், முனிவர் வரம் கேட்டவுடன், மறைந்து போகவும், இளமையோடு இருக்கவும் வரம் கேட்டார்.
ஆனால், அவை நிறைவேற, பல பிராமணர்களை உணவளித்து மகிழ்விக்க வேண்டுமென்றார் முனிவர்.

முனிவர் மன்னரை ஓய்வெடுக்கச் சொல்லி, உணவு தயாரிக்கச் செல்வதாகக் கூறினார்.
மன்னர் மூன்று நாள் காத்திருந்தும் முனிவர் வராது போக, காலகேது ஒரு பூசாரியாக வந்து, மன்னரை அவையில் சந்தித்து, முனிவர் அவனை உணவு சமைக்க அனுப்பியிருப்பதாகக் கூறினார்.
மன்னர் எல்லா பிராமணர்களையும் அழைத்தார். அவர்கள் உண்ணும் முன், அந்த உணவு சுத்தம் இல்லாதது, அனைவரும் ஓடி விடுங்கள் என்று வானிலிருந்து ஒலி கேட்க, அனைவரும், மன்னரைச் சபித்தனர்.
அப்போது அந்த குரல், மன்னரின் மீது பிழை இல்லை என்று கூறி, சாபத்தைத் திரும்பப் பெற இயலாது என்பதால், அடுத்த பிறவியில், சாபத்தின் பலனை அவர்கள் அனுபவிக்கக் கடவது என்றது.

சினம் கொண்ட மன்னர் காலக்கேதுவைத் தேடினார். அங்கு அவனைக் காணாது வருந்திய போது, பிராமணர்கள், அடுத்த பிறவியில் இறைவனே அவனை அழிப்பார் என்றார்.
சாபத்தின் படியே, அண்டை நாட்டு படையெடுப்பில் பிரதாப்பானு, அரிமர்த்தம், தர்மருசி ஆகியோர் மாண்டனர்.

பிரதாப்பானு இராவணனாகவும், அரிமர்த்தம் கும்பகர்ணனாகவும், தர்மருசி விபீஷணனாகவும் மறுபிறவி எடுத்தனர்.
மூவரும், கடுந்தவம் செய்து பல வரங்கள் பெற்றனர்-இராவணன் மனிதப் பிறவி மற்றும் குரங்குப் பிறவிகளால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்றும்,
கும்பகர்ணன் ஆறு மாதம் இடை விடாத உறக்கம் வேண்டுமென்றும், விபீஷணன் ஹரியின் மேல் அளவற்ற பற்று வேண்டும் என்றும் வரங்களைப் பெற்றனர்.

எதிர்பாராத முடிவு
பல்வேறு கவிஞர்கள் இந்நூல் எதிர்பாராத இடத்தில் முடிவு பெற்றதாகக் கூறுகின்றனர்.
வால்மீகியின் உத்தர காண்டத்தில் இராமரின் ஆட்சியில் சீதை கானகம் செல்வது, அயோத்தி மக்கள் புரஞ்சொல்வது போன்றவைக் கூறப்பட்டுள்ளது.
சீதை அன்னை பூமா தேவியிடம் தன்னை அழைத்துக் கொள்ளுமாறு கூறி, இராமரை விட்டுச் செல்வதாக எழுதியுள்ளார்.
ஆனால், இந்த நூலில் எவையும் குறிப்பிடப்படவில்லை. காத கார் மொராரி பாபு, துளஸிதாஸர் நூலை சீதையின் கவலையோடு முடிக்க விரும்பாததே காரணம் என்கிறார். துளஸிதாஸர்,
சீதையை தன்னுடைய தாயாகவும் உலகின் தாயாகவும் வர்ணிக்கிறார். சீதை ஏற்கனவே தேவையான அளவிற்குத் துன்புற்றத்தால், மகிழ்ச்சியுடன் நூலை நிறைவு செய்கிறார்.
சிலர், இந்த நூலின் பாலகாண்டத்தை மட்டுமே கூறுகிறார்கள். ஏனெனில், அதில் இராமர், சீதையின் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்துள்ளது.

மானஸில் இராமரின் தெய்வீகம்
இராமரின் தெய்வீகப் பிறப்பு
சித்திரை மாதத்தின் ஒன்பதாம் நாள், சூரியன் மத்யமமாக இருக்கும்; அதிகம் வெயிலோ குளிரோ இல்லாத காலம்,
இதமான காற்று வீசும் காலம். காட்டில் பூ பூக்கும் காலம், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் காலம். பிரம்மா இராமர் பிறக்க இதுவே சரியான நேரம் என்று குறிக்கிறார்.
தேவர்கள் அனைவரும் மிக உன்னதமான இராமரின் பிறப்பைக் காண வானில் கூடுகிறார்கள். தேவர்கள் இறைவனின் துதியைப் பாட அவை வானில் எதிரொலிக்கிறது.

இங்கே இராம் ஜனம் ஸ்துதி என்ற புகழ்பெற்ற பாடல் எழுதப்பட்டுள்ளது..கோசலை நான்கு கரங்களுடன் கரிய நிரத்துடன் பிறந்த குழந்தை கண்டு குதூகலிக்கிறாள்.
பல்வேறு ஆபரணங்கள் அணிவித்து, அழகின் கடல் என்று கொஞ்சுகிறாள். கோசலை கைகளைக் குவித்துப் பாடுகிறாள்
“எல்லை அற்றவனே, உன்னை நான் எவ்வாறு துதிப்பேன். வேதங்களும் புராணங்களும் நல்லொழுக்கத்தின் ஆலயம் நீ என்று வர்ணிக்கின்றது.
லக்ஷ்மி தேவிக்கு கடவுள் நீ; அனைத்து மக்களாலும் நேசிக்கப் படுபவன் நீ;என் நன்மைக்காக்கத் தோன்றியுள்ளாய்;
உன் உடம்பின் ஒவ்வொரு துளையும் பல பிரபஞ்சங்களை அடக்கியுள்ளது;நீ என்னுடைய வயிற்றில் தங்கினாய் என்று எண்ணுகையில் நான் தடுமாறுகிறேன்”.
இராமர் சிரித்தபடியே கோசலையின் முந்தைய பிறவியைப் பற்றி கூறி தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார்.
கோசலை இராமரை ஒரு சாதாரண குழந்தையாக மாறக் கேட்டுக் கொண்டாள். பரம்பொருளான இராமர், ஒரு சிறு குழந்தையாக மாறி, அழத் தொடங்கினார்.

துளஸிதாஸர், இந்த பாடலைப் பாடும் எவரும் மனித வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வைகுண்டம் அடைவர் என்கிறார்.
இந்த பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல், இராமரின் பிறந்த நாள் அன்று பாடப் படுகிறது.

அகல்யையின் சாப விமோசனம்
அகல்யை கௌதம ரிஷியின் மனைவி. அவளின் அழகைக் கண்டு அவள் மேல் ஆசைப்பட்டான் இந்திரன்.
நிலாவினை சேவலாக மாற்றி, சூரியன் உதிக்கும் முன்னரே கூவச் செய்தான். விடிந்ததாக நம்பிய ரிஷியும் நீராட கங்கையைச் சென்றடைந்தார்.
அப்போது ரிஷியின் ரூபத்தில் இந்திரன் அங்கு வந்தான். சிறிது நேரத்திற்குப் பின் வந்த ரிஷி, நடந்ததை அறிந்து சினம் கொண்டு, இந்திரன், சந்திரனுக்கு சாபம் அழித்தார்.
இந்திரன் தேவலோகம் இழந்து, ஆயிரம் தாமரைகளால் பூஜித்து சாபத்தை முடித்தான். ரிஷி அகலிகையைக் கல்லால் மாறிவிடும்படி சபித்தார்.
ஒரு பாவமும் செய்யவில்லை என்று அவள் கூறிய பின், இராமர் அவளுக்கு சபாவிமோசனம் அளிப்பார் என்றார்.

இராமர், மிதிலைக்கு சீதையைக் காண செல்லும் பொது, கௌதம ரிஷியின் ஆஷ்ரமத்தை அடைந்தனர்.
விஷ்வமித்ரார், அகலிகையின் கதையைச் சொல்ல, இராமர், கல்லைத் தனது கால்களால் தொட்டு, அகலிகைக்கு விமோசனம் அளித்தார்.
அவள் இராமரின் கால்களில் விழுந்து, இராமரைத் தரிசித்தது தனது புண்ணியம் என்று கூறி கண்ணீரால் அவர் பாதங்களைக் கழுவினாள்.
பின்னர், அவளது கணவனின் வீட்டிற்குத் திரும்பினாள்.

சதியின் தற்கொலையும் பார்வதியின் அவதாரமும்
பாலகாண்டத்தில், சிவன் இராமகதையைப் பார்வதியிடம் கூறுவது கூறப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில், யாக்யவல்க்கியர் பரத்வாஜரிடம் கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

சதியின் சந்தேகம்
திரேதா யுகத்தில், சிவன் சதியுடன் அகஸ்த்ய ரிஷியைச் சந்திக்கச் சென்றார்.
சிவனின் வரவால் மகிழ்ந்த அகஸ்த்ய ரிஷி, இராமரின் கதையைக் கூறினார். சிவன் மிகுந்த மகிழ்வுடன் அதைக் கேட்டுக் கொண்டு, திரும்பிச் சென்றார்.
அதே சமயம், இராமர் பூமியில் அவதரித்து சீதை, இலக்குவனுடன் தண்டக வனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இறுதியில், சிவன், சீதையைத் தேடிக் கொண்டிருக்கும் இராமரைக் கண்டார். “உலகின் மீட்பரான இராமரை நான் வணங்குகிறேன்;அவரே சத்தியமானவர்;பேரின்பம் அளிப்பவர்;
உன்னதமானவர்”. சதி இராமரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை; சிவன் எதற்காக ஒரு மானிடரைப் போற்றுகிறார் என்று வியந்தாள்.
அனைத்தையும் அறிந்த சிவன், சதி மனதில் இருக்கும் சந்தேகத்தையும் அறிந்து, அந்த மானிடர் அகஸ்த்ய ரிஷி புகழ்ந்த இராமர் என்றும்,
சந்தேகம் இன்னும் இருந்தால், சோதித்துப் பார்க்கச் சொல்கிறார். சதி சீதையாக இராமர், இலக்குவன் முன் தோன்றுகிறாள்.
சிவன் எங்கே என்று இருவரும் அவளிடம் வினவ, அவர்களின் பெருமையை எண்ணி, தன்னை நொந்து கொள்கிறாள்.
இதை எவ்வாறு சிவனிடம் கூறுவது என்று வருந்துகிறாள்.

சிவன் சதியிடம் எவ்வாறு அவள் சோதித்தாள் என்று வினவுகிறார். சதி தான் சோதிக்கவில்லை என்றும் இராமரைப் புகழ்ந்தாள் என்றும்
அனைத்தும் அறிந்த சிவனிடம் கூறுகிறாள். சினம் கொண்ட சிவன், இனி சதிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறி,
வாழை மரத்தின் அடியில் தவ்ம் மேற்கொள்கிறார். தன் தவறை எண்ணி வருந்திய சதி, சிவனின் கால்களில் வீழ்ந்து அழ,
விஷ்ணுவின் லீலைகளை சிவன் கூறத் தொடங்கினார்.

தக்ஷனின் தியாகம்
சிவன் விஷ்ணுவின் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கையில், வானில் கொண்டாட்டங்கள் தெரிகிறது.
அது என்னவென்று சதி கேட்க, அது அவளுடைய தந்தை தக்ஷன் ஏற்பாடு செய்த யாகம் என்று சிவன் கூறுகிறார்.
கடவுள் மீது தக்ஷன் வெறுப்பு கொண்டதால் பிரம்மா, விஷ்ணு, சிவனை அவன் அழைக்கவில்லை என்கிறார்.
தான் சென்று வர அனுமதி கேட்டாள் சதி. அழைப்பு இல்லாததால் செல்ல வேண்டாம் என்றார் சிவன். சொல் கேளாமல், சதி சென்றாள்.
துளஸிதாஸர் ஒரு பெண்ணுக்கும் அவள் தந்தைக்குமான தொடர்பு மிக உறுதியானது என்கிறார்.

சதியை அவளது அன்னை தவிர யாரும் வரவேற்கவில்லை. தக்ஷன் கண்டுகொள்ளவும் இல்லை. சதி சிவனுக்கு மரியாதை செய்யாததைக் கண்டு வெகுண்டாள்.
சிவனே இந்த உலகின் தந்தை; அனைவரையும் படைத்தவர் அவரை அவமதிக்கலாகாது என்று கூறி நெருப்பில் வீழ்ந்து மாண்டாள்.
இதை அறிந்த சிவன் வீரபத்ரனை அங்கே அனுப்பினார். அவர் யாகத்தையும் தக்ஷனையும் அழித்தார்.
சதி சாகும் தருவாயில் விஷ்ணுவிடம் தான் மீண்டும் சிவனுக்கு மனைவியாக வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள்.
இமாசலுக்கும் மேனாவிற்கும் மகளாக பார்வதியாக பிறந்தாள்.

பார்வதி மற்றும் நாரதரின் தீர்க்கதரிசனம்
பார்வதி பிறந்து பல வருடங்களுக்குப் பின்னர், நாரத முனி அவளின் பெற்றோர் இமாச்சல் மற்றும் மேனாவைச் சந்தித்தார்.
இமாச்சல் தன்னுடைய புதல்வியின் வருங்காலம் என்னவென்று கேட்டார். நாரதர், பார்வதி பல கலைகள் கற்று, மிகுந்த அன்பு கொண்ட ஒருவனை மணப்பாள் என்றார்.
அவனுடன் பல காலம் மகிழ்ச்சியுடன் வாழ்வாள் என்றார். ஆனால், அவளை மனம் முடிப்பவன், சடாமுடி தரித்த உடைகள் அணியாத ஒரு முனிவராக இருப்பார் என்றார். இதைக் கேட்டு பெற்றோர்கள் வருந்தினாலும், பார்வதி விஷ்ணுவின் வாக்கு மெய்யாவதால் மகிழ்ந்தாள்.
நாரதர் அப்படிபட்ட ஒருவர் சிவன் தான் என்று கூறி, பார்வதியைத் திருமாலைத் தியானிக்குமாறு கூறினார்.
பார்வதி சிவனை அடைய கடுந்தவம் இயற்றினாள். உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்த அவளைக் கண்ட பிரம்மா
இது வரை உலகில் இவ்வாறு யாரும் தவம் செய்தது இல்லை என்று மெச்சி தவத்தை நிறுத்தி, தந்தையுடன் செல்லுமாறு கூறினார்.

சதி மரித்த பின், சிவன் ஹரியின் நமதைக் கூறிக் கொண்டே தவம் செய்தார். அப்போது இராமர்,சிவனிடம் பார்வதியை மணக்குமாறு கூறினார்.
இதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், சிவன் மறுக்க முடியாமல் தவத்தைத் தொடர்ந்தார். அப்போது, தாரகன் என்ற அரக்கன் மக்களைத் துன்புறுத்தி வந்தான்.
சிவனின் புதல்வனால் மட்டுமே அவனை அழிக்க முடியுமென்று அறிந்த பிரம்மா சிவனைப் பார்வதியை மணக்குமாறு கூறினார்.
சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். அவன் பூவினால் ஆன ஐந்து அம்புகளை சிவனின் மார்புகளின் மீது வீசினான்.
தவம் கலைந்து வெகுண்டு எழுந்த சிவன், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார். இதைக் கேட்ட மன்மதனின் மனைவி ரதி, மயங்கி விழுந்தாள்.
அதைக் கண்டு மனமிறங்கிய சிவன், உடலில்லாமல் அவன் அனைவரையும் ஆளுவான் என்று வரம் அளித்தார். கிருஷ்ணாவதாரத்தின் போது, அவன் பிரத்யும்னா என்று மீண்டும் பிறப்பான் என்றார்.
பின்னர், பிரம்மாவும் மற்ற கடவுளும் தன்னுடைய கண்களால் சிவனின் திருமணத்தைப் பார்க்கும் வரம் கேட்டனர்.
விஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவன் பார்வதியை மணக்க ஒப்புக்கொண்டார். பிரம்மா சிவனின் திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

சிவன் பார்வதி திருமணம்
சிவனுக்கென்று குடும்பம் இல்லை; எனவே அவருடைய சேவகர்கள் திருமணத்தை ஏற்பாடு செய்தனர்.
பாம்பினாலான கிரீடமும், தோடும், காப்பும், கொண்டு தலையையும் கழுத்தையும் அலங்கரித்துக் கொண்டார்.
தான் உடல் முழுவதும் சாம்பலைப்பூசிக் கொண்டு, சிங்கத்தின் தோலால் போர்த்திக் கொண்டார். இவ்வாறாக அவர் திருமண மண்டபம் நோக்கி நடந்து செல்ல, பிரம்மா, விஷ்ணு, கந்தர்வர்கள், தேவர்கள் தொடர்ந்து வந்தனர்.
திருமணம் முடிந்து, அவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகன் பிறந்து தாரகனை வதம் செய்தார்.

ஒவ்வொரு காண்டத்தில் இருந்து சில ஸ்லோகங்களைப் பார்ப்போம்

1.1

चौपाई
பஂதஉ குரு பத பதும பராகா. ஸுருசி ஸுபாஸ ஸரஸ அநுராகா..
அமிய மூரிமய சூரந சாரூ. ஸமந ஸகல பவ ருஜ பரிவாரூ..
ஸுகரிதி ஸஂபு தந பிமல பிபூதீ. மஂஜுல மஂகல மோத ப்ரஸூதீ..
ஜந மந மஂஜு முகுர மல ஹரநீ. கிஏதிலக குந கந பஸ கரநீ..
ஷ்ரீகுர பத நக மநி கந ஜோதீ. ஸுமிரத திப்ய த்ரரிஷ்டி ஹியஹோதீ..
தலந மோஹ தம ஸோ ஸப்ரகாஸூ. பட஀ே பாக உர ஆவஇ ஜாஸூ..
உகரஹிஂ பிமல பிலோசந ஹீ கே. மிடஹிஂ தோஷ துக பவ ரஜநீ கே..
ஸூ஀ஹிஂ ராம சரித மநி மாநிக. குபுத ப்ரகட ஜஹஜோ ஜேஹி காநிக..

दोहा/सोरठा
ஜதா ஸுஅஂஜந அஂஜி தரிக ஸாதக ஸித்த ஸுஜாந.
கௌதுக தேகத ஸைல பந பூதல பூரி நிதாந..1..

1.2

चौपाई
குரு பத ரஜ மரிது மஂஜுல அஂஜந. நயந அமிஅ தரிக தோஷ பிபஂஜந..
தேஹிஂ கரி பிமல பிபேக பிலோசந. பரநஉராம சரித பவ மோசந..
பஂதஉப்ரதம மஹீஸுர சரநா. மோஹ ஜநித ஸஂஸய ஸப ஹரநா..
ஸுஜந ஸமாஜ ஸகல குந காநீ. கரஉப்ரநாம ஸப்ரேம ஸுபாநீ..
ஸாது சரித ஸுப சரித கபாஸூ. நிரஸ பிஸத குநமய பல ஜாஸூ..
ஜோ ஸஹி துக பரசித்ர துராவா. பஂதநீய ஜேஹிஂ ஜக ஜஸ பாவா..
முத மஂகலமய ஸஂத ஸமாஜூ. ஜோ ஜக ஜஂகம தீரதராஜூ..
ராம பக்தி ஜஹஸுரஸரி தாரா. ஸரஸஇ ப்ரஹ்ம பிசார ப்ரசாரா..
பிதி நிஷேதமய கலி மல ஹரநீ. கரம கதா ரபிநஂதநி பரநீ..
ஹரி ஹர கதா பிராஜதி பேநீ. ஸுநத ஸகல முத மஂகல தேநீ..
படு பிஸ்வாஸ அசல நிஜ தரமா. தீரதராஜ ஸமாஜ ஸுகரமா..
ஸபஹிஂ ஸுலப ஸப திந ஸப தேஸா. ஸேவத ஸாதர ஸமந கலேஸா..
அகத அலௌகிக தீரதராஊ. தேஇ ஸத்ய பல ப்ரகட ப்ரபாஊ..

दोहा/सोरठा
ஸுநி ஸமு஀ஹிஂ ஜந முதித மந மஜ்ஜஹிஂ அதி அநுராக.
லஹஹிஂ சாரி பல அசத தநு ஸாது ஸமாஜ ப்ரயாக..2..

1.3

चौपाई
மஜ்ஜந பல பேகிஅ ததகாலா. காக ஹோஹிஂ பிக பகஉ மராலா..
ஸுநி ஆசரஜ கரை ஜநி கோஈ. ஸதஸஂகதி மஹிமா நஹிஂ கோஈ..
பாலமீக நாரத கடஜோநீ. நிஜ நிஜ முகநி கஹீ நிஜ ஹோநீ..
ஜலசர தலசர நபசர நாநா. ஜே ஜட஀ சேதந ஜீவ ஜஹாநா..
மதி கீரதி கதி பூதி பலாஈ. ஜப ஜேஹிஂ ஜதந ஜஹாஜேஹிஂ பாஈ..
ஸோ ஜாநப ஸதஸஂக ப்ரபாஊ. லோகஹுபேத ந ஆந உபாஊ..
பிநு ஸதஸஂக பிபேக ந ஹோஈ. ராம கரிபா பிநு ஸுலப ந ஸோஈ..
ஸதஸஂகத முத மஂகல மூலா. ஸோஇ பல ஸிதி ஸப ஸாதந பூலா..
ஸட ஸுதரஹிஂ ஸதஸஂகதி பாஈ. பாரஸ பரஸ குதாத ஸுஹாஈ..
பிதி பஸ ஸுஜந குஸஂகத பரஹீஂ. பநி மநி ஸம நிஜ குந அநுஸரஹீஂ..
பிதி ஹரி ஹர கபி கோபித பாநீ. கஹத ஸாது மஹிமா ஸகுசாநீ..
ஸோ மோ ஸந கஹி ஜாத ந கைஸேஂ. ஸாக பநிக மநி குந கந ஜைஸேஂ..

दोहा/सोरठा
பஂதஉஸஂத ஸமாந சித ஹித அநஹித நஹிஂ கோஇ.
அஂஜலி கத ஸுப ஸுமந ஜிமி ஸம ஸுகஂத கர தோஇ..3க..
ஸஂத ஸரல சித ஜகத ஹித ஜாநி ஸுபாஉ ஸநேஹு.
பாலபிநய ஸுநி கரி கரிபா ராம சரந ரதி தேஹு..3க..

1.4

चौपाई
பர அகாஜு லகி தநு பரிஹரஹீஂ. ஜிமி ஹிம உபல கரிஷீ தலி கரஹீஂ..
பஂதஉகல ஜஸ ஸேஷ ஸரோஷா. ஸஹஸ பதந பரநஇ பர தோஷா..
புநி ப்ரநவஉபரிதுராஜ ஸமாநா. பர அக ஸுநஇ ஸஹஸ தஸ காநா..
பஹுரி ஸக்ர ஸம பிநவஉதேஹீ. ஸஂதத ஸுராநீக ஹித ஜேஹீ..
பசந பஜ்ர ஜேஹி ஸதா பிஆரா. ஸஹஸ நயந பர தோஷ நிஹாரா..
பஹுரி பஂதி கல கந ஸதிபாஏ ஜே பிநு காஜ தாஹிநேஹு பாஏ.
பர ஹித ஹாநி லாப ஜிந்ஹ கேரேஂ. உஜரேஂ ஹரஷ பிஷாத பஸேரேஂ..
ஹரி ஹர ஜஸ ராகேஸ ராஹு ஸே. பர அகாஜ பட ஸஹஸபாஹு ஸே..
ஜே பர தோஷ லகஹிஂ ஸஹஸாகீ. பர ஹித கரித ஜிந்ஹ கே மந மாகீ..
தேஜ கரிஸாநு ரோஷ மஹிஷேஸா. அக அவகுந தந தநீ தநேஸா..
உதய கேத ஸம ஹித ஸபஹீ கே. குஂபகரந ஸம ஸோவத நீகே..

दोहा/सोरठा
உதாஸீந அரி மீத ஹித ஸுநத ஜரஹிஂ கல ரீதி.
ஜாநி பாநி ஜுக ஜோரி ஜந பிநதீ கரஇ ஸப்ரீதி..4..

1.5

चौपाई
மைஂ அபநீ திஸி கீந்ஹ நிஹோரா. திந்ஹ நிஜ ஓர ந லாஉப போரா..
பாயஸ பலிஅஹிஂ அதி அநுராகா. ஹோஹிஂ நிராமிஷ கபஹுகி காகா..
பஂதஉஸஂத அஸஜ்ஜந சரநா. துகப்ரத உபய பீச கசு பரநா..
பிசுரத ஏக ப்ராந ஹரி லேஹீஂ. மிலத ஏக துக தாருந தேஹீஂ..
உபஜஹிஂ ஏக ஸஂக ஜக மாஹீஂ. ஜலஜ ஜோஂக ஜிமி குந பிலகாஹீஂ..
ஸுதா ஸுரா ஸம ஸாதூ அஸாதூ. ஜநக ஏக ஜக ஜலதி அகாதூ..
பல அநபல நிஜ நிஜ கரதூதீ. லஹத ஸுஜஸ அபலோக பிபூதீ..
ஸுதா ஸுதாகர ஸுரஸரி ஸாதூ. கரல அநல கலிமல ஸரி ப்யாதூ..
குந அவகுந ஜாநத ஸப கோஈ. ஜோ ஜேஹி பாவ நீக தேஹி ஸோஈ..

दोहा/सोरठा
பலோ பலாஇஹி பை லஹஇ லஹஇ நிசாஇஹி நீசு.
ஸுதா ஸராஹிஅ அமரதாகரல ஸராஹிஅ மீசு..5..

1.6

चौपाई
கல அக அகுந ஸாதூ குந காஹா. உபய அபார உததி அவகாஹா..
தேஹி தேஂ கசு குந தோஷ பகாநே. ஸஂக்ரஹ த்யாக ந பிநு பஹிசாநே..
பலேஉ போச ஸப பிதி உபஜாஏ. கநி குந தோஷ பேத பிலகாஏ..
கஹஹிஂ பேத இதிஹாஸ புராநா. பிதி ப்ரபஂசு குந அவகுந ஸாநா..
துக ஸுக பாப புந்ய திந ராதீ. ஸாது அஸாது ஸுஜாதி குஜாதீ..
தாநவ தேவ ஊ அரு நீசூ. அமிஅ ஸுஜீவநு மாஹுரு மீசூ..
மாயா ப்ரஹ்ம ஜீவ ஜகதீஸா. லச்சி அலச்சி ரஂக அவநீஸா..
காஸீ மக ஸுரஸரி க்ரமநாஸா. மரு மாரவ மஹிதேவ கவாஸா..
ஸரக நரக அநுராக பிராகா. நிகமாகம குந தோஷ பிபாகா..

दोहा/सोरठा
ஜட஀ சேதந குந தோஷமய பிஸ்வ கீந்ஹ கரதார.
ஸஂத ஹஂஸ குந கஹஹிஂ பய பரிஹரி பாரி பிகார..6..

1.7

चौपाई
அஸ பிபேக ஜப தேஇ பிதாதா. தப தஜி தோஷ குநஹிஂ மநு ராதா..
கால ஸுபாஉ கரம பரிஆஈ. பலேஉ ப்ரகரிதி பஸ சுகஇ பலாஈ..
ஸோ ஸுதாரி ஹரிஜந ஜிமி லேஹீஂ. தலி துக தோஷ பிமல ஜஸு தேஹீஂ..
கலஉ கரஹிஂ பல பாஇ ஸுஸஂகூ. மிடஇ ந மலிந ஸுபாஉ அபஂகூ..
லகி ஸுபேஷ ஜக பஂசக ஜேஊ. பேஷ ப்ரதாப பூஜிஅஹிஂ தேஊ..
உதரஹிஂ அஂத ந ஹோஇ நிபாஹூ. காலநேமி ஜிமி ராவந ராஹூ..
கிஏஹுகுபேஷ ஸாது ஸநமாநூ. ஜிமி ஜக ஜாமவஂத ஹநுமாநூ..
ஹாநி குஸஂக ஸுஸஂகதி லாஹூ. லோகஹுபேத பிதித ஸப காஹூ..
ககந சட஀இ ரஜ பவந ப்ரஸஂகா. கீசஹிஂ மிலஇ நீச ஜல ஸஂகா..
ஸாது அஸாது ஸதந ஸுக ஸாரீஂ. ஸுமிரஹிஂ ராம தேஹிஂ கநி காரீ..
தூம குஸஂகதி காரிக ஹோஈ. லிகிஅ புராந மஂஜு மஸி ஸோஈ..
ஸோஇ ஜல அநல அநில ஸஂகாதா. ஹோஇ ஜலத ஜக ஜீவந தாதா..

दोहा/सोरठा
க்ரஹ பேஷஜ ஜல பவந பட பாஇ குஜோக ஸுஜோக.
ஹோஹி குபஸ்து ஸுபஸ்து ஜக லகஹிஂ ஸுலச்சந லோக..7க..
ஸம ப்ரகாஸ தம பாக துஹுநாம பேத பிதி கீந்ஹ.
ஸஸி ஸோஷக போஷக ஸமு஀ி ஜக ஜஸ அபஜஸ தீந்ஹ..7க..
ஜட஀ சேதந ஜக ஜீவ ஜத ஸகல ராமமய ஜாநி.
பஂதஉஸப கே பத கமல ஸதா ஜோரி ஜுக பாநி..7க..
தேவ தநுஜ நர நாக கக ப்ரேத பிதர கஂதர்ப.
பஂதஉகிஂநர ரஜநிசர கரிபா கரஹு அப ஸர்ப..7க..

1.8

चौपाई
ஆகர சாரி லாக சௌராஸீ. ஜாதி ஜீவ ஜல தல நப பாஸீ..
ஸீய ராமமய ஸப ஜக ஜாநீ. கரஉப்ரநாம ஜோரி ஜுக பாநீ..
ஜாநி கரிபாகர கிஂகர மோஹூ. ஸப மிலி கரஹு சாட஀ி சல சோஹூ..
நிஜ புதி பல பரோஸ மோஹி நாஹீஂ. தாதேஂ பிநய கரஉஸப பாஹீ..
கரந சஹஉரகுபதி குந காஹா. லகு மதி மோரி சரித அவகாஹா..
ஸூ஀ ந ஏகஉ அஂக உபாஊ. மந மதி ரஂக மநோரத ராஊ..
மதி அதி நீச ஊி ருசி ஆசீ. சஹிஅ அமிஅ ஜக ஜுரஇ ந சாசீ..
சமிஹஹிஂ ஸஜ்ஜந மோரி டிடாஈ. ஸுநிஹஹிஂ பாலபசந மந லாஈ..
ஜௌ பாலக கஹ தோதரி பாதா. ஸுநஹிஂ முதித மந பிது அரு மாதா..
ஹிஹஹி கூர குடில குபிசாரீ. ஜே பர தூஷந பூஷநதாரீ..
நிஜ கவித கேஹி லாக ந நீகா. ஸரஸ ஹோஉ அதவா அதி பீகா..
ஜே பர பநிதி ஸுநத ஹரஷாஹீ. தே பர புருஷ பஹுத ஜக நாஹீஂ..
ஜக பஹு நர ஸர ஸரி ஸம பாஈ. ஜே நிஜ பாட஀ி பட஀ஹிஂ ஜல பாஈ..
ஸஜ்ஜந ஸகரித ஸிஂது ஸம கோஈ. தேகி பூர பிது பாட஀இ ஜோஈ..

दोहा/सोरठा
பாக சோட அபிலாஷு பட஀ கரஉஏக பிஸ்வாஸ.
பைஹஹிஂ ஸுக ஸுநி ஸுஜந ஸப கல கரஹஹிஂ உபஹாஸ..8..

1.9

चौपाई
கல பரிஹாஸ ஹோஇ ஹித மோரா. காக கஹஹிஂ கலகஂட கடோரா..
ஹஂஸஹி பக தாதுர சாதகஹீ. ஹஹிஂ மலிந கல பிமல பதகஹீ..
கபித ரஸிக ந ராம பத நேஹூ. திந்ஹ கஹஸுகத ஹாஸ ரஸ ஏஹூ..
பாஷா பநிதி போரி மதி மோரீ. ஹிபே ஜோக ஹேஂ நஹிஂ கோரீ..
ப்ரபு பத ப்ரீதி ந ஸாமு஀ி நீகீ. திந்ஹஹி கதா ஸுநி லாகஹி பீகீ..
ஹரி ஹர பத ரதி மதி ந குதரகீ. திந்ஹ கஹுமதுர கதா ரகுவர கீ..
ராம பகதி பூஷித ஜியஜாநீ. ஸுநிஹஹிஂ ஸுஜந ஸராஹி ஸுபாநீ..
கபி ந ஹோஉநஹிஂ பசந ப்ரபீநூ. ஸகல கலா ஸப பித்யா ஹீநூ..
ஆகர அரத அலஂகரிதி நாநா. சஂத ப்ரபஂத அநேக பிதாநா..
பாவ பேத ரஸ பேத அபாரா. கபித தோஷ குந பிபித ப்ரகாரா..
கபித பிபேக ஏக நஹிஂ மோரேஂ. ஸத்ய கஹஉலிகி காகத கோரே..

दोहा/सोरठा
பநிதி மோரி ஸப குந ரஹித பிஸ்வ பிதித குந ஏக.
ஸோ பிசாரி ஸுநிஹஹிஂ ஸுமதி ஜிந்ஹ கேஂ பிமல பிவேக..9..

1.10

चौपाई
ஏஹி மஹரகுபதி நாம உதாரா. அதி பாவந புராந ஷ்ருதி ஸாரா..
மஂகல பவந அமஂகல ஹாரீ. உமா ஸஹித ஜேஹி ஜபத புராரீ..
பநிதி பிசித்ர ஸுகபி கரித ஜோஊ. ராம நாம பிநு ஸோஹ ந ஸோஊ..
பிதுபதநீ ஸப பாி ஸாரீ. ஸோந ந பஸந பிநா பர நாரீ..
ஸப குந ரஹித குகபி கரித பாநீ. ராம நாம ஜஸ அஂகித ஜாநீ..
ஸாதர கஹஹிஂ ஸுநஹிஂ புத தாஹீ. மதுகர ஸரிஸ ஸஂத குநக்ராஹீ..
ஜதபி கபித ரஸ ஏகஉ நாஹீ. ராம ப்ரதாப ப்ரகட ஏஹி மாஹீஂ..
ஸோஇ பரோஸ மோரேஂ மந ஆவா. கேஹிஂ ந ஸுஸஂக படப்பநு பாவா..
தூமஉ தஜஇ ஸஹஜ கருஆஈ. அகரு ப்ரஸஂக ஸுகஂத பஸாஈ..
பநிதி பதேஸ பஸ்து பலி பரநீ. ராம கதா ஜக மஂகல கரநீ..

छंद
மஂகல கரநி கலி மல ஹரநி துலஸீ கதா ரகுநாத கீ..
கதி கூர கபிதா ஸரித கீ ஜ்யோஂ ஸரித பாவந பாத கீ..
ப்ரபு ஸுஜஸ ஸஂகதி பநிதி பலி ஹோஇஹி ஸுஜந மந பாவநீ..
பவ அஂக பூதி மஸாந கீ ஸுமிரத ஸுஹாவநி பாவநீ..

दोहा/सोरठा
ப்ரிய லாகிஹி அதி ஸபஹி மம பநிதி ராம ஜஸ ஸஂக.
தாரு பிசாரு கி கரஇ கோஉ பஂதிஅ மலய ப்ரஸஂக..10க..
ஸ்யாம ஸுரபி பய பிஸத அதி குநத கரஹிஂ ஸப பாந.
கிரா க்ராம்ய ஸிய ராம ஜஸ காவஹிஂ ஸுநஹிஂ ஸுஜாந..10க..

——–

2.1

चौपाई
ஜப தேஂ ராமு ப்யாஹி கர ஆஏ. நித நவ மஂகல மோத பதாஏ..
புவந சாரிதஸ பூதர பாரீ. ஸுகரித மேக பரஷஹி ஸுக பாரீ..
ரிதி ஸிதி ஸஂபதி நதீஂ ஸுஹாஈ. உமகி அவத அஂபுதி கஹுஆஈ..
மநிகந புர நர நாரி ஸுஜாதீ. ஸுசி அமோல ஸுஂதர ஸப பாீ..
கஹி ந ஜாஇ கசு நகர பிபூதீ. ஜநு ஏதநிஅ பிரஂசி கரதூதீ..
ஸப பிதி ஸப புர லோக ஸுகாரீ. ராமசஂத முக சஂது நிஹாரீ..
முதித மாது ஸப ஸகீஂ ஸஹேலீ. பலித பிலோகி மநோரத பேலீ..
ராம ரூபு குநஸீலு ஸுபாஊ. ப்ரமுதித ஹோஇ தேகி ஸுநி ராஊ..

दोहा/सोरठा
ஸப கேஂ உர அபிலாஷு அஸ கஹஹிஂ மநாஇ மஹேஸு.
ஆப அசத ஜுபராஜ பத ராமஹி தேஉ நரேஸு..1..

——-

3.1

चौपाई
புர நர பரத ப்ரீதி மைஂ காஈ. மதி அநுரூப அநூப ஸுஹாஈ..
அப ப்ரபு சரித ஸுநஹு அதி பாவந. கரத ஜே பந ஸுர நர முநி பாவந..
ஏக பார சுநி குஸும ஸுஹாஏ. நிஜ கர பூஷந ராம பநாஏ..
ஸீதஹி பஹிராஏ ப்ரபு ஸாதர. பைடே படிக ஸிலா பர ஸுஂதர..
ஸுரபதி ஸுத தரி பாயஸ பேஷா. ஸட சாஹத ரகுபதி பல தேகா..
ஜிமி பிபீலிகா ஸாகர தாஹா. மஹா மஂதமதி பாவந சாஹா..
ஸீதா சரந சௌஂச ஹதி பாகா. மூட஀ மஂதமதி காரந காகா..
சலா ருதிர ரகுநாயக ஜாநா. ஸீஂக தநுஷ ஸாயக ஸஂதாநா..

दोहा/सोरठा
அதி கரிபால ரகுநாயக ஸதா தீந பர நேஹ.
தா ஸந ஆஇ கீந்ஹ சலு மூரக அவகுந கேஹ..1..

———-

4.1

चौपाई
ஆகேஂ சலே பஹுரி ரகுராயா. ரிஷ்யமூக பரவத நிஅராயா..
தஹரஹ ஸசிவ ஸஹித ஸுக்ரீவா. ஆவத தேகி அதுல பல ஸீஂவா..
அதி ஸபீத கஹ ஸுநு ஹநுமாநா. புருஷ ஜுகல பல ரூப நிதாநா..
தரி படு ரூப தேகு தைஂ ஜாஈ. கஹேஸு ஜாநி ஜியஸயந பு஀ாஈ..
படஏ பாலி ஹோஹிஂ மந மைலா. பாகௌஂ துரத தஜௌஂ யஹ ஸைலா..
பிப்ர ரூப தரி கபி தஹகயஊ. மாத நாஇ பூசத அஸ பயஊ..
கோ தும்ஹ ஸ்யாமல கௌர ஸரீரா. சத்ரீ ரூப பிரஹு பந பீரா..
கடிந பூமி கோமல பத காமீ. கவந ஹேது பிசரஹு பந ஸ்வாமீ..
மரிதுல மநோஹர ஸுஂதர காதா. ஸஹத துஸஹ பந ஆதப பாதா..
கீ தும்ஹ தீநி தேவ மஹகோஊ. நர நாராயந கீ தும்ஹ தோஊ..

दोहा/सोरठा
ஜக காரந தாரந பவ பஂஜந தரநீ பார.
கீ தும்ஹ அகில புவந பதி லீந்ஹ மநுஜ அவதார..1..

———-

5.1

चौपाई
ஜாமவஂத கே பசந ஸுஹாஏ. ஸுநி ஹநுமஂத ஹரிதய அதி பாஏ..
தப லகி மோஹி பரிகேஹு தும்ஹ பாஈ. ஸஹி துக கஂத மூல பல காஈ..
ஜப லகி ஆவௌஂ ஸீதஹி தேகீ. ஹோஇஹி காஜு மோஹி ஹரஷ பிஸேஷீ..
யஹ கஹி நாஇ ஸபந்ஹி கஹுமாதா. சலேஉ ஹரஷி ஹியதரி ரகுநாதா..
ஸிஂது தீர ஏக பூதர ஸுஂதர. கௌதுக கூதி சட஀ேஉ தா ஊபர..
பார பார ரகுபீர ஸாரீ. தரகேஉ பவநதநய பல பாரீ..
ஜேஹிஂ கிரி சரந தேஇ ஹநுமஂதா. சலேஉ ஸோ கா பாதால துரஂதா..
ஜிமி அமோக ரகுபதி கர பாநா. ஏஹீ பாி சலேஉ ஹநுமாநா..
ஜலநிதி ரகுபதி தூத பிசாரீ. தைஂ மைநாக ஹோஹி ஷ்ரமஹாரீ..

दोहा/सोरठा
ஹநூமாந தேஹி பரஸா கர புநி கீந்ஹ ப்ரநாம.
ராம காஜு கீந்ஹேஂ பிநு மோஹி கஹாபிஷ்ராம..1..

———-

6.1

चौपाई
யஹ லகு ஜலதி தரத கதி பாரா. அஸ ஸுநி புநி கஹ பவநகுமாரா..
ப்ரபு ப்ரதாப பட஀வாநல பாரீ. ஸோஷேஉ ப்ரதம பயோநிதி பாரீ..
தப ரிபு நாரீ ருதந ஜல தாரா. பரேஉ பஹோரி பயஉ தேஹிஂ காரா..
ஸுநி அதி உகுதி பவநஸுத கேரீ. ஹரஷே கபி ரகுபதி தந ஹேரீ..
ஜாமவஂத போலே தோஉ பாஈ. நல நீலஹி ஸப கதா ஸுநாஈ..
ராம ப்ரதாப ஸுமிரி மந மாஹீஂ. கரஹு ஸேது ப்ரயாஸ கசு நாஹீஂ..
போலி லிஏ கபி நிகர பஹோரீ. ஸகல ஸுநஹு பிநதீ கசு மோரீ..
ராம சரந பஂகஜ உர தரஹூ. கௌதுக ஏக பாலு கபி கரஹூ..
தாவஹு மர்கட பிகட பரூதா. ஆநஹு பிடப கிரிந்ஹ கே ஜூதா..
ஸுநி கபி பாலு சலே கரி ஹூஹா. ஜய ரகுபீர ப்ரதாப ஸமூஹா..

दोहा/सोरठा
அதி உதஂக கிரி பாதப லீலஹிஂ லேஹிஂ உடாஇ.
ஆநி தேஹிஂ நல நீலஹி ரசஹிஂ தே ஸேது பநாஇ..1..

———–

7.1

चौपाई
ரஹேஉ ஏக திந அவதி அதாரா. ஸமு஀த மந துக பயஉ அபாரா..
காரந கவந நாத நஹிஂ ஆயஉ. ஜாநி குடில கிதௌஂ மோஹி பிஸராயஉ..
அஹஹ தந்ய லசிமந பட஀பாகீ. ராம பதாரபிஂது அநுராகீ..
கபடீ குடில மோஹி ப்ரபு சீந்ஹா. தாதே நாத ஸஂக நஹிஂ லீந்ஹா..
ஜௌஂ கரநீ ஸமு஀ை ப்ரபு மோரீ. நஹிஂ நிஸ்தார கலப ஸத கோரீ..
ஜந அவகுந ப்ரபு மாந ந காஊ. தீந பஂது அதி மரிதுல ஸுபாஊ..
மோரி ஜியபரோஸ தரிட஀ ஸோஈ. மிலிஹஹிஂ ராம ஸகுந ஸுப ஹோஈ..
பீதேஂ அவதி ரஹஹி ஜௌஂ ப்ராநா. அதம கவந ஜக மோஹி ஸமாநா..

दोहा/सोरठा
ராம பிரஹ ஸாகர மஹபரத மகந மந ஹோத.
பிப்ர ரூப தரி பவந ஸுத ஆஇ கயஉ ஜநு போத..1க..
பைடி தேகி குஸாஸந ஜடா முகுட கரிஸ காத.
ராம ராம ரகுபதி ஜபத ஸ்த்ரவத நயந ஜலஜாத..1க..

சத் –ஆத்மா –ப்ரஹ்மம் போன்ற பொதுச்சொற்கள் போல் அன்றி புருஷோத்தமன் -பத பிரயோகம் வியக்தமாக நாராயணனையே காட்டும்
கீழ் -13 -ஆத்மா உடல் வேறுபாடுகளைத் தெளிவாக அருளிச் செய்து
அடுத்த -14-அத்யாயத்தில் ஆத்ம விசோதனம் பண்ணி அருளி – முக்குணங்களையும் தாண்டுவது பற்றியும் அருளிச் செய்து
இதில் – அசேதன சேதன விலக்ஷணமாய் -பிரேரிதனாய் -நியாமகனாய்-ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணனான -இருக்கும் புருஷோத்தமனாப் பற்றி விரித்த்து அருளிச் செய்கிறான்

அபுருஷன் -புருஷன் -புருஷ தரன் -புருஷ தமன் -புருஷ உத்தமன் –
அசேதனம் -சேதனன்(அசின் மிஸ்ராத்) -முக்தன் (விஸூத்த)-நித்யன் -அமரர்கள் அதிபதி
ஐந்து விரல்கள் -கட்டை விரல் இயங்கினால் தான் மற்றவை இயங்கும் –

மூன்று ஹேதுக்கள் -எங்கும் அனைத்தையும் வியாபித்து இருப்பதாலும் -பரணாத் -தாங்குவதாலும் -ஸ்வாம்யாத்–யானே நீ என்னுடைமையும் நீயே –

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பிராகிருத சரீரத்துடன் கூடிய -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித்-பிராகிருத சரீர- நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம -புருஷோத்தமனான நாராயணன்
வ்யாபநாத்–அவைகளை -வியாபிக்கிற படியால்
பரணாத்–அவைகளை -தரிக்கிற படியால்
ஸ்வாம்யாத்–அவைகளை -நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –

ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் -வியாபித்துத் தரித்து நியமிக்கும்

—————

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம்
ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் – இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –

புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் –
பத்தன் முக்தன் நித்யன் -மூவர் புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே
அபுருஷன் -அசித் -வர்க்கம்-
புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் -அவதார ரஹஸ்ய ஞானம் போலே
நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் –
பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

————————————————————

ஸம்ஸார விருக்ஷம் 1-2 –
மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 –
எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5 –
பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6 –
ஜீவ தத்துவ விளக்கம் 7-9 –
ஞானக் கண் 10-11 –
பரமாத்மனது சொரூபம் 12-15 –
ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.

—————————–

அவதாரிகை
க்ஷேத்ர அத்யாய -13 அத்யாயத்துக்கு பெயர் சூட்டுகிறான் இங்கு
க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞன் பூத பிரகிருதி புருஷன் ஸ்வரூபம் விதோய -நன்கு சோதித்து
விஸூத்தஸ்ய அபரிச்சின்ன ஞான ஏகாரஸ்ய புருஷஸ்ய பிரக்ருத குண சங்கம் பிரவாஹ நிமித்த
தேவாதி ஆகார பரிணாமய ப்ரக்ருதி சம்பந்தம்
அநாதி இது யுக்தம்
அநந்தரஸ்ய அத்யாயம் -14
கார்ய காரண உபய அவஸ்தை களிலும் குண சங்க மூல-
பகவத் ஏக க்ருத கர்மாதீனமாக இது யுக்தம்
குண பந்த விளக்கம் அருளிச் செய்து குண சங்க நிவ்ருத்தி பூர்வக ஆத்ம யாதாத்ம்ய அவாப்தி -கைவல்ய மோக்ஷம் அடைய
பகவத் பக்தி மூலம் இத் யுக்தம் மத் ஆராதனம் மூலமே என்று அருளிச் செய்து
இதானே
பகவத புருஷோத்தமன் வக்தும் ஆரம்ப
பஜனம் சொல்லி -பஜநீத்வ அவனைச் சொல்ல வந்து -இத்தைச் சொல்லும் முகத்தாலேயே தன்னிடம் ஈர்த்துக் கொள்ளப் பார்க்கிறான் –
ஷரம் அக்ஷரம் -இங்கு அழியக்கூடிய சரீரத்துடன் கூடிய பத்தாத்மா -இல்லாத முக்தாத்மா -விபூதி பூதாத் -புருஷர்கள் இருவரையும் சொல்லி
இவர்களைக் காட்டிலும் நிகில ஹேயபிரத்ய நீக -கல்யாண குண ஏக தானதயா
அத்யந்த உத்கர்ஷேண -அங்குஷ்ட மாத்ர புருஷ -அசித் பத்த முக்த நித்ய விலக்ஷணன் –
வி ஸஜாதீயத்ய -பகவத புருஷோத்தமஸ் யஞ்ச தன்மை சொல்ல வந்து
தத்ர தாவது -இப்பொழுது
அசங்க ரூப பற்றின்மை வடிவாக சத்ர சின்ன கோடரியால் வெட்டி வீழ்த்தப்படும் பந்தாம் அக்ஷரஸ்ய விபூதிம் வக்தும் -சொல்லத் தொடங்கி
சேத்ய ரூப பந்த ஆகாரேண விததம் அசித் பரிணாமம் விசேஷ அஸ்வத் வ்ருஷம் கல்பித்து எங்கும் பரந்து விரிந்து -அரச மரமாக சம்சாரம் உருவகம் –

உபநிஷத் சொல்லிய திருஷ்டாந்தமே இது

———————-

ஸ்ரீ பகவாநுவாச–
ஊர்த்வ மூல மத ஸாகம் அஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்–
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ் தம் வேத ஸ வேதவித்–৷৷15.1৷৷

ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் -கண்ணன்-கூறுகிறான்
(யம்) அஶ்வத்த₂ம் – யாதொரு ஸம்ஸாரமாகிற அரச மரத்தை
ஊர்த்₄வமூலம் – மேலே வேர் உடையதாகவும்
அத₄:ஶாக₂ம் – கீழே பரவியுள்ள கிளைகளை யுடையதாகவும்
அவ்யயம் – (ப்ரவாஹ ரூபமாயிருக்கையால்) அழியாததாகவும்
யஸ்ய ச₂ந்தா₃ம்ஸி பர்ணாநி-வேத வாக்கியங்களை இலைகளாக யுடையதாகவும்
ப்ராஹு: – (வேத₃ங்கள்) கூறுகின்றனவோ
தம் – அந்த அரச மரத்தை
ய: வேத₃: – எவன் அறிகிறானோ
ஸ வேத₃வித் – அவனே வேதத்தை அறிந்தவனாவான்.

ஸ்ரீ பகவான் கூறுகிறான் -யாதொரு சம்சாரமாகிற அரச மரத்தை- மேலே வேர் உடையதாகவும் –
கீழே பரவியுள்ள கிளைகளை உடையதாகவும் -ப்ரவாஹ ரூபமாக அழியாததாகவும் -வேத வாக்கியங்கள் இலைகளாகவும்-
வேதங்கள் கூறுகின்றனவோ -அந்த அரச மரத்தை எவன் அறிகிறானோ
அவனே வேதத்தை அறிந்தவனாவான்

அஸ்வத்தம் நாளை இருக்காது -அவ்வளவு அநித்தியம் -இருந்தாலும் பிரவாஹமாக நித்யம் இந்த ஸ்லோகம் நைமித்திக ஸ்ருஷ்டியைப் பற்றியது-நான்முகன் வேர் என்பதால் அவன் செய்யும் நைமித்திக ஸ்ருஷ்ட்டி –பிரகிருதி நித்யம் ஆகவே வெட்டுவதாகச் சொல்ல முடியாது -அதன் கார்யமான சம்சாரத்தை சொன்னவாறு -பூர்வ பாகம் சம்சாரத்தை வளர்க்கும் அன்றோ -ஆதலால் வேதங்களை இலைகளாகச் சொல்லிற்று

காம்ய கர்மங்கள் சம்சாரத்தை வளர்ப்பதால் இந்த மரம் வெட்டத்தக்கதே தென்று காற்றால் மறைப்பதால் இலைகளே வேத வாக்கியங்கள்

ஓங்காரம் மரம் –ஏகாயான சாகை -மரம் சொல்ல வேண்டும் என்று ஆக்ஷேபங்கள் -அறிந்தவன் ஓங்கார பிரபாவோ வேதா -வேதம் அறிந்தவன் ஆகிறான் ஆனால் வெட்டி சம்சாரம் கடப்பது என்றது ஒவ்வாதே

வேதாந்தம் தானே சம்சாரம் கடக்க உபாயம் சொல்லும்-எதை வெட்டணும் மரம் காட்டும் -எப்படி வெட்டணும் வேதாந்தம் சொல்லும் –

பெரியதாய் -அழிவதாய் -வெட்டப்படுவதாய் -இருப்பதால் ஸம்ஸாரத்தை அஸ்வத்த மரமாக வேதமே சொல்லுமே-இருந்தாலும் அவ்யயம் -ப்ரவாஹ ரூபமாக நித்யம்

அஸ்வத்த மரம் -அரச மரம் -த்ருஷ்டாந்தம் -தலை கீழே -கடோ உபநிஷத் —
ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்க -வேராக கொண்டு -கர்மம் அடியாக -கீழே விழுந்த விதை
இந்த கர்மம் அடியாக பிறப்பது -மேலே வேற மரம் அருகில் -சம்சாரம் ஆகிய பெரிய மரம் வேர் சத்ய லோகம்
கீழே தேவாதி கிளைகள்

அஸ்வத்தம் -ஸ்வ ந ஸ்தாத்ததி –நாளை இருக்காது -அதனால் அஸ்வத்தம் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –
சதத பரிணாமம் -ஷட் பாவ விகாரங்கள் உண்டே –
அவ்யயம் பிரவாஹ ரூபமாக அழியாமல் -சந்தஸ் வேத வாக்கியங்கள் இலைகள் என்கிறான் –

வேத வாக்கியங்கள் –சந்தாம்ஸி காம்ய கர்மங்களையும் சொல்லும் -பற்று அற்ற தன்மையுடன் பகவத் ஆராதன ரூபமாகச் செய்தால் இத்தைத் தாண்டலாம் என்றும் சொல்லும்

சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி–மரத்துக்கு இலை தானே ஸூர்ய ஒளி மூலம் பிராணன் -அதே போலே யாகங்கள் இவை வேத வாக்கியங்கள் கொண்டே –
மறை புரிய வைக்காமல் மயக்கும் – பூர்வ காண்டம் -த்யானம் உபாசனம் – உபநிஷத் வேதாந்தம் -ப்ரஹ்ம பாவம்
சந்தஸ் -மறைக்கும் -வேதம் மட்டும் பிடித்து கொண்டு ஸ்வர்க்காதி அல்ப -முக்குணத்தவர்களுக்கு
சம்சாரம் மரத்தை அறிந்தவனே அதிகாரி -சொல்லி அடுத்து

——————

கீழே நைமித்திக ஸ்ருஷ்ட்டி -பிரமனே மூலம் படைக்கப்பட்டு -இதில் நித்தியமாக பிறந்தும் இறந்தும் உள்ளவை பற்றி-நித்ய ஸ்ருஷ்ட்டி பற்றி  -இந்த ஸ்லோகத்தால்
தஸ்ய (அந்த அரச மரத்தினுடைய வேறே சில கிளைகள் ) மநுஷ்யாதி ஷாகஸ்ய வரிக்ஷஸ்ய தத்தத் கர்ம கரிதா அபராஃ ச அதஃ ஷாகாஃ புநரபி மநுஷ்ய பஷ்வாதி ரூபேண ப்ரஸரிதாஃ பவந்தி? (கீழ் கிளைகள் மனுஷ்யாதி )ஊர்த்வஂ ச கந்தர்வ யஷ தேவாதி ரூபேண ப்ரஸரிதா பவந்தி(மேல் கிளைகள் தேவாதி ரூபம் ). தாஃ ச குண ப்ரவரித்தாஃ குணைஃ ஸத்த்வாதிபிஃ ப்ரவரித்தாஃ? (முக்குணங்களால் வளர்க்கப்பட்ட )விஷய ப்ரவாலாஃ ஷப்தாதி விஷய பல்லவாஃ.(தளிர்கள் )கதம் இதி அத்ர ஆஹ —

அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ் தஸ்ய ஸாகா–குண ப்ரவ்ருத்தா விஷய ப்ரவாலா–
அதஸ்ச மூலாந் யநு ஸந்ததாநி–கர்மாநுபந்தீநி மநுஷ்ய லோகே–৷৷15.2৷৷

தஸ்ய – அந்த அரச மரத்தினுடைய
ஶாகா₂: – (மேலும் சில) கிளைகள்–(தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள்,)
கு₃ண ப்ரவ்ருத்₃தா₄— ஸத்வம் முதலான கு₃ணங்களால் வளர்கின்றவையாய்
விஷய ப்ரவாளா : – ஶப்₃த₃ம் முதலான விஷயங்களைத் தளிர்களாக யுடையவையாய்
அத₄ஶ்ச ஊர்த்₄வம் ச ப்ரஸ்ருதா: – கீழும் மேலும் பரவியுள்ளன (ஸம்ஸாரமாகிற அந்த அரச மரத்துக்கு)
அத₄: மநுஷ்ய  லோகே ச- கீழுள்ள மனிதிர்களின் உலகிலும்
கர்மாநுப₃ந்தீ₄நி – கர்மக் கட்டுக்களாகிற
மூலாநி – வேர்கள்(அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும்,)
அநுஸந்ததாநி – (எல்லா உலகங்களிலும்) பரவியுள்ளன .

சப்தம் முதலான விஷயங்களைத் தளிர்களாக உடையவையாய் -கீழும் மேலும் பரவி யுள்ளன –
அந்த மரத்துக்கு கீழுள்ள மனிதர்களின் உலகிலும் கர்மக் கட்டுக்கள் ஆகிற வேர்கள் பரவி யுள்ளன –
மேலும் கீழும் பரவி உள்ள கிளைகள் கர்மா -உயர்ந்த தாழ்ந்த யோனிக்கு இரண்டுக்கும் -இதுவே காரணம் –
முக்குணங்கள் வளர்க்கப் பட்ட மரம்

நீரும் உரமும் இவையே -கர்மம் வளர -விழுது விழுந்து மேலும் கீழும் -மரம் சூழல்- பிரவாஹா ரூபம் –
தளிர்கள் பஞ்ச பூத ஸூ ஷ்மங்கள் உடைய சம்சாரம்
சப்தாதிகளை தளிர்கள் -முதலில் நைமித்திக ஸ்ருஷ்ட்டி – அடுத்து நித்ய ஸ்ருஷ்ட்டி -பிராட்டி புருவ நெறிப்பே
பெரிய பெருமாளுக்கு வேதம் -மேலே உயர்த்தினால் உயர்ந்த யோனி -பிரமாணம் இதுவே இவனுக்கு –
கர்மம் என்னும் கட்டுக்கள் -மனுஷ்ய லோகத்திலும் -சேரும் –

————–

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே–நாந்தோ ந சாதிர் ந ச ஸம் ப்ரதிஷ்டா–
அஸ்வத்தமேநம் ஸு விரூட மூல-மஸங்க ஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா–৷৷15.3৷৷

அஸ்ய ரூபம் –இந்த அரச மரத்துக்கு உருவம்
இஹ –இந்த மனுஷ்ய லோகத்தில் ஸம்ஸாரிகளாலே
ந ததோபலப்யதே–ததா ந உப லப்யதே -முன் சொல்லப்பட்ட படி அறியப் படுவது இல்லை
நாந்தோ ச -அந்த ச ந -அந்த மரத்தின் அழிவும் குணம் கடந்த நிலையால் விளைவது என்று அறியப் படுவது இல்லை
ந சாதிர் ச -ஆதி ச ந -இந்த மரத்தின் காரணமும் குணங்களில் பற்றே என்றும் அறியப் படுவது இல்லை
ஸம் ப்ரதிஷ்டா ச ந -இந்த அரசமரம் நிலை நிற்கும் ஆதாரமும் -அநாத்மனி ஆத்ம அபிமானம் போன்ற-அஞ்ஞானமே என்றும் அறியப் படுவது இல்லை
ஏநம் ஸுவிரூடமூலம் -முன் கூறப்பட்டதாய் நன்கு பலவிதமாக ஊன்றி நிற்கும் வேரை யுடையதான-ஸு வி ரூட மூலம்–ஸு-கெட்டியாக -வி-பலவிதமாக விவிதமாக –வாஸனை ருசி போன்றவை -பதிவுகள் கெட்டியாக ஊன்றி இருக்குமே -மாறி மாறி பல பிறவிகளில் பெற்ற பதிவுகள் -போக்குவது கஷ்டம் என்று அறிவிக்கவே இங்கு இத்தை அருளிச் செய்கிறான் 
அஸ்வத்தம் -ஸம்ஸாரமாகிற அரச மரத்தை
த்ருடேந-நல்ல அறிவைக் காரணமாக் கொண்டு இருக்கையாலே உறுதியாய் இருப்பதான
அஸங்க ஸஸ்த்ரேண -குண மய போகங்களில் பற்றின்மையாகிய ஆயுதத்தால்-அஸ்திரம் அம்பு போல்வன -சஸ்திரம் வாள் போல்வன –
சித்த்வா–வெட்டி

அஸ்ய ரூபம் ததா-இந்த மரத்தின் உருவத்தைப் போல,
இஹ ந உபலப்யதே-இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை,
ந அந்த: ந ஆதி ச ந ஸம்ப்ரதிஷ்டா-முடிவும், ஆதியும், நிலைக் களனும் புலப்படுவதில்லை,
ஸு விரூட மூலம் ஏநம் அஸ்வத்தம்-அஹங்காரம், மமகாரம், முற் பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை,
த்ருடேந அஸங்க ஸஸ்த்ரேண சித்த்வா-பற்றின்மை யென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்து விட்டு.-

விவேக ஞானத்தால் வந்த பற்றின்மை திடமாக இருக்க வேண்டும் -நோய் அடியாக வைக்கும் பற்றின்மையானால் நோய் போனால் மீளுமே

தத பதம் தத் பரிமார்கிதவ்ய–யஸ்மிந் கதா ந நிவர்தந்தி பூய–
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே–யத ப்ரவ்ருத்தி ப்ரஸ்ருதா புராணீ--৷৷15.4৷৷

தத: – அந்தப் பற்றின்மைக் காரணமாக
யஸ்மிந் க₃தா : –மறுபடியும் சம்சாரத்துக்குத் திரும்பி
பூ₄ய : ந நிவர்தந்தி தத் பத₃ம்- மறுபடியும் ஸம்ஸாரத்துக்குத் திரும்பி வருதல் இல்லாத அந்தப் ப்ராப்யம்
பரமார்கி₃தவ்யம் – தேடத் தக்கது
ஆத்₃ய ம் – அனைத்துக்கும் ஆதி₃யாய்
யதஸ் : புராணீ ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா – எவனிடமிருந்து அநாதி₃காலமாக கு₃ண மய விஷயங்களில் ஈடுபாடு (ஜீவர்களுக்குத்) தொடர்கின்றதோ
தம் புருஷம் ஏவ – அத் தகையவனான பரம புருஷனையே
ப்ரபத்₃யேத் – அஜ்ஞாநம் முதலோனவை நீங்குவதற்காக) ஶரணமடையக் கடவன்

தத: யஸ்மிந் கதா பூய: ந நிவர்தந்தி-அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ,
தத் பதம் பரிமார்கிதவ்யம்-அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்,
ச யத: புராணீ-மேலும் எதனிடமிருந்து பழமையான,
ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா-சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ,
தம் ஏவ ஆத்யம் புருஷம்-அந்த ஆதி புருஷனையே,
ப்ரபத்யே-சரணம் அடைகிறேன்.

புராணீ-இதற்கு -பிரபத்யேத் -சரணம் அடையக் கடவன் என்றும் -அவனையே சரணம் அடைய வேண்டும் என்பதற்குப் பிரமாணம் முன்னோர் செயல்பாடே பிரமாணம் காட்டுகிறான் என்றும் கொள்ள வேண்டும்
இவனைப் பற்றியே மோக்ஷம் அடைய முமுஷுக்களால் செய்யப்பட்டவை –

இந்த அரச மரத்திற்கு முன் கூறப்பட்ட உருவம் இந்த மனுஷ்ய உலகத்தில் முன் கூறியபடி அறியப் படுவது இல்லை –
அதன் அழிவும் முன் கூறியபடி குணம் கடந்த நிலையால் விளைவது என்று அறியப்படுவது இல்லை
இந்த மரத்தின் காரணமும் அறியப்படுவது இல்லை -இது நிலை நிற்கும் ஆதாரமும் அறியப்படுவது இல்லை-முன் ஸ்லோகம் சொன்னபடி அறிகிறார்கள் அல்ல -குடும்ப மரம் -பிறந்தது அறிகிறோம் வெட்ட வேண்டும் என்றும் வெட்ட வழி இது என்றும் அறியாமல் -சம்சார உத்பத்தி வளர்க்கவே அறிந்து உள்ளார்கள் –
முன் கூறப்பட்டதாய் நன்கு பலவிதமாக ஊன்றி நிற்கும் வேரை யுடையதான சம்சாரமாகிற அரச மரத்தை
உறுதியாக இருப்பதான பற்றின்மையான ஆயுதத்தால் வெட்டி அந்தப் பற்றின்மை காரணமாக
மறுபடியும் சம்சாரத்துக்கு திரும்பி வருதல் இல்லாத அந்த ப்ராப்யம் தேடத் தக்கது
அனைத்துக்கும் ஆதியாய் -எவனிடம் இருந்து அநாதிகாலமாக குண மய விஷயங்களில் ஈடுபாடு
ஜீவர்களுக்குத் தொடர்கிறதோ அத்தகைய பரம புருஷனையே சரணம் அடையக் கடவன் –

தேஹாத்ம அபிமானம் மண் உரம் கொண்டு நிலையாக வளர்ந்து உள்ளதே -இத்தையும் அறிய வில்லை -அஞ்ஞானமே பிரதிஷ்டை -குண சங்கம் ஆதி பற்றின்மை வழி அறிய வேண்டுமே

இந்த சம்சாரி இந்த விஷயம் அறியாமல் -முடிவையும் தெரிந்து கொள்ளாமல் -முடிவு முக்குணங்களை
தாண்டினால் தானே -நீர் கொட்டாமல் இருந்தால் -தண்ணீர் அற்று பட்டு போகுமே –
ஆதியும் -அறியாமல் -ஆதி குண சங்கம் -வேர் இது தானே -சம்சார மரம் -அஞ்ஞானம் என்னும் ஆதாரம் -என்றும் அறியாமல்
தேஹாத்ம பிரமம் தானே -அதுவும் அறியாமல் – விவேக ஞானம் என்னும் கோடரியால் வெட்ட வேண்டுமே –
குடும்ப மரம் வம்ச வருஷம் மட்டுமே அறிந்து சம்சாரத்தில் உழல்கின்றான் —
இந்த அரச மரத்தை -நன்றாக பதிந்த மரம் -ஸூ= நன்கு நின்று -வி= விசித்திர விவித -ஸூ விருட மூலம் -இரண்டையும் சொல்லி
சுலபமாக கண்டு கொள்ள முடியாத மரம் -கோடரி -அசங்கம் -பற்று அற்ற -முக்குணங்களில் பற்று வைக்காத தன்மை
திடமாக இருக்க வேண்டும் –எப்பொழுதும் இருக்க வேண்டும் -ஞானத்தின் அடிப்படையில் அசங்கம் வேண்டும் –

பற்றின்மையையே கொண்டு ப்ராப்யம் தேடத்தக்கது-கதம் அநாதி கால ப்ரவரித்தோ குண மய போக ஸங்கஃ தந்மூலஂ ச விபரீத ஜ்ஞாநஂ நிவர்ததே இதி அத்ர ஆஹ –,அஜ்ஞாநாதி நிவரித்தயே –விபரீத ஞானம் அடியாக வந்த குண மய போக சங்கத்தை இரண்டையும் போக்க வேணுமே

அதனால் -ஆத்ம பிராப்தியை -உயர்ந்த -தேடத் தக்கத்தை -தேடுவாய் –திடமான பற்று அற்ற தன்மையால் –
இதற்கு உபாயம் என்ன என்னில்-திருவடிகள் தானே –மூல புருஷனான எம்பெருமானை பற்று –
அந்த -படர்க்கையில் சொல்கிறான் -அஹம்-சொல்லாமல் -தமேவ –
பிரபத்யே -பற்றுகிறேன் -யத–பற்றி அதனால் அஞ்ஞானம் தொலைத்து –
புருஷோத்தமன் -அரையன் சிறையன் இருவரும் சிறை சாலையில் -சிறை கதவை திறந்து விடுவேன் –
வைப்பான் என் திறப்பான் என் -கர்மாதீனம் —யதாக எவன் இடம் இருந்து -பிரவ்ருத்தி முக்குணங்கள் சேர்க்கை கிடைத்ததோ
அவன் திருவடிகளை பற்றி –
தம் -இல்லை தமேவ -அவனையே -மறந்தும் புறம் தொழா மாந்தர் -நாராயணனே நமக்கே பறை தருவான் -ஏக காரணன்

குணப் பற்றுதல் எவன் இடம் இருந்து உருவாக்கி வெகு காலமான வந்ததோ அவனைப் பற்று
எவனைப் பற்றி அஞ்ஞானாதி செயல்கள் வருமோ அவனைப் பற்று என்றுமாம்

மோக்ஷம் அடைய செய்ய வேண்டிய முயற்சியை அடுத்த ஸ்லோகத்தால் விளக்குகிறான்

————-

நிர்மாந மோஹா ஜித ஸங்க தோஷா–அத்யாத்ம நித்யா விநிவ்ருத்தகாமா–
த்வந்த்வைர் விமுக்தா ஸுக துக்க ஸம்ஜ்ஞைர் கச்சந்த்ய மூடா பதமவ்யயம் தத்–৷৷15.5৷৷

நிர்மாந மோஹா – தேஹ ஆத்ம அபிமானமாகிற மயக்கம் நீங்கப் பெற்றவர்களாய்
ஜித ஸங்க₃தோ₃ஷோ: – கு₃ண மயப் பொருள்களில் பற்றாகிற தோஷத்தை வென்றவர்களாய்
அத்₄யாத்ம நித்யா – ஆத்ம ஜ்ஞாநத்தில் எப்போதும் ஈடுபட்டவர்களாய்
வி நிவ்ருத்த காமா : – மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாய்
ஸுக₂ து₃:க₂ஸஞ்ஜ்ஞைர்: த்₃வந்த்₃வை – இன்ப துன்பங்களாகிய இரட்டை களிலிருந்து
விமுக்தோ: – விடுபட்டவர்களாய்
அமூடோ₄: – (தேஹ ₃ஆத்மாக்களைப் பற்றிய ) அனைத்து
மயக்கங்களும் நீங்கப் பெற்றவர்களாய்
அவ்யயம் – ஜ்ஞாநத்தில் ஏற்றத் தாழ்வற்ற
தத் பத₃ம் – ஸ்வரூப ஆவிர்பா₄வம் பெற்ற ப்ரோப்ய
வஸ்துவான ஆத்மாவை
க₃ச்ச₂ந்தி – அடைகிறார்கள்

நிர்மாநமோஹா-செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள்,
ஜிதஸங்கதோஷா-பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள்,
அத்யாத்மநித்யா-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர்,
விநிவ்ருத்தகாமா:-விருப்பங்களினின்றும் நீங்கியோர்,
ஸுகது:கஸம்ஜ்ஞை: த்வந்த்வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர்,
அமூடா:-மடமையற்றோர், தத் அவ்யயம் பதம் கச்சந்தி-அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

உடலே ஆத்மா என்ற மயக்கம் அற்றவர்களாயும் விஷயப்பற்று என்ற தோஷத்தை வென்றவர்களாயும் –
ஆத்ம ஞானத்திலேயே நிலை பெற்று இருப்பவர்களாயும் -ஆத்மா தவிர மற்றைய விஷயங்களில்
ஆசை அற்று இருப்பவர்களாயும்
ஸூகம் துக்கம் முதலிய இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாயும் -அனைத்து மயக்கங்களும்
நீங்கப் பெற்றவர்களாயும் -ஞானத்தில் ஏற்றது தாழ்வு அற்ற ஆத்மாவை அடைகிறார்கள் –

முமுஷுக்கள் முயற்சி செய்ய வேண்டிய படிக்கட்டுகள்
1-அபிமானம் -மயக்கம் நீக்கி -மானம் என்கிற மோஹம் –
2-இதனால் ஜெயிக்கப்பட்ட குணமய தோஷங்கள் உடையவர்களாகி
3-இதனால் ஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற ஈடு படி உடையவர்களாய்
4-இதனால் முழுவதாக ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் அற்றவர்களாய் -காம்பற தலை சிரைத்து -பற்று வேறே காமம் வேறே
5-இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்களாய்
6-தேஹ ஆத்ம பிரமம் போல் அனைத்து மயக்கங்களும் நீங்கப் பெற்றவர்களாய் -முழுவதும் ஆத்ம ஞானம் பெற்றதால் முக்குண மயக்கங்களில் இருந்து நீங்கப்பெற்றவர்களாய்
அந்த ஞான ஆவிர்பாவம் -ஞான சங்கோசமே இல்லாமல் -உயர்ந்த முக்த ஸ்வரூபம் அடைகிறார்கள்

பற்றினால் கிட்டும் பலன்கள் — -ஆத்ம பிராப்தி அடைகிறார்கள் -அசங்கம் கோடரி கிட்டும் -பிறவி நீங்கி –
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
தேஹாத்ம மயக்கம் இல்லை -முக்குணம் பற்று அற்று -ஆத்ம சிந்தனையில் ஈடுபடுவான் -ஆத்மாவில் நிலை பெற்று அத்தை தவிர இதர காமங்களை விட்டு
வேறு எதிலும் ஆசை இல்லை -இரட்டையில் இருந்து விடுபடுவார்-மயக்கம் இல்லாமல் உயர்ந்த பிராப்தி பெறுகிறான் -ஆத்ம ப்ராப்தியையே இங்கு சொல்கிறான் -பிரசித்தம் இல்லையே இத்தை தேடுகிறான்

———-

ந தத் பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக–
யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம--৷৷15.6৷৷

யத்₃ க₃த்வா – எதை அடைந்தபின்பு
ந நிவர்தந்தே – (அதை அடைந்தவர்கள் ஸம்ஸாரத்துகுத்) திரும்புவது இல்லையோ
தத் – அந்த ஜீவாத்ம ஜ்யோதியை
ஸூர்ய: ந பா₄ஸயதே — ஸூர்யன் ப்ரகாஶிக்கச் செய்வதில்லை
ஶஶாங்க : ந (பா₄ஸயதே ) – சந்திரனும் பிரகாசிக்க ச் செய்வதில்லை
பாவக : ந (பா₄ஸயதே ) – அக்₃நியும் பிரகாசிக்கச் செய்வதில்லை
தத் – அந்த
பரமம் தா₄ம – மேலான ஜ்யோதி
மம – என்னுடைமை யாகும். .

எதை அடைந்த பிறகு சம்சாரத்திற்குத் திரும்புவது இல்லையோ -அந்த ஜீவாத்மா ஜோதியை
ஸூர்யனும் சந்திரனும் பிரகாசிக்கச் செய்வது இல்லை -அக்னியும் பிரகாசிக்கச் செய்வது இல்லை –
அந்த மேலான ஜோதி என்னுடைமை யாகும் –

பரிசுத்தமான ஆத்மா -ஆத்ம சாஷாத்காரம் பெற்று -ஞானம் தேஜஸ் -மிக்கு –
ஸூரியன் கொண்டு ஒளி பெற வேண்டாம் சந்திரன் அக்னி -இல்லாமல் தானே விளங்கும்
எத்தை அடைந்த பின் திரும்பி வர வேண்டாமோ -தாமம் தேஜஸ் -இந்த சொத்து மம -சேர்த்தே சொல்லுவான்
எதனால் விளங்குகிறான் -யோகத்தால் -ஞான சஷூஸ்-கர்மா விலகியதும் யோகம் வளரும் –
திருவடி பற்றி பற்று அறுக்க பிரார்த்திக்க வேண்டுமே –

என்னுடைய சரீர ரூபமான செல்வம் அப்ருதக் சித்த பரதந்தர்யமான ஆத்மா என்றவாறு

(ஜீவாத்மா என்னுடைய அம்சம் –அம்சாதிகாரணம் -நா நா வியாபாதேசாத் -வேறு பட்டதே என்றதை விட வேறு பட்டது -அம்சமே -பகுதியே –
நூல்கள் வேஷ்ட்டி -அம்சம் -விட்டுப் பிரியாத விசேஷணங்கள் -சேர்ந்த விஸிஷ்ட வஸ்து –
சித் -விஸிஷ்ட ப்ரஹ்மத்துக்கு அம்சம் –
பூர்வ பக்ஷிகள் பலர் சேர்ந்து அம்சமாக மாட்டார் –
பேத சுருதிகள் இல்லை சொல்லவே அபேத சுருதிகள் அத்வைதி -இருக்கு சொல்லி நிஷேதிக்க –
த்வைதி -அவனும் இவனும் வேறே வேறே சர்வாத்மானா பேதம் –
நாம் விஸிஷ்ட அத்வைதி -கூடி இருந்த ஒன்றே -அம்சமே -சரீர ரூபமான அம்சம் என்றால் இரண்டுக்கும் சேரும் –
ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு குற்றங்கள் சேராது –
அம்சம் -அவயவமே இல்லாத -ஜீவாத்மா அவயவங்கள் கொண்ட சரீரம் போல் -ப்ரஹ்மமும் -அவயவங்கள் தேவை இல்லையே
வேறே வேறே அறிந்து சரீரம் தொலைத்து மோக்ஷம் அடையவே -)

—————–

மேலான முக்தாத்மா என்னுடைய அம்சமே என்றதும் பக்தாத்மா எவ்வாறு என்ன அதற்குப் பதில்

மமை வாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸநாதந–
மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷

ஸநாதந: – அநாதி₃ காலமாய் இருப்பவனாய்
மம அம்ஶ: ஏவ(ஸந்) – என் அம்ஶமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன்
ஜீவபூ₄த: – ( கர்மங்களால் சூழப்பட்ட) ப₃த்₃த₄ ஜீவனாயிருந்து கொண்டு
ஜீவலோகே – ப₃த்₃த₄ ஜீவர்கள் வாழும்லீலா
விபூ₄தியிலிருப்பவனாய்
ப்ரக்ருதிஸ்தா₂நி – ப்ரக்ருதியின் பரிணாமமான ஶரீரத்திலிருக்கும்
மந:ஷஷ்டா₂நி இந்த்₃ரியாணி- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஜ்ஞாந இந்த்₃ரியங்களையும் (இவற்தை நியமிக்கும் ஆறாவது இந்திரியமான மநஸ்ஸையும்)
கர்ஷதி – ( கர்மாநுகு₃ணமாகச்) செயல் புரியச் செய்கிறான்

அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன் பத்த ஜீவனாக இருந்து கொண்டு
லீலா விபூதியில் இருப்பவனாய் -உடலில் இருக்கும் ஐந்து இந்த்ரியங்களையும்
ஆறாவது இந்த்ரியமான மனசையும் செயல் புரியச் செய்கிறான்

கீழே முக்தாத்மா தன்னுடைய உடைமை -இதில் பத்தாத்மாவும் என்னுடைய உடைமை –
என்னுடைய அம்சமே -மிகவும் பழையவன்
பிரகிருதி பரிணாமம் சரீரம் -வியாபாரம் செய்து -இந்திரியங்கள் செயல்பாட்டை செய்து கொண்டு இருக்கிறான் –

——————

ஸரீரம் யத வாப்நோதி யச்சாப் யுத் க்ராமதீஸ்வர–
க்ருஹீத்வைதாநி ஸம் யாதி வாயுர் கந்தா நிவாஸயாத்–৷৷15.8৷৷

ஈஶ்வர: – – இந்த்₃ரியங்களை நியமிப்பவனான ப₃த்₃த₄ஜீவன்
யத் ஶரீரம் அவாப்நோதி- (முன் ஶரீரத்தை விட்டபின்)யாதொரு ஶரீரத்தை அடைகிறானோ (அந்த ஶரீரத்திற்கு)
யச்ச அபி உத்க்ராமதி – எந்த ஶரீரத்திலிருந்து கிளம்புகிறானோ (அந்த ஶரீரத்திலிருந்து)
வாயு: – காற்றானது
ஆஶயாத் – (மலர் முதலான மணமுடைய) பொருள் களிலிருந்து
க₃ந்தா₄ந் – மணம்மிக் சிறு துகள்களை
இவ – (எடுத்துச்செல்வது) போல்
ஏதாநி – இந்த இந்த்₃ரியங்களை
க்₃ருஹீத்வா – (கிளம்பும் ஶரீரத்திலிருந்து) எடுத்துக் கொண்டு
ஸம்யாதி – (அடையும் ஶரீரத்துக்குச்) செல்கிறான்

வாயு: ஆஸயாத் கந்தாந் இவ-காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல,
ஈஸ்வர: அபி-உடலை ஆளும் ஜீவாத்மாவும்,
யத் உத்க்ராமதி – எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ,
ஏதாநி ச க்ருஹித்வா-மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு,
யத் ஸரீரம் அவாப்நோதி ஸம்யாதி-எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்.

இந்திரியங்களை நியமிப்பவன் -பத்த ஜீவன் முன் உடலை விட்ட பிறகு யாதொரு உடலை அடைகிறானோ –
அந்த உடலிற்கு -எந்த உடலில் இருந்து புறப்படுகிறானோ அந்த உடலில் இருந்து காற்றானது
மலர் முதலிய மணமுடைய பொருள்களில் இருந்து மணம் மிக்க சிறு துகள்களை எடுத்துச் செல்வது போலே
இந்த இந்திரியங்களை எடுத்துச் செல்கிறான் –

அடுத்த சரீரம் போகும் பொழுது பூத ஸூ ஷ்மங்களை எடுத்து கொண்டே –
காற்று மணம் -வண்டு தேன்களை கிரஹிக்குமா போலே
ருசி வாசனைகள் உடனே -இந்திரியங்களையும் சப்தாதி விஷயங்களையும் -கொண்டே புகுகிறான்

————–

காநி புநஃ தாநி இந்த்ரியாணி இத்யாஹ

ஸ்ரோத்ரம் சக்ஷுஸ் ஸ்பர்ஸ்நம் ச ரஸநம் க்ராணமேவ ச–
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுப ஸேவதே--৷৷15.9৷৷

அயம் – இந்த ஜீவன்
ஶ்தோத்ரம் – செவி
சக்ஷுஸ் : – கண்
ஸ்பர்ஶநம் ச –மெய்
ரஸநம் – நா
க்₄ராணம் ஏவ ச – மூக்கு என்னும் இந்த ஐந்து
இந்த்₃ரியங்களையும்
மநஸ் : ச – (இவற்தை நியமிக்கும்) மனத்தையும்
அதி₄ஷ்டா₂ய – தத்தமக்குரிய ஶப்₃த₃ம் முதைான
விஷயங்களில் மேய வல்லவையாக ஆக்கி
விஷயாந் – அந்தந்த விஷயங்களை
உப ஸேவதே – அநுப₄விக்கிறேன்

அயம் ஸ்ரோத்ரம் சக்ஷ: ச-கேட்டல், காண்டல்,
ஸ்பர்ஸநம் ரஸநம் க்ராணம் மந: ச-தீண்டுதல், சுவை, மோப்பு, மனம்,
அதிஷ்டாய ஏவ-இவற்றில் நிலைகொண்டு,
விஷயாந் உபஸேவதே-ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.

இந்த ஜீவன் -காது கண் மெய் நாக்கு மனஸ் என்ற ஆறு இந்த்ரியங்களையும் -இவற்றை நியமிக்கும்
மனத்தையும் தம் தமக்கு உரிய சப்தம் முதலிய விஷயங்களில் மேய வல்லவையாக ஆக்கி
அந்த அந்த விஷயங்களை அனுபவிக்கிறான்
விஷம் தோய்ந்த தேனை பருகுகிறான் -காது கண் –இத்யாதி மனஸ் -சப்தாதிகளிலே மேய விட்டு –
அறியாமல் அனுபவிக்கிறான்

———————–

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்.
விமூடா நாநுபஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாந சக்ஷுஸ–৷৷15.10৷৷

உத்க்ராமந்தம் = வெளியே வெளியே செல்லும் போது
ஸ்திதம் =நிலை பெற்றவன்
வ = அல்லது
அபி = அது அன்றியும்
புஞ்ஜாநம் = அனுபவிப்பவன்
வ = அல்லது
குணாந்விதம் = குணங்களை கொண்டவன் , குணங்களை ஆள்பவன்
விமூடா = மூடர்கள்
ந = இல்லை
அநுபஸ்யந்தி = காண்பது
பஸ்யந்தி = காண்கிறார்கள்
ஜ்ஞாந = ஞான
சக்ஷுஷ= திருஷ்டி உள்ளவர்கள் |

உத்க்ராமந்தம் வா-அவன் புறப்படுகையிலும்,
ஸ்திதம் வா-நிற்கையிலும்,
புஞ்ஜாநம் வா – உண்ணுகையிலும்,
குணாந்விதம் அபி-முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும்,
விமூடா ந அநுபஸ்யந்தி-அவனை மூடர் காண்பதில்லை,
ஜ்ஞாநசக்ஷúஷ: பஸ்யந்தி-ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

முன் கூறியபடி குண மயமான சரீரத்தோடு சேர்ந்து இருப்பவனாய் -ஒரு சரீரத்தில் இருந்து புறப்படுபவனாய் –
அல்லது வேறு ஒரு சரீரத்தில் இருப்பவனாய் -அல்லது குண மய விஷயங்களை அனுபவிப்பவனாய்
இருக்கும் ஜீவனை -தேகமே ஆத்மா என்று மயங்கியவர்கள் தேஹத்தைக் காட்டிலும்
வேறுபட்டவனாகக் காண்பது இல்லை –
அறிவுக் கண்களை யுடையவர்களே தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாகக் காண்கிறார்கள்

ஆத்ம அபகாரம் திருட்டை பற்றி சொல்கிறான் இதில் -சரீரத்தில் புறப்படும் பொழுதும் இருக்கும் பொழுதும் புகும் பொழுதும்
ஆத்மாவை பிரித்து பார்க்க தெரியாமல் மூடர்களாக –
ஞானம் அறிய ஞான கண் கொண்டே பார்க்க முடியும் -சூழலிலே சிக்கி உழல்கின்றான்

——————–

யதந்தோ யோகி நஸ்சைநம் பஸ்யந்த் யாத்மந்ய வஸ்திதம்–
யதந்தோப்ய க்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்ய சேதஸ–৷৷15.11৷৷

யதந்தோ = முயற்சிப்பவர்கள்
யோகிந = யோகிகள்
ச = மேலும்
எனம் = அவர்கள்
பஸ்யந்த்தி = காண்கிறார்கள்
ஆத்மானி = தங்களுக்குள்
அவஸ்திதம் = இருக்கும் , நிலை பெற்று இருக்கும்
யதந்தோ = முயற்சி செய்பவர்கள்
அக்ருதாத்மாநோ = தயாராக இல்லாதவர்கள் ,
ந = இல்லை
எனம் = அவனை
பஸ்யந்த் = காண்பது
அசேதஸ: = நினைவு இல்லாதவர்கள், ஸ்மரணை இல்லாதவர்கள்,

யதந்த: யோகிந:-முயற்சியுடைய யோகிகள்,
ஆத்மநி அவஸ்திதம் ஏநம் பஸ்யந்தி-இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்,
ச யதந்த: அபி அக்ருதாத்மாந:-முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள்,
அசேதஸ:-அஞ்ஞானிகள், ஏநம் ந பஸ்யந்தி-இவனைக் காண்கிலர்.

என்னைச் சரணம் அடைவதை முன்னிட்டுக் கொண்டு கர்மயோகம் முதலான முயற்சிகளைச் செய்யும்
யோகிகள் தம் உடலில் இருக்கும் இந்த ஜீவாத்மாவை யோகம் ஆகிய கண்களால் பார்க்கிறார்கள் –
என்னைச் சரணம் அடையாமல் முயற்சி செய்த போதிலும் மனத்தில் பரிசுத்தி விளையாதவர்களாய் –
அது காரணமாகவே ஆத்மாவைக் காணவல்ல நெஞ்சு இல்லாதவர்கள்
ஆத்மாவை உள்ளபடி காண்பது இல்லை –

என்னை சரண் அடைந்து -கர்மங்களில் இருந்து முயன்றால் -உண்மை நிலையை அறிந்தவனாக -ஆகிறான் –
பற்றாமல் முயல்வாருக்கு மனஸ் சுத்தி ஏற்படாமல் -இழக்கிறார்கள் —
கைங்கர்யம் திருவடி சரண் அடைந்தே -செய்ய வேண்டும் –
சம்பந்தம் புரிந்தே முயல வேண்டும் -ஆத்மாவை தெரிந்து கொள்ள -மனஸ் சுத்தி வேண்டுமே

——————

மூன்று ஸ்லோகங்களால் பிராகிருத பதார்த்தங்களாகும் என்னதே -அனைத்தையும் புகுந்து நியமித்து வியாபித்து தாங்கி -எனது சொத்துக்கள் தான் ஆகையாலே நானே புருஷோத்தமன் என்று சொல்வதற்கு பீடிகை
ஏவஂ ரவி சந்த்ர அக்நீநாம் இந்த்ரிய ஸந் நிகர்ஷ விரோதி ஸஂதமஸ நிரஸந முகேந இந்த்ரிய அநு க்ராஹக தயா ப்ரகாஷகாநாஂ ஜ்யோதிஷ்மதாம் அபி ப்ரகாஷகஂ ஜ்ஞாந ஜ்யோதிஃ ஆத்மா முக்தாவஸ்தோ ஜீவாவஸ்தஃ ச பகவத் விபூதிஃ இதி உக்தம் -‘தத்தாம பரமஂ மம.’ (கீதா 15.6)’மமைவாஂஷோ ஜீவ லோகே ஜீவ பூதஃ ஸநாதநஃ৷৷’ (கீதா 15.7) இதி.–இதாநீம் அசித் பரிணாம விஷேஷ பூதம் ஆதித்யாதீநாஂ ஜ்யோதிஷ்மதாஂ ஜ்யோதிஃ அபி பகவத் விபூதிஃ இத்யாஹ —

யதாதித்ய கதம்- தேஜோ ஜகத் பாஸயதேகிலம்–
யச் சந்த்ரமஸி யச் சாக்நௌ தத் தேஜோ வித்தி மாமகம்–৷৷15.12৷৷

யதா = எது
ஆதித்யகதம் = சூரியனில் இருந்து
தேஜோ = ஒளிர்கிறதோ
ஜகத் = உலகம் அனைத்தும்
பாஸயதே = ஒளிரச் செய்கிறதோ
அகிலம் = உலகம் அனைத்தையும்
யத் = எது
சந்த்ரமஸி = சந்திரனின் ஒளியில்
யத் = எது
ச = மேலும்
அக்நௌ = அக்கினியில்
தத் = அது
தேஜோ = தேஜோ மயமாக
வித்தி = அறிந்து கொள்
மாம் அகம் = என்னுடையது என்று

ஆதித்ய கதம் தேஜ:-சூரியனிடமிருந்து ஒளி,
அகிலம் ஜகத் பாஸயதே-அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ,
ச யத் சந்த்ரமஸி-சந்திரனிடத்துள்ளதும்,
யத் அக்நௌ ச – தீயிலுள்ளதும்,
தத் தேஜ: மாமகம் வித்தி-அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

ஆதித்யன் இடம் இருக்கும் யாதொரு தேஜஸ்ஸூ சந்திரனிடம் உள்ள எந்த தேஜஸ்ஸூம் –
அக்னியில் உள்ள எந்த தேஜஸ்ஸூம் உலகு அனைத்தையும் ஒளி விடச் செய்கிறதோ –
அந்த தேஜஸ்ஸை என்னுடையதாக அறிவாயாக

இங்கு அனைத்தும் தன்னதே -கீழே முக்தாத்மா பத்தாத்மா சொல்லி -பிராசங்கிக்கமாக மூன்று ஸ்லோகங்கள் –
ஆதித்யன் -இடம் உள்ள தேஜஸ் -உலகம் அகிலம் ஒளி பெற -சந்திரன் -அக்னி தேஜஸ் –
இந்த தேஜஸ் எல்லாம் என்னுடையதே என்று அறிந்து கொள் –

ஒரு பொருளின் தன்மை மற்ற பொருளில் இருந்தால் இரண்டுமே ஓன்று அத்வைதி -ஸ்ருஷ்டிக்கப்படும் ஆதித்யனும் ஸ்ருஷ்டித்த ப்ரஹ்மமும் ஒன்றாகாதே

என்னை ஆராதித்து -திருப்தி அடைந்த நான் ஒளி கொடுத்துள்ளேன் -எனது திரு மேனியில் ஒரு பகுதி என்றவாறு-ப்ரதாதா பிரதாத்ரு பாவம்

வேத நான்காய் -ப்ரதிபாத்ய ப்ரதிபாத்யம் பாவம் என்றும் ப்ரதாதா பிரதாத்ரு பாவம் என்றும்

—————

ச பூத தாரிண்யா தாரகத்வ ஷக்திஃ மதீயா இத்யாஹ —

காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம் யஹ மோஜஸா–
புஷ்ணாமி சௌஷதீ ஸர்வா ஸோமோ பூத்வா ரஸாத்மக–৷৷15.13৷৷

கம் = பூமியில்
அவிஸ்ய = நுழைந்து
ச = மேலும்
பூதாநி = உயிர்களைத்
தாரயாமி = தாங்குகிறேன்
அஹம் = நான்
ஒஜஸா = சக்தியால்
புஷ்ணாமி = பலப் படுத்துகிறேன்
ச = மேலும்
ஔஷதீ: = மருந்தாக
ஸர்வா: = அனைத்து
ஸோமோ = சாறாக, அமிர்தமாக
பூத்வா = ஆனபின்
ரஸாத்மக: = அவற்றின் இயற்கையாக இருக்கிறேன்

ச அஹம் காம் ஆவிஸ்ய-நான் பூமியுட் புகுந்து,
ஒஜஸா பூதாநி தாரயாமி-உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்,
ரஸாத்மக: ஸோம: ச பூத்வா-மேலும் நான் நிலவாகி,
ஸர்வா: ஒஷதீ: புஷ்ணாமி-அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்.

நான் பூமியினுள் புகுந்து என்னுடைய தடங்கல் அற்ற சக்தியினால் எல்லாப் பொருள்களையும் தரிக்கிறேன்
அமுத ரஸ வடிவமான சந்த்ரனாக ஆகி எல்லாப் பயிர்களையும் போஷிக்கிறேன்
பூமியை அடைந்து -தரித்து -திறல்- அம்ருத ரசம் சந்திரனாக இருந்து போஷிக்கிறேன்
அனைத்து சக்திகளும் என்னது –

ஆகாசத்தையும் த்ருடமாக தரிக்கிறேன்-ஸங்கல்ப சக்தியாலேயே தடங்கல் அற்ற தரிக்கும் தன்மை யுண்டே –வேதம் ஸ்வத ப்ரமாணிகத்வம் உண்டு போல் ப்ரஹ்மம் தனது மஹிமையாலே தானே தனக்கு தாரகம் -பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம்

———————-

அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித–
ப்ராணாபாந ஸமாயுக்த பசாம் யந்நம் சதுர்விதம்–৷৷15.14৷৷

அஹம் =நான்
வைஸ்வாநரோ = அனைத்து உயிர்களிலும்
பூத்வா = சேர்ந்து
ப்ராணிநாம் = உயிர் வாழ்வனவற்றில்
தேஹம் = உடல்
அஸ்ரித: = அடைந்த பின்
ப்ராணா = பிராண
அபாந = அபான
ஸமாயுக்த: = சமமாக சேர்த்தபின்
பசாம் = சமைக்கிறேன்
அன்னம் = உணவை
சதுர் விதம் = நான்கு விதமாக

அஹம் ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:-உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்,
ப்ராணாபாநஸமாயுக்த :-பிராண-அபான வாயுக்களுடன் கூடி,
வைஸ்வாநர: பூவா – வைசுவாநரன் என்கிற அக்னியாகி,
சதுர்விதம் அந்நம் பசாமி-நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

நான் வைச்வானரன் என்ற அக்னியாக ஆகி எல்லா ஜீவர்களின் உடலில் இருப்பவனாய் –
கடித்தும் உறிஞ்சியும் நக்கியும் குடித்தும் உண்ணப்படும் நான்கு வகைப்பட்ட உணவுகளை
பிராணன் அபானன் என்ற காற்றுக்களுடன் சேர்ந்து ஜீரணிக்கச் செய்கிறேன்
ஜாடராக்னியாகவும்-இருந்து -பிராணிகள் தேகம் அடைந்து -பிராண வாயு அபான வாயு –
நான்கு வித அன்னம் -கடித்து நக்கி உறிஞ்சி குடிக்கும் நான்கு விதம்
நானே தளிகை பண்ணுகிறேன் -ஜீரணம் என்றவாறு -ஸமஸ்த வஸ்துக்களும் அவன் உடைமை என்றவாறு –
அன்னம் -பிராமணனுக்கு -சொல்லி வஸ்திரம் கொடுத்ததாக வஸ்திர தானம் -ஐந்து வாயுக்களும் சரியான நிலையில்
சமான வாயு உடன் பிராண அபான வாயு சேர்ந்து –சாப்பிடட பதார்த்தங்கள் சக்தி பிரிந்து இந்திரியங்களுக்கு போக வேண்டுமே –

ப்ரஹ்ம ஸூத்ரம் 2-4 பஞ்ச வ்ருத்த மனஸ் ஐந்து -சித்தம் -இத்யாதி ஐந்து நிலைகள் உண்டே
பிரகர்ஷேண பாஹுர் ஆயுத பிராண -வெளி விடும் காற்று
அதோ நய அபான -கீழ் விடும் காற்று -ஸர்வத்ர ஆநயததி சமானம் நடுப்பகுதி நாபி மண்டலம்
ஊர்த்தம் கமநம் உதாந கண்டத்தில் -விநயதி விசேஷண பிரஜ்ஜை இருப்பதைக்காட்ட – வ்யான

—————

அத்ர பரம புருஷ விபூதி பூதௌ ஸோம வைஷ்வாநரௌ அஹஂ ஸோமோ பூத்வா வைஷ்வாநரோ பூத்வா இதி தத் ஸாமாநாதி கரண்யேந நிர்திஷ்டௌ.– தயோஃ ச ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய ச பரம புருஷ ஸாமாநாதி கரண்ய நிர்தேஷே ஹேதும் ஆஹ –காரணத்தை இதில் விளக்குகிறார் –

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

ஸர்வஸ்ய = அனைத்திலும்
ச = மேலும்
அஹம் = நான்
ஹ்ருதி = இதயமாக
ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்
மத்த: = என்னில் இருந்து
ஸ்ம்ருதிர் = வேதங்கள்
ஜ்ஞாநம் = ஞானம்
அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது
ச = மேலும்
வேதை³ஸ் = வேதங்களும்
ச = மேலும்
ஸர்வை = அனைத்திலும்
அஹம் = நான்
ஏவ = நிச்சயமாக
வேத்யோ = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள
வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்
வேத விதே = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அஹம் = நான்

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்தக்ருத் வேதவித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே

ஆச்சர்யமான ஸ்லோகம் -நிறைய இடங்களில் காட்டி வியாக்யானம் உண்டே —
கீழே சாமானாதிகரண்யம்-அனைத்தும் இவனே
அந்தராத்மாவாக இருந்து -சரீராத்மா நிபந்தனம்-பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஏகஸ்மின் -விசேஷணங்கள் ஒன்றுக்கே –
விலை பெற்ற நீல வாயும் வயிறுமான மண் குடம் போலே -வேறு வேறு பிரயோஜனத்துக்காக
வேறே வேறே விசேஷணங்கள் -பிரதம விபக்தி -முதல் வேற்றுமையில் படிக்கலாம் –
ஹிருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன் அனைத்துக்குள்ளும் -அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா நியாந்தா
ஸ்ம்ருதியும் – ஞானம் மறதி எல்லாம் என் ஆதீனம் –
வேதங்கள் -சொல்லப் படுகிறேன் -நானே -ஏவ காரம் மூன்று இடங்களிலும் -வேதங்களினால் நானே -அறியப் படுகிறேன்
வேதங்களினாலே சொல்லப் படுகிறேன் -வேறே ஒன்றும் சொல்லாதே -வேதம் என்னை சொல்லி அல்லால் நில்லாது
வேதம் எத்தை சொல்லப் போனாலும் -இவனது சரீரமே
வேதங்களின் படி செய்யும் கர்மங்களுக்கும் பலம் கொடுப்பவனும் நானே

ஏவ -சர்வை வேத ஏவ -வேதத்தாலேயே சொல்லப்படுகிறேன் -ப்ரத்யக்ஷம் அனுமானம் காட்டாது
அஹம் ஏவ -என்னையே சொல்லும்
வேதைர் ஏவ சொல்லியே தீரும் மூன்றாவது
வேதைர் ஏவ அஹம் ஏவ –தேவாதாந்த்ரங்களைச் சொல்வதும் என்னையே -ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவம் அதி கச்சதி-பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லையே -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -திட ப்ராமண சித்தன் -ஊற்றம் யுடையாய் –

ப்ரஹ்மம் வேதம் அறிந்தவனே -அயோக விவச்சேதம் -ராமன் வில்லாளியே -ப்ரஹ்மம் ஜகாத் காரணமே
ராமனே வில்லாளி -அந்நிய யோக விவச்சேதம் -ப்ரஹ்மமே ஜகத் காரணம் -ப்ரஹ்மமே இவனே வேதம் அறிந்தவன் -முன் ஓதிய பட்டன் –

உள்ளத்தே உறையும் மால்-அடியேன் உள்ளான் -அவையுள் தனி முதல் –

ப்ரத்யபிஜ்ஜை வேறே -ப்ரத்யக்ஷம் சேர வேண்டும் -அதே வஸ்து இங்கு இருக்க அனுபவிப்பது -இங்கு அனுபவ மாத்திரம் -ஸ்ம்ருதி வேறே இத்தை விளக்குகிறார்

அபோஹம் -ஊஹம் -பிரமாணம் செயல்பாட்டுக்கு சக்தி -ஸாமக்ரியால் பிறக்கும் -பிரமாணம் ஸ்தாபிக்க உதவும் மூன்றும்
கண்ணால் தூணை க்ரஹிக்கும் சக்தி உடையது என்னும் ஞானம் ஊஹம் -தூண் 12 ஆதி உயரம் வர்ணம் இத்துடன் சேர்ந்தா இல்லையா –
வெளிச்சம் இருந்தால் தான் க்ரஹிக்கும் -ஸாமக்ரியை
முதலில் தூண் மட்டுமா தன்மைகளையும் சேர்த்தா -தன்மைகளை விட்டுப் பிரியாத தூணை கிரஹிப்பதால் சேர்த்தே க்ரஹிக்கும் -மூன்றும்
இந்த ஊகம் ஞானமும் நானே என்றுமாம்

சர்வ தேவதா அந்தர்யாமி -சர்வ ஆராதானமும் எனக்கு -பலம் தருமவனும் நானே -வேதாந்தம் -வேத பலன் என்றே இங்கு-செய்ய கமலக்கண்ணன் -செய்கைப் பயன் உண்பேனும் யானே அனைத்தும் தானே

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 

கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 

ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*

மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)

—————–

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது-முக்த ஜீவாத்மா
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது-பக்த ஜீவாத்மா
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

சாஸ்திரங்களில் -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி இருக்கையாலே
ஷர புருஷன் எனப்படும் பத்த ஜீவனும் -அழியும் இயல்வு இல்லாமையால் அஷரன் எனப்படும் முக்த ஜீவனும்
ஆகிற இரண்டு வகையான இப்புருஷர்களே பிரசித்தி பெற்றவர்கள் –

ஷர புருஷன் எல்லா பத்த ஜீவனுமாவான் -அக்ஷர புருஷன் அசித் சம்பந்தம் அற்ற முக்தாத்மா எனப்படுகிறான் –
லோகே வேதத்தில் சொல்லப் பட்ட படி -ஷரன் அழிவுக்கு உட்பட்ட சரீரம் உடன் உள்ள பத்தாத்மா -அஷரன் -முக்தாத்மா –
பூத ராசிகள் எல்லாம் ஷரன் -உயர்ந்த முக்தாத்மா அஷரன் -இருவரும் வேதத்தில் சொல்லப்பட்டன

கூடஸ்தர் -பத யோகத்தால் அர்த்தம்-யவ்கிக அர்த்தம் மூலம் முக்தாத்மாவைச் சொல்லி – -ரூடி அர்த்தம் ப்ரஸித்த அர்த்தம் இல்லை -விகாரம் இல்லா கொல்லம்பட்டரை இரும்பு-இங்கு பல பிரிவுகளுக்கு பொதுவாக இருப்பவன் -முக்தாத்மா-அசித் சம்சர்க்கம் இல்லாமை ஏக வசனம் ஒருமையில் கூடஸ்தர்

—————–

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

உத்தம: = உயர்ந்த, சிறந்த
புருஷஸ் = புருஷன்
து = மேலும், ஆனால்
அந்ய: = வேறான, மற்ற
பரமாத்மா = பரமாத்மா
இதி = இதுவே
உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
யோ = அவன்
லோக = உலகங்களில்
த்ரய = மூன்று
அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்
பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ
அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத
ஈஸ்வர: = ஈஸ்வரன்

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

உத்தமமான புருஷன் -புருஷோத்தமன் -புருஷன் ஆகிய உத்தமன் -தத் புருஷ ஸமாஸம் -புருஷர்களுக்குள் உத்தமன் -என்றே கொள்ள வேண்டும்

வேதத்தில் பிரசித்தமாக சொல்லப்பட்ட அசித் பத்த முக்தன்-இவர்களில் வேறுபட்டவன் -என்று நிர்தேசம்  ப்ராதான்யம் -புருஷோத்தமன் -பரமாத்மா என்று நிர்தேசம் -உத்தமத்வம் மட்டும் ஸ்தாபிக்காமல் அந்நிய மானவன் என்றே ஸ்தாபிக்க வந்தது

எவன் ஒருவன் அசித் பக்த ஜீவன் முக்தாத்மா என்னும் மூன்று பொருள்களையும் வியாபித்து –
அவற்றைத் தாங்குகிறானோ -அவன் அழிவற்றவனாய் -அனைத்தையும் நியமிப்பவனாய் –
பரமாத்மா என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுபவனாய் –
இக்காரணங்களால் மிக மிக மேலான புருஷனாய் இருப்பவன் -முற்கூறிய
ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்
இவர்களை காட்டிலும் வேறு பட்ட புருஷோத்தமன் -பாரமான ஆத்மா -லோக த்ரயம் –
சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரயங்கள் -சூழ்ந்து தங்குகிறான்
ஸ்வாமி -நியமனம்-ஈசான சீலன் நியமன சாமர்த்தியம் – -வியாபிக்கிறான் -தரிக்கிறான் -தங்குகிறான் –
மற்றவை வியாபிக்கப்படும் – தாங்கப்படும்- நியமிக்கப் படும்

ஆவிஷ்ய-உள்ளும் புறமும் வியாபித்து – பிபர்த்தி -தாங்கும்
அவ்யயம் -அழிவற்ற -ஈஸ்வரன் -நியமிப்பவன் -நான்கும் சொல்லி
தத்வ த்ரயமும் அழிவற்றவையே தான் -ஸ்வரூப ஸ்வ பாவ விகாரம் இல்லாதவன் -என்றவாறு –

முக்தாத்மா-முன்னால் இருந்த அசித் சம்பந்தம் -இருந்ததே இவை வ்யயம் –நித்யர் போல் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் அவ்யயம்

பதி சேஷி ஸ்வாமி வியாபகம் நியாந்தா -ஸ்வாமித்வம் முக்யம் -த்வயம் பூர்வ உத்தர வாக்கியசத்தில் இது உண்டே -கைங்கர்யம் ஏற்றுக்கொள்ள –
இவை எல்லாம் தனது பொருட்டாகவே செய்கிறான் -அமலன் நிமலன் விமலன் நின்மலன்-படர்க்கையாகவே சொல்லிக் கொள்கிறான்-ஸர்வஸ்வ ஸ அஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட -போல் பல இடங்களிலும் சொல்லிக் கொண்டானே -நாராயணனே-சங்கரரும் பாஷ்யத்தில்

————-

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷

யஸ்மாத் = அதனால்
க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய
அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்
அஹம் = நான்
அக்ஷராத = அழியாத
அபி = இப்போது
ச =மேலும்
உத்தம:= சிறந்த , உயர்ந்த
அதோ = அதிலிருந்து
அஸ்மி = நான்
லோகே = உலகில்
வேதே = வேதங்களில்
ச = மேலும்
ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட
புருஷோத்தம: = புருஷோத்தமன்

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

இங்கு வேதம் லோகம் இரண்டும் இருப்பதால் லோகம் என்பது வேதம் விளக்கிய ஸ்ம்ருதிகள் -கலக்கம் இல்லா நல் தவ முனிவர் -நால் வேதம் கண்ட ரிஷிகள்-மந்த்ர த்ரஷ்டா முனிகள் -மனன சீலர் கவி கிராந்தி தர்சீ

புருஷோத்தமன் இவர்களைக் காட்டிலும் உத்தமன் -இவர்களில் உத்தமன் -இவர்களுக்கு உத்தமன்-பஞ்சமி -சஷ்ட்டி சப்தமி உருபு கொண்டு-யவ்கிகமாயும் ரூடியாகவும் இவனையே சொல்லும்

நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான
முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே
ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்
எதன் இடத்தில் இருந்து ஷரம் பத்தாத்மா –அஹம் சப்தம் இங்கு -தாண்டி அதீத வாசனை கூட இல்லை முகத்தாத்மா தாண்டி
ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல் வேதங்கள் ஸ்ம்ருதிகள் என்னை புகழும்-

—————–

யோ மாமேவ ஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–
ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத–৷৷15.19৷৷

யோ = எவன் ஒருவன்
மாம் = என்னை
ஏவம்மே = அப்படியாக
அஸம்மூடோ = குழப்பம் இன்றி, தடுமாற்றம் இன்றி
ஜாநாதி = அறிகிறானோ
புருஷோத்தமம் = புருஷோத்தமன் என்று
ஸ = மேலும்
ஸர்வவித் = அனைத்தும் அறிந்தவன்
பஜதி = வணங்குகிறான்
மாம் = என்னை
ஸர்வ = அனைத்து
பாவேந =நிலைகளிலும்
பாரத = பாரத வம்சத்தில் பிறந்தவனே

பாரத:-பாரதா!
ய: அஸம்மூட: மாம்-எந்த ஞானி என்னை,
ஏவம் புருஷோத்தமம் ஜாநாதி – இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ,
ஸர்வவித் ஸ: ஸர்வபாவேந-எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும்,
மாம் பஜதி-என்னை வழிபடுகிறான்.

பரத குலத்தில் பிறந்தவனே -எவன் ஒருவன் இம்மாதிரியாக-ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும்
பல காரணங்களால் சிறப்புற்றவனாக -என்னை கலக்கமில்லாமல் அறிகிறானோ –
அவன் என்னை அடைவதற்கு உரிய வழி அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான் —
என்னை -என்னை அடையும் வழியான-பக்தி பிரகாரங்கள் அனைத்தாலும் பக்தி செய்தவன் ஆகிறான்
யார் -என்னையே -சந்தேகம் இடம் இல்லாமல் -மயக்கம் இல்லாமல் -புருஷோத்தமன் என்று –
அம்சமா அங்கமா அவயவமா ஐக்கியமா -சங்கை இல்லாமல்
அந்த ஆத்ம ஞானி -புருஷோத்தம வித்யை கை வந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான் —
அவனை அடையும் உபாயங்கள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்
என்னை பக்தி செய்யும் எல்லா முறைகளாலும் பக்தி பண்ணுகிறான் -கண்ணன் அபிப்பிராயம் இது –
இவற்றால் எனக்கு ஏற்படும் ஆனந்தம்
புருஷோத்தம வித்யை அறிந்தவன் -தெரிவதால்- அடைகிறேன் என்றபடி

ஸர்வ பாவம் என்றது சர்வ கிரியைகளாலும் – ஸர்வம் வாஸூ தேவம் இருப்பவர் வேறே -இங்கு உபாசன பிரகாரம் -அஹங்கார மிஸ்ரம்

———-

இதி ஏதத் புருஷோத்தமத்வ வேதநஂ பூஜயதி.-இந்த ஞானத்தை புகழ்கிறான்

இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷

இதி = இதுவே-இவளை போல் இங்கு இதம்
குஹ்யதமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத் தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே

அநக:-குற்றமற்றோய்,
இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த-இவளை போல் இங்கு இதம் -மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை,
மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது,
ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
ஸ்யாத்-ஆகிறான்.-செய்த வேள்வியர் ஆவாய் –

குற்றம் அற்றவனே -பரத குலத்தில் உதித்தவனே -இவ்வண்ணமாக இப்புருஷோத்தம வித்யையாகிற
பரம ரஹஸ்யமான சாஸ்திரம் என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது –
இத்தை அறிந்தவன் என்னை அடைவதற்கு வேண்டிய அறிவு அனைத்தையும் பெற்றவன் ஆகிறான் –
அதற்குச் செய்ய வேண்டியவை அனைத்தையும் செய்தவன் ஆகிறான்-செய்த வேள்வியர் ஆவாய் –
புருஷோத்தம வித்யை அறிந்தவன் அனைத்தையும் அனுஷ்டித்தவன் ஆகிறான் -புனர் யுக்தி தோஷம் இல்லை –
இதில் தான் அறிந்து அனுஷ்ட்டித்து அடைந்து –செய்த வேள்வியர் –
பூவை –யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -வியாக்யானம் போலே -பேர் வைத்து ஆனந்தம் இல்லை
திருநாமங்கள் சொல்லி பெற்ற ஆனந்தம் உலக குழந்தைகள் இவை கொண்டு விளையாடும் ஆனந்தம் பராங்குச நாயகி பெற்றாள்-
அதே போலே இங்கும் முந்திய ஸ்லோகங்களும் அர்த்தம் -குஹ்ய தமமான சாஸ்திரம் —
ரஹஸ்யமாக வைத்துக் கொள் -குற்றம் அற்ற அர்ஜுனன்-

————————————————————–

முதலில் -அஸ்வத மரம்
அடுத்து -கீழ் மேல் கிளைகள்
மரக்கிளை வெட்ட பற்றின்மை-கோடரி – -முக்குணம் கடக்க வேண்டும் –
அஞ்ஞானம் நிவ்ருத்திக்கு சரணம் அடைந்து
அப்படி சரணம் அடைந்தவர் பெருமை
முக்தாத்மாவின் பெருமை
ஏழாவது -அனைத்து தேஜஸ் எல்லாம் என்னதே
எட்டாவது -சரீரம் போகும் பொழுது புலன்கள் பூத ஸூஷ்மங்களைக் கொண்டே செல்கிறான்
விஷம் கலந்த தேன்போல் இந்திரிய சுகம்
ஆத்ம அபஹாரி பெரிய கள்வன் -வேறுபட்ட ஆத்மா அறியாமல்
முயல்வார் -சரண் அடைந்தே பலம்
12-15- ஆதித்ய தேஜஸ் -பூமி தரிப்பதும் சந்திரன் அம்ருதமும் நானே -நானே அக்னி -புகுந்து நியமிக்கிறேன்
16-20-புருஷோத்த வித்யை விளக்கி மஹாத்ம்யம் சொல்லி நிகமிக்கிறான்

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆழ்வார்‌ திருவுள்ளம்‌-பகுதி -2-

January 25, 2024

தமிழ்‌ அகப்பொருள்‌ முறையும்‌ உள்ளுறைப்‌ பொருளும்‌

பத்திநெறியைப்‌ பாடும்‌ தமிழ்நாட்டுப்‌ பத்தர்களின்‌ பாடல்களில்‌ அகப்பொருள்‌ நூற்கருத்துகளை ஒட்டிய பாடல்‌கள்‌ கலந்து விளங்குவது யாவரும்‌ அறிந்ததே.

வைணவ சமயச்‌ சார்பான நூல்களில்‌ அம்முறை தப்பாய்‌ வளர்ந்‌துள்ளமையும்‌, அகப்பொருட்டுறையில்‌ அமைந்த பாடல்‌களுக்கு
அழகுற உள்ளுறைப்‌ பொருளை விரிவுரையாளர்கள்‌ எழுதியுள்ளமையும்‌ தமிழுலகம்‌ அறியும்‌,
பத்தர்கள்‌ இறைவனை அநுபவிக்கும்‌ பல வகை முறைகளில்‌ தலைவன்‌ தலைவி முறையும்‌ (நாயக நாயகி பாவம்‌) ஒன்றாகும்‌.
இம்‌ முறை உலகத்துப்‌ பிற நாட்டுச்‌ சமய இலக்கியங்களிலும்‌ காணக்கூடியதே, ்‌ .

வைணவ பரம்பரையில்‌ முதல்‌ ஆசாரியரான நம்மாழ்‌வார்‌ நூல்கள்‌ நாலிலும்‌ முதலதான திருவிருத்தத்தில்‌ முதற்‌ பாட்டும்‌ கடை எட்டுப்‌ பாட்டுகளும்‌ தவிர
மற்றவை யாவும்‌ அகப்பொருள்‌ களவித்‌ துறையில்‌ அமைந்த பாடல்‌களே.
கடை.சியில்‌ தோன்றிய நாலான திருவாய்மொழியிலும்‌ 100 திருவாய்மொழிகளில்‌ 27 திருவாய்மொழிகள்‌
(பதிகங்கள்‌) அகப்பொருட்‌ பாடல்‌ முறையில்‌ அமைந்‌துள்ளன.
அவற்றில்‌ ஆழ்வார்‌ தாமான தன்மை நீங்கிப்‌ பெண்‌ தன்மை அடைந்து இறைவனைத்‌ தம்‌ தலைவனாகக்‌கொண்டு அநுபவிக்கின்றார்‌.
அவர்க்கு அந் நிலையில்‌ “பராங்குசநாயகி’ என்று பெயர்‌ வழங்குகின்றார்கள்‌ விரிவாளர்கள்‌.

அப்பாசுரங்கள்‌ “தோழி பாசுரம்‌, தாய்‌ பாசுரம்‌,(தலைவி பாசுரம்‌” என மூன்று வகையாக அமையும்‌. பேச்சு மூன்றுவகையாக இருப்பினும்‌, அநுபவம்‌ ஆழ்வாருடையதே.
பல வகையாகப்‌ பிரியினும்‌ அவர்‌ அநுபவத்திற்குக்‌ குறைவு ஓன்றும்‌ நேர்வதில்லை. *பெருக்காறு பலதலைத்துக்‌ கடலை. நோக்குமா போலே” ஆழ்வார் தம்‌ அன்பு பல பிரிவு
களாகப்‌ பிரியினும்‌ கடலையே சென்று சேரும்‌ என்று ஆசார்ய ஹிருதய ஆரியர்‌ விளக்குகின்றார்‌. (ஸூ . 131)
*இறைவனைப்பற்றிப்‌ பேச வேண்டிய இடத்தில்‌ உலகியற்‌ காமத்தை–காதலைப்‌ பற்றிப்‌ பேசுவது சிறப்பாக இல்லையே!? என்பது சிலர் எழுப்பும்‌ தடை.
இதே தடையை நான்காம்‌ திருவாய்மொழியின்‌ தொடக்கத்தில்‌ முதன்‌ முதல்‌ ஆழ்வார்‌ பெண்‌ தன்மை
அடைந்து பேசும்‌ பாடல்‌ வரும்போது ஈட்டின்‌ ஆரியர்‌ எழுப்பி, விடையும்‌ தருகின்றார்‌.
*இது காமுகர்‌ பேச்சு அன்று; இறைவன்‌ கேட்கத்‌ தக்கவன்‌, நினைக்கத்‌ தக்கவன்‌, தியானம்‌ செய்யத்‌ தக்கவன்‌, பார்க்கத்‌ தக்கவன்‌” என்று
பிரஹதாரண்ய உபரிடதம்‌ கூறுவதுபோலக் கொள்ளப்படும்‌ பகவத்‌ காமம்‌- நல்வினை உள்ள ஒருவனே இப்‌ பேறு பெறுகின்றான்‌”, என்பது அவர்‌ கூறும்‌ விடை.

————-

அகப்பொருள்‌ நூல்களையே வெறுப்பாரும்‌ உண்டு,-திருக்குறள்‌ போன்ற நூலிலும்‌ காமத்துப்பால்‌ அமைந்‌ இருப்பது குறையே எனக்‌ கொள்பவர்‌ சிலர்‌ உண்டு,
*பத்தியையும்‌ ஞானத்தையும்‌ சொல்லும்‌ நூல்களில்‌ இன்பச்சுவை அடிப்படையில்‌ அமைந்த பாடல்‌ எதற்கு?” என்று ஐய வினா எழுப்புவர்‌ சிலர்‌.
அதற்கு மாறாக, “அகப்பொருள்‌ வெறுக்கத்‌தக்க பகுதியன்று. என்றைக்கும்‌ நிலைத்துள்ள இயல்புகளை அழகுற
இன்பச்‌ சுவைப்ட எடுத்துச்‌ சொல்லும்‌ பாடல்கள்‌ அவை. அம்முறைக்கு இலக்கணம்‌ வகுத்தமை தமிழின்‌ சிறப்பு”, என்பர்‌ மற்றொரு சாரார்‌.
திருவள்ளுவர்‌ தம்‌ பொதுமறையில்‌ அம்முறையை ஒழுங்குபடுத்தி அமைத்திருக்கும்‌ தன்மையே அப்பொருளின்‌ ஏற்றத்தினை விளக்குமென்பர்‌ சான்றோர்‌.
“அது தன்னளவில்‌ முடிவது அன்று, கசப்பு மருந்தை உண்ண மாட்டாதார்க்கு வெல்லக்‌ கட்டி பூசி மருந்துண்ணச்‌ செய்வது போலச்‌
சிற்றின்பத்தைக்‌ கூறும்‌ முறையில்‌ பேரின்பத்திற்கு வழிகாட்டுவதே அப்பாடல்களின்‌” நோக்கு”, என்று பெரியோர்‌ சிலர்‌ பணிப்பர்‌,”
இக்‌ கருத்து இறையனார்‌ களவியலுரைக்‌ கருத்தை ஒட்டி அமைகின்றது.-சுருக்கமாக அகப்பொருள்‌ தமிழுக்கு உயிர்நிலையாகும்‌-
இறையனார்‌ அகப்பொருள்‌ உரையே அதன்‌ உண்மையை அறிவது ஆண்டவனுக்கன்‌றி மற்றையோருக்கு அரிது எனப்‌ புலப்படுத்துகின்றது”,” மீனாட்சிசுந்தர
மேலும்‌, அகப்பொருள்‌ நூல்கள்‌ எப்படியிருந்த போதிலும்‌, இங்கு ஒப்பற்ற இறைவனே நாயகனாய்‌ வருவதால்‌ இச்சமயப்‌: பாடல்கள்‌ முழுச்‌சிறப்புப்‌ பெறுகின்றன.
இங்கு மக்களை ஏமாற்றி அழைத்துச்‌ செல்லும்‌ நிலைமை எதுவும்‌ இல்லை என்பதும்‌ குறிக்கொள்ளத்‌ தக்க சிறப்பாகும்‌.

———

பெண்ணாதற்‌ சிறப்பு
ஆழ்வார்‌ ஏன்‌ பெண்தன்மை ஏறிட்டுக்‌ கொள்ள வேண்‌டும்‌ என்றால்‌, அவர்‌ வலிந்து அம்மாற்றம்‌ பெறுதல்‌ இல்லை.
அந்நிலை தானாக வந்தடைகின்றது.
இறைவனது ஆண்மையும்‌ வடிவழகும்‌ சீல குணமும்‌ படுத்தும்‌ பாடு அது.-இறைவனாய தலைவன் முன்‌ எல்லா உயிர்களும்‌ பெண்‌ தன்மை அடைந்து விடுகின்றன.
உயிரின்‌ – சேதனனின்‌ – இயல்பு*அவனுடைமையாம்‌ தன்மை யாதலின்‌” பெண்‌ தன்மை இயல்பாக வந்து விடுகின்றது.
“பெண்களுக்கு மோட்ச நிலை இல்லை”, என்ற நூல் கருத்து உண்டு- ஆனால்‌, இங்கு ஆழ்வார்‌ பெண்‌ நிலையடைந்து இறைவனை அநுபவித்தலை நாம்‌ காண்‌கின்றோம்‌.
இராமாவதாரத்தில்‌ முநிவர்களாய்‌ இருந்தவர்‌களே இராமன்‌ அழகில்‌ ஈடுபட்டு அவனை வேண்டிக்‌ கொண்டு,
அவன்‌ கண்ணனாய்‌ அவதரித்த போது கோபியர்களாக அவதரித்தார்கள்‌- அவனைக்‌ கூடி மகிழ்த்தார்கள்‌. என்பர்‌,
அது ஏற்றுக் கொள்ளப்‌ படுமானால்‌ ஆழ்வார்‌ அப்போதே (பெண்ணிலை யடைந்து இறைவனை அநுபவிப்பது அதனினும்‌ சீரியதே யன்றோ?

————

அகப்‌ பாடலும்‌ பத்திப்‌ பாடலும்‌
திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ பெண்ணிலை அடைந்து பேசும்‌ பாசுரங்கட்கு அமைந்துள்ள ‘உள்ளுறைப்பொருளை
யெல்லாம்‌ ஒருசேரத்‌ தொகுத்து விளக்கமுற அமைக்கின்றார்‌ இந்நூலாசிரியர்‌.
பாசுரங்களில்‌ வரும்‌ கொங்கை முதலிய உறுப்புகள்‌, தூதுவிடும்‌ பறவை முதவியவை யாவற்றுக்கும்‌ உள்ளுறைப் பொருளை விளக்குதலைக்‌ காண்கின்றோம்‌.
தமிழ்‌ அகப்பொருள்‌ இலக்கணத்தோடு இப்பாடல்களில்‌ குறிக்கப்‌ படும்‌ தத்துவம்‌ ஓரளவு ஒத்துள்ளமையும்‌ காணலாம்‌.
இம்‌முறை பற்றிக்‌ குறைவாக நினைப்பவர்க்கு “அப்படியன்று”,என்பதை விளக்குவதற்கே ஆரியர்‌ இவ்வளவும்‌ எழுதுகின்றார்‌ என்பது தோன்றுகின்றது.
இராமாயணத்தில்‌ வரும்‌ பிராட்டி நிலையை ஆழ்வார்‌. அடைந்து பேசுவதாக இவர்‌ எடுத்துக் காட்டுவதும்‌ அதனை வலியுறுத்தும்‌,
உலகியற்‌ காமத்திலும்‌ இங்குப்‌ பேசப்படும்‌ பகுதி வேறானது என்பதை அகப்பொருள்‌ இலக்கணத்திற்கு
மாறாகப்‌ பராங்குச நாயகி மடலேறுவதாகச்‌ சொல்வதும்‌ காட்டுமெனலாம்‌.
அதுபற்றியே பின்னா்‌ எழுந்த பன்னிரு பாட்டியல்‌ அதற்கு விதியும்‌ அமைக்‌கின்றது.

———–

ஆசாரிய ஹிருதய ஆரியர்‌ கூறும்‌ விளக்கங்களை இனிக்‌காண்பாம்‌:
“ஞானத்தில்‌ தம்‌ பேச்சு: பிரேமத்தில்‌ பெண்‌ பேச்சு”என்பது ஸூத்ரம் -1-8-.
பிரேமம்‌-அன்பு.காதல்‌ மிகும்‌ போது தான்‌ ஆழ்வார்‌ பெண்ணான நிலையில்‌ பேசுகின்றார்‌.

நேரிற்‌ கண்டாற் போன்று இறைவனை மனத்தாற்கண்டு அநுபவிப்பது “புணர்ச்சி” எனப்படும்‌.
கண்களால்‌ காண வேண்டுமென்ற புற அநுபவம்‌ பெறாமை பிரிவு எனப்படும்‌,
அகப்‌ பொருட்‌ பாடல்களிற்‌ பெரும்பாலன, ஆற்றாமை காரணமாக எழுந்தவைகளாகவே உள்ளன. -ஒரு திருவாய்மொழி மட்டும்‌ மகிழ்ச்சிப்‌ பேச்சாய்‌ உள்ளது.
தாமான தன்மைப்‌ பேச்சின்‌ போதும்‌ பெண்‌ தன்மைப்‌ பேச்சின்‌ போதும்‌ ஆழ்வாரின்‌ மனப்பாங்கு ஒரே தன்மையதாகத் தான்‌ இருக்கின்றது.
அடியோம்‌ தொடர்ந்து குற்றேவல்‌” என்பது பெண்‌ பேச்சாகும்‌ போது
“*அடிச்சியோம்‌ அடிக்கீ க்‌ குற்றேவல்‌” என்று மாறுகின்றது.
எனவே, அப்‌ பேச்சும்‌ ஆழ்வார்க்கு இயல்பான பேச்சே) வந்தேறியன்று என்பது விளங்கும்‌ (ஸூ 4–21).

————

அழகிய உருவகம்‌
“பெண்ணொருத்தி திருமணம்‌ செய்து கொண்டு தன்‌ நாயகனைச்‌ சேர்வதும்‌ ஓர்‌ ஆன்மா
இறைவனை அடைவதும்‌ ஒரே தன்மையன என்பதை உருவகமாகக்‌ காட்டுகின்றார்‌ ஆசிரியர்‌.
தாய்‌, தந்‌தை , உடலை வளர்க்கும்‌ உணவு, கைப்‌ பிடிக்கும்‌ கணவன்‌, திரு நாண்‌ முதலிய பலவும்‌ ஆங்கு எடுத்‌துக்‌ காட்டப்படுகின்றன.
வித்தை தாய் -; பாலும்‌ அமுதுமாய்‌ இருந்து வளர்த்தது திருமால்‌ திருநாமம்‌-
ஆன்மா திரு மகள்போல ஆசாரியனாகிய தந்தையால்‌ வளர்க்கப்படுகிறது.
வேறொருவருக்கு உரிமை பேசும்‌ நிலலை ஏற்படாமல்‌, உலகின்‌ தலைவனும்‌ காப்பவனும்‌ ஆன அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயகர்‌ ஆவர்‌. அவரை மணம்‌ முடித்தவர்‌ தந்‌தையாய ஆசாரியர்‌.
எட்டு இழையும்‌ மூன்று புரியும்‌ கொண்டது மங்கல நாண்‌: அதைப் போன்றதே *இறைவனைச்‌ சேர்ந்தது ஆன்மா” என்ற தொடர்பை
உணர்த்துகிற எட்டு எழுத்துகளால்‌ ஆகி மூன்று சொற்களாய்‌ இருக்கின்ற பிரணவமாகிய திருமந்திரம்‌,
மந்திரம்‌ உணர்ந்த பின்னரே இறைவனோடுள்ள தொடர்பு

இவ்வாறு பரமபுருடன்‌ ஆன்மாவைக்‌ கைக் கொண்டபின்‌
திருமணம்‌ முடிந்து எஞ்சிய ஓமம்‌ முடியுமளவும்‌ நாலுநாள்‌ பெண்‌ தன்‌ நாயகனை அணுகுதலும் அகலுதலும் இன்றி வேறொருவர்க்கு உரியவரல்லாத அடிமைத்‌ தன்மைக்குப்‌
பொருந்த அவன்‌ அநுபவத்திற்குத்‌ தாக்கவளாக அமைவள்‌.
திருமந்திரதிதல்‌ உள்ள ‘ஓம்‌* என்பது வேரொருவரருக்கு உரியதல்லாத அடிமைத் தன்மையை உணர்த்தும்‌.
ஏற்றுக்‌ கொள்ளப்பட்டு இறைவனை நெருங்கி அவனோடு கலவா விடினும்‌, அகலுதலும்‌ அணுகுதலுமில்லாமல்‌
கைங்கரியத்தை வேண்டுதலை *(நாராயணாய’” என்பதிலுள்ள சதுரத்தி-நான்‌காம்‌ வேற்றுமை–உணர்த்துகின்றது.
மணமக்கள்‌ ஒரே படுக்‌கையில்‌ இருக்கச்‌ செய்தேயும்‌, நெருங்கிப் பழகும்‌ வாய்ப்‌பின்றி சோமன் முதலியவர் நடுவே இருப்பதாகச் சொல்லப்படும்‌ நாலு நாட்கள் போல, அடிமைத்‌ தன்மை அறிதலும்‌ கைங்கரியம்‌ செய்ய வேண்டும்‌ என்ற விருப்பமும்‌ இருப்பதால்‌, இருவருக்கும்‌ நெருக்கம்‌ உண்‌டாயிருக்கவும்‌,
சேர்ந்து அநுபவிக்க இயலாதவாறு. அநுபவ விரோதியான உடம்புடன்‌ கூடி யிருக்கும்‌ நாலு நாள்‌ களையும்‌ ஆன்மா ஒருவாறு கழிக்கின்றது.

பெண்‌, பிறந்த வீட்டைத்‌ துறந்து புக்ககம்‌ செல்லுதல்‌ போல, ஆசாரியன்‌ உபதேசித்த திரு மந்திரத்தால்‌ ஆன்மா
பிறவியை அடை.ந்தது இங்கேயாகையால்‌,
பிறப்பிடமான இவ்வுலகை இறைவன் பாலுண்டான அன்பின்‌ மிகுதியாலே முன்பு தனக்கு ஆதரவாய்‌ இருந்த பல பொருள்களோடும்‌ கை விடுகன்றது
சூழ்‌ விசும்பு” என்னும்‌ திருவாய்மொழியில்‌ சொல்லுகிறபடி அர்ச்சிராதி மார்க்கத்திலே வழியிலுள்ள
அனைவரும்‌ போற்ற நாயகன்‌ அழைத்துச்‌ செல்ல, அவனோடு உடன்‌ செல்கின்றது;
கணவன்‌ வீடு செல்லும்‌ பெண் அவனூரின் எல்லையை அடைந்த பின் அவர்கள் குளிப்பாட்டக் குளிக்குமாறுபோல,
அமுத வெள்ளத்தை. உடைய விரசை என்ற ஆற்றிலே இப்பாலுள்ள அழுக்கெல்லாம்‌ நீங்க நீராடுகின்றது-
குளித்த பெண்ணை நாயகனுடைய உற்றார் உறவினரான மகளிர்‌ அலங்கரிப்பது போன்று, துழாய் மாலை,.அஞ்சனத்தின்‌ நீறு, நண ப்பொடி, ‘ பீதக வாடை,
பல அணிகலன்‌ முதலியவற்றால்‌ மானேய்‌ நோக்கியரான மகளிர்‌ இறைவன்‌ நுகருதற்கேற்றவாறு, அவளை அணி செய்வர்‌
தம்‌ ஈடுபாடு தோன்ற அனைவரும்‌ கூடி நின்று அவளைப்‌ போற்றி”புரைப்பர் – சாமரம்‌ ப்ணிமாறி மகிழ்விப்பர்‌,

மணப் பெண்‌ கணவனின்‌ இல்லத்தை அணுகியவுடன்‌ அங்குள்ள மகளிர்‌ மங்கல விளக்கு முதலியன ஏந்தி வந்து
வரவேற்பது போல, ஆன்மாவை
*நிதியும்‌ நற் சுண்ணமும்‌ நிறைகுட விளக்கமும்‌ மதிமுக மடந்தையர்‌ ஏந்தினர்‌”(10-9-9) என்கிறபடியும்‌,
*சதிரிள மங்கையர்‌ தாம் வந்து எதிர்கொள்ள? (நா. திரு. 6-5) என்கிறபடியும்‌
மங்கலப்பொருள்‌களுடன்‌ தெய்வ மகளிர்‌ எதிர் கொள்வர்‌. பாராட்டோடு சென்ற பெண்‌ கணவன்‌ இல்லில் புகுமாறு போல,
*மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பாரீ” (நா, திரு.10) என்கிறபடி திருமகள்‌ கேள்வனானவனுக்கு
இன்பந்தருமிடமான ஸ்ரீ வைகுந்தத்தை அடைந்து அவனோடே. கூடியிருக்கும்‌.

பின்‌ கணவன்‌ வீட்டிற்கு வந்த பின்‌ மண மக்களும் மற்றுமுள்ள உறவினர்களும்‌ கூடியிருந்து பெரும் களிச்சி உண்ணுமாறு போல,
அடியார்‌ குழாங்களும்‌ அவனுமாக இருக்கிற சேர்த்‌தியிலே பெருங்களிச்சியாக முழுக்க அநுபவிக்கும்‌;
*கட்டெழில்‌ வானவர் போகம்‌ உண்பரே” (6-6-11) என்றபடி நித்திய ஸூரிகள்‌ : அநுபவிக்கிற இன்பத்தை
*அவன்‌ பிரமத்‌துடன்கூட இணை பிரியாமல்‌: எல்லா இன்பங்களையும் (கல்யாண குணங்களையும்‌) அநுபவிக்கின்றான்‌” என்கிறபடியே அநுபவிக்‌கும்‌.

கணவனோடு கூடு வதற்கு கட்டிலிலே ஏறுமாறு போல, மிகச்‌ சிறப்பாகச்‌ செய்யப்பட்ட அவனது கட்டிலிலே
பாத பீடத்திலே அடியிட்டேறி இராமனாய்‌ இருந்து பரதனையும்‌ திருவடியையும்‌. அணைத்துக் கொண்டதும்‌,
கண்ண பிரானாய் இருந்து அக்குரூரனை அணைத்துக்‌ கொண்டதும்‌ ஆன கெளத்‌துப மணிக்கும்‌ அழகு செய்யும்‌
இறைவனது திருமார்பிலே இறைமையின்‌ அடையாளமான கெளத்துபம் போல இன்பப்‌ பொருளாய்‌ ஒளி செய்வதாய்‌ அணைவது ஆன்மாவாகிய பொருள்‌.
அதற்குப்‌ பெண்‌ தன்மையால்‌ உண்டானதாக வரும்‌ பேச்சு, வந்தேறியன்று; பெண் தன்மை இயல்பாக உண்டாவதாகைபாலே
அதனை. உள்ளபடி பெற்ற இவருக்கு அதனால் உண்டான பேச்சும்‌ இயல்பான ‘ பேச்சே என்பது தேற்றம்

———

மூவகை நிலை

பெண்‌ பேச்சாகப்‌ பேசும் இடத்திலும் ஆழ்வாருடைய பேச்சு மூன்று விதமாக அமைந்திருப்பதைக்‌ காண்கிறோம்‌.
ஆழ்வார்‌ தோழியாகவும்‌ தாயாகவும்‌ மகளாகவும்‌ இருந்து பேசுகின்றார் -இதன்‌ கருத்து யாது?

தோழியாவாள்‌ தலைவனையும்‌ தலைவியையும்‌ இணக்கிச் சேர்ப்பவள்‌,
திருமந்திரத்தில்‌ முதற் சொல்லான பிரணவத்‌தால்‌ இறைவனோடு ஆன்மாவுக்குச்‌ சொல்லப்பட்ட:
வேறொன்றிற்கு உரியதல்லாத அடிமைத்தன்மை முதலான
சம்பந்தத்தை அறிதலே அவனோடு ஆன்மா சேருதலுக்கு ஹேது
ஆகையால்‌, அந்தச்‌ சம்பந்த ஞானம்‌ என்கிற அறிவு நிலை.
*தோழி” என்று சொல்லப்படுகின்றது. ்‌

தாயாவாள்‌ பெற்று வளர்த்துப்‌ பெண் பிள்ளை பருவ:மடைந்து தலைவனிடம்‌ கொண்ட அளவற்ற ஈடுபாட்டால்‌.
அவனிருந்த இடத்திற்குப்‌ போக வேண்டுமென்று பதறுமளவிலும்‌, அவன் தானே வரக்‌ கண்டிருத்தலொழியப்‌ படி.
கடந்து போதல்‌ குல மரபுக்கு ஏற்றதன்று என்று கூறித்‌தடுத்து நிறுத்துபவள்‌.
*சித்தோபாயம்‌ என்கிற இறைவனையே உபாயமாகப்‌ பற்றினவர்க்கு அடையப்படு பொருளின்‌ கால தாமதத்துற்குக்‌
காரணம்‌ இல்லாமையால்‌, விரைவாகப்‌. பேற்றைப்‌ பெற வேண்டும்‌ என்ற பதற்றம்‌ தோன்றும்‌.
பேற்றின்‌ சிறப்பைக் க ண்டறிந்ததாலே முறைப்படி – படிப்‌.தடியாக… அவனை அடைதல்‌ வேண்டுமென்று இராமல்‌,
மிக்கு. நடக்கிற அளவில்‌ இது பிரபன்ன குல .மரபுக்ருச்‌ சேராது?
தலைவனானவன்‌ தானே வந்து ஆட்கொள்ளப்‌ பார்த்திருக்க வேண்டும்‌ என்று துடிப்பை அடக்கப்‌ பார்க்கின்ற
உபாயத்‌ துணிவு ஆகிற அறிவு நிலையே தாயார்‌ என்று பெயர்பெறும்‌–இந் நிலையைத்‌ திருமந்திரத்தில்‌ நடுச்சொல்‌ உணர்த்தும்‌,

தலைமகளாவாள்‌ இயற்கையில்‌ தலைவனைக்‌ கூடி அவன்‌ சிறப்புகளிலே ஈடுபட்டுக்‌ ‘குல மரபுகளையும்‌ நோக்காது
அவனை அடை,ந்தல்லது ஆற்றேன்‌ என்னும்‌ பதற்றத்தைஉடையவள்‌. -தலைவனும்‌ சரணடையத்‌ தகுந்தவனுமன் இறைவனுக்குத்‌
திருமந்திரத்தின்‌ கடைச்‌ சொல்லால் ‘சொல்லப்படுவதான அவன்‌ இயல்பு வடிவு குணம்‌ செல்வங்களால்‌ வந்த சிறப்பு இவற்றை எண்ணி, அவனை அநுபவித்‌தலில்‌ தாமதத்தைப்‌ பொறாமையாலே்‌,
அவன் ஒருவனே உபாயமானவன் – என்கிற துணிவையும்‌ மீறி அவனை அடைந்து அநுபவித்தல்லது தரியாதபடி
நடக்கிற *பேற்றில்‌ பதற்றம்‌” ஆகிய அறிவு நிலையை மகள்‌ என்று பெயரிட்டு வழங்குவர்‌.

இம்‌ மூன்றுவித நிலைமைகளும்‌ எக்காலத்தும்‌ ஆழ்வார்‌ தம்‌ உள்ளத்திலே உண்டு. அதனால்தான்‌ இவை *அறிவு நிலை”(பிரஜ்ஞா அவஸ்தை) என்று சுட்டப் பெறுகின்றன.’
திருவாய்மொழி நூலில்‌ தோழியின்‌ பேச்சாய்‌ உள்ளவை மூன்று. திருவாய்‌ மொழிகள்‌–அவை:
தீர்ப்பாரை யாமினி (4-6),
“துவளில்‌ மாமணி” (6-5),
கருமாணிக்க மலை: (8-9) என்பனவாம்‌,

தீர்ப்பாரை யாமினி :
இயற்கையாய்த்‌ தலைமகனைக்‌ கூடிப்பின்‌ அவனைப்‌ பிரிதலால்‌ வந்த ஆற்றாமையாலே மயக்க மடைந்த தலைமகளின்‌
நிலையைக்‌ கண்டு தாய்மார்‌ கலந்த *இவளது நோய்‌ இன்னது” என்பதும்‌, “அதன்‌ காரணம் இன்னது” என்பதும்‌,
(அதனைப்‌ போக்கும் விதம்‌ இன்னது”என்‌யதும்‌ அறியாதே ஒரு கட்டு விச்சியின்‌ சொற்‌ கேட்டு, அவள்‌ ‘நோய்‌ நீங்குதற்காக வெறியாடத்‌ தொடங்கினார்
அப்போது தலைமகனின்‌ இயல்பை நன்கு அறியும்‌ அவன்‌ உயிர்த்‌ தோழி,”வேறு ஒருவருக்கும்‌ உரியள் அல்லாத இவட்டுப்‌ பிறர் தொடர்பு கூறுவதை இவள்‌ ஆற்றாள்‌,
நாம்‌ இதனை விலக்காவிடில்‌ இவளை இழக்க நேரும்‌” என்று எண்ணி, அப்பொழுது தான்‌ தான்‌ ஆராய்ந்து அறிந்தவள்‌ போன்று
இவள்‌ நோவையும்‌ அதற்குக்‌ காரணத்தையும்‌ அவர்கட்குச் சொல்லித்‌ தக்க மருந்துகளையும்‌ விதித்து,
“அங்கோர் கள்ளும்‌ இறைச்சியும்‌ தூவேன்‌ மின் (4-6-3)என்று இவை முதலியவற்றால்‌ வெறி’ விலக்கிப்‌ பேசும்‌ பாடல்கள்‌ இதில்‌ அமைந்துள்ளன.

இதன்‌ உள்ளுறைப்பொருள்‌:
பேற்றினை அடைய உள்‌ளம்‌ பதற்றம்‌ கொண்ட நிலையிலும்‌ அது கிட்டாமையால்‌ ஆற்றாமை மிக்கது
அது காரணமாக அவனையே உபாயமாகக்‌ கொண்ட உபாயத்தில்‌ துணிவு கலங்கியது;
தர்மம்‌ மேற் கொண்டு ஒழுகுதலாலே இந் தோயைப்‌ போக்கலாம்‌-என்று அந்தரியாமியான இறைவனுக்குச்‌ செய்யும்‌ கருமங்களைச்‌ செய்தலில்‌ ஈடுபாடு தோன்றிற்று,
அப்போது சம்பந்த ஞானமானது- அவனுடன்‌ உள்ள தொடர்பு பற்றிய அறிவானது–இந்நோய்‌ கருமத்தின்‌ பலனாக உண்டானதன்று
தற்செயலாக ஏற்பட்ட இறைவனது அருள்‌ நோக்கின்‌ பயனால்‌ உண்டானது. சிறந்த திருமேனியோடு கூடியவனான இறைவனை
அநுபவிக்கையாலே வந்த எடுபாட்டின்‌ விளைவு இது. ஆகையால்‌, கருமம்‌ புரிதல்‌ இதனைப்‌ போக்கும்‌ வழி யன்று.
வேறொருவர்க்‌ குரியதல்லாத அடிமைத் தன்மையாகிய ஆன்மாவின்‌ இயல்புக்கு அது முரணான செயலாகும்‌?
எனவே, அதனியல்பை அழிப்பதாகும்‌. இவ்வாறு பிற உபாயங்களை மேற்கொள்ளுதலை விலக்குவதே இதன்‌ உட்கோள்‌ ஆகும்‌.

துவளில்‌ மாமணி :
திருத்தொலை வில்லிமங்கலம்‌ என்னும்‌ திருப்பதியிலே மிக்க ஈடுபாடு கொண்டுள்ள ஒரு தலைமகளை
அந்நிலைமையி லிருந்து மீட்கப்‌ பார்க்கின்றனர்‌ அவள்‌ தாய்மார்‌.
தோழி யானவள்‌ அவர்களை நோக்கி , “இவளை நீரினி அன்னைமீரீ1 உமக்கு ஆசையில்லை விடுமினோ!” என்கிறாள்‌.
நீங்களன்றோ திருத் தொலை வில்லிமங்கலத்தில்‌ இவளைக்‌ கொண்டுபோய்‌ இவட்கு இந்த ஈடுபாட்டை விளைத்தீர்கள்‌?
இனி அடையப்‌ பட்ட பொருளில்‌ ஈடுபட்டவளான இவளை உங்களால்‌ மீட்க இயலாது.
ஆகையால்‌, நீங்கள்‌ இவள் மேல் கொண்ட ஆசையை விடுங்கள்‌!’ என்று அறிவுறுத்துகின்றாள்‌.

இதன்‌ உள்ளுறைப்‌ பொருள்‌ –
அர்ச்சாவதாரமான எளிய பொருளே உபாயமாகையால்‌, எப்போதும்‌ அதிலே நோக்காயிருக்கும்‌ உபாயத்தைப்‌ பற்றிய துணிவு,
அப்பொருளின்‌ சிறப்பை உணர்தலால்‌ வந்த ஈடுபாட்டின்‌ விளைவான பதற்றம்‌ உபாயத்திலே ‘பொருந்துகிறதோ–சேர்கின்றதோ.-. என்ற வேண்டாத ஐயப்பாட்டாலே அதைத்‌ தடுக்க முயல்கிறது.
அச் சமயம்‌,“சம்பந்த ஞானம்‌– அடிமைப்‌ பொருளின் பால்‌ உண்டான இவ் வீடுபாடு–தலைவனின்‌ உகப்புக்குத்‌ தக்கதே:
உபாயப்‌ பகுதியில்‌ சேராது? அடையப்பட்ட பொருளின்‌ சிறப்புக்‌ காரணமாய்‌ வந்தது; இதனைத்‌ தடுத்தலும்‌ இயலாது? தடுக்கக் கூடுமென நினைத்திருக்கின்ற உரிமையே எண்ணம்‌ நெருங்கிய
அவனுடைமை யாதலகின்ற (பாரதந்தரியமாகிற) இயல்புக்கு மாறானது ஆகையாலே விடத்தக்கது-
என்று தன்‌ தொடர்பை நீக்கும்படி. சொல்லியது இத் திருவாய்‌ மொழியின்‌ பொருளாகும்‌.

கருமாணிக்க மலை :
தலைமகளின்‌ பருவத்தைக்‌ கண்ட உறவினர்‌, சுயம்வரத்‌திற்கு அரசர்களை யெல்லாம்‌ திரட்டுகைக்கு மண முரசு அறை விக்கின்றனர்‌.
திருப்புலியூர்‌ என்னும்‌ திவ்விய தேசத்து இறைவனோடே. இவளுக்குச்‌ சேர்க்கை உண்டாய் விட்டது என்பதை
இவள்‌ வடிவிலும்‌ பேச்சிலும்‌ உண்டான வேறு பாட்டாலே அறிகின்றாள்‌ உயிர்த்தோழி,
அவள்‌, *இம்‌ முரசொலி பெண் பிள்ளை செவியிற்‌படுமாகில்‌, “மானிட வர்கென்று பேச்சுப்படில்‌
வாழாத்‌ தன்மையளா யிருக்கினற இவள்‌, உயிர் தரியாள்‌, ஆகையால்‌, அதனைத்‌ தடுக்க வேண்டும்‌” எனக்‌ கருதுகிறாள்
உறவினர்களிடம் , *இவளுக்குத்‌ திருப்புலியூர்‌ நாயனாரோடே சேர்க்கை உண்டாயிற்றுப்போல இருக்கின்றது?
அவனுடைய குணம்‌ செயல்களையே எப்‌ பொழுதும்‌ சொல்லிச்‌ சொல்லிப்‌ புலற்றுகின்றாள்‌? எனவே, நீஙிகள்‌ செய்வது முறையற்ற செயல்‌? என்று ‘தெரிவிக்‌கின்றாள்
அவரிகள்‌, “அப்படியானால்‌ இவளுக்குத்‌ தக்க உறுப்பழகு, அணியழகு முதலான நாயக லக்ஷணங்கள் அவனுக்கு உண்டோ?” என்று கேட்கின்றார்கள்‌,
அவைகளில்‌ எக்குறைவும்‌ இல்லை. அவற்றுள்‌ ஒன்றும்‌ இல்லையே யானாலும்‌, இவளிடம்‌ அவனுக்கள்றிப்‌ பிறரக்குரியள்‌ அல்லாதவளானமைக்கு அடையாளம்‌ தெளிவாகக் காணலாம்
ஆன பின்பு உங்கள்‌ முயற்சியை விடுங்கள்‌! என்று நடுவு நிலயளாய்‌ நின்று அறம்‌ சொல்லுபவளாய்‌ வேறு மணம்‌ விலகினைமை சொல்லப்‌ பெறுகின்றது
இத்‌ திருவாய்‌ மொழியில்‌, அறத்தொடு நின்ற நிலையே இங்குப்‌ பேசப்‌ படுவது,

உள்ளுறைப்பொருள்‌ :
அடையப்படுகின்ற பொருவின்பால்‌ பதற்றம்‌ கொண்ட நிலையை பேற்றின்‌ கண்‌ பதற்ற நிலையின்‌ முதிர்வை.
உபாயத்‌ துணிவு நிலையிலே நின்று கண்ட பிறகு,
அந் நிலை இறைவனை யன்றி வேறு பிறர்குத்‌ தகுதியற்றதான தன்மையை அறியாதே, *மற்றையோர்க்கும்‌ தகுதியோ” என்ற ஆராய்ச்‌சி எழுந்தது.
அவ்வளவில்‌ சம்பந்த ஞானம்‌ இதற்கு வேறு பிறர்க்கு அடிமை என்ற பேச்சுக்கூட இதன்‌ இயல்பை அழிப்பதாகும்‌.
தலைவனுடைய இனிமையாலும்‌ மற்றும்‌ இயல்பாகவே அவனுக்கு அடிமையாம்‌ தன்மையாலும்‌ இவ்வான்மா
அவனுக்கே அடிமை” என்று அறுதியிடப்‌ படுவது இத்திருவாய்மொழியின்‌ பொருள்‌,

ஆக, தோழியானவள்‌ வெறிவிலக்கியும்‌, ஆசையறுத்தும்‌,
அறத்தொடு நின்றும்‌, “இவ்வான்மா பிறர்க்கு அடிமைப்‌ பட்டதுமன்று? தனக்குத் தானே உரியதுமன்று:
இறைவன்‌ ஒருவனுக்கே அடிமை” என்று சொன்ன மூன்று திருவாய்‌ மொழிகளும்‌ சம்பற்த ஞான நிலையில்‌ பேச்சு என்பது தெளிவு.

தாய்‌ பேச்சான திருவாய்மொழிகள்‌—7 :
*ஆடியாடி” (2-4) என்ற திருவாய்மொழியில்‌ அடியார்கள்‌ குழாங்களை உடன்கூடப்‌ பெருமையால்‌ வந்த வருத்தத்தாலே கொழுகொம்பை இழந்த தளிர் போலத்‌ தலைமகள்‌ வாடுகின்றாள்‌.
*பாலனாய்‌ ஏழுலகில்‌? (4-2) என்ற திருவாய்மொழியில்‌
“கண்ணனது அடியில்‌ சூடிய துழாய்க்கு மெலியும்‌”?என்றபடி. கடந்த போனதை ஆசைப்பட்டு மெலிகின்றாள்‌.
“மண்ணையிருந்து துழாவி” (4-4) யிலே *என்‌ பெண்‌
கொடி ஏறிய பித்தே* (4-4-6) என்னும்படி அவனுக்கு”ஒப்பான பொருள்களையும்‌ உறவான பொருள்களையும்‌ அவனாக எண்ணி, அவற்றைக்‌ கிட்டும்படி பித்தேறிப்‌ பேசுகின்றாள்‌.
‘கடல் ஞாலத்திலே (5-6) “ஈசன்‌ வந்தேறக்கொலோ*”(5-6-1) என்று ஆற்றாமையாலே *அவனைப் போலப்‌ பாவித்‌தலை–அநுகரித்தலைத்‌ தெரிந்து கொள்ளாதே இறைவன்‌ இவள் மீது ஆவேசித்தானோ!” என்று கருதும்படி, அவனாகப்‌ பேசுகின்றாள்‌...

“மாலுக்கு வையத்திலே” (6-6) *கற்புடையாட்டி இழந்தது கட்டே” (6-6-10) என்னும்படி இறைவளை அடையாது துன்பத்தாலே கட்டடங்க இழக்கிறாள்‌.
“உண்ணும்‌ சோற்றில் *(6-7) *இன்றெனக்கு உதவாதகன்ற”(6.7.6) என்று தன்னைப்‌ பிரிந்து
துன்புறுகின்ற தாய்‌, “அந்த ஆபத்தான நிலையில்‌ ‘எனக்கு உதவாதே போனாள்‌” என்னும்படி அகல்‌கின்றாள்‌.
“கங்குலும்‌ பகலிலே” (7-2) *சந்தித்து’ உன்‌ சரணம்‌. சார்வதே வலித்த தையல்‌” (7-2-5) என்னும்படி “அவனை அடைந்து அவன்‌ முன்னிலையில்‌ முடிய வேண்டும்‌” என்றஉறுதி பூண்டவளாகின்றாள்‌.

பத்தியால்‌ வழிபடுவோர்க்குப்‌ பரபத்தி தசையிலுண்‌டாம்‌ வாட்டம்‌, மெலிதல்‌ முதலியவைய போலத்‌ தலைமகளின்‌ இந்நிலமை
உபாயத்தில்‌ கொண்டு சேர்க்குமோ என்று தாயானவள்‌ அஞ்சி, இறைவனையும்‌ வினவ வந்தவர்களையும்‌ பார்த்து
வாடா நின்றாள்‌? மெலியா நின்றாள்‌? என்றாற்போன்று
முறையிடுகின்றாள்‌; “உம்முடைய கிருபை தவிர இவள்பக்கல்‌ உள்ள ஒன்றும்‌ ஹேதுவன்று
ஆனபின்பு இவளை “இப்படித்‌ துடிக்க விட்டிருத்தல்‌ உம்முடைய கி ருயைக்கும்‌ காக்கும்‌ தன்மைக்கும்‌ தக்கதாமோ? என்று
கூப்பிடுகின்ற ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உபாயத்‌ துணிவு அல்லது உறுதிநிலை தோன்றும்‌.-ஆகையால்‌, தாய்ப்‌ பேச்சான ஏழு திருவாய்‌மொழிகளும்‌ உபாயத்‌ துணிவு நிளையில்‌ பேச்சு என்பது தெளிவு .

தலைமகள்‌ தன்மையில்‌ ஆழ்வார்‌ பேசும்‌ திருவாய்மொழி-17

தலைமகள்‌ *அஞ்சிறைய மட நாரை” (1-4), *வைகல் பூங்கழி” (6.1)) *பொன்னுலகாளீர்‌* (6-8), *எங்கானல்‌”(9-7) என்கிற
நான்கு திருவாய்மொழிகளிலும்‌ அவன்‌ வருகின்ற வரையிலும்‌ பொறுத்திருக்கப்‌ பொறாமல்‌ பதறித்‌ தூது விடுகின்றாள்‌.

“வாயும்‌ திரையுகளிலே (2-1) “ஆற்றாமை சொல்லி அழுவோமை”: என்று எல்லாப்‌ பொருள்களும்‌ இறைவனைப்‌ பிரிந்த காரணத்தினால்‌
துன்புறுகின்றனவாகக்‌ கருதி அவற்றைத்‌ தன்னோடொத்த துபரமுடையனவாகக் கொண்டு அழுகிறாள்‌.

*ஏறாளு மிறை யோ’னில்‌ (4-8) *மாறாளன்‌ கவராத மணிமாமை குறைவிலம்‌?” என்று அவன்‌ விரும்பாதவற்றை வேண்டாவென்று வெறுத்துரைக்கிறாள்‌.

“மாசறு சோதி*யிலே (5-3) “நாடும்‌ இரைக்கவே யாம்‌ மடலூர்தும்‌” என்று (உலகம்‌ முழுவதும்‌ கலக்கமடையும்படி மடல்‌ ஊர்வேன்‌!’ என்று சொல்கிறாள்‌.

ஊரெல்லாம்‌ துஞ்சி*யிலே (5–4) காதல் தோயும்‌ இரவாகிய கறிபமும்‌ முன்னரே உடன்பாடு செங்து கொண்டாற் போன்று சூழ நின்று பொருதலால தப்ப வழியற்றவள் ஆகின்றாள்

எங்ஙனேயோ”லில்‌ (5-5) சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர்‌ உருவம்‌ விருப்பும்‌ வெறுப்பும்‌ சமமாம்படி ௨ரு வெளிப்பாடாய்‌ வெளிப்படும்‌ நிலையளாகின்றாள்‌.

*மானேய்‌ நோக்கிலே: (5-9) திருவல்ல வாழுறையும்‌ ‘தலைவரைக் கூடும்‌ நாளை வேண்டுகின்றாள்‌. : .

“மின்னிடை மடவாரிலே” (6–2) அவன்‌ காலம் தாழ்த்து வரவே, ‘போகு நம்பீ? என்று காதலால்‌ ஊடலை மேற்‌ கொள்கிறாள்‌ *

*வெள்ளைச்‌ சுரி சங்கிலே” (7-3) *என்‌ நெஞ்சும்‌ அவன்‌ பின் போய்‌ விட்டது! ஆகையால்‌, ஒரு துணையுமற்றேன்‌! என்று உசாத் துணையுமற்றவளாகின்றாள்‌.

ஏழையர்‌ ஆவி’யிலே (7–7) கண்ணனது உருவமும்‌ உறுட்புகளும்‌ உருவெளிப்பாட்டாலே இவளை ஒரு சேர நலிகின்றன.

“நங்கள்‌ வரிவளை*யிலே (8–2) *காலம் பல சென்றும்‌ காண்பது ஆணை உங்களோடு எங்களிடையில்லை!‘ என்று நன்மை சொல்கிற்‌ தாய்மார்‌ தோழிமார்களையும்‌ தாண்டிச்‌
செல்லும்‌ நிலை பெறுகின்றாள்‌.

*இன்னுயிர்ச்‌ சேவ*லிலே (0-5) போலியான பொருள்‌களைக்‌ கண்டு நொந்து முடிதலில்‌ துணிந்தவளாகின்றாள்‌.

*மல்லிகைகமழ்‌ தென்றலில்‌ (9-9) மாலைக்‌ காலத்தில்‌ கண்ணன்‌ பசுக்களின்‌ முற்கொழுந்தில்‌ வரக்‌ காணாமையால்‌, பகையாய்‌ நின்று துன்புறுத்தும்‌ பொருள்களாலே நலிவு யடுகின்றாள்‌.

*வேய்மரு தோளிணை”யிலே (10-3) விடியற்காலையிலே கண்ணன்‌ பசு மேங்க்கப்‌ போனானாகத் தவறாக நினைத்துக்‌ கொண்டு அவன்‌ முகத்தைப்‌ பார்த்து, ‘பசு மேய்க்கப்‌ போனால்‌ நலியக்‌ கூடிய பகைப்‌ பொருள்கள்‌ நலியா நின்றன” என்று கூப்பீடு செய்கின்றாள்‌.

இவ்வாறு பதினேழு திருவாய்‌மொழிகளிலும்‌ பேற்றில்‌ பதற்றம்‌ தோன்றும்‌.
இதனால்‌,தலைமகள்‌ பேச்சான பதினேழு திருவாய்‌ மொழிகளும்‌ பேற்‌றில்‌ பதற்ற நிலையில்‌ பேசுமிடம்‌ என்பது தெளிவாம்‌.

இவ்வாறு மூன்று திருவாய்‌ மொழிகளில்‌ பிறர்க்கு உரிய தல்லாத அடிமைத்‌ தன்மையும்‌,
ஏழில்‌ உபாயத்தில் துணிவும் பதினேழு திருவாய்‌ மொழிகளில்‌ பேற்றில்‌ பதற்றமும்‌ ஆகியமூன்று நிலைப்‌ பேச்சுகள்‌ அமைந்துள்ளன (ஸூ 134), இவை யாவும்‌ தோழி, தாய்‌, மகள்‌ பேச்சாய்‌ உள்ளன.

ஆழ்வார்‌ பாசுரங்களில் பல இடங்களில்‌ *தோழிமாரீ”என்றும்‌, *அன்னையா்‌* என்றும்‌ பன்மைக்‌ குறிப்புகள்‌ உள்ளன.
“தோழி” என்பது சம்பந்த ஞானத்தையும்‌, “தாய்‌! என்பது உபாயத்தில்‌ துணிவையுமாயின்‌, இவ்வாறு பன்மையாகக்‌ கூறுவது ஏன்‌ என்னும்‌ கேள்வி எழுவது இயல்பே,
ஆன்மாவோடு இறைவனுக்கு உள்ள சம்பந்தம்‌ ‘ரக்ஷகத்துவம்‌,-சேஷித்துவம்‌, காரணத்துவம்‌,சரீரத்துவம்‌” எனப் பல உண்டு.
ஆகையால்‌, அந்த அந்தச்‌ சம்பந்தகளின்‌ ஞானம்‌ குறித்த தன்மைக்‌ கேற்பத்‌ தோழியரும்‌ பலராயினர்‌.
உபாயமாக இருக்கின்றவனான இறைவனுடைய தன்மையும்‌ வாத்சல்யம்‌, ஸ்வாமித்துவம்‌, செளசல்யம்‌, செளலப்பியம்‌, ஞானம்‌, சக்தி, கிருபை முதலான பல, -அத்தன்மைகள்‌ பற்றித்‌ துணிவு வரும்‌.
அத்தன்மைகளின்‌ பன்மைக்கேற்பத்‌ தாய்மாரும்‌ பலராகப்‌ பேசப்படுவது பொருந்தமேயாகும்‌.

இதைப் போன்ற தலைமகளுடைய பருவங்கள்‌, பேதை பெதும்பை, மஙகை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்‌ பெண்‌” என ஏழு ஆம்‌.
பேற்றில்‌ பதற்றம்‌ கொள்ளும்‌ ஏழு நிலைமைகளை பத்தியின்‌ முதல்நில்‌ தொடங்க கடை நிலை முடியவுமுள்ள நிலை வகைகளின்‌ ஏழு பிரிவுகளை–அவ்‌வேழு பருவமாகக்‌ கொள்ளலாம்‌.
அவையாவன:
ஓரு பொருளைப்‌ பார்த்தவுடன்‌ பிறக்கும்‌ விருப்பம்‌(அபிலாஷை),
அப்‌ பொருளைப்பற்றிய சிந்தனை,
அது இடையராது நடைபெறுகின்ற தொடர்ந்த நிளைப்பு (அநுஸ்ம்ருதி),
அப்பொருளை எப்படியும்‌ பெற்று நுகர வேண்டுமென்கின்‌ற இச்சை,
வேறொன்றாலும்‌ மாற்ற முடியாதபடி முதிர்கின்ற:சுவை,
“அப்பொருளைப்‌ பெறின்‌ இன்பம்‌, பிரியின்‌ துன்பம்‌” என்கிற பரபக்தி ,
பிரிந்த அளவில்‌ உயிர்‌ பிரியும்‌ தன்மைய்தான பரமபத்தி என இவை ஏமு நிலைமைகளாம்‌ (ஸூ 136.)

அருளிச்செயலில்‌ தலைமகளின்‌ உடல்‌ . உறுப்புகளாக எடுத்துச்‌ சிறப்பித்துக்‌ கூறும்‌ ஒவ்வொன்றுக்கும்‌உட்கருத்து உண்டு. அவையாவன ;
1, கூந்தல்‌ பரப்பை ஆதாரமாகக்‌ கொண்டு பெண்களை மயில்‌ என்பர்‌.–இது ஞான மலர்ச்‌சியைச்‌ சொல்கின்றது.-
2..வெண்மையான ஒளியுடைமையால்‌ நெற்றியைப்‌ பிறை என்பர்‌.–இது பிறர்க்கு அடிமை யாகாமை: என்ற தூய்மையைக்‌ குறிக்கும்‌
3… வளைவை யுடைமையால்‌ புருவத்தை வில்‌ என்பர்‌.–இது அகமும்‌ புறமும்‌ ஆய கரணங்களை அடக்கி ஆளுதலாகிய தாந்தியைக் குறிக்கும்‌.
4, இலக்கை நோக்கச்‌ செல்லும்‌ தன்மையால்‌ கண்ணை அம்பு என்பர்‌,–இது தனக்காக வகுத்த இறைவனையே நோக்கும்‌ ஞானத்தைச்‌ சொல்வது.
5: ஆனந்தத்தைத்‌ தரும்‌ தன்மையால்‌ வெண் முறுவலை முத்து என்பர் ,(முத்‌” என்ற வடசொல்‌ *ஆனந்‌தம் ” என்ற பொருள்‌ தரும்‌) இது அப்பொருளை அநுபவித்தால்‌ உனதாகும்‌ ஆனந்தத்தைச்‌ சொல்லும்‌.
6–செத்றிறமுடைமையால்‌ இதழைப்‌ பவளம் என்பர் –இது அவளைப்‌ பற்றுதலில்‌ உண்‌டான அனு ராகத்‌தைச்‌ (ராகம்‌.ஆசை– சிவப்பு ) சொல்லும்‌.
7-நன்கு வளர்ந்த முலையைச்‌- செப்பு என்பர்‌.-இது தலைவனது. அநுபவத்திற்கு ஏற்ற பக்குவமான பக்தியைக்‌ காட்‌.டும்‌
8-நுண்மை உடைமையால்‌ இடையை மின்‌ என்பர்‌.–இது ஞான நிலைச் சிறப்புகளுக்‌கெல்‌லாம்‌ ஆதாரமான ஆன்மாவின்‌ அணுத்‌ தன்மையைக்‌ காட்‌டும்‌.
9-அழகிய அல்குலைத்‌ தேர்‌ என்பர்‌,-இது ஆன்மாவின்‌ இன்பத்தைக்‌ காட்டும்‌,
10-நடை அழகால்‌ அன்னம்‌ என்பர்‌.-இது யாவரும்‌. போற்றும்படி தன்‌னியல்புக்கு ஏற்ப நடக்கிற கதியைக் காட்டும்‌.

ஆக , ஞான மலர்ச்சி , தூய்மை முதலியவைகட்கு இருப்பிடமாய்‌ உள்ளே யிருக்கின்ற ஆன்ம சொரூபத்தின்‌ வகுப்பு இத்தகையது என்பதாம்‌.
ஆன்மா ஒன்றே தோழி, தாய்‌, மகள்‌ என்ற மூவர்‌ தன்மையிலும்‌ மூன்று நிலைகள்‌ அடைவதால்‌,
(பேற்றின்‌ பதற்றமாகச்‌ சொன்ன மகளின்‌ ஆன்ம சொரூபத்‌தைப்‌. பொருளாகக் கொண்டு இங்குப்‌ பேசப்‌ படுகின்றது–அது பொருத்தமேயாகும்‌.)

தோழி, தாய்‌, தலைமகள்‌ என்கிற மூன்று நிலைகளின்‌ செயல்‌ வேறுபாடு: ்‌
தாய்‌ தோழி மீது, “இவளைக்‌ கொண்டு போய்ச்‌ செய்த சூழ்ச்சியை யார்க்கு எடுத்துரைப்பேன்‌!* என்று பழி கூறுவது,.
தோழி தாய்மார் மேல்‌, அவளைத்‌ தொலை வில்லிமங்கலம்‌ அழைத்துக்‌ கொண்டு போனவர்கள்‌ நீங்களே!’ என்று பழி கூறுவது,
ஆக இப்படி ஒருவர்‌ மீது ஒருவர்‌ பழி கூறிக் கொள்வதும்‌?

“தோழிமார்‌ என்னை இணக்கி விளையாட அழைக்க நான்‌ போந்தேன் ”, என்றும்‌,
தாய்மார்‌ என்னை “அழைத்துக் கொண்டு போக நான்‌ போந்தேன் ” என்றும்‌,
இருவர் மேலும்‌ பழி உண்டு என்று தலைவி இசைந்து காட்டி மேலெழுத்திடுவதும்‌ ஆகிய இரண்டும்‌ .முதல்நிலை, -‘

“பலர்‌ காண வீட்டின்‌ முன்னின்றாய்‌!*? என்று தோழி. தலைமகளைக்‌ கடிவது;
*இவளை விட்டு விடுங்கள்‌” என்று தாய்‌மார்க்குக்‌ கூறுவது போலத் தலைமகளுக்குத்‌ துணை செய்வது
ஆக. இப்படி இ ருபடைகளுக்கும்‌ தன்னை அநுகூலமாககக்‌ கொள்வதும்‌?
*ஆரென்னை ஆராய்வார்‌”–என்ற பாசுரத்தால்‌ தாய்மார்‌ தோழிமார்‌. இருவகையரோடும்‌ தலைமகட்கு உடன்பாடு இருப்பதாகக்‌ காட்டப்படுவதும்‌? ஆகிய இரண்டும்‌ இரண்டாவது நிலை.

அவ் விருவகையரோடும்‌ தனக்கு ஒரு தொடர்புமில்லை என்று இரு வகையரையும்‌ தலைமகள்‌ உத.றிவிடுகையும்‌;
இவள்‌ என்றும்‌ அவன்‌ பெயரே கூறி நைந்து. இரங்கும்‌” என்று தலைவியின்‌ ஈடுபாட்டைத்‌ தோழி கொண்டாடுவதும்‌,.
“இவள்‌ திருக்கோளூர்க்கே. நடந்தாள் என்று திருத்தாயர்‌ கொண்டாடுவதும்‌ ஆகிற உதறுதலும்‌ கொண்டாடுதலும்‌. மூன்றாவது நிலை.

இதில்‌ *பழி, மேலெழுத்து” என்ற இரண்டாலும் சம்பந்த ஞானமும்‌ உபாயத்தில்‌ துணிவும்‌ ஆகிய இவை இரண்டும்‌,பேற்றில்‌ பதந்றத்திற்குக்‌ காரணமாக இருப்பது முதல் நிலை.

இருபடை மெய்க்காட்டு, உடன்பாடு என்ற இரண்டாலும்‌. சம்பந்த ஞானம்‌ மற்ற இரண்டிற்கும்‌ துணை புரிகிறது; பேற்றில் பதற்றத்துக்குக் காரணமான சம்பந்த ஞானமும் -உபாயத்‌தில் துணிவும்‌ இட வேறுபாட்டால்‌ அதற்கு உறவாக. அமைவது இடைநிலை.

உதறுதல்‌, கொண்டாட்டம்‌ என்கிற இரண்டாலும்‌ பேற்றில்‌ பதற்றமானது சம்பந்த ஞானத்தையும்‌ உபாயத்தில்‌ துணிவையும்‌ மீறுதலும்‌,
அங்கனம்‌ மீறுவது கொண்டாடத் தக்கதாதலும்‌ ஆகிய இது இறுதிநிலை.

இவ்வாறு சம்பந்தஞானம்‌, ‘ உபாயத்தில்‌ துணிவு, . பேற்றில்‌ பதற்றம்‌ ஆகிய மூன்று நிலைகளின்‌ செயல்‌ விசேடங்கள்‌ நடைபெறும்‌.

தாயாரான உபாயத் துணிவு நிலையில் ஏதிலராகச் சொல்வது சித்தோபாய நிலைக்குப்‌ பகையான சாத்ய உபாய: நிலையினரை
உறவாகச் சொல்லுவது அநுகூலரான சித்த உபாய நிலையினரை.

தலைமகளான பேற்றின்‌ பதற்றமாகிற திலையில்‌ நெருங்கிய பகைவராகச்‌ சொல்லுவது; இறைவனையே உபாயமாகப் பற்றி நின்று பின்னும்‌ பதறுதல்‌’
பாரதந்தரிய நிலைக்குச்‌ சேராது என விலக்கும்‌ சித்த சாதன பரரை.
“என்‌ துணையான தோழிமார்‌” என்று தன்‌ துணையா”கச்‌ சொல்லுவது தன்னைப் போலே அவனுடைய உபேயத் தன்மையில்‌ உடன்பட்டிருக்கும்‌ சாத்திய பரரை. .

நாணி இனியோர்‌ கருமமில்லை நாலயலாரும்‌ அறிந்‌ தொழித்தார்‌” (நர. தி, 12-:2) என்கிற பாட்டில் நாலயலார்‌..என்பது, “கருமம்‌, ஞானம்‌, பத்தி, பிரபத்தி ” ஆகிய நான்கு உபாயங்களிலும்‌ ஊன்றி நிந்பவர்களை யாகும்‌.

“அயற்சேரி மீர்காள்‌?. (7-3-2) என்பது, : அர்ச்சாவ தரத்தில்‌ ஈடுபாடின்றி வேறான அந்தர்யாமித்வத்‌ தன்மைஇல்‌ ஊன்றி யிருப்பவர்களையாகும்‌.

‘கீழையது மேலையது வடக்கிலது* என்று குறிக்கப்படும்‌ “கருமம்‌, ஞானம்‌, பத்தி? என்கிற வேறு உபயன்களானவை உபாயஙநிகளரனவை

சித்த சாதந பரர்க்கு- இறைவனையே உபாயம்‌ என்று கொள்பவர்க்குப்‌ புறப்புறமாம்‌: அதாவது புறப் பகைகளாம்‌.
பிரயத்தியும்‌ புறம்‌ (அயல் ) எனப்பட்டது முன்னர் . பிரபத்தி நெறியில்‌, தான்‌ அவனைப்‌ பற்றுதலும்‌ அவன்‌ தன்னைப்‌ பற்றிக்‌”கொள்ளுதலும்‌ என்னும்‌ இருநிலை்‌ உண்டு,
அவற்றில் அவனைப்‌ பற்றிக் கொள்ளுதலாகிற தன்பற்று, “அகப்புறம்‌ அல்லது “உட்பகை” ஆகும்‌ என்பதாம்‌. ்‌

“ஊரார்‌” என்பது ஆன்ம அநுபவம்‌ . விரும்பும் கேவலரை,.
“நாட்டார்‌” என்பது இவ்வுலகச்‌ செல்வங்களை விரும்‌புபவர்களை.
உலகர்‌” என்பது ஸ்வர்க்கம்‌ முதலான மேலுலகச்‌(செல்வங்களை விரும்புகின்ற தன் முனைப்புள்ளவர்களை,
“இறுகவிறப்பு” என்பது குவிந்த நிலைமையதாயிருக்றை மோட்சமாகும்‌. இதனை அனுபவிக்கும்போதும்‌ இந்தப்‌ பிரகிருதி மண்டலத்திற்கு அப்பாலான பரமாகாசத்திலே யிருந்து அநுபவிக்க வேண்டும்‌.-ஆகையால்‌,. இதுவும்‌ இறந்தால்‌ போய் வாழும்‌ தேசத்தை ஒக்கும்‌. எனவே, இதனைத்‌ *தனிஊர்‌” என்றார்‌ மேல்‌,

*சிறுசுளகு” என்பது, பெரு மணலையும்‌ நுண்மணலையும்‌ பிரித்தெடுக்கும்‌ கருவி.
எனவே, இது உடல்‌ ஆன்மா ஆய இரண்டையும்‌ பகுத்தறிதற்குத்‌ துணையான .அளவையைக்‌ குறிக்கும்‌.

“சீரார்‌ சுளகு” என்பது, நெல்லையும்‌ மணலையும்‌ பிரித்‌தெடுப்பது இது ஆன்மா வேறு; பரமாத்மா வேறு. என்று பருத்தறிவதற்குத் துணையான அளவை.
மற்றைத்‌ தெய்வங்‌களும்‌ ஆன்மாக்கள்‌ பிரிவில்‌ அடங்குவனவே

மாலை: பொருள்கள்‌ தெளிறவு அறிந்து கொள்ள இயலாது மயங்கும்படி செய்யும்‌ காலம்‌; இது பொருள்களைத்‌ தெளிவுறத்‌ தெரிந்து கொள்ளற்‌கியலாததான ராஜஸ ஞானத்தைக்‌ குறிக்கும்‌.

கங்குல்‌: ஒன்றும்‌ தோன்றாதபடியும்‌ மாறுபாடாகத்‌ தோன்றும்‌ படியும்‌ உள்ள காலம்‌.
பொருளை அறிவியாதது மட்டுமின்றி, மாறுபாடாகக்‌ கொள்ளுதற்கும்‌ உறுப்பான தாமத ஞானத்தை இது காட்டும்‌.
காலை: பொருள்களை உள்ளவாறு தோற்றமளிக்கச்‌ செய்யும்‌ காலம்‌. அதனால்‌, பொருள்களை உள்ளவாறு அறிவதற்குறுப்பான சாத்துவிக ஞான்த்தை இது குறிக்கும்‌.

பகல்‌: ஐயம் திரிபுகட்கு இடமின்றிப்‌ பொருள்களைத்‌ “தெளிவுற விளக்‌கிக்‌ காட்டும்‌ காலம்‌.
இறைவனைக்‌ தெளிவாக அறிதற்குறுப்பான சுத்த சத்துவ ஞானம்‌ இவ்வாறு கூறப்‌படும்‌.

நிலா முற்றம்‌: மாடத்தின்‌ உயரத்தில்‌ ஏறி எல்லாவற்‌றையும்‌ காணுதற்கு உறுப்பான இடம்‌.
இறைவன்‌ தொடர்‌புடைய கண்ணபுரத்தையும்‌ பிறர்‌ காணுதற்கு அமைந்தது இது- எல்லை நிலமான புருஷார்த்த ஞானத்தைக்‌ குறிக்கும்‌.

கலை, வளை: இறைவனை அனுபவிப்பதற்குப்‌ பகையான யான்‌, எனது” என்னும்‌ செருக்குகள்‌;-இவ்விரண்டையும்‌ களைந்த நிலைமையில் தான்‌ அவன்‌ அனுபவம்‌ கிட்டுகின்றது.
சில இடங்களில்‌ “வளைபூரிப்ப அவனைக்‌ காணுதல்‌” என்று வரும்‌.
அவ்விடங்களில்‌ “நான்‌ அவனுக்கு அடிமை”; *என்னுடைய திருவரங்கர்‌? என “வரும்‌ “நான்‌, எனது”என்பவைகளைச்‌ சொல்லுவதாகக்‌ கொள்ள வேண்டும்‌. இவை விடத்தக்கன வல்ல.

பட்டம்‌, சூடகம்‌:. “பட்டம்‌” என்பது, முதலில்‌ ஆன்மாவினை அங்கீ கரித்த ஆசாரியன்‌ உண்டாக்கும்‌ பெயர்‌, வடிவம்‌, இறைவழிபாடு முதலான ஆன்ம அலங்காரங்கள்‌;
“சூடகம்‌” என்பது பின்னர்‌ ஆசாரியனுடைய பெருமையை உணர்த்தி, அவ்விறைவன்‌ உண்டாக்கும்‌ ஆன்மா இறைவனுக்கு அடிமை என்ற அறிவு முதலான ஆன்ம அலங்காரங்கள்‌.

பந்து, சிற்றில்‌: பந்து நூலாற்‌ கட்டப்பட்டு விளையாட்டுக்‌ கருவியாவது;– விழுதல்‌ எழுதல்‌ முதலிய இயற்புகளை யுடையது அதே போன்று, முக் குணங்களடியாக வரும்‌ வினையால்‌ அமைந்த உடல்‌ இறைவன்‌ விளையாட்டுக்கு உறுப்‌பாவது
கருமத்திற்கு ஏற்ப மேலுலகம்‌ கீழுலகம்‌ போவது மீளுவது ஆகும்படி, இறைவன்‌ தன்‌ நினைவால்‌ தூண்டத்‌ தாழ விழுதல்‌, உயரப்போதல்‌,
சக்கரத்தின்‌ சுழலுதல் போலச்‌ சுழலுகல்‌, போனதில்‌ மீண்டும்‌ போய்‌ வந்து உழலூதல்‌ செய்கின்ற ஆன்மாவோடு உண்டான தொடர்பாலே விழுதல்‌ எழுதல்‌ முதலிய இயல்புகளோடு கூடியது.
“சிற்றில்‌” என்பதும்‌ இன்பத்‌திற்குரிய இடத்தைக்‌ குறிக்கும்‌.

கழல்‌, தூதை, கழல்‌ ஐந்தாக இருந்து இன்ப விளையாட்‌ டுக்கு உறுப்பாவது. இஃது இன்ப அனுபவத்திற்குரிய ஐந்து பொறிகளைக்‌ குறிக்கும்‌.
*தூதை” சோறிடுவதற்கேற்ற கருவி. இது இந்திரியங்களின்‌ வேறான மற்ற இன்பக்‌ கருவிகளைக்‌ குறிக்கின்ற ஒன்று.
பாவை, குழமணன்‌ — இவை விளையாட்டுக்‌ கருவி வகைகள்‌.
யாழ்‌, பென்றல்‌, மதியம்‌, அடிசில் சாந்தம் இவை ஐந்தும்‌ முறையே ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்‌ -என்ற ஐம்புல இன்பப்‌ பொருள்‌ களைக்‌ குறிக்கும்‌.

பூண்‌, அகில்‌ — இவையிரண்டும்‌ மேலே குறித்த வற்றிலேயே “ஒளி, நாற்றம்‌ என்ற இருவகை இன்பப்‌ பொருள்‌ பற்றிய பிரிவினவாம்‌.

‘இவ் வின்ப நுகர்ச்சிக்குரிய பொருள்களும்‌, இன்பத்திற்குக்‌ ௧ருவிவியான பொருள்களும்‌, விளையாட்டுக்‌ கருவியான பொருள்‌களும்‌ யாவும்‌
இறைவன்‌ தன்னுடைய போகத்திற்கு விரோதிகளென்று விடுவித்தால்‌ விடுபட்டும்‌, சுவை குறைந்தனவாயும்‌,
‘இறைவனிடத்தினின்றும்‌ அகற்றுபவைகளாயும்‌, தன்‌ தொடர்பு சேர்த்துப்‌ பார்க்கும் போது விடத்தக்கனவாயும்‌,
இறைவனோடு தொடர்பு படுத்தி நோக்கும்போது கொள்ளத்‌ தக்கனவாயும்‌, அவனுறவின்போது அநு௩லங்களாயும்‌
அவனின்றிக்‌ காணும்போது துன்பம்‌ விளைவிப்பனவாயும்‌ ‘சொல்லப்படுதல்‌ அருளிச்‌ செயலிலும்‌ காணலாம்‌.

இறைவன் பால்‌ தூது விடப்படும்‌ பறவைகளுக்கு உள்ளுறை:

ஆன்மாவை இறைவனோடு சேர்க்கின்றவர்களான குரு முதலானவர்களையே பறவைகள்‌ என்று கூறுவர்‌.
விரைவில்‌ அவனை அடைவதற்கு ஞானமும்‌ அனுட்டானமும்‌ (ஒழுக்‌கமும்‌) வேண்டும்‌.
அவையே *சிறகுகள்‌” என்று சொல்லப்‌ படுகின்றன. சேர்ப்பவர்கள்‌ குருக்கள்‌, பிரமசாரிகள்‌, புத்திரர்கள்‌, சீடர்கள்‌ என்ற நான்கு நிலைகளில்‌ வைத்துப்‌ பேசப்‌ படுவார்கள்‌.

பறவைகளுள்‌ அன்னமாகப்‌ பேசப்படுபவர்கள்‌ ‘இன்னார்‌ இன்னார்‌ என்று கூறுகையில்‌ கீழ்க் காணும்‌ பொதுத்‌ தன்மைகளை அறியலாம்‌.

அன்னத்தின்‌ செயல்‌ உள்ளுலறயான ஆசாரியன்‌ செயல்‌
1-பாலும்‌ நீரும்‌ பகுத்தறியும் — சாரமள்ளதும்‌ சாரமில்லாததும்‌ அறிவர்‌.
2. இறைவன்‌ அன்னமாய்‌ “அற நூலுரைத்தான்‌–கேட்பவர்கட்கு நூல்களை உரைப்பர்‌.
3–சேற்று நிலத்தில்‌ பொருந்தாது.-வன் சேற்று அள்ளல் என்கிற இவ்வுலக வாழ்வில் பொருந்தார்
4-மகளிர்‌ பின்பற்றி அவ்வாறே நடக்குமென்று கூறுவர் –அன்னம் போன்ற நடையை யுடைய பிராட்டியின்‌ *வேறு பிறர்‌க்‌குரிய தல்லாத அடிமைத் தன்மை” முதலானவும்‌
புருஷ்காரமாதலும்‌ ஆகிய ஒழுக்கத்தைப்‌ பின்பற்றுவர்‌
5–தாமரையிலை குடையாகவம்‌, பழுத்த செந்‌நெற் பயிரின்‌ அசைவு கவரியாகவும்‌, சங்கின்‌ முழக்கம்‌ வெற்றிப்‌ பெருமுழக்கமாகவும்‌,
வண்டுகளின்‌ இன்னிசை பாட்டாகவும்‌ கொண்டு மானச சரசிலுள்ளதாமரையை இருப்பிடமாகக்‌ கொண்டிருக்‌கும்‌ அன்னம்‌.
தாமரை இலை போன்ற இறைவன்‌ திருமேனியை, உலகத்‌ துன்பங்களாய சூரியஒளி தம்‌மைத்‌ தாக்காதபடி நிழலாகஉடையர்‌
பக்குவமான ஞானியரால்‌ பணி செய்யப் படுவர்‌: தூய பெரியோர்‌களால்‌ போற்றப்படுவர்‌.-எப்போதும்‌ ஆசாரியனின்‌ இணைத் தாமரை யடிகளை
நெஞ்‌சிற்‌ கொள்ளும்‌ சீடர்களின்‌ உள்ளத் தாமரையைத்‌ தங்கள்‌ இருப்பிடமாகக்‌ கொள்ளு,வர்‌.
6-விதிப்படி மணந்து இடரில்லாமலும்‌ அந்‌தரம்‌ சிறிதுமின்‌றியும்‌ மிக இன்பம்‌ பொருந்த ருடிச்சீர்மையுடன் இருப்பன அன்னங்கள்
ஸாஸ்த்ர முறைப்படி. இல்லறத்தில்‌ இருந்து, உலகியல்‌ தீமைகள்‌ தட்டாதபடியும்‌, சிறிதும்‌ இடையீடு இன்றி
மேலும்‌ மேலும்‌ இன்பம்‌ பெருகும்படியும்‌ மனைவி மக்களுடன்‌ அமர்ந்து பகவத்‌ அநுபவம்‌ செய்வர்‌.

இல்வாறு இருப்பவர்‌ செல்வ நம்‌பி, பெரியாழ்வார்‌, முற்றத்‌ துறந்த துறவிகள்‌ போன்ற நாதமுனி, ஆளவந்தார்‌ முதலான வர்கள்
அன்னோர்பால்‌ இத்தகைய குண வொற்றுமை உள்ளமையால்‌, இது மிகப்‌ பொருத்தமேயாம்‌.

வண்டு, தும்பி
1-இவை : மலரில்‌ சென்று தேனுண்ணும்‌; பிற இடத்‌தும்‌ செல்லும்‌.–தமக்கு என்று ஏற்படாத பொருள்களை இன்பமென்று மருளார்‌ (இது வேற்றுமைர்‌
2-தேன்‌ தவிர மற்றொன்றை விரும்பாமையாலே **மதுவிரதம்‌” என்றும்‌ பெயர்‌ பெறும்‌.
உளங்கனிந்த அடியவர்‌உள்ளத்துள்‌ ஊறிய தேனான இறைவனை அநுபவிப்பதையே விரதமாகக்‌ கொண்டவர்‌.
3-தூய தேனுண்ட வாய்‌ கொண்டது.–இறை இன்ப அந;பவத்‌தால்‌ தூய இனிதான வாய்‌ மொழி பேசுவர்‌.
4-கூந்தலில்‌ வைத்த வ்குள மலரின்‌ சாரத்தை உண்‌ணும்‌.
வருளமாலை தரித்த ஆழ்வாரின்‌ பாடல்களாகிய சாரத்‌தை ஏற்று, அதன்‌ வழியாக இன்பம்‌ அநுபவிப்பர்‌.
5-தேனுண்டு தேதென என்று இசை பாடும்‌; சுழலும்‌.
இறையின்பம்‌ ..அடிவயர்‌ இன்பம்‌ இலற்றை நுகர்ந்த செருக்குக்குப்‌ போக்கு வீடாக அளத்தி வைப்பர்‌.
(யாழினிசை வேதத்தியலை வாயாரச்‌ சொல்லிக்‌ 6-கொண்டிருப்பர்‌ என்பர்‌ பெரியோர்‌ சிலர்‌.)
6-காலத்திற்கேற்ற பண்களை அல்லும்‌ பகலும்‌ இறைவன்‌ இவை பாடும்‌.
அல்லும் பகலும் இறைவனின் குணங்களில் ஈடுபட்டவராய்ப் பல பண்களைத் தலைமை பெறும்படி பண்ணுவர்
7-மிகவும்‌ நெருக்கமுடையதும்‌ புக முடியாததுமான இடங்‌களிலும்‌ வண்டுகள்‌ தடையின்றிச்‌ சென்று புகும்‌.
பிற தேவர்களும்‌ புகுதற்‌கரிய பலர்‌ நெருக்கிக்‌ கொண்டுள்ள இடங்களிலும்‌ “கதவைத் திற* என்று வேண்டிக்கொண்டு எளிதில்‌ உரிமையோடு புகுவர்‌
8-தன்னை ஒத்த கருநிறக்‌ கூந்தலிலே வண்டு சென்று சங்‌கையின்றிப்‌ படியும்‌.
இறைவன்‌ பக்கலிலும்‌ அடியவர்‌ புக்சலிலும்‌ கூச்௪ மின்றிச்‌ சென்று நிற்பர்‌
9-தூது விட்ட தலைவியின்‌ ஆசையையும்‌ வேட்கையை யும்‌ அவனுக்கு அறிவித்து, அவனுக்கு முன்னம்‌ அவன்‌ வரவை அறிவிக்க விரைந்து . வந்து; தம்‌ வரவால்‌ இவள்‌ பால்‌, பிறந்த செவ்வியை நுகர்ந்து, அங்குத்‌ தாம்‌ நுகர்ந்த இன்பத்தை இவஞக்கு வெளியிட்டு ஆறுதல் அளிக்கும்‌…
அதே செயலை ஆசார்யர்‌களும்‌ செய்வார்கள்‌
10-கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் என்கிற படியே அவன் வந்து சாட்சியாக வந்ததாகப் பேசப்படும்
சாரத்தை அறிபவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களை முன்னிட்டு இறைவன் உயிர்களை ஏற்றுக் கொள்வான்

இறைவன் தெய்வ வண்டு (9-9-1)-என்று பேசப்பெறுவன்
அவனை அடையச் செய்பவர்களான இறைவன் குணங்களை அனுபவித்த ஆனந்தத்தால் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கும்
நாரதர் -முனி வாஹனரான திருப்பாண் ஆழ்வார் -இன்னிசை பாடும் போல்வாரை -வண்டுகள் தும்பிகள் என்பர் -அரையர்கள்

————-

கிளி பூவை
1-கிளிகள் வலையில் அகப்படும்
மாதரார் கண்ணாகிய வலையுள் அகப்படாது இறைவனின் தாமரைக் கண்களின் அகவலையில் அகப்படுவர்
2- வளர்ப்பவர் கையில் அமரும்
விருப்பத்தோடு வளர்க்கும் ஆச்சார்யருக்கு அன்பார் ஆவர்
3-வளர்ப்பவர் ஊட்டும் பால் தயிர் நெய் அமுது உண்ணும்
காலம் தகுதிக்கு ஏற்ப தாரக போஷக போக்யங்களாக ஆச்சார்யர்கள் அனுபவிக்கும் பொருள் சிறப்புக்களை பகவத் குணாதிகளை அனுபவிப்பர்

4-சொல்லியதையே சொல்‌லும்‌ கிளிப்‌ பிள்ளைகள்‌.
ஆச்சார்யர்களாகிய முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் தாமும் பேசும் தன்மையர் இவர்கள்
5. “போற்றி இரந்தேன்‌”(6-1-6) என்பது போன்று அன்பு தோன்றச்‌ சொன்ன நிலையிலும்‌, சிறிது வருத்தந்‌ தோற்ற உரைத்த நிலையிலும்‌,
உன்னைத்‌ துரப்பன்‌ அவன்‌ வரக்‌ கூவாயேல்‌” என்று கண்டிக்துச் சொன்ன நிலையிலும்‌ உகந்திருப்பது கிளியின இயல்பு.
ஆச்சார்யன் ஆதரவாகப் பேசிய நிலையிலும் இன்னாதாகப் பேசிய நிலையிலும் வெஞ்சொல் கூறிய
ஆச்சார்யன் செய்த செயல் எதுவாயினும் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்று உகப்பர்
6-“திரு நாமத்தைச்‌ சொல்‌? என்று தன்‌ கிளிக்குச்‌ சொல்‌லத்‌ தொடங்‌கி , அது இயலாது போசவே, “முன்‌ கற்‌பித்த நாமத்தைச்‌ சொல்‌”என்ன,
அது அதனைப் பாடக்‌ கேட்டுவளர்க்ததனால் பயன்‌ “பெற்றேன்‌” என்று கிளியை வணங்கினாள்‌ என வருகின்‌றது
ஆசாரியர்களும் கை கூப்பி வணங்கும்படி சீடர்களான இவர்கள் பாட வல்லவர்

3. மயில்கள்‌. ஆலுதலும்‌ ்‌ அழைத்தலும்‌ செய்யும்‌
அரங்கா? என்று ஆலித்தலும்‌ செய்வர்‌.
8. குயில்‌ வேறொன்றின்‌ கூட்டிலே ஒதுங்கி வளரும்‌
தேவு மற்றறியேன்‌. என்று ஆசாரியன்‌ ஈடுபாட்‌,டிலும்‌ அடியவர்‌ அன்பிலும்‌ ஒதுங்கி வளர்பவர்‌.

இத்தகைய இயல்புடையவரான தென்குருகூர்‌ நம்பிக்கு .அன்ப்ரான மதுர கவிகள்‌, தொண்டரடிப்‌ பொடியார்‌,
உடையவருக்கு உரிமைப்‌ பட்டவரான கூரத்தாழ்வான்‌,
ஆண்டான்‌, எம்பார்‌, அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ போன்றோரைக்‌
கிளி பூவை மயில்‌ குயில்‌ என்று சொல்‌லுதலுண்டு.

————

நாரை கொக்கு
1-குற்றமற்ற வெள்ளைத் தூவிகளை உடையது குருகு
உள்ளும் புறமும் ஒத்த தூய்மை யுடையவர்
2-அலைகளுக்குச் சலியாத இயல்புடையன நாரைகள்
இறைவன் பால் ஒன்றிய உள்ளத்தால் பிறவியாம் கடல் அலைகளுக்கு இடையாதவர்
3-தன் வாயால் இரை எடுத்து உண்பிக்க உண்ணும் தன் பிள்ளைக்கு வாயுக்கு அடங்கும் இரை தேடியிடும் கொக்கு
சீடர்களின் தகுதிக்கு ஒத்ததாக இறையவனைப் பற்றிய வற்றை ஸாஸ்த்ரங்களிலே தேடி ஆராய்ந்து உதவுவர்

4-நாள் தோறும் பூம் கழிகளில் தம் இனத்தோடு போய் மேய்வனே குரு கினங்கள்
எப்பொழுதும் கால ஷேபம் செய்யும் இடங்களுக்கு தாங்களே சென்று தங்களை பிரிய இயலாத சீடர்களுடன் கூட இறைவன் குணங்களை அனுபவிப்பர்

5-தாரைகளே நும் கால்களை நுமரோடே சேர்ந்து என் மீது வையுங்கோள் என்றும்
கைம்மாறாகப் பைங்கானம் ஈது எல்லாம் உமக்கேயாகத் தருவன் என்றும் பேசப் பெறுதல் உண்டு
சீடர்களால் நன்றி உணர்வால் தலை மீதும் தோள்கள் மீதும் தாங்கிக் கொள்ளப் பெறுவர்
உடல் பொருள் ஆவி முதலான யாவற்றையும் அவர்கள் அன்புடன் கொடுக்க ஏற்றுக் கொள்வார்கள்

நல்ல பதத்து மனை வாழ்வையும் இன்பம் தரு செல்வத்தையும் அரசாட்சியும் வேண்டேன் என்று அரங்கன் அடியிணை தங்கும்
தனிப்பித்தரான குலசேகரர் –ஆச்சார்ய நிலையரான நம் முதலிகள் போல்வாரை இக்குண ஒப்புமையாலே நாரை கொக்கு என்று சொல்லுதலும் உண்டு

——–

தூது அனுப்பப்படும் மேகம் என்பதை யாரை
முதல் ஆழ்வார்கள் திருமங்கை மன்னன் எம்பெருமானார் போல்வாரையாம்
ஒப்புமைகள் ஆவன

(1)மேகம் பொழிதற்கு ஏற்ற காலங்களில் கடலில் புகுந்து நீரைப் பருகும்
நாள் தோறும் திருமால் கண் வளர்கின்ற கடலில் புகுந்து திருமகள் கேள்வனான அவனது குணக்கடலைத் தம் மனத்திலே கொள்வர்

(2)மேகம்‌ திருமாலின்‌ திருமேனியை ஒக்கும்‌ நிறத்தது.
கார்வண்ணனான இறைவனை உள்ளத்‌துக்‌ கொண்டிருத்தலால்‌ அவன்‌ நிறமே: நிழலிட்டுத்‌ தோன்‌றும்படி நிறத்தில்‌: அவனோடு ஓப்புடையர்‌.

(3)மேகம் மழை பொழிந்து உயிர்‌களைக்‌ காத்தற்‌காக விண் எங்கும் உலவித் திரியும் :
உலகில் பிறந்த உயிர்களைக் காப்பதன் பொருட்டும்‌ நல்வழி” காட்டுவ ற்காகவும்‌ எங்கும்‌ சுற்றித்‌ திரிவார்‌.

(4)மழையாலே குளங்களை நிறைக்கும்
ஞானமாகிற மடுவைத்‌ தாங்கள்‌ பொழிகின் இறைக்‌ “குணங்களாகின்ற: நீராலே நிறைப்பர்‌.

(5)தீங்கின்றி நாடு எல்லாம் வாழ மழை பொழிந்து முத்துக்களாகிய நிதியைச் சொரியும்
கேடு சிறிதும்‌ பற்றாது: அனைவரும்‌ வாழும்‌படி இறை குணமாகிய மணிகளைப் பொழிவர் .

(6) தான்‌ பொழிந்ததை நினையாது இன்னமும்‌ மிகுதியாகச்‌ செய்ய இயலவில்லையே என்று மேகம்‌ நாணமுறும்
எக்காலமும்‌ பொருட்‌ சிறப்புகளை எடுத்‌துரைைத்தாலும்‌ அதை நினையாது இன்னும்‌ உதவ இயலவில்லையே என்று நாணமுறுவர்‌,

(7). உதவாத போது உடம்பு உபதேசம்‌ செய்யாத வெளுத்து ஓளிந்து கொள்ளும்‌.
உபதேசம் செய்யாத காலத்து உடம்பு வெளுத்து வெளித்‌ தோன்ற மாட்டார்‌கன்‌.

(8) தனக்சென்று காரியம்‌ செய்‌யாது பிறர்‌ நலம்‌ கண்டு உவந்து அந்த வளமையைப்‌ பெரும்‌ பேறாகக்‌ கொள்ளும்‌.
உதவும்போது பெறுபவர்‌ மலர்ச்சி கண்டு உவக்கும்‌ இன்ப உள்ளத்த்னர்‌.

“இவ்வாறான குண ஒற்றுமையால்‌ அன்பு கூருமடியவரான முதலாழ்வார்‌,
உருவின வாளை உறையிலிடாது இறைவனது பரத்துவத்தை வலியுறுத்தும்‌ திருமழிசைப்‌ பிரான்‌,
மேகம்‌ ஒத்து அருள் புரியும்‌ திருமங்கை மன்னன்‌, குணந்திகழ்‌ கொண்டலான எம்பெருமானார்‌ போல்வாரை மேகம்‌ என்று சொல்லுவர்‌.

————

பகுதி : இரண்டு திருவாய்‌ மொழியில்‌ காணும்‌: தத்துவக்‌ கருத்துக்கள்‌

1.. இறைவன்‌ குணங்கள்‌:

திருவாய்‌ மொழியின்‌ ஒவ்வொரு பத்திலும்‌ ஒல்வொரு குணம்‌ சிறப்பாக எடுத்துரைக்கப்‌ பட்டுள்ளது.
முதல்பத்தில்‌ பரத்துவம்‌ கூறப்பட்டுள்ளது. : இறைவன்‌ எல்லாவற்றையும்‌ விடே மேலானவன்‌ என்பது பொருள்‌.
அந்த மேன்மை வெளிப்படும்படி சித்து, அசித்து என்னும்‌ இரண்டிற்கும்‌ மூன்று விதக்‌ காரணமாய்‌. அவன்‌ உளன்‌ எனினும்‌, எல்லாப் பொருள்களிலும்‌ பரவி நின்று, அவற்றின்‌ குறைபாடுகள்‌ தன்னைப்‌ பாதிக்காதபடி. இருப்பவன்‌.
அவனது பரவும்‌ தன்மை: ஆகாயம்‌ போன்று அல்லாமல்‌, அக்குணம்‌ : நிறம்‌ பெறும்படியாக அவன்‌ இரண்டு உலகிலும்‌ தன்‌ கட்டளைப்‌ படி யாவும்‌ நடக்கும்படி. செய்யும்‌ ஈசன்‌:
இவ்‌:வேற்றத்தைக்‌ கண்டு யாவும்‌ அஞ்சி விலகாதவாறு யாரிடமும்‌ மிக்க கருணையுடையவன்‌.(பரம காருணிகன்‌)
அதனால்‌, யாவரும்‌ தன்னைச்‌ சரணடையும்படி. நிற்கும்‌: தன்மையன்‌; தன்‌ அருளாற்‌ செய்யும்‌ உபாயத்தை எத்தகையவர்க்கும்‌ தன்‌ பகைவர்க்குங்‌ கூட ஆக்கவல்ல சர்வ சத்தி யோடு கூடியவன்‌ (வரம்பிலாற்றலுடையவன்‌);
அந்தச்‌ சத்தியாலே நிலையானதாகக்‌ கற்பித்துக்‌ கொள்ளப்பட்ட பத்தினி, பரிஜனம்‌ முதலானவைகளை உடையனாகையால்‌ அவன்‌ சத்தியகாமன்‌.
இன்பத்திலேயே ஈடுபட்டிருந்து விடாது, உலகைப்‌ பிரளயம்‌ முதலிய ஆபத்துகளில்‌, ‘ ஒன்றையும்‌ எதிர்பாராது உதவிக்‌ காப்பவன்‌.
ஆபத்துக்குக்‌ துணையான:வனாதலால்‌, அதற்கேற்றவாறு தான்‌ மேற்கொள்ளும்‌ விக்கிரகங்‌களுக்கெல்லாம்‌ மூலமானவனாய்‌, ஓப்பற்ற விக்ரக வடிவமாய்த்‌ : “தோன்றி அடியவர்களின்‌ துன்‌பத்தைப்‌ போக்கும்‌ இயல்பினன்‌:
இவை முறையே பத்துப்‌” பதிகத்திலும் கூறப்படும்‌ முக்‌யக்‌ குணங்களாம்‌.

மற்றும்‌ பல இயல்புகளும்‌ ஆங்காங்கே சொல்லப்படும்‌. அவை:
(1 )பல அவதாரங்கள்‌ எடுத்து வெளிவரும்‌ இயல்பினன்‌;-பிழைகளைப்‌ பொறுக்கும்‌ தன்மையன்‌–தகுதி யில்லை என்று யாரையும்‌ விட்டுவிடாது எல்லாருடனும்‌ கலக்கும்‌ சீல குணத்‌தினன்
அடியவர்‌ எது தரினும்‌ ஏற்றுக்‌ கொள்ளும்‌ நிறையுடையவன்‌; பிறவி அறுக்கும்‌ இனிய மருந்தானவன்‌; நீர்புரை வண்‌ணன்‌?
(உயிர்கட்கு ஏற்பத் தன்னை அமைத்துக்‌ கொள்‌ளும் இயல்பினன்‌]. தன்‌ இன்பத் ஏற்கத்‌ தக்க அளவு சிறிது சிறிதாகக்‌ தருபவன்‌;
பரமபத்திக்கும்‌ பரிகணனைக்கும்‌ ஓக்க முகம்‌ காட்டுபவன்‌.

——————-

(2). எல்லாப்‌ பலன்களையும்‌ அளிக்க வல்லவன்‌; உலகுகள்‌ தெய்வங்கள்‌ யாவற்றிற்கும்‌ எல்லா வகையான காரணமும்‌ ஆனவன்‌?
ஆழியில்‌ உள்ள அனந்தனில்‌ அறிதுயில்‌ புரிபவன்‌?திருமகள்‌ கேள்வனாம்‌ தன்மையன்‌.
எல்லாவற்றிற்கும்‌ ஆன்மாவாய்‌ உள்ளவன்‌; செய்ய தாமரைக்‌ கண்ணன்‌; அமரர்குலமுதல்‌;
நெஞ்சினால்‌ நினைப்பவர்க்கு நினைத்தவாறே வத்து தோன்றும்‌ அர்ச்சாவதாரமாய்‌ :இருப்பவன்‌
பிறர்க்கு உதவுவதற்காகவே வழியைத்‌ தருவதற்காகவே–என்றும்‌ நின்று கொண்டிருப்பவன்‌.

(4). திருவிக்ரமன் -குறட்கோலப்‌ பிரான்‌; மூன்றடி. மண்ணை இரந்த கள்வன்‌. திருவேங்கடத்தில்‌ நிற்பவன்‌
*அகலகில்லேன்‌!” என்று அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌.
அகற்ற மாய வல்லைம்புலன்‌ ஈந்தவன்‌
நலிவான்‌ சுமடு தந்தவன்‌; தன்‌ மகிழ்ச்சிக்காக விரும்பி ஆழ்வாரை இவ்வுலகில்‌ வைத்தவன்‌. ..

(6) ஆத்ம லாபத்தால்‌ அதீவ விளங்கிப்‌ பணைத்தவன்‌-சீதள குணங்களால்‌ பிரீதி வளர்ந்து தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து ஆழ்வாரை இன்புறுத்தியவன்‌.

(7)அமுதம் அளித்தவன் -தயரதன் பெற்றவன் -கோவலன் -வான் ஏறும் கதிக்கு நிழல் தடங்கள் ஆக்கியவன் -வழித்துணை ஆனவன்
விண்ணுலகம் தர விரைபவன் -ஆக்கையில் சபலன் -வானே தரக் கருத்தின் கண் பெரியவன் -தனி நின்ற சுதந்திரன்
உயிர் உறவுடையவன் கடல் போன்ற ஆதாரத்தோடு வந்து பேரவா குளப்படியாம்படி தாபங்களை எரிக்கும் இயல்பினன்

—————-

2-ஆழ்வார் பெற்ற நிலை

(1)-இறைவன் இவருக்கு மயர்வற மதி நலம் –அஞ்ஞானத்தைப் போக்கி பக்தி ரூபமாக உருவெடுத்த ஞானம் -அருளி
இவர் திரு உள்ளத்திலே புகுந்து -இவர் பண்ணிய பாபங்களான வினைகளை போக்கி தன்னை எப்போதும் மறவாதபடி பண்ணி அருளி
இவர் திரு உள்ளத்திலே நிலையாய் இருந்தான் -அதனால் இவர் தூய அழுத்தமான அவனைப் பருகிப் பருகி தத்வ ஞானத்தை -இறைவனிப் பற்றிய யாதாத்ம்ய ஞானத்தை உடையவரானார்
அவ்வனுபவம் தனியிருந்து அனுபவிக்க ஒண்ணாதபடி மிகவும் போக்யமாக இருந்தபடியால் மற்றவர்களையும் திருத்தி  அனுபவிக்க
அவர்களையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளுவதற்காக அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்

(2)தாம் பெற்ற ஞானத்தின் பலனான மோக்ஷத்தை இவர் தேடி வாட-அவன் எம்மா வீட்டைத் தர
இவர் அவன் தனக்கேயாக எனைக் கொள்ள வேண்டும் -அவன் செம்மா பாத பதுமம் என் தலை சேர்த்து
அருளுவதே மோக்ஷம் என்று உறுதி செய்தார்

(3)மோக்ஷத்துக்குப் பலன் அவனை அனுபவித்தலும் -அவனுக்கு கைங்கர்யம் செய்தலும் ஆகும்
முதலில் அனுபவித்தார் -ஆனாலும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போனதுக்கு காரணம்
அவனுடைய அளவிட முடியாமை என்பதை அவன் காட்டிக் கொடுக்கவே ஆறுதல் பெற்றார் -பின்பு
ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் என்று ஆர்வமுற்றார்
அவன் எங்கும் பரந்துள்ளமையைப் புகழ்ந்தார்

மனம்‌ மொழி மெய்‌ மூன்றாலும்‌ களிப்புற்றாடும்படி பிரீதி மிக்கவரானார்‌. அப்பிரீதி மிக்குத்‌ தனக்கு அடையத்‌ தக்கவர்‌,
இறைவனின்‌ அடியவருக்கு அடியவர்‌ என்னும்‌ நிலை பெற்றார்‌. அந்நிலையால்‌, ஒவ்வொரு கரணமும்‌ மற்றொரு கரணத்தின்‌ செயலை அடையும்படி. அவனை அனுபவிப்பதில்‌ பெருவிடாயை உடையரானார்‌.
*மானிடம்‌ பாடாது இறைவனையே பாடும்‌ கவியான்‌? என்று: கூறும்‌ நிலை பெற்றார்‌. எவ்விதக்‌ குறைகளுமின்றி இறை யனுபவமான ஆனந்தக்‌ கடலிலே மூழ்கினவனரானார்‌ ஆம்வார்‌.

(4) இவர்‌ தம்‌ விருப்பத்திற்‌ கேற்பக் கடந்த கால நிகழ்ச்சிகளையும்‌ சமகாலமாக்க இறைவன்‌ அனுபவிக்க அனுபவித்‌தார்‌;
அவன்‌ தம்பால்‌ காட்டிய ஈடுபாட்டைக்‌ கண்டு அவன்‌ பால்‌ காதல்‌ மிக்கவரானார்‌; அவன்‌ இறிது விலகி நிற்க..
பித்தேறியவரானார்‌.
“நான்‌ காணுமாறு வருக! அல்லது என்னைச்‌ கூவிக்‌ கொள்க” என வேண்ட, அவன்‌ தன்னைக்‌ காட்டினன்‌.
அவன்‌ அடியைச்‌ சேர்த்ததாக மனத்தால்‌ ஒரு பேறு பெற்றார்‌. உறுதிப்‌ பொருளைப்‌ பெற்றதற்குப்‌ பலனாக.
வேறு தெய்வங்களிடம்‌ பற்றின்மையும்‌,
ஆன்மாவிலும்‌ ஆன்‌மாவைச்‌ சேர்ந்தவற்றிலும்‌ பற்றின்மையும்‌ உற்றார்‌ . உலக வாழ்வு வாழ்தலிலும்‌, செல்வத்திலும்‌, ஆத்ம அனுபவத்‌திலுங்கூடப்‌ பற்றற்ற தன்மை உடையவறானார்‌ ஆழ்வார்‌.

(5 )இவர்‌ பெற்ற வைராக்‌யத்திற்குப் பலன்‌ பரமாத்மாவினிடம்‌ பிறந்த அளவற்ற அன்பானது நெஞ்சை முடிக்கும்படியாய்க்‌
கழிய மிக்கதோர்‌ காதல்‌ என்று பக்கத்துள்ளவர்களும்‌ பேசும்படி எல்லை கடந்தது.
இறைவன்‌ செய்த அற்புதச்‌ செயல்களையெல்லாம்‌ தாமே செய்ததாகப்‌ பேசும்‌ நிலை பெற்றார்‌. அவனை ஓழிய ஒரு கணமும்‌ ஆற்றமாட்டாதவரானார்‌.
பொருளின்‌ இன்ப மிகுதியால்‌:வந்த ஈடுபாட்டால்‌, உயிரும்‌ மனமுமின்‌றி உடலும்‌ சதிலமாம்‌:படியானார்‌; மெலிந்தார்‌.
அவனைப்‌ பற்றிய நினவு தெஞ்சில்‌: புகுந்து உயிரை உருக்கி. உண்ணும்படி அளவற்ற அன்பாக வளர்ந்தது.
இவ்வாறு பகலத்‌ பத்தியும்‌ அடியவர்‌ இணக்கமும்‌ பெற்றவரானார் ஆம்வார்‌.

(6 முன்‌ பிறந்த காதல்‌ மிகுதி காரணமாக இவர்‌ வேறுஉபாயங்களில்‌ செல்லாத நிலையரானார்‌. (இதற்குக்‌ காரணம்‌
வேறு உபாயங்களை அறியாமையும்‌ அவற்றைக்‌ கடைப்‌பிடிக்கும்‌ ஆற்றல்‌ இல்லாமையும்‌ அல்ல. உண்மை உணர்‌தலினாலும்‌ அந்நிலை ஏற்படலாம்‌.
ஆழ்வார்க்கு அதுவும்‌காரணமன்று.] அத்தகையவருக்கு, இறைவன்‌ தன்‌ அடியை உபாயமாகக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌.
அத்திருவடி.களையே உபாயமாகக்‌ கொண்டு, மாறுபடாத ஒரு நோக்கமுடையரானார்‌
தம்‌ கருக்தைத்‌ தூது மூலம்‌ இறைவனுக்கு அறிவுறுத்தினார்‌. அவன்‌ தாழ்ந்து வந்தான்‌.
வந்தபோது அவனுடன்‌ ஊடல்‌ கொண்டு, பின்‌ அவன்‌ வடிவழகில்‌ ஈடுபட்டு, அவனோடு பொருந்தினார்‌. முன்னர்‌ தனித்திருந்து அவனை அனுபவிக்க வேண்டுமென்று பிரபத்தி செய்தமைக்காக அப்‌பேறு பெற்று அனுபவித்தார்‌.
மற்ற எல்லா உபாயங்‌களையும்‌ கைவிட்டுச்‌ சித்தோபாயம்‌ மேற்கொள்ளுதலை ஒரு தரமேனும்‌ செய்ய வேண்டுமென்று நினைத்தார்‌.
எனவே புராணங்களில்‌ கூறப்பட்டனவும்‌, பழமையோர்‌ நடை முறையிற்‌ காட்டியவையும்‌ ஆன, தாய்‌ தந்‌தை முதலாகவும்‌, மணி பொன்‌ முதலாகவும்‌, கர்ம அனுட்டானங்கள்‌ முதலாகவும்‌,
கூறப்படுகின்ற அறிவுடையவையும்‌, அறிவற்றவையுமான. எல்லாப்‌ பேறுகளாகவும்‌, உபாயங்களாகவும்‌
உள்ள போலிகளை யெல்லாம்‌ கைவிட்டுப்‌ பரமபதம்‌ உட்பட அவன்‌ அடியவர்க்குப்‌ பரிரிலாக அளித்தார்‌.
உலகியற்‌ பொருள்‌களோடு தம்மைச்‌ சேர்த்துப்‌ பேசுவது கூடத்‌ தம்முடைய இறுதிக்குக்‌ காரணமாகுமென்ற நிலை பெற்றார்‌.
அவனே தந்தை அவனே தாய்‌ -அவனே தாம்‌ உண்ணும்‌ சோறு-தமது மாநிதி முதலிய யாவும்‌ என்று கொண்டார்‌;
அவனையே எண்ணிப்‌ புலம்பினார்‌… அவனுடைய இணையடித்‌ தாம்ரைகளைக்‌ காண, இமையவரும்‌ வரும்படி
அழகிய வேங்கடமலையில்‌ சென்று சேர்ந்த இறைவனை, அங்கே சென்று கண்டு, *த்வயம்‌’ என்ற மந்திரத்தின்‌ முற் பகுதியில் சொல்லப்‌படுவது போன்று,
சித்தோபாயத்தை மேற் கொள்ளுதலாகிய
**உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்‌?” என்று உபாயவரணம்‌ (பிரபத்தி) பண்ணினார்‌ ஆழ்வார்‌.

(7) அவன் தன்‌ திருப் பாதம்‌ விட்டுப்‌ பிரிய இயலாதவரான தம்மை அவன்‌, தன்னை விட்டு விலக்கி யோட்டும்படியான
ஐம்புலன்கனின்‌ நடுவே இவ்வுடம்போடே இருக்கும்‌ ப டி வைத்துள்ளானே என்று வருந்திப்‌ புலம்பினார்‌.
சித்தோபாயத்தைப்‌ பற்றிக்‌ கொண்ட பின்‌, பலன்‌ கிடைக்கு மளவும்‌ அவனைக்‌ கூப்பிட்டுக்‌ கொண்டேயிருப்ப தொழிய,
வேறு செய்யலாவது யாதொன்றும்‌ இல்லாமையாலே, அவன்‌ மீது பழியிட்டுக்‌ கூப்பிட்டார்‌;
தம்‌ நிலையைத்‌ தாமே எடுத்துச்‌ சொல்ல முடியாத நிலையை அடைந்துவிட்டார்‌;
தேற்ற முடியாதபடி நெஞ்சச்தைப்‌ பறி கொடுத்தார்‌. இறைவன்‌ தன்‌ வீரச்‌ செயல்களைக்‌ காட்டித்‌ தரிப்பித்தான்‌;

ஆனாலும்‌, உலக மக்களின்‌ இழவை அவர்‌ சிந்தை கூர்ந்ததால்‌ அந் நிலையும்‌ நீங்கியது. மீண்டும்‌ அவனை நினைந்து அலறினார்‌.
எங்கும்‌ அவன்‌ மேனி அவயவங்கள்‌ தோன்றிப்‌ பகையாய்‌ நின்று நலிந்தன. இவ்வாறு துக்கமானது எடுப்பும்‌ சாய்ப்புமாய்‌ நடக்க, அவன் பாலும்‌ தம்மிடமும்‌ எவ்விசச்‌ குறைபாடும்‌ இல்லாதிருக்கவும்‌,
மீண்டும்‌ தம்மை இந்நிலைமையிலே வைத்தது ஏன்‌ என்று காரணத்தைக்‌ கேட்டார்‌. அவனும்‌ இப்படி விடை கூறினான்‌;
கருமங்‌ காரணமாக வன்று, தானாக விரும்பித்‌ தனக்கும்‌ தன்‌ அடியாருக்கும்‌ கவி பாடுவித்துக்‌ கொள்ள வைத்தானாம்‌.
இது கேட்டு ஆழ்வார்‌ வியந்தார்‌! விம்மித மெய்தினார்‌! வியாசர்‌ முதலான முனிவர்களும்‌ முதலாழ்வார்களும்‌ இருக்கவும்‌, தம்மைக்‌ கொண்டு கவி பாடுவித்திக் கொள்ள இறைவன்‌ எண்ணிய உப கார்த்திற்குப்‌ பெரிதும்‌ உவகையரானார்‌.

இதற்குக்‌ கைம்மாறாகத் தம்‌ ஆன்‌மாவைக்‌ கொடுக்கலாம்‌ அவனுக்கு என்றால்‌, அதுவும்‌ தம்முடையது அன்று; அவனுடையது:
ஆகையாலே, இரு வேறு உலகிலும்‌ தாம்‌ செய்யக்‌ கூடுவது ஒன்றுமேயில்லை என்று தடுமாறும்‌ நிலையரானார்‌.

பிராட்டியும்‌ பெருமானும்‌ சேர்ந்த சேர்த்தியால்‌ உலகம்‌ முழுவதும்‌ வாழும்படி தலைமை தோன்ற வீற்றிருந்த திருவாறன்விளை என்னும்‌
திவ்விய தேசத்தில்‌ வைணவர்‌ கூட்டத்திலே திருவாய்மொழி கேட்.பித்து அடிமை செய்ய விரும்பினார்‌.
அந் நிலையில்‌ இறைவன்‌ இவருக்குப்‌ பரம பதத்தை வழங்குவதாகக்‌ கூறினன்‌. தாம்‌ திருவாய்மொழி கேட்பித்து அடிமை செய்யக்‌ கருதிய கைங்கரியத்திற்குக்‌ கேடு வந்ததே என்று கருதியமையாலே, “பரமபதம்‌” என்று அதன்‌ பேர்‌ சொல்லுதலையும்‌ சகித்துக்‌ கொள்ள இயலாதவரானார்‌.
திருவாறன்‌ விளையிலே உள்ளே ஆழ்வார்‌ திருக்‌கூட்டம்‌ போன்றே, தாம்‌ களிக்கும்‌ வண்ணம்‌ தாளம்‌ இசைத்து
இறைவன்‌ புகழேத்தும்‌ தெய்வ யாழோர்‌ கூட்‌டத்தார்‌ பரமபதத்தே சாமகானம்‌ பாடுகின்றார்‌.
அவர்‌ கூட்டம்‌ இனியது என்பதைக்‌ கூடச்‌ சிந்திக்க இயலாத
அளவு அவர்‌ துக்கம்‌ எல்லை மிகந்தது. அந்தத்‌ துயர வாதையாலே அனைத்தையும்‌ மறந்தவரானார்‌ ஆழ்வார்‌.

8. தாம்‌ மேற்கொண்ட சொல்லின்‌ தொண்டாகிய திருவாய்மொழி பாடுதலையும்‌ ஆழ்வார்‌ மறக்கும்படி செய்த அந்தக்‌ கலக்கமும்‌,
கண்ணால்‌ அவனைக் காண இயலாமையால்‌ வந்த கலக்கமும்‌, அவன்‌ அடியவருக்குப்‌ பரதந்திரன்‌தானா என்றும்‌,
எல்லாப்‌ பொருள்களையும்‌ அவன்‌ உடலாக உடையவன்‌ (பிரகாரி)தானா என்றும்‌ உண்டான ஐயங்களும்‌, இங்கேயே நிலைத்தால்‌ உலகக்‌ குற்றங்களில்‌ உழல வேண்டுமே என்பதால்‌ உண்டான அச்சமும்‌ ஆகிய இவையெல்லாம்‌ தீரும்படி இறைவன்‌ அவர்க்கு, அவரைச்‌
சொல்லின்‌ தொண்டு செய்யும்‌ அடிமையாகக்‌ கொண்ட நிகழ்ச்சியை மெதுவே அன்போடு நினைவூட்டினன்‌.
ஆக அவ்வளவில்‌ ஆழ்வார்‌ மீண்டும்‌ தம்மை மறந்தார்‌. முன்பு மறந்த நிலைவேறு; இந்த நிலை வேறு. இப்போது வந்த மறதியிலே அறிவின்‌ வாதமெல்லாம்‌ இல்லை.-மறதி! மறதி மறதிதான்‌! பித்தன்‌ போலும்‌ வள்ளல்‌ போலும்‌ செயல்களைச்‌ செய்யும்‌ பாலனை காண்கிறோம்‌ இங்கே. ஆழ்வார் தமக்குரிய பணியை -தொண்டை- இறைவன்‌ நினைவுறுத்திய மாத்திரத்தே, உவகைக்‌ கடலில்‌ ஆழ்ந்து, தம்மை மறத்து, முன்பு எந்த ஆன்மாவை
*இது நம்முடையதன்று ; அவனுடையதே. இதை எடுத்து எப்படி அவனுக்கே வழங்க இயலும்‌?? என்று வாதம்‌ செய்து, எண்ணிக்‌ கலங்கினாரோ,
அதே ஆன்மாவை இப்போது அது தம்முடையது அன்றாய்இருக்கவும்‌, அதை உடையவனான அந்த எம்பிரானுக்கே
தானம்‌ வழங்குவது அசட்டுத் தனமாய்‌ இருக்கவும்‌,
அவை யெல்லாம்‌ மனத்தே உறைக்காமல்‌ மறதிக்‌ களிப்பாலே தம்‌மதல்லாத அதைத்‌ தம்மதாகலே பாவித்து,
இல்லாதவனுக்கு வழங்குவது போல, உடையவனுக்கே…- எல்லாம்‌ உடையவனுக்கே–அந்த ஆன்மாவையும்‌ உடையவனுக்கே! அந்த ஆன்மாவுக்கு உரிமையும்‌ உடையவனுக்கே அவர்‌ வழங்குகின்றார்‌.
அந்த இறைவனோ, அது தன்னதே யானாலும்‌ தன்னதல்லாத ஒன்றனைத்‌ தானம்‌ பெறுவான்‌ போல, எவனுக்குத்‌ தானே ‘தந்தானோ, அவனிடமிருந்தே பெற்றுக்‌ கொள்கிறான்‌.
வழங்கியலனுக்கோ சொந்தம்‌ அல்லாதது அது; ஏற்றுக்‌ கொள்வானுக்கோ தொடர்பற்ற பரிசிற் பொருள்‌ அன்று அது;
அவனுடைய உரிமைப்‌ பொருளே. தானம்‌ வழங்கு வானும்‌, தானம்‌ ஏற்றுக்‌ கொள்வானும்‌ விந்தையான முறையில்‌ வியத்தகு தானத்தால்‌ தொடர்பு கொள்கின்றனர்‌
இங்கே. தன்னதல்லாததைத்‌ தானமாகப்‌ பெற்றவன்‌ எங்கனம்‌ பூரிப்பானோ, அங்ஙனமே தன்னதைப்‌ பெற்ற பகவானும்‌ பூரித்து, ஒளிவிஞ்சி நிற்கின்றான்‌? மிக்க ஒளியுடை யனானான்‌.
*சோதி’ என்றும்‌, ‘தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌! பேர்களாயிர;த்தாய்‌!” என்றும்‌
தம்மை அந்த மகழ்ச்சிப் பேரொளியில்‌இழந்தபடி, தூ மலர்க்‌ கவிதை பொழிகின்றார்‌ ஆழ்வார்‌.
சீதையின்‌ தன்மைகளான பிறந்த இடப்‌பாசம்‌ விடல்‌, பெருமாளுக்கு மங்களாசாசனம்‌ பண்ணுதல்‌, அவன்‌ வீரம்‌ கண்டு அனுபவித்தல்‌, பிரிவில்‌ துயர்‌ உறல்‌ போன்றவற்றை யெல்லாம்‌ ஆழ்வார்‌ பெற்றார்‌.
இறைவனும்‌,அவரது அவ்வான்ம குணங்களைக்‌ சுண்டு மகிழ்ந்து , ஆழ்வார்‌ தம்‌ உள்ளத்தே அமர்ந்து, அவர்‌ தன்னை நன்கு அனுபவிக்‌கும்படி அருள்‌ செய்தான்‌.
பின்‌, அவர்‌ தன்னைவிட்டு அகன்று போகாதவாறு சிறுமை என்று அவர்‌ பேசிய ஆன்மாவின்‌: பெருமையை அவர்க்குக்‌ காட்டினன்‌.
ஆன்மா உடலின்‌ வேறானது; ஞான மயமானது; பிராட்டி போன்று பிறக்கு உரியதல்லாத இயல்‌பினது. இறைவனுக்கே யன்றி அவன்‌ அடியவர்‌ அளவும்‌ செல்லும்படியான பரதந்திர இயல்புடையது என்று
அதன்‌ சிறப்பியல்பை (தம்மியல்பை)இடையறாது சிந்திப்பவரானார்‌ ஆழ்வார்‌.

(9) ஆன்மாவின்‌ சிறப்பியல்பைக்‌ கண்டதற்குப்‌ பலனாக,அவர்‌, அவனை இடையீடின்றி அனுபவிக்கின்றதான அந்த
அனுபவத்தின்‌ தொடர்ச்சியை அவாவுகின்றார்‌.
அந்த ௮வா-அந்த ஆசை–முறைப்படி காலப்‌ போக்கில்‌ தானே அமையும்‌ என வாளா இராது, பொறுமையுடன்‌ ஆறி இராமல்‌, அவனிடம்‌, *நான்‌ அங்கு வந்து அடிமை செய்ய வேண்டும்‌.-அல்லது நீ இங்கே வரவேண்டும்‌” என்று இரக்கலானார்‌-
அந்த ஒரே நினைவினரானார்‌- அவனைக்‌ கண்ணார எந்நேரமும்‌ காணக்‌ கருதினார்‌;
அவனை நினைப்பூட்டும்‌ பொருள்‌களைக்‌ கண்டு நோவுபடுதலால்‌ வாழ்வை முடித்துக்கொள்ள முயன்றார்‌;
அவனது சீலத்தை நினைக்குந்தோறும்‌ நெஞ்சு கரையலானார்‌; ஆற்றாமையால்‌ அரற்றினார்‌. இருதலைத்த
மனமின்றி மிக்க பதற்ற முடையரானார்‌.
அந் நிலையில்‌ மரணம்‌ அடைதலே பேறு என்று நாள்‌ குறிக்கப்‌ பெற்று மகிழ்ச்சி மிக்கவரானார்‌ ஆழ்வார்‌.

(10)பேறு பெறும்‌ காலம்‌ அணித்தானதற்குப்‌. பலன்‌ அர்ச்சிராதி மார்க்கத்தில்‌ வைகுந்தம்‌ ஏறுவதாகும்‌.
அந்தப்‌ பயணத்திற்குக்‌ காளமேகம்‌ போன்ற இறைவனை வழித் துணையாகப்‌ பற்றினார்‌ ஆழ்வார்‌.
அவன்‌ தம்மை விட்டுச்‌ சிறிதும்‌ பிரிதலாகாது என்று பேசி, இனித்‌ தாம்‌ பேறு பெறுவதில்‌ தடையில்லை என்றும்‌,
பிறவித்‌ துன்பம்‌ மீண்டும்‌ வாராது என்றும்‌ உறுதி கொண்டவராய்‌, உலகினரக்குத்‌ தாம்‌ சொல்ல வேண்டுவனவற்றை யெல்லாம்‌,
மரண தசையானவாறே மறைத்து வைத்த செல்வங்களை மக்கட்குக்‌ காட்டுதல்‌ போன்று, உபதேசிக்கத்‌ தொடங்குகிறார்‌.

——————–

3. ஆழ்வார்‌ செய்யும்‌ உபதேசங்கள்‌:

(1) ஆழ்வார்‌ உலகினரை நோக்கி, உலகில்‌ விடத்தக்கது இன்னது என்றும்‌, அதன்‌ சுற்றம்‌ இத்தகையது என்றும்‌, அதனை விடும்‌ முறை இது என்றும்‌ கூறினார்‌.
அவ்வாறே கொள்ளத்‌ தக்கது இன்னது என்றும்‌, அதனுடைய குணம்‌ இன்னது என்றும்‌, அதில்‌ ஆன்மாவை ஈடுபடுத்தும்‌ முறை இது என்றும்‌ சொன்னார்‌.
இதற்குச்‌ செய்யத்தக்கது பஜனை.-அத்தப்‌ பஜனைக்கு ஆதரவாக -அடித்தளமாக–ஆதாரமாகநிற்பது திருமந்திரம்‌.
*அது இது* என்று அதையும்‌ உபதேசித்தார்‌.
இவ்வாறு பஜனை செய்வதற்கு ஏற்ற அவனுடைய பல்வேறு பண்பு நலன்களையும்‌ எடுத்துக்‌ கூறினார்‌.
“அத்தகு பெரியவனைப்‌ பற்றுவது எளியதும்‌ இனியதும்‌ ஆகும்‌”என்றார்‌;
*அன்னவனைத்‌ தொழுதால்‌ வழியில்‌ நிற்கும்‌ தடைகளை யெல்லாம்‌ சுட்டெரித்து அரிய பயன்களை நமக்‌குத்‌ தருவான்‌” என்றார்‌.
“நாள்தோறும்‌ ஆன்மாவை முடிக்க முயல்கிற கொடிய வினைகள்‌ எல்லாம்‌ அவன்‌பால்‌ பத்திசெய்ய முயலுமளவிலேயே மடிந்து விடும்‌” என்று உபதேசித்தார்‌;
கண்ணன்‌ கீதையிலே சொல்லி யுள்ள வழியில்‌ நின்று, “பரம்பொருள்‌ ஒருவனே” என்னும்‌ உணர்வு பெற்று, வேறு பயன்‌ கருதாது பக்தி செய்யுங்கள்‌” என்றார்‌.
இறைவன்‌ தமது அஞ்ஞானத்தைப்‌ போக்கிப்‌ பத்தி வடிவான ஞானத்தைக்‌ கொடுத்தது போன்று,
இவரும்‌ உலகினர்க்குத்‌ தம்‌ அருட்குணத்தாலே அஞ்ஞானத்தைப்‌ போக்கி, ஞானத்தையும்‌ பத்தியையும்‌ உபதேசித்தார்‌?
உலகர்‌ அனைவரும்‌ பகவத்‌ வழிபாட்டில்‌ (பஜனையில்‌) மூழ்கிக்‌ களிக்கும்படி ஊக்குகின்றார்‌.

———-

(2)– தாம்‌ கண்டறிந்து, இவை தாம்‌ எல்லை! என்று உறுதி செய்தபடி, -இறைவன்‌ மேன்மைக்‌ குணங்களை யெல்‌லாம்‌ வெளியிட்டார்‌.
“அடையத்‌ தக்கோன்‌ அவன்‌”என்றார்‌; அதனை நிலை நாட்ட,மற்றத்‌ தெய்வங்கள்‌ அவனை வணங்கி வழிபட்டுப்‌ போற்றும்‌ நூற் சான்று காட்டினார்‌;
அந்தப்‌ பரம்பொருளின்‌ பெருமையை அர்ச்சுனன்‌ நேரில் கண்ணாற்‌ கண்டதான காட்டிப்‌ பிரமாணத்தையும்‌ எடுத்து உரைத்தார்
அவனை அடைய எண்ணுபவர்களுக்கும்‌, முனைபவர்க்கும்‌ அத் துறையில்‌ ஒரு சுவை பிறக்க வேண்டும்‌ என்பதற்காக மேலும்‌ பல சொன்னார்‌.
விட்டு ஒழிக்க வேண்டிய இந்த உலகின்‌- பிறப்பு இறப்புச்‌ சக்கரத்தின்‌ பயனால்‌ விளையும்‌ துயரங்களும்‌, துன்பங்களும்‌ பற்றியும்‌
“இவை யெல்லாம்‌ நீத்து இறைவனைச்‌ சென்‌றடைந்தால்‌ பெறுகின்ற பேறு எந்நாளும்‌ எல்லையற்ற பேரின்ப ஞான வெள்ளம்‌”என்றும்‌ விளக்கினார்‌;
*இறையருள்‌ நெறிச் செல்வார்‌ மேற்‌ கொள்ள வேண்டிய உபாயத்தின் சாரஸ்யம்‌–இனிமை– சிறப்‌பமைதி இவை” என்றும் கூறி,
இறைவன்‌ குணங்களைச்‌ சிந்தை செய்து, அந்தத்‌ திருக் கல்யாண குணங்களிலே மூழ்குங்கள்‌(குணோபாஸநம்‌ செய்யுங்கோள் )” என்றும்‌ விரித்துரைத்தார்‌.
இதற்கு அங்கமாக, விலக்கியவற்றைச்‌ செய்து, இளமையைப்‌ பாழ்‌ போக்காமல்‌, மாலிருஞ்சோலை சேர்வது, ஏத்துவது, தொழுவது ௮ந்நெறியிலே செல்ல நினைந்திடுவது,
இவை போல்வனவாகிய ஷேத்திர வாசம்‌, சங்கீர்த்தனம்‌, அஞ்சலி, வலம்‌ வருதல்‌, கதி சிந்தனை ஆகியவற்றையெல்லாம்‌ மேற் கொள்ளுமாறு உபதேசிக்கிறார்‌ ஆழ்வார்‌.

———–

(3.)*அமரர்‌ குலமுதல்‌ அவன்‌! அம்மா பெரியன்‌!” என்று உலகினர்‌ அவனை அஞ்சி நீங்காதபடி, அவனது
அவதார எளிமையை எடுத்துப்‌ பேசுகின்றார்‌.
முன்னர்‌ பேசிய அவதார எளிமை பரத்துவமாகத்‌ தோன்றும்படியும்‌, அர்ச்சையில்‌ எழுந்தருளும்‌ எளிமையை எடுத்துரைத்து
அவன்‌ நமக்கு மிக அண்மையன்‌ என்று உணர்த்தும்‌ அழகு ‘போற்றத் தக்கதே ! “நல்லதோர்‌ கதிதர–வழி தர–அவன்‌
நமக்காகக்‌ காத்து நிற்கின்றான்‌.
இழிந்த மனிசரைப்‌ பாடி நிலை இழக்க நினைப்பது ஏன்‌? அவனோ, வேண்டிற்றெல்லாம்‌ தரும்‌ நிறைவாளன்‌.
தன்னைப்‌ போலவே ஆக்கும்‌ வல்லவன்‌. அவனைக்‌ கவிபாட வாருங்கள்‌” என்று அழைத்தார்‌.
முத்தியைக்‌ கொடுத்தல்‌ எனும்‌ அவனது அருஞ்செயலைக்‌ குறிப்பிட்டு, மானிடரைப்‌ பாடுதலாிய நாய்த்‌ தொழிலை விட்டு
இறைவனுக்குச்‌ சொல்‌ தொண்டு புரிதலாகிய ஆன்ம இயல்பிற்கு ஓத்த தொழிலிலே சுவையை ஊட்டித்‌
தாம்‌”அவன்‌ கவியானது போன்றே மற்றவர்களையும்‌ இறைத்‌ தொண்டு செய்பவராக்குகின்றார்‌ ஆழ்வார்‌.

————-

(4), வைராக்கியம்‌ பெற்ற பற்றின்மை அடைந்த. ஆழ்வார்‌, அரச போகத்தின்‌ அற்பத்‌ தன்மையையும்‌, துர்க் கதியின்‌ நிலையாத தன்மையையும்‌,
கைவல்லியம்‌ எனப்படும்‌ ஆன்ம அனுபவத்தின்‌ சிறுமையையும்‌ கூறுகின்றார்‌ முதலில்‌;
பிறகு ஆடுகளின்‌ இறைச்சி முதலாய படைத்துச்‌ சிறு தேவதைகளை வழிபடும்‌ கீழ்மையைசக் கூறுகின்றார்‌;
பிறகு மற்ற தெய்வங்களாக மக்கள்‌ போற்றுகின்ற தெய்வர்களின்‌ அறியாமை, ஆற்றலற்ற தன்மை,
மேலோனை விரும்பாமை முதலிய பண்புகள்‌ பற்றியும்‌, புறமதங்கள்‌ பற்றியும்‌, வைதிக தெறியிலேயே கோணல்‌ தோக்குடைய மதங்கள்‌ பற்றியும்‌,
அவற்றில்‌ தாமஸ குணமே மேலோங்கியிருத்தல்‌ பற்றியும்‌ எடுத்துக்‌ கூறுகின்றார் :
**வேறு தேவதைகளைப்‌ பணிந்து அதன்‌ பலனும்‌ கண்டீர்கள்‌; இறைவன்‌ தன்‌ செயல்‌களை நூல்கள்‌ கூறுவது கொண்டு
அவற்றை அறிந்தும்‌, இவனே பற்றத்‌ தகுந்தவன்‌ என்று தெளிய கில்லீர்‌*
அதற்குக்‌ காரணம்‌ யாதென்பதையாயினும்‌ அறிவீர்களா?
பிரகிருதியை அமைத்து அவன்‌ உங்களை மயக்கி வைத்துள்‌ளான்‌ என்பதுதான்‌ காரணம்‌ என்பதை அறியுங்கள்‌!

அந்த மாயையை விலக்கவும்‌ அவன்‌ பாதமே சரணம்‌ உபாயம்‌ என்பதை அறியுங்கள்‌.
அந்தத்‌ திருப்‌ பாதம்‌. பற்றி அந்த மாயையினின்றும்‌ தப்பப்‌பாருங்கள்‌! அவனுக்கு அடிமை செய்வதே இந்த ஆன்மாவுக்கு உறுதிப்பாடு-உறுதிப்‌ பொருள்‌–என்பதை அறியுங்‌கள்‌’” என்று இவ்வாறெல்லாம்‌ உபதேசிக்கின்றார்‌ ஆழ்வார்‌.
இவ்வாறு உபதசித்துத்‌ தாம்‌ பெற்ற வைராக்கியம்‌ போன்று மற்றவர்களுக்கும்‌ வைராக்யம்‌ உண்டாக்க முயல்‌கின்றார்‌;
வேறு தேவதைகள்‌, வேறு பயன்கள்‌, புறமதங்கள்‌, கோணல்‌ மதங்கள்‌ ஆகியவற்றில்‌ பற்றின்மையை உண்‌டாக்குகின்றார்‌;
அந்தப்‌ பற்றின்மை வாய்த்த பின்னே மீட்டும்‌ சக்கரத்தைச்‌ சுழல வைத்து இறைவன்‌ மேல்‌ பற்றை உண்டாக்குகின்றார்‌.
அதில்‌ தேனார்ந்த தீஞ்சுவை தோன்றச்‌ செய்கின்றார்‌ ஆழ்வார்‌.

————–
(5). அடிமை புக்க வைணவரையும்‌, அவர்களைத்‌ திருந்தும்படி செய்த தம்மையும்‌ காணுதற்கு
வைகுந்தத்திலிருந்தும்‌ வேறு உலகங்களிலிருந்தும்‌ அமரரும்‌ முத்தரும்‌ வந்தனர்‌.
அவர்களைக்‌ கண்டு காப்பிட்டார்‌. ஆழ்வார்‌.
பிரகலாதன்‌ சொல்லைக்‌ கேளாத அவன் தந்தையும்‌, வீடணன்‌ சொல்லைக்‌ கேளாத அவன்‌ தமையனும்‌ போன்று,
தமது உபதேசம்‌ கேட்டுத்‌ திருந்தாத அசுரர்‌, அரக்கர்‌ இருக்‌கிறார்‌களா என்று தேடிப்‌ பிடித்து,
“நாட்டிலே தோன்றும்‌ குறைபாடுகளும்‌, கலிகாலத்தின்‌ குறைகளும்‌ நீங்க வேண்டின்‌, எங்கும்‌ பரந்துள்ள இறைவனடியார்களை
அடைத்து வாழ்வு பெறுங்கள்‌” என்றார்‌? (வேறு தெய்வங்‌ களின்‌ பாலுள்ள ஈடுபாட்டால்‌ எம்பெருமான்‌ பெருமையை
அறியமாட்டாத நீங்கள்‌,
நீங்கள்‌ வழிபடும்‌ தெய்வங்களைப்‌ பற்றி யறியவேண்டும்‌. அந்தத்‌ தெய்வங்களை அந்நிலையில்‌ நிறுத்தியவனும்‌ எம்பெருமானே என்பதையும்‌,
அந்தத்‌ தெய்வங்களும்‌ அவ்விறைவனையே வணங்குகின்றார்கள்‌ என்‌ பதையும்‌ அறிந்து கொள்ளுங்கள்‌.
அந்தத்‌ தெய்வங்களைப்‌ போலவே நீங்களும்‌ அவனைத்‌ தொழுதால்‌ பொல்லாத காலத்தின்‌ குறைபாடுகள்‌ உங்களைப்‌ பொருந்தா” என்று
இவ்வாறெல்லாம்‌ உபதேசித்து அவர்களை விஷ்ணு பத்தி நிலையில்‌ நிலை நிற்பவராக்கினார்‌.
*திருந்தினவர்கள்‌ என்பவர்கள்‌, உபாயத்தில்‌ துணிவு பிறந்தவர்கள்‌.-அவர்களும்‌ பதற்ற நிலையில்‌ நிற்கும்போது ஆழ்வாரை இடித்துரைப்பவர்களே.
காணக்கூடாதவற்றையும்‌ காண வைக்கும்‌ ஆற்றல்‌ உடையதான பத்தி எனும்‌ சித்தாஞ்‌ சனத்தை அவர்களுக்குப்‌ பூசுகிறார்‌ ஆழ்வார்‌.
இந்தப்‌ பத்தியாகிய மையை மனக் கண்ணிற்குப்‌ பூசினால்‌ பெறுதற்‌கரிய பேறாம்‌ இறைவன்‌ வீறுகள்‌ எல்லாம்‌ தோன்றும்‌.
அத்தகைய பத்தியை உபதேசிக்கின்றார்‌ ஆழ்வார்‌.

————

(6). பிரபத்தி பண்ணின ஆழ்வார்‌, முன்‌ ஐந்து பத்துகளிலும்‌ சாத்தியத்தை அடைதற்குச்‌ சாதனமான சாதன பத்தியை உபதேசித்தார்‌.
அந்தப்‌ பத்தியானது ஆன்மாவின்‌ உண்மையான இயல்பிற்கு மாறாக இருப்பதை நினைத்து வருந்துகிறார்‌.
அந்தப்‌ பத்தியின்‌ அருமைப்பாட்டை எண்ணி வருந்தி, இயற்கையின்‌ போக்கில்‌ ஓடும்‌ மனிதனை நிறுத்தி,
அவன்‌, ஆன்மாவை மேலே உயர்த்தி, அவனை ஈடேற்ற முடியாதோ என்று கலங்குகின்றார்‌ ஆழ்வார்‌.
அந்தக்‌ கலக்கத்தாலே, தம்மைப்‌ போலே…தாம்‌ முன்பு இருந்தது போலே, இப்போது இருக்கின்ற இந்தத்‌ தம்‌மொத்த நிலயினருக்கு
அவர்‌ தமது சொந்த வாழ்வின்‌ அனுபவத்தைக்‌ கூறத்‌ துணிகின்றார்‌.
“உங்களை அறைகூவி என்‌ பக்கல்‌ அழைக்கின்றேன்‌! ஏன்‌ தெரியுமா? எப்படி. இது கை வசமாயிற்றென்பதை அறிவீர்களா?
அவன்‌ தனது தாள்‌ நிழலைத்‌ தந்தனன்‌. அவன்‌ கழல்களன்றி மற்றோர்களைக்‌ காண்டிலேன்‌ என்று இருந்தேன்‌.
மற்றும்‌ அவன்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேன்‌” என்று கூறுகின்றார்‌. இப்படிக்‌ கூவித்‌ தம்‌ பேச்சாலும்‌ நடைமுறையைச்‌ சொல்லுவதாலும்‌
தமது சித்தோபாயத்தில்‌ நிலைத்திருக்கும்‌ நிலையை வெளிப்படுத்துகிறார் ஆழ்வார்‌.

————

(7)முன்பு தாம்‌ உபதேசித்த கடைசி உபாயம்‌ எனப்‌படும்‌ சித்தோபாயத்தில்‌ ஊன்றி நிற்பவர்களுக்கு, ஆழ்வார்‌
பேற்றின்‌ கடைசி எல்லையையும்‌
அதை அடையும்‌ சாதனத்‌தின்‌ கடைசி எல்லையையும்‌ அவர்கள்‌ தெரிந்து கொள்ளும்படி உகப்பால்‌ வெளியிடுகின்றார்‌.
இப்போது “நீள்‌ நகரம்‌”என்பது திருவாறன்விளை. அதுவே பேற்றின்‌ எல்லை. எம்‌பெருமானைக்‌ காட்டிலும்‌
அவனுடைய தொடர்பு பெற்ற ஒன்றே பேற்றின்‌ கடைசி எல்லை. வாணனைத்‌ தோள்‌ துணித்தான்‌ சரணன்றி மற்றொன்றிலம்‌ என்று
அர்ச்‌சாவதார நிலையே உபாயத்தின்‌ கடைசி நிலை எனக்‌ குறிக்கின்றார்‌.

———–
(8) ஆன்மாவின்‌ உண்மை இயல்பை அறிந்த–எண்‌ணிய. -ஆழ்வாருடைய உபாயமும்‌, உபேயமுமே தமக்கும்‌
உபாயமும்‌ உபேயமும் * என்று இருக்கும்‌ அவர்களை நோக்கி ஆழ்வார்‌, அவர்கள்‌ யாரும்‌இருகரையர்‌ ஆகாதபடி–அதாவது, உபாயம்‌ வேறு உபேயம்‌ வேறு என்று– இரண்டும்‌ தனித்தனி என்று-இரண்டினைக்‌ கொள்ளாது,
பேறு என்று குறித்த திவ்விய தேசமே உபாயமும்‌ உபேயமும்‌ என்று ஒன்றிலேயே ஊன்றி நிற்கும்படி செய்கின்றார்‌.

———-

(9.)பேற்றுக்கு நாள்‌ குறிக்கப்‌ பெற்ற ஆழ்வார்‌, தம்‌ உபதேசம்‌ கேட்டுத்‌ திருந்தினவர்கள்‌ தவிர, மற்றுள்ளவரான
உபதேசம்‌ கேட்க இயலாத–கேளாத…இருந்த அவர்களையும்‌ விட முடியாத பரம கிருபையால்‌ அறிவு கேடர்களான — அறிவிலிகளான — அவர்களுக்கும்‌ உபதேசிக்‌கின்றார்‌.
*உலகத்து மனைவி மக்கள்‌ உறவினர்‌ முதலியோர்‌ உண்மையான அன்பினர்‌ அல்லர்‌* என்றும்‌,
இறைவனே ஆபத்துக்கு வந்துதவும்‌ அவனே–உண்மை அன்பினன்‌ என்றும்‌, அவனே மேலான உறவு” என்றும்‌,
“அவனே காப்பவன்‌, “அவனே இனியன்‌”, “அவனே இன்பவடி.வினன்‌ *என்றும்‌,
*அவன்‌ ஒருவனே உபாயம்‌” என்றும்‌, “அவனை ஒழிந்த மற்றையாரும்‌ அத்தகையர்‌ அல்லர்‌” என்றும்‌,மெய்ப்பிக்கின்றார்‌.,
கண்ணன்‌ ஒருவனே மேலாந”தெய்வம்‌. அவன்‌ ஒருவனே மாநிலத்து எவ்வுயிர்க்கும்‌ உபாயம்‌” என்று முடித்துச் சித்தோபாயத்தை உபதேசிக்கின்றார்‌ ஆழ்வார்‌.

அந்தச்‌ சித்தோபாயத்தில்‌ நம்பிக்கை பிறக்க வேண்டும்‌.-அது பிறக்கைக்குப்‌ பேறு வேண்டும்‌. அப்படி
அச்சித்தோப௱பத்தில்‌ நம்பிக்கை பிறக்கைக்கு அடியான பேறு இல்லாதார்‌ அதில்‌இழியார்‌–அதில்‌ இழியாதார்‌ இழியமாட்டார்‌- அறிவுக்‌ குறைவு உடையார்‌.
ஆகவே, “அத்தகையவர்கள்‌ செய்யக்‌ கூடுவது யாது?” என்பதும்‌ ஒரு வினாவாகின்றது. ஆழ்வார்‌ அவர்களையும்‌ விட்டு விடவில்லை.
காலையும்‌ மாலையும்‌ மலர்‌ முதலியன கொண்டு, அவனை வழிபட்டு, பத்தி நிலையில்‌ நிற்பவர்‌ ஆகுங்கள்‌? என்று
அங்கங்களோடு கூடிய பத்தியைஅத்தகையோருக்கு உபதேசிக்கின்றார்‌.

செய்ய வேண்டும்‌ என்ற எண்ணம்‌ உண்டேனும்‌, செய்ய இயலாமை காரணமாகவும்‌, வேறு உடனே கிட்டாமை:காரணமாகவும்‌
அப் பத்தியை அனுட்டிக்க ஆற்றலற்றவர்‌ உளர்‌ அன்றோ?*அவர்கள்‌ செய்யக்‌ கூடியதுயாது?” என்பது மற்றொரு வினா.
அவருக்கும்‌ ஆழ்வார்‌ கைவசம்‌ விடை. வைத்துள்ளார்‌.*இன்பம்‌ அளிப்பதும்‌, யாவருக்கும்‌ தகுதியானதும்‌,
எடுத்த பிறவியின்‌ (உடலின்‌) இறுதியிலே பலன்‌ அளிப்பதும்‌ ஆன பிரபத்தி மார்க்கம்‌ பயிலுங்கள்‌” என்று அவர்களுக்கும்‌ உபதேசம்‌ செய்கின்றார்‌ ஆழ்வார்‌.

மற்றும்‌, சிலர்‌ ஐயப்பாடுடையோர்‌. உபாயமோ சிறிது; பலனோ பெரிது; மிகப் பெரியது! நினைத்துப்பார்க்க ஒண்ணாத அளவுபெரியது!
தடைகளோ மிகுதி!மேலும்‌ அவைஉடைக்‌க முடியாத அளவு வலியன. நிலைமை இவ்வாறு இருத்தலால்‌,
இது எவ்வாறு கூடும்‌ என்று ஐயம்‌ கொண்டு
பிரபத்தியில்‌ துணிவு. கொள்ளார்‌. அத்தகைய துணிவு கொள்ளுதற்கு ஏற்ற சத்தி அவர்கள் பால்‌ இல்லை. எனவே இத்தகைய துணிவற்றவர்க்கு வழி யாது? என்றால்‌, ஆழ்வார்‌ விடை. தருகின்றார்‌.
*திருக் கண்ணபுரம்‌ சொல்ல நாளும்‌ ‘துயர்பாடு சாராமே; என்கின்றபடி
அந்த இறைவன்‌ பெயரையோ ஊரையோ சொல்லுங்கள்‌” என்று உச்சாரணத்தை விதிக்கின்றார்‌ ஆழ்வார்‌.
வேறு சிலரையுங்கூட ஆழ்வார்‌ தமது திரு நோக்கில்‌அளந்தே வைத்திருக்கன்றார்‌.

பெயர்‌ சொல்லவும்‌ மாட்டாதார்‌, ஒருமைப்‌ பாட்டோடு உச்சாரணம்‌ செய்யவும்‌ இயலாதார்‌,
தாமே ஒரு பாசுரம்‌ சொந்தமாய்ச்‌ சொல்லுதற்கும்‌ ‘இயலாதார்‌ ஆகிய இவர்களுக்கு-
தகுதி குறைந்தவர்சளுக்கு-அவர்‌ சொல்வது இது: இத்‌ திருவாய்மொழியைப்‌ பத்தியோடு பாடி அவன்‌ திருவடி.களிலே விழுங்கள்‌
கீதாசாரியன்‌ கண்ணன்‌ செய்தது போன்றே ஆழ்வாரும்‌ தமக்குப்‌ பேறு அணித்தானவுடன்‌ உலகினர்‌ ஒருவரும்‌
இழக்க வொண்ணாது இதை என்ற பரம கிருபையாலே
அவரவர்‌ தருதிக்‌ கேற்பப்‌ பலவகை உ.பாயங்களையும்‌ முறையாக எடுத்து உபதேசிக்கக்‌ காண்கின்றோம்‌.

——————-
10, தம்மினும்‌ இறைவன்‌ பால்‌ மிக்க ஈடுபாடுடையது தம் தெஞ்சு என்பது அவர்‌ கருத்து- ஆதலால்‌, தம் மனத்‌திற்கு முதலில்‌ பணி நெஞ்சே!” என்று ஆணையிட்டார்‌.
அடுத்து, “மருள்‌ ஒழி” என்கின்றார்‌. இவ்வாறு செய்ய “வேண்டுவனவற்றையும்‌ தவிர்க்க வேண்டுவனவற்றையும்‌ விதித்தவர்‌,
நெஞ்சு போல்வாரைகத் *(தொண்டீர்‌” என்று அழைத்துச்‌ செய்யத்‌ தக்கதும்‌, நினைக்கத்‌ தக்கதும்‌, பேசத்‌ தக்கதும்‌,
கேட்கத்‌ தக்கதும்‌, காணத்‌ தக்கதும் , போதற்கு ஏற்ற இடமும்‌ இவை என்று வெளியிடுகின்‌றார்‌,
திருவாய்‌ மொழியின்‌ தொடக்கத்தில்‌ முதற் பத்தில்‌ *பிணக்‌ கற” என்ற பாட்டில்‌ (1-2-5) *வணக்குடைக்‌ தவநெறி”
என்று தொடங்கிய பத்தி யோகத்தை
இறுதிப்‌ பத்தில்‌**சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்‌?? (10-4) என்று அது தன்‌ பேற்றுடனே பொருந்தின படியைச்‌ சொல்லி முடித்தார்‌.

—-
முன்னார்‌ முதற்பத்தில்‌ **எண்‌ பெருக்கு (1-2-10) என்ற பாடலில்‌ வழிபாடு செய்தற்குப்‌ பற்றுக்‌ கோடாகச்‌ சொல்லப்‌ பட்டதும்‌,
*எண்ணும்‌ திருநாமம்‌?” (10-5-1) என்று வழிபாட்டின் போது இடையறாது நினைக்கும்‌ திரு நாமமும்‌ ஆன திரு மந்திரத்தின்‌ சொல்லையும்‌ (ஒலியையும்‌),
அதன்‌ பொருளையும்‌ ‘*நாரணம்‌” என்றும்‌ **எம்மான்‌”” என்றும்‌ சுருங்க உபதேசிக்கின்றார்‌.
**மாதவன்‌?”(1-10-7) என்று தெடாங்கித்‌ திரு மத்திரத்தை **த்வயம்‌*’ என்ற மந்திரமாக வெளியிடு கிறார்‌. ்‌

இறைவன்‌ தம்மைச்‌ கொண்டு போவதற்கு விரைகின்ற படியாலும்‌, கேட்கிறவர்களுக்த ஈடுபாடு பிறக்கும்‌ பொருட்டும்‌
“தாள்வாய் மலரிட்டு நாடீர்‌* என்றும்‌,
பாடீர்‌அவன்‌ தாமம்‌” என்றும்‌,
*நன்‌ மலரிட்டு நினைமின்‌” என்றும்‌
மனம்‌ மொழி மெய்‌ ஆகிய முக் கரணங்களாலும்‌ இறைவனை வழிபடுதலை உலகினர்க்குக்‌.
கையோலையில்‌ குறித்துக்‌ கொடுப்பது போன்று சுருக்கமாகக்‌ காட்டுகின்றார்‌, ஆழ்வார்‌.

தம்மைப்‌ போன்று அனுபமும்‌ கைங்கரியமும்‌ செய்‌பவர்க்கு அவர்‌, (அவனுடைய சீல குணத்திலே அகப்பட்டு அழுந்தி விடாது,
உங்கள்‌ உயிரைக்‌ காவல்‌ காத்துக்‌ கொள்ளுங்கள்‌” என்று கூறுகின்றார்‌. இப்படிக்‌ கூறுவதால்‌ அவர்‌களை அவன்‌ உள்கலந்து அழிக்கும்‌ வழிக்குக்‌ காவலிட்டார்‌.
இவர்தம்‌ மனத்தைத்‌ திருத்தினான்‌ இறைவன்‌, திருத்தியபின்‌,*இனியும்‌ இவரை இங்கே இவ்வுலகில்‌ இருக்க விடலாகாது*என்று இவருக்காக வீடு திருத்தப்போனான்‌?
போய் , அது செய்து திரும்புவதுற்கு முன்‌ இவர்‌ தம்‌ உபதேசத்தால்‌ ஊரும்‌ நாடும்‌ திருந்தி இவர்‌ இங்குச்‌ செய்ய வேண்டுவனவன
செயல்‌ எல்லாம்‌ செய்து முடிவுற, இவரைப்‌ பரம பதத்திலே கொண்டு போகப்‌ பதறினான்‌.
இவர்‌ எடுந்த இவ்வுடல்‌ கடைசி உடலாகையால்‌, அதில்‌ தமக்குண்டான மோகத்‌தாலே தன்‌ பதற்ற மிகுதியை மறந்து, தன்‌ பரிவாரங்களுடன்‌ அவ்வுடலில்‌ புகுந்து,
திவ்ய தேசங்களில்‌ செய்யும்‌ விருப்பத்தை யெல்லாம்‌ அதிலே காட்டி, ஆழ்வாரின்‌ பல உறுப்புக்களையும்‌ அனுபவிக்கும்படி அவர்‌ உடலில்‌ சபலனான்‌ இறைவன்‌.
அந்த இறைவனுக்கே, ஆழ்வார்‌, உடலின்‌ மாயையை எடுத்து விளக்கி அதனைக்‌ கைவிடும்படி செய்தார்‌.

காரணமின்‌றியும்‌ தம்மைக்‌ கொண்டு போதலில்‌ இன்று மிக்கு ஈடுபட்டவனான அவனை இதுகாறும்‌ தம்மை விட்டு
வைத்ததற்குக்‌ காரணம்‌ கூறும்படி கேட்கின்றார்‌ ஆழ்வார்‌.
அவனும்‌, :*இந்திரியங்கட்கு அடிமைப்பட்டுப்‌ புலன்கள்‌ வழியே போனீர்‌?? என்பது முதலாய காரணங்களைக்‌ காட்ட எண்ணுகின்றான்‌.
ஆனால்‌, அவையெல்லாம்‌ அவன்‌ செயலே என்று அறியும்‌ அறிவாளர்‌ ஆழ்வார்‌ என்று எண்ணி, ஒரு. விடையும்‌ கூறாது நின்றான்‌.
தன்‌ தவறுகளை மறைப்பான்‌ போன்றும்‌ இவரைத்‌ தன்னிடத்துக்கு ஏற்றுக்‌ கொள்வதன்‌ அறிகுறியாகவும்‌
சில முழக்கங்களை சூழ் விசும்பு அணி முகிலில்‌ உண்டாக்கினான்‌.
அல்வொலி செவிப்பட்டதும்‌ அர்ச்சிராதி வழி பல்லக்குத்‌ தூக்குவார்‌ வழிபாடு, திவ்வியதேசப்‌ பேறு, அங்குள்ளார்‌ பாராட்டு
முதலியவற்றைப்‌ பெற்றவராய்ப்‌ பேசும்படி, மேலான பேற்றை மனநிலையில்‌ (மானசீகமாக) பெற்றார்‌. ஆழ்வார்‌.
அந்நிலையை அகத்தே-மனத்தே மாத்திரமன்றிப்‌ புறக்‌ கரணங்களாலும்‌ பெற வேண்டுமென்று பதறி
அவனுக்குத் திருவாணை இட்டு-அவனைத்‌ தடுத்து, அது பெறாத ஆணை யல்லாமைக்குப்‌ பல ஏதுக்களையும்‌ எடுத்துரைத்து அவா மிக்கவரானார்‌.

இந்தப்‌ பரம பத்தி நிலையும்‌ அற்பமானது என்று சொல்‌லும்படி. மிகக்‌ பெரியதாயிருந்தது இறைவன் தன்‌ ஈடுபாடு.
ஆழ்வாரின்‌ அவாவின்‌ அளவைச்‌ இறு குளம்பின்‌ அடி போன்ற அளவினதாகக்‌ குறிப்பிட்டால்‌,
இறைவனோ, கடல் .போன்ற மிகப்‌ பெரிய அளவினதான ஆசையுடன்‌ வந்தான்‌ என்றுதான்‌ கூறவேண்டும்‌.
வந்தவன்‌, இவருடன்‌ கலந்து தன்‌ விடாய்‌ தீர இவரை அனுபவிப்பித்து, இவர்‌ அலறிய அந்த.வாயாலேயே *அவாவற்று வீடு பெற்ற?” என்று பேசும்படி,
அரி என்ற தன்‌ பெயருக்கு ஏற்ப எல்லாத்‌ தாபங்களையும்‌
ஹரித்தமையை.-அழித்தமையை- யாவரும்‌ அறிய வெளி யிடடுன்றார்‌ ஆழ்வார்‌ இறுதிப்‌ பத்தால்‌.

———–

4. ஐய வினாக்களும்‌ அவற்றின்‌ விடைகளும்‌

1. காரணமற்ற தன்‌ பரம கிருபையால்‌ ஆழ்வார்க்குஅஞ்ஞானம்‌ நீக்கிப்‌ பத்தி வடிவான ஞானத்தைத் தந்து,
பின்னும்‌ அவர்க்கு அவர்‌ விரும்பிய பேற்றையும்‌ இறைவன்‌ அளித்தலைக்‌ காண்கின்றோம்‌.
தம்‌ பிரபத்தங்களில்‌ முதல்‌ பிரபந்தத்தில்‌ முதல்‌ பாட்டில்‌ ஆழ்வார்‌ பொய்ஞ்ஞானம்‌,பொல்லா ஒழுக்கு, அழுக்குடம்பு ஆகியவற்றை நீக்க வேண்‌டும்‌ என்று வேண்டுகின்றார்‌.
*இறுதியில்‌ அவ்வேண்டுதல்‌ நிறைவேதியதாகப்‌ பேசும்‌ ஆழ்வாருக்கு, முன்னரே இறைவன்‌ அருளாமைக்கு யாது காரணம்‌?” என்பது வினா.

இதற்குக்‌ காரணங்களாவன இவை.
(1) தன்னுடைய பல முயற்சிகளாலும்‌ திருந்தாத உலகு ஆழ்வாருடைய உபதேசங்களாலேனும்‌ திருந்தட்‌டுமே என்பதால்‌,
(2) வேண்டியவடனே வீடு கிடைத்துவிட்டால்‌, பிரபத்தி என்பது தன்பால்‌ வந்தவர்களை உடனே மாய்த்து விடும்‌
நச்சுப்‌ பொய்கையோ என்று மக்கள்‌ ஐயம்‌ கொண்டு, தன்‌ பக்கம்‌ யாரும்‌ வந்து எதுவும்‌ வேண்டுதல்‌ செய்யாது போய் விடுவர்‌ என்பதால்‌.
(3) தானும்‌ தன்‌ அடியவர்களும்‌ மகிழ இவரைக்‌ கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளத்‌ தொடங்கிய செயல்‌ முழுதும்‌ முடிவதற்காக.
(4) வேர்‌ சூட்டிக்கொள்பவர்கள்‌ வாசனையின்‌ விருப்பத்தாலே அதில்‌ பற்றிய மண்பற்றையும்‌ கழற்றாது சூட்டிக்‌ ‘கொள்வதுபோல்‌,
இவர்‌ தம்‌ உடம்பில்‌ இறைவன்‌ கொண்ட விருப்பத்தால்‌. என்று இப்படி பல விதமான காரணங்கள்‌ கூறலாமாயினும்‌,
இலை முக்கியமானவை அல்ல.

(5)*இவருடைய ஆர்த்தி.-ஆர்வம்‌–பெருகித்‌ தகுதி யுடையராக வேண்டும்‌” என்பதே முக்கியமான காரணமாகும்‌.
அது இவர்தம்‌ நூலில்‌ 20 (இருபது) இடங்களில்‌ *இனி, இனி” என்று பேசுவதனால்‌ தெளிவாகும்‌.
முதற்‌ பாடலிலும்‌ ஆரத்தி இருப்பினும்‌, அது படிப்படியாக முற்றிக் கொண்டு போய்‌, இறுதியில்‌ பரமார்த்தியாகி, பேற்றிற்குத்‌ தகுதிபெற்றார்‌ என்பதாம்‌.

மேலும் (6)ஒரு காரணம் -வீடு நிறுத்துவான் -இவரைக் கூட்டிப்போவதற்கு முன்பு பரமபதம் ஆகிய பெரிய வீட்டைத் திருத்த வேண்டுமே -அதுவும் ஒரு காரணம்

2. *பர பக்தி பர ஞானம்‌, பரம பக்தி என்பன பக்தியின்‌ நிலைகள்‌.
ஆழ்வார் தம்‌ பத்தியிலும்‌ அந்நிலைமைகள்‌உண்டா? அவை எங்கெங்குப்‌ புலப்படுகின்றன?

பல பாடல்களில்‌ ஆழ்வார்‌ * கண்ணனைக்‌ கண்டேன்‌”என்று பேசுகின்றார்‌.
வேறு பல பாடல்களில்‌ *பாவியேன் காண்கின்‌றிலேன்‌” என்பது போலவும்‌ பேசுகின்றார்‌.
மேலாக நோக்கும்போது, இவை, முரண்படுவது போன்று தோன்றலாம்‌.
கண்டேன்‌ என்பது; உட் கண்ணால்‌ கண்டதாகவும்‌, *காண்கின்றிலேன்‌* என்பது புறக் கண்ணாலும்‌
காண ஆசைப்பட்டு அப்பேறு பெருமையைக்‌ குறிப்ப தாகவும்‌ கொள்ளவேண்டும்‌.

அப்படியானால்‌, முதற்‌ பத்திலிருந்து முடிவு வரும்‌ வரை அலர்‌ நிலை என்ன? என்ற ஐயம்‌ எழும்‌.
கண்டேன்‌” என்ற பேச்சு பத்துத்‌ தரமும்‌,-அதனினும்‌ இருமடங்கு *காண அவாவுவன்‌” என்ற பேச்சும்‌ வருதலால்‌;
பர ஞானம்‌ உள்ளே ஓடிக்கொண்டிருக்கிற பரபக்தியே ஆழ்வார்‌ நிலை என்பது தெரியவரும்‌.
கண்டு களிப்பக்‌ கண்ணுள் நின்று அகலான்‌”? (10—8–7} என்பது வரை இந் நிலைமை.

பரபக்தி முதல்‌ நிலை. பரஞானம்‌, அவனை .அறிகின்ற நிலை-. உள்ளே ஓடிக் கொண்டிருந்த பர ஞானம்‌ எப்பொழுது முழுமை பெறுகின்றது?
**அந்தமில்‌ பேரின்பத்து அடியாரோடு இருந்தமை”” (10-9-11 )என்று நித்திய ஸூரியர்‌ திரளில்‌ தாம்‌ இருப்பதாக
ஆழ்வார்‌ பேசும்‌ பாசுரம்‌, அவர்‌ பர ஞானம்‌ முழுமையாகப்‌ பெற்ற நிலையைக்‌ காட்டும்‌. *சூழ்‌ விசும்பு? திருவாய்‌ மொழியில்‌ காணலாம்‌.

இதுவும்‌ மானச அனுபவமே. பெருவிடாய்‌ பிறந்து, கூப்பிட்டு, ஆற்ற மாட்டாமல்‌ திருவாணை யிட்டு,
அவனைத்‌ தடுத்துப்‌ பேற்றோடு கூடின. “முடிந்த அவாவில்‌ அந்தாதி இப்பத்து”? என்னும்‌
“முனியே நான்முகன்‌- பதிகமே பத்தியின்‌ கடைசி எல்லையான பரமபத்தி நிலை கூறும்‌ பகுதி.

3. பர பத்தி பர ஞானம்‌ பரம பத்தி என்னும்‌ மூன்று நிலைகளைப் பற்றி யார்‌ எங்கே பேசி யிருக்கின்றார்‌?
கண்ணன்‌ தேர்த்‌ தட்டில்‌ வீற்றிருந்து அருச்சுனனுக்குக்‌ கீதையாகப்‌ பேசினான்‌;
அவனே சேர பாண்டியன்‌ என்று அரியணை மீதிருந்து எம்பெருமானார்க்கு உரைத்தான்‌. அது கத்தியமாய்‌ (உரைநடை) உள்ளது. அவற்றில்‌ இவை விளக்கப்பட்டுள்ளன :

*பரபத்தி? என்பது ஞான நிலை. அது “எம்பெருமானுடன் கூடுவது இன்பம்‌; பிரிவது துன்பம்‌” என்று இருக்கும் நிலை

“பர ஞானம்‌” என்பது, தர்சனநிலை. இறைவனுடைய இயல்பு, வடிவு, குணம்‌, செல்வங்களை மிகவும்‌ தெளிவாக
நேருக்கு நேர்‌ காண்பது போல அறிகின்ற நிலை. ்‌

*பரமபத்தி* என்பது, பேறு பெற்ற நிலை. அது உணர்ந்த பொருளை அப்பொழுதே பெறாவிடில்‌ முடிவுஎன்னும்படியான நிலை.

4. திருவாய்‌ மொழியில்‌ ஆழ்வாருடைய பலவான பத்திநிலைகள்‌ பேசப்படுன்றன.– இறைவன்‌ குணங்கள்‌ கூறப்படுகின்றன.
ஆழ்வாருடைய பலவாய உபதேசங்கள்‌ உள்ளன. -ஐம்பொருள்‌ பற்றிய உண்மை உள்ளது.
ஒவ்வொரு திருவாய்‌ மொழியிலும்‌ (ஒருபதிகம்‌) ஒரு கருத்து உணர்த்தப்பட்டுள்ளது.
ஒரு பத்தில்‌ -அதாவது நாறு பாடல்களில்‌ ஒன்றுபட்டதொரு கருத்து உணர்த்தப்பட்டு உள்ளதும்‌ தெரிகின்றது.
எனில்‌, ஆயிரம்‌ பாட்டிலும்‌ கூறப்படும்‌ ஒன்றான திரண்ட கருத்து -அதாவது தத்துவம்‌ யாது?
பிறவிக்குக்‌ காரணமான அஞ்ஞானத்தைப்‌ போக்குவ்தான மதி நலத்தை ஞான நிறைவை–அருளிய இறைவனது
காரணமற்ற. அருளாலேயே இறைவனை அடைதலாகிய மோக்ஷம்‌ பெறுதலும்‌ உண்டாகும்‌ என்று தெளிவித்தலே
“மயர்வற மதி நலம் என்று தொடங்கி வீடுபெற்ற” என்று முடியும்‌பிரபந்தத்தின்‌ ஒன்றான திரண்ட கருத்தாகும்‌,
எந்த இறை யருள்‌ ஞானத்தை அருள்கின்றதோ, அதுவே வீட்டையும்‌ அருள வல்லது” என்பது இங்கு விளங்கும்‌ தெளிபொருள்‌ என்பதாயிற்று.

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆழ்வார்‌ திருவுள்ளம்‌-பகுதி -1-

January 25, 2024

ஸ்ரீ வைண்ணவ சம்பிரதாயத்தை விளக்க எழுந்த இரகசியக்‌ கிரந்தங்களுள்‌ இறந்தது. ஆசாரிய இருதயம்‌:

ஆழ்வார்களின்‌ அருளிச்செயவில்‌ ஈடுபாடு கொண்டு, திருமாலின்‌ தீதில்‌ நன்னெறியை வளர்த்தவர்கள்‌,-

நம்மாழ்வாரையே முதலாசாரியர்‌-மற்ற ஆழ்வார்களை நம்மாழ்வாருக்கு. அங்கங்கள்‌ எனக்‌ கூறுதல்‌ மரபாதலால்‌, “நம்மாழ்வார்‌
திருவுள்ளம்‌” எனக்‌ கொள்வதே சாலவும்‌ பொருத்தமாம்‌..-ஈட்டு உரையின்‌ போக்கினை ஒட்டியே ஆசார்யஹிருதயம்‌ எழுந்தது.

முதற்‌ சூர்ணையில்‌ (மறையாய்‌ விரிந்த துளக்கமில்‌ விளக்கில்‌ கொளுத்‌தின” என்னும்‌ சொற்றொடர்‌ வருகின்‌றது.
மிக்கானை மறையாய்‌ விரிந்த விளக்கை” என்பது திருமங்கையாழ்வார்‌ பாசுரம்‌.
“தோன்று சோதி மூன்று மாய்த்‌ துளக்கமில்‌ விளக்கமாய்‌”?என்றருளிச்‌ செய்‌திருப்பவர்‌ திருமழிசையாழ்வார்‌.
இவ்விரு தொடர்களில்‌ ஒவ்வொரு பகுதியை எடுத்து இணைத்து *மறையாய்‌ விரிந்த துளக்கமில்‌ விளக்கு” என்றமைத்தார்‌
முன்‌ பாசுரங்கட்கு உரை வகுத்தவர்கள்‌ *விளக்கு” என்பது இறைவனைக்‌ குறிப்பதாகவே கொண்டுள்ளனர்‌.
எல்லாச்‌ சொற்‌களுக்கும்‌ வித்தான அகரத்தையே மறையாய்‌ விரிந்த விளக்‌கென்று இவ்வாசிரியர்‌ கொள்வது உரையால்‌ விளங்குகின்றது.
*விரிந்த என்ற” என்ற சொல்லாட்சி, இவர்‌ கொள்ளும்‌ பொருளின்‌ பொருத்தத்தை உணர்த்தும்‌, அகரத்‌ திற்கும்‌ எம்பெருமான்‌ பொருளாயிருப்பவன்‌ என்ற காரணத்‌ தால்‌ *விளக்கு” என்பது இலக்கணையாய்‌ இறைவனை உணர்த்துவதெனக்‌ கூறுவதாகக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌,

——-

50 சூர்ணையில்‌ “பண்ணார் பாடல்‌ பண்புரை இசை கொள்‌ வேதம்‌ போலே” என்ற தொடர்‌ வருகின்றது.
பண்ணார் பாடல்‌” என்பதற்குப்‌ “பண்ணோடு சேர்ந்துள்ள இசையை யுடைய திருவாய்மொழி ” என்பது பொருளாகும்‌.
இத்தொடர்‌ திருவாய்மெ௱ழியில்‌ வருவது.”
“பண்புரை இசை கொள் வேதம்‌? என்பது பண்புரை வேதம்‌,-இசைகொள்வேதம்‌ என்று பொருந்தும்‌.
அருளிச்‌ செயலிலும்‌ அதன்‌ உரை களிலும்‌ ;பண்புரை வேதம்‌” என்ற தொடர்‌ எங்கும்‌ வரவில்லை.
ஆனால்‌ “பண்புடை. வேதம்‌”* என்ற தொடர்‌ எடுத்‌ தாளப்பட்டுள்ளது.
“பண்புரை” என்பது, பண்ணைஃ-இசையைப்‌ புரைந்திருக்கின்ற–பண்ணுக்கு ஆதரவாயிருக்கின்ற வேதம்‌ என்னும்‌ பொருள்‌ தரும்‌,
இது ஒரு புதிய ஆட்சி என்றே உரையாசிரியரும்‌ எடுத்துக்‌ காட்டுகின்றார்‌.

திருவாய் மொழியின் வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய -பண்புரை வேதம்-என்ற பாடமும் ,
இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் ,

ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..
அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது .
மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .

——–

சூர்ணை, 75ல்‌(வீட்டு இன்ப இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில்ஆராய்ச்சி)  “இன்ப மாரியில்‌ ஆராய்ச்சி” என்ற தொடர்‌ வருகின்றது.
அடியார்க்கு இன்ப மாரியே” என்பது திருவாய்மொழிப்‌ பாசரப்பகுதி.
இந்த உலகமெல்லாம்‌ தனக்கு. உரிமையானது என்று சொல்லும்படி நின்ற இறைவனைப் பற்றி
வளப்பமான தமிழ் நூலைச்‌ செய்தற்கு நான்‌ புண்ணியத்தைச்‌ செய்தவன்‌.
இந்நால்‌ “அடியார்க்கு இன்பத்தை உண்டாக்கும்‌ மழையாகும்‌–மேகமாகும்‌”என்பது அதற்கு முன்னோர்‌ வகுத்துள்ள உரை.
இது தமக்கு இனிப்பதனால்‌ மற்றவர்கட்கும்‌ அவ்வாறே இனிக்குமென்பது ஆழ்வார்‌ எண்ணம்‌,

இன்ப மாரி -(திருவாய் மொழி ஈட்டில் )
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு திரு வாய் மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார் பக்கல் உத்பத்தி நிரூபணம் என்கை-

திருவாய்மொழி பரமாக ஈடு கூற,–ஆழ்வார்‌ பரமாகக்‌ கொண்டு இவர்‌ பொருள்‌ அமைக்கின்றார்‌.
இவ்வாறு ஆழ்‌வார்‌ பாடல்களுக்கு முன்னோர்‌ கொண்ட. பொருளுக்கு சற்று மாறான பொருள்‌ இவர்‌ அமைத்துக்‌ காட்டலை நாம்‌ காண்‌கின்றோம்‌.

திருவாய்மொழியின்‌ நாலாம்பத்து ஐந்தாம்‌ திருவாய்‌ மொழியின்‌ மற்றப்‌ பாடல்களை நோக்கும்போது
“இன்பமாரியே? என்பதற்கு நான்‌ அடியவர்க்கு இன்ப மாரிஆயினேன்‌”,” என்று ஆழ்வார்‌ தமக்குள்‌ மகிழ்வதாகச்‌
கொள்ளும்‌ பொருளே, பொருத்தமுடையதாகவும்‌ சிறப்‌ புடையதாகவும்‌ தோன்றுகின்றது.
அப்பாடலின்‌ அவதாரிகையில்‌ அதன்‌ உரையாசிரியர்‌ இப்பொருளையும்‌ குறித்தல்‌ அறியத் தகும்‌.

————

(4) சூர்ணை 99, இறைவனை அடைவதற்குச்‌ சாதனமாகக்‌ கொண்டொமுகும்‌ சாதன பத்தியின்‌ இயல்பை விளக்குகின்றது.
அதில்‌ முறைப்படி. இறை வழிபாடு செய்து, அவனை இடையறாது நினைப்பதனால்‌ அந்தக் கரண்ங்கள்‌ தூயராகப்‌ பெற்று,
இந்திரியங்களை அடக்கி, அவற்றை இறைவனைப்‌ பற்றியதாகிய செந்நெறியிலே நிறுத்தி,
அவற்றின்‌ போக்கினைத் தடுத்து, ஐந்து வகைக்‌ துன்பங்களையும்‌ போக்கி, “விளக்கினைக்‌ கண்டு” என்பது வருகின்றது.
விளக்கினை விதியில்‌ காண்பார்‌‘” என்பது திருமங்கை மன்னன்‌ பாசுரம்‌.
அங்கு “விளக்காகிய இறைவன்‌? என்றே பொருள்‌ கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால்‌ ஆசார்ய இருதயத்‌தில்‌ மணவாள மாமுனிகள்‌ ஆத்தும தரிசனம்‌ செய்து” என்றே பொருள்‌ கொள்கின்றார்‌.
அதற்குரிய காரணத்தையும்‌ அவர்‌ அங்கு எழுதியுள்ளார்‌.

விளக்கினை விதியில் காண்பார்-என்கிற இது பகவத் சாஷாத் காரமாக பூர்வர்கள்
வியாக்யானம் பண்ணி வைத்தார்கள் ஆகிலும் ,இவர் ஆத்ம பரமாகவே அருளிச் செய்தார் என்று கொள்ள வேணும் –
பகவத் த்யான தர்சனங்களை மேலே சொல்லுகையாலே —
விதியில் காணும் பிரதம மத்திய தசைகளை சூரனை -23–என்று ஆத்ம பரமாகவே இறே கீழும் இவர் அருளிச் செய்தது ..
யோஜனா பேதங்களும் உண்டாய் இருக்கும் இறே –

அதே சூர்ணையில்‌ பிற்பகுதியில்‌
அரும்‌ பெருஞ்‌ சுடரைக்‌ கண்டு” என்றும்‌,-“கனவில்‌ மிக்க தர்சன சமமாய்‌” என்றும்‌
வரும்‌ தொடர்களால்‌ இறைவனைக்‌ காணுதல்‌ பற்றிச்‌ ‘சொல்லுகையால்‌
இங்கு :விளக்கினைக்‌ கண்டு என்பது ஆன்மாவினைக்‌ காணுதல்‌ அல்லது அறிதல்‌ என்றே கொள்ளவேண்டும்‌.

——–

சூர்ணை 184 -வளம்‌ மிக்க வாட்டாற்றில்‌ காணும்‌ அர்ச்சாவதாரச்‌ சிறப்பை விளக்குவது.
அடியவர்களுக்குமுத்தியைக்‌ கொடுக்குமளவில்‌ அவர்கள்‌ விதித்தபடி நிற்கிற‘ஆஸ்ரித பாரதந்தர்யம்‌? அங்கு அளவற்ற வகையில்‌ ஒடும்‌ என்‌கின்றார்‌.
மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும்” என்பது சூர்ணை.
பிரணத பாரதந்தர்யமாவது, அடியவர்‌ விரும்புகிறவாறு நடந்து கொள்ளும்‌ தன்மை. அஃதாவது, அவர்கள்‌ உடைமையாம்‌ தன்மையை இறைவன்‌ அடைதல்‌.

அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே –திருவாய்-10-6-1-என்றும் –
விண்ணுலகு தருவானாய் விரைகின்றான் விதி வகையே-திருவாய்-10-6-3- -என்றும்
திருவாய்மொழியில்‌ “அருள்‌ தருவான்‌ அமைகின்றான்‌ அது நமது விதிவகையே ” என்ற பகுதிக்கு முன்னோர்கள்‌ கூறும்‌ உரை, :
நமது புண்ணியத்திற்குத்‌ தகுதியாக அவன்‌ அருள்‌ தருவான்‌” என்பது.
ஸ்ரீ உடையவர்‌ அது கேட்டு இது முன்‌ பாசுரங்களில்‌ வரும்‌ பொருளுக்கு ஏற்றவாறு இல்லையாகையால்‌,
“நாம்‌ விதித்தபடியே செய்வானாய்‌ இருந்தான்‌” என்று அருளிச்‌ செய்தாராம்‌. ஈடு இவ்விரு பொருள்களையும்‌ தருகின்றது.
இவ் வாசிரியர்‌ உடையவர்‌ கூறும்‌ பொருளே பொருத்தமுடையது எனக்‌ கொண்டு அதனையே தம்‌ நூலில்‌ அருளிச் செய்வதைக் காண்கின்றோம்‌.

தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே ஆழ்வார் கேட்டபடியே கொடுத்து அருளினான் -ஆஸ்ரித ப்ரணய பாரதந்தர்யம் )

———-

சூர்ணை 205 ஆழ்வாருடைய உபதேசம்‌ பயனுடைய தாயிற்று என்பதை விளக்க எழுந்தது.

(க்யாதி அபேக்ஷை அற்று –பூஜா அபேக்ஷை அற்று -லாப அபேக்ஷை அற்று –
மலர் நாடி யாட் செய்ய- உய்யக் கொண்டு என்கிற இழவும் – ஆரைக் கொண்டு என்கிற இழவும் –
வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும் -தீரப் பெற்றது
மூன்றிலும் ஆசை அற்று மூன்று இழவுகளும் தீரப்பெற்றார் -)
அதில்‌ புகழில்‌ விருப்பமும்‌ செல்வ ஆசையும்‌ பிறர்‌ போற்ற வேண்டுமென்ற அவாவும்‌ இன்றி
மலர்நாடி, ஆட்செய்ய உலகர்‌ யாவரும்‌ திருந்தினர்‌.
அதனால்‌ உலகினர்‌ நல்வாழ்வு பெறவில்லையே என்று இவர்‌ கொண்ட வருத்தமும்‌,
தமக்குப்‌ பேச்சுத்‌ துணை பில்லாமையால்‌ வந்த ஏக்கமும்‌,
அவன்‌ மென்மைத்‌ தன்மையறிந்து பரிவு காட்டுவதற்கு ஒருவருமில்லையே என்ற இழவும்‌
தீரப்‌ பெற்றன என்கின்றார்‌.
இங்கு “மலர்நாடி” என வரும்‌:தொடர்‌ *நறிய நன்மலர்‌ நாடி”? என வரும்‌ திருவாய்மொழிச்‌ சொற்றொடராகும்‌.
இதற்கு ஈட்டிலும்‌ மற்ற உரைகளிலும்‌ “மணமுடையதாய்‌ நன்றாயிருப்பதான மலர்கள்‌ போலே யிருக்கின்ற
சொற்களை ஆராய்ந்து சொன்ன ஆயிரம்‌” என்னும்‌ பொருள்‌ உள்ளது.
நூலின்‌ சிறப்புக்‌ கூறுவதாகவே இத்தொடர்‌ அமைந்துள்ளது. அப் பொருளை இங்குக் கொள்ள இயலவில்லை. எனவே, *ஆத்தும மலர்களைத்‌ தேடி” என்று”
கொள்ளுதலே ஆரியர்‌ நினைவாய்‌ இருத்தல்‌ வேண்டும்‌,
ஆத்தும மலர்களைத்‌ தேடிக்‌ கைங்கரிய வடிவமாக இவர்‌ உபதேசிக்கையால்‌ நாடெல்லாம்‌ திருந்திற்று என்று கொள்ளல்‌ வேண்டும்‌.

மலர் நாடி யாட் செய்ய-அதாவது-நறிய நன் மலர் நாடி-5-5-11 -என்கிறபடியே –
சேஷத்வ பரிமள யுக்தமாய் ஸ்லாக்யமான ஆத்ம புஷ்பங்களைத் தேடி —
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் -4-10-11–என்று-கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே ஜகத்தாக திருந்துகையாலும் —

சர்வ வ்யாக்யானங்களிலும் -பரிமளத்தை உடையதாய் -ஸ்லாக்யமான புஷ்பங்கள்
போல ஆராய்ந்து சொன்ன ஆயிரம்-என்று பிரபந்த விசேஷணமாகச் சொல்லி இருக்கையாலே –
இவருக்கு நினைவு-(ஸ்ரீ நாயனார் நினைவு ) ஆத்ம புஷ்பங்களைத் தேடி -என்கிற இது என்று கொள்ள வேண்டும் ..
அன்றிக்கே
மலர்நாடி -என்கிற இது –
நாடாத மலர்-1-4-9– -என்கிறதை நினைத்து அருளிச் செய்தார் என்று கொள்ளில் ஒரு விரோதமும் இல்லை ..
வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -என்று கைங்கர்ய பிரசங்கம் உண்டு ஆகையாலே-ஆட் செய்ய -என்றதோடு சேரும் இறே-

——–

தமிழ்‌ மொழி பற்றிய ஆசிரியர்‌ கருத்து

தமிழைத்‌ திராவிடம்‌” என்ற சொல்லால்‌ குறிக்கின்றார்‌ —இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-சூரணை -40-

இரண்டும்‌ ஒத்த சிறப்புடையன என்பதையும்‌ விளக்குகின்றார்‌. தமிமுக்கு“ஆகஸ்தியம்‌”, என்பது ஒரு பெயர்‌.
அதற்கு அகத்தியரால்‌ செய்யப்பட்டது” என்று பொருள்‌ கொண்டு, “ஒரு முனிவரால்‌ உண்டாக்கப்பட்ட மொழியை
அநாதியான வடமொழிக்கு ஒப்பாகக்‌ கூறுவது எவ்வாறு பொருந்தும்‌?? என்ற கேள்வியை எழுப்பி, விடையும்‌ தருகின்றார்‌

செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-சூரணை -41-

அகத்தியரால்‌ வெளிப்படுத்தப்பட்டது என்பதால்‌, தமிழ்‌ அப்பெயர்‌ பெற்றதே யன்றித்‌ தமிழ்‌ அகத்தியர்க்கு முன்னும்‌ உள்ளதே.
அதுவும்‌ அநாதி ஆனதே” என்பதே அவர்‌ தரும்‌ விடை.-இவ்வாறே வேதப் பாடல்கள்‌ எல்லாம்‌ இருடிகள்‌ வழியே
வெளியானதைக்‌ காணலாம்‌.
கவிச்சக்கரவர்த்தியாரான் கம்பரும்‌ (என்றுமுள தென் தமிழ்‌ இயம்பி இசை கொண்டான்‌” என்று அகத்தியரைச்‌ சொல்லும்‌ முறையால்‌ “தமிழ்‌ என்று முள்ளது. அநாதி* என்பது தெளிவிப்பர்‌,

(நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழர் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் -என்றும் –
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் -என்றும் -கம்ப நாட்டு ஆழ்வார் –
ஆழ்வார்‌ பாடல்களைச்‌ சான்று காட்டித்‌ தம்‌ கருத்தை நிலைநாட்டுகின்றார்‌ நம்‌ ஆசிரியர்‌,
இறைவனைப்பற்றிப்‌ பேசும்‌ ஆழ்வார்‌கள்‌ அவன்‌ பலபல வடிவங்களில்‌ அமைந்திருப்பதாகக்‌ கூறுவார்கள்‌.
இல இடங்களில்‌ அவ்விறைவன்‌ தமிழும்‌ வடமொழியுமாய்‌ இருப்பதாகப்‌ பேசப்பட்டுள்ளது…
செந்திறத்த தமிழோசை வட.சொல்‌லாக: என்று திருமங்கை மன்னன்‌ பாடல்‌” கூறுவதை எடுத்துக்‌ காட்டுகின்றார்‌.
இதன்கண்‌ தமிழும்‌ வடமொழியும்‌ சேர்த்துச்‌ சொல்லப்பட்டுள்ளமை, அவை இரண்டும்‌ ஒத்த தன்மையன என்பதனை உணர்த்தும்‌,

வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-சூரணை -42-
ஒத்தனவேனும்‌, அவற்றுள்ளும்‌ தமிழே ஏற்றமுடையது” என்பது, “செந்திறத்த தமிழ்‌” என்று அடைமொழி கொடுக்கப்பட்டும்‌,
இரண்டிலும்‌ முதலிற்‌சொல்லப்பட்டும்‌ இருப்பது காட்டும்‌ என்பது விளக்கப்படுகின்றது.
தமிழிலும்‌ வேதம்‌ உண்டு என்பர்‌ இந் நூலாசிரியர்‌..“வட மொழி மறை-திருவாய் -8-9-8-:” என்று வரும்‌ தொடர்‌ அக் கருத்தை வலியுறுத்தும்‌ என்கிறார்‌.
தென்மொழியாய தமிழிலும்‌ மறையில்லை என்றால்‌, வடமொழிமறை என்று அடை, கொடுத்துச்‌ சொல்ல வேண்டாவன்றோ?
மறைகள்‌ அநாதி யானவை: அவை ப்ரஹ்மம் பிரமனுக்கு உபதேசம் மூலமாக வந்தன. அதே போன்று,
ஆழ்வார் மூலம்‌ தென்மொழி மறை எழுந்தது.

கருத்துகள்‌ என்றும்‌ உள்ளனவே. ஞானம்‌–உண்மை ஞானம்‌–என்றும்‌ உள்ளது.
நூல்‌ வடிவில்‌ பாராத போது அஃது ஆண்டவன்‌ திரு வுள்ளத்‌திற் கிடந்தது எனலாம்‌?
இருடிகளும்‌ கவிகளும்‌ அதனை வெளிப்படுத்துவதால்‌ அவ்வுண்மைகளை அவர்களோடு இணைத்துக்‌ கூறும்‌ வழக்கம்‌ உண்டு.
“நியூட்டன்‌ நியதிகள்‌”அல்லது “சட்டங்கள்‌” அவர்‌ வெளியிட்டது. உண்மையானாலும்‌, அவருக்கு முன்‌ இயற்கையில்‌ அவை விளங்கவில்லை என்று கூற இயலாது.-அவர்‌ அதன்‌ இருப்பினை முதலில் கண்டு.விளக்கியதால்‌, அவர்‌ பெயரால்‌ அந்த நியதிகள்‌
இன்று வழங்குதலை இங்கே மனங்கொளல்‌ தகும்‌. சுவாமி விவேகாகந்தர்‌ இத்தகைய விளக்கம்‌ தந்துள்ளார்‌.
இதனால்‌, மொழிப்‌ போராட்டமின்றி உண்மைகளை அனைவருக்கும்‌ உரிமையாக்கும்‌ பரந்த மனப்பான்மை தெரிகின்றது.

தமிழ் மா முனி திக்கு சரண்யம்‌” என்ற குறிப்பு, தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே
க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-சூர்ணை 91ல்‌ வருகின்றது.

வண்தமிழ்‌ மாமுனி* என்று அகத்தியரைக்‌ குறிக்கின்றார்‌ குலசேகர ஆழ்யார்‌.
அந்த முனிவர்க்கு இருப்‌பிடமாதலால்‌, தென்திசை யாவர்க்கும்‌ புகலிடமானது என்பது கூறப்படுகின்றது.

சர்வருக்கும் புகல் இடம் என்ற மக ரிஷிகளால் –( வால்மீகி போலே சுகர் சொன்னதால் என்றவர்களாலே -என்கிறார்
அத்தகைய சிறப்புக்‌ கூறப்படுவதற்குக்‌ காரணம்‌, அவர்‌ தமிழ்‌ மாமுனிவராய்‌ இருப்பது தான்‌.
தமிழ்‌ நூல்களின்‌ மரபே இங்கு விளக்கப்படுவது தெளிவு.

—-

தமிழிலே அமைந்த ஆழ்வார்‌ பாடல்களின்‌ பெருமை பெறிதும்‌ விரிவாக இந்நூலில்‌ எடுத்துக்‌ காட்டப் படுகின்றது.
அவை *திவ்வியப்பிரபந்தம்‌* என்றும்‌ (சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-சூ. 44),
அருளிச்‌ செயல்‌” என்றும்‌ (ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி ,கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம்
பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் ,திரு மால் அவன் கவி என்றே ,வாயோலை படியே
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்த இது வேதாதிகளில் , பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள்
போலே அருளிசெயல் சாரம்-சூ. 63) குறிக்கப்படுகின்றன.

நம்மாழ்‌வாருடைய நூல்கள்‌ நான்கும்‌ நான்கு வேதங்கள்‌ஆகுமென்றும்‌, திருமங்கையாழ்வருடைய நூல்கள்‌ ஆறும்‌
“சிக்ஷ, வியாகரணம்‌, நிருக்தம்‌, சந்தம்‌, கற்பம்‌, சோதிடம்‌ ஆகிய ஆறு அங்கமும்‌ ஆகுமென்றும்‌,
மற்ற ஆழ்வார்‌ எண்மரின்‌ நூல்களும்‌ எட்டு உபாங்கங்கள்‌ ஆகுமென்றும்‌ சொல்லப்படுகின்றன.
மங்கை மன்னனுடைய நூல்களின்‌போக்கு, நம்மாழ்வாரின்‌ நூல்களின்‌ போக்கைப்‌ பெரிதும்‌ ஒத்திருப்பதால்‌, அவற்றை “அங்கங்கள்‌” என்பர்‌,
மற்றவர்‌ நூல்களும்‌ அப்பொருள்களையே வெளிப்படுத்துபவையாய்‌ அவற்றை விளக்கம்‌ செய்வதற்கு உறுப்பாவதால்‌, அவை ‘உப அங்கங்கள்‌?–துணை உறுப்புகள்‌ எனப்‌ படுகின்றன

(வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)சூ. 43),

வேதம்‌ தோன்றிய பின்னரே அங்கம்‌ முதலியன தோன்றின என்றாலும்‌,

முதலும்‌ விளக்கமும்‌ ஒன்றாய் இயைந்து பொருள்‌ விளக்கம்‌ பெற்று உயிரோடு நிலவும்‌ ஒர் உறுப்பாய்‌ ஒளிர்வதனைஉள்ளத்தே கொண்டு இவ்வாறு விளக்குவது தவறன்று.
நம்மாழ்வார்‌ பாடல்களே முழு வடிவம்‌ தர வருகின்றன.அந்த உயிர்ப்பில் முன்னோர் விளக்கங்கள்‌ என்றுமுள உண்மையின்‌ விளக்கங்களாதலின்‌, ஒன்றாய்த்‌ திரண்டு திகழ்‌கின்றன.

எனவே, வரலாற்றோடு முரணுமாறு இல்லை. மரக்‌கட்டை. முன்னே அமைந்து கிடந்ததேனும்‌ செம்மை யாக்கப்‌
பட்ட மரத்தாலானமேசை முதலியன முன்னதான மரத்‌தினும்‌ சிறப்புப்‌ பெறுதலை இங்கு நினைதல்‌ தகும்‌.

தன்‌ தந்தையான எம்பெருமானிடத்தில்‌ நான்முகன்‌ வேதங்களை ஓதி உணர்ந்து, அவற்றைத் தன்‌ மூத்த புதல்வனான ருத்திரன்‌ முதலியவர்க்கு ஓதுவித்தான்‌.

அது போன்றே தம்‌ தந்தையான எம்பெருமானிடத்திலே ஆழ்வாரும்‌ வேதங்‌களைக்‌ கற்று அவற்றை மதுர கவிகள்‌ போல்வார்க்குப்‌ பயிற்றுவித்தார்‌.

வேதம்‌ முதலில்‌ ஓதுகின்றவர்களையிட்டுப்‌ பெயர்‌ கூறப்படும்‌. அதனால்‌, ஆழ்வார்‌ அருளிய வேதமும்‌
சடகோபன்‌ சொல்‌”? என்னும்‌ பெயர்‌ பெற்றது,

இருக்கு வேதமே சாமமாய்‌ விரிந்தது. அது போன்றே திருவிருத்தம்‌ நூறுமே திருவாய்மொழி ஆயிரமாய்‌ விரிந்தது.
சாம வேதத்திலும்‌ சாந்தோக்கியம்‌ என்னும்‌ பிரிவை ஓக்கும்‌ திருவாய்மொழி(சூ. 52, 53),

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து(சாமான்யம் ஆகாமல் -முதலிலே -சந்தோகன் என்று பிரித்து )
யாழ் பயில் கான ஸ்வரூபியை-பாலையாகி என்று விசேஷிக்கையாலே வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற
உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி சரம கதி முடிவாக தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி
மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்ன பாடுகையாலே இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..சூரணை-52-

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி-என்று கீழ் சொன்னதின்
கருத்தை ஆப்த உபதேச முகேன அறிவிக்கிறார் மேல் ..

புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே திரு சக்கரம் ஒத்து கால சக்கரச் செங்கோல் நடாவி ஜோதிஸ் சக்கர ஒளி சுருக்கி
அக்நீஷோ மீய தேஜோ அம்ருதத்துக்குக் ஊற்றும் மந்தேஹர்க்கு செம் தீயும் முக்தி மார்க்கத் தலை வாசலும்
கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே தண் தாமரை சுமக்க
தோள் வளையும் குழையும் திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழும் பொன் மேனியும்
செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற
செய்யாளான வித்தை யோடே அருக்கன் மேவின சதாத்யேய தேஜஸ்ஸின் சாம ரச உத்கான நாமம் உள்ளுறையான
ஆத்யந்தங்களாலே ஓர் ஆயிரமாம் அவற்றிலே ஒன்றை ஆயிரம் முகத்தினால் அருளின தீர்த்தம் போலே
தீர்த்தங்கள் ஆயிரமுமாக விஸ்தரிக்கிறார் என்று வேத குரு உபதேசம் .–சூரணை -53-

வேதத்திற்கு ஒப்பாதலே அன்றி வேதத்தை விளக்கும்‌ வேத உப ப்ரஹ்மணத்திற்கு ஒப்பான தன்மையும்‌ திருவாய்மொழிக்கு உண்டு (சூ. 54)

1-ஸ்வரூப குணங்களை விசதமாக்குகிற பஞ்சராத்ரம் போலேயும்
2-விபூதியை விசதமாக்குகிற புராணங்கள் போலேயும்
3-சேஷ்டிதங்களை விசதமாக்குகிற இதிகாசங்கள் போலேயும்
நீலபாரூப உக்தியைத் தெரியச் சொன்ன-இத்திருவாய் மொழியை வேத உப ப்ருஹ்மணம்-என்பர்கள்-சூரணை -54-

வேதத்தில்‌ இறைவனின்‌ இயல்பு, பண்பு, விபூதி(இருப்பு), செயல்‌ யாவும்‌ சேர்த்துச்‌ சொல்லப்பட்டிருக்கும்‌.
ஆனால்‌, இயல்பையும்‌ பண்பையும்‌ முதன்மையாகவும்‌ விரிவாகவும்‌ விளக்குவது வைணவாகமங்களுள்‌ ஒன்றானபாஞ்சராத்திரம்‌:
விபூதியை முதன்மையாக விளக்கி உரைப்‌பது புராணம்‌;
அவன்‌ செயல்களை முதன்மையாக விளக்குவது இதிகாசம்‌.
அதே போன்று இறைவனது திருவுருவ அழகினை விளக்குதலை முதன்மையாகக்‌ கொண்டது திருவாய்மொழி,
அவ்வகையில்‌ பாஞ்சர௱த்திரம்‌ முதலியன போன்று இதுவும்‌ ஒர்‌ உப பிரம்மணம்‌ ஆகும்‌. அந்த உப பிரம்மணங்கள்‌ (விளக்க நூல்கள்‌) யாவற்றிலும்‌ இதற்கு உள்ள ஏற்றம்‌ அவை அவை தோன்றிய முறையை நோக்க விளங்கும்‌. .

இருடிகளிலும்‌ ஆழ்வார்க்குள்ள சிறப்‌. பினை விளக்குவன சூர்ணைகள்‌ 58 முதல்‌ 62 முடிய உள்ள ஐந்தும்‌.

தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றி
அருளின பக்தியாலே உள் கலங்கி சோகித்து மூவாறு மாசம் மோஹித்து
வருந்தி ஏங்கி தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-சூரணை -58-

(பக்தியாலே உள் கலங்கி-தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-ஞானத்தாலே மேலே மேலே
தொடுப்பாரைப் போல் அன்றே -பக்திஸ்த ஞான விசேஷம் )

ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்
இன்னும் ஆசாபாச பத்தர் அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கார் செறிந்த நீறாடி
கட்கரிய அரும் பொருளை கண்ட போதே யாமுறாமை என்னும் படி இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று ..சூரணை -59-

(ஸ்வாத்யாயம் -வேதம் –ஓதி உணர்ந்தவர் கண்டமை மைப்பாலே –கண்ட காட்சியில் கலக்கத்தாலே -மயக்கத்தால் –
( வானமே நோக்கும் மையாக்கும் –திருவாய் -7-2-3-மையாக்கும்-மயங்கும் என்றபடி )இன்னும் ஆசாபாச பத்தர்-
அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கண்ட போதே இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று .)

அவர்களுக்கு காயோடு என்னும் இவையே தாரகாதிகள் ..
இவர்க்கு எல்லாம் கண்ணன் இறே-சூரணை -60-

அழுநீர் துளும்ப கடலும் மலையும் விசும்பும் துழாய் திரு மால் என்று எங்கே காண்கேன் என்னும் இவர் அலமாப்பு ,
அவர்களுக்கு புத்ர வ்யோகத்திலே ..சூரணை -61-

பல சாதன தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்-சூரணை -62-

நூலின்‌ சிறப்பை நோக்கும் போதும்‌ இத்திருவாய்மொழி அருளிச்‌ செயலின்‌ சாரமாய்‌ விளங்குவதை அறியலாம்‌.
திருமால்‌ பற்றிய செய்திகளன்றிப்‌ புறச்செய்தியொன்றும்‌ கலசாத தூய்மையது இந்நூல்‌.
இருடிகளின்‌ நூல்களில்‌குருவின்‌ நூலுக்கும்‌ சீடனின்‌ நூலுக்கும்‌ வேறுபாடுகள்‌ காணப்படும்‌.
ஆனால்‌, ஆழ்வார்களின்‌ பாடல்கள் யாவும்‌ ஒரே கருத்துக்‌ கொண்டவை: பேசிற்றே பேசும்‌ ஏக கண்டர்‌கள்‌ இவர்கள்‌.
எனவே,வேதங்களிலும்‌ உப ப்ரஹ்மணங்களிலும்‌ ஐயத்திற்கு இடமான பொருள்களை, இவர்‌ தம்‌ மொழியின்‌
துணை சொண்டு ஐயம்‌ திரிபின்றி உறுதி செய்தல் வேண்டும்‌.
இந்நூலுக்கு மாறுபட்டவை மனுவின்‌ நூலுக்கு மாறு பட்டவை கழிக்கப் படுமாறு போல ஓதுக்கப்படும்‌,
மூன்றாவதாக, வேதம்‌ பரத்துவம்‌ பற்றியும்‌ பாஞ்சராத்‌திர்ம்‌ (ஒதினாய்‌ நீதி ) வியூகம்‌ பற்றியும்‌ கேட்ட. மனு எனப்‌
பட்ட மனு முதலிய ஸ்மிருதிகள்‌ அந்தர்யாமியாய்‌ நின்ற பரவிய நிலை பற்றியும்‌
படுகதை எனப்பெற்ற இதிகாசங்கள்‌ அவதாரங்களைப் பற்றியும்‌ பேச எழுந்தது போன்று,
பண்ணிய தமிழில்‌ ஆக மூர்த்தியான அர்ச்சாவதாரம்‌ பேசப்பட்டது என்பது வேறும்‌ ஒரு முறை,
அதன்படி வேதமே திராவிட மாக்கப்பெற்றது நம்மாழ்வாரால்‌ என்பது உணர்த்தப்‌ பெற்றது. ‘
வேதம் வெறு நிலை பெற்றதால்‌ கலங்கிப்‌ பொருளை விளக்கும்‌ தன்மை குன்றப் பெறாதோ!” என்ற ஐயம்‌ எழுதல்‌ இயல்பு.
சொல்வோன்‌ சிறப்பால்‌ அது கலக்கமடைவதற்கு மாறாகத்‌ தெளிவு பெற்றது என்றும்‌, ஆழ்‌பொருளையும்‌ தெளிவுற விளக்கும்‌
இயல்பினது ஆயிற்‌றென்றும்‌ ஆற்றினை எடுத்துக்‌ காட்டாகக்‌ க௱ட்டி விளக்குகின்றார்‌ ஆரியர்‌.
மேலும்‌, அதனால்‌ (1) எல்லோருக்கும்‌ பயன்படுதல்‌, (2) எவரும்‌ எளிதில்‌ பயன்‌ கொள்ளுமாறு அமைதல்‌
ஆகிய இரண்டு பெரும் பயன்களும்‌ ஏற்பட்டன என்பது உதாரணங்களோடு விளக்கப்படுகின்றன (சூ. 72,73, 74).

மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-

( ஸ்ரீ லஷ்மீ நாதாக்ய சிந்து -சடரி பு ஜலத-ப்ராப்த காருண்ய நீரம் மேகம் பருகின சமுத்ராம்பு )

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ம்ருத் கடம் போல் அன்றே பொற்குடம்-சூரணை -73-

(பொன்-தங்கம் என்றவாறு – தங்கமும் மண்ணிலே வந்தது தானே ஆகவே கார்யம் இது மண் காரணம் )

பெரும் புறக் கடலும் சுருதி சாகரமும் அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில்
அயோக்யருக்கு சமைத்த மடுவும் சாய் கரகமும் மாண மேய சரமம்-சூரணை -74-

(பெரும் புறக் கடல் -இறைவன் -பிருஹத் பஹி சிந்து -திருக்கண்ண மங்கை -அபிஷேக வல்லித்தாயாய் -திருக்கல்யாணம் -தேன் வண்டுகள் தேவர்கள்-
அலைந்து நிற்கும் இடத்திலும் -வியூக நிலை -/ஆழ்ந்து நிற்கும் இடத்திலும் -உயிர்க்கு உயிராய் அந்தராமியாய் நிற்கும் நிலை
ஓடும் இடத்திலும் -அவதாரங்கள் /அயோக்யருக்கு சமைத்த மடு மேய சரமம்-அர்ச்சாவதாரம் -ப்ரமேய சரமம்
ஸ்ருதி சாகரம் -வேதக்கடல்
அலைத்து நிற்கும் இடத்திலும் -வியூகத்தை பேசும் பாஞ்சராத்ரம் /ஆழ்ந்து நிற்கும் இடத்திலும் -அந்தராமியைப் பேசும் மனு ஸ்ம்ருதிகள்
ஓடும் இடத்திலும் -அவதாரங்களை பேசும் இதிகாச புராணங்கள் /
அயோக்யருக்கு சமைத்த சாய் கரம்-அர்ச்சாவதாரத்தை அருளிச் செய்யும் திருவாயமொழி -பிரமாணங்களில் சரமம் –
சாய் கரகம் -சாய்க்கப்பட்ட கரகம் -திருக்காவேரி திரு உள்ளமா-தண்ணீர் வேண்டுமா -)

வேதங்களிலும்‌ உபநிடதங்களிலும்‌ புராண இதிகாசங்களிலும்‌ காணும்‌ அனைத்தும்‌ ஆழ்வார்‌ பாடல்களில்‌ இருப்பதை இவர்‌ விளக்கக்‌ காண்கிறோம்‌.
இறைவனிடத்தும்‌ அவன்‌ அடியவரிடத்தும்‌ அவர்களை அவன் பால்‌ சேர்ப்பிக்கும்‌ தமிழ்ப்‌ பாடலிடத்தும்‌
இவர்‌ கொண்டிருந்த காதல்‌ அளவிடற்கரியதென்பதும்‌ விளங்குகின்றது.

—————-

திருவாய்மொழியும்‌- கீதையும்‌? ஒற்றுமையும்‌ வேற்றுமையும்‌
கீதை: கண்ண பெருமானால்‌ அருச்சுனனுக்கு உரைக்கப்‌பட்ட நூல்‌) 18 அத்தியாயங்களை உடையது-பல நெறிகளையும்‌ அழகுற எடுத்து விளக்குவது; சுருங்கிய அளவினது?எல்லாச்‌ செய்திகளையும்‌ தன்னுட்‌கொண்டதாய்‌ விளங்குவது. ‘ வேதத்‌ததின்‌ முடிவு-சாரம்‌” என்று போற்றிக்‌ கொண்‌ பாடப்படுவது,
திருவாய்மொழி:
நீர்‌ பாலாய்‌, பால்நெய்யாய்‌,நெய்‌ அமுதமாய்‌, அதனால்‌ நிறைந்ததோர்‌ ஏரி கரை பொறாது நெளிந்து உடைபடும்‌.
அது போன்று ஆழ்வாருக்கு இறைவன்‌ ஞானம்‌ அருளினன்‌. அது பரபக்தி வடிவு பெற்றது. அப்‌ பரபக்தி , பரஞானமாயிற்று, பரஞானம்‌, பரம ஞானமாய்‌ மலர்ந்தது.
அமுதக்‌ கடலானது, தான்‌ உள்ள இடத்தை அழித்து விடாமல்‌ இருப்பதற்காக வெள்ளமெடுப்பது போன்று, ஆழ்வார்‌ உள்ளம்‌ வெடித்துவிடாமல்‌ இருப்பதற்காக, அவர்தம்‌ ஆர்வம்‌ பாடல்கள்‌ வடிவாய்‌ வெள்ளமிட்டு *அவாவில்‌ அந்தாதி: என்று பக்தியின்‌ வலிமையால்‌ பிறந்த
அந்தாதியான ஆயிரம்‌ என்ற சிறப்புடைய நூலாயிற்று

முன்னது தத்துவ ஞானத்தை அறிவுறுத்தும்‌ நூல்‌- பின்னது பக்தியை வெளியிடும்‌ நூல்‌ என்று பொதுவாக எண்ணத்‌ தோன்றும்‌.
திருவாய்மொழி பத்திநூல்‌ மட்டுமன்று? தத்துவ ஞானமும்‌ கூறுன்றது. என்பதனை ஒப்புமை கூறத்‌ தொடங்கும்‌
சூர்ணையின்‌ தொடக்கத்திலேயே ஆசிரியர்‌ உணர்த்துகின்றார்‌.

திருவாய்மொழியின்‌ முதல்‌ நடு இறுதி மூன்று இடங்களிலிருந்து மூன்று பாடலை எடுத்துக் காட்டி
ஆழ்வார்‌ இறைவனின்‌ இயல்பை நன்கு அறிந்தவர்‌ என்பது உணர்த்தப்‌பட்டுள்ளது.
மேலும்‌, ஆழ்வார்‌ ஒரு ஞானியார்‌, அவர்‌ சிந்தை செய்தது நிறைந்த ஞான மூர்த்தியை? அவர்‌ கண்டு கொண்டது ஞானப் பிரானை;
உபதேசம்‌ செய்தது (ஞானப்‌ பிரானை ஞானத்து வைம்மின்‌” என்பது. எனவே, திருவாய்‌மொழி ஒரு ஞான தூலும்‌ ஆகும்‌ என்பது காட்டப்படுகின்‌றது.

பின்னர்க்‌ கீழ்க்காணும்‌ 18 பொருள்களையும்‌ சொல்லுதலில்‌ இரண்டிற்கும்‌ ஒற்றுமை உள்ளமையை உணர்த்துகின்றார்‌. அவையாவன:
1-2-3. உண்மைப்‌ பொருளினைப்‌ பகுத்தறியும்‌ ஆராய்ச்சி,இறைவன்‌ உயிர்‌ இவற்றிடையே உள்ள வேறுபாடு,
உயிர்‌களுக்குள்‌ உள்ள வேறுபாடு, அறிவுள்ளவை அறிவற்றவைஇவற்றிடை. உள்ள வேறுபாடு.
4, உயிரின்‌ நிலைத்த இயல்பும்‌ உடலின்‌ அழியும்‌ தன்மையும்‌.-5, எல்லாவற்றையும்‌ நடத்துகின்ற இறைவனின்‌ தலைமைத்‌ தன்மை. தியாய மகத்துவம்‌.
6. அதே சமயத்தில்‌ அடியவர்‌ உள்ளத்தே உறைதலும்‌ அவதாரம்‌ எடுத்தலும்‌ ஆகிய அவனது எளிமைத்தன்மை.
7. ஏற்றுக் கொள்ளும்‌ போது யாவரையும்‌ ஒரே தன்மை யாகக்‌ கொள்ளும்‌ சமத்துவக்‌ தன்மை-8. ஆணவமாகிய குற்றம்‌-9. பொறிகளின்‌ வலிமை
10, பொறிகளினும்‌ மனத்திற்குள்ள முதன்மை-11. புலனடக்கும்‌ முறை-12. வழி படுவோரின்‌ வகை -13. அசுரர்‌ அமரர்‌ என்னும்‌ வேறுபாடு
14. இறைவன்‌ உலகு பல உடையனாதல்‌-15. இறைவனுடைய விசுவரூபக்‌ காட்சி-16, அங்கங்களோடு கூடிய பத்தி 17-18, இருவகையான பிரபத்தி
இப் பதினெட்டுப்‌ பொருள்‌ பற்றியும்‌ கீதையும்‌ பேசுகின்றது;-திருவாய்மொழியும்‌ செப்புகின்றது. ஓரே பொருளை ஒரே தன்மையாக விளக்கும்‌ இவ் விரு நூல்களும்‌ ஒத்தன என்பதற்குக்‌ தடை யாது இருக்க இயலும்‌?

1. ஆக்கியோன்‌ –தத்வ தர்ஸி அருளிச் செய்த ஏற்றம் திருவாய் மொழிக்கே

2. தோன்றிய நோக்கம்‌

கீதை, “ஐவரான பாண்டவர்‌ வெற்றிபெற வேண்டும்‌:நூற்றுவர்‌ மடியவேண்டும்‌”, என்ற நோக்கத்தோடு எழுந்‌தது.
திருவாய்மொழி, *ஊரும்‌ நாடும்‌ எல்லாம்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ நெஞ்சு தோற்கும்படியாகவும்‌, 24 தத்துவங்‌களான அசத்திலும்‌ 25 ஆம்‌
தத்துவமான ஆன்மாவின்‌ அனுபவத்திலும்‌ பற்று முடியும்படியாக அருளிச்‌ செய்யப்‌பட்டது.
இரண்டும்‌ வீடு பேறளிக்குமாயினும்‌, வீடு பேறளிக்‌ கும்‌ பொருட்டாக வன்றி வேறு ஒன்றின்‌ பொருட்டாகத்‌
தோன்றிய கீதையினும்‌ திருவாய்மொழி ஏற்றமுடைமை தெளிவு.

3. தொடக்க நிலை, முடிவு நிலை இவற்றால்‌ மாறுபட்டுள்ள சிறப்பு

கீதையில்‌ உபதேசம்‌ தொடங்கும்போது, “நான்‌ உன்னுடைய சிடன்‌: உன்னைச்‌ சரணடை.ந்த என்னை ஏவுக!” என்றுஅருச்சுனன்‌ பணிய,
அதனால்‌ உபதேசிப்பவனின்‌ விருப்‌போடு–உகப்போடு–கீதை தோன்றியது.
முடிவில்‌ அருச்‌சுனன்பால்‌ மன ஒருமைப்பாடு காணாமையால்‌, விருப்பக்‌ குறை ஏற்பட்டது, இதை அநு கீதையில்‌ காணலாம்‌.
திருவாய்மொழியிலோ என்னில்‌, பராமுகமாக விருப்பமற்றவராக-இருப்பாரை நோக்கி ஆழ்வாரின்‌ உபதேசம்‌ தொடங்குகின்றது.
அருள்‌ உள்ளம்‌ மிக்க அவர்‌, *ஏ பாவம்‌ பரமே??? (என்ன அருமைப்பாடு! இவர்கட்கு உபதேசம்‌ செய்ய நேர்ந்ததே!)
என்று வெறுப்போடு தொடங்குதலினால்‌, உபதேசம்‌ உகப்பின்றித்‌ தொடக்கம்‌ ஆயிற்று,
அறிவுரை கேட்டு உலகம்‌ முழுவதும்‌ திருந்திவிட்டபடியால்‌, யாவரையும்‌ கண்டு மகிழ்ந்து , *பொலிக! பொலிக! பொலிக!1 என்றுவாழ்த்துக்‌ கூறுகின்றார்‌.
“உற்றேன்‌ உகந்து? என்று உகப்‌போடு முடிச்கின்றார்‌.
சித்த தா்மத்தின்‌ அளவும்‌ உபதேசம்‌ பலன்‌ அளிக்கவில்லை கீதையில்‌? அருச்சுனன்‌ போர்‌ செய்யும்‌ நிலைமையே ஏற்பட்டது.
திருவாய்மொழியில்‌, பலன்‌ முழுவதும்‌ கை கூடிய . உகப்பு உளது. எனவே, இதுவும்‌ திருவாய்மொழியின்‌ ஏற்றத்துக்குரிய காரணங்களுள்‌ ஒன்றாதலில்‌ தடையில்லை.

4. கூறப்படும்‌ பொருளில்‌ மேன்மை
கீதையில்‌, “என்னையே சரணமாக அடைவாய்‌”? என்று சித்த தர்மத்தைப்‌ பற்றும்படி, விதித்தலே உள்ளது.
திருவாய்‌மொழியில்‌ *திருநாரணன் தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்து உய்மினோ!?1* என்று விதியும்‌,
“அடியேன்‌ உன்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே!’ என்று தன்‌ நடைமுறையும்‌ ஆகிய இரண்டும்‌ கூறப்பட்டுள்ளன.
எது சிறப்புடையது என்பதை எடுத்து ஆராயவும்‌ வேண்டுமோ?

5. பிரமாணமாக ஏற்றுக் கொள்ளப்படும்‌ பெருமை
“ஆதியம்‌ பகவன்‌ வணக்குடைத்‌ தவதெறி:* என்றும்‌,
*ஞானவிதி ? என்றும்‌,
“பண்டே. பரமன்‌ பணித்த பணி வகை? என்றும்‌ வரும்‌ பாசுரப்‌ பகுதிகளில்‌ ஆழ்வார்‌ கீதையைப்‌ பிரமாணமாகக்‌ கொள்ளுகிறார்‌.
அதனால்‌, கீதைக்கு உயர்வு வருகின்றது. புத்த முனியாயும்‌ கபிலமுனியாயும்‌ நின்று இறைவன்‌ அருளிய நூல்களும்‌ வைதிகரால்‌ ஏற்றுக்‌ கொள்ளப் படாமையால்‌, அவை பிரமாணமல்லவாயின.
அவை போற்றப்படுதல்‌ இல்லை. *கீதைக்குப்‌ பெருமை ஆழ்வார்‌ அதனை ஏற்றுக் கொண்டமையாலே”, என வேண்டும்‌.
ஆழ்வார்‌ செயலுக்கு வேறு பிறர்‌ ஏற்றுக் கொள்ள வேண்டு மென்ற நியதி இல்லை. எனவே, இந்த வகையில்‌ நோக்கும்‌ போதும்‌ திருவாய்மொழியின்‌ ஏற்றம்‌ விளங்கும்‌.

————-

சாதி முதலியன பற்றிய விளக்கம்‌
சாதி ஆச்சிரம இகைரகளில்‌ பேதிக்கும்‌ தருமங்கள்‌ போலே” என்பது 31ஆம்‌ சூர்ணையில்‌ வரும்‌ ஒர்‌ உவமை,
இதனால்‌ பிராமணர்‌, க்ஷத்திரியர்‌, வைசியர்‌, சூத்திரர்‌ என்னும்‌ நான்கு சாதி வேறுபாட்டையும்‌, பிரம சரியம்‌
இல்லறம்‌ வானப் பிரக்தம்‌ துறவறம்‌ என்னும்‌ நான்கு ஆஸ்ரமங்களையும்‌,
ஜோதிஷ்டோமம்‌ முதலிய தீஷைகளையும்‌ இந் நூலாசிரியர்‌ உடன்படுகின்றார்‌:

அந்த அந்தச்‌ சாதி ஆஸ்ரமங்கட்குக்‌ கூறப்படும்‌ தருமங்கள்‌ அவரவர்களாலே செய்ய வேண்டுபவை என்ற வேதக்‌கருத்தினை இவர்‌ ஏற்றுக் கொள்ளுகின்றார்‌ என்பது தெளியலாம்‌.
பிராமணியம்‌ என்றும்‌ வைண்வத்துவம்‌ என்றும்‌ இருநிலைகளை (ஸூ . 37) இவர்‌ குறிப்பிடுகின்றார்‌. இவ் விரண்டிலும்‌ வைண்வக்துவமே முக்கியமானது என்றும்‌, வைணவத்துவம்‌ பெறாத போது பிராமணியம்‌ ஐயப்படும்‌ தன்மையதாய் விடும்‌ என்றும்‌ கூறுகின்றார்‌ (ஸூ . 38).
இதனால்‌, திருமால்‌ வழிபாட்‌டி.ற்கு முதன்மை வழங்குவது தெரிய வரும்‌. “பிறப்பால்‌ வந்த சாதியால்‌ உயர்வு த௱ழ்வு இல்லை?
திருமால்‌ அடியவர்‌,அடியார்‌ அல்லாதவர்‌ என்பதாலேயே உயர்வு தாழ்வு அமைகின்றன” என்று ஆழ்வார்கள்‌ கூறுவதையே இவ்வாசிரியர்‌ தம்‌ கொள்கையாக வற்புறுத்தி உரைக்‌கின்றார்‌.
வைணவத்துவம்‌ கைகூடுவது *சந்தங்களாயிரமும்‌ அறியக்‌ கற்று வல்லாரானால்‌? (ஸூ 37), என்பதால்‌ தமிழில்‌ அமைந்த திருவாய்மொழியான சந்தங்களாயிரத்திற்கும்‌ இவர்‌ தரும்‌ ஏற்றம்‌ விளங்கும்‌,
இஃதுணராதாரை *அயற்சதுப்பேதிமார்‌* என்கின்றார்‌ ஆசிரியர்‌. *சதுர்வேதி” என்பது நால்‌ வேதம்‌ உணர்ந்தாரைக்‌ குறிக்கும்‌ சொல்‌
“சதுப்பேதி” என்பது, அதன்‌ திரிபே: தமிழ்‌ நால்‌ வேதம்‌ அறியாதவர்‌ *அயல்‌ சதுப்‌பேதிமார்‌” எனப்பட்டனர்‌. இத்தொடர்‌ ஓரளவு இகழ்ச்சிப்‌ பொருளில்‌ வழங்கப் பட்டிருத்தலும்‌ கூடும்‌,

ஆழ்வார்‌ பன்னிருவருள்‌ பல சாதியினரும்‌ உளர்‌. அவர்‌களில்‌ தலைவராம்‌ நம்மாழ்வார்‌ நாலாம்‌ வருணத்திற்‌ பிறந்‌தவர்‌?
அவர்‌ தம்‌ பிறவியை ஆராயலாகாது என்பதை இவ்‌வாசிரியர்‌ வற்புறுத்துகின்றார்‌. இன்ப மாரியான ஆழ்வார்‌ தம்‌ பிறவியை ஆராய்வது
இல்லங்களில்‌ வைத்து வணங்கும்‌ இன்பப்‌ பொருளான இறைவன்‌ உரு எந்த உலோகத்தால்‌ ஆனது?” என்று ஆராய்வதை ஓக்கும்‌,
மற்றும்‌ இறைவன்‌ மொழி என்று சொல்லும்படி. இருக்கின்ற இன்ப வாழ்வான திருவாய்‌ மொழி எந்த மொழியில்‌ அமைந்தது என்று ஆராய்‌வதையும்‌ அது ஒக்கும்‌,
இம்‌ மூன்று செயல்களும்‌ மிகப்‌ பாவமானவை என்பதும்‌ செய்யக் தகாதன என்பதும்‌ அவர்‌ அறுதியிட்டு உரைக்கும்‌ கருத்தாம்‌.
இச்செயல்‌, ஒருவன்‌ தன்னைப்‌ பெற்ற தாயின்‌ பிறப்பு உறுப்பினை ஆராய்வதனை ஒத்ததாகும்‌ என்று வரும்‌ வட,மொழிச்‌ சுலோகம்‌ ஒன்று இங்கு எடுத்துக்‌ காட்டப்படுகின்றது

நாலாம்‌ வருணத்தவரான ஆழ்வாரல்‌ செய்யப்‌பட்டது என்ற காரணத்தால்‌ அவர்‌ தம்‌ பாடல்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட.வில்லை யானால்‌,
மீனவர்‌ குலத்து உதித்த மச்சகந்தியின்‌ மைந்தரான வியாசர்‌ கூறிய ஐந்தாம்‌ வேதமான பாரதம்‌ தள்ளத்தக்கது ஆதல்‌ வேண்டும்‌.
அவ்வாறே இடை.க்குலத்துதிக்த கண்ணன்‌ கூறிய கீதை என்ற அறு மூன்று அத்தியாயங்களைக்‌ கொண்ட உபறிஷக்‌ நூலும்‌ தள்ளத்‌ தக்கதாதல்‌ வேண்டும்‌ (ஸூ . 76).
இவை ஒருவருக்கும்‌ உடன்பாடல்ல. இரு நூல்களும்‌ யாவராலும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்‌ பட்டவையே. எனவே, ஆழ்வார்‌ பாடல்களை மட்டும்‌ ஏற்றுக்‌ கொள்ளாமை, ஒவ்வாத செயலாம்‌.
நூல்‌ செய்த ஆசிரியனது பிறவி அடிப்படையில்‌ அதை ஏற்றுக்‌ கொள்ளுதலும்‌ தள்ளுதலும்‌ செய்யத் தகாதன என்பது போதரும்‌.

வியாசர்‌, கண்ணன்‌ ஆகிய இவர்‌ தம்‌ பிறப்பிலும்‌ ஆழ்‌வார் தம்‌ பிறப்பு சிறந்ததாதலை அவர்களைப்‌ பெற்ற தாய்மார்‌, அவர்‌ பிறப்பிடம்‌,
அவர்க்குரிய ஆறு, துறை, ஊர்‌ இவை முதலியவற்றின்‌ வேறுபாடுகளை எடுத்துக்காட்டி. அழகுற விளக்குகின்றார்‌ ஆசிரியர்‌ (ஸூ 77, 78, 79, 80).

தேவர்க்கும்‌ தேவனான இறைவன்‌, உலகினைக்‌ காத்தற்‌ பொருட்டு மானிடனாய்‌ அவதரித்தான்‌. அவன்‌ இராமாவதாரத்தில்‌ இராவணனைக்‌ கொன்றான்‌. அப்போது பிரமன்‌ முதலான தேவர்கள்‌ அவனைப்‌ பார்த்து, “நீவிர்‌ நாராயணராகிய தேவர்‌” என்று புகழ்ந்தார்கள்‌. அதற்கு அவன்‌, நான்‌ என்னை மனிதனெனவே நினைக்கின்றேன்‌? தயரதன்‌ பிள்ளை யாகிய இராமன்‌ நான்‌”” என்று விளக்கினான்‌.
கோவர்த்தன மலையைக்‌ தூக்கத்‌ தங்களைக்‌ காத்த வியக்கத்தக்க செயலைக்‌ கண்ட ஆயர்கள்‌ பலவாறு அவனைப்‌ புகழ ,
அதைப்‌ பொறாமல்‌, யான்‌ தேவனும்‌, கந்தருவனும்‌, இயக்கனும்‌, அசுரனும்‌ அல்லேன்‌?
இடையர்களுக்கு உறவிளனாய்ப்‌ பிறந்த என்னை வேறாக நினைக்கவும்‌ கூடாது” என்று அறிவுறுத்தினாள்‌
தேவனான அவன்‌, உலகில்‌ பிறந்ததனாலேயே. உயர்ந்தவனாகின்றான்
பிறவிகளினாலேயே அவன்‌ குணங்கள்‌ ஒளி பெறுகின்றன, ஆகையால்‌ பிராமணக்‌ தன்மைக்கு எல்லை நிலமான பிரமனாய்ப்‌ பிறத்தலும்‌ அடிமைத்‌ தன்மைக்குப்‌ பகையான ஆணவத்திற்கு ஏதுவாகையாலே அஃது ஆன்மாவுக்கு இழிவைச்‌ செய்வது என்று இகழத் தக்கதாகும்‌.
இறைவனுக்குச்‌ செய்யும்‌ தொண்டின்‌ சுவை அறிந்தவர்க்குப்‌ பண்டை நாளாலே” (9-2-1) என்னும்‌ திருவாய்மொழியில்‌’ கூறப்படும்‌ செருக்கற்றதும்‌ இறைவனது கைங்கரியத்திற்கு ஏற்றதுமான குடிப்பிறவியே ஆன்மாவிற்கு ஒளியைச்‌ செய்வது.-அதுவே பரமபதத்தில்‌ மேற்கொள்ளும்‌ உடல்‌ போன்றதுமாகும்‌.
ஆழ்வாரது பிறவியால்‌ உலகிற்கு ஏற்பட்ட நன்மைகள்‌ மிகப் பலவாம்‌ (ஸூ 82, 83), இறைவன்‌, சாபத்தால்‌ இழிவடை.ந்த யதுகுலத்தை உயர்த்த ஆயர்குலத்தில்‌
கோபாலனாய்ப்‌ பிறந்தான்‌. பிரளய வெள்ளத்தில்‌ மூழ்கிய பூமியை மேலே கொணரக்‌ கேழல்‌ ஆனான்‌.
அவ்வாறே,“நாங்கள்‌ உயர் குலத்தவர்கள்‌” என்ற பற்றுதலாலே கீழ்மை யடைந்தவர்களை அந் நிலையிலிருந்து மாறி உயர்வடையச்‌ செய்வதற்காகவே
அகங்காரத்திற்குக்‌ காரணமல்லாததான நாலாவது வருணத்தில்‌ ஆம்வார்‌ பிறந்தார்‌.
“பிறவியால்‌ வரும்‌ அகங்காரம்‌ கூடரது’ என்பதை இது தெளிவுற உணர்த்தும்‌.
“பிறப்பில்‌ உயர்வு தாழ்வு இல்லை? அவ்வாறு கொள்ளலாகாது” என்பதைப்‌ பல எடுத்துக் காட்டுகள்‌ மூலம்‌
ஆசிரியர்‌ விளக்குகின்றார்‌ (ஸூ 85). அவற்றை மூறையே காண்போம்‌:

(1) என்‌ அடியவர் பால்‌ அன்பும்‌, என்‌ வழிபாட்டில்‌ உகப்பும்‌, தானே என்னை வழிபடுதலும்‌, என்பக்கல்‌ ஆரவார மற்றிருக்கையும்‌, என்‌ கதையைக்‌ கேட்பதில்‌ ஈடுபாடும்‌,
பத்தியின்‌ காரியமான குரல்‌ தழுதழுத்தலும்‌, கண்ணீர்‌ பெருக்குதலும்‌, மயிர்க்குச்செறிவதும்‌, இடையறாது என்னை நினைப்பதும்‌,
என்னிடமிருந்து வேறு பயன்களைக்‌ கொள்ளாமையும்‌ ஆகிய இவ்வெட்டுவகைப்‌ பத்திகள்‌ எந்த மிலேச்‌சனிட.மிருக்கிறதோ”!* என்கிறபடி
இழிகுலத்தவனானாலும்‌ இந்த எட்டுவிதப்‌ பத்தியை உடையனானால்‌ அவன்‌ உத்தமப்‌ பிராமணன்‌- முனிவன்‌: செல்வம்‌ மிக்கவன்‌. அவனே துறவி-
அவனே பண்டிதன்‌-அவனுக்கு ஞானம்‌ அளிக்கத்தக்கது, அவனிடமிருந்து ஞானம்‌ கொள்ளத்‌ தக்கது,
அவனும்‌ என்னைப்‌ போற்றுவது போன்றே போற்றத்‌ தக்கவன்‌, என்று கூறியவாறு அவன்‌ வழிபடப்பெறுவான்‌.
“அவனுடைய திருவடிகளைக் கழுவிய நீரானது ஒப்பற்ற தீர்த்தம்‌? அவன்‌ அமுது செய்த மிச்சில்‌ மிகக்‌ தூயது?” என்று கொள்ளப்படும்‌.
இது இறைவன்‌ அருளிய திருமுகப்பாசுரம்‌. இக்கருத்தே பொருந்த ஆழ்வார்கள்‌ அருளிய பாசுரங்களும்‌ இங்கு நினைவு கொள்ளத் தக்கன:

பழுதிலா ஒழுக லாற்றுப்‌ பல சதுப்‌ பேதிமார்கள்‌ இழி குலத்‌தவர்க்ளேனும்‌, எம்‌ அடி யார்க ளாகில்‌, தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌ (திருமாலை,– 42)
“போனகம்‌ செய்த சேடம்‌ தருவரேல்‌ புனிதமன்றே-(திருமாலை,– 41)
““கடல்‌ மல்லைத்‌ தலசயனத்‌ துறைவாரைக்‌ கொண்டாடும்‌ நெஞ்சுடையார்‌ அவரெங்கள்‌ குல தெய்வமே”? (பெ, தி 2-6-4)

(2) விசுவாமித்திரர்‌ இராம பிரானைத்‌ துயில்‌ எழுப்பினார்‌?பெரியாழ்வார்‌. ஆயரேற்றை அம்மம்‌ (முலை) உண்ணத்‌ துயில்‌ எழுப்பினார்‌;
தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அரங்கத்‌ தம்மானைத்‌ துயில்‌ உணர்த்தினார்‌. இவர்களோடு நிலைக்கச்‌ சொல்லும்‌ தன்மையரான
நான்கு சாதியிலும்‌ இழிந்த நலமொன்றுமில்லாத சண்டாளராய்ப்‌ பிறந்து, திருங்குறுங்குடி, தம்பியைத்‌ திருப்பள்ளி உணர்த்தியும்‌,
“சக்கரத்‌ தண்ணல்‌ ம்ணிவண்ணற்கு ஆள்‌” என்று பயன்‌ கருதாது பாடுதல்‌ தொழிலில்‌ சேர்ந்தும்‌,
“எம்‌ தொழுகுலம்‌ தாங்களே: (3-7-8) என்று நம்மாழ்வார்‌ போன்றவர்களாலே ஆதரிக்கும்‌ ஏற்றத்‌ தைப்‌ பெற்றும்‌ வாழ்ந்த அடியவர்‌ நம்பாடுவான்‌ என்பவர்‌.
சரவ குலத்தில் பிறந்தவன்‌ “வேடன்‌” சோம சர்மா என்ற பிராமண்ன்‌, அவன்‌ தான்‌ தொடங்கிய வேள்வியை முறையாக நடத்தி முடிப்பதற்குமுன்‌ இறந்து போயினன்‌,
அதனால்‌ பிரமராட்சதனாய்ப்‌ பிறந்து அலைந்து திரிந்தான்‌,
அவன்‌ சண்டாளனான நம்பாடுவானைப்‌ பார்த்து, “நீ உன்‌ பாட்டின்‌ பெருமையால்‌ இப்பாவத்திலிருந்து என்னை மீட்கும்‌ தகுதி யுடையவன்‌,” என்று சொல்லிச்‌ சரணடைந்தான்‌.
கைசிகம்‌ என்னும்‌ பண்ணின்‌ பலத்தால்‌ இந்தப்‌ பாவத்திலிருந்தும்‌ விடுவிக்கின்றேன்‌* என்று பாடி, பிராமணனுடைய வேள்விக்‌ குறையால்‌ வந்த
இராட்சகக்‌ தன்மையைப்‌ போக்கி யாகத்தை முடித்தார்‌*நம்பாடுவான்‌’ என்னும்‌ இழிகுலப்‌பிறப்புடைய பக்தர்‌, இது கைசிக புராணத்தால்‌* அறிவது,

(3) வேடர்‌ குலத்தில்‌ பிறந்தவராகையாலே “ஏழை: ஏதவன்‌ கீழ் மகன்‌”” என்னும்படி. பிறவி, தொழில்‌, அறிவுஇவற்றால்‌. இழிந்தவரான குகப்பெருமாள்‌,
அயோத்தியா்‌ கோமானாகையால்‌ இவை எல்லாவற்றாலும்‌ உயர்ந்தவராயிருக்கின்ற அளவுமன்றிக்கே தருமத்தோடு ஒன்றின தன்மையாலே
“வானோர்‌ தலைமகனா:யிருக்கின்ற இராம பிரானுக்கு.“உகந்த தோழன்‌ நீ* என்று சொல்லும்படி ஓத்து தோழனானான்‌.
இராம பிரானே அவனைப்‌ பார்த்து “உம்பி எம்பி,* என்கையாலே இவர்‌ தம்பியான இலக்குவனுக்கு முன்‌ பிறந்தவரானார்‌.
இவ்வாறு தம்மை ஏற்றுக்கொண்ட அன்று இரவே, பெருமாள்‌ பள்ளிகொண்டிருந்த காலை அவர்‌ அழகில்‌: ஈடுபட்டுக்‌
கண்ணுறக்கமற்றுக்‌ கையும்‌ வில்லுமாய்க்‌ காத்து தின்றார்‌ இளையபெருமாள்‌.
பின்னர்ப்‌ பரதன்‌ பிரிவுத்துன்பத்‌துடன்‌ சித்திரகூடத்திற்கு வந்தபோது தம்பியான இளைய பெருமாளுடை.ய அடிமைத்‌ தன்மையின்‌ சிறப்பியல்பை அவனுக்கு எடுத்துரைத்தார்‌ குகப்பெருமாள்‌.
இப்படித்‌ தாழ்குலத்திலே பிறந்தும்‌, தன்‌ பத்தியின்‌ ஈடுபாட்டின்‌ சிறப்பாலே இராமபிரானுடைய இஷ்வாகு வமிசத்திலே ஒருவர்‌ ஆனார்‌ குகப்பெருமான்‌.
இது திருமங்கை மன்னர்‌ பாடலிற்‌ கண்டதாகும்‌.-கவிச்சக்கரவர்த்தியாரான கம்பரும்‌ இவ்வாறே கூறுவர்‌

4) “தூது வாரைத்தின்‌ வாயில்‌ மொழிந்து” என்கிற:படி. பிராட்டிக்குத்‌ தூது மொழியை அனுமாவிடம்‌ சொல்லியனுப்பிய இராமபிரான்‌,
தசரதன்‌ பிள்ளையான இராமபிரான்‌ சபரியினால்‌ வழிபடப்பட்டான்‌.–வான்மீகம்‌ கூறுகிறபடி சபரி கையில்‌ நல்ல விருந்துண்டான்‌.
பாண்ட வருக்குத்‌ தூது சென்ற கண்ணன்‌, வீடுமர்‌ துரோணர்‌ முதலியவர்‌ மாளிகைகளை விட்டு, “பயனை எதிர்‌ பாராததால்‌
தூய்மையுடையதும்‌ குணமுடையதுமான விதுரனுடைய அன்னத்தை உண்டான்‌,” என்று பாரதம்‌ கூறுகிறபடி
பிறவியில்‌ பெருமையில்லாக விதுரர்‌ திருமானியையில்‌ குணத்தோடு கூடிய விருந்துண்டான்‌.
தூது வந்த குரங்கான திருவடி, “சீதாதேவியார்‌ பார்க்கப்பட்டாள்‌!” என்ற பிரியத்‌தாலே
“உதவி விரும்பிச்‌ சுக்ரீவனும்‌ அரசை வீடணனும்‌ ஒரு பயனும்‌ கருதாது அனுமானும்‌ கைங்கரியம்‌ செய்தனர்‌?
ஆதலால்‌, அனுமானுடன்‌ உண்பது தக்கது”* என்று
எண்ணி” “கோதில்‌ வாய்மையினாயொடும்‌ உடனே உண்பன்‌ நான்‌”? என்றபடி பெருமாள்‌ அனுமானுடன்‌ உணவுண்டார்‌.
கீழ்க்குலம்‌, குரங்கு, காற்றின்‌ மகன்‌ என்று அவன்‌ விலக்கப்‌ படவில்லை. இவ்வெடுத்துக்‌ காட்டுகள்‌ பலகாலம்‌பலராலும்‌ எடுத்து ஆளப்படுவதுண்டு.
அவர்கள்‌ கண்ணன்‌ இராமன்‌ முதலானோர்‌. பெருமையையும்‌ எளிமையையும்‌ உணர்த்த எடுத்தாள்வர்‌.
இவ்வாசிரியர்‌ குகன்‌, சபரி, விதுரன்‌, அனுமன்‌ என்னும்‌ இவர்‌ தம்‌ குலம்‌ இகழப்படாது, இவர்‌ தம்‌ பத்தியால்‌
இவர்கள்‌ மற்றவர்களினும்‌ உயர்வாக மதிக்கப்‌ பட்டமையை விளக்க இவற்றை எடுத்துக்‌ காட்டுவது அறிதற்பாலது.

(5) ஒரு பிறவியில்‌ இரு பிறவி ஆனார்‌ இருவர்‌; கண்ணபிரானும்‌ திருமழிசைப்பிரானும்‌.- அவர் தம்‌ செய்தி சொல்லப்‌ படுகின்றது இங்கு.
யதுகுலத்தில்‌ பிறந்து ஆயர்‌ குலத்தில்‌ அக்குலத்தவனைப் போல வளர்ந்த கண்ணனுக்குத்‌ தருமர்‌ தாம்‌ செய்த இராசசூய யாகத்தில்‌ முதல்‌ தாம்பூலம்‌ வழங்க மரியாதை செய்தார்‌.
ருஷியின்‌ மகனாய்ப்‌ பிறந்து மற்றோரிடத்திலே பொருந்தாதாரிடத்திலே பிரம்பன்‌ குடியிலே அந்த இனத்தராய்‌ வளர்ந்த திருமழிசைப்பிரானுக்குப்‌
பெரும்புலியூரில்‌ உள்ள பிராமண உத்தமர்கள்‌, தாங்கள்‌ செய்த யாகத்தில்‌ முதல்‌ மரியாதை கொடுத்தார்கள்‌.

(6) பாண்டவர்‌ ஐவரில்‌ முதல்வரான தரும புத்திரர் விதுரர்க்கு அவர்‌ தம்‌ ஞானமிகுதியைக்‌ கண்டும்‌ அசரீரி
மொழி நினைத்தும்‌ ஐயப் படாமல்‌ இறுதிக் கடன்‌ செய்தார்‌.
தசரதர்‌ மக்கள்‌” நால்வரில்‌ முதல்வரான பெருமாள்‌ உடன்‌ பிறந்த இளையபெருமாள்‌ உடன்‌ இருக்கச்‌ செய்தேயும்‌
அவரை செய்யச்‌ சொல்லாது தானே தம்பொருட்டு உயிர்விட்ட, கழுகரசனான சடாயுவுக்கு இறுதிக்கடன்‌ செய்தார்‌.
பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி, பெரியதிருமலை நம்பி என்னும்‌ மூவர்‌ ஆளவந்தாருக்குச்‌ சீடர்‌, இம்மூவரும்‌ உடையவர்க்கு ஆசாரியராகும்‌ பேறு பெற்றவர்‌.
இம்மூவரில்‌ முதல்வரான பெரியதம்பி, கீழ்க்குலத்திற்‌ பிறந்தவரான மாறனேரிநம்பிக்கு ஆளவந்தார்‌ கட்டளையின் படியே இறுதிக் கடன்‌ செய்தார்‌.
இவை பிறவி காரணமாக நல்லோர்‌ விடப்படாமல்‌ பெருமை செய்‌யப்படுவர்‌ என்பதை வலியுறுத்தும்‌,

7) புஷ்ய மண்டபம்‌ என்னும்‌ *சிந்துபூ மகிழும்‌,” திருவேங்கட மலையில்‌ குயவளாய்ப்‌ பிறந்து பானைகள்‌ செய்யும்‌ போது மிகுந்ததாகிய
மண்ணைப்‌ பூலாகத்‌ திருத்திப்‌ பணிப்‌ பூவும் கையுமாகத்‌ திருவேங்கட.நாகனை வழிபட்ட குறும்பறுத்த நம்பியை
அந்தாட்டின்‌ அரசனான தொண்டைமான்‌ சக்ரவர்த்‌தியர்‌ பின்பற்றினார்‌.
தியாகமண்டபம்‌ என்னும்‌ கச்சிப்பதியில்‌ திருவால வட்டமும்‌ கையுமாய்ப்‌ பேரருளாளனுக்கு அந்தரங்கராய்‌ நின்ற திருக்கச்சி நம்பிகளாகிய
குலச்சிறப்பில்லாதாரை வைதிக உத்தமரான உடையவர்‌ பின்பற்றினார்‌.
போக மண்டபமான திருவரங்கம்‌ டெரிய கோவிலில்‌ வீணையும்‌ கையுமாய்ப்‌ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கராய்‌
வாழ்ந்த திருப்பாணாழ்வாரை உலோக சாரங்க மாமுனிவர்‌ என்னும்‌ அந்தணார்‌ சார்ந்து ஒழுகினர்‌.
இம்முறைகளை அறிபவர்‌ எது உயர் பிறவி எது தாழ்‌ பிறவி என்பதை நன்கு அறிவர்‌.

(8) யாகம்‌ எனப்படும்‌ திருவாராதனத்தில்‌ பிள்ளை உறங்கா வில்லிதாசர்‌ என்பவரைத்‌ தொடுதலால்‌ தமக்கு உடல்‌ தூய்மை அமையுமென்று கொண்டார்‌?
அநுயாகம்‌”எனப்படும்‌ பிரசாதம்‌ கொள்ளுதலில்‌ பிள்ளை யேறு திருவுடை தாசர்‌ கரம்படுதலால்‌, அன்னம்‌ தூய்மை பெறுகின்றதென்று கொண்டார்‌.
நம்பிள்ளை . வடக்குத்‌ திருவீதியில்‌ புதிதாகக்‌ கட்டிய தம்‌ வீட்டில்‌ குடிபுகும்போது பிள்ளை வான மா மலைத்‌
தாசர்‌ நடத்தலாலே தம்‌ புது வீட்டைத்‌ தூய்மையுடைய தாக்கிக்கொண்டார்‌ நடுவில்‌ திருவீதிப்‌ பிள்ளைபட்டர்‌.
இந்த ஞானம்‌ மிக்க பெரியோர்களின்‌ ஒழுக்க முறையை அறிந்தவர்‌களுக்கே உலகில்‌ எந்தப்‌ பிறவி உயர்ந்தது, எப்‌ பிறவி தாழ்ந்தது என்பது விளங்கும்‌,
மற்றவர்‌ உயர்வு தாழ்வு என்று கொள்வன தவறுடையன என்பது இதனால்‌ விளங்கும்‌-

——————-

வருணம்‌, ஆச்சிரமம்‌, ஞானம்‌, அநுட்டானம்‌-இவற்றின்‌ உயர்வும்‌ தாழ்வும்‌

இறைவனுக்கு அடிமைத்‌ தொழில்‌ செய்வதேஆன்மாவிற்குரிய சிறப்பியல்‌–இலக்கணம்‌ என்பதை அறிந்து,
அதற்கு ஏற்பக்‌ கொள்ளத்‌ தக்கனவும்‌ தள்ளத்‌ தக்கனவும்‌ பகுத்தறி கின்ற அறிவினைப்‌ பெறாதவர்‌, உயர்‌ பிறவி எது? தாழ்‌ பிறவி எது? என்பதை அறியார்‌.
இறைவனோடு தொடர்பற்றது எதுவாயினும்‌, அது இழிவானது. “எந்த மறையவன்‌ நான்கு வேதங்கள்‌ அறிந்தவனாயினும்‌, வாசுதேவனான இறையவனை
அறியாமலிருக்கின்றானோ,
அவனே வேதங்களாகிற சுமையால்‌ அழுந்துகின்ற பிராமணக்‌ கழுதை”, என்றபடி
வேதத்தின்‌ உட்பொருளான இறைவனை அறியாதவன்‌, வேதம்‌ அறிந்‌திருப்பினும்‌, குங்குமத்தின்‌ மணம்‌ அறியாத குங்குமம்‌ சுமந்த கழுதைக்கு ஒப்பாவன்‌?
அவன்‌ வருணம்‌ உயர்ந்தது அன்று.“மன்னரே! நாய்‌ தின்னும்‌ புலையனும்‌, திருமால்‌ பத்தனானால்‌, பிராமணனிலும்‌ மேலானவன்‌;
துறவியேயாயி னும்‌ திருமால்‌ பத்தியில்லாவிடில்‌ நாய்‌ தின்னும்‌ புலையவினும்‌ கீழானவன்‌,’- என்றபடி, இறுதி ஆச்சிரமத்தைச்‌ சேர்ந்த வனானாலும்‌-
இறைபத்தி இல்லாதவன்‌ புலையனினும்‌ கீழ்மையன்‌ என்பதை ஆச்சிரமம்‌ தன்னளவில்‌ உயர்ந்ததன்று என்பது விளக்கப்படுகின்றது.
எக்கருமம்‌ உலக பந்தத்தின்‌ பொருட்டு இல்லையோ அதுவே நற்கருமம்‌; எந்த வித்தை மோட்சத்தின்பொருட்டு ஆகின்ற்தோ, அதுதான்‌ வித்தை;
பொருள்‌ இன்பங்களின்‌ பொருட்டுச்‌ செய்கிற வியாபாரமானது, உடலுழைப்பே ஆகின்றது.
வேறு வித்தையானது திறமான இந்திர ஜால வித்தை போலப்‌ பயனற்றது!3” என்பதனால்‌,
“இறைவனைப்‌ பொருளாக உடைமையால்‌ மோட்சத்தை வேண்டுவதே வித்தை? அல்லாதது செருப்புத்‌ தைக்கக்‌ கற்றதைப்‌ போன்றது,” என்று வித்தையின்‌ தன்மை விளக்கப்படுகின்றது.
“எந்த நாராயண்னுடைய்‌ திருவடி.த் தாமரையிணைகளின்‌ நினைவில்லாமல்‌ செய்யும்‌ வேதப்‌ பயிற்சி காட்டில்‌ அழுதல்‌ போன்றதோ,
வேதத்திற்‌ கூறப்படும்‌ நாட் கடனாய விரதங்கள்‌ தசை குறைதலை மட்டும்‌ பலனாக உடையனவோ, குளம்‌ வெட்டல்‌ முதலியவெல்லாம்‌ சாம்பலில்‌ செய்த ஆகுதியோ,
தீர்ததங்களில்‌ நீராடல்‌ யானை முழகுவது போன்றதோ அந்த நாராயணன்‌ என்ற தேவன்‌ வெல்க- என்றபடி, இறைவன்‌ நினைவு இல்லாதவர்களுடைய தருமங்களும்‌ ஒமுகலாறுகளும்‌ சாம்பலில்‌ இட்ட ஆகுதி போன்ற பயனற்றவை ஆம்‌.

“எல்லோருடைய பாவங்களையும்‌ போக்குவனவும்‌ நலங்‌களைக்‌ கொடுப்பனவும்‌ ஆன கண்ணபிரானுடைய குணம்‌ செயல்‌
அவதாரங்களுடன்‌ சேர்ந்‌த சொற்கள்‌ உலகை வாழச்‌ செய்கின்‌ றன? ஒளிபெறச்‌ செய்கின்றன? தூயதாக்குகின்‌றன?
அவைகளால்‌ விடப்பட்டவை பிணத்திற்குச்‌ செய்யப்பட்ட அலங்காரங்களே என்று கருதப்படுகின்றன!”?? என்றும்‌,
“திருமால்‌ பத்தி யில்லாதவனுடை.ய வேதமோதுதலும்‌ நூல் அறிவும்‌ ஜபமும்‌ தவமும்‌ முதலானவை, உயிரற்ற உடலுக்கு
உலகத்தவர்‌ மகிழும் பொருட்டுச்‌ செய்த அழகு போன்‌றவை என்றும்‌ சொல்லுகிறபடியே இறைவன்‌ தொடர்பற்ற பேச்சுகளும்‌, இறைபத்தியில்லாதவனுடைய கல்வி ஒழுக்கங்‌களும்‌ பிணத்திற்குச்‌ செய்த அலங்காரங்கள்‌ போன்றவை என்பதாம்‌.

இறைவன்‌, அவதாரங்களால்‌ தேவனும்‌ மனிதனும்‌ ஆகின்றான்‌? இறையடியார்களும்‌ சாதியினாலும்‌ நடவடிக்கைகளாலும்‌ குணங்களாலும்‌ அப்படியே ஆகின்றார்கள்‌.
இதில்‌ ஒரு குறையுமில்லை. ஆனால்‌, இப்படி. அவதரிப்பது எல்லா வகையிலும்‌ உயர்ந்தது; எதனாலென்றால்‌, அது இவ்வுலகின்‌ நன்மைக்காக நடைபெறுவதால்‌. இறைவன்‌
அடியவர்களல்‌லாத பிறரிடத்தில்‌ உள்ள கல்வியாலும்‌ தொழில்‌ திறனாலும்‌ ஆய மேன்மை, விதவைக்குச்‌ செய்த அலங்காரம்‌ போலே நிந்தனைக்குரியதாம்‌
.”இறைவன்‌ தொடர்பே திருமாங்கல்‌யம்‌ போன்றது, அது இல்லாதபோது அவர்களது மேன்மையை விதவையின்‌ அலங்காரம்‌ போன்றது என்று மேலோர்‌ இகழ்வர்‌.
ஆகவே, இறைவன்‌ தொடர்புடைய வருணம்‌, ஆச்சிரமம்‌, கல்வி, செயல்‌ ஆகியவைகளே உயர்வுடையன என்பதும்‌,
அத் தொடர்பில்லாத நிலையில்‌ உயர்வுடையதாக மக்களால்‌ எண்ணப்படும்‌ வருணம்‌ முதலானவை
தாழ்வுடை.யனவாகவே மேலோர்களால்‌ கொள்ளப்படும்‌ என்பதையும்‌, அவர்‌ உயர்வால்‌ பயனில்லை; அவை இகழத் தக்கவை என்பதையும்‌ ஆசிரியர்‌ ஐயத்திற்கு இடமின்றி விளக்குகிறார்‌.
“உயர்ந்த பிறவி எது?” என்பதன்‌ விளக்கம்‌ ஆன்மாவின்‌ இறப்பியல்பான இறைவனுக்கு அடிமை செய்யும்‌ தன்மைக்கு ஏற்றதான பிறவி எதுவாயினும்‌,
அதுவே உயர்ந்த பிறவி என்பதைப்‌ பெரியோர்களின்‌ செயல்‌களையும்‌ பேச்சுகளையும்‌ சுட்டிக்‌ காட்டி விளக்குகிறார்‌ ஆசிரியர்

இறைவன்‌ கண்வளர்தற்கு ஏற்றதான அரவணையாயும்‌, அவன்‌ ஏறி ஊர்தற்கு ஏற்றதான கருடப்‌ புள்ளாயும்‌, அவன்‌ விரும்பி அணிதற்குத்‌
தகுதியான திருத்துழாயாயு மிருச்கும்‌ விலங்கு பறவை தாவரப்‌ பிறவிகளைப்‌ பெருமக்களாகிய நித்திய ஸூரிகள்‌ இறைவனுக்குத்‌ தொண்டு செய்யும்‌ இச்சையாலே மேற்கொண்டார்கள்‌.
“உயிர்களுக்குத்‌ தலைவனான பிரம்மனுடைய அல்லது பசுபதியான சிவனுடைய செல்வங்களை நான்‌ விரும்பவில்லை?
யமுனைக்‌ கரையில்‌. கடம்ப மரமோ, குருந்த மரமோ ஆகச்‌ கட்வேன்‌”,?” என்கிறபடியும்‌?
“எந்த மகளிர்‌ விடமுடியாத தங்கள்‌ சுற்றத்தார்களையும்‌ பெரியோர்‌ சென்ற நெறியையும்‌ துறந்து வேதங்களால்‌ தேடப்படுபவனான
கண்ணன்‌ சென்ற வழியைப்‌ பின்‌ தொடர்ந்தனரோ, அம் மகளிரின்‌ பாத தூளிபட்ட பிருந்தாவனத்திலுள்ள செடி. கொடிகளில்‌ ஏதேனும்‌ ஒன்றாகக்‌ கடவேன்‌”, என்றபடியும்‌:
“கோனேரி வாழும்‌ குருகாய்ப்‌ பிறப்பேனே!”?*
“மீனாய்ப்‌ பிறக்கும்‌ விதியுடையே னாவேனே!’**
“*செண்பகமாய்‌ நிற்கும்‌ திருவுடையே னாவேனே!:”?
“தம்பகமாய்‌ நிற்கும்‌ தவமுடையே னாவேனே!**
எம்பெருமான்‌ பொன்‌ மலைமேல்‌ ஏதேனும்‌ ஆவேனே!*?*
என்று திருமலையோடு தொடர்புடைய பறவை, விலங்கு பிறவிகளில்‌ ஏதேனுமொன்றாவேனாக என்றார்‌ குலசேகரர்‌.
உன்‌ தொண்டு: புரிதலுண்டாகிய இன்பாமொன்றிலேயே விருப்புடையவர்களுடைய திருமாளிகைகளிலே புழுவாகிய பிறவியேனும்‌ எனக்கு உண்டாகட்டும்‌”?(ஆள. ஸ்‌. 55) என்றபடி,
இறைவனுக்குத்‌ தொண்டிலேயே இன்பம்‌ கொள்ளும்‌ விருப்புடையரான ஸ்ரீவைணவர்‌திருமாளிசைகளிலே
பிறப்பும்‌ இறப்பும்‌ ஆம்படியான புழுப்‌பிறவியே எனக்கு உண்பாக வேண்டும்‌”, என்கிறார்‌ ஆளவந்தார்‌.
இவ்வாறு இறைவன்‌ அடிபடவும்‌, அவனை அணைத்தார்‌ அடியில்‌ பொடிபடவம்‌ அவன்‌ உகந்தருளின நிலத்திலேயாதல்‌
அவனடியார்‌ விரும்பிய நிலத்திலேயாதல்‌ வாழுதற்குப்‌ பிறக்கிற புள்‌ விலங்கு தாவரப்‌ பிறவிகளில்‌
பெரியோர்களான சுகமுனிவர்‌, உத்தவர்‌, குலசேகரப்‌ பெருமாள்‌, ஆளவந்தார்‌ வேண்டினார்கள்‌ என்பது தெரிகின்றது.

விளக்கம்‌
உலகில்‌ விலங்கு பறவை தாவரப்‌ பிறவிகள்‌ ‘மொழியாலும்‌ உடலாலும்‌ ‘ஏற்படுகின்ற குற்றங்களின்‌ பலனாக வருவன என்று நூல்கள்‌ சொல்லுகின்றன.
ஆனால்‌, இங்கு இறைவன்‌ விருப்பப்படி. அவனுக்குப்‌ பயன்ப்டத்தக்க இப்‌பிறவிகளை நித்திய ஸூரிகள்‌ விரும்பி ஏற்பார்கள்‌ என்றும்‌,
கைங்கரியத்தை இன்பமென அறிகின்றவர்‌, முக்தி விரும்புவோர்‌ இறைவன்‌ தொடர்பும்‌ அவனடியார்‌ தொடர்பும்‌ கொண்ட. விலங்கு தாவரப்‌ பிறப்புகளை வேண்டுவார்கள்‌ என்பதும்‌ கூறப்படுகின்றது.
ஆகையால்‌, கைங்கரியம்‌ செய்‌தற்கு ஒத்த பிறவியே உயர்ந்தது என்பது விளங்கும்‌. மரம்‌, பறவை, புழு முதலானவற்றை மக்களினும்‌ உயர்வுடையன என மதிக்க முடியாது தான்‌, எனினும்‌ அவையும்‌ மாண்புடை. யனவாகின்றன
இறைபணியில்‌ ஈடுபடும்போது, உலகத்துப்‌ பிறவிகளில்‌ உள்ள. உயர்வு தாழ்வுகள்‌ பொருட்படுத்தத்‌ தகாதவை; அதுபற்றி இழிவில்லை என்பதை உணர்த்துவதே இதன்‌ கருத்தாம்‌.

வருணம்‌ முதலானவை மாறும்‌ தன்மையனவா?இறைவனுக்கு அடிமை செய்தலே ஆன்மாவின்‌ சிறப்பி’யல்‌.-அதற்குப்‌ பகையான ஆணவத்திற்குக்‌ காரணமரக உள்ளமையால்‌ வருணம்‌ விடத்தக்கது.
கருமத்திற்கு உட்‌பட்டதாகையால்‌ காரணத்திற்கு ஏற்ப மாறுபடுவதாயிருக்‌கின்றது அது. எனவே முத்தி விரும்புவோரான பெரியோர்‌ வருணம்‌ முதலியவற்றை ஆதரியார்‌.
வருணம்‌ மாறுபடும்‌ தன்மையது.என்பது கீழ்வரும்‌ நிகழ்ச்சியால்‌ நன்கு விளங்கும்‌:
அரச குலத்திற்‌ பிறந்த விசுவாமித்திரன்‌ பிரமரிஷி ஆக விரும்பினன்‌: நெடுங்காலம்‌ தவம்‌ செய்து, வசிட்டன்‌ உதவி யால்‌ மறைமுனிவன்‌ ஆயினன்‌.
அவ்வசிட்டனை அவமதித்த காரணத்தால்‌, இட்சுவாகு குல மன்னனான திரிசங்குவை வசிட்டன்‌ புதல்வர்‌ சண்டாளனாமாறு சாபமிட்டனர்‌.

அத்திரிசங்கு மன்னனை அவன்‌ அணிந்திருந்த வாரையே வேள்வி உறுப்பாகக்‌ கொண்டு வேட்டுத்‌ தன்‌ தவ வலிமையால்‌ விசுவாமித்திரன்‌ துறக்கமேறப்‌ பண்ணினன்‌.
இவை புராணம்‌ கூறும்‌ செய்திகள்‌,
ஒர்‌ அரசன்‌ நல்வினைச்‌ சிறப்பால்‌ அந்த உடவிலேயே மறை முனிவன்‌ ஆயினன்‌-வேறு ஓர்‌ அரசன்‌, தன்‌ தீ வினை வலிமையால்‌ அந்த உடலோடே. சண்டாளனாயினன்‌?: மற்றும்‌ அரசத்‌ தன்மை போய்‌ பிரம ரிஷியானவன்‌ அரசகோலம்‌ நீங்கச்‌ சண்டாளன்‌ வடிவாய்‌ நிற்கின்றவனை “அந்தக்‌ கோலத்‌தோடே வேள்வி செய்து துறக்கத்திலே ஏற்றினான்‌: இச்செயல்‌களால்‌ வருணம்‌ கருமத்திற்கு ஏற்ப மாறும்‌ தன்மையது என்பது குன்றிலிட்ட விளக்குப்‌ போன்று தெளிவாம்‌.(ஸூ . 89).

இறைபத்தி உடையவரே உயர்ந்தவர்‌; பிறப்பு உயர்வு தாழ்வு-அங்கில்லை

“இறை பத்தர்‌ சூத்திரர்‌ அல்லர்‌? அடியவரான பிராமணரென நினைக்கத்‌ தக்கவர்‌?
எல்லா வருணங்களிலும்‌ எவர்‌ இறை பத்தி இல்லாதவரோ, அவரே சூத்திரர்‌,”?* (பாரத–ஆச்வ.-..118-32) என்பதால்‌ இறைபத்தி இல்லாதவர்‌ விடத்‌தக்கவர்‌ என்பது விளங்கும்‌. ்‌
“மன்னனே” தாய்‌ இறைச்சி தின்பவனும்‌, திருமாலிடம்‌ பத்தி உடையவன்‌ ஆனால்‌, பிராமணனைக் காட்டிலும்‌ மேலானவன்‌,- என வரும்‌ பிரமாணத்தால்‌,
இறைவனிடம்‌ செலுத்‌தும்‌ பத்தியான செல்வமுடையவர்களே கொள்ளத்‌தக்கவர்கள்‌.
இவ்வுண்மை அறிபவர்கள்‌, பரமபதத்தை அடைவார்கள்‌. அப்படி அல்லாது : அடியவர்‌ பிறப்பை ஆராய்பவர்‌ *அமரவோ ரங்கமாறும்‌??? என்ற பாட்டின்‌ நிலையை
வைணவர்களைப்‌ பிறப்பு முதலியன காட்டி இகழ்வாராகில்‌, அவர்கள்‌ வேறு காலத்தில்‌ வேறு நாட்டில்‌ அன்றிக்கே அப்போதே அவ்விடத்திலேயே, தாம்‌ உயர்‌ பிறப்பினராயினும்‌ சண்டாளரேயாவர்‌.

இவ்வாறு பெரியார்களுடைய ஓழுகலாற்றையும்‌ நூல்கள்‌ கூறும்‌ செய்திகளையும்‌ எடுத்துக்‌ காட்டிப்‌ பிறவி காரணமாக
எவ்விதக்‌ குறைபாடும்‌ எவர்க்கும்‌ இல்லை: பிறவியால்‌ உயர்வு தாழ்வு பாராட்டலாகாது? தெய்வ பத்தி யாவரையும்‌ உயர்‌வுடையராக்கும்‌ என்று சாதிபற்றி உயர்வு தாழ்வு இன்மையையும்‌ கடவுள்‌ முன்னிலையில்‌
யாவரும்‌. ஒரு தன்மையரே என்‌பதையும்‌ அழுத்தம்‌ திருத்தமாக இவ்வாசிரியர்‌ விளக்குகிறார்‌.

———————-

ஆழ்வார்‌ கூறும்‌ சமயக் கொள்கைகளும்‌ தத்துவ விளக்கமும்‌

பகுதி 1–ஆழ்வார்‌ நெறியும்‌ பிறநெறியும்‌

இந்நூலின்‌ முதல்‌ அத்தியாயங்களில்‌ தத்துவங்களும்‌-மதமும்‌ பற்றிய முக்கியமான கருத்துகள்‌ விளக்கப்படுகின்றன.
பிற் பகுதியிலும்‌ ஆங்காங்கே வரும்‌ பல பகுதிகள்‌ தத்துவத்தை உணரத்‌ துணை செய்வனவாகும்‌,
சிறப்பாக ஆழ்வார்‌ அருளிச்செயல்களும்‌, முன்‌ ஆசிரியர்களுரைத்த வேத உபநிஷதங்களும்‌ இதிகாச புராணங்களும்‌
ஆயஇவற்றில்‌ காணப்படும்‌ கருத்துகளின்படியே தத்துவம்‌ கூறப்‌ படுகிறது. வேத உபநிடதங்களில்‌ ஐயப்பாடுகள்‌ தோன்றும்‌ போது
ஆழ்வார்களின்‌ அருளிச் செயலைக் கொண்டு அவை உறுதி செய்யப்படும்‌, இவற்றிற்கு மாறான கருத்துகள்‌ இருப்‌பின்‌, அவை தவிர்க்கப்பட்டு ஆழ்வார்தம்‌ கருத்துகளே ஏற்றுக்‌: கொள்ளப்படும்‌.
அதுவே, இராமானுசர்‌ மேற்கண்ட நெறி என்பதைச்‌ ஸூர்ணை 64, 65, 66 விளக்கும்‌,

“இறைவன்‌ உளன்‌; மனிதர்‌ இருக்கின்றனர்‌,” என்னும்‌ செய்தி முதற் ஸூர்ணேயிலேயே சொல்லப்படுகிறது,
இறைவன்‌ கருணை வடிவினன்‌; மனிதர்‌ இருளாற்‌ சூழப்பட்டுள்ளனர்‌ என்னும்‌ இரண்டு கருத்துகளும்‌ அதிலேயே குறிக்கப்படுகின்றன.
இவர்கள்‌ இருளை -விட்டு நீங்க வேண்டும்‌;-இறைவனைக்‌ காண்‌ வேண்டும்‌ அடைய வேண்டும்‌.
அதற்குக்‌ காரணமானது அவனது கருணையே என்பதும்‌ மிகவும்‌ அழுத்தமாக முதற்‌ ஸூர்ணையிலேயே சொல்லப்படுகின்றது,
அக் கருணையினால்‌ மக்கள்‌ அவனைப்‌ பற்றுதலும்‌ இருள்‌ உலகை விடுதலும்‌ செய்ய–பகுத்தறிய–அவன்‌ சாத்‌திரங்களை அருளினான்‌.

உயிர்கள்‌–மனிதர்கள்‌–அநாதியாக அசித்தோடு சம்‌பந்தம்‌ கொண்டதால்‌, அவித்தை பெற்றார்கள்‌. அதனால்‌ புண்ணியமும்‌ பாவமும்‌ ஆன செயல்கள்‌ புரிந்தனர்‌:
அதனால்‌, இருள்‌ எனப்பட்ட. அஞ்ஞானம்‌ நிரம்பிய உலகில்‌ பிறந்தனர்‌;-அது காரணமாக இராஜச தாமத குணங்களாற்‌ பற்றப்‌ பட்டனர்‌:
அதனால்‌, அவர்கள்‌ ஐம்பொருள்‌ (இறைவன்‌ நிலை, உயிர்நிலை, பகை நிலை, உபாயநிலை, மெய்ந்நிலை ஆகிய ஐந்து அறிவு) இல்லாதவர்களானார்கள்‌?
எனவே, பல இன்பங்களிலே அகப்பட்டு எல்லையற்ற துன்பங்களுக்கு இருப்பிடமான சம்சாரத்திலே (பிறந்து இறத்தலிலே) அழுந்தினார்கள்‌.
இத்‌தகைய துக்கம்‌ விடத்தக்கது என்பதை அறிதல் வேண்டும்‌.-உயிர்களுக்கு அநாதியாக நாராயண்னோடு சம்பந்தம்‌ உண்டு.
இறைவனோடு கொண்ட அந்தச்‌ சம்பந்தத்தால்‌ இறைவனுக்கு உயிர்கள்பால்‌ அருள்‌ புரிந்த சிந்தை (செளஹார்தம்‌) உண்டு.
அதனால்‌, அவன்‌ அருள்‌ புரிவன்‌.-அவ்வருளால்‌ அவன்‌ தூய்மையைச்‌ செய்யும்‌ கடைக்கண்ணாற்‌ காண்பன்‌.
அதன்‌ பயனாகச்‌ ௪த்துவ குண மிகுதி ஏற்படும்‌,-அதன்‌ பயனாக உண்மை அறிவு ஏற்பட்டு ஐம்பொருள்‌ அறிவு உண்டாகும்‌,
அதனைப்‌ பெற்ற காரணத்தால்‌ பேரின்பமாகிய (வீடாய்‌) சுகம்‌ கிட்டும்‌, இச் சுகம்‌ பற்றத் தக்கது என்பதை அறிதல்‌ வேண்டும்‌.

மேற்‌ கூறிய அசித்துச்‌ சம்பந்தம்‌ தன்னோடே. சேர்ந்த மாணிக்கத்தை ஒளியத்தின்று உரு அழித்துத்‌ தன்னைப் போலவே ஆக்கும்‌ சிட்டம்‌ போலத் தானும்‌
ஆன்மாவின்‌ சீர்மை பாராதே தன்னைப்‌ போலாம்படி அதன்‌ அறிவு சிறிதும்‌ இல்‌லாதபடி தின்று, அதற்கு ஒரு முடிவை உண்டாக்கும்‌.
இறைவனோடு உள்ள சம்பந்தம்‌, எதேனும்‌ ஒரு புழுவைக்‌ கொண்டு வந்து வைத்து ஊதித்‌ தன்னை ஓத்ததாக்கும்‌ வேட்டுவேளான்‌ என்ற குளவியைப்போல,
பொருளல்லாததாய்க்‌ கிடக்கிற ஆன்மாவின்‌ சிறுமையைப்‌ பாராதே இயல்பாகவே எங்கும்‌ பரந்துள்ள தன்னோடு ஒத்ததன்மையை
ஞானம்‌ வழியாகப்‌ பெறும்படி தன்னிறமாக வூதி வாழ்வாகிற சத்தை (இருப்பை)உண்டாக்கும்‌.

இந்த இரு சம்பந்தங்களும்‌ ஆன்மாவிற்கு அநாதியாகவே இருக்கின்றன என்றால்‌, ஆன்மா எந்தச்‌ சம்பந்தத்தைப்
பற்றி எவ்வாறு கடைத் தேறுவது என்னும்‌ கேள்வி எழுகின்றது.
இதில்‌ அசித்தின்‌ சம்பந்தம்‌ ஆன்மாவிற்கு இயல்பாகவே உள்ளதன்று. அது பின்னர்‌ வந்து ஆன்மாவைப்‌ பற்றிக்‌’கொண்ட.தே .
“பெருந்துயர்‌ இடும்பையில்‌ பிறந்து கூடினேன்‌”, என்பதால்‌ அது விளங்கும்‌. அது எல்லாம்‌ வல்ல இறைவன்‌
போக்க, வாசனையும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌ தன்மையது.
ஆனால்‌, இறைவனோடு கொண்ட. உறவு, “உறவேல்‌ நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது”, (திருப்பாவை 28) என்றபடி
உயிர்‌களாலும்‌ இறைவனாலும்‌ அவ்லது இருவர்‌ தம்‌ உடன்பாட்டாலும் ஒழிக்க இயலாத ஒரு தொடர்பாகும்‌.
எனவே, அது தாய்க்கும்‌ அவள்‌ குழவிக்கும்‌ உள்ளது போன்ற நிலையான சம்பந்தமாம்‌.

“ஆனால்‌, பின்னர்‌ வந்த அசித்துச்‌ சம்பந்தத்தை அநாதி என்று மேலே சொல்லியது ஏன்‌?” என்று கேட்கலாம்‌.
பின்னர்‌ வந்தது என்பது உண்மையானாலும்‌, அது என்று வந்தது என்பது தெரியாமையால்‌, “அதையும்‌” என்று கூறினர்‌ என்பதை அறிதல்‌ வேண்டும்‌.
இந்த இறைவனோடு கொண்ட தொடர்பு தான்‌ அவன்‌ சாஸ்த்திரங்கள்‌–வேதங்கள்‌–அருளியதந்கு ஏது என்பது அறியத்தக்கது.
நாராயணன்‌ என்பதற்கு எல்லா உயிர்‌களுக்கும்‌ .: பிற பொருள்களுக்கும்‌ இருப்பிடமானவன்‌ என்பதும்‌ எல்லாப்‌ பொருள்களிலும்‌ உறைபவன்‌ என்பதும்‌ ஆகிய இரு பொருளும்‌ உண்டு. -இக்கருத்தை,
அறிகிலேன்‌ தன்னுள்‌ அனைத்துலகம்‌ நிற்க-நெறிமையால்‌ தானும்‌ அவற்றுள் நிற்‌கும் பிரான்‌ (9- 6- 4) என்னும்‌ நம்மாழ்வார்‌. வாக்கில்‌ காணலாம்‌.
இந்தக்‌“குடல்‌ துடக்கு” தான்‌–அயந சம்பற்தந்தான்‌–அவன்‌ சாஸ்த்திரம்‌ அருளக்‌ காரணம்‌. அப்படியானால்‌, அவன்‌ உயிர்களை மோக்ஷம்‌ பெறுவிக்கும்‌ சாஸ்த்திரங்களை
மட்டுமருளாமல்‌, கட்டுவிக்கும்‌ பந்தக சாத்திரங்களையும்‌ அருளியது “ஏன்‌,” என்னும்‌ கேள்வி எழுகின்றது.

அதுவும்‌ அவன்‌? மிக்க அன்பாலே வாச்ஸல்யத்தாலே–செய்தான்‌.
அன்பு மிக்க தாயானவள்‌ தன்‌ பிள்ளை, மண்‌ தின்னப்‌ போனால்‌ அதைத்‌ தடுத்தால்‌ அதன்‌ முகம்‌ வாடும்மென்று அதைத்‌ தின்ன விட்டுவிட்டுப்‌
பின்‌ அம்‌ மண்ணால்‌ கேடு வாராதவாறு வேறு மருந்து கொடுத்து நோயைச்‌ சரி செய்வாள்‌. அதே போன்று, இறைவனும்‌ எல்லா உயிர்களுக்கும்‌ தாயினும்‌
சாலப்பரிந்த தன்மையன்‌ ஆகையினால்‌, உயிர்களின்‌ சுவைக்குத்‌ தக்கவாறு பந்தத்தையும்‌ காட்டி, அதை அறுக்கும்‌ மருந்தினையும்‌ காட்டுகின்றானாம்‌.
இவ்வாறு செய்வது முறைப்படி. அவர்களை ஈடேற்றுவதற்கு ஆன வழி. விடுதலை (மோக்ஷம்‌) உண்‌டாக்கும்‌ சாஸ்த்திரத்தை மட்டும்‌ காட்டினால்‌,
அறிவற்றுப்‌ பொருள்‌ நாட்டம்‌ கொண்டு, பிற உயிர்களுக்கு இன்னா செய்யும்‌ தன்மையருக்கு அவற்றின்பால்‌ சுவை தோன்றாது.
அவர்களையும்‌ வளைத்துப்‌ பிடிப்பதற்காக அவர்களுக்குச்‌-சுவை தரும்‌ பிற உயிர்களுக்குத்‌ துன்பம்‌ தரும்‌ சாயலில்‌ அமைந்த அபிசார கருமத்தை (ஏவல்‌ வினைகளை)ச்‌
செய்‌யும்படி விதித்து, அவற்றால்‌ பலன்‌ ஏற்படும்போது அவருக்குச்‌ ஸாஸ்த்ரம் உண்டு என்கிற நம்பிக்கை (ஆஸ்திக்யம்‌) ஏற்படுகின்றது.

பின்பு சுவர்க்கம்‌ முதலிய உறுதிப்‌ பொருள்களைப்‌ பெறுதற்கேதுவான கருவிகளை விதித்து, அவ்வழியால்‌
“ப்ரக்ருதி ஆன்மா” என்பவற்றைப்‌ பகுத்துணரும்‌ அறிவை உண்டாக்கியும்‌,
அப்படி பகுத்தறிவு பிறந்த பின்பு ஆன்‌மாவின்‌ இன்பத்திற்கு வழிகாட்டி, அவ்வழியாலே பிறர்க்கு அடிமையாயிருக்தலை நீக்க ,
அதன்‌ பிறகு இறை இன்பத்தின்‌ தனிச் சிறப்பையும்‌, அதனை அடையும்‌ கருவியான பக்தியையும்‌ காட்டி, அவ்வழியாலே தன்னுரிமை நீக்கத்தை உண்‌டாக்கியும்‌, அதன்பின்‌ வேறு வழிகளில்‌ சென்று செயற்‌கருமை முதலியவற்றால்‌ அவர்கள்‌ தளருமளவில்‌ தன்‌ முயற்சி நீக்கமான சரணாகதி அடை.தலிலே செலுத்தி, ஆன்மாவின்‌ உண்மை இயல்பானதும்‌, அதற்கு உரிமையுடையதுமான
“அவனுக்கு உடைமையாதல்‌” (பாரதந்தியம்‌) பான்மையை உண்டாக்கியும்‌ இப்படி முறையாக ஈடேற்றுவதற்காகவே
இறைவன்‌ பந்தக சஈஸ்த்திரங்களையும்‌-பற்று விளைக்கும்‌ சாஸ்த்‌திரங்களையும்‌ அருளினன்‌. _சூ.–15)

இறைவன்‌ கருணை காரணமாக இவற்றை வெளியிட்‌டாலும்‌, உயிர்கட்கு இவற்றைக்‌ கற்கப்‌ பல தகுதிகள்‌ வேண்டும்‌?
அவை யெல்லாம்‌ பெற்றுக்‌ கற்பது அரிது என்று எண்ணி, எளிய வழி ஒன்றையும்‌ காட்டியருளினன்‌.
வேதங்‌களின்‌ சாரம்‌. உபநிடதங்கள்‌ அவற்றின்‌ தெளிந்த சஈரம்‌ நாராயண அனுவாகம்‌. அதன்‌ மிகத்‌ தெளிந்த சாரம்‌, காயத்திரி மந்திரம்‌. அதன்‌ முகுலில்‌ சொல்லப்படுவது பிரணவம்‌. அதுவே வேதத்தின்‌ சுருக்கம்‌.
“மாதவன்‌ பேர்‌ சொல்லுவதே வேதத்தின்‌ சுருக்கு”.
பிரணவ மந்திரத்தை தெய்வ வண்டாகய இறைவன்‌ வேதச்‌சாகைகளிலிருந்து தேனெடுப்பது போல எடுத்தும்‌ அன்னமாய்‌ அவன்‌ நீரிலே கலந்து கடக்கும்‌ பாலைப்‌ பிரித்தெடுப்பதுபோல எல்லோருக்கும்‌ தக்கதான பாலான இதனை எடுத்தும்‌,
தேவா்‌களைக்‌ காத்தலின்பொருட்டுப்‌ பாற்கடலிலிருந்து அமுது மெடுத்தவாறு நால்வேதக்‌ கடலிலிருந்து பிறப்பை அஞ்சுபவர்‌களைக்‌ காக்க இதனை எடுத்தும்‌,
தன்‌ பேரருளையே பரவும்படி பண்ணினன்‌. எனவே, சாஸ்த்திரங்களைவிடத்‌ திருமந்திரம்‌ சிறந்தது என்பதனைக்‌ கீழ்க்‌ காணுமாறு காட்டுகின்றார்‌.

சாஸ்த்திர நெறியும்‌ திருமந்திர நெறியும்‌

1-சாஸ்த்திரம்‌ முனிவர்‌ வழியாக வெளிப்படுத்‌தியது.–திருமந்திரம் அவனே அருளியது
2-உடலிலே நோக்குடையது.-ஆன்ம வடிவிலே நோக்குடையது
3-பழுதிலாத்‌ தகுதியுடையரே பின்பற்றற்குரியர்‌.-மனமுடைய அனைவரும்‌ பின்பற்றத்‌ தகுதியுடையர்‌
4-சாஸ்த்திரமறிந்தவர்‌ தெப்பத்தின்‌ துணை கொண்டு கையால்‌ நீந்திக்‌ கடல்‌ கடக்கும்‌ நிலையினர்‌.
சாரமறிந்தவர்‌ தெப்பத்தின்‌ விட்‌.ட.த்திலேறிக்‌ கரை குறுகும்‌ காலம்‌ கருதிக் கொண்டிருக்‌கும்‌ தன்மையர்‌,
5-இதற்குக்‌ காரணம்‌, இவர்கள்‌ ஆன்மாவின்‌ இயல்பை அறிந்‌துள்ள வகையே.
இதற்குக்‌ காரணம்‌, ஆன்மாவை இவர்‌கள்‌ அறிய வந்த வகையே
6-ஆன்மா உடலினும்‌ வேறுபட்டதாய்‌, அறிதல்‌ தன்மை-செய்தல்‌ தன்மை அனுபவிக்கும்‌ தன்மைகளை உடையதாயிருக்குமென்று அறியும்போது அத்நிலைமை
உண்டாகும்‌.
எல்லாம்‌ அழிபவை என்ற உணர்வைப்‌ பெறும்படி இறைவன்‌ செய்ய, அவனுக்கு உடைமையாதலும்‌-அநுபவப்‌ பொருளாதலும்‌
ஆகியவையே ஆன்‌மாவின்‌ உண்மைத்‌தன்மை என உணரும்போது இந்‌ நிலைமை ஏற்படும்‌.
7–இவ்வுணர்வு இவர்களை உமாயத்‌தைச்‌ செய்தலில்‌ மூட்டும்‌.
இவ்வுணர்வு அதுபவப்‌ பொருளான்‌ தன்னைப்‌ பெற இறைவனே முயல வேண்டும்‌ என்று எண்ணி உபாயமாக ஒன்றும்‌ செய்யாது நிலையராக்கும்‌, .-
8-இவர்களுடைய கருமங்கள்‌ உண்‌மை யற்றதும்‌ நிலை யற்றதுமான சாதிக்கு ஏற்ப அமைந்திருக்கும்‌,
இவர்களது செயல்‌ உண்மையானதும்‌ நிலயானதுமான அடிமைத்‌ தன்‌மைக்கு ஏற்ற கைங்‌கரியமாய்‌ இருக்கும்‌.
9-இவர்களைக்‌ கருமம்‌ செய்யத்‌ தூண்டுவது சாஸ்த்திரமாகும்‌,
இவர்களைக்‌ கைங்‌கரியம்‌ செய்யத்‌ தூண்டுவது இறை அனுபவத்தில்‌ உண்‌டான உகப்பேயாகும்‌.
10-இவ்வாறு செல்பவர்கள்‌ இறைவனைப்‌ பல்வேறு சாதனங்களால்‌ வழிபாடு செய்பவர்கள்‌,
இறைவன்‌ அர்ச்சாவதாரமாய்‌ விளங்‌கும்‌ பல திவ்ய தேசங்களிலே ஈடுபட்ட பிரபந்தர்‌ ஆவார்‌.
11-இவர்களுக்கு இலக்கு எப்படிப்‌பட்ட தவத்தைச்‌ செய்தவர்‌களுக்கும்‌ பலனை அளிப்பது ஆழியான்பால்‌ உண்டான அருளே என்னும்படி.
பல்‌ தெய்‌வங்களாகவும்‌ நிறுத்தி மக்கள்‌ விதிகளின்படி. தன்னை யடையும்படி. அந்தர்‌யாமியாய்‌ நின்ற இடம்‌.
இவர்க்கு இலக்கு தனது அருளினாலே மிகவும்‌ எளியனாய் வந்து அர்ச்சாவதாரமாய்‌ நிற்கிற இடம்‌,
12-அந்தார்யாமியாய்‌ உள்ள வடிவு“பொது? என்று பெயர்‌ பெறும்‌.-அதைப்‌ பொருளாகக்‌ கொண்டு செய்யும்‌ கருமமும்‌ பொது என வழங்கப்படும்‌.
திவ்விய மங்கள விக்‌கிரகத்தே௱டு கூடிய *சிறப்பு வடிவு”எனப்‌படும்‌. அதை தம்‌ பொருளாகக்‌ கொண்டு செய்யும்‌ கைங்கரியம்‌ சிறப்பு” எனப்படும்‌.
(அந்தரங்க சேவை செய்கின்ற இவர்‌களுக்குப்‌ பொதுவான கருமம் செய்ய வேண்டுவதில்லை-அவை தாமே கழியும்‌.)
13-மேற்கண்ட கருமம்‌ சாதனத்‌தில்‌ முதல்நிலைய்ஈகும்‌,-இவர்கள்‌ வருணத்திற்கேற்ற தர்மம்‌ செய்‌யும்‌ வர்ண தர்மிகள்‌ எனப்‌ பெறுவர்‌.
கைங்கரியம்‌ பேற்‌றில்‌ முடிந்த நிலை.-இவர்கள்‌ தொண்டு புரிபவர்களாகிய தாச விருத்திகள்‌ எனப்படுவார்கள்‌.
14-வேதத்தை அறிந்தவர்கள்‌ செய்து பிறப்பிக்கும்‌ அது இவர்க்குச்‌ சிறந்த பிறப்பு -இவருக்கு உபநயனச் சடங்கு உண்டு
வேதத்தின்‌ கருத்‌தினை உணர்ந்த மிக்க வேதியர்‌ வேதங்களின்‌ சுருக்கமாகையால்‌ காயத்‌திரிக்கும்‌ தாயாய்த்‌தாயினும்‌ ஆயின செய்யும் ஞானத்தை உண்டாக்கும்‌,
15. இவர்கள்‌ அந்தணர்கள்‌ என்றும்‌, மறையோர்‌ என்றும்‌ வருணமும்‌ அது காரண்மாக வந்த வேத நம்பிக்கையும்‌ பற்றிச்‌ சிறப்பான பெயரில்‌ வழங்கப்படுவார்கள்‌.
அடியார்‌ என்றும்‌ தொண்டர்‌ என்றும்‌ ஆன்மாவாகிய பொருட்கு ஞானம்‌ ஆனந்தம்‌ இவற்றினும்‌ நெருங்கிய சிறப்பியலான அடிமைத்‌ தன்மையும்‌ அது காரண்மாய்த்‌
தோன்றிய கைங்‌கர்யமும்‌ பற்றிச்‌ சிறப்பான பெயரால்‌ வழங்கப்படுவார்கள்‌.
16. கிராமம்‌, குலம்‌ இவற்றின்‌ அடிப்படையில்‌ பெயரிட்டு வழங்‌கப்படுவார்கள்
அது பழியென்று இறைவனோடு கூடியுள்ள தேசத்தையிட்டு அல்லது அடியவர்‌ சம்பந்தத்தையிட்டு வழங்கப்‌படுவர்‌,
17-அந்தணர்க்குக்‌ கோத்திரமும்‌ சரணமும்‌ சூந்திரம்‌–. இவற்றின்‌ தலைவர்‌ முறையே பராசரர்‌, பராங்குசர்‌,போதாயனர்‌ முதலானவர்‌
அடியவர்க்கு பிரபந்தர்க்கு முதல்வர்‌ -பராங்குசர் பரகாலர் லார்‌, யதிராசர்‌ முதலானவர்‌
18.–வேதங்களை ஆசாரியர்‌ வாயிலாக ஓதுதல்‌-பொருளறிதல்‌ கடைப்பிடித்தல்‌ ஆகிய இவற்றால்‌ அந்தண்மை (பிராமணியம்‌) அமையும்
சந்தங்கள் ஆயிரம் எனப்பட்ட வேத வடிவான திருவாய்‌ மொழியை ஒதிஅமையும்‌. உணர்ந்து அதன்‌ படி ஒழுகவும்‌ வல்‌லாரானால்‌ ஸ்ரீ வைஷ்ணவத்துவம்‌ கை கூடும்‌

இப்படிச்‌ சாஸ்த்திர நெறியை, ஒரு பிரிவாகவும்‌ சாரஞர்‌ வேறு ஒரு பிரிவு போலும்‌ ஆசிரியர்‌ எடுத்துக்‌ காட்டுகின்றார்‌,
இரண்டும்‌ இருவேறு துறைகள்‌ என்று வேறுபடுத்தியும்‌ கூறப்‌ படுகின்றன. ஆனால்‌ ஓர்‌ ஆற்றிலுள்ள இருதுறைகள்‌
என்பதையும்‌ அவர்‌ குறிப்பாக உணர்த்துகின்றார்‌.
கருமம்‌ ஞானம்‌ பத்தி என்பவற்றை முன் நெறியைச்‌ சேர்ந்தனவாகவும்‌ பிரபத்தியைப்‌ பின்னெறியாகவும்‌ கொள்ளலாம்‌ என்பது தெரிகின்றது.
முன்னது வருணத்திற்கேற்ப அமைந்தது; சில தகுதிகளை உடையவர்களுக்கு மட்டும்‌ அமைந்தது.
பின்னது, வருணம்‌ ஆச்சிரமம்‌ முதலிய பமிரிவுகளற்றறு;-எத் தகுதி யுடையவர்க்கும்‌ கைக் கொள்ளத்‌ தக்கது; எளிமை உடைய நெறி.

*இவந்றில்‌ எது உயர்ந்தது?” என்னும்‌ கேள்வி எழுதல்‌ கூடும்‌. *வேதந்தானே பெரியது; அதனைப் பின்பற்றும்‌
நெறி உயர்ந்தது”, எனின்‌ அதற்கு விடை பகர்வன ஸூர்‌38, 39.
வேதங்கள்‌ இருவகைய: ஒன்று வடமொழி வேதம்‌) மற்றொன்று தமிழ்‌ வேதம்‌. இரண்டிலும்‌ சொல்லப்பெறும்‌
கருத்து ஒன்றே. எனினும்‌ எளிமை, தெளிவு எல்லோர்க்கும்‌ உரிமையாதல்‌ ஆய ஒரு சில வகைகளில்‌ தமிழ்‌ வேதம்‌
ஏற்றமுடையது என்பது விளக்கப்படுகின்றது,
அந்த:முறையிலே பிரபத்தி நெறி சிறப்புடையது என்பதும்‌ ஆசிரியர்‌: கருத்தாகும்‌,

வேதங்கள்‌ நான்கும்‌ கற்று உணர்ந்து ஒழுகுகலை ஒருவன்‌: செய்யினும்‌, இந்தச்‌ சந்தங்களாயிரத்தின்‌ பொருள்‌ கற்று உணர்ந்து உயர்ந்தவனாகாவிடில்‌ அசலானவன்‌ என்று கூறி,.
அவர்கள்‌ அந்தணர்கள்‌ தாமா என்பதும்‌ ஆராயப்படும்‌. என்று தெரிவிப்பதன்‌ மூலம்‌ வேதாந்திகளும்‌ தமிழ்‌ வேதம்‌. கற்றல்‌ வேண்டுமென்றும்‌,
இல்லையேல்‌ அவர்கட்கு வைணவத்மே யன்‌றி பிராமணத்‌ தன்மையிலும்‌ குறைவு ஏற்படுமென்றும்‌ நூலாசிரியர்‌ தெளிவுறவே இதில்‌ கூறுகின்றார்‌,
அதன்‌ மூலம்‌ இந்த நெறி யாரேர சிலர்‌ இழிந்த நிலையில்‌: உள்ளவர்கட்கு மட்டுமே என்ற எண்ணம்‌ கடியப்படுகின்றது: என்பது தெளிவுற அறியலாம்‌.

மேலும்‌ வியாசர்‌ எழுதிய ப்ரஹ்ம ஸூத்திரங்கள்‌ போன்ற:வற்றில்‌ குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ உள்ள வேறுபாடுகளைக் காரணம்‌ காட்டி நீக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது.
ஆழ்வார்‌ அனைவரும்‌ ஒரே குரலில்‌ பேசுபவர்‌..-இவர்‌ தம்‌ நூற் செய்திகளுக்குப்‌ பொருந்தாதன வேறு சாஸ்த்திரங்களில்‌ இருந்தால்‌ அவை நீக்கத்தக்கன. சொல்லப்‌:படும்‌ பொருளைத்‌ திறம்பட, எடுத்துச்‌ சொல்லும்‌ இதற்குச்‌ சேராதவை மனுவின்‌ நூலுக்கு மாறானவை புகழப்படாதவாறு போலப்‌ புகழப்படாது தள்ளப்படும்‌ :ஸூ .-64),
இதுவும்‌ மேலே சொல்லிய கருத்தை வலியுறுத்தும்‌ மற்றும்‌ ஆளவந்தார்‌ பாடிய குறிப்பை ஒட்டி இராமநுஜரும்‌ தம்‌ பாஷ்‌யத்தில்‌ ஐயப்பாடான பொருள்களையெல்லாம்‌ இத்‌ திருவாய்‌மொறிப்‌ பாடல்களின்‌ துணை கொண்டு உறுதி செய்து, இதற்குப்‌ பொருந்த விடுவர்‌ (சூ. 65) என்பதாலும்‌ முன்‌ ஆசிரியர்கள்‌ ஆழ்வார்‌ நூல்‌ பற்றியும்‌ -அதில்‌ கூறும்‌ நெறி’ பற்றியும்‌ கொண்டிருந்த கருத்து மிகவும்‌ தெளிவுறும்‌.

மேலும்‌ வியாசர்‌ எழுதிய ப்ரஹ்ம ஸூத்திரங்கள்‌ போன்ற:வற்றில்‌ குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ உள்ள வேறுபாடுகளைக் காரணம்‌ காட்டி நீக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது.
ஆழ்வார்‌ அனைவரும்‌ ஒரே குரலில்‌ பேசுபவர்‌..-இவர்‌ தம்‌ நூற் செய்திகளுக்குப்‌ பொருந்தாதன வேறு சாஸ்த்திரங்களில்‌ இருந்தால்‌ அவை நீக்கத்தக்கன. சொல்லப்‌:படும்‌ பொருளைத்‌ திறம்பட, எடுத்துச்‌ சொல்லும்‌ இதற்குச்‌ சேராதவை மனுவின்‌ நூலுக்கு மாறானவை புகழப்படாதவாறு போலப்‌ புகழப்படாது தள்ளப்படும்‌ :ஸூ .-64),
இதுவும்‌ மேலே சொல்லிய கருத்தை வலியுறுத்தும்‌ மற்றும்‌ ஆளவந்தார்‌ பாடிய குறிப்பை ஒட்டி இராமநுஜரும்‌ தம்‌ பாஷ்‌யத்தில்‌ ஐயப்பாடான பொருள்களையெல்லாம்‌ இத்‌ திருவாய்‌மொறிப்‌ பாடல்களின்‌ துணை கொண்டு உறுதி செய்து, இதற்குப்‌ பொருந்த விடுவர்‌ (சூ. 65) என்பதாலும்‌ முன்‌ ஆசிரியர்கள்‌ ஆழ்வார்‌ நூல்‌ பற்றியும்‌ -அதில்‌ கூறும்‌ நெறி’ பற்றியும்‌ கொண்டிருந்த கருத்து மிகவும்‌ தெளிவுறும்‌.

இறைவனுடைய அருட்பார்வைதான்‌ ஆழ்வாருடைய எல்லாப்‌. பெருமைக்கும்‌ உயர்வுக்கும்‌ காரணம்‌ ஆகும்‌-(ஸூத்‌, 91).
இறைவனான இராமபிரானுடைய திருக்கண்‌ பார்வையால் வேடுவச்சியான சபரி தூய்மை பெற்றவளானாள்‌.
“அழகே செந்தாமரைக்‌ கண்ணா என்று பகைவனாலும்‌ பாராட்டப் பெறும்‌ கண்ணனுடைய அருட்பார்வையில்‌
(அவன்‌ தன்‌ வீட்டில்‌ உணவு உட்கொள்ளுதலால்‌) விதுர ருடைய கேடுகளெல்லாம்‌ நீங்கி அவர்‌ தூயரானர்‌,
பக்த விலோசனத்தில்‌ முனிவர்களின்‌ மகளிரை அப்போதே வீடு பெறும்படி செய்தது இறைவனுடைய அருட்பார்வை. இவ்‌வாறு இவர்களை யெல்லாம்‌ பூ.தராக்கிய (தூயராக்கின) புண்டரிகாட்சன்‌ நெடுநோக்கு யாவர்மீது படினும்‌ அநுபவித்தாலல்லது நசிபாத அவர் தம்‌ பாவங்களெல்லாம்‌ ஓழிந்து போம்‌*,

ஆனிரைகளைக்‌ காப்பதற்காசக்‌ கண்ணன்‌ நெருஞ்சிக்‌ காடாய்‌ இருந்த இடத்தையெல்லாம்‌ பசும்புல்‌ நிறைந்த காடாக்கினான்‌.
அதே போன்று, உலக நன்மையின்‌ பொருட்டு எல்லா உயிர்களிடமும்‌ செலுத்தும்‌ அருளையெல்லாம்‌ ஒரு மடையாக்கி
இவரைத்‌ தன்னைப்‌ போன்ற ஞானமும்‌ சத்தியும்‌ உடையராம்படி செய்தான்‌.
அதனை இவரே “எதீர்‌ சூழல்புக்கு எனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய விதி சூழ்ந்‌தால்‌ எனக்கேல்‌ ௮ம்மான்‌ திரிவிக்ரமனையே (2-7-0) என்று பாடுகின்றார்‌.
இப்படிச்‌ செய்ததால்‌ இவர்‌ ஊர்களையும்‌ நாட்டையும்‌ உலகத்தையும்‌ தம்மைப்போல அவனுடைய
பேர்களையும்‌ தார்களையும்‌ பிதற்றி அவன்‌ பால்‌ ஈடுபடும்படி செய்யும்‌ தன்மை யரானார்‌.
இவர்க்குச்‌ செய்த அருளாவது இவர்க்கு மயர்வற மதிநலமருளியதே யாகும்‌. அதாவது
அஞ்ஞானத்தை அடியோடு போக்கி ) பத்தி வடிவான ஞானத்தை இவர்க்கு அருளினன்‌ இறைவன்‌ என்பது.

சாஸ்த்திரங்களிலே “சாதனபத்தி, சாத்தியபத்தி’ என இரண்டு சொல்லப்படுகின்றன. அவ்விரண்டிலும்‌ சேராதது ஆழ்வார் தம்‌ பத்தி ,
அது திருத்துழாய்க்கு மணம் போல, ஆழ்வார்‌ பிறந்த போதே அவருடன்‌ ஓக்கப்‌ பிறந்து விட நினைத்தாலும்‌ விட வொண்ணாதபடி. உடன்‌ வந்தது.
அநுபவிக்கத்‌ தக்க பொருளை விரும்பியவாறு அநுபவிக்காத போது உணவு பெறாத நிலையில்‌ பசி போன்று கஷ்டத்தையும்‌ நோயையும்‌ பெறும்படி செய்வது;
அவனை அறுபலிக்க வேண்டுமென்ற ஆசையால்‌ வற்றாத இயல்புடைய ஆன்மாவையும்‌ குருத்து வற்றும்படி செய்வது? இன்பமான அவனைக்‌ காணவேண்டுமென்று அலமறும்படி செய்வது
அதற்கு மேலும்‌ இதர உபாயங்களை யெல்லாம்‌ விட்டு அவனையே உபாயமாக உறுதியுடன்‌ பற்றியிருக்கும்‌ இவரை
‘குதிரியாய்‌ மடலார்தும்‌” என்று விடத்தக்க உபாயத்திலே இழியமாறு செய்கையாலே விட.த்தக்கதில்‌ நிலையாக நிற்கும்‌ கேட்டைப்‌ பெறச்‌ செய்யும்‌ தன்மையது. –

*நாகணைமிசை தம்பிரான்‌ சரணே சரண்‌’ என்று ஒரு தரம்‌ செய்ய வேண்டிய ‘பிரபத்தியை-சரணாகதியை-மீண்டும்‌மீண்டும்‌ செய்யும்படி செய்கையாலே
கொள்ளத்‌ தக்கதில்‌ நிளையாக நிற்றலிலிருந்து விலகச்‌ செய்யும்‌ தன்மையது, இவ்‌வாறு இருப்பதால்‌, இவர்‌ தம்‌ பத்தி
இறைவனை நினையாமை என்றும்‌,சத்துச்கேடு என்றும்‌ இரண்டு இல்லை என்று இருக்கும்‌
இவர்க்கு எப்பொழுதும்‌ அவனைப்‌ பற்றியே நினைப்பதற்கு ஏதுவாகையாலே, இவர்தம்‌ சத்தைக்‌குத் துணையானது ஆகும்‌?
“எல்லாம்‌ கண்ணன்‌” என்றிருக்கும்‌ இவர்க்கு அவனை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசையை மேன்மேலும்‌ விளைக்‌ கையாலே,
அவனை அநுபவிப்பதற்குத்‌ துணையானது ஆகும்‌;
*வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌” என்றிருக்கும்‌ இவர்க்கு முடிவில்லாத அடிமைத்‌ தன்மையாகிய ஒரே ஆசைக்குக்‌ காரணமாகையாலே,
தொண்டு செய்தற்குத்‌ துணையானதாயிருக்கும்‌. இப்படி மூன்றுக்கும்‌ துணையானது இவர்தம்‌ பத்தியாம்‌.
இறைவனது காரணமற்ற அருளே அவன்‌ உயிர்களை ஆட்‌ கொள்ளுதற்கு ஏது என்பது இவர்கள்‌ கருத்து.
அதற்கு உயிர்கள்‌ இப்பிறலியிலோ, அல்லது முன்‌ பிறவியிலோ மேற்‌கொண்ட கர்மம்‌, ஞானம்‌ உபாயமான பத்தி யாதொன்றும்‌ ஏதுவாகாது.
இறைவனுடைய முயற்சியின்‌ பலனாலேயே இப்‌ பத்தி ஆம்வார்க்கு உண்டாயிற்று என்பதனை
உருவகித்துஅழகுறக்‌ கூறுகின்றது (ஸூ 104).

“ஒரு நல்வினையும்‌ இல்லாத போதும்‌ இறைவன்‌ அருள்‌ பாவித்தலுண்டோ?” என்னும்‌ வினா எழுகின்றது,
கோசல்‌ நாட்டிலிருந்த புல்‌ எறும்பு முதலிய யாவும்‌ ஓர்‌ ஏதுவு மின்றியே நல்ல நிலை இராமனால்‌ பெற்றன. கோகுலத்தில்‌ கண்ணன்‌ குமலூதினபோது கண்டவர்‌ “அற்புதம்‌!* என்று வியக்குமாறு அங்கிருந்த சராசரங்கள்‌ யாவும்‌ இறைவன்‌ பால்‌ ஈடுபட்டன.
ஆகையால்‌ காரணமின்றியே இறைவனது அருள்‌ பலிக்குமென்பது விளங்கும்‌,
*அப்படியானால்‌ இறைவன்‌ காரணமின்றி ஆட்கொள்வதானால்‌-அவன்‌ எல்லாரையுமன்றோ ஆட்கொள்ள வேண்டும்‌!
ஒருவரை மட்டும்‌ ஆட்கொள்வானேன்‌?” என்னும்‌ கேள்வி எழுகின்றது,-அதற்கு ஆசாரிய ஹிருதயக்காரர்‌ கூறும்‌ விடை,

‘பட்டத்‌துக்குரிய யானையும்‌ அரசும்‌ செய்யுமவை ஆராயாது” (ஸூ 106.என்பதுதான்‌. ‘ஆட்சியற்ற நாட்டில்‌ பட்டத்துக்குரிய ஆனையைக்‌ கண்ணைக்கட்டி விட்டால்‌,
அவ்வானையால்‌ எடுக்கப்பட்டவன்‌. அரசனாவான்‌… மற்றவர்களை. விட்டு இவனை மட்டும்‌ எடுக்கக்‌ காரணமென்‌?” என்று ஆராய்தல்‌ கூடாது.
அதே போன்று அரச குமாரன்‌ தன்‌ செருக்காலே ஒருத்தியைத்‌ தனக்குப்‌ பட்டத்தரசியாகக்‌ கொண்டால்‌
இவளைப்‌ போன்ற பலர்‌ இருக்கவும்‌ இவளைத் தேர்ந்தெடுப்‌பானென்‌ என்று ஆராய்தல்‌ ஆகாது.
அது போன்று குறைவற்ற உரிமை உடையவனான இறைவன்‌ தனக்கு அடிமைப்‌பட்டனவும்‌. தனக்கே உரியனவும் ஆன ஆன்மாக்களில்‌ ஒன்றினைத்‌ தன்‌ அநுபவத்திற்கு உரியதாம்படி ஏற்றுக்‌ கொண்டால்‌, அதற்குரிய காரணம்‌ ஆராயப்படாது எனப்‌ படுகின்றது.

“இறைவனுக்கு உரிமை உண்டு என்பது.ஏற்றுக்‌ கொள்ளலாம்‌. ஆயினும்‌, அவனுக்கு ஒரு தலை நோக்கு (பட்சபாதம்‌) என்ற குறையாகாதோ?”* என்று வினவலாம்‌, அதற்கு விடை. காணும்‌ முன்‌ இறைவன்‌ தன்பால்‌ யாவர்‌ பிரபத்தி செய்கின்றாரோ அவரையே ஆட்கொள்ளுகின்றான்‌ என்பதும்‌ அறியத்தக்கது.
ஆழ்வார்க்கு இறைவன்‌ மயர்வற மதிநல மருளினான்‌. அந்நிலையடைந்து பின்‌, அவர்‌ *புகலொன்றில்லா அடியேன்‌, அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!” என்று
சரணாகதி யடைந்த பின்னரே அவரைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துப்‌ பின்‌ அவரையும்‌ ஆட் கொள்கிறான்‌ இறைவன்‌.
அவன்‌ இவரை ஆட்கொள்ளுதற்கு உபாயமாக இவர்‌ ஒன்றும்‌ செய்யவில்லை என்பது 107 முதல்‌ 113 முடிய 7 ஸூர்ணைகளில்‌ எடுத்துக்‌ காட்டப்‌ பெற்றுள்ளது.
இவர்‌ அறிந்து செய்த நல் வினையுமில்லை. இவர்‌ அறியாது தானே வந்தமைந்த நல் வினையும்‌ இருத்தற்கு இடமில்லை.
இவருக்குத்‌ தீ மனம்‌ கெட்டதற்கும்‌ மருவித்தொழும்‌ மனம்‌ வந்ததற்கும்‌ காரணமும்‌ அவனருளே; இவர்தம்‌ நல்வினை யன்று,
இறைவன்‌ எண்ணினும்‌ வரும்‌ எளியனாயினும்‌, இவருக்கு எண் தானுமின்றியே அருள்‌ செய்தான்‌. அவன்‌ மனத்தில்‌ தங்குதற்கு அனுமதி செய்தாரே,
அதற்கு இவரும்‌ உள்ளமும்‌ ஒத்துக்‌ கொண்டனவோ?” என்றால்‌, இல்லை, அவ்விரண்டும்‌ அவன்‌ முயற்சியின்‌ பலனே என்பதும்‌ அவர்‌ பாகரங்களிலேயே கூறப்‌ பெற்றுள்ளது.

மாதவன்‌” என்றும்‌ “திருமாலிருஞ்சோலை” என்றும்‌ இவர்‌பேச அவன்‌ தன்‌ பெயரையும்‌ தன்‌ ஊர்ப்‌ பெயரையும்‌சொன்னதாக ஏறிட்டுக்‌ கொண்டு வந்து
இவர்‌ நெஞ்சில்‌ புகுந்ததாகவும்‌, மற்றும்‌ அவ்வாறே இவர்‌ வேறு செயல்‌களையும்‌ அவனைக்‌ கருதிச்‌ செய்ததாகக்‌ கொண்டு இவரை வந்து ஆட்கொண்ட தாகவும்‌ சொல்லலாமென்றால்‌, அதுவும்‌ பொருந்தாது.
ஏனென்றால்‌ இவை முறையே வேறுபாடு தோன்றச்‌ சொல்லிய சொற்கள்‌; வேறு காரணம்‌ பொருட்‌’டாகச்‌ சொல்லியவை? மனத்தோடு: மொழிந்தன அல்ல?பலத்திற்காக நூல்களில்‌ விதித்தனவமாகா.
பெரும் பேற்றுக்கு ஏற்ற ஏதுமாகா; பல பயன்களுக்குக்‌ காரணமானால்‌ ஆகலாம்‌.-ஆகையால்‌, இவையும்‌ பேற்றுக்குக்‌ காரணமானவை: யல்லவாம்‌. ்‌
மற்றப்படி இறைவனே. ஒரு காரணமின்றியே, “இவன்‌அடியான்‌? எனறு வந்து ஆரருள்‌ செய்தான்‌. “இவர்‌ தாம்‌அடியவர்‌ என்பதற்குச் சான்று என்‌?” என்று கேட்க,
இறைவன்‌ வேதத்தைப்‌ பிரமாணமாகக்‌ காட்ட, இவர்‌, “அது ஓலைப்‌ படாததனால்‌ பிராமாணமாகது,” என்று மறுக்க,
இறைவன்‌ தன்‌ பல காலமாக வரும்‌ அநுபவத்தை வலிமையாகக்‌ கருதி அதைக்‌ கூற, அதற்கும்‌ சான்று கேட்ட பொழுது அவன்‌ உண்மை உணர்ந்தவர்களான ஞானிகளைக்‌ காட்ட, அதற்கும்‌
“அவர்கள்‌ உன் பக்கம்‌ நோக்குடையவர்கள்‌–பட்சபாதிகள்‌,* என்று இவர்‌ மறுத்துவிட்டார்‌. இப்படி அழகானதொரு கற்பனையை ஆசிரியர்‌ தருகின்றார்‌.

அந்த நிலையில்‌ எல்லையற்ற காலமாக நான்‌ என்னுடை,யவன்‌ என்று இருந்த அநுபவம்‌ வவிய களவாலே வந்துதென்று இவர்‌ இரக்கப்படும்படி
இந்திர ஞாலங்கள்‌ போலே கண்ணையும்‌ கருத்தையும்‌ கவரும்‌ வடி .வழகையும்‌ சீல குணத்‌தையும்‌ காட்டி அவரைக்‌ கைக்கொள்ளும்படி
இறைவனைத் தடுக்க முடியாதபடி. இயல்பான அருள்‌ வளைத்துச்‌ கொண்டது (ஸூ . 112). அதனால் தான்‌ ஆழ்வாரும்‌ வரவாறு ஓன்றில்லையால்‌ வாழ்வினிதால்‌” என்றும்‌,
“வெறிதே அருள்‌ செய்வார்‌ செய்வார்கட்கு” (6-7-8) என்றும்‌ அறுதியிட்டுப்‌ . பேசுகின்றார்‌.
ஆகையால்‌ வாழ்க்கைக்கு ஒப்பற்ற முதலாகிய அவன்‌ தன்னை ஒழிய வேறு நினைத்துப்‌ பார்த்தற்கு ஏற்றதான காரணமும்‌ இல்லை என்பது தெளிவாகும்‌.
“இவ்வாறு காரணமின்றி அவன்‌ கருணை புரிவது ஏன்‌ அப்படிச்‌ செய்பவன்‌ எல்லாருக்கும்‌ செய்யாமை குறை வுடையதாகாதோ?” என்பது சிந்திக்க வேண்டுவதாகும்‌.
நல்ல தந்தையானவன்‌ எந்த வித உதவியும்‌ காரணமும்‌ எதிர்‌ பார்த்துத்‌ தன்னைச்‌ சார்ந்தவர்களுக்கு அருள்‌ காட்டுதல்‌ இல்லையே!
அதே போன்று பல மடங்கு புரிவுடைய உலகின்‌ தந்தையும்‌ செய்யக் காண்கின்றோம்‌. அவனும்‌ தன்னையே
சுதியென அடைந்துள்ள தன்‌ மக்களுக்குத்தான்‌ முதலில்‌நலம்‌ செய்வனன்றோ!
அப்படியே தன்னையே நம்பிச்‌ சரணமடைந்தவர்களுக்கு மட்டுமே அவன்‌ முதலில்‌ அருள்‌ செய்‌ கின்றான்‌,
மற்றவர்கள்‌ நிலை பின்னால்‌ வரும்‌. தக்கதொன்றைத்‌ தன்‌ பிள்ளை கேட்டுவிட்டால்‌, அதை எப்படியும்‌ தந்துவிட வேண்டுமென்று தந்தை அவாவுறுதலில்‌ வியப்‌பில்லை யன்றே?
சில சமயங்களில்‌ தந்தையை தேரே அணுகுவதகைக்‌ காட்டிலும்‌ தாய்‌ மூலம்‌ அணுகும்போது அச்‌ செயல்‌ முடிவது எளிதாகன்றதன்றோ?
அம்முறைப்படியே பிராட்டியின்‌ புருஷகாரமும்‌ பேசப்படுகின்றது. இப்படியேஉலகியலை
ஒட்டிக்‌ காணும்போது பல கருத்துகளின்‌ பொருத்தம்‌ தெளிவாய்‌ விளங்கக்‌ காணலாம்‌,

இறைவனுக்குப்‌ *பரத்துவம்‌, அந்தரியாமித்துவம்‌, வியூகத்துவம்‌, அவதாரம்‌, அர்ச்சை” என்னும்‌ ஜந்து நிலைகள்‌ உண்டு.
நிலை ஐந்து ஆனாலும்‌, பொருள்‌ ஒன்றே, அரசன்‌ ஒருவன்‌, தன்‌ உடன்‌ கூட்டத்தாரால்‌ வழிபாடு செய்யப்படுபவனாய்க்‌
தன்‌ வீறு தோற்றப்‌ பகலோலக்கமிருப்பன்‌: தன்‌ தாட்டிலுள்ள குணங்‌ குறைகளை அறிவதற்காக இரவிலே பிறர்‌ அறியாதவாறு கறுப்புடையுடுத்து
நகர சோதனை செய்து வருவன்‌: தன்‌ ஆட்டியின்‌ கீழுள்ளவர்களில்‌ குற்றம்‌ செய்தவரைக்‌ தண்டிக்கவும்‌ நல்லோரைக்‌ காக்கவும்‌ தான்‌ செய்ய வேண்டிய செயல்களை ஆராய்வன்‌?
தீய விலங்குகளை அழிக்க வேட்டை. ஆடுவன்‌?களைப்பு நீங்கச்‌ சோலைகளிலே தன்‌ உரிமைச்‌ சுற்றத்தோடு உலாவி வருவன்‌,
இப்படி. அவன்‌ தன்‌ அரச நீதி (முறை) செலுத்தி வருவது போன்றே, இரு உலகுகளிலும்‌ அரசு செலுத்தும்‌ வானிளவரசான இறைவனும்‌ செய்வான்‌.

விண்‌ மீதிருப்பாய்‌” என்றபடி அவன்‌ பரமபதத்தில்‌ தன்‌ தேவியுடன்‌ நித்ய முத்தர்‌ வழிபட ஓலக்கமிருப்பன்‌,
“இவற்றுள்‌ எங்கும்‌ மறைந்துறைவாய்‌? என்றபடி. பரந்து பல பொருள்களுக்கும்‌ தெரியாதபடி அவன்‌ அவற்றுள்‌ உறையும்‌ பொருளாய்‌ இருந்து அவை செய்யுமவற்றை பெல்லாம்‌ அறிவான்‌,
*சுடல்‌ சேர்ப்பாய்‌” யென்றபடி, பாற்கடலில்‌ சேர்ந்து அறி துயில்‌ புறிந்து உலகத்துயிர்களைக்‌ காக்கும்‌ வழியை– உபாயத்தைச்‌ சிந்தித்துக்‌ கொண்டிருப்பான்‌.
*மண்மீ துழல்‌வாய்‌” என்றபடி. அவ்வுயிர்களைக்‌ காத்தற்‌ பொருட்டு உலகில்‌ வந்து அவதரித்து அடியவர்க்குப்‌ பகையானவர்களை அழிக்கையாகிற வேட்டையாடுவன்‌,
*மலைமேல்‌ நிற்பாய்‌* என்றபடி. பகை அழித்த களைப்புத்‌ தீரச்‌ சோலை சூழ்ந்த:கோயில்‌, திருமலை முதலான இடங்களிலே வாழ்வன்‌.
இப்படி இவ்வைத்து வகை யாகவும்‌ இறைவன்‌ ஒருவனே விளங்குவதைக்‌ காணலாம்‌.

இப்படி எல்லா நிலைகளிலும்‌ அவன்‌ இருப்பினும்‌, *பின்‌னானார்‌ வணங்கும்‌ சோதி” என்றபடி. அவதாரங்களுக்கும்‌ பிற்‌பட்டவர்களும்‌
இழக்காதபடி அமைந்த அர்ச்சாவதார,த்தில்‌ பரத்துவம்‌ முதலான எல்லா நிலைகளிலும்‌ அநுபவிக்கும்‌
எல்லாக்‌ குணங்களும்‌ நிறைந்திருக்கும்‌ (ஸூத்‌, 158).
அத்‌தகைய திவ்விய தேசங்கள்‌ பல உள்ளன. அவற்றுள்‌ ஒவ்‌’வொன்றிலும்‌ ஒவ்வொரு குணம்‌ பொலிந்துவிளங்கும்‌.
என்பதும்‌ தெளிவுற எடுத்து விளக்கப்படுன்றது (ஸூ . 159முதல் 186 முடிய),

ஆழ்வார்‌. அடிக்கடி பரோபதேசம்‌ செய்வர்‌. -திரு விருத்தம்‌ முதல்‌ பாட்டிலேயே, *அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பம்‌ கேட்டருளாய்‌’ என்று சொல்லுகிறவர்‌,
*பொய் நின்ற ஞானம்‌ முதலியவற்றை யாமுறாமைச்‌ செய்ய வேண்டும்‌” என்று பன்மையில்‌ பேசுகிறார்‌,
தனக்கு மட்டும்‌ ஓன்று வேண்டுமென்று கேளாது, தம்மைச்‌ சேர்ந்தவர்‌ யாவர்க்குமாக வேண்டுகின்றார்‌!
பிறர் துன்பங்கண்டு பொறாதவர்‌ ஆகையால்‌, பிறர்க்காகத்‌ தாம்‌ மன்றாடுகின்றார்‌-என்று எடுத்துக்‌ காட்டுவர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை என்ற உரையாசிரியர்‌.
திருவாய்மொழி என்ற நூலின்‌ முதற்‌ பத்து இரண்டாம்‌. திருவாய்‌ மொழியும்‌, ஓவ்வொரு பத்திலும்‌ ஒவ்வொரு திருவாய்‌ மொழியும்‌ பரோபதேசமாக அமைந்‌துள்ளன. ‘
பெற வேண்டுவதெல்லாம்‌ பெற்று விட்டாரோ! பிறர்க்கு உபதேசம்‌ செய்யத்‌ தொடங்கி விட்டாரே!” என்னும்‌ கேள்வி எழலாம்‌.
பிறர்‌ துன்பங்கண்டு பொறாமையும்‌, ஞாலத்தார்க்கு இறைவன்பால்‌ உள்ள,தொடர்பை அறிந்துள்ளமையும்‌, மிக்க கிருபையும்‌ ஆகிய இம்மூன்றுமே
இவரை உபதேசம்‌ செய்யச்‌ செய்வன.-செல்வம்‌ அழிவிற்குக்‌ காரணமாக இருத்தலைக்‌ கண்டும்‌, பின்னும்‌ அதனையே பெற வேண்டுமென்ற அறியாமையில்‌
நிலைத்து நிற்கும்‌ உலகினர்க்குத்‌ தம்‌ உபதேசத்தாலே
இறை.பக்தியைத்‌ தோற்றுவிப்பது, தம்‌ சம்பந்தம்‌ அடியாக அவர்‌களையும்‌ விடாது இருத்தித்‌ தம்மைப்போல இறை அநுபவத்‌தில்‌ ஈடுபட்டவராக்க வேண்டுமென்கிற ஞானத்தாலாகும்‌.
உலகினார்க்கு மட்டுமேயன்றி, ஆழ்வார்‌ இறைவனுக்குமே அடிக்கடி உபதேசம்‌ செய்தலை நாம்‌ காண்கின்றோம்‌.

எல்லாம்‌ அறிந்தவனான அவனுக்கு இவர்‌, ‘உனக்கொன்று உணர்த்‌துவன்‌” (6. 2. 3.) என்று உபதேசம்‌ செய்வது அவன்‌ மாட்டுள்ள அன்பின்‌ மிகுதியாலேயாகும்‌, ‘
கர்மத்திற்கு உட்பட்டவராய்‌ சாதனம்‌ இன்னது சாத்தியம்‌ இன்னது என்று அறியாதே கலங்கி நிற்கிற உலகினரான
சேதனர்க்கு, *வீடுமின்‌ முற்றவும்‌? (திரு, 1, 2) என்று தொடங்கி *சுனை நன்‌ மலரிட்டு நினைமின்‌ நெடியானே” (திரு, 10.5) என்னுமளவும்‌ விட.த்தக்கவற்றையும்‌ கொள்ளத்‌தக்கவற்றையும்‌ உபதேப்பர்‌.
அன்புக்கு அடியவனாய்ச்‌ சாதன சாத்தியம்‌ இன்ன வென்றறியாது கலங்கும்‌ இறைவனுக்குத்‌ “தன்னைத்‌ தகுதி யற்றவன்‌ என்று எண்ணி
ஆழ்வார்‌ தன்னை விட்டுவிட்டால்‌ என்‌ செய்வது என்று ஐயங்கொண்டு அலமறும்‌ அளவில்‌ *உன்னை நான்‌ பிடித்தேன் கொள்‌ சிக்கெனவே!,
“உன்னை நானடைந்தேன்‌ விடுவனோ!” என்று சொல்லி, மேலும்‌ அவனுக்குச்‌ சாதன சாத்தியங்கள்‌ அறிவிப்பது,
‘செய்யத் தகாதவற்றைச்‌ செய்யாதே” என்பது, “செய்ய வேண்டுமவற்றைச்‌ செய்‌” என்பது இப்படிப்‌ பல இடங்களிலும்‌ உபதேசித்தலும்‌,
நன்மை தீமைகள்‌ சொல்லுதலும்‌ ஆழ்வார்‌ செய்தலைக்‌ காணலாம்‌. ஆழ்வாருடைய முதற்சீடர்‌ இறைவரே.
இறைவர் பால்‌ நல்ல சீடனுக்குரிய குணங்கள்‌ யாவும்‌ அமையப் பெற்று இருக்கின்றமையை(ஸூ த்‌. 202) தெளிவுறுத்தும்‌.

இப்படிப்‌ பரோபதேசம்‌ பல காலும்‌ நடந்தாலும்‌, உள்ளே இறை யநுபவம்‌ நடந்து கொண்டே யிருக்கும்‌. உள்ளே அனுபவம்‌ நடந்துகொண்டேயிருக்கவே, புறத்தே உபதேசமும்‌ நடை பெறா நிற்கும்‌.-எனவே, அநுபவ இடையீடு இராது என்பதும்‌ வற்புறுத்தப்‌ படுகின்றது. உபதேசப்‌ பகுதிகளே திருவாய்மொழியின்‌ முக்கியமான பகுதிகள்‌. அவை திருவாய்மொழி 1.2,– 2.10,–3.9, –4.10, –5.2, –6 3, –7.10, –8.6,– 9.10,– 10.5 ஆகும்‌.

*பயிலுஞ்சுடரொளி”, *நெடுமாற்‌ கடிமை: என்னும்‌
இரண்டு திருவாய் மொழிகள்‌ அடியவா்களைப்‌ பற்றியவை. இவை. யல்லாமல்‌, மற்ற இறைவன்‌ தோத்திரமாக அமைந்த திருவாய்‌ மொழிகள்‌ முடிவுபெறாவே .
எனவே, இவை இன்றியமையாத திருவாய்மொழிகளே என்பது அறியத் தக்கது
(ஸூத்‌. 217). இறைவன் பக்‌தி , பக்தியின்‌ முதல்‌ நிலை; அடியவர் பக்தி, பத்தியின்‌ முடிந்தநிலை. அதுவே, “கோதில்‌ அடிமை” என்று பேசப்படுகின்றது.
இது வைணவ தத்துவமும்‌ சமயமும் மனிதாபிமானத்தை எவ்வ௱று மதித்து வந்தது என்பதை நன்கு விளக்கும்‌.

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள்—-பல ஸ்ருதிகள்

January 24, 2024

வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது

“வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”-என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

—————–

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம மஹிமையை அறிவிக்க திரு உள்ளம் பற்றி
சாந்தனுவின் புத்திரரான பீஷ்மர்-குந்தியின் புத்திரனான தர்மருக்கு உரைக்கிறார்

பீஷ்ம உவாச:
இதீதம் கீர்தனியஸ்ய கேஶவஸ்ய மஹாத்மனா |
நாம்நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம் அசேஷேண ப்ரகீர்திதம் || ஃபலஶ்ருதி (1)

நாம ஸங்கீர்த்தனம் செய்யத்தக்கவனும்-மிகுந்த மஹிமை பொருந்தியவனுமான
கேஸவனுடைய திரு நாமங்கள் ஆயிரமும் ஓன்று விடாமல் கூறப்பட்டன

கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்-இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்-கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்-முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன

இதீதம் இதி அனேன நாம ஸஹஸ்ரம் அன்யுன அநதிரிக்தம் இதி தர்ஷயதி திவ்யாநாம் அப்ரகிருதநாம் நாம்நாம் ஸஹஸ்ரம் ப்ரகீர்திதம் இதி வததா பிரகரந்தரேணாபி ஸங்க்யோபபத்திர தர்ஷிதா – இதீதம் என்ற பதம் மிகையான ஆயிரம் நாமங்கள் இல்லை என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது. மேலும் ‘பிரகிருதிதம்’ என்ற சொல் ஸ்லோகத்தின் முடிவில் ஆயிரம் நாமங்களை நிறைவேற்றுவதைக் குறிக்கிறது.

ஸ்ரீ சங்கரர் மேலும் கூறுகிறார் ‘ப்ரக்ரமே கிம் ஜபந் முச்யதே ஜந்துஹ்’ இதி ஜப ஷப்த உபாதநாத் கீர்தயேத் இதி அனேன அபி த்ரிவிதா ஜபோ லக்ஷ்யதே; உச்ச உபாம்ஷு மானஸ லக்ஷனாஸ் த்ரிவிதஹ் ஜபஹ் – ஜபம் மற்றும் கீர்த்தனை இரண்டும் பாராயணத்தின் ஒரு வடிவமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், ஸ்ரீ விஷ்ணு-சஹஸ்ரநாமத்தை மூன்று வடிவங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். சத்தமாக கோஷமிடுதல், தனக்குத்தானே கிசுகிசுத்தல் அல்லது மன சிந்தனை மூலம்.

ஸ்ரீ பராசர பட்டர், ‘கீர்த்தனியாஸ்ய‘ என்ற வார்த்தை பகவான் துதிக்குத் தகுதியானவர் என்பதைக் குறிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், பீஷ்மர் யுதிஷ்டிரனை உடனடியாகப் பாராயணம் செய்யத் தொடங்குவதாகவும் கூறுகிறார். இந்த வசனத்தில் கேசவாவின் தேர்வு வேண்டுமென்றே மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய திரித்துவத்தை (உயர்நிலை) குறிக்கிறது. ‘கா’ என்றால் பிரம்மா, ‘அ’ என்றால் விஷ்ணு, ‘ஈசா’ என்றால் ருத்ரன்; எனவே ‘கேசா’ என்பது திரிமூர்த்தியின் (மூன்று உருவங்கள்) அவரது கட்டுப்பாட்டில் இருப்பதைக் குறிக்கிறது.

‘திவ்யாநாம்‘ என்ற சொல் ‘தெய்வீகமானது’ என்று பொருள்படும் மற்றும் நாமங்களுக்குப் பொருந்தும் நாமங்கள் இம்மையிலும் ஸ்ரீ வைகுந்தத்திலும் பாடுவதற்குத் தகுதியானவை என்பதைக் குறிக்கிறது. ‘அஷேஷேனா’ என்ற வார்த்தையானது, பீஷ்மர் யுதிஷ்டிரனுடனான தொடர்புகளில் குறிப்பிடத்தக்க அல்லது முக்கியமான எதையும் விட்டுவிடவில்லை என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அறிய வேண்டிய அனைத்தும் கற்பிக்கப்பட்டுள்ளன.
——–
அடுத்து அதிகாரி யார் என்பதும் பயனும் கூறப்படுகின்றன
ய இடம் ஶ்ருணுயாந் நித்யம் யஶ்சாபி பரிகீர்தயேத்
நாஶுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் ஸோமுத்ரேஹ ச மானவஹ் ||ஃபலஶ்ருதி -2||

இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்-கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்-பரலோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –

இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து

இதை ஒருவர் தினமும் கேட்கும்போது அல்லது பாராயணம் செய்யும் போது, ​​இம்மையிலோ மறுமையிலோ உள்ளவர்களுக்கு அசுபமான அல்லது விரும்பத்தகாத எதுவும் சேராது என்று ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்குகிறார். பரலோக ப்ராப்தஸ்யாபி யயாதி நஹுஷாதிவத் அசுபப்ராப்தி அபாவம் ஸுசயிதும் அமுத்ர இத்யுக்தம் என்று ஸ்ரீ சங்கரரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள அடுத்த உலகத்தில் உள்ள ‘அமுத்ரா’ என்ற சொல்லுக்கு விசேஷ முக்கியத்துவம் உண்டு. அங்கு. இந்த தெய்வீக சஹஸ்ரநாமத்தை ஜபிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் இது போன்ற அசுபங்கள் ஏற்படாது.

தன் தகுதிக்கும், திறனுக்கும் ஏற்றவாறு, அதைக் கேட்கும் அல்லது மனதிற்குள் தியானம் செய்பவருக்கு, இம்மையிலோ, மறுமையிலோ தீங்கான எதையும் சந்திக்க மாட்டார் என்று ஸ்ரீ பராசர பட்டர் கூறுகிறார். கீர்த்தனை செய்வதாலும், கேட்பதாலும் பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

———–

வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன ஸம்ருத்தஸ் ஸ்யாச் ஸூத்ர ஸூகம் அவாப்நுயாத்–||ஃபலஶ்ருதி -3||

இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்

அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்-பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும் அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –

‘பிராமணர்கள் அறிவைப் பெறுவார்கள்’ என்பதே இதன் அடிப்படைப் பொருள். க்ஷத்திரியர்கள் வெற்றி பெறுவார்கள். வைசியர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். இந்த நாமங்களை உச்சரிப்பதால் சூத்திரர்கள் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவார்கள்.

ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தின் பொருளைப் பற்றி மிகவும் விரிவான விளக்கத்தை அளிக்கிறார். ‘வேதாந்தனம் உபநிஷதம் அர்த்தம் ப்ரம்ஹ கச்சதி அவகச்சதி இதி வேதாந்தகஹ் – வேதாந்தம் அல்லது உபநிடதங்களின் பொருளைப் புரிந்து கொள்பவன் அல்லது புரிந்து கொள்பவனே வேதாந்தகா’ என்று விளக்குகிறார்.

‘கிம் ஜபந் முச்யதே ஜந்துஹ் ஜன்மசம்சார பந்தனாத்?‘ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முன்னுரையிலிருந்து ‘எந்த வகையான தியானம் பூமிக்குரிய இருப்பின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற உதவுகிறது?’ விடுதலை என்பது எந்த விதமான செயலாலும் அல்ல, அறிவு, ஞானம் மற்றும் ஞானத்தால் மட்டுமே அடையப்படும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ‘வேதாந்தகோ ப்ராம்ஹணஸ் ஸ்யாத்‘ என்ற வாக்கியம் இதை வலியுறுத்துகிறது. ஸ்ரீ சங்கரர் மேலும் கூறுகிறார், ‘கர்மணாம் து அந்தா கரண சுத்தித்வாரேண மோக்ஷஹேதுத்வம் – மனதைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் செயல் ஒரு பயனுள்ள கருவியாகும், ஆனால் அது போதுமானதாக இல்லை.

இந்தக் கருத்தை மேலும் மேம்படுத்த அவர் பல ஸ்லோகங்களை மேற்கோள் காட்டுகிறார்:

  • கஷாயபக்திஹ் கர்மாணி ஞானம் து ப்ரமா கதிஹ் கஷாயே
    கர்மபிஹ் பக்வே ததோ ஞானம் ப்ரவர்ததே
    செயலால் மனதை முதிர்ச்சி அடையச் செய்ய முடியும், ஆனால் செயலால் தரையை தயார்படுத்திய பிறகு அறிவால் மட்டுமே விடுதலை அடையப்படுகிறது.
  • நித்யம் ஞானம் ஸமாஸாத்ய நரோ பந்தாத் ப்ரமுச்யதே – நித்திய அறிவை அடைந்த பிறகு மக்கள் விடுதலை பெறுகிறார்கள்.
  • தர்மாத் சுகம் ச ஞானம் ச ஞானாத் மோக்ஷோ அதிகம்யதே – நேர்மையான நடத்தையால் செல்வமும் அறிவும் வெளிப்பட்டு அறிவிலிருந்து இறுதி விடுதலை பெறுகிறது.
  • பகவத் கீதையில் (அத்தியாயம் 5 வசனம் 11) கிருஷ்ணர் ‘யோகினா கர்ம குர்வந்தி சங்கம் த்யக்வா ஆத்மசுத்தயே‘ என்று கூறுகிறார் – யோகிகள் தங்கள் மனதைத் தூய்மைப்படுத்துவதற்காக பற்றற்ற செயலை நாடுகிறார்கள்.
  • பிரம புராணம்  (129.7) —கர்மணா பத்யதே ஐந்து வித்யா ஏவ விமுச்யதே தஸ்மாத் கர்ம ந குரவந்தி யதயா பார தர்க்ஷிணா
    கருட புராணம் (1.237.6) தபஸா கல்மஷம் ஹந்தி வித்யா அமிர்தம் அஸ்நுதே ஞானம் உத் பத்யதே பும்ஸாம் ஷியாத் பாப்சயா கர்மணா யதா தர்ஷ தல ப்ர்க்தயே பஸ்யதி ஆத்மாநாம் ஆத்மநி

ஸ்ரீ சங்கரர் வேதங்கள் மற்றும் உபநிடதங்களிலிருந்து மேலும் குறிப்புகளைத் தருகிறார். பிருஹதாரண்யக உபநிஷத் (4.4.22) கூறுகிறது:
தமேதம் வேதாநுவாச்சனேன ப்ராம்ஹணா விவிதிஷாந்தி |
யஜ்ஞேன தானேன தபஸா அனாஶகேன ||
பிராமணர்கள் வேதங்கள், தியாகங்கள், தானம் மற்றும் துறவு ஆகியவற்றின் மூலம் அதை அறிய முற்படுகிறார்கள், இது புலன்களின் உணர்ச்சியற்ற இன்பம் கொண்டது.

வேதம் பின்வருமாறு கூறுகிறது.
  • தர்விஹோமம் உட்பட எந்த ஒரு ஹோமத்தை செய்தாலும், ‘யேன கேன யஜேதாபி வா தர்விஹோமேன அநுபஹதமான ஏவ பவதி’ என்றாலே மனம் தூய்மையாகும்.
  • ‘ஞானத் ஏவ மோக்ஷோ பவதி’ – ஞானத்தால் மட்டுமே விடுதலை அடையப்படுகிறது.
  • அறிவிலிருந்து மட்டுமே விடுதலையும் உறவுகளிலிருந்து விடுதலையும் சாத்தியம் – ‘ஞாதேவ து கைவல்யம் ப்ராப்யதே தேன முச்யதே’.
  • பிரம்மனை அறிந்தவன் மிக உயர்ந்த நிலையை அடைகிறான் – ‘பிரம்மவித்யாப்நோதி பரம்’.
  • சுயத்தை அறிந்தவன் துன்பத்திலிருந்து விடுபட்டவன் – ‘தாரதி ஷோகம் ஆத்மவித்’.
  • பிரம்மனை அறிந்தால் நீங்கள் பிரம்மன் ஆவீர்கள் – ‘பிரம்ம வேத ப்ரம்ஹைவ பவதி’.
  • பிரம்மனை அறிய நீங்கள் பிரம்மன் ஆக வேண்டும் – ‘பிரம்ஹைவ சன் பிரம்மாப்யேதி’.
  • அவரை அறிந்தால், நீங்கள் மரணத்தை வெல்வீர்கள், முக்திக்கு வேறு வழியில்லை – ‘தமேவ விதித்வா அதிமிருத்யும் ஏதி நான்யஹ் பந்தா வித்யாதே அயநாயா’.
  • பிரம்மனின் மகிழ்ச்சியை அறிந்தவன் எதற்கும் அஞ்சுவதில்லை – ‘ஆனந்தம் ப்ரம்ஹணோ வித்வான் ந பிபேதி குதச்சனா’.
  • மனிதப் பிறவிக்குள், அந்த அறிவைப் பெற்றால் அது பெரியது, இல்லையெனில் அது பெரிய இழப்பு – ‘இஹ சேத் அவேதீத் அத சத்யம் அஸ்தி ந சேத் இஹாவேதீன் மஹதீ வினஷ்டி:’.
  • ஆகாசத்தை (ஆகாயத்தை) தோல் துண்டாக (புடவை போல) சுருட்டுவது எப்படி சாத்தியமில்லையோ, அதுபோல் இறைவனை அறியாமல் உலகின் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது முற்றிலும் சாத்தியமற்றது – ‘யதா சர்மவத் ஆகாஷம் வேஷ்டயிஷ்யந்தி . மானவா; ததா தேவம் அவிஜ்ஞாய துஹ்கஸாயந்தோ பவிஷ்யதி’.
  • செயல்களாலோ, சந்ததியாலோ, செல்வத்தினாலோ அழியாமையை அடைய முடியாது; எல்லாவற்றையும் துறப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் அதைச் செய்ய முடியும் – ‘ந கர்மணா ந ப்ரஜாயா தானேன தியாகா நைகே அம்ருதத்வம் ஆனாஷு’.
  • உண்மையான சன்யாசிகளால் அடையப்படும் இந்த முழுமை நிலை, இந்த உலகத்திற்கு அப்பால் அமைந்துள்ளது, மேலும் சாதாரண மனிதனுக்கு எட்டுவது கடினம் – ‘வேதாந்த விஜ்ஞான சுனிஷ்ச்சிதார்தாஹ் சன்யாசயோகாத் யதாயஷ் ஷுத்தஸத்வா; தே ப்ராம்ஹலோகே து பராந்தகாலே பராம்ருதாঃ பரிமுச்யந்தி ஸர்வே’.

அந்த சன்யாசிகள், வேதங்களின் உண்மையான முக்கியத்துவத்தை உணர்ந்து, இறைவனின் சேவையில் ஈடுபடுவதற்காக தங்கள் தனிப்பட்ட புலன் இன்பத்தை விட்டுவிட்டு, ஜட உலகின் செல்வாக்கிலிருந்து முற்றிலும் விடுபட்ட பிறகு, ஜட உலகத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கையின் முடிவு.

ஸ்ரீ பராசர பட்டர் நான்கு வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் சஹஸ்ரநாமத்தை ஜபிக்கும்போது, ​​​​குறிப்பிட்ட பலனைத் தேடாமல், அல்லது எந்தவொரு சிறப்பு ஒழுக்கத்தையும் பின்பற்றாமல், அவர்கள் அடையும் நன்மைகளை அறிவிக்கிறார்.
————————
தர்மார்த்தி ப்ராப்னுயாத் தர்மம் அர்த்தார்த்தி சார்தம் ஆப்னுயாத் |
காமான் அவாப்னுயாத் காமி ப்ரஜார்த்தி சாப்னுயாத் ப்ரஜா ||ஃபலஶ்ருதி –4||

தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்

நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது

சன்மார்க்கத்தை (தர்மத்தை) விரும்புபவன், அதனால் அருள்புரிவான்; உலகச் செல்வத்தை விரும்புபவன் செல்வத்தால் ஆசிர்வதிக்கப்படுவான்; வாழ்வின் இன்பத்தை விரும்புபவன், எல்லா இன்பங்களையும் வழங்குவான்; சந்ததியை விரும்புபவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

————-

அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன

பக்திமான் யஹ் ஸதோத்தாய ஶுசிஹ் தத்-கத-மானஸஹ் |
ஸஹஸ்ரம் வாசுதேவஸ்ய நாம்நாம் ஏதத் பிரகீர்தயேத்
||ஃபலஶ்ருதி – 5||
எவன் (இறைவனுடைய 1000 நமஸ்காரம் செய்பவன்) எந்த நோயினால் துன்பப்பட்டிருக்கிறானோ அவன் அதிலிருந்து விடுபடுகிறான். அடிமைத்தனத்தில் இருப்பவன் விடுதலை பெறுவான். பயத்தால் பாதிக்கப்பட்டவர் அதை வெல்வார், கஷ்டத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபடுவார்.

பக்தரும், தூய்மையான மனமும், விடாமுயற்சியும் உள்ளவர், முழு கவனத்துடன் தியானத்துடன் இருப்பவர், பகவான் வாசுதேவரின் இந்த ஆயிரம் நாமங்களைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ பராசர பட்டரின் வார்த்தைகள் – ‘அத நியம விஷேஷவத் ஜப ரூப ஸங்கீர்தனே பக்தஸ்ய ஸர்வ ஸம்ரித்திம் ஆஹ’ – இவற்றை ஜபமாகவோ கீர்த்தனையாகவோ பாராயணம் செய்பவன் எல்லாவிதமான பலன்களையும் அடைவான்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள், இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளபடி, வாசுதேவரிடம் ஏக மனதுடன் பக்தி கொண்டவர்களும், அவரைத் தொடர்ந்து தியானிப்பவர்களும், எண்ணம், சொல் மற்றும் செயலில் தூய்மையானவர், வாசுதேவரின் ஆயிரம் நாமங்களை உச்சரிப்பவர்களுக்கே கூறப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று விளக்குகிறார்.

  • பக்திமான் – ஒரு பக்தன். குறிப்பாக, இது வாசுதேவரின் பக்தரை (வாசுதேவஸ்ய நாமம்) ஒருமுக பக்தியுடன் குறிக்கிறது.
  • சதா உத்தரா – எப்போதும் அதிகாலையில் எழுந்திருத்தல்.
  • ஷுசிஹ் – குறிப்பிடப்படும் தூய்மை வெளி மற்றும் அகம். புறத்தூய்மை என்பது குளியல் போன்றவற்றை உள்ளடக்கியது. சாஸ்திரங்களில் பக்தருக்கான நித்ய கர்மாக்கள், வர்ண ஆசிரம தர்மங்கள் போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிப்பது இங்கு சம்பந்தப்பட்ட சுத்திகரிப்புக்கான மற்ற அம்சங்களாகும். நித்ய கர்மங்களைக் கடைப்பிடிக்காமல் செய்யும் எந்தச் செயலும் வீணான முயற்சியாகவே முடிவடையும் என்பதை நமது ஆச்சார்யர்கள் வலியுறுத்துகிறார்கள்.
  • தத்-கத-மானஸ – பக்தனின் மனம் பகவான் வாசுதேவரிடம் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.
  • பிரகீர்தயேத் – கீர்த்தனை என்பது குறிப்பாக மந்திரம், பாராயணம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அத்தகைய பக்தன் அடையும் குறிப்பிட்ட பலன்கள் அடுத்த மூன்று ஸ்லோகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.


யஷஹ் ப்ராப்னோதி விபுலம் யாதி ப்ரதாந்யமேவ ச |

அகாலம் ஶ்ரியம் ஆப்நோதி ஷ்ரேயஹ் ப்ராப்னோத்யனுத்தமம் ||ஃபலஶ்ருதி – 6||
அவர் (இறைவனின் 1000 நாமங்களை ஓதுபவர்) பெரும் புகழைப் பெற்றவராகவும், அவரது உறவினர்களில் முதன்மையானவராகவும் ஆகிறார். அவர் இவ்வுலகில் குறைவற்ற செல்வத்தைப் பெறுகிறார், மேலும் அவர் மறுமையிலும் (அதாவது, முக்தி) அளவற்ற செழிப்பைப் பெறுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் மேற்கண்ட ஸ்லோகங்களுக்கு இரண்டு சிறு வாக்கியங்களில் விளக்கம் அளித்துள்ளார்.
  • அனுத்தமம் ஷ்ரேயா என்றால் முக்தி
  • அன்னே அபியுதய விசேஷாஹ் என்றால் இரட்சிப்பு என்று பொருள்

உதாரணமாக, இவ்வுலகில் அச்சம் நீங்குவது என்பது, இந்தப் பிறவியின் முடிவில் பகவான் நம்மை சம்சாரக் கடலில் இருந்து நிச்சயமாக மீட்டெடுப்பார் என்ற முழு நம்பிக்கையாக விளங்கலாம்.

யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி-பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும் மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும் அனைத்தையும் காட்டிலும்ம் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்


ந பயம் க்வசித் ஆப்னோதி வீர்யம் தேஜஶ்ச விந்ததி |

பவத்யாரோகோ த்யுதிமான் பலரூபகுணாந்விதஹ் ||ஃபலஶ்ருதி –7||

அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை-அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்

அவருக்கு (இறைவனுடைய 1000 நாமங்களை ஓதுபவர்) எந்தப் பகுதியிலிருந்தும் பயம் இல்லை. அவர் வீரத்தையும் சக்தியையும் பெறுகிறார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் எப்போதும் பிரகாசிப்பார். வலிமையும், ஆரோக்கியமான உடலும், உன்னத குணங்களும் கொண்டவர்.


ரோகார்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத் |

பயான் முச்யேத பீதஸ்து முச்யேதாபன்ன ஆபதஹ் |ஃபலஶ்ருதி – |8||

நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்-நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்

பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்

இறைவனின் இந்த 1000 நமஸ்காரங்களைச் சொல்பவன், எந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறானோ, அவன் அதைக் குணப்படுத்துவான். அடிமைத் தனத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபடுவார். பயத்தால் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து விடுபடுவார், கஷ்டத்தில் இருப்பவர் அதிலிருந்து விடுபடுவார்.

  • ரோகர்தோ முச்யதே ரோகாத் – பக்தன் மிகப் பெரிய நோய்களிலிருந்து விடுபடுகிறான், அதாவது இந்த வாழ்க்கையின் உலக மற்றும் ஜடப் பொருள்களின் மீதான பற்றுதல், மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உடல் மற்றும் உடலுடன் தொடர்புடைய எல்லாவற்றின் மீதும் உள்ள பற்று;
  • பயான் முச்யேத பிதா – பக்தன் எல்லாப் பயங்களிலும் மிகப் பெரிய பயத்திலிருந்து விடுபடுகிறான் – மீண்டும் மீண்டும் பிறக்கும் பயம், சம்சார பயம்;
  • யஷா ப்ராப்னோதி – பக்தன் வாசுதேவரிடம் ஒரே மனதுடன் கொண்ட பக்திக்காக, அவனது மிகப்பெரிய சாதனையாக அறியப்படுவான்;
  • த்யுதிமான், தேஜஷ்ச விந்ததி – அத்தகைய பக்தரின் தேஜஸ் சுயமாக வெளிப்படும், நமது ஆச்சார்யர்களின் முன்னிலையில் நாம் உணர முடியும்.

அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் பக்தி இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது


துர்காந்யாதிதரத்யாஷு புருஷஹ் புருஷோத்தமம் |

ஸ்துவன் நாமஸஹஸ்ரேண நித்யம் பக்திஸமன்விதா ||ஃபலஶ்ருதி  9||

பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன் அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்

பக்தியுடன், புருஷோத்தமன் (புருஷோத்தமன்) தனது ஆயிரம் நமஸ்காரங்களை தினமும் சொல்லித் துதிப்பவன், எல்லா கஷ்டங்களையும் மிக எளிதாகக் கடக்கிறான்.

அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன

வாஸுதேவாஷ்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயணஹ் |
சர்வ பாப விசுத்த ஆத்மா யாதி பிரம்ம சனாதனம் ||ஃபலஶ்ருதி –10||

வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரமகதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன் அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறா

வாசுதேவனே அடைய வேண்டிய உயர்ந்த இலக்கை அடையும் எண்ணத்துடன் வாசுதேவனை அடைக்கலம் புகுந்த எவனும், எல்லாப் பாவங்களிலிருந்தும் தூய்மை யடைந்து மனம் தூய்மை அடைகிறான். அவர் இறுதியாக பிரம்மாவின் நித்திய இருப்பிடத்தை அடைகிறார்.

நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன

ந வாசுதேவ பக்தானாம் அசுபம் வித்யதே க்வசித் |
ஜன்ம மிருத்யு ஜரா வ்யாதி பயம் நைவோ பஜாயதே ||ஃபலஶ்ருதி -11||

வாசுதேவரின் பக்தர்கள் எப்பொழுதும் எந்த ஒரு அசுபச்சாரத்தையும் நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்ற மாறுதல்களைக் கண்டு பயப்பட மாட்டார்கள்.

இமாம் ஸ்தவம் அதீயானா ஷ்ரத்தா பக்தி ஸமன்விதா |
யுஜ்யேத ஆத்மா ஸுகஹ் சாந்தி ஶ்ரீ த்ரிதி ஸ்ம்ருதி கீர்திபிஹ் ||ஃபலஶ்ருதி -12 ||

நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இதைப் பாராயணம் செய்பவர் மன அமைதி, பொறுமை, செல்வம், தைரியம், வலிமையான நினைவாற்றல் மற்றும் பெரும் புகழைப் பெறுவார்.

வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன் ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்

ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் ‘ஷ்ரத்தா அஸ்திக்யபுத்தி; பக்திர் பஜனம் தாத்பர்யம்; ஆத்மானஹ் சுகம் ஆத்மசுகம்; தேன ச க்ஷாந்த்யாதிபிஶ்ச யுஜ்யதே – ஷ்ரத்தா என்றால் இறைவன் மீது நம்பிக்கை; பக்தி என்றால் இறைவனிடம் அர்ப்பணிப்பு மற்றும் பக்தி; ஆத்மசுகம் என்றால் தனக்குள் ஆறுதல்; இந்த குணங்களிலிருந்து ஒருவருக்கு சகிப்புத்தன்மை போன்றவை தானாகவே கிடைக்கும்.

ஸ்ரீ பராசர பட்டர் கருத்துக்கள் – நியமாவதோ பக்தஸ்ய அனுஷங்கினீம் அபியுதய சித்திம் ஆஹ – வேத உபதேசங்களின்படி நாமங்களை ஓதும் பக்தனுக்கு, சகலவிதமான சுபிட்சமும் கிட்டும்.

அவர் ஷ்ரத்தா என்ற சொல்லை ச-கௌரவ த்வார – மரியாதையுடன் தொடர்புடைய ஆர்வமாக விளக்குகிறார். பக்தி என்பது உயர்ந்த புண்ணிய செயல்களின் விளைவு என்றும் அவர் கருத்து கூறுகிறார் – பகவதீ பக்தி மஹதஹ் சு-கிருதஸ்ய பலம். எனவே ஒரு உண்மையான பக்தன் நேர்மையான பக்தியுடனும் ஆர்வத்துடனும் ஸ்லோகங்களை ஜபிக்க வேண்டும், மேலும் மற்ற புண்ணிய செயல்களுடன் ஒரு வாழ்க்கை முறையாக ஜபிக்க வேண்டும். ஸ்ரீ பட்டர் மேலும் கூறுகிறார், ‘கோவிந்த பக்த்யாப்யாதிகம் ஸ்ரேயஷ்ச அன்யத் ந வித்யதே’ – கோவிந்த பகவானின் மீது தளராத பக்தியை விட உயர்ந்த செயல் எதுவும் இல்லை.

ஸ்ரீ வி.வி. ராமானுஜம் அனுசந்தனம் (விசாரணை, விசாரணை, ஆய்வு போன்றவை) என்ற சொல்லை இந்த ஸ்லோகத்தின் சூழலில் பயன்படுத்தியுள்ளார். இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், முதலாவது ஸ்லோகத்தை உச்சரிக்கும் பக்தர் அடையும் பலன்களைப் பற்றி விவாதிக்கிறது, இரண்டாவது அர்த்தங்களை ஆழமாக ஆராயும் பக்தர் அடையும் நன்மைகளைப் பற்றியது.
பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்
அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது

ந க்ரோதோ ந ச மாத்சார்யம் ந லோபோ நாஷுபா மதிஹ் |
பவந்தி கிருதபுண்யாநாம் பக்தானாம் புருஷோத்தமே ||ஃபலஶ்ருதி –13 ||

புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை-ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை

(பக்தர்களாக இருப்பதற்காக) நிறைய நற்செயல்களைப் பெற்ற பெருமானின் பக்தர்களின் விஷயத்தில், அவர்களின் மனம் கோபம், பொறாமை, பேராசை மற்றும் தீய எண்ணங்களிலிருந்து முற்றிலும் விடுபடுகிறது.

ஸ்ரீ ஆதிசங்கரர் ‘ந க்ரோதோ, ந லோபோ, நாஷுபா மதிஹ் இதி சக்கராநுபந்தரஹிதேன நகரேண ஸமஸ்தம் பதத்ரயம் க்ரோதோதயோ ந பவந்தி மாத்சார்யம் ச ந பவதி இதி அர்த்தாஹ் – இந்தச் சொற்றொடரில் க்ரோதா, அஸ்ஹுபா மத்தி ஆகியவற்றுடன் ‘ச’ இணைக்கப்படவில்லை. பக்தர்களிடம் கோபம், காமம், தீய எண்ணங்கள் மட்டும் இல்லாமல், பொறாமையும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் மாட்சார்யத்தில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற மூன்றும் பொதுவாக பொறாமையுடன் இணைந்திருப்பதால், பொறாமை இல்லாதது மற்ற மூன்றும் இல்லாததால் முற்றிலும் தற்செயலானது, எனவே பொறாமைக்கு ‘சா’ அல்லது ‘மேலும்’ பயன்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் இயற்கையாகவே, இந்த குறைபாடுகள் தாமாகவே பகவான் வாசுதேவரின் பக்தர்களிடமிருந்து விலகிச் செல்கின்றன என்று கூறுகிறார்.

மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அற்றவர்கள் சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி எம்பெருமானுடைய பெருமை காரணமாக கைகூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்

த்வௌஹ் ச சந்த்ரார்க நட்சத்திரம் கம் திஷோ புர்மஹோதாதிஹ் |
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மனா ||ஃபலஶ்ருதி -14||

சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூதேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன

வானமும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், எல்லாத் திசைகளும், பூமியும், பெருங்கடலும் – இவை யனைத்தும் மஹா பகவான் ஸ்ரீ வாசுதேவரின் சக்தியால் ஒருங்கிணைக்கப்பட்டவை.

தற்போதைய ஸ்லோகம் மற்றும் அடுத்த சில ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் சக்தி மற்றும் மகத்துவத்தைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்று ஸ்ரீ பராசர பட்டர் கூறுகிறார்.
அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –
ஸ ஸூராஸூர கந்தர்வம்  ச யக்ஷோரக ராக்ஷஸம் |
ஜகத்வஶே வர்ததேதாம் கிருஷ்ணஸ்ய சச்சராச்சரம் ||ஃபலஶ்ருதி 15 ||

தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன

இந்த முழு உலகமும், அதன் அசையும் மற்றும் அசையாப் பொருட்களுடன் (தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பாம்புகள் மற்றும் அசுரர்கள் உட்பட) முழுவதுமாக பகவான் கிருஷ்ணரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது

இந்த்ரியாணி மனோ புத்திஹ் சத்வம் தேஜோ பலம் த்ரிதிஹ் |
வாஸுதேவ ஆத்மகான்யாஹுஹ் க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச ||ஃபலஶ்ருதி-16 ||

இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும் வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன

இந்திரியங்கள், மனம், புத்தி, சத்வ குணம், பிரகாசம், வலிமை, உறுதி, உடல் மற்றும் தனிப்பட்ட ஆன்மா, அவை அனைத்தும் வாசுதேவனை தங்கள் ஆத்மா அல்லது உள் ஆத்மாவாகக் கொண்டிருப்பதாக சாஸ்திரங்கள் அறிவிக்கின்றன.

ஸ்ரீ பராசர பட்டர் கருத்து தெரிவிக்கையில், அனைத்து பொருட்களும் வாசுதேவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நிலை அனைத்து பொருட்களுக்கும் பகவானுக்கும் இடையிலான உடல்-ஆன்மா உறவு என்று விளக்கப்படுகிறது. தனிப்பட்ட ஆன்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையிலான இந்த உறவு, உடல்-ஆன்மா உறவுகளில் ஒன்றாக விசிஷ்டா அத்வைத தத்துவத்தின் முக்கிய அம்சமாகும்.

இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள் அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது

ஸர்வ ஆகமா நாம் ஆசாரஹ் ப்ரதமம் பரி கல்பித
ஆசார ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு அச்யுதஹ் ||ஃபலஶ்ருதி–17 ||

ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும் அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்

ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்

எல்லா சாஸ்திரங்களும் முறையான நடத்தையை ஒருவருடைய வாழ்க்கையில் முதன்மையானதாக அறிவிக்கின்றன. தர்மம் அல்லது சன்மார்க்கம் சரியான நடத்தையிலிருந்து உருவாகிறது மற்றும் அச்யுதா தர்மத்தின் முதன்மையான ஆதரவாளர்.

ஸ்ரீ ஆதிசங்கரர், ‘ஸர்வாகமானாம் ஆச்சரஹ்-இதி அனேன அவந்தர வாக்யேன ஸர்வ தர்மணாம் ஆச்சரவதஹ ஏவ அதிகார இதி தர்ஷயதி – இந்த ஆணித்தரமான கூற்றின் மூலம் வியாசர், எல்லா தர்மத்தின் அடிப்படையிலும் சரியான நடத்தை உள்ளது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சரியான நடத்தை என்பது தர்மத்தின் படிகப்படுத்தப்பட்ட விளைவு. அனைத்து வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி கடைபிடிக்க வேண்டிய முதன்மையான ஒழுக்கம் சரியான நடத்தை ஆகும்.

தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது

ரிஷயஹ் பிதரோ தேவாஹ் மஹா பூதானி தாதவஹ் |
ஜங்கம ஜங்கமம் சேதம் ஜகன் நாராயணோத்பவம் ||ஃபலஶ்ருதி-18 ||

ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும் ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின

ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்

அனைத்து முனிவர்கள், மறைந்த முன்னோர்கள், தேவர்கள், பெரிய கூறுகள், அவற்றின் விளைவுகள், பிரபஞ்சத்தை உள்ளடக்கிய நகரும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் நாராயணனிடம்தான் உள்ளன.

ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார்: தர்மத்தின் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எதுவும் மற்றும் எவருக்கும் பகவான் மூலவராக இருக்கிறார்: தர்மாநுபந்தினாமபி தத் உத்பவத்வம் ஆஹ.

அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது

யோகோ ஞானம் ததா ஸாங்க்யம் வித்யாஹஸ் ஷில்பாதி கர்ம கா |
வேத சாஸ்த்ராணி விஜ்ஞானம் ஏதத் சர்வம் ஜனார்தனாத் ||ஃபலஶ்ருதி–19 ||

யோக விஞ்ஞானம், சாங்கியம், அனைத்து அறிவுக் கிளைகள், சிற்பம் போன்ற கலைகள், அனைத்து வேதங்கள், அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் அனைத்து விஞ்ஞானங்களும் ஜனார்த்தனனின் அருளால் வெளிச்சத்திற்கு வந்தன.

கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின

ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன

அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்

ஏகோ விஷ்ணுர் மஹாத்பூதம் ப்ரிதக் பூதாந்ய நேகஶா |
த்ரி லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஷ்வ புகவ்யயஹ் ||ஃபலஶ்ருதி–20 ||

ஸ்ரீ மஹாவிஷ்ணு ஒருவரே, அபரிமிதமான வடிவத்தை உடையவர், ஆனாலும் அவர் தன்னைப் பிரித்துக் கொண்டு எல்லா உயிர்களிலும் பல விதங்களில் இருக்கிறார். அவர் மூன்று உலகங்களிலும் வியாபித்து, அவை அனைத்தையும் ஆளுகிறார். அவன் அவற்றை அனுபவித்து நுகருகிறான். அவனுக்கே மரணமோ, சிதைவோ இல்லை.

ஸ்ரீ பராசர பட்டர் ஒரு வார்த்தைக்கு வார்த்தை அர்த்தங்களையும் விளக்கங்களையும் வழங்குகிறார்:

  • ஏகா – ஸ்வயம் ஏகா சன் – எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த தெய்வமாக இருப்பது;
  • வ்யாப்ய – தேஷாம் நியம சேஷித்வா ஆதிபிஹ் ஆத்மா பவான் – பரவி, அனைத்து உயிரினங்களின் உள்ளான ஆன்மா, கட்டுப்பாட்டாளர் மற்றும் எஜமானராக இருப்பதன் மூலம்
  • அனேகஷாஹ் ப்ரிதக் பூதானி – அஸ’ங்க்யேயதாய ரூப-ப்ரகார- பரிணாமப்ரயோஜனா பேதேன ப்ரீதக் ச ஸ்திதானி மஹந்தி பூதானி – எண்ணற்ற வடிவங்கள், நடத்தைகள், பிறழ்வுகள் மற்றும் பயன்கள் கொண்ட பெரிய கூறுகள், அவை வேறுபட்டவை மற்றும் வேறுபட்டவை.
  • த்ரின் லோகன் சிஏ – பத்த முக்தா நித்யன் சேதனன் – மேலும் ஆத்மாக்களின் மூன்று உலகங்களில், அதாவது, கட்டப்பட்ட ஆத்மாக்கள், விடுவிக்கப்பட்ட ஆத்மாக்கள் மற்றும் நித்திய தேவதைகள்.
  • விஷ்வ-புக் – சர்வதா பரிபாலகா – மற்றும் அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்தையும் ஒரே பாதுகாவலனாக இருப்பதன் மூலம்.
  • ததாபி – அப்படியிருந்தும்,
  • அவ்யயஹ் – தத்-தோஷைஹ் அபாரம்ர்ஷ்டா, புனஷ்ச பரா விபூத்யா – அந்தர்யாமி யாருடைய ஆன்மாவின் எந்தத் தவறுகளாலும் தீண்டப்படாமல் இருப்பது.
  • மஹத்-பூதம் – அவ’ங்-மனச கோசராஷ்ச பவன் – அவரது மகத்துவம் விவரிக்க முடியாதது, வார்த்தைகள் அல்லது மனதின் கற்பனை போன்றவை.
  • புங்க்தே – லீலா போக ரசம் அனுபவி – மேலும் அவர் தெய்வீக விளையாட்டு மற்றும் தெய்வீக பேரின்பத்தின் இன்பத்தை அனுபவிக்கிறார்.

பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்

ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு

அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும் ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர் வ்யசேன கீர்திதம் |
பதேத்ய இச்சேத் புருஷஹ் ஷ்ரேயஹ் ப்ராப்தும் சுகாநி க ||ஃபலஶ்ருதி- 21 ||

ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூகங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
வேத வ்யாஸரால் அருளிச் செய்யப் பட்டதும் பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக

உன்னதமான பேரின்பத்தையும், உலக இன்பங்களையும் பெற விரும்பும் எவரும், மகா முனிவர் வியாசரால் இயற்றப்பட்ட பகவான் விஷ்ணுவின் இந்தப் பாடலைப் படிக்க வேண்டும்.

இமாம் ஸ்தவம் இத்யாதினா ஸஹஸ்ர ஷகஜ்ஞேன ஸர்வஜ்ஞேன பகவதா கிருஷ்ணத்வைபாயநேன ஸாக்ஷாத் நாராயணேன கிருதமிதி ஸர்வைரேவ ஆர்த்திபிஹ் சாதரம் பதிதவ்யம் ஸர்வபலசித்தயே இதி தர்ஷயதி – இமாம் ஸ்தவம் இத்யாதினா ஸஹஸ்ர ஷகஜ்ஞேன ஸர்வஜ்ஞேன ஸஹஸ்ர ஶகஜ்ஞேந ஸர்வஜ்ஞேந க்ரீதமிதி ஸர்வைரேவ ஆர்திபிஹ் ஸாதரம் பதிதவ்யம் ஸர்வபலசித்தயே இதி தர்ஷயதி – என்று இமாம் ஸ்தவம் இத்யாதினா ஸஹஸ்ர ஷகஜ்ஞேன ஸர்வஜ்ஞேன ஸஹஸ்ர ஷகஜ்ஞேந ஸர்வஜ்ஞேந க்ரிதமிதி ஸர்வைரேவ ஆர்த்திபிஹ் ஸாதரம் பதிதவ்யம் ஸர்வபலசித்தயே இதி தர்ஷயதி என்று இமாம் ஸ்தவம் இத்யாதினா ஸஹஸ்ர ஷகஜ்ஞேன கிருஷ்ண த்வைபாயனர் (வியாசர்) , அனைத்தையும் அறிந்தவர், வேதத்தின் ஆயிரம் கிளைகளை அறிந்தவர், நாராயணனே, எனவே இந்த துதியை அனைவரும் தங்கள் விருப்பங்களை அடைய நம்பிக்கையுடன் ஓத வேண்டும். இது இசையமைப்பாளரின் மகத்துவம் மற்றும் பாடத்தின் மகத்துவம் ஆகிய இரண்டிலும் சஹஸ்ரநாமத்தின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘இந்த ஸ்லோகம் எல்லையில்லா மஹான்யத்தை உடையவரான விஷ்ணுவின் புகழைப் பாடுகிறது. இவரைப் போற்றுபவர் வேறு யாருமல்ல, இந்தப் பேருண்மையை முழுவதுமாக அருந்தியவரும், அந்தப் பெருமையை விவரிக்க வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லாதவருமான வேதவியாச முனிவர். ஒரு பாடலின் இந்த ரத்தினம் போற்றப்படுபவரின் மகத்துவத்தையும், அவரைப் புகழ்பவரின் பெருமையையும் கொண்டுள்ளது. வறுமையால் நிரம்பிய இவ்வுலகம், இவ்வுலகைத் துன்பத்திலிருந்து மீட்பதற்குத் தகுதியான இப்பாடலைப் பாடுவதன் மூலம் பயனடையத் தகுதியானது. இவ்வாறாக, இப்பாடல் பாடியவர், பாடுபவர், அவர் புகழ் பாடிப் பயன்பெறத் தகுதியுடையவர் என எல்லாமே சரியானது. எனவே, உயர்ந்த பேரின்பம் அல்லது பொருள் இன்பங்களை விரும்பும் எந்தவொரு நபரும், அவர் யாராக இருந்தாலும், அதை நாடலாம்.

ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்தவ ரத்னமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்-மஹா தரித்ரியம் இதம் ஜகத் -இருள் தரும் இம் மா ஞாலம்-நிர் விஷங்க ஸேவத்வம் –சங்கை லேஸமும் இல்லாமல் ஸூகாநி அனைத்து இஹ ஆமுஷ்மிக-ஸ்ரேயஸ் மோக்ஷ பலன்களையும் அருளும்

ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும் அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும் தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்

விஸ்வேஶ்வரம் அஜம் தேவம் ஜகதஹ் ப்ரபும் அவ்யயம் |
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம் ||ஃபலஶ்ருதி–22||
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி ||

தாமரைக் கண்களைக் கொண்ட பகவான் பிறக்காத உச்ச தெய்வம், பிரபஞ்சத்தின் ஆட்சியாளர், அத்துடன் பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டாளர். அவரைப் புகழ்ந்து பாடுபவர்கள் எந்த வகையிலும் பின்னடைவையோ அல்லது குழப்பத்தையோ சந்திக்க மாட்டார்கள்.

அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும் பிறப்பற்றவனும் அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும் இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று

அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும் ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும் ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம் ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது

ஸ்ரீ ஆதிசங்கரர் கருத்துரைக்கிறார், ‘விஸ்வேஸ்வரம் இத்யாதினா விஸ்வேஷ்வர உபாஸனாத் ஏவ ஸ்தோதார தே தாந்யாஹ் கிருதார்தாஹ் கிருதகிருத்யா இதி தர்ஷயதி – விஸ்வேஸ்வரம் என்று தொடங்கும் இந்த ஸ்லோகம், பிரபஞ்சத்தின் இறைவனான விஷ்ணுவை வணங்குவதன் மூலம் மட்டுமே, அவர் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றியவர் ஆவார் என்பதைக் காட்டுகிறது. ஒருவருடைய வாழ்க்கையில் தேவை. ஆதரவாக, அவர் கருட புராணத்தில் இருந்து பின்வரும் இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்:

பிரமாதாத் குர்வதம் கர்ம ப்ராச்யவேதாத்வரேஷு யத் |
ஸ்மரணதேவ தத்விஷ்ணோ சம்பூர்ணம் ஸ்யாதிதி ஷ்ருதிஹ் ||

அலட்சியத்தால் அர்ச்சனைகள் மற்றும் யாகங்களில் செய்யப்படும் எந்தத் தவறும் மகாவிஷ்ணுவைத் தியானிப்பதால்தான் நன்மையாகும்.

ஸ்ரீ சங்கரர் மேலும் கூறுகிறார், ‘அதாரேண யதா ஸ்தூதி தானவந்தம் தானேச்சயா ததா சேத் விஸ்வகர்த்தாரம் கோ ந முச்யேத பந்தனாத் – ஒரு மனிதன் ஒரு பணக்காரனுக்கு மரியாதையுடன் மரியாதை செலுத்துவது போல, பகவானை வழிபடும் எவரும் முக்தி அல்லது மோட்சத்தை அடையத் தவறமாட்டார்.

வியாச முனிவர் துதிக்கையை இரண்டு முறை பிரமாணம் செய்து முடிக்கிறார் – ‘ந தே யாந்தி பராபவம், ந தே யாந்தி பராபவம்’ – அவர்கள் ஒருபோதும் அவமரியாதையுடன் சந்திப்பதில்லை . அவர்கள் எந்த அவமரியாதையையும் சந்திக்க மாட்டார்கள்.

ஸ்ரீ பராசர பட்டர் பின்வருமாறு முடிக்கிறார்:
அஸ்மாகம் அத்ர ச பரத்ராஞ்ச ஸர்வ துஹ்கம்
உன்மில்ய ஸம்பதம் அஷேஷ விதம் விதாயா |
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷி ச ச வைஷ்ணவனம்
சங்காத் ஸுகம் ஸஹ ஜயேன ஸதா க்ரியாஸ்தம் ||

ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக

ஸ்ரீ ரங்கராஜர், அவருடைய துணைவியார் ஸ்ரீ ரங்கநாயகியுடன் சேர்ந்து, இங்கும், மறுமையிலும் எல்லா துன்பங்களையும் அகற்றி, எல்லா வகையான செல்வங்களையும் எங்களுக்கு அளித்து, மகிழ்ச்சியையும், வெற்றியையும், பக்தியுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின் சகவாசத்தையும் எப்பொழுதும் அருள்வாராக.

அர்ஜுன உவாச:
பத்மபத்ர விசாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம |

பக்தனாம் அனுரக்தானம் த்ராதா பவ ஜனார்தனா ||ஃபலஶ்ருதி- 23 ||

அர்ஜுனன் ‘விஷ்ணுவே! உங்கள் கண்கள் தாமரை இலை போன்ற பெரியவை. உங்கள் தொப்புளில் தாமரை உள்ளது. தேவர்களில் நீயே பெரியவன். உனது வழிபாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட உனது தீவிர பக்தர்களைக் காப்பாற்றுவாயாக’. இதைச் சொல்லும் போது அர்ஜுனன் தனக்காக மட்டுமல்ல, பகவானின் அனைத்து பக்தர்களுக்காகவும் பேசுகிறான்.

ஸ்ரீ பகவான் உவாச:
யோ மாம் நாமஸஹஸ்ரேண ஸ்தோதும் இச்சதி பாண்டவ |

ஸோஹம் ஏகேன ஶ்லோகேன ஸ்துதா ஏவ ந ஸம்ஷயஹ் ||ஃபலஶ்ருதி-24 ||
ஸ்துத ஏவ ந ஸம்ஷய ஓம் நம இதி

பகவான் கூறினார் ‘அர்ஜுனா, ஒருவருக்கு என்னுடைய ஆயிரம் நமஸ்காரம் சொல்லி என்னை வழிபட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அவர் முதல் ஸ்லோகத்தைச் சொல்லும்போதும் நான் என்னை வணங்குவதாகக் கருதுகிறேன், இதில் எந்த சந்தேகமும் இல்லை.

வியாஸ உவாஸ
வாஸநாத் வாஸூ தேவஸ்ய வாஸிதம்  புவன த்ரயம் |
ஸர்வபூத நிவாஸோஸி வாஸுதேவ நமோஸ்து தே ||ஃபலஶ்ருதி–25 ||
ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதா ஓம் நம இதி

வியாசர் கூறினார் ‘பகவான் வாசுதேவர் இருப்பதால் தான் மூன்று உலகங்களும் வாழத் தகுதியானவை. எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமான வாசுதேவருக்கு வணக்கம்’. ‘ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதா ஓம் நம இதி’ என்ற சொற்றொடர் இறுதியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

பார்வதி உவாச:
கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் |

பத்யதே பண்டிதைர் நித்யம் ஷ்ரோதும் இச்சாம்யஹம் ப்ரபோ ||ஃபலஶ்ருதி-26||

பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டாள், ‘ஓ’ இறைவா, விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை தினமும் ஓதக்கூடிய எளிய மற்றும் விரைவான வழி ஏதேனும் உள்ளதா? அப்படியானால், அதைப் பற்றி நான் கேட்க விரும்புகிறேன்.

சிவன் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றும், எனவே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது பற்றி கேட்க சரியான நபரை பார்வதி தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஈஸ்வர உவாச:
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே |

ஸஹஸ்ரநாம தத் துல்யம் ராம நாம வராணனே ||ஃபலஶ்ருதி-27 ||
ராம நாம வாரணனா ஓம் நம இதி

சிவபெருமான் பதிலளித்தார், ‘ஓ’ அழகான பெண்ணே, நான் எப்போதும் ராம நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் மூலமும், ராம நாமத்தை ஒரு முறையாவது உச்சரிப்பதன் மூலமும் இன்பம் பெறுகிறேன்’ என்று பதிலளித்தார்.

எனவே இறைவனின் ஆயிரம் நாமங்களை பாராயணம் செய்வதற்கான எளிய வழி ராம நாமத்தை உச்சரிப்பதாகும்.

மானஸம் வாச்சிகம் பாவம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணேன ஏவ வ்யபோஹதி ந ஸம்ஷயஹ் – ஒருவன் எண்ணத்தினாலோ, பேச்சினாலோ, செயலினாலோ செய்த எந்தப் பாவமும், ராம நாமத்தை தியானிப்பதன் மூலம் நிராகரிக்கப்படும் என்று மற்றொரு ஸ்லோகம் உள்ளது. ‘ராம நாம வரானனா ஓம் நம இதி’ என்ற சொற்றொடர் மேலும் வலியுறுத்துவதற்காகவே.

ப்ரம்ஹ உவாச:
நமோஸ்த்வானந்தாய ஸஹஸ்ரமூர்தயே

ஸஹஸ்ர பதக்ஷிஷிரோருபாஹவே
ஸஹஸ்ரநாம்நே புருஷாய ஶாஷ்வதே
ஸஹஸ்ரகோடி யுகதாரிணே நமஹ் ||28||
சஹஸ்ரகோடி யுகதாரிணே நம ஓம் நம இதி

இது பிரம்மாவிடம் இருந்து விஷ்ணுவிடம் பிரார்த்தனை. ஆயிரமாயிரம் வடிவங்களையும், பல்லாயிரம் பாதங்களையும், ஆயிரமாயிரம் கண்களையும், ஆயிரமாயிரம் கரங்களையும் உடையவனுக்கே, முடிவில்லாத, அழியாதவனுக்கு வணக்கம். ஆயிரமாயிரம் நமஸ்காரம் உடையவனும், எல்லா உயிர்களிலும் ஆன்மாவாக இருப்பவனும், நிரந்தரமானவனுமானவனுக்கே நமஸ்காரம். பில்லியன் கணக்கான யுகங்கள் அல்லது காலச் சுழற்சிகளை உருவாக்கிக்கொண்டே இருப்பவருக்கு வணக்கம்.’

‘சஹஸ்ரகோடி யுகதாரிணே நம ஓம்’ என்ற வாசகம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

ஃபலஶ்ருதி- 29

ஸஞ்ஜய உவாச:
யத்ர யோகேஷ்வரஹ் கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தரஹ் |

தத்ர ஶ்ரீர் விஜயோ விஷ்ணுஹ் த்ருவா நீதிர் மம ||ஃபலஶ்ருதி–28 ||

இது பகவத் கீதையின் (அத்தியாயம் 18 வசனம் 78) ஸ்லோகம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலின் முடிவில் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் கூறியது இது. ‘யோகங்களின் அதிபதியான கிருஷ்ணன் இருக்கும் இடத்தில், வில் ஏந்திய அர்ஜுனன் இருக்கும் இடத்தில், அதிர்ஷ்டம், வெற்றி, செழிப்பு மற்றும் தவறாத ஒழுக்கம் இருக்கும் என்பது என் கருத்து.

கீதையில் சஞ்சயனின் இறுதி அறிக்கையை மூன்று நிலைகளில் இருந்து பார்க்கலாம்.

  • உண்மையில் எடுத்துக்கொண்டால், பாண்டவப் படை வெற்றிபெறும் என்றும், அவனது மகன்களான கௌரவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் மிக நுட்பமாகத் தெரிவிக்க விரும்புவதைக் காணலாம். உலகின் தலைசிறந்த போர்வீரன் அர்ஜுனனும், அனைத்து யோகங்களின் இறைவனான ஸ்ரீ கிருஷ்ணரும் கௌரவர்களின் எதிர் பக்கத்தில் இருந்ததால் இது கண்டிப்பாக நடக்கும்.
  • நமது கடமையின் நிலைப்பாட்டில் இருந்து, இந்த ஸ்லோகத்தை நாம் பின்வருமாறு விளக்கலாம். எந்தவொரு செயலிலும் நாம் எவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், அது பல காரணிகளைச் சார்ந்து இருப்பதால் வெற்றியை உறுதி செய்ய முடியாது. ஆனால் அது இரண்டு விஷயங்களைக் குறைக்கிறது – சொந்த முயற்சி மற்றும் கடவுளின் அருள். எந்த அம்சமும் தவறினால், நமது செயல்கள் வெற்றியடையாது. சொந்த முயற்சியால் மட்டுமே பலன் கிடைக்காது, தனிமனிதனின் எந்த முயற்சியும் இல்லாமல் கடவுளின் அருளுக்காகவோ அல்லது பிரசாதத்திற்காகவோ காத்திருக்க முடியாது.
  • முழுமையான நிலைப்பாட்டில் இருந்து, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, நமது உண்மையான சுயத்தை உணர்தல் என்பது சுய முயற்சியின் மூலம் முற்றிலும் சாத்தியமில்லை. இறைவனுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையுடன், சுயநலமின்றி, வேறு எந்த ஒரு சுயநலப் பொருளையும் நமது குறிக்கோளாகக் கொள்ளாமல், நம் கடமையைச் செய்ய வேண்டும். இறைவனுக்கு தன்னலமற்ற அர்ப்பணிப்பு சேவை, இறைவனின் அருளுடன் இணைந்தால், ஆன்மீக பயணத்தில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். கடவுள் அருள் இல்லாமல் அது சாத்தியமில்லை.

ஸ்ரீ பகவான் உவாஸ
அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஐநா பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்
||ஃபலஶ்ருதி–30 ||

பரித்ராணாய சாதுனாம் வினாஷாய ச துஷ்கிருதம் |
தர்ம ஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே ||ஃபலஶ்ருதி– 31||

முதல் ஸ்லோகம் பகவத் கீதையில் இருந்து (அத்தியாயம் 9 வசனம் 22). இதன் பொருள் ‘எனது வணக்கத்தில் தொடர்ந்து ஒரே மனதுடன் ஈடுபடுகிறாரோ, அவர்களுக்கு இல்லாததைச் சுமந்துகொண்டு, அவர்களிடம் இருப்பதைப் பாதுகாப்பேன் ‘.

இறைவனைப் பின்தொடர்வதில் முழு மனதுடன் நம்மை அர்ப்பணித்தால், நம் தேவைகளைப் பற்றி இடைவிடாமல் கவலைப்பட வேண்டியதில்லை என்பது இதன் உட்பொருள். நாம் நமது கடமைகளை திறம்பட மற்றும் இறைவனுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் செய்யும் வரை, நாம் கவனிக்கப்படுவோம். இறைவன் நம் தேவைகளை மட்டும் சுமக்க மாட்டார், நம் கவலைகள் அனைத்தையும் சுமப்பார்.

நமது முழு வாழ்க்கையும் இரண்டு முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கியது: கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல். நமது வாழ்க்கையின் ஆரம்பப் பகுதி அறிவு, செல்வம், குடும்பம், பதவி மற்றும் பட்டம் பெறுவதில் செல்கிறது. இது ‘யோகா’ என்ற வார்த்தையால் குறிக்கப்படுகிறது. நம் வாழ்வின் பிற்பகுதி நாம் பெற்றவற்றைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுவே ‘க்ஷேமம்’, நாம் முழுவதுமாக அவரிடம் சரணடைந்தால் இந்த இரண்டு தேவைகளையும் இறைவன் பார்த்துக் கொள்கிறான்.

இரண்டாவது ஸ்லோகம் பகவத் கீதை அத்தியாயம் 4 வது வசனம் 8-ல் இருந்து வருகிறது. இதன் பொருள் ‘நல்லொழுக்கத்தைப் பாதுகாப்பதற்காகவும், தீமையை அழிக்கவும், அதே போல் தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காகவும், ஆயிரமாண்டுகளுக்குப் பிறகு நான் என்னை மறுபிறவி எடுக்கிறேன்’.

தர்மத்தை நிலைநாட்ட கடவுள் மீண்டும் மீண்டும் உலகில் பல்வேறு வடிவங்களில் அவதரிக்கிறார் என்பதை இது குறிக்கிறது. எப்பொழுதெல்லாம் தீயவர்கள் மேலெழுந்து, நல்லவர்கள் துன்பப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் பகவான் அவதரித்து, தீயவர்களை அழித்து தர்மத்தை மீட்டெடுக்கிறார்.

ஆர்தாஹ் விஷன்னாஹ் ஷிதிலாஶ்ச பீதாஹ்
கோரேஷு ச வ்யாதிஷு வர்தமானா
ஸங்கீர்த்யா நாராயணா ஷப்த மாத்ரம்
விமுக்ததுஹ்காஹ் சுகினோ பவந்து ||ஃபலஶ்ருதி–32 ||

இது நாராயண நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகளின் மற்றொரு சுருக்கம். ‘தாழ்த்தப்பட்ட, மனச்சோர்வு, அழிவு, பயம் அல்லது பயங்கரமான நோயால் பாதிக்கப்பட்ட எவரும் ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தை உச்சரிப்பதால் நிவாரணமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்’ என்பது இதன் பொருள்.

நோய்களுக்கு உடனடி மந்திர சிகிச்சை இல்லை என்பதை நாம் பாராட்ட வேண்டும், ஆனால் ஸ்ரீமன் நாராயணனின் நாமங்களை உச்சரிப்பதால் ஒருவருக்கு உடனடி மன அமைதியும் அமைதியும் கிடைக்கும்.

ஸ்ரீ ஆதி சங்கரர் விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய தனது வர்ணனையை பின்வரும் வசனத்துடன் முடிக்கிறார்:
ஸஹஸ்ரநாம சம்பந்தி வ்யாக்யா ஸர்வமுகவாஹ ஷ்ருதி
ஸ்மிருதி நியாய மூல ரசிதா ஹரி-பதயோஹ் ||

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் இந்த வர்ணனை அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது, இது ஸ்ருதி, ஸ்மிருதி மற்றும் தர்க்கத்திற்கு இசைவாக எழுதப்பட்டது, இது ஸ்ரீ ஹரியின் தாமரை பாதங்களில் வழங்கப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் விளக்குகிறார்:
ஏவம் ஸ்வபாவத ஏவ ஸமஸ்த-த்வந்த்வ- ப்ரதித்வந்த்வி – ஸகல கல்யாண குணகரம்,
பிரபன்ன பாரிஜாதம், புண்டரீகாக்ஷம், லக்ஷ்மி-பதிம்,
பகவந்தம் பஜமானானம் ச ஏவ ஸர்வஸ்வம் இதி, தத்-ஸம்பதோ வாச்சரஹ |
குதஹ் ஸம்ஸாரிகா- பரிபவ-ப்ரஸங்கஹ் இதி பர்யப்தயதி – விஸ்வேஶ்வரம் இதி ||
லக்ஷ்மியின் மனைவியும் தாமரைக்கண்ணுமான பகவான் நாராயணர், இயற்கையால் விரும்பத்தகாத விஷயங்களை எல்லாம் எதிர்க்கிறார், மேலும் அனைத்து மங்கள குணங்களும் நிறைந்தவர். தம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு அவர் வான பாரிஜாத மரம் போன்றவர். அவன் ஒருவனே தங்களின் செல்வம் என்று எண்ணுகிறார்கள். எனவே இந்த மக்களின் செல்வமும் நலமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இப்படியிருக்க, அவர்களுக்கு அவமானமோ, அவமானமோ ஏற்பட வாய்ப்பே இல்லை.”

குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்
.நிலம், செல்வம் மற்றும் செழிப்பு, நல்ல குடும்பம் ஆகியவற்றைக் கொடுக்கும். பக்தர்கள் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களையும் அது தரையில் சீற்றுகிறது. இது விடுதலை (மோட்சம்) மற்றும் தீங்கான கருணையை வழங்குகிறது. அது ஒரு மனிதனுக்கு வலிமையையும், தாயை விட அதிகமாக உள்ள அன்பையும் தருகிறது. அது தூய நல்வினையைத் தருகிறது, நல் அருளும் மந்திரம் என்பதை அறிவேன் – நாராயணா என்ற நாமமே எல்லா அருளையும் அளிக்கும்!

இறுதி ஸ்லோகம் இறைவனுக்கு சமர்ப்பணம் ஆகும், இது எல்லா பூஜைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் பொதுவானது
கரோமி யদ்யদ் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி ॥
காயேன வாச்சா மன-சேந்திரியர் வா புத்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணா ஏதி ஸமர்பயாமி ||

நான் என் உடல், பேச்சு, மனம் அல்லது என் உடலின் பிற புலன்கள், அல்லது என் புத்தி மற்றும் ஆன்மா அல்லது எனது உள்ளார்ந்த இயற்கையான போக்குகள் ஆகியவற்றால் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் நான் பகவான் நாராயணனுக்கு (அர்ப்பணம்) செய்கிறேன்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணர்பணம் அஸ்து – ஸ்ரீ கிருஷ்ணருக்கு அனைத்து பணிவுடன் அர்ப்பணிக்கப்பட்டது –

ஓம் நமோ நாராயணாய

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகம்- திரு மந்த்ரமும் திரு மந்த்ரார்த்தமும்–-ஸ்ரீ மன் நாராயணனே பர ப்ரஹ்மம் -ஸ்ருதி ஸ்ம்ருதி பரிபாடல் பிரமாணங்கள் -ஸ்ரீ புருஷ ஸூக்தம்-

January 24, 2024

ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகம்- திரு மந்த்ரமும் திரு மந்த்ரார்த்தமும்–

வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8
என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று ஸ்ரீ பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று ஸ்ரீ திரு மழிசைப் பிரானும்

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான  சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8– ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-
இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில் இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -பெரிய திரு மொழி -6-10-6-என்கிறபடியே பிரதிபாத்ய வஸ்துவைப்   போலே -ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே –
போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்கை

நின் திரு எட்டு எழுத்தும் கற்று மற்று எல்லாம் பேசிலும் -பெரிய திரு மொழி -8-10-3-
என்கிறபடியே ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உடலாக அறிய வேண்டும் அர்த்த விசேஷங்கள் எல்லாம் இம் மந்த்ரத்துக்குள்ளே உண்டு என்கை –

ஸ்ரீ நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலே-ஸ்ரீ ஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும் என்கை –

———————–

ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே-10-5-3-

—————–

தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.
ஸ்ரீ நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே, ‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மை யிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனை யிட்டல்லது சொல்லப் போகாது.
கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;
‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம்.

‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி.
‘நான்காம் வேற்றுமை’என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம்,
நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிற தன்றோ.
கோனாரை அடியேன் – நாயகன் தைரியத்தையுடைய நாயகன்–இவள் தைரியம் இல்லாதவள்.
அடியேன் அடிகூடுவது என்று கொலோ – ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் பொருளோடே-விபக்தி உடன் – தலைக்கட்டுகிறபடி.
எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,
அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம், எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.
தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண் கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண் துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.

—————-

நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -ஸ்ரீ திருப்பல்லாண்டு -4-

நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12-

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாட புதுவை கோன் பட்டன் சொல் நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வாரே -ஸ்ரீ பெரியாழ்வார்-1-8-11 – –

நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் எண்ணற்கு அரிய பிரானே – -2 3-2 – –

நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 – –

நம்பி நீ பிறந்த நல் நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

நல்ல துழாய் அலங்கல் சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் -3-7-5 –

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே -3 7-11 –

நாராயணன் செய்த தீமை என்றும் எமரர்கள் குடிக்கு ஓர் ஏச்சு கொலோ ஆயிடும் கொலோ – 3-8 2- –

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின் நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 1-

கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6 7-

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-2 –

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 10-4 –

முற்ற உலகு எல்லாம் நீயேயாகி
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் பிரகாரமாக -தான் பிரகாரியாக இருக்கையாலே –
ஓன்று ஒழியாதபடி சகல லோகங்களும் நீயேயாய் – சர்வம் கல்விதம் பிரம -என்றும் –
புருஷ ஏவேதம் ஸ்ர்வம்-என்னக் கடவது இறே –
மூன்று எழுத்தாய முதல்வனேயோ-
அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5 1-3 –

ஓவாதே நமோ நாரணா என்பன் –
பிரயோஜனம் பெற்றவாறே குலையும் ஐஸ்வர்ய காமற்கு
அங்கி கைப் பட்டவாறே குலையும் உபாசகர்க்கு
இது தானே பிரயோஜனம் ஆகையாலே -பிரபன்னர்க்கு குலையாது
ஓவாதே –இது மாறினால் எனக்கு சத்தை குலையும் –

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – 5-1 6-

கண்ணா –
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து தண்ணியரோடு நின்றான் -என்னும்படி சுலபன் ஆனவனே
நான்முகனைப் படைத்தானே –
இப்படி சுலபனானவன் தான் யார் என்னில் -பிரம்மாவை திரு உந்தியில் ஸ்ருஷ்ட்டித்தவன்
காரணா –
பிரம்மாவுக்கும் முன்புண்டான ப்ராக்ருத ஸ்ருஷ்ட்டியைப் பண்ணிணவனே
கரியாய் –
காரணத்வமும் -சௌலப்யமும் அன்றிக்கே -துர்லபனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
காரணா -நான் முகனைப் படைத்தானே -கண்ணா -கரியாய் -என்று அந்வயம்
இது என் ஸ்வரூபம் –உம்முடைய ஸ்வரூபம் இருந்தபடி என் -என்ன –
அடியேன் நான் –
உனக்கு அனந்யார்க்க சேஷ பூதனான நான் –
ஆனாலும்-தேகம் கிடைக்கையினாலே இதுக்கு தாரகம் என் என்னில் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-
பசிப்பது எப்போதோ என்னில் –
ஓவாதே –
மறவாதே
நமோ நாராயணா என்று எண்ணா நாளும்-
நமோ நாராயணா -என்கையாலே –
தேக ஆத்மா அபிமானத்தையும் குலைத்து கொண்டு -திரு நாமத்தை அனுசந்திக்கிறார் –
இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு –
நமோ நாராயணா -என்றது போராமே -பெரும் திருப் பாவாடையிலே மண்டுகிறார் –
திருமந்தரம் -ஸங்க்ரஹமும் -வேதம் விவரணுமாயும் இறே இருப்பது –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு-
அவை தத்துறுமாகில் -என்கையாலே -அவை கூடாது
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-என்கையாலும் –
ஓவாதே நமோ நாராயணா -என்கையாலும் -கூடாது –
கூடில் -நாளும் அது -பட்டினியும் அது –
நாள் மலர் கொண்டு நண்ணுகைக்கு பிரமாணம் -வேதம்
நாடாத மலர் நாடி –
த்ருஷ்டாதிர்ஷ்டம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாயம் உபேயம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாசகருக்கு உபாயம் -தங்கள் கையிலே -உபேயம்-ஈஸ்வரன்
உண்ணா நாள் -உன பாதம் நண்ணா நாள் — உண்ணும் நாள் உன பாதம் நண்ணும் நாள் –
பசி ஆவது -பசிப்பது என்ற படி
ஓவாதே நண்ணும் நாள் பசி கெடுவது —
ஓவாதே எண்ணா நாள் -இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொள்ளா நாள் -அவன் கொள்ளா நாள் –
அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே-
தத்துறுகை-தட்டுப் படுகை
இத்தால் மாறுமாகில் என்றபடி
தத்துறுமாகில் – மாறாட்டு படுமாகில் என்னவுமாம் –
மாறாட்டு படுகையாவது -அநந்ய பிரயோஜனமாகம் அன்றிக்கே –
பிரயோஜனாந்தரங்களை கணிசிக்கை –

————-

நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்––ஸ்ரீ திருப்பாவை 1-

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்–10-

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே–ஸ்ரீ நாச்சியார் திரு மொழி-2-1-

இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-

வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-8-

———–

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே––ஸ்ரீ பெருமாள் திருமொழி -2-4-

————–

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –-ஸ்ரீ பெரிய திருமொழி -1-1-1-

நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3-

நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-

நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் —1-1-5-

நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-

நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8-

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10-

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி–2-9-1-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் –!–3-8-1-

வராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-4-
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5-
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம் நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

——————–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று —ஸ்ரீ முதல் திருவந்தாதி-—–5-

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் ——95-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி 1-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–

——————-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–-ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -1-

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14–

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67–

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

———

பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என–ஸ்ரீ சிறிய திருமடல்

—————

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே–ஸ்ரீ திருவாய் மொழி -1-2-10-

ஒன்று எனப் பல என அறி வரு வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே–1-3-7-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே–1-10-8-

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையிற் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி! கனை இருளே!–2-1-7-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாரயணனாலே–2-7-1-

நாரணன், முழு ஏழ் உலகுக்கும் நாதன், வேத மயன்,
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன், எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே–2-7-2-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ.–4-1-1-

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில்,நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய் மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே–4-4-7-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய் வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கை தலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே–4-7-1-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-

நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-
நல் அருள் நம்பெருமான் –
நல்ல அருளையுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், -நல்லருள்-வாத்சல்யம் – நம் பெருமான் -ஸ்வாமித்வம்
நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச் செய்கிறார்:
நாராயணன் நாமங்களே –
நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.ஸ்வரூப நிரூபகமாய்-
நாரங்களுக்கு அயனம் -நாரங்கள் எல்லாம் யாருக்கு அயனமோ – உள்ளும் புறமும் -நியமனம் வியாபகம்

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி யாவரோ
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அழித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே –7-5-3-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதோர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே -8-6-10–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே-9-3-1-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்
ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-

———

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து——ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -2-

———————–

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –1-1-7-

கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்னும் இடத்தை சாமா நாதி கரண்யத்தாலே சொல்லிற்று –
இனி இந்த சாமா நாதி கரண்யமானது ஜெகதீஸ்வரயோக சரீராத்ம நிபந்தம் என்று சொல்லுகிறது –

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இந்த சரீரத்தை இவ்வாத்மா நியந்தருதயா வியாபித்து இருந்தால் போலே எம்பெருமானும் அபாதித பிராமண ஸித்தமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகங்களையும்
தத் ஆராப்தங்களான ஸமஸ்த வஸ்துக்களையும் நியந்தருதயா வியாபித்து இருக்கும் -இப்படி காரிய காரண உபய அவஸ்திதா சித்தவஸ்துவில் காட்டிலும்
பத்த முக்த நித்ய சித்த த்ரிவித சேதனரில் காட்டிலும் விலக்ஷண ஞான ஆனந்த அமல ஸ்வரூபனாய் ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந அபரிமித குண விபூதிகனாய்
அகில புவனா நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் சர்வ ஜகத் ஆத்மாவாய் -சர்வ ஜகச் சரீரனாய் ஸ்வதா ஏவ அகர்ம வச்யனாகையாலே
ஸ்வ சரீர பூத சேதன அசேதன ஆத்மக ஸமஸ்த வஸ்துகத ஸூக துக்க விகாராதி சர்வ தோஷைரா சம்ப்ருஷ்டனாய் இருந்த பரம புருஷன் –

சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம/ ஆனந்தோ ப்ரஹ்ம / எஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் / பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச /
மநோமய பிராண சரீரோபாரூபஸ் சத்யா சங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வகாமஸ் சர்வ கந்தஸ் சர்வ ரஸஸ் ஸர்வமித மப்யாத்தோ அவாக்ய அநாதர/
தஸ்ய நாம மஹத் யஸ /அத பரா ஸ்ரோத்ரம் தத் பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூஷ்மம் தத் ஸ்வயம் யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா /
அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்சோ அபிபாஸஸ் சத்யகாமஸ் சத்ய சங்கல்ப /
ய ஏஷ அந்த்ராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ/
சர்வே நிமேஷா ஐஜ்ஞிரே வித்யுத புருஷாததி/ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் /ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே /
நீல தோயத மத்யஸ்தா வித்யுலேகே வபாஸ்வாரா /மஹா ரஜநம் வாச /அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்னீ /ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம்/
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா /யத்ரர்ஷப பிரதமஜா யே புராணா/தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் /
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய/ யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமன் /பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச /
ஷரம் பிரதானம் அம்ருதாசாரம் ஹாரா ஷராத்மாநாவீசதே தேவ ஏக /ச காரணம் கரணாதி பாதிப
/த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமா நம் வ்ருஷம் பர்ஷஸ்வ ஜாதே-தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந்யோ அபிசாக சீதி/
சமாநே வ்ருஷே புருஷோ நிமக்நோ அநீசயோ சோசதி முஹ்யமாந ஜுஷ்டம் யதா பஸ்யத் யன்யமீசமஸ்ய மஹிமாநமிதி வீத சோக /
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா/போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா /
ஏதமாநந்த மயமாத்மா நமுப சங்க்ரம்ய /ரசம் ஹ்யேவாயம் லப்த்வாஸ் ஆனந்தீ பவதி /ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி /
சோஸ்நுதே சர்வான் காமான் சக ப்ரஹ்மணா விபஸ்ஸிதேதி /
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருத்வீ ந வேத யஸ்ய ப்ருத்வீ சரீரம் –ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்த ரோயம் ஆத்மா ந வேத
யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மா ந மந்தரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் யம்ருத/
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண /அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஐநாநாம் சர்வாத்மா /ச தேவ சோம்யேதமக்ர ஆஸீத் /
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே /ப்ரஹ்ம வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / சர்வானி ஹவா இமாநி பூதாந் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே /
ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் / ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாநோ நேமே த்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி /
ந தஸ்யேசே கஸ்ஸந /பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் / யச்ச கிஞ்சிஜ் ஜக தயஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித/
ச ப்ரஹ்மா ச சிவா சேந்த்ர சோஷர பரம ஸ்வராட் –இத்யாதியாய்
அவிகாரய ஸூத்தாய /ஸூத்தே மஹா விபூதியாக்யே /ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாரான் /ருக்மாபம் ஸ்வப்ந தீ கம்யம் /
சமஸ்தா சக்த யஸ் சைநா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபமந்யத்தரேர் மஹத் /
பூஷணாஸ்த்ரா ஸ்வரூபஸ்தம் /ந பூத சங்க சமஸ்தா நோ தேஹோஸ்ய பரமாத்மன/தமஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர ஸ்ரீவத்ச வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய ஸாஸ்வதோ த்ருவ/
நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ /தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய/
திவ்யம் ஸ்தானம் அஐரஞ்சாப்ரமேயம் துர் விஜ்ஜேயஜ் சாகமைர்கம்ய மாத்யம் /
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுரா சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ/
கலா முஹுர்த்தாதி மயஸ்ச கால /காலம் ச பசதே/ பூ பிராணிந சர்வ ஏவ குஹாச யஸ்ய/ சர்வம் ஸமாப்நோஷி ததோ அசி சர்வ /தாநி சர்வானி தத்வபு /
தத் சர்வம் வை ஹரேஸ்தநு /ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூப யதோ அவ்யய / ஜகத் சர்வம் சரீரம் தே /ஜகாத் வியாபார வர்ஜம் பிரகரணாத சந்நிஹிதத் வாச்ச/
போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச /ஜகத் வியாபார வர்ஜம் சமாநோ ஜ்யோதிஷா/ இதம் ஞானம் உபாச்ரித்ய மாமா சாதரம்யா மாகதா சரக்கேபி நோப ஜா யந்தே பிரளயே ந வ்யதந்தி ச /விஷ்ணோஸ் ஸகாசா நுத் பூதம் —
இத்யாதி ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –
ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின —
—————–

அவதாரிகை –

இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
ஸ்ரீ எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

—————————————————–

உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1

——————————————————-

வியாக்யானம் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது

ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது

உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –

உயர்வே -என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைப் போலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இறே

அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
ஏ -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-

உயர் வேத நேர் கொண்டு உரைத்து
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிறவிக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்-
ஆனந்த மய
ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்

பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
நேஹானா நாஸ்தி கிஞ்சன –
ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும்
சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்
நாமவன் –
அவரிவர் –
என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்

தேன வினாத்ருணா க்ரமபி நசலதி –
யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா –
என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்
திட விசும்பு -என்ற பாட்டாலே காட்டியும்

தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் –
நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து
திர மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை
பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது

அத்தை பற்றி இறே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இறே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே-ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –

மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூக்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –

மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி யடியாக
ஆ பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
திவ்ய ஸூக்தி மூலமாக இறே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி

அன்றிக்கே
ஆழ்வார் திரு நாமம் அடியாகவே மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இ றே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –

———————————————————

1. ஸ்ரீ மன் நாராயணனே உலகனைத் தையும் படைத்து அளித்து அழிக்கும் ஜகத் காரணன்.

“நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் த்வாதஸாதித்யா ருத்ரா வஸவ:”
[நாராயணோபநிஷத்]

[நாராயணனிடமிருந்து பிரமன் உண்டாகிறான்(பிரமனுக்கு அந்தர் யாமியான) நாராயணனிடமிருந்து உருத்திரன் உண்டாகிறான். (கஸ்யபருக்கு அந்தர்யாமியான) நாராயணனிடமிருந்தே இந்திரன் உண்டாகிறான்….நாராயணனிடமி ருந்து(இவ்வண்ணமாக) பன்னிரு ஆதித்யர்களும், பதினொரு உருத் திரர்களும் எட்டு வஸுக்களும் தோன்றினார்கள்]

“ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸாந” [மஹோபநிஷத்]

[நாராயணன் ஒருவனே(ப்ரளய காலத்தில்) இருந்தான். பிரமனுமில்லை சிவனுமில்லை.]

“மா அயோயே மாஅயோயே! மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!…
விதியின்மக்களும் மாசுஇல் எண்மரும் பதினொரு கபிலரும் தாமாஇருவரும் தருமனும் மடங்கலும் மூ ஏழுலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதரவலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரை ப்பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின்”[பரிபாடல் -3]

“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்” [நான்..திருவ-1]

“போதுதங்கு நான்முகன் மகன் அவன் மகன்சொலில் மாதுதங்கு கூறன் ஏறதூர்தி என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”
[திருச்சந்தவிருத்தம்-72]

“கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ! என்று வவெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளுர்தி கழல்பணிந்து ஏத்துவரே”
[திருவாய்மொழி-2-2-10]

2. ஸ்ரீ மன் நாராயணனே அனைத்துலகையும் வியாபிக்கும் அந்தர்யாமியாகவும் , அதனாலேயே அனைத்துமாகச் சொல்லத்தக்கவனாகவும் இருப்பவன்.

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர:|
நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர: ||
யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா |
அந்தர்பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:||–[தைத்திரீய நாராயணவல்லி]

[நாராயணனே பரப்ரஹ்மம், நாராயணனே பரதத்வம், நாராயணனே பரஞ்சோதி, நாராயணனே பரமாத்மா, இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவுமாக எந்தெந்தப் பொருள்கள் உள்ளனவோ, அவையனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து விளங்குபவன் நாராயணனே]

ப்ரஹ்மா நாராயண: ஸிவஸ்ச நாராயண:…நாராயண ஏவேதம் ஸர்வம்” [நாராயணோப நிஷத்]

[பிரமனும் நாராயணனே. சிவனும் நாராயணனே. நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்]

ய ப்ர்த்வியம் திஷ்டன் ப்ர்திவ்யா அந்தர யம் ப்ர்திவி ந வேத யஸ்ய ப்ர்திவி சரீரம் ய ப்ர்த்வீம் அந்தரோ யமயதி ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த-3-7-3-

யோ விஞ்ஞாநே திஷ்டன் விஞ்ஞானாத் அந்தர யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த–3-7-22-

வரிசையாக -12-மந்த்ரங்கள் -பிருத்வி / தண்ணீர் /-வாயு -அந்தரிக்ஷம் -திசைகள் -ஆகாசம் -தமஸ் –ஆத்மா -ஞானவானாக இருந்தாலும் அந்தோ
-புகுந்து ஆட்சி செய்தாலும் யறியாமல் -அம்ர்தம் –நிருபாதிக–வியாப்யக தோஷம் தட்டாமல் –

ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ….
பூவனும் நாற்றமும் நீ” [பரிபாடல்-1]

“இனைத்து என எண்வரம்பு அறியா யாக்கையை”
“அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்”
[பரிபாடல்-3]
“கெடுஇல் கேள்வியில் நடு ஆகுதலும்”              [பரிபாடல்-2]

“ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய்” [திருவாய்-4-7-6]

“நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்” திருவாய் -6-9-1]

3. ஸ்ரீ மன் நாராயணனே எல்லாம் அறிந்த ஸர்வஜ்ஞனாகவும் எல்லாம் வல்ல ஸர்வசக்தனாக வும் இருப்பவன்.

“அத புருஷோ ஹவை நாராயணோகாமயத- ப்ரஜாஸ்ருஜேயேதி | நாராயணாத் ப்ராணோ ஜாயதே மந: ஸர்வேந்த்ரியாணி ச | கம் வாயு: ஜ்யோதிராப: ப்ருதிவீ விஸ்வஸ்ய தாரிணி || [நாராயணோபநிஷத்து]

[புருஷன் எனப்படும் நாராயணன்
‘அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டிக்கக் கடவேன்’ என்று ஸங் கல்பித்தான். நாராயணனிடமிருந் தே ப்ராணன் உண்டாகிறது; மனமும் எல்லா இந்திரியங்களும், ஆகாயமும், வாயுவும், அக்னியும், நீரும், அனைத்தையும் தரிக்கும் பூமியும் உண்டாகின்றன.]

“யஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:” [முண்டக..-1-1-10]

[எந்தப் பரமாத்மா அனைத்தையும் அறிகிறானோ, அனைத்தையும் அடைந்திருக்கிறானோ அவனுடைய ஜகத் ஸ்ருஷ்டியாகிற தவம் ஸங்கல்பமயமாயிருக்கிறது.]

“பராஸ்ய ஸக்தி: விவிதைவ ஸ்ருயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச” [ஸ்வேத..6-7]

[இந்தப் பரமாத்மாவினுடைய சக்தியும் ஜ்ஞானமும் செயலும் மேலானதாகவும், பலவிதமாகவும், இயல்வானதாகவும் உள்ளன.]

“நூறு ஆயி ம் கை ஆறுஅறி கடவுள் நின்னைப் புரைநினைப்பின் நீஅலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ!”

“நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் வலியினு மனத்தினும் உணர்வினும் எல்லாம் வனப்பு வரம்பு அறியா மரபிணோயே!”
“இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை” [பரிபாடல் 3]

“எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதேகொண்டு  எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன்” [திருவாய் -3-10-8]

4. ஸ்ரீ மன் நாராயணனே தலைசிறந்த மோக்ஷத்தை அளித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளிப்பவன்.

“உதாம்ருதத்வஸ்யேஸந: ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ— இஷ்டம் மநிஷாண”[புருஷஸூக்தம்]

[மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே; லக்ஷ்மிதேவியும், பூமி தேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள் உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தையும் பெறக் கடவோம்.]

“தத்விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய:”
[ரிக் வேதம் மண்டலம் -5-22-5]

[விஷ்ணுவினுடைய அந்த மேலான பரமபதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் கண்டு கொண்டிருக்கிறார்கள்.]

“மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!”         [பரிபாடல்-3]

“நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம் அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் எளிதில் பெறல் உரிமை”                   [பரிபாடல் -15]

“வீடு முதலாம்”        [திருவாய்-2-8-1]

“சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று வீடு தரும் நின்று நின்றே”     [திருவாய்-3-9-9]

“இவ்வுடல் நீங்கிப்போய்ச் சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்”[திருவாய்-10-10-11]

5. ஸ்ரீ மன் நாராயணனே எல்லாக் கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாய், தாழ்ந்த குணங்கள் எதுவும் இல்லாதவ னாய் இருப்பவன்.

நிஷ்கலங்கோ நிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸுத்தோ தேவ ஏகோ நாராயண: ந த்விதீயோஸ்தி கஸ்சித்||”-[நாராயணோபநிஷத்]

[ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய்,சுத்தனா ய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.]

“தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏக ஏவ நாராயண:|.. உத்பவ: ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:||”-[ஸுபாலோபநிஷத்]

[அனைத்தையும் தரிப்பவனும், அனைத்தையும் விதிப்பவனும், செய்பவனும், சிறந்த விகாரங்க ளையுடையவனும், பரமபதத்திலிரு க்கும் தேவனான நாராயணன் ஒருவனே; பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே.]

நின் ஒக்கும் புகழ் நிழலவை…. எண்ணிறந்த புகழவை”[பரிபாடல்1]

“வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மைநாடின் இருநிலம்”                 [பரிபாடல்-2]

“நின் புகழ் உருவின கை”[பரிபாடல்-3]
“சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ ஏவல்இன் முதுமொழி கூறும் நற்புகழவை”            [பரிபாடல்-13]

“அன்பது மேஎய் இருங்குன்றத்தான்”[பரிபாடல்-15]

“நல்லவை எல்லாம் இயைதரும் தொல்சீர் குளவாய் அமர்ந்தான் நகர்”                 [பரிபாடல் திரட்டு]

“தாவா விழுப்புகழ் மாயோன்”[தொல்காப்பியம் பூவைநிலை]

“தேயா விழுப்புகழ் தெய்வம்”[முல்லைக்கலி-3]

“புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை”    [புறநானூறு-56]

“வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன[புறநாநூறு-57]

“ஈறில வண்புகழ் நாரணன்”[திருவாய்-1-2-10]

“உயர்வற வுயர்நல முடையவன்யவனவன்”[திருவாய்-1-1-1]
“வல்வினையேனை ஈர்கின்ற குணங்களையுடையாய்”[திருவாய்-8-1-8]
“தோற்றக்கேடவை இல்லவன்”[திருவாய்-3-6-6]

6. ஸ்ரீ மன் நாராயணனே தேவர்களுக் கெல்லாம் முதல்வனான தேவாதி தேவன்.

“அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:”[யஜூஸ்ஸம்ஹிதா-5-5]

[தேவதைகளுக்குள் அக்கினியான வன் கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவர் இல்லாத மேல் நிலையில் இருப்பவன்]

“தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்”             [ஸ்வேதாஸ்வர]

[தேவதைகளுக்குள் மேலான தேவதையாயிருப்பவன் அந்தப் பரமாத்மாவே]

“அமரர்க்கு முதல்வன் நீ”[பரிபாடல்]

“மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவாவோ”[திருவாய்-8-1-3]

“தேவாதிதேவனை” [திருப்பாவை8]

7. ஸ்ரீ மன் நாராயணனே எவராலும் அளத்தற்கரியவன்.

“ந ஸந்தருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்சநைநம்”
[தைத்திரீய நா..1-10]

[அந்தப் பரமாத்மாவின் உருவம் எவனுடைய கண்ணுக்கும் புலனா காது; எவனும் அவனைக் கண்ணால் பார்த்ததில்லை.]

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”[தை-ஆந-9]

[எந்தப் பரமாத்மாவிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அவனை அறிய முடியாமல் திரும்பி வருகின்றனவோ.]

“அன்னமரபின் அனையோய்! நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது?”
[பரிபாடல்-1]

“நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ”
[பரிபாடல்-4]
“அளப்பரியவை”    [பரிபாடல்-4]

“இலனது உடையனிது என நினவரியவன்”    [திருவாய்-1-1-3]

“யானுமேத்தி ஏழுலகும் முற்றும் ஏத்திப் பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்”    [திருவாய்-4-3-10]

8. ஸ்ரீ மன் நாராயணனே அனைத்துயிர்களுக்கும் எல்லா உறவுமாய் இருக்கும் உறவினன்.

“மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் கதி: நாராயண:|”              [ஸுபால உப]

[தாய், தந்தை ஸகோதரன் முதலான எல்லா உறவாகவும், புகலிடமாகவும், உபாயமாகவும், நண்பனாகவும், ப்ராப்யமாகவும் இருப்பவன் நாராயணனே]

“அன்னை என நினைஇ நின் அடிதொழுதனெம்”  [பரிபாடல்-18]

“எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின் மண்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பதுமோய் இருங்குன்றத்தான்”
[பரிபாடல்-15]

“பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையாராவாரும் நீ பேசில்”               [பெரிய திருவ-5]

“தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய் அவை அல்லனாய்”
[திருவாய்-3-6-9]

9. ஸ்ரீ மன் நாராயணனே வேதங்களின் முழுமுதல்வனாக முழங்கப்படுபவன்.

“த்வே வித்யே வேதிதவ்யே…பரா சைவாபரா ச | தத்ராபரா ரிக்வேதோ யஜூர்வேத: ஸாமவேத: அதர்வவேத:||
[முண்டக 1-1-4-5]

[பரமாத்மாவைக் காட்டும் இரண்டு வித்யைகளை ஜீவன் அறிய வேண்டும். பக்தியானது மேலான வித்யை. வேதங்கள் இரண்டாவதான வித்யை. அந்த வேதங்கள் ரிக், யஜூர், ஸாமம், அதர்வணம் என்று நாலு வகைப் படுகின்றன.]

“வாய்மொழிப் புலவ”
“நலம்முழுது அளைஇய புகர் அருகாட்சிப் புலமும் நீ”

“நாவல் அந்தணர் அருமறைப் பொருளே நின் ஏவல் உழந்தமை கூறும்”                       [பரிபாடல்-1]

வடுஇல் கொடுகையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடுஇல் கேள்வியின் நடு ஆகுதலும்”
“என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே”

“கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் நின்உருபு”  [பரிபாடல்-2]

“மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து  வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை”

“ஏஎ இன கிளத்தலின் இனமை நற்கு அறிந்தனம்”

“பதினாயிரம் கை முதுமொழி முதல்வ”

“முன்னைமரபின் முதுமொழி முதல்வ”

“தொல் இயல் புலவ”

“வேதத்து மறை நீ”   [பரிபாடல்-3]

“அவை நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை”

“பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவல்இன் முதுமொழி கூறும்”
[பரிபாடல்-13]

“நலம்புரீஇ அம்சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின்”           [பரிபாடல்-15]

“உளன் சுடர் மிகு சுருதியுள்”
[திருவாய்-1-1-7]

“மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே”        [திருவாய்-3-1-10]

“நம்முடைய நாயகனே! நான்மறையின் பொருளே”
[பெரியாழ்திரு 1-5-3]

“வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே”[பெரியாழ்திரு4-3-11

“அரன் நாரணன் நாமம் உரை நூல்மறை”     [முதல் திருவ 5]

“போதில் மங்கை பூதலக்கிழத்திதேவி … என்று வேதநூல் ஓதுகின்றதுண்மை அல்லதில்லை”  [திருச்சந்த -72]

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————————————————-

ஸ்ரீ புருஷ ஸூக்தம்

ஸ்ரீ புருஷஸூக்தத்தில் ஸ்ருஷ்ட்டி க்ரமம் சொல்லி -நாராயண ஸூக்தத்தில் ரக்ஷண க்ரமமும்-உபாஸனா க்ரமமும் – அவனுடைய மேன்மையும்-அவன் சர்வ -அந்தர்யாமியாய் இருக்கும் தன்மையையும் சொல்லி சர்வ பர வித்யைகளிலும் நாராயணனே உபாசிக்கப்படுகிறவன் என்று அருளிச் செய்யப்படுகிறது

#சகஸ்ர_சீர்ஷம்_தேவம்_விஸ்வாஷம் #விஸ்வ_சம்புவம்
#விஸ்வம்_நாராயணம்_தேவம்_அக்ஷரம்_பரமம்_ப்ரபும் –1-

#சகஸ்ர_சீர்ஷம்
ஆயிரம் தலை -கால் கை கண் மற்ற எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் -ஆனந்தமான ஞான சக்திகளை யுடையவன் -என்றவாறு
புருஷ ஸூக்தத்தில் சொல்லப் பட்டவன் நாராயணன் என்றவாறு
#விச்வாஷம் –
சஹஸ்ராக்ஷயா -அனைத்தையும் அறிபவன் என்றவாறு -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி-
விசுவதஸ் சஷூருத விச்வதோ-சர்வ சக்தன் -சர்வ இந்த்ரியங்களாயும் இருப்பவன் –
சஷூர் தேவா நாமுத மர்த்யா நாம் -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
#விஸ்வ_சம்புவம்
அனைவருக்கும் எல்லா வித நன்மைகளையும் கொடுப்பவன் -மம மாயா துரத்யயா — அதஸோ பயங்கதோ பவதி –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம —
#விஸ்வம்
உலகம் எல்லாம் சரீரமாகக் கொண்டவன் -விஸ்வம் விஷ்ணு என்றதையே விஸ்வம் நாராயண என்கிறது –
#நாராயணம்
சரணம் கதி நாராயணம் -நார சப்தேன ஜீவா நாம் ஸமூஹ ப்ரோச்யதே புதைகதிர் ஆலம்பனம் தஸ்ய தேன நாராயணஸ் ஸ்ம்ருத
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவே–தா யதஸ் யாயநம் பூர்வம் தேன நாராயணஸ் ஸ்ம்ருத
தரிப்பவன் –சர்வ வியாபி -சர்வ காரணன் -சர்வ செத்தனர்க்கும் உபாய உபேயன்
#தேவம்
புகரை யுடையவன் -அழகன் -அமலன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-அன்பன் -அச்சுதன் –
#அக்ஷரம்
அழிவற்றவன் –நித்ய ஸ்வரூபம் குணங்கள்
#பரமம்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -மிகுநர் இல்லாதவன்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமம் ச தைவதம் –
#ப்ரபும்
அனைவரையும் நியமிப்பவன் -ஈஸ்வர சர்வேஸ்வரன் -கர்மாதீனம் இல்லாதவன்
பரமம் ப்ரபும் நாராயணம் -சமாதிக தரித்ரன் -சகாதேவன் வியாதிரேகத்தில் சொல்ல பூ மாரி பொழிந்ததே –
நஹி பாலன சாமர்த்தியம் ருதே ஸர்வேச்வரம் ஹரீம்

——————————–

#விச்வத_பரமம்_நித்யம்_விஸ்வம் #நாராயணம்_ஹரிம்
#விஸ்வமே_வேதம்_புருஷஸ்_தத் #விஸ்வ_முபஜீவதி–2

#பதிம்_விஸ்வஸ்_யாதமேஸ்வரம் #சாஸ்வதம்_சிவமச்யுதம்
#நாராயணாம்_மஹாஜ்ஜேயம் #விச்வாத்மநாம்_பாராயணம் -3

#விச்வத_பரமம்
அசேதன சேதனங்களில் வேறுபட்ட -மேலானவன் –இல்லத்துக்கு உள்ளதும் அல்லது அவன் உரு –
அந்யச்ச ராஜன் ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக
உலகு உயிரும் தேவும் மற்றும் படைத்த பரம மூர்த்தி அன்றோ
#நித்யம்
அசேதனங்களுக்கு ஸ்வரூபத்திலும் குணங்களிலும் மாறுபாடு உண்டே -சேதனர்கள் கர்ம அனுகுணமாக ஞானாதி குணங்களில் ஏற்றது தாழ்வு உண்டே
#விச்வத_பரமம்_விஸ்வம்
அத்யந்த விலக்ஷணன்-மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
#நாராயணம்
சர்வ வியாபகம் -தாரகன் –சர்வம் ஸமாப் நோஷி ததோசி சர்வ -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் என்று மீண்டும் மீண்டும் நாராயணம் சப்த பிரயோகம்
கிம் தத்ர பஹுபிர் மந்தரை கிம் தத்ர பஹுபிர் வ்ரதை-
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த சாதக
திருமந்திர பாராயண மகிமைக்காக மீண்டும் மீண்டும் சொல்லிற்று என்றுமாம்
#ஹரிம்_நாராயணம்
சர்வ காரணன் -சர்வ ரக்ஷகன் -சர்வ சம்ஹாரகன் –
ப்ராஹ்மணம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச
நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி ஹோச்யதே
ஹரிர் ஹரதி பாபாநி ஜன்மாந்தர க்ருதானி ச -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –
இவன் உகந்த திரு நாமம் என்பதாலே ஹரி ஓம் முதலிலும் முடிவிலும் வேதம் சொல்லும்
#விஸ்வமே_வேதம்_புருஷஸ்
சர்வ வியாபி -எல்லாம் இவனே -எங்கும் நிறைந்தவன் -பூர்ணத்வாத் புருஷ –
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய் தானே யான் என்பானாகி
இதம் விஸ்வம் புருஷம் ஏவ -அநேந ஜீவேன ஆத்மனா அநு பிரவிசய
#தத்_விஸ்வ_முபஜீவதி
இவன் அந்தர்யாமியாய் இருப்பதாலே உலகு இவனை அடைந்து ஜீவிக்கும் -விஸ்வம் வாஸூ தேவன் ஸ்வரூப ஐக்கியம் இல்லை என்றதாயிற்று –
#பதிம்_விஸ்வஸ்
தேன வினா த்ருணம் அபி நசலதி–அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இல்லை –
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து -தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே —
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே உலகு யென நின்றானே –

“#யாதமேஸ்வரம்”

ஸ்வாமி மாத்ரம் இல்லாமல் -நியமித்தும் அருள்பவன் -ஆத்ம சப்தம் அசேதனத்துக்கும் உப லக்ஷணம் –
தனக்குத் தானே ஈஸ்வரனாய் இருப்பவன் என்றுமாம்

சாஸ்வதம்”

ஆதியும் அந்தமும் இல்லாதவன் -ப்ரஹ்மாதிகள் போலே அழிவு இல்லையே

“சிவம்”

மங்கள கரமாய் இருப்பவன்

“சாஸ்வதம் சிவம்”

எப்பொழுதும் பரிசுத்தன்-ருத்ரன் போலே இல்லையே
பாவனஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன

“அச்யுதம்”

நழுவ விடாதவன் –வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதிமால் –
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-
அறியத் தக்கவர்களுள் பெரியவன் –

“அச்சுதன்-
நாராயணாம் மஹாஜ்ஜேயம்-“

காரணம் து த்யேய-இவனே அறியத் தக்கவன் -என்றவாறு
யதா சோம்யா ஏகேன மருத் பிண்டேண சர்வம் ம்ருண் மயம்
விஞ்ஞாதம் ஸ்யாத் –ஏவம் சோம்ய ச ஆதே சோ பவதி
விச்வாத்மநாம் பாராயணம் –சாந்தோக்யம் ஸ்வேதா கேதுவுடன்
அறிய முடியாதவன் வேதம் சொல்ல இங்கே –

“நாராயணாம் மஹாஜ்ஜேயம்-“

என்றது -அறிய முடியாதவன் என்று அறிவதே அறிவாகும்
மேலை வானவரும் அறியார் –ப்ரஹ்மாபி நாவேத நாராயணம் ப்ரபும்
ஞாதா –ஞானம் -ஜ்ஜேயம் -மூன்றும் உண்டு என்றதாயிற்று
ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் – பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரம் -விச்வத பரமம் -பேத சுருதிகள் –
விஸ்வம் -விஸ்வ மே வேதம் புருஷ –அபேத சுருதிகள் – விச்வாத்மநாம் கடக சுருதி
நித்யோ நித்யா நாம் சேதனச் சேதநா நாம் – ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாரம் -த்வா ஸூ பர்ணா சயுஜா
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -ய ப்ருத்வீம் அந்தரே சஞ்சரந் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ப்ருத்வீ நவேத
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மநோ அந்தர யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம்

“பாராயணம்”

பரமமான உபாயமும் உபேயமும் -கிம் வாப்யேகம் பாராயணம்– யுதிஷ்ட்ரன் கேட்க –பரமம் யா பாராயணம் ஜகந்நாதன் என்று ஸ்ரீ கிருஷ்ணனை காட்டினார் பீஷ்மர்
புருஷான் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா பராகதி
நகர்மணா நப்ரஜயா தநேந த்யாகேன ஏகேன அம்ருதத்வமா நசு-
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி —
பரமாபதமா பன்ன மனசா சிந்தயத் ஹரிம் -ச து நாக வரச் ஸ்ரீ மான் நாராயண பாராயண
ரஷ்ய அபேக்ஷாம் பிரதீஷதே –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே –

——————————————————————–

“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4

யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5″

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“நாராயண பரம் ப்ரஹ்ம”

ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீத் -முதலில் பர ப்ரஹ்மமாகவே இருந்தது இவனே –த்வம் ப்ரஹ்ம ஹி ப்ருஹதி ப்ரும்ஹயதீதி தஸ்மாத் —
ஆஸ்ரிதர்களை பெரியதாகச் செய்பவனும் நீயே -பரமம் சாம்யம் உபைதி —மம சாதாரம்ய மாகதா-தன்னாகவே கொண்டு -தம்மையே ஓக்க அருள் செய்வார் –

“தத்துவம் நாராயண பர”

நாராயணனே பர தத்வம் -நித்ய முத்தர்களும் இவனுக்கு பரதந்த்ரர்கள் –

நாராயண பரோ ஜ்யோதிர்”

ஏஷ ஸம்ப்ரஸாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்-நேம வித்யுதோ பாந்தி குதோயமக்னி
தமேவ பாந்தமநுபாதி சர்வம் -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி —
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் -பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –
மிகும் சோதி மேல் அறிவார் யவரே -ஸ்வ பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக

“ஆத்மா நாராயண பர”

ஆதமைவேதம் அக்ர ஆஸீத் புருஷவித-
பரமாத்மா ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர -விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே
அவிகாராய ஸூ த்தாய நித்யாய பரமாத்மனே –அவிகாராய -அசேதன வியாவ்ருத்தி -அக்ஷரம் – தேவம் சேதனம் வியாவ்ருத்தி/
-சுத்தாய -நித்யம் முக்தர் வியாவ்ருத்தி -பரமாத்மா நித்யர் வியாவ்ருத்தி –
“யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-“
உள்ளும் புறமும் வியாபித்து இருக்கிறான் -ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்–முற்றக் கரந்து ஒளித்தாய்-விச்வாத்மநாம் -என்று முன்பு சொன்னதை விவரிக்கிறது
நாராயண -அஷ்டாவ்ருத்தி -ஒப்புயர்வற்ற அநந்ய பரமுமான திரு நாமம் அன்றோ இது –

—————————————-

“அநந்தம் அவ்யயம் கவிம் சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்–6”

எண்ணிறந்த அவதார ரூபங்கள் -குறைவற்ற -அழகாகப் பேசி -பாற் கடலிலே பள்ளி கொண்டு -உலகுக்கு நன்மை செய்பவன்
அமரர் ஏறாய் இருந்து -பகல் விளக்காய் இருந்து -ஆயர் கொழுந்தானவன் அன்றோ –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே

“அநந்தம்”

கணக்கற்ற அவதாரங்களை யுடையவன் -அநந்த ரூபம் என்கிற முதல் அநு வாகம் -விவரணம்
அந்தஸ் சமுத்திர நிலையம் யம நந்த ரூபம் -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அஜாய மா நோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் – சன்மம் பல பல செய்து -பஹு நி மே வியதீ தானி ஜன்மானி –
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தவன்
அர்ச்சை -ஹ்ருதா மநீஷா மனஸாபிக் லுப்தா –
யத் ஸ்வரூபோ யத் ரூபோ யத் குணோ யத் விபூதிகோ யத் பிராமணகோ யத் த்ரவ்யோயம் சர்வேஸ்வர கலப்யதே ச ததா பவேதி தி பாவ
யே யதா மாம் -பிரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே

“அநந்தம்”

தேச கால வஸ்து பரிச்சேதய ரஹிதன் என்றுமாம் -நித்யம் -கால பரிச்சேதய ரஹிதன் – விஸ்வம் -வஸ்து பரிச்சேதய ரஹிதன் –
யச்ச கிஞ்சித் ஸ்தித -தேச பரிச்சேதய ரஹிதன் –சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றவாறு

“அவ்யயம்”

குறைவற்றவன் -பிறக்கப் பிறக்க பெருமை விஞ்சி –விஜாயதே -விசேஷமாக பிறந்து -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான-
நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நிலம் -ஜென்ம கர்ம ச மே திவ்யம் –
“கவிம்”

நன்றாக பேசி -அவதரித்து செய்து அருளும் சேஷ்டிதங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம் ஹசித்தம் பாஷிதம் சைவ
நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
அனவதிக தயாசவ் ஹார்த்த அநுராக கர்ப்ப அவலோகநாலாம்பாருதை விஸ்வமாப்யா யயன் -ஸ்ரீ பாஷ்யகாரர்

“கவிம்”

வேத உபதேசம் -யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை –
பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்ட தெய்வம் ஏத்தினால்-செம்மின் சுடர் முடி என் திரு மாலுக்குச் சேருமே

“சமுத்ரேந்தம்”

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம்
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –பய் அரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி –

“சமுத்ரேந்தம்”

குறைவில் தடம் கடல் -யசோதை பிராட்டி போலே மடியில் இட்டுக் கொண்டு உகந்து இருக்குமே

“சமுத்ரேந்தம் விஸ்வ சம்புவம்”

சாபம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான் தன்னை -கூப்பீடு கேட்க்கும் இடம் அன்றோ
குறைவில் தடம் கடல் கோள் அரவு ஏறித் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல் ஒரு யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன்

“ஆத்மாநாம் வா ஸூ தேவாக்யம்”

சிந்தையன்
-தன்னைத் தானே த்யானிப்பவன் -அவதார சிந்தனை என்றுமாம் –

————————————————————————–

“பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம்
அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி-7

ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம் தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்-8

தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹார மஜர கவி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம் -9″

அந்தர்யாமி அவஸ்தையை அருமறை அனுபவிக்கிறது –பரத்வம் வ்யூஹம் வைபவம் அர்ச்சை அனுபவித்த பின்பு –
மறை முடி தேடிக் காணா மாதவன் மனத்தே அன்றோ மன்னி உறைகின்றான் –ஹ்ருதி திஷ்ட்ட்தி யோகி நாம் —

“பத்ம கோச பிரதீ காசம் ஹ்ருதயம்”

தாமரை மொக்கைப் போல் இருக்கும் ஹிருதயம் -போதில் கமல வன்னெஞ்சம் –

“சாப்யதோ முகம்”

தலை கீழாய் இருக்கும் ஹிருதயம்

“அதோ நிஷ்ட்யா விதஸ் த்யாம் து நாப்யா முபாரி திஷ்ட்ட்தி”

கழுத்தின் மூலத்துக்கு கீழும் நாபிக்கு மேலும் கட்டை விரல் அளவுள்ள இந்த ஹ்ருதயம் இருக்கிறது –

“அங்குஷ்ட மாத்ர புருஷ –”

கட்டை விரல் பரிமாணம் உள்ள புருஷன்

“ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ் யாயதனம் மஹத்”

அந்த ஹ்ருதயத்தை உலகுக்கு எல்லாம் ஓர் உயிரான நாராயணனுடைய பெரிய கோயிலாக அறிய வேணும் –

“ஆயதனம் மஹத்”

நெஞ்சமே நீள் நகராக இருந்த
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன கோல்-ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே
அன்ஸனான் அந்யோ அபிசாக சீதி-வாத்சல்ய குணம் பிரகாசிக்கும் அந்தர்யாமியிலே
சந்ததம் சிரா பிஸ்து லம்பத்யா கோச ஸந்நிபம்
சிறிது அலர்ந்த தாமரையை ஒக்கும் அந்த ஹிருதயம் எப்பொழுதும் நரம்புகளோடு தொங்குகிறது
கமல ஆசனி கேள்வன் ஆகையால் ஹிருதய கமலத்தை விரும்புகிறான் போலும்

“தஸ் யாந்தே ஸூ ஷிரம் ஸூஷ்மம்”

அந்த ஹ்ருதயத்தில் நடுவிலு நுட்பமான ஒரு துவாரம் இருக்கிறது

“தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்”

அதில் சர்வாத்மாவான நாராயணன் நிலை நிற்கிறான் -சர்வ அந்தர்யாமி அன்றோ
தஸ்ய மத்யே மஹா நக்நிர் விச்வார்ச்சிர்-விச்வதோமுக
அந்த ஹிருதயத்தின் நடுவில் எங்கும் பரவி இருப்பதும் -எங்கும் ஜ்வாலை உள்ளதுமான -ஜாடராக்கினி -என்னும் பெரிய அக்னி உள்ளது
சோக்ர புக் விப ஜந்திஷ் ட்ட ன் ஆஹாரம்
அது ஆகாரத்தை மூன்று விதமாகப் பிரித்துக் கொண்டு முதலில் சாப்பிட -ஜீரணித்து தேகத்துக்கு தருகிறது என்று தாத்பர்யம்

“அஜர”

எப்பொழுதும் விழித்துக் கொண்டே இருக்கும் இந்த அக்னி

“கவி”

எப்பொழுதும் சப்தம் இட்டுக் கொண்டே இருக்கும் இந்த அக்னி
சந்தா பயதி ஸ்வம் தேஹ மாபாத தலமஸ்தகம்
உள்ளங்கால் முதல் தலை வரை தேகத்தை சூடுபடுத்தவும் -ஆழ்வார்கள் திருமலையில் மரம் செடி கொடி அருவி அனுபவிப்பது போலே
ஆதார அதிசயத்தாலே அச்சுதன் இருப்பிடமான ஹிருதயத்தில் அக்னியையும் அருமறை அனுபவிக்கிறது –

——————————————————————–

“தஸ்ய மத்யே வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தன்வீ பீதாபா ஸ்யாத் தநூபமா -10″

“தஸ்ய மத்யே”

தஹா புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்தி நீ -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்

“வன்ஹி சிகா அணீ யோர்த்வா வ்யவஸ்தித”

ஹிருதய ஆகாசத்தில் நடுவில் மெல்லியதாகவும் மேல் நோக்கினதாகவும் வஹ்னி சிகை இருக்கிறது
யுக்தம் தத்துவ ஜாதம் ஆத்மதயா ஸ்திதவா வஹதி தாரய தீதி வன்ஹி –பரமாத்மா “தஸ்ய சிகா வன்ஹி சிகா”
தத்வ ஸமூஹத்தை ஆத்மாவாக நின்று வகிக்கிறவன் ஆகையால் வஹ்னி என்று பரமாத்மாவை சொல்லி -அவனது சிகை வஹ்னி சிகை -என்றவாறு
ஒப்பற்ற பிரகாசம் யுடையதாய் அக்னி சிகை போலே இருப்பதால் –

“நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா”

நீல மேகத்தை நடுவில் கொண்ட மின்னல் கொடி போன்ற ஒளியுடன்
ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதாப பரமாத்மா ஸ்வரூபா –ஸ்வ அந்தர் நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபா தீத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யகாரர்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் –நீல மேகத்தை விழுங்கின மின்னல் போன்ற திருமேனி என்றும் நீல மேகம் விழுங்கின மின்னல் போன்ற திருமேனி
மின்னிலங்கு திரு உரு என்றும் கரு முகில் ஒப்பர் என்றும் சொல்வாரே
சேதனனை பெறாத போது உடம்பு வெளுத்தும் -பெற்ற போது இயற்கையான நீல மேக ஸ்யாமள வர்ணன் -என்றவாறு –

“நீவார ஸூகவத் தன்வீ”

நெல் நுனி போலே சிறியதாய் இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்

“பீதாபா”

மஞ்சள் நிறமான ஒளியுடன் கூடியது -உருக்கிய தங்கம் போலே -நிறத்தை காட்டிலும் ஒளியே விஞ்சி இருக்கும்
தேஜஸாம் ராஸிம்–ஹிரண்ய வர்ணாம்

“பீதாபா”

என்று ஸ்வ தேஜஸ் ஸை விக்ரஹம் தான் பானம் பண்ணிக் கொண்டு இருக்கும் என்றபடி -ஸ்வயம் பிரகாசம் என்றுமாம்

“ஸ்யாத் தநூபமா”

உவமானம் ஆகலாம் -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத பிரகாசம் அன்றோ -உவமானம் அற்றது என்றுமாம்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா -சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

———————————————-

தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித
ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்–11″

“தஸ்யாச் சிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித”

ஆத்மா நாராயண பர -என்னும் பரமாத்மா -விசேஷண அவஸ்தித -விசேஷமாக எழுந்து அருளி இருக்கிறார்
வாத்சல்யாதி குணங்களால் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாய சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே
தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அன்ஸனன் அந்யோ அபிசாக சீதி
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்ட்ட்தி
பிராமயன் சர்வ பூதாநி யந்த்ர ரூடானி மாயயா–ஸ்ரீ கீதை

“ச ப்ரஹ்மா –ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட்”

அனைவருக்கும் அந்தர்யாமி –அவனே அவனும் அவனும் அவனும் -அவனே மாற்று எல்லாமும் அறிந்தனமே
ப்ரஹ்மா சிவாஸ் சதமக பரமஸ் ஸ்வராட் இத் யேதே அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ் தே –ஆளவந்தார்
-இவனது ஐஸ்வர்யா கடலில் துளி யாவார்கள்
இவர்கள் ஸ்திதியும் அவனாலே -இருந்து படைக்கும் ஆசனம் போன்றே நான்முகன் -சிவனாய் அயனாய்

“சோஷர”

-இவர்களும் சிறந்த முக்தாத்மாக்களுக்கும் அவனே அந்தர்யாமி

“பரமஸ் ஸ்வராட்”

கர்ம வஸ்யன் இல்லாத பரமாத்மா -ச ஸ்வராட் பவதி -ஸ்வ தந்த்ரன் ஆகிறான் அவன் ஒருவனே –
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான

———————————————————————-

“ருதம் சத்யம் பரம் ப்ரஹ்மம் புருஷம் க்ருஷ்ண பிங்களம்
ஊர்த்வ ரேதம் விருபாக்ஷம் விஸ்வ ரூபாய வை நம–12″

பரம புருஷார்த்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கப் படுகிறது –

“ருதம்”

சர்வகதன்-சர்வ வியாபகத்வத்தை ஆதார அதிசயத்தால் மீண்டும் அனுவதிக்கிறது -சர்வ வியாபி யாகையாலே நாம் இருந்த இடத்திலே கைங்கர்யம் செய்யலாமே

“சத்யம்”

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம – ஏக ரூபி -ஆஸ்ரித ரக்ஷணம் தீக்ஷிதன் –

“பரம் ப்ரஹ்மம்”

பரமமானவன் -தன்னை ஆசிரியத்தாரையும் பெரியவனாக ஆக்குபவன்

“புருஷம்”

நாம் எல்லாரும் ஸ்த்ரீ பிராயர் -கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அனுரூபம்

“க்ருஷ்ண பிங்களம்”

கறுப்பும் மஞ்சளும் கலந்த திருமேனி -கைங்கர்யத்துக்கு விஷயமான திரு மேனி -காள மேக ஸ்யாமளன் -திரு ஆழி தேஜஸ் வியாபித்து இருப்பதால் –
அதஸீ புஷப ஸங்காசா பீத வாசா ஜனார்த்தன -வ்யப் ராஜத சபா மத்யே ஹேம நீவோ பஹிதோ மணி –
இத்தால் பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே கைங்கர்யம் என்றதாயிற்று –ஹரீச்ச் தே லஷ்மீச்ச பத்நயவ்

“ஊர்த்வ ரேதம்”

ப்ராக்ருதமான ஸ்த்ரீ சங்காதிகள் அற்றவன் -விகாரம் அற்றவன் -உயர்ந்த வீர்யத்தை யுடையவன்

“விருபாக்ஷம்”

மாறு பட்ட ரூபங்களை யுடைய திருக் கண்களை யுடையவன் –சஷூஷீ சந்த்ர சூர்யவ்
விசேஷமான ரூபமுடைய திருக் கண்கள் என்றுமாம் –யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
வன் காற்றறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொழிந்தன –எம்பிரான் தடம் கண்களே

“விஸ்வ ரூபாய வை நம”

உலகத்தை எல்லாம் சரீரமாகக் கொண்டவனுக்கு நமஸ்காரம் -ஆய -கைங்கர்ய பிரார்த்தனை -அவன் முக மலர்த்திக்காகவே –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ 108 திவ்ய தேச எம்பெருமான் ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி பாடல் —

January 23, 2024

திருவரங்கன் கோயில் திருவரங்கேசன்
திருமகள் அழகிய மணவாளன் உறையூர்
திருத் தஞ்சை நீல மேக நரஸிம்ஹம்
திரு அன்பில் அமர் வடிவு அழகிய நம்பி

மரு கமழ் சோலை கரம்பனூர் உத்தமன்
மலர் மகள் வெள்ளறை புண்டரீகாக்ஷன்
திருப் புள்ளம் பூதங்குடி அமர் வேந்தே
திருப் பள்ளி உணர்த்தருள் புரிந்திடுவாயே

வார் புனல் பேரில் -அரவணைக் கிடந்தான்
வரம் திகழ் ஆதனூர் அளந்தருள் ஐயன்
பார் புகழ் தொல் நிறை நாதன் அழுந்தூர்
மணி துயில் உரு கடல் திரு சிறு புலியூர்

கார் மலி தண் சேறை திருச்சேறை நாதன்
கார் கடல் மல்லை தலைச் சங்கம் நாண் மதியே
ஏர் திகழ் குடந்தைக் கிடந்த என் அமுதே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

கண்டியூர் ராமர் சாப விமோசனர்
கருணை பொழிந்திடும் விண்ணகர் அப்பன்
எண் திசை புகழ் கமழ் ஊர் சவுரி ராஜன்
எழில் மிகு திருவாலி வயலாலி அப்பன்

கண்டம் கமழ் சோலை இந்தளூர் மைந்தா
காசினியில் உயர் திருச்சித்ர கூடம்
அந்தணர் தேவன் அரன் அயன் காழி
யரும் தவ முனி தொழும் தில்லைக் கோவிந்தர்

சிந்தை கவர்ந்திடும் ஸ்ரீ ராமா விண்ணகர்
சீராக அளந்திடும் தாடாளன் அம்மா
நந்தருக்கு அருள் கூடலூர் ஜகன்னாதா
நாராயணா பள்ளி எழுந்தருளாயே

மாதவன் மகிழ்ந்து உறை தேவானார் தொகை
மறை திகழ் வண் புருஷோத்தமத்தானே
ஸ்ரீ நாதன் அருள் நாதன் செம் பொன் செய் கோயில்
திருத் தெற்றி அம்பல செங்கண் மாலே

போது அலர் பொழில் சூழும் மணிக் கூடல் நாதன்
புகழ் காவளம்பாடி வேணு கோபாலன்
சீர் மலி சோலை வெள்ளக்குளத்து அண்ணா
ஸ்ரீ தரா சீர் பள்ளி எழுந்தருளாயே

கண்ணங்குடி நின்ற கார் மேக வண்ணா
திருக்கண்ண மங்கை அபிஷேக ஈஸா
கரிக்கு அருள் பிரிந்திடும் கபிஸ்தா நாதா
கருணை புரி வெள்ளி யங்குடி ராமா
விண்ணோர் பணி மணி மாட விளக்கே
வைகுண்ட விண்ணகர் வைகுந்த நாத
எழில் அரி மேய விண்ணகர் அரவிந்தா
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
பார் புகழ் கூடலூர் ஆடுதுறை பெருமாள்
கார் கடல் நாகை அழகியார் பள்ளி எழுந்தருளாயே

தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி
கருணா வளம் தரு சோழ நன் புவியில்
மா மகள் கோன் உறை நாற்பது பதிகள்
மறை ஒலி புகழ் கமழ் மா நகர் என்பர்

காமனைப் படைத்த தோர் மா மேனி அழகர்
மாலிருஞ்சோலையில் மால் அலங்காரர்
சேமமுடை சவும்ய நாராயணான் கோஷ்ட்டி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

மெய்யத்து உறைகின்ற சத்ய கிரீஸ்வரன்
தெய்வச் சிலை நாதன் திகழும் புல்லாணி
வையத்து உயர் திருத் தண் காலில் அப்பன்
வழித்துணையாம் காள மேக ஸ்ரீ மோகூர்

வைகை நதி தீரம் தென் கூடல் அழகர்
வள நகர் ஸ்ரீ வில்லி புத்தூர் அரங்கர்
ஐயன் திருக்குருகூரில் பொலிந்தார்
அன்பனே திருப்பள்ளி எழுந்தருளாயே

தென் உயர் திருக்குறுங்குடி வைஷ்ண நம்பி
நிக்ஷேப மா நிதி நிறை திருக்கோளூர்
பொங்கும் பொருநல் சூழ் பாண்டிய நாட்டில்
புகழ் பெரு பதினெட்டு திருப்பதி என்பர்

பங்கஜ நாதன் அனந்த புரம் தன்னில்
வண் பரிசாரத்தில் திரு வாழும் மார்பன்
தங்கும் பெரும் புகழ் காட்கரை அப்பா
தாமோதரா பள்ளி எழுந்தருளாயே

செல்வம் திகழ் திரு மூழிக் களத்தான்
சேர் திகழ் மாயப்பிரான் திருப்புலியூரில்
நல் திருச் செங்கனூரில் மெய்ய வரை யப்பன்
நாரணன் அமர்ந்திடும் தென் திரு நாவாய்

வல்லவள் வாழ்ந்திடும் வல்லி மணாளா
வண்டூர் உறையும் என் பாம்பணை அப்பா
அல்லல் தவிர்ந்திடும் திரு வட்டாத்தில் ஆதி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

பக்தர் தொழும் திரு வித்துவக் கோடு
வண் குல சேகரன் பாடிடும் அம்மான்
அற்புதன் நாரணன் அமர் திருக்கடித்தானம்
அணி பொழில் விரலாழி வேய் குறள் அப்பன்

செப்புடை மலை நாடு ஓர் பதின்மூன்றும்
தெய்வ நாதன் திரு ஹரி நாதன் நகரே
முத்துடை பெண்ணை நிறை புவியில் திரு
விக்ரமாப் பள்ளி எழுந்தருளாயே

ஹரி ஹரி உறைந்திடும் அருளாள வரதா
கடு வினை களைந்திடும் அழகிய சிங்கா
நெடு பொழில் கச்சியில் அஷ்ட புஜத்தான்
தீபப் பிரகாசன் விளக்கொளி தண்கா

விரி பொழில் வேளுக்கை ஆளரி நாதன்
ஜெய் தூதன் பாடகம் சேர்வை விளங்கும்

நீள் கருணாகரன் திருக்காராகத்தாள் நிலையிலா
மணி மாட கார்வானக் கள்வன் விமல வராஹன்
திருக்கள்வனூரே மலி புகழ் பரமேஸ்வர நகர் நாதா
பவள வண்ணா திருப்பள்ளி எழுந்தருளாயே

புள்ளுக்கு அருள் செய்த புட் குழி ராமா
புனிதன் உறைகின்ற ஊர் பத்தராவி
உள்ளம் கவர் கின்ற வீர ராகவன் எவ்வுள்
உத்தம நீர் மலி நீர் வண்ணன் எம்மான்

துள்ளும் இடவெந்தை நித்ய கல்யாணர்
திரை கடல் மல்லை தலை சங்கம் நாண் மதியே
தெள்ளிய யோகத்தில் அமர் திருக்கடிகை
சிங்கப்பிரான் பள்ளி எழுந்தருளாயே

சீராரும் வேத வல்லி மணாளா
செல்வம் திகழ் திருவல்லிக்கேணி மன்னாதா
பார் புகழ் ருக்மிணி பார்த்தன் ஸஹாயன்
பக்தருக்கு அருள் புரியும் சக்ரவர்த்தி குமாரன்

வாரணம் துயர் தவிர் தேவப் பெருமான்
வல்வினை தீர்த்திடும் தெள்ளிய சிங்கா
ஏர் தொண்டை நாடும் ஓர் நாலாறும் மூவாறும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் திரு வேங்கடத்து அப்பன்
அரியா ஒண்ணாத நர சிங்க வேள் குன்றம்
தொண்டர்கள் வாழும் திரு ராமன் அயோத்யா
தொல் வன ரூபன் வாழ் நைமிசாரண்யம்

கொண்டல் தவழ் திரு சாளக்கிராமம்
குரு நர நாராயணன் பதரி உறை கோயில்
மண்டலம் தாம் தொழும் கண்டம் கடி வாழ்
மாதவனே பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் கொண்டல் தவழ் திருப் ப்ரிதி
பார் புகழ் ருக்மிணி துவராகா தீசன்
கோபிகள் கொண்டாடும் ஆய்ப்பாடி நாதன்
குன்று குடையாக எடுத்த கோவர்த்தன நேசா
நாச்சியார் உகந்து அருளும் வட மதுரையார் மைந்தன்
தேவர்கள் குறை தீர்க்கும் பாற் கடல் நாதா
வைகுந்தக் குட்டன் மகிழ்ந்து உறையும் பரம பத நாதா
உடையவர் போற்றிடும் சம்பத் குமாரா
ஸ்ரீ தரனே பள்ளி எழுந்து அருளாயா

மாதவன் பூ மகள் சேனையர் கோன் அருள் பெற்ற
மறைத் தமிழ் கூறும் மகிழ் மாறன்
முனி நாதன் புண்டரிகாஷர் மணக்கால் நம்பி
ஸ்ரீ யமுனா ஸ்ரீ மஹா பூர்ணர் பூதூரில் எதிராஜர்
பொருநல் குருகூரில் வந்தார் மணவாள மா முனி
முதலார் ஆதாரத்தோடும் உன்னைத் தொழ வந்தோம்
அந்த அச்யுதனே பள்ளி எழுந்தருளாயே

வேதம் தமிழ் செய்த மாறன் கொள் ஈசன்
விமலர்களாம் பொய்கை பூதம் பேயாழ்வார்
கோதை விஷ்ணு சித்தன் தொண்டர் அடிப்பொடி
குறையல் கலி கன்றி மா மழிசைப் பிரான்

நாதன் திருப்பாணான் நம்மாழ்வார் தம் கவி
நல் தமிழ் பாசுரம் பல்லாண்டு இசைப்பார்
ஏதங்கள் வாராது உலகினில் வாழ்வார்
எம்பெருமான் உன் தன கிருபையினாலே

ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

“ஸ்ரீ கோட்டே வரதராஜர் கோயில்”-ஸ்ரீ ஸத்யா காலம்–ஸ்ரீ தேசிகர் மஹாத்ம்யம் —

January 23, 2024

தினமும் காலை எழுந்தவுடன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தை நோக்கி இரண்டு அடி வைக்க வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்யலாம் ? கர்நாடகா இருக்கும் திக்கில் இரண்டு அடி வைக்கலாம். காரணம் இருக்கு.

பாகவதத்தில் ’பக்தி’ என்ற இளமையான பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் – ஞானம், வைராக்கியம்.
பக்தி இளமையுடன் இருக்க, குழந்தைகள் கிழவர்களாக இருப்பதைக் கண்ட நாரதர் வியப்புடன் ஏன் என்று விசாரிக்க,
அதற்குப் பக்தி கூறிய பதில் இது.
“நான் இளமையோடுதான் இருந்தேன். நான் பிறந்தது தமிழகத்தில். கர்நாடகத்தில்தான் வளர்ந்தேன்.
பிறகு அங்கிருந்து மஹாராஷ்டிரத்தை அடைந்து அங்கிருந்து குஜராத் … என்று பல இடங்களுக்குச் சென்ற எனக்கு வயதாகிவிட்டது.
கூடவே வந்த ஞானமும், வைராக்கியத்துக்கும் வயதானது. கடைசியாக யமுனைக் கரையை அடைந்து,
பிருந்தாவனம், மதுரா, கோவர்த்தனம் சென்ற போது மீண்டும் எனக்கு இளமை கிடைத்தது.
கண்ணன் விளையாடிய இடங்களின் ஸ்பரிசம் பட்டவுடன் எதுவும் நடக்கும்.

அதே போல நம் ஆசாரியர்கள் இரண்டு பேர் ஸ்பரிசம் பட்ட மண் கர்நாடகா. ஸ்பரிசம் மட்டும் இல்லை,
ஸ்வாமி ஸ்ரீராமானுஜர், வேதாந்த தேசிகன் போன்றவர்களைப் பாதுகாத்து கொடுத்த இடம்.

கூரத்தாழ்வான் கிருமி கண்ட சோழன் கொடுமையிலிருந்து ஸ்ரீராமானுஜரை மேல்கோட்டை தப்பவைத்து
அதனால் அவர் கண்களை தியாகம் செய்து பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஸ்ரீராமானுஜர் சுமார் 12 ஆண்டு காலம் மேல்கோட்டையில் இருந்துள்ளார்.

அதே போல் ஸ்ரீரங்கம் திருவரங்கத்தில் ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியிருந்த காலத்தில் முகம்மதியர் படையெடுப்பால் பெருந்துன்பம் விளைந்தது.
முகம்மதியர்படை கோயிலில் புகுந்து பாழ்செய்த போது பிள்ளைலோகாச்சாரியார் நம்பெருமாளை எழுந்தருளிக்கொண்டு செல்ல,
ஸ்ரீவேதாந்த தேசிகன் ஸ்ரீரங்கத்தில் தலைமை தாங்கிய சுதர்சன பட்டர் எழுதிய ‘ச்ருத ப்ரகாசிகை’ என்ற ஸ்ரீராமானுஜர் சொன்ன
உரைக் குறிப்புகள் அடங்கிய ஸ்ரீபாஷ்ய உரை நூலையும் அவருடைய இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றி
பிணமோடு பிணமாக இரவு கழித்து சத்தியமங்கலம் காடு வழியாக கர்நாடகா வந்தடைந்தார்.

திருநாராயணபுரம், ஸத்யாகாலம் என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார்.
ஸ்ரீராமானுஜர், ஸ்ரீ வேதாந்த தேசிகன் மட்டும் இல்லை, நம் ‘நம்பெருமாளே’ சில காலம் திருநாராயண புரத்தில் தங்கியிருக்கிறார் !.

மேலும் இந்த இடத்துக்குச் சிறப்பு இருக்கிறது .
ஸ்வாமி ஸ்ரீராமானுஜர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இருவர் மேல்கோட்டை பக்கம் உதித்தவர்கள்.
கிரங்கனூர் என்னும் கிராமத்தில் பிறந்த ஸ்ரீராமானுஜரின் மனதில் உள்ளதை ஆணையாக ஏற்று, திருமலையில்
திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்த அனந்தாழ்வார் என்ற அனந்தான் பிள்ளை.

மற்றொருவர் சாலக்கிரமம் என்னும் இடத்தில் பிறந்து ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் என்று நமக்கு எடுத்துக்காட்டிய நம் வடுகநம்பி ஸ்வாமிகள்.
ஸத்யாகாலத்திலும் திருநாராயண புரம் இரண்டு இடத்திலேயும் அவர் 12 வருடம் வாசம் செய்துள்ளார்

ஸத்யாகாலம் பெங்களூர் கொல்லேகால் போகும் வழியில் இருக்கும் சின்ன கிராமம்.
போகும் வழி எல்லாம் மங்களகரமாக எல்லோர் இல்லத்தின் வாசலில் செழிப்பாக துளசியை காண முடிந்தது.
எங்கும் பச்சை வயல்கள்…. ஊருக்குள் நுழையும் முன் சில நூற்றாண்டு முன் ஒரு காலட்சேபத்தில் நுழைந்த குழந்தையின் கதை பற்றி நினைவு வருகிறது.

காஞ்சிபுரத்தில் ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் நடக்கிறது. காலட்சேபம் செய்பவர் ‘நடாதூர் அம்மாள்’.
அங்கே நல்ல தேஜ்ஸுடன் ஐந்து வயதுக் குழந்தை தன்னுடைய மாமாவான கிடாம்பி அப்புள்ளாருடன் உள்ளே நுழைகிறார்கள்
( நடாதூர் அம்மாளுடைய சிஷ்யர் கிடாம்பி அப்புள்ளார் )
கால்டஷேபத்தை நடதூர் அம்மாள் நிறுத்தி விட்டு குழந்தையின் அழகைப் பார்த்து
“யார் இந்தக் குழந்தை ?” என்று கேட்க ”என்னுடைய மருமகன்” தான் என்கிறார்
அப்புள்ளார் கூடவே இந்தக் குழந்தைக்கு பாடம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்.
அதற்கு அம்மாள், தனக்கு வயதாகிவிட்டது அதனால் உன் மருமகனுக்கு நீயே ஆசிரியராக இருந்து பாடம் எடு என்று நியமித்துவிட்டு,
தொடர்ந்து காலட்சேபத்தை தொடர முற்படும் போது நிறுத்திய இடம் நினைவுக்கு வரவில்லை.
அப்போது சிறுவன் உள்ளே நுழைந்த போது தான் என்ன கேட்டானோ அதை அப்படியே ஒப்பிக்கிறான்.

நடாதூர் அம்மாள் சிறுவனை அணைத்துக் கொண்டு ”ஸ்ரீவைஷ்ணவ கொள்கையைப் பரவச் செய்து, பெரும் புகழுடன் விளங்குவாய்” என்று ஆசிர்வதிக்கிறார்.
அவர் ஆசிர்வாதம் பலித்தது. அந்தச் சிறுவன் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.
ஊருக்குள்ளே பெரும் ஆலமரம் ஒன்று தெரிகிறது. அதைச் சுற்றி பல மஞ்சள் தோட்டம்.
ஸ்ரீதேசிகனே பிரமாண்ட ஆலமரம் மாதிரி கீழே அவர் சிஷ்யர்கள் மஞ்சள் செடிகளாக காட்சி அளிப்பது மாதிரி இருக்கிறது.

ஸ்ரீதேசிகன் 1268 ஆம் வருடம் திருத்தண்கா ‘தூப்புல்’ ( பொருள் : தூய புல் ) என்ற பகுதியில் அவதரித்தார். இயர் பெயர் வேங்கட நாதன்.

புரட்டாசி திருவோணம் திருவேங்கடமுடையான் திருநக்ஷத்ரம் ! திருவேங்கமுடையானின் கண்டம் என்னும் மணியின் அம்சமாக இவரைப் போற்றுவர்.
தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள் அதனால் இவரை வேதாந்த தேசிகன் என்று அழைப்பர் –
வேதாந்தத்துக்கு அதாவது தமிழ், சமிஸ்கிரதம் என்ற உபய வேதாந்தத்துக்கும் ஆசாரியன்

உள்ளே நுழையும் போது கோயில் கோபுரம் புதுப் பொலிவுடன் தெரிகிறது. பத்தாண்டுகளுக்கு முன் சம்பரோக்‌ஷனம் நடந்தது என்று தகவல்.
“ஸ்ரீ கோட்டே வரதராஜர் கோயில்” என்ற எழுதியிருக்கிறது.
( “கோட்டே” என்ற அடைமொழியுடன் பல கோயில்கள் கர்நாடகாவில் பார்க்கலாம். )
கர்நாடகாவில் பெரும்பாலும் நரசிம்மர், நாராயணன், கிருஷ்ணர், வேங்கடேச பெருமாள் கோயில்கள் தான் அதிகம்.
இங்கே வரதர் எப்படி வந்தார் என்று யோசிக்கும் போது “வாங்கோ வாங்கோ” என்று உற்சவம் நடத்துபவர்கள் அழைக்க
உள்ளே துவஜஸ்தம்பம் சேவித்துவிட்டு உள்ளே சென்ற போது நேராக வரதர் நீல நிற உடையுடன் காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் போல பெரிய வரதர் இல்லை, சின்னவர் தான் !
தீர்த்தம், சடாரி வாங்கிக்கொண்டு புறப்படும் போது
பக்கத்தில் இருந்த மண்டபத்தில் நாதஸ்வர இசை ஒலிக்க அங்கே பெருமாளுக்கு கல்யாண உற்சவம் நடந்துகொண்டு இருக்க அதைச் செவிக்க சென்றேன்.

கல்யாண உற்சவம் நடந்துகொண்டு இருக்க, வரதராஜர் பற்றி நினைத்துக்கொண்டேன்.
தேவர்களுக்கும் பிரம்மாவுக்கு கேட்ட வரத்தைத் தந்ததால் அவர் வரதர் என்று பெயர் பெற்றார்.
பிரம்மாவுக்கு மட்டுமா ? ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீராமானுஜரை சம்பிரதாயத்துக்குத் தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
யாதவ பிரகாசர் கொலை முயற்சியிலிருந்து தப்ப வைத்து விந்திய மலைக் காடுகளில் வரதரும், தாயாரும் வேடுவன்,
வேடுவச்சி மாதிரி வந்து சரியான பாதையை வகுத்து கொடுத்தனர்.

ஆளவந்தார் ஆசாரியன் திருவடியை அடைந்த பின் திருவரங்கப் பெருமான் அரையர் பாட்டு பாடி
வரதன் மனதைக் குளிர வைத்து ஸ்ரீராமானுஜரை கேட்டு பெற்றுக்கொண்டார் ஸ்ரீரங்கம் வந்தார்.
வரதன் கேட்பதை தருவான்.
ஸ்ரீராமானுஜரை காக்கும் பொருட்டு தன் கண்களை இழந்த கூரத்தாழ்வான் நிலை கண்டு வருத்தப்பட்ட ஸ்ரீராமானுஜர்
வரதனை “துயரறு சுடர் அடி தொழுதெழு என் மனனே” என்று வேண்டிக்கொள்ளச் சொல்ல
கூரத்தாழ்வான் ‘வரதராஜஸ்தவம்’ பாட வரதன் உடனே பார்வையை கொடுத்தார்
( ஆனால் கூரத்தாழ்வான் ஸ்ரீராமானுஜரை மட்டும் பார்த்தால் போதும் என்று கூறிவிட்டார் ! ).
இன்றும் ஸ்ரீராமானுஜர் சன்னதியில் கூடவே காஞ்சி வரதராஜர் தான் நித்திய திருவாராதன பெருமாளாகக் காட்சி அளிப்பார்.
ஸ்ரீரங்கத்தில் கூட உடையவர் பக்கத்தில் ஸ்ரீவரதராஜர் தான் ! .
அடுத்த முறை ஸ்ரீவரதராஜர் எங்காவது இருந்தால் அங்கே ஸ்ரீராமானுஜர் கூடவே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

வரம் கொடுக்கும் பேரருளாளன் ஸத்யாகலத்துக்கு எதற்கு வந்தார் – ஸ்வாமி தேசிகனுக்கு வரம் கொடுக்க தான்.

கல்யாண உற்சவம், பிரசாதம் எல்லாம் முடிந்த பின் நேராக ஸ்வாமி தேசிகன் அபீதிஸ்தவம் எழுதிய அரச மரத்தைத் தேடி சென்றேன்.
மாலை வேளை, பசுமையான நெல் வயலில் வாசனை என்று அந்த இடமே ரம்மியமாக இருந்தது.
காவிரி ஆறு எந்த சலசலப்பும் இல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப அமைதியாக சென்றுகொண்டு இருந்தாள்.

ஸ்வாமி தேசிகன் இங்கே தான் தனது காலை அனுஷ்டானங்களைச் செய்தார் என்ற நினைப்பே மனதுக்கு நெகிழ்வாக இருந்தது.
இதை எல்லாம் சேவித்துவிட்டு மறுநாள் காலை மீண்டும் வரலாம் என்று திரும்பினேன்.

இரவு பெருந்தேவி தாயார் சன்னதிக்கு சென்று சேவித்தேன்.அங்கேயே சின்னதாக ஸ்வாமி தேசிகன் சன்னதி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

பொதுவாக ஸ்வாமி தேசிகன் வலக் கையில் உபதேச முத்திரையும் இடது கையில் ஓலைச் சுவடியும் இருக்கும். அந்த ஓலைச் சுவடி ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்.
இங்கேயும் அப்படியே காட்சி அளித்தார். பொதுவாக அமர்ந்த நிலையில் இருக்கும் ஸ்ரீதேசிகன் இங்கே நின்றுகொண்டு சேவைச் சாதிக்கிறார்.

திருவாய்மொழிக்கு ”ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமாநுசன்” என்று கூறும் தனியன் மாதிரி
ஸ்ரீபாஷியத்தை ஈன்ற தாய் இராமானுசன், அதை மொய்ம்பால் வளர்த்த பெருமை நம் ஸ்வாமி தேசிகனையே சாரும்.
சரி ஸ்த்யாகாலத்தில் ஸ்வாமி தேசிகன் என்ன செய்தார் ?

பிணமோடு பிணமாக இரவு கழித்து தேசிகன் சத்தியமங்கலம் காடு வழியாக கர்நாடகா வந்தடைந்தார் என்று முன்பு பார்த்தோம்.
சத்யாகாலம் வந்த ஸ்வாமி தேசிகன் இங்கே தினமும் முன்பு பார்த்த காவிரிக் கரையில் தினமும் தன்னுடைய
காலை அனுஷ்டானங்களை முடித்து, அங்கே இருக்கும் அரச மரத்து அடியில் உட்கார்ந்து தியானம் செய்வார்.
இந்த மரத்துக்கு அடியில் தான் அபீதிஸ்தவம் இயற்றினார். 29 ஸ்லோகங்கள் கொண்டது.
அதில் ஸ்ரீதேசிகன் நம்பெருமாளைப் பிரிந்து திருவுள்ளம் மிகப் புண்பட்டு இந்த உயர்ந்த ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தார்.

பெரிய பெருமாளுக்கு திருவாராதனம் நின்றுவிட்டது, நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை என்று
அடுக்கடுக்காக நிகழ்வுகளை நினைக்கும் போது ஸ்வாமிக்கு உண்டான மனநோவு கணக்கிடமுடியாத ஒன்று.
திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தை நீக்கி, உத்ஸவமூர்த்திகள் மறுபடி பெரிய பெருமாளுடன் சேர்ந்து
திருவாராதனம் கண்டருளும்படி இந்த ஸ்தோத்ரத்தால் பிராத்திக்கின்றார்.
பிறகு கோயிலுக்கு வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் என்ன ஆனாரோ என்று கவலையுடன் ஸ்ரீவரதராஜரையும், பெருந்தேவி தாயாரையும் வேண்டிக் கொள்வாராம்.

ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்திரம் வரதனை உருகச் செய்திருக்க வேண்டும்.
விசயநகர பேரரசரின் செஞ்சிக் படைத் தலைவனான கொப்ப‌ணார்ய‌ன் என்னும் பாகவதோத்தமனால் நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் எழுந்தருளினார்.
விஜயநகர பேரரசர்கள் பூர்வீகம் கர்நாடகா.
மீண்டும் ஸ்வாமி தேசிகன் சன்னதிக்கு வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.

மூலவர் அவருக்குக் கீழே ஆமை ஒன்றும் அதற்கு மேல் உற்சவர் தேசிகன்! நின்று கொண்டு சேவைச் சாதிக்கிறார்.
மனதில் இரண்டு கேள்விகள் உடனே எழுகின்றன ஒன்று அந்த ஆமை ?
அடுத்தது பொதுவாக ஸ்வாமி தேசிகன் அமர்ந்துகொண்டு தானே இருப்பார் இங்கே ஏன் நின்று கொண்டு இருக்கிறார் ?

காலை அனுஷ்டானங்கள் முடித்துவிட்டு கோயிலுக்கு செல்லும் போது ஒரு நாள் ஆமை ஒன்று அவரைப் பின் தொடர்ந்தது.
வேகமாக நடந்த தேசிகனை ஆமையும் வேகமாகப் பின் தொடர்ந்தது. ஸ்வாமி தேசிகன் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அன்று இரவு ஸ்வாமியின் கனவில் சாத்விகமான ஒருவர் தோன்றி ”உங்களுக்கு நான் கைங்கரியம் செய்ய விரும்புகிறேன்”
என்று கூறி இதையும் ஸ்வாமி தேசிகன் கண்டுகொள்ளவில்லை.

மறுநாள் கனவில் பெருமாள் தோன்றி முதல் நாள் கனவில் தோன்றியவருக்கு அருள் புரிய கட்டளையிட்டார்.
காலை அனுஷ்டானம் செய்ய சென்ற போது அங்கே ஆமை கல்லாக, கூர்மாசனமாக மாறியிருந்தது.
அன்றிலிருந்து ஸ்வாமி தேசிகன் அதன் மீது அமர்ந்து தன்னுடைய அனுஷ்டானத்த செய்யத் தொடங்கினார்.

1929ஆம் ஆண்டு ஸ்ரீ அபிநவ ரங்கநாத ஜீயர் (பரகால மடம்) ஸ்வாமி இங்கு வந்த போது, இந்த கூர்மாசனம்
நாளடைவில் காவிரி ஆற்றோடு அடித்துக்கொண்டு போகும் அபாயம் இருப்பதை யூகித்து அதை எடுத்து
ஸ்வாமி தேசிகனின் சன்னதியில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.
ஸத்யாகாலத்தில் மட்டும் தான் ஸ்வாமி தேசிகன் நின்றுகொண்டு சேவை சாதிக்கிறார். ஏன் தெரியுமா ?
நம்பெருமாள் வந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் புறப்பட தயார் நிலையில் இருக்கிறார்.

எவ்வளவு வருடங்கள் இங்கே இருந்தார், எப்போது வந்தார் என்பது எல்லாம் ஆராய்ச்சிக்கு உட்பட்டது.
ஆனால் ஸ்வாமி தேசிகன் இங்கே வந்திருக்கிறார் என்பது உண்மை. இங்கே இருக்கும் மக்களுக்கு ஸ்வாமி தேசிகன் மீதும் இந்தக் கோவிலின் மீதும் அதி விசுவாசமும் ப்ரீதியும் கொண்டுள்ளனர்
இன்றும் இந்த ஊர் மக்கள் தங்களின் வீட்டில் ஒரு ஆண் குழந்தைக்கு “தேசிகாச்சார்” என்று பெயர் வைக்கிறார்கள் !

முன்பு பக்தி, ஞானம், வைராக்கியம் என்று மூன்று சொற்களை பார்த்தோம்.
ஒரு பொருளைப் பற்றி அறிவு ஏற்பட்டால் அது ஞானம். அப்பொருளிடத்து அன்பு ஏற்பட்டால் அதுவே பக்தி.
அந்தப் பொருளின் அருமை பெருமைகளை உணர்ந்து மற்ற பொருட்களின் மீது நமக்குப் பற்றற்ற தன்மை ஏற்பட்டால் அதுவே வைராக்கியம்.
இங்கே பொருள் என்பது பெருமாள். அது மூன்றும் பூர்ணமாக பெற்றவர் நம் ஸ்வாமி தேசிகன்.

அவர் வாழ்கையில் பல சம்பவங்கள் இதை எடுத்துக் காட்டுகின்றன.
தன் ஆயுள் முழுவதும் ஸ்வாமி தேசிகன் உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்க்கை நடத்தியவர்.
அவர் சன்னியாசம் வாங்கவில்லை ஆனால் இல்லத்துறவி !.
அவர் வாழ்ந்த காலத்தில் செல்வந்தராகவும், வேந்தியாகவும் இருந்த வித்யாரணயர் ஸ்வாமி தேசிகனின் ஏழ்மையைப் போக்கி இவரையும் செல்வந்தராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசனைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு கடித்ததை அனுப்பினார்.
ஸ்வாமி தேசிகன் அதற்குப் பதிலாக ‘வைராக்கிய பஞ்சகம்’ என்று ஐந்து ஸ்லோகங்கள் எழுதினார்.

ஒரு சாண் வயிற்றுக்கு என்சாண் உடம்பைக் குறுக்கி எதுவும் செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லுகிறார்.
அதில் முன்னோர்கள் ஈட்டிய செல்வம் எதுவும் இல்லை, சொந்த வருவாயும் இல்லை
ஆனால் மூதாதையர்கள் காட்டிய வரதராஜர் என்ற பேரருளாளப் பெருஞ்செல்வம் இருக்கிறது என்கிறார் !.
எதற்குக் கையேந்த வேண்டும் – உணவுக்கு, தண்ணீர், உடை. இதற்குத் தேசிகன் என்ன சொல்லுகிறார் ?
அறுவடை செய்த பின் அங்கே சிந்திய நெல்மணிகள் ஒரு கையளவு கிடைக்குமே அது பசியை தீர்க்க பேதுமானதாகாதா ?
நதி, குளத்தில் இருக்கும் நீர் தாகத்தை தீர்க்காதா ? வயல் சுற்றி முள் வேலிகளில் கிழிந்த துணிகள் மாட்டிக்கொண்டு இருக்குமே
அது என் மானத்தை மறைப்பதற்கு போதுமானது. தகுதியற்ற மனிதர்களை எதற்குப் பாராட்டி செல்வம் சேர்க்க வேண்டும் ?
வைராக்கியமே இவருடைய செல்வம்!.

தன் வாழ்நாளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட படைப்புகளை ஸம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் மணிப்ரவாளத்தில் அருளியுள்ளார்.

ஸ்தோத்ரங்கள் – 28
வேதாந்த கிரந்தங்கள் – 14
வ்யாக்யாந கிரந்தங்கள் 8
ரஹஸ்ய கிரந்தங்கள் 31
தமிழ் பிரபந்தங்கள் – 24
காவியங்கள் 4
நாடகம் 1
அனுஷ்டான கிரந்தங்கள் – 2
மொத்தம் 112

மறுநாள் காலை சூரியோதயத்தின் போது காவிரிக்கரைக்கு துலா ஸ்நானம் செய்ய கிளம்பினேன்.
ஆல மரத்தின் மீது “கீசுகீ சென்றெங்கும்” சத்தம் வேறு வித்தியாச சத்தத்துடன் ”கலந்து பேசின பேச்சரவம்” கேட்க
என்ன என்று பார்த்த போது கிளிகளும் மரத்துக்கு மேல் ஒரு கருடனும் இருப்பதைக் கண்டேன்.

கருடனைப் பார்த்த போது ஸ்வாமி தேசிகனுடைய ஞானம் நினைவுக்கு வந்தது.
ஸ்வாமி தேசிகனுடைய வைராக்கியம் பற்றி முன்பு பார்த்தோம் அதே போல் ஸ்வாமி தேசிகனின் ஞானம் அளவிட முடியாதது.
கருடனுக்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம் ?
கிடாம்பி அப்புள்ளார் ஸ்ரீதேசிகனுக்கு ஆசாரியன் என்று பார்த்தோம்.
அவர் ஸ்ரீதேசிகனுக்கு கருட மந்திரத்தை உபதேசித்தார். ஸ்ரீதேசிகன் இந்த மந்திரத்தை திருவஹீந்திரபுரத்துக்கு சென்று
அங்கே இருக்கும் ’ஔஷாதாத்ரி’ என்ற சிறிய மலை மீது அமர்ந்து ஜபிக்க தொடங்கினார்.
பெரிய திருவடியின் அனுக்ரஹம் அவருக்குக் கிடைத்தது. கருட பகவான் ப்ரத்யக்ஷமாகி அவருக்கு
ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசம் செய்து ஒரு ஹயக்ரீவ விக்கிரகத்தையும் கொடுத்து மறைந்தார்.

ஸ்ரீ தேசிகன் அதே ஔஷதகிரியில் ஹயக்ரீவ மந்திரத்தை ஆயிரமாயிரம் தடவை ஸ்தா ஜபித்துக்கொண்டு தியானத்தில் இருந்தார்.
ஸ்ரீஹயக்ரீவர் மகிழ்ந்து, பிரத்யக்ஷமாகி தனது ”திருவாய் அமுதத்தை” அவருக்கு பிரசாதித்து அருளினார்
அதற்குப் பிறகு ஸ்ரீதேசிகருடைய திருவாக்கிலிருந்து ப்ரவாயமாக ஸ்தோத்திரங்களும் பகவத் விஷயமும் பெருக்கெடுத்தோடியது.

இருபது வயதுதில் எல்லாவற்றையும் கற்றறிந்தார்.
குருபரம்பரையில் ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீராமானுஜர் அதற்குப் பிறகு ஸ்ரீவேதந்த தேசிகனுக்கு மட்டுமே இந்தப் பெருமை உண்டு.

ஹயக்ரீவரிடம் ஞானம் பெற்ற ஸ்ரீதேசிகன், ”“செய்ய தமிழ் மலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோம்” ” என்று
வடமொழி வேதாந்தங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு கற்றாலும், அவற்றால் கலங்கிய ஞானமே உண்டாகும்.
ஆழ்வார் செயல்களைக் கொண்டு தான் தெளிவு பெற்றேன் என்கிறார் ஸ்ரீ தேசிகன்.
திருவாய் அமுதத்தை பிரசாதித்த ஸ்ரீ தேசிகன் திருவாய்மொழியின் சாரப்பொருளை
‘த்ரமிடோப நிஷத் தாத்பர்ய ரத்னாவளி’, ‘திரமிடோ பநிஷத் ஸாரம்’ என்ற நூல்களில் விளக்கியுள்ளார்.
பரம நாத்திகனும் ஒரு முறை திருவாய்மொழியை சேவித்தால் பகவானிடத்தில் ஈடுபடச் செய்துவிடும் என்கிறார்.
“கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன்” என்று திருமங்கை ஆழ்வாரை மனதில் தேக்கிக் கொண்டவர்;
திருப்பாணாழ்வாரின் “அமலனாதி பிரான்” பாசுரங்களுக்கு முநிவாஹன போகம் என்று உரையை அருளிச் செய்தார்.
ஸ்ரீ கோதா ஸ்துதி என்று ஆண்டாளைக் கொண்டாடுகிறார்.
பாதுகா ஸஹஸ்ரத்தில் பெரும்பாலும் ஆழ்வார்கள் கொண்டே அருளிச்செய்துள்ளார்.
பிரபந்த சாரம் என்று ஆழ்வார்கள் அவதரித்த நாள், ஊர், மாதம், பிரபந்தங்களின் எண்ணிக்கை என்ற சுலபமான அதே சமயம் அருமையான செய்யுளை அருளியிருக்கிறார்.
“சந்தமிகு தமிழ் மறையோன் துப்புல் தோன்றும் வேதாந்த குரு” என்று அருளிச் செயல்களில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.

ஸ்நானம் செய்து விட்டு ஸ்வாமி தேசிகன் அமர்ந்து அனுஷ்டானம் செய்த ஆல மரத்தின் பக்கம் ஸ்ரீரங்கம் நோக்கி அமர்ந்துகொண்டு
கிளிகள் ஒலி எழுப்பத் தலைக்கு மேலே கருடன் சுற்றிக்கொண்டு இருக்க அபீதிஸ்தவம் இரண்டு முறை பாராயணம் செய்தேன்.

பிறகு ஆல மரத்துக்கு அடியில் வளர்ந்திருக்கும் துளசியின் இலைகளை இரண்டை பிரசாதமாக எடுத்துக்கொண்டேன்.
ஸ்ரீதேசிகன் அமர்ந்த மரத்தடியில், ஸ்ரீதேசிகனை நேரில் தரிசித்த மரத்தின் மரப்பட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தேன்.
சூரியன் மெல்ல மெல்ல வந்து பயிர்களின் மீது படும் போது வண்ணங்கள் மாறுவதைப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு கோயிலுக்கு திரும்பினேன்.
ஸ்வாமி தேசிகன் வாத்தியங்கள் இசைக்கப் புறப்பாடு கண்டருளினார்.
பெருமாளின் புறப்பாடு போது பொதுவாக இரண்டு திருச்சின்னம் ஊதுவார்கள்,
ஆனால் காஞ்சியில் ஒன்று தான். காஞ்சியில் இந்தத் திருச்சின்னம் ஊதும் போது ஸ்ரீதேசிகனுக்கு வரதனின்
அழகு கண்ணில் தோன்றி திருச்சின்ன மாலை என்று ஒன்றை அருளினார்.
அதைச் செவியுற்ற வரதன், எனக்கு ஒரு திருச்சின்னம் போதும், இன்னொன்று தேசிகன் அருளியது இருக்கிறதே என்று சொன்னாராம்.

மீண்டும் ஸ்வாமி தினமும் அனுஷ்டானம் செய்யும் காவிரிக்கரைக்கு வந்தோம்.
திருமஞ்சனம், தீர்த்தவாரி என்று அடுத்தடுத்து அனுபவித்துவிட்டு பிரியாவிடை கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.

தன் வாழ்நாள் முழுவதும் சற்றும் ஓய்வில்லாமல் வடமொழி, தென்மொழி என்று மொத்தம் 112 கிரந்தங்கள் அருளியுள்ளார்.
ஒரு இரவில் ஒரு யாம காலத்திற்குள் ( மூன்று மணி காலம் ) ஸ்ரீரங்கநாத பாதுகையைப் பற்றி பாதுகா ஸ்ஹஸ்ரம்
இயற்றி, வேதாந்தாசார்யர் என்ற விருதை அரங்கனும், ’ஸ்ர்வதந்த்ரஸ்வதந்தரர், கவிதார்க்கிககேஸரி’ என்ற விருதை ரங்க நாச்சியாரும் கொடுத்து கவுரவித்துள்ளார்கள்.
கோணலான கற்களை சாமர்த்தியமாகப் பொருத்தி கிணறு கட்டினார்,
பக்தி, ஞான, வைராக்கியத்துடன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்த மஹான் ஒரு ’ஸ்ரீவைஷ்ணவ ஃபலூடா’

ஸ்ரீவேதாந்த தேசிகன் தனியன் :
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

பொருள் : எதிர்த்து தர்க்கம் செய்யும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும்,
ஞானம், பக்தி, வைராக்கியம் போன்ற சிறந்த செல்வத்தைப் பெற்றவரும்.
வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரான ஸ்ரீ வேதாந்த தேசிகன் என் நெஞ்சில் எப்பொழுதும் வாழ்வாராக.

 தூப்புல் “, என்ற அக்ஹாரம், காஞ்சீபுரத்தில் திருதண்கா என்ற திவ்ய-தேஸத்தின் அருகாமையில் உள்ளது.  தூப்புல் என்றால் பரிசுத்தமான புல் என்று பொருள்.  அதனை விச்வாமித்ரம் ( தர்பம் ) என்றும் கூறுவர். இந்த அக்ரஹாரத்தில் அவை விளைந்ததாலோ, இல்லை அங்கு விச்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்ததாலோ, அந்தப்பெயர் வந்திருக் கலாம்.  அங்கு அநந்தஸோமயாஜி என்பவர் யஜ்ஞங்களை அனுஷ்டித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.  அவருடைய குமாரரான, புண்டரீகாக்ஷ தீக்ஷதரின் குமாரர், அநந்தஸூரி என்பவர்.  அவருக்கு, ஸ்ரீரங்காச்சாரியின், குமாரத்தியும், அப்பிள்ளாரின் ஸகோதரியுமான,தோதாரம்பாவை திருமணம் செய்து வைத்தனர்.  இந்த தம்பதிகள் இனிதே வாழ்ந்து வந்தனர்.  அவர்க-ளுக்குச் சிலகாலம் குழந்தையில்லாமல் இருந்தது. அவர்கள் ஸ்வப்னத்தில் திருவேங்கடமுடையான், தோன்றி, “ நீங்கள் திருமலையில், எம் சந்நி-தானத்திற்கு வாருங்கள் உங்க ளுக்கு புத்ர பாக்யம் சித்திக்கும் “ என்று கூற இருவர்கனவிலும் ஒருசேர வேங்கடவன் வந்த கார ணத்தால் இருவரும் சந்தோஷப் பட்டனர்.  எம்பெருமான் கருணைத் தங்கள் பக்கம் இருக்கின்றது என மகிழ்ந்து உடனே திருமலைக்கு யாத்திரை கிளம்பினர்.

வேங்கடத்திற்கு நிகரான க்ஷேத்ரமும் கிடையாதுவேங்கடவனுக்கு நிகரான தெய்வமும் கிடையாது.  அவன் இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்.  ஸ்ரீவைகுண்த்தை விட்டுஸ்வாமி புஷ்கரணி தீரத்தில் பிராட்டியுடன் நித்யவாசம் புரிகின்றான்.  கலியுகத்தில் பாவம் செய்தவர்களுக்கு இவனையன்றி வேறு புகலிடம் கிடையாது என்பதை நாம் எல்லோரும் அறிந்ததே.  அத்தகய ப்ஸித்தி வாய்ந்த திருமலைக்கு,
அந்த தம்பதிகள் வந்து சேர்ந்தனர்.  அங்கு ஸ்வாமி புஷ்கரணியில் தீர்தாமாடி, நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ஸ்ரீநிவாஸனை பாதாதி கேசம் சேவித்தனர்.  பிறகு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து உணவருந்தி, அன்று இரவு அங்கேத் தங்கினர்.  என்னே ஆச்சர்யம், ஒரு ஒரு பாலகன் திருவேங்கட-முடையான் ஸந்நிதியிலிருந்து வெளிப்பட்டு வந்து, “ ஸ்ரீராமாநுஜ-ஸித்தாந்தத்தைப் பரப்ப இருக்கும் ஒரு புத்ர ரத்னத்தை உங்களுக்குத் தந்தோம் பெற்றுக் கொள்ளுங்கள் “ என்று கூறி, கோயில் திரு மணியை அநந்த ஸூரியிடம் தர, அவர் தைத் தம் மனைவியிடம் தர, அந்த அம்மையார் அதனை வாங்கி வாயில் போட்டு விழுங்கினார்.  ஸ்வப்னம் கலைந்த வராய் அநந்தஸூரி பதைபதைத்து எழுந்திருந்து பார்க்க, அவர் மனை வியாரும் பதைபதைப்புடன் எழுந்திரு ந்தார் காரணம் ! அதே போன்ற கனவை அவரும் கண்டதாலேயே.  இருவரும் தாங்கள் கண்டக் கனவைப் பரிமாறிக்கொண்டனர்.  அருகில் இருந்து அவற்றைக் கேட்டவர்களும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

 மறுநாள் காலை, கோயில் ஸந்நிதி திறக்கப்பட்டதும், உள்ளே “ கண்டை “  ( மணி )யில்லாததை அர்ச்சகர் கண்டு அலறினார்.   இதனை அறிந்த கோயில் அதிகாரிகள் மணி காணாமல் போனதற்கு அர்ச்சகர்களின் அஜாக் ரதையே காரணம் என்று அவர்களைத் தண்டிக்கத் தீர்மானித்தனர்.  ஆனால் அப்போது அருகே இருந்த திருமலை ஜீயர் ஸ்வாமிகள், “ திரு வேங்கட முடையான், ஒருபாலகனாக தம் திருமணியை ஒரு தம்பதிகளுக் குத்தர, அந்த மணியை அப்பெண்மணி வாங்கி விழுங்குவது போல கனவு கண் டோம் “ என்று கூறினார்.  அங்கு இருந்த வேறு சிலரும் தாங்களும் அது போன்றே கனவு கண்டதாக்க் கூறவே அர்ச்சகர் தண்டனையிலிருந்து தப்பினார்.  கோயில் அதிகாரிகள் அநந்தஸூரியையும், தோதாரம்பா வையும் அழைத்துக் கேட்ட போது, அவர்களும் அதுபோன்ற கனவு தங்களுக்கு வந்ததாகக் கூறினர். அதைக்கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர்.  அந்த நாளிலிருந்து தோதாரம்பையார் கர்பவதியானார்.

 சாதாரணமாகப் பெண்கள் பத்து மாதம்தான் கர்பம் தரிப்பர்.  ஆனால், தோதாரம்மையோ கர்பம் தரித்த பன்னிரண்டாவது மாதம்தான் அதாவது விபவ வருஷம் ( 1269 A.D  )  புரட்டாசிமாதம், ச்ரவண நக்ஷத்ரத்தில் திரு வேங்கடமுடையானின் தீர்த்தவாரி தினத்தன்று, அதி தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.  திருமலையப்பனின் மணியின் அவதாரமாகப் பிறந்த இந்த குழந்தைக்கு,” வேங்கடநாதன் “ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.  யதாகாலத்தில் முறையே வேங்கடநாதனுக்கு அன்ன ப்ராசனம் சிறப்பாக நடத்தப்பட்டது.

 அன்று பேரருளாளன் பெருந் தேவித் தாயாரை தரிசிக்க, பெற்றோர்கள் குழந்தையை, கோயி-லுக்கு அழைத்துச் சென் றனர்.  அங்கு தீபாரத்தி நடக் கும் பொழுது, அர்ச்சகர் வாயிலாக வரதராஜப் பெரு மாளே “ ராமாநுஜ ரைப்போன்று இந்த குழந்தையும் தர்ஸன ஸ்தாபகராக விளங்குவான் “ என்றார்.  அது கேட்ட பெற்ரோர்களும், சுற்றியிருந்தவர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

 ஸ்ரீவேங்கடநாதனுக்கு, வயது ஐந்து !-தகப்பனார் அக்ஷராப்யாஸம் செய்து வைத்தார்.  பிறகு ஒரு நாள் அப்பிள்ளார் பாலகனை தேவாதிராஜன் ஸந்நிதிக்கு அழைத்துச்சென்றார்.  அதுசமயம் மலைமேல், நடாதூரம்மாள் காலக்ஷேபம் நடந்துக்கொண்டி ருந்தது.  அங்கு சென்று அம்மாளை சேவித்த அப்பிள்ளார், குழந்தை யையும் சேவிக்கச்சொன்னார்.   நடாதூரம்மாள் குழந்தையை குளிர கடாக்ஷித்தார்.  அப்போது காலக்ஷேப கோஷ்டியிலிருந்த, வடக்குத் திருவீதிப்பிள்ளை, “ சுடர்போன்று திகழும் இந்த பாலகன் யார் ? “ என்று வினவ, அருகில் இருந்தவர்கள், “ அப்பிள்ளாரின் மருமான் இவன்.  திருவேங்கடமுடையானின் திருமணி அம்ஸமாகப் பிறந்த குழந்தை.  பரா-ஸரரைப் போன்றே பன்னிரண்டு மாதங்கள் தாயார் வயிற்றில் கர்பவாஸம் இருந்து அவதரித்தவர். “ என்று கூறினர். சிறிது நேரம் மௌனம் சாதித்த அம்மாளும், மேற்கொண்டு காலக்ஷேபத்தைத்தொடர, “ யாம் விட்ட இடம் எது ? “ என்று கேட்க, கேட்டுக்கொண்டிருந்தவர்கள், தெரியாது விழித்தனர்.  குழந்தை வேங்கடநாதன், தாம் வந்தபோது அம்மாள் என்ன விஷயம் சாதித்துக்கொண்டிருந்தாரோ, அதைச்சொல்லி, ” இதுவே தாங்கள் கடைசீ-யாக உபதேஸித்த விஷயம், “ என்று விண்ணப்பிக்க, அதனைக்கேட்ட நடாதூரம்மாள், பாலகனை, அருகில் அழைத்து, அணைத்து உச்சிமோந்து, புல ஸ்த்யர், பராஸரரை அநுக்ரஹித்தது போன்று, “ ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத: பூயா: த்ரைவித்யமாந்ய: த்வம் பூரிகல்யாண பாஜநம் “ என்று அநுக்ரஹித்து விட்டு, அப்பிள்ள்ரிடம்,  “ இவன் ஒரு அவதார புருஷன்” , ஸ்ரீபாஷ்யகாரரின் ஸ்ரீபாஷ்யங்களை உபதேஸிக்கும்படி விண்ணப்பித்தார்.  பிறகு பிள்ளான், எங்களாழ்வானுக்கும் ” இந்த குழந்தை நமக்களித்த ஸத்பாத்திரம்.  நமக்கு வயதாகிவிட்டக் காரணத்தால், இவ னுக்கு உபதேஸிக்கும் பாக்யம் பெற்றிலேன்” என்று நியமித்தார்.  பிறகு கிடாம்பி அப்பிள்ளாரை அழைத்து,  “ நீர் இந்தக் குழந்தைக்கு, எம்பெரு மானார் திருவுள்ளம் உகக்கும்படி ஸாமாந்ய சாஸ்த்ரங்களுடன், ஸ்ரீபாஷ் யாதி க்ரந்தங்களையும், மந்தரமந்த்ரார்த்தங்களையும் உபதேஸிக்கக்கடவீர்  “ என்று கூறி, அப்பிள்ளாரின் கரத்தில் குழந்தையை பிடித்துக் கொடுத்தார்.

 வேங்கடநாதனுக்கு, தந்தை ஏழாம் வயதில், உபநயனம் செய்து வைத்தார்.  அதன் பிறகு, வேங்கடநாதன் தந்தையிடம், வேதாத்யயனம் செய்ய ஆரம்-பித்தார்.  ஆளவந்தாரை போன்று அதிமேதாவியாக விளங்கும் தம்குமார ரைக்கண்டு மனம் பூரித்தார் அநந்தஸூரி.

 அதன் பிறகு அம்மாள் நியமனப்படி, அப்பிள்ளார் தம் மருமானுக்கு, சப்த தர்க, மீமாம்ஸாதி, ஸகல ஸாமாந்ய சாஸ்த்ரங்களையும் போதித் தார். மேலும், ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், பகவத்விஷயம் இத்யாதி வேதாந்த க்ரந்தங் களையும் விசேஷார்த்தங்க-ளுடன், உபதேஸித்தார்.  இவற்றையெல்லாம் கற்ற வேங்கடநாதன், நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானாருக்கு ஈடாக எழுந்தருளியிருந்தார்.   மேலும் ஒரு ஆச்சார்யனாகத்தகுந்த குண பூர்த்தியுடன் மிக தேஜஸ்வியாகத்திகழ்ந்தார்.

நம்தூப்புல் மணிக்கு, திரு-மங்கை என்னும் பெண் மணியைப் பாணிக்ரஹணம் செய்து வைத்தனர் பெற்-றோர்.  இந்த திருமணம் அப்பிள்ளார் நியமனப்படியே நடந்தேறியது.  அவர் தன் மருமானுக்கு, எந்த கெடு-தலும் நேராமலிருக்க ரக்ஷை செய்து, வைநதேயன் மந்தரத்தையும் உபதேஸித்தருளினார்.  மேலும்,” ராமாநுஜ சித்தாந்த ஸ்தாபக-ராகத்திகழ்வாய் ” என்று ஆசீர்வதித்தார்.  ஸ்வாமியும் பெருமாள் கோயி-லில் நித்ய கர்மானுஷ்டானங்களை முறைப்படி அனுஷ்டித்து வந்தார்.  பகவத், பாகவத,
ஆச்சார்ய கைங்கர்யங்களைப்
பண்ணிக் கொண்டு பலருக்கும் சாமான்ய விசேஷ சாஸ்த்ரங்களை உபதேஸித்து வந்தார்.

 சிலகாலம் சென்றதும், அப்பிள்ளார் திருமேனிக்கு, அஸௌகர்யம் உண்டாயிற்று.  அப்போது தன் மருமானை அழைத்து, “ உம்மால் ராமாநுஜ சித்தா-ந்தம் நிர்தாரிக்கப்பட வேண்டுமென்பது உடையவர் திருவுள்ளமென்று நடாதூரம்மாள் அருளிச்செய்திருக்கின்றபடியால் அவர் வழியாக வந்த உடையவர் பாதுகைகளை உமக்கு தரு கின்றோம். “ என்று சொல்லிப் பாதுகைகளை அளித்தார்.  ஸ்வாமியும் அவற்றை மிக பயபக்தியுடன் ஸ்வீகரித்துத் திருவாராதனத்தில் எழுந்தருளப் பண்ணி ஆராதித்து வந்தார்.

 அப்பிள்ளார் பரமபதித்த பிறகு, அவருடைய திருக்குமாரர் பத்மநாபாச்சார்யரைக்கொண்டு, சர்ம கைங்கர்யங்களை நன்கு நடத்திவைத்தார்.  வீர வல்லி பெருமாளையன், மற்றும்  வீரவல்லி கிருஷ்ணமாச்சாரி போன்ற வர்கள் நம் ஸ்வாமியிடம் காலக்ஷேபம் பண்ணினார்கள்.

 இவ்வாறு ஸித்தாந்த ப்ரவசனம் செய்து கொண்டிருந்தபோது, அப்பிள்ளார் உபதேஸித்த வைநதேய மந்த்ரத்தை ஆவ்ருத்தி செய்து ஸித்திபெற எண்ணினார்.-அதற்காக, அடியவர்கருளும் தெய்வநாயகன் நித்யவாஸம் செய்யும் திருவஹீந்த்ர புரத்திற்கு எழுந்தருளினார்.

 அங்கு கருட நதியில் நீராடி நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, செங்கமலவல்லி நாச்சி யாரையும், தேவநாதனையும் தொழுது ஔஷதகிரிக்கு எழுந்தருளினார்.  அங்கு ந்ருஸிம்ஹனை ஸேவித்து அந்த சந்நி திக்கு சமீபத்தில் இருந்த ஓர் அச்வத் விருக்ஷத்தின் ( அரசமரத்தின் )அடியில் ஆஸமிட்டு அமர்ந்து வைந தேயன் மந்த்ரத்தை ஜபித்துவந்தார்.  வைநதேயன் அவர் முன்பாக ப்ரத்யக்ஷமாகி ஹயக்ரீவ மந்த்ரத்தை உபதேஸித்தருளினார்.   அன்று முதல் ஸ்வாமியும், ஹயக்ரீவ மந்தரத்தை ஜபிக்க , இவர் தபஸி னால் ப்ரீதியடைந்த ஹயக்ரீவப் பெருமாள் இவர் முன் ப்ரத்ய க்ஷமாகி தம்முடைய லாலாமயமான அம்ரு தத்தைக் கொடுத்து அநுக்ரஹத்து விட்டுமறைந்தார்.

 ஸ்ரீஹயக்ரீவரின் லாலா அமுதத்தை பருகிய நம் ஸ்வாமியிடம் அனைத்து வித்யைகளும் தாமாகவே வந்து சேர்ந்தன்.  அவர் முதலில் ஹயக்ரீவன் விஷயமாக, “ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தை”  அருளிச்செய்தார்.  பிறகு ஹயக்ரீவ மந்த்ரத்தை தமக்கு உபதேஸித்தருளிய கருடன் விஷயமாக     “ கருட பஞ்சாசத் “  அருளினார்.  தொடர்ந்து திருவஹீந்த்ர எம்பெருமான் தேவநாதன் விஷயமாக    “ தேவநாயக பஞ்சாசத் “ ப்ராக்ருத மொழியில்,     “ அச்சுத சதகம் “அழகிய செந்தமிழில் மும்மணிக்கோவை கந்துபா, கழற்பா, அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா, நவரத்னமாலை ஆகியவற்றை இயற்றி னார். ஸ்ரீதேவநாதனையும், செங்கமல நாச்சியாரையும் மங்களா சாஸனம் செய்து கொண்டு சிலகாலம் அங்கேயேத் தங்கியிருந்த ஸ்வாமிகள்,   “ பரமதபங்கம் “  என்ற க்ரந்தத்தையும் அருளினார்.  அங்கேயே கோயிலில் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீராமன் விஷயமாக,     “ ரகுவீரகத்யம்”, கோபாலனைப்பற்றி      “ கோபாலவிம்சதி “ ஆகியவற்றையும் அருளிச்செய்தார்.

 பிறகு, பேரருளாளனைக்காண விழைந்தவராக, அங்கிருந்து புறப்பட்டவர் வழியில், திருக்கோயிலூர் அடைந்தார்.  அங்கு ஆயனாரை தரிசித்தவர் அந்த எம்பெருமான் விஷயமாக, “ தேஹளீகஸ்துதி ” யை அருளிச்செய்தார்.

 பிறகு அங்கிருந்து திருக்கச்சி என அழைக்கப்படும் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார்.  அநந்தஸரஸில் நீராடி நித்யகர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பெருந்தேவித் தாயாரை மங்களாசாஸனம் செய்து விட்டு பேரருளாளன்  வரதராஜன் சந்நிதிக்கு எழுந்தருளினார்.  பெருமாளை ஆபாதசூடம் சேவித்து மகிழ்ந்தார்.

 எம்பெருமானார் கத்யத்தில் அருளிச்செய்துள்ள ப்ரபத்யர்த்தத்தை, தம் ஆச்சார்யரான அப்பிள்ளார் உபதேஸித்தபடி, அங்க பஞ்சக பஞ்சக ஸம்பந்தமான ஆத்ம ரக்ஷாபர ஸமர்பணத்தை ( சரணா கதியை ) பேரருளாளன் திருவடிகளில் ஸமர்பித்து விட்டு, தூப்புல் அக்ரஹாரம் வந்து சேர்ந்தார்.  அங்கு காலக்ஷேபங்களை அரு ளிச்செய்துகொண்டு இருந்தார்.  அப்போதுதான் சரணாகதி விஷயமாக,   “ ந்யாஸதஸகத்தை “ யும் வரதராஜன் விஷயமாக,   “ வரதராஜபஞ்சாசத் “ என்ற ஸ்தோத்ரத்தையும் அடைக்கலபத்து, அர்த்த பஞ்சகம், ஸ்ரீவைஷ்ணவதினசர்யை, திருச்சின்ன மாலை, பன்னிருநாமம், என்று ஐந்து தமிழ்ப்ரபந்தங்களையும் அருளிச் செய்து, “ அத்திகிரி மஹாத்ம்யம் “ என்ற க்ஷேத்ர மகிமையையும் அருளிச் செய்தார்.  தீப ப்ரகாஸர் விஷயமாக, “ சரணாகதி தீபிகை ” யும் யதோக்தகாரி விஷயமாக, “ வேகாஸேது ஸ்தோத்ரத்தை “ யும் அஷ்டபுஜ பெருமாள் விஷயமாக, “ அஷ்டபுஜாஷ்டகத்தை “ யும் ஆளரி விஷயமாக “ காமாஸி காஷ்டகம் “ , திருப்புட்குழி எம்பெருமான் விஜயராகவன் மீது “ பரமார்த்த ஸ்துதி “ யும் அருளிச்செய்தார்.

 பிள்ளானின் குமாரர் புண்டரீகாக்ஷர்.  அவர் விஜயநகர மன்னனின் அத்யக்ஷராக இருந்தார்.  அவர் அப்பிள்ளாரின் குமாரத்தியை விவாஹம் செய்து கொண்டிருந்தார்.,  அவள் தன் தகப்பனாரின் க்ருஹத்தில் ப்ரசவிக்க காஞ்சீபுரம் வந்திருந்தாள்.  அவளுக்கு சோபக்ருத் ஆண்டு, புரட்டாசிமாதம், ச்ரவண நக்ஷத்ரத்தில் ஒர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தூப்புல்மணி ஸ்ரீநிவாஸன் எந்ற பெயரைச்சூட்டி, ரக்ஷையும் செய்துவைத்தார்.  புண்டரீகாக்ஷருக்கு குழந்தை பிறந்த செய்தி அனுப்பிவைக்கப்பட்டது.

 செய்திகேட்ட புண்டரீகாக்ஷரும் புறப்பட்டு காஞ்சீபுரம் வரத்தயாரானார்.  அப்போது அவர் ஸ்ரீபாஷ்யகாரர், பிள்ளான் முதலியவர்களால் ஆராதிக்-கப்பட்டு, பிற்பாடு புண்டரீகாக்ஷரிடம் வந்து சேர்ந்த ஸ்ரீஹயக்ரீவரை வேங்கடநாதனிடம் சமர்பித்துவிட வேண்டும் என்று தாம் கண்ட கனவை விஜயநகர மன்னனிடம் கூற, மன்னன் புண்டரீகாக்ஷரையும், ஹயக்ரீ வரையும் ஸகல ராஜமரியாதைகளுடன்  காஞ்சீபுரம் அனுப்பிவைத்தார்.  காஞ்சீமாநகரிலும், புண்டரீகாக்ஷரை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.  ஸ்ரீஹயக்ரீவன் நம் ஸ்வாமி ஸ்வப்னத்திலும் வந்து கூறியதால், அவரும் எதிர்கொண்டு அழைத்தார்.  பிறகு முறையே குசல ப்ரச்நம் முடிந்தவுடன், புண்டரீகாக்ஷர் ஹயக்ரீவரை ஸ்வாமிகளிடம் அளிக்க ஸ்வாமிகளும் அந்த மூர்த்தியை தம் பிதாமஹ, ப்ரபிதாமஹாதிகள் ஆராதித்து வந்த பேரருளாளன் விக்ரஹத்துடன் எழுந்தருளச்செய்து ஆராதித்து வந்தார்.

 தம் அவதாரத்திற்கு முக்ய காரணமாக விளங்கிய திருவேங்கடமுடையானை தரிசிக்கவேண்டுமென்று ஸ்வாமிகள் எண்ணி யாத்ரை புறப்பட்டார்.  வழியில் சோளிங்கரை அடைந்தவர் அங்கு அக்காரக்கனியை மங்களாஸாஸனம் செய்துவிட்டு, பிறகு சிலகாலம் திருச்சானூரில் தங்கி அலர் மேல்மங்கைத் தாயார், கீழ்திருப்பதியில் கோவிந்தராஜன் ஆகியவர்களை ஸேவித்துவிட்டு திருமலைக்கு எழுந்தருளினார்.

 ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி, நித்ய கர்மா-நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, முதலில் ஸ்ரீவராஹனை ஸேவித்துவிட்டு, ஸ்ரீநிவாஸன் ஸந்நிதிக்கு எழுந்தருளி பாதாதிகேசம் கண் களால்அனுபவித்துவிட்டுதீர்த்தப்ரஸாதங்களைபெற்றுக்கொண்டார்.  திருவேங்கடமுடையான் தயையைப்பற்றி              “ தயாசதகம் “ என்ற நூறு ஸ்லோகங் களை இயற்றினார்.  பிறகு சிலநாட்கள் அங்கு தங்கியிருந்து, திரும்ப மனமின்றி புறப்பட்டார்.  ஸ்ரீநிவாஸனின் விபவம் ஒன்றும் குறைவின்றி நித்ய ஸ்ரீர்நித்ய மங்களமாக இருக்கவேண்டுமென்று  “ ப்ரஸமிதகலிதோஷம் “என்ற ஸ்லோகத்தை அருளிச்செய்து மங்களாசாஸனம் செய்தார்.

 திருமலையைவிட்டுப் புறப்பட்வர் வடதேஸத் திலுள்ள திவ்யதேசங்களுக்கு யாத்ரை சென்றார்.  செல்லும் வழியில் துங்கபத்ரா நதிக்கரையில் வித்யாரண்யரை சந்தித்தார்.

 பால்ய நாட்களிலிருந்து இருவரும் அன்புடன் பழகி வந்தவர்கள்.  இப்போது வித்யாரண்யர் ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரித்துக்கொண்டு, கங்காயாத்ரை புறப்பட்டு இருந்தார்.  நம் ஸ்வாமியைக்கண்டதும் மிக்க சந்தோஷத்துடன் க்ஷேமசமாசாரங்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.  அப்போது அந்த தேஸத்து அரசனின் மகளை ப்ரஹ்மராக்ஷஸ் பிடித்துக்கொண்டு இருப்பதாயும், அதனை ஓட்டவேண்டுமென்று ராஜாவின் ப்ரதிநிதி வித்யாரண்யரை அணுக, அவர் நம் ஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார்.  அதற்கு ஸ்வாமிகள் சம்மதிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு த்வாரகை, கோகுலம், ப்ருந்தாவன், மதுரா, மாயை, அவந்தி, அயோத்யா போன்ற முக்தி தரும் க்ஷேத்ரங்களுக்குச் சென்று சேவித்தார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டுஸ்ரீகூர்மம், புருஷோத்தமம், அகோபிலம், திருஎவ்வுள், திருநின்றவூர், திருவல்லிக்கேணி,திருகடல்மல்லை ஆகிய திவ்யதேசத்து எம்பெருமான்களை மங்களா சாஸனம் செய்துவிட்டு ஸ்ரீபெரும்பூதூருக்கு எழுந்தருளினார்.  யதிராஜனை ஸேவித்தார்.  எம்பெருமானாரால் குளிரக் கடாக்ஷிக்கப்பெற்றவராய் மீண்டும் காஞ்சீ-புரத்திற்கே வந்து ஸித்தாந்த ப்ரவசனம் பண்ணிவந்தார்.

 ஒரு சமயம் காஞ்சீபுரத்திற்கு அருகாமை யிலுள்ள திருப்புட்குழி என்ற திவ்ய தேஸத்தில் வைஸூரி என்ற கொடிய வியாதியால் மக்கள் அவதி யுற்றனர். பலர் இறந்தனர்.  செய்தி கேட்ட நம் ஸ்வாமிகள் வாளாயிருக்காமல் உடனை அங்கு சென்று,” ப்ரதிபட ஸ்ரேணிபூஷண “ என்று தொடங்கும் சக்ரத்தாழ்வார் மீதான “ சுதர்னாஷ்டகம் “ என்ற எட்டு ஸ்லோகங்களை அருளிச்செய்ய, அந்த வியாதியிலிருந்து மக்கள் விடுபட்டதுடன் அவர் பெருமையை உணர்ந்தனர்.  இந்த ஸ்லோகத்தை சொல்வதால், வியாதிகள் மட்டுமல்ல, பேய், பிசாசு தொல்லைகளி லிருந்தும் விடுபடலாம் என்பது உறுதி.

 வேருவொரு சமயம், ஒருஸந்யாஸி, ஸ்வாமி களிடம் வாதம் செய்யவந்தான்.  அவன் வாதத்தில் தோற்றான்.  அதனால் கோபமுற்ற வனாக, சில கெட்ட மந்திரங்களின் உதவியால் அவற்றை ஜபித்து குளத்து நீரை ஒருகை எடுத்துப் பருகினான்.

 உடனே நம் ஸ்வாமியின் வயிறு பெருக்க ஆரம்பித்தது.  அவரால் உபாதையை தாங்க முடியவில்லை.  அதன் காரணத்தை உணர்ந்தவராக, எதிருலிருந்த ஒரு கம்பத்தில் ஒரு கோடு இழுத்தார்.என்னே ஆச்சர்யம் அவர் வயிற்றிலிருந்த ஜலம் கம்பத்தின் வழியாக வெளியேற அவர் வயிறும் முன்போல ஆனது.  இதனை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த ஸந்யாஸி ஸ்வாமியின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டுனான்.

 விஜயநகரத்து மன்னனின் மகளைப் பீடித்திருந்த ப்ரஹ்மராக்ஷஸை வித்யாரண்யர் விரட்டியதால் மன்னனின் அரஸசபையில் அத்யக்ஷகரானார்.  அப்போது தம் நண்பரான தூப்புல் மணி உஞ்சவ்ருத்தி செய்து, ஜீவனம் நடத்துவதாகக்கேள்வியுற்று வருந்தியதுடன் அவருக்கு உதவும் எண்ணத்துடன், விஜயநகரத்திற்கு வந்துவிடும்படி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.   அதில், “ப்ரஸித்தி பெற்ற தூப்புல்குல திலகமே! அடியேன் மூலம் தேவரீருடைய கீர்த் தியை மஹாராஜா அறிந்து, தங்களை நேரில் தரிசிக்க விழைகிறார்.  தேவரீரை தனத்தால் ஆராதித்து உம் வாயிலிருந்து வரும் அம்ருதத்தில் திளைக்க ஆசைப் படுகின்றார்.  ஆகையால் தாங்கள் சிஷ்யர்களுடன் விஜயநகரத்திற்கு எழுந்தருளி மஹாராஜாவையும், தங்களிடம் அன்புகொண்ட அடியேனை யும் மகிழ்விக்க வேண்டுகின்றேன்.“  என்று எழுதியிருந்தார்.  அந்தக்கடிதத்தைப் படித்த ஸ்வாமிகள் அதற்கு,  “ க்ஷோணீ கோண ஶதாம்ஶ பாலந கலா து³ர்வார க³ர்வாநல-
க்ஷுப்⁴யத்க்ஷுத்³ர நரேந்த்³ர சாடு ரசநா த⁴ந்யாந் ந மந்யாமஹே ।
தே³வம் ஸேவிதுமேவ நிஶ்சிநுமஹே யோঽஸௌ த³யாலு: புரா
தா³நா முஷ்டிமுசே குசேல முநயே த³த்தே ஸ்ம வித்தேஶதாம் ॥ வைராக்³யபஞ்சகம்-1 ॥ “ என்ற ஸ்லோகத்தை பதிலாகஎழுதியனுப்பினார்.  அதில்,      “ இந்த பூமண்ட லத்தில், ஏதோவொரு மூலையில் ஏகதேஸத்தை அரசர்கள் ஆள்கின்றனர்.  அவர்களை நம்முடைய அழகிய வார்த்தைகளினால்பாட, துதிக்க விரும்பவில்லை.  அதனால் கிடைக்கும் பணத்தையும், ஒரு பொருட் டாக நாம்மதிக்கவில்லை.  பகவானையே த்யானம் செய்ய நிச்சயித்துள் ளோம்.  அவன் ஒருவனே ஸர்வ பலனையும் கொடுக்க வல்லவன்.  குசேலனுக்கு கண்ணபரமாத்மா சகல சம்பத்தையும் அருளியதை நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். இல்லையா?“ என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள்.

 சிலகாலம் கழித்து மற்றுமொரு கடிதம் அனுப்பி வைத்தார் வித்யா-ரண்யர்.  அதனையும் படித்துவிட்டு, நம் ஸ்வாமிகள்,  ஐந்து ஸ்லோக-ங்களை பதிலாக அனுப்பி வைத்தார். அந்த ஐந்து ஸ்லோகங்களே         “ வைராக்ய பஞ்சகம் “ எனப்படும்.

வைராக்³யபஞ்சகம் ॥
க்ஷோணீ கோண ஶதாம்ஶ பாலந கலா து³ர்வார க³ர்வாநல-
க்ஷுப்⁴யத்க்ஷுத்³ர நரேந்த்³ர சாடு ரசநா த⁴ந்யாந் ந மந்யாமஹே ।
தே³வம் ஸேவிதுமேவ நிஶ்சிநுமஹே யோঽஸௌ த³யாலு: புரா
தா³நா முஷ்டிமுசே குசேல முநயே த³த்தே ஸ்ம வித்தேஶதாம் ॥ 1 ॥

இந்த பூமண்ட லத்தில், ஏதோவொரு மூலையில் ஏகதேஸத்தை அரசர்கள் ஆள்கின்றனர்.  அவர்களை நம்முடைய அழகிய வார்த்தைகளினால்பாட, துதிக்க விரும்பவில்லை.  அதனால் கிடைக்கும் பணத்தையும், ஒரு பொருட் டாக நாம்மதிக்கவில்லை.  பகவானையே த்யானம் செய்ய நிச்சயித்துள் ளோம்.  அவன் ஒருவனே ஸர்வ பலனையும் கொடுக்க வல்லவன்.  குசேலனுக்கு கண்ணபரமாத்மா சகல சம்பத்தையும் அருளியதை நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். இல்லையா?

ஶிலம் கிமநலம் ப⁴வேத³நலமௌத³ரம் பா³தி⁴தும்
பய: ப்ரஸ்ருʼதி பூரகம் கிமு ந தா⁴ரகம் ஸாரஸம் ।
அயத்ந மல மல்லகம் பதி² படச்சரம் கச்சரம்
ப⁴ஜந்தி விபு³தா⁴ முதா⁴ ஹ்யஹஹ குக்ஷித: குக்ஷித: ॥ 2 ॥

ஒருவன் உண்ண உணவும், குடிக்கநீரும், உடுக்க உடையும் வேண்டி அரசனை அண்டி வாழ வேண்டுமென்பதில்லை.  நிலங்களில் சிதறி கிடக்கும் நெல்மணிகளும், குளத்துநீரும், வீதியில் கிடக்கும் கந்தல் ஆடைகளுமே போதும்.

ஜ்வலது ஜலதி⁴ க்ரோட³ க்ரீட³த்க்ருʼபீட³ ப⁴வ ப்ரபா⁴-
ப்ரதிப⁴ட படு ஜ்வாலா மாலாகுலோ ஜட²ராநல: ।
த்ருʼணமபி வயம் ஸாயம் ஸம்பு²ல்ல மல்லி மதல்லிகா
பரிமலமுசா வாசா யாசாமஹே ந மஹீஶ்வராந் ॥ 3 ॥

சமுத்ரத்திலுள்ள படபாக்நி போல் நம் வயிற்றில் உள்ள ஜாடராக்நி விருத்தியடைந்து பசிதாகத்தால் நாம் பீடிக்கப்பட்டாலும் மாலையில் தானாக மலரும் மல்லிகையின் வாசம் போன்ற நறுமணம் கொண்ட நம் வாக்கினால் அரசர்களிடம் ஒருபோதும் யாசிக்கமாட்டோம்.

து³ரீஶ்வர த்³வார ப³ஹிர்விதர்தி³கா-
து³ராஸிகாயை ரசிதோঽயமஞ்ஜலி: ।
யத³ஞ்ஜநாப⁴ம் நிரபாயமஸ்தி மே
த⁴நஞ்ஜய ஸ்யந்த³ந பூ⁴ஷணம் த⁴நம் ॥ 4 ॥

அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்த கருமை நிற கண்ணன் என்கின்ற தனம், நமக்கு நிறைய இருக்கின்றது.  அந்த தனம் குறைவில்லாதது ஆகும். ஆகவே துஷ்டர்களான அரசர்களின் வாசல் திண்ணையில் தனத்திற்காகத் துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம்.  அரியை துதித்து உடன் கிடைக்கும் தனமே சிறந்தது.  சிவ, ஸநகாதி களால் த்யானம் செய்யவும் முடியாத எம்பெருமான் என்ற தனம், எப்போதும் கிட்டும். அதற்கு விடையென்ன என்று கூறுகின்றோம் கேளும்.

ஶரீர பதநாவதி⁴ ப்ரபு⁴ நிஷேவணாபாத³நாத்
அபி³ந்த⁴ந த⁴நஞ்ஜய ப்ரஶமத³ம் த⁴நம் த³ந்த⁴நம் ।
த⁴நஞ்ஜய விவர்த⁴நம் த⁴நமுதூ³ட⁴ கோ³வர்த⁴நம்
ஸுஸாத⁴நமபா³த⁴நம் ஸுமநஸாம் ஸமாராத⁴நம் ॥ 5 ॥

அரசர்களின் பெரும் தனம் நம் பசி, தாகங்களைத் தற்காலிகமாகப் போக்கக் கூடியதே.  நம் மரண பர்யந்தம் அவர்கள் தனத்தை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கக்கூடிய கஷ்டத்தை அது அளிக்கும்.  ஆகவே அது ப்யோஜன மற்றது.  நம்மால் துதிக்கப்படும் பகவான் என்கின்ற தனம் தனஞ்ஜெயனுக்கு கீதையை உபதேஸித்து மேன் மையை உண்டுபண்ணியது. ஆகவே பகவானாகிற தனம் கோவர்தன கிரியைத்தூக்கி, கோபர்களையும், கோக்களையும் ரக்ஷித்தது.  மேலும் தன்னை அண்டிய தேவர்களையும், வித்வான்களையும் ஸந்தோஷப் படுத்தக்கூடியது.  ஆகையால் பகவான் என்கின்ற தனமே மிக உயர் ந்தது. சொந்தமாக சம்பாதித்தோ இல்லை பரம்பரை சொத்தோ இருந்   தால் இவ்விதம் அரசர்களின் உதவியை அலக்ஷியப் படுத்தலாம்.  ஒன்றுமே இல்லாது உஞ்சவிர்த்தி செய்யும் நாம் இப்படி பேசலாகாது என எண்ணவேண்டாம்.

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சிந்ந மயா கிஞ்சிதா³ர்ஜிதம் ।
அஸ்தி மே ஹஸ்தி ஶைலாக்³ரே வஸ்து பைதாமஹம் த⁴நம் ॥ 6 ॥

நாம் சம்பாதிப்பதோ, நம் முன்னோர்கள் சம்பாதித்தது என்றோ எதுவுமில்லை.  நம் பிதாமஹர்  ( ப்ரஹ்மா )  ஸம்பாதித்த தனம் ஒருவராலும் அபஹரிக்கமுடியாதது.  அது அத்திகிரியில் இருக்கின்றது.  அதாவது ப்ரஹ்மனின் யாகத்தில் அவதரித்த பேரருளாளனே நமக்குப் பெரிய தனம்.

॥ இதி வேதா³ந்த தே³ஶிகேந ரசிதம் வைரக்³யபஞ்சகம் ஸம்பூர்ணம் ॥

இப்படி ஸ்வாமி வைராக்யத்துடன் வாழ்க்கையை நடத்திவந்தது எல்லோரும் அறிந்த ஒன்றே.  இவர் கஷ்டத்தை நீக்க விரும்பிய ஒரு பெரும் தனவந்தர், சில தங்க மணிகளை         ( அவைநெல் மணி களைப்போன்றே காணப்படும் ) தாமிடும் பிக்ஷையுடன் கலந்து ஸ்வாமிகள் உஞ்சவிர்த்திக்கு வரும்போது அவருக்கு அளித்தார்.  ஆனால் ஸ்வாமிகளோ அதனை கவனிக்காமல், தம் தேவியாரிடம் தந்து அமுது செய்யும் படிக் கூறினார்.  தேவிகள் செம்பிலிருந்த தான்யங் களைக் கீழே சேர்த்தபோது தங்கமணி களும் கலந்திருப்பதைப்பார்த்தார்.

 ஆனால் அதுவரை அந்த அம்மையார் அதுபோன்ற தங்க மணிகளைப்-பார்த்ததேயில்லையாதலால் பயந்து போய் ஸ்வாமிகளை அழைத்து,     “ இன்று பிக்ஷையுடன் பள பளப்பாக ஏதோ த்ரவியமும் கலந்து இருக்-கிறது சற்றுவந்து பாருங்களேன் “ என்று அழைக்க, ஸ்வாமிகள் வந்து பார்த்துவிட்டு     “ அவைபுழுக்கள் “   என்று கூறிவிட்டு, ஒருகுச்சியால் அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி னார்.  ஆகவே தேவியார், ஸ்வா-மிகள் அருளிச்செய்த நவரத்னமாலை, மும்மணிக்கோவையையுமே தமக்கு விலையுயர்ந்த ஆபரணங்களாகக் கருதி வாழ்ந்துவந்தார்.

 நம் ஸ்வாமிகளின் அறிவுத்திறனைக்கண்டு அஸூயைக்கொண்ட சிலர் ஒரு ப்ரஹ்மசாரியிடம் “ நீ திருமணம் செய்துகொள்ள பணம் வேண்டு-மென்றால் நீ வேங்கடநாதனிடம் சென்றுகேள்.  அவர் தங்காசுகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்.“ என்று கூறி அவனை அவனிடம் அனுப்பி வைத்தனர்.

 அந்த ப்ரஹ்மசாரியும், அதுபோன்றே ஸ்வாமிகளிடம் சென்று உதவி கேட்க, அவரும் அதன் பிண்ணணியை அறிந்த வராக பெருந்தேவித் தாயாரைக் குறித்து “ ஸ்ரீஸ்துதி “ என்ற ஸ்லோகத்தை அருளிச் செய்ய வானத்திலிருந்து தங்கக் காசுகள் மழையென வானிலிருந்து பொழிந்தது.  அதனை அந்த ப்ரஹ்மசாரியும் தன் மேல் உத்ரியத்தில் பிடித்துக்கொண்டான்.  பிறகு ஸ்வாமிகளைத் தண்டன் சமர்ப்பித்துவிட்டு அவற்றை எடுத்துச் சென்றான்.  இதனைப்பார்த்த அந்த விரோதிகள் அனைவரும் தலை கவிழ்ந்தனர்.  இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற வித்யாரண்யருக்கு ஸ்வாமிகளிடம் பன்மடங்கு மதிப்பு வளர்ந்தது.

 ஒருசமயம், சில அத்வைதிக வித்வான்கள் கூட்டமாக ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்து, “  ராமாநுஜஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் சொல்ல வேண்டும் இல்லை யெனில் அத்யயன உத்ஸவத்தை நடத்தக்கூடாது, எங்கள் மதத்தில் சேர்ந்து விடவேண்டும் “ என்று கோஷமிட்டனர்.  ஸ்ரீரங்கவாஸிகளான ஸுதர்ஸன பட்டர் போன்றவர்கள் வயோதிகர்களாக ஆகிவிட்டபடியால், பெருமாள் கோயிலக்கு எழுந்தருளியிருந்த நம் ஸ்வாமிகளுக்கு ஸுதர் ஸன பட்டர் “ தேவரீர் உடனே புறப்பட்டு திருவரங்கம் எழுந்தருள வேண்டும்.  இது ஸ்ரீரங்கநாதனுடைய ஸேநாபதியின் சாஸனம் “ என்ற ஓலையை அனுப்பி வைக்க, ஸ்வாமிகளும் பேரருளாளன் நியமனம் பெற்று, திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

 வடத்திருக்காவேரியில் நித்ய கர்மாநுஷ் டானங் களை முடித்து கொண்டு கோயிலுக்கு எழுந்தருளி னார்.  ஸ்வாமிகள் எழுந்த ருளிய செய்தி கேள்வியுற்ற கோயில் நிர்வாகிகள் அவரு க்கு, பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.  ஸ்ரீ ரங்கநாச்சியாரை ஸேவித்து ப்ரதக்ஷணமாக வந்து ஸ்ரீரங் கநாதன் ஸந்நிதிக்கு எழுந்தருளினார்.  அமலனாதிபிரான் பாசுரத் தைச் சொல்லி பெருமாளை பாதாதிகேசம் ஸேவித்து, தீர்த்த   ப்ரஸா தங்களை ஸ்வீகரித்துக் கொண்டார்.  ஸந்நிதிக்கு வெளியில், பெரிய மண்டபத்தில் ஸுதர்ஸனபட்டர் முத லானவர்கள் இருந்தனர்.  அப்போது அங்கிருந்த அத்வைத வித்வான்கள், ஸ்வாமி களுடன் வாதம் செய்ய ஆரம் பித்தனர்.  ஸ்வாமிக்கும் அவர்களுக் கும் ஏழுநாட்கள் வாதம் நடந்தது.  எட்டாவது நாள் ஸ்வாமிகள் வாதத்தில் வென்றார்.

 இந்த வாதங்களை தினதோறும் வீரவல்லிபெருமாளையன் என்பவர் கேட்டு இரவு வேளை அவற்றை எழுதிமுடித்து, எட்டாவது நாள் வாதம் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் அவற்றைக் காண்பித்தார்.  ஸ்வாமிகளும் அவற்றைக் கடாக்ஷித்து, “  ஸததூஷணி “  என்று பெயரிட்டார்.  அந்த அத்வைத வித்வான்கள் ஸ்வாமிகளிடம் அடிபடிந்தனர். ஸ்வாமிகளும் ஸ்ரீரங்கநாதன் நியமனப்படி அங்கேயே எழுந்தருளியிருந்து காலக்ஷேபங்களை சாதித்து வந்தார்.

இவர் செய்தருளிய ஸ்ரீபாஷ்ய ப்ரவசனத்தைக் கண்டு பெரியபெருமாள் மனமுவந்து, “ வேதாந்தசார்யர் “  என அழைத்தார்.  ஸ்ரீரங்கநாச்சியாரும் தம்பங்கிற்கு, “ ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் “
என்ற விருதை வழங்கினார்.  இவற்றைக்கேள்வியுற்ற ஸுதர்ஸனபட்டர் முதலானோர் மிக சந்தோஷ
மடைந்தனர். இப்படி திவ்ய தம்பதிகளின் அனுக்ரஹத்தை நம் ஸ்வா மிகள் பெற்றார்.  ஸ்வாமிகளின் வைபவத்தைக்கேள்வியுற்ற உள்ளூர், வெளியூர் வாசிகள் வந்து அவரை வணங்க ஆரம்பித்தனர்.  நம் வேதா ந்த தேசிகர், பெரிய பெருமாள் விஷயமாக “ பகவத்யான ஸோபனத் தையும் “ மற்றும், “ பூஸ்துதி” “தசாவதாரஸ்தோத்ரத்தையும்”அருளிச் செய்தார்.

 சித்திரை மாதம் திருவாதிரை நன்னாளில் எம்பெருமானார் விஷயமாக                   ”  யதிராஜ ஸப்ததி “ யை அருளிச்செய்தார்.  பின்பு உடையவர் நியமனப் படி, தத்த்வ முக்தாகலாபம், அதற்கு வ்யாக்யானமாக ஸர்வார்த்த ஸித்தி, ந்யாய ஸித்தாஞ்ஜனம், ந்யாய பரிசுத்தி, ஸேஸ்வரமீமாம்ஸை, மீமாம்ஸபாதுகை,   தத்த்வபீடிகை, அதிகரணஸாராவளி, கீதாபாஷ்ய விவரணமாக தாத்பர்யசந்த்ரிகை, ஈசாவாஸ்ய உபநிஷத் பாஷ்யம், ஸச்ச ரித்ர ரக்ஷை, ந்யாஸவிம்ஸதி, ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை, கீதார்த்த ஸங்க் ரஹ ரக்ஷை, நிக்ஷேபரக்ஷை, மேலும் கத்யத்ரயம், ஸதுஸ்லோகி, ஸ்தோ த்ர ரத்னத்திற்கும் வ்யாக்யானமான ரஹஸ்யரக்ஷை ஆகிய க்ரந் தங்களை அருளிச் செய்தார்.இவற்றைக் கேட்டு உகந்த ஸுதர்ஸன பட் டர் முதலான பெரியவர்கள் நம் ஸ்வாமிக்கு “ கவிதார்க்கிக ஸிம் ஹம் “ என்ற விருதை வழங்கி கௌரவித்தனர்.

விஜயநகரத்தில் அக்ஷோப்ய முனிக்கும், வித்யாரண்யருக்கும் வேதாந்த த்தில் விவாதம் நடைபெற்றது.  இருவருடைய வாதங்களையும் பத்தி ரிகை மூலமாக தேசிகனுக்கு அனுப்பி வைத்தனர். அதில், ” எங்களில் யாரு டைய வாதம் சரியானது, என்று நிர்ண யம் செய்து அனுப்ப வேண் டும் ” என்று கேட்டிருந்தார்.  அதன்படி ஸ்வாமி களும் படித்துப்பார்த்து, அக்ஷோப்ய முனியே  ஜெயித்ததாக ஒரு ஸ்லோ கத்தின் மூலம் எழுதியனு ப்பினார்.  வித்யாரண்யர் நம் ஸ்வாமிக்கு பால்ய சிநேகிதராக இருந்தும் பக்ஷபாதமின்றி முடிவு கூறியது கேட்டு மன்னன் ஸந்தோஷ மடைந்தான்.  வித்யாரண்யர் மிக கோபம் கொண்டு ஸததூஷணியை அனுப்பிவைத்தால் அதனைப்படித்து அதிலுள்ள குற்ற ங்குறைகளை சுட்டிக் காட்டி பதில் அனுப்புவதாக ஒரு கடிதம் எழுதி யனுப்பினார்.  உடனே ஸ்வாமியும் அனுப்பிவைக்க, அதனை நன்கு பரிசோதித்துப் பார்த்து ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியாது போன தால், அதன் தலையில் ஒரு புள்ளியைக்குத்தித் திருப்பியனுப்பினார்.  அதனையும் ஸ்வாமி கடாக்ஷித்து “சகாரஸமர்த்தநம்”   என்ற க்ரந்தத்தைச் செய்து முன்பு வித்யாரண்யர் இட்ட புள்ளியின் பக்கத்தில் மற்றொரு புள்ளியை யும் வைத்து இரண்டையும் வித்யாரண்யருக்கு அனுப்பிவைத்தார். அவரும் அதனைப் பார்த்துவிட்டு, “ விஷ்ணுவின் கண்டாம்ஸரான ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரை நான் ஜெயிக்க வல்ல வனோ “ என்று சொல்லியனுப்பினார்.  அன்றுமுதல் நம் ஸ்வாமிகளிடம் அதிக பக்தியுள்ளவராக மாறினார்.

 கிருஷ்ணமிச்ரர் என்பவர் நம் ஸ்வாமியின் பெயரையும், புகழையும், ஸஹிக்காதவராய் வாதத்திற்கு அழைத்தார்.  மூன்றுநாட்கள் நடந்த வாதத்தில் நம் ஸ்வாமிகள்தான் ஜெயித்தார் என்று சொல்லவும் வேண் டுமோ ! பிறகு அவர் தாம் எழுதிய “ ப்ரபோத சந்த்ரோதயம் “என்னும் நாடகத்தை எழுதி அவரிடம் கடாக்ஷிக்க அளித்தார்.  அதனைப் பெற்றுக் கொண்ட ஸ்வாமியும் அதை கடாக்ஷித்து “ஸங்கல்ப ஸூர்யோதயம்” என்ற நாடகத்தை எழுதி அவருக்கு அளித்தார்.  கிருஷ்ணமிச்ரரும் மிகவும் சந்தோஷமடைந்தார்.  ஸுதர்ஸன பட்டர் முதலானவர்கள் சந்த்ரோதயத்தை பார்த்தவுடன் அதற்கு பதிலளிக்குமுகமாக ஸங்கல்ப ஸூர்யோதயம் எழுதியது கண்டுவியந்தனர்.

 கிருஷ்ணமிச்ரர் தோற்று போனதைக் கேள்வியுற்ற, டிண்டிமர் என்ற மற்றுமொரு பண்டிதர் நம் ஸ்வாமியுடன் வாதிட வந்தார்.  அதுமட்டு மல்ல நான் ஒரு மஹா பண்டிதன் பல ராஜசபைகளிலுள்ள பல பண்டி தர்களை வென்றிருப்பவன் அப்படியிருக்க  ஒரு சிறுவன் தன்னைப் பண்டிதன் என்று இங்கு கூறிக்கொண்டு இருக்கிறானாமே.  அவன் தைரியமிருந்தால் என்னுடன் வாதத்திற்கு வரட்டும் என்று கோஷ மிட்டுக் கொண்டே வந்தார்.   ஆனால் நம் ஸ்வாமியோ இவன் கோஷத்தைக்கண்டு பயப்படவேண்டாம்.  உள்ளே புகுந்து பார்த்தால் ஒரு எழுத்தும் கிடைக்காது.  அது அவர் பெயரிலிருந்தே தெரிகிறது.                      “ டிண்டிரம் “என்றால் கடல் நுரை.  கடல் நுரையைத்தொட்டாலே உடைந்துவிடும்.  டிண்டிரத்திற்கும், டிண்டிமனுக்கும் என்ன பேதம் இருக்கப்போகிறது என்று பொருள்பட “ நிரக்ஷர்ருக்ஷி “ என்று பொருள்படும் ஸ்லோகத்தைச் செய்து பதிலாகத்தந்தார்.  பிறகு இருவருக்கும் வாதம் நடந்தது.  டிண்டிமர் தோற்றார்.  பிறகு அவர் தாம் செய்த “ ராகவாப்யுதம் “ என்ற காவ்யத்தை நம் ஸ்வாமிகளிடம் தந்து கடாக்ஷிக்க வேண்டினார்.  அதனைக் கடாக்ஷித்த ஸ்வாமிகளும், “ யாதவாப்யுதம் “ அருளினார்.  ஸ்வாமிகளின் கவிதா சாமரத்தியத்தை டிண்டிமர் கண்டு வாய்பிளந்தார்.

 பிறகு ஸ்வாமிகள் தென்தேஸத்திலுள்ள திருமாலிருஞ்சோலை,திருக்கோட்டியூர் முதலிய திவ்யதேஸங்களுக்கு எழுந்தருளி பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துசேர்ந்தார்.

 அங்கு பெரியாழ்வார், ரங்கமன்னார், ஆண்டாள் எல்லோரையும் மங்களாசாஸனம் செய்தவர் “ கோதாஸ்துதி “ யும் அருளிச்செய்தார். அங்கிருந்து ஆழ்வார் திருநகரி எழுந்தருளி ஆழ்வாரை தரிசித்த பின்னர் திருவரங்கம் திரும்பி அங்கிருந்து பெருமாள் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.

 சில அஸூயை பிடித்தவர்கள் பேச்சைக்கேட்டு, ஒரு பாம்பாட்டி நம் ஸ்வாமிகளிடம் வந்தான்.  மந்த்ரத்தால் என்னை ஜெயித்தால், நீர் ஸர்வதந்த்ர ஸ்வந்த்ரர் என்ற பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்.

இல்லாவிடில் அதனை விட்டு விடவேண்டுமென்று அட்டகாசம் செய்-தான்.  தமக்கு சமமில்லாத அவனுடன் அவர் பேச மறுத்தார்.  ஆனால் சிஷ்யர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, அவனை ஜெயிக்க திருவுள்ளம் கொண்டார்.  கீழே ஏழு கோடுகளை இட்டு அதன் மீது தாம் உட் கார்ந்து கொண்டார்.  பாம்பாட்டி ஒரு கொடிய நாகத்தை அவர்மீது ஏவினான்.  அந்த நாகத்தால் முதல் கோட்டைக்கூட தாண்ட முடிய வில்லை.  பின்பு அதைவிட கொடிய நாகத்தை ஏவினான்.  அதுவோ முதல் இரண்டு கோடுகளைத் தாண் டியவுடன் சுருண்டது.  கடைசீயில் அவன் கோபத்துடன் “ சங்க பாலன் “ என்ற பெரிய விஷப் பாம்பை ஏவினான்.  அது ஏழுகோடுகளையும் தாண்டி சீறிபாய்ந்தது.  ஸ்வாமி,   “ கருடதண்டக” த்தை அருளி வைநதேயனை ஸ்தோத்ரம் செய்திட என்னே ஆச்சரயம்! எல்லோர் கண் முன்பு, வானத்திலி ருந்து பறந்து வந்த ஒரு கருடன் சங்க பாலனைக் கவ்விச் சென்றது.  பாம்பாட்டி தன் தலையைத் தாழ்த்தி வணங்கித் தவற்றிர்க்கு மன்னிப்புக்கோறி தன் சங்க பாலனை மீட்டுத்தரும்படி வேண்டினான்.  ஸ்வாமிகளும் அவன் நிலையைக் கண்டு பரிதாபப் பட்டுகருடபஞ்சாசத் “ அருளி கருத்மானை ப்ரார்த் திக்க அவரும் சங்க பாலனை திருப்பித்தந்தார்.  இதனை சுற்றி யிருந்து பார்த்த அனைவரும் வியந்து, மகிழ்ந்தனர்  .

 வேங்கடநாதனுக்கு திவஹீந்த்ரபரத்தில் வாசம் செய்யவேண்டுமென்ற அவா எழவே, காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டார்.  திருக்கோயிலூர் சமீபம் வந்தவருக்கு, தளிகைசெய்து பெருமாளுக்கு திருவாராதனம் செய்ய வழியில்லாமல் போகவே ஹயக்ரீவருக்கு, தீர்த்தத்தை மட்டுமே ஸமர்பித்து, அதை தாமும் ஸ்வீகரித்துக்கொண்டார்.  அன்று இரவு ஒரு வைச்யன் வீட்டுத்திண்ணையில் படுத்துக் கொண்டார்.  ஆகாரம் ஏதும் உட்கொள்ளாததாலும், வெகுதூரம் நடந்துவந்த களைப்பாலும் நன்றாக உறங்கிப்போனார். அப்போது என்னே ஆச்சர்யம் ஒரு வெள்ளைக் குதிரை வைச்யன் வீட்டுத்திண்ணையில் அடுக்கி வைத்திருந்த கடலைமூட்டை யிருந்த கடலைகளை தின்ன ஆரம்பித்தது.  சபதம் கேட்டு வெளியே வந்த வைச்யன் எவ்வளவு விரட்டியும் அந்தக் குதிரை சிறிதும் நகரவில்லை.  அவன் உறங்கிக்கொண்டிருந்த ஸ்வாமி களை எழுப்பி, “ ஐயா, உங்கள் குதி ரையை பிடித் துக் கட்டு ங்கள்.  அது கடலை முழு வதையும் தின்றுவிடப் போகிறது.” என்றான்.  இதைக்கேட்ட ஸ்வாமிகள், ஆச்சர்யத்துடன், “ உங்கள் வீட்டில் பால் இருந்தால் கொண்டு வாருங்கள் “ என்றதும், அவனும் கொண்டு வந்தான்.

 அதை ஸ்வாமிகள் ஹயக்ரீவருக்கு, நைவேத்யம் செய்து, பகவானுக்கு நிவேதனம் செய்ததைத் தானும்பருகி அதை அந்த வெள்ளைக்குதிரைக்கும் கொடுத்தார்.  அதை பருகிவிட்டு பின் அது மாயமாய் மறைந்து போனது.  அதனைக்கண்கூடாகக் கண்ட வைச்யன் மிகவும் சந்தோஷப்பட்டு, தாம் பெரும்பாக்யம் செய்திருப் பதாகவும் கூறி, ஆராதன த்திற்கு வேண்டிய த்ரவ்யங்களையும் ஸ்வாமி களிடம் தந்து அவரை வழியனுப்பி வைத்தான்.

 பிறகு, திருக்கோயிலூர் வழியாக திருவஹீந்த்ரபுரம் சென்றடைந்தார்.  அங்கு சிஷ்யர்களுக்கு,வேதாந்த க்ரந்தங்களை உபதேஸித்துக் கொண்டிருந்தார்.  அப்போது சில துஷ் டர்கள், ஒரு கொத்த னாருக்கு பணம் கொடுத்து, அவனை ஸ்வாமிகளை வம் பிற்கு அழைக்கச் செய்தனர்.  அவனும் ஸ்வாமிகளிடம் சென்று, “ நீரே ஒரு கிணற்றை வெட்டிக்கட்டி னால் தான் உம்மை ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்று ஏற்றுக் கொள்ளமுடியும். ஸர் வமும் தங்களுக்குத் தெரிந்தி ருக்க வேண்டாமா ? “ என்றதும் ஸ்வாமிகளும், ஹயக்ரீவனுக்கு ஒரு கிணறு வெட்ட சம்மதித்து, அந்தக் கொத்தனார் கொடுத்தக் கற்களைக்கொண்டே அழகிய தோர் கிணறு வெட்டினார். அந்த கொத்தனாரும் வெட்கித் தலைகவிழ்ந்தார்.

பிறகு ஸ்வாமிகள்வீரநாராயணபுரம், திருவாலி முதலிய தலங்களுக்கு எழுந்தருளி நாதமுனிகளையும், திருமங்கை ஆழ்வாரையும் சேவித்துக்கொண்டு ஸ்ரீரங்கம் எழுந்தருளினார்.

 குறைந்த ஞானமேயுள்ள சில ஸாதுக்கள், நாங்களும் அறியும் வண்ணம் சில க்ரந்தங் களை அருளிச்செய்ய வேண்டும் என்று கேட்க, ஸ்வாமிக ளும் அதற்கு சம்மதித்தார்.  புருஷார்த்தத்தை அடைய உபாயம் வேண்டும், உபாயத்தையறிய ததத்வம் தெரியவேண்டும், தத்வஞானம் உண்டாக ஒருஸதாச்சார்யன் வேண்டும்.  ஸதாச்சார்யனுக்கு ஸம்ப்ரதாய சுத்தி வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு முதன்முதலில், ஸம்ப்ரதாய பரிசுத்தி என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தை அருளிச்செய்தார்.

 பின்பு தத்வபதவீ, ரஹஸ்யபதவீ, தத்வநவநீதம், ரஹஸ்யநவநீதம், தத்வமாத்ருகை, ரஹஸ்ய மாத்ருகை, தத்வரத்னாவளீ, ரஹஸ்யரத்னாவளீ, ரஹஸ்ய ரத்னாவளீஹ்ருதயம், தத்வத்ரயசுளகம், ஸாரஸங்க்ஷேபம், ஸாரஸாரம், அபயப்ரதானஸாரம், தத்வசிகாமணி, ரஹஸ்யசிகாமணி, அஞ்சலி வைபவம், ப்ரதான ஸதகம், உபகாரஸங்க்ரஹம், ஸாரஸங்க்ரஹம், பரமபதஸோபானம், ஆகிய ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச்செய்து அவர்களுக்கு உபதேஸித்தார்.

 ஸ்வாமிதேசிகன் திருவடிகளில் முதன்முதலில் ஆச்ரயித்த வீரவல்லி பெருமாளைய்யன் என்பவர் விரக்தராய் தாம் ஸந்யாஸம் பெற்று கொள்ள விரும்பினார்.  ஸ்வாமியும் சம்மதித்தாயிற்று.  அவருக்கு பேரருளாள ஜீயர் என்று நாமம் சூட்டப்பட்டது.  அதுபோன்றே வீரவல்லி கிருஷ்ணமாச்சாரிக்கு வெண்ணைக்கூத்த ஜீயர் என்றும், கோமாண் டூரப்பனுக்கு ப்ரபாகரஜீயர் என்ற திருநாமங்களும் சூட்டப்பட்டது.

சீரொன்று தூப்புல் திருவேங்கட முடையான்
பாரொன்றுச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.

இந்த பாசுரமே இப்போது ரஹஸ்ய க்ரந்த காலக்ஷேபங்களின்போது, தனியனாக அனுஸந்தானம் செய்யப்படுவது வழக்கத்திலுள்ளது.

 கர்மாவலம்பகா : கேசித், கேசித், ஜ்ஞாநாவலம்பாகா :  Iவயம்து ஹரிதாஸானாம் பாதரக்ஷாவல்பாகா :  II

 “ சிலர் கர்மயோகத்தை, சிலர் ஞானயோகத்தை அநுஷ்டிப்பவர்கள்.  நாம் விஷ்ணுபக்தர்களின் பாதரக்ஷைகளை அவலம்பிப்பவர்கள்.”என்று கூறியபடி, ஸ்வாமிகள் முகமலர்ச்சியுடன் வீற்றிருந்தார் தம் வீட்டுவாசலில்.  ஸ்வாமிகளின் ஆத்ம குணத்தைக்கண்ட அந்த அஸூயை கொண்டவர்கள் வெட்கித்தலை கவிழ்ந்தனர்.

பின்பு ஒருநாள் அநந்தஸூரிகளின் ச்ரார்தம் வந்தது.  அதற்கு மூன்று ஸ்வாமிகளை முன்னமே ப்ரார்த்தித்து இருந்தார்.  ஆனால் சில பொறாமை பிடித்தவர்கள் ச்ரார்த தினத்தன்று காலை அந்த மூவருக்கும் நிறம்ப பணம் தந்து, ஸ்வாமிகள் இல்லத்திற்குச்செல்லாமல் தடுக்க முயன்றனர்.  ஆனால் அந்த மூவரும் அவர்கள் பேச்சைக்கேளாமல் போனதால் அவர்கள் மீது ஒரு மந்தரப் பொடியைத் தூவி அவர்கள் புத்தியை பேதலிக்கச்செய்து அவர்களை ஆகாரம் உட்கொள்ள வைத் தனர்.  மேலும் பேரருளாள ஜீயர் முதலானவர்களுக்கும் சரீரத்தில் வியாதி உண்டாகும்படி செய்து அவர்களையும் ஸ்வாமிகள் இல்லத் திற்கு போகமுடியாமல் தடுத்ததுடன் தள்ளியிருந்து நடப்பதை வேடி க்கைப்பார்க்க காத்திருந்தனர்.  ஸ்வாமிகளும் எதா காலத்தில் தீர்த்தா மாடி, திருவாராதனங்களை செய்துவிட்டு, ச்ரார்தத்தை ஆரம்பித்தார்.  ஹோமங்களைச்செய்து கூர்ச்சத்தில் தேவ, பித்ரு, விஷ்ணுவை ஆவா ஹனம் செய்து வரித்து ச்ரார்தத்தை செய்து கொண்டிருந்தார்.

பின்பு இலையில் பகவத் நிவேதனம் செய்யப்பட்ட அன்னம், பக்ஷ்யங்கள் ஆகியவற்றை பரிமாறினார். விஷ்ணு ஸூக்திகளை ஜபிக்க ஆரம்பித்தார்.  என்னே ஆச்சர்யம் ! சில நிமிடங்களில் இலையில் பரிமாற பட்டவை யாவும் மிச்சமின்றி உண்ணப்பட்டு இருந்தது.  கடைசீயில் “ ஸகலம் ஸம்பூர்ணம் “ என்ற ஒலிகேட்டது.  உத்வாஸநாதிகளைச் செய்ததும் மூன்று ஸ்வாமிகள் அஸூயை கொண்டவர்கள் முன்பாக தாம்பூலம் போட்டுக்கொண்டபடிச் சென்றனர்.  ஸ்வாமிகள் பிண்டதாநாதிகளை செய்து ச்ரார்தத்தை பூர்த்தி செய்தார்.  அந்த அஸூயைப் பிடித்தவர்கள், ஸ்வாமிகளிடம் வந்து, “ இன்று ச்ரார்தத்தில் அந்வயித்த வர்கள் யார் என்று கேட்க “,“ கோயில், திருமலை, பெருமாள்கோயில் எம்பெருமான்கள் “ என்று பதிலளித்தனர்.  இதனைக்கேட்டு பயந்த அவர்கள் ஸ்வாமிகளின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்பு கோறினர்.

அன்று ஏகாதசி தினம்.  சில கெட்டவர்களின் பேச்சைக்கேட்டு அர்ச்சகர் ஒருவர், ஸ்வாமி பெரிய பெருமாளை மங்களா சாஸனம் பண்ணியதும், அவரிடம் வெண் பொங்கலைக் கொடுத்து, இதை உண்ண வேண்டும்.  “ இது பகவானின் நியமனம் “. என்று கூற, அதைப்பெற்றுக் கொண்ட ஸ்வாமி “ ச்ருதி, ஸ்ம்ருதிகள் எமது ஆஜ்ஞை.  அவற்றில் கூறியபடி நடக்கவேண்டும்.  அவ்விதம் நடக்காதவன் த்ரோகி.  அவன் என் பக்தனானாலும், வைஷ்ணவனல்லன் என்று முன்பு நீரே கூறியிருக்கிறீர்  ப்ரபோ ரங்கநாதா, இப்போது .அதற்கு எதிராக சாப்பிடும்படி நியமித்தது சரியா? “.என்று கேட்டதும் பெரியபெருமாள், வேறொரு அர்ச்கர்மீது ஆவேசித்து, “ நாம் அதுபோல் நியமிக்கவில்லை “. என்று சொல்லசிறிய லாபத்திற்காக தாம் அபசாரப் பட்டதற்கு  மன்னிக்கவேண்டுமென்று மண்டியிட்டார் பொங்கல் கொடுத்த அர்ச்சகர்.

வேறொரு சமயம்,ஒரு கவிதா சாதுர்ய முடையவர், ஸ்ரீரங்கநாதன் முன்பு ஸ்வாமிகளைப்பார்த்து, “ ஓர் இரவில் ஓராயிரம் ச்லோகங்களை செய்பவரே கவிதார்கிக ஸிம்ஹம் என்ற விருதிற்கு தகுதியுள்ளவர்.  நான் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக பதகமல ஸஹஸ்ரம் எழுதப் போகி றேன்.“ என்று சொல்லி போட்டிக்கு அழைத்தார்.  நம் ஸ்வாமிகளும் பாதுகா ஸஹஸ்ரத்தை எழுதுவதாக ஒப்புக்கொண்டார்.  இரண்டாவது ஜாமத்திலேயே 1008 ச்லோகங்களைக்கொண்ட ஸ்ரீபாதுகா ஸஹஸ்ர த்தை எழுதி முடித்தார்.  மூன்றாவது ஜாமத்தில் யோகத்திற்கு எழுந்த ருளினார்.  நான்கவது ஜாமத்தில் வழக்கப்படி எழுந்து, நித்ய கர்மாக் களைச் செய்ய ஆரம்பித்தார்.  அநுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தை பெருமாள் திருவடி களில் சமர்பித்தார்.  பதகமல ஸஹஸ்ரத்தை செய்வதாக வாக்களித் தவர் 300 ச்லோகங்களே தாம் செய்திருப்பதாகச்சொல்லி தலை கவிழ்ந்தார்.  அப்போது ஸ்வாமி,

ஸுதே ஸுகரயுவதி :ஸுதஸமதமபி அத்யந்த துர்ப்பகம் ஜடிதி

கரீணி சிராய ஸுதே ஸகலமஹீ பாலலாலிதம் கலபகம்  I I

“ பன்றி நூற்றுக்கணக்கான கன்றுகளை ஈன்றெடுக்கின்றது.  எல்லா அரசர்களாலும் கொண்டாடப்படும் குட்டியை யானை, பன்னிரண்டு ஆண்டுகளன்றோ கர்பத்தில் வைத்திருந்து பெற்றெடுக்கின்றது.” என்று பொருள்பட அருளினார்.

ஆபாதசூடம் அநபர்யிரு தர்ஸநே அஸ்மிந்

ஆசாஸநீயமபரம் ந விபக்ஷ ஹே தோ :  I

ஆபாத சாந்தி மதுராந் புநரஸ்மதீயாந்

அந்யோந்ய வைரஜநநீ விஜஹாத்வஸுயா I I

ராமாநுஜதர்சனம் அடிமுதல் நுனிவரை தோஷமில்லாதது.  மற்றவர்களு க்குச் சொல்ல வேண்டிய சமாதானம் இனி ஒன்றுமில்லை. சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லியாயிற்று.  மிகவும் சாந்தரகளான நமக்குள் விரோதத்தை உண்டுபண்ணும் அஸூயை நம்மை விட்டு விலகட்டும். என்று விண்ணப்பித்துக் கொண்டார்.  மேலும் பல க்ரந்தங்களை அருளிச்செய்தார்.

நம்மாழ்வார் நியமனப்படி த்ரமிடோபநிஷத்ஸாரம், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, நிகமப்பரிமளம், ஆகிய க்ரந்தங்களை அருளிச் செய்தார்.  அமலநாதிபிரான் பாசுரங்களுக்கு, முநிவாஹன போகத்தை யும்; கண்ணிநுண் சிறுதாம்பு பாசுரங்களுக்கு, மதுரகவிஹ்ருதயம்; என் பனவற்றையும் அருளிச்செய்தார்.  திருமந்த்ர சுருக்கு, த்வயச்ருக்கு, சர்மஸ்லோக ச்ருக்கு கீதார்த்த ஸங்க்ரஹ ச்ருக்கு, ஆகார நியமம் முதலியவற்றையும் செய்தார்.

இவருடைய பெருமை வட மாநிலங்களிலும் பரவ, ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிகளில் பக்தி கொண்ட மாதவனுடைய பிள்ளை, ஸர்வஜ்ஞ சிங் கப்ப நாயக்கர் சில வைஷ்ணவர்களை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பித் தமக்கு நல்லுபதேஸம் செய்தருள வேண்டுமென்று ப்ரார்த்திக்க, ஸ்வாமிகளும் “ ஸ்வாதீந த்ரிவித சேதநாசேத ஸ்வரூபஸ்திதி ப்வர்த்தி பேதம் “ என்று ஆளவந்தாரும், எம்பெருமானாரும் அருளிச்செய்த வாக்யங்களின் விரிவாக, தத்வ ஸந்தேஸத்தை அருளிச்செய்தார்.  மேலும் ரஹஸ்ய ஸந்தேசவிவரணம், ஸுபாஷிதநீவி, இவற்றை அருளிச்செய்து கொடுத்த னுப்பினார்.  அவ்வரசன் ஸ்வாமிகளின் ஸ்ரீமுகத்தை எல்லா மரியாதை களுடன் எதிர்கொண்டு வந்து ஏற்று அவற்றை சேவித்து ஸ்வாமியின் நியமனப்படி சரணாகதியை செய்துகொண்டு ஸ்வாமிகளின் திருவடி களில் அசஞ்சலமான பக்தி கொண்டவனாக வாழ்ந்து வந்தான்.

ஸ்ரீஸ்வாமி தேசிகனுக்கு, பல ஆண்டுகளாக குழந்தையே இல்லாமல் இருந்தது. பேரருளாளன் அநுக்ரஹத்தால் நளவருஷம், ஆவணி மாதம், ரோஹிணி நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அந்தக் குழந்தை க்கு, ஜாதகர்மா செய்து வைக்கப் பட்டு  “ வரதன் “ என்ற நாமம் சூட்டப் பட்டது.  குமாரன் வரதாச்சாரிக்கு, அக்ஷராப்யாஸம் செய்து, எல்லா சாஸ்த்ரார்கங்களையும், மந்த்ரார்த்தங்களையும் தாமே உபதேஸித்தார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ? அவர் குமாரரும், அதிமேதாவியாக விளங்கினார்.  மகனுக்கு விபவ ஆண்டு ஸ்ரீபாஷ்ய க்ரந்தத்தை உபதேஸி த்தார்.  அப்போது குமாரர் வரதாச்சாரியார்,

ஸ்ரீமாந் வேங்க நாதார்ய :  கவிதார்க்கிக கேஸரீ  I

வேதாந்தாத்சார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி  I I

என்ற தனியனை விண்ணப்பித்து சேவித்தார்.  அப்போது அருகிலிருந்த ஸுதர்ஸனபட்டர் மற்றுமுள்ளவர்களும் அதனைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற னர். இனி இந்த தனியனையே உச்சரிக்க வேண்டுமென்றும் ஒருமனதாகத் தீர்மானித்தனர்.  ஆனால் அதுநாள்வரை ஸ்வாமியின் ப்ரதான சீடரான வீரவல்லி பெருமாளய்யன் அருளிய :

நம : பதம் இதம்பூயாத் தஸ்மை வேங்கட ஸூரயே I

யத்வாகம் க்ருதஸேகேந ஸஞ்சீவித மிதம் ஜகத் I I

என்ற தனியனையே பயன் படுத்தி வந்தனர் என்பது இங்கு குறிப்பிட வேண் டிய ஒன்று.  எங்கனம் எம்பெருமானாரின் ஜ்ஞான புத்ரனான  திருக் குரு கைப் பிள்ளானிடம் கூரத்தாழ்வார் போன்றவர்கள் பக்தியுள்ள வர்களாக இருந்தார்களோ, அதுபோன்றே பேரருளாள ஜீயர் போன்றவர்கள் ஸ்வாமி களின் குமாரரிடம் மிகுந்த பக்தி செலுத்தி வந்தார்கள்.

ஒரு சமயம் கந்தாடை லக்ஷ்மணாச்சார்யர் என்பவர் பல்லக்கில் ஸ்வா மிகள் வஸிக்கும் வீதி வழியாக வந்துகொண்டு இருந்தார்.  அவர் ஒரு ஆச்சார்ய புருஷர்.    அப்போது ஸ்வாமிகள் தம் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.  அவர் தாம் படித்துக்கொண்டிருந்த க்ரந்தத்தில் லயித்திருந்ததால், வீதியில் என்ன நடக்கின்றது என்பதை அறியவில்லை,  இதனைக்கண்ட லக்ஷ்மணாச்சார்யரின் சீடன் ஒருவன் ஷ்வாமிகளிடம் ஓடிவந்து, “  எங்கள் ஆச்சார்யர் வீதியில் பல்லக்கில் எழுந்தருளும் போது உட்கார்ந்திருக்கின்றீரே ? உமக்கு கண்ணில்லையா ?“ என்று சொல்லிவிட்டு அவர் கால்களைப்பிடித்திழுத்து, கீழே தள்ளிவிட்டு சென்றான்.  ஸ்வாமிகள் மிக சிரப்பட்டு எழுந்திருந்து, லக்ஷ்மணாச்சார்யர் இருக்குமிடம் வந்து தம்மை மன்னிக்கும் படி கைகூப்பி வணங்கி விட்டு மீண்டும் தம் வீட்டுக்குத்திரும்பினார்.  அன்றே ஸ்ரீரங்கத்தைவிட்டுத் தம் குடும் பத்தினருடன், திருநாராயணபுரம் புறப்பட்டார்.

வழியில் சத்யாகாலத்தில் காவேரியில் தீர்த்தாமாடி விட்டு, காவேரிக்கரையிலுள்ள வரதராஜ பெருமாள் சந்நிதியில் வஸிக்க ஆரம்பித்தார்.

தம் சிஷ்யர்கள் அபசாரப்பட்டதால், ஸ்வாமி ஸ்ரீரங்க த்தை விட்டே புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்பதை லக்ஷ்மணாச்சார்யர் அறியமாட்டார்.  அவர் உடலில்      “ வைவர்ணம் “என்ற வியாதியின் கொடுமை அதிகமாக இருந்தது.  தம் சக்தியை இழந்தார்.  அவருக்கு புத்ரபாக்யமும் கிடையாது.  அகாலத்தில் தமக்கு மரணம் நேர்ந்துவிடுமோ என்று பயந்தார்.  அவர் மனைவி, தம் கணவனிடம்,  “ உம் உடம்பில் வைவர்ணம் வர ஏதாவது பாகவத அபச்சாரம் நேரிட்டதா ? ” என்று கேட்டவுடன், அவர்   “ யாம்  புத்தி பூர்வமாக ஏதும் செய்யவில்லை.“ என்று சொன்னவர், “சிஷ்ய பாபம் குரோபி” என்று இருப்பதால், சிஷ்யர்களில் எவராவது அபச்சாரம் செய்திருப் பார்களோ என்ற சந்தேஹத்தில் அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டபோது, ஒருவன் “ நம் ஆச்சார்யர் வீதியில் வரும்போது எழுந்திருந்து மறியாதை செய்யாது புத்தகம் படித்துக்கொண்டிருந்த வேதாந்த தேசிகரை கீழே தள்ளி னோம்.  அவர் அன்றே இந்த ஊரைவிட்டு போய்விட்டார் “ என்றான்.

இதனைக் கேட்டதும் தம்பதிகள் மூர்ச்சை அடைந்தனர்.  பிறகு அவர்களே தெளிந்து  எழுந்து, “ பீடாகரன் என்று பெயர் கொண்ட உனக்கு பொருத்த மானதே “ என்று அந்த சிஷ்யனைக் கடிந்துகொண்டு, ஸ்வாமிகள் இருக்கு மிடம் அறிந்து உடனே புறப்பட்டு சத்யமங்கலம் சென்று ஸ்வாமிகளை தண்டம் சமர்பித்து நின்றனர்.   தேசிகன், “ இங்கு எதற்காக வந்தீர்கள்? தேவரீர் திருமேனியில் வைவர்ணம் வரக்காரணமென்ன?” என்று கேட்டதும் லக்ஷ்மணாச்சார் வருத்தத்துடன், “ என் சிஷ்யர்களில் ஒருவன் உம்மிடம் பட்ட அபச்சாரத்திற்கு, கிடைத்த தண்டனை இது. அடியேனை மன்னித் தருள வேண்டும்.  மேலும் ஒருவருடகாலம் உம் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரிக்க நிச்சயித்துள்ளோம். “ என்று கூறி அதுபோன்றே வாழ்ந்துவர, அவர் வ்யாதி குணமாயிற்று.  லக்ஷ்மணாச்சார்யர் மனைவியும் கர்ப முற்றார்.  ஒருவருஷம் கழிந்ததும், ஸ்வாமிகளை மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கே வரவேண்டுமென ப்ரார்த்தித்துவிட்டு அவர்கள் ஸ்ரீரங்கம் திரும்பிச் சென் றனர்.  சிலமாதங்கள் கழித்து அந்த தம்பதிகளுக்கு, ஸ்வாமிகளின் ஸ்ரீபாத தீர்த்த மகிமையால் ஒரு ஆண்குழந்தை பிறந்தது.  அதற்கு தீர்த்த பிள்ளை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.  தம்தகப்பனாரின் பெயருடன் ஸ்வாமி களின் திருப்பெயரையும் சேர்த்து, “ ஆயிஆழ்வான்பிள்ளை “ என்ற பெயரும் சூட்டினர்.

சத்யமங்கலத்திலிருந்த ஸ்வாமிகளுக்கு, ஒருநாள் ரங்கநாதனை சேவிக்க வேண்டுமென்ற எண்ணம் எழவே தம் குமாரரையும், மனைவியையும் சத்ய மங்கலத்திலேயே விட்டுவிட்டு, பேரருளாள ஜீயர் முதலானவர்களுடன் திருவரங்கம் திரும்பினார்.  வெகுநாட்கள் விட்டு பிரிந்த தாபம் தீர,பெரு மாளை சேவித்து மகிழ்ந்தார்.  அங்கு தங்கியிருந்தபோது, ஒரு வித்வான் தேசிகனிடம் வந்து, வேதாந்த வாக்யார்த்தம் சொல்ல வந்திருப்பதாகச் சொன்னார்.  ஸ்வாமிகள் பேரருளாள ஜீயரை அழைத்து நீர் அவரிடம் வேதாந்த வாக்யார்த்தம் சொல்லவும் என பணித்தார்.

அதன்படியே மஹாவித்வானிடம் சததூஷணி முதலிய க்ரந்தங்களைக் கொண்டு வாதம் செய்து மூன்று நாட்களில் அவரை வென்றார்.  ஸ்வாமிகளிடம் வந்து தண்டம் சமர்பித்துத் தாம் வாதம் செய்த விதத்தை விவரித்தார்.  அதனைக்கேட்ட ஸ்வாமிகள், “ நீர் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் “ என்றார்.அதுமுதல் பேரருளாளஜீயர் அங்கனமே அழைக்கப்பட்டார்.

அந்தசமயம், அந்த தேஸத்தில் துருக்கர்களுடைய உபத்ரவம் அதிகமாக இருந்தது.  அதனால் கோயில் அதிகாரிகள் பெரிய பெருமாள் முன்பாக ஒரு கல்திரையை எழுப்பி ஏதோ ஒரு விக்ரஹத்தை முன்பாக வைத்துவிட்டு, அழகியமணவாளப் பெரு மாளையும், நாச்சிமார்களையும் திருவேங்கடத்தில் எழுந்தருளப் பண் ணினர்.  துருக்கர்சேனை அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஹிம்ஸித்து வந்தது.  அப்போது ஸுதர்ஸனபட்டர் தேசிகனிடம், ஸ்ருத ப்ரகாசி யைக்கொடுத்து, “ இதை சோதித்தருள வேண்டும்.  அது உம்மாலேயே ப்ரவசனம் பண்ணி ப்ரசுரமாக வேண்டும் “ என்று சொல்லிக்கொடுத்துவிட்டு, தம் இரு குமாரர்களையும் அவரிடம் ஒப்படைத்து  “ இவர்களையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் “ என்று கூறிவிட்டு பெருமாள் பின்னேயே சென்றார்.  அப்போது துருக் கர்கள் ஸுதர்ஸனபட்டரைக் கொன்று விட்டா ர்கள்.  ஸ்ரீதேசிகன் ஸ்ருதப்ரகாசி கையைப் பூமியில் புதைத்து விட்டு, தாம் அந்த இரு குழந்தைகளுடன் பிணக்குவியல் மத்தியில் அந்த இரவெல்லாம் படுத்திருந்து, பிறகு அந்தக்ரந்தங்களையும் எடுத்துக்கொண்டு இரு குழந்தைகளுடன் ஸத்யமங்கலம் போய்ச்சேர்ந்தார். பிறகு அவர் ஸ்ருத ப்ரகாசி கையை, தம் சிஷ்யர்களுக்கு உபதேஸித்து வந்தார்.  ஸுதர்ஸனபட்டர் குமாரர்களுக்கும் உபநயாதி களைச் செய்து வைத்து அவர்களுக்கும் உபதேஸம் செய்துவைத்தார்.

ஒருசமயம் தம் குடும்த்தினருடனும், சிஷ்யரகளுடனும் திருநாராயண புரம் சென்றார்.  அங்கு செல்வபிள்ளை, யதுகிரிதாயார், ராமாநுஜர்ஆகியோரை மங்களாசாஸனம் செய்து மகிழ்ந்தார்.

அப்போது திருநாராயணப்பெருமாள் அர்ச்சகர் முகமாக, “ உமக்குப் பிறகு உமதுமகன் வரதாச் சாரியார் ராமாநுஜ சித்தாந்தத்தை பரப்பக்கடவது. “ என்று சொல்ல ஸ்வாமிகள் மிகவும் மகிழ்ச்சி யடைந்தார்.  அங்கேயே சிலகாலம் தங்கி யிருந்தார்.  குமாரவரதாச் சாரியாரும், திருநாரா யண புரத்திலேயேபகவத்விஷய காலக்ஷேப ங்களை செய்ய ஆரம்பித்தார்.  ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் மற்றும் வெண்ணைக்கூத்தஜீயர் முதலானவர்கள் குமாரரிடம் காலக்ஷேபம் கேட்க விழைய, அவர்களுக்கு பஹுதான்ய வருஷம், ஆவணிமாதம், ஹஸ்த நக்ஷத்ர தினத்தில் கவத் விஷய காலக்ஷேபத்தை ஆரம்பித்தார்.

அப்போதுப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரஜீயர் “ஸ்ரீமல்லக்ஷமணயோகீந்த்ர  “                                              என்ற தநியனையிட்டு ஆரம்பித்தார்.  பின்பு தேசிகன் விஷயமாக,  “ ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய:  “ என்ற தனியனை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேப ஆரம்பத்திலும்,  “ ராமாநுஜதயாபாத்ரம் “ என்ற தனியனை பகவத்விஷய காலக்ஷே ப ஆர ம்பத்தின்போதும் பயன்படுத்தும்படி நிய மித்தார்.  அவர் நியமனப்படியே இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.       பிறகு ஸ்வாமிகள்,  — நவநவபஹுபோகாம் நாத நாராயண த்வம் விரசய துரிதௌகைஸ்தாம் அநாக்ராதகந்தாம் … “ என்ற ஸ்லோகத்தை திருநாராயணன் விஷயமாக அருளிச்செய்து மங்களா சாஸனம் செய்து அங்கிருந்து சத்யமங்கலம் திரும்பினார்.

அழகிய மணவாளப்பெருமாளை இதுநாட்கள் விட்டுப்பிரிந்திருந்த, துக்கம் தாளாமல், “ அபீஸ்தவம் “ என்ற ஸ்தோத்ர த்தை அருளிச்செய்தார்.  இதனால் மகிழ்ச்சி யுற்ற ரங்கநாதன் மீண்டும் திருமலையிலி ருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர கோபண்ணராயன் என்ற குறுநில மன்னன் மூலம், அழகியமண வாளனை கொண்டுவரச்செய்து செஞ்சியில் சிலகாலம் ஆராதிக்கவைத்து, பிறகு ஸ்ரீரங்கம் கொண்டுவந்து சேர்க்கச்செய்தார்.

அழகிய மணவாளன் திரும்பிவந்த செய்திகேட்ட ஸ்வாமிகள் மிக சந்தோஷ மடைந்தார்.  தம் குடும்பத்தினருடன் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.  அப்போது சித்ரகூடத்திலிருந்து ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து, தில்லையில் பரஸ்பரம் சண்டை நடந்து கொண்டிருக்கின்றது என்று கூற, இப்போது அரசர்கள் அனுகூலமாக இருந்தால் மீண்டும் கோவிந்தராஜனை அங்கு ப்ரதிஷ்டை செய்யலாம் என்று விண்ணப்பித்தார்.

பிறகு அந்த செய்தியை கோபண்ணராய ருக்கு, தெரிவிக்க, அவரும் மீண்டும் கோவிந்தராஜனை தில்லையில் கொண்டு வந்து ப்ரதி ஷ்டை செய்தார்.  தேசிகனும் தில்லைக்குச்சென்று மங்களாசாஸனம் செய்து, கோபண்ணராயருக்கு, நன்றிகூறி விடையளித்துவிட்டு மீண்டும் திருவரங்கம் திரும்பினார்.  இதனால் தில்லையிலிருந்த சில சைவர்கள், ஸ்வாமிகளிடம் விரோதம் காட்டினார்கள்.  அவரை பேசவிடாமல் செய்யும் முயற்சியில் இறங்கினார்கள்.  ஸ்ரீரங்கம் வந்து, கோயில் அதிகாரிகளை தங்கள் கையில் போட்டுக்கொண்டு, அத்யயன உத்ஸவம் நடைபெற விடா மல் தடுத்தனர்.  மேலும் க்ஷுத்ர மந்திரத்தைப் பயன்படுத்தி ஸ்வாமி களைவாய்ப் பேசமுடியாமல் செய்தனர்.  இதனையறிந்த ஸ்வாமிகள், மானசீகமாக த்வய மந்த்ரத்தை ஜபித்து,  “ஸ்ரீமதேராமாநுஜாய நம: “ என்று சொல்ல வாய்பேசும் திறனை மீண்டும் பெற்றார்.  ஸ்வாமிகள் தம்முடைய மஹாமந்த்ர ஸித்தி ப்ரபாவத்தினால் எதிரிகளின் வாயைக்கட்டிப்போட்டார்.  பின்பு அவர்களிடம் வந்து மன்னிப்பு கோறி ப்ராணபிச்சை கேட்டனர்.  ஸ்வாமிகளும் அவர்களை மன்னித்து, அவர்களிடமிருந்து, க்ஷுத்ர மந்த் ரத்தை விலகச் செய்தார்.  கோயில் அதிகாரிகளும் ஸ்வாமிகளிடம் வந்து மன்னிப்புகேட்டு அத்யயன உத்ஸவம் நடைபெற ஏற்பாடு செய்தனர்.  பிறகு ஸ்வாமிகள் “  ஸாரதீபம் ”, “ விரோதபரிஹாரம் “ என்ற க்ரந்தங்களை அருளிச்செய்தார்.

ஆழ்வார்கள் அவதரித்த நாள், ஊர், திங்கள் முதலியவற்றை விவரிக்கும் ப்ரபந்தஸார த்தை எழுதினார்.  மாயாமதத்தைச்சேர்ந்த சில்பி ஒருவர் தங்கள் மதத்தை ஸத்தூஷணி முதலிய க்ரந்தங்கள் மூலம் தாக்கியதால் ஸ்வாமிகள்மீது கோபமுற்று, ஸ்வாமிகளை சில்ப சாஸ்த்ரத்தில் வென்றுவிடும் முயற்சியில் இறங்கினர்.  ” நீர் உண்மையில் ஸர்வந்தர ஸ்வந்த்ரர் எனறால் உம்ப்போலவே ஒரு விக்ரஹத்தை சில்ப லக்ஷண ங்களுடன் செய்து காட்டுங்கள் “ என்று கூற,தேசிகனும் சம்மதிக்க, அன்று இரவு, ஸ்ரீரங்கநாதன் கனவில் தோன்றி “ வலக்கையல் ஞான முத்திரையும், இடக்கையில் ஸ்ரீகோசமும் உடைய வீற்றிருக்கம் கோலத்தில் செய்யக் கடவது “ என்று அனுக்ரஹிக்க, ஸ்வாமிகளும் செய்து முடித்தார்.

சில்பிகள் அதனைக்கண்டு வியந்தனர்.  ஸ்வாமி அந்த சில்பியிடமே அதற்குத்தகுந்த பீடமும் செய்யச் சொல்ல அவரும் விக்ரஹத்திற்குத் தகுந்த பீடத்தைச் செய்து காட்டினார்.  அப்போது விக்ர ஹத்தின் கன்னப்பகுதியில் அதிகமாக இருப்பதாக எண்ணி உளியால் சீவினார்.  அப்போது விக்ர ஹத்திருமேனியிலிருந்து, இரத் தம் கசிய அதனைக்கண்ட சில்பி பயந்தே போனார்.  ஸ்வாமிகளின் பாதத்தைப் பணிந்தார்.  ஸ்வாமிகளும் அவரை சமாதானப்படுத்தி, பின்பு  “ சில்பார்த்த ஸாரம் “ என்ற நூலை எழுதினார்.   அப்போது ஸ்வாமிகளுக்கு, நூறு திருநக்ஷத்ரங்களுக்கு மேல் !

அளவற்ற பெருமைகளைக் கொண்ட நம் ஸ்வாமிகள் ஸௌம்ய வருஷம் ( 1370 )கார்த்திகை மாதம் பூர்ணிமையில் தம் திருவாராதனப்பெருமாள்  பேரருளாளனை யும் அப்பிள்ளார் அளித்திருந்த சுதர்ஸன, பாஞ்சஜன்ய முத்திரைகளை தம் திருக்குமாரரிடம் அளித்து ஆராதித்து வரும்படிக் கூறி, ஸ்ரீஹயக்ரீவரை, ப்ஹ்மதந்த்ர ஸ்வந்தர ஜீயரிடம் அளித்துவிட்டு நேராக வடக்கு திருவீதியிலுள்ள தம் இல்லத்தில் தமது திருமுடியை குமாரர் மடியிலும், ப்ரஹ்மதந்த்ரர் மடியில் பாதங்களையும் வைத்துக்கொண்டு அப்பிள்ளார் திருவடிகளை த்யானித்தபடியே திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

குமாரர் வரதாச்சாரியார் –கவிதார்கிக ஸிம்ஹாய கல்யாணுண ஸாலிநே Iஸ்ரீமதே வேங்கடேஸாய வாந்தகுர்ரவே நம :  IIஎன்ற ஸ்லோகத்தை அருளிச்செய்து அவர் சர்மதிருமேனியை சேவித்து பின்பு சர்ம கைங்கர்யங்களை நன்கு நடத்தி முடித்தார்.  பின்பு ஸ்ரீரங்கநாச்சியார் நியமனப்படி அந்த ஸந்நிதியிலேயே ஸ்ரீதேசிகர் விக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்தார்.அன்று ஒலிக்க ஆரம்பித்த மணியோசை இந்த உலகம் உள்ளளவும் ஒலிக்கும்.

வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
மன்னுபுகழ் பூதூரான் மனம் உகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே!
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!
நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்ரம் –ஶ்ரீத³த்தாத்ரேய ப்ரார்த²நா–ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர–ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்ட சக்ர பீ³ஜ ஸ்தோத்ரம்–ஶ்ரீ த³த்தாத்ரேய வஜ்ர கவச ஸ்தோத்ரம்–

January 22, 2024

ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்ரம்

ஜடாத⁴ரம் பாண்டு³ராங்க³ம் ஶூலஹஸ்தம் க்ருபாநிதி⁴ம் ।
ஸர்வரோக³ஹரம் தே³வம் த³த்தாத்ரேயமஹம் ப⁴ஜே ॥ 1 ॥

அஸ்ய ஶ்ரீத³த்தாத்ரேயஸ்தோத்ரமந்த்ரஸ்ய ப⁴க³வாந்நாரத³ருஷி꞉ । அநுஷ்டுப் ச²ந்த³꞉ । ஶ்ரீத³த்த꞉ பரமாத்மா தே³வதா । ஶ்ரீத³த்தாத்ரேய ப்ரீத்யர்தே² ஜபே விநியோக³꞉ ॥

நாரத³ உவாச 

ஜக³து³த்பத்திகர்த்ரே ச ஸ்தி²திஸம்ஹாரஹேதவே ।
ப⁴வபாஶவிமுக்தாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 1 ॥

ஜராஜந்மவிநாஶாய தே³ஹஶுத்³தி⁴கராய ச ।
தி³க³ம்ப³ர த³யாமூர்தே த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 2 ॥

கர்பூரகாந்திதே³ஹாய ப்³ரஹ்மமூர்தித⁴ராய ச ।
வேத³ஶாஸ்த்ரபரிஜ்ஞாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥

ஹ்ரஸ்வதீ³ர்க⁴க்ருஶஸ்தூ²லநாமகோ³த்ரவிவர்ஜித ।
பஞ்சபூ⁴தைகதீ³ப்தாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥

யஜ்ஞபோ⁴க்தே ச யஜ்ஞாய யஜ்ஞரூபத⁴ராய ச ।
யஜ்ஞப்ரியாய ஸித்³தா⁴ய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥

ஆதௌ³ ப்³ரஹ்மா ஹரிர்மத்⁴யே ஹ்யந்தே தே³வஸ்ஸதா³ஶிவ꞉ ।
மூர்தித்ரயஸ்வரூபாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 6 ॥

போ⁴கா³ளயாய போ⁴கா³ய யோக³யோக்³யாய தா⁴ரிணே ।
ஜிதேந்த்³ரிய ஜிதஜ்ஞாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 7 ॥

தி³க³ம்ப³ராய தி³வ்யாய தி³வ்யரூபத⁴ராய ச ।
ஸதோ³தி³தபரப்³ரஹ்ம த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 8 ॥

ஜம்பூ³த்³வீபே மஹாக்ஷேத்ரே மாதாபுரநிவாஸிநே ।
ஜயமாந ஸதாம் தே³வ த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 9 ॥

பி⁴க்ஷாடநம் க்³ருஹே க்³ராமே பாத்ரம் ஹேமமயம் கரே ।
நாநாஸ்வாத³மயீ பி⁴க்ஷா த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 10 ॥

ப்³ரஹ்மஜ்ஞாநமயீ முத்³ரா வஸ்த்ரே சாகாஶபூ⁴தலே ।
ப்ரஜ்ஞாநக⁴நபோ³தா⁴ய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 11 ॥

அவதூ⁴த ஸதா³நந்த³ பரப்³ரஹ்மஸ்வரூபிணே ।
விதே³ஹதே³ஹரூபாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 12 ॥

ஸத்யரூப ஸதா³சார ஸத்யத⁴ர்மபராயண ।
ஸத்யாஶ்ரயபரோக்ஷாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 13 ॥

ஶூலஹஸ்தக³தா³பாணே வநமாலாஸுகந்த⁴ர ।
யஜ்ஞஸூத்ரத⁴ர ப்³ரஹ்மந் த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 14 ॥

க்ஷராக்ஷரஸ்வரூபாய பராத்பரதராய ச ।
த³த்தமுக்திபரஸ்தோத்ர த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 15 ॥

த³த்த வித்³யாட்⁴ய லக்ஷ்மீஶ த³த்த ஸ்வாத்மஸ்வரூபிணே ।
கு³ணநிர்கு³ணரூபாய த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 16 ॥

ஶத்ருநாஶகரம் ஸ்தோத்ரம் ஜ்ஞாநவிஜ்ஞாநதா³யகம் ।
ஸர்வபாபம் ஶமம் யாதி த³த்தாத்ரேய நமோ(அ)ஸ்து தே ॥ 17 ॥

இத³ம் ஸ்தோத்ரம் மஹத்³தி³வ்யம் த³த்தப்ரத்யக்ஷகாரகம் ।
த³த்தாத்ரேயப்ரஸாதா³ச்ச நாரதே³ந ப்ரகீர்திதம் ॥ 18 ॥

இதி ஶ்ரீநாரத³புராணே நாரத³விரசிதம் ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்ரம் ।

——————–

ௐ நமஸ்தே ப⁴க³வந் ஶ்ரீஸத்³கு³ருதே³வ-த³த்தாத்ரேயாய நமோ நம: ॥ 1॥

த்வம் ப்³ரஹ்மமயோऽஸி । த்வம் ஆநந்த³மயோऽஸி । த்வம் விஜ்ஞாநமயோऽஸி ।
த்வம் ஸத்யமயோऽஸி । த்வம் ஶாந்திமயோऽஸி । த்வம் ப்ரேமமயோऽஸி ।
த்வம் நிராகாரோ நிராலம்போ³ நிர்விகல்போ நிர்விஷயோ நிரஞ்ஜநோ நிரங்குஶோ
நிரந்தரோ நிராஶயோ நிராமயோ நிர்தூ⁴தகல்மஷோऽஸி ॥ 2॥

த்வதா³ஜ்ஞயா தபந்தி ரவிஶஶி-தாராமண்ட³லா: ।
த்வதா³ஜ்ஞயா விபுலத⁴நதா⁴ந்யவதீ வஸுதா⁴ ।
த்வதா³ஜ்ஞயா வஹதி வாயுஸ்ஸந்த³ஹத்யநல: । த்வதா³ஜ்ஞயாऽऽகாஶம் ஸர்வம் வ்யாப்நோதி ।
த்வதா³ஜ்ஞயா யதா²காலம் வர்ஷதி பர்ஜந்ய: । த்வதா³ஜ்ஞயா விகஸந்தி குஸுமாநி।
த்வதா³ஜ்ஞயா ப²லந்தி பாத³பா: । த்வதா³ஜ்ஞயா கா³யந்தி விஹங்க³ம: ।
த்வதா³ஜ்ஞயா ஜீவந்தி சதுர்வித⁴யோநய: ।
த்வதா³ஜ்ஞயா தே³ஹே ப்ராண: ஸஞ்சரதி நிர்க³ச்ச²தி தே³ஹாத் ॥ 3॥

த்வம் மநஶ்சித்தாந்த:கரணபு³த்³த்⁴யஹங்கார-ப்ரேரகோऽஸி ।
த்வம் ஶமத³ம-திதிக்ஷாவைராக்³ய-ப⁴க்திப்ரதா³யகோऽஸி ।
த்வம் த்³வந்த்³வது:³க²-திமிர-வித்⁴வம்ஸகோऽஸி । த்வம் மாயாபாஶ-நிக்ரு’ந்தகோऽஸி।
த்வம் ஸம்ஸார-ப³ந்த⁴நச்சே²த³கோऽஸி ।
த்வம் ஸர்வஸத்³கு³ணகர்தாऽஸி । த்வம் ஸர்வது³ர்கு³ணஹர்தாऽஸி । த்வம் ஶாந்திப்ரதோ³ऽஸி ।
த்வமாநந்த³ப்ரதோ³ऽஸி । த்வம் ப்ரேமப்ரதோ³ऽஸி । த்வம் ஸகலவிக்⁴நஹரோऽஸி ।
த்வமப⁴யகரோऽஸி । த்வம் வரத³வரோऽஸி । த்வம் நிஜபத³-ப்ரதா³நகரோऽஸி ॥ 4॥

ரு’தே த்வத் கோऽபி நேதரோ வதா³ந்ய: । ரு’தே த்வத் கோऽபி நேதர: ஸமர்த:² ।
ரு’தே த்வத் கோऽபி நேதரோ த³யாலு: । ரு’தே த்வத் கோऽபி நேதர: க்ஷமாஶீல: ।1
ஶ்ரீத³த்தாத்ரேயப்ரார்த²நா
ரு’தே த்வத் கோऽபி நேதரோ ப⁴க்தபாலக: ॥ 5॥

த்வத்த: ஸகலைஶ்வர்ய-போ⁴க³க்ஷமத்வம் । த்வத்த: ஸகலவஸ்து-ரமணீயத்வம் ।
த்வத்த: கர்மஜ்ஞாநேந்த்³ரிய-க³ணஸமர்த²த்வம் । த்வத்த: ஸகலயோக³ஶக்திமத்த்வம் ।
த்வத்த: பரமவைராக்³ய-பரபு³த்³தி⁴மத்த்வம் ॥ 6॥

த்வயி ஸமுபஸ்தி²தம் ப்³ரஹ்மாண்டோ³த்பத்தி-ஸ்தி²திலயபீ³ஜம் ।
த்வயி ஸுப்ரதிஷ்டி²தம் ஸம்ஸ்ரு’திநாஶநாத்³வைத-பா⁴வநாமூலம் ।
த்வயி ஸந்நிஹிதம் ஜந்மம்ரு’த்யுப⁴ய-ஸம்ஹநநஸாமர்த்²யம் ॥ 7॥

கநக-காமிநீ-கமநீயத்வாத் த்ராஹி த்ராஹி மாம் ।
காம-க்ரோத⁴-மோஹ-மத³-மத்ஸரகோலாஹலாத் த்ராஹி த்ராஹி மாம் ।
ஜந்ம-ஜரா-மரண-த்ரிதோ³ஷாத் த்ராஹி த்ராஹி மாம் ।
ஸம்ஸ்ரு’தி-தா³வாநல-த³ஹ்யமாநம் பாஹி பாஹி மாம் ।
விஷயகர்த³ம-நிமஜ்ஜமாநம் பாஹி பாஹி மாம் ।
ப⁴யகர-காலத³ண்ட³-நிபீட³யமாநம் பாஹி பாஹி மாம் ।
த⁴ர்மாசரண-தி³ங்மூடோ⁴ऽஹம் தை⁴ர்யம் தே³ஹி தே³ஹி மே ।
அஹங்காரமலிந-சித்தோऽஹமப⁴யம் வரம் தே³ஹி தே³ஹி மே ।
த்வத் பத³பங்கஜ-ஶரணாக³திம் தே³ஹி தே³ஹி மே ॥ 8॥

விநா த்வயா நாஸ்தி கோऽப்யந்ய ஆபத்திநிவாரக: । த்வம் ப்ரியதமா மாதாऽஸி மே ।
த்வம் ப்ரியதம: பிதாऽஸி மே । த்வம் ப்ரியதமோ ப³ந்து⁴ரஸி மே ।
த்வம் ப்ரிய தமம் மித்ரமஸி மே । த்வம் பூஜ்யதம: ஸத்³கு³ருவர்யோऽஸி மே ।
தே க்ரு’பாஹஸ்தம் தே³ஹி மே ஶிரஸி । தே பத³தலகஞ்ஜம் தே³ஹி மே மநஸி ।
தே ஸுக²கர-வாஸோऽஸ்து மே வபுஷி ।
அநந்த-ஜந்மபர்யந்தம் தே ஸ்மரணம் மே சித்தேऽஸ்து ॥ 9॥

ௐ நமஸ்தே அத்ரிபுத்ராய । ௐ நமஸ்தே அவதூ⁴தாய । ௐ நமஸ்தே ஹம்ஸதே³வாய ।
ௐ நமஸ்தே ஸத்³கு³ருநாதா²ய । ௐ நமஸ்தே யதிநாதா²ய । ௐ நமஸ்தே ஶக்திநாதா²ய।
ௐ நமஸ்தே ஸித்³தி⁴நாதா²ய । ௐ நமஸ்தே முக்திநாதா²ய । ௐ நமஸ்தே ஜக³ந்நாதா²ய।
ௐ நமஸ்தே ப⁴க³வதே த³த்தாத்ரேயாய ।
ௐ நமஸ்தே பரப்³ரஹ்மணே ஸச்சிதா³நந்த³மூர்தயே முநிவர்யாய நமோ நம: ॥ 10॥

ஶ்ரீத³த்தாத்ரேய ப்ரார்த²நா

இதி ஶ்ரீத³த்தாத்ரேய ப்ரார்த²நா ஸம்பூர்ணா ।

———————

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர

ந்ரு’ஸிம்ஹரூபிணே சிதா³த்மநே ஸுக²ஸ்வரூபிணே ।
பதை:³ த்ரிபி:⁴ ததா³தி³பி:⁴ நிரூபிதாய வை நம: ॥ 1॥

ஸாங்க்ரு’தி: முநிவர்யோ அஸௌ பூ⁴தயே யோக³லிப்ஸயா ।
பு⁴வம் ஸர்வாம் பரிப்⁴ராந்யந்நைமிஷாரண்யமாப்தவாந் ॥ 2॥

ஸுக³ந்தி⁴நாநாகுஸுமை: ஸ்வாது³ஸத்ப²லஸம்யுதை: ।
ஶாகி²பி:⁴ ஸஹிதம் புண்யம் ஜலகாஸாரமண்டி³தம் ॥ 3॥

ஸ: முநி: விசரஸ்தத்ர த³த³ர்ஶாம்ரதரோ: அத:⁴ ।
வேதி³காயாம் ஸமாஸீநம் த³த்தாத்ரேயம் மஹாமுநிம் ॥ 4॥

ப³த்³த⁴பத்³மாஸநாஸீநம் நாஸாக்³ரார்பிதயா த்³ரு’ஶா ।
ஊருமத்⁴யக³தோத்தாநபாணியுக்³மேந ஶோபி⁴தம் ॥ 5॥

தத: ப்ரணம்யாகி²லம் த³த்தாத்ரேயம் மஹாமுநிம் ।
தத் ஶிஷ்யை: ஸஹ தத்ரைவ ஸம்முக²ஶ்சோபவிஷ்டவாந் ॥ 6॥

ததை³வ ஸ: முநி: யோகா³த் விரம்ய ஸ்வபுர: ஸ்தி²தம் ।
உவாச ஸாங்க்ரு’திம் ப்ரிதிபூர்வகம் ஸ்வாக³தம் வச: ॥ 7॥

ஸாங்க்ரு’தே கத²ய த்வம் மாம் கிமுத்³தி³ஶ்யேஹாக³த: ।
இதி ப்ரு’ஷ்டஸ்து ஸ: ப்ராஹ யோக³ம் ஜ்ஞாதுமிஹாக³த: ॥ 8॥

யோகோ³ ஹி ப³ஹுதா⁴ ப்³ரஹ்மந்தத்ஸர்வம் கதயாமி தே ।
மந்த்ரயோகோ³ லயஶ்சைவ ஹட²யோக³ஸ்ததை²வ ச ।
ரஜயோக³ஶ்சதுர்த:² ஸ்யாத்யோகா³நாமுத்தமஸ்து ஸ: ॥ 9॥

ஆரம்ப⁴ஶ்ச க⁴டஶ்சைவ ததா² பரிசய: ஸ்ம்ரு’த: ।
நிஷ்பத்திஶ்சேத்யவஸ்தா² ச சதுர்தீ² பரிகல்பிதா ।
ஏதேஷாம் விஸ்தரம் வக்ஷ்யே யதி³ த்வம் ஶ்ரோதுமிச்ச²ஸி ॥ 10॥

அங்கே³ஷு மாத்ரு’கா பூர்வம் மந்த்ரம் ஜபந் ஸுதீ:⁴ ।1
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ய கசநாபி⁴ஸித்³த⁴யை ஸ்யாத் மந்த்ரயோக:³ ஸ கத்²யதே ॥ 11॥

ம்ரு’து:³ தஸ்யாதி⁴காரீ ஸ்யாத்³த்³வாத³ஶாப்³தை:³ து ஸாத⁴நாத் ।
ப்ராயேண லப⁴தே ஜ்ஞாநம் ஸித்³தி⁴ஶ்சைவாணிமாதி³கா: ॥ 12॥

அல்பபு³த்³தி:⁴ இமம் யோக³ம் ஸேவதே ஸாத⁴காத⁴ம: ।
மந்த்ரயோகோ³ ஹ்யயம் ப்ரோக்தோ யோகா³நாமத⁴மஸ்து ஸ: ॥ 13॥

லயயோக³ஶ்சித்தலய: ஸங்கேதை: து ப்ரஜாயதே ।
ஆதி³நாதே²ந ஸங்கேதா அஷ்டகோடி ப்ரகீர்த்திதா: ॥ 14॥

ஸாங்க்ரு’திருவாச –
ப⁴க³வந்நாதி³நாத:² ஸ: கிம் ரூப: க: ஸ: உச்யதாம் ।
த³த்தாத்ரேய உவாச –
மஹாதே³வஸ்ய நாமாந்யாதி³நாதா²தி³காந்யபி ।
ஶிவேஶ்வரஶ்ச தே³வோऽஸௌ லீலயா வ்யசரத்ப்ரபு:⁴ ॥ 15॥

ஶ்ரீகண்ட²பர்வதே கௌ³ர்யா ஸஹ ப்ரமத²நாயகாந் ।
ஹிமாக்ஷபர்வதே சைவகத³லீவநகோ³சரே ॥ 16॥

கி³ரிகூடே சித்ரகூடே ஸுபாத³பயுதே கி³ரௌ ।
க்ரு’பயைகைகஸங்கேதம் ஶங்கர: ப்ராஹ தத்ர தாந் ॥ 17॥

தாநி ஸர்வாணி வக்தும் து ந ஹி ஶக்நோமி விஸ்தராத் ।
காநிசித்கத²யிஷ்யாமி ஸஹஜாப்⁴யாஸவத்ஸுக²ம் ॥ 18॥

திஷ்ட²ந் க³ச்ச²ந்ஸ்வபந்பு⁴ஞ்ஜந்த்⁴யாயந்ஶூந்யமஹர்நிஶம் ।
அயமேகோ ஹி ஸங்கேத: ஆதி³நாதே²ந பா⁴ஷித: ॥ 19॥

நாஸாக்³ரத்³ரு’ஷ்டிமாத்ரேண ஹ்யபர: பரிகீர்தித: ।
ஶிரஸ்பஶ்சாச்ச பா⁴க³ஸ்ய த்⁴யாநம் ம்ரு’த்யும் ஜயேத் பரம் ॥ 20॥

ப்⁴ரூமத்⁴யத்³ரு’ஷ்டிமாத்ரேண பர: ஸங்கேத: உச்யதே ।
லலாதே ப்⁴ரூதலே யஶ்சோத்தம: ஸ: ப்ரகீத்தித: ॥ 21॥

ஸவ்யத³க்ஷிணபாத³ஸ்யாங்கு³ஷ்டே லயமுத்தமம் ।
உத்தாநஶவவத்பூ⁴மௌ ஶயநம் சோக்தமுதமம் ॥ 22॥

ஶிதி²லோ நிர்ஜநே தே³ஶே குர்யாச்சேத்ஸித்³தி⁴மாப்நுயாத் ।
ஏவம் ச ப³ஹு ஸங்கேதாந் கத²யாமாஸ ஶங்கர: ॥ 23॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ஸங்கேதை: ப³ஹுபி⁴ஶ்சாந்யை: யஸ்ய சித்தலயோ ப⁴வேத் ।
ஸ ஏவ லயயோக:³ ஸ்யாத் கர்மயோக³ம் தத: ஶ்ரு’ணு: ॥ 24॥

யமஶ்ச நியமஶ்சைவாஸநம் ச தத: பரம் ।
ப்ராணாயாமஶ்சதுத:² ஸ்யாத் ப்ரத்யாஹாரஸ்து பஞ்சம: ।
ததஸ்து தா⁴ரணா ப்ரோக்தா த்⁴யாநம் ஸப்தமமுச்யதே ॥ 25॥

ஸமாதி:⁴ அஷ்டம: ப்ரோக்த: ஸர்வபுண்யப்ரத:³ ।
ஏவமஷ்டாங்க³யோக³ம் ச யாஜ்ஞவல்க்யாத³யோ விது:³ ॥ 26॥

கபிலாத்³யாஸ்து ஶிஷ்யாஶ்ச ஹட²ம் குயுஸ்ததோ யதா² ।
தத்³யதா² ச மஹாமுத்³ரா மஹாப³ந்த⁴ஸ்ததை²வ ச ॥ 27॥

தத: ஸ்யாத்கே²சரீமுத்³ர ப³ந்தோ⁴ ஜாலந்த⁴ர: ததா² ।
உட்³டி³யாணம் மூலப³ந்தோ⁴ விபரீதகரணீ ததா² ॥ 28॥

வஜ்ரோலி: அமரோலிஶ்ச ஸஹஜோலிஸ்த்ரிதா⁴ மதா ।
ஏதேஷாம் லக்ஷணம் வக்ஷ்யே கர்த்தாவ்யம் ச விஶேஷத: ॥ 29॥

யமா: யே த³ஶ: ஸம்ப்ரோக்தா: ரு’ஷிபி:⁴ தத்த்வத³ர்ஶிபி:⁴ ।
லக்⁴வாஹாரஸ்து தேஷ்வேகோ முக்²யோ ப⁴வதி நாபரே ।
அஹிம்ஸா நியமேஷ்வேகா முக்²யா ப⁴வதி நாபரே ॥ 30॥

சதுரஶீதிலக்ஷேஷ்வாஸநேஷ்வுத்தமம் ஶ்ரு’ணு ।
ஆதி³நாதே²ந ஸம்ப்ரோக்தம் யதா³ஸநமிஹோச்யதே ॥ 31॥

உத்தாநௌ சரணௌ க்ரு’த்வோரூஸம்ஸ்தௌ² ப்ரயலத: ।
உரூ மத்⁴யே ததோ²த்தாநௌ பாணீ க்ரு’த்வா ததோ த்³ரு’ஶௌ ॥ 32॥

நாஸாக்³ரே விந்யஸேத்³ராஜத்³த³ந்தமூலம் ச ஜிஹ்வயா ।
உத்தப்⁴ய சிபு³கம் வக்ஷ: ஸம்ஸ்தா²ப்ய பவநம் ஶநை: ॥ 33॥

யதா²ஶக்தி ஸமாக்ரு’ஷ்ய பூரயேது³த³ரம் ஶநை: ।
யதா²ஶக்த்யேவ பஶ்சாத்து ரேசயேத்பவநம் ஶநை: ॥ 34॥

இத³ம் பத்³மாஸநம் ப்ரோக்தம் ஸர்வவ்யாதி⁴விநாஶநம் ।
து³ர்லப⁴ம் யேந கேநாபி தி⁴மதா லப்⁴யதே பு⁴வி ॥ 35॥

ஸாம்ஸ்க்ரு’தே ஶ்ரு’ணு ஸத்த்வஸ்தோ² யோகா³ப்⁴யாஸக்ரமம் யதா² ।
வக்ஷ்யமாணம் ப்ரயத்நேந யோகி³நாம் ஸர்வலக்ஷணை: ॥ 36॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யுவ அவஸ்தோ²ऽபி வ்ரு’த்³தோ⁴ வா வ்யாதி⁴தோ வா ஶநை: ஶநை: ।
அப்⁴யாஸாத்ஸித்³தி⁴மாப்நோதி யோகே³ ஸர்வோऽப்யதந்த்³ரித: ॥ 37॥

ப்³ராஹ்மண: ஶ்ரமணோ வா பௌ³த்³தோ⁴ வாப்யார்ஹதோऽத²வா ।
காபாலிகோ வா சார்வாக: ஶ்ரத்³த⁴யா ஸஹித: ஸுதீ:⁴ ।
யோகா³ப்⁴யாஸோऽதோ நித்யம் ஸர்வஸித்³தி⁴மவாப்நுயாத் ॥ 38॥

க்ரியாயுக்தஸ்ய ஸித்³தி:⁴ ஸ்யாத³க்ரியஸ்ய கத²ம் ப⁴வேத் ।
ந ஶாஸ்த்ரபாட²மாத்ரேண காசித்ஸித்³தி:⁴ ப்ரஜாயதே ॥ 39॥

முண்டி³தோ த³ண்ட³தா⁴ரீ வா காஷாயவஸநோऽபி வா ।
நாராயணவதோ³ வாபி ஜடிலோ மஸ்மலேபந: ॥ 40॥

நம: ஶிவாயவாசீ வா பா³ஹ்யார்சா பூஜகோऽபி வா ।
த்³வாத³ஶஸ்தா²நபூஜோ வா ப³ஹ்யவத்ஸலபா⁴ஷிதம் ।
க்ரியாஹீநோऽத²வா கூர: கத²ம் ஸித்³தி⁴மவாப்நுயாத் ॥ 41॥

ந வேஷதா⁴ரணம் ஸித்³தே:⁴ காரணம் ந ச தத்ததா² ।
க்ரு’பைவ காரணம் ஸித்³தே:⁴ ஸத்யமேவ து ஸாங்க்ரு’தே ॥ 42॥

ஶிஶ்நோத³ரார்த²ம் யோக³ஸ்ய கத²யா வேஷதா⁴ரிண: ।
அநுஷ்டா²நவிஹீநா: து வங்சயந்தி ஜநாந் கில ॥ 43॥

உச்சாவசை: விப்ரலம்பை:⁴ யதந்தே குஶலா: நரா: ।
யோகி³நோ வயமித்யேவம் மூடா:⁴ போ⁴க³பராயணா: ॥ 44॥

ஶநைர்ததா²விதா⁴ந் ஜ்ஞாத்வா யோகா³ப்⁴யாஸவிவர்ஜிதாம் ।
க்ரு’தார்தா²ந்வசநைரேவ வர்ஜயேத்³வேஷதா⁴ரிண: ॥ 45॥

ஏதே து விக்⁴நபூ⁴த்தாஸ்தே யோகா³ப்⁴யாஸஸ்ய ஸர்வதா³ ।
வர்ஜயேத்தாந் ப்ரயத்நேநேத்³ரு’ஶீ ஸித்³த்⁴தா³ க்ரியா ॥ 46॥

ப்ரத²மாப்⁴யாஸகாலே து ப்ரவேஶஸ்து மஹாமுநே ।
ஆலஸ்யம் ப்ரத²மே விக்⁴ந: த்³விதீயஸ்து ப்ரகத்த²நம் ।
பூர்வோக்ததூ⁴ர்த்தகோ³ஷ்டீ² ச த்ரு’தீயோ மந்த்ரஸாத⁴நம் ॥ 47॥

சதுர்தோ² தா⁴துவாத:³ ஸ்யாத்பங்சம: கா²த்³யவாத³கம் ।
ஏவம் ச ப³ஹவோ த்³ரு’ஷ்டா: ம்ரு’க³த்ரு’ஷ்ணா: ஸமா: முநே: ॥ 48॥

ஸ்தி²ராஸநஸ்ய ஜாயந்தே தாம் து ஜ்ஞாத்வா ஸுதீ:⁴ த்யஜேத் ।
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ப்ராணாயாமம் ததஸ்குர்யாத்பத்³மாஸநக³த: ஸ்வயம் ॥ 49॥

ஸுஶோப⁴நம் மட²ம் குர்யாத்ஸூக்ஷ்மத்³வாரம் து நிர்கு⁴ணம் ।
ஸுஷ்டு² லிப்தம் கோ³மயேந ஸுத⁴யா வா ப்ரயத்நத: ॥ 50॥

மத்குணை: மஶகை: பூ⁴தை: வர்ஜிதம் ச ப்ரயத்நத: ।
தி³நே தி³நே ஸுஸம்ம்ரு’ஷ்டம் ஸம்மார்ஜந்யா ஹ்யதந்த்³ரித: ।
வாஸிதம் ச ஸுக³ந்தே⁴ந தூ⁴பிதம் கு³க்³கு³லாதி³பி:⁴ ॥ 51॥

மலமூத்ராதி³பி:⁴ வர்கை³ரு’அஷ்டாத³ஶபி⁴ரேவ ச ।
வர்ஜிதம் த்³வாரஸம்பந்நம் ॥। ॥ 52॥

॥। வஸ்த்ரம் வாஜிநமேவ வா ।
நாந்யத்ரஸ்தரணாஸீந: பரஸம்ஸர்க³வர்ஜித: ॥ 53॥

தஸ்மிந் ஸ து ஸமாஸ்தீர்யாஸநம் விஸ்த்ரு’தாம்ஶகம் ।
தத்ரோபவிஶ்ய மேதா⁴வீ பத்³மாஸநமந்வித: ॥ 54॥

ஸமகாய:ப்ராஞ்ஜலிஶ்ச ப்ரணம்ய ஸ்வேஷ்டதே³வதாம் ।
ததோ த³க்ஷிணஹஸ்தஸ்யாங்கு³ஷ்டே²நைவ பிங்க³லாம் ॥ 55॥

நிருத்⁴ய பூரயேத்³வாயுமிட்³யா ச ஶநை: ஶநை: ।
யதா²ஶக்திநிரோதே⁴ந ததஸ்குர்யாத்து கும்ப⁴கம் ॥ 56॥

ததஸ்த்யஜேத்பிங்க³லயா ஶநை: பவநவேக³த: ।
புந: பிங்க³லயாபூர்ய பூரயேது³த³ரம் ஶநை: ।
யதா² த்யஜேத்ததா² தேந பூரயேத³நிரோத⁴த: ॥ 57॥

ஏவம் ப்ராத: ஸமாஸீநஸ்குர்யாத்³விம்ஶதிகும்ப⁴காந் ।
கும்ப⁴க: ஸஹிதோ நாம ஸர்வக்³ரஹவிவர்ஜித: ॥ 58॥

ஏவம் மத்⁴யாஹ்நஸமயே குர்யாத் விம்ஶதிகும்ப⁴காந் ।
ஏவம் ஸாயம் ப்ரகுர்வீத புந: விம்ஶதிகும்ப⁴காந் ।
ஏவமேவார்த⁴ராத்ரே அபி குர்யாத் விம்ஶதிகும்ப⁴காந் ॥ 59॥

குர்வீத ரேசபூராப்⁴யாம் ஸஹிதாந் ப்ரதிவாஸரம் ।
ஸஹிதோ ரேசபூராப்⁴யாம் தஸ்மாத்ஸஹிதகும்ப⁴க: ॥ 60॥

குர்யாதே³வம் சதுர்வாரமநாலஸ்யோ தி³நே தி³நே ।
ஏவம் மாஸத்ரயம் குர்யாந்நாடீ³ஶுத்³தி⁴ஸ்ததோ ப⁴வேத் ॥ 61॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யதா³ து நாடீ³ஶுத்³தி:⁴ ஸ்யாத்ததா³ சிஹ்நாநி பா³ஹ்யத: ।
ஜாயந்தே யோகி³நோ தே³ஹே தாநி வக்ஷ்யாம்யஶேஷத: ॥ 62॥

ஶரீரலகு⁴தா தீ³ப்தி: ஜட²ராக்³நிவிவர்த⁴நம் ।
க்ரு’ஶத்வம் ச ஶரீரஸ்ய ததா³ ஜாயேத்து நிஶ்வதம் ॥ 63॥

ததா³ வர்ஜ்யாநி வக்ஷ்யாமி யோக³விக்⁴நகராணி து ।
லவணம் ஸர்ஷபம் சாம்லமுஷ்ணம் ரூக்ஷம் ச தீக்ஷ்ணகம் ॥ 64॥

அதீவ போ⁴ஜநம் த்யாஜ்யம் ஸ்த்ரீஸங்க³மநமேவ ச ।
அக்³நிஸேவா து ஸந்த்யாஜ்யா தூ⁴ர்த்தகோ³ஷ்டிஶ்ச ஸந்த்யஜேத் ॥ 65॥

உபாயம் ச ப்ரவக்ஷ்யாமி க்ஷிப்ரம் யோக³ஸ்ய ஸித்³த⁴யே ।
க்⁴ரு’தம் க்ஷீரம் ச மிஷ்டா²ந்நம் மிதாஹரஶ்ச ஶஸ்யதே ॥ 66॥

பூர்வோக்தகாலே குர்வீத பவநாப்⁴யாஸமேவ ச ।
தத: பரம் யதே²ஷ்டம் து ஶக்தி: ஸ்யாத்³வாயுதா⁴ரணே ।
யதே²ஷ்டம் தா⁴ரணாத்³வாயோ: ஸித்³தே⁴த்கேவலகும்ப⁴கம் ॥ 67॥

கேவலே கும்ப⁴கே ஸித்³தே⁴ ரேசபூரகவர்ஜிதே ।
ந தஸ்ய து³ர்லப⁴ம் கிஞ்சித்த்ரிஷு லோகேஷு வித்³யதே ॥ 68॥

ப்ரஸ்வேதோ³ ஜாயதே பூர்வம் மர்த³நம் தேந காரயேத் ।
ததோऽப்திதா⁴ரணாத்³வாயோ: க்ரமேணைவ ஶநை: ஶநை: ॥ 69॥

கம்போ ப⁴வதி தே³ஹஸ்யாஸநஸ்த²ஸ்ய தே³ஹிந: ।
ததோऽதி⁴ரதராப்⁴யாஸாத்³த³ர்து³ரீ ஜாயதே த்⁴ருவம் ॥ 70॥

யதா² து த³ர்து³ரோ க³ச்சே²து³த்ப்லுத்யோத்ப்லுத்ய பூ⁴தலே ।
பத்³மாஸநஸ்தி²தோ யோகீ³ ததா² க³ச்ச²தி பூ⁴தலே ॥ 71॥

ததோऽதி⁴கதராப்⁴யாஸாத்³பூ⁴மித்யக³ஶ்ச ஜாயதே ।
பத்³மாஸநஸ்த² ஏவாஸௌ பூ⁴மிமுத்ஸ்ரு’ஜ்ய வர்த்ததே ॥ 72॥

நிராதா⁴ரோऽபி சித்ரம் ஹி ததா³ ஸாமர்த்²யமுத்³ப⁴வேத் ।
ஸ்வல்பம் வா ப³ஹு வா பு⁴க்த்வா யோகீ³ ந வ்யத²தே ததா³ ॥ 73॥

அல்பமூத்ரபுரீஷஶ்ச ஸ்வல்பநித்³ரஶ்ச ஜாயதே ।
க்ரிமயோ தூ³ஷிகா லாலா ஸ்வேதோ³ து³ர்க³ந்தி⁴தா தநோ: ।
ஏதாநி ஸர்வதா³ தஸ்ய ந ஜாயந்தே தத: பரம் ॥ 74॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ததோऽதி⁴கதராபா⁴ஸாத்³ப³லமுத்பத்³யதே ப்⁴ரு’ஶம் ।
யேந பூ⁴சரஸித்³தி:⁴ ஸ்யாத்³பூ⁴சராணாம் ஜயே க்ஷம: ॥ 75॥

வ்யாக்⁴ரோ லுலாயோ வந்யோ வா க³வயோ க³ஜ ஏவ வா ।
ஸிம்ஹோ வா யோகி³நா தேந ம்ரியந்தே ஹஸ்ததாட³நாத் ।
கந்த³ர்பஸ்ய யதா²ரூபம் ததா² தஸ்யாபி யோகி³ந: ॥ 76॥

தஸ்மிந் காலே மஹாவிக்⁴நோ யோகி³ந: ஸ்யாத்ப்ரமாத³த: ।
தத்³ரூபவஶகா:³ நார்ய: கங்க்ஷந்தே தஸ்ய ஸங்க³மம் ॥ 77॥

யதி³ ஸங்க³ம் கரோத்யேஷ பி³ந்து³ஸ்தஸ்ய விநஶ்யதி ।
ஆயு:க்ஷயோ பி³ந்து³நாஶாத³ஸாமர்த்²யம் ச ஜாயதே ॥ 78॥

தஸ்மாத்ஸர்வப்ரயத்நேந பி³ந்து³ராக்ஷ்யோ ஹி யோகி³நா ।
ததோ ரஹஸ்யுபாவிஷ்ட: ப்ரணவம் ப்லுதமாத்ரயா ॥ 79॥

ஜபேத்பூர்வா: ஜிதாநாம் ச பாபாநாம் ச நாஶஹேதவே ।
ஸர்வவிக்⁴நஹரஶ்சாயம் ப்ரணவ: ஸர்வதோ³ஷஹா ॥ 80॥

ஏவமப்⁴யாஸயோகே³ந ஸித்³தி:⁴ ஆரம்ப⁴ஸம்ப⁴வா ।
ததோ ப⁴வேத்³க⁴டாவஸ்தா² பவநாப்⁴யாஸிந: ஸதா³ ॥ 81॥

ப்ராணாபாநௌ மநோவயூ ஜீவத்மபரமாத்மநௌ ।
அந்யோந்யஸ்யாவிரோதே⁴நைகதாம் க⁴டதோ காநிசித் ॥ 82॥

ததா³ க⁴டாத்³வயாவஸ்தா² ப்ரஸித்³த⁴ யோகி³நாம் ஸ்ம்ரு’தா ।
ததஶ்சிஹ்நாநி யாநி ஸ்யு: தாநி வக்ஷ்யாமி காநிசித் ॥ 83॥

பூர்வம் ய: கதி²தோऽப்⁴யாஸஶ்சதுர்தா⁴ தம் பரித்யஜேத் ।
தி³வா வா யதி³ வா ராத்ரௌ யாமமாத்ரம் ஸமப்⁴யஸேத் ॥ 84॥

ஏகபா³ரம் ப்ரதிதி³நம் குர்யாத்கேவலகும்ப⁴கம் ।
ப்ரத்யாஹாரோ ஹி ஏவம் ஸ்யாதே³வம் கர்து: ஹி யோகி³ந: ॥ 85॥

இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யோ யத்ப்ரத்யாஹரதி ஸ்பு²டம் ।
யோகீ³ கும்ப⁴கமாஸ்தா²ய ப்ரத்யாஹார: ஸ உச்யதே ॥ 86॥

யத்³யத்பஶ்யதி சக்ஷுர்ப்⁴யாம் தத்ததா³த்மநி பா⁴வயேத் ।
யத்³யஜ்ஜிக்⁴ரதி நாஸாப்⁴யாம் தத்ததா³த்மநி பா⁴வயேத் ॥ 87॥

ஏவம் ஜ்ஞாநேந்த்³ரியாணாம் ஹி தத்ஸங்க்²யா ஸந்த⁴ரயேத் ।
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யாமமாத்ரம் ப்ரதிதி³நம் யோகீ³ யத்நாத³தந்த்³ரித: ॥ 88॥

ததா³ விசித்ரஸாமர்த்²யம் யோகி³நாம் ஜாயதே த்⁴ருவம் ।
தூ³ரஶ்ருதி: தூ³ரத்³ரு’ஷ்டி:க்ஷணாத்³தூ³ரக³மஸ்ததா² ॥ 89॥

வாக்ஸித்³தி:⁴ காமசாரித்வமத்³ரு’ஶ்யகரணம் ததா² ।
மலமூத்ரப்ரலேபேந லோஹாதீ³நாம் ஸுவர்ணதா ।
கே²சரத்வம் ததா²ந்யத்து ஸததாப்⁴யாஸயோகி³ந: ॥ 90॥

ததா³ பு³த்³தி⁴மதா பா⁴வ்ய யோகி³நா யோக³ஸித்³த⁴யே ।
ஏதே விஹதா: மஹாஸித்³தே:⁴ ந ரமேத்தேஷு பு³த்³தி⁴மாந் ॥ 91॥

ந த³ர்ஶயேச்ச கஸ்மைசித்ஸ்வஸாமர்த்²ய ஹி ஸர்வதா³ ।
கதா³சித்³த³ஶயேத்ப்ரீத்யா ப⁴க்தியுக்தாய வா புந: ॥ 92॥

யதா² மூர்கோ² யதா² மூடோ⁴ யதா² ப³தி⁴ர ஏவ வா ।
ததா² வர்தேத லோகேஷு ஸ்வஸாமர்த்²யஸ்ய கு³ப்தயே ॥ 93॥

நோசேச்சி²ஷ்யா: ஹி ப³ஹவோ ப⁴வந்தி ஸ்வ ந ஸம்ஶய: ।
தத்கர்மகரணவ்யக்³ர: ஸ்வாப்⁴யாஸே விஸ்ம்ரு’தோ ப⁴வேத் ।
அப்⁴யாஸேந விஹீநஸ்து ததோ லௌகிகதாம் வ்ரஜேத் ॥ 94॥

அவிஸ்ம்ரு’த்ய கு³ரோ: வக்யமப்⁴யஸேத்தத³ஹர்நிஶம் ।
ஏவம் ப⁴வேத்³க⁴டாவஸ்தா² ஸதா³ப்⁴யாஸஸ்ய யோகி³ந: ॥ 95॥

அநப்⁴யாஸேந யோக³ஸ்ய வ்ரு’தா² கோ³ஷ்ட்²யா ந ஸித்⁴யதி ।
தஸ்மாத்ஸர்வப்ரயத்நேந யோக³மேவ ஸதா³ப்⁴யஸேத் ॥ 96॥

தத: பரிசயாவஸ்தா² ஜயதே அப்⁴யாஸயோக³த: ।
வாயு: ஸம்ப்ரேரிதோ யத்நாத³க்³நிநா ஸஹ குண்ட³லீம் ॥ 97॥

போ³த⁴யித்வா ஸுஷும்நாயாம் ப்ரவிஶேத³விரோத⁴த: ।
வாயுநா ஸஹ சித்தம் து ப்ரவிஶேச்ச மஹாபத²ம் ॥ 98॥

மஹாபத²ம் ஶ்மஶாநம் ச ஸுஷும்நாபி வேத்யஸௌ ।
யஸ்ய சித்தம் ஸபவநம் ஸுஷும்நாம் ப்ரவிஶேதி³ஹ ॥ 99॥

பா⁴வ்யாநர்தா²ந் ஸ: விஜ்ஞாய யோகி³ ரஹஸி யத்நத: ।
பஞ்சதா⁴ தா⁴ரண குர்யாத்தத்தத்³பூ⁴தப⁴யாப²ஹம் ॥ 100॥

ப்ரு’தி²வீ தா⁴ரணம் வக்ஷ்யே பார்தி²வேப்⁴ய்ப் ப⁴யாபஹம் ।
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
நாபே:⁴ அத:⁴ கு³த³ஸ்யோத்⁴வம் க⁴டிகா: பஞ்ச தா⁴ரயேத் ॥ 101॥

வாயும் ப⁴வேத் ததோ ப்ரு’த்²வீதா⁴ரணம் தத்³ப⁴யாபஹம் ।
ப்ரு’தி²வீ ஸம்ப⁴வ: தஸ்ய ந ம்ரு’த்யு: யோகி³நோ ப⁴வேத் ॥ 102॥

நாபி⁴ஸ்தா²நே ததோ வாயும் தா⁴ரயேத் பஞ்ச நாடி³கா: ।
ததோ ஜலாத்³ப⁴யம் நாஸ்தி ஜலம்ரு’த்யு: ந யோகி³ந: ॥ 103॥

நாப்⁴யுர்த்⁴வமண்ட³லே வாயும் தா⁴ரயேத்பஞ்ச நாடி³கா: ।
அக்³நேயதா⁴ரணா ஸேயம் ந ம்ரு’த்யு: தஸ்ய வஹ்நிநா ॥ 104॥

ஸதா³ விசித்ரஸாமர்த்²யம் யோகி³நோ ஜாயதே த்⁴ருவம் ।
ந த³ஹ்யதே ஶரீரம் ச ப்ரக்ஷிப்தோ வஹ்நி குண்ட³கே ॥ 105॥

நாபி⁴ப்⁴ருவோ: ஹி மத்⁴யே து ப்ரதே³ஶத்ரயஸம்யுதே ।
தா⁴ரயேத் பஞ்ச க⁴டிகா: வாயும் ஸாஇஷா ஹி வாயவீ ।
தா⁴ரணாந்ந து வாயோஸ்து யோகி³நோ ஹி ப⁴யம் ப⁴வேத் ॥ 106॥

ப்⁴ரூமத்⁴யாது³பரிஷ்டாத்து தா⁴ரயேத் பஞ்ச நாடி³கா: ।
வாயும் யோऽஸௌ ப்ரயத்நேந ஸேயமாகாஶதா⁴ரணா ॥ 107॥

ஆகாஶதா⁴ரணாம் குர்வந்ம்ரு’த்யும் ஜயதி தத்த்வத: ।
யத்ர தத்ர ஸ்தி²தோ வாபிஸுக²மத்யந்தமஶ்நுதே ॥ 108॥

ஏவம் ச தா⁴ரணா: பஞ்ச குர்யாத்³யோகீ³ விசக்ஷண: ।
ததோ த்³ரு’ட⁴ஶரீர: ஸ்யந்ம்ரு’த்யுர்தஸ்ய ந வித்³யதே ॥ 109॥

இத்யேவம் பஞ்சபூ⁴தாநாம் தா⁴ரணாம் ய: ஸமப்⁴யஸேத் ।
ப்³ரஹ்மண: ப்ரலயே வாபி ம்ரு’த்யு: தஸ்ய ந வித்³யதே ॥ 110॥

ஸமப்⁴யஸேத்ததா³ த்⁴யாநம் க⁴டிகா: ஷஷ்டிமேவ ச ।
வாயும் நிருத்⁴ய த்⁴யாயேத்து தே³வதாமிஷ்டதா³யிநீம் ॥ 111॥

ஸகு³ணத்⁴யாநமேவம் ஸ்யாத³ணிமாதி³கு³ணப்ரத³ம் ।
நிர்கு³ணம் க²மிவ த்⁴யாத்வா மோக்ஷமார்க³ம் ப்ரபத்³யதே ॥ 112॥

நிர்கு³ணத்⁴யாநஸம்பந்ந: ஸமாதி⁴ம் ச ததோऽப்⁴யஸேத் ।
தி³நத்³வாத³ஶகேநைவ ஸமாதி⁴ம் ஸமவாப்நுயாத் ॥ 113॥

வாயும் நிருத்⁴ய மேத⁴வீ ஜீவந்முக்தோ ப⁴வேத்³த்⁴ருவம் ।
ஸமாதி:⁴ ஸமதாவஸ்தா² ஜீவாத்மபரமாத்மநோ: ॥ 114॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யதி³ ஸ்யாத்³தே³ஹமுத்ஸ்ரஷ்டுமிச்சா² சேது³த்ஸ்ரு’ஜேத்ஸ்வயம் ।
பரப்³ரஹ்மணி லீயேத்த்யக்த்வா கர்மஶுபா⁴ஶுப⁴ம் ॥ 115॥

அத² சேந்நோ ஸமுத்ஸ்ரஷ்டும் ஸ்வஶரீரம் யதி³ ப்ரிஅயம் ।
ஸர்வ லோகேஷு விசரேத³ணிமாதி³கு³ணாந்வித: ॥ 116॥

கதா³சித்ஸ்வேச்ச²யா தே³வோ பூ⁴த்வா ஸ்வர்க³யபி ஸஞ்சரேத் ।
மநுஷ்யோ வாபி யக்ஷோ வா ஸ்வேச்ச²யா ஹி க்ஷணாத்³ப⁴வேத் ॥ 117॥

ஸிம்ஹோ வ்யாக்⁴ரோ க³ஜோ வா ஸ்யாதி³ச்ச²யா ஜந்துதாம் வ்ரஜேத் ।
யதே²ஷ்டமேவ வர்த்தேத யோகீ³ வித்³வாந்மஹேஶ்வர: ॥ 118॥

கவிமார்கோ³ऽயமுக்த: தே ஸாங்க்ரு’தே அஷ்டாங்க³யோக³த: ।
ஸித்³தா⁴நாம் கபிலாதீ³நாம் மதம் வக்ஷ்யே தத: பரம் ॥ 119॥

அபா⁴ஸபே⁴த³தோ பே⁴த:³ ப²ல து ஸமமேவ ஹி ।
மஹாமுத்³ராம் ப்ரவக்ஷ்யாமி பை⁴ரவேணோக்தமாத³ராத் ॥ 120॥

பார்ஷ்ணிவாமஸ்ய பாத³ஸ்ய யோநிஸ்தா²நே நியோஜயேத் ।
ப்ரஸார்ய த³க்ஷிணம் பாத³ம் ஹஸ்தாப்⁴யாம் தா⁴ரயேத்³த்³ரு’ட⁴ம் ॥ 121॥

சிபு³கம் ஹ்ரு’தி³ விந்யஸ்ய பூரயேத் வாயுநா புந: ।
கும்ப⁴கேந யதா²ஶக்த்யா தா⁴ரயித்வா து ரேசயேத் ।
வாமாங்கே³ந ஸமப்⁴யஸ்ய த³க்ஷிணாங்கே³ந சாப்⁴யஸேத் ॥ 122॥

ப்ரஸாரிதஸ்து ய: பாத³ஸ்தமுரூபரி விந்யஸேத் ।
அயமேவ மஹாப³ந்தோ⁴ முத்³ராவச்சாமுமப்⁴யஸேத் ॥ 123॥

மஹாப³ந்த⁴ஸ்தி²தோ யோகீ³ ஸ்பி²சௌ ஸந்தாட³யேச்ச²நை: ।
அயமேவ மஹாப³ந்த:⁴ ஸித்³தை:⁴ அப்⁴யஸ்யதே நரை: ॥ 124॥

அந்த: கபாலகுஹரே ஜிஹ்வாம் வ்யாவர்த்ய ப³ந்த⁴யேத் ।
ப்⁴ரூமத்⁴யே த்³ரு’ஷ்டி: அப்யேஷா முத்³ரா ப⁴வதி கே²சரீ ॥ 125॥

கண்ட²மாகுஞ்ச்ய ஹ்ரு’த³யே ஸ்தா²பயேத்³த்³ரு’ட⁴மிச்ச²யா ।
ஜலந்த⁴ரோ ப³ந்த⁴ ஏஷ அம்ரு’தத்³ரவபாலக: ॥ 126॥

நாபி⁴ஸ்தோ²ऽக்³நி: கபாலஸ்த²ஸஹஸ்ரகமலச்யுதம் ।
அம்ரு’தம் ஸர்வதா³ தாவத³ந்தர்ஜ்வலதி தே³ஹிநாம் ॥ 127॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
யதா² சாக்³நிஸ்தத³ம்ரு’தம் ந பிபே³த்து பிபே³த்ஸ்வயம் ।
யாதி பஶ்சிமமார்கே³ணைவமப்⁴யாஸத: ஸதா³ ।
அம்ரு’தம் குருதே தே³ஹம் ஜலந்த⁴ரமதோऽப்⁴யஸேத் ॥ 128॥

உட்³யாணம் து ஸஹஜம் கு³ணௌகா⁴த்கதி²தம் ஸதா³ ।
அப்⁴யஸேத³ஸ்ததந்த்³ரஸ்து வ்ரு’த்³தோ⁴ऽபி தருணோ ப⁴வேத் ॥ 129॥

நாபே:⁴ ஊர்த்⁴வமத⁴ஶ்சாபி தாநம் குர்யாத்ப்ரயத்நத: ।
ஷண்மாஸமப்⁴யஸேந்ம்ரு’த்யும் ஜயேதே³வ ந ஸம்ஶய: ॥ 130॥

மூலப³ந்த⁴ம் து யோ நித்யமப்⁴யஸேத்ஸ ச யோக³வித் ।
கு³தே³ பார்ஷ்ணிம் து ஸம்பீட்³ய வாயுமாகுஞ்சயேத்³ப³லாத் ।
வாரம் வாரம் யதா² சோர்த்⁴வம் ஸமாயாதி ஸமீரண: ॥ 131॥

ப்ராணாபாநௌ நாத³பி³ந்தூ³ மூலப³ந்தே⁴ந சைகதாம் ।
க³த்வா யோக³ஸ்ய ஸம்ஸித்³தி⁴ம் யச்ச²தோ நாத்ர ஸம்ஶய: ॥ 132॥

கரணம் விபரிதாக்²யம் ஸர்வவ்யாதி⁴விநாஶநம் ।
நித்யமப்⁴யாஸயுக்தஸ்ய ஜட²ராக்³நி: விவர்த்³த⁴தே ॥ 133॥

ஆஹாரோ ப³ஹுல: தஸ்ய ஸம்பாத்³ய: ஸாங்க்ரு’தே த்⁴ருவம் ।
அல்பாஹாரோ யதி³ ப⁴வேத³க்³நி: தா³ஹம் கரோதி வை ।
ஊர்த்⁴வம் பா⁴நுரத⁴ஶ்சந்த்³ரஸ்தத்³யதா² ஶ்ரு’ணு ஸாங்க்ரு’தே ॥ 134॥

அத:⁴ ஶிரஶ்சோர்த்⁴வபாத:³க்ஷணம் ஸ்யாத்ப்ரத²மே தி³நே ।
க்ஷணாத்து கிஞ்சித³தி⁴கமப்⁴யஸேந தி³நே தி³நே ॥ 135॥

வலிஶ்ச பலிதஶ்சைவ ஷண்மாஸோர்த்⁴வம் ந த்³ரு’ஶ்யதே ।
யாமமாத்ரம் து யோ நித்யமப்⁴யஸேத்ஸ து ஓக³வித் ॥ 136॥

வஜ்ரோலிம் கத²யிஷ்யாமி கோ³பிதம் ஸர்வயோகி³பி:⁴ ।
அதீவைதத்³ரஹஸ்யம் து ந தே³யம் யஸ்ய கஸ்யசித் ।
ஸ்வப்ராணைஸ்து ஸமோ யோ ஸ்யாத்தஸமை ச கத²யேத்³த்⁴ருவம் ॥ 137॥

ஸ்வேச்ச²யா வர்த்தமாநோऽபி யோகோ³க்தநியமை: விநா ।
வஜ்ரோலிம் யோ விஜாநதி ஸ யோகீ³ ஸித்³தி⁴பா⁴ஜந: ॥ 138॥

தத்ர வஸ்து த்³வயம் வக்ஷ்யே து³ர்லப⁴ம் யேந கேநசித் ।
லப்⁴யதே யதி³ தஸ்யைவ யோக³ஸித்³தி⁴கரம் ஸ்ம்ரு’தம் ॥ 139॥

ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
க்ஷீரமாங்கி³ரஸம் சேதி த்³வயோராத்³யம் து லப⁴தே ।
த்³விதீயம் து³ர்லப⁴ம் பும்ஸாம் ஸ்த்ரீப்⁴ய: ஸாத்⁴யமுபாயத: ।
யோகா³ப்⁴யாஸரதா ஸ்த்ரீ ச பும்ஸா யத்நேந ஸாத⁴யேத் ॥ 140॥

புமாந் ஸ்த்ரீ வா யத³ந்யோந்யம் ஸ்த்ரீபும்ஸ்த்வாநபேக்ஷயா ।
ஸ்வப்ரயோஜநமாத்ரைகஸாத⁴நாத்ஸித்³தி⁴மாப்நுயாத் ॥ 141॥

சலிதோ யதி³ பி³ந்து:³ தமுர்த்⁴வமாக்ரு’ஷ்ய ரக்ஷயேத் ।
ஏவம் ச ரக்ஷிதோ பி³ந்து:³ ம்ரு’தும் ஜயதி தத்த்வத: ॥ 142॥

மரணம் பி³ந்து³பாதேந ஜீவநம் பி³ந்து³தா⁴ரணத் ।
பி³ந்து³ரக்ஷாப்ரஸாதே³ந ஸர்வம் ஸித்⁴யதி யோகி³ந: ॥ 143॥

அமரோலிஸ்தத்³யதா² ஸ்யாத்ஸஹஜோலிஸ்ததோ யதா² ।
தத³ப்⁴யாஸக்ரம: ஶஸ்ய: ஸித்³தா⁴நாம் ஸம்ப்ரதா³யத: ॥ 144॥

ஏதை: ஸை: வைஸ்து கதி²தைரப்⁴யஸேத் காலலாலத: ।
ததோ ப⁴வேத்³ராஜயோகோ³ நாந்தரா ப⁴வதி த்⁴ருவம் ।
ந தி³ங்மாத்ரேண ஸித்³தி:⁴ ஸ்யாத³ப்⁴யஸேநைவ ஜாயதே ॥ 145॥

ராஜயோக³ம் வரம் ப்ராண்ய ஸர்வஸத்த்வவஶங்கரம் ।
ஸர்வம் குர்யாந்நவா குர்யாத்³யதா²ருசிவிசோஷ்டிதம் ॥ 146॥

யதா²ந்தரா ச யோகே³ந நிஷ்பந்நா யோகி³ந: க்ரியா ।
யதா²வஸ்தா² ஹி நிஷ்பத்திர்பு⁴க்திமுக்திப²லப்ரதா³ ॥ 147॥

ஸர்வம் தே கதி²தம் ப்³ரஹ்மந் ஸாம்ஸ்க்ரு’தே யோக³மாசர ।
இதி தஸ்ய வச: ஶ்ருத்வா ஸாம்ஸ்க்ரு’தி: யோக³மாப்தவாந் ।
ஸர்வாஸித்³தீ⁴ரவாப்யாஸௌ த³த்தாத்ரேயப்ரஸாத³த: ॥ 148॥

ய இத³ம் பட²தே நித்யம் ஸாது⁴ப்⁴ய: ஶ்ராவயேத³பி ।
தஸ்ய யோக:³ க்ரமேணைவ ஸித்⁴யத்யேவ ந ஸம்ஶய: ॥ 149॥

யோகி³நோऽப்⁴யாஸயுக்தா: யே ஹ்யரண்யேஷு க்³ரு’ஹேஷு வா ।
ப³ஹுகாலம் ரமந்தே ஸ்ம ப³ஹுகாலவிவர்ஜிதா: ॥ 150॥

தஸ்மாத்ஸர்வப்ரயத்நேந யோக³மேவ ஸதா³ப்⁴யஸேத் ।
யோகா³ப்⁴யாஸோ ஜந்மப²லம் விப²லா ஹி ததா² க்ரியா ॥ 151॥

மஹாமாயாப்ரஸாதே³ந ஸர்வேஷாமஸ்து தத்ஸுக²ம் ।
ஶ்ரீத³த்தாத்ரேய யோக³ ஶாஸ்த்ர
ஏதத்ஸர்வம் யதா²யுக்தம் தாமேவாராத⁴யேத்தத: ॥ 152॥

ய: ஸம்ஸ்ம்ரு’த்யா முநீநாமபி து³ரிதஹரோ யோக³ஸித்³தி⁴ப்ரத³ஶ்ச ।
காரூண்யாத்³ய: ப்ரவக்தா ஸுக²து:³க²ஸுஹ்ரு’த்³யோக³ஶாஸ்த்ரஸ்ய நாத:²॥ 153॥

தஸ்யாஹம் ப⁴க்திஶுந்யோऽப்யகி²லஜநகு³ரோ: ப⁴க்திசிந்தாமணே: ஹி ।
த³த்தத்ரேயஸ்ய விஷ்ணோ: பத³நலிநயுக³ம் நித்யமேவ ப்ரபத்³யே ॥ 154॥

——————–

ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்ட சக்ர பீ³ஜ ஸ்தோத்ரம்

ஶ்ரீத³த்தஷட்சக்ரஸ்தோத்ரம் அஜபாஜபஸ்தோத்ரம் ச ।
ஶ்ரீக³ணேஶாய நம: । ஶ்ரீ கு³ரவே நம: ।
அத² த்⁴யாநம் ।
தி³க³ம்ப³ரம் ப⁴ஸ்மஸுக³ந்த⁴லேபநம்
சக்ரம் த்ரிஶூலம் ட³மரும் க³தா³ம் ச ।
பத்³மாஸநஸ்த²ம் ரு’ஷிதே³வவந்தி³தம்
த³த்தாத்ரேயத்⁴யாநமபீ⁴ஷ்டஸித்³தி⁴த³ம் ॥

ௐ மூலாதா⁴ரே வாரிஜபத்ரே சதுரஸ்ரம் (ஸசதுஷ்கே)
வம்ஶம்ஷம்ஸம் வர்ணவிஶாலம் ஸுவிஶாலம் ।
ரக்தம் வர்ணம் ஶ்ரீக³ணநாத²ம் ப⁴க³வந்தம்
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 1॥ (மூலாதா⁴ர)

ஸ்வாதி⁴ஷ்டா²நே ஷட்த³லபத்ரே தநுலிங்கே³
பா³லாந்தேதத்³வர்ணவிஶாலம் ஸுவிஶாலம் ।
(வாதி³ம் லாந்தம் வர்ணவிஶேஷம் ஸுவிஶேஷம் ।)
பீதம் வர்ணம் வாக்பதிரமணம் த்³ருஹிணம் தம் (வாக்பதிரூபம், து³ஹிலாந்தம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 2॥ (ஸ்வாதி⁴ஷ்டா²ந)

நாபௌ⁴பத்³மம் பத்ரத³ஶாங்கம் ட³ப²வர்ணம் (நாபௌ⁴ஸ்தா²நே பத்ரத³ஶாப்³தே³)
லக்ஷ்மீகாந்தம் க³ருடா³ரூட⁴ம் நரவீரம் । (மணிபூரே ।)
நீலம்வர்ணம் நிர்கு³ணரூபம் நிக³மாந்தம் (நிக³மாக்ஷம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 3॥ (மணிபூர)

ஹ்ரு’த்பத்³மாந்தே த்³வாத³ஶபத்ரே க: வர்ணே (கண்ட²வர்ணே)
ஶம்போ⁴ஶைவம் பூர்ணமயந்தம் ஶஶிவர்ணம் । (ஶம்போ⁴ஶேஶம் ஜீவவிஶேஷம்
ஸ்மரயந்தம் ।)
(ஸ்ரு’ஷ்டிஸ்தி²த்தம் குருவந்தம் ஶிவஶக்திம்
அநாஹதாந்தே வ்ரு’ஷபா⁴ரூட⁴ம் ஶிவரூபம் ।)1

ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்டசக்ரபீ³ஜஸ்தோத்ரம்
ஸ்வர்க³ஸ்தி²த்யம் குருவிந்தூ³தம் ஶிவஶக்திம் (குர்வாணம் த⁴வளாங்க³ம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 4 ॥ (அநாஹத)

கண்ட²ஸ்தா²நே சக்ரவிஶுத்³தே⁴ கமலாந்தே
சந்த்³ராகாரே ஷோட³ஶபத்ரே ஸ்வரவர்ணே ।
மாயாதீ⁴ஶம் தைஜஸரூபம் ப⁴க³வந்தம் (ஜீவஶிவம் தம் நிஜமூர்திம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 5॥ (விஶுத்³த⁴)

ஆஜ்ஞாசக்ரே ப்⁴ரு’குடிஸ்தா²நே த்³வித³லாந்தே (அக்³நிஶ்சக்ரே)
ஹம் ஸம் பீ³ஜம் ஜ்ஞாநஸமுத்³ரம் கு³ரூமூர்தி: । (ஹம் க்ஷம், கு³ரூமூர்திம்)
வித்³யுத்வர்ணம் ஜ்ஞாநமயம் தம் விருபாக்ஷம் (நிடிலாக்ஷம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 6॥ (ஆஜ்ஞா)

மூர்த்⁴நிஸ்தா²நே வாரிஜபத்ரே ஶஶிபீ³ஜம்
ஶுப்⁴ரம் வர்ணம் பத்ரஸஹஸ்ரம் ஸுவிஶாலம் । (லலநாக்²யே ।)
ஹம் பீ³ஜாக்²யம் வர்ணஸஹஸ்ரம் துரியம் தம் (துர்யாந்தம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 7॥ (ஸஹஸ்ரார)

ப்³ரஹ்மாநந்த³ம் ப்³ரஹ்மமுகுந்த³ம் ப⁴க³வந்தம்
ப்³ரஹ்மஜ்ஞாநம் ப்³ரஹ்மமயம் தம் ஸ்வயமேவம் । (ஜ்ஞாநமயம்)
(ஸத்யம் ஜ்ஞாநம் ஸத்யமநந்தம் ப⁴க³ரூபம் ।)
ப்³ரஹ்மாத்மாநம் ப்³ரஹ்மமுநீத்³ரம் ப⁴ஸிதாப⁴ம் (பரமாத்மாநம் ப்³ரஹ்மமுநீத்³ரம் ப⁴ஸிதாங்க³ம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 8॥ (பூர்ணப்³ரஹ்மஸ்வரூப)

ஶாந்தாகாரம் ஶேஷஶயாநம் ஸுரவந்த்³யம்
காந்தாநாத²ம் கோமலகா³த்ரம் கமலாக்ஷம் ।
சிந்தாரத்நம் சித்³க⁴நபூர்ணம் த்³விஜராஜ்யம் (த்³விஜராஜம்)
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 9॥

சிதஓங்காரம் த்⁴வநிநாதே³ ச ஸ்வச்ச²ந்தே³
ஆகாராந்தேऽக்ஷரவணீதே கு³ணரூபே ।
வேதா³ந்தார்த²ம் ஜ்ஞாநஸ்வரூபம் நிஜபோ³த⁴ம்
த³த்தாத்ரேயம் ஶ்ரீகு³ரூமூர்திம் ப்ரணதோऽஸ்மி ॥ 9॥

இதி ஶ்ரீ அஜபாதந்த்ரே த³த்தாத்ரேயஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் । ஶுப⁴ம் ப⁴வது ।

ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்டசக்ரபீ³ஜஸ்தோத்ரம்

(இதி ஶ்ரீமத்³ஶங்கராசார்யவிரசிதம் ஶ்ரீத³த்தாத்ரேய அஷ்டசக்ரபீ³ஜஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।)

———————————————-

॥ ஶ்ரீ த³த்தாத்ரேய வஜ்ர கவசம் ॥
ருஷய ஊசு꞉ |
கத²ம் ஸங்கல்பஸித்³தி⁴꞉ ஸ்யாத்³வேத³வ்யாஸ கலௌயுகே³ |
த⁴ர்மார்த²காமமோக்ஷாணாம் ஸாத⁴னம் கிமுதா³ஹ்ருதம் || 1 ||

வ்யாஸ உவாச |
ஶ்ருண்வந்து ருஷயஸ்ஸர்வே ஶீக்⁴ரம் ஸங்கல்பஸாத⁴னம் |
ஸக்ருது³ச்சாரமாத்ரேண போ⁴க³மோக்ஷப்ரதா³யகம் || 2 ||

கௌ³ரீஶ்ருங்கே³ ஹிமவத꞉ கல்பவ்ருக்ஷோபஶோபி⁴தம் |
தீ³ப்தே தி³வ்யமஹாரத்ன ஹேமமண்ட³பமத்⁴யக³ம் || 3 ||

ரத்னஸிம்ஹாஸனாஸீனம் ப்ரஸன்னம் பரமேஶ்வரம் |
மந்த³ஸ்மிதமுகா²ம்போ⁴ஜம் ஶங்கரம் ப்ராஹ பார்வதீ || 4 ||

ஶ்ரீதே³வீ உவாச |
தே³வதே³வ மஹாதே³வ லோகஶங்கர ஶங்கர |
மந்த்ரஜாலானி ஸர்வாணி யந்த்ரஜாலானி க்ருத்ஸ்னஶ꞉ || 5 ||

தந்த்ரஜாலான்யனேகானி மயா த்வத்த꞉ ஶ்ருதானி வை |
இதா³னீம் த்³ரஷ்டுமிச்சா²மி விஶேஷேண மஹீதலம் || 6 ||

இத்யுதீ³ரிதமாகர்ண்ய பார்வத்யா பரமேஶ்வர꞉ |
கரேணாம்ருஜ்ய ஸந்தோஷாத் பார்வதீம் ப்ரத்யபா⁴ஷத || 7 ||

மயேதா³னீம் த்வயா ஸார்த⁴ம் வ்ருஷமாருஹ்ய க³ம்யதே |
இத்யுக்த்வா வ்ருஷமாருஹ்ய பார்வத்யா ஸஹ ஶங்கர꞉ || 8 ||

யயௌ பூ⁴மண்ட³லம் த்³ரஷ்டும் கௌ³ர்யாஶ்சித்ராணி த³ர்ஶயன் |
க்வசித் விந்த்⁴யாசலப்ராந்தே மஹாரண்யே ஸுது³ர்க³மே || 9 ||

தத்ர வ்யாஹர்துமாயாந்தம் பி⁴ல்லம் பரஶுதா⁴ரிணம் |
வத்⁴யமானம் மஹாவ்யாக்⁴ரம் நக²த³ம்ஷ்ட்ராபி⁴ராவ்ருதம் || 10 ||

அதீவ சித்ரசாரித்ர்யம் வஜ்ரகாயஸமாயுதம் |
அப்ரயத்னமனாயாஸமகி²ன்னம் ஸுக²மாஸ்தி²தம் || 11 ||

பலாயந்தம் ம்ருக³ம் பஶ்சாத்³வ்யாக்⁴ரோ பீ⁴த்யா பலாயத꞉ |
ஏததா³ஶ்சர்யமாலோக்ய பார்வதீ ப்ராஹ ஶங்கரம் || 12 ||

ஶ்ரீ பார்வத்யுவாச |
கிமாஶ்சர்யம் கிமாஶ்சர்யமக்³ரே ஶம்போ⁴ நிரீக்ஷ்யதாம் |
இத்யுக்த꞉ ஸ தத꞉ ஶம்பு⁴ர்த்³ருஷ்ட்வா ப்ராஹ புராணவித் || 13 ||

ஶ்ரீ ஶங்கர உவாச |
கௌ³ரி வக்ஷ்யாமி தே சித்ரமவாங்மானஸகோ³சரம் |
அத்³ருஷ்டபூர்வமஸ்மாபி⁴ர்னாஸ்தி கிஞ்சின்ன குத்ரசித் || 14 ||

மயா ஸம்யக் ஸமாஸேன வக்ஷ்யதே ஶ்ருணு பார்வதி |
அயம் தூ³ரஶ்ரவா நாம பி⁴ல்ல꞉ பரமதா⁴ர்மிக꞉ || 15 ||

ஸமித்குஶப்ரஸூனானி கந்த³மூலப²லாதி³கம் |
ப்ரத்யஹம் விபினம் க³த்வா ஸமாதா³ய ப்ரயாஸத꞉ || 16 ||

ப்ரியே பூர்வம் முனீந்த்³ரேப்⁴ய꞉ ப்ரயச்ச²தி ந வாஞ்ச²தி |
தே(அ)பி தஸ்மின்னபி த³யாம் குர்வதே ஸர்வமௌனின꞉ || 17 ||

த³லாத³னோ மஹாயோகீ³ வஸன்னேவ நிஜாஶ்ரமே |
கதா³சித³ஸ்மரத் ஸித்³த⁴ம் த³த்தாத்ரேயம் தி³க³ம்ப³ரம் || 18 ||

த³த்தாத்ரேய꞉ ஸ்மர்த்ருகா³மீ சேதிஹாஸம் பரீக்ஷிதும் |
தத்க்ஷணாத் ஸோ(அ)பி யோகீ³ந்த்³ரோ த³த்தாத்ரேய꞉ ஸமுத்தி²த꞉ || 19 ||

தம் த்³ருஷ்ட்வாஶ்சர்யதோஷாப்⁴யாம் த³லாத³னமஹாமுனி꞉ |
ஸம்பூஜ்யாக்³ரே விஷீத³ந்தம் த³த்தாத்ரேயமுவாச தம் || 20 ||

மயோபஹூத꞉ ஸம்ப்ராப்தோ த³த்தாத்ரேய மஹாமுனே |
ஸ்மர்த்ருகா³மீ த்வமித்யேதத் கிம் வத³ந்தீ பரீக்ஷிதும் || 21 ||

மயாத்³ய ஸம்ஸ்ம்ருதோ(அ)ஸி த்வமபராத⁴ம் க்ஷமஸ்வ மே |
த³த்தாத்ரேயோ முனிம் ப்ராஹ மம ப்ரக்ருதிரீத்³ருஶீ || 22 ||

அப⁴க்த்யா வா ஸுப⁴க்த்யா வா ய꞉ ஸ்மரேன்னாமனந்யதீ⁴꞉ |
ததா³னீம் தமுபாக³ம்ய த³தா³மி தத³பீ⁴ப்ஸிதம் || 23 ||

த³த்தாத்ரேயோ முனிம் ப்ராஹ த³லாத³னமுனீஶ்வரம் |
யதி³ஷ்டம் தத்³வ்ருணீஷ்வ த்வம் யத் ப்ராப்தோ(அ)ஹம் த்வயா ஸ்ம்ருத꞉ || 24 ||

த³த்தாத்ரேயம் முனிம் ப்ராஹ மயா கிமபி நோச்யதே |
த்வச்சித்தே யத் ஸ்தி²தம் தன்மே ப்ரயச்ச² முனிபுங்க³வ || 25 ||

ஶ்ரீ த³த்தாத்ரேய உவாச |
மமாஸ்தி வஜ்ரகவசம் க்³ருஹாணேத்யவத³ன்முனிம் |
ததே²த்யங்கீ³க்ருதவதே த³லாத³முனயே முனி꞉ || 26 ||

ஸ்வவஜ்ரகவசம் ப்ராஹ ருஷிச்ச²ந்த³꞉ புரஸ்ஸரம் |
ந்யாஸம் த்⁴யானம் ப²லம் தத்ர ப்ரயோஜனமஶேஷத꞉ || 27 ||

அஸ்ய ஶ்ரீத³த்தாத்ரேய வஜ்ரகவச ஸ்தோத்ரமந்த்ரஸ்ய, கிராதரூபீ மஹாருத்³ரருஷி꞉, அனுஷ்டுப் ச²ந்த³꞉, ஶ்ரீத³த்தாத்ரேயோ தே³வதா, த்³ராம் பீ³ஜம், ஆம் ஶக்தி꞉, க்ரௌம் கீலகம்।
ஓம் ஆத்மனே நம꞉
ஓம் த்³ரீம் மனஸே நம꞉
ஓம் ஆம் த்³ரீம் ஶ்ரீம் ஸௌ꞉
ஓம் க்லாம் க்லீம் க்லூம் க்லைம் க்லௌம் க்ல꞉
ஶ்ரீ த³த்தாத்ரேய ப்ரஸாத³ ஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக³꞉

கரன்யாஸ꞉ |
ஓம் த்³ராம் அங்கு³ஷ்டா²ப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரீம் தர்ஜனீப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரூம் மத்⁴யமாப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரைம் அனாமிகாப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரௌம் கனிஷ்டி²காப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ர꞉ கரதலகரப்ருஷ்டா²ப்⁴யாம் நம꞉ |

ஹ்ருத³யாதி³ன்யாஸ꞉ |
ஓம் த்³ராம் ஹ்ருத³யாய நம꞉ |
ஓம் த்³ரீம் ஶிரஸே ஸ்வாஹா |
ஓம் த்³ரூம் ஶிகா²யை வஷட் |
ஓம் த்³ரைம் கவசாய ஹும் |
ஓம் த்³ரௌம் நேத்ரத்ரயாய வௌஷட் |
ஓம் த்³ர꞉ அஸ்த்ராய ப²ட் |
ஓம் பூ⁴ர்பு⁴வஸ்ஸுவரோமிதி தி³க்³ப³ந்த⁴꞉ |

த்⁴யானம் |
ஜக³த³ங்குரகந்தா³ய ஸச்சிதா³னந்த³மூர்தயே |
த³த்தாத்ரேயாய யோகீ³ந்த்³ரசந்த்³ராய பரமாத்மனே || 1 ||

கதா³ யோகீ³ கதா³ போ⁴கீ³ கதா³ நக்³ன꞉ பிஶாசவத் |
த³த்தாத்ரேயோ ஹரி꞉ ஸாக்ஷாத் பு⁴க்திமுக்திப்ரதா³யக꞉ || 2 ||

வாராணஸீபுரஸ்னாயீ கொல்ஹாபுரஜபாத³ர꞉ |
மாஹுரீபுரபீ⁴க்ஷாஶீ ஸஹ்யஶாயீ தி³க³ம்ப³ர꞉ || 3 ||

இந்த்³ரனீல ஸமாகார꞉ சந்த்³ரகாந்திஸமத்³யுதி꞉ |
வைடூ⁴ர்ய ஸத்³ருஶஸ்பூ²ர்தி꞉ சலத்கிஞ்சிஜ்ஜடாத⁴ர꞉ || 4 ||

ஸ்னிக்³த⁴தா⁴வல்ய யுக்தாக்ஷோ(அ)த்யந்தனீல கனீனிக꞉ |
ப்⁴ரூவக்ஷ꞉ஶ்மஶ்ருனீலாங்க꞉ ஶஶாங்கஸத்³ருஶானந꞉ || 5 ||

ஹாஸனிர்ஜித நிஹார꞉ கண்ட²னிர்ஜித கம்பு³க꞉ |
மாம்ஸலாம்ஸோ தீ³ர்க⁴பா³ஹு꞉ பாணினிர்ஜிதபல்லவ꞉ || 6 ||

விஶாலபீனவக்ஷாஶ்ச தாம்ரபாணிர்த³லோத³ர꞉ |
ப்ருது²லஶ்ரோணிலலிதோ விஶாலஜக⁴னஸ்த²ல꞉ || 7 ||

ரம்பா⁴ஸ்தம்போ⁴பமானோரு꞉ ஜானுபூர்வைகஜங்க⁴க꞉ |
கூ³ட⁴கு³ல்ப²꞉ கூர்மப்ருஷ்டோ² லஸத்வாதோ³பரிஸ்த²ல꞉ || 8 ||

ரக்தாரவிந்த³ஸத்³ருஶ ரமணீய பதா³த⁴ர꞉ |
சர்மாம்ப³ரத⁴ரோ யோகீ³ ஸ்மர்த்ருகா³மீ க்ஷணேக்ஷணே || 9 ||

ஜ்ஞானோபதே³ஶனிரதோ விபத்³த⁴ரணதீ³க்ஷித꞉ |
ஸித்³தா⁴ஸனஸமாஸீன ருஜுகாயோ ஹஸன்முக²꞉ || 10 ||

வாமஹஸ்தேன வரதோ³ த³க்ஷிணேனாப⁴யங்கர꞉ |
பா³லோன்மத்த பிஶாசீபி⁴꞉ க்வசித்³ யுக்த꞉ பரீக்ஷித꞉ || 11 ||

த்யாகீ³ போ⁴கீ³ மஹாயோகீ³ நித்யானந்தோ³ நிரஞ்ஜன꞉ |
ஸர்வரூபீ ஸர்வதா³தா ஸர்வக³꞉ ஸர்வகாமத³꞉ || 12 ||

ப⁴ஸ்மோத்³தூ⁴ளித ஸர்வாங்கோ³ மஹாபாதகனாஶன꞉ |
பு⁴க்திப்ரதோ³ முக்திதா³தா ஜீவன்முக்தோ ந ஸம்ஶய꞉ || 13 ||

ஏவம் த்⁴யாத்வா(அ)னந்யசித்தோ மத்³வஜ்ரகவசம் படே²த் |
மாமேவ பஶ்யன்ஸர்வத்ர ஸ மயா ஸஹ ஸஞ்சரேத் || 14 ||

தி³க³ம்ப³ரம் ப⁴ஸ்மஸுக³ந்த⁴ லேபனம்
சக்ரம் த்ரிஶூலம் ட⁴மரும் க³தா³யுத⁴ம் |
பத்³மாஸனம் யோகி³முனீந்த்³ரவந்தி³தம்
த³த்தேதினாமஸ்மரணேன நித்யம் || 15 ||

பஞ்சோபசாரபூஜா |

ஓம் லம் ப்ருதி²வீதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
க³ந்த⁴ம் பரிகல்பயாமி|

ஓம் ஹம் ஆகாஶதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
புஷ்பம் பரிகல்பயாமி |

ஓம் யம் வாயுதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
தூ⁴பம் பரிகல்பயாமி |

ஓம் ரம் வஹ்னிதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
தீ³பம் பரிகல்பயாமி |

ஓம் வம் அம்ருத தத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
அம்ருதனைவேத்³யம் பரிகல்பயாமி |

ஓம் ஸம் ஸர்வதத்த்வாத்மனே ஶ்ரீத³த்தாத்ரேயாய நம꞉ |
தாம்பூ³லாதி³ஸர்வோபசாரான் பரிகல்பயாமி |

(அனந்தரம் ‘ஓம் த்³ராம்॥।’ இதி மூலமந்த்ரம் அஷ்டோத்தரஶதவாரம் (108) ஜபேத்)

அத² வஜ்ரகவசம் |

ஓம் த³த்தாத்ரேயாய ஶிர꞉பாது ஸஹஸ்ராப்³ஜேஷு ஸம்ஸ்தி²த꞉ |
பா⁴லம் பாத்வானஸூயேய꞉ சந்த்³ரமண்ட³லமத்⁴யக³꞉ || 1 ||

கூர்சம் மனோமய꞉ பாது ஹம் க்ஷம் த்³வித³லபத்³மபூ⁴꞉ |
ஜ்யோதிரூபோ(அ)க்ஷிணீபாது பாது ஶப்³தா³த்மக꞉ ஶ்ருதீ || 2 ||

நாஸிகாம் பாது க³ந்தா⁴த்மா முக²ம் பாது ரஸாத்மக꞉ |
ஜிஹ்வாம் வேதா³த்மக꞉ பாது த³ந்தோஷ்டௌ² பாது தா⁴ர்மிக꞉ || 3 ||

கபோலாவத்ரிபூ⁴꞉ பாது பாத்வஶேஷம் மமாத்மவித் |
ஸர்வாத்மா ஷோட³ஶாராப்³ஜஸ்தி²த꞉ ஸ்வாத்மா(அ)வதாத்³ க³லம் || 4 ||

ஸ்கந்தௌ⁴ சந்த்³ரானுஜ꞉ பாது பு⁴ஜௌ பாது க்ருதாதி³பூ⁴꞉ |
ஜத்ருணீ ஶத்ருஜித் பாது பாது வக்ஷஸ்த²லம் ஹரி꞉ || 5 ||

காதி³டா²ந்தத்³வாத³ஶாரபத்³மகோ³ மருதா³த்மக꞉ |
யோகீ³ஶ்வரேஶ்வர꞉ பாது ஹ்ருத³யம் ஹ்ருத³யஸ்தி²த꞉ || 6 ||

பார்ஶ்வே ஹரி꞉ பார்ஶ்வவர்தீ பாது பார்ஶ்வஸ்தி²த꞉ ஸ்ம்ருத꞉ |
ஹட²யோகா³தி³யோக³ஜ்ஞ꞉ குக்ஷிம் பாது க்ருபானிதி⁴꞉ || 7 ||

ட³காராதி³ ப²காராந்த த³ஶாரஸரஸீருஹே |
நாபி⁴ஸ்த²லே வர்தமானோ நாபி⁴ம் வஹ்ன்யாத்மகோ(அ)வது || 8 ||

வஹ்னிதத்த்வமயோ யோகீ³ ரக்ஷதான்மணிபூரகம் |
கடிம் கடிஸ்த²ப்³ரஹ்மாண்ட³வாஸுதே³வாத்மகோ(அ)வது || 9 ||

வகாராதி³ லகாராந்த ஷட்பத்ராம்பு³ஜபோ³த⁴க꞉ |
ஜலதத்த்வமயோ யோகீ³ ஸ்வாதி⁴ஷ்டா²னம் மமாவது || 10 ||

ஸித்³தா⁴ஸன ஸமாஸீன ஊரூ ஸித்³தே⁴ஶ்வரோ(அ)வது |
வாதி³ஸாந்த சதுஷ்பத்ரஸரோருஹ நிபோ³த⁴க꞉ || 11 ||

மூலாதா⁴ரம் மஹீரூபோ ரக்ஷதாத்³ வீர்யனிக்³ரஹீ |
ப்ருஷ்ட²ம் ச ஸர்வத꞉ பாது ஜானுன்யஸ்தகராம்பு³ஜ꞉ || 12 ||

ஜங்கே⁴ பாத்வவதூ⁴தேந்த்³ர꞉ பாத்வங்க்⁴ரீ தீர்த²பாவன꞉ |
ஸர்வாங்க³ம் பாது ஸர்வாத்மா ரோமாண்யவது கேஶவ꞉ || 13 ||

சர்ம சர்மாம்ப³ர꞉ பாது ரக்தம் ப⁴க்திப்ரியோ(அ)வது |
மாம்ஸம் மாம்ஸகர꞉ பாது மஜ்ஜாம் மஜ்ஜாத்மகோ(அ)வது || 14 ||

அஸ்தீ²னி ஸ்தி²ரதீ⁴꞉ பாயான்மேதா⁴ம் வேதா⁴꞉ ப்ரபாலயேத் |
ஶுக்ரம் ஸுக²கர꞉ பாது சித்தம் பாது த்³ருடா⁴க்ருதி꞉ || 15 ||

மனோபு³த்³தி⁴மஹங்காரம் ஹ்ருஷீகேஶாத்மகோ(அ)வது |
கர்மேந்த்³ரியாணி பாத்வீஶ꞉ பாது ஜ்ஞானேந்த்³ரியாண்யஜ꞉ || 16 ||

ப³ந்தூ⁴ன் ப³ந்தூ⁴த்தம꞉ பாயாச்ச²த்ருப்⁴ய꞉ பாது ஶத்ருஜித் |
க்³ருஹாராமத⁴னக்ஷேத்ரபுத்ராதீ³ன் ஶங்கரோ(அ)வது || 17 ||

பா⁴ர்யாம் ப்ரக்ருதிவித் பாது பஶ்வாதீ³ன் பாது ஶார்ங்க³ப்⁴ருத் |
ப்ராணான் பாது ப்ரதா⁴னஜ்ஞோ ப⁴க்ஷ்யாதீ³ன் பாது பா⁴ஸ்கர꞉ || 18 ||

ஸுக²ம் சந்த்³ராத்மக꞉ பாது து³꞉கா²த் பாது புராந்தக꞉ |
பஶூன் பஶுபதி꞉ பாது பூ⁴திம் பூ⁴தேஶ்வரோ மம || 19 ||

ப்ராச்யாம் விஷஹர꞉ பாது பாத்வாக்³னேய்யாம் மகா²த்மக꞉ |
யாம்யாம் த⁴ர்மாத்மக꞉ பாது நைர்ருத்யாம் ஸர்வவைரிஹ்ருத் || 20 ||

வராஹ꞉ பாது வாருண்யாம் வாயவ்யாம் ப்ராணதோ³(அ)வது |
கௌபே³ர்யாம் த⁴னத³꞉ பாது பாத்வைஶான்யாம் மஹாகு³ரு꞉ || 21 ||

ஊர்த்⁴வம் பாது மஹாஸித்³த⁴꞉ பாத்வத⁴ஸ்தாஜ்ஜடாத⁴ர꞉ |
ரக்ஷாஹீனம் து யத் ஸ்தா²னம் ரக்ஷத்வாதி³முனீஶ்வர꞉ || 22 ||

கரன்யாஸ꞉ |
ஓம் த்³ராம் அங்கு³ஷ்டா²ப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரீம் தர்ஜனீப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரூம் மத்⁴யமாப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரைம் அனாமிகாப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ரௌம் கனிஷ்டி²காப்⁴யாம் நம꞉ |
ஓம் த்³ர꞉ கரதலகரப்ருஷ்டா²ப்⁴யாம் நம꞉ |

ஹ்ருத³யாதி³ன்யாஸ꞉ |
ஓம் த்³ராம் ஹ்ருத³யாய நம꞉ |
ஓம் த்³ரீம் ஶிரஸே ஸ்வாஹா |
ஓம் த்³ரூம் ஶிகா²யை வஷட் |
ஓம் த்³ரைம் கவசாய ஹும் |
ஓம் த்³ரௌம் நேத்ரத்ரயாய வௌஷட் |
ஓம் த்³ர꞉ அஸ்த்ராய ப²ட் |
ஓம் பூ⁴ர்பு⁴வஸ்ஸுவரோமிதி தி³க்³விமோக꞉ |

ப²லஶ்ருதி ||

ஏதன்மே வஜ்ரகவசம் ய꞉ படே²த் ஶ்ருணுயாத³பி |
வஜ்ரகாயஶ்சிரஞ்ஜீவீ த³த்தாத்ரேயோ(அ)ஹமப்³ருவம் || 23 ||

த்யாகீ³ போ⁴கீ³ மஹாயோகீ³ ஸுக²து³꞉க²விவர்ஜித꞉ |
ஸர்வத்ர ஸித்³த⁴ஸங்கல்போ ஜீவன்முக்தோ(அ)த்³யவர்ததே || 24 ||

இத்யுக்த்வாந்தர்த³தே⁴ யோகீ³ த³த்தாத்ரேயோ தி³க³ம்ப³ர꞉ |
த³லாத³னோ(அ)பி தஜ்ஜப்த்வா ஜீவன்முக்த꞉ ஸ வர்ததே || 25 ||

பி⁴ல்லோ தூ³ரஶ்ரவா நாம ததா³னீம் ஶ்ருதவானித³ம் |
ஸக்ருச்ச்²ரவணமாத்ரேண வஜ்ராங்கோ³(அ)ப⁴வத³ப்யஸௌ || 26 ||

இத்யேதத்³ வஜ்ரகவசம் த³த்தாத்ரேயஸ்ய யோகி³ன꞉ |
ஶ்ருத்வா ஶேஷம் ஶம்பு⁴முகா²த் புனரப்யாஹ பார்வதீ || 27 ||

ஶ்ரீ பார்வத்யுவாச |

ஏதத் கவச மாஹாத்ம்யம் வத³ விஸ்தரதோ மம |
குத்ர கேன கதா³ ஜாப்யம் கியஜ்ஜாப்யம் கத²ம் கத²ம் || 28 ||

உவாச ஶம்பு⁴ஸ்தத் ஸர்வம் பார்வத்யா வினயோதி³தம் |

ஶ்ரீபரமேஶ்வர உவாச |

ஶ்ருணு பார்வதி வக்ஷ்யாமி ஸமாஹிதமனாவிலம் || 29 ||

த⁴ர்மார்த²காமமோக்ஷாணாமித³மேவ பராயணம் |
ஹஸ்த்யஶ்வரத²பாதா³தி ஸர்வைஶ்வர்ய ப்ரதா³யகம் || 30 ||

புத்ரமித்ரகளத்ராதி³ ஸர்வஸந்தோஷஸாத⁴னம் |
வேத³ஶாஸ்த்ராதி³வித்³யானாம் விதா⁴னம் பரமம் ஹி தத் || 31 ||

ஸங்கீ³த ஶாஸ்த்ர ஸாஹித்ய ஸத்கவித்வ விதா⁴யகம் |
பு³த்³தி⁴ வித்³யா ஸ்ம்ருதி ப்ரஜ்ஞா மதி ப்ரௌடி⁴ப்ரதா³யகம் || 32 ||

ஸர்வஸந்தோஷகரணம் ஸர்வது³꞉க²னிவாரணம் |
ஶத்ருஸம்ஹாரகம் ஶீக்⁴ரம் யஶ꞉கீர்திவிவர்த⁴னம் || 33 ||

அஷ்டஸங்க்²யா மஹாரோகா³꞉ ஸன்னிபாதாஸ்த்ரயோத³ஶ |
ஷண்ணவத்யக்ஷிரோகா³ஶ்ச விம்ஶதிர்மேஹரோக³கா꞉ || 34 ||

அஷ்டாத³ஶது குஷ்டா²னி கு³ல்மான்யஷ்டவிதா⁴ன்யபி |
அஶீதிர்வாதரோகா³ஶ்ச சத்வாரிம்ஶத்து பைத்திகா꞉ || 35 ||

விம்ஶதி꞉ ஶ்லேஷ்மரோகா³ஶ்ச க்ஷயசாதுர்தி²காத³ய꞉ |
மந்த்ரயந்த்ரகுயோகா³த்³யா꞉ கல்பதந்த்ராதி³னிர்மிதா꞉ || 36 ||

ப்³ரஹ்மராக்ஷஸ வேதாலகூஷ்மாண்டா³தி³ க்³ரஹோத்³ப⁴வா꞉ |
ஸங்க³ஜா தே³ஶகாலஸ்தா²ஸ்தாபத்ரயஸமுத்தி²தா꞉ || 37 ||

நவக்³ரஹஸமுத்³பூ⁴தா மஹாபாதக ஸம்ப⁴வா꞉ |
ஸர்வே ரோகா³꞉ ப்ரணஶ்யந்தி ஸஹஸ்ராவர்தனாத்³ த்⁴ருவம் || 38 ||

அயுதாவ்ருத்திமாத்ரேண வந்த்⁴யா புத்ரவதீ ப⁴வேத் |
அயுதத்³விதயாவ்ருத்த்யா ஹ்யபம்ருத்யுஜயோ ப⁴வேத் || 39 ||

அயுதத்ரிதயாச்சைவ கே²சரத்வம் ப்ரஜாயதே |
ஸஹஸ்ராயுதத³ர்வாக் ஸர்வகார்யாணி ஸாத⁴யேத் || 40 ||

லக்ஷாவ்ருத்த்யா ஸர்வஸித்³தி⁴ர்ப⁴வத்யேவ ந ஸம்ஶய꞉ || 41 ||

விஷவ்ருக்ஷஸ்ய மூலேஷு திஷ்ட²ன் வை த³க்ஷிணாமுக²꞉ |
குருதே மாஸமாத்ரேண வைரிணம் விகலேந்த்³ரியம் || 42 ||

ஔது³ம்ப³ரதரோர்மூலே வ்ருத்³தி⁴காமேன ஜாப்யதே |
ஶ்ரீவ்ருக்ஷமூலே ஶ்ரீகாமீ திந்த்ரிணீ ஶாந்திகர்மணி || 43 ||

ஓஜஸ்காமோ(அ)ஶ்வத்த²மூலே ஸ்த்ரீகாமை꞉ ஸஹகாரகே |
ஜ்ஞானார்தீ² துலஸீமூலே க³ர்ப⁴கே³ஹே ஸுதார்தி²பி⁴꞉ || 44 ||

த⁴னார்தி²பி⁴ஸ்து ஸுக்ஷேத்ரே பஶுகாமைஸ்து கோ³ஷ்ட²கே |
தே³வாலயே ஸர்வகாமைஸ்தத்காலே ஸர்வத³ர்ஶிதம் || 45 ||

நாபி⁴மாத்ரஜலே ஸ்தி²த்வா பா⁴னுமாலோக்ய யோ ஜபேத் |
யுத்³தே⁴ வா ஶாஸ்த்ரவாதே³ வா ஸஹஸ்ரேண ஜயோ ப⁴வேத் || 46 ||

கண்ட²மாத்ரே ஜலே ஸ்தி²த்வா யோ ராத்ரௌ கவசம் படே²த் |
ஜ்வராபஸ்மாரகுஷ்டா²தி³ தாபஜ்வரனிவாரணம் || 47 ||

யத்ர யத் ஸ்யாத் ஸ்தி²ரம் யத்³யத் ப்ரஸக்தம் தன்னிவர்ததே |
தேன தத்ர ஹி ஜப்தவ்யம் தத꞉ ஸித்³தி⁴ர்ப⁴வேத்³த்⁴ருவம் || 48 ||

இத்யுக்தவான் ஶிவோ கௌ³ர்வை ரஹஸ்யம் பரமம் ஶுப⁴ம் |
ய꞉ படே²த் வஜ்ரகவசம் த³த்தாத்ரேய ஸமோ ப⁴வேத் || 49 ||

ஏவம் ஶிவேன கதி²தம் ஹிமவத்ஸுதாயை
ப்ரோக்தம் த³லாத³முனயே(அ)த்ரிஸுதேன பூர்வம் |
ய꞉ கோ(அ)பி வஜ்ரகவசம் பட²தீஹ லோகே
த³த்தோபமஶ்சரதி யோகி³வரஶ்சிராயு꞉ || 50 ||

இதி ஶ்ரீ ருத்³ரயாமளே ஹிமவத்க²ண்டே³ மந்த்ரஶாஸ்த்ரே உமாமஹேஶ்வரஸம்வாதே³ ஶ்ரீ த³த்தாத்ரேய வஜ்ர கவச ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராம பக்தி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –ஸ்ரீ அபூர்வ ராமாயணம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் ––ஸ்ரீ ராமாயணத்தில் 18 குஹ்ய தம விஷயங்கள் –

January 22, 2024

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

வைதேஹீ ஸஹிதம் சுரத்ரும தலே ஹைமே மஹா மண்டபே,
மத்யே புஷ்பகமாஸனே மணி மயே வீராஸனே சுஸ்திதம்,

———-

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்-பொன் மானைக் கொல்லல்-சீதா தேவி கடத்தல்–ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு-உரையாடல்-வாலீ அழிவு,-கடல் தாண்டல்-இலங்கை எரிப்பு-பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ஸ்ரீ ராமாயணம்

—————

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவ தனுசா க்ருஹீத சீதா ஹஸ்த கரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

—————

ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

————

ஒரே சுலோகத்தில் ஸ்ரீ சுந்தரகாண்டம்

யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே

க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ர புஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே

——————

ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
பால காண்டம் –77-சர்க்கங்கள் –2266-ஸ்லோகங்கள்
அயோத்யா காண்டம் –119-சர்க்கங்கள் –4185-ஸ்லோகங்கள்
ஆரண்ய காண்டம் –75-சர்க்கங்கள் –2441-ஸ்லோகங்கள்
கிஷ்கிந்தா காண்டம் –67-சர்க்கங்கள் –2453-ஸ்லோகங்கள்
ஸூ ந்தர காண்டம் –68-சர்க்கங்கள் –2807-ஸ்லோகங்கள்
யுத்த காண்டம் –128-சர்க்கங்கள் –5675-ஸ்லோகங்கள்
உத்தர காண்டம் -111 சர்க்கங்கள் -3373-ஸ்லோகங்கள்
மொத்தம் -645 சர்க்கங்கள் –23200 ஸ்லோகங்கள்

————

ஸ்ரீ ராமாயணத்தை இயற்றிய ஸ்ரீ வால்மீகி முனிவரின் அவதார தினம் வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’
எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ வால்மீகியின் இயற்பெயர் ஸ்ரீ ரத்னாகர்.

ஸ்ரீ திருநீர்மலை திவ்வியதேசத்தை தரிசிக்க வந்த ஸ்ரீ வால்மீகி முனிவர், தனது காவிய நாயகனாம் ஸ்ரீராமனுக்கு
இந்தக் கோயிலில் சந்நிதி இல்லாதது கண்டு, தாமே ஸ்ரீராம லட்சுமண சீதாபிராட்டியுடன் சந்நிதி நிர்மாணித்து,
ஸ்ரீகல்யாண ராமர் என்று திருப்பெயரும் சூட்டினாராம்.

———–

ஸ்ரீ ராம பக்தி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் 
1-ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் 
2-ராம பக்தி பட்டாபிஷேகம் 
3-பக்தி ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
4-ஸ்ரீ ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
5-ராம ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
6-பக்தி ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
7-ஸாம்ராஜ்ய சாம்ராஜ்யம்பட்டாபிஷேகம்  

ஏழு காண்ட அர்த்தங்களும் இதில் உண்டே

கைங்கர்ய ஸாம்ராஜ்யம் -ராம பக்தி பரதாழ்வான் -குடி கொண்ட கோயி -ராமானுஜர் ஸாம்ராஜ்யம் -அர்ச்சா ஸாம்ராஜ்யம் -மோஷ -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்ய சாம்ராஜ்யம்

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
வால்மீகி என்னும் மலையில் தோன்றி இராமபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது 

ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்-சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன்

ய பிபன்சத்தம் ராம சரிதாம் ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசெதசம கல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக் கடலை குடித்தும் -போதும் என்று திருப்திஅடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன்

கோயில் இராமானுசன் என்பதற்கு
கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் அயோத்தியில் வாழ்ந்த இராமானுசனை -இளைய பெருமாளை -விலக்குகிறது
கோயில் அண்ணன் -என்று ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

அடி கண்டு கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-

என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –

————

ஸ்ரீ அபூர்வ ராமாயணம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

ஸ்ரீ ராமச்சந்திரன் –
கோநு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கச்ச வீர்யவான் –என்று தொடங்கி-
16-திருக் குணங்கள்-16-கலைகள் நிறைந்த பூர்ண சந்த்ரன் அன்றோ –
குண பரிவாஹ ஆத்மநாம் ஜென்மநாம் –ஸ்ரீ பராசர பட்டர் – திருக் குணங்களை வெளியிட்டு அருளவே ஸ்ரீ ராமாவதாரம் –

——————

1-கோ குணவான்
கோ குணவான் –
வசீ வதான்ய –குணவான் ருஜு சுசி ஸமஸ்த கல்யாண குண அம்ருதோதி -ஸ்ரீ ஸ்லோக ரத்னம் —
குணவான் -விசேஷ ஸுசீல்ய குணவான் என்றவாறு –
சீல க ஏஷ தவ ஹந்த—அத்ர அவதீர்ய- நநு லோசன கோசரோ பூ — ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம் -10-
ஆசூரா ப்ரக்ருதிகளுடைய கண்ணுக்கு இலக்கான கட்கிலி அன்றோ -பிறந்தவாறும் -என்று அனுசந்தித்தவாறே மோகிக்கப் பண்ணுமே –
நீராய் நிலனாய் –தாயாய் தந்தையாய் –அனைத்துமாயுள்ளவன் ஸ்ரீ ராமனாக திருவவதாரம் –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி –
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
தத்ர ராஜா குஹோ நாம ராமஸ்ய ஆத்ம ஸமஸ் சகா –தம் ஆர்த்தஸ் சம்பரிஷ்வஜ்ய குஹோ ராகவம் அப்ரவீத் —
உயிர்த் தோழன் -முன்பே பிடித்த தோழமை –
குகனோடும் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனோடும் அறுவரானோம் எம்முழையன் பின் வந்த
அகனமர் காதல் ஐய நின்னோடும் எழுவரானோம்
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை — ஸ்ரீ கம்பர்
எந்தை எண்ணாமல் ஸ்ரீ விபீஷண ஆழ்வானது தந்தையாகவே உந்தை –
இவ்வாறு சீல குணம் குகன் சுக்ரீவன் விபீஷணன் இடம் காட்டி அருளி –

மேலே -சபரி இடமும் –நிஷாதாநாம் நேதா கபி குலபதி காபி சபரி -ஸ்ரீ தயா சதகம் –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் –
சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜ -என்னும்படியாய் வேடுவிச்சியாய் வைத்தே குரு சுஸ்ரூஷையிலே பழுத்து-ஞானாதிகையாய்
தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன் ஆதார அனுகுணமாகத் தன் கையாலே அமுது செய்யப் பண்ண
அதி ஸந்துஷ்டாராய் அமுது செய்தார் -மா முனிகள் ஸ்ரீ ஸூக்திகள்
சம்யக் -என்பதே நாவுக்கு இனிதாய் இருந்த -என்றவாறு
குகனிடம் நஹி வர்த்தே ப்ரதிக்ரஹே -என்று மறுத்த பெருமாள்
இவள் இடம் அர்ச்சிதோஹம் த்வயா பக்த்யா -என்று உகந்து கூறி அவளுடைய சமர்ப்பணையை ஏற்றுக் கொண்டார் –
குரு ஸுஸ்ரூஷையிலே பழுத்த ஞானாதிகை யாகையாலே –
பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரி க்ருஹே -இது என்ன நீர்மை -என்று
ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார் ஸ்ரீ தேசிகரும் –

கோயம் குண கதர கோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத கஸ்ய பூமி -என்று
திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பாவையைப் பிரித்த பாவி வஞ்சனாக இருந்தும்
கச்ச அனுஜா நாமி –இன்று போய் நாளை வா என்றதும் இந்த சீல குணத்தைக் காட்டுமே –

சீலவத்தை யாகிறது அபிஷேக விக்னம் பிறந்தது என்று வெறுப்பு இன்றியே வனவாசோ மஹோதய என்று காடேறப் புறப்பட்டுப் போவது –
ரிஷிகள் பக்கலிலே சென்று தாழ நிற்பது
கிங்கரவ் சமுபஸ்திதவ்-என்பது
ஜென்ம விருத்தங்களில் குறைய நிற்கிறவர்களை உகந்த தோழன் நீ -என்பது
இப்படிகளாலே சீலவத்தையை மூதலித்தது -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ தனி த்வயத்தில் –
இவ்வாசகம் உரைக்கக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரை வென்றதம்மா -ஸ்ரீ கம்பர் –

—————————————–

2–க வீர்யவான்
சீலவத்யை நினைத்து நீர்பண்ட மாகும் அவர்கள் இந்த வீர்யத்தை அனுசந்தித்து தரிக்க இத்தை அடுத்து அருளிச் செய்கிறார்
ஜெய ஜெய மஹா வீரன் – ஸ்ரீ ரகுவீர கத்யம்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் அன்றோ
சத்ரோ ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்சநீயஸ்ய விக்ரமை –யுத்த -106-6-
வீர்யம் -எதிரிகள் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அத்தை கண்டு சிறிதும் அஞ்சாமை –
ஸுர்யம் -எதிரிகளை அனாயாசமாகக் கொன்று முடிக்கும் வல்லமை —
பராக்ரமம் -அப்படி செய்யுமளவில் தனக்கு ஒரு பங்கமும் இன்றிக்கே சகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சார நிற்றல்-
சின்னம் பின்னம் சரைர் தக்தம் பிரபக்னம் சஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருசுர் ண ராமம் சீக்ர காரிணம்-என்றும்
தே து ராம சகஸ்ராணி ரணே பஸ்யந்தி ராக்ஷஸா -என்றும்
புன பஸ்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே-என்றும்
செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கறந்து உள்ளும்தோறும் தித்திப்பான் -என்றும்
வியாபாரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை-
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த வீரம் அன்றோ-அசாஹாய சூரன்
மரணாந்தாநி வைராணி நிவ்ருத்தம் ந பிரயோஜனம் -இவன் ஜீவித்து இருக்கிற நாளிலே
நாம் செய்யும் நன்மையை இவன் விலக்காது ஒழிய வேணும் என்று இத்தனையே பெறப் பார்த்து இருந்தோம் –
அது அந்நாளில் பெற்றிலோம் -நாம் தேடி இருந்த அது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே-ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள் –
தத் அபிசந்தி விராம மாத்ராத் –அப்ரதிஷேதம் -ஒன்றே வேண்டுவது –
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் சத்யா பராக்ரமம் –
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் -ஷட் குணங்கள் -கஸ்தூரி பரிமளம் தான் விகாரப்படாமல்
சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்துவது போலே தானே –
அபி வ்ருஷா பரிம்லாநாஸ் ச புஷ்பாங்குர கோரகா-சேதன அசேதன வாசியற சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்தும் குணமே வீர்யம் –

—————————————————–

3-—க தர்மஞ்ஞ –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத–சுந்தர -38–41-
தருமம் அறியாக் குறும்பன் இல்லையே
கருணா காகுத்ஸ்த–
காருண்யம் கருணா க்ருணா க்ருபா தயா அநுகம்பா ஸ்யாத் அனுக்ரோச அபி -ஏழு பதங்களும் பர்யாயம்
தர்மம் என்பதே கருணை -பர துக்கத் துக்கித்வம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் —
இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்மசரீதவ –
விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-
சரணாகத பரித்ராணமே பெருமாளுடைய தர்மம்
சர்வ அவஸ்த சரத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணைகவ்ரதி தர்மோ விக்ரஹவான் –
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை –
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்ய பாலயத் –தேவ்யா காருண்ய ரூபயா —
இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது –
அது இல்லாமையால் ராவணன் முடிந்தான் -தான் செய்யும் பிரவிருத்தியில் இருந்து விலகி நிற்பதே சரணாகதி –

——————————————————

4–க க்ருதஞ்ஞ
நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் –
கதஞ்சித் உபகாரணே க்ருதே நைகேந துஷ்யதி நஸ்மரத்யபகாராணாம் சதமபி ஆத்மவத்தயா–
லோக நாத புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி -பம்பாதீரே ஹநுமதா சங்கதோ வானரேண ஹ என்று
சுக்ரீவன் கட்டளையால் தானே பெருமாள் திருவடி சங்கம் உண்டாயிற்று -அதுக்கு க்ருதஞ்ஞதையாக பெருமாள் –
அதே போலே சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே -என்று தன் இருப்பிடம் தேடி வந்த சிறிய செயலுக்கு
க்ருத்ஞ்ஞதையாக பெருமாள் இஷுவாகு வம்சயராக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை-
க்ருதம் ஞானாதி இதி க்ருதஞ்ஞ -அஞ்ஞாத ஸூஹ்ருதம் –
சாஸ்திரமும் விதியாதே நாமும் அறியாதே இருக்கிற இத்தை ஸூஹ் ருதம் என்று நாம் பேரிடுகிறபடி என் என்னில்
நாம் அன்று ஈஸ்வரன் என்று கேட்டு இருக்கையாய் இருக்கும்
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -ஆனுஷங்கிக ஸூஹ்ருதம் –ப்ராசங்கிக ஸூஹ் ருதம் –
என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -என் அடியார்களை நோக்கினாய் -என் அடியார்களின் விடாய் தீர்த்தாய் –
என் அடியார்கள் ஒதுங்க நிழல் கொடுத்தாய் –
ஆநயைநம் ஹ்ரிஸ்ரேஷ்ட தத்தமஸ்ய அபயம் மயா–
விபீஷனோ வா ஸூக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் -போன்ற இடங்கள் இதுக்கு உதாஹரணம்

—————————————————

5–க சத்ய வாக்ய
உள்ளதை உள்ளபடியே கண்டு சொல்வது சத்யம் என்னாமல்-தான் கண்டபடியே சொல்வது சத்யம் –
கயிற்றை பாம்பு என்று பிரமித்து பாம்பு என்று சொல்வதும் சாத்தியமே -மருள் அடியாக –
தான் கண்டபடியே சொல்வதும் சத்தியமாகாது -சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் –
சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் –
ராமோ த்விர் நாபி பாஷதே –
அன்ருதம் நோக்த பூர்வம் மே நச வஷ்யே கதாசன
ஏதத் தே ப்ரதிஜானாமி சத்யே நைவச தே தப -கிஷ்கிந்தா-7-22-/-14-14-
ராமோ விக்ரஹவான் தர்ம –சக்ரவர்த்தி ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி இழந்தான்
அவன் இங்கு இல்லை என்று சொன்ன ததிபாண்டன் தயிர் தாழி க்கும் பேறு பெற்றுக் கொடுத்தான்
சத்யேன லோகான் ஜயதி தீனான் தானேன ராகவ
குரூன் சுச்ருஷ்யா தீரோ தனுஷா யுதி ஸாத்ரவான் -நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் -நம்பிள்ளை –

——————————————————–

6–க த்ருட வ்ரத–
விதி தஸ் சஹி தர்மஞ்ஞ –சரணாகத வத்ஸல –
நிஷ்கிஞ்சன ஜன ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தா நாயசசே–அபயப்ரதான சார ஸ்லோகம்
சர்வ அவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷண ஏக வ்ரதீ -தசாவதார ஸ்லோகம்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம்
ந து ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய பிராஹ்மனேப்யோ விசேஷத்தை –ஆரண்ய -10-10-
சத்ருசஞ்ச அனுரூபஞ்ச குலஸ்ய தவ சாத்மன
ச தர்ம சாரிணீ மே த்வம் ப்ரானேப்யோபி கரீயசி–ஆரண்ய -10–22-
சிபி சக்ரவர்த்தி கதை -இந்திரன் பருந்தாகவும் யமன் புறாவாகவும் -வந்து சோதிக்க
பருந்து சரண் அடைய உடம்பின் தசை அறுத்து கொடுத்து ரக்ஷணம்
கபோத உபாக்யானம்
வ்யாக்ர வானர சம்வாதம் –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷயத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ தாதாமி ஏதத் விரதம் மம —

———————————————————

7–சாரித்ரேண ச கோ யுக்த
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
இமவ் ஸ்ம முனிசார்தூல-கிங்கரவ் சமூபஸ்திதவ் ஆஞ்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாவை கிம்
ந மே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராணி ஆபரணாநி ச
தம் விநா கைகேயீ புத்ரம் பாரதம் தர்ம சாரினம்-
பரத்வாஜஸ்ய சாஸனாத்
பிதுர்வசன நிர்தேசாத்
விச்வாமித்ரஸ்ய வஸனாத்
அகஸ்ய வஸனாத் சைவ
கர்தவ்யம் தைவமாஹ்நிகம்–வர்ணாஸ்ரம தர்ம நிஷ்டர் பெருமாள் -ஆஹ்நிகம் -பஞ்ச மஹா யஞ்ஞாதி அனுஷ்டானங்கள்
ஸ்ரீ கீதாச்சார்யனும் -ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் –வர்த்த ஏவ ச கர்மணி –
வேல்வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை அருளிச் செய்த வார்த்தை –
ஸஹ பத்நயா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் –
த்யாயன் நாராயணம் தேவம் –
மைதிலி ரமண வபுஷா ஸ்வேந ஸ்வார்ஹானி ஆராதநாநி அஸி லம்பித
ஏக தார வ்ரதன்

——————————————————–

8–சர்வ பூதேஷு கோ ஹித —
தற்கால இனிமை தான் பிரியம் -பிற்கால நன்மை பயப்பது ஹிதம் –
மேலாய்த் தாய் தந்தையும் இவரே இனி யாவாரே–தஞ்சமாகிய தந்தை தாயோடு தாணுமாய் –
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் –
மாதா பிதா பிராதா நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண –
கருணா காகுஸ்தன் –
ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹித புத்தயா கரோதி வை —
கர்மம் அடியாக செய்து மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப்பண்ணும்
மாதாவைப் போலே ஹித்பரனாகவே செய்து அருளுகிறார் –

———————————————————————

9–க வித்வான் —
வேத வேதாந்த தத்வஞ்ஞ தனுர்வேதேச நிஷ்டித
சர்வ சாஸ்த்ரார்த்த தத்ளஞ்ஞ ஸ்ம்ருதிமான் பிரதிபாநவான் —
வேதமுரை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-
வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத்மஜே
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம்
சஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்தீதோ மானுஷே லோகே ஐஜ்ஜே விஷ்ணுஸ் சனாதன
வித்வான் -சர்வஞ்ஞன் -பகவான் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் சக்தி வீர்யம் தேஜஸ் –
பச்யதி அசஷூஸ் -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே —
வித்வான் விபச்சித் தோஷஞ்ஞ-துஷ்டனாகையாலே கொள்ள வேணும் -பெருமாள் பக்ஷம்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத கர்ஹிதம் -கைக்கொள்வதற்காக தோஷம் காணும் வித்வான் அன்றோ பெருமாள்
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் வாத்ஸல்ய நிதி அன்றோ –

———————————————————–

10—க சமர்த்த –
இளையவர்கட்க்கு அருளுடையாய் ராகவன் -தம்பி என்றும் இளைத்தவர்கள் என்றுமே சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் அருள்
அங்குல்ய அக்ரேன தான் ஹந்யாம் கிச்சன் ஹரி கணேஸ்வர –
அசமர்த்தம் விஜானாதி மாமயம் மகராலய-கொண்ட சீற்றம் ஓன்று உண்டே கடல் அரசன் மீது –

————————————————–

11–ஏக ப்ரிய தர்சன க –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் அன்றோ
ரமயதி ராம -ரூப உதார குணை -பும்சாத் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி
சந்த்ரகாந்தானனம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம்
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதாரம் செய்வான்
முனிவன் உன்னைப் புக்கு வாயை மறப்பாரைப் போலே
கௌசல்யா ஸூப்ரஜா ராமா-பெற்ற திருவயிற்றுக்குப் பட்டம் கட்டுகிறான் -வடிவு அழகு படுத்தும் பாடு
ஒரு நாள் முகத்தில் விழித்தாரை–குகனும் குகப் பரிக்ரங்களும்
தோள் கண்டார் தோளே கண்டார்
வா போகு வா இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ
தருணவ் ரூப சம்பன்னவ்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்
சர்வ பூஷண பூஷார்ஹா
பத்மதள பத்ராக்ஷம் –பத்மதளம் பத்ம பத்ரம் இரண்டையும் ஆழ்வார் அருளிச் செய்தது போலவே
செங்கமலத்தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்து இலை திருமேனி அடிகளுக்கே
கிள்ளிக் களைந்தவனே மனத்துக்கு இனியான் போலும்
புந்தியில் புகுந்து தன்பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன்
சஷுஷா தவ ஸும் யேன பூதாஸ்மி ரகு நந்தன -பூதராக்கும் நெடும் நோக்கு அன்றோ

—————————————————–

12–ஆத்மாவான் க —
ஆத்மா ஜீவே த்ருதவ் தேஹே ஸ்வ பாவே பரமாத்மனி –ஜீவாத்மா தைர்யம் உடல் இயல்பு பரமாத்மா -ஐந்து பொருள்கள்
ஜீவாத்மாக்களை சொத்தாக யுடையவன் -ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையை யுடையவன் –
தேகமுடையன் –ஆத்மாக்களை தேகமாகக் கொண்டவன் –
பிதரம் ரோசயாமாச–ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
கைங்கர்யம் செய்வதே ஜீவனுடைய இயல்பான தன்மை
இச்சா க்ருஹீத அபிமதொரு தேஹ –உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்த இமையோர் தலைவன்
தேவும் தன்னையும் -திருவாய் -2-7-4-தேவு ஐஸ்வர்யம் -தன்னை -நீரான தன்மை -ஆஸ்ரித பரதந்த்ரம் -பக்த பராதீனன் –
கச்ச லோகான் அநுத்தமான் -என்ற இடம் பரமாத்மாவின் தன்மையை ஸ்பஷ்டமாக்கும் –

————————————–

14–க த்யுதிமான் —
கோ ஜீதக்ரோத-13-குணம் மேலே கஸ்ய பிப்பதி தேவாச்ச ஜாத ரோஷஸ்ய ஸம்யுகே -16-உடன் விவரிக்கப்படும்
த்யுதி -ஓளி–ராம திவாகரன் அன்றோ -ராம ரத்னம் -மணியே மணி மாணிக்கமே –
அநந்யா ராகவேனா அஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அநந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண பிரபா யதா –
நித்ய அநபாயினீ -கிருஷ்ணாஜிநேந சம்வ்ருன்வன் ச்ரியம் வக்ஷஸ் தலஸ் திதாம்
இவளோடு கூடியே வஸ்துவின் உண்மை
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பன்
திரு இல்லாத்தேவரை தேறேன்மின் தேவு
ஒளியின் ஸ்தானத்தில் திருக்குணங்களையும் கொள்ளலாம் -பரமபதத்தில் விலை செல்லா குணங்களைக் காட்டி அருளவே திருவவதாரங்கள்
பிராட்டியும் குணங்களும் சேர்ந்தே த்யுதி -புருஷகார பலத்தால் ஸ்வா தந்தர்யம் தலை சாய்ந்தால் தலையெடுக்கும் குணங்கள் அன்றோ –
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த –சிசுக்களை ஈடுபடுத்த வல்ல அழகும் குணமும் -பால பருவம் தொட்டில் பருவம் –

—————————————————-

15–க அநஸூயக–
வாத்சல்யமும் அனசூயையும் பர்யாய சப்தங்கள் –
நற்றங்களைக் குற்றமாகக் கொள்ளும் அஸூயை இல்லாதவன் –
குற்றங்களைக் குற்றமாக கொள்ளும் அவஸ்தைக்கு மேலே நற்றமாக கொள்வதே வாத்சல்யம்
தன்னடியார் திறத்தகத்து இத்யாதி
விபீஷணன் தோஷாவாகனாகையாலே கைக் கொள்ளத்தத்தக்கவன் -பெருமாள் பக்ஷம் -சுக்ரீவ பஷமும் இல்லாமல் மாருதி பஷமும் இல்லாமல் –
மித்ரா பாவேந -தோஷோயத்யபி -குற்றம் குறைகளையே பச்சையாக கொண்டு –
பிறருக்கு யுண்டான பெருமையை பொறுக்கும் தன்மை இல்லாமையும் அஸூயை –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருப்பது அரிதாய் இருப்பது ஓன்று அன்றோ -மா முனிகள்
சாஸ்த்ரா உக்தங்களான விஷயங்களைக் கேட்டால் இது பொருந்தாது என்று குதர்க்கம் செயபவன் அஸூயை யுடையவன் என்றுமாம்
பெருமாள் ஜபாலி சம்வாதம் – அறிவோம் –

———————————————-

13–கோ ஜித க்ரோத /16— கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஜஸ்ய ஸம்யுகே —
கோபத்தை வெல்வதாவது ஸ்வ அதீனமாக்குகை
அம் கண் மா ஞாலம் அஞ்ச
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச –
உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
சதைவ பிரிய தர்சன –சோமவத் பிரிய தர்சன –காலாக்னி சத்ருச க்ரோத –
க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் வதார்த்தம் சர்வ ரக்ஷஸாம் ஜனஸ்தானத்தில் கோபத்தை வரவழைத்துக் கொண்டார்
கோபஸ்ய வசமேயிவான்-இரண்டும் உண்டே பெருமாள் இடம் –

——————————————————-

ஸ்ரீ ராமாயணத்தில் 18 குஹ்ய தம விஷயங்கள்

1-வித்யா ஸர்வாபி -வேத அங்கங்களின் பெருமை
2-பாஹ்ய த்யஜனம் -வேதங்களுக்கு புறம்பான -பேசும் -ஸஹ வாசம் தவிர்க்க வேண்டும்
3-அகில ஸத் தர்மம் நித்ய வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டியவை
4-ஆத்யாத் மிகம் –ஆத்ம விஷய ஞானம் -4–ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -திருவடி ஆச்சார்யர் -இலங்கை -பிறவி பெரும் கடல் ஸம்ஸார சாகரம் -அசோக வனம் சரீரம்
5- அர்த்த பஞ்சக ஞானம் -காண்டம் தோறும் உண்டே
6–ஸ்ரீ ரகுபதி பரத்வம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
7-பிரபத்தி சரணாகதி சாஸ்திரம் -தொட்ட இடம் தோறும் உண்டே
8—கிம் அர்த்த -புருஷார்த்தம் –அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே
9-ஸ்வா பாவிக சேஷத்வம் பிரதானம் -பர கத அதிசய ஆதேய
10-பாரதந்தர்யம் -இஷ்ட விநியோஹ அர்ஹத்வம்
11-தத் அவதி -பக்தியின் எல்லை நிலம் -அடியார் அடியார் அடியோங்களே -சரம பர்வம்
12-அகதித்வம் -புகல் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டுமே
13-விரக்தி -உலகியல் ப்ராவண்யம் இல்லாமல்-வைராக்யம் மிக்கு இருக்க வேண்டுமே
14-குரோர் கடாக்ஷ மஹிமை
15–ஸ்ரீ ப்ராதான்யம்-ஆச்சார்ய அபிமானம் கிட்டிய உடன் ஸ்ரீ
16-நிர் பரத்வம்-மஹா விஸ்வாஸம்
17- ஸூ வஸிதி
18—ஸத் த்யானமீ கால ஷேபம் உத்தர க்ருத்யம் -ஸத் த்யானம் -குண சிந்தனை

1-வேத அங்கங்களின் பெருமை
அயோத்யா 91-19-சிஷா ஸ்வர ஸமா யுக்தம் பரத்வாஜர் சொல்ல தேவதைகள் வந்து உணவு பரத்தாழ்வான் உடன் வந்த அயோத்யா ஜனங்களுக்கும் சமர்ப்பித்தார்கள் அன்றோ

ஆயதாஷவ் -dual இல்லாமல் பன்மை -நான்கு திருத்தோள்களை ஸேவித்து திருவடி -இலக்கணம்
ஜடாயு -பெருமாள் இடம் -ஆயுஷ்மன் -விந்தோ நாம முஹூர்த்தம் -ராவணான்கொண்டு -காணாமல் போனாய் மாறாமல் அப்படியே கிடைக்கும் -ஜ்யோ திஷம்

2-வேதங்களுக்கு புறம்பான -பேசும் -ஸஹ வாசம் தவிர்க்க வேண்டும்
தசரதனையும் ஒரே இடத்தில் நிந்தை -ஜாபாலி வார்த்தை கேட்டு

புலையற மாகி நின்ற புத்தொடு சமணமெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம்?
தலையறுப்புண்டும் சாகேன் சத்தியம் காண்மின் ஐயா!
சிலையினால் இலங்கை செற்றதேவனே தேவனாவான்.
3- நித்ய வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டியவை
ஐயர் பார்த்து வைத்த திருக் கல்யாணம்
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை -அனுஷ்டித்துக் காட்டிய பெருமாள்
ஒருவருக்கு ஒருத்தி -நல்ல ஒழுக்கம்
அரச தர்மங்கள் -ராமன் பரதன் ஸம்வாதம்
4–ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -திருவடி ஆச்சார்யர் -இலங்கை -பிறவி பெரும் கடல் ஸம்ஸார சாகரம் -அசோக வனம் சரீரம்
ஸத்வ குணம் விபீஷணன் -ரஜோ குணம் கும்பகர்ணன் -தமோ குணம் சூர்ப்பணகை
நல்ல சிஷ்யனைத்தேடி ஆச்சார்யன் -சங்கு சக்கர லாஞ்சனை -செய்து உபதேசித்து பரமாத்மாவிடம் சேர்த்து வைக்கிறார்

5- அர்த்த பஞ்சகம் -காண்டம் தோறும் உண்டே

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும்  வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்
  • ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
      • நித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்
      • முக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்
      • பத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்
      • கேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்
      • முமுக்ஷுக்கள் –  ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.
  • ப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:
      • பரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை
      • வ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்
      • விபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)
      • அந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும்  இருத்தல்
      • அர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை
  • புருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:
    • தர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்
    • அர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது
    • காமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்
    • ஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை
    • பகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்
  • உபாயம் – வழி –  ஐந்து வகை உண்டு:
    • கர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.
    • ஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.
    • பக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.
    • ப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும்  இதுவே நெறி.  இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.
    • ஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html பார்க்கவும். மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.
  • விரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:
    • ஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.
    • பரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.
    • புருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.
    • உபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.
    • ப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம்  முதலியவை.

வில் தடை உடைத்து சீதா கல்யாணம் -பால காண்டம் –
பாரத கைங்கர்யம் -கைகேயி வரன்கள் விரோதி -பாதுகை -அடி சூடும் அரசு -உபாயம் சரணாகதி -அயோத்யா ஆணிடம்
ஆரண்ய காட்டும் -ரிஷிகள் -அரக்கர்கள் தடை -சரணாகதி உபாயம் கர தூஷணாதிகள் வதம்
கிஷ்கிந்தா வாலி தடை -சரணாகதி –
ஸூந்தர காண்டம்
யுத்த காண்டம் -ஆச்சார்யர் பரிந்துரை உபாயம் -ராவணன் போல் பாபக்கூட்டங்கள்

6–ரகுபதி பரத்வம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
காகாஸுர வ்ருத்தாந்தம்–வித்தகனே நின் அபயம் -ஜடாயு மோக்ஷம் -ப்ரஹ்மா-ருத்ரன் -இந்த்ரன் -யாராலும் -சர பலம் -மிக்கது

7-பிரபத்தி சரணாகதி சாஸ்திரம் -தொட்ட இடம் தோறும் உண்டே
பால -தேவர் நாராயணன் -விசுவாமித்திரர் இடம் -திரிசங்கு -பரசுராமன் இடம் சக்ரவர்த்தி
அயோத்யா -லஷ்மணன் -பெருமாள் இடம் -பரதன் சரணாகதி
ஆரண்யன் -ரிஷிகள்
கிஷ்கிந்தா சுக்ரீவன்
ஸூ ந்தர -காகாசுரன் -அடையாளமாக பிராட்டி
யுத்த -விபீஷணன் சரணாகதி-கண்டவர் பேச்சைக் கேட்க்காமல் கண்ட திருவடி பேச்சையம் கேட்க்காமல் மித்ர பாவேந –ஸக்ருதேவ –ஏதத் விரதம் மம

8—புருஷார்த்தம் –அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை -அவன் உகப்புக்காகவே கைங்கர்யம்
கைங்கர்ய சாம்ராஜ்யம் இழக்காமல் லஷ்மண லஷ்மி ஸம் பன்னன்

9-சேஷத்வம் பிரதானம் -பர கத அதிசய ஆதேய -பூ பரிமளம்-மணி தேஜஸ் –
திருவடி இடம் -லஷ்மணன் பேசுவது அஹம் அஸ்ய அவரோ ப்ராதா -குணைர் தாஸ்யம் உபாகதா -பெருமாள் பார்வையில் தம்பி -நான் அவருக்குத் தொண்டன்

10-பாரதந்தர்யம் -இஷ்ட விநியோஹ அர்ஹத்வம்–போக்த்ருத்வ சேஷத்வம் போல் அன்றே போக்யத்வ பாரதந்தர்யங்கள்
பரதாழ்வான் -உயர்ந்தவன் -பாதுகா தேவி மிக உயர்ந்தவள்
லஷ்மணன் -25-%-சீதா –50-%-பரதன் -75- %-பட்டாபிஷேகம் செய்து கொள்ளவில்லையே -பாதுகா தேவி -100%-சொன்னது எல்லாம் செய்து இட்ட வழக்காக இருந்ததால் –

11-பக்தியின் எல்லை நிலம் -அடியார் அடியார் அடியோங்களே-சரம பர்வம் -பாகவத பாரதந்தர்யம் -சத்ருக்ந ஆழ்வான்

கச்சதா  மாதுல குலம் பரதேன ததா அநக சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ்க்ருத –அயோத -1-1-

அநக -தோஷம் அற்றவரும்
நித்ய சத்ருக்ந-எப்போதும் எதிரிகளான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருப்பவரும்
சத்ருக்ந -எதிரிகளை மண் உண்ணப் பண்ண வல்லவர் ஆகையாலே சத்ருனன் என்று பெயரிட்டவருமானவர்
ப்ரீதி புரஸ்க்ருத -அன்பினால் முன் உந்தப்பட்டவராய்
ததா -பரதன் சென்ற அப்போதே
மாதுல குலம் -மாமாவின் வீட்டுக்கு
கச்சதா -போகா நிற்கிற
பரதேன -பரதனால்
நீத -அழைத்துச் செல்லப் பட்டார் –

கச்சதா –
போகா நிற்கிற என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே போகிற விடத்தில்
தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாதல்
இங்கே மாதா பிதாக்களை கேள்வி கொள்ளுதல்
பூர்வஜரான பெருமாளைக் கேள்வி கொள்ளுதல்
இவ்வளவும் அன்றிக்கே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாத படியாலே போனான் -என்கை-
மாதுல குலம் –
யுதாஜித் அழைத்தது அவனை யாகையாலே போக்கில் உத்தேச்யதையும் அவனுக்கு .
இவனும் அவன் உத்தேச்யனாய் போனான் என்கை –

பரதேன –
சக்ரவர்த்தியும் துஞ்சி
பெருமாளும் ராஜ்யத்தைப் போகட்டுப் போய்
இளைய பெருமாள் அடிமை செய்ய வேணும் என்று தொடர்ந்து போய்
சத்ருந ஆழ்வானும் -ராமனை அல்லாது அறியாத பரதா -நின்னை அல்லது அறியேன் என்று இருக்கும் தசையிலும்
ராஜ்யத்தை பரிக்கக்-தாங்கக் -கடவன் என்று ஆயிற்று ஸ்ரீ வசிஷ்ட பகவான் திரு நாமம் சாத்திற்று –
பரதன் இதி ராஜ்யஸ்ய  பரணாத்-என்றான் இ றே ஸ்ரீ சதா நீகன்-

ததா -அப்போதே
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதம் உண்டானால் பிரித்து முஹூர்த்தம் இட்டுப் போக ப்ராப்தமாய் இருக்க
அவன் போனதுவே முஹூர்த்தமாகப் போனான் -என்கை –
கச்சதா -என்கிறதிலே அர்த்த சித்தம் அன்றோ –
ததா என்றது என் என்னில்
அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று -தனக்கே ஒரு பிரயோஜனம் இன்றி சென்றமை சொல்லி –
இங்கு அதுக்கு ஆச்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -தான் ஒருவன் உளன் என்கிற நினைவும் இல்லாமல் –
ஆகையாலே புநருக்தி தோஷம் இல்லை
சேஷத்வ விரோதி இ றே இரண்டும் –

அநக –
பாபம் அற்றவன்
அகம் இல்லாதது இவனுக்கே இ றே
அகம் -உத்தேச்ய விரோதி
இவ்விடத்தில் அகமாவது ராம பக்தி
இத்தைப் பாபம் என்னப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி யாகையாலே புண்யமும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -சாந்தோக்யம் -8-13-1-என்று பாப சப்த வாஸ்யமாய் ஆயிற்று இ றே –
ஆகையால் பரத அநு வ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு விரோதி யாகையாலே ராம சௌந்தர்யத்தில் கால் தழுவும் அதுவும் பாபமாம் அத்தனை இ றே –
ராமோ பிரமாத மம கார்ஷீ -என்று ராம அநு வ்ருத்திக்கு இடைச் சுவராக சொல்லிற்று இ றே ராம சௌந்தர்யத்தை –
பரத அநு வ்ருத்திக்கு இடைச் சுவர் என்னும் இடம் சொல்ல வேண்டா வி றே

சத்ருக்ந –
பிள்ளைகள் உடைய சந்நி வேசங்களைப் பார்த்து  திரு நாமம் சாத்துகிற ஸ்ரீ வசிஷ்ட பகவான்
பெருமாள் கண்டாரை அழகாலே துவக்க வல்லராகத் தோற்றுகையாலே ராமன் -என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே -லஷ்மணன் -என்றும் திரு நாமம் சாத்தினாப் போலே
இவனுடைய சந்நி வேசததைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கையாலே-சத்ருக்னன் -என்று திரு நாமம் சாத்தினான் –

நித்ய சத்ருக்ந –
பாஹ்ய சத்ருக்களைப் போலே அன்றிக்கே ஆந்திர சத்ருக்களான இந்த்ரியங்களை ஜெயித்து இருக்கும் -என்கை –
அவ் விந்த்ரிய ஜெயத்தின் எல்லை எவ்வளவோ என்னில்
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்கிற ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு ஒண்ணாது ஒழிகை –
அதாகிறது
பெருமாளைப் பற்றும் போதும் -தன உகப்பாலே யாதல் –
அவருடைய வை லஷ்ண்யத்தாலே ஆதல் அன்றிக்கே
தனக்கு உத்தேச்யனான இவன் உகந்த விஷயம் என்று பற்றுகை –

நீத –
அழைத்துச் செல்லப் பட்டான் –
ராஜாக்கள் போகும் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமோபாதி
அவன் கொடுபோகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்டமாய் இருக்கும் இ றே
அது போல் அன்றிக்கே  ஜாதி குணங்களோ பாதி -கடமும் கடத்வமும் போலே -போனான் –

ப்ரீதி புரஸ்க்ருத –
அன்பினால் முன் தள்ளப் பட்டான் –
ஜ்யேஷ்ட அநு வ்ருத்தி கர்த்தவ்யம் என்று போனான் அல்லன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-27- என்று போன இளைய பெருமாளைப் போலே போன இடத்தில்
சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ணலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி பிரேரிக்க போனான் –
படை வீட்டில் இருந்தால் பலர் உண்டாகையாலே விழுக்காட்டோ பாதி இ றே சித்திப்பது

நீத -என்கையாலே
சேஷத்வத்தில் அசித் கல்பனாய் இருக்கக் கடவன் -படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
அடிமைத்தனத்தில் அசித் சமனாயும் கைங்கர்யம் செய்யும் பொழுது சேதனத்வமும் -பெருமாள் திரு -4-9-
ப்ரீதி புரஸ்க்ருத -என்கையாலே
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சைதன்ய பிரயுக்தமான தர்மங்கள் உண்டாய் இருக்கை-
அநக -என்கையாலே
பாவநத்வத்தாலும்
நித்ய சத்ருக்ந-என்கையாலே
போக்யதையாலும்
அவனையே பற்றினான் -என்னவுமாம் –
அநக நித்ய சத்ருக்ந  -என்கிறதுக்கு பிரயோஜனம்  என் என்னில்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி
அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத படியானை -என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் –
இதுவே பிரயோஜனம் ஆனால் பரதனுக்கு பெருமாள் விட சொன்ன மிகை  எல்லாம் பொறுக்கும் இ றே-

12-அகதித்வம் -புகல் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டுமே
விபீஷணன் சொல்படி பெருமாள் -தர்ப்ப சயனம் -கருணைக்கடல் கரும் கடலை நக்கி – சமுத்திர ராஜன் இடம் சரணாகதி –
கைம்முதல் இல்லாமல் இருக்க வேண்டுமே -து பெருமாள் இடம் இல்லையே
என் நான் செய்கேன் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -இருக்க வேண்டுமே
பக்தி பாரவசயத்தால் ஆழ்வார்கள் சரணாகதி –என் நான் செய்கேன்
ஆச்சார்யர்கள் ஞாணாதிக்யத்தால் ப்ரபன்னர்கள் -என் நான் செய்கேன்
அஸ்மாதாதிகள் அஞ்ஞானத்தால் ப்ரபன்னர்கள் -என் நான் செய்கேன்
ஒரே தொடர் மூவருக்கும் ஸ்வரத்தால் மட்டுமே மாற்றி –

13- விரக்தி -உலகியல் ப்ராவண்யம் இல்லாமல்–வைராக்யம் மிக்கு இருக்க வேண்டுமே 
நல்ல பதத்தால் -கொண்ட பெண்டிர் –
நித்ரா தேவி -தூக்கம் இல்லாமல் -இருக்க வேண்டும் -14 வருஷம் அருகி வராத
உறங்கா வில்லி -இவனுக்கு
அதே பெயரில் உறங்கா வில்லி தாஸர் ஆச்சார்யர்
அயோத்யா மக்கள் தூக்கத்தால் பெருமாளை இழந்தார்கள்

14-குரோர் கடாக்ஷ மஹிமை
ஏக கண் -ஸஹஸ்ர கண்களும் -மூன்று -அஷ்ட -சேர்ந்து வந்தாலும் ஒப்பாகாதே
சபரி -சாக்ஷியாகவே பெருமாள் -சபரி மோக்ஷ சாக்ஷி பூதா -ரகுவீரா கத்யம்
முனி ஜன பஜன் –முஷித ஹ்ருதய கலுஷம் -ஸ்ரீ முஷ்ணம் -பாபங்கள் நமக்கே திரியாமல் களவு பண்ணுவதே முஷணம்

ஆச்சார்யர் திருவடி அடைந்தார்கள் என்றே சொல்கிறோம்-தானே வைகுந்தம் தரும் -அன்றோ

15–ஸ்ரீ ப்ராதான்யம்
சூர்ப்பணகை -ராவணன் இழக்க –காகாசூரன் விபீஷணன் பேறு -இவள் ஸந்நிதியால்
ரக்ஷணம் -வார்த்தை கைவிட மாட்டேன் -உயிரை விட்டாலும் பிராட்டி ஆதி சேஷனை விட்டாலும்
இத்தைச் சொல்லியே சமாஸ்ரயணம் செய்து வைக்கிறார்கள்
தன்னடியார் –சிதைகு உரைக்குமேல் –ஸ்திரமாக இருக்கிறதா பார்க்கவே -என்னடியார் அது செய்யார் என்பானே

ராமானுஜர் திருமலையில் சீதா ராமன் பிரதிஷ்டை
புனர்பூசம் புறப்பாடு உண்டு

16-நிர் பரத்வம்-மஹா விஸ்வாஸம்
தத் தஸ்ய ஸத்ருசம் பவத்
சொல்லினால் சுடுவேன் -வில்லின் மாசு படக்கூடாதே
ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை ராமாநுஜர்

17- ஸூ வஸிதி
குண அனுபவம் பண்ணி -தேசோயம் சர்வ காம துக்
பவத் விஷய வாஸினா -ரிஷிகள் பெருமாள் இடம்
ராமானுஜர் ஆறு கட்டளைகளில் ஓன்று திவ்ய தேசத்தி வஸிக்க வேண்டும்
அன்று சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றி –

18-உத்தர க்ருத்யம் -ஸத் த்யானம் -குண சிந்தனை
நிச்சயதார்த்தமான பெண் போல்
சீதா பிராட்டி -கணையாழி பெற்று நம்பி இருந்து சூடா மணி சமப்பித்து பொறுத்து இருந்தது போல்
சங்கு சக்கர லாஞ்சனை பெற்று நிம்மதியாக இருப்போம்

முழு ராமாயணத்திலும் ஒவ்வொரு குஹ்ய ரஹஸ்யம் சொல்லி 18 தடவை ஆவ்ருத்தி திருமலை நம்பி ராமானுஜருக்கு அருளிச் செய்தாராம்

———–

ராமரின் முன்னோர்கள்–

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.

———————–

ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்:-

தத ஸ ப்ரயதோ வ்ருத்தோ வஷிஷ்டோ பராஹ்மனை ஸஹ
ராமம் ரத்னமயே பீடே ஷஹஸீதம் ந்யவேசயத்
வஷிஷ்டம் வாம தேவ ச ஜாபாலிரத காயப
காத்யாயன ஸுயஜஞ்ச கௌதமோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்ரம் ப்ரசந்த்னேன ஸ்கந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராஷம் வஸவோ வாஸவம் யதா
ரித்விக்பி ப்ராஹ்மனை பூர்வம் கன்யாபிர் மந்த்ரிபிஸ்ததா
யோதை சைவாப்யஷிஞ்சம்ஸ்தே ,ஸம்ப்ரஹ்ருஷ்டா ஸனைகமை

———-

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப்பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகப் பெருமாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-