Archive for the ‘Narasimhar’ Category

ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதச நாம ஸ்தோத்ரம்–ருண விமோசன ஸ்தோத்ரம்

December 23, 2022
ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதச நாம ஸ்தோத்ரம்
ப்ரதமஸ்து  மஹோஜ்வாலோ
த்விதீயஸ் தூக்ரகேஸரீ
த்ருதீய : க்ருஷ்ண பிங்காக்ஷ :
சதுர்த்தஸ்து  விதாரண :
பஞ்சாஸ்ய :  பஞ்சமைஸ் சைவ
ஷஷ்ட : கஸிபுமர்தந  :
ஸப்தமோ  தைத்யஹந்தாச
அஷ்டமோ தீநவல்லப :
நவம : ப்ரஹ்லாதவரதோ
தசமோ நந்தஹஸ்தக :
ஏகாதச மஹாரௌத்ரோ
த்வாதஸ : கருணாநிதி :
த்வாதஸைதாநி  நாமாநி
ந்ருஸிம்ஹஸ்ய  மஹாத்மந :

ருண விமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

த்⁴யானம்

வாகீ³ஸா யஸ்ய வத³னே லக்ஷ்மீர்யஸ்ய ச வக்ஷஸி |
யஸ்யாஸ்தே ஹ்ருத³யே ஸம்வித் தம் ந்ருஸிம்ஹமஹம் ப⁴ஜே ||

ஸ்தோத்ரம்

தே³வதா கார்யஸித்³த்⁴யர்த²ம் ஸபா⁴ஸ்தம்ப⁴ ஸமுத்³ப⁴வம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 1 ||

லக்ஷ்ம்யாலிங்கி³த வாமாங்க³ம் ப⁴க்தானாம் வரதா³யகம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 2 ||

ஆந்த்ரமாலாத⁴ரம் ஶங்க²சக்ராப்³ஜாயுத⁴ தா⁴ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 3 ||

ஸ்மரணாத் ஸர்வபாபக்⁴னம் கத்³ரூஜவிஷநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 4 ||

ஸிம்ஹநாதே³ன மஹதா தி³க்³த³ந்தி* ப⁴யநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 5 ||

ப்ரஹ்லாத³வரத³ம் ஶ்ரீஶம் தை³த்யேஶ்வரவிதா³ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 6 ||

க்ரூரக்³ரஹை꞉ பீடி³தானாம் ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 7 ||

வேத³வேதா³ந்தயஜ்ஞேஶம் ப்³ரஹ்மருத்³ராதி³வந்தி³தம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 8 ||

ய இத³ம் பட²தே நித்யம் ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம் |
அந்ருணே ஜாயதே ஸத்யோ த⁴னம் ஶீக்⁴ரமவாப்னுயாத் || 9 ||

இதி ருண விமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

———–

தே³வதா கார்யஸித்³த்⁴யர்த²ம் ஸபா⁴ஸ்தம்ப⁴ ஸமுத்³ப⁴வம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 1 ||

தே³வதா கார்யஸித்³த்⁴யர்த²ம் -ப்ரயோஜனாந்தர பரர்களுக்காக
ஸபா⁴ஸ்தம்ப⁴ ஸமுத்³ப⁴வம் |-தூணில் இருந்து அரண்மனையில் சம்பவித்தது அருளின
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருணம் உக்தயே–அடியேனுடைய ருணம் -கடன் -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

லக்ஷ்ம்யாலிங்கி³த வாமாங்க³ம் ப⁴க்தானாம் வரதா³யகம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 2 ||

லக்ஷ்ம்யாலிங்கி³த வாமாங்க³ம் -பிராட்டியார் இடது பக்கம் ஆலிங்கனம் செய்து அருளுகிறார்
ப⁴க்தானாம் வரதா³யகம் |–ஆஸ்ரியர்களுடைய அபேக்ஷித்ங்களை நிறைவேற்றி அருளுகிறீர்
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே -அடியேனுடைய ருணம் -கடன் -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

——–

ஆந்த்ரமாலாத⁴ரம் ஶங்க²சக்ராப்³ஜாயுத⁴ தா⁴ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 3 ||

ஆந்த்ரமாலாத⁴ரம் -ஹிரண்யணாதிகள் மார்பகங்களையே மாலையாகத் தரித்தவனே
ஶங்க²சக்ராப்³ஜாயுத⁴ தா⁴ரிணம் –திருக்கரங்களில் சங்கு சக்கரம் தாமரை மற்றைய திவ்ய ஆயுதங்களைத் தரித்தவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே-பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

———–

ஸ்மரணாத் ஸர்வபாபக்⁴னம் கத்³ரூஜவிஷநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 4 ||

ஸ்மரணாத் ஸர்வபாபக்⁴னம் -ஸங்கல்ப லேச மாத்ரத்திலே ஸமஸ்த பாபங்களையும் போக்கி அருளுபவனே
கத்³ரூஜவிஷநாஶனம் -ஸமஸ்த நாக விஷங்களுக்கும் விஷமானவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்–மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே –பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

————————–

ஸிம்ஹநாதே³ன மஹதா தி³க்³த³ந்தி* ப⁴யநாஶனம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 5 ||

ஸிம்ஹநாதே³ன -உமது ஸிம்ஹ கர்ஜனை நாதத்தாலேயே
மஹதா தி³க்³த³ந்தி* ப⁴யநாஶனம் –திக் கஜங்களின் பயங்களைப் போக்கி அருளுபவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்–மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

———

ப்ரஹ்லாத³வரத³ம் ஶ்ரீஶம் தை³த்யேஶ்வரவிதா³ரிணம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 6 ||

ப்ரஹ்லாத³வரத³ம் -ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு அன்பனாகவே
ஶ்ரீஶம் -மாலோல நரஸிம்ஹ மூர்த்தியே
தை³த்யேஶ்வரவிதா³ரிணம் -அஸூர நிரசன சீலனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே -பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

————–

க்ரூரக்³ரஹை꞉ பீடி³தானாம் ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 7 ||

க்ரூரக்³ரஹை꞉ பீடி³தானாம் -க்ரூர நவக்ரஹங்களின் பிபியில் இருந்து
ப⁴க்தாநாமப⁴யப்ரத³ம் -பக்தர்களை ரக்ஷித்து அபய பிரதம் அளிப்பவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்–மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே –பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

———–

வேத³வேதா³ந்தயஜ்ஞேஶம் ப்³ரஹ்மருத்³ராதி³வந்தி³தம் |
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே || 8 ||

வேத³வேதா³ந்தயஜ்ஞேஶம் -வேத வேதாந்த யாகங்கள் அனைத்துக்கும் பிரபுவே
ப்³ரஹ்மருத்³ராதி³வந்தி³தம்-ப்ரஹ்ம ருத்ராதிகளால் ஆஸ்ரயிக்கப்படுபவனே
ஶ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்-மஹா வீரரான ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாளே
நமாமி ருண முக்தயே –பிரதிபந்தகங்களைப் போக்கி அருள உம்மை ஆஸ்ரயிக்கிறேன்

————-

ய இத³ம் பட²தே நித்யம் ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம் |
அந்ருணே ஜாயதே ஸத்யோ த⁴னம் ஶீக்⁴ரமவாப்னுயாத் || 9 ||

ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம் -பிரதிபந்தங்கள் அனைத்தும் போகப் பெற
ய இத³ம் பட²தே நித்யம் -இந்த ஸ்தோத்ரத்தை நித்யம் செய்பவர்களுக்கு
அந்ருணே ஜாயதே -அவை அனைத்தும் போகப் பெற்று
ஸத்யோ த⁴னம் ஶீக்⁴ரமவாப்னுயாத்-ஸத்ய செல்வம் ஸீக்ரமாகப் பெற்று ஜீவனமும் உஜ்ஜீவனமும் பெறுவார்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்–

November 24, 2022

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலை நிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி “ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்” ஆகும்.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் ‘கரம்’ என்றால் ‘கை’ என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). ‘அவலம்ப’ என்றால் ‘ஆதாரம்’ அல்லது ‘தாங்குதல்’ என்று பொருள். ‘கராவலம்பம்’ என்றால் ‘நம்மைக் கை கொடுத்துத் தாங்குதல்’ அல்லது ‘நமக்குக் கை கொடுத்து உதவுதல்’ என்று பொருள் கொள்ளலாம்.

இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக் கூறி, பகவான் ‘ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை’ இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கை கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதி சங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இரு வேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடு விட்டுக் கூடு பாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் ‘சுரேஷ்வராச்சார்யார்’ என்று பெயர் பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார்.

ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்த வேண்டும் என்று மனு ஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூண வேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்க வொண்ணாத உபயபாரதி, ‘கணவனும் மனைவியும் இணை பிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்ல வேண்டும்’ என்று ஆதி சங்கரரிடம் கூறினாள்.

இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்).

இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆதிசங்கரர், தான் இல் வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால் வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம் கொண்டாள்.

தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதி சங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படை வீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர்.

அதன்படி, வீரர்களும் ஆதிச ங்கரரின் உடலுக்குத் தீ வைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்து விட்டது. தமக்கு ‘கரங்கள்’ (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த ‘கராவலம்ப ஸ்தோத்திரம்’ என்பது முதல் வரலாறு.

இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப் பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபய பாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நர பலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நர பலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை).

அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார்.

தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதி சங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்ம பாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார்.

அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதி

————–
ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ர பாணே 
போகீந்த்ர போக மணி ரஞ்சித புண்ய மூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத 
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || (1)
ஸ்ரீமத் – செல்வம் நிறைந்த, பயோநிதி – பாற்கடலில், நிகேதன –இருக்கின்ற, சக்ரபாணே – (சுதர்சனம் என்னும்) சக்கரத்தை கையில் ஏந்தியவரே, போகீந்த்ர – அரவங்களின் அரசன், போக மணி – (அரவங்களின் தலையில் இருக்கும்) நாக மணி, ரஞ்சித – ஒளியினால் ஒளியூட்டப்பட்ட, புண்ய மூர்த்தே – நற்கருமமே வடிவானவரே, யோகீச – யோகங்களுக்குத் (யோகிகளுக்கு) தலைவரே, சாஸ்வத – என்றென்றும் நிலைநின்று இருப்பவரே, பவாப்தி – பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங் கடலை, போத – கடக்க உதவும் தோணி போன்றவரே, லக்ஷ்மி நரசிம்ம – திருமாமகள் துணைவரே நரசிம்மரே, மம – எனக்கு, தேஹி –அருளுங்கள், கராவலம்பம் – கைக் கொடுத்து.
செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையை தாங்கி யுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேடன் தலையிலிருக்கும் நாக மணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே  வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலை நின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக் கொடுத்து அருளுங்கள்!!!
இங்குள்ள (இந்த சம்சாரத்தில் உள்ள) செல்வங்கள் நிலையற்றவை; அங்குள்ள செல்வங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெறும் தூசுக்கு நிகரானவை. எனவே, செல்வம் சேர் பாற்கடலில் இருப்பவரே என்று அழைக்கிறார்.
பகவான் சக்கரம் (சுதர்சனம்), சங்கு (பாஞ்சசன்யம்), கதை (கௌமோதகம்), வாள் (நந்தகம்) மற்றும் வில் (சார்ங்கம்) ஆகிய ஐந்து ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். அவர் நமது எதிரிகளை விரைந்து வந்து ஒட்டிவிடுவார் என்பதால் சக்கரம் ஏந்தியவரே என்று அழைக்கிறார் (இங்கு சக்கரம் மற்ற நான்கு ஆயுதங்களுக்கும் பிரதிநிதியாகும். சக்கரம் என்று சொல்லும் பொழுது ஐந்து ஆயுதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்).
நாம் அறியாமை என்னும் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். அவரோ, அரவின் மணியில் ஒளி வீசுகிறார். நமது அறியாமை இருளை அகற்றும் ஒளியாகவும் உள்ளார்.
நாம் நல்ல, மற்றும் தீய கருமங்களினால் தீண்டப்பட்டிருக்கிறோம். இவற்றின் வாயிலாகத் தான் நமக்கு இந்த பிறவியே ஏற்படுகிறது. அவரோ, நற்கருமமே வடிவானவர். நமது கர்ம பலன்களை அடியோடு அறுத்து நம்மைக் காப்பார்.
கர்ம, ஞான, பக்தி மற்றும் சரணாகதி ஆகிய வழிமுறைகளைக்  (யோகங்களைக்) கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவரை அடைய முடியும். ஏனெனில், அவர் அனைத்து யோகங்களுக்கும், அதை முறையாகக் கடைப்பிடிக்கும் யோகிகளுக்கும் (அவர்களை) ஆணை யிட்டு வழி நடத்தும் தலைவராக உள்ளார்.
இத்தகைய நற்குணங்கள் நிறைந்த நரசிம்மப் பெருமான், என்றோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் தானே அவதரித்தார். அவர் எவ்வாறு இன்று நம்மைக் காப்பார்? என்ற ஐயம் எழுந்து விடாமல் இருக்க, ‘என்றென்றும் நிலை நின்று இருப்பவர்’ என்று குறிப்பிடுகிறார்.
தொடக்கமே காண முடியாத அனாதி காலமாய் சேர்த்து வைத்திருக்கும் கர்மங்களின் படி நாம் மீண்டும் மீண்டும் இந்த பிறவிப்பெருங்கடலில் பிறக்கிறோம் (இறக்கிறோம்). இந்த தொடர்ச்சியிலிருந்து பகவான் ஒரு தோணியாய் வந்து நம்மைக் கரையேற்றுகிறார்.
அத்தகைய பெருமானை நாம் நேரடியாக சென்று வேண்டுவதை விட, கருணையே வடிவான திருமகளை முன்னிட்டு வேண்டினால், வேண்டுவது கிடைப்பது திண்ணம். பெருமான் கருணையற்றவர் அல்லர். எனினும், கணக்கற்ற பிறவிகள் தோறும் நாம் அவர் கூறியதை கேட்காமல் கர்ம வினைகளால் உந்தப்பட்டு பல பாவங்களை சேர்த்திருக்கிறோம். எவ்வாறு தவறிழைத்த ஒரு குழந்தை தன் தாயை முன்னிட்டுக் கொண்டு தந்தையிடம் மன்னிப்பு கேட்குமோ, அவ்வாறே நாமும் திருமகளை முன்னிட்டுக் கொண்டு இறைவனை அடிபணிவதே சிறந்தது. எனவே, நரசிம்மரை மட்டும் வேண்டாது, திருமகளையும் சேர்த்து ‘லக்ஷ்மி நரசிம்மரின்‘ அடி பணிகிறார்  ஆதி சங்கரர்.
இந்த முதல் துதியிலேயே, ஆதிசங்கரர்  தான் வேண்டுவது தனது உடலில் உள்ள கையை அல்ல; மாறாக, இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுதலையையே என்பதை தெளிவாகக் கூறுகிறார்.
இந்த துதி முழுவதும், நம் கர்ம வினை காரணமாக பிறக்கும் இந்த சம்சாரத்தை கொடிய மிருகங்கள் நிறைந்த காடாகவும், கொடிய நச்சு மரமாகவும், நஞ்சினை உமிழும் அரவாகவும், நெருப்பாகவும், நீர்ச் சுழல்கள் நிறைந்த கடலாகவும் உருவகப்படுத்தி  இதில் உள்ள துன்பங்களை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
————–

ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதார பரமான அருளிச் செயல்கள்—

July 15, 2020

I .ஸ்ரீ பெரியாழ்வார் (முதலாயிரம் )

1.எந்தை தந்தை தந்தை ( திருப்பல்லாண்டு -6)
2.பிறங்கிய பேய்ச்சி 1—-3—-5
3.கோளரியின் 1—-6—-2
3.அன்னமும் 1—-6—-11
4. அளந்திட்ட தூணை 1—-7—-9
5.குடங்கள் எடுத்து 2—-7—-7
6.முன் நரசிங்கமதாகி 3—-6—-5
7.கதிராயிரம் 4—-1—-1
8.பூதமைந்தொடு 4—-4—-6
9.கொம்பினார் பொழில் 4—-4—-9
10.வல்லெயிற்று 4—-8—-8

11.உரம் பற்றி இரணியனை 4—-9—-8
12.தேவுடைய மீனமாய் 4—-9—-9
13.நம்பனே 5—-1—-9
14.மங்கிய வல்வினை 5—-2—-4

II ஸ்ரீ ஆண்டாள் —திருப்பாவை

15.முப்பத்து மூவர்- 20
16.மாரி மலை முழைஞ்சில் 23
17.கூடாரை வெல்லும் 27

நாச்சியார் திருமொழி

18. நாளை வதுவை மணம் 1—-6—-2
19.வரிசிலை 1—-6—-9
20. வான் கொண்டு 1—-8—-5

III திருமழிசை ஆழ்வார் –திருச்சந்தவிருத்தம்

21.வால் நிறத்தோர் சீயமாய் 23
22.கங்கை நீர் பயந்த 24
23.வரத்தினில் 25
24. கரண்ட மாடு 62
25.விள்விலாத 102

IV திருப்பாணாழ்வார்

26.பரியனாகி வந்த 8

V திருமங்கை ஆழ்வார்–பெரிய திருமொழி

27.மருங்கொள் ஆளரி 1—-2—-4
28.மான் முனிந்து 1—-4—-8
29.ஏனோர் அஞ்ச 1—-5—-7
30 முதல் 39அங்கண்ஞாலம் முதலாக –10 1—-7—-1 to
1—7—10
40. எண் திசைகளும் 1—-8—-6
41.தெரியேன் பாலகனாய் 1—-9—-7
42.தூணாய் அதனூடு 1—-10—-5
43.பள்ளியில் ஓதி வந்த 2—-3—-8
44.காண்டாவனம் 2—-4—-2
45.தாங்காத தொராளரி 2—-4—-4
46.புகராருருவாகி 2—-4—-7
47.உடம்புருவில் 2—-5—-3
48.பேணாத வலி அரக்கர் 2—-5—-7
49.பெண்ணாகி இன்னமுதம் 2—-5—-8
50.பட நாகத்தணை 2—-5—-10

51. அன்னமும் மீனும் 2—-7—-10
52. திரிபுரம் 2—-8—-1
53. மாறுகொண்டு 3—-1—-4
54.பொங்கி அமரில் 3—-3—-8
55.பஞ்சிய மெல்லடி 3—-4—-4
56.சலங்கொண்ட 3—-9—-1
57. திண்ணியதோர் 3—-9—-2
58. ஓடாத வாளரியின் 3—-10—-4
59.உருவாகி 4—-1—-7
60.உளைய ஒண் திறல் 4—-2—-7

61. கெண்டையும் குறளும் 4—5—-6
62.முடியுடை அமரர்க்கு 4—10—8
63.வெய்யனாய் 5—-3—-3
64.ஏன மீனாமையோடு 5—-4—-8
65.வளர்ந்தவனை 5—-6—-4
66.எங்கனே உய்வர் 5—-7—-5
67.வக்கரன் வாய் 5—-9—-5
68. முனையார் சீயமாகி 6—-5—-2
69.பைங்கண் ஆளரி 6—-6—-4
70. அன்றுலகம்
6—-6—-5

71. ஓடா அரியாய்
6—-8—-4
72.அத்தா ! அரியே ! 7—-1—-8
73. ஓடா ஆளரியின் 7—-2—-2
74.ஆங்கு வெந்நகரத்து 7—-3—-5
75.அடியேன்
7—-3—-9
76.வந்திக்கும் 7—-4—-5
77.சிங்கமதாய்
7—-6—-1
78.விண்டான் 7—-7—-5
79.சினமேவும் 7—-8—-5
80. பன்றியாய் 7—-8—-10

81. மடலெடுத்த 8—-3—-6
82. நீர் மலிகின்றது 8—-4—-4
83. ஆமையாகி அரியாகி 8—-6—-5
84. உளைந்த அரியும் 8—-8—-4
85. மீனோடு ஆமை 8—-8—-10
86. மிக்கானை
8—-9—-4
87. மாணாகி வையம் 8—-10—-8
88. பரிய இரணியது 9—-4—-4
89.சிங்கமதாய் அவுணன் 9—-9—-4
90. துளக்கமில் சுடரை 10—-1—-4

91. உளைந்திட்டெழுந்த 10—-6—-3
92. தளர்ந்திட்டு 10—-6—-4
93. பொருந்தலன் 10—-9—-8
94. அங்கோர் ஆளரியாய் 11—-1—-5
95. தளையவிழ் கோதை 11—-4—-4
96.கூடா இரணியனை 11—-7—-4

திருக்குறுந்தாண்டகம்
97. காற்றினைப் புலனைத் தீயை 2

சிறிய திருமடல்
98. —- போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
சீரார் திருமார்பின் மேல் கட்டி செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆராவெழுந்தான் அரியுருவாய்———

பெரிய திருமடல்
99.—–ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும்
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை
பின்னோர் அரியுருவமாகி எரி விழித்து
கொல் நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே —வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி —அவனுடைய
பொன் அகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த
மின் இலங்கும் ஆழிப்படைத் தடக்கை வீரனை ———–

———தன்னைப் பிறர் அறியாத்தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அருமறையை ———-

——கொல் நவிலும் ஆழிப்படையானை ,கோட்டியூர்
அன்ன உருவில் அரியை , திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை ,இந்தளூர் அந்தணனை
மன்னும் மதிட்கச்சி வேளுக்கைஆளரியை ——–

VI .பொய்கை ஆழ்வார் இயற்பா–முதல் திருவந்தாதி

100. அடியும்பட கடப்ப 17
101.தழும்பிருந்த 23
102 புரியொரு 31
103. முரணவலி 36
104. எளிதில் இரண்டையும் 51
105. ஏற்றான் 74
106. வரத்தால் வலி நினைந்து 90
107. வயிறழல 93

VII .பூதத்தாழ்வார் –இரண்டாம் திருவந்தாதி

108.கொண்டதுலகம் 18
109. மாலையரியுருவன் 47
110. வரங்கருதி 84
111.உற்று வணங்கி 94
112.என் நெஞ்சமேயான் 95

VIII .பேயாழ்வார் —மூன்றாம் திருவந்தாதி

113.இவையவன் கோவில் 31
114. கோவலனாய் 42
115. அங்கற்கிடரின்றி 65
116. புகுந்திலங்கும் 95

IX . திருமழிசை ஆழ்வார் –நான்முகன் திருவந்தாதி

117. தொகுத்தவரத்தனாய் 5
118. மாறாய தானவனை 18
119. இவையா ! பிலவாய் 21
120. அழகியான் தானே 22

ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்

121.மட நெஞ்சமென்னும் 46

பெரிய திருவந்தாதி

122. நின்றுமிருந்தும் 35
123. வழித்தங்கு வல்வினையை 57

திருவாய்மொழி

124. ஆடியாடி அகம் கரைந்து 2—-4—-1
125.உன்னைச் சிந்தை செய்து 2—-6—-6
126.எங்குமுளன் கண்ணன் 2—-8—-9
127. தோற்றக் கேடவையில் 3—-6—-6
128. கிளரொளியால் 4—-8—-7
129. ஆனானாளுடையான் 5—-1—-10
130. சூழ் கண்டாய் 5—-8—-6

131. அரியேறே 5—-8—-7
132. என் செய்கின்றாய் 7—-2—-2
133. வட்கிலன் 7—-2—-3
134.சிந்திக்கும் 7—-2—-5
135. போழ்து மெலிந்த 7—-4—-6
136.செல்லவுணர்ந்தவர் 7—-5—-8
137. புக்க அரியுருவாய் 7—-6—-11
138. ஆம்வண்ணம் 7—-8—-11
139. கூடுங்கொல் ? 7—-10—-3
140. எடுத்த பேராளன் 8—-1—-3

141. மாலரி கேசவன் 8—-2—-7
142. அற்புதன் 8—-6—-10
143. அறிந்தன 9—-3—-3
144. ஆகம்சேர் 9—-3—-7
145. உறுவது 9—-4—-4
146.அரியாய 9—-4—-5
147. உகந்தே உன்னை 9—4—-7
148. மல்லிகை 9—-9—-1
149. அன்பனாகும் 9—10—-6
150. என் நெஞ்சத்துள்ளிருந்து 10—-6—-4

151. பிரியாது ஆட்செய 10—-6—-10

திருவரங்கத்தமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதி

152. மடங்கல் 103
——————————————————————-

ஸ்வாமி தேசிகன் தான் அருளிய ப்ரபந்தத்தில் (தேசிக ப்ரபந்தம் )
திருவஹீந்த்ரபுரம் அடியவர்க்கு மெய்யன் விஷயமாக
மும்மணிக்கோவையில் 4வது பாசுரத்தில்( மழையில் எழுந்த
மொக்குள் போல் வையம் என்கிற பாசுரம் )
மீனோடாமை கேழல் கோளரியாய் —–என்று துதிக்கிறார்.

பின்னும், நவமணிமாலை 2ம் பாசுரத்தில் ( மகரம் வளரு மளவில்
பௌவ மடைய வுற்ற லைத்தனை என்கிற பாசுரம் )
வலிகொள் அவுணன் உடல் பிளந்து மதலை மெய்க்குதித்தனை —
என்று போற்றுகிறார்

இவ்விதமாக, ஆழ்வார்கள், ஆசார்யன் அனுபவித்துத் துதித்ததை
அறிந்து, உணர்ந்து ,அனுபவித்தோம்

அடியேனின் மந்த மத்தியில் தோன்றியதையும் இங்கு
எழுதியுள்ளேன் —பிழை பொறுத்து, குணம் கொள்வீராக !

ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
—————————–

1. அருமைப் புதல்வனை அழிக்க நினைத்து
அவனது சொல்லால் ஆத்திரம் அடைந்து
அன்று ஒருநாள் மாலைத் துணைத் தட்ட,
அடுத்த கணமே கம்பம் பிளந்தது !

2. அண்டம் அதிர்ந்தது; அமரர்கள் அஞ்சினர் ;
எண்திசை அழிந்தது;பிரளயம் நேர்ந்தது;
நான்முகன் நலிந்தான்; அவன் மகன் மெலிந்தான்
அறுமுகன் பயந்தான்;அனைத்தும் வீழ்ந்தது.

3.சிங்கத்தின் பிடரிகள் சிதறிப் பறந்தன ;
சீறியது கண்ணும்; பற்களும் நெறிந்தன ;
அட்டகாசத்தின் ஆரம்ப நிலைதான்,
கிட்ட நெருங்கத் தேவரும் பயந்தனர் !

4. கரங்கள் பிறந்தன ;வளர்ந்தன எங்கும்,
விரல்களின் நகங்கள் ,வீறிட்டுப் பாய்ந்தன !
இரணியன் மார்பைக் கீறிக் கிழித்தன !
தரணியெங்கும் குருதியின் ஓட்டம் !

5. நரசிங்கம்! நாரணன் கருணை அவதாரம் !
பிரகலாதனுக்காகப் பிறந்த அவதாரம் !
பிரதோஷ வேளையிலே பூசிக்க அவதாரம் !
சரபத்தை முடித்திட்ட சீரிய அவதாரம் !

6. நரசிங்கா ! ஆளரியே ! நாயேன் அடிபணிந்தேன்
கருணைக் கண்கொண்டு காத்திடுவாய் அடியேனை
உருவாய், உருவுக்கும் உருவாய் வந்தவனே !
பிரகலாத வத்ஸலனே ! பஜிக்கின்றேன் உன் நாமம் !

7. உன் நாமம் தனைக் கேட்க உன்மத்தமாகிடுவர் !
உன் நாமம் தியானிக்க உச்சநிலை பெற்றிடுவர் !
உன் நாமம் உச்சரிக்க உயர்நிலை அடைந்திடுவர் !
உன் நாமம் உயர்வாகும், உத்தமுமே அதுவாகும் !

8. சிங்கப் பெருமானே ! சீறினும் நீ அருள்வாயே !
எங்கும் உள்ளவனே ! இதயத்தில் இருப்பவனே !
பொங்கும் பக்தியினால், போற்றுகிறேன் பொற்பாதம் ,
ஏங்கும் அடியேன் நான்; இனிப் பிறவி யான்வேண்டேன் .

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ -நம்முடை நம்பெருமாள் -திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்தோத்ர மஞ்சரி —

July 15, 2020

ஸ்ரீ ந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் –ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகன்

அஹோ பிலம் நாராஸிம்ஹம் கத்வாராம : ப்ரதாபவான் |
நமஸ்க்ருத்வா ஸ்ரீ ந்ருஸிம்ஹம் அஸ்தௌஷீத் கமலாபதிம் ||

1. கோவிந்த கேசவ ஜநார்த்தன வாஸுதேவ விச்வேச விச்வ மதுஸுதந விச்வ ரூப |
ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம புஷ்கராக்ஷ நாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே ||

2. தேவாஸ் ஸமஸ்தா : கலுயோகிமுக்யா : கந்தர்வ வித்யாதர கின்னராஸ்ச |
யத்பாதமூலம் ஸததம் நமந்தி தம்நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி ||

3. வேதாந் ஸமஸ்தாந் கலுசாஸ்த்ர கர்ப்பாந் வித்யாபலேகீர்திமதீஞ்ச லக்ஷ்மீம் |
யஸ்ய ப்ரஸாதாத் ஸததம் லபந்தே தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி ||

4. ப்ரும்மா சிவஸ்தவம் புருஷோத்தமஸ்ச நாராயணாஸௌ மருதாம் பதிஸ்ச |
சந்த்ரார்க்கவாய்வக்னி மருத்கணாஸ்ச த்வமேவ தம்த்வாம் ஸததம் நதோஸ்மி ||

5. ஸ்வப்நேபி நித்யம் ஜகதாம் த்ரயாணாம் ஸ்ரஷ்டா ச ஹந்தா விபுரப்ரமேய : |
த்ரா தாத்வ மேகஸ்த்ரிவிதோவிபந்ந : தம் த்வாம் ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி ||

இதிஸ்துவா ரகுச்ரேஷ்ட பூஜயாமாஸ தம் விபும் |
புஷ்ப வ்ருஷ்டி :பபாதாசு தஸ்ய தேவஸ்ய மூர்த்தனி ||
ஸாதுஸாத்விததம் ப்ரோசு : தேவாரிஷி கணைஸ்ஸ ஹ |” தேவா ஊசு :
ராகவேணக்ருதம் ஸ்தோத்ரம் பஞ்சாம்ருதமனுத்தமம் |
படந்தியேத்விஜ வரா : தேஷாம் ஸ்வர்கஸ்து சாச்வத : ||

————

யஸ்யாபவத் பக்தஜநார்த்தி ஹந்து பித்ருத்வமந்யேஷ்வவிசார்ய தூர்ணம் |
ஸ்தம்பேவதார ஸ்தமநந்யலப்யம் லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ||

அஹோபிலே காருடசைல மத்யே க்ருபாவசாத் கல்பித ஸந்நிதானம் |
லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாமபாகம் லக்ஷ்மீந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே ||

வ்யாஸ பகவான், ”ஸத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம் ”
தன்னுடைய பக்தர்களின் வார்த்தையை, ஸத்யமாக்க ஸ்தம்பத்தில் தோன்றிய அவதாரம்;

என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான் முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்
என் உயிர் யானே மாய்ப்பல் ; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்
அன்னவர்க்கு அடியேன் அல்லேன் ” என்றனன் அறிவின் மிக்கான் –இரணியன் வதைப்படலம் (126)

நசை திறந்து இலங்கப்பொங்கி , ”நன்று, நன்று” என்ன நக்கு ,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ,ஓர் தூணின் , வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் ;எற்றலோடும் ,
திசை திறந்து ,அண்டம் கீறச் சிரித்தது ,செங் கண் சீயம் (127)

நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும், —-நான்முகனாலேகூடக் காண இயலாத செய்யாளுறை மார்பன் இப்படிச் சிரித்ததும்,
ப்ரஹ்லாதன், ஆடினான், அழுதான், பாடி அரற்றினான், சிரத்தில் செங்கை சூடினான், தொழுதான், ஓடி, உலகு எலாம் துகைத்தான் துள்ளி—

பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்;பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பர்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது,கீழும் மேலும்

———

அரே க்வாஸௌ ஸகல ஜகதாத்மா ஹரிரிதி
ப்ரபிந்தேஸ்ம ஸ்தம்பம் சலிதகரவலோ திதி ஸுத :
அத : பஸ்சாத் விஷ்ணோ ந ஹி வதிது மீஸோஸ்மி ஸஹஸா
க்ருபாத்மன் ! விஸ்வாத்மன் பவனபுர வாஸின் ! ம்ருட யமாம்–ஸ்ரீ நாராயண பட்டத்ரி , நாராயணீயத்தில்-

———–

ப்ரஹ்லாதஸ்ய வ்யஸநமிதம் தைத்ய வர்கஸ்ய தம்பம்
ஸ்தம்பம் வக்ஷஸ்தலமபி ரிபோ : யோக பத்யேன பேத்தும் |
பத்தச்ரத்தம் புருஷ வபுஷா மிச்ரிதே விச்வ த்ருஷ்டே
தம்ஷ்ட்ரா ரோசிர் விசித புவனே ரம்ஹஸா ஸிம்ஹ வேஷே ||–காளிதாசன்–போஜ சம்பூ

பகவான் , ந்ருஸிம்ஹனாக அவதரித்து, ஒரே க்ஷணத்தில், ப்ரஹ்லாதனின் கவலை,அசுரர்களின் ஆணவப் போக்கு,
அக்ரமங்கள், தூண் ஹிரண்யனின் மார்பு ஆக , இந்த நான்கையும் பிளந்தார் உலகம் உய்ந்தது
இப்படி மகா உக்ரமான அவதாரமாக இருந்தாலும் ,பக்தியுடன் பூஜிப்பவர்களின் மனக் கவலை தீர்த்து, விரோதிகளை விரட்டி,
அனுக்ரஹம செய்யும் உத்தமமான அவதாரம்.

————

முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர்—–(வைகுண்ட வாஸி )

1.யோகி த்யேயம் ஸதா நந்தம் பக்தாநாம் அபயங்கரம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

2. ஸர்க–ஸ்திதி –விநாசாநாம் கர்த்தா கர்த்ருபதி : ஸ்வயம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

3. நமாஸகம் தயாபூர்ணம் ஸர்வலோக -நமஸ்க்ருதம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

4. ப்ரஹ்லாத —வரதம் ச்ரேஷ்டம் கருடாத்ரி –நிவாஸிநம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

5. வேதாந்த கருணா நித்யம் ஸேவ்ய மாநம் பரம் சுபம் |
மாலோலம் புண்டரீகாக்ஷம் ஸம்ச்ரயே வரதம் ஹரிம் ||

6. ஸ்ரீ ரங்கயோகி க்ருபயா ப்ரோக்தம் ஸ்தோத்ரமிதம் சுபம் |
ய : படேத் ச்ரத்தயா நித்யம் ஸர்வபாபை : ப்ரமுச்யதே ||

1-அஷ்டாங்க ஸித்தி பெற்றவர்கள் தினமும் த்யானிக்கும் மூர்த்தி ;எப்போதும் பரமானந்த ஸ்வரூபி ;பக்தர்களின் பயத்தைப்
போக்குபவன்; தாமரைக் கண்ணன்;சமஸ்த பாபங்களையும் சம்ஹரிப்பவன் ; வேண்டும் வரங்களை அளிப்பவன்; இப்படிப்பட்ட
ஸ்ரீ மாலோலனைப் பற்றுகிறேன்

2.ஜென்மத்தை அழிப்பவன்;ஜீவன்கள் உஜ்ஜீவிக்க பரம கருணையுடன் முத்தொழிலையும் செய்யும் பிரான்; தாமரைக் கண்ணன்;
எல்லாப் பாபங்களையும் போக்குபவன்;வேண்டிய வரம் தருபவன்;இப்படிப்பட்ட ஸ்ரீ மாலோலனையே அடைகிறேன்.

3. லக்ஷ்மிலோலன்; காருண்ய நிதி;எல்லா உலகத்தாரும் ஸேவிக்கும் ஏற்றம் உடையவன்; தாமரைக் கண்ணன்; பாபங்கள் அனைத்தையும்
போக்குபவன்; வேண்டிய வரம் அனைத்தையும் தருபவன்; ஸ்ரீ மாலோலனையே தஞ்சம் என்று கருதி, அவனையே சரணம் அடைகிறேன்.

4. பக்தனான ப்ரஹ்லாதனைக் காத்தவன்; ஒப்பாரும் மிக்காரும் இல்லா மேன்மையாளன்; கருடகிரி வாஸி ; தாமரைக் கண்ணன்;
சிங்கமுக ஸ்வரூபி ; கோரிய வரம் அளிக்கும் ஸ்ரீ மாலோலனைச் சரணம் அடைகிறேன்;

5. 44ம் பட்ட அழகிய சிங்கரால் தினமும் ஆராதிக்கப் பெற்றவன்; மிக மேலானவன்; பங்கயக் கண்ணன்;பாபங்களைப் பொசுக்குபவன்;
வேண்டியதெல்லாம் அருளும் ஸ்ரீ மாலோலனையே தஞ்சமெனப் பற்றுகிறேன்

6. 42ம் பட்டம் ஸ்ரீ இஞ்சிமேட்டு அழகியசிங்கர் கிருபையால், அடியேனால் சொல்லப்பட்ட மங்களத்தை அருளும் இந்த ஸ்தோத்ரத்தைத்
தினமும் சொல்பவர்கள் எல்லாவிதமான பாபங்களிலிருந்தும் விடுபட்டு ஸ்ரீ மாலோலன் கிருபையைப் பெறுவார்கள்

———————-

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் உள்ளது

21.தம்ஷ்ட்ரா –கராளம் ஸுரபீதிநாசகம் க்ருதம் வபுர் –ந்ருஸிம்ஹ –ரூபிணா |
த்ராதும் ஜகத் யேந ஸ ஸர்வதா ப்ரபு : மமாஸ்து மாங்கள்யவிவ்ருத்தயே ஹரி : ||

தேவர்களின் பயத்தைப் போக்கவல்லதும், கோரைப் பற்களால் பயத்தை உண்டாக்குவதுமான நரங்கலந்த சிங்கத்
திருவுருவை ,உலகைக் காப்பாற்ற யார் தரித்தாரோ ” ஸ்ரீ ஹரி ”எனக்கு மங்களங்களைப் பெருகச் செய்வாராக

22.தைத்யேந்த்ர–வக்ஷஸ் ஸ்தல —தார –தாருணை :கரேருஹைர் ய :க்ரகசாநு காரிபி : |
சிச்சேத லோகஸ்ய பயாநி ஸோச்யுதோ மமாஸ்து மாங்கள்ய–விவ்ருத்தயே ஹரி : ||

இரணியன் மார்பைக் கிழித்ததும் ரம்பம் போன்றதுமான நகங்களால் ,உலகின் பயத்தைப் போக்கிய ஹரி
எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

23.தந்தாந்த –தீப்தத்யுதி -நிர்மலாதி ய :சகார ஸர்வாணி திசாம் முகாநி |
நிநாத –வித்ராஸித –தாநவோ ஹ்யஸௌ மமாஸ்து மாங்கள்ய –விவ்ருத்தயே ஹரி : ||

பற்களின் ப்ரகாசத்தால் திசை முடிவிலும் காந்தியைப் பரப்புகிறவரும், ஸிம்ஹநாதத்தால் அஸுரர்களை
நடுங்கச் செய்பவருமான ஸ்ரீ ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக –

24. யந்நாம -ஸகீர்த்தநதோ மஹா பயாத் விமோக்ஷ -மாப்நோதி ந ஸம்சயம் நர : |
ஸ ஸர்வ-லோகார்த்தி –ஹரோ ந்ருகேஸரீ மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

தன்னுடைய நாமத்தைச் சொல்பவரின் பெரும் பயத்தைப் போக்கி க்ருபை செய்பவரும்,உலகங்களின் கஷ்டத்தைப்
போக்குபவரான ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக-

25. ஸடா –கராள ப்ரமணாநிலாஹதா : ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ் ஸமந்தத : |
ஸ திவ்யசிம்ஹ :ஸ்புரிதா-நலேக்ஷணோ மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

பிடரிக் கேசங்கள் அலைந்து மேகக்கூட்டங்களை நாலாபுறமும் சிதறும்படி செய்பவரும் நெருப்புக் கனல் ஜ்வலிக்கும்
நேத்ரங்களை உடையவருமான ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக-

26. யதீக்ஷண –ஜ்யோதிஷி ரச்மி -மண்டலம் ப்ரலீந -மீஷந் ந ரராஜ பாஸ்வத : |
குத :ச சாங்கஸ்ய ஸ திவ்யரூப -த்ருக் மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

எவருடைய திருக்கண்களின் தீக்ஷ்யண்யத்தில் ஸுர்யனின் ஒளிக்கதிர்கள் மங்குமோ,சந்திரனின் ப்ரகாசத்தைப் பற்றிச்
சொல்லவே வேண்டாமோ அந்த திவ்ய ரூபமான ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக—

27. அசேஷ –தேவேச –நரேச்வரேச் வரை : ஸதா ஸ்துதம் யச்சரிதம் மஹாத்புதம் |
ஸ ஸர்வ–லோகார்த்தி -ஹரோ மஹாஹரி : மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

எந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹனுடைய மகோன்னத சரித்ரத்தை தேவர்களும், உலகத்தோரும் புகழ்ந்து கொண்டாடுகிறார்களோ
உலகங்களின் துக்கத்தையும் பாவங்களையும் அழிக்கவல்ல அந்த ஸ்ரீ ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

28. த்ரவந்தி தைத்யா : ப்ரணமந்தி தேவதா : நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய
யத் கீர்த்தநாத் ஸோத்புத –ரூப கேஸரீ எந்த ந்ருஸிம் மமாஸ்து மாங்கள்ய– விவ்ருத்தயே ஹரி : ||

யாருடைய திருநாமத்தைச் சொன்னவுடனே அசுரர்கள் ஓடுகிறார்களோ ,தேவர்கள் நமஸ்கரிக்கிறார்களோ, அரக்கர்கள் அழிவார்களோ,
எதிரிகள் திரும்பி ஒடுவார்களோ அந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹன் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

————

44ம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் ஸ்ரீ மாலோலன் விஷயமாக, பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்,

1-மாலோலம் ப்ரணிபத்யாஹம் ஸ்வர்ண ஸ்ரீந்ருஹரிம்ததா |
மங்களாத்ரி ரமாஸிம்ஹம் க்ருஷ்ணம் நர்த்தன கோவிதம் ||
2. ஸ்ரீ ரங்கநாதம் ஹஸ்தீசம் லக்ஷ்மீபூமி ஸமன்விதம் |
சேஷாசலேசம் ஸ்ரீவாஸம் யாதவாத்ரி ரமாஸகம் ||
3. ஸ்ரீ பூ ஸுரபி ரங்கேசம் ஸ்ரீவராஹௌ ஹயாநநம் |
பூமாதி கேசவம் சக்ரம் கோதாம் வடதளேசயம் ||
4. ஸஸீதாலக்ஷ்மணம் ராமம் அபர்யாப்தாம்ருதம் ஹரிம் |
ஸ்ரீ மூர்த்தி : ஸ்ரீ சடாரீ ச ஸேநேசம் சடமாதிநம் ||
5. பரகாலம் யதீந்த்ரம் ச வேதசூடா குரூத்தமம் |
ஆதிவண் சடகோபாதீந் யதிவர்யாந் பஜே நிஸம் ||
6. பஞ்சாம்ருதமிதம் புண்யம் ய : படேத் ஸததம்முதா |
ரமா நர ஹரிஸ்தஸ்ய தத்யாதீப்ஸிதமாதராத் ||

————-

ஸ்ரீ ஸுதர்சன கவசத்தில்—-
ஓம் அஸ்ய ஸ்ரீ ஸுதர்சன கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அஹிர்புத்ந்யே பகவான் ரிஷி :
அநுஷ்டுப் சந்த :
ஸ்ரீ ஸுதர்சன ஸ்ரீ மஹா ந்ருஸிம்ஹோ தேவதா
சஹஸ்ரார இதி பீஜம்
ஸுதர்சன மிதி சக்தி :
சக்ரமிதி கீலகம்
மம ஸர்வ ரக்ஷார்த்தே
ஸ்ரீ ஸுதர்சன புருஷ ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரீத்யர்த்தே
ஜபே விநியோக:
என்று சொல்கிறோம்—–ஸ்ரீ ஸுதர்சனரைச் சொல்லும்போதெல்லாம் ஸ்ரீ ந்ருஸிம்ஹனையும் சொல்கிறோம்

———-

ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணத்தில் , நவ க்ரஹங்களில் ஒருவரான சுக்ரன் சொன்ன ஸ்தோத்ரம் உள்ளது-

ஸ்ரீ சுக்ர உவாச :–

1. நமாமிதேவம் விச்வேசம் வாமனம் விஷ்ணுரூபிணம் |
பலி தர்ப்பஹரம் சாந்தம் சாச்வதம் புருஷோத்தமம் ||

2.தீரம் சோரம் மஹாதேவம் சங்கசக்ர கதாதரம் |
விஸுத்தம் ஞான ஸம்பன்னம் நமாமி ஹரிம் அச்யுதம் ||

3.ஸர்வசக்தி மயம் தேவம் ஸர்வகம் ஸர்வபாவனம் |
அநாதிமஜரம் நித்யம் நமாமி கருடத்வஜம் ||

4.ஸுராஸுரைர் பக்திமத்பி : ஸ்துதோ நாராயண : ஸதா |
பூஜிதம் சஹ்ருஷீகேசம் தம் நமாமி ஜகத்குரும் ||

5.ஹ்ருதி ஸங்கல்ப யத்ரூபம் த்யாயந்தி யதய :ஸதா |
ஜ்யோதிரூபம் அனௌபம்யம் நரஸிம்ஹம் நமாம்யஹம் ||

6. நஜாநந்தி பரம் ரூபம் ப்ரம்மாத்யா தேவதாகணா |
யஸ்யாவதார ரூபாணி ஸமர்ஸந்தி நமாமிதம் ||

7. ஏதஸ் ஸமஸ்தம் யேதாதௌ ஸ்ருஷ்டம் துஷ்டவதாத் புன : |
த்ராதம் யத்ர ஜகல்லீனம் தம் நமாமி ஜனார்த்தனம் ||

8பக்தைர் ரப்யர்ச்சிதோ யஸ்துநித்யம்பக்தப்ரியோஹிய : |
தம் தேவம் அமலம் திவ்யம் ப்ரணமாமி ஜகத்பதிம் ||

9. துர்லபம் சாபி பக்தாநாம் ய : ப்ரயச்சதி தோஷித : |
தம் ஸர்வசாக்ஷிணம் விஷ்ணும் ப்ரணமாமி சநாதனம் ||

ஸ்ரீ மார்க்கண்டேய உவாச :-

இதிஸ்துதோ ஜகந்நாத புரா சுக்ரேண பார்த்திவ |
ப்ராதுர்பூவ தஸ்யாக்ரே சங்கசக்ரகதாதர : ||

11. உவாச சுக்ரமேகாக்ஷம் தேவோ நாராயண :ஸ்ததா |
கிமர்த்தம் ஜாஹ்நவிதீரே ஸ்துதோஹம் தத்ப்ரவீஹிமே ||

சுக்ர உவாச :–

12.தேவதேவம் பூர்வமபவாதோ மஹாந்க்ருத : |
தத்தோஷஸ்யாபநுத்யர்த்தம் ஸ்துதவானஸ்மி ஸம்ப்ரதம் ||

ஸ்ரீ பகவானுவாச :–

13. மமாபராதாந் நயனம் நஷ்டமேகம் தவாதுனா |
ஸந்துஷ்டோஸ்மிதத : சுக்ர ஸ்தோத்ரேண நேனதேமுநே ||

14. இத்யுகத்வா தேவதேவேசஸ்தம் முநிம் ப்ரஹஸந்நிவ |
பாஞ்சஜன்னேய தத்சக்ஷீ :பஸ்பர்ச ச ஜனார்த்தன ||

15. ஸ்பிருஷ்ட மாத்ரேது சங்கேன தேவதேவேன சார்ங்கிணா |
பபூவ நிர்மலம் சக்ஷு :பூர்வந்நிருபஸத்தம || |

16ஏவம் தத்வாமுனே சக்ஷு பூஜிதஸ்தேன மாதவ : |
ஜகாமாதர்ஸனம் ஸத்ய: சுக்ரோபி ஸ்வாச்ரமம் யயௌ ||

17. இத்யேத துக்தம் முநிநா மஹாத்மனா ப்ராப்தம் புரா தேவவர ப்ரஸாதாத் |
சுக்ரேண கிம்தே கதயாமி ராஜந் புநஸ்ச மாம் பிருச்ச மனோரதாந்த : ||

—————————

அபாமார்ஜன ஸ்தோத்ரம்

சஞ்சத் சந்த்ரார்த தம்ஷ்ட்ரம் ஸ்புர துருரதநம் வித்யுதுத்யோத ஜிஹ்வம்
கர்ஜத் பர்ஜந்ய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ர ரௌத்ரம் |
த்ரஸ்தாஸா ஹஸ்தியூதம் ஜ்வல தநல ஸடா கேஸரோத்பாஸமாநம்
ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம் ||

————–

ஸ்ரீ கூரத்தாழ்வான், அதிமாநுஷ ஸ்த்வம்

க்ரீடாவிதே :பரிகர :தவ யா து மாயா ஸா மோஹிநீ ந கதமஸ்யது ஹந்த ஜந்தோ : |
ஸஹ ! மர்த்யஸிம்ஹவபுஷ :தவ தேஜஸோ ம்சே சம்பு :பவன் ஹி சரப :சலபோ பபூ

ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸுந்தர பாஹுஸ்தவத்தில் கூறுகிறார் :–

ந வாயு பஸ்பந்தே ,யயது ரதவாஸ்தம் சசிரவீ திசோநச்யந் ,விச்வாப்யசலத் அசலா ஸாசலகுலா |
நபச்ச ப்ரச்ச்யோதி ,க்வதிதமபி பாதோ நரஹரௌ த்வயி ஸ்தம்ப்பே சும்ப்பத் வபுஷி ஸதி ஹே ஸுந்தர புஜ : ||

அராளம் பாதாளம் த்ரிதசநிலய :ப்ராபி தலய : தரித்ரீ நிர்தூதா ,யயுரபி திச :காமபி தசாம் |
அஜ்ரும்பிஷ்டாம் போதி :குமுகுமிதி கூர்ணத் ஸுரரிபோ :விபந்தாநே வக்ஷ :த்வயி நரஹரௌ ஸுந்தரபுஜ ! ||

நகக்ரகசக ப்ரதி க்ரதித தைத்ய வக்ஷஸ்ஸ்த்தலீ ஸமுத் தருதிரச் சடாச்சுரித பிம்பிதம் ஸ்வம் வபு : |
விலோக்ய ருஷித :புந : ப்ரதி ம்ருகேந்திர சங்காவசாத் ய ஏஷ நர கேஸரீ ஸ இஹ த்ருச்யதே ஸுந்தர : ||

——————-

தைத்திரீய உபநிஷத்தில் நாராயண வல்லியில் உள்ள ந்ருஸிம்ஹ மந்த்ரமாவது

ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோ ஜாதாய வை நம :பவே பவே நாதிபவே பஜஸ்வமாம் பவோத்பவாய நம :
வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நமோ ருத்ராய நம :காலாய நம :கலவிகரணாய நமோ பலவிகரணாய
நமோ பலாய நமோ பலப்ரமதனாய நமஸ் ஸர்வ பூத தமனாய நமோ மனோன்மனாய நம :
அகோரேப்யோ அதகோரேப்யோ கோரகோர தரேப்யஸ் ஸர்வதஸ் ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய :

——–

108 திவ்ய தேசங்களில், வடநாட்டு திவ்யதேசங்களில் பெருமை பெற்ற திவ்ய தேசம் அஹோபிலம்—-
சிங்கத்தின் குகை– 9 சிங்கங்களின் குகை-ஒன்பது ந்ருஸிம்ஹ மூர்த்திகள் —-
அஹோபில ந்ருஸிம்ஹன்
வராஹ ந்ருஸிம்ஹன்
மாலோல ந்ருஸிம்ஹன்
யோகானந்த ந்ருஸிம்ஹன்
பாவன ந்ருஸிம்ஹன்
காரஞ்ச ந்ருஸிம்ஹன்
சக்ரவட ந்ருஸிம்ஹன்
பார்க்கவ ந்ருஸிம்ஹன்
ஜ்வாலா ந்ருஸிம்ஹன்

———-

ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதசநாம ஸ்தோத்ரம்

ப்ரதமஸ்து மஹோஜ்வாலோ
த்விதீயஸ் தூக்ரகேஸரீ
த்ருதீய : க்ருஷ்ண பிங்காக்ஷ :
சதுர்த்தஸ்து விதாரண :
பஞ்சாஸ்ய : பஞ்சமைஸ் சைவ
ஷஷ்ட : கஸிபுமர்தந :
ஸப்தமோ தைத்யஹந்தாச
அஷ்டமோ தீநவல்லப :
நவம : ப்ரஹ்லாதவரதோ
தசமோ நந்தஹஸ்தக :
ஏகாதச மஹாரௌத்ரோ
த்வாதஸ : கருணாநிதி :

த்வாதஸைதாநி நாமாநி ந்ருஸிம்ஹஸ்ய மஹாத்மந :

———-

ஓம் நமோ நாரஸிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரிணே | வஜ்ரதேஹாய வஜ்ராய நமோ வஜ்ரநகாயச ||

காலாந்தகாய கல்பாய கலநாய க்ருதே நம : | காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே ||

ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ரசரணாய ச | ஸஹஸ்ரார்க்க ப்ரகாஸாய ஸஹஸ்ராயுத தாரிணே ||

சத்ருக்னாய ஹ்யவிக்நாய விக்நகோடி ஹராய ச | ரக்ஷோக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம : ||

பூதபாலாய பூதாய பூதாவாஸாய பூதிநே | பூதவேதாள காதாய பூதாதிபதயே நம : ||

பூதக்ரஹ விநாஸாய பூதஸம்யமிதே நம : | மகாபூதாய ப்ருகவே ஸர்வபூதாத்மநே நம : ||

ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வ கார்ய விதாயிநே | ஸர்வஜ்ஞாயா ப்யநந்தாய ஸர்வ ஸக்தி தராய ச ||

ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிநே | பிங்காக்ஷாயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே ||

அபம்ருத்யு விநாஸாய ஹ்யபஸ்மார விகாதிநே அந்நதாயாந்ந ரூபாய ஹ்யந்நாயாந்த புஜே நம : ||

அமீ ஹி த்வா ஸுர ஸங்கா விஸந்தி கேசித் பீதா : ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி |
ஸ்வஸ்தீத்யுக்த்வா முநயஸ் ஸித்த ஸங்கா : ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி : புஷ்கலாபி : ||

ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா : விஸ்வே தேவா மருதஸ்சோஷ்மபாஸ்ச |
கந்தர்வ யக்ஷாஸுர ஸித்த ஸங்கா : வீக்ஷந்தி த்வாம் விஸ்மிதாஸ் சைவ ஸர்வே ||

லேலிஹ்யஸே க்ரஸமாநஸ் ஸமந்தாத் லோகாந் ஸமக்ராந் வதநைர் ஜ்வலத்பி : |
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ் தவோக்ரா : ப்ரதபந்தி விஷ்ணோ ||

ஸுஜ்யோதிஸ்வம் பரம்ஜ்யோதி :ஆத்மஜ்யோதி :ஸநாதந : |
ஜ்யோதிர் லோகஸ்வரூபஸ் த்வம் ஜ்யோதிர்ஜ்ஞோ ஜ்யோதிஷாம் பதி : ||

கவயே பத்ம கர்ப்பாய பூதகர்ப்ப க்ருணாநிதே | ப்ரஹ்மகர்பாய கர்ப்பாய ப்ருஹத் கர்ப்பாய தூர்ஜடே ||

உன்மத்தாய ப்ரமத்தாய நமோ தைத்யாரயேநம : | ரஸஜ்ஞாய ரஸேஸாய ஹ்யரக்த ரஸநாய ச ||

நாக கேயூரஹாராய நாகேந்த்ராயாக மர்திநே | நதீவாஸாய நக்நாய நாநாரூபதராய ச ||

கதாபத்ம தராயைவ பஞ்சபாண தராய ச |காமேஸ்வராய காமாய காமபாலாய காமிநே ||

நம : காமவிஹாராய காமரூப தராய ச |ஸோமஸுர்யாக்நி நேத்ராய ஸோமபாய நமோ நம : ||

தர்ம நேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே கருணாகர | புண்ய நேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தேபீஷ்ட தாயக ||

நமோ நமஸ்தே ஜயஸிம்ஹரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹ ரூப |
நமோ நமஸ்தே ரண ஸிம்ஹ ரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹ ரூப ||

—————-

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ,ஆர்த்தார்த்தி நிர்வாபணாத்
ஔதார்யாத் அகஸோஷ்ணாத், அகணித ச்ரேய ப்ராணாத் |
ஸேவ்ய : ஸ்ரீபதிரேக ஏவ ஜகதாம் ஏதேச ஷட்ஸாக்ஷிண :
ப்ரஹ்லாதச்ச விபீஷணச்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ : ||

யா ப்ரீதிர்ரவிவேகாநாம் விஷயேஷ்வ நபாயிநோ |
த்வா மநுஸ்மரதஸ்ஸா மே ஹ்ருதயாந் மா ப ஸர்பது ||

நதோஸ்ம்யநந்தா ய துரந்த சக்தயே விசித்ர வீர்யாய பவித்ர கர்மணே |
விஸ்வஸ்ய ஸர்கஸ்திதிஸம்யமாந் குணை :ஸ்வலீலயா ஸந்ததே அவ்யயாத்மநே ||

அளவில்லாதனவும் , வெல்ல முடியாதனவும்திறமையும் பலமும் உடையவனும் , இவ்வுலகத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் –
கார்யங்களை விளையாட்டாகச் செய்பவனும் மாறுதல் அற்றவனுமான பரமாத்மாவை வணங்குகிறேன்

தத்தே மஹத்தம ! நம ; ஸ்துதிகர்ம பூஜா கர்ம ஸ்ம்ருதிச் சரணயோ : ச்ரவணம் கதாயாம் |
ஸம்ஸேவயா த்வயி விதேதி ஷடங்கயா து பக்திஞ்ஜந : பரமஹம்ஸ கதௌ லபேத ||

ஸ்ரீ பகவாநு வாச —

வத்ஸ ப்ரஹ்லாத பத்ரம்தே ப்ரீதோஹம்தே ஸுரோத்தம |
வரம் வ்ருணீஷ்வா பிமதம் காமபூரோஸ்ம்யஹம்ந்ருணா ||ம

ஏவம் ப்ரலோப்யமாநோபி வரைர்லோக ப்ரலோபனை |
ஏகாந்தித்வாத் பகவதி நைச்சத்தாநஸு ரோத்தம : ||

————-

ப்ரஹ்லாத —-
ஸ்ரீ கோவிந்த முகுந்த கேஸவ ஸிவ ஸ்ரீ வல்லப ஸ்ரீ நிதே
ஸ்ரீ வைகுண்ட ஸுகண்ட குண்டிதகல ஸ்வாமின்
அகுண்டோதய ஸுத்தத்யேய விதூததூர்த தவள ஸ்ரீ மாதவாதோக்ஷஜ
ஸ்ரத்தாபத்த விதேஹி நஸ்த்வயி தியம் தீராம் தரித்ரீதர

அச்யுத குணாச்யுத கலேஸ ஸகலேஸ ஸ்ரீதர தராதர விபுத்த ஜனபுத்த |
ஆவரண வாரண விநீல கனநீல ஸ்ரீகர குணாகர ஸுபத்ர பலபத்ர ||
கர்ண ஸுக வர்ணன ஸுகார்ணவ முராரே ஸுவர்ண ருசிராம்பர ஸுபர்ணரத விஷ்ணோ |
அர்ண வநிகேதன பவார்ணவபயம் நோ ஜீர்ணய லஸத்குணகணார்ணவ நமஸ்தே ||

———-

ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண க்ராம : க்ஷணம் பாணிஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய குண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ : |
யத் ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா யாதிருச்சிகா த்வேதஸாம்
யாகாசித்ஸஹஸா மஹாஸுர க்ருஹஸ் தூணாபிதாமஹ்யபூத் ||

ஸ்தூணா —தூண் அதாவது கம்பம்
அவந்த்ய —மலடு இல்லாத
ஜடரா—-வயிற்றைப் பெற்று
வேதஸாம் பிதாமஹீ அபூத்—-ப்ரும்மாக்களுக்குத் தகப்பனைப் பெற்ற தாயாக ஆயிற்று—
( இந்த மணி வயிற்றால் ந்ருஸிம்ஹனைப் பெற்ற தூணும் மோக்ஷம் அடைந்ததோ ! )

——————

ஸ்ரீ மத் பாகவதம் –ஸ்கந்தம்-7-ஸ்லோகங்கள்- 19-22

mimamsa manasya samutthito ‘grato
nrsimha-rupas tad alam bhayanakam
pratapta-camikara-canda-locanam
sphurat sata-kesara-jrmbhitananam
karala-damstram karavala-cancalaksuranta-
jihvam bhrukuti-mukholbanam
stabdhordhva-karnam giri-kandaradbhutavyattasya-
nasam hanu-bheda-bhisanam
divi-sprsat kayam adirgha-pivaragrivoru-
vaksah-sthalam alpa-madhyamam
candramsu-gaurais churitam tanuruhair
visvag bhujanika-satam nakhayudham
durasadam sarva-nijetarayudhapraveka-
vidravita-daitya-danavam

Hiranyakasipu studied the form of the Lord, trying to decide who the
form of Nrsimhadeva standing before him was. The Lord’s form was
extremely fearsome because of His angry eyes, which resembled molten
gold; His shining mane, which expanded the dimensions of His fearful
face; His deadly teeth; and His razor-sharp tongue, which moved about
like a dueling sword. His ears were erect and motionless, and His
nostrils and gaping mouth appeared like caves of a mountain. His jaws
parted fearfully, and His entire body touched the sky. His neck was very
short and thick, His chest broad, His waist thin, and the hairs on His
body as white as the rays of the moon. His arms, which resembled flanks
of soldiers, spread in all directions as He killed the demons, rogues and
atheists with His conchshell, disc, club, lotus and other natural
weapons.

(ஸ்ரீ மத் பாகவதம் -7-ஸ்கந்தம்-19-22- வர்ணனை ஸூ கர் -நரஸிம்ஹ ரூபம்
மீமாம்சமானசய சமுதிதோ கிராதோ நரஸிம்ஹ ரூபஸ் தத் அலம் பயங்கம்-ப்ரதாப்த-சமிகர சண்ட லோசனம்-
ஸ்புரத் சதகேசர ஜ்ரும்பிதநனம்-கரள தம்ஸ்த்ரம்-கராவல கஞ்சலஸுரந்த ஜிஹ்வம் ப்ருகுதி முகோல்பணம்-
ஸ்தப்தோர்த்வ கர்ணம் -கிரி கந்தரத்புத வ்யதஸ்ய நாஸம் ஹனு பேத பிஷணம் த்வி ஸ்ப்ர்சத் கயம்
அதிர்ஹ பிவர கிரிவோரு வஷஸ்தலம் -அல்ப மத்யம் சந்திராம்சு கௌரைஸ் சுரிதம் தனுருஹைர் விஸ்வக் புஜங்கிக-
சதம் நகாயுதம் துரஸ்தம் சர்வ நிஜேதர யுத ப்ரவேக வித்ரவித-தைத்ய தனவம்-

ஹிரண்யன் -ஸ்ரீ நரஸிம்ஹ ரூபம் கண்டான் -பயங்கர ரூபம் -உருகும் தங்கம் போன்ற கண்கள் -ஒளி வீசும் பயங்கர முகம் –
பயங்கர பற்கள் -ஒளி வீசும் வாள் போன்ற நாக்கு -நீண்ட அசையாத காதுகள் -குகை போன்ற மூக்குத் த்வாரங்கள் –
பயங்கரமாக அசையும் தாடைகள் -ஆகாசம் வரை வளர்ந்த திரு மேனி -குறுகிய அடர்ந்த கழுத்து -அகன்ற மார்பகம் –
குறுகிய இடை -சந்த்ர கிரணங்கள் போலே வெளுத்த ரோமங்கள் -திவ்ய ஆயுதங்கள் கொண்டு நிரசித்த அசுரர் ராக்ஷசர்
கூட்டங்கள் போலே திரு உகிராலே நிரசிக்க வல்ல திரு உருவம் )

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ -நம்முடை நம்பெருமாள் -திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நரஸிம்ஹ பரமான ஆறு சுவைகள் அனுபவம் – –

June 6, 2020

ஸ்ரீ அஹோபில நவ நரஸிம்ஹர் சேவை–
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ பரமான திரு நாமங்கள்-
ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டோத்ரம் –
ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டகம் —
ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்-
ஸ்ரீ பெரிய திரு மொழி ஸ்ரீ சிங்க வேள் குன்ற அனுபவம் –
ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தி கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை ஸ்ரீ ராமானுசன்
ஸ்ரீ நரஸிம்ஹ பரமான ஆறு சுவைகள் அனுபவம் – தேனும் பாலும் கன்னலும் அமுதுமான அனுபவம் —

ஸ்ரீ நவ நரசிம்மர் –ஒன்பது என்றும் புதிது புதிதாக அனுபவம் என்றும் உண்டே

அம்ருத்யு -யோகானந்த நரசிம்மர்
அஹோபில க்ஷேத்ரம் -காருட சைலம்–தாரஷ்யாத்ரி -ஸூ பர்ணாத்ரி–வேதாத்ரி -மேற்கு பகுதியில் சேவை –
ம்ருத்யு ம்ருத்யு -பதம் -மந்த்ர ராஜ கடைசி -இந்த திரு நாமம்
முதல் பாசுரம் இந்த நரசிம்மர் மங்களா சாசனம் –

சர்வ த்ருஷே நம-அடுத்த திரு நாமம் சர்வ த்ருக் -சர்வதோ முகம் -யுகபத்-அறியும் ஞானவான் – சர்வம் ஸர்வத்ர சர்வ இந்திரிய –
அஹோ விலம்–பலம் -குகைக்குள் பலத்துடன் -ஆஸ்ரித சம்ரக்ஷணம் –

ஓம் ஸிம்ஹாய நம -அடுத்து
பவ நாசினி -புண்ய தீர்த்தம் -பிறவி அறுக்கும் -திரு புளிய மரத்தின் அடியில் இருந்து பெருகும் தீர்த்தம்
அஹோபில நரசிம்மர்–மாலோலன் -மேல் சேவை -ஸ்வயம்பு -மூர்த்தி –எட்டாம் பாசுரம்
வீர-இரண்டாம் பதம் – -சாளக்ராம மூர்த்தி செஞ்சுல வல்லி-
அருகில் சின்ன குகையில் நான்முகனும் ருத்ரனும் -உண்டே –
திரு மங்கை ஆழ்வார் இத்தையும் நா தளும்ப நான்முகனும் ஈசனும் ஏத்த என்கிறார்
ஆறாம் பட்டம் ஜீயர் உள்ளே ஒரு இடத்தில் ஆராதனம் இன்றும் செய்வதாக ஐதிக்யம்-தடுப்பு வலை வைத்துள்ளார்கள் இங்கு
எம்பெருமானார் தனி சந்நிதியும் உண்டு இங்கு

ஓம் சந்தாத்ரே நம –203-ஆஸ்ரிதர்களை சேர்த்துக் கொள்பவர் —சந்தாதா -பார்க்கவ நரசிம்மர்–கீழேயே சேவை –
அடர்ந்த வனப்பு மிக்க வனப்பகுதி -சாந்த ஸ்வரூபம் -அக்ஷய தீர்த்தம் அருகில் உண்டு -வசிஷ்டர் தவம் செய்த இடம் –
இங்கு இருந்து தான் அஹோபிலம் முழுவதும் தீர்த்தம் விநியோகம் -அக்ஷயமான மோக்ஷம் அருளும் தீர்த்தம்
நான்காம் பாசுரம் -மங்களா சாசனம் -தெய்வம் அல்லால் செல்லா ஒண்ணாத –
தசாவதாரம் பிரபையில் சேவை-

அடுத்த சந்திமாந் -204–ஆஸ்ரிதரை கை விடாதவன் – மாலோலன் அன்றோ -அருகில் மடியிலே பிராட்டியும் உண்டே –
கிருபா வசாத் சந்நிஹிதானாம்-சஞ்சாரம் செய்து இன்றும் உலோகருக்கு கிருபை
மா லோல லஷ்மி நரசிம்மன்-அல்லி மாதர் புல்க நின்ற -அழகியான் தானே அரி உருவம் தானே
நல்லை நெஞ்சே நம்முடை நம் பெருமாள்-கீழே தன்னிடம் வந்த ஆஸ்ரிதர் -இங்கு இவனே சஞ்சரித்து ஆஸ்ரிதர்கள் இடம் சேர்கிறான்-
கனக தீர்த்தம் அருகில்
பத்ரன் -பதம் இதுக்கு -மந்த்ர ராஜ ஸ்லோகத்தில் –
ராம பத்ரன் -பல பத்ரன் -அங்கு எல்லாம் விசேஷித்து -இங்கு மட்டுமே பத்ரன் என்றாலே மாலோலன்

ஸ்திராய நம -205-குற்றங்களினாலும் மாற்ற முடியாத திண்மை
ஏய்ந்த–பாசுரம் -வராஹ- க்ரோடா நரசிம்மன் -சிம்ஹாசலம் போலே -பவ நாசினி கரை வழியாக சென்று –
உடைந்த கற்கள் பாறைகள் வழியாக -சிறு ஸீரிய மூர்த்தி முதல் ஸ்லோகம் -உக்ரம் பதம் இவனுக்கு -உத்புல்ல விசாலாக்ஷம்–
பெரு மலர் புண்டரிக கண் நம் மேல் ஒருங்க விடுவான் -மானமிலா பன்றியாம்
மஹா வராஹ -ஸ்புட பத்ர விசாலாக்ஷன்-

நம்மையும் நிலைத்து நிற்கச் செய்து அருளுபவர்

அஜாய நம -206-முனைத்த சீற்றம் -பாசுரம் -தூணில் இருந்து தோன்றியதால் -பாவன நரஸிம்ஹர்-சேவிப்பது சிரமம் —
செல்ல ஒண்ணாத சிங்க வேள் குன்றம்
செஞ்சு ஜாதி வேடுவர் -கூட்டம் கூட்டமாக சேவை -ஸ்தம்பே அவதாரணம் —
பரத்வாஜர் மகரிஷி -ப்ரஹ்மஹத்தி பாவம் போக்க இங்கே -தாபம் –
மஹா விஷ்ணும் -பதம் இவனுக்கு

துர் மர்ஷணாய நம -207-ஜ்வாலா நரசிம்மன்
ஐந்தாம் பாசுரம் -இவனுக்கு -பாவ நாசினி அருவியாகக் கொட்டும் இடம்
சாளக்ராம திரு மேனி இவர் –பொன்னன் உருகி விழுந்தான் இவனது கோப ஜ்வாலையால் –
பரந்தப-பரர்களை தபிக்கச் செய்பவன் ஜ்வலந்தம் -இவனுக்கு

ஓம் சாஸ்த்ரே நம -208-விரோதிகளை நன்றாக சிஷித்தவர்–சாஸ்தா -காரஞ்ச நரசிம்மன் -மேல் அஹோபிலம் அருகில் –
காரஞ்ச வ்ருக்ஷம் அருகில் -கையில் சார்ங்கம் பிடித்து -ராகவ சிம்மம் –
பெரியாழ்வார் -கண்டார் உளர் -நாண் ஏற்றி உள்ள வில் கொண்டு இரணியனை பிளந்தான் என்று அருளிச் செய்கிறார்
அலைத்த பேழ் வாய் -இரண்டாம் பாசுரம்-செஞ்சுல வல்லி -தாயார் வேடர் குலம் -அதனாலே வில் பிடித்து வசீகரம் பண்ண –
பீஷணம் –பயங்கரமானவன் -மந்த்ர ராஜ பதம் இவனுக்கு
முக்கண்களையும் சேவிக்கலாம் இவனுக்கு -காம க்ரோதங்கள் -ரோகங்கள் தீர்ப்பவன் -பீஷணன் –
சிலைக்கை வேடர்கள் ஆரவாரம் -ஆனந்த அதிசயம் -ஆஞ்சநேயர் இங்கு சேவை -விலக்ஷணம்-நரசிம்ம ராகவன் –
ஸூந்தரன்–அழகியான் தானே அரி உருவம் தானே –
மாரீசன் சுக்ரீவன் ராமனை நரசிம்ம ராகவன் -கிள்ளிக் களைந்த-வ்ருத்தாந்தம் தானே அங்குலய அக்ர-என்று அருளிச் செய்கிறான்

ஓம் விஸ்ருதாத்மநே நம – 209 –சத்ரவட நரசிம்மன் -குடை சத்ரம்–கிழக்கு நோக்கி திரு மகம் -ஆல மர நிழல்
மந்தஸ்மிதம் காட்டி சேவை
சரித்திரங்கள் வியந்து கேட்க்கும் படியான –என் சிங்க பிரான் பெருமை ஆராய முடியுமோ-
சாஷாத் ம்ருத்யு ம்ருத்யு -இவனே -ஆஸ்ரித ரக்ஷணம் -தனக்குத்தான் சரித்திரம் வியப்பு –
சங்கீர்த்தன சாஸ்திரம் வர இவனை உபாசனம் –
ஹாஹா ஹூ ஹூ -கந்தர்வர்கள் -வ்ருத்தாந்தம் -இன்னிசையால் பாடி மகிழ்வித்து தவம் செய்தார்கள் –
அன்னமாச்சார்யார் இங்கே பல கீர்த்தனைகள் -ஸ்தோத்ரம்
கீழ் அஹோபில க்ஷேத்ரம் அருகில் சேவை

ஸூராரிக்நே நாம–210- உக்ர ஸ்தம்பம் -ஆவிர்பவித்த ஸ்தம்பம்
நமது கம்பம் போக்கடிக்க ஸ்கம்பத்தில் ஆவிர்பாவம் -ஸ்கம்பமாகவே இங்கே சேவை -அனைத்து திரு நாமங்களும் இவனுக்கு

யோக நரசிம்மர் -பிரகலாதனுக்கு யோகம் அருளி -ஆடி ஆடி –நாடி நாடி நரசிங்கா –

செஞ்சுல வல்லி தாயார் குகை பாவன நரசிம்மர் சந்நிதி அருகில்

அஹோபில மட மூலவர் நரசிம்மர் -உத்சவர் சக்ரவர்த்தி திரு மகன் சீதா பிராட்டி இளைய பெருமாள் -திருவடி –
பெரிய பெரிய பெருமாள் -மூலவர் பெருமாள் உத்சவர் -ராம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் -உண்டே –

————

ஒன்பது நரசிம்மர்களின் விவரங்கள்-
அஹோபிலம் என்றாலே மேல் அஹோபிலம், அதாவது மலை மேல் இருக்கும் இடத்தைக் குறிப்பதாகும்.
ஏனெனில், அங்குதான், நரசிம்மர் அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தது.
எகுவ / மேல் / பெரிய அஹோபிலம் மற்றும் திகுவ / கீழ் / சிறிய அஹோபிலம் என்று பிரித்துக் காட்டப் படுகிறது.
திகுவ-கீழ் அஹோபிலத்தில் மூன்று நரசிம்மர் கோவில்கள் உள்ளன.
ஒரு கமஸ்கிருத சுலோகத்தில், ஒன்பது நரசிம்மர்கள் குறிக்கப்படுகிறார்கள்:

“ஜுவாலா அஹோபில மலோல க்ரோத கரஞ்ச பார்கவ
யோகனந்த க்ஷத்ரவத பாவன நவ மூர்த்தயாஹ”

எண் நரசிம்மர் தன்மை நரசிம்மர் பெயர் கிரகத்துடன் தொடர்பு படுத்துவது
1 ஜுவாலா ஜ்வாலா நரசிம்மர் செவ்வாய்
2 அஹோபில அஹோபில நரசிம்மர் குரு
3 மலோல மாலோல நரசிம்மர் வெள்ளி
4 க்ரோத வராஹ (குரோத) நரசிம்மர் ராகு
5 கரஞ்ச கரஞ்ச நரசிம்மர் திங்கள்
6 பார்கவ பார்கவ நரசிம்மர் சூரியன்
7 யோகனந்த யோகானந்த நரசிம்மர் சனி
8 க்ஷத்ரவத சக்ரவட நரசிம்மர் கேது
9 பாவன பாவன நரசிம்மர் புதன்
என்று வரிசைப்படுத்துகிறார்கள்.
ஆனால், நரசிம்மரின் “அனுஸ்டுப் மந்திரம்” விஷ்ணுவே ஒன்பது விதமான நரசிம்மர்களாக தோன்றி காட்சியளித்தார் என்றுள்ளது
தலவரலாற்றின்படி இந்த இடம் கருடகிரி [கருடாச்சலம், கருடசைலம்] என்று அழைக்கப்படுகிறது.
கருடருக்கு காட்சி கொடுக்கவே ஒன்பது இடங்களில் பெருமாள் நரசிம்மராக தோற்றம் அளித்தாராம்.
மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட “உக்கிர ஸ்தம்பம்’ (தூண்) உள்ளது.
திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம
வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அவற்றைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
இங்கே ஹிரணியனைக் கொன்ற பின் பிரகலாதனுக்கு வரம்கொடுக்கும் தோற்றத்தில் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார்.
இன்னொரு கதையின்படி இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் செஞ்சுக்கள்.
அவர்களின் குலத்தில் மகாலட்சுமி செஞ்சுலட்சுமியாக வந்து பிறந்தார்.
அவரை நரசிம்மர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்.
எனவே செஞ்சுபழங்குடியினர் வழிபட்ட / வழிபட்டுவரும் நரசிம்மர் கோயில்களாக இவை இருக்கின்றன.

———-

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ பரமான திரு நாமங்கள்-200-210 திரு நாமங்கள் -11–திரு நாமங்கள்

200-அம்ருத்யு
ம்ருத்யு வின் விரோதி -பிரகலாதனை மிருத்யு விடம் இருந்து ரஷித்து அருளி
நமன் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் -மூன்றாம் திரு -98-
நரசிம்ஹ அவதாரத்தில் ம்ருத்யுவுக்கும் ம்ருத்யுவானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அழிவோ அதற்குக் காரணமோ இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்
அழிவில்லாதவர்-அழிவைத் தராதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————-

201- சர்வ த்ருக் –
யாவரையும் பார்ப்பவன் -நியமிப்பவன்
இவையா எரி வட்டக் கண்கள் -நான் முகன் -21
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -பிரமாணங்கள் பார்த்து அருளிய நம் ராமானுசன்
நண்பர் பகைவர் நடுநிலையாளர் ஆகியோரை அவரவர்க்கு உரிய முறையில் நடத்துதல் பொருட்டு
உள்ளபடி பார்த்து அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளின் புண்ய பாவங்கள் எல்லாவற்றையும் இயற்கையான அறிவினால் எப்போதும் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
எல்லாவற்றையும் உள்ளபடி பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

202- சிம்ஹ
சிங்கப் பிரான்
இமையோர் பெருமான் அரி பொங்கக் காட்டும் அழகன் -நான் முகன் -21
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான் முகன் திரு -22
அசோதை இளம் சிங்கம்
மீண்டும் வரும் -489-தண்டிப்பவன்
மஹா நரசிம்ஹ ஸ்வரூபி -ஸ்ரீ பராசர பட்டர் –
நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
அருளைப் பொழிபவர் -சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

203-சந்தாதா –
பக்தர்களை தன்னிடம் சேர்த்து கொள்பவன்
யானையின் மஸ்தகத்தை பிளக்கும் சிங்கம் – குட்டிக்கு பால் கொடுக்கும்
பிரகலாதன் முதலிய பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்த்து வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளை வினைப் பயங்களுடன் சேர்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரஜைகளை நன்றாகத் தரிப்பவர் -போஷிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

204-சந்திமான் –
சந்தி சேர்க்கை நித்யமாக பண்ணுபவன் -மான் -மதுப் -நித்ய யோகம் -ஸ்ரீ மான் போலே
ஆஸ்ரிதர் தவறு செய்தாலும் என் அடியார் –செய்தாரேல் நன்று செய்தார் -என்பவன்
அவர்களுக்குத் தமது சேர்க்கை எக்காலமும் நீங்காமல் இருக்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வினைப்பயன்களை அனுபவிப்பவரும் தாமாகவே இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸூக்ரீவன் விபீஷணன் -முதலியவர்களுடன் உடன்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

205-ஸ்திர –
நிலையாய் நிற்பவன் -சலனம் அற்றவன்
நிலை பேரான் என் நெஞ்சத்து எம்பெருமான் எப்பொழுதும் -10-6-6-
நாம் பெற்ற நன்மையையும் அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் திரு -58-
அருளுகையே இயல்பாக உடையவன் –
கூடியிருக்கையில் அபசாரங்கள் செய்தாலும் அன்பு மாறாமல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் ஒரே தன்மையுடன் மாறுபாடு இல்லாமல் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எப்பொழுதும் நிலையாக உள்ளவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

206-அஜ –
பிறப்பிலி -ஸ்தம்பம் -நம் போல் பிறவாதவன் –
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுவே -பெரியாழ்வார் -1-6-9
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் -2-8-9-
அஜன் -யாவரையும் வெற்றி கொள்பவன் அகார வாச்யன் 96/514-
தூணில் தோன்றியதால் பிறரைப் போல் பிறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வ்யாபிப்பவர் -நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
பிறப்பில்லாதவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

207-துர்மர்ஷண-
எதிரிகளால் தாங்க முடியாத தேஜஸ் -ஹிரண்யன் பொன் உருகுமா போலே உருக்கிய தேஜஸ்
இவையா பிலவாய் இவையா எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
குடல் மாலை சீரார் திரு மார்பின் மேல் கட்டி ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -சிறிய திருமடல்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் -9-10-6-
பகைவர்களால் தாங்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ரதாங்க சங்க தாதாரம் ப்ருஹ்ம மூர்த்திம் ஸூ பீஷணம் –த்யான ஸ்லோகம்
அசுரர்களால் அடக்குவதற்கு முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –
எதிர்க்க முடியாதவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

208-சாஸ்தா –
சாசனம் பண்ணுமவன்
ஒரு மூ யுலகாளி -9-8-9-
சிம்ஹ கர்ஜனையால் சிஷிப்பவன் -இகலிடத்து அசுரர்கள் கூற்றம் -9-2-2-
இப்படி விரோதிகளை நன்கு தண்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
நிநாத வித்ராசித தானவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கர்ஜனை மூலம் அசுரர்களை நடுங்க வைப்பவன்
த்ரவந்தி தைத்யா -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -திரு நாமத்தை உச்சரித்த உடன் அசுரர்கள் ஓடிச் செல்கின்றனர்
வேதம் முதலியவற்றால் கட்டளையிட்டு நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகிற்குக் கட்டளை இடுபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

209-விஸ்ருதாத்மா –
வியந்து கேட்கப்படும் சரித்ரம்
என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -2-8-9-
யாவராலும் வியந்து கேட்க்கத் தக்க ஸ்ரீ நரசிம்ஹ திருவவதார சரித்ரத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அசேஷ தேவேச நரேஸ்வர ஈஸ்வரை -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -திவ்ய சரிதம் அனைவராலும் கேட்கப்படும்
வேதத்தில் விசேஷமாகக் கூறப்பட்ட சத்யம் ஞானம் முதலிய லஷணம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
புகழ் பெற்ற ஸ்வரூபம் யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

210- ஸூராரிஹா –
தேவர்கள் எதிரிகளை முடிப்பவன்
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே -8-1-4-
ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கையன் -பெரியாழ்வார் -1-6-9-
தேவர்களுக்கு விரோதியான ஹிரண்யன் மார்பைப் பிளந்து கொன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத் சத்த்வ கரஜ ஸ்ரேணி தீப்தேந உபய பாணிநா சமயச்சத யதா சம்யக் பயாநாம் ச அபயம் பரம் -த்யான ஸ்லோகம் –
திரு நகங்களின் தேஜஸ்ஸாலே சம்சார பயத்தை போக்கி அபயம் அளிக்கிறார்
தேவர்களுக்கு விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டோத்ரம் —

1. ஓம் நர சிம்காய நம
2. ஓம் மகா சிம்காய நம
3. ஓம் திவ்ய சிம்காய நம
4. ஓம் மகா பலாய நம
5. ஓம் உக்ர சிம்காய நம
6. ஓம் மகாதேவாய நம
7. ஓம் சம்பாஜெய நம
8. ஓம் உக்ர லோகன்யாய நம
9. ஓம் ரதுராய நம
10. ஓம் சர்வ புதியாய நம
11. ஓம் ஸ்ரீமான்யாய நம
12. ஓம் யோக நந்தய நம
13. ஓம் திருவிக்ர மயா நம
14. ஓம் ஹாரினி நம
15. ஓம் ஹோலகலயா நம
16. ஓம் ஹாக்ரினி நம
17. ஓம் விஜயாய நம
18. ஓம் ஜெய வர்தநய நம
19. ஓம் பஞ்ச நாய நம
20. ஓம் பரமகய நம
21. ஓம் அகோரய நம
22. ஓம் கோர விக்ராய நம
23. ஓம் ஜிவாலன்முகாய நம
24. ஓம் ஜிவாலா மலின் நம
25. ஓம் மகா ஜிவாலாய நம
26. ஓம் மகா பிரபாஹய நம
27. ஓம் நித்திய லக்சய நம
28. ஓம் சகஸ்சர கசாய நம
29. ஓம் துர்றிகாசாய நம
30. ஓம் பர்தவானாய நம
31. ஓம் மகா தமாஸ்திரேய நம
32. ஓம் யத பரஞ்ஜனய நம
33. ஓம் சண்ட கோபினே நம
34. ஓம் சதா சிவாய நம
35. ஓம் இரணிய கசிபு தேவ மிசைன் நம
36. ஓம் திவ்விய தானவ பஜனய நம
37. ஓம் கன பகராய நம
38. ஓம் மகா பத்ராய நம
39. ஓம் பல பத்ராய நம
40. ஓம் சூபத்ராய நம
41. ஓம் கராலிய நம
42. ஓம் விக்ராயை நம
43. ஓம் விகர்த்ரே நம
44. ஓம் சர்வ கத்துருகாய நம
45. ஓம் சிசுமராய நம
46. ஓம் திரி லோக தர்த மனே நம
47. ஓம் ஜய்சிய நம
48. ஓம் சரவேஸ்ராய நம
49. ஓம் விபாய நம
50. ஓம் பரகம் பனாய நம
51. ஓம் திவ்யாய நம
52. ஓம் அகம்பாய நம
53. ஓம் கவின் நம
54. ஓம் மகா தேவியே நம
55. ஓம் அகோஜெய நம
56. ஓம் அக்சேரயா நம
57. ஓம் வனமலின் நம
58. ஓம் வரப ரதேய நம
59. ஓம் விஸ்வம்பராய நம
60. ஓம் அதோத்யா நம
61. ஓம் பராப ராய நம
62. ஓம் ஸ்ரீ விஷ்ணவ நம
63. ஓம் புருசோத்தமயா நம
64. ஓம் அங்கோஸ்ரா நம
65. ஓம் பக்தாதி வத்சலாய நம
66. ஓம் நாகஸ்ராய நம
67. ஓம் சூரிய ஜோதினி நம
68. ஓம் சூரிஷ்வராய நம
69. ஓம் சகஸ்ர பகுய நம
70. ஓம் சர்வ நய நம
71. ஓம் சர்வ சித்தி புத்தாய நம
72. ஓம் வஜ்ர தம்ஸ்திரய நம
73. ஓம் வஜ்ர நகய நம
74. ஓம் மகா நந்தய நம
75. ஓம் பரம் தபய நம
76. ஓம் சர்வ மந்திரிக நம
77. ஓம் சர்வ யந்திர வித்ரமய நம
78. ஓம் சர்வ தந்திர மகாய நம
79. ஓம் அக்தாய நம
80. ஓம் சர்வ தய நம
81. ஓம் பக்த வத்சல நம
82. ஓம் வைசாக சுக்ல புத்யாய நம
83. ஓம் சர நகத நம
84. ஓம் உத்ர கீர்த்தினி நம
85. ஓம் புண்ய மய நம
86. ஓம் மகாத் மய நம
87. ஓம் கந்தர விக்ர மய நம
88. ஓம் வித்ரயாய நம
89. ஓம் பரபுஜ்யாய நம
90. ஓம் பகாவான்ய நம
91. ஓம் பரமேஸ்வராய நம
92. ஓம் ஸ்ரீவத் சம்ஹய நம
93. ஓம் ஜெத்யாமினி நம
94. ஓம் ஜெகன் மயாய நம
95. ஓம் ஜெகத்பலய நம
96. ஓம் ஜெகனாதய நம
97. ஓம் தேவி ரூபா பார்வதியாய நம
98. ஓம் மகா ஹகாய நம
99. ஓம் பரமத் மய நம
100. ஓம் பரம் ஜோதினி நம
101. ஓம் நிர்கனய நம
102. ஓம் நர்கேஷ் ஸ்ரீனி நம
103. ஓம் பரதத்வய நம
104. ஓம் பரம் தமய நம
105. ஓம் ஷா சித் ஆனந்த விக்ரகய நம
106. ஓம் லட்சு-மி நரசிம் கய நம
107. ஓம் சர்வ மய நம
108. ஓம் த்ரய நம

———

ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டகம் –

ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் பிராணிகளைக் கரை மரம் சேர்ப்பதற்கு உரிய தோணி போன்றதான
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் உடைய திருவடித் தாமரைகளை தஞ்சமாக பற்றுகிறேன் என்றவாறே –

ஸ்ரீ பெருமாள் கோயில் கரிகிரியின் கீழ்க் காட்சி தந்து அருளா நிற்கும் ஸ்ரீ அழகிய சிங்கர் விஷயம் என்றும்
ஸ்ரீ திரு வல்லிக் கேணி ஸ்ரீ தெள்ளிய சிங்கர் விஷயமாகவும் பணித்து அருளிய ஸ்லோகம் –

———————————————————————————————————————————————

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம்
தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ—————1-

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி -ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த–அழகியவாயும்-களங்கம் அற்றவையுமாயும் உள்ள-
பல வாயிரம் பௌர்னமி சந்திரர்களின் சோபையைத் தாங்குகின்ற மநோ ஹரமான உளை மயிர் திரள்களினால் –
சடாபடலம் -உளை மயிர்க் கற்றைகளாலே அழகியவரே —அழகியான் தானே அரி யுருவன் தானே –
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம் தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ ––கருணைக்கு இருப்பிடமானவரே
ஆசூர வர்க்கங்களுக்கு யமன் போன்ற அழகிய சிங்கப் பெருமாளே –
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ் புக நின்ற செங்கண்மால் -திருவாய் மொழி -3-6-6-
தைத்யவர் -இரணியன் போன்ற ஆசூர பிரக்ருதிகள்
காலன் -மிருத்யு
சம்சாரக் கடலில் வீழ்ந்த அடியேனை ரஷித்து அருள வேணும் –
நரசிம்ஹ நரசிம்ஹ -இரட்டிடித்துச் சொல்லுகிறது ஆதார அதிசயத்தினால் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் அடியேனுக்கு தேவரீர் உடைய திருவருள் அல்லது வேறு புகல் இல்லை என்றார் -ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————-

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம்
பாதக தவா நல பதத்ரிவரகேதோ
பாவந பராயண பவார்த்தி ஹரயா மாம்
பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ–2

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம் – தனது திருவடித் தாமரைகளில் வணங்கின பாபிஷ்ட ஜனங்களின் உடைய பாபங்களுக்கு
பாதக தவா நல –காட்டுத் தீ போன்றவனே
பதத்ரிவரகேதோ –பஷி ராஜனான பெரிய திருவடியைக் கொடியாக யுடையவனே –
பாவந பராயண –தன்னைச் சிந்திப்பார்க்கு பரகதியாய் யுள்ளவனே -உபாயமும் உபேயமுமாக இருப்பவனே
பவார்த்தி ஹரயா மாம் -பாஹி க்ருபயைவ – சம்சாரத் துன்பங்களைப் போக்க வல்ல உனது கருணையினாலேயே
அடியேனைக் காத்தருள வேணும்-போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
க்ருபயைவ -என்பதால்-ஏவ காரத்தால் என் பக்கலில் ஒரு கைம்முதல் எதிர் பார்க்கலாகாது என்கிறது –
நரசிம்ஹ நரசிம்ஹ–அழகிய சிங்கப் பெருமானே-

——————————————————————————————————————————————————————-

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக்
பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர
பண்டித நிதான கமலாலய நமஸ் தே
பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ——3-

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக் பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர –-நீண்ட திரு வுகிற் வரிசைகளினால்
பிளக்கப் பட்டவனான ஹிரண்யாசூரனுடைய உதிரக் குழம்பாகிற புதுமை மாறாத கும்குமச் சாறு தன்னால் வ்யாப்தமாய் இருக்கிற
அகன்ற திரு மார்பை யுடையவரே –

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் போன்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -என்றும் –

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல் கட்டிச் செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -என்றும் சொல்லுகிறபடியே

பண்டித நிதான-அறிஞர்கட்கு நிதி போன்றவரே-வைத்த மா நிதி இறே
நிதியானது உள்ளே பத்தி கிடந்தது ஒரு கால விசேஷத்திலே பாக்யவாங்களுக்கு வெளிப்படுமா போலே –
கமலாலய – பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமானவரே –-கமலை கேழ்வனே-
நரசிங்க வுருக் கொண்ட போது மூவுலகும் அஞ்சிக் கலங்கிப் போகும்படியான சீற்றம் உண்டானது கண்டு
அதனைத் தணிக்க ஸ்ரீ மகா லஷ்மி வந்து குடி கொள்ள ஸ்ரீ லஷ்மி நருசிம்ஹன் ஆன்மை இங்கு நினைக்கத் தக்கது
பங்கஜ நிஷண்ண – ஆசன பத்மத்திலே எழுந்து அருளி இருப்பவரே –-தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான் -என்றபடி –
நரசிம்ஹ நரசிம்ஹா –நமஸ் தே உமக்கு வணக்கமாகுக –

————————————————————————————————————————————————————————–

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்
யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ் ஸூ நிகமா நாம்
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்நி நரசிம்ஹ நரசிம்ஹ—————–4-

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்- அமரவராணாம் மௌலிஷூ விபூஷண –சிறந்த தேவர்களின் முடிகளின் மீதும்
அமரர்கள் சென்னிப் பூ இறே
யோகி ஹ்ருதயேஷூ – யோகிகளின் உள்ளத்திலும் –
ச சிரஸ் ஸூ நிகமா நாம் – வேதாந்தங்களிலும் – வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு
மௌலிஷூ விபூஷண–சிறந்த தொரு பூஷணம் போன்று விளங்குகின்ற –
விபூஷணம் எனபது சப்தம் எந்த பதங்கள் எல்லாவற்றிலும் அந்வயிக்கக் கடவது
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்நி – தாமரை போல் அழகிய தேவரீருடைய திருவடி இணையை
என் சென்னி மீது வைத்து அருள வேணும் –

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் யாழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்றும்

நரசிம்ஹ நரசிம்ஹ-

——————————————————————————————————————————————————————

வாரிஜ விலோசன மதநதி மதசாயம்
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்ய விஹகா நாம்
நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ———————5-

வாரிஜ விலோசன – செந்தாமரைக் கண்ணரே –
கிண் கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-செங்கண் சிறுத் சிறிதே எம்மேல் விழித்து அருள வேணும்
சரண்ய-அடியேன் போல்வார்க்குத் தஞ்சமானவரே –
மதநதி மதசாயம் –என்னுடைய சரம அவஸ்தையிலே
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம் – சமஸ்த கரணங்களையும் -செவி வாய் -கண் -முதலான –
க்லேசத்துக்கு வசப்படுதுமதான அந்த சரம அவஸ்தையிலே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்றும்

மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை யுள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண் உறக்கமதாவது -என்றும்

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற -என்றும் –

காஷ்ட பாஷான சந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்றும்

ஏஹி ரமயா சஹ விஹகா நாம் நாதமதி ருஹ்ய –ரமயா சஹ விஹகாநாம் நாதம் அதிருஹ்ய ஏஹி
பிராட்டியோடு கூடப் பெரிய திருவடி மேல் ஏறிக் கொண்டு அடியேன் பால் வந்து அருள வேணும் –

பறவை ஏறு பரம் புருடனாய்ப் பிராட்டியோடும் கூட எழுந்தருளி பாவியேனைக் கை கொண்டு அருள வேணும்
என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று

நரசிம்ஹ நரசிம்ஹ-

————————————————————————————————————————————————————————-

ஹாடக கிரீட வரஹார வநமாலா
தார ரசநா மகர குண்டல ம ணீந்த்ரை
பூஷிதம சேஷ நிலயம் தவ வபுர் மே
சேதசி சகாஸ்து நரசிம்ஹ நரசிம்ஹ–6-

ஹாடக கிரீட –பொன்மயமான சிறந்த மகுடம் என்ன
வரஹார வநமாலா –வைஜயந்தி என்னும் வனமாலை என்ன
தார ரசநா –முத்து மயமான அரை நாண் என்ன –
தாரம் -என்று முத்துக்குப் பெயர்-நஷத்ரவடம் என்கிற திரு ஆபரணத்தை சொல்லிற்றாகவுமாம்
மகர குண்டல ம ணீந்த்ரை – திரு மகரக் குழைகள் என்ன –
மணீந்த்ரை –ரத்னா வாசகமான இந்த சப்தம் லஷண்யா ரத்ன பிரசுர பூஷண வாசகம் ஆகலாம் –
பூஷிதம – ஆகிய இத் திரு ஆபரணங்களினால் அலங்கரிக்கப் பட்டதும் –

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ ஆழிகளும் கிண் கிணியும்
அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியுமான
திரு வாபரணங்கள் அணிந்த திரு மேனியே தமது திரு உள்ளத்தில் திகழ வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

அசேஷ நிலயம் –எங்கும் வ்யாபித்ததுமான-அசேஷத்தையும் நிலையமாக வுடைத்தான -என்கை
நிலய சப்தம் நித்ய பும்லிங்கம் ஆகையாலே இங்கு பஹூரீவ்ஹியாகக் கடவது

தவ வபுர்- தேவரீர் உடைய திரு மேனி
மே சேதசி சகாஸ்து –என் நெஞ்சின் உள்ளே விளங்க வேணும்
நரசிம்ஹ நரசிம்ஹ ––அழகிய சிங்கப் பெருமாளே-

———————————————————————————————————————————————————————————–

இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லசத்வர ரதாங்க
ஸூந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்திதித ஸூரேச நரசிம்ஹ நரசிம்ஹ—7-

இந்து ரவி பாவக விலோசன –சந்தரன் சூர்யன் அக்னி இவர்களை திருக் கண்ணாக யுடையவரே –
தீப் பொறி பறக்கும் நெற்றிக்கண் உண்டே -அதனால் அக்னியை சேர்த்து அருளுகிறார்
ரமாயா மந்திர – பெரிய பிராட்டியாருக்கு திருக் கோயிலாக இருப்பவரே –
அந்த நெற்றிக் கண்ணை அவிப்பதற்காக பிராட்டி வந்து திரு மேனியில் வீற்று இருந்த படியாலே ரமாயா மந்திர -என்றார் –
மஹா புஜ லசத்வர ரதாங்க–தடக்கையிலே விளங்கும் சிறந்த திரு ஆழி ஆழ்வானை யுடையவரே –
மஹா புஜ லசத் தரரதாங்க -என்றும் பாட பேதம்
தரம் -என்று சங்குக்குப் பெயர் ஆதலால்-சங்கு சக்கரம் இரண்டையும் சேரச் சொன்னபடி ஆகவுமாம்
ஸூந்தர – அழகு பொலிந்தவரே-
சிராய ரமதாம் த்வயி மநோ மே–அடியேனுடைய மனமானது தேவரீர் இடத்தில் நெடும்காலம் உகப்பு கொண்டு இருக்க வேணும்
நந்திதித ஸூரேச –அமரர் கோன் துயர் தீர்த்தவரே –
நரசிம்ஹ நரசிம்ஹ-

———————————————————————————————————————————————————–

மாதவ முகுந்த மது ஸூதன முராரே
வாமன நருசிம்ஹ சரணம் பவ நதா நாம்
காமத கருணின் நிகில காரண நயேயம்
காலமமரேச நரசிம்ஹ நரசிம்ஹ——8-

மாதவ –திருமாலே –
முகுந்த –முக்தி அளிக்கும் பெருமானே –
மது ஸூதன –மது கைடபர்களை மாய்த்தவனே
முராரே –நரகா ஸூர வதத்தில் -முரனைக் கொன்றவனே
வாமன-குறள் கோலப் பெருமானே
நருசிம்ஹ –நரம் கலந்த சிங்கமே –
சரணம் பவ நதா நாம் –அடி பணிந்தவர்களுக்குத் தஞ்சமாவாய் –
காமத–அபேஷிதங்களை எல்லாம் அளிப்பவனே –
கருணின் –தயாளுவே –
நிகில காரண –சகல காரண பூதனே
காலம் நயேயம் –யமனையும் அடக்கி யாளக் கடவேன் –
பொருள் சிறவாது
உன்னை வாழ்த்தியே வாழ் நாளைப் போக்கக் கடவேன் –
அமரேச –அமரர் பெருமானே
நரசிம்ஹ நரசிம்ஹ –இங்கனே உன் திரு நாமங்களை வாயார வாழ்த்திக் கொண்டே
என் வாழ் நாளைப் போக்கக் கடவேன்

க்ரோசன் மதுமதன நாராயண ஹரே முராரே கோவிந்தேதி அனிசமப நேஷ்யாமி திவசான் -ஸ்ரீ பட்டர்

——————————————————————————————————————————————————–

அஷ்டகமிதம் சகல பாதக பயக்தம்
காம தம சேஷ துரி தாம யரி புக்நம்
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே
கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ–9-

அஷ்டகமிதம் –எட்டு ஸ்லோகங்களினால் அமைந்த இந்த ஸ்தோத்ரத்தை –
சகல பாதக பயக்தம் –சகல பாபங்களையும் சகல பயன்களையும் போக்கடிப்பதும்
பாதகம் -மஹா பாதகங்களை -குறிக்கும்
காம தம –சகல அபேஷிதங்களையும் அளிப்பதும்
சேஷ துரி தாம யரி புக்நம் –சகல விதமான பாபங்களையும் பிணிகளையும் பகைவர்களையும் நிரசிப்பதுமான –
துரிதம் -உபபாதகங்களை
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ –யாவன் ஒருவன் கற்கின்றானோ
அவ்வதிகாரி அனைவருக்கும் ப்ராப்யமான தேவரீர் உடைய திவ்ய ஸ்தானத்தை அடைந்திடுவான்
நரசிம்ஹ நரசிம்ஹ –

இதனால் இந்த ஸ்தோத்ரம் கற்றாருக்கு பலன்சொல்லித் தலைக் கட்டுகிறார்
அநிஷ்ட நிவாரணம்-இஷ்ட ப்ராபணம் ஆகிற இரண்டுக்கும் கடவதான இந்த ஸ்தோத்ரத்தை
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வர் என்று பேறு கூறித் தலைக் கட்டினார் ஆயிற்று

ஸ்ரீ தெள்ளிய சிங்க பெருமாள் அக்காராக் கனி திருவடிகளே சரணம்

———-

ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் —

வருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீஷிதம்
நிதாத்ரஸ்தா விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம் யஹம் –

சர்வை ரவத்யதாம் பிராப்தம் சபலவ்கம் திதே ஸூ தம்
நகாக்ரை ஸகலீ யஸ்தம் வீரம் நமாம் யஹம் –

பாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரி விஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம் யஹம் –

ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வல நாதீன் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம் யஹம் –

ஸர்வேந்த்ரியை ரபி விநா சர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜா நாதி யோ நமாம் யாத்யம் தமஹம் சர்வதோமுகம் —

நரவத் ஸிம்ஹ வஸ்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மன
மஹாஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் நரஸிம்ஹம் நமாம் யஹம் –

யன்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணயஸ் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் –

ஸர்வோபி யம் ஸமாச்ரித்ய சாகலாம் பத்ரமஸ்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம் யஹம் –

சாஷாத் ஸ்வ காலே சம்பிராப்தம் ம்ருத்யும் சத்ரு குணா நபி
பக்தா நாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –

நமஸ்காராத் மஹம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம்
த்யக்த துக்கோ கிலான் காமான் அஸ்நுதே தம் நமாம் யஹம் –

தாஸ பூதா ஸ்வத சர்வே ஹயாத்மாந பரமாத்மன
அதோ ஹமபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –

சங்க ரேணாதராத் ப்ரோக்தம் பதா நாம் தத்வமுத்தமம்
த்ரி சந்த்யம் யா படேத் தஸ்ய ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே

————–

ஸ்ரீ பெரிய திரு மொழி ஸ்ரீ சிங்க வேள் குன்ற அனுபவம்– 1-7-அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்–

அந்த ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம் பிற்பட்டார்க்குப் பயன்படாமல் போயிற்றே என்று வயிறு எரிய வேண்டாதபடி
நாம் ஸ்ரீ சிங்க வேள் குன்றம் என்னும் விலஷணமான திவ்ய தேசத்திலே நித்ய சந்நிதியும் பண்ணி வைத்து இருக்கிறோமே –
ஆஸ்ரிதர் விஷயத்தில் நாம் இப்படி பரிந்து கார்யம் செய்வோம் என்பது உமக்குத் தெரியாதோ –
ஏன் நீர் வருந்துகின்றீர் என்று அருளிச் செய்ய-
ஸ்ரீ ஆழ்வாரும் பரம சந்தோஷம் அடைந்து -அந்த ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தையும்
திவ்ய தேசத்தையும் அனுபவித்து இனியராகிறார் –

கீழ்த் திருமொழியில் ஒன்பதாம் பாட்டில் -தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே -என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டு
சரணாகதி செய்தது போலே
இத் திரு மொழியிலும் ஒன்பதாம் பாட்டில் அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்-என்று
ஸ்ரீ லஷ்மி சம்பந்தத்தை முன்னிட்டே அனுபவிக்கிறார் –

இத் திருமொழியில் எட்டாம் பாட்டு வரையில் ஒவ் வொரு பாட்டிலும் முன்னடிகளில் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தையும்
பின்னடிகளில் ஸ்ரீ சிங்க வேள் குன்றத்தின் நிலைமையும் வர்ணிக்கப் படுகின்றன –

இத்திருப்பதியின் திரு நாமம் ஸ்ரீ அஹோபிலம் -என வழங்கப் படும் -இது வட நாட்டுத் திருப்பதிகளில் ஓன்று
ஸ்ரீ சிங்க வேள் குன்றம் -என்றும் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் -என்றும் இதனை வழங்குவர்
வேள் -யாவராலும் விரும்பப் படும் கட்டழகு உடையரான பெருமாள் எழுந்து அருளிய -ஸ்ரீ திருமலை – என்று –
ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தி எழுந்து அருளி இருக்கின்ற ஏழு குன்றங்களை யுடைய திவ்ய தேசம் என்றுமாம் –
இத்தலம் சிங்கம் புலி முதலிய பயங்கரமான விலங்குகள் சஞ்சரிக்கப் பட்ட
கல்லும் புதரும் முள்ளும் முரடுமான கொடிய அரணியமாக இருப்பது இத் திரு மொழியால் நன்கு விளங்கும்
இப்படிப்பட்ட பயங்கரமான துஷ்ட மிருகங்களும் கொடிய வேடர் முதலானவர்களும் அத்தலத்தின் கண் இருப்பதும்
மங்களா சாசன பரரான நம் ஆழ்வார்களுக்கு ஒருவகையான ஆனந்தத்துக்கு ஹேது வாகின்றது போலும் –
எல்லாரும் எளிதாக வந்து அணுகக் கூடிய தேசமாய் இருந்தால் ஆசூர பிரக்ருதிகளும் பலர் வந்து
ஸ்ரீ எம்பெருமானுக்கு ஏதாவது தீங்கு இழைக்கக் கூடுமோ என்கிற அச்சத்துக்கு அவகாசம் இல்லாமல்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்னும்படி கஹநமாய் இருப்பது மங்களா சாசன
ருசி யுடையாருக்கு மகிழ்ச்சியே இறே-

—————————————————————

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-

பக்த சிரோமணியான ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த துன்பங்களை சஹிக்க முடியாமையினாலே
ஸ்ரீ எம்பெருமான் அளவற்ற சீற்றம் கொண்டு பயங்கரமான ஒரு திருவுருவத்தை ஏறிட்டுக் கொண்டான் –
அந்தச் சீற்றம் ப்ரஹ்லாத விரோதியான இரணியன் அளவிலே மாத்ரமே யுண்டானாலும்
அளவு மீறி இருந்தததனால்
உலகங்கட்கு எல்லாம் உப சம்ஹாரம் விளைந்திடுமோ
என்று அனைவரும் அஞ்சி நடுங்கும்படி இருந்தது பற்றி
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்-என்கிறார் –
வியாக்யான ஸ்ரீ ஸூக்தி-நரசிம்ஹம் ஆயிற்று ஜகத் ரஷணத்துக்காக இறே -அங்கனே இருக்கச் செய்தேயும்
விளைவது அறியாமையினாலே ஜகத்தாக நடுங்கிற்று ஆயிற்று –
இது எவ்வளவாய்த் தலைக் கட்டுகிறதோ என்று இருந்ததாயிற்று
இனி அங்கண் ஞாலம் அஞ்ச-என்பதற்கு இரணியனுடைய ஒப்பற்ற தோள் வலியைக் கண்டு
உலகம் எல்லாம் அஞ்சிக் கிடந்த காலத்திலே என்றும் பொருள் உரைப்பார் –
அங்கு -என்றது -எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து -இங்கு யில்லையா என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் -என்கிறபடியே
இரணியன் எந்த இடத்தில் எம்பெருமான் இல்லை என்று தட்டினானோ அந்த இடத்திலேயே -என்றபடி
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க யுருவாய் -என்றார் ஸ்ரீ பெரியாழ்வாரும் –

அவுணன் பொங்க -அசுரர்கட்கு அவுணன் என்று பெயர் -இங்கு ஹிரண்யாசுரனைச் சொல்லுகிறது
இவன் அன்று வரையில் தனக்கு எதிரியாக தன் முன்னே வந்து தோற்றின ஒருவரையும் கண்டு அறியாமல்
அன்று தான் புதிதாக ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியாகிய எதிரியைக் கண்டபடியால் கண்ட காட்சியிலே கொதிப்பு அடைந்தானாம் –
அப்படி அவன் கொதிப்படைந்த அளவிலே அவனது ஆகத்தை மார்வை –
தீஷணமான திரு நகங்களாலே கிழித்து எறிந்தனன் ஸ்ரீ எம்பெருமான் –
பொங்க என்பதுக்கு ஆகத்தை அடை மொழியாக்கி அவுணன் யுடைய அகன்ற மார்பை என்றும் உரைப்பர் –

போழ்ந்த புனிதன் –
புனிதன் என்றால் பரிசுத்தன் என்றபடி
இரணியனது மார்பைப் பிளந்ததால் என்ன பரிசுத்தி யுண்டாயிற்று -என்று கேட்கக் கூடும்
ஜகத்தை சிருஷ்டித்தல் முதலிய தொழில்களில் பிரமன் முதலானவர்களைக் ஏவிக் கார்யம் நடத்தி விடுவது போலே
பிரஹ்லாதனை ரஷிப்பதிலும் ஒரு தேவதையை ஏவி விடாமல் தானே நேராக வந்து தோன்றி
கை தொட்டு கார்யம் செய்வதமையே இங்கே பரிசுத்தி எனக் கொள்க –
இப்படி பரிசுத்தனான ஸ்ரீ எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஏது என்றால்-
அது எப்படிப் பட்டது என்னில்- சிங்கம் யானை முதலிய பிரபல் ஜந்துக்கள் திரியும் இடம் அது என்பதைக் காட்டுகிறார் பின்னடிகளில் –
பகவானுடைய சந்நிதான மகிமையினால் அவ்விடத்து மிருகங்களும் பகவத் பக்தி மிக்கு இருக்கின்றன என்கிறார் –
சிங்கங்கள் யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து
பெருமான் திருவடிகளில் சமர்பித்து வணங்கு கின்றனவாம் –
புருஷோ பவதி ததன்னாஸ் தஸ்ய தேவதா –எந்த எந்த உயிர்கட்கு எது எது ஆஹாரமோ-அந்த அந்த உயிர்கள்
அந்த ஆஹாரத்தைக் கொண்டு தம் தேவதைகளை ஆதாரிக்கும் –
என்கிற சாஸ்திரம் ஆதலால் யானைகளின் அவயவங்களை ஆகாரமாக யுடைய சிங்கங்களும்
யானைத் தந்தங்களைக் கொண்டு பகவத் ஆராதனம் நடத்துகின்றன -என்க
ஆளி -என்று சிங்கத்துக்கும் யாளிக்கும் பெயர் -இங்கே சிங்கத்தைச் சொல்லுகிறார்

செங்கண்-வியாக்யான ஸ்ரீ ஸூக்தி -இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே இருக்கச் செய்தேயும்
பகவத் பக்தி ஒருபடிப் பட்டுச் செல்லும் ஆயிற்று –
சீற்றம் விக்ருதியாய் -பகவத் பக்தி ப்ரக்ருதியாய் இருக்கும் ஆயிற்று –

——————————————————-

அலைத்த பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே—1-7-2-

அலைத்த பேழ்வாய் –
சீற்றத்தாலே கடைவாய் யுடனே நாக்கை ஏற்றிக் கொள்ளுகிற பெரிய வாயை யுடைய ஸ்ரீ நரசிம்க மூர்த்தியாய்த் தோன்றி
பரஹிம்சையாகப் போது போக்கின இரணியனுடைய மார்பைப் பிளந்த ஸ்ரீ பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம்
அவ்விடத்தின் நிலைமையைப் பேசுகிறார் பின்னடிகளில் -தீர்த்த யாத்ரையாகப் பலர் அங்கே செல்லுகின்றாராம் –
அவர்களை அவ்விடத்து வேடர்கள் வந்து தகைந்து சண்டை செய்வார்கள் -பரஸ்பரம் பெரும் சண்டை நடக்கும்
அந்த சண்டையிலே வேடர்கள் பறை ஓசையும் வில் ஓசையும் இடைவிடாது இருந்து கொண்டே இருக்கும் –
இதுவே அத்தலத்தின் நிலைமை என்கிறார் -உள்ளதை உள்ளபபடி சொல்ல வேண்டும் இறே

மலைத்த செல் சாத்து –
மலைத்தலாவது ஆக்கிரமித்தல் –வேடர்களால் ஆக்கிரமிக்கப் பட்ட -என்றாவது
வேடர்களை எதிர் இட்டு ஆக்ரமித்த என்றாவது பொருள் கொள்ளலாம்
வேடர்கள் வந்து பொருகிற போது தாங்கள் வெறுமனிரார்கள் இறே –
தாங்களும் பிரதியுத்தம் செய்வார்களே இறே -அதைச் சொல்லுகிறது என்னலாம் –
செல் சாத்து –
வடமொழியில் சார்த்தம் -சமூஹம் போலே இங்கே சாத்து -யாத்ரை செய்பவர்களின் கூட்டம்
பூசல் யுத்தம் பெரிய கோஷம்
வேடர்களால் ஆக்கிரமிக்கப் பட்ட வழிப் போக்கர்கள் போடும் கூச்சல் பெரிய பறை அடிப்பது போலே ஒலிக்கின்றது -என்றும்
வேடர்கள் வழிப் போக்கர்களை மறித்து செய்கிற சண்டையிலே வேடர்கள் யுடைய பறைகள்
கர்ண கடூரமாக ஒலிக்கின்றன என்றும் கருத்து –

—————————————————

ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே–1-7-3-

ஏய்ந்த பேழ் வாய் –
வடிவின் பெருமைக்குத் தகுதியாக பெரிய வாயையும் -ஒளி -பொருந்திய -அல்லது வாள் போன்ற கோரப் பற்களையும் யுடைய
ஸ்ரீ நரசிம்ஹமாய்த் தோன்றி இரணியன் யுடைய மாமிசம் செறிந்த மார்பைப் பிளந்த ஸ்ரீ பெருமான் உடையும் இடம் ஸ்ரீ சிங்க வேள் குன்றம் –

நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஜ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் -என்றும்
வண்டினம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை -என்றும்
வருணிக்கத் தக்க நிலைமையோ அவ்விடத்து என்றால் -இல்லை –
அந்த சந்நிவேசம் வேறு வகையானது என்கிறார் –
ஆனை குதிரை சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இங்கும் அங்கும் ஓடி அலைந்து ஓய்ந்து நிற்கக் காணலாம் –
உடைந்து நிற்கும் கற்பாறைகளைக் காணலாம்
இன்னமும் சில காண வேண்டுமானால் -மூங்கில்கள் நெருப்புப் பற்றி எரிந்து குறைக் கொள்ளியாய் இருக்குமவற்றை விசேஷமாகக் காணலாம்
இவை ஒழிய வேறு ஒன்றையும் காண்பதற்கு இல்லையாம் அங்கு
இவை எல்லாம் இவ் வாழ்வாருக்கு வண்டினம் முரலும் சோலை போலே தோன்றுகின்றன என்பர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
அது இது உது என்னலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும் என்றபடி
ஸ்ரீ எம்பெருமானுடைய சரித்ரம் எதுவாய் இருந்தாலும் எல்லாம் ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய நெஞ்சைக் கவர்வது போலே
அப்பெருமான் உகந்து அருளின நிலங்களில் உள்ளவைகளும் எதுவாய் இருந்தாலும்
அவ்விடத்தவை என்கிற காரணத்தால் எல்லாம் இவர்க்கு உத்தேச்யம் எனபது அறியத் தக்கது
பிறருக்கு குற்றமாய்த் தோற்றுமவையும் உபாதேயமாகத் தோற்றுகை இறே ஒரு விஷயத்தை உகக்கை இறே -வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –
ஓய்ந்த மாவும் –
நிலத்தின் வெப்பத்தினால் பட்டுப் போன மா மரங்களும் என்னவுமாம் –

————————————————————

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—1-7-4-

கையும் வேலுமாய் இருக்கும் இருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப் படுத்த வல்லனான
இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்பைப் பிளந்து அருளின ஸ்ரீ பெருமான் உறையும் இடமாவது ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் —
வேற்று மனிசரைக் கண்ட போதே வந்து துடைகளிலே கவ்விக் கடிக்கிற நாய்களும்
அப்படிக் கடிக்கப்பட்டு மாண்டு ஒழிந்த பிணங்களை கவ்வுகின்ற கழுகுகளும் ஆங்கு மிகுதியாகக் காணப்படுமாம் –
செடி மரம் ஒன்றும் இல்லாமையினாலே நிழல் என்பதும் காணவே முடியாது –
உச்சி வேளையிலே எப்படிப் பட்ட வெய்யில் காயுமோ -அதுவே எப்போதும் காய்கின்றது –
சுழல் காற்றுக்கள் சுழன்றபடி இரா நின்றன -இப்படி இருக்கையினாலே சாமான்யரான மனிசர் அங்குச் சென்று கிட்டுதல் அரிது –
மிக்க சக்தி வாய்ந்த தேவதைகளே அங்குச் செல்வதற்கு உரியர் -இங்கனே கஹனமான தலமாயிற்று இது –

எவ்வும் -எவ்வம் இரண்டு பாட பேதம் –
பொன் பெயரோன் -ஹிரண்யம் வட சொல் பொன் என்ற பொருள் -ஹிரண்யா ஸூரன் என்றபடி
யேதலன் -சத்ரு
சர்வ பூத ஸூக்ருதான ஸ்ரீ எம்பெருமானுக்கு இவன் நேரே சத்ரு அல்லன் ஆகிலும் –
பகவத் சிரோமணியான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு சத்ருவான முறைமையினாலே பகவானுக்கும் சத்ரு ஆயினான் –
ஆஸ்ரிதர்கள் விரோதிகளைத் தனது விரோதிகளாக நினைத்துப் பேசுமவன் இறே ஸ்ரீ எம்பெருமான் –
ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்து இன்னுயிரை வவ்வினான் -என்று
மார்வைப் பிளந்தது முன்னமும் உயிரைக் கவர்ந்தது அதன் பின்புமாகச் சொல்ல வேண்டி இருக்க இங்கு மாறாடிச் சொன்னது –
இரணியன் ஸ்ரீ நரசிங்க மூர்த்தியைக் கண்ட ஷணத்திலே செத்த பிணமாக ஆய்விட்டான் -என்ற கருத்தைக் காட்டுதற்கு -என்க-
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று -என்பதற்கு இரண்டு பொருள்
உச்சிப் போது என்று ஸூர்யனைச் சொல்லி நாய்களும் கழுகுகளும் கூட தரையின் வெப்பம் பொறுக்க மாட்டாமல் திண்டாடும்
ஸூர்யனே அவ்விடத்தில் வந்தாலும் அவனுக்கும் இதே கதி –
தன்னுடைய தாபத்தை தானே பொறுக்க மாட்டாமல் அவனும் கால் தடுமாறி பரிதபிப்பன் -என்ற வாறுமாம் –
இங்கே சென்று சேவிக்க விருப்பம் யுடைய ஸ்ரீ ஆழ்வார் -தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாது -என்று
அருமை தோன்ற அருளிச் செய்யலாமோ என்னில்
ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியின் அழகைக் கண்டு அசூயைப் படுவதற்கும் அவனுக்கு ஏதேனும் அவத்யத்தை விளப்பதற்கும்
உறுப்பாக ஆசூரப் பிரக்ருதிகள் அங்குச் செல்ல முடியாது –
ஸ்ரீ எம்பெருமானுடைய சம்ருத்தியைக் கண்டு உகந்து பல்லாண்டு பாட வல்ல
ஸ்ரீ ஆழ்வார் போல்வாருக்குத் தான் அவ்விடம் அணுகக் கூடியது என்ற கருத்து தோன்ற அருளிச் செய்கிறார் –

——————————————————————–

மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே–1-7-5-

சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்று கொண்டே இருக்கிற பெரிய வாயையும்
ஒளி விடுகிற எயிற்றையும் மிடுக்கையும் யுடைய ஸ்ரீ நரசிம்ஹமாய்த் தோன்றி
இரணியன் உயிர் மாளும்படியாக அவனது மார்பைப் பிளந்த ஸ்ரீ பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் –
அஃது எப்படிப் பட்டது -மாறாமல் நின்று எரிகிற அக்னியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு
ஆகாயம் எங்கும் பரவி வீசி எறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் ஸ்ரீ கோயில் –

அவுணன் பொன்ற வாகம் -இரண்டு வகை பொருள்
ஸ்ரீ நரசிம்ஹத்தைக் கண்டவுடனே இரணியன் பொன்ற -முடிந்து போக -முடிந்த பிறகு அந்தப் பிணத்தைக் கிழித்து போட்டான் என்னலாம்
இது அதிசய உக்தி -அன்றி அவுணன் பொன்றும்படி-முடியும்படியாக -அவனது உடலைக் கிழித்தான் என்னவுமாம் –
சூறை-சூறாவளிக் காற்று -அக்காற்று செந்தீயை மொண்டு கொண்டு ஆகாயத்திலே ஓடுகின்றதாம் –
நீள் விசும்பூடு எரிய-பாட பேதம் -ஆகாயத்தில் போய் ஜ்வலிக்க -என்றபடி –
சென்று காண்டற்கு அரிய கோயில் -வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –
இப்படி இருக்கையாலே ஒருவருக்கும் சென்று காண்கைக்கு அரிதாய் இருக்குமாயிற்று –
பரமபதம் போலே இந்நிலத்துக்கும் நாம் பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டராகிறார் –

——————————————————————

எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–1-7-6–

உழுவை -புலிகள் ஆனவை –
சீற்றத்தாலே அக்நி ஜ்வாலை போலே ஜ்வலிக்கிற சிவந்த கண்களையும் ஒளி விடா நின்ற பெரிய வாயையும்
கோரப் பற்களையும் கண்டு -அப்பப்ப இது என்ன உரு -என்று பயப்பட்டு தேவர்கள் அங்கும் இங்கும்
கால் தடுமாறி சிதறி ஒடும்படியாக
ஸ்ரீ நரசிங்க உரு கொண்டு எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் –
அஃது எப்படிப்பட்ட இடம் என்னில் -மூங்கில் புதர்களின் நின்றும் புலிகள் பெரு வழியில் வந்து சேர்ந்து
இங்கு யானைகள் நடமாடின அடையாளம் யுண்டோ -என்று பார்க்கின்றனவாம் –
யானைகளை அடித்துத் தின்பதற்காக அவை உலாவின இடங்களை தேடித் திரிகின்ற புலிகள் நிறைந்ததாம் அத்தலம் –

——————————————————————-

முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—-1-7-7-

ஸ்ரீ நரசிங்க மூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்று இருந்ததனால் அந்த கோப அக்நி
மேல் யுலகம் அளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப் புகவே சர்வ லோக சம்ஹாரம் பிறந்து விட்டது என்று
மூ வுலகத்தில் உள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியாய் இருந்ததாம் –
அப்படிப்பட்ட ஸ்ரீ உக்ர நரசிம்கன் எழுந்தி அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் – அவ்விடம் எப்படிப் பட்டது –

எரிகிற போது யுண்டான வேடு வெடு என்கிற ஓசையை யுடைத்தான நெருப்பும் –
அந்த நெருப்பிலே வைக்கோல் போர் போலே வேவுகின்ற கல்லுகளும் –
இவற்றில் காட்டில் கொடியவர்களான கையும் வில்லுமாய்த் திரிகின்ற வேடர்களும்
அங்கு நிறைந்து இருப்பதினாலே ஒரு நொடிப் பொழுதும் சென்று கிட்ட முடியாத தலமாம் அது –
உகவாதார்க்கு கண்ணாலே காணலாம் படி சென்று கிட்டி கண் எச்சில் பட ஒண்ணாத படி இருந்த தேசம் ஆயிற்று –
தினைத்தனையும் -தினை தான்யம் -ஸ்வல்ப காலம் என்றபடி
எட்டனைப் போது -எள் தான்யத்தை எடுத்துக் காட்டினது போலே –

——————————————————————

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8-

நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறை வழுவாது துதிக்கும் படியாக விலஷணமான நரசிங்க உருக் கொண்டு
ஸ்ரீ எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் –
அஃது எப்படிப் பட்டது
காய்கள் காய்த்துத் தொங்கப் பெற்ற வாகை மரங்களின் நெற்றுக்களானவை காற்று அடித்து கலகல என்று ஒலிக்கின்றனவாம் சில இடங்களில் –
மற்றும் சில இடங்களிலோ என்னில் -ஆகாசத்து அளவும் ஓங்கி வளர்கின்ற மூங்கில்கள் ஒன்றோடு ஓன்று உராய்ந்து
நெருப்பு பற்றி எரிந்து விண்ணுலகத்த்தையும் சிவக்கடிக்கின்றனவாம்
நாத்தழும்ப -என்றதானால் இடை விடாது அநவரதம் துதிக்கின்றமை தோற்றும்
முறையால் ஏத்த -என்பதற்கு -மாறி மாறி துதிக்க -என்றும் பொருள் கொள்ளலாம் –
ஒரு சந்தை நான்முகனும் மற்று ஒரு சந்தை சிவனுமாக இப்படி மாறி மாறி ஏத்து கின்றமையைச் சொன்னபடி
நெற்று -உலர்ந்த பழம் –
அதர் -வழி
வேய் + கழை = வேய்ங்ழை-

———————————————————————–

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

கீழ்ப் பாட்டுக்களில் -தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்றும்
சென்று காண்டற்கு அரிய கோயில் -என்றும்
தினைத்தனையும் செல்ல ஒண்ணா -என்றும்
இந்த ஸ்ரீ திவ்ய தேசத்தின் அருமை சொல்லி வந்தாரே –
அந்த அருமை ஆசூரப் பிரக்ருதிகளான பகவத் விரோதிகளுக்கே ஒழிய -உகந்து இருக்கும் அடியவர்களுக்கு அன்றே –
அதனை இப்பாட்டில் வெளியிடுகிறார் –

ஸ்ரீ பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு நாம் அஞ்சாமல் ஸ்ரீ சிங்க வேள் குன்றத்தில் சென்று தொழுவோம் நெஞ்சமே -என்கிறார் –
அல்லி மாதரான ஸ்ரீ பிராட்டியோடு அணைந்து இருப்பதனாலே ஸ்ரீ நரசிங்க மூர்த்தியின் கோப அக்நிக்கு நான் அஞ்ச வேண்டியது இல்லை என்றும்
அவன் தான் நம்முடைய ஸ்ரீ நம் பெருமான் ஆகையாலே அந்நிலத்தின் கொடுமைக்கும் அஞ்ச வேண்டியது இல்லை என்றும் குறிப்பிட்ட படி –
ஸ்ரீ நம்பெருமான் -என்றாலே போதுமே இருக்க- நம்முடைய ஸ்ரீ நம் பெருமான் -என்றது-
அடியார் திறத்தில் அவன் மிகவும் விதேயனாய் இருக்கும் படியைக் காட்டும் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்-என்ற சொல் நயத்தால் -ஸ்ரீ பிராட்டியை அணைக்கும் போது ஸ்ரீ எம்பெருமானுக்கு
சந்தோஷ மிகுதியினால் தழுவுதற்கு உறுப்பான தோள்கள் சஹச்ர முகமாக வளர்கின்றமை விளங்கும் –
இவள் அணைத்தால் இவளைக் கட்டிக் கொள்ள ஆயிரம் தோள் யுண்டாம் ஆயிற்று -என்பர் ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையும் –
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறாத் தோள்களை ஆரத் தழுவி
என்னுயிரை அறவிலை செய்தனன் -ஸ்ரீ திருவாய் -8-1-10-
என்னும்படியானால் பிராட்டியின் சேர்த்தியினால் யுண்டாக கூடிய உடல் பூரிப்பு சொல்லவும் வேணுமோ

நெல்லி மல்கி -இத்யாதி –
நெல்லி மரங்கள் ஆனவை கல்லிடைகளிலே முளைத்து வளர்ந்து கல்லிடைகளிலே வேர் ஒடுகையாலே
அந்த வேர்கள் பருத்து பாறைகளைப் பேர்க்கின்றனவாம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையும் -நெல்லி மரங்கள் வேர் ஓடிக் கற்களை யுடையப் பண்ணும் -என்றே அருளிச் செய்கிறார் –
இங்கே சிலர் சொல்லும் பொருளாவது -நெல்லி மரங்களின் நின்று இற்று விழுகின்ற நெல்லிக் காய்கள் பாறைகளின் மேல்
விழுந்து கற்களை உடைக்கின்றன என்பதாம்
அப்போது நெல்லி என்றது ஆகுபெயரால் நெல்லிக் காய்களைச் சொல்ல வேண்டும்
புல்லிலை யார்த்து -மூங்கில்களின் ஓசையை சொல்லிற்று ஆகவுமாம்
பனை ஓலைகளின் ஓசையைச் சொல்லிற்று ஆகவுமாம் -ஆர்த்தல் -ஒலித்தல்
சில்லி சில்லி என்று சொல் அறாத –
வடமொழியில் சுவர்க் கோழிக்கு -ஜில்லிகா -என்று பெயர் -அச் சொல்லே சில்லி -என்று கிடக்கிறது –
நல்லை நெஞ்சே -நல்ல நெஞ்சே -பாட பேதங்கள்

————————————————————–

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

வீர லஷ்மி விளங்கும் கண்களை யுடைய சிங்கங்கள் ஆனவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு
சமர்ப்பித்து வணங்கும் படியான ஸ்ரீ சிங்க வேழ் குன்றத்திலே எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமான் விஷயமாக
ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்த சொல் மாலையை ஓத வல்லவர்கள் தீங்கு இன்றி
வாழ்வார்கள் என்று -இத் திருமொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

செங்கணாளி யிட்டிறைஞ்சும்-
நவம் சவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத –யஜ்ஞசீலம் மஹா ப்ராஜ்ஞம் ப்ராஹ்மணம் சிவ முத்தமம் –
என்ற கண்டாகர்ணன் வசனம் நினைக்கத் தகும்
அவன் தனக்கு யுண்டான பிணங்களை ஸ்ரீ எம்பெருமானுக்கு நிவேதனம் செய்து யுண்டால் போலே சிங்கங்களும் செய்கிறபடி –

————

ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தி கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை ஸ்ரீ ராமானுசன் –

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி – 103

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –
முனைத்த சீற்றம் விண் சுடப்போய்-ஸ்ரீ பெரிய திரு மொழி – 1-7 7- – என்கிற படியே அநு கூலரான
தேவர்களும் உட்பட வெருவி நின்று பரிதபிக்கும்படி -அத்யந்த அபிவிருத்தமாய் அதி க்ரூரமான-ஸ்ரீ நரசிம்ஹமாய் –
சிறுக்கன் மேலே அவன் முழுகின வன்று –
வயிறழல வாளுருவி வந்தான் -என்கிறபடியே சாயுதனாய்க் கொண்டு எதிர்ந்த ஹிரன்யாசுரனுடைய மிடியற வளர்ந்த
ஸ்வர்ண வர்ணமான சரீரத்தை
அஞ்ச வெயிறி லகவாய் மடித்ததென்-ஸ்ரீ முதல் திருவந்தாதி – 93- என்கிறபடியே
மொறாந்த முகத்தையும் நா மடிக் கொண்ட உதட்டையும் -குத்த முறுக்கின கையையும் கண்டு –
விளைந்த பய அக்நியாலே பரிதப்தமாய் பதம் செய்தவாறே –
வாடின கோரையை கிழித்தால் போலே அநாயாசேன கிழித்து பொகட்டவனுடைய திவ்ய கீர்த்தி யாகிய பயிர்
உயர் நிலத்தில் -உள் நிலத்தில் – பயிர் ஓங்கி வளருமா போலே யெழுந்து சபலமாம் படியான
திரு உள்ளத்தை உடையராய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீP .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் —

June 6, 2020

ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் —

வருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீஷிதம்
நிதாத்ரஸ்தா விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம் யஹம் –

சர்வை ரவத்யதாம் பிராப்தம் சபலவ்கம் திதே ஸூ தம்
நகாக்ரை ஸகலீ யஸ்தம் வீரம் நமாம் யஹம் –

பாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரி விஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம் யஹம் –

ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வல நாதீன் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம் யஹம் –

ஸர்வேந்த்ரியை ரபி விநா சர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜா நாதி யோ நமாம் யாத்யம் தமஹம் சர்வதோமுகம் —

நரவத் ஸிம்ஹ வஸ்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மன
மஹாஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் நரஸிம்ஹம் நமாம் யஹம் –

யன்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணயஸ் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் –

ஸர்வோபி யம் ஸமாச்ரித்ய சாகலாம் பத்ரமஸ்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம் யஹம் –

சாஷாத் ஸ்வ காலே சம்பிராப்தம் ம்ருத்யும் சத்ரு குணா நபி
பக்தா நாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –

நமஸ்காராத் மஹம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம்
த்யக்த துக்கோ கிலான் காமான் அஸ்நுதே தம் நமாம் யஹம் –

தாஸ பூதா ஸ்வத சர்வே ஹயாத்மாந பரமாத்மன
அதோ ஹமபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –

சங்க ரேணாதராத் ப்ரோக்தம் பதா நாம் தத்வமுத்தமம்
த்ரி சந்த்யம் யா படேத் தஸ்ய ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே —

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராம பிரபாவம் / ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்-/ ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)/ ஸ்ரீ பிராரத்நா பஞ்சகம் –ஸ்ரீ வேதாந்த சபா -USA-தொகுப்பு

January 25, 2020

ஸ்ரீ வால்மீகி கூறும் ஸ்ரீ ராமரின் திரு வம்ச வ்ருக்ஷம்.

1) ப்ரம்மாவின் பிள்ளை மரீசி
2) மரீசியின் பிள்ளை காஸ்யபன்.
3) காஸ்யபரின் பிள்ளை சூரியன்.
4) சூரியனின் பிள்ளை மனு.
5) மனுவின் பிள்ளை இக்ஷாவக:
6) இக்ஷாவகனின் பிள்ளை குக்ஷி.
6) குக்ஷியின் பிள்ளை விகுக்ஷி.
7) விகுக்ஷியின் பிள்ளை பாணு
8) பாணுவின் பிள்ளை அரண்யகன்.
9) அரண்யகனின் பிள்ளை வ்ருத்து.
10) வ்ருதுவின் பிள்ளை த்ரிசங்கு.
11) த்ரிசங்குவின் பிள்ளை துந்துமாரன் (யவனாஸ்யன்)
12) துந்துமாரனின் பிள்ளை மாந்தாதா.
13) மாந்தாதாவின் பிள்ளை சுசந்தி.
14) சுசந்தியின் பிள்ளை துருவசந்தி.
15) துருவசந்தியின் பிள்ளை பரதன்.
16) பரதனின் பிள்ளை ஆஷிதன்.
17) ஆஷிதனின் பிள்ளை சாகரன்.
18) சாகரனின் பிள்ளை அசமஞ்சன்
19) அசமஞ்சனின் பிள்ளை அம்சமந்தன்.
20)அம்சமஞ்சனின் பிள்ளை திலீபன்.
21) திலீபனின் பிள்ளை பகீரதன்.
22) பகீரதனின் பிள்ளை காகுஸ்தன்.
23) காகுஸ்தனின் பிள்ளை ரகு.
24) ரகுவின் பிள்ளை ப்ரவருத்தன்.
25) ப்ரவருத்தனின் பிள்ளை சங்கனன்.
26) சங்கனின் பிள்ளை சுதர்மன்.
27) சுதர்மனின் பிள்ளை அக்நிவர்ணன்.
28) அக்நிவர்ணனின் பிள்ளை சீக்ரவேது
29) சீக்ரவேதுவுக்கு பிள்ளை மருவு.
30) மருவுக்கு பிள்ளை ப்ரஷீக்யன்.
31) ப்ரஷீக்யனின் பிள்ளை அம்பரீஷன்.
32) அம்பரீஷனின் பிள்ளை நகுஷன்.
33) நகுஷனின் பிள்ளை யயயாதி.
34) யயாதியின் பிள்ளை நாபாகு.
35) நாபாகுவின் பிள்ளை அஜன்.
36) அஜனின் பிள்ளை தசரதன்.
36) தசரதனின் பிள்ளை ராமர்.

—————

ஸ்ரீ இராமாயண சுருக்கம் -16-வார்த்தைகளில் –

“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்”

விளக்கம்:
1. பிறந்தார்:
ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
2.வளர்ந்தார்:
தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
3.கற்றார்:
வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
4.பெற்றார்:
வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
5.மணந்தார்:
ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
6.சிறந்தார்:
அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
7.துறந்தார்:
கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
8. நெகிழ்ந்தார்:
அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய
அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை.
என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
9.இழந்தார்:
மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
10.அலைந்தார்:
அன்னை சீதையை தேடி அலைந்தது.
11.அழித்தார்:
இலங்கையை அழித்தது.
12.செழித்தார்:
சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
13.துறந்தார்:
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
13.துவண்டார்:
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
15.ஆண்டார்:
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து
மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
16.மீண்டார்:
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி
தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது”.

————

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்

ஸ்ரீ நரசிம்மரின் பல திருநாமங்கள்

1. அகோபில நரசிம்மர்
2. அழகிய சிங்கர்
3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர்
4. உக்கிர நரசிம்மர்
5. கதலி நரசிங்கர்
6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்
7. கதிர் நரசிம்மர்
8. கருடாத்ரிலக்ஷ்மி நரசிம்மர்
9. கல்யாண நரசிம்மர்
10. குகாந்தர நரசிம்மர்
11. குஞ்சால நரசிம்மர்
12. கும்பி நரசிம்மர்
13. சாந்த நரசிம்மர்
14. சிங்கப் பெருமாள்
15. தெள்ளிய சிங்கர்
16. நரசிங்கர்
17. பானக நரசிம்மர்
18. பாடலாத்ரி நரசிம்மர்
19. பார்க்கவ நரசிம்மர்
20. பாவன நரசிம்மர்
21. பிரஹ்லாத நரசிம்மர்
22. பிரஹ்லாத வரத நரசிம்மர்
23. பூவராக நரசிம்மர்
24. மாலோல நரசிம்மர்
25. யோக நரசிம்மர்
26. லட்சுமி நரசிம்மர்
27. வரதயோக நரசிம்மர்
28. வராக நரசிம்மர்
29. வியாக்ர நரசிம்மர்
30. ஜ்வாலா நரசிம்மர்

————–

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம்– ஸ்ரீ ஹரிவம்ச புராணம் – சேஷ தர்மம் -47- அத்யாயம்

———————

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர்,
பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே… எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்” என்றார்.

நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!” என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.
‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.
இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.
படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.
துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.
அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.
இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே

ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்)

ஜயஹனுமானே..ஞானகடலே,
உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1)
ராமதூதனே..ஆற்றலின் வடிவமே,
அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2)
மஹா வீரனே..மாருதி தீரனே..
ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய,
இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5)
சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே..
உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6)
அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா,
ராம சேவையே..சுவாசமானவா.. (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்,
ராமனின் புகழை கேட்பது பரவசம் (8)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே,
ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10)
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி,
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12)
ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான்,
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும்.
நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14)
எம..குபேர..திக்பாலரும்..புலவரும்..
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்,
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17)
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்,
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே,
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்,
கண் இமை போல காத்தே அருள்வாய் (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ,
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும். (24)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25)
மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே,
ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27)
அடியவர் நிறைவே கற்பகத் தருவே,
இறையனுபூதியை தந்திடும் திருவே. (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே (31)
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34)
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36)
ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37)
“ஹனுமான் சாலீஸா” அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39)
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40)

ஸ்ரீ ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

——————-

ஸ்ரீ பிராரத்நா பஞ்சகம்

யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஜ்ஞாபனம் இதம் விலோகய வரதம் குரும்-1–

யதிகளின் தலைவரே! கைங்கர்ய ஸ்ரீயை உடையவரே! பரமமான க்ருபையோடே (அடியேனுடைய)
ஆசார்யரான நடாதூர் அம்மாளைப் பார்த்து, அடியேனுடையதான இந்த விண்ணப்பத்தை
தேவரீர் திருச் செவி சாற்றி யருள வேணும்.

அநாதி பாப ரசிதாம் அந்தக்கரண நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷய சாந்த்ராம் விநிவாசய வாசநாம் -2-

எண்ணற்ற காலங்கள் பாவங்களையே செய்து, அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது.
யதிராஜரே! இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்தபடி உள்ளேன். இவ்விதம் இருக்கின்ற உலக விஷயங்களில்
இருந்து எனது புலன்களை மீட்கவேண்டும்.

அபி பிரார்த்தய மாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்யம் ஏவ அத்ர ஹித காரிந் யதீந்த்ர -3-

யதிராஜரே! நான் உம்மிடம் புத்திரன், வீடு, செல்வம் முதலானவற்றைக் கேட்கக் கூடும். ஆனால் அவற்றை விலக்கி,
நீவீர் எனக்கு வைராக்யத்தை அளிக்கவேண்டும் – காரணம் எனது நன்மையை மட்டுமே அல்லவா நீவிர் எண்ணியபடி உள்ளீர்.

யத் அபராதா ந ஸ்யுர் மே பக்தேஷு பகவத் அபி
ததா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேகம் பிரவத்தய -4-

யதிராஜரே! முக்தி அடியும் வரையில், இந்த உடலுடன் இங்கு வாழும் நான், ஒருபோதும்
பகவானையோ அவனது அடியார்களையோ அவமானப்படுத்திவிடக்கூடாது.

ஆ மோக்ஷம் லஷ்மணாய த்வத் பிரபந்த பரிசீலநை
காலக்ஷேப அஸ்து ந ஸத்பிஸ் ஸஹவாஸம் உபேயுஷாம் -5-

லக்ஷ்மணமுனியே! இந்த உடல் பிரியும் காலம்வரை நான் உமது ப்ரபந்தங்களையே ஆராய்ந்தபடி,
அவற்றையே காலக்ஷேபம் செய்தபடி எனது பொழுதைக் கழிக்கவேண்டும்.

பல சுருதி
இத் ஏதத் சாதரம் வித்வாந் ப்ரார்த்தநா பஞ்சகம் படந்
ப்ரபானுயாத் பரமாம் பக்தி யதிராஜா பாதாப்ஜயோ

யதிராஜரின் திருவடிகளின் மீது வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை யார் ஒருவர் பக்தியுடன்
படிக்கிறார்களோ, அவர்கள் எம்பெருமானாரின் திருவடிகளின் மீது மேலும் பக்தி பெறுவர்.

—————————–

ஸ்ரீ கொங்கில் ஆச்சான் திருமாளிகை -55-மங்கம்மா நகர் -ஸ்ரீ ரெங்கம்
ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் பண்ணி அருளிய சங்கு சக்கரங்ககளையும்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பாதுகைகளையும்
ஸ்ரீ நரசிம்மர் சாளக்ராமமும் இன்றும் சேவிக்கலாம் –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஹனுமத் சமேத ஸ்ரீ சீதா ராம சந்த்ரன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ சிங்கப்பிரான் பெருமை அனுபவம் –

December 27, 2019

அசேஷ ஜகத் ஹித அநு சாசனம் -ஸ்ருதி நிகர சிரஸி -சம்யக் அதிகத -மாதா பித்ரு சஹஸ்ரபி வாத்சல்யதர –
நம் பெருமாள் விஜய தசமி அன்று ஸ்ரீ காட்டு அழகிய சிங்கர் கோயிலுக்கு எழுந்து அருளுகிறார் –
ஸ்ரீ ரெங்க ரக்ஷை
ரஹஸ்யங்கள் விளைந்த பூமி
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8-

வரத்தினால் சிரத்தை வைத்து -ஆணவம் –
விராமம் -வரத்தையும் வரம் கொடுத்தவனையும் -வரம் வாங்கினவனுக்கும் ஒய்வு –
நேரத்தாலே நீட்சி -ஒரு முஹூர்த்தம் மட்டும் இல்லாமல் –
ஒருவருக்கே இல்ல அனைவருக்கும் –
எப்பொழுதும் –
இரண்டு தூணுக்கு நடுவில் இருக்கும் அமலன் -காட்டு அழகிய சிங்கர்
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே வந்த சுத்தி —
ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த சுத்தி ஆகவுமாம்

இமையா பிலவாய்–வெருவ நோக்கி -பைம் கண்ணால் அரி உருவாய் -ஏறி வட்டம் கண்ணன் -உக்ர நரசிம்மர்
இங்கு கருணையே வடிவான ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹர்
பாதுகா வைபவம் -ராகவ சிம்மம் -பாதுகை -பெண் சுகம் ராமர் ஆண் சிங்கம் –
ராவணனான ஆனையை அழிக்க பெருமாள் போலே பரதன் குட்டி சிங்கத்தை கூட்டிப் போனதே
பாகவத அபசாரம் பொறுக்காத நான்கு சிங்கங்கள்
ஏவம் முக்தி பலம் ந அந்ய ஸ்ரீ பாஷ்யம் நிகமத்தில் அருளிச் செய்கிறார் -பாகவத அபசாரம் வலிமை மிக்கதே –
அவனது கருணா சாகாரத்தையும் வற்ற வைக்கும்
நர சிங்கம் ராகவ சிங்கம் -யாதவ சிங்கம் இழந்த நமக்காகவே -ஸ்ரீ ரெங்க சிங்கம்

சிங்கப்பெருமான் பெருமை -ரிஷிகள் -ஆழ்வார்கள்-ஆச்சார்யர்கள் -பார்வை வேறே வேறே கோணங்கள்
அவர்கள் கண் கொண்டு நாம் பார்க்கலாம்
எங்கும் உளன் -2-8-9-மகனைக் காய்ந்து -ஆழ்வார் ஸ்வீகாரம்-கொள்கிறார் –
தத்துப்பிள்ளை
பள்ளியில் ஓதி -தன் மகனை -திருமங்கை ஆழ்வாரும் தன் சிறுவன் – ஸ்வீகாரம்-
வியாபகன் -ரிஷிகள்-சர்வ வியாபகம் -இது வாயிற்று இவன் செய்த குற்றம்
சேராச் சேர்க்கை -பாலும் சக்கரையும் போலே ஆச்சார்யர்கள்
அழகியான் தானே நரசிம்ம வபுஸ் ஸ்ரீ மான் -ஆழ்வார்கள்

எங்கும் உளன் என்றேனோ பிரகலாதனைப் போலே –
இங்கு இல்லை என்றேனோ ததி பாண்டனைப் போலே திருக் கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யங்கள் -81-உண்டே
ஸ்ரீ கீதை ஒப்பித்ததுக்கு பரிசு பிரகலாதனுக்கு –
மயா ததம் இதம் சர்வம் -அவ்யக்த மூர்த்தி -மானுஷ மாமிச கண்களுக்கு விஷயம் இல்லை
காட்சி -சுவை -மணமாகவே இருக்கிறானே -கண்ணாகவும் பொருளாகவும் காட்சியாகவும்
மஸ்தாநி சர்வ பூதாநி-நான் அனைத்திலும் உள்ளே தங்கி -நான் அவற்றினுள் நியமிக்க –
உடனே ந ச மஸ்தாநி பூதாநி -நான் அவற்றினுள் இல்லை -வியாப்கத தோஷம் இல்லை

சர்வ சப்த வாஸ்யம் அவனே –
மகனைக் கடிந்து -கோபம் இவன் மூலம் கற்றுக் கொண்டான்
முதலை மேல் சீறி வந்தார் –
கொண்ட சீற்றம் உண்டு என்று அறிந்து சரண் அடைவோம் –
அரி என உன் உடலையும் தின்பேன் என்ற ஹிரண்யன் பேச்சால் -அப்பொழுது தான் முடிவு பண்ணினார்
ஓர் ஆள் அரி -அழகியான் தானே -ஸுவ்ந்தர்ய லாவண்ய வபுஸ் ஸ்ரீ மான் –ஆழ்வார் பார்வை
கோப பிரசாதம் ஒரு சேரக் காட்டி அருளுபவர் –
ஆஸ்ரித பாரதந்தர்யம் -பிராட்டி கூட அஞ்சும் படி இருக்க -குழந்தை பிரகலாதன் மேல் குளிர்ந்து -எரிமலையாக இருந்தவர்
தெள்ளிய சிங்கமானான்
வாயில் ஆயிரம் நாமம் –பிள்ளை சொல் -குழல் இனிது யாழ் இனிது தன் மழலைச் செல்வம் கேளாதவர்
ஆயிரத்துக்கும் சாம்யம் -ஸ்ரீ ராம ராம ராமேதி -சஹஸ்ர நாம தஸ் துல்யம் அன்றோ –
ப்ரேமம் -கலங்கி நிழலை பார்த்து வேறே சிங்கம் என்று நினைக்கப் பண்ணிற்றே-

ஆச்சார்யர் -பார்வை -சேராச் சேர்க்கை –
கடக ஸ்ருதி -சர்வ சாகா நியாயம் –
அமிருத்யு -சந்தாதா –அஜக –
பிறப்பிலி பல் பிறவிப்பெருமான் -அஜாயமான பஹுதா விஜயதா
கர்மத்தால் இல்லை -கருணையால் கிருபையால் இச்சாக்ருஹீதம்
ஆராதனப் பெருமாள் எங்கும் ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் -தானே -நம்மைக் கூட
நித்ய ஸூரிகள் கோஷ்டியில் ஒரு கோவையாகச் சேர்க்க வல்லமை வேண்டுமே
ப்ராப்ய பிராபக ஐக்யம் -த்ரிவித காரணமாக இருந்தும் வ்யாப்த கத தோஷம் தட்டாதவன்
ச குணத்வம் நிர்குணத்வம் சேர்த்து
கோபம் பிரசாதம் சேர்த்து
புண்ய ஈஸ்வர ப்ரீதி -பாபம் -ஈஸ்வர அப்ரீதி –
நர ஹரி -திரு உகிர் -திரு ஆழி அம்சம்
வாகனம் பெரிய திருவடி அம்சம் -திருப்படுக்கை -திரு அனந்தாழ்வான் அம்சம்

———

ஸ்ருதி -super–market-போலே -குண அநு குணமாக அனைத்தும் உண்டே
ஸ்ருதி நியாய பேதம் -கொண்டு சம்ப்ரதாயம்
அசேஷ -ஸமஸ்த -சேதன அசேதன -அகிலாத்மா -விஷ்ணு -நாராயண -ஸ்ரீ மான் -நிர்மல ஆனந்த –
சரீரம் -சீரியதே சரீரம் அழிந்து கொண்டே போகும்
யஸ்ய த்ரவ்யம் சேதனஸ்ய -தன்னாலே தனக்கு பிரயோஜனமாக தரித்து நியமித்து –
சேஷ பூதனாக ஆக்கி –சேஷ தைக ஸ்வரூபம் –
இங்கு என்ன குறை -வழி பட்டோட அருளினால் –

வேதாந்த தீபம்
மே மனசே தொண்டு செய்யும் -பாதாயீ திருவடித்தாமரையில்
ஸ்ரீ யகாந்த -அநந்த-வரகுண வபுஸ்
ஹதா தோஷம் அற்ற
பரம் அபகத-ஸ்ரீ வைகுண்டம் வாசஸ்தானம் -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவன் –
பூமயே-பூர்த்தியாக அனுபவிக்க முடியாதே –
அணுகில் அணுகும் அகலில் அகலும்
வபுஸ் -ரூபம் விஷயம் ஆகும் -ஸ்வரூபம் ரூப குண விபவ ஐஸ்வர்ய லீலா –
தானோர் உருவே -தனி வித்தாய் –வானோர் பெருமான் மா மாயன் –

அடுத்த மங்கள ஸ்லோகம் பிரணம்ய ஆச்சார்யர் -சிரஸா –அந்த பாதையால் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரார்த்தங்கள்
-51-ஸ்லோகம் யதிராஜ சப்ததியில் -புதுசு இல்லை -உரைகல்-சோதித்து பார்த்தால் -பூர்வர் ஸ்ரீ ஸூக்திகள்

வடுக நம்பி -ஷீர கைங்கர்யம் -மஹநீய குணம் –
அந்தர் ஜுரம் -தஸ்மை ராமானுஜ பரம யோகி -ஸ்ருதி ஸ்ம்ர்தி ஸூத் ரன்கள் -சுருதி பிரகாசர் அருளிய தனியன்
ஸ்ரீ சைல பூர்ணர் -ஹரே தீர்த்தம் புஷ்பம் கைங்கர்யம் -ஆளவந்தார் கால ஷேபம் ஒழிவில் காலம் –
ஸ்ருதி அந்தம் அனைத்தையும் கற்ற பின்னர் வந்தார் –
அனந்தாழ்வான் -ராமானுஜர் கோஷ்டியில்-வந்த மாதிரி –
மதுர மங்களம் -பூத புரி –
ஸ்ரீ தேவி -இளைய சகோதரி கமலநயன பட்டர்-
பூமா தேவி – கேசவ சோமயாஜி – –இருவருக்கும் ஸமாச்ரயணம் பண்ணி வைத்தார் –
வேதாந்த சித்தாந்த ஸம்ஸநார்த்த -பாஹ்ய அந்தர -நிரசனார்த்தம் ஸ்ரீ பாஷ்யகாரர் திரு அவதாரம்
ரஷார்த்த -சங்க லாஷணம் -த்ருஷ்ட்டி கழிக்க –
உபநயனம் -திருக் கல்யாணம் -பூர்வ பக்ஷம் சித்தாந்தம் -கற்க -அத்வைத சாஸ்திரம் -யாதவ பிரகாசர் இடம் –

சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -கலு -indeed-
ஆளவந்தார் -கடாக்ஷம் -பங்கமாகாமைக்காக அசம்பாஷய- -பேசாமல் -தேவபிரான் இடம் பிரபத்தி -மஹா விசுவாசம்

சிற்றத்தின்-செற்றத்தின்- வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் -இந்த ஸ்லோகத்தை கொண்டே பிறந்தது
அடியேன் சிறிய ஞானத்தன்-சிறியது – -ஜீவாத்மா-ஆக்கையின் வழி உழல்வோம் —
நிலம் மாவலி மூவடி -குழந்தை அம்மா அப்பிச்சி சொல்வது போலே கொடு என்று சொல்லாதே –

திருமலை நம்பி -பிள்ளை பிள்ளான் -இரண்டு பிள்ளைகள் –ஸ்ரீ வெங்கடேசராகவே பிரதிபத்தி பண்ணி
சேவிக்க சொல்லி அனுப்பினார்
கிடாம்பி ஆச்சானும் பிள்ளானும்-சேவிக்க-
ப்ரணதார்த்தி ஹரன் -திருமலை நம்பி சகோதரி பிள்ளை -இவரே -கிடாம்பி ஆச்சான் –
திரு மேனி சம்ரக்ஷணம் கைங்கர்யம் கிடாம்பி ஆச்சான் –

சரணாகதி தீபிகை -தேசிகன் -முதல் ஸ்லோகத்தில் -மடப்பள்ளி மணம் -ஸ்ரீ லஷ்மீ பத்தி சம்ப்ரதாயம் –
அஜகத் ஸ்வபாவம் -மஹாநஹம் -மடப்பள்ளி –
கிடாம்பி அப்புள்ளார் மூலம் பெற்ற விஷயம் –
ஸ்ரீ ராமாயணம் -18-ரஹஸ்யங்கள் -படி கொண்ட கீர்த்தி ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் குணம் கூறும் அன்பர்–என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினார்
ஆளும் என்று அடைக்கலம் –தாஸ்யம் – என் தம்மை -விற்கவும் பெறுவார்
கோவிந்தரை தரலாகாதோ –விற்ற மாட்டுக்குப் புல் இடுவார் உண்டோ –

திருமலை நம்பி -ஆளவந்தார் வம்சம் -பிள்ளான் -திருமாலிருஞ்சோலை மலை என்ன திரு மால் வந்து
நெஞ்சுள் புகுந்தான் -பாசுரம் அபிநயம் -ஞான புத்ரன் -அபிமானம் –நாத அந்வயம்-என்று ஆலிங்கனம் -செய்தாராம்

கோன் வஸ்மி குணவான் -உயர்வற உயர் நலம் உடையவன் போலவே குணங்களில் இழிந்து

ஆசைக்கு அடிமையானால் லோகத்துக்கு அடிமை –
ஆசை தாசியானால் -ஆசையை வென்றால் -லோகத்தை வெல்லலாம்

ஐ யங்கார் -நெல்லிக்காய் மூட்டை -பிரித்தால் சேராமல் -ஐ -அஹங்காரம் நிறைந்து -கோபம் நிறைந்து –

————–

கபில வாதம் வேதம் ஒத்துக் கொண்டாலும் -நிரீஸ்வர வாதி-கடவுள் இல்லை என்பான்
நாஸ்திகர் -வேதம் இல்லை என்பவன்
வேதாந்தம் -வேத அந்தம் -வேத சித்தாந்தம் -உபநிஷத்
ப்ரத்யக்ஷம் -பக்கத்து பையனை பார்த்து எழுதி -அனுமானம் -இஞ்சி பிஞ்சி பாங்கி -புஸ்தகம் பார்த்து எழுதுவது
பிப்பில மரம் -பரமாத்மா ஜீவாத்மா -ஆப்பிள்– adam eve -கதை மட்டும் கொண்டு தத்வம் விட்டார்கள்

சுக்ல அம்பரம்-பால் ஆடை -விஷ்ணு-கருப்பு dicaation- -சசி வர்ணம் -நிறம் மாறுமே -சதுர் புஜம் –
கொடுப்பவர் கைகள் இரண்டு -வாங்குபவர்கள் கைகள் இரண்டு -காபி பிரசன்ன வதனம் –
சர்வ விஞ்ஞானம் சாந்தயே -மற்ற வியாதிகள் போகும்
கண் முக்கு வாய் படைத்ததே காபி
excuse -me –x -24-அசித் தத்வம்
y ஆத்மா
z பரமாத்மா
25 படிகள் ஏறி அவனை அடைகிறோம்

தர்சனம் பேத ஏவ ச -சோதி வாய் திறந்து -கடக ஸ்ருதி -வைத்து இணைத்து –
நான் -என் உடம்பு -நான் கருப்பு குள்ளம் -ஜீவனான நான் இந்த மாதிரி உடம்பில் –
நெருங்கிய உறவால் சொல்வதை தப்பாக கொள்ள மாட்டோம் –
யானும் நீயே நீ என்னுள் இருப்பதால் -தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் -உடலாகக் கொண்டு அவன் இருக்கிறான்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் -சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் கொண்டு வந்தேன் சொல்லுவது போலே
பரமாத்மாவை உள்ளே வைக்கும் ஜீவாத்மாவை சொல்லலாம்
மணி மாலை -ஒன்றா பலவா -மாலை ஓன்று தான் -மணிகளைப் பார்க்க போலவே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ சமேத சிங்கப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிரசித்த ஸ்லோகங்கள் / ஸ்ரீ பரமபதம்-திருக்குறுங்குடி -ஆழ்வார்கள் அனுபவம் – /ஸ்ரீ அஹோபில மஹாத்ம்யம் /-

February 2, 2019

நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயணீ ச சா
வியாபகாவதி சம்ஸ்லேஷாத் ஏக தத்வமிவோ திதவ் –அஹிர் புத்ந்ய சம்ஹிதை

லஷ்ம்யா ஸமஸ்த அசித் சித் பிரபஞ்ச சேஷஸ் ததீசஸ்ய து ஸாபி சர்வம்
ததாபி சாதாரண மீசித்ருத்வம் ஸ்ரீ ஸ்ரீ சயொத்வவ் ச சதைக சேஷீ–ஸ்ரீ பாஞ்ச ராத்ர சம்ஹிதை

யாமா லம்ப்ய ஸூகே நேமம் துஸ்த்ரம் ஹி குணோ திதம்
விஸ்தரந்த்ய சிரேணைவ வயக்த த்யான பராயண –ஸ்ரீ ஸாத்வத சம்ஹிதை

சர்வ காமப்ரதாம் ரம்யாம் சம்சார ஆர்ணவ தாரிணீம்
ஷிப்ர ப்ரஸாதி நீம் தேவீம் சராண்யா மனுசிந்தயேத் –காஸ்யப ஸ்ம்ருதி

லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா
ரஷக சர்வ சித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே –ஸ்ரீ லஷ்மீ தந்திரம்

தேவ திர்யங் மனுஷ்யேண புந்நாம பகவான் ஹரி
ஸ்த்ரீ நாம் நீ லஷ்மீர் மைத்ரேய நாநயோர்வித்யதே பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்

வைகுண்ட து பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத் பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த் யாத்மா பக்தைர் பாகவதைர் ஸஹ –லிங்க புராணம்

நித்யை வைஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ
யதா சர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம –ஸ்ரீ விஷ்ணு புராணம் –

————————————————-

பரம பதம் -8-ஆழ்வார்கள் -36- மங்களா சாசனப் பாசுரங்கள் / நம்மாழ்வார் மட்டும் -24-திரு விருத்தத்தில் -3-
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி யுள் அங்கு இருந்தாய் -பெரியாழ்வார்
வான் இளவரசு வைகுண்ட குட்டன் வா ஸூ தேவன்
அமரர் கோவை அந்தணர் அமுதத்தினை
ஆண்டாள் -மா மாயன் மாதவன் வைகுந்தன்
திருமழிசை ஆழ்வார் -அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை –நற்கிரிசை நாரணன் நீ —
ஏன்றேன் அடிமை இழிந்தேன் –மேலை இட நாடு காண இனி ஆன்றேன்
திருப்பாண் ஆழ்வார் -விண்ணவர் கோன்
திருமங்கை -சந்தோகா தலைவனே தாமரைக்கு கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் அருளே
திருக் குறும் தாண்டகத்தில் -ஆதியாய் நீதியான பண்டமாம் பரம் சோதி நின்னையே பரவுவேனே
முதல் ஆழ்வார்கள் -பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப் பண்ணகத்தாய்
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத பூம் கிடங்கின் நீள் கோயில்
நம்மாழ்வார் -இமையோர் தலைவா -/
எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்
வேலைப் புணரி யம் பள்ளி அம்மான் அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ உம் நிலையிடமே
எம்பெருமான் தனது வைகுண்ட மன்னாள் கண்ணாய்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன

ஸ்ரீ சப்தம் -ஸ்ரீயதே -ச்ரயதே –ஸ்ருனோதி-ஸ்ராவயதி -ஸ்ருணாதி -ஸ்ரீணாதி-என்று ஆறு படியாக
ஸ்ருனோதி ஸ்ராவயதி -என்கிற வ்யுத்பத்திகளில்
சாபராதரான அடியோங்களை சர்வேஸ்வரன் திருவடிகளில் காட்டிக் கொடுத்து அருள வேணும் என்று
இப் புடைகளிலே ஆஸ்ரிதருடைய ஆர்த்த த்வனியைக் கேட்டு சர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து
இவர்களுடைய ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாம் –
புருஷகார க்ருத்யத்தைச் சொல்லுகிற இதுக்கும் புருஷகார பாவத்தில் நோக்கு –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம –என்றும் -இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு
கபோதத்தை கபோதி கேட்பித்தால் போலே அவசரத்தில் கேட் பிக்கும் என்னவுமாம்
சர்வேஸ்வரன் பக்கல் லோக ஹிதத்தைக் கேட்டு மித்ர மவ்பயிகம் கருத்தும் இத்யாதிகளில் படியே விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம் –
ஸ்ருணாதி நிகிலான் தோஷான் -என்று வ்யுத்புத்தி யானபோது
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே-என்றும்
சொல்லுகிறபடியே உபாய அதிகாரிகளுக்கு விரோதிகளான கர்மாதிகளைக் கழிக்கும் என்றதாம்
ஸ்ரீர்ணாதி ச குணைர் ஜகத் -என்று நிருக்தியில்
தன் காருண்யாதி குணங்களால் -நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
இத்யாதிகளில் படியே ஆஸ்ரிதற்கு கைங்கர்ய பர்யந்த குண பரிபாகத்தை உண்டாக்கும் என்றதாம் –
நம்மாழ்வாரும் –
அகலகில்லேன் இறையும் என்றும் அலர் மேல் மங்கை உறை மார்பா – என்றும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -என்றும் –
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு -என்றும்
உபாய தசையிலும் பல தசையிலும் ஸ்ரீமத் சப்தத்தில் சொன்ன நித்ய யோகத்தை அனுசந்தித்தார்
ஸ்ருணாதி நிகிலான் தோஷான் ஸ்ரீ ணாதி ச குணைர் ஜகத் –
ஸ்ரீ யதே ச அகிலைர் நித்யம் ச்ரயதே ச பரம் பதம் -என்றும் –இத்யாதிகளில் படியே
அநேக அர்த்தங்கள் உண்டே யாகிலும் ஸ்ரீஞ்சேவாயாம் -என்கிற தாதுவிலே
சேவ்யத்வாதிகளைச் சொல்லிக் கொண்டு கைங்கர்ய பிரதிசம்பந்தித்வ பரம் –

———————————————–

ஸ்ரீ வைஷ்ணவ நம்பி ஸ்ரீ குறுங்குடி வல்லி தாயார் -ஸ்ரீ பஞ்சகேதக விமானம் -கிழக்கே பார்த்து நின்ற நம்பி
இருந்த நம்பி கிடந்த நம்பி சந்நிதியும் கோயிலுக்கு உள்ளே
திருப்பாற் கடல் நம்பி தனி சந்நிதி –
திருப்பரிவட்ட பாறை -ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி –
மலை மேல் நம்பி
நாமே வருவோம் -காரியாருக்கும் உடைய நம்பிக்கும் அருளி -நம்மாழ்வார் திருவவதாரம்
திருமங்கை ஆழ்வார் திருவரசு சேவை இங்கே

பெரியாழ்வார் -1-/ திருமழிசை ஆழ்வார் -1-/ நம்மாழ்வார் -13-/ திருமங்கை ஆழ்வார் -20-ஆக -40-பாசுரங்கள் மங்களாசாசனம்

உன்னையும் ஓக்கலையில் கொண்டு தமிழ் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக் கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மழைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழு உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே –பெரியாழ்வார்-1-5-8-

நான்கு திவ்ய தேசங்களையும் சேர்த்து மங்களா சாசனம்
மன்னு -நாஸ்தி விஷ்ணோ பரம் தத்வம் தஸ்ய காலாத் பரா தநு –ஸ்ரீ விஷ்ணு புராணம்
அஞ்ஞசைவ விஸ்வ ஸ்ருஜோ ரூபம் -ஜகத் காரணன் -ஆதி -ரூபம் நித்யம் என்று பெரியாழ்வார் அருளிச் செய்கிறார்

கரண்டை மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே —

நாரஸிம்ஹ வபு ஸ்ரீ மான் கேசவ புருஷோத்தம –
தம்ஷ்ட்ரா கராலம் ஸூர பீதீ நாசனம் க்ருத்வா வபுஸ் திவ்ய ந்ருஸிம்ஹ ரூபிணா-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
பயங்கரமான கோரைப்பற்களுடன் திரு அவதரித்து தேவர்களின் பயத்தைப் போக்கி ஹிரண்யனை சம்ஹாரம் செய்து
லோகத்தை ரக்ஷித்து அருளிய எம்பெருமானுக்கு ஆழ்வார் மங்களா சாசனம்

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம் பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ -திருவாய் -1-10-9-

அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை —
ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூவர்ண -ஸ்ருதி –

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தண் செல்வத்தை
வளனா மதிக்கும் இம்மானிடத்தைக் கவி பாடி என்
குழனார் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே

ஜ்யேஷ்டாய நம –
பகவான் வாஸூ தேவோ ஜ்யாயஸீ விபூதி -புராதான புண்ய புருஷன்
ஏஷ ப்ரக்ருதி அவ்யக்த கர்தா சைவ சநாதந
பரச்ச சர்வ பூதேப்ய தஸ்மாத் வ்ருத்த தாமோச்யுத-இவனே அனைத்தும் -அனைத்துக்கும் தாரகம் –
ப்ரேரிதன் –சர்வ ஸ்வாமி -சர்வ நியாந்தா -ஜெகதாதாரன்
இத்தையே -குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே-என்கிறார்

இந்த இரண்டு பாசுரங்களுக்கு மேலே -5-5-திருவாய் மொழியில் -11-பாசுரங்களும் திருக்குறுங்குடி நம்பிக்கு மங்களா சாசனம்

எங்கனேயோ அன்னைமீர்காள் என்னை முனைவது நீர்
நாங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியைக் கண்ட பின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களொடும்
செங்கனி வாய் ஒன்றினொடும் செல்கின்றது என் நெஞ்சமே

என் நெஞ்சினால் நோக்கிக் காணிர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னும் நூலும் குண்டலுமும் மார்பில் திரு மறுவும்
மன்னும் பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே

நின்றிடும் திசைக்கும் னையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாழும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே

திவ்ய பஞ்சாயுதங்களை நம்பி திருமேனியில் சேவிக்கப் பெற்றேன்-
இமம் ஹரே பஞ்ச மஹாயுதாநாம் ஸ்தவம் படேத்ய அநு தினம் ப்ரபாதே
ஸமஸ்த துக்காநி பயாநி ஸத்ய பாபாநி நச்யந்தி ஸூகாநி சந்தி–என்று அன்றோ நீங்கள் எனக்கு கற்று வைத்தீர்கள்

குறுங்குடி நெடும் கடல் வண்ணா பாவினார் இன் சொல் பண் மலர் கொண்டு உன் பாதமே பரவி
நான் பணிந்து என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் –என்று முதலில் சரண் அடைகிறார் திருமங்கை ஆழ்வார் –
அடுத்து திரு விண்ணகர் பாசுரத்தில் குறுங்குடியில் குழகா -என்று கூப்பிட்டு ஆனந்தப்படுகிறார்

திரு நெடும் தாண்டகத்தில் -குறுங்குடியுள் முகிலை திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால்
பயன் பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே

பெரிய திருமொழி -9-5—மூலம் தோழிகளை தன்னை குறுங்குடிக்கே உய்த்திடுமின் என்று
பத்தும் பத்தாக அருளிச் செய்கிறாள் பரகால நாயகி

அடுத்த பத்தால் அவன் கல்யாண குணங்களையும் திரு மேனி அழகையும் அனுபவித்து அருளிச் செய்கிறார்
பொங்கார் அரவில் துயிலும் புனிதனூர் போலும் -திருப் பாற் கடல் நம்பிக்கு மங்களா சாசனம்
செங்கால் அன்னம் திகழ் தண் பணையில் கொங்கு ஆர் கமலத்து அலரில் -இயற்க்கை அழகையும் சொல்லி

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்
மா நீர் வண்ணன் மருவு உறையும் இடம் வானில்
கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே

ஒலி மாலை பாடப் பாவம் நில்லாவே -பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்

ஸ்ரீ வாமன தக்ஷிண பத்ரிகாஸ்ரம க்ஷேத்ரே ஷீர சாகர புஷ்கரணி சிந்து நதீ தீர்த தடே பஞ்ச கேதக விமான சாயம்
ஸ்திதாய பூர்வாபி முகாய ஸ்ரீ மதே வாமன ஷேத்ரா வல்லி குறுங்குடி வல்லி நாயிகா சமேத ஸ்ரீ வாமன க்ஷேத்ர பூர்ணாய
குறுங்குடி நம்பி ஸ்ரீ வைஷ்ணவ பூர்ணா ஸ்ரீ வைஷ்ணவ நம்பி நாமயுதாயா இதர த்ரிவிக்ரம பூர்ணா ஆஸீன
ஸ்ரீ தர பூர்ண ஸ்ரீ பூமி சமேத பத்ம நாப பூர்ண பார்ஸ்வே பர்வதே ஹ்ருஷீகேசா பூர்ண இத்யபி தர்சன ப்ரதாத்ரே பர ப்ரஹ்மணே நம –

——————————————–

ந நாரஸிம்ஹாத் அதி கச்ச தேவோ
ந தீர்த்தம் அந்யத் பாவ நாச ஹேதோ
ந காருடாத்ரே அபரோஸ்தி சைலோ
ந பக்த ஐந்தோர் அப ரோஸ்தி யோகீ

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாசம் ததோ ஜெயமு தீரயேத்
கயை பிரயாகை காசி கங்கை -விட உத்க்ருஷ்ட திவ்ய தேசம் அஹோபிலம் -சதுர அஷரி –
சதுர்வித புருஷார்த்தங்களையும் அளிக்கும்
பாப நாசினி -மேற்கு முகமாக பிரவகிக்கும் புண்ய நதி இங்கு
இதன் கரையில் கஜ குண்டத்தின் சமீபத்தில் பெரிய திருவடி தவம் இருந்ததால் கருடாத்ரி பெயர்

நரஸிம்ஹ ரஹிதம் க்ஷேத்ரம் ந பூதம் ந பவிஷ்யதி
நரஸிம்ஹ நாயகோ விஸ்வம் வ்யாப்தவான் புருஷோத்தம
பூமவ் நரஸிம்ஹோ புவநே நரஸிம்ஹோ வாயவ் நரஸிம்ஹோ வசநே நரஸிம்ஹ
அக்நவ் நரஸிம்ஹோ அப்யம்ருதே நரஸிம்ஹோ அப்ய ஆகாச தேசேப் யகில நரஸிம்ஹ
காயோ நரஸிம்ஹோ கானகம் நரஸிம்ஹ
காயோ நரஸிம்ஹ சவனம் நரஸிம்ஹ வனம் நரஸிம்ஹ வனதா நரஸிம்ஹ
யத் அஸ்தி யந் நாஸ்தி சதந் நரஸிம்ஹ
நரஸிம்ஹ தேவதா பரம் விஜாநந் நர பசு பாதயுக ப்ரஸூத
ததோ வரம் ஹ்ய பிரசவோ ம்ருதிர் வா யதோ ஹரீம் சர்வகதம் ந வேத
ஜாந்தோபி ந ஜாநந்தி ஜாட்யா சக்தஸ மநீஷிகா
கிமு தேஹாத்மவி ஞான ரஹி தானாம் துராத்ம நாம்

சிறுக்கன் பிரார்த்திக்க பல நரஸிம்ஹ திவ்ய ரூபம் இங்கே

1–ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹர் –
2–ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர்-
3–ஸ்ரீ மாலோல நரஸிம்ஹர் – ஈசான பாகத்தில் கனக நதி தடாகம் -தாரை பிரவாகம் நித்யம் -லஷ்மி குடி அம்மவாரு குடி –
க்ருத யுகத்தில் சோமகன் வேத அபஹாரம் -செய்ய மீட்டுக் கொடுத்து அருளிய பின்பு
வேதங்களே இங்கே தவம் இருந்ததால் வேத கிரி -வேத மலை -வேதாச்சலம் -பெயர்
4–யோகாந்த நரஸிம்ஹர் -ஸ்ரீ ப்ரஹ்லாதனுக்கு யோகம் பயிற்சி அளித்தவர்
5–பாவன நரஸிம்ஹர் –ஸ்ரீ பரத்வாஜருக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் போக்கி அருளினவர்
6—காரஞ்ச நரஸிம்ஹர் -சங்கு சக்கரம் வில் ஏந்தி சேவை -துர்வாச சாபம் தீர்க்க கபில முனியூவர் தவம் செய்த க்ஷேத்ரம்
7—சத்ரவட நரஸிம்ஹர் -கிழக்கு பார்த்து சேவை -ஹாஹா- ஹாஹூ கந்தர்வர்கள் -காண பாடி வரம் பெற்ற ஸ்தலம்
நிஷாதம் ரிஷபம் காந்தாரம் ஷட்ஜம் மத்யமம் தைவதம் பஞ்சமம் -சப்த ஸ்வரங்கள்
8–பார்கவ நரஸிம்ஹர் -அக்ஷய தீர்த்தம் -பார்க்கவ முனிவர்-வசிஷ்டர் போல்வார் – தவம் செய்த க்ஷேத்ரம்
9—ஜ்வாலா நரஸிம்ஹர் –
போகும் வழியில் பாவநாசி தாரை அருவி –
உத்யுத் பாஸ்வத் சஹஸ்ர ப்ரபம் அசநிபம் ஸ்வேஷணைர் விஷ்க்ரந்தம்
வஹ்நீ நஹ்நாய வித்யுத்த திவித திசடா பீஷணம் பீஷணைச்ச
திவ்யைரா தீப்த தேஹம் நிசித நகலசத் பாஹு தண்டைர நேக
சம் பின்னம் பின்ன தைத் யேச்வர தனு மத நும் நாரஸிம்ஹம் பஜாமா

இந்த ஷேத்ரங்கள் யாவும் ஸ்வயம்பூ ஷேத்ரங்கள்

பஷீந்த்ரம் ப்ரோத்ர சம்ஜ்ஞம் ஜல நிதி தநயா சம்ஜ்ஞிதம் யோக சம்ஜ்ஞம்
காரஞ்ஜம் க்ஷேத்ர வர்யம் பலித பலசயம் சத்ர பூர்வம் வடம் ச
ஜ்வாலாக்யம் பார்கவாக்யம் பிமதம் பாவிதம் யோகி வர்ய புண்யம் தத்
பாவ நாக்யம் ஹ்ருதி ச கலயதாம் கல்பதே சத்பலாய –

சனகர் சனாதனர் சனத்குமாரர் சனத்சுஜாதர் –நால்வரும் -ஜய விஜயர் சாபம் –

ஜிஷ்ணுர் விபுர் யஜ்ஜவ் யஜ்ஞ பாலக பிரப விஷ்ணுர் க்ரஸிஷனுச்ச லோகாத்மா லோக நாயக
மோதக புண்டரீகாக்ஷ ஷீராப்தி க்ருத கேதந பூஜ்ய ஸூரா ஸூரைரீச பிரேரக பாப நாசன
வைகுண்ட கமலா வாச சர்வ தேவ நமஸ்க்ருத த்வம் யஜ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வமோங்கார த்வமக்நய
த்வம் ஸ்வாஹா த்வம் ஸ்வத தேவஸ் த்வம் ஸூ தா புருஷோத்தம
நமோ தேவாதி தேவாய விஷ்ணவே சாஸ்வதய ச அனந்தாயா ப்ரேமேயாய் நமஸ்தே கருடத்வஜ
இதி ஸ்தோத்ரம் மஹச் சக்ரே பகவான் பார்வதீ பதி –என்று அனைத்து தேவர்களும் ஸ்துதிக்க
ஹிரண்யகசிபுவை நிரசித்து -ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானை ரக்ஷித்து அருளினார்
அநுஹ்லாதான் -ஹ்லாதன் -சம்ஹ்லாதான் – ப்ரஹ்லாதன் -நால்வரும் சகோதரர்கள்
அஹோ வீர்யம் அஹோ சவ்ரயம் அஹோ பஹு பராக்ரமம் நாரஸிம்ஹ பரம் தைவதம்
அஹோ பலம் அஹோ பலம் –என்று கொண்டாட அஹோபிலம் திரு நாமம்

ஆவிர்பவித்த ஸ்தம்பம் உக்ர ஸ்தம்பமாக இன்றும் சேவை

சம்புர் பவந் ஹி சரப சலபோ பூவ -பரமசிவனால் அதிஷ்டிக்கப்பட்ட சரபத்தை நரஸிம்ஹர் கொன்றார்

தத க்ருத்தோ மஹா காயோ நரஸிம்ஹோ பீமநிஸ்வந சஹஸ்ர கரஜை த்ரஸ்த தஸ்ய காத்ராணீ பீடயன்
தத் ஸ்புரச் சடாடோப ருத்ரம் சரப ரூபிணம் வயதாரயன் நகை தீக்ஷணை ஹிரண்ய கசிபும் யதா
நிஹதே சரபே தஸ்மிந் ரௌத்ரே மது நிகாதினா துஷ்டுவு புண்டரீகாக்ஷம் தேவா தேவர்ஷயஸ் ததா –ஸ்ரீ நரஸிம்ஹ புராணம்

ஹந்தும் அப் யாதகம் ரௌத்ரம் சரபம் நர கேஸரீ நகை விதாராயாமாஸ ஹிரண்யகசிபும் யதா –ஸ்ரீ வராஹ புராணம்

நமோஸ்து நரஸிம்ஹாய லஷ்மீ சதத ஜிதக்ருத யத் க்ரோத அஃனவ் புரா ரௌத்ர சரப சலபாயிம்–புராணாந்தரம்

நாரதர் -நரர் களுக்கு அஞ்ஞானம் போக்குபவர்
பாவ நாசினி திவ்ய நதியும் திருப் புளிய மரத்தின் அடியிலே -ஸ்ரீ சடகோபரை போலவே உண்டாக்கிற்று
கங்கையைப் போன்ற பவித்ரமானது –

நமஸ்தே சர்வ ரூபாய துப்யம் கட்கதராய ச
மாமுத்தராஸ்மாத் அத்ய த்வம் த்வத்தோஹம் பூர்வ முத்திதா
த்வத்தோஹம் உத்திதா பூர்வம் த்வன்மயாஹம் ஜனார்த்தன
ததா அன்யாதி ச பூதாநி ககநாதீந்ய சேஷத
நமஸ்தே பரமார்த்தாத்மன் புருஷாத்மன் நமோஸ்து தே
ப்ரதா நமஸ்து பூதாய கால பூதாய தே மம
த்வம் கர்த்தா சர்வ பூதா நாம் த்வம் பிதா த்வம் விநாச க்ருத்
ஸ்வர்க்காதிஷூ பரோ ப்ரஹ்மா விஷ்ணு ருத்ராத்ம ரூபாத்ருத்
சம்பஷயித்வா சகலம் ஜகத் யே கார்ண வீக்ருத
சேஷே த்வமேவ கோவிந்த சிந்த்ய மாநோ மநீஷிபி
பவதோ யத் பரம் ரூபம் தத் ந ஜா நந்தி கேசந
அவதாரேஷூ யத் ரூபம் தத் தர்சயதி திவவ் கச
வாஸூதேவ மநாராத்ய கோ மோக்ஷம் சமவாப்நுயாத்
யத் கிஞ்சித் மனஸா க்ராஹ்யம் அக்ராஹ்யம் சஷூராதிபி
புத்யா ச யத் பரிஜ்ஜேயம் தத் ரூபம் அகிலம் தவ
த்வன் மயாஹம் த்வதா தாரா த்வத் ஸ்ருஷ்டா த்வாம் உபாஸ்ரிதா
மாதா வீதி ச விஜ்ஜேயம் அபி தத்தே ததோ ஹ மாம்
ஜயாகிலஜ்ஞா நமய ஜய ஸ்தூல மயாய ச
ஜெயா அநந்த மயா வ்யக்த ஜய வ்யக்த மய ப்ரபோ
பராவராத்மந் விஸ்வாத்மந் ஜய யஜ்ஞபதே அநக
த்வம் யஜ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வம் அங்காரஸ் த்வம் அக்நிஜ
த்வம் வேதாஸ் த்வம் ஷடங்காநி த்வம் யஜ்ஞ புருஷா ஹரே
ஸூர்யாதயோ க்ரஹாஸ் தாரா நக்ஷத்ராண் யகிலம் ஜகத்
மூர்த்தாமூர்த்தமத் ருஸ்யம் ச த்ருஸ்யம் ச புருஷோத்தம
யச் சோக்தம் யச்ச நை வேக்தம் மயோக்தம் பரமேஸ்வர
தத் சர்வம் த்வம் நமஸ் துப்யம் பூயோ பூயோ நமோ நாம
இதம் ஸ்தோத்ரம் பகவதோ தரண்யா பரிகீர்த்திதம்
யே படந்தி நரா லோகே ஸ்ராவயந்தி ச மாநவாந
தே யாந்தி பரமம் சித்திம் லபந்தே பிரார்த்திதம் பலம் –ஸ்ரீ வராஹ ஸ்தோத்ரம் –

பால்குனி பவ்ர்ணமி விசேஷம் அஹோபிலத்தில் / வைகாசி மாத ப்ரஹ்மோத்சவம் /

ஸ்ரீ மத் பாகவதம் -7-ஸ்கந்தம் -ஸ்ரீ நரஸிம்ஹ அவதார விவரணம்
ஸ்ரீ மத் நாராயணீயம் -24-25-தசகங்களும் விவரிக்கும்

நம்பனை நரஸிம்ஹனை -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றி -திரௌபதிக்கு கொஞ்சம் விளம்பம்-
நேரில் போனால் பாண்டவர்களை நிரசிக்க ப்ராப்தமாக இருக்குமே -நேராக வர வில்லை புடவை அனுப்பி ரக்ஷணம் –
ஸ்ரீ கஜேந்த்ரனுக்கும் பல காலம் ஸூ வய ரக்ஷணத்தில் இழிந்து பின்பு –1000-ஆண்டுகள் -நேரம் கழித்து
இங்கோ கூப்பிட்ட அந்த க்ஷணத்தில் வந்தார்
எம்பார் சாதித்த படி இப்படி மூன்று பரீஷைகளிலும் வந்து தனது ரக்ஷணத்வம் காட்டி –
நம்பனை நரஸிம்ஹனை ரக்ஷணத்தில் ஊற்றம் -அவனையே போற்றுவோம்

———————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்-ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் –ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –

March 15, 2017

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்–ஸ்ரீ ஹரிவம்ச புராணம் -சேஷ தர்மம் –47-அத்யாயம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே —

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி-

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம் —

————————————–

ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் —

வருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீஷிதம்
நிதாத்ரஸ்தா விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம் யஹம் –

சர்வை ரவத்யதாம் பிராப்தம் சபலவ்கம் திதே ஸூ தம்
நகாக்ரை ஸகலீ யஸ்தம் வீரம் நமாம் யஹம் –

பாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரி விஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம் யஹம் –

ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வல நாதீன் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம் யஹம் –

ஸர்வேந்த்ரியை ரபி விநா சர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜா நாதி யோ நமாம் யாத்யம் தமஹம் சர்வதோமுகம்

நரவத் ஸிம்ஹ வஸ்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மன
மஹாஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் நரஸிம்ஹம் நமாம் யஹம் –

யன்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணயஸ் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் –

ஸர்வோபி யம் ஸமாச்ரித்ய சாகலாம் பத்ரமஸ்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம் யஹம் –

சாஷாத் ஸ்வ காலே சம்பிராப்தம் ம்ருத்யும் சத்ரு குணா நபி
பக்தா நாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –

நமஸ்காராத் மஹம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம்
த்யக்த துக்கோ கிலான் காமான் அஸ்நுதே தம் நமாம் யஹம் –

தாஸ பூதா ஸ்வத சர்வே ஹயாத்மாந பரமாத்மன
அதோ ஹமபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –

சங்க ரேணாதராத் ப்ரோக்தம் பதா நாம் தத்வமுத்தமம்
த்ரி சந்த்யம் யா படேத் தஸ்ய ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே —

—————————————-

ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –

ஸ்ரீ நிவாஸ விமானஸ்தம் சரணாகத ரக்ஷணம்
ஸ்ரீ மத் ஸ்தித புரா தீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் —

மதஸ்வித்ரீ ப்ரியம் தேவம் சங்க சக்ர கதாதரம்
பக்தவத்சல நாமாநம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்

ஸ்ரீ பூமி நீளா சம்யுக்தம் பத்ம பத்ர நிபேஷணம்
அப்தீ சப்ரீத வாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்

புரந்தரத் விஜஸ்ரேஷ்ட மோக்ஷதாயி நமஸ்யுதம்
அத்யந்த ஸூந்தராகாரம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –

தர்மத்வ ஜார்சித பதம் வாருணீ தீரம் ஆஸ்ரிதம்
அநேக ஸூ ர்ய ஸ்ங்காஸம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –5-

தாபத்ரய ஹரம் ஸுரீம் துலசீவ நமாலிநம்
லோகாத்யக்ஷம் ரமா நாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -6-

கிரீட ஹார கேயூர பூஷணாத்யைர் அலங்க்ருதம்
ஆதிமத்யாந்த ரஹிதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –7-

நீலமேக நிபாகாரம் சதுர்புஜ தரம் ஹரிம்
ஸ்ரீ வத்ஸ வஷம் யோகீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -8-

நிஸ் தலே சாஷ்டகம் புண்யம் படேத்யோ பக்திமான் நர
அநேக ஜென்ம ஸம்ப்ராப்தம் தஸ்ய பாபம் விநஸ்யதி —

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .