ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –
————————————————–
ஸ்ரீ யபதியாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அனுபாவ்யனாய்-நிரதிசய ஆனந்த யுக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய் வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும்-அத்தை இழந்து
அசன்நேவ ச பவதி-என்கிறபடியே அசத் கல்பராய் -போக மோக்ஷ ஸூந்யராய்-சம்யுக்த மேகம் ஷரம் அக்ஷரஞ்ச -என்கிறபடியே
திலதைலவத் தாருவஹ் நிவத் துர்விவேச த்ரிகுண துரத்யயா நாத்யசித் சம்பந்த திரோஹித ஸ்வ ப்ரகாசராய்க் கிடக்கிற
சம்சாரி சேதனருடைய இழவை அனுசந்தித்து
ச ஏகாகீ ந ரமேத -என்றும் ப்ருசம் பவதி துக்கித-என்றும் சொல்லுகிறபடி அத்யந்த வியாகுல சித்தனாய் –
இவர்கள் கரண களேபரங்களை இழந்து லூன பஷா இவாண்டஜ-என்கிறபடியே இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையில் –
நாம ரூபே வ்யாகரவாணி -என்றும் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி -என்றும் சொல்லுகிறபடியே இவர்களுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபாரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
தேஹாத்ம அபிமானமும் -அந்நிய சேஷத்வமும் -ஸ்வ ஸ்வா தந்தர்யமுமான படு குழியிலே விழுந்து அநர்த்தப் படாதே –
தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கைக்கு உடலாக -அபதோஷமபும்பவம்-என்கிறபடியே
அபவ்ருஷேயமாய்-அத ஏவ புருஷ சேமுஷீ தோஷ மாலின்ய வி நிர்முக்தமாய் -வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி என்கிறபடியே
தனக்கு மேற்பட்டதொரு சாஸ்திரம் இன்றிக்கே இருப்பதாய் ஸ்வத பிரமாணமான வேதத்தை –
யோவை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி-என்றும் அருமறையை வெளிப்படுத்திய அம்மான் -என்றும் சொல்லுகிறபடியே
நாராயணத்வ ப்ரயுக்தமான தன் உதரத் தெறிப்பாலே தானே ப்ரவர்ப்பித்த இடத்திலும் ததர்த்த நிர்ணயம் தான்
சர்வ சாகா ப்ரத்யய ந்யாயாதி சாபேஷமாய் இருக்கையாலே -அல்ப மதிகளுக்கு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அரிது -என்றும் –
இம்முகத்தாலே இவர்கள் திருந்திக் கரை மரம் சேருகை அரிது என்றும்-உபதேச பரம்பரையாலே இவர்களைத் திருத்தி
உஜ்ஜீவிப்பிக்கை எளிது என்றும் திரு உள்ளம் பற்றி -ஆச்சார்யாணாம் அசாவசா வித்யா பகவத்த-என்று உபதேசம் தான்
பகவான் தான் அடியாக வந்ததாய் இருக்குமதாகையாலே -அதுக்காக முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -என்றும் –
சசி வர்ணம் -என்றும் -வல்லன் எம்பிரான் விட்டுவே-என்றும் சொல்லுகிறபடியே ஒரு மந்த்ரத்தை உபதேசிக்கும் இடத்தில்
தத் உபதேஷ்டாவுக்கு வடிவாய் இருந்துள்ள ஸூத்த ஸ்வ பாவத்வ அகடி தகடநா சாமர்த்யாதிகளை யுடையனாய் –
பஹுதா விஜாயதே-என்றும் ஜன்மம் பல பல செய்தும் -என்றும் சொல்லுகிறபடியே பலவகைப்பட்ட விபவங்களில் வைத்துக் கொண்டு
மத்யே விரிஞ்சி கிரிசம் பிரதம அவதார -என்னும்படி பிரதம அவதாரமான மஹா விஷ்ணுவாய்க் கொண்டு –
இவ்வண்டாந்த வர்த்தியான சர்வ லோகத்துக்கும் அவ்வருகாய் இருந்துள்ள ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் –
ஜகத் உபக்ருதயே சோயமிச்சாம் அவதார -என்கிறபடியே இஜ்ஜகத்தை வாழ்விப்பதாக-ஸ்ரோனா நக்ஷத்ரம் விஷ்ணுர் தேவதா -என்னும்படி
ஸ்ரீ விஷ்ணு தேவதாகமான திருவோணம் என்கிற திரு நக்ஷத்ரத்திலே ஸ்வ இச்சையால் ஸ்வயமேவ திருவவதரித்து அருளி
உடனே இறையும் அகலகில்லேன் என்று இருக்கும் பெரிய பிராட்டியாரையும்
அந்த ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் தானே -பத்மேஸ்திதாம் -என்றும் -தேனமரும் பூ மேல் திரு -என்றும் -ஸ்ரீ விஷ்ணு பத்னீ -என்றும் –
சொல்லுகிறபடியே அப்போது அலர்ந்த தாமரைப் பூவிலே ஸ்ரீ மஹா லஷ்மீ என்கிற திரு நாமத்தை யுடையாளாய் ஸ்வ மஹிஷியாகத்
தானே திரு அவதரிப்பித்து அருளி -தாப புண்டரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம -என்று ஸ்ரீ ரஹஸ்ய த்ரய உபதேசம் தான்
தாப ஊர்த்வ புண்ட்ர தாஸ்ய நாம பூர்வகமாய் இருக்கிறவோபாதி –
பரம்பராம் உபதிசேத் குரூணாம் பிரதமோ குரு-ஆத்ம வித்யா விஸூத்யர்த்தம் ஸ்வா ச்சார்யாத்யாம் த்விஜோத்தம -என்றும் –
சஹஸ்ர புருஷம் வாபி சத பூருஷ மேவவா த்ரி சப்த புருஷம் வாபி த்வி சப்த தச பூருஷம்-என்றும் –
ஆதா உபதி சேத்வேதே கிலருக்வாக சம்ஜகம்-அஸ்மத் குருப்ய -இத்யாதி வாக்ய த்ரய மரிந்தம – என்றும் இத்யாதிகளிலே
குரு பரம்பரா ஸங்க்ரஹமாய் இருந்துள்ள -அஸ்மத் குருப்யோ நம-இத்யாதி வாக்ய த்ரய உபதேச பூர்வகமாய் இருக்குமாகையாலே
ஸ்ரீ விஷ்ணு லோகே பகவான் விஷ்ணுர் நாராயணஸ் ஸ்வயம் -ப்ரோக்தவான் மந்த்ர ராஜா தீந் லஷ்ம்யா சதா பாதி பூர்வகம் -என்றும் –
விஷ்ணும் ஆதி குரும் லஷ்ம்யா மந்த்ர ரத்னம் பிரதமம் பஜே-என்றும் சொல்லுகிறபடியே -அவளுக்கு தாப ஊர்த்வ புண்ட்ர தாஸ்ய நாம
பிரதான பரஸ் சரமான இந்த வாக்ய த்ரய உபதேச பூர்வகமாக ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய ப்ரதிபாதகமான
ரஹஸ்ய த்ரயத்தைத் தானே நேராக உபதேசித்து அருளி அப்படியே
சோபாதிஷ்டவதீ ப்ரீத்யா தாப புண்டராதி பூர்வகம் -விஷ்ணு லோக அவதீர்ணாய ப்ரியாய சததம் ஹரே சேநேசாய ப்ரியா
விஷ்ணோர் மூல மந்த்ர த்வயாதிகம் -என்கிறபடியே அவளைக் கொண்டு அந்த விஷ்ணு லோகத்தில் தானே அவதீர்ணரான
சேனை முதலியாருக்கு இந்த கிரமத்தில் இந்த ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து பின்னையும் அப்படியே
சேநேசஸ் ஸ்வ யமாகத்ய ப்ரீத்யா ஸ்ரீ நகரீம் ஸூபாம் சடகோபாயா முனயே திந்த்ருணீ மூல வாசிநே -தாபாதி
பூர்வகம் மந்த்ர த்வயஸ்லோகாந் பராந் க்ரமாத்-விஷ்ணு பத்ந்யா மஹா லஷ்ம்யா நியோகா துபதிஷ்டவான்-என்கிறபடியே –
இந்த க்ரமத்திலே தானே ஸ்ரீ சேனை முதலியாரைக் கொண்டு திரு நகரியிலே திருப் புளி ஆழ்வார் அடியிலே எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ ஆழ்வாருக்கு ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து உடனே அவருக்கு மயர்வற மதி நலம் அருளி
புநஸ் ச நாத முநயே பஞ்ச ஸம்ஸ்கார பூர்வகம் -பட்ட நாத ப்ரப்ருதிர் நிர்மி தைர் திவ்ய யோகிபி-திவ்யைர் விம்சதி சங்க்யாகை –
பிரபந்தைஸ் ஸஹ தேசிக ஸ்வோக்த திராவிட வேதா நாம் சதுர்ணாம் உபதேச க்ருத -என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வாரைக் கொண்டு அத்திரு நகரியில் திருப் புளி ஆழ்வார் அடியிலே தானே ஸ்ரீ நாத முனிகளுக்கு இந்த க்ரமத்திலே
ரஹஸ்ய த்ரய உபதேசத்தை திவ்ய பிரபந்த உபதேச சிரஸ்கமாகப் பண்ணுவித்து பின்னையும் அப்படியே
அந்த ஸ்ரீ நாத முனிகளைக் கொண்டு ஸ்ரீ உய்யக் கொண்டார் தொடக்கமானவர்க்கும் –
ஸ்ரீ உய்யக் கொண்டாரைக் கொண்டு ஸ்ரீ மணக்கால் நம்பி தொடக்கமானவர்க்கும்
ஸ்ரீ மணக்கால் நம்பியைக் கொண்டு ஸ்ரீ ஆளவந்தார் தொடக்கமானவர்க்கும்
ஸ்ரீ ஆளவந்தாரைக் கொண்டு ஸ்ரீ பெரிய நம்பி தொடக்கமானவர்க்கும்
ஸ்ரீ பெரிய நம்பியைக் கொண்டு ஸ்ரீ உடையவருக்கும் இந்த க்ரமத்திலே ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து
பின்னையும் அப்படியே ஸ்ரீ உடையவரைக் கொண்டு ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் முதலான எழுபத்து நாலு முதலிகளுக்கும்
ஸ்ரீ எம்பார் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தொடக்கமான ஏழு நூறு ஜீயர்களுக்கும்
மற்றும் அநேக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் இந்த க்ரமம் தப்பாமே ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து –
பின்னையும் அப்படியே ஸ்ரீ உடையார் தாம் தரிசனத்தை நிர்வஹித்துக் கொண்டு போரா நிற்கிற காலத்திலே
ப்ரீத்யா ப்ருதக் ப்ருதக் சிஷ்ய ப்ரணமேதீஸ் வராதி-ஸ்வார்யாத்யாந் யாவதாஜ் ஞாதும் ஸக்யந்தாவ தநுஸ்மரேத்-என்றும்
ப்ரத்யஹம் பிரணதைஸ் சிஷ்யை ப்ரபாதே பத்ம சம்பவ தத்யதா விதிவந் நித்யம் ப்ராவக்த வ்யங்குரோ குலம் -என்கிறபடியே –
இம்மூன்று வாக்யத்துடனே -ஸ்ரீ மதே ராமாநுஜாய நம-என்கிற வாக்யம் தொடங்கி -ஸ்ரீ தராய நம -என்கிற வாக்யத்து அளவான
பத்து வாக்யத்தையும் சேர்த்து பதின்மூன்று வாக்யமாக்கி
அஸ்மத் குருப்யோ நம- அஸ்மத் பரம குருப்யோ நம -அஸ்மத் சர்வ குருப்யோ நம -ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -ஸ்ரீ பராங்குச தாசாய நம
ஸ்ரீ மத் யமுன முநயே நம -ஸ்ரீ ராம மிஸ்ராய நம -ஸ்ரீ புண்டரீகாஷாய நம -ஸ்ரீ மத் நாத முநயே நம -ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே விஷ்வக் ஸேனாய நம -ஸ்ரீ ரியை நம -ஸ்ரீ தராய நம –
இத்தை மேலோரான நம் ஆச்சார்யர்கள் தந்தாமுக்கும் தஞ்சமாக அனுசந்திப்பதும் தந்தமை ஆஸ்ரயித்தாருக்கும் உபதேசிக்கவும்
செய்யக் கடவர்கள் என்று தாமே ஸ்ரீ ஆழ்வானைக் கொண்டு நியமித்து அருளி
இப் புடைகளிலே சேதன ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கியும் புஷ்பிதமாக்கியும் பலபர்யந்தம் ஆக்கியும்
செய்ததுவாய்த்த செல்வனாய் -துளக்கற்ற அமுதமாய் -விஜ்வர பிரமுமோத ஹா -என்கிறபடியே-
உள் வெதுப்பு தீர்ந்து நிவ்ருத்தனாய் இருந்தான்
அந்வ யாதபிஸை கஸ்ய சம்யங் ந்யஸ்தாத் மநோ ஹரவ் -சர்வ ஏவ ப்ரமுஸ்யேரந்நரா பூர்வே பரே ததா -என்றும் –
அர்வாஞ்சோ யத்பத சரஸிஜ த்வந்த்வ மாஸ்ரித்ய பூர்வே மூர்த் நாயஸ் யாந்வயமுபகதா தேசிகா முக்திமாபு -என்றும் சொல்லுகிறபடியே
முன்புள்ள முதலிகளுக்கும் பின்புள்ள முதலிகளுக்கும் ஓக்க உத்தாரகரான ஸ்ரீ உடையவர் சர்வஞ்ஞராய் இருக்கச் செய்தேயும்-
ததாபி சமயாசாரம் ஸ்தாபயந் சாம்ப்ரதாயிகம் -என்கிறபடி தமக்கு சத் சம்பிரதாய பரி ஸூத்தி உண்டு என்னும் இடம் தோற்ற
அஸ்மத் குருப்ய இத்யாதி வாக்ய த்ரயத்தையும் தாம் அநுஸந்திக்கும் போது முந்தின வாக்கியத்தில் குருபத ப்ரதிபாத்யர்
ஸ்ரீ பெரிய நம்பி என்றும் அதில் பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளும் என்றும் –
இரண்டாம் வாக்கியத்தில் பரம குரு ப்ரதிபாத்யர் ஸ்ரீ ஆளவந்தார் என்றும் –
அதில் பஹு வசன ப்ரதிபாத்யர் தத் சப்ரஹ்மசாரிகளான பெரியோர்கள் என்றும்
மூன்றாம் வாக்கியத்தில் குருபத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ மணக்கால் நம்பி தொடக்கமான
மேலோர் எல்லாரும் என்று கண்டு கொள்வது –
அப்படியே ஸ்ரீ உடையவருக்கு முன்புள்ள முதலிகளில் வைத்துக் கொண்டு ஸ்ரீ பெரிய நம்பி இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
முந்தின வாக்கியத்தில் குருபத ப்ரதிபாத்யர் ஸ்ரீ ஆளவந்தார் என்றும் –
இரண்டாம் வாக்கியத்தில் பரம குரு ப்ரதிபாத்யர் ஸ்ரீ மணக்கால் நம்பி என்றும் -இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர்
இவர்களுக்கு குரூபசத்தியிலே ருசியை ஜெநிப்பித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் -அவர்களோடே சங்கதியை யுண்டாக்கின சர்வேஸ்வரன் என்றும் –
மூன்றாம் வாக்கியத்தில் குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ உய்யக் கொண்டார் தொடங்கி
ஸ்ரீ யப்பதி அளவாய் உள்ள அனைவரும் என்று கண்டு கொள்வது –
அப்படியே ஸ்ரீ ஆளவந்தார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது குருபத ப்ரதிபாத்யர் ஸ்ரீ மணக்கால் நம்பி என்றும் –
த்விதீய வாக்கியத்தில் பரம குரு ப்ரதிபாத்யர் ஸ்ரீ உய்யக் கொண்டார் என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதா சம்பவம் இதில் ருசியைப் பிறப்பித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் சர்வேஸ்வரனும் என்றும்
மூன்றாம் வாக்கியத்தில் குரு பாத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ மன் நாத முனிகள் தொடங்கி
ஸ்ரீ தரன் அளவாயுள்ள அனைவரும் என்று கண்டு கொள்வது –
அப்படியே ஸ்ரீ மணக்கால் நம்பி இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது பிரதம த்வதீய வாக்யஸ்த குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் –
ஸ்ரீ உய்யக் கொண்டாரும் ஸ்ரீ மன் நாதமுனிகளும் என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதாசம்பவம் இத்தை இசைவித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் சர்வேஸ்வரனும் என்றும் –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ ஆழ்வார் தொடக்கமான எல்லாரும் என்று கண்டு கொள்வது –
அப்படியே ஸ்ரீ உய்யக் கொண்டார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ மன் நாதமுனிகளும் ஸ்ரீ ஆழ்வாரும் என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதாசம்பவம் இத்தை இசைவித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் -பெரியோர்களும் -சர்வேஸ்வரனும் என்றும் –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ சேனை முதலியார் தொடக்கமான
மேலோர் அனைவரும் என்று கண்டு கொள்வது –
அப்படியே ஸ்ரீ மன் நாதமுனிகள் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ சேனை முதலியாரும் என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதாசம்பவம் இத்தை இசைவித்த-தத் சம்பந்த கடகரான –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் -பெரியோர்களும் -சர்வேஸ்வரனும் என்றும் –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ பிராட்டியாரும் ஸ்ரீ எம்பெருமானும்
மற்றும் அங்குள்ள அனைவரும் என்று கண்டு கொள்வது –
அப்படியே ஸ்ரீ ஆழ்வார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ சேனை முதலியாரும் என்றும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் -என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் இவ்விருவருக்கும் உயிர் நிலையாய் இருப்பார் சிலர் என்றும் –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ எம்பெருமானும் வ்யூஹமும் விபவமும்
நித்ய ஸூரி களும் என்றும் கண்டு கொள்வது –
அப்படியே ஸ்ரீ சேனை முதலியார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ விஷ்ணு அவதாரமான எம்பெருமான் -என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் -அவளுக்கு ஸ்தந பாஹு த்ருஷ்ட்டி ஸ்தாந னீயரான மற்றைப் பிராட்டிமார்களும்
இவ்விருவருக்கும் உயிர் நிலையாய் இருப்பார் -இவர் அடிமை கொள்ளும் மற்றைய சிலர் என்றும் – –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் இவ்வாதாரங்களுக்கு நாற்றங்காலான ஸ்ரீ ஷீரார்ணவ நிகேதனனும்
மற்றும் உள்ள வ்யூஹமும் விபவமும் ஸ்வேதா தீப வாசிகளும் என்றும் இப்புடைகளிலே இவற்றுக்குப் பொருள் சொல்லக் கடவது
அப்படியே ஸ்ரீ பெரிய பிராட்டியார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ விஷ்ணு அவதாரமான எம்பெருமான் தானும்
அவ்வவதார கந்தமான ஸ்ரீ வ்யூஹ வாஸூ தேவனும் -என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் -இவ்விருவருக்கும் உயிர் நிலையாய் இருப்பார் -இவர் அடிமை கொள்ளும்
ஸ்ரீ பெரிய திருவடி தொடக்கமான மற்றைய சிலர் என்றும் – -சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்த கள் என்றும்
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் வான் இளவரசு வைகுண்ட குட்டனும் ஓடும் புள்ளேறிப் படியே
இச்சேதனனுக்காக அவ்விபூதியிலே அவன் பரிக்ரஹிக்கும் சில அவதாரங்களும் நித்ய சித்தரும்
என்றும் யதாசம்பவம் இப்புடைகளிலே இவற்றுக்குப் பொருள் சொல்லக் கடவது
பிரதம அவதாரமான ஸ்ரீ விஷ்ணு அவதாரமும் அவ்வவதார கந்தமான பாற் கடலுள் பையத் துயின்ற பரமனும் –
நிதானமான ஸ்ரீ வைகுண்ட நாட்டில் இருக்கும் ஸ்ரீ பர வாஸூ தேவனும் தர்மி ஐக்யத்தாலே பேதம் இன்றிக்கே
ஏக தத்வமாய் இருந்தார்களே ஆகிலும் -ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும் ஸ்ரீ பெருமாளுக்கும் தர்மி ஐக்கியம் இருக்கச் செய்தே –
ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -என்று விக்ரஹ பேதத்தாலே உப கந்தவ்ய உப கந்த்ருத்வங்களை சொன்னவோ பாதி
இவ்விடத்திலும் விக்ரஹ பேதத்தை இட்டு இம்மூவருக்கும் இங்கன்-குருத்வ -பரம குருத்வ -சர்வ குருத்வங்களை சொல்லக் குறை இல்லை
ஸ்ரீ உடையவருக்கு பின்புள்ள முதலிகளில் வைத்துக் கொண்டு -ராமானுஜ பதாச்சாயா -என்னும்படி அவர் திருவடிகளில் ஆஸ்ரயித்து
அவருக்கு நிழலும் அடிதாறுமாய்க் கொண்டு குரு பரம்பரா அனுபிரவிஷ்டரான ஸ்ரீ எம்பார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத பஹு வசன ப்ரதிபாத்யர் கோபலீ வர்க்க ந்யாயத்தாலே ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும்
ஸ்ரீ அனந்தாழ்வானும் அவர்களுக்கு அபிமதராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும் என்று இங்கனே விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –
அப்படியே ஸ்ரீ எம்பார் திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ பட்டர் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத பஹு வசன ப்ரதிபாத்யர் அடைவே ஸ்ரீ எம்பாரும் ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும்
ஸ்ரீ அனந்தாழ்வானும் அவர்களுக்கு அபிமதராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும் என்று
இங்கனே பூர்வம் போலே விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –
பின்னையும் அப்படியே ஸ்ரீ பட்டர் திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ நஞ்சீயர் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத பஹு வசன ப்ரதிபாத்யர் அடைவேஸ்ரீ பட்டரும் ஸ்ரீ எம்பாரும் ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும்
ஸ்ரீ அனந்தாழ்வானும் அவர்களுக்கு அபிமதராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும் என்று இங்கனே
பூர்வம் போலே யதா சம்பவம் விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –
பின்னையும் அப்படியே ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ நம்பிள்ளை இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத பஹு வசன ப்ரதிபாத்யர் அடைவே ஸ்ரீ நஞ்சீயரும் ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ எம்பாரும் ஸ்ரீ பிள்ளானும்
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ அனந்தாழ்வானும் அவர்களுக்கு அபிமதராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-
ச ப்ரஹ்மசாரிகளாய் பஹு மந்தவ்யராய் இருந்துள்ள ஸ்ரீ ராமானுஜனைத் தோளும் பெரியோர்கள் என்று
இங்கனே பூர்வம் போலே யதா சம்பவம் விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –
இக் குரு பரம்பரை தான் ஆரோஹ க்ரமத்திலே ஆ பகவதத்த-என்று ஸ்ரீ பகவான் அளவும் சென்று அவர்களுக்குச் செல்லக் கடவது ஓன்று –
இங்கனே இருந்தாலும் அவரோஹ க்ரமத்திலே வந்தால் ஸ்ரீ ராமானுசனைத் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி இத்யாதிப்படியே
மேன்மேல் கொழுந்து விட்டுப் படர்ந்து செல்லக் கடவது ஓன்று ஆகையால்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையும் அவர் திருவடிகளை ஆஸ்ரயித்த
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் தொடக்கமானாரும் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத ப்ரதிபாத்யர் அடைவே இன்னார் இன்னார் என்ற இடமும் ஆச்சார்யர்களுடைய திரு நாமங்களில் கண்டு கொள்வது
அப்படியே பஹு வசன ப்ரதிபாத்யர் அவர்களுக்கு உயிர் நிலையாய் தத்தமக்கு பஹு மந்தவ்யராய்க் கொண்டு
கொடியைக் கொள் கொம்பிலே துவக்கும் சுள்ளிக் கால் போலே தம்தாமை அவர் அவர்கள் திருவடிகளில் சேர்க்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று கண்டு கொள்வது –
இனி ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -இத்யாதி வாக்ய தசகத்திலும் வைத்துக் கொண்டு -ஸ்ரீ யை நம -ஸ்ரீ தராய நம -என்கிற வாக்ய த்வயத்தில் –
ஸ்ரீ ரிதி பிரமம் நாம லஷ்ம்யா -என்று ஸ்ரீ ரித்யே வசநாமதே -என்றும் சொல்லுகையாலே
ஸ்ரீ சப்தம் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வாசகமாய் இருக்கும் -மற்றை எட்டு வாக்யத்திலும்
ஸ்ரீ சப்தம் நஜ்ஞான துல்யம் தநமஸ்தி கிஞ்சித் -என்றும் பகவத் பக்திரே வாத்ர ப்ரபந்நா நாம் மஹத் தநம்-என்றும் சொல்லுகையாலே
ஞான பக்திகளாகிற மஹா சம்பத்துக்கு வாசகமாய் இருக்கும்
இதில் சில வாக்கியங்களில் ஸ்ரீ சப்தம் ச விபக்திக மதுப் ப்ரத்யயோ பேதமாயும் -சில வாக்கியங்களில் லுப்தா விபக்திக மது ப்ரத்யயோ பேதமாயும் –
சில வாக்கியங்களில் மது ப்ரத்யய ரஹிதமாயும் இங்கன் வைரூப்யேண நிர்த்தேசிகைக்கு நிபந்தம்-
சிலருடைய ஞான பக்திகள் விசத தரங்களாய் -சிலருடைய ஞான பக்திகள் விசதங்களாய் இருக்கையாலே -அது எங்கனே என்னில்
ஸ்ரீ பங்கயத்தாள் திருவடியைப் பற்றின ஸ்ரீ சேனை முதலியார் உடையவும் அவர் திருவடிகளை பற்றின ஆழ்வார் உடையவும்
அவர் திருவடி பணிந்து உய்ந்த ஸ்ரீ உடையவர் உடையவும் ஞான பக்திகள் விசத தமங்களாய் இருக்கும்
ஸ்ரீ திருக் குருகூர் நம்பிக்கு நண்பரான ஸ்ரீ மன் நாதமுனிகள் உடையவும் -தத் விஷயீ கார பாத்திர பூதரான
ஸ்ரீ யமுனைத் துறையவர் உடையவும் ஞான பக்திகள் விசத தரங்களாய் இருக்கும்
சீல மிகு ஸ்ரீ மன் நாதமுனி சீர் உரைக்கும் பிரிய சிஷ்யரான ஸ்ரீ உய்யக் கொண்டார் உடையவும்
தத் சிஷ்யரான ஸ்ரீ மணக்கால் நம்பி உடையவும் தத் பிரியா சிஷ்யரான ஸ்ரீ பெரிய நம்பி உடையவும்
ஞான பக்திகள் விசதங்களாய் இருக்கும் –
இவர்களுடைய ஞான பக்திகள் ஏக ரூபமாய் இராதே இங்கன் தர தம பாவேந இருக்கைக்கு ஹேது என் என்னில்
ஸ்ரீ சேனை முதலியார் உடையவும் ஸ்ரீ நம்மாழ்வார் உடையவும் ஞான பக்திகள் தாம் -பிரபத்தி மார்க்கத்தை ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதையில்
பரக்கத் தர்சிப்பிக்கைக்கும் -பிரபத் தவ்யனான ஸ்ரீ எம்பெருமான் படிகளை உள்ளபடி அனைவருக்கும் அறிவிக்கைக்கும் –
அப்படியே -ப்ரியேண சேநாபதி நாந்வேதி தத் தத் அநு ஜானந்தம் உதார வீக்ஷணைஎன்று மதிப்புடையார் சொல்லும்படிக்கும்
அவன் அடியாகப் பிறந்தவையாய் இருக்கையாலும்-ஸ்ரீ திருவாய் மொழி முகத்தாலே-தந்தான் தன தாள் நிழலே–
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே -என்றும் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
பிரபத்தி மார்க்கத்தைப் பல படியாலும் தம்முடைய யுக்தி அனுஷ்டானங்களாலே ஸ்பஷ்டம் ஆக்குகைக்கும் –
உயர்வற உயர் நலம் உடையவன் -மயர்வற மதிநலம் அருளினன் -தேவர்க்கும் தேவாவோ -என்று பிரபத்தவ்யனுடைய படிகளைப்
பத்தும் பத்தாக ஏற்றி எடுக்கைக்கும்
உம்முயிர் வீடு உடையான் -யானே நீ என்னுடைமையும் நீயே -தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் -என்று பிரபத்தாவின்
படிகளைப் பல வகையாகப் பிரகாசிப்பைக்கும்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த -கொண்ட என் காதல் உரைக்கில் தோழி மண் தினி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும்
கழியப் பெரிதால் -சூழ்ந்து அதனில் பெரிய அவா -என்று பிராட்டிமார் பேச்சாலும் தம் பேச்சாலும்
தம்முடைய ஆற்றாமையை அறிவிக்கைக்கும் உறுப்பாய் இருக்கையாலும் விசத தமங்களாய் இருக்கும்
ஸ்ரீ உடையவருடைய ஞான பக்திகள் -பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா -என்று தாமும் –
அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹத -என்று ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்யலாம் படி அவன் அடியாகப் பிறந்தவையாய் –
ஸ்ரீ கத்யத்ரய ஸ்ரீ பாஷ்யாதி முகத்தால் சரணாகதி பக்தி சாஸ்திரங்களை அடைவே வெளியிடுகைக்கும்
அவ்வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே -என்கிறபடியே தம்முடைய தாதாத்விக பிரதிபையாலே
பிரதிவாதி வாரண பிரகடாடோப விபாட நத்துக்கும்
நூறு தடாவில் வெண்ணெயையும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலையும் ஸ்ரீ நாச்சியார் மநோ ரதித்த படியே
பரம ஸ்வாமியான ஸ்ரீ அழகருக்கு தாம் அமுது செய்து அருளப் பண்ணுகைக்கும்
துருஷ்கன் படை வீட்டிலே சென்று அவன் மக்கள் மாளிகையில் இருந்த ஸ்ரீ ராமப்ரியரை -வருக வருக வருக இங்கே இத்யாதிப்படியே
தாமே அழைத்து அருளி அவர் தம் அருகே ஓடி ஓடி வந்தவாறே -என் செல்வாய் பிள்ளாய் வாராய் -என்று அவருக்குத் திரு நாமம் சாத்தித்
தம் திரு மார்பிலே அணைத்துக் கொள்ளுகைக்கும் –
புழுவன் பட்ட வ்ருத்தாந்தத்தைத் திருக் கல்யாணிக் கரையிலே தம் சந்நிதியில் சென்று ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதி ஆண்டான்
விண்ணப்பம் செய்யக் கேட்டு பெரிய ப்ரீதியோடே செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரான ஸ்ரீ பெரிய பெருமாளை
மங்களா சாசனம் பண்ணுவதாகக் கோலி ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளும் போது தாமே ஐம்பத்து இருவரைச் செயல் நன்றாகத் திருத்தி
தத் விஷயத்திலே பரிவராய் இருக்கும்படி நியமிக்கைக்கும்
கரை கட்டாக் காவேரி போலே கரை புரண்டு ஆஸ்ரயித்து அளவு அன்றிக்கே இருக்கைக்கு உடலாய் இருக்கையாலே
விசத தமங்களாய் இருக்கும்
ஸ்ரீ மத் நாத முனிகளுடையவும் ஸ்ரீ ஆளவந்தார் உடையவும் ஞான பக்திகள் இங்கனே விஸ்ருங்கலமாய்க் கரை புரண்டு இராதே
அளவு பட்டு அரையாறு பட்டுத் தம் தாமை ஆஸ்ரயித்தார் அளவில் தானே அடங்கி ஓன்று இரண்டு பிரபந்தங்களை
இட்டு அருளுகைக்கு உடலாய் இருக்கையாலே விசத தரங்களாய் இருக்கும்
ஸ்ரீ உய்யக் கொண்டார் உடையவும் ஸ்ரீ மணக்கால் நம்பி உடையவும் ஸ்ரீ பெரிய நம்பி உடையவும் ஞான பக்திகள்
கீழ்ச் சொன்னபடி இராதே சினையாறு பட்டுப் பரிமதங்களாய் இருக்கையாலே விசதங்களாய் இருக்கும்
இப்பதின் மூன்று வாக்யங்களிலும் முந்தின வாக்கியங்கள் மூன்றும் வேதம் ஆகிற சாஸ்த்ர ருசி பரிக்ருஹீதங்களாய் இருக்கும் –
மற்றை வாக்கியங்கள் பத்தும் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதங்களாய் இருக்கும் –
அபவ்ருஷேயமாயும்-பவ்ருஷேயமாயும் இருக்கிற ரஹஸ்ய த்ரயத்துக்கு ஏகாவயவித்வம் சொன்னவோ பாதி இப்படி
அபவ்ருஷேயமாயும் பவ்ருஷேயமாயும் இருந்துள்ள இப்பதின் மூன்று வாக்யத்துக்கும் ஏகாவயவித்வம் சொல்லத் தட்டில்லை–
அப்படியே நமருஷிப்ய -என்று அபவ்ருஷேயமானாப் போலே நமஸ் சப்தம் முன்னாக இவ்வாக்கிய த்ரயத்தையும் நிர்த்தேசியாதே
அஸ்மத் சப்தம் முன்னாக நிர்த்தேசித்து-அகில புவன ஜென்ம -என்கிற இடத்தில் மாங்களிகமான அகாரத்தைப் போலே
மாங்களிகமான அகார உபக்ரம சித்யர்த்தமாக அஸ்மத் சப்தத்தை முன்னிட்டு நிர்த்தேசித்தவோபாதி மற்றை இரண்டு வாக்கியங்களையும்
அஸ்மத் சப்தத்தைத் தானே முன்னிட்டு நிர்த்தேசித்தது-சந்நோ மித்ரஸ் சம் வருண-சந்நோ பவத் வர்யமா-என்னுமா போலே –
த்ரயோதச வாக்யாத்மகமான இக்குரு பரம்பரா ரூப மந்த்ரம் தான் ஸ்ரீ சஹஸ்ர நாம மாலா மந்த்ரம் போலே அநேக நமஸ் சப்த சரீரகமாய் –
ஸ்ரீ த்வார சேஷிகளுக்கும் ஸ்ரீ பிரதான சேஷிகளுக்கும் அடைவே ப்ரதிபாதகமாய் -பிரதம -மத்திய -சரம -அவதி ரூபமான பர்வத த்ரய ப்ரகாசகமாய் –
உபதேஷ்ட்ரு -உபதேச -உபதேஸ்ய-ரூப மூன்று வர்க்கத்துக்கும் சாம்ப்ரதாயிகத்வ சாத் குண்ய யோக்யதைகளுக்கும் சம்பாதகமாய்
வக்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -என்கையாலே ஸ்ரீ த்வயத்தோ பாதி சதா அனுசந்தேயமாய் –
தன்னை முன்னிட்டு ரஹஸ்ய த்ரயத்தை அனுசந்திப்பாரை
நாவ காரியம் சொல் இல்லாதவர் -என்று மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் கொண்டாடும்படி பண்ணக் கடவதாய்
அஸ்மத்-என்று அகாராதியாக உபக்ராந்தமாய்-அப்படியே ஸ்ரீ நமஸ் சப்தங்களைப் பல இடங்களிலும் இடையிலே உடைத்தாய்
ஸ்ரீ தராய நம -என்று மாங்களிகமான நமஸ் சப்தத்தோடு நிகமிக்கப் பட்டதாய் இருக்கையாலே கார்த்ஸ்ந்யேந மங்களாத்மகமாய் இருக்கும்
ஸ்ரீ குரு பரம்பரா விவரணம் சம்பூர்ணம் –
———————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply