அவதாரிகை
இப்படி இவருடைய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டு
பகவத் அனுபவ அர்த்தமாகவும்
(இசைவித்து உனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
நின் கண் வேட்க்கை ஏழுவிப்பேன்
அனுபவத்துக்கும் -உம்மை ப்ரீதி காரித கைங்கர்யத்துக்கும்
இவற்றை ருசி காற்றிய ஆழ்வார் அருளிச் செயல்கள் உண்டே )
தேசாந்தரத்திலே பாகவத விஸ்லேஷம் பொறாத படியான
இவருடைய ஞான வை லக்ஷண்யம் கண்ட அன்புடையார் சொன்ன பாசுரத்தை
பொருள் வயிற் பிரியலுற்ற
தலைமகன் பிரிவாற்றாத தலைமகள் வேறுபாடு கண்டு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
(விலக்ஷண ஞானம் பாகவத ஸம்ஸ்லேஷ அஸஹிஷ்ணுத்வம்
கண்ணபுரம் ஓன்று உடையோருக்கு வேறு ஒருவருக்கு உரியேனோ ஞானம்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -விலக்ஷண ஞானம்
கேட்டு அல்லிக் கமலக் கண்ணன் ஆவான் அன்றோ )
அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-
பாசுரம் -11-அறியான யாம் இன்று காண்கின்றன -பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு
தலைவன் உரைத்தல் –மாலுக்கு வையம் -6-6-
பதவுரை
யாம் இன்று காண்கின்றன–நாம் இப்பொழுது பார்க்கின்றவை
அரியன–(உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை;
கண்ணன் விண் அணையாய்–எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே!
பெரியன காதம் பிரிவு–அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது
பொருட்கோ–பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’
என–என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க
(அவ்வளவிலே)
ஞாலம் எய்தற்கு உரியன–எல்லாவுலகங்களையும் தம் வசப்படுத்திக் கொள்ளக்கூடியவையாயும்
ஒரோ குடங்கைப் பெரியன–தனித்தனி ஒரு அகங்களையவ்வளவு பெரியவையாயுமுள்ள
கெண்டை குலம் இவை–கெண்டை மீன்களின் இனமான இக்கண்கள்
ஒள் முத்தும் பை பொன்னும் ஏந்தி–(பிரிவாற்றாமையால் வந்த கண்ணீர்த் துளிகளாகிய அழகிய முத்துக்களையும்
(பசலை நிறமாகிய) பசும் பொன்னையுங் கொண்டு
வந்து பேர்கின்ற–(என் முன்னே) வந்து உலாவுகின்றன;
ஓ–இது என்ன வியப்பு!.
உரை
அரியன யாமின்று காண்கின்றன
நாட்டில் அரிதாய் இரா நின்றதீ
நாங்கள் இன்று காண்கின்றன
கண்ணன் விண்ணனையாய்
கிருஷ்ணனுடைய பரமபதம் போலே
நிரதிசய போக்ய பூதை யானவளே
(கண்ணனுக்கு அடங்கிய சரக்கு அனைத்தும் தானே )
பெரியன காதம் பொருட்கோ பிரிவென
அதி தூரங்களான காதங்களில் பொருளுக்காகவோ நினைத்தது
ஞாலம் எய்தற்குரியன
ஸர்வ லோகத்தையும் தன் வசம் ஆக்கத் தக்கவையாய்
வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி
ஆற்றாமையால் வந்த அஸ்ரு பிந்துக்களாகிய முத்துக்களையும்
பயப்பாகிற அழகிய பொன்னையும் ஏந்தி
ஒரோ குடங்கைப் பெரியன
தனித் தனியே ஒரு சிறாங்கை போலே பெருத்து இருப்பன
கெண்டைக் குலம்
1-குளிர்த்தியாலும்
2-மிளிர்தலாலும்
3-ஓடுதலாளாலும்
கெண்டையோடே சமமான குலம் என்னும்படி
இவை
இக் கண்களானவையோ
வந்து பேர்கின்றவே
என் முன்னே வந்து உலவா நோன்றன
ஓ
இது என்ன ஆச்சர்யமோ
அரியன யாம் இன்று காண்கின்றன என்று அந்வயம்
இத்தால்
அரியன யாம் இன்று காண்கின்றன -என்று
இவருடைய ஞான வை லக்ஷண்யம் ஓரு இடத்திலும் காண அரிது என்றபடி
(மாதா பிதா -ஆளவந்தார்
ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம்
ஜகத் காரணம் ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமே
வாஸா -விவகாரத்துக்கு பரிணாமம் ரூபம் நாமம்
ஸர்வம் ப்ரஹ்மம்
நிர்ஹேதுக கிருபா விசேஷத்தாலே மதிநலம் அருளப்பெற்றவர் அன்றோ
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-)
கண்ணன் விண் -என்கையாலே
பரமபதமும் ஓர் மாயையினால் போந்த கிருஷ்ணனது என்றபடி
விண் அனையாய்
பரம வ்யோமம் போலே
1-அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
2-அப்ராக்ருதத்வத்தையும்
3-ஆனந்தாவஹத்வத்தையும் -உடையவர் என்றபடி –
(எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் பக்த அம்ருதம் தொண்டர்க்கு அமுதம் அன்றோ )
பெரியன காதம் பொருட்கோ பிரிவென -என்று
புருஷார்த்த ஸித்த்யர்த்தமாக தேசாந்தர கமனம் பண்ண வேணுமோ என்றபடி
ஞாலம் எய்தற் குரியன -என்கையாலே
ஸமஸ்த விபூதியையும் விளாக்குலை கொள்ளும்படியாய் இருக்கை
(சூழ்ந்து அதனில் பெரிய அவா அன்றோ இவரது )
வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி -என்கையாலே
விலக்ஷணமான நித்ய முக்த்தாகாரத்தையும்
ஹிரண்மயமான ஈஸ்வர விக்ரஹத்தையும்
தன்னுள்ளே பிரகாஸிப்பிக்கை
(சர்வஞ்ஞத்வமும் இவருக்கு உண்டு என்றபடி
கண்ணுள்ளானே இவனும்
அனைவரும் பிரதிபலிப்பார்களே )
ஒரோ குடங்கைப் பெரியன -என்கையாலே
ஏவம்விதமான மஹாத்ம்யத்தை யுடைத்ததே யாகிலும்
அன்பர்களுக்கு சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி இருக்கை
கெண்டைக் குலம் -என்கையாலே
ஸ்ரீ நாயனாபமாய்
பிரளய ஆபத் சஹமான பிரதம அவதாரத்திலே
அவஹாகித்தமை தோற்றி இருக்கை
இவை-என்கையாலே
ஞானத்தை அபரோஷித்து அனுபவிக்கலாம் படி இருக்கை
வந்து -என்று
ஆசையுடையோர் சென்று அனுபவிக்கை அன்றிக்கே
தானே வந்து
ஆசையையும் அவர்களுக்கு உண்டாக்கும் என்கை
பேர்கின்றவே-என்று
அதற்கு அடியான பரம்புதலை ஸ்வ பாவமாக யுடைத்தாய் இருக்கும் என்றபடி
இவ் விடத்து
இவையோ பேர்கின்றவே என்று
பன்மை
ஞானத்தின் வ்ருத்தி பேதத்தை நினைக்கிறது
இப்படி அன்புடையவரான பாகவதருடைய
ஸ்லாகா வசனத்தை வெளியிட்டு அருளினார் ஆயிற்று –
———
தாத்பர்யம்
இப்பாசுரத்தில் பாகவத விஸ்லேஷம் ஒரு ஷணமும் பிரியாமையை ஸஹியாத ஆழ்வாரைக்
கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
தனம் அர்த்தமாக பிரிந்த நாயகனைக் கண்ட
நாயகியின் அவஸ்தையைக் கண்டு உரைத்த நாயகன் பாசுரமாய் இருக்கிறது
அத்யந்த போக்யமாய் உள்ள ஓ நாயகியே
நான் இன்றைக்கு ஒருநாளும் காணாத அத்புதம் கண்டேன்
சிலர் என்னிடத்தில் பொருளின் பொருட்டு பிரிவதைச் சொல்ல
நான் அவர்களை நிஷேதியாமல் இருக்க
நானும் பிரிந்தேன் என்று எண்ணி அவ்வளவிலேயே
நெடுதூரம் பிரிந்த நாயகி போல் படுகிறாய்
நான் உன்னை விட்டுப் பிரிய வல்லேன் அல்லேன்
உபய விபூதியும் கண்டு ஆசைப்படும்படி-அனுபவத்து விஸ்வமயமாகும் படி
கண்ணீர் உகுத்து திரு மேனியும் வை வர்ணம் அடைந்து
ஒவ்வொரு சிறங்கை அளவு உள்ள உன்னுடைய கண்கள் பெரிய இரண்டு மத்ஸ்யங்கள் துள்ளுவது போல்
நின்ற நிலையில் நில்லாமல் சலிக்கிறதே
இது என்ன ஆச்சர்யம்
——————————
நம்பிள்ளை ஈடு அவதாரிகை
தலைமகளோடே கலந்து பரிமாறா நிற்கச் செய்தே
நடுவே போது போக்காக
நாட்டிலிலே சிலரைச் சிலர் பொருளுக்காகப் பிரிவர் காண் -என்று ப்ரசங்கித்தார்கள்
அத்தை இவன் கேட்டு
நாம் பிரிந்தோம் அல்லாமாகில்
நமக்கு இது குற்றமாகப் புகா நின்றதோ என்று
இத்தை நிஷேதியாதே அனுமதி பண்ணினான்
இத்தை இவன் அனுமதி பண்ணின போதே பிரிய நினைத்து அன்றோ செய்தது என்று விக்ருதையாக
அத்தைக் கண்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது –
வியாக்யானம்
அரியன
இவை சால அரியவாய் இருந்தன
ஸம்போக மத்யே பிரிவை நினைக்கை சால அரியது ஓன்று இறே
இப்பெரிய திருநாளிலே இது ஒரு திரு ஏகாதசி எங்கே தேடி எடுத்தி கோள் -என்று பட்டர் அருளிச் செய்தார்
நீ நினைத்த ஸாஹஸத்தை நாம் போய் அனுஷ்ட்டித்தாலும் கிடையாதது ஒன்றாய் இருந்ததே
இது சாலப் பெறுவதற்கு அரிதாய் இருந்ததீ
யாம்
உன்னாலே உன்மஸ்தக போகங்களையும் புக்கு அனுபவிக்கிற நான்
இன்று காண்கின்றன
நீ அதிசங்கை பண்ணுகிற இப்பிரிவுக்கு முன்பேயும் சில பிரிவுகள் உண்டு இறே
அவற்றிலும் கண்டிலோமீ இவை
இத்தை ஐந்தாம் பிரிவு என்னக் கடவது இறே
அநந்தரம் வார்த்தை இறே
கண்ணன் விண்ணனையாய்
ஒரு தேச விசேஷங்களிலே
ஸமஸ்த போகங்களையும் பெற்று புஜிக்கிறான் ஒருவன் ஒன்றேயாய்
அது தான் அகஞ்சுரிப்பட்டு மற்றவை இன்றிக்கே இருக்குமத்தை நினைக்கும் அன்று அன்றோ
உன்னோடே கூடினவன்று ஓர் இடத்தை நினைப்பது
தேவ தாவத் ஸர்வார்த்த ஸித்திஸ் ஸ்யாத் -என்கிறபடியே ஸ்வத யுண்டாயிற்று அது
ஒரு நாளும் அழியக் கடவது அன்றிக்கே இருந்துள்ள அபஹத பாப்மத்வாதிகளை உடையவோடு ஓக்கத் தானும்
அபஹத பாப்மத்வாதிகளைப் பெற்று அனுபவிக்கிறவன்
இவற்றுக்குத் திரோதானம் பண்ணக் கடவதான ஸம்ஸாரத்தை ஸ்மரிக்குமோ
பெரியன காதம்
அஸங்கயேயமான காதமாகப் புக்கதாயிற்று
பிரிவைப் பிரசங்கித்தவாறே காதல் நெடிதாகப் புக்கது
பொருட்கோ பிரிவென
ஷூத்ர ப்ரயோஜனங்களுக்காகச் சிலரைச் சிலர் பிரிவார் காண் என்று இங்கனே சிலர் பிரசங்கித்தார்கள் போலே
இவனும் அத்தைக் கேட்டான் போலே
பொருள் அதிகாரத்தைக் கிழித்துப் பொகடப் போகாதே இவனால்
போய்ப் படைக்கும் பெரும் பொருளை த்யாஜ்யம் என்று இருந்தானாகில்
———————————
இப்படி பாகவதர்
ஸ்லாகிக்கைக்கு அடியான பகவத் ப்ராவண்யத்தாலே
தத் விஷயத்திலே அபி நிவிஷ்டமாய்
தன் திரு உள்ளம் கைகழிந்த படியாலே பிறந்த ஸைதில்யத்தை
தலைவி தன் ஆற்றாமை கூறிய பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-
பாசுரம் -12-பேர்கின்றது மணி மாமை -தலைவன் பிரியப் பெற்ற தலைவி
தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் –மாசறு சோதி -5-3–
பதவுரை
மணி மாமை–(எனது) அழகிய நிறமானது
பேர்கின்றது–விகாரப் படா நின்றது;
பிறங்கி அள்ளல் பயலை–விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது
ஊர்கின்றது–மேன் மேல் பரவா நின்றது;
கங்குல்–இராப் போது
ஊழிகளே–அனேக கற்பங்களாக நின்றது;
இது எல்லாம் இனவே–இத் தன்மையுள்ள இவை யெல்லாம்
ஈர்க்கின்ற சக்கரத்து–(கொடியோரை) அறத்திடுகிற திருவாழியை யுடைய
எம்பெருமான் கண்ணன்–எனது தலைவனான கண்ணபிரானது
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயிலே
சார்கின்ற–ஆசைப்பட்டுச் செல்கின்ற
நல் நெஞ்சினார்–(எனது) நல்ல மனம்
தந்து போன–(தான் செல்கிற போது எனக்குக்) கொடுத்து விட்டுச் சென்ற
தனி வளமே–ஒப்பற்ற செல்வங்களாம்.
பேர்கின்றது மணியாமை
நன்றான மாமை நிறமானது வேறுபடா நின்றது
மாமை -என்று
ஸ்த்ரீகளுடைய நல் தோலின் நிறம்
பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது
மேன்மேலும் கிளர்ந்து செறிந்த வை வரண்யமானது பரவா நின்றது
கங்குலூழிகளே
ஒரு இராத்ரி அநேக கல்பங்களாகப் பரிணயியா நின்றது
இதெல்லா மினவே
இவை எல்லாம் இப்படியே யானது
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன்
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும்படியான திருவாழியைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டு
எனக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய
தண்ணம் துழாய்
ஸ்ரம ஹரமாய்
தர்ச நீயமான
திருத் துழாயிலே
சார்கின்ற நன்னெஞ்சினார்
அபி நிவேசித்துப் போருகிற ஸ்நேஹோத்தரமான நெஞ்சினார்
அத் தலையில் ஆஸக்தி யடியான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்லுகிறாள்
தந்து போன தனி வளமே—
போகிற தசையில் நமக்குத் தந்து போன நிரதிசய ஐஸ்வர்யம்
என்று பாங்கியைக் குறித்துத் தன் ஆற்றாமை சொன்னாள் ஆகவுமாம் –
இத்தால்
பகவத் விஷயத்தில் இவர் நெஞ்சு
அபி நிவிஷ்டமாய்ச் சென்றதடியாக
பேர்கின்றது மணியாமை -என்று
ஸ்வா பாவிகமான ஸ்வரூப ஆகாரமும் குலையும்படியாய்
பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது -என்று
அபி நிவேச விகாரங்கள் அபி விருத்தமாய்
ப்ரசரிக்கும் படியாய்
கங்குலூழிகளே -என்று
மோஹ அந்தகாரம் நடக்கும் காலமானது
விளம்ப அஷமத்வத்தாலே கல்ப கோடியாய்
ப்ரதிபாதியா நின்றது
(பக்தி பாரவஸ்யத்தாலே இவருக்கு
நமக்கு அஞ்ஞானத்தாலே
காலைப் பூசலும் மாலைப் பூசலும் உண்டே
இரவாக ஆளவந்தார் நிர்வாகம்
முற்கூற்றில் இருந்து பிற்கூற்றாக வந்தமை எம்பெருமானார் )
இதெல்லா மினவே-
இது எல்லாம் இப்படி யானது
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் -என்று
விரோதி ஸமர்த்தமான திருவாழியையும்
தெம்பெருமான்
ஒழிக்க ஒழியாத ஸம்பந்தத்தையும்
கண்ணன்
ஆஸ்ரித பவ்யத்தையும் யுடையனான
கிருஷ்ணனுடைய
தண்ணம் துழாய்
நிரதிசய போக்யதா ஸூசகமான மாலை அழகிலே
சார்கின்ற நன்னெஞ்சினார்
அநு ரக்தமான நெஞ்சானது
தந்து போன தனி வளமே
தந்து போன அத்விதீயமான ஸம்பத்து இறே என்று
அனுசந்தித்தார் ஆயிற்று
ஸூஹ்ருத் பூதரை நோக்கி அருளிச் செய்தார் ஆகவுமாம் –
————-
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பகவத் ஸம்ஸ்லேஷம் பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தமாக இருக்குமோ பாதி
பகவத் விஸ்லேஷமும் பாகவத விஸ்லேஷ பர்யந்தமாகவே இருக்கும் இறே
ஆகையாலே
தடாவிய அம்பிலே -பாசுரம் -6-
இவருக்குக் கீழ்ப் பிறந்த பகவத் விஸ்லேஷமானது
இப்பாட்டு அளவும் வர
பாகவத விஸ்லேஷமும்
காதாசித்கமாக ஸம்ஸ்லேஷம் உண்டாயிற்றாகில்
அவர்களோடே கூட அவனை அனுபவிக்கப் பெறாமையாலே
2-3-1-முதல் பாட்டில் அனுபவமும் போனதே
ஆர்த்தி உடன் தலைக்கட்டிற்றே
(அவர்கள் விஸ்லேஷிக்கில் செய்வது என் எனது அதிசங்கையாய்ச் சென்றது
அது தானும் போய்
11- அரியன யாம் பாசுரத்தில்
பாகவத விஸ்லேஷம் பற்றி அதி சங்கை சொல்லி
இதில் பகவத் விஸ்லேஷ ஆற்றாமை வந்ததால்
கீழே பாகவதர்கள் பிரிந்து போக மாட்டோம் என்று சொல்லி
வரிகளுக்கு நடுவில் உள்ள அர்த்தம்
முதல் பாட்டில் பிறந்த பகவத் ஸம்ஸ்லேஷம் அபி நிவேசம் மீண்டும் தலை எடுக்கிறது இதில்
இங்கனம் அல்லை யாகில் இரண்டும் புருஷார்த்தம் ஆகாவே
பூஜ்யம் ஓன்று இரண்டையும் கொண்டே binary கணிதம்
அது போல் அல்லவே இங்கு
பகவத் சேஷத்வமும் பாகவத சேஷத்வமும் ஒன்றை ஓன்று பிரியாமல் விடாமல் இருக்கும்
பகவத் சம்ச்லேஷம் ஏற்பட்டு பாகவத சம்ச்லேஷம் விரும்பலாம்
அடியாருக்கு ஆட்படுத்தி அருள் என்று பிரார்த்திக்கலாம்
என் அப்பனில் -என்று சொல்லி மேல்
முடிவில் உண்டான பாகவத ஸம்ஸ்லேஷம் இல்லாத அன்று
கீழ் உண்டான பகவத் ஸம்ஸ்லேஷமும் போவதற்கு ஹேது
இந்த பகவத் ஸம்ஸ்லேஷம் தான் -பாகவதர்கள் உடன் கூடின அன்று தான்-அல்லது ஒன்றாய்த் தலைக் கட்டாதே
அது போன அன்றே இதுவும் போகுமே
main switch போட்டு தான் ஒன்றை உபயோகிக்கலாம் -சார்ந்தே இருக்கும்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று இவர்கள் உடன் கூடி
அவனை அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த பகவத் சம்ஸ்லேஷமும் குலைந்து போனதே )
(நம்பிள்ளை ஈட்டில் -ஊனில் வாழ் உயிரிலே -2-3- 1/10/11 பாசுரங்களையும் சேர்த்து –
களிப்பும் கவரவும் அற்று விளக்கி உள்ளார்)
(ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–
கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா!
நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7-
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9-
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-
குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-
(பகவத் ஸம்ஸ்லேஷம் பெற்று ஏக ரஸமாகக் கலந்து –
குலைந்து
ஆற்றாமை யுடன் தலைக்கட்டிற்றே ‘களித்தேனே’ என்றவர்,
மீண்டும், ‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்
‘கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.
மாயப்பிரான் தானே–மாயப்பிரான் அடியார்கள் – பாகவத ஸம்ஸ்லேஷம் அளிக்க வேண்டும்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–என்று பலன் சொல்லித் தலைக்காட்டுகிறார்
குழாங்களாய் –
என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி,
குழாம் தேட இராதே,
முற்படவே திரளாக இழியப் பாருங்கள்.
அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் –
அவன் பக்கலிலே நிக்ஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும்
நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே,
நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.
(ஆடுகை -அவகாஹியாய் -அனுபவிக்கப் பாருங்கோள் -என்றபடி )
அவனைப் பிரிந்த பிரிவு தோற்றாத படி
ஸ்மரிப்பித்து
ஆஸ்வசிப்பித்தி
போந்த இவர்கள் போய் நின்ற வாறே -இவர்கள் விலகினால் -பழைய பகவத் விஸ்லேஷமும் கிட்டும்
பத்து மாதம் பிரிந்த சீதை
திருவடி கண்டு மகிழ்ந்து
திரு கணையாழி கண்டு அவனையே கண்டது போல் மகிழ்ந்து
போன பின்பு பிறந்த ஆற்றாமை போல் இங்கும் இருந்தது
கணையாழி கையிலே இருந்தாலும் நோவு பட்டாள்
அன்றோ அங்கு
வியாக்யானம்
அனுகூல பதார்த்தங்களும் இப்பொழுது அவனை நினைவூட்ட -அவை நலிய
உன்னாலே தானே வந்தது என்று தோழியைக் கோபித்து
பின்னும்
இவளை வெறுப்பது என்
அவள் சொல்ல மெய் என்று கைக் கொண்ட நெஞ்சு அன்றோ என்று அத்தோடு கிலாய்க்கிறாள்
அவள் குண கீர்த்தனம் பண்ண அத்தை மெய் என்று நினைத்தது நெஞ்சின் குற்றமே என்று கிலாய்க்கிறாள்
கிட்டின போது நிறமானது மேலே மேலே ஒளி வீச
ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்துக்கு யோக்கியமான இவள் நிறம்
அவன் போன போது அத்தைக் கொண்டு ஜீவித்தோம்
அதுவும் மாறிற்றே
இளைய பெருமாள் சுக்ரீவனுக்கு பெருமாள் பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமையை சொன்னது
சுந்தர காண்ட ஸ்லோகம் –
வார்த்தை செவியில் பட பிரபை குறையத் தொடங்கிற்று
பெருமாள் அளவு அல்ல சுக்ரீவனுக்கு
செய்தியைக் கேட்டவுடன் இவனுக்கு அத்யர்த்தம் ஆனதே
பிராட்டி உடன் கூடியவாறே பெருமாளுக்குப் போகும்
இவனுக்கு கூடவும் வேணும்
பெருமாளுக்கு வர்ணமும் வர வேண்டும்
தான் ராஜ்ஜியம் மனைவி இழந்த போதும் பெற்ற இழவை பெருமாள் திரு உள்ளத்தில் போட்ட
பின்பு முகம் வெளுத்து இருந்ததே
பின்பு இளைய பெருமாள் பிராட்டி பிரிவால் பெருமாள் பட்ட பாட்டை சொல்லக் கேட்டு
கிரகத்தால் பீடிக்கப்பட்ட அம்சுமான் -சந்திரன் போலே ஆனதாம்
காண்கிற போதே ஹர்ஷம் மேலே மேலே யாமா போல் இங்கு நிறம் போகிற படி
இவை போனதும் இருள் சூழ்ந்து கொண்டதே
விஷம் போலே ஒரே யாத்ரி அநேக கல்பங்களாக உருக்கொண்டதே
இவை எல்லாம் –
சந்திரன் அன்றில் தென்றல் போல் அனைத்தும்
என் நெஞ்சினார் கொடுத்துப்போன இவை
கலந்து பிரிந்தவர் தந்தது அல்ல
அவரோடே கூட போன நெஞ்சினார் கொடுத்த
சந்தான சாபம் போல் வைத்துப் போனதே
யுகாவாதாரை ஆண்மையால் அழிக்கும்
உகந்தாரையும் அழகாலே அழிக்கும்
கையும் திருவாழி யுமான அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டான்
சக்கரம் பிடித்த கண்ணன்
மறைத்துப் போக சொன்ன தேவகி -இங்கு கம்சன் போல்வார் இல்லையே
காணில் முடிப்பான் அவன்
காணாத போது முடிவார் இவர் போல்வார்
தோளில் சாத்தின துழாயில் ஈடுபட்ட நல் நெஞ்சு அங்கெ சார்ந்தது
நாம் கண்டது அடங்கலும் பகையாக்கிக் கொண்டு இங்கே இருந்தோம்
என்னைப் போல் இல்லாமல் நெஞ்சு துணிந்தார்
துணிந்தாருக்கு அல்லது பேறு இல்லையே –
ஸ்ரீ சுக ப்ரஹ்ம ருஷி வேத வியாசர் பக்கலில் சென்று
ப்ரஹ்ம பிராப்தி உபாயம் பிரார்த்தித்த அளவிலே
எனக்கு ஞானம் மட்டுமே உண்டு
எனது சிஷ்யர் ஜனகனுக்கு சால அத்யவசாயம் உண்டு என்று சொல்ல
அவன் இடம் கேட்ட இடத்து
விவசாயம் -திட அத்யாவஸ்யம் தவிர வேறே ஒன்றும் இல்லை -மோக்ஷ தர்மம் ஸ்லோகம்
துணிவைத் தவிர வேறே உபாயம் இல்லையே
நாம் பழிக்கு பயந்து இருந்தோம்
அது மேல் விழுந்து வாழ்ந்து போனார்
நல் நெஞ்சினார்
பாரதம் சாந்தி பர்வ–334-47-என்று
துணிவே ஒழிய வஸ்துவை லபிக்கைக்கு ஒரு விரகு இல்லை காண் என்றான் இறே
நாம் பழிக்கு இறாய்த்து நின்று கிலேசப்படா நின்றோம்
அவர் மேல் விழுந்து வாழ்ந்து போனார்
தம் தாம் வயிற்றிலே பிறந்தார்களே யாகிலும் பகவத் ப்ரத்யா ஸந்தரை கௌரவிக்க வேணும் இறே
தந்து போன
சிலர் ஜீவிக்கப் புக்கால்
பித்ராதிகளை அழைத்து வாழ்விக்க கடவர்கள் இறே
தனி வளம்
அவர் நமக்கு வைத்துப் போன ஒப்பில்லாத ஸம்பத்து
அதாகிறது
அவர் தாம் வந்தாலும் இது போக்க ஒண்ணாதே –
————–
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
கண்ணன் கலந்த போது உள்ளம் பத்து ஆர்க்கும் இல்லையே
இப்போது உனக்கு என்ன குறையாய் இப்படிப் படா நின்றாய்
எதைத் தந்து போயிற்று உன்னெஞ்சில் அவனில் என்று ஊரார் கேட்கச் சொல்கிறாள்
பேர்கின்றத்திலே –
வியாக்யானம்
மணியாமை
மணி மாமையாவது
ஸ்த்ரீக்கு யவ்வன ப்ராதுர் பாவத்தில் உள்ள ஒளி பெற்ற நிறம்
அது போயிற்று
பேர்கின்றது
அது வேறுபடா நின்றது
அந்நிறம் போன இடம் பாழ் கிடவாமே
பிறங்கி யள்ளல் பயலை
மேல் மேல் வளர்ந்து வருகிற வை வர்ணமானது
ஊர்கின்றது
பரவா நின்றது
கங்குலூழிகளே
ஒரு ராத்ரி அநேக கல்பங்களாக பரிணமியா நின்றது
இதெல்லா மினவே
இத்தோடு என்னில் உள்ளது எல்லாம் இப்படியே யாயிற்று
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான்
அன்று கையும் திருவாழியுமான சேர்த்தி அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
கண்ணன்
எனக்கு அதி பவ்யமானவன்
இப்போது தன் பிரிவால் என்னை ஈர்கின்றான் -வதியா நின்றான்
அப்போது அத்யந்த அனுகூலமான தானும்
தன் பரிகரமும்
தன் சம்பந்தமும்
இப்போது அதி ப்ரதிகூலமாய் என்னைக் கொல்ல வேணுமோ
அவனுடைய
தண்ணம் துழாய் ஈர்கின்ற
அவன் பிரதிகூலித்த இப்போது
அவன் சாத்திக் கொண்டு இருக்கும் குளிர்ந்த திருத்துழாயைப் பெற ஆசைப்படா நின்றார் பாருங்கோள்
சார்கின்ற நன்னெஞ்சினார்
இந்நெஞ்சு இப்படி ஸ்வ தந்திரமான பின்பு என்னால் தான்
என் நெஞ்சினார் என்ன வேண்டிற்று
தந்து போன தனி வளமே
என் நெஞ்சு தான் என்னை விட்டுப் போம் போது எனக்குத் தந்த
அத்விதீய ஸம்பத்தானது இது என்கிறார் –
தந்து போன தனி வளமே என்று –
—-
தாத்பர்யம்
தம்முடைய திரு உள்ளம்
பகவத் ப்ராவண்யம் அடைந்து அத்தாலே
பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிட்டாத-அஸஹ்யமாய் -பிறந்த ஸைதில்யம்
நாயகன் விரஹம் -நாயகி -சேர்ந்த நாயகன் இங்கு
கையும் திருவாழியுமாக சேவை சாதிக்க
அவன் சாத்தி அருளிய திருத்துழாயை ஆசைப்பட்டு அவன் பின்னே நெஞ்சு போக
தேக சவுந்தர்யாதிகள் அழிந்து
அது போனதால் இது வந்ததால் கொடுத்துப் போனதாக சொல்கிறார்
சூர்யன் இருளை பரிசாகக் கொடுத்து போனது போல்
சரீரம் வெளுத்து வைவர்ணயம் அடைந்தது
மற்றும் உண்டான தென்றல் முதலியவையும் பாதிக்க
இப் பாதகங்கள் எல்லாம்
ஒரு இரவு பல கல்பங்களாக பெருகத் தொடங்கிற்றே
நெஞ்சுடன் ஸஹவாசத்துக்கு நான் பெற்ற பலனே இது
———————
அவதாரிகை
இப்படி பகவத் லாபம் அடியான ஆர்த்தி அதிசயத்தாலே
தம்முடைய விவேகமும் குலைந்து (பகல் மறைந்து )
மோஹ அந்தகாரமும் விஞ்சி
ஸ்வ பாக ஸைதில்யமும் பிறந்து
விளம்ப அஷமதை அடியாக ரக்ஷக அபேக்ஷை பிறந்த ஆகாரத்தை
பிரிவாற்றாத் தலைமகள்
இருளாலும் வாடையாலும் ஈடுபட்ட உரைத்த பாசுரத்தாலே
அனுசந்தித்து அருளுகிறார்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய-இத்யாதியாலே –
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-
பதவுரை
தனி வளர்–ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள
செங்கோல்–(தனது ஒளியாகிய) அரசாட்சியை
நடாவு–(எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற
தழாய்வாய் அரசு–உஷ்ணத்துக்கு வாய் ஸ்தானமான வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன்
அவிய–ஒழிய
பனி வளர் செங்கோல் இருள்–(ஜனங்களுக்கு) நடுக்கத்தைச் செய்கின்ற ஆட்சியையுடைய இருளாகிய சிற்றரசு
பார் முழுவதும்–பூமி முழுவதும்
வீற்றிந்தது–அரசு வீற்றிருந்தது;
இனி–இனி மேல்,
நுனி வளர் காதல்–துன்பத்தை அதிகப்படுத்துகிற என் ஆசைக்கு இலக்கான
துழாயை–(தலைவனது) திருத்துழாய் மாலையை
துழாவு–அளைந்து வருகிற
தண் வாடை–குளிர்ந்த காற்றை
தடிந்து–தண்டித்து (அழித்து)
வளை–(பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத்தொடங்கின) வளைகளை
காப்பவர்–கழலவொட்டாது தடுத்துப் பாதுகாப்பவர்.
ஆர்–யாருளர்?
(எவருமில்லை.)
ஊழிகள்–(கற்பக வடிவங்கொண்ட இராத்திரிகள்
எனை–என்னை
ஈர்வன–பிளக்குந்தன்மையுடையன.
உரை
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
தன்னுடைய தேஜஸ்ஸிலே அல்லாத தேஜஸ் பதார்த்தங்கள் அடைய மறையும்படி
அத்விதீயமாய்க் கொண்டு வளருவதான
தன்னுடைய பிரகாசத்தை எங்கும் ஓக்க நடத்துவானாய்
உஷ்ண கிரணன் ஆகையாலே ப்ரதாப உத்தரரான ஆதித்யன் அஸ்தமிக்க
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
விரஹி ஜனங்களுக்கு நடுக்கத்தை வளர்கிற நிலையை யுடைத்தான
அந்தகாரமானது
லோகம் அடையத் தன்னுள்ளே யாக்கிக் கொண்டு
தன் பெருமை தோற்றும் படி இருந்தது
பனித்தல்
துளிர்த்தலும்
குளிர்த்தியுமாய்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
துக்கத்தை வளர்ப்பதான காதலுக்கு விஷயமான திருத்துழாயை
அளைந்து வருகிற குளிர்ந்த வாடையைத் துணித்து
இனி வளை காப்பவர் ஆர்
ரக்ஷக ஸந்நிதி இன்றியே
பாதக ஸந்நிதி யுண்டான பின்பு
கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்
எனை வூழிகள் ஈர்வனனே
கல்ப ஆகரைகளான ராத்ரிகள் என்னை ஈரா நின்றன
ஆகையாலே என்னைக் காக்க ஒண்ணாது என்று கருத்து
1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ
2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ
3-வறுத்துகிற வாடை காக்கவோ
4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று –
(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )
இத்தால்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
இவருடைய அனுபவ அலாப கிலேசத்தால் ஆதித்ய பிரகாசம் போலே
அத்விதீயமாய் அபி வ்ருத்தமாம் படி ஈஸ்வர ஆஜ்ஜை நடத்துவதால்
பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசனத்தாலே பிரதாப உத்தரமான விவேகத்தை யுடைய
ஸ்வரூபமும் (அனுபவ அலாப கிலேசத்தாலே ) அஸத் ஸமமாம் படி
(யத்கோஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)
(சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!)
(ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -83-)
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
அபிமத அலாபம் அடியான ஆந்த்யத்தை (அறியாமையை ) வர்த்திப்பிக்கிற
பெருமையை யுடைத்தான
மோஹ அந்தகாரமானது
ஈசேஸீ தவ்ய விபாகமறத் திரோதானம் பண்ணுகையாலே தானேயாய் விட்டது
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்க அபி வர்த்தகமான அபி நிவேசத்துக்கு விஷயமான பகவத் போக்யதைக்கு
ஸ்மாரகமாய்க் கொண்டு ஸஞ்சரிக்கிற
சீதாதி துக்க ஜனகமான பாதக பதார்த்தத்தை விலக்கி
இனி வளை காப்பவர் ஆர்
பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை
இனிக் கழலாமல் நோக்குபவர் யார்
(கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் )
எனை வூழிகள் ஈர்வனனே
விளம்ப அஸஹத் வடிவமான கால தைர்க்யமானது ஸ்வரூப சத்தையையும்
அழிக்கத் தேடா நின்றது
என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –
——-
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ராத்திரியும் மற்றும் ஸ்மாரக பதார்த்தங்கள் எல்லாம் பாதகமாம் படியைச் சொல்லிற்று இறே கீழ்
இதில் அந்த ராத்ரி தானே அற இருண்டு
பாதக பதார்த்தங்களும் தனித்தனியே வந்து நலிய
அவற்றின் கையிலே நோவுபட்டு
இவற்றின் படி இதுவான பின்பு இனி நான் சத்தை கொண்டு ஜீவிக்கை என்று
ஓன்று உண்டோ என்று நோவு படுகிறாள்
வியாக்யானம்
வீற்று இருந்தது பார் முழுதும்
பனியை விஜ்ரும்பிக்க வற்றான சக்தி யுள்ள தமஸ்ஸானது லோகம் எங்கும்
தானே தானாய் ஸ்திரப்ரதிஷ்டித்தமாயிற்று
இதுக்கு மேலே
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்கத்தை வளர்ப்பதாக காதலுக்கு விஷயமான திருத்துழாயை அளைந்து வருகிற
குளிர்ந்த வாடையால் ஸோஷிதையாய் க்ருசையானேன்
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
இப்படியான பின்பு கை கழலத் தேடுகிற வளை கழலாத படி பண்ணுவார் யார்
இக் கங்குலும் எத்தனை கல்பமாய் என்னைப் பாதியா நின்றதே என்கிறாள் தலைமகள்
இவளை என்கிறாள் தோழி
இப்படி இருவகையால்
ஞான சூன்யரோடும் அஞ்ஞரோடும் இருப்பு அஸஹ்யமாய்
அவனைப் பிரிகையாலே அனுகூலரும் பாதகராவாரும் விடுவாருமாய் நோவு படுகிறாள் –
———
தாத்பர்யம்
ஆழ்வார் தமக்கு சம்சாரம் அஸஹ்யமான படியை –
காலம் குறித்துப் போன சமயத்தில் வருவதாகச் சொன்ன நாயகன் வாராமையைக் கண்டு
வருந்திய நாயகியின் பாசுரத்தால் பேசுகிறார்
பகல் காலத்தில் சூர்யன் நக்ஷத்ரங்களும் சந்திரனும் மறையும்படி
தனது கிரணங்களை வியாபிக்கச் செய்து சர்வ பதார்த்தங்களையும் பிரகாசிப்பிக்க
அவற்றைப் பார்த்துக் கொண்டு காலம் போக்கினோம்
இரவில் ஸூர்யனும் அஸ்தமித்து இருள் மண்டிற்று
குளிர் நடுங்க தொடங்கிற்று
இருள் பதார்த்தங்களை எல்லாம் மறைத்ததே
இதுக்கு மேல்
நான் ஆசைப்பட்ட திருத்துழாய் வாசனையை அளாவி வந்து வாடைக்காற்று என்னை நலிந்தது
இதனால் என் சரீரம் இளைத்து வளையல்கள் கழன்று போகவே
கழல் வளை கழலும் வளையானவே
நாயகனோ வரவில்லை
எனக்கு பாதகங்களான இவைகளைப் போக்கி நாயகன் வந்து ரக்ஷித்து அருளுவது எப்போதோ என்கிறாள்
————-
அவதாரிகை
இப்படி பகவத் அலாபத்தாலே ஈடுபட்டவருடைய ஞான வை லக்ஷண்யத்தைக் கண்டு
கொண்டாடுகிறவர் பாசுரத்தை
தலைவி கண் அழகு கண்டு வியந்த தலைவன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-
பதவுரை
ஈர்வனவேலும்–(பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும்–அழகிய சேல்மீன்கள் போலவும் உள்ளனவான
இவை-இவை
உயிர்மேல் மிளிர்ந்து–(எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல–(அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம்–தெய்வத் தன்மையை யுடைய
நல்–அழகிய
வேள்–மன்மதனுடைய
கணை–அம்புகளினுடைய
பேர் ஒளிய–சிறந்த ஒளியையே
சோர்வன–தாம் வெளியிடுவன
நீலம்–நீலமணியினுடைய
சுடர்–ஒளியை
விடு–வீசுகின்ற
மேனி–திருமேனியை யுடையனான
அம்மான்–எம்பெருமானது
ஊர் விசும்பு–திருநாடாகிய பரமபத்தை
தேர்வன–(தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல்–கொழுதத் கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ–(மோஹினியென்னும்) பெண் தெய்வத்தையொத்த உமது
கண்ணோ–கண்களோ?
வியாக்யானம்
ஈர்வன வேலும் அஞ்சேலும்
கூரிய பார்வையாலே எதிரியை அழிக்கையாலே வேல்களாயும்
நீர்மையின் மிகுதியாலே செல்லாமை தோற்றுகையாலே சேல்களாயும் இருக்கிற இவை
வேல் என்கையாலே
நாயக அநுராக ஜனகமாய்க் கொண்டு ஈடுபடுத்தும் என்றபடி
சேல் என்கையாலே
பிரிவில் தரியாமை தோற்றுகிறது
ஆக உபய அநுராகமும் பிரகாசித்ததாயிற்று
ஈர்வன வேலும் அஞ்சேலும் -என்று
பாதகத்வ
போக்யத்வங்கள் இரண்டும் உண்டான படி
உயிர் மேல் மிளிர்ந்து
பிராணனை வசீகரிப்பதாக ப்ரவர்த்தியா நின்று கொண்டு
இவை
கீழ்ச் சொன்ன ஆகாரங்கள்
அபரோஷிக்கும்படியான இவை
ஓ
இவற்றினுடைய வைச்சித்ர் யத்துக்கு ஆச்சர்யப்பட்ட படி
பேர்வனவோ அல்ல
உயிர் மேல் மிளிர்தல் தவிருமோ என்னில் தவிரா
அதுக்கும் மேலே
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
திவ்யமான ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையை யுடைய சரங்கள் ஆகிற
தாமரை நீலம் தொடக்கமான வற்றின் யுடைய மகத்தான பிரபையை
அனுபவியா நின்று கொண்டு காமுகதையை ஜநிபிப்பபவனாய் யுள்ளன
பேர் ஒளியே சோர்வன -என்று
ஒளியை பிரஸரிப்பன என்றுமாம்
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியுடைய ஸர்வேஸ்வரனதாய்
பரம வ்யோம ஸப்த வாஸ்யமான ஸ்ரீ வைகுண்டத்தையும்
தான் இட்ட வழக்காகக் கணிசியா நின்றன
இச் செழும் கயலே
தர்ச நீயமான ஸம்ஸ்தானத்திலே கயல்கள் என்று சொல்லலாம் படி இருக்கிற இவை
தைவம் அந் நீர கண்ணோ
தேவ மாயேவ நிர்மிதா -பால-1-27-என்கிறபடியே
திவ்ய ஆகாரைகளான உங்களுடைய கண்ணாய் இருக்கின்றனவோ என்று
வியந்து உரைத்தலாய் இருக்கிறது
இது பாங்கியுடன் தன்னைப் புனத்திடைக் கண்டு மதி யுடன்படுத்த தலைவன்
குறை நயந்து உரைத்தல் ஆகவுமாம் –
இத்தால்
இவருடைய ஞான வை லக்ஷண்யம்
ஈர்வன வேலும் அஞ்சேலும்
வேல் என்றும்
சேல் என்றும் சொல்லுகையாலே
கூர்மையும்
நீர்மையும் தோற்றிற்று
ஈர்தலும் அழகும் சொல்லுகையாலே
எதிரிகளை வித்தராக்கி உகப்பிக்கும் என்றதாயிற்று
உயிர் மேல் மிளிர்ந்து -என்கையாலே
சேதனர் பக்கல் பூர்ண விஷயீ காரம் தோற்றிற்று
இவையோ பேர்வனவோ அல்ல -என்கையாலே
இந்த விஷயீ காரத்துக்கு குலைத்தல் இல்லாமை தோற்றிற்று
(ததீய சேஷத்வத்தைக் குலைக்க முடியாதே
மதுரகவி ஆழ்வார் பெற்று மகிழ்ந்தமை கண்டோமே )
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன -என்கையாலே
போக்ய விஷயத்தில் பக்தி காமரான திவ்ய புருஷர்களுடைய
ஸதா பஸ்யந்தி என்று இலக்குத் தப்பாத கிரணங்களுடைய பெரிய ப்ரகாஸத்தையும்
தன்னதாக்கிக் கொண்டமை தோற்றிற்று
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன -என்கையாலே
நித்ய விபூதியையும் ஸ்வா தீனமாகக் கணிசிக்கும் என்றதாயிற்று
(பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றாரே )
இச் செழும் கயலே-என்று
லீலா விபூதியில் அவதார அனுபவத்திலும் அவகாடம் என்றதாயிற்று
தைவம் அந் நீர கண்ணோ -என்று
நித்ய ஸூரி ஸமானரான வோபாதி ஞானமும்
லோக விஸஜாதீயமாய் இரா நின்றது என்று விஸ்மிதரான
அந்யர் பாசுரத்தை வெளியிட்டார் ஆயிற்று –
———-
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நாயகனானவன் தலைமகளோடே கலந்து பிரிகிற சமயத்திலே
தன் ஈடுபாட்டாலும்
தனக்குத் தாரண அர்த்தமாகவும்
மேல் பிரிந்தால் இவன் தம்மை ஒழியவும் ஜீவிக்க வல்லன் என்று
அவள் நெஞ்சில் படாமைக்காகவும் அவள் அழகைக் கொண்டாடுகிறான் –
வியாக்யானம்
ஈர்வன வேலும்
ஈர்வனவான வேல் போலவும்
அஞ்சேலும்
அழகிய சேல் போலவும் இருக்கிற
இவை கண்ணோ
ஸ்வ கார்யம் செய்து தலைக்கட்ட வற்றாய் இருக்கையும்
தர்ச நீயமாய் இருக்கையும்
பற்ற வேலைச் சொல்லுகிறது
இரண்டாலும் செய்கிறது பின் அழியாமே நின்று கார்யம் செய்ய வற்றாய் இருக்கை –
உயிர் மேல்
அவ்வேல் போலே தோல் புரையே போமவை யல்ல
அசேத்யமாயும்
அதாஹ்யமாயும்
இருக்குமதிலே யாயிற்று வியாபரிப்பது
உயிர் மேல் மிளிர்ந்து
குத்தின வேலைப் புரித்து யுடைத்தால் போலே
இவையோ பேர்வனவோ அல்ல
பறித்துக் குத்த ஒண்ணாதே
அவ்விடம் தன்னிலே இடம் காணும் அத்தனை –
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
ஈர்வன வேலும் சேலும் என்று விசேஷித்தால் போலே
நாட்டில் காமன் தான் ஒப்பாகப் போராமை அவனையும் விசேஷிக்கிறதாயிற்று
அப்ராக்ருத ஸ்வ பாவனுமாய்
விலக்ஷணமாய் இருப்பான் ஒரு
—————
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி பகவத அலாபத்தாலே நோவு படுகிற இவள் கண் அழகு கண்டு
விஸ்மயப் படும் நாயகனாய் ஈடுபடும்
தோழியினுடைய பாசுரத்தாலே
ஸ்வ ஞானத்தின் அழகில் நம்மை ஈடுபடுத்துகிறார்
வியாக்யானம்
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல
தன் கண்களுக்கு லஷ்யனான என்னை
வேதிப்பது கொண்டு வேலுமாய்
என்னைத் தன்னில் அநு ரக்தனாக்கி ஆகர்ஷிக்க வல்ல அழகிய மத்ஸ்யங்களுமாய்
என் ப்ராணன்கள் மேல் விழுந்து கார்ய க்ரூரத்தால் தன்னால் இவையே என்னவான
இவை நின்று வசீகரியாமல் தவிர்வன வல்ல
ஓ
இது என்ன இதன் வசீகரண சக்தி என்று ஆச்சர்யப்படுகிற படி –
இவ்வளவோ இதன் கார்யம்
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
திவ்ய ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையுள்ள காமனதான சரங்களினுடைய
மஹத்தான பிரபையைத் தன் ஒளியாலே அபஹரியா நின்றன
இவ்வளவில் தான் நிற்பதோ இவற்றின் சக்தி
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியை யுடையவளாய்
நம்மில் விளையாடும் ஸ்வாமியுடைய விண்ணில் வியாபித்ததாய்
அதில் தன் போன்ற கண்களைத் தேடா நின்றன
இச் செழும் கயலே
தர்ச நீய ஸம்ஸ்தானத்தால் கயல்களே என்று சொல்லலான இவை
தைவம் அந் நீர கண்ணோ
தேவ மாயையே என்னலானதாய்
என்னை அந்ய பரன் ஆகாமல் பலாத்கரிப்பதான கண் தானோ
இவள் கண் தான் இவள் தோழிக்கும் இப்படி ஆகர்ஷகமாய் இருக்கிற படி –
————
தாத்பர்யம்
ஆழ்வாருடைய ஞான வைலஷண்யத்தைக்கண்டு புகழும் கிளைவித் தலைவன் அருளிச் செய்யும் பாசுரத்தை –
நாயகனானவன் நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு பேசும் பாசுரமாக அருளிச் செய்கிறார்
அழகிய இரண்டு மத்ஸ்யம் போலே யும்
மன்மதனின் பூக்கணைகள் போலேயும் அதி ஸூந்தரமாய் என் கண் முன்னே காண்கின்ற இவை
எனது உயிரை சின்னா பின்னமாக ஆக்கிய பின்பு
இன்னமும் பாதிக்க திரும்புகிறது
இவற்றின் வைலக்ஷண்யத்தைக் கண்டு
நித்ய ஸூரிகளும் ஸ்யாம ஸூந்தர எம்பெருமான் அனுபவம் விட்டு
இவற்றை அனுபவிக்கைக்கா இங்கே தேடிக்கொண்டு வந்தார்கள்
அழகியதாயுள்ள இவை உன்னுடைய கண்ணாய் இருக்குமோ என்று கேட்க்கிறான்
—————
அவதாரிகை –
இப்படி ஆழ்வாருடைய ஞான வை லக்ஷண்யத்திலே வித்தரானவர்கள்
இவர் ஞானத்தை ஸ்லாகிக்கச் செய்தே
அந்ய பரதை தோன்ற வர்த்திப்பார் சிலரைக் குறித்து
அவர்கள் ஹ்ருதய சோதன அர்த்தமாக
பார்ஸ்வஸ்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
புனத்திடைக் களிறு வினவ வந்த கண் அழகைக் கொண்டாடின தலைவனைக் குறித்து
தோழி (பேச வந்த தலைமகன் )கருத்து அறிந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(ஆக இவர் இது தோழி பாசுரம் என்றே திரு உள்ளம் கொள்கிறார் )
(கயிறு வினவ வந்த கோஷ்ட்டி வேறே
ஆழ்வார் ஞானம் பேசும் கோஷ்ட்டி வேறே
உபாயாந்தர கோஷ்ட்டி அயலோர்
ஆழ்வார் இடம் அவர்களை இழுத்து பிரபன்னர் கூட்டத்தில் சேர்க்க எண்ணி
பார்ஸ்த்வத்த ஸூஹ் ருத்துகள் பாசுரத்தை என்றபடி )
கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-
பதவுரை
களிறு வினவி–யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி
கயலோ நும கண்கள் என்று நிற்றீர்;–‘உங்கள் கண்கள் கயல்மீன்கள் தாமோ?’ என்று (எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்;
அயலோர் அறியிலும்–அயலார் அறிந்தாலும்
ஈது என்ன வார்த்தை–இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல் கவர்ந்த–கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும்
புயலோடு உலாம்–மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான
கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணன்–(குளிர்ந்த) திருநிறத்தை யுடையனனான எம்பெருமானது
புனம் வேங்கடத்து–(பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே
கொல்லை காக்கின்ற நாளும் பல பல–(நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும்
எம்மோடும் பயலோ இலீர்–எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர்.
வியாக்யானம்
கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
உங்கள் கண்கள் கயல் போலே இரா நின்றன என்று கொண்டாடி
கயிற்றை எங்கே என்று தேடி நில்லா நின்றீர்கள்
களிறு வினவினார் காணா விட்டால் போக அன்றோ அடுப்பது –
கண்ணைக் கொண்டாடுகைக்கும்
போகாமே நிற்கைக்கும்
என்ன சேர்த்தி யுண்டு
களிறு வினவி கயலோ நும் கண்கள் என்றார் என்று அந்வயம்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
புறம்புள்ளார் அறிவிலும் இது என்ன சேரா வார்த்தை
களிறு வினவி வந்தவருக்குக் கண் கொண்டு கார்யம் என் என்று
அயலோர் நினைப்பர் என்று கருத்து
கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன்
பெரும் கடலை மண்டி யுண்டு கண்டவிடம் எங்கும் தூறலோடும் துளியோடும் திரிகிற
காள மேகம் போலே குளிர்ந்த திரு நிறத்தை யுடைய
புன வேங்கடத்து
புனல் சூழ்ந்த திருமலையிலே
கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–
நியமனத்தின் படியிலே கொல்லைக்கு அழிவு வாராமல் நோக்கிக் கொண்டு
போருகிற நாள்களும் பல பல யுண்டு
ஆண்டு தோறும் பல பல நாள்களும் காக்கின்றோம்
எம்மொடும் பயலோ இலீர்
எங்களுடன் பயிர்க்கூட்டு இல்லை
பயல் என்று
பாகமாய்
கூட்டுப் பயிர் இல்லை என்றபடி
ஆதலால் நிற்கிற இதுவும் மிகை என்றதாயிற்று –
இத்தால்
கயலோ நும கண்கள் என்று
எங்கள் தர்சனத்தையும் கொண்டாட நின்றீர்
(பிரபத்தி நிஷ்டை தானே எம்பெருமானார் தர்சனம் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
த்வமேவ உபாய பூதோ மே பவ
அத்யவசாயம் கொண்டாடுவது )
களிறு வினவி -என்கையாலே
ப்ரகீர்ணே விஷயாரண்யே ப்ரதா வந்தம் ப்ரமாதினம்
ஞான அங்குசேந க்ருஹ்ணீயாத் வஸ்ய இந்திரிய தந்தினம் -சுக்ர நீதி -1-98-என்று
காடு பாய்ந்து திரிகிற கடக் களிற்றைத் தேரோட்டி விட்டுப் பிடிக்க நினைப்பாரைப் போலே
இந்த்ரிய அநுதா வனத்திலே தேட்டமாய் இரா நின்றது –
(உபாயாந்தர நிஷ்டர்
இந்திரியங்கள் திரிய ஞானம் என்றும் அங்குசன் கொண்டு நாம் கட்டுப்படுத்த வேண்டும் இவர்களுக்கு
ஆழ்வார் ஹ்ருஷீகேசன் இடம் விட்டார் அன்றோ
கீதாச்சார்யன் அருள் கொண்டு அருளியவற்றையே அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினார் )
நிற்றீர் -என்கையாலே
இங்கு உண்டானது புறம்பு போக மாட்டு கிறிலீர் -என்றபடி
அயலோர் -என்று
இம் மர்யாதைக்குப் புறம்பானவர்கள் என்றபடி –
அதாவது
ஆழ்வார் ஞான வை லக்ஷண்யத்துக்குப் புறம்பாய்
ஸ்வ ஞானத்தாலே இந்த்ரிய வஸீ கரணம் பண்ணத் தேடும் உபாஸகரை நினைத்த படி
அறியிலும் -என்கையாலே
தேவாநாம் குஹ்யமான இந்த ஞான அநு ப்ரவேஸம்
உபாயாந்தர நிஷ்டர் அறியாமல் மறைக்கப்படும் ரஹஸ்யம் என்றதாயிற்று –
ஈது என்ன வார்த்தை -என்கையாலே
இந்த்ரிய வஸீ காரத்துக்குத் தான் யத்னம் பண்ணுகையும்
அநந்ய ஸாதனருடைய ஞானத்தை ஸ்லாகிக்கைக்கும்
ஏக அதிகாரிக்குச் சேராது என்றபடி
(ஞானத்தால் தானே இருவருக்கும் இந்திரிய வஸ்யத்தை செய்ய வேண்டும்
தர்ம வீர்ய ஞானத்தால் ரிஷிகள்
அருளின பக்தி ஆழ்வாருக்கு -அவனது ஞானத்தால் அவனே செய்து அருளுவான் அன்றோ )
கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் -என்கையாலே
இந்த ஞான நிஷ்டருக்கு
1-உபாய பூதனானவனுடைய உள் நீர்மையால் உண்டான பூர்த்தியையும்
2-ஜல ஸ்தல விபாகம் இல்லாத உபகாரகத்வத்தையும்
3-ஸர்வ ஸந்நிதியையும்
4-தர்ச நீயமான விக்ரஹ யோகத்தையும் சொல்லிற்று
வேங்கடத்து என்று
உபாய பூதனானவன் உத்துங்கன் அன்றியே
ஸர்வ ஸூ லபனான அர்ச்சாவதார யுக்தன் -என்றதாயிற்று
புன வேங்கடத்து -என்கையாலே
அர்ச்சாவதார ஸ்தலமே போக ஸ்தானம் என்றபடி
எம்மொடும் பயலோ இலீர் -என்று
ஏவம் வித போக பாக்த்வம் உபாயாந்தர நிஷ்டருக்கு இல்லை என்றபடி
கொல்லை காக்கின்ற -என்று
இந்த போக ஸ்தானத்துக்கு ரக்ஷை இந்த அநந்ய ஸாதனருடைய நித்ய ஸந்நிதி என்றபடி
நாளும் பல பலவே–என்று
இவ்வதிகாரிகளுக்குப் போக அந்வயம் தத் தத் கால உசிதமாய்க் கொண்டு
அவிச்சின்னமாய் நடக்கும் என்றதாயிற்று –
கொல்லை என்று
வரம்பு அறுதியைக் காட்டுகையாலே அர்வாசீன போகம் போலே பரிச்சின்னம் அன்றியிலே
இருக்கும் என்றதாயிற்று (கொல்லை எல்லை என்றபடி )
ஆக
இப்படி ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்திலே அவகாடரானவர்கள்
உபாயாந்தர ஆகாங்ஷை யுடையாரையும் திருத்தி
உள்ளே புகுர விடும் பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –
————
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைவனானவன்
பிற்றை நாள் தலை மகளும் தோழி மாரும் கூடப் புனம் நோக்கி இருந்த இடத்தே சென்று
தன் ஆயாஸத்தை ஆவிஷ்கரித்து
ஆற்றாமையைச் சொல்ல அத்தைக் கேட்ட தோழிமார் வார்த்தையாகச் செல்லுகிறது
வியாக்யானம்
கயலோ
இங்கனே ஓர் ஆனை போந்ததோ என்று சொல்லுவதாக மநோ ரதித்துக் கொடு போன அவன்
அவர்களோடே கிட்டிக் கண்ணுக்கு இலக்கனவாறே
சொல்லுவதும் அறியாதபடி கலங்கி கண்ணை ப்ரஸ்னம் பண்ணத் தொடங்கினான்
கண்கள் கயலோ என்றான்
இது ஒரு வ்யாஹத பாஷணம் இருந்தபடி என் என்ன
இங்கு ஒரு வ்யாஹதீ இல்லையீ -இதுக்கு சம்பாவனையும் இல்லையீ என்கைக்காக
கயலோ நும் கண்கள் என்கிறான்
இத்தைக் கேட்டு மந்தஸ்மிதம் பண்ணி வ்ரீளை யாலே கவிழ்ந்து இருந்தார்கள்
அநந்தரம் தப்பினோம் ஆகாதே என்று வாஸனை கை கொடுத்து களிறு வினவத் தொடங்கினான்
திரியட்டும் இவன் இந்த அசங்கத பாஷணம் பண்ணத் தொடங்கினான் என்று அறிந்து
கேளாமைக்காக முகத்தை மாற வைத்தார்கள்
பின்னை அதுவும் கூடச் சொல்ல மாட்டாதே
ஸ்தப்தனாய் நின்றான்
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்து தரிக்க வந்தவனை முடிய நிஷேத வசனத்தைப் பண்ணினால்
பின்னை அவனுடைய ஸ்வரூப ஸ்திதி இல்லையே
என்றதுக்காக நேரே முகத்தைப் பார்த்து
பாவீ நீ இது என் சொன்னாய் -என்கிறார்கள்
இவன் தன்னை உளனாக்கிக் கொண்டு நின்று வார்த்தை சொல்ல வேணும் என்று
அயலோர் அறியிலும்
நாங்கள் அறிந்தோம் என்கை
நீர் தான் இதுக்கு முன் கண்டு அறியாதார் ஒருவராய் இரா நின்றீர்
நாங்கள் தனியே இருந்த இடத்தே இது என் சொன்னீர் என்கிறார்கள்
நாங்கள் இருக்கிற இடத்திலே வந்து அசங்கத பாஷணங்களைப் பண்ணா நின்றாள்
இவ்வார்த்தையில் உள்மானம் புற மானம் அறியாதார் என் நினைத்து இருப்பார்கள்
அறியிலும்
உள்ளுள்ளார் குமிழி நீர் உண்ணா நிற்க
புறம்பு உள்ளாருக்கு அறிய ஒண்ணாது இறே
ஆனாலும் பாஷிக தோஷமாய் வருமாதுவும் பரிஹரிக்க வேணும் இறே
ஈது என்ன வார்த்தை
அனந்விதமுமாய்
அபார்த்தமுமாய்
இரா நின்றதீ
முன்னிலை வார்த்தைக்கும் பின்னில் வார்த்தைக்கும் ஒரு சேர்த்தி இல்லாமையாலே
அசங்கத பாஷணமாய் இரா நின்றதே
முன்பே அற்ற எங்களை
இப்போது அறுகைக்குச் சொல்லுகிறது ஆகையாலே ப்ரயோஜன சூன்யமாய் இரா நின்றதே
அன்றிக்கே
அடிக்கழஞ்சு பெறும் சீரிய வார்த்தையாய் இருந்ததீ
இத்தால்
தங்களுடைய ஈடுபாடும்
நிஷேதமும்
இரண்டும் தோற்றச் சொல்லுகிறார்கள்
ஈது என்ன வார்த்தை
என்று வார்த்தையைக் கொண்டாடுகிறார்கள்
அயலோர் அறியிலும் என்று
உள்ளீட்டைக் கொண்டாடுகிறார்கள்
கடல் கவர்ந்த
உம்மை முன்பு கண்டு அறியோம்
எல்லா
———-
பேராமலே நின்றான்
இவள் அவன் பாவஜ்ஜையாய்
அதுக்குத் தானும் உள்பட்டாளாய்
இது என்ன வார்த்தை என்று இவள் சொல்லி
என்தான் முன் உன்னோடு நமக்கு அந்வயம் இல்லையோ -என்னும்படியான அவன் பாவத்தை
நாங்கள் புனத்தில் பண்ணும் பயிரில் உமக்கு அந்வயம் இல்லையே என்று அந்யதா கரித்துச் சொல்ல
ஆகில் நீங்கள் இங்கே நிற்பான் என் என்று அவனும் கேட்க
இக்கொல்லை காக்க நாள் தோறும் வந்து நிற்பன் நான்
உமக்கு என்னில் இப்படிகள் தகுமோ -என்கிறான்
கயலோ நும கண்கள் -என்கிற இதில்
வியாக்யானம் –
கயலோ நும் கண்கள் என்று
களிறு வேட்டைக்கு வந்தவரைப் போலே உன் கண்கள் கயல் போல் இரா நின்றது என்று கொண்டு
களிறு வினவி நிற்றீர்
களிறு எங்கே என்று தேடி நில்லா நின்றீர்
உறவு என்ன உமக்கு என்னோடு என்று இவளுக்கு ஸ்வ கதம்
இப்படி இவள் சொல்ல என் தான் என்னும்படி அவன் சில சொன்னான்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
என்கிறாள்
அயலார் அறியும்படி வரிலும் வரும்
இது என்ன அசங்கத பாஷிதத்தைச் சொல்லா நின்றீர் என்று அபிப்ராயம்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8- என்பதான
சுத்தாந்த சித்தாந்திகள் அன்றே அயலார்
மாதவர் இவரே
ஏவம் பூதன் என் கணவன் என்னுமத்தை ஸூ சிப்பிக்கிறாள்
நீர் யாரோ என்பதானதாய்
கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும் பயலோ இலீர்
பெரும் கடல் மண்டி யுண்டு எங்கும் வர்ஷிக்கலான சஞ்சாரம் உள்ள காள மேகம் போலே
குளிர்ந்த நிறத்தை யுடையவனுடைய வேங்கடத்தில் உள்ள புனத்தில் என்னோடு உமக்கு
கூட்டுப் பயிரும் இல்லையே
உமக்கு என்னோடு என்ன சம்பந்தம் என்றபடி
இங்கே வந்து நிற்பது நீ நம்மை ஆசைப்பட்டு அன்றோ என்னப் புக
கொல்லை காக்கின்ற
என்கிறாள்
நாங்கள் இங்கே வந்து நிற்பது கொல்லை காக்கைக்காவே காண்
என் உன் ரஷ்ய ரஷாக பாவத்துக்கு நான் இல்லை என்று தான் நீ இல்லை என்று தான்
குறை சொல்ல வல்லையே
நாளும் பல பலவே–
———–
அவதாரிகை
இப்படி ஆழ்வாருடைய வை லக்ஷண்யம் கண்டு ஸம்ஸ்லிஷ்டரான பாகவதருடைய
ஸம்ஸ்லேஷ தசையிலும் விஸ்லேஷ தசையிலும்
காலத்தினுடைய அத்யல்பத்வாதி மஹத்வங்கள் அடியாகத் தம்முடைய ஸைதில்யத்தைத்
தம்முடைய ஸூஹ் ருத்துக்களுக்கு அருளிச் செய்த பாசுரத்தை
தலைவி தன் பாங்கியருடன் வியந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-
பதவுரை
கண்ணன் விண் அனையாய்–எம்பெருமானுடைய பரமபதம் போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம்–(நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி–அதுவல்லாமல்
(நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)
ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும்-ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;
அன்பர்-நாயகர்
பல பல நாள் கூடினாலும்-பல பல நாள் கூடிநின்றாலும்
(காலம் மிகச் சுருங்குதலால்)
யாம் மெலிதும்-யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)
(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும்–(நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்
(காலம் மிக வளர்தலால்)–
யாம் மெலிதும்–யாம் மிக வருந்துகிறோம்;
(ஆதலால்)
இ பாய் இருள்–இந்தப் பரந்த இருட்பொழுது
பல பல சூழல் உடைத்து–சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.
பல பல சூழல் உடைத்து–அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது)
அந்தோ! வாழ்க.
பல பல ஊழி கள் ஆயிடும்
பல அவாந்தர கல்பத்தை யுடைத்தான பல மஹா கல்பமாகா நிற்கும்
அன்றியோர் நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும்
அந்தக் கல்பம் தான் தன் அவயவ ஏக தேசமான ஒரு நாழிகையைப் பல பலவாக
கலா ரூபத்தாலும்ம காஷ்டா ரூபத்தாலுமாகக் கூறிட்ட கூற்றிலே ஏக தேசமாகா நிற்கும்
கண்ணன் விண் அனையாய்
கலா முஹுர்த்தாதி மயச்ச காலோ ந யத் விபூதே பரிணாம ஹேது என்னும்படி
அகால கால்யமான கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நித்ய அபிமதை யானவளே
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல நாள் அன்பர் கூடிலும் காலம் அத்யல்பமாகையாலே யாம் மெலியா நின்றோம்
பல பல நாள் அன்பர் நீங்கிலும் நாடோறும் காலம் அதி மஹத்தாகையாலே யாம் மெலியா நின்றோம்
ஆகையால்
இப்பாய் இருளே பல பல சூழல் உடைத்து
இந்தப் பாய்ந்த இருள் சிறுமைக்கும் பெருமைக்கும் பல விரல் யுடைத்தாய் இரா நின்றது
அம்ம வாழி
அம்ம -இது ஒரு வாழ்வு இருந்தபடியே என்று ஆச்சர்யப்படுகிறாள்
இத்தால்
இப்பாய் இருள் என்று
மோஹ அந்தகார ஜனகமான இக்காலமானது என்றபடி
பல பல இத்யாதி
இங்கும் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ தசைகளில் கால அத்யல்ப அதி மஹத்வங்களைச் சொல்லுகிறது
விண் அனையாய் -என்று
க்ஷண அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் —
அனுபவ தசையில் காலம் அத்யல்ப மாம்படியை ஸூ சிப்பிக்கிறது
அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||-44-
தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்;
பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.
கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-என்கையாலே
இக்காலத்தினுடைய உபய வித பரிணாமம் ஸைதில்யாவஹம் என்றபடி
அம்ம வாழி -என்று
தான் நினைத்த வடிவைக் கொள்ளவற்றே என்று ஆச்சரியப்பட்டார் ஆயிற்று –
தாத்பர்யம்
இப்பாசுரத்தில் ஆழ்வார்
பாகவத விஸ்லேஷத்தில் தமக்கு பிறந்த வேறுபாட்டை
நெடும்காலம் பிரிந்த தலைவன் ஒரு இரவில் வந்து கலந்து அதே இரவில் –
தோழியுடன் கூடி பிரிந்த நாயகியின் வார்த்தையாக அருளிச் செய்கிறார்
ஓ தோழி இக்காலத்தின் கொடுமையைப் பார்
பிரிந்த காலத்தில் ஒரு துளி யாயே இருந்தாலும் அநேக கல்பமாய் நெருக்கி என்னைப் பாதியா நின்றது
தெய்வ சங்கல்பத்தால் வந்து கூடினால் இப்போதாகிலும் எனது மநோ ரதப்படி
சந்தோஷமாக இருக்க முடியாத படியே உள்ளதே
இப்படி இரவி குறுகியும் நெடுகியும் காலம் கோலோச்சும் சம்சாரம் படுத்தும் பாடு பொறுக்க அரிதாய் உள்ளதே
நான் இப்படி சர்வகாலத்திலும் பாதிக்கப்பட்டே இருந்தேன்
அந்த இரவே வாழட்டும்
——————————————-
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க
பிரிவாற்றாத தலை மகள்
அவனை ஒழியத் தனக்கு காலம் சென்றிட அரிதாகிற படியைத் தோழியைப் பார்த்து சொல்லுகிறாள் ஆதல்
அன்றிக்கே
ஸம்ஸ்லேஷ அநந்தரத்திலே பாங்கிமாரும் தானுமாய் இருக்கிற இருப்பு உண்டு இறே
அதிலே இராத்ரியிலே போகம் விருத்தமான படி என் என்று கேட்க
வ்ருத்தமான படியைச் சொல்லுகைக்கு போகத்துக்குக் காலம் உண்டாயிற்றோ
பிரிவில் காலம் நெடுகுமா போலே இறே கூடினால் காலம் குறுகும் படி -என்கிறாள் ஆகவுமாம்
இதிலே இவை இரண்டுமே உண்டு
ஒன்றைப் பிரதானமாக்கி ஒன்றை ஆனு ஷங்கிகமாகக் கொள்ளும் அத்தனை இறே
புணர்ந்து நீங்கின தலைமகனைச் சிறைப்புறத்திலே கண்டு தோழி என்றோரு பேரையிட்டு
அவனை ஒழிய தனக்கு உண்டான செல்லாமையை அவன் நெஞ்சிலே படுத்துகிறாளாய் இருக்கிறது
இத்தால்
ஒரு நாளும் பிரிவின்றிக்கே நித்ய ஸம்ஸ்லேஷம் பண்ணுகையில் தனக்கு கருத்து என்னும்
இடம் தோற்றச் சொல்லுகிறாள் –
(தேஷாம் சதத யுக்தாநாம் –ததாமி புத்தி யோகம் —
எப்போதும் கூடி இருக்க வேணும் என்று விரும்புவனுக்கு என்று கொள்கிறோம் )
இப் பாசுரம் தோழி வார்த்தை யாகவுமாம்
இவளைக் காட்டில் இவள் தோழியானவள் அவன் படி அறிந்து இருக்கும் இறே –
அயோத்யா மக்களைக் கூட்டி வந்த பரதாழ்வானுக்கு குகப்பெருமாள் இளைய பெருமாள் சரித்ரத்தைக் கூறினான்
யாரைப்பற்றி யார் இடம் பேசுவது –
ஆச சஷே-கூறினான்
குகோ ககன கோசர-காட்டு வாழ் சாதி
மனசுக்கும் கூட அகோசரமான விஷயத்தை வாயாலே பேசினான்
அத -இதுக்கு முன்னால்
முன்பு இவன் கைகேயி
பெருமாளுக்கு நல்லான் என்று அறிந்த பின்பு சின்னான்
ஸத் பாவம்
லஷ்மனோ லஷ்மி வர்த்தந
பெருமாள் திருவடிகளில் அதிப்ராவண்யமே இவனுக்கு ஸத் பாவம்
லஷ்மணஸ்ய
கடலைக் கையாலே இறைக்கக் கோலுவாரைப் போல் தலைக்கட்டு
பரதாய குக
யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்று விவஸ்தையே இல்லையே
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரோதா
ஸ்ரீ குகப்பெருமாள் வக்தா
அப்ரமேயா பரதா
இளைய பெருமாளை பிரகாரம் அறிந்தேன் என்று பேசத்தொடங்கினான்
இவனது பிரபாவம் புத்திக்கு எட்டாதே
காட்டிலே சுத்தி திரிந்த குகன்
பிரிந்தால் தானே சுகம் என்று சொல்லி பிரிந்த பெருமாள் –
பின்பு குகன் மரத்தில் அடியில் தலையை மடுத்து இருந்தவன் பெருமாளுக்கு நல்லான் என்றவனைக் கண்டவன் எழுந்து பேசுகிறான்
நம்பியும் நாயகனை ஒக்கின்றான்
தவம் வேடம் தலைக் கொண்டான் -பேச முடியாதே
காட்டில் உள்ளவற்றை தனித்தனியே பதார்த்தங்களை அறிநதால் போல் இளைய பெருமாள் குணம், முழுவதும் அறிந்து பேசுகிறான்
அன்றிக்கே
எங்கே பிறந்து வளர்ந்தவன் ஆறு வார்த்தை சொல்கிறான் என்று ரிஷி கொண்டாடுகிறான்
காட்டிலே பிறந்து மரங்களை அறிந்தவன்
இவனோடு ஓக்க பிறந்தவனைப் பற்றி சொல்கிறான்
இன்னார் சொல்ல இன்னார் கேட்க என்னும் நியதி இல்லையே
தேசிகர் சொல்லும் அத்தனை
கணபுரம் கைதொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரோ
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே அன்றோ
பல பல ஊழி கள் ஆயிடும் —
எண்ணிறந்த அநேக காலம் கலந்து -அல்ப காலம் பிரிந்தால் -அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி –
அன்றி –இத்தை ஒழிய –
யோர் நாழிகையை-பல பல கூறு இட்ட கூறாயிடும் –
இதனுடைய பரப்புக்கு எல்லை இல்லாதவோ பாதி
ஒரு நாழிகையை அநேக கூறு ஆக்கினால் அதில்
ஒரு சிறு கூறாக நின்றது கலந்த காலம் கலக்கைக்கு இடம் இன்றியே
உபோத் காதத்துக்கு போந்து இருந்த படி–
போகத்துக்கு இன்றி இலே நோவு படுக்கைக்கு வேண்டும் கலவியாய் இருந்த படி
கண்ணன் விண் அனையாய்-
தலை மகள் வார்த்தை ஆன போது
அகால காலத்தில் உள்ளார் பரம பதத்தில் இருப்பார்க்கு சம்சார வெக்காயம் தட்டாதால் போல
இவ் அவசசாதத்தோடே கூடி இருக்க செய்தேயும் சத்தை கிடக்கிறது உன் சந்நிதி ஆகை அன்றோ ..
தோழி வார்த்தை ஆன போது
பரம பதத்தில் உள்ளார்க்கு புனர் ஆவர்த்தி இல்லாதா போல ,
உன்னோடு கலந்தார்க்கு உன்னை பிரிகை உண்டோ ?..
பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-
நீ நித்ய விபூதி போல் அன்றோ அழிய விடமாட்டான்
முக்தருக்கு லீலா விபூதி ததீயதத் ஆகாரத்தால் த்யாஜ்யமாக இருக்காது
கர்ம நிபந்தமான ஸ்ம்ருதி இல்லாமல் ததீயத்வ ஆகாரம்
தாதார்த்தம் -அவன் பிரயோஜனத்துக்காகவே அறிந்து சேஷத்வத்திலேயே அந்வயித்ததே
சம ஸுகம் துக்கம் உண்டே தோழிக்கும்
சுக்ரீவர் மஹாராஜர் பெருமாள் இடம் கண்டோமே
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-
கால தத்வம் உள்ளத்து அத்தனையும் கலக்கிலும் ,அல்ப காலம் பிரியிலும் ,
நாம் ஒரு படி இட்டு இருக்க மாட்டோம் —
தன் வார்த்தை –
கலக்கிற போது வாய் புகு நீரும் அரு நிலையாய் (கால் பாவாது அகாத ஸ்தலம் )
ஆறி இருக்க மாட்டாது மெலிகையும் ,
பிரிந்தால் பிரிந்து ஆற்றாமையால்-மெலிகையும்
கூடின எல்லா நாளுக்கும் ஒக்கும்
தோழி வார்த்தை- ,
நாயகிக்கு நாயகன் உடைய சம்ஸ்லேஷ அந்தத்திலே ,விஸ்லேஷம் ஆய் இருக்கும்
அத்தாலே சம்ஸ்லேஷத்தொடு விஸ்லேஷமும் வாசி அற மெலிகிற படி –
குழி அறியாது இருக்கைக்கு தம்மை போலே அல்லாமே யாம் –
சம்போகத்துக்குக் காலமே இல்லையே
நீங்கிலும்
நீங்க மாட்டான்
அப்படியே நீக்கினாலும் ஸம்ஸ்லேஷ வர்த்தகத்துக்காக பிரிந்தான் அன்றோ
இரண்டு திறத்தாரும் அங்கனே படுக்கைக்கு அடி-
அன்பர் பிரிகையாலே –
பல பல சூழல் உடைத்து-
விசித்திர சக்தன் அவன் என்று இருந்தோம்
காலத்துக்கு இப்படியா
நந்த கோபாலன் கடை தலைக்கே நள் இருள் கண் –நாச்சியார் திருமொழி 12-3-என்னுமா போலே,
கலவிக்கு முன்னிலையாய் ,
விஸ்லேஷத்தில் வந்தால் –
சுருங்கா இருளின் கரும் திணும்பை–திரு விருத்தம்-72-என்று
அஞ்ச வேண்டும் படி பாதகமாய் இருக்கும்
அம்ம .
அம்மே என்ற படி-
ஒரு சொல்லாக்கிச் சொல்லலாம்
அன்றிக்கே
அம்ம
ஹிம்சிக்க பதார்த்தம் போல் வெறுத்து பேசுகிறாள்
வாழி-
தன் வார்த்தை யான போதைக்கு —
வழி பறிப்பாரை-உடன் பிறந்தீர் ! நூறு பிராயம் புகுவீர் ! என்னுமா போலே —
தோழி வார்த்தை யான போது —
இவ் அவசாதம் நீங்கிடுக-
நீயும் வாழ்ந்து இவளையும் வாழ வைக்க மாட்டாயோ
ஆயுஷ்மன் -ஜடாயு என்றால் போல் இந்த இருளும் அனுகூலமாக இருக்க வேண்டும் என்றவாறு
இப்பாய் இருளே –
பரந்த இருளே முன்னிலை யாக –
கடல் கண்ணால்பார்த்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதது போல் இந்த இருளும்
இத்தால்
ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-
காலக்ருத பரிணாமாதிகள்
வியதிரிக்தருக்கு அர்த்த காமங்களுக்கு உறுப்பாகும்
ஆழ்வாருக்கு எப்போதுமே பகவத் தசையில் ஆழ்வதற்கே உறுப்பாகும்
பக்தியின் சிறப்பு
தோழி வார்த்தையான போது
ஈஸ்வரன் பாகவத உத்தமர்களை விட்டுப்பிரிய மாட்டாரே எதனால் தவிக்கிறாய் என்றபடி
ஆசையாக சுமந்திரன் நின்றானே
இரண்டு நாள் நின்றாலும்
பலப்பல நாள் அங்கேயே இருந்தான் என்று ஸ்லோகம்
ஐயருக்கு போர பழைய நாள் போந்தீர்
ஆய்ச்சிமாரையும் அயோத்யா மக்களையும் ரக்ஷித்து போம் என்று விடை கொடுக்க நின்றான்
திவசம் பஹுன் -காலம் நெடுங்கிய படி
அதே போல் இங்கும்
குகப்பெருமாள் உடன் தானே நிற்கிறான் -ஆனால் காலம் நெடுக வேண்டுவான் என்
பகவத் ஸம்ஸ்லேஷம் இல்லாத பாகவத ஸம்ஸ்லேஷம் மட்டுமே போதாதே
நினைவு படுத்த கூட இவர் இருக்க ஆற்றாமை தானே விஞ்சும்
பிரிவாற்றாமையால் தானே அவனும் -ஸ்ம்ருதிக்கு உத்போதகர் அவன் தானே
ஸ்ரீ குஹப்பெருமாளோடே நின்றானாகில் இவனுக்கு காலம் நெடுகுவான் என் என்று பிள்ளை கேட்டருள
ஸம்ருத்திக்கு உத்போதகர் உண்டானால் காலம் நெடுகும் அத்தனை இறே என்று ஜீயர் அருளிச் செய்தார்
ஆசயா யதி மாம் ராம புந சப்தா பயேதிதி -அயோத்யா -59-3-
ஸூமந்த்ரா நீ போ என்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லுவாரோ என்றாகிலும் நின்றான் அன்றோ –
————
ஸ்ரீ பெரிய பரகாலன் ஸ்வாமி வியாக்யானம்
கீழ்ப்பட்ட காலம் எல்லாம் உன்னைப் பிரியாது இருந்தவன் இப்போது அத்யல்ப காலம் உன்னைப் பிரியவே
உன் முன்னே வந்து நிற்கப் பெற்றவனை இங்கனே சொல்லி விடவோ என்று சொன்ன உயிர்த் தோழியை
கண்ணனுக்கு விண் போலே அதி ப்ரியை யானவளே என்று ஸம்போதித்து
கேளடீ பல பல நாள் அன்பர் கூடிலும்
ஒரு நாழிகையை ஆயிரமாக விபஜித்தால் அதில் ஒரு பாகமாய்ப் போமடீ
அங்கன் அன்றியே
நீங்கிலும்
பிரியிலும் பிரிந்த ஒரு க்ஷணமும் பல பல கல்பமாய் விடும் காண்
இது அன்புடையார் ஸ்வ பாவம் இருக்கும் படி
பா ஸ்வ பாவமிடீ
நாங்கள் பிரிந்த காலம் அதி மஹத்தாகையாலே மெலியா நின்றோம்
இப்படிப் பிறந்த இருள் என்னைச் சூழ்கைக்கு பல விரகு யுடைத்தாய் இருந்தது
அம்ம
சிறு பெண்ணே
என்னோடே நீயும் அவசன்னை யாகா நின்றாய்
உன் அவஸாதம்
வாழி
நீங்கி நன்றாய் இருக்க வேணும் என்கிறாள்
அவன் கீழ் களிறு வினவி நின்றதுவும் என்னைப் பிரிந்து இருக்க மாட்டாமையால் இறே
அத்தால் அவனைத் தன் போல்வனாக்கிக் கூட்டிக் கொண்டு
யாம் -என்கிறது –
———————————
அவதாரிகை
இப்படி அபிமதரான பாகவதருடைய விஸ்லேஷ தசையில் அவர்கள் பக்கல் தமக்கு ஆஸ்வாஸ ஜனகமான
மநோ ரத ஸரணியைக் குலையாது ஒழிய வேணும் என்று
ஸம்ஸார ஆர்ணவத்தை அபரோக்ஷித்து உரைத்த பாசுரத்தைத்
தலைவன் பிரிந்து போன நேர் வழி தூரல் என்று
கடலை நோக்கி இரந்த தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-
பதவுரை
இருள விரி–இருளை வெளியுமிழ்கிற
நீலம்–நீலரத்தினம் போன்ற
கரு–கருமை நிறமுடைய
ஞாயிறு–ஸூர்யமண்டலமென்று
சுடர் கால்வது போல்–ஒளி வீசுவது போல,
இருள் விரி சோதி பொருள்–கருமை நிறம்
அரவணைமேல்–சேஷ சயனத்தின்மேல்
உறையும்–நித்யவாஸம் செய்யப்பெற்ற
எறி கடலே–அலை வீசுகிற கடலே!
வாழி–வாழ்வாயாக:
இருள் விரிந்தால் அன்ன–இருள் பரப்பினாற்போன்ற
மா நீர் திரை கொண்டு–கருத்த நீரையுடைய அலைகளால்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல்–இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற
நாயகருடைய தேர் போன வழியை அழியா தொழிவையாக-
உரை
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு
இருள் பரம்பினால் போலே இருக்கிற கறுத்த நீர்த் திரையைக் கொண்டு
மா நீர் -என்று
பெரிய நீர் என்றுமாம்
வாழியரோ
இருள் பிரிந்தார்
என் பக்கல் அன்புடையவர் யாகையாலே
அயல் அறிய ஒண்ணாது என்று இருளிலே பிரிந்து போனவருடைய
தேர் வழி தூறல் ,
எனக்குக் கண்டு தரிக்கைக்கு உடலான நேர் வழியைத் தூராது ஒழிய வேணும்
அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக்
கருவாகச் சமைத்த ஆதித்யன் ப்ரபையை உமிழுமாப் போலே
இருள் விரி சோதி பெருமாள் உறையும்
இருண்டு விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன்
நித்ய வாஸம் பண்ணுகிற
எறி கடலே–
எறிதல் -கொந்தளித்தல்
எறிகிற கடலே -வாழியரோ
வாழியரோ என்று தேர் வழி தூராமைக்கு வாழ்த்துகிறாள் –
இத்தால்
எறி கடலே என்று
பாத்ய பாதக பாவத்தாலே கொந்தளிக்கிற ஸம்ஸார ஆர்ணவத்தைக் காட்டுகிறது
அரவணை மேல் என்று தொடங்கி
பகவத் சம்பந்தத்தைச் சொல்லுகையாலே
தமக்கு விருத்தாசரணம் பண்ணாமைக்கு உறவு சொல்கிறாள்
இருள் பிரிந்தார் அன்பர் என்று
இருள் தரும் மா ஞாலமான -திருவாய் -10-6-1-ஜகத்திலே
ஸ்நிக்த பந்துக்களான
பாகவதர் விஸ்லேஷித்தார் என்றபடி –
மச் சித்தா மத்கத ப்ராணா –ஸ்ரீ கீதை -10-9- இத்யாதியாலே
துணைத் தேட்டமாய் இருப்பது இத் தேசத்திலே இறே
தேர் வழி தூரல் -என்கையாலே
ஸாம் சாரிக கோலா ஹலம் மேலிட்டால் தத் விஷய மநோ ரத ஸரணியும் குலையும்
என்று நினைத்துக் குலையாமையை அபேக்ஷித்த படி
இருள் விரிந்தால் அன்ன -இத்யாதி
மோஹ அந்தகார பிரசரத்தைப் பண்ணும் வாஸநா கல்லோலம் சைத்தில்ய ஹேது என்றபடி
வாழியரோ என்று
தம் ஆற்றாமையாலே இம் மநோ ரத ஸரணியைக் குலையாமைக்காக பாதகரை வாழ்த்துமா போலே
மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –
தாத்பர்யம்
சிறிது காலம் சம்ஸ்லேஷம் உண்டாகி பிரிந்த ஆற்றாமையை
தேர் வழி பார்த்தாகிலும் தரித்து இருப்போம் என்று
சமுத்திரத்தைப் பிரார்த்திக்கும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
ஓ சமுத்ரமே
நீலக்கரு ஞாயிறு போல்
விஸ்லேஷ துக்கம் அறியாய்
இன்று கூடி இருந்து இரவிலே போனான்
தேர் வழியைப் பார்த்தாகிலும் ஜீவிக்கலாம் என்று இருந்தோம்
அத்தை அழியாதே கொள்
எனக்கு இந்த உபகாரம் செய்தால் நெடும்காலம் சுகிக்கக் கடவாய் -மங்களா சாசனம் பண்ணுகிறாள்
————-
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
தலைமகன் கலந்து பிரிந்து போனானாய்
இவளும் தேர்க்கால் சுவட்டைத் தனக்குத் தாரகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாளாய்
இனித்தான் பிரிந்தார் இரங்கும் நிலம் நெய்தல் நிலமாகையாலே கடற்கரை யாய் இருக்கும் இறே
அத்தேர் சுவட்டை அலை வந்து அழிக்கப் புக
அத்தை அழியாதே கொள் -என்று அதின் காலிலே விழுந்து கூப்பிடுகிறாள்
வியாக்யானம்
இருள் பரம்பினால் போலே இருக்கிற பெரிய நீர்த் திரைகள் ஆகிற கையைக் கொண்டு
அபாம் அபி -சுக்லம் என்று கொண்டு காலத்துக்கு குணம் வெளுப்பாகச் சொல்லா நிற்கச் செய்தே
மா நீர் -என்றதைக் கொண்டாயிற்று இருட்சியைச் சொல்லிற்று
பரப்பாலும் நீர்ச் செறிவாலும் கறுத்துத் தோற்றும் இறே
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு தேர் வழி தூரல் -என்னவாயிற்று உபக்ரமித்தது
கடல் மலை போலே நடுவே வந்து அத்தை அழிக்கில் செய்வது என் என்று
வாழியரோ என்று
அதின் காலிலே விழுந்து சரணம் புக்கு அத்தை நியமிக்கிறாள்
தன்னைப் புரிந்தவன் செய்ததைத் தானும் செய்கிறாள்
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா -யுத்த -21-1-
விஸ்லேஷத்தில் அவர்களோடு சம்பந்தம் உள்ளது ஓன்று கொண்டாகிலும் தரிக்க வேண்டும்படியாக
இவருக்குப் பிறந்த தஸா விசேஷத்தைச் சொல்லுகிறது
ஸோபி ரேணுர் ந லஷ்யதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-8-31-
———-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்பாட்டின் வகுப்பு இப்படி –
கண்ணன் விண்ணனையாய் -பல பல நாள் அன்பர் கூடிலும் ஒரு நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும்
அன்றி
நீங்கிலும் யாம் மெலிதும் பல பல ஊழிகள் ஆயிடும்
அன்பர் யாம் மெலிதும் பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-
என்று
தன்னோடு ஸம்ஸ்லிஷ்டனான தன் தலைமகன் அவ்விருளிலே தானே ஒரு கார்யத்துக்காகப் பிரிந்தவனாய்
கடற்கரையிலே தேர் ஏறிப்போக அதின் மார்கம் அழியும் படி தரங்க விஜ்ரும்பணமுள்ள கடலைத்
தன் தலைவன் வர்ணத்தாலும் ஸம்பந்தத்தாலும் உள்ள ஸ்நே ஹத்தைப் புரஸ்கரித்து
அதின் மார்க்கத்தை அழியாமைக்காகப் பிரார்த்திக்கிறாள்
பிரிவில் கடலும் தத் வியாபாரமும் துஸ் ஸஹமாய்
இருள் விரிந்தால் -என்று இதில் –
வியாக்யானம்
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு –
இருள் பரம்பினால் போலே இருக்கிற உன்னுடைய மஹா ஜலமயமனான அலைகளைக் கொண்டு
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி
அன்பானவன் இந்த அந்தகாரத்தில் பிரிந்தவனாய்த் தேர் ஏறிப் போம் வழியை
தூரல் ,
அழியாதே கொள்ளாய்
எத்தால் நம்மை நீ இப்படிப் பிரார்த்திப்பது என்ன
அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–
என்கிறாள்
திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக் கருவாக உண்டாக்கின
அதி நீல ஆதித்யனுடைய ப்ரபையை உமிழுமா போலே
இருள் போலே விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன் நித்ய வாஸம்
பண்ணுகிறானே உன்னில் என் கணவனவன் அவநதான தேர் மார்க்கத்தை
தூரல்
அலைகளை வீசி எறியும் கடலே
வாழியரோ -என்று
தேர் வழி தூராமைக்குச் சொல்லுகிறாள் ஆயிற்று –
——————
அவதாரிகை
இப்படி விஸ்லேஷ அஸஹரான இவருக்கு அனுபவ யோக்ய காலத்தில்
ப்ராப்ய அலாப்ய நிபந்தனமான ஆர்த்தியைக் கண்டு பொறுக்க மாட்டாமல்
ஸூஹ்ருத்துக்களான பாகவதர் சொன்ன பாசுரத்தை
கார் காலம் கண்டு அழிந்த தலைவி ஆற்றாமை கண்டா பாங்கி இரங்கின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-
பதவுரை
கடல்கொண்ட–கடலளவினதான
கண்நீர் அருவி–கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும்–செரிந்து நிற்கிற
காரிகையே–அழகிய நங்காய்!
வானம்–ஆகாயமானது
கடல் கொண்டு எழுந்தது–கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது;
கடல்–அக் கடல்தான்
அன்றி–(அங்ஙனம் தன்னைக் கொள்ளைகொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து
அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால்–ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால்
இது–இந்த நிலை, உண்டாயிற்று;
கண்ணன் மண்ணும் விண்ணும்–எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
கடல்கொண்டு எழுந்த அகாலம் சொல் ஓ–பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக்கொண்டு மேற்கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி)
புயல் காலம் கொல் ஓ–மழைக்காலந்தானோ? (அறியேன்.)
உரை
கடல் கொண்டு எழுந்தது வானம்
ஆகாசமானது கடலைக் கிரஹித்துக் கொண்டு கிளம்பிற்று என்னலாய்
அன்றி-அவ் வானத்தை
அன்றி அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கோபித்து
கடல் -சென்று – கொண்டு ஒழிந்த அதனால்
கடல் தான் சென்று கொண்டு விட்டது என்னலாய் இருக்கையாலே
இது
இந்த அவஸ்தை
கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கிருஷ்ணனுடைய த்யாவா பிருத்விகளை பிரளய ஆர்ணவம் கொண்டு கிளர்ந்த காலமோ
புயல் காலம் கொலோ
கார் காலமோ
காரிகை கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும்
அழகு வடிவு கொண்டால் போலே இருக்கிற இவள்
திரை கொள்ளும் படியான கண்களிலே
நீராலே அருவியைப் பண்ணா நின்றாள் என்று
காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்தாள் யாயிற்று
காரிகைக்கு -என்ற
பாடமான போது
இவர் கண்ண நீர் அருவி செய்யா நின்றது என்றபடி
மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ-என்று
எல்லாவற்றுக்கும் முடியும் காலமோ
நமக்கு என்று வந்த கார் காலமோ என்கையாலே
ஆற்றுதலுக்கு உறுப்பான கால மயக்கம் அன்று –
இத்தால்
கடல் கொண்டு எழுந்தது வானம் -என்று
பரம வ்யோமமானது ஸம்ஸார ஸாகரத்தைக் கபளீ கரித்தது -என்னலாய்
அவ்வானத்தை என்று
(அசித் சித் வாசி இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே )
அன்றியே
இஸ் ஸம்ஸார சாஹரம் தான் பரம வ்யாமத்தோடே ஏகீ பவித்தது என்னலாம் படி இருக்கையாலே
(சூழ் விசும்பு அணி முகில் இப்பாட்டுக்கு விரிவு
சம்சாரம் முக்தனுக்குத் தானே தொலையும் )
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபி சாப்யய-என்று
அவன் தான் விபூதி த்வயத்தையும் உப ஸம்ஹரிப்பதாக
(மண்ணும் விண்ணும் -பரமபதத்தைச் சொல்ல வில்லை )
கால அகால யதாம் அஹம் -ஸ்ரீ கீதை -10-30- என்கிறவன் தானாம்படியாக ஒரு காலம் வந்ததோ
இவருடைய ஸைதில்யம் இருந்தபடியோ
இரண்டு விபூதியும் அழியுமா போலே இருந்தது என்று சங்கா வஹமாய் இருக்கை
புயல் காலம் கொலோ -என்று
இவருடைய ப்ராப்ய த்வரையை அறிக்கைக்காக (அறிவிக்கைக்காக ) வந்து
ஆர்த்தியை ஜனிப்பிக்கிற தொரு கால விசேஷமோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –
பாரதந்தர்யத்தை அனுசந்தித்து இருக்கப் ப்ராப்தமாய் இருக்க
அபரிச்சின்னமான ஞானத்துக்குக் காலுஷ்யம் பிறந்து நடவா இருந்தது என்று
சிதிலராய்ச் சொன்ன பாசுரமாய் இருந்தது –
—–
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இது போய் பகவத் விஷயத்திலே மூட்டும் இறே
இதுவும் ஒரு கால மயக்கமாய் இருக்கிறது
இவர் தமக்குப் பல இடங்களிலும் வருமாயிற்று கால மயக்கு
அவற்றுக்கு எல்லாம் மூல ஹேதுக்கள் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -1-என்ற
அநந்தரமே தொடங்கி பகவல் லாபத்தோடே செல்ல வேண்டி இருக்க
அது கிடையாமல் பிறந்த ஆற்றாமையைப் பார்ஸ்வஸ்த்தருக்கு ஆஸ்வசிப்பித்தும்
ஜீவிப்பிக்கிறது பரமாய் இருக்கும் இறே
ஆகையால் சொல்லுகிறது
கலந்து பிரிந்த தலைமகன் கார்காலத்தைக் குறித்துப் போனானாய்
அக்காலமும் வந்து அவன் வாராமையால் பிறந்த ஆற்றாமை
கண்ணன் இத்யாதி
சர்வேஸ்வரனுடைய
பூமி அந்தரிக்ஷம் ஸ்வர்க்காதிகள் அடைய -பிரளயம காலமோ
வர்ஷா காலமோ
இரண்டாலும் உனக்கு இழவு இல்லை
அஸத் ஸமமாய்க் கிடக்கும்
உண்டது உருக்காட்டாமல் அவன் இருப்பானே
தான் உளனாக உண்டாக்குமவன் -உன்னையும் உண்டாக்கி விடுவானே
————
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி விஸ்லேஷ அஸஹ மானை யான தலை மகளுடைய போக யோக்கியமான காலத்தில்
அவன் வாராமையாலே
வந்த ஆர்த்தி அதிசயத்தாலே புறப்படும் கண்ணீர் வெள்ளத்தைக் கண்ட இவள் தாயார்
அத்தைச் சொல்லிக் கொண்டு இக்காலம் பிரளய காலமேயோ வர்ஷா காலம் தானோ என்று
தானும் ஏங்கி அவசன்னை யாகிறாள்
இப்பாசுரத்தில் –
வியாக்யானம்
கடல் கொண்டு எழுந்தது வானம்
மேகமானது கடலை அடி மண்டியோடே பருகினதாய் எழும்பிற்று
அவ் வானத்தை அன்றி சென்று
அன்றி -அவ்வானத்தைத் தான் கபளீ கரித்து அன்று விடாததாய்ச் சென்று
ஸ்வயம் விஜ்ரும்பித்து எழும்பினதாய்
கடல் கொண்டு ஒழிந்த
கடலானது அவ்வானத்தைக் கபளீ கரித்துக் கொண்டு
ஸ்வயம் அதி மஹத்தாய் எழுந்தது ஆயிற்று
அதனால் இது
அந்தக்காரணத்தாலே இக்காலம்
கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ
கிருஷ்ணம் பூமி ஆகாச சமுத்ரங்களை வயிற்றிலே வைத்துக் கொண்டு விஜ்ரும்பித்த மஹா ப்ரளயமோ
புயல் காலம் கொலோ
மேகங்களே விஜ்ரும்பித்து எழும்பி வர்ஷிக்கும் காலம் தானோ
ஓ
இது என்ன காலமாயிற்று
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே
காரிகை -இவ்வவஸ்தை பொறுக்க மாட்டாத அபலையான சீர்மை யுள்ளவள் –
கடல் கொண்ட கண்
கடலைத் தோற்பித்த கண்
அது யுடையவள்
அக்கண்ணீர் அருவிகளையே சொரியா நின்றாள் என்று அவசன்னை யாகிறாள்
இது கால மயக்குத்துறை –
——————-
அவதாரிகை
இப்படி அனுபவ யோக்ய கால தர்சனத்தாலே ஈடுபட்ட இவருக்கு ஈஸ்வரன் சடக்கென
அனுக்ரஹம் பண்ணாதே
விளம்பிக்கிறபடியைக் கண்டு ஸூஹ்ருத்துகள் ஈடுபட்டு உரைத்த பாசுரத்தை
கார் காலத்தில் ஈடுபட்ட தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே
பாங்கி பழிக்கு இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-
பதவுரை
காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று–‘ஸ்திரீகளுள் (எம்முன், அடக்கத்தை அழியாமற்
பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச்செருக்கி
மாரி–மேகங்கள்
கார் கொண்டு–கருமை நிறங்கொண்டு-கோபத்துக்கு வர்ணம்
இன்னே–இவ்வாறு
கை ஏறி–ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று
அறையிடும் காலத்தும்–அறைகூவுகிற காலத்திலும்
சாரிகை புள்ளர்–விரைந்த நடையையுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர்
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை
கூய் இறை அருளார்–(இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை;
(ஆகவே)
என் சில் மொழிக்கு–சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு
சேரி கை ஏறும்பழி ஆய் விளைந்தது–(அவர் பக்கல்கொண்ட காதல்தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது.
அதிமாத்ர ப்ராவண்யத்தைப் பழி என்கிறார்கள்
வாழியரோ–இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.
உரை
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகு பார்த்து இருக்கும் பெண் பிறந்தாரில் தங்கள் பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று
இன்னே
இப்படியே
கார் கொண்டு மாரிகை ஏறி
மேகங்களானவை வர்ஷித்துக் கொண்டு அணிந்து ஏறி
அறை இடும் காலத்தும்
யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்
வாழியரோ சாரிகை புள்ளர்
இவ்வளவிலும் தம்முடைய வைபவத்துக்கு மங்களா ஸாஸனம் பண்ண இருக்கிற இவர்
சாரிகை புள்ளார்
ஆ பன்னர் இருந்த இடத்தில் சடக்கென வருகைக்கு ஈடான பரிகரத்தை யுடையவர்
சாரிகை என்று
மண்டல ஆகார கதியைச் சொல்லுகிறது
தர்ச நீய கதியான புள் என்றபடி
(சிறப்பான நடத்தை ஆச்சாரம் அனுஷ்டானம் வேதம் தானே சொல்லும் )
ஆர்ந்து அம் தண் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாயை
இறை கூய் அருளார்
ஏக தேசமும் அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்
கொடுக்கும் போதை ஸாந்த்வ வாதமும் தேட்டமாய் இருக்கிற படி
(இறை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை
இங்கு ஏகதேசம் )
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –
என்னுடைய மித பாஷிணி யானவளுக்கு
ஊரார் கை வகுத்து உறும்படியான பழியாய்ப் ;பலித்தது
கை ஏறும் பழி என்று
கை எடுத்து உரைக்கவுமாம் –
இத்தால்
காரிகையார் -என்று
ஸ்த்ரீத்வத்தைச் சொல்லுகையாலே பாரதந்தர்யத்தை அனுசந்தித்து
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்-ஸூந்தர –37-62- என்று இருக்கும் ஸ்வரூபத்தைச் சொன்னபடி
நிறை காப்பவர் யார் -என்று
இந்த ஸ்வரூப பூர்த்தியை யாராலே நோக்கலாம் என்று அபிப்ராயம்
கார் கொண்டு என்று தொடங்கி
ஸ்மாரக முகத்தாலே ஆகர்ஷகமான விக்ரஹத்தையும்
அனுபாவ்யமான குண அபி வர்ஷத்தையும் ஆவிஷ் கரித்து
இப்படி அனுபவ யோக்ய அவஸ்தையானது அபி முகமாய் த்வரிப்பிக்கச் செய்தேயும்
மங்களா ஸாஸனம் பண்ணும்படி
தர்ச நீயமான வாஹன வை லக்ஷண்யத்தை யுடையவர்
போக்யமாய் ஸ்ரம ஹரமான தம்முடைய ப்ரஸாதத்தை ஸ்நிக்த கம்பீரமான திரு மிடற்று ஓசையாலே
அழைத்து ஏக தேசமும் கொடுத்து அருளுகிறீலீர்
என் சின் மொழிக்கு
என்று இதனுடைய அபேக்ஷையில் புனர் வசனம் மிகையாம் படி ஸக்ருத் யுக்த அதிகாரிகளால்
எங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவான அவருக்கு என்றபடி
(ஸக்ருத் ஏவ யுக்தி த்வயம் பிரபத்தி ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ இவர்
மாறன் சொல் வேராக வீடு )
சேரி இத்யாதி
இந்த ஸ்ரேணி யிலுள்ள சாத்விக ஜனம் கை எடுத்துக் கூப்பிடும்படி பழியாய்
பரிணமித்தது என்றார் ஆயிற்று –
—————–
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
தோழியானவள் காலத்தை மயக்கி இவளை ஆஸ்வசிப்பித்து வார்த்தை சொல்லா நிற்க
அவ்வளவில் பிரிந்து தனி இருப்பாரைக் காலத்தை மயக்கி தரிப்பிப்பார் யுண்டாகில் தரிப்பிப்புயுங்கோள் என்று
வாய் பற்றிக் கொண்டு வந்து தோற்றின சில மேகங்கள்
அவற்றின் உத்யோகத்தைக் கண்ட திருத்தாயார் வார்த்தையாகாச் செல்லுகிறது
வியாக்யானம்
காரிகையார் உண்டு -அபலைகள்
அவர்களுடைய நிறையுண்டு -அடக்கம்
அத்தை ஆர் தான் அறியாதபடி நோக்குகிறார்கள்
நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் என்று
கார் கொண்டு
புறம்பு கறுப்பு
அகவாயில் கறுப்பு புறம்பு பொசித்துத் தோற்றிற்று என்னலாய் இருக்கை
இன்னே
இதனுடைய ஒருப்பாடு இருந்தபடி கண்டோ உமக்கு இப்படி -என்னும் அத்தனை போக்கிப்
பாசுரம் இட்டுச் சொல்லலாவது இல்லையே
மாரிகை ஏறி
ரண உத்யதா நாம் கிஷ்கிந்தா -28-21-என்னும்படி
கையும் அணியும் வகுத்துக் கொண்டு
அறை இடும் காலத்தும்
நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் -என்று அறையோ அறை -என்னா நின்றதாயிற்று
தேந நாதேந மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர -பால -1-68-
அவன் ரக்ஷகன் நாம் ரஷ்யம் என்று ஆச்சார்ய உபதேச மாத்திரம் அறிந்து ஆறி இருக்கலாய் –
க்ரமத்தாலே பெறுவோம் என்று இருக்கலாம்
இவருக்கு அனுபவ பூர்வகமாக அறிந்து -கிருபா குண ஞானம் பிறந்து
இரக்கமே உபாயம் -அதுக்கு நான் ஆள் என்று உணர்ந்த பின்பு க்ரம பிராப்தி என்று ஆறி இருக்காமல் -துடிப்பாரே
பேற்றுக்குத் த்வரிக்க வேணுமே
வழி அல்லா வழி மேல் விழுந்து அடைய த்வரிப்பது குற்றம் அன்றே
ஸாஸ்த்ரங்கள் விதித்தாலும் செஞ்சே தீர கங்கணம் கொண்டு – வாஸனை பலத்தாலும் கவனக்குறைவால் -பிராமாதிகமாகவும்
அபிராப்த விஷயங்களில் புத்தி பூர்வகமாக குற்றம் நாம் செய்வது போல் பகவத் விஷயத்தில்
ஞானாதிக்யத்தால் வருமவை எல்லாம் அடிக்கழஞ்சு பெறலாம்
பத்தி மேலீட்டால் தெரிந்தே செய்தாலும் குறை இல்லையே
குணாதி விஷயத்தில் விஷய வை லக்ஷண்யம் பண்ண வைக்கும்
ஷூத்ர விஷயம் அல்பம் அஸ்திரம் அப்ராப்யம் -இதிலே மேல் விழுந்து
இது அநந்தமாயும் ஸ்திரமாயும் ப்ராப்த விஷயமுமாய் அதுக்கும் மேலே குணாதி விஷயமுமாய் –
ஆக நான்காலும் இருக்க கைமுதிக நியாயத்தால் செய்வதிலே குறை இல்லையே
இத்தால் சொல்லிற்றாயிற்று என் என்னில்
ஷூத்ர விஷய ப்ராவண்யத்தோ பாதி பகவத் விஷயத்துக்கு குற்றம் உண்டாகிலும்
விட மாட்டாத படியான இவருடைய ப்ராவண்ய அதிசயம் சொல்லுகிறது –
பகவத் விஷயத்தில் குற்றமே சொன்னாலும் விட மாட்டார்
கடியன் கொடியின் நெடிய மால் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் என்பர் அன்றோ
———————-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி வர்ஷா காலத்திலேயே அத்யாவசன்னையாகும் தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே
இவள் தாயார் ஊரார் சொல்லும் பழிக்கு இரங்கி அவசன்னை யாகிறாள் இப்பாட்டில் –
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகைக் கண்டு உகக்கும் பெண்களுடைய பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று
கார் கொண்டு இன்னே மாரிகை ஏறி
இன்னே –
இப்படியே
கார் கொண்டு மாரிகை ஏறி
மேகங்களானவை மேல் மேல் வர்ஷித்திக் கொண்டு
அணி அணியாக ஏறி
அறை இடும் காலத்தும்
யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்
வாழியரோ
என்று சிலராலே தமக்கு மங்களத்தை ஆஸாஸிப்பித்திக் கொண்டு
சாரிகை புள்ளார்
மண்டல ஆகார கதியால் ஸாரி விடும் புள்ளுடையவருடைய
அம் தண் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாயை
இறை கூய் அருளார்
ஈஷத்தாகிலும் மனமுற்று அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்
என் சின் மொழிக்கே –
என் மகளாய்
மித பாஷிணியான இவளுக்கு
சேரி –
ஊரார்
கை ஏறும் பழியாய் விளைந்தது
கை வகுத்து ஏறும்படியான பழியாய்ப் பலித்தது
அவனில் பிரவணை யானாய் உனக்கு இத்தனையும் வேணும் காணும் -என்னும்படி
ஓர் அவதி அற்றுத் தூற்றுவார்களே என்று அவசன்னை யாகிறாள்
இது இவள் பசி வளர்க்கப் பட்டினி இடா நின்றவன் என்று அறிந்தும்
சிலருக்கு அவனில் ப்ராவண்யத்தைத் தவிர்க்கவாய்
சேரியர்க்கே பழியாய்த் தன் குலத்துக்குப் பழியாய் விளைந்தது என்னா நின்றாள் –
————
அவதாரிகை
இப்படி நோவு படுகிற இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கைக்காக
ஈஸ்வரன் அநந்ய ஸாத்யன் -என்று அறியாதே இவர் பக்கல் பரிவாலே உண்டான கலக்கத்தாலே
ஸர்வான் தேவான் நமஸ்யந்தி -அயோத்யா காண்டம் -2-52-என்னுமா போலேயும்
நாய்ச்சியார் காமன் காலிலே விழுந்தால் போலேயும்
பகவத் விபூதி பூதரான தேவதாந்தர அனுவர்த்தனத்தாலே யாகிலும் இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கலாமோ
என்று ப்ரவர்த்தித்த பரிவரைக் குறித்து
இவருடைய ப்ரக்ருதி அறிந்து இருக்கும் ஸ ப்ரஹ்மசாரியான ஸூஹ்ருத்துக்கள் விலக்கின பாசுரத்தை
தலை மகள் ஈடுபாட்டுக்கு நிதானம் அறியாதே வெறி யாடலுற்ற தாயாரைக் குறித்து
இவள் பிரகிருதி அறிந்த தோழி வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20–
பதவுரை
சில் மொழி நோயோ–சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது–இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து
இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று இது;
வேல–வெறியாட்டாளனே!
நீ நில்–நீ விலகி நிற்பாயாக;
எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே–
என் மொழி கேண்மின்–(இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்;
கழிபெருந் தெய்வம்– மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது.
ஏழு உலகும்–எல்லாவுலகங்களையும்
உண்டான்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது.
சொல் மொழிகொண்டு–திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு
மாலை அம் தண்ணம் துழாய்–(அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை
சூட்டுமின்–(இவளுக்குச்) சூட்டுங்கள்-
வியாக்யானம்
சின்மொழி நோயோ
வாய் விட்டு வார்த்தை சொல்லவும் மாட்டாத இவளுடைய நோய்
ஓ
நோயின் முதிர்த்திக்கு ஈடுபட்ட படி
கழி பெருந்தெய்வம்
மிகவும் பெரிய ஈஸ்வரன் அடியாக வந்தது
இன்ன-இந்நோய் இது என்று
இந்த நோய் இப்படிப்பட்டது என்று
ஸ்வரூப பிரகாரங்களைப் பரிச்சேதித்து
இன்மொழி கேட்கும்
இல்லாத மொழியைக் கேட்கப்படுவதான
இளந்தெய்வம் அன்று இது
இது அர்வாஸீன (தாழ்ந்த )தேவதை அன்று
வேல! நில் நீ
முருகனே -நீ வெறி யாடுகிற வேலனே -கடக்க நில்லு
என் மொழி கேண்மின்
இவள் பிரகிருதி அறிந்த என்னுடைய வார்த்தையை கேளுங்கோள்
ப்ரக்ருதி அறியாதே அசம்பாவிதத்தைச் சொல்லுகிற
கட்டு விச்சி
வேலன்
தொடக்கமானவர் வார்த்தையைக் கேளாதே என்று கருத்து –
என்னம்மனை மீர் !
மெய் சொல்லுகைக்கு அடியான பந்தமும்
ப்ரக்ருதி அனுகுணமாகப் பிரவர்த்திப்பிக்கும் வாத்சல்யத்தையும் யுடைய நீங்கள்
உலகு ஏழும் உண்டான் சொல் மொழி
ஸப்த லோகத்தையும் தனது வயிற்றிலே வைத்து நோக்கினவன் திரு நாமத்தைச் சொல்லுகை
மாலை யம் தண் யம் துழாய்
மாலா ரூபமாய்
தர்ச நீயமுமாய்க் குளிர்ந்த திருத்துழாய்
கொண்டு சூட்டுமினே –
சொன்மொழியைக் கொண்டு
திருத்துழாயைச் சூட்டுமின் என்று நேர் நிரல் நிறை
இந்நோய்க்கு பகவன் நாமமாகிற மந்த்ரத்தை உச்சரித்து
ப்ரஸாதமாகிற பசு மருந்தை சிரஸா வஹியுங்கோள்
என்றதாயிற்று –
இத்தால்
சின்மொழி நோய் -என்று
ஸ்வ காரியத்தில் ஸக்ருத் வசனமும் ஒழிய அறியாதவள் என்றபடி –
நோயாவது
அனுபவ அபி நிவேச ரூபமான பக்தி யோகம்
கழி பெருந்தெய்வம் -என்று
ஸமாப்யதிக ரஹித ஸர்வேஸ்வரன் என்றபடி
(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ )
இந்நோய் இது என்று-இத்யாதியாலே
இந்த ஆர்த்தி ஏவம் விதம் என்று பர்ச்சேதிக்கலாம் படி
அஸத்ய ப்ரலாப ஸ்ரவண விஷயமான அர்வாஸீன தேவதைகளுக்கு ஸாத்யம் அன்று
ஆகையாலே
வேல நில் நீ -என்று
தேவதாந்த்ர அந்வயம் நிற்கப்படுவதாக என்றபடி
பிரதமத்திலே பகவத் சம்பந்தம் உடையோருக்கு அவதானித்துக் கழிக்க வேண்டுவது
தேவதாந்த்ர சம்பந்தம் ஓன்று இறே
பின்பு இறே
ஆர்த்தி பரிஹாரமும்
போக ஸித்தியும்
(பகவத் சேஷத்வத்திலும் அந்நிய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் )
என் மொழி கேண்மின் -என்று
ஆர்த்தி பரிஹாரம் -ஆப்த உபதேச மூலம் என்றபடி
என்னம்மனை மீர் ! -என்று
பிதா புத்ர ஸம்வாதம் போலே மூப்பு இளமையால் வரும் தாரதம்யம் இன்றியே
அறிவுடையார் உபதேஷ்டாக்கள் என்றபடி
உலகு ஏழும் உண்டான் சொல் மொழி -என்று
நாம உச்சாரண பேஷ ஜாத் நஸ்யந்தி சகலா ரோகா -என்கிறபடியே
ரக்ஷகனுடைய நாம உச்சாரணமே ஆர்த்தி சாந்தி கரம் என்றபடி
மாலை யம் தண் யம் துழாய் -என்று
போக்ய வஸ்து ஸம்ஸ்லேஷமும் ஆஹ்லாத ஜனன முகத்தாலே ஆர்த்தியை
சமிப்பிக்கும் என்றதாயிற்று
கொண்டு சூட்டுமினே –என்கையாலே
போக்ய விஷயத்திலே தலை வைக்கப் பண்ணி
அத்தாலே
நோ பஜநம் ஸ்மரன் -சாந்தோக்யம் -8-12- என்கிறபடியே
ஆர்த்தியை நினைக்கைக்கும் வழி இல்லை இறே
ஆகையால்
உபதேச மூலமான ஸப்த உச்சாரணமும்
போக்ய அந்வயமும்
விஸ்லேஷ ஆர்த்தி நிவர்த்தகம் என்றதாயிற்று –
———-
ஸ்ரீ நம்பிள்ளை -ஈடு
அவதாரிகை
காலமும் போய் மர முதிர்ந்து மேகங்களுமாகக் கை வளர்ந்து
நாயகனும் வாராமையாலே இவள் மோஹங்கதையாக
இத்தைக்கண்ட தாயார் தொடக்கமான பந்து வர்க்கமும் போய் அறிவு இழந்து
இவளுக்கு இது ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாக நினைத்து
பாஹ்ய ஆகமங்களைத் த்ருஷ்டியாகக் கொண்டு தேவதாந்தர ஸ்பர்சமுடையாரை
சிகித் சகரராய்க் கொண்டு சிகிச் ஸஹையிலே இழிய
இவள் பிரக்ருதியை அறிந்த தோழி யானவள்
இவர்கள் இவளை இழக்கும்படி வ்யாபரியா நின்றார்கள்
அவன் வந்திலனேயாகிலும் நாம் இவள் சத்தியை நோக்கி இட்டு வைப்போம் என்று பார்த்து
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து -திருவாய் -4-6-8-என்கிறபடியே
வேதத்தைத் த்ருஷ்டியாகக் கொண்டு வேத தனரைத் தேசிகராய்க் கொண்டு
வேதாந்த வேத்யமான பரதத்வம் அடியாக வந்தது என்று புத்தி பண்ணி
இக்குடிக்கு அனுரூபமாகப் பரிஹரிக்கப் பாருங்கோள் என்று
பரிஹாரத்தைச் சொல்லி இவள் வெறி யாட்டத்தை விலக்குகிறாள்
வியாக்யானம்
சின் மொழி
கீழ்ச் சொன்ன தசா விசேஷம் தன்னையே சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே
சில கற்ப்பித்தவை சொல்லுமது ஒழியத் தானாக ஒன்றும் சொல்ல மாட்டாத படியன்றோ இவள் பருவம்
இப்பாவைக்கு வந்தது அவனடியாக வேண்டாவோ
சின்மொழி நோயோ
இவள் கொண்ட நோய் அறிந்து ஸர்வேஸ்வரன் அடியாக வந்தது என்னுதல்
அன்றிக்கே
சின் மொழி நோய் கழி பெரும் தெய்வம் ஓ
என்னவுமாம்
இவள் இந்நோய் கொள்ள பாக்யம் பண்ணுவதே
இது என்ன ஆச்சார்யமோ
நாம் இந்நோயைக் கொள்ளாதே
இதுக்குப் பரிஹாரம் பண்ணுவதாகப் புகுந்து அவிக்ருதிகளாய் இருப்பதே என்று
ஓ என்னவுமாம்
கழி பெரும் தெய்வம்
இவளுடைய இந்நோய் கழியப் பெரிதான பரதேவதை அடியாக வந்தது
இந்த்ராதிகளில் காட்டில் ப்ரஹ்மாதிகள் யுடைய ஐஸ்வர்யத்துக்கு ஏற்றம் உண்டே யாகிலும்
இருவருக்கும் ஷேத்ரஞ்ஞத்வம் அவிசிஷ்டம் இறே
சேஷித்வ ப்ரயுக்தமான இதர விஸஜாதியை யுள்ளது அவன் ஒருவனுக்கும்
ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வ ஷேத்ரஞ்ஞத்வங்கள் இங்கு உள்ளார் எல்லாருக்கும் ஒக்கும் இறே
கழி பெரும் தெய்வம்
அவ்வருகு இல்லாத தத்வம்
பதிம் விஸ்வஸ்ய -தைத்ரியம்
பதிம் பதீ நாம் -ஸ்வேதாஸ்
தமீஸ் வரணாம் பரமம் மஹேஸ்வரம் -ஸ்வேதாஸ்
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தைத்ரியம்
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .