Archive for March, 2020

ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ ஆரண்ய காண்டம் – —

March 12, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்-

ஸ்ரீ கடவுள் வாழ்த்து –

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன், முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவுஅரோ.

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப் படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆது ம்ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே––ஸ்ரீ திருவாய் மொழி–3-4-10-

தோய்ந்து பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடர் –சரபங்கர் படலம் –
வ்யாப்தகத தோஷம் தட்டாமல் உள்ளும் புறமும் வியாபித்து ஏக நிர்வாஹகன் –
ஆதி நாதர் அவர் எம் அறிவினுக்கு அறிவரோ –
ஒன்றும் தேவும் யாரும் இல்லா அன்று –நின்ற ஆதிப்பிரான் -அன்றோ –

———

துறப்பதே தொழிலாகத் தோன்றினார் தோன்றியக்கால்
மறப்பதோ தம்மை அது அன்று ஆகில் மற்றவர் போல்
பிறப்பரோ எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறலரிதோ
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டின் இனிதுகந்தோய் –50- விராதன் துதி-ஒன்றாக கலக்கவே அவதரிக்கிறாய்

என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா –திருவிருத்தம் -1-
சேதனர்களுக்காகவே அவதரித்து தன்னையே உபாயமாகாகக் காட்டி அருளுகிறாயே –

————

பனி நின்ற பெரும் பிறவிக் கடல் கடக்கும்படி பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லாம் நன்று என்னை
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ யாகில்
இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு என் செய்வார் -51-

நும்மின் கவி கொண்டு நும் நும் கிட்டாத தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே–பாசுர எதிர் ஒலி-

————

நீ ஆதி பரம்பரமும்: நின்னவே உலகங்கள்;
ஆயாத சமயமும் நின் அடியவே; அயல் இல்லை;
தீயாரின் ஒளித்தியால்; வெளி நின்றால் தீங்கு உண்டோ ?
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ? 53-

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்
சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதிகச்சதி —

‘தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய!
நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என்கொலோ?-வாராதே வர வல்லாய்! 54′

வந்தாய் போல் வாராதாய் வாராதாய் போல் வருவான் –திருவாய் -6-10-9-

பன்னல் ஆம்” என்று உலகம் பலபலவும் நினையுமால்;
உன் அலால் பெருந் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே;
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்மாட்டு அருந் தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ? 55-

தெய்வம் பல அவர் நூலும் பல அவை தேர் பொழுதில்
பொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு போத நல்லோர்
உய்வம் பலனும் அவனே என்று ஓதி உணர்வர் நெஞ்சே
கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே –அழகர் அந்தாதி ––22-

———

பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்
இருவினையும் உடையார் போல் யரும் தவம் இயற்றுவார்
திருவுறையும் அணி மார்ப நினக்கு என்னை செயற்பால
ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் -56-

பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே –பெரியாழ்வார்
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –திருவாய் -5-4-1-

————

அரவாகிச் சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால்
ஒரு வாயின்ன விழுங்குதியால் ஓர் அடியாள் ஒளித்தியால்
திருவானம் நிலைமகளை இஃது அறிந்தால் சீறாளோ
மருவாரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் -57-

பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன் –திரு நெடும் தாண்டகம் -20-

பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் கிடந்தான் பார் அளந்தான் பார் இடம் முன் படைத்தான் என்பரால் –பெரிய திருவந்தாதி -42-

கிடந்தது இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத்தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே–திருவாய் 2-8-7-

—————–

மெய்யைத் தான் சிறிது சூணைர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள்
உய்யத் தான் ஆகாதோ உனக்கு என்ன குறை யுண்டோ
வையத்தார் வானத்தார் மழு வாளிக்கு அன்று அளித்த
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா -58-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் –திருவாய் -4-10-4-

———————-

அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ; அவை உன்னை
முன்னம் ஆர் ஒதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ?
என்ன மா மாயம் இவை?-ஏனம் ஆய் மண் இடந்தாய்! 59′

ஒரு நாள் அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி -5-7-3-

பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ? என்ன மா மாயம் இவை–விசிஷ்டாத்வைத தத்வம் –

————

ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந் தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும்,
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.’ 60-

ஈடும் எடுப்புமில் ஈசன் –திருவாய் -1-6-3-

ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயா -2-3-2-

தன் ஒப்பார் இல்லப்பன் தந்தான் தனதாள் நிழலே -6-3-9-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ –பெரியாழ்வார் -5-4-9-

பறவை ஏறும் பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் –பெரியாழ்வார் -5-4-2-

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் –திருவாய் –3-6-8-

சார்ந்த இரு வல் வினைகளும் –திருவாய் -1-5-10-

அருளோடு பெரு நிலம் அளிக்கும் –பெரிய திருமொழி -1-1-9-

—————–

சிறுகாலை இலா நிலையோ திரியா
குறுகா நெடுகா குணம் வேறுபடா
உறு கால் கிளர் பூதமெலாம் உகினும்
மறுகா நெறி எய்துவன் வானுடையாய் -20-இந்திரன் இடம் சரபங்கர்

காலாதீனம் இல்லாத பரமபதம் –
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி –திருவாய் -6-9-10-

கண்டாமவை யாயிரம் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை —-24-இந்திரன் இராமபிரானை ஸ்துதிப்பது –

அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி -7-10-1-

—————–

தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே -27-

அந்தர்யாமியாய் இருந்தும் வ்யாப்ய தோஷம் தட்டாதவன் –
சிறைச்சாலைக்குள் குற்றவாளியும் காண வந்த அரசகுமாரனும் போலே அன்றோ –

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப் படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆது ம்ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே––ஸ்ரீ திருவாய் மொழி–3-4-10-

—————

மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இரு இருளும் இல்லை மேல் கீழும் இல்லை
மூவாமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடை கடையோடு ஈறில்லை முன்னோடு பின்னில்லை
தேவா இங்கு இவ்வோ நீ சென்ற நிலை என்றாள் சிலை ஏந்தி வந்து செம்மைச் சேவடிகள் நோவக்
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றேல் கரும் கடலில் கண் வளராய் கைம்மாறும் உண்டோ —

வெண்மையான பாற்கடலும் இவன் நிழலீட்டாலே கருங்கடல் ஆனதே –

ஆலத்திலையான் அரவின் அணை மேலான் நீலக்கடலுள் நெடும் காலம் கண் வளர்ந்தான் –பெரியாழ்வார் -2-6-6-

கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –பெரிய திருமொழி 3-1-1-

நீலக் கடல் கடைந்தாய் –திருவாய் -10-10-7-

சஹஸ்ர வதநோ தேவ பணா மணி விராஜித
ச ஏவ வ்ருஷ அபூத் அநந்த அத்புத ரூபவான் -அன்றோ –

—————

மூவரும் சரபங்கன் தவக் குடில் சேர்தல்
போனவன் அக நிலை புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான்;
ஆனவன் அடி தொழ, அருள் வர, அழுதான்
தானுடை இட வகை தழுவினன், நுழைவான். 33-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்-5-8-5-
அழுவன் -உபாசகர் செய்கையும் செய்தேன் -தொழுவன் -ப்ரபன்னர் செய்கையும் செய்தேன்-

மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –பெருமாள் -5-1-

————–

அண்டமும் அகிலமும் அறிவரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு வேறு
எண் தவ நெடிது எனின் இறுதியிலவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதே -44-

வை கலந்த மூவிலை மேல் ஈசற்கும் வாசவற்கும் வாசப் பூ மேல்
மெய் கலந்த நால் வேத விரிஞ்சனுக்கும் மேலா வீற்று இருப்பர் மாதோ
பை கலந்த பாம்பணை மேல் திருவரங்கப் பெரு நகருள் பள்ளி கொள்ளும்
கை கலந்த நேமியான் திரு நாமத்து ஒரு நாமம் கற்றார் தாமே –திருவரங்கக் கலம்பகம்-–4-

——–

அகஸ்தியரை -நீண்ட தமிழால் உலகை அளந்தான் -என்கிறார்
அநாதி -தெய்வத்தன்மை -உதாரம் -சகல பல ப்ரதம்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் -9-4-9-

வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே 4-5-10-
செந்நிறத்த தமிழ் ஓசை யாகையால் ஆகஸ்த்யமும் அநாதி -வடமொழி என்றது தென் மொழி மறையை நினைத்து இறே

————

செருக்கடை அரக்கர் புரி தீமை சிதை வெய்தித்
தருக்கு அழி தரக் கடிது கொல்வது சமைந்தேன்
வருக்க மறையோய் அவர் வரும் திசையின் முற்துற்று
இருக்கை நலம் நிற்க அருள் என்றனன் –இராமபிரான் அகஸ்த்யருக்கு பதில்

இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா. 56-

பரசுராமன் கொடுத்த வில்லும் புட்டிலும் -ராமன் வருணன் இடம் கொடுக்க -கரவதம் போல்வன நெருங்கிற்று என்று
வருணன் அகஸ்தியர் இடம் கொடுத்து இராமபிரானுக்குக் கொடுக்கச் சொல்ல
அவற்றைக் கொடுத்து பஞ்சவடியில் தங்குமாறு உபதேசித்தார் –

————————–

இராமனை சடாயு போற்றுதல்
‘உந்தை உண்மையன் ஆக்கி, உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக்கொண்டு, தாரணி,
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே!
எந்தை வல்லது யாவர் வல்லார்?’ எனா, 34

சடாயு இராமபிரானை புகழ்தல்
அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்
புல்லி, மோந்து, பொழிந்த கண்ணீரினன்,
‘வல்லை மைந்த!’ அம் மன்னையும் என்னையும்
எல்லை இல் புகழ் எய்துவித்தாய்’ என்றான். 35-

அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன் 8-10-11-

இங்கு பஞ்சவடியில் தங்குமாறு அகஸ்தியர் சொன்னதைச் சொல்ல –
நான் உங்களை வான் வழியே வலி காட்டிக் கொண்டு சென்றனன்
இங்கு திண் சிறை -விரியும் நிழலில் செல்ல -என்ற தொடர்
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-நினைவுக்கு வர பாசுரம் இட்டார் போலும் –

————

கோதாவரி வர்ணனை
வண்டுறை கமலச் செல்வி வான் முகம் பொழிய வாசம்
உண்டுறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின்
தென் திரை கரத்தின் திரு மலர் தூவிச் செல்வர்
கண்டு அடி பணிவது என்னப் பொலிந்தது கடவுள் ஆறு — சூர்ப்பணகைப் படலம்–2-

திருவரங்கப் பெரு நகரில் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடி வருட –பெருமாள் -1-1-

—————-

சூர்ப்பணகையின் வியப்பு
‘சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்;
இந்திரற்கு ஆயிரம் நயனம்; ஈசற்கு
முந்திய மலர்க் கண் ஓர் மூன்று; நான்கு தோள்,
உந்தியில் உலகு அளித்தாற்கு’ என்று உன்னுவாள். 12-

பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு அழிப்பு
சிந்தித் திடுவதும் இல்லை கண்டீர் அத்திசை முகனோடு
உந்திக் கமலம் விரிந்தால் உகக் கடையில்
முந்திக் குவியில் உடனே குவியும் இம் மூதண்டமே –திருவரங்கத்து மாலை-–19-

—————

உடுத்த நீராடையான் உருவச் செவ்வியன்–இராமபிரானின் வர்ணனை

இதைப் பின்பற்றியே மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனார்
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும் -தமித்தாய் வாழ்த்து

————

பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா,
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள்;
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள், செவ்வியள்,
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள். 30

வால்மீகி இராமாயணத்தில் அரக்கி உருவத்தோடு எதிர்பட்டதாக கூறி இருந்தாலும்
இவள் லஷ்மீ மந்த்ரத்தை தியானம் செய்து அழகான பெண் உருவை அடைந்து இராமபிரானுக்கு எதிரே
பஞ்சி ஓளிர் விஞ்ச குளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சா நிமிர் சீறடியளாகி
அஞ்சொல் இள மஞ்ஜை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மக்கள் வந்தாள் -31-அழகிய உருவத்தோடு வந்தாள் -ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் படியே –

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே –பெருமாள் திருமொழி-—10-5–

மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் -33-கலை வணக்கு நோக்கரக்கி-

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே––பெரிய திருமொழி–3-9-4-

தார்க்கு இள தம்பிக்கு அரசு தந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 9-8 –

நுடங்கிடை -இத்யாதி
காம ரூபிணி ஆகையாலே -ஸ்வ வேஷத்தை மறைத்து -அத்யந்த அபிமதமான ஒரு
ஸ்திரீ வேஷத்தை கொண்டு வருகையாலே -நுடங்கின இடையை உடையளான
சூர்பணகயை -தன் அழகைக் காட்டி -என்னை விஷயீ கரிக்க வேணும் -என்று வந்த அளவில் –
பிராட்டியை கண்டு -நமக்கு இவள் ஒரு ஸ்திரீ உண்டு -அங்கே போ -என்று இளைய பெருமாளைக்
காட்ட -அங்கே சென்ற அளவில் -நான் அவருக்கு சேஷ பூதனாய் இருப்பான் ஒருத்தன் -இன்னம்
அவர் பக்கலிலே போ -என்ன
இப்படி உபாலம்பிக்கையாலே அவள் அதிக்ருதையாய் -பழைய வேஷத்தை கொண்டு
எடுத்துக் கொண்டு போகப் புக்க அளவிலே -செவியோடு கூட அவள் மூக்கையும் –
அவள் கதற கதற அறுத்தவனை
ராமஸ்ய தஷிணோ பாஹூ –என்கிற படியே இளைய பெருமாள் கரண பூதர் ஆகையாலே
அறுத்ததில் கர்த்த்ரத்வம் பெருமாளதாக சொல்லுகிறது–மா முனிகள் வியாக்யானம்

ஊக்கித் தாங்கி, விண் படர்வென்’ என்று உருத்து எழுவாளை,
நூக்கி, நொய்தினில் ‘வெய்து இழையேல்’ என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும், முறையால்
போக்கி, போக்கிய சினத்தொடும், புரி குழல் விட்டான். 94–இலக்குவன் சூர்ப்பணகையின் உறுப்பு அறுத்தல்

————

என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி
பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து
நின்றந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து
வண் திண் கைச்சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் –அவள் புலம்பும் பொழுது ராமபிராணன் வந்தமை –

மன்னு மரகதக் குன்றின் மருங்கே –பெரிய திருமடல் -77-

வள்ளலே மது சூதனா என் மரகதமலையே –திருவாய் -2-6-4-

மரகத சைலம் செந்தாமரைக் காடு பூத்துத்
திரை ஏறி கங்கை கை வீசும் திவலையால் நனைந்த செய்ய
இரு குழை தொடரும் வேல் கண் மயிலொடு இருந்த தேய்ப்பப்
பெருகிய செல்வி கண்டார் பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் –யுத்த -திருமுடி சூட்டு படலம் -36–

கரு மாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அரு மாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ––ஸ்ரீ திருவாய் மொழி–8-9-1-

பெருமாள் பிராட்டியுடன் பட்டாபிஷேகம் செய்யும் சேவையை சேவித்தவர்கள் பிறவிக்கடல் கடப்பர்-என்று இவர் அருளிச் செய்தது
திரு வரங்கத்தில் நம்பெருமாள் திரு மஞ்சனத்தை சேவித்து ஈரவாடை தீர்த்தத்தையும் ஸ்வீ கரித்து இருக்க வேண்டும்

மன்னு மரகதக் குன்றின் மருங்கே –பெரிய திருமடல்

உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே –திரு விருத்தம் -85-

————-

செங்கயல் போல் கரு நெடும் கண் தேமரு தாமரை உறையும்
நங்கை இவள் என நெடுநல் நடந்தவரோ நாம் என்னக்
கொங்கைகளும் குழைக் காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால்
அங்கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் -119-

புலக்குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி ஒன்றால்
விலக்குண்டு லாகின்ற வேல் விழிக்கின்றன–திரு விருத்தம் -57-

கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காத்து இரண்டும் ஈரா விடுத்து அவட்க்கு மூத்தோனை –சிறிய திருமடல் -40-

மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு –திருவாய் -6-7-2-

————

துமிலப்போர் வல்லரக்கர்க்குச் சுட்டினாள்
அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமலப் பாத நினைவின் இருந்த அக்
கமலக் கண்ணனை கையினில் காட்டினாள் -15-

கோதறு தம் குலத்துளோர் தொழும் ஆதி யஞ்சோதியை அடி வணங்கினான் –பாலகாண்டம்

தன் திரு உள்ளத்தே தண்ணியே நினைற்றக் குன்றிவர் தோளினான்-என்றும்
ஐயரும் அச்சோர்கேலா ஆயிர மௌலி யானைக் கை தொழுது -என்றும் அயோத்யா காண்டத்திலும் உண்டே –
அமலன் விமலன் நிமலன் நின்மலன் -இவனே பரம் பொருள் என்று பல இடங்களிலும் காட்டி அருளுகிறார் –

வந்தனை முனித்தலைவர்பால் உடையார்; வானத்து
இந்துவின் முகத்தர்; எறி நீரில் எழு நாளக்
கந்த மலரைப் பொருவு கண்ணர்; கழல், கையர்;
அந்தம் இல் தவத் தொழிலர்; ஆர் அவரை ஒப்பார்? 53

‘செந் தாமரைக் கண்ணொடும், செங் கனி வாயினோடும்,
சந்து ஆர் தடந் தோளோடும், தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலத்தொடும், அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும், அவ் வல் வில் இராமன்’ என்றாள். 149-இராவணன்-சூர்ப்பணகை உரையாடல்-

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே –திரு நெடும் தாண்டகம் -21-

———–

சந்திரனும் தன்னைப்போலவே சீதாபிராட்டி அழகைக்கண்டு உடல் தேய்ந்தும் வெளுத்தும் அகம் கருகியும் இருந்தமை –
தேயா நின்றாய் ஒரு நீயும் கண்டார் உள்ளம் கருத்தாய் நிலை திரிந்து
காயா நின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்லக் கேட்டாயோ
பாயா நின்ற மலர் வாளி பிரியா நின்றார் இன்மையால்
ஓயா நின்றேன் உயிர் காத்தற்கு உரியர் யாவர் அவரே யுடுபதியே -114-

நைவாய எம்மே போல் நாண் மதியே! நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந் நீர்மை தோற்றாயே?–2-1-6-

————–

வரும் புண்ட்ரம் வாளியின் மார்புருவிப்
பெரும் புண் திறவா வகை பேருதி நீ
இரும்புண்ட நீர் மீள்கினும் என்நுழையிக்
கரும்புண்ட சொல் மீள்கிலள் காணுதியால் -104-சீதையை மீட்க முடியாது என்கிறான் இராவணன்

நீர் இரும்புண்ட நீரது போல என்னாருயிரை ஆரப் பருகு எனக்கு ஆராவமுதானாயே –திருவாய் -10-10-5–

—————-

பொங்கு வெம் கோளரா விசும்பு ஒத்தன
வெங்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்
அங்கண் மா ஞாலத்தை விளக்குமாய்க் கதித்
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால்-196-
கிரகண காலத்தில் சூர்ய சந்திரர் பீடிக்கப்பட்டு மீளுவது போலே பிறவி -சடாயு சமாதானம் இளைய பெருமாளுக்கு –

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் –பெரிய திருமொழி 1-7-1-

சீதம் கொள் மலர் உளோரும் தேவரும் என்பது என்னே
வேதங்கள் காண்கிலாமை வெளி நின்றே மறையும் வீரன்
பாதங்கள் கண்ணில் பார்த்தான் படிவம் கொள் நெடிய பஞ்ச
பூதங்கள் விளியும் நாளும் போக்கிலா உலகம் புக்கான் -215-
கச்ச யோகான் அநுத்தமான் –பெரிய உடையார் ஸ்ரீ வைகுண்டம் போனமை

கிளித்தன களித்த திருமேனி -223-உடைய இராமபிரான் கண்ணீர் பெறுக ஜடாயுவுக்கு சரம கைங்கர்யம்

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

————-

சான்றவனோ எம் பொருளும் எல்லை நீர் நல்லறத்தை
சான்றவனோ தேவர் தவத்தின் தனிப்பயனோ
மூன்று கவடாய் முளத்து எழுந்த மூலமோ
தோன்றி இரு வினையேன் சாபத் திடர் துடைத்தாய் –கவந்தன் படலம்—

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –பெரிய திருவந்தாதி-–72-

—————-

காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி,
பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்,
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ? –கவந்தன் படலம்-42′

தோய்ந்து பொருள் அனைத்து தோயாது நின்ற சுடர் அன்றோ இவன் –

யாவையும் யாவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் –திருவாய் -3-4-10-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அழியும் அல்லன் 2-5-10-

திரு மா மணி மண்டபத்தில் எழுந்து அருளும் நிலை –
எண்டிசையும் யும் திண் சுவ்ரா வேழுழ் நிலை வகுத்த
அண்டப் பெரும் கோயிலுக்கு எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின் மேன்மேல் என்றும் மலராத
புண்டரீக மொட்டின் பொருட்டே புரை யம்மா -கவந்தன் படலம்-46-

நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்-
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்! –கவந்தன் படலம்–47′

விதியஸ் ச வேதிகா த்வதீய கம்பீர மநோ அநு ஸாரிண–ஆளவந்தார் —

வெறிதே அருள் செய்வான் -நிர்ஹேதுகமாக தனது தாளிணைக் கீழ் சேர்த்துக் கொள்ளும்
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் இங்கே அருளிச் செய்கிறார்

————-

மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக்
காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி,
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்!
நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்?’ என்றான்–கவந்தன் படலம்– 48-

மாயப்பிறவி மயர்வு அறுத்தேனே –திருவாய் -1-7-3-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ அயோத்யா காண்டம் – —

March 11, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்-

ஸ்ரீ கடவுள் வாழ்த்து –

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப-
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.-

சர்வமும் அவனது சரீரமே -வான் -மூல ப்ரக்ருதி –
வரம்பு இகந்து மா பூதத்தின் வைப்பொங்கும்–வரம்பு கடந்த பஞ்ச பூதங்களின் காரியமாய் பரவியுள்ள
பவ்திக பதார்த்தங்கள் தோறும் -உலகு எங்கும் உடலும் உயிரும் போலவும் உயிரும் உணர்வும் போலவும்
உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவன் –

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7-

சுரர் அறிவு அருநிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே–-ஸ்ரீ திருவாய் மொழி-1-1-8-

வான்நின்று இழிந்து–பால காண்ட நிகழ்ச்சி-ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த அவதாரம்
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,–கைகேயி சொல்லால் தொன்னகரம் துறந்த அயோத்யா காண்ட செய்தி
கானும்–ஆரண்ய காண்ட நிகழ்ச்சி
கடலும் கடந்து–ஸூந்தர காண்ட நிகழ்ச்சி
இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.-இராவண வதப் பிரயோஜனம்
யாவரும் வந்து அடி வணங்க திரு அயோத்தியில் திறல் விளங்கு மாருதியுடன் வீற்று இருந்ததை அருளிச் செய்கிறார்

—————–

புக்க பின் நிருபரும் பொருவில் சுற்றமும்
பக்கமும் பெயர்க எனப் பரிவின் நீக்கினான்
ஓக்க நின்று உலகு அளித்து யோகம் எய்திய
சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான் —மந்திரப் படலம்–5-

சக்ரவர்த்தி தனியன் ஆனமை-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் 5-4-11-
ஆலினிலை யதன் மேல் பைய உயோகு துயில் கொண்ட பரம் பரனே –பெரியாழ்வார் திருமொழி 1-5-1-

———–

புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகல்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்தி யாவையும் காத்து அவை பின் துறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத்திறலோன் -39-

மூவர் காரியமும் திருத்தும் முதல்வன் –பெரியாழ்வார் திருமொழி–4-4-1-
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி- –
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -என்றுமாம் –

———

மண்ணினும் நல்லாள் மலர்மகள் கலைமகள் கலையூர்
பெண்ணினும் நல்லாள் பெரும் புகழ்ச் சனகியோ நல்லாள்
கண்ணிலும் நல்லான் கற்றவர் காற்றிலா தவறும்
உண்ணு நீரினும் உயிரினும் அவனையே யுவப்பார் —

வலிய சிறை புகுந்தாள் அன்றோ தேவ மாதர் சிறை விலக்க-
தன்னடியார் –இத்யாதி -பெரியாழ்வார் 4-9-2-
உண்ணும் சோறு பருகு நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் 6-7-1-

——————

பெண்ணின் இன்னமுது அன்னவள் தன்னோடும் பிரியா
வண்ண வெஞ்சிலைக் குரிசிலும் மருங்கு இனிது இருப்ப
அண்ணல் ஆண்டு இருந்தான் கரு நற வெனத்தான்
கண்ணும் உள்ளமும் வந்து எனக் களிப்புறக் கண்டான் -சுமந்திரன் திவ்ய தம்பதிகளை கண்டமை-

வழு விலா அடிமை செய்யும் இளைய பெருமாளும் அகலகில்லேன் இறையும் என்று இருக்கும் பிராட்டி உடன்
பச்சை மா மலை போன்ற திருமேனியுடன்
நித்யர்கள் கண்டு அனுபவிக்குமா போலே அன்றோ சுமந்திரன் அனுபவித்தான் –
அவன் தவப்பயன் அன்றோ என்கிறார் –

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே––ஸ்ரீ திருவாய் மொழி–5-5-3-

————–

கண்டு கை தொழுது ஐயவிக் கடலுடைக் கிழவோன்
உண்டு ஓர் காரியம் வருக என உரைத்தனன் எனலும்
புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர்
கொண்டல் புலவன் கொடி நெடும் தேர் மிசைக்கொண்டான் -53-

கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் செங்கனிவாய் கரு மாணிக்கம் 3-3-5–
திருகி செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் -8-4-7-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் –திரு விருத்தம் -45-

———–

ஏனை நிதியினையவும் வையகம்
போனகற்கு விளம்பிப் புலன் கொளீஇ
ஆணவனோடும் ஆயிர மௌலியான்
தானம் நண்ணினான் தத்துவம் நண்ணினான் -மந்தரை சூழ்ச்சிப் படலம்–22-

வையகம் போனகற்கு–சஹஸ்ர சீர்ஷா புருஷன் -இவனே பரம புருஷன் -பரம தத்வம்
ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத்

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க்கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே 8-1-10-

————–

தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயிலின் மேல்
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டை நாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உன்னுவாள்-41-

வால்மீகி அருளிச் செய்யாத விருத்தாந்தம்
ஞாநிதாசீ யதோ ஜாதா கைகேயியாஸ்து ச ஹோஷிதா
பிரசாதம் சந்த்ர ஸ்ங்காஸம் ஆருரோஹ யதிருச்சயா–அயோத்யா 7-1-
யதிருச்சயா –பகவத் சங்கல்பத்தால் வந்தாள்
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்ட அரங்கவோட்டி உள் மகிழ்ந்த நாதன் –திருச்சந்த -49-
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெரித்தாய் கோவிந்தா -1-5-5-
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி –திருச்சந்த -30-

தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயையும் அவர் பெற்றுள்ள வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய யரும் தவத்தாலும் -76-

அரக்கர் பாவமுமம் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூ மொழி மடமான்
இரக்கம் இன்மை யன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே -78-

சிறை சிறந்தவள் ஏற்றம் சொல்ல வந்த படி கொண்ட கீர்த்தி ராமாயணம் எனும் பக்தி வெள்ள அமுதம் பருகுகிறோம்

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

—————-

மூவராய் முதலாகி மூலமதாகி ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேணிலம்
காவலன் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர்
பாவை மார்முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய வாவியே -62-

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் முரி நீர் வண்ணன் –முதல் திருவந்தாதி -15-

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென் னிலங்கை எரி எழச் செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ–-ஸ்ரீ திருவாய் மொழி-3-6-2-

———————

என்றனள் என்னக் கேட்டான் எழுந்த பேருவகை பொங்கப்
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்
தன் திரு உள்ளத்துள்ளே தன்னையே நினையுமற்றக்
குன்றிவர் தோளினானைத் தொழுது வாய் புதைத்துக் கூறும் -80-

தான் மேற்கொண்ட அவதாரத்தையும் செய்ய வேண்டிய செயல்களையும் நினைத்து குல தெய்வமான
ஸ்ரீ மந் நாராயணனைத் தியானித்து இருந்தான் –

————-

உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும்
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார்
செயலரும் தவங்கள் செய்து இச்செம்மலைத் தந்த செல்வத்
தயரதற்கு என்ன கைம்மாறு உடையும் யாம் தக்கது என்பார் -89-

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் –திரு விருத்தம் -32-

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும்–திருவாய் -4-4-4-
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும்-4-4-9-

————–

நீல மா முகில் அனான் தன் நிறைவினோடு அறிவும் நிற்க
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவனோ
காலமாகக் கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம் முன்பன் என்பார் -91- முன்பன்-முதல்வன்

கெட்டேன் -வெறுத்துப் போய்க் கையை
நெரித்துக் கூறும் துயர மிகுதியைக் காட்டும் – விஷாத அதிசயம் —

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –

——————-

வேத்து அவை முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
ஏத்தவை இசைக்கும் செம் பொன் மண்டபம் இனிதின் எய்தான்
ஒத்து அவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளவும்
பூத்தவை வடிவை ஓப்பான் சிற்றவை கோயில் புக்கான் -101-

உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளவும் பூத்தவை வடிவை ஓப்பான் –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்–44-

————

விநயத்துடன் இராமன் கைகேயி இடம் இருந்தமை –

வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச்
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையில் புதைத்து மற்றைச்
சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்
அந்தி வந்து அடைந்த தாயைக் கண்டா ஆன் கன்றின் அன்னான் -104-

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பி பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ –நாச் 7-1-
சர்வ கந்த சர்வரச
பச்சை மா மலை போல் மேனி பவளச் செவ்வாய் –திருமாலை -2-
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்பா நீ காண வாராய் -திருவாய் -9-2-4-
பவளம் போல் கனிவாய் சிவப்ப 9-2-5-

நின்றவன் தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சில்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்,
‘இன்று எனக்கு உணர்த்தலாவது ஏயதே என்னில் ஆகும்;
ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பதோர் உரையுண்டு’ என்றாள். 109-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி ஓன்று இல்லை இரும்பு போல் வலிய நெஞ்சம் –திருமாலை -17-

கரும்பன மொழியினர் கண் பனிக் கிலர்
வரம்பறு துயரினால் மயங்கியே கொலாம்
இருப்பன மனத்தினர் என்ன நின்றனர்
பெரும் பொரு விழுந்தனர் போலும் பெற்றியார் -நகர் நீங்கு படலம்–176-

—————

கையைக் கையினால் நெரிக்கும் தன் காதலன்
வைகும் ஆலிலை அன்ன வயிற்றினை
பெய்வளைத் தளிரால் பிசையும் பகை
வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குவாள் -1-கோசலையார் வருந்துதல்

ஸ்ரீ ராமபிரான் பன்னிரு திங்கள் எழுந்து அருளிய திரு வயிறு -ஆலிலை அன்னதாக்க -சாமுத்ரிகா லக்ஷணம்
வடதள தேவகீ ஜடர வேத சிரஸ் கமலாஸ்தந சடகோப வாக் வபுஷி ரங்க்ருஹ்யே சயிதம் –பூர்வ சதகம் -78-
பெய் வளைக் கைகளைக் கூப்பிப் பிரான் கிடைக்கும் கடல் என்னும் -4-4-2-

—————

என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் ஆலன்
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் -59-

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —-பெருமாள் திருமொழி –9-10–

பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? 65

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

—————

கண்ணின் கடைத் தீயுக, நெற்றியில் கற்றை நாற,
விண்ணிற் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப,
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான். 112-பொங்கும் பிரிவால் இளைய பெருமாள்

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து––நான்முகன் திருவந்தாதி –10-

விடம் காலும் தீவாய் அரவணையான் -இரண்டாம் திருவந்தாதி -71-
பாசுரங்களை உட்க்கொண்டே கண்ணில் கடைத்தீ உக -என்கிறார்
ஆதிசேஷன் அழல் உமிழும் சேவை இன்றும் மெய்யானைத் தடவரை மேல் கிடந்த -திரு மெய்யத்தில் காணலாமே –

—————-

பின், குற்றம் மன்னும் பயக்கும் அரசு” என்றல், பேணேன்;
முன், கொற்ற மன்னன், “முடி கொள்க” எனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ?-
மின்குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்! 128–

தனது குற்றமாகவே ராமபிரான் -இதில் –
ந மந்தராயா ந ச மாதுரஸ்யா தோஷா ந ராஜ்ஜோ ந ச ராகவஸ்ய
மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் வந பிரவேச ராகு நந்தனஸ்ய—வால்மீகி –அயோத்யா 86-1-
என்னும் பரதாழ்வானைப் போல
நானே தான் ஆயிடுக -பாசுரக் கருத்து –

நதியின் பிழை யன்று யரும் புனல் இன்மை யன்றே
பதியின் பிழை யன்று பயந்து நம்மைப் புரந்தாள்
மதியின் பிழை யன்று மகன் பிழை யன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என்னை விழுந்தது என்றான் -134-

——————-

ஆகாதது அன்றால் உனக்கு; அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை-என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்’ என்றாள். 146

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன் பின் செல்; தம்பி
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி’ என்றனள், வார் விழி சோர நின்றாள். 147-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்
அயோத்யாம் அடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் –அயோத்யா -40-10-
அஹம் அஸ்ய அவரோ பிராதா குணைர் தாஸ்யம் –கிஷ்கிந்தா -4-11-

———–

வீற்றிடம் தாமரைச் செங்கண் வீரனை
உற்று அடைந்து ஐய நீ உருவி ஓங்கிய
கல் தடம் காணுதி என்னின் கண்ணகல்
மால் தடந்தானையான் வாழ்கிலான் என்றான் -166-

கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –பெருமாள் 9-2-
எவ்வாறு நடந்தாய் எம்மிராமாவோ -9-3-
கல் நிறைந்து தீந்து கழை உடைந்து கால் கழன்று –பெரிய திருமடல் -48-

————-

நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்,
நார் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்!’ என்றான். 152-

ந ச சீதா த்வயாஹீநா ந சாஹம் அபி ராகவா
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யா விவோத்த்ருதவ் –அயோத்யா -53-31-

————

தகவு மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர்
முகமும் அவர் அருளும் நுகர் சிலர்கள் துயர் முதுகை
அகவும் இள மயிர்களும் உயிர் அலசியன அனையார்
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் -13-

இருமலை போல் எதிர்ந்த மள்ளர் இருவர் அங்கம் எரி செய்தாய் உன்
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு மொழி–2 2-8 – –

—————–

தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூவியல் கானகம் புக உய்த்தேன் என்கோ?
கோவினை உடன்கொடு குறுகினேன் என்கோ?
யாவது கூறுகேன், இரும்பின் நெஞ்சினேன்? 20–

புகழு நல் ஒருவன் என்கோ பொருவில் சீர்ப் பூமி என்கோ –திருவாய் 3-4-பதிகத்தை
பின்பற்றி அருளிச் செய்கிறார் –

அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை
எஞ்சலில் பொன் போர்த்தன்ன இளவலும் இந்து என்பான்
வெஞ்சிலைப் புருவத்தாள் தன் மெல்லடிக்கு ஏற்ப வெண் நூல்
பஞ்சிடை படுத்தது என்ன வெண்ணிலாப் பரப்பப் போனார் -52-மூவரும் போனமை –

செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார் தடம் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
வந்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவனாகும் அவ்வளவில் இராமன் என்றாள் –சூர்ப்பனகை வர்ணனை -ஆரண்ய -மாரீச வதை படலம் -149-

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே–பெரிய திருமொழி-7-6-5-

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –பெரிய திருமொழி–9-2-6-

மைந் நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றார்க்கு -10-6-8–

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளிமணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே–4-4-5-

————–

இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி,
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி,
‘வந்தனன், எந்தை தந்தை!’ என மனம் களித்து, வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர் மீள்கிலா உலகத்து உய்த்தார். –தைலம் ஆட்டுப் படலம்–60-

வால்மீகி ஸ்வர்க்கம் போனதாக சொன்னதை கம்பர் வைகுண்ட மா நகரம் போனதாக அருளிச் செய்கிறார் –

————————

இராமன் சீதை இலக்குவனோடு காட்டில் செல்லல்
வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், போனான்-
“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!” என்பதோர் அழியா அழகு உடையான். –கங்கைப் படலம்–1

நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –அவனுடைய ஆனந்தத்துக்கு அவதி இன்றிக்கே
ஒழிகிறதும் வடிவில் வை லக்ஷண்யத்தால் அன்றோ –
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே –பெரிய திருமொழி 1-5-9–

——————

பொழியும் கண்ணில் புதுப்புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொலின் மொய்ம்மலர் சூட்டினர்
அழிவில் அன்பு எனும் ஆரமிருது ஊட்டினர்
வழியின் வந்த வருத்தம் தணியவே -14-

புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே -4-3-2-

——————

காயும் காணில் கிழங்கும் கனிகளும்
தூய தேடிக் கொணர்ந்தனர் தோன்றல் நீ
ஆய கங்கை யரும் புனலை ஆடினை
தீயை ஓம்பினை செய்யமுத்து என்றனர் -15-முனிவர்கள் ராமனுக்கு உபசாரம்

காடுகளூடு போய் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கொடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டம் அமைத்து வைத்தேன்
ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 3-3 –

வருந்தித் தான் தர வந்த அமுதையும்
அருந்து நீர் என்று அமரரை ஊட்டினான்
விருந்து மெள்ளடக்குண்டு விளங்கினான்
திருந்தினார் வாயின் செய்தது தேயுமோ -27-

அமுதம் அமரர்கட்க்கு இந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீல் கடலானே -திருவாய் 1-6-5-

—————

விரி இருள் பகையை ஒட்டித் திசைகளை வென்று மேல் நின்று
ஒரு தனித் திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள் புரிந்து வீய்ந்த
செரு வலி வீரன் என்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றான் -49-அஸ்தமன சூர்யன் வர்ணனை

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – திரு விருத்தம் –80 – –
சூர்ய அஸ்தமனம் அரசன் ஆண்டு மறைந்தால் போலே என்றவாறு –

———–

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்
கூவா முன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான். 11

அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்
என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்
நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன் -73-

அங்குள கிளை காவற்கு அமையின் உளன் ஊம்பி
இங்குள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனதன்றோ உறு துயர் உறலாமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் -76-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

———–

தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன் தொடுத்த வில்லன்
வெம்பி வைந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தன்மை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் -54-

பொங்கும் பிரிவால் அதிசங்கை -இளையபெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதிசங்கை பண்ண –
இருவரையும் அதிசங்கை பண்ணி ஸ்ரீ குகப்பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இறே-
தனித்தனியே கையும் வில்லுமாய்க் கொண்டு பெருமாளை ரஷித்தது அன்றோ
ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவு அழகு படுத்தும் பாடாயிற்று இது –
ஆச சஷேத ஸத்பாவம் லஷ்மணஸ்ய மஹாத்மான
பரதாய அப்ரமேயாய குஹோ கஹந கோசர-86-1–
கழியின் பெருமையைக் கடலுக்குச் சொல்லப் போமோ –குகன் லஷ்மண பெருமையை பரதனுக்கு அறிவித்தமை –

————-

வான் புரை விழியாய் உன் மலர் புரை அடிமானத்
தாள் புரை தளிர் வைகும் தகை ஜிமிறு இவை காணாய்
கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை காணாய்
தோள் புரை இள வேயின் தொகுதிகள் இவை காணாய் -17-

ஜிமிறு -வந்து மழை மேகம் வேய் மூங்கில் தொகுதிகளை சீதைக்கு ராமன் காட்டியது
கோள் புரை இருள் என்ற தொடர் -கொள்கின்ற கோள் இருள் –திருவாய் -7-7-9-

————

இராமனை எதிர்கொள்ள பரத்துவாச முனிவர் வருதல்
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன், ‘நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று’ எனல் தெரிகின்றான்,
பரத்துவன் எனும் நாமப் பர முனி, பவ நோயின்
மருத்துவன் அனையானை, வரவு எதிர்கொள வந்தான். 20-

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–5-3 6-

——————–

வடம் கொள் பூண் முலை மட மயிலே மதக் கதமா
அடங்கு பேழ் வயிறு அரவு உரி அமை தொறும் தொடங்கித்
தடங்கல் தோறும் நின்று ஆடு தண்டலை அயோத்தி
முடங்கி மாளிகைத் துகில் கொடி நிகர்ப்பன நோக்கால் -4-சித்ர கூட இயற்க்கை வளங்களை காண்கிறாள்

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மா சுணம் கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலார் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பது பாராய் -35-

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே ––பெரிய திருமொழி–1-2-10-

—————

உவரி வாய் அன்றிப் பாற் கடல் உதவிய அமுதே
துவரின் நீள் மணித் தடம் தோறும் இடம் தோறும் துவன்றிக்
கவரிப் பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்
பவளமால் வரை அருவியைப் பொருவன பாராய் -5-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

சீதக் கடலில் உள்ளமுது என்றாரே பிராட்டியை பெரியாழ்வாரும்
எம்பெருமானும் பிராட்டியும் உடன் இருந்து இனிதாக மகிழ்ந்த இடமாகையாலே சித்ரகூட வளப்பங்களை
காணாய் பாராய் என்று காட்டுகிறார் –
ரசிகனானவன் நித்யவாஸம் பண்ணுகிற தேசம் திருத்தேவனார் தொகையே -பிராட்டியும் தானுமாக
சித்ரகூடத்திலே வர்த்தித்தாப் போலே -பெரியவாச்சான் பிள்ளை –

உருகு காதலின் தழை கொண்டு மழலை வந்து உச்சி
முருகு ஞாரு செந்தேனினை முலை நின்றும் வாங்கிப்
பெருகு சூழினும் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை
பருக வாயினில் கையின் அழிப்பது பாராய் -10-

கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –பெரிய திருமொழி-–1-2-5-
பிரசம் -தேன் கூட்டுக்கும் மதுகரங்களுக்கும் பெயர் -வாரி -அவற்றினுடைய தேன்

இங்குள்ள முனிவர்களை விண்ணுலகம் கூட்டிச் செல்லும் விமானங்கள் வருவதும் போவதுமாக இருந்தமை –
அசும்பு பாய் வரை யரும் தவ முடித்தவர் துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான்
விசும்பு தூர்ப்பனவாம் என வெயிலுக விளங்கும்
பசும் பொன் மானங்கள் போவானா வருவன பாராய் -36-

இரு கண்களிலும் தாரைதாரையாக ஆனந்தக் கண்ணீர்
ஆஹ்லாத சீதா நேத்ராம்பு புளகீக்ருத காத்ரவான்
சதா பரகுண ஆவிஷ்ட த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி –ஸ்ரீ விஷ்ணு தத்வம்

———-

கோசலை பரதனை வாழ்த்துதல்
முன்னை நும் குல முதலுளோர்கள்தாம்,
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா!’ என்று, வாழ்த்தினாள்-
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள். 119-

வாளேறு காணத் தேளேறு மாயுமாப் போலே மன்னர் மன்னவா -உத்திஷ்ட ராஜன் –

————-

பரதன் காய் கிழங்கு போன்றவை உண்டு, புழுதியில் தங்குதல்
இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான்,
அன்ன காயும், கிழங்கும், உண்டு, அப் பகல்
பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான். 17-

பரதன் நிலையைக் கண்ட இராமன், இலக்குவனனிடம் கூறுதல்
தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன்; ‘அவலம் ஈது’ என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான், முடிய நோக்கினான். 49-

பரதன் இராமனின் திருவடி வணங்குதல்
கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனன், நலத்தின் நீங்கினாள்,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். 52-

தந்தையை நினைத்து இராமன் புலம்புதல்
‘நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே!
எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி, வாய்மைக்கு ஆர் உளரே மற்று?’ என்றான். 60

பரதன் இராமனின் திருவடிகளைப் பெற்று முடிமேற் சூடிச் செல்லல்
விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான்,
‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். 135

அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,
‘முடித்தலம் இவை’ என, முறையின் சூடினான்;
படித்தலம் இறைஞ்சினன், பரதன் போயினான்-
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். 136–

இராமனின் பாதுகை ஆட்சி செய்ய, பரதன் நந்தியம் பதியில் தங்குதல்
பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்;
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்;
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான். 139

நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்,
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான். 140-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது ப்ரபத்தியும் உபாயம் அன்று –
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று
இவை இரண்டும் ஸ்ரீ பரதாழ்வான் பக்கலிலும் ஸ்ரீ குகப்பெருமாள் பக்கலிலும் காணலாம்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு நன்மை தானே தீமை யாயிற்று -ஸ்ரீ குகப்பெருமாளுக்குத் தீமை தானே நன்மை யாயிற்று

தனக்குத் திருவடி சூட்டுமாறு வீடணன் வேண்டுதல்
விளைவினை அறியும் மேன்மை வீடணன், ‘என்றும் வீயா
அளவு அறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின், ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர,
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி’ என்றான். –வீடணன் அடைக்கலப் படலம்—142

பரத தத் அநு பிரார்தித்தய லேபே லாப விதம் வர
காகுத்ஸ்த்த பாதுகா காரம் மஹார்க்கம் முகுடத்வயம் –சம்பூ ராமாயணம்

அரசு அமர்ந்தான் ஆதி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேண் மற்ற அரசு தானே –பெருமாள் -10-7-
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம் –திருவாய் -10-3-6-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ பால காண்டம் – —

March 9, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்-

ஸ்ரீ கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1–

அகில புவந ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவநதி தத் ப்ரஹமேதி யா பர்வத்பி சம்விசந்தி

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2

ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன – மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3-

ஸ்வரூபம் ரூபம் உபாய புருஷார்த்தங்களை மூன்று பாசுரங்களால் கடவுள் வாழ்த்தாக அருளிச் செய்கிறார் –

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4

‘நாராயணாய நம!’ என்னும் நல் நெஞ்சர்
பார் ஆளும் பாதம் பணிந்து, ஏத்துமாறு அறியேன்;
கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே. 7-

தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குரை கழல் காப்பதே. 9

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான். 10

இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி, அரசு ஆண்டு இருந்தாலும்,
உம்பர் நாட்டில் கற்பகக் கா ஓங்கும் நீழல் இருந்தாலும்,
செம்பொன்மேரு அனைய புயத் திறல் சேர் இராமன் திருக் கதையில்,
கம்பநாடன் கவிதையில்போல், கற்றோர்க்கு இதயம் களியாதே. 13

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே –
இம்மையே இ’ராம’ என்று இரண்டு எழுத்தினால். 15

——-

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் – திறம் கொள் கோசலை. 101–கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழிய தாக்கும் வேரி யம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே

வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே–திருவாய் -4-5-11-

————-

காதைகள் செறிவான செவி நுகர் கனிகள் –நாட்டு படலம்

செவிகளாரே நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் காலப் பண் தென் உறைப்பத்துற்று –திருவாய் -3-8-6-

செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து –பெரிய திரு -3-6-7-

எம்பெருமான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே —

—————–

செறு நறு தயிரும் பாலும் வெண்ணெயும் தெளிந்த நெய்யும்
உறியோடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாறு நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போல் அன்றே –ஆற்று படலம் -15-

ஆற்றுக்கும் கண்ணனுக்கும் உள்ள பொதுத் தன்மைகள் –
புனிதன் –
பூப்புனைக் கண்ணிப் புனிதனோடு என்னைக் காப்பு நாண் கட்டக் கானாக் கண்டேன் தோழி நாண் –நாச் -6-4-

——————

தோயும் வெண் தயிர் மத்தொலி துள்ளவும்
மாய வெள் வளை வாய் விட்டு அரற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் –27-

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ -7-

——————-

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ என்னும் ஈது அரு மறைப் பொருளே;
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?
எண்அருங்குணத்தின்அவன்,இனிதுஇருந்து,இவ்ஏழ்உலகுஆள்இடம்என்றால்,
ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல்? –நகரப் படலம்–5

தங்கு பேர் அருளும் தருமமும்,துணையாத் தம் பகைப்புலன்கள் ஐந்துஅவிக்கும்
பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங் கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்,
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ? 6-

எம்பெருமான் உகந்து அருளி உறையும் திவ்ய தேசங்கள் போகம் நுகரும் இடம் -ஸச் ஸம்ப்ரதாயார்த்தம் –

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய்

அங்கண் மா ஞாலத்து அரசர் –

———-

என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
“முன்னரே எண்கின்வேந்தன் யான்”-என, முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்’ என்றான். 23-

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-8-

————

வேள்வி காக்க தயரதனிடம் கரிய செம்மலை முனிவன் வேண்டல்
‘தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,
“செருமுகத்துக் காத்தி” என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.11

தயரதன் இராம இலக்குவரை முனிவனிடம் ஒப்புவித்தல்
குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
‘திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று’ என,-
‘வருக என்றனன்’ என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 17

வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, ‘நல்
தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!’ என்றான். 18

தேவர்கள் இராமனை வாழ்த்துதல்
பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார். –வேள்விப் படலம்–44-

கோதண்ட வில்லுக்கு அழகு இராமன் திருக்கையில் சேர்த்தியால் வந்த அழகு அன்றோ –
கோல வில்லி ராமன் -வென்ற வில்லி –

———–

பற்றவா வேரோடும் பசையறப் பிறவி போய் –காமாஸ்ரமம் பற்றி விசுவாமித்திரர்

அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்–

————

பரிதி வான் அவனி நிலம் பசை அறப் பருகுவான் –தாடகை வதம்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம்–26–

————–

சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்;-கண்ணின் காண்பரேல்,
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
“தாடகை” என்பது அச் சழக்கி நாமமே; 23–பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாழ் கண்டார்
தாழே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

வான் தனில் வரைந்ததோர் மாதர் ஓவியம்
போன்றனள் புலந்தனள் புழுங்கு நெஞ்சினள்
தோன்றல சுடர் மணித் தோளின் நாட்டங்கள்
ஊன்றினாள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் –சூர்ப்பனகை படலம்

ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாச்ச பாஹவா பரிகோயமா
சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா –கிஷ்கிந்தா -3-15-
திருவடி தோள்களைக் கண்டபோதே வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தார் –

மல்லாண்ட தோள் மணி வண்ணா

நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிம்ர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிறு ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணி வண்ணனைப் பாடிப் பற – 3-9 7-

மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தர தோளுடையான்-ஸூந்தர பாஹு —
அப்பனே அடல் ஆழியானே ஆழ் கடலைக் கடைந்த துப்பனே
உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்–திருவாய் -4-7-5-

————–

எங்கள் நான்மறைக்குத் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச் செங்கண் மால் இருந்து
மேல் நாள் செய்தவம் செய்ததன்றே-
சித்தாஸ்ரமம் –
மண்ணை இருந்து அது துழாவி வாமனன் மாம் இது என்னும்
அமலமூர்த்தி இவன் என்பர்
அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
அணி அரங்கன் தந்தானை அறியாதார் அறியாதாரே
ஆயிர மௌலியான் –சஹஸ்ர சீர்ஷா புருஷ
அக்கமலக் கண்ணனைக் கையால் காட்டினாள்

நீல நிறைத்து நெடுந்தகை வந்தோர் ஆலமர் வித்தின் யரும் குறள் ஆனான்

‘முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன்,-அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான். 12

விஞ்சை கற்பதோர் நாவன் -வரஹ்ம வித்யையாகிற வேதம் ஓதும் நாவை உடையவன் -என்றவாறு –
வெண்திரள் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி –பெரிய திருமொழி -11-4-5–
ஆயருக்கு அதிபதி அற்புதன் தானே –திருவாய் -8-6-9-
அற்புதன் நாராயணன் அரி வாமனன் 8-6-10-

சிந்தை உவந்து எதிர், “என் செய்?” என்றான்;
அந்தணன், “மூஅடி மண் அருள், உண்டேல்;
வெந் திறலாய்! இது வேண்டும்” எனா முன்,
“தந்தனென்” என்றனன்; வெள்ளி, தடுத்தான்: 15-

மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனுக்கு என்னால் தரப்பட்டது என்றலுமே –பெரிய திருமடல்

கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள்,
உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள்” என்றான். 16″

சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள்
சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி–1 4-8 –

உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! 26′

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீ ராம விண்ணகரே சேர்மின் நீரே—–பெரிய திருமொழி–3-4-1-

இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,—தோளிணை மேலும் தன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் முடி அம்மான் –1-9-7-

———

கரியவன் உலகெலாம் கடந்த தாளிணை
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே —

வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாய் -9-2-10-

————–

இராமனின் அம்பு சுபாகுவைக் கொன்று, மாரீசனைக் கடலில் சேர்த்தல்
திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்,
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே. 41

தேவர்கள் இராமனை வாழ்த்துதல்
பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார். 44-

சுந்தர வில்லி –கோலவில்லி ராமன் -பெருமாள் வில் பிடித்த அழகைக் கண்டு நாண் வில் பிடித்தது
ஒரு படியே என்று இராவணன் தன்னைத்தானே மருவி வில்லை எறிந்து பொகட-வெறும் கை வீரன் ஆனான் –

—————————–

வேள்வியை இனிது முடித்த முனிவன் இராமனைப் பாராட்டுதல்
‘பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி, நிற்கு இது பொருள் என உணர்கிலென் – புவனம்
ஆக்கி, மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி,
காக்கும் நீ, ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே.’ 46-

உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா –பெரியாழ்வார் திருமொழி 1-5-1-

————–

திறம் கொள் ஆமையாய் முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தடக்கைகள் பரப்பி மீ வலிப்ப–அகலிகை படலம் -24-

ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி -5-7-4-

——–

அங்கு நின்று எழுந்து, அயன் முதல் மூவரும் அனையார்,
செங் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தில் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால், பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார். 5

கங்கையில் புனிதமாகிய காவேரி -திருமாலை -23-

பிடிசேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் —முதல் திருவந்தாதி—97–

சலம் பொதி உடம்பில் தழல் உமிழ் பேழ் வாய் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவு மணி வண்ண வுருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4 7-2 –

அண்ட கோளகைப் புறத்ததாய் அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் பதத்திடைப் பிறந்து பூ மகனார்
கொண்ட தீர்த்தமாய் அரன் கொளப் பகிரதன் கொணர
மண்டலத்து வந்து அடைந்தது இவ்வானதி மைந்த –அகலிகை படலம் -60-

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்து அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் இருக்கை
சது முகன் கையில் சத்துப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-3 –

——————-

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் இன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத் தரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே யுன்
கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் -82-

மழை வண்ணத்து அண்ணலே –மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –

இப்பாட்டில் எட்டு தடவை வண்ணம் பத பிரயோகம் –

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே-பெரிய திருமொழி-–4-9-8-போலவே

————

கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்
பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள். 23-

பஞ்ச இந்திரியங்களுக்கும் இன்பம்

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே––ஸ்ரீ திருவாய் மொழி-4-9-10-

கண்டு கேட்டு உண்டு உயிர்த் துற்றியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள–திருக்குறள்

செஞ்சொல் கவி இன்பம் -மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி யுறுமோ முழுதுமே –திருவாய் -8-10-5-

செஞ்சொல் கவி இன்பம் என்றது -தொண்டர்க்கு அமுது உண்ண-பக்தாம்ருதம் –
அடியார்க்கு இன்ப மாரியே –கேட்டு ஆரார் வானவர்கள் —

————-

கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்
பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள். 23-

இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -ஸ்தாவர பிரதிஷடையாக என்னைக் கண்டும்
கால் வாங்க மாட்டாதே -அப்பால் போக மாட்டாதே நின்றார் –

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு, காதல் கொள்ளுதல்
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். 35–

கீழே பொன்னின் சோதி பாட்டில் மூவரும் சீதா பிராட்டியைக் கண்டமை பொது நோக்கு -இங்கு இருவரும் அன்புடன் நோக்கியது –
வால்மீகி -வில்லை முறிப்பதுக்கு முன்பு நோக்கியமை கூறவில்லை –

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார். 37

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் –
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ? 38-

திருப் பாற் கடல் வெண்மையாயினும் அவனது நிழலீட்டாலே கருங்கடல் ஆனதே
நீலக்கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவேனோ –திருவாய் -10-10-7-
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –பெரிய திருமொழி -3-1-1-
உவர்க்கும் கருங்கல் நீருள்ளான்–மூன்றாம் திருவந்தாதி -37-என்றுமாம் –

——————–

இராமன் முனிவருடன் போக அவன் நினைவால் சீதை ஓவியப்பாவைபோல் நிற்றல்
அந்தம் இல் நோக்கு இமை அணைகிலாமையால்,
பைந்தொடி, ஓவியப் பாவை போன்றனள்;
சிந்தையும், நிறையும், மெய்ந் நலனும், பின் செல,
மைந்தனும், முனியொடு மறையப் போயினான். 39-

காதல் நோயால் துயருற்ற சீதையின் தோற்றம்
அருகில் நின்று அசைகின்ற ஆலவட்டக் கால்
எரியினை மிகுத்திட, இழையும், மாலையும்,
கரிகுவ, தீகுவ, கனல்வ, காட்டலால்,
உருகு பொற் பாவையும் ஒத்துத் தோன்றினாள். 52-

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

இராமனை நினைத்து சீதை உருகுதல்
‘இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரை தோளுமே, அல;
முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே! 57-

திரண்டு எழு தழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-8 9- –

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –21-

அவள் உயிரை உண்டது குஞ்சி போல்வன என்றாலும் முதலில் உண்டது முறுவலே

போகு நம்பி உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவல் அங்குலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே -6-2-3-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடங் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே–6-2-9-

என்று நின்றே திக ழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக் கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங் கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே–7-7-5-

————

கடலோ? மழையோ? முழு நீலக் கல்லோ? காயா நறும் போதோ?
படர் பூங் குவளை நாள் மலரோ? நீலோற்பலமோ? பானலோ?-
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ?’ என்று தளர்வாள்முன்,
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே! 65–மாலைப் பொழுதில் சீதையின் மன நிலையும் புலம்பலும்

முகில் வண்ணன் -மேக வண்ணன் -காயம் பூ வண்ணன் -நீல மேனி மரகதமோ அஞ்சனக்குன்றமோ -ஆழ்வார்கள்

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண் ணளந்த
கண் பெரிய செவ் வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

—————-

கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன் தன்னை மா முகம் நோக்கி இப்
போது நீ இவன் கண் போதை இப்பூதலம்
ஏது செய்த தவம் என்று இயம்பினான் -85-

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4 6-

திரு உலகு அளந்த திருவடிகளின் தூளி பட்டதன்று பாக்கியம்
ஸ்ரீ வைஷ்ணபர்கள் ஸ்ரீ பாத தூளி பட்டது பாக்கியம்
கல்லைப் பெண்ணாக்கி சரீரத்தை பூண் கட்டிற்று இத்தனை -அவன் திருவடிகள்-
கடல் வண்ணன் பூதங்கள் ஸ்ரீ பாத தூளி பட்டால்-போயிற்று வல் உயிர் சாபம் -5-2-1-என்று
ஸ்வரூபத்தை பற்றி வரும் விரோதிகளும் போம் இறே –
பேர்த்தகரம் நான்குடையான் திருவடிகள் படுவதிலும் பேரோதும் தீர்த்தகரர் ஸ்ரீ பாத தூளி படுகை இறே பாக்கியம் –

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே —-பெருமாள் திருமொழி-10-5–

————–

முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தினர் பின் இருள்
கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
தனியும் தானும் அத்தையலும் ஆயினான் –130-இராம பிரானும் தூங்காமை –

இருள் கனியும் போல்பவன் –தானோர் இருள் அன்ன மா மேனி எம்மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து –பெரிய திருவந்தாதி —

கங்குலும் திங்களும் -தனியும் தானும் அத்தையலும் ஆயினான் –உரு வெளிப்பாடாகத் தோன்றி பள்ளி கொள்ளாமல் இருந்தான்-
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்–

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் ஏறி கடலே–-திரு விருத்தம்–17-

வந்து தோன்றா யன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந் தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்த மில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–-ஸ்ரீ திருவாய் மொழி-8-5-7-

——————–

மண் வழி அடி வருந்தப் போனவன்
கண் வழி நுழையுமோர் கள்வனே கொலாம் -85-
நாயகியும் இழிவது திருவடியிலேயே தானே -அமரர் சென்னிப்பூ
தலைவனும் -தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே —

கண் தாமரை ஆயிரமும் கதுவ
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை —கரு ஞாயிறு -இல் பொருள் உவமை

நான் மறையின் கனி -அப்போதே அனுபவிக்கும்படியான போக்யமான கனி –
அடியேன் மணத்தாசையை அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைச் சென்று நாடி
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி 7-10-1–

———————-

பிணி அரங்க வினை அகலப் பெரும் காலம் தவம் பேணி
மணி யரங்கு நெடு முடியாய் மலர் அயனை வழி பட்டு
பணி அரங்கப் பெரும் பாயல் பரஞ்சுடரை யாம் காண
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் –விசுவாமித்திரர் ஜனகன் இடம் இருவரையும் அறிமுகம் –

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–திரு மாலை-14-

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே——திருப்பள்ளி எழுச்சி–5–

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 4-9 2-

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே ––ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-4-51-

ஆழ்வார்களின் ஈரச் சொற்களில் தோய்ந்தவர் கம்ப நாட்டாழ்வார் இப்படி
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்–என்று அருளிச் செய்கிறார் —

————–

ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிதியற்றும்
தீங்குடைய கொடியோரைக் கொல்விக்கும் சிந்தையானாய்
பூங்கழலார்க் கொண்டு போய் வனம் புக்கேன் புகா முன்னம்
தாங்கரிய பேராற்றல் தாடகையே தலைப்பட்டாள்-25-

பூங்கழலார் -மெல்லிய அடிகள் நுதி போல் பரல் பாயும் வனத்தில் நடத்திச் சென்றேன் என்கிறார்
–மலர்மகள் பிடிக்கும் மெல்லடியைக் கொடுவினையேனும் பிடிக்க –திருவாய் 9-2-10-
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல்லடிக்கல் குருதி சோர –பெருமாள் -9-5-

அலை உருவக் கடலுருவத் தாண்டகை தன் நீண்டு உயர்ந்த
நிலை யுருவப் புயவலியை நீ உருவ நோக்கு ஐயா
உலை யுருவக் கனலுமிழ் கண் தாடகை தன் உரமுருவி
மலை உருவி மரமுருவி மண் உருவிற்று ஒரு வாளி -26-ராமனின் ஒரே அம்பு செய்த கார்யம்
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன் –

சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள்

————-

வில்லினைக் கண்டார் கூறிய மொழிகள்
‘சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அச்
சிங்க ஏறு அல்லனேல், இதனைத் தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன்? இன்று ஏற்றின், இச் சிலை,
மங்கைதன் திருமணம் வாழுமால்’ என்பார்.-கார்முகப் படலம்– 5

இமைப் பொழுதில் வில்லை எடுத்து இராமன் நாண் ஏற்ற, அவ் வில் ஒடிதல்
ஆடக மால் வரை அன்னது தன்னை,
‘தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது’ என்ன, எடுத்தான். 33

தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார். 34-

————-

வயிரியர் மதுர கீதம் மங்கையர் அமுத கீதம்
செயிரியர் மகர யாழின் தேம்பிழி தெய்வ கீதம்
பயிர்களை வேயின் கீதம் என்று இவை பருகி விண்ணோர்
உயிருடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் -40-

எழுத்து சித்ரங்கள் போல நின்றனவே –பெரியாழ்வார் -3-6-9-

————-

நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்;
கொம்பினைக் காணும் தோறும், குரிசிற்கும் அன்னதே ஆம்!
தம்பியைக் காண்மின்!’ என்பார்; ‘தவம் உடைத்து உலகம்’ என்பார்;
‘இம்பர், இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும்’ என்பார். 43-

பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான
வண்ணமும் இலைகளால் காட்டலால் வாட்டம் தீர்ந்தேன்
தண்ணறுக் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின்
உண்ணிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே -46-

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

தம் பத்ம தள பத்ராக்ஷம் ஸிம்ஹ விக்ராந்தகாமி நாம்
தந்யா பஸ்யந்திமே நாதம் க்ருதஜ்ஜம் பிரியவாதி நம் –ஸூந்தரா -25-14-

தள பத்ராக்ஷம் -இலை போலவும் மலர் போலவும் -அக்ஷம் -கண் என்றும் வடிவம் என்றும் பொருள் உண்டே

———————

பஞ்சரங்கு தீயின் ஆவி பற்றி நீடு கொற்ற வில்
வெஞ்சரங்கள் நெஞ்சரங்க வெய்ய காமன் எய்யவே
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே -49-

என்ன ஆண்மை என்று எரிச்சல் பட்டு வார்த்தை -பெண்ணின் வருத்தம் அறியாப் பெருமான்

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே –13-1-

கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —13-3-

————-

விண்ணுளே எழுந்த மேக மார்பின் நூலின் மின்னொடு இம்
மண்ணுளே இழிந்து என்ன வந்து போன மைந்தனார்
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலேன்
கண்ணுள்ளே இருந்த போதும் என் கொல் காண்கிலாதவே -53-

இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை
இன்னார் என்று அறியேன் -பர கால நாயகி போலவே –

——————

மண்ணுற விழுந்து நெடு வானுற எழுந்து
கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார்
உண்ணிற நறும் பொடியை வீசி ஒரு பாகம்
வெண்ணிற நறும் பொடி புனைந்த மத வேழம்–வரைக்காட்சி–19-

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத் துந்தித் தலத்து –திருவாய் -1-3-9-
குல வரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கயத்தாய் –திரு நெடும் தாண்டகம் -9-

————-

மாடகம் பற்றிய மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க்கரம் சிவப்பத் தொட்டனள்
பாடினள் ஒருத்தி தன் பாங்கி மார்களோடு
ஊடின துறை செயாள் உள்ளத்து உள்ளதே—உண்டாட்டுப் படலம்-32-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனி என்றும்
அல்லியம்பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே-திரு நெடும் தாண்டகம்–-15-

———-

குழைத்த பூம் கொம்பு அனாள் ஒருத்தி கூடலை
இழைத்தனள் அது அவள் இட்ட போது எல்லாம் பிழைத்தலும்

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே––நாச்சியார் திரு மொழி –4-1-

——————

பந்தணி விரலினாள் ஒருத்தி பையுளாள்
சுந்தரன் ஒருவன் பால் தூது போக்கினாள்
வந்தனன் எனக்கடை அடைத்து மாற்றினாள்
சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே -34-

பந்தணி விரலி உன் மைத்துனன் பேர் பாட –திருப்பாவை -18-
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கல் பொருது வந்து இழியும்
சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனை –நாச் -9-10-

—————-

இராமனின் வருகை
இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக அத்
துன்னு மா நகரின் நின்று எதிர் வரத் துன்னினான்
தன்னையே அனையவன் தழலையே அனையவன்
பொன்னின் வார் சிலை இறப் புய நிமிர்த்து அருளினான்-18-

தன் ஒப்பார் இல் அப்பன் –

—————-

சான்று எனத்தகைய செங்கோலினான் உயிர்கள் தாம்
ஈன்ற நற்றாய் எனக் கருது பேர் அருளினான்
ஆன்ற இச்செல்வம் இத்தனையும் மொய்த்து அரு குறத்
தோன்றலைக் கொண்டு முன் செல்க எனச் சொல்லினான் -29-

சான்று எனத்தகைய செங்கோலினான் உயிர்கள் தாம் ஈன்ற நற்றாய் எனக் கருது பேர் அருளினான் –சக்கரவர்த்தி பற்றி மக்கள்

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே
அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –பெருமாள் 5-1-

————–

இராமனின் மேனி அழகு–
தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? –
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார். 19

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – திரு விருத்தம்-96 –

——————

மாது ஒருத்தி மனத்தினை யல்லாதோர்
தூது பெற்றிலள் இன்னுயிர் சோர்கின்றாள்
போதரிக்கண் பொலன் குழைப் பூண் முலை
சீதை ஏத்தவம் செய்தனளோ வென்றாள்-24-

புள்ளும் சிலம்பின் காண் போதரிக்கண்ணினாய்

நீர் இருக்க மட மங்கைமீர் கிளிகள் தாம் இருக்க மதுகரம் எலாம்
ஆர் இருக்கிலும் என் நெஞ்சம் நல்லதொரு வஞ்சம் அற்ற துணையில்லை –திருவரங்க கலம்பகம் -24-

—————

பழுது இலா வொரு பாவை யன்னாள் பதைத்து
அழுது வெய்துயர்த் தன் புடைத் தோழியை
தொழுது சேர்ந்தயர் வாள் இந்தத் தோன்றலை
எழுதலாம் கொல் இம் மன்மதனால் என்றாள்–25-

தோழியை தொழுதாள் என்றும் தேர் போன திக்கைத் தொழுதாள் என்றுமாம்

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே–திரு நெடும் தாண்டகம் -14-

வடகரை வண் தொலை வில்லி மங்கலம் நோக்குமேல் அத்திசை அல்லால் மறு நோக்கு இலள் –திருவாய் -6-5-6-

ப்ரணம்ய சிரஸா தேவ்யை ஸீதாயை தாம் திசம் ப்ரதி –ஸூந்தர-65-7-பிராட்டி உள்ள திசை நோக்கி திருவடி தொழுததையும் அனுபவிக்கலாம் –

மஞ்சக்குளி உத்சவத்தில் திருவரங்கம் நோக்கி திருமங்கை ஆழ்வார் தொழுகிறார் –

—————–

சுழலும் வண்டும், மிஞிறும், சுரும்பும், சூழ்ந்து
உழலும் வாச மது மலர் ஓதியர்,
குழலினோடு உற, கூறு பல்லாண்டு ஒலி,
மழலை யாழ் இசையோடு மலிந்தவே. 50-சக்ரவர்த்தி சபா மண்டபம் வர மகளிர் பல்லாண்டு பாடுதல் –

திண்ணார் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் காலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -3 3-9 –

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே -10-9-6-

—————

எங்கள் செய்த தவத்தினின் இராமன் என வந்தான்
சங்கினொடு சக்கரம் உடைத் தனி முதல் பேர்
அங்கண் அரசாதலின் அவ்வல்லி மலர் புல்லும்
மங்கை இவளாம் என வசிட்டன் மகிழ்வுற்றான் -32-

கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் 6-9-1-

ஜாதோசி தேவ தேச சங்க சக்ர கதாதர
திவ்யம் ரூபம் இதம் தேவ ப்ரஸாதேந உபாசம் ஹர–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-10-

வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –திருப்பல்லாண்டு -2-

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் 7-2-1-

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தளங்கள் வந்து காணீரே –பெரியாழ்வார் -1-2-12-

வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தி -7-3-1-

—————-

திருமணம் -நாளை என்றதும் -சீதை தனது மனத்தை நோக்கி
கரு ஞாயிறு போல்பவர் காலோடு போய் -இராம பிரானது திருவடியின் பின்னே தொடர்ந்து சென்று
மீண்டும் அவன் வரும் நாளிலே அயலே வருவாய் -என்றும்
புருஷோத்தமன் ஆகிய இராமனை நாளைய தினம் அடைந்து களிப்பதாக இருக்கையில்
நீ என்னை விட்டுச் செல்வது தக்கது அன்று –என்கிறாள் –

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் ஏறி கடலே–-திரு விருத்தம்–17-

வந்து தோன்றா யன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந் தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்த மில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே––ஸ்ரீ திருவாய் மொழி–8-5-7-

கண்டாமவை யாயிரம் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை –ஆரண்ய –சரபங்கர் பிறப்பு நீங்கு படலம் –24-

கண்ட போதே நுகர வேண்டும் கனி அன்றோ இவன்

அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி -7-10-1-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே -என்றும் –திரு நெடும் தாண்டகம் -15-

யானை தோன்றிய இடம் கடல் -திருப் பாற் கடலிலே பழுத்த பழம்

தடம் கடல் சேர்ந்த பிரானை கனியைக் கரும்பின் இந்த சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை –திருவாய் -3-5-6-

——————

இடையே வளை சோர, எழுந்து, விழுந்து,
அடல் ஏய் மகனன் சரம் அஞ்சினையோ?
உடல் ஓய்வுற, நாளும், உறங்கலையால்! –
கடலே! – உரை! நீயும், ஓர் கன்னிகொலாம்?’–கடி மணப் படலம்- 11-

காமுற்ற கை யறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்றது உற்றாயோ? வாழி! கனை கடலே!–2-1-3-

————-

இராமன் நீராடி மணக்கோலம் புனைதல்
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்,
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்,
கங்கையே முதலவும், கலந்த நீரினால்,
மங்கல, மஞ்சனம் மரபின் ஆடியே, 48

கோது அறு தவத்துத் தம் குலத்துளோர் தொழும்
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் –
காது இயல், கயல் விழிக் கன்னிமார்களை,
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே. 49

அழி வரு தவத்தினோடு, அறத்தை ஆக்குவான்,
ஒழிவு அருங் கருணை ஓர் உருவு கொண்டென,
எழுத அரு வடிவு கொண்டு, இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு என, கலவை சாத்தியே; 50-

மிதிலைக்கு வரும் பொழுது ஸ்ரீ ரெங்கநாதனையும் எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்தான்
அதனால் தொழுதான் -என்கிறார்
தீர்த்தமாடி திருமண காப்பு தரித்து திரு ஆராதனை பெருமாளை சேவிக்கும்
ஸ்ரீ வைஷ்ணவ மரபை வழுவாமல் அருளிச் செய்கிறார் –

முப் பரம் பொருளிற்குள் முதலை, மூலத்தை,
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை,
அப்பனை, அப்பினுள் அமிழ்தை, தன்னையே
ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ? 68-

முப் பரம் பொருளிற்குள் முதலை, மூலத்தை,–வியூஹ வாஸூ தேவனாகிய மூலம் –
சங்கர்ஷணன் அநிருத்தன் -ப்ரத்யும்னன் மூவரும் -வ்யூஹம்
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை–பர வாஸூதேவன் ,
அப்பனை,– செப்பார் திண் வரை சூழ் திரு வேங்கட மா மலை அப்பா-1-9-5- -அர்ச்சாவதார
அப்பினுள் அமிழ்தை, தன்னையே–அந்தர்யாமியும் விபவமம் –

வின் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து குறைவாய்-6-9-5-

குருகை நாதன் குரை கழல் பாப்பாவே -என்பதற்கு ஏற்ப ஆழ்வார் அருளிச் செயலை
அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

————

சீதை மண்டபத்துள் வந்த காட்சி
சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர் செம் பொன் கொம்பர்,
முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி, மீள
மலையிடை உதிக்கின்றாள்போல், மண்டபம் அதனில் வந்தாள். 79

திருமண மாட்சி காண, வானவர் எல்லாம் வானத்து வருதல்
நன்றி வானவர் எலாம், இருந்த நம்பியை,
‘துன்று இருங் கருங் கடல் துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும், இன்று உடைத்து அழகு’ என்றார் அரோ. 80–

சீதையும் இராமனும் மணத் தவிசில் வீற்றிருத்தல்
மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். 85

இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக் கொடுத்தல்
கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
‘பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி’ என்னா,
தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான். 86

வாழ்த்து ஒலியும், மலர் மாரியும்
அந்தணர் ஆசி, அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ. 87

வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார். 88

இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல்
வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான். 89

இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின்,
மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின்,
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள். 90

அம்மி மிதித்து, அருந்ததி காணுதல்
வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். 91

இராமன் சீதையோடு தன் மாளிகை புகுதல்
மற்று உள, செய்வன செய்து, மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி,
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்,
பொற்றொடி கைக் கொடு நல் மனை புக்கான். 92

பல் வகை மங்கல ஆரவாரம்
ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை. 93-

இராமனும் சீதையும் தாயர் மூவரையும் வணங்குதல்
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்,
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி,
ஆய தன் அன்னை அடித் துணை சூடி,
தூய சுமித்திரை தாள் தொழலோடும், 94

மாமியர் மகிழ்ந்து சீதைக்குப் பொன் முதலியன அளித்தல்
அன்னமும், அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தாள்; சிந்தை உவந்தார்,
கன்னி, அருந்ததி, காரிகை, காணா,
‘நல் மகனுக்கு இவள் நல் அணி’ என்றார். 95

சங்க வளைக் குயிலைத் தழீஇ நின்றார்,
‘அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனிப் பிறர் யார் உளர்?’ என்றார்;
கண்கள் களிப்ப, மனங்கள் களிப்பார். 96-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசிம்பு தருவானே––ஸ்ரீ திருவாய் மொழி–10-8-4-

இராமன் சீதையொடு பள்ளி சேர்தல்
நூற் கடல் அன்னவர் சொற் கடன் நோக்கி,
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்,
கார்க் கடல் போல் கருணைக் கடல், பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான். 98-

பரதன் முதலிய மூவருக்கும் திருமணம் நிகழ்தல்
வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன், ‘எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும்’ எனத் தமரோடு குறித்தான். 100

கொய்ந் நிறை தாரன், குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன், மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர், வான் உறை நீரார்,
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார். 101–

——————-

பரசுராமன் இராமனைப் புகழ்ந்து, தன் தவத்தை அம்புக்கு இலக்கு ஆக்குதல்
‘நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்
ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்!
வேதியா இறுவதே அன்றி, வெண் மதிப்
பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ? 37

‘பொன்னுடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்!
மின்னுடை நேமியன் ஆதல் மெய்ம்மையால்;
என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த
உன்னுடை வில்லும், உன் உரத்துக்கு ஈடு அன்றால், 38-

திருமாலுரு வொக்கும் மேரு அம்மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – திரு விருத்தம்-88- –

நூம்நம் ஜநேந புருஷே மஹதி ப்ரயுக்தம் ஆகஸ் பரம்
தத நுரூப பலம் ப்ரஸூதே க்ருத்வா ரகூத்வஹக தேத்
க்ஷணம் அந்தராயம் யத் பார்கவ பரகதே விஹதிம் ப்ரபேதே –சம்பூ ராமாயணம்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஹம்ஸ ஸந்தேஸம்–

March 5, 2020

ஸ்ரீ மாந் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரி
வேதாந்தாச்சார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ சீதா பிராடிக்கு தூது
இரண்ட்டு ஆஸ்வாசங்கள்–முதலது-60-ஸ்லோகங்கள் / இரண்டாவ்து -50-ஸ்லோகங்கள்

வம்சே ஜாத ஸவிது அநேக மாநயந் மானுஷத்வம்
தேவ ஸ்ரீமாந் ஜநகதநயாந் வேஷணே ஜாக ரூக
ப்ரத்யாயாதே பவநதநயே நிச்சிதார்த்த ச காமீ
கல்பாகாராம் கதமபி நிஸாம் ஆவிபாதம் விஷேஹே–1-

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றிய சக்கரவர்த்தி திருமகன் -திருவடி திரும்பி வந்து
கண்டேன் சீதை என்று அறிவித்த பின்பு -மிகவும் வருந்தி -அந்த இரவு ஊழிக் காலம் போலே நீண்டு தோன்றியது

கால்யே சேநாம் கபிகில பதே தூர்ணமுத்யோ ஜயிஷ்யந்
தூரி பாவாத் ஜனக துஹிதுர் தூயமான அந்தராத்மா
கிரீடாகேலம் கமல ஸரஸி க்வாபி காலோபாயதம்
ராகா சந்த்ர த்யுதி ஸஹ சரம் ராஜ ஹம்சம் ததர்ச–2-

அந்த சரத்கால காலை வேளையில் ராஜ ஹம்சத்தைக் கண்டான் –

தஸ்மிந் சீதா கதிம் அநி கதே தாத் துகோலே அங்க மூர்த்தவ்
தந் மஞ்ஜீர ப்ரதிம நிநதே ந்யஸ்த நிஸ்ஸபந்த த்ருஷ்ட்டி
வீரச்சேதோ விலயம் அகமத் தந்ம யாத்மா முஹூர்த்தம்
சங்கே தீவ்ரம் பவதி சமயே சாசனம் மீநகேதோ -3-

அவளது நடையை போலவும் அவளது வெண் பட்டு வஸ்திரம் போலவும் அவள் சிலம்பின் த்வனி போலவும்
இருக்கக் கண்டு மூர்ச்சித்தான் -மன்மதன் கட்டளைகள் கடுமையாகவே இருந்தன

லப்த்த ஆஸ்வாசஸ் கதமபி ததா லஷ்மணஸ்ய அக்ர ஜன்மா
சந்தேசேந ப்ரணய மஹதா மைதிலீம் ஜீவ யிஷ்யந்
சக்ரே தஸ்மை ஸரஸி ஜதளை சோபசாராம் சபர்யாம்
காந்தா ஸ்லேஷாத் அதிக ஸூபக காமிநாம் துர்த்த லாப –4-

தூது விட ஹம்சத்துக்கு மரியாதைகளுடன் கூடிய பூஜை செய்தான் –

க்ருத்வா தஸ்மிந் பஹு மதிம் அசவ் பூயஸீம் அஞ்சநேயாத்
காடோந் மாதஸ் ப்ரணய பதவீம் ப்ராப வார்த்தந பிஞ்ஜே
விஸ்லேஷண ஷூபித மநசாம் மேக சைலத்ருமாதவ்
யாஸ்ஞாதைந்யம் பவதி கிமுத க்வாபி சம்வேதநார்ஹே-5-

திருவடியை நினைத்து அறிவற்ற மேகம் மலைகளை தூது விடுவது போலே
அறிவுள்ள ஹம்சத்தை தூது செல்ல விண்ணப்பித்தார் –

வேத உதந்வத் விபஜன விதோ வம்சஜம் விஸ்வமூர்த்தே
ஆஹு சித்தா கமல வாஸதே ஒவ்பவாஹ்யம் பவந்தம்
லப்தம் யேந பிரகுண கதிநா தத் பிரியாயா ஸகாசாத்
தத் சாவர்ண்யம் ஸ்ரவண ரஸநா ஸ்வாத யோக்யா ஸூதா ச –6-

ஹம்சத்தை புகழ்கிறார் -வேதக்கடலை பிரிக்க வல்லமை -ஜகத் சகலமும் சரீரமாக கொண்ட ப்ரஹ்மமும் ஹம்ஸ ரூபி –
நான்முகனுக்கு வாஹனம் -சரஸ்வதியின் வெண்மை நிறம் -வாக்கு அம்ருதம் -ஒழுக்கமான நடத்தை –
சீரிய புத்தி உள்ளமை -இவற்றை எல்லாம் சொல்லி ஸ்தோத்ரம் –

மத்யே கேசித் வயம் இஹ சகே கேவலம் மானுஷணாம்
வ்யக்த உத்கர்ஷ மஹதி புவநே வ்யோமகாநாம் பதிஸ்த்வம்
ஸ்த்தாநே தூத்யம் தத் அபி பவதஸ் சமஸ்ரித த்ராண ஹேதோ
விஸ்வ ஸ்ராஷ்டா விதிரிபி யதஸ் ஸாரதித்வேந தஸ்தவ் –7-

மனுஷ்யர் இன்ப துன்பங்களை உனதாக கொள்ளும் -அரசர்களை போன்ற ராஜ ஹம்சமே-
உன்னை அண்டியவர்களது ரக்ஷணம் உன் பரம் அன்றோ
திரிபுர அஸூர யுத்தத்தில் நான்முகன் தேர்ப்பாகனாய் இருந்தான் அல்லவா –

இச்சா மாத்ராத் ஜகத் அபராத ஸம்விதாதும் ஷமாணாம்
இஷ்வாகூணம் ப்ரக்ருதி மஹதாம் ஈத்ருஸீம் ப்ரேஷயே வேளாம்
லஷ்ய அலஷ்ய ஜலதி பயஸா லப்த ஸம்ஸ்த்தாம் த்ரிகூடே
லங்காம் கந்தும் தவ சமுசிதம் ராக்ஷஸீம் ராஜதாநீம் –8-

என்னைத் தூது அனுப்பி என்ன பயன் என்ன
எனது குலமான இஷ்வாஹு குலத்தின் மேன்மை
உனக்கு கடல் தாண்டி செல்ல பலம் அளிக்கும் –
திரிகூட மலையில் அமைந்துள்ள இலங்கைக்கு நீ செல்வது ஏற்றதாகும் –

ஸ்தாநை திவ்யை உபாசித் குணாம் சந்தன அரண்ய ரம்யாம்
முக்தா ஸூதிம் மலய மருதாம் மாதரம் தக்ஷிணாசாம்
அஸ்மத் ப்ரீத்யை ஜநக தநயா ஜீவதார்த்தம் ச கச்சந்
ஏகம் ரக்ஷ பதம் இதி சகே தோஷ லேஸம் சஹேதா–9-

நீ செல்லும் தெற்கு தேசம் திவ்ய தேசங்களால் நிறைந்தவை -சந்தனக்காடு நிறைந்து -முத்துக்கள் பிறப்பிடம் -தென்றலுக்கு தாய் –
இருந்தாலும் அரக்கர்களால் நிறைந்த இடம் -எங்களுக்காக அவர்கள் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வாயாக –

வாசலாநாமிவ ஜடதியாம் ஸத்வகவ் தூரயாதே
கைலாஸாய த்வயி கதவதி ஷீபதாம் ஆஸ்ரிதாநாம்
சம்மோதஸ்தே பதி பரிணமேத் சந்த்ரகை உஜ்ஜிதாநாம்
மேகாபாயே விபிநசிகிநாம் வீஷ்ய வாஸம்யமத்வம் -10-

அரசன் இல்லா நாட்டில் அராஜகம் தலையெடுத்து ஆடும் -நீ முன்பு கைலாசம் சென்ற போது மயில்கள் கோகோ என்று கத்தி ஆடின
மழைக்காலம் நீங்கி சரத்காலம் வந்ததும் தோகை இழந்து கத்தாமல் இருப்பது கண்டு நீ வந்து கண்டு மகிழ்ந்தாய்

ஆரக்தாநாம் நவமது சநைர் அபிபந் பத்மிநீநாம்
காலோந் நித்ரே குவலய வநே கூர்ண மாநஸ் சலீலம்
ஸ்விந்நோ தாநைர் விப நகரிநாம் ஸுவ்ம்ய சேவிஷ்ய த்வாம்
ஆமோதாநாம் அஹம் அஹம் இகாம் ஆதிசந் கந்தவாஹா -11-

காற்று தாமரை-குவளை – மலர்த் தேனை பருகி மயங்கி அங்கும் இங்கும் அலைந்து-
நீ செல்லும் வழிகளில் உனக்கு உபசாரம், செய்து வணங்கி நிற்கப் போகிறது –

பர்யாப்தம் தே பவந சலிதை அங்க ராகம் பராகை
ஸ்தாநே குர்யுஸ் சமசமுதயாத் பந்தவோ பந்து ஜீவா
யேந அந்வேஷ்யசி அசலதநயா பாதலாஷா அநு ஷக்தம்
சூடா சந்த்ரம் புரவிஜயிந ஸ்வர்ணதீ மேந பூர்ணம் -12-

உன் போன்ற வண்மை நிறம் கொண்ட பஞ்சு -பருத்தி மரங்கள் நீ செல்லும் வழியில் உள்ளன
காற்று மலர்களின் துகள்களை உன் மேலே வீச சற்றே சிவந்த நிறம் ஆக்குகின்றன
சிவந்த கங்கை நீரால் நனைக்கப்பட்ட சிவனது சிரஸ் போலே விளங்குகிறாய்-
கங்கையின் வெண்மையான நுரை பிறைச் சந்திரன் போலே விளங்க -ப்ரணய கலஹத்தால் சிவன் பார்வதியை வணங்க-
அவள் பாதத்தில் உள்ள சிவந்து சாறு படுவது போன்று உள்ளாய் –

ஸூஷ்ம ஆகாரை திநகரகரை கல்பித அந்தச் சலாகா
சார உபாந்தா சதமக தநுச் சேஷ சித்ராம் சுகேந
ஊடா பச்சாத் உசித கதிநா வாயுநா ராஜ ஹம்ஸ
சத்ராயேரந் நபசி பவத சாரதா வாரிவாஹா -13-

சரத்கால வெண்மையான மேகங்கள் குடையின் நுனி போலவும் -ஸூர்ய கதிர்கள் உட்கம்பிகளாகவும் –
நாநா வர்ண இந்த்ரவில் அதன் மேல் உள்ள சீலைகளாகவும் இருக்க -காற்றால் தள்ளப்பட்டு இந்த குடை
நீ செல்லும் வழி எங்கும் உனது நடைக்குத் தக்கவாறு உன் மேல் விரித்தபடி வந்து கொண்டே இருக்கும் –

த்ரய சி ஏவம் பிரிய சக ஸூகம் சங்கம் லங்கிதாத்வா சகீம் தே
ஸீதாம் க்ஷேத்ரே ஜநக ந்ருபதே உத்திதாம் சீரக்ருஷ்டே
கோபாயந்தீ தநுமபி நிஜாம் யா கதஞ்சித் மதர்த்தம்
பூமவ் லோகே வஹதி மஹதீம் ஏக பத்நீ சமாக்யாம்-14-

எனக்காகவே வாழ்ந்து இருக்கும் உனது தோழியான ஸ்ரீ சீதா பிராட்டியைக் காண்பாய் –

ப்ரஷீணாம் த்வத் விரஹ சமய ஜாத ஹர்ஷாம் இதாநீம்
ப்ரத்யாயாஸ்யந் அநுநய சநை பத்மிநீம் ஸ்வாதுவாச
சா தே தந்த்ரீ ஸ்வநஸூபகயா ஸ்யாத் இதி இஹ அப்யநுஜ்ஞாம்
மந்யே குர்யாத் மதுகரகிரா மைதிலீ ஸுவ்ஹ்ருதே ந -15-

நான் சென்றதும் எனது காதலியான தாமரையும் வாடுமே என்ன -விரைவாக திரும்பி வருகிறேன் என்று சொல்லிச் செல்வாயாக
தாமரை ஸ்ரீ சீதாப் பிராட்டியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதே -வண்டின் ரீங்காரம் மூலம் சம்மதம் அளிப்பாளே-

சார்த்தம் காந்தை சபர ஸூத்ருசாம் அத்ரி குஞ்சேஷு ராகாத்
ஆஸீநாநாம் க்ஷணம் அஸமயே த்ருஸ்ய சந்த்ரோதய ஸ்ரீ
உட்டீ யேதா சரஸிஜவநாத் தக்ஷிணா ஆசா அநுசாரீ
பஸ்யன் தூராத் பிரபல க்ருதாம் பஷீணாம் தத்த வர்த்மா-16-

நீ செல்லும் பொழுது வேகமாக பறக்கும் கருடன் போன்ற பறவைகளுக்கு வழி விட்டுச் செல்வாயாக
உன்னைக் காணும் காதலர்கள் அகால சந்திரன் என்று பிரமிப்பார்கள்
தென் திசையை நோக்கி தாமரைக் காட்டை விட்டுப் புறப்படுவாயாக –

அங்கீ குர்வன் அம்ருத ருசிராம் உத்பதிஷ்ணோ சலீலம்
சாயாம் அந்தஸ் தவ மணி மயோ மால்யவான் ஏஷ சைல
சோபாம் வஷ்யதி அதிக லளிதாம் சோபமாநாம் அதீந்தோ
தேவஸ்யா ஆதே உப ஜநயதோ மாநசாத் இந்து பிம்பம் –17-

இரத்னமயமான மால்யவான் மலை மேலே தங்காமல் பறந்து செல்வாயாக -உனது நிழல் சந்த்ர பிம்பத்தை விட
மேலாக அந்த மலையிலே விழும் -சந்திரன் அவன் மனம் மூலம் உருவாக்கப்பட்டது –
இங்கு பெருமாள் திருக்கரமும் பட்டு அவன் திரு உள்ள எண்ணத்தை தூதாக எடுத்துச் செல்வதால் ஏற்றம் உண்டே இங்கு –

மார்க்கவ் சம்யக் மம ஹநுமதா வர்ணிதவ் த்வவ் தாயோஸ்தே
ஸஹ்ய ஆசந்ந அபி அநதி ஸூபக பச்சிமோ நித்ய வர்ஷ
ப்ராஸீநே து பிரதி ஜநபதம் சம்ஹதவ் அத்புதாநாம்
மக்நா த்ருஷ்டி கதமபி சகே மத்க்ருதே தே நிவார்யா -18-

மால்யமான் மலைக்குப் பின்னர் மேற்கு நோக்கிச் செல்லும் பாதை நீ செல்ல வேண்டிய சஹ்யமலைக்கு அருகில் இருந்தாலும்
அந்தப்பாதையில் எப்பொழுதும் மழை பொழிந்தபடியே இருக்கும் -ஆகையால் அது வழியாகப் போகாமல்
கிழக்கே நோக்கிச் செல்வாயாக
அங்கு காணத் தக்கவை பலவும் இருந்தாலும் அதில் கண் வைக்காமல் எனக்காக விலக்கி விரைந்து செல்ல வேண்டும் –

ச்ருத்வா சப்தம் ஸ்ரவண மதுரம் தாவகம் பாமரீனாம்
பிரத்யாசந்நாத் சபதி பவநாத் சாதரம் நிர்கதாநாம்
அப்ரூ பங்கே அபி அதிக ஸூபகை நிச்சி தாங்க கடாஷை
தேசாந் ஏதாந் வநகிரி நதீ சம் விபக்தான் வ்யதீயா–19-

உனது இனிய குரலைக்கேட்டு உன்னைக் காண வெளியில் வந்து ஆசையுடன் காண்பார்கள் -புருவம் நெரிப்பார்கள் –
நீ காடு மலை ஆறு இப்படி பிரிவுகளுடன் கூடிய தேசங்களைக் கடப்பாயாக –

இஷுச் சாயே கிசலயமயம் தல்ப்பம் ஆதஸ்த்து ஷீணாம்
சம்லாபை தைர் முதிதமநசாம் சாலி ஸம்ரக்ஷிகாணாம்
கர்ணாட ஆந்திர வ்யதிகர வசாத் கர்புரே கீதி பேதே
முஹ்யந்தீ நாம் மதந கலுஷம் மௌக்த்யம் ஆஸ்வாதயேதா-20-

நீ செல்லும் வழியில் கன்னட ஆந்திர தேசம் இணைப்பிடம் வரும் -செந்நெல் பயிர்களை காக்கும் பெண்கள்
கரும்பு நிழலில் அமர்ந்து கானம் செய்து இருப்பர் -அவர்களது அழகை அனுபவித்தபடி நீ தொடர்ந்து செல்வாயாக –

விஷ்ணோர் வாஸாத் அவநிவஹநாத் பத்தரத்நை சிரோபி
சேஷஸ் சாஷாத் அயமிதி ஜநை சம்யக் உந்தீயமாந
அப்ரைர் யுக்தோ லகுபி அசிர உந் முக்த நிர்மோக கல்ப்பை
அக்ரே பாவீ ததநு ரஞ்ஜயன் அஞ்ஜநாத்ரி-21-

திருமலை வர்ணனை இது முதல் தொடக்கம் -ஆதி சேஷனே திருமலை -மேற்கில் தலைப்பக்கம் கிழக்கில் வால் பக்கம் –
கண்களுக்கு மகிழ்வை உண்டாக்கும் திருமலை உனக்குத் தோன்றும் –

தத் ஆரூடை மஹதி மநுஜை ஸ்வர்கிபி ச அவதீர்னை
சத்வ உந் மேஷாத் வ்யபகதமித தாரதம்ய ஆதி பேதை
சாதாரண்யாத் பல பரிணதே சங்க்கஸோ பத்யமாநாம்
சக்த்யா காமம் மது விஜயிந தவம் ச குர்யா சபர்யாம் -22-

திருமலையில் சத்வ குணம் வளரும் -மண்ணோரும் விண்ணோரும் ஆராதனை செய்யும் வெற்பு-

ஸ்தோக உந்மக்ந ஸ்புரித புளிநாம் த்வத் நிவாஸ இச்சயா இவ
த்ரஷ்யஸி ஆராத் கநக முகரீம் தக்ஷிணாம் அஞ்ஜநாத்ரே
ஆசந்நாநாம் வநபிட பிநாம் வீஸீ ஹஸ்தை ப்ரஸூநாநி
அர்ச்சா ஹேதோ உபஹரதி யா நூநம் அர்த்த இந்து மவ்ளே -23-

திருவேங்கட மலைக்கு தென் திசையில் ஸ்வர்ண முகரி நதியை காண்பாய்-சிவ க்ஷேத்ரம் காளஹஸ்தி –
ஸ்ரீ நிவாஸனை பூஜை செய்ய மலர்களை கொண்டு வந்து சிவன் இடம் கொடுக்கும் நதி-

நிர்விஸ்ய ஏநாம் நிப்ருதம் அநபி வ்யக்த மஞ்ஜு ப்ரணாத
மந்த ஆதூத புளிந பவநை வஞ்ஜூள ஆமோத கர்ப்பை
அவ்யா சங்க சபதி பதவீம் ஸம்ஸ்ரய ஆந்யை அலங்க்ய
பந்தீ குர்யு தடவசதய மா பவந்தம் கிராதா -24-

அங்கு மந்தமாருதம் அனுபவித்து இளைப்பாறுவாய் -அங்கு வேடர்கள் இருப்பார்கள்
அவர்கள் காணும் முன்பு உயர்ந்த இடத்தில் பறந்து விரைவில் செல்வாயாக –

துண்டீர ஆக்யம் ததநு மஹிதம் மண்டலம் வீஷமாணா
க்ஷேத்ரம் யாயா ஷிபத துரிதம் தத்ர சத்யவ்ரத ஆக்யம்
பத்யவ் ரோஷாத் சலில வபுஷோ யத்ர வாக் தேவதயா
சேது ஐஜ்ஜே சகல ஜெகதாம் ஏக சேது ச தேவ -25-

பின்பு தொண்டை மண்டலம் -சத்யவ்ரதம் -ஸ்ரீ காஞ்சி தேவராஜன் சேவை —
வேகா சேது -சம்சாரக்கடலை கடக்க ஒரே சேது அன்றோ தேவாதி ராஜன் –
சேது -அணை என்றும் பாலம் என்றும்
பிரமத சேது -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-30-
ய ஆத்மா ச சேது -சாந்தோக்யம் -8-4-1-
அம்ருதஸ்ய பரம் சேது -ஸ்வேதாஸ்வர-6-19-
அம்ருதஸ்யைஷ சேது -முண்டகம் -2-2-5–

நாநா ரத்னை உபசி குணாம் நித்ய சங்கீத நாதாம்
பூமே த்ரஷ்யஸி உசித விபவம் பூஷணம் தத்ர காஞ்சீம்
யஸ்யாம் நித்யாம் நிஹித நயன ஹஸ்தசைல ஆதி வாஸீ
த்வந்த்வ ஆதீத ச கலு புருஷ த்ருச்யதே சத்யகாம -26-

பூமிக்கு ஒட்டியாணம் போன்ற காஞ்சீ
திவ்யதேச -தேவாதி ராஜனின் வர்ணனை –திவ்ய தேசங்கள் நாந வித ரத்னா வர்ணனை –
புருஷன் என்று பரத்வம் -த்வந்தம் என்று சங்கர்ஷணாதி வ்யூஹம் -விபவமும் இதில் உண்டே
நாதம் என்று அந்தர்யாமி -இரத்தினங்கள் என்று அர்ச்சா திவ்ய தேசங்கள்
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதன் ஐந்து நிலைகளையும் காட்டி அருளுகிறார் என்றபடி –

தாம் ஆஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்த்நா
ஜாதாம் ஆதவ் க்ருதயுக முகே தாது இச்சாவசேந
யத் வீதீநாம் கரிகிரிபதே வாஹ வேக அவதூதாந்
தந்யாந் ரேநூந் த்ரிதசபதயோ தாரயந்தி உத்தம அங்கை -27-

க்ருதயுக தொடக்கத்தில் விஸ்வகர்மாவால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட திவ்யதேசம் –
ஹஸ்திகிரி பேர் அருளாளன் வாகனங்களால் எழும்பிய துகள்கள் புனிதமாக்கும்
த்ரிதசபதயோ-பால்யம் யவ்வனம் கௌமாரம் மூன்று மட்டுமே கிழத்தன்மை இல்லாத தேவர்கள்
இந்த தூசி துகள்களை தலையின் மேல் கொள்கிறார்கள் –

மந்த ஆதூதாத் ததநு மஹிதோ நிஸ் ஸ்ருதச் சூத ஷண்டாத்
பார்ஸ்வே தஸ்யா பசுபதி சிரச்சந்த்ர நீஹார வாஹீ
தூராத் பிராப்தம் ப்ரியசகம் இவ த்வாம் உபேஷ்யதி அவஸ்யம்
கம்பா பாத கமல வநிகா காமுகோ கந்த வாஹ-28-

இந்த காஞ்சி திவ்ய தேச -ஸ்வயம்பூ மா மரம் -ஏகாம்பரேஸ்வரர் தலையில் சந்திரன் பனித்துளியைக் கொண்டு
வரும் காம்பை ஆற்றில் உள்ள தாமரைக்காட்டு நறு மணம் முகந்து வரும் காற்று
உன்னை நண்பனாகவே பார்த்து உன்னை நெருங்கி வரும் –

வர்ணஸ் தோமை இவ பரிணதா சப்த பேதை மஹவ்கை
மாந்யா மத்யே நகரம் அபித ஸேவிதா தேவதாபி
ஸ்வச்ச ஸ்வாது ப்ரசர ஸூபகா ஸ்வாமிநீ வ கவீநாம்
வேகா சம்ஜ்ஞாம் வஹதி மஹதீம் வல்லபா பத்மயோநே –29-

சரஸ்வதி உனது இனிய துணைவி -வேகவதி நதியாகவே அவள் உள்ளாள் –
ஏழு விதமான எழுத்துக்கள் -உயிர் எழுத்துக்கள் -கவர்க்கம் -சவர்க்கம் -டவர்க்கம் -தர்க்கம் -பவர்க்கம் மற்றும் யகரம் போன்றவை –
சுத்திகை -கநகை -ஸ்ருப்ரை -கம்பை -வேகை -வஞ்ஜூளை -சண்டை வேகை -என்ற ஏழு பிரிவுகள் வேகவதி நதிக்கும் உண்டே –

தீர்த்தே பும்ஸாம் சமிதகலுஷ தத்ர ஸாரஸ்வத ஆக்யே
ஸ்நாத்வா சார்த்தம் முநிபி அநகை சம்யக் உல்லாச தாங்க
விஸ்வம் சித்தே விகதரஜசி வியஞ்ஐயிந்திம் அசேஷம்
வஷ்யஸி அந்தர் பஹிரபி பராம் சுத்தும் அஷேபணீயாம்–30-

வேகவதி ஆற்றில் நீராடி முனிவர்கள் ரஜோ குணம் நீங்கி சத்வ குணம் வளர்த்து வருவர்–
நீயும் நீராடி உள்ளும் புறமும் தூய்மையை அடைவாயாக –

தஸ்யா தீரே சரஸிஜபுவ ஸுவ்மய வைதாந வேதி
திவ்யம் குர்வன் த்ரமிட விஷயம் த்ருச்யதே ஹதிஸைல
யஸ்ய உபாந்தே க்ருதவசதய யாபயித்வா சரீரம்
வரித்திஷ்யந்தே விதமஸி பதே வாஸூ தேவஸ்ய தந்யா -31-

அஸ்வமேத யாகத்துக்கு உரிய மேடையாக -வேதி -வேகவதியின் கரையில் உள்ள ஹஸ்திகிரி
தென் தேசம் முழுவதுமே திவ்ய தேசமாக ஆக்கியபடி உள்ளதோ என்று என்னும் விதமாக உள்ளது –
இந்த முக்தி தரும் ஷேத்ரத்தில் நித்ய வாசம் செய்து இன்புற்று வாழ்ந்து முக்தராவார் –

சஞ்சிந்வாநா தருண துளஸீ தாமபி ஸ்வாம் அபிக்யாம்
தஸ்யாம் வேத்யாம் அநு விதததீ ஸ்யாமளம் ஹவ்யவாஹம்
போக ஐஸ்வர்யனபிரிய ஸஹ சரை கா அபி லஷ்மீ கடாஷை
பூயஸ் ஸ்யாமா புவந ஜநீ தேவதா சந்நிதத்தே -32-

ஹஸ்திகிரி பேர் அருளாளன் வர்ணனை –

லஷ்மீ வித்யுத் லலித் வபுஷம் தத்ர காருண்ய பூர்ணம்
மா பைஷீ த்வம் மரகத சிலாமேசகம் வீஷ்ய மேகம்
ஸூத்தைஸ் நித்யம் பரிசித பதஸ் த்வாத்ருசை தேவ ஹம்சை
ஹம்சீ பூத ச கலு பவதாம் அந்வவாய அக்ர ஜன்மா –33-

பெரியபிராட்டியார் உடன் மிதுனமாக இவனைக் கண்டு மேகம் என்று அஞ்சாதே –
ஹம்ஸரூபியாக அவன் உங்களுக்கு மூத்தவன் அன்றோ –

சார ஆஸ்வதீ ஸவநஹ விஷாம் ஸ்வமிநஸ் தே ச தேவஸ்
ஸூத்தம் சஷுஸ் ஸ்ருதி பரிஷதாம் சஷுஷாம் பாகதேயம்
அங்கீ குர்யாத் விநதம் அம்ருத ஆசார சமவாதிபிஸ் த்வாம்
ஆவிர் மோதை அபிமத வர ஸ்தூல லஷைஸ் கடாஷைஸ் –34-

வரதன் அனுபவம் -வேதங்களுக்கும் கண் போன்றவன் -தேவாதிராஜன் –
கடாக்ஷ லேசத்தாலே அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் அளித்து அருளுவான் –

மது ஆசிக்தம் சரஸிஜம் இவ ஸ்வந்நம் ஆலம்பமாந
தேவ்யா ஹஸ்தம் தத் இதர கர ந்யஸ்த லீலாரவிந்த
தேவஸ் ஸ்ரீமாந் ச யதி விஹரேத் ஸ்வைரம் ஆராமபூமவ்
வ்யக்தோ வாலவ்ய ஜநவபூஷா வீஜயே தம் த்வம் ஏவ –35-

அந்த வரதன் தோட்டத்தில் பிராட்டியுடன் ஏகாந்தமாக அமர்ந்து அவளது திருக்கரங்களைப் பிடித்துக் கொண்டு உலவுகிறான்
உனது சிறகால் சாமரம் வீசி தென்றல் காற்று அந்த மிதுனத்துக்கு ஆஸ்வாசம் படும்படி கவரி வீசி கைங்கர்யம் செய்ய வேண்டும் –

ஜாத பிரிதி ஜன பதம் அதோ மத்யமம் சங்கயித்வா
தூராத் லஷ்யே க்ரமுக நிர்வாக ஸ்யமளாந் யாஹி சோளாந்
ப்ரத்யுத் கச்சத் மகர வலந ஸ்தம்பிதைஸ் ஸஹ்ய ஜாயாஸ்
ஸ்ரோதோ பேதை விவித கதிபி சம் விபக்த அவகாசாந் -36-

இதில் சோழ நாட்டு வர்ணனை –கறுத்த பாக்குமர வரிசை -காவேரி நீர் பெருக்கு-அசையாமல் உள்ள அலைகள் –

சந்த்யா ராகம் ஸூரபி ரஜநீ சம்பவை அங்க ராகைர்
கேஸைர் ஜ்யோத்ஸ்நா கலஹி திமிரம் பாலிகா ஆபீட கர்ப்பை
ஆபி பிராணா சரஸிஜ திருச ஹம்ஸ டோளாதி ரோஹாத்
ஆதாஸ் யந்தே மதகலகிரஸ் தே ஷு நேத்ரோத்ஸவம் தே —

சோழ நாட்டு பெண்கள் தாமரைக் கண்கள் -மஞ்சள் பூசிய மேனி -அந்திப் பொழுது போன்ற நிறம் –
தலையில் பாக்குமலர் சூடி இருந்த குழலில் நிலவு போலே இருக்கும் –
இளமைக்கு ஏற்க இனிய சொற்களைப் பேசுவார்கள் –
அவர்கள் ஊஞ்சல் ஆடியபடி இருப்பதை பார்க்கவே உனக்கு இன்பம் பயக்கும் –

ப்ருத்வீ லீலா திலக ஸூபகம் பச்சிமம் பாகம் ஏஷாம்
நாம்நா வர்ஷம் ஜலசர நதீம் ஆத்ருகம் காஹாமாந
த்ரஷ்யஸி ஆராத் பரிமித தயா மக்ந கைலாச த்ருஸ்யம்
ஸ்வேதம் சைலம் பணிபதம் இவ ஷ்மாலாத் உஜ்ஜிஹாநம் -38-

திருவெள்ளறை திவ்ய தேச அனுபவம் -மேற்கு திசையில் -பூமி தனக்கு இட்டுக் கொள்ளும் திலகம் போன்று
பூமியில் இருந்து மேலே எழும் ஆதி சேஷன் போன்ற திருவெள்ளறை திவ்ய தேசத்தைக் காண்பாயாக –

ஸ்பார ஆலோக பிரசமித தம சஞ்சயம் ததர பும்ஸாம்
ப்ரத்யக் ரூபம் ப்ரகுண விபவம் ப்ரார்த்தநீயம் பூதாநாம்
நேதீ யாம்சம் குசல நிவஹம் நந்துராதாஸ்யதே தே
திவ்யம் தேஜோ ஜலதி தநயா ஸ்நேஹ நித்ய அநு ஷக்தம்–39-

புண்டரீகாக்ஷணனின் வர்ணனை -திவ்ய தேஜஸ் -மிதுன கடாக்ஷ லேசத்தால் சர்வ புருஷார்த்தங்களையும் அளிப்பவன் –
அனைத்தும் இவன் அதீநம் -நீ இவனை வணங்கு சர்வ நன்மைகளையும் பெறுவாய் –

ஸ்நிக்தச் சாயம் ததநு விததம் தஸ்ய தாமேவ நீலம்
நீலீ ரஷா நியத லளிதம் காநநம் சம்விசீயா
த்ருஷ்டே தஸ்மிந் அநிமிஷ வதூ நித்ய நிர்வேச யோக்யே
ஸ்வர்க உத்யான ஸ்ரியம் அபி லகும் மம்ஸ்யதே மாநஸம்–40-

திருவெள்ளறைக்கு மேற்கே உள்ள காட்டு வர்ணனை -அவன் திவ்ய மங்கள விக்ரஹம் போன்ற நீல நிறம் –
விஸ்தாரம் -நீலீ அரக்கியால் ரக்ஷணம் -இங்குள்ள கனிகள் மலர்கள் ஸ்வர்க்கத்தில் உள்ளவை போலவே இருக்கும் –

குர்வன் நாநா குஸூம ரஜசா யத்ர சித்ரம் விதாநம்
பூக ஆரண்யே ம்ருது விசலயந் பாலிகா சாமராணி
பாத ந்யாஸ க்ஷமம் அவகிரந் ஷமாதலம் புஷ்ப ஜாலை
பிரயோ வாயு ப்ரிஜந விதிம் பஞ்ச பானஸ்ய தத்தே -41-

அந்த கணத்தில் மலர்களின் தாதுக்கள் மேலாப்பு போலே -பாக்கு மரங்கள் பாலைகள் சாமரங்கள் வீச –
மலர்க்குவியல் அலங்காரம் -மன்மதனுக்கு தொண்டு புரியும் கானத்தை விரும்பி
தேவ ஸ்த்ரீகள் அனுபவிக்க விரும்புகிறார்கள் –

ஸ்ரேதோ வேகாத் அத ஜநபதம் ஸுவ்ம்ய ஸீமந்தயந்தீ
பிரத்யா தேசோ விபுத சரித ஸ்யந்ததே ஸஹ்ய கந்யா
காலே காலே பரிண திவசாத் பர்வ பேத அவகீர்ணை
புண்ட்ரே ஷுணாம் புளிந விசதை கத்கதா மௌக்தி கௌகை -42-

காவேரி வர்ணனை -கங்கையில் புனிதம் -கரும்புகள் முதிர்ந்து முத்துக்கள் வெடித்து வெண்மை முத்து குவியல் –
ஸஹ்ய மலையின் பெண் தேசத்துக்கு வகுடு போலே தோன்றி பெருகுகிறாள் –

ஸஹ்ய உத்ஸங்காத் சபதி மருதா சாகரம் நீயமாநாம்
பத்ர ஆலாபைர் விஹித குசலாம் த்வாத்ருசாநாம் த்விஜாநாம்
யாம் அஸ்கந்நா சரஸ குஹளீ பத்ரபாதைர் நிசாந்தே
மந்தஸ் மேராம் மது பரிமளை வாசயந்தீவ பூகா–43-

தந்தையான ஸஹ்ய மலையின் மடியில் இருந்து கணவனான கடலுக்கு செல்லும் காவேரிக்கு
உன் போன்ற பறவைகளின் ஆசீர் மங்களகரம்
பாக்குப்பூ மடல் புன்சிரிப்பு -தேன் நறு மணம் வாசனைப் பொருள்கள் காவேரியை நறு மணம் செய்கின்றன –

சந்த்ர உல்லா -தஸ்மிந் த்ரஷ்யஸி அமர மஹிளா மௌளி கந்த்யை அவந்த்யாம்
ஆதன்வாநாம் வ்ய பக்த ரசம் மாநசே மாநசம் வ
தீர்தை அந்யை அபி பரிகதாம் சுத்தி ஹேதோ சமந்தாத்
சந்த்ர உல்லாக பிரதி தயசச சம்பதம் புஷ்கரிண்யா–44-

திருவரங்க வர்ணனை -சந்த்ர புஷ்கரணி-மானஸப் பொய்கையில் ஹம்ஸங்கள் விளையாட –
மனஸ்ஸூ விஷயாந்தரங்களில் செல்லாமல் இருக்கும்படி செய்ய வல்ல தூய்மை –
புண்ணிய தீர்த்தங்கள் கைகர்யம் செய்ய காத்து இருக்கும் சந்த்ர புஷ்கரணி–

தீரே தஸ்யா விரசித பதம் சாதுபி ஸேவ்யமாநம்
ஸ்ரத்தா யோகாத் விநமித தநு சேஷ பீடம் பஜேதா
யஸ்மின் அஸ்மத் குலதந தயா ஸுவ்ம்ய சாகேத பாஜ
ஸ்த்தாநம் பாவ்யம் முநிபி உதிதம் ஸ்ரீமதோ ரெங்கதாம் ந –45-

சந்த்ர புஷ்கரணி கரையில் ஆதி சேஷன் ஆசனம் -குல தனம் ஸ்ரீ ரெங்க விமானம் -ஸ்ரீ அரங்கன் பின்பு வருவான் –

சத்வே திவ்யே ஸ்வயம் உதயத தஸ்ய தாம்ந பிரசங்காத்
மஞ்ஜூஷாயாம் மரகதம் இவ பிரஜாமாநம் ததந்த
சேதோ தாவதி அபஹித புஜம் சேஷ போகே சயாநம்
தீர்க்க அபாங்கம் ஜலதி தநயா ஜீவிதம் தேவம் ஆத்யம் -46-

ஸ்ரீ ராமபிரான் தம்மிடம் உள்ள ஸ்ரீ ரெங்க விமானம் எண்ணியதை வர்ணிக்கிறார் –
சத்வ குணம் விளங்கும் இந்த இடத்தில் வருவதை உணர்கிறார்
தங்கப்பெட்டியில் மரகத மணி போலே ஆதி சேஷன் உடலில் புஜத்தை தலை அணையாக ஆக்கிக் கொண்டு சயனித்து
நீண்ட அப்பெரிய வாய திருக்கண்கள் -பெரிய பிராட்டியாரின் உயிருமான ஸ்ரீ ரெங்க நாதனை குறித்து சிந்தனை –

சோர ஆக்ராந்தம் ததநு விபநம் சோழ பாண்டிய அந்தரஸ்தம்
ஜில்லீ நாத ஸ்ரவண பருஷம் சீக்ரம் ஏவ வ்யதீயா
தீர்ணே தஸ்மிந் ப்ரகடய சகே சீதளாம்ச நிநாதாந்
ஸப்தா யந்தே ந கலு கவய சந்நிதவ் துர்ஜநாநாம் –47-

பின்பு காட்டைக் கடப்பாயாக -கடந்த பின்பு உன் குளிர்ந்த சப்தம் எழுப்புவாய் –
கவிகள் அறிவற்றவர்கள் சந்நிதியில் வாய் திறக்க மாட்டார்களே –

ஸ்ரஸ்தா பீடம் பிரசலத் அளகம் வ்யக்த தாடங்க ரத்னம்
முக்தா சூர்ண ஸ்ப்புரித திலகம் வக்த்ரம் உத்தாந யந்த்ய
தேசே தஸ்மிந் குவலய த்ருச ஜாதகவ் தூஹலாஹாஸ் த்வாம்
மாலா தீர்க்கை மதுர விருதம் மாநயிஷ்யந்தி அபாங்கை-48-

உனது இனிய குரலைக் கேட்டு பெண்கள் உன்னைக் காண ஆசையுடன் வருவார்கள் –
அவர்கள் காது அணி ஒளி வீச உன்னைக் கடாக்ஷித்து கௌரவிப்பார்கள் –

நித்யாவாசம் வ்ருஷபம் அசலம் ஸூந்தர ஆக்யஸ்ய விஷ்ணோ
பிரத்யா சீதந் சபதி விநமத் பாகதேயம் நத ஸ்யா
யஸ்ய உத்ஸங்கே பலி விஜயிந தஸ்ய மஞ்ஜீர வாந்தம்
பாத திவ்யம் பசுபதி ஜடா ஸ்பர்ச சூன்யம் விபாதி -49-

திருமாலிருஞ்சோலை வர்ணனை -வ்ருஷபாசலம் திருமலையை வணங்கு
அங்குள்ள நூபுர கங்கை சிவன் தலை ஸ்பர்சம் இல்லாமல் நேராக இங்கு வந்தது –

ஈஸாத் அஸ்த்ராணி அதிகதவதாம் க்ஷத்ரியானாம் ப்ரவாவாத்
காரா வாச ஸ்மரண சகிதை சிக்த ஸஸ்யாந் பயோதை
பஸ்யன் யாயா பரமலகயா ஸ்பர்த்த மாநை அஜஸ்ரம்
புண்யா வாசை புரஜந பதை மண்டிதாந் பாண்டிய தேசாந்-50-

இந்திரன் ஆசனத்தில் பாண்டிய மன்னன் அமர கோபித்து உதவாமல் இருக்க பாண்டிய மன்னன் மேகங்களை சிறை வைக்க
அஞ்சிய இந்திரன் வேண்டிய மழை பொழிய உத்தரவிட்டான்
பாண்டிய மன்னர்கள் சிவன் இடம் அஸ்த்ரங்களைக் கற்றனர் -அவர்களைக் கண்டு மேகங்கள் அஞ்சி
மழையை பொழியும் -பயிர்கள் செழிப்பு –
குபேர நாட்டு செல்வதுடன் போட்டி -புண்ய புருஷர்கள் வாசம் -நாடு நகரங்களால் அலங்கரிக்கப்பட்ட பாண்டிய நாடு –

முக்தா ஜாலை ஜெநித புளிநாம் சுக்தி சந்தாந் அமுக்தை
தாரா பூர்ணாம் திவம் இவ தத தாம்ரபர்ணீம் பஜேதா
பிரத்யாசத் யா நியத விசதம் பீத ஸிந்தோ மஹர்க்ஷே
பாநீயம் தே பரிண மயிதா தத்ர முக்த ஆமயத்வம் -51-

வானம் போன்ற தாமிரபரணி -சிப்பிக்களின் இருந்து வெளிவந்த முத்துச் சிப்பிகள் நக்ஷத்ரம் போன்று ஒளி விடுகின்றன –
நீ கீழே இறங்கி அந்த நீரைப் பருகுவாய் -கடலைப் பருகிய அகஸ்தியர் சம்பந்தத்தால் தெளிவான அந்த நீர் சம்சார ரோகம் போக்குமே-

தஸ்யா ஸ்வைரம் சரஸிஜ முக ஆஸ்வாத சம்பிரீத சேதா
சீதீபுத தரள லஹரீ பாஹு ஸம்ஸ்லேஷணேந
அத்யாசீந புளிநம் அநிலை வீஜித சந்த நாத்ரே
ஸ்ராந்திம் சாந்திம் கமயது பவாந் சாகரம் லங்கயிஷ்யந்–52-

அடுத்து கடலைக் கடக்கப் போகின்ற நீ -உனது மனைவி போன்று உபசாரம் செய்யும் தாமிர பரணி உடைய
தாமரை போன்ற முக அம்ருதத்தை சுவைப்பாய்
அலைகளாகிற கைகளால் அணைக்கப் பெற்று வெப்பம் தீறுவாய்
அதன் மணல் திட்டில் அமர்ந்து மலயம் என்னும் சந்தன மலையில் இருந்து வீசும் காற்றை அனுபவிப்பாய் –
இப்படி உனது களைப்பை நீக்கிக் கொள்வாய் –

ஸவ்யம் தஸ்யா கியத் இவ கத ஸ்யாம தாளீ தமாலாம்
த்வத் ப்ரயாணாம் தருண வயசாம் சேதஸோ நந்தயித்ரீம்
வேலாம் அப்தே விவித லஹரீ தத்த முக்தாபிராமம்
த்ரஷ்யஸி ஆராத் த்விகுண புளிநாம் கேதகீநாம் பராகை –53-

அந்த தாமிர பரணியின் இடது பக்கம் தாண்டி சிறிது தூரம் சென்று கறுப்பான பனை மரங்கள் பச்சிலை மரங்கள்
அலைகளால் கொண்டு வரப்பட்ட முத்துக்கள் -தழை மடல்களின் மலர்த்துளிகள் நிரம்பிய
மணல் திட்டுகள் நிரம்பிய கடல் கரையைக் காண்பாய் –

ஸ்த்தித்வா தத்ர க்ஷணம் உபயத சைல ஸ்ருங்க அவதீர்னை
ஸ்ரோதோ பேதை அதிகத குணம் சாரு விஷப்பார கோஷை
லஷீ குர்வந் தசமுக புரீம் ஸுவ்ம்ய பத்ர ப்ரக்ருஷ்டோ
வேலா சாபம் சர இவ சகே வேகத த்வம் வ்யதீயா –54-

நான் செலுத்தும் அம்பு போன்று சமுத்திரத்தின் கரையில் நின்று இலங்கைக்குப் புறப்பட தயாராக நிற்பாயாக –
அருவிகள் இரைச்சலை வில்லின் நாண் ஒலி போலே எண்ணுவாய்
அந்த கரையையே வில் என்று நினைத்து ராம பாண்ம் போன்று விரைவாக கிளம்பிச் செல்வாயாக –

தாவ ஆஸக்தம் வநம் இவ நப சந்த்யயேவா அநு வித்தம்
சிந்தூர அங்கம் த்வீபம் இவ ஹரிம் ஸ்வ அம்பரேணவ ஜூஷ்டம்
வித்யுத் பிந்நம் கநமிவ சகே வித்ரும் அரண்ய யோகாத்
தேஹேந ஏகம் மிதுநம் இவ ச த்ரஷ்யஸி த்வம் பயோதிம்-55-

அந்தக் கடல் பவளக் காட்டைக் கீழே கொண்டது -கடல் காட்டுத் தீ பரவிய காடு போன்றும்
அந்திப் பொழுதால் சூழப்பட்ட வானம் போன்றும் -சிந்தூரப் பூச்சைக் கொண்ட யானையைப் போன்றும் –
பீதாம்பரம் விஸிஷ்ட எம்பெருமான் போன்றும் -ஒரு உடலுடன் மற்றோர் உடல் சேர்ந்த ஜோடியைப் போன்றும் காண்பாய் –

அஸ்மத் பூர்வை ஸூரபதி ஹ்ருதம் த்ருஷ்டுகாமை துரங்கம்
பித்வா ஷோனீம் அகணித பலை சாகரோ வர்த்தித ஆத்மா
சத் காரார்த்தம் தவ யதி க்ரீந் ஆதிசேத் குப்தபஷாந்
அஸ்ராந்த அபி ப்ரணயம் உசிதம் ந ஏவ பந்தோ விஹந்யா -56-

தேவேந்தரன் அபகரித்த அஸ்வமேத குதிரையைக் காண விரும்பிய எங்கள் முன்னோர்கள் சகர புத்திரர்கள்
பூமியைப் பிளந்து சென்றதால் சாகரம் என்ற பெயர் கடலுக்கு –
அந்த சமுத்திரம் மைனாகம் போன்ற மலைகளை உனக்கு உபகாரம் செய்யும் படி உத்தரவு இடக்கூடும்
அவர்களது அன்பை ஏற்றுக் கொள்வாய் –

தத்ர ஆஸீந க்வசந ஸரஸி ஸ்மேர ஹேம அரவிந்தே
லப்த்த ஆஸ்வாதோ மது பிரமிதை சம்விநீத அத்வகேத
த்ரஷ்யஸீ அக்ரே லகுதர கதி சேஷம் உல்லங்ய ஸிந்தோ
தோய ஆகாதாத் மஸ்ருணித சிலா ரம்ய வேலம் ஸூ வேலம் –57-

இப்படி கடல் அனுப்பிய மலையில் தாமரை பொய்கையில் அமர்ந்து கொள்-
தேனை பருகி களைப்பை நீக்கிக் கொண்டு கடலைக் கடப்பாய் -அங்கு ஸூ வேலம் மலையைக் காண்பாய் –

யஸ்ய ஆசந்நே பயஸி ஜலதே த்வத் ப்ரதிச்சந்த சந்திரா
பக்ஷஸ் சேத க்ஷரித ருதிர ஸ்தோம சந்தர்ச நீயா
வீஸீ ப்ராப்தை உபசிதருசோ மௌத்திகை தாரகாபை
ஸந்த்யாம் அந்யாம் நியதம் அவநவ் தர்சயந்தி பிரவாளா–58-

அந்த ஸூவேல மலையில் பவளக் கொடிகள் முத்துக்கள் போலே நக்ஷத்திரங்கள் போல ஒளி வீசும்
கடல் நீரில் உனது பிரதிபிம்பம் சந்திரன் போலே தோன்றும் –
அந்திப் பொழுதை இப்படியாக கடல் காண்பிக்கும் –

யத்ர அரண்யம் வருண வஸதே வீசி வேக ஆபநீதை
முக்தா ரத்ந ஸ்தபக சபளை வித்ருமை உத்ப்ரவாளம்
ரஷோபீதை ஸ்வயம் அநிமிஷை ஆஹ்ருத ஸ்த்தாபி தாநாம்
மந்தாரானாம் மது பரிமளை வாசிதம் மௌலி தக்நை-59-

அந்த மலையில் உள்ள காட்டில் கடல் அலைகளால் ஏறியப் பட்ட முத்துக்கள் ரத்தினங்கள் பவளங்கள் நிறைந்தும்
அரக்கர்களுக்கு அஞ்சி தேவர்கள் கொண்டு வந்து வளர்த்த மந்தாரம் என்னும் கற்பக மரங்களில் உள்ள மலர்கள்
தேன் பெருக்கி மழைக்கே நறு மணம் ஊட்டிக் கொண்டு இருக்கும்-

தஸ்மிந் த்ருச்யா ததனுபவத சாருஸவ் தாவதாதா
லங்கா ஸிந்த்தோ மஹதி புளிநே ராஜ ஹம்சீவ லீநா
த்வாம் ஆயாந்தம் பவந தரளை யா பதாகாபதேஸை
பஷை அப்யுஜ்ஜி கமிஷு இவ ஸ்த்தாஸ்யதி ஸ்ராவ்ய நாதா -60-

அந்த ஸூவேல மலையின் காட்டுக்குள் அடங்கியதாய் -கடலில் நீண்ட மண் திட்டில் அடங்கியதாய் மாட மாளிகைகள் நிறைந்த
இலங்கை உனக்கு ஏற்ற பெண் ஹம்ஸ பறவை போன்று காட்சி –
கொடி என்னும் சிறகுகள் காற்றில் அசைய -வாத்ய கோஷம் உன்னை வரவேற்கும்

முதல் ஆஸ்வாசம் சம்பூர்ணம் –

————————

இரண்டாம் ஆஸ்வாசம் –

லீலா கேலம் லலிதக மநா சாரு நாதம் ச சிஜ்ஜா
பல்ல அக்ஷம் த்வாம் ஸ்மர சரத்ருஸ கௌரம் ஆ பாண்டுர அங்க்ய
முக்த ஆலாபம் மதுர வசச மாநச அர்ஹம் மநோஜ்ஞா
யத்ர ஆநீதா ஸூர யுவதய ரஜ்ஜயேயு சமஷம்–61-

இங்கே இராவணனால் அபகரித்த தேவலோக ஸ்த்ரீகள் உன்னைப் போலவே அழகாக நடந்து சிலம்பு ஒலி எழுப்பி
கண்களாகிய மன்மத பானத்தால் வெண்மையான உன்னைக் காண்பர் -இனிமையாக பேசுவார் –
உன்னை மனத்தில் வைத்து அழகு பெறுவர்-

உக்ரை சாபை உபஹதி பியா ரக்ஷஸ தூர முக்தா
தக்த்தும் யோக்யா ஹுதவஹம் அபி த்வத் ப்ரியா வர்ண சுத்தா
உத்பஸ்யந்த ஜனக தநயா தேஜஸா ஏவ ஸ்வ ரஷாம்
ரோதம் யஸ்யாம் அநு வித ததே லோக பாலே அவரோதா -62-

இந்திராதி அஷ்டதிக் பாலகர் அந்தப்புர பெண்களும் சிறை -கற்பால் அவிர்பாகம் கொடுக்கும் நெருப்பையும் எரிக்க வல்லவர்
ஸ்ரீ சீதா பிராட்டி யுடைய தேஜஸ்ஸாலே ரக்ஷிக்கப் பட்டுள்ளவர்கள் -உனது நிறம் கொண்டவர்கள் –

அத்யா ஸீநா பஹு மணி மயம் துங்க ஸ்ருங்கம் த்ரிகூடம்
திக் பாலேஷு பிரதிதயஸசா ரக்ஷஸா ரஷ்யமாணா
அக்ரே மேரோ அமர நகரீம் யா பரிஷ்கார பூம்நா
த்வ ஆஹுய இவ த்வஜ படமயாந் அக்ர ஹஸ்தாந் துநோதி -63-

திரிகூட மலையில் -மணிகள் நிறைந்த அடர்ந்த சிகரத்தில் -இலங்கை -மேரு மலை மேல் உள்ள அமராவதி
நகரத்துக்கும் மேலாக கைகள் ஆகிற கொடிச் சீலைகளை ஆட்டி அழைக்கும்

காலே யஸ்யாம் வ்யபகத கநே த்வத் விஹார அசிதே அஸ்மின்
சந்த்ர ஆலோகை விலுளித த்யாம் சர்வரீ கர்வ ஹாசை
ஸ்வர்க்க ஸ்த்ரீணாம் விரஹத நிதம் பாஷ்யம் உத்வேல யந்த்ய
நிஷ்யன் தந்தே சலில கணிகா சந்த்ர காந்த ஸ்தலீ நாம்-64-

அங்கு சரத் காலம் -மேகங்கள் இல்லாமல் நீ சஞ்சரிக்க வசதியாய் இருக்கும் –
சந்த்ர ஒளி இரவு கர்வத்தால் சிரிப்பது போலே இருக்கும்
தேவ ஸ்த்ரீகள் மந வேதனை -கண்ணீர் பெறுக -சந்த்ர காந்த கற்களால் கட்டப்பட்ட இடத்தில் நீர் வெள்ளமாய் இருக்கும் –

பாஸா தாத்ருக் பரிண திஜு ஷா மைதிலீ சோக வந்ஹே
பஸ்மீ பூதாம் பவநதநய ஸ்நேஹி நா பாவகேந
அந்தஸ் த்ரஸாத் அவஹித தியஸ் சம்விதாஸ் யந்தி அவஸ்யம்
பிரத்யா திஷ்ட பிரதமரசநம் விஸ்வ கர்மா ஆதயஸ் தாம் –65-

திருவடி இலங்கையை எரித்த போதிலும் விஸ்வகர்மா இராவணனுக்கு பயந்து மீண்டும்
நேர்த்தியாக புதிய நகரத்தை நிர்மாணம் செய்வார்-
எனவே ஸ்ரீ சீதா பிராட்டியின் சோக நிமித்தமாக எழுந்த நெருப்புக்கு இராவணன் அஞ்ச மாட்டான்

மத்யே தஸ்யா நிசிசர பதே சத்ம ருத்த அந்தரிக்ஷம்
யுக்மம் நேயை திவி ஸூ மநசாம் ஸேவ்யமாநம் விமாநை
காரா காராம் விபூதி ஸூ த்ருஸாம் விஷமானோ விசித்ரம்
சோக ப்ரீதி வ்யதிகரவதீம் வஹ்யசே சித்த வ்ருத்திம் –66-

நகரத்தின் நடுவில் சுவர்க்கம் கூட்டிப்போகும் தேவ விமானம் உள்ளது –
இராவணன் அரண்மனையையும் பார்த்து உன்னக்கு ஆனந்தமும் சோகமும் தோன்றும் –

ஈஷத் கோபாத் ஸஹித பவநாம் இந்து சந்திக்த்த ஸூர்யாம்
நித்ய உதாராம் ருது பிரகிலை நிஷ் குடே வ்ருஷ வாடீம்
சீதா சோக ஜ்வலந சஹஜை தத்ர தீப்தாம் அசோகை
ஆபத் ஏதா பிரதம லுளிதாம் ஆஜ்ஞநேய பிரசாரை –67-

காற்று அவனுக்கு அஞ்சி வீசும் -சூர்யன் தனது தேஜஸ்ஸை சந்திரன் போலே குறைத்துக் கொள்வான்
ஸ்ரீ சீதா பிராட்டி சோகத்தால் அசோக மரங்கள் சோக மரங்களாக இருக்கும்-
முன்பு திருவடியால் அழிக்கும் பொருட்டு முறிக்கப் பட்டவை இவை –

தஸ்யாம் அந்யை வியதி விஹகை சார்த்தம் ஆனந்த நிக்நை
ஸ்த்தாநே ஸ்த்தாநே நிஹித நயன வர்த்தயந் மண்டலாநி
த்ரஷ்யஸி ஏகாம் ஜனக துஹிது ஸுவ்ம்ய துர்ஜாத பந்தும்
ந்யஸ்தா ஆகல்ப்பாம் க்வசந விடபே சிம்சுபாம் சாந்த்ர சாகரம் -68-

அந்த மரங்களில் பல பறவைகள் வசித்து வரும் -நீ ஸ்ரீ சீதா பிராட்டியைத் தேடிப் போவாய் –
சிம்சுபா மரத்தைக் காண்பாய் -அதில் பிராட்டி தனது ஆபரணங்களை வைத்து உள்ளாள் –

மூலே தஸ்ய கிமபி சவந க்ஷேத்ர சம்சார ஜாதம்
யத்ர க்வ அபி ஸ்த்திதம் அபி சகே த்ராச ஹீநம் மஹிம்நா
காலே தஸ்மிந் கதம் அபி மயா வீர்ய சுல்க்கே ந லப்ப்தம்
த்ருஸ்யம் தத் தே திநகர குலே த்யோதகம் திவ்ய ரத்னம் –69-

யாக பூமியை உழுத பொழுது தோன்றிய சீதா ரத்னம் -சிவ தனுசு முறித்து
ஸூர்ய குலம் வாழ நான் அடைந்த இரத்தினம் -உன்னால் காணப்பட வேண்டும் –

சா மே த்ருஷ்டீ சபர நயநா சந்நத ப்ரூ ச கேசீ
தந்வீ துங்க ஸ்தந பரநதா தப்பித்த ஜாம்பூநந ஆபா
பாலா யுஷ்மத் பிரதிம கமநா வேதி மத்யா வர அங்கீ
சிருங்கார ஆக்யம் நிதிம் அதிகதா ஸ்ரேயஸீ தேவ தேவ –70-

எனக்கு கண் போன்றவள் -மீன் போலே லோகத்தை கடாக்ஷத்தால் ரக்ஷிப்பவள் –
வில் போன்ற புருவம் -அடர்ந்த கூந்தல் –
மெல்லிய திருமேனி -கனத்த ஸ்தநம் -ஸ்வர்ண வர்ணம் -அன்ன நடை -சிறிய இடை –
சிருங்கார ரசம் புதையலை ஆளும் தேவதை –

சா தே யாவத் நயந பதவீம் யாதி மோஹ அலசா வா
சந்தேசம் வா மத் உபகதயே ஸ்ராவயந்தி சகுந்தாந்
அத்யா சந்ந பிரிய வசநதாம் ஸூசயத்பி நிமித்தை
ஏதாம் அஸ்ரு ஸ்த்தகித நயநம் வீக்ஷ மாணா திஸம் வா –71-

ஸ்ரீ சீதா பிராட்டி என்ன செய்வது என்று திகைத்து யாரை மீண்டும் தூது விடலாம் என்று சிந்தித்தும்
இனிய செய்து வருவதை இடது கண் துடிப்பு போன்ற ஸூசகங்கள் மூலம்
கண்ண நீர் வடித்து நான் உள்ள திக்கை நோக்கி இருப்பாள் –

ஆ கல்ப்பாந் வா ஸவித நிஹிதாந் ஆல பந்தீ விமோஹாத்
அங்க ஸ்பர்ச ரகு குல பததே ஸ்மர்யதே வா ந வேதி
த்யா யந்தீ வா சிர விரஹிதாந் ஏக சய்யா விஹாராந்
தஸ்யா நூநம் நியதி ஜநிதா தாத்ருசீ கால யாத்ரா –72-

ஸ்ரீ சீதா பிராட்டி தனது ஆபரணங்களை கழற்றி அவற்றுடன் பெருமாள் முன்பு தொட்டபடி இருந்தீர்கள்
நினைவு வருகிறதா என்று கலங்கி பேசிக் கொண்டு இருப்பாள் –
என்னுடன் சேர்ந்து இருந்தவற்றையே நினைத்துக் கொண்டு பொழுது போக்குவாள்

சுத்தாம் இந்தோ ஸ்வ பச பவநே கௌமுதீம் விஷ்ப் புரந்தீம்
ஆநீதாம் வா விஷ தருவநே பாரி ஜாதஸ்ய சாகாம்
ஸூக்திம் ரம்யாம் கலபரிசரே சத் கவே கீர்த்யமாநாம்
மந்யே தீநாம் நிசிசர க்ருஹே மைதிலிஸ்யா ஆத்ம ஜாதம் –73-

தூய்மையான சந்திரன் நாயைத் தின்பவன் வீட்டில் ஒளி வீசுவது போலவும்
விஷ மரங்கள் உள்ள இடத்தில் பாரிஜாத மரம் போலவும்
சிறந்த சொல் திறம் நிறைந்த கவிகளின் சொற்கள் அவற்றைப் படித்த பின்பும் ஒப்புக் கொள்ளாதவர்
நாவில் படுமா போலவும் அன்றோ -தகாத இடத்தில் பிராட்டி உள்ளாள்

வர்ஷ ஆகீர்ணாம் இவ கமலிநீம் வ்யாஹதார்த்தம் இவ உக்திம்
பங்கா ஸ்லிஷ்டாம் இவ பிசலதாம் பத்ய பேதாம் இவேபீம்
மேகச் சந்நாம் இவ சசி கலாம் விக்ந ருத்தாம் இவ ஆசாம்
வ்யாக்ரத்ரஸ்தாம் இவ ம்ருக வதூம் பூதலே ஜ்யாம் இவாஸ்தாம் –74-

மழை பெய்யாமல் தவிக்கும் தாமரை ஓடை போலவும்
தவறான பொருள் கொள்ளப் பட்ட செய்யுள் போலவும்
சேறு அகற்ற முடியாத தாமரைக் கோடி போலவும்
கஜத்தை விட்டுப் பிரிந்த பெண் யானை போலவும்
மோகத்தால் மறைக்கப் பட்ட பிறைச் சந்திரன் போலவும்
தடைகளால் தடுக்கப்பட்ட விருப்பம் போலவும்
புலியால் அச்சுறுப்படுத்தப் பட்ட மான் குட்டி போலவும்
வில்லை விட்டுப் பிறுய்ந்த அம்பு போலவும் அன்றோ இருக்கிறாள் என்று எண்ணுகிறேன் –

ஸ்ம்ருத்வா பூர்வம் ஸ்மரசர பய மத் பரிஷ்வங்க ரஷாம்
ஆஸ்லிஷ் யந்தீம் அலசவளிதை அங்ககை மாதரம் ஸ்வாம்
ஆ கல்பே அபி ஸ்ரமம் அதி கதை அங்க ராகை அபி கிந்நை
அஷாம் யத்பி ஸ்ம்ருதி மபி முஹு ஸுவ்குமார்யாதி ரேகாத் -75–

என்னுடன் இருக்கும் பொழுது காமனின் அம்புகளுக்கு பயந்து என்னை அணைத்துக் கொள்வாள்
இப்பொழுது அது கிட்டாமையால் பூமா தேவியிடம் கூற முற்பட்டு அப்படியே கிடக்கிறாள் போலும்
உடம்பு மெலிந்து அவசியம் அணிய வேண்டிய ஆபரணங்களையும் அணிய முடியாமல் இருப்பாள்
நீராடி உடம்பில் பூச வேண்டியவை பூசக் கூட இயலாமல் இருப்பாள் –

பூய பூய கர சரசிஜே ந்யஸ்ய ரோமாஞ்சி தாங்கீம்
மௌலவ் சூடாமணி விரஹிதே நிர்விசந்தீம் நிதாய
அந்தஸ் தாபாத் அதிகத ருஜோ ஆதராத் அர்ப்பயந்தீம்
பர்யாயேண ஸ்தந கலசயோ அங்குளீயம் மதீயம் -76-

கணையாழியை கையில் வைத்து சிலிர்த்துக் கொள்வாள் –
சூடாமணி இருந்த இடத்தில் வைத்துகொள்வாள் –
ஸ்தநங்களில் வைத்தும் ஆறுதல் அடைவாள் –

அம்பா துல்யா ஸூ சரிதபலம் திவ்யம் ஆலேபநம் ப்ராக்
அங்கேஷ் வஸ்யா ஸ்த்திரம் அநு குணம் யத் விதேந அநஸூயா
தாரா காரை ஸ்தந கலசயோ ஆபதத்பி சமந்தாத்
சந்தா போஷ்னைஸ் ததபி பஹுளை அஸ்ருபி சாளயந்தீம்–77-

எங்கள் தாய்க்கு ஈடான அநஸூயை அழியாத உடம்பு பூச்சு -இவள் கண் நீர் அருவி அத்தையும் அழித்து
ஸ்தநங்களில் விழுந்து நான்கு திக்குகளிலும் தெளித்தபடி உள்ளது

அக்ராஹ்வாத் விஷயம் இதம் கேச ஹஸ்தம் மயா ப்ராக்
ஆபி ப்ராணாம் தநு பரிமள ஸ்ரத்தயா இவ அவகீர்ணம்
அர்ச்சா ஹேதோர் புவிரதி பதேர் அப்ஸரோ அபி வி முக்தாம்
அந்வக் யாதாமிவ ஸூரதரோர் மஞ்சரீம் சஞ்சரீகை–78-

முன்பு சம்ச்லேஷ தசையில் அவளது கூந்தலை கட்ட முயல்வேன் -கைகளுக்கு அடங்காதே –
இப்பொழுது அவை அவளது திருமேனியின் நறுமணத்தை நுகர்ந்து பின்னால் தொங்குகிறது
காமனின் பூஜைக்காக தேவ லோகப் பெண்கள் கொண்டு வந்த கற்பக மரத்தின்
மலர்க் கொத்தை வண்டுகள் மறித்து மொய்ப்பது போல அன்றோ உள்ளது –

ஆநீதம் யத் த்வரிதம் அசலாத் உத்தரீயம் ப்லவங்கை
அஸ்ய ஆகாரை சத்ருசம் அபிதஸ் த்வத் ப்ரியா ரூப சிஹ்நம்
பால ஆதித்ய த்யுதி ஸஹ சரம் சாரு வாசோ வசாநாம்
சந்த்யா ராகா வ்யதிகரவதீம் சந்த்ர லேகாம் இவாந்யாம் –79-

ஆகாச மார்க்கத்தில் செல்லும் பொழுது ஆடை ஆபரணங்கள் விழ வானர முதலிகள் அவளால் கடாக்ஷிக்கப் பெற்றனர்
வெண்மை -மென்மை-மிக்க அந்த ஆடைகளில் அன்னப் பறவை ஓவியங்களும் பொன்னால் ஆன சரிகைகளும் இழைக்கப் பட்டு
இருப்பதை பார்ப்பாயாக -அவற்றால் நீயும் அவளால் ஸ்வீ கரிக்கப் படுவாய் –
இளம் சூர்ய ஒளி போன்ற ஆடைகளை அணிந்தவள் அந்திப் பொழுதில் தோன்றும் சந்த்ரப் பிறை போன்று இருப்பாள் –

வக்தும் மார்க்கம் கில வஸூ மதீம் ஜக்முஷஸ் தத் பத அப்ஜாத்
மஞ்ஜீ ரஸ்ய த்வத் உப மருதே தஷிணஸ்ய அஸ்ய துல்யம்
அங்கா ரூடே சரண கமலே மத் கரேண உபதேயம்
வாமம் சாகா சிகர நிஹிதம் வீஷ்ய காட்டும் விஷண்ணாம்–80-

அவள் சென்ற வழியைக் காட்ட இந்த நூபுரத்தை கீழே போட்டு இருந்தால் –
உன்னைப் போலே இனிய த்வனி எழுப்பும் இந்த வலது திருவடி கால் சிலம்பைப் பார்
எனது மடியில் முன்பு அவள் இந்த சிலம்பை அணிந்து இருந்ததை நினைத்தும்
அந்த சிலம்பு இப்பொழுது மரக் கிளையில் மாட்டப் பட்டு இருப்பதையும் பார்த்து வருந்துகிறேன் –

அங்கை ம்லாயத் கிசலய சமை உஜ்ஜிதா கல்ப்ப புஷ்பை
காட ஆஸ்லிஷ்டாம் வபுஷி விமலே பிம்பிதாபே லதாபி
சந்தாப உஷ்ண ஸ்வசந புருஷச் சாயயா கிஞ்ச தீநாம்
பந்தீ பூதாம் நிசிசர க்ருஹே நந்த தஸ்ய ஏவ லஷ்மீம் -81-

அவள் திருமேனியில் அங்குள்ள கொடிகள் நிழல் படும் -திரு மேனி வாடிய தளிர் போலவும்
மலர்கள் ஆபரணங்கள் இன்றியும் சூடான பிராண வாயு வெளியிட்டு நிழல் போலவே காணப்படுவாள்
அரக்கன் சிறையில் அடைபட்ட நந்தவன ஸ்ரீ லஷ்மீ அன்றோ இவள் –

சேதஸ் வ்ருத்திம் சமயதி பஹிஸ் ஸார்வ பவ்மே நிரோதே
மயி ஏகஸ்மிந் ப்ரணி ஹித தியம் மாந்மதேந ஆகமேந
அப்யஸ் யந்தீம், அநிதர ஜுஷ பாவநாயா ப்ரகர்ஷாத்
ஸ்வாந்தேந் அந்தர் விலய ம்ருதுநா நிர்விகல்ப்பம் சமாதிம் -82-

என்னையே தியானித்து -வேறு ஒன்றிலும் மனம் செலுத்தாமல் -உள்ளம் உருகி மென்மையான மனம் கொண்டவளாய்
தனது அறிவையும் இழந்து உள்ளத்தில் எனது அன்பான தோற்றத்தையே தர்சித்துக் கொடு இருக்கிறாள் –

ஸூந்யா த்ருஷ்ட்டி ஸ்வ சிதம் அதிகம் மீலிதம் வக்த்ர பத்மம்
தாராகாரம் நயந சலிலம் சாநு பந்த விலாப
இத்தம் சைதன்யம் கிமபி விதிநாம் துர் நிவாரணே நீதா
சா மே சீதா தநுதரதநு தப்யதே நூநம் அந்த -83–

அவளது பார்வை எதையுமே காணாமல் உள்ளது -பெருமூச்சு -கண்களில் நீர் பெருக்கு-
என்னையும் ஏன் குலத்தாரையுமே நினைந்து கொண்டே புலம்பல் -மெலிந்த திருமேனி -துயரம் மிக்க நிலை –

த்ருஷ்ட்வா தஸ்யாஸ் த்வம் அபி கருணாம் தாத்ருஸீம் தாம் அவஸ்த்தாம்
சஷ்யசி அந்த ஸ்வயம் உப நதம் சோக வேகம் ந சோடும்
க்ரவ்யாதாநாம் தசவதநவத் க்வாபி ஜாதவ் அவஜாதா
நா லம்பந்தே கதமிவ தயாம் நிர்மலத்வ உப பந்நா –84-

திருவடி போலே காண சகியாத அவள் நிலையை நீயும் காண்பாய் -உன்னில் சோகம் தானே கிளர்ந்து எழும்
சாத்விகர்களுக்கு தயை குணம் தானாகவே உண்டாகும் –

நேதீ யஸ்யாம் அதிகதரச தீர்க்கி காயாம் நிகாமம்
சம்வேசேந ஸ்ரமம் அப நயந் சர்வரீம் யாபயேதா
இத்தம் நித்ரா சமயம் உசிதம் வீஷ்ய நக்தம் சரினாம்
ப்ரத்யூஷே த்வம் ப்ரணய மதுராம் ஸ்ரா வயிஷ்யந் மத் யுக்தம்–85-

அன்னமே அந்த நடை வாபியில் தூய நீரைப் பருகி களைப்பைப் போக்கிக் கொள்வாய் –
முழுதும் முழித்து உள்ள அரக்கிகள் சிறிது நேரம் தூங்குவார்கள் –
அந்த நேரத்தில் தூது செய்தியை இனிமையாக சொல்வாய்
இரவு முழுவதும் அங்கேயே தங்கி ஆஸ்வாசப்படுத்துவாய் –

சீதை அத்வ ஸ்ரம விநயநை -சேவிதோ கந்த வாஹை
ஸூப்த ஸ்வைரம் புளிந சயநே ஸ்வந்த்ரே சந்த்ர பாதை
கிரீடா கீதை கமல முகுளை தீவ்யதாம் ஷட் பதா நாம்
கார்ய அகாங்ஷீ கலயது பவாந் ராஜ ஹம்ஸ ப்ரபோதம் –86-

ராம கார்யம் செய்யச் செல்லும் உனக்கு களைப்பைப் போக்க குளிர்ந்த நறுமணம் மிக்க
மந்த மாருதங்கள் உன்னை உபசரிக்கும்
சந்த்ர கிரணங்கள் குளிர்ச்சியால் மணல் மேட்டில் நன்றாக உறங்குவாய் –
வியற்காலையில் வண்டுகளின் ரீங்காரம் உன்னை திருப்பள்ளி உணர்த்தும் –

தாம் ஆரூட சலகிசலயாம் சிம்சுபாம் ஸ்வ ஏக லஷ்யோ
மந்தீ குர்வந் மநிசிஜ தநு கோஷ தீவரம் நிநாதம்
மோஹாத் ஈஷத் முஹி தம நசம் போதய ப்ரயஸீம் மே
ரம்யாம் ஆதவ் ரகு ஜநகயோர் வர்ணயந் வம்ச கீர்த்திதம் –87-

தளிர்கள் நிறைந்த சிம்சுபை மரத்தில் அமர்ந்து கொள்வாய் -மன்மதன் போன்ற உனது இனிய பேச்சு
மற்றவர்கள் கேட்க்காதபடி மெதுவான குரலில் ரகு வம்ச பெருமைகள் சீதா பிராட்டியுடைய குலப் பெருமைகளையும் கூறுவாய் –
பிரிந்த மயக்கத்தில் உறக்கம் இல்லாமல் இருந்தாலும் மயங்கிய நிலையில் உள்ள ஏன் காதலியை எழுப்புவாயாக –

பத்யு தேவி ப்ரணயஸசிவம் வித்தி தீர்க்காயுஷோ மாம்
ஜீவாதும் தே தததம் அநகம் தஸ்ய சந்தேசம் அந்த
ஸூராணாம் யத் சரத் உபகமே வீர பத்நீ வரானாம்
சம்மாந அர்ஹம் சமயம் உசிதம் ஸூசயேத் கூஜிதை ஸ்வை -88-

என்னை தூதனாக அனுப்பினாய் என்று சொல் -உனக்கு புத்துயிர் அளிக்க வல்ல தோஷங்கள் அற்ற சொற்களை
மனசில் நிலை நிறுத்தி உள்ள என்னை அறிவாய் -வீர பத்தினிகள் என்னுடைய குரலைக் கொண்டே
வெற்றி வரும் நேரம் என்று அறிவார்கள் –

மத் ப்ரஸ்தாவ பிரவண மத மைதிலீ மாநயேத் த்வாம்
ம்லாநாம் சோகாத் வதந கமலம் கிஞ்சித் உந் நம்ய பீரூ
அந்தஸ் தோஷாத் அம்ருதலஹரீ லப்த ச ப்ரஹ்ம சர்யை
அம்போஜாநாம் உஜஸி மிஷதாம் அந்தரங்கை அபாங்கை –89-

மிதிலை நாயகி முகம் வாடியே இருக்கும் -உன் இனிய சொற்களைக் கேட்டு முகத்தை உயர்த்துவாள்
சொற்களைக் கேட்டதும் அமிர்த வெள்ளம் போன்ற தாமரைக் கண்களால் கடாஷிப்பாள்-

பஸ் யந்தீ சா ரகுபதி வதூ த்வாம் அசேஷ அவதாதம்
ப்ரத்யாச் வாஸாத் அதிகதருசி ப்ராக்த நீ இந்து லேகா
மத் சந்தேசே ததுநு ஸூமுகீ சாவதாநா பவத்ரீ
கிம் நா ஸ்த்ரீனாம் ஜநயதி முதம் காந்த வார்த்தா ஆகம அபி -90-

வெண்மையான உன்னைக் கண்டு உன் மீது நம்பிக்கை கொள்வாள் -சுக்ல பஷ சந்த்ர காலை போல
அவள் திரு முகம் ஒளிரும் -கணவன் மேல் காதல் கொண்டவளுக்கு அவனைப் பற்றிய சொற்கள்
எப்பொழுதும் மகிழ்ச்சியை உண்டாக்கும் –

பச்சாத் ஏவம் கதய பவதீ பாக தேயந ஜீவந்
கல்யாணீம் த்வாம் குசல மநக கோஸலேந்திர அநு யுங்க்தே
யேஷு ஸ்ரேயோ பவதி நியதம் தாநி ஸர்வாணி சந்த
லஷ்ம்யா தேவ்யா தவ ச புவநே லக்ஷணாநி ஆ மந்தி -91-

அவள் தனது திரு முகத்தை உயர்த்தி கவனிக்கும் பொழுது நீ -கோசல நாட்டு ராம சந்திரன்
மங்கலமே வடிவான உனது நலம் விசாரித்தான் -என்றும்
சாமுத்ரிகா லக்ஷணங்கள் பொருந்திய ஸ்ரீ மஹா லஷ்மியான உன்னால் உலகுக்கு பல நன்மைகள் உண்டாகும் என்றும் கூறு –

யஸ்யா யஸ்மின் வியாதி அபவத் பூஷண ஆலேபந ஆதி
நீதாம் ஏனாம் நியதி விபவத் அந்தரீபம் தவீய
பிரத்யா ஸீதந் இவ நயநயோ வர்த்மநி ஸ்த்தா பயித்
ச த்வாம் ஏவம் வததி குசலீ வா தேவி சக்யா முகேந 92–

சம்ச்லேஷ காலத்தில் அணைக்க ஆபரணங்கள் சந்தநப் பூச்சும் தடை என்று தேவரீர் எண்ணியத்தையே எண்ணிக் கொண்டு
உன்னை மாநஸக் கண்களால் முன்னே நிறுத்தி நேராகப் பேசுவது போலே தோழனான என்னைப் பேச வைக்கிறான் –

வேலா அதீத ப்ரணய விவசம் பாவம் ஆஸேதுஷோர் நவ்
போக ஆரம்பே க்ஷணம் இவ சுதா பூர்வம் ஆலிங்கந ஆத்யை
சம் ப்ரத்யேஷா ஸூதநு சதச கல்பநா சங்கமை தே
சிந்தா தீர்க்கை அபி சகலிதா சர்வரீ நாபயாதி –93-

சம்ச்லேஷ காலத்தில் இரவு நொடிப் பொழுதாக தோன்ற -இப்பொழுது விஸ்லேஷ தசையில்
உன்னையே எண்ணி கல்பம் போல அன்றோ உள்ளது –

உத்தாமை தே குசல கலசயோ ரூஷ்மபி நிர்ஜிதேந
சித்ரம் லப்தவா விரஹ சமய தத் க்ஷணாத் உந்நதேந
குந்த ஆமோதை ஸூர பிததிசா கந்த வாஹேந சைதன்யம்
சம் ப்ராப்த அஹம் ஸஹ ஸரஸிஜை த்வத் முகம் அம்போஜ மித்ரை -94-

முன்பு மென்மையான காற்றில் இருந்து தப்ப உனது முலைத்தடங்களில் சாய்ந்து என்னை ரஷிப்பேன்
இப்பொழுது அந்தக் காற்று குருக்கத்தி பூக்களின் நறுமணங்கள் துணையுடன் என்னை வெல்ல தொடங்குகிறது
உனது முகத்துக்கு தோழமையான தாமரை மலர்களையும் அது துன்புறுத்துகிறதே –

மாத்வீ திக்தை விரஹி வநிதா ஸ்வாத லுப்தை அமோகை
ஆவ்ருண் வந்தம் குஸூ மத நுஷ சித்ர புங்கை திக் அகந்தாத்
சீதா பார்ஸ்வே ந பவது பவாத் இதி அவோஸத் வ் வசந்தம்
ராம த்ராஸாத் அநமிததநு மௌலிநா சந்த தேந –95-

இராமன் கூறியதாக இராமனே சொல்வது இதில் -தன்னை சீதையைப் பிரிந்த பின்பு ராமனாக எண்ணாமலேயே –
கணவனைப் பிரிந்த விதவை போலே உள்ளேன் -பிரிவாற்றாமை விஷம் -மலர்களின் நறுமணம் கொண்ட வில்லை-காம பானங்கள் –
வசந்த ருதுவைக் கண்டு அஞ்சி பேசும் பேச்சு –
அந்த வசந்த ருசுவின் இடம் இது போலே சீதையை வருத்தாமல் இருக்க பிரார்த்தனை –

பார்ஸ்வே வோலை பரப்ருத குலை முக்த கோலாஹலா நாம்
மல்லீ ரேணு ஸ்த்தகீத வபுஷாம் மந்தரம் நிர்கதாநாம்
பீதேந அஹம் ப்ரமர படலீ ஸ்ருங்கலா சங்குலாநாம்
மார்கே திஷ்ட்டந் மலய மாருதம் வாரிதோ லஷ்மனேந –96-

தென்றலும் என்னை வாட்டுவதிலே குறிக்கோள் கொண்டுள்ளது -இனிய குயில்களின் குரல்களைக் கூட்டிக் கொண்டு வாட்டுகிறது –
மல்லிகை மகரந்த துகள்கள் துணையுடன் வண்டுகளை துணை கூட்டிக் கொண்டு வாட்ட
திகைத்து நிற்கும் என்னைக் கண்டு லஷ்மணனும் விலகி நிற்கிறான் –

மந்தோ வஹ்யே கிம் இவ ஜனகம் கிந்து யோகீச்வரோ மாம்
இதி ஏவம் மே ஸூ தநு மனசோ வர்த்த யந்தி ஸ்ம கேதம்
ரக்த அசோகா ஜ்வலதி சவிதே லாஜ வர்ஷ அபிராமை
புஷ்ப ஓக த்வத் பரிணய தஸாம் வ்யஞ்ஜ்யந்த கரஞ்ஜா–97-

அசோகா மரங்களில் அக்னி போன்ற சிவந்த மலர்கள் மேலே புங்கை மர வெண்மை மலர்கள் விழுகின்றன –
நமது திருமணத்தில் ஹோம அக்னியில் பொறி இட்டதை நினைவூட்டும் –
யோகியான ஜனகரை எண்ணினேன்-அவர் இடம் என்ன சொல்லப் போகிறேன் என்று வருந்துகிறேன் –

சேதோ நைவ த்யஜதி சபலா ஹேம கோண அபிகாதாத்
தீர உதாத்த ஸ்தநித ஜலதாத் தாண்டவ ஆரம்பம் இச்சந்
வாத உந் முக்தை குடஜ குஸூமை வாசித சைல ஸ்ருங்கே
ரஷா பீடா ரஹித தயிதா ஆஸ்லேஷ தந்ய மயூர –98-

இங்குள்ள மலைகளில் மலர்கள் விழுந்து நறுமணம் வீச -மின்னல்கள் தங்கக் கொடிகள் போலே தோன்ற –
இவை பேரிகை வாத்ய இடி முழக்கம் -இந்த மேகத்தைக் கண்ட மயில்கள் ஆட
இராவணனால் பிடிக்கப்படாத பெண் மயில் ஆண் மயில் உடன் அணைந்து இருப்பதைக் கண்ட
பாக்யம் பெற்றேன் -என்றது ஹம்சம் மேலும் –

சைல வ்யக்த பிரதி விலபி தாம் சாந்த்ரா தாப அநு வித்தாம்
தந்வாநாநாம் நயநசவிலை மாதரம் தே ச பாஷ்பாம்
பசயந்தீ நாம் பிரபல மதந உந்மாத பர்யாகுலம் மாம்
ப்ராயோ ஜாதம் கிமபி ருசிதம் வ்யோம்நி காதம்பி நீநாம் -99-

என்னுடைய கலங்கிய நிலையை உம்முடைய தாயான பூமா தேவி கண்டாள்-
உமது நிலையைக் கண்ட அவளுக்கு சூர்யா வெப்பத்துக்கு மேலே வெப்பம் அதிகமாக -அவள் அழுகை மேகங்கள் மூலம்
மலைகளில் மோதி இடியாக ஒலித்தது -மேகங்கள் இவள் நிலையைக் கண்டு மழை பொழிய -உள்ளிருந்த வெப்பம் மூலமாக
பூமா தேவியும் கண்ணா நீரை வெளியிட்டாள்-இதன் மூலம் மேகங்களுக்கு பின்னால் உண்டாகும் அழுகை போன்று உள்ளது –

தேஹ ஸ்பர்சம் மலய பவநே த்ருஷ்ட்டி சம்பேதம் இந்தவ்
தாம் ஏகத்வம் ஜகதி புவி ச அபிந்ந பர்யங்க யோகம்
தாரா சித்ரே வியதி விததிம் ஸ்ரீ விதா நஸ்ய பஸ்யந்
தூரீ பூதாம் ஸூதநு விதிநா த்வாம் அஹம் நிர்விசாமி –100-

இப்பொழுதும் பிரிந்த நிலையிலும் -தென்றல் காற்று உனது உடலில் பட்டு ஸ்பர்சிப்பதால் ஆறுதல் அடைகிறேன் –
சந்திரனை நான் காணும் பொழுதும் நீ பார்க்கும் சந்திரன் என்ற எண்ணத்தால் ஆறுதல் அடைகிறேன் –
ப்ரஹ்மாண்டம் ஒரே வீட்டில் -பூமி ஒரே கட்டில் -நக்ஷத்திரங்கள் மேல் விதானத்தில் உள்ள ரத்தினங்கள்
என்று எண்ணி ஆறுதல் அடைகிறேன் –

ப்ராப்தை சக்யம் தவ நயநயோ பத்ம கோஸை ப்ரபுத்தை
சந் நாஹம் ந சமயநியதம் சாது சந்து ஷயந்தீ
சேநாயோக்யாம் சரணி மது நா தர்சயந்தீ சுபாசா
சீதே நூநம் த்வரயத் சரத் த்வத் சமீபம் நிநீஷு -101–

சரத்காலம் வந்தது -உனது திருக்கண்களின் தோழனான தாமரை மலர்கள் மலரத் தொடங்குகின்றன
ஷத்ரியரான நாங்கள் யுத்த முயற்சி அதிகரிக்கவும் சேறுகள் உலர்த்தப்பட்ட படைவீரர்கள் செல்லும் பாதையை காட்டுமதாயும்
வெற்றி ஆசைகளை நிறைவேற்றுவதாயும்-எங்களை உன் அருகில் சேர்க்க வல்லதாயும் உள்ளதே –

ததா ஆதேசாத் ச பதி பரதே ந்யஸ்த ராஜ்ய அபிஷேகம்
யா மாம் ஏகா வனம் அநுகதா ராஜதா நீம் விஹாய
தாமேவ த்வாம் உசித சயநாம் பாஹு மத்யே மதீயே
தூரே க்ருத்வா குணவதி முஹு தூயதே ஜீவிதம் மே–102-

சக்ரவர்த்தி சொல் படி ராஜ்யத்தை பாரத நம்பிக்கு அருளி கானகம் சென்ற என்னை நீயும் தொடர்ந்தாய்
உன்னை மார்வில் வைத்து கைகளை அனைத்து ரக்ஷித்துகே கொண்டு இருக்க வேண்டிய நானோ
உன்னை நெடு தூரம் நீண்ட காலம் பிரியும் படி விட்டேனே-எனது உயிர் தவிக்கும் படி அன்றோ செய்தேன்–

சேதும் பத்த்வா விபுலம் அசைல சாயகைர்வா பயோதவ்
க்ருத்வா லங்காம் ஸ்ரஜம் இவ கரே கேலதாம் வாநராணாம்
அல்பீ யோபி ஸூ முகி திவசை யோதயன் யாதுதாநாந்
கர்ணே சீதும் தவ ரசயிதா லஷ்மண சாப கோஷை -103-

கடலை மலைகளைகே கொண்டோ அம்புகளைகே கொண்டோ லஷ்மணன் விரைவில் அணை கட்டி முடிப்பான் –
அதில் விளையாடியா படியே ஆடி வரும் வானர முதலிகள் இலங்கையை குரங்கு கையில் உள்ள
பூ மாலையைப் போலவே கசக்கி எறிவார்கள்
அவன் ராவணை யுத்தத்து அழைத்து நாண் ஒலி மூலம் உன்னை விரைவில் ஆஸ்வாசப் படுத்துவான்

ரஷோ மௌலி ஸ்தபக லவநாத் வைர பந்தே வி முக்த
கத்வா சோர்வீம் ககந பதவீ ஸ் வைரினா புஷ்பகேனா
சித்தாரம்பவ் சபதி பவதாம் ஆதி ராஜ்ய அபி ஷேகாத்
சம் ப்ராப்ஸ்யாவ சிர விரஹத சஞ்சிதான் தேவி போகாந் –104-

வானர முதலிகள் அரக்கர் தலைகளை மலர்க்கொத்தைப் பறிப்பது போலே பறிப்பார்கள்-
வென்ற பின்பு விரைவில் ஆகாச மார்க்கமாக அயோத்யைக்கு செல்வோம்
பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் விரைவில் பட்டாபிஷேகம் நடைபெறும்
நாம் மநோ ராதித்த படியாக சமலேஷித்து இன்பம் அனுபவிப்போம் –

சித்தே குர்யாத் ததபி பவதீ யத் ஜன ஸ்தான யுத்தாத்
ஸம்ப்ராப்தம் மாம் தசமுக சமாந் பாரயுத்வா கராதீந்
சஸ்த்ரஹாதம் ஸ்தந கலசயோ ஊஷ்மணா நோ பயத்பி
காட ஆஸ்லேஷை அபிஹிதவதீ கத்கதா ஹர்ஷ பாஷ்பை–105-

கரவதம் அநந்தரம் என்னை அணைத்து புண்களை ஆற்றி உனது உடலில் மூடி என்னை
மறைத்துக் கொண்டாயே -அத்தை இப்பொழுது எண்ணிகே கொள்வாயாக –

சக்யா கிலேசம் க்வசந சமயே தாத்ருசம் சிந்தயித்வா
ஸ்ம்ருத்வா தேவீம் அசல தநயாம் விப்ர யுக்தாம் சிவேந
ரஷா ஆத்மா நம் கதம் அபி சுபே ஜீவித ஆலம்பனம் மே
பத்யு உச்சந்தாத் வ்யஸனம் அபி ஹி ஸ்லாக நீயம் வதூ நாம் –106-

இந்திரனைப் பிரிந்த இந்திராணி போலவும் -சிவனைப் பிரிந்த பார்வதி போலவும்
விஸ்லேஷத்தில் உனது துக்கம் பொறுக்க ஒண்ணாதது தான்-

அபி ஏதத் தே மனசி நிஹிதம் சாஹ்யம் அவ்யாஜ பந்தோ
ப்ரத்யாக் யாதும் ப்ரபவதி ந கலு ஆந்ரூ சம்சயம் த்வதீயம்
ப்ராகப் யேவம் ப்ரிணத குணாம் நைஷதே வீஷ்ய வார்த்தாம்
ஆர்த்த த்ராணம் வ்ரதம் இதி விது ஹம்ஸ சுத்த ஆத்மாநாம் வ -107-

மற்றவர்களுக்கு உதவும் குணம் உண்டே ஹம்சமே உனக்கு -நலனுக்காக தமயந்தி இடம் தூது போனாயே –
உடல் போலே மனமும் வெண்மையே உனக்கு -உனது சஜாதீயமான எனக்கு நீ உதவுவுவாய் என்று சொல்ல வேண்டுமோ –

இத்தம் ஹ்ருத்யை ஜனக தநயாம் ஜீவயித்வா வசோபி
சக்யம் புஷ்யந் திநகர குலே தீப்ய மாநை நரேந்த்ரை
ஸ்வைரம் லோகந் விசர நிகிலாந் ஸுவ்ம்ய லஷ்மி ஏவ விஷ்ணு
சார்வாகாரை த்வத் அநு குணயா சேவிதோ ராஜ ஹம்ஸ்யா -108-

அம்சமே இப்படி சொற்கள் மூலம் நான் அங்கு வரும் வரை அவள் உயிர் தரிக்கும் படி செய்து
சூர்ய குல மன்னர்களின் தோழமை பெறுவாய் –
உனக்கு ஏற்ற பெண் அம்சமும் அடைந்து ஸ்ரீ லஷ்மீ சமேத ஸ்ரீ விஷ்ணு போலே எங்கும் சஞ்சரித்து மகிழப் பெறுவாய் –

சந்திஸ்ய ஏவம் ஸஹ கபி குலை சேதுநா லங்க்கி தாப்த்தி
பங்க்தி கிரீவே யதி விநிஹதே ப்ராப்ய ஸீதாம் ப்ரதீத
ராஜ்யம் பூய ஸ்வயம் அநு பவந் ரஷிதம் பாது காப்யாம்
ராம ஸ்ரீ மாந் அதநுத நிஜ ராஜ தாநீம் சநாதாம் -109–

இவ்வாறு தூது -பின்பு சேது அணை கட்டி -மூல பலத்தையும் இராவணனையும் அழித்து–சீதா பிராட்டியையும் மீட்டு
அயோத்யைக்குச் சென்று ராஜ்ஜியம் ஏற்று உலகை உஜ்ஜீவித்தான் –

வித்யா சில்ப்ய ப்ரகுண மதிநா வேங்கடேச ந க்ல்ப்தம்
சிந்தா சரண உல்லிகிதம் அஸக்ருத் ஸ்ரேயசாம் பிராப்தி ஹேதும்
சீதா ராம வ்யதிகர சமம் ஹம்ஸ சந்தேச ரத்னம்
பஸ்யந்து அந்த ஸ்ரவணம் அநகம் சஷு ஸ் உஜ்ஜீவ்ய சந்தஸ் –110-

ஸ்ரீ வேங்கடேசர் இயற்றி அருளிய இந்த ஹம்ஸ ஸந்தேஸம் பிரபந்தத்தை – -செவி கண்ணால் அனுபவிப்பவர்
ஸ்ரீ சீதா ராமர் ஸம்ஸ்லேஷித்த நிரதிசய ஆனந்தம் பெறப் பெறுவார் –

இரண்டாம் ஆஸ் வாசம் சம்பூர்ணம்
ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம் சம்பூர்ணம்

————

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மூல ஸ்ரீ ஸூக்திகள் –113-148 – –

March 3, 2020

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

—————-

113–நிமித்த உபாதாநஸ்து பேதம் வதந்த-வேத பாஹ்ய ஏவஸ்யு–
ஜன்மாத்யஸ்ய யத–
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா திருஷ்டாந்த அநு பரோத்யாத்–இத்யாதி
வேதவித் ப்ரணீத ஸூத்ர விரோதாத்
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ப்ரஹ்ம வநம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் ததோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு-
ப்ரஹ்மத் யாத்ய திஷ்டத புவநாநி தாரயந்
சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி
ந தஸ்யேசே கஸ்ஸன் தஸ்ய நாம மஹாத்யச
நேஹ நாநாஸ்தி கிஞ்சன
ஸர்வஸ்ய வஸி ஸர்வஸ் யேசாந
புருஷ ஏவேதம் சர்வம் யத் பூதம் யச்ச பவ்யம்
உதாம்ருதத் வஸ்யே சாந
நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதி சர்வ ஸ்ருதி கண விரோதாஸ் ச —

114–இதிஹாச புராணே ஷு ச ஸ்ருஷ்ட்டி ப்ரலய பிரகரணயோர் இத மேவ பர தத்வம் இத்யவகம்யதே-
யதா மஹா பாரதே
கேந ஸ்ருஷ்டம் இதம் சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம்-பிரலயே ச கமப்யேதி தந்மே ப்ருஹி பிதா மஹ-இதி ப்ருஷ்டா
நாராயணோ ஜெகன் மூர்த்தி அநந்தாத்மா சநாதன –இத்யாதி ச வதந்
ருஷய பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ ஜங்கமாங் ஜங்கமம் சேதம் ஜெகன் நாராயண உத்பவம் -இதி ச

ப்ராஸ்ய -உதீஸ்ய -தஷிணாத்ய–பாஸ்சாத்ய சர்வ சிஷ்டை -சர்வ தர்ம -சர்வ தத்வ -வ்யவஸ்தாயாம் –
இதமேவ பர்யாப்தம்–இதயவிகீத பரிக்ருஹீதம்-ஸ்ரீ வைஷ்ணவம் ச புராணம்
ஜெந்மாத் யஸ்ய யத -இதி ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹ்மேத் யவகம் யதே –
தது ஜென்மாதி காரணம் கிமதி ப்ரஸ்ன பூர்வகம் -விஷ்ணோ சாகாசாதுத் பூதம் -இத்யாதிநா
ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ ப்ரதிபாதந ஏக பரதயா ப்ரவ்ருத்தம் இதி சர்வ சம்மதம் ததாததத்ரைவ
ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணீ
புருஷஸ் சாப்யுபாவேதவ லீயதே பரமாத்மநி
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர
விஷ்ணு நாமாச வேதேஷு வேதாந்ததேஷு ஸகீயதே -இதி -( என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தலைக்கட்டி அருளுகிறார் )

சர்வ வேத வேதாந்ததேஷு சர்வைஸ் சப்தைஸ் பரம காரண தயா அயமேவ கீயதே இத்யர்த்த –
யதா சர்வ ஸூஸ்ருதி ஷு கேவல பர ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ ப்ரதிபாதநாயைவ ப்ரவ்ருத்தோ நாராயணானுவாக

ததா இதம் வைஷ்ணவஞ்ச புராணம்
ஸோஹம் இச்சாமி தர்மஞ்ஞ ஸ்ரோதும் த்வத்தோ யதா ஜகத் பபூவ பூயாஸ் ச யதா மஹா பாக பவிஷ்யஸி
யந் மாயம் ச ஜகத் ப்ரஹ்மந் யதைஸ் சைத சராசரம் லீநமா ஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ரச–
இதி பர ப்ரஹ்ம கிமிதி பிரக்ரமய
விஷ்ணோ சகாசாதுத் பூதம் ஜதத் தத்ரைவை ச ஸ்திதம் ஸ்திதி சம்ய மகர்த்தாஸை ஜகதோஸ்ய ஜகச் சச
பர பரணாம் பரம பரமாத்மாத்ம ஆத்ம ஸம்ஸ்தித
ரூப வர்ணாதி நிர்தேச விசேஷண- விவர்ஜித
அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜென்மபி வர்ஜித்த சக்யதே வக்தும் ய சதாஸ் தீதி கேவலம்
சர்வதராசவ் சமஸ்தம் ச வசத்யத்ரேதி வையத ததஸ் ச வாஸூ தேவேதி வித்வத்பி பரிபட்யதே
தத் ப்ரஹ்ம பரம் நித்யம் அஜம் அஷயம் அவ்யயம் ஏக ஸ்வரூபம் ச சதா ஹேய அபாவாச் ச நிர்மலம்
ததேவ சர்வமே வைதத் வ்யக்த அவ்யக்த ஸ்வரூபவத் ததா புருஷ ரூபேண கால ரூபேண ச ஸ்திதம்
ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாராந் குணாதி தோஷாஞ்ச முநே வ்யதீத
அதீத சர்வா வரணோ அகிலாத்மா தேநா ஆஸ்ருதம் யத் புவநாந்த ராலே
ஸமஸ்த கல்யாண குணாத்ம கோசவ் ஸ்வ சக்தி லேசோ த்ருதா பூத வர்க
இச்சா க்ருஹீதாபி மதோரு தேஹ சம்சாதிதா சேஷ ஜகத்தி தோசவ்

தேஜோ பல ஐஸ்வர்யா மஹா வபோத ஸ்வ வீர்ய சக்த்யாதி குணைக ராசி
பர பரானாம் சகலா ந யத்ர க்லேசாதயஸ் சந்தி பராவரேசே
ச ஈஸ்வரோ வ்யஷ்டி சமஷ்டி ரூப வ்யக்த ஸ்வரூப பராவரேசே
ச ஈஸ்வரோ வ்யஷ்டி சமஷ்டி ரூப பிரகட ஸ்வரூப சர்வேஸ்வர சர்வ த்ருக் சர்வ வேத்தா ஸமஸ்த சக்தி பரமேஸ்வராக்ய
சம்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வாதது ஞானம் அஞ்ஞானம் அதோ அந்ய துக்தம்
இதி பர ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷ நிர்ணயாயைவ ப்ரவ்ருத்தம் –
அக்யாநி சர்வ புராணாநி அந்ய பராணி ஏதத் அவிரோதேந நேயாநி அந்ய பரத்வஞ்ச தத் தத்
ஆரம்ப பிரகாரை அவகம்யதே சர்வாத்மநா விருத்தாம் ச தாம சத்வாத் அநா தரணீய –

115–நந்வஸ்மிந்நபி
ஸ்ருஷ்ட்டி ஸ்தித் யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ச சக் ஞாம்யாதி பகவான் ஏக ஏவ ஜநார்த்தந-
இதி த்ரி மூர்த்தி சாம்யம் பிரதீயதே நைததேவம்
ஏக ஏவ ஜனார்த்தன -இதி ஜனார்த்தனஸ் யைவ ப்ரஹ்ம சிவாதி க்ருத்ஸ்ன ப்ரபஞ்சதாத்ம்யம் விதீயதே-
ஜகஸ் ச ச இதி பூர்வ உக்தமேவ விவ்ருணோதி -ஸ்ரஷ்டா ஸ்ருஜதி சாத்மாநம் விஷ்ணு பால்யம் ச பாதிச
உப ஸ்ம்ஹ் ரியதே சாந்தே ஸம்ஹர்த்தா ச ஸ்வயம் பிரபு
இதி ஸ்ருஷ்டத்வேந அவஸ்த்திதம் ப்ரஹ்மாணம் ஸ்ருஜ்யம்ச ஸம்ஹர்த்தாராம்–சம்ஹார்யம் ச யுகபந் நிர்திஸ்ய –
ஸர்வஸ்ய விஷ்ணு தாதாம்ய உபதேசாத்-ஸ்ருஜ்ய ஸம்ஹார்ய பூதாத் வஸ்துந ஸ்ருஷ்ட்ட சம்ஹத்ரோ ஜனார்த்தன
விபூதி த்வேந விசேஷோ த்ருச்யதே -ஜனார்த்தன விஷ்ணு சப்தயோ பர்யாயத்வேந-
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் -இதி விபூதி மத ஏவ ஸ்வ இச்சையா லீலார்த்த விபூதி யந்திர பாவ உச்யதே –

பிருதிவி ஆபஸ் ததா தேஜஸ் வாயுர் ஆகாச ஏவ ச -சர்வ இந்திரிய அந்தக்கரணம் புருஷாக்யம் ஹி யஜ் ஜகத்
ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யதோவ்யய
சர்க்யதேதம் அநந்தரம் ஏவ உச்யதே
கா தினம் ததோஸ்யைவ பூதஸ்தம் உபகாரகம்
ச ஏவ ஸ்ருஜ்ய ச ச சர்க்ககர்த்தா ச ஏவ பாத்யத்தி சபால்யதேச
ப்ரஹ்மத்யவஸ்தா ப்ரசேஷ மூர்த்தி விஷ்ணு வரிஷ்டோ வரதோ வரேண்ய இதி —

அத்ர சாமாநாதி காரண்ய நிரதிஷ்ட ஹேய மிஸ்ர பிரபஞ்ச தாதத்ம்யம் நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய
ஸமஸ்த கல்யாண குணாகாரஸ்ய-ப்ரஹ்மண கதம் உபபத்யதே ? இத்யா சங்க்யா-
ச ஏவ சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யத அவ்யயய –இதி ஸ்வயமேவ உபபாதயதி–
ச ஏவ -ஸர்வேச்வரேச்வர -பர ப்ரஹ்ம பூத விஷ்ணுரேவ சர்வம் ஜகத் -இதி ப்ரதிஞ்ஞாய –

சர்வ பூதாத்மா விஸ்வரூபோ யதோவ்யய –
இதி ஹேது ருக்த–சர்வ பூதாநாம் அயமாத்மா விஷ்வா சரீரோ -யதோவ்யய -இத்யர்த்த
வஷ்யதிச–தத் சர்வம் வை ஹரேஸ் தநு -இதி –
ஏதத் யுக்தம் பவதி –
அஸ்ய அவ்யயஸ் யாபி பரஸ்ய ப்ரஹ்மண விஷ்ணோ விஸ்வசரீரதயா தாத்ம்யம விருத்தம் இதி –
ஆத்ம சரீரயோஸ் ச ஸ்வபாவா வ்யவஸ்திதா ஏவ —

ஏவம் பூதஸ்ய-சர்வேஸ்வரஸ்ய விஷ்ணோ பிரபந்த அந்தர் பூத நியாம்ய கோடி நிவிஷ்ட ப்ரஹ்மாதி தேவ திர்யக் மனுஷ்யே
தத் தத் ஸமாச்ரயணீயத்வாய ஸ்வ இச்சாவதார பூர்வ யுக்த –
ததே தத் ப்ரஹ்மாதிநாம் பாவநாந்தரய அந்வயேந கர்ம வஸ்யத்வம்
பகவத பர ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நிகில ஜகத் உபகாராய ஸ்வ இச்சையா ஸ்வேநைவ ரூபேண
தேவாதி ஷு அவதார இதி ச ஸ்பஷ்டாம்சே ஸூபாஸ்ரய பிரகரேண ஸூ வ்யக்தம் யுக்தம்
அஸ்ய தேவாதி ரூபேண அவதாரேஷ் வபி நப்ரா க்ருதோ தேஹ இதி மஹா பாரதே –
ந பூத சங்க சமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந-இதி ப்ரதிபாதிதே –
ஸ்ருதிஸ் ச
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -இதி
கர்மா வஸ்யாநாம் ப்ரஹ்மாதீனம் நிஸ்ஸதாம் அபி தத் தத் கர்ம அநு குண ப்ரக்ருதி பரிணாம ரூப பூத சங்க சமஸ்தான
விசேஷ தேவாதி சரீர பிரவேச ரூபம் ஜென்ம அவர்ஜநீயம்
அயம் து சர்வேஸ்வர ஸத்யஸங்கல்ப பகவான் ஏவம் பூத ஸூயேதர ஜென்ம அகுர் வன்னபி ஸ்வ இச்சையா
ஸ்வநைவ நிரதிசய கல்யாண குண ரூபேண தேவாதி ஷு ஜகத் உபகாராய பஹுதா ஜாயதே –
தஸ்யை தஸ்ய ஸூவ இதர ஜென்ம பஹுதா யோநிம் பஹுவி ஜென்ம தீரா தீமதாம் அக்ரேஸரா ஜா நந்தி இத்யர்த்த –

116–ததே தந் நிகில ஜெகன் நிமித்த உபாதான பூதாத்
ஜந்மாத் யஸ்ய யத–1-1-2-
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பராதாத்-1-4-7–இத்யாதி ஸூத்ரை
ப்ரதிபாதி தாத் பரஸ்மாத் ப்ரஹ்மண பரம புருஷாத் அந் யஸ்ய கஸ்யசித் பரத்வம்
பரமதஸ் சேதூந்மாந சம்பந்த பேத வ்யபதேசேப்ய-3-2-30–
இத்யா சங்க்யா –
(பர ப்ரஹ்மம் அணை-இரு கரைகளை இணைப்பதால் அளவு பட்டது -இரண்டு கரைகளிலும் வேறுபட்டது
வேறு ஓன்று உண்டு என்ற சங்கை போக்க )
சாமாந் யாத் து
புத்யர்த்த பாதவாத
ஸ்தான விசேஷாத் ப்ரகாசாதிவத்
உப பத்தேஸ் ச
ததாந்ய பிரதிபேதாத்
அநேந சர்வ கதத்வ மாயாம சப்தாதிப் ய
இதி ஸூத்ரகார ஸ்வயம்சேவ நிராகரோதி–

117–மாந வேச சாஸ்த்ரே
பிராதுரா ஸீத்தமோநுத
சிச்ருஷு விவிதா பிரஜா
அப ஏவ ச சர்ஜாதவ் தாஸூ வீர்யமபா ஸ்ருஜத்
தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா –இதி ப்ரஹ்மணோ ஜென்ம ஸ்ரவணாத்
ஸ்ரேத்த ஞாத்வமேவ அவகம்யதே ததா ச ஸ்ருஷ்டு -பரம புருஷஸ்ய தத் விஸ்ருஷ்டஸ்ய ச ப்ரஹ்மண-
அயநப் தஸ்யதா பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருதி
தத் விஸ்ருஷ்ட ச புருஷ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே-இதி நாம நிர்தேசஸ்
ஸ–மனு ஸ்ம்ருதி –ஸ்லோகங்கள் -6-/11-

ததா வைஷ்ணவே புராணே
ஹிரண்ய கர்ப்பாதீநாம் பாவநாத்ரய அந்வயாத் அ ஸூத்தத்வேந ஸூபாஸ்ரயத்வா
நஹர்த்வோப பாதநாத் ஷேத்ரஞ்ஞத்வம் நிஸ்ஸீயதே –

118–யதபி கைஸ்சித் யுக்தம்
ஸர்வஸ்ய சப்த ஜாதஸ்ய வித்யர்த்தவாத மந்த்ர ரூபஸ்ய கார்யாபிதா யித்வேநைவ ப்ராமாண்யம் வர்ணனீயம்
வ்யவஹாராதந் யத்ர சப்தஸ்ய போதகத்வ சக்த்ய வதாரணா சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி மூலத்வாத்
கார்ய ரூப ஏவ சப்தார்த்த அத நபரி நிஷப்ந்நே வஸ்துநி சப்த பிரமாணம் இதி –

விதி அர்த்த வாதம் மந்த்ரம் -வை தேர்ந்த மற்ற ஸ்ருதி வாக்கியங்கள் பிரமாணம் இல்லை என்று
மீமாம்சகர் -கொள்கையை சொல்லி அடுத்து சித்தாந்தம் –

119—அத்ரோச்யதே
ப்ரவர்த்தக வாக்ய வ்யவஹாராதேவ சப்தாநாம் அர்த்த போதகத்வ சக்த்யவதாரணம் கர்த்தவ்யம் இதி கிம் இதம் ராஜாஞ்ஞா ?
சித்த வஸ்துஷு சப்தஸ்ய போதகத்வ சக்தி கிரஹணம் அத்யந்த ஸூகரம்
ததாஹி
கேந சித் ஹஸ்த சேஷ்டாதிநா -அபவர்கே தண்ட ஸ்திதா –இதி தேவ தத்தாயா ஞாபயேதி ப்ரேஹித
கஸ்சித் தது ஞாபநே ப்ரவ்ருத்த -அபவர்கே தண்ட ஸ்திதா-இதி சப்தம் ப்ரயுங்க்தே-மூகவத் ஹஸ்த சேஷ்டா மிமாம்
ஜாநந் பார்ஸ்வஸ்யோந்ய ப்ரக வ்யுத்பன்னோபி ஏதஸ்யார்த்தஸ்ய போதநாய அபவர்கே தாண்ட ஸ்தித –
இத்யஸ்ய சப்தஸ்ய பிரயோக தர்சநாத் -அஸ்ய அர்த்தஸ்ய அயம் சப்தோ போதக -இதி ஜாநாதி –
இதி கிம் அத்ர துஷ்கரம்–

120–ததா பால –
ததோ யம் -அயம் அம்பா -அயம் மாதுல-அயம் மனுஷ்ய -அயம் ம்ருக-சந்திரோதயம் -அயம் ச ஸூர்ய -இதி
மாதா பித்ரு ப்ரப்ருதிபி சப்தை சரை அங்குல்யா நிர்த்தேசேந-தத்ர தத்ர பஹு ச -ஸிஷித-தைரேவ சப்தை –
தேஷ் வரத்தேஷு-ஸ்வாத் மனஸ் ச யுத் பத்திம் த்ருஷ்ட்வா தேஷ் வரத்தேஷு தேஷாம் சப்தாநாம் –
அங்குல்யா நிர்தேச பூர்வக பிரயோக சம்பந்தாந்த்ர பாவாத் சங்கேத யித்ரு புருஷா ஞாநாச்ச போதகத்வ நிபந்தன-
இதி க்ரமேண நிஸ்ஸித்ய புநர் அபி அஸ்ய சப்தஸ்ய அயமர்த்த-இதி பூர்வ விருத்தை -ஸிஷித சர்வ சப்தாநாம் மர்த்தம்
அவகம்ய ஸ்வம் அபி சர்வம் வாக்ய ஜாதம் ப்ரயுங்க்தே –
ஏகமேவ சர்வ பதாநாம் ஸ்வார்த்த அபிதா யத்வம் ஸங்காத விசேஷானாம் ச யதா வஸ்தித சம்சர்க்க விசேஷ போதகத்வம்
ச ஜாநாதி இதி -கார்யார்த்த ஏவ வ்யுத்பத்தி இத்யாதி நிர்பந்தோ நி நிர்பந்தந —
அத
பரி நிஷ்பன்னே வஸ்துநி சப்தஸ்ய போதகத்வ சக்த்ய வதாராநாத் சர்வானி வேதாந்த வாக்யானி
சகல ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகாரம் யுக்த லக்ஷணம் ப்ரஹ்ம போதயந்த்யேவ —

121—அபி ச கார்யார்த்த ஏவ வ்யுத்பத்தி ரஸ்து வேதாந்த வாக்யாநி உபாஸநா விஷய கார்யாதி க்ருத விசேஷண பூத
பலதவேந -துக்காசம் பிந்ந தேச விசேஷ ரூப ஸ்வர்க்காதி வத்ராத்ரி சத் ப்ரதிஷ்டாதி வத் அபகோரண சதயாதந
ஸாத்ய சாதனா பாவவச்ச கார்ய உபயோகி தயைவ சர்வம் போதயந்தி

ததாஹி
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -இத்யத்ர ப்ரஹ்ம உபாஸந விஷய கார்யாதி க்ருத விசேஷண பூத
பலத்வேந ப்ரஹ்ம பிராப்தி ஸ்ரூயதே
ப்ர பிராப்தி காமோ ப்ரஹ்ம வித்யாத் -இதி அத்ர ப்ராப்ய தயா ப்ரதீயமாநம் ப்ரஹ்ம ஸ்வரூபம் தத் விசேஷணம்
ச சர்வம் கார்ய உபயோக்யதை வசித்தம் பவதி –தத் அந்தர் கதமேவ-ஜகத ஸ்ருஷ்டத்வம்- ஸம்ஹார்த்ருத்வம்–ஆதாரத்வம் –
அந்தராத்மத்வம் -இத்யாதி யுக்தம் அனுக்தம் ச ஸர்வமிதிந கிஞ்சித் தநுப பந்நம் –

122–ஏவம் ச சதி மந்த்ர அர்த்தவாத கதா ஹ்ய விருத்தா அபூர்வாஸ் ச சர்வே விதி சேஷ தயைவ சித்தா பவந்தி-
யதோக்தம் -த்ரமிட பாஷ்யே–ருணம் ஹிவை ஜாயதே -இதி ஸ்ருதே -இத் யுபக்ரம்ய யத்யாப்யவதாந ஸ்துதி பரம் வாக்யம்
ததாபி நாசதா ஸ்துதி ரூப பத்யதே இதி-
ஏதத் யுக்தம் பவதி –
சர்வோ ஹயர்த்த வாத பாக -தேவதாராதன பூத யாகாதே சாங்கஸ்ய ஆராத்ய தேவதாயாஸ் ச அதிருஷ்ட ரூபான்-குணாந் –
சஹஸ்ரசோ வதந்-கர்மணி ப்ராசஸ்த்ய புத்திம் உத்பாதயதி தேஷாம ஸத்பாவே ப்ரஸாஸ்த்ய புத்திரேவ நஸ்யாத்-
இதி கர்மணி ப்ரஸாஸ்த்ய புத்யர்த்த குண ஸத்பாவமேவ போதயதி இதி –
அநயைவதிசா சர்வ மந்த்ரார்த்தவாத கதா ஹ்யார்த்தா சித்தா —

(ச குண ப்ரஹ்மம் நிர் குண ப்ரஹ்மம் இரண்டு இல்லையே
சத் வித்யையிலும் ச குண ப்ரஹ்மமே உபாசிக்கப்படுகிறான்
இதுவே அபி யுக்தர் -வாக்யகாரர் –
சங்கல்பாதி நிர் குண ப்ரஹ்மம் செய்ய முடியாதே)

123–அபிச கார்ய வாக்யார்த்தவாதிபி
கிமிதம் கார்யத்வம் நாம -இதி வக்த்தவ்யம்–க்ருதிபாவ பாவிதா க்ருத யுத்தேஸ்யதா ச இதி சேத்
கிமிதம் க்ருத யுத்தேஸ்யத்வம் –
யதகதி க்ருத்ய க்ருதி -வர்த்ததே தது க்ருத யுத்தேஸ்யத்வம் –
இதி சேத் புருஷ வியாபார ரூபாயா க்ருதே கோயம் அதிகாரோ நாம ?
யத் பிராப்தீச்சயா க்ருதிம் உத்பாதயதி புருஷ -தத் க்ருத யுத்தேஸ்யத்வம் இதி சேத் –
ஹந்த-தரஹி இஷ்டத்வமேவ க்ருத யுத்தேஸ் யத்வம் –

124–அதைவம் மனுபே-இஷ்டஸ்யைவ ரூப த்வய -மஸ்தி –இச்சா விஷய தயாஸ்திதி -புருஷப் பிரேரகத்வம் ச –
தத்ர பிரேரகத்வார க்ருத யுத்தேஸ் யத்வம் இதி -சோயம் ஸ்வ பஷாபி நிவேச காரிதோ வ்ருதாஸ்ரம-
ததாஹி -இச்சா விஷய தயா ப்ரதீதஸ்ய ஸ்வ ப்ரயத்ந உத்பத்தி மாந்தரேண அசித்தி -பிரேரகத்வம் தாத்தா ஏவ ப்ரவ்ருத்தே –
இச்சாயம் ஜாதாயாம் -இஷ்டஸ்ய ஸ்வ ப்ரயத்ந உத்பத்தி மந்தரேண அசித்தி -பிரதீயதே சேத் –
தத சிகீர்ஷா ஜாயதே தத ப்ரவர்த்ததே புருஷ -இதி தத்வ விதாம் ப்ரக்ரியா தஸ்மாத் இஷ்டய க்ருத்யதீநாத்
மலாபத் வாதிரேகி க்ருத யுத்தேஸ் யத்வம் நாம கிமபி ந த்ருச்யதே –

125–அதோஸ்யதே–இஷ்டாதா ஹேதுஸ் ச புருஷ அநு கூலதா -தத் புருஷ அநு கூலத்வம் க்ருத யுத்தேஸ்யத் -வமிதி —
நைவம் -புருஷ அநு கூலம் -ஸூகம்-இத் யநரத்த அந்தரம் ததா புருஷ பிரதி கூலம் துக்க பர்யாயம் –
அத ஸூக வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி புருஷ அநு கூலத்வம் ந சம்பவதி –
நநு ச துக்க நிவ்ருத்தேர் அபி ஸூக வ்யதிரிக்தாயா-புருஷ அநு கூலதா த்ரஷ்டா ?
நைதத் -ஆத்ம அநு கூலம் ஸூகம் -ஆத்ம பிரதி கூலம் துக்கம் -இதி ஹி ஸூக துக்கயோ-விவேக –
தத்ர ஆத்ம அனுகூலம் ஸூகம் -இஷ்டம் பவதி -தத் பிரதி கூலம் துக்கம் ச அனிஷ்டம் –
அத துக்க சம்யோகஸ்ய அஸஹ்யதாய தந் நிவ்ருத்திர் அபி இஷ்டாபவதி -தத ஏவ இஷ்ட தா சாமியாத் அநு கூலதாப்ரம –
ததாஹி -ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டஸ்ய ஸம்ஸாரின புருஷஸ்ய அநு கூல சம்யோக பிரதி கூல சம்யோக ஸ்வரூபேணா வஸ்திதி –
இதி திஸ்ர அவஸ்தா தத் பிரதி கூல சம்பந்த நிவ்ருத்தி அநு கூல சம்பந்த நிவ்ருத்தி ஸ்வரூபேண அவஸ்த்திதி ரேவ–
தஸ்மாத் -பிரதி கூல சம்யோகே வர்த்தமாநே தந் நிவ்ருத்தி ரூபா ஸ்வரூபேண அவஸ்திதிரபி இஷ்டா பவதி –
தத்ர இஷ்டதாசாம்ய அநுகூலதா ப்ரம-அத ஸூக ஸ்வரூபத்வ அநு கூல தயா நியோகஸ்ய
அநு கூல தாம் வதந்தம் பிரமாணிகா பரிஹஸந்தி-

126–இஷ்டஸ்ய அர்த்த விசேஷஸ்ய நிர்வர்த்தக தயைவ ஹி நியோகஸ்ய நியோகத்தவம் –
ஸ்திரத்வம் அபூர்வத்வம்ச பிரதீயதே
ஸ்வர்க்க காமோ யஜதே இத்யத்ர கார்யஸ்ய க்ரியாதிரிக்த்தா ஸ்வர்க்க காம பத சமாபி வ்யாஹாரேண
ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸயாதேவ பவதி –

127—ந ச வாஸ்யம் -யஜேத-இத்யத்ர பிரதமம்-நியோக -ஸ்வ பிரதான தயைவ பிரதீயதே ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹாராத்
ஸ்வ ஸித்தயே ஸ்வர்க்க சித்த யனுகூல தாச்சி நியோகஸ்ய இதி யஜேத-இதிஹி -தாதவர்த்தஸ்ய புருஷ பிரயத்தன சாத்யதா பிரதீயதே ?
ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹாராதேவ தாத்வர்த்தாதிரேகினோ நியோகத்வம்-ஸ்திரத்வம் -அபூர்வத்வம்-ச இத்யாதி அவகம்யதே –
தச்ச ஸ்வர்க்க சாதனத்வ ப்ரதீதி நிபந்தம் -சமாபி வ்யாஹ்ருத ஸ்வர்க்க காம பதார்த்த அந்வய யோக்யம்
ஸ்வர்க்க சாதனமேவ கார்யம் லிங்காதயோபி தததீ இதிஹி லோக வ்யுத்பத்திரபி திரஸ் க்ருதா —
ஏதத் யுக்தம் பவதி –
சமபி வ்யாஹ்ருத -பதாந்தர வாஸ்ய அன்வய யோக்யமேவ இதரபத ப்ரதிபாத்யம் இதி அன்விதாபிதாயி பத ஸங்காத ரூப
வாக்ய ஸ்ரவண சமந்தரமேவ பிரதீயதே தச்ச ஸ்வர்க்க சாதன ரூபம் அத க்ரியாவத் அநன்யார்த்த தாபி விரோதாதேவ பரித்யக்தா இதி
அத -கங்காயாம் கோஷ-இத்யாதவ் கோஷ பிரதிவாஸ யோக்யார்த்த உபஸ்தான -பரத்வம் கங்கா பதஸ்ய ஆஸ் ரீயதே-
பிரதமம் கங்கா பதேந கங்கார்த்த ஸ்ம்ருத இதி -கங்கா பதார்த்தஸ்ய உபேயத்வம் ந வாக்யார்த்த அந் வயீ பவதி –
ஏவமாத்ராபி -யஜேத-இத்யேதா வந் மாத்ர ஸ்ரவனே கார்யம் அநன்யார்த்த ஸ்ம்ருதமிதி வாக்யார்த்த அன்வய ஸமயே
கார்யஸ்ய அன்யார்த்ததா நாவாதிஷ்டதே-
கார்யாபிதாயி பத ஸ்ரவண வேலாயாம் பிரதமமம் கார்யம் அநன்யார்த்த ப்ரதீதம் இத்யேததபி ந சங்கச்சதே வ்யுத்பத்தி காலே
கவா நயநாதி க்ரியாயா துக்க ரூபாயா இஷ்ட விசேஷ சாதன தயைவ கார்யதா ப்ரதீதே–

128–அத நியோகஸ்ய புருஷ அநு கூலத்வம் சர்வ லோக விருத்தம் -நியோகஸ்ய ஸூக ரூப புருஷ அநு கூலதாம் வதத –
ஸ்வ அநுபவ விரோதஸ் ச கரீர்யா வ்ருஷ்டி காமோ யஜேதா –இத்யாதி ஷு சித்தேபி நியோக வ்ருஷ்டியாதி சித்தி நிமித்தஸ்ய
வ்ருஷ்டி வ்யதிரேகேன நியோகஸ்ய அநு கூலதா நாநு பூயதே யத்யபி அஸ்மின் ஜென்மநி வ்ருஷ்ட்யாதி சித்தேர நியம –
ததாபி அநியமா தேவ நியோக சித்தி அவஸ்ய ஆஸ்ரயணீயா தஸ்மிந் அநு கூலதா பர்யாய ஸூக அநு பூதி ந வித்யதே –
ஏவம் உக்தரித்யா க்ருதி சாத்யேஷ்டத்வாதிரேகி க்ருத யுத்தேஸ் யத்வம் ந த்ருஸ்யதே–

129–க்ருதிம் பிரதி சேஷித்வம் க்ருத யுத்தேஸ் யத்வம் இதி சேத் -கிமிதம் சேஷித்வம் ?-கிம் ச சேஷத்வம் ? இதி வக்தவ்யம்
கார்ய பிரதி சம்பந்ததீ சேஷ -தத் பிரதி சம்பந்தத்வம் சேஷத்வம் இதி சேத் -ஏதம் தர்ஹி கார்யத்வமேவ சேஷித்வம்
இத் யுக்தம் பவதி -கார்யத்வமே ஹி விசார்யதே ? பர உத்தேச ப்ரவ்ருத்த க்ருதி வ்யாப்த் யர்ஹத்வம் சேஷத்வம்
இதி சேத் கோயம் பர உத்தேசோ நாமேதி அயமேவ ஹி விசார்யதே ?
உத்தேஸ் யத்வம் நாம ஈப்சித சாத்யத்வம் இதி சேத் கிமீப்ஸி தத்வம் ?
க்ருதி பிரயோஜனத்வம் இதி சேத் புருஷஸ்ய க்ருத்யாரம்ப ப்ரயோஜனமேவ ஹி க்ருதி ப்ரயோஜனவம் ?
ச ச இச்சா விஷய க்ருத்யதீன ஆத்ம லாப இதி பூர்வ யுக்த ஏவ —

130–அயமேவ ஹி ஸர்வத்ர சேஷ சேஷி பாவ
பரகத அதிசய ஆதாநே இச்சாயா உபாதேயத்வ மேவ யஸ் ஸ்வரூபம் -ச சேஷ -பர சேஷீ -பல உத்பத்தி இச்சாயா யாகதே–
தத் பிரயத்தனஸ் யச உபா தேயத்வம் -யுகாதி சித்தி இச்சாயா அந்யத் சர்வம் உபாதேயம்-ஏவம் கர்பதாஸாதீநாம் அபி
புருஷ விசேஷாதி சாயாதாநேச் சயா உபாதே யத்வமேவ சேதந அசேதநாத்ம கஸ்ய நித்யஸ்ய அநித்யஸ்ய ச ஸர்வஸ்ய வஸ்துந –
ஸ்வரூபம் இதி சர்வம் ஈஸ்வர சேஷ பூதம் -ஸர்வஸ்ய ச ஈஸ்வர சேஷீதி -ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்ய ஈஸாந
பதிம் விஸ்வஸ்ய –இத்யாதி யுக்தம்
க்ருதி ஸாத்யம் பிரதானம் -யத் தத் கார்யம் அபி தீயதே -இதயயமர்த்த -ஸ்ரத்தூதாநேஷ் வேவ சோபதே —

131—அபி ச ஸ்வர்க்க காமோ யஜேத-இத்யாதி ஷு லகார வாஸ்ய கர்த்ரு விசேஷ சமர்ப்பண பரானாம்
ஸ்வர்க் காமாதி பதாநாம் நியோஜ்ய விசேஷ சமர்ப்பண பரத்வம் சப்த அநு சாசன விருத்தம் கேந அவகம்யதே ?
ஸாத்ய ஸ்வர்க்க விசிஷ்டஸ்ய ஸ்வர்க்க சாதநே கர்த்ருத்வ அந்வயோ ந கடேத இதி சேத் –
நியோஜயத்வ அந்வயோபி ந கடதா இதி ஹி ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸய -ச து ஸாஸ்த்ர சித்தே கர்த்ருத்வ அந்வயே
ஸ்வர்க்க சாதநத்வ நிஸ்ஸய -க்ரியதே –
யதா போக்து காமோ தேவதத்த க்ருஹம் கச்சேத் இத் யுக்தே-போஜன காமஸ்ய தேவதத்த க்ருஹ கமநே
கர்த்ருத்வா ஸ்ரவனா தேவ ப்ராகஜாதமபி போஜன சாதநத்வம் தேவ தத்த க்ருஹ கமநஸ்ய அவகம்யதே –
ஏவம த்ராபி பவதி -நஹி க்ரியாந்தரம் ப்ரதி கர்த்ரு தயா ஸ்ருதஸ்ய க்ரியாந்தரே கர்த்ருத்வ கல்பநம் யுக்தம் –
யஜேத-இதி ஹி யாக கர்த்ரு தயா ஸ்ருதஸ்ய புத்தவ கர்த்ருத்வ கல்பனம் நியதம் -புத்தே கர்த்ருத்த மேவ ஹி நியோஜ்யத்வம் ?
யதோக்தம்
நியோஜ்ய ச ச கார்யம் ய ஸ்வ கீய த்வேந புத்யதே இதி
யஷ்ட்டத்வ அநு குணம் தத் போக்த்ருத்வம் இதி சேத் தேவ தத்த பசேத் இதி பாக கர்த்ருதயா ஸ்தருதஸ்ய தேவ தத்தஸ்ய
பாகார்த்த கமனம் பாக அநு குணமிதி கமநே கர்த்ருத்வ கல்பனம் ந யுஜ்யதே —

132—கிஞ்ச லிங்காதி சப்த வாஸ்யம் ஸ்தாயி ரூபம் கிமிதி அபூர்வம் ஆஸ் ரீயதே ?-
ஸ்வர்க்க காம பத சமபி வ்யாஹார அநு ப பத்தே இதி சேத் கா அத்ர அநுப பத்தி ?
சிஷாதயிஷித ஸ்வர்க்கோஹி ஸ்வர்க்க காம தஸ்ய ஸ்வர்க்க காமஸ்ய காலாந்தர பாவி ஸ்வர்க்க ஸித்தவ் க்ஷண
பங்கினீ யாகாதி கிரியா ந சமர்த்த இதி சேத்
அநாக்ராத வேத வித் அக்ரேசரோ ஐயம் அநுப பந்தி -சர்வை கர்மபி ஆராதித பரமேஸ்வர பகவான் நாராயண
தத்திஷ்டம் பலம் ததாதி இதி வேத வைத்தோ வதந்தி
யதா ஆஹு வேத வித் அக்ரேஸரா த்ரமிடாச்சார்யா
பல சம்பிபந்த் சயா கர்மபிராத்மாநாம் பிப்ரீஷந்தி சப்ரிதோலம் பலாய-இதி ஸாஸ்த்ர மர்யாதா -இதி
பல சம்பந்தேச்சயா கர்மபி யாக தான ஹோமாதிபி -இந்திராதி தேவதா முகேந தத் தந்தர்யாமி ரூபேண அவஸ்திதம்
இந்த த்ராதி சப்த வாஸ்யம் பரமாத்மநாம் பகவந்தம் வாஸூ தேவம் ஆரிராதயிஷ்யந்தி –
ச ஹி கர்மபிராராதிதா -தேஷாம் இஷ்டாநி பலாநி பிரயச்சத்தி இத்யர்த்த –

ததா ச ஸ்ருதி
இஷ்டா பூர்த்தம் பஹுதா ஜாதம் ஜாயமானம் விஸ்வம் விபர்த்தி புவனஸ்ய நாபி -இதி இஷ்டா பூர்த்தம் –
இதி சகல ஸ்ருதி ஸ்ம்ருதி சோதித்தம் கர்மா உச்யதே -தது விஸ்வம் விபர்த்தி –
இந்திர அக்னி வருணாதி சர்வ தேவதா சம்பந்தி தயா பிரதீயமானம் தத் தத் அந்தராத்மா தயா அவஸ்தித
பரம புருஷ ஸ்வயமேவ விபார்த்தி -ஸ்வயமேவ ஸ்வீ கரோதி-
புவனஸ்ய நாபி
ப்ரஹ்ம க்ஷத்ராதி சர்வ வர்ண பூர்ணஸ்ய புவனஸ்ய தாரக
தைஸ்தை கர்மா பிராராதித–தத் தத்திஷ்ட பல பிரதாநேந புவனானாம் தாரக இதி நாபி இத்யுக்த
அக்னி வாயு ப்ரப்ருதி தேவதாந்தராத்மதயா தச் தச் சப்தாபி தேய அயமேவேத்யாஹ-
ததே வாக்நிஸ் தத் வாயுஸ் தத ஸூர்யஸ் தாது சந்த்ரமா -இதி

யதோக்தம் பகவதா–ஸ்ரீ கீதையிலும் -7-21–/22-
யோயோ யாம் யாம் தநும் பக்த ஸ்ரத்தாயா அர்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யா சலாம் ச்ராத்தம் தாமேவ விததாம் யஹம்
ச தயா ஸ்ரத்தயா யுக்த தஸ்யா ஆராதன மீஹதே
லபதேச தத காமான் மயைவ விஹிதாந் ஹி தாந்
யாம் யாம் தநும்
இந்த்ராதி தேவதா விசேஷம் தத் தத் அந்தர்யாமிதயா அவஸ்திதஸ்ய பகவத-
தநவ–சரீராணி இத்யர்த்த
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச இத்யாதி
பிரபுரேவ ச இதி சர்வ பலாநாம் ப்ரதாதா சேத்யர்த்த –

யதாச
யஜ்ஜைஸ் த்வம் இஜ்யஸே நித்யம் சர்வ தேவ மயா ஸ்யுத
யைஸ்வ தர்ம பரைநார்த்த நரைராராதிதோ பவாந்
தே தரந்த்யகிலா மேதாம் மாயாமாத்ம வி முக்தயே இதி –ஸ்ரீ விஷ்ணு புராணம்

சேதிஹாச புராணேஷு -சர்வேஷ்வேவ வேதேஷு –
ஸர்வாணி கர்மாணி சர்வேஸ்வர ஆராதன ரூபாணி தைஸ்தை கர்ம பிராராதித புருஷோத்தம தத்ததிஷ்ட பலம்
ததாதி இதி தத்ர தத்ர பிரபஞ்சிதம்
ஏவமேவ ஹி சர்வஞ்ஞம் -சர்வ சக்திக்கு -சர்வேஸ்வரன் -பகவந்தம்-இந்திராதி தேவதாந்தர்யாமி ரூபேண
யாக தான ஹோமாதி -வேதோதித சர்வ கரமானாம் போக்தாரம் சர்வ பலானாம் பிரதாதாரம் ச சர்வா ஸ்ருதயோ வதந்தி –
சதுர் ஹோதாரோ யத்ர சம்பதம் கச்சந்தி தேவை இத்யாத்யா
சதுர் ஹோதார யஜ்ஞா -யத்ர பரமாத்மநி தேவேஷ் வந்தர்யாமிதயா அவஸ்தித -தேவை சம்பந்தம் கச்சந்தி இத்யர்த்த –
அந்தர்யாமி ரூபேண அவஸ்தி தஸ்ய பரமாத்மாந சரீரதயா அவஸ்திதாநாம் இந்த்ராதிநாம் யுகாதி சம்பந்த இத்யுக்தம் பவதி
யதோக்தம் பகவதா –ஸ்ரீ கீதையிலும்
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் சர்வலோக மஹேஸ்வரம் இதி தஸ்மாத் அக்னியாதி தேவதாந்தர்யாமி பூத
பரம புருஷ ஆராதன பூதாநி ஸர்வாணி கர்மாணி ச ஏவ ச அபிலஷித ப்ரதாயி
இதி கிமத்ர அபூர்வேன வ்யுத்பதி பததூர வர்த்திநா வாச்யதயா அப்யுகதேந கல்பிதேந வா பிரயோஜனம் ?-

133–ஏவஞ்ச சதி லிங்காதே -கோயமர்த்த -பரிக்ரஹீதோ பவதி ?
யஜ தேவ பூஜா யாம் -இதி தேவதாராதன பூத யாகாதே -ப்ரக்ருத்யர்தஸ்ய-கர்த்ரு வபாரசாத்யதாம் வ்யுத்பத்தி சித்தாம்
லிங்காதய அபி தததி இதி ந கிஞ்சித் தநுபபந்நம் -கர்த்ரு வாசிநாம் ப்ரத்யயாநாம் ப்ருக்ருத் யர்த்தஸ்ய
கர்த்ரு வியாபார சம்பந்த பிரகாரோ ஹி வாஸ்ய ?
பூத வர்த்தமாநாதிகம் அந்யே வதந்தி லிங்காத யஸ்து கர்த்ரு வியாபார சாத்யதாம் வதந்தி —

134–அபி ச காமிந -கர்த்தவ்ய தயா கர்மா விதாய கர்மனோ தேவதா ஆராதன ரூபதாம் தத் த்வாரேண பல சித்திம்
ச தத் தத் கர்மா விதி வாக்ய அன்யேவ வதந்தி –
வாயவ்யம் ஸ்வேத மால பேதபூதி காம -வாயுர் வை ஷேபிஷ்டா தேவதா -வாயுமேவ ஸ்வேந பாகதேயேநோ பதாவதி
ச ஏவைநம் பூதிம் கமயதி இத்யதிநி நாத்ரா பல சித்யநுப பத்தி காபி த்ருச்யதே இதி பல சாதனத்வா வகதி ஒளபதாநிகீ-
இத்யபி ந சங்கச்சதே வித்யபேஷிதம் யாகாதே பல சாதனத்வப் பிரகாரம் வாக்ய சேஷ ஏவ போதாயாதி இத்யர்த்த —

தஸ்மாத் -ப்ராஹ்மணாய நா பகுரேத் -இத்யத்ர அபகோரண—நிஷேத விதி பர வாக்ய சேஷே ஸ்ரூயமாணம்
நிஷேத் யஸ்ய அபகோரணஸ்ய சத யாதநா சாதநத்வம் நிஷேத வித்யுபயோகி இதி ஹி ஸ்வீ க்ரியதே ?
அத்ர புந காமிந கர்த்தவ்ய தயா விஹிதஸ்ய யாகாதே காம்ய ஸ்வர்காதி சாதனத்வ பிரகாரம் வாக்ய சேஷா வகதம்
அநாத்ருத்ய கிமிதி உபாதேநேந யாகதே பல சாதனத்வம் பரிகல்ப்யதே-
ஹிரண்ய நிதி மபவரகேநிதாய யாசதே கோத்ரவ்யாதி லுப்த க்ருபணம் ஜனம் இதி ஸ்ரூயதே ததேதத் யுஷ்மாஸூ த்ருச்யதே –

சதயாதநா சாதனத்வம் அபி ந அத்ருஷ்டத் வாரேண-சோதிதாந்யநுதிஷ்டத -விகிதம் கர்மா குர்வத–நிந்திதாநி ச குர்வத–
ஸர்வாணி ஸூகாநி துக்காநி சபரம புருஷ அநு க்ரஹ நிக்ரஹாப்யா மேவ பவந்தி-

ஏஷ ஹ்யேவாநந்தயாதி
அத சோ பயங்கதோ பவதி
அத தஸ்ய பயம் பவதி
பீஷாஸ்த்மா வாதா பவதே பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்த்மா தக்நி சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி —
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசசநே கார்க்கி –ஸூர்ய சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே
கார்க்கி -தததோ மனுஷ்யா ப்ரஸஸந்தி யஜமானம் தேவா தர்வீம் பிதரோந் வாயத்தா இத்யாத்யேந கவிதா ஸ்ருதய சந்தி –

யதோக்தம் த்ரமிட பாஷ்யே-
தஸ்ய ஆஞ்ஞாய தாவதி வாயு -நத்ய -ஸ்ரவந்தி -தேந ச க்ருதஸீமாநோ ஜலாசயா சமதா இவ மேஷ விசர்ப்பிதம் குர்வந்தி-
இதி தத் ச கல்ப்பநி பந்தநா ஹி இமே லோகா நஸ்ய வந்தே நஸ் புடந்தி-ஸ்வ சாசன அநு வரத்தினம் ஞாத்வா
காருண்யாத் ச பகவாந் வர்த்தயேத வித்வான் கர்ம தக்ஷ -இதி ச –

பரம புருஷ யாதாத்ம ஞான பூர்வகம் தத் உபாசாநாதி-விஹித கர்ம அனுஷ்டாயின-தத் ப்ரஸாதாத்
தத் பிராப்தி பர்யந்தாநி ஸூகாநி அபயம் ச யதாதிகரம் பவந்தி-தத் ஞான பூர்வகம்
தத் உபாஸநாதி விஹிதம் கர்ம அகுர்வத-நிந்திதாநி ச குர்வத தந் நிக்ரஹாதேவ தத் பிராப்தி பூர்வகா
பரிமித துக்காநி பயம் ச பவந்தி –

யதோக்தம் பகவதா -ஸ்ரீ கீதையிலும் –
நியதம் குரு கர்மத்வம் கர்மஜ்யாயோ ஹ்ய கர்மண –இத்யாதிநா க்ருத்ஸ்நம் கர்மா ஞான பூர்வகம் அநுஷ் டேயம் விதாய –
மயி ஸர்வாணி கர்மாணி சந் யஸ்ய -இதி சர்வஸ்ய கர்மண ஸ்வ ஆராதநுதாம் ஆத்மநாம் ஸ்வ நியாம்யதாம் ச ப்ரதிபாத்ய
யே மே மதமிதம் நித்யம் அநு திஷ்டந்தி மாநவா
ஸ்ரத்தா வந்தோ அந ஸூயந்தோ நாநு திஷ்டந்தி மே மதம்
சர்வஞ்ஞான வி மூடாம் ஸ்தாந் வித்தி நாஷ்டாந சேதச —
இதி ஸ்வ ஞான அநு வர்த்திந ப்ரஸஸ்ய விபரீதாந் விநிந்த்ய -புநரபி ஸ்வ ஞான அநு பாலநம் அகுர்வதாம்
ஆஸூர ப்ரக்ருத் யந்தர்பாவம் அபிதாய அதமாகதிஸ் ச யுக்தா
தாநஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம்ய ஜஸ்ரமஸூபாந் மூடா ஜென்மநி ஜென்மநி –
யாமப்ராப் யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம் தீம் இதி –
சர்வ கரமண்யபி சதா குர்வானோ மப்த்யபாஸ்ரய
மத் பிரசாதாதவாப் நோதி சாஸ்வதம் பதமவ்யயம்
இதி ச ஸ்வ ஞான அநு வர்த்தி நாம் சாஸ்வதம் பதம் ச யுக்தம் —

அஸ்ருதா வேதாந்தாநாம் கர்மணி அஸ்ரத்தா மா பூத் -இதி தேவதாதி கரேண திவாதா-க்ருதா கர்மமாத்ரே
யதா ஸ்ரத்தா ஸ்யாத் இதி சர்வம் ஏக சாஸ்திரம் இதி வேதவித் சித்தாந்த –

135–தஸ்யை தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ நாராயணஸ்ய -அபரிச்சேத்ய ஞான ஆனந்த அமலத்வ ஸ்வரூபவத் –
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜ ப்ரப்ருத்ய -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண வத் –
ஸ்வ சங்கல்ப ப்ரவர்த்ய –ஸ்வேதா ஸமஸ்த சிதசித் வஸ்து ஜாதவத்–
ஸ்வ அபிமத -ஸ்வ அநு ரூப -ஏக ரூப திவ்ய ரூப -ததுசித -நிரதிசய கல்யாண -விவித அநந்த பூஷண –
ஸ்வ சக்தி சத்ருச -அபரிமித -அனந்த -ஆச்சர்ய -நாநா வித ஆயுத –
ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப விபவ ஐஸ்வர்ய சீலாத்யா அநவதிக மஹிம மஹிஷி –
ஸ்வ அநு ரூப கல்யாண ஞான கிரியாத்ய அபரிமேய குண ஆனந்த பரிஜன பரிச்சத
ஸ்வ உசித நிகில போக்ய போக உபகரணாத் அனந்த மஹா விபவ –
அவாங் மனஸ் கோசர ஸ்வரூப ஸ்வபாவஸ் திவ்யாஸ்தாநாதி நித்யதா நிரவத்யதா கோசாராஸ் ச சஹச்ரச ஸ்ருதய சந்தி
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத்
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவும் மஷிணீ
ச யே ஏஷ யந்திர் ஹ்ருதய ஆகாச தஸ்மிந் நயம் புருஷோ மநோ மய
அம்ருதோ ஹிரண்மய
மநோ மய–இதி மனசைவ விஸூத்தேந க்ருஹ்யதே இத்யர்த்த
சர்வே நிமேஷா ஜஜிரே வித்யுத புருஷா ததி–வித்யுத் வர்ணாத் புருஷாதித்யர்த்த
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
மத்யஸ்த நீல தோயதா வித்யுல்லேகேவ சோயம் தஹர புண்டரீக மத்யஸ்தா ஆகாச வர்த்திநீ வஹ்நி சிகா –
ஸ்வ அனந்தர்நிஹித நீல தோயதா வித்யுதிவ ஆபாதி இத்யர்த்த —
மநோ மய
பிராண சரீர
பா ரூப சத்ய காம ஸத்ய ஸங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்மா சர்வ காம சர்வ கந்த சர்வ ரஸ சர்வம் இதம் அம்யாத்தோ
அ வாக்ய அநாதா
மஹா ரஜனம் வாச இத்யாத்யா
அஸ்யே சாநா ஜகதோ விஷ்ணு பத்னீ
ஹ்ரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய –
ஷயம் அந்த மஸ்ய ரஜஸ பராகே
யதேகம் அவ்யக்தம் அனந்த ரூபம் விஸ்வம் புராணம் தமஸஸ் பரஸ்தாத்
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
யோ அஸ்யாத் யக்ஷய பரமே வ்யோமந்
ததேவ பூதம் ததுபவ்யமா இதம் தத் அக்ஷரே பரமே வ்யோமந்
இத்யாதி ஸ்ருதி சத நிஸ்ஸிதோ அயமர்த்த –

136–தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி விஷ்ணோ -பரஸ்ய ப்ரஹ்மண-பரமம் பதம் -சதா பஸ்யந்தி ஸூரய -இதி வசநாத்
சர்வ கால தர்சனவந்த பரிபூர்ண ஞானா -கேசந சந்தி இதி ஞாயதே -யே ஸூரய –
தே சதா பஸ்யந்தி -இதி வசன வ்யக்தி யே சதாஸ் யந்தி தே ஸூரய -இதி வா -உபய பக்ஷப் யநேக விதாநம்
ந சம்பவதி இதி சேத் ந -அபிராப்தத்வாத் ஸர்வஸ்ய சர்வ விசிஷ்டம் பரமம் ஸ்தானம் விதீயதே-
யதோக்தம் –
தாது குணாஸ் து விதியேரந் அவி பாகாத் விதாநாத்தே ந சேதந்யேந சிஷ்டா இதி –
யதா யதாக்நேயோஷ்ட கபால -இத்யாதிக் கர்ம விதேந கர்மனோ குணா நாஞ்ச அப்ராத்வேந ஸ்வே குண விசிஷ்டம் கர்ம விதீயதே-
ததா அத்ராபி ஸூரிபி சதா த்ருஸ்யத்வேந விஷ்ணோ பர ஸ்தானம் பிராப்தம் ப்ரதிபாதயதி இதி ந கஸ்சித் விரோத —

137–கரண மந்த்ரா க்ரியமானாநுவாதி ந -ஸ்தோத்ர சஸ்த்ர ரூபா -ஜபாதி ஷு வி நியுக்தாஸ் ச ஸ்வார்த்தம்
சர்வம் யதா வஸ்தித மேவ அபிராப்தம விருத்தம் ப்ராஹ்மணவது போத யந்தி இதிஹி வைதிகா ?
(பிரகீத மந்த்ர ஸாத்ய குணி நிஷ்ட குணா பிதாநம் -ஸ்தோத்ரம்
அப்ரகீத மந்த்ர ஸாத்ய குணி நிஷ்ட குணா பிதாநம் -சஸ்திரம்)
விநி யுக்தார்த்த பிரகாசிநாம் ச தேவதாதி ஷு அபிராப்த விருத்த குணவிரேஷா ப்ரதிபாதனம் விநியோகாநு குணமேவ

138—நேயம் ஸ்ருதி -முக்த ஜன விஷயா-தேஷாம் சதா தர்சன அநு பத்தே -நாபி முக்த ப்ரவாஹ விஷயா -சதா பஸ்யந்தி இத்யேகைக
கர்த்ரு விஷய தயா ப்ரதீதே -ஸ்ருதி பங்க பிரசங்காத் மந்த்ரார்த்த வாத கதா ஹ்யர்த்தா -கார்யபரேத்வே அபி சித்த யந்தி இத்யுக்தம் –
கிம் புந சித்த வஸ்துந்யேவ தாத்பரியே வ்யுத்பத்தி சித்தே இதி சர்வம் உப பந்நம் —

139–நநு -சாத்ர–தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி பர ஸ்வரூபமேவ -பரமபத சப்தேந அபிதீயதே –
ஸமஸ்த ஹேய ரஹிதம் -விஷ்ண வாக்யம் பரம் பதம் -இத்யாதி ஷு அவ்யதிரேக தர்சநாத்
மைவம் –
ஷயந்தமஸ்ய ரஜஸப் பராகே
தத் அக்ஷரே பரமே வ்யோமந்
யோஸ்யாத் யஷ பரமே வ்யோமந்
யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமந் –இத்யாதி ஷு பர ஸ்தானஸ்யைவ தர்சநாத்
விஷ்ணோ பரமம் பதம் -இதி வ்யாதிரேக நிர்த்தேசச் ச -விஷ்ண வாக்யம் பரமம் பதம் -இதி விசேஷணாத்
அந்யதாபி பரம் பதம் வித்யதே இதி தேநைவ ஞாயதே ததிதம் பர ஸ்தானம் ஸூரிபி -சதா த்ருச்யத்வேந ப்ரதிபாத்யதே –

ஏதத் யுக்தம் பவதி –
க்வசித் பரம் ஸ்தானம் பரம பத சப்தேந ப்ரதிபாத்யதே –
க்வசித் ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபம் –
க்வசித் பகவத் ஸ்வரூபம் -தத் விஷ்ணோ பரம் இதி பர ஸ்தானம் –
சர்க்க ஸ்தித் யந்த காலேஷு த்ரி தேவம் ஸம்ப்ரவர்த்ததே -குண ப்ரவ்ருஸ்யா பரமம் பதம் தஸ்யா குண மஹத் –
இத் யத்ர ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபம் -ஸமஸ்த ஹேய குண ரஹிதம் விஷ்ண வாக்யம் பரமம் பதம் –
இத் யத்ர பகவத் ஸ்வரூபம் -தரீண்யாப்யேதாநி பரம ப்ராப்யத்வேந பரம பத சப்தேந ப்ரதிபாத யந்தே –

கதம் த்ரயாணாம் பரம ப்ராப்யத்வ மிதிசேத் -பகவத் ஸ்வரூபம் -பரம ப்ராப்யத்வாதேவ பரமம் பதம் இதர யோரபி –
பகவத் பிராப்தி கர்பத்வாதேவ பரம பதத்வம் -ஸ்வர்க்கம் பந்த விநிர்முக்த ஆத்ம ஸ்வரூபா வாப்தி –
பகவத் பிராப்தி கர்ப்ப இதி -த இமே சத்யா -காமா -அந்ருதா பிதாநா இதி பகவதோ குண கணஸ்ய
திரோதாயகத்வேந அந்ருத சப்தேந ஸ்வ கர்மண ப்ரதிபாதநாத் –

அந்ருத ரூபா திரேதாநம் ஷேத்ரஞ்ஞ கர்மேதி கதம் அவகம்யதே இதி சேத்
அவித்யா கர்ம சம்ஞ்ஞா அந்யாத்ரி தீயா சக்திரிஷ்யதி
யயா ஷேத்ரஞ்ஞ சக்தி சாவேஷ்டிதா ந்ரூப சர்வகா
சம்சாரதாபாநகிலாந் அவாப்நோத் யதி சந்த தாந்
தயாதி ரோஹித த்வாச்ச–இத்யாதி ஸ்ரீ விஷ்ணு புராண வஸனாத்
பர ஸ்தான பிராப்திரபி பகவத் பிராப்திகமைவ இதி ஸூ வியக்தம் –

ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே இதி ரஜஸ் சப்தேந த்ரி குணாத்மிகா ப்ரக்ருதி ருச்யதே -கேவல்ய ரஜசோநவ ஸ்தநாத் இமாம்
த்ரி குணாத் மிகாம் ப்ரக்ருதி மதிக்கரம்யா ஸ்திதேஸ்தாநீ ஷயந்தம்-வசந்தம் -இத்யர்த்த –
அநேந த்ரி குணாத் மகாத் ஷேத்ரஞ்ஞஸ்யா போக்ய போதாத் வஸ்துந -பரஸ்த்தாத் விஷ்ணோ வாச ஸ்தானம் இதி கம்யாதே
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத் -இத் யத்ராபி தமஸ் சப்தேந
சைவ ப்ரக்ருதி உச்யதே கேவலஸ்யத மச -அநவஸ்தாநா தேவ ரஜஸ பராகே ஷயந்தம்-இத்யநேந
ஏக வாக்யத்வாத்-தமஸ பரஸ்தாத் வசந்தம் ஆதித்ய வர்ணம் புருஷம் அஹம் வேத இதயயமர்த்த அவகம்யதே –

சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மா
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
தத் அஸ்ஹர் பரமே வ்யோமந்
இதி தத் ஸ்தானம் அதிகார ரூபம் பரம வ்யோம சப்தாபிதேயமிதி ச கம்யதே
அக்ஷரே பரமே வ்யோமந் –
இத்யஸ்ய ஸ்தானஸ்ய அக்ஷரத்வ ஸ்ரவணாத் ஷர ரூபா -ஆதித்ய மண்டலாதய-ந பரம வ்யோம சப்தாபிதேயா
யத்ர பூர்வே ஸாத்ய சாந்தி தேவா
யத்ருஷய பிரதம ஜாயே புராணா
இத்யாதி ஷு ச தா ஏவ ஸூரய இதி கம்யாதே
தத் விப்ராசோ வி பந்யவோ ஜாக்ரு வாம்ச சமிந்ததே விஷ்ணோர்யப் பரமம் பதம் –
இத்யத்ராபி விக்ராஸ மேதாவிந -விபந்யவ -ஸ்துதி ஸீலோ
ஜாக்ரு வாம் ச -அஸ் கலித ஞானா தா ஏவ அஸ் கலிதா ஞானா தத் விஷ்ணோ பரமம் பதம்
சதா ஸ்துவந்த ச பந்ததே -இத்யர்த்த –

140–ஏதேஷாம் பரிஜன ஸ்தானதீநம்
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யத்ர ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண கணவத் பர ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர் பூதத்வாத் –
சதேவ –ஏகமேவ அத்விதீயம் –இதி பிரம்மா அந்தர் பாவ –அவகம்யதே-
ஏஷாம் அபி கல்யாண குணைக தேச தத்வாதேவ சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் -இத்யத்ர இதம் இதி சப்தஸ்ய
கர்ம வஸ்யா போக்த்ரு வர்க்க மிஸ்ர- தத் போக்ய பூத விக்ஷயத்வாச்ச- சதா பஸ்யந்தி ஸூரய-
இதி சதா தர்சித்வேந ச தேஷாம் கர்ம வஸ்யாநந்தர் பாவாத் -அபஹத பாப்மா –இத்யாதி அபி பாஸே இத்யந்தேந
ஸ்வ லீலோபகரண பூத த்ரிகுணாத்மகா ப்ரக்ருதி பிராகிருத ததஸ்ம்ஸ்ருஷ்ட புருஷ கதம் ஹேயா ஸ்வ பாவம்
சர்வம் ப்ரதிஷித்ய சத்யகாம -இத்ய நேந ஸ்வ போக்கிய போக உபகரண ஜாதஸ்ய ஸர்வஸ்ய நித்யதா ப்ரதிபாதிதா–

சத்யா காமா யஸ்ய அ சவ்
சத்ய காம–காம் வந்தே –இதி காமா –தேந பரேண ப்ரஹ்மணா ஸ்வ போக்ய ததுபகரணாதய-ஸ்வாபிமதா -யேகாம் வந்தே –
தே சத்யா -நித்யா -இத்யர்த்த -அந் யஸ்ய லீலோபகரணஸ் யாபி வஸ்துந
பிராமண சம்பந்த யோக்யத்வே சத்யபி விகராஸ் பதத்வேநா -அஸ்திரத்வாத் தத் விபரீதம் ஸ்திரத்வம் ஏஷாம் ஸத்ய பதேந உச்யதே
ஸத்ய சங்கல்ப இதி ஏதேஷு போக்ய தத் உப கரணாது ஷு நித்யேஷு நிரதிசயேஷு ஆனந்தே ஷு சத்ஸ்வபி அபூர்வாணாம்
அபரிமிதானாம் அர்த்ததானாம் அபி சங்கல்ப மாத்ரேண சித்தம் வததி-
ஏஷாம் ச போக உபகரணாநாம் லீலா உபகரணாநாம் சேதநாநாம் அசேதநாநாம் ஸ்திராணாம் அஸ்திராணாம்
சதத் சங்கல்பாதயாத் ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி பேதாதி சர்வம் வததி ஸத்ய சங்கல்ப இதி –

141—இதிஹாச புராணயோ வேத உப ப்ரும்ஹண யோஸ்ச அயமர்த்த உச்யதே
தவ்து மேதாவினவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரிநிஷ்டிதவ் வேத உப ப்ரும்ஹணதயா பிரார்ப்பதே
ஸ்ரீ ராமாயணே
வ்யக்தமேஷ மஹா யோகி பரமாத்மா சனாதன அநாதிமத்ய நிதந மஹத பரமோ மஹான்
தமசப் பரமோ தாதா சங்க சக்ர கதா தர -ஸ்ரீ வத்ச வஷாஸ் நித்ய ஸூரி அஜய்ய சாஸ்வதோ த்ருவ-என்றும்

சரா நாநாவிதாஸ் சாபி தனுராயத விக்ரஹம் -அந்வகச் சந்த காகுத்ஸ்த்தம் சர்வே புருஷ விக்ரஹா –
விவேச வைஷ்ணவம் தாம ச சரீர சஹானுக –ஸ்ரீ மத் வைஷ்ணவே புராணே –
சமஸ்தா சக்த்யஸ் சைதா ந்ருப யத் ப்ரதிஷ்டிதா–தத் விஸ்வ ரூபா வை ரூப்யம் ரூபமந் யத்தரேர் மஹத் –
மூர்த்தம் ப்ரஹ்ம மஹா பாக -சர்வ ப்ரஹ்ம மயோஹரி –
நித்யைவைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அந பாயிநி
யதா சர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம
தேவத்வே தேவ தேவோயம் மனுஷ்யத்வே ச மானுஷீ –
விஷ்ணோ தேஹானு ரூபாம்வை கரோத்யேஷா ஆத்மநஸ் தனும்-
ஏகாந்தின சதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகிநோ ஹியே –
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யதவை பஸ்யந்தி ஸூரய —
கலா முஹுர்த்தாதி மயஸ் ச கால -நயத்விபூதே பரிணாம ஹேது

மஹா பாரதே ச
திவ்யம் ஸ்தாநம் அஜாம் சா ப்ரமேயம் துர் விஜ்ஜேயம் சாகமைர்கம்ய மாத்யம்
கச்ச ப்ரபோ ரக்ஷ சாஸ்மாந் ப்ரபந்நான் கல்பே கல்பே ஜாயமான ஸ்வ மூர்த்யா –
காலஸ் சபசயதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -இதி –

142–பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபவத்வம் ஸூத்ரகாரச் ச வததி
அந்தஸ் தத் தர்மோபதே ஸாத்-1-1-21-இதி
யோ அசாவாதித்ய மண்டலாந்தர் வர்த்தி தப்தகார்த்த -ஸ்வர கிரிவரப்ரப —
சஹஸ்ராம் ஸூ சத சஹஸ்ர கிரண
கம்பீராம்ப ஸமுத்பூத -ஸ்ம்ருஷ்ட நாள ரவி கர விகசித புண்டரீக தல -அமலாய தேஷண-
ஸூப்ரூ லலாட –
ஸூ நாஸ-
ஸூஸ்பிதாதர வித்ரும ஸூ ருசிர கோமல கண்ட கம்புக்ரீவ
சமுந் நதாம் ச விலம்பி ஸூ ரூப திவ்ய கர்ணகி சலய
பீந விருத்தாயத புஜ சாருதர ஆதாரம்ர கரதலானு ரக்தாங்கு லிபி -அலங்க்ருத –
தனு மத்யே விசால வக்ஷஸ்தல சமா வி பக்த சர்வாங்க அநிர்தேஸ்ய திவ்ய ரூப சம்ஹ நத-
ஸ் நிக்த வர்ண-பிரபுத்த புண்டரீக சாரூ சரண யுகள -ஸ்வ அநு ரூப பீதாம்பரதர
அமல கிரீட குண்டல ஹார கௌஸ்துப கேயூர கடக நூபுரோதர பந்தநாத் யபரிமித ஆச்சர்ய அனந்த திவ்ய பூஷண
சங்க சக்ர கதா சி சார்ங்க ஸ்ரீ வத்ச வனமாலா அலங்க்ருத அநவதிக அதிசய ஸுவ்ந்தர்யாஹ்ருத
அசேஷ மாநோ த்ருஷ்ட்டி வ்ருத்தி லாவண்யாம் ருதபூரித அசேஷ சராசர பூத ஜாத
அத்யத் புதாசிந்த்ய நித்ய யவ்வன -புஷப ஹாஸ ஸூ குமார புண்ய கந்த வாசித அநந்ததி கந்த ரால
த்ரை லோக்யாக்ரமண ப்ரவ்ருத்த கம்பீர பாவ கருணானுராக மதுர லோசந அவலோகிதாஸ்ரித வர்க்க –
புருஷவரோ தரீத் ருஸ்யதே —

ச ச நிகில ஜகத் உதய விபவ லய லீல நிரஸ்த ஸமஸ்த ஹேய ஸமஸ்த கல்யாண குண நிதி –
ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண பரமாத்மா பரம் ப்ரஹ்ம நாராயண இத்யவகம்யதே
தத் தர்மோபதேசாத்
ச ஏஷ ஸர்வேஷாம் லோகாநாம் ஈச-ஸர்வேஷாம் காமாநாம்
ச ஏஷ சர்வேப்ய பாப் மப்ய உதித-இத்யாதி தர்சநாத்
தஸ்யை தே குணா ?
சர்வஸ்யா வசீ சர்வஸ்யேசாந
அபஹத பாப்மா விஜர–இத்யாதி ஸத்யஸங்கல்ப இத்யந்தம்
விஸ்வத பரமம் நித்யம் விஸ்வம் நாராயணம் ஹரிம்
பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் -இத்யாதி வாக்யப் பிரதி பாதித–

143–வாக்ய காராஸ் சைதது ஸூ ஸ்பஷ்டமாஹ-
ஹிரண்மய புருஷோத்ருச்யதே இதி -ப்ராஞ்ஞ சர்வ அந்தரஸ்யாத் -லோக காமே சோபதேசாத் ததோதயாத் பாப்மநாம் இத்யாதிந —
தஸ்ய ரூபஸ்ய அநித்யதாதி வாக்ய காரேனைவ ப்ரதிஷித்தம்
ஸ்யாத் ரூபம் க்ருதக மனுக்ரஹார்த்தம் தச்சேதாநாநாம் ஐஸ்வர்யாத்-இதி உபாசிது–
அநு க்ரஹாரத்தை பரம புருஷஸ்ய ரூப ஸங்க்ரஹ -இதி பூர்வ பக்ஷம் க்ருத்வா -ரூபம் வா அதீந்த்ரிய மந்தகரண ப்ரத்யக்ஷம்
தந் நிர்தேசாத் -இதி யதா ஞானதயா-பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூப தயா நிர்தேசாத் ஸ்வரூப பூதா குணா –
ததா இதமபி ரூபம் ஸ்ருத்யா ஸ்வரூபதயா நிர்தேசாத் ஸ்வரூப பூதம் இத்யர்த்தா —

பாஷ்யகாரேண ஏதத் வ்யாக்யாதம்
அஞ்ஞசைவ விஸ்வ ஸ்ருஜா ரூபம் -தத்து ந சஷுஷா க்ராஹ்யம் -மனசா த்வக் கலுஷேன சாதனாந்தரவதா க்ருஹ்யதே –
ந சஷுஷா க்ருஹ்யதே -நாபி வாசா மனசாது விஸூத்தேந -இதி ஸ்ருதே-
நஹி அ ரூபாயா தேவதாயா ரூபம் உபதிஸ்யதே-யதா பூதவாதி ஹி சாஸ்திரம் –
மஹா ரஜனம் வாச –
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்-ஆதித்ய வர்ணம் தமசப் பரஸ் ஸாத் -இதி ப்ரகாரனாந்தர நிர்தேசாஸ் ச ஸாக்ஷிண-இத்யாதிநா —
ஹிரண்ய மய –
இதி ரூப சாமான்யான் சந்த்ர முகவத் -நம யத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே -அநாரப் யத்வாதாத் மந-இதி –
யதா ஞானாதி கல்யாண குண அனந்த்ய நிர்தேசாத் அபரிமித கல்யாண குண விசிஷ்டம் பரம ப்ரஹமேத் யாவகம்யதே –
ஏவம் -ஆதித்ய வர்ணம் -புருஷம் -இத்யாதி நிர்தேசாத்
ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப கல்யாண தம ரூப -பர ப்ரஹ்ம பூத -புருஷோத்தமோ -நாராயண இதி ஞாயதே –
ததா அஸ்யேசாந –
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
சதா பஸ்யந்தி ஸூரய
தமசப் பரஸ்தாத்
ஷயந்தம் அஸ்ய ரஜஸப் பராகே —
இத்யாதிநா பத்னி பரிஜன ஸ்தானாதீநம் நிர்தேசா தேவததை வசந்தீத் யவகம் யதே –
யதாஹ பாஷ்யகார
யதா பூதவாதி ஹி சாஸ்திரம்

இதி ஏதத் யுக்தம் பவதி–யதா
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -இதி நிர்தேசாத் பரமாத்ம ஸ்வரூபம்-ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீக –
அநவதிக அனந்தைக தாநதயா அபரிச்சேதயதயா ச சகல இதர விலக்ஷணம் ததா
யஸ் சர்வஞ்ஞ சர்வவித்
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே
ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச
தமேவ பாந்த மதுபாதி சர்வம் தஸ்ய பாஸா சர்வம் இதம் விபாதி –
இத்யாதி நிர்தேசாத் நிரதிசய அசங்க்யேயாஸ் ச குணா சகல இதர விலக்ஷணா –
ததா ஆதித்ய வர்ணம் -இத்யாதி நிர்தேசாத்
ரூப பரிஜன ஸ்தாநாதயஸ் ச சகல இதர விலக்ஷண ஸ்வ அசாதாரணா அநிர்தேஸ்ய ஸ்வரூபம் ரூபஸ்வ பாவா இதி –

144–வேதா பிரமாணம் சேத் வித்யர்த்த வாத மந்த்ர கதம்
சர்வம் அபூர்வம் அவிருத்தம் அர்த்த ஜாதம் யதா வஸ்திதமேவ போதயந்தி
ப்ராமாண்யம் ச வேதாநாம்
ஒவ்த்பத்தி கஸ்தி சப்தஸ்யார்த்தேந சம்பந்த -இத்யுக்தம் ததா
அக்னி ஜலாதீநாம் ஓவ்ஷ்ண்யாதி சக்தி யோக ஸ்வாபாவிக- யதா ச சஷுராதீநாம் இந்த்ரியானாம் புத்தி விசேஷ
ஜனன சக்தி ஸ்வாபாவிகி ததா சப்தஸ் யாபி போதகத்வ சக்தி ஸ்வாபாவிகீ –

ந ச ஹஸ்த சேஷ்டாதிவது சங்கேத மூலம்-சப்தஸ்ய போதகத்வம் இதி வக்தும் சக்யம்
அநாத்யநுசந்தான விச்சேதேபி சங்கேதயித்ரு புருஷா ஞானாத் யாநி சங்கேத மூலாநி தானி சர்வானி சாஷாத்வா
பரம் பரயாவா ஞாயந்தே –
ந ச தேவ தத்தாதி சப்தவத் கல்பயிதும் யுக்தம் -தேஷு ச சாஷாத் வா பரம்பரயா வா ஸங்கேதோ ஞாயதே –
கவாதி சப்தாநாம் து அநாத் யநுஸந்தான விச்சேத அபி ஸங்கேதா ஞானாதேவ போதகதவை சக்தி ஸ்வாபாவிகீ —

அத -அக்னீயாதீநாம் ஓவ்ஷ்னாதி சக்திவத் இந்த்ரியானாம் போதகத்வ சக்தி வச்ச சப்தஸ் யாபி போதகத்வ சக்தி -ஆச்ரயணீயா
ந னு ச
இந்த்ரியவத்-சப்தஸ் யாபி போதகத்வம் ஸ்வா பாவிகம் சம்பந்த கிரஹணம் போதகத்வாய கிமதி அபேக்ஷதே ?
லிங்க வத் இத்யுச்யதே-
யதா ஞாத ஸம்பந்த நியம் தூமாதி அக்னியாதி விஞ்ஞான ஜனகம்-
ததா ஞாத ஸம்பந்த நியம சப்தோபி அர்த்த விசேஷ புத்தி ஜனக –
ஏவம் தர்ஹி சப்தோபி அர்த்த விசேஷஸ்யா லிங்க மிதி அனுமானமேவ ஸ்யாத் -நைவம் சப்தார்த்தயோ –
ஸம்பந்த போத்ய போதக பாவ ஏவ தூமாதீநா து சம்பந்தாந்தரமிதி –
தஸ்ய ஸம்பந்தஸ்ய ஞான த்வாரேண புத்தி ஜனகத்வமிதி விசேஷ
ஏவம் க்ருஹீத சம்பந்தஸ்ய போதகத்வ தர்ஸனாத் அனாதி யநுசந்தான விச்சேதே பி ஸங்கேதா
ஞானாத் போதகத்வ சக்தி ரேவேதி நிஸ்ஸீயதே —

145–ஏவம் போதகாநம் -பத சங்காதாநாம் சம்சர்க்க-விசேஷ போதகத்வேந-வாக்ய சப்தாபிதேயநாம் உச்சாரண க்ரமோ
யத்ர புருஷ புத்தி பூர்வக
தே பவ்ருஷேயா –சப்தா இத் யுச்யந்தே -யத்ர து உச்சாரண க்ரம பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார பூர்வக
ஸர்வதா அபவ்ருஷேயா தே ச வேதா இத் யுச்யந்தே-
ஏததேவ வேதாநாம் அபவ்ருஷே யத்வம் நித்யத்வம் ச யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்காரேண
தமேவ க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யா மாணத்வம் –
தேச ஆனு பூர்வ விசேஷேண ஸம்ஸ்திதா அக்ஷர ராசயோ வேதா -ரிக் யஜுஸ் சாம அதர்வ பேத பிந்நா –
அநந்தாஸ் சாகா வர்தந்தே-தேச வித்யர்த்தவாத மந்த்ர ரூபா வேதா பர ப்ரஹ்ம பூத நாராயண ஸ்வரூபம்
தத் ஆராதனபிரகாரம் ஆராதிதாத் பல விசேஷம் ச போதயந்தி
பரம புருஷவத் தத் ஸ்வரூப தத் ஆராதந -தத் பல ஞாபக வேதாக்ய சப்த ஜாதம் நித்யமேவ –
வேதாநாம் அந்நதத்வாத் துரவகாஹத் வாச்ச பரம புருஷ நியுக்தா பரமர்ஷய கல்பே கல்பே நிகில ஜகத் உபகாரார்த்தம்
வேதார்த்தம் ஸ்ம்ருத்வா வித்யர்த்தவாத மந்த்ர மூலாநி தர்ம சாஸ்த்ராணி இதிஹாச புராணாநி ச சக்ரு
லௌகிகாச்ச சப்தா வேதராசே உத்ருத்யைவ தத் தத் அர்த்த விசேஷ நாம தயா
பூர்வ வத் ப்ரயுக்தா பாரம்பர்யேண ப்ரயுஜ்யந்தே —

நநுச வைதிகா ஏவ சர்வே வாசகா சப்தாஸ் சேத் -சந்தஸ்யேவம் பாஷாயாமேவம் -இதி லக்ஷண பேத கதம் உப்பத்யதே
உச்யதே தேஷாமேவ சப்தாநாம் தஸ்யாமேவ ஆநு பூர்வ்யாம் வர்த்தமாநாநாம் ததைவ பிரயோக
அந் யத்ர ப்ரயுச்யமாநா நாமந்யதேதி நகஸ் சித்தோஷ–

146–ஏவம் இதிஹாச புராண தர்ம சாஸ்த்ர உப ப்ரும்ஹித சாங்க வேத வேத்ய-பர ப்ரஹ்ம பூத நாராயண –
நிகில ஹேய ப்ரத்ய நீக -சகல இதர விலக்ஷண –
அபரிச்சின்ன நாநாந்தைக ஸ்வரூப -ஸ்வாபாவிக அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குணாகர-
ஸ்வ சங்கல்ப அநுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேத-சிதசித் வஸ்து ஜாத அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ –
அனந்த மஹா விபூதி நாநாவித அனந்த சேதந அசேதநாத்மக பிரபஞ்ச லீலோபகரண இதி ப்ரதிபாதிதம்

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
ஐததாத்ம்யம் இதம் சர்வம்
தத்வமஸி ஸ்வேத கேதோ
ஏநமேக வதந்யக்நிம் மாருதோந்யா பிரஜா பதிம்
இந்திரமேகே பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம்
ஜ்யோதிம்ஷி ஸூக்லாநி ச யாநி லோகே த்ரயோ லோகா லோக பாலா த்ரயீ ச
த்ரயோக்நயஸ் சாஹு தயஸ் ச பஞ்ச சர்வே தேவா தேவகீ புத்ர ஏவ
த்வம் யஜ்ஞ த்வம் வஷட்கார த்வம் வ ஓங்கார -பரந்தப
ரிததாமா வஸூ -பூர்வ வஸூநாம் த்வம் பிரஜாபதி –
ஜகாத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வஸூதா தலம்
அக்னி கோப பிரசாதஸ் தே ஸோம
ஸ்ரீ வத்ச லக்ஷண
ஜ்யோதீம் ஷி விஷ்ணு புவநா நி விஷ்ணு வநாநி விஷ்ணு
கிரயோதிசாஸ் ச நத்ய சமுத்ராஸ் ச ச ஏவ சர்வம் யதஸ்தியந் நாஸ்தி ச விப்ரவர்ய –இத்யாதி
சாமாநாதி கரண்ய பிரயோகேஷு சர்வை சப்தை -சர்வ சரீர தயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபிதீயதே இதி ச யுக்தம் –

ஸத்ய ஸங்கல்பம் பரம் ப்ரஹ்ம ஸ்வயமேவ
பஹு பிரகாரம் ஸ்யாம் –இதி சங்கல்ப்ய அசித் சமஷ்டி ரூப மஹாபூத ஸூஷ்மம் வஸ்து போக்த்ரு வர்க்க ஸமூஹம்
ச ஸ்வஸ்மிந் ப்ரலீநம் ஸ்வயமேவ விபஜ்ய-தஸ்மாத் பூத ஸூஷ்மாத் வஸ்துந மஹா பூதாநி ஸ்ருஷ்ட்வா தேஷு
போக்த்ரு வர்க்கமாத்ம தயா பிரவேஸ்ய-தை-சித் அதிஷ்டிதை–மஹா பூதை-அந்யோந்ய ஸம்ஸ்ருஷ்டை –
க்ருத்ஸ்னம் ஜகத் விதாய-ஸ்வயமபி ஸர்வஸ்ய ஆத்ம தயா பிரவிஸ்ய பரமாத்மத்வேந அவஸ்திதம்
சர்வ சரீரம் பஹு பிரகாரம் அதிஷ்டதே –
யதிதம் மஹா பூத ஸூஷ்மம் வஸ்து -ததேவ ப்ரக்ருதி சப்தேந அபிதீயதே -போக்த்ரு வர்க்க ஸமூஹ ஏவ புருஷ சப்தேந உச்யதே
தவ் ச பிரகிருதி -புருஷவ் பரமாத்ம சரீர தயா பரமாத்ம பிரகார பூதவ் தத் பிரகார -பரமாத்மவை ப்ரக்ருதி புருஷ சப்தாபிதேய
சோ காம யத பஹுஸ் யாம் பிரஜா யேயேதி –தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிசத்–
தத் அநு பிரவிஸ்ய –சச்ச த்யச்சா பவத்
நிருக்தஞ்சா நிருக்தஞ்ச நிலயனஞ்ச அநிலயனஞ்ச விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச சத்யஞ்சா ந்ருதம் ச சத்யம் அபவது –
இதி பூர்வ யுக்தம் சர்வம் அநயைவ ஸ்ருத்யா வ்யக்தம் –

147–ப்ரஹ்ம ப்ராப்த் யுபாயஸ் ச
சாஸ்த்ராதி கத -தத்வ ஞான பூர்வக -ஸ்வ கர்ம அநு க்ரஹீத -பக்தி நிஷ்டா ஸாத்ய
அநவதிக அதிசய ப்ரிய விசததம ப்ரத்யக்ஷதா பந்ந -அநு த்யான ரூப -பர பக்தி ரேவ இத் யுக்தம் –
பக்தி சப்தஸ் ச ப்ரீதி விசேஷே வர்த்ததே -ப்ரீதிஸ் ச ஞான விசேஷ ஏவ —

நநு ச ஸூகம் ப்ரீதி–இத்ய நர்த்தாந்தரம்–ஸூகம் ச ஞான விசேஷ ஸாத்யம் பதார்த்தாந்தரம் இதி லௌகிகா–
நைவம் யேந ஞான விசேஷேண தத் ஸாத்யம் இத் யுச்யதே -ச ஏவ ஞான விசேஷ ஸூகம் –

ஏதத் யுக்தம் பவதி
விஷய ஞானாநி ஸூக துக்க மத்யஸ்த சாதாரணாநி தாநி ச விஷயாதீநா விசேஷாணி ததா பவந்தி –
யேந விஷய விசேஷேண விசேஷிதம் ஞானம் ஸூகஸ்யா –ஜனகம் இத்யபிமதம் –
தத் விஷய ஞான மேவ ஸூகம் -தத் இதிரேகி பதார்த்தந்தரம் நோப லப்யதே –
தேநைவ ஸூகித்வ வ்யவஹாரோப பத்தேஸ் ச –

ஏவம் வித ஸூக ரூப ஞானஸ்யா விசேஷ கத்வம் -ப்ரஹ்ம -வ்யதிரிக்தஸ்ய வஸ்து ந சாதிசயம் அஸ்திரம் –
சப்ரஹ்மணஸ் து அநவதிக அதிசயம் ஸ்திரம் ச இதி ஆனந்தே ப்ரஹ்ம -இத் யுச்யதே
விஷயா யத் தத்வத் ஞானஸ்ய ஸூக ரூப தயா ப்ரஹ்ம ஏவ ஸூகம்-

ததிதமாஹ
ரஸோவை ச -ரசம் ஹ்யே வாயம் லப்த்வாநந்தீ பவதி -இதி ப்ரஹ்ம ஏவ ஸூகம் இதி ப்ரஹ்ம லப்த்வா ஸூகீ பவதீத் யர்த்த –
பரம புருஷ ஸ்வேநைவ ஸ்வம் அநவதிக அதிசய ஸூகஸ் சந் -பரஸ்யாபி ஸூகம் பவதி ஸூக ரூபாத்வா விசேஷாத்
ப்ரஹ்ம யஸ்ய ஞான விஷயோ பவதி ச ஸூகீ பவதி இத்யர்த்த —

ததேவம் பரஸ்ய ப்ரஹ்மண
அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரஸ்ய நிரவத்யஸ்ய அனந்த மஹா விபூதே
அநவதிக அதிசய ஸுவ்சீல்ய வாத்சல்ய ஸுவ்ந்தர்ய ஜலதே சர்வ சேஷித்வாத் ஆத்மந –
சேஷத்வாத் பிரதிசம்பந்தி தயா அநு சந்தீயமானம் அநவதிக அதிசய ப்ரீதி விஷயம்
சத் பரம் ப்ரஹ்ம ஏவ ஏந மாத்மாநம் ப்ராபயதி–இதி –

148—நநுஸ–அத்யந்த சேஷதைவ ஆத்மந -அநவதிக அதிசயம் ஸூகம் இத் யுக்தம் பவதி -ததே தத் சர்வ லோக விருத்தம் –
ததாஹி-
ஸர்வேஷாமேவ சேதநாநாம் ஸ்வா தந்தர்யமேவ இஷ்ட தமம் த்ருச்யதே -பாரதந்தர்யம் துக்கதாம் ஸ்ம்ருதிஸ் ச –
சர்வம் பரவசம் துக்கம் சர்வாத்மா வசம் ஸூகம் -ததாச- சேவா ஸ்வ வ்ருத்தி -ராக்யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜ யேத் -இதி –
ததிதம்-அநவதிக -தேஹாதிரிக்தாத்ம ஸ்வரூபாநாம் சரீராத்ம அபிமான விஜ்ரும்பிதம் –
ததாஹி
சரீரம் ஹி மனுஷ்யத்வாதி ஜாதி குணாஸ்ரய பிண்ட பூதம் ஸ்வ தந்திரம் பிரதீயதே -தஸ்மிந்நேவ –
அஹம் – இதி ஸம்ஸாரிணாம் ப்ரதீதி -ஆத்ம அபிமாநோ யாத்ருச-தத் அநு குண ஏனைவ புருஷார்த்த ப்ரதீதி –
ஸிம்ஹ வ்யாக்ர வராஹ மனுஷ்ய யஷ ரக்ஷ பிசாசா தேவ தாநவ ஸ்தீரி பும்ஸ வ்யவஸ்தித ஆத்ம அபிமாநாநாம்
ஸூகாநி வ்யவஸ்திதாநி தாநிச பரஸ்பர விருத்தாநி தஸ்மாத் ஆத்ம அபிமாந அநு குண
புருஷார்த்த வியவஸ்த்தயா சர்வம் ஸமாஹிதம் —
ஆத்ம ஸ்வரூபம் து தேவாதி தேஹ விலக்ஷணம் ஞான ஏக ஆகாரம் -தச்ச பர சேஷதைக ஸ்வரூபம் –
யதா வஸ்திதாத்ம அபிமாநே தத் அநு குண ஏவ புருஷார்த்த ப்ரதீதி -ஆத்மா ஞான மய அமல-இதி ஸ்ம்ருதே–
ஞான ஏக ஆகாரதா பிரதிபந்நா –
பதிம் விஸ்வஸ்ய-இத்யாதி ஸ்ருதி கணை பரமாத்ம சேஷதைக ஆகாரதயா ச ப்ரதிபாதிதா–
அத ஸிம்ஹ வ்யாக்ராதி சரீர ஆத்ம அபிமானவத் ஸ்வா தந்தர்ய அபிமாநோபி
கர்ம க்ருத விபரீத ஆத்ம ஞான ரூபோ வேதி தவ்ய —

அத -கர்ம க்ருத மேவ பரம புருஷ வ்யதிரிக்த விஷயானாம் ஸூகத்வம் -அத ஏவ தேஷாம் அல்பத்வம்-அஸ்திரத்வம் –
ச பரம புருஷஸ் யைவ ஸ்வத ஏவ ஸூகத்வம் -அத ததேவ ஸ்திரம் -அநவதிக அதிசயம் ச –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம —
ஆனந்தோ ப்ரஹ்ம –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –இதி ஸ்ருதே–
ப்ரஹ்ம வியதிரிக்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வஸ்துந ஸ்வரூபேண ஸூகத்வாபாவ –
கர்ம க்ருதத்வேந ச அஸ்திரத்வம் பாகவதர் பாராசரேண யுக்தம் –

நரக ஸ்வர்க்க சம்ஜே வை பாப் புண்யே த்விஜோத்தம –
வஸ்த்வேகமேவ துக்காய ஸூகாயேர்ஷ் யாகமாய ச கோபாய ச யதஸ் தஸ்மாத் வஸ்து வஸ்வாத்பகம் க்ருதா
ஸூக துக்காத் யேகாந்த ரூபேண வஸ்துனோ வஸ்துத்வம் குத ?
ததே காந்ததா புண்ய பாபா க்ருதேத்யர்த்த–
ஏவம் அநேக புருஷ அபேக்ஷயா கஸ்யஸித் துக்கம் பவதி இத் யவஸ்தாம் ப்ரதிபாத்ய ஏகஸ்மின்நபி புருஷே நவ்ய வஸ்தித மித்யாஹ
ததேவ ப்ரீதயே பூத்வா புந துக்காய ஜாயதே
ததேவ கோபாய தத் ப்ரஸாதாய ச ஜாயதே
தஸ்மாத் துக்காத் மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் -ஸூகாத் மகம் –
இதி ஸூக துக்காத் மகத்வம் ஸர்வஸ்ய வஸ்து ந -கர்ம க்ருதம் ந வஸ்து ஸ்வரூப க்ருதம் -அத கர்ம வசாநே ததவைதி இத் யர்த்த –
யத் து –சர்வம் பரவச துக்கம்– இத் யுக்தம்-தத் பரம புருஷ வ்யதிரிக்தாநாம்-பரஸ்பர சேஷ சேஷீ பாவ அபாவாத்
தவ் வ்யதிரிக்தம் பிரதி சேஷதா–துக்கமேவ இத் யுக்தம்
சேவா ஸ்வ வ்ருத்தி -ராக்யாதா -இத் யத்ராபி அசேவ்ய சேவா -ஸ்வ விருத்தி ரேவ இத் யுக்தம்
சஹ்யாஸ் ரமை சதோபாஸ்ய சமஸ்தை ஏக ஏவது -இதி சேர்வை ஆத்ம யாதாம்ய வித்பி ஸேவ்ய புருஷோத்தம ஏக ஏவ —

யதோக்தம் பகவதா –ஸ்ரீ கீதையிலும் -14-26-
மாம் ச யோ வ்யாபிஸாரேண பக்தி யோகநே சேவதே
ச குணாந் சமதீத்யைதாந் ப்ரஹ்ம பூயாய கல்பதே–இதி
இயமேவ பக்தி ரூபா சேவா
ப்ரஹ்ம விதாப் நோதி பரம்
தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி
ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி –இத்யாதி ஷு வேதநா சப்தேநாபி தீயதே இத் யுக்தம்
யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய-இதி விசேஷணாத்
யமேவைஷா வ்ருணுதே-இதி பகவதா வரணீயத்வம் பிரதீயதே வரணீ யஸ்ஸ ப்ரியதம யஸ்ய பகவதி
அநவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ச ஏவ பகவத ப்ரிய தம-தத் யுக்தம் பநவதைவ
ப்ரியோஹி ஞாநிநோத் யர்த்தம் அஹம் ச ச மம ப்ரிய -7–17-இதி
தஸ்மாத் பர பக்தி ரூபா பந்நமேவ வேதனம் தத்வத்தோ பகவத் பிராப்தி சாதனம்

யதோக்தம்
பகவதா த்வை பாயநேந மோக்ஷ தர்மே சர்வ உப நிஷத் வியாக்யான ரூபம்-
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பச்யதி கஸ்ஸனநநம்
பக்த்யா ச த்ருத்யா ச ஸமாஹி தாத்மா ஞான ஸ்வரூபம் பரி பஸ்யதீஹ–இதி
த்ருத்யா ஸமாஹி தாத்மா பக்த்யா புருஷோத்தமம் பச்யதி -சாஷாத் கருதி ப்ராப்நோதி
இத் யர்த்த பக்த்யாத் வநந்யயா சக்ய-இத்யநேந ஐகார்த்யாது
பக்திஸ் ச ஞான விசேஷ ஏவ இதி சர்வம் உப பந்நம்
சார அசார விவேகஞ்ஞா கரீயாம்சோ விமத்சரா
பரமாணதந்த்ரா சந்தீதி க்ருதோ வேதார்த்த ஸங்க்ரஹம்

இதி பகவத் ஸ்ரீ ராமானுஜ விரசித வேதார்த்த ஸங்க்ரஹ ஸமாப்தம்–

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –