இதன் சந்தம் விளம், மா, காய், விளம் – என்ற வாய்பாட்டில் உள்ளது
திருப்பஞ்சகம் – முதல் பாடல்
குருவுளச் சந்தக் கவிராயர் சொன்ன
வொருகலிச் சந்தம் உணராநின் றுன்னி
திருவுளே துஞ்சும் திருமால்பேர் சொல்வேன்
கருவிளம் மாமுன் பலவின்காய் மாவே. –சந்தம்: கருவிளம் மா புளிமாங்காய் மா
குருவாக உளம் கொண்ட சந்தக் கவிராயர் ஒரு கலிவிருத்த சந்தம், உணர்ந்து உன்னி, திருவுள்ளூரில் இருக்கும் திருமால் பேரைச் சொல்ல பயன் படுத்துவேன். இதில், உள்ள நாற்சீர்கள் கருவிளம், மா, பலகாய்கள் மற்றும் மாவாக வரும்
திருப்பஞ்சகம் – இரண்டாம் பாடல்
இராவணன் வீழ்த்தி ஏந்திழையை மீட்ட
இராவணன் இங்கே ஈடிலாத பேறாய்
அராவணை தன்னில் ஆன்றதுயில் கொண்டான்
மராவளி சாய்த்த மாலிவனைக் கொள்ளே! -2-சந்தம்: கருவிளம் மா கூவிளங்காய் மா
இரவு வண்ணம் கொண்டவன், இராவணனை வதைத்து தன் மனைவியை மீட்டான். அந்த மரா மர வரிசையைச் சாய்த்தவன் இங்கு பாம்பு படுக்கையில் தூங்குகிறானே! அவனை நீ மனதில் வரிப்பாயாக.
திருப்பஞ்சகம் – மூன்றாம் பாடல்
மலிகடல் வாழ்ந்த மாகைட பர்தம்
தலைகுடல் வேறாய்த் தானாழி கீண்டான்
அலகிடும் அன்பர் ஆகாத வெந்நோய்
குலைகெட இவ்வுள் கா(ல்)நீட்டு மாறே! -3-சந்தம்: கருவிளம் மா தேமாங்காய் மா
பெருங்கடலில் வளர்ந்த மது கைடபர் என்ற இருவரை, (தன் தொடைமீது வைத்து), சக்ராயுதத்தால் வகிர்ந்தவன், இவ்வூரில், உடம்பின் பகுதிகளை அலகால் சமர்ப்பிக்கும் அன்பர்கள் நோய் தீர்ப்பவனாக கால் நீட்டி படுத்திருக்கும் அழகைப் பாருங்கள்!
திருப்பஞ்சகம் – நான்காம் பாடல்
சுவாதி நன் னாளில் சினமுறுத்த சீயம்
விவாதமீ தீற்றில் வெளிப்புறத்த தென்னே!
அவாயிரா சாலி அருமுனிவர்க் கிங்கே
சுவாமிநின் அவ்வுள் சுவீகரித்த தென்னே! -4-சந்தம்: கருவிளம் மா கருவிளங்காய் மா
‘அவன் எங்கிருக்கிறான்’ என்ற விவாதத்தின் முடிவில், கோபமாய் சிங்க உருவில் வெளி வந்தவன், இங்கு ஆசை இல்லாத சாலி ஹோத்ர மகரிஷிக்கு அந்த உள்ளை (பரத்தை)க் காட்டி எப்படி அன்போடு சுவீகரித்து இருக்கிறான்!
மிளகுமுப் பளக்கு மடியவர்பால் நெஞ்ச
மிளகுமிம் மருந்து திருவுளூரில் துஞ்சும்
அளவுமிப் படியென் ரளக்குறாத அண்ணல்
முளரியொப் புவசு மதிமணந்த திங்கே! -5-சந்தம்: கருவிளம் மா கருவிளங்காய் மா
மிளகும் உப்பும் தரும் அடியவர்க்காக நெஞ்சம் இளகும் மருந்து ஒன்று திரு எவ்வுள் ஊரில் தூங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அண்ணலை, எண்ணிக்கையால் அளக்க முடியாது (அத்யதிஷ்ட தஷாங்குலம்). அவன், வசுமதியை வரித்த ஊர் இதுவே!
வடலூர் இராமலிங்க அடிகளார் இப்பெருமாள் மீது பக்தி கொண்டு திருப்பஞ்சகம் என்னும் ஐந்து பாக்களைப் பாடியுள்ளார்.
‘பாண்டவர் தூதனாக பலித்ருள் பரனே போற்றி
நீண்டவனேன்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி
தூண்டலில்லாமல் வோங்குஞ் சோதி நல் விளக்கே போற்றி
வேண்டவ ரெவ்வுள்ளூர் வாழ் வீர ராகவனே போற்றி’
————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply