Archive for the ‘Prabandha Amudhu’ Category

ஸ்ரீ அருளிச் செயல்களில் வண்டு பத பிரயோகம் – /ஸ்ரீ தெய்வ வண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்-

October 8, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி

செம்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்பச்
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளால் வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவு வாய் வந்து அச்சோ அச்சோ -1 8-2 –

செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –

அண்டத்த அமரர் பெருமான் அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –
கார் வண்ணன் வண்டார் குழல் வார வாராய் என்ற ஆய்ச்சி சொல்-2-5-10-

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்-2-9-11-

வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – 2-10 2-

———————

பூங்குவளைப் போதில் பொறி வந்து கண் படுப்ப -ஸ்ரீ திருப்பாவை -3-

பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய்-ஸ்ரீ நாச்சியார் திரு மொழி- —5-3-

————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே–ஸ்ரீ பெருமாள் திருமொழி – 2-8-

வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற
பெரும் திரு மார்வை உடையராய் –
மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-

பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

இயலைக் கற்று சிஷா பலத்தாலே இசை வரும் தனைய வார்த்தை சொல்லும் போதும் பண்ணாய் இருக்கை
தாங்கள் பாடுகிற பாட்டுக்கு இசைந்து வண்டினங்களானவை பண் பாடுகிற ஸ்ரீ திரு மலையிலே-

தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவத்தேன் ஆவேனே –4-6-

தென் தென் என்று ஆளத்தி வைத்து வண்டினங்கள் பண் பாடுகிற ஸ்ரீ திருமலையிலே
அப்படிப்பட்ட பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –
ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கு அவ்வருகு இருக்கில் இறே -ஆகையால்
அரும் தவத்தேன்-என்னக் குறை இல்லை இறே –

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம் தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-

உன் குழலை விச்வசித்த வண்டுகள் என் பட்டனவோ –
உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –

வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே
ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –

———————–

வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–22-

வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த-71-

————

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–ஸ்ரீ திரு மாலை-14-

கிண்ணகத்தில் இழிவார் திரளாக இழியுமா போலே
மது வெள்ளத்தால் வண்டுகள் திரள் திரளாக வாய்த்து இழிவது –
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணி புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலும்
தான் வாய் விட மாட்டாமையாலும் ஆளத்தி வையா நிற்கும் ஆயத்து –
முக்தர் திரள் திரளாக பகவத் அனுபவம் பண்ணி போக்குவீடாக சாமகானம் பண்ணிக் களிக்குமா போலே
இவ் ஊரில் திர்யக்குகளும் கழித்து வர்த்திக்கும் -என்கை –

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே–32-

திருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை
அபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து கழுத்தே கட்டளையாகப் பருகி
புக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே ஆர்த்துக் கொள்ளா நிற்கும் –
முக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சாம கானம் பண்ணுமா போலே
ஒரு தேச விசேஷத்திலே –பகவத் அனுபவத்தாலே முக்தருக்கு பிறக்கும் விகாசம் திர்யக்குகளுக்கும்
பிறக்கும் படி யாய்த்து கோயிலின் போக்யதை இருப்பது
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு
பாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இறே-
இவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –
இவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –
மது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே
பிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்
கிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும் அலையா நிற்கும் யாய்த்து –

—————

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-ஸ்ரீ அமலனாதி பிரான்–6-

அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –-திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து
கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

—————-

ஸ்ரீ பெரிய திருமொழி-

மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை-1-1-10-
வேழம் பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-
வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-

தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-
அறிவில்லாத வண்டுகள் -அப்புஷ்ப விகாச சோபையைப் பார்த்து நெருப்பாகவே நினைத்து பயப்படும்
நித்யமாக அச்சமும் அச்சம் கழிதலும் மாறி மாறிச் செல்லும்
அவன் சர்வ ரஷகன் என்று தெரிந்தும் பல்லாண்டு -போற்றி -என்று மங்களா சாசனம் செய்யும்
பெரியாழ்வார் போல்வார் வண்டுகள்
பயமும் பய நிவ்ருத்தியும் மாறி மாறி செல்லும் பிரபன்னர்கள் வாழும் இடம் –

வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை-1-2-10-

மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -என்னும்படியான எம்பெருமானை பரிபூர்ணமாக அனுபவித்து ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
ஏதத் சாம காயன் நாஸ்தே -ஹாவுஹாவு ஹாவு -சாமகானம் பண்ணிக் களிக்கும் முமுஷூக்கள் வாழப் பெற்ற வதரி-

நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை-1-3-10-

பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-
வண்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய தண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-

தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–2-2-5-
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்-2-2-10-

வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே-3-6-1-
பிணியவிழும் நறு நீல மலர் கிழியப் பெடையொடும் அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே-3-6-2-
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன் போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்-3-6-6-
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-

மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-

வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-
நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன்-3-9-10-

மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

குல மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-

வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-4-

வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-3-

வரி வண்டு மிண்டித் தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2-

எழிலார் மஞ்ஞை நடமாடப் பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6-
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-

நறும் தண் தீம் தேனுண்ட வண்டு குறிஞ்சி பாடும் கூடலூரே—5-2-2-

வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3-

வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-

வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு த்வனியா நின்றுள்ள பொழிலை உடைத்தான திருப் பேரிலே வரிகளை உடையனான
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனை கவி பாடிற்று –
இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-

மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-2-

ஸ்யாமமான நிறத்தையும் வரியையும் உடைத்தாய் இருக்கிற வண்டுகள் தன் பந்து வர்க்கத்தோடே கூட மது பானத்தைப் பண்ண
கழுத்தே கட்டளையாக மது பானம் பண்ணின படியாலே கால் வாங்கிப் போக மாட்டாமை அவ்விடத்திலே இருந்து பூக்களைக் கோதி
அதின் மேலே இருந்து நைவளம் என்கிற பண்ணைப் பாடா நின்றுள்ள பொழிலை உடைத்தான தேசம்  –

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்–6-1-1-

செவ்விப் பூ மாலையை கையிலே கொண்டு முன்பு நாம் பண்ணி வைத்த பாபங்களை அடையப் போக்க வேணும்
என்று திருவடிகளின் மேலே

பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-
இன வண்டாலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

மென்மலர் மேல் கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே-6-7-4-

பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை-7-1-10-

வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-8-

வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-

மென் தளிர் போல் அடியினானைப் பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னை-7-4-8-

புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-7-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —9-3-4-

நம்முடைய தலைவன் என்று சொல்லலாம் படி சம்ஸ்லேஷித்து பிரிந்தான்
மது பானம் பண்ணுகிற வண்டே சாஷியாக வந்தான்
நான் உபவாசத்தால் மெலிந்து கிடக்க அந்த வண்டு மது உண்டு களித்து-
அவன் இடமே மண்டி உள்ளதே -என்ன பாக்கியம்
ஒரு நாளும் தாமும் நோவு படாதே -பிறர் நோவும் அறியாதே உண்டு களித்து திரியும் வண்டுகள்
நமக்கு சாஷி சொல்ல மாட்டாவே
தகுந்த சாஷி இல்லாமல் கலந்த பாவியேன் -கொடியேற்கு -என்கிறார்-

இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —–9-6-9-

———————-

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

ஸ்ரமஹரமாய் -வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே.
இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும்,
‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம்.
இதனால், கடகருடைய -இறைவனோடு சேர்க்கின்ற ஆசாரியனுடைய ஆத்தும குணத்தைப் போன்றே,
ரூப உருவத்தின் குணமும்-உத்தேச்யம் – உட்கோள் என்கை,

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்-1-7-11-

தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே
இடங்கொண்டு குடித்தலை அன்றி,மது வற்றிக் கைவாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத்துழாய் மாலையாலே
அலங்கரிக்கப் பட்ட திருமுடியை யுடையவனை.
அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று,
பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-2-8-11-

வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –

வண்டார் தண் ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரி கின்றனவே–5-2-2-

வண்டுகள் மாறாதபடியான செவ்வித் துழாய் மாலையை யுடையனாய்,
ஸ்ரீயபதி- திருமகள் கேள்வன் ஆகையால் வந்த ஏற்றத்தையுடையனாய் இருக்கிறவனுடைய-
ஸ்ரீய:பதித்வத்திலும் ஒப்பனையிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்-5-9-6-

இவற்றின் குரல் த்வனியில் -ஓசையில் வெள்ளோசையாய்க் கழியுண்பது இல்லை,
பரப்பு அடங்கலும் பாட்டாக இருக்கும். என்றது,
இயல் கற்று இசையோடு கூட்டிற்று அன்று அவற்றுக்கு, பேச்சே தொடங்கி இசை என்றபடி.
தேன் போலே இனிய பாட்டு’ என்னுமது போய், வடிவே தேனாய்
அதற்கு மேலே பாட்டும் ஆனால் மிகவும் இனியதாயிருக்குமன்றோ.
அன்றிக்கே, பாண் குரல் – இசை ரூபமான மிடற்றோசை என்னுதல்.

குழல் என யாழும் என்னக் குளிர் சோலையுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்ல வாழ்-5-9-9-

குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை.
நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டால் போலே இருக்கை.
“விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”- பால. 1-18-
வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்” என்னுமாறு -.
ஒன்றற்குப் பல பொருள்களை உவமை -போலே
ஸ்ரமஹரமான சோலையிலே குளிருக்குப் பரிஹாரமாகத் தேனைக் குடித்து. அருந்தி – குடித்து.
முக்தமாய் -இளமையோடு கூடியதாய்க் தர்ச நீயமான -காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள்,
பிரீதிக்குப் போக்கு விட்டுப் பாடா நின்றுள்ள திருவல்லவாழ்.
செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப்
புழுகு நெய்யை ஏறிட்டுக்கொண்டு திரியுமாறு போலே,
இவையும் இயலை விட்டு இசையையே பாடுகின்றன வாதலின் ‘இசை பாடும்’ என்கிறது.

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

சில வண்டுகளைக் குறித்து, அவர் இத் தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர்,
அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்வர்.
இத் தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது;
பெண் பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யரா யிருக்குமவர்க்கு,
ரக்ஷ்ய வர்க்கத்திலே நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்.

இவற்றை வேறுகொண்டு இரக்க வேண்டுவான் என்? என்னில்,
அவற்றினும் இவை பதஸ்தம் -பல கால்களை யுடையன ஆகையாலே.
இன்னம் ஒன்று, சபைக்கு அஞ்ச வேண்டாதே வளையத்தே இருந்து வார்த்தை சொல்லவும் வல்லனவே யன்றோ
அன்றிக்கே. “தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள்”-பெரியாழ்வார் திருமொழி,-1. 8 : 2. ‘- என்றும்
அவனுக்குத் தலையான திருஷ்டாந்தமாகவும் சொல்லுவது இவற்றை அன்றோ.
செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –தலையான திருஷ்டாந்தம்-

ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே–6-8-3-

பேரளவுடையார் படும் ஈடுபாட்டினைக் கண்டு, தன் குழலின் வீறு தான் அறிந்திருக்குமே.
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ
என்பான் என்? காரியம் செய்து சமைந்தால் கைக் கூலி கொடுப்பாரைப் போலே? என்னில்,
இவற்றுக்கு இவள் குழலிலே விஷயம் உண்டாக வேணுமே.
இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது;
இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது.
அவனுக்குத் தூது போய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூது போனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.
அங்கு மஹா ராஜருடைய மது வனம் அன்றோ அழிந்தது;
இங்கு அவன் காவற் காட்டினை உங்களுக்குத் தருகிறேன் என்கிறாள்.
அளகாடவி அன்றோ.-தலையான பரிசில் அன்றோ இது தான்.

என்றும் இவள் குழலில் மது பானம் செய்வன வண்டுகளே அல்லவோ.
தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டாதல்-திருவாய்.-9. 9 : 4.–
இவை யாதல். அவனேயோ சாம்யா பத்தி – ஒத்த தரத்தைத் தர வல்லான்,
நானும் உங்களுக்கு அவனோடு ஒத்த தன்மையைத் தருகிறேன் என்கிறாள். என்றது,
ஸோஸ்நுதே – அந்த முக்தன் பரமாத்வோடு அநுபவிக்கிறான்” என்கிறபடியே,
உங்களையும் அவனையும் ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி. தலையான ஊண் அன்றோ.
உங்கள் வரவாலே தளிர்த்திருக்கிற என்னுடைய குழலில் ஒளியை யுடைத்தாய்
ஸ்லாக்யமான மலரில் மதுவைப் பானம் செய்யீரோ?
ஊதிரோ-மதுவின் நிறைவாலே, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனித்து இழிய மாட்டாமல்
நின்று பறக்கிற படியைத் தெரிவிப்பாள் ‘ஊதிரோ’ என்கிறாள்.
உங்கள் காரியமும் பர ரக்ஷணமுமானால் -பிறரைப் பாதுகாப்பதுமானால் ஆறி இருக்கிறது என்? என்கை,
கூடிய வண்டினங்காள் –மஹா ராஜரைப் போலே படை திரட்ட வேண்டா அன்றோ உங்களுக்கு
என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டிருக்கப் பெற்றது அன்றோ.
இளைய பெருமாள் கிஷ்கிந்தா நகரத்தின் கோட்டை த்வாரத்திலே -வாசலிலே சென்று
குண கீர்த்தனம் செய்த பின்பன்றோ படை திரட்டிற்று.

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9-

மதுபான மத்தமாய் -தேனைக் குடித்து மயங்கிப் பாடுகின்ற சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து
உங்கள் த்வனி -இசை எனக்கு துஸ்ஸஹமாய் -பொறுக்க ஒண்ணாததாய் இருந்தது
நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் –என்கிறாள்-

தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-

இனிய பேச்சை உடைய வண்டுகாள் –
அவன் அநாதரிக்கிலும் -விரும்பானாகிலும் உங்கள் பேச்சு இனிமையாலே
வர வேண்டும்படி அன்றோ பேச்சு இருப்பது –
பூக்களிலே இரைத்துக் கொண்டு-மது பானம் -தேனைக் குடிக்கும் பொழில்
அன்றிக்கே
மலர்கிற காலத்தில் சென்று தேனைக் குடிக்கும் சோலை என்னுதல்
உங்களுக்கு மீட்சியில் ஆகவும் வேண்டா
ததிமுகன் முதலானோர் காவலும் இல்லை
முன்பு தேனைக் குடிக்கிறவர் களோடு தேனைக் குடிக்க அமையும் –
நீங்கள் சொல்லும் அத்தனையே வேண்டுவது
உங்கள் வார்த்தை கேட்டிருக்கவும் கேட்டுக் கொண்டாடுகைக்கும் புருஷகாரம் உண்டு -என்கை-

எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-

சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்கு உள்ளவனுக்கு என்ன தீங்கு வருமோ -என்று
அஞ்ச வேண்டாதபடி ஸூ ரஷிதமான தேசத்திலே – காவல் உள்ள இடத்தில் அவன் இருக்கப் பெற்றோம்
இனி எனது ஆர்த்தியை -துன்பத்தை அறிவியுங்கோள் -என்கிறாள்

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

பெரிய திருவடியை உடைய தெய்வம் ஆகிற வண்டாலே ஆத்த -எடுக்கப் பட்ட சாரத்தை உடையதான
என்னுடைய பெண்மை யாகிற பூ -பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே –
ஏவம் -இந்த விதமாய் நலிய -நலிவு படா நின்றது –

வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே-9-10-3-

வண்டுகள் மதுபான மத்தமாய் -தேனை உண்டு அதனால் மயக்கம் கொண்டு
பாடா நின்றுள்ள சோலை சூழ்ந்த தேசம்
ஏதத் சாமகாயான் ஆஸ்தே-தைத்ரியம் -10–அந்த சாம வேதத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் -என்றபடியே
வண்டு பாடும் சோலை -என்கிறார் –
இதனால் நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமை உடைய தேசம் -என்பதனை தெரிவித்த படி –

——————–

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும்
தண்டுழாய்க் கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–

பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில்
பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய
ஸ்லாக்யமான திருவடிகளை வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

———————————

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –ஸ்ரீ –திரு விருத்தம் -30-

ஜந் த்ரவ்யா கரண பண்டித -சிறிய திரு வடி -ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-
தூது போக கடவத்தை உங்களை இரவா நின்றேன்-
என் தசை–உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி
அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க இரப்பவும் செய்தேன்-

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

வண்டுந்துழாய் -ஒப்பனையால் வந்த அழகை சொல்லுகிறது –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து
திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அக்குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி
நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பஸ்யபாரே-புவனஸ்ய மத்யே -நாகச்யப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பஸ்ய -வியூகம்
புவனஸ்ய -விபவம் அர்ச்சை
நாகசா -பரம்
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –

——————-

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-152-

வண்டு தும்பிகள் என்கிறது யாரை என்று அருளிச் செய்கிறார் மேல்–

என் பெறுதி என்ன பிரமியாது உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்துத் தே தென வென்று ஆளம் வைத்துச் சிறு கால் எல்லியம் போது
குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும்
தகைவறப் புக்கு வண்டு ஒத்து இருண்ட குழலிலே சங்கை அற மருவி அருளாத யாம் என்று ஓடி வந்து
வாசமே ஊதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்
சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்-

அதாவது
1-என் பெறுதி என்ன பிரமியாது
கோல் தும்பீ ஏரார் மலர் எல்லாமூதி நீ என் பெறுதி–பெரிய திருமொழி -8-4-5 – என்று
நிவர்திப்பிக்க வேண்டும் படி- அப்ராக்ருத விஷயங்களை போக்கியம் என்று பிரமியாதே-
(இது ஒன்றே வண்டுகளும் தும்பிகளுக்கும் இவருக்கும் உண்டான வாசி -மேல் எல்லாம் ஒற்றுமைகள் –
( ஒன்பதோடு ஓன்று -முதல் மட்டும் -பிரமிக்காமல் -வண்டு பிரமரதம் என்பர் – -எதிர்மறை -மற்றவை எல்லாம் சாம்யம் ))

2-உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் –
களங்கனி வண்ணா கண்ணனே என் தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் உள்ளத்துளூறிய தேனை -பெரிய திருமொழி-4-3-9-என்று
தன்னுடைய சௌந்தர்ய சீலாதிகளை நினைத்து ஹிருதயம் பக்குவமாய் இருக்கும்
சேஷ பூதருடைய ஹிருதயத்தில் ஊறிய தேனை -என்கிற பகவத் விஷயம் ஆகிற மதுவை விரும்பி –
த்வாம் ருதஸ்யந்தினி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி –
ஸ்திதேரேவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே – ஸ்தோத்ர ரத்னம் -27-என்கிறபடி-
மற்று ஒன்றை புரிந்து பாராதே இத்தை புஜிக்கையே வ்ரதமாக உடையவராய் —

3-தூ மது வாய்கள் கொண்டு —
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு-திருவாய்-6-8-3- -என்று
பகவத் போக்யதா அனுபவத்தாலே பரிசுத்தமான இனியதான வாயைக் கொண்டு ..

4-குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்து –
என் குழல் மேல் ஒளி மா மலரூதீரோ -திருவாய் -6-8-3–என்கிறபடியே
நாள் கமழ் மகிழ் மாலை மார்பர் –4-10-11–ஆகையாலே வகுள தாரரான ஆழ்வார் உடைய
வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும் வியலிடத்தே–திருவிருத்தம் –55 -என்று
பரத்வாதிகள் போக்யதையும் பரிச்சின்னம் என்னும் படியான திருக் குழலிலே வைத்த –
ஒளி மா மலரான-வகுளத்தின் சாரத்தை கிரஹித்து அவ்வழியாலே
இத் தலையில் போக்யத்தை அனுபவித்து –

5-தே தெனவென்று ஆளம் வைத்து –
வரி வண்டு தே தென வென்று இசை பாடும் –பெரிய திருமொழி -4-1-1-
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–பெரியாழ்வார் -4-8-6–என்கிற படியே
இப்படி பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்து -செருக்குக்குப் போக்கு வீடாக ஆளத்தி வைத்து-
(இத்தால் யாழில் இசை வேதத்து இயல்களை வாயாரப் பாடிக் கொண்டு இருக்கும்படியைச் சொன்னவாறு )

6-சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ள பாடித் —
(இத்தால் -எம்மானைச் சொல்லிப் பாடி -பண்கள் தலைக் கொள்ளப் பாடி –
வேத முதல்வனைப் பாடி -கொண்டு இருத்தலைச் சொன்னவாறு )
அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலை பாடும்
தென் திருமாலிருஞ்சோலையே –பெரியாழ்வார் -4-2-8–என்றும் –
எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி — பெரியாழ்வார்-4-8-8–என்றும்
(மல்லிகை வெண் சங்கூதும் பெரியாழ்வார்-4-8-8–மல்லிகை பூ மலர -காற்று வீச சங்கு போல இசை வருமே )
வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் -பெரிய திருமொழி -2-1-2-என்றும் –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -பெருமாள் -8-4-என்றும் –
கந்தார மன் தேனிசை பாட-பெரிய திருமொழி -3-8-1 -என்றும் –
என்கிறபடியே காலோசிதமான பண்களை –
பண்கள் தலைக் கொள்ளப் பாடி-திருவாய் -3-5 2–என்கிற படி தலைமை பெறும் படி பாடி —

7-துன்னிட்டு நெருக்க நீக்கு என்று கடந்து புகும் தகைவற புக்கு –
(இத்தால் வண்டுகள் மிக நெருக்கமான இடங்களிலும் தடை இன்றி செல்லும் -தன் இனமான பொருள்களோடு நட்பு கொள்ளும் –
இறைவன் சந்நிதியில் அச்சம் சிறிதும் இன்றி நிற்கும் –
அவ்வாறே இவர்களும் நேச நிலைக்கதம் நீக்கு என்று சொல்லி -பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு-
அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து -அஞ்ச வேண்டிய அபராதம் சிறிதும் இல்லாமையால் சங்கை இல்லாமல்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்பார்கள் -என்கிறது )
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய –பெருமாள் -4-3-என்றும் –
சுந்தரர் நெருக்க –திருப்பள்ளி எழுச்சி –7-என்றும் –
சொல்லுகிறபடியே திரு வாசலிலே சேவாபரர்கள் நிறைந்து -தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க –
நேச நிலை கதவம் நீக்கு–திருப்பாவை –16 -என்று
திரு வாசல் காப்பானை திருக் கதவு திறக்க வேணும் என்று அபேஷித்து ,
பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -பெரிய திருமடல் –73-என்கிறபடி-
திருஷ்ட்டி சித்த அபஹாரம் பண்ணும் திரு வாசல் அழகிலே துவக்கு ஒண்ணாதே –
அத்தை கடந்து புக வேண்டுகையாகிற தகைவு அற –
பாடுவாரான அந்தரங்கதை யாலும் ஏகாக்ர சித்ததையாலும் போய்ப் புக்கு

8-வண்டு ஒத்த இருண்ட குழலில் சங்கை அற மருவி –
வண்டு ஒத்த இருண்ட குழல்-பெரியாழ்வார் -2-5-7-என்கிறபடியே -ஸ்வசமான விஷயம் உள்ள இடத்தில் சேர்ந்து –
நீ மருவி அஞ்சாதே நின்று–திரு நெடும் தாண்டகம் -26- என்கிறபடி நிச்சங்கமாக அவனுக்கு சமீப வர்திகளாய்–

9-அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி- –
அருளாத நீ அருளி–திருவாய் -1-4-6 -என்றும் ,
யாமிதுவோ தக்கவாறு–திருவாய் –6-8-4-என்றும் ,
இத்தலையில் ஆர்த்தியை அவனுக்கு அறிவித்து –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-திருவாய் -6-8-3 -என்று
அவனோடு கூட வர இராதே முந்துறவே ஓடி வர வேண்டும் என்று அபேஷித்து விட்ட படியே –
இத்தலையில் ஆர்த்திக்கு ஈடாக அவன் வரவை அறிவிக்க விரைந்து வந்து —
தங்கள் வரவாலே -இத்தலையில் வந்த செவ்வியை அனுபவித்து –
மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவ வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –பெரிய திருமொழி -11-1-9-
என்கிற படியே-அத் தலையில் தாங்கள் அனுபவித்த போக்யதையை –தங்கள்
வாக்காலே -வரவாலே இத் தலைக்கு பிரகாசிப்பியா நின்று கொண்டு ஆஸ்வசிப்பித்து-

10-வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்-இத்யாதி –
கொங்குண் வண்டே கரியாக வந்தான் -பெரிய திருமொழி -9-3-4-என்கிறபடி
சாகாக்ர சார க்ராஹியாய்-ஷட்பத நிஷ்டராய்–பஷ த்வய யோகத்தாலே –
அப்ரதிஹத கதியானவரை முன்னிட்டு அங்கீகரிக்குமவனாய் —
தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-என்று
வேதாந்த்ய வேத்யன் என்று தோற்றும் படி –
கருட வாஹனாய் – சார க்ராஹியாய் இருக்கிற சர்வேஸ்வரனுடன் சேர்விக்கும் —

சேமமுடை நாரதன் -பெரியாழ்வார் -4-9-5-என்று
ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டதையாய் ஆகிற ரஷையை உடையவனாய் –
பகவத் குண அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே நிருத்த கீத பரனாய் இருக்கும் ஸ்ரீ நாரத ப்ரஹ்ம ரிஷி —
(மஹதி நாரதருடைய வீணைக்கு பெயர்-கர்ம -உபய -பாவனை இல்லாமல் ப்ரஹ்ம பாவனையில் மட்டும் இருக்கும் க்ஷேமம் )
லோக சாரங்க மகா முநிகளால் வஹிக்க படுகையாலே முனிவாஹனர் என்று நிரூபிதரான திருப் பாண் ஆழ்வார் ,
திரு வாய் மொழி இசையே தங்களுக்கு போக்யமாய் இருக்கிற தம்பிரான்மார் போல்வாரை –
( அரையர் ஸ்வாமிகளை -பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்று உள்ள வர்கள் என்றவாறு )
இக் குண சாம்யத்தாலே – வண்டு என்றும் தும்பி என்றும் சொல்லும் என்கை–

தும்பி ஆவது ப்ருங்க ஜாதியிலே – ஓர் அவாந்தர பேதம் —
ஆகையால் இறே -வண்டினங்காள் தும்பிகாள் -என்று ஏக ஸ்தலத்திலே இரண்டையும்
பிரிய அருளிச் செய்தது-

———————————————————-———————————————————-———————————————————-———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -74–ஸ்ரீ மதுராபுரி பிரவேசம்-

October 1, 2020

சார்த்தூல விக்ரீடிதம்–சந்தஸிசில் இந்த தசகம் புலியின் விளையாட்டு போல் நுழைந்தார்கள்

ஸம் ப்ராப்தோ மதுராம் திநார்த விகமே தத் ராந்த்ரஸ் மிந் வசந்
ஆராமே விஹி தாஸந சகி ஜநைர் யாத புரீ மீஷிதம்
ப்ரபோ ராஜ பதம் சிர ஸ்ருதி த்ருத வ்யாலோக கௌதூஹல
ஸ்த்ரீ பும்ச உத்யத் அகண்ய புண்ய நிகலைரா க்ருஷ்ய மானோநு கிம் –-1-

திநார்த விகமே-பாதி நாள் கழிந்த
வசந்–ஒய்வு எடுத்தாய்
விஹி தாஸந–உணவும் உண்டாய்
புரீ மீஷிதம்-புரீம் ஈஷிதம் -மதுராவைப் பார்க்க முந்திய நாளே போனான் –

12 வருஷமாகக் கேளிவிப்பட்டு காண விரும்பி இருந்த மதுரா வாசிகளை கடாக்ஷிக்கப் போனான்

நண் பகலில் மதுரா நகரம் அடைந்து -அருகில் உள்ள தோட்டத்தில் உணவு உண்டு –
நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தீர்
அந்த நகரத்தில் உள்ளார் முன்பே தங்களைப் பற்றி கேள்விப் பட்டு இருந்ததால்
தங்களை நேரில் காண ஆசை கொண்டனர் –
அவர்களுடைய புண்ணியங்கள் என்கிற கயிற்றால் இழுக்கப் பட்டவர் போல்
ராஜ வீதியை அடைந்தீர்கள் –

———–

த்வத் பாத த்யுதி வத்ஸ ராக ஸூபகா த்வன் மூர்தி வத் யோஷித
ஸம் ப்ராப்தா விலசத் பயோ தர ருஸோ லோலா பவத் த்ருஷ்டி வத்
ஹாரிண்யஸ் த்வ துரஸ் தலீவத் அதயித மந்த ஸ்மித பிரவ்டிவன்
நைர் மல் யோல்ல சிதா கசவ்க ருசிவத் ராஜத் கலாபாஸ்ரிதா –2-

உம்மைக் காண வந்த பெண்கள் எப்பொழுதும் தங்களையே நினைத்துக் கொண்டு இருந்ததால்
தங்களையே பல விதத்திலும் ஒத்து இருந்தார்கள் –
தங்கள் திருவடித் தாமரைகள் ராக-ஆசை –சிவந்த நிறம் போல் அவர்கள் மேனி அன்பினால் சிவந்து இருந்தது –
பயோ தர-திரு மார்பகங்கள் –கரு மேகங்கள் போல் தங்கள் திரு மேனி வண்ணம் போல் அவர்கள் ஸ்தனங்களும் இருந்தன-
லோலா பவத்-அசைகின்ற தங்கள் திருக்கண் விழிகளைப் போல் அவர்களும் அங்கும் இங்கும்
தங்களைக் காண ஓடிக் கொண்டு இருந்தார்கள் –

ஹாரிண்யஸ்-உள்ளம் அபகரிக்கும் தாம தழும்பு கொண்ட இடைகள் -இவர்களும் ஹாரம் அணிந்தவர்கள்
மனத்தைக் கவரும் மலர் மாலைகளை அணிந்து கொண்டு கள்ளம் அற்ற மந்த ஹாஸத்துடன் இருந்த
தங்களைப் போல் கள்ளம் அற்ற தூய்மை உடையவராய் இருந்தார்கள்
மயில் பீலி அணிந்த தங்கள் கொண்டை போல் அவர்களும் ஆபரணங்கள் அணிந்து இருந்தார்கள் –

———–

தாஸாம் ஆகலையன்ந பாங்க வல நைர் மோதம் ப்ரஹர்ஷாத்புத
வ்யாலோ லேஷு ஜநேஷு தத்ர ரஜகம் கஞ்சித் படம் ப்ரார்தயன்
கஸ்தே தாஸ்யதி ராஜ கீய வசனம் யாஹீதி தேநோதித
ஸத்யஸ் தஸ்ய கரேண ஸீர்ஷம் அஹ்ருதா ஸோ அப்யாப புண்யாம் கதிம் -3-

கடைக் கண் கடாக்ஷத்தால் அப் பெண்களை ஆனந்திக்கச் செய்தீர்கள் -மக்களும் மகிழ்ச்சியுடன்
தங்களைக் காணக் கூடினார்கள் –
அப்போது எதிரே வந்த ரஜகம்-ஒரு வண்ணான் இடம் உடைகள் வேண்டும் என்று கேட்டீர்கள் –
அவன் ராஜாவின் உடைகளை எவன் உமக்குக் கொடுப்பான் தள்ளிப் போ என்று கேலியாகப் பேசினான் –
உடனே அவன் தலையைக் கிள்ளி எறிந்தீர்கள் –அவனும் நல் கதியும் அடைந்தான் –

மிதிலையில் இருவராய் நடந்து -வீதிவாய் செல்கின்றான் போல் -யாவருக்கும் கண்ணன் என்று ஓதிய பொருளுக்கு ஏற்ற நின்ற -கண்ணன் -கண்ணில் நிற்பவன்
கிருஷ்ணன் -கண்ணன் -காரணப்பெயர் சக்ரவர்த்தி திருமகனுக்கு -வியந்து பார்த்து இருக்க கண்கள் நிறைந்து இருந்தான்

வில்லை முறித்து சீதா கல்யாணம் போல் இவனும்

————

பூயோ வாயகமே கமாயத மதிம் தோஷேண வேஷோ சிதம்
தாஸ் வாம் ஸம் ஸ்வ பதம் நிதேத ஸூஹ்ருதம் கோ வேத ஜீவாத்மநாம்
மாலாபி ஸ்தபகை ஸ்தவை ரபி புனர் மாலா க்ருதா மாநிந
பக்திம் தேந வ்ருதாம் திதே சித பராம் லஷ்மீம் ச லஷ்மீ பதே –4-

அப்போது ஒரு துணி நெய்பவன் உமக்குப் பொருத்தமான ஆடைகளைக் கொண்டு வந்து கொடுத்தான் –
அவனுக்குத் தங்கள் இருப்பிடமான ஸ்ரீ வைகுண்டத்தை அளித்தீர்கள் –
ஜீவர்களுடைய புண்யங்களை உம்மைத் தவிர வேறு யாரால் அறிய முடியும்
மாலாகாரர் உமக்கு மலர் மாலைகள் சூட்டி போற்றி ஸ்துதித்தார்-பூ மாலை பா மாலை இரண்டும் சூடினார் –

சுறு நாறாத பூ -நெருப்பில் எரிந்த நாற்றம் போல் பிரயோஜனாந்தர பரர் -வியாபாரம் போல் ஆகாத பூ சமர்ப்பித்தான்

பஞ்ச பாண்டவர் ஸ்வர்க்கம் தான் போனார்கள் -ததிபாண்டனுக்கும் தயிர் பானைக்கும் ஸ்ரீ வைகுண்டம் அருளினான்

————

குப்ஜாம் அப்ஜ விலோசநாம் பதி புனர் த்ருஷ்ட்வா அங்க ராகே தயா
தத்தே சாது கில அங்க ராக மததாஸ் தஸ்யா மஹாந்தம் ஹ்ருதி
சித்தஸ் தாம் ருஜூதாம் அத ப்ரதயிதும் காத்ரே அபி தஸ்யா ஸ்புடம்
க்ருஹ்ணன் மஞ்ஜூ கரேண தாம் உத நயஸ் தாவஜ் ஜகத் ஸூ ந்த்ரீம் –5-

வழியிலே அழகான கண்களை உடையவளும் முதுகில் கூன் உடையவளுமான பெரு பெண்ணைக் கண்டீர்கள் –
அவள் தங்களுக்கு விரைந்த அங்க ராகே-சந்தனத்தைப் பூசினாள் -அவளிடம் அன்பு கொண்டு அவள் உள்ளத்தில் உள்ள
நேர்மையை அவள் உடம்பிலும் வெளிக் காட்டும் வண்ணம் அவளைக் கைகளால் மெதுவாகப் பிடித்து
அவளுடைய கூனை நிமிர்த்து அருளினீர்கள் -உலகிலேயே அழகானவளாக ஆக்கி அருளினீர்கள் –
அவனுக்கு விரும்பிய பக்தியையும் நிரவதிக சம்பத்தையும் அளித்து அருளினீர்கள் –

அங்க ராக-அங்கா ராகம் கொடுத்து அருளினாய்

பூசும் சாந்துஎன்நெஞ்சமே; புனையும்கண்ணி எனதுடைய
வாசக கம்செய் மாலையே; வான்பட்டாடை யும்அஃதே;
தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டுஉமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

———

தாவன் நிச்சித வைபவாஸ் தவ விபோ ந அத்யந்த பாபா ஐநா
யத் கிஞ்சித் தததே ஸ்ம சக்த் யனு குணம் தாம்பூல மால்யாதிகம்
க்ருஹணாந குஸூ மாதி கிஞ்சன ததா மார்கே நிபத்த அஞ்சலிர்
நா திஷ்டம் பத ஹா யதோ அத்ய விபுலாம் ஆர்திம் வ்ரஜாமி ப்ரபோ –6-

பரி சுத்தமான பாபம் அற்ற அந்நகர மக்கள் தங்கள் வரும் வழியில் நின்று கொண்டு பூ மாலை தாம்பூலம்
முதலிய தமது சக்திக்குத் தகுந்த ஏதாவது ஒரு பொருளைத் தங்கள் இடம் சமர்ப்பித்தார்கள் –
அந்த காலியில் கையைக் கூப்பிக் கொண்டு பூ முதலிய ஏதாவதை எடுத்துக் கொண்டு
சமர்ப்பிக்கும் பாக்யம் அடியேனுக்கு கிடைக்காதலால்
பிறவியில் அழுந்தி துன்பம் அனுபவித்துக் கொண்டு திரிகிறேன் –

பத்ரம் பலம் தோயம் –பக்தி ஒன்றே வேண்டுவது
மதுவார் தண்ணம் துழாயனுக்கு எது ஏது என் பனி என்னாது

————

ஏஷ்யா மீதி விமுக்தயா அபி பகவன் நாலே பதாத்ர்யா தயா
தூராத் காதராய நிரீஷித கதி ஸ்தவம் ப்ரா விஸோ கோபுரம்
ஆ கோஷ அநுமித த்வத் ஆகம மஹா ஹர்ஷோல் லலத் தேவகீ
வஷோஜ ப்ரகலத் பயோ ரஸமிஷாத் த்வத் கீர்த்திர் அந்தர் கதா –7-

தங்களுக்கு சந்தனம் பூசிய கூனியிடம் பிறகு வருகிறேன் என்று கூறி விட்டு கோட்டை வாயிலில் நுழைந்தீர்கள் –
அவளும் நீங்கள் செல்வதை வெகு தூரத்தில் நின்றும் பார்த்துக் கொண்டு இருந்தாள்
மக்களின் ஆரவாரத்தினால் உங்கள் வருகையை உணர்ந்த ஸ்ரீ தேவகிப் பிராட்டியார்
மிகுந்த குதூகுலம் அடைந்தாள் –
அவளது ஸ்தனங்களில் இருந்து பால் சுரந்தது – அது கீர்த்தியை உடைய
தங்களது மதுரா நகர வருகையைப் போல் இருந்தது –

———-

ஆவிஷ்டோ நகரீம் மஹோத்ஸவ வதீம் கோதண்ட ஸாலாம் வ்ரஜந்
மாதுர்யேண நு தேஜஸா நு புருஷைர் தூரேண தத்தாந்தர
ஸ்ரக்பிர் பூஷிதம் அர்சிதம் வர தநுர் மாமேதி வாதாத் புர
ப்ரா க்ருஹ்ணா சமரோபய கில சமாக்ராஷீர் அபாங்ஷீரபி —-8–

தாங்கள் நகரத்துக்குள் பிரவேசித்த போது காவலர்களும் மக்களும் தங்கள் அழகைக் கண்டு
மயங்கி தங்களை வழி பட்டார்கள் –
மாலைகளால் அலங்கரிக்கப் பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வைக்கப் பட்டு இருந்த
அந்த வில் வைத்து இருந்த அறைக்குள் பிரவேசித்தீர்கள் –
அவர்கள் வேண்டாம் என்று சொல்லித் தடுக்க நினைக்கும் முன் அந்த வில்லை
எடுத்து நாண் ஏற்றி முறித்தீர்கள் –

வில்லின் மேல் கீழ் நுனிகளுக்கு போட்டி
இடது திருவடியின் ஸ்பர்சம் கீழ் நுனி
மேல் பகுதி வலது திருவடியை ஸ்பர்சிக்க தானே முறிந்ததாம்

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்

————-

ஸ்வா கம்ஸ ஷபண உஸ்தவஸ்ய புரதஸ் பிராரம்ப தூர்யோ பமஸ்
சாப த்வம்ஸ மஹா த்வனிஸ் தவ விபோ தேவாந் அரோமாஞ்சயத்
கம்ஸஸ் யாபி ச வேபதுஸ் ததுதித கோதண்ட கண்ட த்வயீ
சண்ட அப்யாஹத ரஷி பூருஷ ரவைர் உத் கூலி தோ அபூத் த்வயா –9-

கம்ஸ வதத்துக்கு முன் வாசிக்கப்படும் மங்கள வாத்யம் போல் வில் முறிந்த பெரிய
ஒலியைக் கேட்டு தேவர்கள் மெய் சிலிர்த்தனர் –
அந்த ஓசையைக் கேட்ட கம்சனுக்கு நடுக்கம் ஏற்பட்டது -முறிந்த வில்லினால் அடிபட்ட
காவலர்களின் கூக்குரலினால் கம்சனுடைய பயம் அதிகரித்தது –

ஸ்வா–நாளைக்கு -ஆகவே இன்று மங்கள வாத்யம் முழங்கும்

ரவைர் அரவம் ஐயோ சப்தம் கம்சன் கேட்டான்

————–

சிஷ்டைர் துஷ்ட ஜனைஸ் ச த்ருஷ்ட மஹிமா ப்ரீத்யா ச பீத்யா தத
ஸம் பஸ்யன் புர சம்பதம் ப்ரவிசரன் சாயம் கதோ வாடி காம்
ஸ்ரீ தாம்நா ஸஹ ராதிகா விரஹ ஜம் கேதம் வதன் ப்ரஸ் வபன்
ஆநந்தன் அவதார கார்ய கட நாத் வா தேச ஸம் ரக்ஷமாம் –10–

சிஷ்டர்களைப் பரி பாலனம் செய்தும் -துஷ்டர்களை நிக்ரஹம் செய்தும் உனது
மகிமைகளை உணர்த்தும் பகவானே –
நகரத்தின் அழகைப் பார்த்துக் கொண்டே மாலையில் பூம் தோட்டத்தில் உள்ள கூடாரத்தை அடைந்தீர்கள் –
தங்கள் நெருங்கிய நண்பரான ஸ்ரீ தாமாவிடம் ராதையின் பிரிவால் ஏற்பட்ட
துயரத்தைக் கூறிக் கொண்டு அவதார நோக்கம் நிறைவேறும் நேரம் வந்து விட்டதை அறிந்து
ஆனந்தம் கொண்டு கொண்டு அங்கு தங்கினீர்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை –

September 11, 2020

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா -ஸ்ரீ தசாவதார ஸ்லோகம் –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப் பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

————————————————————————————————-

ஸ்ரீ கிரீடா வல்லபன் -அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் -லீலைகளுக்காகவே அவதாரம்
அவதாரமே லீலை
கோகுல லீலை
பிருந்தாவன லீலை
வடமதுரை லீலை
விவாக லீலை
ஸ்ரீத்வராகா லீலை
மஹா பாரத லீலை
யது குல திலகம்

——————-

வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அவன் -கிறிக் கொண்டு -உள்ளம் புகுந்து –
விசித்ரமான லீலைகள் -அநேக லீலைகள் –
கீதா சாஸ்திரம் யுத்த களத்திலே அருளிச் செய்த லீலை
ஓர் நகையுடன் உண்மை உரைக்க அடி சேர்ந்த விஜயனுக்கு -லோகத்துக்காக கீத உபநிஷத் –
ரதி-சாரதி –
மோக்ஷ பிரதத்வத்திலும் லீலை -ததி பாண்டவனுக்கும் தயிர் தாழிக்கும்
சரணாகதி சரம ஸ்லோகமும் லீலையாக அருளி
பவந்தி லீலா -ஆளவந்தார்
பூதனாவுக்கும் மோக்ஷம் பால்யத்திலே
கண்டா கர்ணனுக்கும்
கைலாசம் புத்ர வரம் -கள்வா
கிருஷ்ணாஸ்ரய -நாதன் -பாண்டவ தூதன் -பார்த்த சாரதி – மாம் -அஹம் –
ஜன்ம கர்ம மே திவ்யம்

—————

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-

ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –

—————

திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-

இவனுடைய லஷணம் இருந்தபடியால் திருவோணத்தான் ஆன சர்வேஸ்வரனுடைய லோகம் எல்லாம்
இவன் ஆளும் என்பாராய்-இப்படி பிரீதி வ்யஹாரம் பண்ணினார்கள்

—————–

வையம் ஏழும் கண்டால் பிள்ளை வாயுளே 1-1-6-

பிள்ளை உடைய வாயுள்ளே சகல லோகங்களையும் கண்டாள் என்கை –
அதுக்கடி -அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து விஸ்வரூபம் காட்டினாப் போலே –
இவளுக்கும் திவ்ய சஷூசை கொடுத்து தன் வைபவத்தை காட்டுகை -இறே

————–

வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-

இவள் கண்ட அநந்தரம்-அருகு நின்றவர்களுக்கும் காட்ட –
அவனும் தன் வைபவம் எல்லாரும் அறிக்கைக்காக அவர்களுக்கும்
திவ்ய சஷூஸ்சை கொடுத்து காட்ட கூடும் -இறே
ஸ்ரீ நந்தகோபன் மகன் அல்லன் -பெறுதற்கு அரிய சர்வேஸ்வரன் –
பரம்பின கல்யாண குணங்களை -உடையனாய் -நீர்மை உடையனான -சிறு பிள்ளை –
ஆச்சர்ய சக்தன் என்று இப்படி சொல்லி மிகவும் ப்ரீதிகளானார்கள் ஸ்திரீகள்

—————

திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-

அசாதாரண விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற –
நாராயண சப்த வாச்யனாய் -கல்யாண குண பூர்ணனானவன் திருவவதரித்த பிரகாரம்-

திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று துடங்கி
திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று தலைக் கட்டுகையாலே
திரு வவதரித்து அருளின பிரகாரத்தை தக்க உலோபளாலநங்களோடே அனுபவித்து ஹர்ஷ்டராய் அருளி செய்தார் –

———-

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

திருக் கையாலே பிடித்து திருப்பவளத்தில் வைத்து ஆஸ்வசித்து புஜிக்கும்-
தேனே மலரும் திருப் பாதம் -என்று சொல்லக் கேட்டு இருக்கையாலே
திருவடிகள் தன்னின் போக்யதை தன்னை பரீஷிக்கைக்காக -பருவத்துக்கு
அநு குணமான வியாபாரம் செய்வாரைப் போலே செய்தான் -ஆதல்

————–

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-

மங்களா சாசன பரர் ஆகையாலே -விரோதிகள் அறிந்து அபசரிக்கைக்கு அவகாசம்
இல்லாதபடி திருவவதரித்த நாளை மறைத்து அருளி செய்கிறார் –

————-

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

காந்தி மிக்க ஆபரணங்களை உடைய பெண்காள்
தன்னோடு விளையாட வந்த -தன்னோராயிரம் பிள்ளைகளான-தானும் மதலையாய் இருக்கச் செய்தே –
அத்தனை பேரும் ஒருதலை – தான் ஒரு தலையாக நின்று -பலாத்கரித்து -கொம்பு முகிழ்த்த இள யானை போலே
தானே பிரதானனாய் விளையாடும் -இப்படி திரியா நிற்க செய்தே -ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில்
ச விநயமாக வர்த்திக்கும் பிள்ளைத் தனத்தை உடையவன்-

—————-

மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

திரு ஆழியும் -கருதும் இடம் பொருது வந்து கையில் நிற்கவும் வேண்டாதே -கை விடாதே இருந்து –
தன்னோசையாலே எதிரிகளை அழிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -நிரந்தரமாக
வர்த்தியா நின்றுள்ள கையும் -ஆழ்வார்களுமான சேர்த்தியை ஒரோ தசைகளிலே இவன் தான்
இவளுக்கும் காட்டக் கூடும் இறே

————–

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-

ஸ்ரீ நந்தகோபர் மகனுக்கு -இவர் அடி அறிந்தவர் ஆகையாலே -மகனாக கொண்டு -என்கிறார் –
அவள் -தன் மகன் -என்று இறே நினைத்து இருப்பது –
அண்டத்தையும் அண்டாந்த வர்த்திகளான சேதன அசேதனங்களையும் திரு வயிற்றிலே
ஒரு புடையிலே அடங்கும் படி விழுங்கினவன் –

—————

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

ஸ்வர்காதி லோகங்களை இருப்பிடமாக உடைய இந்திராதி தேவர்களுக்கு
ஆசூர பிரக்ருதிகளால் வரும் துக்கம் போம்படியாக முன்னே பூமியை இருப்பிடமாக
உடைய ஸ்ரீ வசுதேவருக்கு புத்ரனாய் வந்து அவதரித்து -தன்னை பற்ற சிறைப் பட்டு இருக்கிற
ஸ்ரீ வசுதேவர் துக்கத்தை தீர்த்து -பின்னம் தேவர்கள் துக்கம் தீர்க்கைக்கு முன்னம் இங்கே அவதரித்தானாய் ஆய்த்து-
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -என்னக் கடவது இறே-

————–

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

சக்கரவர்த்தி திருமகனைப் போலே -பருவம் நிரம்பின பின்பு -விரோதிகளை நிரசித்து –
லோகத்தை உஜ்ஜீவிப்பிக்கை அன்றிக்கே -பருவம் நிரம்புவதுக்கு முன்னே –
திண் கொள் அசுரரை தேய -வளருகையாலே -லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படியாக –
பூதன சகட யமளார்ஜுனாதிகளை தொட்டில் பருவம் பிடித்து இறே நிரசித்து சென்றது –
லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –
திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –
கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

———–

மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-

கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-
அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து -இவன் பக்கல் ஸ்நேகத்தாலே
விகசிதமான கண்ணை உடையவள் என்னுதல் –

—————–

மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான –
நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

——————–

இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-

மத்ய ராத்ரே கிலாதாரே ஜாயமானே ஜனார்தனே -என்கிறபடியே கம்சன் முதலான
துஷ்ப்ரக்ருதிகள் கண் படாதபடி -அருகு நின்றாரை தெரியாத இருளிலே வந்து அவதரித்து –
எப்போது பிறப்பது -என்று ஹிம்சிக்கைக்காக உருவின வாளை வைத்து உறையில் இருக்கிறவன் –
கண்ணால் கண்டால் விடான் இறே-
ஜானாதுமாவதானந்தே கம்சோயம் திதி ஜன்மஜ -என்றாள் இறே தேவகி பிராட்டி –
போய் -வீங்கு இருள்வாய் அன்று அன்னை புலம்ப போய் -என்கிறபடியே அந்த செறிந்த இருளிலே பெற்ற
தாயானவள் விரஹா ஆதரதையாலே காலைக் கட்டிக் கொண்டு கிடந்தது கதரா நிற்க திரு ஆய்ப்பாடியிலே போய் –

—————-

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-

இருந்ததே குடியாக உஜ்ஜீவிக்கும்படி -இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து -அது தானே உனக்கு மிகவும்
தேஜஸ்சாம்படி இருப்பானாய்-வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

————–

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-

அழகு ஒரு தட்டும் தான் ஒரு தட்டும் படியான கண்களின் அழகை உடையவன்
சர்வ லோகங்களும் உன்னுடைய அவதாரத்தாலே லப்த சத்தாகமாய் -உஜ்ஜீவிக்கும்படி வந்து பிறந்தவனே
கஸ்ரீய ஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வா -என்கிறபடியே உன்னை
தனக்கு சம்பத்தாக உடையாளாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே
அவள் உகப்புக்காக சம்சார சேதனரை ரஷித்து அருளும்படி ஸ்ரீ கோவிலிலே கண் வளர்ந்து அருளினவனே

—————–

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-

கண்டவர்கள் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருண்டு இருக்கிற திரு மேனியை உடையவனே –
அஞ்சனம் -மை மைப்படி மேனி இறே
கன்றுகளின் பின்னே போகிற போதை நடையின் த்வநியையும் -திரு மேனியின் குறு வெயிர்ப்பும்
அலைந்த திருக் குழல்களும் -திருக் கையில் பிடித்த பொற் கோலுமான ஆயர் குலத்தை உடையவனாய் –
அவர்களுக்கு முன்னோடி கார்யம் பார்க்கும் தலைவன் ஆனவனை –
அன்றிக்கே –
வேரிலே வெக்கை தட்டினால் -கொழுந்து முற்பட வாடுமா போலே
அவர்களுக்கு நோவு வந்தால் -முதல் தன் முகம் வாடும்படி இருக்கையாலே
கொழுந்து -என்கிறதாகவுமாம் -ஆயர் கொழுந்தாய்-என்றார் இறே ஆழ்வார்

———–

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

இழந்தவள் இழவு தீர்ந்தால் போலே என்னுடைய இழவு தீர்க்க வேணும் என்கிறார் –
தேவகிப் பிராட்டிக்கு அஷ்ட கர்ப்பம் இறே ஸ்ரீ கிருஷ்ணன் –
கால நேமியோடே சம்பந்தம் உடையராய் -ஹிரண்ய சாபத்தாலே பாதாளத்திலே
வர்திப்பார் ஆறு ராஷசரை யோக நித்ரையால் பிரவேசிப்பிக்க -தேவகியார் வயிற்றிலே பிறந்த ஆறு ராஷசரை
கல்லிடை மோத – கம்சனால் நிரசிக்கப்பட -ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோகிணியார் வயிற்றினில் அவதரிப்பித்து –
தாம் எட்டாம் கர்ப்பமாய் இறே வந்து அவதரித்தது
இழந்தவள் தன் வயிற்றில் அவள் முன்பு இழந்த இழவு தீர சிக்கன வந்து பிறந்து நின்றாய்
திரு மால் இரும் சோலை எந்தாய் –அங்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -இங்கு ஸ்வாமித்வம்
தேவகி பிராட்டியார் வயிற்றில் ஸ்ரீ கிருஷ்ண எழுந்து அருளி இருந்த இருப்பு போலே இறே
பூடுறை ஸ்ரீ கோயிலில் ஸ்ரீ அழகர் எழுந்து அருளி இருந்த இருப்பும் இவர்க்கு-

——————————-

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-
திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6-
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-
திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-
வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-
மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-
வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-
மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-
கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் பாசுரப்படி ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நாரணன் நம்பி திரு வோணத்தான்
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் சித்தம் பிரியாத திருவின் வடிவு ஒக்கும் தேவகி தன் வயிற்றில்
சிக்கனே இருட்டில் வசுதேவன் தம் மகனாய் வந்து பிறந்த அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
உருவு கரிய ஒளி மணி வண்ணன் கோவலர் குட்டன் நந்தன் மதலை மைத் தடம் கண்ணி யசோதை
வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தாய் போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து
திண் கொள் அசுரரை தேய தந்த களிறு போல் தானே விளையாடும் ஆய்ச்சி மகனாக வளரும்
சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் பேதை குழவி
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலங்கள்
ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் உய்ய இவ் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய்

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆத்ம சமர்ப்பணம் பல ஆழ்வார் அருளிச் செயல்களில் —

September 9, 2020

வரன் -மாப்பிள்ளை
வரணம்-வரனாக வரிக்கும் பிரகாரம் -நாம் அனைவரும் ஸ்த்ரீ பிராயர்களே –
அவன் ஒருவனே புருஷோத்தமன்
கூலம்-கரை
அநு கூலம் -பிரதி கூலம் இரண்டும் கரைகள்-
சரணாகதன் அடையும் ஆறு குணங்கள்
1-அநு கூல்ய சங்கல்பம்
2-பிரதி கூல்ய வர்ஜனம்
3-கோப்த்ருத்வ வர்ணம்
4-மஹா விசுவாசம்
5-கார்ப்பண்யம்
6-ஆத்ம சமர்ப்பணம்

1-ஆநுகூல் யஸ்ய சங்கல்ப –
ஆநுகூல்யம் என்றது ப்ரியத்வம் -அதாவது —
ப்ரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ ஸ மம ப்ரிய-என்கிறபடியே அநந்ய பிரயோஜனன் ஆகை –
2-ப்ராதிகூல் யஸ்ய வர்ஜனம் —
என்றது அதி ப்ரவ்ருத்தி வ்யவசாய நிவ்ருத்தி
3-ரஷிஷ்யதீதி விஸ்வாசோ-
என்றது -த்ரிவித சங்கா ரஹிதமான பகவத் குண வத்தாத்யவசாயம்
4-கோப்த்ருத்வ வரணம் –
ஆவது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்திக்கு அவ்யவஹித உபாயமாக ஸ்வீகரிக்கை –
5–ஆத்ம நிஷேபம் -என்றது
ரஷ்யத் வேன சமர்ப்பிக்கை-அதாகிறது ஆத்ம ஆத்மீயமானநகில பர சமர்ப்பணம் –
6-கார்ப்பண்யம்-ஆவது க்ருபா ஜனன க்ருபண வ்ருத்தி நிரதத்வம்-

சாதன சப்தகம் -விவேகம் இத்யாதிகள் –
1. விவேக காய சுத்தி+ஆஹார சுத்தி – ஸத்வ சுத்தி.
2. விமோக : காம, க்ஷுத்ர விஷய நிவிர்த்தி.
3. அப்பியாச – ஆராத்யா தெய்வத்தின் மேல் மனதை ஒருமுகப் படுத்துதல்.
4. கிரியா – பஞ்ச மஹா யக்ஞ பாலனம்.
5. கல்யாண – சத்யம், நேர்மை, தயை, தானம், அஹிம்சை கடைபிடித்தல்.
6. அநவஸாத – மன அழுத்தம், சோகம், dejection, gloom இல்லாமை.
7. அனுர்தர்ஷ : – அதீத சந்தோஷம்/துக்கம் கொள்ளாமை .
உபாஸனா பலம் ஏற்பட இவை 7ம் அவஸ்யா பேக்ஷிதங்கள் .

1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும்
தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர்
இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-

நவவித சம்பந்தம் உணர்ந்து -திருமந்திரத்தில் இந்த நவவித சம்பந்தமும் அறியலாம்-
1-ஸ்ரீ ரமா பதி பிதா-ஸர்வவித காரணத்வம்
2-படைத்து நிற்காமல் ரஷக-
3-அவனுக்கே அடிமை -சேஷி –
4-பர்த்தா-அநந்யார்ஹத்வம் -அவனுக்கே அடிமை
5-ஜேய அறியப்படுபவன் – நாம் அறிகிறோம்
6-அறிவு வந்தாலே நானே பகர்த்தா எண்ணம் வருமே ஸ்வாமி -சொத்து -அவன் அதீனம்
7-ஆதாரம் -ஆதேயம் -வீடு நிலம் போலே இல்லை -தங்குகிறான்
8-ரத்னம் போலே வைத்து -பிரிக்க இடம் உண்டோ என்னில் ஆத்மாச -பிரிக்க முடியாத –
9-போக்தா -பிரயோஜனமும் அவனுக்கே -படியாய் கிடந்தது பவள வாய் காண்போம்

பத்து குணங்களை ஆழ்வார் காட்டி அருளியதை அனுசந்தித்து நாமும் பக்தியை வளர்க்க வேண்டும்

1-பரத்வம்
2-காரணத்வம்
3-வியாபகத்வம்
4-நியந்த்ருத்வம்
5-காருணிகத்வம்
6-சரண்யத்வம்
7-சக்தித்வம்
8-சத்ய காமத்வம்
9-ஆபத் ஸகத்வம்
10-ஆர்த்தி ஹரத்வம்

——————

ஆத்ம சமர்ப்பணம் பல ஆழ்வார் அருளிச் செயல்களில் உண்டே –

வாக்கு தூய்மையில் படியே -அயோக்யதா அனுசந்தானம் பண்ணி இவர் அகலப் புக –
நாம் இருவரும்  ஏக தத்வம் என்னும்படி கலந்த பின் அது என் -என்று ஈஸ்வரன் சமாதானம் பண்ண –
சமாஹிதராய் -செய்த உபகாரத்துக்கு தோற்று -ஸ்தோத்ர ரூபத்தாலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறார் –

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 5-

உன்னில் இட்டேன் –
உன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணினேன் என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறார்
நித்ய அஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா நம இத்யேவவாதி ந  -என்று
அனுபவ ஜனித ப்ரீதி தலை மண்டை இட்டால் பண்ணும் அது இறே

———–

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

அந்த ராஜாக்களைப் போலே நாங்களும்–அநாதி காலம் பண்ணிப் போந்த–தேகாத்ம அபிமானத்தை விட்டு
தேகாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வா தந்த்ரியத்தையும் விட்டு–அநந்ய பிரயோஜனராய் வந்தோம் -என்றுமாம் –
ஈரரசு தவிர்ந்து -நீ தான் அரசன் ஒத்து கொண்டு வந்தோம்

1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ஸ்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –
முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது தேகாத்ம அபிமானத்துக்கு பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

————–

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

பிராண நாதன் அவன் ஆனபின்பு
பிராணன்களைக் காக்க வேண்டிய கடமை
அவன் தலைப் பட்டதே அன்றி எனக்குப் பணியாமோ –

————

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

கடைசியாக சரீரம் என்ற வஸ்து மீதம் இருந்தது அத்தையும் கொள்ளை கொண்டார் –
மெய் என்று ஆத்மாவையும் சொல்லக் கடவதாகையாலே
ஆத்மீயங்களை ஏற்கனவே கொள்ளை கொண்டவர்
இப்போது ஆத்மாவையும் கொள்ளை கொண்டார் என்னவுமாம்

————————–

காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே –திருச்சந்த விருத்தம்-99-

காட்டி நான் செய் வல் வினை–நான் செய்யும் பெரிய பாபங்களை எனக்கு நினைவு படுத்தி
பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து-அந்த பாபங்களின் பயன்களை அனுபவிப்பதில் மனசை செலுத்தி
நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக-ஹிம்சைகளை செய்ய நினைத்து இருக்கிறார்கள் என்று
கேட்டதன்றி-நான் கேட்டு இருக்கிற படி யாமைக்காக
என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை
என்னுடைய ஆத்மாவை உன் பக்கலில் சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இருக்கும் என்னை-
நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே-உன்னை விட்டுப் பிரித்திட வேண்டாம்-

—————————–

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -திருச்சந்த விருத்தம் -120-

தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி
சம்பந்தங்களை யறுத்து –என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

————

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருந்தேன்
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே சர்வேஸ்வரனதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்
பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக் கிடீர் நான் அபஹரித்தது
ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கையும்
இதர விஷய பிரவணன் ஆகைக்கும் மேற்பட சதிர்க்கேடு இல்லை இறே
அவற்றை விட்டு பகவச் சேஷத் தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வருமவனாம் படியான சதிரை யுடையவன் ஆனேன்
ஆசார்யர்களை நம்பி என்கைக்கும் அவர்கள் அழைத்தால் அடியேன் என்கைக்கும் ஹேது ஸ்ரீ மதுர கவிகள் வாசனை யாய்த்து –
விலஷண த்ரவ்யம்
எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் -என்றும் -நன்றாய் ஞானம் கடந்து -என்றும்
ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள் என்கிறார்
நன்மையாவது -பஞ்ச பூதாத்மகம் வஸ்து -என்றும் -மேம்பொருள் –மேவிய பொருள் -என்றும்
சொல்லுகிறபடியே தேஹத்துக்கு வஸ்துதை உண்டே யாகிலும்-அது போலே
அநித்யமாய் அநவரத விகாராஸ் பதமாய் அத்யந்த ஹேயமாய் அஜ்ஞ்ஞானமாய் அஸூகமாய் அபோக்யமாய் இருக்கை அன்றிக்கே
நித்தியமாய் நிர்விகாரமாய் அத்யந்த விலஷணமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஸூகமாய்
ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –
ஆத்மாத்மீயங்கள் இரண்டும் ஆழ்வாராய்த்து –
அவர் தாமே யானே நீ என்னுடைமையும் நீயே என்று தத் விஷயத்திலே சமர்ப்பித்தால் போலே

————-

கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே —11-7-7-

இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை

—————-

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

மாற்றமுள –
இவ்வாத்ம வஸ்துவானது கௌஸ்துபாதிகளோபாதி
நிர்தோஷமாய் உன்னாலே தரிக்கப் படுவது ஒன்றாய் இருக்க
இது அநாதி காலம் சம்சரிக்கும் படி விட்டு வைத்தாய் நீ
உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் –
அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் –
மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –
நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது
என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே
பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தையை நினைப்பது-

———-

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-

தய நீய தசையை ப்ராப்தனாய் இருக்கிற என் பக்கலிலே
கொள்வார் தேட்டமாய்
புறம்பு வழிந்து போம்படியான
உன்னருளைப் பண்ண வேணும் –

—————

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்
வாசனையோடு கழியும் படி
அஹம் -என்று
ரஷகனான தன்னைக் காட்டினான் –

————-

அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி,அனுசயிக்கிறார் –
தகழிவிரக்கம் கொள்ளுகிறார்

எனது ஆவியுள் புகுந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
என தாவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
என தாவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்!
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே–-ஸ்ரீ திருவாய் மொழி-2-3-4-

———-

யானே என்னை அறிய கிலாதே,
யானே என் தனதே என்று இருந்தேன்;
யானே நீ:என்னுடைமையும் நீயே;
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே!–2-9-9-

———-

இத்தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக்கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார்.

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

—————————-

பூதநாதிகளுடைய நிரசன சமயத்தில் ஸ்ரமம் தீர சிசிர உபசாரங்களைச் செய்யப் பெற்றிலேனே யாகிலும்,
சிசிர- குளிர்ந்த உபசாரத்தால் அல்லது செல்லாத உன்னுடைய ஸூகுமாரமான -மிருதுத் தன்மையை யுடைய
திரு மேனிக்குச் சாத்தும் மாலை என் சத்தையேயாய் -உயிரேயாய்-விடுவதே!’ என்கிறார்

மாய்த்தல் எண்ணி ‘வாய் முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத் தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே–4-3-4-

—————————

ஆத்மாத்மீயங்கள் அடைய — ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களும் ஆகிய அனைத்தும்
உன் அதீனமான பின்பு என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை
நீயே ரக்ஷிக்க வேண்டும் -என்கிறார்

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல் வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வங்கியர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

———————

சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான –
போக்ய – போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே –
சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –
சம்சார தோஷ அனுசந் தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக –
பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –
இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண –
(பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அற விலை செய்தனன் சோதீ – 8-1-10)
அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-
இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து –( 8-6-8-7-)இனி
அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க –(8-8)
அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் –
பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி –
பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார் ..

வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-
அதாவது
உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -7-9-10–என்று
கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே
நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –

இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே-( மமகாரம் விட்டவன் மமகாரம் )
பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று
அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –

(உப பத்தேச ச பொருந்துகிறபடியால் ப்ராபகமான ப்ரஹ்மமே ப்ராப்யம் -வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
இங்கு பிராப்யமான அர்ச்சா திவ்ய தேசமே பிராபகம் –
பாகவதர்களே ப்ராபகம்–அவதியையும் தாண்டி ஒன்றாக -திவ்ய தேசமே இருக்குமானால்
பாகவதர்கள் இருக்கச் சொல்ல வேணுமோ – கிம் புன நியாயம் )

——————

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் —ஸ்ரீ முதல் திருவந்தாதி—-73-

இத்தால் இவை எல்லாம் அவனுக்கு கார்யதயா சேஷம்-அவன் சேஷி -என்கிறது-
தரித்தான் -என்றுமாம் –
இவை யாகில் தான் என்ற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அந்வயிக்கும் படி சர்வ பிரகாரியாய் இருப்பான் ஒருத்தன் –
ஆதாரத்தைப் பற்றிலும் பற்று -ஆதேயத்தைப் பற்றிலும் பற்று-ரஷகத்வத்தைப் பற்றிலும் அவனையே பற்ற வேணும் –

————

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

கன்றையும் விளாவாயும் வந்த அஸூ ரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று -இத்தை அமைத்து அருள வேணும்-
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே –
ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

————-

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி —59-

பகவத் விஷயத்திலே இவனுடைய இச்சையும் அநிச்சையும் இறே உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
எங்கள் பெருமான் –ஒரு மிதுனம் இவருக்கு போக்கியம்-அஸ்மத் ஸ்வாமியாய் உள்ளான் –
போக்ய பூதனாய் மேன்மையை உடையனாய் வகுத்தவனுடைய திருவடிகளைப் பெற்று
ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –

———–

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

ஆபத்து உள்ள போதும் அல்லாத போதும் என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –
நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும் அவனுக்கும் பிராட்டிக்கும்
ரஷணத்துக்கு பரிகரமான திரு ஆழியைக் கையிலே யுடையவன்-
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையை யுடைத்தாய் மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவன்-
அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –அவளை -அகலகில்லேன் -என்னும் –
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற உதாரமான தாமரை போலே இருக்கிற
ஒழுகு நீண்ட கண்ணை யுடைய நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –
நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

————

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—நான்முகன் திருவந்தாதி -30-

கோயிலிலே வந்து ஸூ லபனானவன் என்னை அடிமை கொண்டான் –
இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் .
திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –

——-

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

விஷயாந்தரங்களில் புகுந்து விகாரப்படும் நெஞ்சுடையேன் அல்லேன்
ஞானத்தில் பரம சிவனொடு ஒத்து இருப்பான் -என்னலாமாயினும்
ஈஸ்வரோஹம் என்னும் -அந்த ருத்ரன் நித்ய தாசனான -என்னோடு ஒவ்வான்
ஒலிக்கும் வீரக் கழலை அணிந்துள்ள ராஜாதி ராஜனான கண்ணபிரானையே
எந்நாளும் தொழும் படியாக ஆசைப்படுவதையே நித்ய கர்மயமாக ஏற்றுக் கொண்டு இருக்கிற அடியேன் –

————–

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

ஆட்பட்டு இருப்பது அனைவருக்கும் இயற்க்கை அன்றோ -அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்
அபிமான துங்கன் செல்வனைப் போலே நானும் உனக்கு பழ வடியேன் –
மாணிக்கத்தின் ஒளி அழுக்கினால் மழுங்கி இருந்து ஒரு நாள் அளவில் அழுக்கு நீங்கி
விளங்கினாலும் அவ்வொளி இயற்க்கை என்னத் தட்டில்லை —
இடையில் அடிமையை இழந்தால் -வயிறு எரிந்து -பொழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் –என்றும் அன்று நான் பிறந்திலேன் -என்பர்
நிற்கும் இருந்தும் –எல்லா நிலைகளிலும் என்றபடி —நிற்கும் போதும் இருக்கும் போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும்
நாராயணா என்றால் உங்கள் தலையில் இடி விழுமோ -என்றானே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் –

——————

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

எல்லாவற்றுக்கும் மேல் பட்டுள்ளதாய் -அடியார் குழாங்களுக்குத் தகுதியான இடமுடைத்தான
திரு நாட்டை கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது –
திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்-
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் –

————

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-

அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார்
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை
வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –

——–

நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-

பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் –
இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே –
இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே
ஆகவே-ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்-

———-

கால ஷேப அர்த்தமாக-பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும் என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

திருக் குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூ க்திகளை-
ஸ்ரீ ராமாயணம்
மகா பாரதம்
ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
அருளிச் செயல்கள்
அனுசந்தித்து
கொடிய பாபங்களினால் யுண்டாகும்-மிக்க துன்பங்களை போக்கிக் கொள்ளார்கள் ஆகில்-ஒழியட்டும்
வேறு எதை அனுசந்தித்து இந்தப் போதை-போக்குவார்கள்

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆச்சார்யர்களும் —

September 9, 2020

கடவுளே -அருளிச் செயலில் சப்த பிரயோகம் கண்ணனையே –

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே -ஸ்ரீ பெரிய திருமொழி–4-6-5-

கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய்
சர்வாதிகனான நீயே
சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ-
கண்ணன் அனுபவத்திலேயே மண்டி இருப்பார்களே

——————

ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் ஸ்ரீ கண்ணனும் -ஸ்ரீ கிடாம்பி வெங்கடேசன் ஸ்வாமிகள் –

கிடந்தது பூமி எடுத்தது குன்றம் கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா
காணாக் கண் கேளாச் செவி -சேர்ந்தே அனுபவம்
வாய் அவனை அல்லது வாழ்த்தாது –பேய் முலை நஞ்சூணாக உண்டான்
பூதனா நிரசனத்துடன் அனுபவம் தொடங்கும்
புள்ளின் வாய் கீண்டானும் -மருதிடை போய் மண் அளந்த மால்
கடை வெண்ணெய் உண்டாய் –
அறியும் உலகு எல்லாம் -உவணம் ஊர்ந்தாய்-பரத்வ ஸூசகம் –
தாம்பின் தழும்பு ஸுவ்லப்யம் பறை சாற்றும் –
கண்டு பற்றுகைக்கு ஸுவ்லப்யம்-
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு -களவாடிய செயலைக் காட்டி
குரல் ஓவாது ஏங்கி அயலார் காண இருந்த ஓங்காத வண்ணா உரை
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மல் குன்றம்
விட்டு இறுத்து மேய்த்து ஓசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு அட்டு எடுத்த
செங்கண் அவன் -நிரை நிரை அணி –10 சேஷ்டிதங்களை ஒரே பாசுரத்தில் அனுபவம்
தோள் கார்யங்கள் -62–
மருதினூடு போய் -பூம் குறுந்தம் சாய்த்து -மண மருவ மால் விடை ஏழு செற்று –
ஏழு உலகம் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழ் அரவ பொங்கு அணையான் தோள்
87-இனி யார் புகுவார் எழு நரக வாசல்
கலியும் கெடும் கண்டு கொண்மின் போல்
ஓர் அடியும் -சாடு உதைத்த –கேசவனை -ஈர் அடியும் காணலாம் –
கேசவனை மாயவனையே மனத்து வை -100 நிகமனம்

——————

*ஸ்ரீ பூதத்தாழ்வாரும் கண்ணனும்* *ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி* ஸ்ரீ க்ருஷ்ணானுபவத் தொடர்

ஸ்ரீ கிருஷ்ணன் திரு அவதாரம் -ஆவணி ரோஹிணி -கிமு 3102-125 ஆண்டுகள்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அவதாரம்
ஸூகாதிகளும் முதல் ஆழ்வாரும் பரத்வத்தில் ஈடுபட்டு இருப்பார்கள் –
காலத்தால் முன்னால் -பக்தியில் முதிர்ந்த முதல் ஆழ்வார்கள்

அத்புதம் பாலகம் -பரத்வம் தோன்றவே அவதாரம்
அம்புஜ அக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதாயுதம் –
செய்ய சுடர் ஆழி
அன்பே விஷயமான திருவந்தாதி
வேணு கோபாலன் ஷேத்ராதிபதி
ஆயனர் -திருவிக்ரமன் -பரத்வம் பொலிய இருக்கும் திவ்ய தேசம்
முத்துக்கள் சேரும் கடல் மல்லை
கடல் மல்லைக் கிடக்கும் கரும்பு –
கிருபா சாகரம் கடல் மல்லை பூதத்தாழ்வார்-இதுவே நிரூபகம்
கடல் மல்லை தல சாயனத்து உறைவார் -அவனுக்கும் இதுவே நிரூபகம்
கதையின் பெரும் பொருளும் கண்ணா -நின் பேரே-இதயம்-64-
இதிஹாச புராணங்கள் கண்ணனையே சொல்லும்
திரு நாம சங்கீர்த்தனமே சார தமம் –
வேதைஸ் சேர்வை அஹம் ஏவ போல் –
இருந்தவையே ஏத்தில் – கதையின் திருமொழியாய் நின்ற திரு மாலே
உன்னைப் பரு மொழியால் காணப் பணி -ஸதா பஸ்யந்தி பண்ணப் பண்ணி அருள்

———————

பேயாழ்வார் அனுபவித்த கண்ணன் -ஸ்ரீ உ வே M A மதுஸுதனன் ஸ்வாமி-

ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்
பரத்வத்தில் முதல் ஆழ்வார்கள் ஊன்றி இருப்பார்கள்
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய கேள்வன் –
குறும்பு யோசித்த கோபாலகனே பாற் கடலிலும் வேங்கடத்திலும் பனி விசும்பிலும் மனத்துள்ளும்
வெற்பு என்று வேங்கடம் பாடும் -முதல் நாயகி தாயார் பாசுரம் -மல் போன்ற நீண்ட தோள் மால் கிடந்த
கண்ணனே -மேகங்களைக் காணிலும்
அடைந்தது அரவணை மேல் -ஐவர்க்காய் –பேய்ச்சி பால் உண்ட பிரான் யசோதை மத்துக்கு அஞ்சி
அஞ்சாதவன் பீஷ்மாதிகளுக்கு-ப்ரஹ்மாஸ்திரத்துக்கும் அஞ்சாதவன் மத்துக்கு பீதனானான்
அவர்களும் வில்லை போய்ட்டு மத்தைக் கையில் கொண்டு இருந்தால் வென்று இருப்பார்கள்
நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் ஆய்ச்சியால் வெண்ணெய் உண்டு ஆப்புண்டவன்
அம்மனே -இது இவருடைய எத்திறம் இருந்தபடி
மண்ணுண்டும் -பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் உண்டு -வயிற்றினொடு ஆற்றா மகன்
திருமழிசை மூன்றும் அருளிச் செய்தது போல் இவரும்
வயிற்றை அறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ -வண்ணான் சாலில் எவ்வளவு போட்டாலும் ரொம்பாதே
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் -மகனாம் –
லோக பிதா பித்ரனைத் தேர்ந்து எடுத்து பிதாவாகக் கொண்டான் வேதம் காடகம்
மகன் தன் காதல் மகனை -அநிருத்தனுக்காக வாணனை கர வனம் அழித்து
திரு வேங்கடத்திலும் ஊன்றி-
அவனே திருவல்லிக் கேணியான்
கண்ணனாகவே திருவேங்கடத்தானை அனுபவிப்பார் பெரும்பாலும்
அவர் திருவவதாரம் -வேங்கட கிருஷ்ணனே அவர் மனத்தில் இருந்து அனுபவிப்பிக்கிறான்

உம்பர் கோமானே உறங்காது -கண்ணனை எழுப்ப -ஆண்டாளும்
பேயாழ்வார் சந்நிதியில் கண்ணன் எழுந்து அருளி சேர்ந்தே சேவை திருவல்லிக் கேணியில்

————-

திருமழிசைப்பிரானும் கண்ணனும் ஸ்ரீகோயில் தேவராஜன் ஸ்வாமி

கோயில் ப்ராதான்யம் போல் கண்ணன் ப்ராதான்யம்
பன்னிரு ஆழ்வார்களும் மங்களா சாசனம் கண்ணனுக்கும் கோயிலுக்கும்
ஒரு பிறவியில் இரு பிறவி இருவரும்
யது குலம் கோப குலம்
ரிஷி குமாரராக பிறந்து பிரம்பு அறுத்தவனால் வளர்க்கப்பட்டு
அக்ர பூஜை சாம்யம்
கூனி -கூன் போக்கி பால் கொடுத்த தம்பதிக்கு இளமை
மன்னு திரு மழிசை -மன்னு வடமதுரை
கால நேமி
காசி ராஜன்
பவ்ண்ட்ர வாசுதேவன் இவர் மட்டுமே அனுபவம்
ஆதி ஆதி ஆதியான -முக்காரணங்களும் –ஆயனாய மாயம் என்ன மாயமே–35- –
சிசுபாலாதிகளும் அகப்பட உஜ்ஜீவிக்கும் படி –
ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ –36-
சர்வ நியாமகன் நியமிக்கப் படுவதே
குரூரமான முலைகள் குரூரமான பால் –
விஷப்பாலை குடித்ததுக்கு கோபிகள் வாய் அமுதம் பரிகாரம்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் மாயன் -கபிஸ்தலம்

——————

ஸ்ரீ குலசேகராழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் ராமானுஜன் ஸ்வாமி

வால்மிகி பகவானும் குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் பூர்ண அனுபவம்
முகுந்தா மாலை தனி பிரபந்தம்
ஸ்ரீ ரெங்க யாத்ரா தினே தினே –
தோய்த்த தயிர் -அரங்கன் -அடியார் -பெரிய பெருமாளும் கண்ணனே –
ஊடல்-வாஸூ தேவா உன் வரவு பார்த்தேன்
ஒன்பது பெண்களை வஞ்சித்தது
தேவகி புலம்பிய புலம்பல்
தொல்லை இன்பத்து இறுதி காணும்படி அழுகையும் அஞ்சின நோக்கும் -தொழுத கையும் –
எழில் கொள் தாம்பு -அசேதனமும் எழில் இவன் சம்பந்தத்தால்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே

——————

பெரியாழ்வாரின் க்ருஷ்ணானுபவம் – விதுஷி ஸ்ரீமதி ஹரிப்ரியா அம்மங்கார்

வண்ண மாடங்கள் கண்ணன் கேசவன் நம்பி
கண்ணன் கேசவன் கிலேச நாசகன்
ஏகோ ப்ரஹ்ம ஆனந்தம் -நம்பி -ஸமஸ்த கல்யாண குண சாகரம்
பண்புடைப் பாலகன் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மாயன் -ஆத்ம மாயயா-பாதக் கமலங்கள் காணீரே -மாம் ஏகம் சாதனம் வ்ரஜ –
திண் கழல் அன்றோ
பரம் பரனே ஆடுக செங்கீரை -அங்கே அவாக்ய அநாதர-
மன்னு குறுங்குடி திரு வெள்ளறை கண்ணபுரம் அவனே இங்கும்
அந்தமில் பேர் இன்பத்தை சிற்றின்பமாக்கி அன்றோ ஆய்ப்பாடியில்
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்
அரு மருந்து பிறவிக்கும் போகம் குறையாமைக்கும்
பந்தம் அறுப்பதற்கும் போகம் வளர்க்கைக்கும்
பத்து மஞ்சள் -பூசி பாவை மாருடன் பாடியில்
பாதம் நண்ணாத நாள் பட்டினி நாள்
உபவாச திவசம் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் –
மாயன் மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே

——————

ஸ்வாமி நம்மாழ்வாரும் கண்ணனும்–ஸ்ரீ உ வே பள்ளிகரணை திருமாலை நடாதூர் சேஷாத்ரி ஸ்வாமி–

கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பராசராதிகள் போல் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி
திருவரங்கம் த்ரித விபூதி போல் தத்வ த்ரயங்களை விட இது தனி தத்வம்
ஆராமங்களில் ராஜ நீதி –
ஸ்ரவணம் –தாஸ்யம் -நவவித பக்தி
குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் இதிலே ஆழ்வார் ஊன்றி
சேமம் குருகையோ –நாரணமோ -அத்விதீயம்
பூ பாரம் -மண்ணில் பாரம் நீக்க -தர்ம ஸம்ஸ்தானம் -ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கவே
சாஷாத் தர்மம் இவனே காட்டவே அவதார நோக்கம்
எத்திறம் மூ ஆறு மாதம் மோகித்து –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -கண்கள் சிவந்து –அடியேன் உள்ளான்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
திருவாய்மொழி என்னும் தேன்
ஒரு நீராக ஆக்கினான்
கரண கலக்கத்தை -ஒருபடிப்படுத்த கண்ணன்
சீலமில்லா சிறியன்–சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மடலூர ஒருப்பட -கண்ணன் வந்து கலவாமையால்
பேர் அருள் -கண்ணன்
கோபிமார் ஆகாரம் ஏறிட்டு மின்னிடை மடவார்
குரவை முதலான கோலச் செயல்கள்
கிருஷி பூ வாசகம் -கிருஷ்ணன் பூமிக்கு சுகம் திவ்ய தேசங்கள் -அர்ச்சாவதாரமே தாரகாதிகள்
கண்ணன் அடி இணையில் காதல்-சுருங்க செப்பி -உபதேசம் நிகமனம்
அத்தனை பதிகங்களில் கண்ணன் -கேட்ப்பார் கேசவன் கீர்த்தி அன்றி மற்றும் கேட்ப்பாரோ

———————

ஸ்ரீ மதுரகவியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே தென்திருப்பேரை பார்த்தசாரதி ஸ்வாமி

தேவு மற்று அறியேன் என்பவரும்
முதலிலே ஆழங்கால் பட்டு
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ட பெரு மாயன் என் அப்பனில்
எடுத்துக் கழிக்கவும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் விளக்க கிருஷ்ண அனுபவம்
எத்திறம் என்று ஆழ்வார் ஆழங்கால் பட்ட இதுவே ஆழ்வார் திரு உள்ளத்துக்கு நெருக்கமாக இருக்குமே

———————-

திருப் பாணாழ்வார் அனுபவிக்கும் கண்ணன் -பரவஸ்து வரதராஜன் ஸ்வாமி-

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போல்
லோக சாரங்க முனிவரால் எழுந்து அருளப் பண்ணி -முனி வாகன போகம்
ராமனாகவும் நரசிம்மனாகவும் உலகு அளந்தவனாகவும் பாடி -தப்பைச் செய்தோம்-கண்ணனே இவன்
கோவலன் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் -ஆயர்களுக்கு நாயகன்
கொண்டல் வண்ணன் -முகில் வண்ணன் -தானே இவன் சீதள காள மேகம் பட்டர் –
மின்னல் இந்த்ரியா -பெரிய பிராட்டியார் -பூஷா மணி இந்திர தனுஸ் வானவில் -தயா ரசம் விஞ்சி –
மேகம் கீழே வருமோ இவனோ கோவலனாய் அண்டர் கோனாய் நமக்காக
அவதார பிரயோஜனம் கோவலனாகைக்கும் அண்டர் கோன் ஆகைக்கும் வெண்ணெய் உண்ணவுமே
வெண்ணெய் உண்டது எனது உள்ளத்தைக் கவரவே என்கிறார்
வெண்ணெய் உண்டது அப்யாசம் இதுக்காகவே
அணி அரங்கன் இவனே தான் என்கிறார்
அபேச்சேத நியாயம் -இறுதி சொன்னதே கொள்ளத் தக்கது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் -கண்ணனை அரங்கமாலை என்று நிகமிக்கிறார் –

——–

ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே கோவில் வகுளாபரணன் ஸ்வாமி

மதுர வாறே -மழைக்கு அன்று வரையை ஏந்திய ஆறே திருவரங்கத்தில்
பண்டு அவன் செய்த க்ரீடை தான் கிருஷ்ணாவதாரம் -பெரியாழ்வார்
பிரபந்த தாத்பர்யம் உபக்ரம உப சம்ஹாரம்
திருமாலையில் –அச்யுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே
கண்ணனை அரங்க மாலை உபஸம்ஹாரம்
தனியனிலும் கற்றினம் மேய்த்த கழலிணைக் கீழ் பாடப் பெற்றதாகவே
கற்றினம் மேய்த்த கழலிணை ஆழ்வாரும்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உபத்தி
கன்றுகளை மேய்த்து இனிது உகப்பவன்
பட்டரும் பிருந்தாவனம் பண்டிதன் இவனே பெண்களையும் வெண்ணெயும் ஒளித்து வைத்தாலும்
அறிய வல்ல பண்டிதன்
தாண்டவம் கற்றதும் தயிர் கடையும் ஓசைக்கு ஆடிக் கற்றுக் கொண்டான்
மொசு மொசுப்பு எல்லாம் இன்றும் காணலாம்
கார் ஒளி வண்ணனே கண்ணனே
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
காக்கும் இயல்பினன் கண்ணபிரான்
கோயில் சாந்து அழியாத திரு மார்பு
ஆமைத்தாலி அச்சுத்தாலி புலி நகம் பஞ்சாயுத மாலை-
கவள மால் யானையைக் கொன்ற கண்ணனை
திருப்பள்ளி எழுச்சியிலும்
ப்ரஹ்மாதிகள்
அயோத்தி அம் அரசே
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும்
இதுக்கு எல்லாம் அசையாமல்
துகில் உடுத்து ஏறினாய் கண்ணனை அருளிச் செய்தே நிகமிக்கிறார் –
சூழ் புனல் அரங்கா -ரசம் இழக்கப் போகிறாய்
துடி இடையர் சுரி குழல்-துகில் உடுத்து ஏறுகிறார்களே
பள்ளி எழுந்து அருளாய் -கேட்டதும் பதறி எழுந்தானாம்

——————

திரு மங்கை ஆழ்வாரும் கண்ணனும் -ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி

பிடி தோறும் நெய் போல் அடி தோறும் அர்ச்சையிலே இருந்தாலும் –
காதில் கடிப்பிட்டு ஊடல்
பிள்ளைத் தமிழ் பதிகங்கள்
எங்கேனும் இது ஒப்பதோர் மாயம் உண்டோ
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -பசு நிரை மேய்ப்பு உவத்தி
நீரூட்டி -தடம் பருகு கரு முகிலை
சொல்லுண்டான் காணேடீ –சாழலே
பார்த்த சாரதி அனுபவம் பெரிய திருமொழி பதிகங்கள் தோறும் கலியன்
4-10-5-/ஆழியால் அங்கு மறைத்து /6-5-9-/9-9-8 /10-/11-காணேடீ
ஆஸ்ரித ரக்ஷணம் ஆழங்கால் பட்டு அனுபவம்
ஆஸ்ரித பக்ஷபாதன் தெளிவாகக் காட்டி
பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பண்ணினவை –
விரித்த தலை காண மாட்டாதவன் வெறும் கழுத்தைக் காண மாட்டான் அன்றோ

———-

கீதாச்சார்யரும் ஜெகதாச்சார்யரும் – திருக்கோவலூர் மணிவண்ணன் ஸ்வாமி
அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராஜர்
ஈஸ்வரனும் ஆச்சார்ய பதவியை ஆசைப்பட்டு இருக்கும்
அவதார சம்பந்தமும் அருளிச் செயல் சம்பந்தமும் உண்டு
அநந்தன் பிரதம ரூபம் -பார்த்த சாரதியே -என்றும் உண்டே
பலராமாநுஜனே இளையாழ்வார்
எம்பெருமானார் -அவரோ நீர் -திருக் கோஷ்ட்டியூர் நம்பி கேட்ட ஐதிக்யம்-பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனம்
லோக ரக்ஷணத்தில் பாரிப்பு மிக்கு
சமிதோதிதய சங்கர கர்வம் அடக்கி பாணாசுரன் சங்கர பாஸ்கர இத்யாதி –
யாதவ பிரகாச–உஜ்ஜீவனம் -யது குலம் உத்தரிக்க – –
ஸ்ருதோ அபார்த்தான் -அபார்த்தங்கள் நிரசித்து ஸ்ரீ பாஷ்யாதி முகத்தால் -மூன்று சாம்யங்கள் தேசிகன் –

அருளிச் செயல் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ கீதா பாஷ்யம் சம்பந்தமும் உண்டே
செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் அருளிச் செய்து –
அவதார ரஹஸ்ய ஞானம் -சம்பவாமி ஆத்ம மாயயா -அஜஹத் ஸ்வபாவம் -மாயம் சங்கல்பம் இச்சையால் –
எத்திறம் என்று மொஹித்த மாறன் அடி பணிந்தவர் ஸ்ரீ கீதா பாஷ்யம்
சாதுநாம் -ஸ்வாமி வியாக்யானம் மிக ரசமாய் இருக்குமே
கம்பீர -மதுர –
யுக்த லக்ஷண தர்ம சீல -வைதிக அக்ரேஸர் -நம்மாழ்வார் நிலையையே விளக்கி வியாக்யானம்
தொழுது எழு என் மனனே
என் சொல்லிச் சொல்லுகேன் நான்
வெண்ணெய் உண்ணும் ஈனச் சொல்லே
உண்டோ கண்கள் துஞ்சுதல்
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
முக்கிய பிரயோஜனம் சாது சம்ரக்ஷணமே மற்றவை ஆனு ஷங்கிகம் -சங்கல்பத்தாலே அவையை செய்ய வல்லவன் அன்றோ
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்தது போல் இங்கு அவதரித்து
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினாயே
மழுங்காத ஞானமே படையாக இருந்து இருந்தால் –சோதி மறைந்து இருக்குமே
கரஸ்த கமலம் பாதயோஸ் அர்ச்சிக்கவே அழைக்கவே அந்தர்யாமியாய் அறிந்து அவதரித்து
அரை குலைய தலை குலைய வந்த த்வரைக்கு நமஸ்காரம்

கண்ணன் ஸ்ரீ ஸூக்திகளை கிருஷ்ண த்ருஷ்ணா தத்துவத்தின் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே வியாக்யானம்

————–

ஆழ்வானும் கண்ணனும் -ஆழ்வானும் கண்ணனும் …. ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
மொழியைக் கடக்கும்
சிஷ்ய ஆச்சார்ய பூர்த்தி
உபய காவேரி மத்யத்தில் விண்ணப்பிக்கவோ -மேதா விலாசம் -பாவஜேன கிருதஞ்ஜேனே தர்மஜ்ஜேன–
உமது ரூபத்தில் ஆளவந்தார்-ராமானுஜர்
அதி மானுஷ ஸ்தவம் -துயரறு சுடர் அடி -எத்திறம் மோஹித்து -ஆழ்வான்
கேள்விகள் -பால்ய உசித சேஷ்டிதங்கள் ஆகிற -நெருப்பு பொறியில் விழுவார்கள்
தயரதன் பெற்ற மணி தடாகத்தில் புக்கு அழுத்துவது போல்
கம்ச பீதியால் போனது எதனால்
பஞ்சியன்ன மெல்லடியால் சகட நிரஸனம் –
யோக அப்யாஸத்தால் கூட பிடிக்க முடியாத நீ வெண்ணெய் களவு -பிடிபட்டு அடி பட்டு என்ன நீர்மை
ஒளித்து வைத்த வெண்ணெய் மட்டுமே களவு கண்டு
திருமேனியில் பூசி -மறைக்க சாதனம் -என்ன மதி உடைமை
நிர் பயனாக இருந்து -என்ன நீர்மை
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
வெண்ணெய் போல் ஹிருதயம் வெண்மை உருகும் உயர்ந்த ஸ்தானம்
நீர் பண்டமா -சொல்ல முடியாமல்
மோர் குடத்தை உருட்டி
ஆர்ய ஜன -ஆழ்வார் போல்வாரை மோஹிக்க செய்வதற்கே
தாமத்தால் இல்லாமல் பிரேமத்தால் கட்டி வைத்து
கனைத்து இளம் -அத்தாணிச் சேவகத்தில் பொதுவான தர்மங்கள் நழுவும்
ஜீயர் புரம் -எழுந்து அருள -உறங்குவான் கைப்பண்டம் போல் நழுவும்
உரலில் கட்டி வைப்பதே ஸூ வ ஸ்தானம்
பின்பே ஆக்களைப் பார்க்கப் போகிறாள்

———————–

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் கீதாசார்யனும் லோகாசார்யரும் .. Sri U Ve Aththangi Srinivasacharyar
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் ஆறாம் நாள் -மூலம் நக்ஷத்ரம்
ஸ்ரீ கண்ணனாகவே ஸ்ரீ தேவப்பெருமாள் சேவை
அவரே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராக
ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்
இவரும் ஸ்ரீ லோகாச்சார்யார்
பிள்ளை என்று புகழப் படுபவர்கள்
ப்ரஹ்மசர்யம் -பரிஷத் விஷயம்
சத் பிராதா
பிராமண ரக்ஷணம் இருவரும் அஷ்டாதச ரஹஸ்யம் அஷ்டாதச அத்யாய ஸ்ரீ கீதை உபநிஷத்
ப்ரமேய ரக்ஷணம் இருவரும்
ராம பிரியன் -அரங்கன் ஜோதிஷ்குடி
தன்னுடைச் சோதி தனியாகவே இருவரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் ஜோதிஷ்குடி
ஸ்ரீ கீதா பாஷ்யம் யதி புனர் அவதாரம் ஆதி சேஷனே -ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் இவற்றுக்கு

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் -ஸ்ரீ கோவிந்தனும் -ஸ்ரீ கோவர்த்தன உத்தரணமும்–ஸ்ரீ உலகு அளந்த உத்தமனும் –

September 7, 2020

ஸ்ரீ கோவிந்தன்
கவாம் ரஷித்த
கோ பூமி ஸ்ரீ வராகன்
கோ ஸ்துதி ஏற்றுக் கொண்டு
கோ வேதம் -அவற்றால் அறியப்படுபவன்
கோ அசையும் அசையா சராசரங்கள் தனது வசம்
ஸ்ரீ மத்ஸ்ய -பூமி -வேதம் ரஷித்தவன்
ஸ்ரீ கூர்ம -மலை பூமி கோ
ஸ்ரீ வராஹ -பூமி இடந்து
ஸ்ரீ நரஸிம்ஹ =பிரகலாதன் ஸ்துதி
ஸ்ரீ வாமனன் பூமி அளந்து
ஸ்ரீ பரசுராமன் பூமியில் உள்ள தீயர்களை அழித்து
ஸ்ரீ ராமன் பூமி ஆண்டு
ஸ்ரீ பலராமன் வளைத்து திருத்தி -யமுனை தீரம்
ஸ்ரீ கண்ணன்
ஸ்ரீ கல்கி கோ பூமி தர்மம் காத்து
தச அவதாரங்களும் பொருந்தும்

————–

மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே-பெரியாழ்வார் -2-3-7-

மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?-திருவாய் -–3-2-9-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழு கொக்கும் நின்றே–5-10-5-

மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ ——ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி—41-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்-48-

இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே –ஸ்ரீ திரு விருத்தம் – -61 –

ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான்-பெரிய திருவந்தாதி–52-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

உள்ள உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ உலகளந்த மூர்த்தி உரை –76-

மறப்பெல்லாம் ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை–திருவெழு கூற்றிருக்கை-

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்-ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்-சிறிய திருமடல்-

————————————-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-பெரிய திருமொழி -11-8-10-

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–-திருவாய் –7-4-11-

—————–

மத்த மா மலை தாங்கிய மைந்தனை உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே–-பெரியாழ்வார் -1-1-8-

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி
நின் முகம் கண் உளவாகில் இனி இங்கே நோக்கிப் போ -1-4-1-

ஒரு வேழத்தின் கரும் கன்று போல் தெள் புழுதி யாடி திருவிக்ரமன் -1-7-9-

குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் -1-9-1-

வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 7-

காது தாழப் பெருக்கி குண நன்றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்-2-3-4-

மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே-2-3-7-

கோவிந்தன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-6 –

கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11-

தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்-2-10-4-

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று மூவடி தா என்று இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7-

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்–3-3-8-

யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்தவள்–3-3-10-

எக்கம் மத்தளி தாழ் பீலிக் குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி–3-4-1-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு–3-4-4-

ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற–3-4-10-

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
பொட்ட துற்று மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை–3-5-1-
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை-3-5-2-
ஆழிக்கை எந்தை எடுத்த மலை–3-5-3-
அமரர் பிரான் கொண்டு நின்ற மலை-3-5-4-
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை-3-5-5-
செப்பாடு உடைய திருமால் அவன் தன் செம்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள்காம்பாகக் கொடுத்து கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 6-
படங்கள் பலவும் உடை பாம்பரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல்
தடம் கை விரல் ஐந்து மலர வைத்து தாமோதரன் தாங்கு தடவரை தான்-3-5-7-
நாராயணன் முன் முகம் காத்த மலை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-8-
தாமோதரன் தாங்கு தடவரை தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9-
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல வடிவேறு திரு உகிர் நொந்தும்
இல மணிவண்ணன் மலையும் —கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-10-

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது–3-6-2-
வானிளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர்
கோனிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடூதின போது-3-6-3-
சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது -3-6-8-
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை-3-6-11-

கோவிந்தனோடு இவளை சங்கை ஆகி என் உள்ளம் நாள் தோறும் தட்டுளுப்பா கின்றதே – 3-7 3- –

ஒண் நிறத் தாமரை செம்கண் உலகு அளந்தான் என் மகளைப்
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8 9-

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச் செய்தான் மலை–4-2-4-

கோவலர் கோவிந்தனை குற மாதர்கள் பண் குறிஞ்சி
பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே – 4-3-4-

திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4-4-8 –
குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்-4-4-9-

கௌதத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி யாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே-4-5-8 —

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 6-5 –

உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட-4-9-8-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்–4-10-9-

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே–5-1-8-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –

—————

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –3-
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே –17-
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி -24-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா – 27-
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –28-
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா –29-

—————

கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–நாச்சியார் திரு மொழி-1-3-

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்–2-9-

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய–5-10-
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி–5-11-

குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே–10-7-

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால் நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்–11-5-

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா–12-4-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்-12-9-

கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்-13-9-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே–14-2-

———————

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை–பெருமாள் திருமொழி-1-4-

குழகனே !என் தன் கோமள பிள்ளாய் கோவிந்தா !–7-7-

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா–7-9-

—————

வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–39-

அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்–105-

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்–109-

————

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய் –திருமாலை -35-

———–

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன்–அமலன் –2-

————–

காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே—-பெரிய திருமொழி-1-3-4-

கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

குறளாய்ச் சென்று மா வலியை ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-6-

கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே —2-3-4-

நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப் படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் விண்டானை -2-5-9-

வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழி யாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-2-

இவர் கொல் தெரிக்க மாட்டேன் வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மா வலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்று இவர் யார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே-2-8-2-

மஞ்சுயர் மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து -2-8-4-

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி-2-9-7-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து-3-1-5-

அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம்–3-1-8-

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்-3-2-4-

மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்-3-2-8-

ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-

மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-6-

ஒ மண்ணளந்த தாளாளா ! தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம்–3-10-5-

காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்–3-10-8-

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்-4-2-3-

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்-4-2-6-

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானை-4-3-4-

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-4-4-7-

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்–4-6-2-

குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3-

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்ற்றது இதுவே காணும் இந்தளூரீரே-4-9-3-

பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்-4-10-1-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்-4-10-7-

அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்–5-1-1-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்-5-1-2-

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்–5-1-4-

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து–5-1-7-

கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் -5-2-4-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே–5-3-9-

பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்–5-4-3-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானை–5-6-3-

பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து–6-6-5-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே–6-9-4-

தாடாளன் இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான்–6-10-5-

குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை–7-6-4-

பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே-7-7-5-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்–7-8-6-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்–8-6-9-

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்-8-10-8-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்-9-1-5-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்-9-4-2-

நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்-9-8-3-

தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்–9-9-5-

ஆநிரைக்கு அழிவன்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்-9-10-7-

திருமால் விரி நீருலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-4-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான்–10-6-5-

கூவாய் பூங்குயிலே குளிர் மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே -10-10-3-

கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான்–11-1-1-

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்–11-2-1-

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –11-4-5-

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —11-5-9-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

—————

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை–திருக் குறும் தாண்டகம் –6-

தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மையல்லால் எழுமையும் துணை யிலோமே–9-

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயுமால் எம்பிரானார்க்கு–16-

———-

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–திரு நெடும் தாண்டகம்–5–

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்–15-

பாராளன் பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட பேராளன்–20-

சென்றுலகம் மூன்றினையும் திரிந்து–28-

குன்றெடுத்த தோளினானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

————–

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!-1-5-5-

வெற்பை ஒன்று எடுத்து, ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர், கற்பன் வைகலே.–1-8-4-

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-

உலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

ஏத்த ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தனை –2-2-11-

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11

தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக் கண் குன்றம்;
கோது அவம் இல் என் கன்னற் கட்டி எம்மான் என் கோவிந்தனே–2-7-3-

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி –2-7-4-

எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரி விக்கிரமனையே–2-7-6-

திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளிப்
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித்தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே!–2-7-7-

வாமனன்,என் மரகத வண்ணன், தாமரைக் கண்ணினன்,
காமனைப் பயந்தாய்! என்று என்று உன் கழல் பாடியே பணிந்து-2-7-8-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்–2-8-7-

வன் மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்,-3-2-2-

மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?–3-2-9-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்–3-3-11-

மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்–3-5-3-

ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே–3-8-2-

மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி –3-8-5-

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! -3-8-9-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!–4-3-7-

மண்ணை இருந்து துழாவி,‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;-4-4-1-

கோமள வான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன வென்னும் –4-4-5-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;-4-4-6-

உருவுடை வண்ணங்கள் காணில்,‘உலகு அளந்தான்’என்று துள்ளும்;-4-4-8-

குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன் பகலும் நான் இருந்து, ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே–4-7-2-

குறிய மாண் உருவாகி, கொடுங்கோளால் நிலங் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறை யிலமே–4-8-6-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–4-10-3-

செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூர தனுள்
குறிய மாண் உரு வாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே–4-10-10-

சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே–5-9-6-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழு கொக்கும் நின்றே–5-10-5-

அடியை மூன்றை இரந்த வாறும் அங்கே நின் றாழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்-5-10-9-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே–6-3-8-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன்–6-3-11-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்–6-4-1-

அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே-6-4-6-

மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங் கண் நீர் மல்க நிற்குமே–6-5-3-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

மாடுடை வையம் அளந்த மணாளற்கு–6-6-4-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு-6-6-9-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே–6-9-2-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!-6-9-3-

பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்!-6-9-6-

தாவி வையம் கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ–6-9-9-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன மினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

ஓர் குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன் னமுதோ!–7-1-7-

‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;-7-2-8-

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்டவாறே–7-4-1-

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே–7-4-10-

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!–7-6-1-

குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப் பூத் தண் துழாய் முடி யாய்–7-6-3-

குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே–7-7-5-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்–7-8-1-

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
மா கந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ?–7-10-2-

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மது சூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வியைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த பேருயிரேயோ !–8-1-5-

மாயம் தன்னால் மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு–8-2-9-

அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

என்றே என்னை உன் ஏரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட் செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே—8-3-8-

பெரிய மூ வுலகும் நிறையப் பேரு ருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்-8-4-4-

உன் வையம் தாய மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-8-5-7-

கொண்மின் இடர் கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே–8-6-7-

அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவி யிருப்பது என் னெஞ்சகம்-8-6-10-

பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1-

உறுமோ பாவியேனுக்கு இவ் வுலக மூன்றுமுடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-

நீ யொரு நாள் படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்-9-2-2-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்-9-3-2-

மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3–

குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே–9-8-7-

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்–9-9-2-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்–10-1-5-

குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்-10-2-7-

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி-10-3-4-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்-10-6-7-

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-10-9-8-

————–

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே -ஸ்ரீ முதல் திருவந்தாதி -3-

சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மாவடிவின் நீ யளந்த மண் —9-

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம் தாயவனை அல்லது தாந்தொழா–11-
தொழாதார் தலையிலும் இருந்து தொழு வித்துக் கொள்ளும் திருவடிகள் –

உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-

அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பும் அளந்தது என்பர் -17-

மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச் செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று-20–

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண் மாற்கு–21-

மலையால் குடை கவித்து-27-

தரணி தனதாகத் தானே— நீ மண்ணிரந்து கொண்ட வகை –36-

எடுத்தது குன்றம்–39-

பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது ——50-

வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –76-

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமா மிடர் –77-

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் ஆரங்கை தோய வடுத்து –79-

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து–83-

பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார் உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை அடிக்களவு போந்த படி –84-

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –86-

நின்றுலகம் தாய நெடுமாலும்–98-

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

————–

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி-5-

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

மண்ணிரந்து காத்தனை பல்லுயிரும் காவலனே -10-

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம் காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்–89-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க-98-

அறை கழல சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய் மாவலியை மண் கொண்டான் மால் –99-

————

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி–4—

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன்–5-

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண்ணளந்த பாதமும் மற்றவையே–9-

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே–20-

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்–34-

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ் சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ ———41-

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா–47-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்–48-

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி மருதம் சாய்த்தான்-51-

சென்று குறளுருவாய் முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-

தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

————

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–நான்முகன் திருவந்தாதி -9-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்-15-

ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல் வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-35-

———

உலகு அளந்த மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு -ஸ்ரீ திரு விருத்தம்-35-

குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -38-

மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒருத்து வான் நிமிர்ந்த-42-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து–58-

இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் -64-

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67-

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்-68-

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-69-

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-74-

ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்
பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –

பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85-

ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91-

———–

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக மூ வுலகு அளந்த சேவடியோயே -ஸ்ரீ திருவாசிரியம் ––1–

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழி பட -5-

————-

பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி –8-

சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா-16-

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான் திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

அடியால் படிகடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன் படைத்தான் என்பரால்-42-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான்–52-

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

———–

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்-ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்-சிறிய திருமடல்-

பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக பேராமல் தாங்கிக் கடைந்தான்-

————

தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்—ஸ்ரீ பெரிய திருமடல்——-5-

மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –

—————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் -ஆரா அமுதம் -பத பிரயோகங்கள் –

August 30, 2020

ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அழியாமல் இருக்க ஆராவமுதம் -சரீரம் அழியாமல் இருக்கவே அமுதம் -உப்புச் சாறு –

ஆரா வின்னமு துண்ணத் தருவன் நான்-பெரியாழ்வார் -3-2-11-

என்னரங்கத்தின் இன்னமுதர் -நாச்சியார் –11-2-
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே -13-4-

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ –பெருமாள் –8-1-
எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ –8-3-

அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் களிக்குமாறே –17-
ஆவியே அமுதே –திருமாலை -35-
மைந்தனே மதுரவாறே –36

நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே-கண்ணி -1-

சீரார் திரு வேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே –பெரிய திருமொழி -1-10-3-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்க்கு ஆரமுதம் ஆனான் தன்னை –2-10-4-

விண்ணவர்கட்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
குரு மணி என்னாரமுதம் -3-10-2-

சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆரா வமுதே அடியேற்கு அருளாயே –4-7-8-

தன்னடியார் மனத்து என்றும் தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை –கண்டது தென்னரங்கத்தே –5-6-3-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-

திரு மூழிக் களத்து விளக்கே இனியாய தொண்டரோம் பேருக்கு இன்னமுதாய கனியே –7-1-6-

மலர் மங்கை நாயகனை ஆரா இன்னமுதத்தைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரார் கருமுகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதத்தினைப் பைந்துழாய் மாலை ஆலியில்
கண்டு மகிழ்ந்து போய் ஞான முன்னியைக் காண்டும் நாங்கூரிலே-10-1-3-

துளக்கமில் சுடரை அவுணனுடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே-10-1-4-

வானை ஆரமுதம் தந்த வள்ளலை தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டியருளும் அமரர் தம் கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே-10-1-5-

பார் கெழு பவ்வத் தார் அமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே –10-9-9-

முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை–திரு நெடும் தாண்டகம் –14

விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தோர்க்கு ஓர் ஆர் அமுதே –திருவாய் –1-6-5-

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -2-5-4-

ஆராவமுதமாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவே செம்பவளம் கண் பாதம் கை கமலம் பேரார நீள் முடி நாண் பின்னும் இழை பலவே–2-5-5-

கூறுதலொன் றாராக் குடக் கூத்த வம்மானை — 2-5-11-

எழுமைக்கும் எனதாவிக்கு இன்னமுதத்தினை –3-6-7-

அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை –3-7-5-

ஆவியே ஆரமுதே என்னை யாளுடை தூவி யம் புள்ளுடையாய் சுடர் நேமியாய் –3-8-7-

தண் சிரீ வர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா வமுதே –5-7-11-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின் பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!–5-8-1-

ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக் குடந்தை
ஊராய்! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

தீர இரும்புண்ட நீரது போலே என்னாருயிரை
ஆரப் பருக எனக்கே ஆராவமுதானாயே–10-10-5-

எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்–10-10-6-

அன்பாவாய் ஆரா வமுதமாவாய் அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய்-நான்முகன் திருவந்தாதி -59

தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆரா வமுதம் அங்கு எய்தி
அதினின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே —

நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்
அறிதற நின்ற இராமானுசன் எனக்காரமுதே

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப் பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழலன்றிச் சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே. ( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் )

சேரா தனவுள வோ? பெருஞ்செல்வர்க்குவே தம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயமாயிரம் பெய் துளவத்
தாரார் முடியா யிரங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆரா அமுதக் கவி யாயிர மவ் வரியனுக்கே!—கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி

—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் -என் ஆனாய் -பத பிரயோகங்கள் –

August 28, 2020

யானை –
தென்னானாய் வடவானாய் குட பாலானாய் குண பால மத யானாய் –என்றும்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -என்றும்
சோலை மலைக் களிறே -என்றும் சொல்வார்களே –
குஞ்ஜரம் வா அத்ரி குஞ்ஜே -என்றார் ஸ்ரீ பட்டர் –

1- யானை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் பொழுது எல்லாம் அபூர்வ வஸ்துவாகவே -பரமானந்தமாகவே -இருக்கும்–
இவனும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே –
பண்டு இவரைக் கண்டது எவ் ஊரில் -என்றும் சொல்லப் பண்ணுவன்

2-ஆனை உடைய காலைப் பற்றியே ஏற வேண்டும் -இவன் திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பர் –

3- தன்னைக் கட்ட கையிற்றை தானே எடுத்துக் கொடுக்கும்-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் –
பக்தியாகிய கயிற்றை அவனே தந்து அருள்வான் -மதி நலம் அருளினான் –

4-நீராட்டிய உடனே அழுக்கோடு சேரும் -சுத்த சத்வ மயன் -பரம பவித்ரன் -இருந்தும் வாத்சல்யத்தாலே
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் உடைய நம் போல்வாருடன் சேர்வான் –

5-பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் -பிராட்டியின் புருஷகாரம் இன்றி இவனும் வசப்படான் –

6-பாகனுடைய அனுமதி இன்றி தனது பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
என்றபடி பாகவதர்களை முன்னிட்டு புகாதாராய் அங்கீ கரித்து அருளான் –

7-யானையின் பாஷை பாகனுக்கு தெரியும் -எம்பெருமான் பாஷை திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும்
ஸ்ரீ காஞ்சி பூர்ண மிஸ்ரேண ப்ரீதா சர்வ அபி பாஷிணே-

8-யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்காய் இருக்கும் -இவனும்
கனி கண்ணன் போகின்றான் –காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா –
உன் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொள் -என்றும்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்றும் சொல்வாருக்கு சர்வாத்மநா விதேயன் இறே–

9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும் –
இவன் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தால் பல கோடி பக்த வர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம் –

10-யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை -நீண்ட அந்தக் கருமுகிலை எம்மான் தன்னை –

11-யானை இறந்த பின்பும் உதவும் -இவனும் தீர்த்தம் பிரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளிய பின்பும்
இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாக தனது சரிதைகளை உணர்த்தி உதவுகிறான் –

12-யானைக்கு ஒரு கையே உள்ளது -இவனுக்கும் கொடுக்கும் கை மட்டுமே கொள்ளும் கை இல்லை இறே

13-பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் யானை -இவனும் அர்ச்சக பரிசாரகர்களுக்கும் தன்னை நிர்வஹிக்கும்
வித்வான்களுக்கும் ஜீவன உஜ்ஜீவன ப்ரதன்-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

————

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்–பெரியாழ்வார் திருமொழி -1-2-6-

தந்த களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலை–1-2-8-

தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகம்
என்பவர் தாம் மடிய செரு வதிரச் செல்லும்
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே! ஆடுக ஆடுகவே – 1-5 4-

துடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்ற்றூர்வது போலே
உடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்
தெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –

மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-

——————-

வேழ போதக மன்னவன் தாலோ-பெருமாள் திருமொழி –7-1-

கைம்மாவின் நடை அன்ன மென்னடையும் கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

—————-

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே –1-10-6-

உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை–2-10-6-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்–4-8-1-

அண்டர் கோன் என் ஆனை என்றும் –4-8-3-

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே -4-9-2-

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
— யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-

மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று-7-4-1-

கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே-10-4-9-

—————-

என் ஆனாய் –-தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய் -திரு நெடும் தாண்டகம்-10-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் -திரு நெடும் தாண்டகம்-15

——————-

திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -திருவாய்மொழி–3-9-1-

————————————————

பண் தரும் மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதார பரமான அருளிச் செயல்கள்—

July 15, 2020

I .ஸ்ரீ பெரியாழ்வார் (முதலாயிரம் )

1.எந்தை தந்தை தந்தை ( திருப்பல்லாண்டு -6)
2.பிறங்கிய பேய்ச்சி 1—-3—-5
3.கோளரியின் 1—-6—-2
3.அன்னமும் 1—-6—-11
4. அளந்திட்ட தூணை 1—-7—-9
5.குடங்கள் எடுத்து 2—-7—-7
6.முன் நரசிங்கமதாகி 3—-6—-5
7.கதிராயிரம் 4—-1—-1
8.பூதமைந்தொடு 4—-4—-6
9.கொம்பினார் பொழில் 4—-4—-9
10.வல்லெயிற்று 4—-8—-8

11.உரம் பற்றி இரணியனை 4—-9—-8
12.தேவுடைய மீனமாய் 4—-9—-9
13.நம்பனே 5—-1—-9
14.மங்கிய வல்வினை 5—-2—-4

II ஸ்ரீ ஆண்டாள் —திருப்பாவை

15.முப்பத்து மூவர்- 20
16.மாரி மலை முழைஞ்சில் 23
17.கூடாரை வெல்லும் 27

நாச்சியார் திருமொழி

18. நாளை வதுவை மணம் 1—-6—-2
19.வரிசிலை 1—-6—-9
20. வான் கொண்டு 1—-8—-5

III திருமழிசை ஆழ்வார் –திருச்சந்தவிருத்தம்

21.வால் நிறத்தோர் சீயமாய் 23
22.கங்கை நீர் பயந்த 24
23.வரத்தினில் 25
24. கரண்ட மாடு 62
25.விள்விலாத 102

IV திருப்பாணாழ்வார்

26.பரியனாகி வந்த 8

V திருமங்கை ஆழ்வார்–பெரிய திருமொழி

27.மருங்கொள் ஆளரி 1—-2—-4
28.மான் முனிந்து 1—-4—-8
29.ஏனோர் அஞ்ச 1—-5—-7
30 முதல் 39அங்கண்ஞாலம் முதலாக –10 1—-7—-1 to
1—7—10
40. எண் திசைகளும் 1—-8—-6
41.தெரியேன் பாலகனாய் 1—-9—-7
42.தூணாய் அதனூடு 1—-10—-5
43.பள்ளியில் ஓதி வந்த 2—-3—-8
44.காண்டாவனம் 2—-4—-2
45.தாங்காத தொராளரி 2—-4—-4
46.புகராருருவாகி 2—-4—-7
47.உடம்புருவில் 2—-5—-3
48.பேணாத வலி அரக்கர் 2—-5—-7
49.பெண்ணாகி இன்னமுதம் 2—-5—-8
50.பட நாகத்தணை 2—-5—-10

51. அன்னமும் மீனும் 2—-7—-10
52. திரிபுரம் 2—-8—-1
53. மாறுகொண்டு 3—-1—-4
54.பொங்கி அமரில் 3—-3—-8
55.பஞ்சிய மெல்லடி 3—-4—-4
56.சலங்கொண்ட 3—-9—-1
57. திண்ணியதோர் 3—-9—-2
58. ஓடாத வாளரியின் 3—-10—-4
59.உருவாகி 4—-1—-7
60.உளைய ஒண் திறல் 4—-2—-7

61. கெண்டையும் குறளும் 4—5—-6
62.முடியுடை அமரர்க்கு 4—10—8
63.வெய்யனாய் 5—-3—-3
64.ஏன மீனாமையோடு 5—-4—-8
65.வளர்ந்தவனை 5—-6—-4
66.எங்கனே உய்வர் 5—-7—-5
67.வக்கரன் வாய் 5—-9—-5
68. முனையார் சீயமாகி 6—-5—-2
69.பைங்கண் ஆளரி 6—-6—-4
70. அன்றுலகம்
6—-6—-5

71. ஓடா அரியாய்
6—-8—-4
72.அத்தா ! அரியே ! 7—-1—-8
73. ஓடா ஆளரியின் 7—-2—-2
74.ஆங்கு வெந்நகரத்து 7—-3—-5
75.அடியேன்
7—-3—-9
76.வந்திக்கும் 7—-4—-5
77.சிங்கமதாய்
7—-6—-1
78.விண்டான் 7—-7—-5
79.சினமேவும் 7—-8—-5
80. பன்றியாய் 7—-8—-10

81. மடலெடுத்த 8—-3—-6
82. நீர் மலிகின்றது 8—-4—-4
83. ஆமையாகி அரியாகி 8—-6—-5
84. உளைந்த அரியும் 8—-8—-4
85. மீனோடு ஆமை 8—-8—-10
86. மிக்கானை
8—-9—-4
87. மாணாகி வையம் 8—-10—-8
88. பரிய இரணியது 9—-4—-4
89.சிங்கமதாய் அவுணன் 9—-9—-4
90. துளக்கமில் சுடரை 10—-1—-4

91. உளைந்திட்டெழுந்த 10—-6—-3
92. தளர்ந்திட்டு 10—-6—-4
93. பொருந்தலன் 10—-9—-8
94. அங்கோர் ஆளரியாய் 11—-1—-5
95. தளையவிழ் கோதை 11—-4—-4
96.கூடா இரணியனை 11—-7—-4

திருக்குறுந்தாண்டகம்
97. காற்றினைப் புலனைத் தீயை 2

சிறிய திருமடல்
98. —- போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
சீரார் திருமார்பின் மேல் கட்டி செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆராவெழுந்தான் அரியுருவாய்———

பெரிய திருமடல்
99.—–ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும்
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை
பின்னோர் அரியுருவமாகி எரி விழித்து
கொல் நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே —வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி —அவனுடைய
பொன் அகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த
மின் இலங்கும் ஆழிப்படைத் தடக்கை வீரனை ———–

———தன்னைப் பிறர் அறியாத்தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அருமறையை ———-

——கொல் நவிலும் ஆழிப்படையானை ,கோட்டியூர்
அன்ன உருவில் அரியை , திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை ,இந்தளூர் அந்தணனை
மன்னும் மதிட்கச்சி வேளுக்கைஆளரியை ——–

VI .பொய்கை ஆழ்வார் இயற்பா–முதல் திருவந்தாதி

100. அடியும்பட கடப்ப 17
101.தழும்பிருந்த 23
102 புரியொரு 31
103. முரணவலி 36
104. எளிதில் இரண்டையும் 51
105. ஏற்றான் 74
106. வரத்தால் வலி நினைந்து 90
107. வயிறழல 93

VII .பூதத்தாழ்வார் –இரண்டாம் திருவந்தாதி

108.கொண்டதுலகம் 18
109. மாலையரியுருவன் 47
110. வரங்கருதி 84
111.உற்று வணங்கி 94
112.என் நெஞ்சமேயான் 95

VIII .பேயாழ்வார் —மூன்றாம் திருவந்தாதி

113.இவையவன் கோவில் 31
114. கோவலனாய் 42
115. அங்கற்கிடரின்றி 65
116. புகுந்திலங்கும் 95

IX . திருமழிசை ஆழ்வார் –நான்முகன் திருவந்தாதி

117. தொகுத்தவரத்தனாய் 5
118. மாறாய தானவனை 18
119. இவையா ! பிலவாய் 21
120. அழகியான் தானே 22

ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்

121.மட நெஞ்சமென்னும் 46

பெரிய திருவந்தாதி

122. நின்றுமிருந்தும் 35
123. வழித்தங்கு வல்வினையை 57

திருவாய்மொழி

124. ஆடியாடி அகம் கரைந்து 2—-4—-1
125.உன்னைச் சிந்தை செய்து 2—-6—-6
126.எங்குமுளன் கண்ணன் 2—-8—-9
127. தோற்றக் கேடவையில் 3—-6—-6
128. கிளரொளியால் 4—-8—-7
129. ஆனானாளுடையான் 5—-1—-10
130. சூழ் கண்டாய் 5—-8—-6

131. அரியேறே 5—-8—-7
132. என் செய்கின்றாய் 7—-2—-2
133. வட்கிலன் 7—-2—-3
134.சிந்திக்கும் 7—-2—-5
135. போழ்து மெலிந்த 7—-4—-6
136.செல்லவுணர்ந்தவர் 7—-5—-8
137. புக்க அரியுருவாய் 7—-6—-11
138. ஆம்வண்ணம் 7—-8—-11
139. கூடுங்கொல் ? 7—-10—-3
140. எடுத்த பேராளன் 8—-1—-3

141. மாலரி கேசவன் 8—-2—-7
142. அற்புதன் 8—-6—-10
143. அறிந்தன 9—-3—-3
144. ஆகம்சேர் 9—-3—-7
145. உறுவது 9—-4—-4
146.அரியாய 9—-4—-5
147. உகந்தே உன்னை 9—4—-7
148. மல்லிகை 9—-9—-1
149. அன்பனாகும் 9—10—-6
150. என் நெஞ்சத்துள்ளிருந்து 10—-6—-4

151. பிரியாது ஆட்செய 10—-6—-10

திருவரங்கத்தமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதி

152. மடங்கல் 103
——————————————————————-

ஸ்வாமி தேசிகன் தான் அருளிய ப்ரபந்தத்தில் (தேசிக ப்ரபந்தம் )
திருவஹீந்த்ரபுரம் அடியவர்க்கு மெய்யன் விஷயமாக
மும்மணிக்கோவையில் 4வது பாசுரத்தில்( மழையில் எழுந்த
மொக்குள் போல் வையம் என்கிற பாசுரம் )
மீனோடாமை கேழல் கோளரியாய் —–என்று துதிக்கிறார்.

பின்னும், நவமணிமாலை 2ம் பாசுரத்தில் ( மகரம் வளரு மளவில்
பௌவ மடைய வுற்ற லைத்தனை என்கிற பாசுரம் )
வலிகொள் அவுணன் உடல் பிளந்து மதலை மெய்க்குதித்தனை —
என்று போற்றுகிறார்

இவ்விதமாக, ஆழ்வார்கள், ஆசார்யன் அனுபவித்துத் துதித்ததை
அறிந்து, உணர்ந்து ,அனுபவித்தோம்

அடியேனின் மந்த மத்தியில் தோன்றியதையும் இங்கு
எழுதியுள்ளேன் —பிழை பொறுத்து, குணம் கொள்வீராக !

ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
—————————–

1. அருமைப் புதல்வனை அழிக்க நினைத்து
அவனது சொல்லால் ஆத்திரம் அடைந்து
அன்று ஒருநாள் மாலைத் துணைத் தட்ட,
அடுத்த கணமே கம்பம் பிளந்தது !

2. அண்டம் அதிர்ந்தது; அமரர்கள் அஞ்சினர் ;
எண்திசை அழிந்தது;பிரளயம் நேர்ந்தது;
நான்முகன் நலிந்தான்; அவன் மகன் மெலிந்தான்
அறுமுகன் பயந்தான்;அனைத்தும் வீழ்ந்தது.

3.சிங்கத்தின் பிடரிகள் சிதறிப் பறந்தன ;
சீறியது கண்ணும்; பற்களும் நெறிந்தன ;
அட்டகாசத்தின் ஆரம்ப நிலைதான்,
கிட்ட நெருங்கத் தேவரும் பயந்தனர் !

4. கரங்கள் பிறந்தன ;வளர்ந்தன எங்கும்,
விரல்களின் நகங்கள் ,வீறிட்டுப் பாய்ந்தன !
இரணியன் மார்பைக் கீறிக் கிழித்தன !
தரணியெங்கும் குருதியின் ஓட்டம் !

5. நரசிங்கம்! நாரணன் கருணை அவதாரம் !
பிரகலாதனுக்காகப் பிறந்த அவதாரம் !
பிரதோஷ வேளையிலே பூசிக்க அவதாரம் !
சரபத்தை முடித்திட்ட சீரிய அவதாரம் !

6. நரசிங்கா ! ஆளரியே ! நாயேன் அடிபணிந்தேன்
கருணைக் கண்கொண்டு காத்திடுவாய் அடியேனை
உருவாய், உருவுக்கும் உருவாய் வந்தவனே !
பிரகலாத வத்ஸலனே ! பஜிக்கின்றேன் உன் நாமம் !

7. உன் நாமம் தனைக் கேட்க உன்மத்தமாகிடுவர் !
உன் நாமம் தியானிக்க உச்சநிலை பெற்றிடுவர் !
உன் நாமம் உச்சரிக்க உயர்நிலை அடைந்திடுவர் !
உன் நாமம் உயர்வாகும், உத்தமுமே அதுவாகும் !

8. சிங்கப் பெருமானே ! சீறினும் நீ அருள்வாயே !
எங்கும் உள்ளவனே ! இதயத்தில் இருப்பவனே !
பொங்கும் பக்தியினால், போற்றுகிறேன் பொற்பாதம் ,
ஏங்கும் அடியேன் நான்; இனிப் பிறவி யான்வேண்டேன் .

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ -நம்முடை நம்பெருமாள் -திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானத்திலும் -பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானத்திலும் -உள்ள அமுத மொழிகள் —

July 4, 2020

ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோக த்ருஷ்டியாலும் -வேத த்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே
திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

————

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு
ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –
ஆழ் பொருள்-மங்கிப் போகிற பொருள்-நசிக்கிற பொருளை -என்றுமாம் –
இப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்-
சம்சாரத்தின் உடைய தண்மையையும் நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்-நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

———–

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-
ப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்
எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்-அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

————-

ஞாலத் தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும்-ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே
அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை முட்டக் காண வல்லார் இல்லை –
நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-
அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது

—————

எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

தனக்கு பிரகாரமான சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத் திரளச் சொன்னேன்
சர்வ சப்த வாச்யன் ஆனவனை எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை தொகுத்து சொன்னேன் –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம்-

————-

யுள் வாங்கி நீயே–5-
சம்ஹரிக்கிறாய் நீயே –ஜகத் அடைய சம்ஹரித்த நீயே-
தன்னுடைச் சோதி ஏற எழுந்து அருளுகிற படி யாகவுமாம்

——-

வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று –6-

நிரதிசய போக்யனான ஆச்சர்ய பூதனாய் வ்யாமுக்தனாய் ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனை –
ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று – அவர்கள் ஏத்தாமையாலே தண்ணியரே
ஹீநர் என்றும் அஹீநர் என்றும் நான் பிரதிபாதிக்க வேணுமோ என்கிறார்-

————-

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே நீ என்னை அன்றி இலை -7-

இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று
நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று பேர்த்திடுகிறார்-
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –

———-

இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை–8-

கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –
வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே- எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இருப்பர்கள் –
இவர்கள் சக்கரவர்த்தி திருமகன் உடைய அம்பின் கூர்மையை-தஞ்சமாக நினைத்து இருப்பர்கள் –

—————-

கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

அண்டம் விம்ம வளர்ந்தவனுடைய திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரன் திருவடிகளை-அக்காலத்திலே
நீல கண்டனுடைய சிரஸ் ஸிலே படும்படியாகக் கழுவினான் –
சாஹசிகரான பிரஜைகள்-வழியே வழியே வர வேணும் என்று தீர்த்தத்தை மேலே தெளிப்பாரைப் போலே –

—————–

ஆங்கு ஆரவாரமது கேட்டு- அழல் உமிழும் பூங்கார் அரவு–10-
திசை வாழி எழ -என்னும்படி திரு உலகு அளந்து அருளின போது உண்டான-வார்த்தை கேட்டு –
தன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-பரிவின் கார்யம் ஆகையாலே
அடிக் கழஞ்சு பெறும் படியாய் இருக்கிற அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான்-

—————

மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

மடுவிலே பெரிய முதலையினுடைய வாயிலே அகப்பட்ட யானையை விடுவிக்கைக்காக திருவாழியை விடுக்கைக்கும்
இரண்டு இரண்டு சரீரத்தையும் விட்டு இரண்டும் முக்தமாம் படியும் நினைத்தாய் –
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய் ஸூகிகளாம்படி -என்றுமாம்-
விடும்படிக்கு ஈடாக சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு நினைத்தாய் –
பூர்வ ஆகாரங்களை விட்டு-முதலை -கந்தர்வனாய்-ஆனை திருவடிகளைப் பெறும்படிக்கு ஈடாகவும்-நினைத்தாய்-

—————–

வீடாக்கும் மெய்ப்பொருள் தான் – வேத முதல் பொருள் தான் -விண்ணவர்க்கும் நற்பொருள் தான் -நாராயணன்-13-

மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும் –வேதை க சமதி கம்யனுமாய் –அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-
பிராப்யனுமாய் இருக்கிறானும் – சர்வேஸ்வரன்-
மோஷத்தை உண்டாக்கும் அவயவஹீத சாதனம் –மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் –சர்வேஸ்வரன் –

————–

திருமால் -தன் பேரான பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

திருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே இவ்வர்த்தத்துக்கு இசையாத ஏகா யனனை நினைத்து
அருளுகிறார் என்று -பட்டர் –பிணச் சமயர் என்கிறது –
தேவதாந்திர பரரையும்-உபாயாந்தர பரரையும் -அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –
அவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள்
ஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்-
இப்படி சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப் பெறாதே -ஜீவியா நிற்கச் செய்தே -ம்ருதப் ப்ராயராய் இருக்கும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் வேறே ஓர் அர்த்தம் உண்டு என்று சூழக் கேட்டு-அனர்த்தப் படுவார் சிலர் உண்டு என்றும்-
பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

———

மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்
நீர்- விஷ ஜலம் -நீல கண்டன் -என்றபடி –

————–

பல மன்னர் போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு
நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை
ந்யாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப்பாட்டால் சொல்லுகிறது-

—————

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார் –தவம் -ஸூ க்ருதம்-

———————-

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-
அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –
இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்–அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்
அன்றிக்கே-அக்நி கொடுக்கும் ஹவிசை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –
அரி பொங்கிக் காட்டும் அழகு – நித்ய சூரிகள் பரிய இருக்குமவன்-ஆஸ்ரித அர்த்தமாக நரசிம்ஹமாய்ச்
சீறிக் காட்டின அழகு–இவை இவை என்றது நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு
சாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –
நரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –

———–

அழகியான் தானே அரி உருவன் தானேபழகியான் தாளே பணிமின்–22-

ஆபத் சகனானவனே அழகியான் –த்யஜிக்கிற சரீரத்திலும்-வர்த்திக்கிற சரீரத்திலும்-புதுயிகோளாய் இருந்துள்ள நீங்கள் –
உங்கள் கையில் உங்களைக் காட்டிக் கொடாதே-கால த்ரயத்திலும் சரீரங்களில் பிரவேசிகைக்கு நிதானத்தையும்-
அதுக்கு பரிகாரத்தையும் அறியுமவனை ஆஸ்ரயிக்க பாருங்கோள்-
பிரகிருதி வாசி அறிந்து பழையனாய் பரிகரிக்கும் வைத்தியனைவ்யாதிக்ரஸ்தர் பற்றுமா போலே

—————

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –
பிரதிபந்தகங்களைத் தானே போக்கி -ருசியைப் பிறப்பித்து -பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்
பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது –
விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி
வைத்த படியாலே யாத்ருச்சிகமாக ஸூ க்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –
ஈர நெல் வித்தி என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ
அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே
முன்னின்று பிறப்பியா நிற்கும் -இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-
இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –
ருசி பிறந்த பின்பு பிராப்தி அளவும் நாம் தரிக்கைக்கு-அவன் திருமேனிக்கு போலி உண்டு -என்கை-

—————-

எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டுகொள் கிற்குமாறு –26-
கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனே உன் அழகிலே பிணிப்பு யுண்டேன்-
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –

————–

மால் தான் புகுந்த மட நெஞ்சம் –27-
மால் தான்-ஈஸ்வரன் வ்யாமுக்தனாய்-அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு
கடல் வண்ணா –நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது =பேறாகக் கொள்வேனோ –
ஒரு லாபமோ -என்கிறார்-

—————-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28–

இது என்று ப்ரத்யஷ சாமா நாகாரமான ஸ்ரீ இராமாயண பிரசித்தியைச் சொல்லுகிறது –
இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-

————–

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

கோயிலிலே வந்து ஸூ லபனானவன் என்னை அடிமை கொண்டான் –இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் . திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –
அரங்கு – சம்சாரம் ஆகிற நாடக சாலை –பிறவி மா மாயக் கூத்து -என்று-சம்சாரம் ஆகிய
நாடக சாலையில் என்னை ப்ரவேசியாமல்-காப்பார்
என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-
என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –

————-

வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும் கரு மாயம் பேசில் கதை –31-

ஒருத்தன் தலை அறுத்துப் பாதகியாக-ஒருத்தன் சோச்யனாக- இருவருடைய வியசனத்தையும் போக்குவதும் செய்து –
ருத்ராதிகளுக்கும் ரஷகனானவனை ஆஸ்ரயியாத பேய்காள்
உங்களுக்கு சம்சாரத்தில் பிறக்கும் ஆச்சர்யமான துரிதங்கள் பேசி முடிக்க ஒண்ணாது –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவனை-ஏத்தாத அறிவு கேடர்காள் – இவ்வறிவு கேடு கிடக்கப் பிறவிக்கு அடியான
கர்ப்ப ஸ்தானத்தில் உள்ள ஆச்சர்யம் சொல்லப் புகில்-மகா பாரதம்-

————–

குறிப்பு எனக்கு க் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

என் நெஞ்சில் ஓடுகிறது எனக்கு இனிதாகத் திருக் கோட்டியூரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற நாயனாரையும்-
திருவேங்கடமுடையானையும் ஏத்துகை-
ஒருக்கால் விட்டுப் பிடித்தாலோ என்ன -வெவ்விய பாபங்களும் அதின் பலமான நோவுகளும் நலியாத படி
சம்சாரத்தைக் கடத்தக் கடவதான அவன் திருவடிகளை விடுவேனோ –
சரீரம் அடியாக வந்த வியாதியும்-வ்யாதிக்கு ஹேதுமான கர்மமும் கிட்டாமல் மாற்றுமவன் திருவடிகளை மறப்பேனோ –

—————

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம் பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை அளந்த ஆயாசமோ -என்கிறார் –
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும்
திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ -உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்-

——————–

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

திருக் குடந்தை -திரு வெக்கா-திரு வெவ்வுள் -கோயில் -திருப்பேர் -அன்பில் -திருப்பாற் கடல் –
முதலான இடங்களிலே திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளுகிறான் –
ஆதி நெடுமால் –சர்வ காரணமாய் ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சன்-
அணைப்பார் கருத்தனாவான் – ஆஸ்ரிதர் கருத்திலே ஒழுகைக்காக –
அவர்கள் ஹிருதயத்தில் புகுகைக்கு -என்றுமாம் – இளைப்பாகில் ஓர் இடத்திலே கிடக்க அமையும்
பல இடங்களிலே திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிறது –
அவ்வவ தேசங்களிலே ஆஸ்ரயிப்பார் யுடைய நெஞ்சிலே புகுகைக்கு அவசரம் பார்த்து -என்கிறார் –
தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில் புகுருகைகாக இப்படி அவசர ப்ரதீஷனாக வேண்டுவான்-
என் என்னில் -தான் ஆகையாலே-

—————–

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கின்றேன்-நின்று நினைக்கின்றேன் –-40-

விசேஷித்து ஓன்று செய்தது இல்லை -அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி இத்தைச் சொல்ல –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு நின்று ஒழிந்தேன்
இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –எது சொல்லிற்று எது பற்றிற்று என்று-விசாரியா நின்றேன்-

——————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

சென்று காணல் உறுகின்றேன் -என்று அந்வயம் – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –
சம்பத்தாவது திரு அருவிகளோடே கலந்து முத்துக்கள் சிதருகையும்-திருவேங்கடமுடையானுக்கு
திருப் பல்லாண்டு பாடுவாரும் வேத பாராயணம் பண்ணுவாரும்- ஆடுவாரும் –

—————-

ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-அனந்தரம்
திருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –
உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த
சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
தத் விஷய ஜ்ஞானம் அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

—————-

என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார்
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று –
சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

——————

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

சேதனரோடு கூடி இருந்த புண்ய பாப ரூப கர்மங்கள் ஆவான் –பெரிய குருந்தத்தைச் சாய்த்தவனே .
பெரும் குருந்தம் சாய்த்தவன் என்கிறது சொன்ன பொருளுக்கு சாதனமாக திருஷ்டாந்த உக்தி –
வேறு பட்டிருக்கிற தேவதைகள் -அசுரர்கள் -தாரகை தான் -நஷத்ரங்கள் தான் என் ஹ்ருதயம் தான் –
இது எல்லாம் அவன் இட்ட வழக்கு -ததீனம் இல்லாதது ஒன்றும் இல்லை –ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –
நெஞ்சுக்கு எம்பெருமானோடு யுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு -என் நெஞ்சமானவர் -என்கிறார் –

——————

கிளரொளி என் கேசவனே கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –
அனர்த்தப் படாமே நிர்வஹிக்கிற உனக்கு நான் அடிமை –
இவருடைய ஸ்நேஹத்தை கண்டு இவரிலும் காட்டில் ஸ்நேஹித்து இவருக்கு நிரதிசய போக்யனாய்
இவருக்கு தன்னுடைய அனுபவ ஸூகத்தையும் கொடுத்து
இன்னமும் எல்லா ஸூ கத்தையும் கொடுக்க வேணும் என்று பிச்சேறின ஸ்ரீ யபதி படியை அனுசந்தித்து
நீ அங்கனே அபி நிவேசித்தாய் ஆகிலும் எனக்கு அவை எல்லாம் வேண்டா
என்னுடைய ஸ்வரூப அநு குணமாக நான் அடிமை செய்ய வமையும் -என்கிறார் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-
அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று
முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

———————-

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–62-

அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே-இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்-அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய் -வேறு ஒன்றால் அறியாதது –-ஒரு சேதனர் ஆகில் அறியலாம்

———-

பொன் மகரக் காதானை ஆதிப் பெருமானை நாதானை நல்லானை நாரணனை
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –64-

ஆஸ்ரயிப்பார்க்கு மேன்மேலே அபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் அழகை யுடையவனுமாய் –
சர்வ காரணணுமாய்-எனக்கு நாதனுமாய் -ச்நேஹியுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய் -நம்முடைய சம்சாரத்தைப்
போக்கித் தரும் நாமங்களை யுடையனானவனைச் சொல்லுமதுவே உறுவது –
சொன்ன குணங்கள் திரு நாமத்தினுடைய அர்த்தம் என்கிறார் –சொல்லானை -சப்த மாதரம் –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி ஸ்ப்ருஹணீ யனானவனை –
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே நமக்கு உத்பாதகனானவன் – ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய் நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ்வாத்மாவுக்கு உறுவது –

——————

மாதாய மாலவனை மாதவனை –யாதானும் வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

தாயைப் போலே பரிவான ஸ்ரீ யபதியை பக்த்யா விவசனாய்ப் பேச ஷமன் அன்றிக்கே-
சொல் மாலையாலே ஏதேனும் வல்ல பரிசு சிந்தித்து இருக்கிற எனக்கு-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே
இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –இதுவே வாய்ப்பு என்று நெஞ்சிலே அத்யவசித்தேன் என்கிறார் -என்றுமாம் –
சொன்மாலை –தம்முடைய திருவந்தாதி–ஸ்ம்ருதி மாதரம் உடையாருக்கும் பரமபதம் சித்தியாதோ என்கை –
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்

———-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி
புறம் தொழா மாந்தர் -என்று –மது ஸூ தான பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது-

————————

ஆயன் துவரைக்கோன் – மாயன் அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று–அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி–அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள்
பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே-அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி
தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய்
ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்–மெய்யான ஞானம் இல்லை –
இடையனாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய் ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
தேர் தட்டிலே நின்று-உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன் நீ சோகிக்க வேண்டா – என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று நினைக்கும்படி சத்ருக்களாய் தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்-

—————

நல்லறம் ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

நிவ்ருத்தி தர்மமும் -ருகாதி பேதமான நாலுவகைப்பட்ட வேதத்தில் சொல்லுகிற மகத்தான பிரவ்ருத்தி தர்மமும்
நாரணனே யாவது –அதில் சொல்லுகிற உபாய பாவம் உள்ளதும் ஆஸ்ரயிப்பாருக்கு எளியனான நாராயணனுக்கே என்று கருத்து –
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளாலும் இப்பொருளை அன்று என்ன முடியாது
வேதங்களோடு வேத வேத்யனோடு வைதிக புருஷர்களோடு அல்லாத ஆழ்வார்களோடு
வாசி அற எல்லாருக்கும் இவ்வர்த்தத்தில் ஐக கண்ட்யம் சொன்னபடி –
யமைவேஷ வ்ருணுதே தேந லப்ய-கட -1-2-23-என்றும்
நயாச இதி ப்ரஹ்ம–நயாச ஏவாத்ய ரேசயத் -தைத் -2-62-77-என்கிறது முதலானவை அன்றோ வேத புருஷன் வார்த்தை –
லோகா நாம் த்வம் பரமோ தர்ம -யுத்த -120-15-என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -ஆரண்ய -37-13- என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -பார வன -71-123-என்றும்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -உத்தர -82-9- என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை -18-66- என்றும்
மாம் ப்ரபத் யஸ்வ-என்றும்
அறம் தானாய்த் திரிவாய் – பெரிய திருமொழி -6-3-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11-என்றும்
களை கண் நீயே -திருவாய் -5-8-8-என்றும் -இவை இறே அவர்கள் வார்த்தை –

பலாபிசந்தி ரஹீதமான கர்மங்கள் இதிஹாச புராணங்களில் சொல்லுகிற திருநாம சங்கீர்தனங்கள்
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம் இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –
அவை பல பிரதங்கள் ஆம்போது பகவத் பிரசாதம் வேணும் –பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹகரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்
அல்லாதவை போல் அன்றிக்கே உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-

—————

அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி–73-

பண்டு ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தபடி தான் எழுந்து அருளி இருக்கும் திரு நாடு
அவன் பழையதாக வைத்த பிரதிஷ்டை இருக்கும் இடம் –அதாவது உத்தம -சரம -ஸ்லோகம் –
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது-

————

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

குல சத்ருவாய் இருக்கிற பெரிய திருவடிக்கு ஆற்றாதே –
குளிர்ந்து இருந்துள்ள திருப்படுக்கையிலே எழுந்து அருளி இருக்கிற எம்பெருமான் தன்னையே இத்தசைக்கு
அபாஸ்ரயம் என்று நினைத்து அடைந்து-அவனை அபாஸ்ரயமாகப் பெற்ற ப்ரீதியாலே ஒளியை யுடைத்தான
ஸூமுகனான பாம்பை அங்கீ கரித்து-திரு மார்விற்கு ஆபரணமாக கொடுப்பதும் செய்து
ஸ்லாக்கியமான திரு நிறத்தை யுடையனாய் ஆச்சர்ய பூதனான அவனை அல்லது வேறு ஒருத்தரை என் நாவானது ஏத்தாது
சரணாகதர் ஒரு தலையானால்-பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் -ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-ரஷிப்பான் ஒருவன்
அத்தாலே நிறம் பெற்று க்ருதக்ருத்யனாய்-ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-வேறு ஒன்றை ஏத்தாது என் நா-

————–

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பாட்டும் –கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்-அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள்
கேட்ட மனுவும் –ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் –ஓதி வருகிற நாலு வேதங்களும்
மாயன் –ஆச்சர்ய பூதனானவனுடைய
தத மாயையில் பட்ட தற்பு-தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு –தத்த்வார்த்தம் –
பாட்டு -அருளிச் செயல்
முறை -ஸ்ரீ மத் ராமாயணம்
படுகதை -மகா பாரதாதி புராணங்கள்
பல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்
தற்பு-சத்தை -உண்மையை உடைத்தது என்றபடி-

——————–

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

தபஸ்வியான ருத்ரனுக்கு-மஹிஷியான உமா தேவி முறை மாறாடி யுணர்த்த – எம்பெருமான் திரு நாமங்களைக் கேட்டிருந்து –
அவற்றுக்கு உள்ளீடான குணங்களை அனுசந்தித்து அத்தாலே புஷ்கலான படியால்-முடிந்து வாடின பூ மாலை போலே பரவசனாய்த் துவண்டபடி
ப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி
அவள் வாயாலே தான் கேட்டு ஆதிராஜ்ய சூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு
நெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து பாரவச்யதையைச் சொன்ன படி-
தபஸ்வியான நாரதர் -வால்மீகி கேட்டபின்பு பாரவஸ்யரானது போலவே –

————–

ஏய்ந்த தம் மெய் குந்தமாக –79-

ச்தூலோஹம் க்ருசோஹம் என்று-தானாக சொல்லலாம்படியான சரீரத்தை குந்தமாக -நோயாக-
குந்தம் -வடுக பாஷையாலே வியாதி-

———–

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய திரு நாமங்களை
லோகங்கள் ஆனவை பரந்து பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

—————-

விதையாக நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்–81-

வித்தாக நல்ல தமிழை வித்தி என்னுடைய ஹ்ருதயத்தை-நினைத்தது தலைக் கட்ட வல்ல ஞான சக்தியாதிகள்
குறைவற்ற நீ விளையப் பண்ணினாய் அப்யசித்த சொல்லாய்க் கொண்டு வந்து -நான் அறிந்த தமிழ் பாஷைக்கு
வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து-நல்ல தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து
நல்ல தமிழ் வித்தை யுண்டாக்கி என் ஹிருதயத்தை அழகிய கவி பாடுகைக்குப் பாங்காம் படி பண்ணினாய் –

————

சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

பிரபன்னராய்க் கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி
எல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவனாய்
பிரதிகூல நிரசன ஸ்வ பாவமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
சரீர அவசநத்திலே வாசா மகோசரமான போகத்தை புஜிக்கக் கொடுக்கும்
ஆஸ்ரித விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்யாதது என்று விவேகிக்க மாட்டாத படி-
பிச்சுத்தான் ஒரு வடிவு கொண்டால் போலே நெஞ்சாறல் பட்டு இருக்கும் படி சொல்லுகிறது
யா கதிர் யஜ்ஞ சீலா நாம் -ஆரண்ய -68-30-என்றபடி கார்யார்த்தமாக தம்மை அழிய மாறின பெரிய யுடையாருக்குச்
செய்வது அறியாமல் அர்வாசீ ந போகத்தோடே பரம பத போகத்தோடே சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள் –

——————

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன் – இரண்டு பட்ட மனசை யுடையேன் அல்லேன் –
பிரயோஜனாந்தரம் கொண்டு விடும் மனசை யுடையேன் அல்லேன் -என்றபடி –
பிஜ்ஞகன் இத்யாதி-ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்-அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –
சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன் எனக்கு ஒப்போ-
ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணனை-
என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –
கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது –
ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று

—————–

உத்தமன் என்றும் உளன் கண்டாய் –உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –86-

இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்-
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –

————-

ஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்–88-

ஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே தானே ஓடி-அவர்கள் தர்சனத்தால் வந்த
அறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திருநாமத்தை பிரியமுடன் சொல்லி-தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார் –
இவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை -எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-

————

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு
ஆஸ்ரயித்து வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு
ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் –

———-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்
பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-
தத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யத்தைப் பெறுவார்கள்
ததீய சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்கள் -என்றபடி
யதோபாசனம் பலம் -என்கை-எல்லாருக்கும் ஒக்கும் இறே-
விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க
வேண்டி இருக்கப் பெற்றவர்கள்-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்
எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ச்நேஹித்து-
அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் –

————

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-
என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று வ்யாமுக்தனானவனை-
என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் என்கிறார்-
ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

———————–

அடியேற்கு வேம்பும் கறியாகும் என்று-94-

நீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்
கறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –
கிமத்ர சித்ரந்தர் மஜ்ஞ-இதிவத்
சரணாகதி தர்மம் அறிந்தவர்கள் தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-

———–

எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

அடிமை என்றால் மருந்து போலே இராதே அதிலே பொருந்தினேன் –
அடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான அஹங்கார மமகாரங்கள் ஆகிற துக்கரூப பர்வதத்தில் நின்றும் இழிந்தேன் –
ப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்படி ஞான பக்திகளால் பரிபூர்ணன் ஆனேன்
அதுக்கு மேலே புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும் புண்யார்ஜனம் பண்ணும் விபூதியையும் உபேஷித்து
விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-

————

சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்
என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்
இப்போது அறிந்தேன் -சர்வ காரணமும் நீயே
பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்
சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்- அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

இத்தால் –
1-ப்ராப்யமான கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு விரோதியான அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படி பரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை நடுங்கித்
தம் கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும் அருளிச் செய்தார் ஆய்த்து-

மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே
சர்வ ஸ்மாத் பரன் என்று பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து-
அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-