கலை வளை
அஹம் மம கிருதிகள் —ஆச்சார்ய ஹிருதயம்-சூரணை -147-
( கலை அஹம் கிருதி -வளை மம கிருதி
மேகலை மேம் பொருள் -சரீரம் பற்றிய -அஹங்காரம் –
கை வளை-என்னுடைய மமகாராம் )
அதாவது –
கைவளையும் மேகலையும் காணேன் -திரு நெடும் தாண்டகம் -22-என்றும்
கலையாளா அகல் அல்குல் கன வளையும் கையாளா –பெரிய திருமொழி -5-5-2–இத்யாதிகளில் சொல்லுகிற
கலையும் வளையுமான – பகவத் அனுபவ விரோதி ஆகிற அஹங்காரமும் -மம கிருதியும் என்கை-
அஹங்காரம் மமகாரங்கள் இரண்டும் பகவத் அனுபவ விரோதி ஆகையால் இறே
மத்யம பதத்தாலே இவை இரண்டையும் கழித்து கொண்டு
த்ருதீய பதத்தாலே பகவத் அனுபவம் சொல்லிற்று —
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு ,கை தொழக் கூடும் கொலோ –திருவாய் -5-9-9-–என்றும் ,
ஈண்டிய சங்கும் நிறையும் கொள்வான்-திருவாய் -8-2-2-என்றும் ,
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையும் –திருவாய் -9-7-6–என்கிற இடங்களிலே
த்யாஜ்யமான அஹம் மம காரங்கள் அன்றிகே ,
சேஷோஹம்-
என்னுடைய திருவரங்கர் -என்றார் போலே இருந்துள்ள
அஹம் மம தைகளைச் சொல்லிற்றாகக் கொள்ளலாம் ஆகையாலே
அங்குத்தைக்கும் இதுவே ஸ்வாபதேசமாக கொள்ளக் குறை இல்லை —
( அஹங்காரம்-ஆத்ம விஷயம் -தேகாத்ம அபிமானம் –கைவல்யம் வைராக்கியம் என்றுமாம் –
மமகாராம் -தேக விஷயம்-ஸ்வ ஸ்வா தந்தர்ய அபிமானம் – -ஐஸ்வர்யாதிகள் வைராக்கியம் -என்றுமாம்
சித் ஈஸ்வரன் வ்யாவ்ருத்தி -சேஷத்வம்
அசித் சித் வ்யாவ்ருத்தி -ஞாத்ருத்வம் )
————
சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே -2 9-10 – –
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி
என் அகத்திலே புகுந்து
என் மகள் பேரைச் சொல்லி அழைத்து
கையில் வளையை கழற்றிக் கொண்டு
அவள் கையில் அடையாள வளையலைக் கழற்றிக் கொண்டு போய்
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
கொல்லையில் நின்றும் கொண்டு வந்து
அங்கே நாவல் பழம் விற்றுத் திரிவாள் ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து –
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
செவ்வி குன்றாத பழங்களைத் தெரிந்து கொண்டு -போரும் போராது -என்று சொல்லுகிற அளவிலே
நான் கண்டு -இவ்வளை உனக்கு வந்தபடி என் -என்று அவளைக் கேட்க
அவள் -இவன் தந்தான் -என்ன
நீயோ இவளுக்கு வளை கழற்றிக் கொடு வந்து கொடுத்தாய்-என்ன –
நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன்
என் கையில் வளை கண்டாயோ
நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறது கேட்டாயோ
கையில் வளை கழற்றுவது கண்டாயாகில் உன் வளையை அங்கேயே பறித்துக் கொள்ளாமல் விட்டது என் –
என்றால் போலே சில மித்யைகளைச் சொல்லி
மந்த ஸ்மிதம் செய்கிறதைக் கண்டு
இவனைப் பிடித்தவள் வளையை மறந்து இவனை விட்டு
உன்னைத் தீம்பு அற நியமிக்கும் படி அவளைச் சொல்லுகிறேன் -என்று போந்து
அவனுடைய சூழல்களை இவளுக்குச் சொல்லி முறைப்படுகிறார்கள் –
————
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் -2 10-1 – –
சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு
நாங்கள் எங்களுடைய லீலா உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு –விமுகைகள் ஆன அளவிலே
எங்களைச் சேற்றில் இருந்து எங்கள் வளைகளையும் துகில்களையும் கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி
ஓடுகிற காற்றைப் பிடிக்கிலும் அகம் புக்கு-இவனைப் பிடிக்க ஒண்ணாதபடி தன்னகத்திலே சென்று புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
நாங்கள் கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைத்தாலும் ஏன் என்கிறான் இல்லை –
ஏன் என்றாகில் இன்று முடியார்கள் இறே
ஏன்-என்னும் போது-அவன் குரலிலே தெளிவும் கலக்கமும் கண்டு தரிப்பர்கள் இறே –
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்
ஏன் என்கை அரிதாய்-உறவு அற்றாலும்
எங்கள் கையில் வளை -கலை -முதலாகத் தர வேணும் – என்று நாங்கள் பல காலும் சொன்னால்
அதுக்கு ஒரு உத்தரம் சொல்ல வேண்டாவோ தான் –
வளைத் திறம் பேசானால்-என்கையாலே
வளை பெறுவதிலும் பேச்சுப் பெறுவதில் காணும் இவர்களுக்கு அபேக்ஷிதம்
பிரணயினிகள் -வளை -கலைகள் -என்றால் போலே காணும் தம் தாம் அபிமதங்களைச் சொல்வது –
இத்தால்-
அநந்ய ப்ரயோஜனராய் -அநந்ய ஸாதந பரராய் இருப்பாரையும் விஷயீ கரிக்கும் என்னும் அர்த்தம் தோற்றுகிறது
ஆற்றில் இருந்து விளையாடுபவர்கள் -ஓம் நம–அநந்ய ப்ரயோஜனராய் -நம நம -அர்த்தம் புரிந்தவர்கள்–அநந்ய ஸாதந பரராய்-
ஸாதனம் ஆகையாவது -அவனுடைய வ்யாமோஹ ஹேது -என்று இறே அறிவுடையார் நினைத்து இருப்பது –
(வளை -துகிலை கழற்றி ஒன்றும் இல்லை நம்மிடம் என்று அறிந்தவர்கள் )
சேற்றால் எறிந்து -என்கையாலே அவன் நீர்மையாலே தாங்கள் ஈடுபட்டார்கள் என்னும் இடம் தோற்றுகிறது –
(இறங்கி -தாழ விட்டு வந்தமை அறிந்தவர்கள் )
எறிந்து -என்கையாலே அவன் ஈடுபாட்டிலன் என்னும் இடம் தோற்றுகிறது –
(தூவி என்று இருந்தால் ஈடுபட்டமை தோற்றும்
வீட்டில் இருந்து விளையாடி இருக்க வேண்டுமே -ஆற்றில் வந்ததால் கோபம் )
அடையாளம் குறித்துப் போனானாய் இறே அவன் இருப்பது –
வளை -துகிலைக் கொண்டு -என்கையாலே
சேஷத்வத்தையும் பாரதந்தர்யத்தையும் பறித்துக் கொண்டான் என்கிறது
(அவனுக்கு பிடிக்காத சேஷத்வம் பாரதந்தர்யம்-தன்னை நோக்காமல் ஈஸ்வரனைப் பார்த்து இருக்க வேண்டும்
ஆட் செய்
எனக்கு ஆட் செய்
எனக்கே ஆட் செய்
எக் காலத்திலும்
இடைவீடு இன்று
என் மனத்தே மன்னி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -பார்த்தால் அழகிலே ஈடுபடுவோம் ஆகவே படர்க்கை -)
சேஷத்வத்தை பறிக்கை ஆவது -தன் வயிறு நிறைத்துப் போகை இறே
பாரதந்தர்யத்தைப் பறிக்கை யாவது -இவர்களை அலைவலை -ஆக்குகை இறே
காற்றில் கடியனாய் ஓடி என்கையாலே (ரூப ரஹித ஸ்பர்ஸவான் காற்று )
ஸ்பர்ச இந்திரிய க்ராஹ்ய துர்லபன் -என்கிறது
அகம் புக்கு என்கையாலே
ஸ்வ போக்த்ருத்வ நிபந்தமான ஸ்வ தந்தர்ய ஸ்தானத்திலே புக்கான் என்னும் இடம் தோற்றுகிறது
(ப்ராப்தாவும் ப்ராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே )
மாற்றமும் தாரானால் என்கையாலே
அவாக்ய அநாதர அம்ருத போகி -என்னும் இடம் தோற்றுகிறது
(கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூப்பிட்டாலும் ஏன் என்கிறான் இல்லை
ஏன் என்னும் பொழுது அவன் தெளிவும் கம்பீரமும் தெரியுமே -இதனால் முடிய மாட்டார்களே )
வளைத் திறம் பேசானால் -என்கையால்
விஷய அநுரூப ப்ராப்ய ப்ரகாசன் என்னும் இடம் தோற்றுகிறது
(அனுக்ரஹ விஷயமாக இருப்பவர்கள் -உங்களுக்கு வளையல் வேண்டாம் -தானே ப்ராப்யம் அறிவிக்கிறான்
துரியோதனன் கேட்ட ஒரு கோடி சைன்யம் கொடுத்து -அவனுக்குத் தக்கபடி செய்பவன் )
இன்று முற்றம் -என்ற இத்தால்
சரம அதிகாரம் நாசத்தை நிரூபித்தால் -உஜ்ஜீவனத்தில் நிரூபித்தால் ஒழிய
நடுவு நிலை இல்லை என்று நம்பி அருளிச் செய்த வார்த்தையும் தோற்றுகிறது –
(binary போல் பூஜ்யமும் ஒன்றுமே இங்கும் )
அதாவது
பர்வ க்ரமமாக நசிக்கிறான் என்னுதல் உஜ்ஜீவிக்கிறான் என்னுதல் செய்யாது என்றபடி –
——–
இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்னச்
சந்தியின் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே – 3-4-8-
எதிர் நின்று அங்கு இன வளை இழவேல் என்ன –
அவன் வரவுக்கு எதிராக -அந்த ஸ்தலத்திலே நின்று –
உன்னுடைய இள வளைகளை இழவாதே கொல் என்று நான் சொல்ல –
எதிர் நிற்கை -என்றும் வளை இழக்கை -என்றும் இரண்டு இல்லை போலே காணும் –
இன வளை -என்கையாலே –
எதிர் நின்றவர்கள் கையில் ஒரு வளையும் தொங்காது என்னும் இடம் தோற்றுகிறது –
வளை இழக்கை யாவது -ஸ்த்ரீத்வம் அழிகை இறே
சந்தியில் நின்று கண்டீர் –
என் சொல் கேளாமல் ஊர் பொதுவான அவன் வருகிற வழியான சந்தியிலே நின்று கண்டீர்
நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே –
முன்பு ஸ்த்ரீத்வத்தால் பரி பூரணையாய் இருந்த இவளுடைய பரிவட்டத்தோடே கூடச்
சரி வளையும் கழலா நின்றது
கோல் வளை -கழல் வளை -வரி வளை -என்னுமா போலே
சரி வளை என்றும் ஒரு வளை விசேஷம்
கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினர் (நாச்சியார்-11-2 )-என்கிறபடியே முன்பே
சரி வளை -என்ற பேராய் இருந்த இத்தை -நாமம் மாத்ரம் அன்றிக்கே –
கையில் தொங்காமல் சரிந்து கழன்று போம்படி
பண்ணினான் ஆய்த்து -அவன் தன்னுடைய காட்சியாலே –
———
அலங்காரத்தால் வரும் மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – 3-4-9-
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை –
ஏவம் பிரகாரங்களான அலங்காரங்களோடு வரும் இடைப் பிள்ளை உடைய –
பிள்ளை -என்கையாலே –
யுவாகுமாரா -என்கிற பருவத்தை சொல்கிறது
அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
மேலீடான ஸுந்தர்ய பூர்த்தியைக் கண்டு மிகவும் விரும்பி
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர்
விலங்கி நில்லா விட்டால் மத்த கஜத்தின் முன்னே நிற்பாரைப் போலே பிராப்தி அளவும் செல்ல ஒட்டாத அளவே அன்றிக்கே
ரக்ஷகத்வாதி குணங்கள் அளவும் செல்ல ஒட்டாத சவுந்தர்யத்தின் முன்னே விரும்பி நின்று ஆசைப்படுவாரும் உண்டோ –
வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே
என்னுடைய நியந்த்ருத்வத்தையும் மறுத்தால் தான் தன்னுடைய
ஸ்த்ரீத்வ அபிமானம் தான் நோக்கலாய் இருக்கிறதோ
மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய் சுத்தமுமான வளைகள் கழன்றோ தான் உடம்பு மெலிவது –
வளை கழலத் தக்கது அமையாதோ மெலிய
மெலிகின்றதே என்ற வர்த்த மானத்தாலே –
இனி வளைக்கு ஆஸ்ரயம் இல்லையோ என்று தோற்றா நின்றதே என்னுதல் –
வளை –தோள் வளை யாகையாலே
பலகாலும் கழலுவது அணிவதாய்ப் போருகையாலே அதுவோ என்று இருந்தாள்
எடுத்து அணியத் தொங்காமையாலே -மெலிவு கண்டாளாய்
கண்ட பிரகாரத்தைச் சொன்னாள் ஆதல் –
———–
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கோவைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
மாறு இல் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுருகின்றாளே – 3-7-8- –
தன் கையில் வளை குலுக்கும்-
தானே கழலுகிற வளைகளும் குலுக்கினால் மிகவும் விழ விறே ப்ராப்தம் –
விழுந்தவை விழுந்தே போயிற்றன
விழாதவை கழலா நிற்கச் செய்தே மநோ ரத சமயத்திலே பூரித்தன இறே
அவன் குணங்களை நினைத்து இருந்த கனத்தாலே குலுக்கக் குலுக்கப் பூரித்தன என்னுமது ஒழிய
சிதிலமாய் விழுந்தன என்கை மார்த்தவதுக்குப் போராதே –
ஆச்சார்ய வசன அபிமானத்தாலே இதர அபிமானம் குலைந்து ப்ராப்த அபிமானத்துடைய மிகுதி
இவள் தன்னாலும் ஆச்சார்யன் தன்னாலும் குலைக்க ஒண்ணாது என்னும் இடம் தோற்றுகிறது –
கையில் வளை குலுக்கும் -என்கையாலே –
———-
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர் –4-6-3-
பிள்ளைக்கு உச்சியில் தடவத் தக்க எண்ணையையும்
நெற்றியிலே அலங்காரமாக தொங்கும்படி கட்டத் தக்க சுட்டியையும் –
கைக்கு அலங்காரமாக இடத் தக்க வளையையும்-
இத்தால்
பிள்ளை தலை காயாமல் தடவ -தப்புகைக்கு -எண்ணி பெறலாம்
பிள்ளை பணிகள் ஆனவை பெற்று பூட்டலாம் -என்று ஆய்த்து -பிறர் பேர் இடுகையில் இழிகிறது
———
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–18–
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப –
நீ தானே வந்து திறக்க வேணும் செந்தாமரைக் கையால் – அவனும் ஆசைப் படும் கை –
ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம் என்னும் கை –
அவள் -அப்படியே செய்கிறோம் -என்று
முன் கையில் வளையைக் கடுக்கி திறக்கப் புக்காள் –
சீரார் வளை ஒலிப்ப –
வளைக்கு சீர்மை யாவது -கழலாய் இருக்கை –
சங்கு தங்கு முன்கை நங்கை -இறே – நாங்களும் அத் த்வனி கேட்டு வாழும்படி –
தங்கள் கைகள் -இருக்கையில் சங்கு இவை நில்லா -என்று இறே இருப்பது –
சூடகமே -தோள் வளையே -என்று அவர்கள் இருவரும்
கூட்டிப் பூட்டினால் இறே இவர்களுக்கு உள்ளது –
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ-
யாமுகக்கும் எம் கையில் சங்கம் எனது இழையீர்-என்றும்
என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே -என்றும்
செந்தாமரைக் கை–
மாஸூச கை பார்த்து இருப்பாரோ நாங்கள்–சரணம் பற்றாத உங்களுக்கும் நான் இருப்பேன் ராஷசி –
லகு தரா ராமஸ்ய கோஷ்டி கிருதா -பட்டர்–நீங்கள் செய்த பாபத்துக்கு அஞ்ச வேண்டாம்
அவன் ஸ்வா தந்த்ர்யம் அஞ்ச வேண்டாம் வைத்த அஞ்சல் கை செந்தாமரைக் கை
அவனும் ஆசைப் படும் கை -கை மேல் என் கை வைத்து–
பெண் கை மேலே —அணி மிகு தாமரைக் கை மேலே செந்தாமாரைக் கை
பந்து பிடித்து சிவந்த கை
மேகம் முழங்கி சீரார் வளை ஒலிப்ப–பசியர் சோற்றை வர்ணிப்பது போலே–கையிலோ நின்றும் கழலாத சீர்மை
வளை ஒலி கண்ணன் எழ வேண்டும்–நாங்களும் ஒலி கேட்டு வாழ–
கிடந்த இடத்தே இருந்து–நாலடி நடந்து வந்து -அவனும் நாங்களும் நடை அழகு காண
மகிழ்ந்து திறவாய்-தலை விதி என்று வராமல்–ஆர்த்தி சாஸ்திரம் அர்த்தம் பரிதாபம்
உகந்து வந்து–மகிழ்ந்து மார்கழி நீராட–எதோ உபாசனம் ததோ பலம்–நாங்கள் நோற்ற நோன்பு நீ மகிழ தான்
உன்னுடைய மகிழ்ச்சி தான் எங்கள் மகிழ்ச்சி–இதுவே பலம்–
தர்மத்துக்கு திறவாமல்–மகிழ்ந்து–பேறு உன்னதாக வேண்டும்
அவன் உடையார் பக்கல் அவனை விட–முக விகாசத்தில் தோற்றும்படி–
கண்ணுக்கு இறை வந்து
வளை
செவி பட்டினி தீர–
பேர் பாட நாக்கு பட்டினி–
செந்தாமாரைக் கை ஸ்பர்சம்–கந்தம் நுகரும்–சர்வ இந்த்ரியங்கள் விடாய் தீர்க்க
மனஸ் மகிழ்வு உன்னதாக இருக்க
சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களாலே–தாமரை போன்ற திருக் கையாலே –
இவ்விடத்தில் -கையாவது -ஜ்ஞானம்
ஜ்ஞானக் கை என்றார் – ஆழ்வார் –
ஞானத்துக்கு சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்கள் ஆவன இதர விஷய நிவ்ருத்தி –
சௌந்தர்யம்-ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி –
சௌகுமார்யம் -நிரதிசய ப்ரேமாத்மகத்வம்-
சௌகந்த்யம் -இப்படி இருந்துள்ள ஞானத்தாலே –
சீரார் வளை ஒலிப்ப—
நிரந்தர பகவத் சம்பந்தத்தாலே பூர்ணங்களாய்-பகவத் சம்பந்த சூசகங்களான-
ரகஸ்ய த்ரய அர்த்தங்கள் பிரகாசிக்க –
———-
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்–24-
சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்–
பரம பிரணயி ஆகையாலே தன் தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
சூடகமே –
அணி மிகு தாமரைக் கை இவர்கள் ஆசை படுவது போலே-
அடியார் கையை தான் அணிய ஆசை படுகைக்கு இட கடவ ஆபரணம்
வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே
அநன்யார்ஹைகளாகப் பிடித்த கைகளிலே இறே முதல் ஆபரணம் பூட்டுவது
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -என்னுமா போலே
அவன் சொல்லி மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம் கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி வைத்த -முந்துறக் காணும் இடம் –
முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்
தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே-அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –
தோடே –
பொற்றோடு பெய்து -என்று-பண்டே தோடு இட்டாலும்-அவன் இட்டாப் போலே இராது இறே –
செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே-
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –
பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –
என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –
அனைய -பல
கிரீட -ஹார –கௌச்துப நூபுராதி அபரிமத திவ்ய பூஷணம்-
பல பலவே ஆபரணம்-ஆபரணங்கள் அழகு கொடுக்கும் அவயவங்கள் இவர்களுக்கு
யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்–பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-
———-
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–நாச்சியார் திரு மொழி-–2-3-
நாங்கள் பட்ட பிரயாசத்தைப் பாராய் -வண்டல் உள்ள இடம் தேடி –அதிலே நுண்ணிய மணல் தேடி —
அது தன்னை தெள்ளி -துர்ப்பலைகளாய் இருக்கிற நாங்கள்-
வளை கொண்டு பாடாற்றுகையே தொடங்கி அரிதாய் இருக்கிற கைகளைக் கொண்டு கிலேசப் பட்டோம் –
அவன் ஸ்பர்சித்த வளையாதலால் சிரமப் பட்டோம் –
————
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே–5-1-
எல்லா பதார்த்தங்களையும் முறையிலே நிறுத்தக் கடவ அவன் –மணி முடி மைந்தன் அன்றோ –
முறை செய்யா விடில் பொருந்த விடுகை உனக்கு பரம் அன்றோ -என்கிறாள்
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக -என் சங்கு இழக்கும்-
இத்தலையிலே குறை உண்டாய் இழக்கிறேனோ –
தன் பக்கல் குறை உண்டாய் இழக்கிறேனோ
மன்னு –
தர்மி உண்டாய் -குணங்கள் -நடையாடாத ஒரு போது உண்டாய் -நான் இழக்கிறேனோ –
பெரும் புகழ் –
குணங்களுக்கு அவதி உண்டு என்றும் -அது என் பக்கல் ஏறிப் பாயாது என்றும் நான் இழக்கிறேனோ –
புகழ் –
கல்யாண குணங்களே -கொண்டவன் அன்றோ -ஹேய குணங்களும் கலசித்தான் நான் இழக்கிறேனோ
உயர்வற உயர் நலம் உடையவன்–நிஸ் சீமம் – -நிஸ் சங்க்யம் -ச்லாக்யதை மூன்றுமே உண்டே
ஸ்வ பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண-என்றால் போலே இருக்கிறது யாய்த்து –
மாதவன் –
இப்போது இக்குணங்கள் இன்றிக்கே ஒழிக –
அருகே இருந்து ந கச்சின் ந அபராத்யதி –யுத்த -116-44-என்று சேர்ப்பார் இல்லாமையால் தான் இழக்கிறேனோ
ஸ்ரீ வல்லப -என்றால் போலே இருக்கிறது
மாதவன் -மணி வண்ணன் –
தனக்காக வடிவு படைத்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ
இழக்கலாம் வடிவாய்த் தான் இழக்கிறேனோ
ந தே ரூபம் ந சாகாரோ நாயுதா நி ந சாஸ்பதம்-ததா அபி புருஷாகாரோ பக்தா நாம் தவம் பிரகாசசே -ஜிதந்தே -1-5-
மணி முடி மைந்தன் –
இத்தனையும் உண்டானாலும் என்னைப் போலே பிறர் கை பார்த்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ –
ஸ்வ தந்த்ரனாவது -ரஷணத்திலே தீஷித்து இருப்பான் ஒருவனாய்த்து –
மைந்தன் –
ரஷணத்தை ஏறிட்டுக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை இறே -அசக்தனாய் இருக்குமாகில்
மைந்து -என்று வலியாய்-வலியை உடையவன் -என்றபடி –
தன்னை உகந்தது காரணமாக –
அப்ராப்த விஷயத்தை ஆசைப்பட்டேனா -இழப்பேன் நானோ
தன் திருவடிகளிலே சிலர் சாய்ந்தால் அநு பாவ்யங்கள் பின்னை அவர்கள் அநு பவிப்பார்களோ –
தான் அநு பாவித்தல் பரிஹரித்தல் -செய்யும் அத்தனை அன்றோ —சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்பவன் அன்றோ –
விஸ்ருஷ்டம் பகதத்தேன ததஸ்த்ரம் சர்வகாதுகம் -உறசா தாரயாமாசா பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -துரோண பர்வம் -29-18-
வழக்குண்டே
என் ஆர்த்தியைக் கண்டே ஓரம் பண்ணச் சொல்லுகிறேன் அல்லேன் –
மத்யஸ்த புத்தியாலே பார்க்கச் சொல்லுகிறேன் அத்தனை
ந வாஸூ தேவ பக்தா நாம ஸூ பம் வித்யதே கவசித் -என்றும்
ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31-என்றும் சொல்லக் கடவது இறே
கௌந்தேய பிரதீஜா நீஹி –அர்ஜுனா இவ்வர்த்தத்தில் நின்றும் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞை பண்ணு
ந மே பக்த ப்ரணச்யதி -நம்மைப் பற்றினார்க்கு ஒரு காலும் அநர்த்தம் வாராது காண்-
———
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-
குயிலே நீ இச் சோலையில் இருந்து ஜீவிகிக்க வேணுமே-என்னை அலட்ஷியம் செய்தால் இதிலே உனக்கு வாழ முடியுமோ
நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கித் தருவார் யார்
வலங்கை ஆழி இடக்கை சங்கம் உடையானான எம்பெருமான் இங்கே வரும்படி கூவுதல் ஓன்று
என் கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஓன்று-இவை இரண்டினுள் ஒன்றை நீ செய்தாக வேணும் என்கிறாள்-
கை வளை தங்குவது எம்பெருமான் சம்ச்லேஷத்தால் மட்டுமே ஆகும்-அதுவும் அவன் வந்தால் அன்றி ஆகாதே
இரண்டு பஷமாக அருளிச் செய்வான் என் என்னில்
சத்யவான் உயிர் மீட்ச சாவித்திரி யமன் இடம்-பல பிள்ளைகள் பிறக்கும்படி அருள வேணும் என்றால் போலே
இதுவும் ஒரு சமத்காரமான உக்தி-ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக் கட்டும் இறே
நாராயணாதி நாமங்களை குறிப்பிடாதே சங்கோடு சக்கரத்தான் -என்கையாலே
அவனுடைய ஆபரணத்தை யாவது இங்கே கொண்டு சேர்
அல்லது
என்னுடைய ஆபரணத்தை யாவது கொண்டு கொடு -என்கிற ரசோக்தி
———
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-
ஆஸ்ரித விரோதிகளை தானே கை தொடானாய் போக்கு மவன்
இரணியனை -யுடலிடந்தான்-
விரோதியைப் போக்கவும் தன்னை அழிய மாறவும் வேணும் என்று சொல்லுகிறேன் அல்லேன்
தன் உடைமை தான் பெறுவாள் என்று நினைக்க அமையும்
தான் கொண்ட சரி வளைகள்
கழலுகிற வளையல்கள்
சரி என்னும் ஆபரணமும் வளையல்கள் என்னும் ஆபரணமும் என்னுமாம்
அவன் வந்தாலும் தொங்காது போலே காணும்
தருமாகில் சாற்றுமினே–
தாராது ஒழிகையே-ஸ்வ பாவம் என்று இருக்கிறாள்
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாராது ஒழியிலும் ஒழிவர் இ றே-ஆனாலும் நமக்கு நசை அறாது இ றே
சாற்றுமினே
அவன் தரிலும் தருகிறான்
தவிரிலும் தவிருகிறான்
நீங்கள் அறிவித்துப் போருங்கோள்-
————-
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-
பிரணயி இல்லாதான் ஒருவன் அல்லன்
ஒரு நத்தத்தில் பிறவாதான் ஒருவன் அல்லன்
ஒரூரிலே பிறந்து வளர்ந்தார் வந்தியிடார்கள் இறே -பிறர் துன்புரும்படி சண்டையிட மாட்டார்களே
திரு விளையாடு திண் தோள்
பெரிய பிராட்டியாருக்கு லீலார்த்தமாக சேண் குன்று சமைத்தால் போலே யாய்த்து திருத் தோள்கள் இருப்பது
திருமால் இரும் சோலை நம்பி-
ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு ஸூலபனானவன்
இனக் குறவர் புதியது உண்ணும் எழில் மாலிரும் சோலை எந்தாய் -பெரியாழ்வார் -5-3-3-
அதுக்கு உள்ளே உண்டு இறே சீலமும்
நம்பி –
சொல்லிச் சொல்லாத குணங்களால் பூரணன் ஆயத்து –
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –
தாம் இருந்த இடத்தில் நாங்கள் சென்றோம் ஆகில் எங்களை நலிய பிராப்தம்
நாங்கள் இருந்த இருப்பிலே தாமே வந்து எங்களுடைய உயிர் நிலை அறிந்து -வளையை அறிந்து
வந்தி பற்றும்
எங்கள் இசைவு இன்றிக்கே இருக்க -எங்கள் வளை கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
தாம் விரும்பின வளை என்று நாங்கள் இத்தைக் கொண்டு தரிப்போமானால் இத்தையும் கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
வழக்கு உள்ள இடத்தில் அன்றோ கைக் கூலி கொள்ளுவது -கைக்கூலி -கையில் வளையை -கையில் உள்ள பொருளை –
ஆன பின்பு எனக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு சொல்லி கோளே
இல் புகுந்து –வரி வளை வந்தி பற்றும் -வழக்குளது -என்று அந்வயம்
———-
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–11-1-
இவ் வவசாதத்தில் வந்து நீர் உதவாது ஒழிந்தது என் -என்று கேட்டால்
இன்னத்தாலே என்று தமக்கு மறுமாற்றமாக சொல்லலாவது ஓன்று உண்டு என்று நினைத்து இருக்கிறாரோ கேளி கோள்-
என் உகப்பில் குறை உண்டாயோ -வளை இழந்து அவன் வளையை ஆசைப்படுகை -என் உகப்பு –
தம் உகப்பில் குறை உண்டாயோ -தம் உகப்பு -என் வளையைக் கைக் கொள்ளுகை
தம்முடைய ரஷணத்தில் குறை உண்டாயோ -கோயிலிலே சேருகையே ரஷணம்-
என்னுடைய ரஷ்ய ரஷண பாவத்தில் குறை உண்டாயோ -முகத்தை நோக்காரால்-என்று இருக்கை-
எத்தாலே நான் உதவிற்றிலன் -என்று சொல்ல இருக்கிறார்
தம் கையில் குறை இல்லை
என் கையில் குறை இல்லை
இனி என் சொல்லுவதாக இருக்கிறார் –
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாம் நினைத்தது செய்து தலைக் கட்டும் இத்தனை யன்றோ -என்று சொல்ல நினைத்து
இருக்குமதுவும் வார்த்தை அல்ல –
பரம பிரணயி அன்றோ-
பர தந்த்ரராய் இருப்பார் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது நிர்பந்திக்கக் கடவர்களோ என்று நினைத்து
இருக்குமத்தும் வார்த்தை யல்ல
எனது ஆற்றாமையை அறிவாரே
நம் கையில் உள்ளது ஒன்றும் கொடோம் –பிறர் கையில் உள்ளது கொள்ளக் கடவோம் -என்று நினைத்து
இருக்குமதுவும் வார்த்தை யல்ல
வன்மையுடையார் செய்தபடி கண்டிருக்கும் அத்தனை அன்றோ மென்மையுடையார் என்று நினைத்து இருக்கக் கடவர் அல்லர்
உம்முடைய கையில் வளை நீர் கொடாது ஒழிகிறது என் என்று கேட்டால் -நான் உகந்து இருக்கையாலே -என்று சொல்ல
நினைத்து இருக்கிறாரோ -அது பின்னை பிறர்க்கு இல்லையோ
கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகை போலே காணும் இவள் தானும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு கிடக்கிறது –
நாமும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு -கிடப்பது இத்தை அன்றோ என்று சொல்ல இறே அவரும் நினைத்து இருப்பது
அது தமக்காகக் கண்டதோ —ந தே ரூபம் நா யுதா நி —பக்தாநாம் -என்று அன்றோ இருப்பது
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ-யாமுகக்கும் என் கையில் சங்கமும் -என்று சேர்த்து
தாம் உகந்தது நம் கையில் கிடக்கும் அத்தனை
பிறர் உகந்ததும் நம் கையில் கிடக்கும் இத்தனை
நாம் உகந்ததும் கொடோம் -பிறர் உகந்ததும் கொடோம் -என்று நினைத்து இருக்குமது அழகோ
உகந்தார் உகந்தது பெறுதல் -உடையார் உடையது பெறுதல் செய்ய வேண்டாவோ
உகந்தார் உகந்தது பெறும் போது-தன் கையில் உள்ளவை என் கையில் வர வேணும்
உடையார் உடையது பெறில் என் கையிலவை என் கையில் கிடக்க வேணும்
இரண்டும் சம்ச்லேஷத்தை ஒழியக் கூடாது இ றே
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்று ஒரு சங்கு பெற ஆசைப் பட்ட என்னை
தான் கொண்ட சரி வளைகள்-8-5-என்று ஒரு ஜாதியாக இழக்கும் படி பண்ணுவதே
ஈஸ்வர ஜாதி -என்ற ஒரு ஜாதி உண்டாகில் இ றே தம் கையில் வளையோடு சஜாதீயம் உண்டு என்று சொல்லலாவது –
தம் கையில் வளை ஆபரணமாகத் தோற்றுகையாலே-அவன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஆபரணமாக தோற்றுகிறது
அத்தனை அல்லது ஆயுதமாகத் தோற்றுகிறது இல்லை காணும் இவளுக்கு
நாரீணாம் உத்தமையாய் வளை இட்டால் போலே அவன் புருஷோமத்வத்துக்கும் வளை இட்டான் என்று இருக்கிறாள் யாய்த்து –
ஏந்திழையீர்
ஏந்தப் பட்ட இழையை உடையீர் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை உடையீர்
பிரளயத்திலும் தப்பிக் கிடப்பாரைப் போலே நீங்கள் எங்கே தப்பிக் கிடத்தி கோள்
மயூரச்ய வநே நூநம் ரஷசா ந ஹ்ருதா ப்ரியா -கிஷ்கிந்தா -1-40-என்று இருவராய் இருப்பாரை எல்லாம் பிரித்தான் என்று
இருந்தார் இ றே பெருமாள் -அப்படியே வளை கையில் தொங்கினார் ஒருவரும் இல்லை என்று இருந்தாள் போலே காணும்
நீங்கள் தப்பிக் கிடந்தபடி எங்கனே -என்கிறாள்
அவனோடு கலந்து பிரிந்த படியால் ப்ராதேசிகம் ஆகமாட்டாது என்று தோற்றி இருந்தது ஆய்த்து –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டு இருந்தார் பக்கலிலே கேட்கும் அத்தனை இ றே
குறையாளர் வழக்கு குறைவற்றார் பக்கலிலே இ றே கேட்பது
யுவாக்கள் வழக்கு சன்யாசிகள் பக்கலிலே அன்றே கேட்பது -யுவாக்கள் பக்கலிலே இறே கேட்பதுவும்
நீயும் சில நாள் வைத்துக் கொண்டு இரு -என்பார் பக்கல் அன்றே கேட்பது
ஆண்களோ பாதி இறே இவளுக்கு ஓடுகிற தசை அறியாமைக்கு இவர்களும் –
———
எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே–11-2-
எம்மானார் –
ஜிதந்தே -என்னுமா போலே ஸ்வா பாவிகமான சேஷித்வத்துக்குத் தோற்றுச் சொல்லும் வார்த்தை அல்ல
இப்படி அழகு குவியலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவர் –
என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே-
எழில் கொண்டார் என்று அவர்க்கு இத்தை எங்கனே நாம் குற்றமாகச் சொல்லும்படி
பிரணயித்வத்தில் ஏதேனும் தப்ப நின்றாராகில் அன்றோ நம்மால் அவர்க்கு குற்றம் சொல்லலாவது
ஏக கண்டரானவர்க்கு -நம்மோடு ஒத்த மனத்தராய் -நாம் என்ன குற்றம் சொல்லுவது
அவர் பிரிந்தாலும் கழலாத படி திண்ணிய வளை தேடி இட்டோம் ஆனோம் நாம்
அவர் இதினுடைய நாமத்தையே மெய்யாக்கினார்
விச்லேஷத்திலும் தொங்கும் வளையை தேடி இட்டோம் ஆனோம் நாம் -அவர் ஒரு ஷணமும் தொங்காத படி ஆக்கினார் -என்ற அழகு பாரீர்
இது அங்கும் ஏறப் பற்றது இல்லை
அவர் கையில் வளை கழன்றதாகில் இவள் கையில் வளை தொங்கும் இறே
அவர்க்கும் இச் செல்லாமை உண்டு என்று அறிந்தால் இவர் கையில் வளை கழலாதாயத்து –சலிக்கிற படி
நீ ஒருத்தியே இழந்ததாகச் சொல்லுகிறது என் -இங்கனே யன்றோ எல்லாரும் இருப்பது -என்ன
என்னை ஒழிய ஆரேனும் வளை இழந்தார் உண்டோ -என்கிறாள் –என்னுடைய கழல் வளையையே -என்ற ஏவகாரத்தால் –
——————
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
தம்முடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் -ஸ்வ சங்கல்பத்தினாலே நடத்துமது போராது என்று கோயிலிலே வந்து சாய்ந்தவர்
பெரிய பெருமாளோ பின்னை உபய விபூதியையும் ஆள்கிறார் -என்னில்
அல்ல –அவர் இட்டதோர் ஏவல் ஆள் -பெரிய பெருமாளும் அல்லர் காண் -செங்கோல் தானே ஆள்கின்றது –செங்கோல் -ஆஜ்ஞை
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே —
தமக்கு ஒரு குறை உண்டாய் -என் கையில் வளை ஒழியச் செல்லாமை குறைப்பட்டு அவ்விடர் தீருகைக்காக கொண்டாரோ-
எனக்கு கிலேசத்தை விளைக்கைக்காக செய்தார் அத்தனை அன்றோ
கழலாத படி திண்ணியதாக இட்ட வளையையும் கொண்டார் -கீழ்ப் பாட்டில் சொன்னபடியே –கோல் வளையையும் கொண்டார் -இங்கே
————
மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே—11-4-
பிச்சைக் குறையாகி –
மகா பலி பக்கல் பெற்றுக் குறை உண்டாய்
அது என் கையால் பெற வேணும் என்னும் இச்சையாலே
என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் –
அம் மண்ணோ பாதி இச்சையும் என் வளையில் உடையராகில் -என்றுமாம்
தாம் இரந்த மண்ணில் வீறும்-என் கையில் வளையில் வீறும் தாம் சொல்லக் கேட்டு இருக்கும் அத்தனை இறே நாம்
தாம் இரந்த பூமியாருக்கு ஆபரணமாக வற்று -இடப்பட்ட வளையின் மேல் –
ஸ்ரீ யபதியாய் கொடுத்து வளர்ந்த கையை உடையவராய் இருக்கிறவர் தாம் கழஞ்சு மண் பெறுகைக்கு தம்மை இரப்பாளராக்கி
அதில் பண்ணின விருப்பம் என் பக்கலிலே பண்ணி இருந்தாராகில்
என் கையில் வளையாலே குறை தீர வேணும் என்னும் இச்சை உண்டாகில்
என் கையில் வளையாலே குறை நிரப்ப வேணும் என்னும் இச்சை உண்டாகில்
இத்தெருவே போதாரே—
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு-4-5- -என்கிறபடியே எங்கள் தெருவில் எழுந்து அருளாதோ பின்னை –
அசுரனுடைய யஜ்ஞ வாடத்தில் நடந்த நடையை இத்தெருவில் நடந்தால் ஆகாதோ –
என் கண் வட்டத்தில் நடந்தால் ஆகாதோ
தன உடைமை அல்லாததைக் கொடுத்து ஔதார்யம் கொண்டு இருக்கிறவனைப் போலே இருப்பேனோ நான்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் -என்று இருக்குமவள் அன்றோ நான்-
கொண்டானை யல்லால் கொடுத்தானை யார் பழிப்பர்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை குறை சொல்லுவார் இல்லை
தனக்குக் கொடுத்தவனுக்கு அபகாரத்தைப் பண்ணுவதே -இவன் தன்னில் க்ருதக்னர் இல்லை -என்னா நிற்பார்கள்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை அன்றோ நெல்லிலே வைத்துத் தெரிக்க வேண்டுவது -என்கிறார் –
என்னது -என்று இருந்த வன்று -அவனுக்கு -என்று கொடுக்க பிராப்தம்
பிரமித்த அன்றாய்க் கொடுக்க பிராப்தி உள்ளது
உணர்த்தி உண்டானவாறே –அதவா கிந்நு சமர்ப்பயாமி தே-என்னா நின்றார்களே இ றே
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் அவனுடைய ஸ்வரூப குணங்களோ பாதி அங்கே தோற்றக் கடவதாய்த்து இது
அவனுடைய ப்ராப்யத்வத்தில் ஏக தேசமாய் அந்வயிக்கும் அத்தனை
ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக பற்றினால் அனுபவ சமயத்திலும் ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக வி றே அனுபவிப்பது
-யதோபாசனம் பலம் ஆகையாலே
—————
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3-
வளைகளும் இறை நில்லா-
ஆகாசத்தில் நிற்பது ஒரு வளை இல்லையே
சைதில்யம் உபாயாந்த சுரேஷூ யாச்யபி -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -பக்தியால் -விரஹ தாபத்தால் )
இன்னம் இவற்றில் அவனுக்கு வாசி உண்டு
அவன் பிரியேன் என்று பிரிவை உணர்த்தி யாகிலும் போம் இறே
இவையோ சடக்கெட போய்க் கொடு நின்றது
என் தன் ஏந்திழை இவளுக்கு-
என்னுடையவள்- தரிக்கப்பட்ட ஆபரணத்தை உடையவள் –
இவள் ஆபரணங்களால் அலங்க்ருதையாய்
இருக்கும் இருப்பைக் கண்டு கொண்டு இருக்குமதே தாரகமாக
காணுமவள் தான் நினைத்து இருப்பது –
இவள் ஆபரணம் பூண்டு இருக்கும் இருப்பை
கண்டு அனுபவிக்க எனக்கு இவளோட்டை பர்யவசிக்குமா போலே இருந்தது –
——————
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–3-6-6-
ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன்
என் கையில் வளை பெறா விடில் உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –
சம காலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ
இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும் உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும்
இவள் கையில் வளை சேஷிக்கில்
வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-
திருவாலி யிலே உத்தேச்ய வஸ்து சுலபமாயிற்று என்றவாறே கண்ணுறக்கம் குடி போயிற்று ஆயிற்று
என் கன வளையும் கடவேனோ!
என் உடம்பில் உள்ளது வேணுமாகில் கொள்ளுகிறாய்
நான் பொன்னிட்டு கொண்ட வளையில் என் பிராப்தி உண்டு
அவனும் பொன் கொடுத்து இறே கொண்டு போகுகிறது -வைவர்ண்யத்தைக் கொடுத்து –
இவனுக்கும் இவள் உடம்பில் உள்ளது கொள்ளும் போது
இவள் மேல் எழுத்து இட வேண்டாம் காணும்
(மேல் எழுந்தது வேண்டா காணும் -மேல் எழுந்த வளையை கொள்ளுவான் என்
சாமான்யமானது கூடாது ஸ்லாக்யமான வளையல் என்றுமாம் )
ஸ்வாபாவிக மானத்தோடு-(என் கண் துயில் கொண்டு) ஔபாதிக மானத்தோடு-(என் கன வளையும்) வாசி
இன்றிக்கே ஏதேனும் இத்தனையோ நீ கொள்ளுகைக்கு வேண்டுவது –
அவன் இத்தை விரும்பப் புக்கவாறே என்னது என்று ஒரு தலை தானும் பற்றுகிறாள்-
(ஆழ்வார் தன்னது என்னுமவை எல்லாம் இவனுக்கு உத்தேச்யம் -என்னுடைய பந்தும் தந்து போ போல்
மன் மநா பவா –மாம் நமஸ் குரு-அவன் என்னது என்னிடமே சொல்வது போல் )
இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே !–3-6-8-
தன் உடம்பில் துள்ளுகிற முயலைப் போக்கவும் மாட்டாதே
பருவம் நிரம்பாதே இருக்கிறவனுக்கு-இள மதிக்கு அன்றோ நான் – வளை இழந்தேற்கு
இது நடுவே இத்யாதி –
விபூதியை -நீ வைத்த ஆளான சந்திரனை -இட்டு நலிகை அன்றிக்கே நீரும் தூசி ஏறப் புக்கீரோ
போரிலே த்வந்த யுத்தம் பண்ணா நிற்கச் செய்தே-நடுவே வந்து பொருவாரைப் போலே-
விடு நகமும்-( கிட்டிக் கோல் ) சம்மட்டியும் இட்டு நலியா நிற்க அது போராது
என்று உடையவன் தானே நலியுமா போலே —
விபூதியை இட்டு நலிகை தவிர்ந்து நீ தானே கை தொடானாய் நலியப் பார்த்தாயோ –
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-
திரு மெய்ய மலையாளா ! அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –
நீ யாள வளையாள மாட்டோமே –
இருந்தபடியால் உன் பரிக்ரமாகையும்-கையில் வளை தொங்குகையும் என்று ஒரு பொருள் உண்டோ –
இப்போது தன் ஆற்றாமையாலே ஒன்றைச் சொல்லுகிறாள் அத்தனை போக்கி
ஒரு காலும் கையில் வளை தொங்குகைக்கு விரகு இல்லை காணும் –
கிட்டினால் தானே ஹர்ஷத்தால் பூரித்து நெரிந்து இற்று போம்
பிரிந்தான் ஆகில் தானே கழன்று போம் –
உன்னுடைய பரிக்கிரமாய் எங்களுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ
அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-
ஆக இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –
—————
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-
வெள்ளி வளைக்கை பற்றப்-
உக்தியிலே துவக்குண்டு சப்தையாய் நின்றாள்-அவ்வளவிலே வந்து கையைப் பிடித்தான் –
ந பிரமாணீ க்ருத பாணீர் பால்யே பாலேந பீடித்த -என்கிறபடியே
(அக்னி பிரவேசம் பண்ணும் சீதாபிராட்டி வார்த்தை )
பிடித்த பிடியிலே -அங் கண்ணன் உண்ட என்னுயிர்க் கோதிது-திருவாய்மொழி–என்னும்படியாயிற்று பிடித்தது
முன்பு நெடுங்காலம் தாய் பக்கல் பண்ணின வாசனை-முதலடியிலே வந்து அழியும்படி-கழியும்படி – யாயிற்று பற்றின பற்று
இடைச்சிகள் பொன்னையும் மாணிக்கத்தையும் அழிய மாறி -வெள்ளி வளை யாயிற்று இடுவது-
———
இங்கு வளையல்களை மட்டும் இழந்தவற்றை பத்தும் பத்துமாக அருளிச் செய்கிறார்
இழந்தேன் என் வரி வளையே —8-3-1-
இழந்தது என் கன வளையே —8-3-2-
என் செறி வளையே —8-3-3-
இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-
இழந்தேன் என் வரி வளையே—8-3-5-
இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-
இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-
இழந்தேன் என் செறி வளையே —8-3-8-
இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-
வரை யெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-
கோவர்த்தன கிரியை தோள் அசையும்படி எடுத்துக் கொண்டு நின்றான் ஆயிற்று –
மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய்
பெரிய மிடுக்கையும் உடைத்தாய்-மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக
மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன் –
(அரியன செய்தவன் என்னை அறியாமல் இருக்கிறானே )
மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளையே —8-3-2-
அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட அச் செயலுக்கு வளை இழந்தேன் –
மாடங்கள் அழகிலும் -படுக்கை வாய்ப்பாலும் -களிறு தரு புணர்ச்சி -உலக இயல்பு -வளை இழவாமை-
இங்கு தன்னையே நமக்கு ரஷித்து அளித்த செயல்
செங்கண் மால் யம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-3-
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன் –
சங்கு தங்கு முன் கை நங்கையாய் இருக்க வேண்டியவள் அன்றோ இழந்தேன் –
புணர் மருதம் இற நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-
இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர் விவரமாய் இருக்கிற மருதுகள்
முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன் –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே—8-3-5-
முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன் –
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-
தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ
என்று இருந்தாயிற்று வளை இழந்தது –
(ஈஸ்வரனாக தன்னை நினைத்தவனை நஸ்வரன் என்று காட்டிய அவதாரம் அன்றோ )
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-
பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த சர்வேஸ்வரனுக்கு
அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார் –
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-
சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை -விஸ்வசித்து முடிந்தேன் -என்கிறாள் –
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-
தூங்கு மெத்தை போலே அசையா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான் மடியிலே ஏறட்டுக் கொண்டு
ஆயிரம் வாயாலும் அனுபவத்துக்கு பாசுரமான ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணுகையால் வந்த பெருமையை உடையவனுக்கு
யசோதை பிராட்டி தன் மடியிலே வைத்துக் கொண்டு ஆடுமா போலே ஆயிற்று –
(அது எளிமையால் மேன்மை இது மேன்மையால் மேன்மை )
இழந்தேன் என் பெய் வளையே-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ –
நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள் –
—————————
பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;–4-4-2-
பெய் வளைக் கைகளைக் கூப்பி-
அவனைத் தொழுவித்துக் கொள்ளும் பரிகரம் உடையவள் தான் தொழா நின்றாள்-
அவளைத் தொழுவிக்கப் போலே காணும் கையில் வளை கொண்டது
அவன் சங்கு சக்கரம்-கடல் வண்ணன் என்றவாறே -கழன்ற வளைகளை ஒழிய -சரிந்த வளைகள் பூரித்தன-காணும் –
கையிலே பிரம்மாஸ்திரம் இருக்க இவள் படும் பாடு இது –
பரகால நாயகி திருக்கையில் மடல் போலே –
வீரக் கழல் உடன் பட்டு கிடப்பாரைப் போலே இவள் கிடக்கிற கிடை –
———-
வினை யுடையாட்டியேன் பெற்ற
செறிவளை முன் கைச் சிறுமான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?–4-4-3–
முன் கையிலே செறிந்த வளையை யுடையவள்;
இதுவன்றோ இருக்கத் தகும்படி!
முன்பு இருக்கும்படியாதல்,
பின்பும் அப்படியே இருக்கத் தகுமவள் என்னுதல்.
அன்றிக்கே, ‘இவள் வளைத்தழும்பு அவன் உடம்பில் காண்கை அன்றிக்கே,
இவள் உடம்பிலே அவன் உடம்பில் திருத்துழாய் காணுமத்தனையாவதே!’ என்பாள்,
‘செறிவளை முன்கை என்கிறாள்’ என்னுதல்.
——–
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறையிலமே–4-8-7-
நீல மணி போலே வளரா நின்றுள்ள ஒளியை யுடையவன்.
கை மேலே இலக்கை-(மாத ஜீவனமான பணமும், இலட்சியமும்) பெறாதார்க்கு-அன்றாடு – நாடோறும்
படி ( ஜீவனமான பணமும், இலட்சியமும். படி – ) விட வேண்டுமே அன்றோ?
படி விடாத போது அரை ஷணமும் நில்லார்களே அவர்கள்.
படி கண்டறிதியே’-முதல் திருவந். 85. என்றபடி இப்படிக் கண்டு ஜீவிக்குமது இறே
சதா பஸ்யந்தி ஸூரய எப்பொழுதும் பார்த்துக் கொண்டே யிருக்கிறார்கள்,’ என்கிறபடியே,
இப்படிக் கண்டு ஜீவிக்குமதே யன்றோ உள்ளது?
மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில்,
சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்த படியைச் சொல்லுகிறது.
அவ் வடிவை யுடையவன் தானே வந்து மேல் விழுந்து விரும்பி வாங்கி இட்டுக் கொள்ளாத
இவ் வளையால் எனக்கு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.
————
வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை-4-8-8-
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தாலே. வளை – சங்கு.முகத்திலே வரியை யுடைய –
குறை இல்லாப் பெரு முழக்கால் –
சகோஷா தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் – அந்த ஒலியானது திருதராஷ்டிரன்
புத்திரர்களுடைய நெஞ்சுகளைப் பிளந்தது,’ என்றும்,
ஜகத் சா பாதால வியத்தி கீஸ்வரம் ப்ரகம் பயாமாச – அந்தப் பாஞ்சஜன்யமானது, பாதாளம் ஆகாயம் திக்குகள்
திக்குப்பாலர்கள் ஆகிய இவற்றோடு கூடின உலகத்தை நடுங்கச் செய்தது,’ என்கிறபடியே,
பகைவர்கள் அளவு அல்லாத மஹா த்வனியால் -பெரிய ஒலியாலே.
ஹஸ்தேந ராமேண – கையினாலே ஸ்ரீராமனாலே’ என்னுமாறு போலே
வரிவளையால் பெருமுழக்கால்’ என்பது வேற்றுமை உருபு மயக்கம்.
——
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-
என்னுடைய பந்தும் கழலும்
கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்.
என்னுடைய பந்தும் கழலும் –
பாவியேன், நீ எங்கே செய்ய வேண்டியன வற்றை எங்கே செய்கிறாய்?
அவை நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண்; அவை எங்களுடைமை காண்’ என்றார்கள்.
அதுதான் மெய்யே’ என்றான். இவன் விருப்பத்துக்கு அது தானே யன்றோ வேண்டுவது;
யஸ்யை தே தஸ்ய தத் தனம் -அரசனே! மனைவி வேலைக்காரன் மகன் ஆகிய இவர்கள் ஒருவனுக்கு
அடிமைப்பட்டவர்களே; இவர்கள் எவருக்கு அடிமைப் பட்டவர்களோ அவருக்கு இவர்களுடைய பொருள்களும்
அடிமைப்பட்டனவாம்” என்கிறபடியே, மற்றையது அநந்தரத்தே -உடனே -வரும் அன்றோ.
அதாவது ஸ்வரூப ஞானமுடைய உன்னுடைய மமகார விஷயம் அடங்கலும்
என்ன தன்றோ என்று போகத் தொடங்கினான் –
இனி, இத் திருவாய் மொழியினுடைய ப்ரவேசத்திலே ‘முடியப் பார்க்கிறாள்’ என்று சொல்லிற்று ஒன்று உண்டு.
அது, இப் பதத்திலே தோற்றுகிறது.
அவன் சந்நிதியிலே ‘என்னது’ என்று சொல்லுகைக்கு மேற்பட்டது ஒரு முடிவு இல்லை அன்றோ.
த்வ்யக்ஷரஸ்து பவேத் ம்ருத்யு: த்ர்யக்ஷரம் ப்ரஹ்மண: பதம்
மமேதி த்வ்யக்ஷர: ம்ருத்யு: நமமேதி ச சாஸ்வதம்”- பாஞ்சராத்திரம்
யானென தென்னும் செருக் கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். -திருக்குறள்.
மம என்ற இரண்டு எழுத்துக்கள் நாசத்துக்குக் காரணமாகின்றன”“ என்பது அன்றோ சாஸ்திரம்.
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யயுத்ஸவ: மா மகா: பாண்டவாஸ்
சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய” , ஸ்ரீ கீதை. 1 : 1.
என்னுடைய புத்திரர்களான துரியோதனன் முதலியோர்களும், பாண்டவர்களும்” என்கிற விடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி:
என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான், அது வன்றோ விநாச பர்யந்தம் ஆகி விட்டது” என்று.
இது தான் தத்தவ கதையே -உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று,
பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கை யன்றோ உறவு அறுகையாவது.
என்னுடைய பந்தும் கழலும்-
ஆத்மே த்யேவது க்ருஹணீயாத் – தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே,
ஒன்றை ஒன்று உபாசியா நிற்கச் செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ
இரண்டு வஸ்துக்களுக்கும் -ப்ரத்யாசத்தி -தொடர்பு- இருக்கிறபடி.
ஸ்வரூபம் விசதமானால் -தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.
தந்துபோகு நம்பி-
நீ இங்கே கால் தாழாநின்றாய்;
இதற்கு ஒரு தாத்பர்யம் -கருத்து அறியாதே உன்னை உபேக்ஷிக்கத் தொடங்குவர்கள்; அதற்கு முன்னே போ.
நம்பீ
முகப் பழக்கமும் இன்றிக்கே இருந்தது; முதலியாருமாய் இரா நின்றீர்;
கடுகப் போகப் பாரும் என்பாள் ‘நம்பீ ’ என்கிறாள்.
கண்ட காட்சி புல்லெழுந்து போனபடி யன்றோ இவள் இங்ஙன் சொல்லுகிறது” என்று பெரிய முதலியார் பணிப்பர்.
என்னுடைய பந்தும் கழலும்’ என்ற இடம், அவன் பொகடுகைக்குச் சொன்ன வார்த்தை.
தந்து போகு’ என்றதனால், அவன் விரும்பினவை ஒழியத் தனக்குச் செல்லாது என்னுமிடம் தோற்றுகிறது.
நம்பி –
ஷோடச ஸ்திரீ ஸஹஸ்ராணி சதமேகம் ததோதிகம்
தாவந்தி சக்ரே ரூபாணி பகவாந் தேவகீ ஸுத:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 31 : 17.
பதினாறாயிரம் பெண்களையும் அதற்கு மேலே ஒரு நூறு பெண்களையும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் விவாகம் செய்து கொண்டார்”
என்கிறபடியே, உமக்குப் போனவிடம் எங்கும் கொண்டாட்டத்தால் குறை இல்லை;
எங்களுக்கு உம்மை ஒழிய வேறு கதி இல்லை;
இனி, உம்முடைய திருக் கரங்களின் ஸ்பர்சம் -சம்பந்தமுண்டாய்ப் பொகட்டவை கொண்டாகிலும்
எங்களுக்கு ஜீவித்துக் கிடக்க வேணும்;
ஆன பின்னர், அவற்றை எங்களுக்குத் தந்து போம்.
அன்றிக்கே
உயிரை வைத்துப் போம்” என்பாரைப் போலே ‘தந்து போகு’ என்கிறாள் என்னுதல். என்றது,
இவன் இவற்றைக் கைவிட்டுப் போக மாட்டான் என்று அறிந்து-
மர்மஞ்ஜை -அவன் மனக் கருத்தை அறிந்தவர்கள் -ஆகையாலே ‘தந்து போகு’ என்கிறார்கள்
——–
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-
தர்ச நீயமாய் -காட்சிக்கு இனியவாய் வாத்சல்யத்தாலே சிவந்து,
விகாசாதிகள் -மலர்ச்சி முதலானவைகளை யுடையவான திருக் கண்களை யுடையவனுக்கு.
தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” என்று திருக் கண்களாலே யாயிற்று அகப்படுத்திக்கொண்டது.
விசேஷணம் தோறும் அவனுக்கு என்று தனித் தனியே அகப்பட்ட துறைகளைச் சொல்லுகிறாள்.
மாலுக்கு’ என்று தொடங்கி, தன் மகள் மேல் பட்ட அம்புகளை எண்ணுகிறாள்;
இது ஒரு குத்து, இது ஒரு வெட்டு, இது ஒரு அம்பு என்று.
என் கொங்கு அலர் ஏலம் குழலி –
மதுஸ்யந்தியாய் தேன் பெருக்கு எடுக்கின்ற பூக்களை யுடைத்தாய்,
நறு நாற்றத்தை யுடைத்தான குழலை யுடைய என் பெண் பிள்ளை.
கொங்கு – தேன், அலர் – பூ, ஏலம் – நறுநாற்றம்.
இவள் மயிர் முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழி நீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்!
பங்களப் படை கொண்டு, தனி வீரம் செய்வாரை அழிக்குமாறு போலே-
இழந்தது சங்கே –
இவள் மயிர் முடி கண்டு அவன் இழக்கக் கடவதனை இவள் இழந்தாள்.
சங்கு -வளை
————
நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-
நங்கள் வரிவளை –
முன்பு உங்களோடு என்னோடு வாசியற எல்லார்க்கும் உண்டான வளை-என்னுதல் –
அன்றிக்கே
த்வம் வ்யச்ய அஸி மே ருத்ய ஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ
சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரக்ருஷ்டவத் -கிஷ்கிந்தா 5-18-
இன்ப துன்பங்கள் நம் இருவருக்கும் ஒன்றே -என்கிறபடியே
இன்ப துன்பங்கள் ஒன்றாக சொல்லிப் போந்த நீங்கள் அனுஷ்டானத்தில் வந்தவாறே
பேதிப்பதே -வேறுபடுவதே -என்கிறாள் -என்னுதல்
இப்போது அனுஷ்டானத்தில் -செய்கையில் வேற்றுமை என் என்ன –
கை மேலே கண்டிலேமோ -நான் சங்கை அற்று இருக்கிறேன்
நீங்கள் சங்கை உடையீர் கோளாய் இருக்கின்றீர் கோள் அல்லீரோ –
வரி வளை
வரியை உடைய வளை -என்னுதல் -தர்ச நீயமான -அழகிய வளை -என்னுதல் –
இவளைத் தரிப்பிக்கைக்காக அவர்களும் வருந்தி தரித்து இருப்பார்கள் அன்றோ –
பிராட்டியை பிரிந்த இடத்தில் பெருமாளைக் காட்டிலும்
தம்முடைய காவல் சோர்வாலே வந்தது என்று தளர்த்தி இரட்டித்து இருக்கச் செய்தேயும்
பெருமாள் தளருவர் என்று தம்முடைய தளர்த்தி தோற்றாதபடி இளைய பெருமாள் தரித்து இருந்தாப் போலே
இவர்களும் தரித்து இருப்பார்கள் வளையை –
சங்கம் சரிந்தன –
நான் இத்தை யாருக்கு மறைத்து யாருக்கு வெளி இடுவது
ஜகத் அஸ்தமிதம் -உலகமே அழிந்தது என்றது போலே காணும் இருக்கிறது –
இவளைக் கிடையாத போதை நாயகன் இலன்-
நாயகன் இல்லாத போது உபய விபூதியும் இல்லை -என்றது
இவள் கையும் வளையுமாக இராத அன்று நாயகன் உளனாக மாட்டான் –
இருவருமான சேர்த்தியில் உண்டாகக் கூடிய உபய விபூதியும் அழியும் என்றபடி –
——
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-
காணப் பெற்றால்
ஈண்டிய சங்கும் –திரண்ட வளையையும்
ஒரு வலம்புரி கிடந்த இடத்தே ஆயிரம் சங்குகள் சேரும்
வலம் புரி ஆழியன் வேங்கட வேதியன் -அன்றோ –
நிறைவும் –அடக்கத்தையும்
கொள்வான் -கொள்கைக்காக
தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கிறான் –
இவளுக்கு கை முதல் அங்கே அன்றோ
இது வாகில் உன் துணிவு காலம் சென்றவாறே நீயே இளைத்து மீளுகிறாய் -என்ன
எத்தனை காலம் இளைக்கின்றேனே
இது சொல்லி பகட்டக் கேட்பேனோ-இந்த ஆசையோடு எத்தனை காலம் உண்டு இளைத்துப் போருகிறது-
——
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-
நீலமான நிறத்தை யுடையதாய்
மலர்-விஸ்த்ருதமாய்
நெடு-அபரிச்சேத்யமாய்
சோதி இத்யாதி-தேஜஸ்ஸாலே சூழப் பட்டு -அபரிச்சேதயமாய் இருப்பதொரு காளமேகத்தின் நிறம் போலே
இருக்கிற நிறத்தினை யுடையனாய்
அவ்வடிவை பரார்த்தமாக்கி வைக்கும் அவன் அபஹரித்த தர்ச நீயமான வளையோடே கூட
அவன் வாய் புலற்றும் நிறத்தையும் மீட்டுக் கொள்ளுகைக்காக
காலம் எல்லாம் கூடச் சென்றும் ஞாலம் அறியப் பழி சுமந்தேன்
நன்னுதலீர் இனி நாணித் தான் என்
எத்தனை காலம் கூடச் சென்று-நெடும் காலம் சம்ஸ்லேஷார்த்தமாகக் கூடச் சென்று என்னுதல்
—–
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன்பு பரிசு இழந்தேன்–8-2-4-
இனி என் கொடுக்கேன் –-பண்டே எல்லாம் இழந்த பின்பு இனி எதனை இழப்பது –
கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து –
தர்ச நீயமான -அழகிய வளை –நெஞ்சு -தொடக்கமானவற்றை எல்லாம் என் பாடு அற்று
வாசனையோடு போம்படியாக இழந்து
எல்லாம்-அவன் விபூதியைப் போலே யாகும் இவள் பரிகரத்தின் பரப்பும்
ஆதலின் எல்லாம் என்கிறது
வைகல் பல் வளையார் முன் பரிசு இழந்தேன் –
கழற்றிப் பூணும் ஆபரணமும் இழவாதவர்கள் முன்பே கழற்ற வேண்டாத ஆபரணமான பரிசு உண்டு –
பிரகாரம் -நாணம் -அதனையும் இழந்தேன்
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்–8-2-8-
நம்முடையவான நிறமும் வளையும் நெஞ்சும் ஆகிய
பாஹ்யங்களோடு -புறப் பொருள்களோடு ஆந்தரங்களோடு -உட் பொருள்களோடு வாசி அற
நம் பக்கல் ஒன்றும் எஞ்சாதவாறு கைக் கொண்டான்
அடையும் வைகுந்தமும்-சேரும் பரமபதமும்
இத் தலையில் உள்ள எல்லாமும் நேராகக் கொண்டு
எட்ட ஒண்ணாத நிலத்தில் போய் பாரித்து வெற்றி கொண்டாடி இருந்தான் -என்கை
—————–
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-
என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில்
என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர் கேடு அடைந்தபடியைச் சொல்லும் கோள்
அன்றிக்கே
செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல்
அறிவிக்கும் அதுவே குறை–அவன் வரவு தப்பாது –
சுடர் வளையும் கலையும் கொண்டு அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் –9-7-7-
இத்தலையில் தனக்கு பிரயோஜனமான அம்சத்தை -பாகத்தை கொண்டு
என்னைப் பொகட்டுப் போனான் -என்றது
தனக்கு தாரகமானவற்றைக் கொண்டு அல்லாதவற்றை பொகட்டுப் போனான் -என்றபடி –
சங்கம் சரிந்தன -என்ற திருப் பாசுரத்தில் கூறிய படியே
எல்லாப் பொருள்களும் உருக் குலைந்து கிடக்க –
சுடர் வளையும் கலையும் -என்று விசேஷித்து கூறியது என் என்ன –
கைக்கு அடங்கியதையும் கொண்டு மடிச் சரக்கையும் கொண்டு போனான் என்றது
முக்கிய பொருள்களை மாத்ரம் கொண்டு போனான் என்றபடி –
———
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ-10-3-7-
விரஹ கார்ஸ்யத்தாலே -பிரிவினால் உண்டாகிய மெலிவால் வெள் வளைகளும் மேகலைகளும் கழன்று விழும்படியாகவும்
வெள் வளை –சங்கு வளை- பிறர் அறியாதபடி பல் காலும் எடுத்து இடுவது பேணுவது ஆனாலும்
அவை நிராஸ்ரயமாக- பற்றுக் கொடு இன்றி நில்லாவே ஆகாசத்தில் தொங்காவே –
அப்படி காணும் உடம்பு இளைத்தபடி –
——-
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே–திரு விருத்தம்–13-
துக்கம் வளரா நின்றுள்ள காதலை உடைத்தான துழையை துழாவி வருகிற குளிர்ந்த வாடையை
இரு முறியாக வெட்டி இனி வளையை காப்பவர் ஆர் ?தண் வாடை அமூர்தம் மூர்த்தம் ஆகிற படி பாதகத்வத்தில் உறைப்பு
இனி வளை காப்பவர் ஆர் ? -வந்து கிட்டுவது காணும் என்று இருக்கிறாள்
எனை வூழிகள் ஈர்வனவே –அநேகமான கல்பங்கள் ஈரா நின்றன ..
ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-
——
இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–
கொயல்வாய் மலர் மேல்-வட்டமாய் செவ்வியை உடைத்தான மாலையிலே மனம் ஆயிற்று-
எம் கோல் வளைக்கே -என்னால் முடிய புகுகிறது என்று அறிகிலேன்
மலர் மேல் மனத்தொடு -அந்த கரணம் பிரவணம் ஆன படி-
——–
எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-
என்னுடைய வளை நிமித்தமாக-
கண்ணன் இத்யாதி–சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும்
ரஷியா நின்ற வாஞ்சையை பக்னம் ஆக்கா நின்றது
நம் கோன் உகக்கும் துழாய் –சம்சாரத்தின் அபலையான இவளை பெற்றால்
என் செய்யாது–சர்வேஸ்வரன் தானே உபய விபூதியையும் ரஷிக்க கடவ ஆக்ஜையை
பக்னம் ஆக்கா நின்றான்-என் உடையவளை நிமித்தமாக
இவனை அழிக்க தொடங்கினால் வேறு ரஷிப்பார் யார் என்றுமாம்
———
கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது–47-
இத்தால் ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும் இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள்
ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்-
இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –
——-
சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –
வளை விற்கும் செட்டிகள் பக்கலிலே விலைக்கு கொண்ட சங்கங்களை வாங்கிக் கொள்ள பாரா நின்றது –
நாங்கள் தன்பாடே சென்றோமோ-தன்னை நெருக்கி கொண்டோமோ
வேரித் துழாய் துணையா –
நறு நாற்றத்தை உடைய திருத் துழா யை தனக்கு கூட்டுப் படையாக கொண்டு –
அங்கு நின்று மிலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –
சக்கரவர்த்தி திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –
———
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன் வளைத் திறமே – -69 – –
உன் வளை இடையாட்டமாக நீ வருந்த வேண்டா -வேணுமாகில் அவன் கையில் வளை இடையாட்டமாக
வருந்தில் வருந்து -அப்பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்றது நங்கையிலே அகப்பட்டு இருப்பதொன்று –
அதற்கு மங்களாசாசனம் பண்ணு –
இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் -அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும்
தரிப்பித்த படியை சொல்லிற்று கீழ் –
இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹ்ராக பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது –
அவனாகில் ரஷகனாய் -இத்தலையாகில் ரஷ்யகமாய் இருக்கும் இறே –
வருந்தேன் உன் வளைத் திறமே -மாசு ச -என்கிறாள் -அஹம் த்வா -என்று இருவருடையவும் சொல்லி வைத்து இறே -மாஸூச -என்றது –
இருளாகிற காரேறு செகிலேற்றின் சுடருக்கு உளைந்து செல்வான் போரேற்று எதிர்ந்தது -பிரத்யஷ்யமான சந்த்யையை-
ருஷபங்கள் என்று சொல்லுகிறது என் என்ன -புன் தலை மாலை ஆகையாலே –
புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –
வாரேற்றின இள முலையாய்-உன் வளைத் திறம் வருந்தேல் -என்று அந்வயம்
———
இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே–76-
நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ –
வெள் வளைக்கே -தம்தாமுக்கு பிராப்தியாய் உள்ள இடங்களிலே நலிகை முறை இறே –
தானும் வெண் திங்களாய் -இதுவும் வெள் வளை யாகையாலே -நிறத்திலே சாம்யம் கொண்டு -நலியலாம் இறே –
வியன் தாமரை இத்யாதி -வாசி அறியாதார் என் செய்யார்கள் -விஸ்மயநீயமான தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கவும் –
ஷூத்ரமுமாய் புல்லிதமுமான ஆம்பல் அலரும்படியாகவும்
பண்ணுமதான வெண் திங்கள் -நங்கள் வெள் வளைக்கே விடம் போலே விரிதவிது வியப்பே –
ஸ்வா பதேசம்
இத்தால் -திரு உலகு அளந்து அருளின போது -சாத்தின அச் செவ்வி மாலையை இப்போது
பெற வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே அனுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமாய் இருக்கிறபடியை சொல்லுகிறது –
முதலியாராக -ஸ்வாமி ஆகைக்காக-
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply