Archive for September, 2022

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் அமுதம் —

September 24, 2022

ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரர்  ஸ்ரீ திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்த தமிழ் தனியன் —

ஸ்ரீ திருமாலை ஆண்டான் அருளிச் செய்த சமஸ்க்ருத தனியன்

தமேவ மத்வா பரவா ஸூதேவம்
ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே–

ஸ்துதி அபிவாதனம் -தொழுது ஸ்தோதரம் பண்ணுவது
ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது
இத்தால் -குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-

ராஜாவத் பூஜ்யராய்-ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திரு மகனாலும் பூஜிக்கத் தக்க அர்ஹனாய் இருக்கை-
ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –

தம் -அந்த என்று சொல்லவே முடியம் படி வாசா மகோசர ஸுலப்ய பிரசித்தம்

ஈடே -ஆழ்வார் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்–பேராத சீர் அரங்கத்து ஐயன்-

காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் –
ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பிராணவார்த்தம் பிரகாசா –

இதம் பூர்ணம் –ஸர்வம் பூர்ணம் சகோம்

ஓம் பூர்ணமத: – பசுவாகிய அது பூர்ணமானது; பூர்ண மிதம் – கன்றாகிய இதுவும் பூர்ணமானது. பூர்ணாத் பூர்ண முதச்யதே – பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ண மாகிய கன்று உதித்துள்ளது. பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஸ்யதே- பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ணமாகிய கன்றை எடுத்தும் பூர்ணமாகிய பசு எஞ்சியுள்ளது. ஓ! இது எத்தகைய புதையல்! ஈடு இணையற்ற – அறியாமை இருளை நீக்க, என் எளிய உள்ளத் துதித்த இளங்கதிரோனனைய அற்புத அறிவுப் புதையல்!

பூர்ணம் -தேச, கால, வஸ்து என்கின்ற மூன்றினாலும் வரையறுக்கப்படாதது(அபரிச்சின்னம்)
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி-ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் –முதல் அத்யாயம் ||

———————

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்
மா மறையோராக இருந்தால் தான் திரு மண்டங்குடி என்பர் என்றுமாம்–ததீய வைபவம் அறிந்து அதில் நிஷ்டரானவர்

வண்டு திணர்த்த வயல் தென் அரங்கர் –
திரு மண்டங்குடி வண்டே- ஆழ்வார்-தொண்டர் அடிப் பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்–
வயலுள் இருந்தின சுரும்பினம்–இவர் நான்காம் பாசுரத்தில் –
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-
ஸூ தட -மஞ்சரி-சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாட ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்-
பூக்களில் கண் படுத்த வண்டுகள் எழுந்தன –பெரிய பெருமாள் தான் எழுந்தார்–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்–இன்றும் திரு மார்பில் பதக்கம் சேவை-

பராங்குச பதாம்புஜ பிருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள்

உதித்த ஊர்-
பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-
கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு–என்னும்படி அன்றிக்கே ஆந்தரமான
இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-

பகவத் கைங்கர்யம் கொண்டே திவ்ய பிரபத்தத்தின் பெயரானது இதன் தனிச் சிறப்பு-

வனமாலை ஸ்ரீ வைஜயந்தி அம்சம் -மாலையே வந்து பிறந்து பூ மாலைகளையும் பா மாலைகளையும் சமர்ப்பித்து அருளிய ஏற்றம்-

——-

திருமாலைக்கும் திருப்பள்ளி எழுச்சிக்கும் வாசிகள் —
1-பெரிய பெருமாள் ஆழ்வாரை அவன் ப்ரீதிக்கு உகப்பாக கைங்கர்யம் செய்ய வேண்டி இவரது
ஸ்வரூபத்தை -உணர்த்தி அருளினார் திரு மாலையில்
இவர் அவனுக்கு அடியார்க்கு ஆட்படுத்தி கைங்கர்யம் கொண்டருள வேண்டி அவனுக்கு
அவனுடைய ஸ்வரூபத்தை உணர்த்துகிறார் இதில்
2- இளைய புன் கவிதை -வாசிக கைங்கர்யம் அதில் –
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -காயிக கைங்கர்யம் இதில்
3-எம்பிராற்கு இனியவாறே -பகவத் கைங்கர்யம் அதில்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாயே –
4-பெரிய பெருமாள் கிருஷி அதில் -அதன் பலன் இதில் -அதில் பிறந்த பாகம் பக்குவம் ஆனப்படி இதில்
5-தனக்கு அருளை பிரார்த்தித்தார் அதில் -நாளொக்கம் அருள -பர ஸம்ருத்தியை ஆஸாஸிக்கிறார் இதில்

பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் 

பிரஜைகளை காட்டி வேண்டுவாரைப்  ஜீவனம் போல தேவ ஜாதிகளைக் காட்டி ஸூய பிரயோஜனம் கேட்கிறார்-
ஆம் பரிசு-சிறப்பை தந்து அருளி கண் விளித்து கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும்-என்கிறார் 

இருந்தாலும் நிகமத்தில்
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி-துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!-என்று
மர்மம் அறிந்து அருளிச் செய்கையாலே உணர்ந்தார்

உணர்ந்த அவனுக்கு இவரது சரம பர்வ நிஷ்டையைக் காட்டி

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை –என்று ததீய கைங்கர்யத்தில் இழிந்த துளஸீ தாஸரான அடியேனை
அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—என்று நிகமிக்கிறார்
கரிய கோலத் திரு உரு காண் என்று இவனே வலிய பின் தொடர்ந்து காட்டி அருளுவான்

—————–

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

ஆதித்யன் தன் சொரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்–மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம் –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்கள்

இந்திரன், குபேரன் என்னும் படியான பல தேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும் தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத்
தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே வந்து திரண்டு
“எம்பெருமான் திருப் பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்க வேணும்” என்னுமாசையாலே
திருக் கண்ணோக்கான எதிர் திசையிலே வந்து நின்றார்கள்.

—————–

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

ஹம்ஸ அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –

நில பூவும் முல்லை பூவும் விகாசித்தது -நீர்ப்பூ -நிலப்பூ இவனே அரங்கன் -இரண்டையும் சொல்லுகிறார் –-நீயும்- நில பூவும் நீர் பூவும்
உகந்து அருளின நிலங்களில் உள்ளவை எல்லாம் உத்தேசம்
ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலப் பூவான முல்லைப்பூவும் விகஸித்து,

கீழ் காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமா போலே வந்து வீசா நின்றது

இக்காற்று வீசினவாறே, புஷ்ப சயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸ மிதுநங்களும்,
‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித் திவலைகளை

உதறிக் கொண்டு உறக்கம் விட்டெழுந்தன.

அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –

துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
ஆயிரம் காலம் தன்னை தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே –
பிரதிபந்தகங்களை முடித்து கைங்கர்யம் கொண்டு அருளுபவன் அன்றோ நீ

முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே.-
அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்;
பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது!
என்பது போல் இதனைக் கொள்க.

கைங்கர்யம் செய்த உபகாரத்வம் நம்மது பெற்றுக் கொள்ளும் மஹா உபகாரம் அவனது –

அன்று காட்டிய அழகை ஆர்த்தி தீரும் படி–முதலை கண்டு கால் கொடுத்தால் தான் எழுந்து இருப்பீரோ-

————–

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –
முளைத்து குண திசை
எழுந்த-சூழ் திசை எல்லாம்–
முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம்
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம் சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி-
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக தேஜஸ் வளரும் என்றவாறு –
திரு கண் மலர்ந்தால் போதும்- திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி
உணர்ந்து அருள ஆகாதோ–எழுந்து அருள வேண்டாம் உணர்ந்தாலே போதுமே –

“ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து
இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து;
தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.”

கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்-
சகஜ சத்ரு வான இந்த்ரிய பாரவச்யம் போக்க -கையும் திரு ஆழியும் ஆன அழகைக் காட்டி –
ஐய்யப்பாடு அறுக்கவும்
ஆதாரம் பெருக்கவும் –
விரோதி போக்கவும்
அனுபவிக்கவும் அழகே தான் –

கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை-

—————

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி-

வந்து எதிர்ந்த தாடகை –மந்திரங்கள் கொள் மறை முனிவர் வேள்வியைக் காத்த –பராபிபவன சாமர்த்தியம் –

தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதன பட்ட பெருமானே!

அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்-

பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியான -தாடகை தாடகாதிகள் –அருணோதயம் போலே இது அதுக்கு –

உத்திஷ்ட -நரசார்த்தூல – ரிஷிகள் திருப் பள்ளி எழுப்ப தான் எழுந்து அருளுவீரோ –

வாட்டிய-மாருதியால் சுடுவித்தான் -என்றுமாம்-
ஸீதாயா தேஜஸால் தக்தாம் -ஸூந்தர காண்டம் -கற்பு கனல் -ராம கோப பிரபீடிதாம் -முற்றுகை இட்டது பெருமாள் கோபம் –

வரி  சிலை —ஏ வரி வெஞ்சிலை வலவா -தர்ச நீயாமான -ஆகர்ஷணா –

மேட்டு இள மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-

பகவத் குணம் அனுபவித்து முக்தர்கள் சாமகானம் செய்வது போலே இங்கே வண்டுகள் –

நேற்று மாலைப் பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே–ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக் கொள்ள,
இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள்-இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர,
ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றுமாம்.

உகந்து அருளின தேசங்களில் எல்லாமே உத்தேஸ்யம் அன்றோ

எறுமை சிறு வீடு மேய்வான் பறந்தன -திருப்பாவை -8-போல் இங்கும் அடையாளம் காட்டி அருளுகிறார்

உங்களுக்கு நான் செய்தபடி அழகிதியோ -என்று வினவி குசலப் பிரசன்னம் பண்ணி அருள வேண்டுமே –

அடியோங்களை ரஷிக்க எழுந்து அருள வேண்டும் -என்றவாறு

——————–

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

அரங்கத்தம்மான்-ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
செல்வ விபீடணனுக்கு வேறாக நல்லான்-

சேஷ அசனர் -விஷ்வக் சேனர் -விபீஷணனும் திருவடி-களும் சேர்ந்து சந்நிதி
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
திரு முளை -மண் எடுக்க-மிருத் ஸங்க்ரஹம் -விஷ்வக் சேனரும் ஹனுமானும் சேர்ந்து எழுந்து அருளுவார்கள்-
தாயார் சந்நிதி மரம் கீழ் எடுப்பார்கள்-

சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே

அவனை அடிமை கொண்டால் போலே எங்களையும் கைங்கர்யம் கொள்ள-எழுந்து அருள்வாய்

கீழ் பாட்டில் வயற் காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது;
அவ்வளவே யல்ல; சோலை வாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப் பெறாதே-பரம ஸுகமாகக் கிடந்துறங்கக் கடவ பறவைகளும்
போது வைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது.

சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த

பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் வண்டுகளுக்கும் இவற்றுக்கும் உள்ள வாசி

திரு விருத்தம் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி-நித்யர்கள் -பெருமாள் காலை-திருவடிகளையே பார்த்து இருப்பார்கள்-
இங்கு அமரர்கள் தேவர்கள் -தங்கள் நாற்காலி பார்த்து இருப்பார்கள்

விபீஷணனுக்கு பராதீனரக இருந்தது போல -எழுந்து அருள வேண்டும்-
ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ -எழுந்து இருந்தீர் பள்ளி கொள் என்றால் சொன்ன வண்ணம் செய்பவர் அன்றோ –

——————–

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை
நாட்டினான் தெய்வம் எங்கும் அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்
அணியனார் செம் பொன் –திருமாலை -24- -மேரு பர்வதம் போன்ற கோவில்-

“[குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்]
‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே
‘குமரன்’ என்று அவன் பேராய்,
‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக் கடவதிறே
அங்ஙனன்றியே,
தேவ ஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே
இனி, தண்டம் என்கிறது அவ்வவர் ஆயுத பேதங்களை என்னவுமாம்” என்பது வியாக்யானம்.

ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-

——————-

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
கீதை 13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்- மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.

——————–

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

ராஜா பார்க்க எலுமிச்சம் பழம் கொண்டு போவது போலே தேவர்கள் அருகம் புல்லை கொண்டு தேவர்கள் -உத்தேச்ய வஸ்துவை வணங்க –
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும் -இசை கேட்டு அருளுவது போல -வீணை ஏகாந்தம்
திருக் கண்ணை மலர்த்தி கடாக்ஷம் ஒன்றே போதுமே -சிபாரிசு பண்ணுகிறார் இவர்களுக்காக
ஸூரியனும் தனது மிக்க தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து கொண்டு உதயமானான்
இருளானது ஆகாசத்தின் நின்றும் நீங்கிப் போயிற்று -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

——————

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே ஒழிக்க ஒழியாத நிருபாதிக சம்பந்தம்
அநாலோசித விசேஷ -அசேஷ லோக சரண்யன் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது -அழகை சேவை சாதித்து அருள வேண்டும்-

விமாந ஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷ ஸித்த சாரண ரென்கிற தேவர்களோடு
கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு
இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடு கிடக்கின்றனர்.
திருப்பள்ளி யுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

————-

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும் திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
இதில் தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்-என்று தனது ஸ்வரூபம் காட்டி அருளி மேல்
தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

கீழ்க் கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும்

“கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி
தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக் குடலையும் தோளுமாக வந்து நிற்கிற
அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத்
திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப் பிரபந்தத்தை தலை கட்டுகின்றனர்.

பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை
நன்கு உணர்ந்தவராதலால் தாம் பெற்ற திரு நாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.

வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு ஏறி வருகிறார்கள்-

சட்டு என்று உணர –பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-

கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே

அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –புசிக்க எழுந்து அருளாய் –

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –

மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

 

 

 

 

 

ஸ்ரீ கோயில் கந்தாடையப்பன் ஸ்வாமிகள் -கன்னி மகம் திரு அவதாரம் —

September 23, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடையப்பன் ஸ்வாமிகள் -தனியன்

வரதகுரு சரணம் சரணம் வரவர முநிவர்ய கந க்ருபா பாத்ரம் |
ப்ரவகுண ரத்ண ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||
தேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜ குரோஸ் ஸுதம் |
பூஷிதம் ஸத் குணைர் வந்தே ஜீவிதம் மம ஸர்வதா||

திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்

தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி

அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்

ஆசாரியன்: மணவாளமாமுநிகள்

பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்

————–

நம் வர்த்தமான ஸ்வாமி -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹராச்சார்யர் ஸ்வாமிகள் தனியன்

வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

————–

எறும்பியப்பா மணவாளமாமுநிகளின் அன்றாட வழக்கங்களைக் கொண்டாடும்
தனது பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,

பார்ச்வத: பாணி பத்மாப்யாம் பரி க்ருஹ்ய பவத் ப்ரியௌ
விந்யஸ் யந்தம் சநைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே (பூர்வ தினசர்யை 4 )

இந்த சுலோகத்தில் எறும்பியப்பா மணவாளமாமுநிகளை பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் ,
“தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் )
இருபுறங்களிலும் தேவரீரின் திருக்கரங்களான தாமரைகளாலே பிடித்து,
தேவரீரின் திருவடித் தாமரைகளை மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “.

தினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், திருமழிசை அண்ணாவப்பங்கார்,
“இந்த சுலோகத்தில் இரண்டு அபிமான சிஷ்யர்கள் என்று எறும்பியப்பா  -கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் -என்று காட்டி அருள்கிறார்

கோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர்.
“காவேரி தாண்டா அண்ணனாய் ” ,கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் ,
அவர் தனது திருத் தம்பியாரான கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணி கொள்ள நியமித்தார்.
இதனை சிரமேற்கொண்டு கோயில் அப்பன் தானும் திருவரங்கத்திலிருந்து பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.

————-

திரு முடி வர்க்கம்

1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
6-திருக் கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
16-வேங்கடாச்சார்யார் –
17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
20-வரதாச்சார்யர்

22-வேங்கடாச்சார்யார்
23-வரதாச்சார்யர்
24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
27-வேங்கடாச்சார்யார் –
28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி

32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

ஐப்பசி சுக்ல பக்ஷ சதுர்தசி – கோவில் கந்தாடை வதுல தேசிக அப்பன் ராமானுஜாச்சார் ஸ்வாமி தீர்த்தம்

அவதார ஸ்லோகம்
ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

ஸ்வாமி தனியன் –
வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

ஸ்வாமி வாழித் திரு நாமம்
சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

ஸ்வாமி நாள் பாட்டு –

பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

—————

ஸ்ரீ ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்

33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -ஸ்ரீ பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் –நம் வர்த்தமான ஸ்வாமி திரு நக்ஷத்ரம் -மார்கழி விசாகம்

தனியன்
வாதூலான்வய வார் தீந்தும் ராமானுஜ குரோஸ் ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

மார்கழி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே
மா வளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேர் அருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகர் அப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்து உதித்தோன் வாழியே
ஆர்வமுடன் அருளிச் செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க்கோதை சீர் அருளைச் சேர்ந்து இருப்பான் வாழியே
பூவார் மணம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்து உதித்த வள்ளல் வாழியே
தெண்டிரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தான் உகந்த எதிராசன் கழல் தொழுவோன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

————-

ஸ்ரீ வாதூல குலத் தோன்றல் ஸ்ரீ முதலியாண்டானுக்கு
ஆறு திருக் குமாரத்திகள் -ஒரு திருக் குமாரர்

ஆறு திருக் குமாரத்திகளை -74- ஸிம்ஹாசனபதிகளான
முடும்பை நம்பி
முடும்பை அம்மாள்
ஆஸூரிப் பெருமாள்
கிடாம்பிப் பெருமாள்
கொமாண்டூர் இளைய வல்லி யச்சான்
வங்கி புரத்து நம்பி
வம்சத்தில் வந்த திருக் குமாரர்களுக்கு திருமணம் முடித்தார்

மாசி புனர்வஸு திருநக்ஷத்ரத்தில் கந்தாடை ஆண்டான் -திருக் குமாரர் அவதாரம்

கந்த வாடை -சொல்லே -கந்தாடை -என்று மருவிற்று –
அணுக்கச் சேவகம் செய்ததால் கந்த வாடை-நறுமணம் வீசும் பொன்னாடை – போல் கமழ்ந்தவர்

அவர் திருக் குமாரருக்கு பச்சை வாரணப் பெருமாள் பெயரைச் சூட்ட
அரங்கன் கந்தாடை தோழப்பர் -என்று மறுபெயர் சார்த்தி அருளினான் –

கந்தாடை தோழப்பருக்கு நான்கு திருக்குமாரர்கள்
பெரிய வரதாச்சார்யர்
சிறிய வரதாச்சார்யர்
ஈயன் ராமானுஜாச்சார்யர்
அம்மாள் -என்கிற தேவராஜ குரு –தோன்ற

அரங்கன் –
பெரிய வரதாச்சார்யருக்கு –பெரிய ஆயி –என்றும்
சிறிய வரதாச்சார்யருக்கு –சிறிய ஆயி -என்றும்
திரு நாமம் இட்டுப் பணி கொண்டு அருளினார் –தாய் போல் பரிந்து பணி செய்ததால் ஆயி –

ஈயன் ராமானுஜாச்சார்யருக்கு –
திருக் கோபுரத்து நாயனார் -நரசிம்மாச்சார்யார் -என்ற திருக்குமாரரும்
அவர்க்குப் பின் தேவப்பெருமாளும் தோன்றினார்கள்

திருக் கோபுரத்து நாயனாருக்கு –
பெரிய அண்ணன்
சிற்றண்ணன்
தெய்வங்கள் பெருமாள் தோழப்பர் –என்ற மூவர் அவதரித்தனர்

மூன்றாவது திருக் குமாரர் -தெய்வங்கள் பெருமாள் தோழப்பர்-ஆவணி திருவோணத்தில் அவதரித்தவர்
இவருக்கு
போரேற்று நாயன்
அழைத்து வாழ்வித்த பெருமாள் அண்ணர்
தேவராஜ தோழப்பர் -அவதரிக்க

மூன்றாவது திருக் குமாரரான தேவராஜ தோழப்பரை வாதூல தேசிக பதம் அளித்து ஸ்ரீ கார்யம் நிர்வஹிக்கச் செய்து அருளினார்

தேவராஜ தோழப்பருக்கு
போரேற்று நாயன்
நாராயண அப்பை
அழைத்து வாழ்வித்த பெருமாள்
வரத நாராயண குரு –புரட்டாசி பூரட்டாதி –
ஸ்ரீ நிவாஸாச்சார்யர்
திருக்கோபுரத்து நாயனார் என்னும் அழகிய சிங்கர்
தோழப்பர்
ஈயான் –என்பதாக எண்மர் திரு அவதரித்தனர்

எண்மரில் வரத நாராயண குருவே -வாதூல தேசிகர் பட்டம் பெற்றார்

கூர நாராயண ஜீயரும் கூர குலத்துப் பட்டரும் முதலியாண்டானின் முன் வரிசையைத் தள்ளி
தங்களை முற்படுத்திக் கொண்டதால் -திருவோலக்கம் -கோஷ்டிக்கு -எழுந்து அருள முடியாமல் தனித்து
பெரிய பெருமாளை சேவித்து வர
நம் பெருமாள் இவரை அண்ணனாக அபிமானித்து அருளினான்
மணவாள மா முனிகளால் மீண்டும் வாதூல தேசிகர் பொறுப்பு ஏற்றார்

தோழப்பரின் ஐந்தாவது திருக்குமாரரே நம் அப்பன் ஸ்வாமிகள்
இவர் திரு அவதாரம் -புரட்டாசி மகம்

திரு நக்ஷத்ர தனியன்
ஆங்கிரஸே வர்ஷர் க்கே கன்யா ராசிங்கதே த்ரயோதஸ்யாம்
ஜாதம் மகாக்ய தாரே ப்ரணமாமி ஸ்ரீ நிவாஸ குரு வர்யம்

ஸ்ரீ நிவாஸ -கைங்கர்ய ஸ்ரீ யின் இருப்பிடம் என்றவாறு
தனது திருத் தமையனாரையே ஆச்சார்யராகப் பற்றி இருந்தார்

மா முனிகளின் இடம் கொண்ட ஞான பக்தி வைராக்யங்களாலே
வரவர முனி கன கிருபா பாத்ரம் -என்று போற்றப் பட்டவர் –
இவர் மா முனிகளுக்கு உஸாத் துணையாக இருந்த பக்தி பாங்கினை –
வரவர முனி வைபவ சம்பூ –நூலில் காணலாம்

வரத குரு சரணவ் சரணம் வரவர முனி வர்ய கன க்ருபா பாத்ரம்
ப்ரவர குண ரத்ன ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீ நிவாஸ குரு வர்யம்

வரத குரு சரணவ் சரணம் -என்று சரம பர்வ நிஷ்டையில் இருந்தவர்

கோயில் அன்னான் -காவேரி கடவா கந்தாடை அண்ணன் -என்று ஸ்ரீ ரெங்கத்தை விட்டு வெளியேறாமல்
கைங்கர்யம் ஒன்றிலே ஊன்றி இருந்தார்

ஆகையால் கந்தாடை வம்சத்து சிஷ்யர்களை உஜ்ஜீவிக்க பல இடங்களுக்குச் செல்லும் பொறுப்பை நம் அப்பன் ஸ்வாமிகள் மேற்கொண்டார்

நாயக்க மன்னர் காலத்தில் சேர்க்கையை அடுத்த திருமேனியில் காஞ்சியின் நினைவாக
தேவராஜன் -பேர் அருளாளன் -திரு நாமம் விளங்க
பெரும் தேவித் தாயார் சமேதராய் ஸ்ரீ கல்யாண வரத ராஜப்பெருமாளை இத்தலத்தில் எழுந்து அருளிச் செய்தான் –
இது முதல் இத்தலம் வரத நாராயண புரம் -என்று வழங்கலாயிற்று –
பின்னர் நம் ஸ்வாமி அப்பன் வழித்தோன்றலான அப்பூர்ண ஐயங்கார் ஸ்வாமியிடம்
செப்பேடுடன் வழங்கப் பெற்று வழிபாட்டுக்கு உரிய நில புலன்களும் மானியமும் வழங்கப் பட்டன –

அப்பூர்ண ஐய்யங்காருக்கு இரண்டு திருக் குமாரர்கள்
மூத்தவர் -வரதாச்சார்யர்
இளையவர் –ப்ரணதார்த்தி ஹரர்
ஸ்ரீ அப்பன் ஸ்வாமியின் ஆறாவது தலைமுறை இது –
இத்தலை முறையில்
திருமணி ஸ்வாமி திருமாளிகை என்றும்
அப்பன் வேங்கடாச்சார்யார் திருமாளிகை என்றும் இரண்டாக்கப் பிரிந்தது

இந்த புகழ் பெற்ற அப்பன் வேங்கடாச்சார்யார் காலத்தில் ஸ்ரீ எறும்பி அப்பா திருவாராதனப் பெருமாளான சக்கரவர்த்தி திருமகன்
எழுந்து அருளி அருளினார்
ஸ்ரீ சோளிங்க புரம் 2 வது தீர்த்த மரியாதையும் இத் திருமாளிகைக்கு ஏற்படுத்தப் பட்டு இன்றும் தொடர்கிறது –

அப்பன் வேங்கடாச்சார்யர் திருக் குமாரர் ப்ரணதார்த்தி ஹராச்சார்யர் காலத்தில்
ஸ்ரீ காஞ்சிபுரம்
ஸ்ரீ பெரும்பூதூர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் –முதலான இடங்களில் திருமாளிகைகள் ஏற்படுத்தப் பட்டன –

ப்ரணதார்த்தி ஹராச்சார்யரின் திருக்குமாரர் வரதாச்சார்யர்
அவருக்கு வழித் தோன்றல் இன்மையால் திருமணி ஸ்வாமி கிளையில் உத்தம சீலர் கோயில் கந்தாடை வாதூல தேசிக அப்பன் ஸ்வாமியின்
மூன்றாவது திருக் குமாரர் ஸ்ரீ ராமானுஜாச்சார்யரை ஸ்வீ காரம் பெற்று திருமாளிகை பொலிவடைந்தது-

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

———

நாள் பாட்டு

சீர் மலி நான்மறை அந்தணர் சிந்தை சிறந்து மகிழ்ந்திடு நாள்
தென் அரங்கம் முதல் நல் பதி கண் மிகு தேசு பொலிந்திடு நாள்
பார் தனிலே வர மா முனி தன்னருள் பாத்திரமாகிய நாள்
பாடியமும் திரு மந்த்ரமும் தினம் பாயொளி மேவுறு நாள்
தார் மலி மார்பர் அழைத்து வாழ்வித்தவர் சதிர் மிக ஓங்கிய நாள்
தக்க புகழ் வாதூலர் குலத்தவர் சந்ததம் வாழ்வுறு நாள்
கார் மலி வண் கைக் கருணையில் அப்பன் காசினியில் தோன்றிய நாள்
கன்னி தனில் திரு மா மகம் என்னும் கவினுறு தனி நாளே

———

வெண்பா

மந்திரங்கள் வாழ மணவாள முனி வாழ யுயர்
எந்தை எதிராசன் எழில் வாழ சந்தமுடன்
மன்னு புகழ்க் கந்தாடை மன்னன் எனும் அப்பனே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அரையர் சேவை பற்றி ஸ்ரீ ரெங்கம் அரையர் ஸ்வாமிகள் –ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி” –முனைவர் ஸ்ரீராம்–அவர்கள் –

September 22, 2022

“நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகள் காலத்திலிருந்து எங்களின் அரையர் மரபு தொடங்குகிறது.
நாதமுனிகளின் தங்கை தன் இரு மகன்களைத் தான் திவ்யப் பிரபந்தங்களைப் பெருமாள் கோயில்களில் பாட அர்ப்பணிக்கிறார்.
அவர்கள் மேலகத்து ஆழ்வார், கீழகத்து ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வழிவந்த வாரிசுகள்தான் நாங்கள்.

பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாடும் அரையர்கள் குடும்பங்கள்
ஸ்ரீவில்லிப்புத்தூர், மேல்கோட்டை, திருநாராயணபுரம் (கர்நாடகா), ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறோம். இன்னொரு குடும்பம் ராமானுஜம் அரையருடையது.

என்னோட 11-வது வயதிலிருந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாடி வருகிறேன்.
வைகுண்ட ஏகாதசியின்போதான 20 நாள் விழாவில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாட கோயிலில் இருந்து வந்து அழைத்துச் செல்வார்கள் இதுதான் மரபு.
எங்களின் பாடல்களைக் கேட்டு பெருமாள் தன்னுடைய பரிவட்டத்தையும் குல்லாவையும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
அதனால், பாடலைப் பாடும்போது குல்லா அணிந்துகொண்டு பாடுவோம்.
நாங்கள் பாடல்களை நேரடியாக பெருமாள் முன்பு நேரடியாகப் பாடுவதாக உணர்கிறோம்.

பகல்பத்து விழாவின் முதல் ஐந்து நாளில் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி பாடுவோம்.
வைகுண்ட ஏகாதசி முதல் நம்மாழ்வார் மோட்சம் வரைக்கும் திருவாய்மொழி பாடுவோம்.
இயல், இசை, நாடகம் என்கிற அடிப்படையில் பாடல்களைக் காட்சிகளாக்க அபிநயமும் நடத்துவோம்.
அதற்கு அடுத்த நாள் இயற்பா என நாலாயிரம் பாடல்களையும் பாடி முடித்துவிடுவோம்.
இதைத்தவிர அரங்கநாதர் உற்சவ காலங்களிலும் பாடுவோம்.

தம்பிரான் படி வியாக்கியானம், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்களின் வியாக்கியானப் படிகள் வழிவழியாக எங்களிடம் மட்டுமே இருக்கிறது.
இதை எங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே சொல்லித் தருகிறோம். வேறு யாருக்கும் சொல்வதில்லை. அரங்கநாதர் கோயிலில் மட்டுமே நாங்கள் பாடுவோம்.

இயற்பா பாடுவதற்கு இருந்த அமுதானார் என்பவரின் குடும்பத்தில் வாரிசு இல்லாததால்
அவருக்குப் பின் இயற்பாவையும் 24 ஆண்டுகளாக நாங்கள்தான் பாடுகிறோம்” என்றார் சம்பத் அரையர்.
உங்கள் மகன்களும் பாடுவார்களா என்று கேட்டபோது, “நிச்சயமாக, எங்கள் குடும்பத்தில் சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்கிறோம்.
என் மகன் பரத்வாஜ் விமான பைலட்டாக இருக்கிறார். ஆனாலும் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் அவர் பாடுவார்.
இளைய மகன் இன்ஜினியர், அவரும் பாடுவார். எங்களுக்கு அரசு உதவித்தொகை தருவதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அதை மறுத்துவிட்டோம். இதை பெருமாளுக்கு செய்யும் சேவையாக மட்டுமே நினைக்கிறோம்” என்றார்.
அருகிலிருந்த பரத்வாஜும் நிச்சயமாக இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று உறுதியாகச் சொன்னார்.

ஆழ்வார்களின் இனிமையான பக்திப் பாசுரங்களால் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமியையும், கோயிலையும்
மந்திர கனத்திற்கு ஒப்பான அதிர்வைத் தந்து வரும் அரையர்களின் சேவை ஒரு நீண்ட பாரம்பரியமாக தொடர்ந்து வந்திருக்கிறது.
கோயிலில் இருந்து புறப்பட்ட போது அரையர்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதற்குப் ‘பாட்டுக்கு அரசன்’ என்று பெருமை பொங்கச் சொன்னார் பரத்வாஜ்.

அரங்கனுக்கு நடக்கும்அனைத்து விழாக்களும் பொதுவாக 10 நாட்களே நடக்கும். மார்கழிவைகுண்ட ஏகாதசி விழா மட்டும் 22 நாட்கள் நடக்கும். இதனாலேயே இது பெரிய திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்கழி உற்சவத்தின் முதல் பத்து நாட்கள் திருமொழித் திருநாள் எனவும் பின்னால் வரும் 10 நாட்கள் திருவாய்மொழித் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் முதல் பத்து நாட்கள் பகல் நேரத்தில் அரையர் சேவை நடைபெறும். திருவாய்மொழித் திருநாளின் போது அரையர் சேவை இரவு நேரத்தில் நடைபெறும். இந்த அரையர் சேவை நடைபெறும் காலத்தை வைத்து இதை பகல்பத்து இராப்பத்து என்றும் அழைக்கின்றனர்.

  • திருமங்கையாழ்வார் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பத்துநாள் திருவாய்மொழி திருநாளாக ஆரம்பிக்கப்பட்டது
  • நாதமுனிகள் காலத்தில் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்கள் சேர்க்கப்பட்டு 21 நாள் திருநாளாக அரையர் சேவையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
  • ஜகதசாரியன் சுவாமி ராமானுஜர் நம்மாழ்வார் தொடக்கமாக அனைத்து ஆழ்வார்களின் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து விழாவிற்கு மேலும் பொலிவு ஊட்டினார்.
  • பராசரபட்டர் காலத்தில் மார்கழி பெரிய திருநாள் தொடக்க விழாவாக திருநெடுந்தாண்டகம் சேர்க்கப்பட்டு இன்றுவரை 22 நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மணவாள மாமுனிகள் காலத்தில் தம்பிரான் படி வியாக்கியானம் அரையர் சேவையில் சேர்க்கப்பட்டது.
  • நம்பெருமாள் வீணை வாசிப்பு கைங்கரியம்
    முத்தமிழ் விழாவில் தமிழ்வேதமான, திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை அரையர்கள் தாளம் இசைத்துப் பாடுவார்கள்.
    வீணை இசைக் கலைஞர்கள்,
    சில பிரபந்தப் பாசுரங்களை பலவகை அமிர்தமான ராகங்களில்,யாழ்(வீணை) இசைத்தும், வாய்ப்பாட்டாகவும் பாடுவார்கள்.

    இராப்பத்து நாட்களில் நம்பெருமாளின் இரவுப் புறப்பாட்டில், நாழிகேட்டான் வாசலிலிருந்து, மேலப்படி ஏறும்வரை,
    நம்பெருமாள் சுமார்1.30 மணி நேரம் இந்த அற்புதமான இசையைக் கேட்டுக்கொண்டு வருவார்.

    சாந்தோக்ய உபநிஷத்தின்படி, வீணையில் இசைக்கப்படும் இசை எல்லாம் சேர்ந்து பரப்ரம்மமான ஸ்ரீமந்நாராயணனை போற்றுமாம்.

    மேலும் வீணை இசையே மஹாலக்ஷ்மித் தாயாரின் ஒரு வடிவம் என்கிறது உபநிஷத்.

    உடையவர் நியமித்து அருளிய வீணாகானச் சேவை:
    திவ்யப் பிரபந்தங்களில் பெரிதும் ஈடுபட்டிருந்த உடையவர்,
    பல பாசுரங்களிலும் ஆழ்வார்கள் யாழிசையை பாடியுள்ளார்கள்.
    எனவே, ஸ்வாமி இராமானுஜரும் பெரியபெருமாள் கேட்டு உகக்க வேண்டும் என்று கருதி, வீணை இசைக்கும் கைங்கரியத்தை ஏற்பாடு செய்தார்.

    பெருமாள் வீணை கானம் கேட்டருளும் சமயங்கள்:

    திருப்பள்ளி எழுச்சியின் போது – ‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்’ எனும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம்.
    இரவில் திருக்காப்பு சேர்க்கும் போது – ‘மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே என்னும் பெருமாள் திருமொழி பாசுரம்.
    வைகுண்ட ஏகாதசி இராப்பத்தில்
    மற்ற சில உற்சவங்களில் பெருமாள் புறப்பாட்டின் போது வீணை கானம் சேவிக்கப்படும்.

    —————————–

ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி”

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் உற்சவங்களில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு முத்து குறி.
ஆண்டாள் எம்பெருமானையே எப்பொழுதும் நினைப்பவள்.
கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே- – என்பது ஆண்டாளின் நிலை.
“தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும், அவனுடன் கூடிமகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன்.’’
“புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல், அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்தப் பெருமான்
தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?’’ என்பது இந்தப் பாசுரத்தின் பொருள்.

ஆண்டாள் எம்பெருமானை அடைவதற்கு வழி இருக்கிறதா என்று துடிக்கிறாள். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் வீதி வழியே குறி சொல்லும் ஒரு குறத்தி போகிறாள்.
அவளை அழைத்து தோழிகள் சூழ்ந்திருக்க தன் கவலைக்கான காரணத்தையும், அது தீர்வதற்கான
வழியையும் கேட்பது போல அமைந்த நிகழ்ச்சிதான் முத்துகுறி கேட்கும் நிகழ்ச்சி.
ஆண்டாள் கவலையோடு கேள்வி கேட்பதும், அவள் நோய்க்கு கட்டுவிச்சி நீண்ட பதில் சொல்வதும், சுவாரசியமாக இருக்கும்.

அதற்காகவே வடிவமைக்கப்பட்ட உரையாடலை அபிநயத்தோடு அரையர்கள் பேசுவார்கள்.
நெல்லை மாவட்ட இலக்கியங்களில், குறிகேட்கும் இந்த நிகழ்ச்சிகள் நிறைய வரும். `
`குற்றாலக் குறவஞ்சி’’ என்ற சிற்றிலக்கியமே, இந்த உரையாடலில் அடிப்படையில் அமைந்ததுதான்.
இந்த நிகழ்ச்சி ஆடிப்பூர உற்சவத்தில் நடைபெறும். பத்தாம் நாள் உற்சவத்தில், சப்தாவரணம் நடக்கும்.
அன்று ஆண்டாள் முத்துகுறி கேட்கும் வைபவம் நடைபெறும்.
கட்டுவிச்சி பாவனையில் அபிநயம் பிடிக்கும் அரையர் சுவாமி வாயால் ஆண்டாள் இதைக் கேட்டு மகிழ்வாள்.

அரையர் சுவாமி ஒரு கருப்பு பட்டுத்துணியில் சோழிகளை போட்டு குறி சொல்வதுபோல் அபிநயம் செய்வார்.
ஆடித் திருநாளிலும், பங்குனித் திருநாள் ஒன்பதாம் நாள் விழாவுக்கு பிறகு, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் என்கிற பாசுரத்தில்
“பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள்’’ என்று தொடங்கும் பாடலுக்கு அபிநயம் பிடிப்பர்.
மார்கழி மாதத்தில் ஆண்டாள் கோயில் பிராகாரத்தில் ஆண்டாள் மட்டும் தனியாக எழுந்தருளி இருக்க,
தலையில் பட்டு குல்லாய் அணிந்து அரையர் அபிநயம் செய்து முத்து குறி செய்வார்.
இதில், இரண்டு பேர் கிடையாது. அவரே கேள்வி கேட்டு, அவரே பதில் சொல்ல வேண்டும். ஓரங்க நாடகம் போலிருக்கும்.

“சூழ நீர் பாயும் தென்னங்குறுங்குடி, திருமாலிருஞ்சோலை, சுக்கு குத்தி
கழத்தட்டி, வஞ்சி நகரம் என்னும் இஞ்சி நறுக்கி,
ஞானசாரம் பிரமேய சாரம் என்கின்ற சாற்றை எடுத்து,
ஸ்ரீசைலேச தயாபாத்திரத்தில் சேர்த்து
அச்சுதன் என்னும் அடுப்பை வைத்து,
உத்தமன் என்னும் உமியைத் தூவி,
வேங்கடம் என்னும் விறகை முறித்திட்டு,
நீர்மலை என்னும் நெருப்பை மூட்டி,
மணி மந்திரம் என்னும் துடிப்பினாலே,
வானமாமலை என்னும் வட்டிலில் சேர்த்து,
திருமணி கூடத்திலே இறக்கி,
உபதேசரத்தினமாலை என்னும் உரை கலத்தில் இட்டு,
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் மாத்திரை தேய்த்து,
விண்ணகரம் என்னும் மேல்பொடி போட்டு,
கண்ணபுரம் என்னும் கரண்டியால் கலக்கி,
திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து,
திருப்பள்ளி எழுச்சி என்று திகழக் கலக்கித்
திருக்குடந்தை என்று எடுத்து புசி. உன் நோய் தீரும்.”

இதை நீட்டி முழக்கி சொல்லி முடித்ததும், இப்பொழுது கோதையின் தோழிகள் கேட்கிறார்கள்.
“என்ன மருந்து சாப்பிட்டாய்?’’

கோதை பதில்,“எங்கும் இல்லாத மருந்து. விலையில்லா மருந்து.
வடக்கே சென்று வாயு புத்திரன் கொணர்ந்த மருந்து.
தெற்கே சென்று தேவர்கள் கொணர்ந்த மருந்து.
அனுமன் அங்கதன் கொணர்ந்த மருந்து. ஆழ்வார்கள் ஆசாரியர்கள் அனுசந்தித்த மருந்து.
“ஸ்ரீமன் நாராயணா…” என்று தொடங்கும் திவ்யமந்திர மருந்து’’ என்கிறாள்.

இப்படிப் போகும் அரையர் நிகழ்ச்சி. அரையர் சேவை உள்ள ஒரு சில தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரும் உண்டு.
நாதமுனிகள், ஆழ்வார்களின் அருளிச் செயலை, இயல், இசை, நாடகமாகத் தொகுத்தார்.
பொதுவாக தனித்தனியாக இருக்கும்.
இம்மூன்றும், ஒன்றாக கலந்து இருக்கும் நிகழ்ச்சிதான் அரையர் சேவை.
அவர்கள் பாடல் பாடுவார்கள். அதற்கான உரையையும் சொல்லுவார்கள். அபிநயம் பிடிப்பார்கள். வெறும் கைத்தாளம் கொண்டு மட்டும்தான் பாடுவார்கள்.
பக்கவாத்தியம் எதுவும் இருக்காது. இவர்கள் பாடலுக்கு உரை சொல்லும் பொழுது தனி உரையை பயன் படுத்துவார்கள்.
தம்பிரான்படி வியாக்கியானம் என்று பெயர்.

————-

“கோயிலுடைய பெருமாளரையர்” என்றோ,
“வரந்தரும் பெருமாளரையர்” என்றோ,
“மதியாத தெய்வங்கள் மணவாளப்பெருமாளரையர்” என்றோ.
“நாத விநோத அரையர்” என்றோ அரங்கனின் கைங்கர்யபரர்களால் ,அரையர் ஸ்வாமிகளுக்கு அருளப்பாடு சாதிக்கப்படும்.

(பகல்பத்து ,இராப்பத்து விழாக்காலங்களில்,அரையர் ஸ்வாமிகளுக்கான அருளப்பாடு,மேற்சொன்னவாறே சாதிக்கப்படும்)

அரையர்களுக்கு ஸ்தாநீகர் ,தீர்த்தம், சந்தனம், தொங்குபரியட்டம்,மாலை ஆகியவற்றை சாதிப்பார்…

பிறகு அரங்கன் பள்ளிகொண்டு இருக்கும் கர்ப க்ருஹத்தின் (மூலஸ்தானத்தின்) மேற்கு பகுதியில்,அரையர் ஸ்வாமிகள் இருந்துகொண்டு,

“பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத் திகழும் பெருமாள்”
“போதமணவாள மாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்”–என்ற கொண்டாட்டங்களைச் சொல்லி,
திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்” என்பதை பலதடவை இசைப்பர்.

பிறகு,அரையர்கள் சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளி, திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்”
என்று தொடங்கும் முதல் பாசுரத்தினை இசையுடன் அபிநயம் செய்வர்.

பிறகு முதல் பாட்டிற்கு ,”ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த,வ்யாக்யான(விரிவுரை) அவதாரிகைகளும்,
இரண்டாம் பாட்டிலிருந்து,11 பாட்டான,”பட்டுடுக்கும்”என்னும் பாசுரம் வரை,”தம்பிரான்படி” வியாக்யானமும் சேவிக்கப்டும்.

திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு, நாதமுனிகள் தொடங்கி, அவரின் வம்சத்தில் உதித்த, அரையர் ஸ்வாமிகள்
(இன்றைய அரையர் ஸ்வாமிகளின் முன்னோர்கள்) எழுதி வைத்த, வ்யாக்கியானங்களுக்கு (விரிவுரை) “தம்பிரான் படி வியாக்யானம்” என்று பெயர்.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் ஓலைச் சுவடிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் அச்சு வடிவில் இல்லை.
தற்பொழுது அரையர் கைங்கர்யம் செய்யும், அரையர் ஸ்வாமிகளிடம் உள்ள ஓலை ச்சுவடிகளில் இருந்து இந்த தம்பிரான்படி வியாக்கியானம் சேவிக்கப்படும்.

இந்த தம்பிரான் படி விரிவுரை, சொல்லழகும், பொருளழகும் கொண்ட, கருத்தாழமிக்க, சொற்றொடர்களாகும்.
இவற்றை கேட்கக் கேட்க, பக்தர்களின் உள்ளத்திலே பக்தியும், மகிழ்ச்சியும் பொங்கும்.

திவ்யப் பிரபந்தச் சொற்கள் பின்னிப் பிணைக்கப் பட்டு, சந்தத்தோடு அவைகள்,அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும் போது,
அதைக் கேட்போரின் உள்ளத்தில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சொல்லழகு புலப்படும்…..

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பண்டைய தமிழ்நூல்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகள்–பேராசிரியர் ஸ்ரீ ந. சுப்புரெட்டியார் அவர்கள் —

September 22, 2022

1. தொல்காப்பியம்

மாயோன் மேய காடுறை உலகமும்—என்ற பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தால் அறியலாம்.

மாயோன் – கண்ணன், கருநிற முடையோன்! இதனால் மாயோன் என்று முன்னோர்களால் குறிப்பிடப் பெறும் தெய்வம் திருமாலின் பூர்ண அவதாரமான கண்ணனே என்பது பெறப்படுகின்றது. இவ்வுரிமைத் தலைமை அப் பெருமானுக்கு அமைந்ததற்கு அவனது இறைமைப் பண்புகளே காரணமாகும் என்று கருதலாம்.

மாயோன் மேய மன்பெறுஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ் பூவை நிலையும்-

என்ற நூற்பா ‘பூவை நிலை’ என்ற புறத்திணையினை விளக்குவது. இதனை மாயோனுடைய காத்தற் புகழை மன்னர்க்கு உவமையாகக் கூறும் ‘பூவை நிலை’ என்று விளக்குவர் நச்சினார்க்கினியர். மேலும் அவர்,

கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்–என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டுவர்.

இப் பாடலில் பலதேவனும் திருமணி (திருமறு-ஶ்ரீவத்சம்) யையுடைய திருமாலும் வருதலைக் காணலாம்.
பலதேவனைத் தமிழ்நூல்கள் நம்பிமூத்தபிரான் என்று குறிப்பிடும்.

———

2. பத்துப்பாட்டு
தொல்காப்பியத்தை அடுத்துப் பத்துப்பாட்டும் எட்டுத் தொகை நூல்களும் எழுந்தன.
இவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியனவாகக் கூறுவர்.
முதற்கண்கூறிய பத்துப்பாட்டில் மாயோனைப்பற்றிய குறிப்புகள் பல காணலாம். அவற்றுள் சில :
‘புள்ளனி நீள்கொடிச் செல்வன்’
‘நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலையிய ‘உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை’
‘இருநிலங் கடந்த திருமறு மார்பின் ‘முந்நீர் வண்ணன் பிறக்கடை’
‘அவ்வயின், அருந்திறல் கடவுள் வாழ்த்தி’–[அத்திரு வெஃகாவணையில் அரிய திறலினை யுடைய திருமாலை வாழ்த்தி]
இது பிரம்ம தேவர் செய்த வேள்வியினை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுத்தற்பொருட்டுத் திருமால் பள்ளி கொண்டு அணைபோற் கிடந்த தலம்;
இங்கே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருமாலுக்கு வேகாசேது என்பது திருநாமம்.

‘காந்தளஞ் சிலம்பில் கயிறு நீடுகுலைப் படிந்தாங்குப்
பாம்பனைப் பள்ளியமர்ந்தோன் ஆங்கண்.’
‘வலம்புரி பொறித்த நேமியொடு மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல’[16]

[நேமியொடு, வலம் புரிதாங்கு தடக்கை மாஅல் -சக்கரத்தோடே வலம் புரியைத் தாங்கும் பெரிய கையையுடைய மால்.
மா- பொறித்தமா. அல் – திருமார்பிடத்தே திருமகளை வைத்த மால்.
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல – மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமால் போல]
‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண‌ நந்நாள்’
இந்த மேற்கோள்களிலிருந்து
(i) மாயோனது கொடி கருடக்கொடி என்றும்
(ii) அவன் காப்புக் கடவுள் என்றும், (
iii) திருமார்பகத்தே திருமறுவை (ஸ்ரீ வத்சம்) அணிந்த கடல் நீர் வண்ணன் என்றும்
(iv) திருவெஃகாவில் (காஞ்சியில்) கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவன் என்றும்,
(v) அங்குப் பாம்புப் படுக்கையில் சயனத் திருக்கோலமாகக் காட்சி அளிக்கின்றான் என்றும்,
(vi) நான்கு முகத்தையுடைய ஒருவனைப் பெற்ற திருவுந்தியையுடையவன் என்றும்,
திருவாழியையும் திருச்சங்கையும் தன் கைகளில் தாங்கியவன் என்றும், (
vii) மாவலியிடம் மூவடி மண் வேண்டிச் சென்று கேட்டபொருளை நீர் வார்த்துக்கொடுக்க, பேருருவங்கொண்டு காட்சி அளித்தவன் என்றும்,
(viii) அவுணர்களை அழித்தவனும் மாமை (கருமை) நிறமுடையோனுமாகிய அவன் பிறந்த நாள் திருவோணம் என்றும்
அறியப் பெறும் செய்திகளாகும்.

————

3. எட்டுத்தொகை
எட்டுத் தொகை நூல்களில் — பரிபாடலில்– இப்போதுள்ள பதிப்பில் திருமாலுக்குரியவையாக ஆறு பாடல்களும் (1,2,3,4,13,15)
பரிபாடல் திரட்டில் ஒன்றும் ஆக ஏழு பாடல்கள் உள்ளன.
இவற்றில் கூறப் பெறும் செய்திகள் :
திருமால் ஆயிரம் பணாமுடிகளைக் கொண்ட ஆதிசேடன்மீது பள்ளி கொண்டவன்;
பூவைப் பூவண்ணன்;
திருமகள் விரும்பியமர்ந்த திருமார்பினன்;
திருமார்பில் கெளத்துவ மணியை (ஸ்ரீ வத்சம்) யுடையவன்;
பொன்னாடை புனைந்தவன்;
கருடக் கொடியையுடையவன்;
நான்முகனுக்கும் காமனுக்குத் தாதை,
திருவாழியை வலக்கையில் தரித்திருப்பவன் (1).

கேழல் உருவைக் கூறும் உயிர்கள் உளவாதற்பொருட்டு வராகத் திருக்கோலம் கொண்டவன்;
வெண்ணிற முள்ளவனுக்குப் பிறப்பு முறையால் முதியவன்;
உயிர்கள் தோறும் அந்தர்யாமியாய் இருப்பவன்;
ஆழிப்படையால் அவுணர்களின் தலைகளைப் பனங்காய்கள் போல் உருளச்செய்தவன்;
ஆழிப்படையின் உருவம் பகைவர் உயிருண்ணும் கூற்றையும், அதன் நிறம் சுட்ட பொன்னோடு விளங்கிய நெருப்பையும் ஒக்கும்;
திருமேனி நீலமணியையும் கண்கள் தாமரை மலர்களையும் ஒக்கும்;
கருடக் கொடியையுடையவன்;
தேவர்கட்கு அமிழ்தம் வழங்க வேண்டும் என்று திருவுள்ளத்தில் கொண்ட அளவில் அதன் பயனால்
மூவாமையும் ஒழியா வலியும் சாவாமையும் உரியனவாயின (2).

அன்பராயினார் பிறவிப் பிணியை அறுக்கும் மாசில் சேவடியை உடையவன்;
நீலமணி போன்ற திருமேனியையுடையவன்;
கருடனின் அன்னையாகிய விநதையின் இடுக்கண் தீர்த்தவன்,
கேசி என்னும் அரக்கனை மாய்த்தவன்;
மோகினி உருவம் கொண்டு அமரர்கட்கு அமுதம் அளித்தவன்;
இவனுக்கு ‘உபேந்திரன்’ என்ற திருநாமமும் உண்டு;
நான்முகனின் தந்தை; அவனைத் தனது திருவுந்தியில் தோற்றுவித்தவன்.

‘கீழேழ் உலகமும் உற்ற அடியினன்’(20)என்பதால் திருமால் திரிவிக்கிரமனாக உலகளந்த செயல் குறிக்கப் பெற்றதால் வாமனாவதாரமும் நுவலப் பெற்றதாகும்.
தனி நின்று உலகைக் காப்பவன்.
இருபத்தைந்து தத்துவங்களாலும் ஆராயப்பெறும் பெருமையை உடையவன்.
பிறவாப் பிறப்பு இல்லாதவன்;
அவனைப் பிறப்பித்தோரும் இலர்.

மாவிசும்பு ஒழுகுபுனல் வறள அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் (25-26)

செங்கட் காரி கருங்கண் வெள்ளை-பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் (181–182)–என்ற அடிகள்
சிவந்த கண்ணையும்,கரிய மேனியையும் உடைய வாசுதேவன், கரிய கண்ணையும் வெள்ளிய திருமேனியையும் உடையச ங்கர்ஷணன்,
சிவந்த திருமேனியையுடைய பிரத்திம்யுனன்,
பசிய உடம்பையுடைய அதிருத்தன் என்ற திருமாலினது நான்கு வகை வியூகங்களும் இப் பாடலில் நுவலப் பெறுகின்றன. (3)

நீலமேனியையும் அலையடங்கிய கடலையும் நீர் நிறைந்த மேகத்தையும் ஒத்த திருமேனியையுடையவன்.
பிரகலாதன் பொருட்டுத் தூணிலிருந்து நரசிம்மனாகத் தோன்றி இரணியனின் மார்பைக் கிழித்த நகத்தையுடையவன்.
பண்டைக் காலத்தில் பூமி வெள்ளத்தில் அழுந்திய போது வராக வடிவம் கொண்டு அந் நிலத்தைத் தன் கோட்டால்
எடுத்து நிறுத்திய செயல் உலகம் தாங்கும் மேருமலையின் செயலோடு ஒக்கும்.
பனை, கலப்பை, யானை முதலிய கொடிகள் இருப்பினும் கருடக் கொடியே சிறந்தாகத் திகழும்.
அன்பர் நெஞ்சிற் கருதிய வடிவமே அவனது வடிவம்;
தனி வடிவம் இல்லாதவன் வனமாலை அணிந்தவன். தன்னினும் சிறந்த திருவடிகளையுடையவன்;
நிறைந்த கடவுள் தன்மையையுடையவன். வேறு பண்புகளும் நிறைந்தவன்.
ஆலின் கீழும் கடம்பினும் ஆற்றிடைக் குறையினும், மலையிடத்தும் பிறவிடத்தும் பொருந்திய தெய்வங்களாக
வேறுவேறு பெயரும் உருவமும் கொண்டு விளங்குபவன், “ஆர்வலர் தொழுகைகளில் அமைதியாக அமர்ந்திருப்பவன்.
அவரவர் ஏவலனாகவும் அவரவர் செய்த பொருளுக்குக் காவலனாகவும் இருப்பவன்”(4)

பீதாம்பரத்தையும் திருமுடியையும் மாலையையும் கருடக்கொடியையும்கொண்டவன்.
காத்தல் தொழிலையும் உடையவன்.
திருஆழியையும், திருச்சங்கையும் ஏந்திய கைகளையுடையவன்.
தன்னைத் தொழுவோர்க்கு வைகுண்ட பதவியை வழங்குபவன்.
ஐந்து பூதங்களும் மூவேழு உலகத்து உயிர்களும் அவனிடத்து உண்டாயின.
பாற்கடல் நடுவே ஆயிரம் தலையையுடைய ஆதிசேடன் மீது அறிதுயில் கொள்பவன்.
கலப்பையைப் படையாக உடையவன்.
பூமியை நடுக்கமற எடுத்த ஆதிவராகன்,மேகம், காயாம் பூ, கடல், இருள், நீல மணி என்னும் ஐந்தையும் ஒக்கும் திருமேனியையுடையவன்.
காலக் கூறுபாடுகளைக் கடந்து நிற்பவன். அவனுடைய திருவடி, திருக்கை, திருக்கண், திருப்பவழம் இவை தாமரை மலரையொக்கும்,
நெருப்பையொத்த வெட்சிமலரை இடையிட்டுக் கட்டின திருத்துழாய் மாலையையுடையவன்,
அவரவர் செய்த தவப்பயனால் தியானிக்கத்தக்கவன். (13)

மலைகளில் சிறந்த திருமாலிருங் குன்றத்தில் மாயோனாகவும் பலதேவனாகவும் சேவை சாதிப்பவன்.
அவன் அருளின்றி வீடுபேறு அடைதல், துறக்கம் பெறுதல் அரிது.
திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருக்கும் திருமால் துளவமாலையை அணிந்தவன்.
நீலமணிபோன்ற மேனியையுடையவன் ஒளி மிக்கவன், ஒற்றைக் குழையையுடையவன்; கருடக் கொடியையுடையவன்.
கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன், திருவாழி, திருச்சங்கு முதலிய ஐந்து படைகளையுடையவன்.

————

(ஆ) பரிபாடல் திரட்டு :
இருந்தையூர் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருப்பவன். இதில் அமுதம் கடைந்த செய்தி கூறப்பெற்றுள்ளது.
(இருந்தையூர் என்பது மதுரையில் உள்ள திருக்கூடல் என்னும் திருப்பதி)

————-

(இ) கலித்தொகை :

இதில் திருமாலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒருகுழை யொருவன்போல் இணர் சேர்ந்த மராமரமும் (கலி-27) என்ற அடியில் நம்பி மூத்தபிரான் குறிப்பிடப்பெற்றுள்ளான்.
‘கொடுமிடல் நாஞ்சிலான்’ (கலி 36) என்று கூறப்பெறுபவன். ‘மல்லரை மறஞ்சாய்த்தமால்’ (கலி-52) என்று மாயோன் குறிப்பிடப்பெறுகின்றான்.
ஒரு பாடலில் (கலி-103) ‘மாயோன்’ என்ற சொல் வருகின்றது.
முல்லைக் கலியொன்றில் (104),
பால்நிற வண்ணன்போல் பனைக் கொடிப் பழிதிரிந்த வெள்ளையும்
பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ்நேமித் திருமறு மார்பன்போல் திறல் சான்ற காரியும் (8-10) என்ற அடிகளில்
பனைக் கொடியைக் கொண்ட பால் நிற பலதேவனைப் பற்றிய குறிப்பும் திருவாகிய மறுவினையுடைய (ஶ்ரீ வத்சம்) திருமாலைப் பற்றிய குறிப்பும் வருகின்றன.

இதே பாடலில்,
பால்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீணிற வண்ணன்(37-38)–என்ற அடிகளில் திருமாலைப்பற்றிய குறிப்பும் காணப் பெறுகின்றது.

அடுத்த பாடலில் (கலி.105),
வள்ளுரு நேமியான் வாய்வைத்த வளைபோலத் தெள்ளிதின் விளங்கும் களிநெற்றிக் காரியும் (9-10)–என்ற அடிகளில்
மாயோன் ஆழி தாங்கிய கையன் என்றும் அவன் வாய் வைத்து ஊதும் சங்குபோல் கரி கொண்ட நெற்றியையுடைய கரிய ஏறு என்ற குறிப்பும்,
அதே பாடலில் நம்பி மூத்த பிரானைப் பற்றிய குறிப்பும் (11-12) வருகின்றன.

நெய்தற் கலியின் ஒரு பாடலில் (கலி-124)
ஞாலமூன் றடித்தாய முதல்வர்க்கு முதுமறைப் பாலன்ன மேனியான் அணிபெறத் தைஇய (1-2) என்ற அடிகளில்
உலகம் மூன்றும் தன் திருவடியால் அளந்தவனைப்பற்றிய குறிப்பினையும்
இவனுக்கு மூத்த முறையினையுடைய நம்பி மூத்தபிரானைப் பற்றிய குறிப்பினையும் காணலாம்.

திருமாலின் அவதாரச் செயல்களைப்பற்றிக் கூறும் பாரத இராமாயணக் குறிப்புகள் பலவற்றைக் கலித்தொகையில் கலி-101, கலி-104, கலி-106, கலி-134 காணலாம்.

——————-

(ஈ) அகநானூறு :
(1) அகம் -39இல் குறிக்கும் செய்தி: ஆயமகளிர் யமுனையாற்றில் நீராடுங்கால் அவர்கள் கரையில் இட்டு வைத்த ஆடைகளைக் கண்ணபிரான்
விளையாட்டாக எடுத்துக்கொண்டு குருந்தமரத்தேறியிருக்க அப்பொழுது நம்பிமுத்த பிரான் அங்குவர,
அம்மகளிர் ஒரு சேர மறைதற்கு வேறு வழியின்மையால் கண்ணன் தான் ஏறியிருந்த மரத்தின் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தான் என்பது.
இச்செய்தியைச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகளும் குறிப்பிடுவர்.
(ii) அகம் -70 இல்,
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கி வரும் பெளவம் இரங்கு முன்றுரை
வெல்போர் இராமன் அருமறைக் குவித்த வல்வீ லாலம்போல ஒலியவிந் தன்றிவ் வழுங்க லுரே–என்ற அடிகள் குறிப்பிடும் செய்தி :
இராமன், தானும் மற்ற வாணர வீரர்களும் இலங்கைமேற் செல்லுதற்பொருட்டுத் திருவணைக்கரையில் (கோடிக்கரை) இருந்த
ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே அரியமறைகளை ஆராய்ந்த பொழுது அங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் ஆணையால் அடக்கினான் என்ற வரலாறு குறிப்பிடப் பெற்றுள்ளது.
இது தமிழ் நாட்டு வழக்கு இராமாயணங்களில் காணப்படாதது.
(iii) அகம் -220இல் வரும் வரலாறு :
பரசுராமன் தன் தந்தையான யாமதங்கியை (ஐமதக்கினிமுனிவர்) கொன்ற கார்த்த வீரியனை மட்டுமில்லாது
இருபத்தொரு தலைமுறை மன்னர் மரபினைக் கொன்றழிப்பதாக மேற்கொண்ட கொடுஞ்சூளுரை குறிக்கப் பெற்றுள்ளது.
(iv) அகம்-137 இல் திருவரங்கத்தில் நடைபெறும் பங்குனி உத்திர விழா குறிக்கப் பெறுகின்றது.
பங்குனித் திங்களில் உத்திர நட்சத்திரமும் நிறைமதியும் கூடிய நன்னாளில் உறையூரில் பங்குனி உத்திர விழா சிறப்புற்றிருந்ததென்பது இறையனார் நூற்பா (நூற்பா-15) உரையில்,
“இனி ஊர் துஞ்சாமை என்பது ஊர் கொண்ட பெருவிழா நாளாய்க் காண்பாரில்லை யாமாகவும் இடையீடாம் என்பது;
அவை மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப்பங்குனி உத்தரமே, கருவூர் வள்ளிவிழாவே என இவையும்
இவை போன்ற பிறவும் எல்லாம் அப்பெற்றியான பொழுது இடையீடாம் என்பது” என வருதலான் அறியப்படும்.

—————-

(2) புறநானூறு : புறநானூற்றில் வரும் குறிப்புகளைக் காண்போம்
(i) புறம்-174ல் அசுரர் சூரியனை ஒளித்ததும், திருமால் அதனை மீட்டதும் கூறப் பெற்றுள்ளன.[20]
இந்த வரலாற்றைப் பற்றி அறியக்கூடவில்லை.
இன்னொரு பாடலில் (ii) (புறம்-378) இராமாயண நிகழ்ச்சிபற்றி ஒருகுறிப்பு வருகின்றது.
சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி ஊன் பதி பசுங்குடையாருக்குச் சில பரிசிற் பொருளை நல்கினான். அவை பல அணிகலன்களாகக் கொண்டிருந்தன.
அவை பொருநர்க்கெனச் சமைக்கப் பெறாதவை;
அரசர்க்கும் செல்வர்க்குமெனச் சமைக்கப் பெற்றவை; போரில் பகைவர்பால் கொண்டனவும் அவற்றுள் அடங்கியிருந்தன.
அவற்றைப் பசுங்குடையாருடன் போந்த சுற்றத்தினர் பகிர்ந்து கொண்டு தாம் தாம் அணிந்து மகிழ்ந்தனர். இதனைக்கிணைப் பொருநன் கூற்றில் வைத்துக் கூறுவான்.
இராமனுடன் போந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது அவள் கழற்றி எறித்த அணிகலன்களைக் குரங்குகள் எடுத்து
அணிந்து கொண்டதைக் கண்டோர் சிரித்து மகிழ்ந்ததைப் போல பொருநனின் கிளைஞர்கள் அந்த அணிகலன்களை அணிந்து கொள்ளும் வகையறியாது
விரலில் அணிபவற்றைச் செவியிலும், செவியில் அணிபவற்றை விரலிலும், கழுத்திலணிபவற்றை இடுப்பிலும் அணிந்து கொண்டு
நகைப்புக்கு இடமாயினர் என்று கூறும்போது இராமனைப் பற்றிய குறிப்பு வருகின்றது.

———————-

(ஊ) நற்றிணை : இத் தொகை நூலில் கடவுள் வாழ்த்துப் பாடல் தத்துவத்தின் கருத்துகளை மிக அழகாக விளக்குகின்றது.
மாநிலம் சேவடி யாகத் தூநீர் விளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பகங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே-(நற்.1)

இதில் திருமால் மறைகளால் போற்றப்படும் நிலையும் அவர் எங்கும் பரந்து நிற்கும் நிலையும் (வியாபகத்துவம்)
எள்ளுக்குள் எண்ணெய்போல் எவ்வுயிர் மாட்டும் (உயிரல்லாத பொருள்களிலும் கூட) நிற்கும் நிலையும் (அந்தர் யாமித்துவம்)
அவன் ஆழிதாங்கி நிற்பதும் பிறவும் கூறப் பெற்றிருப்பதை ஆழ்ந்து நோக்கித் தெளியலாம்.
என்ற பெரிய திருமொழிப் பாசுரப் பகுதியில் இக்கருத்து நிழலிடுவதைக் காணலாம்.
இதில் ஸ்ரீ வைணவத்தின் உயிர்நாடி போன்ற சரீர – சரீரி பாவனை தத்துவம் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

————-

(எ) பதிற்றுப்பத்து : பதிற்றுப்பத்தில் ஒரு பாடலில் (நான்காம் பத்து-1) ஒரு குறிப்பு காணப்படுகின்றது.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய இப்பாடற் பகுதியில்
திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள திருமாவின் வழிபாட்டுச் சிறப்புக் கூறப் பெறுகின்றது.
திருக்கோயிலின் நாற்புற வாயிலின் வழியாகத் தலைமேல் கைகூப்பி ஒருங்கு கூடிச் செய்யும் பேராரவாரம் நான்கு வேறு திசைகளில் பரந்து ஒலிக்கின்றது.
கோயிலில் தொங்கும் மணியை இயக்கிக் கல்லெனும் ஒசையை உண்டாக்குவர்;
உண்ணா நோன்பு மேற்கொண்ட விரதியர் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி மார்பில் புதிதாகத் தொடுக்கப் பெற்ற திருத்துழாய் மாலையையும்,
காண்பவர் கண்கூசும் ஒளி திகழ் திருவாழியையும் உடைய செல்வனான திருமாலை வணங்கி வாழ்த்தி
நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன் தத்தம் இருப்பிடம் திரும்பிச் சேர்வர்.
இப்பாடலில் செல்வன் என்பது திருவனந்தபுரத்துத் திருமாலை என்று கூறுவர் பழைய உரைகாரர்.

————–

4. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
இப்பகுதியில் அடங்கிய நூல்களை நோக்குவோம்.
(அ) திருக்குறள் : இஃது உலகப் பொது மறையாகக் கருதப் பெறுவது. இதில் வரும் வைணவம் பற்றிய குறிப்புகளை,
(1) இறைவன் பெயர்கள்
(2) அவதாரங்கள்
(3) இருவகை உலகுக்கும் தலைவன் என்று மூன்று பகுதிகளாக நோக்கலாம்.

(1) இறைவனின் பெயர்கள் :
முதல் குறளில் வரும் ஆதிபகவன் என்னும் பெயரை நோக்குவோம்.
இதனை ஆதியாகிய பகவன் என்று ஒரு பெயராகவும் ஆதியும் பகவனும் என்று இரு பெயராகவும் கொள்ளலாம்.
சிவஞான சித்தியார் பரபக்கம் பாஞ்சராத்திரி (வைணவ) மதமறுதலையில் “ஆதியாய் அருவுமாகி” என்ற செய்யுளாலும்
“பாஞ்சராத்திரி நீ உன் கர்த்தாவை ஆதி என்று கூறினாய்
அங்ஙனம் ஆதியாயின் ஆதிக்கு முடிவுண்டாய் கர்த்தாவும் அல்லனாவான்’ என்ற அதன் உரையாலும்
‘ஆதி என்ற பெயர் திருமாலுக்கு உரிய பெயராகும்.’ஆதிமூலம் என்ற பெயரும் நோக்கற் பாலதாகும்.
நம்மாழ்வாரும் ‘அந்தமில் ஆதியம் பகவன் என்பர்.
பகவான் அருளிய கீதை பகவத்கீதை பகவான் வரலாறு கூறும் நூல் பாகவதம், பகவான் அடியார்கள், பாகவதர்கள் எனும் வழக்காறுகளால்
‘பகவத்கீதை’ ‘பாகவதம்’ ‘பாகவதர்’ எனும் பெயர்களுக்கு மூலமாகிய பகவான் என்ற சொல் திருமாலுக்கே உரிய பெயரைக் குறிக்கின்றது என்பது உறுதி.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (10)

என்னும் குறட்பாக்களில் இறைவன் என்னும் சொல் உள்ளது.
இறைவன் என்பதற்கு எல்லாப் பொருள்களிலும் தங்குகின்றவ்ன் என்பது பொருள்.
இது ‘நாராயணன் ‘விஷ்ணு’, ‘வாசுதேவன் எனும் பெயர்களின் தமிழ் வடிவமாதலை உணரின் இறைவன் எனும் சொல் திருமாலுக்கே உரியதாம்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)என்பதில் காணப் பெறும்.
ஐந்தவித்தான் எனும் பெயர் ரிஷிகேசன்’ (இருடிகேசன்) என்ற திருநாமத்தின் தமிழ் வடிவமாகும்.
ரிஷிகம்-இந்திரியம்: இந்திரியங்களின் தலைவன் என்னும் பொருளுடையது. அ
வித்தல் என்பது ஈண்டுத் தன் வயமாக்குதல் என்னும் பொருளைத் தரும்.
ஓராயிரமாய் உலகேழிற்கும்-பேராயிரம் கொண்டதோர் பீடுடைய திருமாலுக்குச் சிறந்தனவாய் திருநாமங்கள் ‘பன்னிரு திருநாமம்’ எனப்படும்.
அவற்றுள் ‘ரிஷிகேசன்’ என்பதும் ஒன்று. ஆகவே, பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது திருமாலுக்கு உரியதேயாகும்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (8) என்பதனுள் வரும் ‘
அறவாழி அந்தணன்’ என்பதும் அறவனை ஆழிப்படை அந்தணனை, ‘அறமுயல் ஆழிப்படையவன்’ என்னும்
திருவாய்மொழித் தொடர்களால் திருமாலுக்கு உரியது என்று உணரலாம்.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வனங்காத் தலை (9) என்பதில்
எண்குணத்தான்’ ‘எளிமைக் குணமுடையவன்’ என்று பொருள்படும்.
இஃது இப்பொருளாதலை,
எண்பதத்தான் ஒரா முறை செய்யா மன்னவன் (548)
எண்பதத்தால் எய்தல் எளிதென் (991) என்பவற்றில் இவற்றின் சொற்பொருளால் அறியலாம். ‘
எளிவரும் இயல்வினன்’ (1;2;3)
“யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்(1;3;4) எனவரும் திருவாய்மொழித் தொடர்களால் உறுதியாகும்.
மேலும் இறைவனின் திருக்குணங்களுள் செளலப்பிய குணம் (சுலப குணம்) என்பதனை அடியார்கள் சிறப்பித்துக் கூறுவதும் இதனை வலியுறுத்தும்.
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)-என்பதில்
தாமரைக் கண்ணான் என்ற பெயர் திருமாலுக்கன்றி வேறு எத்தெய்வத்துக்கும் இல்லாமை உய்த்தறியத்தக்கது.

—————–

(2) அவதாரங்கள் :
எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் எண்ணற்றவை. அவற்றுள் பத்து அவதாரங்கள் மிகு புகழ் வாய்ந்தவை.
ஆனால் திருக்குறளில் குறிப்பிடப்பெற்றவை மூன்று அவதாரங்களே.
அவை இராமாவதாரம், கிருட்டினா அவதாரம், திரிவிக்கிரமாவதாரம்.
நீதியை உரைக்க வந்த திருக்குறளில் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் இவற்றைக் காட்டியுள்ளதை நோக்கின் திருவள்ளுவரின் சமயம் இன்னதென்பதை உணரலாம்.
திருமால் இராமாவதாரத்தில் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையைத் தாமே நடத்திக் காட்டினார். அங்ஙனம் நடந்து காட்டிய ஒழுக்க நெறி ஒன்று.
கிருட்டிணாவதாரத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் எங்ஙனம்? என்பதை உபதேச வாயிலாகச் (பகவத்கீதை) சொன்ன ஒழுக்கநெறி மற்றொன்று
இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்க நெறி எனவும்,
கண்ணனாக வந்து சொல்லியருளிய ஒழுக்க நெறி எனவும் இரட்டுற மொழிதல் என்னும் உத்தி வகையால்,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)–என்னும் குறளில் திருமாலின் இரண்ட வதாரத்தையும் கட்டுதல் அறியலாம்.
கிருட்டினாவதாரத்தில் துரியோதனனிடம் “படை எடேன் அமரில் எனப் பணித்ததை” மீறி
வீடுமனின் விருப்பிற்கிணங்க அவன் நடத்திய போரில் ‘ஆனதெனக்கினியாக எனத் தனியாழி எடுத்தமையும்
பொய்யே அறியா’ தருமனை ‘அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது’ எனத் துரியோதனன் செவிபடச் சொல்லச் செய்து
அதற்குத் துரியோதனன் வேறு பொருள் கொள்ளுமாறு மயங்கச் செய்தமையும்,
பிறந்த பொழுதே இறந்த நிலையில் இருந்த பரீட்சித்து, பெண்களை நோக்காத பேராண்மையையுடைய ஒருவன் திருவடியால் உய்வான் எனக் கண்ணபிரான் உரைக்க,
அந்நிலையில் யாவரும் முன் வராமை கண்டு ‘யானே பெண்களை நோக்காதவன்’ எனத் தன் திருவடியைப் பதிய வைத்து அவனைப் பிழைக்கச் செய்தமையும் முதலிய வரலாறுகளை மனத்திற் கொண்டே,
வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292) என்ற திருக்குறளைக் கூறினர் எனக் கருதலாம். ‘
புரை தீர்ந்த நன்மையைப் பொய்மை பயவாது, அங்ஙனம் பயக்கின்ற அப்பொய்மையும் வாய்மை இடத்த’ என்று கூற வந்தது.
கண்ணபிரானின் வரலாற்றை நோக்கியே எனக் கருதலாம்.
‘இராமனது மெய்யும் கிருட்டிணனது பொய்யும் நமக்குத் தஞ்சம்’ எனும் வைணவ சம்பிரதாய ஆன்றோர் வாக்கும் இதனை அரண் செய்யும்.

திருமால் திருக்குறள் அப்பனானபின் ‘மண்முழுவதும் அகப்படுத்து நின்ற பேருருவத்தைத் திரிவிக்கிரமன்’ என்பர்.

விக்கிரமம்-பெருவலி, திரிவிக்கிரமம்-மூவகைப் பெருவலி, இதனை அறியாது ஒருசிலர் ‘திருவிக்கிரமம்’ என்று பிழைபட எழுதுவர்.
முதலாவது உலகளந்தது; அடுத்தது விண்ணளந்தது. மூன்றாவது மாவலித் தலையில் தன் திருவடியை வைத்து அவனைப் பாதளத்தில் ஆழ்த்தியது.
எனவே, இவ்வகையான மூவகை வலியையும் காட்டுவதற்காகவே ‘உலகளந்தான்’ எனக் கூறாது
‘தன்னடியாலே எல்லா உலகங்களையும் அளந்தான்’ எனப் பொருள் கொள்ளுமாறு ,
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)-என விளக்கிய நுட்பம் உணரத் தக்கது.

—————–

(3) இருவகை உலகுக்கும் தலைவன் :
நாம் வாழும் உலகு மண்ணுலகு. வானவர் வாழும் உலகு வானுலகு.
“இருள்சேர்ந்த இன்னா உலகு”
‘அளறு ஆரிருள்’ எனப்படும் கீழுலகு -இவையாவும் மக்கள் பிறவிச்சுழலில் சிக்கித் தவிக்கும் விளையாட்டுலகு எனவும்,
இறைவனுடைய விளையாட்டுலகம் எனவும் பொருள்படுமாறு இவ்வனைத்துலகையும் ‘லீலாவிபூதி’ என்பர்.
எம்பெருமானும் அவன் அடியார்களும் நித்தியமாய் இன்பத்தோடு வாழும் உலகு ‘முக்தி உலகு’. இதனை ‘நித்திய விபூதி’ என்பர்.
இவ்வாறு கூறுவது வைணவமரபு.
இருவகை உலகிற்கும் தலைவன் திருமாலே என்பதைக் குறிக்கத் திருமாலை ‘உபயவிபூதி நாதன்’ என்பர் ஆன்றோர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி’
பகவன் முதற்றே உலகு (1)
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு (610)
எனும் இருகுறள்களால் இவ்வுலகிற்கு அவன் தலைவன் என்பதனை விளக்கினார்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)
எனும் குறளில் முற்றும் துறந்தார் எய்தும் தாமரைக் கண்ணானுடைய ‘(முக்தி) உலகு’ எனக் குறித்தலால்
‘அந்தமில் இன்பத்து அழிவில்வீடு’,
‘நலம் அந்தம் இல்லதோர் நாடு’,
‘வானோர்க்குயர்ந்த உலகு’ என்றெல்லாம் ஆழ்வார்கள் சிறப்பித்துக் கூறும் நித்திய விபூதிக்கும் திருமாலே தலைவன் என்பதைக் கூறினர்.
எனவே ‘உபயவிபூதிநாதன்’ திருமாலே என உறுதி செய்தாராயிற்று.
இம்முக்தியுலகிற் சென்றவரை ‘புனை கொடுக்கிலும் போக ஒட்டார்’ என்றபடி
அவ்வுலகிலேயே நிலைபெறுவாரன்றி ஈண்டுத் திரும்பிவாரர் என்பது வைணவ சமயக் கோட்பாடு.
இதனை
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி (356)-என்று விளக்கினார் என்பது சிந்திக்கத்தக்கது.

—————

(ஆ) திருவள்ளுவமாலை: இதில்இரண்டு பாடல்கள் உள்ளன.
மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் வாலறிவின்
வள்ளுவரும் தன்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாம்.அளந்தார் ஒர்ந்து (6)–இது பரணர் பாடியது,
இதில் திரிவிக்கிரமாவதாரக் குறிப்பு உள்ளது. திருமால் தன் இரண்டு அடிகளால் புறஉலகத்தை விரும்பி அளந்தார்.
வள்ளுவர் அவ்வுலகோரின் அக உலகையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்.
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்திர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்கம்
மாதாது பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு (21)
இப்பாடலை நல்கூர் வேள்வியார் பாடியது உபதேசிநப்பின்னை என்றும், அவள் தோள்மணந்தான் கண்ணபிரான் என்றும், உத்தர மாமதுரை அவன் அவதரித்த வடமதுரை என்றும்
மாதாநுபங்கி செருக்கொழில் உடையான் என்றும் பொருள் உரைப்பர்.

————-

(ஈ) திரிகடுகம் : இந்நூலை இயற்றியவர் நல்லாதனார்.
கண்ணகன் ஞாலம் அளந்ததுஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருதம் சாய்த்ததுஉம்-நண்ணிய
மானச் சகடம் உதைத்தது உம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.–இஃது இந்நூல் காப்பாக வந்த பாடல்.
திருமால் திரிவிக்கிரமனாக ஞாலம் அளந்த வரலாறும், கண்ணனாக அவதரித்தபோது குருந்தம் சாய்த்தது, சகடம் உதைத்தது என்ற
இரண்டு நிகழ்ச்சிகளும் இதில் குறிப்பிடப் பெற்றுள்ளன.

—————-

(உ) நான்மணிக் கடிகை : இதன் ஆசிரியர் விளம்பி நாயனார் என்ற நல்லிசைப் புலவர்.
மதிமன்னு மாயவன் வான்முகம் ஒக்கும்;
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண் ஒக்கும்; பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம்.–இஃது இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்,
மாயவன் வியக்கத்தக்க ஆற்றலுடைய திருமால் சக்கரப் படை அவன் திருக்கண்களுக்கும் பூவை மலர் அவன் நிறத்திற்கும் உவமையாக வந்தன.

————–

(ஊ) கார்நாற்பது : இந்நூலை இயற்றியவர் கண்ணங் கூத்தனார் என்ற நல்லிசைப்புலவர்.
பொருகடல் வண்ணன் புனைமார்பின் தார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம்
கருவிருந் தாலிக்கும் போழ்து (1)-என்பது முதற்பாடல்.
தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தும் துறையில் அமைந்தது.
கடலின் நிறத்தையுடைய திருமால் திருமார்பில் அணிந்த பூமாலைபோல் இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய மழை பெய்யும்போது (கார்காலத்தில்)
தாம் வருவதாகக் கூறிச் சென்றார் என்று தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.

————–

(எ) இனியவை நாற்பது: இதனை இயற்றிய நல்லிசைப் புலவர் பூதம்சேந்தனார் என்பவர். மும்மூர்த்திகளையும் குறிப்பிடும் பாடல் கடவுள் வாழ்த்தாக வந்துள்ளது.
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே;
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே;
முந்துறப் பேணி முந்நான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.–என்பது காப்புச் செய்யுள்
சேர்த்தல், ஏத்தல், தொழுதல் என மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரண வழிபாடு கூறினார்.
தொல் மாண் துழாய் மாலையான் என்பவன் திருமால்

—————-

(ஏ) ஐந்திணை ஐம்பது : திணைக்குப்பத்தாக ஐம்பது பாடல்களைக் கொண்ட இந்த நூல் அகப்பொருட் பனுவல், இயற்றியவர் மாறன் பொறையனார், முல்லைத்திணையைத் தொடங்கும் முதற் பாடல் இது.
மல்லர்க் கடந்தான் நிறம்போன்று இருண்டெழுந்து
செல்வக் கடம்பமர்ந்தான் வேல்மின்னி – நல்லாய்!
இயங்கெயில் எய்தவன் தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார். (1)
கார்காலம் தோன்றியதைக் கூறுவது இப்பாடல்
மல்லரை வென்ற கண்ணனின் நிறம்போல் இருளைச் செய்து எழுந்து கடப்பந்தாரினை விரும்பிய முருகனின் வேல்போல் மின்னி விசும்பில் இயங்குகின்ற முப்புரங்கனை எய்தவன்
கொன்றைத்தார் மலரும்படியாக வலமாகச் சுழன்று எழா நின்றது கார்காலம். இதில் கண்ணனைப் பற்றிய குறிப்பு வந்துள்ளது.

—————-

(ஐ) பழமொழி நானூறு :
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று இந்நூலாகும். இதன் ஆசிரியர் மூன்றுறையரையனார். இது நானுறு வெண்பாக்களைக் கொண்டது.
ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு பழமொழியைக் கொண்டு திகழ்கின்றது. இதில் ஒரு வெண்பா:
ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல் (42)
பழித்துரைக்கப் புகுவார்க்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதில்லை என்ற கருத்தைக்கூறுகின்றது இவ்வெண்பா.
பசுக் கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும் ஆநிரைகட்குத் தக்க இடையன் என்றே உலகம் சொல்லும் என்பது இவ்வெண்பா விளக்கும் கருத்து.
கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்த வரலாறு இதில் வருவதைக் காணலாம்.

————–

5. இரட்டைக் காப்பியங்கள் :
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் காப்பியமாகிய சிலப்பதிகாரம் படைத்தவர் (இரண்டாம் நூற்றாண்டு) இளங்கோ அடிகள்,
தொடர்ந்து மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால் படைக்கப்பெற்றது.
இந்த இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என்ற பெயரால் வழங்கி வருகின்றன.

(அ) சிலப்பதிகாரம் : இக் காவியத்தில் பல இடங்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகள் உள்ளன.
மாங்காட்டு மறையோன் உறையூருக்கருகில் கோவலன் கண்ணகியுடனும், கவுந்தியடிகளுடனும்
ஒர் இளமரக்காவில் பயணிகள் தங்கும் இருப்பிடத்தில் தங்கியிருந்தபோது அவர்களைச் சந்திக்கின்றான்.
இவன் தென்திசையினின்றும் வடதிசையை நோக்கி வருபவன்.
கோவலன் அவனை நோக்கி, ‘யாது நும்மூர்? ஈங்கென வரவு?’ என்று வினவுகின்றான்.
இந்த இரண்டு வினாக்களில் முன்னதினும் பின்னது சிறப்புடைத் தாதலின் அதற்கு விடைகூறும் இடத்தில்
திருவரங்கம் திருவேங்கடம் இவற்றின் வருணனைகள் வருகின்றன.
நீல மேக நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம்
விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயற் பள்ளிப் பலர்தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பின் கிடந்த வண்ணமும்.–
என்பது திருவரங்கத்தில் திருமால் அறிதுயில் கொண்டு கிடந்த வண்ணத்தை நுவல்வது.
இதில் உயர்ந்த பொன்மலையின்மீது நீலமுகில் படிந்ததுபோல் ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேடனாகிய பாயலின் மீது
காவிரியின் ஆற்றிடைக் குறையாகிய திருவரங்கம் என்ற திவ்விய தேசத்தில் திருமகள் அமரும் மார்பனாகிய
திருமால் பள்ளி கொண்டருளும் செய்தி கூறப் பெற்றுள்ளது.

அடுத்து, மாங்காட்டு மறையோன் திருவேங்கடத்தில் திருமாலின் நின்ற திருக்கோலத்தைக் கூறுகின்றான்.
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஒங்குயர் மலயத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய விடைநிலை தானத்து
மின்னுக்கோடி எடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண்சங்கமும்
தலைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கினர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்–
இது ‘அகலகில்லேன் இறையும்’ என்று ‘அலர்மேல் மங்கை உறை மார்பனாகிய’ வேங்கடவாணனின் நின்ற திருக்கோலத்தைக் காட்டுவது.
இதில் ஒலிக்கின்ற அருவிகள் மலிந்த திருவேங்கடம் என்னும் திருமலையில் ஞாயிறும் திங்களும் இருமருங்கும் ஓங்கி விளங்கிய இடைப்பட்ட விடத்தே
நல்ல நீல நிறத்தையுடைய மேகம் தன் மின்னாகிய புதுப் புடவையை உடுத்து தன் வில்லாகிய பணியைப் பூண்டு நின்றாற்போல
ஆழியையும் சங்கையும் தாமரைக் கையகத்தே வலனும் இடனும் ஏந்தி அழகிய ஆரத்தைத் திருமார்பில் பூண்டு
பொற்பூவாடையை உடுத்து அவன் நின்றருளும் செய்தி தரப்பெறுகின்றது.

இவற்றைத் தவிர, சிலப்பதிகாரத்தில் வேறு சில இடங்களில் வேங்கடத்தைப் பற்றிய குறிப்பு காணப் பெறுகின்றது.
‘நெடியோன் குன்றமும் தொடியோன் பெளவமும்
தமிழ்வரம் புறுத்த தண்புனல் நன்னாடு’. –என்றும், .
வேங்கட மலையும் தாங்கா விளையுள்
காவிரி நாடும். –என்றும் வருதலைக் காணலாம்

இனிச் சிலப்பதிகாரத்தில் திருமால் குன்றமும் அதன் கண் உள்ள பிலத்துவாரமும் அவண் இருந்த பவகாரணி முதலிய மூன்று பொய்கைகளும் கூறப் பெற்றுள்ளன.
திருமால் குன்றம் என்பது அழகர் மலை
இம்மலை திருமாலிருஞ்சோலை மலை என்றும் ஆழ்வார் பாசுரங்களால் அறியப்பெறும்
மதுரைக்கு வருங்கால் பல கோயில்களைக் கூறிய இளங்கோ அடிகள் கருடனைக் கொடியாகவுடைய திருமால் கோயிலையும்
மேழிப் படையை வலமாக ஏந்திய நம்பி முத்த பிரான் கோயிலையும் குறிப்பிடுவர்.
இன்னும் காவிரிப்பூம்பட்டினத்தில் பலதேவன் கோவிலும், திருமால் கோயிலும் இருந்தமையைக் குறிப்பிடுவர் அடிகள்.
இவற்றால் திருமால் வணக்கம் தென்னிந்தியாவில் மிகப் பழங்காலத் திலேயே இருந்திருக்க வேண்டும் என்பது தெளியப்படும்.

மேலும் மாங்காட்டு மறையோன்,
நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்
தாள்தொழு தகையேன் போகுவல்–என்ற பகுதியால்
தன்னைத் திருமாலடியான் என்று குறிப்பிடுவ தாலும்
திவ்விய தேசங்கட்கு யாத்திரையாகப் புறப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதாலும்
திருமால் வழிபாடு பெரு வழக்காக இருந்ததை அறியக் கிடக்கின்றது.

மாங்காட்டு மறையோனைஒரு பழைய பாகவதனாக நினைந்து திரு இராமராசன்
தென்னரங் கேசனை வேங்கடம் மேய செழுமுகிலைத்
தன்னிரு கண்களும் காட்டென்ன உள்ளம் தனைக்கவற்ற
மன்னிய யாத்திரை மேற்கொள்ளும் மாங்கால் மறையவன் சீர
சென்னியில் தாங்கினன் ; வாழிய அன்னவன் திருவடியே.[–என்று தம் நூலில் போற்றுவர்.

மதுரையில் குரவைக் கூத்துள் ஆய்ச்சியரின் ஒருபாடலில் கண்ணனின் அவதாரம் பற்றிய செய்தி வருகின்றது.
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையும் தீங்குழல் கேளாமே தோழி (1)
பாம்பு கயிறாக் கடல்கடந்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி (2)
கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் ஆனுல் வருமேள் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமே தோழி (3)
இவற்றுள் கண்ணன் கன்று வடிவாக வந்த வத்சலாசுரனைக் கொண்டு விளாமர வடிவாக நின்ற
கபித்தாசுரன் மேல் எறிந்து இருவரையும் கொன்றசெய்தியும்,
திருமால் வாசுகி என்னும் அரவத்தைக் கயிறாகவும், மந்தரமலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்த செய்தியும்
காட்டையடுத்த மலைச் சாரலில் கண்ணன் மகளிரைமறைப்பதற்காகக் குருந்தமரத்தை வளைத்த செய்தியும் குறிப்பிடப்பெற்றிருப்பதைக் காணலாம்.
இவையெல்லாம் ஆயர்குலப் பெண்கள் கூடிக் கண்ணனுடைய குழலிசையைப் புகழ்ந்து பாடிய பாடல்கள்.

ஆயர்குலப் பெண்கள் கூடிக் கண்ணனுடைய குழலிசையைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் இனிய சுவையைத் தருவதுடன்
திருமால் வழிபாட்டுச் சிறப்பினையும் உணர்த்து கின்றன. முன்னிலைப் பரவலாக வரும் பாடல்கள் இவை :
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல் வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கிளையே
கலக்கியகை யசோதையார் கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே.

அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உடல்கடைய உண்டனையே
உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

திரண்டமார் தொழுதேத்தும் திருமால்நின்
இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமே மருட்கைத்தே[33]

இவற்றுள் திருமால் கடல் கடைந்த வரலாறும், யசோதைப் பிராட்டியாரின் தாம்பால் ஆப்புண்டதும்;
பசியின்றியே உலகெல்லாம் உண்டு தன் திருவயிற்றில் அடக்கியதும்; உலகம் உண்ட வாயாலேயே களவினால் கொண்ட உறிவெண்ணெயை உண்டு களித்ததும்
திரிவிக்கிரமாவதார காலத்தில் இரண்டடியால் மூவுலகை அளந்ததும் அதே அடியால் பாண்டவர்க்காக ஒலை சுமந்து தூதாக நடந்ததுமான செய்திகள் குறிக்கப்பெறுகின்றன.

‘படர்க்கைப் பரவலாக வரும் பாடல்கள் இவை:
மூவுலகும் ஈரடியால் முறைதிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசிலம்பத் தம்பியொடு கானபோந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே.

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்னென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே.

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
நடந்தானைத் துதுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை எத்தாத நாவென்ன நாவே
நாராயணாவென்னா நாவென்ன நாவே.[34]

இப்பாடல்களுள் ஈரடியால் மூவுலகளந்தமை தம்பியொடுகான் போந்தமை,
‘சோ’ என்னும் அரணம் அழித்தமை உலகனைத்தையும் கொப்பூழில் உதிக்கச் செய்தமை
கண்முதல் கனிவாய் ஈராக உள்ள கரியனைக் கண்களால் கண்ட மை,
கண்ணனுக்குக் கஞ்சன் இழைத்த வஞ்சனைச் செயல்களை யெல்லாம் கடந்து நின்றமை,
பாண்டவர்க்காக நூற்றுவர்பால் தூது சென்றமை ஆகிய செயல்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன.
திருவனந்தபுரத்து எம்பெருமான் ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் (29:52) என்றும்
ஆடகமாடத்து அரவணைக் கிடந்தோன்(30:51) என்றும் இரண்டு இடங்களில் குறிப்பிடப் பெற்றுள்ளான்.
ஆக சிலப்பதிகாரத்தில் பரதத்துவம், வியூகம், விபவம், அர்ச்சை என்ற திருமாலின் நான்கு வகை நிலைகளும் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

மேலும் ஆய்ச்சியர் குரவையில் கண்ணன் ஆயர்பாடி மகளிருடன் குரவை யாடிய செய்தியையும் காணலாம்.
இச்செய்தியில் ஏழு இளம்பெண்கள் தமது மணங்குறித்து வளர்த்த ஏழுவகை ஏற்றினை அடக்கினவனையே மனப்போம் எனக் குறித்து வளர்த்தனர்.
இம் மகளிரைப் பழைய நரம்புகள் நிற்கும் முறைமைகளிலே நிறுத்தி இடையர் குலத்து மாதரி இவர்கட்குப் படைத்துக் கோட்பெயரிடுவாளாயினள்.
பன்னிரண்டு இராசிக்குள்ளே இடபம், கடகம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம் மீனம் என்னும் ஏழினும் குரல் முதலாய் ஏழும் முறையே நிற்பது ஒரு முறை.
துலாம், தனுசு, கும்பம், மீனம் இடபம், கடகம்,சிங்கம் என்னும் ஏழினும் குரல் முதலாய் ஏழும் முறையே நிற்பது மற்றோர் முறை.
இவ்விருமுறையானும் எழுவரும் நின்று கைகோத்துப் பாடுகின்றனர்.
ஆகலின் ஒரு கால் இடத்தில் நின்றவர் மற்றொரு கால் வலத்திலும் வலத்தில் நின்றவர் இடத்திலுமாக மாறி நிற்றல் இயல்பு.
இவ்வாறு குரவையாடினர். இக்கூத்து பெரும்பாலும் இராசக்கிரீடை என வடமொழியாளர் கூறும் ஆட்டத்தை யொத்திருப்பதைக் காணலாம்.
இக்கூறியவற்றிலிருந்து நாராயணனும் திருமாலும் ஆயர்பாடிக் கண்ணனும் ஒன்றுபட்டு
மக்களால் வனங்கப்பெற்ற காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டின் பின்னரே ஏற்படும்.
பரிபாடல் திருமாலையும் அவன் தமயனாகிய பலதேவனையும் குறிக்கும்.
இவற்றிலிருந்து கண்ணபிரானும் அவன் பிராட்டி நப்பின்னையும் பலதேவனும் வணங்கப்பெற்ற செய்தி நன்கு விளங்கும்.
பல தேவற்குத் தனிக் கோயில்கள் அக்காலத்தில் இருந்தன என்பதற்குச் சங்கத் தொகை நூல்களில் போதிய சான்றுகள் உள்ளன.
திருமால் வணக்கம் இவ்வாறு தென்னகத்தே மிகப் பழங்காலத்திலிருந்தே உள்ளது என்பது தெளியப்படும்.

—————

(ஆ) மணிமேகலை : சிலப்பதிகார காலத்துடன் எழுந்தக் காப்பியம் மணிமேகலை,
இதிலும் வைணவம்பற்றிய குறிப்பு உள்ளது.
மணிமேகலை வஞ்சிநகர்க்கண் இருந்து பல்வகைச் சமயவாதிகளையும் கண்டு அவரவர் சமயப் பொருள்களைக் கேட்க விரும்பினாள்.
அளவை வாதிமுதல் பூதவாதி ஈறாகவுள்ள அனைவரும் தத்தம் சமயக் கருத்துகளை உரைத்தனர்.
வைணவவாதி கூறுவான்;
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஒதினன் நாரணன் காப்பென்று கூரைத்தனன்.என்று
ஈண்டுக் கடல்வண்ணன் புராணம் என்பது விட்டுணு புராணத்தை.
புராணம் – பழைமையான வரலாறு;
இவன் வைணவ சமயத்தில் பேரன்பும் கடைப்பிடியும் உடையவனாதலால் ‘காதல் கொண்டு ஒதினான்’ என்றார்.
‘நாராயணன் முறை செய்தலேயன்றிக் காத்தலும் அவன் கடன்’ என்று வற்புறுத்தினான்.
‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்று வள்ளுவர் இறைவனைச் சுருங்கக் கூறியதுபோல் ‘நாரணன் காப்பு’ என்று சுருக்கமாக உரைத்தனன்.

——————-

இ) சீவகசிந்தாமணி :
இந்நூல் சீவகன் என்னும் ஒரரசன் பிறந்தது முதல் வீடுபேறு அடையும் வரை உள்ள கதையைக் கூறுவது
திருத்தக்க தேவர் என்னும் சைன முனிவரால் இயற்றப்பெற்றது. பிற்காலத்தில் அதி மதுரமான காப்பியங்கள் இயற்றிய மகாகவிகள் பலர்க்கும் வழிகாட்டிய இனிய காவியம்.
அந்தக் காலத்தில் திருமால்பற்றியும் அவரது அவதாரங்கள் பற்றியுமான செய்திகள் மக்களிடையே பெரு பெருவழக்காக இருந்ததை நேரில் கண்டவராதலால் தாம் இயற்றும் காவியம் மக்களிடையே நன்கு பரவுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று கருதிய
திருத்தக்க தேவர் அவற்றைத் தம் காவியத்தில் பொருத்தமான இடங்களில் பெய்து தம் காவியத்தைச் சிறப்பித்துள்ளார்; ஒன்றிரண்டு செய்திகள் ஈண்டுக் காட்டப் பெறுகின்றன.
(i) குருந்தொசித்த வரலாறு: சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகத்திலும்
(ii) கண்ணன் மறைந்து வளர்ந்த கதை அதே இலம்பகத்திலும்
((iii) கண்ணன் நப்பின்னையை மணந்த குறிப்பு கோவிந்தையார் இலம்பகத்திலும்
(iv) இராமன் மராமரம் எய்த வரலாறு கனகமாலையார் இலம்பகத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளன.

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

ஸ்ரீ ஆழ்வார்களின் ஆராவமுது -/ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகளின் ஸ்ரீ பத்ரி-ஸ்ரீ சாளக்ராமம் – திவ்ய யாத்திரை குறிப்புக்கள்

September 21, 2022

12 ஸ்ரீ ஆழ்வார்கள் ……………..அம்சங்கள்

1. ஸ்ரீ பொய்கையாழ்வார்…………ஸ்ரீ பாஞ்சஜன்யம் (சங்கு)
2. ஸ்ரீ பூதத்தாழ்வார்…………….ஸ்ரீ கௌமோதகி (கதை)
3. ஸ்ரீ பேயாழ்வார்………………ஸ்ரீ நந்தகம் (வாள் )
4. ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்……….ஸ்ரீ சுதர்சனம் (சக்கரம்)
ஒண் சங்கதை வாள் தண்டு –ஸ்ரீ ஆழ்வார் வரிசைப்படுத்தி அருளிச் செய்கிறார்
5. ஸ்ரீ நம்மாழ்வார் ……………..ஸ்ரீ விஷ்வக்சேனர் (சேனை முதலியார் )
6. ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ………..ஸ்ரீ நித்ய ஸூரி குமுதர்
7. ஸ்ரீ பெரியாழ்வார் ……………ஸ்ரீ பெரிய திருவடி (வாஹனம்)
8. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்………ஸ்ரீ .பூமா தேவி
9. ஸ்ரீ குலசேகர ஆழ்வார்………..ஸ்ரீ கௌஸ்துபமணி
10. ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார்- ஸ்ரீ வைஜயந்தி (வனமாலை)
11. ஸ்ரீ திருப்பாணாழ்வார் ………..ஸ்ரீவத்சம்
12. ஸ்ரீ திருமங்கையாழ்வார் ………ஸ்ரீ சார்ங்கம் (வில்)
இதனாலேயே தனது ஆறு பிரபந்தங்களிலும் ஸ்ரீ சார்ங்க பாணி ஒருவரையே மங்களா சாசனம்

——————

பூதம் -ஆழ்வாரை நினைத்தே -அவயவி
ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தானே -உண்டோ சடகோபருக்கு ஒப்பு
32-திரு நாமங்கள் உண்டே
சடகோபர்-சடாரி -சடஜித்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபிரான்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி நம்பி
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
நா வலம் பெருமான்
குமரித் துறைவன்
ஞான தேசிகன்
ஞானப் பிரான்
தொண்டர் பிரான்
உதய பாஸ்கரர்
ஞானத் தமிழ் அரசு
ஞானத் தமிழ்க் கடல்
மெய் ஞானக் கவி
பாவலர் தம்பிரான்
திரு நா வீறு உடைய பிரான்
குழந்தை முனி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஸ்ரீ வைஷ்ணவ கூடஸ் பதி
தெய்வ ஞான செம்மல்-பவ ரோக பண்டிதன் -போன்ற பல

உயர்வற உயர் நலம் உடையவன் -உயர்ந்து கொண்டே இருக்கும் நலம்

ஞானத்தால் ஆன ஆத்மாவுக்கு ஞாத்ருத்வமும் உண்டே -உணர்ந்து உணர்ந்து -தங்க சிலைக்கு தங்க ஆபரணம் போல் –

எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில-

உயிர் மிசை உடல் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –

தண்ணீர் கேட்க சொம்பு கொண்டு வர -container -வஸ்து போல் நீயே -யானும் நீயே என்னுடைமையும் நீயே
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
ப்ரத்யக் -பராக்குக்கு எதிர்மறை -இரண்டிலும் உள்ளான்
அந்தரங்க அடையாளம் அடியேன் உள்ளான் உடல் உள்ளான்

அர்த்த பஞ்சக ஞான பரமாயே தானே அருளிச் செயல்கள் உண்டு

————————-

தேனாய்க் கன்னலாய் அமுதாய் தித்திக்கும் ஆழ்வார்கள் அருளிச் செயல்களை
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
ஞானப் பூம் கொடி -பெரியாழ்வார் வளர்த்த பெண் கொடி -மால் தேடி ஓடும் மனம் கொண்டவளாய் கோல் தேடி ஓடும் கொழுந்தாகவே வளர்ந்தாள்
பெரியாழ்வார் திருத்தேவிமார் விரஜை எனப்படுபவள்

எம்பெருமானுக்கு சூடிக்கொடுத்து என்னை ஆண்டாளே இவள் –

நாமும் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
பிள்ளைகள் எல்லாரும் பாவிக்கலாம் புக்கார்
எம் பாவாய்
பாவை நோன்பு -மார்கழி நோன்பு –
பதுமை போன்று பாரதந்தர்யம் மிக்க பாவைகள் பாவையைக் கொண்டு செய்யும் நோன்பு

காட்டில் வேங்கடம் -தண்டகாரண்ய வனத்தில் ருஷிகளுடன் கூடி இருந்து வனவாஸ ரஸம் அனுபவித்தபடிக்கு ஒப்பாகும் திருமலை வாஸம்
கண்ணபுர நகர் -வனவாசம் முடித்து திரு அயோத்யையில் அனைவருடன் கூடி இருந்து நகர வாஸத்துக்கு ஒப்பு திருக்கண்ண புர வாஸம்
வ்ருத்தாவனத்துக்கும் திரு ஆய்ப்பாடிக்கும் இவ்விரண்டும் ஒப்பாகவுமாம்
வாமனன் -தன் உடைமையைப் பெற தானே இரப்பாளனாக -சேதன லாபம் ஈஸ்வரனுக்கு புருஷார்த்தம்
வாமனன் ஓட்டரா வந்து -ஓரடி மண்ணுக்குப் பதறுமவன் இவர்களை படரும் போதைக்கு ஆறி இரான் இறே
காற்றில் முன்னம் கடுக ஓடி வரக் கடவன் இறே
கூடிடு கூடலே -நீ கூடி என்னையும் கூட்டு -அவன் எழுந்து அருளி என்னைக் கூட்டிக்கொள்ளும்படியாக நீ அனுகூலிக்க வேணும்

பவள வாயான் வரக்கூவாய்
என்னோடு கலந்து போகிற சமயத்தில் அணைத்து ஸ்மிதம் பண்ணி வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி விளை நீர் அடைத்துப்
போன போதைச் செவ்வியோடும் ஆதாரத்தில் பழுப்போடும் வந்து அணைக்கும்படி யாகக் கூவப்பாராய் –

என் ஆகத்து இளம் கொங்கை விரும்பித் தாம் நாடொறும் பொன்னாகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே
சொற் கேளாத பிரஜைகளைப் போல் யாயத்து முலைகளின் படி –

தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே
அவன் தரிலும் தருகிறான் தவிரிலும் தவிர்க்கின்றான் நீங்கள் அறிவித்துப் போங்கோள்-

உலங்குண்ட விளம் கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே
ஆவி தங்கும் -ஒரு நாள் அணைவது போகத்துக்குப் போதாது -அது உயிர் தரிப்பதற்கே சாலும்
குண ஞானத்தால் தரிப்பாள் என்று இருக்க ஒண்ணாது
அணையுமானால் தரிக்கலாம்

பா வரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழி விளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு –வில்லிபுத்தூராரின் திருக்குமாரர் வரம் தருவார்

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால்
மாட்டுக்கு அருள் தரும் மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள் செக நான்மறை அந்தி நடை விளங்க
வீட்டுக்கு இடை கழிக்கே வெளி காட்டும் அம்மெய் விளக்கே –தேசிகன்
மாடு -செல்வமாகிய ஆன்மா

தீங்கரும்பு கண் வளரும் –2-10-4-திருமங்கை

மூவரும் இராமர் பரதன் லஷ்மணன் போல் அடுத்த அடுத்த நாள் திரு அவதாரம்

ஆடவர்கள் எங்கன் அகன்று ஒழிவார் வெக்காவும்
பாதகமும் ஊரகமும் பஞ்சரமா நீடிய மால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ
மன்றார் பொழில் கச்சி மாண்பு –கணி கண்ணன் பாடியது

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என் கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரம் கொள் கையனே சடங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்த வண்ணமே புறம்பு யோசித்து காட்டிடே

அன்பு ஆவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனுக்கு பின்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் –

கடல் கிழக்குத் தெற்குக் கரை பொரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் -வடதிசையில்
ஏணாட்டுப் பெண்ணை இருபத்து நாற் காதம்
சோணாட்டுக்கு எல்லை எனச் சொல்

வெள்ளாறாது வடக்கா மேற்குப் பெரு வழியாம்
தெள்ளார் புனல் கன்னி தெற்காகும் -உள்ளாரா
வாண்ட கடல் கிழக்காம் ஐம்பத்தாறு காதம்
பாண்டி நாட்டு எல்லைப் பதி

வடக்குத் திசை பழனி வான் கீழ் தென்காசி
குடக்குத் திசை கோழிக்கூடாம் -கடற்கரையின்
ஓரமோ தெற்காகும் உள் எண் பதின் காதம்
சேர நாட்டுக்கு எல்லை எனச் செப்பு

மேற்குப் பவள மலை வேங்கட நேர் வடக்காம்
ஆர்க்கும் உவரி அணி கிழக்குப் பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப நின் காதம்
நல் தொண்டை நாடு எனவே நாட்டு

———–

ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகளின் ஸ்ரீ பத்ரி திவ்ய யாத்திரை குறிப்புக்கள்

ஸ்ரீ பத்ரி இந்தியாவிற்குள் 10,000 அடிகளுக்கு மேல் இருக்கிறது.

ஸ்ரீ ஹரித்துவார்

டெல்லியில் இறங்கி பேருந்தில் கரடு முரடான சாலை, விவசாயப் பேரணி எல்லாம் கடந்து ஏழு மணி நேரப் பிரயாணம் செய்து மாலை ஐந்து மணிக்கு ஹரித்துவார் சென்றடைந்தோம். ஹிமாசலத்தின் அடிவாரத்தில் அமைந்த இந்த இடம், முக்தி தரும் ஷேத்திரங்களில் ஒன்று. இங்கேதான் கங்கை கடல் மட்டத்தில் ஓடுகிறது.

பத்ரிக்கு மேலே ‘சொர்கா ரோகிணி’ என்ற இடம் இருக்கிறது. அதன் வழியாகத்தான் பாண்டவர்கள் சொர்கத்தை அடைந்தார்கள். அதற்கு இது வாசலாகத் (துவாரமாக) இருப்பதால்தான் இதை ‘ஹரி’ துவாரம் என்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பத்ரி ஸ்ரீ நாராயணனான ‘ஹரி’யை அடையும் துவாரமாக இருக்கிறது.

ஸ்ரீ தேவப்பிரயாகை -என்னும் ஸ்ரீ கண்டம் என்னும் கடி நகர் 

ஹரித்துவாரத்திலிருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் இருக்கிறது இந்தத் திவ்ய தேசம். 2720 அடி உயரத்தில் பெரியாழ்வார் ‘கண்டம் என்னும் கடிநகர்’ என்று பாடியுள்ளார். கண்டம் – பாரத கண்டம், கடி என்றால் சிறப்பான என்று பொருள்.

பத்ரிக்குச் செல்லும்போது வரும் முதல் திவ்ய தேசம் இது. பிரயாகை என்றால் ஆங்கிலத்தில் confluence என்று கூறுவர். தமிழில் சங்கமம். பாகீரதியும், அலகநதா நதியும் சங்கமிக்கும் இடம் இது. சங்கமித்த பிறகு அதற்கு ‘கங்கை’ என்று பெயர்!

கங்கை நம் பாரத தேசத்துப் புண்ணிய நதிகளுக்குள் முதன்மையானவள். ஸ்ரீமந் நாராயணன் திருவிக்கிரமாவதாரத்தில் ‘ஓங்கி உலகளந்த’ போது அவரது இடது திருவடி பிரம்மாவின் சத்ய லோகத்தை அடைந்தது. நான்முகன் பக்தியுடன் புனித நீரால் கழுவ, அதுவே கீழே பரமசிவனின் திருமுடி வழியாகக் கங்கையாக நமக்கு மொத்தம் 2525 கிமீ ஓடுகிறாள். கங்கா என்றால் பூமியை நோக்கிக் கருணையோடு இறங்கி வந்தாள் என்று பொருள். கங்கோத்திரி என்ற மலையில் உள்ள பனிப் பாறையில் தொடங்கி, உத்ராஞ்சல், உத்திரப் பிரதேசம், பிஹார், வங்காளம் சென்று கடலில் கலக்கிறாள் கங்கை.

அதாவது பரமசிவனின் தலையிலிருந்த கொன்றை மலரும், பெருமாள் பாதத்திலிருந்த துளசியும் இங்கே இரண்டு நதிகளாக ஓடிவருகின்றன. நதியின் அழகை ரசிக்கும்போது, 2013ல் வெள்ளம் வரும்போது தண்ணீர் எதுவரை வந்தது என்ற இடத்தைக் காண்பித்தார்கள். பயமாகத்தான் இருந்தது. இங்கே ஸ்ரீராமானுஜர் வந்து தங்கியுள்ளார். அவருக்கு ஒரு கோவில் இங்கே உள்ளது. கோவிலில் சயன திருக்கோலத்தில் இருக்கும் ஷேசசாயி பெருமாளும் உற்சவர் ராமானுஜரும் 2013ல் வந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்கள். உற்சவர் ராமானுஜர் மட்டும் காப்பாற்றப்பட்டு பத்ரியில் இருக்கிறார். அதைப் பின்னர் பார்ப்போம்.

கண்டம் என்னும் கடிநகரில் இருக்கும் பெருமாள் நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன் என்று திருநாமம். ஸ்ரீராமராகச் சேவை சாதிக்கிறார். பெரியாழ்வாரும் இந்தப் பெருமாளை ஶ்ரீராமனாகவே பாடியுள்ளார். ஸ்ரீராமர் தவம் புரிந்தபோது அமர்ந்த மேடை ஒன்று இங்கே இருக்கிறது.

ஸ்ரீ திருப்பிரிதி (ஜோசிமட்) 

ஆழ்வார் பாடிய திருப்பிரிதி இமயத்துள் திபெத் நாட்டில் மானசரோவர் ஏரிப்பக்கம் பக்கம் இருந்திருக்க வேண்டும். இன்று நரசிம்மரையே திருப்பிரிதி பெருமாளாக எல்லோரும் தரிசித்து வருகிறார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றித் தரிசிக்கலாம்.

பெங்களூரிலிருந்து எங்களுடன் யாத்திரைக்கு வந்தவர் இந்தப் பெருமாளுக்கு ஏலக்காய் மாலை சமர்ப்பித்தார். “ஏலக்காய் மாலை இந்தப் பெருமாளுக்கு விசேஷமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “திருமங்கை ஆழ்வார் இந்தப் பெருமாளைப் பற்றிப் பாடும் முதல் பாசுரத்தில் ‘அன்று, ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல் இமயத்துள்’ என்று பாடியிருக்கிறார். ஏலம் மணத்துடன் கூடிய நறுமணம் என்று ஆழ்வார் சொல்லியிருக்கிறார். அதனால் ஏலக்காய் மாலை சமர்ப்பித்தேன்” என்றார். ம‘ண’ம் இருந்தால் மார்க்கம் உண்டு!

பத்ரியில் வருடத்தில் ஆறு மாதங்கள் பனியால் மூடிவிடும். அப்போது அந்தப் பெருமாளை இங்கே கொண்டு வந்துவிடுவார்கள். அவருக்குப் பூஜை, ஆராதனம் எல்லாம் இங்கே தான் நடைபெறும். 25 கீமீ மேலே இருக்கும் பத்ரிக்குப் புறப்பட்டோம்.

ஸ்ரீ பதரிகாசிரமம்

பதரிகாசிரமம் தானே உருவான திவ்ய தேசம். இதை ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் என்பார்கள். எட்டு எழுத்து மந்திரம் (பிரணவத்துடன் கூடிய நமோ நாராயணா) அவதரித்த இடம். திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியின் தொடக்கத்தில் இந்த எட்டு எழுத்து மந்திரத்தின் பெருமைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு வரும்போது பெற்ற தாயைக் காட்டிலும் நமக்கு நன்மை செய்யும் என்கிறார்.

பிறகு இந்த மந்திரத்தால் சொல்லப்பட்ட பெருமாளை திருப்பிரிதியில் தரிசித்து பாசுரங்கள் பாடுகிறார். அதற்குப் பிறகு இந்த மந்திரத்தை உபதேசித்த நாராயணப் பெருமாளைப் பதரிகாசிரமத்தில் பாடுகிறார்.

பத்ரியில் நான்கு நாட்கள் தங்கினோம். தினமும் காலை கோயிலுக்குக் குளிக்கச் செல்லுவோம். குளிக்கவா? ஆச்சரியப்படாதீர்கள். கோயிலுக்கு வெளியில் ‘தப்த குண்டம்’ என்ற இடம் இருக்கிறது. இது ஒரு வெந்நீர் ஊற்றுக் குளம். இந்தக் குளிரில் வரும் பக்தர்கள் கஷ்டப்படக் கூடாது என்று பெருமாளே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த ஊற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஊற்று வரும் தொட்டி உள்ளே இறங்கினால் தப்த குண்டம் கொடுக்கும் கதகதப்பில் அது தவக் குண்டம் ஆகி, வெளியே ரம்பையும் ஊர்வசியும் வந்தால் கூட வெளியே வரமாட்டோம்.

திருமங்கை ஆழ்வார் சொன்ன இந்த முதுமையை என் கண்முன்னே நான் பார்த்தேன். அதைப் பற்றி விவரிக்கும் முன் பத்ரியின் முக்கிய மலைகளைப் பற்றிச் சொல்லுகிறேன். பத்ரிகாசரமம் நான்கு மலைகளுக்கு நடுவில் இருக்கிறது. ஒரு புறம் பனிபடர்ந்த நீலகண்டமலை. இன்னொரு புறம் ஊர்வசி பர்வதம். நாராயண பர்வதம் இன்னொன்று சிறிய நர பர்வதம்.

சுமார் 10,800 அடி உயரத்தில் இருக்கும் பத்ரி பெருமாள் கோயிலுக்குள் சென்றவுடன் கருடன் நம்மை வரவேற்கிறார். அவருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு நுழைந்தால் கர்பகிரஹம் தெரிகிறது. மூலவர் பதரிநாராயணப் பெருமாள். பத்ரிவிஷால் என்று பெயர். தாயார் அரவிந்தவல்லி தாயார்.

நடுவாகப் பதரிவிஷால் பெருமாள் இலந்தை மரத்துக்குக் கீழ் பத்மாசனத்தில் அமர்ந்த தியானத் திருக்கோலம். இவருடைய திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. தங்கக் குடையின் கீழ், ரத்தின கிரீடம், வண்ண வண்ண கற்கள் பதிக்கப்பட்ட மாலைகள் அணிந்து கொண்டு சேவை சாதிக்கிறார். நான்கு திருக்கரங்கள். மேல் நோக்கி இருக்கும் கரங்களில் சங்கு சக்கரம், கீழ் நோக்கி இருக்கும் கரங்களைத் தன் மடியில் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

பெருமாளின் வலதுபக்கம் கருடன் அவர் அருகே குபேரன் இருக்கிறார். இடதுபக்கம் நாரதரும் அவருக்கு அருகே உத்தவரும். நர நாராயணர்கள் இருவர் என்று மொத்தம் ஏழு மூர்த்திகள் இருக்கிறார்கள்.

‘நர நாரணனாய், உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன்’ என்கிறார் ஆழ்வார். அதாவது பெருமாளே நாராயணன் என்ற ஆசாரியனாகவும், அவரே நரன் என்ற சிஷ்யராகவும், இரட்டை வேடத்தில், சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இங்கே இருக்கிறார்.

பத்ரி பெருமாளை மூன்று முறை தண்ணீருக்குள் இருந்து மகான்கள் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். முதலில் அலகநந்தா நதிக்குள். அடுத்து நாரத குண்டத்திற்குள். மூன்றாவது முறை தப்த குண்டத்திலிருந்து.

கண்டமென்னும் கடிநகர் என்ற இடத்தில் 2013ல் வந்த வெள்ளத்தில் பெருமாள் மற்றும் ராமானுஜர் விக்கிரகங்கள் அடித்துச் செல்லப்பட்டார்கள், உற்சவர் ராமானுஜர் மட்டும் காப்பாற்றப்பட்டார் என்று முன்பு சொல்லியிருந்தேன். அந்த உற்சவர் விக்கிரகத்தை பத்ரியில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் கடைசி கிராமம் மாணா என்ற இடத்துக்கு ஒரு நாள் கிளம்பினோம். இயற்கைக் காட்சிகளை விவரிக்க முடியாது. மாணா கிரமத்துக்குச் செல்லும்போது அடிக்கடி ‘மூட் ஸ்விங்ஸ்’ வந்தது. எனக்கு இல்லை பத்ரிக்கு. அங்கே காலைப் பத்து மணிக்குச் சூரியன் பளிச் என்று அடித்தால் கொஞ்சம் இதமாக இருக்கும். அதே சூரியன் மேகத்தில் மறைந்து கொஞ்சம் ‘மூடியாக’ இருந்தால் நமக்குக் குளிர் நடுங்கும்.

கிராமம் போகும் வழியில் ‘பீம் பூல்’ என்ற பீமன் திரௌபதிக்காக ஏற்படுத்திய பாலம், பேரிரைச்சலோடு சரஸ்வதி நதி பூமிக்குள் செல்லும் இடம் (அதற்குப் பிறகு சரஸ்வதி நதி அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கா, யமுனா, சரஸ்வதி கலக்கும் இடம்) கலக்கிறாள். பாண்டவர்கள் சொர்க்கத்தை நோக்கிச் சென்ற ‘சுவர்க்கா ரோகிணி’ வாசலுக்குச் சென்றபோது ‘இப்படியே நடந்து சென்றால் நான்கு நாட்களில் சொர்க்கம் வரும்’ என்றார்கள், திரும்பிவிட்டேன்.

வியாச குகைக்குள் சென்று வியாச பகவனைச் சேவித்துவிட்டு சற்று தூரம் நடந்தபோது இந்தியக் கொடி ஒன்று பறந்துகொண்டு இருக்க, அதற்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தபோது ‘இந்தியாவின் கடைசி டீக்கடை’ என்ற பலகையைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

———-

ஸ்ரீ சுஜாதா தேசிகன் ஸ்வாமிகளின் ஸ்ரீ சாளக்ராம பத்திவ்ய யாத்திரை குறிப்புக்கள்

ஸ்ரீ முக்திநாத் அகண்ட பாரத தேசத்தில் அவந்தி தேசத்தில் இருந்துள்ளது. இன்று அது நேபாள தேசத்தில் 12,500 அடி உயரத்தில் இருக்கிறது. (சென்னை 22 அடி; பெங்களூர் 3000 அடி உயரத்தில் இருக்கிறது.)

முதலில், பெரிய விமானத்தில் (180 இருக்கைகள்) நேபாளத் தலைநகரம் காத்மாண்டு சென்று, அங்கிருந்து ஒரு சிறிய விமானத்தில் (50 இருக்கைகள்) போக்ரா என்று ஊரை அடைய வேண்டும். பின்னர் போக்ராவிலிருந்து ஜோம்சம் என்ற இடத்தை, ஒரு மிகச் சிறிய விமானம் (18 இருக்கைகள்) மூலம் சென்றடைய வேண்டும். பிறகு அங்கிருந்து ஜீப் மூலம் (8 இருக்கைகள்) கோயிலுக்குமுன் அரை கிமீ வரை கொண்டு போய் விடுவார்கள். அங்கிருந்து கொஞ்சம் தூரம் குதிரையிலும், பின் கடைசியாக நடந்தும் செல்ல வேண்டும்.

காத்மாண்டுவிலிருந்து முக்திநாத் 128 கிமீ தூரத்தில் இருக்கிறது. ஆனால் நேராகச் செல்ல முடியாது. முதலில் போக்ரா, அங்கிருந்து ஜோம்சம், பிறகு முக்திநாத் செல்ல வேண்டும். விடியற்காலை ஐந்து மணியிலிருந்து மதியம் பன்னிரண்டு வரை மட்டுமே விமானங்கள் இயங்கும். இதற்கிடையில் மூடுபனி, காற்று என்று வானிலை மாறும்போது விமானங்கள் ரத்து செய்யப்படும்.

விமானம் அன்னபூரணா மலைத்தொடருக்கும் தவளகிரி என்ற மலைத்தொடருக்கும் நடுவில் சென்றது. இரண்டு பக்கமும் பனிபடர்ந்த மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டு செல்லுகையில் விமானம் காற்றில் இங்கும் அங்கும் அசைந்தது. முப்பது நிமிஷத்தில் ஜோம்சம் வந்து சேர்ந்தோம்.

சாள என்றால் ஸ்தோத்திரம் என்றும், கிராமம் என்றால் கூட்டம் என்றும் பொருள். கூட்டமாக நம் ஸ்தோத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பெருமாள் சாளக்கிராமப் பெருமாள் என்றும் கூறலாம். இன்னொரு முனிவர் கதையையும் இருக்கிறது. ‘சாளங்காயனர்’ என்ற முனிவர் கண்டகி நதிக்கரையில் தவம் மேற்கொண்டார். பெருமாள் அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க, முனிவர் ‘நான் விரும்பியபடி தோன்ற வேண்டும்’ என்று தன் ஒரு கண்ணால் ஒரு பெரிய சாள மரத்தையும் இன்னொரு கண்ணால் மலையையும் பார்த்தார். மலையும் மரமாகவும் இருக்க வேண்டும் என்றார்.

அடுத்து போக்ராவில் மிக அழகான இடம் பேவா ஏரி (Phewa lake). படகுப் பயணம் செய்து இயற்கையை ரசித்தோம். அங்கே மூங்கில் மீது பறவைகள் கூட்டமாக இருந்தன. ‘கூகிள் லென்ஸ்’ உதவியுடன் இவை ‘cattle egret’ வகை என்று தெரிந்துகொண்டேன்.

காளி கண்டகி பள்ளத்தாக்கு. உலகத்திலேயே ஆழமான பள்ளத்தாக்கு இதுதான். சுற்றி இருக்கும் மலைகள், காற்று, குளிர், பளிச் என்ற சூரிய ஒளி எல்லாவற்றையும் பார்க்கும்போது, நாம் இந்த உலகத்தில் எவ்வளவு சிறியவர்கள் என்று உணர்வு ஏற்படுகிறது.

திருமங்கை ஆழ்வார் சாளக்கிராம பாசுரம் ஒன்றில் ‘தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை’ என்கிறார். நீர்ப் பறவைகள் நிறைந்துள்ள வயல்களால் சூழப்பட்ட சாளக்கிராமம் என்று பாடுகிறார். ஆழ்வார் கண்ட காட்சியை இன்றும் நம்மால் காண முடிகிறது.

முக்திநாத் கோயிலுக்குள் சென்ற போது மனதில் ஒரு சந்தோஷம் கிடைத்தது. திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் இங்கே வந்து தரிசித்த அதே பெருமாளை நாமும் இப்போது சேவிக்கிறோம் என்ற சந்தோஷம் அதை விடப் பெரியது.

கோயிலுக்கு முன் இரண்டு சின்ன குளங்கள் இருக்கின்றன. ஒன்று பாவ குளம், இன்னொன்று புண்ணிய குளம். பெருமாளைச் சேவிக்கும் முன் இதில் நீராட வேண்டும். நீராட என்றால் உள்ளே இறங்கிக் கடக்க வேண்டும். இதைக் கேட்கும் போதே ஜன்னி வந்தது.

முதல் குளத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். இடுப்புக்குக் கீழே உடம்பு அப்படியே உறைந்து போனது. மேலே வந்த போது உடல் சிவந்து, நடுக்க ஆரம்பித்துவிட்டது. ‘சார் புண்ணியம் எல்லாம் போச்சு, இந்த குளத்தில் இறங்கி பாவத்தைத் தொலையுங்க’ என்றார்கள். மீண்டும் அதே போல இறங்கி நடக்க ஆரம்பித்தேன். எமனின் எண்ணெய்க் கொப்பறையில் விழுந்து எழுந்த உணர்வு கிடைத்தது.

இதற்குப் பிறகு கோயிலைச் சுற்றி 108 நீர்த் தாரைகளில் (108 திவ்ய தேசங்களைக் குறிக்கும்) நீர் வருகிறது. அரைவட்ட வடிவில் இருக்கும் இதில் ஒரே ஓட்டமாக ஓடினால் உங்கள் மீது அந்த நீர் படும்.

பெருமாள் பெயர் ஸ்ரீமூர்த்தி பெருமாள். நான்கு திருக்கரங்கள். சங்கு சக்கரம், பத்மம், கதை தாங்கி இருக்கிறார். இருபுறத்திலும் ஸ்ரீதேவியும், பூதேவியும் சாமரம் வீசும் கோலம். பக்கத்தில் கருடன் காட்சி தருகிறார்.

பெருமாளுக்குக் கீழே ராமானுஜர் அங்கே வீற்றிருக்கிறார். கையில் சில உலர்ந்த திராட்சை, சர்க்கரை இனிப்புகளைப் பிரசாதமாக கொடுக்கிறார்கள். மிக முக்கியமான விஷயம், வருபவர்களுக்குத் தலையில் ஸ்ரீசடகோபம் என்ற சடாரியைச் சாதிக்கிறார் உள்ளே இருக்கும் ஒரு பெண் புத்த பிட்சு!

————————

குன்றம் எனது குளிர் மழை காத்தவன்-பொருப்பு-வெற்பு-தெய்வ வடமலை -கல்லும் -கிரி -ஆழ்வாருக்கு பணி தொண்டு செய்யும் சொற்கள்
சடகோபன் மிடைந்த சொல் தொடை ஆயிரம் -1-7-11-சொற்கள் பணி செய்ய ஆழ்வாரை நெருக்குமாம்

பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறு அத்தனை போது ஆங்காந்தவன்–பெரிய திருமொழி –10-6-1-

சடகோபன் சொல் பணி செய் ஆயிரம் -1-10-11-

ஆழ்வார் கண்டு அருளிச் செய்கிறார் -புதிதாக இயற்ற வில்லை –

இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் -ஸ்தோத்ரம் பண்ணி அர்த்தம் மனசில் படுகிறது –

—————-

மாரி மாறாத தண் அம் வேங்கடத்து அண்ணலை –வாரி மாறாத -பைம் பூம் பொழில் குருகூர் நகர் –
அங்குள்ள மாரி -இங்கு தாமிரபரணி நீர் வற்றாமல் ஓடுமே –
திருவேங்கடமும் தாம்ரபரணியும் சேர்த்து -மொட்டைத் தலைக்கும் மூலம் காலுக்கும் சம்பந்தம்
ஸஹ்யம் மூலம் அனுக்ரஹம் –
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே

———-

விதி –கோட்ப்பாடு -முறை -பாபங்கள் -பாக்யம் -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -வைகுந்தத்து அமரரும் முனிவரும் விழியப்பார்
இறை அருள் -புண்யம் -கட்டளை -கைங்கர்யம் -திண்ணம் உறுதிப்பாடு -ஆக்குதல் -இப்படி பத்து அர்த்தங்கள் உண்டே
மீனாய் பிறக்கும் விதி யுடையேன் ஆவேனே -பாக்யம்

——————

பத்து வித கைங்கர்யங்கள் -ஊனேறு செல்வத்து பதிகம் படியே
மூன்று நாள்கள் உபவாசம் திருமலையில் -மல ஜலம் கழிக்கக் கூடாதே
1-கொக்கு போல் -ஓடு மீன் ஓட உரு மீன் வரும் அளவும் -சாரம் -இவனே நாராயணன் நிரூபித்து -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே
ருக் வேத மந்த்ரம் -ஆராதி-ஏழை காணே-ஞானக்கண் விகடே -திருப்பதி வந்தால் திருப்பம் வரும் கிரீம் கச்ச -ஸ்ரீ பீடம் -கோவிந்தா கோஷம் இட்டுக்கொண்டே போக சொல்லும்
2-மீன் போல் கைங்கர்யம் -அருளிச் செயல் தண்ணீரில் -திருப் பாவை நாச்சியார் திருமொழி சேவை ஏற்படுத்தி –
மலை அடிவாரத்தில் பராங்குச நித்ய ஸூரிகள் பிரதிஷடை செய்து அருளி -அப்பனை நினைத்தார்
3- வட்டில் பிடித்து தாஸ்யத்வம் -உப லக்ஷணம் -சேஷன் -பர கத அதிசய ஆதாய இச்சையா -சேஷனையே திருமேனியில் பிரதிஷ்டை செய்து அருளினார் –
இடது திருக்கரங்களில் நாகாபரணம்
வீர நரசிம்மன் அரசன் வலது திருக் கரத்தில் சேர்த்து அருளினாராம்
4-செண்பக மரம் -புஷ்ப கைங்கர்யம் -சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -அனந்தாண் பிள்ளை -ராமானுஜன் தோட்டம் -ராமானுஜன் புஷ் கரணி
5-தம்பாக்கம் முள் புதர் -சோழன் -கோவிந்த ராஜர் -உத்சவர் -சமர்ப்பிக்க -மூலவரையும் -யாதவ ராஜ அரசன் மூலம் -ப்ரதிஷ்டை
ஸ்ரீ ராமாயணம் கால ஷேபம் -கீழே ஒரு வருஷம் -புளிய மரத்தடியில் -ஆழ்வார் சம்பந்தம் என்பதால் புளியோதரை விசேஷம்
விபீஷண சரணாகதி கட்டம் -ஐந்து திரு மேனி ராமபிரான் லஷ்மணன் விபீஷணன் அங்கதன்  சுக்ரீவன் – குருவித் துறை விஸ்வம்பரர் முனிவர்
கண்டவன் பேச்சை கேளாமல் கண்ட என் பேச்சு விபீஷணஸ்து தர்மாத்மா
மித்ர பாவேந –ஸம் பிராப்தம் -நத்யஜேயம் கதஞ்சன-கனவில் இங்கே கொண்டு வந்து சேர்க்க அருளி
சீதாபிராட்டி உடன் சேர்த்தே -திருவின் மணாளன் -அர்ச்சையில் இருக்க வேண்டுமே
புனர்பூசம் புறப்பாடு உண்டு
திருக்கல்யாண உத்சவமும் உண்டு

6-கல் பாறையாக ஆக வேண்டுமே -ஸ்ரீ வாரி பாதம் –மாத்யாயனம் பண்ணும் காலம் உன்னை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிற்றே திருமலை நம்பி வருந்த
நான் உம்மிடம் இருக்கிறேன் -காட்டி அருளி
அனந்தாழ்வான் -குங்கும பரிமள -இதிஹாச மாலையில் காட்டி அருளுகிறார்
கர்ப்பக்ருஹ வாஸனை பரிமளித்ததே
கல்பாறையில் திருவடியில் பதித்து அருளி –
வயசானவர்கள் ஏறாமல் சேவிக்க -திருவடிகளை ப்ரதிஷ்டை செய்து அருளினார்
7-காட்டாறு -நதி ஓடிக்கொண்டே இருக்குமே
கைங்கர்யம் இடைவிடாமல் போக ஜீயர் மடம் நிர்வஹித்து அருளி– மா முனிகள் சின்ன ஜீயர் மடம்
8- வழி பாதை -நெறியாகவே -நான்கு மாடவீதிகளில் வாஹனம் போகாமல் -செருப்பு அணியாமல் போக ஏற்பாடு
நித்யமான கைங்கர்யம் செய்பவர் மட்டுமே அங்கே தங்கி
திருமலையில் மரணம் ஆனால் சம்ஸ்காரம் கீழே
9- படியாய்க் கிடந்து பவளவாய் காண்பேனே
அவனைத் தவிர யாருமே மாலை அணிய மாட்டார்கள்
அங்கே கல்யாணம் பண்ண மாட்டார்கள்
அங்கு உள்ள பூ கனி காய் எல்லாமே அவனுக்காகவே
10 ஏதேனும் ஆவேனே -அவன் இட்ட வழக்காகவே
ஆச்சார்யனாக அவனே ஆக்கி அருள -தான் சிஷ்யனாகி-அவன் கொண்ட அனைத்தும் எம்பெருமானார் அருளாலேயே
நிணர்கிறான் இவன் அவன் அமர்ந்து வேதசாரம் உபன்யாசம் -வேதார்த்த ஸங்க்ரஹம்

நம்மாழ்வார் கோஷ்ட்டி ngo காலணி -மாறன் அடியாராகி உஜ்ஜீவிப்போம்

பெரிய திருமலை நம்பி 1049 திரு நக்ஷத்ரம் சமீபத்தில் கொண்டாடினார்கள்

——————–

தேசிகர் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொள்ளவில்லை.
அது பெரியாழ்வார் திருமொழியுடன் சேர்ந்தது என்ற சம்பிரதாயத்தை அப்படியே கொண்டவர்.

ஏரணிபல் லாண்டுமுதற் பாட்டு நானூற்றெழுபத்தொன் றிரண்டுமெனக் குதவு வாயே-என்று
திருப்பல்லாண்டு சேர்ந்த ஒரே தொகையாகக் கூறியிருப்பதனால் இதனை அறியலாம்.

அவர் தமது பிரபந்த சாரத்தில் மேற்கொண்டுள்ள முறையைக் கவனித்தால் இது தெளிவாகும்.
இந்த முறை பிரபந்தசாரத்தின் முதற்பாட்டில்,
வாழ்வான திருமொழிகள் அவற்றுள் பாட்டின் வகையான தொகைஇலக்கம் மற்றும் எல்லாம் என்று பேசப்பெறுகின்றது.
இதில் ‘பாட்டின் வகையான தொகை’ என்பது ‘பாட்டின் வகுப்பின்படி எண்கள்’ என்பதையும்
‘இலக்கம்’ என்பது அவரவர் அருளிச் செய்த பாசுரத்தின் கூட்டிய எண் என்பதையும் குறிக்கின்றன என்பது தெளிவு-

பெரியாழ்வார் பற்றின பாடலில் வகை எதுவுமின்றித் தொகை மட்டிலும் நானூற்று எழுபத்து ஒன்று இரண்டு (470+1+2=473) என்று கூறியுள்ளதை நோக்கும்போது தேசிகரின் திருவுள்ளத்தில் திருப்பல்லாண்டு தனிப்பிரபந்தம் அன்று என்றிருந்தமை தெளிவாக அறியக்கிடக்கின்றது.

இவர் இராமாதுச நூற்றந்தாதியைச் சேர்த்துத் திவ்விய பிரபந்தம் இருபத்து நான்கு பிரபந்தங்களைக் கொண்டது என்ற கொள்கையினர்;

அப்பிள்ளை-தேசிகருக்குக் காலத்தால் சற்றுப் பிற்பட்டவரான இவர் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கொண்டவர். இதனை,
நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றுப் பத்தொன்றும் நமக்குரைத்தோன் வாழியே
என்று பெரியாழ்வாரைப்பற்றிய தமது வாழித்திருநாமத்தில் கூறியிருப்பதனால் அறியலாகும்.

வேதாந்த தேசிகர் தாம் இயற்றிய பிரபந்தசாரத்தில் இருமடல்களையும் 118 பாசுரங்களாகக் கொள்வர்.
சிறிய திருமடற் பாட்டு முப்பத்தெட்டு இரண்டும்
சீர்பெரிய மடல் தனிப்பாட்டு எழுபத் தெட்டும்–என்பது அவரது திருவாக்கு
பிறிதோரிடத்தில் அவர்
அஹீதனுயர் பரகாலன் சொல் . . . . . . . . . .
வேங்கட மாற்கு ஆயிரத்தோடு
ஆணஇரு நூற்றோரைம் பத்து முன்று–என்று
திருமங்கை மன்னன் பாசுரங்களை 1253 என்று பேசுவர்.
மடல் ஒழிந்த நான்கு பிரபந்தங்களிலும் அடங்கிய பாசுரங்கள்,
பெரிய திருமொழி –1084-
திருக்குறுந்தாண்டகம்–20-
திருநெடுந்தாண்டகம் –30-
திருவெழுக் கூற்றிருக்கை –1-
ஆக –1135-என்று ஆகின்றன.
எனவே, இரு மடல்களும் 1253-1135=118 பாசுரங்களாகின்றன என்பது இதனாலும் தெளிவாகின்றது.
தேசிகர் ‘சிறியதிருமடல் முப்பத்தெட்டு இரண்டும்’, பெரிய மடற் ‘பாட்டு எழுபத்தெட்டு’ என்று குறித்த எண்ணிக்கையைப் பெரும்பாலான பதிப்பாசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அப்பிள்ளையாசிரியர்மடலில் அமைந்த ஒரு கண்ணியை (இரண்டு அடிகள்)ஒரு பாசுரமாகக்கொண்டு சிறிய திருமடலை 771/2 பாசுரங்கள் என்றும்,
பெரிய திருமடலை 1481/2 பாசுரங்கள் என்றும் கணக்கிட்டு இருமடல்களிலும் 226 பாசுரங்கள் உள்ளனவாகக் கொள்வர்.
இதனைத் தாம் இயற்றிய திருமங்கையாழ்வார் வாழித் திருநாமத்தில்,
இலங்கு எழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்று இருபது ஏழ்ஈந்தான் வாழியே என வரும் பகுதியால் அறியலாம்.

யாப்பிலக்கணப்படி திருமடலை ஒரே பாட்டாகக் கொள்வதே பொருத்தம். காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலிவெண்பாவாலான பிரபந்தம்.

ஒரே பாடலாக அமைந்த நீண்ட பாசுரங்களைப் பொருள் முடிவு கருதித் தனித்தனிப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுதல் பண்டிருந்து வரும் ஒரு மரபேயாகும்.
நச்சினார்க்கினியர் அடியார்க்கு நல்லார் இம்முறையை மேற் கொண்டுள்ளனர்.
இம் மரபையொட்டியே இருமடல் பிரபந்தங்களையும் பல பாசுரங்களால் (சரியாகச் சொன்னால் பல பகுதிகளாகக்) கணக்கிடும் மரபும் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
பாசுரங்களைச் சேவிக்கும் போது இப் பகுதிகளின் இறுதியில் சற்று நிறுத்தப் பெறுகின்றது.

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.-

ஸ்ரீ நாலாயிரம் முன்னடி பின்னடி சேவா க்ரமம் –ஸ்ரீ முதலாயிரம் —

September 21, 2022

ஸ்ரீ திருப்பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு–அடியோமோடும் நின்னோடும்
வாழாட் பட்டு நின்றீர் –ஏழாட் காலும் பழிப்பிலோம்
ஏடு நிலத்தில் இடுவதன் –நாடு நகரமும் நன்கு அறிய
அண்டக் குலத்துக்கு –தொண்டக் குலத்தில் உள்ளீர்
எந்தை தந்தை தந்தை –திருவோணத் திரு விழவில் அந்தி
தீயில் பொலிகின்ற –மாயப் பொரு படை வாணன்
நெய்யிடை நல்லதோர் –மெய்யிட நல்லதோர்
உடுத்துக் களைந்த –விடுத்த திசைக் கருமம்
எந்நாள் எம்பெருமான் –செந் நாள் தோற்றி
அல் வழக்கு ஒன்றுமில்–நல் வகையால் நமோ
பல்லாண்டு என்று –பல்லாண்டு என்று நவின்று

————–

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி

வண்ண மாடங்கள் சூழ் –எண்ணெய் சுண்ணம்
ஓடுவார் விழுவார் –பாடுவார்களும்
பேணிச் சீருடை –ஆண் ஒப்பார்
உறியை முற்றத்து –செறி மென் கூந்தல்
கொண்ட தாளுறி –விண்ட முல்லை
கையும் காலும் –ஐய நா வழித்தாளுக்கு
வாயுள் வையகம் -பாய சீருடை
பத்து நாளும் கடந்த –மத்த மா மலை
கிடக்கில் தொட்டில் –ஒடுக்கிப் புல்கில்
செந்நலார் வயல் சூழ் -மின்னு நூல்

சீதக் கடலுள் –பேதைக் குழவி
முத்தும் மணியும் –எங்கும் பத்து விரலும்
பணைத் தோள் இள வாய்ச்சி –இணைக் காலில் வெள்ளி
உழந்தாள் நறு நெய் — பழந்தாம்பால் ஓச்ச
பிறங்கிய பேய்ச்சி –மறம் கொள் இரணியன்
மத்தக் களிறு –அத்தத்தின் பத்தா நாள்
இருங்கைம் மத களிறு –நெருங்கு பவளமும்
வந்த மதலை –நந்தன் மதலைக்கு
அதிரும் கடல் நிற வண் –பதறப் படாமே
பெரு மா வுரலில் –குரு மா மணிப் பூண்
நாள்களோர் நாலைந்து –வாள் கொள் வாள் எயிறு
மைத்தடம் கண்ணி –நெய்த்தலை நேமியும்
வண்டமர் பூங்குழல் –அண்டமும் நாடும்
என் தொண்டை வாய் –ஆய்ச்சியர் தம் தொண்டை
நோக்கி யசோதை –வாக்கும் நயனமும்
விண் கொள் அமரர்கள் –திண் கொள் அசுரரை
பருவம் நிரம்பாமே –உருவு கரிய
மண்ணும் மலையும் –வண்ணம் எழில் கொள்
முற்றிலும் தூதையும் -பற்றிப் பறித்து
அழகிய பைம் பொன்னி –மழ கன்றினங்கள்
சுருப்பார் குழலி –விருப்பாள் உரைத்த

மாணிக்கம் கட்டி –பேணி யுனக்கு
உடையார் கன மணி –விடையேறு காபாலி
எந்தம் பிரானார் –இந்திரன் தானும்
சங்கின் வலம் புரியும் –அங்கண் விசும்பில்
எழிலார் திரு மார்பிற்கு –வழுவில் கொடையான்
ஒதக் கடலில்–மா தக்கவென்று
கானார் நறுந்துழாய் –தேனார் மலர் மேல்
கச்சொடு பொற் சரிகை –அச்சுதனுக்கு என்று
மெய்திமிருநானம் –வெய்யக் கலைப்பாகி
வஞ்சனையால் வந்த –செஞ்சொல் மறையவர்

தன் முகத்துச் சுட்டி –என் மகன் கோவிந்தன்
என் சிறுக் குட்டன் –அஞ்சன வண்ணனோடு
சுற்றும் ஒளி வட்டம் –வித்தகன் வேங்கட வாணன்
சக்கரக்கையன் –தக்கது அறுதியேல்
அழகிய வாயில் –குழகன் சிரீ தரன்
தண்டோடு சக்கரம் –உண்ட முலைப்பால் அறாக் கண்டாய்
பாலகன் என்று –மேல் எழுப் பாய்ந்து
சிறியன் என்று என் இள –சிறுமை பிழை கொள்ளில்
தாழியில் வெண்ணெய் –ஆழி கொண்டு யுன்னை எறியும்
மைத்தடம் கண்ணி –ஒளி புத்தூர் வித்தகன் –

யுய்ய யுலகு படைத்த –செய்யவள் நின்னகலம்
கோளரியின் யுருவம் –காள நன் மேகமவை
நம்முடை நாயகனே –விம்ம வளர்ந்தவனே
வானவர் தாம் மகிழ –தேனுகனும் முரனும் திண்
மத்தளவும் தயிரும் –முத்தின் இள முறுவல்
காயா மலர் நிறவா –ஆயமறிந்து பொருவான்
துப்புடையார்கள் தம் –தப்பின பிள்ளைகளை
உன்னையும் ஓக்கலையில் –மன்னு குறுங்குடியாய்
பாலொடு நெய் தயிர் –நீல நிறத்து அழகார்
செங்கமலக் கழலில் –மங்கல ஐம்படையும்
அன்னமும் மீன் யுருவும் –அன்ன நடை மடவாள்

மாணிக்கக் கிண் கிணி —பேணிப் பவள வாய்
பொன்னரை நாணொடு –என்னரை மேல் நின்று இழிந்து
பன் மணி முத்தின் –நின் மணி வாய் முத்து இலங்க
தூ நிலா முற்றத்தே –நீ நிலா நின் புகழா நின்ற
புட்டியில் சேறும் –சட்டித் தயிரும்
தாரித்து நூற்றுவர் –பாரித்த மன்னர் பட
பரந்திட்டு நின்ற –கரந்திட்டு நின்ற
குரக்கினத்தாலே –அரக்கர் அவிய
அளந்திட்ட தூணை –உளம் தொட்டு இரணியன்
அடைந்திட்ட அமரர்கள் –வடம் சுற்றி
ஆட் கொள்ளத் தோன்றிய –வேட்கையால் சொன்ன

தொடர் சங்கிலிகை –உடன் கூடிக் கிண் கிணி
செக்கரிடை நுனி –அக்கு வடமுடுத்து ஆமைத்
மின்னுக் கொடியுமோர் –மின்னில் பொலிந்ததோர்
கன்னற் குடம் திறந்தால் –தன்னைப் பெற்றெற் குத்தன்
முன்னலோர் வெள்ளி –பன்னி யுலகம் பரவி யோவா
ஒரு காலில் சங்கு ஒரு –பெருகா நின்ற வின்ப
படர் பங்கய மலர் –கடுஞ்சேக் கழுத்தின்
பக்கங் கரும் சிறுப் –மக்கள் உலகினில் பெய்து அறியா
வெண் புழுதி மேற் பெய்து –ஒண் போதலர் கமல
திரை நீர்ச் சந்திர –பெரு நீர்த் திரை எழு
ஆயர் குலத்தினில் –வேயர் புகழ் விட்டு சித்தன்

பொன்னியில் கிண் கிணி –மின்னியல் மேகம்
செங்கமலப் பூவில் –சங்கு வில் வாள் தண்டு
பஞ்சவர் தூதனாய் –அஞ்சப் பணத்தின் மேல்
நாறிய சாந்தம் –ஊறிய கூனினை
கழல் மன்னர் சூழ –சுழலைப் பெரிதுடை
பேரொக்கப் பண்ணி –காரொக்கு மேனி
மிக்க பெரும் புகழ் –சுக்கிரன் கண்ணை
என்னிது மாயம் –மன்னு நமுசியை
கண்ட கடலும் –இண்டைச் சடை முடி
துன்னிய பேர் இருள் –பின்னிவ் வுலகினில்
நச்சுவார் முன்னிற்கும் –மச்சணி மாடம்

வட்டு நடுவே –சொட்டு சொட்டென்ன
கிண் கிணி கட்டி –தன் கணத்தாலே
கத்தக் கதித்து –கொத்துத் தலைவன்
நாந்தகம் ஏந்திய –வேந்தர்களுட்க
வெண் கலப் பத்திரம் –பண் பல பாடி
சத்திரம் ஏந்தி –கத்திரியர் காண
பொத்த உரலை –மெத்தத் திரு வயிறு
மூத்தவை காண –வாய்த்த மறையோர்
கற்பகக் காவு –நிற்பன செய்து
ஆய்ச்சி யன்றாழிப் பிரான் –ஈத்த தமிழிவை

மெச்சூது சங்கம் –பத்தூர் பெறாதன்று
மலை புரை தோள் மன் –பார்த்தன் சிலை வளைய
காயு நீர் புக்கு –வேயின் குழலூதி
இருட்டில் பிறந்து போய் –புரட்டி யன்னாள் எங்கள்
சேப்பூண்ட –சோப்பூண்டு துள்ளி
செப்பிள மென் முலை –துப்பமும் பாலும்
தத்துக் கொண்டாள் –கொத்தார் கருங்குழல்
கொங்கை வன் கூனி –எங்கும் பரதற்கு அருளி
பதக முதலை வாய் –உதவப் புள்ளூர்ந்து
வல்லாள் இலங்கை –சொல்லார்ந்த வப்பூச்சி

அரவணையாய் ஆயர் ஏறே –வரவும் காணேன்
வைத்த நெய்யும் –எத்தனையும் செய்ய
தந்தம் மக்கள் –உந்தையாருன் திறத்து
கஞ்சன் தன்னால் –அஞ்சினேன் காண்
தீய புந்திக் கஞ்சன் –தாயர் வாய்ச் சொல்
மின்னனைய நுண் –என்ன நோன்பு நோற்றாள்
பெண்டிர் வாழ்வர் –வண்டுலாம் பூங்குழலினார்
இரு மலைப் போல் –ஒரு முலையை வாய்
அங்கமலப் போதகத்தில் –அங்கம் எல்லாம் புழுதி
ஓட வோடக் கிண் கிணி –ஆடியாடி யசைந்து யசைந்து
வாரணிந்த கொங்கை –பாரணிந்த தொல் புகழான்

போய்ப் பாடுடைய –பேய்ப் பால் முலை யுண்ட
வண்ணப் பவள மருங்கு –எண்ணற்கு அரிய பிரானே
வையம் எல்லாம் பெறும் –உய்ய இவ்வாயர் குலத்துக்கு
வண நன்றுடைய –இணை நன்று அழகிய
சோத்தம் பிரான் என்று –பேர்த்தும் பெரியன
விண்ணெல்லாம் கேட்க –புண்ணேதும் இல்லை
முலை ஏதும் வேண்டேன் –சிலை ஓன்று இறுத்தாய்
என் குற்றமே என்று — வன் புற்று அரவின் பகை
மெய்யென்று சொல்லுவார் –செய்தன சொல்லி
காரிகையார்க்கும் உனக்கும் –சேரியில் பிள்ளைகள்
கண்ணைக் குளிர –உண்ணக் கனிகள் தருவன்
வா வென்று சொல்லி -நாவற் பழம் கொண்டு
வார் காது தாழப் பெருக்கி –பாரார் தொல் புகழான்

வெண்ணெய் அளைந்த –எண்ணெய் புளிப் பழம்
கன்றுகளோடுச் செவியில் — நின்ற மராமரம் சாய்
பேச்சி முலை யுண்ண –காய்ச்சின நீரொடு
கஞ்சன் புணர்ப்பினில் –மஞ்சளும் செங்கழு நீரின்
அப்பம் கலந்த சிற்றுண்டி –செப்பிள மென் முலையார்கள்
எண்ணெய்க் குடத்தை –உண்ணக் கனிகள்
கறந்த நற் பாலும் –சிறந்த நற்றாய்
கன்றினை வாலோலை –நின் திறத்தேன் அல்லேன்
பூணித் தொழுவினில் –நாண் எத்தனையும்
கார் மலி மேனி நிறைத்து –பார் மலி தொல் புதுவை

பின்னை மணாளனை –என்னையும் எங்கள்
பேயின் முலையுண்ட –காயா மலர் வண்ணன்
திண்ணக் கலத்தில் –அண்ணல் அமரர்
பள்ளத்தில் மேயும் –புள்ளிது வென்று
கற்றினம் மேய்த்து –உற்றன பேசி
கிழக்கில் குடி மன்னர் –விழிக்கும் அளவிலே
பிண்டத் திரளையும் –அண்டத்து அமரர் பெருமான்
உந்தி எழுந்த –கொந்தக் குழலை
மன்னன் தன் தேவிமார் –பொன்னின் முடியினை
கண்டார் பழியாமே –விண் தோய் மதிள்

வேலிக் கோல் வெட்டி –பீலித் தழையை
கொங்கும் குடந்தையும் –சங்கம் பிடிக்கும்
கறுத்திட்டு எதிர் நின்ற –நெறித்த குழல்கள்
ஒன்றே உரைப்பான் -சென்று அங்குப் பாரதம்
சீர் ஓன்று தூதாய் –பார் ஒன்றிப் பாரதம்
ஆலத்திலையான் –பாலப் பிராயத்தே
பொன் திகழ் சித்திரக் கூடம் –அக் கற்றைக் குழலன்
மின்னிடை சீதை பொருட்டா –தன்னிகர் ஓன்று இல்லா
தென்னிலங்கை மன்னன் — என்னிலங்கு நாமத்தளவும்
அக்காக்காய் நம்பிக்கு –ஓக்க யுரைத்த

ஆ நிரை மேய்க்க நீ போதி –பானையில் பாலைப் பருகி
கருவுடை மேகங்கள் –திருவுடையாள் மணவாளா
மச்சொடு மாளிகை ஏறி — நிச்சலும் தீமைகள் செய்வாய்
தெருவின் கண் நின்று –புருவம் கரும் குழல் நெற்றி
புள்ளினை வாய் பிளந்த –அள்ளி நீ வெண்ணெய்
எருதுகளோடு பொருதி –தெருவின் கண் தீமைகள்
குடங்கள் எடுத்து ஏற –இடந்திட்டு இரணியன்
சீமாலி கனவனோடு –ஆமாறு அறியும் பிரானே
அண்டத்து அமரர்கள் சூழ –உண்டிட்டு உலகினை ஏழும்
செண்பக மல்லிகையோடு –மண்பகர் கொண்டானை –

இந்த்திரனோடு பிரமன் –சந்திரன் மாளிகை சேரும்
கன்றுகள் இல்லம் புகுந்து –மன்றினில் அந்திப்போது
செப்போது மென் முலையாள் –முப்போதும் வானவர் ஏத்தும்
கண்ணில் மணல் கொடு –கண்ணனே வெள்ளறை நின்
பல்லாயிரவர் இவ்வூரில் –நல்லோர்கள் வெள்ளறை நின்
கஞ்சன் கறுக்கொண்டு –மஞ்சு தவழ் மணி மாடம்
கள்ளச் சகடும் மருதும் –உள்ளவாறு ஒன்றும் அறியேன்
இன்பம்தனை யுயர்த்தாய் –செம் பொன் மதிள் வெள்
இருக்கொடு நீர் சங்கில் –திருக்காப்பு நான் யுன்னை
போதமர் செல்வக் –வேதப்பயன் கொள்ள வல்ல-

வெண்ணெய் விழுங்கி –புண்ணிற் புளிப் பெய்தால்
வருக வருக வருக இங்கே –அரியன் இவன் எனக்கு இன்று
திருவுடை பிள்ளை தான் –அருகிருந்தார் தம்மை
கொண்டல் வண்ணா இங்கே –உண்டு வந்தேன் அம்மன் என்று
பாலைக் கறந்து அடுப்பேற –சாளக்கிராம முடைய நம்பி
போதர் கண்டாய் இங்கே –கோதுகலமுடைக் குட்டன்
செந்நெல் அரிசி சிறு பருப்பு –இன்னம் உகப்பன் நான் என்று
கேசவனே இங்கே போதராயே –தூசனம் சொல்லும் தொழு
கன்னலில் லட்டு வத்தோடு –பின்னும் அகம் புக்குறியை
சொல்லில் அரிசிப்படுதி –கொல்லை யில் நின்றும்
வண்டு களித்து இரைக்கும் –கொண்டிவை பாடி

ஆற்றில் இருந்து –காற்றில் கடியனாய்
குண்டலம் தாழ –வண்டமர் பூங்குழலார்
தடம்படு தாமரை —படம்படு பைந்தலை
தேனுகானாவி செகுத்து –வானவர் கோன் விட
ஆய்ச்சியர் சேரி –வேய்த் தடம் தோளினார்
தள்ளித் தளர் நடை –கள்ளத்தினால் வந்த
மா வலி வேள்வியில் –ஓரடியிட்டு
தாழை தண்ணாம்பல் –வேழம் துயர் கெட
வானத்து எழுந்த –ஏனத்து வுருவாய்
அங்கமலக் கண்ணன் தன்னை –அங்கவர் சொல்லை

தன்னேராயிரம் பிள்ளை –மின்னேர் நுண்ணிடை வஞ்ச
பொன்னே போல் மஞ்சனம் –மின் போல் நுண் இடையாள்
கும்மாயத்தொடு வெண் -இம் மாயம் வல்ல பெண் பிள்ளை நம்பி
மையார் கண் மடவாய் –பொய்யா யுன்னைப் புறம் பல
முப்போதும் கடைந்து –மெய்ப்பால் உண்டு அழு பிள்ளை
கரும்பார் நீள் வயல் –சுரும்பார் மென் குழல் கன்னி
மருட்டார் மென் குழல் –பொருட்டாயமிலேன்
வாளாவாகிலும் காண –கேளார் ஆயர் குலத்தவர்
தாய்மார் மோர் விற்க –கார்வார்க்கென்று முகப்
தொத்தார் பூம் குழல் கன்னி –ஒத்தற்கு ஒத்தன பேசு
காரார் மேனி நிறத்து–பாரார் தொல் புகழான்

அஞ்சன வண்ணனை –கஞ்சனைக் காய்த்த
பற்று மஞ்சள் பூசி –கற்றுத் தூளி யுடை
நன் மணி மேகலை –கண் மணி நின்றதிர்
வண்ணக் கருங்குழல் –கண்ணுக்கு இனியானை
அவ்வவ்விடம் புக்கு –எவ்வும் சிலையுடை
மிடறு மெழுத்தோடே –கடிறு பலதிரி
வள்ளி நுடங்கிடை –கள்ளி யுணங்கு
பன்னிரு திங்கள் –பொன்னடி நோவ
குடையும் செருப்பும் –கடிய வெங்கானிடை
என்றும் எனக்கு இனியானை –பொன் திகழ் மாடம்

சீலைக் குதம்பை யொரு –காலிப் பின்னே வருகின்ற
கன்னி நன் மா மதிள் –உன்னை இளம் கன்று மேய்க்க
காடுகளூடு போய் –பேடை மயில் சாயல் பின்
கடியார் பொழில் அணி –கடிய வெங்கானிடை
பற்றார் நடுங்க முன் –சிற்றாடையும் சிறு பத்திரமும்
அஞ்சுடராழி யுன் –என் செய்ய என்னை
பன்றியும் ஆமையும் –சென்று பிடித்துச் சிறுக்கை
கேட்டு அறியாதன –ஊட்ட முதலிலேன்
திண்ணார் வெண் சங்கு –கண்ணாலம் செய்ய
புற்று அரவு அல்குல் யசோதை –செற்றம் இல்லாதவர் வாழ் தரு

தழைகளும் தொங்கலும் –மழை கொலோ வருகின்ற
வல்லி நுண் இதழ் அன்ன –முல்லை நன்னறு மலர்
சுரிகையும் தெறி வில்லும் –வருகையில் வாடிய பிள்ளை
குன்று எடுத்து ஆ நிரை காத்த –என்றும் இவனை ஒப்பாரை
சுற்றி நின்று ஆயர் தழைக –அன்றிப்பின் மற்று ஒருவருக்கு
சிந்துரம் இலங்கத் தன் திரு –அந்தம் ஓன்று இல்லாத வாயப்
சாலப் பன்னிரைப் பின்னே –கோலச் செந்தாமரைக் கண்
சிந்துரப் பொடிக் கொண்டு –இந்திரன் போல் வரும் மாய
வலம் காதில் மேல் தோன்றி –அலங்காரத்தால் வரும் மாய
விண்ணின் மீது அமரர்கள் –வண்டமர் பொழில் புதுவை

அட்டுக் குவி சோற்றுப்–வட்டத் தடம் கண் மடமான்
வழு வொன்றும் இல்லாச் –இழவு தரியாதோர் ஈற்றுப் பிடி
அம்மைத் தடம் கண் –தம்மைச் சரண் என்ற
கடுவாய்ச் சின வெங்கண் –கடல் வாய்ச் சென்று
வானத்தில் உள்ளீர் –கானக் களியானை தன்
செப்பாடுடைய –எப்பாடும் பரந்து இழி
படங்கள் பலவுமுடை திரு –அடங்கச் சென்று இலங்கையை
சல மா முகில் பல் கணப்–இலை வேய் குரம்பைத் தவ
வன் பேய் முலை யுண்ட –முன்பே வழி காட்ட முசுக்
கொடியேறு செந்தாமரை –முடியேறிய மா முகில் பல
அரவிற் பள்ளி கொண்டு –திருவிற் பொலி மறை வாணர்

நா வலம் பெரிய தீவினில் –கோவலர் சிறுமியர் இளம்
இட வணரை இடத் –மட மயில்களோடு மான்
வான் இளவரசு வைகுந்த –வான் இளம்படியர் வந்து வந்து
தேனுகன் பிளம்பன் காளி–மேனகையோடு திலோத்தமை
முன் நரசிங்கமதாகி –நன்நரம்புடைய தும்புரு
செம் பெரும் தடம் கண் –அம்பரம் திரியும் காந்தப்ப
புவியுள் நான் கண்டதோர் –அவி யுணா மறந்து விண்ணவர் எல்
சிறு விரல்கள் தடவிப் –பறவையின் கணங்கள்
திரண்டு எழு தழை மழை –மருண்டு மான் கணங்கள்
கரும் கண் தோகை மயில் –மரங்கள் நின்று மது தாரை
குழல் இருண்டு சுருண்டு ஏறி –குழல் முழவம் விளம்பம்

ஐய புழுதி யுடம்பு அளைந்து –கையினில் சிறு தூதையோடு
வாயிற் பல்லும் எழுந்தில –தீ யிணக் கிணங்காடி வந்து
பொங்கு வெண் மணல் –கொங்கை யின்னம் குவிந்து
ஏழை பேதையோர் — ஆழியான் என்னுமாழ
நாடு மூரும் அறியவே போய் –கேடு வேண்டுகின்றார்
பட்டங் கட்டிப் பொன் –பொட்டப் போய்ப் புற
பேசவும் தரியாத –கேசவா என்னும் கேடிலீ
காறை பூணும் கண் –தேறித் தேறி நின்றாயிரம்
கைத்தலத்துள்ள மாட –செய்த்தளை எழு நாற்றுப்
பெருப் பெருத்த கண் –மருத்துவப் பதம் நீங்
ஞால முற்று முண்டா –கோலமார் பொழில் சூழ்

நல்லதோர் தாமரை –இல்லம் வெறியோடிற்றாலோ
ஒன்றும் அறிவு ஒன்றில்லாத –நன்றும் கிறி செய்து போனான்
குமரி மணம் செய்து –அமரர் பதியுடைத்தேவி
ஒரு மகள் தன்னை யுடையேன் –பெரு மகளாய்க் குடி வாழ்ந்து
தன் மாமன் நந்த கோபாலன் –கொம்மை முலையும் இடையும்
வேடர் மறக்குலம் போலே –நாடும் நகரமும் அறி
அண்டத்து அமரர் பெருமான் –கொண்டு குடி வாழ்க்கை –
குடியில் பிறந்தவர் செய் –இடை இருபாலும் வணங்க
வெண்ணிறத் தோய் தயிர் –ஒண்ணிறத் தாமரை
மாயவன் பின் வழி சென்று –தாயவள் சொல்லிய சொல்லை

என்னதான் தேவிக்கு –வன்னாதப் புள்ளால்
என் வில் வலி கண்டு –முன் வல் வில் வலித்து
உருப்பிணி நங்கையை –செருக்குற்றான்
மாற்றுத்தாய் சென்று –கூற்றுத்தாய் சொல்ல
பஞ்சவர் தூதனாய் –அஞ்சப் பணத்தின் மேல்
முடி ஒன்றி –படியில் குணத்து
காளியன் பொய்கை–மீள வவனுக்கு
தார்க்கிளம் தம்பிக்கு –சூர்பணகாவை
மாயச் சகடம் உதைத்து –வேயின் குழலூதி
கார் கடலை –நேராவவன் தம்பிக்கு
நந்தன் மதலையை –செந்தமிழ் தென் புதுவை

நெறிந்த கரும் குழல் மடவாய் –அரசு களை கட்ட
அல்லி யம் பூ மலர்க் கோதாய் –எல்லியம் போது இனிது இருத்தல்
கலக்கிய மா மனத்தனளாய் –குலக்குமாரா காடுறைய
வாரணிந்த முலை மடவாய் –கூறணிந்த வேல் வலவன்
மானமரு மென்னொக்கி –தேனமரும் பொழில் சாரல்
சித்திர கூடத்து இருப்ப –வித்தகனே இராமா ஓ
மின்னொத்த நுண் இடையா –நின்னன்பின் வழி நின்று
மைத்தகு மா மலர்க் குழலாள் –அத்தகு சீர் அயோத்தியர்
திக்கு நிறை புகழாளன் –ஒக்குமால் அடையாளம்
வாராரும் முலை மடவாள் –பாராரும் புகழ்ப் புதுவை

கதிராயிரம் இரவி –அதிரும் கழல் பொரு தோள்
நந்தகம் சங்கு தண்டு –காந்தள் முகிழ் விரல் சீதைக்
கொலையானை கொம்பு –தலையால் குரக்கினம் தாங்கி
தோயம் பரந்த நடுவு –ஆயர் மட மகள் பின்னைக்காகி
நீரேறு செஞ்சடை –வாரேறு கொங்கை யுருப்
பொல்லா வடிவுடைப் –பல்லாயிரம் பெரும் தேவிமார்
வெள்ளை விளி சங்கு –வெள்ளைப் பிறவிக் குரக்கு
நாழிகை கூறிட்டுக் காத்து –ஆழி கொண்டு அன்று இரவி
மண்ணும் மலையும் மறி –எண்ணற்க்கு அரியதோர்
கரிய முகில் புரை மேனி மா –திருவிற் பொலி மறைவா

அலம்பா வெருட்டா –சிலம்பார்க்க வந்து
வல்லாளன் தோளும் –எல்லா இடத்திலும் எங்கும்
தக்கார் மிக்கார்களை –எக்காலமும் சென்று
ஆனாயர் கூடி –வானாட்டில் நின்றும்
ஒரு வாரணம் –கரு வாரணம்
ஏவிற்றுச் செய்வான் –ஆவத்தனம் என்று
மன்னர் மறுக –கொன்னவில் கூர் வேல் கோன்
குறுகாத மன்னரை –அறு கால் வரி வண்டுகள்
சிந்தப் படைத்து –இந்திர கோபங்கள்
எட்டுத் திசையும் –பட்டிப் பிடிகள்
மருதப் பொழில் அணி –விரதம் கொண்டு ஏத்தும்

உருப்பிணி நங்கை தனை –பொருப்பிடைக் கொன்றை
கஞ்சனும் காளியனும் –நஞ்சுமிழ் நாக மெழுந்தணவி
மன்னு நரகன் தன்னை –புண்ணை செருந்தியோடு
மா வலி தன்னுடைய –கோவலர் கோவிந்தனை
பல பல நாழம் சொல்லி –குல மலை கோல மலை
பாண்டவர் தம்முடைய –பாண்டகு வண்டினங்கள்
கனம் குழையாள் பொருட்டு –கனம் கொழி தெள்ளருவி
எரி சிதறும் சரத்தால் –அரையன் அமரும் மலை
கோட்டு மண் கொண்டிட –ஈட்டிய பல் பொருள்கள்
ஆயிரம் தோள் பரப்பி –ஆயிரம் ஆறுகளும்
மாலிருஞ்சோலை என்றும் –மேல் இரும் கற்பகத்தை

நாவ கார்யம் சொல்லிலாத –மூவர் கார்யமும் திருத்தும்
குற்றம் இன்றிக் குணம் பெரு –துற்றி ஏழுலு குண்ட
வண்ண நன் மணியும் –எண்ணக் கண்ட விரல்களால்
உரக மெல்லணையான் கையில் –நரக நாசனை நாவில் கொண்டு
ஆமையின் முதுகத்திடை –நேமி சேர் தடம் கையினானை
பூதம் ஐந்தொடு வேள்வி –நாதனை நரசிங்கனை
குருந்தம் ஒன்றா சித்த –கரும் தடம் முகில் வண்ணனை
நளிர்ந்த சீலன் நயா சீலன் –குளிர்ந்து உரைகின்ற கோவிந்தன்
கொம்பினார் பொழில் வாய் –நம்பனை நரசிங்கனை
காசின் வாய்க் கரம் விற்க –கேசவா புருடோத்தமா
சீத நீர் புடை சூழ் –கோதில் பட்டர் பிரான்

ஆசை வாய்ச் சென்ற –கேசவா புருடோத்தமா வென்
சீயினாற் செறிந்தேறிய –வாயினால் நமோ நாரணா
சோர்வினால் பொருள் –மார்வம் என்பதோர் கோயில்
மேல் எழுந்ததோர் வாயு –மூலமாகிய ஒற்றை எழுத்
மடி வழி வந்து நீர்ப் புலன்– துடை வழி யும்மை நாய்கள்
அங்கம் விட்டவை –வங்கம் விட்டுலவும்
தென்னவன் தமர் –இன்னவன் இனையான் என்று
கூடிக் கூடி யுற்றார்கள் –தீ யொரு பக்கம் சோர்வதன்
செத்துப் போவதோர் –சித்தம் நன்கு ஒருங்கி

காசுங் கறை யுடை –கேசவன் பேரிட்டு
அங்கொரு கூறை –செங்கண் நெடுமால்
உச்சியில் எண்ணெயும் –பிச்சை புக்காகிலும்
மானிட சாதியில் –வானுடை மாதவா
மலமுடை யூத்தையில் –குலமுடைக் கோவிந்தா
நாடு நகரமும் அறிய –சாடிறப் பாய்ந்த தலைவா
மண்ணிற் பிறந்து மண் –கண்ணுக்கு இனிய
நம்பி பிம்பி என்று –செம் பெருந் தாமரைக் கண்ணன்
ஊத்தைக் குழியில் –கோத்துக் குழைத்து
சீரணி மால் –ஓரணி ஒண் தமிழ்

தங்கையை மூக்கும் –கங்கை கங்கை என்ற
சலம் பொதி யுடம்பில் –நலம் திகழ் சடையான்
அதிர் முகமுடைய –சது முகன் கையில்
இமையவர் இறுமாந்து –இமவந்தம் தொடங்கி
உழுவதோர் படையும் –எழுமையும் கூடி
தலைப்பெய்து குமுறி –அலைப்புடைத் திரை வாய்
விற் பிடித்து இறுத்து –அற்புதமுடைய
திரை பொரு கடல் சூழ் –நிரை நிரையாக
வடதிசை மதுரை அரசாள –தடவரை அதிரத் தரணி
மூன்று எழுத்ததனை –மூன்றடி நிமிர்த்து
பொங்கொலி கங்கை –தங்கியவன்பால

மாதவத்தோன் புத்திரன் –தோதவத்தித் தூய் மறையோர்
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த –மறைப் பெரும் தீ வளர்த்த
மருமகன் தன் சந்ததியை –திரு முகமாய்ச் செங்கமலம்
கூன் தொழுத்தை சிதகு –கான் தொடுத்த நெறி போகி
பெரு வரங்களவை பற்றி –குரவரும் பக்கோங்கு அலர
கீழ் உலகில் அசுரர்களை –தாழை மடலூடு ரிஞ்சி
கொழுப்புடைய செழும் –தழுப்பரிய சந்தனங்கள்
வல் எயிற்றுக் கேழலுமாய் –எல்லியம் போது இருஞ்சிறை
குன்றாடு கொழு முகில் போல் –குன்றூடு பொழில் நுழைந்து
பரு வரங்களவை பற்றி –திருவரங்கத் தமிழ் மாலை

மரவடியைத் தம்பிக்கு –திருவடி தன் திரு வுருவம்
தன்னடியார் திறத்தகத்து –மன்னுடைய விபீடணற்கா
கருளுடைய பொழில் மருது –இருளகற்றும் எறி கதிரோன்
பதினாறாம் ஆயிரவர் –புது நாண் மலர்க் கமலம்
ஆமையாய்க் கங்கையாய் –சேமமுடை நாரதனார்
மைத்துனன்மார் காதலி –பத்தர்களும் பகவர்களும்
குறள் பிரம்மசாரியாய் — எறிப்புடைய மணி வரை மேல்
உரம் பற்றி இரணியனை –உரம் பெற்ற மலர்க்கமலம்
தேவுடைய மீனமாய் –சேவலொடு பெடை யன்னம்
செரு வாளும் புள்ளாளன் –இரவாளன் பகலாளன்
கைந் நாகத்து இடர் கடிந்த –மெய்ந்நாவான் மெய்யடியான்

துப்புடையாரை யடைவது –எய்ப்பு என்னை வந்து நலியும்
சாமிடத்து என்னைக் குறி –போமிடத்து உன் திறத்து எத்தனை
எல்லையில் வாசல் –சொல்லலாம் போதே
ஒற்றை விடையனும் –அற்றது வாழ் நாள் இவற்கு என்று
பை யரவின் அணைப்பால் –வைய மனிசரைப் பொய்யென்று
தண்ணனவில்லை நமன் –எண்ணலாம் போதே யுன்
செஞ்சொல் மறை –வஞ்ச உருவின் நமன் தமர்கள்
நான் ஏதும் யுன் மாயம் –வானேய் வானவர் தங்கள் ஈசன்
குன்று எடுத்து ஆ நிரை –நன்றும் கொடிய நமன் தமர்கள்
மாயவனை மது ஸூதனனை –வேயர் புகழ் வில்லி புத்தூர் மன்

வாக்குத் தூய்மை –மூர்க்குப் பேசுகின்றான் இவன் என
சழக்கு நாக்கொடு –விழிக்கும் கண்ணிலேன்
நன்மை தீமைகள் ஓன்று –உன்னுமாறு உன்னை ஓன்று
நெடுமையால் உலகேழும் -அடிமை என்னும் அக்கோயின்
தோட்டமில்லவள் –நாட்டு மானிடத்தோடு
கண்ணா நான்முகனை –எண்ணா நாளும் இருக்க எசுச்
வெள்ளை வெள்ளத்தின் –உள்ளம் சோர உகந்து எதிர்
வண்ண மால் வரையே –எண்ணுவார் இடரை
நம்பனே நவின்று ஏத்த –கம்ப மா கரி கோள் விடுத்தானே
காமர் தாதை கருதலர்–சேம நன்கு அமரும் புதுவையர் –

நெய் குடத்தைப் பற்றி –மெய்க் கொண்டு வந்து புகுந்து
சித்தர கூத்தன் எழுத்தால் –முத்துத் திரை கடல் சேர்ப்பன்
வயிற்றில் தொழுவை –எயிற்றை மண் கொண்ட
மங்கிய வல் வினை நோய் –சிங்கப் பிரான் அவன் எம்மான்
மாணிக் குறள் வுருவாய் –மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
உற்ற வுறு பிணி நோய்காள்–அற்றம் யுரைக்கின்றேன்
கொங்கைச் சிறு வரை –வங்கக் கடல் வண்ணன் அம்மான்
ஏதங்களாயின எல்லாம் –போதில் கமல வன் நெஞ்சம்
உறகல் உற கல் உற கல் –இறவு படாமல் இருந்த
அரவத்து அமளியினோடும் -பரவத் திரை பல மோத

துக்கச் சுழலையை –மக்கள் அறுவரை கல்லிடை
வளைத்து வைத்தேன் இனி –அளித்து எங்கும் நாடும் நகரமும்
உனக்குப் பணி செய்திரு –புனைத்தினைக் கிள்ளிப் புது
காதம் பலவும் திரிந்து உழன்று –தூது செய்தார் குரு பாண்டவர்
காலும் எழா கண்ண நீரும் –மால் உகளா நிற்கும் என் மனமே
எருத்துக் கொடி யுடையான் –மருத்துவனாய் நின்ற மா மணி
அக்கரை என்னும் அநர்த்தக் –சக்கரமும் தடக்கைகளும்
எத்தனை காலமும் எத்தனை யூழியும் –மைத்துனன் மார்களை வாழ்
அன்று வயிற்றில் கிடந்திரு –சென்று அங்கு வாணனை
சென்றுலங்குடைந்தாடு –பொன் திகழ் மாடம்

சென்னியோங்கு –என்னையும் என்னுடைமையையும்
பறவை ஏறு பரம் புருடா –இரவு செய்யும் பாவக்காடு
எம்மனா என் குல தெய்வமே –நம்மன் போல வீழ்த்த முக்கும்
கடல் கடைந்து அமுதம் கொண்ட –கொடுமை செய்யும் குற்றமும்
பொன்னைக் கொண்டு உரை –உன்னைக் கொண்டு என்னுள்
உன்னுடைய விக்ரமம் –மன்னடங்க மழு வலங்கை
பருப்பதத்துக் கயல் –மருப்பொசித்தாய் மல்
அநந்தன் பாலும் கருடன் பாலும் –நினைந்து என்னுள்ளே நின்று
பனிக்கடலை பள்ளி கோளை –தனிக்கடலே தனிச்சுடரே
தடவரை வாய் மிளிர்ந்து –வடதடமும் வைகுந்தமும்
வேயர் தங்கள் குலத்து உதித்த –ஆயர் ஏற்றை அமரர் கோவை

—————

ஸ்ரீ திருப்பாவை

மார்கழித் திங்கள் –ஏரார்ந்த கண்ணி
வையத்து வாழ்வீர்காள் –மையிட்டு எழுதோம்
ஓங்கி உலகளந்த –பூங்குவளைப் போதில்
ஆழி மழைக் கண்ணா –ஆழி போல் மின்னி
மாயனை மன்னு –தூயோமாய் வந்து நாம்

புள்ளும் சிலம்பின் காண் –வெள்ளத்து அரவில்
கீசு கீசு என்று எங்கும் –மத்தினால் ஓசை படுத்த
கீழ் வானம் வெள்ளென்று –கோதுகலமுடைய பாவாய்
தூ மணி மாடத்து –உன் மகள் தான் ஊமையோ
நோற்றுச் சுவர்க்கம் –பண்டு ஒரு நாள் கூற்றத்தின்

கற்றுக் கறவை –சுற்றத்து தோழிமார்
கனைத்து இளம் கற்று எருமை –சினத்தினால் தென்னிலங்கை
புள்ளின் வாய் கீண்டானை –புள்ளும் சிலம்பின் காண்
உங்கள் புழக்கடை –எங்களை முன்னம்
எல்லே இளங்கிளியே –ஒல்லை நீ போதாய்

நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி
அம்பரமே தண்ணீரே –அம்பரமூடறுத்து
உந்து மத களிற்றின் –மாதவிப் பந்தல் மேல்
குத்து விளக்கு எரிய –மைத்தடம் கண்ணினாய்
முப்பத்து மூவர் –செப்பென்ன மென் முலை

ஏற்ற கலங்கள் –உலகினில் தோற்றமாய் நின்ற
அங்கண் மா ஞாலத்து அரசர் –செங்கண் சிறுச் சிறிதே
மாரி மலை முழைஞ்சில் –போதருமா போலே
அன்று இவ்வுலகம் –குன்று குடையா எடுத்தாய்
ஒருத்தி மகனாய் –நெருப்பென்ன நின்ற

மாலே மணி வண்ணா –போல்வன சங்கங்கள்
கூடாரை வெல்லும் சீர் –பாடகமே என்றனைய
கறவைகள் பின் சென்று –உன் தன்னோடு உறவேல் நமக்கு
சிற்றம் சிறு காலே –இற்றைப் பறை கொள்வான்
வங்கக் கடல் கடைந்த –சங்கத் தமிழ் மாலை

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் –

—————-

ஸ்ரீ நாச்சியார் திருமொழி

தையொரு திங்களும் –உய்யவும் ஆம் கொலோ
வெள்ளை நுண் மணல் கொண்டு –கள்ளவிழ் பூங்கணை தொடு
மத்த நன்னறு மலர் –கொத்த மலர் பூங்கணை தொடு
சுவரில் புராண நின் –அவரைப் பிராயம் தொடங்கி
வானிடை வாழுமவர் –ஊனிடை யாழி சங்குத் தமர்
உருவுடையார் இளையார்கள் –கருவுடை முகில் வண்ணன்
காயுடை நெல்லொடு –தேச முன்னளந்தவன்
மாசுடை யுடம்பொடு –பேசுவது ஓன்று உண்டு இங்கு
தொழு முப்போது முன் –அழுதழுது அலமந்தம்மா வழங்க
கருப்பு வில் மலர்க் கணை –பொருப்பன்ன மாடம்

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற –காமன் போதரு காலம் என்று
இன்று முற்றும் முதுகு நோவ –அன்று பாலகனாகி
குண்டு நீருறை கோளரீ –வண்டல் நுண் மணல் தெள்ளி
பெய்யு மா முகில் போல் –நொய்யர் பிள்ளைகள் என்பத
வெள்ளை நுண் மணல் –உள்ளமோடி உருகல் அல்லால்
முற்றிலாத பிள்ளைகளோம் –கடலை யடைத்து அரக்கர் குலம்
பேத நன்கு அறிவார்களோடு –ஓத மா கடல் வண்ணா
வட்ட வாய்ச் சிறு தூதை –தொட்டு உதைத்து நலியேல் கண்
முற்றத்தூடு புகுந்து –முற்ற மண்ணிடம் தாவி
சீதை வாய் அமுதமுண்டாய் –வேத வாயத் தொழிலார்கள்

கோழி அழைப்பதன் முன் –ஏழைமை ஆற்றவும் பட்
இது என் புகுந்தது இங்கு –விதி இன்மையால் அது மாட்
எல்லே ஈது என்ன இளமை –வில்லால் இலங்கை அழித்தாய்
பரக்க விழித்து எங்கும் –இரக்க மேலொன்று மிலாதாய்
காலைக் கது விடுகின்ற –கோலச் சிற்றாடை பலவும்
தடத் தவிழ்த் தாமரை –குடத்தை எடுத்து ஏற விட்டு
நீரிலே நின்று அயர்க்கின்றோம் –ஆர்வம் யுனக்கே யுடையோம்
மாமிமார் மக்களே யல்லோம் –சேமமேல் அன்று இது சால
கஞ்சன் வலை வைத்த அன்று –அஞ்ச யுரைப்பாள் யசோதை
கன்னியரோடு எங்கள் நம்பி –இன்னிசையால் சொன்ன –

தெள்ளியார் பலர் –பள்ளி கொள்ளுமிடத்து
காட்டில் வேங்கடம் –ஓட்டரா வந்து
பூ மகன் புகழ் வானவர் -மிகு சீர் வசுதேவர் தம்
ஆய்ச்சிமார்களும் –வாய்த்த காளியன் மேல்
மாட மாளிகை சூழ் –ஓடை மா மத யானை
அற்றவன் –திகழும் மதுரைப்பதி
அன்று இன்னாதன செய் –வென்றி வேல் விறல்
ஆவல் அன்புடையார் தம் –கன்று மேய்த்து விளையாடும்
கொண்ட கோலம் –அண்டமும் நிலனும்
பழகு நான்மறையின் –எம் அழகனார்
ஊடல் கூடல் –கூடலைக் குழல் கோதை

மன்னு பெரும் புகழ் –புன்னை குருக்கத்தி நாழல்
வெள்ளை விளி சங்கு –கள்ளவிழ் சண்பகப் பூ மலர்
மாதலி தேர் முன்பு கோல் –போதலர் காவில் புது மணம்
என்புருகி யின வேல் –அன்புடையாரைப் பிரிவுறு
மென்னடை யன்னம் –இன்னடிசிலோடு பாலமுது
எத்திசையும் அமரர் பணி –கொத்தலர் காவில் மணித்தடம்
பொங்கிய பாற் கடல் –உனக்கென்ன மறைந்து உறைவு
சார்ங்கம் வளைய வலிக்–தேங்கனி மாம் பொழில் செந்
பைங்கிளி வண்ணன் சீர் –சங்கொடு சக்கரத்தான் தான்
அன்று உலகம் அளந்தானை யுக –என்றும் இக்காவில் இருந்து இருந்து
விண்ணுற நீண்டு தாவிய –பண்ணுறு நான் மறையோர்

வாரணமாயிரம் –பூரண பொற் குடம் வைத்து
நாளை வதுவை –கோளரி மாதவன்
இந்திரன் உள்ளிட்ட–மந்திரக்கோடி யுடுத்தி
நாற்றிசைத் தீர்த்தம் –பூப்புணை கண்ணி
கதிர் ஒளி தீபம் –மதுரையார் மன்னன்
மத்தளம் கொட்ட –மைத்துனன் நம்பி
வாய் நல்லார் –காய் சின மா களிறு அன்னான்
இம்மைக்கும் –செம்மை யுடைய
வரி சிலை வாண் முகத்து –அரி முகன் அச்யுதன்
குங்குமம் அப்பி –அங்கு அவனோடும்
ஆயனுக்காக –தூய தமிழ் மாலை

கருப்பூரம் நாறுமோ –மருப்பு ஒசித்த மாதவன் தன்
கடலில் பிறந்து –குடியேறித் தீய வசுரர்
தடவரையின் மீதே –நீயும் வடமதுரையார் மன்னன்
சந்திர மண்டலம் போல் –மந்த்ரம் கொள்வாயே போலு
உன்னோடு உடனே –மன்னாகி நின்ற
போய்த் தீர்த்த மாடாதே –சேய்த் தீர்த்தமாய் நின்ற
செங்கமல நாண் மலர் மேல் –அங்கைத்தலம் ஏறி
உண்பது சொல்லில் –பெண் படையார் யுன்மேல்
பதினாறாம் ஆயிரவர் –பொதுவாக யுண்பதனை
பாஞ்ச சன்னியத்தை –ஏய்ந்த புகழ்ப் பட்டர் பிரான்

விண்ணீல மேலாப்பு –கண்ணீர்கள் முலைக் குவட்டில்
மா முத்த நீர் சொரியும் –காமத்தீயுள் புகுந்து
ஒளி வண்ணம் வளை சிந்தை –குளிர் அருவி வேங்கடம்
மின்னாகத்து எழுகின்ற –என்னாகத்து இளம் கொங்கை
வான் கொண்டு கிளர்ந்த –ஊன் கொண்ட வள்ளுகிரால்
சலம் கொண்டு கிளர்ந்த –உலங்கொண்ட விளங்கனி போல்
சங்க மா கடல் கடைந்தான் –கொங்கை மேல் குங்குமத்தின்
கார் காலத்து எழுகின்ற –நீர் காலத்து எருக்கில்
மத யானை போல் எழுந்த –கதி என்றும் தானாவான்
நாகத்தின் அணையானை –போகத்தில் வழுவாத

சிந்துரச் செம் பொடிப் போல் –மந்தரம் நாட்டி இன்று
போர்க்களிறு பொரும் –கார்க்கொள் படாக்கள் நின்று
கரு விளை ஒண் மலர்காள் –திரு விளையாடு திண் தோள்
பைம் பொழில் வாழ் –ஐம் பெரும் பாதகர்கள்
துங்க மலர்ப் பொழில் சூழ் –மலர் மேல் தங்கிய வண்டி
நாறு நறும் பொழில் –நூறு தடா நிறைந்த
இன்று வந்து இத்தனையும் –தென்றல் மணம் கமழும்
காலை எழுந்து இருந்து –சோலை மலைப் பெருமான்
கோங்கு அலரும் பொழில் –பூங்கொள் திரு முகத்து
சந்தொடு கார் அகிலும் –சுரும்பார் குழல் கோதை

கார்க்கோடல் பூக்காள் –ஆர்க்கோவினி நாம்
மேற் தோன்றிப் பூக்காள் –மேல் தோன்றும் ஆழியின்
கோவை மணாட்டி –பாவியேன் தோன்றி
முல்லைப் பிராட்டி –கொல்லை யரக்கியை மூக்கரி
பாடும் குயில்காள் –ஆடும் கருளக் கொடி யுடையான்
கண மா மயில்காள் –பண மாடு அரவணை
நடமாடித் தோகை –குடமாடு கூத்தன்
மழையே மழையே –அழகப் பிரானார் தம்மை
கடலே கடலே –என்னையும் யுடலுள் புகுந்து
நல்ல வென் தோழி –வில்லி புதுவை

தாமுகக்கும் தம் கையில் –தீ முகத்து நாகணை மேல்
எழிலுடைய அம்மனைமீர் –கொப்பூழில் எழில் கமலம்
பொங்கோதம் சூழ்ந்த –செங்கோலுடைய
மச்சணி மாடம் –பிச்சைக் குறளாகி
பொல்லாக் குறளுருவாய் –நல்லார்கள் வாழும்
கைப்பொருள்கள் முன்னம் –எப்பொருட்க்கும் நின்றார்க்கும்
உண்ணாது உறங்காது –திண்ணார் மதிள் சூழ்
பாசி தூர்த்துக் கிடந்த –தேசுடைய தேவர்
கண்ணாலம் கோடித்து –அண்ணாந்து இருக்கவே
செம்மை யுடைய –தம்மை யுகப்பாரை

மற்று இருந்தீர்கட்க்கு அறியலாகா –பெற்று இருந்தாளை ஒழிய
நாண் இனியோர் கருமம் –மாணி யுருவாய் யுலகளந்த
தந்தையும் தாயும் உற்றாரும் -கொந்தளமாக்கிப் பரக்க
அங்கைத் தலத்திடை –கொங்கைத் தலமிவை
ஆர்க்கும் என் நோய் இது –நீர்க்கரை நின்ற கடம்பை
காரத் தண் முகிலும் கரு –வேர்த்துப் பசித்து வயிறு அசைய
வண்ணம் திரிவும் மனம் — தண்ணந்துழாய் என்னும்
கற்றினம் மேய்க்கலும் –கற்றன பேசி வச உணாதே
கூட்டில் இருந்து கிளி எப்போதும் –நாட்டில் அலைப்பழி எய்தி
மன்னு மதுரை தொடக்க –பொன்னியல் மாடம் பொலிந்து

கண்ணன் என்னும் கரும் –பெண்ணின் வருத்தம் அறியாத
பாலால் இலையில் துயில் கொள் –கோலால் நிரை மேய்த்தாய்
கஞ்சைக் காய்ந்த கரு –அஞ்சேல் என்றான் அவன் ஒருவன்
ஆரே யுலகத்து ஆற்றுவார் –ஆராவமுதம் அனையான் தன்
அழிலும் தொழிலும் உரு –தழையின் பொழில் வாய்
நடை ஒன்றில்லா யுல –புடையும் பெயரகில்லேன் நான்
வெற்றிக் கருளக் கொடி –குற்றம் அற்ற முலை தன்னை
யுள்ளே யுருகி நைவேனை –கொள்ளும் பயன் ஒன்றில்லாத
கொம்மை முலைகள் இடர் தீர –செம்மையுடைய திரு மார்பில்
அல்லல் விளைத்த பெருமான் –வில்லைத் தொலைத்த புருவத்தாள்

பட்டி மேய்ந்தோர் கார் ஏறு –இட்டமான பசுக்களை
அனுங்க வென்னைப் பிரிவு –கணங்களோடு மின் மேகம்
மாலாய்ப் பிறந்த நம்பியை -மேலால் பரந்த வெயில்
கார் தண் கமலக்கண் –போர்த்த முத்தின் குப்பாயம்
மாதவன் என் மணியினை –பிதக வாடை யுடை தாழ
தருமம் அறியாக் குறும்பனை –உருவு கரியதாய் முகம் செய்தாய்
பொருத்தமுடைய நம்பியை –அருத்தித் தாரா கணங்கள்
வெளிய சங்கு ஓன்று யுடையானை –களி வண்டு எங்கும் கலந்து
நாட்டைப்படை என்று –காட்டை நாடித் தேனுகனும்
பாரும் தாள் களிற்றினுக்கு –மருந்தால் என்று தம் மனத்தே

பாரும் தாளுடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பாரே –

————–

ஸ்ரீ பெருமாள் திருமொழி

இருள் இரியச் சுடர் மணிகள் –திருவரங்கத்துப் பெரு நகருள்
வாயோர் ஈரைஞ்சூறு –காயாம்பூ மலர்ப் பிறங்கல்
எம்மாண்பின் அயன் நான்கு –அம்மான் தன் மலர்க் கமலக்
மாவினை வாய் பிளந்து –அவ்வடமொழியைப் பற்றற்றா
இணையில்லா வின்னிசை யாழ் –மணி மாட மாளிகைகள்
அளிர் மலர் மேல் அயன் அரன் –களி மலர் சேர் பொழில் அரங்கத்து
மறம் திகழு மனம் ஒழித்து –அறம் திகழு மனத்தவர் தம்
கோலார்ந்த நெடும் சார்ங்கம் –சேலார்ந்த நெடும் கழனி
தூராத மனக்காதல் தொண்டர் –நாளும் சீரார்ந்த முழவோசை
வன் பெரு வானகம் உய்ய –அன்பொடு தென் திசை நோக்கி
திடர் விளங்கு கரைப் பொன்னி –குடை விளங்கு திறல் தானை

தேட்டரும் திறல் தேனினை –ஆட்ட மேவி யலர்ந்து யழைத்து
தோடுலா மலர் மங்கை –ஆடிப்பாடி அரங்காவோ
ஏறு அடர்த்ததும் ஏனமாய் –வண் பொன்னிப் பேராறு போல்
தோய்த்த தண் தயிர் –நா தழும்பு எழ நாரணா என்
பொய் சிலைக்குரல் ஏற்றெரு –மெய் சிலைக் கரு மேகம் ஓன்று
ஆதி யந்தம் அநந்தம் அற்புதம் –தீதில் நன்னெறி காட்டி
கார் இனம் புரை மேனி –சேரு நெஞ்சினராகி
மாலை யுற்ற கடல் –மாலை யுற்று எழுந்து ஆடிப்பாடி
மொய்த்துக் கண் பனி சோர –என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு
அல்லி மா மலர் மங்கை –கொல்லி காவலன் கூடல் நாயகன் —

மெய்யில் வாழ்க்கையை –ஐயனே அரங்கா
நூலின் நேர் இடையார் –ஆலியா அழையா
மாரனார் வரி வெஞ்சிலை –ஆர மார்வன்
உண்டியே யுடையே –அண்ட வாணன்
தீதில் நன்னெறி நிற்க –ஆதி அயன் அரங்கன்
எம் பரத்தர் –தம்பிரான் அமரர்க்கு
எத்திறத்திலும் –அத்தனே அரங்கா
பேயரே எனக்கு –ஆயனே அரங்கா
அங்கை யாழி –கொங்கர் கோன்

ஊனேறு செல்வத்து –கூனேறு சங்கம் இடத்தான்
ஆகாத செல்வத்து –தேனார் பூஞ்சோலை
பின்னிட்ட சடையானும் –மின் வட்டச் சுடராழி
ஒண் பவள வேலை –பண்பகரும் வண்டினங்கள்
கம்ப மதயானை –எம்பெருமான் ஈசன்
மின்னனைய நுண்ணிடை –தென்னவென வண்டினங்கள்
வானாளும் மா மதி போல் –தேனார் பூஞ்சோலை
பிறையேறு சடையானும் –வெறியார் தண் சோலை
செடியாய வல் வினைகள் –அடியாரும் வானவரும்
உம்பர் உலகாண்டு –செம்பவள வாயான்
மன்னிய தண் சாரல் –கொன்னவிலும் கூர் வேல்

தரு துயரம் தடாயேல் –அரி சினத்தால் ஈன்ற தாய்
கண்டார் இகழ்வனவே –விண் தோய் மதிள் புடை சூழ்
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் –தான் நோக்கா தெத்துயரம்
வாளால் அறுத்துச் சுடினும் –மீளாத் துயர் தரினும்
வெங்கட்டிண் களிறு அடர்த்தா –எங்கும் போய்க் கரை காணாது
செந்தழலே வெந்தழலை –வெந்துயர் வீட்டா விடினும்
எத்தனையும் வான் மறந்த –மெய்த்துயர் வீட்டா விடினும்
தொக்கிலங்கி யாறெல்லாம் –மிக்கிலங்கு முகில் நிறத்தாய்
நின்னையே தான் வேண்டி –மின்னையே சேர் திகிரி
வித்துவக் கோட்டம்மா –கொற்றேவல் தானை

ஏர் மலர்ப் பூங்குழல் –கூர் மழை போல் பனிக் கூதல்
கெண்டை ஒண் கண் –வண்டமர் பூங்குழல்
கரு மலர் கூந்தல் ஒருத்தி –புரி குழல் மங்கை ஒருத்தி
தாய் முலைப்பாலில் அமுது இருக்க –ஆய்மிகு காதலோடு யான் இருக்க
மின்னொத்த நுண் இடை –கண்ணுற்ற அவளை நீ கண்ணால் இட்டு
மற்பொரு தோளுடை –அற்றை இரவும் ஓர் பிற்றை
பை அரவின் அணைப்பள்ளி –செய்ய வுடையும் திரு முகமும்
என்னை வருக எனக்குறி –பொன்னிற வாடையைக்
மங்கல நன் வனமாலை –கொங்கு நன் குழலார்களோடு
அல்லி மலர்த் திரு மங்கை –கொல்லி நகர்க்கிறை கூடல்

ஆலை நீள் கரும்பு அன்னவன் –ஏலவார் குழல் என் மகன்
வடிக் கொள் அஞ்சனம் எழுது –அடக்கியாரச் செஞ்சிறு விரல்
முந்தை நன்முறை யன்பு –உந்தை யாவன் என்று உரைப்ப
களி நிலா எழில் மதி புரை –இளமை இன்பத்தை இன்று என்
மருவு நின் திரு நெற்றியில் –விரலைச் செஞ்சிறு வாயிடை
தண்ணம் தாமரைக்கண் –வண்ணச் செஞ்சிறுகை
குழகனே என் தன் கோமள –மழலை மென்னகை யிடையிடை
முழுதும் வெண்ணெய் அளைந்து –அழுகையும் அஞ்சி நோக்கும்
குன்றினால் குடை கவித்ததும் –வென்றி சேர் பிள்ளை நல்
வஞ்சமேவிய நெஞ்சுடை –கஞ்சன் நாள் கவர் கரு முகில்
மல்லை மா நகருக்கு இறைவன் –கொல்லி காவலன் மாலடி

மன்னு புகழ்க் கௌசலை தன் –கன்னி நன் மா மதிள் புடை சூழ்
புண்டரீக மலரதன் மேல் –கண்டவர் தம் மனம் வழங்கும்
கொங்கு மலி கருங்குழலாள் –கங்கையிலும் தீர்த்த மலி
தாமரை மேல் அயனவனை –வண்டினங்கள் காமரங்கள் இசை
பாராளும் படர் செல்வம் –சீராளும் வரை மார்பா
சுற்றம் எல்லாம் பின் தொடர –கற்றவர்கள் தாம் வாழும்
ஆலினைப் பாலகனாய் –காலின் மணி கரை யலைக்கும்
மலை யதனால் யணை கட்டி –கலை வலவர் தாம் வாழும்
தளை யவிழ நறுங்குஞ்சி –களை கழு நீர் மருங்கு அலரும்
தேவரையும் அசுரரையும் –காவிரி நன்னதி பாயும்
கன்னி நன் மா மதிள் புடை –கொன்னவிலும் வேல் வலவன்

வன் தாளின் இணை வணங்கி –எம்மி ராமாவோ
வெவ் வாயேன் வெவ்வுரை –நெய் வாய வேல் நெடும் கண்
கொல்லணை வேல் வரி நெடும் –மெல்லணை மேல் மென் துயின்று
வா போகு வா இன்னம் வந்து –மா பொகு நெடும் கானம்
பொருந்தார் கை வேல் –இன்று பெரும் பாவியேன்
அம்மா வென்று உகந்து அழைக்கும் –கைம்மாவின் நடை யன்ன
பூ மருவு நறுங்குஞ்சி –ஏமரு தோள் என் புதல்வன்
பொன் பெற்றார் எழில் –நின் பற்றா நின் மகன் மேல்
முன்னொரு நாள் மழு வாளி –என்னையும் என் மெய்யுரையும்
தேனகுமா மலர்க்கூந்தல் –இன்று கானகமே மிக விரும்ப
ஏரார்ந்த கரு நெடுமால் –கூரார்ந்த வேல் வலவன்

அங்கண் நெடு மதிள் புடை சூழ் –செங்கண் நெடு கரு முகிலை
வந்து எதிர்ந்த தாடகை தன் –செந்தளிர் வாய் மலர் நகை சேர்
செவ்வரி நற் கரு நெடும் கண் –தெவ்வரஞ்சு நெடும் புரசை
தொத்தலர் பூஞ்சுரி குழல் –சித்திர கூடத்து இருந்தான் தன்னை
வலி வணக்கு வரை நெடும் –சிலை வணக்கி மான் மரிய
தனமருவு வைதேவி –சினம் அடங்க மாருதியால்
குரை கடலை அடல் அம்பால் –திரு மகளோடு இனிது அமர்ந்த
அம் பொன் நெடு மணி மாடம் –செம்பவளத் திரள் வாய்
செறி தவச் சம்புகன் –திறல் விளங்கும் இலக்குவனை
அன்று சராசரங்களை –சென்று இனிது வீற்று இருந்த
தில்லை நகர்த் திருச் சித்திர –கொல்லி யலும் படைத்தானை –

நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே

—————-

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்

பூநிலாய ஐந்துமாய் –மீ நிலாயது ஒன்றுமாகி
ஆறும் ஆறும் ஆறுமாய் –வேறு வேறு ஞானமாகி
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி –ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி
மூன்று முப்பத்தாறினோடு –தோன்று சோதி மூன்றுமாய்
நின்றி யங்கும் ஒன்றலா –என்றும் யார்க்கும் எண்ணிறந்த

நாகம் ஏந்தும் மேரு வெற்பை –மாக மேந்து மங்குல் தீயோர்
ஓன்று இரண்டு மூர்த்தியாய் –ஓன்று இரண்டு தீயுமாகி
ஆதியான வானவர்க்கும் –ஆதியான வான வாணர்
தாதுலாவு கொன்றை மாலை –வேத வாணர் கீத வேள்வி
தன்னுளே திரைத்து எழும் –நின்னுளே பிறந்து இறந்து

சொல்லினால் தொடர்ச்சி நீ –சொல்லினால் படைக்க
உலகு தன்னை நீ படைத்தி –உலகு நின்னொடு ஒன்றி நிற்க
இன்னை என்று சொல்ல –பின்னையாய கோலமோடு
தூய்மை யோகமாயினாய் –நின் நாமதேயம் இன்னது என்ன
அங்கம் ஆறும் வேதம் நான்கும் –செங்கண் நாகணைக் கிடந்த

தலைக் கணத் துகள் குழம்பி –கலைக் கணங்கள் சொற் பொருள்
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி –நாக மூர்த்தி சயனமாய்
விடத்த வாய் ஓர் ஆயிரம் –தொடுத்து மேல் விதானமாய
புள்ளதாகி வேத நான்கும் –புள்ளை யூர்தி யாதலால்
கூசம் ஒன்றும் இன்றி –பாசம் நின்ற நீரில் வாழும்

அரங்கனே தரங்க நீர் –நெருங்க நீர் கடைந்த போது
பண்டும் இன்றும் மேலுமாய் –வண்டு கிண்டு தண் துழாய்
வான் நிறத்தோர் சீயமாய் –நானிறத்த வேத நாவர்
கங்கை நீர் பயந்த பாத –சிங்கமாய தேவ தேவ
வரத்தினில் சிரத்தை மிக்க –இரத்தி நீ இது என்ன பொய்

ஆணினோடு பெண்ணுமாகி –பூணி பேணு மாயனாகி
விண் கடந்த சோதியாய் –எண் கடந்த யோகினோடு
படைத்த பார் இடந்து அளந்து –மிடைத்த மாலி மாலி மான்
பரத்திலும் பரத்தை யாகி –நரத்திலும் பிறத்தி நாத
வானகமும் மண்ணகமும் –தேனகம் செய் தண்ணரும்

கால நேமி காலனே –வேலை வேவ வில் வளைத்த
குரக்கினப் படை கொடு –இரக்க மண் கொடுத்தவற்கு
மின்னிறத்து எயிற்று அரக்கன் –நன்னிறத்தொரின் சொல் ஏழை
ஆதி யாதி யாதி நீ –வேதமாகி வேள்வியாகி
அம்புலாவி மீனுமாகி –கொம்பராவு நுண் மருங்குல்

ஆடகத்த பூண் முலை –வீட வைத்த வெய்ய கொங்கை
காய்த்த நீள் விளங்கனி –ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை
கடம் கலந்த வன் கரி –குடம் கலந்த கூத்தனாய
வெற்பு எடுத்த வேலை நீர் –வெற்பு எடுத்த விஞ்சி சூழ்
ஆனை காத்தோர் ஆனை கொன்று –ஆனை காத்து மெய்யரிக் கண்

ஆயனாகி ஆயர் மங்கை –மாய மாய மாயை கொல்
வேறிசைந்த செக்கர் மேனி –ஊறு செங்குருதியால்
வெஞ்சினத்த வேழம் –வஞ்சனத்து வந்த பேய்ச்சி
பாலின் நீர்மை செம்பொன் –நீல நீர்மை என்றிவை
மண்ணுளாய் கொல் –கண்ணுளாய் கொல் சேயை

தோடு பெற்ற தண் துழாய் –நாடு பெற்ற நன்மை
காரொடு ஒத்த மேனி –ஓர் இடத்தை அல்லை
குன்றில் நின்று வானிருந்து –நன்று சென்ற நாளவற்றுள்
கொண்டை கொண்ட –நண்டை யுண்டு நாரை பேர
வெண் திரைக் கரும் கடல் –எண்திசைக் கணங்களும்

சரங்களைத் துரந்து –பரந்து பொன் நிரந்து நுந்தி
பொற்றை யுற்ற முற்றல் –சிற்றெயிற்று முற்றல் மூங்கில்
மோடி யோடி லச்சையாய–வாணன் ஆயிரம் கரம் கழித்த
இலைத் தலைச் சாரம் துரந்து –குலைத்தலைத்து இறுத்து எறிந்த
மன்னு மா மலர்க்கிழத்தி –உன்ன பாத மென்ன சிந்தை

இலங்கை மன்னனைத் தொலை –விலங்கு நூலர் வேத நாவர்
சங்கு தங்கு முன்கை நங்கை –கொங்கு தங்கு வார் குழல்
மரம் கெட நடந்து அடர்த்து –துரங்கம் வாய் பிளந்து
சாலி வேலி தண் வயல் –காலநேமி வக்கரன்
செழும் கொழும் பெரும் –எழுந்திருந்து தேன் பொருந்து

நடந்த கால்கள் நொந்தவோ –கடந்த கால் பரந்த
கரண்ட மாடு பொய்கை–திரண்ட தோள் இரணியன்
நன்று இருந்து யோக நீதி –குன்று இருந்த மாட நீடு
நின்றது எந்தை ஊரகத்து –அன்று நான் பிறந்திலேன்
நிற்பதும் ஓர் வெற்பகத்து –அற்புதன் அனந்த சயனன்

இன்று சாதல் நின்று சாதல் –அன்று பார் அளந்த
சண்ட மண்டலத்தினூடு –புண்டரீக பாத புண்ய கீர்த்தி
முத்திறத்து வாணியத்து –எத்திறத்தும் உய்வதோர்
காணிலும் உருப்பொலார் –ஆணமென்று அடைந்து வாழும்
குந்தமோடு சூலம் வேல்கள் –வந்த வாணன் ஈர் ஐஞ்சூறு

வண்டுலாவு கோதை மாதர் –முண்டன் நீறன் மக்கள் வெப்பு
போதின் மங்கை பூதலக் –மாது தங்கு கூறன்
மரம் பொதச் சாரம் துரந்து –வரம் குறிப்பில் வைத்தவர்க்கு
அறிந்து அறிந்து வாமனன்–மறிந்தெழுந்த தெண் திரையுள்
ஒன்றி நின்று நற்றவம் –சென்று சென்று தேவ தேவர்

புன் புல வழி யடைத்து –என்பில் எள்கி நெஞ்சு உருகி
எட்டும் எட்டும் எட்டுமாய் -எட்டினாய பேதமோடு
சோர்விலாத காதலால் –ஆர்வமோடு இறைஞ்சி நின்று
பத்தினோடு பத்துமாய் –பத்தினாய தோற்றமோடு
வாசியாகி நேசமின்றி –வீசி மேல் நிமிர்ந்த தோளின்

கடைந்த பாற் கடல் கிடந்த –மிடைந்த ஏழ் மரங்களும்
எத்திறத்தும் ஒத்து நின்று –நின்பத்துறுத்த சிந்தையோடு
மட்டுலாவு தண் துழாய் –எட்டினோடு இரண்டு எனும்
பின் பிறக்க வைத்தனன் –தன் திறத்தோர் அன்பிலார்
நச்சு அரவணைக் கிடந்த –மெய்த்தன் வல்லை யாதலால்

சாடு சாடு பாதனே –கோடு நீடு கைய
நெற்றி பெற்ற கண்ணன் –கற்ற பெற்றியால் வணங்கு
வெள்ளை வேலை வெற்பு நாட்டு –உள்ள நோய்கள் தீர் மருந்து
பார் மிகுத்த பார முன் –மா ரதர்க்கு வான் கொடுத்து
குலங்களாய ஈர் இரண்டில் –புலன்கள் ஐந்தும் வென்றிலேன்

பண்ணுலாவு மென் மோழி –கண் ணலாலோர் கண்ணிலேன்
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து –படைத்து அடைத்து அதில் கிடந்து
சுரும்பரங்கு தண் துழாய் –கரும்பு இருந்த கட்டியே
ஊனில் மேய வாவி நீ –வானினோடு மண்ணும் நீ
அடக்க அரும் புலன்கள் ஐந்து அட -விடக்கருதி மெய் செயாது

வரம்பிலாத மாய மாய –வரம்பிலாத பல் பிறப்பு
வெய்ய வாழி சங்கு தண்டு –ஐயிலாத வாக்கை நோய்
மறந்துறந்து வஞ்சமாற்றி –பிறந்து இறந்து பேர் இடர்
காட்டி நான் செய் வல் வினை –கேட்டதன்றி என்னதாவி
பிறப்பினோடு பேர் இடர் –பெறர்க்கு அரிய நின்ன பாதம்

இரந்து உரைப்பது உண்டு வாழி –பரந்த சிந்தை ஓன்று இன்றி
விள் விலாத காதலால் –பள்ளியாய பன்றியாய
திருக்கலந்து சேரு மார்பா –கருக் கலந்த காள மேகம்
கடும் கவந்தன் வக்கரன் –கிடந்து இருந்து நின்று இயங்கு
மண்ணை யுண்டு யுமிழ்ந்து –பண்ணை வென்ற வின் சொல்

கறுத்து எதிர்ந்த கால நேமி –தொறுக்கலந்த ஊனமக்து
காய் சினத்த காசி மன்ன– நாசமுற்று வீழ
கேடில் சீர் வரத்தனாய –வீடதான போகம் எய்தி
சுருக்குவாரை இன்றியே –செருக்குவார்கள் தீக் குணங்க
தூயனாயும் அன்றியும் –நீயு நின் குறிப்பினில்

வைது நின்னை வல்லவா –எய்தலாகும் என்பர்
வாள்களாகி நாள்கள் –ஆளதாகும் நன்மை என்று
சலம் கலந்த செஞ்சடை –அலங்கல் மார்வில் வாச நீர்
ஈனமாய வெட்டு நீக்கி –ஞானமாகி ஞாயிறாகி
அத்தனாகி அன்னையாகி –முத்தனார் முகுந்தனார்

மாறு செய்த வாளரக்கன் –வேறு செய்து தம்முள் என்னை
அச்ச நோயொடு அல்லல் –அச்சுதன் அநந்த கீர்த்தி
சொல்லினும் தொழில் வல்லி நாண் மலர்க்கிழத்தி
பொன்னி சூழ் அரங்க மேய –உன்ன பாத என்ன நின்ற
இயக்கறா பல் பிறப்பில் –மயக்கினான் தன் மன்னு சோதி

இயக்கெலா மறுத்து அறாத வீடு இன்பம் பெற்றதே

———–

ஸ்ரீ திருமாலை

காவலில் புலனை வைத்து –மூவுலகு உண்டு உமிழ்ந்த
பச்சை மா மலை போல் மேனி –இச்சுவை தவிர யான் போய்
வேத நூல் பிராயம் நூறு –பேதை பாலகன் அதாகும்
மொய்த்த வல் வினையுள் நின் –இத்தனை அடியரானார்க்கு
பெண்டிரால் சுகங்கள் உய்ப்ப –தண் துழாய் மாலை மார்பன்

மறம் சுவர் மதிள் எடுத்து –அறம் சுவராகி நின்ற
புலை யறமாகி நின்ற –தலை யறுப்புண்டும் சாகேன்
வெறுப்போடு சமணர் –குறிப்பு எனக்கு அடையுமாகில்
மற்றுமோர் தைவம் உண்டு –அற்றமேல் ஓன்று அறியீர்
நாட்டினான் தெய்வம் எங்கும் –கேட்டிரே நம்பி மீர்காள்

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் –மருவிய பெரிய கோயில்
நமனும் முற்கலனும் பேச –அவன்தூர் அரங்கம் என்னாது
எறியு நீர் வெறி கொள் வே –அறிவிலா மனிசர் எல்லாம்
வண்டினம் முரலும் சோலை –அண்டர் கோன் அமரும் சோலை
மெய்யர்க்கே மெய்யனாகும் –உய்யப்போம் உணர்வினார்கள்

சூதனாகி கள்வனாகி –போதரே என்று சொல்லி
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் –சுரும்பமர் சோலை சூழ்ந்த
இனி திரைத் திவலை மோத –கனி இருந்தனைய செவ்வாய்
குடதிசை முடியை வைத்து –கடல் நிறக்கடவுள் எந்தை
பாயும் நீர் அரங்கம் தன்னுள் –தூய தாமரைக் கண்களும்

பணியினால் மனமதொன்றி –அணியினர் செம்பொனாய
பேசிற்றே பேசல் அல்லால் –மாசற்றார் மனத்துளானை
கங்கையில் புனிதமாய-எங்கள் மால் இறைவன் ஈசன்
வெள்ள நீர் பரந்து பாயும் –உள்ளமே வலியை போலும்
குளித்து மூன்று அனலை ஓம்பும் –களிப்பது என் கொண்டு நம்பி

போது எல்லாம் போது கொண்டு –காதலால் நெஞ்சு மன்பு
குரங்குகள் மலையை நூக்க –மரங்கள் போல் வலிய நெஞ்சம்
உம்பரால் அறியலாகா –நம்பர மாயதுண்டே
ஊரிலேன் காணி யில்லை –காரொளி வண்ணனே
மனத்திலோர் தூய்மை –புனத் துழாய் மலையானே

தவதுள்ளார் தம்மில் அல்லேன் –துவர்த்த செவ்வாயினார்க்கே
ஆர்த்து வண்டு அலம்பும் –மார்க்கம் ஓன்று அறிய மாட்டா
மெய்யெல்லாம் போக விட்டு –ஐயனே அரங்கனே
உள்ளத்தே உறையும் மாலை –உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
தாவி அன்று உலகம் எல்லாம் –ஆவியே யமுதே

மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் –உழைக்கின்றேர்க்கு என்னை நோ
தெளிவிலாக் கலங்கல் நீர் –எளியதோர் அருளுமன்றே
மேம் பொருள் போக விட்டு –காம்பறத் தலை சிரைத்து
அடிமையை குடிமையில்லா –முடியினில் துளபம் வைத்தாய்
திரு மறு மார்ப நின்னை –வெருவுறக் கொன்று சுட்டிட்டு

வானுளார் அறியலாகா –ஊனமாயினகள் செய்யும்
பழுதிலா ஒழுகலாற்று –தொழுமினீர் கொடுமின்
அமர வோர் அங்கம் ஆறும் –நுமர்களைப் பழிப்பராகில்
பெண்ணுலாம் சடையினானும் –விண்ணுளார் வியப்ப வந்து
வள வெழும் தவள மாடம் –துளவத் தொண்டாய தொல்

இளைய புன் கவிதையிலும் எம்பிராற்கு இனியவாறே —

————

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி

கதிரவன் குண திசை –எதிர் திசை நிறைந்தனர்
கொழும் கொடி முல்லை –விழுங்கிய முதலையின்
சுடரொளி பரந்தன –மடலிடைக் கீறி
மேட்டிள மேதிகள் –வாட்டிய வரி சிலை
புலம்பின புட்களும் –அலங்கலந் தொடையல் கொண்டு

இரவியர் மணி நெடும் — புரவியோடு ஆடலும் பாடலும்
அந்தரத்து அமரர்கள் –சுந்தரர் நெருக்க
வம்பவிழ் வானவர் –தும்புரு நாரதர்
ஏதமிழ் தண்ணுமை –மாதவர் வானவர்
கடி மலர்க் கமலங்கள் –தொடை ஒத்த துளவமும்

ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே

————-

ஸ்ரீ அமலனாதி பிரான்

அமலனாதி பிரான் –நிமலன் நின்மலன் நீதி வானவர்
உவந்த உள்ளத்தனாய் –கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்
மந்தி பாய் –அந்தி போல் நிறத்தாடையும்
சதிர மா மதிள் சூழ் –மதுர மா வண்டு பாட
பாரமாய பழ வினை –கோர மா தவம் செய்தனன்

துண்ட வெண் பிறையன் –அண்ட ரண்ட பகிரண்டத்து
கையினார் சுரி சங்கு அனல் ஆழி –அணி அரங்கனார்
பரியனாகி வந்த –கரியவாகிப் புடை பரந்து
ஆல மா மரத்தின் இலை மேல் –கோல மா மணி ஆரமும்
கொண்டல் வண்ணனை –அண்டர் கோன் அணி அரங்கனை

என்னமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே

————

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு

கண்ணி நுண் சிறுத்தாம்பு –நண்ணித் தென் குருகூர்
நாவினால் நவிற்றி –தேவு மற்று அறியேன்
திரி தந்தாகிலும் –பெரிய வண் குருகூர்
நன்மையால் மிக்க –அன்னையாய் அத்தனாய்
நம்பினேன் –செம் பொன் மாடம்

இன்று தொட்டும் –குன்ற மாடம்
கண்டு கொண்டு என்னை –எண்டிசையும்
அருள் கொண்டாடும் –அருள் கொண்டு
மிக்க வேதியர் –தக்க சீர்
பயன் அன்றாகிலும் குயில் நின்றார் பொழில் சூழ்

அன்பன் தன்னை –அன்பனாய்

கண்ணி நுண் சிறுத்–நண்ணித் தென் குருகூர்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பார்த்த சாரதி பஞ்சரத்னம் -ஸ்ரீ உ வே புன்னை மாடபூசி ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் —

September 15, 2022

பார்த்தனுக்குச் சாரதி மேல் பஞ்ச ரத்தினம் செய்யக்
காத்திரள்கள் ஏறிக் கவிந்த பொழில் -யோர்த்த
குருகையில் வாழ் மாறன் குரை கழலைப் போற்றின்
அருகெய்தா தோடும் அவம் –காப்புச் செய்யுள் –கா -பூந்தோட்டம்

————-

செங்கமல மங்கையொடு சங்க வணனும் முரிய சிறிய வரு மருகார் தரத்
திருவல்லிக்கேணி தனில் வானவர்கள் வந்து பணி செய்ய மகிழ்வெய்தி அமரும்
துங்க நவ மா மணி குயிற்றி ஒளிர் ஸந்நிதித் துவார வழி நின்று நின்னைத்
துதி செய்து நிற்கும் எனை யருள் செய்து வா வென்று சொல்லில் உனக்கு என்ன குறைவோ
மங்கள குணாகர மநோ ஹர மஹா தீர மார சுகுமார வீர
மதி தவருணாலாய ஹிரண்ய ஹர நரஸிம்ஹ மதுகைட போத் காடந
பங்கச பாப நிச யஷாள நரம்பு தர பரம புருஷாமரேச
பத்ம பவ பவ தாத பாணி த்ருத நவ நீத பாண்டு சுத ரத ஸூதனே–1-

செங்கமல மங்கையொடு -திரு மா மகளான ருக்மிணி பிராட்டியார்
சங்க வணனும் -பலராமன்
உரிய சிறியவரும் -அநிருத்தன் -ப்ரத்யும்னன் -ஸாத்விகீ
துங்க -உயர்வான
நவ மா மணி குயிற்றி -நெருக்கமாகப் பதித்து
ஒளிர் -பிரகாசிக்கின்ற
மங்கள குணாகர -நற் குணங்களுக்கு இருப்பிடமானவனே
மநோ ஹர –கண்டவர் மனம் கவரும் கண்ணனே
மஹா தீர
மார சுகுமார -சாஷாத் மன்மத மன்மதனே
வீர
மதி தவருணாலாய -திருப்பாற் கடலைக் கடைந்து அருளினவனே
ஹிரண்ய ஹர நரஸிம்ஹ
மதுகைட போத் காடந
பங்கச –திருவடி முதல் திருமுடி வரை தாமரை வனம் போன்றவனே
பாப நிச யஷாள நரம்பு தர -பாபக் குவியலைப் போக்கும் மேகம் போன்றவனே
பரம புருஷ
அமரேச
பத்ம பவ பவ தாத -நான் முகனுக்கும் சிவனுக்கும் தந்தையே
பாணி த்ருத நவ நீத -வெண்னெய்க் கையனே
பாண்டு சுத ரத ஸூதனே–அர்ஜுனன் தேர் பாகனே
பார்த்த சாரதியே

—————–

எங்கும் உனை வைத சிசு பாலற்கு நின் பாதம் ஈந்தனை எதிர்த்து நின்றே
இணை யற்ற பண நிரையினால் எறிந்தோர்க்கும் உனது எழில் மேனி தந்து அருளினை
பொங்கு மணியாட்டி யுன் திரு நாமம் நாடாத புல்லற்கு வீடு அருளினை
புகழ் அரிய நின் பாதம் ஒரு நாளும் அகலாது போற்றும் எனை அருளாதது ஏன்
சங்க தர சடகோப பரகால பரி படித ஸ்யாமள சரீர ராம
சசி தரணி நயன புத சநவி நுத பத நளின சதமக மதச் சேதந
பங்கஜ தளாஷ பக நாசக கிரீந்த்ர கர பாலித ஸமஸ்த புவந
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –2-

எங்கும் உனை வைத சிசு பாலற்கு -தமகோஷன் -சேதி நாட்டு அரசனுக்கும் வஸூதேவர் தங்கை சுருதசிரைவைக்கும் பிறந்தவன்
பொங்கு மணியாட்டி யுன் திரு நாமம் நாடாத புல்லற்கு வீடு அருளினை -புல்லன் -கண்டா கர்ணன்
சசி தரணி நயன -சந்த்ர ஸூர்யர்களைத் திருக் கண்களாகக் கொண்டவனே
புத சநவி நுத பத நளின –தேவர்களும் புலவர்களும் வணங்கும் தாமரை இதழ் ஒத்த திருவடிகளை யுடையவனே
சதமக மதச் சேதந -இந்திரன் கர்வத்தை அழித்து அருளினவனே
பங்கஜ தளாஷ -செந்தாமரைக் கண்ணனே
பக நாசக -புள்ளின் வாய் கீண்டவனே
கிரீந்த்ர கர பாலித ஸமஸ்த புவந -குன்றம் ஏந்திய திருக் கையால் அகில உலகங்களையும் ரக்ஷித்து அருளினவனே

———————–

ஆசை வலையுள் சிக்கி யாடும் என் நெஞ்சத்தின் அறியாமை நீக்குவாயேல்
அனு தினமும் உனது திருவடியை மறவாத பத்தி வரும் ஐம் பொறியின் மதம் அடங்கும்
மாசில் உனது அடியார்கள் அருள் செய்வர் என் மீது வல் வினைகள் நீங்கி அகலும்
மன்னும் உயர் உணர்வு எய்தி மலரினிடை உறைகின்ற மா மகளின் நோக்கு வருமால்
கீச குலபதி மித்ர கம்பு நிப கந்தர  ஸூ கேது தநுஜா நாசந கிரண மணி க்ருத ஹார கம்பீர புஜ கலித கேயூர வேத சார
பாசதர சத்ருச அஸுராந்தக மஹா சூர பரம கருணா சாகர
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –3-

கீச குலபதி மித்ர -ஸூக்ரீவ மஹா ராஜனின் நண்பன்
கம்பு நிப கந்தர –குடக் கழுத்து போன்ற திருக் கழுத்து யுடையவனே
ஸூ கேது –தர்மத்துக்கு ஜெயக்கொடி போன்றவனே
தநுஜா நாசந –அரக்கர் கூட்டங்களை நிரசித்து அருளுபவனே
கிரண மணி க்ருத ஹார -ஒளி வீசும் ரத்னங்களான காரத்தை யுடையவனே
பாசதர சத்ருச -பாசக்கரைடு கையில் கொண்ட யமனுக்கு நிகரானவனே
அஸுராந்தக -அஸூரர்கட்க்கு யமனாய் இருப்பவனே
மஹா சூர -அஸஹாய ஸூரனே
பரம கருணா சாகர -அருள் மா கடல் அமுதே

—————————

முன்னம் ஒரு வீடுமன் முனைந்து வரு சமரத்து முனை வாளியால் அடிப்ப
முக கமல மலர் கருக நிகில புவனமும் அதிர முடுகி ஒளி யாழி ஏந்திச்
சொன்ன சபதம் அழிய வன்னவனை மாய்க்க வரு தோற்றம் எளியேன் காண நீ
தோற்றுவித் தனை யாகினான் கண்டு கொண்டு பல துதி யோதி யுய்குவன் காண்
உன்னத கதா ஹஸ்த கோபிகா நந்தந கர யுத்தமோத்தம மா தவ
உத்துங்க பீஷ்மக சுதாகாந்த கோவிந்த வுக்ரகம் ஸாசு கரண பன்னகாதிப சயன நாராயணா நந்த பலராம தேவா நுஜ
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –4-

முன்னம் ஒரு வீடுமன் -சந்தனு கங்கை இருவருக்கும் பிறந்த பீஷ்மர் -காங்கேயன் தேவ விரதன் என்றும் பெயர் -வசுக்களில் ஒருவர்
உன்னத -நெடியோனே
கதா ஹஸ்த
கோபிகா நந்தந
கர யுத்தமோத்தம
மா தவ
உத்துங்க பீஷ்மக சுதா காந்த -மிகச் சிறந்த பீஷ்மகரின் திரு மகளரான ருக்மிணி பிராட்டி மணாளனே
கோவிந்த
வுக்ர கம்ஸாசு கரண -கோரா கம்சனை அனாயாசேன கொன்றவனே
பன்னகாதிப சயன
நாராயணா
நந்த
பலராம
தேவா நுஜ -நம்பி மூத்த பிரானுக்கு பின் தோன்றலே

—————————

காலயவனற்கு மிக அஞ்சி யோடினை என்று கழறுகின்றனர் அறிவிலார்
கண்ணியா நோக்கினின் கழல் இணையை மறவாத கனமுடைய முசுகுந்தனின்
நீல நிற மணி மேனி கண்டு தொழவே எதிர் நின்றனை எனக் கொள்ளுவாம்
நின் பெருமை வணம் அறிய வல்லார் இந்த நீண் நிலத்தில் எவர் அறைகுவாய்
சீல குண கண நாத சிகுர குந்தள வாம சேஷ கருடாபி வந்த
சீத கர முக சந்த்ர கீத உபதேச வா சிஷ்யார்ய பத தர்ச்சக
பால குல கோபால பக்த ஜன மந்தார பாரத சஹாய ஸுவ்ரே
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –5-

சீல குண கண நாத
சிகுர குந்தள வாம -வளைத்த முன் உச்சி மயிர்களால் அழகானவனே
சேஷ கருடாபி வந்த
சீத கர முக சந்த்ர
கீத உபதேச வா
சிஷ்யார்ய பத தர்ச்சக -சிஷ்ய ஆச்சார்ய நிஷ்டைகளைக் காட்டி அருளினவனே

—————–

இரண்டாவது மகுடம்

கரு மேனி அழகு அழிய வரு சிறுவரோடு பல காடு மலையின் புறத்துக்
கன்று நிரை மேய்க்க நீ சென்ற பொழுதத்து உனது கழல் இணை என் மீது பட யான்
ஒரு பெரிய கல்லாக மரமாக மெதுவாக யுற்ற சிறு புல்லாக முன் உதித்து இருந்தேனாகில்
அரு நரகில் வீழ்க்கும் இவ் வுடலம் எவ்வாறு எய்துவேன்
குரு வம்ச பவ துஷ்ட ந்ருப வம்ச பீதி கர கோமள ரதாங்க பாணே
குமுகுமித ம்ருகமத படீர க்ருத லேபந ரகூத்தம கரிந்த்ர வரத
விருத கண்டாச ஹித பசு ரக்ஷணா சக்த வேதாந்த ஸாஸ்த்ர வேத்ய
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –1–

குரு வம்ச பாவ துஷ்ட ந்ருப வம்ச பீதி கர -கௌரவ வம்ச அரசர் கூட்டங்களுக்கு பீதியை விளைவித்தவனே
கோமள ரதாங்க பாணே
குமுகுமித ம்ருகமத படீர க்ருத லேப ந-பரிமளம் மிக்க கஸ்தூரி பூச்சை யுடையவன்
ரகூத்தம -ராகு வம்சத்தில் உத்தமனாய் நின்று பிரகாசிப்பவனே
கரிந்த்ர வரத -கஜேந்திராழ்வானுக்கு பேர் அருளாளனாய் வந்து அருளினவனே
விருத கண்டாச ஹித பசு ரக்ஷணா சக்த
வேதாந்த ஸாஸ்த்ர வேத்ய
வேணு யுத கர கமல
விஜி தரிபு சய -சத்ருக்களை எல்லாம் ஜெயித்தவனே
விமல விஜய ரத ஸூய மணியே –பார்த்தனுக்கு தேரூர்ந்த மா மணியே –

————————————————-

எந்த உலகுக்கும் இறையாகி யுள நீ முன்னம் எளியவோர் மாணியாகி ஏகி
மா வலி யச்ச வாடத்து மூவடி மண் ஏற்றனை யது யன்றி இரவி
மைந்தனிடை அந்தண் உருக் கொண்டு சென்று பின் மா தான பலம் ஏற்றனை
மா காந்தனான யுனக்கேற்கும் முறை எவ்வாறு வாய்த்ததோ யான் அறிகிலேன்
கந்த வஹ சுத வாஹ நாச்யுத ஹ்ருஷீ கேச கம நீய கோப வேஷ
காகுஸ்த்த வஸூதேவ தேவகி ஸூத ரத்ன கநக வஸ்த்ர அலங்க்ருத
விந்த்ய கிரி சத்ருச புஜ யுகள ப்ருந்தாரண்ய மேதினீ ஸமஸ்தா பக
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –2–

இரவி மைந்தன் -ஸூ ர்ய புத்ரன் -கர்ணன்
மா காந்தன் -ஸ்ரீ யபதி
கந்த வஹ சுத வாஹந-ஹநுமானை வாகனமாகக் கொண்டருளினவனே
அச்யுத
ஹ்ருஷீ கேச
கம நீய கோப வேஷ
மேதினீ ஸம்ஸ்தாபக -தர்மத்தை நிலை நாட்டை தரணியில் அவதரித்து அருளினவனே –

———————-

செகத்தில் உடலோடு காண்கின்ற வுயிர் யாவும் நீ செய்த நன்றியை மறந்து
செருக்குற்று நின்று தாம் செய் தொழில் கடம் முடைய செய்கை என்றே நினைந்து
திகைத்து மேல் தெய்வம் இல்லை என்று எண்ண மாயையாம் திரையிட்டு வைத்து இருத்தி
திரு உள்ளம் இரங்கி அத்திரை நீக்கி யவை உனைத் தரிசித்து வாழும் அன்றோ
ஸூக நாரதாதி முனி ஸேவ்ய வைகுண்டேச ஸூத்த ஸாத்விக கேசவ
சூர்ப்ப கா ராதி ஜனக ஆஸ்ரித ஜன ஆதார ஸூப விபீஷண பாந்தவ
விகோசித மன நளிந பாஸ்கர வஷட்கார விஹ கரத விஸ்வ மூர்த்தே
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –3–

வஷட்கார -வஷட் கார ஸ்வரூபியே
விஹ கரத -திருவடியை வாஹனமாகக் கொண்டு அருளினவனே

——————–

சொல்லால் உனைப் பாடி மகிழ அறியேன் சொன்ன சொற் பொருளின் உண்மை அறியேன்
சோராமல் நிற்கு அடியேன் செய்ய அறியேன் பெரிய சுருதியினை நோக்க அறியேன்
கல்லை நிகர் நெஞ்சினேன் பொய் களவு வஞ்சகம் கனவிலும் நீக்க அறியேன்
கடையினேன் நாயினும் கடைக் கணித்து ஆள நின் கருத்தின் நினைத்து அருள்வாய்
பில்லாதி போல்லாச கர கோபிகா ஜார பீமாக்ர ஜாபி வாத்ய
பீத பாஞ்சால புத்ரீ மாநத அபேத பேத வாக்யார்த்த கதித
வில்லிபுத்தூர் விஷ்ணு சித்த நிச்சித தத்வ விஹித ப்ரஹ்மாதி ரூப
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –4–

பில்லாதி போல்லாச கர –ஆயர் தலைவர்கட்க்கு மகிழ்ச்சி அளித்தவனே
கோபிகா ஜார -ஆய்ச்சிகளை மோஹித்து அடைந்தவன்
பீமாக்ர ஜாபி வாத்ய –யுதிஷ்ட்ரர் வணங்கியவனே
பீத பாஞ்சால புத்ரீ மாநத-பயந்த திரௌபதியின் மானத்தைக் கொடுத்தவனே
அபேத பேத வாக்யார்த்த கதித
வில்லிபுத்தூர் விஷ்ணு சித்த நிச்சித தத்வ
விஹித ப்ரஹ்மாதி ரூப –விதி சிவன் இந்திராதி ஸர்வ ரூப சரீரியே

—————————

முதிய வரவக் கொடிய துரியோதனக் கொடிய மூடன் கண் காண வவையின்
முன் எய்தி மதியாது கொலவிட்ட வவணுற்ற முனை வீரர் பட வானவர்
துதி பெற்ற புவன நிறை பெரிய உருவத்தை நீ தோற்றுவித்தனை
என் மனத்து உன் பொழிய நின் சிறிய கரிய உருவத்தை உள் தோற்றுவிக்கின் மகிழ்வனே
மதுர ம்ருது தர வசன நவநீத ததி சோர மது ஸூதந ஆதி கூர்ம மதுரா புரீ வாஸ மாதந மா ரமண மாரீச நீசான் தக
விதுர ஸூஹ்ருத அதித்ய விப்ர தநத அநித்ய விஷயாதி தூர கமந
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –5–

முதிய வரவக் கொடிய துரியோதனக் கொடிய மூடன் கண் காண வவையின்
முன் எய்தி மதியாது கொலவிட்ட வவணுற்ற முனை வீரர் பட வானவர்
துதி பெற்ற புவன நிறை பெரிய உருவத்தை நீ தோற்றுவித்தனை
என் மனத்து உன் பொழிய நின் சிறிய கரிய உருவத்தை உள் தோற்றுவிக்கின் மகிழ்வனே

ம்ருது தர வசன -இனிய வார்த்தை யுடையவன்
நவநீத ததி சோர மது ஸூதந
ஆதி கூர்ம –ஆதி கூர்ம ரூபியே
மதுரா புரீ வாஸ
மாதந –மானத்தையே தனமாகப் பெற்றவனே
மா ரமண -ஸ்ரீ யபதியே
மாரீச நீசான் தக
விதுர ஸூஹ்ருத அதித்ய –விதுரரால் நன்கு அதிதி ஸத்காரம் செய்யப் பெற்றவனே
விப்ர தநத-குசேலருக்கு ஐஸ்வர்யம் அளித்து அருளினவனே
அநித்ய விஷயாதி தூர கமந -அநித்யமான விஷயங்களுக்கு வெகு தூரம் செல்பவனே

——————–

மூன்றாவது மகுடம்

உன்னுந்தி மலர் வந்த நான்முகத்து ஒருவனே நின் பெருமை அறியாது உனை
ஓர் இடையன் மகனாக யுன்னீ நீ காட்டகத்து ஓடி அனுதினம் மேய்த்திடும்
பொன்னின் அணி இலகு மணி ஆக்களையும் அவைகள் பின் போகு சிறு கன்றுகளையும்
போற்றி வரும் கோபால பாலர்களையும் தனது புணர் மாயை யால் பிணைத்துப்
பன்னரிய பெரிய மலை முழை ஒளித்திட வாய்ந்து பார்த்தவர்கள் போல் உருவம்
பல பல எடுத்து நீ நிற்க அவன் அணி நின் பாத மலர் இறைஞ்சி யஞ்சிக்
கன்னனிகர் வேத மொழி யாற்று திப்பக் கருணை காட்டி அறியாமை ஈர்ந்தாய்
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –1-

வானில் உறைகின்ற மதி செல்ல வழி இன்மையால் வாடி மேனிலை வாயிலில்
வந்து புக நின்ற கோபுர வகையும் மணி தைத்த வண்ண வான் கதவின் வகையும்
மானெரிய நீண்டு வளை தந்த மதிலின் வகையும் மா மாணிக் கொடி ஏறும் உறும்
மன் பெரிய தம்பமும் பொன் மண்டபப் பொலிவு மண நாறு பூஞ்சோலையும்
மீன் உலவும் இனிய புனநிறை குளனும் வாய்ந்த பேர் மேன்மை யுறு நின்னகரில் வாழ்
மேதக்க யடியார்கள் யடி பணியும் அவர் பெருமை வேதனும் வுரைக்க வலனோ
கானனல முண்ட கனி வாயனே மாயனே கமலை யுறைகின்ற மார்பா
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –2-

கங்கை அலை எறிகின்ற கழல் இணையின் அழகு நின் கரிய திருமேனி யழகும்
கலை மதியை ஒத்த தவனத்தின் அழகும் பெரிய கமல நிகர் விழியின் அழகும்
சங்க முறை தருகின்ற கையின் அழகும் குங்கொடியர் தலை யரியும் வாள் கை அழகும்
தமநிய மலைக்கு நிகர் தோளின் அழகும் தலை யிறாங்கு மணி முடியின் அழகும்
துங்க மலர் மகள் வாழு மார்பின் அழகும் அதில் தோன்றும் வனமாலை யழகும்
தூய நான்முகன் வந்த யுந்தி அழகும் பொலந்தூசு பொலி இடையின் அழகும்
கங்குலும் பகலும் என் கண்ணை விட்டு அகலாது கருத்தினை யிருக்கும் அன்றே
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –3–

மிக்க பசியால் வாடி யுணவினை விரும்பி முன் விடுப்பவொரு கோபனோடி
வேள்வி செய்யும் அந்தணரை நாடி அன்னம் கேட்ப வெகுண்டவர் மறுப்ப வன்னான்
இங்கு நிகர் மொழி வரவ் வேதியரின் மனைவியரை யேற்பவ வருள் களித்தே
இணை யற்ற வன்ன முதலாய கைக் கொண்டு எய்தி எம் பெரும நீ கொள்க எனத்
தக்க யுபசாரத்தினோடு உனை அருத்திடத் தளர்ச்சி யற யுண்டு வந்து
தாழாத வர்க்கு அருள் செய் தந்த மங்கையர் தம்பதிகள் செய் தொழிலினும்
கக்கும் ஒளிமைக் குழலவர் பத்தியே மிகக் கனமுடைய தென நாட்டினை
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –4-

அமித வெழில் ஒழுகு முக கோபியர்கள் அரு கலவி யார்ந்தகம் உவந்த நீ முன்
அம்மதுரை நகரினிட வதிகின்ற கூனி யுடல் அணை தந்த வாறு என்னவும்
தமர் கண் மிக வினிய சுவை தர வாங்கி அன்பினோடு தந்த உணவு உண்டு அருளு நீ
தகுதி அற வொரு அறிய வந்தணன் அளித்தவ வறான் யுண்ட வாறு என்னவும்
அமுத மொழி யுடைய பல வாழ்வார்கள் செந்தமிழை ஆதாரத்தோடு கொண்ட நீ
அஞ்ஞனான எளியேன் சொன்ன புன் கவியை அருள் செய்து கொள வேண்டுமால்
கமழ மணமுடைய துளஸீ காரனே விளவின் கனி வீழ்த்த வொரு தீரனே
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –5-

அந்தணன் -குசேல முனி

ஆக்கியோன் பெயர்
குந்தி மகன் சாரதி மேல் கூறினான் பஞ்ச ரத்னம்
செந்திரு வாழ் கஞ்சஞ் செழு நீலம் –உந்து மணப்
பூ நிரை மாறா வயல் சூழ் புன்னை ராமானுஜன் சேய்
சீ நிவாஸன் விழைந்து தேர்ந்து

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புன்னை ஸ்ரீ ராமானுஜன் ஸ்வாமிகள் திருக்குமாரர் ஸ்ரீ நிவாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேத வியாஸ பகவான் அருளிச் செய்த ஸ்ரீ அத்யாத்ம ராமாயணம் —

September 13, 2022

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ இளைய பெருமாளுக்கு உபதேசம்

வேத வியாசரின் பிரம்மாண்ட 61வது அத்தியாயத்தில் பரமசிவனும் அம்பாள் பார்வதியும் பேசிக்கொள்கிறார்கள்
( இதை நாரதருக்கு பிரம்மா சொல்லியிருக்கிறார்) இந்த பகுதி தான் அத்யாத்ம ராமாயணம் ஆகும்.

வால்மீகி ராமாயணம் 7 காண்டங்கள். 24000 ஸ்லோகங்கள்.
ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்குப் பின் முதல் எழுத்து காயத்ரி மந்த்ரத்தில் இருந்து வரும்.

வேத வியாசரின்  அத்யாத்ம   ராமாயணம்  6 காண்டங்கள்,  கிட்டத்தட்ட 4000  ஸ்லோகங்கள்  கொண்டது.

ராவண வதத்துக்குப் பிறகு மாய சீதை தான் அக்னி ப்ரவேசம் செய்கிறாள் – வியாசர்.
உண்மையான சீதை தான் அவ்வாறு செய்தது – வால்மீகி.

லக்ஷ்மனனுக்குத் தெரியாமல், ”சீதா, ராவணன் வருவான், உன்னைக் கடத்துவான்.
எனவே உன்னை அக்னியிடம் ஒப்படைத்து ஜாக்ரதையாக பிறகு பெற்றுக் கொள்கிறேன்
அதுவரை உன்னைப் போன்று இப்போது முதல் ஒரு மாய சீதா உருவாக்கி ராவணன் தூக்கிச் செல்ல வைக்கிறேன்.
பிறகு ராவண வதம் முடிந்து மாய சீதாவை அக்னியில் பிரவேசிக்க வைத்து உன்னை மீட்டுக் கொள்வோம். –
ராமன் – சீதாவின் இந்த ஒப்பந்தம் வியாசர் சொல்கிறார்.

—————

ஸ்ரீ ராமகீதாமாகாத்மியம்‌,

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் மாகாத்மியம்‌ (பெருமை) முழுவதனையும்‌ ஸ்ரீ சங்கரன்‌ அறிவார்‌.
௮தில் பாதி பார்வதி தேவி யார்‌ அறிவர்‌. முனிவரே !-௮தில் பாதி யான்‌ ௮றிவேன்‌.

எந்த மாகாத்மியத்தை யறிதலால்‌ உலகத்தினர்‌ அக்‌ கணமே சித்த சுத்தியை அடைவரோ, ௮தனை யுனக்குச்‌
சிறிது சொல்லுகிறேன்-முழுவதும்‌ சொல்லக் கூடிய தன்று

நாரதரே! ஸ்ரீ ராம கீதை எந்தப்‌ பாபத்தைக்‌ கெடுக்‌கிறதோ அந்தப் பாபம் உலகில் ஓர் இடத்திலும் ஒரு போதும்
தீர்த்தம் முதலியவற்றால் போக்க முடியாது-
ஸ்ரீ ராம கீதையினால் கெடாத பாபத்தை உலகில் எங்கும் காண முடியாது

ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியினால் உபநிஷத் ஆர்ணவம் கடைந்து உண்டு பண்ணப் பட்டது
ஸ்ரீ லஷ்மணனுக்கு உகந்து உபதேசிக்கப்பட்டது
இந்த ஸ்ரீ ராம கீதா அம்ருதத்தைப் பருகின புருஷன் அமரன் ஆகிறான் –

ஸ்ரீ பரசு ராமர் கார்த்த வீர்ய அர்ஜுனனைக் கொல்ல வில் வித்யையை பழகுவதற்கு முன்
ஸ்ரீ ராம கீதையை ஸ்ரவணம் செய்து கிரஹித்து படித்து ஸ்ரீ நாராயணனின் கலையைப் பெற்றார்

ப்ரஹ்மஹத்தி பாபங்களையும் போக்கும் சக்தி இதற்கு உண்டு

இத்தால் ஸாயுஜ்யமும் அடையலாம்

——————

ஆகாசத்தில்‌ மூன்று விதமான பேதம்‌ காணப்படுகிறது.
அதாவது ஒரு தடாகத்தை வியாபித்திருக்கிற ஆகாசம்‌ (1) மஹா ஆகாசம்‌,
அதற்குள்‌ ௮டங்கி யிருக்கிற ஆசாசம்‌ (2) அவிச்சின்ன ஆகாசம்
அதில்‌ பிரதிபலித்திருக்கிற ஆகாசம்‌ (3) பிரதிபிம்ப ஆகாசம்‌
என்னும் இம்மூன்று வித பேதங்களும்‌ ஆகாயத்தில் காணப் படுகின்றன,
பிரமத்திலும்‌, ஆபாஸம்‌, ௮விச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம் -என்னும் மூன்று வித பேதங்களும் உண்டே –
ஆபாஸ மென்பது பொய்பான புத்தி, ௮து அவித்தை (அஞ ஞானத்தின் காரியம்‌.
௮.து-விச்சின்னம்‌ (வேறுபட்டது) இல்‌லாதது. அஞ்ஞானத்தால்‌ விச்சின்னம்‌ ஏற்படுகிறது,
ஞானம்‌ ஏற்பட்டால்‌, அவிச்சின்ன சைதன்யம்‌, பூரண சைதன்யம்‌, இவை இரண்டும்‌ ஒன்றென்றும்‌,
ஆபாஸமாகிய அவித்தை தன்‌ காரியங்களுடன்‌ நசிக்கும் என்றும்‌ ௮றியக் கூடும்‌,

ரிக்‌ வேதத்தில்‌ அபாத்திரிய உபநிஷத்தில் –ப்ரக்ஞானம் ப்ரஹ்மம் என்னும்‌ வாக்கியமும்‌,
யஜுர்‌ வேதத்தில்‌ தைத்தரிய உபநிஷத்தில் அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி என்னும்‌ வாக்கியமும்‌,
சாமவேதத்தில்‌ சாந்தோக்ய உபநிஷத்தில் தத்துவமஸி என்னும்‌ வாக்யமும்‌,
அதர்வண வேதத்தில்‌ மாண்டோக்ய உபநிஷத்தில்‌ அயமாத்மா ப்ரஹ்மம் ப்ரஹ்மம் என்‌னும்‌ வாக்யமும்‌ உண்டே –

ப்ரக்ஞானம் பிரம்மம் என்றால் தூய அறிவே பிரம்மம் எனப் பொருள். அயமாத்மா பிரம்மம் என்றால் இந்த ஆத்மாவே பிரம்மம் எனப் பொருள். அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே பிரம்மம் எனப் பொருள்.

இந்த நான்கு மகா வாக்கியங்களை
ஸ்ரவணம் (1)
மனனம் (2)
நிதித்யாசனம் (தெளிதல்) (3)
நிட்டை கூடுதல் (4) என்று
ஸ்ரீ கீதை கூறுகின்றது.-

ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
ஸத்யம்
நித்யம்
பூர்ணம்
ஏகம்
பரமார்த்தம்
பர ப்ரஹ்மம்
கூடஸ்தர்
பரஞ்சோதி -பர்யாய பதங்கள் –

ஸ்ரீ ராம ஹ்ருதயமே இந்த உபநிஷத் வாக்கியங்களின் தாத்பர்யம்

நியந்த்ரு நியாம்ய பாவம்-
சேஷி சேஷ பாவம்-
சரீர ஆத்ம பாவம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -உணர வேண்டுமே –

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு எவ்வுளூர் திருப்பஞ்சகம்–

September 10, 2022

இதன் சந்தம் விளம், மா, காய், விளம் – என்ற வாய்பாட்டில் உள்ளது

திருப்பஞ்சகம் – முதல் பாடல்
குருவுளச் சந்தக் கவிராயர் சொன்ன
வொருகலிச் சந்தம் உணராநின் றுன்னி
திருவுளே துஞ்சும் திருமால்பேர் சொல்வேன்
கருவிளம் மாமுன் பலவின்காய் மாவே. –சந்தம்: கருவிளம் மா புளிமாங்காய் மா

குருவாக உளம் கொண்ட சந்தக் கவிராயர் ஒரு கலிவிருத்த சந்தம், உணர்ந்து உன்னி, திருவுள்ளூரில் இருக்கும் திருமால் பேரைச் சொல்ல பயன் படுத்துவேன். இதில், உள்ள நாற்சீர்கள் கருவிளம், மா, பலகாய்கள் மற்றும் மாவாக வரும்

திருப்பஞ்சகம் – இரண்டாம் பாடல்
இராவணன் வீழ்த்தி ஏந்திழையை மீட்ட
இராவணன் இங்கே ஈடிலாத பேறாய்
அராவணை தன்னில் ஆன்றதுயில் கொண்டான்
மராவளி சாய்த்த மாலிவனைக் கொள்ளே! -2-சந்தம்: கருவிளம் மா கூவிளங்காய் மா

இரவு வண்ணம் கொண்டவன், இராவணனை வதைத்து தன் மனைவியை மீட்டான். அந்த மரா மர வரிசையைச் சாய்த்தவன் இங்கு பாம்பு படுக்கையில் தூங்குகிறானே! அவனை நீ மனதில் வரிப்பாயாக.

திருப்பஞ்சகம் – மூன்றாம் பாடல்
மலிகடல் வாழ்ந்த மாகைட பர்தம்
தலைகுடல் வேறாய்த் தானாழி கீண்டான்
அலகிடும் அன்பர் ஆகாத வெந்நோய்
குலைகெட இவ்வுள் கா(ல்)நீட்டு மாறே! -3-சந்தம்: கருவிளம் மா தேமாங்காய் மா

பெருங்கடலில் வளர்ந்த மது கைடபர் என்ற இருவரை, (தன் தொடைமீது வைத்து), சக்ராயுதத்தால் வகிர்ந்தவன், இவ்வூரில், உடம்பின் பகுதிகளை அலகால் சமர்ப்பிக்கும் அன்பர்கள் நோய் தீர்ப்பவனாக கால் நீட்டி படுத்திருக்கும் அழகைப் பாருங்கள்!

திருப்பஞ்சகம் – நான்காம் பாடல்
சுவாதி நன் னாளில் சினமுறுத்த சீயம்
விவாதமீ தீற்றில் வெளிப்புறத்த தென்னே!
அவாயிரா சாலி அருமுனிவர்க் கிங்கே
சுவாமிநின் அவ்வுள் சுவீகரித்த தென்னே! -4-சந்தம்: கருவிளம் மா கருவிளங்காய் மா

‘அவன் எங்கிருக்கிறான்’ என்ற விவாதத்தின் முடிவில், கோபமாய் சிங்க உருவில் வெளி வந்தவன், இங்கு ஆசை இல்லாத சாலி ஹோத்ர மகரிஷிக்கு அந்த உள்ளை (பரத்தை)க் காட்டி எப்படி அன்போடு சுவீகரித்து இருக்கிறான்!

மிளகுமுப் பளக்கு மடியவர்பால் நெஞ்ச
மிளகுமிம் மருந்து திருவுளூரில் துஞ்சும்
அளவுமிப் படியென் ரளக்குறாத அண்ணல்
முளரியொப் புவசு மதிமணந்த திங்கே! -5-சந்தம்: கருவிளம் மா கருவிளங்காய் மா

மிளகும் உப்பும் தரும் அடியவர்க்காக நெஞ்சம் இளகும் மருந்து ஒன்று திரு எவ்வுள் ஊரில் தூங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அண்ணலை, எண்ணிக்கையால் அளக்க முடியாது (அத்யதிஷ்ட தஷாங்குலம்). அவன், வசுமதியை வரித்த ஊர் இதுவே!

வடலூர் இராமலிங்க அடிகளார் இப்பெருமாள் மீது பக்தி கொண்டு திருப்பஞ்சகம் என்னும் ஐந்து பாக்களைப் பாடியுள்ளார்.
‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனே போற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி
தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதி நல் விளக்கே போற்றி
வேண்டவ ரெவ்வுள்ளூர் வாழ் வீர ராகவனே போற்றி’

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ திவ்ய தேச மஹாத்ம்யம் —

September 9, 2022

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்-

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

————————

ஸ்ரீ திருமந்திரம் – நாராயண மந்திரம் -மூன்று பதங்களாயிருப்பதைப் போல
இந்த திவ்ய தேசங்கள் என்று சொல்லப்படும் ஸ்தலங்களை மூன்று திவ்யங்கள் சூழ்ந்துள்ளன. அதாவது
1-கோவில் திவ்யமாகிறது.
2-பெருமாள் ஒரு திவ்யம்,
3-மங்களாசாசனப் பாசுரம் திவ்யப் பிரபந்தமாகிறது.

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால்
(எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள்
எனப்படும்.

ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர
மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது.

ஏழு புண்ணியங்களானவை
1-க்ஷேத்ரம்
2-வனம்
3-நதி
4-ஸிந்து
5-புரம்
6-புஷ்கரணி
ததா
7-விமானம்
ஸப்த புண்யஞ்ச யத்ர தேச 

இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின்
மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம்
நிலை பெற்ற இடமாகும். . இவ்விதம் இந்தியாவில்
ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் -108.

இம்மட்டுமன்றி, இந்த திவ்யதேசங்கள் அதில் அமைந்துள்ள
விமானங்களினாலும் சிறப்பும், மேன்மையும் படைத்தனவாகும்.
மூலஸ்தானத்திற்கு மேலே (கர்ப்பக் கிரகத்திற்கு மேல்) சிற்ப சாஸ்திர
விதிகட்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ள கோபுரமே விமானமாகும்.

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம் 

2. விமலாக்குருதி விமானம்  

3. சுத்தஸ்த்வ விமானம்      

4. தாரக விமானம்

5. சுகநாக்ருதி விமானம்      

6. வைதிக விமானம்  

7. உத்பலா விமானம்        

8. சௌந்தர்ய விமானம்

9. புஷ்கலாவர்த்த விமானம்   

10. வேதசக்ர விமானம்  

11. சஞ்சீவி விக்ரஹ விமானம்  

12. அஷ்டாங்க விமானம்
13. புண்யகோடி விமானம்     

14. ஸ்ரீகர விமானம்      

15. ரம்ய விமானம்   

16. முகுந்த விமானம்- 

17. விஜய கோடி விமானம்

18. சிம்மாக்கர விமானம்      

19. தப்த காஞ்சன விமானம்

20. ஹேமகூட விமானம்

இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும்,
ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும்,
ஆகமம் கூறிப்போகிறது.

———–

1. பொய்கையாழ்வார்– 6 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
2. பூதத்தாழ்வார் –13 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
3. பேயாழ்வார் –15 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
4. திருமிழிசையாழ்வார் –17 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் 
5. நம்மாழ்வார் –37 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
6. குலசேகராழ்வார் –9 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
7. பெரியாழ்வார் –18 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்
8. ஸ்ரீ ஆண்டாள்-11 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்

9. தொண்டரடிப் பொடியாழ்வார் –1 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்

10. திருப்பானாழ்வார்   -3 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்

11. திருமங்கையாழ்வார்  — 86 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம்

—————

ஸ்ரீ ரெங்கம் –11 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
திருமலையும் திருப்பாற் கடலும் -10 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
பரமபதம் -8-ஆழ்வார்களால் மங்களா சாசனம்
திருக்குடந்தை -7-ஆழ்வார்களால் மங்களா சாசனம்
திருமாலிருஞ்சோலை -6-ஆழ்வார்களால் மங்களா சாசனம்
ஐந்து திவ்ய தேசங்கள் -6 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
நான்கு திவ்ய தேசங்கள் -3 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
ஐந்து திவ்ய தேசங்கள் -3 ஆழ்வார்களால் மங்களா சாசனம்
21 திவ்ய தேசங்கள் -2- ஆழ்வார்களால் மங்களா சாசனம்
67 திவ்ய தேசங்கள் -ஒரே ஆழ்வாரால் மங்களா சாசனம்

—————

நின்ற திருக்கோலம் -67 திவ்ய தேசங்கள்
இருந்த திருக்கோலம் -17 திவ்ய தேசங்கள்
சயனத் திருக்கோலம் -24-திவ்ய தேசங்கள்

கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலம் –39-திவ்ய தேசங்கள்
மேற்கு நோக்கி நின்ற திருக் கோலம் -12-திவ்ய தேசங்கள்
தெற்கு நோக்கி நின்ற திருக் கோலம் -14 திவ்ய தேசங்கள்
வடக்கு நோக்கி நின்ற திருக் கோலம் -2-திவ்ய தேசங்கள்

கிழக்கு அமர்ந்த திருக்கோலம் –13 திவ்ய தேசங்கள்
மேற்கு அமர்ந்த திருக்கோலம் –3-திவ்ய தேசங்கள்
தெற்கு அமர்ந்த திருக்கோலம் -இல்லை
வடக்கு அமர்ந்த திருக்கோலம் -1 திவ்ய தேசம்
கிழக்கு நோக்கி சயனம் –18 திவ்ய தேசங்கள்
மேற்கு நோக்கி சயனம் –3 திவ்ய தேசங்கள்
தெற்கு நோக்கி சயனம் –3 திவ்ய தேசங்கள்
வடக்கு நோக்கி சயனம் –இல்லை

ஜல சயனம்
தல சயனம்
புஜங்க -சேஷ -சயனம்
உத்தியோக சயனம்
வீர சயனம்
போக சயனம்
தர்ப்ப
பத்ர -ஆலிலை மேல் – சயனம்
மாணிக்க சயனம்
உத்தான சயனம்

திருநீர்மலை -திருக்கோட்டியூர் -கூடல் அழகர் -திருவல்லிக்கேணி -போன்ற திவ்ய தேசங்களில் நின்ற இருந்த சயன திருக்கோலங்களில் ஸேவை

——–

ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி
ஓர் பதிமூன்றாம் மலை நாடு ஓர் ஈர் இரண்டாம் சீர் நாடு நாடு
ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாகக் கொள்

கடல் கிழக்கு தெற்கு கரை பொறு வெள்ளாறு
கூட திசையில் கோட்டைக் கரையான் வடதிசையில்
வோனாட்டுப் பண்ணை இருபது நாற்கதஞ்
சோனாட்டுக்கு எல்லை எனச் செப்பு –பெரும் கதை

————

உயர் திருவரங்கம் உறையூர் தஞ்சை
அயர் யகற்றிடும் அன்பில் கரம்பனூர்
புகழ் வெள்ளறை புள்ளம் பூதங்குடி
அந்தமில் பேர் நகர் ஆதனூர் அழுந்தூர்
போதமருள் சிறு புலியூர்ச் சேறை
மாதலைச் சங்க நாண் மதியம் குடந்தை
விரவு கண்டியூர் விண்ணகர் கண்ண
புரமுடன் ஆலி பொன்னாகை நறையூர்
நத்து நந்தி புர விண்ணகரம் இந்தளூர் திருச்
சித்ர கூடம் சீ ராம விண்ணகரம்
கூடலூர் கண்ணங்குடி கண்ண மங்கை
வீடருள் கவித்தலம் வெள்ளியங்குடி
வண்ண மணி ,மாடக் கோயில் வைகுந்த
விண்ணகரம் அரி மேய விண்ணகரம்
திருத்தேவனார் தொகை சிறந்த நதாய வண்
புருடோத்தமம் செம் பொன் செய் கோயிலே
பாவணத் தெற்றி யம்பலம் பல மணிக்கூடம்
கா வளம் பாடிக் கவின் வெள்ளக் குளம்
துதி பார்த்தன் பள்ளி சேர் சோழ நாட்டுப்
பதியதோர் நாற்பதும் பணிந்து போற்றுவோம் –

——————-

நீல மேகம் நெடும் பொற் குன்றத்துப் பால் விரித்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை யாரும் திறல் பாயல் பள்ளிப் பலர் தொழுது ஏத்த
விரி திரைக் காவிரி வியன் பெருந்துருத்தி திரு வமர் மார்பன் கிடந்த வண்ணம் –இளங்கோவடிகள்

iii) கி.பி. 10ம் நூற்றாண்டு – இது சோழர்கள் தமிழ்நாட்டின் ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.

கி.பி. 953 முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு அளித்ததையும்
அதற்கு கற்பூரம், பட்டுத்திரி, நூல், வாங்குவது உட்பட அதன் நிலையான செலவினங்கட்கு 51 பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.
ஏறத்தாழ 400 சோழர் கல்வெட்டுகள் உண்டு.
கி.பி. 1060-1063 இராச மகேந்திர சோழன் இங்குள்ள முதலாம் பிரகாரத்தின் திருமதிலை கட்டினான்.
எனவே அது இராசமகேந்திரன் திருவீதி என்றே வழங்கப்பட்டுள்ளது.
கி.பி.1017-1137 இது இராமானுஜரின் காலமாகும். இவரின் அரிய சேவைகளை கோயிலொழுகு என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது.
கி.பி. 1120-1170 முதலாம் குலோத்துங்க சோழன். இவன் இராமானுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்தான்.
இதனால் ராமானுஜர் சிலகாலம் ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில்-மேல்கோட்டையில் – தங்கியிருந்தார்.
கி.பி.1178-1218 மூன்றாம் குலோத்துங்க சோழன். இவன் காலத்தில் இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப் பட்டது.
இவன் சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்தான்.
கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.
கி.பி.1216-1238 மாறவர்மன் சுந்தரபாண்டியன் கர்நாடகத்தைக் கைப்பற்றினான். கங்கர்களை விரட்டினான். கோவில் நிர்வாகம் சீர்பெற்றது.
கி.பி.1234-1262 ஒய்சாள மன்னன் சோமேசுவரன் இங்கு நந்தவனம் உண்டாக்கி மூன்றாம் பிரகாரத்தில் யாகசாலை நிறுவினான்.
கி.பி.1251-1268 மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சடாவர்ம சுந்தர பாண்டியன் ஏராளமான பொன்வழங்கி, மூன்று விமானங்கள் கட்டினான்.
திருமடைப்பள்ளி கட்டினான். இராண்டாம் பிரகாரத்தில் பொன் வேய்ந்தான்.பொற்கருட வாகனம் வழங்கினான்.
இவன் கடக அரசை (கட்டாக், ஒரிசா)போரில் வென்று கைப்பற்றிய பொன்னில் திருவரங்கனுக்கு மரகதமாலை,பொற்கிரீடம், முத்தாரம், முத்துவிதானம், பொற் பட்டாடை போன்றன வழங்கினான்.
இவன் காவிரி நதியில் தெப்ப உற்சவத்தின் போது இரண்டு படகுகள் கட்டினான்.
அதில் ஒன்றில் தனது பட்டத்து யானையை இறக்கித் தானும் அதன்மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
மற்றொரு படகில் ஏராளமான அணிகலன்களையும், பொற் காசுகள் நிரம்பிய குடங்களையும்,
கோவிலுக்கு வேண்டிய பிற முக்கிய பொருட்களையும் நிரப்பி தன்னுடைய படகில் நீர் மட்டத்தின் வரையில் இன்னொரு படகின் நீர்மட்டம் வரும் வரை தானம் வழங்கினான்.
அப்பொருட்களை இத்திருக் கோவிலுக்கு வழங்கினான்.
கி.பி.1263-1297 ஒய்சாள மன்னன் இராமதேவன் இக்கோவிலுக்கு எண்ணற்ற தானம் வழங்கி புனருத்தாரப் பணிகளை மேற்கொண்டார்.
இத்திருக்கோவிலில் உள்ள பேரழகு பொருந்திய வேணு கோபால கிருஷ்ணரின் சன்னிதி இவர் காலத்தில் ஏற்பட்டதாகும்.

கி.பி.1268-1308 மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலம். இவன்
காலத்தில் இந்தியா வந்த போர்ச்சுக்கீசிய மாலுமி மார்க்கோபோலோ
இங்கு வந்து இத்தலம்பற்றியும் இதைச் சுற்றியுள்ள செழிப்பைப் பற்றியும்
வியந்து போற்றிக் குறிப்புகள் கொடுத்துள்ளார்.

கி.பி. 1311 முஸ்லீம் தளபதி மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான்.இக்கோவிலில் கொள்ளையிட்டான்.

கி.பி.1325-1351 முகம்மதுபின் துக்ளக் இக்கோவிலை கொள்ளையிட எத்தனித்தான்.
அரங்கன்பால் பற்றுக் கொண்ட அடியார்களும்,
ஆச்சார்யார்களும் திருவரங்க நகர்வாசிகளும் தேவதாசிகளும் அவனை முன்னேறவிடாமல் தடுத்தனர்.
எண்ணற்ற வீரர்கள் இருதரப்பிலும் மாண்டனர்.
பாண்டியர்களும்., ஒய்சாளர்களும் முடக்கப்பட்டதாலும் சோழவரசு இந்திய வரைபடத்தில் கொஞ்சம் கூட இடம்பிடிக்க முடியாது இருந்த இந்த
காலக்கட்டத்தில்
வைணவ அடியார்கள் தம் இன்னுயிர் நீத்து
இத்திருக்கோவிலைக் காத்தனர். இத்திருக்கோவிலின் விலை உயர்ந்த அணிகலன்களையும்,
வழிபாட்டிற்குரிய முக்கிய பொருட்களையும் உற்சவப்
பெருமாளையும் திருவரங்கத் தினின்றும் கடத்தி
பல ஊர்களில் மறைத்து வைத்து திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை எனப்
பலவிடங்களிலும் மறைத்து
இறுதியில் திருப்பதியில் கொண்டுபோய் பாதுகாத்து
வைத்தனர். கி.பி. 1371 வரை திருப்பதியிலேயே இருந்தன. இவ்விதம் திருவரங்கத்திலிருந்து கிளம்பி மீண்டும் திருவரங்கம் வரும் வரையில் நடந்த நிகழ்ச்சிகளை
“திருவரங்கன் உலா” என்னும் நூல் தெளிவாகவும் விரிவாகவும் வரலாற்று நாவல் போன்று சிலாகித்துப் பேசுகிறது.

—————–

பகவான் எழுந்தருளியிருக்கும் விமானங்கள் 96 வகையென்று ஆகம சாஸ்திரங்கள் கூறும்.
அவற்றுள் மிக அருமையானது அஷ்டாங்க விமானம்.
திருக்கோட்டியூர், கூடல்மாநகர், உத்திர மேரூர் போன்ற ஸ்தலங்களில் விமானங்கள் அஷ்டாங்க அமைப்புடன் கூடியவை. இவை 8 அங்கம் 3 (தளம்) அடுக்கு உடையது.
அதாவது திருமந்திரமானது எட்டெழுத்துக்களாகவும், மூன்று பதமாகவும் இருப்பதைப் போல திருவஷ்டாச்சர மந்திரத்தின் ஸ்தூல வடிவமாக இவைகள் திகழ்கின்றன.
ஸ்ரீமந் நாராயணன் திருமேனி இந்த மந்திரத்தில் அடங்கி 8 அம்சங்களாக விமானத்தில் நிறைந்திருக்கின்றன என்பது பொருள்.

—————

அகால மிருத்யு ஹரணம் ஸர்வ வியாதி விநாசனம் விஷ்ணோ பாதோதகம் பீத்வா புனர் ஜன்ம ந வித்யதே
துளசி தளம் கலந்த ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை பருகுபவர்களுக்கு மறு பிறப்பில்லை.
அகால மரணம், உடல், உள்ளம் பற்றிய வியாதிகள் எல்லாமே விலகும் என்கிறது ஆயுர்வேதம்.

துளசி எடுப்பதை ஸ்ரீவைஷ்ணவர்கள் திருத்துழாய் எழுந்தருளப்பண்ணுதல் என்பர்.
துளசியை எடுக்கும்போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தையும் கூறுவர்.
விருந்தாயை துளசி தேவ்யை பிரியாயை கேசவஸ்யச கேசவார்த்தே சினோமி த்வாம் வரதா பவ சர்வதா
“திருமாலுக்கு உகந்த ஒளஷதியே, விருந்தா, துளசி என்றெல்லாம் போற்றப்படும் தேவியே உன்னை வணங்குகிறேன்.
ஸ்ரீமந் நாராயணனை ஆராதிக்க உன்னைத் தொழுகின்றேன்.
எனக்கு என்றும் அருள் பாலிப்பாயாக” என்பது இதன் பொருள்.

————

ராமாவதார ஸு ர்யஸ்ய சந்தர்ஸ்ய யதுநாயக
ந்ருஸிம் ஹோ பூமிபுத்ரஸ்ய ஸெம்ய, ஸோம ஸிதஸ்யச
வாமநோ விபுதேந்தரஸ்ய பார்கவோ பார்க்கவஸ்ய
கூர்மோ பாஸ்கர புத்ரஸ்ய ஸைம்ஹிகேயஸ்ய ஸு கர
கேதுர் ம்நாவாதாரஸ்ய யோகாசாந்யேபி கேசரா-தசாவதார ஸ்தோத்திரம்- – சுவாமி வேதாந்த தேசிகர்

ஸ்ரீராமவதாரம் – சூர்யன்
ஸ்ரீகிருஷ்ணவதாரம் – சந்திரன்
ஸ்ரீநரசிம்மவதாரம் – செவ்வாய்
ஸ்ரீகல்கி அவதாரம் – புதன் (சோமபுத்ரன், சந்திரனின் மகன்)
ஸ்ரீவாமன அவராரம் – வியாழன்
ஸ்ரீபரசுராம அவதாரம் – சுக்கிரன்
ஸ்ரீகூர்ம அவதாரம் – சனி (பாஸ்கர புத்திரன்,- சூரியனின் மகன் சனி)
ஸ்ரீவராஹ அவதாரம் – இராகு
ஸ்ரீமத்ஸ்ய அவதாரம் – கேது
ஸ்ரீபலராம அவதாரம் – குளிகன் (சனியின் மகன்)

————–

மகா விஷ்ணுவைக் குறித்து தவம் செய்து அருள் பெற்ற அஷ்ட நாகங்கள்
1. சேஷன் 2. வாஸு கி 3. தகஷகன் 4. சங்கபாலன் 5. கார்க்கோடகன் 6. குளிகன் 7. பதுமன் 8. மகாபதுமன்

—————–

திருப்பாற்கடலைக் கடையும்போது வைகுண்ட ஏகாதசியன்று விஷம் தோன்றியது. மறுநாள் துவாதசியன்று அமிர்தம் தோன்றியது.
துவாதசி அன்று பக்தர்கள் அகத்திக் கீரை செய்து சாப்பிடுவார்கள்.
அகத்திக் கீரைக்கு அமிர்தபிந்து என்ற ஒரு பெயர் உண்டு. அமிர்தபிந்து என்றால் அமிர்தத்துளி என்று பொருள்.
இதை அகத்திய முனிவன் மூலிகை என்றும் கூறுவர்.
அகத்தியை துவாதசியன்று சாப்பிடுதல் திருப்பாற்கடல் அமுதத்தை (விஷ்ணு தேவர்கட்கு கொடுத்தது போல்) சாப்பிட்டதற்கு ஒப்பாகும்.

———————

ஸ்ரீ யதிராஜ ஸ்தோத்திரம்

காஷாயாம்பர கவிசத சாத்ரம் கவிதக மண்டலு தண்ட பவித்ரம்
வித்ரு தசிகா ஹரினாஜன சூத்ரம் வ்யாக்யதா த்வைபாயன சூத்ரம் – (பஜ யதி ராஜம்)

காஷாய வஸ்திரத்தினால் சாத்திக் கொள்ளப்பட்ட திருமேனியை உடையவரும். கமண்டலத்தையும் திரி தண்டத்தையும்,
திரி தண்டத்துக்கு மேல் பாகத்தில் உள்ள வஸ்திர விசேஷத்தை உடையவரும், சிவிகையை உடையவரும்,
மான் தோல் முகம் கொண்ட யஞ்ஞோப வீதத்தை உடையவரும் த்வைபாயனர் என்று சொல்லும்பாடியான
வ்யாசர் அருளிய ப்ரஹ்ம ஸூத்திரங்கட்கு வ்யாக்யானம் செய்தவரான
எதிராஜரை ஜெபியுங்கள் என்று வடுக நம்பிகள் வம்சத்தவரானவரும், மிதுனகால இராமவாசியான ரங்காச்சாரியார்
தாம் அருளிச்செய்த பஜ யதிராஜ ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்

——————

2. உறையூர் என்னும் திருக்கோழி

கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா (1762)–பெரிய திருமொழி -9-2-5-

ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத் திருவிழாவாகும்
திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார்.
கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே
“ஆழ்வார்பட்டவர்த்தி” என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் வரும் கார்த்திகை திருநாளன்று பெருமாளும் சிவனும் சேர்ந்தாற்போல் வீதி உலா வருவார்கள்.

——–

பஞ்ச ரங்க ஷேத்ரங்கள்
1. ஆதிரங்கம் – -ஸ்ரீரெங்கப்பட்டினம் (மைசூர்)
2. அப்பால ரெங்கம் – திருப்பேர் நகர்
3. மத்தியரங்கம் – ஸ்ரீரெங்கம்
4. சதுர்த்தரங்கம் – கும்பகோணம்
5. பஞ்சரங்கம் – இந்தளூர் (மாயவரம்)

———-

கம்பர் பெருமானும் இந்த வல்வில் ராமன் என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளார்.
சீதையின் அழகைப் பற்றி சூர்ப்பனகை சொல்லக்கேட்ட இராவணன் அவள் அழகு எத்தகையது என்றான்.
சீதையின் அழகை ராவணனுக்கு சொல்வதை விடுத்து தான் இராமபிரானின் அழகுப் போதையில் மயங்கிக் கிடப்பதை,

செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார்ந்த தடந்தோளோடும் தாழ்தடக் கைகளோடும்
அம்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றமென்ன
வந்தான் இவன்ஆகும் அவ்வல்வில் இராமன் என்பான்
என்று இப் பெருமானின் பெயரையே சூர்ப்பனகை வாயிலாய் கம்பர் தெரிவிக்கிறார்.

திருஎவ்வுள் கிடந்தானை “தம்மன்யே ராகவம் வீர” என்று ராவணன் போற்றியுள்ளதாக பூர்வாச்சாரியர் கூறுவர். இங்கு சூர்ப்பனகை வல்வில்ராமன் என்கிறாள்

—————

ஸ்ரீ புள்ளம் பூதங்குடி

நான்கு கரங்களுடன் சங்கு சக்ர தாரியாக ராமன் சயன திருக் கோலத்தில் உள்ள ஸ்தலம் 108 இல் இது ஒன்றுதான். இராமாயணத்தில்
இத்தலம் பற்றி,
பூத்புரி ஷேத்ர வந்தே புன்னைவந ஸம்ஸ்திதம்
ஸௌமித்ரே சார சாஷ்டாநி நிர்மதிஷ்யாம பாவகம்
க்ருத்ராதம் திஷாஷாமி மத்க்ருதே நிதநம்கரம்- – ஆரண்யகாண்டம் 68-27-
வைம் முத்தவா சிதலம் தீப்தா மரோப்ய பதகேச்வரம்
ததாளைராமோ தர்மாத்மா ஸ்வபந்து பிவ துக்கித்-ஆரண்யகாண்டம்-68-31-
விமாநே ஸோபநே அம்புஜஸ்ரீ ஸீஸ மக்ரதம்
க்ரூத்ராஜண் புஷ்கரணித்தீரே லஷமனோலஷ்மி ஸம்பன்ன”

————-

ஸ்ரீ திரு ஆதனூர்
ஆ -காமதேனு தவம் புரிந்த திவ்ய தேசம்
ஆதி ரெங்கேஸ்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம்
பிருகு அக்னி காம தேனுப்யோ தத்தா பீதம் தயாந்திரம்
விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸூ ஸமாஸ்ரிதம் ஸூர்ய
புஷ்கரணி தீரே சேஷஸ்யோ பரி ஸாயிநம் –

திருவரங்க கர்ப்ப க்ருஹத்தில் உள்ள திருமணத் தூண்கள் போல் இங்கும் உண்டே

என்னை மனம் கவர்ந்த ஈசனை -வானவர் தம் முன்னவனை -மூழிக் களத்து விளக்கினை அன்னவனை
ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை –பெரிய திருமடல்
என்னை மனம் கவர்ந்த ஈசனை
என்று ஆதனூர் பெருமாளை திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் போலவே
நம்மாழ்வார் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்க்கு தெளி விசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்துறையும் துளிவார் கட்குழலார் -9-7-5-

ஓடி வந்து திருமங்கைக்கு காட்சி கொடுத்து மரக்கால், ஓலை,எழுத்தாணியோடு ஆதனூரில் புகுந்து கொண்டதாக ஐதீகம்.
அவ்வாறு திருமங்கை ஆழ்வார்  ஓடி வரும்போது ஆதனூருக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும்
கம்பீரமாக நடந்துவந்த ஊர்க்கு விசயமங்கை எனவும்,
ஓடிவரும் போது திரும்பிப் பார்த்த ஊர் திரும்பூர் எனவும்,
திருமங்கையாழ்வார் விரட்டிக் கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர் (மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும்,
மரக்காலுக்குள் கை வைத்த ஊர் வைகாவூர், என்றும்
புகுந்தது பூங்குடி என்றும்,
அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர்
ஊர்கள் எல்லாம் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகின்றது.
இத்தலத்தின் கோபுரத்தில் மஹாவிஷ்ணு சிலை உள்ளது.
“ஒங்காரோ பகவான் விஷ்ணு” என்ற ப்ரமாணத்தின் பேரில் ப்ரணவ விமானத்தில் வாசுதேவன் உள்ளான்.
இவன் திருவடி தெரிந்துவிட்டால் இந்த யுகமானது (கலியுகம்) முடிந்து பிரளயம் உண்டாகும்.
இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம்.
இப்போது முழங்கால்வரை தெரிகிறது. இச்சிலை வளர்ந்து வருவதாக இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர்.
இங்கு ஸேவை சாதிக்கும் அஞ்சநேயருக்கு “வீரசுதர்சன ஆஞ்சநேயர்” என்பது பெயர்.
. ஒரு காலத்தில் மிகச் சிறப்புடன் நடந்துவந்த இத்தலத்தின் பரிபாலனத்திற்கு நித்யபடி, தளிகை வந்ததாகவும்,
அந்த இடம் இப்போது கிராமமாகி அந்தப் பழைய பெயரிலேயே (தளிகையூர்) தளியூர் என்று வழங்கி வருகிறது

—————–

முதலாவது ஸ்ரீரங்கம் 236 அடி உயரம் ஆகும்.
இரண்டாவது ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் உயரம் 165 அடி ஆகும்.
150 அடிஉயரமுள்ள திருக்குடந்தையில் ராஜகோபுரம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.
150 அடி உயரமுள்ள ராஜகோபுரம் இப்பெருமான் மீது பக்திகொண்ட லட்சுமி நரசிம்ம சுவாமி என்ற பக்தர் ஒருவரால் கட்டப்பட்டதாகும்.
மூலவருக்கு உத்சவருக்கும் சமமான பிரதானம் என்பதால் -108 திவ்ய தேசங்களில் இத்தலத்திற்கு மட்டுமே உபய பிரதான
திவ்ய தேசம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இத்தலத்தில் அமைந்துள்ள சித்திரைத்தேர் அல்லது சித்திரத்தேர் எனப்படும் தேர் தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும்.
இத்தேரை திருமங்கையாழ்வாரே இப்பெருமானுக்கு அர்ப்பணித்தார்.
அழகிய சித்திரங்களும், நுண்ணிய வேலைப்பாடும் நிறைந்தது இத்தேர்.
இத்தேரினையே மங்களாசாசனம் செய்வது போல் திருவெழு கூற்றிருக்கை என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார்.
இங்குள்ள சிங்கச் சின்னம் பொறித்த மண்டபம் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனால் கட்டப்பட்டதாகும் (7ம் நூற்றாண்டு)
வைணவ மத வளர்ச்சிக்கு ஒரு பெரிய மலைபோன்று விளங்கிய கிருஷ்ணதேவராயரால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது.
முகலாயர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை கொள்ளையிட்டு அழித்துவிட எத்தனித்து விடுங்கால்
நெய்வாசல் உடையார் என்னும் பக்தர் தமது பக்தி மேலீட்டால் வைக்கோற்போரால் இப்பெருமானின் இருப்பிடத்தை மூடி
மாடுகட்டும் இடம் என்று சொல்லி அவர்களை மருளச் செய்து திருப்பியனுப்பினார்.
நெய்வாசல் உடையார் வம்சத்தாருக்கு ஸாசனமும்,மரியாதைகளும் இங்கு தொன்றுதொட்டு இருந்து வந்தது.
தூணிலா முற்றம் என்று பெரியாழ்வாரின் பாசுரத்தில் கூறப்படும் இடம் இக்கோவிலின் வடக்குப் பிரகாரமாகும்.

—————-

திரு விண்ணகர்
இத்தலத்துப் பெருமான் தானே மிகவும் உகந்து ஆழ்வாரை அணைந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார்.
அவையாவன. பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன்,திருவிண்ணகரப்பன்,
இவ்வைந்து பெயரிட்டு,
என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே–6-3-9-

——————

திருநறையூர்

இத்தலம் உள்ள பகுதி கிருஷ்ணாரண்யம் என்று வழங்கப்படுகிறது.
திருநறையூர்தான் கிருஷ்ணாரண்யத்தின் துவக்கமாகும்.
கிருஷ்ணாரண்யம் என்னும் இந்த கிருஷ்ணன் காடு திருநறையூரில் ஆரம்பித்து திருச்சேறை,திருக்கண்ணமங்கை, திருக் கண்ணபுரம் வரை சென்று திருக்கண்ணங்குடியில் முடிகிறது
ராஜகோபுரம் 5 அடுக்கும் 76 அடி உயரமும் கொண்டதாகும்.
மூலஸ்தானத்திற்கு (கருவறைக்கு) மேல் உள்ள விமானமும், கோபுர வடிவிலேயே அமைந்திருக்கிறது. இதுபோன்ற அமைப்பினை வேறு திவ்ய தேசங்களில் அதிகமாக காணமுடியாது.
கருவறைக்கு மேல் உள்ள விமானம் கோபுரம் போல் அமைந்திருப்பது இங்கும் திருவல்லிக்கேணியிலும் மட்டுமே.-
இவ்வூரில் வாழ்ந்த ஒரு வைதீகப் பிரம்மச்சாரிக்கு 108 திவ்ய தேசங்களை காணவேண்டும் என்ற பேராவல் இருந்தது.
ஆனால் காலச் சூழ்நிலையால் அது இயலவில்லை. 108 எம்பெருமான்களையும் சேவிக்க வேண்டுமென தினந்தோறும் இப்பெருமானை கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார்.
இந்த பக்தருக்காக அவரது கனவில் திருநறையூர் ஸ்ரீனிவாசனே நேரில் வந்து 108 திவ்யதேசத்து எம் பெருமான்களின் விக்கிரகங்களைக் கொடுத்ததாகவும்,
நெடுங்காலம் தமது இல்லத்தில் வைத்து பூஜித்த இவைகளை தமது அந்திம காலத்தில் இத்தலத்தில் ஒப்படைத்ததாகவும் கூறுவர்.
இந்த 108 திவ்யதேசத்து எம்பெருமானின் விக்ரகங்களை இத்தலத்தில் இன்றும் காணலாம்.

————–

மாவடிப்பள்ளம் “பாபாஷாகேப்” என்னும் இஸ்லாமியர்
திருச்சேறைப் பெருமானை வணங்கி புத்திரப் பேறு பெற்று
இத் தலத்திற்கு பூமி தானம் செய்தாரென்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

———–

திருக்கண்ண மங்கை
ஸ்ரீ லட்சுமி தவமியற்றியதால் “லட்சுமி வனம்” என்றும்
இவ்விடத்தே திருமணம் நடை பெற்றதால் கிருஷ்ணமங்கள ஷேத்ரம் என்றும்
விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களால் அமையப் பெற்றதால்
“ஸ்ப்த புண்ய ஷேத்ரம்” என்றும் ஸப்தாம்ருத ஷேத்ர மென்றும் இதற்குப் பெயர்.

இப்பெருமாளைப் பற்றிக் காளமேகப்புலவர்
“நீல நெடுங்கடலோ நீலமணிக் குன்றமோ”
கோலம் சுமந்தெழுந்த கொண்டலோ – நீல நிறக்
காயா மலரோ களங்கனியோ கணமங்கை
மாயா உனது வடிவு-என்று பாடியுள்ளார்.

வடலூர் இராமலிங்க அடிகளார் இந்த தாயாரின் மீது
உலகம் புரக்கும் பெருமான்றன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகையளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
திலகஞ் செறி வாணுதற் கரும்பே தேனே, கனிந்த செழுங்கனியே
தெவிட்டா தன்பர் உள்ளத்துள்ளே தித்தித்தெழுமோர் தெள்ளமுதே
மலகஞ் சகத்தேர் கருளளித்த வாழ்வே மலகஞ் சகத்தேர் கருளளித்த வாழ்வே
வருத்தந் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
சலகந்தரம் போல் கருணை பொழி தடங்கண் திருவே கண்ணமங்கை
தாயே சரணஞ் சரணமிது தருணங் கருணை தருவாயே” — என்று பாடிப்பரவுகிறார்.

எங்கும் 4 கரங்களுடன் விளங்கும் விஸ்வக் சேனர் இங்கு இரண்டு கரங்களுடன் தோன்றுகிறார்.

———-

முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம்,தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம் இவற்றில்
ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள்
திருக்கண்ண புரத்தில் திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார்.
இதைப் பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம்
ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம்
நைமிசம் சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ
ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம்
திஷ்டாமி க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத
அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.

தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம்.
இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.

இவ்விடத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார்.
வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்”நிலையில் மஹா விஷ்ணுவாகவும்,
இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும்,
அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம்செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.

————

திருக்கண்ண மங்கை

கிருஷ்ணாரண்யம் என்றழைக்கப்படும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்றாகும்.
1. திருக்கண்ணமங்கை 2. திருக்கண்ணபுரம் 3. கபிஸ்தலம் 4. திருக்கோவிலூர் 5. திருக்கண்ணங்குடி.

இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணங்கூறும். (ஆறு, காடு, நகரம்,ஆலயம், தீர்த்தம்) இவ்வைந்தினாலும் புகழ்பெற்ற இடமாதலால் பஞ்ச பத்ரா என்றாயிற்று.

திருக்கண்ணங்குடிக்கு அருகில் உள்ள மற்ற நான்கு ஸ்தலங்களையும் இதனுடன் சேர்த்து பஞ்ச நாராயணஸ்தலம் என்றும் வழங்குவர்.
1. தெற்கில் – ஆபரணதாரி என்ற பதியில் ஆனந்த நாராயணன்
2. தென்மேற்கில் – பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்
3. தென்மேற்கில் – தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன்
4. தென்மேற்கில் – கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன்
5. தென்மேற்கில் – திருக்கண்ணங்குடி என்ற பதியில்
இவ்வைந்தும் சுமார் 6 கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளாகவே அமைந்துள்ளன.

மற்றெல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் நிலையில் உள்ள கருடாழ்வாரைத்தான் காண முடியும்.
ஆனால் இங்கு இரண்டு கைகளையுங் கட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார்.
இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.
இங்குள்ள அழகிய சிரவண புஷ்கரணியின் தெற்கு கரையில் உள்ள கோவிலில் ஆதிப் பெருமாள் வீற்றிருந்த நிலையில் உள்ளார்.
இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீரணி விழா”என்பது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
இந்த விழாவில் பெருமாள் விபூதி அணிந்துகொள்கிறார்.
இந்நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும் அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம்.
உபரிசரவஸு மன்னனுக்காக இவ்விதம் செய்யப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்நிகழ்ச்சி மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

காயாமகிழ், உறங்காப்புளி,ஊராக்கிணறு, தோலா வழக்கு திருக்கண்ணங்குடி என்பது அவ்வூரைப் பற்றிய பழமொழியாகும்

இவரது சீடர்கள் தெரிவிக்க உடனே நாகப்பட்டினஞ் சென்று அச்சிலையைப் பார்த்து
உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை, செம்பு போன்றவற்றால் சிலை செய்தால் ஆகாதோ பொன்னும் வேண்டுமோ என்று
அறம் பாடின மாத்திரத்தில் சிலையின் வடிவம் மட்டும் அவ்வாறேயிருக்க சுற்றி வேயப்பட்ட தங்கம் மட்டும் பிதுங்கிக்கொண்டு வந்து விழுந்ததாம்.
இதோ அப்பாடல்
ஈயத்தா லாகாதோ இரும்பினா லாகாதோ பூயத்தால் மிக்கதொரு பூதத்தா லாகாதோ
பித்தளை நற்செம்புக ளாலா காதோ மாயப் பொன்னும் வேண்டுமோ
மதித்துன்னைப் பண்ணுகைக்கே.

——————-

தலைச்சங்க நாண்மதியத்தைப் பற்றிக் கீழ்காணும் அருமையான பாடல் ஒன்று காணப்படுகிறது.
செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்
அப்புங் காலும் கனலும் ஆய் நின்றான் கைப்பால்
அலைச்சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
தலைச்சங்க நாண் மதியத்தான்.

————–

1. மணிமாடக்கோவில் – நாராயணப்பெருமாள்- – பத்ரி
2. அரிமேயவிண்ணகரம் – குடமாடு கூத்தர் – கோவர்த்தனகிரி
3. வைகுந்தவிண்ணகரம் – ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்)
4. வெண்புருடோத்தமம் – அயோத்தி
5. செம்பொன்செய் கோயில் – அழகிய மணவாளன்- – உறையூர்
6. திருவெள்ளக்குளம் – அண்ணன்கோயில்- – திருப்பதி
7. திருதெற்றியம்பலம் – பள்ளிகொண்ட பெருமாள்- – ஸ்ரீரங்கம்
8. திருத்தேவனார்த் தொலை – கீழச்சாலை – திருவடந்தை
9. திருக்காவளம்பாடி – கோபாலகிருஷ்ணன்- ருக்மணியுடன் – துவாரகை
10. திருமணிக்கூடம் – வரதராஜப்பெருமாள் – கச்சி
11. பார்த்தன்பள்ளி – பார்த்தசாரதி – குருசேஷ்த்திரம்

சிவன் பதினொரு வடிவம் கொண்டதை-
ஸ்வமயம் பூதஸத் யானே- த்வாதச விபத்வானே- ஏகாதசனாம் ருத்தரனாம்- பூதஸ் ஸண்யானே. – என்று வடமொழி கூறும்.

—————–

திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
இங்கு நாச்சியாரின் திருநாமம் இனிக்கும் தமிழ்ச் சொல்லான “மடவரல் மங்கை” என்பதாகும்.
இதனைத் திருமங்கையாழ்வார்,
படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பல்நடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தினானே–என்று அருளிச் செய்கிறார்

—————–

6) மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்- தா(அ)யது எல்லாம் ஒருங்கு – திருக்குறளின் 610ஆம்பாடல் –
ஸ்ரீ காழிச் சீராம விண்ணகர் -தாடாளன் -பெருமானையே குறிக்கின்றது
தா அயது – தாவிய பரப்பு முழுவதும்
அடி அளந்தான் – அடியால் உலகளந்த திருமால்
திருமாலின் காலடிக் கீழ் உலகடங்கியது போல் சோம்பலற்ற மன்னனின் கீழ் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை–
திருமங்கை ஆழ்வார் குறித்துள்ள தமது பட்டப் பெயர்கள்
1.ஆலிநாடன் 2. அருள்மாரி 3. அரட்டமுக்கி 4. அடையார் சீயம் 5.கொங்குமலர் குழலியர்வேள் 6. மங்கை வேந்தன் 7. பரகலான் 8. கலியன்.
திருஞான சம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் சமகாலத்தவர்கள் என்பது வரலாறிந்தார் கூற்று.
மதத்தால் இருவரும் வேறு பட்டவராயினும் மனத்தால் “கற்றானைக் கற்றோனே காமுறுவான்” என்பதற்கொப்ப
ஒருவரையொருவர் சந்திக்கப் பேராவல் பூண்டவராயிருந்தனர் என்பதும்
ஒருவருடன் ஒருவர் கன்னித்தமிழில் கலந்துரையாடக் காலங்கருதிக் காத்து இருந்தனர் என்பதும் கீழ்க்கண்ட இரண்டு பாக்களால் விளங்கும்.
கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக் கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
படியுண்ட பெருமானைப் பறித்து பாடி பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே– என்பது ஞானசம்பந்தரின் தாய்ப்பேச்சு
அதாவது தன்னைத் தாயாக நினைத்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார்.
ஏ மங்கை மன்னா, பரம்பொருளாம் திருமாலை வழிப்பறி செய்தீர்.
உமது பவனியைக் காண என் மகள் ஒருநாள் வந்த போது அவள் உள்ளத்தையும் வழிப்பறி செய்தீர்.
இதுமுறையோ, எனது ஒரே மகள் உள்ளமிழந்து உயிர் ஒன்றுடன் வருந்த நிற்கிறாளே, என்று கூறும் வகையில்
திருமங்கையாழ்வார் தனது உள்ளத்தையும் திருடிவிட்டதாய் (வழிப்பறி செய்து விட்டதாய்) ஞானசம்பந்தர் கூறினார்.

இதனைக் கேட்ட திருமங்கை, தன்னைத் தலைவியாகப் பாவித்துக் கொண்டு, தலைவி படும் துயரத்தைச் சொல்லும்முகமாய் தலைவிப் பேச்சுப் பேசுகிறார்-
திருஞான சம்பந்தர் மயிலையில் அனலில் வெந்த ஒரு பெண்ணை உயிர்ப்பித்துக் கொடுத்தார்.
இச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு தலைவிப் பேச்சில் திருமங்கை கூறுகிறார்.
ஞானசம்பந்தரே நானும் ஒரு பெண். பெண் என்றால் அபலை என்பர்
பெரியோர். நான் தங்களையே நினைந்து நினைந்து காணாக் காதலுற்று பிரிவாற்றாமையால் வருந்தி நிலவொளி கூட அனலாக வேகும்படி நிலவில் வெந்திருக்கிறேன்.
தாங்கள் மயிலாப்பூரில் அனலில் வெந்த ஒரு பெண்ணை பிழைக்கச் செய்தீரே அது என்ன விந்தை, சித்து விளையாட்டால் கூட இதனைச் செய்ய முடியுமன்றோ,
ஆனால் தங்களைக் காண விரும்பி நிலவில் வெந்த இந்தப் பெண்ணுடன் கூடி உயிர்ப்பித்தாலன்றோ தங்கள் பெருமை
நிலைக்கும் என்றார்.
இதோ அப்பாடல்

வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப் பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே

————–

திருமங்கையாழ்வார் குடமாடு கூத்தன் என்ற சொல்லை இரண்டு தலங்கட்கு மங்களாசாசனம் செய்யும்போது இரு வேறுபட்ட பொருளில் எடுத்தாள்கிறார்.
1) நந்திபுரவிண்ணகரத்தை மங்களாசாசனம் செய்யும்போது
தாய்செற உளைந்து தயிருண்டு குட மாடு தட மார்வர் தகைசேர் ………………….. என்று குடங்களில் தயிருண்டதை கூறுகிறது
திருஅரிமேய விண்ணகரம் -இத்தலத்திற்கு அளித்த பாடலில்,
காமரூசீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம்
என்று குன்றை குடையாய் பிடித்த காட்சியைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
எனவே இங்கிருப்பவனுக்கு கூறப்பட்ட குடமாடு கூத்தன் என்ற சொல் குடங்களையெடுத்து ஆடவல்ல கூத்தனல்ல “குன்றத்தைக் குடையாய் எடுத்த கோவிந்தன் தான்”
குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடுவது லீலா விநோதம்
குன்றத்தைக் குடையாய்க் கொண்டு காப்பது அவன் வாத்ஸல்யம்.
எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு எடுத்தாளப்பட்ட இச்சொல் குடைக் கூத்தினையே குறிக்கிறது என்பதில் யாதும் ஐயமில்லை.

————

திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)
தமிழ்நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுந்தான்.

அந்த அயோத்தி எம்பெருமானே இங்கு எழுந்தருளியமையால் புருடோத்தம திருநாமம் உண்டாயிற்று.

———

திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
திருநாங்கூர் வந்த எம்பெருமான்களில் இவர் உறையூரின்(திருக்கோழி) அழகிய மணவாளப் பெருமான் ஆவார்.
இவரே பேரருளாளன் என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார்.
எனவேதான் உறையூரில் உள்ளதைப் போன்றே இங்கும் பெருமாளுக்கு இரண்டு பிராட்டிகள்
உறையூரில் கமலவல்லி நாச்சியார்,பூமாதேவியுடன் எழுந்தருளியுள்ளார்
இங்கு அல்லி மாமலர் நாச்சியாரும் பூமாதேவியும் எழுந்தருளியுள்ளனர்.

——————

திருமணிமாடக்கோவில் (திருநாங்கூர்)
வேத புருஷன் ‘ஸ்தயம் ஞான மநந்தம் பிரஹ்மம்’ என்ற பிரஹ்ம்ம ஸப்தத்தினால் ஸ்ரீமந் நாராயணனைக் கூறுகிறான்.
அதை அப்படியே தமிழில்- நந்தா விளக்கே, அளத்தற் கரியாய் என்று மங்களாசாசனம்
பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே இங்கு 11 திருமால்களில் ஒருவராக வந்து நின்றார். பத்ரியிலும் நாராயணன் என்ற பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அதே நிலை.
இந்த மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாளே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு தாம் ஒரு திருமேனியாக வந்ததாயும் கூறுவர்.
திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்த ஸ்தலத்திற்கு முன்புதான் நடை பெறுகிறது

—————-

திருவாலி – திருநகரி
ஆழ்வார் தோட்டம் என்று ஒரு தோட்டமும்,சிந்தனைக் கினியான் குட்டை என்று வழங்கப்படும் வயலுமே இப்போது திருவாலியில் உள்ள அடையாளங்களாகும்.
இதனையும் சேர்த்து இவ்விடத்தைச் சுற்றி ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள் உண்டு. அவைகள் பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்கள் என்று இன்றும் வழங்கப்படுகின்றன.
1. குறையலூர் – உக்கிர நரசிம்மன்
2. மங்கை மடம் – வீர நரசிம்மன்
3. திருநகரி – யோக நரசிம்மன்
4. திருநகரி – ஹிரண்ய நரசிம்மன்
5. திருவாலி – லட்சுமி நரசிம்மன்
பத்ரிகாச்ரமத்துக்கு அடுத்தபடியாக எம்பெருமான் இரண்டாவது முறையாகத் தாமே இவ்விடத்து
திருமந்திர உபதேசம் செய்ய எழுந்தருளியதால் இத்தலம் (திருவாலி) பத்ரிகாச்ரமத்துக்கு சமமானதாய்க் கருதப்படுகிறது.
திருமங்கையாழ்வாரால் பூஜிக்கப்பட்ட சிந்தனைக்கினியான் என்னும் விக்ரகம் இராமானுஜர் காலத்தில் திருக்குறுங்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டு
இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிந்தனைக்கினியானின் திருவாரதனத்திற்கு நந்தவனமாக இருந்த பகுதி இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.
திருமங்கையாழ்வார் திருக்குறுங்குடியிலிருந்தபோது தம்மைப் போலவே ஒரு பிம்பம் (தங்கத்தால் விக்ரகம்) செய்து
தான் அப்பிம்பத்தின் நேரில் நின்று கொண்டு வா என்று அழைக்க, அப்பிம்பம் நடந்து வர அதனைக் கட்டித் தழுவி தம் சக்தி முழுவதையும்,
அப்பிம்பத்தில் செலுத்திவிட்டு அதன் பிறகே திருமங்கையாழ்வார் திருவரசு (மோட்சம்) எய்தினார்.
இப்பிம்பம்தான் இப்போது திருநகரியில் வைக்கப்பட்டு நித்ய பூஜைகளும் நடைபெறுகின்றன.

நம்மாழ்வாரின் அவதாரஸ்தலம் ஆழ்வார் திருநகரியாயிற்று
இவரின் அவதாரஸ்தலம் திருவாலி திருநகரியாயிற்று.
ஆண்டாள் மனத்துக்கினியானிடம் ஈடுபட்டார். இவரோ சிந்தனைக்கினியானிடம் ஈடுபட்டார்.

————————-

திருத்தேவனார்த் தொகை (திருநாங்கூர்)
இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர் – 2) உற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப்பெருமாள் கோவில் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது.
வழங்கப்படுகிறது. மேல் மாதவன்றானுரையுமிடம் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருமங்கையும் தமது பாசுரத்தில் தடமண்ணி தென்கரைமேல் மாதவன்றானுரையுமிடம் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
மூலவருக்குண்டான தெய்வநாயகன் என்னும் திருநாமம் 108 திவ்யதேச எம்பெருமான்களில் நடுநாட்டுத் திருப்பதியான் திருவஹிந்திரபுரத்துக்கும்
பாண்டிநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான வானமாமலைக்கும் (திருச்சீரவரமங்கை) உண்டு.
கடல் மகள் நாச்சியார் என்று அழகிய செந்தமிழ் சொல்கொண்ட நாச்சியார் ஆவார், இத்தலத்துப் பிராட்டி.

திருநாங்கூருக்கு எழுந்தருளின 11 எம்பெருமான்களில் இவர் திருவிடவெந்தை (திருவடந்தை) எம்பெருமான் ஆனார்.

————–

திருத் தெற்றி யம்பலம் (திருநாங்கூர்)
பள்ளி கொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும்.

————

திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்)
கண்ணார் கடல் சூழி லங்கை இறைவன்றன்
திண்ணாகம் பிளக்கச் சரஞ்செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மாமலை மேய
அண்ணா, அடியேனிடரைக் களையாயே – 1038- என்று
திருப்பதி வேங்கடவனை அண்ணா என்றழைத்து தன் துன்பத்தைப் போக்குமாறு வேண்டுகிறார்.

திருவெள்ளக்குளத்துப் பெருமாளை வேண்டும்போது கண்ணார் கடல் போல் என்ற சொற்றொடராலேயே மங்களாசாசனத்தை ஆரம்பித்து
இப்பெருமாளையும் அண்ணா அடியேனிடரைக் களையாயே என்கிறார்.
கண்ணார் கடல்போய் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா, அடியேனிடரைக் களையாயே – 1308

————-

திருப்பார்த்தன் பள்ளி
பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன் வீரம் ததும்பும் முகத்துடன் உள்ளார்.
இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் சாந்தம் தவழும் வதனத்துடன் திகழ்கிறார்.
இங்கு மூலவர் திரு நாமம் – தாமரையாள் கேள்வன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உத்சவர் -பார்த்தசாரதி
ஓண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் திருவந்தாதி-67)
இதில் திவ்ய தேச திரு நாமம் இல்லை என்பதால் இத் திவ்ய தேச மங்களா சாசனப் பாடலாகக் கொள்ள வில்லை

பதினொரு பெருமாள்களில் ஒருவராக இங்கு எழுந்தருளிய இப்பெருமாள் குருக்ஷேத்திரத்திலிருந்து வந்தவரென்றும்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதியே இங்கு வந்தாரென்றும் சொல்வர்.
திருவல்லிக்கேணியில் இருப்பவர் குருஷேத்ர போரை நடத்திய பார்த்த சாரதியல்லவா?
17) மூலவர், உற்சவர், இருவருக்குமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று தேவி மார்கள் புடை சூழ இருப்பது 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும்தான்.
இவர் பார்த்தசாரதியான கண்ணபிரானல்லவா? எனவே தேவிகள் புடைசூழ இருப்பதில் அதிசயமென்னவுள்ளது.

இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்ற ஒரு பெயரும் உண்டு. (திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவர் போல் )
சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும்,கொண்டு திகழ்கிறார் இவர்.
இவருக்கும் ஒரு தனி மூலவர் இருக்கிறார்.
அவரது கோவில் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு தோப்பில் இருக்கிறது.
தை மாதம் பூச நட்சத்திரத்தன்று இங்கு நடைபெறும் தீர்த்தவாரி மிகச்சிறப்பான விழாவாகும்.
சரம சுலோகார்த்தம் விளங்கிய இடமும் இதுதான்.

——————-

தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்நாடு 12 பிரிவுகளாக இருந்ததெனக் கூறப்படுகிறது.
தென்பாண்டிக் குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு – நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு நாட்டென்
1. தென்பாண்டி-
2. குடநாடு- குடகு மலைப்பகுதி
3. குட்ட நாடு- தற்போது கேரளத்தில் உள்ள குட்ட நாட்டுப் பகுதி, குட்டநாட்டுத் திருப்புலியூர் என்ற மலைநாட்டுத் திவ்ய தேசம் இந்நாட்டின் பெயரோடு சேர்த்து வழங்கப்படுகிறது.
4. கற்கா நாடு– கன்னடம் அல்லது கன்னடத் தமிழகத்தின் ஒரு பெரும்பகுதி.
5. வேணாடு– தொண்டை நாடு. தொண்டை நாட்டின் இதுவும் தென்பகுதியையும்,ஒய்மாநாட்டு நல்லியக் கோடானும் அவன் பின் தோன்றல்களும் ஆண்டு வந்தனர்.
இங்கிருக்கும் கோடை மலையை பொருணனும், திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கை மா என்னும் பகுதியை வேள் நன்னனும் ஆண்டு வந்தனர்
6. பூழி நாடு– தேனி, சின்னமனூர், கம்பம் அடங்கிய பகுதி.
7. பன்றி நாடு– திண்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள பன்றிமலைப் பகுதி
8. அருவா நாடு- தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதி.
9. அருவா வடதலை நாடு- அருவா நாட்டின் வடபகுதி
10. சீத நாடு- கோவை மண்டலம்
11. மலை நாடு– சேர நாடு (இன்றைய கேரளா)
12. புனல் நாடு- சோழநாடு

“பொன்னுடை யயிந்தரபுரம் திருக்கோவலூர்– இந்நடு நாட்ட திரண்டையும் சேவித் தேத்துவோம்”
ஒன்று மூவுலகையும் அளந்த பராக்கிரமம் பொருந்திய எம்பெருமானைப் பெற்றது.
மற்றொன்று நான்கு வேதங்களையும் சகல கலைகளையும் உலகிற்கு அளித்த பெருமாளைப் பெற்றது.
இது ஒன்றே இந்நடு நாட்டு ஸ்தலங்கட்கான தனிச் சிறப்பாகும்.

திருவயிந்திரபுரம்
இப்பெருமானுக்கு 1) தாஸ ஸத்யன் 2) அச்சுதன் 3) ஸ்த்ரஜ்யோதிஷ்4) அனகஞ்யோதிஷ் 5) த்ரிமூர்த்தி என்று ஐந்து பெயர்களைப் புராணம் சூட்டி மகிழ்கிறது.
இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும்
ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும்
த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கை எடுத்தாண்டுள்ளார்.
வெகு காலத்திற்கு முன் கோவில் பிரகாரத்திலிருந்த ஒரு பழைய புன்னை மரத்தின் வேரிலிருந்து சக்ரவர்த்தி திருமகனுடன் (ஸ்ரீராம பிரானுடன்)
நம்மாழ்வாரும் தோன்றினாரென்றும் அதனாலே இங்கு இரண்டு நம்மாழ்வார்கள் சேவை சாதிக்கின்றனர் என்பதும் வரலாறு.
இங்குள்ள ராமபிரான் தமது இடது கரத்தில் வில்லேந்தி காட்சி தருகிறார்.
இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள் உண்டென்றும் அவைகள் இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிக்கும் என்றும் சொல்வர்

————

ஆறோடு ஈரெட்டு தொண்டை எனப்பட்ட 22 தொண்டை நாட்டுத் திருப்பதிகள் –
அந்தமா மத்தியூர் அட்டபுயக் கரம் விந்தை தன்கா வேளுக்கை பாடகம்
நீரகம் புனித நிலாத்திங் கட்த்துண்டம் ஊரகம் வெஃகா வுடனே காரகம்
வந்துலாவுங் கார்வானங் கள்வனூர் பந்த மகற்றிடும் பவள வண்ணமே
தொன்மை யாம்பர மேச்சுர விண்ணகரம் நின்மலப் புட்குழி நின்றவூ ரெவ்வுள்ளூர்.
நீர்மலை இடவெந்தை நீர்க்கடன் மல்லை சீர்மிகு மல்லிக்கேணி சிறந்ததாங் கடிகை
எண்டிசை புகழுமிவ் விருபத்தி யிரண்டு தொண்டை நாட்டுப் பதி தொழுது போற்றுவோம்.

இந்த 22 இல் காஞ்சி மாநகரில் மட்டும் 14 திவ்ய தேசங்கள் உள்ளன.

——————

திருக்கச்சி அத்திகிரி (காஞ்சிபுரம்)
3) சித்ரா பௌர்ணமியன்று இப்போதும் ஒவ்வொர் ஆண்டும் இரவு 12 மணிக்கு மேல் பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக ஐதீஹம்.
இந்த தினத்தில் எம்பெருமானுக்குப் பிரசாதம் செய்து வைத்துவிட்டு பட்டர்கள் வெளியே வந்து விடுவார்கள்.
ஒரு நாழிகை (24 நிமிஷம்) கழித்து எடுத்துப் பார்த்தால் அதில் தூய நறுமணம் கமழும் இக்காட்சி ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் வைபவமாகும்.
சித்திரை மாதம் பௌர்ணமி கழிந்த 15 தினங்கட்கு சூரியன் மறையும்போது சூரியனிடமிருந்து வரக்கூடிய கதிர்கள்
மூலவரின் திருமுகத்தில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களும் கண்டு களிக்கக் கூடிய இவ்வரிய காட்சி மற்றெந்த திவ்ய தேசத்திலும் இல்லாததாகும்.

இக்கோவிலின் முதல் பிரகாரத்திற்கு சேனையர் கோன் திருமுற்றமென்றும்,
மூன்றாவது பிரகாரத்திற்கு ஆளவந்தார் பிரகாரமென்றும்,
நான்காவது பிரகாரத்திற்கு ஆழ்வார் திருவீதியெனவும்,
5வதுபிரகாரத்திற்கு மாடவீதி எனவும் பெயர்.
இந்த பிரகாரத்திற்குள்தான் ஸ்ரீஆளவந்தார் இராமானுஜரை முதன் முதலில் கண்டு ஆம் முதல்வனிவன் என்றருளினார்.
இன்றளவும் சாலைக் கிணற்றின் தீர்த்தமே கச்சி வரதனுக்கு திருமஞ்சன தீர்த்தமாக எடுத்து வரப்படுகிறது.
பெருமாள் இராமானுஜரை மீட்டுக் கொணர்ந்த நாள் இன்றும் உற்சவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

முஸ்லீம்களின் படையெடுப்பு நிகழ்ந்தபோது இங்குள்ள உற்சவரை கி.பி. 1688இல் திருச்சி உடையார் பாளையத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
1710இல் ஆத்தான் ஜீயர் தம் சீடர் ராஜா தோடர்மாலின் உதவியுடன் இப்பெருமாளை மீண்டும் காஞ்சிக்கே கொணர்ந்தார்.
இதனால் இக்கோவிலின் நிர்வாகம் ஆத்தான் ஜீயரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை விவரிக்கும் கல்வெட்டு ஒன்று தாயார் சன்னதியின் முகப்பிலேயே உள்ளது. இங்கு ராஜா தோடர்மாலுக்கும் சிலை உண்டு.
இப்பெருமானை மீட்டுக் கொணர்ந்த தினமான பங்குனி உத்திரட்டாதி தினம் உடையார்பாளைய உத்ஸவம் என்ற பெயராலேயே இன்றும் நடைபெறுகிறது.

‘தேனோங்கு நீழற் திருவேங்கட மென்னும்
வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்குந்
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்’– பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர்,

—————-

திரு அட்டபுயக்கரம்
தொண்டை மண்டலத்து திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது.
இங்கு வந்த சரபம் ஒன்று அட்டபுயக்கரத்தானைக் கண்டு அஞ்சி சரண் அடைய அச்சரபத்தை நோக்கிய எம்பெருமான் இச்சன்னதியில்
வாயு மூலையில் உள்ளயாக சாலையைக் காக்குமாறு சொல்ல சரபேசன் என்ற பெயரில் இன்றும் காவல் காப்பதாக ஐதீஹம்.

————–

திருப்பாடகம்- பாடு – மிகப் பெரிய அகம் (இருப்பிடம்) என்ற பொருளில் பாடகம்

———–

திருவெஃகா
திருமழிசையாழ்வாருடன் பெருமாள் புறப்பட்ட இந்நிகழ்ச்சி இங்கு ஆண்டு தோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தினன்று உற்சவமாக நடைபெறுகிறது.
அப்போது எம்பெருமானும் ஆழ்வாரும் வேகவதி யாற்றங்கரை வரை சென்று மீள்வர்.

————

காஞ்சியில் பற்பல திவ்ய தேசங்களில் மிகமிகப் பெரிய கோவில்களில் எழுந்தருளியிருந்து அங்குவரும் பக்தர்கட்கு அருள் பாலித்து திருப்தி அடையாமல்
காமாட்சியம்மன் கோவிலின் ஒரு மூலையின் நின்று கொண்டு இங்கு வரும் பக்தர்களையும் தன் அருளுக்கு இலக்காக்க வேண்டுமென்று
இப்படிக் கள்ளத் தனமாக உறைவதால் கள்வன் எனப்பட்டான் போலும்

—————–

ஸ்ரீ முதலியாண்டான் உபதேசங்களுள் மிகவும் முக்கியமானது மூன்று
அ) எம்பெருமானின் தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போல்
ஆ) ஆழ்வார்களின் அருளிச் செயல் அம்ருத பானம் போல
இ) பிராட்டிக்கு ராவண பவனம் போல ஸ்ரீவைணவர்கட்கு ஸம்சாரம்.

————-

திருவள்ளூர் (திரு எவ்வுள்)
வடலூர் இராமலிங்க அடிகளார் இப்பெருமாள் மீது பக்தி கொண்டு திருப்பஞ்சகம் என்னும் ஐந்து பாக்களைப் பாடியுள்ளார்.
‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனே போற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி
தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதி நல் விளக்கே போற்றி
வேண்டவ ரெவ்வுள்ளூர் வாழ் வீர ராகவனே போற்றி’

——————–

திருவிடவெந்தை
இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில் பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் முகத்தான் கோமளவல்லிபுரம் என்று வழங்கப்பட்டதாகும்.
இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.

——

திருக்கடல் மல்லை
நீர்ப்பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே –திருமழிசை ஆழ்வார்

——————

மாவனந்த புரம் வண் பரிசாரம் காவலுள்ள காட்கரை மூழிக்கழம்
இலகிடு புலியூ ரெழிற் செங்குன்றூர் நலமிக வளித்திடும் நாவாய் வல்லவாழ்
மற்றும் வண்வண்டூர் வாட்டாருடனே வித்துவக் கோடு மேலாங் கடித்தானம்
மதிளாறன் வினை மலைநாட்டுப் பதி பதிமூன்று மவைப் பணிந்து போற்றுவோம்.

————–

திரு அநந்த புரம்
கி.பி. 1673 முதல் 1677 வரை பூஜையின்றி இக்கோவில் அடைக்கப்பட்டிருந்தது. 1686 இல் இக்கோவில் தீப்பிடித்து மூலவிக்ரகம் தவிர பிறவெல்லாம் பழுதுற்றது.
கி.பி. 1729ல் ராஜாமார்த்தாண்ட வர்மாவினால் புதுப்பிக்கப்பட்டு மரத்தாலான மூல விக்ரகம் அகற்றப்பட்டு
12000, சாளக்கிராமத்தினாலும்,கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த சயன மூர்த்தியே இப்போது நாம் காண்பதாகும்.
1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மர், தனது உறவினர்களுடனும், தளபதி சேனா பரிவாரங்களுடன் இச்சன்னதிக்கு வந்து
தன் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யம் மற்றும் பிற செல்வங்களையும் அனந்தபுரம் பத்மநாபனுக்கே பட்டயமெழுதிக்கொடுத்து
தன் உடைவாளையும் அவரின் திருப்பாதத்தில் வைத்து எடுத்துக்கொண்டு பரிபூர்ண சரணாகதி அடைந்தார்.
அன்றுமுதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் பத்ம நாப தாசர் என்றே அழைக்கப்பட்டனர்.
தினமும் காலையில் வந்து பத்மநாபரை வணங்கி ஆசீர்வாதம் பெற்று ஆட்சி நடத்தினர்.
இன்றும் ராஜா திருச்சன்னதியை நோக்கி குனிந்து நமஸ்கரித்து விரல்களால் தரையைத் தொட்டுத்தொட்டுத் தன் மார்பில்
பக்தி சிரத்தையோடு அந்த விரல்களை வைக்கும் பாணி, ஓ நெஞ்சுருகச் செய்து கண்களில் பக்தி நீரை வரவழைக்கிறது

———

திருவட்டாறு
இத்தலம்பற்றிப் பல நூல்கள் உண்டு. ஆதிதாமஸ்தலம் என்று இத்தலத்திற்குப் பெயர்.
மலையாளத்தில் வி.ஆர். பரமேஸ்வரன் பிள்ளை என்பார் இத்தலம் பற்றி நூலொன்று யாத்துள்ளார்.
கலியுகத்தில் 950 வது நாளில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி சன்னதி தோற்றுவிக்கப்பட்டது.
இதைவிட திருவட்டாறு 1284ஆம் ஆண்டுகள் முற்பட்டது என்று மதிலக கிரந்தம் என்ற நூலில் சொல்லப் பட்டுள்ளது.
பிள்ளைப் பெருமாளையங்காரின் விபவனாலங்காரம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய கவிதை ஒன்று உள்ளது.
மாலை முடி நீத்து மலர்ச் செம் பொன்னடி நோவ பாலை வனம் நீ புகுந்தாய் …. கேசவனே பாம்பனை மேல் வாட்டாற்றில் துயில் கொள்பவனே

கேரளாவின் மிகப்பெரும் கவிஞரான கவிகுல திலகம் களக்கூத்து குஞ்சன் நம்பியார் இத்தலம் பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்.
எட்டெழுத்து மந்திரத்தின் பொருளான ஆதிகேசவனே என்னை ஒருவட்டமாவது உன் திருக்கண்களால் நோக்காயோ

வேனாடு என்பது திருவிதாங்கூர் பகுதி. இப்பகுதியில் இசைச் சக்கரவர்த்தி ஸ்வாதித் திருநாள் இப்பெருமாள் மீது கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார்.

ஸ்ரீலஸ்ரீ மதுராந்தஜி மகாராஜா,
ஆறாய் கவிகள் பொழிந்து ஆழ்வார் பரவிப் போற்றும்
மாறாப் பேரன் புருவாம் பண்புடை சைதன்யர் வாழ்த்தும்
ஆறார் திருவாட் டாற்றின் ஆதிகேசவப் பெருமாள்
மாறாய் என் உள்ளத்தென்றும் மலரடி வணங்கி னேனே’– என்று கூறுகிறார்.

‘வாழி திருவட்டாறு வாழி திருமாயவன்
வாழியடியார்கள் வளமையுடன் வாழி
திருமாலடி சேர்ந்தார் தெய்வபலம் சேர்ப்பார்
கருமால் அறுப்பர் அணிந்து’– என்கிறார் கிருபானந்த வாரியார்

‘சேத்ரா நாம பரசுராம ஷேத்ரா தீர்த்த நாம சக்ர தீர்த்த’- என்று அத்யயன ராமாயணம் கூறுகிறது.

————-

பாண்டி நாடு என்றால்
வடிவேல் எறிந்த வான்பகை பொறாஅது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”
என்று சிலம்பு காட்டும் பாண்டிய நாடு தற்போதுள்ள குமரியிலிருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் வரை பரவியிருந்த லெமூரியாக்கண்டம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.
அந்த மாபெரும் நிலப்பரப்பில் தற்போதைய வைகை நதி போன்று பன்மடங்கு நீண்டதாயிருந்த, பஃறுளியாறு என்னும் நதியும்
அடுக்கடுக்கான பல மலைகளும், குமரி எல்லையும் கடல்வாய்ப்பட்டு அழிந்தது என்று சங்க நூல்கள் செய்தி கூறுகின்றன.

வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனர்கன்னி தெற்காகும் – உள்ளார்
ஆண்டகடல் கிழக்கா யைம்பத்தாறு காதம்
பாண்டிநாட் டெல்லை பகர்– பெருங்கதை 2098

துய்ய மாலிருஞ்சோலை கோட்டியூர்
மெய்யம் புல்லாணி விளங்குதன் காளூர்
குளிர்க்கு மெழின் மோகூர் – கூடலூர் வில்லிபுத்தூர்
மிளிர்க குருகூர்த் தொலைவில்லை மங்கலம்
ஸ்ரீவரமங்கை ஸ்ரீவைகுண்டம் தென்பேரை
மாவளப் புளிங்குடி வரகுண மங்கை
கோன்தவிர் குளந்தை குறுங்குடி கோளூர்
பாண்டி நாட்டுப்பதி பதினெட்டு மேத்துவம்”

————

திருக்குறுங்குடி
இங்கு கழனிகளின் நடுவே அமைந்துள்ள திருமங்கை ஆழ்வாரின் திருவரசு எனப்படும் முக்தி பெற்ற இடம் இன்றும் நித்ய பூஜைகளை ஏற்றுக்கொள்கிறது. இறைவனிடம் வீடு பேற்றை வேண்டி தமது இருகரத்தையும் கூப்பிய வண்ணம் திருமங்கையாழ்வார் இங்கு எழுந்தருளியுள்ளார்.
இதற்கடுத்து திருவாலி திருநகரியில் மட்டுமே இதே போன்று அமைந்துள்ளது.

பரவுதய மார்த்தாண்டம் பந்தற்கீழுண்மை வருராம தேவமகராசன் தருபீடத்
துறப்பனமாய் பூமகளும் ஓங்கு நிலமகளும் விற்பனமாய் நீங்காத மேன்மையான்”– என்று அழகிய நம்பியுலாவில் வரும் பாடலால்
உதயமார்த்தாண்டர் என்னும் சேர அரசரால் செய்யப்பட்ட பந்தலின் கீழ், ராமவர்மன் என்ற அரசனால் (இராமதேவன்) செய்யப்பட்ட பீடத்தின் மேல்
திருக்குறுங்குடி நம்பி எழுந்தருளியிருந்தார்.
இதில் குறிக்கப்படும் மன்னர்கள் யாவரும் சேர நாட்டினரே

இங்குதான் நாத முனிகளின் வம்ஸத்தவர்கள் சுமார் 50 குடும்பங்களுக்குமேல் வசித்துவந்தார்கள்.
அவர்கள் தமது வீட்டின் பின்னால் உள்ள அவரைக் கொடி பந்தலின் கீழ் தனது குமாரர்கட்குத் தாளத்துடன் பாசுரங்களைக் கற்று கொடுக்கும் சமயம்
இந் நம்பியே ஒரு வைணவன் வேடத்தில் வந்து அதைக் கேட்டு ரசித்தாராம்.
“வளர் அரையர் திருமனையில் வந்து அவரை நிழல்தனில் வன்காணம் கேட்ட பெருமான்’- என்ற பாடலால் உணரலாம்.

திருக்குறுங்குடி தாசர் என்ற பெயரில் ஸ்தானிகம் (கைங்கர்யம்) திருநாராயணபுரத்தில் இன்றும் செய்து வருகின்றனர்.

புகழேந்திப் புலவர் கூட இத்தலம் பற்றி பின்வருமாறு பாவிசைத்துள்ளார்.

எட்டெழுத்தைக் கருதிற் குறித்திட்டு நித்தம் பரவும்
சிட்டர்கட்கு திருப்பொற்பதத்தை சிறக்கத் தருமவ்
வட்டநெட்டைப் பணிமெத்தை யதிற்கிட வாரிசப்போ
குட்டினத்துக் குலம் தத்தி முத்தீனும் குறுங்குடியே.

—————-

திருவரமங்கை என்னும் வானமாமலை
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று மணவாள மாமுனிகள் அணிந்திருந்த தங்க மோதிரத்தை ஜீயர் சுவாமிகள்
அணிந்து காட்சி கொடுப்பதுடன் ஸ்ரீபாத தீர்த்தமும் அருளுவார்.

————-

ஸ்ரீவைகுண்டம்
இந்த இறைவனைத் “திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளப்பிரான்” என்று கல்வெட்டு கூறுகிறது.
இத்தலத்து எம்பெருமானை ஆண்டுக்கு இருமுறை சூரியதேவன் வந்து வழிபாடு செய்கிறான். அதாவது சித்திரை 6ம்தேதி, ஐப்பசி 6ந்தேதி.
இவ்விரு தினங்களிலும் இளஞ்சூரியனது பொற்கிரணங்கள் கோபுர வாயில் வழியாக வைகுந்த நாதனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறது. இத்தகைய அமைப்பில் இக்கோவிலின் கோபுர வாசல் அமைக்கப்பட்டுள்ளது

—————

திருக்குளந்தை

இத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூரோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
அங்கு ஆண்டாள் அவதரித்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று மணங்கொண்டாள்.
அதே போல் இங்கு கமலாவதி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள்.
அங்கு வேதப்பிரான் ஆண்டாளுக்கு தகப்பனராயிருந்தார்.
இங்கு வேதசாரன் கமலாவிற்கு தகப்பனாயிருந்தார்.

————

திருக்கோளுர்
மதுரகவி ஆழ்வாரின் திருவதாரஸ்தலமாக இத்தலம் விளங்குதல் இதன் மேன்மைக்கோர் எடுத்துக்காட்டாகும்.
நம்மாழ்வாரான சூரிய உதயத்திற்கு “அருணோதயம்” (விடிகாலைப் பொழுதைப்) போன்றது இவர் அவதாரம்

————

திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி
நம்மாழ்வாரோடு இந்தப்புளி (லட்சுமணன்) தொடர்பு கொண்டது போல் திருக்கண்ணங்குடியில் திருமங்கையாழ்வாருடன் உறங்காப்புளி தொடர்பு கொண்டு விட்டது.
இராமானுஜர் இவ்வூருக்கு எழுந்தருளினார். இராமானுஜர் இந்த திவ்ய தேசத்துக்கு வெகுதொலைவில் வரும்போதே
தாமிரபரணி நதிக்கரையில் இத்தலம் காட்சியளிக்க மிகவும் உணர்ச்சி வசப்பட்டு,
இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
வேதம் பகர்ந்திட்ட மெய்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்– என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இது பரமபதத்து எல்லையாகின்றது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டமாகிறது.
இந்தக் கோவிலில் மிகவும் அருமையான வேலைப் பாடமைந்த கல்நாதஸ்வரம் ஒன்றுள்ளது.
இது கருங்கல்லில் குடைந்த அதிசய இசைக்கருவியானாலும் மரத்தால் செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது.
இது நீளம் 1 அடி மேல்ப்பாகம் 1/4 அங்குலம். அடிப்பாகம் 1 அங்குலம் குறுக்களவுடையது. இதனடிப்பாகம் பித்தளைப் பூணால் செய்யப்பட்டுள்ளது.
இது இந்தக் கோவிலில் பரத நாட்டியம் நடைபெறும் பொழுது வாசிப்பதற்கு பயன்பட்டதாகத் தெரிகிறது.
இது சுமார் 350 வருடத்திற்கு முன்னால் கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னர் காலத்தில் கொடுக்கப்பட்டது.
இதற்கு மோகன வீணை என்று ஒரு பெயரும் உண்டு.

“குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும் சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”- என்று வள்ளுவர் நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து கூறியதாகச் சொல்லப்படுகிறது.

———

கூடலழகரை வேண்டிப் பேறு பெற்றவர்களை
வில்லாண்ட வடவரையான் மணம் புணர அட்டாங்க விமான மென்னும்
இல்லாண்டு புயன் கனகன் காசிபனார் பிருகு அம்பரீடன் கூடல்
தொல்லாண்ட புருரவசு மலயகேதனன் முதலலோர் தொழப் புத்தூரான்
பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட தோளனடி பணிதல் செய்வாம்.– என்ற பாடலால் தெரியலாம்

வைகை நதி வேகமாக ஓடியதால் வேகவதி என்றொரு பெயரும் உண்டு.
விண்ணின்று வையம்நோக்கி வந்ததால் வையை என்றும் பெயர் பெற்றதென்பர்.
இது இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரை நகருக்கு மாலையிட்டது போல் வந்ததால் “கிருதமாலை” என்று இதனைப் புராணம் கூறும்

வேகமாதலின் வேகவதி என்றும் மாகம் வாய்ந்ததனால் வையை என்றும் –
தார் ஆகலால் கிருதமலையதாம் என்றும் நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”

இங்குள்ள பெருமாளை நெடுநீர் வையை பெருமாள் என்று சிலம்பு செப்புகிறது.
சிலம்பில் (சிலப்பதிகாரத்தில்) வரும் மாதுரி என்னும் இடைப் பெண் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும் நெடுமாலைப் பூசிப்பதற்கு சென்றார் -என்பதை
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நடுநீர் வையை நெடுமால் அடியேத்தத் தூவித் துறை படியப் போயினாள்.– என்று இளங்கோவடிகள் பகர்கிறார்.
இங்கு கருடாழ்வாருக்கும் பலராமனுக்கும் கோவில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.
“உவனச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழிவலவன் உயர்த்த வெள்ளை நகரமும்”
மதுரைமாநகரில் உவணச் சேவல் கருடக் கொடியினை உடைய திருமாலின் கோவிலும், மேழிவலவன் – பலராமனின் கோவிலுமிருந்த வெள்ளை நகரம் –
அதாவது வெண்மை நிறமான மேகங்கள் (நான்மாடக்கூடல் போன்று) எந்நேரமும் சூழ்ந்திருப்பதால் வெள்ளை நகரம் எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த மாலிருங்குன்றத்தைப் பற்றி பரிபாடல் என்னும் சங்ககால நூல் பரிபாடல்
தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம் நாறிணாராத் தூழாயோ னல்கி னள்லதை
ஏறுதலெளிதோ வீறுபெற துறக்கம் அரிதிற் பெறு துறக்க மாலிருங்குன்றம் என்றும்
மாயோ னெத்தலின் னிலைத்தே சென்று தொழுகல் சீர் கண்டு பணிமனமே
இருங் குன்றென்றும் பெயர் பரந்ததுவே பெருங்கலி ஞாலத்து தொன்றியல் புகழது

சிலப்பதிகாரமும்
“தடம்பல கடந்து காடுடன் கழிந்து திருமால் குன்றம் செல்குவீராயின்”– என்று திருமாலிருஞ்சோலையைக் குறிக்கிறது.

“அலங்கும் மருவியார்த்து திமிழ் பிழியச் சிலம்பாரணிந்த சீர்கெழு திருவிற்
சோலையொடு தொடர்மலி மாலிருங் குன்றம்”-என்று-சிலம்பாற்றைப் பற்றி பரிபாடல் கூறுகிறது.

————

சித்தர்களில் ஒருவராகிய போகர் என்னும் முனிவர் சிலம்பாற்றைப் பற்றியும், இம் மலையைப் பற்றியும் கூறியுள்ள பாடல்கள்
ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாக உள்ளன.
“காணப்பா வழுகணிச் சித்தருண்டு கமண்டல நீர் தொட்டியிலே வந்து பாயும்
தோனப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு துலங்கிடவே கன்னியொன்று அவர் பாலுண்டு
பூணப்பா வதனடியிற் றெப்பமுண்டு புகழான திரவியங்கள் அநேக முண்டு
மாணப்பா வழகர்மலை யென்று பேருமாச்சர்யம் நீலகிரிக் கதிகம் பாரே
பாரே னென்றேனம் மலையினுயரஞ் சென்றால் பதிவான கருப்பானுட கோவி லொன்று
நிரென்றேன் கோவிலுக்குத் தெற்கே சென்றால் நெடிய தொருபாறையொன்று சுனையொன்றுண்டு
பேரென்றேன் வனம் வொன்று பெருத்துக் காணும் பெரிதாக குகையொன்று கதவுந் தோன்றும்
சேரென்றே குகையுள்ளே சென்றே யானால்ச் செயமான வையப்பா இத்திருப்பத்தானே”
என்று போகமுனிவர் தான் இயற்றிய ஜெனன சாகரம் என்னும் நூலில் எடுத்தாண்டுள்ளார்.
இதில் சிலம்பு குறிக்கும் சிலம்பாற்றுடன் திரவியங்கள் கிடைப்பதையும், 18ம் படிக் கருப்பண்ணணையும் குறிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொருபாடலில்,
“தானென்ற சப்தரிஷி ஷப்த கன்னி தற்பரமாம் திருமாலும் மதனினுதுண்டாம்.– -என்றும் குறிப்பிடுகின்றார்.
(போகரின் மருத்துவ, வானசாஸ்திர ஆன்மீக நூல்கள் யாவும் பெரும் ஆய்வு செய்ய வேண்டிய களஞ்சியங்களாகும்)

———-

திருமோகூர் பற்றி குறிப்பிடும் சங்ககாலப் பாடலொன்று இவ்வூரின் தொன்மையை எடுத்தியம்பும்
….வேல் கொடித் தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
துனைக்காலன்ன புனைதேர் கோசர் தொன் மூதலத்தரும் பனைப் பொறியில்
இன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமைதிற் பகைதலை வந்த மாகெழுதானை வம்ப மோரியர்- -அகம் 251
நந்தர்கள் மீது வெற்றி கொண்ட மௌரியர்கள் படையெடுப்பாளர்களாக விளங்கி பெரியதோர் பேரரசை நிறுவினர்.
அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர்.
பொதியமலைவரை சென்றனர்.
சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியது.

———-

திருக்கோட்டியூர்
திருக்கு -பாவங்கள் -ஒட்டியூர்
மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் இங்கும்
திருக்கூடல் என்னும் மதுரையிலும் ஆகமவிதிகட்குட்பட்ட அஷ்டாங்கவிமானம் அமைந்துள்ளது.
முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல்
கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல் நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி.
பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும்,
அதன்பிறகு 2வது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும்
3வது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
தேவர்களின் நடுவில் நின்றமையால் ஸ்தித நாராயணன் எனவும்,
ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டதால் உரக மெல்லணையான் என்றும்-திருப்பெயர்கள் உண்டாயிற்று.

—————

திருப்புல்லாணியின் சிறப்பைப் பற்றி சங்க நூலான அகநானூற்றின் 70வது பாடல் பின்வருமாறு கூறுகிறது.
“வெள்வேர் கவுரியிர் தொன் முதுகோடி முழங்கிடும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் ராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல் ஒலி அவிந்த தன்றிவ் வழுங்கலூரே”
வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக் கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற
துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த
பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது.

“மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்”
ஐயனே குபேரனது புண்ணியத்தால் முதலில் நான் அழகாகப் படைக்கப்பட்டேன். பின்பு உனது தவமகிமையால் ராவணன் வந்து குடியேறினான். நெடிது வாழ்ந்தான்.
நாளடைவில் அரக்கர்கள் பல கொடுஞ்செயல்கள் செய்து இங்கு பாபச் சுமை பெருகிவிட்டது.
இனிமேல் என்னால் பொறுக்க முடியாது. நீ விரைவில் வந்து தீமை போக்கி என்னைப் புனிதமாக்கி அருள் என்று இராமனை நோக்கி இலங்கா தேவி கையை நீட்டி
நின்றது போல் (சேது) இவ்வணை காட்சியளிக்கின்றதென்பதைக் கம்பன் தன் இராமாயணத்தே காட்டுகிறான்.

விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு தெரிவித்து அவனுக்கு
அடைக்கலம் கொடுத்தருள வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி,
வாய் புதைத்து நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது.
இது போன்ற ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது.

————

திகழ் திருவேங்கடம் சிங்க வேழ் குன்றம் நகரமாம் அயோத்தி நைமிசாரண்யம்
தன்னிகர் இல்லாச் சாளக்கிராமம் மன்னிய புகழுடை வதரியாஸ்ரமம்
காவல் கங்கைக் கரை கண்டம் பிரீதி தூ வடமதுரை துவரை யாயப்பாடி
படர் பாற் கடல் இப் பன்னிரண்டுமே அவ் வடநாட்டுப் பதி என வணங்கிப் போற்றுவோம் –

—————–

பெருமகன் ஏவல் அல்லது யாங்கனும் அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்
அதுபோல் புகார் நகரத்தினர் துயருள்ளாயினர் என்கிறார்.
இளங்கோவடிகள்

தாதை ஏவலின் மாதுடன் போகி காதலி நீங்க கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வ பயந்தோன் என்பது நீ யறிந்திலையோ நெடுமொழி யன்றோ – என்கிறார்.

—————

பாரத தேசத்தை, தேசாந்திரத்திலிருந்து பிரிக்குமிடமாகையாலே பிரிதி என்று பெயரிட்டதாகக் கொள்ளலாம்.
உகந்தருளின நிலங்களுக்கு எல்லை என்று பெரியவாச்சான் பிள்ளை பிரிதியைக் குறிப்பிட்டிருப்பது இப்படி பொருள் கொள்ள இடமளிக்கிறது.
மானஸரோவரம் பாரதத்தின் வட எல்லையென்று இதிஹாச புராணங்களில் காட்டப்பட்டிருப்பதும் இப்படி
பொருள் கொள்வதற்குப் பொருந்தியிருக்கிறது.
இந்த மானஸரோவரக் கரையில் திருப்பிரிதி எங்கோ இருக்க வேண்டும் என்பதுதான் தெளிவு.

————–

சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம்
சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட்(AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும்.

தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்– என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியிருக்கிறார்.

வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்– என்கிறார் இளங்கோவடிகள்.

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்