ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி
திரு அரங்கா உறை மார்பா திசை முகன் சேவிப்ப கந்
திருவர் அங்கு ஆதரித்து இன்னிசை பாட திருக் கண் வளர்
திருவரங்கா வுன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்
திரு வரம் காதலித்தேன் உனக்கே தொண்டு செய்வதற்கே–1
முதல் -வரி -திருவரங்கா -திரு அரங்கு ஆ -திரு மகள் தான் வசித்தற்கு இடமாக கொண்டு
இரண்டாம் வரி -திருவரங்கா தரித்து -கந்தருவர் அங்கு ஆதரித்து
மூன்றாம் வரி -திருவரங்கா -அவனையே குறித்து அருளி
நான்காம் வரி -திருவரங்கா -எழுந்திரு-உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் = வரம் பெற ஆசைப்பட்டேன்-
————–
திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந்
திருக் காவிரிக்கும் கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த்
திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –45-
திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந் திருக் காவிரிக்கும்
திருக்கா விரிக்கும் -அழகிய சோலைகளைச் செழித்து வளரச் செய்கின்ற
யமுனா நதிக்கும் கங்கா நதிக்கும் தெளிவான அமுதம் போலே இனிதாய் இருக்கிற மேன்மை உள்ள காவேரி நதிக்கும்
கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
சமுத்ரத்துக்கும் தலைவனான எம்பெருமானது அழகிய திருவரங்கம் என்று ஒரு தடவையாவது வாயினாலாவது சொல்ல
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த் திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –
-அன்பு உய்த்து இருக்கா -அன்பு செலுத்தி இராமல்
திருக்கு ஆவீர் -மாறுபடுவீர்காள்
இக்கு மொழியார்க்கு -கருப்பஞ்சாறு போலே இனிய சொற்கள் உடைய மகளிர் திறத்திலோ
தீ மெழுகு ஆவீர் -தீப்பட்ட மெழுகு போலே கரைந்து உருகுவீர்கள்
இவ்வாறு இருக்க
அவன் உங்கள் சென்மத்தை இரிக்குமது எ ஆறு -அப்பெருமான் உங்களுடைய பிறப்பை ஒழிப்பது எங்கனம் நிகழும்
திருக் கா விரிக்கும் -அடை மொழி யமுனை கங்கை காவரி மூன்றுக்கும் கொள்ளலாம்
யமுனைக்கும் இவனே பிரான் -ஸ்ரீ கிருஷ்ணா லீலைகள் செய்து அருளியதால்
கங்கைக்கும் பிரான் -ஸ்ரீ பாத தீர்த்தமானதால்
திருக் காவேரிக்கு பிரான் -உபய காவேரி மத்யத்தில் திருப் பள்ளி கொண்டு அருளிக் கொண்டு இருப்பதால் -எனவே தெள்ளமுதாம் –
———-
தீரத் தரங்கப் பவ நோய் துடைத்து என்னைத் தேவரொடும்
தீரத் தரங்கப் பணி காப்ப வைத்த செயல் என்பதோர்
தீரத் தரங்க வபயம் என்றார்க்கும் திரைப் பொன்னி சூழ்
தீரத் தரங்கன் சிலம் பார்ந்த செய்ய திருவடியே –100-
தீரத் தரங்கப் பவ நோய் துடைத்து
தரங்கம் பவ நோய் தீரத் துடைத்து
அலை போல் மாறி மாறி வந்து வருத்துகின்ற எனது பிறவித் துன்பத்தை ஒழியுமாறு நீக்கி
என்னைத் தேவரொடும்
அடியேனை நித்ய ஸூ ரிகளோடும்
தீரத் தரங்கப் பணி காப்ப வைத்த செயல் என்பதோர்
தீர்த்தர் -ஓடும் ஞானி
அங்கு -அவ்விடத்தில் -பரம பதத்தில்
அ பணி
எம்பெருமானுக்கு செய்யும் அந்தக் கைங்கர்யங்களை
காப்ப -காத்து இருந்து தவறாமல் செய்யுமாறு
வைத்த செயல் எனபது ஒர்தீர்
செய்கையை அறியுங்கோள்
தீரத் தரங்க வபயம் என்றார்க்கும் திரைப் பொன்னி சூழ்
அத்தர் அங்க -தலைவர்களான பிரம ருத்ரர்களை தனது திருமேனியில் கொண்டு அருள்பவனே
அபயம் என்று ஆர்க்கும்
அடைக்கலம் என்று ஓலம் இடுவது போன்று ஆரவாரிக்கின்ற
திரைப் பொன்னி சூழ்
தீரத் தரங்கன் சிலம் பார்ந்த செய்ய திருவடியே —
தீரத்து அரங்கன் -வரம்பை உடைய திருவரங்கன் உடைய
சிலம்பு ஆர்த்த செய்ய திருவடியே
சிலம்பு என்னும் திரு ஆபரணம் பொருந்திய சிவந்த திருவடிகளே –
பணி காப்ப வைத்த செயல் -அவா அற்று வீடு பெற்றார் என்றால் போலே
அத்த ரங்க அபயம் என்று ஆர்க்கும் திரைப் பொன்னி
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன்
அஞ்சாதே என்று என்னை பாதுக்காக உரியன் நீயே -என்றபடி
————————————————————————————
பணவாள் அரவின் அரங்கேசர் தாளில் பரிதி வளை
நிணவாள் அம் சார்ங்கம் கதை தோளில் சார்த்தினன் நீள் நிலமேல்
குணவாளர் ஆம் பட்டர்க்கு ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான்
மணவாள தாசன் யமக அந்தாதி வனைந்தனனே —
பணவாள் அரவின் அரங்கேசர் தாளில் சார்த்தினன்
திருவடிகளில் சமர்ப்பித்தான்
பரிதி வளை நிண வாள் அம் சார்ங்கம் கதை தோளில்
பரிதி -சக்கரம்
வளை -சங்கமும்
நிணம் வாள் -பகைவரின் கொழுப்புத் தோய்ந்த வாளும்
அம் சார்ங்கம் -அழகிய சார்ங்கம் என்னும் வில்லும்
கதை -ஆகிய பஞ்ச ஆயுதங்களும்
தோளில் -தமது திருக்கைகளில் கொள்பவரான
தொனி தக்க சங்கம் திருச் சக்கரம் சுடர் வாள் முசலம் குனி தக்க சார்ங்கம் தரித்தார் அரங்கர் -என்றார் முன்னமே
நீள் நில மேல் -நீண்ட நில வுலகத்திலே
குணவாளர் ஆம் பட்டர்க்கு
உத்தம குணங்களை யுடைய வரான பட்டர் என்னும் ஆச்சார்யர்க்கு
ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான்
பதினான்கு தலை முறைகளிலும் -தொன்று தொட்டு -பரம்பரையாக அடியவனான
மணவாள தாசன் –
அழகிய மணவாள தாசன்
யமக அந்தாதி வனைந்தனனே —
யமக யந்தாதி பா மாலையைத் தொடுத்து
————————————————————————————–———–
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –
நம்மாழ்வார் துதி
மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –
திரு நா வென் மந்தரத்தால் -பாட பேதம்-
அளத்தற்கு அரிய பரப்புடைமை -இன் சுவை யுடைமை -எம்பெருமான் உறைவிடம் ஆதலால்
மறையை பாற் கடலாக உருவகம் செய்து அருளுகிறார்
திரு -வேறு ஒன்றுக்கு இல்லாத மேன்மை -திரு நா வீறுடைய பிரான் போலே
கறை-நஞ்சினை யுடைய – -புள்ளி என்றுமாம்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –
——-
4- யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ என்றால் அஃது உனக்கு வியப்பு ஆமோ —
நாயகராய்த் திரியும் சில தேவர் -திரு வேம்கடத்து அந்தாதி
கடவுள் -எல்லாவற்றையும் கடந்து இருப்பவன் -தொழில் ஆகு பெயர்
——–
1-அலை கடல் வயிறு கலக்கினை
கூர்மாவதாரத்தில் ஷீராப்தி மதன காலத்திலும் -ஸ்ரீ ராமாவதாரத்தில் வருணனை வழி வேண்டிய பொழுதும்
2-அவுணரை மதுகை யடக்கினை
மதுகை யடக்கினை -வலிமை கெடச் செய்தாய்
3-மலை கட களிறு வதைத்தனை
குவலயாபீட வதம்
4-மலை தலை கவிழ எடுத்தனை
கோவர்த்தன உத்தாரணம்
மதுசூதனன் எடுத்து மறித்த மலை –
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்துக் கவித்தமலை –
————————————–
1-மண்ணை விண்டனை
2- வெண்ணெய் உண்டனை
3- மருது இடந்தனி
4-எருது அடர்ந்தனை
5-உள் நிறைந்தனை
அந்தர்யாமித்வ வைபவம்
6-எண் இறந்தனை
எண்ணத்தையும் கடந்து –மனத்தை கூறினது மொழி மெய்களுக்கும் உப லஷணம்
7-ஒருமை ஆயினை
அத்விதீயன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
8-பெருமை மேயினை-
—————————————————————————-
11- தானே தனக்கு ஒத்த தாள் -தாமரைக்குச் சரண் புகுந்து ஆள்
ஆனேன் இனி உன் அருள் அறியேன் எனது ஆருயிரே
தேனே என் தீ வினைக்கு ஓர் மருந்தே பெரும் தேவர்க்கு எல்லாம்
கோனே அரங்கத்து அரவணை மேல் பள்ளி கொண்டவனே –11-
உயிர்க்கு உயிர் என்பதால் ஆருயிர்
அழியா இன்பம் தருவதால் தேன்
தேவாதி தேவன் -என்பதால் பெரும் தேவர்க்கு எல்லாம் கோன்
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி உன் திருக் குறிப்பே -பெரியாழ்வார் –
———————————————
20- கேசவனையே செவிகள் கேட்க திரு அரங்கத்து
ஈசனையே சென்னி இறைஞ்சிடுக நேசமுடன்
கண்ணனையே காண்க இரு கண் இணர் கொள் காயம் பூ
வண்ணனையே வாழ்த்துக என் வாய் –20-
இணர் கொள்-கொத்தாக மலர்ந்த
————
தான் தூது விட்ட நெஞ்சு திரும்பி வாராமைக்குத் தலைமகள் இரங்குதல்
24-நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க -மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான்
ஆர் இருக்கினும் என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –24–
தோழிமீர் -நீர் அவன் அழகிலே ஈடுபட்டு திரும்பி வாராமல் இருப்பீர்
கிளியோ மன்மதன் குதிரை
வண்டோ மன்மதன் வில்லின் நாண்
அன்னம் மந்தகதி –
குருத்தத்தை மாரன் குரகதமாம் என்றே வருத்தத்தை அங்கு உரைக்க மாட்டேன்
கருத்துற்ற மா தண்டலைவாய் மதுகரத்துக்கும் அவன் தன் கோதண்ட நாண் என்று கூறேன் நான்
பொற்கால் வெறிப்பது மவீட்டன்னம் வெண் பாலும் நீரும் பிரிப்பது போல் நட்பும் பிரிக்கும்
குறிப்பு அறிந்து காதலால் உள்ளக் கவலை யது கேட்க ஓதலாகாது என்று உரையாடேன் ஆதலால்
உள்ளே புழுங்குவது அன்றி ஒருவருக்கும் விள்ளேன் -திரு நறையூர் நம்பி -மேக விடு தூது –
——————
73-கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –73-
கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -இரு கரைகளையும் மோதிப் பெருகுகின்ற காவிரி நதி ஓன்று உண்டு
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -நம்பெருமாள்
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே—திரு அவயவங்கள்
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே -இடது திருவடி ஒரு சேர அளந்ததே
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே -வலது திருவடி -கங்கை நதியை வெளி உமிழ்ந்தது
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே-உந்தித் தாமரை மலர் பிரமதேவனை உண்டாக்கிற்று
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே -திரு மார்பு அழகிய இடமாய் -திரு மனையாகி
பெரிய பிராட்டிக்கு வாசஸ் ஸ்தானம் -பருத்த கௌஸ்துபம் விளங்கப் பெற்று உள்ளதே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே -வலத் திருக்கை முடை நாற்றம் உடைய பிரம கபாலத்தை ஒழித்தது
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே -இடது திருக்கை கோதண்டத்தை வளைத்தது
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே -திரு முக மண்டலம் -எப்பொழுதும் மலர்ந்து அருளோடு இருந்தது
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே -திருப்பவளம்
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய இன்பம் தழீ இய இரு பெரும் கமலம்-திருக்கண்கள் –
துன்பம் தழீ இய தொண்டனேனையும் உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –
பத்துத் தாமரையும் ஒன்பது அதிசயமும் அருளுகிறார்
அரவிந்தம் -தாமரை -பங்கேரு ஹம்-சேற்றில் முளைப்பது -கோகனகம்- கோக நதம் -மருவி –பதும மலர் –
முளரி-வனசம் -வனஜம் -நீரில் முளைப்பது -புண்டரீகம் -அம்போருகம் -கமலம் -பர்யாய பத்து சொற்கள் –
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி -அவன் கடாஷமே உய்ய ஹேது என்றவாறு –
ஜாயமானம் ஹி புருஷம் யாம் பச்யேன் மது ஸூதான -சாத்விகஸ் சது விஜ்ஞேயஸ் சவை மோஷார்த்த சாதக –
மா முதல் அடிப்போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப் போது ஓன்று விண் செலீஇ
நான்முகப்புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழி பட நெறீஇத் தாமரைக்காடு மலர்க் கண்ணொடு கனிவாயுடைய
–முடி தோள் ஆயிரமும் தழைத்த நெடியோக்கு அல்லது அடியதோ வுலகே –
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே –
—
இப்பாடலின் சிறப்புகள் :
1. இவ்வண்ணத்தில் உள்ள சொற்கள் அடுத்த வரியிலும் உடனே வருகின்றன (அந்தாதி போல)
2. இவ்வண்ணத்தில் உள்ள சொற்கள் தாமரையின் வெவ்வேறு பெயர்களையும்
அரங்கனின் (அடைப்பு குறிக்குள்உள்ள ) அவயவங்களையும் குறிக்கின்றன
கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே ! (பொருது – மோதி)
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே !
அரவம் சுமப்பதும் ஓர் அஞ்சன மலையே ! (அஞ்சனம் – கண் மை)
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே !
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே !
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம்
உடன் முழுது அளந்தது, ஒருதாமரையே (இடது திருவடி)
வகிர் இளம் பிறையான் வார்சடை தேங்கப்
பகிரதி கான்றது ஓர் பங்கேருகமே (வலது திருவடி)
யாவையும் யாரையும் படைக்க, நான்முகக்
கோவை ஈன்றது ஓர் கோகனகமே (திரு நாபி)
திருமகட்கு இனிய திருமனை ஆகி
பரிமணி இமைப்பது ஓர் பதும மலரே (திரு மார்பு)
சடைத்தலை தாழ்த்து சங்கரன் இரப்ப
முடைத்தலை தவிர்த்தது ஓர் முளரி மாமலரே (வலத் திருக்கை )
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கள நாண்
வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே (இடத் திருக் கை )
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென்திசை (விபீஷணன்)
புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே (திரு முக மண்டலம்)
மண்திணி ஞாலமும் வானமும் உட்பட
அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போருகமே (திருப் பவள வாய்)
கடை சிவந்து அகன்று கருமணி விளங்கி
இடை சில அரி பரந்து இனி ஆய் நெடி ஆய்
இன்பம் தழீஇய இரு பெரும் கமலம் தழீ இய – நிறைந்த (திருக் கண்கள்)
துன்பம் தழீஇய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி
பவக்கடல் கடக்கும் பரிசு பண்ணினவே
——————————
திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது.
இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது.
எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது.
அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே.–38-
வாலி காலனை -வாலிக்கு யமனாய் இருந்தவனே
வாசவன் தலைவன் -இந்திரன்
ஔவியப் பிறப்பில்-பொறாமையை உடைய பிறவிக் கடலில் –
அவா வெகுளி இன்னாச் சொல் -போன்ற தீக் குணங்களுக்கும் உபலஷணம்
அழன்று பொரு வாலி காலன் பரகாலன் போற்றும் திருவாலி மாயன் -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
இந்தப் பாடலில் மாலவன் மகிழ்ந்தினிதுறையும் தலங்களும்,
அவனுடைய திருநாமப்பெருமையும்,
அவன் உயிர்களில் கரந்துறையும் மாண்பும்
மனங்கவரும் வண்ணம் இடம்பெற்றுள்ளன.
———–
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்து மாலை
சிறப்புப் பாயிரம் -அபியுக்தர் அருளிய தனியன் –
மறைப் பொருளோ அச்சிரப் பொருளோ மனுவே முதலாம்
முறைப் பொருளே இதிகாகச புராண முதுப் பொருளோ
இறைப் பொருளாம் நம் பெருமாளுடைத் திரு எட்டு எழுத்துள்
உரைப் பொருளோ -மணவாளர் தம் மாலையின் உட் பொருளே –
வேதம் -வேதாந்தம் -சிர பொருள் -மனு முதலான தரும சாஸ்திரம் -18 ஸ்ம்ருதிகள் –இதிகாசம் -புராணம் -அஷ்டாஷரம் –
இவை அனைத்தின் பொருளும் இந்த திருவரங்கத்து மாலையிலே உண்டு என்றவாறு
புகழு நல் ஒருவன் என்கோ-பொருவில் சீர் பூமி என்கோ -திகழும் தண் பரவை என்கோ -தீ என்கோ வாயு என்கோ
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ -இகழ்வில் இவை யனைத்தும் என்கோ என்றால் போலே
ஈடு பட்டு வியந்து சங்கை போலே அருளிச் செய்கிறார் இங்கு
இறைப் பொருள் -தலைமையான பொருள் -முதலாவார் மூவரே யம் மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் -என்பதால் –
இறைப் பொருளாம் நம் பெருமாள் -என்றவாறு
இறைப் பொருள் திரு அஷ்டாஷர திரு மந்த்ரத்துக்கு விசேஷணம் என்றுமாம்
நம்பெருமாளுடை திரு எட்டு எழுத்து -இவன் வெளியிட்டு அருளி குரு பரம்பரையில் இடம் பிடித்து கொண்டதால்
குரு பரம்பரை பூர்வகமாக அனுசந்திக்கும் அஷ்டாஷரம் என்றவாறு-
கோயிலில் வந்த மணவாளர் பொற் திருப் பாதாம்புயங்கட்கு மாலை என மணவாளர் சூடும் என்றவாறு-
——————————
பேர் ஒத்த ஆயிரம் பேர் மடிந்தால் பிறங்கும் கவந்தம்
நேர் ஒத்த ஆடும் அது ஆயிரம் ஆடின் நெடும் சிலையின்
ஏர் ஒத்த கிண் கிணி சற்று ஒலித்திடும் அது ஓர் யாமம் நின்று
கார் ஒத்த மேனி அரங்கர் தம் போரில் கறங்கியதே –44-
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை காவல் ஆயிரம் படில் செழும் கவந்தம் ஓன்று ஆடும்
கானம் ஆயிரம் ஆயிரம் கோடிக்கு கவின் மணி கணில் என்னும் எனை யம் மணி ஏழரை நாழிகை யாடியது இனிதன்றே -கம்பர்
நாளில் ஏட்டில் ஓர் பாகம் -யாமம் -ஏழரை நாழிகை
————
திருவெட்டு எழுத்து -பெரிய திருமந்திரம்
நம் பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணிவாள்
வெம்படை மாசுணம் மா மத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –81-
மகா மாயாவியான சம்பாசுரன் செய்த மாயைகளை எல்லாம் திரு வாழி யாழ்வான் தகித்து சாம்பராக்கி விட்டதனால் சம்பரன் மாயமும்
புரோகதர் உண்டாக்கி மேலே ஏவின கிருத்யை வந்து ஒன்றும் செய்ய மாட்டாதே திரும்பிப் போய் அந்த புரோகிதர் மேலே விழுந்து
தகிக்க ஆரம்பித்ததனால் புரோகிதர் சூழ் வினையும்
அங்கு இருந்த அசுரர்கள் ஆயுதங்களை எடுத்து பிரயோகிக்க அதனால் வேதனை உறாமல் விளங்கியதால் தாரணி வாள் வெம்படையும்
கொடிய மகா சர்ப்பங்கள் -மா சுணமும் – மா மத வேழமும் -விஷமும் -தழல் கால் அம்பரம் முதலானவை என்றதால் பர்வதம் முதலியனவையும்-என்றவாறு –
சர்வ வேதாந்த சாரார்த்தஸ் -சம்சார ஆர்ணவ தாரக –கதி அஷ்டாஷர உன்ரூணா மபுநர்ப்பவ காங்ஷிணாம்-
குலம் தரும் செல்வம் தந்திடும் இத்யாதி
————————————————————-
துவாதசாஷர மகா மந்திரம் –
அத்தா அரங்கத்து அமர்ந்தவனே எழுத்து ஆறு இரண்டின்
வித்து ஆய நின் அருள் கொண்டு அல்லவோ -விளைவு ஓன்று அறிய
உத்தான பாதன் மகன் சலியாது உலகு உள்ளளவும்
எத்தார கைக்கும் முனிவர்க்கும் மெல் சென்று இருக்கின்றதே –82-
சூரிய குலத்தில் உத்தானபாக மகாராசன் குமாரன் துருவன் சஞ்சலம் இல்லாமல் லோகம் உள்ளவரையிலும்
மேல் ஸ்தானம் சென்று அடைந்து இருப்பது -ஸ்ரீ த்வாதச அஷர விதையாகிய உனது அருள் கொண்டே –
விளைவு ஓன்று அறியா -துருவனுக்கும் உத்தான பாதனுக்கும் இயையும்-இளையாள் மேல் பஷபாதம்
காட்டியதால் பெரும் தீங்கு விளைய காரணம் ஆனான் என்றவாறு –
—————————————
திரு வநந்த வாழ்வான் –
சென்றால் குடை ஆம் கடல் புணை ஆம் திருத் தீவிகை ஆம்
நின்றால் இரு திருப் பாதுகை ஆம் நித்திரைக்கு அணை ஆம்
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம் புனை கோசிகை ஆம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசற்கு அரவு -அரசே –87-
சென்றால் குடை ஆம் கடல் புணை ஆம் -திருப் பள்ளி மேத்தையாம்
திருத் தீவிகை ஆம் -விளக்கு இட்டுக் காண அபேஷிதம் ஆன பொழுது மங்கள தீபம் ஆகும்
நின்றால் இரு திருப் பாதுகை ஆம்
நித்திரைக்கு அணை ஆம்
குன்றா மணி ஒளி ஆசனம் ஆம்
புனை கோசிகை ஆம் -பும்ச்த்வ அவஹமாகிய அழகிய திருப் பரிவட்டமாம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசற்கு அரவு -அரசே —
சென்றால் குடையாம் இத்யாதி -நிவாசா செய்யா ஆசன இத்யாதி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதை யதோ உசிதம் சேஷ இதீர்ய தேஜ நை
—————————
ஏழு மதில்களும் திருவரங்க விமானமும்
அருமறை ஓதிய ஓர் எட்டு எழுத்தும் அயன் படைத்த
இரு நில மீதினில், யாவரும் காண இலங்குதுத்திக்
குரு மணி நாகத்தில் எம் கோன் விழி துயில் கொண்டருள
திரு மதில் ஏழும் விமானமும் ஆகிச் சிறக்கின்றவே –95-
பிரணவாகார விமானம் இங்கேயே அனைவரும் காணும் படி -எழுந்து அருளி இருப்பதனால் –
இரு நில மீதினில் –யாவரும் காண சிறக்கின்ற -என்கிறார் –
———————————————————————-
இதுவும் அது –
தாழாது இபம் சொல்ல வந்தார் அரங்கர் தயங்கு செம் பொற்
கேழா விமானம் கிளர் செம் பொன் மேரு கிரி -நிகர்த்த
ஏழ் ஆ வரணத்து இடை இடைத் தீவுகள் இவ் அனைத்தும்
சூழ் ஆறு மா கடல் எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதே –96-
தாழாது இபம் சொல்ல வந்தார் அரங்கர் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆதி மூலமே என்ன
அரை குலைய தலை குலைய விரைந்து எழுந்து அருளி காத்து அருளிய நம்பெருமாள்
தயங்கு செம் பொற் கேழா விமானம் -விளங்கும் செம்பொன் மயமாகிய விமானம்
கிளர் செம் பொன் மேரு கிரி –
நிகர்த்த ஏழ் ஆ வரணத்து இடை இடைத் தீவுகள் -சப்த த்வீபங்களை ஒத்த ஏழு மதில்கள்
இவ் அனைத்தும் சூழ் ஆறு மா கடல் -சொந்த காவேரி கடலை ஒத்தது
எவ்வாறு நாம் இனிச் சொல்லுவதே –பூ லோக வைகுண்ட மகிமையை வருணித்துச் சொல்ல இயலாது -என்றவாறு
———————————————————
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை –
காப்பு -நம்மாழ்வாரைக் குறித்து அருளிச் செய்கிறார் –
திண்பார் புகழும் திருவேங்கட மாலை
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய்
நாராயணா வடியேனாடும் தமிழ் வேதப்
பாராயணா சடகோபா –
நாராயணா
வடியேனாடும் -அடியேன் நாடும்
தமிழ் வேதப் பாராயணா சடகோபா
அடியேன் நாடும் -தமிழ் வேத பராயணத்துக்கும் சடகோபருக்கும் அடை மொழியாகக் கொள்ளலாம்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் –
பராயணம் = முழுவதும் -நாதனுக்கு நாலாயிரமும் அருளினவர் அன்றோ
திண்பார் புகழும் திருவேங்கட மாலை –
வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -உலக்குக்கு எல்லாம் தேசமாய்த் திகழும் மழைத் திரு வேங்கடம் –
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய் -வெண்பாவால் நூறும் விளம்புவதற்கு கிருபை செய்து அருளுவாய்
———————————————–
இதுவும் அது -திருவேங்கடமுடையானைக் குறித்து அருளிச் செய்கிறார்
மூலமே யென்ற கரி முன் வந்திடர் தொலைத்து
நீலமேகம் போலே நின்றானைப் பாலாய
வேலை நடு விற்றுயிலும் வித்தகனை வேங்கடத்து
மாலை யன்றிப் பாடாதென் வாய் –
தேவு மற்று அறியேன் -வேறு ஒன்றும் நான் அறியேன் -போலே வேங்கடத்து திருமாலை யன்றி பாடாது என் வாய் என்கிறார்
மறந்தும் புறம் தொழாதவர் -என்நாவில் இன்கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –
பாலாய வேலை நடுவில் துயிலும் வித்தகன் -வியூக நிலை –
———————————————
——————————————————————
பாடும் மதுகரமும் பச்சைத் தழைக் குடிலின்
வேடும் மணம் மருவும் வேங்கடமே -நீடு
மகராலயம் கடந்தார் வாழ் வாசு தேவர்க்கு
மகர் ஆலயங்கள் தந்தார் வாழ்வு –100-
பாடும் மதுகரமும்-இசை பாடுவது போல் ஒலிக்கின்ற வண்டுகளும்
மணம் மருவும் -மலர்களின் நறு மணம் பொருந்தப் பெற்ற
பச்சைத் தழைக் குடிலின் -பசுமையான தழைகளால் அமைக்கப் பட்ட குடிசைகளில்
வேடும் மணம் மருவும் -வேடர்களும் கல்யாணம் செய்யப் பெற்ற
வேங்கடமே
-நீடு மகராலயம் கடந்தார் -நீண்ட கடலை தாண்டியவரும் -மகரங்களுக்கு இடமான கடல் -மகரம் -சுறா மீன்
வாழ் வாசு தேவர்க்கு மகர் -வாழ்வை யுடைய ஸ்ரீ வசுதேவருக்கு புதல்வரானவரும்
ஆலயங்கள் தந்தார் வாழ்வு -திருக் கோயில்களை தந்து அருளிய திருமால் நித்ய வாசம் செய்யும் திருப்பதி
——————————————————————-
நாந்திச் செய்யுள் –
ஆதி திருவேங்கடம் என்று ஆயிரம் பேரான் இடம் என்று
ஓதிய வெண்பா ஒரு நூறும் -கோதில்
குணவாள பட்டர் இரு கோகனைத் தாள் சேர்
மணவாள தாசன் தன் வாக்கு —
பட்டர் இரு கோகனைத் தாள் சேர் -ஸ்ரீ பராசர பட்டர் உடைய சரணார விந்தங்களை சேர்ந்த
அழகிய மணவாள தாசன் உடைய திரு மொழியாகும்
கோகம் -சக்கரவாக
——————————
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கடத்தந்தாதி –
எனக்குப் பணியப் பணி ஒரு கால் இரு காலும் நல்க
உனக்குப் பணி இங்கு இருவேம் பணியில் என் ஓர் பணியும்
நினக்குப் பணி வித்துக் கொண்டு உம் பணி நீ பணித்திலை என்
தனக்குப் பணி வெற்பின் மீது ஓங்கி நின்ற தனிச் சுடரே –52-
பணி வெற்பின் மீது-சேஷகிரியின் மேல் ஓங்கி நின்ற தனிச் சுடரே –சூர்யா சந்திர அக்னிகளிலும் மேம்பட்ட பரஞ்சோதி அன்றோ நீ
எனக்குப் பணியப் பணி ஒரு கால்-ஒரு கால் பணிய எனக்கு பணி -ஒரு தரம் வணங்குவதே எனக்கு தொழில்
இரு காலும் நல்க உனக்குப் பணி -உனது திருவடி இணைகளை அருளுவது உனக்கு உரிய க்ருத்யம்
இங்கு இருவேம் பணியில்-இவ்வாறு குறித்த நம் இருவர் வேலைகளிலும்
என் ஓர் பணியும் நினக்குப் பணி வித்துக் கொண்டு -ஒரு கால் பணிதல் ஆகிய எனது தொழிலை மாதரம் உனக்கு நீ செய்வித்துக் கொண்டு
உம் பணி நீ பணித்திலை என் தனக்குப் -இரு காலையும் நல்குதல் ஆகிய உனது தொழிலை நீ செய்கின்றாய் இல்லை –
——————————————————————————————-
அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுய
கரம் கண்ண மங்கை நறையூர் கடல் மலை கச்சி கண்ண
புரம் கண்டியூர் தஞ்சை மாலிருஞ்சோலை புல்லாணி மெய்யம்
தரங்கம் பரமபதம் வேங்கடேசற்குத் தானங்களே –56-
திருவரங்கம் முதல் ஸ்ரீ வைகுண்டம் வரை 17 திவ்ய தேசங்களை அடை மொழி இல்லாதபடி அழகாக அருளிச் செய்கிறார் –
—————
திருமந்திரம் இல்லை சங்கு ஆழி இல்லை திரு மண் இல்லை
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் செம்பொன் தானவனை
மருமம் திரங்கப் பிளந்தான் வடமலை வாரம் செல்லீர்
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –99–
பேதைச் சனங்களே உங்கள் பக்கல்
திருமந்திரம் இல்லை
சங்கு ஆழி இல்லை-சங்கு சக்கர முத்திரை இல்லை
திரு மண் இல்லை -திருமான் காப்பும் இல்லை
மந்த்ரம் தாபம் புண்டரம் மூன்றும் அருளிச் செய்தது மற்றை நாமம் யாகம் இரண்டுக்கும் உப லஷணம்
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் -சரணாகதி தர்மத்தை நிலையாக சிறிதும் செய்து பயின்றீர் இல்லை
செம்பொன் தானவனை மருமம் திரங்கப்-மார்பு வருந்த – பிளந்தான்
வடமலை வாரம் செல்லீர் -திருவேங்கட திருமலை அடிவாரம் -சென்றீர் இல்லை –
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –மலை போலே பெரும் தொகுதியாக குவிந்து உள்ள -திரண்ட கர்மங்களை எவ்வாறு களைவீர் –
அவைஷ்ணவர்களை பரம காருண்யத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகுமாறு அருளிச் செய்கிறார் உஜ்ஜீவன உபாயமாக –
———————————
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி –
வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின் பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய தொங்கல் சுற்றும்
தாழும் இன்பஞ்சணை மேல் மடவார் தடமா முலைக்கே
வீழும் இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே –44–
தொங்கல் சுற்றும் தாழும்
இன்பஞ்சணை மேல் -இன் பஞ்சு அணை மேல்
மடவார் தடமா முலைக்கே வீழும்
இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே —
பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய –
வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின்–வாழும் மின்னல் போலே நித்ய அநபாயினி -சுந்தர வல்லி தாயார் கேள்வன் உடைய
மாலிருஞ்சோலை திருமலையை பிரதஷிணம் செய்மின்
வலம் செய்து வைகல் வலம் கழியாதே வலம் செய்யு மாய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -ஆழ்வார்
——————————————————————————
மணவாளர் ஆவி நிகர் திரு மாதுக்கு மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக்
குணவாளர் ஆவீர் இன்றே உயிர்காள் உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் அப்போது நினைப்பு அரிதே –51–
உயிர்காள் -பிராணிகளே
மணவாளர் ஆவி நிகர்-உயிர் போன்ற – திரு மாதுக்கு
மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக் -தியானிக்குமாறு
குணவாளர் ஆவீர் இன்றே
ஏன் என்றால்
உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் -கொடு வினைக்கு ஏற்ப நிணம் தோய்ந்த -முன்பு அறுக்கப் பட்ட பிராணிகளின் கொழுப்பு தோய்ந்த –
வாள் ஆயுதத்தை கூர் செய்து அது கொண்டு அறுக்கும் படியான
அப்போது நினைப்பு அரிதே –அந்த அந்திம காலத்தில் நினைப்பது இயலாகாதாகும்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் –
———————
பணிபதி வாட நின்று ஆடின நூற்றுவர் பால் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின பாப் பதின்மர்
பணிபதி எங்கும் உவந்தன பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் பொன் திருப் பாதங்களே –94-
பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் -ஸ்ரீ கௌஸ்துபம் மணி பொருந்திய மார்பன் -அலங்கார அழகர் யுடைய
பொன் திருப் பாதங்களே —
பணிபதி வாட நின்று ஆடின -காளியன் வலிமை தளரும் படி அவன் தலையில் நர்த்தனம் செய்தன
நூற்றுவர் பால் சென்றன -துரியோதனாதிகள் பால் பாண்டவ தூதனாய் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின-பதினாலு புவனமும் தாவி அலைந்தன
பதின்மர் பாப் பணிபதி எங்கும் உவந்தன-பத்து ஆழ்வார்கள் அருளிச் செயல் அருளி ஸ்துதிக்கப் பட்ட
திவ்ய தேசங்களில் எல்லாம் உவந்து எழுந்து அருளின –
இது இரண்டாவது யமகச் செய்யுள் இந்த பிரபந்தத்தில் –
—————————
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி –
காப்பு –
ஆழ்வார்கள் பன்னிருவர்
பொய்கை பூதன் பேயார் பொன் மழிசைக் கோன் மாறன்
செய்ய மதுரகவி சேரர் பிரான் வையகம் எண்
பட்டர் பிரான் கோதை தொண்டர் பாதப் பொடி பாணன்
கட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு –
வையகம் எண் -உலகோரால் நன்கு மதிக்கப்படும் –
கட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு -அரும்புகளின் முறுக்கு விரிந்த மாலையைத் தரித்த வாட்படையை ஏந்திய திரு மங்கை யாழ்வார்
தார் முள்ளி மலர் மாலை என்றுமாம் -முள்ளிச் செழு மலரோ தாரான் =
—————————————————————
நம்மாழ்வார் –
பிறவாத பேறு பெறுதற்கு எஞ்ஞான்றும்
மறவா திறைஞ்சு என் மனனே துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வளநாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள் –
——————————————————————–
உடையவர் –
முன்னே பிறந்து இறந்து மூதுலகிற் பட்ட எல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி —
————————————————————————-
கூரத் தாழ்வான் –
முக்கால மில்லா முகில் வண்ணன் வைகுந்தத்தது ‘
எக்காலம் செல்வான் இருக்கின்றேன் தக்கார் எண்
கூரத் தாழ்வான் அடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத் தாழ்வான சடம் போட்டு —
முக்கால மில்லா முகில் வண்ணன் வைகுந்தத்தது ‘-முக்காலம் இல்லா -முகில் வண்ணனுக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கும் விசேஷணம்
தக்கார் எண் -பெரியார்களால் நன்கு மதிக்கப் பெற்ற –
போட்டு —பேரும் சுமை என்பதால் -சடம் போட்டு -உடம்பை விட்டு
—————————————————————————
பட்டர் –
நான் கூட்டில் வந்தவன்றே நானறியா நன்மை எல்லாம்
தான் கூட்டி வைத்த நலந்தான் கண்டீர் -ஆம் கூட்டச்
சிட்டருக்கு வாய்ந்த திருவரங்கன் இன்னருளால்
பட்டருக் காட்பட்ட பயன் –
ஆம் கூட்டச் சிட்டருக்கு வாய்த்த திரு வரங்கன்-இன்னருளால்
திரள் திரளாக யுள்ள பெரியோர்கட்கு -கருணை செய்யுமாறு வாத்சல்யத்துடன் -பொருந்திய இருக்கும்
திருவரங்கன் யுடைய இனிமையான நிர்ஹேதுக கிருபையினால்
சித்தர் சிஷ்டர் நல்ல ஒழுக்கம் உடையவர் -என்றபடி
———————————————————————
திருப்பதிகளின் வகை –
ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–
நடு நாடு -தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திவ்ய தேசங்கள்
தொண்டை -தொண்டர்கள் நிறைந்த தேசம் -தொண்டை நில மகட்கு முக்கிய அங்கம்
—————————————————————–
1–திருவரங்கம் பெரிய கோயில் –
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்
திரு அரங்கம் கோயில் சிறப்பு -1-
ஆர்வம் ஒருவர் அங்கு அங்கு ஒயில் -ஒருவர் அந்த அந்த விஷயங்களில் பலவகையான உலகப் பற்றுக்களில் ஆசை ஒழிந்தால் –
உகந்து அவரை ஆள்வான் -அவ்வாறு பற்று அற்ற அன்பரை விரும்பி அடிமை கொள்ளும் எம்பிரான் உடைய
திரு அரங்கம் கோயில் சிறப்பு -பெருமையை
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என் சோர்வந்த சொல்லில் -குற்றம் பொருந்திய சொற்களில் -சுருங்குமோ
நான்முகன்-முதலில் வழிபட்ட திருவரங்கம் என்பதாலும் எம்பெருமான புதல்வன் என்பதாலும் -சீர் வந்த உந்தித் திசை மகன் என்கிறார் –
——————————————
34-திரு வண் புருடோத்தமம் –
சாய்ந்த திரு அரங்கம் தண் வேங்கடம் குடந்தை
ஏய்ந்த திரு மால் இருஞ்சோலை பூந்துவரை
வண் புருடோத்தமம் ஆம் வானவர்க்கும் வானவன் ஆம்
ஒண் புருடோத்தமன் தன் ஊர் –34-
ஏய்ந்த -திரு உள்ளத்துக்கு பாங்காக –
புருஷோத்தமன் எழுந்து அருளி உள்ள வளப்பம் உள்ள திருப்பதி யாதலால் திரு வண் புருடோத்தமம் –
—————————————
41- திரு மால் இருஞ்சோலை —
பணிந்தேன் திருமாலை பாமாலை தாளில்
அணிந்தேன் அருள் தஞ்சமாகத் துணிந்தேன்
திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன் எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் –41–
திருமால் இருஞ்சோலை சேர்ந்தேன்
பணிந்தேன் திருமாலை
பாமாலை தாளில் அணிந்தேன்
அருள் தஞ்ச மாகத் துணிந்தேன்
எனக்கு
வருமால் இருஞ்சோதி வான் -ஜோதிமயமான பரம பதம் கிட்டும் -இது திண்ணம் –
பணிந்தேன் திருமேனி பைங்கமலக் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது-
————————
49-திருக் குருகூர் –
வளம் தழைக்க உண்டால் என் வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என் சீ சீ குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள்
வண் குருகூர் என்னாத வாய் –49-
குளிர்ந்த பொழில்
தண் குருகூர் வாவிச்
சடகோபன் ஊர்
எங்கள் வண் குருகூர் என்னாத வாய் — வளப்பம் பொருந்திய எங்கள் திருக் குருகூர் என்று
ஒரு தடவையாவது சொல்லாத வாயானது
வளம் தழைக்க உண்டால் என்
வாசம் மணத்தால் என்
தெளிந்த கலை கற்றால் என்
சீ சீ -இகழ்ச்சிக் குறிப்பிடைச் சொல்
க- பிரமனே இங்கே தவம் செய் என்று காட்டிக் கொடுத்தலால் -குருகா புரி -திரு நாமம் –
ஆழ்வார் திருவவதரித்ததால் ஆழ்வார் திருநகரி –
ஆழ்வார் திரு நகரி ஆதிதேவ நாதர் திருக் கோயில் உபய பிரதானம் –
—————————
73-திருக் கோவலூர் –
தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
சேம உயிரும் செகம் அனைத்தும் பூ மடந்தைக்கு
ஆம் கோ அலாயுதன் பின்னா அவதரித்த
பூங்கோ வல் ஆயன் பொருள் –73–
தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
சேம உயிரும் செகம் அனைத்தும்
பூ மடந்தைக்கு ஆம் கோ
அலாயுதன் பின்னா அவதரித்த -கலப்பையை ஆயுதமாக யுடைய நம்பி மூத்த பிரானுக்கு பின்னாக திருவவதரித்த
பூங்கோ வல் ஆயன்
பொருள் –படைப்புப் பொருள்கள் ஆகும்
அனைத்தும் அவனால் படைக்கப் பெற்று அவன் இட்ட வழக்காகும் என்றவாறு
கோபாலபுரம் –
பா வரும் தமிழால் பேர் பனுவல் பா வலர் பாதி நாள் இரவின் மூவரும் நெருக்கி
மொழி விளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு –
———————————————————————
91-திரு நீர் மலை –
இரங்கும் உயிர் அனைத்தும் இன் அருளால் காப்பான்
அரங்கன் ஒருவனுமே ஆதல் கரங்களால்
போர் மலை வான் வந்த புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று –91–
இரங்கும் உயிர் அனைத்தும்-வருந்துகின்ற எல்லா உயிர்களையும்
இன் அருளால் காப்பான் அரங்கன் ஒருவனுமே ஆதல் கரங்களால் -ஆயிரம் கரங்களினாலும்
போர் மலைவான் வந்த-போர் செய்யும் படி வந்த –
புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று —
தன்னை ஆஸ்ரயித்த வாணனை -தலையிலே பூ வாடாதே நோக்குகிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி தன்னைத் தொழுத கைகளை
கள்ளிக் காடு சீய்த்தால் போலே சீய்க்கக் கண்டு உயிர் உண்டால் உப்பு மாறி உண்ணலாம் என்று நெற்றியிலே
கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினான் ஆகையாலும் ரஷகன் ஆக மாட்டான் –
ஈஸ்வரன் மாதாக்கள் கை விட்ட அவஸ்தையிலும் பின்னி நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான் —
நாராயணத்வ பிரயுக்தமான உதரத் தெரிப்பாலே அகவையில் நின்று சத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே
இவனே எல்லாருக்கும் ரஷகன் -ப்ரபன்ன பரித்ராணம்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலமே -நம்மாழ்வார் –
———————————————————————–
92-திரு இட வெந்தை —
நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து
கொன்று திரியும் கொடு வினையார் இன்று
வெருவிட எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன்
திருவிட வெந்தைக்கே செறிந்து –92-
நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து -ஸ்தாவரமும் ஜங்கமும்ஆகிய எல்லா பிறவிகளையும் எனக்கு உண்டாக்கி
கொன்று திரியும் கொடு வினையார் -வருத்திக் கொண்டு திரியும் கொடிய வினைகள்
இன்று வெருவிட-அஞ்சி ஓடும்படி
யான்
திருவிட வெந்தைக்கே செறிந்து
எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன் –
வானோ மறி கடலோ -இத்யாதி –
———————————
94- திருவல்லிக்கேணி —
திரிந்து உழலும் சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
புரிந்து புகன்மின் புகன்றால் மருந்து ஆம்
கருவல்லிக்கு ஏணி ஆம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக்கேணி யான் சீர் –94-
திரிந்து உழலும்-ஐம் புலன் ஆசைகளில் சென்று அலைகின்ற
சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
திருவல்லிக்கேணி யான்-கண்ணன் – சீர் -பார்த்த சாரதி-வேங்கட கிருஷ்ணன் உடைய கல்யாண குணங்களை
புரிந்து புகன்மின் -விரும்பிக் கூறுமின்
புகன்றால்
கருவல்லிக்கு -கர்ப்பம் ஆகிய கொடிக்கு மருந்து ஆம்
மாக்கதிக்கு ஏணி ஆம்-
—————————————————————————-
95-திருக்கடிகை -சோளிங்க புரம்–
சீர் அருளால் நம்மைத் திருத்தி நாம் முன் அறியாக்
கூர் அறிவும் தந்து அடிமை கொண்டதற்கே நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான் –95-
மனமே
சீர் அருளால் நம்மைத் திருத்தி
நாம் முன் அறியாக் கூர் அறிவும் தந்து
அடிமை கொண்டதற்கே
முத்தி தரு கடிகை மாயவனை
நேரே
ஒரு கடிகையும் -ஒரு நாழிகை பொழுதாவாது
உள்ளுகிலாய் -நினைக்க மாட்டாய் –
தான் -ஈற்று அசை –
கடிகாசலம் -சோழ தேசத்துக்கு வளம் மிக்க ஸ்ரீ நரசிம்ஹம் நித்ய வாசம் செய்து அருளும் ஸ்தலம்
என்பதால் சோளசிம்ஹபுரம்-
சோளசிம்ஹராஜன் உடைய புரம் என்றுமாம்
————————————————————————–
96-திருவேங்கடம் –
தானே சரணமுமாய் தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான் தேன் ஏய்
திருவேங்கடம் தொழுதேம் தீய விபூதிக்குள்
மருவேம் கடந்தனெம் இவ்வாழ்வு –96–
தானே சரணமுமாய்
தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான்
தேன் ஏய்திருவேங்கடம் தொழுதேம்
தீய விபூதிக்குள் மருவேம்
கடந்தனெம் இவ்வாழ்வு –சம்சார வாழ்வைக் கடந்து விட்டோம் –
தெளிவு பற்றி எதிர் காலத்தை இறந்த காலத்தில் அருளிச் செய்கிறார் -கால வழுவமைதி –
———————————————————
97-திருச் சிங்கவேள் குன்றம் -திரு அஹோபிலம் –
வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே
சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும்
அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த
சிங்கவேள் குன்றத்தினார்க்கு –97-
கேழ் கிளரும் -நிறம் விளங்குகின்ற
அங்கவேள் -அழகிய தேகத்தை யுடைய மன்மதன்
குன்ற அழல் சரபத்தைப் பிளந்த -சிவபிரானது ரூபமான சரபம் என்னும் விலங்கை பிளந்து அளித்து அருளிய
இரண்டு தலைகள் சிறகுகள் கூறிய நகங்கள் எட்டுக் கால்கள் மேல் நோக்கிய கண்களை யுடைய மிருக விசேஷம் –
சரபம் பறவையும் என்பர்
சிங்கவேள் குன்றத்தினார்க்கு —
வாழ் குமரன் மேல் -அருள் பெற்ற பிரகலாதன் மேல்
ஓர் முகத்தே சூழ் கருணையும்
கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே முனிவும் தோன்றினவால்
இப்படி மாறான குணங்களை ஓன்று சேர வைத்த அகடிகடநா சமர்த்தன் –
சிங்கமாகி அழகியவனாய் அனைவராலும் விரும்பத்தக்கவன் என்பதால் சிங்க வேள் குன்றம் –
நவ நரசிம்ஹ அஹோபில ஷேத்ரம் –
————————————————
101-திருவதரியாச்சிரமம் —
தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு எட்டெழுத்தும்
கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு
போவது அரிது ஆனாலும் போய்த் தொழுவோம் நெஞ்சமே
மாவதரியாச்சிரமத்து –101-
நெஞ்சமே
தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு
எட்டெழுத்தும் கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு போவது அரிது ஆனாலும்
போய்த் தொழுவோம் மாவதரியாச்சிரமத்து –
நர நாராணனாய் உலகத்து அறநூல் சிந்காமை விரித்தவன்
பதரி இலந்தை மரம் -இலந்தை மரங்கள் அடர்ந்த ஆஸ்ரமம்
———————
104-திருவட மதுரை –
செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி
வல்வினையை நீக்குமினோ மாந்தர்காள் தொல்லை
வடமதுரையான் கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான் திறத்து –104-
மாந்தர்காள்
கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான்-திடம் அது உறுதியாக -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று உபதேசித்து அருளினவன்
தொல்லை வடமதுரையான் திறத்து-திரு வடமதுரை திருவவதரித்த பெருமான் இடத்தில் –
செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி -வல்வினையை நீக்குமினோ
கண்ணனுக்கு மதுரமாய் இருக்கும் ஸ்தலம் -மது அசுரனை நிரசித்த இடம் -மதுரை பெயர் காரணம் –
————————————————————————-
105-திருத் துவாரகை –
திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி பாதகர் ஓர் ஐவர் நறுந்துளவ
மாதுவரை யோனே மனம் துணையாகக் கொண்டு என்னைக்
காதுவர் ஐயோ மெய் கலந்து –105-
நறுந்துளவ
மாதுவரையோனே
பாதகர் ஓர் ஐவர்
திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி
மனம் துணையாகக் கொண்டு
மெய் கலந்து
என்னைக் காதுவர் ஐயோ —
அகன்ற துவாரத்தை யுடையது திருத் துவாரகா –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர் –
———————————————————
106-திருவாய்ப்பாடி –
கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும்
பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர் மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி அமலர் அடியார் அடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும்–106-
மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி -அண்டர் -இடையர்கள் வாழ்கின்ற ஆய்ப்பாடி திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கும்
அமலர்
அடியார் அடியார் தொண்டராய்ப் பாடித் தொழும்–தாசானுதாசராய் அடிமைப் பட்டவராய் -அவர்கள் குணங்களைப் பாடி
அவரை வணங்குங்கோள்-அப்படி வணங்கினால்
கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும் பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர்
கரை கண்டோர் துளக்கமில்லா வானவர் –
பெருமை மிக்க இடையர்கள் வசிக்கும் சேரி பொருளில் திரு ஆய்ப்பாடி -திரு கோகுலம் –
——————————————————————
107–திருப்பாற் கடல் –
தொழும் பாய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்து
இருப்பாற்கு அடலாம் இடர் –107-
தொழும் பாய நான்-எம்பிரானுக்கு அடியேனான நான்
நல்ல சூது அறிந்து கொண்டேன் -நல்ல உலவை அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும் திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார்
அடி சேர்ந்து இருப்பாற்கு அடலாம் இடர் -ஒழித்தல் எளிதாம்
அல்ப செயலால் பெரும் பேறு சித்திக்கும் என்பதால் நல்ல சூது என்கிறார் –
வ்யூஹ நிலை -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரத்த அர்த்தமாகவும்
சம்சாரிகள் சம் ரஷண அர்த்தமாகவும்
உபாசக அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்த ரூபேண நிற்கும் நிலை –
—————————————————————————–
திரு நாட்டுத் திருப்பதி -108-
இடருடையேன் சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே -தொடரும்
கருவைகும் தம் பிறவிக் கட்டு அறுத்து மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சீர் –108-
தொடரும் -தொடர்ந்து வருவதும்
கருவைகும் -கர்ப்பத்தினுள் பிரவேசிக்க காரணமான
தம் பிறவிக் கட்டு அறுத்து
மீளாத் திருவைகுந்தம் பெறுவார் சீர் –
பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே
இடருடையேன் சொல்ல எளிதோ -கைமுதிக நியாயம் –
பரத்வமாவது அகால கால்யமான நலம் அந்தமில்லதோர் நாட்டிலே நித்ய முக்தருக்கு
போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
——————————————————————-
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –
நூலோதி வீதி வாழி என வரும் திரளை வாழ்த்துவார் தம் மலர் அடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –
———————————————————-
பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து
—————————————————————–
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –
காப்பு –
புதுவை நகர்ப் பட்டர் பிரான் சரண்கள் போற்றி பொய்கை பூதன் பேயார் பாதம் போற்றி
சது மறைச் சொல் சடகோபன் சரணம் போற்றி தமிழ்ப் பாணன் தொண்டர் அடிப் பொடி தாள் போற்றி
முது புகழ் சேர் மழிசையர் கோன் பதங்கள் போற்றி முடிக் குல சேகரன் கலியன் கழல்கள் போற்றி
மதுர கவி எதிராசன் கூரத் தாழ்வான் வாழ்வான பட்டர் திருவடிகள் போற்றி —
————————————————————————
திரு வாழ திரு ஆழி சங்கம் வாழ திரு அனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ
அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ அளவில் குணத்து எதிராசன் அடியார் வாழ
இரு நாலு திரு எழுத்தின் ஏற்றம் வாழ ஏழ் உலகும் நான் மறையும் இனிது வாழ
பெரு வாழ்வு தந்தருள் நம் பெருமாள் எங்கள் பெரிய பெருமாள் அரங்கர் ஆடீர் ஊசல் –1-
——————————————
———————————————————————-
அருவரங்கள் தரு பராங்குசனே ஆதி ஆழ்வார்கள் தம்பிரான் ஆடீர் ஊசல்
இருவர் அங்க ஒளிக்கு அகலா இருள் அகற்றும் எதிராசன் தம்பிரான் ஆடீர் ஊசல்
தருவரங்கர் நீள் பொழில் கூரத்து வேதா சாரியனார் தம்பிரான் ஆடீர் ஊசல்
திருவரங்கத்து அணி அரங்கன் திரு முற்றத்துத் தெய்வங்கள் தம்பிரான் ஆடீர் ஊசல் –31-
—————————————————————–
உணராத முதலை இளங்குதலைச் சொல்லை உளமுருகித் தந்தை தாய் உவக்கு மா போல்
தணவாமல் கற்பிப்பார் தம் சொற் கேட்டுத் தந்தை உரைத்தத்தை ஆதரிக்குமா போல்
பணவாள் அரா முடி மேல் படி ஏழ் போற்றும் பட்டர் திருத் தாட்கு அடிமைப் பட்ட காதல்
மணவாள தாசன் தன் புன் சொல் கொண்ட மதில் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –32–
——————————————————————–
தற்சிறப்புப் பாசுரம்
போதாரு நான் முகனே முதலா யுள்ள புத்தேளிர் தொழு நாதன் புவனிக்கு எல்லாம்
ஆதாரமாம் தெய்வ மான நாதன் அனைத்து உயிர்க்கு நாதன் அணி யரங்க நாதன்
சீதார விந்த மலர்த் திரு வினாதான் திரு ஊசல் திரு நாமம் ஒரு நால் எட்டும்
வேதா சாரிய பட்டர்க்கு அடிமையான வெண் மணிப் பிள்ளைப் பெருமாள் விளம்பினானே —
————————————
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருப் பேரனாரான கோனேரி அப்பன் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகி ஊஞ்சல் –
காப்பு –
முருகூரும் மகிழ் மாலை அணியும் மார்பன் முத்தமிழன் கவித்தலைவன் முனிவர் வேந்தன்
திருகூரு மனத்திருள் நீக்குதய பானு சி பராங்குச யோகி திரு நா வீறன்
அருகூருந் தண் பொருணை வழுதி நாடன் அக்கமலம் பாடினான் அன்ன மேறி
குருகூரன் சடகோபன் காரி மாறன் கோகனக மலரடியின் குணங்கள் போற்றி –
———————————————–
நீராழி நிறத்த ரங்கர் அடிகள் வாழ நெடு மகுடப் பணிவாழக் கருடன் வாழப்
பேராழி செலுத்திய சேனையர் கோன் வாழப் பேய் பூதன் பொய்கை முதல் பதின்மர் வாழ
ஓர் ஆழிக் கதிர் வாழத் திங்கள் வாழவும் அடியார் மிக வாழ உலகம் வாழச்
சீராழி சங்கு கதை சிலை வாள் வாழச் சீரங்க நாயகியார் ஆடீர் ஊசல் –1-
————————
————————————————————————
மேவிய பங்கயன் தவம் செய்து இறைஞ்சும் கோயில் வேணி யரன் புராண நூல் விளம்பும் கோயில்
தாவு திரைக் காவேரி புடை சூழ் கோயில் சந்திர வாவியின் மருங்கு தழைத்த கோயில்
பாவளர் சத்தாவரணம் உடைய கோயில் பணி அணி சேர் ஓங்காரமான கோயில்
தேவம் தொழும் திருவரங்கம் பெரிய கோயில் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –15–
—————————————————-
தற் சிறப்பு பாசுரம் –
தார் அரங்கத் திருவரங்கர்க்கு ஊசல் பாடிச் சாத்தினான் பேரன் எனும் தன்மையாலும்
ஆரும் கண்டே தெளியும் அவன் சொல் பாட்டின் அதிசயத்தை அறிவன் என்னும் ஆசையாலும்
பார் எங்கும் புகழ் வேத வியாச பட்டர் பதம் பணி கோனேரியப்பன் புன் சொல்லாகச்
சீரங்க நாயகியார்க்கு ஒரு பத்தைந்து திரு ஊசல் திரு நாமம் செப்பினானே –
—————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply