மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர்-ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு மொழி-2-2-6-
விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –
விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் –
ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்
மேல் நுழைந்த வண்டு -என்கையாலே
இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்
இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி
அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்
இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது
திரு மாளிகையிலே ஆகையாலே
இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-
———
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்-
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்-2-9-11-
வண்டுகள் ஆனவை மது பானத்தால் களித்து பாடுகிற கோஷத்தை உடைத்தான பொழில்களாலும்
பொழில்களுக்கு தாரகமாக பெருகி வாரா நின்றுள்ள புனலை உடைத்தான காவிரியாலும் சூழப்பட்டு
திரு மதிள்களும் – திருக் கோபுரங்களும் -திரு வீதிகளும் -மாட மாளிகைகளுமான -இவற்றோட சேர்த்தியால் வந்த
அழகை உடைத்தாய் இருந்துள்ள -ஸ்ரீ திருவரங்கப் பெரு நகரிலே நித்யவாசம் பண்ணும் வைபவத்தை உடையனானவன்
முன்பு -விபவ அவதாரத்திலே -செய்த லீலா சேஷ்டிதங்கள் எல்லாவற்றையும்
அந்த லீலை தான் வ்யாஜமாய் -லோகத்துக்குப் பீதி மூலமாகவும் -பக்தி மூலமாகவும் -பிராப்தி மூலமாகவும் –
பிராப்தி அனுஷ்டானங்களோடே சேர்க்கலாய் இறே இருப்பது –
————-
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8-
ஷட் பதங்களான அழகிய வண்டுகள் -இத்தால் இவற்றின் உடைய ரூப குணங்கள் சொல்லிற்று-
தேவோ நாம சகஸ்ரவான் -என்று அவனுடைய ஆயிரம் திரு நாமங்களையும்
சத்வோத்தரமான காலத்திலே ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடா நிற்கும்
————–
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
தோண்டல் உடைய மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே -4- 3-6 –
பாட்டுக்கு தகுதியான வண்டு இனங்கள்
அதாவது பிறப்பே பிடித்து பாட்டே ஒழிய வேறு ஓன்று அறியாதே இருக்கை
ப்ரீதி பிரகர்ஷத்தால கானாவான பண்களைப் பாடிக் கொண்டு -மதுபானம் பண்ணிச் செல்லும்படியாக
திருச் சோலைகள் ஒரு காலும் வாடாமல் -நித்ய வசந்தமாய் செல்லும்படி ஊற்று உடைத்தான மலை –
———–
குருவு அரும்ப கொங்கு அலற குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –
குரவுகளானவை அரும்பி செல்லவும் கோங்குகள் ஆனவை அலர்ந்து செல்லவும்
குயில்கள் ஆனவை ஹர்ஷத்தால் இருந்து கூவும்படியான
குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்டு இருக்கிற திருவரங்கம்
இத்தால்
அநேக புராண பிரசஸ்தம் ஆகையாலும்
ஆழ்வார்கள் எல்லோரும் ஓர் மிடறாக அருளி செய்கையாலும் உண்டான பிரசித்தியை சொல்லுகிறது
——-
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-
மலர தொடங்குகிற தாழம் பூ மடலின் உள்ளே பரிமளத்தில் லோபத்தாலே
உடம்பை உரோசிக் கொண்டு புகுந்து
அதின் உள்ளில் உண்டான -வெளுத்த நிறத்தை உடைத்தான -சுண்ணத்தை உடம்பு எங்கும் அணிந்து கொண்டு
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே -யாழ் ஓசை போல் இருக்கிற இனிய இசையை உடைய
வண்டின் உடைய திரள் ஆனவை பாடுகைக்கு அடிக் கொண்டு
தென தென என்று ஆளத்தி வையா நிற்கும் அரங்கமே
———–
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலை பாடும் -என்றாரே
அங்கே தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8-
இங்கே இப்படி அருளிச் செய்கிறார் -இத்தால்
திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் வண்டுகள் ஆனவை -கால அனுகுணமாக பண்களிலே
பகவத் குணங்களை நியமேன பாடும்படி சொல்லுகிறது
எல்லியம் போது -அந்திப் போதிலே
இரும் சிறை வண்டு -பெரிய சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை –
பகவத் பிரவணமான விஷயங்களுடைய ரூப குணங்களும் உத்தேயம் என்று
இருக்குமவர் ஆகையாலே இவற்றினுடைய சிறகை வர்ணித்து கொண்டு அருளி செய்கிறார் –
எம்பெருமான் குணம் பாடி –
சர்வ ஸ்வாமியான பெரிய பெருமாளுடைய ஆஸ்ரித ரஷணங்களால்
உண்டான திவ்ய குணங்களை ப்ரீதி ஹர்ஷத்தாலே பாடி
——-
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1- 1-
அறிவுடையார் -குற்றம் ஆகாத அளவு அன்றிக்கே -குணமாகவும் கொள்ளுவார்கள் –
அது ஓர் இடத்தே இருந்து தனக்கு வேண்டினது பிதற்றிப் போகவும் -அத்தை அறிவுடையார் –
நமக்கு நன்மை சொல்லுகிறது -என்று கொள்ளுவார்கள் இறே –
கட்டுரை -நல் சொல்லு
அப்படியே நான் வேண்டிற்று சொன்னதையும் -குணமாக்கி கொள்ள வேணும் –
———–
புள்ளும் சிலம்பின காண்–திருப்பாவை–6–
போது விடிந்தது–பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண் -என்ன
ஆசார்யர் -சிஷ்யர் பெறாத பொழுது குமிறிக் கொண்டு இருப்பாராம்
இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-
பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை சூசிப்பிக்கிற பஷிகளின் நாதம் அல்லது-
இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்-
நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ —
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்–மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல்-மெய்ம்மை கொலோ –
என்று அன்றோ இருப்பது –
புள்
என்கிறது -சேர்ப்பாரை -யில் சொல்லுகிறபடியே ஞான அனுஷ்டங்களாலே –
பகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை –
ஆகையால்–சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் —பகவத் குண அனுசந்தான பூர்வகமாக
பகவத் கைங்கர்ய ரூபங்களாய்-தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக–
சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –
——–
கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ-திருப்பாவை–7–
அநஷர ரசமாய் இருக்கை–
சுகீசு என்று ஆனைச் சாத்தன் பேசின–
கீசுகீசு என்று ஆனைச் சாத்தன் எங்கும் பேசின –
கீசுகீசு என்று ஆனைச் சாத்தன் எங்கும் கலந்து பேசின–
கொண்டு வருவது போலே–
பிரியா விடை -அனுபவம் தேக்கி விளை நீர் அடித்தல்-
கரிய குருவி – வலியன் கரிச்சான் குருவி -கண் அழகாக இருக்கும் –
கஞ்சரீகிகா பஷி -ஆனைச் சாத்தன் மலையாள –
சின்ன கலியன் ஸ்வாமி -25 பட்டம் -மலையாள யாத்ரையில் பார்த்து –
இந்த பெயரைச் சொல்லி இந்த விஷயத்துக்கு நீ அன்றோ ஆசார்யன் கை கூப்பினார் —
ஆனைச் சாத்தன் –
குவலயா பீடம் நிரசித்த/ புலன் அடக்கம் அருளிய ஆச்சார்யர் –
பஷிக்கு அந்தராத்மாதயா எம்பெருமான் என்றுமாம்
சர்வோத்திக்கமாக அஹங்கார நிவர்த்தகரான மகா பாகவதர்–
நாம் பிரியப் புகா நின்றோமே -என்று
பிரிந்தால் மறுபடியும் கூடும் தனையும் தரித்து இருக்கைக்காக–பரஸ்பரம் சம்ச்லேஷித்து–
கத்கத ஸ்வரம் ஆகையாலே அநஷர ரசமாக பேசின பேச்சரவம் —
விஸ்லேஷ வ்யசனம் தோற்றும்படியாக பேசின பேச்சின் உடைய த்வனியை கேட்டிலையோ –
ஆனைச் சாத்தான் -உடல் சிறுத்து கண் பெரிதாக -ஆசார்யர்கள் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் –
சர்வமும் கிருஷ்ணா கிருஷ்ணா என்றே ஆய்ப்பாடியிலே உள்ளது –
பக்ஷிகள் கலந்து பேசும் அரவமும் -தயிர் அரவமும் –கீசு கீசு -கிருஷ்ணா கிருஷ்ணா என்று அன்றோ இங்கே உள்ளது –
அத்தை போலே என்றபடி-
கீசு கீசு
கிருஷ்ணா கிருஷ்ணா -தன்னைப் போல் பேரும் தாருமே பிதற்றி –
தில்லைச் சித்ர கூடம்-பத்னிகள்-கிளி -வேதம் சந்தை சொல்வதை கேட்டு –
——-
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்–திருப்பாவை–13–
புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே இரை தேடி சிலம்பி போயிற்றன –
மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள்
புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் –
——
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்–திருப்பாவை–18–
கோழி கூவா நின்றது என்ன –
ஒரு கோழி கூவினவாறே விடிந்தது ஆமோ -என்ன–
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
துடை தட்டி எழுப்புவாரைப் போலே சர்வதோதிக்கமாக கோழி கூவா நின்றன –
உணர்ந்தவை எல்லாம் கூப்பிடும் பின்னை உறங்குமது தான் சாமக் கோழி -என்ன –
கோழி கூவும் என்னுமால் -தோழி நான் செய்கேன் ஆழி வண்ணர் திருத்தாய் செம்போத்தே – திருமங்கை ஆழ்வார்
முதல் சந்தோஷ வார்த்தை அப்புறம் துக்கம் வார்த்தை
ஜாமம் பிரித்து -கோழி கூவின உடன் வருவேன் அடுத்த கூவலுக்கு போவானாம்
கோழி கூவும் -என்னுமால் -ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று
வந்ததும் -கோழி கூவும் என்னுமால் தோழி நான் என் செய்கேன் -பாதம் மாற்றி –
கண்ணன் கோழி மடியிலே இட்டுக் கொண்டு வருவானாம்
கோழி வயிறு எரிச்சல் திரு வாய்ப்பாடி உனக்கு அது இல்லையே -எங்களைப் போலே –
கோழி அழைப்பதன் முன்னம் குளிக்கவும் வேண்டாவே உனக்கு
கோழி கூவு என்னுமால் என்று உனக்கு வயிறு எரிகைக்கு உடல் அல்லாமையாலே தெரியாதே -என்கிறார்கள்
கோழி கூவும் என்னுமால் தோழி மார் யான் என் செய்கேன்-
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று கோழி கூவும் என்னுமால்
மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
கொத்தலர் கோவின் மணித்தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை யல்லால் கைம்மாறு இலேனே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் –
மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவினகாண் –
ஸூக ஸ்பர்சத்தாலே-படுக்கையிலே உறங்குகிறவை உணரும் போது விடிய வேண்டாவோ -என்ன –
ஒரு குயில் ஒருகால் கூவும் காட்டில் விடிந்ததோ -என்ன
பல்கால் குயில் கூவிற்றுக் காண் –
உன்னுடைய நோக்கும் ஸ்பர்சமுமே தாரகமான குயில் விடிந்ததும் உன்னைக் காணப் பெறாமையாலே
பல் காலும் கூவா நின்றது
ஒரு குயில் பல் கால் கூவினது பிரமாணமோ -என்ன –
உன்னைக் காணப் பெறாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்ற குயில் இனங்கள் கூவின காண் –
இனம் இனமாக குயில்கள் பலகாலும் கூவின –
சத்வோத்தரமான காலம் ஆனவாறே–சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து
பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள் –என்ன-
அவர்களை உறங்க ஒட்டாமைக்கு நீங்கள் உண்டே -என்ன –
வேதாந்தங்களிலே வேதாந்த அர்த்தங்களை அனுபவியா நிற்கும் நாத யாமுநர் போலும்–
பரம பாகவத சமூஹங்கள்-
சத்வம் தலை எடுத்த பின்பும்–உன்னைக் காணாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்றப்
பலகாலும் கூவா நின்றன காண் –
குயில் இனங்கள் ஓன்று இல்லை–ஒரு குரல் இல்லை–பல் கால் கூவின–உறக்கத்தால் அலர்த்தி
மாதவி பந்தல் இஷ்டமான பந்தல்–
நோ பஜனம் ஸ்மரம் படுக்கை வாய்ப்பால் —உன் நோக்கும் உன் பேச்சும் தாரகமாக இருக்கும்
தயிர் பழம் சோறு பல் அடிசில் –கோல கிளியே நாராயணனை வரக் கூவாயால் துரத்துவேன்
மேல் ஒரு திரள்–கீழே நாங்கள்
புன்னை மேல் உறை பூம் குயில்காள் -போற்றி யான் இரந்தேன்-திரு வண் வண்டூர் உறையும் –
மாற்றம் கொண்டு
குயில் த்வனி பஞ்சமம் த்வனி ஐந்தாவது வேதம் பாரதம் பஞ்சம வேதம்
——-
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்–நாச்சியார் திரு மொழி–3-1-
கிருஷ்ணன் தான் ராத்ரி முற்கூற்று எல்லாம் பெண்களுடைய முலைகளோடும் தோள்களோடும் பொருது உறங்குவது பிற்கூற்றிலே யாகையாலே
இக்காலத்தில் இவன் உணரான் என்று -அது பற்றாசாக வாய்த்து -இவர்கள் போந்தது –
இவர்கள் நினைவு இதுவானாலும் கோழி கூவினவாறே உணர்வான் ஒருவன் ஆயத்து
தாங்கள் உறக்க உறங்கி கோழி உணர்த்த உணர்ந்து போரும்படியை கண்டு அந்வய வ்யதிரேகங்கள் இரண்டும் அறிந்து யாய்த்து போந்தது –
இவன் தன்னை துடை தட்டி எழுப்புவாரைப் போலே கோழி கூவி எழுப்ப வேண்டும்படி யாய்த்து நித்ராபரவசனாய்க் கிடக்கும் படி-
———–
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்–5-1-
என்னுடைய சோகத்து அடியான அக்குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும்
நான் தரைக்கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே
எனக்கு மென்மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-
இத்தை விட்டு உனக்கு செய்ய வேண்டுமத்தை சொல்லலாகாதோ என்ன –
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்–
ஒரு கால் சொல்லி விடுகை அன்றிக்கே பலகாலும் இருந்து ஆனை இடர்பட்ட மடுவின் கரையிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்தால் போலே விரைந்து வந்து
என்னோடு கலந்து போகிற சமயத்தில் அணைத்து ஸ்மிதம் பண்ணி வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி
விளை நீர் அடைத்து போன போதை செவ்வியோடும்
அதரத்தில் பழுப்போடும் வந்து அணைக்கும் படியாக கூவப் பாராய் -என்கிறாள்
———-
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-
மது விரியா நின்றுள்ள செண்பகப் பூவிலே ருஜீஷமான -கோதுவான -அம்சத்தைக் கழித்து -மலரைக் கோதி
நான் பூக்காண வெருவ – நீ களித்து-ஹர்ஷம் வழிந்தால் போலே இருக்க இசை பாடுகிற குயிலே –
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–
அருகே இருந்து நிரம்பா மென் சொற்களைச் சொல்லி விலாச சேஷ்டிதங்களைப் பண்ணாதே
———-
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-
பரப்பு மாறப் பூத்த -சோலையிலே -அப்போது அலர்ந்த செவ்வி அழியாத அபரிமிதமான பரிமளமானது கமழ
ரசாயன சேவை பண்ணினால் போலே -தர்ச நீயமான வண்டானது –காமரம் -என்ற பண்ணைப் பாட -அதுக்கு செவி தாழ்த்து
மேல் விளைவது அறிந்து விடாதே வர்த்திக்கிறாய் அன்றோ –
தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே
தன் வடிவைக் காட்டி என்னை அனந்யார்ஹம் ஆக்கினவன் வரக் கூவாய் -என்கிறாள் –
———-
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-
பிறர் நோவு பட பொறுக்க மாட்டாதவன் நெஞ்சு திருத்த வேண்டா
நீ சென்று கிணுக்க அமையும் காண் அவன் வருகைக்கு -என்கிறாள் –
சிறிது உணர்த்தினாயாகில் -என்றபடி -அல்பம் ஸூசிப்பிக்க அமையும் –
——-
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-
பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை–
இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது
இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –
அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு
குயில் -ஆசார்யன் -தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும்பொருள் த்வனிக்கும் –
கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது -அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி
இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு –
பேறு எனக்குக் கைப்படும் –
எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் —
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே –வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய் –
———
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே –5-6-
நீ பண்ணின உபகாரத்துக்கு இத்தலையால் செய்வது ஓன்று உண்டோ -என்று என் தலையை உனக்காக்கி –
காலம் எல்லாம் உன் காலிலே வணங்கி வர்த்திக்கும் அத்தனை -என்கிறாள் –
———-
அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி–5-7-
உனக்கு ஒரு உக்தியே நேர வேண்டுவது
ஒரு வாய்ச் சொல்லாலே தண்ணீர் -ஆறி இராதே இத்தனையும் செய் பந்தலாம் –
நீ சாலத் தருமம் பெறுதி-
சேஸ்வரமான ஜகத்தை ரஷித்தாய் என்னும் ஏற்றம் பெறுதி
பழையத்தை புதியது ஆக்கினாய் யாவுதி
பண்டும் ஒரு பஷி இறே தன்னை அழிய மாறி சரணாகதனை ரஷித்தது-கபோத உபாக்யானம்
இங்கு உன்னை அழிய மாற வேண்டா
ஓர் உக்தியே நேர வேண்டுவது
இவள் இல்லையாகவே அவன் இல்லையாம்
பின்னை உபய விபூதியும் இல்லையாம் அத்தனை இறே
தருமம் பெறுதி என்னாதே –நீ சாலத் தருமம் பெறுதி–என்கிறது
அங்கு நிஷாதன் ஒருவனும் -இங்கு உபய விபூதியும்
தர்மத பரி ரஷிதா–யுத்த 1-12-என்று அருளிச் செய்தார் இறே பெருமாளும் திருவடியிடம்
——–
சிறு குயிலே திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே–5-8-
நீ அத்தலையிலே சென்று அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
நம் குற்றங்களைப் பொறுப்பித்து பதறி நடந்து வரப் பண்ணுவார் அருகே யுண்டு
அவன் பதறி நடந்து வரும்படி சடக்கென கூவ வல்லையாகில்
இவள் படுகிற கிலேசத்துக்கு ஒரு ப்ரேயோஜனம் இல்லை என்று இறே நீ இருக்கிறது
அவன் வந்து கிட்டினவாறே அவன் பிரிந்து நெடுநாள் என்னைப் படுத்தின பாட்டை எல்லாம் உன் சந்நிதியிலே அவனை படுத்தும் படி பாராய் –
அது காண்கையே போரும் இறே உனக்கு பலம்
————
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-
இசைகள் நிரந்த சோலையிலே
அவ விசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக நீ-திரிந்தாய் ஆகிலும் நான் உன்னை விடுவேன் அல்லேன்
ஏனோ தானோ என்று கேளாதே–வண்டுகளை இசையில் நின்றும் காதுகளை மீட்டுக் கொண்டு
என் வாய்ச் சொல்லை குறிப்பாக கேள் –
குயிலே நீ இச் சோலையில் இருந்து ஜீவிகிக்க வேணுமே-என்னை அலட்ஷியம் செய்தால் இதிலே உனக்கு வாழ முடியுமோ
நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கித் தருவார் யார்
வலங்கை ஆழி இடக்கை சங்கம் உடையானான எம்பெருமான் இங்கே வரும்படி கூவுதல் ஓன்று
என் கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஓன்று-இவை இரண்டினுள் ஒன்றை நீ செய்தாக வேணும் என்கிறாள்-
கை வளை தங்குவது எம்பெருமான் சம்ச்லேஷத்தால் மட்டுமே ஆகும்-அதுவும் அவன் வந்தால் அன்றி ஆகாதே
இரண்டு பஷமாக அருளிச் செய்வான் என் என்னில்
சத்யவான் உயிர் மீட்ச சாவித்திரி யமன் இடம்-பல பிள்ளைகள் பிறக்கும்படி அருள வேணும் என்றால் போலே
இதுவும் ஒரு சமத்காரமான உக்தி-ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக் கட்டும் இறே
நாராயணாதி நாமங்களை குறிப்பிடாதே சங்கோடு சக்கரத்தான் -என்கையாலே
அவனுடைய ஆபரணத்தை யாவது இங்கே கொண்டு சேர்
அல்லது
என்னுடைய ஆபரணத்தை யாவது கொண்டு கொடு -என்கிற ரசோக்தி
———
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-
உடைமை தான் அசித் சம்ஸ்ருஷ்டமாய்த்து என்று கால் கடைக் கொள்ளாதே
அழுக்கு உகப்பாரைப் போலே அது தன்னோடு விரும்பும்படியாய் இருக்கிறவனை வரும்படி கூவாயாகில் –
இங்குத்தை நின்றும் துரப்பன்- ஒட்டுவன் – ஒட்டுவன ஒட்டி -இருத்துவன இருத்தி செய்கிறவள் அல்ல இறே இவள்
ஆனால் சொல்லுகிறது என் என்னில் -நான் முடிவன் –
பின்னை இங்கு நின்றும் புறப்பட்டுப் போம் அத்தனை கிடாய்
நான் உளேனாய்ச் சோலை நோக்கித் தர வேணுமே –
நான் முடிந்தால் பின்னை உனக்கு இருப்பு இல்லை கிடாய் -என்கிறாள் –
———
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்–5-11-
கண்ணுற –அவன் தன்னை வேலுக்கு இரையாக்கத் தேடுகிறாள் –
என் கண்ணுக்கு விஷயமாம்படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் வரும்படி –
உன் வடிவைக் காட்டி அவன் வடிவுக்கு ஸ்மாகரமான நீ என்னையும் அவனையும் சேர்க்க வேணும் -என்று சொன்ன பாசுரமாய்த்து –
———-
வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே–9-5-
இவளுக்கு குறைவற்றார் குறைவாளர் குறை தீர்க்க வேண்டாவோ-
தர்மபுத்திரன் பீஷ்மத்ரோணாதிகள் பக்கலிலே சென்று -உங்களை நான் கொல்லும் விரகு நீங்களே சொல்ல வேணும் என்றால் போலே
பாதிக்க ஒருப்பட்டு நிற்கிற இவற்றைப் பார்த்து நான் உங்களை தப்பி ஜீவிப்பதற்கு ஒரு விரகு சொல்ல வல்லி கோளே -என்று கேட்கிறாள் –
சிகண்டியை முன்னே நிறுத்துவது -வில்லைப் பொகடுகிறோம்-கொன்று கொள்-என்றால் போலே ஒரு விரகு சொல்ல வல்லி கோளே
அஸ்வத்தாமா ஹத -என்றது துரோணன் வில்லை போகட காரணம்-
நாங்கள் இல்லாதவிடம் இன்ன இடம் அங்கே போய் நீ ஜீவி -என்று ஒரு புகல் சொல்ல வல்லி கோளே –
இவை தனக்கு ஒரு புகல் சொல்ல வேண்டும் படி காணும் இவள் தான் புகல் அற்ற படி –
———
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ–9-8-
சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு பொது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-வி றே பண்ணிக் கொண்டு இருப்பது –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –என்னுமா போலே யாய்த்து
கரிய குருவிக் கணங்கள்-வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –
மாலின் வரவு சொல்லி –அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி
மருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
கிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் -சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-இது மெய்யாக வற்றோ –
——-
பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-
சம்ச்லேஷ சமயத்திலும் உங்கள் பாட்டுக் கேட்டு அறிவுதோம் இறே-
இன்று தொடங்கி பாடுகிறி கோள் அன்றே
என்றும் ஒக்கப் பாடிப் போரா நிற்கச் செய்தே -செவி வழியே நெருப்பைச் சொரிந்தால் போலே –
இற்றைக்கு உதவ இது ஒரு பாட்டை எங்கே தேடினி கோள் –
பாடும் குயில்காள் –
ந து ராஷச சேஷ்டித-ஆரண்ய -17-24–என்கைக்கு ஒருவரையும் பெற்றிலோமீ –
ஈது என்ன பாடல்
இக்காலத்திலே பாடுவதே
இப்பாட்டைப் பாடுவதே
இரண்டருகும் நெருப்புப் பற்றி எரியா நிற்கச் செய்து நடுவே இருந்து சாந்து பூசுவாரைப் போலே இருந்து பாட்டுக் கேட்கும் தசையோ என் தசை
நெருப்பு கிடந்த இடத்தே சுடுமா போலே அவற்றினுடைய ஆஸ்ரயத்தையும் அழிக்கும் என்று இருக்கிறாள்
கெடுவிகாள் உங்களுக்கு செவி இல்லையோ –
நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்–
உங்கள் பாட்டுக் கேட்கைக்கு செவி உண்டானால் வந்து பாடுங்கோள்-
இப்போது இவள் கரணங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களை கிரஹிக்க மாட்டாதே இறே கிடக்கிறது
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு -பெரிய திருமொழி -7-5-9–என்கிறபடியே
வந்து பாடுமின்
இபொழுது உங்கள் சந்நிதி எனக்கு அசஹ்யமாய் இரா நின்றது –போங்கோள்-என்றபடி
உங்கள் சந்நிதி அபேஷிதமாய் இருப்பதும் ஒரு போது உண்டு இ றே -அப்போது வந்து பாடுங்கோள் –
——
வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ–பெருமாள் திருமொழி – 8-4–
வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற
ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே
——-
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை–திரு மாலை-14–
வண்டினம் முரலும் சோலை –
கிண்ணகத்தில் இழிவார் திரளாக இழியுமா போலே
மது வெள்ளத்தால் வண்டுகள் திரள் திரளாக வாய்த்து இழிவது –
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணி
புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலும்
தான் வாய் விட மாட்டாமையாலும் ஆளத்தி வையா நிற்கும் ஆயத்து –
முக்தர் திரள் திரளாக பகவத் அனுபவம் பண்ணி
போக்குவீடாக சாமகானம் பண்ணிக் களிக்குமா போலே
இவ் ஊரில் திர்யக்குகளும் கழித்து வர்த்திக்கும் -என்கை –
குயிலினம் கூவும் சோலை –
கீழ் சொன்னவற்றின் வியாபாரம் இன்றிக்கே
குயில் இனங்கள் ஆனவை இருந்த இடத்திலே இருந்து
தம் தாம் இருந்த பிரதேசத்திலே குளிர்த்தியாலே அன்யோன்யம் அழையா நின்றன –
——–
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை—திரு மாலை-32–
திருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை
அபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து
கழுத்தே கட்டளையாகப் பருகி
புக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
ஆர்த்துக் கொள்ளா நிற்கும் –
முக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
சாம கானம் பண்ணுமா போலே
ஒரு தேச விசேஷத்திலே –
பகவத் அனுபவத்தாலே
முக்தருக்கு பிறக்கும் விகாசம்
திர்யக்குகளுக்கும் பிறக்கும் படி யாய்த்து
கோயிலின் போக்யதை இருப்பது
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு
பாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இ றே-
இவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –
இவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –
வண்டு அலம்பும் சோலை –
மது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே
பிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்
கிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும்
அலையா நிற்கும் யாய்த்து –
———
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-அமலனாதி பிரான்–4-
ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்ய சூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
ராவண வதம் பண்ணின வீர லஷ்மி யுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ்ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே –
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட –
——–
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-கண்ணி நுண் சிறுத் தாம்பு — 10-
இவரை அவகாஹித்த திர்யக்குகளும் களித்து வர்த்திக்கும் படி இவரைக் கிட்டினார்க்கும் உண்டு காணும்
ஏதத் சாம காயன் நாஸ்தே -என்கை பகவத் விஷயத்துக்காகில் இ றே ஒரு தேச விசேஷத்து ஏறப் போக வேண்டுவது
ஏற்றம் உள்ள விஷயத்தைப் பற்றினார்க்கு இங்கே கிடைக்கும் போலே காணும்
முக்தர்க்கு இ றே அங்குப் போக வேண்டுவது -முமுஷுக்களுக்கு கிடைக்கும் இடம் இ றே இவ்விடம்
எம்பெருமானோடு நித்யரோடு முக்தரோடு வாசியற ஹ்ருஷ்டராம் படி இ றே ஆழ்வாருடைய பூர்த்தி
இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு-
ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு-
இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன
இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று
திருவாய் மொழி பாடக் கற்றுப் பாடா நின்றால் சேதனான நான் திருந்தச் சொல்ல வேணுமோ
சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது
(சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே
தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-
(விண்ணப்பம் செய்வார் முன்னே இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே
ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு )
ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம் பாசுரம் கலியன் )
இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா விறே-
தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்-
———–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –