ஸ்ரீ கிருஷ்ண யஜுர் வேத உபநிஷத் -கட உபநிஷத்-கட வல்லி -என்றும் இத்தை சொல்வர் –
நைச்சிகேதஸ் –உபாக்யானம் -மஹா பாரதத்திலும் உண்டு -கொஞ்சம் மாறி
கௌதமர் பிள்ளை இவன் -அருணன் -உத்தாலகர் பிள்ளை –
யாகம் கோ தானம் பண்ண -மெலிந்த பசுவாக இருக்க -பிள்ளை நல்ல மாடு கொடுக்க வேண்டாமா -மூன்று தரம் கேட்டு
என்னை யாருக்கு கொடுக்க -மிருத்யு தேவதைக்கு வெறுப்பில் சொல்ல -மூன்று நாள் பட்டினி விட்ட யமன் மூன்று வரம் -பிராயச்சித்தம்
அப்பா கோபிக்காமல் முதல் / அக்னி வித்யா சொல்லி தர இரண்டாவது -இவன் பெயரிலே அக்னி -உபாசனம் /
மரணம் அடைந்த பின்பு போகும் கதி -மறு பிறவி பற்றி சொல்ல கேட்டான் -மூன்றாம் வரம்
இது தவிர வேறே கேட்க சொல்ல -ஸ்திரமான இந்த ஒன்றே -உறுதி கண்டு நீண்ட உபன்யாசம் -ஸ்திரம் -ஸ்திரம் மருத்தவம் -நிதானமாக சொல்லி
மூன்று வல்லி-ஒவ் ஒரு அத்தியாயத்திலும் – இரண்டு அத்தியாயங்கள் -மொத்தம் -ஆறு வல்லிகள்-
————————
உபநிஷத் என்பதை உப + நி + ஷத் என்று பொருள் கொள்ளலாம்.
உப = ஆத்மா ( அருகில், நமக்கு மிக அருகில் இருப்பது, அது ஆத்மா) நாமாக இருப்பது.
ஆத்மா மீதுதான் அகங்காரம் ஏற்றி வைக்கப் பட்டிருக்கிறது.
நி – நிச்சய ஞானம். இறுதியான, உறுதியான அறிவு, ஆத்மாவைப் பற்றிய உறுதியான அறிவு
ஷத் – நாசத்தை செய்வது. உறுதியான ஆத்ம ஞானத்தின் மூலமாக சம்சாரத்தை அது கொடுக்கின்ற துயரங்களை நாசம் செய்தல்-
கடோ உபநிஷத் கிருஷ்ண-யஜூர் வேதத்தில் இருக்கின்றது. யஜூர் வேதம் இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது.
1. சுக்ல பகுதி, 2. கிருஷ்ண பகுதி.
சுக்ல பகுதியில் ஈஸாவாஸ்ய உபநிஷத்தும், ப்ருஹதாரண்ய உபநிஷத்தும் இருக்கின்றது.
கிருஷ்ண பகுதியில் கடோ உபநிஷத்தும், தைத்திரீய உபநிஷத்தும் இருக்கின்றது.
கடோ உபநிஷத் கட் என்ற முனிவரால் எழுதப்பட்டிருப்பதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
————–
தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ ৷৷ 1.1.1 ৷৷-
வஜ்ரஸ்ரவா -மகன்-உசன் என்ற -வஜ்ரஸ் ரவாசா –விஸ்வஜித் யாகம் பண்ணி அனைத்தையும் தியாகம் பண்ணி
-பலனை அனுபவிக்க ஆசை கொண்டான் -அவன் புத்ரன் நசிகேத –
முன்னொரு காலத்தில் அன்னத்தை தானமாக கொடுத்து புகழடைந்தவரின் மகன் வாஜஸ்ரவ என்பவர்
கர்ம பலனை அடைய விரும்பி செய்கின்ற யாகத்தில் எல்லா பொருட்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு நசிகேதன் என்ற பெயருடைய மகன் இருந்தான்.
———-
த் ఁஹ குமார் ఁஸந்தஂ தக்ஷிணாஸு நீயமாநாஸு ஷ்ரத்தாவிவேஷ ஸோமந்யத ৷৷ 1.1.2 ৷৷
தம் குமாரம் சந்தம் -அவன் குமாரனாக இருந்தும்
ஷ்ரத்தா அவிவேச –ஸ்ருதிகளில் விசுவாசம் மிக்கு இருந்தான்
தக்ஷிணாஸு நீயமாநாஸு –பசுக்களை தானம் கொடுக்க அழைத்து கொண்டு செல்லும் பொழுது
அமன்யத-நினைத்தான் –
சிறு வயதுடைய குமாரனாக இருந்த போதிலும் சிரத்தையுடன் இருந்தான்.
தன் தந்தை தட்சணையை கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவன் சிந்திக்கலானான்.
————–
பீதோதகா ஜக்ததரிணா துக்ததோஹா நிரிந்த்ரியாஃ .
ஆநந்தா நாம தே லோகாஸ்தாந் ஸ கச்சதி தா ததத் ৷৷ 1.1.3 ৷৷
பிதம் உதகம் -தண்ணீரை குடித்து -நிறைய காலம் / ஜகதம் த்ருணம் -புல்லை உண்டு-நிறைய காலம்
ஜகத் தரிணா துக்ததோஹா-உலகம் தரிக்க பாலை கறந்து
நிரிந்த்ரியா-இனி மேல் கன்றுகளை பெற முடியாத நிலையில் தானம் பண்ணி
ஆநந்தா நாம தே லோகாஸ்தாந் ஸ கச்சதி-ஆனந்தம் இல்லாத லோகங்களுக்கு போகிறான் –
இனிமேல் நீர் குடிக்கும் சக்தியில்லாத நிலையில் உள்ளதுமான, புல்லை மேய்ந்து முடித்த நிலையிலுள்ளதுமான.
பால் கொடுக்கும் சக்தியை இழந்த நிலையிலுள்ள, கன்று ஈனும் சக்தியை இழந்த நிலையிலுள்ள
இப்படிபட்ட பசுவை தானமாக கொடுப்பதன் மூலம்
அநந்தா (சுகமற்ற) என்ற பெயருடைய உலகத்தை தந்தை அடைந்து விடுவார் என்று எண்ணினான்..
———-
ஸ ஹோவாச பிதரஂ தாத கஸ்மை மாஂ தாஸ்யஸீதி .
த்விதீயஂ தரிதீயஂ த் ఁஹோவாச மரித்யவே த்வா ததாமீதி ৷৷ 1.1.4 ৷৷
ஸ ஹோவாச பிதரஂ தாத கஸ்மை மாஂ தாஸ்யஸீதி .–தன்னை யாருக்கு தானமாக கொடுப்பாய் என்று
த்விதீயஂ தரிதீயஂ த்ஹோவாச-இரண்டாவது மூன்றாவது தடவையும் கேட்டான்
மரித்யவே த்வா ததாமீதி -யமனுக்கு கொடுப்பேன் என்றான் –
இவ்வாறு சிந்தித்து விட்டு நசிகேதன் தன் தந்தையை பார்த்து,
“என்னை யாருக்கு தானமாக கொடுக்கப் போகிறீர்கள் என்று மூன்று முறை கேட்டான்”
பொறுமை யிழந்த அவர் உன்னை யமனுக்கு தானமாக கொடுக்கின்றேன் என்று கோபத்துடன் கூறினார்.
————
பஹூநாமேமி ப்ரதமோ பஹூநாமேமி மத்யமஃ .
கி் ఁஸ்வித்யமஸ்ய கர்தவ்யஂ யந்மயாத்ய கரிஷ்யதி ৷৷ 1.1.5 ৷৷
பஹூநாமேமி ப்ரதமோ பஹூநாமேமி மத்யம–சிஷ்யர்களுக்குள்ளும் மகன்களுக்கும் பிரமம் மத்யமாகவும் அன்றோ நான் இருக்கிறேன்
குருவின் ஆஞ்ஜை படி அன்றோ நடந்து உள்ளேன் என்றபடி
கி் ஸ்வித்யமஸ்ய கர்தவ்யஂ யந்மயாத்ய கரிஷ்யதி-இப்படி என்னை எமனுக்கு தானம் கொடுத்து என்ன அடைய போகிறார் –
பிள்ளை நேர்மையாக சிந்திக்கிறான்
பலருக்கும் நான் உத்தமமான சிஷ்யனாக இருந்திருக்கின்றேன், சிலருக்கும் இடைநிலைப் பட்டவனாக இருந்திருக்கின்றேன்.
ஆனால் எதிலேயும் நான் கடை நிலையில் இல்லையே, பிறகு எதனால என்னை யமனுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னார்.
எமனுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கின்றது? ஒன்றும் செய்ய வேண்டியதில்லையே!
என்னை கொடுப்பதன் மூலம் எதை அடையப் போகின்றார். நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்.
————
அநுபஷ்ய யதா பூர்வே ப்ரதிபஷ்ய ததாபரே .
ஸஸ்யமிவ மர்த்யஃ பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புநஃ ৷৷ 1.1.6 ৷৷
அநுபஷ்ய யதா பூர்வே ப்ரதிபஷ்ய ததாபரே .–முன்பு உள்ள அனைவர்களும் பார்த்தாய் ஆனால்
ஸஸ்யமிவ மர்த்யம் பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புந–தானியங்கள் போலவே நசிந்து மரித்து-மீண்டும் உருவாக்கி
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து-இப்படி இருக்க -நீர் சொன்ன படி என்னை எமன் இடமே அனுப்பு என்றவாறு –
நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான். முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைத்து பாருங்கள்
இப்பொழுது இருக்கின்ற சான்றோர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதையும் சிந்தித்து பாருங்கள்.
மனிதர்கள், தாவரங்கள் அழிகின்றன, மீண்டும் தாவரங்களாகவே பிறக்கின்றார்கள்.
தன் தந்தையின் வாக்கு பொய்யாக்க் கூடாது என்று நசிகேதன் தந்தைக்கு உணர்த்துகின்றான்.
உங்கள் வாக்கு காப்பாற்றப்பட வேண்டும். ஆகவே தங்கள் வாக்குப்படி நான் எமலோகம் செல்கின்றேன்.
————
வைஷ்வாநரஃ ப்ரவிஷத்யதிதிர் ப்ராஹ்மணோ கரிஹாந் .
தஸ்யைதா் ఁஷாந்திஂ குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம் ৷৷ 1.1.7 ৷৷
வைஷ்வாநர-அக்னி பகவான் போலே –
ப்ரவிஷத்யதிதிர் ப்ராஹ்மணோ கரிஹாந் -நம் க்ரஹம் வந்த ப்ராஹ்மணன் -நம் விருந்தாளி அன்றோ இவன்
தஸ்யைதா் ஷாந்தி குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம் -இவனுக்கு ஸ்ரீ பாதம் விளக்கி நீர் கொடுக்க வேண்டும் –
அர்க்கியம் கொடுக்காமல் நம் க்ருஹம் நெருப்பு போலே என்று தர்ம பத்னி சொல்ல –
யமதர்ம ராஜா, நெருப்பைப் போல பிராமண விருந்தினர் நம் வீட்டை அடைந்திருக்கின்றார்.
அவருக்கு மனிதர்கள் இப்படிபட்ட உபசாரத்தை செய்கின்றார்கள்.
எனவே அவரை உபசரிக்க நீரைக் கொண்டு வாருங்கள் என்று அங்கிருந்தவர்கள் அவரிடம் கூறினர்.
————–
ஆஷாப்ரதீக்ஷே ஸங்கத் ఁஸூநரிதாஂ ச இஷ்டாபூர்தே புத்ரபஷூ் ఁஷ்ச ஸர்வாந் .
ஏதத்வரிங்க்தே புருஂஷஸ்யால்பமேதஸோ யஸ்யாநஷ்நந்வஸதி ப்ராஹ்மணோ கரிஹே ৷৷ 1.1.8 ৷
ஆஷாப்ரதீக்ஷே ஸங்கத் -ஆசையும் எதிர்பார்ப்பும் பலமும்
ஸூநரிதா ச இஷ்டாபூர்தே புத்ரபஷூ் ஷ்ச ஸர்வாந் .–நல்ல உபதேசமும் -புத்ர பசு போன்ற சகல இஷ்டங்களையும் தருவதாயும் உள்ள அனைத்தையும்
ஏதத்வரிங்க்தே புருஂஷஸ்யால்பமேதஸோ -அல்ப புத்தி உடையவர்கள் இழக்கிறார்கள்
யஸ்யாநஷ்நந்வஸதி ப்ராஹ்மணோ கரிஹே -தங்கள் க்ரஹத்தில் வந்த ப்ராஹ்மணருக்கு உணவு கொடுக்காமல் அன்றோ இவற்றை இழக்கிறார்கள் –
யமன் ரிஷி சாபத்தால் விதுரராக பிறந்த விருத்தாந்தம் உண்டே
பிராமண விருந்தினரை சரியாக உபசரிக்காவிட்டால் ஏற்படும் நஷ்டங்களை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கின்றது.
எவருடைய வீட்டில் ஒரு பிராமண விருந்தினர் உணவு உட்கொள்ளாமல் இருக்கின்றானோ அந்த அறிவற்ற மனிதனுடைய
அனைத்து விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் ஸத் ஸங்கத்தினால் வந்த புண்ணியத்தையும்
நல்ல சொற்களால் தேடிய புண்ணியத்தையும், யாகத்தாலும், சேவையாலும் அடைந்த புண்ணியத்தையும்,
மக்கட் செல்வத்தையும், பசுக்களையும் அந்த பிராமணன் அழிக்கின்றான்.
விருந்தோம்பலின் பெருமையை யமதேவரிடம் அங்கிருந்தோர் கூறுகிறார்கள்,
விருந்தினரை சரியாக உபசரிக்க விட்டால் என்ன இழப்பு ஏற்படும் என்று இங்கு கூறப்படுகின்றது.
விருந்தினராக வந்தவனே புண்ணியங்கள் அனைத்தையும் அழித்து விடுவான் என்று கூறப்படுகின்றது.
—————-
திஸ்ரோ ராத்ரீர்யவாத்ஸீர்கரிஹே மேநஷ்நந் ப்ரஹ்மந்நதிதிர்நமஸ்யஃ .
நமஸ்தேஸ்து ப்ரஹ்மந் ஸ்வஸ்தி மேஸ்து தஸ்மாத்ப்ரதி த்ரீந்வராந்வரிணீஷ்வ ৷৷ 1.1.9 ৷৷
ஓ ப்ராஹ்மணரே என் க்ரஹத்தில் விருந்தாளியாக வந்தும் மூன்று நாட்கள் உண்ணாமல் இருக்கும் படி வைத்தேனே
உனக்கு நலம் உண்டாகட்டும் -உனக்கு வேண்டிய மூன்று வரங்களை கேள் இதற்கு பிராயச்சித்தமாக -என்றவாறு –
ஓ பிராமணனே, போற்றத்தக்க விருந்தினராக உணவு உட்கொள்ளாமல் என்னுடைய வீட்டில்
மூன்று இரவுகள் வசித்த காரணத்திற்காக முதலில் உனக்கு என்னுடைய வணக்கம் உரித்தாகுக.
பிராமணனே எனக்கு மங்களம் இருக்கட்டும், எந்த குறையும் என்னை வந்து சேராமல் இருக்கட்டும்.
உணவின்றி மூன்று இரவுகள் எனக்காக காத்திருந்ததற்காக மூன்று வரங்களை கொடுக்கிறேன்
அவைகளை கேட்பாயாக. என்று எமதர்ம நசிகேதனை பார்த்து கூறினார்.
————-
ஷாந்தஸங்கல்பஃ ஸுமநா யதா ஸ்யாத்வீதமந்யுர்கௌதமோ மாபி மரித்யோ .
த்வத்ப்ரஸரிஷ்டஂ மாபிவதேத்ப்ரதீத ஏதத் த்ரயாணாஂ ப்ரதமஂ வரஂ வரிணே ৷৷ 1.1.10 ৷৷
ஷாந்தஸங்கல்பம் ஸுமநா யதா -ஸ்யாத்வீதமந்யுர்கௌதமோ மாபி மரித்யோ .–முதலில் என்னுடைய தகப்பனார் கௌதமர் மனஸ்
என்னைப் பற்றிய கவலை அற்று சாந்தமாக என்னை
த்வத்ப்ரஸரிஷ்ட மாபிவதேத்ப்ரதீத ஏதத் த்ரயாணாஂ ப்ரதம வர வரிணே-யமன் இடம் வந்தவன் என்று உபேக்ஷிக்காமல்
முன்பு இருந்த பிரியமான மகனாக ஏற்றுக் கொண்டு அவர் திருப்தி அடையும் படி பண்ண வேண்டும் –
யமதேவரே, என் தந்தை கௌதமர் கவலையற்ற மனதையுடையவராகவும், கோபமற்ற-வராகவும்
என்னிடத்தில் அன்பான மனதை உடையவராகவும் எவ்விதம் ஆவாரோ அவ்விதம் அருள்வீராக.
உங்களால் திருப்பி அனுப்பப்படும் என்னை அடையாளம் கண்டுகொண்டவராக என்னிடத்தில் பேச வேண்டும்.
இதை மூன்று வரங்களுள் முதல் வரமாக தேர்ந்தெடுக்கின்றேன்.
—————-
யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத ஔத்தாலகிராருணிர்மத்ப்ரஸரிஷ்டஃ .
ஸுக் ఁராத்ரீஃ ஷயிதா வீதமந்யுஸ்த்வாஂ ததரிஷிவாந் மரித்யுமுகாத் ப்ரமுக்தம் ৷৷ 1.1.11 ৷৷
யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத -ஔத்தாலகிராருணிர்மத்ப்ரஸரிஷ்டம் -முன்பு போலவே ப்ரீதராக -உன் மேல் பாசம் வைத்து -என் பிரசாதத்தால்
ஸுக் ராத்ரீம் ஷயிதா வீதமந்யுஸ்த்வாஂ ததரிஷிவாந் மரித்யுமுகாத் ப்ரமுக்தம் -நன்றாக இரவில் தூங்குவார் -ஷாந்தமான மனஸுடன்
சந்தோஷமாக இருப்பார் -கோபம் இல்லாமல் யமன் இடம் திரும்பி வந்தான் என்று உன் மேல் அதிக பிரியமாக இருப்பார் –
எமதர்ம ராசாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உன்னைக் கண்டு உன் நினைவு பெற்றவராக
முன் எப்படி இருந்தாரோ அப்படியே இருப்பார்.
ஆருணியின் மகனான உத்தாலகர் என்னால் திருப்பி அனுப்பபட்ட உன் மீது கோபமற்றவராக இரவில் சுகமாக உறங்குவார்.
—————–
ஸ்வர்கே லோகே ந பயஂ கிஂசநாஸ்தி ந தத்ர த்வஂ ந ஜரயா பிபேதி .
உபே தீர்த்வாஷநாயாபிபாஸே ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே ৷৷ 1.1.12 ৷৷
ஸ்வர்கே லோகே ந பய கிசநாஸ்தி ந தத்ர த்வ ந ஜரயா பிபேதி .–ஸ்வர்க்க லோகத்தில் நோய்கள் போன்ற
பயம் இல்லை -மூப்பு இல்லை -எம பயமும் இல்லை
உபே தீர்த்வாஷநாயாபிபாஸே ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே -பசி தாகம் இல்லாததால்
துக்கங்கள் இல்லாததால் -ஸ்வர்க்க இன்பம் அனுபவிக்கிறார்கள் –
இங்கு ஸ்வர்க்க லோகம் என்றது ஸ்ரீ வைகுண்டத்தையே -பயமே இல்லாமல் -உன் ஆதிக்யம் இல்லாமல் –
ஷீனே புண்ய தலை குப்புற தள்ளும் பயம் இந்திர லோகத்தில் இருக்குமே -கர்மங்கள் தொலைந்தால் தானே பயம் இல்லாமல் இருக்கும்
அபஹத பாப்மா விஜர –இத்யாதி அஷ்ட குணங்கள் நித்ய மண்டலத்தில் தானே –
சுவர்க்க லோகத்தில் பயம் சிறிதும் கூட இருக்காது. அங்கே நீங்கள் (மனிதர்கள்) இல்லை
வயோதிக பயமும் கிடையாது. பசி-தாகம் என்ற இந்த இரண்டும் இருப்பதே தெரியாமல்
மக்கள் சோகத்தை கடந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
—————
ஸ த்வமக்நி் ఁஸ்வர்க்யமத்யேஷி மரித்யோ ப்ரப்ரூஹி த் ఁஷ்ரத்ததாநாய மஹ்யம் .
ஸ்வர்கலோகா அமரிதத்வஂ பஜந்த ஏதத் த்விதீயேந வரிணே வரேண ৷৷ 1.1.13 ৷৷
ஸ்ரத்தை உடன் நான் ஸ்ருதிகளில் விசுவாசம் கொண்டவன் -அக்னி உபாசனத்தால் சுவர்க்கம் பெற்று இந்த
இன்பம் அடைந்து அமரத்துவம் பெற –அக்னி உபாசனம் -இரண்டாவது வரம் / பர ப்ரஹ்மம் ஞானம் சாஷாத்காரம் மூன்றாவது வரம்
கச்ச லோகம் -பெருமாள் ஜடாயுவுக்கு -சத்யத்தால் அணைத்து உலகும் வென்றவர் –
ஆஹிதாகினி-அக்னி மஹாத்ம்யத்தால்-செல்லும் இடம் -அங்கே போம் -‘இந்த அக்னி உபாசனம் இரண்டாவது வரத்தில் அறிய கேட்க்கிறான்
எமதர்ம ராஜா சொர்க்கத்தில் இருப்பவர்கள் நீண்ட காலம் இன்புற்று இருக்கின்றனர்
அந்த சொர்க்கத்தை அடைய உதவும் யாகத்தை பற்றி நீங்கள் அறிவீர்கள்,
அதை சாஸ்திரத்தில் சிரத்தையுடைய எனக்கு சொல்லுங்கள். இது என்னுடைய இரண்டாவது வரமாக இருக்கட்டும்.
————-
ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத ஸ்வர்க்யமக்நிஂ நசிகேதஃ ப்ரஜாநந் .
அநந்தலோகாப்திமதோ ப்ரதிஷ்டாஂ வித்தி த்வமேதஂ நிஹிதஂ குஹாயாம் ৷৷ 1.1.14 ৷৷
ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத ஸ்வர்க்யமக்நி நசிகேதஸ் ப்ரஜாநந் -அந்த அக்னி உபாசனம் பற்றி நான் சொல்வதை கவனமாக கேள்
அநந்தலோகாப்திமதோ ப்ரதிஷ்டா வித்தி த்வமேதஂ நிஹித குஹாயாம் -இதன் மூலம் பரம பதம் பெறலாம் -இதுவே பர ப்ரஹ்மம்
ஞானிகள் ஹிருதய புண்டரீகாக்ஷத்தில் வாசம் செய்பவன் -நித்ய வாசம் செய்யும் இடம் –
நசிகேதனே, நான் இதை ஞாபகபடுத்திக் கொண்டு பிறகு சொர்க்கத்தை அடைய உதவும்
இந்த யாகத்தை செய்யும் முறையை உனக்கு தெளிவாக கூறுகிறேன்.
அதை என்னிடமிருந்து கவனமாக கேட்டு தெரிந்து கொள். இந்த யாகமானது நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடியதும்,
எண்ணற்ற உலகங்களை அடைவதற்கான சாதனமாகவும், இந்த உலகத்திற்கு ஆதாரமானதாகவும்
மேலும் உபாஸகர்களின் மனதிலும் இருப்பதாகவும் நீ அறிவாயாக.
எமதர்மர் உபாஸனையை சேர்த்தே இந்த யாகத்தை செய்யும் முறையை உபதேசித்தார்.
இங்கே உபாஸன தேவதையாக ஸ்தூல பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கும் தேவதை (விராட்). இந்த பிரபஞ்சமே விராட்டின் சரீரம்.
அதற்கு ஆலம்பனமாக சொர்க்க காம இஷ்டா யாகத்தில் உள்ள அக்னியை கொள்ள வேண்டும்.
ஆலம்பனமே தேவதையாக நினைத்து உபாஸனை செய்ய வேண்டும்.
சமுத்திரம் – சமஷ்டி; அலைகள் – வியஷ்டி
சமஷ்டி – வியஷ்டிக்கு ஆதாரமாக இருக்கும்.
பிரதிஷ்டா – விராட் தேவதையை குறிக்கின்றது, அதற்கு ஆலம்பனமாக இருக்கும் அக்னியை குறிக்கின்றார்.
————
லோகாதிமக்நிஂ தமுவாச தஸ்மை யா இஷ்டகா யாவதீர்வா யதா வா .
ஸ சாபி தத் ப்ரத்யவதத் யதோக்தமதாஸ்ய மரித்யுஃ புநரேவாஹ துஷ்டஃ ৷৷ 1.1.15 ৷৷
லோகாதிமக்நிஂ தமுவாச தஸ்மை யா இஷ்டகா யாவதீர்வா யதா வா .–அக்னி குண்டத்துக்கு வேண்டிய செங்கல்கள் எத்தனை எப்படி வைக்க வேண்டும் –
அக்னி எப்படி வைக்க வேண்டும்
ஸ சாபி தத் ப்ரத்யவதத் யதோக்தமதாஸ்ய மரித்யு புநரேவாஹ துஷ்ட–போன்றவற்றை உபதேசிக்க நசிகேதஸ் நன்றாக கேட்டு
ஓன்று விடாமல் மீண்டும் சொல்ல திருப்தி அடைந்த யமன் அதிகமாக ஒரு வரம் தருவதாக சொன்னான் –
அந்த யாகத்தை செய்யும் முறையை நசிகேதனுக்கு கூறினார்.
எப்படிபட்ட செங்கற்கள் எவ்வளவு இருக்க வேண்டும் எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும் போன்ற விவரங்களை விளக்கினார்.
அவற்றை உன்னிப்பாக கேட்டு அவனும் அவர் கூறியபடி திருப்பி கூறினான்.
அதை கேட்ட எமதர்மராஜா மீண்டும் மனதிருப்தியுடன் பேசினார்.
————
தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா வரஂ தவேஹாத்ய ததாமி பூயஃ .
தவைவ நாம்நா பவிதாயமக்நிஃ ஸரிங்காஂ சேமாமநேகரூபாஂ கரிஹாண ৷৷ 1.1.16 ৷৷
தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா வர தவேஹாத்ய ததாமி பூய–சிஷ்யன் மேலே அதிக பிரியம் உடையவனாய் இனி மேல்
இந்த உபாசனம் நசிகேத வித்யை என்றே இனிமேல் வழங்கப் படட்டும்
தவைவ நாம்நா பவிதாயமக்நி ஸரிங்கா சேமாமநேகரூபா கரிஹாண–ஸ்ருங்கம் நெக்ல்ஸ் ஒன்றையும் அவனுக்கு அணிவித்தான்
அன்றிக்கே-ஸ்ருங்கம்- கர்ம யோக விளக்கம் என்றுமாம் –
மகிழ்ச்சியடைந்த எமதர்ம ராஜா மீண்டும் நசிகேதனை பார்த்து இதற்காக இன்னொரு வரமும்
இங்கேயே இப்போதே தருகின்றேன் கேட்டு பெற்றுக்கொள் என்று கூறினார்.
இனிமேல் இந்த யாகமானது உன்னுடைய பெயரிலே அழைக்கப்படும் என்று கூறிவிட்டு
பல்வேறு வடிவங்களையுடைய மிக சிறப்பான மாலையை பரிசாக பெற்றுக் கொள் என்று கூறினார்.
—————
த்ரிணாசிகேதஸ்த்ரிபிரேத்ய ஸந்திஂ த்ரிகர்மகரித்தரதி ஜந்மமரித்யூ .
ப்ரஹ்மஜஜ்ஞஂ தேவமீட்யஂ விதித்வா நிசாய்யேமா் ఁஷாந்திமத்யந்தமேதி ৷৷ 1.1.17 ৷৷
த்ரிணாசிகேதஸ் -இந்த நசிகேத உபாசனம் பற்றி அறிந்து -உணர்ந்து உபாசிப்பவர்கள் –
த்ரிபிரேத்ய ஸந்திம் -தாய் தந்தை ஆச்சார்யர் மூவர் / வேதம் ஸ்ம்ருதி ஆச்சார்யர் என்றுமாம் /இவற்றால் வந்த ஞானங்களைக் கொண்டு
த்ரிகர்மகரித்தரதி ஜந்மமரித்யூ .-த்ரிவித தியாகங்கள் உடன் செய்து ஜென்ம சூழலில் இன்றும் நீங்கி -மேலும்
ப்ரஹ்மஜஜ்ஞம்- தேவமீட்ய விதித்வா நிசாய்யேமா் ஷாந்திமத்யந்தமேதி -ப்ரஹ்மத்தை அடைந்து அந்தமில் பேரின்பம் பெற்று
நித்யர்கள் உடன் ஒரு கோவையாக ப்ரீதி காரித கைங்கர்யம் செய்து உகக்கிறான் –
யாகம் அத்யயனம் த்யானம் மூன்று கர்மாக்களை செய்து அக்னி உபாசனம் -ஜென்மம் தாண்டுகிறார்கள்
கர்மபாகத்துக்கே மேல் ஞான பாகமும் இருக்க வேண்டும் -ப்ரஹ்மஜஜ்ஞம்—ப்ரஹ்மம் -பிறந்த ஜீவன் -ஞானியான ஜீவன் -அறிந்து கொள்ள வேண்டும்
ஸ்வாமி சேஷி சேஷ பாவம் அறிய வேண்டுமே
இந்த யாகத்தை மூன்று முறை செய்தவன்
(இதிலிருந்து இந்த யாகத்தை மூன்று முறை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்,)
மூவர்களுடன் (தாய், தந்தை, ஆசிரியர்) நல்ல சம்பந்தத்தை அடைந்தவன்.
அதாவது தாயிடமிருந்து அன்பையும், தந்தையிடமிருந்து ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும்,
குருவிடமிருந்து அறிவையும், அன்பையும் அடைந்திருக்க வேண்டும்.
மூன்று கர்மத்தை செய்தவன். யாகம், இறைவழிபாடு, சாஸ்திரத்தை படித்தல், தானம் செய்தல் ஆகிய
மூன்று கர்மங்களையும் செய்தவன் தற்காலிகமாக பிறப்பு இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.
சூட்சும பிரபஞ்சமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றிய, எல்லாமும் அறிகின்ற,
அக்னியாக இருக்கின்ற விராட் ஸ்வரூபத்தை குறிக்கின்றது.
ப்ரஹ்ம என்ற சொல் சூட்சுமமான பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருப்பதைக் குறிக்கின்றது. அந்த ஈஸ்வரனை குறிக்கின்றது.
அவரே எல்லாவற்றையும் அறிபவர். ஒவ்வொரு சரீரத்திற்கு உள்ளேயிருந்து கொண்டு எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருப்பவர்.
வணங்கத்தக்கவராகிய அந்த ஈஸ்வரனை உபாஸனை தேவதையாக வைத்து தியானம் செய்பவன்
இங்கேயே நிலையான சாந்தியை அடைகின்றான். சுவர்க்க லோகத்தில் மேலான அமைதியை அடைகின்றான்.
———-
த்ரிணாசிகேதஸ்த்ரயமேதத் விதித்வா ய ஏவஂ வித்வா் ఁஷ்சிநுதே நாசிகேதம் .
ஸ மரித்யுபாஷாந் புரதஃ ப்ரணோத்ய ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே ৷৷ 1.1.18 ৷৷
இந்த வித்யை நன்கு அறிந்து உபாசனம் செய்பவன் இங்கே இருக்கும் பொழுது பேரின்பம் பெற்று –
விஷயாந்தர பிராவண்யம் இல்லாமல் இருந்து அங்கு சென்று ப்ரஹ்ம பரி பூர்ண அனுபவம் பெறுகிறான் –
மரித்யுபாஷாந்-ராக த்வேஷம் விருப்பு வெறுப்பு -கர்மங்கள் தீண்டாது
யார் மும்முறை நாசிகேத யாகத்தை செய்திருக்கின்றார்களோ. இந்த மூன்றையும் இவ்வாறு முறையாக அறிந்த
எந்த வித்வான் நான் கூறியபடி இந்த நாசிகேத யாகத்தை செய்கின்றானோ
அவன் மரணத்தினுடைய பிடியிலிருந்து உடல் விடும் முன்பே வென்று சோகத்தை கடந்தவனாக
சுவர்க்கத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருப்பான்.
இதை உபாஸனையாக செய்தால் பிரஹ்மலோகத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் இருப்பான்.
—————-
ஏஷ தேக்நிர்நசிகேத ஸ்வர்க்யோ யமவரிணீதா த்விதீயேந வரேண .
ஏதமக்நிம் தவைவ ப்ரவக்ஷ்யந்தி ஜநாஸஸ்தரிதீயம் வரம் நசிகேதோ வரிணீஷ்வ ৷৷ 1.1.19 ৷৷
நிச்சிகேதனுக்கு-அக்னி உபாசனை வித்யை -அளித்து -அது உன் பேராலே உலகில் வழங்கப்படும் —
என்றும் சொல்லி மூன்றாவது வரம் கேள் -என்கிறது –
நசிகேதா! எந்த வரத்தை இரண்டாவதாக கேட்டாயோ அதாவது சுவர்க்கத்தை அடைகின்ற யாகத்தை உனக்கு கூறிவிட்டேன்.
இந்த யாகமானது உன்னுடைய பெயராலே இனி மக்கள் அழைப்பார்கள். இனி நசிகேதா, மூன்றாவது வரத்தை கேட்பாயாக.
——————–
யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதிம் சைகே .
ஏதத் வித்யாமநுஷிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்தரிதீய ৷৷ 1.1.20 ৷৷
யேயம் ப்ரேதே-மரணம் அடைந்தவர் பற்றி
விசிகித்ஸா -அறிய ஆசை
மநுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதிம் சைகே .-சிலர் அஸ்தி நாஸ்தி என்கிறார்கள் –
மேலே பிறவி பற்றியா -இல்லை -ஆத்மாவுக்கு பிறவி உண்டு அறிந்தவன் -பசு மாடு தானம் பற்றி கவலை பட்டவன் தானே –
புண்ய பாப லோகங்கள் உண்டு என்று அறிந்தவன் –
முமுஷு -ஆசைப்பட்டு எங்கே போகிறார் –திரும்பி பிறக்காமல் போக என்ன வழி
சாஸ்திரம் மறைத்து சொல்லும் அர்த்தம் பற்றி கேட்க்கிறான்
ஏதத் வித்யாமநுஷிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்தரிதீய ৷৷
சிறந்த வரம் -கேள்வி சங்கை போக்க -இது –கொடுமை ஆபத்து சந்தேகம் -ப்ரஹ்ம ஞானம் இல்லாமை தானே
பதில் சொல்லாமல் பரீஷை -இவனது உறுதியை சோதிக்க மேலே -நான்கு மந்திரங்களில் இந்த பரீஷை
எமதர்மராஜா இந்த உலகில் இறந்த மனிதர்களை பற்றி இப்படிபட்ட ஒரு சந்தேகம் இருக்கின்றது.
அவர்கள் இறந்த பிறகும் இருக்கின்றான் என்று சிலர் கூறுகின்றார்கள். இவன் இல்லையென்றும் சிலர் கூறுகின்றார்கள்.
இதை நான் தங்களிடமிருந்து அறிய வேண்டும்.
இதுவே வரங்களுக்குள் மூன்றாவதாக வரம்
————
தேவைரத்ராபி விசிகித்ஸிதம் புரா ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம-
அந்யம் வரம் நசிகேதோ வரிணீஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸரிஜைநம் ৷৷ 1.1.21 ৷৷
தேவைரத்ராபி விசிகித்ஸிதம் -தேவதைகளுக்கும் இந்த சங்கை உண்டே
புரா ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம–மண்டபத்தில் யானை எங்கே -குண்டூசி எங்கே போலே அதி ஸூஷ்மம் இது
ஆத்மா அணு ஸ்வரூபம் –
அந்யம் வரம் நசிகேதோ வரிணீஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸரிஜைநம்
கடன் கொடுத்தவன் -போலே தொந்தரவு -இத்தை கேட்க்காமல் வேறே கேள் -கண்ணுக்கு தெரியும் விஷயம் பற்றி –
இந்த விஷயத்தில் தேவர்களும்கூட முன்பே சந்தேகம் அடைந்தார்கள். இது எளியதாக அடையக்கூடியதல்ல.
இந்த ஆத்ம தத்துவத்தை பற்றிய அறிவானது மிகவும் சூட்சுமமானது. எனவே வேறு ஏதாவது வரத்தை தேர்ந்தெடு.
இதனை எனக்காக விட்டுவிடு. என்னை நிர்பந்தப்படுத்தாதே என்று எமதர்மராஜா நசிகேதனிடம் கூறினார்.
————————-
தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில த்வம் ச மரித்யோ யந்ந ஸுவிஜ்ஞேயமாத்த .
வக்தா சாஸ்ய த்வாதரிகந்யோ ந லப்யோ நாந்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கஷ்சித் ৷৷ 1.1.22 ৷৷
நீர் சொன்னன காரணங்களால் தானே இத்தையே உம்மிடம் கேட்க்கிறேன்
இந்த ஆத்ம விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளதோ!
அதை நீங்களும் அறிந்து கொள்வது சுலபமல்ல என்று சொல்கிறீர்கள். எனவே இதற்கு வேறெந்த வரமும் சமமாகாது.
இந்த ஆத்ம தத்துவத்தை எடுத்துரைப்பதற்கு உங்களைத் தவிர வேறொருவர் எனக்கு கிடைக்க மாட்டார்
—————
ஷதாயுஷ புத்ரபௌத்ராந் வரிணீஷ்வ பஹூந் பஷூந் ஹஸ்திஹிரண்யமஷ்வாந் –
பூமேர்மஹதாயதநம் வரிணீஷ்வ ஸ்வயம் ச ஜீவ ஷரதோ யாவதிச்சஸி ৷৷ 1.1.23 ৷৷
பசு -தங்கம் -குதிரை யானை -என்ன வேண்டுமானாலும் கேள்
நூறு வருடம் ஆயுளுள்ள புத்திரனையும், பௌத்திரனையும் கேள். நிறைய பசுக்கள் போன்ற செல்வத்தைக் கேள்.
தங்கம், யானைகள், குதிரைகள் இவைகளை கேட்டுப் பெற்றுக்கொள். இந்த பூமியில் பெரிய ராஜ்ஜியத்தை கேள்.
எவ்வளவு காலம் வாழ விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வரை வாழ்ந்து கொள்.
இவ்வாறாக பலவித போகப் பொருட்களை கொடுப்பதாக கூறுகிறார் எமதர்மன்.
—————
ஏதத்துல்யம் யதி மந்யஸே வரம் வரிணீஷ்வ வித்தம் சிரஜீவிகாம் ச –
மஹாபூமௌ நசிகேதஸ்த்வமேதி காமாநாம் த்வா காமபாஜம் கரோமி ৷৷ 1.1.24 ৷৷
சமமான எந்த பணமோ சுகமோ ஆசையோ கேள்
இதுவரை கொடுப்பதாக கூறியவற்றிற்கு இணையாக வேற் ஏதாவது இருக்கின்றது என்று நீ கருதினால் அதையும் கேள்.
நிறைய செல்வங்கள், இந்த பூமியின் பெரும் பகுதியை அடைவாய். இந்த பூமிக்கே அரசனாகவும் இருக்கலாம்.
நீ எவையெல்லாம் விரும்புகின்றாயோ அவையெல்லாம் தடையில்லாமல் அனுபவிப்பவனாக உனக்கு வரம் தருகின்றேன்
————-
யே யே காமா துர்லபா மர்த்யலோகே ஸர்வாந் காமா் ஷ்சந்தத ப்ரார்தயஸ்வ –
இமா ராமா ஸரதா ஸதூர்யா ந ஹீதரிஷா லம்பநீயா மநுஷ்யை .
ஆபிர்மத்ப்ரத்தாபி பரிசாரயஸ்வ நசிகேதோ மரணம் மாநுப்ராக்ஷீ ৷৷ 1.1.25 ৷৷
துர்லபம் -இத்தை விட்டு வேறே கேள் –
எந்த வகையான போக இந்த உலகத்தில் அடைவதற்கு கடினமோ அவைகளையெல்லாம் விருப்பம் அனுபவிப்பாயாக.
இந்த தேவ லோகத்தில் உள்ள பெண்கள் ரதத்துடன் இசைக்கருவிகளையும் உடையவர்கள்.
இவர்களை மனிதர்களால் அடைய முடியாது. அவர்களை உனக்கு பணிவிடை செய்ய கொடுக்கின்றேன் பெற்றுக்கொள்.
ஆனால் மரணத்தைப்பற்றி மட்டும் என்னிடம் கேட்காதே.
—————–
ஷ்வோபாவா மர்த்யஸ்ய யதந்தகைதத் ஸர்வேந்த்ரியாணாம் ஜரயந்தி தேஜ-
அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ தவைவ வாஹாஸ்தவ நரித்யகீதே ৷৷ 1.1.26 ৷৷
அப்சரஸ் குதிரை -அல்பம் அஸ்திரம் இவை -கொடுத்து ஏமாற்ற பார்க்காதீர்
அஸ்வத்த -நாளையே இல்லை -குதிரை ஓடுவது நாளைக்கு இல்லை என்று ஓடும் –
நசிகேதன் மூன்று காரணங்களினால் எமதர்மர் கொடுக்கும் எல்லாவற்றையும் நிராகரித்து விடுகின்றான்.
நீங்கள் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டவைகளில் உள்ள சுக-துக்கங்களை நான் நன்கு அறிவேன்.
இவைகள் 1. நிலையற்றவை, 2. என்னை பலவீனப்படுத்திவிடும், 3. மனநிறைவைக் கொடுக்காது.
இவைகள் இன்று இருப்பது போல் நாளை இருக்குமா என்று நிர்ணயித்து கூற முடியாத நிலையற்றவைகள்.
நிலையற்ற பொருட்களை அனுபவிப்பதனால் அதற்கு அடிமையாகி விவேகத்தை இழந்து விடுவோம்,
அனுபவிக்க அவைகள் இல்லாத போது துயரத்தை அடைவோம். மனிதர்களின் இறப்புக்கு காரணமான எமதர்ம ராஜா,
இந்திரிங்களின் சக்தியை இந்த நிலையற்ற பொருட்களை கொஞ்ச கொஞ்சமாக இழக்க செய்து விடும்.
அதிக சுகம் உடல் பலத்தை குறைத்து விடும், மனமும் சக்தியை இழந்து விடும், அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.
புத்தியையும் சரியாக தீர்மானிக்கும் சக்தியை இழக்க செய்து விடும்.
நீங்கள் எவ்வளவு ஆயுளைக் கொடுத்தாலும் அவைகள் உண்மையில் சிறியதுதான்.
உங்களுடைய வாகனங்கள், குதிரைகள், ஆடல் பாடல்கள் அனைத்தும் உங்களிடமே இருக்கட்டும்.
—————-
ந வித்தேந தர்பணீயோ மநுஷ்யோ லப்ஸ்யாமஹே வித்தமத்ராக்ஷ்ம சேத்த்வா –
ஜீவிஷ்யாமோ யாவதீஷிஷ்யஸி த்வம் வரஸ்து மே வரணீய ஸ ஏவ ৷৷ 1.1.27 ৷৷
இதனால் திருப்தி வராதே -நான் கேட்டதை கொடுத்தால் அனைத்தையும் பெற்றதாகும்
ஆத்ம ஞானம் வேணும்
எந்தப்பொருளும் ஒருவனுடைய மனதை திருப்தி படுத்த முடியாது. செல்வங்கள் மனிதனை திருப்திபடுத்த முடியாது.
உங்களை பார்த்ததினாலேயே எல்லா செல்வங்களையும் அடைந்ததற்கு ஈடாகும்.
நீங்கள் எவ்வளவு காலம் வரை வாழ்வீர்களோ அதுவரைதான் நாங்கள் வாழ முடியும்.
எனவே எனக்கு வேண்டிய வரம் நான் கேட்ட ஆத்ம தத்துவம் தான்.
———————
அஜீர்யதாமமரிதாநாமுபேத்ய ஜீர்யந் மர்த்யஃ க்வத ஸ்த ப்ரஜாநந் –
அபித்யாயந் வர்ணரதிப்ரமோதாநதிதீர்கே ஜீவிதே கோ ரமேத ৷৷ 1.1.28 ৷৷
அமிருதம் -அஜீர்யம் -கேள்வி பட்டுள்ளேன் -துக்கம் சுகம் கலந்த பூமியில் இருக்கும் ஞானம் முதலில் அறிந்து -மாறி மாறி பிறக்கிறோம்
அழிவுக்குட்படாத, மரணமற்ற உங்களை நான் அடைந்திருக்கின்றேன்.
அழியக்கூடிய மனிதன், பூலோகத்தில் வாழ்கின்ற நான் இவைகளையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து புரிந்து கொண்டேன்.
ஆடல் பாடல் போன்றவற்றிலிருந்து வரும் இன்பங்கள், நீண்ட கால வாழ்க்கை இவற்றில் யார் சுகத்தை அனுபவிப்பார்கள்.
————–
யஸ்மிந்நிதம் விசிகித்ஸந்தி மரித்யோ யத் ஸாம் பராயே மஹதி ப்ரூஹி நஸ்தத் –
யோயம் வரோ கூடமநுப்ரவிஷ்டோ நாந்யம் தஸ்மாந்நசிகேதா வரிணீதே ৷৷ 1.1.29 ৷৷
சம்சாரங்களில் அழுந்தும் வரங்களை நான் கேட்க மாட்டேன் -உயர்ந்த ஒன்றிலே ஆசைப் படுவேன்
ஸாம் பராயே-நன்றாக மரணத்துக்கு பின் அடையும் இடம் பரமபதம் –
ஓ எமதர்ம ராஜா! எந்த ஆத்ம தத்துவ விஷயத்தில் மனிதர்கள் இவ்விதத்தில் சந்தேகப்படுகின்றார்களோ,
பரலோக விஷயத்தில் மோட்சப் பலனுடையதாக எது இருக்கின்றதோ அதை எனக்கு கூறுங்கள்.
எந்த வரமானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை விட வேறொரு வரத்தை நசிகேதன் கேட்கவில்லை.
৷৷ இதி ப்ரதமேத்யாயே ப்ரதமா வல்லீ ৷৷
———————————————–
அந்யச்ச்ரேயோந்யதுதைவ ப்ரேயஸ்தே உபே நாநார்தே புருஷ் ஸிநீத–
தயோ ஷ்ரேய ஆததாநஸ்ய ஸாதுர்பவதி ஹீயதேர்தாத்ய உ ப்ரேயோ வரிணீதே ৷৷ 1.2.1 ৷৷
பரீஷை பண்ணி -இவன் உறுதி அறிந்து பின் உபதேசம்-
இரண்டு மார்க்கம் –
ஸ்ரேயஸ் -சாஸ்திரம் -சொல்லும் அளவில்லா பேரின்பம் -நமக்கு நினைக்கவும் அரியதாகுமே
பிரேயஸ் -ஆனந்தம் -தங்கள் நினைத்த அளவு –
ப்ரஹ்மானந்தம் அறிய உபநிஷத் -மனுஷ்ய ஆனந்தம் பித்ரு தேவர் கர்ம தேவர் இந்திரன் பிரஜாபதி சதுர்முக ப்ரம்மா -மேலே மேலே நூறு
உயர்வற உயர்நலம் -யாதோ வாசோ நிவர்த்தந்தே –
நீ ஸ்ரேயஸ் கோஷ்டியில் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி
ஸ்ரேயஸ் – மேலானது, அடையத்தக்கது ( இது மோக்ஷத்தை குறிக்கின்றது)
ப்ரேயஸ் – உலக விஷயங்களிலிருந்து அடையும் இன்பத்தை குறிக்கின்றது (தர்மார்த்தகாமஹ);
இவையிரண்டும் மனிதனால் அடையக்கூடிய சாத்தியங்கள். சம்சாரம் என்பது மானஸதாபம் அதாவது காம, க்ரோதாதிகளுடன் கூடியது.
இவைகளை விட்டுவிடுதல் மோஷத்தை குறிக்கின்றது. மேலும் தன்னிடத்திலே இன்பத்தை காணும் தன்மை உடையது,
பூரண மனநிறைவை அடைந்துள்ள நிலையை குறிக்கின்றது.
ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை ஸ்ரேயஸ் பாதையென்றும், ப்ரேயஸுக்கு செல்லும் பாதைக்கு ப்ரேயஸ் பாதை என்றும் கூறுவதுண்டு.
ஒருவன் இதிலிரண்டிலொன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். கர்மத்தினால் அடைவது ப்ரேயஸ், ஞானத்தினால் அடைவது ஸ்ரேயஸ்.
ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, ப்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, இவையிரண்டும் வெவ்வேறு பலனை கொடுக்ககூடியது.
இவற்றுள் ஸ்ரேயஸை தேர்ந்தெடுப்பவனுக்கு முக்தி கிடைக்கின்றது, முழு மனநிறைவை கிடைக்கின்றது.
இதை விடுத்து ப்ரேயஸை எவனொருவன் தேர்ந்தெடுக்கின்றானோ அவனுக்கு மோட்சத்தை அடைவதிலிருந்து விலகி விடுகின்றான்.
மோட்சத்திற்கு செல்லும் பாதையிலிருந்து விலகி விடுகின்றான். சம்சாரம் பந்தத்தில் வீழ்ந்து விடுகின்றான்.
—————-
ஷ்ரேயஷ்ச ப்ரேயஷ்ச மநுஷ்யமேதஸ்தௌ ஸம் பரீத்ய விவிநக்தி தீர- .
ஷ்ரேயோ ஹி தீரோபி ப்ரேயஸோ வரிணீதே ப்ரேயோ மந்தோ யோகக்ஷேமாத்வரிணீதே ৷৷ 1.2.2 ৷৷
மந்த புத்திமான் பிரேயஸ் தேடி கஷ்டமான வழி -அல்ப இன்பம்
ஸ்ரேயஸ் தேடினால் அனுபவம் பேர் ஆனந்தம் – சுலபமான வழியுமாகும்
ஸ்ரேயஸும், ப்ரேயஸும் மனிதனை அணுகுகின்றன. விவேகமுள்ளவன் ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.
மூடன் ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான். அறிவாளி இவையிரண்டையும் ஆழ்ந்து சிந்தித்து பாகுபடுத்துகின்றான்.
சுயமாக சிந்தித்து ஆராயும் புத்தியில்லாதவனுக்கு சாஸ்திரம் பயன்படாது.
குருடனுக்கு நிலை கண்ணாடியால் எப்படி பயனில்லையோ அது போல வேதாந்த சாஸ்திரம் பயன்படாது.
அறிவுடையவன் ப்ரேயஸை விட்டுவிட்டு ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.
விவேகமற்ற மூடன் உடல் சுகத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.
[ யோக ஷேமம் – யோகம் என்பது இதுவரையில் அடையாததை அடைவது, ஷேமம் என்பது அடைந்ததை பாதுகாத்தல் ]
————-
ஸ த்வம் ப்ரியாந் ப்ரியரூபா் ஷ்ச காமாநபித்யாயந் நசிகேதோத்யஸ்ராக்ஷீ–
நைதா் ஸரிங்காம் வித்தமயீமவாப்தோ யஸ்யாம் மஜ்ஜந்தி பஹவோ மநுஷ்யா ৷৷ 1.2.3 ৷৷
சம்சார கடலில் உழலாமல் நீ மேலே வரப் பார்க்கிறாய் -இயற்க்கை -இக்கரை அக்கரை-
நசிகேதா, நீ இன்பத்தை கொடுக்கின்ற, இன்பத்தின் வடிவமாக இருக்கின்ற, ஆசையை தூண்டுகின்ற பொருட்களை
நன்றாக சிந்தித்து அதிலுள்ள குறைகளை நன்கு உணர்ந்து அவைகளை தியாகம் செய்து விட்டாய்,
ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாய். இந்த விலை மதிப்பில்லாத மாலையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த விஷயத்தில் பெரும்பாலான மனிதர்கள் மூழ்கி விடுகின்றார்கள், மூழ்கி இருக்கின்றார்கள்.
—————-
தூரமேதே விபரீதே விஷூசீ அவித்யா யா ச வித்யேதி ஜ்ஞாதா .
வித்யாபீப்ஸிநம் நசிகேதஸம் மந்யே ந த்வா காமா பஹவோலோலுபந்த ৷৷ 1.2.4 ৷৷
எத்தனை ஆசை காட்டினாலும் சபல புத்தி இல்லாமல்- இருந்தாய் -லோலுபன் இல்லாமல் –
இவையிரண்டும் வேறுபட்டவை, வெவ்வேறு இலக்கை நோக்கி செல்லும் இரு பாதைகள்.
எது அறியாமை ( சம்சாரத்தில் இருத்தல்) எது ஆத்ம ஞானம் என்று அறியப்படுகிறதோ இவைகள்தான் ஒருவனை
அந்தந்த இலக்கை நோக்கி செல்லும் பாதைக்கு அழைத்து செல்கின்றது.
ஸ்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை ஆத்ம ஞானத்தை அடைவதற்கு எடுக்கும் முயற்சி அதாவது
குருவை அடைந்து வேதாந்த சாஸ்திரத்தை படித்தல் (சிரவணம்), மனனம், நிதித்யாஸனம் ஆகிய சாதனங்களை பயன்படுத்தி முக்தி அடைதல்.
ப்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை செயலில் ஈடுபடுதல்.
ஆனால் ஞானத்தை அடைவதற்கு உதவும் பண்புகளை அடைவதற்கு செய்யும் செயல்கள் அனைத்தும் ஸ்ரேயஸ் பாதைக்கு கொண்டு செல்லும்.
கர்மத்தை அவித்யா என்று கூறக் காரணம் கர்த்தா என்ற புத்தி எப்பொழுதும் இந்த சரீரத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.
ஞானத்தை விரும்புபவனாக இருக்கும் உன்னை பலவித ஆசைகளும் சலனப்படுத்தவில்லை என்று கருதுகின்றேன்.
—————
அவித்யாயாமந்தரே வர்தமாநா ஸ்வயம் தீரா பண்டிதம் மந்யமாநா–.
தந்த்ரம்யமாணா பரியந்தி மூடா அந்தேநைவ நீயமாநா யதாந்தாஃ ৷৷ 1.2.5 ৷৷
உலக இன்பம் -கண் தெரியாதவன் கண் இழந்தவனுக்கு உதவுவது போலே -அவித்யைக்கு நடுவிலே வாழ்ந்து
சரீரமே நான் என்று நினைத்துக் கொண்டிருப்பவனை அறியாமைக்குள் இருப்பவனாக கூறப்படுகின்றது.
இவர்கள் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கின்றார்கள்.
ஆனால் தன்னை அறிவுடையவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு நானே அறிவாளி, பண்டிதன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கீழான நிலையை அடைகிறார்கள்,
சம்சாரத்திலே அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள். மூப்பு, மரணம், நோய் என்ற துன்பத்தில் சிக்கி துன்புறுகின்றார்கள்.
இவர்களின் நிலை குருடனால் வழிநடத்தி செல்லப்படும் குருடர்களின் நிலைக்கு சமமாக இருக்கின்றது.
—————————
ந ஸாம் பராய ப்ரதிபாதி பாலம் ப்ரமாத்யந்தம் வித்தமோஹேந மூடஂ —
அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புந புநவர்ஷமாபத்யதே மே ৷৷ 1.2.6 ৷৷
திரும்ப திரும்ப என்னிடம் நரகம் -வருகிறவர்கள் இவ்வாறு லோலோபனாக -திரிகிறவர்கள்
ஆத்ம ஞானம் என்ற ஒன்று இருப்பதை அறியாமல் இருப்பவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்கள்,
அறியாமையுள்ளவர்கள் இவர்களுக்கு வேத கர்மங்களை கடைப்பிடித்து வாழ்தல், தர்மநெறிப்படி வாழ்தல்
ஆகிய சாதனங்களை அறியாமல் இருக்கின்றார்கள்.
கவனமின்மையுடனும், மூடர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் பணத்தாசையினால் அறிவிழந்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இதுதான் உலகம், வாழ்க்கையென்ற அறியாமையிலும் இருக்கின்றார்கள்.
இதைத்தவிர வேறெதுவும் இல்லை என்ற கர்வத்துடனும் இருக்கின்றார்கள்.
இவர்கள் மீண்டும் மீண்டும் என்(எமதர்மர்) வசத்திற்கே வருகின்றார்கள்.
—————
ஷ்ரவணாயாபி பஹுபிர்யோ ந லப்ய ஷ்ரரிண்வந்தோபி பஹவோ யம் ந வித்யு–
ஆஷ்சர்யோ வக்தா குஷலோஸ்ய லப்தாஷ்சர்யோ ஜ்ஞாதா குஷலாநுஷிஷ்ட ৷৷ 1.2.7 ৷৷
ஆயிரத்தில் ஒருவன் நம்பிக்கை வைக்கிறான்- அதில் -ஆயிரத்தில் ஒருவன் ஆராய்கிறான் –
அதில் -ஆயிரத்தில் ஒருவன் முயல்கிறான் -அதில் -ஆயிரத்தில் ஒருவன் நெருங்கி அடைகிறான் –
மனிதரில் பலருக்கு ஆத்ம தத்துவத்தை பற்றி கேட்பதற்கே வாய்ப்பு கிடைப்பதில்லை.
குருவை அடைந்து வேதாந்தத்தை கேட்பவர்களில் பலருக்கும் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருவானவர் ஆச்சரியமானவர், அபூர்வமானவர்.
ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருமார்களும் மிகக் குறைவாகவே இருக்கின்றனர்.
ஆத்ம ஞானத்தை அடைந்தவனும் மிகக்குறைவு.
சாமர்த்தியமான, தகுதியான குருமூலம் உபதேசம் பெறுபவர்களும் மிகக்குறைவு.
————–
ந நரேணாவரேண ப்ரோக்த ஏஷ ஸுவிஜ்ஞேயோ பஹுதா சிந்த்யமாந-
அநந்யப்ரோக்தே கதிரத்ர நாஸ்த்யணீயாந் ஹ்யதர்க்யமணு ப்ரமாணாத் ৷৷ 1.2.8 ৷৷
இதில் ஆசை உள்ளவர்கள் ஆத்ம பரமாத்மா உபதேசம் செய்தால் பலன் இல்லை-சொல்லுவதும் பிரேயஸ் அடைய தான் சொல்லுவான் –
சொல்ல நிறைய பேர் வருவார்கள் –
ஸ்ரேயசில் விருப்பம் உள்ளவன் பிரேயஸ் பிடிக்காது சொல்ல மாட்டான் -அத்யயனம் கால ஷேபம் உடுக்கை ஆசாரம் வேண்டுமே –
உள் அடையாளம் வெளி அடையாளம் இரண்டும் வேண்டுமே
ஆத்ம குணங்கள் சமதமாதி வேண்டுமே –
தகுதியற்ற ஆசிரியர்களால் இந்த ஆத்ம ஞானத்தை உபதேசிக்கப்பட்டால் இதை நன்கு புரிந்து கொள்ள முடியாது.
ஆத்மாவை பற்றி பலவிதமான கருத்துக்கள், சிந்தனைகள் இருப்பதால், இவைகளையெல்லாம் நீக்கி
சரியான அறிவை புகட்ட தகுதியான ஆசிரியரால்தான் முடியும்..
இவர் எதை உபதேசம் செய்கின்றாரோ அதன்வழி வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ஆத்ம ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றிருப்பவர்., முறைப்படி உபதேசம் பெற்று ஞானத்தை அடைந்தவராக இருப்பவர்.
இப்படிபட்ட குருவிடம் படிப்பவன் ஆத்ம் ஞானத்தை சந்தேகம் இல்லாமல் புரிந்து கொள்வான். சம்சார கதியிலிருந்து விடுபடுவான்.
இவன் வேறெதையும் அடையத்தேவையில்லை. இவனால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.
ஆத்மா என்பது அணுவைக்காட்டிலும் மிக மிக சூட்சுமமானது,, இதை தர்க்கத்தினாலும், வாதத்தினாலும், புத்தியினாலும் அடைய முடியாது.
—————-
நைஷா தர்கேண மதிராபநேயா ப்ரோக்தாந்யேநைவ ஸுஜ்ஞாநாய ப்ரேஷ்ட –
யா த்வமாப ஸத்யதரிதிர்பதாஸி த்வாதரிங்நோ பூயாந்நசிகேத ப்ரஷ்டா ৷৷ 1.2.9 ৷৷
உன்னைப் போலே சிஷ்யனை ஆசையுடன் தேடிக் கொண்டு இருந்தேன் -எனது பாக்யம் –
சாஸ்திரம் தர்க்கம் படித்தாலும் இந்த உறுதி சின்ன வயசில் உனக்கு இருக்கிறதே –
ஞானம் பிரார்த்தித்தாய் -ஆத்ம ஞானம் பரமாத்ம ஞானம் இரண்டையும் உனக்குச் சொல்லுகிறேன்
இந்த ஆத்ம ஞானமானது தர்க்கத்தினாலும், வாதத்தினாலும் அடைய முடியாது.
நம் புத்திக்கு அப்பாற்பட்ட நம்மை காட்டிலும் வேறான தகுதியான ஒருவரால் உபதேசிக்கப்பட்டால்தான் புரிந்து கொள்ள முடியும்.
என் அன்பிற்குரியவனே! எந்த ஆத்ம ஞானத்தை அடையப்போகின்றாயோ சத்யமான அதை அறியும் விஷயத்தில் நீ மிகவும் உறுதியாக இருக்கின்றாய்.
ஏன் இந்த அறிவை தர்க்கத்தினால் அடைய முடியாது என்றால் புத்தியின் துணைக்கொண்டு யூகத்தினால் சில அறிவை அடைய முடியும்.
உதாரணமாக மலையில் தெரியும் புகையைப் பார்த்தே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகின்றோம்.
இந்திரியங்களின் துணையில்லாமல் மனதைக்கொண்டு அடையும் ஞானத்திற்கு அனுமான ஞானம்.
நேரிடையாக அடையும் அறிவுக்கு பிரதியக்ஷ ஞானம். நம் அனுபவத்திற்கும் வராததை வைத்து அனுமானம் செய்ய முடியாது.
ஆத்மா நம் அனுபவத்திற்கு வராதது, அதாவது பிரத்யக்ஷ ஞானத்திற்கு வரவே வராது எனவே அதை அனுமானத்தினால் அடைய முடியாது
ஆத்மாவை இல்லையென்றும் நிரூபிக்க முடியாது. என்போன்ற குருவுக்கு உன் போன்ற சிஷ்யர்கள் கிடைக்கட்டும்.
——————-
ஜாநாம்யஹ் ஷேவதிரித்யநித்யம் ந ஹ்யத்ருவை ப்ராப்யதே ஹி த்ருவம் தத் –
ததோ மயா நசிகேதஷ்சிதோக்நிரநித்யைர்த்ரவ்யை ப்ராப்தவாநஸ்மி நித்யம் ৷৷ 1.2.10 ৷৷
அநித்யமான த்ரவ்யத்தால் அநித்ய பலமே கிட்டும்
நித்தியமான உபாசனத்தால் நித்தியமான ப்ரஹ்மம் அடைகிறோம்
கர்ம பலன்கள் நிலையற்றவை, அநித்யமானது என்றும்,
நிலையற்றவைகளைக் கொண்டு நிலையானதை அடைய முடியாது என்று நான் அறிவேன்.
ஆனாலும் என்னால் நசிகேத யாகம் செய்யப்பட்டது, அதன் பலனாக இந்த பதவியும் கிடைத்தது,
நீண்ட காலம் வாழக்கூடிய நிலையையும் அடைந்தேன்.
——————-
காமஸ்யாப்திம் ஜகத ப்ரதிஷ்டாம் க்ரதோராநந்த்யமபயஸ்ய பாரம் –
ஸ்தோமம் மஹதுருகாயம் ப்ரதிஷ்டாம் தரிஷ்ட்வா தரித்யா தீரோ நசிகேதோத்யஸ்ராக்ஷீஃ ৷৷ 1.2.11 ৷৷
குதிரை இத்யாதி இந்திர சத்ய லோகங்கள் வேண்டாம் என்றாயே -இவையும் அநித்தியம் என்று உணர்ந்தாயே –
அநந்தம் ஸ்திரம் இரண்டும் -ப்ரஹ்மத்துக்கு /அல்பம் அஸ்தரம் இவற்றுக்கு /
ஸ்தோத்ர ரத்னம் -ப்ரஹ்மா பதவி வேண்டாம் தவ தாஸ்ய ரசம் அறிந்த குடில் மண் புழுவாக பிறந்தாலும் அதுவே வேண்டும்
இந்த தேவலோகம் ஆசைகளின் எல்லையாக இருக்கின்ற இந்த லோகத்தை, இந்த பூலோகத்திற்கே ஆதாரமாக இருக்கின்ற உலகம்,
உபாஸனையில் அடையக்கூடிய முடிவான பலன் இந்த உலகம், பயமற்ற நிலையின் எல்லையாக இருக்கின்றது இந்த உலகம்,
பூஜிக்கத்தக்கதாகவும் இருக்கின்றது, பெருமைக்குரிய அனிமா போன்ற ஐஸ்வர்யங்களை உடைய உலகம்,
அதிகமாக வியாபிக்கப்பட்டிருக்கின்ற உலகம், அதிக ஆயுளைக் கொடுக்கும் உலகம்.
இப்படிபட்ட பெருமைகளை உடைய இந்த உலகத்தை நன்கு அறிந்தும் அதிலுள்ள குறைகளை,
நிலையற்ற தன்மையையும் அறிந்து புத்திசாலியான நீ மனவுறுதியுடன் வேண்டாம் என்று துறந்து விட்டாய், மறுத்து விட்டாய்.
———————
தம் துர்தர்ஷம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் –
அத்யாத்மயோகாதிகமேந தேவம் மத்வா தீரோ ஹர்ஷஷோகௌ ஜஹாதி ৷৷ 1.2.12 ৷৷
ப்ரத்யக் –தனக்கு தானே -பராக் வெளி விஷயம் –ஆத்மாவை நோக்கி மனஸ் புத்தி செலுத்தி
ஹர்ஷம் சோகம் புண்யம் பாபம் இரண்டையும் தொலைத்து -பகவத் பிராப்திக்கு
முதல் நிலை பாபம் தவிர்த்து புண்யம் -மேலே இதுவும் மோக்ஷத்துக்கு பிரதிபந்தகம் உணர்ந்து
பல தியாகம் செய்ய வேண்டும் -சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்மி-
அதி ஸூஷ்மம் -கரந்த பாலுள் நெய்யே போலே -அறிய முடியாதே
குஹாஹிதம் கஹ்வரேஷ்டம்-ஹிருதய புண்டரீகம் – யோக சித்தியால் பிரிந்து அறிகிறான்
இந்த ஸ்லோகத்தில் மூன்று கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றது.
அவைகள் 1. ஆத்மாவின் லஷணம்,
2. அதை அடையும் வழி ( எதைக்கொண்டு அதை அறிந்து கொள்ள முடியும்)
3. ஆத்மாவை அடைவதால் விளையும் பலன்.
இது அனுபவிக்கபடுகின்ற ஒன்றாக இல்லாததால் அதை அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடியாது.
இதற்கு குணங்களும் கிடையாததால் மிகவும் சூட்சுமமாக இருக்கின்றது எனவே அறிந்து கொள்வது மிகக்கடினமாக இருக்கின்றது.
இது மிகவும் ரகசியமாகவும், மறைக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றது.
புத்தியில் பிரதிபலிக்கும் இந்த ஆத்மாவை சிதாபாஸம் என்று கூறப்படுகின்றது, இதுவே ஆத்மாவை மறைத்து கொண்டிருக்கின்றது.
வெள்ளைத்திரையில் பார்க்கும் காட்சியானது எப்படி அந்த திரையையே மறைத்துக் கொண்டிருக்கின்றதோ
அதே போன்று புத்தியில் தோன்றும் அறிவானது உண்மையான அறிவை மறைத்துக் கொண்டிருக்கின்றது;
இது புத்தியில்தான் வைக்கப்பட்டிருக்கின்றது. குகையில் எப்படி எப்பொழுதும் இருட்டு இருக்கின்றதோ அதுபோல
புத்தியில் எப்பொழுதும் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இதன் துணைக் கொண்டுதான் ஆத்மாவை அறிய வேண்டும்.
இது சம்சாரத்தினுள்ளே இருக்கின்றது, துயரத்திற்குள்ளே ஆனந்த ஸ்வரூபமாக இருந்து கொண்டிருக்கின்றது.
எப்பொழுதும் மாறாமல் இருக்கின்றது.
அத்4யாத்மயோக3: – அனாத்மாவிலிருந்து ஆத்மாவை நோக்கி நம்முடைய கவனத்தை திருப்புதல், அதாவது
நாம ரூபத்திலிருந்து அவைகளுக்கு ஆதாரமான பரம்பொருளை நோக்கி மனதை செலுத்துதல்.
அதிகமன: குருமூலம் சாஸ்திரத்தை படிப்பதன் மூலம், ஆத்மாவை அறிந்து, உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆத்ம ஞானத்தை அடைந்து, அதில் நிலைப்பெற்று சுக-துக்கங்களை விட்டு விடுகின்றான், அவைகளை கடந்து விடுகின்றான்.
—————–
ஏதச்ச்ருத்வா ஸஂபரிகரிஹ்ய மர்த்ய ப்ரவரிஹ்ய தர்ம்யமணுமேதமாப்ய –
ஸ மோததே மோதநீய் ஹி லப்த்வா விவரித் ஸத்ம நசிகேதஸம் மந்யே ৷৷ 1.2.13 ৷৷
தேகம் ஆத்ம விவேகம் –கட்டை கல் பாஷாணம் முக்தி சொல்வார் உண்டே -ஒன்றுமே தெரியாத நிலை –
அணு மாத்திரம் ஆத்மா ப்ரஹ்மத்தை அடைந்து -அடைந்து ஆனந்திக்கிறான் -ஆனந்தமயன் தானே கர்மத்தால் சிக்கி இழந்து இருந்தான்
ஆனந்தம் ப்ரஹமே திவ்ய ஞானாத்
சுகம் துக்கம் அசேதனத்துக்கு இல்லையே -சரீரமாக இருந்தாலும் அறிய முடியாதே ஜடமும் அஜடமும் / முடியாதே ஜடமும் அஜடமும் /
ஆத்ம தத்துவத்தை கேட்டு (சிரவணம்), சந்தேகமில்லாமல் புரிந்து கொண்டு (மனனம்),
மனிதனானவன் அனாத்மாலிருந்து ஆத்மாவை நன்றாக புரிந்து கொண்டு
எப்பொழுதும் நம் கவனம் ஆத்மாவிலேயே நிலைத்து நிற்க வேண்டும் (நிதித்யாஸனம்).
ஆத்ம ஸ்வரூபம் மிக சூட்சுமமானது அதை அடைந்தவன் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றான்.
சுகத்தின் காரணத்தை அடைந்து விட்டவனாக இருக்கின்றான்.
ஆனந்தம் நிறைந்த ஆத்மாவை அடைந்தவனுக்கு மோட்சத்தின் கதவு திறக்கப்பட்டுள்ளது என்று நான் கருதுகின்றேன்.
————–
அந்யத்ர தர்மாதந்யத்ராதர்மாதந்யத்ராஸ்மாத் கரிதாகரிதாத் –
அந்யத்ர பூதாச்ச பவ்யாச்ச யத் தத்பஷ்யஸி தத் வத ৷৷ 1.2.14 –
தர்மம் அதர்மம் -முக்காலத்தையும் வேறு பட்ட சநாதனமான மார்க்கம் -லோக தர்ம மார்க்கம் இல்லை
பகவத் அருளாலே முக்தி -அவர் ஆசைப்பட்டப் படி தான தர்மம் -நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்கள்
உலக சாமான்ய தர்மம் இல்லை -என்றதும் அதர்மமா கேள்வி வருமே அதுவும் இல்லை
தர்மத்தைக் காட்டிலும் வேறானதும், அதர்மத்திற்கும் வேறானதாகவும் உள்ளது.
அதாவது இருமைக்கும் அப்பாற்பட்டதாக உள்ள ஒன்றை இது சுட்டிக் காட்டுகின்றது.
இது காரண-காரியத்திலிருந்தும் வேறாக உள்ளது. உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் காரண காரியமாகவும் இருக்கின்றது. (உ-ம்) தந்தை – மகன் – பேரன். கடந்த காலத்திலிருந்தும், வருங்காலத்திலிருந்தும் வேறானதாகவும் உள்ளது. இவ்வாறு எந்த ஒன்று உள்ளதோ அல்லது நீங்கள் அறிந்திருக்கின்றீர்களோ அதை எனக்கு கூறுவீர்களாக.
—————–
ஸர்வே வேதா யத் பதமாமநந்தி தபா் ஸி ஸர்வாணி ச யத் வதந்தி —
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத் தே பத் ஸம் க்ரஹேண ப்ரவீம்யோமித்யேதத் ৷৷ 1.2.15 ৷৷
ஸர்வே வேதா யத் பதமாமநந்தி -முக்தி பதம் அணைத்து வேதமும் சொல்லும்
தபா் ஸி ஸர்வாணி ச யத் வதந்தி –தபசாதிகள் எங்கே கொண்டு சேர்க்குமோ
யதிச்சந்தோ -ஆசை யுடன்
ப்ரஹ்மசர்யம் சரந்தி -ப்ரஹ்மசர்ய விரதம் இருக்கிறார்களோ
தத் தே பதம் -அந்த பதத்தை இடத்தை -அடையும் பதம் -அடைவிக்கும் பதம் ৷
ஸம் க்ரஹேண ப்ரவீம்யோ சுருக்கமாக சொல்கிறேன் -ஓம் -பதம் கொண்டு -இந்த அக்ஷரா பதம் மூலம் அந்த மோக்ஷம் பெறலாம் –
எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தைப் பற்றி உபதேசிக்கின்றதோ, அதை இறுதியாக அடைய வேண்டும் என்று கூறுகின்றதோ,
எல்லா தவங்களும் எதை அடைவதற்காக கூறப்பட்டிருக்கின்றதோ, எந்தவொன்றை அடைய விரும்பி
பிரம்மசர்யத்தை கடைப்பிடிக்கின்றார்களோ அந்த லட்சியத்தை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.
அந்த பதம் ஓம் என்பதுதான்.
———————
ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம்-
ஏதத்த்யேவாக்ஷரம் ஜ்ஞாத்வா யோ யதிச்சதி தஸ்ய தத் ৷৷ 1.2.16 ৷৷
பிரகர்ஷம் நிறைய ஸ்தூதயே ஸ்தோத்ரம் பண்ணப் படுகிறான் அதுவே பிரணவம்
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் -இத்யாதி
இதுவே அக்ஷரம் இதுவே ப்ரஹ்மம் -இதுவே ஸ்ரேஷ்டம் -காட்டிக் கொடுக்கும் -உபாயம் -சிறந்த ஜெபிக்கும் திரு மந்த்ரம்
ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷம் மூலமே பலன் பெறலாம் -விரும்பிய அனைத்தையும் கொடுக்கும்
இந்த ஒங்காரத்தை பரம் பொருளாக விசாரம் செய்து அறிந்தவன் அதை விரும்புகின்றானோ அது அவனுக்கு கிடைக்கின்றது.
————–
ஏததாலம்பந் ஷ்ரேஷ்டமேததாலம்பநம் பரம் –
ஏததாலம்பநம் ஜ்ஞாத்வா ப்ரஹ்மலோகே மஹீயதே ৷৷ 1.2.17
பற்றுக் கொம்பு -ஆலம்பனம் -உபாசானம் த்யானம் தாண்டி ஸ்ரேஷ்டம்-
எதை வைத்துக் கொண்டு இந்திரியங்களுக்கப்பாற்பட்ட தேவதைகளை தியானிக்கின்றோமோ அதற்கு ஆலம்பனம் என்று பெயர்.
இது இருவகையாக இருக்கின்றது.
1. பிரதிமா ஆலம்பனம் – குறிப்பிட்ட உருவத்துடன் கூடியது,
2. ப்ரதீகம் ஆலம்பனம் – குறிப்பிட்ட உருவமில்லாதது. (உ.ம்) ஓம் என்ற சொல்
நாம் ஒங்காரத்தை தியானிக்கும் போது நமது மனம் ஒம் என்ற சப்தத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதை தியானம் செய்தவன் இறந்த பிறகு பிரம்ம லோகத்திற்கு சென்று சிறப்புடன் இருக்கின்றான்.
இதை பரம்பொருளாக விசாரம் செய்து அடையும் அறிவினால் பிரம்மத்தையே அடைவன், அதன் ஸ்வரூபமாகவே தன்னை உணர்ந்து கொள்வான்.
—————–
ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் —
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே ৷৷ 1.2.18 ৷৷
ஸ்ரீ கீதையில் இத்தையே அருளுகிறார்
ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்–ஆத்மா பிறக்கவும் இறப்பதும் இல்லை -யமனை பார்த்து மிருத்யு பயம் எதனால்
உடம்பு எடுத்துக் கொண்டால் ஜனனம் விட்டால் மரணம் /கதா சித் கீதை- இங்கு விபச்சித்
நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் –யார் இடம் உத்பத்தி இல்லை யாரையும் உத்பத்தி பண்ணாதே -மண் குடம் போலே இல்லை
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ -பிறப்பிலி நித்யம் -சாஸ்வதம் -ஏக ரூபம் –அநாதி
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே -கொல்ல முடியாதே -நித்யம் அழியும் சரீரத்துக்குள் இருந்தாலும் –
சுக துக்கம் அனுபவிக்கிறான் ஸூஷ்மம் தானே -பண்டிதர் இத்தை பற்றி கவலை படாதவர்-நித்யம் புரிந்து கோள் -கீதை -2-12-ஆரம்பம்
சைதன்ய ஸ்வரூபமான ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை. எதனிடமிருந்தும் தோன்றவில்லை,
எதுவுமே இதனிடத்திருந்தும் தோன்றவில்லை. இதற்கு காரணம் எதுவுமில்லை, காரியமாகவும் இல்லை.
இது பிறப்பற்றது, தேய்வற்றது, எல்லா காலத்திலும் இருப்பது, நிலையானது, வளர்ச்சியற்றது,
பழமையானது, உடல் அழிந்தாலும் இது அழிவதில்லை.
——————-
ஹந்தா சேந்மந்யதே ஹந்து் ஹதஷ்சேந்மந்யதே ஹதம் –
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே ৷৷ 1.2.19 ৷৷
இதுவும் கீதா ஸ்லோகம்
ஹந்தா சேந்மந்யதே ஹந்து்ம் -கொல்ல போக சங்கல்பம் கொண்டால் முட்டாள்
ஹதஷ்சேந்மந்யதே ஹதம் -கொல்ல படுவேன் என்று நினைத்தாலும் முட்டாள்
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே -ஆத்மா அழியாதே -எனக்கு நாசம் இல்லை –
என் சரீரத்துக்கு தலை வலி வயிற்று வலி அழிவு இதுக்கு நினைவு வேண்டுமே
இது எந்தவிதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.
கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன்
என்று நினைப்பது அவர்களது அறியாமையை குறிக்கின்றது.
உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கபடுவதுமில்லை, அழிவதுமில்லை.
————–
அணோரணீயாந் மஹதோ மஹீயாநாத்மாஸ்ய ஜந்தோர்நிஹிதோ குஹாயாம் –
தமக்ரது பஷ்யதி வீதஷோகோ தாதுப்ரஸாதாந்மஹிமாநமாத்மந ৷৷ 1.2.20 ৷৷
மேலே பிரத்யாகாத்மாவில் இருந்து பரமாத்மஞானம் உபதேசம் –நான் ஸ்வ தந்த்ரன் இல்லை —
இரண்டையும் நியமனம் பண்ணும் பரமாத்மா உண்டே -என்று உணர வேண்டும் –
அணோரணீயாந் -ஆத்மாவுக்குள்ளும் இருக்கிறான் -நெல் மணி விட -கடுகை விட சிறியது –
மஹதோ மஹீயான் –மிக பெரியவன் –
ஆத்மாஸ்ய ஜந்தோர்-நிஹிதோ குஹாயாம் –ஹிருதய புண்டரீகத்துக்குள் -அந்தர் பகிஸ்தா தத் சர்வம்
தமக்ரது பஷ்யதி -காம்ய கர்மங்களில் விருப்பம் இல்லாதவனே இவனை அறிய முடியும் -தியாகம் பண்ணினவனே அமிர்தம் பெறுகிறான்
வைராக்யம் வேண்டுமே
வீதஷோகோ -ராகம் சோகம் இல்லாமல் -ப்ரஹ்ம ஞானம் ஒன்றே அடைவிக்கும்
தாதுப்ரஸாதாந்மஹிமாநமாத்மந -அவன் பிரசாதம் அடியாகவே இவை இந்த ப்ரஹ்ம ஞானம் -பெறலாம்
மனம் உணர்வு பொறி உணர்வு அப்பால் –
சத்வ குணம் உள்ள மனசாலே அவன் அனுக்ரஹம் அருள வரும் பொழுது விலக்காமல் இத்தை பெற முடியும்
இந்த ஸ்லோகத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
1. ஆத்மாவை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்,
2. ஆத்மாவை புரிந்து கொள்கின்ற இடம்,
3. எப்படிபட்டவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது
4. ஆத்மாவை அடைவதால் அடையும் பலன்.
ஆத்ம லஷணம்: இது அணுவைக்காட்டிலும் அணுவானது, சிறியதைக் காட்டிலும் சிறியது. பெரியதைக் காட்டிலும் பெரியது.
இந்த கருத்து ஆத்மா பார்க்கப்படும் பொருளல்ல என்று உணர்த்துகின்றது. இந்த லஷணம் அனாத்மா விஷயங்களை நீக்கி விடுகின்றது.
குணங்களால் வரையறுக்கப்படாதது. இதிலிருந்து எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பதாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒன்றையும் கால, தேச வஸ்து இவைகளால் வரையறுக்கப்படலாம். ஆனால் ஆத்மா இவைகளால் வரையறுக்கப்பட முடியாது.
ஆத்மாவானது எங்கும் இருக்கின்றது ஆனால் அதை புரிந்து கொள்கின்ற இடம் நம்முடைய புத்திதான்.
நாம் பார்க்கும் இந்த உயிரினங்களின் மனதிற்குள் அமர்ந்திருக்கின்றது, வெளிப்படுகின்றது.
இந்த ஆத்மாவை, ஆசையற்றவன் (சுகத்தை நாடும் ஆசைகள் இல்லாதவன்) தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே அறிகின்றான்..
நம்முடைய இந்திரியங்களின் அமைதியினால் ஆத்மாவை அடைகின்றான். ஈஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் ஆத்மாவை அடைகின்றான்.
ஆத்மாவை அடைந்தவன் சோகத்திலிருந்து விடுபடுகின்றான், துயரத்திலிருந்து விடுதலை அடைகின்றான்.
————-
ஆஸீநோ தூரம் வ்ரஜதி ஷயாநோ யாதி ஸர்வத-
கஸ்தம் மதாமதம் தேவம் மதந்யோ ஜ்ஞாதுமர்ஹதி ৷৷ 1.2.21 ৷৷
ஆஸீநோ தூரம் வ்ரஜதி -அமர்ந்தது ஸ்ரீ வைகுண்டம் -நடந்தது ராமனாக –
ஷயாநோ யாதி ஸர்வத-உறங்குவான் -யோகு செய்து -அனைத்தையும் நிர்வகிக்கிறான்
கஸ்தம் மதாமதம் தேவம் மதந்யோ ஜ்ஞாதுமர்ஹதி ৷৷
என்னை தவிர யார் அறிவார் -அவன் அனுக்ரஹத்தால் அன்றோ பெற்றேன் என்ற சாத்விக அஹங்காரம்
அறிவு ஸ்வரூபமான ஆத்மாவானது அனாத்மாவான இந்த சரீரத்தோடு இணைந்து இருக்கின்றது.
இதனால் ஜடமான நம் உடலும், மற்ற உறுப்புக்களும் செயல்படுகின்றன. ஆத்ம தத்துவத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம்.
அதை தனியே பார்த்தல், உடலோடு சேர்ந்து பார்த்தல். ஆத்மா தன்னளவில் செயலற்று இருக்கின்றது.
ஆனால் அனாத்மாவுடன் சேரும்போது செயல்படுவதுபோல் இருக்கின்றது.
உதாரணமாக பானையானது ஒரிடத்திலிருந்து வேறொரு இட்த்திற்கு செல்லும் போது அதிலிருக்கும் ஆகாசமும் செல்வது போல் தோன்றுகின்றது.
ஆனால் ஆகாசம் எங்கும் வியாபித்திருப்பதால் அது நகர்வதில்லை.
ஆத்மாவானது அமர்ந்து கொண்டே வெகுதூரம் செல்கின்றது. அதாவது அது தன்னளவில் அசையாமல் இருக்கின்றது,
ஆனால் உடலோடு, மனதோடு சேர்ந்து பார்க்கும்போது அதுவும் வெகுதூரம் செல்வது போல் தோன்றுகிறது.
உறங்கிக்கொண்டெ வெகு தூரம் செல்கின்றது. இதையும் உபாதிகளுடன் சேர்ந்து பார்க்கும்போது இதுமாதிரி தோன்றும்.
ஆனந்தமாகவும் அதற்கப்பாற்கப்பட்டதாகவும் இருக்கின்ற இந்த ஆத்மாவை என்னைத் தவிர வேறு யார் அறிய தகுந்தவர்.
—————-
அஷரீர் ஷரீரேஷ்வநவஸ்தேஷ்வவஸ்திம் –
மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 1.2.22 ৷৷
அஷரீர் -சரீரம் அற்றவன்
ஷரீரேஷ்வநவஸ்தேஷ்வவஸ்திம் -அநித்தியமான சரீரத்துக்குள் நித்தியமான அவன் உள்ளான்
மஹாந்தம் –
விபும் -எங்கும் நிறைந்து / அணு–அளவில் சிறியது ஸ்தூலம் -கண்ணுக்கு புலப்படும் —
ஸூஷ்மம்–கண்ணுக்கு தெரியாமல் ஆனால் விபு -நான்கையும் அறிய வேண்டும் –
நீக்கமற -கரந்து எங்கும் பரந்துளன்
துணி -நனைத்து -புளிந்து-நீர் ஸூ ஷ்மம் ஆனால் துண்டு முழுவதும் விபு அதே போலே –
ஆத்மாநம் மத்வா –உயர்ந்த தத்வம் கேட்டாலே பயம் சோகம் போகுமே
தீரோ ந ஷோசதி- அறிந்த தீரன் -ப்ரஹ்ம ஞானம் வந்தவன் துக்கம் இல்லாமல் இருப்பான்
இது உடலற்றது, உடலுக்குள்ளே இருந்து கொண்டு உடலற்றதாக இருக்கின்றது.
அழியக்கூடியதில் அழியாததாக இருக்கின்றது. மிகப்பெரியது, மேலானது, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது,
எங்கும் வியாபித்திருக்கின்றது. இந்த ஆத்மாவை இவ்வாறக உணர்ந்திருக்கும் சான்றோர்கள் துயரப்படுவதில்லை.
————
நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந —
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூ் ஸ்வாம் ৷৷ 1.2.23 ৷৷
நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ –வேத அத்யயனம் பண்ணியோ அடைய முடியாது
ந மேதயா -புத்திசாலியாக இருந்தாலோ அடைய முடியாது
ந பஹுநா ஷ்ருதேந –நிறைய கேட்டாலும் அடைய முடியாதே
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ–தேர்ந்து எடுத்து யாரோ ஒருவருக்கு தன்னைக் காட்டுகிறான்
தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூ் ஸ்வாம் -அவன் அருளுக்காக காத்து இருக்க வேண்டும்
சரணாகதி -ஆச்சார்யர் திருவடி ஒதுங்கி –பாகவத சமாஹம் வழிகள்/
தேவிமாராவார் — -ஆவியே அமுதே அலை கடல் கடைந்த -அப்பனே -காணுமாறு அருளாய்-
பிராப்யம்- பிராப்பகம்
காணுமாறு -புருஷார்த்தம் / அருளாய் -உபாயம்
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -ஏக சிந்தனையாய் -காணுவது புருஷார்த்தம் -அதுக்கு வழியும் நீயே கண்ணே
கோல மேனி காண -ப்ராப்யம் –வாராய் -உபாயம்
இதில் ஆத்ம ஞானத்தை அடைய உதவும் இரண்டு சாதனங்களை கூறப்பட்டிருக்கின்றது.
1. ஈஸ்வரன் அனுக்கிரகம், 2. முமுக்ஷுத்வம் (மோக்ஷ இச்சா).
வேத பாராயணத்தால் மட்டும், வேதத்தை உச்சரிப்பதால் மட்டும் இதை அடைய முடியாது.
வேதத்தில் படித்ததை நினைவில் வைத்திருந்தாலும் அதை அடைய முடியாது. அதை பலமுறை கேட்பதாலும் பயனில்லை.
ஆத்மா எந்த மனிதனை தேர்ந்தெடுக்கின்றதோ அவனால் மட்டும்தான் அடைய முடியும்.
அவர்களுக்கு ஆத்மா தன்னுடைய ஸ்வரூபத்தை விளக்கி காட்டுகின்றது, உணர வைக்கின்றது.
இங்கே ஆத்மா என்பதை மாயையுடன் கூடிய ஆத்மாவை (ஈஸ்வரனை) எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால்
எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத்தான் தேர்ந்தெடுக்கின்றார்.
அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.
————-
நாவிரதோ துஷ்சரிதாந்நாஷாந்தோ நாஸமாஹித–
நாஷாந்தமாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத் ৷৷ 1.2.24 ৷৷
நித்ய வர்ணாஸ்ரம அனுஷ்டானங்கள் விடாமல் இருக்க வேண்டும் -அனுக்ரஹத்துக்கு தகுந்த பாத்திரமாக இருக்க வேண்டும் –
நாவிரதோ துஷ்சரிதாந்—தீய நடத்தையில் இருந்து விலகாமல் இருந்தால் கிடைக்காது -அடைந்து அனுபவிக்க ஆசை ருசி இருக்க வேண்டுமே
நா ஷாந்தோ நாஸமாஹித-சாந்தி இல்லாமல் -இந்திரியங்கள் மனஸ் அடக்காமல் இருந்தால் கிடைக்காது
நாஷாந்தமாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத் -அருள் இருந்தால் பெறலாம் – சரணாகதியாலே பெறுகிறான்
இந்த ஸ்லோகத்தில் நான்கு விதமான சாதனங்கள் கூறப்பட்டிருக்கின்றது.
அதர்மமான வாழ்க்கை முறையிலிருந்து தன்னை விலக்கி கொள்ளாதவன், புலன்களில் அமைதியில்லாதவன்,
புலனடக்கம் இல்லாதவன், எடுத்துக்கொண்ட லட்சியத்தில் மனத்தை வைக்காதவன், மன ஒருமுகப்பாடு இல்லாதவன்,
மன அமைதியை அடையாதவன் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் ஞானம் வந்தாலும் அதில் நிலைபெற முடியாது.
எனவே இவர்களால் ஆத்மாவை அடைய முடியாது
———————-
யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதந–
மரித்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ ৷৷ 1.2.25 ৷৷
யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதந–மிக பெரியவன் -ப்ராஹ்மண வர்க்கம் க்ஷத்ரியர் –
நான்கு வர்ணங்களும் -சோறு உண்ணுவது போலே ப்ரஹ்மம் திரு வயிற்றில் வைத்து
மரித்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ -என்னை வைத்து மற்றவர்களை அழித்து என்னையும் அழித்து-
சாப்பிட பயன்பட்டு தானும் சாப்பிடப்படும் ஊறுகாய் போலே -நானும் -என்று யமன் சொல்லி அருளுகிறார்
நீ கேட்டு நான் சொல்லும் படி வைத்து உள்ளான் பரம காருணிக்கன் -யார் அறியப் போகிறான் -இவன் பெருமையை
ஆத்மாவே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றது. பிரளய காலத்தில் அனைத்தும் அதற்குள் ஒடுங்கி விடுகின்றது.
இந்த அகில் பிரபஞ்சமே ஆத்மாவுக்கு உணவாக இருக்கின்றது. மரணத்தை ஊறுகாயாக பயன்படுத்தி உணவை உட்கொள்கின்றது.
பிறகு அதையையும் சாப்பிட்டு விடுகின்றது.
ஆத்மாவிற்கு பிராமணர்களும், சத்திரியர்களும் சாப்பிடும் அன்னமாகின்றது. இது இந்த பிரபஞ்சமே சாப்பிடும் உணவாகின்றது
என்று புரிந்து கொள்ள வேண்டும். மரணம் இதற்கு ஊறுகாய் போன்று இருக்கின்றது.
இவ்விதமாக எங்கு இந்த ஆத்மா இருக்கிறது என்று யார் அறிவார்.
৷৷ இதி ப்ரதமேத்யாயே த்விதீயா வல்லீ ৷৷
———————————————————–
றதம் பிபந்தௌ ஸுகரிதஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டௌ பரமே பரார்தே .
சாயாதபௌ ப்ரஹ்மவிதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ச த்ரிணாசிகேதா ৷৷ 1.3.1 ৷৷
றதம் பிபந்தௌ- சத்யம் -இருவரும் கர்ம பலம் -சங்கல்ப பலம் அவனுக்கு கர்ம பலம் ஆத்மா /
குஹாம் ப்ரவிஷ்டௌ ஹிருதயகுஹைக்குள் இருவரும்
சாயாதபௌ- ஓன்று வெய்யில் ஓன்று நிழல்
ப்ரஹ்மவிதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ச த்ரிணாசிகேதா-ஒன்றை பஞ்சாக்கினி வித்யை மூலம் –
ஒன்றை த்ரிநாசிகேத அக்னி வித்யை மூலம் அடையலாம்
அருகிலே உள்ளான்-இருந்தாலும் அறிய முடியாதே – -இந்திரிய ஜெயம் பற்றி இந்த வல்லி உபதேசம்
பரமார்த்தாவும், ஜீவாத்மாவும் நிழலும் ஒளியும் போல் கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்,
தன்னால் செய்யப்பட்ட கர்மத்தால் அடைந்த பாவ-புண்ணியங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்
உடலில் உள்ள புத்தியில் நுழைந்திருக்கின்றார்கள்.மேலானதாக இருக்கின்ற ஆத்மாவில் இருப்பிடம் புத்திதான்.
ஜீவனும், பிரம்மனும் நிழலும் ஒளியும் போல் இருக்கின்றார்கள் என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.
இதை இல்லறத்தில் இருந்து கொண்டு ஐந்துவிதமான யாகங்களை செய்தவர்களும்,
மூன்று முறை நாசிகேத யாகத்தை செய்தவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இங்கு நுழைந்திருக்கின்றது என்பதை அவர்களுடைய இருப்பிடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அங்கு சென்றால் அவர்களை தரிசிக்கிலாம். பிரவேசம் என்பது அறியப்படுகின்ற இடம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஜீவன் சம்சாரியாக இருக்கின்றான், அவன் அனுபவிப்பதை பிரம்மத்தில் ஏற்றி வைத்திருக்கின்றோம்.
—————–
ய ஸேதுரீஜாநாநாமக்ஷரம் ப்ரஹ்ம யத்பரம் .
அபயம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேத் ஷகேமஹி ৷৷ 1.3.2 ৷৷
நமக்கு அந்த பாக்யம் சக்தி ஏற்படட்டும் -சேர்த்து இருவருக்கும் பிரார்த்தனை
யாகத்தை செய்கின்றவர்களுக்கு இகலோக, பரலோகத்தை அடைய ஆசையுள்ளவர்கள் இவர்களுக்கு
நாசிகேத யாகம் பாலமாகவோ, மார்க்கமாகமோ இருக்கின்றது.
அதேபோன்று சம்சார கடலின் பயமற்ற அக்கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற,
உயர்ந்த பிரஹ்மமானது மார்க்கமாக, பாலமாக அமைகின்றது.
————-
ஆத்மாந் ரதிநம் வித்தி ஷரீர் ரதமேவ து .
புத்திம் து ஸாரதிம் வித்தி மந ப்ரக்ரஹமேவ ச ৷৷ 1.3.3 ৷৷
தேரில் இருவர்-முதலாளி ஆத்மா – தேரோட்டி -புத்தி ஞானம் உறுதி தேரோட்டி -சரீரம் தேர் -இந்திரியங்கள் குதிரை -மனஸ் கடிவாளம் –
ஒழுங்காக ஓட்ட வேண்டுமே -மனஸ் இந்திரியங்கள் வேண்டும் இல்லாமல் ஆக்க முடியாது –
சரியான இடங்களில் செலுத்த வேண்டும் -பரமாத்மா இடம் சேர வேண்டும் -இவற்றை எல்லாம் விட்டு ஆத்மா அவனையே அனுபவிக்கும்
ஆத்மா புத்தி மனஸ் இந்திரியங்கள் -ஒன்றை அடுத்து நியமிக்கும்
இந்த்ரியாணி ஹயாநாஹுர் விஷயா் ஸ்தேஷு கோசராந் –
ஆத்மே ந்த்ரிய மநோயுக்தம் போக்தேத்யாஹுர்மநீஷிண ৷৷ 1.3.4 ৷৷
போக்த்ரு போக்தா சம்பந்தம் -இந்திரியங்கள் குதிரை -விஷயாந்தரங்கள் சப்தம் இத்யாதி
கண் ரூபம் -காது சப்தம் -தோள் ஸ்பர்சம் நாக்கு ரசம் மூக்கு கந்தம்
வாழ்க்கை என்ற பயணத்திற்கு ஸ்தூல சரீரம் ரதமாக கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
ரதத்தில் அமர்ந்திருப்பவராக ஜீவாத்மா கூறப்படுகின்றார்.
புத்தியானது தேரோட்டியாகவும் மனம் கடிவாளமாகவும், விஷயங்களே பாதையாகவும்,
ஐந்து இந்திரியங்கள் குதிரைகளாகவும் கற்பணை செய்யப்பட்டிருக்கின்றது.
சரீரம் ஜடமாக இருப்பதால், அதை இயக்குவதற்கு ஏதோ ஒரு சக்தி உள்ளே இருக்க வேண்டும். சரீரத்திற்கு உரிமையாளன் ஜீவாத்மா
எப்படி எஜமானன் போக விரும்பும் இடத்தை அடைய சரியாக செலுத்துவதற்கு சாரதி என்பவன் இருப்பானோ
அதுபோல வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் லட்சியத்தை அடைவதற்கு உதவுவது புத்திதான்.
ரத சாரதிக்கு தன் எஜமானனை அவர் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்ல குதிரைகள் தேவையாக இருக்கின்றது.
அதுபோல புத்திக்கு குதிரைகள் போன்று இந்திரியங்களின் துணை தேவைப்படுகின்றது.
குதிரைகள் தேரை இழுப்பது போல இந்திரியங்கள் சரீத்தை இயக்குகின்றது.
தேரோட்டிக்கு குதிரைகளை கட்டுப்பாட்டுடன் செலுத்துவதற்கு கடிவாளம் தேவைப்படுவது போல
புத்திக்கு இந்திரியங்களை கட்டுபடுத்துவதற்கு மனம் தேவைப்படுகின்றது.
ரதம் செல்லும் பாதையானது நாம் அனுபவிக்கும் விஷயங்களுக்கு உவமானமாக கூறப்படுகின்றது.
ஜீவாத்மாவை ரதத்தின் எஜமானனாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உடலானது ரதத்திற்கு ஒப்பிடப்படுகின்றது
புத்தியை தேரோட்டியாகவும், மனதை கடிவாளமாகவும், இந்திரியங்கள் குதிரைகளாகவும்,
தேர் செல்லும் பாதையானது விஷயங்களாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்தூல இந்திரியங்கள் மனதுடன் கூடிய போக்தாவாக இருக்கின்றது. இவ்விதம் ஞானிகள் கூறுகின்றார்கள்.
———————
யஸ்த்வ விஜ்ஞாநவாந் பவத்யயுக்தேந மநஸா ஸதா .
தஸ்யேந்த்ரியாண்ய வஷ்யாநி துஷ்டாஷ்வா இவ ஸாரதே ৷৷ 1.3.5 ৷৷
யார் ஒருவன் விவேக ஞானம் பெற்று -விபரீத ஞானம் இல்லாமல் –
மனசால் இந்திரியங்களை அடக்கி இருக்கிறானோ அவனே அடைகிறான்
எவனொருவன் புத்தியில் அறியாமையோடு இருக்கின்றானோ, கட்டுபடுத்த முடியாத மனதை உடையவனாக இருக்கின்றானோ
அவனுடைய இந்த்ரியங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கும்.,
தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள் போல் புத்திக்கு இந்திரியங்கள் கட்டுப்படாமல் இருக்கும்.
——————-
யஸ்து அவிஜ்ஞாநவாந் பவதி அயுக்தேந மநஸா ஸதா .
தஸ்யேந்த்ரியாணி அவஷ்யாநி ஸதஷ்வா இவ ஸாரதே ৷৷ 1.3.6 ৷৷
தேரோட்டி ஒழுங்காக இருந்தால் தான் சரியாக போகும் இடத்துக்கு போவான்
எவனொருவனுடைய புத்தியில் அறிவுடனும், கட்டுபடுத்தபட்ட நெறிபடுத்தபட்ட மனதுடன் இருக்கின்றானோ
அவனுக்கு இந்திரியங்கள் அவனது கட்டுக்குள், வசத்தில் இருக்கும்.
தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல இந்திரியங்கள் அவனுக்கு அடங்கியிருக்கும்.
———————–
யஸ்த்வவிஜ்ஞாநவாந் பவத்யமநஸ்க ஸதாஷுசி-
ந ஸ தத் பதமாப்நோதி ஸம் ஸாரம் சாதி கச்சதி ৷৷ 1.3.7 ৷৷
சுத்த மனசால் -ஞானியாகவும் -இந்திரியங்களை அடக்கி -இருந்தால் தானே சம்சாரம் தாண்டுவான்
யாரொருவன் விவேகமில்லாமலும், அடங்காத மனதுடனும், தூய்மையற்ற மனதை உடையவனாக இருக்கின்றானோ
அவர்களால் ஆத்ம அடைய வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதில்லை, சம்சாரத்தைதான் அவர்கள் அடகின்றார்கள்
————–
யஸ்து விஜ்ஞாநவாந் பவதி ஸ மநஸ்க ஸதா ஷுசி–
ஸ து தத் பதமாப்நோதி யஸ்மாத்பூயோ ந ஜாயதே ৷৷ 1.3.8 ৷৷
சுத்த மனசால் -ஞானியாகவும் -இந்திரியங்களை அடக்கி -இருந்தால் தானே சம்சாரம் தாண்டுவான் –
பதமாப்நோதி யஸ்மாத்பூயோ ந ஜாயதே பரமபதம் அடைகிறான் -திரும்பி வராமல் ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான்
எந்த ஒரு விவேகியானவன், கட்டுப்படுத்தபட்டு, தூய்மையாக வைத்திருக்கும் மனதுடன் இருக்கின்றானோ
அவன் மேலான லட்சியத்தை அடைகின்றான் அதனால் மீண்டும் பிறப்பதில்லை.
————————
விஜ்ஞாந ஸாரதிர்யஸ்து மந ப்ரக்ரஹவாந் நர–
ஸோத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் ৷৷ 1.3.9 ৷৷
இங்கு தான் தெளிவாக விஷ்ணு லோகம் -பரம பதம் புத்தி நிலை மட்டுமே ஸ்தான விசேஷம் இல்லை என்பர் அறியாதவர்
எந்த மனிதன் புத்தியுடைய சாரதியையும், கடிவாளம் போன்ற மனதை கட்டுக்குள் வைத்திருக்கின்றானோ
அப்படிபட்டவன் பயணத்தினுடைய முடிவை அடைகின்றான்.
அதுவே இறைவனின் மேலான இருப்பிடமான பர பிரம்மத்தை அடைகின்றான்..
—————–
இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா அர்தேப்யஷ்ச பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்புத்தேராத்மா மஹாந் பர ৷৷ 1.3.10 ৷৷
ஒன்றுக்கு ஓன்று யார் வலிமை -புலன்களை விட சப்தம் இத்யாதி வலிமை -இவற்றை இழுக்கும் –நாக்கை விட ருசிக்கு -சக்தி அதிகம் –
விஷயங்களை விட மனஸ் சக்தி மிக்கது –மனசை விட புத்தி வலிமை கொண்டது –மனம் சிந்திக்க கருவி -புத்தி ஞானம் முடிவு எடுக்கும் –
புத்தியை விட ஆத்மா வல்லமை -புத்தியையும் அடக்கலாம்
பஞ்சகோச விசாரம்:-
1. அன்னமய கோசம் : நான், என்னுடையது என்ற பற்றை விட்டுவிட வேண்டும்.
2. பிராணமய கோசம் : பசி, தாகம், இந்திரியங்களை பயன்படுத்தி ஏதாவது செய்து கொண்டிருத்தல்.
3. மனோமய கோசம் : யாருடைய அன்பிற்காகவும் ஏங்கியிருக்கக்கூடாது, யாரையாவது நேசிக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
4. விக்ஞானமய கோசம்: தன்னை மதிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும்.
தன்னிடத்திலுள்ள திறமையை போற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
5. ஆனந்தமய கோசம்: எதிலும் இன்பத்தை நாடிக்கொண்டிருத்தல்
பரம் என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் கூறப்படுகின்றது. அவைகள்,
1. சூட்சுமம் – ஒவ்வொரு கோசமும் அதற்கு முன்னே உள்ளதை விட மிகவும் சூட்சுமமானது.
2. வ்யாப்தி – ஒரு பொருள் சூட்சுமமாக ஆக அது வியாபிக்கும் இடமும் அதிகமாகும்.
3. நியந்தா – ஒன்று அதற்கு முன்னே உள்ளதை கட்டுபடுத்தும்,
4. ஆத்ம சமீபம் – ஒன்று அதற்கு முன்னே உள்ளதை விட ஆத்மாவுக்கு அருகில் இருக்கும்.
இந்திரியங்களைக் காட்டிலும் வெளியிலுள்ள விஷயங்கள் மேலானது.
வெளியிலுள்ள விஷயங்களை காட்டிலும் மனம் மேலானது..
எந்த இந்திரியத்தை பயன்படுத்த வேண்டும் என்று வெளியிலுள்ள விஷயத்தை பொறுத்துத்தான் அமைகிறது.
எனவே வெளியிலுள்ள பொருட்கள் மேலானதாக கருதப்படுகின்றது.
விஷயங்கள் என்பது எண்ணங்களை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
மனதைக் காட்டிலும் புத்தி மேலானது, சூட்சுமமானது
வியஷ்டி புத்தியை காட்டிலும் சமஷ்டி விக்ஞானமய கோசம் (புத்தி) மிகவும் மேலானது, சூட்சுமமானது.
——–
மஹத பரமவ்யக்தமவ்யக்தாத் புருஷ பர–
புருஷாந்ந பரம் கிம் சித் ஸா காஷ்டா ஸா பரா கதி ৷৷ 1.3.11 ৷৷
பர ப்ரஹ்மம் வலிமை -பரம புருஷனுக்கு மேலே யாரும் இல்லை -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ
சமஷ்டி விக்ஞானமய கோசத்தை விட காரண சரீரம், ஆனந்தமய கோசம் மேலானது.
ஆனந்த மய கோசத்தைக் காட்டிலும் பரபிரம்மம் மேலானது. புருஷனைக் காட்டிலும் மேலானது வேறெதுவுமில்லை.
அதுவே முடிவானது, மேலான இருப்பிடம், இறுதி லட்சியமாகும்.
—————-
ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோத்மா ந ப்ரகாஷதே .
தரிஷ்யதே த்வக்ர்யயா புத்த்யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்ஷிபி ৷৷ 1.3.12 ৷৷
சுலபமாக அறிய முடியாது -சரீரம் தடை -மறைக்கும் -திரோதானம் -பகவத் ஸ்வரூபம் திரோதான கரி -ஏகாக்ர புத்தி வேண்டும்
இந்த ஜீவராசிகளுக்குள் இருந்தாலும் அது மறைக்கப்பட்டுள்ளதால் நம்மால் அதை உணர முடியவில்லை.
கயிற்றில் தெரியும் பாம்பை பார்க்கும்போது உண்மையில் நாம் கயிற்றைத் தான் பார்க்கின்றோம்
ஆனால் பாம்புதான் கண்களுக்கு தெரிகின்றது. இது பாம்பு இல்லை என்று தெரிந்தவுடன் பாம்பு மறைந்து ஆதாரமான கயிறு தெரிகின்றது.
இது பாம்பு என்று சொல்லும் போது கயிற்றைத்தான் காட்டுகின்றோம் ஆனால் பாம்பு என்று அறியாமையால் சொல்கின்றோம்.
இந்த ஆத்மா எல்லா உயிர்களிலும் மறைந்திருக்கின்றது. அதனால் தெரிவதில்லை, வெளிப்படுவதில்லை
ஆனால் சூட்சுமமான தத்துவத்தை அறிந்தவர்களால். ஒருமுகப்படுத்தப்பட்ட நுண்ணிய புத்தியால் மட்டும் உணரப்படுகின்றது, பார்க்கப்படுகின்றது-
——————
யச்சேத்வாங்மநஸீ ப்ராஜ்ஞஸ்தத்யச்சேஜ்ஜ்ஞாந ஆத்மநி .
ஜ்ஞாநமாத்மநி மஹதி நியச்சேத்தத்யசேச்சாந்த ஆத்மநி ৷৷ 1.3.13 ৷৷
இந்திரியங்கள் மனசில் -அத்தை புத்தியில் -அத்தை மனசில் -அத்தை ஆத்மாவில் -அத்தை பரமாத்வா இடம் நியமிக்க வேண்டும்
சிரவணம்:-
நான் இந்த ஐந்து கோசங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மா என்ற அறிவை கேட்பதின் மூலம் அறிவது சிரவணம்.
சாஸ்திரம் உரைக்கின்ற கருத்தை கேட்டு புரிந்து கொள்வது சிரவணம்.
இந்த மூன்று சரீரமே நான் என்ற் அறியாமையில் இருப்பதால் இந்த சரீரத்திற்கு ஏதாவது தீங்கு வந்தால் துன்பமடைகின்றோம்.
அவமான படுத்தினாலோ, தீய வார்த்தைகளால் திட்டினாலோ கோபம் வருகின்றது.
இந்த சரீரத்திலுள்ள அபிமானம் நீங்கி விட்டால், இதற்கு வரும் சுக-துக்கங்கள் நம்மால் அனுபவிக்கப்படமாட்டாது.
சாஸ்திரத்தை பல வருடங்களாக கேட்பதன் மூலம் நமக்கு நான் யார் என்ற உண்மை தெரிய வருகின்றது.
நான் பஞ்ச கோசங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற அறிவை அடைகின்றோம். ஆத்ம-அனாத்மா விஷய ஞானம் ஏற்படுகின்றது.
நான் ஆத்மா, மனம், புத்தி, பிராணன் இவைகளை சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கின்றேன்.
இவைகளுக்கு வரும் சுக-துக்கங்கள் என்னைச் சேர்ந்ததல்ல என்று அறிந்து கொள்வதுதான் சிரவணம்.
மனனம்:-
இந்த ஞானம் வந்தால் அதில் நமக்கு பலவிதமான சந்தேகங்கள் வரும்.
இந்த சந்தேகங்கள் அனைத்தையும் போக்க உதவும் சாதனம் மனனமாகும்.
சாஸ்திர அறிவானது அனுபவ அறிவுக்கு முரண்பாடாக இருக்கும் இதை குரு-சாஸ்திரத்தின் மூலமாக நீக்கி விட வேண்டும்.
இப்படி அடைந்த ஞானத்தினால் உடலுக்கு எந்த தீங்கு வந்தாலும், புகழ் வந்தாலும் அது என்னைச் சேர்ந்ததல்ல என்று
உறுதியாக இருக்க வேண்டும், சாட்சியாக பார்த்து கொண்டிருக்க வேண்டும்.
நம்முடைய மனநிலை எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். தீய குணங்கள் நம்மை விட்டு நீங்கி இருக்க வேண்டும்.
ஆனாலும் பல நேரத்தில் நாம் அவ்வாறு இருப்பதில்லை. இதனை விபரீத பாவனை என்று கூறப்படுகின்றது.
அதாவது ஞானம் அடைந்தாலும் அதற்கேற்ற மாதிரி மனநிலை முன்பு இருந்ததை போன்று மாறி விடுகின்றது.
இந்த நேரத்தில்தான் நிதித்யாஸனம் என்ற சாதனம் தேவைப்படுகின்றது. இது விபரீத பாவனையை நீக்க உதவும்.
அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கு இந்த சாதனம் உதவுகின்றது.
மந்திர விளக்கம்:-
நம்முடைய இந்திரியங்கள் புத்தியில் உள்ள அறிவுப்படி செயல்படுவதில்லை. இந்திரியங்களை மனதில் ஒடுக்க வேண்டும்.
இந்திரியங்களின் மீதுள்ள அபிமானத்தை எடுத்து மனதில் வைக்க வேண்டும். அதனால் இந்திரியங்கள் நம் சொற்படி செயல்படும்.
தேவையான விஷயங்களுக்கு மட்டும் அவைகளை பயன்படுத்த பழக வேண்டும்.
மனதில் உள்ள அபிமானத்தை எடுத்து புத்தியில் வைக்க வேண்டும்.
மனதில் இருக்கின்ற சங்கல்ப-விகல்பங்களை நீக்கி புத்திக்கு வரவேண்டும்.
புத்தியில் உள்ள அபிமானத்தை எடுத்து அனைத்து ஜீவராசிகளின் புத்தியில் வைக்க வேண்டும்,
இந்த சமஷ்டி புத்தியை சத்சிதானந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்மாவில் ஒடுக்க வேண்டும்.
இவைகளுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கின்ற பரமாத்மாவே நான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
—————–
உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வராந் நிபோதத .
க்ஷுரஸ்ய தாரா நிஷிதா துரத்யயா துர்கம் பதஸ்தத் கவயோ வதந்தி ৷৷ 1.3.14 ৷৷
அனைவரையும் எழுப்புகிறார் -கத்தி மேல் நடப்பது போலே -விஷய சுகம் தூங்க வேண்டாம் –
ப்ராப்ய வராந் நிபோதத ஆச்சார்யர் மூலம் -அபிமானம் கொண்டே அறியலாம்
உத்திஷ்டத – எழுந்திருங்கள் ( ஆத்ம ஞானத்தை அடைய வாருங்கள் )
ஜாக்ரத – விழித்துக்கொள்ளுங்கள் ( ஆத்மா ஒன்று இருப்பதை தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விழித்துக் கொள்ளுங்கள்)
ஆதம ஞானத்தை அடைய விழித்துக் கொள்ள இரண்டு படிகள் தாண்டி வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அவைகள் 1. இந்த உலகத்தை துறக்க வேண்டியதற்கு காரணம் தெரியவில்லை,
2. நாம் அடையும் துயரத்திற்கும், சுகத்திற்கும் இந்த உலகம்தான் காரணம் என்று தவறாக் எண்ணிக் கொண்டிருத்தல்..
என்னுடைய அறியாமை தான் நான் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு காரணம் என்று அறிந்து கொள்ளுங்கள்.
இந்த அறியாமையிலிருந்து விடுபடுங்கள், இந்த அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்.
குருவை அடைந்து சரியான, நிச்சயமான அறிவை அடையுங்கள். இந்த ஞானத்தை அடையும் பாதையானது மிகக் கடினமானது,
கூர்மையான கத்தியின் மீது நடந்து செல்வது போன்று கடினமானது என்று ஞானிகள், ரிஷிகள் கூறுகின்றனர்.
—————-
அஷப்தமஸ்பர்ஷமரூபமவ்யயம் ததாரஸம் நித்யமகந்தவச்ச யத் –
அநாத்யநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தந்மரித்யுமுகாத் ப்ரமுச்யதே ৷৷ 1.3.15 ৷৷
அஷப்தமஸ்பர்ஷமரூபமவ்யயம் ததாரஸம் -அசப்தம் அஸ்பர்சம் -அரூபம் -அவ்யயம் -தத் ரசம் – -சாந்தி
நித்யமகந்தவச்ச யத் – அநாத்யநந்தம் -ஆதி அந்தம் இல்லை
மஹத பரம் த்ருவம் – -மஹத் ப்ரஹ்மம்
நிசாய்ய தந்மரித்யுமுகாத் ப்ரமுச்யதே -ப்ரஹ்மம் ஞானம் பெற்றவன் சம்சாரம் தாண்டுகிறான்
ஆத்ம ஸ்வரூபம் இதில் கூறப்படுகின்றது. ஆத்மா நிர்குணமாக இருப்பதால் அது மிகவும் சூட்சும்மானது,
சப்தமற்றது எனவே காதுக்கு விஷயமாக இல்லை. தொட்டுணரக்கூடியதல்ல, உருவமற்றது, சுவையற்றது, மணமற்றது,
இவ்வாறு ஐந்து புலன்களுக்கும் விஷயமாக இல்லாமல் இருக்கின்றது. இது மாற்றங்களற்றது, என்றும் இருப்பது ( காலத்திற்குட்படாத்து),
என்றும் மாறாமல் இருப்பது, எந்த காரணத்திடமிருந்து தோன்றவில்லை (அநாதி),
இதிலிருந்தும் எதுவும் தோன்றவில்லை (அனந்தம்) சமஷ்டி பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டது..
இப்படிபட்ட ஆத்மாவை உணர்ந்து கொள்வதால் மரணத்திலிருந்து விடுபடுகின்றான்.
அறியாமை, காமம், கர்ம பலன்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலையடைகின்றான்.
———————
நாசிகேதமுபாக்யாநம் முத்யுப்ரோக்த் ஸநாதநம் –
உக்த்வா ஷ்ருத்வா ச மேதாவீ ப்ரஹ்மலோகே மஹீயதே ৷৷ 1.3.16 ৷৷
பலன் சொல்லி நிகமிக்கிறார் -மீளா லோகம்
இதில் விதேஹ முக்தியை பற்றி கூறுப்படுகின்றது. ஆத்ம தத்துவ உபதேசத்தினால் நசிகேதனால் அடையப்பெற்ற ஆத்ம ஞானம்,
எமதர்ம ராஜாவினால் உபதேசிக்கபட்ட ஞானம், எப்பொழுதும், எங்கும் இருக்கின்ற ஞானம்,
பரம்பரையாக உபதேசிக்கபட்டு வருகின்ற ஞானம், அழிவற்ற ஞானம்.
இந்த ஞானத்தை கேட்டு புரிந்து கொண்டவர்கள் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.
இந்த ஞானத்தை உபதேசிக்கின்றவர்களும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.
——————–
ய இமம் பரமம் குஹ்யம் ஷ்ராவயேத் ப்ரஹ்மஸஂஸதி –
ப்ரயத ஷ்ராத்தகாலே வா ததாநந்த்யாய கல்பதே –
ததாநந்த்யாய கல்பத இதி ৷৷ 1.3.17 ৷৷
ப்ரஹ்ம ஞானிகள் -ரஹஸ்யம் -ஸ்ரார்த்த காலம் பாராயணம் -ப்ரஹ்ம பிராப்தி -அதுவே ஆனந்தம் கொடுக்கும்
இந்த உபநிஷத்தை அர்த்தம் புரியாமல் பாராயணம் செய்பவர்கள் இறந்த பிறகு பிரம்மலோகத்திற்கு சென்று
அங்கிருந்து முக்தியடைவதற்கு வாய்ப்பு உண்டு. யாரொருவர் இந்த மேலான, ஆழமான, ரகசியமான ஆத்ம த்த்துவத்தை
தன்னை நன்கு தூய்மைபடுத்திக் கொண்டு (உடல், மனம் இரண்டையும்), சிரார்த்தம் செய்கின்ற காலத்தில்
பிராமணர்கள், சத்திரியர்கள் சபையில் மற்றவர்கள் கேட்பதற்காக சொன்னால் அப்பொழுதே
அவர்கள் மோட்சத்தை அடைவதற்கு தகுதியடைகின்றார்கள்.
৷৷ இதி ப்ரதமேத்யாயே தரிதீயா வல்லீ ৷৷
———————————–
வைதிக த்ருஷ்ட்டி -ப்ரஹ்மம் -ஸாஸ்த்ர யோநித்வாத்-வேதைக சமைதி கம்யன் —
அபசாரத்துக்கு தக்க மறு பிறவி -மானஸ -வாசிக காகித அபசாரம் -வாசி போலே ஜங்கம ஸ்தாவர இத்யாதி –
ஒன்றை பார்த்தால் மூன்றையும் அறிய வேண்டும் -பொருள் ஆத்மா பரமாத்மா வரை பர்யவசிக்க வேண்டுமே –
யோகி நிஷ்டை -வளர வளர -சரீரம் பார்க்காமல் ஆத்மா ப்ரஹ்மம் மட்டும் – அதுக்கும் மேலே ப்ரஹ்மம் மட்டும் –
ஐந்து நிலைகள் -இதுக்கும் மேலே -எல்லா ப்ரஹ்மமும் ஒன்றே என்று அறிவது ஆறாவது நிலை -ஒன்றாகவே இருக்கும் ப்ரஹ்மமே -அனைத்துமாக
பண்டித சம தர்சன–அத்விதீயம் -ப்ரஹ்மம் -ஏகமேவ -சதேவ -பல விஷயங்களை பொருட்டாகவே நினைக்காமல் –
ப்ரஹ்ம தரிசனமே யோகம் -ஸாஸ்த்ர ஞானம் கொண்டே -இந்த த்ருஷ்ட்டி வரும் -அம்ருதத்வம் அடைகிறான் –
தேக ஆத்ம விவேகம் / ஆத்ம பரமாத்மா விவேகம் -ஆத்மா பரதந்த்ரன் -மூன்றையும் மேலே மூன்று வல்லிகளும் சொல்லும் –
உன் முயற்சி இல்லை -ஸ்வாமி சொத்தை ஸ்வீ கரிப்பான் -விலக்காமை ஒன்றுமே வேண்டும் -நாய மாத்மா–பார்த்தோம்
——-
பராஞ்சி காநி வ்யதரிணத் ஸ்வயம்பூஸ்தஸ்மாத் பராங்பஷ்யதி நாந்தராத்மந் –
கஷ்சித்தீர ப்ரத்யகாத்மாநமைக்ஷதாவரித்தசக்ஷுரமரிதத்வமிச்சந் ৷৷ 2.1.1 ৷৷
வெளியில் பார்ப்பவர் -உள்ளே பார்ப்பவர் -இரண்டு வகை -இந்திரியங்கள் கானி-/விஷய சுகம்-பராஞ்சி காநி-/
மனசில் லயித்து –ஆத்மாவில் லயம் உள்ளே பார்ப்பது -த்யானம் அறிமுகம் இதில் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் -ஸ்வயம்பூ-
பாத பங்கயம் நண்ணிலா வகை எண்ணுகின்றாய் -ஐவரும் குமைக்க -அந்தராத்மாவை பார்க்காமல்
உள்ளே நோக்கி பிரத்யாகாத்மாவை பார்க்க வேண்டுமே -/ யோக காலம் -வளர்த்து கொள்ள வேண்டும் –
ஆத்மா தனக்கு நான் என்று அறிவதால் பிரத்யக் -கண்ணாடி பராக் -தனக்கு தானே தெரியாதே
தீரன் ஆத்ம தேகம் அறிந்தவன் -உள்ளே நோக்கி செலுத்துவார் -அம்ருதம் இச்சிப்பவன் இப்படி உள்ளே பார்க்க வேண்டுமே –
நமது ஞானேந்திரியங்கள் இயற்கையாகவே வெளி விஷயங்களை நோக்கி செல்வதாகவே ஈஸ்வரன் படைத்துள்ளார்.
அதனால்தான் இவைகளை வெளியுலகை நாடியே செல்கின்றது. பகவானே இவ்வாறு ஒரு கஷ்டத்தை ஜீவனுக்கு கொடுத்து விட்டார்.
இந்திரியங்களை பயன் படுத்திதான் ஆக வேண்டும் ஆனால் இவைகளுக்கு அடிமையாகி விடக்கூடாது.
அவைகள் கொடுக்கும் இன்பத்திற்கு மயங்கி விடக்கூடாது.
இவைகளை உள்முகமாக திருப்பினால், புத்தியில் ஒடுக்கப்பட்டால் புத்தியானது மிகவும் சூட்சுமமாகின்றது.
யாரோ ஒரு விவேகிதான் அந்தராத்மாவை பார்க்கின்றான். இவ்வாறு இந்திரியங்களை உட்புறமாக திருப்பியவன்
மரணத்திலிருந்து விடுபட விரும்புபவன், சம்சாரத்திலிருந்து விடுதலைப் பெற விரும்புபவன்,
மோட்சத்தை அடைவதில் தீவிர நாட்டமுடையவனாக இருக்கின்றான்..
ஆத்மா என்ற சொல் நான்கு வினையடிகளிலிருந்து தோன்றியது.
1. ஆப்னோதி இதி ஆத்மா – எது எங்கும் வியாபித்திருக்கின்றதோ அதுவே ஆத்மா
2. ஆத4த்தே – எது எல்லவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
3. அத்3தி – எது ஜீவ-ஸ்வரூப விஷயத்தில் சாட்சியாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
4. அத்தே – மூன்று காலத்திலும் அழியாமல் எது இருக்கின்றதோ அதுவே ஆத்மா
————
பராச காமாநநுயந்தி பாலா-
ஸ்தே மரித்யோர்யந்தி விததஸ்ய பாஷம் .
அத தீரா அமரிதத்வம் விதித்வா
த்ருவமத்ருவேஷ்விஹ ந ப்ரார்தயந்தே ৷৷ 2.1.2 ৷৷
வாசி அறிந்து -அசேதனம் -தாண்டி -சேதனம் -கண்ணுக்கு நேராக தெரிவது அசேதனம் –
பாலர்கள்-ஸாஸ்த்ர ஞானம் இல்லாமல் -பொருளை மட்டும் பார்த்து -சம்சாரம் -மிருத்யு -உழன்று -நரகத்தை நகு நெஞ்சே –
பாசத்துக்கு வலைப்பட்டு கமலக் கண் பாசத்துக்கு தானே அகப்பட வேண்டும் -கண் வலை படாமல் அக வலை பட வேண்டும் –
மாதரார் கயல் கண் என்னும் வலையில் பட்டு அழுந்தாமல்–சாஸ்வதமாக இருக்க இந்த லோகம் விரும்ப மாட்டார்கள்
குழந்தைத்தன்மையுடையவர்கள், விவேகமில்லாமல் வீணாக காலத்தை கழிப்பவர்கள்,
வெளியுலக இன்பம் தரும் பொருட்களை நாடுகின்றார்கள். அவர்கள் மரணத்தின் (அறியாமை, ஆசை, சம்சாரம்) பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள்,
சம்சாரம் என்னும் பிறப்பு-இறப்பு என்ற வலையில் விழுந்து விடுகின்றார்கள் இந்த நிலையில் இருப்பவர்களின் மனம் போகத்திலே இருக்கும்.
வயதாக ஆக இந்திரியங்களின் சக்த்தி குறைந்து கொண்டே போகும் அதனால் அனுபவிக்கும் சக்தியும் குறைந்து கொண்டே போகும்
எனவே மனதுயரத்தை அடைவார்கள். ஆனால் சான்றோர்கள் எங்கும் இருக்கின்ற (கால ஸ்வரூபியாக இருக்கின்ற) நிலையான
மன நிறைவை கொடுக்கின்ற மோட்சத்தை அறிந்து கொண்டு இவ்வுலகில் நிலையற்ற பொருட்களில் நாட்டம் கொள்வதில்லை, வேண்டுவதில்லை.
——————–
யேந ரூபம் ரஸம் கந்தம் ஷப்தாந் ஸ்பர்ஷா் ஷ்ச மைதுநாந் .
ஏதேநைவ விஜாநாதி கிமத்ர பரிஷிஷ்யதே ஏதத்வை தத் ৷৷ 2.1.3 ৷৷
ப்ரஹ்மம் அடையாளம் –அனுக்ரஹத்தால் சப்தாதி அறிகிறோம் -ரஸோஹம்-ப்ரஹ்மம் -தண்ணீர் தாகம் போக்க
அன்னம் பசி போக்க -சங்கீதம் இனிமை -நெருப்பு சுடும் தன்மை -எல்லா தன்மைகளும் ப்ரஹ்மமே -அறிய வேண்டும் –
நெருக்கமாக நம்மை பிடித்துக் கொண்டு ப்ரஹ்மம் இருப்பதை அறிய வேண்டுமே –
அனைத்தும் அவர் வசம் -காற்றாக வாயு பகவானை நியமித்து -அனைவரையும் திருவடி கீழ் சேர்க்க யோக நித்திரை அவன் கர்தவ்யம்
அனைத்தையும் சங்கல்ப மாத்திரம் -நமக்கு மோக்ஷ ஆசை விளைக்கவே தவம் -எதிர் சூழ் புக்கு -நான்கு யானைகள் –
ஈர வேஷ்ட்டி -த்வம் மே -நாம் அவனுக்கு மேலே சாமர்த்தியமாக ஏதேனும் விரகு பார்த்து விலகுகிறோம் –
பரமாத்மாவை சத்ய ப்ரதிஜ்ஜை பண்ண வைக்கும் சாமர்த்தியம் நமக்கு –
த்ருக் த்ருஷ்ய விவேகம் – பார்ப்பவன் வேறு, பார்க்கப்படும் பொருள் வேறு என்ற அறிவு
உதாரணமாக இந்த உடலை நான் பார்க்கின்றேன் என்று சொல்லும் போது நான் பார்ப்பவனாக இருக்கின்றேன்.
இந்த உடல் பார்க்கப்படும் பொருளாக இருப்பதால் அது வேறாக இருக்கின்றது.
ஆகவே அறிகின்ற நான் வேறு அறியப்படும் விஷயங்கள் வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
எந்த வெளி விஷயங்களில் எனக்கு அபிமானம் இருக்கின்றதோ அதற்கு வரும் நஷ்டம் எனக்கு துயரத்தை கொடுக்கின்றது.
அதேபோல இந்த உடலுக்கு ஏதாவது கஷ்டம் வரும்போது எனக்கு துயரம் உண்டாகின்றது.
எந்த சைதன்யத்தால் மட்டும் உருவம், சுவை, மணம், சப்தம், தொட்டுணர்தல் ஆகியவைகளெல்லாம் அறியப்படுகின்றதோ,
இந்திரியங்கள் விஷயத்தில் சம்பந்தம் வைப்பதால் வருகின்ற சுகம், துக்கம் கூட எந்த சைதன்யத்தால் அறியப்படுகின்றது.
பிறகு அறிய எஞ்சியுள்ளது ஒன்றுமில்லை. இதிலிருந்து ஆத்மாவால் அறியப்படாதது எதுவுமே இல்லை என்று அறியப்படுகின்றது.
இப்படிபட்ட சித் ஸ்வரூபம்தான் அந்த ஆத்மாவாகிய பிரஹ்மம். இதுவேதான் எல்லா பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.
த்ருக் த்ருஷ்ய விவேக விசாரம்:-
எது என்னால் அனுபவிக்கப்படுகின்றதோ அது நானல்ல. இந்திரியங்களின் செயல்கள் என்னுடையதாக நினைக்கப்படுகின்றது.
(உ-ம்) நான் பார்க்கின்றேன், நான் நடக்கின்றேன் என்ற இந்த வாக்கியங்களில் கண் பார்க்கின்றது,
அது பார்க்கின்ற விஷயங்கள் என்னால் அறியப்படுகின்றது. இந்திரியங்களின் செயல்கள் எனக்கு அனுபவமாகவும்,
அறிவுபூர்வமாக அறிந்து கொள்ளுவதாலும் அவைகள் நானல்ல. நம் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.
நம்முடைய உணர்ச்சிகளும் எண்ணங்கள்தான். நான் விரும்புகின்றேன், கோபத்துடன் இருக்கின்றேன் என்பதெல்லாம் எண்ணங்கள்தான்.
இவ்வாறு என் மனதிலுள்ள எண்ணங்களை நான் அறிகின்றேன். எனவே த்ருக்-த்ருஷ்ய விவேகத்தின் நியதிப்படி அவைகள்
வேறு என்று தெளிவாக அறியப்படுகின்றது. தோன்றுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் மனம் நானல்ல என்று தெரிகின்றது.
புத்தியின் செயல்களும் நம்மால் அனுபவிக்கப்படுவதால் அதுவும் நானல்ல என்று அறிந்து கொள்ள முடிகின்றது.
இதிலிருந்து எல்லாவித அனுபவங்களுக்கும் சாட்சியாக இருக்கின்ற ஆத்மாதன் பிரஹ்மம் என்று புரிந்து கொள்ள முடிகின்றது
இந்த உடல் நானல்ல என்று சொல்லும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது. இந்த உடலை நான் அனுபவிக்கின்றேன்,
இந்த உடலுக்கு ஏதாவது துன்பம் வந்தால் நான் பாதிக்கப்படுகின்றேன். பிறகு எப்படி நான் வேறாக இருக்க முடியும் என்ற ஐயம் வரும்போது
இந்த அனுபவங்கள் எல்லாம் பொய், ஏனென்றால் அனுபவம் எப்பொழுதும் பொய்யாகத்தான் இருக்கும்.
நீலவானம், சூரியோதயம் இவை அனுபவத்தில் வானம் நீலவர்ணமாகவும், சூரியன் கிழக்கில் உதிப்பது போலவும் இருக்கின்றது
ஆனால் நம் அறிவில் இவைகள் பொய் என்று தெரிகின்றது. எனவே அறிவுதான் எப்பொழுதும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு
அனுபவம் ஒரு அத்யாஸம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அனுபவம் பொய்யென்று எப்படி புரிந்து கொள்வது? இந்த சரீரத்தில் நான் என்ற அபிமானம் வைப்பதனால் இது நான் என்று
எண்ணிக் கொண்டு இதற்கு வரும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று உணர்கின்றோம்.
வெளி விஷயங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உண்மையில் நம்மை பாதிக்க கூடாது
ஆனால் நாம் அபிமானிக்கும் விஷயமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுகின்றோம்.
உதாரணமாக நம்முடைய நெருங்கிய உறவினர்க்கோ, நண்பருக்கோ ஏதாவது துன்பம் வந்தால் நாமும் பாதிக்கப்படுகின்றோம்,
ஏனென்றால் அவர்கள் மீது நாம் அபிமானம் வைத்திருக்கின்றோம். ஆகையால் ஏதாவது ஒரு பொருள் மீது பற்று வைக்கும் போது
அதற்கு வரும் நலம்-கேடு என்னைப் பாதிக்கின்றது. நாம் நம் உடலின் மீது அபிமானம் வைத்திருப்பதால் அதனால் பாதிப்பை அடைகின்றோம்.
த்ருக்-த்ருஷ்ய விவேகம் முக்தியை கொடுக்காது, ஆனால் நம்மை இந்த சரீரத்திலிருந்து விடுவித்து விடும்.
அதே போல மனம், புத்தி அனைத்தும் நானல்ல என்று நீக்க வேண்டும்.
————–
ஸ்வப்நாந்தம் ஜாகரிதாந்தம் சோபௌ யேநாநுபஷ்யதி –
மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 2.1.4 ৷৷
ஸ்வப்னம் பதார்த்தங்களும் பரமாத்மாவே ஸ்ருஷ்ட்டி -கர்மம் அடியாகவே -ஸ்வப்னத்தில் பயப்படுத்தி பாபம் போக்கும் பரம காருணிகன்-
விழித்து இருக்கும் தசையில் கேட்க வேண்டாமே -மஹான் விபு -அனைத்தும் இவனால் அறிய வேண்டுமே
இந்த ஸ்லோகத்தில் அவஸ்தா த்ரயம் மூலம் ஆத்ம தத்துவம் விளக்கப்படுகின்றது.
நாம் ஒவ்வொருவரும் மூன்று விதமான அனுபவங்களை உடையவராக இருக்கின்றோம்.
அவைகள் 1. விழிப்பு நிலை (ஜாக்ரத் அவஸ்தா) – வெளியே இருக்கும் உலகத்தை அனுபவிக்கின்றோம்.
2. கனவு நிலை (ஸ்வப்ன அவஸ்தா) – இந்திரியங்களின் துணையில்லாமலே மனதினாலே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அனுபவிக்கின்றோம்.
3. ஆழ்ந்த உறக்கம் (சுஷூப்தி அவஸ்தா) – இந்த நிலையில் அறியாமையுமிருக்கின்றது, சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.
ஆத்மாவானது விழிப்புநிலை பதார்த்தங்களையும், கனவுநிலை பதார்த்தங்களையும் பார்த்து கொண்டு இருக்கின்றது.
இவைகளுக்கு சாட்சியாக இருந்து கொண்டு எந்தவிதமான அவஸ்தைகளையும் அனுபவிப்பதில்லை, அதற்கென்று எந்த அனுபவமும் கிடையாது.
கனவுலகில் அனுபவிக்கும்போது விழிப்பு நிலை பொருட்கள் எதுவும் நமக்கு பயன்படாது,
அதேபோன்று கனவுலகில் அனுபவிக்கும் எந்த விஷயமும் விழிப்பு நிலையில் பயன்படாது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எது வந்து போகின்றதோ அது அநித்யம் என்றும் எது தொடர்ந்து இருக்கின்றதோ
அதுதான் நித்யம் ( நிலையானது ) என்பதாகும்.
இந்த மூன்று நிலைகளிலும் வந்து போவது விழிப்பு நிலை பிரபஞ்சமும், கனவு நிலை பிரபஞ்சமும்தான்,
தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது நான் என்கின்ற ஆத்மா என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.
நாம் காலம், தேசம், வஸ்து இவைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றோம், நானேதான் ஆத்மா என்று
புரிந்து கொண்டால் நமக்கு இவைகளால் எந்தவிதமான பயமும் வராது.
கனவுநிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள், விழிப்பு நிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள்
இந்த இரண்டும் எந்த சைதன்யத்தால் பார்க்கப்பட்டு கொண்டிருக்கின்றதோ அது எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும்,
பூரணமான ( தேச, கால, வஸ்து பரிச்சேத ரஹிதம்) ஆத்மாவாக விவேகிகள் அறிந்து கொண்டு துன்பத்தை அனுபவிப்பதில்லை.
——————–
ய இமம் மத்வதம் வேத ஆத்மாநம் ஜீவமந்திகாத் .
ஈஷாநம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத் ৷৷ 2.1.5 ৷৷
ப்ரஹ்மம் கொஞ்சம் அறிந்து -ஆசை கொண்டவன் -தப்பாக செயல்பட்டாலும் வெறுக்காதே –
ரொம்ப நல்லவன் ப்ரஹ்ம ஞானம் இல்லாமல் இருந்தால் கிட்டாதே
இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரனை பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.
ஸத் – மூன்று காலத்திலும் இருப்பது
சித் – அறிவு ஸ்வரூபமாக இருப்பது
ஆனந்தம் – பூரணமாக இருப்பது
இதுதான் பிரம்மத்தின் லக்ஷணம், இது அநாதி, அதேபோன்று மாயாவும் அநாதி.
இது இரண்டும் சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரன் என்று அறியப்படுகின்றது.
மூன்று விதமான பார்வையில் ஈஸ்வரனுக்கு மூன்றுவிதமான பெயர்கள் உள்ளது.
1. மாயையோடு இருக்கும் பிரம்மமான ஈஸ்வரனுக்கு அந்தர்யாமி என்று பெயர். மாயைக்கு இருத்தல் என்ற தன்மையை கொடுப்பவர் ஈஸ்வரன்.
2. மாயைக்கு காரண பிரபஞ்சம் என்றும் கூறுவர். இதுவே இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கின்றது.
சூட்சும பிரபஞ்சம் முதலில் மாயையிலிருந்து தோன்றியது. இதிலிருந்து நம்முடைய சூட்சும சரீரமும் தோற்றுவிக்கப்படுகின்றது.
இப்பொழுது சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரனுக்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.
3. சூட்சும பிரபஞ்சத்திலிருந்து ஸ்தூல பிரபஞ்சம் தோன்றியது. சூட்சும பஞ்ச பூதங்கள் ஸ்தூலமாக மாற்றும் முறைக்கு பஞ்சிகரணம் என்று பெயர்.
ஸ்தூல பிரபஞ்சத்தோடு பிரம்மத்தை ஈஸ்வரனாக பார்த்தால் அதற்கு விராட் என்று பெயர்.
இதே போன்று ஜீவனுக்கும் மூன்று சரீரத்தின் அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவைகள்
1. ஆத்மா என்றழைக்கப்படும் பிரம்மமே மூன்று சரீரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.
காரண சரீரத்தோடு இந்த ஆத்மாவை பார்த்தால் அதற்கு ஜீவன் என்று பெயர்.
இதில் அறியாமை நிறைந்திருப்பதால் காரண சரீரத்தை அவித்யா என்றும் கூறுவர்.
ஆழ்ந்த் உறக்கத்திலும் அறியாமை இருக்கின்றது, இந்த அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.
2. காரண சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் தோன்றுகிறது. இந்த சூட்சும சரீரத்தோடு பார்க்கும் போது அதற்கு தைஜஸன் என்று பெயர்.
3. ஸ்தூல சரீரத்தோடு ஆத்மாவை பார்த்தால் அதற்கு விஸ்வன் என்று பெயர்.
ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயர். கனவு நிலையில் உள்ள ஜீவனுக்கு தைஜஸன் என்று பெயர்.
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர். மூன்று நிலைக்கும் பொதுவாக இருப்பவன் ஜீவன்.
சமஷ்டி மாயைக்கு அந்தர்யாமி என்று பெயர், வியஷ்டி மாயைக்கு பிராக்ஞன் என்று பெயர்.
சமஷ்டி சூட்சும மாயைக்கு ஹிர்ண்யகர்ப்பன், வியஷ்டி சூட்சும மாயைக்கு தைஜஸன்
சமஷ்டி ஸ்தூல மாயைக்கு விராட், வியஷ்டி ஸ்தூல மாயைக்கு விஸ்வன்.
மந்திர விளக்கம்:
யாரொருவர் இந்த ஜீவனை ( கர்ம பலனை அனுபவிப்பவன் ) மூன்று காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனிடத்திலிருந்து
வேறுபாடில்லாமல் அறிகின்றானோ அவர் இந்த அறிவுக்கு பிறகு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றான் ( ந விஜுகுப்ஸதே ). இந்த ஆத்மாதான் அந்த ஈஸ்வரன்.
ந விஜுகுப்ஸதே – பலன் விசாரம்:-
எல்லோரும் தன்னுடைய பாதுகாப்பை நாடித்தான் எல்லா செயல்களையும் செய்கின்றார்கள்.
அதனால் தான் துயரத்தை அனுபவிக்கின்றார்கள். எல்லோரும் பயத்தின் நடுவில்தான் வாழ்கின்றோம் என்று சங்கரர் சொல்கிறார்.
நம்மால் எந்தப்பொருளை காப்பாற்ற முடியும், உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் அழிவை அடையக்கூடியது,
எனவே அவைகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியால் எந்த பலனும் கிடைக்காது. அழியாத பொருட்களை காப்பாற்ற தேவையில்லை.
இந்த அறிவால் அழியப்போகும் இந்த உடலை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் நீங்குவதுடன்,
அதை காப்பாற்று எடுக்கும் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது என்று உணர்ந்தவுடன்,
அதிலிருந்து வரும் துயரங்களிலிருந்து விடுபடுகின்றோம். நானே ஆத்மா என்று அறிந்தவுடன்,
நான் அழியாதவன் அதனால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயம் நீங்க்யவனாக இருந்து கொண்டிருப்பேன்.
ஆத்மா ஒன்றுதான் எனவே எனக்கு பயமும் கிடையாது, துயரமும் கிடையாது.
இந்த ஞானம் வந்தவுடன் எந்தப் பொருட்களிட்த்திலும் வெறுப்போ, அருவெறுப்போ வருவதில்லை.
நானே அனைத்துமாக இருப்பதால் யாரையும் வெறுக்க முடியாது, அருவெறுப்பு கொள்ள முடியாது.
—————–
ய பூர்வம் தபஸோ ஜாதமத்ப்ய பூர்வமஜாயத .
குஹாம் ப்ரவிஷ்ய திஷ்டந்தம் யோ பூதேபிர்வ்யபஷ்யத ஏதத்வை தத் ৷৷ 2.1.6 ৷৷
அப்பு -தண்ணீர் -முதலில் -பெரிய நீர் படைத்து -நாபி கமலம் -சதுர்முக ப்ரம்மா -நான்முகனை நாராயணன் படைத்தான்
எங்கும் வியாபித்து -உபாதானம் நிமித்த சஹகாரி த்ரிவித காரணமும் ப்ரஹ்மமே –
அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் -காரணமே அவன் என்று உணர்ந்து நெருக்கம் கொள்ள வேண்டுமே
அந்தர்யாமியின் தவத்தின் பலனாக ஸ்தூலமான நீர் போன்ற பஞ்ச பூதங்களுக்கு முன் ஹிரண்யகர்ப்பன் தோன்றினார்.
ஒவ்வொரு ஜீவராசியின் புத்தியில் நுழைந்து சூட்சும சரீர அங்கங்களில் இருக்கின்றார் என்று யார் அறிகின்றார்களோ அவர்களுக்கு.
இந்த ஹிரண்யகர்ப்பன்தான் அந்த பிரம்மம் என்ற அறிவும் கிடைக்கின்றது
சூட்சும சரீரம் – ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி, சித்தம்
மற்றும் அகங்காரம் இவைகள் சேர்ந்து இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இதனை பிராண சரீரம் என்றும் கூறுவர்
—————–
யா ப்ராணேந ஸம் பவத்யதிதிர்தேவதாமயீ –
குஹாம் ப்ரவிஷ்ய திஷ்டந்தீம் யா பூதேபிர்வ்யஜாயத ஏதத்வை தத் ৷৷ 2.1.7 ৷৷
அதிதி -ஆத்மா -இங்கு -பிராணன் உடன் -இந்திரியங்கள் உடன் -சரீரம் -ஆத்மாக்குள்ளும் வியாபித்து
க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞன் -ஸ்ரீ கீதை –அனைத்தும் ப்ரஹ்ம சரீரம் –நான் சரீரமா -சதஸ் -சொல்லி -சமாளிக்க ப்ரஹ்மம் சரீரீ -தானே
யார் பிராண ரூபமாக தோன்றியுள்ளாரோ, அவரே ஞானேந்திரியங்களின் வழியாக உலகத்திலுள்ள விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்.
இவ்வாறு எல்லா சூட்சும சரீரங்களில் இருந்து கொண்டு இந்த உலகத்தை அனுபவிக்கும் ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுமாக இருப்பவர்.
ஒவ்வொரு இந்திரியத்தையும் தேவதையாக எடுத்துக் கொண்டால் எல்லா தேவதைகளுமாக இவர் இருக்கின்றார் என்ற அறிவும் கிடைக்கின்றது.
இவர் ஒவ்வொரு ஜீவராசிகளின் இதயத்தில், புத்தியில், மனதில் வீற்றிருக்கின்றார். இந்த ஹிரண்யகர்ப்பனே அந்த பிரம்மம்.
ஐந்து சூட்சும பூதங்களிலிருந்து ஸ்தூல பூதங்கள் தோன்றுகின்றது.
—————–
அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா கர்ப இவ ஸுபரிதோ கர்பிணீபி–
திவே திவ ஈட்யோ ஜாகரிவத்பிர்ஹவிஷ்மத்பிர்மநுஷ்யேபிரக்நி ஏதத்வை தத் ৷৷ 2.1.8 ৷৷
அக்னிக்குள்ளும் ப்ரஹ்மமே
அக்னியை விராட் என்று அழைக்கப்படுகின்றது, இதுதான் நம்மால் பார்க்கக்கூடிய பஞ்ச பூதங்களில் முதலில் இருப்பது.
அரணி என்ற இரண்டு மரக்கட்டைகளுக்குள் இருக்கின்ற அக்னியானது கருவுற்ற பெண்களால் காக்கப்படுகின்ற கருவைப்போல
உபாஸனை செய்கின்ற மனிதர்களால் யாகம் செய்கின்ற மனிதர்களால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வழிபடப்படுகின்றது.
அரணி கட்டையும், வயிறும் விராட்டின் மறுபெயர்களாகும். இந்த விராட் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்.
இதன் மூலம் இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின் ஸ்தூல உடல்களிலும் நான் இருக்கின்றேன் என்ற ஸர்வாத்மா புத்தி ஏற்பட வேண்டும்.
———————-
யதஷ்சோதேதி ஸூர்யோஸ்தம் யத்ர ச கச்சதி .
தம் தேவா ஸர்வே அர்பிதாஸ்தது நாத்யேதி கஷ்சந ஏதத்வை தத் ৷৷ 2.1.9 ৷৷
சூரியனுக்குள்ளும் ப்ரஹ்ம -ப்ரஹ்ம ஞானம் வேண்டுமே -பழுதே பல பகலும் போயின என்று அஞ்ச வேண்டுமே
இதில் ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை விளக்கி ஐக்கியம் கூறப்படுகின்றது. எந்த தத்துவத்திலிருந்து ( ஹிரண்யகர்ப்பன்)
சூரியன் உதிக்கின்றானா, அஸ்தமனம் ஆகின்றானோ எல்லா தேவதைகளும் அந்த தத்துவத்தையே சார்ந்திருக்கின்றார்கள்.
எந்த ஒன்றும் அந்த தத்துவத்தை மீறுவதில்லை. அந்த ஹிரண்யகர்ப்ப தத்துவமே பிரம்ம்ம் என்று தெரிந்து கொள்
—————-
யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததந்விஹ –
மரித்யோ ஸ மரித்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஷ்யதி ৷৷ 2.1.10 ৷৷
இங்கு இருக்கிறது அது -அங்கு எதுவோ அது இது தான் -வைகுண்ட பெருமாளே இங்கும் அங்கும் வியாபித்து
ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றே இல்லையே
இரண்டாவது உண்டு என்று பார்த்தால் மிருத்யு அடைகிறாய்
ப்ரஹ்மத்தால் வியாபித்து பட்டு தான் அனைத்தும்
ஒரே ப்ரஹ்மம் தான் -இந்த இரண்டையும் அறிய வேண்டும்
இதில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம் சொல்லப்படுகின்றது. எந்த ஒன்று இங்கு இருக்கின்றதோ அதுவே அங்கும் இருக்கின்றது.
எது அங்கேயிருக்கின்றதோ அதுவே மிக அருகில் இங்கே இருக்கின்றது.
எந்த தத்துவம் ஜீவ சம்சாரத்தை அடைந்த்து போல் இருக்கின்றதோ அதுவே சம்சாரத்தை கடந்ததாக இருக்கின்றது.
சம்சாரியாக தெரிகின்ற ஜீவனும், சம்சாரமற்ற ஈஸ்வரனும் ஒன்று இங்கு சொல்லப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழும் போது கடல்-அலை உதாரணத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம்.
அலைகள் கடலிலே தோன்றி பின்பு அதிலேயே அழிந்து விடுகின்றது. கடலில் இருப்பதும் நீர்தான், அலைகளில் இருப்பதும் நீர்தான்.
நீர் என்ற ஒன்று அலைகள் என்று கூறுவது வியஷ்டியை குறிக்கின்றது, கடலை குறிப்பிடும்போது சமஷ்டியை குறிக்கின்றது.
ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பிரம்மத்தின் அடிப்படையில் வேறுபாடில்லை, ஆனால் நாம-ரூபத்தில் வேறுபட்டிருக்கின்றது.
அலைகள் கடலில் தோன்றி அதிலேயே மறைந்து விடுவது போல ஜீவன் ஈஸ்வரனிட்த்திலிருந்து தோன்றி அவரிடமே லயமடைந்து விடுகின்றான்.
சரீரத்தில் அபிமானம் இருந்து கொண்டிருக்கும்வரை ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே த்வைத புத்தி இருந்து கொண்டேயிருக்கும்.
அதாவது ஈஸ்வரன் படைப்பவன், நான் படைக்கப்பட்டவன் என்ற இருமை புத்தி இருந்து கொண்டேயிருக்கும்.
மந்திர விளக்கம்:
யாரொருவன் ஜீவ-ஈஸ்வர விஷயத்தில் வேறுபாடு இருப்பது போல் பார்க்கின்றார்கனோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றான்.
அதாவது எவனொருவன் ஈஸ்வரனை தனக்கு வேறாக பார்க்கின்றானோ அவன் சம்சாரத்தில் சுழலிலேயே இருக்கின்றான்,
பிறவி பெருங்கடலை கடக்காமல் இருக்கின்றான்.
—————
மநஸைவேதமாப்தவ்யம் நேஹ நாநாஸ்தி கிம் சந –
மரித்யோ ஸ மரித்யும் கச்சதி ய இஹ நாநேவ பஷ்யதி ৷৷ 2.1.11 ৷৷
சுத்தமான மனசாலே அறிய முடியும் இந்த ப்ரஹ்மாத்மாக விஷயம் -ஸாஸ்த்ர வாசனையால் சம்ஸ்காரம் பண்ணப் பட்ட மனஸ்
பல கிடையாது -ஒன்றே -இஹ இங்கே -நானாத்வம் இல்லை -ஒரே ப்ரஹ்மமே அந்தராத்மா
நேஹ நானாஸ்தி கிஞ்சன:-. (விசாரம்)
இந்த உலகில் மிக சிறிதளவு கூட வேறுபாடு கிடையாது. இந்த உலகம் நாம் அனுபவிக்கவில்லையென்றால்
அது இல்லை என்று சொல்ல தேவையில்லை. உலகமே இல்லையென்றால் அது இல்லை என்று சொல்ல தேவையில்லை.
இல்லாத ஒன்றில் இருக்கின்றது என்ற அறிவு இருக்கும்போதுதான் இல்லை என்று நீக்க முடியும்.
உதாரணமாக பிளாஸ்டிக் மலரை நிஜம் என்று நினைக்கும் போது அது நிஜமில்லை என்று சொல்வது போல.
தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையிலே வெறும் தோற்றமே உண்மையான தோற்றம் கிடையாது
நான் மட்டும்தான், பிரம்மம் மட்டும்தான் இருக்கின்றது என்ற அறிவை அடைந்திட வேண்டும். தூய்மையான மனதினால்தான் இந்த அறிவை அடைந்திட முடியும்.
சில உபநிஷத்தில் மனதினால் ஞானத்தை அடைந்திட முடியாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆனால் இங்கோ தூய்மையான மனதினால்தான் அடைய முடியும் என்று கூறப்பட்டிருக்கின்றது.
இந்த முரண்பாட்டை விசாரம் செய்து நீக்க வேண்டும். ஆத்ம ஞானத்திற்கு மனம் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்போம்.
சாதாரன அறிவு எப்படி ஏற்படுகின்றது என்றால் மனமானது கண் பார்க்கும் பொருளின் வடிவமாக மாறுகின்றது
இதற்கு விருத்தி (எண்ணம்) என்று பெயர். எண்ணம் பார்க்கும் பொருளை முழுவதுமாக வியாபித்தல் என்பதற்கு விருத்தி வியாப்தி என்று பெயர்.
நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களும் வெறும் ஜடம். சைதன்யத்தின் பிரதிபிம்பத்தால் (சிதாபாஸம்) விருத்தியை வியாபிக்கும்போது
நமக்கு அந்த விருத்தி வியாபித்த பொருளை பற்றிய அறிவு ஏற்படுகின்றது. இதற்கு பல-வியாப்தி என்று பெயர்.
விருத்தி வியாப்தியும், பல வியாப்தியும் சேர்ந்து நடைபெறுவதால்தான் நமக்கு அறிவு வருகின்றது.
ஆத்மாவை அறியும் விஷயத்தில் பல வியாப்தி தேவையில்லை வெறும் வியாப்தி மட்டும் இருந்தால் போதும்.
உதாரணமாக இருட்டான அறையில் உள்ள புத்தகத்தை எடுப்பதற்கு கதவை திறக்க வேண்டும்,
பிறகு வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் புத்தகத்தை எடுக்க முடியும்.
ஆனால் எரிந்து கொண்டு இருக்கும் மெழுகு வர்த்தியை எடுப்பதற்கு கதவை திறந்தால் மட்டும் போதும்,
வெளிச்சம் தேவையில்லை, ஏனென்றால் அந்த மெழுகுவர்த்தியே வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கின்றது.
அதுபோல ஆத்ம விஷயத்தில் சிதாபாஸத்தினுடைய பல வியாப்தி தேவையில்லை.
ஆகவே மனம் தேவையில்லை என்று சொல்லும் போது பல வியாப்தி தேவையில்லை என்றும்,
மனம் தேவை என்று சொல்லும்போது விருத்தி வியாப்தி தேவையென்று புரிந்து கொள்ள வேண்டும்.
மந்திர விளக்கம்:-
யார் இங்கு ஈஸ்வரனுக்கும், உலகத்திற்குகிடையே வேறுபாட்டை பார்க்கின்றார்களோ அவர்கள் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றார்கள்.
இது நம்மை துயரத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும். இங்கு மரணம் என்பதற்கு காம, க்ரோதம், போன்றவற்றிலிருந்து
அடைகின்ற துன்பத்தை குறிக்கின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
———————-
அங்குஷ்டமாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி –
ஈஷாநம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத் ৷৷ 2.1.12 ৷৷
ப்ரஹ்மம் இவ்வளவு அருகில் -கட்டை விரல் அளவில்-சுருக்கிக் கொண்டு கருணையால் -புத்திக்கு பிடிக்கும் படி
பெரியவர் -அனைத்தைக்கும் ஸ்வாமி -வெறுப்பு இல்லாமல் -விஜுகுப்ஸதே -அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து
கட்டைவிரல் அளவுள்ள ஆத்மா என்று இங்கு குறிப்பிடுவது இதயத்திற்குல் இருக்கும் ஆகாசத்தைத்தான்.
இதயமே மனதின் இருப்பிடம், இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தில்தான் அந்தக்கரணம் இருக்கின்றது.
இந்த ஆகாசம் நமது கட்டைவிரலில் அளவு உள்ளது. இப்படிபட்ட மனதை உபாதியாகவும், அதற்கு ஆதாரமாகவும் இருப்பதுதான்.ஆத்மா.
இந்த உடலின் மையப்பகுதியான இதயத்திற்குள் ஆத்மா இருக்கின்றது. இந்த ஆத்மாவே எல்லா காலத்திலும் இருக்கின்ற
ஈஸ்வரனாகவும் இருக்கின்றது. இந்த ஐக்கிய ஞானத்தை புரிந்து கொண்டபிறகு எதற்கும் கவலைப்பட தேவையில்லை,
பாதுகாப்பை தேடிக் கொள்ள தேவையில்லை, எந்த ஜீவராசிகளையும் வெறுக்க மாட்டோம்.
—————
அங்குஷ்டமாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக .
ஈஷாநோ பூதபவ்யஸ்ய ஸ ஏவாத்ய ஸ உ ஷ்வ ஏதத்வை தத் ৷৷ 2.1.13 ৷৷
மூன்று காலங்களிலும் இவனே சர்வேஸ்வரன் –ஜ்யோதிரிவாதூமக . -புகை இல்லாத ஜோதி
கட்டைவிரல் அளவுள்ள ஆத்மாவானது ஒளியைப் போல இருக்கின்றது. இருளில் மறைந்துள்ள பொருட்களை அறிய உதவுவது போல
உபநிஷத் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுக்கின்றது இந்த ஆத்மாவினால்தான் அனைத்துமே அறியப்படுகின்றது.
நான் என்னை எதனுடைய உதவியில்லாமலே அறிகின்றேன். புகை நெருப்பை மறைக்கலாம்,
ஆனால் அறியாமை இந்த ஆத்மாவை மறைக்க முடியாது. ஆத்மா அறியாமையையும், அறிவையும் பிரகாசிக்கின்றது
எல்லா காலத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற ஈஸ்வரனே இப்பொழுதும் இருக்கின்றான், நாளையும் இருக்கும், என்றும் இருப்பதும்,
எல்லாகாலத்திலும் இருப்பதுமான இந்த ஆத்மாதான் அந்த பிரம்மமேயாகும்.
————-
யதோதகம் துர்கே வரிஷ்டம் பர்வதேஷு விதாவதி –
ஏவம் தர்மாந் பரிதக் பஷ்யம் ஸ்தாநேவாநுவிதாவதி ৷৷ 2.1.14 ৷৷
மலைக்கு மேலே மழை பெய்து – நீர் அருவிகள் கிளை -ஒன்றாக -இருந்தும் பெயர்கள் ரூபங்கள் மாறும் –
அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர்–புத்தி வாசி மதங்கள் –
ஆகாசாத் பதிதம் தோயம் –சர்வ தேவ நமஸ்காரம் கேசவனையே சேரும்
இருமைதான் நம்மை சம்சாரத்தில் வைத்திருக்கின்றது. எவ்வாறு நீரானது மலை உச்சியில் மழையாக பொழிந்தால்
அது மலைகளிலிருந்து கீழே ஓடி வந்து மறைந்து விடுகின்றது. அதுபோல ஜீவர்களை வேறுபாட்டுடன் யார் பார்க்கின்றார்களோ
அவர்கள் அந்த தவறான அறிவினால் சம்சாரத்தில் வீழ்ந்து துன்பமடைகின்றார்கள்.
உடல், மனம் என்று யார் ஜீவர்களை பார்க்கின்றார்களோ அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றார்கள்.
ஈஸ்வர புத்தியோடு இந்த உலகத்தை பார்த்தால் அது நமக்கு இன்பத்தை கொடுக்கும்.
——————-
யதோதகம் ஷுத்தே ஷுத்தமாஸிக்தம் தாதரிகேவ பவதி –
ஏவம் முநேர்விஜாநத ஆத்மா பவதி கௌதம ৷৷ 2.1.15 ৷৷
தண்ணீர் தண்ணீர் கலந்தது போலே ப்ரஹ்ம ஞானம் அறிந்து சாம்யா பாதி மோக்ஷம் –
அஷ்ட குண சாம்யம் -குண அனுபவம் பண்ணி ஆனந்தம்
எவ்வாறு தூய்மையான நீரானது தூய்மையான நீரில் கலந்தால் வேற்றுமையின்றி அதேபோன்று இருக்கின்றதோ
அதுபோல இந்த தத்துவத்தை அறிகின்ற முனிவனுக்கு ( சிரவணம், மனனம் இவைகளை தாண்டி நிதித்யாஸனத்தில் இருப்பவன்)
ஆத்மாவாக எல்லாமும் இருக்கின்றது. தூய்மையான நீரோடு தூய்மையான நீரை சேர்க்கும்போது இரண்டும் ஒன்று சேர்ந்து விடுவது போல
ஆத்மாவை அறிந்தவன் ஆத்மாகவே இருப்பதை உணர்கின்றான், அந்த பிரம்மமாகவே மாறி விடுகின்றான்.
৷৷ இதி த்விதீயோத்யாயே ப்ரதமா வல்லீ ৷৷
—————————————————–
புரமேகாதஷத்வாரமஜஸ்யாவக்ரசேதஸ–
அநுஷ்டாய ந ஷோசதி விமுக்தஷ்ச விமுச்யதே ஏதத்வை தத் ৷৷ 2.2.1 ৷৷
அறிய அறிய விளக்கம் -அனுபவத்துக்கு அசை போட்டு -அனுஷ்டானம்
ஏகாதச துவாரம் -11-வாசல் கதவு -சரீரம் – உள்ளே இருப்பது ஆச்சர்யம்
முகத்தில் ஏழு -நாபி மலம் ஜலம் ப்ரஹ்ம யந்த்ரம் -ஆக 11-திறந்தே இருக்குமே
விமுக்தஷ்ச விமுச்யதே -ஞானத்துடன் வெளியில் போனால் முத்தனாகிறான்-அறிந்து கொள்ள வேண்டும்
இந்த உடலானது பதினொன்று வாயில்களை உடையதாக வருணிக்கப்படுகின்றது.
நாபியும், தலையுச்சியில் இருக்கின்ற இரண்டு துவாரங்கள் சேர்த்து ஏற்கனவே உள்ள ஒன்பது துவாரங்களான
இரண்டு கண்கள், இரண்டு மூக்கு துவாரங்கள், இரண்டு காதுகள், ஒரு வாய், ஒரு ஆசன துவாரம், ஒரு மூத்திர துவாரம் ஆகியவைகள்.
சில துவாரங்கள் வழியே வெளி விஷயங்கள் உள்ளே தள்ளப்படுகின்றது,
சில துவாரங்கள் வழியே விஷயங்கள் வெளியே தள்ளப்படுகின்றது.
கோளகம் என்பது இந்திரியங்களின் இருப்பிடமாக கூறப்படுகின்றது.
உறங்கும் போது அவைகள் இருதயத்திற்கு சென்று விடுகின்றது. உடலுக்கு அரசனாக இருப்பது ஜீவாத்மா.
வேறுபாடுகளற்ற சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்ற பிறப்பு-இறப்புகளில்லாத ஆத்மாவினுடையது இந்த உடல்
என்று நிதித்யாஸனம் செய்து அதாவது இந்த ஞானத்தை நன்கு தியானம் செய்வதனால் அடையப்பெறும்
ஞானநிஷ்டையினால் துயரங்கள் வருவதில்லை. இந்த நிலையையே மோட்சம்,
இதை அடைந்ததினால் சம்சாரத்திலிருந்து விடுதலையடைந்து ஜீவன் முக்தனாகின்றான்.
( சம்சாரம் என்பது ராக, துவேஷ, மத, மாச்சர்ய போன்ற குணங்கள் சேர்ந்த நிலையேயாகும் ).
மீண்டும் அவன் பிறப்பதில்லை, இறப்பதுமில்லை, பிறப்பு-இறப்புகளில்லாத நிலையை அடைகின்றான்.
——————-
ஹ் ஸ ஷுசிஷத் வஸுரந்தரிக்ஷஸத்தோதா வேதிஷததிதிர்துரோணஸத் –
நரிஷத் வரஸதரிதஸத்வ்யோமஸதப்ஜா கோஜா றதஜா அத்ரிஜா றதா பரிஹத் ৷৷ 2.2.2 ৷৷
அக்னி வாயு -அதிதி -தண்ணீர் பசு மாட்டில் மலையில் இருந்து பிறந்ததாக எதுவாக இருந்தாலும் ப்ரஹ்மமே –
ஐததாத்ம்யம் ஏக ஆத்மா -ப்ரஹ்மத்தால் வியாபகம் ஒன்றே அனைத்துக்கும் பொதுவான விசேஷணம் —
எல்லாவிடத்திலும், எல்லா சரீரங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றது ஆத்மா.
இதுவே சொர்க்கத்தில் சூரியனாகவும், சொர்க்கத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள ஆகாசத்தில் வாயுவாக இருக்கின்றது.
பூமியில் அக்னியாக இருப்பதும், நம்முடைய வீட்டில் விருந்தினராக இருப்பது போல எல்லா மனிதர்களிடத்திலும், தேவர்களிடத்திலும் இருக்கின்றது..
யாகங்களிலும், ஸத்யத்திற்குள்ளும் இருக்கின்றது. ஆகாசத்திலும், நீர்வாழ் பிராணிகளிடத்தில், நிலத்தில் உள்ள தாவரங்கள் அனைத்திலும்,
விதவிதமான யாகங்களின் அங்கங்களிடத்திலும், மலைகளிலிருந்து உருவாகும் நதிகளிலும் இருக்கின்றது.
மூன்று காலத்தில்லும் இருப்பது, மிகப்பெரியது, பூரணமானது இந்த ஆத்மா.
——————–
ஊர்த்வம் ப்ராணமுந்நயத்யபாநம் ப்ரத்யகஸ்யதி –
மத்யே வாமநமாஸீநம் விஷ்வே தேவா உபாஸதே ৷৷ 2.2.3 ৷৷
பிராண வாயு அபான வாயு கீழே -ஹிருதய கமலத்தில் இருந்து நியமனம் –
விஷ்வே தேவா உபாஸதே- அனைவரும் ஆராதிக்கிறார்கள் –
ஆத்மா இருப்பதினால் இந்த உடல் செயல்படுகின்றது. அது இல்லாத உடல் வெறும் ஜடம்தான்.
அன்வய-வ்யதிரக நியாயம்: எது இருந்தால் மற்றொன்றும் இருக்குமோ,
எது இல்லாமலிருந்தால் மற்றொன்றும் இல்லாமல் இருக்குமோ அதுவே அதற்குக் காரணம்.
உதாரணமாக களிமண் இருந்தால் பானை இருக்கின்றது. அது இல்லையென்றால் பானையும் இருக்காது
எனவே களிமண் பானைக்கு காரணமாக இருக்கின்றது/ அதுபோல ஆத்மா இருப்பதால்தான் பிராணன், மனம் ஆகியவை செயல்படுகின்றது,
அது இல்லையென்றால் இவைகள் செயல்படுவதில்லை, எனவே ஆத்மாதான் இந்த உடலுக்கு காரணம் என்ற கருத்து இந்த மந்திரத்தில் விளக்கப்படுகின்றது.
பிராணனை மேல்நோக்கி இழுக்கின்றது, மேல் நோக்கி செல்ல காரணாமாக இருக்கின்றது,
அபானனை கீழ்நோக்கி தள்ளுகின்றது. இதயத்தை இருப்பிடமாக கொண்டிருக்கின்ற , இதயத்தில் வெளிப்படுகின்ற,
வணங்கதக்கதாகவும் இருக்கின்ற ஆத்மாவை, எல்லா இந்திரியங்களும் வணங்குகின்றன.
எல்லா இந்திரியங்களும் அந்தந்த விஷயங்களை கிரகித்து ஆத்மாவிடம் சமர்ப்பிகின்றது என்பதையே வணங்குதல்
என்ற சொல்லின் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
————
அஸ்ய விஸ்ரம் ஸமாநஸ்ய ஷரீரஸ்தஸ்ய தேஹிந–
தேஹாத் விமுச்யமாநஸ்ய கிமத்ர பரிஷிஷ்யதே ஏதத்வை தத் ৷৷ 2.2.4 ৷৷
ஜீவன் -வாழ்ந்து -விலகி -புகுந்து -மூன்றுக்குள்ளும் அதே ப்ரஹ்ம -இத்தை அறிந்தால் போதும்
இந்த உடலில் உள்ள உயிரானது, உடலை விட்டுப் பிரிந்து விட்டால், வெளியேறிய பிறகு அங்கு என்ன எஞ்சியிருக்கின்றது,
ஒன்றுமில்லை என்று குறிப்பிடப்படுகின்றது. இதுவே நீ கேட்ட அந்த பிரம்ம தத்துவம்.
————
ந ப்ராணேந நாபாநேந மர்த்யோ ஜீவதி கஷ்சந –
இதரேண து ஜீவந்தி யஸ்மிந்நேதாவுபாஷ்ரிதௌ ৷৷ 2.2.5 ৷৷
பிராண வாயு -அபான வாயு -ப்ரஹ்மத்துக்கு வசம் –
பிராணன் இருக்கும் வரைதான் இந்த உடல் செயல்படுகின்றது. எனவே அனவய்-வ்யதிரக நியாயப்படி பிராண்ந்தானே
இந்த உடலுக்கு காரணம் என்ற சந்தேகத்திற்கு பதிலாக அமைகின்றது இந்த மந்திரம்.
மனிதர்கள் ஒருகாலும் பிராணனாலும் வாழ்வதில்லை, அபானனாலும் வாழ்வதில்லை.
இவைகளுக்கும் வேறான ஒன்றினால்தான் வாழ்கின்றார்கள். ஆத்மாவை இந்த பிராணன்கள் சார்ந்திருக்கின்றது
விசாரம்:-
ஆத்மாவின் ஸத் ஸ்வரூபம் எல்லாவிட்த்திலும் இருக்கின்றது. அது இருக்குமிடம் ஜடமாகவும் இருக்கலாம்,
அறிவுள்ளதாகவும் இருக்கலாம். அதேபோல சித் ஸ்வரூபம் உயிரின்ங்களில் அறிவுபூர்வமாக இயங்குகிறது.
மனதில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற ஆத்மாதான் அவைகள் இயங்குவதற்கு உதவுகின்றது.
உடலிலிருந்து ஆத்மா வெளியேறுவது என்று குறிப்பிடுவது அதனுடைய பிரதிபிம்பமான சிதாபாஸத்தின் அழிவைத்தான்.
உயிரற்ற உடலிலும் ஆத்மா ஸத் ஸ்வரூபத்துடன் இருந்து கொண்டுதான் இருக்கும்.
————
ஹந்த த இதம் ப்ரவக்ஷ்யாமி குஹ்யம் ப்ரஹ்ம ஸநாதநம் .
யதா ச மரணம் ப்ராப்ய ஆத்மா பவதி கௌதம ৷৷ 2.2.6 ৷৷
கௌதம -பிள்ளை இவன் -நசிகேஷத் -ரஹஸ்ய ப்ரஹ்ம ஞானம் சொல்கிறேன் –
உனக்கு மிகவும் ரகசியமானதும், எப்பொழுதும் இருக்கின்ற இதைப்பற்றி மேலும் சொல்கிறேன்.
அறியாமையில் இருக்கின்ற ஒரு ஜீவன் மரணத்தை அடைந்தால் அவனிடத்தில் உள்ள ஆத்மா என்னவாகும்
என்பதையும் உனக்கு நான் சொல்கிறேன்.
———————
யோநிமந்யே ப்ரபத்யந்தே ஷரீரத்வாய தேஹிந –
ஸ்தாணுமந்யேநுஸம் யந்தி யதா கர்ம யதா ஷ்ருதம் ৷৷ 2.2.7 ৷৷
ஒரு சிலர் கர்மம் தக்க வேறே பிறவி -அந்நியன் -உன்னை போலே இல்லாத புபுஷுக்கள் -அநாதரவு சப்தம்
அசரீரீயாகவும் சுற்றி இருக்கலாம் –
சில ஜீவாத்மாக்கள் வேறொரு மனித உடலை எடுப்பதற்கு கர்ப்பத்தை அடைகிறது. வேறு சில உயிர்கள் தாவரங்களாகவும்,
விலங்குகளாகவும் பிறப்பெடுக்கின்றார்கள். அவரவர்களுடைய வினைப்பயனுக்கேற்பவும், அவர்கள் செய்த உபாஸனைகளின்
அடிப்படையில் அடுத்த ஜென்மத்தில் அதற்கேற்றாவாறு சரீரத்தை எடுக்கின்றான்.
கர்ப்பத்திலிருந்து பிறப்பவைகள், முட்டையிலிருந்து பிறப்பவைகள், வியர்வையிலிருந்து பிறப்பவைகள்,
பூமியை பிளந்து வரும் உயிர்கள் இவைகளில் ஏதாவது ஒரு வகையில் மறுபிறப்பையடைகிறான்.
—————–
ய ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண–
ததேவ ஷுக்ரம் தத்ப்ரஹ்ம ததேவாமரிதமுச்யதே-
தஸ்ம ல்லோகா ஷ்ரிதா ஸர்வே தது நாத்யேதி கஷ்சந ஏதத்வை தத் ৷৷ 2.2.8 ৷৷
ஒருவனே முழித்து -அனைவரும் தூங்கும்பொழுது -மோக்ஷம் ஆசை தூண்ட -முனியே நான் முகனே முக்கண் அப்பா -மனன சீலன்
தேஜஸ் ப்ரஹ்மம் அம்ருதம் நித்யம் -ஐந்து விரல்கள் -பத்த முக்த நித்ய -அசேதனம் கட்டை விரல்
சேர்ந்தால் தான் நாலும் வேலை செய்யும் -ஒரே சரண்யன்
ஆத்மா எந்தவிதமான அவஸ்தைகளுக்குள்ளும் வருவதில்லை. மூன்று அவஸ்தைகளும் மனதை சார்ந்தது.
இது எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கின்றது. இந்திரியங்கள் உறங்கும்போதும் கூட ஆத்மாவானது விதவிதமான
விருப்பமான பொருட்களை உருவாக்கியபடி விழித்துக் கொண்டிருக்கின்றது. அதுவேதான் தூய்மையான பிரம்மம்.
ஆனால் இந்த அவஸ்தைகளோடு சம்மந்தப்படாமலிருப்பதையே தூய்மையானது என்று குறிப்பிடப்படுகின்றது.
அதுவே மரணமற்றதாகவும், எல்லாகாலத்திலும் இருக்கின்றதாகவும் உள்ளது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றது.
இதற்கு அப்பாற்பட்டு வேறொன்றும் கிடையாது.
—————
அக்நிர்யதைகோ புவநம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ –
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிஷ்ச ৷৷ 2.2.9 ৷৷
சுக துக்கம் -ஒரே ப்ரஹ்மம் என்றால் ஓன்று போலே இல்லையே சங்கை –
நெருப்பு கொழுத்த -பதார்த்தம் உருவத்தில் எரியும் அதே போலே
கர்மத்துக்கு தகுந்த சுக துக்கம் -அசேதனங்களுக்கும் சேதனங்களுக்கும் வேறுபாடு -ஸ்வரூபம் ஸ்வ பாவம் மாறும்
எப்படி ஆத்மா பலவாக தெரிகின்றது என்ற கேள்வி எழும்போது ஆகாசம் என்பது ஒன்றுதான் ஆனால் விதவிதமான மண்பாண்டங்கள் செய்யப்படுகின்றன.
இதன் வேறுபாடு அதனுள் இருக்கும் ஆகாசத்தின் அளவை பொறுத்து அமைகின்றது. இப்போது ஆகாசமானது வெவ்வேறு அளவுடைய
ஆகாசம் இருப்பது போல தோன்றுகிறது/ இந்த வேறுபாடு மண்பாண்டத்தினுடைய வேறுபாட்டால் தோன்றுகின்றது.
இங்கு இந்த மண்பாண்டத்தை உபாதி என்று கூறப்படுகின்றது. இது ஆகாசத்தை பலவாக இருப்பது போல் தோற்றமளிக்க செய்கின்றது.
அதேபோல பலவாக இருக்கும் சரீரத்தின் இருக்கும் ஆத்மா பலவாக இருப்பது போல் காட்சியளிக்கின்றது.
இந்த மந்திரத்தில் இதை விளக்க அக்னியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறார் எமதர்ம ராசா.
அக்னியானது எந்த பொருளை வியாபிக்கின்றதோ அதன் வடிவமாகவே காட்சியளிப்பது போல்
ஆத்மாவும் எந்த சரீரத்தை வியாபிக்கின்றதோ அதனிடத்தில் இருப்பதாக நினைக்க தோன்றுகின்றது
உபாதி:- எந்தவொன்று தன்னுடைய தன்மையை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கின்றதோ அதற்கு உபாதி என்று பெயர்.
உபஹிதம்:- எந்தவொன்று பொய்யாக வேறொன்றின் தன்மையை பிரதிபலித்து அல்லது ஏற்றுக் கொண்டு காட்சியளிக்கின்றதோ அதற்கு இந்த பெயர்.
இந்த மூன்று சரீரங்களும் உபாதி, ஆத்மா உபஹிதம். சரீரம் த்வைதமாக இருக்கின்றது,
சரீரத்தில் உள்ள குணங்கள் பொய்யாக ஆத்மாவுக்கு சென்று விட்ட்தால், ஆத்மா பலவாக காட்சியளிக்கின்றது.
ஆனால் அது ஒன்றாகத்தான் இருக்கின்றது. எவ்வாறு ஒன்றாக இருக்கும் அக்னியானது உலகத்திலுள்ள பொருட்களை
வியாபிக்கும் போது அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அவ்வாறு ஒன்றாக இருக்கின்ற,
எல்லா ஜீவராசிகளுடைய மனதிலும், சரீரங்களிலும் வெளிப்படுகின்ற ஆத்மா அந்தந்த சரீரத்தில் நுழைந்து
அந்தந்த சரீரத்தினுடைய ரூபத்தை அடைகின்றதோ அதுவேதான் வெளியிலும் இருக்கின்றது.
—————
வாயுர்யதைகோ புவநம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ –
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிஷ்ச ৷৷ 2.2.10 ৷৷
வாயுவும் -பொதிகை மலை- தென்றல் -வேனல் காற்று வாசி உண்டே –
எவ்வாறு வாயுவானது உலகத்திலுள்ள பொருட்களில் நுழைந்து அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ
அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா எல்லா ஜீவராசிகளின் மனதில் நுழைந்து அதன் வடிவத்தை அடைகின்றது.
—————
ஸூர்யோ யதா ஸர்வலோகஸ்ய சக்ஷுர்ந லிப்யதே சாக்ஷுஷைர்பாஹ்யதோஷை–
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தாராத்மா ந லிப்யதே லோகது கேந பாஹ்ய ৷৷ 2.2.11 ৷৷
கண்ணுக்குள்ளே ஸூர்யன்-தோஷம் தட்டாதே -வியாபகத தோஷம் அவனுக்கு இல்லை –
சூரியன் அனைத்து உலகிற்கும் கண்களாக இருந்து கொண்டும், நம்முடைய கண்களின் அதிஷ்டான தேவதையாக
இருந்து கொண்டு அருள் கொடுக்கின்றான். நம்முடைய கண்களில் இருக்கும் குறைகளால் சூரியன் பாதிக்கபடுவத்தில்லை.
வெளியே உள்ள பொருடகளின் குறைகள் அதை பாதிப்பதில்லை. அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா,
எல்லா ஜீவராசிகளின் உடலில் நுழைந்திருந்தாலும், மனதிற்கு, உடலுக்கு வரும் துயரங்களினால் பாதிப்பதில்லை.
இவைகளையெல்லாம் கடந்திருக்கின்றது ஆத்மா. இதிலிருந்து ஆத்மா வேறு, மனம் என்பது வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
————–
ஏகோ வஷீ ஸர்வபூதாந்தராத்மா ஏகம் ரூபம் பஹுதா ய கரோதி –
தமாத்மஸ்தம் யேநுபஷ்யந்தி தீராஸ்தேஷாம் ஸுகம் ஷாஷ்வதம் நேதரேஷாம் ৷৷ 2.2.12 ৷৷
ஒருவனே -அனைத்தையும் தன் வசம் -பக்தர்களுக்கு வசப்படுபவன் –
மூல பிரகிருதி கொண்டே அனைத்தும் ஸ்ருஷ்டிக்கிறான்
ஒன்றாக இருப்பதும், அனைத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதுமான ஆத்மா எதையும்
சார்ந்தில்லாதிருப்பதால் துயரங்களை அனுபவிப்பதில்லை.
பரதந்திரம் என்பது ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்கும் நிலைமை, இந்த நிலையில் துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
சுதந்திரம் என்பது எதையும் சார்ந்தில்லாதிருக்கும் நிலைமை இந்த நிலையில் எதனிடமிருந்தும் துன்பத்தை அனுபவிக்க நேரிடாது.
ஆத்மா சுதந்திரமாக இருப்பதால் துயரங்கள் எதுவும் அது அனுபவிக்காது. எல்லா அனுபவத்திற்கும் காரணம் இருமை தான்.
ஆத்மா ஒன்றாக இருப்பதால் எந்த அனுபவமும் அதற்கு கிடையாது அதனால் துயரமும், சுகமும் வருவதில்லை
உத்க்ருஷ்டத்வம் என்பது என்னைக் காட்டிலும் மற்றவர்களிடத்தில் ஏதோ ஒன்று அதிகமாக இருக்கிறது என்று எண்ணி துயரப்படுவதை குறிக்கின்றது.
ஆத்மா எல்லாவிடத்திலும் சமமாக இருப்பதால் இந்தவிதத்தில் துயரங்கள் வருவதில்லை
இது ஒன்றாக இருந்து கொண்டு பலவிதமாக இருப்பதுபோல் தன்னை தோற்றுவித்து கொண்டிருக்கின்றது.
எந்தவொரு விவேகி ( சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ) பிரம்மத்தை தன்னிடத்தில் இருப்பதாக
( குரு-சாஸ்திரத்தின் துணைக்கொண்டு ) பார்க்கின்றானோ அவனுக்கு சுகம் கிடைக்கின்றது, அந்த சுகம் நிலையானது.
அவனைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலையான சுகம் கிடைக்காது.
அறியாமையில் அடையும் சுகம்-துக்கம் ஏதோ ஒன்றின் காரணத்தால்தான் வருகின்றது. அந்த ஒன்று மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது.
எனவே இந்த சுக-துக்கம் மாறி மாறி வருகின்றது. ஆனால் மாறாத ஆத்ம தத்துவத்தை உணர்வதால்
அவன் எப்போதும் சுகமாக ஆனந்தமாக இருக்கின்றான்.
——————–
நித்யோநித்யாநாம் சேதஷ்சேதநாநாமேகோ பஹூநாம் யோ விததாதி காமாந் –
தமாத்மஸ்தம் யேநுபஷ்யந்தி தீராஸ்தேஷாம் ஷாந்தி ஷாஷ்வதீ நேதரேஷாம் ৷৷ 2.2.13 ৷৷
ப்ரஹ்மம் நித்யம் -ஜீவனும் நித்யம் -அவன் ஒருவன் நாம் பலர் -சர்வஞ்ஞன் அவன் நாம் கொஞ்சம் -சகல பல பிரதன்
நாராயணனே நமக்கே பறை தருவான் -ப்ரஹ்மம் ஒருவனே -ஜீவர் பலர் –
நிலையற்றவைகளில் நிலையானதாகவும், அறிவுக்கு அறிவாகவும், ஒன்றாகவும் இருக்கின்ற ஈஸ்வரன் (பிரம்மம்)
எல்லோருக்கும் அவரவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார், கர்ம பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிபட்ட பிரம்மத்தை தானாக எந்த விவேகிகள் உணர்கின்றார்களோ அவர்களுக்கு நிலையான மன அமைதி கிடைக்கின்றது.
மற்றவர்களால் இதை அடைய முடியாது.
——————–
ததேததிதி மந்யந்தேநிர்தேஷ்ய பரமம் ஸுகம் –
கதம் நு தத்விஜாநீயாம் கிமு பாதி விபாதி வா ৷৷ 2.2.14 ৷৷
பிள்ளை -கேள்வி -அது இது -யோகிகள் ப்ரஹ்மம் அறிகிறார்கள் -பரமம் சுகம் -அடையாளம் காட்ட முடியாதே
அந்த பிரம்மம்தான் இந்த ஆத்மா என்று சொல்கிறார்கள், நினைக்கின்றார்கள். இது மேலான சுகமாக இருப்பது,
நிலையான சுகமாக இருப்பது, இப்படிபட்ட தன்மையுடையது என்று வாக்கால் குறிப்பிட முடியாததாகவும்,
அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றது இந்த சுகம். நான் எவ்வாறு இதை தெரிந்து கொள்வது?
அது தானாகவே ஒளிர்கின்றதா? தெளிவாக அறியக்கூடியதா அல்லது வேறொன்றால் ஒளிர வைக்கப்படுகின்றதாக இருக்கின்றதா?
சந்தேகமில்லாமல் அறியக்கூடியதாக இருக்கின்றதா?
————-
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நி–
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ৷৷ 2.2.15 ৷৷
ப்ரஹ்மம் தேஜஸ் முன்னால் ஸூர்யனோ சந்தரனோ நக்ஷத்திரங்கள் ஒளி விடாதே -அக்னியை சொல்ல வேண்டுமே
அவன் தேஜஸால் இவை ஒளி விடுகின்றன -ஒளி மயம் பரஞ்சோதி நல்ல யோகிகள் தான் அறிகிறான் –
அத்தை தானே நான் உனக்கு உபதேசித்தேன்
யாரும் ஓர் நிலைமை என அறிவரிய எம்பெருமான் அறிவு எளிய எம்பெருமான் போலே
இதை சூரியனும் விளக்காது, ஒளிர்விக்காது, சந்திரனாலும், நட்சத்திரங்களாலும் ஒளிர்விக்க முடியாது.
இதை மின்னலாலும் ஒளிர்விக்க முடியாது. இந்த அக்னியானது எவ்வாறு ஒளிர முடியும்.
ஒரு பொருள் இருக்கின்றது என்றால் அது அனுபவத்திற்கு வந்து இருக்க வேண்டும்.
அந்த ஆனந்தமயமான ஆத்மா சுயபிரகாசமாக மற்றவர்களால் அறியப்படுகின்றது.
அதனுடைய பிரகாசத்தினால்தான் உலகிலுள்ள அனைத்தும் பிரகாசிக்கின்றன.
அறிவை அடைய உதவுகின்ற ஞானேந்திரியங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.
ஆனால் ஆத்மாவினால்தான் அனைத்தும் செயல்பட்டு அறிவை அடைய உதவுகின்றது.
விசாரம்:- ( நாம் அடையும் சுகம் எப்படி அடையப்படுகின்றது ).
நாம் கண்ணால், காதால் அடையும் இன்பம், அதை அடைய உதவும் விஷயத்தை பொறுத்து இருக்கின்றது என்று பொதுவாக சொல்வோம்.
ஆனால் அந்தப்பொருட்கள் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சுகத்தைக் கொடுக்காது. இதிலிருந்து பொருட்களிலிருந்து சுகத்தை
நாம் அடைவதில்லை என்று புரிந்து கொள்ளலாம். பிறகு இந்த சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விக்கு
சாஸ்திரம் ஆத்மாவிடமிருந்து வருகின்றது என்று விடையளிக்கிறது. நமது மனம் அமைதியுடன் இருக்கும்போது ஆத்மாவின் சுகம்
அதில் பிரதிபலிக்கின்றது அதனால சுகத்தை அடைகின்றோம். எல்லோரும் தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்து கொள்ளவே விரும்புகின்றார்கள்.
விரும்பியதை அடைந்ததும் அந்த ஆசையானது மறைந்து மேலும் பல ஆசைகள் வந்து சேர்ந்து விடுகின்றன.
৷৷ இதி த்விதீயேத்யாயே த்விதீயா வல்லீ ৷৷
————————————————–
ஊர்த்வமூலோவாக்ஷாக ஏஷோஷ்வத்த ஸநாதந–
ததேவ ஷுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாமரிதமுச்யதே –
தஸ்ம ல்லோகா ஷ்ரிதா ஸர்வே தது நாத்யேதி கஷ்சந ஏதத்வை தத் ৷৷ 2.3.1 ৷৷
இதே ஸ்லோகம் -15-அத்யாயம் ஆரம்பம் -மரத்தை தலை கீழே -வேர் மேலே -ப்ரம்மா மேலே -காய் கனி நாம் கீழே
சம்சாரம் மரம் -நன்றாக இருந்து நினைப்பவன் பிறந்தே -ஆழ்ந்து இருப்பான்
கோடரி -அசங்க-சத்ரேண -வைராக்யம் -திடமான சித்தம் -பற்றின்மை ஒன்றாலே வெட்ட முடியும் –
இந்த மந்திரத்தில் பிரஹ்ம ஸ்வரூபம் விளக்கப்படுகின்றது. சம்சாரம் என்பது நாம் மனதில் அனுபவிக்கும் சுக-துக்கமேயாகும்.
ஈஸ்வரனை வேராக கொண்டுள்ளது இந்த சம்சாரம் என்கின்ற மரம். இந்த மரத்தின் கிளைகள் கீழ் நோக்கி செல்கின்றன.
இந்த அரசமரம் என்றும் இருக்கின்ற பிரபஞ்சத்தை குறிக்கின்றது. மரத்திற்கு வேர் ஆதாரமாக இருப்பது போல
சம்சாரத்திற்கு, பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரன் ஆதாரமாக இருக்கின்றார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மரத்திற்கும், சம்சாரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்:
1. மரம் நிலையாக இருப்பதற்கு அதன் வேர்கள் காரணமாக இருக்கின்றது அதுபோல சம்சத்தின் வேராக இருப்பவர் ஈஸ்வரன்.
வேர்கள் மறைந்து இருப்பது போல அவரும் நம் இந்திரியங்களுக்கு தெரியாமல் இருக்கின்றார்.
2. மரத்தின் நடுப்பகுதியானது ஹிரண்யகர்ப்பனுக்கு ஒப்பிடப்படுகின்றது. முதலில் தோன்றிய சூட்சும சரீரம் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர்.
3. மரத்தில் உள்ள இலைகள் வேதத்தினுடைய கர்ம காண்டத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றது.
மரம் நன்கு வளர்வதற்கு இலைகள் காரணமாக இருப்பது சம்சாரம் நன்கு வளர்வதற்கு கர்ம காண்டம் உதவுகின்றது.
இதில் கர்ம பலன்களை அடைவதற்குரிய சாதன்ங்களைக் கூறி மனிதனை சம்சாரத்திலே வைத்திருக்கின்றது
4. மரம் வளர்வதற்கு உதவும் நீரானது, ஆசைகளுக்கு உவமையாக கூறப்படுகின்றது. நம்மை சம்சாரத்தில் வைத்திருப்பதற்கு இந்த ஆசைகள்தான் காரணம்.
5. மரத்தினால் அடையும் பலன்கள் நாம் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு உவமையாக கூறப்படுகின்றது
6. மரதிலுள்ள பழங்களை முதலில் அனுபவிப்பது பறவைகள், அதுபோல சம்சார பலனை அனுபவிப்பது ஜீவர்களான நாம் தான்.
7. இந்த பறவைகள் அந்த மரத்திலே கூடுகட்டி வாழ்வது போல நாமும் இந்த உலகத்தில் வீடுகட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
8. மரத்தை வெட்டி வீழ்த்தக்கூடிய கருவியாக இருக்கும் பெரிய அரிவாளாக வைராக்கியம் கூறப்படுகின்றது.
மரத்தை வெட்டுவதற்கு, முதலில் கிளைகளை வெட்டுவோம், பிறகு நடுமரத்தை வெட்டி கடைசியில் வேரோடு பிடுங்கி எறிவது போல
நாமும் ஞானத்தால் சம்சார என்கின்ற மரத்தை வேரோடு நீக்க வேண்டும்.
நாளை இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருக்கின்ற அரசமரம். நதிக்கரையில் அமர்ந்து நீரை பார்க்கும் போது
உண்மையில் சென்று கொண்டிருக்கும் நீரானது அசைவற்று இருப்பது போல தோற்றமளிக்கும்.
அதுபோல மாறிக்கொண்டிருக்கும் சம்சாரத்திலிருந்து விடுபட இரண்டு வழிகள் உபதேசிக்கப்படுகின்றது.
அவைகள் 1. வைராக்கியம், 2. ஆத்ம ஞானம். பிரம்மமானது தூய்மையானது, மாயையோடு சம்பந்தபடாதது.
ஏதாவது ஒரு சம்பந்தத்தால் தான் எதுவுமே அசுத்தமாகின்றது. மேலும் அது பூரணமானது, நிறைவானது,
என்றும் மாறாமல் எப்பொழுதும் இருப்பது, மரணமற்றது, அழிவற்றது இவ்வாறு பிரம்மத்தின் ஸ்வரூபத்தை ரிஷிகளால்,
பிரம்மத்தை உணர்ந்தவர்களால் கூறப்படுகின்றது. அந்த பிரம்மனிட்த்தில் எல்லா உலகங்களும் சார்ந்து இருக்கின்றது எப்படி
கயிற்றின் மீது பொய்யாக தோற்றமளிக்கும் பாம்பு அந்த கயிற்றை சார்ந்திருக்கின்றதோ அதுபோல.
இதை தவிர்த்து வேறொன்றுமில்லை, இதுதான் நீ கேட்ட அந்த உண்மை தத்துவம்.
————-
யதிதம் கிம் ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நி ஸரிதம்-
மஹத்பயம் வஜ்ரமுத்யதம் ய ஏதத்விதுரமரிதாஸ்தே பவந்தி ৷৷ 2.3.2 ৷৷
ப்ரஹ்மம் -எங்கும் வியாப்யம் -பயந்தே -கார்யங்கள் ஸூர்ய உதயம் இத்யாதி
எவையெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதோ அவைகளெல்லாம் தோற்றுவிக்கப்பட்டவைகள்.
படைக்கப்பட்ட உலகங்கள் அனைத்தும் பிரம்மத்திலிருந்துதான் தோன்றியதால்தான் அவைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதுவே எல்லோருக்கும் மிகப்பெரிய பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. வஜ்ராயுதத்தை கையில் ஏந்தியிருப்பதுபோல்
பய ஸ்வரூபமாக காட்சியளித்து கொண்டிருக்கும் ஈஸ்வரனை யார் பிரம்மன் என்று தெரிந்து கொள்கிறார்களோ
அவர்கள் மரணமற்ற தன்மையை அடைகிறார்கள்.
———–
பயாதஸ்யாக்நிஸ்தபதி பயாத்தபதி ஸூர்ய-
பயாதிந்த்ரஷ்ச வாயுஷ்ச மரித்யுர்தாவதி பஞ்சம ৷৷ 2.3.3 ৷৷
ப்ரஹ்மம் பார்த்து நடுங்கி யமன் வேலை -வாயு –
ஈஸ்வரனிட்த்தில் கொண்டுள்ள பயத்தினால் தான் எல்லா சக்திகளும் அவருக்கு கட்டுபட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
எல்லா தேவதைகளும் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பது ஹிரண்யகர்ப்பனைத் தான். ஈஸ்வரனிட்த்தில் உள்ள பயத்தினால் தான்
அக்னியானது உஷ்ணத்தை வெளிப்படுத்துகிறது, சூரியனும் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது, இந்திரனும் அவருக்கு பயந்து
தன் வேலையை தவறாமல் செய்து கொண்டிருக்கின்றான். வாயு பகவானும், எமதர்மனும் தம்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது எல்லா சக்திகளும் அவர் விதித்த நியமத்தின்படி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
————
இஹ சேதஷகத்போத்தும் ப்ராக் ஷரீரஸ்ய விஸ்ரஸ-
தத ஸர்கேஷு லோகேஷு ஷரீரத்வாய கல்பதே ৷৷ 2.3.4 ৷৷
சரீரம் விழும் முன் ப்ரஹ்ம ஞானம் அடையைப் பார்
அடுத்த பிறவி எது என்ன தெரியாதே –
ஏடு நிலத்து இடுவதன் முன்னம் -இழந்தால் எங்கேயோ உழன்று இருக்க வேண்டுமே
இந்த மனித சரீரத்தில் இருக்கும் போதே பரம்பொருளை அறிந்து கொண்டால் உடல் வீழ்வதற்கு முன்னே முக்தியை அடைந்து விடலாம்.
ஒரு வேளை அறியவில்லையென்றால் இறந்த பிறகு படைக்கப்பட்ட இந்த உலகத்திற்குள் வேறு சரீரத்தை அடைய நேரிடும்.
————–
யதாதர்ஷே ததாத்மநி யதா ஸ்வப்நே ததா பிதரிலோகே-
৷৷ 2.3.5 ৷৷
மனித உலகத்தை தவிர வேறெந்த உலகத்திலும் அடைய முடியாது.
மனித லோகத்தில் ஆத்ம ஞானம் அடைவது நம்மை கண்ணாடியில் பார்த்தால் நம் உருவம் தெளிவாகவும்,
சரியாகவும் தெரிவது போல ஆத்ம, அனாத்ம விவேகத்தை மிகத்தெளிவாக அடையலாம்.
பித்ரு லோகத்தில் கனவில் காணும் தெளிவற்ற உலகத்தைப் போல ஆத்ம-அனாத்ம விவேகம் தெளிவற்று இருக்கும்.
கந்தர்வ லோகத்தில் அசைந்து கொண்டிருக்கும் நீரில் தெரியும் உருவத்தைப்போல இந்த விவேகம் வேறுபாடு தெளிவாக தெரியாமல் இருக்கும்.
பிரஹ்ம லோகத்தில் இந்த அறிவு தெளிவாக அறியப்படும். நிழலும்-நிஜமும் எவ்வாறு தெளிவாக தெரியுமோ அதுபோலதான் இருக்கும்.
இந்த லோகத்திற்கு செல்வது மிகவும் கடினம். அதிக உபாஸனை செய்தும், வேதாந்தம் படிக்க முடியாமல் போனவர்களால் அடையப்படும் உலகம்.
இவைகளைத் தவிர வேறெந்த உலகத்திலும் இந்த அறிவை அடைய முடியாது. இந்த அறிவை அடைவதற்கு மனித லோகமே மிக மிக உயர்ந்தது.
எப்படி கண்ணாடியில் உருவம் தெளிவாக தெரியுமோ அவ்விதமாக நம் மனதில், புத்தியில் ஆத்மாவினுடைய தரிசனம் கிடைக்கும்,
ஆத்ம-அனாத்ம வேறுபாடு மிகத்தெளிவாக புரியும்.
எப்படி கனவில் உள்ள பொருட்கள் அனைத்தும் தெளிவற்றதாக இருக்கின்றதோ அதுபோல பித்ருலோகத்தில் தெளிவற்றதாக இருக்கும்.
எப்படி நீரில் தெரியும் உருவம் தெளிவற்றதாக இருக்குமோ அதுபோல கந்தர்வலோகத்தில் இருக்கும்.
இதுவே பிரம்ம லோகத்தில் நிழலும், நிஜமும் போல தெளிவாக இருக்கும்.
———
இந்த்ரியாணாம் பரிதக்பாவமுதயாஸ்தமயௌ ச யத் –
பரிதகுத்பத்யமாநாநாம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 2.3.6 ৷৷
இந்திரியங்கள் தேகம் உத்பத்தி விநாசம் -அறிந்து உணர வேண்டும்
ஆத்மாவை இந்திரியங்களிலிருந்து வேறாக புரிந்து கொள்ள வேண்டும். நம்மை யாராவது முட்டாள் என்று யாராவது திட்டினால்
நான் புத்தி என்று நினைத்தால் கோபம் வரும். ஆனால் நான் ஆத்மா என்று நினைத்தால் நமக்கு கோபம் வராது.
எல்லா இந்த்ரியங்களையும் அந்தக்கரணத்தையும் நான் என்ற ஆத்மாவிலிருந்து பிரித்து விட்டால் நமக்கு என்றென்றும் சோகம் கிடையாது.
இரண்டு யுக்திகள் மூலம் நாம் இந்திரியங்களல்ல என்று புரிந்து கொள்ளலாம். புலன்கள் ஆத்மாவிலிருந்து வேறுபட்டிருக்கின்றது
ஏனென்றால் அவைகள் தனித்தனியாக தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.. எது தோற்றுவிக்கப்படுகிறதோ அது நிலையற்றவை.
ஆத்மா என்றும் இருப்பது, அதிலிருந்து தோன்றியவைகள்தான் அனைத்தும். இவைகள் நானல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திரியங்கள் எழுச்சியும் (விழிப்பு நிலை ) பெறுகின்றது ஒடுங்கியும் (கனவு நிலை) இருக்கின்றது
நான் என்ற ஆத்மா இரண்டு நிலையிலும் சாட்சியாக இருக்கின்றேன். ஆகவே இவைகள் என்னிடமிருந்து வேறுபட்டவை என்று உணர வேண்டும்.
இவ்விதம் அறிந்த விவேகியானவன் துயரத்தை அடைவதில்லை.
——————-
இந்த்ரியேப்ய பரம் மநோ மநஸ ஸத்த்வமுத்தமம் –
ஸத்த்வாதபி மஹாநாத்மா மஹதோவ்யக்தமுத்தமம் ৷৷ 2.3.7
இந்திரியங்களை விட விஷயங்கள் பலமானவை – முன்பு போலே இதுவும் –
ஆத்மா புத்தி சத்துவம் சப்தத்தால் இங்கு மனஸ் –இத்யாதி
புலன்களை விட மனம் மேலானது. பரம் என்பதற்கு சூட்சுமமானது, எங்கும் வியாபித்துள்ளது,
ஆத்ம சமீபம் என்று பொருள் கொள்ளலாம். மனதை விட புத்தி மேலானது, புத்தியைக் காட்டிலும் சமஷ்டி புத்தி மேலானது.
ஹிரண்யகர்ப்பனை விட மாயை மேலானது.
————-
அவ்யக்தாத் து பர புருஷோ வ்யாபகோலிங்க ஏவ ச –
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்துரமரிதத்வம் ச கச்சதி ৷৷ 2.3.8 ৷৷
பிரகிருதி-சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த மிக பெரும் பாழ்-அத்தையும் தாண்டி ப்ரஹ்மம்
மாயைக் காட்டிலும் ஆத்மா மேலானது. எங்கும் வியாபித்திருக்கும் புருஷனே மாயை விட மேலானது. அடையாளமற்றதுமானது ஆத்மா,
ஆத்மாவை யூகித்து அறிய முடியாது. இந்த புருஷனை உணர்ந்த ஜீவன் சம்சாரத்திலிருந்து விடுபடுகின்றான்-மரணமில்லா நிலையையும் அடைகின்றான்.
இறந்த பிறகு விதேஹ முக்தியை அடைகின்றான் பிறப்பு-இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.
——————-
ந ஸம் தரிஷே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஷ்யதி கஷ்சநைநம் –
ஹரிதா மநீஷா மநஸாபிக்லரிப்தோ ய ஏதத் விதுரமரிதாஸ்தே பவந்தி ৷৷ 2.3.9 ৷৷
கண்ணால் பார்க்க முடியாது காதால் கேட்க முடியாது -பக்தி ஒன்றாலே -ஹரிதா மநீஷா-சுத்தமான மனசால் -ஒன்றாலே முடியும்
யாவர்க்கும் உன்னை இன்னதோர் தன்மை என்று தெரிய அரியையாய் உள்ளாய் –
பிரம்மத்தினுடைய தன்மை இந்திரியத்தினுடைய வசத்துக்குள் வராது. புலன்களால் பிரம்மத்தை அறியமுடியாது.
அவரை ஒருவரும் கண்களால் காணப்படுவதில்லை. தெளிவான சிந்தனையால், மனதினால் அறியப்படுகின்ற,
இருதயத்திற்குள் இருக்கின்ற விழிப்புற்ற புத்தியால் எவர்கள் இந்த தத்துவத்தை அறிகின்றார்களோ அவர்கள் மரணமற்றவர்களாகின்றார்கள்.
————-
யதா பஞ்சாவதிஷ்டந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ –
புத்திஷ்ச ந விசேஷ்டதே தாமாஹு பரமாம் கதிம் ৷৷ 2.3.10 ৷৷
ப்ரஹ்மம் ஒன்றையே மீண்டும் மீண்டும் நினைந்து -வெளி விஷயம் பற்று இல்லாமல் -பரமாம் கதி அடையலாம்
நிதித்யாஸன விசாரம்:-
நான் ஆத்மா என்ற நிலையில் முதலில் வாழ பழக வேண்டும். அதற்கு முதலில் உலக விவகாரங்களிலிருந்து விலகி
கொஞ்ச நாள் தனிமையில் வாழ்ந்து பழக வேண்டும். இந்திரியங்கள் மனம், புத்தி இவைகளை துறந்து
நான் ஆத்மா என்ற நிலையில் வாழ்ந்து பழக வேண்டும்.
சஜாதீய விருத்தி – ஆத்ம தத்துவத்திற்கு உகந்த எண்ணங்கள்
விஜாதீய விருத்தி – ஆத்ம தத்துவத்திற்கு முரண்பாடான எண்ணங்கள்
தியானம் – மனப்போராட்டங்கள் இல்லாமல் செய்தல்
சஜாதீய விருத்தி நிலை அடைதல் என்பது முதிர்ந்த நிலை. இதுவே சமாதானம், சமாதி யோகம் என்று சொல்லப்படுகின்றது.
எப்பொழுது ஞானேந்திரியங்கள் மனதோடு சேர்ந்து ஒருமுகப்பட்டு நிற்குமோ, அமைதியுடன் இருக்குமோ (சஜாதீய விருத்தி நிலை),
புத்தியானது அமைதியடைந்து விட வேண்டும். புத்தியில் ஏதாவது சந்தேகமிருந்தால் அது அமைதியடையாது.
எனவே மனத்தின் மூலம் சந்தேகங்களை நீக்கி தெளிவடைந்துவிட வேண்டும். இந்த நிலையே மேலான நிலை என்று சொல்லப்படுகின்றது.
————–
தாம் யோகமிதி மந்யந்தே ஸ்திராமிந்த்ரியதாரணாம் –
அப்ரமத்தஸ்ததா பவதி யோகோ ஹி ப்ரபவாப்யயௌ ৷৷ 2.3.11 ৷৷
இது தான் யோகம் -விழிப்பு உடன் இருக்க வேண்டும்-ஸ்திரமாக இந்திரியங்களை வசப்படுத்தி
இந்த நிலையில் இந்திரியங்கள் உறுதியாக ஒடுக்கப்படிருப்பதை யோகசமாதி, சமாதானம் என்றும் மனம் அமைதியடைந்திருத்தல்
என்றும் சொல்லப்படுகின்றது. அப்பொழுது ( நிதித்யாஸனம் செய்யும் காலத்தில்) மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த யோகமானது மேலே செல்வதற்கும், கீழே வீழ்வதற்கும் காரணமாக இருக்கும். இந்திரிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த சமயத்தில் வேண்டுமானாலும் அவைகள் நம்மை வீழ்த்தி விடும்.
தியானம் செய்யும்போது தமோ குணத்தினால் தூக்கமும், ரஜோ குணத்தினால் மன சிதறல்களும் ஏற்படும்.
—————
நைவ வாசா ந மநஸா ப்ராப்தும் ஷக்யோ ந சக்ஷுஷா –
அஸ்தீதி ப்ருவதோந்யத்ர கதம் ததுபலப்யதே ৷৷ 2.3.12 ৷৷
சாஸ்திரம் ஒன்றே ப்ரஹ்மம் அறிய வழி
அஸ்தி அஸ்தி -சாஸ்திரம் படி எல்லாமாக இருக்கிறார் எப்படி என்று சொல்ல முடியாது –
எல்லாமாக இருப்பதால் சொல்ல முடியாதே
வாக்கினால் அந்த பிரம்மத்தை அடைய முடியாது. இங்கு ஞானேந்திரியங்களால் பிரம்மத்தை அடைய முடியாது
என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று கண்களால் பிரம்மத்தை அறிய முடியாது என்பதை
கர்மேந்திரியங்களாலும் அதை அறிய முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும். மனதாலும் முடியாது,
அந்தக்கரணத்தின் உதவியாலும் அறிய முடியாது.
இந்த பிரம்மம் இருக்கிறது என்று மற்றவர்களால் சொல்லப்படுகின்றது அதை நான் எப்படி உணர முடியும்.
—————–
அஸ்தீத்யேவோபலப்தவ்யஸ்தத்த்வபாவேந சோபயோ-
৷৷ 2.3.13 ৷৷
பரோக்ஷ ஞானம் என்பது பிறர் மூலம் கேள்விபட்டு அறிவை அடைதல், பிரத்யக்ஷ ஞானம் என்பது நாமே நேரிடையாக அடையும் ஞானம்.
வேத வாக்கியப்படி அடையும் ஞானம் பரோக்ஷ ஞானம். இதை பிரத்யக்ஷ ஞானத்தினால் அறிய முடியாது, ஏனென்றால்
அது இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கின்றது. இந்திரியங்களின் மூலம் அடையும் அறிவுக்கு இந்திரியங்களே பிரமாணமாக இருக்கின்றது.
பிறகு வேத்த்தின் உபதேசமான மஹாவாக்கியமான ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால் அபரோக்ஷ ஞானத்தை அடைகின்றோம்.
அந்த பிரஹ்மத்தை நான் என்று புரிந்து கொள்ளும் போது அடையும் ஞானம் அபரோக்ஷ ஞானம்.
எனவே அந்த பிரஹ்மத்தை இருக்கின்றது என்று அறிய வேண்டும், ஆத்ம ஸ்வரூபமாக உணரப்பட வேண்டும்,
நான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்று உணர வேண்டும். இவ்விரண்டில் யார் இருக்கின்றது என்று புரிந்து கொள்கிறார்களோ
அவர்களுக்கு தான் பிரம்மமாகவே நான் இருக்கின்றேன் என்ற ஞானத்தை அடையலாம்.
————–
யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்ய ஹரிதி ஷ்ரிதா-
அத மர்த்யோமரிதோ பவத்யத்ர ப்ரஹ்ம ஸமஷ்நுதே ৷৷ 2.3.14 ৷৷
மனசால் அஸ்தி நினைக்க நினைக்க பிடி படுவான் -நம்பிக்கை உடன் த்யானம் ஆரம்பம்
ஆசை மற்ற இடங்களில் விட்டு அவன் இடம் கொண்டு
எப்பொழுது மனதிலுள்ள ஆசைகளெல்லாம் நீங்குகின்றதோ அப்பொழுதுதான் பிரம்ம ஞானத்தை அடைகின்றான்.
ஞானியானவன் தன்னிடத்திலே நிறைவுடன் இருப்பவன். மனம் நிறைவுடன் இருக்கும்போது ஆசைகள் எதுவும் தோன்றாது.
ஆசைகள் இருவகையாக இருக்கின்றது. அவைகள் 1. பந்தப்படுத்துகின்ற ஆசை, 2. பந்தப்படுத்தாத ஆசை என்பதாகும்.,
ஒருவனுடைய மனதில் உள்ள ஆசைகளெல்லாம் எப்பொழுது நீங்குகின்றதோ , விடுபட்டு போகின்றதோ
அப்பொழுதே சம்சாரியாக இருக்கும் மனிதன் மரணமற்றவனாகின்றான். நிலையான மனநிறைவை அடைகின்றான்.
——————
யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹரிதயஸ்யேஹ க்ரந்தய-
அத மர்த்யோமரிதோ பவத்யேதாவத்த்யநுஷாஸநம் ৷৷ 2.3.15 ৷৷
விருப்பு வெறுப்பு முடிச்சுக்கள் போகும் த்யானம் பண்ண -இது தான் நீ கேட்ட மூன்றாவது வரம் -உனக்கு உபதேசம்
மனதிலுள்ள அறியாமை எப்பொழுது நீங்குகின்றதோ அப்போதுதான் பிரஹ்மத்தை அடைவோம்.
அறியாமையிலிருந்து தோன்றுவது அத்யாஸம் (அனாத்மாவை ஆத்மாவாக பார்த்தல்). அத்யாஸத்திலிருந்துதான் ஆசைகள் பிறக்கின்றது.
எப்பொழுது ஒருவனுடைய இருதயத்திலுள்ள எல்லா முடிச்சுகளும் ( அறியாமையும், அத்யாஸமும், ஆசைகளும்) அவிழ்க்கபடுகின்றதோ,
அதாவது அறியாமை நீங்குகின்றதோ அப்பொழுதே சம்சாரியான மனிதன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.
இதுவே நான் உனக்கு கூறும் ஆத்ம தத்துவ உபதேசங்கள்.
——————
ஷதம் சைகா ச ஹரிதயஸ்ய நாட்யஸ்தாஸாம் மூர்தாநமபிநி ஸரிதைகா –
தயோர்த்வமாயந்நமரிதத்வமேதி விஷ்வங்ங்ந்யா உத்க்ரமணே பவந்தி ৷৷ 2.3.16 ৷৷
நூறுக்கு மேல் ஓன்று 101-நாடி -மூர்த்தன்யா நாடி -மூலம் வெளியில் சென்று அர்ச்சிராதி கதி –
ஞானத்தை அடையாதவர்களின் மரணகதியைப் பற்றி இந்த மந்திரத்தில் கூறப்படுகின்றது.
இருதயத்திலிருந்து 101 நாடிகள் உடலிலிருந்து வெளியே செல்கின்றன, அவற்றில் ஒன்று உச்சந்தலைக்குள் நுழைகின்றது.
அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.
மற்ற நாடிகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் பிறப்பெடுக்கின்றார்கள்
—————
அங்குஷ்டமாத்ர புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹரிதயே ஸந்நிவிஷ்ட-
தம் ஸ்வாச்சரீராத் ப்ரவரிஹேந்முஞ்ஜாதிவேஷீகாம் தைர்யேண –
தம் வித்யாச்சுக்ரமமரிதம் தம் வித்யாச்சுக்ரமமரிதமிதி ৷৷ 2.3.17 ৷৷
கட்டை விரல் அளவு -அத்தனை பேர் இடம் உள்ளான் -பிரித்து அறிந்து கொள்ள வேண்டும் -ஸூஷ்மம்
த்யானம் மூலம் அறிந்து -சரணாகதி மூலம் -இரட்டிப்பு சொல்லி நிகமிக்கிறார் – பரஞ்சோதி அம்ருதம் அவன்
இருதய ஆகாசத்தில் வெளிப்படுகின்ற ஆத்மாதான் நம்முடைய உண்மையான சைதன்ய ஸ்வரூபம், அந்தர்யாமி.
அது எல்லா ஜீவராசிகளின் இதயத்தில் எப்பொழுதும் வசிக்கின்றது.
அந்த ஆத்மாவை நம்முடைய சரீரத்திலிருந்து முஞ்சை புல்லிலிருந்து தண்டை பிரிப்பதை போல கவனமாக பிரித்தெடுக்க வேண்டும்,.
அப்படி பிரித்தெடுத்த ஆத்மாவானது தூய்மையானதாகவும், நிலையானதாகவும் அறிந்து கொள்.
———————-
மரித்யுப்ரோக்தாம் நசிகேதோர்த லப்த்வா வித்யாமேதாம் யோகவிதிம் ச கரித்ஸ்நம் –
ப்ரஹ்மப்ராப்தோ விரஜோபூத்விமரித்யுரந்யோப்யேவம் யோ விதத்யாத்மமேவ ৷৷ 2.3.18 ৷৷
மிருத்யுவால் உபதேசம் -பரமாத்மா வித்யையம் யோக விதியையும் அறிந்து -பர ப்ரஹ்ம ஞானம் பெற்று
அனுஷ்ட்டித்து -ப்ரஹ்மம் அடைந்தான் -கேட்டத்தை யார் கேட்டாலும் ப்ரஹ்ம பிராப்தி இது சத்யம் –
எமதர்மரால் சொல்லப்பட்ட, நசிகேதனால் கேட்கப்பட்ட இந்த ஆத்ம வித்யாவை, எவனொருவன் ஞானத்தை அடைய உதவும்
சாதனங்களை முழுமையாக பயன்படுத்தி மனத்தூய்மையடைந்து பிறகு கேட்கின்றானோ அவன் பிரஹ்ம நிலையை அடைகின்றான,
மரணமற்ற நிலையை அடைகின்றான். மற்றவர்களும் கூட இவ்வாறு அறிந்து பிரம்மத்தை அடைகின்றார்கள்.
৷৷ இதி கடோபநிஷத்ஸமாப்தா ৷৷
——————————————————–
கடோபநிஷத்தின் சுருக்கம்:
1.1. நசிகேதன் தன் தந்தையிடம் தன்னை யாருக்கு தட்சணையாக கொடுக்க போகிறீர்கள் என்று கேட்க,
அவர் எமனுக்கு கொடுக்கப்போகிறேன் என்று சொல்ல அவனும் எமலோகத்திற்கு செல்கின்றான்.
அங்கே எமதர்மராஜா இல்லாததால் 3 நாட்கள் காத்துக் கொண்டிருந்தான்.
அவன் தன்னை சந்திக்க 3 நாட்கள் காக்க வைத்தற்காக் 3 வரங்கள் தாம் தருவதாக அவர் கூறுகிறார்.
நசிகேதன் முதல் வரமாக தன் தந்தை தன் பிரிவால் வருந்தக்கூடாது எனவும், தான் திரும்பி செல்லும்போது என்னைக் கண்டு
பயப்படாமல் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று கேட்டான். இரண்டாவது வரமாக சொர்க்கலோகத்தை அடைய உதவும்
யாகத்தை செய்யும் முறையை தனக்கு சொல்லித்தர வேண்டுமென்று கேட்டான்.
மூன்றாவது வரமாக ஜீவன் இறந்ததற்கு பிறகு எங்கு செல்கின்றான் என்பதை தனக்கு சொல்லுமாறு கேட்டான்.
எமதர்மராஜாவும் அவன் கேட்ட முதல் இரண்டு வரங்களையும் அளித்துவிட்டார்.
மூன்றாவது வரமாக அவன் கேட்டது ஆத்ம தத்துவத்தை பற்றியதாக இருப்பதால் அதற்கு அவன் தகுதியானவனாக இருக்கின்றான என்று பரிசோதிக்கின்றார்.
இது புரிவதற்கு மிகமிக கடினம் என்று சொல்லிப்பார்க்கின்றார். ஆனால் நசிகேதன் அப்படியென்றால அதைத்தான் தாம் அறிய விரும்புவதாக கூறுகின்றான்.
பலபோகங்களை தருவதாக ஆசையை தூண்டுகின்றார், அவைகளை அனுபவிக்க நீண்ட ஆயுளும் தருகின்றேன் என்றும் கூறினார்.
ஆனாலும் நசிகேதன், நிலையற்ற அந்த போகங்களை தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு தேவையில்லை என்றூ உறுதியாக கூறினான்.
1.2 இதில் 7 தலைப்புக்கள் பேசப்படுகின்றது அவைகள்
1. இரண்டு விதமான மார்க்கத்தை கூறுகின்றார், அதற்கான சாதனத்தையும் கூறுகின்றார்.
அவைகள் ஸ்ரேயஸ் (மோட்சம்), ப்ரேயஸ் ( சம்சார போகம்)
2. விவேகியானவன் ஸ்ரேயச்சைத்தன் தேர்ந்தெடுக்கின்றான்.
ப்ரேயஸை தேர்ந்தெடுப்பவர்களின் துயர நிலையை கூறி அவர்களை நிந்திக்கின்றார்.
இவையிரண்டும் வெவ்வேறு பாதைகளை கொண்டிருப்பதால் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கூறுகின்றார்.
3. ஸ்ரேயஸ்சை தேர்ந்தெடுப்பவர்கள் வெகுசிலரே, அதை சொல்லி கொடுக்கும் குருவும் வெகு சிலரே என்று கூறுகிறார்.
குருவின் லட்சணமாக அவர் எதை சொல்லிக்கொடுக்கின்றாரோ அதுமாதிரியேதான் நடந்து கொள்வார் என்று விவரித்தார்.
4. சாஸ்திரத்தை கேட்டல், சிந்தித்தல், பிறகு அதை தியானித்தல் ஆடியவற்றை ஞானயோகம் என்று உரைத்தார்.
5. தர்ம-அதர்மத்திற்கும் காலத்திற்கும் அப்பாற்பட்ட ஆத்ம த த்துவத்தை நசிகேதன் உபதேசிக்க வேண்டும் என்று வேண்டினான்.
1. ஆத்ம தத்துவத்தை உபதேசிக்க ஆரம்பிக்கின்றார். இந்த அத்தியாத்தில் இந்த பாகத்தில் உள்ள 18-22 மந்திரங்கள் மிக முக்கியமானவை.
மனப்பாடம் செய்து அதை நிதித்யாஸனம் செய்ய வேண்டியவை.
2. சில சாதனங்களை சொல்கின்றார். முமுக்ஷூத்வம் ஒரு மோட்ச சாதனம்,
தார்மீக வாழ்க்கையை வாழ்வதற்கு சம, தம போன்ற சாதனங்களை பரிந்துரைக்கின்றார்.
1.3 சரீரத்தை தேராக உருவகப்படுத்தி சில உபதேசங்களை சொல்கின்றார். மனத்தூயமையை கொடுக்கும் விவேகம்,
சம, தம ஆகிய மூன்று சாதன்ங்களை முக்கியமாக கூறுகின்றார்.
புத்திக்கு ஸ்ரேயஸ்க்கும், ப்ரேயஸ்ஸுக்கும் இடையே உள்ள வேற்றுமையையும் அதன் பலன்களையும் தெரிந்திருக்க வேண்டும்.
ஐம்புலன்களையும் அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், மனதை கடிவாளமாக உருவகப்படுத்தி
அதை நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
ஆத்ம தத்துவத்தை பஞ்சகோசங்களை வைத்து விளக்குகின்றார். ஒவ்வொரு கோசத்திலும் நான் என்ற புத்தியை விட்டுவிட வேண்டும்.
இறுதியில் நானே ஆத்மா என்று உணர வேண்டும் என்றும் கூறுகின்றார். நம்முடைய பஞ்ச கோசங்களின் சமஷ்டியான பிரபஞ்சங்களையும் நீக்க வேண்டும்.
இதை அறிந்து கொள்வதற்கு இரண்டு சாதனங்கள் கூறப்படுகின்றது. இதை அறிவதற்கு நமது புத்தியானது மிகவும் சூட்சுமமாக இருக்க வேண்டும்
என்று அறிவுறுத்துகின்றார். நிதித்யாஸனத்தையும் விவரிக்கின்றார்.
2.1 மற்றொரு சாதனத்தை பற்றியும் கூறுகின்றார். இந்த பகுதியில் உள்ள எல்லா மந்திரங்களும் முக்கியமானது.
எதனால் சூட்சும புத்தியை இழக்கின்றான் என்று கேட்கும் போது படைப்பிலே இந்திரியங்கள் வெளியே செல்வதாக இருக்கின்றது.
வெகு சிலரே ) ஆவிருத்த சக்ஷூ)- இந்திரியங்களை உள்நோக்கி செல்லுமாறு பழக்கி வைத்திருகின்றார்கள்.
இதனால சூட்சும புத்தியை அடைகின்றார்கள். விதவிதமான கோணங்களில் ஆத்ம த த்துவமானது விளக்கபடுகின்றது;
த்ருக்-த்ருஷ்ய விவேகம் மூலம் ஆத்ம ஞானம் விளக்கப்படுகின்றது. அறிபவன் – அறியப்படும்பொருள் இந்த தத்துவமும்,
ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தையும் விளக்குகின்றது. இருமையானது நிந்திக்கப்படுகின்றது.
இருமை புத்தியை உடையவன் சம்சாரத்தில் சிக்கி பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்திலே சுழன்று கொண்டிருப்பான் என்று எச்சரிக்கின்றார்.
2.2 ஆரம்பத்தில் ஆத்ம தத்துவம் விவரிக்கப்படுகின்றது. உடலை ஒரு நகரத்திற்கு ஒப்பிட்டு விவரிக்கப்படுகின்றது.
அன்வய-வியதிரோக த த்துவட்தின் மூலமாக இது விளக்கப்படுகின்றது. இறந்த தற்கு பிறகு அக்ஞானிகளினுடைய நிலை என்ன என்பதையும் கூறுகின்றார்.
உறங்கும்போது ஆத்மா உறங்குவதில்லை சாட்சியாக இருந்து கொண்டு எல்லா அவஸ்தைகளிலும் நடப்பதை பார்த்து கொண்டிருக்கின்றது.
சரீரம் ஆத்மாவுக்கு உபாதியாக கூறப்படுகின்றது. ஸ்படிகத்தின் அருகின் உள்ள சிவப்பு மலரின் நிறம் அதில் பிரதிபலிப்பது போல
சரீரத்தி செயல்கள் அனைத்தும் ஆத்மாவிற்கு செல்கின்றதாக விளக்குகின்றார்.
ஆத்மா ஆனந்தஸ்வரூபம் என்றும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்று விளக்குகின்றார்.
2.3 சம்சார வர்ணனை கூறப்பட்டுள்ளது. சம்சாரம் அரச மரத்திற்கு உதாரணமாக கூறப்பட்டு மரத்தைப்போல் அநித்யமானது என்றும்
அதற்கு ஆதாரமாக எப்படி வேர் இருக்கின்றதோ அதுபோல சம்சாரத்திற்கு ஆதாரமாக பிரம்மம் இருக்கின்றது என்று தெளிவுபடுத்துகின்றார்.
ஈஸ்வரனே அனைத்துமாக இருக்கின்றார், அவருக்கு கட்டுபட்டுத்தான் எல்லா இயற்கை சக்திகளும் இயங்குகின்றன என்று சுட்டிக் காட்டுகின்றார்.
மனித சரீரத்தின் மேன்மையை கூறி இதன் மூலம்தான் ஆத்ம தத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று உறுதி கூறுகின்றார்.
ஆத்ம தத்துவத்தை மீண்டும் வேறு வகையில் விளக்குகின்றார். அதை அறிவதற்கு வேறு சில சாதனங்களையும் கூறுகின்றார்.
சூட்சும்மான புத்தியின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். நிதித்யாஸனத்தை பற்றி கூறியிருக்கின்றார்.
அறிவை அடைந்தாலும் பழக்க தோஷத்தால் நம் மனம் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல தூண்டும் எனவே அடைந்த
அறிவில் நிலைபெற்று இருக்க வேண்டும். எப்பொழுதும் மனமும், புலன்களும் அமைதியாக இருக்கின்றதோ
அதுவே நாம் அறிவை அடைந்த்தற்கான அறிகுறியாக சொல்கின்றார்.
மேலும் ஸ்ரத்தையை உடையவன்தான் மோட்சத்தை அடைவான் என்றும் உறுதிபட கூறுகின்றார்.
முதலில் இருக்கின்றது என்று உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு இருக்கின்றேன் என்ற அறிவை அடைவோம்.
ஆத்ம பலன்களை கூறுகின்றார்.
1. நம்முடைய மனதிலுள்ள ஆசைகளெல்லாம் அழிந்துவிடும், புதிதான எந்த ஆசைகளும் தோன்றாது,
அப்படி தோன்றினாலும் அது பந்தப்படுத்தாகவே இருக்கும்.
2. நம்முடைய அறியாமை நீங்கி விடும்.
3. மனிதன் அமரத்தன்மையை இங்கேயே, இப்போதே அடைகின்றான். பூரணமான ஆத்மாவை அறிகின்றான்.
4. தம்மிடத்தேயுள்ள அறியாமை-அத்யாஸம் இவைகள் நீங்கப்பெற்று ஆத்ம ஞானத்தை அடைகின்றான்.
5. நசிகேதன் மட்டுமில்லாமல் மற்றவர்களாலும் இந்த ஞானத்தை அடையப்படும் என்று உபநிஷத் உறுதிகூறுகிறது.
—————————–
ஸஹ நாவவது ஸஹ நௌ புநக்து ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்விநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை ৷৷
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷
—————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .