ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –
——————————————————————————-
ஸ்ரீ ப்ராப்ய தேசத்திலும் ஆச்சார்ய சேஷத்வம் முறை தவற ஒண்ணாது என்னும் த்வரையும்–
சரம தசையிலும் பிராண பிரயாண பாதேயமாக ஸ்வாச்சார்யன் தானே ஸ்ரீ த்வயத்தை விடாய் கெட உபதேசிக்கப் பெற்ற தன்னேற்றமும்
பகவத அபிமான ஸ்தலத்திலும் ததீய அபிமான ஸ்தலமே சரம தேசமாகப் பெற்ற தன்னேற்றமும் –
சரம அதிகார பாக விசேஷமும் ஸ்ரீ ஆழ்வான் பக்கலிலே அனுஷ்டான சேஷமாகக் கண்டது இறே
——————–
ஸ்ரீ முதலியாண்டான் திருநக்ஷத்ரம் -சித்திரையில் ஸ்ரீ புனர்வஸூ –
அவர் தனியன் –
ஸ்ரீ பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்-
அஹஹத் பாகிநேயத்வம் பாதுகாத்வந் த்ரி தண்டதாம் –ஸம் ப்ராப்தோ யதிராஜஸ்ய குணைஸ் தத் ப்ரீதி ஹேதுபி-
ஸ்ரீ வைஷ்ணவாநாந் தாஸத்வம் ஸ்வாமித்வம் பிரபுதாம் ஸ்வயம் -வாதூல குலதவ்ரேயம்-வந்தே தாசாரதிம் குரும் –
———————
திருக் குருகைப் பிரான் பிள்ளான் தனியன் –
யா பர்யாப்த கல க்யாதோ யதிராஜ அப்தி சந்த்ரமா –குசலந் திசதாம் மே அசவ் குருகேச்வர தேசிக –
விக்யாதோ யதி ஸார்வ பவ்ம ஜலதேஸ் சந்த்ரோபமத்வே நய-ஸ்ரீ பாஷ்யே ச யதன்வயாஸ் ஸூ விதிதாஸ் ஸ்ரீ விஷ்ணு சித்தாதய-
வ்யாக்யாம் பாஷ்ய க்ருதாஞ்ஞ யோபநிஷதாம் யோ த்ராமிடீ நாம் வ்யதாத் பூர்வந்தங் குரு கேஸ்வரங் காருண்ய பூர்ணம் பஜே
-திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருநக்ஷத்ரம் ஐப்பசி பூராடம்
———————————
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் தனியன்
ஸ்ரீ ராமானுஜ பதாம்போஜ யுகளீ யஸ்ய தீமத ப்ராப்யஞ்ச பிராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்-
ஆஸ்திக அக்ரேசரம் வந்தே பரி வ்ராட் குரு பாசகம் யாசிதங் குரு கேசேந ப்ரணதார்த்தி ஹரம் குரும்
ஸ்ரீ பாஷ்யம் தர்சயித்வா யதிபதி ரசிதம் சார தாயை நிவ்ருத்தோ நத்வா ஸ்ரீ வேங்கடேசம்பதி பரமபதந் தத்த வாங் கோபிகாயை —
ஆக்யாம் வேதோத்த மாங்கோ தயந இதி ததத் பாஷ்ய காரேண தத்தா மாத்ரேயாசார்ய விஷ்ணோ ரனுஜமனுதினம் சாதரந்தன் நமாமிஅராகங்கள் |
விஷ்ணு என்பாருக்குத் திருத்தம்பியார் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் சித்திரை திருநக்ஷத்ரம் ஹஸ்தம்
————————————
ஸ்ரீ எங்கள் ஆழ்வான் தனியன் –
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ ஸம்ஸ்ரயாய சேதோ மமஸ் ப்ருஹய தேகி மத பரேண நோசேந் மமாபி யதி சேகர
பாரதீ நாம் பாவ கதம் பவிதுமர்ஹதி வாக் விதேய
——————————–
ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்(ஸ்ரீ நடாதூர் அம்மாளின் திருப்பாட்டனார் ) தனியன்
யஸ்மின் பதம் யதிவரஸ்ய முகாத் பிரணேதுன் நிஷ்க்ராம தேவ நிததே நிகமாந்த பாஷ்யம் –
தஸ்யை வதம் பகவத் பிரிய பாகிநேயம் வந்தே குரும் வரத விஷ்ணு பதாபிதாநம்
ஞாநோத்த மோத்ததி நிராஸரண ப்ரதுஷ்யத் ராமாநுஜார்ய கருணா பரிணாஹ பாத்ரம் –
வத்ஸான் வவாய திலகம் வசதிங் குணானாம் வந்தாமஹே வரத விஷ்ணு குரும் வரேண்யம்
————————————————
ஸ்ரீ சோமாசி ஆண்டான் (இயற் பெயர் ஸ்ரீ ராமன்)தனியன்
நவ்மி லஷ்மண யோகீந்த்ர பாத சேவைக தாரகம் -ஸ்ரீ ராம க்ரதுநா தார்யம் ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாகரம்
—————————————
ஸ்ரீ நடுவில் ஆழ்வான் தனியன்
யேந அனந்தாக்ய மஹம் பஜே ப்ரோத் சகலதே நித்யங்கார்க்ய வம்ச மஹாம்புதி-மந் மஹேதம் சதா சித்தே மத்யமார்ய கலா நிதிம்
————————–
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தனியன்
(கார்த்திகை பரணி)தயா பாலந தேவாய ஞான சார ப்ரதாயச ப்ரமேய சாரந்தே நமோ அஸ்து பிரேம சாலிநே
யதிராஜ தயா பாத்திரம் யதி பங்க்தி விபூஷணம் தயா பாலந முனிம் வந்தே தேசிகாக்ரே சரம் சதா
————————————–
ஸ்ரீ அனந்தாழ்வான் திரு நக்ஷத்ரம் -திருச் சித்திரையில் திருச் சித்திரை
அகிலாத்ம குணா வாசம் அஞ்ஞான திமிரா பஹம் ஆஸ்ரிதா நாம் ஸூ சரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்
(மாம்பழம் சாப்பிடச்சொன்ன பிள்ளை அருளிய தனியன் -சரியாக சொல்லாமல் அடுத்த தனியன் )ஸ்ரீ மத் ராமாநுஜாசார்ய ஸ்ரீ பாதாம் போருஹ த்வயம் சத் உத்தமாங்க சந்தார்யம் அனந்தாஹ்ய மஹம் பஜே -(அனந்தார்ய குரும் பஜே )
ஸ்ரீ யதீந்த்ர பதாம் புஜ சஞ்சரீகம்- ஸ்ரீ மத் தயா பால தயைக பாத்ரம்-ஸ்ரீ வேங்கடேச அங்க்ரி யுகாந்தரங்கம் நமாம் யனந்தார்ய மனந்த க்ருத்வ
———————————–
ஸ்ரீ எச்சான் தனியன் (அஷ்ட சஹஸ்ரம் கிராமம் சந்நிதி உண்டு )-
யேந வைஷ்ணவ சேஷத்வ பர்யந்தம் பரமாத்மந-சேஷத்வ மாத்ம நோஜஜேயம் யஜ்ஜே சந்தம் உபாஸ்மஹே
———————————–
ஸ்ரீ வடுக நம்பி (ஆந்திர பூர்ணர்)தனியன் –
ஸ்ரீ ராமாநுஜார்ய சரண பிரணவம் பரதேவவத் -வடு பூர்ணம் அஹம் வந்தே பரஞ்ஞான பயோ நிதிம்
——————————————-
ஸ்ரீ எழுபத்து நான்கு ஆச்சார்யர்களுக்கும் சமுதாய தனியன்
ஸ்ரீ ராமாநுஜார்யாஸ் ஸ்ருதி மௌலி பாஷ்யம் அர்த்தம் ரஹஸ்யந் த்ரமிட ஸ்ருதீணாம் –
ஸம்ப்ராப்தே நைவ குரூ க்ருதாம் ஸ்தாந் பஜே சதுஸ் சப்ததி பீட ஸம்ஸ்தான்
———————————-
ஸ்ரீ மாருதிச் சிறியாண்டான் தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை
ஸ்ரீ திருவேங்கடமுடையான் தன் ஸ்வரூபத்தை மறந்து என் ஸ்வரூபத்தை நினைத்தான் ஆகில் பழைய நரகங்கள் ஒழிய வேறே எனக்கு என்று சில நரகங்களை ஸ்ருஷ்டிக்க வேண்டும் இறே
அன்றிக்கே என் ஸ்வரூபத்தை மறந்து தன் ஸ்வரூபத்தை உணர்ந்தான் ஆகில் பழைய திரு நாடு போராது-எனக்கு என்று வேறே ஒரு திரு நாடு ஸ்ருஷ்டிக்க வேண்டும் இறே
அதாவது ஸ்வ க்ருத தோஷ ஸ்மரணம் அனந்த துக்க பிரதான ஹேது
ஈஸ்வர வாத்சல்ய ஸ்மரணம் அனந்த ஆச்சர்ய ஸூக பிரதான ஹேது -என்றபடி
இவர் தனியன் –
ஞாதும் கூர குலாதி பங்க்ரிமிகுளாத் ப்ராப்த பதம் ப்ரேஷித-ஸ்ரீ ராமா வரஜேந கோசல பதிர் த்ருஷ்ட் வா ததீயாம் ஸ்திதிம் –
ஸம்ப்ராப்தஸ் த்வரயா புராந்தக புராத் கல்யாண வாபீ தடே யோசவ் மாருதி ரித்யசம் சதவயந் தஸ்மை நமஸ் குர் மஹே
——————————–
ஸ்ரீ மருதூர் நம்பி தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை
மூன்று ஜென்மம் தம் திருவடிகளில் அபராதம் பண்ணின சிஸூ பாலன் திருவடிகளை அடைந்தான் -அனந்த ஜென்மங்கள் திருவடிகளில் அபராதம் பண்ணின நான் இழந்து இருக்கை வழக்கோ என்ன
ஸ்ரீ சிங்கர் அன்றே திருவடிகளைத் தந்து அருளினார் –
அதாவது இத்தலையில் அபராதமே அவன் அங்கீ காரத்துக்கு பச்சை என்று உணர்கை சரம ஞான பரிபாகம் என்றபடி
———————————
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் தம்முடைய அந்திம தசையில் முதலிகள் எல்லாரையும் அழைப்பித்துத் தீர்த்தம் கொண்டு க்ஷமை கொண்டு -ஸ்ரீ பொன்னாச்சியாரைப் பார்த்து -நம்முடைய விஸ்லேஷத்தில் நீ பிழை நினையாதே கொள் என்று ஆணை இட்டு -ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளைத் தம் திரு முடியில் வைத்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –
அனந்தரம் பொன்னாச்சியாரும் கிலேசியாமல் தரித்து இருந்து திரு வாசலைத் திரு அலகிட்டுத் தெளிநீர் தெளித்துத் திருப் பிண்டி இட்டுத் திருக் காவணம் இடுவித்து நிற்க ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ உடையவர் நீராடும் துறையிலே திரு மஞ்சனம் எடுத்துக் கொண்டு வந்து ஸ்ரீ த்வய அனுசந்தானத்துடன் நீராட்டி திரு நாமம் திருச் சூர்ணம் முதலாக ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரங்கள் எல்லாம் செய்து ஸ்ரீ பெருமாள் சாத்திக் களைந்து வர விட்டு அருளின திருமாலையும் திருப்பரி யட்டமும் சாத்தி அலங்கரிக்க தாமும் சர்வ ஆபரண பூஷிதையாய்க் கஸ்தூரி மிருகம் போலே உலாவி நின்று ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தீர்த்தம் கொண்டு சுருள் அமுது திருத்தித் திரு மாளிகையில் உள்ள த்ரவ்யங்கள் அடங்கலும் சமர்ப்பிக்க கரும்புகளும் எடுத்து ஸ்ரீ நூற்று அந்தாதி இயலாக அனுசந்தித்து வரப் பின்பு திருச் சூர்ணம் இடித்து எல்லாரும் எண்ணெய் சுண்ணம் கொண்டாடி ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசருடைய விமல சரம விக்ரஹத்தை திவ்ய விமானத்தில் எழுந்து அருள பண்ணி வைத்துக் கொண்டு ஏகாங்கிகளும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் மற்றும் உள்ள முதலிகளும் மாறி மாறி ஸ்ரீ பாதம் தாங்க விமானமும் தூர மறைந்த அளவில்- ஸ்ரீ பொன்னாச்சியாரும் சோகார்த்தையாய்
மாரி மாக் கடல் வலை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில் தாயாரின் ஆசையில் போயின நெஞ்சுமும் தாழ்ந்தது
ஓர் துணை காணேன் -ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது அறியேனே -என்று கை எடுத்துக் கூப்பிட்டு அழுது கொண்டு விழுந்து -பாகவத விஸ்லேஷ அஸஹிஷ்ணுவாய் மூர்ச்சித்துக் கிடந்து- அப்போதே அங்கே ஸ்ரீ திருநாட்டுக்கு எழுந்து அருள முதலிகளும் அங்கே அவருக்கு திருச் சூர்ணம் இடித்து ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசருடன் திருப் பள்ளி படுத்தார்கள் என்பர்கள்-
இவருக்கு ததீய விஸ்லேஷத்தில் அப்போதே சரீர விஸ்லேஷம் வரும்படியான ததீய பிரேம சரம பாகம் முற்றி வளர்ந்த படி இறே இது
இவர் தனியன்
ஜாக ரூக தனுஷ் பாணிம் பாணவ் கட்க ஸமந்விதம்-ராமானுஜ ஸ்பர்ச வேதிம் ராத்தாந் தார்த்த ப்ரகாசகம் பாகிநேய த்வ யுகம்
ஸ்ரீ பாஷ்யகார பரம் வஹம் ரங்கேச மங்களகரந் தனுர்த் தாசம் அஹம் பஜே
—————————————–
ஸ்ரீ நம்பி திரு வள நாடு தாசர் திருநாட்டுக்கு எழுந்து அருளுகிற சமயத்தில் தம் ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருந்த ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அழ-
அதற்கு ஸ்ரீ நம்பி -கெடுவாய் செத்துப் போகிற நான் போகா நின்றேன் -ஸ்ரீ பராசர பட்டர் வாசிக்கக் கேட்க இருக்கிற நீயோ அழுகிறாய் -என்று அருளிச் செய்தார் இறே
அதாவது சதாச்சார்ய வ்யாக்யான வசன ஸ்வாரஸ்யாசக்தி அபவர்க்க பல ப்ராப்தியிலும் அருசி பிறப்பிக்கும் என்றபடி
————————————
ஸ்ரீ பிள்ளை திரு வழுதி வள நாட்டு அரையர் தம் அந்திம தசையில் கிலேஸிக்க சுற்றிலும் இருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
அன்யோன்யம் திரு முகம் பார்த்து இருக்க -அவரும் இவர்களுடைய அபிப்ராயத்தைத் தம் திரு உள்ளத்திலே கோலி அருளி –
வாரிகோள் முதலிகாள் சம்சாரிகள் இழவுக்குப் போர நொந்தோம் காணுங்கோள்-
அவர்களுக்கும் நமக்கும் அல்ப மாய்த்து வாசி உள்ளது -எங்கனே என்னில்
நாம் இடுவது ஒரு தண்டம் -பண்ணுவது ஒரு பிரபத்தி -இழப்பது ஒரு ஹேயமான சரீரம் -பெறுவது ஒரு விலக்ஷணமான ஸ்ரீ பரமபதம் -இத்தை அறியாதே அதபதிக்கிறார்களே என்ற கிலேசமாய்த்து காணுங்கோள் என்ன முதலிகளும் க்ருதார்த்தரானார்கள்
அதாவது -பர துக்க அஸஹிஷ்ணுதவமும் -பர சம்ருத்ய ஏக பிரயோஜனத்வமும்- ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உண்டாக வேணும் என்று கருத்து
———————————————-
ஸ்ரீ எம்பார் வைபவம் –
ஸ்ரீ எம்பார் ஸ்ரீ உடையவர் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது-அவர் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு-
நாயந்தே ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸூக்தி கையிலே ரஜத புத்தி பண்ணுவாரைப் போலே அபரமாத்மா விஷயே பரமாத்மா புத்தி பண்ணி
விபரீத ஞான நிஷ்டனாய் ஸ்ரீ காளஹஸ்தி ஆகிற கடும் காட்டிலே இருந்த என்னைப் போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து
தன் பால் ஆதரம் பெருகும்படி திருத்தி மாயப் பற்று அறுத்து அடியேனுடைய துர் வாச நாச்சேதனத்தைப் பண்ணி அருளி –
பொருள் இல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டு அருளி -தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -என்கிறபடியே
சர்வவித பந்துவும் த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டையும் தேவரீர் திருவடிகளே என்று காட்டிக் கொடுத்து அருளினார் –
தேவரீரும் அப்படியே அடியேன் ஸ்ரீ நம்பி திருவடிகளை அகன்ற இழவு எல்லாம் தீர சர்வ வித உத்தாரக பந்துவாய் நிற்க –
தேவரீர் திருவடிகளே ப்ராப்யம் ப்ராபகமும் என்று அத்யவசித்து இருந்த அடியேன்
ந ச சீதா த்வயா ஹீனா ந ச அஹம் அபி ராகவ முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருதவ் -என்கிறபடியே
என் உயிர் நிலையான தேவரீர் திருவடிகளை அகன்று ஒரு க்ஷண மாத்ரமும் தரிக்க மாட்டேன் -தேஹி விட்டுப் போனால் தேகம் நிற்குமோ -நிழலும் அடி தாறும் ஆனோம் -என்கிறபடியே ஸ்ரீ பாதாச்சாய பன்னனான அடியேன் எங்கனே தரித்து இருப்பேன் என்று திருவடிகளில் போர ஆர்த்தியோடே விழுந்து எழுந்து இராமல் கிடக்க
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ எம்பாரை குளிர நோக்கி அருள -நாம் ஸ்ரீ நம்பி திருக்கையாலே உம்மை உதக பூர்வகமாகப் பரிஹரித்த பின்பு நமக்கும் உம்மைப் பிரியக் கூடுமோ -நம்முடைய ஸ்ரீ வைகுண்ட நாதனும் அப்படியே செய்து அருளுகிறான் -பதறாதே கொள்ளும் -என்று ஸ்ரீ எம்பாரை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு தம் பொன் அம் கழல் தாமரைப் பூக்களால் அவர் திருமுடியை அலங்கரித்து அருளி ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருள
ஸ்ரீ எம்பாரும் தாயைப் பிரிந்த ஸ்தநந்த்ய பிரஜையைப் போலே சிதில அந்தக் கரணனாய் பெரிய ஆர்த்தியோடே ஸ்ரீ உடையவர் பிரசாதித்து அருளின அர்த்த விசேஷங்களை ஸ்ரீ பட்டர் முதலான முதலிகளுக்கு ப்ரசாதித்துக் கொண்டு எழுந்து அருளி இரா நிற்க
ஒரு நாளாக ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் திரு உள்ளத்தே நினைந்து நைந்து உள் கரைந்து உருகி -தாய் நாடு கன்றே போல் எப்போது காணப் பெறுவேன் -என்று த்வரை விஞ்சி ஆச்சார்ய விஸ்லேஷம் பொறுக்க மாட்டாமல் -அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா -என்கிறபடி ஸ்ரீ உடையவரை அகன்று இருக்க மாட்டாதே ஆற்றாமை கரை புரண்டு மிகவும் விஞ்சி -ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதியில் சென்று -நாயந்தே அடியேன் ஸ்ரீ உடையவர் திருவடிகள் ஏறப் போக நினையா நின்றேன் -தேவரீர் விடை பிரசாதித்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பெருமாளும் அப்படியே செய்யும் -என்று திரு உள்ளம் பற்றி அருளி -ஸ்ரீ எம்பாருக்குத் தீர்த்த பிரசாதமும் ஸ்ரீ சடகோபனும் இரங்கிப் பிரசாதித்து அருள -இவரும்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-என்று அங்கீ கரித்து அருளி -ஸ்ரீ அமலனாதிப் பிரான் படியே ஸ்ரீ பாதாதி ஸ்ரீ கேசாந்தமாக அனுபவித்து அருளி என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே-என்று கொண்டு அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பனை தன் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நீங்காத படியாக நிறைத்துக் கொண்டு புறப்பட்டு அருளி ஸ்ரீ உடையவர் திரு மடத்தேற எழுந்து அருளி –
யோ நித்யம் -என்று தொடங்கி-ராமாநுஜஸ்ய சரணவ சரணம் ப்ரபத்யே -என்று அனுசந்தித்துக் கொண்டு தண்டனை சமர்ப்பித்து திரு மடம் எழுந்து அருளித் தம் திரு ஆராதனமான ஸ்ரீ அரங்க நகர் அப்பனைத் திருவடி விளக்கி ஸ்ரீ பட்டரை அழைத்து அருளி
வாரீர் ஸ்ரீ பட்டரே-நாம் ஸ்ரீ ஆழ்வான் திருக் குமாரர் – அகில சாஸ்திரங்களையும் அதிகரித்தோம் -ஸ்ரீ நம்பெருமாள் நம்மை புத்ர ஸ்வீகாரம் பண்ணி அருளினார் என்னும் மேன்மைகளை நினைந்து இறுமாந்து இராதே -நம் ஆணை ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே உபாய உபேயம் என்று அத்யவசித்து இரும்-என்று அருளிச் செய்து –
ஸ்ரீ கணியனூர் சிறி யாச்சான் -ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர் -ஸ்ரீ ஈச்சம் பாடிச் சீயர் முதலானோர்க்கும் மற்றும் உள்ள முதலிகளுக்கும் ஸ்ரீ உடையவர் பிரசாதித்து அருளின அர்த்த விசேஷங்களையும் ப்ரசாதித்துக் கொண்டு தர்சனம் நிர்வகித்து வாழ்ந்து அருள வேணும் என்று மங்களா சாசனம் செய்து அருளி -அவர்களை ஸ்ரீ பட்டர் திருக் கையிலே கொடுத்து அருளி -சர்வ அபராதங்களையும் பொறுத்து அருள வேணும் என்று தண்டனை சமர்ப்பித்து -ஸ்ரீ பட்டர் முதலான முதலிகளைத் தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி -ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனே வழித் துணையாக நினைத்துக் கொண்டு -ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஸ்ரீ பட்டரும் ஆச்சார்ய விஸ்லேஷம் பொறுக்க மாட்டாமல் மிகவும் சோகார்த்தராய் கிலேசிக்க-அருகில் இருந்த முதலிகளும் -வாரீர் ஸ்ரீ பட்டரே தேவரீர் இப்படி கிலேசிக்கலாமோ -என்று தேற்றமிட -ஸ்ரீ பட்டரும் தம்மிலே தெளிந்து கொண்டு இருக்கிற அளவிலே -ஸ்ரீ பெருமாள் சாத்திக் களைந்த திருமாலை திருப் பரியட்டம் முதலானவற்றையும் கொண்டு அனைத்துக் கொத்தில் உள்ளவர்களும் வர -ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாள் திருக்கையாலே ப்ரஹ்ம மேத விதி யடங்கச் செய்வித்து -ஸ்ரீ எம்பாருடைய விமல சரம விக்ரஹத்தைப் பீடயாநத்திலே எழுந்து அருளுவித்துக் கொண்டு போய்- யதி ஸம்ஸ்கார விதி யுக்தப் பிரகாரேண சமஸ்கரித்து கனித்துத் திருப் பள்ளிப் படுத்தி -அவப்ருதம் கொண்டாடிப் பெருக்கத் திரு அத்யயனமும் நடத்தி அருளினார் –
ஆச்சார்ய கைங்கர்யமே பரம பிரயோஜனமாய்த் தன்னைப் பேணாமையும் -ஆச்சார்ய விஷயத்தில் க்ரய விக்ரய அர்ஹராய் ஸ்வ வியாபாரம் அற்று இருந்த படியையும்-ஆச்சார்ய திறத்தில் சாயாவத் பாரதந்தர்யமும் -ஆச்சார்யரை அகன்று தரியாத அனுஷ்டானமும் இவருக்கே உள்ளது ஓன்று இறே
ஸ்ரீ எம்பார் திரு நக்ஷத்ரம் -திருத் தையில் திரு புனர்வஸூ
இவர் தனியன்
ஸ்ரீ ராமானுஜ பதாச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயநீ ததாயத்த ஸ்வரூபா சா ஜீயான் மத் விஸ்ரமஸ் தலீ –
வம்பார் மலர்க் கணை களைந்தாலு மேவு மாதர் விழி அம்பால் இடர ஒன்றிலன் ஒரு காலும் அரிவையர்க்குத்
தம்பாடு ஒரு காலும் ஏகாந்தம் இல் என்று தாம் உரைத்த எம்பார் அடி சரண் என்பார் அடி சரணம் எங்களுக்கே
ஸ்ரீ பட்டார்யா ப்ரபத்திம் வ்யபதிச ததுலன் த்ராவிடாம்நர்ய மவ்லேரர்த்தம் ஸ்ரீ பாஷ்ய மந்யாநபி ச யதிவரா தேசதோ அந்யாந் ரஹஸ்யான்
யஸ் தோக்தோ தேசி கேந்த்ரோ யதிபதி சரணச் சாயா நாமார்ய வர்யஸ் தங் கோவிந்தார்ய மஸ்மாத் குலகுரு மமித ஞான வைராக்ய மீடே
ஹ்ருதி நாராயணம் பஸ்யன் நாப்யச் சத ரஹஸ் சதா -யஸ் ஸ்வாதார ரதவ்ஷாபி கோவிந்தம் உபாஸ்மஹே
———————————————–
ஸ்ரீ ஆழ்வார்களுக்கும் ஸ்ரீ உடையவருக்கும் தீர்த்த திவசம் சொல்லாது ஒழிவான்-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பரிபாலித்து ப்ரசித்திப் படுத்தாமல் இருப்பது – என் என்னில்-
அத்யாபி அகிலாத்ம உத்தாரணார்த்தமாக ஸ்ரீ அர்ச்சா விக்ரகங்களை அங்கீ கரித்து இங்கே எழுந்து அருளி இருக்கிறார்கள் ஆகையால் –
அன்றிக்கே-அவர்கள் அங்கு கால் வாங்கிப் போகில் ஆத்ம கோடிகளுக்கு ஈடேற வழி இல்லை இறே -இத்தை நினைத்து இறே
நம் ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் தீர்த்தம் கொண்டாடித் திதி பரிபாலனம் பண்ணாது ஒழிகிறதும்
ஆர்த்ராயா முதிதோ -மஹா புரி கதோ ஹஸ்த்யத்ரி மாத்தாஸ்ரமஸ்- ஸ்ரீ ரங்க ஸ்ரீய மேத்ய சிஷ்ய மஹிதோ வேதாந்த பாஷ்பம் வதன் –
தீப்ரோ திக் விஜயம் விதாய -சக தைர் விப்ரைர் த்வி பஞ்சாச தைர்பாதி ஸ்ரீ யது பூதரே யதிவரஸ் சம்பத் குமாரம் பஜன் என்று –
சித்திரையில் செய்ய திருவாதிரையில் -ஸ்ரீ பெரும் பூதூரிலே அகில ஆத்ம உத்தாரண அர்த்தமாக வந்து அவதரித்து சகல சாஸ்திரங்களையும் அப்யஸித்து -ஸ்ரீ பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பேர் அருளாளர் நியமனத்தாலே ஸ்ரீ பெரிய நம்பியை ஆஸ்ரயித்துப் பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் பெற்று
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியில் ஆஸ்ரம பிராப்தி பண்ணி அருளி ஸ்ரீ ரங்க ஐஸ்வர்யத்தைப் பெற்று ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து திக் விஜயம் பண்ணித் ஸ்ரீ திருவரங்கர் பரத்வத்தை நிலை நிறுத்தி அருளி-புழுவன் வ்யாஜேன மேல் நாட்டுக்கு எழுந்து அருளி ஸ்ரீ திரு நாரணற்கு அனைத்து அழகும் கண்டு அருளப் பண்ணி ஸ்ரீ செல்வப் பிள்ளையை பெற்று எடுத்து வந்து ப்ரதிஷ்டிப்பித்து அருளி ஐம்பத்து இருவர்க்காக அர்ச்சாவதார ரூப விக்ரஹத்தை அங்கீ கரித்து அதிலே தம் சர்வவித சக்தியையும் ப்ரதிஷ்டிப்பித்துக் கொண்டு அவர்களால் ஸேவ்யமானராய் -செம் பொன் கழல் அடி திரு உரு ஸ்ரீ செல்வப்பிள்ளையை மங்களாசாசனம் செய்து கொண்டு கால தத்வம் உள்ளதனையும் இங்கே ஸூ ப்ரதிஷ்டிதராய் விளங்கா நின்று கொண்டு வாழ்ந்து அருளுகிறார் ஸ்ரீ உடையவருமாய்த்து –
————————————
ஸ்ரீ பட்டர் வைபவம்
அநந்தரம் ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்து முதலிகளுடனே பெரும் கூட்டத்து திரு ஓலக்கமாக எழுந்து அருளி இருந்து தர்சனம் நிர்வகித்து அருளுகிற காலத்திலே -ஒரு தீர்த்த வாசி ப்ராஹ்மணன் வந்து ஸ்ரீ பட்டரை சேவித்து அவருடைய வேதாந்த உபன்யாச சாதுர்யத்தையும் கோஷ்டியின் வைபவத்தையும் கண்டு நின்று
ஸ்ரீ பட்டரே மேல் நாட்டில் ஸ்ரீ வேதாந்தி என்று ஒரு வித்வான் இருக்கிறான் -அவனுடைய வித்யையும் கோஷ்டியம் போலே உமக்கும் இருந்தது என்ன –
ஸ்ரீ பட்டரும் ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தையைக் கேட்டு அருளி -ஆமோ அப்படியும் ஒரு வித்வான் உண்டோ -என்ன –
உண்டு என்று சொல்லி -அந்த ப்ராஹ்மணன் இங்கு நின்றும் புறப்பட்டு மேல் நாட்டுக்குப் போய் வேதாந்தி கோஷ்டியிலே சென்று-
வேதாந்திகளே உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சத்ருசராய் -ஸ்ரீ பட்டர் என்பார் ஒருவர் இரண்டு ஆற்றுக்கும் நடுவே எழுந்து அருளி இருக்கிறார் என்ன
வேதாந்திகளும் ப்ராஹ்மணனைப் பார்த்து -ஆமோ ஸ்ரீ பட்டர் நமக்கு ஒத்த வித்வானோ என்ன -அவனும் உம்மிலும் அதிகர் என்ன
அவனும் அவருக்கு எந்த சாஸ்திரம் போரும் என்ன -ப்ராஹ்மணனும் -சப்த தர்க்க பூர்வ உத்தர மீமாம்ச தொடக்கமான சகல சாஸ்திரங்களும் ஸ்ரீ பட்டருக்குப் போரும் என்ன வேதாந்தியும் இவன் சொன்னத்தைக் கேட்டு -இவ் விபூதியில் நமக்கு ஒருவரும் எதிரில்லை என்று ஷட் தர்சனத்துக்கும் ஆறு ஆசனம் இட்டு அதன் மேலே உயர இருந்தோம் -ஸ்ரீ பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னானே என்று அன்று தொடங்கி திடுக்கிட்டு இருந்தான் –
அவ் வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து ஸ்ரீ பட்டர் சந்நிதியில் வந்து –
ஸ்ரீ பட்டரே உம்முடைய வைபவம் எல்லாம் வேதாந்திக்குச் சொன்னேன் என்ன -ஸ்ரீ பட்டரும் ப்ராஹ்மணனைக் குறித்து அதுக்கு அவன் என்ன சொன்னான் -என்ன -அவனும் -ஸ்ரீ பட்டருக்கு எந்த சாஸ்திரம் போரும் என்று கேட்டான் என்ன -ஸ்ரீ பட்டரும் ப்ராஹ்மணா அதுக்கு நீ வேதாந்திகளுக்கு என்ன சொன்னாய் என்ன -அவனும் ஸ்ரீ பட்டருக்கு சப்த தர்க்கங்களும் பூர்வ உத்தர மீமாம்சைகளும் நன்றாகப் போரும் என்று வேதாந்தி யுடன் சொன்னேன் என்ன –
ஸ்ரீ பட்டரும் அந்த ப்ராஹ்மணனைக் குறித்து தீர்த்த வாசியாய் தேசங்கள் எல்லாம் நடையாடி வித்யா மஹாத்ம்யங்களை எல்லாம் அறிந்து நாகரீகனாய் இருக்கிற நீ -நமக்குப் போருமது எல்லாம் அறிந்து வேதாந்திக்குச் சொல்லாதே -கேவலம் வேதாந்த சாஸ்த்ரங்களே போரும் என்று தப்பச் சொன்னாயே -என்ன –
-ப்ராஹ்மணனும் ஸ்ரீ பட்டரைக் குறித்து-இந்த லோகத்தில் நடையாடுகிற சாஸ்திரம் ஒழிய உமக்கு மற்று எது போரும் என்று வேதாந்திக்குச் சொல்வது -என்ன
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் போரும் என்று வேதாந்திக்குக் சொல்லாது இருந்தாயே என்று வெறுத்து அருளிச் செய்து விட –
அவனும் பின்னையும் மேல் நாட்டுக்குப் போய் வேதாந்தியுடன் இச் செய்தியைச் சொல்ல –
வேதாந்தியும் ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் என்கிற சப்தத்துக்குத் தானே அர்த்தம் ஆகிறது இல்லை -அவர் எப்படிப்பட்ட வித்வானோ என்று விஸ்மயப் பட்டு இருக்கச் செய்தே
ஸ்ரீ பட்டரும் -வேதாந்தியை நம்முடைய தர்சனத்திலே அந்தர்ப் பூதராம்படி திருத்தும் என்று ஸ்ரீ உடையவர் நியமித்து அருளினது அவசியம் கர்தவ்யம் என்று தம் திரு உள்ளத்திலே கொண்டு ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் சென்று சேவித்து நின்று –
நாயந்தே மேல் நாட்டில் வேதாந்தி என்று ஒரு பெரிய வித்வான் இருக்கிறான் -அவனைத் திருத்தி நம் தரிசன பிரவர்த்தகனாம் படி பண்ண வேண்டும் என்று அங்கேற விடை கொள்வதாக இரா நின்றேன் -தேவரீர் அவனை நன்றாகத் திருத்தி ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தத்துக்கு நிர்வாஹனமாம் படி திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்று ஸ்ரீ பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெருமாளும் அப்படியே ஆகக் கடவன் -த்வரித்துப் போய் வாரும் -என்று திரு உள்ளம் உகந்து-தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டம் இவற்றுடன் தம் திருக் குமாரரான வாசி தோன்ற அநேகம் திரு ஆபரணம் திருப்பரியட்டம் ந்ருத்த கீத வாத்யங்களையும் தமக்கு உண்டான சகல பரிஜன பரிச்சதங்களையும் கூட்டி போம் என்று விடை கொடுத்து அருள –
ஸ்ரீ பட்டரும் புறப்பட்டு மேல் நாட்டிலே எழுந்து அருளி -திருக் காவேரி கரையிலே ஸ்ரீ சிறுப்புத்தூர் அண்டையிலே நின்று அருள
ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ ஆழ்வான் திருக்குமாரர் ஸ்ரீ பட்டர் எழுந்து அருளினார் என்று கேட்டு சடக்கெனப் புறப்பட்டு எழுந்து அருளி திருக் காவேரிக் கரையிலே ஸ்ரீ பட்டரைக் கண்டு சேவித்து -ஐயோ ஸூ குமாரரான நீர் காடும் மலையும் கடந்து இத்தனை தூரம் எழுந்து அருளலாமோ -என்ன ஸ்ரீ பட்டரும் திருவடிகளில் விழுந்து ஸ்ரீ அனந்தாழ்வானை சேவித்து ஸ்ரீ உடையவர் மேல் நாட்டிலே போய் வேதாந்தியைத் திருத்தி நம் தரிசன பிரவர்த்தகராம் படி பண்ணு என்று நியமித்து அருளினார் -அப்படியே ஸ்ரீ நம்பெருமாளை விடை சாதித்து அனுப்பி அருளினார் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ அனந்தாழ்வானும் -எங்கள் குடிக்கு அரசே வாரும் என்று ஸ்ரீ பட்டரை எடுத்து அனைத்துக் கொண்டு போய்
ஸ்ரீ யாதவாத்ரேர் ஜிநிமிஷா யேஷாங் கேஷாஞ்ச வித்யதே -தேஷான் தேசே யமபடா நா கச்சந்தி கதாசன-என்று
ஸ்ரீ யதிசைல யியாசை யாவர் சிலருக்கு உண்டாய் இருக்கும் -அவர்கள் வசிக்கும் தேசத்தில் யம படர் மறந்தும் புகுரார்கள்-என்றும்
சஹஸ்ர சிகரஸ் சோயம் சாஷாச் சேஷாத்ம கோ கிரி -வைகுண்டாதபி யத்ராஹம் ரமயா சஹி தோரமே-என்று
சஹஸ்ர பணா மண்டலமுடைய திரு வனந்த ஆழ்வான் திரு வவதாரமான ஸ்ரீ யது கிரி சிகரத்தில் ஸமஸ்த கல்யாண குணங்களும் குன்றில் இட்ட விளக்காய் பிரகாசிக்கும்படி ஸ்ரீ பரம பதத்தையும் ஸ்ரீ திருப் பாற் கடலையும் உபேக்ஷித்து -ஸ்ரீ அரவிந்தப் பாவையும் தானுமாய்-அல்லி மலர் மகள் போக மயக்குகளாய் நிற்க-
ஸ்ரீ வைகுண்ட வாசிநஸ் சர்வே சேஷ சேஷாசநாதய-திர்யக் ஸ்தாவர ஜன்மாநி ஸ்ரயந்தே யது பூதரே-என்று ஸ்ரீ வைகுண்ட நாட்டில் வாழும்
ஸ்ரீ சேனை முதலியார் ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் முதலான நித்ய முக்தர் எல்லாரும் ஸ்ரீ திருநாடு புல் எழுந்து போம்படி குடி வாங்கி வந்து
இஸ் ஸுசீல்ய ஸுலப்ய அனுபவ அர்த்தமாக திர்யக் ஸ்தாவர ஜென்மங்களைப் பரிக்ரஹித்து ஸூ பிரதிஷ்டராய் இங்கே வர்த்திக்கிறார்கள் என்றும் சொல்லும்படியான வைபவத்தை யுடைய ஸ்ரீ யாதவ கிரியைக் கிட்டி சேதனன் பாத பீடத்தில் ஏறும் பாவனை கொண்டு
செம்பொன் ஸ்ரீ யதுகிரி ஏறித் திருக் கல்யாண சரஸ்ஸைக் கிட்டி
காலே காலேச சேவந்தாம் கல்யாண தீர்த்தம் அத்புதம் -யத்ர தீர்த்தே நிமஜ் ஐந்தோ யதயஸ் ஸம்சித வ்ரதா உன்மஞ்சந்தி பவாம் போதி கல்லோல கலஹாந்தராத் புஷ்கரே நததா ப்ரீதிர் ந கங்காயாம் நா யாமுநே-யதா கல்யாண தீர்த்தஸ்ய தீர்த்தே கல்யாண சேதஸாம் தீர்த்தே
தத்ரா மலேஸ் நாத்வா முச்யந்தே சர்வ கில்பிஷை-நாஸ்திகஸ் ச க்ருதக்நஸ் ஸ பரீவாத பரோபிச-பர ப்ரஸம்ஸா நிஷ்டஸ்ஸ ஸ்வ ப்ரஸம்சா பாராயண -யஜ்ஜ விக்நகரஸ் சைவ வேதாத்யயன தூஷக -பர தாரா நுரக்தஸ் ஸ பாக பேத கரோபி ச பர த்ரவ்யாபஹாரீ ச பாஷண்டா மதத் பர ஷூத்ர அன்ன பக்ஷகஸ் சைவ ஸ்வாதீநா முபலாளக தர்ம விக்ரய சீலஸ் ஸ ஸ்ராத்த புக் க்ராம யாஜக தேவதா த்ரவ்யாஹாரீச தரப்ப டம்பஸ் மன்வித பாவாங்க் லேசகரஸ் சாபி ப்ராஹ்மணா நாஞ்ச நிந்தக விஷ்ணு பக்தி விகாதீச வ்ருஷலீ பதி ரேவச -என்று
இப்படிப் பட்டவர்களுடைய பாபங்களை போக்க வல்ல திருக் கல்யாணியிலே நீராடி -கேசவாதியான துவாதச திரு நாமம் சாத்தி அருளி எழுந்து அருள -அங்கு இருந்த ஐம்பத்து இருவர் முதலான அனைவரும் ஸ்ரீ சடகோபன் முன்னிலையாக வந்து எதிர் கொள்ள
ஸ்ரீ பட்டரும் சாஷ்டாங்கமாக சேவித்து திவ்ய நகரிக்குள்ளே எழுந்து அருளி -சதுராநந திவ்ய கோபுரத்தை (நான்முகன் கோட்டை வாசல் )அஞ்சலித்து உள்ளே புகுந்து ஸ்ரீ பலி பீடத்து அருகே தாளும் தடக்கையும் கூப்பி தண்டன் சமர்ப்பித்துஸ்ரீ உடையவர் சந்நிதிக்கு எழுந்து அருளி -யோ நித்யம் -என்று தொடங்கி –ராமாநுஜஸ்ய சரணவ சரணம் ப்ரபத்யே -என்று சேவித்து –
ஸ்ரீ ராமானுஜ திவாகரரையும் திருவடி தொழுது வாழ்த்தி -தீர்த்த பிரசாதங்களும் பெற்று அவர் புருஷகாரமாக பிரதக்ஷிணமாக எழுந்து அருளி
பஸ்ஸாதாபி விமானஸ்ய பிரகாராந்தர மத்யத ஸ்ரீ ஸூதர்சன நஞ்ச ஸ்ரீ லஷ்மீஸ் ச வர்த்ததே சர்வ காமதே என்று சொல்லப்பட்ட –
ஸ்ரீ திருவாழி ஆழ்வானையும் -ஸ்ரீ யதுகிரி நாச்சியாரையும் சேவித்து- ஆனந்த மயமான திவ்ய விமானத்தையும் தொழுது உள்ளே எழுந்து அருளி -சாஷ்டாங்கமாக சேவித்து -ஸ்ரீ நம்மாழ்வாரையும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரையும் சேவித்து- ஸ்ரீ செல்வப் பிள்ளையையும் திருவடி தொழுது
அவ் விக்ரஹ ஸுந்தர்யத்திலே ஆழங்கால் பட்டு நிற்க –ஸ்ரீ செல்வப் பிள்ளையும் உகந்து தீர்த்தம் திருமாலை சடகோபன் பிரசாதித்து அருளப் பெற்றுப் புறப்பட்டு ஸ்ரீ சேனை முதலியாரையும் திருவடி தொழுது சண்ட ப்ரசண்டர்களான த்வாபர பாலர்கள் அனுமதி கொண்டு உள்ளே சென்று திருப்பல்லாண்டை அனுசந்தித்து ஸ்ரீ திரு நாராயணப் பெருமாளைப் பாதாதி கேசாந்தமாக சேவித்து அஞ்சலித்து நிற்க
ஸ்ரீ திரு நாராயணரும் மிகவும் உகப்போடே ஸ்ரீ பட்டருக்குத் திருமாலை திருப்பரியட்டம் தீர்த்தம் சடகோபனும் பிரசாதித்து விடை கொடுத்து அருள
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ அனந்தாழ்வானுடன் புறப்பட்டு எழுந்து அருளி -வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆசன்னமானவாறே
ஸ்ரீ ஆழ்வான் திருக்குமாரர் ஸ்ரீ பட்டர் வந்தார் -ஸ்ரீ அணி அரங்கன் திருக்குமாரர் பட்டர் வந்தார் -வேதாந்தாசார்ய பட்டர் வந்தார் -வேதியர்கள் தனித் தலைவர் வந்தார் -ஸ்ரீ பராசர பட்டர் வந்தார் -பரவாத மத ஹஸ்தி பஞ்சாநநர் வந்தார் -என்று பல திருச் சின்னம் பணிமாறுகை முதலான தூர்ய கோஷத்துடன் பெரும் திரளாக மஹா சம்பிரமத்துடனே சர்வாபரண பூஷிதராய் -சத்ர சாமர தால வ்ருந்தாதிகள் சேவிக்க –மணிப் பல்லக்கிலே எழுந்து அருளா நிற்க –அவ்வளவில் இரண்டு ப்ராஹ்மணர்கள் எதிரே வந்து ஸ்ரீ பட்டரைப் பார்த்து -நீர் ஆர் -அநேக சம்பிரமத்துடனே வந்தீர் -எங்கிருந்து எழுந்து அருளுகிறீர் என்று கேட்க
ஸ்ரீ பட்டரும் -நாம் ஸ்ரீ ரெங்கராஜ பட்டர் -வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம் என்ன –
அந்த ப்ராஹ்மணர்கள் சொன்னபடி -நீர் இப்படி சம்பிரமத்துடனே எழுந்து அருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப் போகாது காணும் -அவர் க்ருஹத்துக்கு உள்ளே இருந்து விடுவார் -அவருடைய சிஷ்ய பிரசிஷ்யர்கள் தலை வாசலிலே இருந்து வந்த வித்வான்களுடனே நாலு ஆறு மாசம் தர்க்கித்து அவர்களை உள்ளே புகுர ஒட்டாதே புறம்பே தள்ளி விடுவார்கள் என்ன –
ஸ்ரீ பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து -ஆகில் நாம் நேரே சென்று அவர் க்ருஹத்திலே புகுந்து வேதாந்திகளைக் காணும் விரகு என்ன-என்று கேட்டருள-அவர்கள் சொன்னபடி –
-வேதாந்திகள் தனவான் ஆகையால் -அவாரியாக – (தடை இல்லாமல் )-ப்ராஹ்மணருக்கு சத்ர போஜனம் இடுவர் -அந்த சத்ரபுக் ப்ராஹ்மணரோடே கலசி அவர்கள் வேஷத்தையும் தரித்துக் கொண்டு உள்ளே சென்றால் புஜிக்க வருகிற ப்ராஹ்மணரை நிரீக்ஷித்து இருப்பர் -அங்கே வேதாந்திகளைக் காணலாம் -ஆகையால் உங்கள் சம்பரங்களை எல்லாம் இங்கே நிறுத்தி நீர் ஒருவருமே சத்ராசிகளுடனே உள்ளே எழுந்து அருளும் என்று சொல்லிப் போனார்கள் –
அநந்தரம் ஸ்ரீ பட்டரும் இவர்கள் சொன்னது கார்ய கரமாம் என்று திரு உள்ளம் பற்றி தம்முடைய அனைத்துப் பரிகரத்தையும் ஊருக்குத் தூரத்திலே நிறுத்தி-தாம் சாத்தி அருளி இருந்த சர்வ ஆபரணங்களையும் களைந்து ஒரு அரசு இலைக் கல்லையைக் குத்தி இடுத்திக் கொண்டு-தொன்னையை தைத்து எடுத்துக் கொண்டு – காவி வேஷ்ட்டியும் தரித்து ஒரு கமண்டலமும் கையிலே தூக்கிக் கொண்டு ஸ்ரீ அனந்தாழ்வானும் தாமுமாய் சத்ராசிகளுடனே கூடிக் கார்ப்பண்ய வேஷத்துடன் உள்ளே எழுந்து அருள
வேதாந்திகளும் ப்ராஹ்மணர் புஜிக்கையைப் பார்த்துக் கொண்டு ஒரு மண்டபத்திலே ஆறு ஆசனம் இட்டு அதன் மேலே பெரிய மதிப்புடன் இரா நிற்க ப்ராஹ்மணர் எல்லாரும் சத்ர சாலையிலே புகுர
ஸ்ரீ பட்டர் அங்கே எழுந்து அருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்து அருள
வேதாந்திகளும் -பிள்ளாய் இங்கு ஏன் வருகிறீர் என்ன – ஸ்ரீ பட்டரும் பிக்ஷைக்கு வருகிறேன் என்ன –
எல்லாரும் புஜிக்கிற இடத்தில் போகீர் பிக்ஷைக்கு என்ன -ஸ்ரீ பட்டரும் எனக்குச் சோற்றுப் பிக்ஷை அன்று என்ன –
வேதாந்திகளும் -இவர் சத்ராஸியானாலும் கிஞ்சித் வித்வானாகக் கூடும் என்று விசாரித்து -கா பிஷா -என்ன –ஸ்ரீ பட்டரும் -தர்க்க பிஷா -என்ன
வேதாந்திகள் இத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு -முன்னே தீர்த்த வாசிப் ப்ராஹ்மணன் வந்து நமக்குச் சொன்ன ஸ்ரீ பட்டர் அல்லது நம் முன்னே வந்து கூசாமல் நின்று தர்க்க பிக்ஷை என்று கேட்க வல்லவர் இந்த லோகத்தில் ஒருவரும் இல்லை -வேஷம் கார்ப்பண்யமாய் இருந்ததே ஆகிலும் இவர் ஸ்ரீ பட்டராகவே வேணும் என்று நிச்சயித்து நம்மைத் தர்க்க பிக்ஷை கேட்டீர் நீர் ஸ்ரீ பட்டரோ என்ன -இவரும் ஆம் என்று -கமண்டலம் -கல்லை -காவி வேஷ்ட்டி -இவற்றை எல்லாம் சுருட்டி எறிந்து -எழுந்து அருளி இருந்து மஹா வேகமாக உபந்யஸிக்க-அவ்வளவில் வேதாந்திகளும்
ஸ்ரீ பட்டர் வைபவம் கேட்டு இருந்தும் -இவர் வித்யா மஹாத்ம்யம் காண வேணும் என்று இவருடன் தர்க்கிக்க –
இப்படி ஒருவருக்கு ஒருவர் மத்த வாரணம் பிணங்குமா போலே தர்க்கிக்க இங்கனே ஒன்பது நாள் சென்ற பின்பு பத்தாம் நாள்–ஸ்ரீ பட்டர் தர்க்கிக்கச் செய்தே-மாயி சித்தாந்தத்தை சத்தாவாகக் கண்டித்து விசிஷ்டாத்வைத பரமாக உபந்யஸிக்க –
இத்தைக் கண்ட வேதாந்திகள் எழுந்து இருந்து நடுங்கி வேறு ஒன்றும் சொல்லாதே –மனுஷ்ய மாத்திரமே என்று இருந்தேன் -ஸ்ரீ நம்பெருமாள் என்ன நீர் என்ன பேதம் இல்லை -உறங்கும் பெருமாள் அவர் -உலாவும் பெருமாள் நீர் -ஆன பின்பு வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கூடாது என்று அரை குலையத் தலை குலைய வந்து ஸ்ரீ பட்டர் திருவடிகளில் அடைவு கெட விழுந்து சேவித்து அடியேனை இரங்கி அருள வேணும் என்று மிகவும் அனுவர்த்திக்க -ஸ்ரீ பட்டரும் தாம் எழுந்து அருளின கார்யம் சீக்கிரமாக பலித்தவாறே மிகவும் திரு உள்ளம் உகந்து அருளி வேதாந்திகளை அங்கீ கரித்து அருளி அவருக்கு அர்த்த பஞ்சக தத்வஞ்சா பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா -என்று சொல்லப்பட்ட தாப புண்டராதி பஞ்ச ஸம்ஸ்காராதிகளையும் ப்ரசாதித்து வர்த்தக பஞ்சக ஞானத்தையும் உண்டாக்கி ஆகார த்ரய சம்பன்னரான மஹா பாகவத உத்தமராக்கி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி –
வேதாந்திகளே நீர் சர்வஞ்ஞராய் இருந்தீர்-ஆகையால் நாம் உமக்குப் பரக்கச் சொல்லலாவது ஒன்றும் இல்லை -விஷ்டாத்வைதமே பொருள் -நீர் மாயாவாத ரீதியை ச வாசனமாக த்யஜித்து ஸ்ரீ யபதியைப் பற்றி ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தத்தையே நிர்வஹித்துப் போரும் -என்று அருளிச் செய்து -ஆழ்வார்கள் அருளிச் செயல் நாலாயிரமும் ஓதும்படி நியமித்து அருளி –இனி நாம் ஸ்ரீ நம்பெருமாளை சேவிக்கப் போகிறோம் என்று உத்யோகித்துப் புறப்பட்ட அளவில்
ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகரமும் ஊரிலே வந்து அவர்கள் மஹா சம்பிரமத்துடனே ஸ்ரீ பட்டரைச் சூழ்ந்து சேவித்து பூர்வம் போலே சர்வ ஆபரணங்களாலும் பூஷித்து ஒப்பித்து மணிப் பல்லக்கிலே ஏற்றி உபய சாமர தால வ்ருத்தாந்திகள் பரிமாற சகல வாத்தியங்களும் முழங்க திருச் சின்னம் பணிமாறிப் புறப்படக் கண்டு வேதாந்திகள் ஸ்ரீ பட்டருடைய பெருமையையும் சம்பத்தையும் நன்றாக கண் குளிர நோக்கி -இந்த ஸ்ரீமான் இத்தனை தூரம் காடும் மலையும் கஷ்டமும் கடந்து எழுந்து அருளி நித்ய சம்சாரிகளிலும் கடை கெட்டு ம்ருஷாவாதியாய் இருந்த அடியேனுடைய துர்க்கதியே பற்றாசாக அங்கீ கரித்து அருளுவதே என்று மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு ஸ்ரீ பட்டர் திருவடிகளில் விழுந்து க்லேசித்து ஸ்ரீ பெரிய பெருமாள் தாமான தன்மையாய் ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகளை யுடையராய் எழுந்து அருளின தேவரீர் -அநாதி காலம் தப்பித்திருந்து அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் எட்டாதபடி கை கழிந்து போன இவ் வாத்மா இன்னம் தப்பிப்போம் என்று திரு உள்ளம் பற்றி அருளி -இப்படி அதி கார்ப்பண்யமாய் இருபத்தொரு வேஷத்தையும் தரித்துக் கொண்டு சத்ராதிகளுடனே கூட எழுந்து அருளி அதி துர்மானியான அடியேனை அங்கீ கரித்து அருளின அந்த வேஷத்தை நினைத்தால் அடியேனுக்குப் பொறுக்க போகிறது இல்லை-என்று சொல்லி வாய் விட்டு அழுது கொண்டு திருவடிகளில் விழுந்து கிடக்க-ஸ்ரீ பட்டரும் வேதாந்திகளை திரு முடியைப் பிடித்து எடுத்து நிறுத்தி தேற்றி -நீர் இங்கே ததீயாராதன ஏக பரராய் ஸூகமே இரும் -என்று அருளிச் செய்து ஸ்ரீ கோயிலை நோக்கி புறப்பட்டு எழுந்து அருளா நிற்க –
மின்னு மா முகில் மேவு தண் திருவேங்கடம் -என்கிறபடியே அம்பு தர சும்பியது பூதர ஸ்ருங்க நிலயனான ஸ்ரீ நரஸிம்ஹ திவ்ய விமானம்
தூரத்திலே தோன்றக் கண்டு அஞ்சலித்து பின்னையும் ஸ்ரீ திருநாராயண புரம் வழியாக எழுந்து அருளி ஸ்ரீ அனந்தாழ்வான் முன்னிலையாக –
நயனம் ஸ்ரீ நாரஸிம்ஹம் ஹரி ப்ரஹ்ம மஹா ஸ்தானம் – ( பரிப்ருட ஸ்தானம் ) சீதாரண்யம் ஞானஸ்த்வம் ஆகிற
பஞ்ச பாகவத ஸ்தலம் ஸ்வேத அம்ருத் பரிதான சிலை ஆகிற சப்த ஷேத்ரங்களையும்
ஸ்ரீ வேத புஷ்கரணி தர்ப்ப தீர்த்தம் பலாச தீர்த்தம் பத்ம தீர்த்தம் யாதவ மஹா நதி வைகுண்ட கங்கா தீர்த்தம் நாராயண தீர்த்தம்
மைத்ரேய குண்ட தீர்த்தங்களும் சேவித்து அவகாஹித்து -இவற்றின் மத்ய கதமான திருக் கல்யாணி யிலே நீராடி –
கேசவாதி துவாதச ஊர்த்வ புண்ட்ர தரராய் முன்பு போலே சேவாக்ரமம் தப்பாமல் சேவித்துத் தீர்த்த பிரசாதங்களும் பெற்றுப் புறப்பட்டுத்
திருமலை இறங்கி எழுந்து அருளி ஸ்ரீ சிறுப்புத்தூரிலே ஸ்ரீ அனந்தாழ்வானை நிறுத்தி பயணகதியிலே த்வரித்து
ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி திருக் காவேரியில் நீராடி அருளி கேசவாதி துவாதச ஊர்த்வ புண்ட்ர தரராய் சகல பரிஜன பரிச் சதங்களோடே
ஸ்ரீ வேதாந்தாசார்ய பட்டர் வந்தார் -வேதாந்திகளை வென்ற விரகர் வந்தார்-என்ற திருச்சின்னம் பணிமாற
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் எதிர் கொள்ள எழுந்து அருளி சேவா கிரமம் தப்பாமல் சேவித்துக் கொண்டு உள்ளே புகுந்து
மாயோனை மணத் தூணைப் பற்றி நின்று வாயார வாழ்த்தி நிற்க -ஸ்ரீ பெருமாளும் பெரிய ப்ரீதியோடே திருமாலை திருப்பரியட்டம்
தீர்த்தம் சடகோபன் ப்ரசாதித்து திரு மாளிகையில் போக விட்டு அருள ஸ்ரீ பட்டரும் தம் திரு மாளிகையில் எழுந்து அருளி
அங்கே ஸ்ரீ ஆண்டாளை சேவித்து ஸ்ரீ பாதத்து முதலிகளுக்குத் தரிசன அர்த்தம் நிர்வகித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்
அநந்தரம் அங்கே காங்கோரையில் வேதாந்திகள் திருமால் அடியார்களை பூசித்துக் கொண்டு இருக்கும் நாளிலே
இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் இளைத்து வேதாந்திகள் திரு மாளிகைக்கு எழுந்து அருளி ஷூத்து நலியா நின்றது -என்று
அமுது செய்யத் தேட வேதாந்திகள் தேவிகள் இருவரும் பார்த்து -உங்கள் வேதாந்திகள் தீர்த்தம் ஆடப் போனார் –
இங்கு ஒன்றும் இல்லை -நீங்கள் அங்கு ஏறப் போங்கோள்-என்று சொல்லி உதாசீனம் பண்ணி விட –
அந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் வேதாந்திகள் பக்கல் சென்று இத்தை அறிவிக்க -அவரும் அது கேட்டு அனுதபித்து–தம் திரு மாளிகையில் எழுந்து அருளி தேவிகள் இருவரையும் சீறி அப்போதே புறப்பட்டு ஸ்ரீ கோயிலுக்குஎழுந்து அருளத் தேட –
அங்குள்ளவர்கள் வேதாந்திகளைப் போக ஒண்ணாது என்று தகைய இவரும் தமக்கு நிரவதிக தனம் உண்டாகையாலே அத்தை மூன்று அம்சமாகப் பிரித்து -இரண்டு தேவிகளுக்கும் இரண்டு அம்சம் கொடுத்து மற்றை அம்சத்தை ஸ்வாச்சார்யருக்காக எடுப்பித்துக் கொண்டு அத் தேசத்தையும் சவாசனமாக விட்டு -இல்லறம் அல்லேல் துறவறம்-என்று அதிதி சத்கார யோக்யதை இல்லாத பார்யயை த்யஜித்து சன்யசிக்கக் கடவன் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே-சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக அங்கே சன்யசித்து அருளி ஸ்ரீ கோயிலை நோக்கி எழுந்து அருளா நிற்கச் செய்தே
திருக் காவேரிக் கரையில் உள்ள ஸ்ரீ சிறுப்புத்தூரிலே ஸ்ரீ அனந்தாழ்வானைக் கண்டு சேவித்து நிற்க –
ஸ்ரீ அனந்தாழ்வானும் -வாரீர் வேதாந்திகளே ஸூகுமாரரான நீர் இங்கனே செய்யலாமா -வேர்த்த போது நீராடிப் பசித்த போது அமுது செய்து ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் என்று இருந்தால் உம்மைப் பரம பதத்தில் நின்றும் தள்ளி விடுவார் உண்டோ -இனி என் -(ஞான ஜென்மம் )திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராவீர் என்று ஆசீர் வதித்து போம் என்று விட்டார் –
அதாவது திருமந்திரம் ஆத்ம ஸ்வரூப பரம் ஆகையால் -சேஷத்வ ஞான உத்பத்தி ஆகிற ஆபீஜாத்யம் உண்டாய் (குலம் தரும் –நான் கண்டு கொண்டேன் நாராயணாயா என்னும் நாமம் )-த்வயத்திலும் ஸ்ரீ மச் சப்த யுக்தமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் புருஷகாரத்தாலே -வர்த்தமான அர்த்தத்தில் வர்த்தித்து- உத்தர வாக்ய யுக்தங்களைப் பற்றக் கைங்கர்ய ஏக நிஷ்டராவீர் என்று சொன்னபடி (ஞானம் அனுஷ்டானம் பர்யந்தமாக கைங்கர்ய ஏக நிஷ்டராவதே வளர்ப்பது )-
வேதாந்திகளும் பயண கதியிலே போய் ஸ்ரீ கோயிலிலே எழுந்து அருளி- ஸ்ரீ பட்டர் திருவடிகளில் சேவித்து தாம் கொண்டு வந்த தனத்தை தம்மது என்கிற அபிமானத்தை விட்டு- ஸ்ரீ பட்டருக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம்படி அவர் திருவடிகளில் சமர்ப்பித்து நிர்மமராய் நிற்க –
அவ்வளவில் ஸ்ரீ பட்டரும் மிகவும் உகந்து அருளி -நம்முடைய சீயர் வந்தார் என்று வாரி எடுத்துக் கட்டிக் கொண்டு அருளி ஒரு க்ஷண காலமும் பிரியாமல் தம்முடைய சந்நிதியிலே வைத்துக் கொண்டு சகல அர்த்தங்களையும் பிரசாதித்து அருள
ஸ்ரீ சீயரும் ஸ்ரீ பட்டரை அல்லது மற்று ஒரு தெய்வம் அறியாது இருந்தார் –
ஸ்ரீ பட்டரும் நம்முடைய சீயர் என்று சொல்லி அணைத்துக் கொண்ட அன்று தொடங்கி வேதாந்திகளுக்கு ஸ்ரீ நஞ்சீயர் என்று திரு நாமம் உண்டாய்த்து-
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைப் பார்த்து ஸ்ரீ பெருமாள் சந்த்ர புஷ்கரணிக் கரையிலே கண் வளர்ந்து அருளுகைக்கு கருத்து என் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பட்டரும் -நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் என்று கூப்பிட்ட பின்பு இறே அந்த மடுவின் கரையில் எழுந்து அருளிற்று -இங்கு கண் வளர்ந்து அருளுகிறது நான் கூப்பிடுவதற்கு முன்னே என்னை எடுக்கைக்காக நான் அகப்பட்ட பொய்கைக் கரையிலே ஏற்கவே வந்து கண் வளர்ந்து அருளுகிறான் அத்தனை -நீர் இவ்வர்த்தம் கேட்டது உம்முடைய வசத்தால் அன்று காணும் -உம்மைக் கொண்டு ஸ்ரீ நம்பெருமாள் என் நினைவினை வெளியிட்டு அருளினார் என்று அருளிச் செய்தார்
அதாவது -ஸ்ரீ பகவத் திரு அவதாரங்கள் அடங்க ஸ்வார்த்தமாகவே என்று இறே ஞானாதிகர் அனுசந்திப்பர் என்றபடி –
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரை ஸ்ரீ பாதம் தாங்குவதாகத் தோளிலே தண்டை வைக்கப் புக-ஸ்ரீ பட்டரும் உம்முடைய வேஷத்துக்கு இது விருத்தம் காணும் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ ஜீயரும் அங்குத்தை அடிமைக்கு ஏகாந்தம் என்று இவ் வேஷத்தை பரிக்ரஹம் பண்ணினேன் -அது தானே இதுக்கு விரோதம் ஆகில் பழைய வெள்ளையை உடுக்கிறேன் என்று விண்ணப்பம் செய்தார்
அதாவது ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு அனுரூபம் ஆகாத வர்ணாஸ்ரம தர்மமும் பரித்யாஜ்யம் என்றபடி
ஒருமுறை, பட்டர் வந்ததால் தோட்டத்தில் சில தொந்தரவுகள் ஏற்படுவதாக சில ஏகாங்கிகள் (அவருடைய உதவியாளர்கள்) நஞ்சியரிடம் புகார் செய்தபோது, நஞ்சியர், தோட்டத்தின் நோக்கம் பட்டருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சேவை செய்வதே தவிர நம்பெருமாளுக்காக அல்ல என்று கூறி, தனது ஏகாங்கிகளை அதை எப்போதும் மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.-பிற்றை ஒரு நாள் நஞ்சீயர் ஏகாந்திகளை அழைத்து -நம்பெருமாள் திருக் குழல் கற்றை நாறும் என்றோ நந்தவனம் வைத்தேன் -இக் குழந்தைகள் விளையாடவே வைத்தேன் -மீதம் உள்ளவற்றையே அங்குத்தைக்கு என்றே இருப்பேன் –ஆச்சார்ய பரதந்தரனாக இருப்பவன் செய்யும் பகவத் கைங்கர்யமும் அவர் உகப்புக்காகவே என்றவாறு
ஆச்சார்யர்கள் படுக்கும்போது தங்கள் சீடர்களின் மடியில் தலை வைப்பது வழக்கம். ஒருமுறை, பட்டர் ஓய்வெடுக்க விரும்பியபோது, அவர் படுத்துக்கொண்டு தன் தலையை நஞ்சீயரின் மடியில் வைத்து நீண்ட நேரம் ஓய்வெடுத்தார். நஞ்சீயர் அந்த நேரம் முழுவதும் அசையாமல் இருந்தார். பட்டர் விழித்தெழுந்தபோது நஞ்சீயரின் அர்ப்பணிப்பை உணர்ந்து, த்வயத்தின் அர்த்தங்களை மீண்டும் ஒருமுறை கற்பித்தார் நஞ்சீயருடைய திருத்தொடையிலே கண் வளர்ந்தருள -அசித்வத் பரதந்தர்யம் -என்று உகந்தருள -சிஷ்ய ஸ்வரூப சித்தி-
வேடன் காட்டி அருளிய விருத்தாந்தம் -சேதனனுக்கு உள்ள ஓன்று பரம சேதனனான -ஈஸ்வரன் தனது அபிமானத்தில் ஓதிங்கினாரை என் செய்யான் -பிராணன் விட்டே ரஷித்த்து அருள வேண்டும் -சிபி சக்ரவர்த்தி –மாம் ஏகம் சரணம் வ்ரஜ முயலுக்கு உபதேசித்தார் இல்லை -வேடனுக்கும் உபதேசித்தார் இல்லை -சரணாகதி அரங்கேற்றே -இயலாமை ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்தவமே வேண்டியது –
பிள்ளைப்பிள்ளை ஆழ்வான் திருமாளிகையை இடித்து மதிள் செய்த வீர சுந்தர ப்ரஹ்மராயன் -செயலால் வருந்தி-உன் மதிலோ ரக்ஷணம் -திருமங்கை ஆழ்வாரும் ஒதுங்க முன்பே காட்டினார் அன்றோ -ஆசார்ய புருஷ வாக்கியம் என்று அஞ்சாமல் கட்டி மேலும் திருவரங்கத்தில் இருக்க ஒட்டாமல் தொந்தரவு கொடுக்க -திருகோஷ்ட்டியூருக்கு எழுந்தருளினார் -அங்கு கிடைத்த ஸ்லோகன்களே பூதம் –நீளா -இத்யாதி ஸ்லோகங்கள் கிடைக்கப்பெற்றோம்
பின்பு நஞ்சீயர் காட்டுப்பிரசாதத்துடன் வந்து இளைப்பாற்றி வைக்க -அப்பொழுதும் விசேஷ கடாக்ஷம் செய்து அருளினார்
அநந்தரம் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருந்து –
பூகி கண்ட த்வய ச சரச ஸ்நிக்த நீரோபகண்டா மாவிர்மோத ஸ்திமித சகுநா நூதித ப்ரஹ்ம கோஷம் -மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாநா அபவர்க்காம் பஸ்யே யந்தாம் புநரபி புரீம் ஸ்ரீ பதீம் ரங்க தாம்ந-(ஸ்ரீ ரெங்கராஜஸ்தவ ஸ்லோகம் )என்று சொல்லிக் கொண்டு ஸ்ரீ கோயிலையும் ஸ்ரீ பெருமாளையும் விட்டுப் பிரிந்து இருக்கையாலே மிகவும் கிலேசப்பட்டு -என்று கொலோ கண் குளிரக் காணு நாளே என்று கொண்டு எழுந்து அருளி இருக்கும் காலத்திலேயே– ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பட்டரை சேவித்து அடியேனுக்கு ஸ்ரீ திரு விருத்தத்துக்கு அர்த்தம் ஒரு உரு ப்ரசாதித்து அருள வேணும் என்று மிகவும் அனுவர்த்திக்க -ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து -ஸ்ரீ சீயா எனக்கு ஸ்ரீ கோயிலையும் ஸ்ரீ பெருமாளையும் விட்டுப் பிரிந்த கிலேச அதிசயேன செவிகள் சீப்பாயா நின்றன -ஆகையால் வாய் திறந்து வார்த்தை சொல்லப் போகிறது இல்லை -நீர் ஸ்ரீ திரு விருத்தத்துக்கு ஒரு உரு இந்த ஸ்ரீ வைஷ்ணவருக்குச் சொல்லும் என்று அவரை ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பாதத்தில் காட்டிக் கொடுத்து இங்கனே நடந்து செல்லுகிற நாளிலே
கடலைக் கலக்கினால் போலே ஸ்ரீ பட்டர் திரு உள்ளத்தைக் கலக்கி விரோதித்த வீர ஸூந்தரன் மரித்துப் போக
அவ்வளவில் ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ பட்டர் திருத் தாயார் ஸ்ரீ ஆண்டாளை சேவித்து இருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் -ஸ்ரீ பட்டருடைய விரோதி போனான் என்று தங்கள் திருப் பரியட்டங்களை முடிந்து ஆகாசத்தில் எறிந்து நின்றார் நின்ற திக்கில் சந்தோஷித்துக் கூத்தாடி ஸ்ரீ ஆண்டாளுக்கு அறிவிக்க அது கேட்டு ஸ்ரீ ஆண்டாள் செய்த படி -திரு மாளிகைக்கு உள்ளே புகுந்து திருக்காப்புச் சாத்தி சிக்கென தாளிட்டுக் கொண்டு வயிறு பிடித்து மிகவும் கிலேசித்து வாய் விட்டு உச்சை ஸ்வரமாக அழத்தொடங்கினாள் –
அது கேட்டு சந்தோஷ அதிசயேன தடு குட்டமாய் கும்பிடு நட்டமிட்டுக் கூத்தாடுகிற முதலிகள் ஸ்ரீ ஆண்டாளைக் குறித்து –
ஸ்ரீ பட்டரை இங்கே இருக்கவும் கூட ஒட்டாமல் விரோதித்த பாபிஷ்டன் போனான் என்று சந்தோஷியாதே கிலேசிப்பான் என்-ஸ்ரீ பட்டருடைய விரோதி போகவும் ஸ்ரீ பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்து அருளவும் நாம் எல்லாரும் கூடி வாழவும் உமக்கு அஸஹ்யமாய் இருந்ததோ -என்ன –
ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து அருளிச் செய்த படி –
பிள்ளைகாள் நீங்கள் ஒன்றும் அறிகிறிகோள் இல்லை -வீர ஸூந்தரன் தான் நேரே ஸ்ரீ ஆழ்வானுடைய சிஷ்யனாய் இருந்து ஆச்சார்ய புத்திரரான ஸ்ரீ பட்டரை திண்டாட்டம் கண்டு அவர் திறத்திலே மஹா அபராதத்தைத் தீரக் கழியப் பண்ணி -அறியாமல் செய்தேன்-இத்தைப் பொறுத்து அருள வேணும் -என்று ஸ்ரீ பட்டர் திருவடிகளில் தலை சாய்ப்பதும் செய்யாதே -இப்படிச் செய்தோமே என்கிற அனுதாபமும் இன்றியே செத்துப் போனான் -ஆகையால் அவன் சரீரம் விட்ட போதே யமபடர் கையிலே அகப்பட்டு கலங்க அடியுண்டு மலங்க விழிக்கும் ஆகையால் அத்ருஷ்டத்தை இழந்தான் -சில நாளைக்கு இருந்தாகிலும் த்ருஷ்டா ஸூ கத்தை அனுபவிக்கிறான் என்று இருந்தேன் -அதுவும் கூட இழந்தான் ஆகாதே –
ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுடையது ஒரு ஆத்மா இப்படித் தட்டுப்பட்டுப் போவதே என்று இத்தை நினைத்து என் வயிறு எரிகிறபடி-உங்கள் ஒருவருக்கும் தெரிகிறது இல்லை என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்தாள்–
குற்றம் செய்தவர்கள் பக்கலிலும் அகப்பட ஹித பரராய்த் தயார்த்த சித்தராய்ப் போருவது ஸ்ரீ ஆழ்வான் சம்பந்தம் உடையவர்களுக்கே உள்ளது ஓன்று இறே
ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் இவ் விஷயம் கேட்டு ஸ்ரீ கோயிலிலும் ஸ்ரீ திருக் கோஷ்டி யூருக்கு எழுந்து அருளி இத்தை அருளிச் செய்ய
ஸ்ரீ பட்டரும் கேட்டு ஸந்துஷ்டாராய் -நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே-என்கிறபடியே அவர் கழல்களை அடிக்கடி வணங்கி அவருடனே கூடி தத் க்ஷணமே ஸ்ரீ கோஷ்டி புரத்தில் நின்றும் புறப்பட்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளி பண்டு போலே தர்சனார்த்தம் நிர்வகித்துக் கொண்டு இருந்தார்
ஸ்ரீ அம்மணி ஆழ்வான் இருநூறு காத வழி நடந்து வந்து ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்தில் தண்டன் சமர்ப்பித்து அடியேனுக்கு தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் பிரசாதித்து அருள வேணும் -என்று பிரார்த்திக்க –
ஸ்ரீ பட்டரும் நெடுமாற்கு அடிமை அர்த்தம் பிரசாதித்து அருளி ஸ்ரீ எம்பெருமானை அறிக்கை யாவது -அவனை அரை வயிறு பட்டு அறிகை –ததீயரை அறிகையாவது -அவனை முழுக்க அறிகை என்று அருளிச் செய்து அருள –
அவரும் பலபடி சொல்லி என் -மறப்பன் -இவ்வளவே அமையும் -என்று அது தன்னையே தாரகமாகப் பண்ணிக் கொண்டு எழுந்து அருளினார் –
ந்யக்ரோத பீஜே வடவத் பிரணவே சப்த ஜாலவத் சித்தே ததீய சேஷத்வே சார்வார்த்தாஸ் சம்ப வந்திஹி -என்கையாலே
சச் சிஷ்யன் சதாச்சார்யன் அருளிச் செய்ததொரு சரம அர்த்தத்தையே தஞ்சம் என்று விஸ்வசிக்க வேணும் என்றபடி –
வீர சிகாமணிப் பல்லவ ராயன் ஸ்ரீ பட்டரைக் குறித்து -ஸ்ரீ பட்டரே ராஜ கார்யம் செய்கையாலே அடியேனுக்கு பகவத் விஷய வைபவம் கேட்க விரகு இல்லை -எனக்குத் தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் பிரசாதித்து அருள வேணும் என்று அபேக்ஷிக்க –
ஸ்ரீ பட்டரும் கடற்கரை வெளியை நினைத்து இரும் -என்று அருளிச் செய்து அருள -அது தெரியாமையாலே அவன் கையைப் பிசைந்து நிற்க –
இவரும் கடற்கரையிலே ஒரு அம்ருதக் கடல் போலே பெருமாள் பெரிய வானர சேனையோடே விட்டு இருக்க -அக் கரையில் பிணம் தின்னிப் பையல் ராவணன் இருக்க -எழுபது கோடி மஹா கபி சேனை உணர்ந்து ஸ்ரீ பெருமாளைக் குறிக் கொண்டு நோக்கிக் கொண்டு போர-அவர்கள் ப்ரக்ருதிமான்கள் ஆகையால் கண்ணுறங்கி கால் ஓய்ந்து கை சோர்ந்த அளவிலே- தாமும் தம் திருத் தம்பியாருமாகத் திருவரையில் கட்டிய கச்சும் சுருக்கிய சீராவும் நாணியும் முதுகிலே அம்பறாத் தூணி கட்டிக் கையிலே தெறித்துப் -பிடித்துப் பெருக்கின திருச் சரமும் தரித்த திரு வில்லும் தாமுமாய் -சில அண்டஜங்கள் முட்டையிட்டுத் தம் சிறகின் கீழே நோக்கியிட்டு வைக்குமா போலே -எழுபது வெள்ளம் ப்லவங்க குலபதி மஹா சேனையையும் நடையாடும் மதிள்கள் போலே ரஷித்துக் கொண்டு ஓர் இரவு எல்லாம் சாரிகையாய் வந்த சக்கரவர்த்தித் திருமகனுடைய கையும் வில்லேமே தஞ்சம் என்று ஸூகமாய் இரும் -என்று அருளினார்
தர்சன ரஹஸ்யமாவது -உறங்குகின்ற போது நம்மை ரக்ஷிக்குமவன் உணர்ந்தால் நம்மை நோக்கும் என்று சொல்ல வேண்டாம் இறே என்றபடி –
ஒரு நாள் திரிபுர வீர தேவ ராயன் ஸ்ரீ பட்டருடைய வைபவம் கொண்டு -ஸ்ரீ பட்டரே -நீர் நம் பக்கல் ஒரு நாள் வந்து போகீர் என்ன –
ஸ்ரீ பட்டரும் -ஸ்ரீ பெருமாள் அஞ்சேல் என்ற திருக் கை மறுத்தாலும்-அவ் வாசல் ஒழிய வேறு ஒரு போக்கு உண்டோ -என்று அருளினார் –
அதாவது ஏதத் விரதம் மம -என்று ஸ்வ ஆஸ்ரித ரக்ஷண ஏக தீக்ஷிதனான ஸ்ரீ எம்பெருமான் இருக்க –கதிபய க்ராமேச கஞ்சித் புருஷ அதமன் வாசலிலே துவளக் கடவோம் அல்லோம் என்றபடி –
ஒரு நாள் ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பெருமாளைத் திருக் கைத் தலத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே திருவடி தொழப் புக திருமுன் அடிக்கிற வேத்ர பாணிகள் ஸ்ரீ பட்டரைப் பாராமல் சில பருஷ யுக்திகளை சொல்ல ஸ்ரீ பாதத்தில் ஸ்ரீ வைஷ்ணவர் அவரோடே எதிர் உத்தரம் சொல்லப் புக
ஸ்ரீ பட்டரும் -வாரீர் பிள்ளாய் -கேளும் ஸ்ரீ பெருமாளுக்கு ஏகாந்தத்தில் என் குற்றம் விண்ணப்பம் செய்ய ஒரு காலம் பற்றாதாய -ஸ்ரீ பெருமாளும் திருச் செவி சாத்தாமல் போந்த இத்தை ஸ்ரீ பெருமாளுக்கு அந்தரங்க பரிகரமாய் இருப்பார் ஒருவர் நம் தோஷத்த ஏகாந்தத்தில் விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் திருச் செவி சாத்தினது கண்டால் நம்மைப் பார்க்கில் அத்தை விலக்குகிற நீர் பெற்ற பேறு என் -என்று அருளினார் –
இத்தால் பகவத் சந்நிதியில் ஏகாந்தத்தில் பரக்ருத ஸ்வ தோஷக்யாபநம் தத் வாத்ஸல்ய கார்யமாய்த்
தத் அங்கீகார ஹேதுவுமாம் நினைக்கக் கடவன் என்றபடி –
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்தில் சம்பந்தம் உடையராய் சோமயாஜியாய் இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பட்டரை அடியேனுக்கு
திருவாராதன க்ரமம் ப்ரசாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ உடையவர் நித்யத்தை
ஒரு யாமப்போது திருவாராதனம் பண்ண வேண்டும் க்ரமத்தை ப்ரசாதித்து அருள –
அவரும் அது கொண்டு நெடுநாள் திருவாராதனம் பண்ணிப் போரச் செய்தே-
ஓன்று இரண்டு நாள் ஸ்ரீ பட்டர் திரு வாராதனத்தை சேவித்து இருக்க -அங்கு தமக்கு அருளிச் செய்த க்ரமம் ஒன்றும் கண்டிலர் –
ஸ்ரீ பட்டர் திருவாராதனம் செய்த படி -ஸ்ரீ பட்டர் நீராடித் தூய திருப்பரியட்டம் சாத்தி அருளித் திருமண் காப்பு சாத்தி அருளி
உள்ளே அமுது செய்யத் தளிகையை அமர்த்தின அளவிலே தளிகை முன்னே எழுந்து அருளி இருந்து
ஸ்ரீ தெற்கு ஆழ்வாரை எழுந்து அருளுவித்துக் கொண்டு வாருங்கோள்-என்ன –
அவர்களும் அப்படியே எழுந்து அருளுவித்துக் கொண்டு வந்து கைத்தலத்திலே பிடித்த அளவிலே தமக்குப் படைத்த
திருப் போனகத்தையும் சேர்ந்த தண்ணீர் அமுதத்தையும் அமுது செய்வித்து அருளி ப்ரசாதத் பட்டு அருளினார் –
அத்தைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவரும் ஸ்ரீ பட்டரைத் தண்டன் இட்டு ச விநயராய்-ஒரு விண்ணப்பம் உண்டு –
சொல்லப் பயமாய் இருக்கிறது என்று சொல்ல -ஸ்ரீ பட்டரும் அஞ்சாதே சொல்லும் என்ன –
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் திருவாராதனப் படியை அடியேனுக்கு இப்படி அருளிச் செய்திற்று -தேவரீர் இப்படி செய்து அருளுகிறது –
இதற்கு அடி என் -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பட்டரும் -சகல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்த்த இடத்தே
உமக்கு அப்படி ஒழியச் சொல்லுகைக்கு ஒரு வார்த்தை கண்டிலேன் –
என்னை நிரூபித்த இடத்தில் இப்படி ஒழியச் செய்கைக்கு ஒரு சொல் கண்டிலேன் -என்று அருளிச் செய்து அருளினார் –
இத்தால் ஹிதைஷியான ஆச்சார்யன் சிஷ்யனுக்கு ஞான பரிபாக அனுகுணமாகக் கொண்டிப் பசுவுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே
சப்தாதி விஷயங்களில் மண்டித் திரிகிற கரணங்களைப் பகவத் விஷய ப்ரவணமாம் படி திருத்தும் என்னுமதுவும் –
ஆச்சார்யனுடைய யத்னமாய் பகவத் விஷய ஏக பரமான அனுஷ்டான விசேஷத்துக்கு கருத்து
அவிசேஷஞ்ஞர்க்குத் தோற்றாது என்னுமதுவும் தோன்றா நின்றது இறே
ஸ்ரீ பட்டரை ஒருவன் தேவதாந்த்ரங்களை ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுவர்த்தியாது ஒழிவான் என் -என்ன
பிரமாண விரோதம் உண்டாகில் அன்றோ ஸந்தேஹம் உள்ளது-இங்கே ஸந்தேஹம் இல்லை -என்று அருளிச் செய்தார் –
அது எங்கனே என்னில் -சத்வ பிரசுரரை ரஜஸ் தமஸ் பிரசுரர் அனுவர்த்திக்குமது போக்கி
சத்வ பிரசுரர் ரஜஸ் தமஸ் பிரசுரரை அனுவர்த்திக்கக் கடவதோ -என்று அருளிச் செய்தார் –
ஆகையால் தேவதாந்தரங்கள் குண தோஷங்கள் இரண்டாலும் ஒரு காலும் அனுவர்த்தநீயர் அன்று என்றபடி –
ஸ்ரீ பட்டர் அறியில் சம்மதியார்-என்று -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்தை வேறு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருக்கையாலே விளக்குவித்து
ஸ்ரீ ஆண்டாள் ஸ்வீ கரிப்பாள்-இத்தை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கண்டு நீர் திருத் தாயாராய் இருந்து இப்படிச் செய்து அருளலாமோ என்ன –
ஸ்ரீ ஆண்டாளும் அது என் -பிறர் திரு ஆராதனத்தின் தீர்த்தமே ஸ்வீ கார்யமாய் தான் ஏறி அருளப் பண்ணின விக்ரஹத்தை
தீர்த்தம் ஸ்வீ கார்யம் ஆகாதோ என்ன -அவரும் அதற்கு அடி என் என்று கேட்க –
ஸ்ரீ ஆண்டாளும் -ஸ்ரீ கணபுரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே-என்று அருளிச் செய்து அருளினாள்-
இத்தால் சிஷ்ய புத்ரர்களே யாகிலும் ஞானாதிகர் ததீயத்வேன அனுவர்த்த நீயர் என்றபடி –
ஸ்ரீ பட்டர் தம் ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைப் பார்த்து நீர் ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் சென்று
ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் இருக்கும்படி எங்கனே என்று கேட்டு வாரும் என்று அருளிச் செய்ய –
அவரும் ஸ்ரீ அனந்தாழ்வான் சந்நிதிக்கு எழுந்து அருள அன்று அங்கே பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்து அருள
இவரும் இடம் போதாமையால் அவர்கள் அமுது செய்து எழுந்து இருக்கும் அளவும் பேசாது இருக்க -பின்பு ஸ்ரீ அனந்தாழ்வானும் இவரைக் கண்டு –
நெடும் போது உண்டே -அமுது செய்து அருளப் பெற்றது இல்லையே-இளைப்போடு இருக்கிறதே என்று போர நொந்து சடக்கென
அமுது செய்து அருளப் பண்ணி தாமும் தேவிகளுமாக சேஷித்து இருந்த திருப் போனகத்தை அமுது செய்து அருளி எழுந்து அருளி இருந்து –
ஸ்ரீ வைஷ்ணவரைக் குறித்து எங்கு நின்றும் எழுந்து அருளிற்று என்று கேட்டு அருள –அவரும் ஸ்ரீ பட்டர்
தேவரீர் ஸ்ரீ பாதத்தில் சென்று ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் இருக்கும்படி எங்கனே என்று கேட்டு வரச் சொல்லி
வர விட்டு அருளினார் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ அனந்தாழ்வானும் -ஆகில் கொக்குப் போலே இருக்கும் -கோழி போலே இருக்கும் -உப்புப் போலே இருக்கும் –
உம்மைப் போலே இருக்கும் -என்று அருளினார் –
இத்தால் தன் ஞான அனுஷ்டான அபிமாநாதி நிமித்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே முற்பாட்டுக்கு ஆசைப்படாதே பிற்பாட்டுக்கே
ஆசைப்பட்டு ததீய சேஷத்வத்தை பேணுகை ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்று உத்தரம் அருளிச் செய்து விட்டாராயிற்று –
ஒரு நாள் ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருப்பார் ஒரு வைஷ்ணவர்- ஸஹவாஸ தோஷத்தால் கலங்கி விஷய ப்ராவண்யம் தலை எடுத்து
ஸ்ரீ பட்டர் சந்நிதியில் சென்று ஸ்ரீ பட்டரே நமக்கும் உமக்கும் பணி இல்லை என்று சொல்ல -ஸ்ரீ பட்டரும் -வாராய் பிள்ளாய் –
அது உன் நினைவாலே அன்றோ -நீ விட்டாலும் நாம் விடுவோமோ -என்று அருளிச் செய்து அருள -அவனும் அகன்று போகத் தேட-
இவரும் அவனைப் பலாத்கரித்துப் பிடித்து உபாயேந ஞான உபதேச முகத்தால் வருந்தித் திருத்தி
ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கராக்கிக் கொண்டு அருள -அவரும் மஹா விரக்தராய் நிலையிலே நின்று அருளினார் –
ஆகையால் அஞ்ஞானம் தலையெடுத்து அகன்று போவாரையும் உட்பட விடாதே யத்நேந திருத்திச் சேர்த்துக் கொள்ளுகையே சதாச்சார்ய லக்ஷணம் என்கிறது –
ஒரு நாள் ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுமாக பெரும் கூட்டத் திரு ஓலக்கமாக எழுந்து அருளி இருந்து பகவத் கல்யாண குண
அனுசந்தானம் நடவா நிற்க -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நாம் பண்ணின ஸூஹ்ருதம் அன்றோ இப்படி இருக்கப் பெற்றது-என்ன
அவ்வளவில் ஸ்ரீ சிறி யாச்சான் எழுந்து இருந்து நின்று -நெடும் காலம் ஸ்ரீ பெருமாள் ரக்ஷகர் என்று சிஷித்து வைத்து இப்போதாக ஒரு ஸூஹ்ருத தேவர் உண்டாவதே -என்று அருளினார்
இத்தால் உஜ்ஜிஜீவயிஷுவான சர்வேஸ்வரன் இருக்க ஆனுகூல்யங்களுக்கு ஸூஹ்ருதம் அடி என்கை ஸ்வரூப நாசம் என்றபடி –
ஸ்ரீ பட்டரோடு ஸ்ரீ அமுதனார் வெறுத்து அருளி -தாம் ஸ்ரீ ஆழ்வானுடைய வெற்றிலைச் செருக்கிலே பிறந்தவர் -நான் ஸ்ரீ ஆழ்வானுடைய ஞானச் செருக்கிலே பிறந்தவன் அன்றோ -என்று சொல்லி விட -அத்தை ஸ்ரீ பட்டர் கேட்டு அருளி பாசுரம் அழகிது- ஆகிலும் இத்தைத் தாமே சொன்னாரே -என்று அருளிச் செய்தார் –
இத்தால் ஆச்சார்ய அபிமான ஜெனித ஸ்வ உத்கர்ஷ ரூப ஸ்லாகா வசனம்–( ஸ்வ வாக் வ்யவஹ்ருத வசனம் ) ஸ்வரூப அநுசிதம் என்றபடி –
ஒரு நாள் ஸ்ரீ பெருமாள் புறப்பட்டு அருளி ஒரு திரு மண்டபத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ பட்டர் திரு ஆலவட்டம் சேவித்து இரா நிற்க
ஸ்ரீ பாதத்து முதலிகள் ஸந்த்யாவந்தனத்துக்கு காலம் தப்புகிறது என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பட்டரும் பகவத் கைங்கர்ய நிரதற்கு சந்த்யா வந்தன வைகல்ய தோஷம் வாராது என்று அருளிச் செய்து அருளினார் -இதற்கு கருத்து
மத் கர்ம குர்வதாம் பும்ஸாம் கர்ம லோபோ பவேத்யதி-தத் கர்மதே ப்ரகுர்வந்தி திஸ்ர கோட்யோ மஹர்ஷய -என்று திருமுகப் பாசுரம் இருக்கையாலே பகவத் கைங்கர்யத்தை இழந்து நித்ய கர்ம அனுஷ்டான அர்த்தமாகப் போகை ஸ்வரூப விருத்தம் என்றபடி –
ஒரு கால் ஸ்ரீ பட்டருடனே அநேக வித்வான்கள் திரண்டு வந்து தர்க்கிக்க ஸ்ரீ பட்டர் அவர்கள் எல்லாரையும் வாய் மூடுவித்து ஜெயித்து அருள –
பின்னையும் அவர்கள் இவருடைய சர்வஞ்ஞதையை பரீஷிப்போம் என்று ஒரு குடத்தில் ஒரு பாம்பை அடக்கிக் காட்டி -இக் குடத்திலே இருக்கும் வஸ்து என் என்று கேட்க -ஸ்ரீ பட்டரும் திரு வெண் கொட்றக் குடை இருக்கிறது என்ன –
அவர்களும் சிரித்து குடத்தைக் கட்டை அவிழ்த்து விட்ட அளவிலே போகி புறப்பட-அவர்களும் இது கொற்றக் குடையோ என்ன –
ஸ்ரீ பட்டரும் அன்றோ -சென்றால் குடையாம் என்று அன்றோ ஆழ்வார் அருளிச் செய்தது-என்ன
அவர்களும் இவருடைய சர்வஞ்ஞதைக்கு விஸ்மயப்பட்டு க்ருதார்த்தராய்ப் போனார்கள் –
முன்பு ஸ்ரீ உடையவர் காலத்திலே ஆச்சார்யர்கள் எல்லாரும் உடையவருக்கு மானஸ புத்திரரான ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளானை
அனுவர்த்தித்து -ஸ்ரீ ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் அரும் பொருள் தெரியும்படிக்கு தேவரீர் வ்யாக்யானம் அருளிச் செய்து
அருளும் படி ஸ்ரீ உடையவரை வேண்டிக் கொள்ள வேணும் என்று ஸ்ரீ பிள்ளானுக்கு விண்ணப்பம் செய்ய-
ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ உடையவர் பெரும் கூட்டத் திருலோக்கமாக எழுந்து அருளி இருக்கச் செய்தே சாஷ்டாங்க பிராணாமம் பண்ணி
ச விநயராய் இரப்புடனே ஒரு விண்ணப்பம் உண்டு என்று சொல்ல -ஸ்ரீ உடையவரும் என் என்று கேட்டு அருள –
ஸ்ரீ பிள்ளானும் தேவரீர் ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து திக்விஜயம் பண்ணி தரிசனத்தை நிலை நிறுத்தி அருளிற்று –
இனி திருவாய் மொழி முதலான ஸ்ரீ ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தங்களும் வ்யாக்யானம் அருளி ரஷித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய-ஸ்ரீ உடையவரும் திரு உள்ளத்திலே விசாரித்து அருளி -அப்படியும் -நாம் அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம் பண்ணினால் மந்த மதிகளுக்கு இதற்கு இவ்வளவே அர்த்தம் உள்ளது என்று தோற்றும் –அதில் அபசாரமாம் -ஸ்ரீ ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு அவ்வவருடைய புத்திக்கு ஈடாக பஹுவாகச் சுரக்கும் -ஆகையால் நாம் அருளிச் செயல்களுக்கு வரம்பு கட்டினால் போலே யாம் -நீர் ஒருபடி திருவாய் மொழிக்கு வ்யாக்யானம் செய்யும் என்று நியமித்து அருளினார்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளானும் ஸ்ரீ யதிராஜர் அனுமதி கொண்டு ஸ்ரீ விஷ்ணு புராண பிரகிரியையாலே திருவாய் மொழிக்கு முந்துற முன்னம் இனிதாக ஆறாயிரப்படி உரைத்து அருளினார் –
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ நஞ்சீயருக்கு ஸ்ரீ பிள்ளான் படி ஆறாயிரமும் நன்றாக பிரசாதித்து அருளினார்
ஸ்ரீ நஞ்சீயரும் அத்தை நன்றாக அதிகரித்து -ஸ்ரீ பட்டரை அநேகமாக அனுவர்த்தித்து அவருடைய அனுமதி கொண்டு திருவாய் மொழிக்கு ஒன்பதினாயிரம் படியாக ஒரு வ்யாக்யானம் பண்ணா நிற்கச் செய்தே
ஸ்ரீ பட்டருக்கு இருபத்து எட்டாம் திரு நக்ஷத்ரத்திலே ஒரு கைசிக துவாதசி அன்று ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் கைசிக புராணம் வாசித்து அருளா நிற்க என்றையும் போல் அன்றியே ஒரு பதத்தில் நின்று பஹு முகமாக பாவ அர்த்தங்களை அருளிச் செய்கிற படிகளைக் கண்டு ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி உகந்து இவருக்கு தாம் சாத்தி இருந்த திரு மாலை திருப்பரியட்டம் திரு ஆபரணம் முதலியவற்றையும் தாம் எழுந்து அருளி இருக்கும் திவ்ய சிம்ஹாசனத்தையும் பின்னையும் சிலவற்றையும் பரிசிலாகி இரங்கி அருளி -மார்பும் தோளும் பூரித்து திரு மேனி தெரியாமல் த்வரை விஞ்சி மாறி -இவருக்கு மற்று எது கொடுப்போம் என்று சந்தோஷ அதிசயத்தால் -ஸ்ரீ பட்டரே உமக்கு மேலை வீடு தந்தோம் என்று திரு உள்ளமாக-இவரும் மஹா பிரசாதம் -என்று அங்கீ கரித்து அருள –
திரு ஓலக்கம் அடைய கடல் குழம்பினால் போலே-இப்படி திரு உள்ளம் ஆவான் என் என்று கலங்கி வயிறு பிடிக்க
ஸ்ரீ பட்டரும் ஹர்ஷ பிரகர்ஷத்துடன் ஸ்ரீ பெருமாள் திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து க்ருதாஞ்சலி புடராய் நின்று கொண்டு –
நாயந்தே தேவரீர் அர்ஜுனனைக் குறித்து மோக்ஷயிஷ்யாமி என்று அருளிச் செய்து அருளிற்று என்று கேட்பார் வார்த்தை கேட்டு இருக்கை அன்றிக்கே தேவரீர் தாமே இப்படி திருவாய் மலர்ந்து அருளப் பெற்ற இப் பேற்றுக்கு அடி ஸ்ரீ உடையவர் தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும் -ஸ்ரீ ஆழ்வானோடு உண்டான குடல் துடக்கும்-ஸ்ரீ எம்பார் அருளும் இறே -என்று விண்ணப்பம் செய்ய திரு ஓலக்கத்தில் இருந்த ஸ்ரீ ரெங்க மறையோர் ஸ்ரீ பட்டரைப் பார்த்து -ஸ்ரீ பெருமாள் உகப்பு தலை மண்டி இட்டு விசாரியாமல் ஒரு வார்த்தை அருளிச் செய்து அருளினார் -நீர் இங்கனே உகந்து அங்கீ கரிக்கிறது என் -உம்மைக் கொண்டு இவ் விபூதியை திருத்த வேணும் என்று அன்றோ ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி இருக்கிறது என்ன –
ஸ்ரீ பட்டரும் -ஆனால் இவ் விபூதியும் இவ் விபூதியில் உள்ளாரும் பாக்ய ஹீனர் ஆனால் அடியேன் செய்வது என் -நாய்க் குடலுக்கு நறு நெய் தொங்குமோ -என்னை இவ் விபூதி பொறுக்குமோ -இன்னம் சிறுது நாள் இங்கே அடிமை கொண்டு அருளில் – ஸ்ரீ பரமபதத்துக்கும் இதுக்கும் சுருளும்படியும் காட்டேனோ என்று பெருமாள் தம்மை விசேஷ கடாக்ஷம் செய்து அருளின ராஜகுல மஹாத்ம்யத்தால் உண்டான செருக்குத் தலை மண்டியிட்டு ஹ்ருஷ்ட உக்தியைப் பண்ணி-
நாயந்தே ஆசன பத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித் தாமரைகளும் அஞ்சல் என்ற கையும் கவித்த முடியும் முறுவல் பூரித்த சிவந்த திரு முக மண்டலமும் -திரு நுதலில் கஸ்தூரித் திரு நாமமும் ஸ்ரீ பரமபதத்தில் கண்டிலேன் ஆகில் ஒரு மூலை அடியே முறித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன் -என்று விண்ணப்பம் செய்து
ஸ்ரீ நம்பெருமாளையும் ஸ்ரீ பெரிய பெருமாளையும் ஆ பாத சூடம் அனுபவித்து ஸ்ரீ கோயில் ஆழ்வாரையும் ஸ்ரீ ஆழ்வாரையும் கண்ணார சேவித்து நிற்க – ஸ்ரீ பெருமாள் தம் வரிசைகள் எல்லாவற்றுடன் ப்ரஹ்ம ரதம் பண்ணுவித்து ஸ்ரீ கோயில் அனைத்துக் கொத்தும் அகில ஸ்ரீ வைஷ்ணவர்களும் எல்லா ஆச்சார்யர்களும் மற்றும் உள்ள விப்ர வர்க்கமும் சூழ்ந்து சேவித்து வர
அவர் திரு மாளிகையில் எழுந்து அருளி ஸ்ரீ ஆண்டாளை சேவித்து நிற்க -அவரும் நலம் அந்தம் இல்லதோர் நாடு புகுவீர் -என்று ஆசீர்வதிக்க
ஸ்ரீ பட்டரும் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று உகந்து அருளி
ஸ்ரீ திருப்பதியில் உள்ளவர்கள் அடங்கத் திரு மாளிகையில் அமுது செய்து அருளின பின்பு பெரும் கூட்டமாக எழுந்து இருந்து என்றைக்கும் போலே ஸ்ரீ திரு நெடும் தாண்டகத்துக்கு அர்த்தம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே-அஃலம் புரிந்த நெடும் தடக்கை -என்கிற பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்கிற போது -அஞ்சிறைப்புள் தனிப் பாகன் -என்கிற இடத்தில் –
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் -என்ற இத்தை இரட்டித்து அனுசந்தித்து அருளித் -திருக் கண்களை மலர விழித்துத் திரு மேனியைச் சிலிர்ப்பித்துப் புன்முறுவல் செய்து திரு முடியில் அஞ்சலி செய்து கொண்டு அணையில் சாய்ந்து நிற்கச் செய்தே சிறை கபாலம் வெடித்து ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருள -முதலிகளும் உள்ளே சென்று ஸ்ரீ பட்டர் இளைத்து எழுந்து அருளி இருக்கிறார் என்று ஸ்ரீ ஆண்டாளுக்கு அறிவிக்க
ஸ்ரீ ஆண்டாளும் சடக்கென எழுந்து அருளி ஸ்ரீ பட்டரை வாரி எடுத்து மார்பிலே அணைத்துக் கொண்டு ஸ்ரீ திருநாட்டுக்கு எழுந்து அருளின விஸ்மயத்தைக் கண்டு -திரு உள்ளம் கலங்குதல் -திரு முகம் கன்றுதல் -கண்ணீர் மல்குதல் செய்யாதே- வண்டுகள் பூவின் பரிமளம் அறிந்து ஆக்ராணித்து கிரஹிக்குமா போலே -ஸ்ரீ பட்டருடைய ஸுகுமார்யம் அறிந்து கலக்காமல் இவர் ஹ்ருத் கமலத்தை அலர்த்தித் தான் தெய்வ வண்டான தன்மை தோன்ற- ஸ்ரீ வைகுண்ட நாதன் இவரைக் கைக் கொண்டு அருளுவதே –
ஸ்ரீ பெருமாளுக்கும் ஸ்ரீ நாச்சிமாருக்கும் பேர் இழவும் பெரும் கிலேசமும் பெரு வயிற்று எரிச்சலுமாகச் செல்லா நிற்க-ஸ்ரீ பரமபத நிலையனுக்கும் அங்குள்ள ஸ்ரீ நாச்சிமாருக்கும் பெரு வாழும் பெரும் செல்வமும் பெரும் களிப்புமாய்ச் செல்லுகிறதே -என்று புத்ர சோக லேச ஸ்பர்சமும் அற்று-உடையவன் உடைமையைக் கைக் கொண்டால் நாம் வெறுக்கலாமோ என்று ஸ்ரீ ஆண்டாள் இருக்க –
கடல் கலங்கினால் போலே ஸ்ரீ கோயிலில் உள்ளார் அடங்க சோகார்த்தராய்க் கிடந்து துடிக்க
வேதாந்திகளும் (நஞ்சீயரும்)வேர் அற்ற மரம் போலே கோஷித்துக் கொண்டு விழுந்து சோகார்த்தராய் பஹுவாய் பிரலாபித்து மழைக் கண்ணீர் மல்கி நிற்க
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமாரும் திரு முத்தின் பணி காளாஞ்சி திரு வெண் சாமரம் திரு ஆலவட்டம் திரு வெண் கொற்றக் கொடை வெண் முத்தின் கலசம் மேற்கட்டு முத்துத் தாமம் தொடக்கமான தம்முடைய சர்வ பரிஜன பரிச் சதங்கள் அடங்கக் கொடுத்து விட்டு –
நம்முடைய அவப்ருத உத்சவம் கொண்டாடுமா போலே ஸ்ரீ பட்டருக்கு அவப்ருத உத்சவம் கொண்டாடுங்கோள் என்று திரு உள்ளமாய் –
திரு முகம் கன்றி -திரு முத்து உதிர்த்து -ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமாரும் கூடத் திருமஞ்சனம் ஆடி அருளி -இப்போது நமக்குச் செவ்வாய் வக்ரமாய்த்து என்று திரு உள்ளம் நொந்து -நாம் புத்ரனை இழந்தோமே என்று சுருள் அமுதும் அமுது செய்யாமல் முசித்து எழுந்து அருளி இருக்க –
ஸ்ரீ வேதாந்தி முதலான முதலிகள் ஸ்ரீ ராமப் பிள்ளையைக் கொண்டு ஸ்ரீ பட்டரை ப்ரஹ்ம மேதத்தால் சமஸ்கரித்து திருப் பள்ளி படுத்தி அவப்ருதம் கொண்டாடி மீண்டு வரும் போது- ஸ்ரீ நஞ்சீயர் முட்டாக்கு இட்டு மூடிக் கொண்டு புழக்கடை வழியால் தம் திரு மடம் எழுந்து அருள –
ஸ்ரீ பாதத்து முதலிகள் இதுக்கு அடி என் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நஞ்சீயரும் புதுக்க அறுத்த விதவை தெருவிலே வெளிப்பட வருமோ -என்று அருளிச் செய்து அருளினார் –
அதாவது ஸச் சிஷ்யன் சதாசார்யன் திறத்துப் பார்யா சமனாய் இருக்கை ஸ்வரூப சித்தி என்று கருத்து –
பின்பு ஸ்ரீ ஆண்டாளும் முதலிகளும் திரு மாளிகையில் புக்க அளவிலே வெறிச்சான திரு மாளிகையைக் கண்டு ஸ்ரீ பட்டர் திருத் தம்பியாரான ஸ்ரீ ராமப் பிள்ளை
நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தது ஒத்ததாலோ –
இல்லம் வெறிவோடிற்று ஆலோ -என்று பாடிக் கொண்டு விழுந்து பெரு மிடறு செய்து ஆர்த்தராய் கூப்பிட்டு சோகிக்க-
ஸ்ரீ ஆண்டாளும் அவ்வார்த்தியைக் கண்டு -இவர் ஸ்ரீ ஆழ்வான் திரு வயிற்றில் பிறக்கத் தக்கவர் அல்லர் என்று முசித்து
முதலிகளைப் பார்த்து அருளிச் செய்து -பிள்ளாய் பெற்ற பேற்றுக்குப் பொறாமல் ஞாதித்வம் கொண்டாடுகிறீரோ -நீர் இப்படி செய்கையில் நான் ஒரு கைப் புடையிலே இருக்கிறேன் என்ன -ஸ்ரீ ராமப் பிள்ளையும் சோகத்தை விட்டு துணுக்கு யென எழுந்து இருந்து ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து அபசாரப் பட்டேன் பொறுத்து அருள வேணும் -என்று ஷமை கொண்டு ஸ்ரீ பட்டருக்கு தீர்த்தம் திரு அத்யயனம் செய்து அருளி நிறைவேற்றிய பின்பு ஸ்ரீ பெருமாளைத் திருவடி தொழச் சென்ற அளவிலே
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ராமப் பிள்ளையை அருள் பாடிட்டு அருளி -ஸ்ரீ பட்டரை இழந்தோம் நாம் -உமக்கு நாம் இருக்கிறோம் -முசியாதே கொள்ளும் என்று- ஸ்ரீ பட்டருடைய வரிசைகள் அடங்கக் கொடுத்து அருளி ப்ரஹ்ம ரதம் பண்ணுவித்துத் திரு மாளிகையில் போக விட
ஸ்ரீ ராமப் பிள்ளையும் முசிப்பற்று ஹ்ருஷ்டராய் தர்சனம் நிர்வகித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –
இத்தால் மஞ்சள் நீர் குடிப்பித்து பெற்று வளர்த்தவரே தம் பெரு வீடு கொடுக்கும்படியான தன்னேற்றமும்
அர்த்த அனுசந்தான வேளையிலே ஹார்த்தன் சாஷாத் கரித்து வழி நடத்தும் படியான தன்னேற்றமும்
பேறு இழவு இரண்டுக்கும் பெருமாள் தாமாய் -அதில் கலக்கம் அற்ற தன்னேற்றமும்
ஸ்ரீ ஆழ்வான் குடல் துவக்குடைய ஸ்ரீ பட்டருக்கே உள்ளது ஓன்று இறே
ஸ்ரீ பட்டர் வைபவம் முற்றச் சொல்லி முடியாது இறே–யதா மதி யதா ஸ்ருதமாகச் சொன்னது அத்தனை
ஸ்ரீ பட்டர் திரு நக்ஷத்ரம் வைகாசி அனுராதம்
இவர் தனியன்
ஸ்ரீ பராசார்ய பட்டார்யாஸ் ஸ்ரீ ரெங்கேச புரோஹித ஸ்ரீ வத்சாங்க ஸூதஸ் ஸ்ரீ மான் ஸ்ரேயசேஸ் மேஸ்து பூயதே —
————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-