Archive for the ‘Prabandha Amudhu’ Category

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானத்தில் இருந்து சில அமுத துளிகள் –

June 30, 2020

அவதாரிகை —

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சர்வ ரஷகனாய் இருக்கிற –
சர்வேஸ்வரனை ரஷ்யமாக நினைத்து திருவவதார விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினார்
திருப்பல்லாண்டிலே-

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–பல்லாண்டு பாடுதும் -என்றும்
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -என்றும்
ஸ்ரீ நரசிம்ஹ ப்ராதுர்பாவத்துக்கும் ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி இருக்கச் செய்தேயும்

மாயப் பொரு படை வாணனை -என்றும்
ஐந்தலைய -இத்யாதிகளால் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு பிரசுரமாக மங்களா சாசனம் பண்ணுகையாலும்

இவ்வதாரத்துக்கு ஹேதுவாக படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டு அருளின ஸ்ரீ பெரிய பெருமாள்
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் எழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்-என்றும்
வையம் யுண்டு ஆலிலை மேவு மாயன் மணி நீண் முடிப் பைகொள் நாகத் தணையான்-பெரிய திருமொழி -5-4-2-என்றும்
ஸ்ரீ கோயிலில் நின்றும் திரு மாளிகைகளில் புகுந்து ஸ்ரீ வடபெரும் கோயிலுடையானாக கண் வளர்ந்து அருளுகையாலும்

பயின்றது அரங்கம் திருக்கோட்டி -என்று ஸ்ரீ கோயிலில் நின்றும் தங்கு வேட்டையாக எழுந்து அருளி ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
உரக மெல்லணையனாய்க் -பெரியாழ்வார் -4-4-4- கண் வளர்ந்து அருளுகையாலும்
அணி கோட்டியூர் அபிமானத் துங்கன் செல்வனைப் போலே இத்யாதி படியே
இவ் வாழ்வாருக்கு மங்களா சாசனத்துக்கு சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியுடன் ஸ்ரீ திருக் கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலும்

ஸ்ரீ திருக் கோட்டியூரானே-பெரிய திருமொழி -9-10-1-என்றும்
கன்று கொன்று விளங்கனி எரிந்து -பெரிய திருமொழி -9-10-7-என்றும்
அவனே இவன் என்று ஆழ்வார்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமாக ஸ்ரீ திருக் கோட்டியூரை அருளிச் செய்கையாலும்
செந்நாள் தோற்றி சிலை குனித்த திரு மதுரையில் காட்டிலும் ஸ்ரீ திருக் கோட்டியூர் உத்தேச்யம் ஆகையாலும்

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரச் செய்தேயும்
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் மடிய வஞ்சனையில் வளர்ந்த மணி வண்ணன் -பெரியாழ்வார் -4-3-2-என்று
ஈஸ்வரத்வம் நடையாடுகையாலும்

மற்ற அவதாரங்களுக்கு காலமும் நன்றாய் தாமும் ராஜ குலத்தில் அவதரிக்கையாலும்
பந்துக்களும் ராஜாக்களுமாய் பலவான்களுமாய் ஆகையாலும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு காலமும் த்வாபர அந்தமாய்
பந்துக்களும் சாதுக்களான ஆயராய்
முளைப்பது எல்லாம் தீப்பூண்டு களாகையாலே
மங்களா சாசனம் வேண்டுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கே ஆகையாலும்
அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சாவதாரமாக நின்றவிடத்தில் அர்ச்சாவதாரம் அர்ச்சக பராதீன
சமஸ்த வ்யாபாரமாய்ப் போருகையாலே
மங்களா சாசனம் மிகவும் வேண்டுவது அர்ச்சாவதாரம் ஆகையாலும்
சென்னியோங்கு அளவும் இவர்க்கு அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் நடக்கும் இறே-

——————————————————————

முதல் பாட்டு -அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக
மங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால் –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே –1-1-1-

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாணகுண பூரணன் -என்கிறார்
பிறந்தினில்
இன் -இல்-பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போல் பொல்லாங்கு இல்லாதபடியாலே
திரு வாய்ப்பாடியிலே பிறப்பை இனிய இல்லிலே பிறந்தான் என்கிறார்
திருக் கோட்டியூரிலே வ்யாவ்ருத்தி சொல்ல மாட்டாரே

————–

இரண்டாம்பாட்டு -அவதாரிகை –
இவ்வளவிலே யன்றி தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த
திருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே ஸ்லாகிக்கிறார்-

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே–1-1-2-

ஆயிற்று ஆய்ப்பாடியே
இப்படி திருவாய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியில் உள்ளாரில்
ஒருத்தரும் விக்ருதர் ஆகாமல் இருந்தார் இல்லை –

———–

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே–1-1-3-

உகவாதார் காணாத படி மறைக்கையாலும்
ஸ்ரீ ராமாவதாரம் போலே வளர்ந்த பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகை யன்றி
அப்போதே பேணிப் போருகையாலும்-பேணிச் சீருடைப் பிள்ளை
திருவோணம் ஸ்ரீ வைஷ்ணவ நஷத்ரம் ஆகையால் திருவோணத்தான் உலகு என்று
உபய விபூதியையும் ஆளும் -என்கிறார்கள்

————-

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

இத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
செந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி
மன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே
சாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை
மன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்-

—————-

பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1-

பிடித்துச் சுவைத்து உண்ணும் –
திருக் கையாலே திருவடிகளைப் பிடித்து –
தேனே மலரும் திருப்பாதம் -திருவாய்மொழி -1-5-5-என்று
தன் திருவடிகளிலே விழுந்தவர்கள் சொல்லக் கேட்கையாலே
இது பரீஷிக்க வேணும் -என்று திருப்பவளத்திலே வைத்தான்

பாதக் கமலங்கள் காணீரே –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய -திருவாய் மொழி -4-6-8-வேண்டுகையாலே
இவர் காட்டக் காணும் வேணும் இறே
வேதப் பயன் கொள்ள வல்லார் -பெரியாழ்வார் -2-8-10-இவர் இறே
திருவடித் தாமரைகளை வந்து காணுங்கோள்-என்கிறார்
அறிவுடையார் காட்டக் காணும் வேணும் இறே-

பவள வாயீர் வந்து காணீரே –
என்று பின்பும் அருளிச் செய்கையால் ப்ரபத்தியின் மேல் ஏறின பக்தியையும் பவ்யதையும்
யுடையவர்கள் நின்ற நின்ற நிலைக்குள்ளே யுள்ளே புகுந்து தர்சிக்க யோக்யர் -என்கிறார் –

ஒண் நுதலீர் வந்து காணீரே –1-2-2-
ஒண் நுதல் -என்கையாலே பிரபத்தி பிரகாசகமான தாந்தியை யுடையவள் என்றபடி-

காரிகையீர் வந்து காணீரே –1-2-3-
காரிகையீர் -என்கையாலே பக்தி பாரவச்யம் யுடையாரை அனுபவிக்க அழைக்கிறார் –

குவிமுலையீர் வந்து காணீரே –1-2-5-
குவி முலையீர் -என்று பக்தி வர்த்தகர் ஆகிறவர்களை அழைக்கிறார் –

ஒளி இழையீர் வந்து காணீரே –1-2-8-
ஒளி இழை-என்றது ஆத்ம பூஷணம்

ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-
ஒளி வளை–என்று பிரகாசகமான அனன்யார்ஹ சிஹ்னம் –

சேயிழையீர் வந்து காணீரே –1-2-10-
சேயிழை -என்று பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-

சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-
சுரி குழல் -தாந்த ரூப பிரபத்தி –

கனம் குழையீர் வந்து காணீரே –1-2-12-
கனம் குழை -என்றது -காதுப் பணியாய்-ஸ்ரோத்தாக்களைச் சொல்லுகிறது –

காரிகையீர் வந்து காணீரே –1-2-13-
காரிகையீர் -என்று -பக்தி பாரவச்யம் யுடையாரை அழைக்கிறார்-

சேயிழையீர் வந்து காணீரே –1-2-14-
சேயிழை -பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-

மொய்குழலீர் வந்து காணீரே –1-2-15-
மொய் குழலீர் -கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியாய் பிரார்த்தனா ரூபையான பிரபத்திகள் –

கன வளையீர் வந்து காணீரே -1-2-16–
கன வளை -ஸ்ப்ருஹா வஹமுமாய் -மமதா விசிஷ்டமுமான அனன்யார்ஹ சிஹ்னம் –

பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-
பூண் முலை -என்றது பக்தி பிரகாசகமான ஆத்மபூஷணம் –
அதாவது பராவர குருக்கள் பிரகாசிப்பித்தது இறே-

நேரிழையீர் வந்து காணீரே–1-2-19-
நேரிழை-என்கையாலே -சம்ச்லேஷத்திலும் கழற்ற வேண்டாத ஆபரணங்கள்
அதாவது–அத்யந்த ஸூஷ்ம ரூப ஜ்ஞானமான ஆத்மபூஷணம் –

குவி முலையீர் வந்து காணீரே —1-2-20-
குவி முலை
பூர்வதத்
காணீர் காணீர் -இருபது பிரகாரமும்
முடிச் சோதி -திருவாய் -3-1- பிரகாரம் போலே இருக்கச் செய்தேயும்
பாதாதி கேசமாக அனுசந்தித்து
ப்ராப்ய அனுரூபம் ஸ்வரூபமாகவும்
ஸ்வரூப அனுரூபம் பிராப்யமாகவும்
அனுசந்தித்து இறே
இவை யுடையவர்களை அழைத்து இரு கால் காணீர் காணீர் -என்றது
அவனுடைய உபேய பாவமும்
உபாய பாவமும்
அறியுமவர்களை என்னவுமாம் –
இப்படிக் காட்டக் கண்டால் இறே மங்களா சாசன பரிபாகம் ஆவது -பரிகாரமாவது-

தென் புதுவைப் பட்டன்விருப்பால் உரைத்த விருபதொடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவார் தாமே–1-2-21-
உரைப்பார்-இவருடைய அபிமானத்தாலே சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே
என்கிற தேசத்திலே போய் அவர்களோடு மங்களா சாசனம் பண்ணப் பெறுவார்-

————

பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ –1-3-1-
வையம் அளந்தானே -இரப்பு பெற்றவாறே -பூரித்து -திரி விக்ரமன் ஆனானிறே-
அளந்த போதை ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி ஸ்மரணத்தாலே இறே ப்ரஹ்மா வரவிட்டதும் –

தேவகி சிங்கமே தாலேலோ –1-3-4-
தேவகி புத்திரன் என்கிற பிரசத்தியாலே -சொல்லுகிறார்
இது தான் ஸ்ருதி சோதிதமுமாயும் இறே இருப்பது –
ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிற இது இறே ஏற்றம் –

தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ –1-3-7-
குடந்தைக் கிடந்தானே
உபய விபூதியையும் நிர்வஹிப்பது திருதிய விபூதியிலே கண் வளர்ந்து போலே காணும் –

அழலே தாலேலோ அரங்கத்து அனையானே தாலேலோ –1-3-9-
அவதார கந்தமான -உரக மெல்லணை யானான அரங்கத் தரவணை யான் -இறே
தேனார் திருவரங்கம் தென்கோட்டி -மூன்றாம் திருவந்தாதி -62-என்னக் கடவது இறே –

புதுவை பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே –1-3-10-
இடர் இல்லை -என்னாதே-இல்லை இடர் -என்கிறார்
த்ருஷ்டா சீதா -என்னுமா போலே
இடராவது -இவர் அபிமானத்திலே ஒதுங்காமை இறே
தானே போகையாலே இல்லை என்கிறார் —

————–

தன் முகத்து-1-4- -பிரவேசம் –
விண் தனில் மன்னிய மா மதீ-என்று -மங்களா சாசன பரராய்
சூழ்ந்து இருந்து ஏத்துகிறவர்களையும் அழைக்கிறார் –

மா மதீ -என்றால் மதியை யுடையவர்களை காட்டுமோ என்னில்
விஜ்ஞானம் யஞ்ஜம் தநுதே-
தத் குணசாரத்வாத் தத் வ்யபதேச – என்கிற ந்யாயத்தாலே காட்டும் இறே –
மங்களா சாசன பரராய் இருக்கும் திருவடியும் பெருமாள் திரு உள்ளம் கன்றாமைக்காக
இவ்வஸ்துவை யுண்டாக்கிப் பரிய வேணும் என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது அன்றோ கார்யம்
கடுக அழைத்து அருளீர் என்றான் இறே
மங்களா சாசனம் தான் அவன் யாதொன்றில் உற்ற காலத்து-அங்கு ரசிக்கவும் வேணுமே
அது கார்யம் அன்றாகில் விலக்கவும் வேணும்
கார்யம் அன்று என்ன ஒண்ணாதே-இது அவதாரத்தில் மெய்ப்பாடு ஆகையாலே

மன்னிய மா மதியைப் பிடித்துத் தா -என்று அவன் சொல்லி ஆசரிக்கையாலே
ஆச்சார்ய முகத்தாலே ஆர்க்கும் ஜ்ஞானம் யுண்டாக வேணும் -என்று காட்டுகிறது என்னவுமாம்
ஆச்சார்யன் தானும் மன்னிய மா மதி யுடையவர்களையும் அழைத்துக் காட்டும் இறே –

என் மகன் கோவிந்தன் கூத்தினை யிள மா மதீ
நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ –1-4-1-

கதிர் ஜ்ஞான மூர்த்தியினாய் -திருவாய் -6-2-8-
உனக்கு ஓன்று உணர்த்துவான் நான் -திருவாய் -6-2-5-
என்னுமா போலே நித்ய விபூதியிலும் திருதிய விபூதியிலும்-உண்டான ஜ்ஞான விசேஷங்கள்
தமக்கு விதேயம் ஆகையாலே அவற்றை அழைத்து இவனுக்கு உணர்த்துகிறார் –

மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-2-
மா மதீ-முற்பட இள மதி என்று இப்போது மா மதீ என்கையாலே காலக்ருத பரிணாமம் தோற்றுகிறது-

விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா –1-4-6-
மா மதீ -என்றது பக்தியை-ஜ்ஞான சப்த வாச்யையுமாய் இறே பக்தி தான் இருப்பது
பிள்ளை உறங்கா வல்லி தாசரை மகா மதிகள் என்று இறே எம்பார் போல்வார் அருளிச் செய்வது
விரைந்தோடு வாருங்கோள்-மா மதீ -என்றது ஜாதி ஏக வசனம்-

மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-7-
இவனுடைய வ்யாமோஹத்தை பாராதே நீ
ஆஜ்ஞா பரிபாலனம் பண்ணுகிற கர்த்ருத்வத்தாலே தாழ்ந்து வருகிறோம் -எண்ணாதே
அவன் வ்யாமோஹத்துக்கு ஈடாக -நம்மை அழைக்கப் பெற்றோம் என்று மகிழ்ந்து கடுக ஓடி வா –

நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1-4-8-
நெடுமால் -உன்னளவே இல்லை காண்-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தால் வந்த வ்யாமோஹம்
அந்த வ்யாமோஹத்துக்கு ஈடாக கடுக வா –

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய-1-4-9-
தாழியில் வெண்ணெய் -என்றது தேக குணத்தால் வந்த தன்னேற்றம்
சிறு மா மனிசர் –திருவாய் -8-10-3-என்னுமா போலே-அன்ன பானாதிகளாலே தரிக்கிற தேஹத்தால் வந்த சிறுமை
பெருமையாம்படி ஆத்ம குணத்தால் ஸூ ரிகளோடு ஒக்க வந்த மகத்வம்
விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -73-என்கிற மகத்வத்தையும் உடையவர்கள் இறே –
வெண்ணெய் -என்கிறது -வெண்ணெய் இருந்த பாத்ரம் இறே தாழி யாகிறது —
சம்சாரிகள் உடைய ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லும் முமுஷூக்களுடைய தேக குணம் ஆத்ம குணத்தை பின் செல்லும் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும் முமுஷூக்களாய் இருந்தார்களே யாகிலும்
இவர்களுடைய ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லும்
தாழியில் வெண்ணெய் -என்றது ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லுகிற ஆழ்வார்களை —
இவர்கள் விரும்புகை இறே சாஷாத் வ்யாமோஹம் ஆவது-

வாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-9-
வாழுகையாவது-நீ இப்போ நிற்கிற நிலை தன்னிலே -கரிஷ்யே வசனம் தவ –கீதை -18-73- என்கை இறே –
த்யஜ த்யஜ்ய -என்ற உன் முற்பட்ட நிலையை குலைத்து-அவன் மீண்டும் அதிலே நிறுத்தினால் அது பழைய நிலையாமோ
தவ -வசனம் -என்றபோதே மற்று ஒன்றிலே நிறுத்திலும் நிற்க வேணும் இறே பழைய நிலையில் -மாஸூச என்ன ஒண்ணாதே
வாழ வுறுதியேல்- வாச வர்த்தியாய் வாழ வேணும் என்று இருந்தாய் ஆகில்
மா மதி இத்யாதி –அறிவுடையார்க்கு எல்லாம் வேணும் காண் இந்த பாரதந்த்ர்யத்தாலே வந்த மகிழ்ச்சி –

——————

மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கரசே கண்ணபுரத்தமுதே
அமுதே என்னவலம் களைவாய் –1-5-8-
ஜ்ஞான சங்கோசம் பிறவாமல் ரஷகத்வத்தை மாறாடி நடத்துகையாலே அமுதே -என்னவலம் களைவாய் -என்கிறார்
இவருக்கு அவலம் யுண்டாவது அவன் நியாமகன் ஆகாது ஒழியில் இறே
இவர் அவனை நியமித்து இவை முதலான திவ்ய தேசங்களிலே நித்ய சந்நிதி பண்ண வேணும் -என்று
நிறுத்தினார் போலே காணும்-

———-

மாணிக்கக் கிண்கிணி பிரவேசம் –1-6-
சப்பாணி -என்கிற வ்யாஜத்தாலே ஆகிஞ்சன்யத்தை வெளியிட்டு லோகத்தை ரஷிக்கிறார் –

பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி –1-6-1-
சப்பாணி -என்று அஞ்சலியை பிரகாசிப்பிக்கிறது
இரு கால் -சப்பாணி -என்கையாலே
உபாய பாவத்திலும்
உபேய பாவத்திலும்
ஆகிஞ்சன்யம் வேணும் என்று அவனைக் கொண்டு பிரகாசிப்பிக்கிறார் –
காணி -என்கையாலே பலரும் என்னது என்று தோன்ற அபிமானித்து பிறருக்கும் வழங்கிக் கொண்டு போரிலும்
இந்த விபூதி -அவனுடைய காணி -என்கிறது – அது தன்னை இறே இவன் இரந்து கொண்டதும் –

ஆழி அம்கையனே கொட்டாய் சப்பாணி –1-6-3-
இவன் சப்பாணி கொட்டும் போது-இவன் திரு உள்ளத்தில் கருத்தை அறிந்து
திருக்கையில் ஆழ்வார்களுக்கும் நீங்க நின்று=இவர் தம்மைப் போலே உகப்பார்கள் இறே
அருகாழி யாகவுமாம் –

அளந்திட்ட தூணை யவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளந்திட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-

சிங்க யுருவாய் –
ஊர்த்த்வ நரசிம்ஹமாய் வளர்ந்திட்டு –
ஸ்ரீ கஜேந்த்திரன் -நாராயணா வாராய் என்றான் இறே
வ்யாப்தியிலும் விசேஷ்ய பர்யந்தமான அஸ்தித்வம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
அது பாராமல் -மணி வண்ணா நாகணையாய் -சிறிய திரு மடல் -50-என்றவோபாதி இறே
இவர் நாராயணா என்றதும்
இங்கே அங்கன் அன்றிக்கே
அஸ்தித்வ நாஸ்தித்வ விகல்பம் தோன்றுகையாலே எங்கும் உளன் –திருவாய் மொழி -2-8-6-என்று
வ்யாப்தியைக் கணிசித்து அதுக்கு ஒரு ஹேது வேண்டுகையாலே கண்ணன் என்ற
பாகவதனைக் காய்ந்த பொறாமையாலே இறே
முன்பு தன்னளவிலே நாஸ்திக்யத்தால் அவன் பண்ணின பிரதிகூல்யம் எல்லாம் பொறுத்துப் போந்தவன் இப்போது
அவன் புடைத்த அவ்விடம் தன்னிலே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிற்றும்-
இத்தால் அங்கு -என்கையாலே -தேசாந்திர வ்யாவ்ருத்தியும்
அப்பொழுது -என்கையாலே காலாந்தர வ்யாவ்ருத்தியும்
அவன் வீய -என்கையாலே தேகாந்தர வ்யாவ்ருத்தியும்
தோற்றினாப் போலே
அவன் தட்ட ஆங்கே -என்ற போதே அவை எல்லாம் தோற்றிற்று இறே –
திவ்ய ஆயதங்களையும் நிறுத்தித் தோன்றின பிரகாசத்தாலே இறே வாள் உகிர் -என்கிறது –

————

தொடர் சங்கிலி பிரவேசம் –1-7-
தளர் நடை -என்கிற வ்யாஜத்தாலே
அனுகூல ப்ரீதியும் பிரதிகூல நிரசனமும் -இவ்விரண்டும் அதிகார அனுகுணமாக நடக்கவே சித்திக்கும்
என்னும் இடத்தை அவனைக் கொண்டே வெளியிடுகிறார்
அவனுடைய ஆசாரம் -பக்தி மூலமாகவும் பீதி மூலமாகவும் அவகாஹாந ஹேதுவாய் இருக்கும் இறே-
பிரமாண அனுகுணமாக ஏதேனுமோர் அதிகரிக்கும் –

சீரால் விரித்தன வுரைக்க வல்லார் மாயன் மணி வண்ணன் தாள் பணியும்
மக்களைப் பெறுவர்களே –1-7-11-

சீரால் விரித்தன –
சீரால் விரிக்கை யாவது -குணாஸ்ரய தர்சனமும் -குண பிரகாச ஹேதுவும்-குண பிரகாச பிரயோஜனமும் -இறே
உரைக்க வல்லார் –
இவர் விரித்த பிரகாரம் அறியாது இருந்தார்களே யாகிலும்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே அனுசந்திக்குமவர்களும்-

பணியும் -என்ற வர்த்தமானம் -உத்தமனில் வர்த்தமானம் ஆதல் –
உத்தர வாக்யத்தில் பிரார்த்தனை யாதலால் இறே-

மக்களைப் பெறுவர்களே-
புத்ரர்களைப் பெறுவர்கள்-
அவர்கள் ஆகிறார் -சிஷ்யவத் புத்ரர்கள் ஆதல் –
தாசவத் புத்ரர்கள் ஆதல் –
சிஷ்ய தாசர்கள் ஆதல் –
இது தான் சப்த உச்சாரண மாத்ரத்தால் கூடுமோ என்னில் –
இவர் அபிமானத்திலே ஒதுங்கி –
இவர் அருளிச் செய்ததை ஓதி –
ஒதுவித்துப் போருமவர்களுக்கும் -கூடும்
எங்கனே என்னில்
இவர்களாலே திருந்தின சிஷ்யர்கள் யுடைய நினைவாலே –
ஸூ கதாதம் –
இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -பெரியாழ்வார் -2-2-6-
நந்தன் பெற்றனன் -பெருமாள் திருமொழி -7-3-
கூரத்தாழ்வார் நங்கையார் திருவடி சார்ந்த வாறே பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு
கூடுகிற அளவில் தம்முடைய புத்ரரான ஆழ்வான் யுடைய
ஸ்ரீவைஷ்ணவத்தைக் கண்டு
இதனுடைய எடுப்பு இருந்தமை கண்டோமுக்கு
ஆழ்வானுக்கு அந்ய சேஷத்வம் வர ஒண்ணாது என்று ஆவர்த்திக்கை தவிர்ந்தார் இறே-

———-

பொன்னியல்-1-8- பிரவேசம் –

கீழே இவருடைய அபிமானத்திலே ஒதுங்கி-அதிகாரியானவன் நல்வழி நடக்கவே
அனுகூல ப்ரீதியும் பிரதிகூல நிரசனமும் சித்திக்கும் -என்கிறார் –
பிரதிகூல நிரசனம் தான் -தேஜோவதமும் -பிராண வதமுமாயும் இறே இருப்பது
சாஷாத் பிரதிகூலமாவது -தேக இந்த்ரியங்களும் தானும் இறே –
தேக இந்த்ரியங்களை தேஜோ வதம் பண்ணுகையாவது-அதிகார அனுகுணமாக நியமித்து -சிறைப்படுத்தி நியாம்யம் ஆக்குகை –
நிரசிக்கையாவது -எம்பாரை போலே இறே -தானே தனக்கும் சத்ருவை இருக்கும் இறே –
கர்மத்தால் அன்றிக்கே-காலத்தால் அன்றிக்கே-தேசத்தால் அன்றிக்கே-இந்த்ரியங்களால் அன்றிக்கே
நானே செய்தேன் -என்றான் இறே –
இனி மேல் அச்சோ -என்கிற வ்யாஜத்தாலே–அயோக வ்யச்சேதமும்-அப்ரதிஷேதம் -முதலான
ஆத்ம குணங்கள் யுண்டாகில் இறே–அவனைக் கூடலவாது -என்னும் அர்த்தத்தை வெளியிடுகிறார் –

————–

பொத்த உரலைக் கவிழ்த்து-அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய-1-9-7-

இத்தால் ஸூஷியுடையருமாய் -இதர அபிமானம் அற்றவர்களுக்கு
அபேஷா நிரபேஷமாக திருவடிகள் சேரும் என்று காட்டுகிறது
பொத்த யுரலால் -இதர அபிமானம் சிறிது கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போகய பூதராவார் என்கிறது-

தித்தித்த பாலும் –
காய்ச்சி உறி ஏற்றி உறைதல் வாய்ப்பாலும் அவனுக்கு போக்யமாய் இருக்கும் இறே-
இத்தால் -ஒருவனை நாம் திருத்தி ஆந்தராளிகன் ஆக்கினோம் என்னும் அபிமானம் கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போக்யர் ஆவார்கள் இறே
நாழிவளோ-திரு விருத்தம் -71-என்றும்
செய்த சூழ்ச்சியை யாருக்கு உரைக்கேன் -பெரிய திருமொழி -3-7-4-என்றும்
இவ் வபிமானம் இறே அவனுக்கு அங்கீகார ஹேது
ஸ்வ அபிமானம் அற்ற அளவன்றிக்கே -வைகுண்ட பிரிய தர்சிகளாய் இருப்பாரை -வெண்ணெய்-என்கிறது –
எல்லா உலகுமோர் துற்றாற்றா-திருவாய் -2-8-8-என்கிற திரு வயிறு நிறைவதும்
திரு உள்ளம் பிரசன்னம் ஆவதும் இவ்வதிகாரம் கண்டால் இறே –
சதுர்த்தியில் ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தமான பார தந்த்ர்யம் தோன்றா நிற்கச் செய்தேயும்
அந்ய சேஷ பூதரை இறே சேஷம் என்கிறது –
சேஷ பூதனை -முமுஷூ வானவனை இறே வெண்ணெய் என்னாலாவது –
தித்தித்தபால் -என்கிறது
ஸ்வ அபிமானமும் இதர அபிமானமும் அற்ற பிரபன்னரை இறே –
பொத்த உரல் என்றது -பிரபன்னன் தன்னை -அசித் என்று இறே இருப்பது –

குழலால் இசைபாடி வாய்த்த மறையோர் வணங்க -இமையவர் ஏத்த வந்து–1-9-8- –
குழலால் இசை பாடி -என்றத்தாலே
ஆச்சார்ய வசன பாரதந்த்ர்யமே வாய்த்த மறையாக -மங்களா சாசன பர்யந்தமாக கைங்கர்யம் செய்யுமவர்கள் –

விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே –1-9-10-

விட்டு சித்தன் பரோபகாரமாக வுபகரித்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
வாய்த்த மக்களையும்
நன் மக்களையும் பெற்று
அவர்கள் மங்களா சாசனம் பண்ணக் கண்டு மகிழ்வர் -என்கிறார்

விஷ்ணு சித்தன் என்றது -அரவத்தமளிப்படியே
வல்லவர் -என்றது -சாபிப்ப்ராயமாக -என்றபடி
வாய்த்த மக்கள் -என்றது -புத்ரர்களை
நன் மக்கள் என்றது -சிஷ்யர்களை –
பிரத்யயத்திலே சிஷ்யர்களுக்கு ப்ராப்தி யுண்டானவோபாதி-பிரக்ருதியிலே புத்ரர்களுக்கும் பிராப்தி யுண்டு இறே
புத்ரான் -சந்த்யஞ்ய -என்றது காரண கார்ய பாவ சம்பந்தத்தாலே இறே-அது தான் அறிந்த மாத்ரம் இறே
இங்கு கார்ய காரண பாவ சம்பந்தம் ஆகையாலே இறே உபாதேயமாம் இறே
தாத்வர்த்தத்தால் வந்த ரஷ்யத்வம் சதுர்த்தி தோற்றினால் இறே தோற்றுவது –

———-

அரவணை–2-2- பிரவேசம் –

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-என்று அல்வழக்கு ஒன்றும் இல்லாதே அறுதியிட்டது தேசமாக்கி
தத்தேசிகனை அவதார கந்தமாக வஸ்து நிர்த்தேசம் செய்து
நாவகார்யம் சொல் இல்லாதவர்களை தேசிகராக்கி
கார்ய பூதனானவன் அவதரித்த ஊரில் கொண்டாட்டம் ஒக்க நின்று கண்டால் போலே
மிகவும் உகந்து மங்களா சாசனம் செய்து
அவதரித்தவனுடைய திவ்ய அவயவங்களை பாதாதி கேசாந்தமாக நிரவத்யமான வளவன்றிக்கே
இதுவே பரம புருஷார்த்தம் என்று வஸ்து நிர்த்தேசம் செய்து
தாமும் மிகவும் உகந்து தம் போல்வார்க்கும் காணீர் –காணீர் -என்று -காட்டி அருளி
இவனுக்கு ஆஞ்ஞா ரூபமாகவும் அனுஜ்ஞ்ஞா ரூபமாகவும்
ப்ராப்தி நிபந்தனமான அபிமான ரூபமாகவும்
உபய விபூதியில் உள்ளாரும் உபகரித்த பிரகாரங்களை அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற அவர்கள் வரவிட்ட வற்றையும்
அவர்கள் கொடுவந்த வற்றையும் மேன்மையும் நீர்மையுமான மெய்ப்பாடு தோன்ற அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து-

அவன் அங்கீ கரித்த பின்பு
தொட்டிலேற்றித்
தாலாட்டி
ஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயத்தில் காட்டிலும் ஜஞேய ப்ராதான்யத்தைக் கற்ப்பித்து
அவற்றுக்கு ஜஞேய சீமை இவ்விஷயமாக்கி விஷயீ கரித்த ஜ்ஞானத்தை –
விஜ்ஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற ந்யாயத்தாலே ஜ்ஞாதாக்கள் ஆக்கி
இள மா மதீ -1-5-1-என்றும் –
விண்டனில் மன்னிய மா மதீ -1-5-6-என்றும்
உபய விபூதியில் உள்ளாரையும் உப லஷண நியாயத்தாலே இவன்
புழுதி அளைவது தொடக்கமான வ்யாபாரங்களைக் கண்டு
தாமும் மிகவும் உகந்து தம் போல்வாரையும் அழைத்துக் காட்டி
நோக்கின கண் கொண்டு போக வல்லீர்கள் ஆகில் போங்கோள்-என்று
முன்பு பச்சை வரவிட்டுத் தாங்கள் வாராதவர்களையும் வந்து கண்டு போங்கோள் -என்று
உய்ய உலகு படைத்து -என்று ஜகத் காரண பிரகாசகமான பரமபதம் முதலாக கீழே அருளிச் செய்த திவ்ய தேசங்களையும்
இதில் அருளிச் செய்த திருக் குறுங்குடி முதலான திவ்ய தேசங்களிலும் சந்நிஹிதனாய் நின்றவனும்
நாநாவான அவதாரங்களும் அபதாநங்களுமாக பிரகாசித்தவனும்
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -கீதை -15-15-என்கிறபடியே
சகல வேத சாஸ்திர இதிஹாச புராணாதிகளாலும் அறியப்படுமவன் நான் -என்றவனை -கீழே
நாராயணா அழேல் அழேல் -என்றவர் ஆகையால் –
நான் மறையின் பொருளே -1-6-3-
ஏலு மறைப் பொருளே -1-6-9-
எங்கள் குடிக்கு அரசே -1-6-10-என்று வாசகத்துக்கு வாச்யமும் -வாச்யத்துக்கு வாசகமுமாக அறுதியிட்டு அவனை
செய்யவள் நின்னகலம் சேமம் எனக்கருதி –ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை -1-6-1- என்கையாலே
லோகத்தில் உள்ளாருக்கு பீதி பக்தி பிராப்தி மூலமான ஆசாரங்கள் பிரமாண அனுகுனமாகத் தோன்றும்படி யாகவும்
சொல் வழுவாத ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தோன்றும்படியாகவும்
செங்கீரை என்கிற வ்யாஜ்யம் முதலாக
சப்பாணி
தளர்நடை
அச்சோ அச்சோ
புறம் புல்கல்
அப்பூச்சி என்கிற வியாபார விசேஷங்களைப் பிரார்த்தித்து
அவன் இவை செய்யச் செய்ய அவற்றுக்குத் திருவடிகள் நோம் -என்றும்
தளர் நடையில் விழுந்து எழுந்து இருக்கையாலே திரு மேனி நோம் -என்றும்
அச்சோ புறம் புல்குகளாலே தம்முடைய திரு மேனியை வன்மை என்று நினைத்து
அத்தாலும் திரு மார்பு நோம் என்று அஞ்சி
நாம் பிரார்த்தித்து என்ன கார்யம் செய்தோம் -என்று அனுதபிக்கிற அளவில்
தன் நிவ்ருத்த அர்த்தமாக தன் திருத் தோள்களையும் ஆழ்வார்களையும் காட்ட
அவையும் பயா அபாய ஹேது வாகையாலே அவற்றை அமைத்து திரு மேனியில் வாட்டத்தை நினைத்து
படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் இத்தனை என்று உறங்குகிறவனை எழுப்பி
அநச்னன்-என்கிற பிரதிஜ்ஞ்ஞையைக் குலைத்து
அஸ்நாமி -என்கிறபடியே அமுது செய்ய வேணும் -என்கிறார் –

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்-2-2-2-
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான்
வைத்த நெய்யால் -சாஷாத் முத்தரையும்
காய்ந்த பாலால் -சொல்லுவதே ஓத்தின் சுருக்கு -என்றும்
நாம நிஷ்டோசம் யஹம் ஹரே -என்றும் இருக்கிறவர்களையும்
வடிதயிரால் -சதுர்த்தி உகாரங்களிலே தெளிந்து -தந் நிஷ்டராய் –
மகாரத்திலே ப்ர்க்ருத்யாத்ம விவேக யோக்யரானவர்களையும் –
நறு வெண்ணெயால் -செவ்வி குன்றாமல் இவ்வடைவிலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்து
அஹங்கார மமகார நிவ்ருத்தமான ஆத்ம குணங்களால் பூரணராய் மோஷ சாபேஷராய்-இருக்கிறவர்களையும் சொல்லுகிறது –

யமர்ந்து என் முலை யுணாயே —2-2-5-
உன் இஷ்டத்திலே போக்குவரத்து சீகர கதி யானாலும்
அழைக்க வரும் போது மந்த கதியாக வேணும் காண் –
இனி இவர்க்கு முலைப்பால் ஆவது
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமாய் –
மங்களா சாசன பர்யந்தமான பக்தி ரூபா பன்ன ஜ்ஞான ப்ரவாஹம் இறே
பக்தி உழவன் ஆனவனுக்கு தாரகாதிகள் எல்லாம் இது தானே இ றே-

இருடீ கேசா முலை யுணாயே-2-2-6-
இந்த்ரியங்கள் வ்யக்தி அந்தரங்களிலே செல்லாதபடி சௌந்தர்யாதிகளாலே அபஹரிக்க வல்லவனே –
இடையாலே
ஒன்றையும் பொறாத வைராக்யமும் –
இடை நோக்குவது
முலைகள் விம்மி பெருத்தல் ஆகையாலே மிக்க பக்தியையும்
விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் -ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்
மேல் நுழைந்த வண்டு -என்கையாலே இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்
இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்
இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது
திரு மாளிகையிலே ஆகையாலே இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-

சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே —2-2-11-
பாட வல்லார் தாமே சென்ற சிந்தை பெறுவார்
சீர் –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
செங்கண் –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் -ஆதல்
பெருமை யாதல்
வ்யாமோஹம் ஆதல் –

ஜல சம்ருதி மாறாத செங்கழு நீரைச் சொல்லுகையாலே
மங்களாசாசன குணத்திலே ஒருப்பட்ட ஸூமநாக்களையும்-
நிகழ் நாறும் -என்கையாலே -அவர்களுடைய பிரசித்தியையும் சொல்லுகிறது –

——

போய்ப்பாடுடைய-2-3- பிரவேசம் –

கீழே -தாயார் வாய்ச் சொல் கருமம் கண்டாய் -என்றும்
தீமை செய்து அங்கம் எல்லாம் புழுதியாக யளைய வேண்டா -என்றும்
பலவிடங்களிலும் சொல்லிற்று கேட்கிறார் இல்லை -என்று இருக்கையாலும் –
ஆஸ்ரித பரதந்த்ரனான அவதாரத்திலே மெய்ப்பாடு தோன்றும் போதும்
ஆஸ்ரித வசனம் கேட்க வேணும் என்னும் தாத்பர்யம் தோன்ற வேணும் என்று
ஸ்ரவண இந்த்ரியத்திலே சம்ஸ்கார ஸூஷி யுண்டாக அவன் ஆசரித்து காட்டுகையாலே
இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான நிரபேஷ பிரகாசகம் ஒருபடிப் பட்டு இருக்கும் –
அவன் இப்படி ஆசரித்தான் என்றால் -இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான சாபேஷராய் இருக்கும்
தேக இந்த்ரியங்கள் ஜன்ம சித்தமாக யுண்டாய் இருக்கச் செய்தேயும்
த்ருஷ்டாத்ருஷ்ட ரூபமான பதார்த்தங்களை ஜன்ம சித்தமான அந்த இந்த்ரியங்களாலே குறிக் கொண்டு கிரஹிக்கும் போதும்
பிரமாணிகரான பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களுக்கு சேர்ந்த வர்த்தமான ஆச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
இவ் வனுஷ்டானம் தான் இல்லை யாகிலும் திராவிட வேதத்துக்கு கருத்து அறியும் மூதுவர் நிர்ணயித்த வாச்ய வாசக சம்ப்ரதாயத்தாலே
வ்யாபகத்வாரா வாசக வாச்யங்களை பிரதம மத்யம நிகமன பர்யந்தமாக
அர்த்த தர்சனம் பண்ணுவிக்க வல்லவர்களுடைய அனுதாப வசனங்களாலும்
அனுதாப ஹேது வானால் இறே செவி வழியே கலை இலங்குவது
ஸ்ரோதாச -அனுதாப ஹேதுவான அர்த்த் க்ரஹண சப்த மாத்ரங்களை வருந்தியும் குறிக் கொண்டு க்ரஹிக்கைகாக இறே
அந்த ஸ்ரவண இந்த்ரியத்துக்கு சம்ஸ்கார ஸூஷி யுண்டாக்கிற்று என்று –
அத்தை நினைத்து
அந்த ஸூஷியை பலகாலும் தொட்டுப் பார்க்க வேணும் இறே
உன் செவியில் புண்ணைக் குறிக் கொண்டு இரு-என்று இ றே லோக உக்தியும் –

வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் –2-3-5-
விஷ்ணு சப்தம் சாதாரண வ்யாவ்ருத்தமான படி தோன்ற நீ இங்கே வாராய் என்று பிடித்து திரி இடுகிறாள்
கேசவனை -விட்டுவே -என்கிறாள்
கரும் குழலாலே -பிரசச்த கேசன் -என்றது பின்நாட்டின படி-

————————————————————————————–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் அனுபவித்து அருளிச் செய்யும் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி —

June 26, 2020

மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப் பன்னு பாடல்–1-1-10-

தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்று–1-2-21-

மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்–1-3-10-

ஒளி புத்தூர் வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை–1-4-10-

புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் இன்னிசை மாலைகள் இப் பத்தும்–1-5-11-

பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்து–1-6-10-

வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன–1-7-11-

மச்சணி மாட புதுவை கோன் பட்டன் சொல்–1-8-11-

விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழ் ஈரைந்து–1-9-11-

—————

விட்டு சித்தன் விரித்த சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்து–2-1-10-

குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர் பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல்–2-2-11-

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண்டு-2-3-13-

பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்–2-4-10-

விண் தோய் மதிள் வில்லி புத்தூர் கோன் பட்டன் சொல்-2-5-10-

வில்லிபுத்தூர் பட்டன் ஒக்க உரைத்த தமிழ் பத்து–2-6-10-

பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே – 2-7 10-

வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை–2-8-10-

பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்–2-9-11-

புதுவைக் கோன் பட்டன் சொல்–2-10-10-

———–

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்ஏரார் இன்னிசை மாலை–3-1-11-

பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல் இன் தமிழ் மாலைகள்–3-2-10-

செற்றம் இலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்–3-3-10-

வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை–3-4-10-

திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ் பட்டார் பிரான் சொன்ன மாலை-3-5-11-

புதுவைக் கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் -3-6-11-

கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை–3-7-11-

தண் புதுவை பட்டன் சொன்ன தூய தமிழ் பத்து–3-8-10-

செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல் ஐந்தினோடு ஐந்து–3-9-11-

பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல்–3-10-10-

—————

செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை–4-1-10-

கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல் –4-2-11-

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 3-11 –

கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்–4-4-11-

பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர் கோன் சித்த நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை–4-5-10-

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று–4-6-10–

வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று தங்கியவன் பால் செய் தமிழ் மாலை–4-7-11-

திருவாளன் திருப்பதி மேல் திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன–4-8-10-

தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் –4-9-11-

அரங்கத்து அரவணைப் பள்ளியானை வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை–4-10-10-

————-

வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ்–5-1-10-

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5 2-10 –

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன் ஒன்றினோடு ஒன்பது–5-3-10-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –22-கார்த்திகையானும் கரி முகத்தானும்- இத்யாதி —

April 6, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

முன்பு தன்னோடு எதிரிட்ட தேவ ஜாதி -பின்பு தன் வைபவத்தை அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்காக வாணன் அபராதத்தை பொறுத்த ஸ்ரீ சர்வேஸ்வரனை ஏத்தும்
ஸ்ரீ எம்பெருமானார்-எனக்கு ஆபத்து தனம் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

பாணன் என்கிற கோர அசுரன் கோர தபச்சாலே ருத்ரனை வசீகரித்து -அவனைத் தன் வாசலிலே வைத்துக் கொண்டு
இருந்த காலத்தில் -அவன் தன் பெண் பிள்ளையான உஷா நிமித்தமாக ஸ்ரீ அநிருத்தாழ்வானை நிரோதிக்க –
ஸ்ரீ கிருஷ்ணன் இந்த வ்ருத்தாந்தைக் கேட்டு -அவன் மேல் படை எடுத்து வர –
ருத்ரனும் சபரிகரனாய் கொண்டு வந்து எதிரிட்டு -ஸ்ரீ கிருஷ்ணனோடே கோர யுத்தம் பண்ணி -பலாயிதனான பின்பு –
தன்னை உள்ளபடி அறிந்து ஸ்தோத்ரம் பண்ணினவாறே –
அப்போது ருத்ரன் முதலான தேவ ஜாதிக்காக – பாணனுடைய ஆர்த்த அபராதத்தைப் பொறுத்த
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்துதிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு மகா நிஷேப பூதர் -என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தன்னை எதிர்த்து போரிட்ட அமரர் மக்கள் இவர்களோடு கூடிய முக் கண்ணன் என்னும் இவர்கள்
தோல்வி அடைந்து தன் வைபவத்தை அறிந்து துதிக்க –அவர்களுக்காக வாணன் அபராதத்தை
பொறுத்த ஸ்ரீ சர்வேஸ்வரனை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானார்-எனக்கு சமயத்துக்கு உதவ சேமித்து வைத்த செல்வம்-என்கிறார்

ஸ்ரீ எம்பெருமானார்க்கு பூர்வாசார்யர்கள் ஆன ஸ்ரீ நாத முனிகள் ஸ்ரீ ஆளவந்தார் இவர்கள் இடம் உள்ள பக்தி பேசப்பட்டது-
கீழ் இரண்டு பாசுரங்களாலே –
இனி கீழ் கூறிய ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ நாத முனிகள் -ஸ்ரீ ஆளவந்தார் -இவர்கள் பர தேவதையாக வழி பட்ட ஸ்ரீ கண்ணன் இடத்தில் –
அவருக்கு உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –இந்த பாசுரத்தில் –
கண்ணன் கல்லது இல்லையோர் கண்ணே -என்று
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
நம் கண்ணன் கண் அல்லது இல்லை கண்
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ கண்ணனையே பர தேவதையாக ஸ்தாபித்தார் –
ஸ்ரீ நாத முனிகள் யமுனைக் கரையிலே குடி இருந்து யமுனைத் துறைவனை வழி பட்டும் –
அத திருநாமத்தையே தம் திருப் பேரனாருக்கு சாத்தச் சொல்லியும் –
அரசன் தன் பெண்டிரும் தானுமாய் இவர் யோகத்தில் இருப்பதைக் கண்டு வியந்து மீண்டு போகும் பொழுது –
திரு உடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும் -என்ற படி ஸ்ரீ கண்ணனும் கோபியருமாக கருதி –
அம் மேதகு மன்னனை பின் தொடர்ந்து – ஸ்ரீ கண்ணனை தாம் காமுற்று பரதேவதையாய் வழி பட்டதை காட்டி அருளினார் –
ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ கண்ணனை –தனைப் பற்றி அருளிய ஸ்ரீ கீதையை –
ஸ்ரீ மணக்கால் நம்பி இடம் இருந்து கேட்டு -அதில் கூறப்படும் பர தேவதையை தவிர மற்று ஒரு உபாயம் இதனின் மிக்கது இல்லை –
அதனை இப்போதே சாஷாத் கரிக்க வேணும் என்று வேட்கை மீதூர்ந்து –
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ திருவரங்கத்தால் ஸ்ரீ பெரிய பெருமாளை காட்ட –
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடும் அன்று தொட்டு பிரியாது ஸ்ரீ கீதைப் பொருளாம் அரங்கனை வழி பட்டு –
ஸ்ரீ கண்ணன் பால் உள்ள தன் பரத்வ பிரதிபத்தியை காட்டி அருளினார் –

இவ்விதம் ஆழ்வாரும் ஆச்சார்யர்களும் உகந்த ஸ்ரீ கண்ணனை ஸ்ரீ எம்பெருமானாரும் ஏத்துவதாக -கோருகிறார் ஸ்ரீ அமுதனார் –
ஸ்ரீ கண்ணனது பரத்வம் பாணாசுர யுத்தத்தில் தெளிவாக வெளிப்படுதலின் வாணனது பிழையை
பொருத்து அருளிய தூய்மையை ஸ்ரீ எம்பெருமானார் எத்துவதாக சொல்லுகிறது இந்த பாசுரம் –

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

பத உரை –
கார்திகையானும் -கார்த்திகேயன் என்று சொல்லப்படுகிற சுப்ரமண்யனும்
கரி முகத்தானும் –யானை முகனான கணபதியும்
கனலும் -அக்னி தேவனும்
முக் கண் மூர்த்தியும் -மூன்று கண்கள் கொண்ட வடிவு படைத்த ருத்னனும்
மோடியும் -காளியும்
வெப்பும் -ஜவர தேவதையும்
முதுகிட்டு -புற முதுகு காட்டி ஓடி
பின்னர்
மூ வுலகும்-மூன்று உலகங்களையும்
பூத்தவனே என்று -உண்டு பண்ணிணவனே என்று
போற்றிட -துதிக்க
அவர்க்காக
வாணன் -பானாசுரனுடைய
பிழை பொறுத்த -குற்றத்தை மன்னித்த
தீர்த்தனை-சுத்தமானவனை
ஏத்தும் -ஸ்தோத்ரம் செய்கிற
இராமானுசன்-எம்பெருமானார் –
என் தன் சேம வைப்பு –எனக்கு சேமித்து வாய்த்த செல்வம் ஆவார் –

கிருத்திகா நஷத்திர சம்பந்தத்தாலே கார்த்திகேயன் என்று சொல்லப்படுகிற ஸூப்ரஹ்மண்யனும் கஜ முகனான கணபதியும் –
அவர்களுக்கு சகாயமாய் வந்த அக்னியும் -த்ரி நேத்ர யுக்தமான-வடிவை உடைய ருத்ரனும் – துர்கையும் -ஜ்வரமும்–
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடியங்கி யோடிட -திரு சந்த விருத்தம் -71 – என்கிறபடியே
புறம் காட்டி யோடி –
கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் -விஷ்ணு புராணம் -5 33-41 – –
என்கிறபடியே ஸ்ரீ சர்வேஸ்வரன் என்று அறிந்த பின்பு –
க்ருதகம்- அக்ருதகம் -க்ருதகாக்ருதம் -என்று மூன்று வகைப் பட்டு இருக்கிற இந்த அண்டத்தை உன்னுடைய
திரு நாபீ கமலத்திலே ஜனிப்பித்தவனே -என்று அவனுடைய ஜகத் காரணத்வ கதனத்தாலே –
அவனுக்கும் தங்களுக்கும் உண்டான பித்ரு புத்ர சம்பந்தாதிகளை ஸூசுப்பித்து நின்று தங்களை ஆஸ்ரயித்த
வாணனுடைய ரஷண அர்த்தமாக ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்காக பாணாசுரனுடைய அபராதத்தை ஷமித்த குண சுத்தியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை
அந்த குண வித்தராய் கொண்டு -ஏத்துகிற ஸ்ரீ எம்பெருமானார் -எனக்கு ஆபத்துத் துணையாக சேமித்து வைத்த -தனம் ..
போற்றுதல்-புகழ்தல்
வைப்பு -நிஷேபம்–

தோள் பலம் கண்ட பின்பே ஸ்தோத்ரம் பண்ணினான் ருத்ரன் –
கிருஷ்ண கிருஷ்ண மா பாஹோ-பிரகலாதன் -விரோசனன் -மஹா பலி -நமுசி -பாணன் -இருவரும் பிள்ளைகள் –
நமுசி மஹா பலி திருக் கோவலூரில் சேவிக்கலாம் –இதுவும் ஒரு பரம்பரை -அவதாரங்களும் இவர்களுக்காக –
காமரு சீர் அவுணன் -அன்றோ –
ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ நாத முனிகள் ஸ்ரீ ஆளவந்தார் -மூவர் திருவடி சம்பந்தம் அருளிச் செய்து –
இவர்கள் மண்டி கிடந்த ஸ்ரீ கண்ணன் பற்றி அருளிச் செய்கிறார் -இதில் –
அவன் இவன் என்று கூழேன் மின் -நெஞ்சினால் நினைப்பவன் எவன் அர்ச்சை பாடிய உடனே
அன்று தேர் கடாவின கழல் காண்பது என்று கொல் கண்களே என்பர் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவமே -ஸ்ரீ நம்மாழ்வார்
மூன்றாம் பதிகம் -முதல் இரண்டாலும் கொள்கை நிரதேசித்து அருளின பின்பு -சாஸ்த்ர மரியாதை படி நாராயணனே -என்றார் –

கார்த்திகையானும் -இத்யாதி
பிரகலாதனுடைய பௌத்திரனாய் -மகா பலியினுடைய புத்ரனான -பாணன் என்கிற மகா அசுரன் கோரமான தபச்சுக்களால்
ருத்ரனை பிரசன்னனாக்கி வசீகரித்துக் கொண்டு –
நீ என் வாசலில் இருந்து சகல லோக ஜெயத்தையும் பண்ணித் தர வேண்டும் என்று அர்த்தித்தவாறே -ருத்ரனும் அப்படியே
பார்யா புத்த்ராதி சஹிதனாய் வந்து தலையில் பூ வாடாதபடி உன்னைக் காக்கிறேன் என்று பிரதிக்ஜை பண்ணி
அவனுடைய வாசலிலே இருக்கிற காலத்திலே-
அவனுடைய கன்யகையான உஷா ரூப லாவண்யாதிகளால் அப்ரதிமையாய் இருக்கை யாலே –
அவளுக்கு க்ரீடார்த்தமாக ஒரு ஸௌதத்தை பண்ணிக் கொடுக்க – அவளும்
பஹூ பரிசாரிகா ஸ்திரீகளோடே அந்த ஸௌத தத்திலே விஹரியா நின்று கொண்டு -தனக்கு
தகுதியானவர்களைத் தேடும் பருவம் வந்த வாறே -ஒரு மாய பிறவியான தோழியை அழைத்து –
பூ லோகத்தில் இருக்கிற ராஜ குமாரர் எல்லாரையும் -ஒரு சித்ர படத்திலே எழுதிக் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல –
அவளும் அப்படி எழுதிக் கொண்டு அவள் கையில் கொடுக்க -அவள் எல்லோரையும் பார்த்து
அவர்களிலே ஸ்ரீ மத் த்வாரக நகர வாசியாய் -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பேரனாய் -ஸ்ரீ பிரத்யும்னனுடைய குமாரனான ஸ்ரீ அனிருத்தாழ்வானைப்
பார்த்து -அவரையே வரிக்க வேணும் என்னும் அதி வ்யாமோகத்தாலே அந்த தோழியை பிரார்த்திக்க –
அவளும் அசுர ஜாதியில் பிறந்த மாயாவினி யாகையாலே -ஸ்ரீ மத் துவாரகையில் உள்ள எல்லாரையும் வஞ்சித்து –
ஸ்ரீ அநிருத் தாழ்வானை எடுத்துக் கொண்டு வந்து அந்த ஸௌததத்திலே வைக்க –

ஸ்ரீ உஷையும் ஸ்ரீ அநிருத் தாழ்வானும் அந்யோந்யம் ச வதித்துக் கொண்டு -காந்தர்வ விவாஹத்தாலே
ஒருவரை ஒருவர் வரித்து போக பரராய் இருக்க –
பாணனும் அச் செய்தி அறிந்து குடில சித்தனாய் ஸ்ரீ அநிருத் தாழ்வானைப் பிடித்து நிரோதிக்க –
இவ் வ்ருத்தாந்தத்தை ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டருளி வாணன் மேல் சீறி ச பரிகரனாய் படை எடுத்து வர –
அவன் வாசலில் இருந்த ருத்ரன் எதிரிட்டு தோற்று ஸ்துதி பண்ணினான் என்று -இந்த வ்ர்தாந்த்தங்கள் எல்லாம் –
பாஹவத ஹரிவம்சாதிகளிலே பிரசித்தம் இறே –
அந்த கதா முகேன இப் பாட்டை அருளிக் செய்கிறார் –

கார்த்திகையானும் –
ருத்ர புத்ரனாய் கிருத்திகா நஷத்ரத்திலே ஜலத்திலே ஜனித்த சண்முகனும்
கார்திகையானும்
சரவணத்தில் பிறந்த சுப்ரமணியனுக்கு கார்த்திகைப் பெண்கள் பால் கொடுத்த காரணத்தால் கிருத்திகை மன்னனாக
அவன் கூறப்படுகிறான் -கார்த்திகேயன் -எனபது வட மொழி பெயர்

கரி முகத்தானும் –
ருத்ரன் தஷ யாக த்வம்சம் பண்ணின போது அங்கே இருந்தவர்கள் இவனுடைய சிரசை சேதித்தவாறே –
தேவ ஜாதி எல்லாம் திரண்டு வந்து ஒரு ஆனையினுடைய தலையை அறுத்துக் கொண்டு வந்து -இவன் கழுத்தின் மேலே சேர்க்க –
அன்று தொடங்கி கஜானனன் என்ற பேரை வகித்த ருத்ர கணபதியும் –
கரி முகத்தானும்
கரி-யானை-வட சொல் –
கார்திகையானும் கரி முகத்தானும் முக் கண் மூர்த்தியினுடைய மக்கள் ஆவர் –

கனலும் முக்கண் மூர்த்தியும் –
லோக சம்ஹாரம் பண்ணுகிற சம்வர்த்த காலாக்னி போலே பிரஜ்வ விதமான
மூன்று கண்களை உடைய நாமத்தாலே விருபாஷன் என்று பேசப்படுகிற ருத்ரனும் –
அன்றிக்கே –
கனலும் -என்று
அவர்களுக்கு சகாயமான அக்னியை சொல்லவுமாம் –
முக் கண் மூர்த்தி –
எரித்து விடுவான் என்னும் அச்சத்தை விளைவிக்கக் கூடிய வடிவு படைத்தவன் -என்றபடி
இத்தகைய திறன் உடைமையே ஸ்ரீ கண்ணனையும் மதிக்காது எதிர்க்கும்படி செய்தது -என்க-

மோடியும் –
துர்க்கையும் –
வெப்பும் –
யுத்த பரிகரமாய் எதிர்படைக்கு சந்தாபகரமான -ஜ்வராதி தேவதையும் –
மோடியும் –
இவளை ஸ்ரீ விஷ்ணு புராணம்-கோடரி-என்கிறது
அசுரர்கள் உடைய குல தேவதையாய் -வித்யா ஸ்வரூபமான இவள் வாணன் மீது சக்கரத்தை
ஸ்ரீ கண்ணன் பிரயோகிக்க முற்படும் போது -வாணனை காப்பதற்காக -கண்ணன் எதிரே அரையில் ஆடை இன்றி
நின்றதாகவும் -அதனால் வெட்கி -ஸ்ரீ கண்ணன் கண்களை மூடிக் கொண்டே சக்கரத்தை பிரயோகித்ததாகவும் –
அந்த புராணத்திலே பேசப்படுகிறது –
அவ்விடத்துக்கு ஸ்ரீ எங்கள் ஆழ்வான் -அருளிய வ்யாக்யானத்தில் –
ஸ்ரீ கண்ணன் அவளுக்கு -பன்னிரண்டு ஆண்டுகள் என்னிடம் பக்தி செலுத்திய பயன் உன்னை ஒரு கால் பார்த்து
வணங்கின மாத்ரத்திலே நசித்து விடும் -என்றும் –
எப்பொழுதும் அரையில் ஆடை அற்றவளாக கடவை -என்றும் சாபம் இட்டதாக மேற்கோள் காட்டி யுள்ளார் –
ஸ்ரீ திரு மழிசை பிரானும்-மோடியோடி லச்சையாய்ச் சாபமெய்தி முக் கணான் – என்று திருச்சந்த விருத்தத்தில் -53 –
சாபமிட்ட செய்தியை அருளி செய்து இருப்பதும் -இங்கு அறிய தக்கது –
அதன் வ்யாக்யானத்தில் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை -சாத்விகர்க்குத் தர்சனமே தொடங்கி லஜ்ஜையாம் படி
இவர்களால் அபரிக்ராஹ்யையான சாபத்தை ப்ராபித்த காளியோடே-என்று அந்த சாபத்தை விளக்கி இருப்பதும் காண்க –

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே ––ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–53-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–71-

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே––பெரிய திருமொழி–5-7-6-

நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?––ஸ்ரீ திருவாய் மொழி–6-4-8-

இத்தனை சாதனங்களுடன் வந்து யுத்தம் பண்ணி –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய பாண பாதத்துக்கு சஹிக்க மாட்டாதே –
முதுகிட்டு –
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிட –என்கிறபடியே – விமுகராய் புறம் காட்டி ஓடி –
முதுகிட்டு
பாணாசுர னோடு போரிட அவன் நகராகிய சோணித புரத்தை நோக்கி ஸ்ரீ கண்ணன் படை எடுத்து வந்த போது –
தானும் தன் மக்களும் பக்க பலமாக வந்த அக்னி முதலிய தேவர்க்களுமாக முக் கண்ணன் வாணனை காக்க முற்பட்டு
போருக்கு ஆற்றாது -புறம் காட்டி ஓடினான் -என்க –
பிறகு பாணாசுரன் ஸ்ரீ கண்ணனை நேர எதிர்த்து போரிட -அவ்வசுரனுடைய ஆயிரம் தோள்களையும் அறுத்து
அவனைக் கொல்ல ஸ்ரீ கண்ணன் கருதிய போது -முக் கண்ணன் தன்னால் அபயம் அளிக்கப்பட அவனைக் காக்கும் நோக்குடன் –
மூவுலகும் பூத்தவனே -என்று கண்ணனைப் போற்றி -வாணனை கொல்லாது காக்குமாறு வேண்டினான் -என்க –

அப்போது அவனுடைய பரத்வத்தை அறிந்து –
மூ வுலகும் பூத்தவனே –என்று –
க இதி பிரம்மணோ நாம ஈசோஹம் சர்வதேஹினா – ஆவாந்த வான்சே சம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் –
ஏதவத் வைவிபுதச்ரே ஷ்டவ் பிரசாத குரோத ஜவ ச்மர்தவ் -ததா தர்சித பந்தானவ் ஸ்ர்ஷ்டி சம்ஹார காரகவ் -என்றும்
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-என்றும்
சொல்லுகிறபடியே
சமஸ்த லோகங்களையும் ஸ்ர்ஷ்டிக்கைக்காக காரண ஜலத்திலே ஒரு பவனான ஆலம் தளரின் மேலே பள்ளி கொண்டு
அவனுடைய திரு நாபீ கமலத்திலே -சதுர் முகன் தொடக்கமான சகல ஜகத்துக்களின் உடையவும் -உத்பத்தி காரணமாய்
இருப்பதொரு தாமரைப் பூவை விகசிப்பித்த ஜகத் காரண பூதன் ஆனவன் -என்று போற்றிட –

கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் . ஜகதாகவே உபாதான காரணமாக
ப்ரஹ்ம சரீரம் நீராய் நிலனாய்–போல…நீ தான் புருஷோத்தமன்
தங்களுக்கும் அவனுக்கும் உண்டான பித்ர் புத்ராதி சம்பந்தங்களை சூசிப்பியா நின்று கொண்டு –ஸ்தோத்ரம் பண்ண –

போற்றுதல்-
புகழுதல் –
கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் –என்றும் –
கிருஷ்னேதி மங்களானாம் யச்யவாசி பிர வர்த்ததே பச்மீபவந்தி ராஜேந்திர மகாபாதக கோடாயா-என்றும்
கிருஷ்ணா-என்றும் தான் தீர கழியச் செய்த அபராதத்துக்கு பிராயச்சித்தார்தமாக -திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறான் காணும் –
ப்ராயச்சித்தான்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை -யாநி தேஷா மசெஷாணாம் கிருஷ்ண அனுஸ்மரணம் பரம் -என்னக் கடவது இறே –

கிருஷ்ண -என்றும்
கிருஷி ப்ர்பூ வாசகஸ் சப்தோனஸ் ச நிர்வர்த்தி வாசக -தயோரைக்யம் பரப்ரம்ம கிருஷ்ணா இத்யபிதீயதே -என்னும்படி –
உபய விபூத் யாத்மகனாய் – என்றும் –
ஜகச்சச -என்று தத்ரூப மகா ப்ர்திவி யானவனே – என்றும் –
மகா பாஹோ -பூர்வ காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் -அசுத்தாஸ்தே சமஸ்தாச்து தேவாத்யாம் கர்ம யோக -என்றும் –
அவித்யாந்தர்க்க தாஸ் சர்வே -என்றும் –
நமேவிதுஸ் சூரகணா பிரபவன்ன மகர்ஷய – என்றும் சொல்லப்பட்ட பிரக்ரதர் யாகையாலே –
ஹரி ஹரர்கள் இருவருடையவும் -பலாபலங்களை அறிவதற்காக விஸ்வ கர்மாவை அழைத்து -இரண்டு தனுச்சுக்களைப் பண்ணச் சொல்ல –
அவனும் அப்படியே பண்ணிக் கொடுக்க -அவர்கள் அந்த தனுச்சுக்களை எடுத்து இருவர்
கையிலும் கொடுத்து -யுத்தம் பண்ண வேணும் என்று பிரார்த்திக்க -அப்படியே இருவரும் யுத்தம் பண்ணுகிற போது –
விஷ்ணுவுடைய சர வேகத்தை -ருத்ரன் சஹிக்க மாட்டாதே மிகவும் அவசன்னனாய் -ரஜஸ் தமச்சுக்கள் அபி பூதமாய் –
சத்வம் தலை எடுத்தவாறே -அப்போது அவரை -சர்வ ஸ்மாத்பரன் -என்று அறிந்து -ஸ்தோத்ரம் பண்ணினான் -என்று பிரசித்தம் இறே –
அப்படியே இப்போதும் தமோத்ரேகத்தாலே யுத்தம் பண்ணி -அவனாலே அடி பட்டு -பின்பு சத்வம்தலை எடுக்க –
பூர்வ காலத்திலே அபதானத்தை ஸ்மரித்து -அவனுடைய பாஹூ பலத்தை அறிந்தவன் ஆகையாலே –
மகா பாஹோ என்று சம்போதிக்கிறான் –
ஜானே -இவ்வளவும் தேவரீர் கொடுத்த அதிகாரத்தாலே யுத்தம் பண்ணி -அடி பட்ட பின்பு –சத்வம் தலை எடுத்து தெளிந்தேன் –
சத்வாத் சஞ்சாய தேஜ்ஞ்ஞானம் -என்றது இறே -தெளிந்த படி
எங்கனே என்னில் –
த்வாம் புருஷோத்தமம் -என்றும் –
வாசுதேவ குமாரராய் -ஆஸ்ரித சுலபனான தேவரீரை – என்றும் –
புருஷோத்தமம் –என்றும் -அதோச்மிலோகேவேதேச பிரதித புருஷோத்தம -யோ மா மேவ மசமூடே ஜாநாதி புருஷோத்தமம் -என்று
தேவரீர் அருளிச் செய்த படி -பரம புருஷன் என்று -இப்போது தெளிந்தேன் என்று -போற்றிட –
இப்படி குணி நிஷ்ட குணாபிதானம் பண்ணி ஸ்துதிக்க –

வாணன் பிழை பொறுத்த –
இந்த ஸ்தோத்ரத்தாலே பிரசன்னனாய் ஸ்ரீ அநிருத் தாழ்வானை நிரோதித்து –
மகா அபராதம் பண்ணி நின்ற -வானனுடைய மகா அபராதத்தை ஷமித்த –

தீர்த்தனை –
ஒருவன் சில அபராதங்களைப் பண்ணினால் அவை அனுபவ பிராயசித்தங்களாலே போக்க வேணும் -இறே –
இவன் அப்படி அன்றிக்கே -ஒருவரை ஸ்தோத்ர மாத்ரத்தாலே -அவனுடைய பாபங்களை எல்லாம் பொடி பண்ணின -பாவனனை –
பதித பாவனனை-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-

வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை –
வாணனுக்கு அபயம் அளித்து -தன்னை எதிர்த்தவன் முக் கண்ணனாய் இருப்பினும் -தற் சமயம்
தன் பிரபாவத்தை உள்ளபடி உணர்ந்து அவன் வேண்டிக் கொண்டமையின் வாணனை கொல்லாது விட்டதோடு –
அவன் பிழையையும் பொறுத்து அருளினான் ஸ்ரீ கண்ணன் –
அத்தகைய சுத்தமான குணம் உடையவன் என்றபடி-இவ் வரலாற்றினை ஸ்ரீ ஹரி வம்சத்திலும் -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் –
ஸ்ரீ பாகவதத்திலும் விரிவாக காணலாம் -இதன் சுருக்கம் வருமாறு –

பாணாசுரன் பரம சிவ பக்தன்-பரம சிவன் நடமாடும் போது மத்தளம் கொட்டி அவனை மகிழ்வித்தான் –
பரம சிவன் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் கரம் கொடுத்ததோடு -பரிவாரமும் தானுமாக -அவனுக்கு காவலாக கூடவே இருந்தான் -.
தம்பதிகளான பார்வதி பரமேஸ்வரர்கள் இணைந்து விளையாடி மகிழ்வதை பாணாசுரன் மகள் உஷை கண்டாள் –
தானும் இவ்வாறே கணவனைப் பெற்று அவனோடு இன்புற்று வாழ்வதற்கு ஆசை கொண்டாள்-
இதனை அறிந்த பார்வதி -வைகாசி மாதம் வளர் பிறை த்வாதசி அன்று நீ ஒரு கனா காண்பாய் –
அக்கனாவில் உன்னோடு ஒரு ஆடவன் கூடுவான் -அவனே உனக்கு கணவன் ஆவான் -அவனோடு கூடி விளையாடி
நீயும் என்னைப் போல் இன்புறுவாய் -என்று உஷையை நோக்கி கூறினாள்-
அவ்வாறே உஷை கனா கண்டாள் –
அவனை தன் தோழி சித்ர லேகை எழுதிக் காட்டிய பல சித்திரங்களுள் ஒன்றினால் அடையாளம் கண்டு கொண்டாள் உஷை-
அவன் ஸ்ரீ மத் த்வாரகையில் உள்ள ஸ்ரீ கண்ணனுடைய பேரனும் ஸ்ரீ பிரத்யும்னனுடைய புத்திரனுமான ஸ்ரீ அநிருத்தனே -எனபது ஊர்ஜிதம் ஆயிற்று –
அந்தபுரத்திலே உறங்கிக் கொண்டு இருக்கும் போது சித்ர லேகை தன் யோக வித்யையின் பலத்தினால்
யாரும் அறியா வண்ணம் அவனை உஷையின் கன்னி மாடத்தில் கொணர்ந்து அவனை காண்பித்தாள்
ஸ்ரீ அநிருத்தன் உஷையுடன் கூடிக் கழிப்பதை பணி யாட்கள் வாயிலாக ஒருவாறு அணிந்த வாணன்
போராடி இறுதியில் நாக பாசத்தாலே அவனைக் கட்டிப் போட்டான் –

ஸ்ரீ அநிருத்னனைக் காணாது கலங்கிய ஸ்ரீ கண்ணன் முதலியோர் நாரதர் மூலம் விஷயம் அறிந்து
ஸ்ரீ அநிருத்னனை மீட்பதற்காக சோணித புரத்தை நோக்கி படை எடுத்து வந்தனர் –
நினைத்தும் வந்த ஸ்ரீ கருடன் மீது ஸ்ரீ கண்ணன் எழுந்து அருளினான் –
வந்த படையை சிவ பிரானுடைய ப்ரமத கண்கள் தடுத்தன -அவர்களை சிதற அடித்து நகரை நெருங்கியது ஸ்ரீ கண்ணன் படை –
பின்னர் மூன்று தலைகளும் மூன்று கால்களும் கொண்ட சிவ பிரானை சேர்ந்த ஜவர தேவதை வாணனை
காப்பதற்காக கண்ணனோடு போர் இட்டது -வைஷ்ணவ ஜவர தேவதையால் அது நிராகரிக்கப்பட்டது –
பிறகு அக்னி தேவன் தோற்கடிக்கப் பட்டான் –
அசுரப் படை அனைத்தும் -வாணனும் -சிவ பிரானும் -சுப்ரமணியனும் போருக்கு எழுந்தனர் –
ஸ்ரீ கண்ணனுக்கும் பரம சிவனுக்கும் பயங்கரமான போர் மூண்டது –
ஸ்ரீ கண்ணன் ஜ்ரும்பகாஸ்த்ரத்தால் சிவ பிரானை கொட்டாவி விட்டு கொண்டே இருக்க செய்து ஒய்வுறச் செய்தான் –
சுப்பிரமணியன் வாகனம் கருடனால் புண் படுத்தப்பட்டது –
பிரத்யும்னனின் பாணங்களால் நோவுற்று ஸ்ரீ கண்ணன் ஹூங்காரத்தாலே சக்தி ஆயுதம்
பயன் அற்று போரினின்றும் விலகி ஓடினான் சுப்பிரமணியன் –
அசுரப்படைகளும் சிவ பரிகாரங்களும் நலிவுற்றன –

பின்னர் நந்தி தேரோட்ட ஸ்ரீ கண்ணனோடு போரிட முற்பட்டான் வாணன்
ஐந்நூறு விற்கள் ஏந்தி ஆயிரம் கை படைத்த வாறன் வாணன் -பல பல பாணங்களை எய்து
இறுதியில் ஸ்ரீ கண்ணனை கையில் சக்கரம் எடுக்கும்படி செய்தான் –
வாணனை கொல்லும் கருத்துடன் ஸ்ரீ கண்ணன் கையில் சக்கரம் எடுத்ததும் வாணனை காப்பதற்காக அசுரர்களுடைய
குல தெய்வமும் வித்யா ரூபமுமான கோடரி என்னும் பெயர் வாய்ந்த கௌரியின் சக்தி
அறையில் ஆடை இன்றி கண் எதிரே நின்றாள்-அவள் நின்றதும் ஸ்ரீ கண்ணன் கண்ணை
மூடிக் கொண்டே வாணன் தோள்களை துணிப்பதர்க்காக சக்கரத்தை ஏவினான் -அவன்
தோள்களை அது அறுத்து தள்ளியது -மீண்டும் அவனை நாசப் படுத்துவதற்காக சக்கரத்தை
ஏவ முற்படுவதை கண்டு உமாபதி தன்னால் அபயம் அளிக்கப்பட்ட வாணனை பிராணன் போகாமல் காப்பதற்காக
ஸ்ரீ கண்ணனை போற்றி வேண்டிக் கொண்டான் –

கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் -என்று
நீண்ட கை படைத்த கிருஷ்ண கிருஷ்ண உன்னைக் புருஷோத்தமனாக அறிகிறேன் –
கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத- எனபது தற்காலப் பாடம் -என்று தொடங்கி
நான் அபயம் என்று சொன்னதை பொய்யாக்காது அருள வேணும் –
என்னிடம் இருந்து வரம்யேற்று செருக்கு கொண்டனன் – பொருத்து அருள வேண்டும் என்று மன்றாடினான் –
ஸ்ரீ கண்ணன்-உனக்காக பொறுத்தேன் என்று சக்கரத்தை ஏவாது வாணனை உயிரோடு விட்டு விட்டான் –
ஸ்ரீ கருடன் காற்றுப் பட்டதும் அநிருத்தனை கட்டி இருந்த நாக பாசம் விடுபட்டது -ஸ்ரீ அநிருத்னனையும் ஸ்ரீ உஷையையும் மீட்டுக் கொண்டு
ஸ்ரீ கண்ணன் முதலியோர் ஸ்ரீ மத் த்வாரகைக்கு மீண்டும் வந்து சேர்ந்தனர் –
உன்னை புருஷோதமனாக அறிகிறேன் என்றமையால்-அறியாமையால் முன்பு போரிட்டதை சிவ பிரான்
ஒப்புக் கொண்டமை தெரிகிறது -ஸ்ரீ அமுதனார் –
இங்கே முதுகிட்டு -போற்றிட -என்னும் சொல் அமைப்பாலே
முதுகிட்டமையால் பிரபாவத்தை அறிந்து -போற்றினதை உய்த்து உணர வைத்தார் –
போற்றிட வாணன் பிழை பொறுத்த -என்றமையின் போற்றின முக் கண்ணனுக்காக வாணன் பிழை பொறுத்தமை தோற்றுகிறது-

மூ வுலகும் பூத்தவனே என்று போற்றிட –
இந்த மூ வுலகு எனபது -பூ லோகம் -ஸ்வர்க்க லோகம்-பாதாள லோகம் என்னும் மூ வுலகைக் குறிப்பிட வில்லை –
எல்லா வுலகும் ஸ்ரீ கண்ணன் படைப்பு ஆதலின் -ஆனவே அணைத்து உலகங்களையும் அடக்குவதற்காக –
கிருதகம்-அகிருதகம் -கிருதகா கிருதகம் –என்னும் மூ வகைப்பட்ட வுலகம் என்று கொள்ள வேணும் –
இந்த அண்டத்தையே -என்றதாயிற்று –
பூத்தவனே –
ஸ்ரீ நாபீ கமலத்தை மலரச் செய்வதன் மூலம் பிறப்பிதவனே -என்றபடி –
பூவின் இடம் உள்ள பூத்தலை அதனை உடையான் மேல் ஏற்றி கூறுவது உபசார வழக்கு –
ஸ்ரீ நாபீ கமலம் மலருவதே லோக சிருஷ்டி என்றும்
அது கூம்புவதே லோக சம்ஹாரம் என்றும் சொல்லப்படுதலின் -இங்கனம் கூறினார் –
இனி பூத்தல்
விரிதலாய் உலகு அனைத்தும் தன்னுள் ஒடுங்க நின்ற இறைவன் விரிவு அடைதலே சிருஷ்டி யாதலின் -இங்கனம் கூறினதாகவுமாம் –
மூ வுலகும் பூத்தவனே -பொறுத்து அருள்க -எனபது சொல் எச்சம் –
பிறப்பித்தவன் நீ -பிறந்தவர்கள் நாங்கள் – ஆகையால் நாம் தந்தையும் மக்களும் ஆகிறோம் –
பிதேவ புத்ரச்ய -என்றபடி மகன் திறத்து பிதா பொறுத்துக் கொள்வது போல பொருத்து அருள வேணும் எனபது கருத்து –
வாணன் மன்னிப்பு கோரா விடினும் அவனுக்காக முக் கண்ணன் கோர – வாணன் பிழை பொறுத்தான் ஸ்ரீ கண்ணன் –
இதனால் -அஹமச்ம்ய பராதானாமாலய -நான் குற்றங்களுக்கு கொள்கலம்-என்று
சரண் அடைந்தவருக்கு மாத்திரம் அன்றி -அவர் அபிமானத்தை பெற்றவருக்கும் குற்றங்களை பொறுத்து
அருள் சுரக்கும் பெரும் தன்மை கண்ணன் இடம் துலங்குவது காணலாம் –

ஸ்ரீ கண்ணன் என்னும் தெய்வம் தவிர மற்றைத் தெய்வங்கள் கருணை காட்டினும் ஆபத்து காலத்து உதவகில்லாது
கை விட்டு ஓடி விடுவன -சீறின நிலையிலும் ஸ்ரீ கண்ணனே ஆபத்துக்கு உதவுமவன் என்பதும் இங்கே தெளிதற் பாலது –
தேக பந்துக்களை துறந்து -பற்ற வேண்டியவனான ஸ்ரீ கண்ணனை தன் பெண்ணாகிய உஷைக்காக பகைத்து
போரிடப் புறப்பட்டது -பாணனது பிழையாகும் –
மேலும் காதல் மணம் புரிந்து தன் மகள் ஸ்ரீ அநிருத்னனோடு கூடினதற்கு பிறகு ஸ்ரீ கண்ணனோடு தனக்கு சம்பந்தம் வாய்த்து
இருப்பதை பயன்படுத்தி காதல் தம்பதிகளை இணைத்து ஸ்ரீ கண்ணன் இடம் ஒப்படைத்து பேர் உவகை கொள்ளுமாறு
செய்ய வேண்டி இருக்க தன் தோள் வலிமையை பெரிதும் மதித்து போருக்கு புறப்பட்டு அல்லலுக்கு உள்ளாகியதும் அவன் இடம் உள்ள பிழையாம் –
அனுபவித்தோ அல்லது பிராயச்சித்தம் செய்தோ தீர்க்க வேண்டிய அபராதங்களையும் பகைவர் திறத்தும் போக்கியும் போக்கி அவர்களை
தூயராக்கிய தூய்மையை கருதி -தீர்த்தன் -என்கிறார் –

ஆபத்துக் காலத்திலேயே உதவிய ஸ்ரீ கண்ணனது தூய்மையினை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானாரோ எனக்கு
ஆபத்து காலத்தில் உதவுவதற்காக சேமித்து வைத்த செல்வம் என்றார் ஆயிற்று –

ஏத்தும் –
இந்த பிரபாவத்தை இட்டு ஸ்துதிக்கிற –
ஏத்தும் -என்கிற வர்த்தமான நிர்தேசத்தால் –
ஸ்ரீ பாஷ்ய கீதா பாஷ்யாதிகளாலே -சர்வ காலத்திலும்-லோகத்தில் அவனுடைய பிரபாவத்தை ச்தாபிக்கிறவர் -என்றபடி –

இராமானுசன் –
எம்பெருமானார் –

என் தன் சேம வைப்பே –
எனக்கு யாவதாத்ம பாவியாய் -உஜ்ஜீவிக்கும்படி -சேமித்து வைத்த ஆபத்து தனம் – என்றது ஆய்த்து –
வைப்பு -நிஷேபம் –

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4-
என்று ஸ்ரீ பெரும் புறக் கடலை வைப்பு நிதி என்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-

ராமானுசன் எனக்கு சேம வைப்பே –
நம் கண்ணன் கண்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி போல் ஸ்ரீ சுவாமியும் தீர்த்தன் என்கிறார் இங்கு
என்றும் ரஷிக்க போகிறவர் ஸ்ரீ ராமனுஜன்–யாராலும் கை விட்டவரை ஸ்ரீ சுவாமி காப்பார்..
இந்த குணம் ஸ்ரீ கீதாசார்யன் மூலம் பெற்றார் ஸ்ரீ ஸ்வாமி –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –21-நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர்-இத்யாதி —

April 4, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருவடிகள் ஆகிற ப்ராப்யத்தை பெற்றுடைய ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் –
ஆகையால் ஷூத்ரருடைய வாசல்களிலே நின்று அவர்கள் ஒவ்தார்யாதிகளைச் சொல்லி ஸ்துதியேன்-என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இவ்வளவும் -ஸ்ரீ ஆழ்வார்கள் உடையவும் -ஸ்ரீ மன் நாத முனிகள் உடையவும் சம்பந்தத்தை இட்டு –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய வைபவத்தை யருளிச் செய்து கொண்டு வந்து –
இதிலே சரம பர்வ நிஷ்டர் எல்லாருக்கும்-ஸ்வாமியான ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருவடிகளை உபாய உபேகமாக பற்றின –
ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து- அருளின பின்பு -இனி நீசரான மனுஷ்யரை ஸ்துதித்து க்லேசப் பேடன் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருவடிகளை பெரும் பேறாக உடைய ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் .
ஆகையால் அற்பர்கள் உடைய வாசல்களில் நின்று அவர்கள் உடைய வள்ளன்மை முதலியவற்றைக்
கூறிப் புகழ் பாட மாட்டேன் -என்கிறார் –

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

பத உரை –
தூய் நெறி சேர் -சுத்தமான ஒழுக்கம் வாய்ந்த
எதிகட்கு -சந்நியாசிகட்கு
இறைவன்-தலைவரான
யமுனைத் துறைவன் -ஆளவந்தார் உடைய
இணை -ஒன்றுக்கு ஓன்று ஒத்த
அடியாம்-திருவடிகள் ஆகிற
கதி -பேற்றை
பெற்று உடைய -அடைந்து அதனை உடையவராய் இருக்கிற
இராமானுசன் -எம்பெருமானார்
என்னைக் காத்தனனே-என்னைக் காப்பாற்றி அருளினார்
இனி -இனிமேல்
நிதியைப் பொழியும் -நவ நிதிகளையும் தாரையாகக் கொட்டும்
முகில் என்று -மேகம் என்று
துதி கற்று -புகழ் பாடப் பயின்று
உலகில் -இவ் உலகத்தில்
நீசர் தம் -அற்பர்கள் உடைய
வாசல் பற்றி –வாசலிலே காத்துக் கிடந்தது
துவள்கின்றிலேன் -துவண்டு வறுமை தோற்ற நிற்கின்றிலேன்-

வியாக்யானம் –
பரி சுத்த அனுஷ்டான யுக்தரான -எதிகளுக்கு நாதரான -ஸ்ரீ ஆளவந்தார் உடைய பரஸ்பர சத்ருசமான திருவடிகளாகிற
ப்ராப்யத்தை பெற்றுடையராய் இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் –
ஆன பின்பு நிதியை வர்ஷியா நிற்கும் மேகம் என்று அவர்களுடைய ஒவ்தார்ய கதனத்துக்கு உறுப்பான ஸ்தோத்தரங்களை
கற்று லோகத்திலே அஹங்காராதி தூஷிதரான தண்ணியர்கள் உடைய வாசலைப் பற்றி-நின்று –
என்னுடைய ரஷண அர்த்தமாக அவர்கள் அவசரம் பார்த்து துவளக் கடவன் அல்லேன் –
தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் -என்கிற இது –
ஸ்ரீ ஆளவந்தாருக்கு விசேஷணம் ஆகவுமாம்-
நெறி-ஒழுக்கல்
கதி–அதாவது ப்ராப்யம்–

யதீஸ்வரர் -ஸ்ரீ ஆளவந்தாருக்கும் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் இயையும் –
இல்லாதது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -மொட்டைத் தலையன் -கதை
என்னை காத்தனன் -நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என்னையும் கூட –
இன்பம் பயக்க -ஸ்ரீ திருவாறன் விளை அன்றோ – ஸ்ரீ திருவாய் மொழி அரங்கேற்றப் பட்ட திவ்ய தேசம் -துணைக் கேள்வி

தூய் நெறி சேர் –
சுருதி பத விபரீதஷ் வேளகல்ப ஸ்ருதவ் சப்ரக்ருதி புருஷ யோக ப்ராபகா சோனதத்ய –என்கிறபடியே
அபரிசுத்தமாய் இருக்கிற உபாயாந்தரங்களுக்கும் -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் -அஞ்ஞான அசக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது என்றும் –
மதிராபிந்து மிஸ்ரமான சாதகும்ப மய கும்ப கத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான உபாயாந்தரம் என்றும் சொல்லப்படுகிற -அவத்யங்கள் ஒன்றும் இன்றிக்கே –
அத்யந்த பாரதந்த்ர்ய ஸ்வரூப அநு ரூபமாய் -அதிலும் -பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான ஈஸ்வரனை பற்றுகை அன்றிக்கே –
மோஷ ஏக ஹேதுவான சதாசார்யனைப் பற்றி -அதிலும் –
அஹங்கார கர்ப்பமான தான் பற்றும் பற்றுகை அன்றிக்கே -கிரூபா மாத்திர பிரசன்னாசார்யரான ஸ்ரீ ஆள வந்தார் –
தம்மாலே பரகதமாக ச்வீகரிக்கப் பட்டது ஆகையாலே -அத்யந்த பரிசுத்தமான
ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கிற -தூய்மை -பரி சுத்தி –நெறி –உபாயம் –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான்
நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே–3-7-4-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

எதிகட்கு
ஐஹிக ஆமுஷ்மிகம் சர்வம் கதி ரஷ்டாஷரப்ப்ரத -என்றும் –
மாதா பிதா வுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் -என்றும் சொல்லுகிறபடியே –
ஸ்வா சார்யரான ஸ்ரீ ஆள வந்தாரே தங்களுக்கு ஐ ஹிக ஆமுஷ்யங்கள் எல்லாம் என்று கொண்டு –
மேக பிந்துக்களை ஒழிய மற்று ஒன்றை விரும்பாத சாதகம் போலே – ததீய விஷயங்களை விரும்பாதபடி –
தம் தாமுடைய மனசை நியமித்துப் போகிற –ஸ்ரீ பெரிய நம்பி –ஸ்ரீ திருமலை நம்பி –ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் -ஸ்ரீ திருமாலை ஆண்டான் -ஸ்ரீ திருக் கச்சி நம்பி –ஸ்ரீ மாறனேர் நம்பி -முதலானவர்களுக்கு –

இறைவன் –
ஸ்வாமி யானவர் –

யமுனைத் துறைவன் –
யமுனா தீரத்தில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு உத்தேச்யராய் –
ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலிலே எழுந்து அருளி இருந்த ஸ்ரீ சுவாமிகளுடைய திரு நாமத்தை வஹித்த ஸ்ரீ ஆள வந்தார் உடைய

இணை யடியாம்
பாவனத்வ போயத்வங்களாலே பரஸ்பர ச தர்சமான-திருவடிகள் ஆகிற –

கதி பெற்று –உபாயத்தை லபித்து-உபாய உபேயங்களாக பற்றி -என்றபடி –
கதி –
கதி -அதாவது ப்ராப்யமும் ப்ராபகமும் –
அத்தாலே லோகத்தில் உள்ள பிரபன்ன ஜனங்களுக்கு எல்லாம்-ஸ்வாமியாய் இருக்கிற-

இராமானுசன்b
எம்பெருமானார் –

என்னைக் காத்தனனே –
லோகத்தில் ஞாநாதிகரை ரஷித்தது ஆச்சர்யமாய் இராது –
பிரதி கூலனாய் இருக்கிற என்னை -அநு கூலனாக்கி ரஷித்தான் –
இது என்ன அகடிதகடநா சாமர்த்தம் என்று வித்தராகிறார் –

தூய் நெறி சேர் யதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் -கதி பெற்று உடைய -என்கிற இது –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

தூய் நெறி சேர் எதிகட் கிறைவன் –
இவ்வடை மொழி ஸ்ரீ யமுனைத் துறைவற்கும் இசையும் -ஸ்ரீ இராமனுசற்கும் இசையும் –
நெறி-ஒழுக்கம் -உபாயமுமாம்
ஒழுக்கம் –ஆவது
அனுஷ்டானம் -அது சாத்விக த்யாகத்துடன் -பகவான் என்னைக் கொண்டு தன் பணியை
தன் உகப்புக்காக செய்து கொள்கிறான் என்றும் நினைப்புடன் -அனுஷ்டிக்கப் படுதலின் தூயதாயிற்று -என்க –
இனி அஹங்காரக் கலப்பினால் மாசுற்ற மற்ற உபாயங்களை விட்டுத் தூயதான சித்த உபாயத்தின்
எல்லை நிலமான ஆசார்யனையே உபாயமாக கொள்ளலின் தூய் நெறி என்றார் ஆகவுமாம் –
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ நாத முநிகளையே உபாயமாகவும்-
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ ஆளவந்தாரையே உபாயமாகவும் -கொண்டு உள்ளமையின் தூய் நெறி சேர்ந்தவர்கள் ஆயினர் என்க –

யமுனைத் துறைவன் –
ஸ்ரீ ஆளவந்தார் திரு நாமம்
அவருக்கு ஸ்ரீ நாத முனிகள் விருப்பப்படி இத் திருநாமம் சாத்தப்பட்டது என்பர் –
யாமுநேயர் -என்பது வட மொழி திரு நாமம் -பொருள் ஒன்றே –
கதி -பெறப்படுவது -பேறு என்றபடி
குருரேவ பராகதி -என்று குருவையே சிறந்த கதியாக சாஸ்திரம் சொல்லுவதும் காண்க –

ஸ்ரீ ஆளவந்தாரைப் பற்றி ஸ்ரீ எம்பெருமானார் –
யத் பதாம் போருஹ த்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ வஸ்துதாம் உபயதோஹம் யாமுநேயம் நமாமிதம் -என்று
எவருடைய திருவடித் தாமரையை உபாயமாக த்யானம் செய்ததனால் பாபம் அனைத்தும் நீங்கப் பெற்றவனாய்
ஒரு பொருளாகி விட்டேனோ -அந்த ஸ்ரீ யமுனைத் துறைவனை வணங்குகிறேன் -என்று
அருளிய ஸ்லோகம் இங்கு அனுசந்திக்கத் தக்கது
நேர் ஆசார்யர் ஸ்ரீ பெரிய நம்பியே ஆயினும் -அவர் தம்மை ஸ்ரீ ஆளவந்தார் உடைய கருவியாகவும் –
ஆ முதல்வன் -என்று முந்துற முன்னம் ஸ்ரீ பெருமாள் கோயிலிலே கடாஷித்த ஸ்ரீ ஆளவந்தாரே நேர் ஆசார்யராகவும்
கருதினதாலும் -அங்கனமே ஸ்ரீ எம்பெருமானாருக்கு –
ஸ்ரீ பெருமாள் மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்து வானோர் வாழத் தண்ட காரண்யத்துக்கு
எழுந்து அருளினது போலே ஸ்ரீ ஆளவந்தாரும் அடியானான அடியேனை உமக்கு வைத்து
மேலை வானோர் வாழத் திரு நாட்டுக்கு எழுந்தி அருளினார் -என்று உபதேசித்த தனால்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடையரானார் என்க –
ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஸ்ரீ மணக்கால் நம்பி நேரே ஆசார்யன் ஆனாலும் தம் ஆசார்யர் திரு உள்ளப்படி
நித்யம் யதீயசரணவ் சரணம் மதீயம் -என்று
பரமாச்சார்யார் ஆன ஸ்ரீமன் நாத முனிகள் திருவடிகளையே கதியாகவும் பற்றினது -போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் பரமாச்சார்யர் ஆன ஸ்ரீ ஆளவந்தார் இணை அடியாம்-கதியைப் பெற்று உடையரானார் -என்க-

இனி யமுனைத் துறைவர் இணை யடி -என்பது
ஸ்ரீ ஆளவந்தார் திருவடியான ஸ்ரீ பெரிய நம்பியை குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-
இவ் விஷயம் லஷ்மீ நாத -பத்ய வ்யாக்யானத்தில் ஸ்பஷ்டம் –

ஆச்சர்ய அனுக்ரகம் ஒன்றாலே பெற பெறுவோம்
முக் கண்ணான் எட்டு கணான் 1000 கண் சேர்ந்து ஆச்சார்யர் கண் சமம் இல்லை-
இவ் உலக அவ் உலக இன்பம் எல்லாம் ஆச்சார்யர் எல்லாம் வகுத்த இடமே
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் …மேக பிந்துவை ஒன்றையே நோக்கும் சாதக பறவை போல –

சித்தி த்ரயம் கை விளக்கு கொண்டு வேதார்த்த சங்க்ரஹம் -வேதார்த்ததீபம் போன்றன அருளினார்-
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி கொண்டு கத்ய த்ரயம் அருளினார்-
கீதா சங்க்ரஹம் கொண்டு கீதா பாஷ்யம் அருளினார்-

என்னைக் காத்தனன் –
என்னைக் காக்கும் பொறுப்பைத் தாமே ஸ்ரீ எம்பெருமானார் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்ட படியால்
நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலைந்து துவள வேண்டியது இல்லை-என்றது ஆயிற்று –

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே–3-7-6-

இனி
அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்-

நீசர் தம் வாசல் பற்றி –
ய கஞ்சித் புருஷ அதம ரகதிபயக்ராமேச மல்பார்த்தத்தம் -என்கிறபடியே
அஹங்கார தூஷிதராய் -நிஹீநராய் இருக்கிறவர்களுடைய –
துரீச்வர த்வார பஹிர்விதர்த்தி காதுராசி காயை ரசிதோய மஞ்சலி -என்கிறபடியே-
நரக பிராயமான வாசலை ஆஸ்ரயித்து –

நிதியைப் பொழியும் முகில் என்று –
லோகத்திலே மேகம் ஜலத்தை வர்ஷிக்கும் இத்தனை –
இந்த தாதாவானால் நவ நிதியையும் ஒருக்காலே வர்ஷிக்கும் காள மேகமாய் இருந்தான் என்று –

துதி கற்று
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்கிற
தர்மஜ்ஞ சமயத்தையும் லன்கித்து வாய் வந்த படி எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணி –
மற்று ஒருவர் சொன்ன மித்யா ஸ்தோத்ரங்களை அப்யசித்து முன்னே சொன்னேன்-என்னுதல் –

உலகில் –
இப்படி இருந்த உலகில் -இருள் தரும் மா ஞாலத்திலே-

துவள்கின்றிலேன்
அவர்கள்-உடைய அவசரம் பார்த்து -என்னுடைய ரஷண்த்துக்காக கிலேச படக் கடவேன் அல்லேன் –
துவலுகை -வாடுகை –
குரு பாதாம் புஜம் த்யாயேத் குரோர் நாம சதா ஜபேத் குரோர் வார்த்தார்ஸ் சதக யேத் குரோர் அந்ய ந பாலயேத் –-என்கிறபடியே
இருக்கக் கடவேன் என்று கருத்து –

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழி தோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான் கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ–3-9-5-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான் கிலேன்;
மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே–3-9-7-

நிதியை ….துவள்கின்றிலேன் இனி –
நீசர் -அதமர்கள்-பணச் செருக்கினால் மற்றவரை மதிக்காதவர்கள்-
அஹம் மமேதி சண்டாள -என்றபடி -அஹங்காரம் சண்டாளனாக கூறப்பட்டது –
அதனுக்கு இடம் தருவாரும் அத்தகையினரே –
மத்பக்தான் ச்ரோத்ரியோ நிந்தத் சத்யச்சண்டாளதாம் வ்ரஜேத் -என்று
வேதம் ஓதியவன் என் பக்தர்களை இகழும் பொழுதே சண்டாளன் ஆகி விடுகிறான் -என்றபடி
பணம் படைத்தவர்கள் பக்தர்களையும் மதிக்காது -இகழ்வதனால் உடனே சண்டாளர்கள் ஆகி விடுகிறார்கள் –
அவர்கள் வாசலில் உலகில் தவிர்க்க ஒண்ணாத பசி முதலியவற்றால் துவண்டு சமயம் எதிர்பார்த்து கிடக்கின்றனர் மக்கள்.
அந்த நீசரை மகிழ்விப்பதற்காக தம்மிடம் தகுதி இன்மையால் புகழுரை பாடப்பாடம் கற்று வருகின்றனர் –
மாரி யனைய கை – என்று பச்சை பசும் பொய்களை பேசுகின்றனர் –
நிதியை பொழியும் முகில் -எனபது போன்றவற்றை கற்று வந்து -வாசலில் துளள்கின்றனர் –
அங்கனம் அவர்கள் துவள்வதற்கு காரணம் -தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் திறன் இல்லாமையும் –
காப்பாற்றுவார் வேறு இல்லாமையும் –
எனக்குத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறன் இல்லாவிடினும் –
ஸ்ரீ எம்பெருமானார் என்னைக் காப்பாற்றி விட்டார் -இனி ஏன் நான் துவள வேண்டும்-என்கிறார் ஸ்ரீ அமுதனார் –

நிதியை பொழியும் மேகம் -ஜலம் கொட்டாது நிதியை கொட்டுகிறாய் என்று ஸ்தோத்ரம் கற்று–இனி துவள் கின்றிலேன்
இனி-காத்த பின்பு-நவ நிதியை வர்ஷிக்கும் காள மேகம் ஸ்ரீ எம்பெருமானார் இருக்க –
இந்த கஷ்டம் இனி எனக்கு இல்லையே –

மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும்–ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் -ஆச்சார்ய ஹிருதயம்-சூரணை–156–

பூண்ட நாள் சீர்க் கடலை உள் கொண்டு
திரு மேனி நல் நிறம் ஒத்து உயிர் அளிப்பான்
தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞான ஹ்ரதத்தைப் பூரித்து
தீங்கின்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்து கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூறும் அடியவர்
உறையில் இடாதவர்
பு யற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும் —

அதாவது
1-பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு —
வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி
கொண்டு இருக்கும் -மேகம் போலே –
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் –
திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் –
சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே
புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே
உள்ளே அடக்கி கொண்டு —

2-திரு மேனி நன்னிறம் ஒத்து –
திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் –
சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

3-உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று
மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக –
விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-
சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி

4-ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –
மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –
ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே
ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற
வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

5-தீங்கின்றி வாழ நிதி சொரிந்து –
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் –
வாழ உலகினில் பெய்திடாய் -திருப்பாவை -3–என்றும் ,
மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும்
சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

6-கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —
ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-

7–வெளுத்து –
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து
(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து

8- ஒளித்து –
மறைந்து வெளியே முகம் காட்டாமல்
ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – )

9–கண்டு உகந்து –
உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து –

10-பர சம்ருத்தியே பேறான
அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

அன்பு கூறும் அடியவர் –
ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும்
அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்-
(ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை —
அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் –
அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

உறையில் இடாதவர் –
உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர அவரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக
பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

புயற்கை அருள் மாரி –
காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,
ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று
குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் –
இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி —

(நம்மாழ்வார் த்ரிகாலம் உணர்ந்தவர் -முற்பட்டவர் பின்பட்டவர் பற்றியும் அறிந்தவர்
வால்மீகி முற்காலம் பிற்கால நிகழ்வுகளை அருளிச் செய்தது போலே – )

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் –ஒரே பலன்கள் —

April 4, 2020

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே––பெரியாழ்வார் திருமொழி -1-1-10-

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே––நாச்சியார் திரு மொழி–4-11-

தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –பெரிய திருமொழி -9-9-10-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—-பெரிய திருமொழி–1-9-10-

——–

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே –பெரியாழ்வார் திருமொழி –1-4 10-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே –பெரியாழ்வார் திருமொழி -3 2-10 –

———-

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே –பெரியாழ்வார் திருமொழி -1-6 10-

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப்பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப்பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே பெரியாழ்வார் திருமொழி –2 8-10 –

————-

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த்தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களை பெற்று மகிழ்வரே பெரியாழ்வார் திருமொழி -1 9-11 – –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—–நாச்சியார் திரு மொழி–6-11-

————–

புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்தவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே -3 3-10 –

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-

—————

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 4-10 – –

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடிமுல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 5-11 –

—————–

மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லை தண் புதுவை பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே – 3-8 10-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 10-

——————

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – 3-9 11- –

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –பெரிய திருமொழி-–10-1-10-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே––ஸ்ரீ திருவாய் மொழி–9-10-9-

———–

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– பெருமாள் திருமொழி–7-11-

காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை
சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே – 5-1 10-

———–

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே –பெரிய திருமொழி–5 4-11 –

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–-நாச்சியார் திரு மொழி–7-10-

————

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—–பெருமாள் திருமொழி–1-11-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே––பெருமாள் திருமொழி–10-11–

———–

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே –பெருமாள் திருமொழி–4-11-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—-பெருமாள் திருமொழி— 8-11-

———-

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே––பெரிய திருமொழி–1-10-10-

நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே ––பெரிய திருமொழி–4-7-10-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—–பெரிய திருமொழி–2-1-10-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே ––பெரிய திருமொழி–9-10-10-

———

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—–பெரிய திருமொழி–2-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —பெரிய திருமொழி–5-7-10-

—————-

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே––பெரிய திருமொழி–3-2-10-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே –பெரிய திருமொழி–8-5-10-

——————-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே ––பெரிய திருமொழி–5-8-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –பெரிய திருமொழி-–7-3-10-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —பெரிய திருமொழி–8-8-10-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே ––பெரிய திருமொழி–9-6-10-

————-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –பெரிய திருமொழி–8-9-10-

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –பெரிய திருமொழி-–11-7-10-

————

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-

கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடி யுள் நின்றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே ––பெரிய திருமொழி–9-1-10-

—————-

மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே––பெரிய திருமொழி–3-1-10-

சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –பெரிய திருமொழி-–7-9-10-

————

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –நாச்சியார் திரு மொழி-–9-10-

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே––ஸ்ரீ திருவாய் மொழி–6-5-11-

—————————————————–—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் ஒற்றுமை —

April 3, 2020

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது—நான்முகன் திருவந்தாதி-63-

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-ஆர்த்தி பிரபந்தம்–28

———-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்——இரண்டாம் திருவந்தாதி—11-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் –நான்முகன் திருவந்தாதி –55-

————

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –திரு மாலை–17-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம்–13–

————-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—–பெரிய திருமொழி–2-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே -5-7-10-

———————-

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4-

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-5-

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6-

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-7-

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-8-

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-

—————–

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –-மூன்றாம் திருவந்தாதி –38-

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தேவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –-நான்முகன் திருவந்தாதி -20-

————-

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –-பெரிய திருமொழி-5-1-6-

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே–பெரிய திருமொழி-7-5-9-

———-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே––ஸ்ரீ திருவாய் மொழி-6-7-4-

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?––ஸ்ரீ திருவாய் மொழி–6-7-7-

—————-

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-9-5-

ஆர்வனோ ஆழி அங்கை எம்பி ரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர் விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறந்துக்கே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-9-8-

————–

கோது இல் வண் புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ்வினையேன் தடம் தோளியே–-பெரிய திருமொழி-4-2-4-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–-பெரிய திருமொழி-4-2-6-

————–

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –-பெரிய திருமொழி-5-1-7-

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி-8-8-6-

————–

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –-பெரிய திருமொழி–3-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –-பெரிய திருமொழி-5-8-10-

——————–

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2 7-9 – –

அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலர் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே பாது காவல் வைக்கும் கொலோ –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-8 7-

———–

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–-பெரிய திருமொழி-3-9-3-

அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே –பெரிய திருமொழி-4-1-5-

—————

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -மூன்றாம் திருவந்தாதி–19-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவ–-ஸ்ரீ திருவாய் மொழி -9-8-8-

——–

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து——இரண்டாம் திருவந்தாதி—12-

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு–நான்முகன் திருவந்தாதி -56–

————

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து -இரண்டாம் திருவந்தாதி-—50-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –-நான்முகன் திருவந்தாதி -39-

————

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –-ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-74-

அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே–-ஸ்ரீ திருவாய் மொழி -4-7-7-

—————

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–24-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை–நான்முகன் திருவந்தாதி -35-

————

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—நாச்சியார் திருமொழி -5-10-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–-பெரிய திருமொழி-6-6-5-

—————-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–-பெரிய திருமொழி-3-1-5-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே —-பெரிய திருமொழி-5-3-9-

————

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –-திருக் குறும் தாண்டகம்-5-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம்-13-

————–

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–-நாச்சியார் திரு மொழி –11-7-

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – திரு விருத்தம்–66 –

————–

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையை பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9 3- –

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலை யதே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-4 3-1 –

—————–

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே—பெரிய திருமொழி -—1-5-3-

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே–-பெரிய திருமொழி —3-5-7-

—————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————-

ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -ஸ்ரீ திருவாசிரியம் ––4-

ஊழி தோறு ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே! நீயும் மதுசூதன்
பாழிமையிற் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே?–-ஸ்ரீ திருவாய் மொழி-2-1-5-

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–-ஸ்ரீ திருவாய் மொழி–7-3-11-

———–

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–-ஸ்ரீ திருவாய் மொழி-3-3-2-

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –பெரிய திருமொழி -4-9-9-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –திருப்பல்லாண்டு–6-

————-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——முதல் திருவந்தாதி–89-

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –நான்முகன் திருவந்தாதி-–51-

————–

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு–நான்முகன் திருவந்தாதி–92-

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்––இரண்டாம் திருவந்தாதி–55-

—————-

ஏழை பேதையர் பாலகன் வந்து என் பெண் மகளை எள்கித்
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-7 4-

ஏழை பேதை இராப் பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள்;கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர்! இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–-ஸ்ரீ திருவாய் மொழி-2-4-10-

————–

ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-2-9-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–-பெரிய திருமொழி–3-5-9-

—————

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப் பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே–-ஸ்ரீ திருவாய் மொழி–4-7-8-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -ஸ்ரீ திருவாய் மொழி––9-4-9-

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே –கண்ணி நுண் சிறுத் தாம்பு–1–

—————

ஆழ்வாருடைய நிரதிசய போக்யதையைச் சொல்லுகிறது -ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர்
பிரதம அவதியான பகவத் விஷயத்திலே இழிவான் என் என்னில்
ஆழ்வாருடைய போக்யாதிசயம் தோற்றுகைக்காகவும் அவருடைய முக மலர்த்தி தோற்றுகைக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம் ஆகையாலும் பேசுகிறார் –

சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
2-அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
3-அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
4-கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
5-பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டார் வாசி உண்டே
6-இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
7-உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
8-தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
9-ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
10-கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
11-யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
12-எமர் கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
13-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
14-ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
15-மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
16-அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
17-பே ரே ன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் –நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கே திருவாய்மொழி இங்கே
18-வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
19-ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
20-பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
21-கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
22-உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
23-உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –

பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
1-போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
2-தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
3-பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தந்தாகிலும்
4-விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
5-இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
6-ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
7-கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
8-ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
9-சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் -நிற்கப்பாடி
10-உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

—————

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி-–4-7-1-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே––பெரிய திருமொழி-1-10-1–

——————-

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-4-

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-

————–

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே–-பெரிய திருமொழி –6-8-5-

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -பெரிய திருமொழி –6-10-4-

————

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக்காக்காய்
ஆழியான் தன குழல் வாராய் அக்காக்காய் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 2-5 5- –

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்––நாச்சியார் திரு மொழி–12-8-

—————–

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டமே முத்தம் தா –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 3-3 2-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— -பெருமாள் திருமொழி-8-11-

——————-

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —-திரு விருத்தம்–8-

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய் கின்றவே–-ஸ்ரீ திருவாய் மொழி-5-6-3-

————-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –-திரு விருத்தம்-19-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காத்து பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி–2-3 10- –

————–

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே -நாச்சியார் திரு மொழி-–14-4-

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் -நாச்சியார் திரு மொழி-–12-6-

—————

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——முதல் திருவந்தாதி–66-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி–10-7-2-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே -நாச்சியார் திரு மொழி––9-8-

—————

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே–-ஸ்ரீ திருவாய் மொழி-4-3-7-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-6-7-

—————

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–-ஸ்ரீ திருவாய் மொழி–7-4-11-

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–-பெரிய திருமொழி-11-2-1-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே–பெரிய திருமொழி—11-8-10-

—————————–

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே -பெரிய திருமொழி–7-6-4-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -பெரிய திருமொழி–8-6-9-

————-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
ஓன்று நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள மூளையும் என் வசம் அல்லவே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-4-4 – –

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4 10-9 –

—————–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—-பெருமாள் திருமொழி-8-3–

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —-பெரிய திருமொழி—8-3-8-

————–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —–அமலனாதி பிரான்–10-

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே —ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 9-4 – –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே––ஸ்ரீ திருவாய் மொழி–8-5-6-

—————-

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே––பெரிய திருமொழி-3-9-1-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–-நாச்சியார் திரு மொழி – -8-6-

————-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ் வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே–-ஸ்ரீ திருவாய் மொழி-5-2-5-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இளமான் திறத்தே–-ஸ்ரீ திருவாய் மொழி–5-6-4-

————

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்–நான்முகன் திருவந்தாதி -71-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–-பெரிய திருமொழி-1-10-8-

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–-பெரிய திருமொழி-2-1-8-

———-

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் ————பெரிய திருமொழி—-9-5-9-

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி––பெரிய திருமொழி–10-5-5-

—————

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே–பெரிய திருமொழி-4-8-6-

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3 7-11 –

————–

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்–இரண்டாம் திருவந்தாதி-78-

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே–நான்முகன் திருவந்தாதி -19-

————-

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – –திரு விருத்தம் -74 –

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே–-ஸ்ரீ திருவாய் மொழி-6-9-4-

————-

தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -பெரிய திருமொழி -4-5-4-

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–-பெரிய திருமொழி -2-10-4-

————–

தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–-பெரிய திருமொழி -3-6-6-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி –8-1-4-

———–

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–பெரிய திருமொழி–4-3-3-

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே–ஸ்ரீ திருவாய் மொழி —1-1-7-

————

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-7-6-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-7-8-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—-ஸ்ரீ திருவாய் மொழி-10-8-1-

————

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின்னயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே –திரு நெடும் தாண்டகம்-26-

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே –பெரிய திருமொழி–8-3-10-

—————–

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–-பெரிய திருமொழி-7-4-4-

தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்-20-

————-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ—-பெருமாள் திருமொழி- 8-10-

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –பெரிய திருமொழி–11-6-10-

—————

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே –பெரிய திருமொழி–8-2-8-

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –திருக் குறும் தாண்டகம் –11-

————-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே–ஸ்ரீ திருவாய் மொழி-6-3-3-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-3-10-

————–

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9 11- –

நந்தன் மதலை நிலமங்கை நற் துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –பெரிய திருமொழி–8-4-9-

————

நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–-பெரிய திருமொழி–3-5-2-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே –திரு விருத்தம்-39-

———————-

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 1-8 3- –

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 3-9 5-

——–

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 4-9 4-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே––நாச்சியார் திரு மொழி ––7-9-

———————–

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்துப் பல்படி கால் குடி குடி வழி வந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தான் –ஸ்ரீ திருவாய் மொழி –9-2-1-

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே––பெரிய திருமொழி–5-7-1-

——————-

பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே—பெரிய திருமொழி–2-2-4-

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –பெரிய திருமொழி—7-8-7-

—————

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ––பெரிய திருமொழி-9-9-7-

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ––பெரிய திருமொழி–9-9-7-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2-7 5- – –

—————

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–13-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்தஎன்
கள்ள மாயவனே! கரு மாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே––ஸ்ரீ திருவாய் மொழி-5-7-9-

———–

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே -பெரிய திருமொழி-–9-10-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -பெரிய திருமொழி–11-2-2-

————-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே -பெரிய திருமொழி–9-10-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -பெரிய திருமொழி–11-2-2-

—————-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று——முதல் திருவந்தாதி––20–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி -பெரிய திருமொழி-10-5-4-

————-

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –பெரிய திருமொழி–5-6-2-

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே -பெரிய திருமொழி–7-6-9-

————–

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்——முதல் திருவந்தாதி––10-

மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணன் எழில் கொள்மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-2-18-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4 1-9 –

————-

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–திரு மாலை–9–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே –பெரிய திருமொழி–8-10-3-

————–

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —இரண்டாம் திருவந்தாதி–28-

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –மூன்றாம் திருவந்தாதி-–3–

——————

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—-நாச்சியார் திரு மொழி -4-5-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –பெரிய திருமொழி–5-8-10-

—————–

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –பெரிய திருமொழி–6-2-3-

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே–-பெரிய திருமொழி-6-3-3-

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணி வண்ணா! மது சூதா! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே––ஸ்ரீ திருவாய் மொழி– 1-5-5-

————–

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 2-6 –

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –பெருமாள் திருமொழி-–4-6-

மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–-பெரிய திருமொழி-3-9-5-

——–

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் – –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–-3-10-7-

——————

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-1-2-12-

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-4 10-

———–

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே—ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1 3-10 –

வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க
கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை
கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே -பெரிய திருமொழி–3-10-9-

———–

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி–8-1-9-

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -பெரிய திருமொழி-8-3-7-

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -பெரிய திருமொழி-8-4-10-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே -பெரிய திருமொழி–7-1-10-

————–

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே –பெரிய திருமொழி–11-5-5-

வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 2-4 –

————

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே––பெரிய திருமொழி–1-10-9-

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –-பெரிய திருமொழி–8-9-5-

வந்தாய் போலே வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்; இதுவே இது வாகில்,
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய்! யான் உனை எங்கு வந்து அணுகிற்பனே?––ஸ்ரீ திருவாய் மொழி–3-2-5-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந் தாமரைக் கட் செங்கனி வாய் நாற் றோளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே—ஸ்ரீ திருவாய் மொழி–6-10-9-

————

வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்க ளிடையே?––ஸ்ரீ திருவாய் மொழி–3-5-4-

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-திருப்பள்ளி எழுச்சி—8 –

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4-

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –பெரிய திருமொழி —5-4-5-

————–

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 2-11 – –

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–3-10-4-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–3-10-10-

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே——பெரிய திருமொழி—–4-4-4-

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—–பெரிய திருமொழி–4-1-8-

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –பெரிய திருமொழி-–5-5-7-

வாராளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –பெரிய திருமொழி-–8-3-9-

—————

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –பெரிய திருமொழி–7-10-8-

வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே––பெரிய திருமொழி–4-3-7-

————

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே—–பெரிய திருமொழி–1-4-7-

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –பெரிய திருமொழி-–11-4-5-

———–

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் ——மூன்றாம் திருவந்தாதி–—-96-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால்கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும்தங்கு––பெரிய திருவந்தாதி —84-

————————–

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே––நாச்சியார் திரு மொழி–1-2-

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-நாச்சியார் திரு மொழி–2-5-

————

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 4-1-7- –

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்––நாச்சியார் திரு மொழி-5-2-

—————

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய்–ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 2 3-3 –

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே—பெரிய திருமொழி –8-8-7-

————–

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–-மூன்றாம் திருவந்தாதி–—69-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்—நான்முகன் திருவந்தாதி–40-

அருளிச் செயலில் சாரமான திருவாய் மொழியின் ப்ரமாண்ய அதிசயத்தை பிரகாசிப்பைகாக ,
ஆழ்வார்களுடைய ஐக கண்ட்யைத்தையும் ,அவர்களில் தலைவரான இவர் அருளிச் செய்த இப் பிரபந்ததினுடைய பிராபல்யத்தையும் ,
பிரதி பாதியா நின்று கொண்டு , ஏவம் பூதமான விதுக்குச் சேராத சாஸ்திரங்கள் பரீஷக பரித்யாஜ்யங்களாம் படியை அருளிச் செய்கிறார் ..

குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை
பரமதாதிகளாலே பரிஹரியாமல்
செஞ்சொல் செம்தமிழ் இன் கவி
பரவி அழைக்கும் என்று
அந்யோந்யம் கொண்டாடி
பேசிற்றே பேசும் ஏக கண்டரில்
என்னில் மிகு வென்னும் இவர் உரை
கொள் இன் மொழி கொண்டு
சாஸ்த்ரார்தங்களை நிர்ணயிக்க வேண்டுகையாலே
வலம் கொண்டு இதுக்கு சேராதவை
மநு விபரீதங்கள் போலே-(விலக்கப்படுவனவாம் )
(வலம் -பலம் -பிரபலம் என்றவாறு )

அதாவது –
ருஷிகளில் ,குரு சிஷ்யர்களான வியாச ஜைமிநிகளில் ,
(பூர்வ மீமாம்சை -கர்மகாண்ட விசாரம் -அபூர்வத்தை ஒத்துக் கொண்டு ஜைமினி -12-அத்தியாயங்கள் –
உத்தர மீமாம்சை –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூதரம் -4-அத்தியாயங்கள்
கர்ம விசாரம் பண்ணிய பின்பு – அதனாலே ப்ரஹ்ம விசாரம் –அத அதக– முதல் ஸூத்ரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஜாசா
அதாதோ கர்ம ஜிஜ்ஜாசா-பரமத -ஆதி என்றது -அந்நிய பரத்வங்களாலே-இரண்டாலும் – பரிஹரியாமல்-
கர்மம் செய்வதை சொன்னது இவை இரண்டாலும் )
குருவான வியாசனுடைய கிரந்தமான ,ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமினி உடைய
கிரந்தமான கர்ம ஸூத்ரத்தோடு நிரீஸ்வர வாதாதிகளால் ,வந்த விரோதத்தை ,
சம்பத் தேரிதி , ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–1-2-32-
( பிராணா ஹூதி ஹோமங்களை அக்னி ஹோத்ர ஹோமங்களாக செய்வதற்காக உபாசகனுடைய
மார்பு முதலான உறுப்புகளை நெருப்பு களாக கூறியுள்ளது என்று ஜைமினி சொன்னார் )
அன்யார்த்தம் து ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 1-4-18-
( வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமினி சொல்கிறார்-
ஜீவனைக்காட்டிலும் ப்ரஹ்மம் வேறுபட்டது என்று காட்டவே )
பரம் ஜைமினி முக்யத்வாத்—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 4-3-11-
( பர ப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதி வாஹிகர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று ஜைமினி எண்ணுகிறார்-
ப்ரஹ்ம கமயிதி என்ற இடத்தில் உள்ள ப்ரஹ்ம சப்தம் ப்ரஹ்மத்தின் இடமே முக்கியமாக இருப்பதால் )
ப்ராஹ்மனே ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4 -5-
( ப்ரஹ்ம சம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று
ஜைமினி சொல்லுகிறார் ) இத்யாதியான ,ப்ரஹ்ம ஸூத்தரங்களாலே
ஜைமினிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத் குண தத் உபாசன தத் பலாதிகளின் உடைய
அங்கீகாரம் உண்டு என்னும் இடமும் தோற்றுகையாலும் ,

மகா பாரதத்திலே ,ஹய சிர உபாக்யானாதிகளிலே பகவத் வியாச உபதேச லப்த
பரமாத்மா தத்வ ஞானம் உடையவனாய் சொல்லுகையாலும் ,
ஸ்ரீ வேத வியாசனும் ஜைமினியும் ஏக கண்டர்கள்..

இனி தேவதா நிராகரணம் பண்ணின இது ,ஈஸ்வர பிரநீதமாக வேதத்தை
சிலர் சொல்லுகையாலே ,அந்த பௌ ருஷேத்வம் அடியாக
விப்ரலம்பாதி தோஷங்களை கல்பித்து வேத அப்ராமண்யம் சொல்லுவது ,
வைதிக கர்மங்களை ,நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து ,
வேத ப்ராமண்ய கர்மா அவச்ய ,கர்தவ்யைகளை சாதிக்கையில் உண்டான இச்சையாலே
ஸ்வ மதம் அன்றிலே இருக்க பரம பதத்தை அவலம்பித்து சொன்னான் என்றாதல் ..
அன்றிக்கே தேவதா நிராகரணத்தில் ,தாத்பர்யம் இல்லை ..

அஸ்ருத வேதாந்தருக்கு கர்மத்தில் ,அச்ரத்தையை நிவாரிக்கைக்காக ,
கர்ம பிரதாண்யம் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே ,
நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ந பிரவர்த்ததே
நிந்திதாத் இதரத் பிரசம்கிதம் –
(நிந்தையானது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை -நிந்திக்கும் பொருளைக் காட்டிலும்
வேறான ஒரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது ) –என்கிற ந்யாயத்தாலே ,
தேவதா நிரகரணம் பண்ணின இது ,கர்ம பிரசம்சார்த்தம் ஆகையாலே
அந்ய பரம் என்றாதல் கொள்ள வேணும் என்று
இப்படி பரமத அன்ய பரத்வங்களால் பரிஹரிக்க வேண்டிற்று இறே .
( கர்மங்களை அவசியம் செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு ஆகையால் கடவுள் இல்லை என்று கூறின இது
வேறு ஒன்றிலே நோக்கு என்றாதல் கொள்ள வேண்டும் -என்று இப்படி பிறர் தம் மதம் மேற்கொண்டு கூறினார் –
வேறு ஒன்றினை உட்க்கொண்டு கூறினார் என்று பரிஹாரம் செய்ய வேண்டுமே )

அப்படியே
இங்கும் அந்யோந்ய வசன விரோதம் உண்டாய் ,அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாத படி
செஞ்சொல் கவிகாள்–திருவாய் -10-7-1-என்றும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் -பெரிய திருமொழி -2-8-2–என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள்-திருவாய் -7-9-6 -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7–1-7-என்றும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-2–என்றும்
பரஸ்பரம் ஸ்லாகித்து கொண்டு ,

பேசிற்றே பேசல் அல்லால்–திருமாலை -22- -என்ற படியே
ஒருவர் பேசினதே எல்லாரும் பேசும் ஏக கண்டரான
ஆழ்வார்களில் வைத்து கொண்டு

என்னில் மிகு புகழார் யாவர் –பெரிய திருவந்தாதி –4-என்று சேஷிக்கு அதிசயகராகப் பெற்ற
ப்ரீதி பிரகர்ஷத்தாலே என்னில் காட்டில் மிக புகழ் உடையார் ஆர் என்னும்
சர்வாதிகரான இவருடைய -உரை கொள் இன் மொழியாளை-திருவாய் -6-5–3- -என்கிற படியே
ஸ்ரீ ராமாயணாதிகளையும் ஸ்வ வைலஷண்யத்தாலே ஜெயிக்கும் படியான
சக்திகளைக் கொண்டு வேத தத் உப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ,சம்சயிதமான
அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும் படியாய் இருக்கும் ஆகையாலே –

வலம் கொண்ட வாயிரம்–திருவாய் -3–8-11-என்கிற படியே பிரதி பாத்ய வஸ்துவை உள்ள படியே
பிரதி பாதிக்க வல்ல சாமர்த்தியத்தை உடைத்தான இப் பிரபந்தத்துக்கு
சேராத சாஸ்திரங்கள் -மன் வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே –
( எந்த ஸ்ம்ருதியானது மனுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டு இருக்கிறதோ அது புகழப்படுவது இல்லை )
என்று சொல்லப் பட்ட மநு விபரீதமான ஸ்ம்ருதிகள் போலே கழிக்க படும் என்கை-

—————————————————–—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில்– ஒரே பாசுரத்தில் -பரத்வ வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி -ஐந்தும் உள்ளவை –

March 17, 2020

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந் துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-என்று

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–48-இப்படி பல பாசுரங்களும் உண்டே

——————–

ஸ்ரீ முதல் ஆயிரம்

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே–ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -3 4-10 –

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 5-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 10-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5 4-9 –

———-

மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்––ஸ்ரீ திருப்பாவை–5-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

—————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?–பெருமாள் திருமொழி-+ —1-10-

——–

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –-ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–17-

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–48

————-

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

——————————–

ஸ்ரீ பெரிய திருமொழி

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

சோத்த நம்பி யென்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தனம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்கெல்லாம்
மூத்த நம்பி முக்கண்ம்பி யென்று முனிவர் தொழு
தேத்தும் நம்பி யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—2-2-6-

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –2-5-3-

பேணாத வலி யரக்கர் மெலியவன்று
பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்
பொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-7-

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல்
திருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-4-

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-8-

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-9-

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-6-

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே -7-3-7-

உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை
அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3-

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -7-6-6-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

வானார் மதி பொதியும் சடை மழுவாளி யொடு ஒருபால்
தானாகிய தலைவனவன் அமரர்க்கு அதிபதியாம்
தேனார் பொழில் தழுவும் சிறு புலியூர் சல சயனத்
தானாயனது அடி அல்லது ஓன்று அறியேன் அடியேனே -7-9-4-

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீயோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே –7-9-7-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-3-

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே –7-10-7-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -8-6-9-

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை இன்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே –9-10-8-

துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே–10-1-4-

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-4-

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

————-

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –திருக் குறும் தாண்டகம் –3-

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர்சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே –திருக் குறும் தாண்டகம் –7-

————

நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –திரு நெடும் தாண்டகம்–8-

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-

—————————-

ஸ்ரீ திருவாய் மொழி–

தானோர் உருவே தனி வித்தாய்த் தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே–1-5-4-

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?–1-7-6-.

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஓக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9-4-

அமரர் தொழப் படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே–3-5-9-

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென் னிலங்கை எரி எழச் செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ–3-6-2-

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந் துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே–8-5-6-

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

————-

இயற்பா —

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது —- முதல் திருவந்தாதி-—39–

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் ——99-

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை ———100-

—————

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—–இரண்டாம் திருவந்தாதி–25—

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

—————–

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –-மூன்றாம் திருவந்தாதி–3–

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

———-

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—–நான்முகன் திருவந்தாதி –30-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

————

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –

—————-

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்––பெரிய திருவந்தாதி–68-

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

—————

இராமானுஜ நூற்றந்தாதி

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

————-

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-1-20- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 9, 2020

ஸ்ரீ திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் துயர் தீரத்
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கு மண நாறும்
திருச்சந்ததுடன் மருவு திருமழிசை வளம் பதியே –

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் -விருக்ஷங்களினுடைய அழகை யுடைய சோலைகளாலே சூழப்பட்ட
பூமியில் உள்ளவர்களுடைய
துயர் தீர–துக்கம் தீரும் படியாக
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்-திருவவதரித்த திவ்ய தேசம் ஏது என்றால்
கருச்சந்தும் -பெருமை பொருந்திய சந்தன மரங்களும்
காரகிலும் -கறுத்த அகில் கட்டைகளும்
கமழ் கோங்கு –மணம் மிக்க கோங்கு மரங்களும்
மண நாறும்-பரிமளம் வீசப் பெற்றதாய்
திருச்சந்ததுடன் மருவு -பெரிய பிராட்டியார் அபி நிவேசத்துடன் பொருந்தி வாழப் பெற்றதான
திருமழிசை வளம் பதியே –செல்வம் மிக்க திவ்ய தேசம்

தாரணியின் துயர் தீர ..திருமழிசை வளம் பதியே
”கண்டியூர் அரங்கம் மெய்யம் கட்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே போல .
“பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே போல
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் –
சமன் கொள் வேங்கடமே -போலே திவ்ய தேசமே பரம ப்ராப்யம்

———-

திரு அவதார ஸ்தலம் பாடுகிறார் –

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க -உலகு தன்னை
வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே
வைத்து எடுத்த பக்கம் வலிது

சர்வஞ்ஞராகிய சதுர் முகர் விஸ்வகர்மாவைக் கொண்டு துலாக்கோலால் நாட்டி
வசிஷ்டர் பார்க்கவர் போன்றோருக்கு எடுத்துக் காட்டிய விருத்தாந்தம் -புராண சித்தம் –
புலவர் -பார்க்கவாதி மஹரிஷிகளான மஹா கவிகள் -என்பர் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்
புகழ்க்கோல்-பெருமையை விளக்கும் துலாக்கோல்
திருமழிசையின் அநந்ய அசாதாரணமான ஏற்றம் சொல்லிற்று ..மஹீஷா சார ஷேத்ரம்
ஜகன் நாதன் இறே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறது –
சிந்தயேத் ஸ ஜகந்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் சநாதனம் -என்னக் கடவது இறே
அத்தாலே வைத்தெடுத்த பக்கம் வலிதாய்த்து

————-

எழுத்து அசை சீர் தளை அடி தொடை -இந்த ஆறு உறுப்புக்களையும் கொண்டு
வெண்பா -ஆசிரியப்பா -கலிப்பா -வஞ்சிப்பா -என்ற நான்கு பா இனங்களுக்கும்
துறை தாழிசை விருத்தம் -மூன்று இனங்கள் யாப்பு இலக்கணத்தில் உண்டு
இது எழு சீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்த திவ்ய பிரபந்தம்
ஓன்று முதல் ஆறு சீர்கள் மாச்சீர்கள் ஏழாவது விளாச் சீர்
தான தான தான தான தான தான தானனா –சந்தங்களில் அமைத்தது -சந்த விருத்தம் என்றும்
கவி விருத்தம் என்றும் சொல்வர் –

ஒரு பிறவியில் இரண்டு குலங்கள்-யது குலம் ஆய்க்குலம் கண்ணனைப் போலவே
ரிஷி குலம் பிரம்பு அறுத்த தாழ்ந்த குலம் இவரும்
சர்வேஸ்வரன் மயர்வற மதிநலம் அருளி சர்வத்தையும் காட்டிக் கொடுக்க நெடும் காலம் இவ்விபூதியிலே இருந்து
ஸ்ரீ மன் நாராயணனுடைய பரத்வத்தை பலவாறும் அருளிச் செய்த இடத்தும் சம்சாரிகள் திருந்தக் காணாமையாலே
அவனது பெருமையை வாய் வேறுவப்பெற்ற தமது பாக்யத்தை அவன் திரு அருளால் பெற்றதை பேசி அருளுகிறார் இதில்

————-

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பூநிலாய ஐந்துமாய் -பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
புனல் கண் நின்ற நான்குமாய்-நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
தீநிலாய மூன்றுமாய் -தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
சிறந்த கால் இரண்டுமாய்-சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள
சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
மீநிலாய தொன்றுமாகி -ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மையாய்-பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய்
நீநிலாய வண்ண –கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும்
நின்னை –சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
யார் நினைக்க வல்லீரே –ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்

பூ நிலாய ஐந்து .”பிராக்ருத சிருஷ்டி அருளுகிறார் ..பூமிக்கு ஐந்து குணங்களும்(மணம் ரசம் , ரூபம் ,ஸ்பர்சம் சப்தம் )
புனல் =நீருக்கு நான்கும் ,தீ -தேஜஸ் மூன்றும் ,வாயு (சிறந்த கால் =சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது )இரண்டும்
ஆகாசத்துக்கு மீநிலாயது )ஒன்றும் -சப்தம் மட்டும் ..இப்படி பஞ்ச பூதங்களும் குணங்களும் அவன் இட்ட வழக்காக இருக்கும்
”வேறு வேறு தன்மையாய் நீர் நிலய வண்ணம் நின்னை “என்று விலஷணமாய் இருக்கும் யாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற படியையும்
உன்னையும் “யார் நினைக்க வல்லார் யாராலே ஸ்வ பிரயத்தனத்தால் நினைக்க முடியும் என்கிறார்-

ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி -அக்நேர் ஆப -அத்ப்ய ப்ருத்வீ–தைத்ரியம்

ஆகாசத்தில் சப்தம் ஒன்றும்
காற்றில் -சப்தம் ஸ்பர்சம்
தீயில் -சப்தம் ஸ்பர்சம் ரூபம்
புனல் கண் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம்
பூமியில் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம்

ஆத்மாக்கள் ஞாத்ருத்வாதிகளால் ஒன்றாக இருந்தாலும் கர்மாதீனமாக தேவாதி உபாதிகள் இருப்பதால்
வேறு வேறு தன்மையாய் உண்டே

இது வேதாந்த பிரமாணம் கைப்படாத குத்ருஷ்டிகளுக்கோ -பேதாபேதிகளுக்கோ –மாயா வாதிகளுக்கோ நினைக்க ஒண்ணாதே
பரமாணுக்களே -உபாதான காரணம் -என்னும் வைசேஷிகர் நினைக்க வல்லர் அல்லர்
பிரதானமே -உபாதான காரணம் -என்னும் -சாங்க்யர் நினைக்க வல்லர் அல்லர்
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்க வல்லர் அல்லர் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமும் பரஹம பரிணாமம் என்னும் பேத அபேத வாதிகள் நினைக்கவோ –
நிர்விசேஷ சிந் மாத்ரம் ப்ரஹ்மம் தத் வ்யதிகரங்கள் அபரமார்த்தங்கள் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ –
வேதாந்த ப்ரேமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது -என்கிறார் –

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற நீயே உபாதாந காரணம்;

இப்பரமார்த்தமானது வேதாந்தப்ரமேயம் கைப்படாத பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு நெஞ்சில்புக வழியில்லையென்கிறது, இப்பாட்டு,

இது எம்பெருமானை முன்னிலையாக்கிச் சொல்லும் பாரசுமாயிருத்தலால் விளி வருவித்துக் கொள்ளப்பட்டது.

இப்பாட்டின் முன் இரண்டரையடிகளால் பிராக்ருத ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது,

ஸாதாரனமாய் ப்ருதிவிக்கு மனம் குணமென்றும்,

அப்புக்கு ரஸம்குணமெனறும்,

தேஜஸ்ஸுக்கு ரூபம் குணமென்றும்,

வாயுவுக்கு ஸ்பர்சம் குணமென்றும்,

ஆகாசத்திற்கு  சப்தம் குணமென்றும்

இங்ஙனே ஒவ்வொரு பூதத்திற்கு ஒவ்வொன்று குணமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ‘

காரணவஸ்துவிலுள்ள குணங்கள் காரியத்தில் வந்து சேருகின்றன’ என்ற நியாயப்படி

பூமிக்கு ஐந்து குணங்களும்,

ஜலத்திற்கு நான்கு குணங்களும்,

தேஜஸ்ஸுக்கு மூன்று குணங்களும்,

வாயுவுக்கு இரண்டு குணங்களும் உண்டு.

கைத்திரீயோப நிஷத்தில்- “ஆகாசாத்வாயு; வாயோரக்நி; அக்நேராப: அத்ப்ய: ப்ருதீவீ,” என்று

ஆகாசத்தில் நின்றும் வாயுவும்,

வாயுவில் நின்றும், அக்நியும்,

அக்நியில் நின்றும் ஜலமும்,

ஜலத்தில் நின்றும் ப்ருதிவியும் உண்டாவதாக ஓதப்பட்டிருக்கின்றது.

ஆகாசத்தில் நின்றும் பிறக்கிற வாயுவானது தன் குணமாகிய ஸ்பர்சத்தோடு கூட ஸ்வ காரணமான ஆகாசத்தின் குணமாகிய சப்தத்தையும் உடைத்தானதாம்.

வாயுவின் நின்றும் பிறக்கிற அக்நியானது தன்குணமாகிய ரூபத்தோடு கூட ஸ்வகாரணமான வாயு வினிடத்துள்ள சப்தஸ்பர்சங்களையும் உடைத்தானதாம்.

அக்நியில் நின்றும் பிறக்கிற ஜலமானது தன்குணமாகிய ரஸத்தோடுகூட ஸ்வகாரணாமன அக்நியிடத்துள்ள சப்தஸ்பர்சரூபங்களையும் உடைத்தானதாம்.

ஜலத்தில் நின்றும் பிறக்கிறபூமியானது தன் குணமாகிய கந்தத்தோடுகூட ஸ்வகாரணமாக ஜலத்திலுள்ள சப்தஸ்பர்ரூபரஸங்களையும் உடைத்ததானதாம்.

ஆகவே, பூமியானது ஐந்து குணங்களை உடைத்தானதாகவும்,

ஜலமானது நான்கு குணங்களை உடையதாகவும்,

அக்நியானது மூன்று குணங்களையுடையதாகவும்,

வாயுவானது இரண்டு குணங்களையுடையதாகவும்,

ஆகாசமானது ஒரு குணத்தை உடையதாகவும் ஆயிற்று.

இந்த ப்ரக்ரியையைத் திருவுள்ளம் பற்றியே “பூநிலாயவைந்தும்” இத்யாதிகள் அருளிச்செய்யப்பட்டனவென்க.

இப்படி ஒரு பூதத்தில் நின்றும் மற்றொரு பூதமுண்டாவதாகச் சொல்லப்பட்ட ப்ரக்ரியை தவிர,

தந்மாத்ரத்தில் நின்றும் தந்மாத்ரம் பிறக்கை,

பூதத்தில் நின்றும் தந்மாத்ரம் பிறக்கை முதலிய ப்ரகாராந்தரங்களும் உண்டாயினும்,

அதுவுமன்றி, பஞ்சீகரண ப்ரக்ரியையாலே எல்லாப்பூதங்களிலும் எல்லாக் குணங்களுமே ஏற்றத்தாழ்வாக இருக்குமென்கிற கோட்பாடு முண்டாயினும்,

இங்கே *ஆகாசாத் வாயு:* என்று கீழே உதாஹரிக்கப்பட்ட ச்ருதிச் சாயையாலே அருளிச் செய்யப்பட்டிருக்கிறதென்றுணர்க.

இந்தப்ரக்ரியை ஸ்ரீவிஷ்ணு புராணத்திலும் (முதல் அம்சம், இரண்டாமத்தியாயம், ச்லோ 50.) ஸ்பஷ்டம்.

(1). பூமியில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்

(2) புனற்கண் -சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்.

(3) தீயில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம்.

(4) காற்றில் – சப்தம், ஸ்பர்சம்.

(5) ஆகாயத்தில்- சப்த மொன்றே.

ஆக இப்பஞ்சபூதகுணங்கள் எம்பெருமானாயிருக்கையாவதென்? எனில்;

பஞ்சபூதங்கள் எப்படி எம்பெருமானிட்ட வழக்காயிருக்கின்றனவோ,

அப்படியே அவற்றின் குணங்களும் அவ்வெம்பெருமாளிட்ட வழக்காயிருக்கின்றனவென்றவாறு.

“வேறு வேறு தன்மையாய்” என்றது அண்டத்துக்கு உட்பட்டவையாய் ஒன்றுக்கொன்று விலக்ஷணங்களாயுள்ள தேவாதி பதார்த்தங்கட்கெல்லாம் ஆத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.

ஆத்மாக்கள் அனைவரும் ஜ்ஞாத்ருத்வாதிகளாலே வேற்றுமையின்றி ஒரு படிப்பட்டிருந்தாலும் கர்மாதீநமாக வருகிற தேவத்வமநுஷ்யத்வாதிகளாகிற உபாதிகள் வெவ்வேறுபட்டனவாதல்பற்றி “வேறு வேறு தன்மையாய்” எனப்பட்டதென்ப.

ஆர் நினைக்கவல்லர்? என்றது- நினைக்கவல்லார் ஒருவருமில்லை யென்ற குறிப்பு.

பேதாபேதிகள் நினைக்கவோ?

நிர்விசேஷவஸ்துவ்யதிரிக்தங்கள் அபரமார்த்த மென்னும் மாயாவாதிகள் நினைக்கவோ? என்கிறார்.

—————

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-

“ஆறும் ஆறும் ஆறு மாய “..
முதல் ஆறு
அந்தணர்கள் ஆறு கர்மாக்களை —அத்யயனம் (தான் ஓதுதல் ),அத்யாபனம் (ஓதுவித்தல் )
யஜனம் தான் வேள்வி செய்தல் ),யஜனம் (பிறரை வேள்வி செய்வித்தல் ),தானம் (தான் கொடுப்பது )
ப்ரதிக்ரஹம் (பிறர் தருவதை வாங்கி கொள்ளுதல் ) இந்த கருமங்களுக்கு அவன் நிர்வாஹகன் .
முதல் ஆறு, வேதமோதல் முதலான தொழில்களைச் சொல்வது. படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது,
கொடுப்பது, பெறுவது என்று ஆறு செயல்கள் சொல்லப்படுகின்றன

அடுத்து ருது ஆறு —
வசந்தம் ,க்ரீஷ்மம் ,வர்ஷ ,சரத் ,ஹேமந்தம் ,சிசிரம் –இந்த ருதுக்களும் அவன் பிரவர்தகன்.
அவை கார்; கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன.

அடுத்த ஆறு
யக்ஜம் –ஆக்ஞேயம் ,அக்நீஷோமீயம் ,வுபாம்சுயாஜம் ,ஐந்தரம் ,இரண்டு ஐந்த்ராஞ்ஞம் —
ஆக்னேயம் முதலிய யாகங்கள். வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், திருப்பலி கொடுத்தல்,
தானம் செய்தல் போன்று யாகங்கள் செய்பவர்கள் அனுஷ்டிக்கத் தக்க ஆறு செயல்கள்.
இவற்றில் முதல் மூன்றும் பவுர்ணமியில் செய்யப்படும் யாகங்கள் -பவுர்ணமாஸம் என்றும்
அடுத்த மூன்றும் அமாவாசையில் செய்யப்படும் யாகங்கள் என்பதால் தர்சம் என்றும்
இவை ஆறும் ஸ்வர்க்க பலத்துக்காக செய்யப்படுவதால் தர்ச பவுர்ணமாஸம் என்று ஒரே பெயராகச் சொல்லப்படும்
இவனே சர்வ தேவதைகளுக்கும் சரீரியாய் இருந்து தானே சர்வ யஜ்ஞா போக்தாவாகிறான்

அடுத்து ஐந்து
யஜ்ஞம் தேவ ,பித்ரு ,பூத ,மனுஷ ,ப்ரஹ்ம –பஞ்ச மஹா யக்ஜம் அருளுகிறார்
பஞ்ச யஜ்ஞா போக்தாவும் இவனே

அடுத்த ஐந்து -பிராணன ,அபான ,வ்யான ,வுதான ,சமான .பஞ்ச ஆஹுதிகள் ..
இவை ஐந்தும் அந்தர்யாமியான இவனுக்கு ஆராதனம்
அடுத்த ஐந்து
பஞ்ச அக்னிகள் –கார்ஹா பதியம் ,ஆஹஅவநீயம் ,தஷினாக்னி ,சப்யம் ,ஆவசட்யம் …இவற்றை சரீரமாக கொண்டவன் .

ஏறு சீர் இரண்டுமாய்
மிக்க அதிசயத்தை வுடைய ஞானம் , விரக்தி இரண்டையும் தர வல்லவன் .
அவனை மட்டும் நோக்கும் ஞானமும் , கடை அற பாசங்கள் விடுகை யாகிய வ்ரக்தியும்
மால் பால் மணம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
கடையறப் பாசங்களைக் கை விட்டு
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
இவை இரண்டுமே முக்கியம் என்பதால் ஏறு சீர் -ஆகின்றன –

“மூன்றும் “-
கீழ் சொன்ன ஞான விரக்திகள் பயனாக பெரும்
பரபக்தி பரஞான ,பரம பக்தி –
அல்லது
ஐஸ்வர்ய ,கைவல்ய ,பகவத் ப்ராப்திகளையும் .

அடுத்து “ஏழும் ” என்று
விவேகாதிகள் ஏழையும் ..
விவேகம் (ஜாதி ஆஸ்ரய நிமித்த திஷ்ட தோஷங்கள் இல்லாத அன்ன சுத்தியால் உண்டாகும் காய சுத்தி )
விமோஹம் காமம் ,க்ரோதம் இல்லாமை ),
அப்யாசம்-(ஸூப ஆஸ்ரயமான வஸ்துவில் பலகாலம் பரிசீலனம் பண்ணுகை )
க்ரியை-(பஞ்சம மஹா யஜ்ஜாதிகளை -நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானம் )
கல்யாணம் -( சத்யம் ஆர்ஜவம் தயை அஹிம்சை பிறர் அபசாரங்களில் கண் வையாமை போன்றவை )
அனவசடம் (சோக நிமித்தம் ,-மனசை மழுங்காது இருத்தல் )
அனுடர்ஷம் (சந்தோஷத்தால் தலை கால் தெரியாமல் பொங்காது இருக்கை )
எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மன தெளிவுக்கு இந்த விவேகாதி சப்தம் எல்லாம் தேவை –

அடுத்த ஆறும் –
ஞான பால ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் குணங்கள் இவற்றுக்கும் நிர்வாஹகன் அவன் ”

எட்டும் “ என்று –
அபஹத பாபமா -பாபம் சம்பந்தம் அற்றவன் -விஜரஹ -கிளத் தன்மை அற்று நித்ய யுவாவாய் இருப்பவன்
விமிருத்யு மரணம் அற்றவன் -விசோக-சோகம் அற்றவன் – விஜிகத்சக பசி அற்றவன் -அபி பாஷா தாகம் அற்றவன்
சத்ய காம சத்ய சங்கல்ப ,ஆகிய எட்டு குணங்களும் தம்மைத் தொழும் அடியார்க்குத் தர வல்லவன்
தம்மையே ஓக்க அருள் செய்யுமவன் அன்றோ

வேறு வேறு ஞானமாகி –
வணங்கும் துறைகள் பல பல வாக்கி -கள்ள வேடத்தைக் கொண்டு போய் புறம் புக்க வாறும் என்று
புத்த அவதாரமும் ஆனவனே

மெய்யினோடு பொய்யுமாய் –
மெய்யர்க்கு மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே பொய்யர்க்கே பொய்யனாகும் .
“புள் கொடி உடைய கோமான் போலே ஆஸ்திகர்களுக்கு தனது மெய்யான ரூபம் நாஸ்திகர்களுக்கு காட்டித் தராமலும்
முமுஷுக்களுக்கு அவனையே தந்து -மற்றவர்களுக்கு சூத்திர பலமும் தந்து ,தள்ளி நிற்பவன்

ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே நின்னை யார் நினைக்க வல்லரே –
ஸ்பர்சம் சப்தம் மற்றும் ரூபம் ரசம் கந்தம் ஐந்தையும் அவனாவது
உண்ணும் சோறும் பருகும் நீறும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -போலே ..
“கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம்கருவி .கண்ட .இன்பம் எம்பெருமான் தானே
மெய்ப்பொருள் கண்டார்க்கு சர்வவித போக்யமும் அவனே
ஆயர் ஏறே மெய் பொருள் கண்டார்க்கு –ஆய- மாய மாயனே -நம்மிடையே வந்து -திவ்ய மங்கள விக்ரஹத்தை
சம்சாரி சஜாதீயமாக்கி வந்து பிறந்து அருளிய ஆச்சர்யம்

————

முன் இரண்டு அடிகளால் லீலா விபூதியையும் -அடுத்து நித்ய விபூதியையும் சொல்லி
தனக்கு நிர்ஹேதுக கிருபையைக் காட்டி அருளியதைச் சொல்கிறார்

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே —3-

பதவுரை

ஐந்தும்

ஆகாசாதி பூதங்கள் ஐந்தும்
ஐந்தும்

ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

தந்மாத்ரைகள் ஐந்தும்
மூன்றும்

ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும்
ஒன்றும்

மநஸ்ஸாகிய ஒன்றும்
ஆகி

(ஆக இப்படிப்பட்ட இருபத்தினாலு தத்துவங்கட்கு) நிர்வாஹகனாய்
அல்ல வற்றுளாயும் ஆய் நின்ற

கீழ்ச்சொல்லப்பட்ட அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற
ஆதிதேவனே!

முழு முதற்கடவுளே!
அந்தரத்து அணைந்து! நின்று

பரமபதத்திலே பொருந்தி நின்று
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி

அப்ராக்ருத பஞ்சசக்திகளுக்கும் ஜ்ஞாநேதிரியங்களைந்துக்கும், கருமேந்திரியங்களைந்துக்கும் நிர்வாஹகனாய்
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை

சப்தாதிபோக்யங்களைந்துமாய், போகஸ்தாகம், போகோபகரணம், வைகுந்தத்தமர் முனிவர் முக்தர் என்ற ஐந்து வகுப்புகட்கு நியாமகனுமா யெழுந்தருளியிருக்கிற உன்னை.
யாவர் காண வல்லர்

யார் அறியவல்லர்? (யாருமறியகில்லார்.)

ஐந்தும் ஐந்தும் ஐந்தும் –முதல் ஐந்து –பஞ்ச பூதங்கள்–அடுத்த ஐந்து –ஞான இந்திரியங்கள்
அடுத்த ஐந்து கர்ம இந்திரியங்கள் –
அல்ல வற்றுள் நின்று -இப்படிச் சொன்ன அசித் போன்று இல்லாமல் சித் எல்லா வற்றிலும்
அந்தர்யாமியாய் இருந்து நிர்வகிக்கும்
மூன்றும் ஒன்றும் ஆகி -பிரகிருதி -அவிபக்த தமஸ் -அக்ஷரம் போன்ற அவஸ்தைகளைக் கொண்ட பிரகிருதி –
அதில் இருந்து குண வைஷம்யம் அடியாக பிறக்கும் விகாரங்களான மஹானும்
அதில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் -ஆகிய மூன்றும் – மனசாகிய ஒன்றும்
ஐந்தும் -தன் மாத்ரைகள் ஐந்தும் ஆகி -இப்படி 24 தத்துவங்களுக்கும் நிர்வாஹகனாய் ஆகி
ஆதி தேவனாய் -முழு முதல் கடவுளாய்
அந்தரத்து அணைந்து நின்று -பரமபதத்தில் பொருந்தி இருந்து –
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி -அப்ராக்ருத பஞ்ச சக்திகளுக்கும் ஞான இந்திரியங்களுக்கும்
கர்ம இந்திரியங்களுக்கும் – நிர்வாஹகனாய்
ஐந்தும் -சப்தாதி போக்யங்கள் ஐந்துமாய்
ஐந்துமாய-போக ஸ்தானம் போக உப கரணங்கள் -வைகுந்தத்தது அமரரரும் முனிவரும் முக்தர் என்கிற ஐந்து வகுப்புக்களும் –
நியாமகனாய் எழுந்து அருளி இருக்கிற உன்னை யார் நினைக்க வல்லவர் என்கிறார்
லீலா விபூதி விசிஷ்டானாயும் நித்ய விபூதி விசிஷ்டானாயும் -திவ்ய மங்கள விக்ரஹத்தையும் நீ எழுந்து அருளி இருக்கும் இருப்பை
நிர்ஹேதுக கிருபையால் நீ காட்டி அருள நான் எளிதில் கண்டால் போலே காணக் கூடியவர்கள் யாரும் இல்லையே –

லீலாவிபூதி விசிஷ்டனாயும் நித்யவிபூதி விசிஷ்டனாயும் நீ எழுந்தருளியிருக்குமிருப்பை நிர்ஹேதுக க்ருபையாலே எனக்கு நீ காட்டியருள நான் எளிதிற்கண்டாப்போல் ஸ்வஸரமர்த்தியத்தாற் காணக்கூடியவர்கள் யாருமில்லை யென்கிறார்.

முன்னிரண்டடிகளால் லீலாவிபூதியோகமும், பின்னிரண்டடிகளால் நித்யவிபூதியோகமும் அருளிச்செய்யப்படுகின்றன.

முதலடியில், ஐந்தும்- ப்ருதிவி. அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (நிலம் நீர் தீ கால்விசும்பு) என்ற பஞ்சபூதங்கள்.

ஐந்தும் = த்வக்கு, சக்ஷûஸ், ச்ரோத்ரம், ஜிஹ்வா, க்ராணம் (செவ் வாய் கண் மூக்கு உடல்) என்ற பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள்.

ஐந்தும்- வாக்கு’ பாணி, பரதம், பாயு, உபஸ்தம் (வாய்,கை, கால், குதம்,குறி)என்ற பஞ்சகர்மேந்திரியங்கள்.

இரண்டாமடியில், ஐந்தும் = சப்ததந்மாத்ரை, ஸ்பர்சதந்மாத்ரை,ரூபதந்தமாதரை, ரஸதந்மாத்ரை, கந்ததந்மாத்ரை என்னும் பஞ்சதந்மாத்ரைகள்.

மூன்றும் = அலிபக்ததமஸ்ளென்றும் அக்ஷரமென்றும் சில அவஸ்தைகளை யுடைந்தாயிருக்கிற ப்ரக்ருதி (1), அந்தப்ரக்ருதியில் நின்றும் குணவைஷம்யமடியாகப் பிறக்கிற விகாரங்களுள் முதலதான மஹாக் (2), அந்த மஹத்தத்வத்தில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் (3), ஆக மூன்று,

ஒன்று- மநஸ்ஸு. ஆக இருபத்தினாலு தத்துவங்கள் சொல்லப்பட்டன. (முதலடியில் பதினைந்து; இரண்டாமடியில் ஒன்பது, ஆக-24.)

ஆகிநின்ற என்ற ஸாமாநாதிகரண்யம்- இத் தத்துவங்களுக்கும் எம்பெருமானுக்குமுள்ள ஸம்பந்தங்களெல்லாவற்றையும் உளப்படுத்தியதாம்.

அல்லவற்றுளாயுமாய்- இப்படி இருபத்தினாலாக வகுக்கப்பட்ட ப்ரக்ருதியிலே ஸம்ஸ்ருஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் என்றபடி,

அல்லாவை என்றால் ஜீவாத்மாக்களை எங்ஙனே குறிக்கும்படியென்னில்; அல்லவை என்பதற்கு ‘அப்படியாகாதவை’ என்று பொருள்.

ப்ரகரணாநுகுணமாக ‘அசித்தாகாதவை’ என்று பொருளாய் அசேக்நவ்யாவ்ருத்தரான சேதநர்களைக் குறிக்கிறபடி.

இனி பின்னடிகளில், திவ்யமங்களவிக்ரஹத்தையும் நித்யவிபூதியோகத்தையும் தமக்குக் காட்டித்தந்தருளினபடியை அருளிச்செய்கிறா.

(1) ஐந்தும் = *** ***  பஞ்சசக்திகளாவன – “*** ***  என்று சொல்லப்படுகிறவையாய் நித்யவிபூதியிலுள்ளவையான பஞ்சபூதங்கள். வாஸுதேவனுடைய திவ்யமங்களவிக்ரஹம் பஞ்ச சத்திமயமென்று வேதாந்த நூற்கொள்கை.

ஐந்தும், ஐந்தும், ஐந்தும் – அப்ராக்ருதங்களான ஜ்ஞாநேந்திரியங்கனைந்தும், கருமேந்திரியங்களைந்தும், சப்தாதி போக்யங்களைந்தும். ஐந்தும் = ***  நங்களென்ற வகுப்பு (1), ஜொஹொவதுரணங்களென்ற வகுப்பு (2), “வைகுந்தத்தமரரும் முனிவரும்” என்ற இரண்டு வகுப்புகள் (4), முக்தர் என்ற வகுப்பு (50)- ஆ க ஐந்து கோடிகள்.

அந்தரம் = ஆகாசம்; பரமாகாசமெனப்படுகிற பரமபதம்.

————

மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தியாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4-

பதவுரை

மூன்று முப்பது

முப்பத்து மூன்று ஹல்லெழுத்துகட்கும்
ஆறினொரு ஒரு ஐந்தும் ஐந்தும்

பதினாறு அச்செழுத்துகட்கும்
ஐந்து

ளகாராதி பஞ்சாக்ஷரங்கட்கும்
ஆய்

நிர்வாஹகனாய்
மூன்று மூர்த்தி ஆகி

ருக்கு, யஜுஸ், ஸரமம் னஎ“கிற வேதத்ரய ஸ்வரூபியாய்
மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய்

த்வாதசாக்ஷரீ ப்ரதி பாத்யனாய்
மூன்று தோன்று சோதி ஆய்

மூன்று ட்அஷரமாகிய ப்ரணவத்திலே விளங்கும் ஜ்யோதிரிமயனாய்
துளக்கம் இல் விளக்கம் ஆய்

என்று மழிவற்ற விளக்காகிய அகாரத்துக்கு வாச்யனாய்
எம் ஈசனே

எமக்கு நிருபாதிக சேஷியாயிருப்பவனே!
என்று

(என் காரியங்களையெல்லாம் நீயே உன் தலைச்சுமையாக) ஏறிட்டுக்கொண்டு
என் ஆவியுள்

என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே
புகுந்தது

புகுந்திருப்பது
என் கொல்?

என்ன நீர்மை!

மூன்று முப்பது –33 ஹல் எழ்த்து
ஆறினொடு ஒர் ஐந்தும் ஐந்தும் –16 அச்சு எழுத்துகள்–
ஐந்தும் – ளகராதி பஞ்சாட்ஷரம்
ஆய் –நிர்வாஹகானாய்
மூன்று மூர்த்தி ஆகி நின்று “-ரிக் ,யஜுர் ,சம வேத வேத திரைய ஸ்வரூபியாய்-
ப்ரதிபாத்யன்–ப்ரவர்த்திப்பித்தவன் என்றுமாம்

மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய –த்வாதச அஷரீ பரதி பாத்யனாய் ..”ஒம் நமோ வாசுதேவாய “.

தோன்று சோதி மூன்றுமாய் ”-மூன்று தோன்று சோதியாய் என்று மூன்று அஷரம்-பிரணவம் -தோன்றும் ஜோதி ..’

துளக்கம் இல்லா விளக்கம் “-அழிவற்ற விளக்காக –
அ ” காரம் ..ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன் ஓம்கரோ பகவன் விஷ்ணு போல
சகலத்துக்கும் காரணம் தனக்கு காரணம் அற்றவன் ஆதலால்
துளக்கமில்லா விளக்கு என்றார் .

எம் ஈசனே “-எனக்கு நிருபாதிக சேஷியனவானே
என்று -எனது காரியங்களை நீயே உன் தலைச் சுமையாய் ஏறிட்டு கொண்டு .

என் ஆவியுள் புகுந்தது என் கொல் “.-என்ன நீர்மை வேதங்கள் மந்த்ர ரஹஸ்யங்களை தேவரீர் உண்டாக்கி வைத்தும் –
அவ்வழியாலே உபாசியாமல் இருக்க
தேவரீரே அடியேனுடைய அஞ்ஞான அசக்திகளைக் கண்டு அறிந்து நிர்ஹேதுகமாக ஹ்ருதயத்தில் எழுந்து அருளி
ஸ்வரூபத்தை சாஷாத்கரிப்பித்து என்னை இடைவிடாமல் அடிமையும் கொண்டு அருளி உபகரித்தமை என்ன நீர்மை –

வேதங்களையும் மந்த்ர ரஹஸ்யங்களையும் தேவரீர் உண்டாக்கி வைத்திருக்கச் செய்தேயும் அடியேன் அவ்வழியாலே அறிந்து உபாஸியாதே யிருக்க தேவரீரே அடியேனுயைட ஹ்ருதயத்தினுள்ளே புகுந்தெழுந்தருளியிருக்கிறவிது என்ன நீர்மை! என்று ஈடுபட்டுப் பேசும் பாசுரம், இது.

மூன்று மூர்த்தியாகி = ருக்கு, ஸாமம், யஜுஸ் என்று மூன்று உருக்கொண்ட வேதங்களுக்கு ப்ரதிபாத்யன் (அல்லது) ப்ரவர்த்தகன் என்றபடி,

மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் = நாலுமூன்றுகள் கூடியப் பன்னிரண்டாய், “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்கிற தவ்யாதசாக்ஷரியாலே ப்ரதிபாத்யன் என்றதாகிறது.

தோன்று சோதி மூன்றுமாய் = ‘மூன்று தோன்று சோதியாய்’ என்று மொழிமாற்றி இயைக்கவேணும்.

மூன்றிலே தோன்றுகிற சோதியாய் என்றபடி.

மூன்று என்கிறது- மூன்று திருவக்ஷரமான ப்ரணவத்தை.

இது ஸம்ஹிதாகாரத்தாலே ஏகாக்ஷரமாயிருந்தாலும் உட்பிரிவிலே அ, உ, ம் என மூன்று திருவக்ஷரமாய் மூன்று அர்த்தங்களைப் பிரதிபாதிக்கவற்றாயிருக்குமிறே.

இப்படிப்பட்ட ஓங்காரத்திலே திகழ்கின்ற ஜ்யோதிர்மயன் எம்பெருமானிறே.

“ஓங்காரோ பகவாந் விஷ்ணு.” என்றதும் காண்க.

துளக்கமில் விளக்கமாய் = அந்த ப்ரணவத்திலே ப்ரதமாக்ஷரமான அகாரத்தைத் “துளக்கமில்விளக்” கெள்கிறது.

ஸகல வேதங்கட்குக் காரணமான ப்ரணவத்துக்குங் காரணமாய், தனக்கொரு காரணமற்றிறே அகாரமிருப்பது.

ஆகையாய் துளக்கமற்ற விளக்குப் போன்றதாய்த்து.

ஆக இவ்வழியாலே நான் அறிந்து உபாஸிப்பதற்கு நீ விஷயமாக வேண்டியிருக்க,

அங்ஙனாகாதே நீயே எனது அஜ்ஞாக அசக்திகளைக் கண்டறிந்து இப்படிப்பட்ட உன் ஸ்வரூபத்தை

எனக்கு ஸாக்ஷாத்கரிப்பித்து என்னை இடைவிடாது அடிமைகொண்டனையே! என்கிற உருக்கம் ஈற்றடியில் தோற்றும்.

————

வேதங்களும் மந்திர ரஹஸ்யங்களும் இருக்க -யாவர் காண வல்லரே -என்று எம்பிரான் கேட்க
அந்தராத்மாவாகவும் ஜகத் காரணத்வத்தாலும் -சகல ஆதாரமாய் இருக்கும் ஸ்வ பாவத்தை –
சமுதாய ரூபமாக அறியலாமே தவிர
தேவரீர் எனக்கு காட்ட நான் அலகு அலகாக கண்டால் போலே ஒருவருக்கும் காண முடியாதே என்கிறார்-

நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –-5-

பதவுரை

நின்று

ஸ்தாவரமாயும்
இயங்கும்

ஜங்கமமாயுமிருக்கிற
ஒன்று அலா ருக்கள் தோறும்

பலவகையான சரீரங்கள் தோறும்
ஆவி ஆய்

ஆத்மாவாய்
ஒன்றி

பொருந்தி
உள் கலந்து நின்ற

பரிஸமாப்ய வர்த்தியாநின்ற
நின்ன

உன்னுடைய
தன்மை

ஸ்வபாவம்
இன்னது என்று

இத்தகையதென்று
என்றும்

எக்காலத்திலும்
யார்க்கும்

எப்படிப்பட்ட ஞானிகட்கும்
எண் இறந்த

சிந்திக்க முடியாதிருக்கிற
ஆதியாய்

ஆதிகாரணபூதனனான எனம்பெருமானே! (நீ)
அன்று

முற்காலத்திலே
நின் உந்திவாய்

உனது திருநாபியில்
நான் முகன்

சதுர்முகப்ரஹ்மாவை
பயந்த

படைத்த
ஆதிதேவன் அல்லையே

முழு முதற் கடவுளல்லையோர்.

நின்று -ஸ்தாவரமாயும் -நிலை பேராமல் நிற்கும் மலை போன்றவை
இயங்கும் -அசையக் கூடிய பசு பக்ஷி யாதி ஜங்கமமாயும் இருக்கிற
ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்-பலவகை சரீரங்கள் தோறும் ஆத்மாவாய்
ஒன்றி -பொருந்தி
உள் கலந்து நின்ற நின்ன தன்மை -பரிசமாப்யா வர்த்தியா நின்ற உன்னுடைய ஸ்வ பாவம்
இன்னதென்று-இத்தகையது என்று
என்றும் -எக்காலத்திலும்
யார்க்கும் -எப்படிப்பட்ட ஞானியர்க்கும்
எண்ணிறந்த -சிந்திக்க முடியாது இருக்கிற
வாதியாய் நின்னுந்தி வாய்-ஆதி காரண பூதனான எம்பெருமானே நீ உனது திரு பாபியிலே
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே -முற்காலத்தில் சதுர்முகனைப் படைத்த முழு முதல் கடவுள் அன்றோ

எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! நம்மை உள்ளபடி அறிவிக்கவற்றான வேதங்களும் மந்த்ரஹஸ்யங்களும் பலபல உண்டாயிருக்க ‘யாவர் காணவல்லரே’ என்பானேன்?” என்ன;

அந்தர்யாமித்வத்தாலும் ஜகதேக காரணத்வத்தாலும் ஸகலாதாரனாயிருக்கிற ஸ்வபாவத்தை

ஸ்தூலத்ருஷ்டியாலே ஸமுதாயருபே அறியில் அறியலாமத்தனையொழிய,

தேவரீர் காட்ட நான் அலகலகாகக் கண்டாற்போலே ஒருவர்க்குங் காண முடியாதென்கிறார்-

இதில் நின்று என்னு- நிலைபேராதே நிற்கும் மலை முதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது;

இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது;

இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்ங்களைச் சொல்லுகிறது.

ஒன்று அலா = ஒன்று அல்லாத என்றாய், பலபலவென்றபடி.

நின் உந்திவாய் இத்யாதி. தேவரதி ஸகலபதார்த்தங்களும் அழிந்து கிடந்த அக்காலத்தில் உன்னுடைய திருநாபிக் கமலத்திலே பிரமனைப் படைத்த ஜகதேக காரணனல்லையோ நீ

உந்திவாய் = வாய்- ஏழனுருபு. நான் முகன் + பயந்த, நான்முகற்பயந்த.

—————-

உலகத்தில் ஒன்றுக்கு ஓன்று தாரகமாய் இருக்கும் பொருள்களுக்கும் இவனே தாரகம் என்கிறார்
இத்தால் அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமானே என்று விளிக்கிறார் —

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே –6-

நாகம் ஏந்தும் ஆக–திரு அனந்தவாழ்வானாலே தரிக்கப் பட்ட திருமேனியை யுடைய எம்பெருமானே
நாகம் ஏந்து மேரு வெற்பை -ஸ்வர்க்க லோகத்தை தரிக்கிற மேரு பர்வதத்தையும்
தனது தேஜஸ்ஸாலேயே தரிக்கிறது என்பர்
நாகம் ஏந்து மண்ணினை–திருவனந்தாழ்வான்-அல்லது திக்கஜங்களால் தரிக்கப்பட்ட பூமியையும்
நாகம் -சர்ப்பத்துக்கும் யானைக்கும் –
மாகம்–பரம பதத்தையும்
மாகம் ஏந்து வார் புனல்–ஆகாசத்தால் தரிக்கப்பட்ட கங்கையையும்
மாகம் ஏந்து மங்குல் -ஆகாசத்தால் தரிக்கப்பட்ட மேக மண்டலத்தையும்
தீ ஓர் -ஓர் தீ -வைச்வானர அக்னியையும்
வாயு ஐந்து -பஞ்ச வ்ருத்தி பிராணங்களையும்
அமைந்து காத்து-பொருந்தி ரஷித்து அருளி
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை -எல்லாவற்றையும் ஒரு வஸ்துவே தரித்துக் கொண்டு நிற்கிறது என்று
உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ள ஸ்வ பாவம் –
நின் கணேயியன்றதே-உன்னிடத்தில் தான் இருக்கின்றது –

கைலவஸ்துக்களுக்கும் எம்பெருமான் அந்தர்யாமியாயிருந்து கொண்டு அனைத்துக்கும் ஆதாராமகிறான் என்னுமர்த்தம் கீழ்பாட்டிற் சொல்லப்பட்டது;

உலகத்தில் ஒன்றுக்கொன்று தாரகங்களாகத் தோற்றும் பதார்த்தங்கட்கும் இம்வெம்பெருமானே தாரகன் என்கிறது இப்பாட்டு.

இரண்டாமடியிலுள்ள “நாகமேந்துமாக!” என்பது ஸம்போதகம். அரவணைமேற் பள்ளிகொண்ட பெருமானை! என்று விளித்தபடி.

மேருபர்வதம் ஸ்வர்க்கத்தை எங்ஙனே தரிக்கிறதென்றால், தன் சிகரத்திலுள்ள தேஜ்ஸ்ஸின் வழியாலே என்பர்.

முதலடியின் முதலிலுள்ள நாகம்- நாசா” என்ற வடசொல்லிகாரம். ***- ***-  என்பது ச்ருதி.

அதற்கு மேல் நாகம்- நாஹா என்ற வடசொல் விகாரம். அந்த பதத்திற்கு ஸர்ப்பமென்றும், யானையென்றும் இரண்டு பொருள்களுண்டு . இரண்டு பொருளும் இங்கு ஏற்கும்.

பூமியானது ஆதிசேஷனாலும், திக்கஜங்களாலும் தாங்கப்படுவதால். இரண்டாவடியிலுள்ள நாகமும் – நாஹா என்ற வடசொல் விகரம் (“நாகமேந்துமாகன்” என்பதன் அண்மைவிளி.)

இரண்டாமடியில், மாகம் இரண்டும் ஹோவா என்ற வடசொல் விகாரம்.

முதல் மாகம்- பரமாகாசவாசகம்.

இரண்டாவது மாகம்- ப்ரஸித்தாகாசவாசகம்.

மூன்றாமடியிலுள்ள மாகமும்- ஹோவா. என்ற வடசொல் விகாரமே.

ஏகமேந்தி நின்ற நீர்மை- “***- ***- ” என்றிவை முலான வேதாந்த வாக்கியங்களில் ஓதப்பட்டுள்ள அர்த்தம் உன் பக்கலில்தான் பொருந்தியிரா நின்றதென்றபடி.

ஏகம்- வன்கம்.

நின் கண்= கண்- எழலுருபு.

——————–

ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7-

பதவுரை

ஒன்று இணர்டு மூர்த்தி ஆய்

ப்ரதாநமான ஒரு மூர்த்தியும் அப்ரதாநமான இரண்டு மூர்த்தியுமாய்
உறக்கமோடு உணர்ச்சி ஆய்

அஜ்ஞாநத்துக்கும் ஸத்ஜ்ஞானத்துக்கும் நியாமகனாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி

மூன்று காலங்களுக்கும் நிர்வாஹனாய்
வேலை ஞாம் ஆயினாய்

கடல்சூழ்ந்த பூமண்டலத்துக்கு ப்ரவத்தகனாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி

மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹனாய்
ஆயன் ஆய

கோபாலஸஜாதீயனாய் அவதரித்த
மாயனே!

ஆச்சர்யபூதனான எம்பெருமானே!
ஒன்று இரண்டு கண்ணினாலும்

முக்கண்ணனான சிவபிரானும்
உன்னை

உன்னை
ஏந்த வல்லனே

துதிக்க வல்லவனே!

ஓன்று இரண்டு மூர்த்தியாய் –பிரம்மா ருத்ரன் இவர்களை சரீரமாகக் கொண்டு அவர்களுக்கும் நிர்வாஹகன் –
முனியே நான் முகனே முக்கண் அப்பா போலே
ஓன்று பிரதானம் -இரண்டு அப்ரதானம்

உறக்கமோடு உணர்ச்சியாய்-அஞ்ஞானத்துக்கும் ஞானத்துக்கும் நியாமகனாய்
உறக்கம் -என்றது அஜ்ஞ்ஞானத்தை –
அஜ்ஞ்ஞானம் அன்யதா ஜ்ஞானம் விபரீத ஜ்ஞானம் சம்சயம் மறப்பு எல்லாம் -உறக்கம் தானே –
ஸ்வரூப யாதாம்யத்தை சிலருக்கு உள்ளபடி சாஷாத் கரிக்கச் செய்பவனும்
திரிமூர்த்தி சாம்யம் வ்யாமோஹாதிகளாலே சிலரை மயங்கச் செய்பவனும் இவனே

ஓன்று இரண்டு காலமாகி-இறந்த நிகழ் எதிர் காலங்கள் -முக்காலங்களுக்கும் நிர்வாகனாய் -சாதாரண அர்த்தம் –
சாத்விக ரஜஸ் தமஸ் காலங்களுக்கும் கடவன் என்றபடி

வேலை ஞாலமாயினாய் –கடல் சூழ்ந்த பூ மண்டலத்துக்கு ப்ரவர்த்தனாகி

ஓன்று இரண்டு தீயுமாகி –ஆஹவநீயம் -கார்த்தபத்யம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளுக்கும் நிர்வாஹகன் .

ஆயனாய-கோபால சஜாதீயனாய் திருவவதரித்த

ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –
ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் என்கிறார் –

ப்ரஹ்ருத்ராதிகளைச் சரீரமாகக்கொண்டு அவர்களுக்கு நியாமகனாய் என்கிறது முதலடைமொழி.

முனியே நான்முகனே முக்கண்ணப்பா” இத்யாதிகளிற்போல இங்கும் ஸாமாநாதிகரண்யம் சரீர சரீர பாவத்தைப் பற்றியதாம்.

உறக்கமோடு உணர்ச்சியாய்= இலக்கணையால் அஜ்ஞானத்தை உறக்கமென்கிறது.

ஞானமற்றவனுக்கு உறக்கம் தவிர வேறு தொழிலிலாமை அறியத்தக்கது.

அஜ்ஞாகம், அந்யதாஜ்ஞாநம், விபரீதஜ்ஞாகம், ஸம்சயம், மறப்பு இவையெல்லாம் உறக்கமேயாம்.

உறக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் எம் பெருமான் நிர்வாஹகனாகையாவ தென்னென்னில்;

தன் ஸ்வரூப யாதாத்மியத்தைச் சிலர்க்கு உள்ளபடி ஸக்ஷாத்கரிக்கச் செய்பவனும் தானே; த்

ரிமூர்த்திஸாம்ய வ்யாமேஹாதிகளாலே சிலரை மயங்குபவனும்தானே என்கை.

ஒன்றிரண்டு காலமாகி = இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்  என்று மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகன் என்பது ஸாமாந்யமான அர்த்தம்.

ஸத்வகுணம் மிகும்படியான ஸாத்விககாலத்துக்கும்,

ரஜோகுணம் மிகும்படியான ராஜஸ காலத்துக்கும்,

தமோகுணம் மிகும்படியான தாமஸகாலத்துக்கும் கடவன் என்கை விசேஷார்த்தம்.

—————–

ருத்ரனுக்கு மட்டும் இல்லை -உபய விபூதியில் உள்ளார் அனைவருக்கும் முடியாது என்கிறார்

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-

பதவுரை

ஆதி ஆன கால

ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனானவனே!.
ஆதி ஆன

ஜக்த்ஸ்ருஷ்டி முதலினவற்றுக்குக் கர்த்தாக்களான
வானவர்க்கும்

(பிரமன் முதலிய) தேவதைகட்கும்.
அண்டம் ஆய அப்புறத்து ஆகி ஆன வானவர்க்கும்

அண்டமென்று பெயர் பெற்ற அப்பரமபதத்திலுள்ள ப்ரதாநகர்களான நித்யஸூரிகளுக்கும்
ஆதி ஆன

நிர்வாஹகனான
ஆதி

அதிபதி
நீ

நீயாகிறாய்;
ஆதி ஆன

ஜகத்துக்குக் கடவர்களாக ஏற்பட்டிருக்கிற
வானம் வாணர்

(பிரமன் முதலிய) மேலுலகத்தவர்களினுடைய
அந்த காலம்

முடிவு காலத்தை
நீ உரைத்தி

நீ அருளிச்செய்ய நின்றாய்.
ஆதி காலம ஆன நின்னை

ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனான உன்னை.
யாவர் காணவல்லர்

பரிச்சேதிக்க வல்லார் யார்?

ஆதியான வானவர்க்கும் –
பிரம்ம -தஷ பிரஜாபதிகள்- சப்த ரிஷிகள்- த்வாசதச ஆதித்யர்கள் -சிருஷ்டி கர்த்தாக்கள் -இந்த்ரன் -சதுர்தச மனுக்கள்-
ஸ்திதி கர்த்தாக்கள் -ருத்ரன் -அக்னி- எமன் இவர்கள் போன்ற சம்ஹார கர்த்தாக்கள் போன்றறோரை இத்தால் சொல்லிற்று .

அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்க்கும் –
நித்ய ஸூரிகளுக்கும்

ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி-
ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளிச் செய்கிறாய்

ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே
ஆதி காலம் ஆன நின்னை என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை யாவர் காண வல்லரே –என்கிறார்-

உபயவிபூதியிலுமுள்ள ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸத்தாதிகள் தானிட்ட வழக்காகப்பெற்ற உன்னை ருத்ரன் ஒருவனையோ பரிச்சேதிக்கமாட்டான்? உபயவிபூதியிலும் பரிசேதிக்க வல்லர் இல்லையென்கிறார்.

ப்ரஹ்மா, தக்ஷப்ரஜாபதிகள், ஸப்தரிஷிகள், ஆதித்யர்கள் ஆகிய இவர்கள் ஸ்ருஷ்டி கர்த்தாக்கள்; இந்திரன், சதுர்த்தச மநுக்கள் ஆகிற இவர்கள் ஸ்திதிகர்த்தாக்கள்; ருத்ரன், அக்நி, யமன் முதலானவிவர்கள் ஸம்ஹாரகர்த்தாக்கள், ஆகிய இவர்களைச் சொல்லுகிறது- முதலடியில்

“ஆதியானவானவர்” என்று. ‘அண்டமாயவப்புறத்தாதி யானவானவர்’- நித்யஸூரிகள்.

“அண்டமாள்வதாணை” “அண்டம்போ யாட்சி அவர்க்கதறிந்தோமே” இத்யாதிகளில் அண்ட சப்தம் பரமபதவாசகமாக வருதல் காண்க.

இவ்விடத்துப் பெரியவாச்சர்ன்பிள்ளை வியாக்கியானத்தில் “அண்டசப்தவாச்யமான “லீலாபூதிக்கு அப்புறத்தில் அண்ட சப்தவாச்யமான பரமபதத்தில் வர்த்திக்கிற” என்பது சுத்தபாடம்.

ஜகத்துக்கு நிர்வாஹமான காலதத்துவமும் அவம்பெருமாளிட்ட வழக்கென்கிறது- மூன்றாமடி.

எம்பெருமான் ப்ரவர்த்திப்பித்த சாஸ்த்ரங்களிலே ***-***- இத்யாதிகளாலே ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அவஸாநகாலம் கூறப்பட்டிருந்தலால் “அந்தகாலம் நீயுரைத்தி” எனப்பட்டது.

அந்த காலம் = *** என்ற வடசொல் விகாரம். ப்ரஹ்மாதிகளுடைய ஆயுஸ்ஸுக்கு ஓர் எல்லை ஏற்பட்டிருப்பதாலும் எம்பெருமானுக்கு அது இல்லாமையாலும் இவனே முழுமுதற் கடவுள் என்பது ஸ்பஷ்டம்.

ஆதி ஆன காலம்நின்னை = ஆதி காலம் ஆன நின்னை என மாற்றியுரைக்கப்பட்டது;-

கார்யரூபமான ஜகத்துக்களெல்லாம் லயமடைந்து போனவளவிலே ***- என்றபடி ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனாயிருந்த உன்னை என்றவாறு.

————

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-

பதவுரை

தாது உலாவு

தாதுகள் உலாவுகின்ற
கொன்றை மாலை

கொன்னைப்பூ மாலையையும்
துன்னு செம் சடை

நெருங்கிய சிவந்த சடையையுடைய
சிவன்

ருத்ரன்
நீதியால்

முறைமைப்படி
வணங்கு

வணங்கப்பெற்ற
பாத

திருவடிகளையுடையவனே!
நின்மலா!

நிர்மலஸ்வரூபியே!
நிலாய சீர்வேதம் வாணர்

நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன
கீதம்

வேள்வியார்

ஸாமகானம் மிகுந்த யஜ்ஞயாகங்களை நடத்துமவர்களென்ன

நீதி ஆன கேள்வி யார்

சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்)
நீதியால்

சாஸ்த்ரவிதிப்படி
வணங்கு நின்ற நீர்மை

வணங்குகைக்கு உரிய தன்மை.
நின் கண்ணே நின்றது

உன் பக்கலில்தான் உள்ளது.

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
பிரயோஜனாந்தரர்களில் முதல்வரான சிவனும்

நீதியால் வணங்கு பாத நின்மலா–
அநந்ய பிரயோஜனரான வைதிக உம்பர்களும் உன்னையே ஆஸ்ரயிக்கிறார்கள்
நீயே சர்வ சமாஸ்ரயணீயன் என்கிறார்

நிலாய சீர் வேத வாணர்–
நிரம்பிய கல்யாண குணங்கள் உடைய வைதிகர்கள்

கீத வேள்வியார் –
சாம வேத ஞானம் உடையவர் முகுந்த யாக யஜ்ஞங்கள் நடத்துபவர்கள் .

நீதியான கேள்வியார்-
க்ரமப்படி ஸ்ரவண மனனநாதிகளை செய்பவர்கள் –

ப்ரயோஜநாந்தரபார்களில் முதல்வனான சிவனும் அநந்யப்ரயோஜநரான வைதிகோத்தமர்களும் உன்னையே ஆச்ரயிக்கக் காண்கையாலே நீயே ஸர்வ ஸாச்ரயணீயன் என்கிறார்.

—————-

காரணந்து த்யேயா -காரண வஸ்துவே உபாஸ்யம் என்கிறார் இதில்

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

பதவுரை

தன்னுள்ளே திரைத்து

தன்னிலே கிளர்ந்து
எழும்

பரவுகின்ற
தரங்கம்

அலைகளையுடைத்தாய்
வெண்தடம்

வெளுத்த ப்ரதேசங்களையுடைத்தான
கடல்

கடலானது
தன்னுள்ளே  திரைத்து எழுந்து

தனக்குள்ளே கிளர்துலாவி
அடங்குகின்ற தன்மைபோல்

(மறுபடியும்) சாந்தமாவதுபோல.
நிற்பவும்

ஸ்தாவரஜங்கமரூபமான ப்ரபஞ்சமெல்லாம்
நின்னுள்ளே

உன் ஸ்வரூபத்துக்குள்ளே
பிறந்து

உத்பந்தமாய்
இறந்து

லாபமடைந்து
நின்னுள்ளே அடக்குகின்ற நீர்மை

(இப்படி) உன் ஸ்வரூபத்துக்குள்ளேயே ஒடுங்கிப்பொருகைக்கு உரிய தன்மை
நின் கண்ணே நின்றது

உன் பக்கலில் தான் உள்ளது.

தன்னுளே திரைத்து எழும்-
பகவத் சங்கல்பத்தால் தோன்றி உள்ளதும் பின்பு அழிவதும் அவனது ஸ்வரூபத்தில் பிறந்து லயிப்பது
கடலில் அலைகள் தோன்றி அழிவது போலேவே
தரங்கம் -அலைகள்-

நிற்பவும் திரியவும்–
நிற்பனவும் திரிவனவும் -ஸ்தாவர ஜங்கம ரூபமான பிரபஞ்சம் எல்லாம்

நின்னுளே பிறந்து இறந்து-உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பன்னமாய் லயம் அடைந்து
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே-உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே
ஒடுங்கிப் போக உரிய தன்மை உன் பக்கத்திலே தான் உள்ளது –

அதர்வசிகையிலே “*** “  – என்று ஓதப்பட்டிருக்கிறது. ‘

ஜகத்துக்கு எது உபாதாநகாரண்மோ அதுதான் உபாஸ்யம்’ என்பது அந்த ச்ருதிவாக்யத்தின் பொருள்.

அப்படி உபாதாக காரணத்வ ப்ரயுக்தமான ஆச்ரயணியத்துவமும் எம்பெருமானிடத்தே யுள்ளது என்கிறது இப்பாட்டு.

அலையெறிவு ஓய்ந்துகிடந்த கடலானது வாயுஸஞ்சாரத்தாலே எங்கும் அலையெறியப்பெற்று,

மீண்டும் காற்று ஓய்ந்தவாறே அவ்வலையெறிவு அடங்கி, கடலானது சாந்தமாவதுபோல- என்பது முன்னடிகளின் கருத்து.

பின்னாடிகளிற் கூறப்படும் அம்சத்திற்கு இது த்ருஷ்டாந்தம்.

தார்ஷ்டாந்திகத்தில் வாயுவின் ஸ்தானத்திலோ பகவத் ஸங்கல்பத்தைக்கொள்க.

ஸங்கல்பமில்லாதபோது பகவத்ஸ்வரூபம் சாந்தமாயிருக்கும்.

***- என்றாற்போன்ற ஸங்கல்பம் உண்டானவாறே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ப்ரபஞ்சங்கள் தோன்றுதலும்

பின்பு அழிதலுமான அவஸ்தைகளையடைந்து கடைசியாக

***- என்றபடி எம்பெருமானளவிலே உயஸம்ஹ்ருதங்களாய்ப் போகிறபடியை சொல்லுகிறது.

நிற்பவும் திரிபவும்- நிற்பனவும் திரிபனவு மென்றபடி.

—————

பிரஜாபதி பசுபதிகள் இவனுக்கு புத்ரராகவும் பரனாகவும் சுருதி சொல்லுமே –
ஸ்ருஜ்யர்-அஞ்ஞர்-ஆஸ்ரயணீயர் ஆக மாட்டார்களே

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-

பதவுரை

சொல்லினால்

வேதாந்த சாஸ்த்ர முகத்தாலே
தொடர்ச்சி நீ

(ஏகாந்திகளுக்கு) உறவை உண்டு பண்ணுமவன் நீ;
சொலப்படும் பொருளும் நீ

(சில புராணாதிகளில் ஆச்ரயணீயராகச்) சொல்லப்படுகிற தேவாதி பதார்த்தங்களுக்கு அந்ராத்மா நீ;
சொல்லரினால் சொல்லப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால்

நீ காட்டிக்கொடுத்த வேதத்திற் சொல்லியபடி
படைக்க

(உலகங்களை) உண்டாக்குவதற்காக
நீ படைக்க வந்து தோன்றினார்

உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு வந்து பிறந்தவர்களான ப்ரஹ்மாதிகன்
சொல்லினால்

சப்தங்களைக் கொண்டு
சுருங்க

சுருக்கமாவாவது
நின் குணங்கள்

உனது கல்யாண குணங்களை
சொல்லவல்லரே.

வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.)

சொல்லினால் –
வேதாந்த சாஸ்திர முகத்தால்

தொடர்ச்சி நீ-
ஏகாந்திகளுக்கு .உறவை உண்டுபவன் நீ

சொலப்படும் பொருளும் நீ-
சில புராணங்களில் சொல்லப் படும் தேவாதி அனைத்துக்கும் அந்தர்யாமி நீயே .

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ-
வேதத்தால் சொல்ல முடியாது என்று தோன்றுகின்ற தேஜஸ் சப்த வாக்யனும் நீயே .

சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்-
நீயே காட்டிக் கொடுத்த வேதத்தில் சொல்லிய படியே உலகத்தை உண்டாக்கிய உன்னாலேயே சிருஷ்டிக்கப் பட்டு
வந்து பிறந்த பிரம்மா முதலானோர்

சொல்லினால் –
சப்தங்களைக் கொண்டு

சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –
சுருக்கமாக வாவது -உனது கல்யாண குணங்களை வர்ணிக்க சக்தர்களோ

***- ப்ரஹ்ருத்ராதிகள் ஆச்ரயணீரல்லர்களென்றும் எம்பெருமானொருவனே ஆச்ரயணீயனென்றும் சொல்லிவிடலாமோ?

வேதங்களில் ***-***- இத்யாதிகளான சில வாக்கியங்கள் சிலபாரம்யத்தையும்

***- இத்யாதிகளான சில வாக்யங்கள் ப்ரஜாபதி பாரம்யத்தையும் சொல்லிக்கிடக்கின்றனவே;

அவர்கள்- ஆச்ரயணீயராகத் தடையென்ன? என்று சிலர்க்கு சங்கையுண்டாக

அந்த ப்ரஜாபதி பசுபதிகள் எம்பெருமானுக்குப் புத்ரபௌத்தர்களான வேதங்கள் முறையிடா நிற்பதுந் தவிர,

அவர்கள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விரிவாகப் பேசமாட்டாமையன்றிக்கே

சுருக்கமாகவும் பேசமுடியாதவர்களென்று ப்ரமாண ப்ரஸித்தமாயிருக்க,

இப்படி ஸ்ருஜ்யர்களாகவும் அஜ்ஞர்களாயுமுள்ள அவர்கள் ஆச்ரயணீயராகைக்கு ப்ரஸக்தியேயில்லை யென்றாயிற்று.

————–

உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-

பதவுரை

உலகு தன்னை

லோகங்களை
நீ படைத்தி

நீ ஸ்ருஷ்டியாகின்றாய்;
உள் ஒடுக்கி வைத்தி

(நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய்.
மீண்டு

அதுமன்றியில்
உலகு தன்னே

இவ்வுலகத்தினுள்ளே
பிறத்தி

வந்து அவதரியா நின்றாய்;
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்;
உலகு

ப்ரபஞ்சம் முழுதும்
நின்னொடு ஒன்றி நிற்க

(சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க
வேறு நிற்றி

அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்;

ஆதலால்:

உலகில்

லோகத்திலே
குழல் உள்ள நின்னை

ஆச்சரியமான படிகளையுடைய உன்னை
யாவலர் உள்ள வல்லவர்

அறியவல்லாரார்?

 

உலகு தன்னை நீ படைத்தி-
ஜகத் காரண பூதனாய் நின்று நோக்கும் அளவே அன்று
வேறு நிற்றி -அசாதாரண விக்ரஹத்தோடு கூடி வந்து திருவவதரித்து நோக்குகின்ற உன் படிகளை
சூழல் உள்ள நின்னை-ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை
அறிய வல்லார் யாரும் இல்லை என்கிறார்-

ஜகத்காரணபூதனாய்நின்று நோக்குமளவே யன்றிக்கே அஸாதாரண விக்ரஹத் தோடுங் குடிவந்தவதரித்து நோக்குகின்ற உன்படிகளை அறியவல்லார் ஆருமில்லை யென்கிறார்.

நான்காமடியை, சூழல் உள்ள நின்னை  உலகில் யாவருள்ளவல்லர்” என மாற்றி அந்வயித்துக்கொள்க.

ஆச்சர்யமான படிகளையுடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறியவல்லார் ஆருமில்லை யென்க.

இனி, நின்னை என்பதற்கு ‘உன்னிடத்திலே’ என்று பொருள்கொண்டு உன்னிடத்திலே உள்ள சூழலை ஆர் அறியவல்லார்? என்னவுமாம்.

படைத்தி-, வைத்தி, பிறத்தி, நிற்றி= இவை முன்னிலை யொருமை வினை முற்றுக்கள்.

—————-

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-

பதவுரை

இன்னை என்று

‘நீ இப்படிப்பட்டவன்’ என்று
சொல்லலாவது

சொல்லக்கூடியது
யாதும் இல்லை

ஒரு படியுமில்லை;
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்

உன்னுடைய அவதாராதி விஷயங்களில் ஆச்ரிதர்க்கும் அநாச்சரிதர்க்கு முள்ள விவாதத்தை அறிந்திருக்கும் மஹான்கள் (உன்னை)
ஆதியும்

(விக்ரக்ஷபரிக்ரக்ஷம் பண்ணினதற்குக்கு) காரணத்தையும்
நீர்மையால் நினைக்கில் (அல்லது)

உன்னுடைய கிருபையினாலே நீ அறிவிக்க இறியுமதெழிய
இட்டிடை பின்னை கேள்வன் என்பர் நின்னை

நுண்ணிய இடையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு வல்லபனானகக் கூறுவர்கள்; உன்னுடைய
பின்னை ஆய கோல மோடு

ஸர்வவிலக்ஷணமான திவ்விய மங்கள விக்ரக்ஷத்தையும்
பேரும் ஊரும்

திருநாமங்களையும் திவ்யஸ்தானங்களையும்
ஆர் நினைக்க வல்லர்

(மற்றைப்படி) அறிய வல்லாரார்?

 

“இன்னை என்று சொல்லலாவது இல்லை-
நீ இப்படிப் பட்டவன் என்று சொல்லக் கூடியது ஒரு படியும் இல்லையே

உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்-
உன்னுடைய திருவவதாரத்து விசேஷங்களை ஆஸ்ரிதர்களுக்கும் அநாஸ்ரிதர்களுக்கும்
உள்ள விவாதத்தை அறிந்த மகான்கள்

இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் –
நுண்ணிய இடையை உடைய நப்பின்னை பிராட்டியாருக்கு வல்லபனாக கூறுவார்கள்

பின்னையாய கோலமோடு-
சர்வ விலஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்

பின்னையாய கோலம் –
மானிட ஜாதிக்கும் கீழாக திரியும் ஜாதியில் வந்து திருவவதரித்து -என்றும் கொள்ளலாம்

பேருமூரும் ஆதியும்-
திரு நாமங்களையும் -திவ்ய தேசங்களையும் விக்ரஹ பரிக்ரஹம் பண்ணியதற்கு காரணத்தையும்

நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே-
நீர்மையால் நினைக்கில் அல்லது நின்னை யார் நினைக்க வல்லர் -ஒழிய மற்றப்படி யாராலும் அறிய முடியாதே-

ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த

பிணக்காவது-ஆஸ்ரியர்கள் பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான் -என்றும்
அநாஸ்ரிதர்கள் பேரும் ஓர் உருவமும் உள்ளதில்லை என்பர் –

எம்பெருமானுடைய வைலக்ஷண்யத்தையும் அவதார ரஹஸ்யங்களையும் அவன் தானே காட்டிக் கொடுக்கில் காணுமதொழிய ஸ்வப்ரயத்நத்தாலே ஆர்க்கும் காணமுடியாதென்கிறார்.

“ஆகியஞ்சோதியுருவை அங்கு வைத்திருங்குப்பிறந்த” என்றபடி

தன்படிகளில் ஒன்றும் குறையாமே எல்லாவற்றோடுங் கூடிவந்து திருவவதரித்து நிற்கிற நிலையிலே

உன் படிகளில் ஏதாவதொருபடியையும் பரிச்சேதித்து அறிய முடியாதென்பது முதலடியின் கருத்து.

உன்னாலே *மயர்வர மதிநல மருளப்பெற்ற உன் விஷயங்களை யெல்லாம் நன்கறிந்துள்ள மஹான்கள்

“மிதுநமே ஆச்ரசணீயம்” (அதாவது பெருமாளும் பிராட்டியுமாக இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை)

என்று சொல்லுவார்கள்- என்பது இரண்டாமடியின் கருத்து.

பிணக்காவது – “பேருமோருருவமும் உளதில்லை” என்று அநாச்ரிதர்கள் கூறுவதும்,

“பேருமோராயிரம் பிறபலவுடைய வெம்பெருமான்” என்று ஆச்ரிதர் கூறவதுமான இப்படிப்பட்ட விவாதம்:

இதனையறிந்தவர்களென்றால், அநாச்ரிதர்கள் கூறுவது அஸம்பத்தமென்றும் ஆச்ரிதர்கள் கூறுவதே பொருத்தமுடைத்தென்றும் சோதித்தறிந்தவர்களென்கை.

“பிள்ளையாயகோலம்” என்றது- இதர வ்யாவ்ருத்தமான விக்ரஹமென்றபடி.

அன்றி, மானிட சாதிக்கும் ” பிற்பட்டதான் (ஹேயமான) திர்யக்காதி ஜாதியிலேயான திருமேனி யென்னவுமாம்.

“***- என்று கீதையிலே அறிவித்தாப்போலே நீறே அறிவிக்கில் அறியுமத்தனையொழிய மற்றைப்படியாக அறியமுடியாதென்பது ஈற்றடியின்கருத்து.

இப் பாட்டின் முடிவில் நினைக்கிலே என்றவிடத்து அல்லது என்று கூட்டிக் கொள்ளவேணுமென்பர்.

—————

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்ன தென்ன வல்லமல்ல வாகிலும்
சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-

பதவுரை

தூய்மை யோகம் ஆயினாய்

ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே!
துழாய் அலங்கல் மழையாய்

திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே!
ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!

கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே!
நின் நாமதேயம்

உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள்
இன்னது என்ன

இன்னின்னவை யென்று சொல்ல
வல்லம் அல்ல ஆகிலும்

யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும்
சாம வேத கீதன் ஆய

ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான
சக்ர பாணி அல்லையே

கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்)

தூய்மை யோகமாயினாய் –
சம்சாரிகள் அழுக்கு உடம்பு நீங்கி அப்ராக்ருத சரீரம் பெறும் படி அருள் செய்பவன்

நின் நாமதேயமின்ன தென்ன வல்ல மல்ல வாகிலும்–
உனது திரு நாமங்களுக்கு வாச்யமான திருக் கல்யாண குண சேஷ்டிதங்கள்
உனது எண்ண முடியாத பல பல திருக் கல்யாண குணங்களையும் இன்புறும் விளையாட்டுக்களையும் இவை இவை என்று
பகுத்து சொல்ல அடியேன் சமர்த்தன் அல்லேன் என்றாலும்
நீ பரிஹரித்து அருளின ஸ்ரீ கூர்ம விக்ரஹம் –திருக்கையில் திருவாழியுமான சேர்த்தியை சாம வேதத்தில் அருளிய
அதி ரமணீய ஹிரண்மய விக்ரஹம் என்று அறிந்தேன் என்கிறார் —

“நம் அவதாரரஹஸ்யத்தை நீர் அறிந்தபடி யென்?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,

“ப்ரயோஜநாந்தர பரர்க்காக இதர ஸாஜாதீயராகத் திர்யக் யோநியிலே திருவவதரித்தருளின தேவரீருடைய குண சேஷ்டிதங்களை அடியேன் பரிச்சேதித்து அறியமாட்டேனேலும் அவ்வழக்கு ***- என்றறிந்தேன்” என்கிறார்.

தூய்மை யோகமாயினாய்! = அசித் ஸம்ஸர்க்கத்தாலே அசுத்தனான ஸம்ஸாரிக்கு உன் “க்ருபையாலே அந்த அசித்ஸம்ஸர்வர்க்கத்தை யறுத்து நித்யஸூரிகளோடே சேர்த்து உன்னை அநுபவிப்பிக்கவல்ல சுத்தியோகத்தையுடையவனே! என்ற படி.

(நின்நாமதேயம் இத்யாதி.) நாமதேயமாவது- குணங்களையும், சேஷ்டிகளையும் சொல்லுகிற திருநாமம். ஆயினும் இச்சொல் இங்கு இலக்கணையால் திருநாமவாச்யமான குணசேஷ்டிதஙக்ளையே சொல்லக்கடவ’தாமென்பர்.

“நின்னாமதேயமென்று-வாச்யமான குணசேஷ்டிதங்களை ***-கமான சப்தத்தாலே லக்ஷிக்கிறது” என்ற வியாக்கியான ஸூக்தி காண்க.

உன்னுடைய எண்ணில் பல்குணங்களையும் இன்புறு மிவ் விளையாட்டுகளையும் இவை யிவையென்று பகுத்துச் சொல்ல அடியேன் அமஸமர்த்தனேயாகிலும் என்றவாறு.

சாமவேதநீதனாய சக்ரபானியல்லையே = நீ பரிக்ரஹித்தருளின் கூர்மவிக்ரஹம் ஸாமாக்யமானதல்லவென்றும் ஸாக்ஷாரத் ***- மாய்க் கையுந்திருவாழியுமான அதிரமணீய ஹிரண்மய விக்ரஹம் என்றும் அறிந்தேனென்கை

————-

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

பதவுரை

அங்கம் ஆறும்

சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன
வேதம் நான்கும்

(அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு)
ஆகி நின்று

ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே
தங்குகின்ற தன்மையாய்

ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே!
தடம் கடல்

மஹா ஸமுத்திரத்திலே
பணம் தலை செம் கண் நாக அணை

படங்களின் தலையிலே சிவந்த கண்களை யுடையனான தீருவனந்தாழ்வானாகிற அணையிலே
கிடந்த

கண்வளர்ந்தருளுகிற
மல்குசெல்வம் சீரினாய்

நிறைந்த செல்வத்தையும் குணங்களையுடையவனே!
சஙக வண்ணம் அன்னமேனி

சங்கினுடைய வர்ணம் போன்ற திருமேனியையுடையனாய் (கிருதயுகத்தில் திருவவதரித்து)
சாரங்கபாணி அல்லையே

(த்ரேதாயுகத்தில் இக்ஷ்வாகு குலத்திலே) கையும் வில்லுமாய் வந்து பிறந்தவன் நீயேயன்றோ?

 

அங்கமாறு–
சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு வேத அங்கங்களும்
அஷரங்களை உச்சரிக்க வேண்டியவற்றை சிஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யங்களின் பாகுபாடு வியாகரணத்தில்
அர்த்த விவேகம் சொல்லும் .நிருக்தம்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும் –

இந்த ஆறு அங்கங்களும் நான்கு வேதங்களுக்கும் உண்டு -இவற்றால் அவனுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்கள் சொல்லப்படும் .

அவன் தான் –மா கடல்
திருப் பாற் கடலில்-
பணைத் தலை-செங்கண் நாகணைக் கிடந்த.-
பணங்களின் தலையில் சிவந்த கண்களை உடைய திரு அனந்தாழ்வான் என்னும் அணையில் பள்ளி கொண்டு இருக்கும் .

மல்கு செல்வம் சீரினாய்.”-
நிறைந்த செல்வத்தையும் குணங்களையும் கொண்ட

சங்க வண்ண மன்ன மேனி-
சங்கின் வண்ணம் போன்ற திருமேனியை உடையவன்-கருத யுகத்தில் திருவவதரித்து

சாரங்க பாணி யல்லையே –
த்ரேதா யுகத்தில் இஷ்வாகு குலத்திலே திருக்கையிலே திருச் சார்ங்கம் என்னும் கோதண்டம் கொண்டு
வந்து திரு வவதரித்த நீயே அன்றோ -என்கிறார்-

வேதங்கட்கும் அவற்றின் அங்கங்கட்குமே விஷயமாகவல்ல ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய நீ

ஆச்ரிதர்களை அநுக்ரஹிக்கைக்காகத் திருப்பாற்கடலிலேயே திருக்கண் வளர்ந்தருளி,

அதுதானும் பரதசை யென்னும்படி அங்கு நின்னும் புறப்பட்டு ஆச்ரிதர் உகந்த ரூபத்தையே

உனக்கு ரூபமாகக் கொண்டு வந்தவதரித்தாய் என்கிறார்.

அங்கம் ஆறும் = சீக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேதாங்கள் ஆறு.

அச்சுக்கள், ஹல்லுக்கள் என்னும் அக்ஷரங்களை உச்சரிக்க வேண்டிய முறைகளும்,

அவை ஒன்றோடொன்று சேர வேண்டும் முறைகளும் சீக்ஷையில் சொல்லப்படும்;

ப்ரக்ருதி ப்ரத்யயங்களின் பாகுபாடும், அவற்றின் அர்த்தவிவேகமும் வியாகரணத்திலும் நிருக்தியிலும் நிர்ணயிக்கப்படும்;

காயத்ரீ, த்ரிஷ்டுப், ஜகதீ இத்யாதி ***-சந்தங்களில் கூறப்படும்;

வேதோக்கர்மங்களைக் காலமறிந்து அநுஷ்டிக்க வேண்டுகையாலே அக்காலங்களை யறிவிக்கும் ஜ்யோதிஷம்:

ஆச்வலாயநர், ஆபஸ்தம்பர் முதலிய மஹர்ஷிகளால் செய்யப்படட் கல்பங்களில்

வைதிக கருமங்களை அநுஷ்டிக்க வேண்டிய முறைமைகள் விளக்கப்படும்.

இப்படிப்பட்ட ஆறு அங்கங்களோடு கூடிய வேதங்கள் நான்கு. ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன.

ஆக இந்த ஸாங்கவேதங்களாலும் எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்பாவங்களே ப்ரதிபாதிக்கப்படுகின்றமை

ஒன்றரை யடிகளாற் கூறப்பட்டதாயிற்று.

———–

தலைக் கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே —-16 –

பதவுரை

தலைக்கணம்

முதன்மைபெற்ற தேவகணமென்ன
துகள்

க்ஷுத்ரமான ஸதாவரகணமென்ன
குழம்பு சாதி

மிச்ரயோனிகளான மநுஷ்ய திர்யக்ஜாதிகளென்ன இவற்றிலே
சோதி

அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட
தோற்றம் ஆய்

திருவவதரித்து
நிலைக்கணகங்கள் காண

(தேவாதிகள் மாத்திரமே யன்றியே) ஸ்தாவரங்களும் (உன்னை) அனுபவிக்கும்படி
வந்து நிற்றி

வந்து நிற்கிறாயாகிலும்
ஏலும் நீடு  இரும் கலை கணங்கள்

நித்தியமாய் விரிந்தவையான வேதசாஸ்திர ஸமூஹங்கள்
சொல் பொருளினால்

அபிதாநவ்ருத்தியாலும்
கருத்தினால்

தாம்பர்ய வ்ருத்தியாலும்
நினைக்க ஒணா

(உன் பெருமைகளை) நினைக்கவும் மாட்டாமல்
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி

பர்வத ஸமூஹஙக்ள்போல் அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலக்ஷண்யமானது
நின் தன் மாட்சியே

உன்னுடைய வைலக்ஷண்ய மென்னுமித்தனை

தலைக்கணம் –
முதன்மை பெற்ற தேவ கணங்கள்

துகள் –
ஷூத்ரமான ஸ்தாவர கணங்கள்-
குப்ஜ மரமாய் -சிறிய மரமாயும் திருவவதாரம் செய்ததை புராணம் கூறும் –

குழம்பு சாதி –
மிஸ்ர யோநிகளான மனுஷ்ய ஜங்கம ஜாதிகள் இவற்றிலே ”

சோதி தோற்றமாய் –
அப்ராக்ருத தேஜஸ் உடன் திரு வவதரித்து

நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும்-
தேவர்கள் மட்டும் இல்லாது அனைவரும் அனுபவிக்கும் படியாக வந்து நிற்பாயாகிலும்
நிலைக் கணங்கள்-அசையாமல் நிலை நிற்கும் ராசிகள் -ஸ்தாவர சமூகங்கள்

நீடிரும் கலைக் கணங்கள் –
நித்தியமாயும் விரிந்தும் உள்ள வேத சாஸ்திர சமூகங்கள்

சொல் பொருள் கருத்தினால் –
அபிதான வ்ருத்தியாலும் தாத்பர்ய வ்ருத்தியாலும்

நினைக்கொணா-
உனது பெருமைகளை நினைக்கவும் மாட்டாமல் .
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி-
பர்வத சமூகங்கள் போலே அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலஷண்யம்

நின் தன் மாட்சியே –
உன்னுடைய வைவைலஷண்யம் எத்தனை

திருப்பாற்கடலில் நின்றும் தேவ மதுஷ்பாதி யோநிகளிலே அவதரித்து ரக்ஷிப்பது மாத்திரமே யன்றி

ஸ்தாவர பர்யந்தமான நால்வகை ஸ்ருஷ்டிகளிலும் அவதரித்து நீ உன்னை ஸர்வாநுபயோக்யனாக, ஆக்கினாலும்

சாஸ்த்திரங்களானவை பரிச்சேதித்து அறியமாட்டாதபடியன்றே உன்னுடைய அவதார வைக்ஷைண்ய மிருப்பது என்கிறார்.

மநுஷ்யாதிகளுக்கு மேற்பட்ட தேவகணத்தைத் தலைக் கணமென்கிறது

க்ஷுத்ரகணங்களாகிய ஸ்தாவராதிகளைத் துகள்கண மென்கிறது. மநுஷ்ய கணங்களும் திர்யக்கணங்களும் குழம்பு சாதி யெனப்படும்.

தேவகணங்கள் புண்யயோநியாய், ஸ்தாவரங்கள் பரபயோநியாய் இருப்பது போன்றியே மநுஷ்ய திர்யக்ஜாதிகளிரண்டும் புண்யபாப மிச்ரயோநிகளாகையாலே குழம்புசாதி என்கை உசிதம்;

ஆக இந்நான்கு யோநிகளிலும் *** என்றபடி அப்ராக்ருத திவ்யளம்ஸ்தாகத்தோதே பிறந்தருளின படியைக் கூறுவது முதலடி.

ஸ்தாவரஜாதியில் எம்பெருமான் பிறந்தனை யுண்டோவென்னில் உண்டு;

கும்ஜாம்ரமாய் (-அதாவது சிறியதொரு மாமராய்)த் திருவவதரித்த வரலாறு புராண ப்ரஸித்தம்.

இப்படி திருவதரித்து, நிலைக்கண்கள் காணவந்து நிற்றியேலும் = தேவாதிகள் மாத்ரமில்லாமல் ஸ்தாவரங்களும்கூட உன்னை அநுபவிக்கும்படி நீ வந்து நின்றாயாகிலும்,

நிலைக் கணகங்கள் – அசையாமல் நிலைநிற்கும் ராசிகள், ஸ்தாவர ஸமூஹங்கள்.

நீ இப்படி தாழநின்றாலும் வேதம் முதலிய சாஸ்த்ரங்களானவை உன் வைபவத்தை ஒருபடியாலும் பரிச்சேதிக்கமாட்டாமல்,

பர்வத ஸமூகங்களை வர்ணிக்கப்புகுந்த வொருவன் அவற்றைப் பரிசேசதித்து வர்ணிக்கமாட்டாதே

ஒரு ஸமுதாய ரூபேண வர்ணிக்குமாபோலே வர்ணிக்குமித்தனை யல்லது வேறில்லை யென்கிறார்

நீடிருங் கலைக்கணகங்கள் இத்யாதியால்

——————-

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-

பதவுரை

ஆதி தேவனே

ஸர்வகாரண பூதனான பெருமாளே!
ஏகமூர்த்தி ஆய்

(பரமபதநிலயனான) பரவாஸு தேவமூர்த்தியாய்
மூன்று மூர்த்தி ஆய்

ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய்
முதலாயிரம்

திருச்சந்த விருத்தம்
நாலு மூர்த்தி ஆய்

ப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய்
நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய்

விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய்
புண்ணியத்தின் மூர்த்தி ஆய்

புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய்
எண் இல் மூர்த்தி ஆய்

(இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய்
நலம் கடல்

நல்ல திருப்பாற்கடலில்
நாகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து

திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி
மேல்

அதுக்குமேலே
ஆக மூர்த்தி ஆய வண்ணம்

அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை
என் கொல்

என்னாயிருந்தது.

ஏக மூர்த்தி
பரமபத நிலையனான பர வாஸூ தேவ மூர்த்தியாய்

மூன்று மூர்த்தி யாய் –
சங்கர்ஷன பிரத்யுமான அநிருத்தன் ஆகிய மூன்று மூர்த்திக்களுமாய்

நாலு மூர்த்தி யாய்
பிரதானம் புருஷன் அவ்யக்தம் காலம் என்னும் இவற்றை சரீரமாகக் கொண்ட

நன்மை சேர் போக மூர்த்தி யாய் –
விலஷணமாய் போகத்துக்கு அர்ஹ்யமான மூர்த்தியாய்

புண்ணியத்தின் மூர்த்தி யாய்
புண்யமே வடிவு கொண்ட தொரு மூர்த்தியாய்

எண்ணில் மூர்த்தியாய்-
இப்படி எண்ணிறந்த பல பல மூர்த்தியாய்

நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது –
நல்ல தொரு பாற் கடலிலே திரு வநந்த ஆழ்வான் திரு மேனியைப் படுக்கையாகக் கொண்டு கண் வளரும்

மேல்
அதற்கும் மேலே

ஆக மூர்த்தி யாய வண்ணம் –
அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சாவதாரமும் எடுத்த தன்மையை

என் கொல் ஆதி தேவனே ––
தமர் உகந்த உருவம் அவ்வ்ருவம் தானே போலே ஆதி தேவனே இது என்ன விந்தை என்கிறார் –

ஆதி காரணமாய் இருக்கும் நீ கார்ய வர்க்கத்துக்கு உள்ளே அதி ஸூத்ரனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
அதீனமாய் இருப்பது என்ன வித்தகம் –

பரவாஸுதேவ மூர்த்தியா யிருந்துகொண்டு நித்யவிபூதியை நிர்வஹித்தும்,

வ்யூஹம் முதலாக ஸ்தாவரஜந்மபர்யந்தமாகத் திருவவதரித்து லீலாவிபூதியை நிர்வஹித்தும் போருகிற இவை

ஓரொன்றே சாஸ்த்ரங்களுக்கு அவிஷமாயிருக்க,

அதுக்குமேலே* தமருகந்த தெவ்வுரு மவ்வுருவந்தானாய் ஸர்வஸுலபனாய் ஸர்வ ஸஹிஸ்ணுவாய்

ஸர்வஜுஸமாராத்யனாய் அர்ச்சாவதார ரூபியாய்த் தன்னை அமைத்துநின்ற தன்மை என்னே! என்று

அது தன்னிலே உள் குழைகின்றார்.

“மேல் ஆகமூர்த்தியாய வண்ணம் என்கொல்!”- கீழ்க்கூறிய பற்பல திருவுருவங்களை ஏற்றுக் கொண்டதுமல்லாமல்

இப்படிப்பட்ட ஊர்வாத்மா பரதந்த்ரமான தொரு நிலைமையை ஏற்றுக்கொண்டவிது என்ன

ஸௌலப்ப பரமகாஷ்டை! என உள்குழைகிறபடி

ஆதிதேவனே! = ஜகத்துக்கெல்லாம் ஆதிகாரணமாயிருக்கிற நீ கார்யவர்க்கத்துக்குள்ளே

அதிக்ஷûத்ரனாயிருப்பானொரு சேதானுடைய விருப்பத்துக்கிணங்கி நடப்பது என்ன வித்தகம்! என்று கேட்கிறபடி-

——————————-

நாக மூர்த்தி சயனமாய் -என்றும் –
தடம் கடல் பணை தலை செங்கன் நாகனைக் கிடந்த -என்றும்- அருளிச் செய்த அநந்தரம்
அதிலே ஆழம் கால் பாட்டு அடுத்த பாசுரம் அருளுகிறார்

விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந் தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –18-

பதவுரை

வேலை வண்ணனே

கருங்கடல் வண்ணனான எம்பெருமானே!
விடத்த

விஷத்தையுடைத்தான
ஒரு ஆயிரம் வாய்

ஓராயிரம் வாய்களினின்றும்
இரு ஆயிரம் கண்

ஈராயிரம் கண்களினின்றும்
வெம் தழல்

வெவ்விய தழலை
விடுத்து

புறப்படவிட்டுக்கொண்டு,
வீழ்வு இலாத போகம்

ஒரு காலும் விச்சேதமில்லாத பகவநறுபவத்தையுடையனாய்
மிக்க சோதி

மிகுந்த ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
விதானம் ஆய்

மேற்கட்டிபோன்ற படங்களினுடைய
மேல்

மேற்புறத்திலே
தொக்க

திரள்திரளாயிருக்கிற
சீர்

அழகை
தொடுத்து

தொடுத்து
பௌவம் நீர்

ஸமுத்ரஜலத்திலே
படுத்த

படுக்கையாக அமைந்த
அரா அணை பாயல் பள்ளி கொள்ளது

திருவனந்தாழ்வானாகிய சயகத்திலே பள்ளிகொண்டருளும் தன்னை
என் சொல்

எத்திறம்!

விடத்த வயோராயிரம்-
விடாத்தை உடைய ஆயிரம் வாயில் என்றும்

ஈராயிரம் கண் வெந்தழல்-விடுத்து-
ஈராயிரம் கண்கள் என்றும் வெவ்விய தழலை புறப்பட விட்டுக் கொண்டு

விள்விலாத போக
ஒரு காலும் விச்சேதம் இல்லாத பகவத் அனுபவத்தை உடையானாய்

மிக்க சோதி
மிகுந்த ஜ்யோதிசை உடையனாய்

தொக்க சீர்
திரள் திரளாக இருக்கும் அழகை

தொடுத்து மேல் விதாநமாய
தொடுத்து மேல் புறத்திலே மேல் கட்டி போன்ற படங்கள் உடைய

பௌவ நீர் அராவணைப் படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –
சமுத்திர ஜலத்தில் படுக்கையை அமைத்த திரு வநந்த ஆழ்வான் சயனத்திலே பள்ளி கொண்டு அருளும் தன்மை எத்திறம் –

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவு -போலே

விள்விலாத போகம் –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமும் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம்
அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அரவாம் திருமாற்கு அரவு –

பகவத் அனுபவம் மாறாமல் இருப்பதால் மிக்க சோதி -என்கிறார்-

கீழ் “நாக மூர்த்தி சயனமாய்” என்றும்

“தடங்கல்பணத்தலைச் செங்கணாகணைக் கிடந்த” என்றும்

க்ஷீரஸநகரசயநம் ப்ரஸ்துதமானவாறே திருவுள்ளம் அங்கே ஆழங்காற்பட்டு

அந்நிலையிலே அபிநிவேசாதிசயம் தோற்ற அருளிச் செய்கிறார்.

“விடத்தவாயொராயிர மிராயிரங்கண் வெந்தழல் விடுத்து” என்னுமளவால்

“ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு” (என்முகன் திருவந்தாதி.) என்ற அர்த்தத்தை அருளிச்செய்தபடி.

ஆபத்து நேருவதற்கு ப்ரஸந்தியற்ற இடத்திலுங்கூட ஆதராதி சயத்தினால் ஆபத்தை அதிசங்கித்துக் காப்பிடுந்தன்மை

நித்யஸுரிகளுக்கெல்லாம் உண்டாயிருக்கச் செய்தேயும் திருவனந்தாழ்வானுக்கு அது விசேஷித்திருக்குமாய்த்து.

வீழ்வு இலாத போகம் = “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாய் நின்றால் மாவடியாம். நீள்கடலுள்-

என்றும், புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புக்கு மணையாந் திருமாற்கரவு.” என்றபடி

பஹுமுகாமகத்திருமால் திறத்தில் கிஞ்சித்கரிக்கும் தன்மையினால் பகவதநுபவமாகிற போகததிற்கு எப்போதும் விச்சேதமில்லாதவன் என்கை.

மிக்க சோதி = பகவதநுபவம் மாறாதே செல்லுமவர்கட்கு விலக்ஷணமானதொரு ஜேஸ்ஸு உண்டாகக் கடவதிறே;

அதனைச் சொல்லுகிறது.

கீழ்ப் பாட்டில் “பௌவநீரராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வதென்கொல்?” என்று-

ஏதுக்காகத் திருப்பாற்கடலில் கண்வர்ளந் தருளாநின்றாய்? என்று எம்பெருமானை நோக்கி வினவிய ஆழ்வாரைக்குறித்து

அப்பெருமான் “ஆழ்வீர்! ஸம்ஸாரிகளை ரக்ஷிப்பதற்காகத்தான் நாம் இக்கிடை கிடைக்கிறோம்” என்றருளிச்செய்ய;

அதுகேட்ட ஆழ்வார், ‘பஹுமுகமாக ஸம்ஸாரிசேதநர்களை ரக்ஷித்தருளின நீ ரக்ஷணக்ருத்யத்திலே இன்னும் சேஷம் வைத்திருக்கிறாயோ?

பண்டை எல்லாம் செய்தருளிற்றே! ஆயிருக்க, ஒன்றும் செய்யாதவன் போலவும்

இன்னும் பல செய்யக் கூடியவன் போலவும் திருப்பாற் கடலிலே வந்து கண்வளர்ந்தருள்வது என்னோ? என்கிறார்.

“புள்ளதாகி வேதான்கு மோதினாய்” என்று- ப்ரமாணத்தைக் கொடுத்தபடியையும்,

“புள்ளின்வாய் பிளந்து” என்று – ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடியையும் சொல்லிற்றாயிற்று.

இப்படிப்படட் ரக்ஷணம் என்றைக்கோ செய்யப்பட்டதாகில் இன்றைக்கும் மேலுள்ள காலத்துக்கும் என்னாயிற்று? என்று

சங்கிப்பார்க்கு இடமறும்படியருளிச் செய்கிறார்

புட்கொடியித்யாதி, தான் ரக்ஷணத்தொழிலொன்றிலேயே தீக்ஷிதன் என்பது தோன்றக் கொடிகட்டிக் கிடக்கிறபடி

ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன்பக்கலிலே வந்து காரியங் கொள்ளும்படி ரக்ஷண தர்மத்தைத்

தெரிவிக்கைக்காகவிறே பெரிய திருவடியை தவ்ஜமாகக் கொண்டிருக்கிறது.

கருடனை த்வஜமாகக் கொண்ட மாத்திரத்தால் என்னாகும்? என்று சங்கிப்பார் தெளியுமாறு அருளிச் செய்கிறார். புள்ளையூர்தி என்று.

ஆச்ரிதர்கட்கு ஆபத்து நேர்ந்தால் பறவையேறிக் கடிதோடிக் காப்பிடுமவன் யல்லாமல்;

புன்னை ஊர்தி- ஆச்ரிதர் ஆபந்நராய் இருந்தவிடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை வாஹநமாகக்

கொண்டு நடந்தா நின்றாய்,  என்கை. ஊர்தி- ஊர்கின்றாய் என்றபடி.

“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும்

“புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக் கேட்டிருக்கை.

ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று.

ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க.

பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி

ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி-

அர்த்த ஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க.

இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும்

திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில்

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க.

கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க.

கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க.

நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள

பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும்

கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார்.

வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற

திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.

————————————————-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-

பதவுரை

மின்கொள்  நேதமியாய்

தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே!
புள் அது ஆகி

ஹம்ஸரூபியாய் அவதரித்து
வேதம் நான்கும்

நான்கு வேதங்களையும்
ஓதினாய்

உபதேசித்தருளினாய்,
அது அன்றியும்

அதுவுமல்லாமல்,
புள்ளின் வாய் பிளந்து

(உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு)
புள்கொடி பிடித்த பின்னரும்

பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல்
புள்ளை

அப்பெரிய திருவடியை
ஊர்தி

வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய்
ஆதலால்

இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும்
கடல்

திருப்பாற்கடலிலே
புள்ளின் பகை மெய்

கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே
கிடத்தல்

பள்ளிகொள்வதை
காதலித்தது

விரும்பிப்போவதாகிய
என்கொல்

என்ன திருவுள்ளத்தாலே?

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –
ஹம்ச ரூபனாய் திருவவதரித்து நான்கு வேதங்களையும் உபதேசித்து அருளினாய்

அதன்றியும் புள்ளின் வாய் பிளந்து –
அதுவும் அல்லாமல் பகாசுரனாய் -உன்னைக் கொல்ல வந்த பஷியின் வாயைப் கிழித்துக் கொன்று

புட் கொடி பிடித்த பின்னரும
பெரிய திருவடியை த்வஜமாக பிடித்ததும் அல்லாமல்

புள்ளை ஊர்தி யாதலால்
அந்த பெரிய திருவடியை வாகனமாயும் கொண்டு இப்படி பல பல ரஷண உபாயங்களைச் செய்து அருளி

என் கொல் மின் கொள் நேமியாய் புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –
திருப்பாற் கடலிலே கருட ஜாதிக்கு பகை என்றும் தோற்றும்படியான திரு வநந்த ஆழ்வான் உடைய திரு மேனியிலே
பள்ளி கொள்வதை விரும்பிப் போர்வதான இக்கார்யம் என்ன திரு உள்ளம்
திருப் பாற் கடலிலே சயனித்து இருப்பது எதற்கு என்று வினவ
சம்சாரிகளை ரஷிக்க என்ன
முன்பே ஹம்சமாக வேதம் அனைத்தும் உபதேசித்து அருளினாய் என்ன –

இத்தால் பிரமாணம் கொடுத்து அருளி –
புள்ளின் வாய் கீண்டு –பிரமேய பூதமான தன்னை ரஷித்து அருளியும் சர்வ ரஷகன் என்று கொடி கட்டி பறை சாற்றிக் கொண்டு
ஆஸ்ரிதற்கு ஆபத்து வந்தால் பெரிய திருவடியை வாகனாமக் கொண்டு வந்தும் ரஷித்து அருளுகிறான் என்றவாறு-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் -பிரமாணத்தைக் கொடுத்தபடி
புள்ளின் வாய் பிளந்து-ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடி
புட் கொடி பிடித்த–ரக்ஷணத்தில் தீஷிதனான படி
புள்ளை ஊர்தி–ரக்ஷணத்துக்கு கடிது ஓடி வரும் படி

கீழ்ப் பாட்டில் “பௌவநீரராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வதென்கொல்?” என்று- ஏதுக்காகத்

திருப்பாற்கடலில் கண்வர்ளந் தருளாநின்றாய்? என்று எம்பெருமானை நோக்கி வினவிய ஆழ்வாரைக்குறித்து

அப்பெருமான் “ஆழ்வீர்! ஸம்ஸாரிகளை ரக்ஷிப்பதற்காகத்தான் நாம் இக்கிடை கிடைக்கிறோம்” என்றருளிச்செய்ய;

அதுகேட்ட ஆழ்வார், ‘பஹுமுகமாக ஸம்ஸாரிசேதநர்களை ரக்ஷித்தருளின நீ ரக்ஷணக்ருத்யத்திலே இன்னும் சேஷம் வைத்திருக்கிறாயோ?

பண்டை எல்லாம் செய்தருளிற்றே! ஆயிருக்க, ஒன்றும் செய்யாதவன் போலவும்

இன்னும் பல செய்யக் கூடியவன்போலவும் திருப்பாற் கடலிலே வந்து கண்வளர்ந்தருள்வது என்னோ? என்கிறார்.

“புள்ளதாகி வேதான்கு மோதினாய்” என்று- ப்ரமாணத்தைக் கொடுத்தபடியையும்,

“புள்ளின்வாய் பிளந்து” என்று – ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடியையும் சொல்லிற்றாயிற்று.

இப்படிப்படட் ரக்ஷணம் என்றைக்கோ செய்யப்பட்டதாகில் இன்றைக்கும் மேலுள்ள காலத்துக்கும் என்னாயிற்று?

என்று சங்கிப்பார்க்கு இடமறும்படியருளிச் செய்கிறார் புட்கொடியித்யாதி,

தான் ரக்ஷணத்தொழிலொன்றிலேயே தீக்ஷிதன் என்பது தோன்றக் கொடிகட்டிக் கிடக்கிறபடி

ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன்பக்கலிலே வந்து காரியங் கொள்ளும்படி ரக்ஷண தர்மத்தைத் தெரிவிக்கைக்காகவிறே

பெரிய திருவடியை தவ்ஜமாகக் கொண்டிருக்கிறது.

கருடனை த்வஜமாகக் கொண்ட மாத்திரத்தால் என்னாகும்? என்று சங்கிப்பார் தெளியுமாறு அருளிச் செய்கிறார். புள்ளையூர்தி என்று.

ஆச்ரிதர்கட்கு ஆபத்து நேர்ந்தால் பறவையேறிக் கடிதோடிக் காப்பிடுமவன் யல்லாமல்;

புன்னை ஊர்தி- ஆச்ரிதர் ஆபந்நராய் இருந்தவிடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை

வாஹநமாகக்கொண்டு நடந்தா நின்றாய்,  என்கை. ஊர்தி- ஊர்கின்றாய் என்றபடி.

“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும் “புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக்கேட்டிருக்கை.

ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று.

ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க.

பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி

ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி- அர்த்த ஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க.

இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும்

திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில்

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க.

கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க.

கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க.

நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள

பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும்

கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார்.

வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.

————————————————-

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20-

பதவுரை

முன்

அநாதிகாலமாக.
வேலைநீர்

ஸமுத்ரஜலத்திலே
கூசம் ஒன்றும் இன்றி

சிறிதும் கூசாதே
மாசுணம்

திருவனந்தாழ்வானை
படுத்து

படுக்கையாக விரித்து
பேச நின்று தேவர் வந்து பாடக் கிடந்ததும்

ஸ்தோத்தரம் பண்ணுவதற்கென்று அமைந்த ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பாடும்படி சமநித்தருளினபடியையும்
அன்று

தேவர்களுக்காகக் கடல் கடைந்த அக்காலத்தில்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா (என்று) ஏச நீ கிடந்த ஆறும்

“வருண பாசங்கள் கிடக்கிற கடலிலேவாழ்கின்ற ஆமையென்னும் க்ஷுத்ர ஜந்துவாகப் பிறந்த கேசவனே!” என்று (அவிவேகிகள்) ஏசும்படி கிடந்தபடியையும்
தேற

அடியேன் நன்குதெரிந்து கொள்ளும்படி
கூறு

(எனக்கு) அருளிச் செய்யவேணும்.

 

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
சிறிதும் கூசாதே -திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக விரித்து -சமுத்திர ஜலத்தில்

பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு என்று -அமைந்த -ப்ரஹ்மாதிகளும் வந்து பாடும் படி அநாதி காலமாக
சயனித்து இருந்து அருளியதையும்

அன்று –
தேவர்களுக்கு கடல் கடைந்த அன்று

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
வருண பாசங்கள் கிடக்கிற கடலிலே வாழுகின்ற ஆமை என்னும் ஷூத்ர சஜாதீயனாக திருவவதரித்த கேசவனே

ஏசவன்று நீ கிடந்தவாறு
அறிவிலிகள் ஏசும்படி கிடந்த படியும்

தேற கூறு –
அடியேன் நன்கு தெரிந்து கூறும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும்

நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம்
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது
இவற்றைப் பிரித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் என்கிறார்
எல்லா அவதாரங்களிலும் பரத்வ சௌலப்யங்கள் இரண்டுமே கலந்தே இருக்குமே –

பாசம் நின்ற நீர் –
பரம பதத்தை விட இந்த பாற் கடலிலே சயனம் போக்யமாய் இருக்கை –
ஆஸ்ரித ரஷணத்துக்காக வென்றே –கூப்பாடு கேட்கும் இடம் அன்றோ-
எல்லா அவதாரங்களில் பரத்வ ஸுவ்லப்யங்கள் ஒன்றுக்கு ஓன்று தொழாதே வீறு பெற்று இருக்குமே

ஆனி மாத சுக்ல பக்ஷ துவாதசி ஸ்ரீ கூர்ம ஜெயந்தி

ஜலாராசிக்ம்க்கு அதிஷ்டான தேவதை வருணனுக்கு ஆயுதம் பாசம் -பாசன் என்று வருணனைச் சொல்வர்

பரமபதத்தில் காட்டில் பாசம் மிக்கு உறங்குவான் போலே யோகு செய்கிறானே திருப் பாற் கடலிலே

ப்ரயோஜநரந்தபரரான நான்முகன் முதலானோர் எந்தத் திருப்பாற்கடலிலே

திருக்கண்வளர்ந்தருளுகிற மேன்மைதானே நீர்மைக்கு எல்லை நிலமாயிராநின்றது;

அமரர்க்கு அமுதமளிக்கக் கடல் கடைந்தபோது மந்தரமலையைத் தாங்குவதற்காக ஆமையாக உருவெடுத்த

நீர்மைதானே மேன்மைக்கு எல்லை நிலமாயிராகின்றது;

இவற்றைப் பிரித்து என்நெஞ்சிலே நன்குபடும்படி அருளிச்செய்யவே அருளிச்செய்யவேணுமென்கிறார்.

க்ஷீரஸாகரசயநவ்ருத்தாந்தம் முன்னடிகளில் கூறப்படுகிறது;

கூர்மாவதாக வ்ருத்தாந்தம் பின்னடிகளில் கூறப்படுகிறது.

க்ஷீரஸாகரசயநம் பரத்வப்காசகமாயினும் ப்ரயோஜநாந்தாபர்களும் வந்து கிட்டித் துதிக்கலாம்படி

எம்பெருமான் தன்னை அமைத்துக்கொண்டு கிடக்கிறபடியை நோக்கினவாறே

“இப்படியும் ஒரு எளிமை உண்டோ?” என்று உள்குழையும்படி யிருந்தலாலும்,

ஆமையாய்ப்பிறந்த பிறவி எல்லார்க்கும் ஏசுகைக்கிடமாயிருந்தாலும்

தேவதே வாதி தேவனான பரமபுருஷன் *** “பின் பிறப்பாய் ஒளிவரு முழுநலம்” இத்யாதிப்படியே

தண்ணிய பிறவியிற் பிறந்த விடத்தும் பரத்வம் குன்றாமற் பொலியநிற்பதே! என்று ஈடுபடும்படியாயிருத்தலாலும்,

மற்றுள்ளார்க்குப் பரத்வம் தோன்றுமிடத்தில் எளிமையும்,

எளிமை தோன்றுமிடத்தில் பரத்வமும் இவ்வாழ்வார்க்குத் தோன்றாநின்ற தாய்த்து.

எல்லா அவதாரங்களிலும் பரத்வஸௌலப்யங்கள் ஒன்றுக்கொன்று தோலாதே வீறு பெற்றிருக்குமென்பதுவே இப்பாட்டின் உள்ளுறை.

ஸௌலப்யத்தோடு இணங்காத பரத்வமும், பரத்வத்தோடு இணங்காக ஸௌலப்யமும்

ஒருபொருளாக மதிக்கத்தக்கவையல்ல வாகையால் இரண்டொடுங் கூடி நிற்கும் நிலையே மெச்சத்தக்காதென்க.

பாசம் நின்ற  நீரில்- ஜலராசிக்கு அதிஷ்டாக தேவதை வருணனாகையாலும்,

அவ்வருணனுக்குப் பாசம் ஆயுதமாகையாலும் “பாசம் நின்ற நீர்” எனப்பட்டது.

“பாசன் நின்ற” என்றும் பாடமுண்டாம்; பாசன் =வருணன்.

இனி, “பாசம் நின்ற நீரில்” என்பதற்கு, “பரமபதத்திற்காட்டில் ப்ரேமஸ்தலாமன கடலிலே” என்றும் பொருள் அருளிச்செய்வர்.

பாசம் என்றது ஆசை;

‘பரமபத்திற்காட்டிலும் இந்த நீர்நிலமே நமக்கு போக்யமான இடம்’ என்று எம்பெருமான் ஆசைப்படத்தக்க நீர் என்றபடி.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் -அப் பாஞ்ச ஜன்யம் -அது-இவள் -போன்ற சுட்டுப் பத பிரயோகங்கள் –

February 9, 2020

படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–
முன்னிலையாய் இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-
மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் –
அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-

ஆண் ஒப்பர் இவன் நேரில்லை காண் திருவோணத்தான் உலகாளும் என்பார்களே -1 -1 -3-

ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6-

இப்பிள்ளை இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3-

உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்கு களை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-

அங்கு இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10-

அந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால் தருக்கி பருகும்
இச் செந்தொண்டை வாய் வந்து காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-14-

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி நின் முகம் கண் உளவாகில் இனி இங்கே நோக்கிப் போ -1-4-1-

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்- ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்–1-4-7-

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய்–1-6-9-

வன் கஞ்சன் மாளப் புரட்டி அந்நாள் எங்கள் பூம் படு கொண்ட அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-2-1-4-

கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –

நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 –

எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 –

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்-2-9-6-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே–2-9-8-

அங்கு அவர் சொல்லை புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கு இவை வல்லார்க்கு ஏதம் ஓன்று இல்லையே -2 10- 10- –

இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்–3-1-3-

தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் நம் பரமன் இந்நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் –3-6-6-

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில
சாய்விலாத குறுந்தலை சில பிள்ளைகளோடு இணங்கித்
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே – 3-7 2- –

திரு கோட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4 9-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4 10-9 –

————-

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்–24-

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-

சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-

பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–10-6-

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-
அது காண்டுமே
அவ வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்குவைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே
அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே—11-4-
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு-4-5- -என்கிறபடியே எங்கள் தெருவில் எழுந்து அருளாதோ பின்னை –
அசுரனுடைய யஜ்ஞ வாடத்தில் நடந்த நடையை இத்தெருவில் நடந்தால் ஆகாதோ –
என் கண் வட்டத்தில் நடந்தால் ஆகாதோ
தன உடைமை அல்லாததைக் கொடுத்து ஔதார்யம் கொண்டு இருக்கிறவனைப் போலே இருப்பேனோ நான்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் -என்று இருக்குமவள் அன்றோ நான்-

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே–14-1-

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே–14-3-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே-14-7-

———

ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை
அம் தமிழ் இன்ப பாவினை அவ் வடமொழியை –1-4-

மெய் அடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்–3-1-

பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் இது பேசி என்?-3-8-

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ? இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய்-6-6-

விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-

அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே! —–9-3–

மனம் உருக்கும் மகனே! இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —9-4–

இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல் தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

இன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —10-10–

———-

படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்–28-

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்–34-

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி–39-

மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்–57-

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66–

எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-

ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78-

பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –82–

கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே -106-

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்–116-

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

——————-

இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-
அச்சுவை –இச்சுவை
அது ஸ்ருதி பிரசித்தம் –இது பிரத்யஷ சித்தம் –
அது கேட்டார் வாய் கேட்டுப் போமது –இது கைப்பட்டது –
கைப்பட்டதை விட்டு இவ் அறு சுவைக்கு வேறு ஒரு சுவை இருந்த இடம் தேடித் போகச் சொல்லுகிறாயோ –
இவருடைய அறு சுவை இருக்கிறபடி –
பரம பதத்தில் அனுபவத்தை விட்டு இவ் வழகையும் சீலத்தையும் இங்கு உள்ளாரை அனுபவிக்கைக்கு
அங்கு உள்ளாறும் இங்கே வாரா நிற்க என்னை அங்கே போகத் தேடுகிறது என் –

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே–3-
இவன் போரப் பொலியப் பாரிக்கிற காலம் எல்லாம் தமக்கு ஓன்று இராமையாலே -இது -என்று
ஸூ த்தரமாகப் பேசுகிறார் –
அதாகும்
ததநந்தரமான அந்த அவஸ்தையாம் -என்றபடி –ததநந்தரம் யௌவனம் வந்து பிரவேசித்து விஷய பிரவணனாய் திரியும் –
ஜனனி உடைய புத்தி அதீனமான பேதைத் தனமே நன்று எனும்படி யாய்த்து இதின் அறிவு கேடு இருப்பது –

அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே-9-

அவனதுஊர் அரங்கம் என்னா அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவர்கின்றேனே–12–

நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –43–

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே–44-
ஸ்வ பலம் அற்ற அன்று – கஜ ஆகர்ஷே தே தீரே -என்று
சென்ற காலத்தில் இவனோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி இல்லை –
அன்று ஒரு முதலையின் கையில் அகப்பட்ட ஆனைக்கு அருளை ஈந்தாய் –
இன்று அஞ்சு முதலையில் கையில் அகப்பட்ட எனக்கு அருளாய் –
ஆனை ஆயிரம் சம்வத்சரம் நோவு பட்டது – நான் அநாதி காலம் நோவு பட்டேன் –
அவன் அகப்பட்டது மடுவிலே-நான் அகப்பட்டது சம்சார சாகரத்திலே இறே –

—————

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ–10-

————–

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்–2-
அன்று –ரஷகனானவன் ரஷ்யதை நோக்கக் கடவராக வந்து நின்ற அன்று –

கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப் பெரிய வாய கண்கள் -என்கிறார் -இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி இருக்கை –
போக்யதா அதிசயத்தாலே -அப் பாஞ்ச சன்னியம் -என்னுமா போலே முகத்தை திரிய வைத்து சொல்லுகிறார் –

————-

செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-
இன்றே –
ஈஸ்வரனை அண்டை கொண்டு ஆரப்த சரீரபாத சமயம் பார்த்து இருந்து பின்னையும் வாஸனா ருசிகள் ஆகிற
மண் பற்று விடாமல் விரஜை அளவும் போக வேண்டும்படி இருக்கை யன்றிக்கே இன்றே சவாசனமாக விட்டேன்
இன்றே
அன்று அப்படி யானேன்-இன்று இப்படி யானேன்
நடுவில் இதுக்கு என் கையில் கிடப்பதொரு ஹேதுவைக் கண்டிலேன்
இதுக்கு வரவாறு ஓன்று இன்றிக்கே இருக்க வாழ்வு இனிதாம் படி விழுந்தது என்று விஸ்மிதர் ஆகிறார்
இன்றே
அன்று ஈஸ்வரனும் கூட நிற்கச் செய்தே சம்சரித்துப் போந்தேன்-
இன்று ஆழ்வார் சந்நிதி மகாம்யத்தாலே இவ்வளவும் பிறந்தது என்று ப்ரீதர் ஆகிறார் –

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான்–6–
பகவத் விஷயத்தில் காட்டில் தத் சம்பந்தியான ஆழ்வார் உத்தேச்யர் என்று ருசி பிறந்த இன்று தொடங்கி –
மேல் ஒரு நாளிலே பலிப்பதாக விட்டு வைக்கிறாரோ விஷயீ கரித்த இன்று தொடங்கி

———-

ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த வந்நாள்கள்–1-1-3-

இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்-1-1-7-

வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்–1-2-1-

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்–1-7-1-

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்-1-7-8-

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்-1-8-4-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை-1-10-6-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்-2-1-2-

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்-2-1-3-

பெண்ணுருவாகி அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே–2-3-3-

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம்–2-4-9-

பேணாத வலி யரக்கர் மெலியவன்று பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனை-2-5-7-

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை பட வெகுண்டு மருதிடை போய்-2-5-10-

பிச்சச் சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர் விச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே-2-6-5-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-
அவளும் –வடிவு அழகாலும் பருவத்தாலும் பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –
இவளை –சொன்ன ஏற்றம் எல்லாம் போராத படி இருக்கையாலே கையாலே காட்டி இவளை என்கிறார் –
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே -2-7-3-
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-3-
அஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-4-
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-
அங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே-2-8-6-
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-
என் ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-8-
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை–2-10-4-

வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்-3-3-1-

தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்-3-7-5-

அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து
அவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் -3-10-4-

வராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்–4-7-8-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-

முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்–4-10-8-

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்-5-1-6-

பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்-5-4-3-

பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்-5-5-7-

மண்ணிலிது போலு நகரில்லைஎன வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-8-

ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-/9-

அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்-6-6-4-

நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்–8-4-9-

ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை–9-5-7-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்–9-6-1-

கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து-10-3-6-

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்–10-4-8-

பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6–

பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-

துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ —10-8-2-
மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் இருளத்து இது என் இது என் இது வென்னோ—10-8-3-
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர் ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4-
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் எற்றுக்கு இது என் இது என் இது என்னோ —10-8-5-
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6-
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர் எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர் எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8-
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப ஏடி இது என் இது என் இது என்னோ —10-8-9-

ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3-
சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4-
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5-
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8-

வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -11-2-2-

அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே —11-4-5-
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர்களே —11-6-2-

————

பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–9

மடமானை இது செய்தார் தம்மை மெய்யே கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே ––11-

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே–18-

அடியும் அக்தே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-

எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-
திரு மணம் கொல்லைக்கும் திருவாலிக்கும் உண்டான பிரத்யாசத்தி
அங்குலி நிர்த்தேசம் பண்ணலாய் இருக்கையாலே இது வன்றோ -என்று கையைக் காட்டினார் -என்கிறாள் –
அங்கன் அன்றியே –நீ இருந்த இடம் அன்றோ -நமக்கு உத்தேச்யம் என்றார் -என்னவுமாம் –
சேஷி இருந்த இடமே சேஷ பூதனனுக்கு உத்தேச்யமாம் போலே
பிள்ளை வேட்டகத்தை ஆசைப்படும் பெண் பிள்ளை புக்ககத்தை ஆசைப்படும் இறே –
உன் காலே அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்று என் காலைக் காட்டிப் போந்தார் –என்கிறாள் –

———————-

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்–-முதல் திரு வந்தாதி-44-

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——மூன்றாம் திருவந்தாதி–51-

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது—நான்முகன் திருவந்தாதி -27-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

————————

அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—-திரு விருத்தம்-3-

அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –

நலம்பாடுமிது குற்றமாக வையம் சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87- –

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு -பெரிய திருவந்தாதி-–9-

உணரத் தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால் எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-
அவனாம்-தூரச்தனாய் இருப்பானோ /இவனாம்-சுலபனாய் இருப்பானோ /உவனாம் – மத்யச்தனாய் இருப்பானோ
மற்று உம்பர் அவனாம்-அல்லது மிகவும் உயர்ந்தவனாய்-எட்டாதவனாய் இருப்பானோ
அவன் என்று இராதே –சர்வேஸ்வரன்-இப்படி என்று என்று எல்லாம் நினைத்து இராதே
அவனாம் அவனே எனத் தெளிந்து-எம்பெருமான் உடைய ஸ்வரூபமே-சௌலப்யம் என்று தெளிந்து கொண்டு
அவன் என்ற சொல்லே சௌலப்யம் ஆழ்வார்கள் படி இதுதானே
ஆம் அவன் நமக்கு கையாளாக இருப்பவன்-பரதந்த்ர்யமே வடிவு என்றபடி
கண்ணனுக்கே தீர்ந்தால் –அந்த சௌலப்யத்தை-கிருஷ்ணாவதார முகத்தாலே-விளங்கக் காட்டி அருளிய அவனுக்கே ஆட்பட்டால் –
அவனே எவனேலுமாம் –அப்பெருமானே எல்லா உறவு முறையும் ஆவான்-
யஸ்ய மந்த்ரீச கோப்தாச சூஹ்ருத்சைவ ஜனார்த்தன -அர்ஜுனனுக்கு ஆனால் போலே -ஆஸ்ரயணீயன் சிவனோ ப்ரஹ்மணோ விஷ்ணுவோ
இவர்களிலும் மேம்பட்ட தெய்வமோ-என்கிற சங்கை தெளிந்து-வேதாந்தங்களில் -சொல்லப் பட்ட தெய்வம் கண்ணபிரான் ஒருவனே
என்று தெளிந்து பற்றினால்-அந்த அந்த தேவதாந்த்ரங்கள் அளிக்கும் பலன்களையும்-
மேலாக கைங்கர்ய சாம்ராஜ்ய பலனையும்-அவனே அளித்து அருளுவான் என்றதாயிற்று-

எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும் எவ்வளவும் உண்டோ எமக்கு –47-

வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது–66-
சொன்னேன் இது என்னாமல் அது -என்றது அர்த்த கௌரவம் தோற்ற அருளிச் செய்கிறார்-

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

கரந்த உருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

———-

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.-1-1-1-

இலன்அது உடையன்இது எனநினைவு அரியவன்-1-1-3-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே–1-1-4-

அவரவர் தமதமது அறிவறி வகை வகை
அவரவர் இறையவர் என யடி யடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே—1-1-5-

படர் பொருள் முழுவதும் ஆய் அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-1-1-7-

உளன் எனில் அவனுருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என விலன் என இரு குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே–1-1-9-

மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு
எது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடே–1-6-2-

ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-

அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே–2-3-8-

உள்ளம் மலங்க வெவ் வுயிர்க்கும்; கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்று இவளே–2-4-4-

கஞ்சனை வஞ்சனை செய்தீர்! உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே!–2-4-8-

இலங்கை செற்றீர்! இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–2-4-10-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே–3-3-6-

ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆது ம்ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே–3-4-10-

வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் வாணுதலீர்!என் மடக் கொம்பே–4-2-7-

வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே–5-1-2-

சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–5-1-8-

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-5-5-7-

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார்குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2-

திமிர் கொடா லொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக் கொசிந்து கரையுமே–6-5-2-

மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத் திசை உற்று நோக்கியே–6-5-5-

முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே–6-5-7-

இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தா னுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே–6-5-9-

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திரு மகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடு மால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே–6-5-10-

செங்கயல் பாய் நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறந்து என் செய்கின் றாயே?–7-2-1-
முன் செய் திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-
திட் கொடி மதிள் சூழ் திருவரங் கத்தாய்’ இவள் திறத்தென் செய்திட்டாயே?–7-2-3-
சிட்டனே! செழு நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறத் தென் சிந்தத் தாயே?–7-2-4-
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே!–7-2-5-
பை கொள் பாம்பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே–7-2-6-
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
அடி யடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே–7-2-10-

தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!–7-8-2-
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில் லனவாய் வியவாய் வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-
வெள்ளத் தடங் கடலுள் விட நாகணை மேன் மருவி உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!-7-8-4-
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே–7-8-5-
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னு நீ துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே–7-8-6-
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த் துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண்டாயங்களே–7-8-7-
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும் பின்னும் உள்ளாய்!புறத் தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-

பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே–7-9-10-

பேர் வளம் கிளர்ந்த தன்றிப் பேச்சு இலள் இன்று இப் புனை இழையே–8-9-4-
பட வர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8-
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-

திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10—

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் நாராயண சப்த பிரயோகம்- திரு மந்த்ரமும் திரு மந்த்ரார்த்தமும்–

January 20, 2020

வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8
என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1-
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று ஸ்ரீ பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று ஸ்ரீ திரு மழிசைப் பிரானும்

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான  சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8- ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ் வாழ்வார்களைப் பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-
இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில் இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திரு நாமம் -பெரிய திரு மொழி -6-10-6-
என்கிறபடியே பிரதிபாத்ய வஸ்துவைப்   போலே -ஸ்வயம் போக்யமாய் இருக்கையாலே –
போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் என்கை

நின் திரு எட்டு எழுத்தும் கற்று மற்று எல்லாம் பேசிலும் -பெரிய திரு மொழி -8-10-3-
என்கிறபடியே ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உடலாக அறிய வேண்டும் அர்த்த விசேஷங்கள் எல்லாம்
இம் மந்த்ரத்துக்குள்ளே உண்டு என்கை –

ஸ்ரீ நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலே
ஸ்ரீ ஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும் என்கை –

———————–

ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே-10-5-3-

—————–

தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.
ஸ்ரீ நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே, ‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மை யிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனை யிட்டல்லது சொல்லப் போகாது.
‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;
‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம்.

‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி.
‘நான்காம் வேற்றுமை’என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.

‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம்,
நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிற தன்றோ.
கோனாரை அடியேன் – நாயகன் தைரியத்தையுடைய நாயகன்–இவள் தைரியம் இல்லாதவள்.
அடியேன் அடிகூடுவது என்று கொலோ – ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் பொருளோடே-விபக்தி உடன் – தலைக்கட்டுகிறபடி.
எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,
அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம், எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.
தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண் கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண் துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.

—————-

நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -ஸ்ரீ திருப்பல்லாண்டு -4-

நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12-

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாட புதுவை கோன் பட்டன் சொல் நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வாரே -ஸ்ரீ பெரியாழ்வார்-1-8-11 – –

நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் எண்ணற்கு அரிய பிரானே – -2 3-2 – –

நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 – –

நம்பி நீ பிறந்த நல் நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

நல்ல துழாய் அலங்கல் சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் -3-7-5 –

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே -3 7-11 –

நாராயணன் செய்த தீமை என்றும் எமரர்கள் குடிக்கு ஓர் ஏச்சு கொலோ ஆயிடும் கொலோ – 3-8 2- –

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின் நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 1-

கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6 7-

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-2 –

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 10-4 –

முற்ற உலகு எல்லாம் நீயேயாகி –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் பிரகாரமாக -தான் பிரகாரியாக இருக்கையாலே –
ஓன்று ஒழியாதபடி சகல லோகங்களும் நீயேயாய் – சர்வம் கல்விதம் பிரம -என்றும் –
புருஷ ஏவேதம் ஸ்ர்வம்-என்னக் கடவது இறே –
மூன்று எழுத்தாய முதல்வனேயோ-
அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5 1-3 –

ஓவாதே நமோ நாரணா என்பன் –
பிரயோஜனம் பெற்றவாறே குலையும் ஐஸ்வர்ய காமற்கு
அங்கி கைப் பட்டவாறே குலையும் உபாசகர்க்கு
இது தானே பிரயோஜனம் ஆகையாலே -பிரபன்னர்க்கு குலையாது
ஓவாதே –இது மாறினால் எனக்கு சத்தை குலையும் –

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – 5-1 6-

கண்ணா –
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து தண்ணியரோடு நின்றான் -என்னும்படி சுலபன் ஆனவனே
நான்முகனைப் படைத்தானே –
இப்படி சுலபனானவன் தான் யார் என்னில் -பிரம்மாவை திரு உந்தியில் ஸ்ருஷ்ட்டித்தவன்
காரணா –
பிரம்மாவுக்கும் முன்புண்டான ப்ராக்ருத ஸ்ருஷ்ட்டியைப் பண்ணிணவனே
கரியாய் –
காரணத்வமும் -சௌலப்யமும் அன்றிக்கே -துர்லபனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
காரணா -நான் முகனைப் படைத்தானே -கண்ணா -கரியாய் -என்று அந்வயம்
இது என் ஸ்வரூபம் –உம்முடைய ஸ்வரூபம் இருந்தபடி என் -என்ன –
அடியேன் நான் –
உனக்கு அனந்யார்க்க சேஷ பூதனான நான் –
ஆனாலும்-தேகம் கிடைக்கையினாலே இதுக்கு தாரகம் என் என்னில் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-
பசிப்பது எப்போதோ என்னில் –
ஓவாதே –
மறவாதே
நமோ நாராயணா என்று எண்ணா நாளும்-
நமோ நாராயணா -என்கையாலே –
தேக ஆத்மா அபிமானத்தையும் குலைத்து கொண்டு -திரு நாமத்தை அனுசந்திக்கிறார் –
இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு –
நமோ நாராயணா -என்றது போராமே -பெரும் திருப் பாவாடையிலே மண்டுகிறார் –
திருமந்தரம் -ஸங்க்ரஹமும் -வேதம் விவரணுமாயும் இறே இருப்பது –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு-
அவை தத்துறுமாகில் -என்கையாலே -அவை கூடாது
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை-என்கையாலும் –
ஓவாதே நமோ நாராயணா -என்கையாலும் -கூடாது –
கூடில் -நாளும் அது -பட்டினியும் அது –
நாள் மலர் கொண்டு நண்ணுகைக்கு பிரமாணம் -வேதம்
நாடாத மலர் நாடி –
த்ருஷ்டாதிர்ஷ்டம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாயம் உபேயம் இரண்டும் புறம்பே சம்சாரிகளுக்கு
உபாசகருக்கு உபாயம் -தங்கள் கையிலே -உபேயம்-ஈஸ்வரன்
உண்ணா நாள் -உன பாதம் நண்ணா நாள் — உண்ணும் நாள் உன பாதம் நண்ணும் நாள் –
பசி ஆவது -பசிப்பது என்ற படி
ஓவாதே நண்ணும் நாள் பசி கெடுவது —
ஓவாதே எண்ணா நாள் -இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொள்ளா நாள் -அவன் கொள்ளா நாள் –
அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே-
தத்துறுகை-தட்டுப் படுகை
இத்தால் மாறுமாகில் என்றபடி
தத்துறுமாகில் – மாறாட்டு படுமாகில் என்னவுமாம் –
மாறாட்டு படுகையாவது -அநந்ய பிரயோஜனமாகம் அன்றிக்கே –
பிரயோஜனாந்தரங்களை கணிசிக்கை –

————-

நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்––ஸ்ரீ திருப்பாவை 1-

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்–10-

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே–ஸ்ரீ நாச்சியார் திரு மொழி-2-1-

இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——————5-11-

வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-8-

———–

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே––ஸ்ரீ பெருமாள் திருமொழி -2-4-

————–

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –-ஸ்ரீ பெரிய திருமொழி -1-1-1-

நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3-

நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-

நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் —1-1-5-

நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-

நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

நல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-8-

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம் –1-1-10-

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி–2-9-1-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் –!–3-8-1-

வராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-4-
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5-
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம் நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம் நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

——————–

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று —ஸ்ரீ முதல் திருவந்தாதி-—–5-

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் ——95-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி 1-

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–

——————-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–-ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -1-

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14–

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67–

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

———

பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என–ஸ்ரீ சிறிய திருமடல்

—————

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே–ஸ்ரீ திருவாய் மொழி -1-2-10-

ஒன்று எனப் பல என அறி வரு வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே–1-3-7-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே–1-10-8-

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையிற் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி! கனை இருளே!–2-1-7-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாரயணனாலே–2-7-1-

நாரணன், முழு ஏழ் உலகுக்கும் நாதன், வேத மயன்,
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன், எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே–2-7-2-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ.–4-1-1-

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில்,நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய் மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே–4-4-7-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய் வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கை தலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே–4-7-1-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-

நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-
நல் அருள் நம்பெருமான் –
நல்ல அருளையுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், -நல்லருள்-வாத்சல்யம் – நம் பெருமான் -ஸ்வாமித்வம்
நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச் செய்கிறார்:
நாராயணன் நாமங்களே –
நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.ஸ்வரூப நிரூபகமாய்-
நாரங்களுக்கு அயனம் -நாரங்கள் எல்லாம் யாருக்கு அயனமோ – உள்ளும் புறமும் -நியமனம் வியாபகம்

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி யாவரோ
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அழித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே –7-5-3-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதோர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே -8-6-10–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே-9-3-1-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்
ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-

———

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து——ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -2-

———————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –