ஸ்ரீ ப்ரஸ்ன உபநிஷத் —

ஸுகேஷா ச பாரத்வாஜ ஷைப்யஷ்ச ஸத்யகாம ஸௌர்யாயணீ ச கார்க்ய கௌஷல்யஷ்சாஷ்வலாயநோ பார்கவோ வைதர்பி கபந்தீ
காத்யாயநஸ்தே ஹைதே ப்ரஹ்மபரா ப்ரஹ்மநிஷ்டா பரம் ப்ரஹ்மாந்வேஷமாணா ஏஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷ்யதீதி
தே ஹ ஸமித்பாணயோ பகவந்தம் பிப்பலாதமுபஸந்நா ৷৷1.1.1৷৷

ஆறு ரிஷிகள் (ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி திருக்குமாரர் ஸ்ரீ ஸூ கோசர் -ஸ்ரீ சிபியின் திருக்குமாரர் ஸ்ரீ சத்யகாமர் –
ஸ்ரீ ஸுர்யாயணீய மகரிஷியின் திருக்குமாரர் ஸ்ரீ கார்க்க்ய மகரிஷியும் -ஸ்ரீ அஸ்வலாயனர் திருக்குமாரர் ஸ்ரீ கௌசல்யர் —
ஸ்ரீ விதர்ப்ப திருக்குமாரர் ஸ்ரீ பார்க்கவ மகரிஷியும் -ஸ்ரீ கத்ய மகரிஷி கோத்ரத்தவரான ஸ்ரீ காபந்து மகரிஷி -ஆகிய பிரசித்தமான அறுவர்) –
ஆறு கேள்விகள் -பிப்பலாதர் இடம் கேட்டு பதில் -அதர்வண வேத உபநிஷத் -சுலபமான கேள்விகள்
பதில் புரிந்து கொள்ள அதிகாரம் சம்பாதிக்க வேண்டும் –அதிகாரம் சம்பாதிக்க ஒரு வருஷம் காட்டுக்கு போக சொல்லி தபஸ்
அப்புறம் தான் அர்த்தம் அருளிச் செய்தார் -அறிந்து கொள்ள ஆசை முதலில் நமக்கு வேண்டும்
ப்ரச்னம் -கேள்வி ஒன்றை ஓன்று கஷ்டம் -ஆறாவது கேள்வி கேட்டவர் பெயர் முதலில்

ஸுகேஷா ச பாரத்வாஜ -பரத்வாஜர் திரு மகன் ஸூ கேஷர்-வால்மீகி சிஷ்யர் பரத்வாஜர்
ஷைப்யஷ்ச ஸத்யகாம -ஸத்யகாமர் இரண்டாவது
ஸௌர்யாயணீ ச கார்க்ய -கார்க்யா கோத்ரம்-கார்க்யர் மூன்றாவது
கௌஷல்யஷ்சாஷ்வலாயநோ
பார்கவோ வைதர்பி
கபந்தீ காத்யாயநஸ்தே ஹைதே
ப்ரஹ்மபரா ப்ரஹ்மநிஷ்டா
பரம் –ப்ரஹ்மாந்வேஷமாணா –ப்ரஹ்ம பார்த்தார்கள் நிஷ்டர்கள் –
ஏஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷ்யதீதி தே ஹ ஸமித்பாணயோ பகவந்தம் பிப்பலாதமுபஸந்நா–ஸமித் பாணி நமஸ்காரத்துடன் சென்றார்கள்
ஆச்சார்யரை நோக்கி சென்றார்கள்

ஸுகேஷ பாரத்வாஜ் – முதல் சிஷ்யர்
ஶைப்யஹ, சத்யகாம – இரண்டாவது சிஷயர்
ஸௌர்யாயணி, கார்க்ய – மூன்றாவது சிஷ்யர்
கௌஸல்ய, ஆஸ்வாலாயன – நான்காவது சிஷ்யர்
பார்கவ, வைதர்பி – ஐந்தாவது சிஷ்யர்
கபந்தீ, காத்யாயன் – ஆறாவது சிஷ்யர்
ஹேதே – இவர்கள்
ப்ரஹ்ம பராஹா – ஈஸ்வரனை பரமாக கொண்டவர்கள் (கர்மயோகிகள்)
ப்ரஹ்ம நிஷ்டா – ஈஸ்வரனை உபாஸனை செய்பவர்கள்
பரம் ப்ரஹ்ம அன்வேஷமாணா: – பர பிரஹ்மத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலிரண்டின் மூலமாக அதிகாரித்வம் பெற்றிருப்பவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
மூன்றாவதிலிருந்து அவர்களின் முமுக்ஷுத்வத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏஷ ஹ வை – இவரே
தத் ஸர்வம் – அனைத்தையும்
வக்ஷயதி – சொல்வார்
இதி – என்று கூறிக் கொண்டு
ஸமித் பாணி – கைகளின் சமித்தை எடுத்துக் கொண்டு
பகவன் தம் பிப்பலாதம் – பகவான் பிப்பலாத குருவை
உபஸன்னாஹ – அணுகினார்கள்

—————-

தாந்ஹ ஸ றஷிரூவாச பூம ஏவ தபஸா ப்ரஹ்மசர்யேண ஷ்ரத்தயா ஸம் வத்ஸரம் ஸம் வத்ஸ்யத யதாகாமம்
ப்ரஷ்நாந்பரிச்சத யதி விஜ்ஞாஸ்யாம ஸர்வம் ஹ வோ வக்ஷ்யாம இதி ৷৷1.1.2৷৷

ஸஹ ரிஷி தான் உவாச – அந்த முனிவர் அவர்களிடம் கூறினார்
பூய ஏவ தபஸா – இன்னும் தவத்துடனும் (சம, தம ஆகிய தகுதிகள் வளர)
பிரம்மச்சர்யேன – பிரம்மசர்ய விரத த்துடனும் ( குரு குல வாச நியமங்களை பின்பற்றுதல்)
ஶ்ரத்தயா – சிரத்தையுடனும்
ஸம்வத்ஸரம் – ஒரு வருடம்
ஸம்வத்ஸ்யத ­ – உரிய முறையில் குருவிற்கு சேவை செய்து வாருங்கள்

குருவுக்கு அருகே சென்று பணிவிடை செய்யும்போதுதான் அவர் மீது சிரத்தை வளரும்.
இதனால் அவர் கூறும் வாக்கியங்கலின் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.

யதாகாமம் ப்ரஶ்னான் ப்ருச்சத – உங்கள் விருப்பப்படி கேள்விகளை கேளுங்கள்.
யதி விஞாஸ்யாம – எங்களுக்கு தெரிந்தால்
ஸர்வம் ஹ வை வ்க்ஷ்யாம இதி – எல்லாம் உங்களுக்கு சொல்கிறோம்.
இது குருவிடம் இருக்கும் பணிவை காட்டுகின்றது. அவர் ஞானநிஷ்டர் என்பதும் தெரிகின்றது.

ஸ்ரத்தை யுடன் -ப்ரஹ்ம சர்ய விரதம் ஒரு ஸம்வத்ஸரம்–தபஸ் இருந்து -அப்புறம் ஆசைப்பட்ட படி கேள்வி கேளுங்கோள் –
பதில் தெரிந்தால் சொல்லுவேன் -திருக் கோஷ்டியூர் நம்பி -18-மந்த்ரார்த்தம் -நம் பெருமாள் -18-திரு மஞ்சனம் -இன்றும் உண்டே

—————

அத கபந்தீ காத்யாயந உபேத்ய பப்ரச்ச பகவந்குதோ ஹ வா இமா ப்ரஜா ப்ரஜாயந்த இதி ৷1.1.3৷৷

அத – ஒரு வருடத்திற்கு பிறகு
கபந்தீ காத்யாயன என்ற பெயருடைய சிஷயர்
உபேத்ய ப்ப்ரச்ச – அணுகி கேட்டார்
பகவன் குதே ஹ – பகவானே! யாரிடமிருந்து, எதிலிருந்து
இமாஹா ப்ரஜா: – இந்த உயிரினங்கள்
ப்ரஜாயந்த இதி – தோன்றியுள்ளன என்று கேட்டார்.

இது ஸ்ருஷ்டியைப் பற்றியதான கேள்வி. ஸ்ருஷ்டியைப் பற்றி இரண்டு காரணத்திற்காக பேசப்படுகிறது.
அவைகள் 1. பிரம்மத்தைப் பற்றி விளக்குவது, 2. வைராக்கியத்தை அடைவது.

கபந்து முதல் கேள்வி -சுமார் வித்வான் -கண்ணால் பார்க்கும் ஜகம் எப்படி ஸ்ருஷ்ட்டி -சின்னத்தில் இருந்து பெரியதா –
விஞ்ஞானம் அணுக்கள் சேர்ந்து -மெய்ஞ்ஞானம் ப்ரஹ்மம் பெரியத்தில் இருந்து அனைத்தும்
ஞானம் இருப்பது ஜகத்துக்கு காரணம் ஆகுமா / ஞானம் இல்லாதது காரணம் ஆகுமா /
இருப்பதுதான் காரணம் ஆகும் -சத்காரிய வாதம் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒத்து போகும் –
வஸ்து இல்லாமல் உத்பத்தி இல்லை -அவஸ்தா வாசி மண் குடமாக பரிணாமம் ஆகும் –
இந்த மூன்றையும் -பெரியது -ஞானம் -உள்ள ஒன்றாலே அனைத்தும் –

————–

தஸ்மை ஸ ஹோவாச ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிதுநமுத்பாதயதே
ரயிம் ச ப்ராணம் சேத்யைதௌ மே பஹுதா ப்ரஜா கரிஷ்யத இதி ৷৷1.1.4৷৷

தஸ்மை ஸ உவாச – கேள்வி கேட்ட சிஷ்யருக்கு குரு பதிலளிக்கிறார்.
ப்ரஜாபதி – எல்லா உயிரினங்களின் ஸ்ருஷ்டிக்கு காரணமானவர்
ப்ரஜாகாம: – உயிரினங்களை படைக்க விரும்பினார்.
ஸ தப அதப்யத – அவர் தவத்தை மேற்கொண்டார்
ஸ தப: தபத்வா – தவத்தை முடித்த பிறகு, ( எப்படிபட்ட ஸ்ருஷ்டியை உருவாக்கலாம் என்று திட்டமிட்டார்.
ஸ மிதுனமுத்பாதயதே – இருமைகள் உற்பத்தியானது.
ரயிம் ச ப்ராணம் ச உத்யஹ – ரயி(தனம், நீர்), பிராணன் என்ற இரண்டையும் தோற்றுவித்தார்.
ஏதௌ மே பஹூதா – இந்த இரண்டும் எனக்கு பலவிதமான
ப்ரஜா கரிஷ்யத இதி – உயிரினங்களை உருவாக்கி கொடுக்கும் என்று

வேதார்த்த விஞ்ஞானத்தை ஆலோசித்து -நான் முகனாக வேணும் என்று பர ப்ரஹ்மமே நான்முகன் -என்று அறிந்து -உபாசித்து
ரயி ஸூர்யன் -ஆகிய இருவரையும் ஸ்ருஷ்டித்தார் என்று ஸ்ரீ பிப்பலாதர் ஸ்ரீ கபந்திக்கு சொன்னார்
ரயி பிராணன் -பிரகிருதி ஜீவன் என்றுமாம் -பிரஜாபதி பரமாத்மாவே -ஹிரண்ய கர்ப்பன்-நான்முகனை அன்று –
இதுவே காரண வாக்கியம் -காரணந்து த்யேயா

——————-

ஆதித்யோ ஹ வை ப்ராணோ ரயிரேவ சந்த்ரமா ரயிர்வா ஏதத்ஸர்வம் யந்மூர்தம் சாமூர்தம் ச தஸ்மாந்மூர்திரேவ ரயி ৷৷1.1.5৷৷

ஆதித்ய ப்ரானஃஅ – சூரியனே பிராணன் ( சக்தி)
சந்த்ரம ரயி ரேவ – சந்திரன் சூரியனிடமிருந்து சக்தியை பெற்று ஒளி வீசுகிறது.
ரயி வை ஏதத் – ரயி என்பது உலகிலுள்ள அனைத்தும்
மூர்த்தம், அமூர்த்தம் – உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருப்பது
தஸ்மாத் மூர்த்தி ரயி – ஆகவே உருவத்துடன் இருப்பது எல்லாம் ரயி, உருவமற்றதாக இருப்பதெல்லாம் பிராணன்.

ரயி தத்துவம் – இருமைகள் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பவைகள்
(இன்ப-துன்பம், ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ( குரு-சிஷ்யன், ராக-துவேஷம் – எங்கே ராகம் இருக்கின்றதோ
அங்கேதான் துவேஷம் இருக்கும்). இங்கே ரயி என்பது அனுபவிக்கப்படும் பொருள் – உணவு,
பிராணன் என்பது அனுபவிப்பவர் – சாப்பிடுபவர். இவையிரண்டும்தான் முதன் முதலில் தோன்றியது.
இவைகள் ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றின. எனவே இவைகள் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன.
(உ-ம்) சாப்பிடுபவனும் பஞ்ச-பூதத்தினாலானவன், சாப்பிடப்படும் உணவும் பஞ்ச-பூதத்திலானவைகள்.
இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம்.

காரண பார்வையில் இரண்டும் ஒன்று, காரிய பார்வையில் இரண்டும் வெவ்வேறானது
ரயி, பிராணன் இந்த வார்த்தைகள் விஷயம், விஷயி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

போக்தா ஜீவன் -போக்யம் பிரகிருதி -மூத்த அமூர்த்த ரூபமாய் இருக்கிற காணப்படும் சமஸ்தமும் போக்யம்
அத்தா என்றும் அன்னம் என்றும் சொல்லப்படும் ஆதித்யன் -சந்த்ரமா -என்கிற எல்லா மூர்த்தியும் ரயி —
பஞ்ச பூதங்களும் ரயி -பிராணன் ஆதித்யன் -என்றவாறு

———————

அதாதித்ய உதயந்யத்ப்ராசீம் திஷம் ப்ரவிஷதி தேந ப்ராச்யாந் ப்ராணாந்ர ஷ்மிஷு ஸம் நிதத்தே யத்தக்ஷிணாம் யத்ப்ரதீசீம் யதுதீசீம்
யததோ யதூர்த்வம் யதந்தரா திஷோ யத்ஸர்வம் ப்ரகாஷயதி தேந ஸர்வாந்ப்ராணாந் ரஷ்மிஷு ஸம் நிதத்தே ৷৷1.1.6৷৷

அத ஆதித்ய உதயன் – பிறகு சூரியன் உதித்தது
யத் ப்ரசிம் திஶம் ப்ரவிஶதி – கிழக்கு திசையை தன்னுடைய கிரணங்களால் வியாபிக்கிறார்.
தேன ப்ராச்யான் ப்ராணான் – அதனால் கிழக்கிலுள்ள ஜீவன்களை
ரஶ்மிஷு ஸன்னித்த்தே – தன்னுடைய கிரணங்களால் தன்மயமாக்குகின்றார்.
யத் தக்ஷிணாம் – தெற்கு திசையில் ஒளிவீசும் போது
யத் ப்ரதீசீம் – மேற்கு திசையில் ஒளிவீசும் போது
யத் உதீசீம் – வடக்கு திசையில் ஒளிவீசும் போது
யத் அதஹ – கீழே ஒளிவீசும் போது
யத் ஊர்த்வம் – மேலே ஒளிவீசும் போது
யத் அந்தரா ச – உட்பகுதிகளில் ஒளிவீசும் போது
ஸர்வம் ப்ரகாஶயதி – அனைத்தையும் ஒளிர செய்கிறது
தேன – அதனால்
ஸர்வான் ப்ராணன் ரஶ்மிஷு ஸன்னிதத்தே – எல்லா ஜீவன்களையும் தன்மயமாக்குகிறார்.

எல்லாவற்றையும் பேத பார்வையோடு பார்க்கும் நிலையில்தான் நம்முடைய புத்தி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
ஆகவே இந்த புத்தியை அபேத புத்தியுடன் செயல்படுமாறு செய்ய வேண்டும்.
ஸர்வாத்ம பாவஹ என்ற அறிவுடன் நோக்கும் போது இந்த அபேத புத்தி வந்து விடும்.

உதய சமயத்தில் கிழக்குத் திக்கில் பிரவேசித்து -பிராணங்களை தர்மபூத ஞானம் ஆகிற கிரணங்களிலே சேர்த்து –
அனைத்து திக்குகளையும் பிரகாசிக்கச் செய்வதால் ஆதித்யன் எனப்படுகிறான் -பிராணம் சர்வ தாரகமாய் இருக்கும் –
இவன் பிராண சப்தத்தால் சொல்லப்படுகிறான்

அசேதனங்கள் -தானே செயல் படாதே -காட்டில் எறிந்த நிலா வாகக் கூடாதே -ஆத்மா உள்ளே புகுந்தால் தானே அனுபவம்
வடக்கே -கிழக்கே தெற்கு மேற்கு மேல் நோக்கி கீழ் நோக்கி அனுப்புகிறார் தூண்டுகிறார்
ப்ராஸீம் தோஷம் ப்ரவிஷதி- சோம்பல் இல்லாமல் சொல்லும் உப நிஷத் -சொல்லிய பின்பும் சொல்லாமல் விட்ட இடங்களிலும் உண்டு என்று சொல்லும்
ஜீவனை புகுத்தி சம்பந்தம் தானே ஜனனம் -/ பிரிவதே மரணம் / உள்ளே நுழைந்து தூண்டியபின்பே வேலை –
கர்ம பலன் அனுபவிக்க ஆத்மா உள்ளே அதிஷ்டானம் -/ ஜட பொருளுக்குள் காலத்தை கழிக்க பல ஆத்மாக்கள் –
வேறே கர்மாக்கள் சம்பாதிக்காமல் -இவை –நகம் வெட்ட போகும் -தலை மயிரிலும் ஆத்மா உண்டே -ஆத்மா குஞ்சங்கள் இவை -/

————–

ஸ ஏஷ வைஷ்வாநரோ விஷ்வரூப ப்ராணோக்நிருதயதே ததேததரிசாப்யுக்தம் ৷৷1.1.7৷

ஸஹ ஏவ வைஶ்வானரஹ – ஸர்வ ஜீவாத்மாவான இந்த ப்ராணன் ஆதித்யனாக இருக்கிறார்.
வைசுவானரன் என்றால் அனைத்து உயிரினங்களாக உள்ளவன், அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு ஆற்றலை அளிப்பதால்
சூரியன் அனைத்து உயிர்களின் வடிவமாக போற்றப்படுகிறார்.
விஶ்வரூபஹ – எல்லாமுமாக இருக்கின்றார் – பிரபஞ்சமாக இருக்கின்றார்.
ப்ராணோ அக்னி உதயதே – அனைத்தையும் உட்கொள்கின்ற நெருப்பாக இருக்கின்றார்.
தத் ஏதத் ரிசா அப்யுக்தம்- அது இவ்வாறு ரிக் வேத்தில் கூறப்பட்டுள்ளது

ரிக் வேதம் சொல்லும் -பிராணன் -அதிஷ்டானம் பண்ணினால் தான் அக்னி கார்யம் இத்யாதி
அப்படிப்பட்ட இந்த ஜீவனானவன் -சமஸ்தங்களையும் நியமிக்கிற எல்லாவற்றையும் சரீரமாக உடைய மேலான கதியைக்
கொடுத்து அருளும் பரமாத்மாவுக்கு சரீரமாக விளங்குகிறான்
வைச்வானரதிகரணத்தில் இந்த வாக்கியம் கொண்டே ஸ்ரீ பாஷ்ய வியாக்யானம்

————-

விஷ்வரூபம் ஹரிணம் ஜாதவேதஸம் பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம
ஸஹஸ்ரரஷ்மி ஷததா வர்தமாந ப்ராண ப்ரஜாநாமுதயத்யேஷ ஸூர்ய ৷৷1.1.8৷৷

விஶ்வரூபம் – அனைத்துமாக இருப்பவர்
ஹரிணம் – ஒளிக்கதிர்கள் நிறைந்தவன், எல்லாவற்றையும் தன்னுள்ளே எடுத்துக் கொள்பவர்.
ஜாதவேதஸம் – அனைத்தையும் அறிந்தவர்
பராயணம் – ஜீவர்களுக்கு ஆதாரமாக இருக்கிறார்.
ஜ்யோதிஹி – ஒளிமயமானவர்
ஏகம் – ஒருவரே
தபந்தம் – வெப்பத்தை கொடுத்து பாவங்களை போக்குகிறார்.
சூரியனை இவ்வாறாக மகான்கள் அறிகிறார்கள்.
ஸஹஸ்ர ரஶ்மி ஶததா வர்தமானஹ – ஆயிரக்கணக்கான ஒளிக்கதிர்களுடன் நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறார்.
ப்ராணா: ப்ரஜானாம் – எல்லா ஜீவராசிகளுக்கும் உயிராக இருக்கின்றவர்.
ஏஷ ஸூர்யஹ உதயதி – இப்படிபட்ட சூரியன் உதிக்கின்றார்.

ருக்கு மந்த்ரம் இங்கே -விஸ்வத்தை உருவாக கொண்ட -சூர்ய கிரணங்கள் போலே ரஸ்மி -தேஜஸாம் ராசி மூர்த்தானாம் –
அடையத்தக்க -உலகுக்கு கண்ணாக -பிராணன் -ஜீவனை அனுவர்த்தனம் பண்ணுகிறான்
எல்லாவற்றையும் சரீரமாக உடையவனும் -வேதங்களை பிரகாசித்தவனும் பரம பிராப்தமுமான தேஜஸ் ஸ்வரூபி –
அத்விதீயன் -ஸ்ரீ ஹரி -சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -பிரணபூதமான சர்வ வஸ்துவாகவே பர ப்ரஹ்மம் -என்றவாறு

—————

ஸம் வத்ஸரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாயநே தக்ஷிணம் சோத்தரம் ச. தத்யே ஹ வை ததிஷ்டாபூர்தே கரிதமித்யுபாஸதே தே சாந்த்ரமஸமேவ
லோகமபிஜயந்தே த ஏவ புநராவர்தந்தே தஸ்மாதேத றஷய ப்ரஜாகாமா தக்ஷிணம் ப்ரதிபத்யந்தே ஏஷ ஹ வை ரயிர்ய பிதரியாண ৷৷1.1.9৷৷

வேதம் உரைக்கும் கர்மத்தை முறையாக செய்து காலமானவர்கள் கிருஷ்ண கதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.
உபாஸனை செய்து காலமானவர்கள் சுக்லகதி வழியாக சூரியலோகம் (பிரம்ம லோகம்) செல்கிறார்கள்.

ஹிரண்யகர்ப்பன்தான் கால தத்துவமாக இருக்கின்றார். காலமே பிரஜாபதி. அந்தக் காலத்திற்கு இரண்டு வழிகள் இருக்கின்றது.
அவைகள் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்பதாகும். மனிதர்களுக்குள் யார் இந்த விதத்தில் ஸ்ருதியில் சொல்லப்பட்ட
கர்மங்களை செய்கிறார்களோ அவர்கள் கிருஷ்ணகதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.

1-இஷ்டம்: அக்னிஹோத்ரம், தபம் (விரதத்தை முக்கியமாக கருதப்படுகிறது ), மற்றவர்களை சொல்லால் துன்புறுத்தாது இருத்தல்,
சத்யம் பேசுதல், பிராணிகளை பாதுகாத்தல், விருந்தினர்களை அன்புடன் உபசரித்தல், பறவைகளுக்கும், சிற்றுயிர்களுக்கும் உணவளித்தல்
2-பூர்த்தம் சமுதாய சேவை (ஏரி, குளம், கிணறு வெட்டுதல் ), கோயில்களை கட்டி பராமரித்தல், புதுப்பித்தல், அன்னதானம், தோட்டங்களை வளர்த்தல்
3-தத்தம் பகிர்ந்து கொள்ளுதல், தானம் செய்தல், அபயம் அளித்தல் இது மிகப்பெரிய தானம், சரணடைந்தவர்களை பாதுகாத்தல்,
அஹிம்சைய கடைப்பிடித்தல், யாகம் செய்து கொடுத்தவர்களு வெகுமதி அளிப்பது

இந்த மூன்றையும் நன்றாகவும், சரியாகவும் கடைப்பிடித்து காலமானவர்கள் சந்திரலோகம் சென்று மீண்டும் பூலோகத்தில் பிறப்பார்கள்.
ஆகவே கர்மத்தில் நாட்டமுடையவர்கள், சந்ததியை நாடுபவர்கள் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்.

பிரஜாபதியை கால ரூபமாக உருவகம் -இங்கு –சுத்த சத்வம் மிஸ்ர சத்வம் கால தத்வம் மூன்றும் அசேதனங்கள் –
தானும் மாறி -அனைத்தையும் மாற்றும் காலம் –
தேவ யாணம் உத்தர தசை / புண்யம் செய்து ஸ்வர்க்கம் -அனுபவித்து -மீண்டும் வந்து /
தக்ஷிண யானும் பித்ரு யாணம் -நரகம் அனுபவித்து மீண்டும் வந்து

——————

அதோத்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ஷ்ரத்தயா வித்ய யாத்மாந மந்விஷ்யாதித்ய மபிஜயந்தே ஏதத்வை ப்ராணாநாமாயத நமேத
தமரிதமபயமேதத் பராயணமேதஸ்மாந்ந புநராவர்தந்த இத்யேஷ நிரோதஸ் ததேஷ ஷ்லோக ৷৷1.1.10৷৷

சிலர் உத்தராயனத்தின் வழியாக பிரம்மலோகத்திற்கு சென்று சுகத்தை அடைகிறார்கள்
வைராக்கியம் அதிகம் உள்ளவர்கள் அங்கிருந்தே கிரம முக்தி அடையலாம்.
பிரம்மலோகம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் விளக்கப்படுகின்றது.
அத – மேலும்
தபஸா தவத்தால், (உடலைக் கொண்டு செய்யும் தவம்)
ப்ரஹ்மசர்யேண பிரம்மசர்யத்தை கடைப்பிடித்தால்,
ஶ்ரத்தயா செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையால்
வித்யயா தியானத்தால், தன்னையே உபாஸிக்கும் தேவதையாக பாவித்து செய்கின்ற தியானத்தை செய்தால்
ஆத்மானம் அன்விஷ்ய ஆதித்ய பகவானை நாடி
ஆதித்யம் அபிஜாயந்தே ஆதித்யனையே அடைகிறார்கள், பிரம்மலோகத்தை அடைகிறார்கள். உத்தராயணம் மார்க்கத்தின் வழியாக இவ்வுலகத்தை அடைகிறார்கள்
ஏத த் வை ப்ராணானாம் ஆயதனம் – இதுவே ஆற்றல்களின் உறைவிடம்
அம்ருதம், அபயம், பராயணம் – அழிவற்றது, பயமற்றது, லட்சியம்
ஏதஸ்மாத் – இந்த லோகத்திலிருந்து
புனராவர்த்தந்தே – மீண்டும் திரும்பி வருவதில்லை, பிறப்பதில்லை
இதி ஏஷ நிரோத – இந்தப் பாதைக்கு உபாஸனை செய்யாத கர்மிகளால் செல்ல முடியாது
த்தேஷு ஶ்லோகஹ – இதைப் பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

தபஸாலும்-ப்ரஹ்மசர்ய வ்ரதத்தாலும் ஸ்ரத்தையாலும் வித்யா மஹாத்ம்யத்தாலும் -அம்ருதம் -பாராயணம் -மீளா வைகுந்தம் -அடைகிறார்கள்
அர்ச்சிராதி மார்க்கத்தால் -மாம் உபேத்யதி கௌந்தேய புனர் ஜென்ம ந வித்யதே -என்றவாறு

————-

பஞ்சபாதம் பிதரம் த்வாதஷாகரிதிம் திவ ஆஹு பரே அர்தே புரீஷிணம்
அதேமே அந்ய உ பரே விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷடர ஆஹுரர்பிதமிதி ৷৷1.1.11৷৷

இதில் காலமே சூரியனாக வர்ணிக்கப்படுகின்றது.
பஞ்சபாத3ம் – ஐந்து பாதங்களை உடையது. இங்கு பாதங்கள் என்பது பருவங்களை குறிக்கின்றது.
அவைகள் வசந்தம், கோடை, மழை, இலையுதிர், குளிர் ( முன்பனிக்காலம், பின்பனிக்காலம்).
பிதரம் – தந்தையாக இருக்கிறார் ( வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்)
த்3வாத3ஶ ஆக்ருதிம் – பன்னிரண்டு உருவங்களை உடையவர். இது 12 மாதங்களை குறிக்கின்றது
அர்தே4 பரம் தி3வே ஆஹு மேற்பகுதியிலிருந்து மழை பொழிபவன் என்று சொல்கிறார்கள்.
அத2 விசக்ஷணம் ஸப்தசக்ரே மேலும் ஏழு சக்கரங்களுடன் ( இது ஏழு வர்ணங்களை கொண்ட வானவில்லாக கூறப்படுகிறது),
ஆறு ஆரங்களுடன் (ஆறு பருவங்களுக்கு ஒப்பிடப்படுகின்றது) கூடிய தேரில் இருப்பவன்
இதி அன்யே இமே பரே என்று வேறு சிலர் இவ்வாறு மேன்மையாக
ஆஹு: சொல்கிறார்கள்.

12-மாதம் -நாள்-ஆகாசத்தில் ஓடும் -ஏழு குதிரைகள் சந்தஸ்கள் -அரம்-நேமி கும்பம் -தேர் வசந்த ருசி ஆரும் ஆறு அரங்களும்
சம்வத்சரத்துக்கு ஹேமந்த ருது சிசிர ருது இவற்றை ஒன்றாக்கி –
வத்சரம் -சம்வத்சரம் -பரிவஸ்தரம் -இடாவத்சரம்-அனுவத்சரம் -ஆகிய ஐந்து பாதங்கள் –
பன்னிரண்டு மாதங்கள் -எழு கிரகங்கள் ஆகிற சக்கரங்கள் -அனைத்துக்கும் ஆதாரம் -சம்வத்சர பிரஜாபதி

—————

மாஸோ வை ப்ரஜாபதிஸ் தஸ்ய கரிஷ்ண பக்ஷ ஏவ ரயி ஷுக்ல ப்ராணஸ் தஸ்மாதேத றஷய ஷுக்ல இஷ்டிம் குர்வந்தீதர இத ரஸ்மிந் ৷৷1.1.12৷৷

மாதமும் பிரஜாபதி தத்துவம், அதில் கிருஷ்ண பக்ஷமானது (தேய்பிறை) ரயி தத்துவம் என்றும்,
சுக்ல பக்ஷமானது (வளர்பிறை) பிராண தத்துவம் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே சுக்லபக்ஷத்தில் யாகங்களை மேற்கொள்கிறார்கள்

தர்ம கார்யம் -பகல் பொழுது- சுக்ல பக்ஷம் -உத்தராயணம் -ஸ்ரேஷ்டம் —
ஹோமம் ஜ்வலிக்கும் அக்னியில் அஸ்தமனம் முன்னால் செய்தால் தான் பலம் –
ஆகையால் ஞானவான்கள் சுக்ல பக்ஷத்தில் நல்ல கர்மங்களை செய்கிறார்கள் –
அறிவில்லாதவர் க்ருஷ்ண பக்ஷத்தில் செய்கிறார்கள்

——————-

அஹோராத்ரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாஹரேவ ப்ராணோ ராத்ரிரேவ ரயி ப்ராணம் வா ஏதே ப்ரஸ்கந்தந்தி யே
திவா ரத்யா ஸம் யுஜ்யந்தே ப்ரஹ்மசர்யமேவ தத்யத்ராத்ரௌ ரத்யா ஸம் யுஜ்யந்தே ৷৷1.1.13৷৷

இரவும் பகலுமே படைப்புக் கடவுள் (பிரஜாபதி). இதில் பகலே பிராணன், இரவே ஜடம் (ரயி).
யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள்.
இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சர்யமே..

பிராணன் -ஆத்மா சம்பந்தம் -பகல் /-இரவு -ரயி மூல பிரகிருதி -அசேதனம் அன்னம் உருவாக்கி /இப்படி ஸ்ருஷ்ட்டி க்ரமம்

—————–

அந்நம் வே ப்ரஜாபதிஸ்ததோ ஹ வை தத்ரேதஸ்தஸ்மாதிமா ப்ரஜா ப்ரஜாயந்த இதி ৷৷1.1.14৷৷

பிரஜாபதியே அன்னமாக இருக்கிறார். உணவிலிருந்தே வீர்யமானது உண்டாகிறது, அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன

——————

தத்யே ஹ வை தத்ப்ரஜாபதிவ்ரதம் சரந்தி தே மிதுநமுத்பாதயந்தே
தேஷாமேவைஷ ப்ரஹ்மலோகோ யேஷாம் தபோ ப்ரஹ்மசர்யம் யேஷு ஸத்யம் ப்ரதிஷ்டிதம் ৷৷1.1.15৷৷

இல்லறத்தில் இருப்பவர்கள் படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை கடைப்பிடித்து வாழ்ந்தால்
அவர்களுக்கு மகன், மகள் பிறப்பார்கள். தமக்கு வேண்டிய சுகங்களை பெறுவார்கள்,
இறந்த பிறகு சொர்க்கலோகத்தை அடைவார்கள்

———————

தேஷாமஸௌ விரஜோ ப்ரஹ்மலோகோ ந யேஷு ஜிஹ்மமநரிதம் ந மாயா சேதி৷৷1.1.16৷৷

சரீரம் வேறே -கர்மாக்கள் பகவத் ஆராதனை ரூபம் என்ற நிலையுடன் -இந்திரியங்கள் வசம் -த்யானம் -முக்கரணங்கள் -ஆர்ஜவதுடன் –

இவ்வாறு ஒழுக்க நெறியுடன் வாழ்பவர்களுக்கு இறந்த பிறகு சுவர்க்க லோகம் கிடைக்கிறது.
குறை காண்கின்ற புத்தியை யுடையவர்கள், .ஏமாற்றுபவர்கள், பொய் பேசுபவர்கள், வஞ்சனை உடையவர்கள்
இவர்களுக்கெல்லாம் இந்த லோகத்தை அடைய முடியாது.
நற்குணமும், கர்மங்களை ஒழுங்கான முறைப்படி செய்பவர்களால் தான் சுவர்க்கத்தை அடைய முடியும்.

৷৷இதி ப்ரதம ப்ரஷ்நம் ৷৷

———————————————–

கீழ் பிராணனை -அத்தா என்றும் -பிரஜாபதி -என்று சொல்லி அத்தைக் கண்டு அறியும் வழி சொல்ல இந்த ப்ரச்னம்
தேகம் இந்திரியங்கள் -மனஸ் பிராணன் -இவற்றைவிட வேறான ப்ரத்யகாம ஆத்ம ஸ்வரூப சோதனம்
ஸ்தாவர ஜங்கமங்களை தரிக்கும் தேவர்கள் இந்திரியங்களை அதிஷ்டானம் பண்ணி இருப்பதை சொல்லிற்று –
பஞ்ச பூதங்களால் ஆன சரீரம்/ ஞான கர்ம இந்திரியங்கள் / தாரகத்வம் பிரகாசத்வம் ஸ்ரேஷ்டத்வம் -இவற்றால்
தன்னை உயர்ந்ததாக நினைத்து தங்கள்மேன்மையைச் சொல்லும் பிரஸ்னம்

அபரா வித்யா = கர்மம் + உபாஸனா
பரா வித்யா + அக்ஷரத்தை அறிய உதவும் வித்யா

ஹிரண்யகர்ப்பன் உபாஸனம் விளக்கப்பட்டிருக்கிறது. சூட்சும சரீரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் இவர்.
பிராண உபாஸனையின் பெருமையும் இதில் சொல்லப்படுகிறது

————–

அத ஹைநம் பார்கவோ வைதர்பி பப்ரச்ச பகவந்கத்யேவ தேவா ப்ரஜாம் விதாரயந்தே கதர ஏதத்ப்ரகாஷயந்தே க புநரேஷாம் வரிஷ்ட இதி৷৷2.1.1৷৷

அதஹ – அடுத்ததாக
விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்கவன் என்ற சிஷ்யர் பிப்பலாத முனிவரிடம் கேள்வி கேட்டார்.
பகவானே! ஒருவனுடைய சரீரத்தை எத்தனை தத்துவங்கள் தாங்குகின்றன, இயங்கச் செய்கிறது
கதரஹ – அந்த தத்துவங்களில்
ஏதத் – யார் யார் எவற்றை
ப்ரகாஶயந்தே – பெருமையை கூறிக் கொள்கின்றது, வெளிப்படுத்துகின்றன? இயக்குகின்றன?
கஹ புனஹ ஏஷாம் வரிஷ்ட – இவைகளில் எது முக்கியமான தத்துவம்
· 24 தத்துவங்கள் ( 5-ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5-பிராணன்கள், 4-அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்), 5-ஸ்தூல பூதங்கள்) இவைகள்தாம் இந்த சரீரம் இயங்குவதற்கு ஆதாரமாக இருக்கின்றன்.
· எல்லா தத்துவங்களும் தங்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டு இருக்கின்றன.
· இவைகளுள் பிராணன் தான் மிக முக்கியமான தத்துவம்

பிராண வாயு ஸ்ரேஷ்டம் -இதில்
இந்திரியங்கள் -பிராணன் போட்டி -பார்க்கவர் கேள்வி -எத்தனை தேவதைகள் –

————

தஸ்மை ஸ ஹோவாசாகாஷோ ஹ வா ஏஷ தேவோ வாயுரக்நிராப பரிதிவீ வாங்மநஷ்சக்ஷு க்ஷோத்ரம் ச
தே ப்ரகாஷ்யாபிவதந்தி வயமேதத்பாணமவஷ்டப்ய விதாரயாம ৷৷2.1.2৷৷

ஆகாசம் – -வாயு அக்னி தண்ணீர் -சரீரத்துக்குள் எல்லாம் வைஸ்ராவண அக்னி-
வாக்- மனஸ் கண் காது -இந்திரியங்கள் -கர்ம ஞானம் -அதிஷ்டான தேவதை \
ஆதித்யன் கண்ணுக்கும் -ஸூஷ்ம இந்திரியங்கள் -மூக்கு நுனி / கண் கரு விழி / நாக்கு நுனி /இந்திரியங்கள் இருக்கும் இடங்கள்

குருவானவர் அந்த சிஷ்யனுக்கு பதிலளிக்க தொடங்கினர்.
ஆகாசம், வாயு, தண்ணீர், அக்னி, ப்ருத்வி ஆகிய பஞ்ச பூதங்களும் அபிமான தேவதைகளாக குறிப்பிடப்படுகின்றது.
5-கர்மேந்திரியங்களின் அபிமான தேவதைகள் தங்களுடைய முக்கியத்துவத்தை பெருமையுடன் கூறிக் கொள்கின்றன.
நான்கு வகையான அந்தக்கரணஙகளும் தங்கள் பெருமையைக் கூறிக்கொள்கின்றன.
நாங்கள் தான் இந்த உடலை ஒருங்கிணைந்து தாங்குகின்றோம் என்று பெருமைக் கொள்கின்றன.

—————-

தாந்வரிஷ்ட ப்ராண உவாச மா மோஹமாபத்யதா அஹமேவை தத்பஞ்சதாத்மாநம் ப்ரவிபஜ்யை தத்பாணமவஷ்டப்ய விதாரயாமீதி தேஷ்ரத்ததாநா பபூவு ৷৷2.1.3৷৷

பஞ்ச பிராணன் -ஸ்ரேஷ்டம் -யார் இல்லா விடில் உடம்பே இருக்காதோ -தாங்கும் -பிராண அபான -வியான –இருதயத்தில் இருக்கும் —
சமான–தாதுக்களை சமானமாக சேர்க்கும் -உதான-உத்கதிக்கு சேர்ந்து போகும்

முக்கியமான பிராண தத்துவம் மற்றவைகளை பார்த்து நீங்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போகாதீர்கள்.
நானே என்னை ஐந்தாக பிரித்துக் கொண்டு இந்த உடலை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியது.
இதைக் கேட்ட மற்றவைகள் பிராணனின் பேச்சை நம்பவில்லை.

————-

ஸோபிமாநா தூர்த்வமுத்க்ரமத இவ தஸ்மிந்நுத்க்ராமத்யதேதரே ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்ம் ஷ்ச ப்ரதிஷ்டமாநே ஸர்வ ஏவ ப்ராதிஷ்டந்தே
தத்யதா மக்ஷிகா மதுகரராஜாந முத்க்ராமந்தம் ஸர்வா ஏவோத்க்ராமந்தே ஏவமஸ்மிம் ஷ்ச ப்ரதிஷ்டமாநே
ஸர்வா ஏவ ப்ரதிஷ்டந்த ஏவம் வாங்மநஷ்சக்ஷு ஷ்ரோத்ரம் ச தே ப்ரீதா ப்ராணம் ஸ்துந்வந்தி ৷৷2.1.4৷৷

வெளியில் போய் காட்ட -மூச்சு மேல் விட்டு -போகாதே -சொல்லுமே -ராஜா தேனீ த்ருஷ்டாந்தம் /
குரங்கு தொப்பி கதை போலே /பெருமை அறிந்து ஸ்தோத்ரம்

பிராணன் தன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கு உடலை விட்டு வெளியேறுவது போல காட்டியது.
அது வெளியேறியதும் மற்ற புலன்கள் அனைத்தும் செயல் இழந்துவிட்டன.
அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல்படத் துவங்கின. எவ்வாறு ராணீ தேனி கூட்டை விட்டு வெளியேறினால் மற்ற தேனீக்கள்
அனைத்தும் வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அவைகளும் வந்தமர்கின்றனவோ அவ்வாறு இவை நிகழ்ந்தது.
பிராணனின் பெருமையை உணர்ந்த மற்ற தத்துவங்கள் அதை துதித்தன.

——————–

ஏஷோக்நிஸ்தபத்யேஷ ஸூர்ய ஏஷ பர்ஜந்யோ மகவாநேஷ வாயு ஏஷ பரிதிவீ ரயிர்தேவ ஸத ஸச்சாமரிதம் ச யத் ৷৷2.1.5৷৷

நீ தான் அக்னி வாயு வருணன் -இல்லாத பெருமைகளை சேர்த்து -இருந்தால் தான் உடம்பு வெப்பம் -ஸூர்யன் நீ தான்
இடம் இருந்தால் தானே மூச்சு உள்ளே போகும் -ஆகாசமும் நீயே / உண்மையும் நீ பொய்யும் நீ -/
இந்த முக்கிய பிராணனானது அக்னியாய்க் கொண்டு கொளுத்தும் -சூரியனாய் கொண்டு பிரகாசிக்கும் –
மேகமாய்க் கொண்டு வர்ஷிக்கும் -இந்த்ரனாய் கொண்டு லோக பரிபாலனம் –
வாயுவாய் கொண்டு வீசி பூமியாய்க் கொண்டு தரித்து சந்திரனாய் கொண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கும்

பிராணனை பெருமைய புகழ்வதால் நாம் அடையும் நற்பண்புகளானவை,
·எல்லா இந்திரியங்களும் நமக்கே நல்லதாகவும், கெட்டதாகவும் செயல்படுகின்றன.
ஆனால் பிராணன் மட்டும் எப்பொழுதும் நல்லதாகவே செயல்படுகின்றது.
·தவறான வார்த்தையை பேசுபவர்களை தவறாக நினைக்கிறோம். இவ்வாறு மற்ற இந்திரியங்கள்தான் தவறாக நடந்து கொள்கின்றன.
பிராணன் என்றும் சுத்தமாகத்தான் இருக்கும். எனவே நாம் மனிதர்களை பிராணனாக பார்க்க வேண்டும்.
இந்திரியங்களின் செயல்களை நிராகரித்து விட வேண்டும்.
·பிராணனால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் நல்லவர்களே, புலன்களின் தவறான செயல்களை வைத்து கோபப்படாமல், பரிதாபப்பட வேண்டும்.
·பிராண ஸ்துதியால் ஸர்வாத்ம பாவம் நம்மிடத்தே ஏற்படும்.

இந்த பிராணனே நெருப்பாக இருந்துக்கொண்டு வெப்பத்தை கொடுக்கின்றது.
இதுவே சூரியனாகவும், மழையை கொடுக்கின்ற மேகமாகவும், வாயுவாகவும், இந்திரனாகவும், நிலமாகவும், சந்திரனாகவும் இருக்கின்றது.
இதுவே உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருக்கின்றது, அதாவது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது.
இந்த பிராணனை ஸ்துதி செய்வதன் மூலம் கிரமமுக்தி அடையலாம்.

—————–

அரா இவ ரதநாபௌ ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்டிதம் றசோ யஜூ் ஷி ஸாமாநி யஜ்ஞ க்ஷத்ரம் ப்ரஹ்ம ச ৷৷2.1.6৷৷

ரதம் நாபீ கும்பம் -அரங்கள் சேர்ந்து -வேதங்கள் -அரம் -அனைவரும் உன்னிடம் கோக்கப் பட்டு -மந்த்ரம் சொல்ல மூச்சு வேண்டுமே

பிராணனிடத்தில் அனைத்தும் சேர்ந்திருக்கின்றது. எப்படி தேர் சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ
அதுபோல நான்கு வேதங்கள், எல்லா கர்மங்கள், யாகங்கள், வீரம், அறிவு போன்றவைகள் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

—————-

ப்ரஜாபதிஷ்சரஸி கர்பே த்வமேவ ப்ரதி ஜாயஸே துப்யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா பலிம் ஹரந்தி ய ப்ராணை ப்ரதிதிஷ்டஸி ৷৷2.1.7৷৷

வாழ்வாக இருக்க நீ இருக்க வேண்டும் -சத்தைக்கு பிராணன் வேண்டுமே

பிராணனே! கருவின் உயிராக இயங்குவதும் நீயே, பெற்றோரின் பிரதிபிம்பமாக குழந்தை வடிவில் பிறப்பதும் நீயே,
உங்களுக்கு எல்லா புலன்களும் தாங்கள் கிரகிக்கும் விஷயங்களை உங்களுக்கே ஆஹுதிகளாக கொடுக்கின்றன.
புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

——————

தேவாநாமஸி வஹ்நிதம பிதரிணாம் ப்ரதமா ஸ்வதா-றஷீணாம் சரிதம் ஸத்யமதர்வாங்கிரஸாமஸி-৷৷2.1.8৷৷

பித்ரு தேவைதைகளுக்கு ப்ரீதி நீயே -தர்ப்பணாதிகள் உண்டே உயிர் உடன் இருந்தால் தானே /பிரதம ஸ்வதா பிராணன் தான்

பிராணனே! தேவர்களுக்குள் அக்னி தேவனாக இருக்கிறீர்கள். பித்ருகளுக்கு கொடுக்கின்ற முதல் உணவாக இருக்கின்றீர்கள்.
அதர்வ, அங்கிரஸ முனிவர்கள் பின்பற்றும் சத்யமாக இருக்கின்றீர்கள்.

—————-

இந்த்ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோஸி பரிரக்ஷிதா த்வமந்தரிக்ஷே சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி ৷৷2.1.9৷৷

இந்திரனும் நீயே -ஸூர்யன் நீயே-அக்னி -நீயே

நீங்கள் அனைத்துக்கும் தலைவனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் அழிக்கும் சக்தியில் ருத்ரனாக இருக்கின்றீர்கள்,
அனைத்தையும் காப்பாற்றுபவராகவும் இருக்கின்றீர்கள், ஆகாயத்தில் உலா வருகின்ற எல்லா ஜோதிகளுக்கும்
தலைவனாக இருக்கும் சூரியதேவனாக இருக்கின்றீர்கள்.

———————–

யதா த்வமபி வர்ஷஸ்ய தேமா ப்ராண தே ப்ரஜா– ஆநந்தரூபாஸ்திஷ்டந்தி காமாயாந்நம் பவிஷ்யதீதி ৷৷2.1.10৷৷

மழை பெய்து ஸந்தோஷம் நீ இருந்தால் தானே –

எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றீர்கள். எப்பொழுது மழையைக் கொடுக்கின்றீர்களோ
அப்போதெல்லாம் உயிரினங்கள் அனைத்தும் வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று ஆனந்தமாக இருக்கின்றன.

————

வ்ராத்யஸ்த்வம் ப்ராணை கர்ஷிரத்தா விஷ்வஸ்ய ஸத்பதி வயமாத்யஸ்ய தாதார பிதா த்வம் மாதரிஷ்வ ந ৷৷2.1.11৷৷

மாதா பிதா நீயே -படைப்பதும் நீயே

பிராணனே! நீங்கள் சாஸ்திர ஸம்ஸ்காரமற்றவன், தூய்மைபடுத்தப்படாதவன். எப்பொழுதும் தூய்மையோடு இருக்கும்
உங்களுக்கு தூய்மைபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதர்வண வேதத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்தும் அக்னியாக
இருந்துகொண்டு ஆஹுதிப் பொருட்களை உண்பவராக இருக்கின்றீர்கள். உலகத்துக்கே இருப்பைக் கொடுக்கின்றீர்கள்.
நாங்கள் உங்களுக்கு உணவுகளை கொடுக்கின்றோம். நீங்கள் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர், எங்களுக்கு தந்தையாக இருக்கின்றீர்கள்.

——————–

யா தே தநூர்வாசி ப்ரதிஷ்டிதா யா ஷ்ரோத்ரே யா ச சக்ஷுஷி- யா ச மநஸி ஸஂததா ஷிவாம் தாம் குரூ மோத்க்ரமீ ৷৷2.1.12৷৷

அனைத்திலும் பிராண வாயு உண்டே / எழுந்து இருந்து போக கூடாது -ந உத்க்ரமி-

எங்களுடைய வாக்கில் அபான ரூபமாகவும், காதில் வியான ரூபமாகவும், கண்களில் பிராண ரூபமாகவும்,
மனதில் சமான ரூபமாகவும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். இவைகளனைத்தும் அமைதியாகவும்,
நன்றாக வேலை செய்து கொண்டிருக்கட்டும், உடலை விட்டு வெளியே செல்லாமல் இருக்கட்டும்.

——————-

ப்ராணஸ்யேதம் வஷே ஸர்வம் த்ரிதிவே யத்ப்ரதிஷ்டிதம் மாதேவ புத்ராந் ரக்ஷஸ்வ ஷ்ரீஷ்ச ப்ரஜ்ஞாம் ச விதேஹி ந இதி ৷৷2.1.13৷৷

தாய் தந்தை ரஷிப்பது போலே நீரே ரஷிக்க வேண்டும் -இங்கும் அங்கும் பிராணனுக்கு வசம் அனைவரும் –

மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவைகளனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
ஒரு தாய் பிள்ளைகளை காப்பது போல எங்களை காப்பாற்றுவாயாக!
செல்வமும், தெளிவான புத்தியையும் எங்களுக்கு கொடுத்தருள வேண்டும்.

৷৷இதி த்விதீய ப்ரஷ்நம் ৷৷

———————————————————-

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

அத ஹைநம் கௌஸல்யஷ்சாஷ்வலாயந பப்ரச்சம் பகவந்குத ஏஷ ப்ராணோ ஜாயதே கதமாயாத்யஸ்மிஞ்சரீர ஆத்மாநம்
வா ப்ரவிபஜ்ய கதம் ப்ராதிஷ்டதே கேநோத்க்ரமதே கதம் பாஹ்யமபிதத்தே கதமத்யாத்மமிதி ৷৷3.1.1৷৷

கௌசல்யன் கேள்வி -ஐந்து கேள்விகள் -இதே பிராண வாயுவைப் பற்றி -எதில் இருந்து பிராண வாயு உத்பத்தி
சரீரத்துக்குள் எப்படி வந்தது -ஐந்தாக எப்படி பிரிகிறது -எங்கே உள்ளது -எதனால் ஐந்தாக பிரிந்தது
எதனால் வெளியில் போகிறது -இதற்கும் வெளியில் உள்ள காத்துக்கும் சம்பந்தம் எது -எப்படி தாங்குகிறது அனைத்தையும்

கௌசல்யன் என்ற அஶ்வலர் என்பவர் பிப்பலாத முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்டார்:
1. பகவானே! எங்கிருந்து பிராணன் தோன்றியது? எந்த உபாதான, நிமித்த காரணத்தினால் பிராணன் உருவானது?
2. எப்படி இந்தப் பிராணன் வியஷ்டியாக உடலில் புகுந்துள்ளது?
3. எவ்விதம் பிராணன் ஐந்தாக பிரிந்து உடலை பாதுகாக்கிறது?
4. எதன் வழியாக, எதற்காக இது உடலிலிருந்து வெளியேறுகிறது? என்ன காரணத்தினால் உடலிலிருந்து வெளியேறுகிறது?
ஐந்துவித பிராணன்களில் எந்த பிராணன் வெளியேறுகிறது
5. ஸமஷ்டி பிராணன் வெளி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறது
6. வியஷ்டி பிராணன் உடலை எப்படி காப்பாற்றுகிறது? தாங்குகின்றது?

—————

தஸ்மை ஸ ஹோவாசாதிப்ரஷ்நாந்பரிச்சஸி ப்ரஹ்மிஷ்டோஸீதி தஸ்மாத்தேஹம் ப்ரவீமி ৷৷3.1.2৷৷

படைப்பது பற்று தெளிவாக பதில் சொல்லலாம் -சம்ஹாரம் -பதில் சொல்ல புத்தி கூர்மை -உடன் கேட்டு கொள்ள சொல்லி பதில் மேலே

நீ சூட்சுமமான கேள்விகளைக் கேட்டிருக்கிறாய். உனக்கு தகுதி இருப்பதால் நான் பதிலளிக்கிறேன்.
ப்ரஹ்மிஷ்டஹ- சகுண பிரம்ம நிஷ்டையில் நீ இருப்பதால் கர்மயோக உபாஸனையால் நீ தகுதியுடையவனாக இருக்கின்றாய்.

—————-

ஆத்மந ஏஷ ப்ராணோ ஜாயத யதைஷா புரூஷே சாயைதஸ்மிந்நேததாததம் மநோகரிதே நாயாத்யஸ்மிஞ்ஷரீரே ৷৷3.1.3৷৷

ப்ரஹ்மம் இடம் உருவாகி-மனுஷ்யன் நிழல் போலே –நேராக -மனமும் பிராணனும் சரீரத்துக்குள் -நேர் அடி தொடர்பு –

பதில்-1 –ஆத்மாவிடமிருந்து இந்தப் பிராணன் தோன்றியுள்ளது. இதற்கு ஆத்மாவே உபாதான, நிமித்த காரணமாக இருக்கிறது.
மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் இருக்கிறது.
பொதுவாக ஒன்றிலிருந்து உருவாகும் அனைத்திற்கும் ஒரே இருப்புத்தான் இருக்கும்.
ஆத்மா-பிராண என்ற சம்பந்தத்தில் ஆத்மாவானது சத்தியமென்றும், பிராணன் மித்யா என்றும் அறிந்து கொள்ள வேண்டும்,
ஆத்மா விவர்த்தக் காரணமாக இருந்துகொண்டு எந்த மாற்றமும் அடையாமல் அனைத்தையும் தோற்றுவித்திருக்கிறது.
பதில்-2 –பிராணன் இந்த உடலில் வருவதற்கு காரணம் மனமே. மனம் என்ற சொல் எண்ணங்களின் (சங்கல்பங்கள்) தொகுதியாக கருதப்படுகிறது.
அதுவே ஆசையாக உருவாகின்றது. சங்கல்பம் என்பது ஒன்றை அடைவதனால் வரும் பலனை திரும்ப திரும்ப நினைத்தல்.
ஆசையானது அதை அடைய செயலில் ஈடுபடுத்துகின்றது. கர்ம பலனால், பாவ-புண்ணியங்களின் வசத்தால் பிராணனானது உடலில் புகுந்துள்ளது.

————-

யதா ஸம்ராடேவாதி கரிதாந்விநியுங்க்தே ஏதாந்க்ராமாநேதாந்க்ராமாநதிதிஷ்டஸ்வேத்யேவமேவைஷ
ப்ராண இதராந்ப்ராணாந்பரிதக்பரிதகேவ ஸம் நிதத்தே ৷৷3.1.4৷৷

சக்கரவர்த்தி போலே பிராணன் –பிரித்து ராஜ்ஜியம் கொடுக்கும் –

பதில்-3 எப்படி அரசன் அதிகாரிகளை நியமித்து இந்த இந்தக் கிராமங்களை பாதுகாப்பீர்களாக என்று
ஆணையிடுவது போல இந்தப் பிராணன் மற்ற பிராணன்களை தனித்தனியாக நியமிக்கின்றது.

————–

பாயூபஸ்தேபாநம் சக்ஷு ஷ்ரோத்ரே முகநாஸிகாப்யாம் ப்ராண ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்யே து ஸமாந
ஏஷ ஹ்யேதத்துதமந்நம் ஸமம் நயதி தஸ்மாதேதா ஸப்தார்சிஷோ பவந்தி ৷৷3.1.5৷৷

அபான -மல ஜல கழிக்கும் இடம் / முக நாசிகா கண் காது பிராணன் / நடுவில் சமான வாயு -அன்னம் சமமாக உடம்புக்குள் கொண்டு போகும்
கண்ணுக்கு வேண்டிய சக்தி கண்ணுக்கு -கொண்டு போகும்
ஐந்து பிராணன் அனைத்துக்கும் ஆதாரம் -நன்று ஜெரிக்க- நல்ல ரத்த ஓட்டம் இவை சரியாக வைத்தால் தானே -யோக சக்தி

அபானன் பிராணனானது கழிவுகளை வெளியேற்றுகிறது. கண், காது, வாய், நாசி, மூச்சுவிடுதல் போன்ற
முக்கிய செயல்களை பிராணனே அந்தந்த இடங்களில் இருந்து கொண்டு செயல்படுகிறது.
சமானன் உடலின் நடுபகுதியில் இருந்துகொண்டு உணவை செரிக்கும் செயலை செய்வதால்
அவர் இருப்பிடம் வயிறு, நாபி. இதுவே உடலில் பல பகுதிகளுக்கு தேவையான அளவு சக்திகளை கொண்டு செல்கிறது.
பிராணனிலிருந்து ஏழு அக்னி ஜுவாலைகள் உண்டாகின்றன.
இந்த 7 ஜுவாலைகள் 2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குத்துவாரங்கள் வாய் ஆகும்.
வயிற்றில் உள்ள அக்னியிலிருந்து எழும்புகின்ற ஜுவாலைகள் இவைகளாகும். இந்த உறுப்புக்கள் தாங்கள் இயங்குவதற்கான
ஆற்றலை வயிற்றிலுள்ள அக்னியிலிருந்து பெறுகின்றன. உணவு என்ற ஆஹுதிப் பொருட்களை அர்ப்பிக்காவிட்டால்
உடலின் உறுப்புக்கள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

—————

ஹரிதி ஹ்யேஷ ஆத்மா அத்ரைததேகஷதம் நாடீநாம் தாஸாம் ஷதம் ஷதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர்த்வாஸப்ததி ப்ரதிஷாகாநாடீ ஸஹஸ்ராணி பவந்த்யாஸு வ்யாநஷ்சரதி ৷৷3.1.6৷৷

101-நாடிகள் உண்டே இருதயத்தில் ஒவ் ஒன்றும் -72-ஆக பிரிந்து –ஒவ் ஒன்றும் -1000-பிரிந்து வியான வாயு இருக்கும் இடம்

இதில் வியானன் என்ற பிராணனின் இருப்பிடத்தையும், செயல்பாட்டையும் சொல்லப்பட்டிருக்கிறது.
உடலில் இருக்கின்ற நாடிகள்தான் அது இருக்குமிடம். இந்த நாடிகள் உடலினுள்ளே உள்ள இதயத்திலிருந்து புறப்படுகின்றன.
இதன் வழியேதான் இரத்தத்தை எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. சூட்சும சரீரம் குடி கொண்டிருக்கும் இடம் இருதயமாகும்.

இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. ஒவ்வொரு பிரதான நாடிக்கும் 100 கிளை நாடிகள் உள்ளன.
ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72000 கிளை நாடிகள் உள்ளன. இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கின்றது.

——————

அதைகயோர்த்வம் உதாந புண்யேந புண்யம் லோகம் நயதி பாபேந பாபமுபாப்யாமேவ மநுஷ்யலோகம் ৷৷3.1.7৷৷

உத் -மேல் நோக்கி கூட்டும் போகும் உதான -பாபம் பண்ணியவனை நரகம் -இரண்டும் பண்ணினால் மனுஷ்ய லோகம் –
புண்ணியம் செய்தால் ஸ்வர்க்க சந்த்ர பித்ரு லோகம் கூட்டி போகும்

உதானன் மற்ற பிராணன்கள் செய்வதற்கு எதிராக செயல்படுகிறது. உடலை பாதுகாப்பதற்காக உடலிலிருந்து
விஷங்களை வெளியே தள்ளுகிறது. மரண காலத்தில் சூட்சும சரீரத்தை பிரித்து எடுத்துக் கொண்டு செல்கிறது

பதில்-4 மரணமடைந்தவனின் சூட்சும சரீரத்தை உதானனானது சுஷும்னா நாடி வழியாக மேலுலகத்திற்கு கொண்டு செல்கிறது.
புண்ணியம் செய்தவரை புண்ணிய லோகத்திற்கோ அல்லது நல்ல மனித சரீரத்திற்கோ கொண்டு செல்கிறது.
பாவ கர்மத்தை செய்தவனை பாவலோகத்திற்கோ, கீழான பிறவிகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன
ஆகியவற்றிற்கு கொண்டு செல்கிறது.

——————-

ஆதித்யோ ஹ வை பாஹ்ய ப்ராண உதத்யேஷ ஹ்யேநம் சாக்ஷுஷம் ப்ராணமநு கரிஹ்ணாந பரிதிவ்யாம் யா தேவதா
ஸைஷா புரூஷஸ்யாபாநமவஷ்டப்யாந்தரா யதாகாஷ ஸ ஸமாநோ வாயுர்வ்யாந ৷৷3.1.8৷৷

சூர்யன் கண்களில் -பிராண வாயு சம்பந்தம் /அபான பிருத்வி / வாயு -விதான வாயு சம்பந்தம் /
தேஜஸ் உதான வாயு சம்பந்தம் -ஆகாசமும் சமான வாயு

பதில்-5&6
* சூரியனே வெளியே உள்ள பிராணன்; இதுவே நம் கண்களில் உள்ள பிராணனாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது
* பூமியாக உள்ள பிராணன் அபானன். மனித உடலிலுள்ள அபானனாக செயல்படுகிறது
* இந்த ஆகாசமே சமானன் – இது மனித உடலிலுள்ள சமானனாக செயல்படுகிறது
* வாயுவானது வியானன் – இது மனித உடலிலுள்ள வியானனாக செயல்படுகிறது

—————

தேஜோ ஹ வாவ உதாநஸ்தஸ்மாதுபஷாந்ததேஜா புநர்பவமிந்த்ரியைர்மநஸி ஸம் பத்யமாநை ৷৷3.1.9৷৷

உதானன் அக்னி தத்துவமாக இருக்கிறது.
இறந்தவரின் எல்லா இந்திரிய சக்திகளையும் மனதில் ஒடுங்கப்பெற்று மீண்டும் பிறக்கின்றான்.
உதானன் வெளியேறி விடுவதால் உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி குளிர்ந்து விடுகிறது.

———-

யச்சித்தஸ்தேநைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த ஸஹாத்மநா யதாஸம் கல்பிதம் லோகம் நயதி ৷৷3.1.10৷৷

கிளம்பும் வழி இனி -எந்த நினைவுடன் விடுகிறானோ -பிராண வாயு -உதான வாயு உடன் சேர்ந்து –
கை கோத்து -ஸூஷ்ம மனஸ் -பூத ஸூஷ்மம்

மரண காலத்தில் ஜீவன் எப்படிபட்ட எண்ணங்களுடன் இருக்கின்றானோ, எதை நினைத்துக் கொண்டு இருக்கின்றதோ
அந்த எண்ணத்துடன் பிராணனை அடைகின்றான். மற்ற இந்திரிய செயல்களை இழந்து பிராண விருத்தியாக மட்டும் இருக்கின்றான்.
மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கடைசிகால எண்ணங்களுடன் பிராணனிடத்தில் ஒடுங்கியிருக்கும் இந்த பிராணன் உதானனுடன் சேர்ந்திருக்கிறது.
அந்த ஜீவனை, வாழ்க்கை முழுவதும் எதை சங்கல்பம் செய்து கொண்டிருந்தானோ அதன் அடிப்படையில் தகுதியுடைய உலகத்திற்கு கொண்டு செல்கிறது.

——————

ய ஏவம் வித்வாந்ப்ராணம் வேத ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதேமரிதோ பவதி ததேஷ ஷ்லோக ৷৷3.1.11৷৷

இத்தை அறிந்தால் சந்தானம் பெறுவான்

எந்த உபாஸகன் இவ்விதம் பிராணனை உபாஸிக்கின்றானோ அவனுடைய சந்ததி சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை.
இதைப்பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

——————–

உத்பத்திமாயதிம் ஸ்தாநம் விபுத்வம் சைவ பஞ்சதா அத்யாத்மம் சைவ ப்ராணஸ்ய விஜ்ஞாயாமரி தமஷ்நுதே விஜ்ஞாயாமரி தமஷ்நுத இதி ৷৷3.1.12৷৷

விஞ்ஞாய அமிருதத்தை அடைகிறான் -ஐந்தையும்
உத்பத்தியையும் — தொடங்கி புறப்படும் வரை -அனைத்தையும் அறிந்தவன் மோக்ஷம் அடைகிறான்

பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயல்கள்,
உடலுக்குள்ளே செயல்படும் விதத்தையும் உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.

৷৷இதி த்ரிதீய ப்ரஷ்நம் ৷৷

——————————————————————-

அத ஹைநம் கௌஸல்யஷ்சாஷ்வலாயந பப்ரச்ச பகவந்குத ஏஷ ப்ராணோ ஜாயதே கதமாயாத்யஸ்மிஞ்சரீர ஆத்மாநம் வா
ப்ரவிபஜ்ய கதம் ப்ராதிஷ்டதே கேநோத்க்ரமதே கதம் பாஹ்யமபிதத்தே கதமத்யாத்மமிதி ৷৷4.1.1৷৷

ஸௌர்யாயணி என்கின்ற கா3ர்க்3யன் என்பவர் கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்:
1.பகவானே! கனவு காணும் போது எந்தெந்த இந்திரியங்கள் உறங்குகின்றன, அதாவது செயல்படுவதில்லை ?
2.எந்தெந்த இந்திரியங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. தேகத்தை பாதுகாத்துக் கொள்ள எவையெவைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன?
3.கனவை பார்ப்பது யார்?
4.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள சுகமானது யாரை சார்ந்தது?
5.இவையனைத்துக்கும் ஆதாரமாக(ஸம்ப்ரதிஷ்டிதா) இருப்பது எது?

————————-

தஸ்மை ஸ ஹோவாசாதிப்ரஷ்நாந்பரிச்சஸி ப்ரஹ்மிஷ்டோஸீதி தஸ்மாத்தேஹம் ப்ரவீமி ৷৷4.1.2৷৷

பதில்-1 கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார். “சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் சூரியனிடத்திலேயே ஒடுங்குகின்றன.
அது உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும் வெளியே வந்து பரவுகின்றன.
அதுபோல, ஒருவன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமை புலனான மனதில் ஒடுங்குகின்றன.
அப்போது அவன் பார்ப்பதில்லை, கேட்பதில்லை, முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை, பேசுவதில்லை,
எடுப்பதில்லை, சுகத்தை அனுபவிப்பதில்லை, எதையும் வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை. அப்போது இவன் தூங்குகிறான் என்று கூறுகிறார்கள்.

—————–

ஆத்மந ஏஷ ப்ராணோ ஜாயதே யதைஷா புரூஷே சாயை தஸ்மிந்நே ததாததம் மநோகரிதே நாயாத்யஸ்மிஞ்ஷரீரே৷৷4.1.3৷৷

பதில்-2 எவைகள் விழித்திருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் ஐந்து வித பிராணன்களும், மனமும்தான் விழித்திருக்கின்றன.
இந்த ஐந்து பிராணன்களும் யாகம் செய்து கொண்டிருக்கின்றன. பிராணன்கள் விதவிதமான அக்னிகளுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன.
மனமே எஜமானனாக இருக்கிறது. இஷ்ட பலனாக ஆழ்ந்த உறக்கம் கருதப்படுகிறது.
பிராணன் (வெளிவிடும் காற்று) ஆஹவனீய அக்னி என்றும், அபானன் (உள்ளே இழுக்கும் காற்று) கார்ஹபத்ய அக்னி என்றும்,
வியானன் அன்வாஹார்யபசனம் என்ற அக்னியாகவும், சமானன் யாகத்தை செய்பவனாகவும் (ஹோதா),
உதானன் இஷ்ட பலனாகவும் கருதப்படுகிறது. மனம் எஜமானனாக கற்பணை செய்யப்படுகிறது. ஆழ்ந்த உறக்கமே சுவர்க்கலோகமாக இருக்கிறது.

ஜீவன் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது விஸ்வன் என்றும்,
சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது தைஜஸன் என்றும்,
காரண சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது பிராக்ஞன் என்றும் அழக்கப்படுகிறான்.
மூன்று நிலைகளிலும் மாறாது இருக்கும் அறிவு ஸ்வரூவத்தை துரியன் என்று அழைக்கப்படுகின்றது.

அக்னிஹோத்ரியானவன் எப்பொழுதும் பாதுகாக்க வேண்டிய அக்னிக்கு கார்ஹபத்ய அக்னி என்று பெயர்.
இந்த அக்னியை இரண்டு நிலையில்தான் அணைக்க வேண்டும். அவைகள் ஒன்று அவன் சந்நியாஸம் எடுக்கும் போது,
மற்றொன்று அவன் மரணத்தின் போது. மற்ற யாகங்களுக்கு வேண்டிய அக்னியை இந்த கார்ஹபத்ய அக்னியிலிருந்து தான் எடுக்க வேண்டும்.
அதே உள்ளே போகும் காற்றிலிருந்துதான் வெளியே விடும் காற்று எடுக்கப்படுகிறது.

ஸ்லோகத்தின் பொருள்:
இந்த சரீரத்தில் அக்னிக்கு ஒப்பிடப்படுகின்ற பிராணனே தூங்கும்போது விழித்துக் கொண்டிருக்கிறது.
கார்ஹபத்ய அக்னி அபாணனுக்கும், அன்வஹார்யபசன அக்னி வியானனுக்கும் ஒப்பிடப்படுகின்றது.
கார்ஹபத்யத்திலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயம்.

——————-

யதா ஸம்ராடேவாதிகரிதாந்விநியுங்க்தே ஏதாந்க்ராமாநேதாந்க்ராமாநதிதிஷ்டஸ்வேத்யேவமேவைஷ
ப்ராண இதராந்ப்ராணாந்பரிதக்பரிதகேவ ஸம் நிதத்தே ৷৷4.1.4৷৷

உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன் எனப்படுகின்றது.
மனமே எஜமானனாக இருக்கின்றது. யாகத்தின் மூலம் அடையும் பலனே உதானன்.
ஏனெனில் உதானனே இந்த எஜமானனை பிரம்மத்திடம் சேர்க்கின்றது. பிரம்மத்திடம் எடுத்துச் செல்வது என்பது
ஆழ்ந்த உறக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆழ்ந்த உறக்கம்தான் பிரம்மத்தை அடைந்ததற்கு சமமாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் இருக்கும்.

இந்த ஆழ்ந்த உறக்கத்தில் உண்மைநிலை (ஜீவத்வம்) வெளிப்படுவதில்லை. எனவே பிரம்ம பிராப்தி என்று சொல்கிறோம்.
இந்த நிலையில் அறியாமை இருந்து கொண்டிருப்பதால், விழித்ததும் மீண்டும் ஜீவத்வத்திற்கு வந்து விடுகிறான்.
ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைந்திருக்கின்றான். காரண சரீரம் பிரம்மத்தை சார்ந்திருப்பதால்,
அவன் பிரம்மத்தை அடைந்ததாகும். உதாரணமாக வெயிலினால் பூமி சூடாக இருக்கும்போது நிழலை நாடிச் செல்கிறோம்.
ஆனால் உஷ்ணமும், நிழலும் பூமியைத்தான் சார்ந்திருக்கின்றன.

————————

பாயூபஸ்தேபாநம் சக்ஷு ஷ்ரோத்ரே முகநாஸிகாப்யாம் ப்ராண ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்யே து ஸமாந
ஏஷ ஹ்யேதத்துதமந்நம் ஸமம் நயதி தஸ்மாதேதா ஸப்தார்சிஷோ பவந்தி ৷৷4.1.5৷৷

கேள்வி-3 கனவை பார்ப்பது யார்? அனுபவிப்பது யார்?
பதில்-3 நம்முடைய மனம்தான் கனவை காண்கிறது. கனவில் இந்த மனம் தன்னுடைய பெருமையையே அனுபவிக்கின்றான்.
நம்முடைய மனதிலுள்ள ரகசியங்களை அனுபவிக்கும் கனவுகளாக வருகின்றது. மனமே மனதை கனவில் அனுபவிக்கின்றது.
மனதில் பதிந்துள்ள எண்ணங்களே கனவுகளாக வருகின்றது.
விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்த்தானோ அதையேதான் கனவில் பார்க்கின்றான்.
எதையெல்லாம் கேட்டானோ அதையேதான் கேட்கின்றான். விதவிதமான இடங்களில், திசைகளில், காலத்தில்
எதை அனுபவித்தானோ அதையே அனுபவிக்கின்றான்.
எதை மற்ற இந்திரியங்களால் அனுபவித்தானோ அதையேதான் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றான்.
முற்பிறவிகளில் பார்த்ததைம் கேட்டதையே கனவில் அனுபவிக்கின்றான்.
இந்தப் பிறவியில் பார்த்ததையும், பார்க்காததையும் கனவில் பார்க்கின்றான்.
இந்தப்பிறவியில் கேட்டதையும், கேட்காததையும் அனுபவிக்கின்றான். ஸத்தையும், அஸத்தையும் பார்க்கின்றான்.
எல்லாவற்றையும் பார்க்கின்றான், அனைத்துமாக இருந்து கொண்டு பார்க்கின்றான்.
நம்முடைய கர்மபலன்கள்தான் நம்மை இந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது.
ஒரு பிராரப்த பலன் முடிந்து வேறொன்று ஆரம்பிக்கும் இடைவெளியில்தான் நாம் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.

—————-

ஹரிதி ஹ்யேஷ ஆத்மா. அத்ரைததேகஷதம் நாடீநாம் தாஸாம் ஷதம் ஷதமேகைகஸ்யாம் த்வாஸப்ததிர்த்வாஸப்ததி
ப்ரதிஷாகாநாடீ ஸஹஸ்ராணி பவந்த்யாஸு வ்யாநஷ்சரதி ৷৷4.1.6৷৷

கேள்வி-4 சுஷுப்தி சுகத்தை அனுபவிப்பது யார்?
பதில்-4 விழிப்பு, கனவு நிலையில் அனுபவிக்கும் சுகத்தில் துக்கமும் கலந்து இருக்கிறது.
நம்முடைய மனதிலுள்ள வாஸனைகள் எல்லாம் சில வகையான நாடிகளுக்குள் இருக்கின்றது.
மனமானது வாஸனைகள் இருக்கும் நாடிகளுக்குள் சென்று அங்குள்ள ஸம்ஸ்காரங்களை எடுத்து கொண்டு கனவு காண்கிறான்.

சுஷுப்தியில் இந்த நாடிகளுக்குள் ஜீவன் செல்ல முடியாது. அதனால் கனவை காண முடியாது.
அவைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான்.
அப்போது அவனே பிராக்ஞன் என்று அழைக்கப்படுகிறான். கர்மபலன்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் இந்நிலை ஏற்படுகிறது.
கர்மவினைதான் விஷயங்களைக் கொண்டு வந்து, நம்மை அனுபவிக்க வைக்கின்றது.
அதற்கேற்ற உலகைப்படைத்து, உடலைபடைத்து, சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

ஸ்லோக பொருள்:
எவனொருவனுக்கு அக்னியால் (பித்தத்தினால்) நாடிகள் மறைக்கப்படும்போது, இந்த மனமானது கனவை காண்பதில்லை.
அந்த நிலையில் இந்த சரீரத்தில் சுஷுப்தி சுகத்தை அனுபவிக்கின்றான். ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் சுகம்.
இந்த சுகத்தை பிரம்மானந்தத்திற்கு அருகில் உள்ளது போல கூறப்படுகிறது.

———————–

அதைகயோர்த்வம் உதாந புண்யேந புண்யம் லோகம் நயதி பாபேந பாபமுபாப்யாமேவ மநுஷ்யலோகம் ৷৷4.1.7৷৷

கேள்வி-5 இவைகள் அனைத்தும் எதை ஆதாரமாக கொண்டுள்ளது?
பதில்-5 பகலில் இரைத் தேடச் சென்ற பறவைகள் மாலையில் தங்கள் கூட்டை நாடுவது போல
அவைகள் அனைத்தும் ஆத்ம தத்துவத்தில் ஒடுங்குகின்றன.
நாம் பல இடங்களில் இருக்கும் போது சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வோம்.
ஆனால் நம் வீட்டில்தான் நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தில், சௌகரியமாக இருப்போம்.
உலகத்திலுள்ள வேற்றுமைகள் எல்லாம் நீங்கி அமைதியாக இருக்குமிடம்தான் பரபிரம்மம்.
இந்த உதாரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டியது பர பிரம்மத்தில் ஒடுங்கும் போது தான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும்.
கடலில் தோன்றி எழும் அலைகள் மீண்டும் கடலிலே கலந்துவிடுவது போல ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து தோன்றி அதிலே கலந்துவிடுவதுதான் மோட்சம்.

—————–

ஆதித்யோ ஹ வை பாஹ்ய ப்ராண உதத்யேஷ ஹ்யேநம் சாக்ஷுஷம் ப்ராணமநு கரிஹ்ணாந பரிதிவ்யாம் யா தேவதா
ஸைஷா புரூஷஸ்யாபாநமவஷ்டப்யாந்தரா யதாகாஷ ஸ ஸமாநோ வாயுர்வ்யாந ৷৷4.1.8৷৷

நாம் அனுபவிக்கின்ற ஸ்தூல பூதங்களனைத்தும் முதலில் சூட்சும பூதங்களாக இருந்தன.
இந்திரியங்கள் அனைத்தும் மற்றும் அவைகளில் செயல்களும், அந்தக்கரணமும் அதனுடைய செயல்களும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன

நிலமும், சூட்சும நிலமும், நீரும், சூட்சும நீரும், நெருப்பும், சூட்சும நெருப்பும், வாயுவும், சூட்சும வாயுவும்,
ஆகாசமும், சூட்சும ஆகாசமும் இவைகள் அனைத்தும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன.
கண், பார்க்கும் செயல், காது-கேட்கும் செயல், மூக்கு-நுகரும் செயல், நாக்கு, சுவைக்கும் செயல், தோல்,
தொட்டுணரும் செயல் அதாவது ஞானேந்திரியங்களும் அவைகளினுடைய செயல்களும், வாய், பேசும் செயல், கைகள்-
அவை செய்யும் செயல்கள், கால்கள் – நடக்கும் செயல்கள் குறி-இன்பத்தை கொடுக்கும் செயல்கள், குதம்,
கழிவுகளை வெளிப்படுத்தும் செயல், அதாவது கர்மேந்திரியங்களும் அவைகளின் செய்லகளும், மனமும்,
மனதால் நினைக்கப்படும் எண்ணங்களும், புத்தியும், புத்தியால் அறிவை அடையும் செயலும், அகங்காரமும்,
நான் என்ற உணர்வும், சித்தமும், எண்ணங்களை பதிய வைப்பதும், எண்ணங்களை மனதுக்கு எடுத்துக் கொடுப்பதும்,
ஒளி, அந்த ஒளியால் விளக்கபடுவதும், பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது என்ற அனைத்தும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன.

—————-

தேஜோ ஹ வாவ உதாநஸ்தஸ்மாதுபஷாந்ததேஜா புநர்பவமிந்த்ரியைர்மநஸி ஸம் பத்யமாநை ৷৷4.1.9৷৷

எவைகளெல்லாம் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகள் நானல்ல என்று சுலபமாக அறிந்து கொள்கின்றோம்,
அதாவது நமக்கு புறத்தோ உள்ள அனைத்தும் நானல்ல என்று புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது.
ஆனால் இந்த தேகம் நானல்ல என்று புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.

ஜீவனைப் பற்றிய விசாரம் – த்ருக்-த்ருஷய விவேகம் (பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும்
வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஈசனைப் பற்றிய விசாரம் – காரண-காரிய விவேகம்

த்ருக்-த்ருஷய விவேகம்
பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த சரீரம் அறியப்படும் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்திரியங்கள், ப்ராணன்களும் அறியப்படுவதாக இருக்கிறது.
தியானம் செய்வதற்கு மனமே கருவியாகவும், விஷயமாகவும் இருக்கிறது. எனவே மனதை இரண்டாக பிரித்து பழக வேண்டும்.
கட்டுபடுத்த பட்ட மனம், கட்டுபடுத்தபடாத மனம். இதேமாதிரி புத்தியையும் இரண்டாக பிரித்து அறிந்து கொள்கிறார்கள்.
அந்தக்கரணத்தில் இருக்கும் சிதாபாஸம், இதை பிரித்து பார்ப்பது கடினம்.
இதைத்தான் ஜீவன் என்று புரிந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் இதுவே சுத்த சைதன்யத்தின் பிரதிபிம்பமாகும்.

மனதுடன் சேர்ந்த சிதாபாஸம்தான் ஜீவன். ஆனால் இதை பிரதிபலிக்கின்ற சுத்த சைதன்யத்தை மறந்து விடுகின்றோம்.
நானே கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றேன் என்ற அறிவு நமது உடலையும், மனதையும் குறிக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

நமக்குள்ளே இரண்டு அறிபவன்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்.
எது உண்மை என்று பிரித்துணர வேண்டும். எந்த ஒன்று மாற்றமடையாமல் அறிபவனை அறிந்து கொண்டிருக்கிற தத்துவம்
ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும். நிர்விகார த்ருஷ்டா, சிதாபாஸன் சவிகார த்ரஷ்டா, இது பரபிரம்மத்தை சார்ந்து இருக்கின்றது.
(உ-ம்) பரமாத்மா சூரியன் என்றால், நீரில் தெரியும் சூரிய பிம்பம் ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோக விளக்கம்:
இந்த சிதாபாஸன் (ஜீவன்) உணர்ச்சியுடையவன், கேட்பவன், சுவைப்பவன், நுகர்ந்து பார்ப்பவன், சிந்திப்பவன்,
மனதில் குழப்பமுடையவன், உறுதி செய்பவன், செயல் செய்பவன் (அகங்காரம்) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு
வாழும் ஜீவன்கள் (மனிதர்கள்) இவைகள் சேதனமானது, அறிவுடையது.
இந்த அறிவுடைய ஜீவன்தான் மேலான, அழியாத பிரம்மனாக இருக்கின்றான்.

நான் பார்ப்பவன் அல்ல, கேட்பவன் அல்ல, சிந்திப்பவன் அல்ல, இவைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பவன்.
இவைகள் இப்படி அறிவு ஸ்வரூபமாக இருப்பதற்கு காரணமாக இருப்பவன்.
நான் பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படும் பொருளும் அல்ல என்ற நிலையை அறிவை அடைய வேண்டும்.

ஒரு பொருளின் இருப்பை சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்,
எனவே இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்துக்கும், மூலக்காரணமாக இருக்கின்றேன்.
இந்த ஸ்லோகத்தில் ஜீவன் என்பது வாக்கியார்த்தம், ஆத்மன் என்பது லட்சியார்த்தம்.
ஜீவ-பிரஹ்ம ஐக்கியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

———————

யச்சித்தஸ்தேநைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த ஸஹாத்மநா யதாஸம் கல்பிதம் லோகம் நயதி ৷৷4.1.10৷৷

பரமேவ அக்ஷரம் ப்ரதிபத்3யதே – மேலானதும், அழியாததுமான அபேதத்தை அடைகின்றான்.
சிதாபாஸத்திற்கு வந்து போவதெல்லாம் என்னைச் சார்ந்தது அல்ல என்ற அறிவை அடைந்திட வேண்டும். இவனே ஞானி.
ஸஹ யஹ வை – எவன் பிரம்மத்தை அடைந்தவனோ
தத்3 அச்சா2யம் – அது அவித்யா என்ற இருள் அற்றது, அக்ஞானம் அற்றது
அஶரீரம் – சரீரமற்றது ( இது அக்ஞானமற்றது, மூன்று சரீரங்கள் அற்றது )
அலோஹிதம் – தர்மங்களற்றது, குணங்களற்றது. இந்த உடலும் நானல்ல, அதைச் சார்ந்த தர்மங்களும் நானல்ல.
ஶுப்4ரம் அக்ஷரம் – தூய்மையானது, அழியாதது.
வேத3யதே யஸ்து – இப்படி யார் அறிகிறார்களோ
ஸஹ ஸர்வஞஹ – இப்படி அக்ஷரத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்.
நம்முடைய புத்தியில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்,
இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருக்கின்றது. புத்தி சாந்தியடைகின்றது, அமைதி அடைகின்றது.
ஏனெனில் இவன் எல்லாம் அறிந்தவனாகி விட்டதால், அடைந்த அறிவில் நிறைவடைந்தவனாகின்றான்.
ஸர்வோ ப4வதி – இவனே அனைத்துமாகின்றான். அனைத்து ஜீவராசிகளிலும், பார்க்கின்ற அனைத்திலும்
தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கின்றான். இதுபற்றி னேலும் விளக்குவதற்கு கீழே மந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

——————————–

ய ஏவம் வித்வாந்ப்ராணம் வேத ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதேமரிதோ பவதி ததேஷ ஷ்லோக ৷৷4.1.11৷৷

அனைத்து இந்திரியங்களுடன் (விக்ஞானாத்மா) ஜீவாத்மா (சிதாபாஸத்துடன் இருக்கும் ஜீவன்)
பிராணன்கள், 5 ஸ்தூல பூதங்கள், 5 சூட்சும பூதங்கள் இவைகள் எந்த பிரம்மனிடத்தில் சார்ந்துள்ளதோ
அதுவே அந்த அழியாத ஒன்றை யார் அறிகின்றார்களோ, அவன் அனைத்தையும் அறிகின்றான்,
அனைத்தையும் வியாபிக்கின்றான் (ஆவிவேஶேதி)

—————

உத்பத்திமாயதிம் ஸ்தாநம் விபுத்வம் சைவ பஞ்சதா அத்யாத்மம் சைவ ப்ராணஸ்ய விஜ்ஞாயாமரிதமஷ்நுதே விஜ்ஞாயாமரிதமஷ்நுத இதி ৷৷4.1.12৷৷

மூன்று மாத்திரைக்கு மேலே -நரகம்
ஒரு மாத்திரை சொல்லி மனுஷ்ய லோகம் -இரண்டு மாத்திரை ஸ்வர்க்கம்-சோம லோகம் -திரும்பி வருவான் /மூன்று மாத்திரை மோக்ஷம்
அர்ச்சிராதி கதி -ஆதித்ய கிரணங்களை பிடித்து
பாதோதராம் பாதம் உதரம் கடச்செவி பாம்பு -சட்டை உரிப்பது போலே சரீரம் விட்டு விநிர்முக்தன் ஆகிறான்
சாம மந்த்ரம் -புருஷோத்தமன் அடைந்து அனுபவம்

৷৷இதி சதுர்தம் ப்ரஷ்நம் ৷৷

——————————————————————–

அத ஹைநம் ஸௌர்யாயணீ கார்க்ய பப்ரச்ச பகவந்நேதஸ்மிந்புரூஷே காநி ஸ்வபந்தி காந்யஸ்மிந் ஜாக்ரதி கதர ஏஷ
தேவ ஸ்வப்நாந்பஷ்யதி கஸ்யைதத்ஸுகம் பவதி கஸ்மிந்நு ஸர்வே ஸம் ப்ரதிஷ்டிதா பவந்தீதி ৷৷5.1.1৷৷

ஸ்வப்னம் பற்றி -யார் தூங்குகிறார்- யார் ஸ்வப்னம் -யார் முழித்து இருக்கிறார் -அடுத்த கேள்வி -ஆத்மா எங்கு இருக்கும் –
யார் ஸ்வப்னம் காட்டுகிறார் எதனால் ஸ்வப்னம் சுகம் -கார்க்யர் கேள்வி

மரணகாலம் வரை ஓங்கார உபாஸனையைத்தான் செய்ய முடிந்தால் அவனது கதி என்ன?

இவன் வைராக்கியத்தை குறைவாக அடைந்திருப்பதால் ஞானயோகத்திற்கு அவனால் செல்ல முடியவில்லை.

ஶௌப்3ய என்கின்ற ஸத்யகாமன் கேள்வியைக் கேட்கின்றான்.
பகவானே! மனிதர்களில் மரணகாலம் வரை (ப்ராயணாந்தம்) ஓங்காரத்தை தியானம் செய்து கொண்டிருக்கின்றானோ?
(அவன் ஆத்ம விசாரம் செய்து ஞானயோகத்திற்கு வராமல்) அவன் அந்த தியானத்தால் எந்த உலகத்தை அடைகின்றான்.

ஓம் என்ற மந்திரத்தை விசாரம் செய்து அடையும் ஞானத்தால் பரபிரம்மத்தை அடைகின்றான்.
ஓம் என்ற மந்திரத்தை தியானம் செய்வதனால் பிரம்ம லோகத்தை அடைவான்.

——————

தஸ்மை ஸ ஹோவாச. யதா கார்க்ய மரீசயோர்கஸ்யாஸ்தம் கச்சத ஸர்வா ஏதஸ்மிஂஸ்தேஜோமண்டல ஏகீபவந்தி தா புந புநரூதயத
ப்ரசரந்த்யேவம் ஹ வை தத்ஸர்வம் பரே தேவே மநஸ்யேகீபவதி தேந தர்ஹ்யேஷ புரூஷோ ந ஷ்ரரிணோதி ந பஷ்யதி ந ஜிக்ரதி
ந ரஸயதே ந ஸ்பரிஷதே நாபிவததே நாதத்தே நாநந்தயதே ந விஸரிஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷதே ৷৷5.1.2৷৷

மனம் தவிர அனைத்தும் மூடி இருக்கும் தசை -எதனால் தூங்குகிறார் -பார்க்கும் கருவிகள் வேலை செய்யாமல் இருப்பதே தூக்கம் –
மனஸுடன் கண் சேர்ந்தால் தானே பார்வை சித்திக்கும் –
மனசும் தூங்கி ஸூ ஷூப்தி தசை / ஸூ ர்ய கிரணங்கள் ஒன்றுவதும் விரிவதும் போலே உதயம் அஸ்தமனம் போலே
சோம்பல் உபநிஷத் சொல்லும்

———–

ப்ராணாக்நய ஏவைதஸ்மிந்புரே ஜாக்ரதி கார்ஹபத்யே ஹ வா ஏஷோபாநோ வ்யாநோந்வாஹார்யபசநோ
யத்கார்ஹபத்யாத்ப்ரணீயதே ப்ரணயநாதாஹவநீய ப்ராண ৷৷5.1.3৷৷

மூன்று வித அக்னி /கார்ஹபத்ய அக்னி -சமான வாயு மனஸ் யஜமாணம் உதான வாயு பலம் /
தர்ம பூத ஞானம் மட்டும் அங்கே -ஆத்மா தூங்கும் இடத்திலே மட்டும் தான் /

ஓம் என்ற சொல்லானது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டாகும்.
அகாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து ஓங்காரத்தை தியானிப்பதனால் என்ன பலன் என்று சொல்லப்படுகிறது

ஒருவன் ’அகாரத்தை மட்டும் தியானித்தால் அவன் அந்த தியானத்தில் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகின்றான்,
அதிலேயே ஐக்கியமாகி விடுகிறான். பிறகு சீக்கிரமாகவே இந்த பூமியில் மனிதனாக பிறக்கின்றான்.
அகாரத்திற்கு தேவதையான ரிக்வேதம் இந்த சாதகனை மனித சரீரத்தை அடைவதற்கு உதவுகிறது.
இப்படி மனித சரீரமெடுத்தவன் மீண்டும் தவம் செய்கின்றான். பிரம்மச்சர்யம் போன்ற தவத்தினால் இவனுக்கு சிரத்தை ஏற்படுகின்றது.
இதனால் மனித சரீரத்தினால் அடைய முடிகின்ற ஆனந்தத்தை அடைகின்றான். மனுஷ்யானந்தத்தை அனுபவிக்கின்றான்.

—————

யதுச்ச்ரவாஸநிஷ்வாஸாவேதாவாஹுதீ ஸமம் நயதீதி ஸ ஸமாந மநோ ஹ வாவ
யஜமாந இஷ்டபலமேவோதாந ஸ ஏநம் யஜமாநமஹரஹர்ப்ரஹ்ம கமயதி ৷৷5.1.4৷৷

இதில் உகாரத்தை மட்டும் தியானிப்பதல் அடையும் பலனாக சொர்க்கத்தை அடைவது கூறப்படுகின்றது.

இரண்டாவது எழுத்தான உகாரத்தை ஒருவன் தியானம் செய்தால் அந்த உகாரத்திலே ஐக்கியமாகி விடுவான்.
அதனால் இவனை யஜுர்வேத தேவதைகள் ஸோமலோகமான சொர்க்க லோகத்தை அனுபவிக்க தக்க உடலை கொடுக்கிறது.
அதனால் சொர்க்க லோகத்திலுள்ள சுகத்தை அனுபவிக்கின்றான்.
அவன் சொர்க்க லோகத்திலுள்ள இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் திரும்பி விடுகின்றான்.

—————-

அந்நைஷ தேவ ஸ்வப்நே மஹிமாநமநுபவதி யத்தரிஷ்டம் தரிஷ்டமநுபஷ்யதி ஷ்ருதம் ஷ்ருதமேவார்தமநுஷரிணோதி தேஷதிகந்தரைஷ்ச
ப்ரத்யநுபூதம் புந புந ப்ரத்யநுபவதி தரிஷ்டம் சாதரிஷ்டம் ச ஷ்ருதம் சாஷ்ருதம் சாநுபூதம் சாநநுபூதம் ச ஸச்சாஸச்ச ஸர்வம் பஷ்யதி ஸர்வ பஷ்யதி ৷৷5.1.5৷৷

இதில் மூன்று மாத்திரைகளை சேர்த்து உபாஸித்தால் அடையும் பலனான பிரம்ம லோகத்தை அடைவதை கூறுகிறது.
முழு ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும். பிரம்மலோகத்தை அடைந்து அங்கிருந்தே கிரமமுக்தி அடைவான்.
இதனால் அவன் பாவங்களனைத்தும் நீங்கப் பெறுகின்றான்.

யாரொருவன் மூன்று மாத்திரைகளை அதாவது முழுமையான ஓங்காரத்தை தியானிக்கின்றானோ,
மேலான புருஷனை தியானிக்கின்றானோ அவன் ஒளிப்பொருந்திய சூரியப் பாதையை (சுக்ல கதியை) அடைகின்றான்.
எவ்விதம் பாம்பானது தோல் சட்டையை உரித்து விட்டு செல்கின்றதோ அவ்விதம் அவன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து
சாம வேத தேவதைகளால் பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.
அங்குள்ள இன்பத்தை அனுபவிக்காமல் வைராக்கியத்தை அடைந்து முக்தியடைகின்றான்.
ஜீவகனாத் – ஹிரண்யகர்ப்பனை காட்டிலும் மேலான எல்லா சரீரத்திற்குள்ளும் இருக்கின்ற பிரம்மத்தை அறிகின்றான்.
ஈக்ஷதே – இதுவரை கூறிய விஷயங்களை இரண்டு ரிக் மந்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

—————-

ஸ யதா தேஜஸாபிபூதோ பவதி அத்ரைஷ தேவ ஸ்வப்நாந்ந பஷ்யத்யத ததைதஸ்மிஞ்ஷரீர ஏதத்ஸுகம் பவதி ৷৷5.1.6৷৷

திஸ்ரஹ மாத்ரா ம்ருத்யுமத்யஃ – மூன்று மாத்திரைகளான ஒங்காரத்தை தனித்தனியாக உச்சரிப்பதால், தியானிப்பதால் மரணத்தை கடக்க வைக்காது.
ப்ரயுக்தா: இது ஒருவனுக்கு தியானம் செய்வதற்கு உகந்த கரணமாக இருக்கிறது
அன்யோன்ய ஸக்தா – ஒன்றையொன்று சேர்த்து வைத்தல். ஓங்காரத்தை தனித்தனியாக பிரித்து உபாஸிக்கூடாது.
அனவிப்ரயுக்தா: – சரியாக பயன்படுத்தபட்டால்
ஞ ந கம்யத: ­ – இவ்வாறு ஓங்காரத்தை தியானம் செய்பவன் மரணத்தைக் கடக்கின்றான். பிரம்மலோகத்தை அடைகிறான்.
ஸம்யக் க்ரியாஸு – நன்றாக தியானம் செய்யும்போது.
பாஹ்ய அப்4யந்தரம் மத்4யமஸு – ஜாக்ரத், சுஷூப்தி, கனவு போன்ற நிலைகளில்
ப்ரயுக்தாஸு – அவன் வீழ்வதில்லை

———————-

ஸ யதா ஸௌம்ய வயாம் ஸி வாஸோவரிக்ஷம் ஸம் ப்ரதிஷ்டந்தே ஏவv ஹ வை தத்ஸர்வம் பர ஆத்மநி ஸம் ப்ரதிஷ்டதே ৷৷5.1.7৷৷

ஓங்காரம் மந்திரம் நமக்கு என்னென்ன பலன்களை கொடுக்கின்றது என்பதை சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

ரிக்வேத தேவதைகளால் அகாரத்தை உபாஸிக்கும் சாதகன் மனிதலோகத்தை அடைகின்றான்.
யஜுர் வேத தேவதைகளால் உகாரத்தை தியானிக்கும் சாதகன் சொர்க்க லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.
சாமவேத தேவதைகளால் முழு ஓங்காரத்தையே தியானம் செய்யும் சாதகன் ரிஷிகளால் அறியப்படும் பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.
எதுவானது துயரமில்லாதாக, அழியாததாக, காலமற்றதாக, மரணமற்றதாக, பயமற்றதாக இருக்கின்றதோ அதை ஞானியானவன் அடைகின்றான்.

—————-

பரிதிவீ ச பரிதிவீமாத்ரா சாபஷ்சாபோமாத்ரா ச தேஜஷ்ச தேஜோமாத்ரா ச வாயுஷ்ச வாயுமாத்ரா சாகாஷஷ்சாகாஷமாத்ரா ச சக்ஷுஷ்ச
த்ரஷ்டவ்யம் ச ஷ்ரோதம் ச ஷ்ரோதவ்யம் ச க்ராணம் ச க்ராதவ்யம் ச ரஸஷ்ச ரஸயிதவ்யம் ச த்வக் ச ஸ்பர்ஷயிதவ்யம் ச வாக் ச வக்தவ்யம் ச
ஹஸ்தௌ சாதாதவ்யம் சோபஸ்தஷ்சாநந்தயிதவ்யம் ச பாயுஷ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச கந்தவவ்யம் ச மநஷ்ச மந்தவ்யம் ச
புத்திஷ்ச போத்தவ்யம் சாஹம் காரஷ்சாஹம் கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஷ்ச வித்யோதயிதவ்யம் ச ப்ராணஷ்ச விதாரயிதவ்யம் ச ৷৷5.1.8৷৷

ஏஷ ஹி த்ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஷ்ரோதா க்ராதா ரஸயிதா மந்தா போத்தா கர்தா விஜ்ஞாநாத்மா புரூஷ ஸ பரேக்ஷர ஆத்மநி ஸம் ப்ரதிஷ்டதே ৷৷5.1.9৷৷

பரமேவாக்ஷரம் ப்ரதிபத்யதே ஸ யோ ஹ வை ததச்சாயமஷரீரமலோஹிதம் ஷுப்ரமக்ஷரம் வேதயதே
யஸ்து ஸோம்ய ஸ ஸர்வஜ்ஞ ஸர்வோ பவதி ததேஷ ஷ்லோக ৷৷5.1.10৷৷

விஜ்ஞாநாத்மா ஸஹதேவைஷ்ச ஸர்வை ப்ராணா பூதாநி ஸம் ப்ரதிஷ்டந்தி யத்ர ததக்ஷரம் வேதயதே
யஸ்து ஸோம்ய ஸ ஸர்வஜ்ஞ ஸர்வமேவாவிவேஷேதி ৷৷5.1.11৷৷

எல்லா இந்திரியங்கள் -எல்லா பிராணங்கள் -மனஸுடன் லயித்து ஆத்மாவுடன் லயம் -ப்ரஹ்மானுபவம்

৷৷இதி பஞ்சம ப்ரஷ்நம் ৷৷

———————————————-

ஷஷ்ட ப்ரஷ்நம்

அத ஹைநம் ஸுகேஷா பாரத்வாஜ பப்ரச்ச பகவந்ஹிரண்யநாப கௌஸல்யோ ராஜபுத்ரோ மாமுபேத்யைதம் ப்ரஷ்நமபரிச்சத ஷோடஷகலம்
பாரத்வாஜ புரூஷம் வேத்த தமஹம் குமாரமப்ருவம் நாஹமிமம் வேத யத்யஹமிமமவேதிஷம் கதம் தே நாவக்ஷ்யமிதி ஸமூலோ வா ஏஷ
பரிஷுஷ்யதி யோநரிதமபிவததி தஸ்மாந்நார்ஹாம்யநரிதம் வக்தும் ஸ தூஷ்ணீம் ரதமாரூஹ்ய ப்ரவவ்ராஜம் தம் த்வா பரிச்சாமி க்வாஸௌ புரூஷ இதி ৷৷6.1.1৷৷

16-கலைகள் உடன் கூடிய புருஷன் யார் -கேட்டார் தெரியவில்லை –
பிராணன் -தொடங்கி -நாமம் வரை -16-கலைகள்

பரத்வாஜ என்கின்ற ஸுகேஶா குருவிடம் கேள்வி கேட்கலானார்.
பகவானே! ஹிரண்யநாப என்கின்ற கோசல நாடு இளவரசன் என்னிடம்,
“பதினாறு அங்கங்களுடைய புருஷனை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.
அதற்கு நான், “தெரியாது, தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்!
எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை” என்று கூறினேன்.
இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப்போய்விட்டார்.
“அந்த நபர் யார்? அவர் எங்கே இருக்கின்றார்” என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.

———-

தஸ்மை ஸ ஹோவாச இஹைவாந்த ஷரீரே ஸோம்ய ஸ புரூஷோ யஸ்மிந்நேதா ஷோடஷகலா ப்ரபவந்தீதி ৷৷6.1.2৷৷

சரீரத்துக்குள் உள்ள புருஷன் -ஜீவனா பரனா -கலா போக்த்ருத்வம் -அனுபவம் ஜீவனுக்கு இருப்பது பரமாத்வா இடம்
யஜமானத்தவம் பரன் இடம் போக்த்ருத்வம் ஜீவன் இடம்

அந்த சிஷ்யருக்கு குருவானவர் கூறினார்: “இனியவனே! அந்த நபர் ஆத்மா.
ஆத்மா இங்கே நம் உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

விசாரம்:
நிர்குண பிரம்மன்தான் அந்த புருஷன். இதற்கு லட்சணம் பிளவுப்படாதது, அவயவங்களற்றது.
அங்கங்களுடையதெல்லாம் வரையறுக்கப்பட்டதாக இருக்கும். இந்த உலகத்தில் நாம் வேற்றுமையைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.
எல்லாமே வெவ்வேறாக இருக்கின்றது. நம்முடைய மனதில் அபேத ஸம்ஸ்காரம்தான் இருக்கிறது.
நாம் புரிந்து கொள்ள வேண்டியது பேதமற்றதைத்தான். இதுதான் மிகவும் கடினம். அனுபவித்தினால்தான் அறிவை அடைய முடியும்,
இந்த பிரம்மம் பிளவுபடாததாக இருக்கிறது என்று அறிமுகப்படுத்தினால் இது நம்முடைய அனுபவத்திற்கு முரணனானதாக இருக்கும்.
எனவே முதலில் அனுபவத்திலுள்ள உள்ளதை நீக்கிவிட்டு அதற்கு அப்புறம் பிரம்ம தத்துவத்தை உபதேசிக்கப்படுகின்றது.
அத்யாரோப அபவாதம் என்ற யுக்தியை பயன்படுத்தி இந்த ஞானத்தை உபதேசிக்க்கப்படுகின்றது.

————-

ஸ ஈக்ஷாம் சக்ரே கஸ்மிந்நஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ பவிஷ்யாமி கஸ்மிந்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி ৷৷6.1.3৷৷

யார் உடன் உள்ளே -யார் உடன் வெளியில் -கர்மா வாசனா ருசி ஸூஷ்மம் இத்யாதி

இதில் பிரம்மன் பதினாறு அவயவங்கள் தோன்றுவதற்கு நிமித்த, உபாதான காரணமாக இருக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது.
அந்த புருஷன் ஆலோசனையை மேற்கொண்டார். எந்த ஒன்றினால் சரீரம் இயங்குவதற்கும், வெளியேறினால் ஜடமாகி விடுவதற்கும் அதை சிந்தித்தார்.
இந்த உடலில் எது இருந்தால் அனைத்தும் உடலிலேயே இருக்குமோ அது வெளியே சென்றால் தானும் சேர்ந்து
வெளியே சென்று விடுமோ அத்தகைய பிராணனை ஸ்ருஷ்டிப்பேன் என்று ஆலோசித்தது.

—————

ஸ ப்ராணமஸரிஜத ப்ராணாச்ச்ரத்தாம் ஸ்வம் வாயுர்ஜோதிராப பரிதிவீந்த்ரியம்
மந அந்நம்ந்நாத்வீர்யம் தபோ மந்த்ரா கர்ம லோகா லாகேஷு ச நாம ச ৷৷6.1.4৷৷

பிராணன் -ஸ்ரத்தை -கம் வாய் ஜோதி -அன்னம் வீர்யம் -மந்த்ர –நாமம் -16-கலைகளை காட்டி அருளுகிறார்

முதலில் பிரணனை தோற்றுவித்தார். சிரத்தை (அந்தக்கரணத்தின் எல்லா குணங்களும் நல்ல செயல்களை செய்வதற்கு காரணமாக இருப்பது),
அடுத்து சூட்சும, ஸ்தூல பஞ்ச பூதங்களான ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் படைக்கபட்டது. பிறக் 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள்,
மனம் உணவு, சரீர இந்திரிய சக்திகள், தவம் (தவம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உருவாகுதல்,
இதனால் மனமானது தூய்மை அடைகின்றது), வேதமந்திரங்கள் (இந்த உலகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவை தரும் சாதனம்),
செயல்கள், கர்மபலன்கள் (இந்த கர்மத்தினால் வரும் பலனாக அனுபவிக்கும் உலகம்) எல்லவற்றிற்கும் உள்ள பெயர் ( யோகேஷு நாம)
ஞானி விதேஹ முக்தனானலும் அவன் பெயர் என்றும் அழிவதில்லை.

—————-

ஸ யதேமா நத்ய ஸ்யந்தமாநா ஸமுத்ராயணா ஸமுத்ரம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யேதே தாஸாம் நாமரூபே ஸமுத்ர இத்யேவம்
ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்ரஷ்டுரிமா ஷோடஷகலா புரூஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யேதே சாஸாம்
நாமரூபே புரூஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோகலோமரிதோ பவதி ததேஷ ஷ்லோக ৷৷6.1.5৷৷

யமுனை கருப்பு -சமுத்திரம் சேர்ந்து நாம ரூபம் -இல்லாமல் -வேறு பாடு இல்லாமல் ப்ரஹ்மம் இடம் ஆத்மா அனுபவம் –

பலவிதமான பெயர்களுடைய, தன்மைகளுடைய நதிகள் கடலில் கலந்த்தும் அவைகளின் பெயர்களும், தன்மைகளும் மறைந்து விடுகின்றன.
இதுவே அபவாதம். ஓடிக் கொண்டிருக்கின்ற நதிகள் கடலை அடைவதையே லட்சியமாக கொண்டு ஓடி,
அதை அடைந்து அவைகள் இல்லாமல் ஆகிவிடுகிறது. அந்த நதிகளுடைய நாமமும் ரூபமும், இல்லாமல் போய் விடுகின்றது.
நதியின் ஸ்வரூபமான நீர் அழிவதில்லை. இவைகள் கடலில் கலந்த்தும் கடல் என்று அழக்கப்படுகின்றது.
இந்த உதாரணத்தை போல பிரம்ம சைதன்யத்தினுடைய இந்த பதினாறு அவயவங்கள், உலகில் உள்ள எல்லா படைப்புக்களும்
பிரம்மத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அந்த பிரம்மத்தை அடைந்ததும் அனைத்தும் இல்லாமல் போகின்றது.
அவைகளுடைய நாம-ரூபங்கள் சென்று விடுகின்றது, அழிந்து விடுகின்றது. புருஷன் மட்டும்தான் இருக்கிறார்.

இந்த புருஷன் அனைத்துக்கும் காரணமாக இருப்பவன்தான், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவன்தான்,
சரீரத்திலுள்ள பதினாறு பகுதிகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றான். இவன் வேற்றுமைகளற்றவன், அவயவங்களற்றவனாக இருக்கிறான்.

நாம ரூபத்திற்கு இரண்டு நிலை உள்ளது. அவைகள் வெளிதோற்றத்திற்கு வந்தது, வராதது என்பதாகும்.

பிரம்மன் சத்யம் இந்த நாம-ரூபம் மித்யா, இதற்கென்று சுதந்திர இருப்பு கிடையாது.
அவைகள் பிரம்மத்தையே ஆதாரமாக கொண்டிருக்கின்றது. இந்த பிரம்மன் நித்யமாக, மரணமற்றதாக இருக்கின்றது.
பிரம்மத்திற்கும், ஜகத்திற்கும், உள்ள சம்பந்தம் சத்யம்-மித்யா என்ற சம்பந்தம்.
இந்த ஞானத்தை மேலும் விளக்குவதற்கு ரிக் மந்திரங்கள் அடுத்து வரும் மந்திரங்களில் கூறப்படுகின்றது.

————–

அரா இவ ரதநாபௌ கலா யஸ்மிந்ப்ரதிஷ்டிதா தம் வேத்யம் புரூஷம் வேத யதா மா வோ மரித்யு பரிவ்யதா இதி ৷৷6.1.6৷৷

அரங்கள் தேர் போலே இந்த 16-கலைகளும் ஆத்மாவிடம் ஒட்டிக் கொண்டு இருக்கும் –

சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் இணைக்கப்பட்டு உள்ளது போல, எதனிடத்தில் அனைத்து படைப்புக்களும்
இணைக்கப்பட்டுள்ளதோ அதை யோக்யமான யார் அறிகிறார்களோ, அந்த அறிவினால் அவர்களை மரணமானது தீண்டாது.
தவறான அறிவுதான் இங்கு மரணத்திற்கு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மனதில் உருவாகும் தவறான எண்ணத்தை இந்த ஆத்ம ஞானம் அழித்து விடுகின்றது.

———————–

தாந்ஹோவாசை தாவதே வாஹமே தத்பரம் ப்ரஹ்ம வேத நாத பரமஸ்தீதி ৷৷6.1.7৷৷

ப்ரஹ்மம் பற்றி சொல்ல வேண்டியதை சொன்னேன்
அறிந்து மேலே ஆராய்ந்து கொள்ள வேண்டும்

பரபிரம்மத்தைப்பற்றி என்ன உபதேசம் செய்தேனோ அதுவரைதான் எனக்குத் தெரியும்.
இதற்கு மேல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. இதன் மூலம் குருவானவர் சிஷயர்களுக்கு மனநிறைவை கொடுக்கின்றார்

—————

தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந பிதா யோஸ்மாகமவித்யாயா பரம் பாரம் தாரயஸீதி நம பரமறஷிப்யோ நம பரமறஷிப்ய ৷৷6.1.8৷৷

பத்ரம் கர்ணேபி ஷ்ரரிணுயாம தேவா பத்ரம் பஷ்யேமாக்ஷ பிர்யஜத்ரா ஸ்திரைரங்கைஸ்துஷ்டுவா் ஸஸ்தநூபிர்வ்யஷேம தேவஹிதம் யதாயு
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வரித்தஷ்ரவா ஸ்வஸ்தி ந பூஷா விஷ்வவேதா ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி ஸ்வஸ்தி நோ பரிஹஸ்பதிர்ததாது–৷৷

சிஷயர்கள் குருவை வணங்கி, “எங்களுக்கு நீங்கள் தந்தைப்போல் இருக்கிறீர்கள். கூறினார்கள்.
குரு-சிஷ்ய பரம்பரையிலுள்ள ரிஷிகளுக்கு எங்களது நமஸ்காரங்கள்.

ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷

৷৷இதி ப்ரஷ்நோபநிஷத்ஸமாப்தா৷৷

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading