பார்த்தனுக்குச் சாரதி மேல் பஞ்ச ரத்தினம் செய்யக்
காத்திரள்கள் ஏறிக் கவிந்த பொழில் -யோர்த்த
குருகையில் வாழ் மாறன் குரை கழலைப் போற்றின்
அருகெய்தா தோடும் அவம் –காப்புச் செய்யுள் –கா -பூந்தோட்டம்
————-
செங்கமல மங்கையொடு சங்க வணனும் முரிய சிறிய வரு மருகார் தரத்
திருவல்லிக்கேணி தனில் வானவர்கள் வந்து பணி செய்ய மகிழ்வெய்தி அமரும்
துங்க நவ மா மணி குயிற்றி ஒளிர் ஸந்நிதித் துவார வழி நின்று நின்னைத்
துதி செய்து நிற்கும் எனை யருள் செய்து வா வென்று சொல்லில் உனக்கு என்ன குறைவோ
மங்கள குணாகர மநோ ஹர மஹா தீர மார சுகுமார வீர
மதி தவருணாலாய ஹிரண்ய ஹர நரஸிம்ஹ மதுகைட போத் காடந
பங்கச பாப நிச யஷாள நரம்பு தர பரம புருஷாமரேச
பத்ம பவ பவ தாத பாணி த்ருத நவ நீத பாண்டு சுத ரத ஸூதனே–1-
செங்கமல மங்கையொடு -திரு மா மகளான ருக்மிணி பிராட்டியார்
சங்க வணனும் -பலராமன்
உரிய சிறியவரும் -அநிருத்தன் -ப்ரத்யும்னன் -ஸாத்விகீ
துங்க -உயர்வான
நவ மா மணி குயிற்றி -நெருக்கமாகப் பதித்து
ஒளிர் -பிரகாசிக்கின்ற
மங்கள குணாகர -நற் குணங்களுக்கு இருப்பிடமானவனே
மநோ ஹர –கண்டவர் மனம் கவரும் கண்ணனே
மஹா தீர
மார சுகுமார -சாஷாத் மன்மத மன்மதனே
வீர
மதி தவருணாலாய -திருப்பாற் கடலைக் கடைந்து அருளினவனே
ஹிரண்ய ஹர நரஸிம்ஹ
மதுகைட போத் காடந
பங்கச –திருவடி முதல் திருமுடி வரை தாமரை வனம் போன்றவனே
பாப நிச யஷாள நரம்பு தர -பாபக் குவியலைப் போக்கும் மேகம் போன்றவனே
பரம புருஷ
அமரேச
பத்ம பவ பவ தாத -நான் முகனுக்கும் சிவனுக்கும் தந்தையே
பாணி த்ருத நவ நீத -வெண்னெய்க் கையனே
பாண்டு சுத ரத ஸூதனே–அர்ஜுனன் தேர் பாகனே
பார்த்த சாரதியே
—————–
எங்கும் உனை வைத சிசு பாலற்கு நின் பாதம் ஈந்தனை எதிர்த்து நின்றே
இணை யற்ற பண நிரையினால் எறிந்தோர்க்கும் உனது எழில் மேனி தந்து அருளினை
பொங்கு மணியாட்டி யுன் திரு நாமம் நாடாத புல்லற்கு வீடு அருளினை
புகழ் அரிய நின் பாதம் ஒரு நாளும் அகலாது போற்றும் எனை அருளாதது ஏன்
சங்க தர சடகோப பரகால பரி படித ஸ்யாமள சரீர ராம
சசி தரணி நயன புத சநவி நுத பத நளின சதமக மதச் சேதந
பங்கஜ தளாஷ பக நாசக கிரீந்த்ர கர பாலித ஸமஸ்த புவந
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –2-
எங்கும் உனை வைத சிசு பாலற்கு -தமகோஷன் -சேதி நாட்டு அரசனுக்கும் வஸூதேவர் தங்கை சுருதசிரைவைக்கும் பிறந்தவன்
பொங்கு மணியாட்டி யுன் திரு நாமம் நாடாத புல்லற்கு வீடு அருளினை -புல்லன் -கண்டா கர்ணன்
சசி தரணி நயன -சந்த்ர ஸூர்யர்களைத் திருக் கண்களாகக் கொண்டவனே
புத சநவி நுத பத நளின –தேவர்களும் புலவர்களும் வணங்கும் தாமரை இதழ் ஒத்த திருவடிகளை யுடையவனே
சதமக மதச் சேதந -இந்திரன் கர்வத்தை அழித்து அருளினவனே
பங்கஜ தளாஷ -செந்தாமரைக் கண்ணனே
பக நாசக -புள்ளின் வாய் கீண்டவனே
கிரீந்த்ர கர பாலித ஸமஸ்த புவந -குன்றம் ஏந்திய திருக் கையால் அகில உலகங்களையும் ரக்ஷித்து அருளினவனே
———————–
ஆசை வலையுள் சிக்கி யாடும் என் நெஞ்சத்தின் அறியாமை நீக்குவாயேல்
அனு தினமும் உனது திருவடியை மறவாத பத்தி வரும் ஐம் பொறியின் மதம் அடங்கும்
மாசில் உனது அடியார்கள் அருள் செய்வர் என் மீது வல் வினைகள் நீங்கி அகலும்
மன்னும் உயர் உணர்வு எய்தி மலரினிடை உறைகின்ற மா மகளின் நோக்கு வருமால்
கீச குலபதி மித்ர கம்பு நிப கந்தர ஸூ கேது தநுஜா நாசந கிரண மணி க்ருத ஹார கம்பீர புஜ கலித கேயூர வேத சார
பாசதர சத்ருச அஸுராந்தக மஹா சூர பரம கருணா சாகர
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –3-
கீச குலபதி மித்ர -ஸூக்ரீவ மஹா ராஜனின் நண்பன்
கம்பு நிப கந்தர –குடக் கழுத்து போன்ற திருக் கழுத்து யுடையவனே
ஸூ கேது –தர்மத்துக்கு ஜெயக்கொடி போன்றவனே
தநுஜா நாசந –அரக்கர் கூட்டங்களை நிரசித்து அருளுபவனே
கிரண மணி க்ருத ஹார -ஒளி வீசும் ரத்னங்களான காரத்தை யுடையவனே
பாசதர சத்ருச -பாசக்கரைடு கையில் கொண்ட யமனுக்கு நிகரானவனே
அஸுராந்தக -அஸூரர்கட்க்கு யமனாய் இருப்பவனே
மஹா சூர -அஸஹாய ஸூரனே
பரம கருணா சாகர -அருள் மா கடல் அமுதே
—————————
முன்னம் ஒரு வீடுமன் முனைந்து வரு சமரத்து முனை வாளியால் அடிப்ப
முக கமல மலர் கருக நிகில புவனமும் அதிர முடுகி ஒளி யாழி ஏந்திச்
சொன்ன சபதம் அழிய வன்னவனை மாய்க்க வரு தோற்றம் எளியேன் காண நீ
தோற்றுவித் தனை யாகினான் கண்டு கொண்டு பல துதி யோதி யுய்குவன் காண்
உன்னத கதா ஹஸ்த கோபிகா நந்தந கர யுத்தமோத்தம மா தவ
உத்துங்க பீஷ்மக சுதாகாந்த கோவிந்த வுக்ரகம் ஸாசு கரண பன்னகாதிப சயன நாராயணா நந்த பலராம தேவா நுஜ
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –4-
முன்னம் ஒரு வீடுமன் -சந்தனு கங்கை இருவருக்கும் பிறந்த பீஷ்மர் -காங்கேயன் தேவ விரதன் என்றும் பெயர் -வசுக்களில் ஒருவர்
உன்னத -நெடியோனே
கதா ஹஸ்த
கோபிகா நந்தந
கர யுத்தமோத்தம
மா தவ
உத்துங்க பீஷ்மக சுதா காந்த -மிகச் சிறந்த பீஷ்மகரின் திரு மகளரான ருக்மிணி பிராட்டி மணாளனே
கோவிந்த
வுக்ர கம்ஸாசு கரண -கோரா கம்சனை அனாயாசேன கொன்றவனே
பன்னகாதிப சயன
நாராயணா
நந்த
பலராம
தேவா நுஜ -நம்பி மூத்த பிரானுக்கு பின் தோன்றலே
—————————
காலயவனற்கு மிக அஞ்சி யோடினை என்று கழறுகின்றனர் அறிவிலார்
கண்ணியா நோக்கினின் கழல் இணையை மறவாத கனமுடைய முசுகுந்தனின்
நீல நிற மணி மேனி கண்டு தொழவே எதிர் நின்றனை எனக் கொள்ளுவாம்
நின் பெருமை வணம் அறிய வல்லார் இந்த நீண் நிலத்தில் எவர் அறைகுவாய்
சீல குண கண நாத சிகுர குந்தள வாம சேஷ கருடாபி வந்த
சீத கர முக சந்த்ர கீத உபதேச வா சிஷ்யார்ய பத தர்ச்சக
பால குல கோபால பக்த ஜன மந்தார பாரத சஹாய ஸுவ்ரே
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –5-
சீல குண கண நாத
சிகுர குந்தள வாம -வளைத்த முன் உச்சி மயிர்களால் அழகானவனே
சேஷ கருடாபி வந்த
சீத கர முக சந்த்ர
கீத உபதேச வா
சிஷ்யார்ய பத தர்ச்சக -சிஷ்ய ஆச்சார்ய நிஷ்டைகளைக் காட்டி அருளினவனே
—————–
இரண்டாவது மகுடம்
கரு மேனி அழகு அழிய வரு சிறுவரோடு பல காடு மலையின் புறத்துக்
கன்று நிரை மேய்க்க நீ சென்ற பொழுதத்து உனது கழல் இணை என் மீது பட யான்
ஒரு பெரிய கல்லாக மரமாக மெதுவாக யுற்ற சிறு புல்லாக முன் உதித்து இருந்தேனாகில்
அரு நரகில் வீழ்க்கும் இவ் வுடலம் எவ்வாறு எய்துவேன்
குரு வம்ச பவ துஷ்ட ந்ருப வம்ச பீதி கர கோமள ரதாங்க பாணே
குமுகுமித ம்ருகமத படீர க்ருத லேபந ரகூத்தம கரிந்த்ர வரத
விருத கண்டாச ஹித பசு ரக்ஷணா சக்த வேதாந்த ஸாஸ்த்ர வேத்ய
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –1–
குரு வம்ச பாவ துஷ்ட ந்ருப வம்ச பீதி கர -கௌரவ வம்ச அரசர் கூட்டங்களுக்கு பீதியை விளைவித்தவனே
கோமள ரதாங்க பாணே
குமுகுமித ம்ருகமத படீர க்ருத லேப ந-பரிமளம் மிக்க கஸ்தூரி பூச்சை யுடையவன்
ரகூத்தம -ராகு வம்சத்தில் உத்தமனாய் நின்று பிரகாசிப்பவனே
கரிந்த்ர வரத -கஜேந்திராழ்வானுக்கு பேர் அருளாளனாய் வந்து அருளினவனே
விருத கண்டாச ஹித பசு ரக்ஷணா சக்த
வேதாந்த ஸாஸ்த்ர வேத்ய
வேணு யுத கர கமல
விஜி தரிபு சய -சத்ருக்களை எல்லாம் ஜெயித்தவனே
விமல விஜய ரத ஸூய மணியே –பார்த்தனுக்கு தேரூர்ந்த மா மணியே –
————————————————-
எந்த உலகுக்கும் இறையாகி யுள நீ முன்னம் எளியவோர் மாணியாகி ஏகி
மா வலி யச்ச வாடத்து மூவடி மண் ஏற்றனை யது யன்றி இரவி
மைந்தனிடை அந்தண் உருக் கொண்டு சென்று பின் மா தான பலம் ஏற்றனை
மா காந்தனான யுனக்கேற்கும் முறை எவ்வாறு வாய்த்ததோ யான் அறிகிலேன்
கந்த வஹ சுத வாஹ நாச்யுத ஹ்ருஷீ கேச கம நீய கோப வேஷ
காகுஸ்த்த வஸூதேவ தேவகி ஸூத ரத்ன கநக வஸ்த்ர அலங்க்ருத
விந்த்ய கிரி சத்ருச புஜ யுகள ப்ருந்தாரண்ய மேதினீ ஸமஸ்தா பக
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –2–
இரவி மைந்தன் -ஸூ ர்ய புத்ரன் -கர்ணன்
மா காந்தன் -ஸ்ரீ யபதி
கந்த வஹ சுத வாஹந-ஹநுமானை வாகனமாகக் கொண்டருளினவனே
அச்யுத
ஹ்ருஷீ கேச
கம நீய கோப வேஷ
மேதினீ ஸம்ஸ்தாபக -தர்மத்தை நிலை நாட்டை தரணியில் அவதரித்து அருளினவனே –
———————-
செகத்தில் உடலோடு காண்கின்ற வுயிர் யாவும் நீ செய்த நன்றியை மறந்து
செருக்குற்று நின்று தாம் செய் தொழில் கடம் முடைய செய்கை என்றே நினைந்து
திகைத்து மேல் தெய்வம் இல்லை என்று எண்ண மாயையாம் திரையிட்டு வைத்து இருத்தி
திரு உள்ளம் இரங்கி அத்திரை நீக்கி யவை உனைத் தரிசித்து வாழும் அன்றோ
ஸூக நாரதாதி முனி ஸேவ்ய வைகுண்டேச ஸூத்த ஸாத்விக கேசவ
சூர்ப்ப கா ராதி ஜனக ஆஸ்ரித ஜன ஆதார ஸூப விபீஷண பாந்தவ
விகோசித மன நளிந பாஸ்கர வஷட்கார விஹ கரத விஸ்வ மூர்த்தே
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –3–
வஷட்கார -வஷட் கார ஸ்வரூபியே
விஹ கரத -திருவடியை வாஹனமாகக் கொண்டு அருளினவனே
——————–
சொல்லால் உனைப் பாடி மகிழ அறியேன் சொன்ன சொற் பொருளின் உண்மை அறியேன்
சோராமல் நிற்கு அடியேன் செய்ய அறியேன் பெரிய சுருதியினை நோக்க அறியேன்
கல்லை நிகர் நெஞ்சினேன் பொய் களவு வஞ்சகம் கனவிலும் நீக்க அறியேன்
கடையினேன் நாயினும் கடைக் கணித்து ஆள நின் கருத்தின் நினைத்து அருள்வாய்
பில்லாதி போல்லாச கர கோபிகா ஜார பீமாக்ர ஜாபி வாத்ய
பீத பாஞ்சால புத்ரீ மாநத அபேத பேத வாக்யார்த்த கதித
வில்லிபுத்தூர் விஷ்ணு சித்த நிச்சித தத்வ விஹித ப்ரஹ்மாதி ரூப
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –4–
பில்லாதி போல்லாச கர –ஆயர் தலைவர்கட்க்கு மகிழ்ச்சி அளித்தவனே
கோபிகா ஜார -ஆய்ச்சிகளை மோஹித்து அடைந்தவன்
பீமாக்ர ஜாபி வாத்ய –யுதிஷ்ட்ரர் வணங்கியவனே
பீத பாஞ்சால புத்ரீ மாநத-பயந்த திரௌபதியின் மானத்தைக் கொடுத்தவனே
அபேத பேத வாக்யார்த்த கதித
வில்லிபுத்தூர் விஷ்ணு சித்த நிச்சித தத்வ
விஹித ப்ரஹ்மாதி ரூப –விதி சிவன் இந்திராதி ஸர்வ ரூப சரீரியே
—————————
முதிய வரவக் கொடிய துரியோதனக் கொடிய மூடன் கண் காண வவையின்
முன் எய்தி மதியாது கொலவிட்ட வவணுற்ற முனை வீரர் பட வானவர்
துதி பெற்ற புவன நிறை பெரிய உருவத்தை நீ தோற்றுவித்தனை
என் மனத்து உன் பொழிய நின் சிறிய கரிய உருவத்தை உள் தோற்றுவிக்கின் மகிழ்வனே
மதுர ம்ருது தர வசன நவநீத ததி சோர மது ஸூதந ஆதி கூர்ம மதுரா புரீ வாஸ மாதந மா ரமண மாரீச நீசான் தக
விதுர ஸூஹ்ருத அதித்ய விப்ர தநத அநித்ய விஷயாதி தூர கமந
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –5–
முதிய வரவக் கொடிய துரியோதனக் கொடிய மூடன் கண் காண வவையின்
முன் எய்தி மதியாது கொலவிட்ட வவணுற்ற முனை வீரர் பட வானவர்
துதி பெற்ற புவன நிறை பெரிய உருவத்தை நீ தோற்றுவித்தனை
என் மனத்து உன் பொழிய நின் சிறிய கரிய உருவத்தை உள் தோற்றுவிக்கின் மகிழ்வனே
ம்ருது தர வசன -இனிய வார்த்தை யுடையவன்
நவநீத ததி சோர மது ஸூதந
ஆதி கூர்ம –ஆதி கூர்ம ரூபியே
மதுரா புரீ வாஸ
மாதந –மானத்தையே தனமாகப் பெற்றவனே
மா ரமண -ஸ்ரீ யபதியே
மாரீச நீசான் தக
விதுர ஸூஹ்ருத அதித்ய –விதுரரால் நன்கு அதிதி ஸத்காரம் செய்யப் பெற்றவனே
விப்ர தநத-குசேலருக்கு ஐஸ்வர்யம் அளித்து அருளினவனே
அநித்ய விஷயாதி தூர கமந -அநித்யமான விஷயங்களுக்கு வெகு தூரம் செல்பவனே
——————–
மூன்றாவது மகுடம்
உன்னுந்தி மலர் வந்த நான்முகத்து ஒருவனே நின் பெருமை அறியாது உனை
ஓர் இடையன் மகனாக யுன்னீ நீ காட்டகத்து ஓடி அனுதினம் மேய்த்திடும்
பொன்னின் அணி இலகு மணி ஆக்களையும் அவைகள் பின் போகு சிறு கன்றுகளையும்
போற்றி வரும் கோபால பாலர்களையும் தனது புணர் மாயை யால் பிணைத்துப்
பன்னரிய பெரிய மலை முழை ஒளித்திட வாய்ந்து பார்த்தவர்கள் போல் உருவம்
பல பல எடுத்து நீ நிற்க அவன் அணி நின் பாத மலர் இறைஞ்சி யஞ்சிக்
கன்னனிகர் வேத மொழி யாற்று திப்பக் கருணை காட்டி அறியாமை ஈர்ந்தாய்
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –1-
வானில் உறைகின்ற மதி செல்ல வழி இன்மையால் வாடி மேனிலை வாயிலில்
வந்து புக நின்ற கோபுர வகையும் மணி தைத்த வண்ண வான் கதவின் வகையும்
மானெரிய நீண்டு வளை தந்த மதிலின் வகையும் மா மாணிக் கொடி ஏறும் உறும்
மன் பெரிய தம்பமும் பொன் மண்டபப் பொலிவு மண நாறு பூஞ்சோலையும்
மீன் உலவும் இனிய புனநிறை குளனும் வாய்ந்த பேர் மேன்மை யுறு நின்னகரில் வாழ்
மேதக்க யடியார்கள் யடி பணியும் அவர் பெருமை வேதனும் வுரைக்க வலனோ
கானனல முண்ட கனி வாயனே மாயனே கமலை யுறைகின்ற மார்பா
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –2-
கங்கை அலை எறிகின்ற கழல் இணையின் அழகு நின் கரிய திருமேனி யழகும்
கலை மதியை ஒத்த தவனத்தின் அழகும் பெரிய கமல நிகர் விழியின் அழகும்
சங்க முறை தருகின்ற கையின் அழகும் குங்கொடியர் தலை யரியும் வாள் கை அழகும்
தமநிய மலைக்கு நிகர் தோளின் அழகும் தலை யிறாங்கு மணி முடியின் அழகும்
துங்க மலர் மகள் வாழு மார்பின் அழகும் அதில் தோன்றும் வனமாலை யழகும்
தூய நான்முகன் வந்த யுந்தி அழகும் பொலந்தூசு பொலி இடையின் அழகும்
கங்குலும் பகலும் என் கண்ணை விட்டு அகலாது கருத்தினை யிருக்கும் அன்றே
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –3–
மிக்க பசியால் வாடி யுணவினை விரும்பி முன் விடுப்பவொரு கோபனோடி
வேள்வி செய்யும் அந்தணரை நாடி அன்னம் கேட்ப வெகுண்டவர் மறுப்ப வன்னான்
இங்கு நிகர் மொழி வரவ் வேதியரின் மனைவியரை யேற்பவ வருள் களித்தே
இணை யற்ற வன்ன முதலாய கைக் கொண்டு எய்தி எம் பெரும நீ கொள்க எனத்
தக்க யுபசாரத்தினோடு உனை அருத்திடத் தளர்ச்சி யற யுண்டு வந்து
தாழாத வர்க்கு அருள் செய் தந்த மங்கையர் தம்பதிகள் செய் தொழிலினும்
கக்கும் ஒளிமைக் குழலவர் பத்தியே மிகக் கனமுடைய தென நாட்டினை
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –4-
அமித வெழில் ஒழுகு முக கோபியர்கள் அரு கலவி யார்ந்தகம் உவந்த நீ முன்
அம்மதுரை நகரினிட வதிகின்ற கூனி யுடல் அணை தந்த வாறு என்னவும்
தமர் கண் மிக வினிய சுவை தர வாங்கி அன்பினோடு தந்த உணவு உண்டு அருளு நீ
தகுதி அற வொரு அறிய வந்தணன் அளித்தவ வறான் யுண்ட வாறு என்னவும்
அமுத மொழி யுடைய பல வாழ்வார்கள் செந்தமிழை ஆதாரத்தோடு கொண்ட நீ
அஞ்ஞனான எளியேன் சொன்ன புன் கவியை அருள் செய்து கொள வேண்டுமால்
கமழ மணமுடைய துளஸீ காரனே விளவின் கனி வீழ்த்த வொரு தீரனே
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –5-
அந்தணன் -குசேல முனி
ஆக்கியோன் பெயர்
குந்தி மகன் சாரதி மேல் கூறினான் பஞ்ச ரத்னம்
செந்திரு வாழ் கஞ்சஞ் செழு நீலம் –உந்து மணப்
பூ நிரை மாறா வயல் சூழ் புன்னை ராமானுஜன் சேய்
சீ நிவாஸன் விழைந்து தேர்ந்து
—————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புன்னை ஸ்ரீ ராமானுஜன் ஸ்வாமிகள் திருக்குமாரர் ஸ்ரீ நிவாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply