ஸ்ரீ மாந் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரி
வேதாந்தாச்சார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ சீதா பிராடிக்கு தூது
இரண்ட்டு ஆஸ்வாசங்கள்–முதலது-60-ஸ்லோகங்கள் / இரண்டாவ்து -50-ஸ்லோகங்கள்
வம்சே ஜாத ஸவிது அநேக மாநயந் மானுஷத்வம்
தேவ ஸ்ரீமாந் ஜநகதநயாந் வேஷணே ஜாக ரூக
ப்ரத்யாயாதே பவநதநயே நிச்சிதார்த்த ச காமீ
கல்பாகாராம் கதமபி நிஸாம் ஆவிபாதம் விஷேஹே–1-
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றிய சக்கரவர்த்தி திருமகன் -திருவடி திரும்பி வந்து
கண்டேன் சீதை என்று அறிவித்த பின்பு -மிகவும் வருந்தி -அந்த இரவு ஊழிக் காலம் போலே நீண்டு தோன்றியது
கால்யே சேநாம் கபிகில பதே தூர்ணமுத்யோ ஜயிஷ்யந்
தூரி பாவாத் ஜனக துஹிதுர் தூயமான அந்தராத்மா
கிரீடாகேலம் கமல ஸரஸி க்வாபி காலோபாயதம்
ராகா சந்த்ர த்யுதி ஸஹ சரம் ராஜ ஹம்சம் ததர்ச–2-
அந்த சரத்கால காலை வேளையில் ராஜ ஹம்சத்தைக் கண்டான் –
தஸ்மிந் சீதா கதிம் அநி கதே தாத் துகோலே அங்க மூர்த்தவ்
தந் மஞ்ஜீர ப்ரதிம நிநதே ந்யஸ்த நிஸ்ஸபந்த த்ருஷ்ட்டி
வீரச்சேதோ விலயம் அகமத் தந்ம யாத்மா முஹூர்த்தம்
சங்கே தீவ்ரம் பவதி சமயே சாசனம் மீநகேதோ -3-
அவளது நடையை போலவும் அவளது வெண் பட்டு வஸ்திரம் போலவும் அவள் சிலம்பின் த்வனி போலவும்
இருக்கக் கண்டு மூர்ச்சித்தான் -மன்மதன் கட்டளைகள் கடுமையாகவே இருந்தன
லப்த்த ஆஸ்வாசஸ் கதமபி ததா லஷ்மணஸ்ய அக்ர ஜன்மா
சந்தேசேந ப்ரணய மஹதா மைதிலீம் ஜீவ யிஷ்யந்
சக்ரே தஸ்மை ஸரஸி ஜதளை சோபசாராம் சபர்யாம்
காந்தா ஸ்லேஷாத் அதிக ஸூபக காமிநாம் துர்த்த லாப –4-
தூது விட ஹம்சத்துக்கு மரியாதைகளுடன் கூடிய பூஜை செய்தான் –
க்ருத்வா தஸ்மிந் பஹு மதிம் அசவ் பூயஸீம் அஞ்சநேயாத்
காடோந் மாதஸ் ப்ரணய பதவீம் ப்ராப வார்த்தந பிஞ்ஜே
விஸ்லேஷண ஷூபித மநசாம் மேக சைலத்ருமாதவ்
யாஸ்ஞாதைந்யம் பவதி கிமுத க்வாபி சம்வேதநார்ஹே-5-
திருவடியை நினைத்து அறிவற்ற மேகம் மலைகளை தூது விடுவது போலே
அறிவுள்ள ஹம்சத்தை தூது செல்ல விண்ணப்பித்தார் –
வேத உதந்வத் விபஜன விதோ வம்சஜம் விஸ்வமூர்த்தே
ஆஹு சித்தா கமல வாஸதே ஒவ்பவாஹ்யம் பவந்தம்
லப்தம் யேந பிரகுண கதிநா தத் பிரியாயா ஸகாசாத்
தத் சாவர்ண்யம் ஸ்ரவண ரஸநா ஸ்வாத யோக்யா ஸூதா ச –6-
ஹம்சத்தை புகழ்கிறார் -வேதக்கடலை பிரிக்க வல்லமை -ஜகத் சகலமும் சரீரமாக கொண்ட ப்ரஹ்மமும் ஹம்ஸ ரூபி –
நான்முகனுக்கு வாஹனம் -சரஸ்வதியின் வெண்மை நிறம் -வாக்கு அம்ருதம் -ஒழுக்கமான நடத்தை –
சீரிய புத்தி உள்ளமை -இவற்றை எல்லாம் சொல்லி ஸ்தோத்ரம் –
மத்யே கேசித் வயம் இஹ சகே கேவலம் மானுஷணாம்
வ்யக்த உத்கர்ஷ மஹதி புவநே வ்யோமகாநாம் பதிஸ்த்வம்
ஸ்த்தாநே தூத்யம் தத் அபி பவதஸ் சமஸ்ரித த்ராண ஹேதோ
விஸ்வ ஸ்ராஷ்டா விதிரிபி யதஸ் ஸாரதித்வேந தஸ்தவ் –7-
மனுஷ்யர் இன்ப துன்பங்களை உனதாக கொள்ளும் -அரசர்களை போன்ற ராஜ ஹம்சமே-
உன்னை அண்டியவர்களது ரக்ஷணம் உன் பரம் அன்றோ
திரிபுர அஸூர யுத்தத்தில் நான்முகன் தேர்ப்பாகனாய் இருந்தான் அல்லவா –
இச்சா மாத்ராத் ஜகத் அபராத ஸம்விதாதும் ஷமாணாம்
இஷ்வாகூணம் ப்ரக்ருதி மஹதாம் ஈத்ருஸீம் ப்ரேஷயே வேளாம்
லஷ்ய அலஷ்ய ஜலதி பயஸா லப்த ஸம்ஸ்த்தாம் த்ரிகூடே
லங்காம் கந்தும் தவ சமுசிதம் ராக்ஷஸீம் ராஜதாநீம் –8-
என்னைத் தூது அனுப்பி என்ன பயன் என்ன
எனது குலமான இஷ்வாஹு குலத்தின் மேன்மை
உனக்கு கடல் தாண்டி செல்ல பலம் அளிக்கும் –
திரிகூட மலையில் அமைந்துள்ள இலங்கைக்கு நீ செல்வது ஏற்றதாகும் –
ஸ்தாநை திவ்யை உபாசித் குணாம் சந்தன அரண்ய ரம்யாம்
முக்தா ஸூதிம் மலய மருதாம் மாதரம் தக்ஷிணாசாம்
அஸ்மத் ப்ரீத்யை ஜநக தநயா ஜீவதார்த்தம் ச கச்சந்
ஏகம் ரக்ஷ பதம் இதி சகே தோஷ லேஸம் சஹேதா–9-
நீ செல்லும் தெற்கு தேசம் திவ்ய தேசங்களால் நிறைந்தவை -சந்தனக்காடு நிறைந்து -முத்துக்கள் பிறப்பிடம் -தென்றலுக்கு தாய் –
இருந்தாலும் அரக்கர்களால் நிறைந்த இடம் -எங்களுக்காக அவர்கள் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வாயாக –
வாசலாநாமிவ ஜடதியாம் ஸத்வகவ் தூரயாதே
கைலாஸாய த்வயி கதவதி ஷீபதாம் ஆஸ்ரிதாநாம்
சம்மோதஸ்தே பதி பரிணமேத் சந்த்ரகை உஜ்ஜிதாநாம்
மேகாபாயே விபிநசிகிநாம் வீஷ்ய வாஸம்யமத்வம் -10-
அரசன் இல்லா நாட்டில் அராஜகம் தலையெடுத்து ஆடும் -நீ முன்பு கைலாசம் சென்ற போது மயில்கள் கோகோ என்று கத்தி ஆடின
மழைக்காலம் நீங்கி சரத்காலம் வந்ததும் தோகை இழந்து கத்தாமல் இருப்பது கண்டு நீ வந்து கண்டு மகிழ்ந்தாய்
ஆரக்தாநாம் நவமது சநைர் அபிபந் பத்மிநீநாம்
காலோந் நித்ரே குவலய வநே கூர்ண மாநஸ் சலீலம்
ஸ்விந்நோ தாநைர் விப நகரிநாம் ஸுவ்ம்ய சேவிஷ்ய த்வாம்
ஆமோதாநாம் அஹம் அஹம் இகாம் ஆதிசந் கந்தவாஹா -11-
காற்று தாமரை-குவளை – மலர்த் தேனை பருகி மயங்கி அங்கும் இங்கும் அலைந்து-
நீ செல்லும் வழிகளில் உனக்கு உபசாரம், செய்து வணங்கி நிற்கப் போகிறது –
பர்யாப்தம் தே பவந சலிதை அங்க ராகம் பராகை
ஸ்தாநே குர்யுஸ் சமசமுதயாத் பந்தவோ பந்து ஜீவா
யேந அந்வேஷ்யசி அசலதநயா பாதலாஷா அநு ஷக்தம்
சூடா சந்த்ரம் புரவிஜயிந ஸ்வர்ணதீ மேந பூர்ணம் -12-
உன் போன்ற வண்மை நிறம் கொண்ட பஞ்சு -பருத்தி மரங்கள் நீ செல்லும் வழியில் உள்ளன
காற்று மலர்களின் துகள்களை உன் மேலே வீச சற்றே சிவந்த நிறம் ஆக்குகின்றன
சிவந்த கங்கை நீரால் நனைக்கப்பட்ட சிவனது சிரஸ் போலே விளங்குகிறாய்-
கங்கையின் வெண்மையான நுரை பிறைச் சந்திரன் போலே விளங்க -ப்ரணய கலஹத்தால் சிவன் பார்வதியை வணங்க-
அவள் பாதத்தில் உள்ள சிவந்து சாறு படுவது போன்று உள்ளாய் –
ஸூஷ்ம ஆகாரை திநகரகரை கல்பித அந்தச் சலாகா
சார உபாந்தா சதமக தநுச் சேஷ சித்ராம் சுகேந
ஊடா பச்சாத் உசித கதிநா வாயுநா ராஜ ஹம்ஸ
சத்ராயேரந் நபசி பவத சாரதா வாரிவாஹா -13-
சரத்கால வெண்மையான மேகங்கள் குடையின் நுனி போலவும் -ஸூர்ய கதிர்கள் உட்கம்பிகளாகவும் –
நாநா வர்ண இந்த்ரவில் அதன் மேல் உள்ள சீலைகளாகவும் இருக்க -காற்றால் தள்ளப்பட்டு இந்த குடை
நீ செல்லும் வழி எங்கும் உனது நடைக்குத் தக்கவாறு உன் மேல் விரித்தபடி வந்து கொண்டே இருக்கும் –
த்ரய சி ஏவம் பிரிய சக ஸூகம் சங்கம் லங்கிதாத்வா சகீம் தே
ஸீதாம் க்ஷேத்ரே ஜநக ந்ருபதே உத்திதாம் சீரக்ருஷ்டே
கோபாயந்தீ தநுமபி நிஜாம் யா கதஞ்சித் மதர்த்தம்
பூமவ் லோகே வஹதி மஹதீம் ஏக பத்நீ சமாக்யாம்-14-
எனக்காகவே வாழ்ந்து இருக்கும் உனது தோழியான ஸ்ரீ சீதா பிராட்டியைக் காண்பாய் –
ப்ரஷீணாம் த்வத் விரஹ சமய ஜாத ஹர்ஷாம் இதாநீம்
ப்ரத்யாயாஸ்யந் அநுநய சநை பத்மிநீம் ஸ்வாதுவாச
சா தே தந்த்ரீ ஸ்வநஸூபகயா ஸ்யாத் இதி இஹ அப்யநுஜ்ஞாம்
மந்யே குர்யாத் மதுகரகிரா மைதிலீ ஸுவ்ஹ்ருதே ந -15-
நான் சென்றதும் எனது காதலியான தாமரையும் வாடுமே என்ன -விரைவாக திரும்பி வருகிறேன் என்று சொல்லிச் செல்வாயாக
தாமரை ஸ்ரீ சீதாப் பிராட்டியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதே -வண்டின் ரீங்காரம் மூலம் சம்மதம் அளிப்பாளே-
சார்த்தம் காந்தை சபர ஸூத்ருசாம் அத்ரி குஞ்சேஷு ராகாத்
ஆஸீநாநாம் க்ஷணம் அஸமயே த்ருஸ்ய சந்த்ரோதய ஸ்ரீ
உட்டீ யேதா சரஸிஜவநாத் தக்ஷிணா ஆசா அநுசாரீ
பஸ்யன் தூராத் பிரபல க்ருதாம் பஷீணாம் தத்த வர்த்மா-16-
நீ செல்லும் பொழுது வேகமாக பறக்கும் கருடன் போன்ற பறவைகளுக்கு வழி விட்டுச் செல்வாயாக
உன்னைக் காணும் காதலர்கள் அகால சந்திரன் என்று பிரமிப்பார்கள்
தென் திசையை நோக்கி தாமரைக் காட்டை விட்டுப் புறப்படுவாயாக –
அங்கீ குர்வன் அம்ருத ருசிராம் உத்பதிஷ்ணோ சலீலம்
சாயாம் அந்தஸ் தவ மணி மயோ மால்யவான் ஏஷ சைல
சோபாம் வஷ்யதி அதிக லளிதாம் சோபமாநாம் அதீந்தோ
தேவஸ்யா ஆதே உப ஜநயதோ மாநசாத் இந்து பிம்பம் –17-
இரத்னமயமான மால்யவான் மலை மேலே தங்காமல் பறந்து செல்வாயாக -உனது நிழல் சந்த்ர பிம்பத்தை விட
மேலாக அந்த மலையிலே விழும் -சந்திரன் அவன் மனம் மூலம் உருவாக்கப்பட்டது –
இங்கு பெருமாள் திருக்கரமும் பட்டு அவன் திரு உள்ள எண்ணத்தை தூதாக எடுத்துச் செல்வதால் ஏற்றம் உண்டே இங்கு –
மார்க்கவ் சம்யக் மம ஹநுமதா வர்ணிதவ் த்வவ் தாயோஸ்தே
ஸஹ்ய ஆசந்ந அபி அநதி ஸூபக பச்சிமோ நித்ய வர்ஷ
ப்ராஸீநே து பிரதி ஜநபதம் சம்ஹதவ் அத்புதாநாம்
மக்நா த்ருஷ்டி கதமபி சகே மத்க்ருதே தே நிவார்யா -18-
மால்யமான் மலைக்குப் பின்னர் மேற்கு நோக்கிச் செல்லும் பாதை நீ செல்ல வேண்டிய சஹ்யமலைக்கு அருகில் இருந்தாலும்
அந்தப்பாதையில் எப்பொழுதும் மழை பொழிந்தபடியே இருக்கும் -ஆகையால் அது வழியாகப் போகாமல்
கிழக்கே நோக்கிச் செல்வாயாக
அங்கு காணத் தக்கவை பலவும் இருந்தாலும் அதில் கண் வைக்காமல் எனக்காக விலக்கி விரைந்து செல்ல வேண்டும் –
ச்ருத்வா சப்தம் ஸ்ரவண மதுரம் தாவகம் பாமரீனாம்
பிரத்யாசந்நாத் சபதி பவநாத் சாதரம் நிர்கதாநாம்
அப்ரூ பங்கே அபி அதிக ஸூபகை நிச்சி தாங்க கடாஷை
தேசாந் ஏதாந் வநகிரி நதீ சம் விபக்தான் வ்யதீயா–19-
உனது இனிய குரலைக்கேட்டு உன்னைக் காண வெளியில் வந்து ஆசையுடன் காண்பார்கள் -புருவம் நெரிப்பார்கள் –
நீ காடு மலை ஆறு இப்படி பிரிவுகளுடன் கூடிய தேசங்களைக் கடப்பாயாக –
இஷுச் சாயே கிசலயமயம் தல்ப்பம் ஆதஸ்த்து ஷீணாம்
சம்லாபை தைர் முதிதமநசாம் சாலி ஸம்ரக்ஷிகாணாம்
கர்ணாட ஆந்திர வ்யதிகர வசாத் கர்புரே கீதி பேதே
முஹ்யந்தீ நாம் மதந கலுஷம் மௌக்த்யம் ஆஸ்வாதயேதா-20-
நீ செல்லும் வழியில் கன்னட ஆந்திர தேசம் இணைப்பிடம் வரும் -செந்நெல் பயிர்களை காக்கும் பெண்கள்
கரும்பு நிழலில் அமர்ந்து கானம் செய்து இருப்பர் -அவர்களது அழகை அனுபவித்தபடி நீ தொடர்ந்து செல்வாயாக –
விஷ்ணோர் வாஸாத் அவநிவஹநாத் பத்தரத்நை சிரோபி
சேஷஸ் சாஷாத் அயமிதி ஜநை சம்யக் உந்தீயமாந
அப்ரைர் யுக்தோ லகுபி அசிர உந் முக்த நிர்மோக கல்ப்பை
அக்ரே பாவீ ததநு ரஞ்ஜயன் அஞ்ஜநாத்ரி-21-
திருமலை வர்ணனை இது முதல் தொடக்கம் -ஆதி சேஷனே திருமலை -மேற்கில் தலைப்பக்கம் கிழக்கில் வால் பக்கம் –
கண்களுக்கு மகிழ்வை உண்டாக்கும் திருமலை உனக்குத் தோன்றும் –
தத் ஆரூடை மஹதி மநுஜை ஸ்வர்கிபி ச அவதீர்னை
சத்வ உந் மேஷாத் வ்யபகதமித தாரதம்ய ஆதி பேதை
சாதாரண்யாத் பல பரிணதே சங்க்கஸோ பத்யமாநாம்
சக்த்யா காமம் மது விஜயிந தவம் ச குர்யா சபர்யாம் -22-
திருமலையில் சத்வ குணம் வளரும் -மண்ணோரும் விண்ணோரும் ஆராதனை செய்யும் வெற்பு-
ஸ்தோக உந்மக்ந ஸ்புரித புளிநாம் த்வத் நிவாஸ இச்சயா இவ
த்ரஷ்யஸி ஆராத் கநக முகரீம் தக்ஷிணாம் அஞ்ஜநாத்ரே
ஆசந்நாநாம் வநபிட பிநாம் வீஸீ ஹஸ்தை ப்ரஸூநாநி
அர்ச்சா ஹேதோ உபஹரதி யா நூநம் அர்த்த இந்து மவ்ளே -23-
திருவேங்கட மலைக்கு தென் திசையில் ஸ்வர்ண முகரி நதியை காண்பாய்-சிவ க்ஷேத்ரம் காளஹஸ்தி –
ஸ்ரீ நிவாஸனை பூஜை செய்ய மலர்களை கொண்டு வந்து சிவன் இடம் கொடுக்கும் நதி-
நிர்விஸ்ய ஏநாம் நிப்ருதம் அநபி வ்யக்த மஞ்ஜு ப்ரணாத
மந்த ஆதூத புளிந பவநை வஞ்ஜூள ஆமோத கர்ப்பை
அவ்யா சங்க சபதி பதவீம் ஸம்ஸ்ரய ஆந்யை அலங்க்ய
பந்தீ குர்யு தடவசதய மா பவந்தம் கிராதா -24-
அங்கு மந்தமாருதம் அனுபவித்து இளைப்பாறுவாய் -அங்கு வேடர்கள் இருப்பார்கள்
அவர்கள் காணும் முன்பு உயர்ந்த இடத்தில் பறந்து விரைவில் செல்வாயாக –
துண்டீர ஆக்யம் ததநு மஹிதம் மண்டலம் வீஷமாணா
க்ஷேத்ரம் யாயா ஷிபத துரிதம் தத்ர சத்யவ்ரத ஆக்யம்
பத்யவ் ரோஷாத் சலில வபுஷோ யத்ர வாக் தேவதயா
சேது ஐஜ்ஜே சகல ஜெகதாம் ஏக சேது ச தேவ -25-
பின்பு தொண்டை மண்டலம் -சத்யவ்ரதம் -ஸ்ரீ காஞ்சி தேவராஜன் சேவை —
வேகா சேது -சம்சாரக்கடலை கடக்க ஒரே சேது அன்றோ தேவாதி ராஜன் –
சேது -அணை என்றும் பாலம் என்றும்
பிரமத சேது -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-30-
ய ஆத்மா ச சேது -சாந்தோக்யம் -8-4-1-
அம்ருதஸ்ய பரம் சேது -ஸ்வேதாஸ்வர-6-19-
அம்ருதஸ்யைஷ சேது -முண்டகம் -2-2-5–
நாநா ரத்னை உபசி குணாம் நித்ய சங்கீத நாதாம்
பூமே த்ரஷ்யஸி உசித விபவம் பூஷணம் தத்ர காஞ்சீம்
யஸ்யாம் நித்யாம் நிஹித நயன ஹஸ்தசைல ஆதி வாஸீ
த்வந்த்வ ஆதீத ச கலு புருஷ த்ருச்யதே சத்யகாம -26-
பூமிக்கு ஒட்டியாணம் போன்ற காஞ்சீ
திவ்யதேச -தேவாதி ராஜனின் வர்ணனை –திவ்ய தேசங்கள் நாந வித ரத்னா வர்ணனை –
புருஷன் என்று பரத்வம் -த்வந்தம் என்று சங்கர்ஷணாதி வ்யூஹம் -விபவமும் இதில் உண்டே
நாதம் என்று அந்தர்யாமி -இரத்தினங்கள் என்று அர்ச்சா திவ்ய தேசங்கள்
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதன் ஐந்து நிலைகளையும் காட்டி அருளுகிறார் என்றபடி –
தாம் ஆஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்த்நா
ஜாதாம் ஆதவ் க்ருதயுக முகே தாது இச்சாவசேந
யத் வீதீநாம் கரிகிரிபதே வாஹ வேக அவதூதாந்
தந்யாந் ரேநூந் த்ரிதசபதயோ தாரயந்தி உத்தம அங்கை -27-
க்ருதயுக தொடக்கத்தில் விஸ்வகர்மாவால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட திவ்யதேசம் –
ஹஸ்திகிரி பேர் அருளாளன் வாகனங்களால் எழும்பிய துகள்கள் புனிதமாக்கும்
த்ரிதசபதயோ-பால்யம் யவ்வனம் கௌமாரம் மூன்று மட்டுமே கிழத்தன்மை இல்லாத தேவர்கள்
இந்த தூசி துகள்களை தலையின் மேல் கொள்கிறார்கள் –
மந்த ஆதூதாத் ததநு மஹிதோ நிஸ் ஸ்ருதச் சூத ஷண்டாத்
பார்ஸ்வே தஸ்யா பசுபதி சிரச்சந்த்ர நீஹார வாஹீ
தூராத் பிராப்தம் ப்ரியசகம் இவ த்வாம் உபேஷ்யதி அவஸ்யம்
கம்பா பாத கமல வநிகா காமுகோ கந்த வாஹ-28-
இந்த காஞ்சி திவ்ய தேச -ஸ்வயம்பூ மா மரம் -ஏகாம்பரேஸ்வரர் தலையில் சந்திரன் பனித்துளியைக் கொண்டு
வரும் காம்பை ஆற்றில் உள்ள தாமரைக்காட்டு நறு மணம் முகந்து வரும் காற்று
உன்னை நண்பனாகவே பார்த்து உன்னை நெருங்கி வரும் –
வர்ணஸ் தோமை இவ பரிணதா சப்த பேதை மஹவ்கை
மாந்யா மத்யே நகரம் அபித ஸேவிதா தேவதாபி
ஸ்வச்ச ஸ்வாது ப்ரசர ஸூபகா ஸ்வாமிநீ வ கவீநாம்
வேகா சம்ஜ்ஞாம் வஹதி மஹதீம் வல்லபா பத்மயோநே –29-
சரஸ்வதி உனது இனிய துணைவி -வேகவதி நதியாகவே அவள் உள்ளாள் –
ஏழு விதமான எழுத்துக்கள் -உயிர் எழுத்துக்கள் -கவர்க்கம் -சவர்க்கம் -டவர்க்கம் -தர்க்கம் -பவர்க்கம் மற்றும் யகரம் போன்றவை –
சுத்திகை -கநகை -ஸ்ருப்ரை -கம்பை -வேகை -வஞ்ஜூளை -சண்டை வேகை -என்ற ஏழு பிரிவுகள் வேகவதி நதிக்கும் உண்டே –
தீர்த்தே பும்ஸாம் சமிதகலுஷ தத்ர ஸாரஸ்வத ஆக்யே
ஸ்நாத்வா சார்த்தம் முநிபி அநகை சம்யக் உல்லாச தாங்க
விஸ்வம் சித்தே விகதரஜசி வியஞ்ஐயிந்திம் அசேஷம்
வஷ்யஸி அந்தர் பஹிரபி பராம் சுத்தும் அஷேபணீயாம்–30-
வேகவதி ஆற்றில் நீராடி முனிவர்கள் ரஜோ குணம் நீங்கி சத்வ குணம் வளர்த்து வருவர்–
நீயும் நீராடி உள்ளும் புறமும் தூய்மையை அடைவாயாக –
தஸ்யா தீரே சரஸிஜபுவ ஸுவ்மய வைதாந வேதி
திவ்யம் குர்வன் த்ரமிட விஷயம் த்ருச்யதே ஹதிஸைல
யஸ்ய உபாந்தே க்ருதவசதய யாபயித்வா சரீரம்
வரித்திஷ்யந்தே விதமஸி பதே வாஸூ தேவஸ்ய தந்யா -31-
அஸ்வமேத யாகத்துக்கு உரிய மேடையாக -வேதி -வேகவதியின் கரையில் உள்ள ஹஸ்திகிரி
தென் தேசம் முழுவதுமே திவ்ய தேசமாக ஆக்கியபடி உள்ளதோ என்று என்னும் விதமாக உள்ளது –
இந்த முக்தி தரும் ஷேத்ரத்தில் நித்ய வாசம் செய்து இன்புற்று வாழ்ந்து முக்தராவார் –
சஞ்சிந்வாநா தருண துளஸீ தாமபி ஸ்வாம் அபிக்யாம்
தஸ்யாம் வேத்யாம் அநு விதததீ ஸ்யாமளம் ஹவ்யவாஹம்
போக ஐஸ்வர்யனபிரிய ஸஹ சரை கா அபி லஷ்மீ கடாஷை
பூயஸ் ஸ்யாமா புவந ஜநீ தேவதா சந்நிதத்தே -32-
ஹஸ்திகிரி பேர் அருளாளன் வர்ணனை –
லஷ்மீ வித்யுத் லலித் வபுஷம் தத்ர காருண்ய பூர்ணம்
மா பைஷீ த்வம் மரகத சிலாமேசகம் வீஷ்ய மேகம்
ஸூத்தைஸ் நித்யம் பரிசித பதஸ் த்வாத்ருசை தேவ ஹம்சை
ஹம்சீ பூத ச கலு பவதாம் அந்வவாய அக்ர ஜன்மா –33-
பெரியபிராட்டியார் உடன் மிதுனமாக இவனைக் கண்டு மேகம் என்று அஞ்சாதே –
ஹம்ஸரூபியாக அவன் உங்களுக்கு மூத்தவன் அன்றோ –
சார ஆஸ்வதீ ஸவநஹ விஷாம் ஸ்வமிநஸ் தே ச தேவஸ்
ஸூத்தம் சஷுஸ் ஸ்ருதி பரிஷதாம் சஷுஷாம் பாகதேயம்
அங்கீ குர்யாத் விநதம் அம்ருத ஆசார சமவாதிபிஸ் த்வாம்
ஆவிர் மோதை அபிமத வர ஸ்தூல லஷைஸ் கடாஷைஸ் –34-
வரதன் அனுபவம் -வேதங்களுக்கும் கண் போன்றவன் -தேவாதிராஜன் –
கடாக்ஷ லேசத்தாலே அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் அளித்து அருளுவான் –
மது ஆசிக்தம் சரஸிஜம் இவ ஸ்வந்நம் ஆலம்பமாந
தேவ்யா ஹஸ்தம் தத் இதர கர ந்யஸ்த லீலாரவிந்த
தேவஸ் ஸ்ரீமாந் ச யதி விஹரேத் ஸ்வைரம் ஆராமபூமவ்
வ்யக்தோ வாலவ்ய ஜநவபூஷா வீஜயே தம் த்வம் ஏவ –35-
அந்த வரதன் தோட்டத்தில் பிராட்டியுடன் ஏகாந்தமாக அமர்ந்து அவளது திருக்கரங்களைப் பிடித்துக் கொண்டு உலவுகிறான்
உனது சிறகால் சாமரம் வீசி தென்றல் காற்று அந்த மிதுனத்துக்கு ஆஸ்வாசம் படும்படி கவரி வீசி கைங்கர்யம் செய்ய வேண்டும் –
ஜாத பிரிதி ஜன பதம் அதோ மத்யமம் சங்கயித்வா
தூராத் லஷ்யே க்ரமுக நிர்வாக ஸ்யமளாந் யாஹி சோளாந்
ப்ரத்யுத் கச்சத் மகர வலந ஸ்தம்பிதைஸ் ஸஹ்ய ஜாயாஸ்
ஸ்ரோதோ பேதை விவித கதிபி சம் விபக்த அவகாசாந் -36-
இதில் சோழ நாட்டு வர்ணனை –கறுத்த பாக்குமர வரிசை -காவேரி நீர் பெருக்கு-அசையாமல் உள்ள அலைகள் –
சந்த்யா ராகம் ஸூரபி ரஜநீ சம்பவை அங்க ராகைர்
கேஸைர் ஜ்யோத்ஸ்நா கலஹி திமிரம் பாலிகா ஆபீட கர்ப்பை
ஆபி பிராணா சரஸிஜ திருச ஹம்ஸ டோளாதி ரோஹாத்
ஆதாஸ் யந்தே மதகலகிரஸ் தே ஷு நேத்ரோத்ஸவம் தே —
சோழ நாட்டு பெண்கள் தாமரைக் கண்கள் -மஞ்சள் பூசிய மேனி -அந்திப் பொழுது போன்ற நிறம் –
தலையில் பாக்குமலர் சூடி இருந்த குழலில் நிலவு போலே இருக்கும் –
இளமைக்கு ஏற்க இனிய சொற்களைப் பேசுவார்கள் –
அவர்கள் ஊஞ்சல் ஆடியபடி இருப்பதை பார்க்கவே உனக்கு இன்பம் பயக்கும் –
ப்ருத்வீ லீலா திலக ஸூபகம் பச்சிமம் பாகம் ஏஷாம்
நாம்நா வர்ஷம் ஜலசர நதீம் ஆத்ருகம் காஹாமாந
த்ரஷ்யஸி ஆராத் பரிமித தயா மக்ந கைலாச த்ருஸ்யம்
ஸ்வேதம் சைலம் பணிபதம் இவ ஷ்மாலாத் உஜ்ஜிஹாநம் -38-
திருவெள்ளறை திவ்ய தேச அனுபவம் -மேற்கு திசையில் -பூமி தனக்கு இட்டுக் கொள்ளும் திலகம் போன்று
பூமியில் இருந்து மேலே எழும் ஆதி சேஷன் போன்ற திருவெள்ளறை திவ்ய தேசத்தைக் காண்பாயாக –
ஸ்பார ஆலோக பிரசமித தம சஞ்சயம் ததர பும்ஸாம்
ப்ரத்யக் ரூபம் ப்ரகுண விபவம் ப்ரார்த்தநீயம் பூதாநாம்
நேதீ யாம்சம் குசல நிவஹம் நந்துராதாஸ்யதே தே
திவ்யம் தேஜோ ஜலதி தநயா ஸ்நேஹ நித்ய அநு ஷக்தம்–39-
புண்டரீகாக்ஷணனின் வர்ணனை -திவ்ய தேஜஸ் -மிதுன கடாக்ஷ லேசத்தால் சர்வ புருஷார்த்தங்களையும் அளிப்பவன் –
அனைத்தும் இவன் அதீநம் -நீ இவனை வணங்கு சர்வ நன்மைகளையும் பெறுவாய் –
ஸ்நிக்தச் சாயம் ததநு விததம் தஸ்ய தாமேவ நீலம்
நீலீ ரஷா நியத லளிதம் காநநம் சம்விசீயா
த்ருஷ்டே தஸ்மிந் அநிமிஷ வதூ நித்ய நிர்வேச யோக்யே
ஸ்வர்க உத்யான ஸ்ரியம் அபி லகும் மம்ஸ்யதே மாநஸம்–40-
திருவெள்ளறைக்கு மேற்கே உள்ள காட்டு வர்ணனை -அவன் திவ்ய மங்கள விக்ரஹம் போன்ற நீல நிறம் –
விஸ்தாரம் -நீலீ அரக்கியால் ரக்ஷணம் -இங்குள்ள கனிகள் மலர்கள் ஸ்வர்க்கத்தில் உள்ளவை போலவே இருக்கும் –
குர்வன் நாநா குஸூம ரஜசா யத்ர சித்ரம் விதாநம்
பூக ஆரண்யே ம்ருது விசலயந் பாலிகா சாமராணி
பாத ந்யாஸ க்ஷமம் அவகிரந் ஷமாதலம் புஷ்ப ஜாலை
பிரயோ வாயு ப்ரிஜந விதிம் பஞ்ச பானஸ்ய தத்தே -41-
அந்த கணத்தில் மலர்களின் தாதுக்கள் மேலாப்பு போலே -பாக்கு மரங்கள் பாலைகள் சாமரங்கள் வீச –
மலர்க்குவியல் அலங்காரம் -மன்மதனுக்கு தொண்டு புரியும் கானத்தை விரும்பி
தேவ ஸ்த்ரீகள் அனுபவிக்க விரும்புகிறார்கள் –
ஸ்ரேதோ வேகாத் அத ஜநபதம் ஸுவ்ம்ய ஸீமந்தயந்தீ
பிரத்யா தேசோ விபுத சரித ஸ்யந்ததே ஸஹ்ய கந்யா
காலே காலே பரிண திவசாத் பர்வ பேத அவகீர்ணை
புண்ட்ரே ஷுணாம் புளிந விசதை கத்கதா மௌக்தி கௌகை -42-
காவேரி வர்ணனை -கங்கையில் புனிதம் -கரும்புகள் முதிர்ந்து முத்துக்கள் வெடித்து வெண்மை முத்து குவியல் –
ஸஹ்ய மலையின் பெண் தேசத்துக்கு வகுடு போலே தோன்றி பெருகுகிறாள் –
ஸஹ்ய உத்ஸங்காத் சபதி மருதா சாகரம் நீயமாநாம்
பத்ர ஆலாபைர் விஹித குசலாம் த்வாத்ருசாநாம் த்விஜாநாம்
யாம் அஸ்கந்நா சரஸ குஹளீ பத்ரபாதைர் நிசாந்தே
மந்தஸ் மேராம் மது பரிமளை வாசயந்தீவ பூகா–43-
தந்தையான ஸஹ்ய மலையின் மடியில் இருந்து கணவனான கடலுக்கு செல்லும் காவேரிக்கு
உன் போன்ற பறவைகளின் ஆசீர் மங்களகரம்
பாக்குப்பூ மடல் புன்சிரிப்பு -தேன் நறு மணம் வாசனைப் பொருள்கள் காவேரியை நறு மணம் செய்கின்றன –
சந்த்ர உல்லா -தஸ்மிந் த்ரஷ்யஸி அமர மஹிளா மௌளி கந்த்யை அவந்த்யாம்
ஆதன்வாநாம் வ்ய பக்த ரசம் மாநசே மாநசம் வ
தீர்தை அந்யை அபி பரிகதாம் சுத்தி ஹேதோ சமந்தாத்
சந்த்ர உல்லாக பிரதி தயசச சம்பதம் புஷ்கரிண்யா–44-
திருவரங்க வர்ணனை -சந்த்ர புஷ்கரணி-மானஸப் பொய்கையில் ஹம்ஸங்கள் விளையாட –
மனஸ்ஸூ விஷயாந்தரங்களில் செல்லாமல் இருக்கும்படி செய்ய வல்ல தூய்மை –
புண்ணிய தீர்த்தங்கள் கைகர்யம் செய்ய காத்து இருக்கும் சந்த்ர புஷ்கரணி–
தீரே தஸ்யா விரசித பதம் சாதுபி ஸேவ்யமாநம்
ஸ்ரத்தா யோகாத் விநமித தநு சேஷ பீடம் பஜேதா
யஸ்மின் அஸ்மத் குலதந தயா ஸுவ்ம்ய சாகேத பாஜ
ஸ்த்தாநம் பாவ்யம் முநிபி உதிதம் ஸ்ரீமதோ ரெங்கதாம் ந –45-
சந்த்ர புஷ்கரணி கரையில் ஆதி சேஷன் ஆசனம் -குல தனம் ஸ்ரீ ரெங்க விமானம் -ஸ்ரீ அரங்கன் பின்பு வருவான் –
சத்வே திவ்யே ஸ்வயம் உதயத தஸ்ய தாம்ந பிரசங்காத்
மஞ்ஜூஷாயாம் மரகதம் இவ பிரஜாமாநம் ததந்த
சேதோ தாவதி அபஹித புஜம் சேஷ போகே சயாநம்
தீர்க்க அபாங்கம் ஜலதி தநயா ஜீவிதம் தேவம் ஆத்யம் -46-
ஸ்ரீ ராமபிரான் தம்மிடம் உள்ள ஸ்ரீ ரெங்க விமானம் எண்ணியதை வர்ணிக்கிறார் –
சத்வ குணம் விளங்கும் இந்த இடத்தில் வருவதை உணர்கிறார்
தங்கப்பெட்டியில் மரகத மணி போலே ஆதி சேஷன் உடலில் புஜத்தை தலை அணையாக ஆக்கிக் கொண்டு சயனித்து
நீண்ட அப்பெரிய வாய திருக்கண்கள் -பெரிய பிராட்டியாரின் உயிருமான ஸ்ரீ ரெங்க நாதனை குறித்து சிந்தனை –
சோர ஆக்ராந்தம் ததநு விபநம் சோழ பாண்டிய அந்தரஸ்தம்
ஜில்லீ நாத ஸ்ரவண பருஷம் சீக்ரம் ஏவ வ்யதீயா
தீர்ணே தஸ்மிந் ப்ரகடய சகே சீதளாம்ச நிநாதாந்
ஸப்தா யந்தே ந கலு கவய சந்நிதவ் துர்ஜநாநாம் –47-
பின்பு காட்டைக் கடப்பாயாக -கடந்த பின்பு உன் குளிர்ந்த சப்தம் எழுப்புவாய் –
கவிகள் அறிவற்றவர்கள் சந்நிதியில் வாய் திறக்க மாட்டார்களே –
ஸ்ரஸ்தா பீடம் பிரசலத் அளகம் வ்யக்த தாடங்க ரத்னம்
முக்தா சூர்ண ஸ்ப்புரித திலகம் வக்த்ரம் உத்தாந யந்த்ய
தேசே தஸ்மிந் குவலய த்ருச ஜாதகவ் தூஹலாஹாஸ் த்வாம்
மாலா தீர்க்கை மதுர விருதம் மாநயிஷ்யந்தி அபாங்கை-48-
உனது இனிய குரலைக் கேட்டு பெண்கள் உன்னைக் காண ஆசையுடன் வருவார்கள் –
அவர்கள் காது அணி ஒளி வீச உன்னைக் கடாக்ஷித்து கௌரவிப்பார்கள் –
நித்யாவாசம் வ்ருஷபம் அசலம் ஸூந்தர ஆக்யஸ்ய விஷ்ணோ
பிரத்யா சீதந் சபதி விநமத் பாகதேயம் நத ஸ்யா
யஸ்ய உத்ஸங்கே பலி விஜயிந தஸ்ய மஞ்ஜீர வாந்தம்
பாத திவ்யம் பசுபதி ஜடா ஸ்பர்ச சூன்யம் விபாதி -49-
திருமாலிருஞ்சோலை வர்ணனை -வ்ருஷபாசலம் திருமலையை வணங்கு
அங்குள்ள நூபுர கங்கை சிவன் தலை ஸ்பர்சம் இல்லாமல் நேராக இங்கு வந்தது –
ஈஸாத் அஸ்த்ராணி அதிகதவதாம் க்ஷத்ரியானாம் ப்ரவாவாத்
காரா வாச ஸ்மரண சகிதை சிக்த ஸஸ்யாந் பயோதை
பஸ்யன் யாயா பரமலகயா ஸ்பர்த்த மாநை அஜஸ்ரம்
புண்யா வாசை புரஜந பதை மண்டிதாந் பாண்டிய தேசாந்-50-
இந்திரன் ஆசனத்தில் பாண்டிய மன்னன் அமர கோபித்து உதவாமல் இருக்க பாண்டிய மன்னன் மேகங்களை சிறை வைக்க
அஞ்சிய இந்திரன் வேண்டிய மழை பொழிய உத்தரவிட்டான்
பாண்டிய மன்னர்கள் சிவன் இடம் அஸ்த்ரங்களைக் கற்றனர் -அவர்களைக் கண்டு மேகங்கள் அஞ்சி
மழையை பொழியும் -பயிர்கள் செழிப்பு –
குபேர நாட்டு செல்வதுடன் போட்டி -புண்ய புருஷர்கள் வாசம் -நாடு நகரங்களால் அலங்கரிக்கப்பட்ட பாண்டிய நாடு –
முக்தா ஜாலை ஜெநித புளிநாம் சுக்தி சந்தாந் அமுக்தை
தாரா பூர்ணாம் திவம் இவ தத தாம்ரபர்ணீம் பஜேதா
பிரத்யாசத் யா நியத விசதம் பீத ஸிந்தோ மஹர்க்ஷே
பாநீயம் தே பரிண மயிதா தத்ர முக்த ஆமயத்வம் -51-
வானம் போன்ற தாமிரபரணி -சிப்பிக்களின் இருந்து வெளிவந்த முத்துச் சிப்பிகள் நக்ஷத்ரம் போன்று ஒளி விடுகின்றன –
நீ கீழே இறங்கி அந்த நீரைப் பருகுவாய் -கடலைப் பருகிய அகஸ்தியர் சம்பந்தத்தால் தெளிவான அந்த நீர் சம்சார ரோகம் போக்குமே-
தஸ்யா ஸ்வைரம் சரஸிஜ முக ஆஸ்வாத சம்பிரீத சேதா
சீதீபுத தரள லஹரீ பாஹு ஸம்ஸ்லேஷணேந
அத்யாசீந புளிநம் அநிலை வீஜித சந்த நாத்ரே
ஸ்ராந்திம் சாந்திம் கமயது பவாந் சாகரம் லங்கயிஷ்யந்–52-
அடுத்து கடலைக் கடக்கப் போகின்ற நீ -உனது மனைவி போன்று உபசாரம் செய்யும் தாமிர பரணி உடைய
தாமரை போன்ற முக அம்ருதத்தை சுவைப்பாய்
அலைகளாகிற கைகளால் அணைக்கப் பெற்று வெப்பம் தீறுவாய்
அதன் மணல் திட்டில் அமர்ந்து மலயம் என்னும் சந்தன மலையில் இருந்து வீசும் காற்றை அனுபவிப்பாய் –
இப்படி உனது களைப்பை நீக்கிக் கொள்வாய் –
ஸவ்யம் தஸ்யா கியத் இவ கத ஸ்யாம தாளீ தமாலாம்
த்வத் ப்ரயாணாம் தருண வயசாம் சேதஸோ நந்தயித்ரீம்
வேலாம் அப்தே விவித லஹரீ தத்த முக்தாபிராமம்
த்ரஷ்யஸி ஆராத் த்விகுண புளிநாம் கேதகீநாம் பராகை –53-
அந்த தாமிர பரணியின் இடது பக்கம் தாண்டி சிறிது தூரம் சென்று கறுப்பான பனை மரங்கள் பச்சிலை மரங்கள்
அலைகளால் கொண்டு வரப்பட்ட முத்துக்கள் -தழை மடல்களின் மலர்த்துளிகள் நிரம்பிய
மணல் திட்டுகள் நிரம்பிய கடல் கரையைக் காண்பாய் –
ஸ்த்தித்வா தத்ர க்ஷணம் உபயத சைல ஸ்ருங்க அவதீர்னை
ஸ்ரோதோ பேதை அதிகத குணம் சாரு விஷப்பார கோஷை
லஷீ குர்வந் தசமுக புரீம் ஸுவ்ம்ய பத்ர ப்ரக்ருஷ்டோ
வேலா சாபம் சர இவ சகே வேகத த்வம் வ்யதீயா –54-
நான் செலுத்தும் அம்பு போன்று சமுத்திரத்தின் கரையில் நின்று இலங்கைக்குப் புறப்பட தயாராக நிற்பாயாக –
அருவிகள் இரைச்சலை வில்லின் நாண் ஒலி போலே எண்ணுவாய்
அந்த கரையையே வில் என்று நினைத்து ராம பாண்ம் போன்று விரைவாக கிளம்பிச் செல்வாயாக –
தாவ ஆஸக்தம் வநம் இவ நப சந்த்யயேவா அநு வித்தம்
சிந்தூர அங்கம் த்வீபம் இவ ஹரிம் ஸ்வ அம்பரேணவ ஜூஷ்டம்
வித்யுத் பிந்நம் கநமிவ சகே வித்ரும் அரண்ய யோகாத்
தேஹேந ஏகம் மிதுநம் இவ ச த்ரஷ்யஸி த்வம் பயோதிம்-55-
அந்தக் கடல் பவளக் காட்டைக் கீழே கொண்டது -கடல் காட்டுத் தீ பரவிய காடு போன்றும்
அந்திப் பொழுதால் சூழப்பட்ட வானம் போன்றும் -சிந்தூரப் பூச்சைக் கொண்ட யானையைப் போன்றும் –
பீதாம்பரம் விஸிஷ்ட எம்பெருமான் போன்றும் -ஒரு உடலுடன் மற்றோர் உடல் சேர்ந்த ஜோடியைப் போன்றும் காண்பாய் –
அஸ்மத் பூர்வை ஸூரபதி ஹ்ருதம் த்ருஷ்டுகாமை துரங்கம்
பித்வா ஷோனீம் அகணித பலை சாகரோ வர்த்தித ஆத்மா
சத் காரார்த்தம் தவ யதி க்ரீந் ஆதிசேத் குப்தபஷாந்
அஸ்ராந்த அபி ப்ரணயம் உசிதம் ந ஏவ பந்தோ விஹந்யா -56-
தேவேந்தரன் அபகரித்த அஸ்வமேத குதிரையைக் காண விரும்பிய எங்கள் முன்னோர்கள் சகர புத்திரர்கள்
பூமியைப் பிளந்து சென்றதால் சாகரம் என்ற பெயர் கடலுக்கு –
அந்த சமுத்திரம் மைனாகம் போன்ற மலைகளை உனக்கு உபகாரம் செய்யும் படி உத்தரவு இடக்கூடும்
அவர்களது அன்பை ஏற்றுக் கொள்வாய் –
தத்ர ஆஸீந க்வசந ஸரஸி ஸ்மேர ஹேம அரவிந்தே
லப்த்த ஆஸ்வாதோ மது பிரமிதை சம்விநீத அத்வகேத
த்ரஷ்யஸீ அக்ரே லகுதர கதி சேஷம் உல்லங்ய ஸிந்தோ
தோய ஆகாதாத் மஸ்ருணித சிலா ரம்ய வேலம் ஸூ வேலம் –57-
இப்படி கடல் அனுப்பிய மலையில் தாமரை பொய்கையில் அமர்ந்து கொள்-
தேனை பருகி களைப்பை நீக்கிக் கொண்டு கடலைக் கடப்பாய் -அங்கு ஸூ வேலம் மலையைக் காண்பாய் –
யஸ்ய ஆசந்நே பயஸி ஜலதே த்வத் ப்ரதிச்சந்த சந்திரா
பக்ஷஸ் சேத க்ஷரித ருதிர ஸ்தோம சந்தர்ச நீயா
வீஸீ ப்ராப்தை உபசிதருசோ மௌத்திகை தாரகாபை
ஸந்த்யாம் அந்யாம் நியதம் அவநவ் தர்சயந்தி பிரவாளா–58-
அந்த ஸூவேல மலையில் பவளக் கொடிகள் முத்துக்கள் போலே நக்ஷத்திரங்கள் போல ஒளி வீசும்
கடல் நீரில் உனது பிரதிபிம்பம் சந்திரன் போலே தோன்றும் –
அந்திப் பொழுதை இப்படியாக கடல் காண்பிக்கும் –
யத்ர அரண்யம் வருண வஸதே வீசி வேக ஆபநீதை
முக்தா ரத்ந ஸ்தபக சபளை வித்ருமை உத்ப்ரவாளம்
ரஷோபீதை ஸ்வயம் அநிமிஷை ஆஹ்ருத ஸ்த்தாபி தாநாம்
மந்தாரானாம் மது பரிமளை வாசிதம் மௌலி தக்நை-59-
அந்த மலையில் உள்ள காட்டில் கடல் அலைகளால் ஏறியப் பட்ட முத்துக்கள் ரத்தினங்கள் பவளங்கள் நிறைந்தும்
அரக்கர்களுக்கு அஞ்சி தேவர்கள் கொண்டு வந்து வளர்த்த மந்தாரம் என்னும் கற்பக மரங்களில் உள்ள மலர்கள்
தேன் பெருக்கி மழைக்கே நறு மணம் ஊட்டிக் கொண்டு இருக்கும்-
தஸ்மிந் த்ருச்யா ததனுபவத சாருஸவ் தாவதாதா
லங்கா ஸிந்த்தோ மஹதி புளிநே ராஜ ஹம்சீவ லீநா
த்வாம் ஆயாந்தம் பவந தரளை யா பதாகாபதேஸை
பஷை அப்யுஜ்ஜி கமிஷு இவ ஸ்த்தாஸ்யதி ஸ்ராவ்ய நாதா -60-
அந்த ஸூவேல மலையின் காட்டுக்குள் அடங்கியதாய் -கடலில் நீண்ட மண் திட்டில் அடங்கியதாய் மாட மாளிகைகள் நிறைந்த
இலங்கை உனக்கு ஏற்ற பெண் ஹம்ஸ பறவை போன்று காட்சி –
கொடி என்னும் சிறகுகள் காற்றில் அசைய -வாத்ய கோஷம் உன்னை வரவேற்கும்
முதல் ஆஸ்வாசம் சம்பூர்ணம் –
————————
இரண்டாம் ஆஸ்வாசம் –
லீலா கேலம் லலிதக மநா சாரு நாதம் ச சிஜ்ஜா
பல்ல அக்ஷம் த்வாம் ஸ்மர சரத்ருஸ கௌரம் ஆ பாண்டுர அங்க்ய
முக்த ஆலாபம் மதுர வசச மாநச அர்ஹம் மநோஜ்ஞா
யத்ர ஆநீதா ஸூர யுவதய ரஜ்ஜயேயு சமஷம்–61-
இங்கே இராவணனால் அபகரித்த தேவலோக ஸ்த்ரீகள் உன்னைப் போலவே அழகாக நடந்து சிலம்பு ஒலி எழுப்பி
கண்களாகிய மன்மத பானத்தால் வெண்மையான உன்னைக் காண்பர் -இனிமையாக பேசுவார் –
உன்னை மனத்தில் வைத்து அழகு பெறுவர்-
உக்ரை சாபை உபஹதி பியா ரக்ஷஸ தூர முக்தா
தக்த்தும் யோக்யா ஹுதவஹம் அபி த்வத் ப்ரியா வர்ண சுத்தா
உத்பஸ்யந்த ஜனக தநயா தேஜஸா ஏவ ஸ்வ ரஷாம்
ரோதம் யஸ்யாம் அநு வித ததே லோக பாலே அவரோதா -62-
இந்திராதி அஷ்டதிக் பாலகர் அந்தப்புர பெண்களும் சிறை -கற்பால் அவிர்பாகம் கொடுக்கும் நெருப்பையும் எரிக்க வல்லவர்
ஸ்ரீ சீதா பிராட்டி யுடைய தேஜஸ்ஸாலே ரக்ஷிக்கப் பட்டுள்ளவர்கள் -உனது நிறம் கொண்டவர்கள் –
அத்யா ஸீநா பஹு மணி மயம் துங்க ஸ்ருங்கம் த்ரிகூடம்
திக் பாலேஷு பிரதிதயஸசா ரக்ஷஸா ரஷ்யமாணா
அக்ரே மேரோ அமர நகரீம் யா பரிஷ்கார பூம்நா
த்வ ஆஹுய இவ த்வஜ படமயாந் அக்ர ஹஸ்தாந் துநோதி -63-
திரிகூட மலையில் -மணிகள் நிறைந்த அடர்ந்த சிகரத்தில் -இலங்கை -மேரு மலை மேல் உள்ள அமராவதி
நகரத்துக்கும் மேலாக கைகள் ஆகிற கொடிச் சீலைகளை ஆட்டி அழைக்கும்
காலே யஸ்யாம் வ்யபகத கநே த்வத் விஹார அசிதே அஸ்மின்
சந்த்ர ஆலோகை விலுளித த்யாம் சர்வரீ கர்வ ஹாசை
ஸ்வர்க்க ஸ்த்ரீணாம் விரஹத நிதம் பாஷ்யம் உத்வேல யந்த்ய
நிஷ்யன் தந்தே சலில கணிகா சந்த்ர காந்த ஸ்தலீ நாம்-64-
அங்கு சரத் காலம் -மேகங்கள் இல்லாமல் நீ சஞ்சரிக்க வசதியாய் இருக்கும் –
சந்த்ர ஒளி இரவு கர்வத்தால் சிரிப்பது போலே இருக்கும்
தேவ ஸ்த்ரீகள் மந வேதனை -கண்ணீர் பெறுக -சந்த்ர காந்த கற்களால் கட்டப்பட்ட இடத்தில் நீர் வெள்ளமாய் இருக்கும் –
பாஸா தாத்ருக் பரிண திஜு ஷா மைதிலீ சோக வந்ஹே
பஸ்மீ பூதாம் பவநதநய ஸ்நேஹி நா பாவகேந
அந்தஸ் த்ரஸாத் அவஹித தியஸ் சம்விதாஸ் யந்தி அவஸ்யம்
பிரத்யா திஷ்ட பிரதமரசநம் விஸ்வ கர்மா ஆதயஸ் தாம் –65-
திருவடி இலங்கையை எரித்த போதிலும் விஸ்வகர்மா இராவணனுக்கு பயந்து மீண்டும்
நேர்த்தியாக புதிய நகரத்தை நிர்மாணம் செய்வார்-
எனவே ஸ்ரீ சீதா பிராட்டியின் சோக நிமித்தமாக எழுந்த நெருப்புக்கு இராவணன் அஞ்ச மாட்டான்
மத்யே தஸ்யா நிசிசர பதே சத்ம ருத்த அந்தரிக்ஷம்
யுக்மம் நேயை திவி ஸூ மநசாம் ஸேவ்யமாநம் விமாநை
காரா காராம் விபூதி ஸூ த்ருஸாம் விஷமானோ விசித்ரம்
சோக ப்ரீதி வ்யதிகரவதீம் வஹ்யசே சித்த வ்ருத்திம் –66-
நகரத்தின் நடுவில் சுவர்க்கம் கூட்டிப்போகும் தேவ விமானம் உள்ளது –
இராவணன் அரண்மனையையும் பார்த்து உன்னக்கு ஆனந்தமும் சோகமும் தோன்றும் –
ஈஷத் கோபாத் ஸஹித பவநாம் இந்து சந்திக்த்த ஸூர்யாம்
நித்ய உதாராம் ருது பிரகிலை நிஷ் குடே வ்ருஷ வாடீம்
சீதா சோக ஜ்வலந சஹஜை தத்ர தீப்தாம் அசோகை
ஆபத் ஏதா பிரதம லுளிதாம் ஆஜ்ஞநேய பிரசாரை –67-
காற்று அவனுக்கு அஞ்சி வீசும் -சூர்யன் தனது தேஜஸ்ஸை சந்திரன் போலே குறைத்துக் கொள்வான்
ஸ்ரீ சீதா பிராட்டி சோகத்தால் அசோக மரங்கள் சோக மரங்களாக இருக்கும்-
முன்பு திருவடியால் அழிக்கும் பொருட்டு முறிக்கப் பட்டவை இவை –
தஸ்யாம் அந்யை வியதி விஹகை சார்த்தம் ஆனந்த நிக்நை
ஸ்த்தாநே ஸ்த்தாநே நிஹித நயன வர்த்தயந் மண்டலாநி
த்ரஷ்யஸி ஏகாம் ஜனக துஹிது ஸுவ்ம்ய துர்ஜாத பந்தும்
ந்யஸ்தா ஆகல்ப்பாம் க்வசந விடபே சிம்சுபாம் சாந்த்ர சாகரம் -68-
அந்த மரங்களில் பல பறவைகள் வசித்து வரும் -நீ ஸ்ரீ சீதா பிராட்டியைத் தேடிப் போவாய் –
சிம்சுபா மரத்தைக் காண்பாய் -அதில் பிராட்டி தனது ஆபரணங்களை வைத்து உள்ளாள் –
மூலே தஸ்ய கிமபி சவந க்ஷேத்ர சம்சார ஜாதம்
யத்ர க்வ அபி ஸ்த்திதம் அபி சகே த்ராச ஹீநம் மஹிம்நா
காலே தஸ்மிந் கதம் அபி மயா வீர்ய சுல்க்கே ந லப்ப்தம்
த்ருஸ்யம் தத் தே திநகர குலே த்யோதகம் திவ்ய ரத்னம் –69-
யாக பூமியை உழுத பொழுது தோன்றிய சீதா ரத்னம் -சிவ தனுசு முறித்து
ஸூர்ய குலம் வாழ நான் அடைந்த இரத்தினம் -உன்னால் காணப்பட வேண்டும் –
சா மே த்ருஷ்டீ சபர நயநா சந்நத ப்ரூ ச கேசீ
தந்வீ துங்க ஸ்தந பரநதா தப்பித்த ஜாம்பூநந ஆபா
பாலா யுஷ்மத் பிரதிம கமநா வேதி மத்யா வர அங்கீ
சிருங்கார ஆக்யம் நிதிம் அதிகதா ஸ்ரேயஸீ தேவ தேவ –70-
எனக்கு கண் போன்றவள் -மீன் போலே லோகத்தை கடாக்ஷத்தால் ரக்ஷிப்பவள் –
வில் போன்ற புருவம் -அடர்ந்த கூந்தல் –
மெல்லிய திருமேனி -கனத்த ஸ்தநம் -ஸ்வர்ண வர்ணம் -அன்ன நடை -சிறிய இடை –
சிருங்கார ரசம் புதையலை ஆளும் தேவதை –
சா தே யாவத் நயந பதவீம் யாதி மோஹ அலசா வா
சந்தேசம் வா மத் உபகதயே ஸ்ராவயந்தி சகுந்தாந்
அத்யா சந்ந பிரிய வசநதாம் ஸூசயத்பி நிமித்தை
ஏதாம் அஸ்ரு ஸ்த்தகித நயநம் வீக்ஷ மாணா திஸம் வா –71-
ஸ்ரீ சீதா பிராட்டி என்ன செய்வது என்று திகைத்து யாரை மீண்டும் தூது விடலாம் என்று சிந்தித்தும்
இனிய செய்து வருவதை இடது கண் துடிப்பு போன்ற ஸூசகங்கள் மூலம்
கண்ண நீர் வடித்து நான் உள்ள திக்கை நோக்கி இருப்பாள் –
ஆ கல்ப்பாந் வா ஸவித நிஹிதாந் ஆல பந்தீ விமோஹாத்
அங்க ஸ்பர்ச ரகு குல பததே ஸ்மர்யதே வா ந வேதி
த்யா யந்தீ வா சிர விரஹிதாந் ஏக சய்யா விஹாராந்
தஸ்யா நூநம் நியதி ஜநிதா தாத்ருசீ கால யாத்ரா –72-
ஸ்ரீ சீதா பிராட்டி தனது ஆபரணங்களை கழற்றி அவற்றுடன் பெருமாள் முன்பு தொட்டபடி இருந்தீர்கள்
நினைவு வருகிறதா என்று கலங்கி பேசிக் கொண்டு இருப்பாள் –
என்னுடன் சேர்ந்து இருந்தவற்றையே நினைத்துக் கொண்டு பொழுது போக்குவாள்
சுத்தாம் இந்தோ ஸ்வ பச பவநே கௌமுதீம் விஷ்ப் புரந்தீம்
ஆநீதாம் வா விஷ தருவநே பாரி ஜாதஸ்ய சாகாம்
ஸூக்திம் ரம்யாம் கலபரிசரே சத் கவே கீர்த்யமாநாம்
மந்யே தீநாம் நிசிசர க்ருஹே மைதிலிஸ்யா ஆத்ம ஜாதம் –73-
தூய்மையான சந்திரன் நாயைத் தின்பவன் வீட்டில் ஒளி வீசுவது போலவும்
விஷ மரங்கள் உள்ள இடத்தில் பாரிஜாத மரம் போலவும்
சிறந்த சொல் திறம் நிறைந்த கவிகளின் சொற்கள் அவற்றைப் படித்த பின்பும் ஒப்புக் கொள்ளாதவர்
நாவில் படுமா போலவும் அன்றோ -தகாத இடத்தில் பிராட்டி உள்ளாள்
வர்ஷ ஆகீர்ணாம் இவ கமலிநீம் வ்யாஹதார்த்தம் இவ உக்திம்
பங்கா ஸ்லிஷ்டாம் இவ பிசலதாம் பத்ய பேதாம் இவேபீம்
மேகச் சந்நாம் இவ சசி கலாம் விக்ந ருத்தாம் இவ ஆசாம்
வ்யாக்ரத்ரஸ்தாம் இவ ம்ருக வதூம் பூதலே ஜ்யாம் இவாஸ்தாம் –74-
மழை பெய்யாமல் தவிக்கும் தாமரை ஓடை போலவும்
தவறான பொருள் கொள்ளப் பட்ட செய்யுள் போலவும்
சேறு அகற்ற முடியாத தாமரைக் கோடி போலவும்
கஜத்தை விட்டுப் பிரிந்த பெண் யானை போலவும்
மோகத்தால் மறைக்கப் பட்ட பிறைச் சந்திரன் போலவும்
தடைகளால் தடுக்கப்பட்ட விருப்பம் போலவும்
புலியால் அச்சுறுப்படுத்தப் பட்ட மான் குட்டி போலவும்
வில்லை விட்டுப் பிறுய்ந்த அம்பு போலவும் அன்றோ இருக்கிறாள் என்று எண்ணுகிறேன் –
ஸ்ம்ருத்வா பூர்வம் ஸ்மரசர பய மத் பரிஷ்வங்க ரஷாம்
ஆஸ்லிஷ் யந்தீம் அலசவளிதை அங்ககை மாதரம் ஸ்வாம்
ஆ கல்பே அபி ஸ்ரமம் அதி கதை அங்க ராகை அபி கிந்நை
அஷாம் யத்பி ஸ்ம்ருதி மபி முஹு ஸுவ்குமார்யாதி ரேகாத் -75–
என்னுடன் இருக்கும் பொழுது காமனின் அம்புகளுக்கு பயந்து என்னை அணைத்துக் கொள்வாள்
இப்பொழுது அது கிட்டாமையால் பூமா தேவியிடம் கூற முற்பட்டு அப்படியே கிடக்கிறாள் போலும்
உடம்பு மெலிந்து அவசியம் அணிய வேண்டிய ஆபரணங்களையும் அணிய முடியாமல் இருப்பாள்
நீராடி உடம்பில் பூச வேண்டியவை பூசக் கூட இயலாமல் இருப்பாள் –
பூய பூய கர சரசிஜே ந்யஸ்ய ரோமாஞ்சி தாங்கீம்
மௌலவ் சூடாமணி விரஹிதே நிர்விசந்தீம் நிதாய
அந்தஸ் தாபாத் அதிகத ருஜோ ஆதராத் அர்ப்பயந்தீம்
பர்யாயேண ஸ்தந கலசயோ அங்குளீயம் மதீயம் -76-
கணையாழியை கையில் வைத்து சிலிர்த்துக் கொள்வாள் –
சூடாமணி இருந்த இடத்தில் வைத்துகொள்வாள் –
ஸ்தநங்களில் வைத்தும் ஆறுதல் அடைவாள் –
அம்பா துல்யா ஸூ சரிதபலம் திவ்யம் ஆலேபநம் ப்ராக்
அங்கேஷ் வஸ்யா ஸ்த்திரம் அநு குணம் யத் விதேந அநஸூயா
தாரா காரை ஸ்தந கலசயோ ஆபதத்பி சமந்தாத்
சந்தா போஷ்னைஸ் ததபி பஹுளை அஸ்ருபி சாளயந்தீம்–77-
எங்கள் தாய்க்கு ஈடான அநஸூயை அழியாத உடம்பு பூச்சு -இவள் கண் நீர் அருவி அத்தையும் அழித்து
ஸ்தநங்களில் விழுந்து நான்கு திக்குகளிலும் தெளித்தபடி உள்ளது
அக்ராஹ்வாத் விஷயம் இதம் கேச ஹஸ்தம் மயா ப்ராக்
ஆபி ப்ராணாம் தநு பரிமள ஸ்ரத்தயா இவ அவகீர்ணம்
அர்ச்சா ஹேதோர் புவிரதி பதேர் அப்ஸரோ அபி வி முக்தாம்
அந்வக் யாதாமிவ ஸூரதரோர் மஞ்சரீம் சஞ்சரீகை–78-
முன்பு சம்ச்லேஷ தசையில் அவளது கூந்தலை கட்ட முயல்வேன் -கைகளுக்கு அடங்காதே –
இப்பொழுது அவை அவளது திருமேனியின் நறுமணத்தை நுகர்ந்து பின்னால் தொங்குகிறது
காமனின் பூஜைக்காக தேவ லோகப் பெண்கள் கொண்டு வந்த கற்பக மரத்தின்
மலர்க் கொத்தை வண்டுகள் மறித்து மொய்ப்பது போல அன்றோ உள்ளது –
ஆநீதம் யத் த்வரிதம் அசலாத் உத்தரீயம் ப்லவங்கை
அஸ்ய ஆகாரை சத்ருசம் அபிதஸ் த்வத் ப்ரியா ரூப சிஹ்நம்
பால ஆதித்ய த்யுதி ஸஹ சரம் சாரு வாசோ வசாநாம்
சந்த்யா ராகா வ்யதிகரவதீம் சந்த்ர லேகாம் இவாந்யாம் –79-
ஆகாச மார்க்கத்தில் செல்லும் பொழுது ஆடை ஆபரணங்கள் விழ வானர முதலிகள் அவளால் கடாக்ஷிக்கப் பெற்றனர்
வெண்மை -மென்மை-மிக்க அந்த ஆடைகளில் அன்னப் பறவை ஓவியங்களும் பொன்னால் ஆன சரிகைகளும் இழைக்கப் பட்டு
இருப்பதை பார்ப்பாயாக -அவற்றால் நீயும் அவளால் ஸ்வீ கரிக்கப் படுவாய் –
இளம் சூர்ய ஒளி போன்ற ஆடைகளை அணிந்தவள் அந்திப் பொழுதில் தோன்றும் சந்த்ரப் பிறை போன்று இருப்பாள் –
வக்தும் மார்க்கம் கில வஸூ மதீம் ஜக்முஷஸ் தத் பத அப்ஜாத்
மஞ்ஜீ ரஸ்ய த்வத் உப மருதே தஷிணஸ்ய அஸ்ய துல்யம்
அங்கா ரூடே சரண கமலே மத் கரேண உபதேயம்
வாமம் சாகா சிகர நிஹிதம் வீஷ்ய காட்டும் விஷண்ணாம்–80-
அவள் சென்ற வழியைக் காட்ட இந்த நூபுரத்தை கீழே போட்டு இருந்தால் –
உன்னைப் போலே இனிய த்வனி எழுப்பும் இந்த வலது திருவடி கால் சிலம்பைப் பார்
எனது மடியில் முன்பு அவள் இந்த சிலம்பை அணிந்து இருந்ததை நினைத்தும்
அந்த சிலம்பு இப்பொழுது மரக் கிளையில் மாட்டப் பட்டு இருப்பதையும் பார்த்து வருந்துகிறேன் –
அங்கை ம்லாயத் கிசலய சமை உஜ்ஜிதா கல்ப்ப புஷ்பை
காட ஆஸ்லிஷ்டாம் வபுஷி விமலே பிம்பிதாபே லதாபி
சந்தாப உஷ்ண ஸ்வசந புருஷச் சாயயா கிஞ்ச தீநாம்
பந்தீ பூதாம் நிசிசர க்ருஹே நந்த தஸ்ய ஏவ லஷ்மீம் -81-
அவள் திருமேனியில் அங்குள்ள கொடிகள் நிழல் படும் -திரு மேனி வாடிய தளிர் போலவும்
மலர்கள் ஆபரணங்கள் இன்றியும் சூடான பிராண வாயு வெளியிட்டு நிழல் போலவே காணப்படுவாள்
அரக்கன் சிறையில் அடைபட்ட நந்தவன ஸ்ரீ லஷ்மீ அன்றோ இவள் –
சேதஸ் வ்ருத்திம் சமயதி பஹிஸ் ஸார்வ பவ்மே நிரோதே
மயி ஏகஸ்மிந் ப்ரணி ஹித தியம் மாந்மதேந ஆகமேந
அப்யஸ் யந்தீம், அநிதர ஜுஷ பாவநாயா ப்ரகர்ஷாத்
ஸ்வாந்தேந் அந்தர் விலய ம்ருதுநா நிர்விகல்ப்பம் சமாதிம் -82-
என்னையே தியானித்து -வேறு ஒன்றிலும் மனம் செலுத்தாமல் -உள்ளம் உருகி மென்மையான மனம் கொண்டவளாய்
தனது அறிவையும் இழந்து உள்ளத்தில் எனது அன்பான தோற்றத்தையே தர்சித்துக் கொடு இருக்கிறாள் –
ஸூந்யா த்ருஷ்ட்டி ஸ்வ சிதம் அதிகம் மீலிதம் வக்த்ர பத்மம்
தாராகாரம் நயந சலிலம் சாநு பந்த விலாப
இத்தம் சைதன்யம் கிமபி விதிநாம் துர் நிவாரணே நீதா
சா மே சீதா தநுதரதநு தப்யதே நூநம் அந்த -83–
அவளது பார்வை எதையுமே காணாமல் உள்ளது -பெருமூச்சு -கண்களில் நீர் பெருக்கு-
என்னையும் ஏன் குலத்தாரையுமே நினைந்து கொண்டே புலம்பல் -மெலிந்த திருமேனி -துயரம் மிக்க நிலை –
த்ருஷ்ட்வா தஸ்யாஸ் த்வம் அபி கருணாம் தாத்ருஸீம் தாம் அவஸ்த்தாம்
சஷ்யசி அந்த ஸ்வயம் உப நதம் சோக வேகம் ந சோடும்
க்ரவ்யாதாநாம் தசவதநவத் க்வாபி ஜாதவ் அவஜாதா
நா லம்பந்தே கதமிவ தயாம் நிர்மலத்வ உப பந்நா –84-
திருவடி போலே காண சகியாத அவள் நிலையை நீயும் காண்பாய் -உன்னில் சோகம் தானே கிளர்ந்து எழும்
சாத்விகர்களுக்கு தயை குணம் தானாகவே உண்டாகும் –
நேதீ யஸ்யாம் அதிகதரச தீர்க்கி காயாம் நிகாமம்
சம்வேசேந ஸ்ரமம் அப நயந் சர்வரீம் யாபயேதா
இத்தம் நித்ரா சமயம் உசிதம் வீஷ்ய நக்தம் சரினாம்
ப்ரத்யூஷே த்வம் ப்ரணய மதுராம் ஸ்ரா வயிஷ்யந் மத் யுக்தம்–85-
அன்னமே அந்த நடை வாபியில் தூய நீரைப் பருகி களைப்பைப் போக்கிக் கொள்வாய் –
முழுதும் முழித்து உள்ள அரக்கிகள் சிறிது நேரம் தூங்குவார்கள் –
அந்த நேரத்தில் தூது செய்தியை இனிமையாக சொல்வாய்
இரவு முழுவதும் அங்கேயே தங்கி ஆஸ்வாசப்படுத்துவாய் –
சீதை அத்வ ஸ்ரம விநயநை -சேவிதோ கந்த வாஹை
ஸூப்த ஸ்வைரம் புளிந சயநே ஸ்வந்த்ரே சந்த்ர பாதை
கிரீடா கீதை கமல முகுளை தீவ்யதாம் ஷட் பதா நாம்
கார்ய அகாங்ஷீ கலயது பவாந் ராஜ ஹம்ஸ ப்ரபோதம் –86-
ராம கார்யம் செய்யச் செல்லும் உனக்கு களைப்பைப் போக்க குளிர்ந்த நறுமணம் மிக்க
மந்த மாருதங்கள் உன்னை உபசரிக்கும்
சந்த்ர கிரணங்கள் குளிர்ச்சியால் மணல் மேட்டில் நன்றாக உறங்குவாய் –
வியற்காலையில் வண்டுகளின் ரீங்காரம் உன்னை திருப்பள்ளி உணர்த்தும் –
தாம் ஆரூட சலகிசலயாம் சிம்சுபாம் ஸ்வ ஏக லஷ்யோ
மந்தீ குர்வந் மநிசிஜ தநு கோஷ தீவரம் நிநாதம்
மோஹாத் ஈஷத் முஹி தம நசம் போதய ப்ரயஸீம் மே
ரம்யாம் ஆதவ் ரகு ஜநகயோர் வர்ணயந் வம்ச கீர்த்திதம் –87-
தளிர்கள் நிறைந்த சிம்சுபை மரத்தில் அமர்ந்து கொள்வாய் -மன்மதன் போன்ற உனது இனிய பேச்சு
மற்றவர்கள் கேட்க்காதபடி மெதுவான குரலில் ரகு வம்ச பெருமைகள் சீதா பிராட்டியுடைய குலப் பெருமைகளையும் கூறுவாய் –
பிரிந்த மயக்கத்தில் உறக்கம் இல்லாமல் இருந்தாலும் மயங்கிய நிலையில் உள்ள ஏன் காதலியை எழுப்புவாயாக –
பத்யு தேவி ப்ரணயஸசிவம் வித்தி தீர்க்காயுஷோ மாம்
ஜீவாதும் தே தததம் அநகம் தஸ்ய சந்தேசம் அந்த
ஸூராணாம் யத் சரத் உபகமே வீர பத்நீ வரானாம்
சம்மாந அர்ஹம் சமயம் உசிதம் ஸூசயேத் கூஜிதை ஸ்வை -88-
என்னை தூதனாக அனுப்பினாய் என்று சொல் -உனக்கு புத்துயிர் அளிக்க வல்ல தோஷங்கள் அற்ற சொற்களை
மனசில் நிலை நிறுத்தி உள்ள என்னை அறிவாய் -வீர பத்தினிகள் என்னுடைய குரலைக் கொண்டே
வெற்றி வரும் நேரம் என்று அறிவார்கள் –
மத் ப்ரஸ்தாவ பிரவண மத மைதிலீ மாநயேத் த்வாம்
ம்லாநாம் சோகாத் வதந கமலம் கிஞ்சித் உந் நம்ய பீரூ
அந்தஸ் தோஷாத் அம்ருதலஹரீ லப்த ச ப்ரஹ்ம சர்யை
அம்போஜாநாம் உஜஸி மிஷதாம் அந்தரங்கை அபாங்கை –89-
மிதிலை நாயகி முகம் வாடியே இருக்கும் -உன் இனிய சொற்களைக் கேட்டு முகத்தை உயர்த்துவாள்
சொற்களைக் கேட்டதும் அமிர்த வெள்ளம் போன்ற தாமரைக் கண்களால் கடாஷிப்பாள்-
பஸ் யந்தீ சா ரகுபதி வதூ த்வாம் அசேஷ அவதாதம்
ப்ரத்யாச் வாஸாத் அதிகதருசி ப்ராக்த நீ இந்து லேகா
மத் சந்தேசே ததுநு ஸூமுகீ சாவதாநா பவத்ரீ
கிம் நா ஸ்த்ரீனாம் ஜநயதி முதம் காந்த வார்த்தா ஆகம அபி -90-
வெண்மையான உன்னைக் கண்டு உன் மீது நம்பிக்கை கொள்வாள் -சுக்ல பஷ சந்த்ர காலை போல
அவள் திரு முகம் ஒளிரும் -கணவன் மேல் காதல் கொண்டவளுக்கு அவனைப் பற்றிய சொற்கள்
எப்பொழுதும் மகிழ்ச்சியை உண்டாக்கும் –
பச்சாத் ஏவம் கதய பவதீ பாக தேயந ஜீவந்
கல்யாணீம் த்வாம் குசல மநக கோஸலேந்திர அநு யுங்க்தே
யேஷு ஸ்ரேயோ பவதி நியதம் தாநி ஸர்வாணி சந்த
லஷ்ம்யா தேவ்யா தவ ச புவநே லக்ஷணாநி ஆ மந்தி -91-
அவள் தனது திரு முகத்தை உயர்த்தி கவனிக்கும் பொழுது நீ -கோசல நாட்டு ராம சந்திரன்
மங்கலமே வடிவான உனது நலம் விசாரித்தான் -என்றும்
சாமுத்ரிகா லக்ஷணங்கள் பொருந்திய ஸ்ரீ மஹா லஷ்மியான உன்னால் உலகுக்கு பல நன்மைகள் உண்டாகும் என்றும் கூறு –
யஸ்யா யஸ்மின் வியாதி அபவத் பூஷண ஆலேபந ஆதி
நீதாம் ஏனாம் நியதி விபவத் அந்தரீபம் தவீய
பிரத்யா ஸீதந் இவ நயநயோ வர்த்மநி ஸ்த்தா பயித்
ச த்வாம் ஏவம் வததி குசலீ வா தேவி சக்யா முகேந 92–
சம்ச்லேஷ காலத்தில் அணைக்க ஆபரணங்கள் சந்தநப் பூச்சும் தடை என்று தேவரீர் எண்ணியத்தையே எண்ணிக் கொண்டு
உன்னை மாநஸக் கண்களால் முன்னே நிறுத்தி நேராகப் பேசுவது போலே தோழனான என்னைப் பேச வைக்கிறான் –
வேலா அதீத ப்ரணய விவசம் பாவம் ஆஸேதுஷோர் நவ்
போக ஆரம்பே க்ஷணம் இவ சுதா பூர்வம் ஆலிங்கந ஆத்யை
சம் ப்ரத்யேஷா ஸூதநு சதச கல்பநா சங்கமை தே
சிந்தா தீர்க்கை அபி சகலிதா சர்வரீ நாபயாதி –93-
சம்ச்லேஷ காலத்தில் இரவு நொடிப் பொழுதாக தோன்ற -இப்பொழுது விஸ்லேஷ தசையில்
உன்னையே எண்ணி கல்பம் போல அன்றோ உள்ளது –
உத்தாமை தே குசல கலசயோ ரூஷ்மபி நிர்ஜிதேந
சித்ரம் லப்தவா விரஹ சமய தத் க்ஷணாத் உந்நதேந
குந்த ஆமோதை ஸூர பிததிசா கந்த வாஹேந சைதன்யம்
சம் ப்ராப்த அஹம் ஸஹ ஸரஸிஜை த்வத் முகம் அம்போஜ மித்ரை -94-
முன்பு மென்மையான காற்றில் இருந்து தப்ப உனது முலைத்தடங்களில் சாய்ந்து என்னை ரஷிப்பேன்
இப்பொழுது அந்தக் காற்று குருக்கத்தி பூக்களின் நறுமணங்கள் துணையுடன் என்னை வெல்ல தொடங்குகிறது
உனது முகத்துக்கு தோழமையான தாமரை மலர்களையும் அது துன்புறுத்துகிறதே –
மாத்வீ திக்தை விரஹி வநிதா ஸ்வாத லுப்தை அமோகை
ஆவ்ருண் வந்தம் குஸூ மத நுஷ சித்ர புங்கை திக் அகந்தாத்
சீதா பார்ஸ்வே ந பவது பவாத் இதி அவோஸத் வ் வசந்தம்
ராம த்ராஸாத் அநமிததநு மௌலிநா சந்த தேந –95-
இராமன் கூறியதாக இராமனே சொல்வது இதில் -தன்னை சீதையைப் பிரிந்த பின்பு ராமனாக எண்ணாமலேயே –
கணவனைப் பிரிந்த விதவை போலே உள்ளேன் -பிரிவாற்றாமை விஷம் -மலர்களின் நறுமணம் கொண்ட வில்லை-காம பானங்கள் –
வசந்த ருதுவைக் கண்டு அஞ்சி பேசும் பேச்சு –
அந்த வசந்த ருசுவின் இடம் இது போலே சீதையை வருத்தாமல் இருக்க பிரார்த்தனை –
பார்ஸ்வே வோலை பரப்ருத குலை முக்த கோலாஹலா நாம்
மல்லீ ரேணு ஸ்த்தகீத வபுஷாம் மந்தரம் நிர்கதாநாம்
பீதேந அஹம் ப்ரமர படலீ ஸ்ருங்கலா சங்குலாநாம்
மார்கே திஷ்ட்டந் மலய மாருதம் வாரிதோ லஷ்மனேந –96-
தென்றலும் என்னை வாட்டுவதிலே குறிக்கோள் கொண்டுள்ளது -இனிய குயில்களின் குரல்களைக் கூட்டிக் கொண்டு வாட்டுகிறது –
மல்லிகை மகரந்த துகள்கள் துணையுடன் வண்டுகளை துணை கூட்டிக் கொண்டு வாட்ட
திகைத்து நிற்கும் என்னைக் கண்டு லஷ்மணனும் விலகி நிற்கிறான் –
மந்தோ வஹ்யே கிம் இவ ஜனகம் கிந்து யோகீச்வரோ மாம்
இதி ஏவம் மே ஸூ தநு மனசோ வர்த்த யந்தி ஸ்ம கேதம்
ரக்த அசோகா ஜ்வலதி சவிதே லாஜ வர்ஷ அபிராமை
புஷ்ப ஓக த்வத் பரிணய தஸாம் வ்யஞ்ஜ்யந்த கரஞ்ஜா–97-
அசோகா மரங்களில் அக்னி போன்ற சிவந்த மலர்கள் மேலே புங்கை மர வெண்மை மலர்கள் விழுகின்றன –
நமது திருமணத்தில் ஹோம அக்னியில் பொறி இட்டதை நினைவூட்டும் –
யோகியான ஜனகரை எண்ணினேன்-அவர் இடம் என்ன சொல்லப் போகிறேன் என்று வருந்துகிறேன் –
சேதோ நைவ த்யஜதி சபலா ஹேம கோண அபிகாதாத்
தீர உதாத்த ஸ்தநித ஜலதாத் தாண்டவ ஆரம்பம் இச்சந்
வாத உந் முக்தை குடஜ குஸூமை வாசித சைல ஸ்ருங்கே
ரஷா பீடா ரஹித தயிதா ஆஸ்லேஷ தந்ய மயூர –98-
இங்குள்ள மலைகளில் மலர்கள் விழுந்து நறுமணம் வீச -மின்னல்கள் தங்கக் கொடிகள் போலே தோன்ற –
இவை பேரிகை வாத்ய இடி முழக்கம் -இந்த மேகத்தைக் கண்ட மயில்கள் ஆட
இராவணனால் பிடிக்கப்படாத பெண் மயில் ஆண் மயில் உடன் அணைந்து இருப்பதைக் கண்ட
பாக்யம் பெற்றேன் -என்றது ஹம்சம் மேலும் –
சைல வ்யக்த பிரதி விலபி தாம் சாந்த்ரா தாப அநு வித்தாம்
தந்வாநாநாம் நயநசவிலை மாதரம் தே ச பாஷ்பாம்
பசயந்தீ நாம் பிரபல மதந உந்மாத பர்யாகுலம் மாம்
ப்ராயோ ஜாதம் கிமபி ருசிதம் வ்யோம்நி காதம்பி நீநாம் -99-
என்னுடைய கலங்கிய நிலையை உம்முடைய தாயான பூமா தேவி கண்டாள்-
உமது நிலையைக் கண்ட அவளுக்கு சூர்யா வெப்பத்துக்கு மேலே வெப்பம் அதிகமாக -அவள் அழுகை மேகங்கள் மூலம்
மலைகளில் மோதி இடியாக ஒலித்தது -மேகங்கள் இவள் நிலையைக் கண்டு மழை பொழிய -உள்ளிருந்த வெப்பம் மூலமாக
பூமா தேவியும் கண்ணா நீரை வெளியிட்டாள்-இதன் மூலம் மேகங்களுக்கு பின்னால் உண்டாகும் அழுகை போன்று உள்ளது –
தேஹ ஸ்பர்சம் மலய பவநே த்ருஷ்ட்டி சம்பேதம் இந்தவ்
தாம் ஏகத்வம் ஜகதி புவி ச அபிந்ந பர்யங்க யோகம்
தாரா சித்ரே வியதி விததிம் ஸ்ரீ விதா நஸ்ய பஸ்யந்
தூரீ பூதாம் ஸூதநு விதிநா த்வாம் அஹம் நிர்விசாமி –100-
இப்பொழுதும் பிரிந்த நிலையிலும் -தென்றல் காற்று உனது உடலில் பட்டு ஸ்பர்சிப்பதால் ஆறுதல் அடைகிறேன் –
சந்திரனை நான் காணும் பொழுதும் நீ பார்க்கும் சந்திரன் என்ற எண்ணத்தால் ஆறுதல் அடைகிறேன் –
ப்ரஹ்மாண்டம் ஒரே வீட்டில் -பூமி ஒரே கட்டில் -நக்ஷத்திரங்கள் மேல் விதானத்தில் உள்ள ரத்தினங்கள்
என்று எண்ணி ஆறுதல் அடைகிறேன் –
ப்ராப்தை சக்யம் தவ நயநயோ பத்ம கோஸை ப்ரபுத்தை
சந் நாஹம் ந சமயநியதம் சாது சந்து ஷயந்தீ
சேநாயோக்யாம் சரணி மது நா தர்சயந்தீ சுபாசா
சீதே நூநம் த்வரயத் சரத் த்வத் சமீபம் நிநீஷு -101–
சரத்காலம் வந்தது -உனது திருக்கண்களின் தோழனான தாமரை மலர்கள் மலரத் தொடங்குகின்றன
ஷத்ரியரான நாங்கள் யுத்த முயற்சி அதிகரிக்கவும் சேறுகள் உலர்த்தப்பட்ட படைவீரர்கள் செல்லும் பாதையை காட்டுமதாயும்
வெற்றி ஆசைகளை நிறைவேற்றுவதாயும்-எங்களை உன் அருகில் சேர்க்க வல்லதாயும் உள்ளதே –
ததா ஆதேசாத் ச பதி பரதே ந்யஸ்த ராஜ்ய அபிஷேகம்
யா மாம் ஏகா வனம் அநுகதா ராஜதா நீம் விஹாய
தாமேவ த்வாம் உசித சயநாம் பாஹு மத்யே மதீயே
தூரே க்ருத்வா குணவதி முஹு தூயதே ஜீவிதம் மே–102-
சக்ரவர்த்தி சொல் படி ராஜ்யத்தை பாரத நம்பிக்கு அருளி கானகம் சென்ற என்னை நீயும் தொடர்ந்தாய்
உன்னை மார்வில் வைத்து கைகளை அனைத்து ரக்ஷித்துகே கொண்டு இருக்க வேண்டிய நானோ
உன்னை நெடு தூரம் நீண்ட காலம் பிரியும் படி விட்டேனே-எனது உயிர் தவிக்கும் படி அன்றோ செய்தேன்–
சேதும் பத்த்வா விபுலம் அசைல சாயகைர்வா பயோதவ்
க்ருத்வா லங்காம் ஸ்ரஜம் இவ கரே கேலதாம் வாநராணாம்
அல்பீ யோபி ஸூ முகி திவசை யோதயன் யாதுதாநாந்
கர்ணே சீதும் தவ ரசயிதா லஷ்மண சாப கோஷை -103-
கடலை மலைகளைகே கொண்டோ அம்புகளைகே கொண்டோ லஷ்மணன் விரைவில் அணை கட்டி முடிப்பான் –
அதில் விளையாடியா படியே ஆடி வரும் வானர முதலிகள் இலங்கையை குரங்கு கையில் உள்ள
பூ மாலையைப் போலவே கசக்கி எறிவார்கள்
அவன் ராவணை யுத்தத்து அழைத்து நாண் ஒலி மூலம் உன்னை விரைவில் ஆஸ்வாசப் படுத்துவான்
ரஷோ மௌலி ஸ்தபக லவநாத் வைர பந்தே வி முக்த
கத்வா சோர்வீம் ககந பதவீ ஸ் வைரினா புஷ்பகேனா
சித்தாரம்பவ் சபதி பவதாம் ஆதி ராஜ்ய அபி ஷேகாத்
சம் ப்ராப்ஸ்யாவ சிர விரஹத சஞ்சிதான் தேவி போகாந் –104-
வானர முதலிகள் அரக்கர் தலைகளை மலர்க்கொத்தைப் பறிப்பது போலே பறிப்பார்கள்-
வென்ற பின்பு விரைவில் ஆகாச மார்க்கமாக அயோத்யைக்கு செல்வோம்
பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் விரைவில் பட்டாபிஷேகம் நடைபெறும்
நாம் மநோ ராதித்த படியாக சமலேஷித்து இன்பம் அனுபவிப்போம் –
சித்தே குர்யாத் ததபி பவதீ யத் ஜன ஸ்தான யுத்தாத்
ஸம்ப்ராப்தம் மாம் தசமுக சமாந் பாரயுத்வா கராதீந்
சஸ்த்ரஹாதம் ஸ்தந கலசயோ ஊஷ்மணா நோ பயத்பி
காட ஆஸ்லேஷை அபிஹிதவதீ கத்கதா ஹர்ஷ பாஷ்பை–105-
கரவதம் அநந்தரம் என்னை அணைத்து புண்களை ஆற்றி உனது உடலில் மூடி என்னை
மறைத்துக் கொண்டாயே -அத்தை இப்பொழுது எண்ணிகே கொள்வாயாக –
சக்யா கிலேசம் க்வசந சமயே தாத்ருசம் சிந்தயித்வா
ஸ்ம்ருத்வா தேவீம் அசல தநயாம் விப்ர யுக்தாம் சிவேந
ரஷா ஆத்மா நம் கதம் அபி சுபே ஜீவித ஆலம்பனம் மே
பத்யு உச்சந்தாத் வ்யஸனம் அபி ஹி ஸ்லாக நீயம் வதூ நாம் –106-
இந்திரனைப் பிரிந்த இந்திராணி போலவும் -சிவனைப் பிரிந்த பார்வதி போலவும்
விஸ்லேஷத்தில் உனது துக்கம் பொறுக்க ஒண்ணாதது தான்-
அபி ஏதத் தே மனசி நிஹிதம் சாஹ்யம் அவ்யாஜ பந்தோ
ப்ரத்யாக் யாதும் ப்ரபவதி ந கலு ஆந்ரூ சம்சயம் த்வதீயம்
ப்ராகப் யேவம் ப்ரிணத குணாம் நைஷதே வீஷ்ய வார்த்தாம்
ஆர்த்த த்ராணம் வ்ரதம் இதி விது ஹம்ஸ சுத்த ஆத்மாநாம் வ -107-
மற்றவர்களுக்கு உதவும் குணம் உண்டே ஹம்சமே உனக்கு -நலனுக்காக தமயந்தி இடம் தூது போனாயே –
உடல் போலே மனமும் வெண்மையே உனக்கு -உனது சஜாதீயமான எனக்கு நீ உதவுவுவாய் என்று சொல்ல வேண்டுமோ –
இத்தம் ஹ்ருத்யை ஜனக தநயாம் ஜீவயித்வா வசோபி
சக்யம் புஷ்யந் திநகர குலே தீப்ய மாநை நரேந்த்ரை
ஸ்வைரம் லோகந் விசர நிகிலாந் ஸுவ்ம்ய லஷ்மி ஏவ விஷ்ணு
சார்வாகாரை த்வத் அநு குணயா சேவிதோ ராஜ ஹம்ஸ்யா -108-
அம்சமே இப்படி சொற்கள் மூலம் நான் அங்கு வரும் வரை அவள் உயிர் தரிக்கும் படி செய்து
சூர்ய குல மன்னர்களின் தோழமை பெறுவாய் –
உனக்கு ஏற்ற பெண் அம்சமும் அடைந்து ஸ்ரீ லஷ்மீ சமேத ஸ்ரீ விஷ்ணு போலே எங்கும் சஞ்சரித்து மகிழப் பெறுவாய் –
சந்திஸ்ய ஏவம் ஸஹ கபி குலை சேதுநா லங்க்கி தாப்த்தி
பங்க்தி கிரீவே யதி விநிஹதே ப்ராப்ய ஸீதாம் ப்ரதீத
ராஜ்யம் பூய ஸ்வயம் அநு பவந் ரஷிதம் பாது காப்யாம்
ராம ஸ்ரீ மாந் அதநுத நிஜ ராஜ தாநீம் சநாதாம் -109–
இவ்வாறு தூது -பின்பு சேது அணை கட்டி -மூல பலத்தையும் இராவணனையும் அழித்து–சீதா பிராட்டியையும் மீட்டு
அயோத்யைக்குச் சென்று ராஜ்ஜியம் ஏற்று உலகை உஜ்ஜீவித்தான் –
வித்யா சில்ப்ய ப்ரகுண மதிநா வேங்கடேச ந க்ல்ப்தம்
சிந்தா சரண உல்லிகிதம் அஸக்ருத் ஸ்ரேயசாம் பிராப்தி ஹேதும்
சீதா ராம வ்யதிகர சமம் ஹம்ஸ சந்தேச ரத்னம்
பஸ்யந்து அந்த ஸ்ரவணம் அநகம் சஷு ஸ் உஜ்ஜீவ்ய சந்தஸ் –110-
ஸ்ரீ வேங்கடேசர் இயற்றி அருளிய இந்த ஹம்ஸ ஸந்தேஸம் பிரபந்தத்தை – -செவி கண்ணால் அனுபவிப்பவர்
ஸ்ரீ சீதா ராமர் ஸம்ஸ்லேஷித்த நிரதிசய ஆனந்தம் பெறப் பெறுவார் –
இரண்டாம் ஆஸ் வாசம் சம்பூர்ணம்
ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம் சம்பூர்ணம்
————
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
—————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply