ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ ஆரண்ய காண்டம் – —

ஸ்ரீ சீதா ராம ஜெயம்-

ஸ்ரீ கடவுள் வாழ்த்து –

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன், முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவுஅரோ.

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப் படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆது ம்ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே––ஸ்ரீ திருவாய் மொழி–3-4-10-

தோய்ந்து பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடர் –சரபங்கர் படலம் –
வ்யாப்தகத தோஷம் தட்டாமல் உள்ளும் புறமும் வியாபித்து ஏக நிர்வாஹகன் –
ஆதி நாதர் அவர் எம் அறிவினுக்கு அறிவரோ –
ஒன்றும் தேவும் யாரும் இல்லா அன்று –நின்ற ஆதிப்பிரான் -அன்றோ –

———

துறப்பதே தொழிலாகத் தோன்றினார் தோன்றியக்கால்
மறப்பதோ தம்மை அது அன்று ஆகில் மற்றவர் போல்
பிறப்பரோ எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறலரிதோ
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டின் இனிதுகந்தோய் –50- விராதன் துதி-ஒன்றாக கலக்கவே அவதரிக்கிறாய்

என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா –திருவிருத்தம் -1-
சேதனர்களுக்காகவே அவதரித்து தன்னையே உபாயமாகாகக் காட்டி அருளுகிறாயே –

————

பனி நின்ற பெரும் பிறவிக் கடல் கடக்கும்படி பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லாம் நன்று என்னை
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ யாகில்
இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு என் செய்வார் -51-

நும்மின் கவி கொண்டு நும் நும் கிட்டாத தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே–பாசுர எதிர் ஒலி-

————

நீ ஆதி பரம்பரமும்: நின்னவே உலகங்கள்;
ஆயாத சமயமும் நின் அடியவே; அயல் இல்லை;
தீயாரின் ஒளித்தியால்; வெளி நின்றால் தீங்கு உண்டோ ?
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ? 53-

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்
சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதிகச்சதி —

‘தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய!
நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என்கொலோ?-வாராதே வர வல்லாய்! 54′

வந்தாய் போல் வாராதாய் வாராதாய் போல் வருவான் –திருவாய் -6-10-9-

பன்னல் ஆம்” என்று உலகம் பலபலவும் நினையுமால்;
உன் அலால் பெருந் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே;
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்மாட்டு அருந் தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ? 55-

தெய்வம் பல அவர் நூலும் பல அவை தேர் பொழுதில்
பொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு போத நல்லோர்
உய்வம் பலனும் அவனே என்று ஓதி உணர்வர் நெஞ்சே
கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே –அழகர் அந்தாதி ––22-

———

பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்
இருவினையும் உடையார் போல் யரும் தவம் இயற்றுவார்
திருவுறையும் அணி மார்ப நினக்கு என்னை செயற்பால
ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் -56-

பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே –பெரியாழ்வார்
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –திருவாய் -5-4-1-

————

அரவாகிச் சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால்
ஒரு வாயின்ன விழுங்குதியால் ஓர் அடியாள் ஒளித்தியால்
திருவானம் நிலைமகளை இஃது அறிந்தால் சீறாளோ
மருவாரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் -57-

பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன் –திரு நெடும் தாண்டகம் -20-

பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் கிடந்தான் பார் அளந்தான் பார் இடம் முன் படைத்தான் என்பரால் –பெரிய திருவந்தாதி -42-

கிடந்தது இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத்தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே–திருவாய் 2-8-7-

—————–

மெய்யைத் தான் சிறிது சூணைர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள்
உய்யத் தான் ஆகாதோ உனக்கு என்ன குறை யுண்டோ
வையத்தார் வானத்தார் மழு வாளிக்கு அன்று அளித்த
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா -58-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின் –திருவாய் -4-10-4-

———————-

அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ; அவை உன்னை
முன்னம் ஆர் ஒதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ?
என்ன மா மாயம் இவை?-ஏனம் ஆய் மண் இடந்தாய்! 59′

ஒரு நாள் அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி -5-7-3-

பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ? என்ன மா மாயம் இவை–விசிஷ்டாத்வைத தத்வம் –

————

ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந் தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும்,
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.’ 60-

ஈடும் எடுப்புமில் ஈசன் –திருவாய் -1-6-3-

ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயா -2-3-2-

தன் ஒப்பார் இல்லப்பன் தந்தான் தனதாள் நிழலே -6-3-9-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ –பெரியாழ்வார் -5-4-9-

பறவை ஏறும் பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் –பெரியாழ்வார் -5-4-2-

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் –திருவாய் –3-6-8-

சார்ந்த இரு வல் வினைகளும் –திருவாய் -1-5-10-

அருளோடு பெரு நிலம் அளிக்கும் –பெரிய திருமொழி -1-1-9-

—————–

சிறுகாலை இலா நிலையோ திரியா
குறுகா நெடுகா குணம் வேறுபடா
உறு கால் கிளர் பூதமெலாம் உகினும்
மறுகா நெறி எய்துவன் வானுடையாய் -20-இந்திரன் இடம் சரபங்கர்

காலாதீனம் இல்லாத பரமபதம் –
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி –திருவாய் -6-9-10-

கண்டாமவை யாயிரம் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை —-24-இந்திரன் இராமபிரானை ஸ்துதிப்பது –

அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி -7-10-1-

—————–

தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே -27-

அந்தர்யாமியாய் இருந்தும் வ்யாப்ய தோஷம் தட்டாதவன் –
சிறைச்சாலைக்குள் குற்றவாளியும் காண வந்த அரசகுமாரனும் போலே அன்றோ –

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப் படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆது ம்ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே––ஸ்ரீ திருவாய் மொழி–3-4-10-

—————

மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இரு இருளும் இல்லை மேல் கீழும் இல்லை
மூவாமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடை கடையோடு ஈறில்லை முன்னோடு பின்னில்லை
தேவா இங்கு இவ்வோ நீ சென்ற நிலை என்றாள் சிலை ஏந்தி வந்து செம்மைச் சேவடிகள் நோவக்
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றேல் கரும் கடலில் கண் வளராய் கைம்மாறும் உண்டோ —

வெண்மையான பாற்கடலும் இவன் நிழலீட்டாலே கருங்கடல் ஆனதே –

ஆலத்திலையான் அரவின் அணை மேலான் நீலக்கடலுள் நெடும் காலம் கண் வளர்ந்தான் –பெரியாழ்வார் -2-6-6-

கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –பெரிய திருமொழி 3-1-1-

நீலக் கடல் கடைந்தாய் –திருவாய் -10-10-7-

சஹஸ்ர வதநோ தேவ பணா மணி விராஜித
ச ஏவ வ்ருஷ அபூத் அநந்த அத்புத ரூபவான் -அன்றோ –

—————

மூவரும் சரபங்கன் தவக் குடில் சேர்தல்
போனவன் அக நிலை புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான்;
ஆனவன் அடி தொழ, அருள் வர, அழுதான்
தானுடை இட வகை தழுவினன், நுழைவான். 33-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்-5-8-5-
அழுவன் -உபாசகர் செய்கையும் செய்தேன் -தொழுவன் -ப்ரபன்னர் செய்கையும் செய்தேன்-

மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –பெருமாள் -5-1-

————–

அண்டமும் அகிலமும் அறிவரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு வேறு
எண் தவ நெடிது எனின் இறுதியிலவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதே -44-

வை கலந்த மூவிலை மேல் ஈசற்கும் வாசவற்கும் வாசப் பூ மேல்
மெய் கலந்த நால் வேத விரிஞ்சனுக்கும் மேலா வீற்று இருப்பர் மாதோ
பை கலந்த பாம்பணை மேல் திருவரங்கப் பெரு நகருள் பள்ளி கொள்ளும்
கை கலந்த நேமியான் திரு நாமத்து ஒரு நாமம் கற்றார் தாமே –திருவரங்கக் கலம்பகம்-–4-

——–

அகஸ்தியரை -நீண்ட தமிழால் உலகை அளந்தான் -என்கிறார்
அநாதி -தெய்வத்தன்மை -உதாரம் -சகல பல ப்ரதம்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் -9-4-9-

வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே 4-5-10-
செந்நிறத்த தமிழ் ஓசை யாகையால் ஆகஸ்த்யமும் அநாதி -வடமொழி என்றது தென் மொழி மறையை நினைத்து இறே

————

செருக்கடை அரக்கர் புரி தீமை சிதை வெய்தித்
தருக்கு அழி தரக் கடிது கொல்வது சமைந்தேன்
வருக்க மறையோய் அவர் வரும் திசையின் முற்துற்று
இருக்கை நலம் நிற்க அருள் என்றனன் –இராமபிரான் அகஸ்த்யருக்கு பதில்

இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா. 56-

பரசுராமன் கொடுத்த வில்லும் புட்டிலும் -ராமன் வருணன் இடம் கொடுக்க -கரவதம் போல்வன நெருங்கிற்று என்று
வருணன் அகஸ்தியர் இடம் கொடுத்து இராமபிரானுக்குக் கொடுக்கச் சொல்ல
அவற்றைக் கொடுத்து பஞ்சவடியில் தங்குமாறு உபதேசித்தார் –

————————–

இராமனை சடாயு போற்றுதல்
‘உந்தை உண்மையன் ஆக்கி, உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக்கொண்டு, தாரணி,
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே!
எந்தை வல்லது யாவர் வல்லார்?’ எனா, 34

சடாயு இராமபிரானை புகழ்தல்
அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்
புல்லி, மோந்து, பொழிந்த கண்ணீரினன்,
‘வல்லை மைந்த!’ அம் மன்னையும் என்னையும்
எல்லை இல் புகழ் எய்துவித்தாய்’ என்றான். 35-

அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன் 8-10-11-

இங்கு பஞ்சவடியில் தங்குமாறு அகஸ்தியர் சொன்னதைச் சொல்ல –
நான் உங்களை வான் வழியே வலி காட்டிக் கொண்டு சென்றனன்
இங்கு திண் சிறை -விரியும் நிழலில் செல்ல -என்ற தொடர்
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-நினைவுக்கு வர பாசுரம் இட்டார் போலும் –

————

கோதாவரி வர்ணனை
வண்டுறை கமலச் செல்வி வான் முகம் பொழிய வாசம்
உண்டுறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின்
தென் திரை கரத்தின் திரு மலர் தூவிச் செல்வர்
கண்டு அடி பணிவது என்னப் பொலிந்தது கடவுள் ஆறு — சூர்ப்பணகைப் படலம்–2-

திருவரங்கப் பெரு நகரில் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடி வருட –பெருமாள் -1-1-

—————-

சூர்ப்பணகையின் வியப்பு
‘சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்;
இந்திரற்கு ஆயிரம் நயனம்; ஈசற்கு
முந்திய மலர்க் கண் ஓர் மூன்று; நான்கு தோள்,
உந்தியில் உலகு அளித்தாற்கு’ என்று உன்னுவாள். 12-

பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு அழிப்பு
சிந்தித் திடுவதும் இல்லை கண்டீர் அத்திசை முகனோடு
உந்திக் கமலம் விரிந்தால் உகக் கடையில்
முந்திக் குவியில் உடனே குவியும் இம் மூதண்டமே –திருவரங்கத்து மாலை-–19-

—————

உடுத்த நீராடையான் உருவச் செவ்வியன்–இராமபிரானின் வர்ணனை

இதைப் பின்பற்றியே மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனார்
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும் -தமித்தாய் வாழ்த்து

————

பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா,
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள்;
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள், செவ்வியள்,
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள். 30

வால்மீகி இராமாயணத்தில் அரக்கி உருவத்தோடு எதிர்பட்டதாக கூறி இருந்தாலும்
இவள் லஷ்மீ மந்த்ரத்தை தியானம் செய்து அழகான பெண் உருவை அடைந்து இராமபிரானுக்கு எதிரே
பஞ்சி ஓளிர் விஞ்ச குளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சா நிமிர் சீறடியளாகி
அஞ்சொல் இள மஞ்ஜை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மக்கள் வந்தாள் -31-அழகிய உருவத்தோடு வந்தாள் -ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் படியே –

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே –பெருமாள் திருமொழி-—10-5–

மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் -33-கலை வணக்கு நோக்கரக்கி-

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே––பெரிய திருமொழி–3-9-4-

தார்க்கு இள தம்பிக்கு அரசு தந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 9-8 –

நுடங்கிடை -இத்யாதி
காம ரூபிணி ஆகையாலே -ஸ்வ வேஷத்தை மறைத்து -அத்யந்த அபிமதமான ஒரு
ஸ்திரீ வேஷத்தை கொண்டு வருகையாலே -நுடங்கின இடையை உடையளான
சூர்பணகயை -தன் அழகைக் காட்டி -என்னை விஷயீ கரிக்க வேணும் -என்று வந்த அளவில் –
பிராட்டியை கண்டு -நமக்கு இவள் ஒரு ஸ்திரீ உண்டு -அங்கே போ -என்று இளைய பெருமாளைக்
காட்ட -அங்கே சென்ற அளவில் -நான் அவருக்கு சேஷ பூதனாய் இருப்பான் ஒருத்தன் -இன்னம்
அவர் பக்கலிலே போ -என்ன
இப்படி உபாலம்பிக்கையாலே அவள் அதிக்ருதையாய் -பழைய வேஷத்தை கொண்டு
எடுத்துக் கொண்டு போகப் புக்க அளவிலே -செவியோடு கூட அவள் மூக்கையும் –
அவள் கதற கதற அறுத்தவனை
ராமஸ்ய தஷிணோ பாஹூ –என்கிற படியே இளைய பெருமாள் கரண பூதர் ஆகையாலே
அறுத்ததில் கர்த்த்ரத்வம் பெருமாளதாக சொல்லுகிறது–மா முனிகள் வியாக்யானம்

ஊக்கித் தாங்கி, விண் படர்வென்’ என்று உருத்து எழுவாளை,
நூக்கி, நொய்தினில் ‘வெய்து இழையேல்’ என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும், முறையால்
போக்கி, போக்கிய சினத்தொடும், புரி குழல் விட்டான். 94–இலக்குவன் சூர்ப்பணகையின் உறுப்பு அறுத்தல்

————

என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி
பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து
நின்றந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து
வண் திண் கைச்சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் –அவள் புலம்பும் பொழுது ராமபிராணன் வந்தமை –

மன்னு மரகதக் குன்றின் மருங்கே –பெரிய திருமடல் -77-

வள்ளலே மது சூதனா என் மரகதமலையே –திருவாய் -2-6-4-

மரகத சைலம் செந்தாமரைக் காடு பூத்துத்
திரை ஏறி கங்கை கை வீசும் திவலையால் நனைந்த செய்ய
இரு குழை தொடரும் வேல் கண் மயிலொடு இருந்த தேய்ப்பப்
பெருகிய செல்வி கண்டார் பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் –யுத்த -திருமுடி சூட்டு படலம் -36–

கரு மாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அரு மாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ––ஸ்ரீ திருவாய் மொழி–8-9-1-

பெருமாள் பிராட்டியுடன் பட்டாபிஷேகம் செய்யும் சேவையை சேவித்தவர்கள் பிறவிக்கடல் கடப்பர்-என்று இவர் அருளிச் செய்தது
திரு வரங்கத்தில் நம்பெருமாள் திரு மஞ்சனத்தை சேவித்து ஈரவாடை தீர்த்தத்தையும் ஸ்வீ கரித்து இருக்க வேண்டும்

மன்னு மரகதக் குன்றின் மருங்கே –பெரிய திருமடல்

உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே –திரு விருத்தம் -85-

————-

செங்கயல் போல் கரு நெடும் கண் தேமரு தாமரை உறையும்
நங்கை இவள் என நெடுநல் நடந்தவரோ நாம் என்னக்
கொங்கைகளும் குழைக் காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால்
அங்கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் -119-

புலக்குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி ஒன்றால்
விலக்குண்டு லாகின்ற வேல் விழிக்கின்றன–திரு விருத்தம் -57-

கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காத்து இரண்டும் ஈரா விடுத்து அவட்க்கு மூத்தோனை –சிறிய திருமடல் -40-

மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு –திருவாய் -6-7-2-

————

துமிலப்போர் வல்லரக்கர்க்குச் சுட்டினாள்
அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமலப் பாத நினைவின் இருந்த அக்
கமலக் கண்ணனை கையினில் காட்டினாள் -15-

கோதறு தம் குலத்துளோர் தொழும் ஆதி யஞ்சோதியை அடி வணங்கினான் –பாலகாண்டம்

தன் திரு உள்ளத்தே தண்ணியே நினைற்றக் குன்றிவர் தோளினான்-என்றும்
ஐயரும் அச்சோர்கேலா ஆயிர மௌலி யானைக் கை தொழுது -என்றும் அயோத்யா காண்டத்திலும் உண்டே –
அமலன் விமலன் நிமலன் நின்மலன் -இவனே பரம் பொருள் என்று பல இடங்களிலும் காட்டி அருளுகிறார் –

வந்தனை முனித்தலைவர்பால் உடையார்; வானத்து
இந்துவின் முகத்தர்; எறி நீரில் எழு நாளக்
கந்த மலரைப் பொருவு கண்ணர்; கழல், கையர்;
அந்தம் இல் தவத் தொழிலர்; ஆர் அவரை ஒப்பார்? 53

‘செந் தாமரைக் கண்ணொடும், செங் கனி வாயினோடும்,
சந்து ஆர் தடந் தோளோடும், தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலத்தொடும், அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும், அவ் வல் வில் இராமன்’ என்றாள். 149-இராவணன்-சூர்ப்பணகை உரையாடல்-

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே –திரு நெடும் தாண்டகம் -21-

———–

சந்திரனும் தன்னைப்போலவே சீதாபிராட்டி அழகைக்கண்டு உடல் தேய்ந்தும் வெளுத்தும் அகம் கருகியும் இருந்தமை –
தேயா நின்றாய் ஒரு நீயும் கண்டார் உள்ளம் கருத்தாய் நிலை திரிந்து
காயா நின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்லக் கேட்டாயோ
பாயா நின்ற மலர் வாளி பிரியா நின்றார் இன்மையால்
ஓயா நின்றேன் உயிர் காத்தற்கு உரியர் யாவர் அவரே யுடுபதியே -114-

நைவாய எம்மே போல் நாண் மதியே! நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந் நீர்மை தோற்றாயே?–2-1-6-

————–

வரும் புண்ட்ரம் வாளியின் மார்புருவிப்
பெரும் புண் திறவா வகை பேருதி நீ
இரும்புண்ட நீர் மீள்கினும் என்நுழையிக்
கரும்புண்ட சொல் மீள்கிலள் காணுதியால் -104-சீதையை மீட்க முடியாது என்கிறான் இராவணன்

நீர் இரும்புண்ட நீரது போல என்னாருயிரை ஆரப் பருகு எனக்கு ஆராவமுதானாயே –திருவாய் -10-10-5–

—————-

பொங்கு வெம் கோளரா விசும்பு ஒத்தன
வெங்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்
அங்கண் மா ஞாலத்தை விளக்குமாய்க் கதித்
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால்-196-
கிரகண காலத்தில் சூர்ய சந்திரர் பீடிக்கப்பட்டு மீளுவது போலே பிறவி -சடாயு சமாதானம் இளைய பெருமாளுக்கு –

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் –பெரிய திருமொழி 1-7-1-

சீதம் கொள் மலர் உளோரும் தேவரும் என்பது என்னே
வேதங்கள் காண்கிலாமை வெளி நின்றே மறையும் வீரன்
பாதங்கள் கண்ணில் பார்த்தான் படிவம் கொள் நெடிய பஞ்ச
பூதங்கள் விளியும் நாளும் போக்கிலா உலகம் புக்கான் -215-
கச்ச யோகான் அநுத்தமான் –பெரிய உடையார் ஸ்ரீ வைகுண்டம் போனமை

கிளித்தன களித்த திருமேனி -223-உடைய இராமபிரான் கண்ணீர் பெறுக ஜடாயுவுக்கு சரம கைங்கர்யம்

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

————-

சான்றவனோ எம் பொருளும் எல்லை நீர் நல்லறத்தை
சான்றவனோ தேவர் தவத்தின் தனிப்பயனோ
மூன்று கவடாய் முளத்து எழுந்த மூலமோ
தோன்றி இரு வினையேன் சாபத் திடர் துடைத்தாய் –கவந்தன் படலம்—

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –பெரிய திருவந்தாதி-–72-

—————-

காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி,
பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்,
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ? –கவந்தன் படலம்-42′

தோய்ந்து பொருள் அனைத்து தோயாது நின்ற சுடர் அன்றோ இவன் –

யாவையும் யாவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் –திருவாய் -3-4-10-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அழியும் அல்லன் 2-5-10-

திரு மா மணி மண்டபத்தில் எழுந்து அருளும் நிலை –
எண்டிசையும் யும் திண் சுவ்ரா வேழுழ் நிலை வகுத்த
அண்டப் பெரும் கோயிலுக்கு எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின் மேன்மேல் என்றும் மலராத
புண்டரீக மொட்டின் பொருட்டே புரை யம்மா -கவந்தன் படலம்-46-

நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்-
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்! –கவந்தன் படலம்–47′

விதியஸ் ச வேதிகா த்வதீய கம்பீர மநோ அநு ஸாரிண–ஆளவந்தார் —

வெறிதே அருள் செய்வான் -நிர்ஹேதுகமாக தனது தாளிணைக் கீழ் சேர்த்துக் கொள்ளும்
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் இங்கே அருளிச் செய்கிறார்

————-

மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக்
காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி,
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்!
நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்?’ என்றான்–கவந்தன் படலம்– 48-

மாயப்பிறவி மயர்வு அறுத்தேனே –திருவாய் -1-7-3-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading