Archive for the ‘ஸ்ரீ ராமானுஜர்’ Category

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம–
ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே
–ஸ்ரீ வேதாந்த தீப-முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே
–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

———

எம்பெருமானே உலகு உய்ய வேத வ்யாசராய் சாரீரீரக சாஸ்திரத்தை நான்கு அத்தியாயங்களாக அருளிச் செய்தார்
அதுக்கு போதாயன பகவான் அறுபதினாயிரம் படி வ்ருத்தி க்ரந்தமும்
கலியுக தொடக்கத்தில் டங்கர் ஆராயிரப்படியாக சுருக்கி அருளி
த்ரமிட முனிவர் அதற்கு பாஷ்யமும் அருளிச் செய்தனர்
நம் ஸ்வாமி அருளிச் செய்ததுக்கே ஸ்ரீ பாஷ்யம் என்று ஸ்ரீ சரஸ்வதி தேவியே திரு நாமம் சாத்தி அருளினாள்

ஸ்ரீ பாஷ்யம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -மங்கள ஸ்லோகமே ஸ்ரீ பாஷ்ய சாரம்
சமன்வய -காரணத்வ
அவிரோதித்தவ -அபாத்யத்வ
உபாயத்வ
பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

இரண்டாவது மங்கள ஸ்லோகத்தால்
இங்கு ப்ரஹ்ம விஷயமே விசாரம் என்றும்
அவனே நாம் அடையும் பயன் என்றும் விசாரிக்கப்படும் பொருள் என்றும் சம்பந்தம் காட்டி
போதாயனர் விஸ்தாரமாக அருளிச் செய்ததை -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் விளக்க
மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

முதல் அத்தியாயத்தில்-11+6+10+8=35 அதிகரணங்கள்

முதல் நான்கு அதிகரணங்கள் -ஒரே ஸூத்ரம் ஒவ்வொன்றும்
1-1-1- அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–
1-1-3- சாஸ்திர யோநித்வாத்-
1-1-4-தத் து சமன்வயாத் –

முதல் இரண்டும் சித்த ரூபமான ப்ரஹ்மத்தில் பிரமித்திதி ஏற்படுத்தவும்
அடுத்த இரண்டும் ஸாஸ்த்ரமும் அதனால் ஏற்படும் புத்தியும் வீண் என்ற வாத நிரஸனம்

அதிகரணம் என்பது
1-விஷயம்
2-சம்சயம்
3-பூர்வபக்ஷம்
4-சித்தாந்தம்
5-பிரயோஜனம்
என்ற ஐந்து பொருள்களைக் கொண்டது

————

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாஸாதி அதிகரணம்

இதில் ப்ரஹ்ம விசார ஸாஸ்த்ரம் விஷயம்
அது ஆரம்பிக்க வேண்டியதா இல்லையா என்று சம்சயம்
ஆரம்பிக்க வேண்டாம் என்பது பூர்வ பக்ஷம்
ஆரம்பிக்க வேண்டுவதே என்பது ஸித்தாந்தம்
ஸாஸ்த்ரத்தை நிர்ணயம் செய்வதே பலம்

ஸூத்ரம் -1- அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –1-1-1-

இதில் விஷய வாக்கியம்
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் –தத் விஞ்ஞானர்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் –என்பது
கர்மாக்களால் பெறப்படும் லோகங்களை எல்லாம் ஆராய்ந்த ப்ராஹ்மணன்
அக்கர்மங்களால் அக்ருதனான -செயலுக்கு விஷயமாகாத -எம்பெருமான் பெறப்பட முடியாதவன் என்று நிர்வேதம் பிறந்து
ப்ரஹ்ம நிஷ்டனான ஸ்ரோத்ரியனை ஆச்சார்யராக வரித்து சமித்தாதிகளைக் கையிலே உபஹாரமாகக் கொண்டு
எம்பெருமானை அறிந்து கொள்ள பிரார்த்திப்பது ஆகும்

இங்கு ஒருவன் ப்ரஹ்ம விசாரம் செய்வது என்பது அவனது ஆசையாலேயே ஏற்படக் கூடிதயதாகையால்
கிடைக்காத ஒன்றை கிட்ட அபூர்வ விதி ஆகாது
பின் என் என்னில்
ப்ரஹ்ம விசாரம் செய்ய விரும்புபவன் அத்தை ஆச்சார்ய முகேன
உபதேச பூர்வகமாகவே செய்ய வேண்டும் என்ற நியமத்தை விதிப்பதால்
நியம விதியே யாகும்

பூர்வ மீமாம்ஸையில் கடைசி ஸூத்ரம் –
ஸ விஷ்ணு ராஹ ஹிதம் ப்ரஹ்மேத்யா சஷதே தம் ப்ரஹ்மேத்யா சஷதே-என்று உள்ளது
அந்த ப்ரஹ்மத்தின் விசாரம் தொடங்குகிறது என்று இதில் வ்யாஸர்

அத -பிறகு
அத– இக்காரணங்களாலே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -ப்ரஹ்மத்தைப் பற்றி விசாரம் ஆராய்ச்சி செய்யத்தக்கது

கர்ம விசாரம் முடிந்து அவை அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்றும்
ப்ரஹ்ம ஞானமே முடிவற்ற எல்லை இல்லா நிலையான பலனைக் கொடுக்கும் என்று
மேல் எழுந்தவாரி உணர்ந்து ப்ரஹ்ம விசாரத்தில் இழிகிறார் என்றவாறு

கர்ம விசாரம் செய்த பின்பே ப்ரஹ்ம விசாரம் என்பதற்கு -அத்வைதி பூர்வம் நடந்தது கர்ம விசாரமே அல்ல
1-நித்ய அநித்ய வஸ்து விவேகம்
2- சமதமாதி சாதன ஸம்பத்
3-இம்மை மறுமை பல போகத்தில் வைராக்யம்
4-மோக்ஷம் அடைய விருப்பம்
ஆகிய சாதன சதுஷ்டயமே பூர்வ விருத்தம் என்பர்

யாதவ பிரகாசரும் பாஸ்கரரும் முந்தையது தாப த்ரயத்தால் ஏற்பட்ட ஸ்ரமமே என்பர்
லகு பூர்வ பாசத்துக்கு லகு சித்தாந்தம் -மஹா பூர்வ பாசத்துக்கு மஹா சித்தாந்தம்
ப்ரஹ்ம ஆத்ம ஐக்ய ஞானமே உபாயம் என்றும்
நிர்விசேஷ ப்ரஹ்மமே ப்ராப்யம் என்றும்
இந்த ஐக்ய ஞானத்தால் அநிர் வஸநீய அஞ்ஞானமும் –
அதன் அடியாக பிரபஞ்சமும் நீக்கப்படுபவை என்றும் கூறுவார்
ஸ குண சாஸ்திரங்கள் குணங்களை அபேக்ஷிக்கையாலே துர்லபம் என்றும்
நிர்குண சாஸ்திரங்கள் பலம் மிக்கவை என்றும்

ஸத்யம் ஞானம் அநந்தம் -சோதக வாக்கியமும் நிர்குண ப்ரஹ்மத்தையே கூறும் என்பர்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவம் அத்விதீயம் ப்ரஹ்மம் என்பதில்
ஸதேவ -விஜாதீயங்களான அசேதனங்களை விட்டு பேதத்தையும்
ஏகமேவ -என்று சஜாதீயன்களான சேதனங்களை விட்டு பேதத்தையும்
அத்விதீயம் என்று ப்ரஹ்மத்திடம் உள்ள ஸத்யத்வம் ஞானத்வம் போன்ற ஸ்வ கத தர்மங்களில் நின்றும் பேதத்தையும்
விலக்கி நிர்விசேஷ ப்ரஹ்மமே நிரூபிக்கப் படுகிறது
எனவே யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித்
தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே முதலிய வாக்கியங்களில் உள்ள குணங்களை இல்லையாக்கி
நிர்க்குண ப்ரஹ்மமே கூறப்படுகிறது என்று காரண வாக்யத்துடன் ஐக்ய அர்த்தம் கொள்ள வேண்டும் என்பர் –

பிரமாணம் தர்க்கம் உபபாத்திகளைக் காட்டி நம் சித்தாந்தமான
பக்தி ரூபா பன்ன ஞானமே முக்தி உபாயம் -வெறும் தத்வ ஞானம் மட்டும் அல்ல
அது ஆசையால் கிட்டும் கேள்வி அறிவாலே கிட்டக்கூடியது விதிக்க வேண்டாம் என்று மஹா சித்தாந்தம்

இதுக்கு
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -அம்ருதம் ஆகிறான் சர்வ பாதங்களில் நின்றும் விடுபடுகிறான்
போன்ற வாக்யங்களிலே தத்வ ஞானமே முக்திக்கு வழி என்ற சங்கை
ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம்
காரணந்து த்யேய -என்பதால்
ஞானம் வேதனம் சொற்களுக்கு த்யானம் உபாஸனம் என்றே கொள்ள வேண்டும்
பக்தி ரூப ஞானமே முக்திக்கு சாதனம்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -இதில் த்ருஷ்டே தர்சன சமானாகார சாஷாத்காரம் பெற தியானமே வழி
பேதங்களை ஏற்கக்கூடாது என்னும் பூர்வ பக்ஷிகளின் வாதத்தைக் கண்டித்து ஏற்க வேண்டும் என்று ஸ்தாபிக்கிறார்
தர்மமும் தர்மியும் எப்போதும் பேதம் உள்ளவையே

சத்யம் ஞானம் அநந்தம் ஸ்ருதி சஜாதீய பேதங்களைக் கண்டிக்க வில்லை
ஸதேவ -என்று ஸத்கார்ய வாதம்
ஏகமேவ -ஸூஷ்ம அவஸ்தை -உபாதான காரணம் காட்டும்
அத்விதீயம் -தன்னைத் தவிர வேறு நிமித்தம் இல்லை
கீதா வசனம் விஷ்ணு புராண வசனங்களைக் காட்டி அவன் ஒருவனே சமஸ்தத்துக்கும் அந்தர்யாமி என்று
நிர்விசேஷ ப்ரஹ்ம வாதத்தைக் கண்டித்தார்

ஏழுவித அனுபபத்திகள்
1- ஆஸ்ரய அனுப பத்தி -ஞானத்தால் பாதிக்கப்படும் அவித்யை ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மத்தையே
ஆஸ்ரயிப்பது பொருந்தாதே
ஸ்வரூப ஞானம் அவித்யைக்கு விரோதம் இல்லை என்பர்
இவன் தேவதத்தன்-இவனே தேவதத்தன் என்ற ப்ரத்யபிஜ்ஜை நினைவு ரூபமான ஞானத்துக்கும்-
இரண்டு நபர்கள் இல்லை என்று ஸ்தாபிக்கும் ஞானத்துக்கும் வாசி உண்டே
நீங்கள்கூறும் உதாரணம் வேறு வேறு காலத்து ஞானம்
ஆனால் இங்கோ ஒரே விஷயம் -நிர்விசேஷ ப்ரஹ்மம் பற்றிய ஞானம்
ஸ்வரூப ஞானமே ஜகத் என்னும் பிரமத்தைத் தடுக்கும் என்று கண்டிக்கிறார்
2-திரோதான அனுப பத்தி -ப்ரகாசமே வடிவான ப்ரஹ்மம் அவித்யையால் மூடப்பட்டது என்பது பொருந்தாதே
3-ஸ்வரூப அனுப பத்தி -ப்ரஹ்மத்திடம் அவித்யை தோஷம் உண்மையா சத்தியமா
உண்மை என்றாலே இரண்டு வஸ்துக்கள் கொண்டதாகும் அசத்தியம் என்றால்
அந்த அவித்யை பார்வையா பார்ப்பவனிலா பார்க்கப்படுபத்திலா –
ப்ரஹ்மமே தோஷம் என்றால் தோஷ நிவ்ருத்தியே ப்ரஹ்ம நாசமாகும்
4-அநிர்வசனீயத்வ அனுப பத்தி -அத்வைதிகள் அவித்யை ஸத் என்றோ அஸத் என்றோ
சொல்ல முடியாமல் அநிர்வசனீயம் என்பர்
ப்ரதீதி -உள்ளத்துக்குப் புலப்படுதலைக் கொண்டே அது ஸித்திக்க வேண்டும்
அது ஸத் என்றோ அஸத் என்றோ தோன்றுவதால் அநிர்வசனீயம் இல்லை
சத்தும் அசத்தும் இல்லாதது தான் அவித்யையின் விஷயம் என்றால் தோன்றாதது கூட ப்ரதீதியில் விஷயம் ஆகலாம்
அப்போது விஷயம் எது என்ற வ்யவஸ்தையே அற்றுப் போகும்
5-பிராமண அனுப பத்தி பாவ ரூபமான அஞ்ஞானம் உண்டு என்று ஏற்றுக் கொள்ள
அறிவற்ற நான் என்னையும் பிறரையும் அறிந்திலேன் -என்கிற ப்ரத்யஷம் பிரமாணம்
இந்தப் ப்ரத்யக்ஷம் உண்டாவதற்கு முன் இல்ல அபாவ -இன்மையை -விஷயமாகக் கொண்டது என்றால் பொருந்தாது
ஏன் எனில்
ஞானத்தின் பிராக் அபாவத்தை அதன் சம்பந்தியான பிரதியோகி ஞானத்தைக் கொண்டே நிரூபிக்க வேண்டும்
க்யாதி வாதங்கள்
சிப்பியைப்பார்த்து வெள்ளி என்ற பிரமம் -அநிர்வசநீயமான வெள்ளி உண்டாகிறது என்னும் அத்வைதி வாதம் நிரஸனம்
அக்யாதி
அந்யதா க்யாதி
ஆத்ம க்யாதி
அஸத் க்யாதி –பஷன்களில் அந்யதா க்யாதி சிறந்தது என்று விளக்கல்
அக்யாதி யோடே கூடிய யதார்த்த க்யாதியே சிறந்தது என்பதே ஸ்ரீ மன் நாத முனிகள் உகந்தது
சிப்பியில் வெள்ளியின் அம்சம் உண்டே
ஸ்வப்ன பொருள்களும் ஸத்யங்களே
கண்கள் ப்ரவ்ருத்தி விரலால் தடைப்பட்டு இரண்டு சந்திரன்கள் என்கை
மாயாந்து ப்ரக்ருதிம் –மாயா -விசித்ரார்த்த ஸ்ருஷ்ட்டி =மித்யா ஞானம் அல்ல
6- நிவர்த்தக அனுப பத்தி
தத் தவம் அ ஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம
நிர்விசேஷ ப்ரஹ்மாத்மைகத்வ ஞானம் அவித்யை நிவ்ருத்தி செய்யும் என்பர்
இது தவறு
ஜகத்தின் சரீரியான ப்ரஹ்மத்தையே குறிக்கும்
அம்ச அதிகரணத்தில் விளக்கம் உண்டே
பாஸ்கரன் உபாதி பேத அபேத வாதி
யாதவப்ரகாசர் ஸ்வ பாவிக பேத அபேத வாதி
தார்க் கிகன் ஸ்வ நிஷ்ட பேத வாதி
பிரகாரம் அப்ருதக் சித்தம் என்று உணராமல் பிதற்றல்கள் இவை
7- நிவ்ருத்தி -அனுப பத்தி -ஐக்ய ஞானத்தால் பந்த நிவ்ருத்தி என்பது பொருந்தாது
பகவத் பக்தியாலேயே நிவ்ருத்தி என்பதே சுருதி சித்தம்
ஐக்ய ஞானத்துக்கும் ஞாதா தனியே இருக்க ஒண்ணாதே
ஞானம் ஞாதா ஜேயம்-மூன்றும் வேண்டுமே
ப்ரஹ்ம ஞானமே அநந்தமான ஸ்திர பலனைக் கொடுக்கும்

இனி ஸித்த வஸ்து ரூபமான ப்ரஹ்மத்தை போதிக்கும் சக்தி இல்லை என்னும் மீமாம்ஸகனை நிரசிக்கிறார்
ப்ரஹ்ம ப்ராப்திக்கு ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் என்னும் வேத வாக்கியங்கள் பிரமாணங்களே
ப்ரஹ்ம விசாரம் தொடங்குவதில் எந்தவித விரோதமும் இல்லை –

1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –1-1-1-

அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம் -எதனை ஆராய்வதில் எதனால் –
அத -இந்த காரணத்தினால் -மோஷ பலனை அளிக்க வல்ல

ப்ரஹ்ம சப்தேன ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ –அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கண -புருஷோத்தம -அபிதீயதே –

அத -வேதத்தின் ஒரு பகுதியான கர்ம காண்டத்தை விசாரித்த பின்பு
அத -ப்ரஹ்ம ஞானம் இல்லாதவன் கர்மங்கள் அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்பதால்
ப்ரஹ்ம ஞானம் அநந்த ஸ்திரம் ஆகையாலும்
ப்ரஹ்ம விஷயகமான மீமாம்ஸை -விசாரம் –
கர்த்தவ்ய -என்ற பதம் வருவித்துக் கொண்டு செய்யப்பட வேண்டும்
ப்ரஹ்ம -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக குணதானனாய் -ஸ்ரீயப்பதியான புருஷோத்தமன்
ஆகவே ப்ரஹ்ம விசாரம் செய்யத்தக்கதே –

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ
அநவதிக அதிசய அசங்க்யேய புருஷோத்தம அபிபீதயதே
அநவதிக அதிசய -உயர்வற
அசங்க்யேய -உயர்
கல்யாண குண-நலம் உடையவன்
புருஷோத்தமன் -யவனவன்—

————

ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் யாது என்ற கேள்வி எழ
இது தோன்றுகிறது

இரண்டாம் அதிகரணம் ஜந்மாத்யாதி அதிகரணம்

2- ஜந்மாதி அஸ்ய யத–1-1-2-

தைத்ரிய உபநிஷத் –
ப்ருகு தந்தை வருணனிடம் கேட்க வருணன் அளித்த பதில் –
யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே -யேன ஜாதாநி ஜூவந்தி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி
தத்வி ஜ்ஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்மேதி —என்பதே விஷய வாக்கியம்

உலகில் பிறப்பு முதலியவற்றுக்கு காரணமாய் இருத்தல்
இது ப்ரஹ்மத்துக்கு லக்ஷணமாக இருக்கலாமா கூடாதா சம்சயம்
ஸ்ருஷ்டி காரணத்வம்
ஸ்திதி காரணத்வம்
லய காரணத்வம்
என்று விசேஷணங்கள் பலவாய் இருப்பதால்
விசேஷ் யாமும் பலவாகி விடுமே
ப்ரஹ்மமும் பலவாகி விடுமே
ஆகையால் லக்ஷணம் என்று ஏற்க முடியாது -பூர்வ பக்ஷம்

ஜன்மாதி –அஸ்ய –யத –மூன்று பதங்கள்–
இந்த விசித்திரமான ஜகத்துக்கு -ஸ்ருஷ்டி ஸ்திதி -ப்ரளயங்கள் -எந்த ப்ரஹ்மத்தினிடம்
இருந்து உண்டாகின்றனவோ அவனே ப்ரஹ்மம் -என்றவாறு
ப்ரஹ்மம் -காரணப்பெயராகக் கொண்டால் உபய லிங்கமும்
இடுகுறிப் பெயராகக் கொண்டால் ஸ்ரீயப்பதித்வமும் ஸித்திக்கும்
ஜன்மாதி காரணத்வம் விசேஷணமாகவும் உபலக்ஷணமாகவும் கொள்ளலாம்
ப்ரஹ்ம வித்யைகள் பல உண்டே
உபாஸ்ய குண பேதத்தால் உபாஸ்யமும் பின்னமாகலாம்

காரணந்து த்யேய
சதவித்யையில் காரணத்வம் அறிய வேண்டும் என்பதால் விசேஷணமாக கொள்ள வேண்டும்
தஹர உபாஸனத்தில் ப்ரஹ்மத்தில் தோற்றம் ஏற்படுகையில் பொருந்தியும் இருப்பதால் காரணத்வம் உப லக்ஷணம் ஆகும்
இதில் அபஹத பாப்மத்வாதிகளே அறியத்தக்க ஆதாரம் ஆகையால் ஸ்ம்ருதி வ்யக்தி தோறும் தொடர்ந்து
விசேஷணம் ஆகின்றன என்று வித்யா பேதத்தாலே விஷயமும் வெவ் வேறு ஆவதால்
பாஷ்யத்தில் இரண்டு வகைகளும் காட்டப்பட்டது பொருந்தும்

யதோவா இமானி பூதாநி –சேதன அசேதனாத்மகமான ஸமஸ்த வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தை நிரூபிப்பது
ஸத்யம் ஞானம் அநந்தம் வாக்கியம் வேறுபட்ட ஸ்வரூபத்தை விளக்கும்
ஆகையால் இரண்டு லக்ஷண வாக்யங்களுமே பயனுள்ளவையே –

———-

உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மமே வேதாந்த வாக்யங்களால்
விளக்கப்படுகிறது என்று கூறுவது பொருந்தாது
ஏன் எனில்
ப்ரஹ்மம் அனுமானத்தாலேயே ஸித்திப்பதால்
அந்த அனுமானமே தர்மியான ப்ரஹ்மத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய பிரமாணமாகையாலே
பிரபலமாதலின் வேறு ப்ரமாணங்களாலே சாதிக்க முடியாததையே ஸாஸ்த்ரம் ஸாதிப்பதில் பயன் உண்டு என்பதால்
அனுமான ஸித்தமான ப்ரஹ்மத்தை ஸாஸ்த்ரம் உபாதான காரணனுமாகும் என்று கூற ஒவ்சித்யம் இல்லை
ஆதலின் ஸாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தேவை இல்லை என்று பூர்வ பக்ஷம்
அந்த அனுமானத்தைக் கண்டித்து
ஸாஸ்திரமே பிரமாணம் என்றும்
அதனால் ஆரம்பிக்கப் பட வேண்டியதே என்றும்
அடுத்தபடி ஸாதிக்கிறார் –

3-சாஸ்திர யோநித்வாதிகரணம்-

சாஸ்திர யோநித்வாத்–1-1-3-

ஸாஸ்த்ரத்தையே ப்ரமாணமாகக் கொண்டது ப்ரஹ்மம் என்றவாறு

பூமி முதலியவை கர்த்தாவைக் கொண்டவை -செய்யப்படும் பொருளாய் இருப்பதால் –குடம் முதலியவை போலே –
செய்யப்படாதவைக்குக் கர்த்தா கிடையாது –ஆத்மாவைப் போலே
என்று இவ்வாறு அந்வய கேவல வ்யாதிரிகி அனுமானங்களால் ஜகத் காரணமான ப்ரஹ்மம் அறியக்கூடுமாதலின்
யதோவா இமானி -இத்யாதி வாக்கியங்கள் ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிவிக்க மாட்டா என்பது பூர்வபக்ஷம்

ஜகத் என்பது கார்யம் -செய்யப்படுவதே என்றாலும்
ஒரே காலத்திலே ஒரே புருஷனாலே சர்வ ஜகத்தும் படைக்கப்பட்டது என்பதில் பிரமாணம் இல்லாதபடியால்
விச்வாமித்திராதிகளைப் போன்ற ஜீவர்களுக்கே விசித்ர ஸ்ருஷ்டி சம்பவிக்குமாகையாலே
ஜீவனை விட்டு வேறான ஸர்வஞ்ஞத் வாதி குணங்களை யுடைய ப்ரஹ்மம் அனுமானத்தால் ஸித்திக்காது
அதற்கு ஸாஸ்திரமே பிரமாணமாக வேண்டும் என்பது ஸித்தாந்தம்

அனுமானாதிகளாலே உள்ளவாறு அறிய ஒண்ணாமையாலே
யதோவா இமானி -என்ற வாக்கியம்
உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மத்தைப் போதிப்பதால் ஸாஸ்திரமே பிரமாணம் ஆகிறது –
ஆகவே ப்ரஹ்மம் ஸாஸ்த்ர யோனியாகிறது
பிற பிரமாணங்கள் போதிக்காது என்பதாம் –

————-

ப்ரஹ்மம் ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியக் கூடியதாய் இருப்பினும் –
ஸப்தம் ஸித்த வஸ்துக்களைப் போதிக்கும் திறனைப் பெற்று இருப்பினும்
ப்ரவ்ருத்தி என்பது -அறிய வேண்டும் என்னும் விருப்பத்துக்குக் காரியமாக இருப்பதாலும் –
அவ்விருப்பும் பிரயோஜனம் பற்றிய ஞானத்தைச் சார்ந்து ஆதலாலும் –
அந்த பிரயோஜனமும் அதற்கான சாதனங்களை அனுஷ்ட்டிப்பத்தைச் சார்ந்து இருப்பதாலும்
ஸித்த பரமான வாக்யத்துக்கு பிரயோஜனமான சுகமும் -துக்க நிவ்ருத்தி -அவற்றின் சாதனத்தை அனுஷ்டித்தல்
இவற்றின் விஷயத்தில் போதனத்தினால் ப்ரவர்த்தகத்வம் என்பது இல்லாததால்
ப்ரயோஜனத்தில் முடிவு பெறுதல் என்பது இல்லை
ஆதலால் வேதாந்த வாக்யங்கள் ஸித்தமான வஸ்துவைப் போதிக்கும் கருத்துடையவை அல்ல என்பது சங்கை
இத்தை நீக்கவே இந்த அதிகரணம் –

4-சமந்வயாதிகரணம்-

தத் து சமன்வயாத் –1-1-4–

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் போன்ற வாக்கியங்கள் ப்ரவ்ருத்திக்கும் நிவ்ருத்திக்கும்
விஷயமாகாத ப்ரஹ்மத்தை போதிக்க மாட்டா
ஆகையால் வேதாந்த அர்த்த விசார ரூபமான ஸாஸ்த்ரம் ஆரம்பிக்க வேண்டியது இல்லை
என்பது பூர்வ பக்ஷம்

வீட்டுக்குள் புதையல் இருக்கிறது போல் ஈடற்ற ஆனந்த ரூபமான ப்ரஹ்மத்தை
இந்த வாக்கியங்கள் போதிக்கும் சக்தி கொண்டவையே
ஆதலின் ஸாஸ்த்ர விசாரம் ஆரம்பிக்கத் தக்கதே என்பது சித்தாந்தம்

உபாசகனுக்கு பயனாக ப்ரஹ்மமும்-ப்ரஹ்மத்துக்கு பயனாக உபாசகனும் ஆவதால்
கர்மங்களையும் பலன்களையும் சொல்லும் வேதங்கள் பிரமாணங்கள் ஆகும்

தத் து சமன்வயாத் -மூன்று சொற்கள்
து பூர்வ பக்ஷ நிரஸனம்
தத் -சாஸ்திரத்தையே ப்ரமாணமாகக் கொண்டமை ஸம்மபவிப்பதே
சமன்வயாத்-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஆனந்தோ ப்ரஹ்ம
முதலிய வாக்யங்களுக்கு ப்ரயோஜன பூதமான ப்ரஹ்மத்தை ஆனந்த ரூபமாக விளக்கும் தன்மையால்
சமன்வயம் -பொருத்தம் ஏற்படுவதால்
ஸாஸ்த்ர யோனித்வம் கூடும் –

——————-

இவ்வாறு நான்கு அதிகரணங்களால் ஸாஸ்த்ர ஆரம்பத்தைச் சரியானதே என்று நிலை நாட்டி
ப்ரஹ்ம விசாரத்தை தொடங்குகிறார்

5-ஈஷத் யதிகரணம்

இதில் எட்டு ஸூத்ரங்கள்

கீழே வேதாந்த வாக்யங்களுக்கு ப்ரஹ்மத்தை பரம புருஷார்த்த ரூபமாக விளக்குவது
சமன்வயமே பொருத்தமே என்பதை பூர்வ பக்ஷி மறுக்கிறார்
புருஷார்த்தம் அல்லாத பிரதானம் முதலானவற்றை காரணமாக விளக்குவதால் என்று ஆக்ஷேபித்து
இந்த அதிகரணம் தொடங்குகிறது என்பது சங்கதி –

5- ஈஷதேர் ந அ சப்தம் –1-1-5-

சாந்தோக்யத்தில் -ஸ்வேதகேதுர் ஹாருணேய ஆச -என்று தொடங்கும் ஆறாம் அத்தியாயத்தில்
ஜகத் காரணமாகக் கூறப்படும் ஸத் -என்பது
அனுமானத்தால் சித்திப்பதும் சாங்க்யர்கள் கூறும் பிரதானம் -பிரகிருதியா அல்லது ப்ரஹ்மமா என்று சங்கை
பிரதானம் தான் என்று பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
இதம் என்ற சொல்லால் கூறப்படும் சேதனர்களின் போக்யமான ஸத்வ ரஜஸ் தமோ மயமான ஜகத்துக்கு
அதே விதமான பிரதானம் காரணம் என்கை உசிதமானது
ஜகாத்தை விட விலக்ஷணமான ப்ரஹ்மம் காரணம் என்பது பொருந்தாது
பிரதானம் ஜகத்துக்குக் காரணம் என்பதற்கு அனுமானம்
இந்த ஜகத்து தன்னைத் தவிர வேறே அல்லாமல் தன்னையே உபாதான காரணமாகக் கொண்டது
காரியமாய் இருப்பதால் குடம் போல் என்பதும்
இந்த ஜகத்து தன் காரணம் ஒன்றை அறிவதாலேயே முற்றும் அறியப்படுவது -காரியமாய் இருப்பதால்
ஒரு மண் உருண்டையால் தொடங்கப்பட்ட குடம் போல் என்பதும் ஆகிய இரண்டு அனுமானங்களாலும்
சாதனமானவை என்பது பூர்வ பக்ஷம் –

பரம புருஷனே ஜகத் காரணம் என்றும் ஸத் என்றும் சொல்லப்படும் பர ப்ரஹ்ம ஸ்வரூபம்
அவனே ஸூஷ்ம சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால் காரணமானாலும்
ஸ்தூலமான சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால்
காரியமாகிய ஜகத்தின் ரூபத்தில் உள்ளவன் என்பதால் காரியமும்
காரியமும் காரணமும் ஒரே விதமானமையால் பரமபுருஷனே ஸத் எனப்படும்
ஜகத் காரணம் என்பது சித்தாந்த யுக்தி –

ஈஷதேர் ந அ சப்தம் –
இதில்
அ -சப்தம் மட்டும் ப்ரமாணமாகக் கொள்ளாத அனுமான பிராமண கம்யமான பிரதானம்
ந -ஸத் எனப்படும் ஜகத் காரணம் அன்று
ஏன் எனில்
ஈஷதேர்-நான் பலவிதமாக மாறப்போகிறேன் என்று சங்கல்பித்துக் கொண்டார்
தத் ஈஷதே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -என்ற சங்கல்பம்
அசேதனமான ஜகத்துக்குச் சேராதே என்பதால்
ஸர்வஞ்ஞத்வம் முதலியவற்றுடன் கூடிய ப்ரஹ்மமே ஜகத்தின் காரணமாகும் என்பதாம் –

——–

6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் –1-1-6-

தேஜஸ் பார்த்தது தண்ணீர் பார்த்தது முதலிய வாக்கியங்களில்
ஈஷ என்ற வினைப்பகுதியால் சங்கல்பம் என்பதை உபசார வாக்காக -கௌணமாக -கொள்வது போல்
இங்கும் கொண்டால் பிரதானம் காரணம் என்பதில் தடை இல்லையே
ஈஷணம் என்பது ஸ்ருஷ்டிக்கு முந்திய நிலையாகிய முக்கியமில்லாத ஈஷணத்தைச் சொல்வது என்றால்

கௌண சேத் ந -அஃது இல்லை
ஏன் எனில்
ஆத்ம சப்தாத் -ஐததாம்யம் இதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா என்று –
சேதன அசேதன ரூபமான சர்வ ஜகத்துக்கும் ஸத் என்பதே ஆத்மா என்பதால்
பிரதானம் ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமியான ஆத்மாவாய் இருத்தல் பொருந்தாது என்று கருத்து –

———

7-தந் நிஷ்டஸ்ய ச மோஷ உபதேசயாத் –1-1-7-

தந் நிஷ்டஸ்ய ச -சத்தே ஆத்மா என்றது -சந்திக்கும்
மோஷ உபதேசயாத் –புருஷனுக்கு உடலை விட்டதும் ப்ரஹ்மத்தை அடைதல் என்கிற மோக்ஷத்தை உபதேசிப்பதால்
அசேதனமான பிரதானம் காரணம் -காரணமே த்யானிக்கப் படுவதால் –
எதை உபாஸிக்கிறானோ அதே பலம் -தத் க்ரது -நியாயத்தால் –
தாப த்ரயங்களுக்கு காரணமான அசேதனத்தை அடைதலே -சம்பத்தியே -மோக்ஷம் -என்றதாகும்
பிரதானத்தைக் காரணமாக் கூறும் சாங்க்யர்களும் இதனை ஏற்பது இல்லையே என்று கருத்து –

யாதாக்ரது ரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-14-1–என்றபடி
பிரக்ருதியை எவ்வாறு உபாசிக்கிறானோ இறந்தபின் அப்படியே ஆகிறான் -எனவே சத் எனபது பிரகிருதி அல்ல-

சத் வித்யா பிரகரணத்தில்-சாந்தோக்யத்தில் –
ஆச்சார்யவான் புருஷ வேத -தஸ்ய தாவதேவ சிரம் யாவன்ன விமோஷ்யே அத சம்பத்ஸ்யே-என்று
சத் உபாசனமே மோக்ஷ உபாயமாக சொல்லப்பட்டது –
எவனுக்கு உபதேஷ்டாவான ஆச்சார்யன் இருக்கிறானோ அவனே ப்ரஹ்ம வித்தாவான் –
சரம சரீரத்தில் இருந்து விடுபடலாம் அளவே அவனுக்கு கால தாமதம் –
சரம சரீரம் விழுந்த உடனே சத் சப்த நிஷ்டானாய் ஜகத் காரண பூதனான பரம புருஷனை அடைகிறான்
சத் உபாசன நிஷ்டனுக்கு சரீரம் விழும் அளவு தான் மோக்ஷ ப்ராப்தியில் தாமதம் –
சரீரம் தொலைந்த உடன் முக்தன் ஆகிறான் –
அதனால் நாராயணனே ஸச் சப்த வாச்யன் என்று அறுதி விடப்படுவதால்
ப்ராக்ருதமான வஸ்து பிரதானம் அன்று என்பதே ஸூத்ரத்தின் தாத்பர்யம்

தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி -இத்யாதிகளால்–இதே தத் சப்தம் –
இதே தத் சப்தம் -தன்னிஷ்டஸ்ய -வாக்யத்திலும்
எனவே – நாராயண உபாசனமே மோக்ஷ உபாயம் -என்றதாயிற்று

————

8-ஹேயத்வா வச நாத் ச –1-1-8-

சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
உபாசனை செய்யலாம் -எனவே அது ப்ரஹ்மமே

ப்ரதானமே ஸத் எனும் ஜகத் காரணமாகில்
மோக்ஷம் விரும்புகிற ஸ்வேதகேதுவுக்கு தன்னை பிரதான ஆத்மகன் என்று உபாஸிப்பது
மோக்ஷ விரோதியாதலின் அது விலக்கத் தக்கது என்று உபதேசித்து இருக்க வேண்டும் –
அவ்வாறு உபதேசிக்காமையாலும் பிரதானம் காரணம் அன்று –

———–

9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் –1-1-9-

சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
அறிவற்ற பொருள் அறிவுடையார்க்கு உணர்த்தாதே –

பிரதானம் காரணம் என்னில் செய்த ப்ரதிஜ்ஜையும் விரோதிக்கும் –
அதாவது முதலில் -யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி –என்று
காரணத்தை அறிந்தால் கார்யங்கள் அனைத்தும் அறியப்பட்டு விடும் என்று ப்ரதிஜ்ஜை செய்யப் பட்டது
ஸத் என்பது ப்ரஹ்மமே என்று கொண்டால் தான் இந்த ப்ரதிஜ்ஜை பொருந்தும்
பிரதானம் ஸத் என்னும் சொல்லின் பொருள் என்றால்
அந்த சேதனம் சேதனத்துக்குக் காரணம் ஆக மாட்டாதே என்பதால்
ஜகத் அத்தனையும் அறியலாம் என்ற ப்ரதிஜ்ஜை பொருந்தாது ஆகும் –

———–

10 –ஸ்வாப்யயாத்–1-1-10-

தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம்
சத் ப்ரஹ்மமே

சாந்தோக்யம் -6-8-1-
யத்ரை தத் புருஷ ஸ்வ பிதி நாம சதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி
தஸ்மா தேநம் ஸ்வ பி தீத்யாஸ் ஷதே ஸ்வம் ஹயபீதோ பவதி –

ஸதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி-முதலிய வாக்யங்களில் ஸூஷுப்தி தசையில் ஜீவன்
ஸத்திலே லயித்து இருப்பதாகக் காண்கிறது
பிரளயம் என்பது காரியப்பொருள் காரணத்திலே லயம் அடைதலே
இதனாலும் பிரதானம் காரணம் அன்று
எங்கு இந்த ஜீவன் உறங்குகிறானோ என்னும் இடத்தில் புருஷ என்னும் சொல்
விழித்து இருக்கும் ஜீவனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் குறிப்பிடுகிறது
அந்த ப்ரஹ்மம் ஸூஷுப்தி காலத்தில்
மனுஷ்யாதி நாம ரூப சம்பந்தத்தை விட்டு வெறும் ஸத் என்ற சொல்லின் பொருளாகிறது என்பதாம் –

————-

11-கதி சாமான்யாத் –1-1-11–

ஐத் ரேய உபநிஷத் -1-1-
ஆத்மா வை இதம் ஏக ஏவாக்ர ஆஸீத் -ஆத்மா என்னும் பொருளாக இது -சத் -இருந்தது –
தைத்ரியம் -2-1-1-
ஆத்மன ஆகாச சம்பூத -இந்த பிரமத்தில் இருந்து ஆகாசம் யுண்டாயிற்று
இவற்றால் ஸ்ரீ மன் நாராயணனே சத் என்றும் உலகின் காரணம் என்றதும் ஆயிற்று –

கதி சாமான்யாத்-
கதியாவது -பிரவ்ருத்தி -அதாவது அர்த்த போதகத்வம் –
சாமான்யாத்-அது சாமானமாய் இருக்க வேண்டியது அவசியம் ஆகையால் -என்றவாறு
காரண வாக்கியங்கள் எல்லாம் ஒரே மிடறாக இருக்க வேண்டியதாகையாலே என்றவாறு
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத -என்றும்
ப்ரஜாஸ் ஸ்ருஜ்யேதி-என்றும் –
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –என்றும்
ந ப்ரஹ்மா நேசாநோ நேம த்யாவா ப்ருத்வீ -என்றும்
நாராயணனுக்கே ஜகத் காரணத்வம் ஓதப்பட்டுள்ளதே
ஸச் சப்த தேவதா வாக்கியங்கள் -சப்தங்கள் நாராயணன் இடமே பர்வசிக்கும் –
பிரதானம் பிரகிருதி ஸச் சப்த வாஸ்யம் அன்று-

இது போன்ற பல உபநிஷத் வாக்யங்களுக்கு எந்த கதியோ -நியாயமோ -அதே கதி
முன்பு ஸத் ஒன்றாய் இருந்தது முதலிய வாக்யத்துக்கும் சமானம்
அவற்றில் எல்லாம் பரம புருஷனே ஜகத் காரணம் என்று நிச்சயித்து இருக்கிற படியால்
பரம புருஷனே ஸத் என்ற சொல்லின் பொருளாம் –

———-

12- ஸ்ருதத்வாச்ச –1-1-12–

ஆத்மத பிராண ஆத்மத ஆகாச ஆத்மத ஏவேதம் சர்வம்–சாந்தோக்யம் -7-26-1- என்று
இந்த ப்ரஹ்மத்தில் இருந்து சுவாசம் ஆகாசம் அனைத்தும் உண்டானது என்பதால்-

அத சர்வஞ்ஞ -சர்வ சக்தி -சர்வேஸ்வரேஸ்வர-நிரஸ்த நிகில தோஷ கந்த -அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணவ் மஹார்ணவ -புருஷோத்தமோ நாராயண ஏஷ நிகில
ஜகத் ஏக காரணம் ஜிஜ்ஞ்ஞாஸ்யம் ப்ரஹமேதி ஸ்திதம்

இந்த ஸத் வித்யையிலும் ஸத் என்பதே ஆத்மா என்ற பெயருடன் நாம ரூபங்களை ஏற்படுத்தியது என்றும்
ஸர்வஞ்ஞன்–பாபங்கள் ஒட்டாதவன் -போன்ற பல கல்யாண குணங்கள்
இந்த ஜீவாத்மாவுடன் அனுபிரவேசம் செய்து நாம ரூபங்களை விளக்குகிறேன்
இந்த எல்லா பிரஜைகளும் சத்தை காரணமாக் கொண்டவையே
பாபம் அற்றவன் ஜரா மரணாதிகள் அற்றவன் முதலிய வாக்யங்களால் பொருத்தமாகக் கூறப்படுபவன்
ஸத் எனப்படும் ஸகல ஜகத் காரணமான பரம புருஷனே என்று ஸித்தாந்தம்

இந்த அதிகரணத்தால் கல்யாண குண பூர்ணனான பர ப்ரஹ்மமே ஸத் என்பதால்
நிர் குணம் நிர் விசேஷமாய் உள்ள ப்ரஹ்மம் என்ற அத்வைதி வாதம் நிரசிக்கப் பட்டது –

———–

6-ஆனந்த மயாதிகரணம்-

கீழே ஈஷணம் -சங்கல்பம் இல்லாத அசேதனத்தை விட ப்ரஹ்மம் விலக்ஷணம் என்று நிரூபணம்
ஈஷணம் சத்துக்கு வேண்டும் என்றால் அதுக்குத் தகுதி உள்ள ஜீவனே ஸத் என்றும் காரணம் ஆகட்டும்
அல்லது ஸத் வித்யையில்
அநேந ஜீவேந ஆத்மநா
தத் த்வம் அஸி என்று
விசேஷண விசேஷ்ய பாவ சாமானாதி கரண்யத்தால் ஜீவ ப்ரஹ்மங்களுக்கு ஐக்யம் சொல்லுவதாலும்
பக்தன் முக்தன் இரு நிலைகளை உடைய ஜீவனே காரணமாகட்டுமே
என்ற சங்கையை நிரஸிக்க
ஸத் எனப்படும் ப்ரஹ்மத்துக்கு ஜீவனைக் காட்டிலும் வேறு பாட்டை நிரூபிக்கிறார் இதில்
என்று அதிகரண சங்கதி –

13- ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-

தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயா தன்யோந்தர ஆத்மாநந்தமய தே நைஷபூர்ண -ஆனந்த வல்லி–என்று
விஷய வாக்யம்

முந்திய வரில் ஆத்மாவிடம் இருந்து ஆகாயம் -ஆகாயத்தில் இருந்து காற்று -காற்றில் இருந்து அக்னி -அக்னியில் இருந்து நீர்
நீரில் இருந்து பூமி -பூமியில் இருந்து தாவரங்கள் -தாவரங்களில் இருந்து உணவு -உணவில் இருந்து உடல் –
விஜ்ஞான மயம் மட்டும் அல்ல ஆனந்தமே உருவாக ஓன்று உள்ளது –

ஆனந்த மயம் என்பது பக்தனும் முக்தனும் அல்லாத பரமாத்மாவா அல்லது ஜீவனா என்ற சங்கை
ஜீவனே என்று சாங்க்யன் -பூர்வபஷி
ஏஷ ஏவ சாரீர ஆத்மா
தத் த்வம் அஸி -என்பதாக ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் தோன்றுவதால் ஜீவனே என்பது பூர்வ பக்ஷம்
சாரீரத்வம் சரீர சம்பந்தம் ஜீவனுக்கே பொருந்தும் என்பர்

இவ்வாறு கூறும் சாங்க்யனை ப்ரஹ்மத்துக்கு அஞ்ஞானம் கூறும் அத்வைதி எதிர்க்க
நநுச ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்டா என்று அத்தை சாங்க்யன் எதிர்க்க
அந்த சாங்க்யனையும் -நைவ -என்று தொடங்கி சித்தாந்தி கண்டிக்கிறார் –

இந்த அதிகரணத்தில் பூர்வ பக்ஷ ஹேதுக்கள் இரண்டு –
தத் த்வம் அஸி-என்றும் சாமானாதி கரண்யமும் -சாரீரத்வமும்
நிர் விசேஷமே பொருள் என்றால் பிரகரணத்தின் விரோதமும் –
இரண்டு பதங்களின் பரியாலோசனையுடன் சாமானாதி கரண்யம் பற்றி ஆலோசியாமையும் குற்றமாகின்றன
சாமானாதி கரண்யம் என்பதற்கு வையாகரணர் கூறிய லக்ஷணம் –
வெவ்வேறு பொருளுள்ள பதங்கள் ஒரே பொருளை விளக்கும் நிலை -என்றபடி
விசிஷ்டமான அர்த்தத்தைக் காட்டுவதாக சமர்த்திக்கின்றார்

அந்த லக்ஷணமாவது –
பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் ஸப்தானாம் ச ஏகஸ்மின்னர்த்தே வ்ருத்தி
அதாவது
ப்ரவ்ருத்தி என்றால் ஒரு சொல் இந்த அர்த்தத்தைப் போதிக்கும் என்ற நியதி
சிறப்பாக விசேஷ் யமான சொல்லின் பொருளையே விசேஷணமும் போதிக்கை தான் ப்ரவ்ருத்தி
அதுக்கு நிமித்தம் -த்வாரம் -விசேஷமான ஜாதி இனம் குணம் முதலியவை
அவற்றைக் குறிப்பிடும் சொற்கள் ஒரே விசேஷ் யமான அர்த்தத்தை
வ்ருத்தி -போதித்தல்

இந்த சாமானாதிகரண்யம் நிர் விசேஷத்தைப் போதிக்க மாட்டாது என்று கண்டித்ததுடன்
தன் மதத்தில் மீமாம்சகர் கூறும் அருணாதி கரண நியாயம் பொருத்தமாய் இருப்பதையும்
அவ்வதிகரணத்துக்கு நிரீஸ்வர மீமாம்சகன் அர்த்தத்தைக் கண்டித்து
தம் மதப்படியான பூர்வ பக்ஷ சித்தாந்தகளையும் கூறி அருளுதல்
பின்னர் தத் த்வம் இரு சொற்களுக்கும் விஸிஷ்ட அர்த்தமே பொருள் என்று நிறுவி
ஜாதி இனம் குணம் இவற்றைக் குறிக்கும் சொற்கள் கோ பசு முதலியவை குறிப்பிட்ட
வியக்தியை – பொருளை -விளக்கும் ஆற்றல் பெற்று இருப்பது போலவே
சரீரத்தைக் கூறும் சொற்களும் சரீரியான ஆத்மா வரை பொருளைக் காட்டுமவை எனக் காட்டல்
இவ்வாறு சாமானாதி கரண்யம் என்ற ஹேதுவைக் கண்டித்து
பின் சாரீரத்வம் -சரீர சம்பந்தம் -என்ற ஹேதுவையும் கண்டிக்கிறார்

பரம புருஷனே – தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா –தைத்ரியம்
ஞான மயன் ஆத்மா-ஜீவன் தான் அவனுக்குள்ளும் இருக்கும் ஆனந்த மயன் பரமாத்மா –
சாரீரம் எனப்படுபவன் ஆதலின்
அவனது ஆனந்தத்தை அளக்க இயலாது –

சைஷா நந்தஸ்ய மீமாஸ் ஸா பவதி –
மனுஷ்ய ஆனந்தத்தை விட பல கோடி நூறாயிரம் மடங்கு ஆனந்தம்

யஸ்யாத்மா சரீரம் சுருதி வாக்யத்தால்
அந்த பரம் பொருளுக்கு உடல் தொடர்பு உண்டே -எனவே
ஆனந்த மயனாக சொல்லப் படுபவன் பரம் பொருளே-

————-

14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –1-1-14-

ஆனந்த மய என்பதில் மய என்ற விகுதி புலப்படுதலால்-விகாரம் என்ற பொருளில் அவ் விகுதி உள்ளமையால்
நிர் விகாரமான ப்ரஹ்மத்தை ஆனந்த மயம் என்ற சொல் பொருந்தாது
இயற்கையாய் ஆனந்த ரூபமான ஜீவனுக்கு சுக துக்கங்களுக்குக் காரணமாக சம்சார நிலை விகாரமாதலின்
ஆனந்தமயன் என்பது ஜீவனே
பரம புருஷன் ஆனந்த மயன் அல்லன் என்றால்

இதி சேத் ந -இவ்வாறு கூறுவது பொருந்தாது
ப்ராசுர்யாத் –யாத்ரை முழுவதும் வண்டி மயம் போல் ப்ராசுர்யம்-மிகுதி என்ற பொருளிலும்
மயட் -என்ற விகுதி பயன்படுத்தப் படுவதால்
நிகரற்ற ஆனந்தம் நிறைந்தவனான பரம புருஷனே ஆனந்த மயன் ஆவான்

ஆனால் ஆனந்தம் பிரசுரம் -மிகுதி என்றால்
துக்கமும் ஸ்வல்பம் உண்டு என்று பொருளாகுமே
அப்போது ப்ரஹ்மம் துக்கம் கலந்து என்னலாகாதோ என்னில்
அப்படி அன்று
கிரணங்கள் மிகுந்தவன் கதிரவன் என்றால் இருளும் சிறிது கலந்தவன் என்ற பொருள் எப்படி ஆகாதோ
அப்படியே அபஹத பாப்மா விஜர முதலிய வாக்யங்களால் துக்கம் அல்பமும் ஒட்டாது என்று கருத்து –

———–

15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச-1-1-15–

ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று அவன் ஆனந்தம் அளிப்பவன் என்றும்
கோ ஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-என்று
அவன் இல்லை என்றால் யாராலும் ஆனந்தம் அனுபவிக்க முடியாது என்றும் தைத்ரியம் கூறுவதால்
ஆனந்தம் அடையும் ஜீவனை விட ஆனந்தத்தில் காரணமான பரமாத்மா வேறானவன் என்றவாறு

———-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே–1-1-16-

தைத்ரியம் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் ப்ரஹ்மம் ஜீவனை விட உயர்ந்தது என்கிறது

ஜீவனுக்கு ப்ரஹ்மமே ப்ராப்யம் -என்று கூறி
ததேஷாப்யுக்தா -முதலிய ப்ராஹ்மணம் மந்த்ரவர்ணம் முதலிய வாக்யங்களாலே சொல்லி
அந்த ப்ரஹ்மமே ஆனந்த மயன் -ஜீவனில் வேறு பட்டவன் என்று உறுதி ஆகிறது

————–

இவ்வாறு ப்ரஹ்மத்துக்கு பக்தனான ஜீவனில் பேதத்தைக் கூறி
மேல் முக்த ஜீவனில் பேதத்தைக் காட்டுகிறார் –

17-ந இதர அநுபபத்தே –1-1-17-

தைத்ரியம் –
சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி -என்று
மிகுந்த ஞானம் உள்ள ப்ரஹ்மத்தின் இடம் இருந்து ஜீவன் தான் விரும்பும் அனைத்தையும் பெறுகிறான் –
என்பதால் ஆனந்த மயன் ஜீவன் அல்ல –

இதர -பரமாத்மாவின் வேறுபட்ட முக்தாத்மாவும்
ந -மந்த்ர வர்ணத்தால் கூறப்படுபவன் அல்லன்
அநுபபத்தே –சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி-என்று கூறப்படும் இயற்கையான விபச்சித்த்வம்
அதாவது இயற்கையான ஸத்ய ஸங்கல்பம் முக்தனுக்குக் கூடாததாலால்
ஸோ காமாயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய-என்று குறிப்பிடும் விபச்சித்வம்
முந்தைய நிலையில் சம்சாரியாய் இருந்த முக்தனுக்கும் பொருந்தாது என்று கருத்து –

———-

18-பேத வ்யபதேசாத் ச–1-1-18-

தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞான மயாத் அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய –தைத்ரியம்- என்று
ஆனந்தமயன் விஜ்ஞான மயனை விட மாறுபட்டவன் என்பதால்-ப்ரஹ்மமே -ஜீவன் அல்ல என்றதாயிற்று –

தஸ்மாத்வா ஏதஸ்மாத்மான ஆகாசஸ் ஸம்பூத –போன்ற வாக்யங்களாலே
அன்னமயம் பிராண மயம் மநோ மயங்களைக் காட்டிலும்
வேறான விஞ்ஞான மயனான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனாக
அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய–என்று
பரமாத்மாவுக்கு பேதத்தைக் கூறுவதால் மந்திர வர்ணத்தில் கூறப்படும் ஆனந்தமயன்
ஜீவன் அல்லன் என்பது தெளிவாகிறது –

———-

19-காமாத் ச ந அநுமாநாபேஷா –1-1-19-

பஹூச்யாம் சங்கல்பத்தால் -உடல் புலன்கள் இல்லாமல் பிரகிருதி உதவி இல்லாமல் செய்பவன் –
என்பதால் ப்ரஹ்மமே-ஜீவன் இல்லை-

காமாச்ச –பஹுஸ்யாம் என்று அருளிய ஸங்கல்பத்தால் தான் விசித்திரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது
அதற்கு அனுமான அபேஷா ந –பிரதானத்தின் அபேக்ஷை இல்லை
சதுர்முகாதிகளுக்கு சரீர நிலையை அடைந்த பிரதானத்தின் சேர்க்கை தேவைப்படுவது போலே
பரமாத்மா சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிப்பதற்குப் பிரதானத்தின் தேவையில்லை –
ஆதலால் ஆனந்த மயன் என்பது ஜீவனின் வேறு ஆனவனே –

———–

20-அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் சாஸ்தி –1-1-20-

ஆனந்த மயனுடன் சேரும் பொழுது ஜீவனுக்கும் ஆனந்தம் உண்டாகும்

இவ்வாறு ஆனந்த மயன் முக்தனுக்குக் கிட்டிய வுடன்
தத் யோகம் -அந்த ஆனந்தத்துடன் சம்பந்தத்தை
சாஸ்தி -ஸாஸ்த்ரம் கூறுகிறது
ஸாஸ்த்ரமாவது –ரஸோ வை ஸ ரஸம் ஹ்யே வாயம் லப்தவா ஆனந்தீ பவதி -என்பது
ஆகையால் பக்த முக்த விலக்ஷணனான பரம புருஷனே ஆனந்த மயன் என்பதாகும்

முன் தத் ஹேது வ்யபதேசாத் -என்ற ஸூத்ரம்
உபாஸன தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறியது
இதில் முக்தி தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறுகிறது
ஆகையால் புநர் யுக்தி தோஷம் இல்லை –

———–

1-7-அந்தர் அதிகரணம்–ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .

ஸ்வல்ப புன்யர்களான ஜீவர்களால் ஸங்கல்ப மாத்ரத்தைக் கொண்டு
ஜகத் ஸ்ருஷ்ட்டியையும்
மிகுந்த ஆனந்தத்தையும்
பய அபய ஹேதுத்வமும் பெற முடியாமல் போகலாம்
ஆயினும் விலக்ஷண புண்யம் கொண்ட ஆதித்யன் இந்திரன் பிரஜாபதி முதலியோருக்கு
இந்த குணங்கள் சம்பவிக்கலாமே
என்ற சங்கையை இங்கு நீக்குகிறார் என்று சங்கதி

மேலும் இவ்வதிகரணத்தில் அந்தர்யாமி என்ற தன்மையால் மட்டும் சரீராத்ம பாவம் சொல்லப்பட வில்லை -பின் என் எனில்
பாணி பாத அஷி கேசாதிகளான பிரிவுகள் போல் சரீர சம்பந்தம் உள்ள புருஷன் கூறப்படுகிறான்
அந்தப் புருஷன் ஜீவன் தான் என்று பூர்வ பக்ஷம் தோன்றுவதே இங்கு சங்கதி

காரண வாக்கியங்கள் பரமாத்ம போதகங்கள் என்று ஸ்தாபிப்பதே இவ்விடம் பிரஸக்தம்
காரண வாக்கியம் இல்லாத அந்தராதித்ய வித்யா நிரூபணம் அயுக்தமே
ஆயினும் முன் அதிகரணத்தின் சேஷமாக நிரூபிப்பதில் தவறு இல்லை
எப்படி எனில்
ஆனந்தவல்லியில் -ஸ யச்சாயாம் புருஷே யச்சா ஸ ஆதித்யே ஸ ஏக -என்று
ஆனந்த மயனுக்கு ஆதித்யனின் உள் இருப்பு கூறப்பட்டது
சாந்தோக்யத்தில் சொன்ன ஆதித்ய மண்டை அந்தர்வர்த்தியான புருஷனுக்கு கர சரணாதி விஸிஷ்ட
தேஹ சம்பந்தம் சொல்லுகையாலே இரண்டு இடங்களிலும் ஒருவனே பேசப்படுபவன்
ஆகையால் ஆனந்தமயனும் ஜீவன் தான் என்கிற சங்கையை நிவர்த்திக்க
முன் அதிகரண சேஷமாக இங்கு நிரூபிக்கிறார் என்று விடை –

அதற்கு சேஷமாவது அங்கங்கு தேவையான பொருளை விளக்குதல்
அப்படி என்றால் வெவ்வேறு அதிகரணங்கள் என்று எவ்வாறு பேதம் கூற முடியும் எனில்
கூறிய நியாயத்துக்கு விஷயமான உபநிஷத்து மாறுபட்டதால் பேதம் வருவது பொருந்துமே

21-அந்த தத் தர்மோபதேசாத் –1-1-21-கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-

ய ஏஷ யந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேசக ஆப்ரணகாத்
சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி என்றும் –
ய ஏஷ அந்தர் அஷிணி புருஷோ த்ருஸ்யதே தஸ்யை தஸ்ய ததேவ ரூபம் யதமுஷ்யரூபம்
ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று பாபங்களால் தீண்டப்படாமல் இருப்பவன் -என்றும்
சைவ ருக் தத் சாமததுக்க்கம் தத்ய ஜூ ஸ் தத் ப்ரஹ்ம-என்றும்
இவை விஷய வாக்கியங்கள் –

இங்கு கீழ்ச் சொன்னபடி ஜீவர்கள் அல்ல ப்ரஹ்மமே-

அந்தஸ் -கண்ணின் உள்ளும் ஸூர்ய மண்டலத்தின் உள்ளும் இருப்பவனாகச் சொல்லப்படும் புருஷன்
ஜீவனைக் காட்டிலும் இதரனான பரமாத்மாவே
எப்படி என்றால்
தத் தர்மோபதேசாத் –ஸ்ருத் யந்தரங்களில் பிரசித்தமான பரமாத்மாவின் தர்மங்களை உபதேஸிப்பதால்
அவை -அபஹத பாப்மா -அஜர -அசோக —ஸத்ய காம –ஸத்ய ஸங்கல்ப -சர்வ லோக சர்வ காம நியந்த்ருத்வம் –
புண்டரீகாக்ஷத்வமும் திவ்ய மங்கள விக்ரஹம்முதலிய தர்மங்களும் உபதேசிக்கப்படுகின்றன
எனவே ஜீவ விலக்ஷண ஸ்ரீயப்பத்யே ஆதித்ய மண்டலத்தில் ஒளிரும் புருஷன்
இங்கு கூறும் சரீரம் கர்ம நிமித்தம் அன்று -அதுவே ஹேயமாகும் –
முமுஷுக்களுக்கு ஹேய நிவ்ருத்தமான திவ்ய மங்கள விக்ரஹம் என்பதேயாகும்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம முதலிய பிராமண பலத்தாலே
ஸத்யத் ஞானத் வாதிகள் ஸித்திப்பது போல்
வித்யுத் புருஷாததி
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
அஜயமானோ பஹுதா விஜாயதே
அஜோபிசன் அவ்யயாத்மா
ஸம்பவாமி ஆத்ம மாயயா –முதலிய ப்ரமாணங்களால்
ஆஸ்ரிதர்களை அநுக்ரஹிக்க திவ்ய மங்கள விக்ரஹ ரூபமான தர்மமும்
தத் தர்ம உபதேசாத் -என்கிற பதத்தில் கருதப்படுகிறது என்று திரு உள்ளம் –

————-

22- பேத வ்யபதேசாத் ச அந்ய –1-1-22-

ப்ருஹத் ஆரண்யகாவில் –
ய ஆதிதயே திஷ்டன் ஆதித்யாத் அந்த்ரோயம் ஆதித்யோ நவேத யஸ்யா தித்ய சரீரம் ய ஆதித்யம் அந்தரோ யமயதி -என்று
யார் சூரியனில் அந்தர்யாமியாக உள்ளானோ -அவன் சூரியனுக்கு தெரியாமல் அப்படி உள்ளவன் யாரோ –
அவனுக்கு சூர்யன் உடம்பாக உள்ளான் -அவனே சூர்யனை வழி நடத்துகிறான்

ஸூபால உபநித்தும் இது போலே ஜீவர்களுக்குள் அந்தர்யாமாவாக உள்ளத்தை சொல்லும் –
அவனே பரம்பொருள் ஜீவன் அல்ல என்றதாயிற்று-

அபஹத பாபனான இப்பரமாத்மா
அந்ய–ஆதித்யாதி ஜீவர்களைக் காட்டிலும் வேறானவன்
பேத வ்யபதேசாத் ச
ய ஆதித்யே திஷ்டன் –யம் ஆதித்யோ ந வேத -யஸ்ய ஆதித்யச் சரீரம் -ய ஆதித்யம் அந்தரோ யமயதி
ய ஆத்மனி திஷ்டன்
யஸ்ய அக்ஷரச் சரீரம்
யஸ்ய ம்ருத்யுச் சரீரம் –என்று இப்படியாக ஹிரண்ய கரப்பான் முதலிய ஸகல ஜீவர்களையும் சரீரமாகக் காட்டி
நாராயணனை அந்தராத்மாவாகப் பேதப்படுத்திக் காட்டுவதால்
பரமாத்மா ஜீவனைக்காட்டிலும் அந்நியன் தான் என்பதாம் –

——–

இப்படி யதோவா இமானி பூதாநி ஜாயந்தே என்கிற வாக்யத்தால் ஜகத்தின் காரணம் ப்ரஹ்மம் எனப்பட்டது
அத்தகைய ப்ரஹ்மம் எது என்ற ஐயம் எழுந்தால்
ஸதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத்
ஆத்மாவா இதம் ஏகம் ஏவ அக்ர ஆஸீத் –முதலிய வாக்யங்களால்
சாமான்யங்களான -ஸத் -ப்ரஹ்மாதி சப்தங்களால் -ஸத் -ப்ரஹ்மாதிகள் காரணங்கள் என்று குறிக்கப்பட்டன

அடுத்து ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தான சமாக்யைகளில் முந்தியது பிந்தையதை விட பலம் மிக்கது என்றபடி
லிங்கத்தை விட ஸ்ருதி பலம் மிக்கது என்றாலும் -விசேஷமான லிங்கத்தைக் காட்டிலும் ஸ்ருதி துர்ப்பலை யாதலின்
விசேஷ லிங்கங்கள் பிரதானாதிகளை விலக்குவனவாய் பிரபலமாய் இருப்பதால்
ஈஷத் அதிகரணத்தில் முக்கியமான ஈஷணமும்
ஆனந்த மய அதிகரணத்தில் ஆனந்த விசேஷமும்
அந்தராதித்ய அதிகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹமும் ஆகிய
அர்த்த ஸ்வ பாவமான -லிங்கங்களாலே -அடையாளங்களாலே –
ப்ரஹ்மத்துக்கு -பிரதானம் -ஜீவாத்மா -இவை இரண்டிலும் இருந்தும் பேதம் தீர்மானிக்கப் பட்டது –

அப்படி இருப்பினும்
விசேஷ ஸ்ருதிக்கு விசேஷ லிங்கத்தை விட ப்ராபல்யம் இருப்பதால்
சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி=போன்ற இடங்களிலே
ஆகாசம் போன்ற விசேஷ சப்தங்களாலே சொல்லப்பட்ட ப்ரஸித்தமான ஆகாசம் பிராணன் முதலியவை
காரண ப்ரஹ்மம் என்கிற சங்கையை நீக்கி
கல்பிக்கப்பட்ட யோக காரணப்பெயர் -கல்பிக்க வேண்டிய ரூடி இடுகுறிப்பெயரை பாதிக்கும் என்ற நியாயப்படி
யோக சக்தி-காரணத்தை அடிப்படையாகக் – கொண்டு
ஆகாசம் முதலிய சொற்கள் பரமாத்மாவையே போதிக்க வல்லவை
என்பதை கீழ் வரும் அதிகரணங்களால் விளக்குகிறார் –

———–

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –

23-ஆகாஸ தல் லிங்காத் —1-1-23-

சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி என்று
ஆகாசமே மூல காரணம் என்றும் பரம ப்ராப்யம் என்றும் சொல்லிற்று
இதில் ஆகாசம் -பூத ஆகாசமா -அல்லது முன் லக்ஷணம் கூறப்பட்ட ப்ரஹ்மமா என்று சங்கை
பிரசித்தமான
ஆகாசமே என்று பூர்வ பக்ஷம்
ஈஷணம் -சங்கல்பம் பற்றிய லிங்கத்தை விட விசேஷ ஸ்ருதி பலம் வாய்ந்ததாகையாலும்
ஆகாசம் என்பது பூத ஆகாசத்தில் ப்ரஸித்தமாகையாலும்
ஸத் -ப்ரஹ்மம் -முதலிய சாமான்ய சப்தங்களும் பிரசித்த ஆகாசத்தையும் கூறுபவை என்பதே பூர்வ பக்ஷம் –

சித்தாந்தம்
ஆகாஸ -அசேதனமான ஆகாசத்தை விட வேறு பட்டவனாக பரமாத்மாவே ஆகாசம் என்று கூறப்படுகிறான்
தல் லிங்காத் —அந்தப் பரம புருஷனின் லிங்கங்கள் அடையாளங்கள் காணப்படுவதால் –
அவை யாவன
அனைத்துக்கும் காரணமாதல்
எல்லாவற்றையும் விட பழமை
அனைத்துக்கும் பரம அடைக்கலம் –முதலிய தர்மங்கள்
தஸ்மாத் விராட் அஜாயத
ஏகோஹவை நாராயண ஆஸீத் –முதலிய உபநிஷத் வாக்கியங்களில் கூறப்பட்ட
விராட் புருஷத்வம் -நாராயணத்வம் -முதலிய தர்மங்கள்
ஆ –நாற்புறமும்
காச -பிரகாசிப்பது
என்ற காரணப் பெயராகக் கொண்டு பரம புருஷன் தான் ஆகாசம் என்பதாம் –

இங்குள்ள சிறப்பாவது
காரணப்பெயரை -யோகப்பெயரை -விட இடுகுறிப்பெயரே -ரூடியே -மேலானது என்ற நியாயம் இருந்தாலும்
கல்பிதமான யோகம் கல்பிக்கப்பட இருக்கிற ரூடியைப் பாதிக்கும் என்ற நியாயத்தால்
இங்கு -யதேஷ ஆகாச ஆனந்தோ நஸ்யாத்-என்ற வாக்யத்தில்
ஆகாச சப்தத்துக்கு யோகத்தால் -காரணத்தால் -பொருள் கல்பிக்கப்பட்டு இருப்பதால்
இந்த யோகாசக்தி பொருளை ரூடி சக்தி பாதிக்க மாட்டாது –
ஆகையால் முன் கூறிய லக்ஷணங்கள் –
ஈஷணம் -ஆனந்த விசேஷம் திவ்ய மங்கள விக்ரஹம் -முதலான சிறப்பான லிங்கங்களால்
ஸத் -ப்ரஹ்ம -பொதுச் சொற்களும்
ஆகாசம் போன்ற சிறப்புச் சொற்களும்
ஸமஸ்த ஜகத் காரணனாய் -சர்வஞ்ஞாதி கல்யாண குணங்களை யுடைய பரம புருஷனையே
விளக்குகின்றன என்பது திரு உள்ளம் –

———-

அடுத்தபடி -ஆகாசம் என்பது பரமாத்மா என்ற காரணம் இருக்கட்டும் –
சகல ஜனங்களுக்கும் ஸ்திதியோ ப்ரவ்ருத்தியோ ப்ராணனைச் சார்ந்து இருப்பதால்
சாந்தோக்யம் முதல் அத்யாயம் ஒன்பதாவது கண்டத்தில்
பிரஸ்தோ தர்யோ தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தா -என்று தொடங்கி
இந்த பூதங்கள் அனைத்தும் ப்ராணனையே சார்ந்து இருக்கின்றவை என்று கூறப்பட்டு இருப்பட்டு இருப்பதால்
பிரசித்தமான பிராணனே ஜகத் காரணம் என்று கூறலாமே என்று மேற்கொண்டு அதிகமான ஓர் சம்சயம் தோன்ற
அதைக் கண்டிக்கவே இந்த அதிகரணம் –

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே

24-அத ஏவ பிராண –1-1-24-

சர்வாணி ஹ வா இமானி பூதானி பிராணமேவாபி சம்விசந்தி பிராணமப் யுஜ்ஜிஹதே –

தோன்றி மறையும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு-

அத ஏவ -பிரசித்தம் போலே நிர்தேசம் இருப்பதினாலேயே
பிராண -பிராண சப்தத்தால் சொல்லப் படுபவன்
அந்நிய -பிராண வாயுவில் காட்டில் வேறுபட்டவன் –

சர்வாணி ஹி வா இமானி பூதாநி ப்ராணம் ஏவ அபி சம்விசந்தி ப்ராணம் அப்யுஜ்ஜி ஹதே
சைஷா தேவதா ப்ரஸ்தாவம் அந்யாவத்தா –ஹை வை -பிரதித்தம் -சாந்தோக்யம்
பிராணன் இடத்திலே லயம் அடைகின்றன -பிராணன் இடத்தில் இருந்தே வெளிவருகின்றன
ப்ராணயதி– ஜீவயதி என்கிற வியுத்பத்தியால் பர ப்ரஹ்ம பர சப்தம்
உத்பத்தி ஸ்திதிகளை பிராண அதீனமாக கண்டாலும் சேதன ஸ்வரூபத்தின் ஸ்திதி
பிராண அதீனமாக அல்லாமையாலே இதுவும் பரமார்த்த பரமே

அத –ஆகாசத்தில் கூறியபடியே சகல ஜலத்தின் உள் நுழைதல் வெளியேறுதல் முதலிய பரமாத்ம லிங்கம் இருப்பதாலேயே
ப்ராண –பிராணன் என்ற சொல்லால் கூறப்படுபவனும்
பரமாத்மாவே என்று பொருள்
சேதனர்களிடம் பிரசித்தமான பிராணன் உள் நுழைவதும் வெளி ஏறுவதும் இருப்பினும்
அசேதனமான கல் மரக்கட்டை முதலியவற்றில் அது சம்பவிக்காது
ஆதலின் பரமாத்மாவுக்கே அது பொருந்தும் என்பதைக் கொண்டு
எதிலும் உள் நுழையவும் வெளியேறவும் வல்ல பரமாத்மாவே பிராணன் என்றதாகும் –

———-

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –

இனி காரணத்வத்தை நிரூபிக்க வல்ல நிரதிசயமான தீப்தி -பிரகாசம் –
ஹித தமமான உபாசனத்துக்கு உரிய கர்மா -செயப்படு பொருள் என்னும் தன்மை
இவற்றுடன் கூடிய ஜ்யோதிஸ் என்பதும்
இந்த்ரன் பிராணன் முதலிய சொற்களும் கூறப்படுவதும்
உலகில் பிரசித்தமான ஒளி இந்திரன் இவற்றை விட்டு விலக்ஷணமான ப்ரஹ்மமே என்பதை
இந்த ஜ்யோதிர் அதிகரணத்திலும்
அடுத்த இந்திர பிராணாதி கரணத்திலும்
நிலை நாட்டுகிறார் என்று சங்கதி –

அது மட்டும் இன்றியே ஸ்ருதியிலே
ஆகாசாத் வாயு வாயுர் அக்னி -என்று கூறியுள்ள க்ரமப்படி
முதலில் ஆகாசம்
பின் வாயு -பிராணன் –
அடுத்து அக்னி –
என்ற க்ரமத்தைப் பின் பற்றி
ஆகாசாதி கரணத்தின் பின்
பிராணன் பற்றியும்
பின் ஜ்யோதிஸ் பற்றியும் விசாரிக்கிறார் என்றும் சங்கதி –

1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
ஜோதியும் ப்ரஹ்மமே -மற்றவை அதன் பாதங்களில் பணியும்-

அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ அனுததமேஷூ
உத்தமேஷூ லோகேஷூ இதம் வாவ ஸர்வத தத் யதிதம் அஸ்மின் அந்த புருஷே ஜ்யோதி –சாந்தோக்யம் -மூன்றாம் அத்தியாயத்தில்
மது வித்யைக்குப் பிறகு காயத்ரீ ஸப்தப் பொருளான பரமாத்மா ஜ்யோதிர் வித்யையிலே பேசப்படுகிறார்
இதுவே விஷய வாக்கியம்

இங்கு ஜ்யோதிஸ் என்பது பிரசித்தமான ஸூர்யாதிகளான ஜ்யோதிஸ் ரூபங்களைக் குறிப்பிடுகிறதோ
அல்லது உலக காரணமான எல்லையில்லா ஒளி வடிவமான பரமாத்மாவையே குறிப்பதா என்பதே சம்சயம் –

ஆகாசம் பிராணன் போன்ற வாக்கியங்களை போலே இதில்
நிகில ஜகத் ஏக காரணத்வம் போன்ற பரமாத்மாவின் சிறப்பான லிங்கம் ஏதும் இல்லாமையால்
இதம் வாவதத் என்று தொடங்கி புருஷனின் வயிற்றில் உள்ள ஜ்யோதியுடன்
இந்த ஜ்யோதியை ஒன்றாகக் கூறுவதால்
பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாகவே இருக்கலாம் என்று பூர்வ பக்ஷம்
அதைக் கண்டிக்கிறார்

ஜ்யோதி -தேவ லோக சம்பந்தியாகக் கூறப்பட்ட ஏராளமான ஒளி உள்ள ஜ்யோதி என்பது பரம புருஷனே
ஏன் எனில்
சரணாபிதா நாத் –பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ் யம்ருதம் திவி -என்று
சர்வ பூதங்களும் இந்த ஜ்யோதிஸ்ஸுக்கு ஒரு பாதமாகவும்
பரமபதத்தில் மூன்று பாதங்களும் இருப்பதாகச் சொல்வதால்
பிரசித்தமான எந்த சோதிக்கும் அது பொருந்தாது
பரமபுருஷனே ஜ்யோதிஸ் ஸப்த பொருளாவான்

இந்த தேவலோக சம்பந்தியான ஜ்யோதிசை ஜாடராக்னி சரீரமாகக் கொண்டது என்று உபாசித்தால்
ஆபி ரூப்யாதிகள் -பொருத்தமான அழகு போன்றவை ஸித்திக்கும் என்பதால்
கௌஷேய-வயிற்று ஜ்யோதிஸ்ஸுடன் ஐக்யம் கூறுகிறது என்று திரு உள்ளம் –

உயர்வற உயர்ந்த ஒளி உள்ளதாக ஓதப்பட்ட ஜ்யோதிஸ்ஸூக்கு –
பாதோஸ்ய சர்வ பூதாநி த்ரிபதாஸ் யாம்ருதம் தீவி -என்ற புருஷ ஸூக்த்தத்தின்
மந்திரத்தின் பொருள் நினைவூட்டப் படுகிறது –
ஆகையால் வேதாந்தமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமசஸ் து பாரே –
பரம புருஷன் பரமாக கொள்ள வேண்டும்
அஹம் வைச்வா நரோ பூத்வ பிராணி நாம் தேஹமா ஸ்ரீ தா -ஸ்ரீ கீதை –
உடம்பில் உள்ள அக்னியும் ப்ரஹ்மமே

————–

26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்–1-1-26-

காயத்ரி சந்தஸில் கூறப்படுபவன் ப்ரஹ்மமே-காயத்ரி போலே ப்ரஹ்மத்தையும் மனசில் கொள்ள வேண்டும் –
காயத்ரிவா இதம் சர்வம் -காயத்ரி சந்தஸ் பிரமத்தைப் போலே நான்கு பாதங்கள் உடையது –

சந்தோ அபிதா நாத் ந
அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே–இத்யாதி வாக்யத்துக்கு முன்பு காயத்ரி சந்தஸ்ஸை சொல்லி
பின்பு ததே தத் ருசாப் யுக்தம் –என்று கூறிய ருக்குக்கும் காயத்ரீ என்னும் சந்தஸ்ஸே விஷயமாகையாலே
இங்கு பரமபுருஷனைப் பற்றிய பேச்சே இல்லை என்று ஐயம் தோன்றிற்று
இதி சேத் ந -இவ்வாறு கூறுவது தவறு என்கிறார் –
ஏன் எனில்
ததாசே தோர்ப்பண –அவ்வாறு சித்தத்தாலே அனுசந்தானம் விதிக்கப்படுவதால்
அந்த காயத்ரியைப் போலவே பரம் ஜோதிசை நான்கு பாதங்கள் உள்ளதாக அனுசந்திக்கச் சொல்கிற படியால்
நிஹமாத் -நிச்சயிக்கப் படுவதனால் ஸப்த ரூபமான காயத்ரீ சர்வ பூதாத்மிகை என்பது பொருந்தாமையால்
பரம புருஷனை காயத்ரீ துல்யனாக நான்கு பாதம் உள்ளவனாக அனுசந்திக்க வேண்டும் என்று
நிச்சயிக்கிற படியால் பரம புருஷனே காயத்ரீ சப்தத்தின் பொருளாம்
ததாஹி தர்சனம்-அவ்வாறு நான்கு பாதங்கள் உள்ள காயத்ரியும் சில இடங்களில் காணப்படுகிறது
இந்த்ரச் சசீபதி வலே ந பீடித துச்சய வநோ வ்ருஷா ஸமித் ஸூ ஸஹி – என்று காணலாம் –

————-

27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்–1-1-27-

சாந்தோக்யத்தில்
பூதங்கள் பூமி உடல் இதயம் ஆகிய நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்வதால்
காயத்ரி என்றதும் ப்ரஹ்மமே –

பூத ப்ருத்வீ சரீரங்களைச் சுட்டி இது நான்கு கால் உள்ளது என்பதற்குப் பொருத்தம் வர வேண்டுமானால்
ஏவம் -இவ்வாறு ப்ரஹ்மமே காயத்ரீ என்ற சொல்லின் பொருள் என்றாலே பொருத்தம் ஏற்படும்
பூத ப்ருத்வீ சரீர ஹ்ருதயங்களை-என்பதில்
பூதம் -ஆத்ம வர்க்கம்
ப்ருத்வீ -இந்த லோகம்
சரீரம் -கர்மாக்களால் ஆர்ஜிதமான போகத்திற்கு உரிய இடமும் -அதன் உபகரணமும்
ஹ்ருதயம் -ஆத்மா தங்குவதற்கான இடம் –

———–

28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –1-1-28-

பரம் பொருளின் மூன்று பாதங்கள் பரம பதத்தில் இருப்பதாகவும் 1-1-25- சொல்லி –
சாந்தோக்யம் பரோதிவ ஜ்யோதி -என்று
பரம பதத்துக்கு மேலே உள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது –
இரண்டுக்கும் பேதம் இல்லை
மரத்தின் மேலே பறவை என்பதும்
மரத்தில் பறவை என்பதும் ஓன்று போலே –

உபதேச பேதாத்
பூர்வ வாக்கியத்தில் த்ரி பாத் ஸ்யாம்ருதம் திவி என்று த்யு லோகத்தை ஆதாரமாகவும்
இந்த வாக்கியத்தில் திவ என்று த்யு லோகத்தைக் காட்டிலும் என்று எல்லையாகவும் உபதேசம் வேறு வேறாய் இருப்பதால்
முன் வாக்கியத்தில் கூறிய ப்ரஹ்மம் இந்த வாக்யத்தில் தோன்றவில்லை

இதி சேத் ந-என்று கூறுவது சரியில்லை

உபய அஸ்மின் அபி அவிரோதாத் –இரண்டுக்கும் அர்த்த ஸ்வ பாவம் ஒன்றே யாதலின் நினைவுக்கு விரோதம் இல்லை
மரத்தின் நுனியில் பருந்து என்றாலும்
மரத்தின் நுனிக்கு மேலே பருந்து என்றாலும் போலே இங்கும் அர்த்தம் ஒன்றே யாதலின்
ஏதாவான் அஸ்ய மஹிமா பாதோஸ்ய விஸ்வா பூதாநி-என்ற புருஷ ஸூக்த நினைவாலே
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -என்கிற எல்லையில்லா ப்ரகாசமுடைய புருஷோத்தமனே
அத யதத பரோ திவோ ஜ்யோதி என்று கூறப்படுகிறான் என்று திரு உள்ளம் –

ஸ்ரீ பாஷ்யத்தில் இவ்வதிகரணத்தின் அவதாரிகையில்-எல்லையில்லா பிரகாசம் என்னும்
லிங்கத்தாலே பூர்வ பக்ஷம் தோன்றுகிறது என்று காட்டி
பின்பு ப்ரசித்தவத் நிர்தேசம் இருந்தாலும் ஆகாசம் பிராணன் இவற்றைப் போலே
தன் வாக்கியத்தில் எடுக்கப்பட்ட பரமாத்மாவுக்கான லிங்கம் இல்லாமையால் என்று அருளியது
முன் பின்னாக முரணாக உள்ளதே என்னில்

அத யதத பரோ –என்னும் வாக்கியத்தில் காரணத்தைக் காட்டவல்ல
ஸர்வத ப்ரகாசமயமான தன்மை எனும் லிங்கம் உள்ளது
அப்படி இருந்தாலும் உபய லிங்கத்வாதிகள் கூடியதும் -பரமபுருஷனை நிலை நிறுத்தக் கூடியதுமான
ஜகத் காரணத்வம் என்னும் லிங்கம்
அத யத்த பாரோ வாக்கியத்தில் கிடையாது என்னும் பூர்வ பசியின் கருத்தால்
அருளிச் செய்வதால் முரண்பட்டு இல்லை
அப்படியான சிறப்பான லிங்கம் தன் வாக்கியத்தில் இருப்பதாகத் திரு உள்ளம் –

————

1-11-இந்திர பிராணாதி கரணம்-

இதில் காரணத்தோடு வியாப்தமான -முமுஷுக்களால் உபாஸிக்கத் தன்மை கொண்ட
இந்திரப் பிராணன் -என்று சொல்லப்படுபவனும் பரம புருஷனே என்று ஸ்தாபிக்கிறார்

1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –

ஹித தமமாக உபாசனம் செய்யத்தக்க இந்த்ர பிராணன் என்று
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில் சொன்னது ஜீவனா அல்லது பரமாத்மாவான என்று சம்சயம்
ஜீவன் தான் என்பது பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
இந்த்ர சப்தம் ஜீவனைக் குறிப்பதாகவே ப்ரஸித்தம்
தான் என்று குறிப்பிடும் இந்த்ரனாகவும் பிராணனாகவும் உள்ளது
பிரசித்தமான இந்த்ரனைக் குறிப்பது என்பது பொருந்தாது

பிராணனாக நான் உள்ளேன் என்று இந்த்ரன் கூறியதும் ப்ரஹ்மத்தை தான் –
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்
தன்னை உபாசித்த ப்ரதர்த்தனன் என்பவன் இடம் –
சா ஹோவாச ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா தம் மாம் ஆயுர் அம்ருதம் இத் உபாஸ்வ –
உயிராகவும் அமிர்தமாகவும் சொன்னான்
அதே கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்-
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோஜரோம்ருத-என்று
பிராணன் ஆனந்தமாயும் இளமையுடனும் அழியாமலும் உள்ளதாக சொல்லி இருப்பதால்
பிராணன் என்றது இந்த்ரன் தனக்கு உள்ளே உள்ள ப்ரஹ்மத்தை தான்-

ப்ராணா –ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா -என்று சொன்ன இந்த்ரப்ரண ஸப்த வாஸ்யன் ஜீவன் அல்லன்
அவனை விட விலக்ஷணமான பர ப்ரஹ்மமே ஆகும்
ஏன் எனில்
ததா அநுகமாத் –அப்படியே தொடர்வதால்
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோ ஜர அம்ருத-என்று
ஆனந்தம் முதலிய தர்மங்களுக்கு தர்மியாகப் பிராணனைத் தொடர்வதாலே
ப்ரஸித்தமான இந்த்ரனுக்கு ஆனந்த் வாதிகள் கூடாமையாலே பரம புருஷனே
இந்த்ர பிராணன் என்ற சொல்லின் பொருள் ஆகும் –

————-

30-ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-1-1-30-

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன்நிநீஷதி ஏவசாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி-என்று
நன்மை தீமைகள் பரம் பொருளால் விளையும் என்றும் –
தத் யதா ரதஸ் யாரேஷூ நேமி ரர்ப்பிதா நாபாவர அர்ப்பித்தா ஏவ மேவைதா பூத மாத்ரா ப்ராஜ்ஞா மாத்ரா ப்ராணே அர்ப்பிதா-என்று
தேரின் சக்கரத்தில் உள்ள கம்புகள் சக்கரத்தின் நடுவில் சேர்க்கப் பட்டது போலே
அசேதனங்கள் சேதனங்களின் இடமும் சேதனங்கள்
ப்ரஹ்மத்திடமும் இணைக்கப் பட்டுள்ளன என்பதால் இந்த்ரன் பிராணன் ஆகியவை பரம்பொருளையே குறிக்கும்-

ந -இந்த்ர ப்ராண சப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மம் அன்று
ஏன் எனில்
வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் –தொடக்கத்தில் -மூன்று தலையுள்ள த்வாஷ்ட்ரனைக் கொன்றேன் என்று கூறி
விஸ்வ ரூப வதம் முதலியவற்றால் ப்ரஸித்தமான ஜீவ பாவத்துடன் ப்ரஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன்
என்று பேசும் தன் ஆத்மாவை உபாஸீ என்று உபதேஸிப்பதால் ஜீவன் தான் என்றால்
அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-பிராண ஸப்தத்தால் குறிப்பிடும் இந்த ப்ரஹ்மத்திடம் உள்ள குணங்கள் -தர்மங்கள் –

அத்யாத்ம தர்மங்கள் -அவற்றின் சம்பந்தங்கள் -அவற்றின் பூமா -மிகுதியாய் உள்ளது அல்லவா
உபக்ரமத்தை விட மஹா வாக்யம் பிரபலமாகையால் இந்த ப்ரதர்தன வித்யையில்
ஆதி முதல் அந்தம் வரை பரமாத்வாவின் சிறப்பான தர்மங்கள் பேசப்படுகின்றன
அதாவது ப்ரதர்தன் இந்த்ரனிடம் -நீயே மனிதர்க்கு ஹித தமமாய் எண்ணும் வரத்தைத் தருக–என்று கூறிப் பின்
அனைத்து நல்ல காரியங்களையும் நிறைவேற்றுபவனாகவும் தேரின் குடத்தில் -ஆரங்களில் -சக்ரம் நிலை பெற்றது போல்
உலகிற்கே ஆதாரமாய் இருப்பவனும் -ஆனந்த வடிவாய் ஜரை மரணம் முதலியவை அற்றவனாய் –
உலகின் தலைவனாய் ஸகல கல்யாண குணா கரனுமாக இந்த வித்யையில் சொல்லப்படுகையாலே
பரம புருஷனே இந்த்ர பிராணன் என்பது கருத்து

————

ஆனால் இந்திரன் தன்னையே உபாஸிக்கச் சொல்வதால் பொருந்துமோ
என்ற சங்கைக்கு மேலே விடை தருகிறார் –

31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –1-1-31-

வாசுதேவரைப் போலே இந்த்ரனும் வேதங்கள் மூலம் உண்டான ஞானத்தினால் இவ்வாறு கூறினான் –
சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்ம நா அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று ஜீவன் மூலமாக
அசித்துக்களை ஆக்கிரமித்து பெயரும் ரூபமும் கொடுக்கிறேன் என்றும்
ப்ருஹத் ஆரண்யா காவில்-
ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தர யமாத்மா ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மாநமந்திரோ யமயதி -என்று
எந்த பரம்பொருள் ஜீவாத்மாவில் உள்ளதோ -எந்த பரம்பொருளை ஜீவாத்மா அறியவில்லையோ -யாருக்கு ஜீவாத்மா உடலாக உள்ளதோ –
உள்ளே புகுந்து ஜீவாத்மாவை யார் இயக்குகின்றானோ -என்று தனக்கு உள்ளே உள்ள பரம்பொருளை இந்த்ரன் குறிப்பிட்டான்-
ப்ருஹத் ஆரண்யா காவில் –
தத்தைதத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபதே அஹம் மநுரபவம் ஸூர்யச்யாஹம்-என்று
ப்ரஹ்மத்தை உணர்ந்த வாமதேவர் தானே மனுவாகவும் ஸூர்யனாகவும் –
பரம்பொருளே அந்தர்யாமியாகவும் உணர்ந்து -இப்படிக் கூறினார்-

து -சங்கையை நீக்குகிறது
உபதேஸ முமுஷுக்கள் தன்னை உபாஸிக்க வேண்டும் என்று உபதேசித்தல்
சாஸ்திர த்ருஷ்ட்யா–ஆத்மநி திஷ்டன் -ஆத்மநோ நந்தர -யம் ஆத்மா ந வேத –
யஸ்ய ஆத்மா சரீரம் -முதலிய ஸாஸ்திரத்தாலே
உபதேச -ஜீவ சரீரிகனான பரமாத்மாவை அறிந்து ஜீவனைக் குறிக்கும் அஹம் த்வம் முதலிய சொற்களும்
பரமாத்மாவையே போதிப்பது என்று அறிந்து
என்னையே அறிந்து உபாஸனை செய் என்று தன் ஆத்மாவைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்கிறான் இந்த்ரன் –
வாமதேவவத் –வாமதேவர் என்ற மஹ ரிஷி இப்படியே ஸாஸ்த்ர கண்ணோட்டத்தாலே
அஹம் மனுரபம் ஸூர்யச்ச -நானே மனுவாகவும் ஸூர்யனாகவும் இருந்தேன் என்று இருக்கிறார்
அப்படியே இந்த்ரனும் கூறுகிறான் -என்றபடி
ப்ரஹ்லாதனும் இப்படியே எம்பெருமான் எங்கும் நிறைந்து இருப்பதால் அவனாகவே நானும் இருக்கிறான் –
என்னிடம் இருந்தே எல்லாம் தோன்றுகிறது
நானே எல்லாமுமாய் ஆவேன் என்று கூறுகிறான் என்று கருத்து
கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் என்றாரே ஆழ்வாரும் –

———-

இந்தப் ப்ரகரணத்தில் ஜீவாத்மாவைக் குறிக்கும் சொற்களாலும்
ப்ராணாதி சப்தங்களாலும்
உபாஸ்யமான பர ப்ரஹ்மத்தைச் சொல்லுகையில்
காரணத்தைச் சந்தேகம் தெளிவிப்பதன் மூலம் அருளுகிறார்

32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத் ந உபாசாத்ரை வித்யாத் ஆஸ்ரிதத்வாத் இஹ தத் யோகாத் –1-1-32-

கௌஷீதகி ப்ரஹ்மணத்தில்-
ந வாசம் விஜிஜ்ஞா சீத வக்தாரம் வித்யாத் -என்றும்
த்ரிசீர்ஷாணம் த்வாஷ்ட்ரம் அஹம் அருன்முகான் யதீன் சாலாவ்ருகேப்ய ப்ராயச்சம் -என்றும்
இந்திரனைப் பற்றி சொல்லிற்று –
யாவதஸ்மின் சரீரே ப்ராணோ வசதி தாவதாயு -என்றும் பிராணனைக் குறித்தும் சொல்லிற்று
பரம்பொருளை உபாசிப்பது -தைத்ரியம்
ஆனந்தோ ப்ரஹ்ம-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம- -உள்ளபடியே உபாசிப்பது ஒரு முறை –
ஜீவாத்மாவை உடலாக உடையவன் -என்று உபாசிப்பது ஒரு முறை –
பிராண வாயுவை உடலாக உடையவன் -அந்தர்யாமியாக உள்ளவன் என்பதையே சொல்லும் —

ஜீவ முக்ய பிராண லிங்காத் ந –த்வஷ்ட்ர வதம் முதலான ஜீவ லிங்கங்களாலேயும்
இவ்வுடலில் பிராணன் உள்ள வரையிலும் தான் ஆயுள் என்று கூறும் பிராண லிங்கத்தாலும்
பரமாத்ம விஷய சம்பந்தம் மிகுதி என்பது இல்லை

இதி சேத் ந -என்று கூறுவது தவறு

உபாசாத்ரை வித்யாத் –மூன்றுவிதமாக உபாஸிக்க வேண்டும் என்றே உபதேஸிக்கிறார்
மூன்று வித உபாஸனமாவது
1- ஸமஸ்த காரணனான ப்ரஹ்மத்தை சத்யத்வ ஞானாதிகள் உடையதாய் உபாஸிப்பது
2-போக்த்ரு வர்க்கமான- ஜீவர்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது
3-போக்ய போக உபகரணமான -அசேதனங்களைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது –
என மூன்று வித உபாஸனங்கள்

ஆஸ்ரிதத்வாத் –தைத்ய ஸ்ருதியிலும் ஆஸ்ரயிக்கப் படுகிறது
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்றும்
ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் பகவத் ஸ்வரூப அனுசந்தானம் கூறப் படுகிறது
பின்னர் தத் ஸ்ருஷ்ட்வா ததே அநு ப்ரவிசேத் -என்று தொடங்கி
சேதன சரீரகமாயும் அசேதன சரீரிகமாயும் அனுசந்தானம் கூறப்படுகிறது

இஹ தத் யோகாத்-இந்த உபநிஷத்திலேயும் அந்த மூன்று வித உபாஸனங்களும் கூடும்
எப்படி என்றால்
என்னை உபாஸி -என்றதால்-என்னைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸி என்று
சேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
ப்ராஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன் என்றதால்
அசேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
சொல்லப் படுகின்றன
ஆனந்தோ -அஜரா -அம்ருத -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அனுசந்தானம் சொல்லப் படுகிறது
இவ்வாறு வேறு உபநிஷத்துக்களிலும் பரமாத்மாவின் சிறப்பான தர்மங்கள் சொல்லப்பட்டன
ஹிரண்ய கர்பாதிகளைக் குறிக்கும் சொற்களும் பரமாத்மாவையே குறிக்குமாம்

ஆகையால் இந்த்ர ப்ராண சப்தத்தால் குறிக்கப் படுபவன் ஜீவனை விட வேறுபட்ட பரமாத்மாவே என்று தேறிற்று –

இந்திர பிராண அதிகரணம் சம்பூர்ணம்

——–

இந்தப்பாதத்தில்
ஆகாசாதிகரணம் முதல் இறுதி வரை நான்கு அதிகரணங்களிலும்
ஆகாசம் -பிராணம் -என்ற சொற்கள் பிரித்துப் பொருள் கொள்ளும் காரணப் பெயராய்
யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்–முதலிய ஸ்ருதிகளிலே க்லுப்தமான படியாலே
ரூடி சக்தியை விட்டு ஸர்வார்த்ர்யாமியாய் –ஸர்வ பிராணிகளையும் உயிரூட்டுபவனாய் உள்ளான் -என்பதாக
நிமித்த பேதம் காரணமாக ஸ்ரீ மன் நாராயணனையே போதிப்பவை என்றும்

ஜ்யோதிஸ் ஸப்தம் குஷி கதமான ஜ்யோதிஸ்ஸுடன் ஒன்றாக உபதேசித்து விசேஷ லிங்கம் இருந்தாலும்
ரூடி சக்தியால் பரம புருஷனையே குறிக்கிறது

இந்த்ர ப்ராணாதி ஸப்தங்களும் -த்வாஷ்ட்ர வதாதி லிங்கங்கள் இருப்பினும் அத்தகைய லிங்கங்களுடன் கூடிய
இந்த்ராதி சரீரகனான பரமாத்மாவையே போதிப்பன என்பதாக ஆச்சார்யர்கள் நிரூபித்து உள்ளனர்

பர வித்யாஸூ ஜீவோக்தி நிரூக்த்யாதே பராஸ்ரயா
தல்லிங்கா நந்யதா ஸித்தவ் தத் விஸிஷ்டாபி தாயினீ –என்று விளக்கினார்கள்
அதாவது
பரவித்யைகளில் காணும் ஜீவனைக் குறிக்கும் சொற்கள் பரமாத்மாவையே குறிப்பவை
அதன் லிங்கங்கள் மாற்ற முடியாமல் நிற்கையில் சேதனாதிகளைச் சரீரமாய்க் கொண்ட ப்ரஹ்மம்
என்ற பொருளைக் குறிப்பிடுவனவாம் என்றவாறு –

இந்தப்பாதத்தில் அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-சம்பூர்ணம்-

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் —

November 13, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

ஜகத்து முழுவதும் ப்ரஹ்மத்தின் கார்யம் என்பதை சமர்த்திக்க
சில ஸ்ருதிகளில் மேல் எழுந்த வாரியாக இந்திரியங்கள் நித்யங்கள் என்னும் எண்ணம்
சில மாந்தர்களுக்குத் தோன்ற இடம் இருப்பதால் அவ்வெண்ணத்தை நீக்க
ஜீவனின் உப கரணமான இந்திரியங்களுக்கு கார்யத்வத்தை சாதிக்கிறார் என்பது சங்கதி

இந்திரியங்கள் ஜீவன் போல் உண்டாவது இல்லையா –
ஆகாசாதிகள் போல் உண்டாகின்றனவா என்று சம்சயம்
உண்டாவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அஸத்வா இதம் அக்ர ஆஸீத் ததாஹு கிம் ததா ஸீத் இதி ருஷயோ வாவதே அக்ர ஆஸீத்
ததாஹு கேதே ருக்ஷய இதி ப்ராணா வாவ ருஷய இதி –
பிரளய காலத்தில் பிராண ஸப்த வாஸ்யங்களான இந்திரியங்களுக்கு இருப்பு கூறுவதால்
உத்பத்தி இல்லை என்பதாம் –

ஸூத்ரம் –265-கதா ப்ராணா –2-4-1- பூர்வ பக்ஷ ஸூத்ரம்

ஜீவன் எவ்வாறு உத்பத்தியும் மரணமும் இல்லாதவனோ
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்
அப்படியே பிராணா -இந்திரியங்களும்
அஸத்வா –என்னும் ஸ்ருதிகளால் உத்பத்தி ஆவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அதைக் கண்டிக்கிறார் –

—————

ஸூத்ரம் –266-கௌண்ய சம்பவாத் தத் ஸ்ருதேச் ச –2-4-2-

ச என்றது து என்ற பொருளாய் பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறது
இந்திரியங்களும் வ்யத் யாதிகளைப் போலே உத் பன்னங்களே
தத் ப்ராக் ஸ்ருதேச் ச -அந்த பரமாத்மாவுக்கே பிரளய காலத்தில் இருப்பு ஸ்ருதியில் கூறப்படுவதால்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –இத்யாதி ஸ்ருதிகளில்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருக்கிறான் என்பது ப்ரஸித்தம்
ப்ராண ஸப்தமும் பிராணம் அபி ஸம் விசந்தி -என்ற ஸ்ருதியால் பரமாத்மாவைக் குறிப்பது
எல்லாவற்றையும் ஸாஷாத் கரிக்க வல்ல ரிஷி என்ற தன்மையும் அவருக்கே கூடும்
இப்படியாகில் ப்ராணா வாவ ரிஷயே என்ற பஹு பன்மை வசனம்
கௌணீ -உபசார வார்த்தை
ஏன் எனில்
அசம்பவாத் -இந்திரியங்கள் பிரளய காலத்தில் இல்லாமையால் –

————————–

ஸூத்ரம் –267-தத்வ பூர்வகத்வாத் வாச –2-4-3-

வாச -பரமாத்மேதரமான எல்லா நாமதேயங்களும்
தத்வ பூர்வகத்வாத் -அந்த அந்த வஸ்துவின் ஸ்ருஷ்ட்டியை முன்னதாகக் கொண்டு இருப்பதால்
தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -தன் நாம ரூபாப்யாம் வியாக்ரியத -என்கிற ஸ்ருதி
அந்த வஸ்துக்களையும் நாமங்களையும் ப்ரஹ்மமே படைத்தது என்று சொல்வதால்
இந்திரியாதி ஸ்ருஷ்டிகளும் முன் உள்ள பிராணன் என்பது பரமாத்மாவே என்று சித்திக்கிறது –

——————

இதில் இந்திரியங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறார்
என்று சங்கதி

ஸூத்ரம் –268–ஸப்தகதேர் விசேஷி தத்வாச்ச–2-4-4-பூர்வ பஷ ஸூத்ரம்

இந்திரியங்கள் ஏழா பதினொன்றா என்று சம்சயம்
ஏழே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்

கதே ஸப்தப் ப்ராணா ப்ரபவந்தி-என்று
ஜீவனுடன் சேர்ந்து கதி சொல்வதால்
விசேஷி தத்வாச்ச
யதா பஞ்ச அவதிஷ்டந்தே ஞானாமி மனஸா ஸஹ –புத்திச்ச ந விசேஷ்டேதே தமாஹு பரமாம் கதிம் -என்று
ஏழு விஞ்ஞானங்களும் ஸ்திரமாய் இருந்தால் யோகம் ஸித்திக்கும் என்று விசேஷித்து
ஞானி என்று ஞான ஸாதனங்களான இந்திரியங்களை விசேஷிக்கையாலும்
ஸ்ரோத்ரம் -த்வக் -சஷுஸ்-ஜிஹ்வா -கிராணம் -மனஸ் -புத்தி -என்று ஏழு இந்திரியங்கள்
வேறே இல்லை என்பது பூர்வ பக்ஷம் –

——————–

ஸூத்ரம் –269-ஹஸ்தாத யஸ்து ஸ்திதே அதோ நைவம் –2-4-5-

அவ்வாறு அல்ல -இந்திரியங்கள் ஏழு என்பது சரி யல்ல
ஸ்ரோத்ரம் முதலிய ஞான இந்திரியங்கள் ஐந்து
மனம் ஓன்று -கர்ம இந்திரியங்கள் ஆக -11 இந்திரியங்கள்
அவற்றுள் ஐந்து ஞான இந்திரியங்களும் ஜீவனுடன் வேறு சரீரத்தில் கூட இணைந்தே செல்கின்றன
ஹஸ்தாத யஸ்து–கர்மா இந்த்ரியங்களோ எனில்
ஸ்திதே -உடல் உள்ளவரை உள்ளன -சரீரம் தோன்றும் போது தோன்றி மறையும் போது மறைபவை
அதோ நைவம்-ஆகையால் இந்திரியங்கள் ஏழு என்பது இல்லை
புத்தி அஹங்காரம் சித்தம் என்ற வளாகங்களை மநோ விருத்தியின் பேதங்களே யாதலின் வேறே அல்ல
ஆக இந்திரியங்கள் பதினொன்றேயாது

இவ்வாறு வியாக்யானம் தீபத்தைத் தழுவியது –

இங்கு ஓர் பூர்வ பக்ஷம்
ஜீவன் இருக்கையில் ஹஸ்தாதிகள் அவனுக்கு உபகாரமாய் இருப்பதாலும் எடுப்பது வைப்பது போன்ற
செயல்கள் இயற்றுவதாலும் இந்த்ரியத்தில் தடை இல்லை
ஆகையால் அவை ஏழு தான் என்று கூறப்படுவது இல்லை -அவை பதினொன்றே
ஜீவன் சரீரத்தை அடையும் போது கர்ம இந்திரியங்கள் உண்டாகி சரீரம் நசிக்கும் போது அடியோடு நசிக்கின்றன
ஜீவன் லோகாந்த்ரம் தேஹாந்த்ரம் அடையும் போது ஞான இந்த்ரியங்களே உடன் போகின்றன
கர்ம இந்திரியங்கள் போவது இல்லை என்ற இவ் வர்த்தங்களைச் சாதிக்க வில்லை

ஸ்ருத பிரகாசிகையிலோ -பதினோரு இந்த்ரியங்களுமே அஹங்காரத்தில் இருந்து தோன்றியவை யாதலின்
ஜீவனின் லோகாந்தர தேஹாந்தர கமனத்திலும் இவை கூடவே செல்கின்றன என்றும்
பிரளய தசையில் தவிர மற்ற காலங்களில் இவற்றுக்குப் பிரிவே கிடையாது என்றும் கூறி
ஏழே இந்திரியங்கள் என்பதைக் கண்டிக்கிறார்

சிந்தாமணியிலும் -ஸப்த இமே லோகா யேஷு சரந்தி பிராணா -என்கிற சுருதியில்
ஜீவனுடன் செல்லுதல் ஞான இந்திரியங்களுக்கு மட்டும் கூறினாலும்
கர்ம இந்திரியங்களுக்கு உப லக்ஷணம் என்று கூறப்பட்டுள்ளது
இப்படி இருக்க தீப அனுசாரியாக வியாக்யானம் செய்யலாமோ என்பது பூர்வ பக்ஷம்

இவ்விஷயத்தில் நியாய பரிசுத்தி கிரந்தம் சமாதானமாகக் கூறும் வழியைக் காண்போம்
யாதவ பிரகாசர் மதத்தைப் போல் கர்ம இந்திரியங்களுக்கு ஒவ்வோர் சரீரத்திலும்
உத்பத்தி விநாசங்களை ஏற்றுக் கொண்டாலும் அவற்றுக்கு இந்த்ரியத்வம் ஸித்தமாகிறது என்பதால்
இந்த ஸூத்ரத்துக்குப் பொருத்தமான பொருள் ஓன்று கூறப்பட்டது
ஆகையால் பதினோரு இந்த்ரியங்களுமே வேறே சரீரங்களிலும் தொடர்கின்றன என்பதே
ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம் என்று அறிகிறோம்
சரீரே ஸ்திதே -என்றும் பிரயோஜனந்தரத்தாலும் பிறர் மதத்தை அனுவதித்து
இந்திரியங்கள் பதினொன்றே என்று ஸ்தாபித்தாலும்
தீபத்தில் சொல்லியதத்திற்கும் விரோதம் இல்லை என்பதாம் –

—————

மூன்றாம் அதிகரணம் –பிராண அணுத்வ அதிகரணம்

ஸூத்ரம் –270-அணவச்ச –2-4-6-

இந்திரிய பரிமாணம் இதனால் கூறப்படுகிறது
இந்திரியங்கள் ஸர்வ கதங்களா அணுக்களா என்று சம்சயம்
ஸர்வ கதங்களே –ஏதே ஸர்வ ஏத சமாஸ் ஸர்வே அநந்தா -என்று அனந்தத்வம் சொல்வதால் –
என்று பூர்வபக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்
அணவச்ச –இந்திரியங்கள் அணுக்களே
பிராணம் அனூத்க்ரா மந்தம் சர்வே ப்ராணா அனூத் க்ராமந்தி -என்று
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வது கூறப்பட்டுள்ளதால் அணுவே
அநந்தம் -என்று சொன்னதோ -அதஹை தாந நந்தானு பாஸ்தே -என்று
இந்திரியங்களின் உபாஸனத்தால் வரும் பலன்களின் மிகுதியைக் காட்டவேயாம் –

————–

ஸூத்ரம் –271-ஸ்ரேஷ்டச்ச –2-4-7–

இந்திரியங்களுக்கு நிர்வாஹகம் ஆகையால் ஸ்ரேஷ்டமான பிராண வாயுவும் உண்டாகிறது
ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மன -என்று சொல்வதால்
இங்கு ப்ராணனைச் சொன்னது மேலே பிராணனின் ஸ்வரூபத்தை விசாரிக்க வாம் –

———

நான்காம் அதிகரணம் -வாயு க்ரிய அதிகரணம் —

ஸூத்ரம் –272- ந வாயு க்ரியே ப்ருதக் உபதேசாத் –2-4-8-

இந்த ஸ்ரேஷ்ட பிராணன் கேவல வாயு ஸ்வரூபமா -அல்லது வாயுவின் சலனாதி கிரியையா
அல்லது தேஹாதி தாரணத்துக்கு அனுகுணமான ஒரு அவஸ்தா விசேஷத்தோடு கூடின வாயுவா என்று சம்சயம்
கேவல வாயுவே –முதல் பக்ஷம் –யஸ் பிராணா ச வாயு -என்று சொல்வதால்
இரண்டாவது பக்ஷம் -உஸ்வாச நிச்வாஸ ரூபமான வாயுவின் கிரியையே பிராணன் என்பது
இவற்றை நிரசிக்கிறார்

ந வாயு க்ரியே -வாயு மாத்ரமோ அதன் கிரியையோ அன்று
ப்ருதக் உபதேசாத்–ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மனஸ் ஸர்வ இந்த்ரியாண ச
கம் வாயு -என்று
வாயுவும்
பிராணனும்
ப்ரஹ்மத்தின் இடம் இருந்து உண்டாகின்றன என்று தனித்தனியே சொல்வதால் என்றபடி
ஆகையால் தேஹ தாரண யோக்யதா ரூபமான விசேஷத்தை யுடைய வாயுவே பிராணன் என்று சித்தம்

———–

இப்படி வாயுவைக் காட்டிலும் தனியாகச் சொல்லப்பட்ட அக்னியாதிகளைப் போலே
வேறே ஒரு பூதமோ என்னும் சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –273-சஷுராதி வத் து தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய –2-4-9-

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பிக்கிறது
பிராணன் தேஜஸ் முதலியவை போல் பூதம் அல்ல
சஷுராதி வத்–கண்–இந்திரியங்கள் போல் ஜீவனுக்கு உபகரணம் ஆகாது
தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய–உபகரணங்களான அவற்றுடன் சேர்ந்து உபதேசம் செய்யப்பட்டு இருப்பதால்
பிராண சம்வாதத்தில் -ஸர்வே ப்ராணா அஹம் ஸ்ரேயஸே விவத மானா -என்று
ச ஷுராதி இந்த்ரியங்களையும் பிராண வாயுவையும் கூட்டி பிராண ஸப்தத்தாலே உபதேசிக்கிறது
ச ஷுராதிகளைப் போலே பிராண வாயுவும் உபகரணம் என்ற வகையில் சமமானால் தான் பொருந்தும்
யோ அயம் முக்ய ப்ராணா -என்று ப்ராண சப்தத்தால் குறிப்பிடப்பட்டுள்ள கரணங்களுள்
பிராண வாயு முக்கியம் என்று கூறியது
ஸஹ சிஷ்ட் யா திப்ய-என்று ஆதி ஸப்தத்தின் பொருள் –

————–

ஸூத்ரம் –274-அகரணத் வாச்ச ந தோஷ ததாஹி தர்சயதி–2-4-10-

அகரணத் வாச்ச ந தோஷ –ஜீவனுக்கு உபகரிக்கை என்னும் காரணம் இல்லாமையாலே
ப்ராணனுக்கு உபகரணத்வம் கூடாது என்ற தோஷமும் இல்லை
ததாஹி தர்சயதி–யஸ்மின் உத் க்ராந்தே இதம் சரீரம் பாபிஷ்ட தரமிவ த்ருச்யதே ஸவை ஸ்ரேஷ்ட –என்றும்
ஸ்ருதி தானே பிராண வாயுவுக்கு தேஹ இந்திரியாதி அசை தில்ய கரண ரூபமான உபசாரத்தைக் காட்டுகிறது
ஆகையால் தோஷம் இல்லை என்பதாம் –

——————-

ஸூத்ரம் –275–பஞ்ச வ்ருத்திர் மநோ வத் வ்யபதிஸ்யதே–2-4-11–

பஞ்ச வ்ருத்திர்-ஒரே பிராண வாயு தான் பிராண அபா நாதி வ்ருத்தி பேத மூலமாக
ஐந்து பெயர்களால் கூறப்படுகிறது
மநோ வத்-ஒரே மனம் எப்படி காம நாதி வ்ருத்தி பேதத்தால்
காமம்
சங்கல்பம் விசிகித்சா
ஸ்ரத்தா
அஸ்ரத்தா
த்ருதி
அத்ருதி ‘
ஹ்ரி -வெட்கம்
தீ புத்தி
பீ பயம்
என்று வெவ்வேறாக கூறப்படுகிறது அப்படியே பிராணனும் ஐந்து இடங்களில் இருப்பைக் கொண்டு
பிராணன் அபானன் இத்யாதி பெயர்களால் குறிக்கப் படுகிறது

———————-

ஐந்தாம் அதிகரணம் –அணுச் ச அதிகரணம்

இந்தப் பிராணன் வாயுவா அல்லவா என்று சம்சயம்
சர்வகதன்-விபு -என்று பூர்வ பக்ஷம்
ஸ ஏபி த்ரி பி லோகை சம என்று அனந்தயம் சொல்வதால் என்று பூர்வ பக்ஷ ஹேது
இதை நிரசிக்கிறார்

ஸூத்ரம் –276–அணுச் ச –2-4-12–

தம் உத் க்ரமாந்தம் பிரானோ அனூத் க்ரமாதி –என்று உத் க்ராந்தி சொல்வதால்
இந்திரியங்கள் போலவே பிராணனும் ஸூஷ்ம பரிணாமம் உள்ளது
த்ரி பி பிராணை சம -என்றது பிராணனை ஸ்துதிப்பது அன்று வேறு இல்லை –

———–

ஆறாம் அதிகரணம் -ஜ்யோதிராத் அதிகரணம்

பராத் து தத் ஸ்ருதே -என்னும் அதிகரணத்தில் சொன்ன அர்த்தத்தை
இதில் ஸ்திரப்படுத்துகிறார் என்று சங்கதி

ஸூத்ரம் –277-ஜ்யோதிராத் யதிஷ்டா நந்து ததா மனனாத் ப்ராண வதா சப்தாத் –2-4-13–

ப்ராண வதா-பிராணனின் நியந்தா என ஜீவனுடன் கூடி
ஜ்யோதிராத் யதிஷ்டாநம் -அக்னி யாதி தேவதைகளுக்கு வாக் யாதி இந்த்ரியங்களில் அதிஷ்டானமானது
ததா மன நாத் து –ஆபி முக்யேந மனனம் ஆ மனனம் ஸங்கல்பம் –
அந்த பரம புருஷனின் சங்கல்பத்தாலே ஏற்படுகிறது என்று கருத்து
ஏன் எனில்
சப்தாத்-யோ அக்னவ் திஷ்டன் அக்னி மந்தரோ யமயதி ய ஆத்மனி திஷ்டன் –இத்யாதி
சப்தங்களால் என்றபடி –

——————–

ஸூத்ரம் –278- தஸ்ய ச நித்யத் வாத் –2-4-14–

தஸ்ய -ஸமஸ்த வஸ்துக்களும் பரமாதிஷ்டிதம் என்பதற்கு
நித்யத் வாச் ச -ஸ்வரூப அனு பந்தியாய் நியதத்வம் இருப்பதால்

ஆகவே பகவத் ஸங்கல்பத்தாலே தான் அக்னி யாதி தேவதைகளுக்கு
இந்திரிய அதிஷ்டாத்ருத்வம் தவிர்க்க முடியாததாகிறது –
தத் ஸ்ருஷ்ட்வா ததே வா அனு ப்ராவிசத் தத் அனு ப்ரவிஸ்ய சச்சத் யச்சா பவத் என்று
சர்வ நியாந்தாவாய் இருந்து அனு பிரவேசம் செய்தார் என்ற ஸ்ருதி இருப்பதால் என்று கருத்து –

————

ஏழாம் அதிகரணம் –இந்த்ரிய அதிகரணம்

ஸூத்ரம் –279-த இந்த்ரியாணி தத் வ்யபதேசாத் அந் யத்ர ஸ்ரேஷ்டாத் –2-4-15–

ஸர்வே பிராணா -என்று சஷு ராதிகளையும் பிராண வாயுவையும் பிராண சப்தத்தாலேயே சொல்லுகையாலே
முக்ய பிராணனையும் இந்த்ரியம் என்னலாம்
என்பதைக் கண்டிக்கிறார்
ஸ்ரேஷ்டாத் அந் யத்ர-ஸ்ரேஷ்ட பிராணன் அல்லாத பிற ப்ராணங்கள்
த இந்த்ரியாணி-அவையே இந்த்ரியங்கள்
தத் வ்யபதேசாத் -அவற்றையே அவ்வாறு வழங்குவதால்
இந்திரியாணி தசை கஞ்ச -என்று முக்ய பிராணனை விட்டு -சஷுராதி மனம் வரையானவற்றையே
இந்த்ரியம் எனக் குறிப்பிடுவதால்
முக்ய ப்ராணனுக்கு இந்த்ரியம் என்ற பெயர் கிடையாது என்பதாம் –

——————

ஸூத்ரம் –280-பேத ஸ்ரு தேர் வை லக்ஷண்யாச் ச–2-4-16–

பேத ஸ்ரு தேர்
ஏதஸ் மாஜ் ஜாயதே பிரானோ மனஸ் ஸர்வ இந்த்ரியாணி ச -என்று
பிராணனையும் இந்திரியங்களை வேறாகச்
சொல்லுகையாலும்
வை லக்ஷண்யாச் ச–இந்திரியங்கள் லயம் அடைந்த பிறகும் பிராண வ்யாபாரத்தைக் காண்கையாலே
இவற்றின் இடையே வேறுபாடு இருப்பதாலும் என்றபடி

இத்தாலும் ஸ்ரேஷ்ட ப்ராணனைத் தவிர்த்த ஏனைய சஷு ராதிகளே இந்த்ரியங்கள் என்று ஸித்தம் –

———–

எட்டாம் அதிகரணம் –ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம்

வ்யத் அதிகரணம் தொடங்கி இது வரை -14- அதிகரணங்களாலே
பூத இந்திரியாதிகளின் சமஷ்டி ஸ்ருஷ்டியை நிரூபித்து
இவ்வதி கரணத்திலே
தேவ மனுஷ்யாதி வ்யஷ்டி ஸ்ருஷ்டியை இங்கு நிரூபிக்கின்றார் என்று சங்கதி

ஸூத்ரம் -281–ஸம்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் -2-4-17-

பிரபஞ்ச ஸ்ருஷ்டியை சதுர்முகன் செய்கிறானா
சதுர்முக சரீரக பரமாத்மா செய்கிறானா
என்ற ஸம்சயத்தில்
அநேந ஜீவேந ஆத்ம நா அனு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று
ஜீவனைத் த்வாரமாகக் கொண்டு நாம ரூப வியாகரணம் சொல்லுகையாலே
சதுர் முகனே வ்யஷ்டி ஸ்ருஷ்டியை செய்பவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் –
நாம ரூப வ்யாகரவாணி தாஸாம் த்ரி வ்ருதம்
த்ரி வ்ருதம் ஏகை காம் கரவாணி -என்று த்ரி வ்ருத கரணம் பண்ணுபவனுக்கே நாம ரூப வியாகரணம் உபதேசிக்கையாலே
த்ரி வ்ருத் க்ருதங்களான தேஜோ அப்பு அன்னங்களால் உத் பன்னமான அண்டத்தில் உள்ள சதுர்முகன்
அந்த த்ரி வ்ருத் கரணத்தின் கர்த்தா ஆக மாட்டான்
த்ரி வ்ருத் கரணமும் வ்யஷ்டி ஸ்ருஷ்டியும் பரம புருஷனால் தான் செய்யப் பட்டன என்றாலே
வ்யாகரவாணி என்ற உத்தம புருஷனும் -தன்மை ஒருமை வினை முற்றும் -பொருந்தும்
ஜீவேந ஆத்ம நா என்ற சாமா நாதி கரண்யமும் -விசேஷண விசேஷ்ய பாவமும் முக்கியப் பொருளாகும்
ஜீவேந ஆத்ம நா–ஜீவ சரீரகனான என்னால் என்றபடி–

————-

ஆமாம் அன்ன மசிதம் த்ரேதா விதீயதே என்று தொடங்கி
சதுர்முகன் படைத்த அன்னாதிகளிலும் த்ரி வ்ருத் கரண பிரகாரம் உபதேசிக்கப் படுகிறதே
ஆகையால் அவனும் த்ரி வ்ருத் கரணம் செய்யச் சக்தன் தானே என்ற சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –282–மாம் ஸாதி பவ்மம் யதா ஸப்தம் இதர யோச்ச 2-4-18–

மாம் ஸாதி பவ்மம் -மாம்சமும் மனமும் பவ்மம்-பூமி சம்பந்தம் உள்ளவை
அவை ஆப்யமோ தைஜஸமோ அல்ல
யதா ஸப்தம் -ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்று ஸ்ருதி சொன்னபடியே
இதர யோச்ச-அன்னம் மசிதம் என்ற பிரதம பர்யாயம் தவிர்த்த
ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்ற இரண்டு பர்யாயங்களிலும் மூத்ர பிராணங்களுக்கு ஆப்யத்வமும்
அஸ்தி மஜ்ஜைகளுக்கு தைஜஸத்வமும் உபதேசிக்கப் படுகின்றன
இதன் பொருளாவது

தாஸாம் த்ரி வ்ருதம் என்று அண்ட ஸ்ருஷ்டிக்கு என்று குறிப்பிடப்பட்ட த்ரி வ்ருத் கரணம்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே -என்பதால் விதிக்கப்பட வில்லை
ஆனால் அண்டத்துக்குள் இருக்கும் ஸ்வேதகேது எளிதில் புரிந்து கொள்ள மனிதனால் உட் கொள்ளப்படும்
அன்னம் ஜலம் முதலியவற்றில் மூன்று வகைப்பிரிவு கூறப்பட்டது
தஸ்ய யஸ் ஸ்தவிஷ்டோ பாக தத் புரீ ஷம் யோ மத்யம் தன் மாம்ஸம் யோ அ ணிஷ்ட தன் மன –என்று
மாம்சமும் புரீ ஷமும் மனஸ்ஸும் போல் பவ்மம் என்று உபதேசிக்கப் படுகிறது
ஏன் எனில்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே–என்று தொடக்கத்தாலும்
அன்ன மயம் ஹி சோம்ய மனஸ் –என்று வாக்ய சேஷத்தாலும் என்றபடி

தேஜோ ஆபன்னங்களுக்குத் த்ரி வ்ருத் கரண பிரகாரம் இதில் சொல்லப் படுகிறது எனில்
மாம்சமும் மனஸ்ஸும் பவ்மமான புரீ ஷத்தைக் காட்டில் அணீ யஸ்ஸாகையாலே
ஆப்யத்வமும் தைஜஸத்வமும் ப்ரஸக்தமாகும்
அவ்வாறே ஆப பீத தேஜோ உசிதம் என்ற இரு பர்யாயங்களிலும்
லோஹிதம் மூத்ரம் பிராணன் இம் மூன்றுக்கும் ஆப்யத்வமும்

தேஜஸ் பர்யாயத்தில் அஸ்தி மஜ்ஜை வாக்கு இவை மூன்றுக்கும் தைஜஸத்வமும் சொல்லப்படுகிறது
ஏன் எனில்
பீதா என்று தொடங்குவதாலும் ஆபோ மய ப்ராண என்ற வாக்ய சேஷத்தாலும்
அப்படியே தேஜோ உசிதம் என்ற தொடக்கத்தாலும்
தேஜோ மயீ வாக் என்ற வாக்ய சேஷத்தாலும்
என்றபடி

இப்படி இல்லாமல் த்ரி வ்ருத் கரணத்தை உபதேசிக்கிறது என்றால் மூத்ரம் ஸ்தவிஷ்டமாகையாலே பவ்மம் ஆகிவிடும்
பிராணனும் அணீ யஸ் யாதலின் தைஜஸம் ஆகி விடும்
தேஜோ அஸிதம் என்ற மூன்று பர்யாயத்தாலும் அஸ்தி -பவ்மமாயும் மஜ்ஜை ஆப்யமாகவும் ஆகும்
உபக்ரம வாக்ய சேஷங்களுக்கு விரோதம் வருமாதலின் முன்பே த்ரி வ்ருத் க்ருதமான அன்னாதிகளுக்கு
ஜாட ராக்னி யாலே மூன்று விதமாகப் பரிணாமம் உபதேசிக்கப் படுகிறது

—————-

முன்பே த்ரி வ்ருத்தமானால் வெறும் அன்னம் முதலிய சொற்களால் எப்படி வழங்கலாம்
என்பதற்கு விடை தருகிறார்

ஸூத்ரம் –283-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பதாம்
வைசேஷ்யம்–விசேஷ பாவ -ப்ருத்வீ ஜலாதிகள் முன்னரே த்ரி வருத் க்ருத்யங்கள் ஆயினும்
பிருத்வீயில் தன் அம்சம் பாதியும் ஜல தேஜோ அம்சங்கள் கால் காலும் உள்ளது என்பது போலே
அந்த அ ந்த பூதத்தில் விசேஷமானது தன் பாகம் ஆதலாலும் அன்னம் அப்பு தேஜஸ் என்கிற வ்யவஹாரம் ஏற்பட்டது

தத் வாத தத் வாத -இரு முறை கூறி அத்யாய முடிவைக் காட்டுகிறது

இங்கு ஸ்வாமி தேசிகன்
அநேந ஜீவேந ஆத்மனா அனு ப்ரவேஸ்ய-என்ற ஸ்ருதியும்
அந்தராத்மா வேறு என்றும்
மற்றவன் சரீரம் என்றும் பேதத்தைக் ஊறி இருப்பதால்
ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைக் கூறவில்லை
ஆகையால் எம்பெருமான் சேதன அசேதன சரீர விசிஷ்ட ஸ்வ பாவனாய் அனு ப்ரவேசத்திலும் கர்த்தா ஆகிறான்
அனு ப்ரவேசத்தில் கர்த்தா பின்னர் ஆவதால் த்வா ப்ரத்யயம் ஜீவனுக்கு கர்த்ருத்வத்தைக் காட்டாது என்று அருளினார்
ஒருவன் அனு பிரவேசம் செய்வதாயும்
மற்றவன் வியாகரணம் செய்வதாயும்
கர்த்தா வேறான -சமான கர்த்ருகத்வம் இல்லாமையாலே
த்வா ப்ரத்யயம் வாராது என்பதாகும் –

————-

இப்பாதத்தில் எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாக் யாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்
என்பவை எட்டு அதிகரணங்களால் விளக்கப்பட்டன –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–

October 31, 2021

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

யதீந்திர மத தீபிகா :

ஸர்வம் வஸ்து ஜாதம் .
அவை ஜடம் + அஜடம் எனவாய்
பிரகிருதி, காலம் 2ம் ஜட வஸ்து.
நித்ய விபூதி, தர்மபூத ஞானம், ஜீவன், ஈஸ்வரன் இவை 4ம் அஜட வஸ்து ஆகும்.

இந்த அஜட வஸ்த்துக்கள் 4ல் முதல் இரண்டும், அதாவது நித்ய விபூதி, தர்மபூத ஞானம் 2ம் பிரத்யக் என்றும்,
ஜீவனும் ஈஸ்வரனும் பராக் என்றும்,

ஜடம், அஜடம், இரண்டும் திரவ்யத்திலும் ,
ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களும் அதிரவ்யங்களுமாய்
கீழ் கண்ட Chart மூலம் அறியலாம்.

வஸ்து பிரமாணம் (3) ; பிரத்யக்ஷம் + அனுமானம் + சப்தம்.
பிரமேயம் (7)
|
அதிரவியம் -; ஸத்வம் + ஸப்த + ஸம்யோகம்
| ரஜஸ் ஸ்பர்ச சக்தி
| தமஸ் ரூப
| ரஸ
| கந்தம்
திரவ்யம்
|
அஜடம் + ஜடம் ; பிரகிருதி (24) + காலம் (3)
|
பிரத்யக் + பராக் -; நித்ய விபூதி + தர்ம பூத க்ஞானம்
| தர்மி பூத க்ஞானம்
|
ஜீவன் + ஈஸ்வரன் ; பர +
| வியூக (4) +
| விபவ ; ஆவேசம் + அம்சம் + பூர்ணாவதாரம் | அந்தர்யாமி +
| அர்சை (106 +ஆழ்-ஆசா-அபிமான-அந்திம
| ஸ்தலங்கள்)
நித்யன்
முக்தன்
பத்தன்
|
புபுக்ஷு -; அர்த்தகாம பரன் + தர்ம பரன்
| |
| தேவதாந்த்ர பரன் + பகவத் பரன்
முமுக்ஷு
|
பரம மோக்ஷர்த்தி + கைவல்யார்த்தி
|
பிரபன்னன் + பக்தன்
|
பரமைகாந்தி + ஏகாந்தி
|
ஆர்த்தன் + திருப்தன்

—————–

ஜட வஸ்துவில் ஒன்றான பிரக்ருதி 23 தத்வங்களாய் பார்க்கப் படுகின்றன. அவை:
மூல பிரகிருதி. மஹான், (சாத்விக + ராஜச + தாமச ) அஹங்காரம் – 3
ஆகாசம், வாயு, அக்நி , ஜலம், பிருதிவி ஆகிற – 5
ஞான இந்திரியம் – சப்த, ஸ்பர்ச, ரூப ரச கந்தம் – 5
கர்மேந்திரியம் – காது , தோல், கண், நாக்கு, மூக்கு – 5
பஞ்ச தன்மாத்ரைகள் . சக்ஷுர், கிரண, ஷோத்ரிய, பாயு, உபஸ்தங்கள் – 5
இவற்றுக்குமேல் மனசு 24 வது தத்வம் . ஆத்மா 25. பரமாத்மா 26 வது தத்வம் என்றும் அறியவும்.

————–

பிரத்யக் + பராக்
என வஸ்துக்கள் ஐந்திரியமாகவும்; அதீந்த்ரிய மாகவும் காணக் கிடைக்கின்றன.

பிரமா ; உள்ளதை உள்ளபடி அறிகை பிரமா .
பிரமாணம்; பிரமா கரணத்வம் பிரமாணம். அதிசயித்த ஞானத்தை கால விளம்பம் இன்றி சாதித்துக் கொடுப்பது பிரமாணம்.

பிரமா -; ஞானம் ; லக்ஷியம்.
பிரமாணம் -; கருவி ; லக்ஷணம்.
பிரமேயம் ; பிரத்யக்ஷ, அனுமான, ஸப்த பிரமாணங்களால் அறியப் படுமவை பிரமேயம்.

பஞ்சேந்திரியங்களைக் கொண்டு நேராக உள்ளதை உள்ளபடி அறிய ஹேதுவாக இருப்பது பிரத்யக்ஷம்.

ஸவிகல்ப ஸாக்ஷத்காரம் ; இரண்டு, அதற்கு மேற்படவும் குணங்களை கிரஹிப்பது .
நிர்விகல்ப ஸாக்ஷத்காரம் ; பிரதம பிண்ட கிரஹணம் – விசேஷணங்களை சமூகமாக முதல் முறையாக அறிதல்.
சம்யோகம் -; இந்திரிய திரவ்ய சம்பந்தம் ஸம்யோகம்
சம்யுக்த சம்யோகம் -; திரவிய ஆஸ்ரய குணத்தை அறிகை .உ.ம். வர்ண கலாபமான மண் குடத்தின் வர்ணம் இன்னது என்று அறிகை.

நம்முடைய ஞானம் இந்திரிய ஸம்யோகத்தால் உண்டாவது -; அர்வாசீனம்.
ரிஷிகளுடைய ஞானம் யோக ஸம்யோகத்தால் உண்டாவது. -; அநர்வாசீனம் – ஸ்வயம் சித்தம்.
ஆழ்வார்களுடைய ஞானம் பகவத் அனுக்கிரஹ ஸம்யோகத்தால் உண்டாவது. – மயர்வற மதி நலமான பகவத் பிரசாதம்..

ஸம்ஸ்காரம் -; பிரத்யக்ஷத்தால் ஏற்படும் ஞானம்.
ஸ்மிருதி – பூர்வ அனுபவ ஜன்ய ஸம்ஸ்கார ஜன்ய ஞானம் ஸ்மிருதி.(நினவுப் பதிவு).
ஊகம் , சம்சயம், பிரதிபா, பிரமம் இவை அனைத்தும் பிரயக்ஷத்துள் அடக்கம்.
சம்ஸயம் -; இதுவா, அதுவா என்பது – ஸ்தம்போவா புருஷோவா என்கிற சந்தேகம்.
விபர்யயம் -; அன்யதா ஞானம் + விபரீத ஞானம் வஸ்து, குணம் இவைகளை மாறாடி நினைகை .
பிரமம் ; பாம்பை பழுதென நினைப்பிடுகை பிரமம்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் – காணலாக ஜீவனை காணும்படியானவன் ஜீவன் என்னல்.
ஸக்கியாதி -; உண்மை அறிவு. இந்த உண்மை அறிவால் அறியப்படும் அனைத்தும் உண்மை / சத்யம்.
அ+கியாதி =; சுக்தியை வெள்ளி என்று பார்க்கும் போது பிரத்யக்ஷத்தில் கிளிஞ்சல் இருந்தாலும்
அதன் பளபளப்பினால் வெள்ளியின் நினைவு வருகிறது.
இங்கே பிரயக்ஷமும், ஸ்ம்ருதியும் இருக்கின்றன. சுக்திக்கும் வெள்ளிக்கும் உள்ள பேதத்தை உணர முடியாத
அறியாமையோடு கூடிய ஞானம் அக்யாதி /அன்யதா கியாதி என்கிறான் மீமாம்ஸகன்.

ஆத்மாவின் ஞானம் ஒன்று தான் எங்கும் இருப்பது. அதற்கு விஷயமாக வெளிப் பொருள் எதுவுமில்லை.
சுக்தியானாலும், வெள்ளியானாலும் பார்க்கப்பதுவது ஞானம் தான் என்கிறான் யோகாசாரன் (பௌத்தன்). இது ஆத்மகியாதி.

சுக்த்தியில் வெள்ளி உண்டாகி பிறகு போய் விடுகிறது.
இப்படி வெள்ளி என்கிற ஞானம் உண்டாகி மறைவது அநிர்வநீயக்யாதி என்கிறான் அத்வைதி..

விசேஷணம் -; சிறப்பம்சம் , ஒன்றிலிருந்து மற்றதை வியாரவர்த்திக்கை / கழித்து வேறுபடுத்தல் பிரயோஜனம்.
உ.ம். கடம் என்றால் படத்வ பின்னம்.

சங்க : பீத : என்பது மருள் (அக்ஞானம்=குணத்தை மாறாடி நினைத்தல் ) – பார்ப்பவன் குறையே ஒழிய பொருளில் குறை இல்லை..
முத்துச் சிப்பியை வெள்ளி என்று அறிதல் மயர்வு (அன்யதா ஞானம்=வஸ்துவை மாறாடி நினைத்தல் ) பயன் பாட்டின் குறை.
மாறாக , தெருள் = பிரமா – வியவஹார பூர்த்தியோடு கூடிய ஞானம்.

——–

வேதாந்தம் ; விசேஷ ஸாஸ்த்ரம் .

வியாகரணம்
தர்க்கம்
மீமாம்சை இவை -; சாமான்ய ஸாஸ்த்ரம் .

உத்திஷ்ட ; எழு – Arise
ஜாக்ரத ; விழித்துக் கொள் – Awake and
பிராப்பியவரான் நிபோதித -; முயற்சி செய் – Stop not till the Goal is reached.
என்று ஞான ஸந்தர்சன கார்யம் விவேகம்.
ஐந்த்ரியத்தை பிரத்யக்ஷ த்தாலும், அனுமானத்தாலும் சாதிக்கலாம்.
அதீந்திரியமான பகவத் தத்வத்தை சப்த பிரமாணத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
பிரத்யக்ஷ அனுமானங்கள் ஐந்திரிக சாதன மாகையாலே.

———————————-

இது இப்படி, இது ஆனபடியாலே .
இது இப்படி இல்லை; இது இல்லாத படியாலே .
என்று யூகிப்பது அனுமானம்.

அனுமிதி -; பிரமிதி -; ஞானம் .
அனுமானம் -; கருவி (பிரமாணம்). ஆக அனுமிதிக்கு கரணம் அனுமானம். அப்படிப்பட்ட அனுமானம் பலிக்க :
ஹேது வியாப்தியால் இருக்க வேண்டும்.
பக்ஷத்தில் ஹேது தர்மம் இருக்க வேண்டும்.
ஸபக்ஷத்தில் கண்டிருக்க வேண்டும்.
ஹேது வியாவர்த்திக்கக் கூடாது.
ஹேது பிரத்யக்ஷத்தில் பாதிக்கப் பட கூடாது.
பிரதி பக்ஷம் இருக்கக் கூடாது.

வியாப்தி -; எங்கெல்லாம் புகை இருக்கிறதோ அங்கு நெருப்பு உண்டு என்று பொதுப்படுத்திக் கூறுவது வியாப்தி..
வியாபகம் -; ஆதிக்யம் உடையது. – அதிக இடத்தில் அதிக காலத்தில் இருக்கும்.
புகை இருக்குமிடம் எல்லாம் நெருப்பு உண்டு. ஆகையால் நெருப்பு வியாபகம். உ.ம். மடைப்பள்ளி. பூஜை அறை etc
வியாப்பியம் -; நியூனதையோடே கூடி இருக்கும். – குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் இருப்பது.
நெருப்பு இருக்கும் இடமெல்லாம் புகை இருப்பதில்லை. ஆகையால் புகை வியாபியம். உ.ம். அயப்பிண்டம்.
சாகசர்யம் -; இது இருந்தால் அது உண்டு . புகை (வியாப்பியம்) இருந்தால் நெருப்பு (வியாபகம்) உண்டு
என்கிற நியத சாகசர்யம் என்பது -; நியத சாமான்யாதிகரண்யம்

பர்வதோ வன்னிமான், தூமத்வாத்.

இதில்
பர்வதம் – பக்ஷம். வன்னிமான் – சாத்யம் . தூமத்வாத் – ஹேது .
சாத்தியம் எதிலே சாதிக்கப் படுகிறதோ அது பக்ஷம்.
நெருப்பு மலையில் சாதிக்கப் படுவதால், மலை = பக்ஷம்.
எதை சாதிக்கிறோமோ அது சாத்தியம் .
மலையில் நெருப்பை சாதிப்பதால், நெருப்பு = சாத்தியம்.
எதனால் (எந்த காரணத்தைக் கொண்டு) சாதிக்கிறோமோ, அது ஹேது = லிங்கம் = சாதனம்.
புகையைக் கொண்டு மலையில் நெருப்பை சாதிப்பதால், புகை = ஹேது .

சபக்ஷம் -; எங்கெல்லாம் புகை இருந்ததோ அங்கெல்லாம் நெருப்பு இருந்ததாகக் காண்கிறோம்.. உ.ம். மலை, அடுப்பு, ஊதுவத்தி etc .
விபக்ஷம் -; நெருப்பாகிற வியாபகம் சேராத இடம் உ.ம். குளம்.
லிங்க பராமர்சம் ; புகை என்கிற அடையாளம் (ஹேது ) மலை என்கிற பக்ஷத்தில் இருப்பதாக காண்பது.

ஈர விறகு என்றால் புகையும்

1. அன்வய வியாப்தி . 2. வியதிரேக வியாப்தி. 3. அன்வய வியதிரேகி 4. பாவ வியாப்தி. 5. அபாவ வியாப்தி என ஐந்து வகை.

அன்வய வியதிரேகி -; அந்வயம், வியதிரேகம் இரண்டிலும் சொல்லலாம்.
கேவல அன்வயி -; அன்வயத்தில் மட்டுமே சொல்லலாம். உ.ம். பிரம்மத்தை வார்த்தையால் சொல்லத் தகும், வஸ்த்துவாய் இருக்கையாலே..
இதுக்கு விபக்ஷம் சொல்ல முடியாதாகையால் இது கேவல அன்வயி யாகும், அவஸ்து என்ற ஒன்று இல்லையாதலால்.

அவியாபதி -; உ. ம். வெளிய பசு என்றால் வேறு நிற பசுக்கள் உண்டாகையால் ;
அதிவியாப்தி -; உ.ம். கொம்புள்ள பசு என்றால், கொம்புள்ள வேறு மிருகங்களும் உண்டாகையால்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் உ.ம். காணலா ஜீவனை காணும் படியான ஜீவன் என்னால்.

இனி உ.ம். பார்க்கலாம் :
ஜீவன் முக்குணத்தன், என்றால், நித்ய முக்தர்கள் பக்கல் அவியாப்தி
ஜீவன் ஞான குணகன் என்றால்,, பரமாத்மாவும் ஞான குணகன் ஆகையால் அதிவியாப்தி .
சக்ஷுர் விஷயம் ஜீவன் என்றால், கூடாத அடையாளம் ஆதலால் அசம்பவம்..

இதில் இன்னது இருக்கிற படியாலே இப்படி இருக்க வேண்டும், இதை போலே .
எங்கெல்லாம் புகை உண்டோ, அங்கு நெருப்பு இருக்கிறது, சமையல் அறை அடுப்பு போலே.
இந்த மலை புகை உடைத்தது,.
ஆகையாலே , இந்த மலை நெருப்பை உடைத்ததாய் இருக்கிறது,–என்பதையே
பர்வதோ வந்நிமான், தூமத்வாத் என அனுமானிக்கிறோம்.

ஆக அனுமானிக்க 5 அங்கங்கள் வேண்டும். :அவை
1-பக்ஷம் – மலை.
2-ஹேது – புகை.
3-சாத்யம் – நெருப்பு.
4-ஸபக்ஷம் – சமையலறை.
5-விபிக்ஷம் – குளம்.

————

உபமானம் – வியாப்திக்கு சம்பந்தப் பட்ட மற்றுமோர் இடம் – பூஜை அறை .
அன்வய வியாப்தி -; புகை இருக்கும் இடத்தல் நெருப்பு இருக்கும்
வியதிரேக வியாப்தி ; நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காது.
இதில் புகை – ஹேது , நெருப்பு சாத்தியம். ஆக சாத்தியம் இல்லையேல் ஹேது இருக்காது.
அனுமானம் துஷ்ட மாகாத போது ஏற்படும் ஞானம் ஸாது .

அனுமான பிரக்ரியை -;

1. பிரதிக்ஞா – பக்ஷத்தில் ஸாத்யம் இருப்பதாக அறிவது.
2. ஸத் ஹேது – ஹேதுவை காண்பது.
3. உதாரணம் – எங்கெல்லாம் புகை இருக்குமோ, அங்கே நெருப்பு இருக்கும், மடைப் பள்ளி போலே .
4. உபமானம் – மடப் பள்ளியில் புகை-நெருப்பு சம்பந்தத்தை , மலையில் உள்ள புகையோடு ஒப்பிட்டு மலையில் நெருப்பு இருக்க வேண்டும் என யூகிப்பது.
5. நிகமனம் – ஆக, இம்மலை நெருப்போடு கூடியது (அன்வயம்)
அதவா இம்மலை நெருப்பின்மை யோடு கூடியது அல்ல (வியதிரேகம்) என முடிப்பது.
தூம சதுர்ச தூசி மண்டலம் ஹேதுவாபாச மாகக் கடவது.

நையாயிகன் – 1 -; 5 அவஸ்யா பேக்ஷிதம் .
மீமாம்சகன் – 1 -; 3 மட்டும்.
பௌத்தன் – 2ம் 4லும் .
விசிஷ்டாத்வைதி – அநியமம்

துஷ்ட அனுமானம் :

1. அசித்தம் -;
a . ஸ்வரூப அசித்தம் – ஜீவன் அநித்யன், கண்ணால் பார்க்கப் படும் குடத்தைப் போலே .
b .ஆஸ்ரய அசித்தம் – ஆகாசத் தாமரை போலே .
c . வியாப்தி அசித்தம் – எது எது உள்ளதோ அது அநித்தியம் என்பதில்,
உதாரணம் காட்டப் படவில்லை யாதலால், உதாரண ராஹித்யத்தால் அசித்தி .

2. விருத்தம் -; பிரகிருதி நித்யா, கிருதகிருத்தவாத் , காலவது ..
உலகம் அழிவில்லாதது, படைக்கப் பட்டதால், கால தத்வத்தைப் போலே .
படைக்கப்படுமவை யாவும் அழியக் கூடியவை ஆகையாலே , நித்யம் என்று சாதிப்பது விருத்த அனுமானம்.

3. அனைகாந்திகம் (வியபிசாரம்) -; ஹேதுவும், சாத்தியமும் சேருமிடம் ஏகாந்தம். உ.ம். புகை+நெருப்பு கூடிய மலை .
சேராத இடம் தோஷம் (அ ) வியபிசாரம்.உ.ம். புகை இல்லாத நெருப்பு பழுக்கக் காச்சின இரும்பு.

a . ஹேது – பக்ஷம், ஸபக்ஷம், விபக்ஷம் 3லும் இருந்தால், அது சாதாரண ஹேது.
உ.ம். ஸப்தம் அழிவற்றது, அறியப் படுவதால், ஆத்மாவைப் போலே .
”அழிவற்றது” என்கிற ஹேது , ஸப்தத்தில் (பக்ஷத்தில்) உள்ளது. ச பக்ஷமாகிற ஆத்மாவுக்குப் பொருந்தும் .
ஆனால் உதாரணத்துக்காக எடுத்துக் கொண்ட விபக்ஷமான கடத்துக்குப் பொருந்தாது,
கடம் அழியக் கூடியது ஆகையாலே . அனுமானமும் தோஷமாய் முடியும்.

b . ஹேது – பக்ஷத்தில் இருந்து, சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லாது போனால், அது அசாதாரண ஹேது .
உ.ம். பூமி அழிவற்றது, கந்தவது பிருதிவி. ”அழிவற்றது” என்கிற ஹேது பக்ஷத்தில் மட்டும் இருந்து,
மற்ற இரண்டில், சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லையாய்ப் போவது.

4. பிரகரண சமம் (ஸத் பிரதி பக்ஷம்) ;
உ. ம். பகவான் நித்யம், அநித்ய தர்மம் இல்லாத படியால்.
இதில் ஹேது ”நித்யம்”.
பகவான் அநித்தியம், நித்ய தர்மம் இல்லாதபடியால்.
இதில் வரும் ” அநித்தியம்” பூர்வ வாக்யத்துக்கு ஹேத்வந்தரம் எதிர்மறை ஹேத்வபாவமாகையால், ஏற்படும் அனுமானம் தோஷதுஷ்ட்டம்.

5. காலாத்யபாவம் -;
உ.ம். நெருப்பு உஷ்ணமில்லாதது, வஸ்துவாய் இருக்கிறபடியாலே , ஜலத்தைப் போலே .
பிரத்யக்ஷத்தில் நெருப்பு உஷ்ணமானது. ஆகையால், சாத்தியம் பக்ஷத்தில் இல்லாத போது அபாவம்.

—————

தர்க்கம் -;

a நிஸ்சய வாதம். – தர்க்க அனுகிருஹீத பிரமாண பூர்வக தத்வ அவதாரணம்.
பிரமாணங்களின் உதவி கொண்டு உண்மைப் பொருளை நிரூபித்தல் .
வாதி பிரதிவாதி பக்கல் சாராமல் , பக்ஷபாத மில்லாமல் செய்யப்படுமது.
b ஜல்பம் – ஜன்னி வந்தாப் போலே சொன்னதை விடாமல் மீண்டும் மீண்டும் பேசி வாதடுவது.
c விதண்டா – தன் பக்ஷ ஸ்தாபனத்தை விட்டு, எதிரி பக்ஷ தவற்றையே பேசுவது.
d சலம் – எதிரி பக்ஷம் நினைப்பிடாததை ஆரோபித்து மடக்கி பேசுவது..
e ஜாதி – ஸ்வ பக்ஷ விரோதமாய் நிக்ரஹத்தில் முடியும் வாதம் ஜாதிஹி.
f நிக்ரஹ ஸ்தானம் – பராஜாய ஸ்தானம் . தவறான உத்தரத்தால், தன் பக்ஷம் தோற்றுப்போ போவது.
இவை 6ம் அனுமானத்துக்குள்ளும் பிரத்யக்ஷயத்துக்குள் அந்தர்கதம் .

—————-

ஸப்த பிரமாணம் —

பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிக்கப் படலாம். அதே போல் அனுமானம் பிரத்யக்ஷத்தால் பாதிக்கப்படலாம்.
ஆனால் சப்த பிரமாணங்களில் ஒன்றான வேதம் ஸவ்த சித்தம்.
அதீந்ரியமான பிரம்மத்தை அறிய சப்த பிரமாணமாகிற வேதம் ஒன்றே வழி. அது கால ஆராய்ச்சிக்கு உட்படாதது. அநாதியானது.
ஒரு புருஷனால் சொல்லப் பட்டது அல்லதாய் அபௌருஷேயம். அபூர்வார்த்த பிரதிபாதனே ஸதி சத்ய வாதத்துவம் தெரியாத
புதிய அர்த்தங்களைத் தருவதோடு சத்யமான வற்றையே பேசும்.

பிரத்யக்ஷத்துள் ஒன்றான ஸ்ரோத்ர ஐந்திரிய கரண சப்தம் வார்த்தை அளவிலானது.
வேதமாகிய பிரமாணத்துக்கு கரணம் (கருவி) சப்தம் அது சப்த்தத் தால் குறிப்பிடப் படும் பொருள் வரையிலுமாக உணர்த்த வல்லது.

வேதம் ஆப்த வசனம் என்பது நையாயிக பக்ஷம். சத்ய வசனமாகிலும் ஆப்தன், புருஷனாலே சொல்லப்பட்டது என்றால்
அபௌருஷேயத்வம் சித்திக்காது.ஆகவே அநாப்பதனாலே சொல்லப் படாதது என்று
வியதிரேகத்திலே கொள்வோமேயானால், அதுவே சாதுவான பக்ஷம். இராமானுஜ சம்மதம் .

அநாப்தனாலே சொல்லப்படாத வாக்கியத்தாலே ஏற்படும் அர்த்த ஞானம் , சப்த பிரமாணம் எனப்படும்.

காரணத்வ, பாதகத்வங்கள் இதுக்கு இல்லை.. வேத பிரமாணத்துக்கு பகவானும் காரணமில்லை..
அவனும் முன்னிருந்தபடி புத்தி செய்து படைப்பு காலத்தில், பிரமனுக்கு உபதேசித்தானாகில் இதுக்கு காரணத்வ தோஷம் இல்லை.

”பசுவை அழைத்து வா .கட்டு” என்ற வாக்கியத்தின் படி இன்னது பசு என்கிற காரிய-காரணத்வ சம்பந்தத்தால்
ஏற்படும் அறிவு ப்ரஹ்மத்தின் விஷயத்தில் உதவாது. காரணம் ப்ரஹ்மம் சித்த வஸ்து ஒழிய காரிய வஸ்து அல்லவே.
ஆக சப்த வாக்கிய பிரமாணம் ப்ரஹ்மத்தை சொல்லாது என்பது பூர்வ பக்ஷம் .

இதுக்கு பிரதிபக்ஷம் என்ன வென்றால் – ஒரு தாய் தன் குழந்தைக்கு இன்னார் தந்தை என்று காட்டும் போது
வாயால் ”அப்பா” என்று சொல்லி ஜாடை செய்யும் போது குழந்தை புரிந்து கொள்கிறது.
இவ்விடத்தில் வருதல் , காட்டுதல் போல காரிய விவகாரம் இல்லை ஆகிலும் குழந்தைக்கு இன்னார் தான்
தந்தை என்கிற அறிவு சித்த வஸ்துவைக் காட்டி சப்த சூசனையால் சாதிக்கப் படுவதால்,
ப்ரஹ்மத்தின் விஷயத்திலும் காரியபரதையாகிற அபேக்ஷை இல்லை.

”ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதிதாஸ்யவ்ய: என்கிற உபாசன காரிய பரதை ப்ரஹ்மத்தின் விஷயத்திலும்
சொல்லலா மாகையாலே , ப்ரஹ்மம் சித்த வஸ்து வானாலும் சப்த பிரமாணம் கொண்டு அப்பியகம வாதம்,
அனப்பியகம வாதம் இரண்டாலும் – எதிராளி சொல்வதை ஏற்றுக் கொண்டோ அல்லது நிராகரித்தோ பிரஹ்மத்தை சாதிக்கலாம்.

பில்லி சூன்யம் சேன யாகாதி அபிச்சாரி கர்மங்கள் அடங்கிய வேத பாகம் பிராமணம் ஆகுமோ என்னில் ,
திருஷ்ட பலத்தைக் காட்டி, அதிருஷ்ட பலமாகிற மோக்ஷத்தில் மூட்டுகிற படியால் வேதம் முழுவதுமாக பிரமாணம் ஆகும்.
திரைகுண்யா விஷயா வேதா: என்பதால் தாமச பிரகிருதிக்கு உண்டான வேத பாகம் சாத்விகருக்கு
அன்வயமில்லை ஆனாலும், அவைகளின் பிராமாண்யதைக்கு குறை இல்லை.

பூர்வ பாகம் கர்ம மீமாம்ஸா – உத்தர பாகம் ப்ரஹ்ம மீமாம்ஸா
கர்ம பாகம் தேவதா ஆராதன விதிகளையும்
ப்ரஹ்ம பாகம் ஆராத்ய தேவதா பிரகாரமும் சொல்லும்.

மந்த்ர அனுஷ்டான விதி பாகம் கர்ம காண்டம். அதில் சொல்லப் பட்ட செயலில் தூண்டி அதில்
உத்தியோகிக்க வேண்டி போற்றிப் பேசும் கொண்டாட்டம் அர்த்த வாதம் – ஹிதைஷி வாக்கியம் விதி.எனப்படும்.

விதி வாக்கியங்கள் அபூர்வம், , பரசங்கியா , நியமம் என மூன்றாய் நித்ய, நைமித்யக, காம்ய கர்மங்கள் என பிரிந்து இருக்கும்.

விரீன் புரோக்ஷய என்கிற விதி வாக்கியம் அபூர்வ விதி. யாக திரவ்யமான நெல்லை ஹவிஸாக பயன்படுத்தும் முன்
புரோக்ஷிப்பாய் என்கிற இந்த விதி நூதனமாக சொல்லப் படுவதால் இது அபூர்வம்.

இரண்டு விதமான செயலில் ஒன்றை முதலில் செய் என்று ஆணை இடுவது ப்ரசங்கியா விதி.

பலவழிகளில் செய்யப்படுமதை ”குரும் அபிகமநாத்’
என்று ஞனத்தை சம்பாதிக்கிற விஷயத்தில் படித்து தெரிந்து கொள்வது , ஆசாரியனை அடைந்து தெரிந்து கொள்வது
என்கிற பல வழிகள் இருக்க, ”குருவை” அடைவாய் என்று உபதேசிப்பது நியமம்.

சந்தியாவந்தனாதி விதிகள் நித்ய விதி.
ஒரு காரணத்தைப் பற்ற வருகிற விதி நைமித்திகம். உ.ம்.கிரஹண தர்ப்பணம்.
ஜோதிஷ்ட்டேன காம்ய கார்ய அபிஸந்தி விதி காம்ய. விதியாகும்.

சந்தா – அனுஷ்டுபு (32 எழுத்து) , த்ரிஷ்டுப்பு (44 எழுத்து) என சந்தஸில் உள்ள எழுத்து, பாத கணக்கு பற்றியது.

கல்பம் – எழுத்து விதி சௌதா ஸ்மார்த்த விதிகளாகக் கடவது.

ஸிக்ஷஆ – ஸ்வரம் சம்பந்தப் பட்டது.

நிரூக்தம் – அபூர்வ அர்த்த வார்த்தைகள் சம்பந்தப் பட்டது.

ஜோதிஷம் – – கால நிர்ணய வானவியல் சாஸ்திரம் ஆகக் கடவது.

வியாகரணம் – இலக்கண சாஸ்திரம்.இவை 6ம் வேதாங்கங்கள் .

மனு, யாக்ஞய வல்கிய , போதாயன, ஆஸ்பலதாயர் இவை போல ஸ்மிருதிகளும் வேதாங்கம் ஆகும் .
பிரம்மா, கபிலர் இவர்கள் இயற்றிய யோக சாஸ்திரம், தள்ளத்தக்கது , அவை வேத விரோதமாம்போது.

ஸ்மிருதிகள் போலே இதிஹாச புராணங்களும் வேதத்துக்கு அவை உப பிராம்மணங்கள் ஆகும்.
ஸ்மிருதிகள் கர்ம பாகத்துக்கு அங்கமானால் , இதிஹாச புராணங்கள் உபநிஷத் பாகத்தின் அங்கமாகும்.

புராணங்கள் வகை 18. அவையுள் சாத்விக புராணங்கள் 6ம் , வேத அனுரோத ராஜஸ., தாமஸ புராண பாகங்களும் பிரமாணம்.
மற்ற பாகங்கள் தள்ளத்தக்கன. பாசுபத ஆகமமும் அப்படியே.

வைகானஸ சாஸ்திரம் போலே பாஞ்ச்ராத்ர ஆகமம் முழுவதும் பகவானாலே வேதத்ததை அனுசரித்து சொல்லப் பட்ட படியால் அதுவும் பிரமாணமே .

வைத்திய சாஸ்திரம் (ஆயுர்வேதம்) , சில்ப சாஸ்திரம் (Temple architecture ) , காந்தர்வம் (Musicology ),
பரதம் (நிருத்யம்), தத்வ, உபாய புருஷார்த்தம் சம்பந்தப் பட்ட பாகங்கள் ஆய கலைகள் 64லிலும் பிரமாணமே

(a)ஆக்காங்க்ஷ (b) யோக்கியதை (c) சந்நிதி ஆகிற 3ம் இருக்கிற லௌகிக கிரந்தங்களும் பிரமாணமாகும் .

சடகோபமுனி .சாதித்த திராவிட வேதம் 4ம் , அதற்கு அங்கமான ஏனைய ஆழ்வார்கள் பிரபந்தங் களும் பிராமண தரம் .
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லை என்பது ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி .

பகவத் ராமானுஜர் சாதித்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்கள், ஏனைய ஆச்சார்யர் களுடைய ஸ்ரீ ஸூக்திகள் அனைத்தும் பிராமண தமம்

மொத்தத்தில் உண்மை அறிவை போதிக்கும் எந்த வாக்கியமும் பிரமாணம் தான்.

அதில் வேத வாக்கியம் வைதிகம். லோக வியவகார வாக்கியம் லௌகீகம் .

முக்கிய விருத்தி – சிங்கம் என்ற சொல் மிருக ராஜனை குறிப்பது முக்கிய விருத்தி

அபிதா விருத்தி – யோகம் – ரூடி என இரண்டு வகை காரணப் பெயர், இடுகுறிப் பெயர் என்பதே அவை. உ.ம். பாசகன் = .
பச + ஆக என்கிற சேர்க்கையால் (யோகம்) சமையல் காரன் என்ற பொருளில் வருவது.

பங்கஜம் – பங்க + ஜ என்று சேற்றில் எழ செந்தாமரையாக தாமரை மலரைக் குறிப்பது ரூடியர்த்தம் .
குமுத மலரும் ஆம்பலும் சேற்றிலே மலர்ந்தாலும் தாமரையை அது உணர்த்துவதாக அறிவது லோக வழக்கம் கொண்டு.

முக்கியார்த்தத்தை சொல்ல முடியாத போது அருகாமையான லக்ஷணையாலே குறிப்பது கௌணார்த்தம் .
இது தமிழில் ஆகு பெயர் எனப்படுவது. கங்காயாம் கோச : என்றால் கங்கைக் கரையிலுள்ள தான குடிசையை குறிக்கும் .
உலகம் என்றால் உலகத்திலுள்ள மக்களைக் குறிப்பது போலே.

புஷ்பம் என்றால் அது பழம், பறவை, என்பதான இதர பொருள்களில் இருந்து வேறுபடுகிறது.
நீலோத்பலம் என்றால் செந்தாமரையில் இருந்து வேறுபடுகிறது. ஆக உலகத்தில் எந்தப் பொருளும் ,
விசேஷண விசிஷ்டமாய் விசேஷ்யத்தைக் குறிக்கும் – நிர்விசேஷணமாய் எந்த வஸ்துவும் இருத்தல் ஆகாது என்று தேறுகிறது .

மேலும் வஸ்துக்களைக் குறிக்கும் எந்த சொல்லும் அது அந்த வஸ்துவைத் தாங்கும் ஆத்மா மூலமாக
அந்தராத்மா வான நாராயணன் வரை பர்யவசிக்கும் (சென்று குறிக்கும்) காரணம் ,
பிரம்மா, ருத்ரன்,இந்திரன், அக்நி ஆகிய சேதனர்கள் , பிரகிருதி, காலம், ஆகாசம், பிராணன் ஆகிய
அசேதன வஸ்து விசிஷ்டமான ப்ரஹ்மம் அவனாகையாலே.
இத்தால் , சர்வ சப்த வாச்யார்த்தம் நாராயணன் என்பது வேதாந்த விழுப் பொருள்.

பிரமேயம் – பிரகர்ஷேண மேயம் – நன்கு அறியப்படுவது பிரமேயம்.
பிரமா + இயம் = எது எப்படிப் பட்டது என்று அறிவது பிரமேயம்
எதைக் கொண்டு அறிகிறோமோ அது பிரமாணம் .

யார் அறிகிறாரோ அவர் பிரமாதா.

இவை

திரவ்யம் + அதிரவ்யம் என்று இரண்டாய் ,
அதில்
திரவ்யம் : உபாதான (அவஸ்தா விசேஷம்) பேதம் திரவ்யம் .
பிரக்ருதி (அ) லீலா விபூதி – சரீரம் தொடங்கி மூலப் ப்ரக்ருதியினின்றும் படைக்கப் பட்ட பிராக்ருதங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
கர்ம , சாமான்ய, விசேஷ, ஸமவாய அபாவங்கள் – ஆகிய நையாயிக பக்ஷ 5ம் – திரவ்யத்தோடே அடங்கும்.
மேல், கீழ், சுருங்கல்,விரித்தல் , சலித்தல் ஆகிய நிலை = அவஸ்தை கர்ம.

சலநாத்மகம் கர்மா என்று ஒன்றை 5ஆக விரித்துக் கூறுகை கௌரவம் என்கிற குற்றத்துக்கு உள்ளாகும்.
லாகவம் =சுருங்க உரைத்தல்; கௌரவம் =பரக்கப் பேசுதல் .
இந்த சலனமும் ஸம்யோகத்தோடே சேர்த்து படிக்கலாம்.
கடத்வ படத்வ ஜாதி விசேஷம் இதை அதிலிருந்து வேறு படுத்த போதுமானதாக இருக்க சாமான்யம் என்கிற ஒன்று அவசியம் இல்லை.
ஒன்றை நிரூபிக்க இன்னொன்றை புதிது புதிதாக கல்பித்தலாகிற அநவாஸ்தான தோஷம் ஸமவாயத்துக்கு உண்டு. ஆக அதுவும் விலக்கு.

இனி அபாவம் – பிராக் அபாவும், பிரத்வம்ஸா அபாவும், அன்யோன்யா அபாவம் ,
அத்யந்த அபாவமாவது முன்.பின்,ஒன்றினோடு இன்னொன்று ,
எப்போதுமான ”கடத்தில் மறொன்றின் இன்மை ” படத்தில் இன்னொன்றின் இன்மை”
ஸ்வதசித்தம் . தனித்து அபாவாத்தின் அவசியம் இல்லை.

குடம் இன்மை என்கிற நிலை குடத்தை செய்வதற்கு முன் ,(மண் என்கிற நிலை ), அந்த
குடம் உடைந்த பின் (ஓட்டு சில்லு அல்லது சூர்ணம் என்கிற நிலை)
குடத்தின் இடத்தில் இன்னொன்று இருக்கும் பக்ஷத்திலும் (அன்யோன்யா அபாவம்)
குடம் இருந்ததே இல்லை என்கிற அத்யந்த அபாமாகிற 4 ஆக நையாயிகன் பிரித்து திரவ்யங்கள் மொத்தம் 7 என்று கணக்கிடுகிறான்.
இந்த 4ம் பூதல ஸ்வபாவமாய், பிரத்யக்ஷத்தில் அடங்கும் என்பது வைதிகர் – ராமானுஜ பக்ஷம் .

இனி திரவ்யம் என்பது வெவ்வேறு (உபாதானங்களாய்) தசா விசேஷங்களாய், குண ஆஸ்ரயமாய் இருக்கும்.

மஞ்சள் குடம் என்றால் மஞ்சள் வர்ணத்தோடு கூடிய குடம் என்றும் மண்ணாய் இருந்த தன்மை போய்
கடமான தன்மையில் மஞ்சள் பூச்சு ஆசிரயணீயம்.

பிரக்ருதி , காலம் ஆகிற ஜட வஸ்து இரண்டும் ஸ்வயம் பிரகாசம் இல்லாதது.
நித்ய விபூதி , தர்மபூத ஞானம் , ஜீவன் , ஈஸ்வரன் ஆகிற அஜட வஸ்து 4லும் ஸ்வயம் பிரகாசிதம் .
இவை 6ம் திரவ்யம் – முக்குணங்கள் அதிரவ்யம் என்றும் அறியவும்.

– – – – — – – – – – – – – – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – – – –

பகவானுக்கு சரீரமாக இருக்கிற பிரக்ருதியை மூலப் பொருளாக கொண்டு
அத்வாரக + ஸத்வாரக ஸ்ருஷ்டி
சமஷ்டி + வியஷ்டி ஸ்ருஷ்டி
என்பவை சிருஷ்டிப் பிரகாரம்.

வைகாரிக + தைஜஸ + பூதாதி ; ஸாத்விக , ராஜஸ, தாமச அகங்காரங்களின் வேறு பெயர்கள்.

சாத்விகா அஹங்காரம் -; 11 இந்திரியங்கள்.
மனசு -; (நிச்சிதா) புத்தி -; அஹங்காரம் = மனசின் வேறு நிலைகள்.
ஞானேந்ரியம் + 5 தன்மாத்ரங்கள் (= சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தம் ) + பஞ்ச பூதம்.
கர்மேந்த்ரியம் ; வாக், பாணி, பாத, மல, ஜல உபஸ்தங்கள்.
ஞானேந்ரியம் சாத்விக அஹங்கார பரிணாமம்.
கர்மேந்த்ரியம் தாமஸ அஹங்கார பரிணாமம்.
சாத்விக தாமஸ அஹங்கார பரிணாம சககாரி ராஜச அகங்காரம்.

குறிப்பு: ஒருவன் மறித்து விட்டால் பயணமாகும் ஆத்மாவோடு , கர்ம வினைகளும், இந்திரிய ஸூக்ஷ்மங்களும் எடுத்து செல்லப்படும்.
கர்ம வினைகளுக்குச் சேர கிடைக்கிற சரீரத்துக்கு அதனதன் பயன்பாட்டுக்கு அவைகள் ஆட்படும்.
இது பிராகிருத பிரளயம் வரை அழிவதில்லை. பிரம்மா வுடைய காலம் முடிந்து, பிராகிருத பிரளயத்தில்,
பஞ்சபூதங்கள் மஹான்-பிரக்ருதியில் லயம் அடையும் போது மட்டுமே இந்த இந்திரிய ஸூக்ஷ்மங்கள் முடிவுக்கு வரும்.
அந்த நிலையிலும் தொலையாதது கர்ம பயன்.

ஒருவேளை அந்த ஆத்மாவுக்கு மோக்ஷம் கிட்டினால் , அப்ராக்ருத தேசமான அங்கு பிரகிருதி பிராக்ருதமான
இந்திரிய ஸூக்ஷ்மங்கள் புகுற வழியில்லை. விரஜைக்கு இப்பால் அவைகள் விடப்பட்டு , பிரளயத்தோடே நசியும்.
அல்லது அதன் குறைபாடு உள்ள ஆத்மாவுக்கு உபயோகி ஆகலாம்.

பாலை உறையவிட்டு தயிராக்கும் போது , பாலாகிற தன்மை போய் தயிர் என்றாவதாகிற கால அளவைக்கு
இடைப்பட்ட நிலை போன்றதானது , தாமஸ அஹங்காரம் பஞ்ச பூதங்களாக மாறுவதற்கு முன்னான (அவ்யவஹித தசை)
பஞ்சதன் மாத்ரங்களாகிற நிலை எனலாம்..

ஸப்த தன் மாத்திரத்தில் இருந்து உருவாவது ஆகாசம். அதாவது தாமஸ அஹங்காரம் ஆகாசமாக மாறுவதற்கு
இடைப்பட்ட நிலையிலுள்ள திரவ்யம் ஸப்த தன்மாத்ரம். அடுத்து வாயு, அக்நி , அப்பு, பிருதிவி இவர்களுக்குரிய
ஸ்பர்ச, ரூப ரஸ , கந்த தன்மாத்ராங்கள் படைக்கப் படுகின்றன.

ஆகாசத்துக்கு ஒலியின் குணம் மட்டும் உண்டு. அடுத்து வரும் வாயுவிற்கு ஸப்தம் , ஸ்பர்சம் இரண்டின் குணங்கள் உண்டு.
அக்கினியில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் முக்குணங்கள்; ; தண்ணீரில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் ரசம் ஆகிய 4ம் ;
பூமியில் கந்தம் சேர 5ன் குணங்களும் உண்டு.

ஆகாசத்தை தொடு உணர்ச்சியால் உணர முடியாது. அதாவது தொட்டு உணர முடியாது.
சூரியன், சந்திரன், உலகம், உலகில் உள்ள எல்லாவிதமான பொருள்களுக்கும் இடம் கொடுப்பதாய் ஆகாசம் இருக்கும்.
ஆகாசம் உண்டாவதில்லை, நித்யம் என்கிற சிலர் வாதமும் தவறு,
ஏனென்றால் ஸப்த தன்மாத்திரத்தில் இருந்து ஆகாசம் உருவாகிறது என்று இங்கு படிக்கப்படுவதால்.

ஆகாசத்துக்கு ஒலி மட்டும் குணம் என்றால் அது நீல நிறமான அக்கினியின் குணத்தில் ஒன்றான
ரூபத்தைக் கூட்டிக் கொண்டு காண்பது ஏன்?
இதற்கு விடை ஒவ்வொன்றின் தன்மை மற்ற பூதங்களில் பஞ்சீகரண முறையில் பகிரப் படுவதுதான் காரணம்.

ஆகாசம்,காற்று நெருப்பு ஆபப் பிருத்வி கால திக்கு ஆத்மா மனசு என வைசேஷிகர்கள் திரவ்யங்களை 9ஆக பிரிக்கின்றனர் .
அது தேவை இல்லை என்பது வைதிக பக்ஷம். திஸ ஸ்ரோத்ராத் என்கிற விடத்தில் திசைகள் படைக்கப் படுகின்றன என்று கொள்ளாமல் ,
திசையில் உள்ள லோகங்கள் படைக்கப் படுகின்றன என்றே பொருள் கொள்ள வேண்டும். ஆக திக்கு என்ற பதார்த்தம் கிடையாது. .

ஆகாசம் படைக்கப் பட்ட பிறகு, ஸ்பர்ச தன்மாத்திரத்தில் இருந்து உருவாவது வாயு. இது தொடு உணர்ச்சியால் அறியப்படுவதாய் ,
உஷ்ணம் குளிர்த்தி ரூபம் இல்லாதது. காற்று சப்த, ஸ்பர்ச இந்த்ரியங்களுக்குப் புலப்படுவது.
பிராண (ஹ்ருதய ஸ்தானம்), அபான (பிருஷ்ட பாகம்), வியான (சரீரம் முழுவதும்), உதான (கண்டம்) ,
சமான (நாபி தேசத்தில் ) வர்த்திக்கும் பஞ்ச பிராண சக்தி மனிதன், விலங்கு போன்ற ஜங்கம (mobile life form)
ஜீவராசிகளில் பூர்ணமாய், ஸ்தாவர வர்கங்களில் ஸ்வல்பமாயும் உபகாரமாகிறது.

ரூப தன்மாதரத்தைக் கொண்டு உருவாவது தேஜஸ் . இது அக்நி சூரியன் போன்ற பதார்த்தங்களில் இருந்து ,
தொட்டால் சுடுவதுமாய், ஒளியோடே கூடியது. ஜாடராக்நி யாய் வைச்வாநரன் என்ற பெயரில் பிராணிகளின் வயிற்றில்
ஆகாரத்தை ஜெரிக்கச் செய்கிறது. வெளிச்ச ரூபத்தில் நம்முடைய சக்ஷுர் இந்த்ரியத்துக்கு பதார்த்தங்களைக் கண்டு
அறிய உதவவும் செய்கிறது. பகல் குருடு ஆந்தை இதுக்கு விதிவிலக்கு. இதை 4ஆக பிரிக்கலாம்..

பௌமம் -; எண்ணை விறகு போன்ற பூமியில் கிடைக்கும் பொருள் கொண்டு எரிவது .
திவ்யம் -; சூரியன், மின்னல் இவை பிரகாசிப்பது ஜலத்தைக் கொண்டு.
உதரியம் ; ஜாடராக்நி இதற்கு இந்தநம் தண்ணீரும், பௌமமும்.
ஆகரஜம் -; தங்கம், வைரம் போன்ற சுரங்க கனிமங்கள் – நிரிந்தனம்
.
தங்கம், வைரம் இவைகளில் ஒளஷ்ணியம் இல்லையே என்றால் அவைகளில்
பிருதிவி அம்சம் அதிகமாய் தேஜஸ் அம்சம் அல்பமாய் இருப்பதே காரணம்.

ஞானம் ஆத்மாவுக்கு குணம். அதுபோல் ஒளி தீபத்துக்கு குணம். இதில் ஞானம், ஆத்மா, ஒளி
இவை மூன்றும் திரவ்ய கோஷ்டியிலும் சேரும் குண கோஷ்டியிலும் சேரும்.

திரவ்யம் இடத்தை அடைக்கும். குணம் இடத்தை அடைக்காது. ஆத்மா, ஒளி (தேஜஸ்) இரண்டும் திரவியம் ஆனாலும் ,
இடத்தை அடைக்காது குணங்களைப் போலே . ஒலி ,உணர்வு, உருவம் இவை மூன்றும், தேஜசின் குணங்கள்.

ரஸ தன்மாத்திரத்தில் இருந்து உண்டாவது ஜலம். குளிர்த்தி, சுவை, வாசனை அற்ற தன்மை நீரினுடையது.
கடல்,ஆறு கிணறு என பலவாக ஆஸ்ரயணத்துக்குச் சேர நிறம் மணம் பெற்றாலும் உண்மையில் அவை இல்லாதது.

அடுத்து, கந்த தன்மாத்திரத்தில் இருந்து உருவவாது பிருதிவீ . கந்தம் , அஉஷ்ண சீத ரஹித ஸ்பர்ஸ யோக்யதா லக்ஷணம் பிருத்வி.
மண் கல் கட்டி என்று இருப்பதோடு உணவு, மூலிகை விளையவும் உதவுவது பூமி. மற்ற பூதங்களுடன் சேர்ந்து பக்குவப் படும் போது
நிறம், மணம் ரூபம் மாறக் கூடியது. பொருள்களையும் தாங்குவதாய் நிறம் மணம் உரு ஒலி ஒளி என்று 5ன் குணமும் இதில் உண்டு.

தமஸ் (அ ) இருட்டு என்பது ஒளியின்மை என்பது சிலர் வாதம். அது தவறு. தமஸ் பூமியின் ஒருபகுதி, அது கருநீலமாக இருக்கிறபடியால்.

படைக்கப் பட்ட 5 பூதங்கள் பஞ்சிகரண முறையில் கலப்படம் செய்யப்பட்டு சரீரமானது உருவாகிறது.
உருவான சரீரத்தில் – தங்க தோட்டில் வைரம் பதிப்பது போல் – இந்திரியம், மனசு இவை பதிக்கப்பட்டு
அவை அந்தந்த சரீரத்தை ஆக்ரமிக்கின்றன.

சரீரத்துக்கு லக்ஷணம் : ஜீவாத்மாவால்
1. ஆதேயத்வம் – தாங்கப் படுமது.
2. விதேயத்வம் – ஏவப்படுமது.
3. சேஷத்வம் – ஜீவாத்மாவுக்கு சொத்தாய்
4. அப்பிரதத் சித்தமாய் – பிரிக்க முடியாததான திரவியம் சரீரம். (அ )

ஈஸ்வரனும் அவனுடைய ஞானம் நீங்கலாக உள்ள அனைத்துமே சரீர சப்த வாச்யம்.. இதை
நித்யம் Vs அநித்தியம் என பிரிக்கலாம்.
பகவானுக்கு சரீரமாக உள்ள அனைத்தும் நித்யம்.
பிரக்ருதி காலம் ஜீவாத்மாக்கள், பகவத் திவ்ய மங்கள விக்ரகம் இவை அனைத்தும் அவனுக்குச் சரீரமான படியாலே நித்யம்.

நித்யஸூரிகள் கர்மத்தால் பிறவாதவர்கள். மற்றவை
கர்மத்தால் பிறப்பன Vs கர்மத்தால் அல்லாது பிறப்பவை இவை இரண்டும் அநித்தியம் .
மஹான், அஹங்காரம் இத்யாதி , இச்சா கிருஹீத நித்ய, முக்தர்களுடைய பார்த்திவ சரீரம் அநித்யஸ்ய அகர்ம கிருதம்.
சங்கல்ப வர்ஜித கர்ம கிருதம் Vs சங்கல்பத்வேன கர்மகிருதம்

நாமும் சௌபரியும் (ஆபாச அனுபவத்துக்கு 50 சரீரம்?

மரம், செடி. கொடி புதர் ; ஸ்தாவரம்
தேவ, மனுஷ்ய, திர்யகு , நாரகி ; ஜங்கமம்
இவை அனைத்தும் கர்மாதீனமாய்ப் பிறப்பன.

உத்பிஜ்ஜ (விதை வெடித்து) ஸ்வேதஜ (வியர்வை யிலிருந்து) அண்டஜ (முட்டையிலிருந்து)
ஜராயு (கர்பப் பையிலிருந்து) பிறப்பவை என மேலும் 4 வகையாக சரீரத்தைப் பிரிக்கலாம்.

சீதை, ஆண்டாள் முதலாழ்வார்கள் அயோநிஜர்களாய் பிறந்த இன்னோரு வகுப்பும் உண்டு.

இப்படி ஸ்ருஷ்டியானது , பனை ஓலையிலிருந்து காது ஓலை பிறந்தாப் போலே – ஒன்றின் கார்யம் மற்றொன்றின் காரணமாய் –
பகவத் சங்கல்பத்தாலே பரிணமிப்பதே ஒழிய எதுவும் புதிதாக உற்பத்தி ஆவதில்லை.

முன்னது பின்னத்துக்குக் காரணம் என்றால் பிரஹ்ம காரணத்வ வாதம் தொலையாது? என்னில் அப்படி அன்று!

மண் குடமாம்போது , களி மண் என்ற ஆகாரம் போய் வாயும் வயிறுமான குடம் என்ற ஆகாரம் வந்ததே ஒழிய .
இதில் அவஸ்தா பேதம் தவிற உபாதான பேதம் உண்டோ? இல்லை.

அதுபோலவே பிரகிருதி மஹானாகவும், மஹான் சாத்விக தாமஸ அகங்காரத்தின் வழி 21 தத்துவங்களாக பிரிவது காரண பிரஹ்மம் -;
காரிய பிரஹ்மம் ஆவது அவனுடைய சரீரத்துக்குண்டான அவஸ்தா பேதமே ஒழிய இரண்டுக்கும் சேர
அவனுடய உபாதான காரணத்வத்துக்கு நசிவில்லை, எப்படி மண்ணானது குடமானபோதும் அதை மண்குடமாகவே வியவகரிப்பது போலே.

பிரஹ்மமே பலவற்றின் காரிய காரணமாக ஆவது அவனுடய சங்கல்ப மாத்திரத்தாலேயே என்பதால்,
சிருஷ்டிக்கு நிமித்த , சககாரி காரணமும் அவனே.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

பிரக்ருதி பரமாத்மா ஜீவாத்மா இரண்டுக்குமாக போக போகஸ்தான போகோப கரணமாக இருப்பது .
சக்கரை பொங்கல் – போகம் , உபகரணம் – தொன்னை. போகஸ்தானம் – கோயில் .

கண் மூக்கு நாக்கு செவி தோலிவை போகோபகரணம். பார்த்தல் நுகர்தல் சுவைத்தல் கேட்டல் உணர்தல் இவை போகம். .
அங்கண் மா ஞாலம் போக ஸ்தானம். அதாவது அண்டமும் அண்டத்துகுள்ளீடான இந்த பிரபஞ்மும்.

ஆக இந்த அண்டமானது திரவ்யமாய் இருக்கும். பிராகிருதமாய் இருக்கும். பஞ்சீகிருத பஞ்ச பூதத்தால் ஆக்கப் பட்டிருக்கும்.
விளாம்பழ வடிவில் இருக்கும் அதில் ஒரு பத்மத்தின் வடிவில் இருப்பது பூமி.
பூமியின் நடுவில் தலைகீழாய் குத்திய ஆணிபோல் இருப்பது மேரு மலை.
அதன் தெற்கு பகுதியில் இருப்பது பாரத, ஹரி, கிம்புருஷ வர்ஷங்கள். ரம்யகம், ஹிரண்யக, குரு வர்ஷங்கள் வடக்கிலும் அமையப் பெற்றுள்ளன.
பார்தஸ்வம் கிழக்கிலும், கேதுமால வர்ஷம் மேற்கிலும் அமைந்துள்ளன. மத்தியில் இளா வருஷம் சேர ஆக மொத்தம் ஒன்பது வர்ஷங்கள்.

இந்த ஜம்பூ த்வீபம் ஒரு லக்ஷம் யோஜனை விஸ்தீர்ணம் கொன்டது.
இதை சுற்றி வளைத்து இருப்பது உப்புக்கடல். அடுத்து
பிலக்க்ஷ தீபம். கடல் கரும்புச் சாறு. விஸ்தீர்ணம் இரண்டு லக்ஷம் யோஜனை. மூன்றாவது
சால்மலித் த்வீபம். கள்ளுக் கடல். விஸ்தீர்ணம் நான்கு லக்ஷம் யோஜனை. .
குசத்வீபம் – நெய்கடல் – 800000 யோஜனை.
கிரௌஞ்ச த்வீபம். – தயிர்க்கடல் – 1600000 யோஜனை
சாக த்வீபம் – பாற்கடல் – 3200000 யோஜனை
புஷ்கர த்வீபம் – மானலோத்ர பர்வதம் – ஸுத்த தீர்த்தம் – 6400000 யோஜனை.
ஸ்வர்ண பூமி – லோகாலோகம்
கர்த்தம் (ஒருவித ஜலம்)
அண்ட ஓடு.
பெருவெளி.
இப்படி ஒன்றை அடுத்து ஒன்றாக கோள வடிவில் ஒரு விளாம்பழம் போல் அமைந்திருப்பது இந்த அண்டகடாகம் .

– – – – – – – – – – – – – – –

தமஶ்**
ஸத்ய லோகம்
தபோ லோகம்
மஹர் லோகம்
ஸுவர் லோகம்
புவர்லோகம்
||
த்ருவ பதம்
ஸப்த ரிஷி மன்டலம்
சனி
வியாழன்
செவ்வாய்
வெள்ளி
புதன்
நக்ஷத்ரங்கள்
சந்திரன்
ஸூரியன்
||
புவர்லோகம்
||பூமி||
அதள
விதள
ஸுதள
தலாதள
மஹாதள
ரஸாதள
பாதளம்
நரகம் (பாப பூமி)
தமஸ்**
கர்த்தம்
அண்ட ஓடு
பெருவெளி.
தமசிலிருன்து தமஸ் ஐம்பது கோடி யோஜனை விஸ்தீர்ண்யம்.

– – – – – – – – – — – – – – –

திரவ்யம் -; சேதனம்(2) அசேதனம் (4)
சேதனத்தில் அடங்கும் திரவ்யம் இரண்டு ஈஸ்வரனும் ஜீவனும்.
அசேதனத்தில் அடங்கும் திரவ்யம் பிரக்ருதி, காலம், ஸுத்த ஸத்வமாகிற நித்ய விபூதி, தர்ம பூத ஞானம் ஆகியவை.

இதில் அஜடமான சேதனனும், ஈஸ்வரனும் ஶ்வயம் பிரகாஸமாய்,
பிரத்யக் என்று, தீபத்தைப் போலே தன்னைக் காட்டி , பிரவற்றையும் காட்டித் தரும்.
இதையே ஶ்வயம் பிரகாஸிதம், ஶ்வஶ்மை பிரகாஸிதம் என்று சொல்லுவர்.

அசேதன திரவ்யமான பிரக்ருதி, காலம் இரண்டும் தானாகவும், தனக்காகவும் பிரகாசிக்காது.
அஶ்வயம் பிரகாசிதம், ஜடமான படியாலே.

நித்ய விபூதியும், தர்ம பூத ஞானமும் அசேதன, அஜட திரவ்யம் பராக் என்று அழைக்கப்பட்டு தானே பிரகாஸிக்கும், தனக்கு பிரகாஸிக்காது .

– – – – – – – – – – – – – –

இனி கால தத்வத்தைப் பார்ப்போம் :

இது ஒரு ஜடப்பொருள். முக்குணத்துக்கு அப்பாற்பட்டது
ஶ்வஶ்மை பிரகாஸத்வம், ஸ்வயம் பிரகாஸத்வம் இல்லாதது.
இது அகண்ட காலம் ஸகண்ட காலம் என நித்யாநித்யமாய் இரண்டு.
அகண்ட காலம் ஶகண்ட காலத்துக்கு உபாதானமாய் இருக்கும்.
அகண்ட காலம் நித்யம். ஶகண்ட காலம் கார்யமாய், ஸதத பரிணாமியாய் அநித்யம்.

அகண்டகாலம் – பூத, பவத், பவிஷ்யத் காலம் என்றும், யுகபத (ஒரே ஸமயம்);
க்ஷிப்ர (ஸீக்ர/விரைவானதாய்); சிராதி என்று (நீண்டதாயும்) இருக்குமது.

ஶகண்ட காலம் – விநாடி, நிமிடம், மணி, நாள், வாரம், பக்ஷம், ருது, அயனம், ஶம்வத்சரம்
என்று மாறிமாறி சுழலுமது. இவை மநுஷ்ய மாண நேரம்.

பித்ருக்கள் நேரம் :
மநுஷ்ய மாதம் அவர்களுக்கு 1 நாள். வளர் பிறை – பகல். தேய்பிறை – இரவு. அம்மாவாசை மதியம்.

தேவர்கள் நேரம் :
மநுஷ்யர்களின் ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள்.
உத்தராயணம் – பகல்.
தக்ஷ்ணாயனம் – இரவு.
தேவ வருஷம் 12000 = ஒரு சதுர் யுகம். அதில்

கிருத யுகம் 4000 யுக சந்தி 800(700) தர்மம் 1 கால்.
திரேதா யுகம் 3000 – 600(500) – 3/4.
த்வாபர யுகம் – 2000 – 400(500) – 1/2.
கலி யுகம் – 1000 – 200(300) – 1/4.

தேவமாண 1000 சதுர் யுகம் பிரம்மாவுக்கு பகல்.
இந்த 1000 சதுர் யுகத்தில், 71 சதுர் யுகம் என்கிற விகிதத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள், சப்த ரிஷிக்கள் வந்து போவார்கள்.
பிரம்மாவுடைய ஆயுசு 2000 சதுர்யுகம் x 30 x 365

பிரளயம் :

௧. நித்ய பிரளயம் – சரீர வியோகம் (அ) மரணத்தில் ஏற்படுவது.

௨. நைமித்யிக பிரளயம் – பிரம்மாவுக்கு பகல் முடிந்தால் பூ, புவ, ஸுவர் லோகங்கள் அழியும் .
பிரம்மாவின் ஆயுட்காலதில் நடுநடுவே ஏற்படுவதால், இது அவாந்தர பிரளயம் என்றும் – கிருதம் என்றும் அழைக்கப்படும்..
இந்த சமயத்தில், மஹர்லோக வாசிகள் குடிபெயர்ந்து ஜனர்லோகத்தில் இருப்பர்.
அதாவது பிரம்மாவுடைய இரவுக்காலத்தில், முதல் மூன்று லோகங்கள் அழிய, மற்ற நான்கு உலகங்களும் அழிவதில்லை.
மறுபடியும் பிரம்மவுக்கு பகல்போது ஆகும் போது, அழிந்த மூன்று உலகங்களும் படைக்கப்பதும்.
ஆகவே இந்த மூன்று உலகங்களும், கிருதம் என்றும், மஹர் லோகம் – கிருதகிருத்யம் (அழியாதது ஆனால் வசிப்பார் அற்றது) என்றும்,
அதன்மேல் உள்ள சத்ய, தபோ, ஜநைர் லோகங்கள், அழிவதில்லை யாதலால், அகிருதம் என்றும் அழைக்கப் படுகின்றன.

௩. பிராகிருத பிரளயம் :

பிரம்மவினுடைய ஆயுஸு முடியும் போது 14 உலகங்களும் அழிந்து, ப்ருத்வி நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும்,
காற்று அண்ட வெளியிலும், இப்படி பஞ்ச பூதங்களும் கலந்த ஆகாஸம் அஹங்காரம், மஹாந் பிரகிருதி என்று
எம்பெருமான் திருமேனியிலும் லீநமடையும்.

அப்படி அவைகள் அநாதியாய் ஸூக்ஷ்ம தசையில் ஒன்றிக் கிடக்க, காலத்தால் உணர்த்தப் பட்டு,
பிராட்டி அனுஞையோடே மீண்டும் உண்டாவது தான் படைப்பு.
இப்படியான யோகபத்யம் அநுகிரஹ கார்யம் என்பது பிரசித்தி.

ஆக லீலா விபூதி காலாதீனம். பகவானும் இங்கு காலத்துக்கு கட்டுப் பட்டே கார்யம் செய்கிறான்.

நித்ய விபூதியில் காலம் உண்டு ஆனால் அதன் ஆட்சி இல்லை. ”நவைகால தத்ர பிரபுஹு” என்கிற பிர்சித்தியோடே,
ஒன்றின் அடுத்து ஒன்று என்கிற கிரமம்தான் உண்டு. அந்த ஒவொன்றும் எத்தனை காலம் என்பது கிடையாது,
பகவாக்ஞா ஸீமிதமானது என்றே சொல்ல வேண்டும்.
நித்யவிபூதியில் காலம் ஷடிந்திரிய கிராஹ்யமாய், ஆறு இந்திரியங்களாலும் அறியத்தக்கதாயிருக்கும்..

௪. அத்யந்திக பிரளயம் – ஜீவன் முக்தி அடைவதாகும்.

1, 4 ஜீவாத்மா சம்பந்தப் பட்டது.
2, 3 லோகங்கள் சம்பந்தப் பட்டது.

– – – – – – – – – – – – –

நித்ய விபூதி / வைகுந்தம் :

திரவ்யமாய், பராக் கோஷ்டியில் அன்வயிப்பதாய், அஜடமாய் இருக்கும்.
ஶ்வயம் பிரகாசம், ஶ்வஶ்மை பிரகாசத்வத் தோடு கூடியது. அதாவது பிறர்க்கு ஒளிவிடும்.
தனக்கு ஒளிவிடாது. ஸுத்த சத்வமாய், மிஶ்ர தத்வம் கலசாதது. தூமணி துவளில் மாமணி விளக்கம் இங்கு நோக்கத்தக்கது.

மேல் பக்க வாட்டங்களில் அசீமிதமாய், கீழ்வாட்டில் லீலாவிபூதியால் சீமிதமானது.
ஆனாலும் முக்குணத்தால் ஆன ப்ரக்ருதி தத்வதினிற்றும் தனித்து, ஸுத்த சத்வமயமானது.
அசேதனம். ஆனந்தாவஹம். பஞ்ச உபனிஷத் மய- பூத தத்வத்தாலும், பஞ்ச சக்தி- இந்திரிய விசேஷங்களாலும் ஆன
சரீரங்களோடு கோடிய நித்ய, முக்த ஜீவாத்மாக்களுக்கு இடம்.

அங்கு போகம் – பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹம்.
போகோபகரணம் – சந்தன, புஷ்ப, குசுமாதிகள். (லீலாவிபூதிபோல் இந்த்ரியங்கள் அன்று).
போகஸ்தானம் – கோபுர, பிராகார, விமான, மண்டபம் இத்யாதிகள்.

நித்ய, முக்தர்கள் பரிகிரஹிக்கிற சரீரம், ஸுத்த சத்வமயமாய், ஈஶ்வர சங்கல்ப்பத்தாலே அமைவது. கர்மத்தால் அன்று.
பகவத், வியூக, விபவ, அர்சா திருமேனியும் அப்ராகிருதம்தான். வேறு சிலர் அவன் அர்சா திருமேனியை
பிராகிருதம் என்று சொனாலும் அதுவும் அப்ராகிருத ஆவிர்பாகம் என்றே நம் சித்தாந்தம்.

சிலர் அவனுக்கு சரீர்மே இல்லை என்று வாதிக்க, நித்ய முக்த்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கைகாக
பரமபதத்தில் அவன் ஒரு அபிராகிருத சரீரத்தோடே இருத்தல் அவஸ்யம்.

நித்ய முக்தர்கள் அசரீரியாக, ஆத்ம வடிவமாகவே இருந்து அனுபவிக்கலாமே என்றால்,
திருவாராதன, உற்சவ கைங்கர்யங்களைச் சமர்ப்பிக்க, அவர்களுக்கும் கரண களேபரங்கள் அவஶய்மாகின்றன.

ஞான பல ஐஶ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் பகவத் சரீரத்தாலே பிரகாஸிதம். மேலும்
நித்ய, நிரவத்ய, நிரதிசய, ஔஜல்ய , ஸௌகந்த, ஸௌகுமார்ய, லாவண்ய, யவ்வன, மார்த்வ, ஆர்ஜவ குண ஸம்பன்னன்.
அவனுடைய திருமேனி இப்படியாக அபிராகிருதம் – ஹேய குண பிரதிபடம்.

அவர் ஆத்மாவாலும், ஸ்வரூபத்தாலும் விபு – வியாபிக்கக் கூடிய சக்தி சாமர்த்தியம் உடையவர்.
இதற்கு கண்ணனெம் பெருமான் குருக்ஷேத்ரத்தில் காட்டிய, விராட் ஶ்வரூபமே சாக்ஷி.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

ஸ்வயம் பிரகாசம் :
ஆத்மா ஞானதால் ஆனது. ஞானவான். ஞான குணகனும் கூட. மற்றப் பொருள்களை தன் ஞானம் கொண்டு அறிவதோடு
தனக்கு ஞானம் உண்டு என்பதும் அறிபவர். இதையே தனக்கு பிரகாசிப்பவர். தானே பிரகாசிப்பவர் என்கிறது.
ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய விபூதி ஸ்வயம் பிரகாஸம். ஆனால் ஶ்வஸ்மை பிரகாஸிதம் இல்லை.
முக்குணத்தால் ஆன லீலா விபூதியில் எம்பெருமான் அவதரிக்கும் போதும் , அர்ச்சா திருமேனியோடு இருக்கும் போதும்
ஸுத்த ஸத்வ மயமாமன திவ்யமங்கள விக்ரகத்தோடே எழுந்தருளுவதால், லீலா விபூதியிலும் ஸுத்த ஸத்வதுக்கு அவகாசம் உண்டு.

ஶ்ரீ விஶ்ணுபுராண அஸ்த்ரபூஷணா அத்யாயத்தின்படி லீலா விபூதியில் காண்கிற ஒவ்வொன்றுக்கும்
எம்பெருமான் திருமேனியில் பிரதிநித்வம் (ஸர்வ அபாஸ்ரயத்வம்) உண்டு.
கௌஸ்துபம்=ஜீவாத்மா.
ஶ்ரீவத்ஸம் என்கிற திருமார்பில் மரு = பிரக்ருதி.
கதை = மஹான்
சங்கு= ஶாத்விக அஹங்காரம்.
சார்ங்கம்=ராஜஸ அஹங்காரம்.
கட்கம்=ஞானம்.
கட்கத்தின் உறை=அஞானம்.
சக்ரம்=மனசு.
அம்ராதூளியில் உள்ள 10 அம்பு=ஞாநேந்திரியம், கர்மேந்திரியம்.
வைஜயந்தி,வனமாலா =பூத ஸூக்ஷ்மங்களும், பஞ்ச பூதமும்.

ஆமோத, பிரமோத, ஸம்மோத, வைகுந்தம் என்று நித்ய விபூதியில் அடைகிற ஆனந்தத்தின் நான்கு நிலைகள் தான் அவை.
அதாவது பார்த்துக் களிப்பது. பார்த்ததை அடைந்து ஆனந்திப்பது. அடைந்ததை அநுபவித்து இன்புருவது.
கிடைத்த ஆனந்தத்தை தக்க வைத்து சிரகாலம் அநுபவிப்பது என்கிற நாலு நிலைக்கு நித்ய விபூதியில் உண்டான நான்கு விபாகங்கள்.

திரிபாத் விபூதி, பரமபதம், பரமவியோமம், பரமாகாச, அம்ருத, நாத, அப்ராக்ருத, ஆனந்த, வைகுண்ட, அயோத்யா
என்று பரம பதமான நித்யவிபூதிக்கு பர்யாய சப்தங்கள்.
அப்படிபட்ட தேசத்தில் இருகிற ஊர் வைகுந்தம். அது 12 மதில்களால் சூழப்பெற்றது.
அங்கு ஆனந்த மண்டபம் என்கிற கோயிலில் 1000 கால் மண்டபத்தில், திரு மாமணி மண்டபம் என்கிற திரு ஓலக்க சபை உண்டு.
அதில் ஆயிரம்தலை பணாமண்டலம் கொண்ட ஸேஷபீடம் –
அதில் (தர்மம், அதர்மம்-ஞானம், அஞானம்-வைராகியம், அவைராகியம்-ஐஸ்வர்யம், அநைஸ்வர்யம் என்கிற எட்டு கால்களை) உடைய தர்மாதி பீடம்.
அஷ்டதள தாமரை மலர்போல ஆசனம், சத்ர, சாமர, ஆலவட்ட கைங்கர்ய பரர்கள் சூழ
வீரா சனத்தில் தேதீப்யமான திவ்யமங்கள விக்ர்ஹதோடே நம்பெருமாள் சேவை சாதிகும் படியான தேசம் நித்ய விபூதி.

—————–

இனி தர்மபூத ஞானம் விவரிக்கப்படுகிறது:
ஜீவ-பர தர்மமாய் (குணமாக) இருகிற ஞானம், தர்ம பூத ஞானம். பரமாத்மாவுக்கு அது பூர்ணமாக விகஸித்திருக்கும்.
ஜீவாத்மாகளுக்கு அது கர்மத்தால் மழுங்கி இருக்கும். பரம பதத்தில் கர்மா இல்லையாய், விகஸித்தபடி காணலாம்.
ஸ்வந்திரன் என்கிற ஞான ஸங்கோசம் போய், சேஷ பூதன் என்கிற விகசித ஞானம் பெறுகை.
புத்தி (அ) தர்மபூத ஞானம் – ஸ்வயம் பிரகாசம். ஸ்வஸ்மை பிரகாசிதம் இல்லையாய் பராக் என்றும், அசேதனமாயும் இருப்பது.
ஸூர்யனுக்கு பிரகாசம் போலே, விளக்குக்கு ஒளி போலே, ஆத்மாவுக்கு ஞானம்.
அணுவான ஆத்மாவுக்கு குணமான ஞானம் விபுத்வத்தோடே கூடியது.
அதாவது ஆத்மா ஓரிடத்தில் இருக்க, சரீரம் முழுவதுமாய் வியாபிப்பது. அதுக்குண்டான, தர்மபூத ஞானம்.

பரமாத்மாவோ என்னில் அவன் ஸ்வரூபத்தாலும் விபு. அவருடைய ஞானமாகிற குணத்தாலும் விபு.
தனக்குத் தானே ஒளிவிடும் ஜீவாத்மா. தனக்குத் தானே ஒளிவிடுவார் பரமாத்மா.
தானே ஒளிவிடும் தனக்கு ஒளிவிடாது ஞானம். தானும் ஒளிவிடாது, தனக்கும் ஒளிவிடாது ஜடப்பொருள்கள்.
ஞானத்தைக் கொண்டு மற்ற பொருள்களை ஆத்மா கிரகிக்கிறது.
ஆக பொருள்கள் ஞானத்துக்கு விஷயம். ஞானமே விஷயமாம்போது, விஷயி ஆகிறது.

இந்த தர்மபூத ஞானம் பகவானுக்கும், நித்ய ஸூரிகளுக்கும் எங்குமே எப்போதுமே விபுவாயிருக்கும்.
பத்தர்கள் விஷயத்தில் இது மூடப்பட்டு குறைய பிரஸரிக்கும். முக்தர்களுக்கு இது மறைவு வெளிப்பட்டு, நித்யர்களுக்குப் போலே ஒளிவிடும்.
பிறந்திறவாத ஆத்மாவை பிறந்தார், இறந்தார் என்னுமாபோலே, ஞான உத்பந்நம், நஷ்ட்டம் என்கிற வியவகாரம்,
அது கர்மத்தால் சங்குசிமாவதும், கர்மம் தொலைந்தால் விகசிப்பதுமான நிலையைக் குறிக்கும்.
எதைப்பற்றிய ஞானம், யாருக்கு ஞானம் என்பதைக் கொண்டு கர்மக-ஞானம் கருத்ருக-ஞானம் என்று ஞான விபாகம்.

இது விளக்கு என்று புரிதலாகிற ஞானம் உண்டாகும்போது, விளக்கு கர்மா, அறிபவர் கர்த்தா.
தீபம் அஹம் ஞானாமி அன்ற வாக்கியத்தில், தீபம் ஞானத்துக்கு விஷயம். அஹம் ஞானத்துக்கு ஆஶ்ரயம்.
இத்தால் ஞானம் ஸகர்மக-ஸகர்த்ருக மாகத்தான் எப்போதும் இருக்க வேண்டும் என்பது தேறுகிறது.
வேகம், நுண்மை, லகு இத்தோடு தான் இருக்கும் போது, பிரகாசியாமல் இருக்காது ஞானம் என்பது.
ஞன பிரஸர த்வாரம் இந்திரியம். இந்திரிய நிஸ்ருஜ்ய ஞானம் என்பது விஷயத்துக்கும் (பொருள்கள்) இந்திரியத் துக்குமான இரு-வழி பாலம்.
அதாவது – ஆத்மாவிலிருந்து புறப்படும் ஞானம் மனம் மொழி காயங்கள் ஆகிற இந்திரியங்கள் வழியாக
பொருட்களைக் கிரஹித்து மீண்டு புத்திக்கு விஷய மாக்குகை.
ஆக ஞனத்துக்கு கமனம், பாம்பின் உடல் குண்டலத்தைப் போல் – சுருங்கி விரிவது ஞானம்.

ஞானம் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருப்பதால் ”குணம்” என்றும், சுருங்கல் விரிதல், கமனம் ஆகிய மாறுதலுக்கு உட்பட்டுவதாய்,
அக்ஞானம், ஞான சங்கோசம், ஞான விகாசம் என்கிற நிலையை அடைவதாலும் ”திரவ்யம்” என்று கூறலாம்.
விளக்கு போலே தன்னைக் காட்டி பிறவற்றைக் காட்டும், தான் ஆஸ்ரயித்து இருக்கிற ஆத்மாவுக்கு மட்டிலும்,
ஏனெனில் அந்தந்த ஆத்மாவுக்கான ஞானம் அதனதன் இந்திரிய சன்நிகர்ஷத்தாலே ஏற்படுமே அன்றி
ஒருவருடைய ஞானம் மற்றவருக்கு ஒளிர வழியில்லை.

ஆனால் ஒரு விஷயத்தை பற்றிய ஞானம் தனக்கு போல் இன்னொருவருக்கும் ஏற்பட வழி உண்டாகையால்,
அதை அநுமானத்தல் அறியலாம் அன்றி தன்னுடைய ஞானம் அவர் அளவாக பிரஸரிப்பதாகிற பிரத்யக்ஷ பிரமாணத்தை கொண்டு இல்லை எனலாம்.
ஞானம் ஸ்வத ஏவ பிரமாணம்-எந்த ஞானமும் உண்மை ஞானம் என்பது ராமனுஜ சம்பிர தாயத்தின் அடிப்படைக் கொள்கை.
இது விளக்கு என்ற அறிவுக்கு சஜாதீயமான இன்னொரு விளக்கு தேவை இல்லை.
விஜாதீயமான கர்தாவும், கார்யத்தையும் மட்டுமே எதிர்பார்க்கும். ஆக அது ஸ்வயம் பிரகாசம்.

ஞானம் க்ஷணிகம் (பௌத்தன்), த்ரிக்ஷணிகதம் (நையாயிகன்), ஞான குணகன் ஆதமா என்னாமல் ஞானமே ஆத்மா (அத்வைத மதம்),
முத்து சிப்பியை வெள்ளி என்று பிரமிக்கிற ப்ராதிபாஸ ஞானம் (மாயா வாதம்)அனைத்தும் மேற்சொன்னவைகளால் நிரஸிக்கப் பட்டன.
ஒரு விஷயத்தைப் பற்றி பலமுறை ஏற்படுகிற ஞானம் வெவ்வேறு அல்ல ஒரே ஞானம் தான்.
தமோ குண சன்னிதியால் மயக்கம், தூக்கம் இவை எற்பட்டு ஞானம் மூடப்படலாமே ஒழிய அது ஞான அபாவம் என்று சொல்லு வதற்கில்லை.
எதை போலே என்றால் , யவ்வன பருவத்தை பாலய பருவம் மூடினால் போலே, கௌமாரம் நீங்கி யுவா ஆனவாரே ஸுக்லம் பிரஸரிப்பது போலே இது.

மதி, பிரக்ஞா, ஸம்விது, தீ, மணீஷா, ஸேமுஷி, மேதா, புத்தி என்பது தர்மபூத ஞானத்துக்குண்டான ஒரு பொருள் பல சொல்.
சுக, துக்க, இச்சா, துவேஷ பிரேமம் அனைத்தும் ஞான விபாகமே. அனுகூல ஞானம் சுகம். பிரதிகூல ஞானம் துக்கம்.
இப்படி ஸில பல உபாதியால் வேறுப்டுகிற ஞானம் இவை அறிவின் வேறு வேறு நிலைகள்.
நினைவு கூறுதலாவது முன் நிகழ்ந்த ஒன்றை, பார்த்த, கேட்ட ஸம்பவம், பொருள் அல்லது மனிதரை ஞாபகப் படுத்திக் கொள்வது.
இது இரண்டு வகையில் ஏற்படலாம். அதே சம்பவம் மீண்டும் நிகழ மறு நினைவு ஏற்படலாம்.
இதை ஸ்மரணை என்பர். அல்லது ஒன்றின் நினைவு இன்னொன்றின் எண்ணத்தை மீட்க்கலாம்.
இதுக்கு பிரத்யபிக்ஞா என்று பெயர். அப்படியான அறிவின் மாறுபாடுகளே சுக, துக்காதிகள்.

——————————————————————————–

சேமுஷி பக்தி ரூபா – ஜ்ஞானம் கலந்த நலம் – மதி நலம் என்ற இவை முதிர்ந்த பகவத் பத்தியை குறிக்கும்.
இந்த பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் மோஷோபாயம். இந்த ஜ்ஞானம் ஜீவனுக்கும்,ஈஸ்வரனுக்கு குணமாய் இருப்பதால்
அதை தர்ம பூத ஜ்ஞானம் என்கிறோம்.

இந்த தர்மபூத ஜ்ஞானம் திரவியமாய் , அசேதனமாய், அஜடமாய் இருப்பது. வெறுமனே ஜ்ஞானம் பக்தியாகி விடாது,
ஏனென்றால் கர்மத்தால் அது மூடப்பட்டுள்ளது, வெட்டி எடுக்கப்பட்ட வைரம் போலே.
அதன் ஒளியை கூட்ட பட்டை தீட்டுவது போல், அதை நன்றாக
(1) ஆச்சார்ய உபதேசங்களாலும்
(2) உபதேச உசித அநுஷ்டானத்தாலும் பரிஷ்கரிக்கப்பட வேண்டும்.
ஆத்மா வா அரே ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: திர்ஷ்டவ்ய: நிதித்யாஸி தவ்ய : என பரிபக்வமாக வேண்டும்.

காமம் (விருப்பம்) சங்கல்பம் (உறுதி) சிரத்தை (ஈடுபாடு),விசிக்கிச்ஸா (அறிந்து கொள்ளும் ஆசை)
திருதி (தைர்யம்) ஹ்ரீஹி ( வெட்கம் ) தீஹி (புத்தி) பீஹி (பயம்)
இவை அனைத்தும் ஜ்ஞானத்தின் வெளிப்பாடுகளே. இவை மனதின் வெளிப்பாடு என்று சாஸ்த்ர வசனம் இருக்கிறதே,
மனம் ஜடப் பொருளாயிற்றே ? அஜடமான ஜ்ஞானத்தின் வெளிப்பாடு என்று எப்படிச் சொல்லலாம்? என்று கேட்டால்.
அவை ஜ்ஞான காரியமாக இருக்க, மனக் காரியம் என்றது உபசார வழக்காகக் கொள்ள வேண்டும்,
ஜ்ஞானம், மன சாகாய மின்றி நடவாதாகையால்.

பிரத்யக்ஷம், அனுமிதி, சாஸ்திர (ஆகம) ஜ்ஞானம், ஸ்மிருதி, சம்ஸயம் (இதுவா அதுவா என்று தடுமாறுகிற அறிவு),
விபர்யயம் (இதுதான் என்று தவறாக முடிவு பண்ணுகிற அறிவு), மயக்கம் (வஸ்துவை மறாடி நினைக்கை)
விவேகம் (பகுத்து அறிதல்), வ்யவசாயம் (துணிவு), மோஹம் (கிறக்கம்) ராகம், த்வேஷம், மதம் (செறுக்கு )
மாத்சர்யம், தைர்யம், சாபல்யம், டம்பம் (தர்ம காரியத்தை படாடோபத்துக்குச் செய்வது),
லோபம், க்ரோதம், தர்ப்பம் (செருக்கு) ஸ்தம்பித்தவம் (திகைப்பு) துரோகம், அபிமானம், நிர்வேதம் (மன வெறுப்பு) ஆனந்தம் ,
நல்ல அறிவு, தீய அறிவு, அன்பு, திருப்தி, சாந்தி, கீர்த்தி, வைராக்கியம், மன அழுத்தம், இன்பம், நட்பு, கருணை, இச்சை,
மென்மை, பொருமை , வெறுப்பு,, பாவனை,பேராசை, துராசை ,சர்ச்சை, சக்தி,பக்தி, பிரபத்தி இவை முதலான ஆத்மாவின் குணங்கள்.

ஜ்ஞான, சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் வாத்சல்ய, காருண்ய இத்யாதி பகவத் குணங்கள்.
அவருடைய ஜ்ஞானம் இறந்த காலம் நிகழ் காலம், வருங்காலம் அனைத்தும், பிரத்யக்ஷத்தில் காண்பது போல் அறிபவர்.
மநுஷ்யர்களுக்கு இறந்த காலத்தில் சிலவும், நிகழ் காலமும் வியக்தம்.
ரிஷி, முனிகளுக்கு இறந்த காலமும், வரும் காலமும் ஸ்புரிக்குமே ஒழிய, கண்முன் நடப்பதுபோல் தோன்றாது .
ஆனால் பகவானுக்கு அவைகள் பிரத்யக்ஷத்தில் பார்ப்பதுபோல் ஒளிவிடக்கூடியது.

சக்தி அகடித கடனா சாமர்த்தியம்.
பலம் ஜகத் தாரண சாமர்த்தியம்.
ஐஸ்வர்யம் நியமன சாமர்த்தியம் .
வீர்யம் அவிகாரத்வம் .தன்னுடன் சேர்ந்தவைகள் மாற்றம் அடைந்தாலும், தான் மாறுதல் இல்லாத.
தேஜஸ் பராபிவன சாமர்த்தியம்.
சௌசீல்யம் – நீரந்தரேண சம்ஸ்லேஷம்
வாத்சல்யம் – குற்றத்தையே குணமாக பார்த்தல்.
மார்த்தவம் – அடியார்கள் பிரிவை சகியாதவன்.
ஆர்ஜவம் – ஒன்றே நினைத்து ஒன்றே பேசி ஒன்றே செய்வது.
சௌஹார்த்தம் – தனக்கு இழுக்கான செயலானாலும், பிறர் ரக்ஷணத்தில் முனைப்பு.
சாம்யம் – ஆஸ்ருதர்களிடத்தில் உயர்வு தாழ்வு பாராதவன். யதிவா ராவண ஸ்வயம் என்ற இடம் காண்க.
ஆனால் அபக்தன், பக்தன் இவர்களிடம் வேறுபாடு பார்க்கமாட்டான் என்பது இல்லை.
காருண்யம் – பரதுக்க துக்கித்தவம், பரதுக்க அஸஹிஷ்ணுத்வம் . பிறர் வருத்தம் கண்டு பொறாதா தன்மை
மாதுர்யம் – போக்கிய வஸ்துவான பால் மருந்தாமாப் போலே, உபாய உபேயம் இரண்டிலும் மதுரமாம் தன்மை.
காம்பீர்யம் – ஆழங்கால் காண முடியாத கொடையாளி. திரௌபதி விஷயத்தில் எல்லாம் செய்தும், என்ன செய்தோம் என்ற அதிருப்த்தி .
சாமர்த்தியம் – அடியார்கள் அபராதங்களை தான் கணிசியாததோடு , மறைக்கிறார்.
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் என்னடியார் அது செய்யார் என்று தோஷ கோபத்வம்.
ஸ்தைர்யம் – பக்தர்கள் ரக்ஷண விஷயத்தில் யார் எதுசொன்னாலும் அசராதவன் தடங்கலைக் கண்டு கலங்காதவர் .
தைர்யம் – பழுதாகாத பிரதிக்ஞை உடையவர்.
சௌர்யம் – பரபல பிரவேஸ சாமர்த்தியம்.
பராக்கிரமம் – பரர்களை சின்னாபின்ன மாக்கல் .
என்று எண்ண முடியாததாய், அனுபவித்து முடிக்க முடியாததாய் இருக்கும் பரமாத்மாவுடைய ஜ்ஞானம்.

இனி பக்தி பிரபத்தியின் தன்மைகளை கிஞ்சிது பார்ப்போம்,
ஏனெனில் அவைகளை பற்றி முழுவதுமாக ஒரு ஆசாரியனை வணங்கியே அறியலாவது.

பக்தி பிரபத்திகளை வியாஜமாகக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனே உபாயமாக இருந்து
மோக்ஷத்தை அளிக்கிறான் என்பது தேர்ந்த உண்மை.

மோக்ஷோபாயத்தை சித்தோபாயம் சாத்யோபாயம் என்று இரண்டாக பிரிக்கலாம்
இதில் சித்தோபாயம் பகவான். சாத்யோபாயம் பக்தி/பிரபத்தி.
இது விஷயமான கலா பேதம் பிள்ளைலோகாச்சார்யார் (தென்கலை) சம்பிரதாயம் என்றும்;
வேதாந்த தேசிகர் (வடகலை) சம்பிரதாயம் என்றும் இரண்டு.
பக்தியோ பிரபத்தியோ வியாஜ உபாயமே. பகவானே முக்கிய உபாயம் என்பது தேசிக பக்ஷம்.
அவை அதிகாரி விசேஷணம் மாத்திரமே வியாஜ மாத்ர உபாயமும் இல்லை என்பது பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.
இருவருக்கும் பகவானே உபாயம் என்பதில் பேதமில்லை.
ஆனால் அவனுடைய அந்த உபாயத்வம்; கிருபா ஜன்யமா? கிருபா ஜனகமா? என்பதிலேயே பேதம் சொல்லப்படுகிறது. .’
‘அதுவும் அவனது இன்னருளே ” என்கிறபடி கிருபா ஜன்யம் . இது பிள்ளை லோகாசார்யர் அபிப்ராயம்.
இவன் செய்யும் பிரபத்தி கிருபா ஜனகம் என்பது தேசிகர் அபிப்ராயம்.

பக்திக்குச் சாதனம் கர்மயோகமும், ஜ்ஞான யோகமும். கர்மயோகம் சித்த சுத்தியை ஏற்படுத்தும் அது ஜ்ஞான யோகத்திலும்,
ஜ்ஞான யோகம் ஆத்ம சாக்ஷத்காரத்தை வரவழைத்து, பகவத் பக்தியிலே மூட்டும்.

இவை மூன்றும் தனித்தனியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு.
ந தர்ம நிஷ்டோஸ்மி நசாத்மவேதி ந பக்திமான் — ஆளவந்தார். பக்திக்கு அங்கமாக மற்றை இரண்டும் வைத்து,
பக்தியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு. நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் — நம்மாழ்வார்.
பக்திக்கு அங்கமான இவை இரண்டும் இல்லை என்றால், மோக்ஷோபாயமான பக்தியம் இல்லை என்று சொல்ல பிரசக்தியே இல்லை என்கிறார்.

கர்மயோகமாவது :

வர்ணாஸ்ரம தர்மத்தில் நின்று
தேவதா ஆராதனா, யாக யஜ்ஞம், தான தர்மாதிகளை செய்வது
ஆச்சார்யனை அண்டி தத்வ ஜ்ஞானம் பெற்று, அதற்கநுகுணமான ஆசாரத்தில் நிற்பது
அகிருத்ய கிருத்யம் , கிருத்ய அகிருத்யம் இவைகளை தவிர்ப்பது
கர்த்ருத்வ தியாகம், பலத் தியாகம் , பல சங்கத் தியாகம் கூடிய நித்ய கர்மாநுஷ்டான வர்தனம்
தாழ்ந்த பலன்களில் கண் வையாமை
செய்பவை யாவும் பகவத் கைங்கர்யமாக செய்தல் இத்யாதி.

கர்ம யோகத்தால் மனதின் அழுக்கு நீங்கி ஜ்ஞான யோகத்துக்கு வழி வகுக்கும்.

ஜ்ஞான யோகமாவது :

வேதாந்த விசாரமும்
பகவத் சேஷமான
நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்வரூப
தியான, ஆசன, யோக முறைகளும் (அ )
நாம சங்கீர்த்தனம் (அ )
திவ்ய தேச வாசம் (அ)
பக்திக்கு அங்கமான சரணாகதியாலே

பகவத் பக்தியில் ஈடுபட உள்ள தடங்கல்கள் விலகி
பக்தி யோகத்திலே மூட்டும்.

பக்தி யோகமாவது :

யமம் நியமம் ஆஸனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணம் தியானம் ஸமாதி என்று எட்டு அங்கங்களோடு கூடியதான
தைல தாராவது அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தானம் (அ)

விவேக, விமோக, அவ்யாச, கிரியா, கல்யாண, அநவசாத, அனுதர்ஸ்வ ; சாதன சப்தகம் பக்தி.

இந்த மேலே விளக்கமாகப் பார்க்கலாம்:

பக்தி பிரபத்தி இரண்டுமே ஜ்ஞானத்தின் வெளிப்பாடுதான். தர்மிபூத ஜ்ஞானம் நெருப்பு என்றால்,
அந்த தீயின் பொறி போன்றது தர்ம பூத ஜ்ஞானம். ஜ்ஞானத்தின் முதிர்ந்த நிலை பக்தி.
கர்ம, ஜ்ஞான யோகத்தாலேயே பெறப்படும் ஒன்று. இந்த பக்தியே முக்தியைப் பெற்றுக் கொடுக்கும் என்று ஒரு சாரார் கருத்து.
இல்லை கர்ம, ஜ்ஞாம, பக்தி யோகங்களே தனியாக, நேரே மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பது இன்னொரு சாரார் கருத்து.

கர்ம ஜ்ஞான ஸகக்ருதையான பக்தி யோகம் என்பது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து,
தூமலர் தூவித் தொழுது என்கிறபடி மனம் மொழி காயம் என்று மூன்றாலும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருத்தல்.
அர்ச்சனம் செய்தல், நமஸ்காரம், பூத் தொடுத்தல், நாம சங்கீர்த்தனம் செய்தல்,
”மத் கதா ப்ரீதிஹி” என்று அவனுடைய கதையைக் கேட்டல் , அவரை விட்டுப் பிரிந்தால் தாங்க மாட்டாமை ,
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருத்தல் பத்திக்கு லக்ஷணம்.
இது 8 அங்கங்களைக் கொண்டு , பக்தி அங்கியாய் இருக்கும்.

யமம் – சத்தியம் பேசுதல், திருடாமை, அஹிம்சை, பிரஹ்மசரியம் ,
அபரிக்ரஹம் (= தேவைக்கு அதிகமான பொருள்கைளின்மேல் பற்றின்மை) யமம் .

நியமம் – வேதம் (அ ) அதுக்கு நிகரான ஆழ்வார் பாசுரங்களை ஓதுதல், சுத்தியோடு இருத்தல்=
சரீரத்துக்கு அழுக்கு சேறு, சகதி, வியர்வை, மலஜலம்.
மனசுக்கு அழுக்கு காம, குரோதாதி அரிஷட் வர்க்கங்கள்.
ஆத்மாவுக்கு அழுக்கு பாப புண்யங்கள். துஷ்டி = இருப்பதைக் கொண்டு நிறைவடைதல்.
காய கிலேசமான சுத்தி = தேகமாய் போஷிக்காமல், சரிரமாய் நோக்கிப் போதல். மனதை நியமித்து பகவானிடத்தில் ஈடுபடுத்தல் நியமம்.

ஆசனம் – தியானத்துக்கு உசித (துதிகால் தொடையில் தொட அமர்ந்து கொள்கிற பத்மாசனம் போன்ற ) அமர்வு நிலை.

பிராணாயாமம் – கும்பகம் (உள்வாங்கல்), பூரகம் (இழுத்து நிறுத்தல்), ரேசகம் (வெளியேற்றல்) இவைகளை சமமான கால அளவில் செய்தல்.

பிரத்யாஹாரம் – புறப்பொருள்களில் ஈடுபட்டுள்ள புலன்களை வாங்கி, ஆத்ம, பரமாத்ம விஷயத்தில் திருப்பி விடுகை.

தாரணம் – அவைகளை பரமாத்ம விஷயத்தில் நிலை நிறுத்தல் .

தியானம் – நிறுத்திய மனதை மற்றது கலசாத சதத பகவத் நினைவு.

சமாதி – இப்படிப்பட்ட முயற்சிகளால் அந்த பகவானை வசீகரித்தல்.

தைல தாரை போலேயுள்ள விடுபடாத தொடர் நினைவுச் சங்கிலி சாதன பக்தி.
மோக்ஷத்துக்கு சாதனமாக இருக்கிற பக்தி சாதன பக்தி. இது உபாசகர்களுக்கு வழி.

பிரபன்னர்கள் செய்கிற பக்தி சாத்ய பக்தி. மோக்ஷத்துக்கு
சாதனமாக இல்லாது அதுவே பிரயோஜனமாய், பகவானால் அருளப்படும் (பிரசாதிக்கப்படும்) பக்தி சாத்ய பக்தி (அ) பலபக்தி யாகும்.

பிரபத்தி அனுஷ்ட்டித்த பிறகு, மோக்ஷம் போவதற்கு இடையில் உண்டான – இருக்கும் நாள் –
பிராப்ய ருசியினாலே செய்கிற பக்தி ஸ்வயம் பிரயோஜன (சாத்ய) பக்தி. கொடுத்துக் கொள்ளாதே,
கொண்டதுக்கு கைக்கூலி கொடுக்க வேண்டுமாய் –
ஒன்று நூறாக பின்னும் ஆளும் செய்வன் என்கிற ஸ்வயம் பிரயோஜன பக்தி. இவை 8ம் ஒருவகை.

சாதன சப்தகமடியாக செய்கிற பக்தி இன்னொரு வகை.

விவேகம் – ஆகார சுத்தி = ஜாதி துஷ்டமான, ஆச்ரய துஷ்டமான, நிமித்த துஷ்டமான (=தலை மயிர், புழு விழுந்த ) பண்டங்களை ஸ்வீகரியாமை .

விமோகம் – பற்று அற்று இருத்தல் = லௌகீகர்கள் விரும்புகிற விஷயங்களில் இருந்து விலகி இருத்தல்.

அப்பியாசம் – பகவத் விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திப்பது.

கிரியா – பஞ்ச மஹா யக்ஞங்களை ( ப்ரஹ்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவைகளை), விடாமல் செய்வது.

கல்யாணம் – உண்மை பேசுதல், ஆர்ஜவத்தோடு (=மனஸ் ஏகம் , வசஸ் ஏகம் , கர்மண் ஏகம் என்று) நேர்மையாய் நடத்தல்,
கருணையோடு இருத்தல், தான, தர்மம் செய்தல், அஹிம்சை, பிறர் பொருள் நச்சுதல் செய்யாமை இவை .

அநவசாதம் – துக்கம் கண்டு துவளாமை. நிர்வேதம் கொள்ளாமை .

அனுர்தர்ஷம் – சந்தோஷம் வரும்போது உன்மத்தர் ஆகாமை.

இந்த 7 னாலும் கிட்டுவதும் பக்தியே .

பக்திக்கு பிரயோஜனம் தரிசன சமானாகார பகவத் சாக்ஷத்காரம் . இதை மோக்ஷ பர்யந்தம் அனுஷ்டிக்க வேண்டுவதாய்,
மோக்ஷம் அடைந்து அங்கு செய்கிற பக்தி , சாதன பக்தியாய் இல்லாது, சாத்ய பக்தியாய் இருக்கும்.

யாருக்கு எப்போது மோக்ஷம் என்ற கேள்வி வரும் போது,
சாஸ்திரம் ”கர்மாவசாநே மோக்ஷம்” என்கிறது. கர்மங்கள் முழுவதுமாக தொலைவது எப்போது என்றால்

பக்தி நிஷ்டனுக்கு பக்தி யோகத்தில் இழியும் நிலையில் சஞ்சித கர்மங்கள் தீயினில் தூசாகும்.
உபாசன மாஹாத்ம்யத்தாலே ஜன்மாந்தரத்தில் பிராரப்த கர்மம் முடிந்த நிலையில், அந்திம ஸ்மிருதி ஏற்பட்டு மோக்ஷம் கிட்டும் .
இப்படி உபாசகர்கள் விஷயத்தில் பிராரப்த கர்மத்தைக் தொலைத்துக் கொள்வது அவர்களுடைய பொருப்பு .

பிரபன்னனுக்கு சரணாகதி அனுஷ்ட்டிக்கும் போது சஞ்சித கர்மமும், தேஹாந்தர ஆரப்த கர்மமும் நசியும்.
வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் தேஹாவசாநே தொலைந்து இந்த ஜன்மத்தின் முடிவிலேயே மோக்ஷம் கிட்டும்.
இவர்களுக்கு அந்திம ஸ்ம்ருதி நியமமில்லை. அத்தோடு இவர்களின் பிராரப்த கர்மாவை போக்கிக் கொடுப்பது பகவானின் பொருப்பு.

பூர்வாகங்கள் (சரணாகதிக்கு முன்செய்தவை) இப்படிக் கழியுமாகில், உத்தராகங்கள் க்ஞாதம், அக்ஞாதம் என்று இரண்டாய்,
க்ஞாதம் பஸ்சாதாபத்தால் கழியப் பெற்று, அதில்லாது தெரிந்தே செய்தவையாய், வருத்தமும் படாததாய் உள்ளவை யாவை,
அவை அனைத்தும் வர்த்தமான சரீர ஆரப்தத்தோடே சேர்க்கப்பட்டு அதிகப்படி அனுபவிக்க வேண்டியதாய் வரும்.

”ஆக, ஸர்வ பாபேப்யோ மோக்ஷ இஷ்யாமி ” என்கிற இதுக்குப் பொருள், மேல் சொன்ன சஞ்சித பாபங்கள் வரை பக்தனுக்கும் ,
தேஹாந்த்ர ஆராப்த கர்மம் வரை சரணாகதனுக்கும் போக்கித் தருவேன் என்பது கூடார்த்தம் .
அதுவா, வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் மோக்ஷ பர்யந்தம் அனுபவித்தே அற வேண்டும் என்பதிலே கிருஷ்ண கீதைக்கு நோக்கு.

இங்கு ஒரு சந்தேகம் வரலாம். அதாவது ஒருவனுக்கு ஆயுசு 80 என்று வைத்துக் கொண்டால் ,
அவன் 60 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, மீதம் உள்ள 20 வயதுக்கான ஆரப்த கர்மத்தோடு,
உத்தராகங்களையும் சேர்த்து அந்த 20 வருடத்தில் தீவ்ரமாக அனுபவிக்க வேண்டி வரும்..
அங்கனன்றி, அவரே 20 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, அனுபவ காலம் நீண்டு தீக்ஷண்யம் மிதமாய் இருக்க ஹேது உண்டு.

வேதனம், தியானம், உபாஸனம் என்கிற எல்லாம் பக்தியையே குறிக்கும்.
இந்த பக்திக்கு அங்கமான சரணாகதியும் ஜ்ஞான விபாகமே.
இத்தை பரபக்தி , பரஜ்ஞான, பரம பக்தி என்று பக்தியின் மூன்று நிலைகளாகச் சொல்லுவார்.

ஜ்ஞாதும், திரஷ்ட்டும் , பிரவேஷ்ட்டும்
அறிகை, காண்கை , அடைகை
ஜ்ஞான, தரிசன , பிராப்தி
இவை ஒவ்வொன்றும் பக்திக்கு அங்கமான பிரபத்தியின் ஆவிஷ்காரமே.

அறிகை – பகவானாப் பற்றிய ஜ்ஞானம் ஏற்படுகை., ஸம்ஸ்லேஷத்தில் தரிப்பும் , விஸ்லேஷத்தில் தரியாமையுமாகிற பரபக்தி நிலை.
காண்கை – பிரத்யக்ஷ தர்சன ஸமானாகாரமான பர ஜ்ஞானம். சாட்சாத்காரமாவது நேரில் காண்பது போன்ற மானச அநுபவம் .
அடைகை – பகவான் திருவடிகளை அடையப் பெற்று மீளா இன்பத்தில் திளைக்கை பரம பக்தி.

பிரபன்னாதிகாரிக்கு சரீர அவஸாந பர்யந்தம் பரபக்தியாலே செல்லும். சரீர வியோகத்தில், அர்ச்சிராதி மார்க கதி மத்தியில்
பரஜ்ஞான தசையான தரிசன ஸமாநாகாரம் லபிக்கும் . பரம பதத்தை சேர்ந்தவாரே பரம பக்தி தலை எடுக்கும்.

ஆழ்வாருக்கு இவைமூன்றும் திருப்புளியாழ்வார் அடியிலேயே பிராப்தமாம்பட்டி வைத்தது,
இவரைக் கொண்டு ஊரும் நாடும் திருத்த வேண்டிய படியாலே. அது ஆழ்வார் பால் அவனுக்குண்டான கருணை என்பதை விட
ஆழ்வார்மேல் அவன் கொண்ட பிரேமம் என்றே சொல்ல வேண்டும். கணவன் மனைக்கு மத்தியில் நியமங்கள் நடக்கலாம் ,
காமுகன் காமுகிக்கு இடையில் அக்ரமமே ஸக்ரமம் அன்றோ?

சாதன பக்தியானது கீழ்ச் சொன்ன அஷ்டாங்க யோகத்தாலோ (அ) சாதன சப்தகத்தாலோ உண்டாவது.
பல பக்தியோ வென்னில் ஈஸ்வர கிருபையாலே ஏற்படுவது. நம் பூர்வாச்சார்ய கோஷ்டியில்
நம்மாழ்வார் தொடக்கமாக நாதமுனிகள், எம்பெருமானார் என்று அனைவரும் பல பக்தி நிஷ்டர்களேயாவர் .
பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி என்று கொண்டு பக்தியில் அவர்கள் இழிந்தார் இல்லையோ என்னில், அங்கனன்று.

அவதார ரஹஸ்யம், புருஷோத்தம வித்தை இதன் படிக்கு பக்தி உபாசகனாக இருந்து ”புனர் ஜன்ம ந இதி” என்கிற விதி விலக்கால்,
அந்த ஜன்மத்தின் இருதியில் , பிரபன்னனைப் போலவே முக்தி அடைய வழி உண்டானாலும் ,
கால விளம்ப அசகதவமும் காரணமன்று. ஸ்வரூப விரோதமே காரணம். பக்தி ஸ்வாதந்த்ரிய அனுரோதாமான படியாலே .
தங்கமயமான பாத்திரத்தில் வைத்த பாலேயானாலும் , ஒரு துளி கள்ளு சேர்ந்தால் எப்படி நிஷித்தமோ அதுபோலே ,
ஆத்மா = தங்கபாத்ரம். பக்தி = பால். ஸ்வாதந்திரியம் = கள்ளு, என்பதாலே அஸ்வீகாரம்.

அங்கனாகில் பூர்வாச்சார்ய கோஷ்டியில் பக்திக்கு அங்கீகாரமில்லையோ என்னில் , தவறு.
சாதன பக்தியை விட்டு, சாத்ய பக்தியை அன்றோ அவர்கள் ஆதரித்தது.
”சார்வே தவ நெறிக்கு தாமோதிரன் தாள்கள் …” என்கிற திருவாய்மொழி (10-4-1) வியாக்கியானம் இங்கு அனுசந்தேயம் .

ஸ்வ பிரயோஜனம், ஸ்வயம் பிரயோஜனம், பர பிரயோஜனம் என்கிறத்தின் அடிப்படையில் வந்தவை இத்தனையும்.

ஸ்துதி, நமஸ்காரம் போன்கிற பிரயோகம் பக்தியை குறிக்குமோ என்னில் , இல்லை. அவை உபசார வழக்கே ஆகும்.

ஆத்மாவா அரே திரஷ்டவ்ய : ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதிவ்ய: என்றவிதில்
எது விதி வாக்கியம் , எது ராக பிராப்தம் என்று விசாரித்ததில்
வேத படன வனந்தரம் ப்ரஹ்ம தியான விஷயமாக கேட்பதற்கும், மனனம் பண்ணுவதற்கும்
ஒருவன் ஆசைகொண்டு வருவது பிராப்தமாகையால் , ஸ்ரோத்ரம், மந்தாரம் இரண்டும் ராக பிராப்யமாய் ,
ப்ரஹ்ம சாட்சாத்காரத்துக்கு நிதித்யாஸனமே விதி வாக்கியம் என்று கொள்வதே அநுமதம்.

தியானம் என்கிற பக்தியை, வித்யா பேதத்தால் இரண்டாக பார்க்கப் படுகின்றது.
இகலோக பலத்தைக் குறித்தாக்கில், ஐஹிக்க-பலா என்றும், மோக்ஷ பலத்தைக் குறித்து செய்யும் தியானம்
பாரமார்த்திக-பலா என்றும் இரண்டு வகை. இதையே உத்கீத வித்யா, மற்றும் பிரம்மா வித்யா என்றும் கூறுவார்.

அக்ஷி வித்யா – கண்ணில் சூரியனை வைத்து செய்யும் தியானம்.

அந்தராதித்ய வித்யா – சூர்ய மண்டல மத்திய வர்தியான ப்ரஹ்மத்தைக் குறித்துச் செய்யும் உபாசனம்.

தகர வித்யா – ஹ்ருதயத்து தகராகாசத்தில் உள்ள ப்ரஹ்மத்தை தியானிப்பது.
.
பூமா வித்யா – நிரதிசய சுகம் முதலிய குணங்களுக்கு ஆஸ்ரயனாக செய்யும் வித்தை.

ஸத் வித்யா – ஸத் சப்த வாச்யனான பகவானைத் தியானிப்பது.

மது வித்யா – வஸ்வாதிகளுக்கு அந்தராத்மாவாககே கொண்டு தியானிப்பது.

பஞ்சாக்கினி வித்யா – பகவானை ஆத்மாவாகவும், தன் ஆத்மாவை அவருக்கு சரீரமாகவும் வைத்து செய்யும் வித்யை.

அந்தரிக்ஷ வித்யா –

உப போசல வித்யா –

சாண்டில்ய வித்யா –

புருஷ வித்யா –

பிரதர்தன வித்யா –

வைஸ்வானர வித்யா –

என்று ப்ரஹ்ம வித்தைகள் 32. அதில் ஒன்று

நியாஸ வித்தை – இதுதான் சரணாகதி.

அநன்ய ஸாத்யே ஸாபீஷ்டா மஹா விஸ்வாசா பூர்வகம் ததேக உபாயதா யாஞ்சா பிரபத்தி சரணாகதி ஹி – என்கிற
பிரபதனம் சரணாகதி. பிரபத்யே என்கிறதில் உள்ள கத்யர்தே புத்யர்த்தம் ஜ்ஞான கார்யமான படியாலே ,
இந்த பிரபத்தி ஜ்ஞான விபாகமாக சொல்லப்படுகிறது.

பஞ்ச அங்க வித்யையே பரண்யாசம்.

ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்
பிராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விசஸ்வாச:
கோப்திருப்த வரணம் ததா
கார்ப்பணயம்
இவை ஐந்தும் அங்கங்களாகக் கொண்ட ஞாசமாகிற = ஆத்ம ரக்ஷணாபர ஸமர்ப்பணமே
பிரபத்தி என்பது ஸ்வாமி தேசிகர் பக்ஷம்.

இத்துடன்
ஆத்ம நிக்ஷேபமாகிற
ஆத்ம ஸமர்பணம் சேர்த்து ஷடங்கியாக இருப்பது சரணாகதி.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய – என்கிற ஒன்றே பிரபத்திக்கு அங்கம்.
மேற்சொன்ன 6ம் அவகாத-ஸ்வேதம் = நெல் குத்த வியர்வை தானே சுரக்குமா போலே
சம்பாவித ஸ்வபாவம் என்பது ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.

ஈஸ்வர பிரவிருத்தி விரோதி ஸ்வ பிரவிருத்தி தந் நிவிர்த்தி ஏவ பிரபத்திஹி என்கிற இத்தால்,
ஸ்வ பிரவிருத்தி நிவிருத்திக்கு ஈடான ஸர்வ தர்ம பரித்யாகம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமாகாதோ என்னில் ,

அங்கங்களை எதிர்பார்க்கும் பிரபத்தியால் பகவான் கார்யம் செய்கிறான் என்றால்
அது சாதன பக்தியாகுமே ஒழிய சாத்ய பக்தி ஆகாது.
அந்த விதத்தில் மேற்சொன்ன ஸர்வ தர்ம பரித்யாகம் நிவிர்த்தி தர்மம் மாகையாலே அது, அங்கமாக கணக்கிடப் படாது.

பிரபதியின் விசேஷங்களாவன :
தேஹாவஸாநே மோக்ஷம்.
அந்திம ஸ்மிருதி வர்ஜனம்.
ஸக்ருத் = ஒருமுறையே செய்யப்பட வேண்டியதான் அபேக்ஷை .
ஜ்ஞான விசேஷ ரூபம் = ஜ்ஞானத்தின் செறிந்த நிலையோடு .
ஒரு சதாசார்யனை அண்டி அறிய வேண்டும் ரஹஸ்யம் இது.

சணல் கயிறு கண்ட பிரம்மாஸ்திரம் போலே , பிரபத்திக்கு விஷய நியமம் அதிமுக்யம்.
இத்தால், தேவதாந்திர சம்பந்தமும், பாகவதா பச்சாரத்தையும் இது பொறாது . ஆர்த்தி தலை எடுத்து,
ஆர்த்தியில் பூர்த்தி ஏற்பட்ட வன்றே (= விஷயாந்தர ஸ்பர்சம் லவலேசமும் இல்லையான பின்பே) மோக்ஷம் சுநிஸ்ச்சிதம் .

”இன்நின்ற நீர்மை இனியாமுறாமை” என்று தொடங்கின ஆழ்வாருக்கு உடனே கிட்டாத மோக்ஷம்,
நாலு பிரபந்தம் பாடி, வைகுந்தத்தில் நின்று, வரகுண மங்கை இருந்து, புளிங்குடிக்கிடந்து என்றபடி
ஆழ்வாராகிற ஆத்ம = அன்னம் பரிபக்குவமாக பார்த்தானாய், நமக்கும்
”மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” பிரானான அவன், அந்திம தசையில்
அவைகளை உண்டாகித் தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வான்.

தேகமே ஆத்மா என்றிருக்கிற லோகாயதனுக்கு ஸ்வர்க, நரக , பாப, புண்யங்கள் கிடையா தாகையாலே
பக்தி, பிரபத்தி இவை பொருந்தாது .

க்ஷணிக வாதியான பௌத்தன், க்ஷணிக ஜ்ஞானமே ஆத்மா என்பதால், முக்தி, உபாயங்களின் பிரசங்கமில்லை.
ஒன்று இன்னொன்றில் மூட்டுக்கையாகிற ஜ்ஞான பரம்பரை வைத்துக் கொண்டு பார்க்கில்,
உபாசிக்கும் ஆத்மா ஒன்றாக, மோக்ஷ பல சித்தி அடையும் ஆத்மா வேறு என்று முடியும் .
ஒருத்தன் நோவுபட்ட இன்னொருத்தன் அனுபவிப்பது சாத்தியமல்லவே.

சப்த பங்கி வாதிகளான க்ஷபணர்கள் மோக்ஷத்தை இருக்கு, இல்லை, இருந்தும் இல்லை, இல்லையாய் இருக்கும்
என்று பேசி சேருமிடம் அறியமாட்டாத அவர்களுக்கும் பக்தி, பிரபத்தி பொருந்தாது.

வைசேஷிகர்கள் பாஷாண கல்பமான ஸ்திதியை மோக்ஷம் என்றும்,
சாங்கியன் சித் , அசித் தத்வங்களை ஒப்புக்கொண்டு,
ஈஸ்வரனை இல்லை செய்கிறபடியால், யாருக்கு எதனால் மோக்ஷம் என்பது அஸ்பஷ்ட்டம்.

மாய வாதிகளான அத்வைதிகள் வியாவஹாரிக பிரஹ்ம வாதத்தால் பாரமார்த்திக மோக்ஷத்தை ஒப்புக்கொள்வ தில்லை .
பாஸ்கர, யாதவ பிரகாசர்கள் கர்ம – ஜ்ஞான சமுச்சயம் மோக்ஷ சாதனம் என்ன, வேதமானது பக்தியையே
மோக்ஷ சாதனமாக சொல்லுகிற படியால், இவர்கள் மதம் குதிருஷ்டி மதமாகிறது.
வேத பிராமாண்யத்தை ஒப்புக் கொண்டும், அதற்கு விருத்தமான கொள்கையை பேசுவதால் அதுவும் தள்ளுபடி.

சைவம், லைங்கியம் , பாசுபதம் போன்ற மதங்களில், பிராப்யம் சிவன் என்று பேச, அதுவும்
அநுத்தேஸ்ய மாயிற்று.

இத்துடன் தர்மபூத ஜ்ஞான விளக்கம் முற்றுப் பெறுகிறது.

———————————————————————————-

8 வது அவதாரம் ஜீவனைப் பற்றியது.
கீழே சொல்லப்பட்டவையுள் பிரமாணங்கள் 3 அவதாரம் .
பிரமேயத்தில் அடங்கின திரவ்யங்களைப் பற்றியதான 4 அவதாரங்கள்.
பிரகிருதி, காலம், தர்ம பூத ஜ்ஞானம், சுத்த சத்வமான பரம பதம்.
இவை பராக் என்றும், திரவ்யங்களில் அடங்கின ஜீவனும் , ஈஸ்வரனும் பிரத்யக் என்றும் பார்த்தோம்.

ஜீவன் என்பது :
அணுவாய், நித்தியமாய், ஜ்ஞானமாய், ஜ்ஞான குணகனாய் பகவத் சேஷ பூதனாய் விளங்குமவர்.
தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

சித், அசித், ஈஸ்வரன் இவை மூன்றிற்கும் சாமான்ய லக்ஷணம் சொல்லப் புகில் :

சித்தும், அசித்தும் பகவத் சேஷ வஸ்து.
சித்தும், ஈஸ்வரனும் ஜ்ஞானம் உடைத்து.
அசித்தும், ஈஸ்வரனும் தன்னை சேர்ந்தவர்களை தன்னைப் போல் ஆக்கும் ஸ்வபாவம் படைத்தவர்கள்.
அசித் சம்பந்தம் அவஷ்டப்யம் . பகவத் சம்பந்தம் உன்மீயம்.

பிரத்யக்த்வம் – தனக்குத் தானே ஒளி விடுபவர். தானே பிரகாசிப்பவர். ஸ்வயம் பிரகாசத்வம்.
சேதனத்வம் – அறிவுடையவர். தனக்குப் பிரகாசிப்பவர். ஸ்வஸ்மை பிரகாசத்வம்.
ஆத்மத்வம் – அநாத்மா அல்லாதது. சரீரத்துக்கு பிரதி சம்பந்தியாய், ஈஸ்வரனுக்குத் தான் சரீரமாக இருப்பது.
கர்திருத்வரம் – செயல் திறன் உடையது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, மோக்ஷ பிரதத்வம் நீங்கலாக ,
லௌகிக கார்ய, மோக்ஷ சாதன அனுஷ்டான பர்யந்தமான கர்திருத்தவம் உடையவர். சங்கல்ப ஜ்ஞான ஆஸ்ரயத்வம் கர்திருத்தவம் .

இவை 4ம் ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கு உண்டான சாமான்ய (பொதுவான) லக்ஷணம்.

ஆத்மா, அறிவு, பொருள் (அசேதனம்) இவையில்,

ஆத்மா – ஜ்ஞானம் உடையதாய், ஜ்ஞானமுமாய் – இரண்டுமாய் இருக்கும்.

அறிவு – ஜ்ஞானமாய் இருக்கும். ஜ்ஞான முடையதாய் இருக்காது.

பொருள்கள் – ஜ்ஞான ஆகாரமோ, பாசமோ – இரண்டும் இல்லாதது.

இல்லதும் , உள்ளதும் அல்ல தவனுரு — நம்மாழ்வார்.

இல்லது – ஜ்ஞானம் அற்றது, அசித்து .
உள்ளது – ஜ்ஞானம் உள்ளது. சித்து .
அல்லது அவனுரு – சித் , அசித் விலக்ஷணன் என்கிற வியாவர்த்தம் சொல்ல வந்த பாசுரம் இது.

கணவனுக்கு மனைவி, பிரதி சம்பந்தி.
சேஷனுக்கு சேஷி, பிரதி சம்பந்தி. அது போல
சரீரத்துக்கு ஆத்மா, பிரதிசம்பந்தி –
ஒன்றிருந்தால்தான் , இன்னொன்று இருக்கும் என்கிற சம்பந்தம், பிரதி சம்பந்தத்வம்.

இனி ஆத்மாவுக்குண்டான அசாதாரண லக்ஷ்ணம் :

1. அணுவாய் இருக்கும் போதே அறிவுடையதாய் இருக்கும்.
2. பகவத் சேஷமாய் இருக்கும் போதே ஜ்ஞானத்தோடே இருப்பவர்.

சேஷத்வத்தை முதலில் சொல்லி ஜ்ஞாத்ருத்வத்தை அடுத்து சொன்ன படியால், ஆத்ம ஸ்வரூபத்துக்கு சேஷத்வமே பிரதானம்.

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (திருவாய் 8-8-2)

ஈஸ்வரனுக்குண்டான சரீர-ஆத்ம அந்தராத்மதையைச் சொல்லும்போது, ஆத்மாவை ஆழ்வார்
அடியேன் என்று சொன்னபடி காணலாம். ”உள்ளான்” என்கிற வியாபக ஜ்ஞானம் உடைய ஆழ்வார் தன்னை,
என்னுள் உள்ளான் என்று சொல்லாமல் அடியேன் உள்ளான் என்று சொன்ன படியாலே,
ஜ்ஞாதிருத்துவத்தைக் காட்டிலும், சேஷத்வமே ஆத்மாவுக்குண்டான விசேஷ தர்மமாய் தேறுகிறது .

யானும் தானாய் ஒழிந்தானே (நம்மாழ்வார் 8-8-3) என்ற இடத்தில் ஜீவ-பர ஐக்கியம் அர்த்தம் ஆகுமோ என்னில்,
”ஆய்” என்கிற சாமானாதிகரண்யத்தாலே சரீராத்மா பாவத்தைக் காட்டியதாகவே பார்க்கலாம்.

பகவத் சேஷத்வம் சித் அசித் இரண்டுக்கும் பொது. அந்த சேஷத்வமாகிற வைரத்தை ஜ்ஞாத்ருத்வமுடைய
தங்க பெட்டியில் இருப்பது அசித்தோடு இருப்பதைக் காட்டிலும் உயர்வு.
அது தோற்ற சேஷத்வத்தைச் சொல்லி பிறகு ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லுகிறது.

அப்படிப்பட்ட உயர்ந்த பகவத் சேஷத்வத்தை மறந்து வர்த்திக்கை அசித் சமானமன்றோ?
ராஜ புத்திரன் அத்தை அறியாது கிடக்க, சம்பந்த ஜ்ஞானம் பெற்றவாரே உண்மை யான அறிவு பிறக்குமா போலே,
ஒரு சதாசாரியனை அண்டி வருகிற சேஷத்வ ஜ்ஞானம் , ஆத்மாவை அழகு படுத்தும்.

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல்நெஞ்சே ! (திருமழிசை ஆழ்வார்) அப்போது தான்
பகவத் தத்வம் நெஞ்சுக்கு நன்கு பிரகாசிக்கும். நெஞ்சும் நல் நெஞ்சாகும்.

ஆதேயத்வம் (தாங்கப் படுமவர் )
விதேயத்வம் (ஆணைப்படி நடப்பவர்)
பராதீன கர்த்ருத்வம் (எண்ணப்படி செய்பவர்)
பரதந்திரம் (பகவானையே பரம பிரயோஜனமாக கொண்டிருப்பவர்)

தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

தேகமே ஆத்மா என்பது பொருந்தாது. நான் உடல் என்பது வழக்கு இல்லை. என்னுடைய உடல் என்பது தான் வழக்கு.
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு தேக அதிரிக்தன் ஆத்மா என்பதை உறுதி படுத்துகிறது.

கண்களால் பார்க்கிறேன் என்பதிலுள்ள ”ஆல்” 3ஆம் வேற்றுமை உறுபு வெளி இந்திரியங்கள் ஆத்மா இல்லை,
அவை கருவி , ஆத்மா கர்த்தா என்பதை உறுதி படுத்துகின்றன. த்ரிதீயா விபத்தே கருத்ருத்வாத் என்பது சூத்திரம்.

மனஸா ஸ்மராமி , நெஞ்சால் நினைக்கிறேன் என்கிற வழக்கும் – ”ஆல்” வேற்றுமை உறுபு –
அந்தக் கரணமான மனசைக் காட்டிலும் ஆத்மா வேறு என்பதை தெரிவிக்கிறது.

மம பிராணாஹி – என்னுடைய பிராணன் என்கிற வழக்கும்
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு கொண்டு ஆத்ம பரிச்சேதம் சொல்லிற்று.

தீ = ஜ்ஞானம். தர்ம ஜ்ஞானத்தை உடையது ஆத்மா. ”யான்” தர்மி ஜ்ஞானம். ”எனது” தர்ம (பூத) ஜ்ஞானம்.
ஆக தர்ம பூத ஜ்ஞானமும், ஆத்மாவும் வேறு.

ஆத்மா அணு, வேத உபநிஷத் பாகங்களில் இப்படி சொல்லி இருக்கிறபடியால். .
ஆனையின் ஆத்மா ஆனை அளவு, பூனையின் ஆத்மா பூனை அளவு என்கிற ஜைன சம்பிரதாயம் பொருந்தாமையோடு கூடியது.
அவர்கள் சொல்லுகிற படியானால், ஆத்மாக்கள், வேறு வேறு பிறவிகளில் , எடுத்துக் கொள்கிற தேகத்துக்கு ஏற்ப
சுருங்கல் , விரித்தல் செய்ய வேண்டும். அதாவது ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் உண்டு என்பதை நியாயப் படுத்த வேண்டும்.
உண்மையில் ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களை அனுபவித்தலாகிற ஸ்வபாவ விகாரம் உண்டு. ஸ்வரூப விகாரம் கிடையாதே .
ஆகவே அது ஏகதா அணுவாகவே இருக்கும், ஒரு கால விசேஷத்தில் சரீரத்தை விட்டு ஆத்மா, உத்கிரமித்து,
அர்ச்சிராதி மார்க்கத்தில் பரமபதத்தை அடைகிற படியால். ஆத்மா விபுவாக இருந்தால், பயணப்பட வாய்ப்பில்லை யாகையாலே.

ஆத்மா ஒரு இடத்தில் இருந்தாலும், அதனுடைய தர்மபூத ஜ்ஞானம் சரீரம் முழுவதும் வியாபிக்கும்.
ஸ்வப்ன சரீரத்திலும் வியாபிக்கும். ஆபாச இன்பத்துக்கு ஐம்பது சரீரம் என்று சௌபரிக்குப் போலே
அத்தனைக்கும் வியாபிக்கும். கூடு விட்டு கூடு பாய்கிறபோது அந்த இரண்டு சரீரமளவும் வியாபிக்கும்.

ஆத்மா நித்யம். பௌத்த, சார்வாக மதத்தில் சொல்லியது போல் ஆத்மா அநித்யமாய், சரீரத்தோடே அழிவதாகில் ,
கிருத பிரணாசம் (=செய்தவை களுக்கு பலன் கிட்டாமை)
அகிருத அப்பியாகமம் (=செய்யாதவைகளுக்கு அனுபவிக்கை)
ஆகிற தோஷம் வரும்.
ஆத்மாவுக்கு உற்பத்தி, நஷ்ட்டம் தேக சம்பந்தமும், வியோகமும் ஸ்வரூபேண உண்டாதல் சாதல் கிடையாது.
ஜீவராசிகளுக்கு ஜ்ஞானத்தில் உண்டான தாரதம்யத்துக்குச் சேர மனுஷ்ய, மிருக, ஸ்தாவர, ஜங்கம பிறவிகள் கிடைக்கின்றன.
அவர்களின் ஜ்ஞானம் கர்மத்தால் மறைக்கப் படும் அளவைப் பொருத்து
ஜ்ஞான சங்கோச, விகாச பரிமாணத்தின் அளவையைக் கொண்டு அந்தந்த பிறவி கிட்டுகிறது எனலாம்.

மனுஷ்ய சரீரத்தில் நகம் முதல், மயிர் கால் வரை பல ஆத்மாக்கள் உண்டு.
அவைகள் கல்லுக்குள் இருக்கிற ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் மழுங்கின நிலையில் உள்ள படியாலே
அதிஷ்டான ஆத்மாவுக்குண்டான சுக துக்க அனுபவங்கள் வியாபரியாத ஆத்மாக்களுக்கு கிடையாது.

ஆக ஆத்மா ஒன்றல்ல, பின்னமே. ஒவ்வொரு சரீரத் துக்குள்ளேயும் உள்ள ஆத்மாக்கள் வேறு வேறு என்பது அத்வைத சித்தாந்த பிரதிபடம் .
ஜ்ஞானத்தில் சமண ஆகாரத்தைக் கொண்டு, ஜாத்யேக வசனமாய் அவை ஒன்று என்று சொல்லும் வழக்கு உண்டு.
பரமாகாச-கடாகாசம் போலன்று.

ஆகாசத்தில் உள்ள சூரியன், குளத்தில், கிணற்றில், கண்ணாடியில் பட்டு ஒன்று பலவாக தெரிவது போல்,
ப்ரஹ்மம் ஒன்றே. சரீரமாகிற உபாதியால் அவை பலவாக தோற்றுகின்றன.
சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தால், பல என்ற அந்த பிரமம் விலகும் . என்பது உண்மையானால்

நித்யோ நித்யானாம், சேதன சேதனாநாம் என்கிற பஹு வசன பிரயோகம் ஆத்மாக்கள் ஒன்றல்ல,
பல என்று பேசுவதை எப்படிப் பரிஹரிப்பது? ”ஏஷாம் – தேஷம் ” என்கிற கீதா ஸ்லோகத்தை எப்படிப் பொருந்த விடுவது?
ஆக அத்வைதம் பொய்யாகி, ஆத்மாக்கள் பல என்பதே நிரூப்யம்.

அஹம் அல்லாததை அஹம் புத்தி பண்ணுகை

ஆத்மா கர்த்தா – லௌகிக வியாபாரங்கள், மற்றும் மோக்ஷோபாய சாதனா அனுஷ்டான, உபாசனா கிரியா கர்தாவாகையாலே.
போக்தா-பாப புண்ய விஷயானுபவங்கள் நடக்கிற படியாலே .
சரீரி, சரீரம் – இந்த உடலோடும் , பரமாத்மாவோடும் வைத்துப் பார்க்கையில்,
உடலை தாங்குபவராயும், ஈஸ்வரனால் தாங்கப் படுமவராயும் இருக்கையாலே.
அமலத்வம்-குற்றமற்ற தன்மை. இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஆத்மா -; ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருக்கும்

ஜ்ஞானம் -; ஜ்ஞானம் ஞேயம் 2ஆய் மட்டும் இருக்கும் . ஜ்ஞாதாவாய் இருக்கமாட்டார் அசேதன மாகையாலே.

பிரகிருதி -; ஞேயமாய் மட்டும் இருக்கும்.

ஈஸ்வரன் -; ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருப்பர்.
கூடவே தாதாவாய் இருப்பர், மூன்றன் பிரதாதா அவரானபடியாலே.

—————————————————————————

பர பக்ஷம் :

பௌத்தன் – ஆத்மா க்ஷணிகம். ஏனெனில் அவர்கள் மதத்தின் படி ஜ்ஞானமே ஆத்மா. ஜ்ஞானம் க்ஷணிகம்.
ஆகவே ஆத்மாவும் க்ஷணிகம். ஒருகாலத்தில் ஏற்படும் ஜ்ஞானம் மறறொரு காலத்தில் ஏற்படும் ஜ்ஞானத்தைக் காட்டிலும் வேறு பட்டது,
காலத்தால். அப்படிப் பார்த்தால் நோற்பும் பயனும் வெவ்வேறு ஆத்மாக்களதாய் ஸ்ரமிசிதவனுக்கு பலன் இல்லாமல் போகும்.
உலகியல் நடைமுறை இப்படி இல்லை ஆதலால், ஜ்ஞானமும் க்ஷணிகமல்ல. ஆத்மாவும் க்ஷணிக மல்ல .

சாருவாகன் – பூத சதுஷ்டயத்தால் (ஆகாசம் தவிர்ந்த பிருதிவி, அப்பு தேஜஸ் வாயு இவற்றால்) ஆன தேகமே ஆத்மா.
தேக அதிருக்த ஆத்மா என்பது இல்லை. ஸ்வர்க்க நரகங்கள் இல்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்கிற நாஸ்திக வாதம்.
உயிருள்ள தேகம், உயிரற்ற உடல் என்கிற வித்யாசம் தெரிகிற படியால் இவர்கள் பக்ஷமும் உண்மைக்குப் புறம்பானது.

ஜைனர் – யானைக்கு யானை அளவு பெரிய ஆத்மா . எறும்புக்கு எறும்பளவு ஆத்மா என்கிற இவர்கள் பக்ஷமும் நிரஸ்த்தம் .
இந்த ஜென்மத்தில் யானையாக இருந்து அடுத்த ஜென்மத்தில் எறும்பாக பிறக்க வேண்டுமானால்,
ஆத்மா சுருங்கல், விரித்தலுக்கு உள்ளாக வேண்டும்.
சாஸ்திரங்கள் ஆத்மாவை அணு என்று சொல்லி இருக்கிற படியால்,, இவர்கள் வாதமும் தவறு.

சாங்கியம் – கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பிரகிருதி புருஷன்கள் அளவே. மூன்றாவதான ஈஸ்வர தத்துவம் இல்லை என்று மறுப்பவர்கள் .
செயல் உடலதாகவும், அனுபவம் ஆத்மா வுடையதாகவும் பார்ப்பவர்கள்.
இது நிரீஸ்வர் சாங்கியம். ஸேஸ்வர சாங்கியர் ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலும்,
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பூத பரிமாண உடலுக்கேயாய்,
ஜெபா குஸும – ஸ்படிக உதாரணத்தின் மூலம், எப்படி புஷ்பத்தின் சிகப்பு நிறம் ஸ்படிகத்தில் பட்டு, ஸ்படிகம் சிகப்பாக தெரிகிறதோ,
அதுபோல, தேகத்துக்குண்டானது ஆத்மாவுக்குப் போலே தெரிகிறது என்பர்.
உண்மையில் கருத்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜீவனுக்கே என்பது வைதிக பக்ஷம். ராமானுஜ சம்பிரதாயமும் கூட.

யாதவ பக்ஷம் – பிரம்மத்தின் அம்சம் ஜீவன் என்பது . அதுவும் தவறு ஏனென்றால், பிரமத்துக்கு சரீரம் பிரக்ருதியும், ஆத்மாவும்.

பாஸ்கர பக்ஷம் – சரீரமாகிற உபாதியாலே பிரம்மத்தின் ஒரு கண்டமாக (பகுதியாக) சோபாதிக ஜீவன் இவர்களால் பார்க்கப் படுகிறது.
அதுவும் தவறு ஏனெனில், ஆத்மா அணுவாகவும், பிரமத்துக்கு சரீரமாகவும் இருக்கிற படியால்.

அத்வைதம் – பிரம்மத்துக்கு அஜ்ஞானம். தன்னைப் பலவாக பிரமிக்கிறது அப்படி இல்லை என்கிற ஐக்கிய ஜ்ஞானம் வந்தால்,
அதுவே மோக்ஷம். இதிலே பல கேள்விகள்.

1. பிரம்மத்துக்கு பிரமம் என்பது இயற்கையா? செயற்கையா?
2. அதாவது, ஸ்வரூபமா? ஸ்வரூப வியதிரேகியா?
3. ஸ்வரூபம் (இயற்கை) என்றால், அவித்யை விலக வாய்ப்பில்லை. அப்படியானால்,
பிரமத்தால் வந்த ஜகத் வியாவிர்த்தி விலகாது / அஸ்த்தமிக்காது .அங்கனாகில் மோக்ஷம் சித்திக்காது .
4. இயற்கை இல்லை. செயற்கைதான் என்றால், அத்வைதம் நிற்காது. பிரம்மம் என்கிற ஒருதத்வம்.
பிரம்மத்துடைய அஜ்ஞானம் என்கிற ரெண்டாவது தத்வம் சித்திக்கும்.
5. இதில் எது உண்மை? பிரம்மம் பாரமார்த்திகமா? அதன் அஜ்ஞானம் பாரமார்த்திகமா?
6. பிரமத்தை பொய் என்று சொல்ல வாய்ப்பில்லை. அவித்யை பொய்யானால், பொய்யான ஒன்றை எப்படிப் போக்க?
7. முடிவாக, அவித்யா சபளித்த பிரம்மத்தின், அஜ்ஞானத்தை யார் போக்க?
அதுவும் பொய்யான ஒரு ஆசாரியானால் , பொய்யான ஜ்ஞானத்தால் மறைக்கப் பட்ட உண்மையான
பிரம்மத்தினிட மிருந்து பிரமத்தை எப்படிப் போக்க முடியும்?
என்பதான 7 வித (ஸப்தவித) அனுபபத்தி சித்திக்கும் . இதனால் ஏக ஜீவ பக்ஷமும் நிரஸநமாகிறது .

வாசஸ்பதி மதம் – பிரம்மத்துக்கு பல அந்தக் கரணங்கள் (மனசு) இருப்பதால், பல ஜீவர்களாக தோற்றுகிறது
என்பதும் ஆத்மா விபு என்கிற வாதம் உள்பட அனைத்தும் தவறு. ஏனென்றால்,

1. ஆத்மாக்கள் அநேகம்.
2. அதனதன் கர்மத்தால், வெவ்வேறு சரீரங்களை எடுத்துக் கொள்கின்றன.
3. பிராகிருத சரீரம் அசேதனம். கர்மத்தால் அதனுள் விலங்கிடப் பட்டுள்ள ஆத்மாக்கள் அனைத்தும் சேதனம்.
4. அவை அனைத்தும் பிரம்மத்துக்கு சரீரமாய் (உடலாய்) பிரகாரமாய் இருக்கும்.
5. சாஸ்திர ஜ்ஞானத்தாலும், ஆச்சாரிய உபதேசத்தாலும் , கர்ம, ஜ்ஞான, பக்தி யோகங்களை
அனுஷ்ட்டித்து (அ) பகவானை சரணமடைந்து அவனுடைய கருணையால் பாபங்கள் விலக்கப் பெற்று
சம்சாரத்தைக் கடந்து மோக்ஷமடைகிறான். என்கிற, இதுவே சாஸ்திர சம்மதமான மார்க்கம். மற்றவை குத்ருஷ்டிகள் மதமாகின்றன.

6. ஆத்மா விபுவல்ல அணுவே. அதன் தர்ம பூத ஜ்ஞானம் பல சரீரங்களில் பிரசுரிக்க ஒருவர் பல சரீரம் எடுக்கவோ
அவர் புகழ், பெருமை பல இடங்களில் வியாபிக்கவோ, வாய்ப்புண்டு .
அது யோக சக்தியாலோ / அதிருஷ்ட பலத்தாலோ உண்டாவது.

இங்கு அதிருஷ்டமாவது பகவானுக்கு பிரீதியை விளைவிக்கிற , ஜீவனாலே செய்யப் பட்ட கர்ம விசேஷம்.
சுருங்கச் சொல்லில், பகவத் கிருபை (அ) பகவத் ப்ரீதி விசேஷ ஜ்ஞான ரூபம் அதிருஷ்டம்.
”விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?” என்று ஆழ்வார் விளக்கம்.
அது பகவான் ஒருவனிடத்தில் மட்டும் நிலைப்பது., தேவதாந்தரங்கள் அநித்யமாகையாலே.

—————–

அந்த ஜீவாத்மா 1. பத்தர். 2.முக்தர். 3. நித்யர் என மூவகைப் பட்டவர்கள்.
இதில் பத்தர்கள் கர்மத்துக்கு வசப்பட்டு, பிராகிருத பூமியில் இன்னும் உழன்று கொண்டு இருப்பவர்கள்.
முக்தர்கள் கர்மங்களில் இருந்தும், பிறவித் தளையிலிருந்தும் விடுபட்டு, அர்ச்சிராதி மார்க்கத்தில்
”அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை” என்ற கணக்கில் வைகுந்தம் புகுந்தவர்கள்.
நித்யர்கள், அநந்த,கருட,விஸ்வக்ஷேணர் போல, கர்ம வாசனையே இல்லாதவர்களாய்,
பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தில் இருப்பவர்கள்.

1. பத்தர்கள் : 1. தேவர்கள் :

பிரம்மா ; சிவன்.
||
V
நாரதாதி தேவர ரிஷிகள்
விசிஷ்டாதி பிரம்ம ரிஷிகள் (ராஜ ரிஷி, மகா ரிஷி, ரிஷி என்று அவர்களின் யோக/வைராக்யங்களை இட்டு தார தம்யாம்)
புலஸ்திய, மரீசி, கச்யப, தக்ஷ நவ பிரஜாபதிகள்
திக்பாலகர்க்ள் -; வ – குபேரன் ; கி – இந்திரன்; தெ – எமன்; மே – வருணன்)
14 – இந்திரர்கள் (பிரம்மா பகல் போதில் படைக்கப் படுமவர்கள்)
14 – மநுக்கள்
அஸுரர்கள்
பித்ருக்கள்
கந்தர்வ யக்ஷ
கின்ன
கிம்புருஷ
சித்த
வித்யாதரர்கள்
8 – வஸுக்கள்
11 – ருத்ரர்கள்
12 – ஆதித்யர்கள்
2 – அஸ்வினி தேவதைகள்
தானவ யக்ஷ ராக்ஷஸ
பிசாசங்கள் .

2. பத்தர்கள் : மநுஷ்யர்கள் :
||
v
பிராஹ்மண
க்ஷத்ரிய
வைஸ்ய
சதுர்த்தர்கள்

3. பத்தர்கள் : திர்யக்கு :
||
v
பசு
பக்ஷி
ஊர்வன (பாம்பு முதலான)
பறப்பன (விட்டல் பூச்சி முதலான)
கீடங்கள் (புழு பூச்சிகள்)

4. பத்தர்கள் : ஸ்தாவரம் :
||
v
விருக்ஷம்
குல்மம் (புதர்)
லதா (கொடி)
வீறு (அறுக்க, அறுக்க முடியாதன)

இந்த நான்கையும் வேறுவிதமாகவும் பிரிக்கலாம்.

ஜராயுஜ (கர்ப பையிலிருந்து உண்டாவன ) = 1,2;3.
அண்டஜ ( முட்டையிலிருந்து உண்டாவன ) = 3
உத்பிஜ்ஜ (முளைவிட்டு உண்டாவன) = 4
ஸ்வேதஜ (வியர்வையில் உண்டாவன ) = 3
அயோநிஜ (யோநியில் சேராத)
||
v
பிரம்மா (நாபி கமலம்)
சிவன் (பிரம்மாவின் புருவ நெறிப்பு)
ஸநகாதிகள் (பிரம்மாவின் மனசிலிருந்து )
சீதா (பூமியிலிருந்து)
முதலாழ்வார்கள் (பூவிலிருந்து)
திரௌபதி, (நெருப்பிலிருந்து)
திருஷ்ட துயும்னன்
பூத, வேதாளங்கள்.

கர்ம பிரவாக சக்ரம் :

அவித்யா (அறியாமை)
ருசி (தூண்டுதல்)
கர்மா
(தவறான செயல்)
ஜென்மம்
(அழுத்தம்)
வாசனை
விதை செடி பூ காய் பழம் விதை போலே பிறவியும்

கர்ப ஜன்ம சைஸவ பால்ய யௌவன
ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்தி மூர்ச்சா
ஜரா மரண
ஸ்வர்க்க நரகாதி
ஆத்யாத்மிக ஆதி தைவீக ஆதி பௌதிக தாப த்ரய சுழற்சி .

ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து, ஈஸ்வர கைங்கர்யத்தியும் இழந்து,
இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபடு கிறவர்களே பத்தர்கள்..

——————————————————————

சாஸ்திரத்துக்கு வசப்படாதவை -; விலங்குகளும், ஸ்தாவரங்களும்..

சாஸ்திரத்துக்கு வசப்பட்டவர்கள் -; தேவர்களும், மநுஷ்யர்களும். விவேக ஜ்ஞானம் உள்ளபடியால்.
||
V
புபுக்ஷுக்கள் ; தேஹாத்மாபிமானிகளாய்
அர்த்தத்தில், காமத்திலும் இச்சை உடையவர்கள்.

முமுக்ஷுக்கள் -; தேஹ அதிருக்த ஆத்ம பிரசம்ஸை உள்ளவர்கள். தர்மத்தில் பற்றுடையவர்கள்.

பரலோக அனுபவ ச்ரேயஸ் சாதனம் தர்மம் . யக்ஞ, தான, தபஸ், தீர்த்த யாத்திரை, திவ்ய தேச வாசம் இத்யாதி இதில் அடங்கும்.
||
V
தேவதாந்த்ர பரர்கள் ; தர்மார்த்த புருஷார்த்த துக்காக அன்ய தேவதைகளை உபாசிப்பவர்கள்.

பகவதாஸ்ருதர்கள் -; பக்தன். தர்மார்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களில் ,
வீட்டின்பத்தை விட்டு இதர பலன்களுக்காக பகவானை ஆச்ரயிப்பவர்கள்.
பிரபன்னன் -; மோக்ஷ லாபார்த்தி.

ஆர்த்தன் -; பிரஷ்ட ஐஸ்வர்ய காமன்.
அர்த்தார்த்தி -; அபூர்வ ஐஸ்வர்ய காமன்.
ஜிக்ஞாஸி -; கைவல்யார்த்தி.

கேவலன் -; ஆத்மானுபவம் தவிர்ந்த இரண்டாவதான பகவதனுபவ பர்யந்தம் வராதவன்.

தேசிக பக்ஷம் -; கேவலன் புபுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் , பிரகிருதி நியுக்த ஸ்வாத்மானுபவ நிஷ்டராய்
விரஜைக்கு இப்பால் வர்த்திப்பவர். திருந்தி பகவன் லாபார்த்தியாக வழியுண்டு.

பிள்ளை லோகாச்சாரியர் பக்ஷம் =; கேவலன் முமுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் ,
ப்ரக்ருதி நியுக்த ஸ்வாத்மானுபவம் விரஜைக்கு அப்பால். கர்ம பூமியை விட்டு விலகி
போக பூமியுள் வந்துவிடுகிற படியால் ஸ்வானுபவத்தை விட்டு, பதி -தியக்த பத்நி போலே ,
பகவன் லாபார்த்தியாக வழியில்லை.

பகவத் பக்தனுக்கும் , பிரபன்னனுக்கும் வேண்டியவை :

வேதத்தை அதன் அங்கங்களோடே வாசிக்கை. அதாவது கர்ம காண்டம் + தேவதா காண்டம் + ஜ்ஞான காண்டங்கள் கற்று
பூர்வ மீமாம்ஸா + உத்தர மீமாம்ஸா இவைகளில் தேர்ந்து
சித், அசித்தினின்றும் வேறுபட்ட
அதிசய, ஆச்சர்ய, ஆனந்த நிலையனாய்
ஹேய குணங்கள் இல்லாதவனாய்
கல்யாண குணைகதானனாந பகவான்
அவனை, ஸ்த்ரீ. சதுர்த்த வர்ணத்தவர்கள் நீங்கலாக
அடைய அங்கங்களோடே கூடிய பக்தியை உபாயமாகக் கொண்டு மோக்ஷமடைபவன் பக்தன். இவர்கள் சாத்யோபாய நிஷ்டர்கள்.

ஆர்த்தித்தவம் , சாமர்த்தியம் இரண்டும் பக்திக்கு யோக்யதைகள்.

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன்தந்த அந்தணன் ஒருவன்
காதலென் மகன் புகலிடம் காணேன்
கண்டுநீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உன்னை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்–(பெரிய திருமொழி 5-8-7)

வைதிகன் பிள்ளை மோக்ஷ பூமியை பிராபித்தும் திரும்ப சம்சாரத்தில் வந்தது மோக்ஷ மடைய சாமர்த்தியம் இல்லையான படியால்.
அர்ஜூணனும் வைதிகனும், மோக்ஷத்தின் வாயில் வரை சென்றார்களாயினும்,
மோக்ஷ பூமியைப் பிராபிக்காதது அவர்களிடத்தில் ஆர்த்தித்தவம் இல்லை யானபடியாலே.
அத்தகைய பக்தியானது புத்தி பரிச்சேத ஜ்ஞான விசேஷம் (அ ) முதிர்ந்த ஜ்ஞானம் என்பர்.

வியாசர் முதலானோர் -; சாதன பக்தி நிஷ்டர்கள். அறம், பொருள், இன்பமாகிற திரைவர்கிக பலம் உத்தேஸ்யம்.

நாதமுனி முதலானோர் -; சாத்ய பக்தி (பல பக்தி) நிஷ்டர்கள். மோக்ஷ பலம் உத்தேஸ்யம்.

பிரபத்திக்கு உறுப்பு ஆகிஞ்சின்யமும் , அநன்யகதித்வமும் .
நம்மாழ்வாருடைய நோற்ற நோன்பிலேன், ஆராவமுதே திருவாய்மொழிகள் இதுக்கு லக்ஷணம்.

வீடடைய வேண்டுவது :
சத்ஸங்கம்
நித்ய, அநித்ய வஸ்து விவேகம்
ஸம்சாரத்தில் நிர்வேதம்
வைராக்கிய சீலராய்
மோக்ஷத்தில் விருப்பம்
த்வேஷ மற்றவனாய், விஷ்ணு பக்தனாய், வேத சாஸ்திர விற்பன்னனாய் இருக்கிற ஆசாரியனை அடைந்து
அவர் மூலமாக புருஷகார பூதையான பிராட்டியை ஆஸ்ரயித்து
பக்தி முதலான மற்ற உபாயங்களை (அசத்தி ஆயாசங்களுக்காயும், பிராப்தி இன்மைக்குமாக) விட்டவனாய்
ஆகிஞ்சின்யத்வ , அனன்ய கதித்வங்களை (கர்ம, ஜ்ஞான, பக்தி இல்லை. வேறு கதி இல்லை என்று) பிரார்த்திப்பவராய்

1. ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்;
2. பிராதி கூல்யஸ்ய வர்ஜனம்;
3.ரக்ஷஸ்யதி இதி விச்வாஸ:
4.கோப்த்ருத்வ வரணம்;
5.கார்ப்பண்யம்;
6. ஆத்ம நிக்ஷேபம்

இந்த ஆறும் ஏற்பட்டவனாய்
ஸ்ரீமன் நாராயணனுடைய சரணங்களையே உபாயமாக சுவீகரிப்பவன் பிரபன்னன்.

தேசிக பக்ஷம் =; ஆத்ம சமர்ப்பணத்துக்குக் கீழ் சொன்ன
5 ம் அங்கமாய் அங்க பிரபத்தியிலே சேரும்.

லோகாசார்ய பக்ஷம் =; அங்கமாகக் கொண்டு செய்கிற பிரபத்தி சாதன பக்தியில் போய் முடியுமாகையால்
கீழ்ச் சொன்ன 5 ம் ஸம்பாவித ஸ்வபாவங்களாய் – நெல் குத்த வியர்க்குமா போலே –
இவை 6ம் தானே ஏற்பட, ஸ்வதந்த்ர பிரபத்தியிலே சேரும்.

பிரபதிக்கு ஸர்வரும் அதிகாரிகள்.
||
V
ஏகாந்தி :
தேஹ யாத்திரை நிமித்தமாக மற்றதும் கேட்டு, மோக்ஷமும் பிரார்திப்பார்..
இரண்டும் பகவானிடத்திலேயாய், தேவதாந்தரங்கள் பக்கல் போகாதவர்கள்.

பரமைகாந்தி:
பரமனான பகவானை மட்டுமே பலமாக பிரார்த்திப்பவர். இவரும் பகவானைத் தவிர
வேறு இடத்தில் கை ஏந்தாதவர்கள். பிராப்பியா பிராபக ஐக்கியம் இங்கே உண்டு.
||
V
திருப்தன் -; அஸ்மதாதிகள் . இவர்களுக்கு தேஹாவஸானே மோக்ஷம். மரணமானால் வைகுந்தம் தரும்.

ஆர்த்தன் -; ஆழ்வார், ஆசாரியர் போல்வார். பிரபத்தி உத்தர க்ஷணத்திலே மோக்ஷம். .மரணமாக்கி வைகுந்தம் தரும் .

இதுவரை சொல்லப் பட்டவர்கள் பக்தர்கள். கர்மத்தால் தளைப் பட்டவர்கள். பகவத் கிருபையால் மோக்ஷ மடைபவர்கள்.

——————————————————————————

இனி முக்தர்கள் :

உபாய சுவீகார அனந்தரம்
ஆஜ்ஞா கைங்கர்யம் (அகரனே பிரத்யவாயங்கள் – செய்யத் தவறினால் பாபம் )
அநுஜ்ஞா கைங்கர்யம் (பாபம் ஸம்பவிக்காது – செய்யாமல் விட்டால் அவன் முகமலத்திக்கு குந்தகம் ஏற்படும்).
ஸ்வயம் பிரயோஜனமாய் (வேறு எந்த பலனையும் எதிர்பாராது அல்ல அல்ல செய்வதே பிரயோஜனமாய்)
பகவத், பாகவத, ஆச்சார்ய, அசக்கியா அபசார விமுக்தராய்/தவிர்ந்தவராய்
தேஹாவாசானே / சரீரம் விழும் போது
புண்யங்களை மித்ரர்களுக்கும் , பாபங்களை அமித்ரர்களுக்கும் பகவானாலே கொடுக்கப் பட
ஹ்ருதய வாசியான பெருமானிடம் விடை பெற்று
ஸுஷும்நா நாடியை அடைந்து
பிரம்ம ரந்தரம் வழி வெளிப்பட்டு
சூரிய கிரணங்களை வாகனமாகப் பற்றி

அர்ச்சிஸ் மார்க்கத்தில் முதலில் அக்கினி லோகம்
பகல்
ஸுக்ல
உத்தராயணம் வாயு
சூர்ய லோகம்
சந்திர
வித்யுத் / மின்னல்
வருண
இந்திர
சத்ய லோகம் இவைகளை ஆதிவாகர்கள் கடத்த , அவ்வோ லோகங்களின் அபிமானிநி தேவதைகள் ஸத்கரிக்க

பரமபத வாசலில் உள்ள விரஜையில் குளித்து
ஸூக்ஷ்ம சரீரத்தை உதிரி
அமானவனால் ஒளிக்கொண்ட சோதியும் பெற்று
அபிராக்ருத திருமேனியும்
பிரம்மாலங்காரமும் செய்யப் பெற்று
நகர பாலகர்களுடைய அனுமதி கிட்டி

வைகுந்தம் புகுதலும்
அனந்த கருட விஸ்வகஸேனர்களைச் ஸேவித்து
திருமாமணி மண்டபத்தில், ஸ்வ ஆச்சார்ய கூடஸ்தரையும் ஸேவித்து
பர்யங்க சயனத்தில், தர்மாதி பீடத்தில் தேவிமார் மூவருடன் ஜாஜுல்யமாய் எழுந்தருளி இருக்கும்
திவ்ய பூஷணார் பூஷிதம், அபரிமித கல்யாண குண பூர்ணராய் ஸேவை சாதிக்கும்
பகவான் திருவடிகளை தலைகளால் வணங்கி
பர்யங்கத்தில் கால் வைத்து மிதித்து ஏறலும்

பகவான் கைபிடித்து தூக்கி மடியில் அமர்த்தி
”கோஸி ?” என்று விளிக்க
அஹம் பிரஹ்ம பிரகார:
பிரஹ்ம பரிகார:
பிரஹ்ம பிரகாஸ: அஸ்மி என்று சொல்லி நிற்க
பகவான் தன்னுடைய குளிர்ந்த கண்களால் கடாக்ஷிக்க
அந்த அனுபவம் தந்த ஆனந்தம் பல்கிப் பெருக
ஸர்வ தேச ஸர்வ கால சர்வாவதோசித சகலவித கைங்கர்யங்களையும் செய்ய விரும்புவனாய்
ஸாலோக ஸாமீப்ய ஸாரூப ஸாயுஜ்ய மாகிற
( ஜகத் வியாபார வர்ஜம் – போக மாத்ர ஸாம்ய லிங்காஸ்ச — ஸ்ரீபாஷ்யம் இத்யாதிகளில் தெரிவித்த )
அஷ்டவித ஆவிர்பாகத்தை அடைந்து எல்லை யற்ற பிரம்மானந்தத்தில் தோய்கிறவன் முக்தன்.

”ஸோஸ்ணுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா ” என்று
ஆனந்தத்தில் ஸாம்யம் அடைவதன்றி ஸ்வரூப ஐக்கியம் அடைகிறான் அன்று .

———————————————————————————-

வேத வேதாந்தங்களிலே பிரஹ்மத்தைப் பற்றி சொன்ன வாக்கியங்களுக்கு அர்த்தம் பார்க்கும் போது
எந்தவித முரண்பாடும் கிடையாது. அப்படி விரோதம் தோற்றினாலும் அதை பரிஹரிக்கவே
சுவாமி எம்பெருமானார் பல கிரந்தங்களை அனுகிரகித்தார்.
அவருடைய மதத்தை வெளிச்சம் போட்டு காட்ட அவதரித்த கிரந்தமே ”யதீந்த்ர மத தீபிகா என்கிற இந்த நூல்.

இதிலுள்ள 10 அவதாரங்களில், 9 வது அவதாரம் ”ஈஸ்வரனைப் ” பற்றிய விசாரம்.

ஸர்வேஸ்வரத்வம் .= நியந்திருத்தவம். ஈஸ் +வரச் =ஈஸ்வரன். நியமன சாமர்த்தியம்.
ஸ்வபாவார்த்தே வரச். ஈசன சீல: நாராயண: என்று சங்கராச்சாரியார் வியாக்கியானம்.
ஸர்வ சப்தத்தால் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருக்குமான ஈஸ்வரன், தனக்கொரு ஈஸ்வரன் இல்லாத என்று பொருள்படும்.
அவன் ஈஸ்வரன். அவனுடைய செயல் ஈசனம் நாம் ஈஸிதவ்யர்கள்.

ஸர்வ சேஷித்வம் = எல்லோருக்கும் ஸ்வாமியாய் , சேஷியாய் இருத்தல். கைங்கர்ய பிரதி சம்மந்தி.
பகவானுக்கு பெருமை சேர்க்க வல்ல கார்யங்களையே எவனொருவன் செய்கிறானோ அவனே சேஷன். பகவான் சேஷி.

ஸர்வ கர்ம ஸமாராத்யத்வம்.= எல்லாருடைய (சந்தியா வந்தனம், தர்ப்பணம், ஸ்ரார்த்தமித்யாதி)
கர்மங்களாலும் ஆராதிக்கப் படுமவர். ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி.
.
ஸர்வ கர்ம பலபிரதத்வம்.= எல்லா கர்மங்களுக்கும் பலன் கொடுப்பவர் நாராயணனே..
தேவதாந்தரங்கள் கொடுக்கிற பலன்கள் இவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிற சக்தி சாமர்த்தியத்தைக் கொண்டு.
அப்படிக் அவர்கள் கொடுக்கும் போதும் இவன் அவர்களுக்குள் அந்தராத்மாவாக இருந்தே கொடுக்கிறான்.

ஸர்வ ஆதாரத்வம்.= எல்லாவற்றையும் தாங்குமவர். அவன் ஆதாரம். நாம் ஆதேயம்.

ஸர்வ கார்ய உத்பாதகத்வம்.=
”செய்கின்ற கிரியெல்லாம் யானே என்னும், செய்வா நின்றகளும் யானே என்னும் ,
செய்து முநிறந்தவையும் யானே என்னும், செயகைப் பயநுண்னுபேம் யானே என்னும் ” (திருவாயிமொழி-5-6-4) என்றபடி
செய்வார்கள் செய்யும் கிரியைகள் அனைத்துக்கும் ஊற்றுவாய் அவரே.

ஸர்வ வாச்யத்வம். = எல்லா சொல்லின் பொருளும் அவரே. திருமால் , சிவன், இந்திரன் என்று எது சொன்னாலும்
அவை அனைத்தும் பர்யவஸான விதியின் படி சரீரியான நாராயணனையே குறிக்கும். வாசகம் = சொல். வாச்யம் = பொருள்.

ஸ்வக்ஞான ஸ்வேதிர ஸமஸ்த திரவ்ய ஸரீரத்வம் = தன்னையும், தன் ஜ்ஞானம் இரண்டும் தவிர்ந்த அனைத்தும் அவருக்கு சரீரம்.
ஜ்ஞானம் அவருக்கு குணமாதலால் அவர் குணியாகிறார். அவர் மற்றவைகளை தாங்குபவராக இருக்கிறாரே ஒழிய,
தன்னைத் தான் தங்குபவராக இல்லை. எனவே தன்னையும், தன் ஜ்ஞானமும் தவிர மற்றவைகளுக்கு சரீரியாக இருக்கிறார் என்று சொல்லப் பட்டது..

இவை ஈச்வரனுக்குண்டான அடையாளங்கள். இந்த பிரஹ்மம் ஜகத்துக்கு திரிவித – உபாதான, நிமித்த, சககாரி – காரணங்களாக இருக்கிறார்.

எது எதுவாக மாறுகிறதோ, அது அதுக்கு உபாதானம். மண் குடத்துக்கு உபாதானம்.
தங்கம் சங்கிலிக்கு உபாதானம். பஞ்சு வேஷ்ட்டிக்கு உபாதானம். மூலப் பொருள் உபாதானம்.
செய்கிறவர் சங்கல்பமடியாக பொருள்கள் படைக்கப் படிகின்றன.
எனவே குயவன், தட்டான், நெசவாளி இவர்கள் குடத்துக்கு, சங்கிலிக்கு, வேஷ்டிக்கு நிமித்த காரணம்.
இப்படி படைக்க உதவும் கருவிகளுக்கு – சககாரி காரணம் என்று பெயர்.
குயவனுக்கு தண்ட ,சக்ரம். தட்டானுக்கு நெருப்பு துருத்தி, ஊது குழல், நெசவாளிக்கு ராட்டை,
நெய்கிற இயந்திரம் இவைகள் அவரவர்களுக்கு சககாரி காரணம்.

சித் அசித் விஷிஷ்ட பிரஹ்மம் ஏகம் .

பிரஹ்மத்தோடு கூட இரண்டாவது கிடையாது. – அதுவைதம்

சித் அசித்தோடு கூடிய பிராஹ்மம் (போல ) இரண்டாவது கிடையாது – விஷிஷ்டாத்வைதம்

விஷிஷ்ட யோகோ அதுவைதம் விஷிஷ்டாத்வைதம் –
பிரஹ்மத்தோடு கூடி இருக்கிற (ஜாத்யேக வஸ்துக்களான) சித் அசித் போலே இரண்டாவது கிடையாது.
விஷிஷ்ட அஸ்ய அத்வைதம் விஷிஷ்டாத்வைதம் – சித் அசித் கூடி இருக்கிற பிரஹ்மத்தைப் போல இரண்டாவது கிடையாது .-
ந த்வத் சமஸ்ச அப்யதிகஸ்ச திருஸ்யதே என்றபடி.

ஸத் வித்யா பிரகரணம் :(சாந்தோக்ய உபநிஷத்)

ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞானம் – பிரதிக்ஞை.

ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் ஜ்ஞானம்.

மண் என்கிற காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யமான குடம், மடக்கு, பொம்மை அனைத்தும் அறிந்ததாகும் அல்லவா? அதுபோல

காரண பிரஹ்மத்தை அறிந்தால், அதன் காரியமான ஜகத் அனைத்தும் அறிந்ததாகும்.

குடம் என்றும், மடக்கு என்றும் பொம்மை என்றும் பலவாக பார்ப்பது வியவகார வழக்கு.
ஆனால் எல்லாம் மண் என்பதே உண்மை. காரண ரூபத்திலான மண்ணுக்கும் காரிய ரூபத்திலான
மண்ணுக்கும் நாம (குடம்) ரூப (வாயும், வயிறுமான ஆகாரம்) வியவகார வித்யாசம் உண்டு போலே ,
காரண பிரஹ்மமான ஈஸ்வரனுக்கும் கார்ய பிரஹ்மமான ஜகத்துக்கும் குடத்துக்கும் மிருக் பிண்டத்துக்குமான
வேறுபாடு போலே ஆதார ஆதேயத்தவ, சேஷ சேஷிதவ வியவகார பேதம் உண்டு.

மண், மண்ணால் ஆன குடம். பிரஹ்மம். பிரஹ்மத்தால் ஆன ஜகத் என்பதே உண்மை.
எது எதுவாகிறதோ அது அதுக்கு உபாதாந காரணம் என்று வைத்து பார்க்கில், ஜகத்துக்கு ஈஸ்வரன் உபாதாந காரணம்.

பிரளயம் காரண தசை. ஸ்ருஷ்டி கார்ய தசை. காரண பிரஹ்ம விசிஷ்டமான சித்தசித் ஸூக்ஷ்ம தசையிலும் ,
கார்ய பிரஹ்மமான ஜகத் நாம-ரூப வியார்த்தமாய் ஸ்தூல தசையை அடைவதே ஸ்ருஷ்டி.

” பஹுஸ்யாம் பிரஜாயேய ”என்று பிரஹ்மம் சங்கல்பிப் பதால் பிரஹ்மமே நிமித்த காரணம்.
நான் பலவாக ஆகிறேன் ”அநேந அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி ” என்று தான்
தன்னை கார்ய வஸ்துக்களாக மாற்ற நினைப்பதால், ”அபிந்ன நிமித்த உபாதான காரணம் பிரஹ்ம”
என்கிற சாஸ்திர வசனத்தின்படி உபாதாந காரணமாகவும் அவரே ஆகிறார்.

தண்ட, சக்ரம் போலே பிரஹ்மம் தன்னிடத்தேயான பிரக்ருதி, காலம், ஜ்ஞானம், சக்தி இவைகளைக் கொண்டே படைப்பதால் ,
சககாரி காரணமும் பிரஹ்மமே என்று தேறுகிறது.

”ஸதேவ ஸோம்ய ஏகமேவ அக்ர ஆஸீத், அத்விதீயம் ”

ஸத்தாகவே இருந்தது, ஒன்றாகவே இருந்தது, இரண்டாவது இல்லை என்றால்

1. ஸதேவ = உள்ளத்திலிருந்து உள்ளது வந்தது (ஸத் கார்ய வாதம்) அன்றி இல்லத்திலிருந்து உள்ளது வர (அஸத் கார்ய வாதம்) இல்லை ‘
2. ஏகமேவ = நாம ரூபம் இல்லாது ஒன்றே என்று சொல்லும்படியாக ஸூக்ஷ்ம தசையில் இருந்த சேதநா சேதன விஸிஷ்ட காரண பிரஹ்மம் அதுவே
3. அதுவிதீயம் = ஸ்தூல தசையிலான சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மமாயித்து, இரணடாவது இல்லை.
வஸ்து இரண்டாவது இல்லை என்ற பொருள் அல்ல. காரண பிரஹ்மமே காரிய பிரஹ்மம் ஆனபடியால் இரண்டாவது இல்லை என்கிறது.

சைஸவம், பால்யம், யௌவனம் , யுவா, குமார விருத்த என்று ஒருவருக்கு பல அவஸ்தை உண்டு போலே,
பிரஹ்மத்தின் சரீரமான சித்தசித் பிரகிருதி பிராகிருதங்களாக விகாரமடைகிறதே ஒழிய,
ஆத்மாவுக்குப் போலே பிரஹ்மத்துக்கும் எந்தவித விகாரமும் ஏற்படுவது இல்லை . பிரஹ்மம் நிர்விகாரம்

”தத்வமஸி ஸ்வேத கேதோ” = தது + த்வம் +அஸி .

விட்டு (ஜகல்) இலக்கணம்
விடாத (அஜகல் ) இலக்கணம்
விட்டு விடா (ஜகாலஜகல்) இலக்கணம்

விசேஷணத்தை (அடைமொழி) விட்டு விசேஷ்யத்தை (அடைகொளியைப் ) பார்ப்பது விட்டிலக்கணம் .
சேர்த்துப் பார்ப்பது விடாவிலக்கணம்.

தது = த்வம் அஸி
விசிஷ்ட பிரஹ்மமே = ஸ்வேதகேதோ, உனக்கு அந்தராத்மாவான பிரஹ்மம் ஆகிறது.

ஸூக்ஷ்ம சேதநாசேதன விசிஷ்டமாய் பிரஹ்மம் இருக்கிறபடியால் அது உபாதான காரணம் ஆகிறது.
கார்ய ரூபமாக விகாரம் அடையக் கூடிய வஸ்து உபாதான வஸ்து . மண் குடமாவதற்கு இடையில் பல நிலைகள் உள்ளன.
மண்ணைப் பிசைந்து உருட்டி, சக்கரத்தில் இட்டு சுழற்றி வாயும் வயிறுமாகப் பிடித்தால் குடம் உண்டாகும் .
இப்படியான அடுத்தடுத்த நிலைகளின் (நியத) முன் நிலை, அதன் அதன் உபாதானப் பொருள் ஆகும்.

சங்கல்ப விசிஷ்ட பிரஹ்மமாய் இருக்கிறபடியால் அதுவே நிமித்த காரணம் ஆகிறது.
காரணப் பொருளை கார்யப் பொருளாக யார் பரிணமிக்கச் செய்கிறாரோ அவர் நிமித்தம்.
தான் மாறாமல் தன்னோடு கூடிய சேதநாசேதனங்களை மாற்றமடையச் செய்கிறபடியால்.

காலம் , ஜ்ஞான, சக்தியாதிகளுக்கு அந்தர்யாமி பிரஹ்மம்மாய் இருக்கிறபடியால் சககாரி காரணமும் அதுவே ஆகிறது.
கார்ய உத்பத்தியில் உதவி செப்பவை ஸஹகாரி.

இப்படியாகப் படைப்பவர் நாராயணன் என்று சொல்லலாம். அதுதான் எப்படி? என்றால் :

கஸ்ய த்யேய:? காரணம்து த்யேய:

உள்ளது காரணமா? இல்லது காரணமா? உள்ளது காரணம் என்றால் ”ஸத் ” காரணம். ‘ஸதேவ ஸோம மக்ரம் ஆஸீத்”.

ஜ்ஞானம் உள்ளது காரணமா? ஜ்ஞானம் அற்றது காரணமா? ஜ்ஞானம் உள்ளது காரணம் என்றால் ‘
‘ஆத்மா ” காரணம். ”ஆத்மா வா இதம் ஆக்ர ஆஸீத் ”

சிறியது காரணமா? பெரியது காரணமா? பெரியது காரணம் என்றால், ”உள்ளதாய் ,
” ஜ்ஞானம் உள்ளதாய்” இருக்கிற ”பிரஹ்மம் ” காரணம். ஆகும்.

அந்த பிரஹ்மம் நாராயணனே என்றது எந்த நியாயத்தாலே?

1. ஸர்வ சாகா பிரத்யயம் நியாயம். – பூர்வ பாகத்தில், பல சாகைகளில் பலபடி சொல்லப்பட்ட
ஒன்றை சமன்வயப் படுத்தி பொருள் கொள்ளல்.

2. ஸகல வேதாந்த பிரத்யயம் நியாயம். – பல பல உபநிஷத்துக்களில் சொன்ன விஷயத்தை ஒன்றுக்கொன்று
முரண்படாமல் பொருள் கூறல். ஸத் , ஆத்மா , பிரஹ்மம் என்று வெவ்வேறு சொல்லால் குறிப்பிட்ட பிரஹ்மத்தை ,
வேதாந்தங்களில் பூர்ணமாக பிரஹ்மத்தைப் பற்றி சொன்னதுக்கு முரண் படாமல் இன்னது அன்று அறுதி இடல்.

3. சாமான்ய விசேஷ நியாயம். – பொதுவாக சொன்னவைகளை விசேஷித்து சொன்னதனோடு சேர்த்துப் படித்தல்.
அதாவது, ஸத்; ஆத்மா; என்கிற சாமான்ய சப்தங்களை , பிரம்மா; சிவன்; இந்திரன் என்று விசேஷித்துச் சொன்ன சப்தங்களோடு சேர்ப்பது.

4.சாக-பசுந் நியாயம். – பசுவைக் (4 கால்மிருகம்) கொண்டு யாகம் செய் என்று சாஸ்திரம் சொல்ல,
எந்த நாலுகால் பசு? என்ற விசாரம் வந்தது. அதற்கு சாஸ்திரம் சாக-பசு என்று விசேஷித்து
”வெள்ளாட்டைக்” கொண்டு யாகம் செய் என்று நிர்தேசித்தது.

சப்தங்களுக்கு பொருள் இரண்டு வகையில் சொல்லலாம்.
ஒன்று யோகம்.= சப்த சேர்க்கை.
இரண்டாவது ரூடி = பிரசித்த வழக்கு.
பங்கஜ -; தாமரை. நாய்க்குடை, ஆம்பல், அல்லி எல்லாம் தாமரையை போலவே நீர் அளரில் தோன்றினாலும்,
ரூடி அர்த்தம் தாமரை என்பதே.

வேதாந்தத்தில் பிரம்மா, சிவன், இந்திரன், ருத்ரன், ஹிரண்யகர்பன், நாராயணன் என்று பல படி சொல்லி இருப்பதால்,
இவர்களில் காரண பிரஹ்மம் யார் என்ற விசாரம் வந்தது. இந்த சப்தங்களின் ரூடி அர்த்தத்தை மாற்ற முடியாது.
யோக அர்த்தத்தைக் கொண்டு மற்றவர்களின் பெயர்களை நாராயணனுக்கு பொருந்த விட வழி உள்ளது போல்
மற்றவர்களின் பெயருக்கு நாராயணன் என்பதும் அர்த்தமாகச் சொல்ல வழி இல்லை. காரணம்:

பூர்வ பததாது ஸம்க்ஞா: அக: என்ற பாணினி சூத்திரத்தின் படி
நாரா: + அயன = நாராயன என்பதற்கு பதிலாக நாராயண என்றாகும் என்கிறார்.
அதாவது ஒருசொல் ”ர ” வில் முடிந்து அடுத்த சொல் ”க ” வில் தொடங்காவிடில், ”ன ” என்பது ”ண ” என்று மாறி,
விசேஷித்து ஒருத்தரை மட்டுமே குறிக்கும் என்பது வியாகரணம்.

ஆதலால் யோகிகப் பொருள் கொண்டு ”நாராயணன் ‘ என்ற சொல்லை, இந்திரன், சிவன், ருத்ரன் பிரம்மன்
இவர்களுக்கு பொருந்த விட முடியாதோ , என்றால், ‘ண ” த்வம் ஒரு தேவதா விசேஷத்தைத்தான் குறிக்கும்
என்பது பாணினி சூத்திரத்தின் விதி.
அவர்கள் எல்லாம் ”ஸ்ரஷ்டம் ” என்பது பிரசித்தமும் கூட.
எனவே ”ஸத் ” ஆத்மா ” பிரஹ்மம் ” என்ற நாமங்கள் நாராயணனை மட்டுமே குறிக்கும்
ஆதலால், நாராயணனே ஸ்ருஷ்டி கர்த்தா, பர பிரஹ்மம் என்பது கரதலாமலகமாய் விளங்குமன்றோ?

பிரகிருதி காரணமா? என்றால் அதுக்கு உபாதான காரணத்வம் சொல்லப் போனாலும்,
நிமித்த காரணம் சொல்லப் போகாது , ஜ்ஞானம் இல்லையாதலால்.

சாந்தோக்கியத்தில் ஸத், ஆகாச, பிராண, சப்தங்களைச் சொல்லி ஜகத் காரணம் என்றது..
வாஜஸநேயத்தில் பிரஹ்ம்ம சப்தம் சொல்லி காரணத்வம் கூறப்பட்டது.

ஸகல வேதாந்த பிரத்யய நியாயத்தைக் கொண்டு சாமான்ய சப்தங்களை பிரஹ்மத்தினிடத்தில் சேர்க்க வேண்டும்.
பிரஹ்ம சப்தத்தை சாக-பசுந் நியாயத்தாலே ஒரு தேவதா விசேஷத்தில் சேர்க்க வேண்டும்.
அந்த பிரஹ்மம் எது என்று கேள்வி எழ, தைத்ரீய உபநிஷத்தின் படி ஆத்ம சப்தத்திலே சேர்க்க வேண்டும்.

அந்த ஆத்மா யார் என்ற கேள்வி வர, ஸ்ருதிகளில் சொல்லப்பட்ட இந்திரனா?
அல்லது அவரைப் போல பிரசித்தமாய் இருக்கிற அக்நியா? உபாஸ்ய விஷயமான ஸூர்யனா?
அல்லது ஸோமந் தான் பிரஹ்மமா? குபேரனா? வருணனா? எமனா? என்ற சந்தேகம் எழ,
கர்ம வஸ்யராய் படைப்புக்கு உள்ளாகி, பரிமித ஐஸ்வர்ய தேவதைகளாகவும், பிரம்மாவினுடைய ஆயுஸ்
காலத்துக்குள்ளாக அழிவராகவும் இருக்கும் பக்ஷத்தில், அவர்களுக்கு பிரஹ்மத்துவம் சித்திக்க வழி உண்டோ? இல்லையே.

ஸ்வேதஸ்வேதா உபநிஷத்தில் ”சிவவஸ்ச காரணன் ” என்று சொல்லப் பட்டு இருக்கிறதே ?
அவர்தான் பிரஹ்மமோ? அதர்வ சிகையிலே சம்புவை காரணம் , சர்வத்துக்கும் ஆத்மா என்கிறதே?
தைத்ரீய உபநிஷத்தில் ஹிரண்யகர்பர்க்கு இதே காரணத்வம் சொல்லப் பட்டிருக்கிறதே? என்றால்
ஸாமான்ய-விசேஷ நியாயத்தாலே ஸம்பு, சிவன், ருத்ர வாச்யர்களை , ஹிரண்யகர்பர் என்கிற
பிரம்மாவிடத்திலே சேர்க்க வேணுமாகும் . காரணம் – சிவன், சம்பு என்று சொல்லப் படுகிற ருத்ரன்,
பிரம்மாவினுடைய கோபத்தால் புருவ நெறிப்பின் நடுவில் இருந்து பிறந்தான் என்றும்,
கபாலித்தவம் பவிஷ்யத்தலாகிற பாபங்கள் அவருக்கு புராணங்களில் படிக்கிற படியால்.

மஹோபநிஷது , நாராயண உபநிஷது , ஸுபாலோபநிஷது , மைத்ராயணி, புருஷ ஸூக்தம் ,
நாராயண அநுவாகம் , அந்தர்யாமி பிராஹ்மணம் இத்யாதிகளில்
பரம காரணத்வம்
ஸர்வ ஸப்த வாச்யத்வம்
மோக்ஷ பிரதத்வம்
ஸர்வ ஸரீரகத்வம்
நாராயணனுக்கே என்கிறபடியால், பிரம்மாவுக்குண்டான ஸ்வயம்பூ , ஹிரண்யகர்ப, பிரஜாபதி சப்தங்கள்
நாராயணிடத்தே பர்யவசானமாக , சாக – பசுந் நியாயத்தாலே நாராயணனே காரண பிரஹ்மம் என்று இறுதியாகத் தேறுகிறது.

அந்தராதித்ய வித்யா பிரகாரணத்தில் , சூர்ய மண்டல மத்திய வர்த்தி பர்க்க: = சிவன் என்று இருப்பதால்,
நாராயண பரத்வம் ஏற்பல்ல என்கிற வாதம் வந்ததாகில் அதற்கு சமாதானம் :

ஹர : சிவ: பர்க: சிவனைக் குறித்தாலும், தது ஸவிதுஹு வரேண்யம் பர்க: என்று இருப்பதால்,
தது – வரேண்யம் என்று ”நபும்ஸஹ ” லிங்கத்தோடே வருகிற பர்க: சப்தத்தையும்,
அது புல்லிங்க மானாலும், ”ஹார்ஷ பிரயோகமாக”, நபும்ஸக லிங்கமாகவே கொள்ள வேண்டும்.
அப்படி ”அ ”காரத்தில் முடிவதை ”ஸ ” காரமாகக் கொண்டால் , ”உயர்ந்த ஒளி ” என்றுதான் பொருள் படும்,
”சிவன் ” என்று அர்த்தம் வராது. ஆக அந்தராதித்ய வித்யா பிரகரணத்தில் சிவ தியானம் சொன்னதாக ஆகாது.
என்றால் நாராயண பரத்வத்துக்கு குறை இல்லை.

இதே போல தகர வித்யா பிரகரணத்தில் ”தஸ்ய பிரகிருதி லீனஸ்ய யப்பரஸ்ய மஹேஸ்வர:” என்று
ஹிருதய மத்தியில் இருக்கிற ஆகாசத்தை விஷ்ணுவாகச் சொல்லி, விஷ்ணுவுக்கு அந்தராத்மாவான சிவனை
தியானம் பண்ண வேண்டும் என்கிறது என்பர்.
”வி சோக:” என்பதற்கு சிவன் என்று கொள்ளாமல் அஷ்ட குணங்களில் உள்ள ”வி சோக:” என்கிற குணமாகக் கொண்டு,
அந்தராத்மாவான நாராயணனுடைய குணங்களை உபாசிப்பாய் என்றே கொள்ள வேண்டும்.
ஆக அந்த விதத்திலும் நாராயண பரத்வத்துக்குக் குறை இல்லை.

ஸப்ரஹ்மா ஸசிவஸ் ஸேந்திர ஸோ அக்ஷரப் பரம ஸ்வராட்| —
அந்த பரமாத்மாவே சிவன், இந்திரன், அக்ஷரம் அனைத்துமே என்கிறது விஷ்ணு ஸூக்தம்.
அவனே கல்யாண குணாத்மகனாய் , பிரகிருதி புருஷர்களோடு கூடியவராய், அவர்களைக் காட்டிலும் வேறு பட்டவராய்
இருக்கிற நாராயணன். அவரே ஜகத் காரணம் . மற்ற தேவதைகளின் பெயர்கள் ஜகத் காரண விஷயத்தில் ,
சரீராத்ம சம்பந்தத்தாலே அவை அனைத்தும் நாராயணனையே சொன்னதாக அமையும். காரணம்:

ப்ரஹ்மாச நாராயண: சிவச்ச நாராயண: என்று நாராயண உபநிஷத்திலும்;
முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று ஆழ்வாரும் சொல்லி இருக்கிறபடியால்
சரீராத்ம பாவம் அவருக்கே பிரஸித்தம் .
மேலும் ”நீராய் நிலனாய் ..சீரார் சுடர்கள் இரண்டாய், சிவனாய் அயனானாய் (திருவாயமொழி-6-9-1) என்று
சாமான்யதிகரணத்தில் ( முதல் வேற்றுமை உறுப்பில்) படித்ததும் சரீராத்ம சம்பந்தத்தைக் கொண்டே எனலாம்.

—————————————————————————————————————————————–

ஆத்மா – பரமாத்மா = இருவருக்கும் ஜ்ஞானம் பொது.
சேதனன் – பரம சேதனன்
தத்வம் – பரதத்வம் / பர பிருஹ்மம்
பிருஹ்மம் என்று சொல்ல தகுதி படைத்தவர் ஒருவரே. அவரே பர பிருஹ்மம் ஸ்ரீமந் நாராயணன்.
அவரே அகில ஜகத்துக்கும் மூன்று வித காரணமாயும் இருக்கிறார். ஆனால் தான் விகாரமடைவதில்லை.
தன்னோடு கூடி இருக்கிற சேதநா சேதனங்கள் நிலை பெருத்தலும் நீக்கலும் உடையன.
ஸ்தூல சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மம் ஸூக்ஷ்ம சேதநா சேதன விசிஷ்ட காரண பிருஹ்மமாய்
இருக்கையை நிலை பெருத்தலும் நீக்கலும் ஆகும்.
எதுபோல என்றால், 25 வயது கட்டிளங் காளை 60 வயது முதியவர் ஆகும்போது
அவருடைய சரீர கத மாற்றங்கள் ஆத்மாவை பாதியாது போலத்தான்

அங்கனாகில், ஆத்மா இந்த உடலோடு கூடி இருக்கும்போது, படுகிற இன்ப துன்பங்கள் ,
சேதநா சேதன விசிஷ்ட பிருஹ்மத்துக்கும் உண்டோ என்னில்? கிடையாது.

ஸம்ஸார பத்தமான ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களாகிற ஸ்வபாவ விகாரம் உண்டே ஒழிய,
ஸ்வரூப விகாரம் கிடையாது. இவை அனைத்தும் கர்மத்தால் வருவன. தோஷ பூயிஷ்டம்..

மாறாக பரமாத்மா விஷயத்தில், ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டுமே கிடையாது,
காரணம் அவருக்குச் சரீரமான சேதநா சேதனங்கள் அவருடன் கூடியிருப்பது அவருடைய சங்கல்பத்தாலே யாகி குண கோடியிலே சேரும்.

ஆனால், முக்த ஆத்மாவுக்கு பரமாத்மாவைப் போலே ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டும் கிடையாது,
அங்கு சென்றதும் கர்மம் தொலைந்து, ஸாரூப ஸாயுஜ்யம் பெறுவதாலே .

அத்துவைதிகள் பிருஹ்மம் ஒன்றே சத்தியம் . ஜகத்து கானல் நீரைப் போலே பொய்த் தோற்றம்.
ஆத்மாக்கள் பலவாக தோற்றுவது மாயை. அந்த மாயை எப்படிப் பட்டது என்றால், அநிர்வசனீயம்.
பிருஹ்மம் அவித்தையால் மறைக்கப்பட்டு, ஒன்றை பலவாக பிரமிக்கிறது. (அபேத ஸ்ருதி) வாக்கிய ஜன்ய (தத்வமஸி)
வாக்கியார்த்த (ஐக்கிய) ஜ்ஞானத்தாலே, அவித்தையாகிற திரை விலகி,
பிரஹ்மமே மோக்ஷம் அடைகிறது என்பது அவர்களுடைய மதம்.

பிரக்ருதி பிராக்ருதங்களுக்கு ஸ்வரூப, ஸ்பாவ விகாரம் இரண்டும் உண்டு.
பத்த ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் கிடையாது. ஸ்வபாவ விகாரம் மட்டும் உண்டு.
தத்வம் எல்லாம் ஒன்று என்றால், இப்படியான தோஷங்கள் பிருஹம்மத்துக்கும் வந்து சேரும் அல்லவா?
என்கிற விசிஷ்டாத்வைத வாதத்துக்கு எதிர்வாதம் :

நேஹ நாநாஸ்தி கிஞ்சந …பல என்பது இல்லை. பல என்று படித்தால் சம்ஸாரம் சித்திக்கும் என்பதும்
சாத்திர வசனம் தானே இது போன்ற ஆக்ஷேபங்கள் வருமே? என்றால்

போக்தா போக்கியம் பிரேரிதாம் ச மத்வா க்ஷரம் பிரதானம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மாநா ஈஷதே தேவ ஏக: என்று
பேத ஸ்ருதிகள் தத்வங்களை மூன்றாகப் பிரிக்கின்றன.

யஸ்ய ஆத்மா சரீரம், யஆத்மா நவேத யஸ்ய பிருதிவி சரீரம், யம்பிருதிவி நவேத என்கிற
அந்தர்யாமி ப்ராஹ்மணங்களில் சொல்லப் பட்ட கடக வாக்கியங்களை முக்கியமாகக் கொண்டு,
அத்துவைத -துவைத மத சங்கடங்களைப் பரிகரிக்கலாவது.

ஸஜாதீய பேதம் = ஒரே ஜாதியில் வெவ்வேறு வகை = மா, பலா என்று மரங்களிலேயே வேறு வகை.
விஜாதீய பேதம் = வேறு ஜாதி வேறு பொருள் = மலை, மரம் என்கிற இரு வேறு ஜாதி
ஸ்வகத பேதம் = ஒரு வகையில், வேறு வேறு பிரிவு, பாகங்கள் = மரம், கிளை, பூ, காய், பழம் என்பன.

சங்கரர் இந்த மூன்றுவித பேதங்களும் பிரஹ்மத்துக்குக் கிடையாது என்கிறார். அதாவது

பிரஹ்மம் ஜ்ஞான முடைத்து. சஜாதீயமான (ஜ்ஞான வாச்சயமான) ஆத்மா தனிப்பட இல்லை யாதலால் ஸஜாதிய பேதமில்லை.

ஜடப் பொருள்களுக்கு ஜ்ஞானமில்லை. ஜெகன் மித்யா வாதத்தால் விஜாதீயமான பேதமும் இல்லை.

ஜ்ஞான முடைய பிரஹ்மத்துக்கு, குணங்கள் இல்லை யாதலால் , ஸ்வகத பேதமும் இல்லை என்பர்,

ஆத்மா, பிரக்ருதி , குணங்கள் மூன்றும் பிரஹ்மத்தைப் போலே சத்தியம், நித்தியம் அனந்தம் ஆகையால் ,
ராமானுஜ ஸம்பிரதாயத்தில் திரிவித பேதமும் ஒப்புக் கொள்ளப் படுகின்றன.

இந்த மூறு பேதமும் கிடையாது என்கிற அத்துவைதிகள் , சரீர கத தோஷம் ஆத்மாவுக்கு உண்டு போல் ,
அந்தர்யாமி பிரம்மத்துக்கும் சேதநா சேதன விகாரங்கள் வாராதோ என்று ஆக்ஷேபிக்க , அதற்கு உத்தரம் என்ன வென்றால் :

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா , அபகத பாப்மா – என்று வியாப்பியம் சொன்ன விடத்தில்,
வியாப்பிய கத தோஷமும் தட்டாதவர் என்கிற வாக்கியங்களும் சேர்த்தே படிக்கிற படியால்,
அமலன், விமலன், நின்மலன் நீதி வானவன் – என்றார் திருப்பாணாழ்வாரும்.

யோகபத்யம் அனுக்கிருஹ கார்யம். விஷம ஸ்ருஷ்டிக்கு ( படைக்கப் பட்டவைகளுள் ஏற்ற தாழ்வுக்கு)
அவரவர் கர்மா காரணமே ஒழிய, பிரஹ்மம் காரணமன்று.
வீட்டை பண்ணி விளையாடும், விமலன் ..(நாச்சியார் திருமொழி) என்றபடியால்
பிரஹ்மத்துக்கு வைஷம்ய நைர்கிருண்ய தோஷம் இல்லை என்பது ஆண்டாள் திருவாக்கும் கூட .

படைப்பாளி பிருஹ்மம் நாராயணன் என்று தேறின பிறகு

கர்திருத்வ (செய்ப்பவர்)
காரயித்வ (செய்விப்பவர்)
நியந்திருத்தவ (உள்ளிருந்து நடத்துபவராய்)
பிரகாசயித்தவ (பிரகாசப் படுத்துவராய் )
அநுமந்திருத்வ (ஜீவ சுவாதந்ரியத்தைக் கொண்டு செய்யப் புகுகிற காரியங்களில் அனுமதிப்பிரதானம் பண்ணி )
சககாரித்தவ (கர்மானுசாரமாய் மேன்மேலும் பிரவர்திப்பித்து)
உதாசீனத்தவம் (சாஸ்த்ர வஸ்யத்தை இன்றி புறம்பே போகும் போது தடுக்கவும் தடுக்காமல் ,
ஆதரிக்கவும் செய்யாமல் திருந்துவான் என்று உதாசீனவது ஆசீனம் – நித்ய, நிரவதிக, நிருபாதிக, நிர்ஹேதுக கிருபை காரணம் )

இவை அனைத்தும் நாராயணனுக்கே குறைவின்றிப் பொருந்தும்.

ஆதார-ஆதேயத்வம்.
விதாதா-விதேயத்வம்.
சேஷி-சேஷத்வம்.

என்று சரீரத்துக்கும் ஆத்மாவுக்குமான தொடர்பு போல,
ஆத்மாவுக்கும் (சரீரம்) பரமாத்மா (ஈஸ்வரன்) வுக்குமான தொடர்பு இவையாகும்.

அந்த ஈஸ்வரன் விபுவாக (எங்கும் நீக்கமற நிறைந்து) இருக்கிறார். இப்படி அவர் வியாபிப்பதுவும் மூன்று படியாலே .

ஸ்வரூப வியாப்தி.
விக்ரக வியாப்தி
தர்ம பூத ஜ்ஞானத்தாலே வியாப்தி.

ஆத்மா அணுவாகையால், தர்ம பூத ஜ்ஞான வியாப்தி தவிர்ந்த மற்ற இரண்டும் கிடையாது.

ஈஸ்வரன் அனந்தன் . அதாவது அந்த மற்றவன்.

கால அபரிச்சினன் (நித்யமானபடியாலே)
தேச அபரிச்சினன் (எங்கும் வியாபித்திருக்கிற படியாலே )
வஸ்து அபரிச்சினன் (ஸமஸ்த வஸ்துக்களும் அவருக்கு சரீரமான படியாலே ).

சத்யத்வம்
நித்யத்வம்
ஆனந்தத்வம்
அமலத்வம்

இவை அவருக்கு ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஸ்ருஷ்டி உபஹிருதங்களான ஸர்வக்ஜ்ஞத்வம்
சர்வ சக்தித்வம் நிரூபித ஸ்வரூப குணங்கள்.

சௌலப்யம்
சௌசீல்யம்
வாத்சல்யம் இத்யாதி ஆச்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்.

காருண்யம் முதலியன ரக்ஷணத்துக்கு உபயோகியான குணங்கள்.

அந்த ஈஸ்வரன் அண்டங்களை படைப்பதற்கு ஸமஷ்டி ஸ்ருஷ்டி என்று பெயர்..
பிறகு சதுர்முக பிரம்மா, தக்ஷ பிரஜாபதி இவர்களுக்கு அந்தர்யாமியாக இருந்து வியஷ்டி ஸ்ருஷ்டிகளைத்த தொடங்குகிறார்.
தான் விஷ்ணுவாக அவதரித்து காலம், மனுவாதிகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ரக்ஷணத் தொழிலைச் செய்கிறார்.
ருத்ரன், மிருத்யு தேவதைகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ஸம்ஹாரத் தொழிலைச் செய்கிறார்.
ஆக, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்தும் இவரே செய்கிறார்.

இப்படியான ஈஸ்வரனின் நிலைகள் ஐந்து. இதை

விண்மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய், கடல் சேர்ப்பாய் , மண்மீதுழல்வாய், இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் (திருவாய்மொழி -6-9-5)
பாட்டு கேட்குமிடம்; கூப்பீடு கேட்குமிடம், குதித்த விடம் , வளைத்த விடம் , ஊட்டுமிடம் என்று ஆழ்வார்களில்
நம்மாழ்வாரும், ஆச்சாரியர்களில் பிள்ளை லோகாச்சாரியரும் பேசியுள்ளனர்.

பர – பரம பதத்தில் இருப்பு. – பரபிருஹ்மம் , பர வாசுதேவனான ஸ்ரீமந் நாராயணனாய் ஸர்வ லோக மஹேஸ்வரனாய் இருக்கும் இருப்பு.

வியூகம் – திருப்பாற்கடல் சயன வியூக வாசுதேவன் தன்னை நான்காக வகுத்துக் கொண்டு முத்தொழிலும் நடாத்துகின்ற கார்ய வைகுண்டம் வாசம்..

வியூக வாசுதேவன் -ஷாட்குண பூர்ணன் -கேசவன் சக்ரதாரி தங்க வர்ணம் ; நாராயணன் சங்கம் கருநீல வர்ணம் ; மாதவன் கதை மணியின் வர்ணம் ;
ஸங்கர்ஷணன் – ஜ்ஞான, பலம் – ஸம்ஹாரம் – கோவிந்தன் சார்ங்கம் நிலாவின் ஒளி ;
விஷ்ணு கலப்பை தாமரை மகரந்த வர்ணம் ; மதுசூதனன் கல் உலக்கை செந்தாமரை வர்ணம்;
பிரத்யுமனன் – ஐஸ்வர்ய, வீர்யம் – ஸ்ருஷ்டி- திருவிக்ரமன் வாள் நெருப்பு வர்ணம் ;
வாமனன் வஜ்ராயுதம் உதய சூர்ய வர்ணம் ; ஸ்ரீதரன் கோடாரி வெண்டாமரை வர்ணம்;
அநிருத்தன் – சக்தி, தேஜஸ் – ஸ்திதி – ஹிருஷீகேசன் மின்னல் வர்ணம் இரும்பு உலக்கை ;
பத்மநாபன் – சூரிய ரஷ்மி வர்ணம் பஞ்சாயுதம் ; தாமோதரன் இந்திரகோப வர்ணம் (பட்டாம்பூச்சி வர்ணம்) பாசக்கயிறு பிடித்திருப்பார்.

விபவம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள் .
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் ராமனாய் தாமோதரனாய் கற்கியுமானான் .
தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகளில் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் ! இமையோர் தலைவா ! – என்று ஆழ்வார் காட்டினபடி.

முக்கியாவதாரம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள். இவர்கள் மட்டுமே உபாசிக்கத் தக்கவர்கள். மற்ற.அநுபாஸ்யங்களான கௌணாவதாரத்தில்
ஸ்வரூப ஆவேசாவதாரம் – பரசுராம, பலராமர்கள்
சக்தி (அம்ச) ஆவேசாவதாரம் – பிரம்மா, ருத்ரன், மரீசி, வியாசர் இவர்கள்.

1. நம்முடையது பிறப்பு. அவனுடையது அவதாரம். நம் பிறப்பு கர்மத்தால். அவன் அவதாரம் தன் இச்சையால் (ஸ்வ சங்கல்ப்பத்தால்).
2. நாம் பிறந்து சிரமப் படுகிறோம். அவன் அவதரித்து மேன்மை அடைகிறான். ஸௌ ஸ்ரேயான் பவதி ஜாயமான:
3. நம்முடையது பாஞ்ச பௌதிக தேகம். (பிறந்த இடத்தும்) அவனுடையது அபிராக்ருத திருமேனி.
4. தர்மம் செய்து மேன்மை அடைய நம் பிறவி. நலிவுற்ற தர்மத்தை உத்தரிக்க அவன் அவதாரம்.
5. கர்மம் கழிய வேண்டி நாம் பிறக்கிறோம் . அதர்மத்தை அழித்து, ஸாதுக்களை ரக்ஷிப்பது பகவதவதார பிரயோஜனம்.
6. நாம் பிறவாதிருக்க வேண்டி அவன் பிறக்கிறான்

அந்தர்யாமி – ஹார்த்த ரூபியான – தகராகாஸ வாசி. தன்னை அநாதரிப்பவர்களையும் ஆதரித்துப் போருகிற இடம்.
இவனுடைய ஸ்வர்க்க நரகாதி யானத்திலும் விடாதே பற்றி இருக்கும் நிலை. உடன் கேடனாய் இருக்குமிடத்தும்,
தோஷ அஸம்ஸ்பிருஷ்ட்டனாய். ரிஷி யோகிகளுக்கும் பிரத்யக்ஷம்.

அர்ச்சை .- திருவாளன் திருப்பதிகள் தோறும் விக்ரக ரூபத்தில் எழுந்தருளி இருத்தல்.
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று கிருஹார்ச்சையாய் சந்நிதி பண்ணி அபூர்ணனைப் போலேயும்
அசகத்தனைப் போலேயும் இட்டது கொண்டு நிறைவு அடைபவனாய் ரக்ஷணம் பண்ணி போருமவன்.

ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வானமாமலை , திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம் திருவேங்கடம் நைமிசாரண்யம் புஷ்கரம் பத்ரிநாத் முக்திநாத்.

தெய்வ
சித்த
மநுஷ்யர்களால்
ஏறி அருளப் பெற்ற க்ஷேத்ரங்கள் என அர்ச்சாவதார க்ஷேத்ரங்கள் நான்கு வகை.

பகவத் விபவ அவதார காலங்களிலும் ஆராதிக்கப் பெற்ற பெரிய பெருமாள், ராமப்பிரியன் போன்று
பெருமை உடைய அவதாரம் அர்ச்சாவதாரம். ஸர்வம் பூர்ணம் ஸஹோம் என்று பிரபத்திக்கு உகந்தவிடம் அர்ச்சாவதாரம் .
ஆழ்வார்களும், பகவத் ராமானுஜரும் பிரபத்தி பண்ணித்து அர்ச்சையிலே .

இந்த 5 நிலைகளிலும் ” அகலகில்லேன் இறையும் என்று லக்ஷ்மி விசிஷ்டனாகவே அவன் கோயில் கொள்கிறான் என்பது
வேத, இதிஹாச, புராண, ஆழ்வார் பாசுரங்களில் பிரசித்தம்.
ஆக, இது ஒரு மிதுன ஸம்பிரதாயமாய் ஏகாயான மதம் நிரசிக்கப் பட்டது .

—————————————————————————–

கடிகாசலம் என்கிற சோள சிம்ம புரம் தொட்டையாச்சார் ஸ்வாமியின் சிஷ்யர்
ஸ்ரீநிவாஸ குரு சாதித்த பால போத கிரந்தம் ”யதீந்திர மத தீபிகா” என்கிற இந்த நூல்,
பகவத் அவதாரங்கள் 10 போலே , ஆழ்வார்கள் அவதாரங்கள் 10 போலேயும் 10 அவதாரங்களைக் கொண்டது.
அவை பிரமாணங்கள் விஷயமான 3ம் + பிரமேயங்கள் விஷயமான 7 மாக 10 அவதாரங்கள். அவையாவன:

பிரத்யக்ஷ பிரமாணம்.
அனுமானப் பிரமாணம்,
சப்த பிரமாணம்
என்ற மூன்று.

அடுத்து பிரமேயத்துக்கான 7ல் திரவியம் 6 + அதிரவ்யம் 1. திரயங்களில் ஜடம் 4 + அஜெடம் 2.

பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்; (பராக்)
சுத்த சத்வமாகிற பரம பதம் (பராக்) 4ம் ஜடம்.

ஜீவாத்மா; (பிரத்யக்)
பரமாத்மா (பிரத்யக்) 2ம் அஜடம்.

லக்ஷ்மி லக்ஷியா அனயா தேவி. பூ நீளா தேவிகளோடு சேர்ந்து நம் குற்றங்களைப் பொறுப்பிக்குமவள் அவளே.
ஜீவாத்மாவுக்கு ஒரு மிதுனமே உத்தேச்யம். பகவான் உபாயமும், பிராப்பியமுமாய் இருக்க,.
பிராட்டி புருஷகார பூதை மற்றும் கைங்கர்ய பிரதி சம்மந்தியுமாவள். அவளை பற்றித்தான் பகவானைப் பற்ற வேண்டும்.
புருஷம் கரோதி இதி புருஷகார: நம்மை அருளாலே திருத்தி, அவனை அழகால் திருத்தும்,
பிராட்டியை முதலில் பற்றுவதற்குக் காரணம், உபாய அத்யாவசாயம் பலிக்கவே.
இவளுடைய அருளாலே அவனுடைய ஸ்வாதந்திரியம் மடிந்தால், தலை எடுக்கும் குணங்கள் :
நீரிலே நெருப்பு கிளருமா போலே ,
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம். கார்யம் செய்யுமென்று துணிக்கைக்கு ஸ்வாமித்வம் .
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீலயம் . கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்.
விரோதியைப் போக்கி தன்னை கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்.

அஸ்ய ஈஸானா ஜகத: விஷ்ணு பத்நி என்று அவள் நமக்கு சேஷியாய், விஷ்ணுவுக்கு பத்நியாய் , பிரதம கிங்கரியாய் விளங்குமவள்.

இந்த விஷயத்தில் ஒரு யோஜனா பேதம் உண்டு. பிராட்டியை பிருஹ்ம கோடியிலே சேர்ப்பதா? சேஷ கோடியிலே சேர்ப்பதா ? என்பதே அது.
விசிஷ்ட அத்வைதம் என்று பிரஹ்ம ஏக வாதமாய் இருக்க, பிராட்டியை ஆத்ம கோடியில் இல்லாது பிரஹ்ம கோடியில் சேர்த்தால்,
விசிஷ்ட துவைத்த சம்பிரதமாக வன்றோ தேறும்? என்பது தென்னாசார்ய பக்ஷம்.

நம் விஷயத்தில் அவளுக்கான ஆகாரத் திரயம் :(லோகாசார்ய பக்ஷம்)

புருஷகாரத்வம்.
சேஷித்வம்.
பிராபியத்வம்.
ஸ்வரூபதயா அணுத்வம்.
பகவத்விக்ரக வியாப்திதயா விபுத்வம் ஸம்பாவிதம்.

அவளுக்கு உபாயத்வம் இல்லை என்பதாம். உபாயத்வம் ஸ்வதந்திரனான பரமாத்மாவுக்கே அசாதாரணம்.
பிராட்டி உட்பட அனிதரர்கள் அவனுக்கு பரதந்திரப் பட்டவர்கள் என்பது கொண்டு.

தேசிக பக்ஷம்:

புருஷகாரத்வம்.
உபாயத்வம்.
பிராபியத்வம் .
ஸ்வரூபத்தாலேயே விபுத்வம் வியவஸ்திதம்.

—————————————————————————————–

இனி பத்தாவது அவதாரம் அ திரவ்யம்.

சம்யோக ரஹிதம் அதிரவ்யம். (Dimensionless-non object ) அதாவது அதிரவ்யங்கள் ஒன்றோடு ஒன்று சேர இயலாதன.

குணங்கள் ஒன்றொடு ஒன்று சேர இயலாது. ஆனால் அவை ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம்.
அதாவது ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய குணங்கள் ஒன்றோடு ஒன்று சேராது
ஆனால் அவை சரீரமாகிய ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம். குணம் சரீரத்தை ஆஸ்ரயித்து இருக்கலாம்.
குணம் குணத்தை ஆஸ்ரயித்து இருக்கலாகாது.

அவஸ்தாஸ்ரயம் (மாறுதலுக்கு உட்படுவது) திரவ்யம் = உபாதானம்.

அ-திரவியங்களாவன :

ஸத்வம் = உண்மை அறிவாய், சுகமாய் லாகவமாய் அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. மோக்ஷ ஹேது .
அதுவும் இரண்டு வகை.
1. சுத்த ஸத்வம் = ரஜஸ் தமஸ் ரஹித விருத்தி (ரஜஸ் தமஸ் இல்லாத ஆஸ்ரயம்).
அவைதான் பரம பதமும் , பகவத் திவ்ய மங்கள விக்கிரகமும்.
2. மிஸ்ர ஸத்வம் = ரஜஸ் தமஸ் சகசாரி . பிரகிருதி, பிராகிருத்தங்கள்.

ரஜஸ் = அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. உலக விஷயங்களில் விருப்பம், ஆசை, பேராசை செயல்பாடு இவைகளுக்கு காரணம்.
ஸ்வர்க்க, பித்ரு லோக பிறப்பிக்குமதாய், அல்ப, அஸ்திர, ஆமுஷ்கிக பல, துக்க ஹேது .
மாறாக, பகவத் விஷயத்திலான விருப்பம், ஆசை, பேராசை, செயல் பாடு சத்வ குண பிராசர்யத்தால் வருவது.

தமஸ் = மறதி , மயக்கம், சோம்பல், தூக்கம், கவனக் குறைவு இவைகளுக்கு காரணமாகிறது. அஜ்ஞான ரூப, நரக ஹேது.

இம்மூன்றும் பிரளய தசையில் சமமாய் இருக்க , சிருஷ்டியின் போது வி சமமாய் (ஆகவே தான் ஸ்ருஷ்டி விஷம சிருஷ்டி யாகிறது?).
உபயுக்த மாகின்றன. ஸ்ருஷ்டி ரஜோ குண கார்யம். சம்ஹாரம் தமோகுண கார்யம். ரக்ஷணம் ஸத்வ குண கார்யம் .
பகவானுக்கு முக்குணங்கள் உண்டா என்றால் இல்லை. லீலார்த்தமாக, தன் இச்சையால் அவைகளை அவலம்பித்து கார்யம் செய்வார்.

ஸப்த = காற்றின் உதவியால் காதால் உணரப் படுவது. பஞ்ச பூதத்தால் ஆனது.
இதுதானும் வர்ணாத்மகம். அவரணாத்மகம் என இரண்டு வகை.
உயிர் எழுத்து (13), மெய்யெழுத்து (18), உயிர்மெய்எழுத்து (216) அனைத்தும் வர்ணாத்மகம்.
இவை மனுஷ்ய, தேவ உதட்டசைவுகளால் ஏற்படுவன.
மற்ற ஒலி வடிவங்கள் (பட்சிகளின் சப்தம், வாத்தியங்களின் சப்தம் இவை) அவர்ணாத்மகம் .

விஜாதீயமாய் பரமபதத்தில் உணரப்படிகிற சப்த ரூப ரஸ கந்தம் இங்கு சொல்லப் பட்டவைகளைக் காட்டிலும்
விலக்ஷணமானவை.வேறுபட்டவை.

பிரணவத்தின் உள்ள அகாரம் , சப்தங்களுக்கு உபாதானமாய் சொல்லப்படுவதால்,
சப்தம் அதிரவ்யம் என்பது பொருந்தாதே என்னில் , ”அ ” என்பது விஷ்ணுவைக் குறிக்குமாதலால்,
எப்படி விஷ்ணு ஜகத்துக்கு உபாதான காரணமோ, அதுபோல் சப்த ராசிகளுக்கு அகாரம் உபாதான காரணம் என்று
கொள்வதும் ஒளபசாரிகமாய் ஒழிய வஸ்துதா இல்லை.

ஸ்பர்ச = தொடு உணர்ச்சியால் அறியப் படுவது. வெப்பம், குளிர்த்தி, இரண்டும் அற்ற தன்மை என மூன்று வகையாக உணரப்படும்.
தண்ணீர் குளிர்த்தி. நெருப்பில் இருப்பது வெப்பம். நிலம், காற்று இவைகளில் இரண்டும் அற்ற தன்மையைப் பார்க்கலாம்.
இந்த ஸ்வபாவ குணங்கள் அவையவை நெருப்போடு சம்பந்தப் படும்போது மாறலாம்.
ஆனால் அவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். நெருப்போடு சம்பந்தப் பட்டால்
”பாகஜம்” என்றும், மற்ற நிலை ”பாகஜ அபேதம் ” என்றும் பிரிக்கலாம். உ.ம். அமிர்தம், பஞ்சு நெருப்பு, கல்லு, பசு இவை.

ரூப = நிறம், பளபளப்பு எனப்படுகிற அதிரவ்யம் ரூபம். அத்தை கண்களால் மட்டுமே உணர முடியும் .
மஞ்சளான அக்ஷதையை கண்ணால் பார்த்தும் , கைகளாகிற தொடு உணர்ச்சியாலும் அறியலாம்.
ஆனால் அதன் மஞ்சள் நிறத்தை கண்களால் மட்டுமே கிரஹிக்க முடியும். துவக் இந்திரியத்தால் ஆகாது.
எனவே ரூபம் கண்களுக்கு மட்டுமே விஷயம்.
நிறங்களில், வெண்மை, சிகப்பு, மஞ்சள், கறுப்பு என்று நால்வகை வர்ண பேதம் பார்க்கப் படுகின்றன.
பாஸ்வரம் =ஒளிவிடக் கூடிய (நெருப்பில் உள்ள சிகப்பு)
ஆபாஸ்வரம் = ஒளிவிடாத (ஜெபா குசுமாம் ) என்று நிறங்களை வேறு விதமாவும் பிரிக்கலாம்.

ரஸ = வாயிலுள்ள நுனி நாக்கால் உணரப்படும் சுவைகள் 6 – இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கரிப்பு , காரம்.
அடியார்களுக்கு ஆறு சுவை அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்கிற ஷட் ரஸமாகும்

கந்தம் = மூக்காகிற இந்திரியத்தினால் உணரப்படுவது. பூ, சந்தனம் இவைகளில் உள்ள நறுமணம்,
மல, மூத்திராதிகளில் உள்ள துர்நாற்றம் என்று இரண்டு வகை.
காற்று, ஜலம் இவைகளுக்கு இயற்கையில் மணம் இல்லாவிட்டாலும், ‘
‘கந்தவது பிரிதிவி ” என்ற வகையில் பூமியில் இருந்து உண்டாகும் பூக்களின் மகரந்த சேர்க்கையால்
காற்றுக்கும், ஏலம், கிராம்பு போன்றவைகளின் சேர்க்கையால் ஜலத்துக்கும் மணம் பாக பேதத்தால் சம்பாவிதம்.

ஆகாசம் – சப்தம் – காது
நெருப்பு – ரூபம் – கண் –
காற்று – ஸ்பர்சம் – தொடு உணர்சி
நீர் – சுவை – நாக்கு
நிலம் – மணம் – மூக்கு.

பஞ்சிகரணத்தால் எல்லாவற்றிலும் எல்லா குணங்களும் இருக்குமானால் , பிரதானமான குணங்கள் இவை.
பாகம் படும்போது மற்றைய குணங்கள் வெளிப்படுவது உண்டானாலும் அது நேரம் போகப் போக பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
இரும்பு கொதிக்கிறது என்றால், காய்ச்சும் போது கடின பதார்த்தம் திரவம் போல் ஆனாலும்,
உஷ்ணம் நீங்கும் போது மீண்டும் கெட்டிப் படும் என்பது இயற்கை.

ஸம்யோகம் – கூட்டறவுக்கான புரிதல் ஸம்யோகம். உ.ம். மேசை மேல் புத்தகம் இருக்கும் போது
புத்தகத்தின் ஒரு பகுதியும் மேசையின் குறிப்பிட்ட பகுதியும் சம்பந்தப் பட்டிருக்கும்.
அப்படியான மேசையின் ”மேல் ” புத்தகத்துக்கான சம்பந்தத்தை ” மேல்” என்கிற புரிதலால் அறிகிறோம். அந்த அறிவு ஸம்யோகம்.

கார்ய ச சயோகம் – இரண்டு ஆடுகள் முட்டிக் கொள்ளும்போது அதன் தலைக்கான சம்பந்தம்.
மரக் கிளையின் மேல் கிளி வந்து உட்காருதலால் ஏற்படுகிற சம்பந்தம். கையில் புத்தகத்தை எடுக்கும் போது உண்டாகும் சம்பந்தம் இவை.

கையோக ச சயோகம் – கையில் புத்தகம் இருக்க, உடலுக்கும் புத்தகத்துக்குமான சம்பந்தம்.
இது கையோகத்தில் அடக்கமாதலால், அதிவாதமாய் மறுக்கப் படுகிறது.
அதே கையில் உள்ள புத்தகத்தை கீழே வைத்து விட்டால் ஏற்படும் எதிர் நிலை விபாகச விபாகம் என்பர் தாரிக்கிகர் .
இதுவும் மறுக்கப் படுகிறது. இத்தை சையோகச அபாவத்தில் அடக்கிவிட முடியுமாதலால்.

ஆகார்யச சையோகம் – இரண்டு விபு தத்வங்களுக்கான சம்பந்தம். பிரஹ்மமும் காலமும் சம்பந்தப் பட்டிருத்தல்.
பிரஹ்மமும் பிரகிருதியும் சேர்ந்து இருத்தல்.

சக்தி.- நெருப்புக்கு சுடுதலாகிற தன்மையை எது செய்கிறதோ அதை சக்தி என்கிறோம்.
அதேபோல் எல்லாப் பொருட்களுக்கும் அதனதன் தன்மையை நிர்வகிக்கும் அதிரவ்யம் ”சத்தி” எனப்படும்.
காந்தமும்-இரும்பும் போலே . மந்த்ரம், மருந்து, இவைகளால் கட்டி இடாதபோது வெளிப்படுமது .

பரா அஸ்ய சக்திஹி விவிதைஸ்ச ஸ்ரூயதே — என்று சொல்லப்பட்ட விஷ்ணு சக்தி அதுவாகும்.
அது இந்திரியங்களுக்கு கோசரம் இல்லை.

தார்க்கிகள் சொல்லும் மேலும் 14 விதமான குணங்கள் தனித்து சொல்லாமல் மேல் சொன்ன 10 அதிரவ்யங்க ளுக்குள்ளேயே
அடக்கிவிடலாம் என்பது ராமானுஜ பக்ஷம்.

புத்தி, இச்சை சுகம் துக்கம் த்வேஷம் யத்தனம் இந்த 6ம் ஜ்ஞானத்தின் வெளிப்பாடு ஆகையால்
தனிப்பட்ட சொல்ல வேண்டியதில்லை ஜீவனுடைய ஜ்ஞாத்துக்குள் அந்தர்கதம் .

தர்ம அதர்மமௌ பாப புண்யௌ ஈஸ்வ்ர ப்ரீதி கோபௌ என தர்ம அதர்மங்களை ஈஸ்வர ஜ்ஞானத்துள் படிக்கலாம்.

சம்ஸ்காரம் எனப்படும் பாவனை, வேகம் , ஸ்திதி ஸ்தாபனம் (எத்தனைப் பிரயத்னப் பட்டாலும்
அதன் முன் நிலைக்கே திரும்புவது, நாய் வால் போலே ) மூன்றும் ஜ்ஞான விபாகமாகவும்,
வஸ்து ஸ்வரூபமாகவும், சையோகத்து க்குள்ளாகவும் சேர்த்து விடலாம்.

விபாகம் (பிரிவு) பிரதத்வம் (தனிமை) இரண்டும் அப் பாவ நிலையாய், சையோகத்துக்குள் அடங்கும்.

சங்கியா (எண்ணிக்கை), பரிமாண (மாறுதல்), திரவத்வ (நீரான தன்மெய்), ஸ்நேஹானாம் (பிசு பிசுப்பு)
இவை வஸ்து ஸ்வபாவமாய், தனிப்பட சொல்ல வேண்டியதில்லை.

குருத்வம் (எடை கூடிய நிலை) சக்தி- அதிரவ்யத்துக்குள் அடக்கி விடலாம். ஆக அதிரவ்யங்கள் 24 (அ ) 38 இல்லை 10 மட்டுமே.

சத்வ, ரஜஸ் , தமோ குணங்கள் பிரகிருதி சம்பந்தப் பட்டது. ஆத்மாவுக்கு இல்லை.
ஆனால் சரீரத்துக்குள்ளான ஆத்மாவுடைய தர்மபூத ஜ்ஞானம் முக்குணங்களால் மறைக்கப் படுவதால்
ஆத்மாவை அவை பாதிப்பதாக சொல்லப் படுகிறது.

சாத்விக ஜ்ஞானம் , சாத்விக காலம் என்கிற வழக்கு உபசார வழக்கே. உண்மையில் சரீரத்தில் சாத்விக தாதுக்கள்
மேலோங்கின காலத்து ஜ்ஞானம், சாத்விக வஸ்து பரிமித காலம் என்று கொண்டு ஒளபசாரிகமாக கொள்ளவேண்டும்.

ஆகாசம் – சப்தம்
நெருப்பு – ரூபம் + சப்தம்
காற்று – ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நீர் – சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நிலம் – மணம் + சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
என கலசி இருக்கும்.

சுத்த சத்வம் திரிபாத் விபூதியிலும் அதனை வளர்த்துக் கொடுக்கும் பகவானி டத்திலுமாய் இருக்கும் .

சையோக சக்தி கீழ்ச் சொன்ன
பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்;
சுத்த சத்வமாகிற பரம பதம்
ஜீவாத்மா;
பரமாத்மாவாகிற
6 திரவ்யங்களில் இருக்கும்.

ஆத்யாத்கமி சாஸ்திரமான இதில் தத்வ ஹித புருஷார்த்தங்கள் சொல்லப்பட்டதும் இப்புடைகளாலே :

பிரகிருதி, ஜீவ பர பரிச்சேதம் சொல்லு முகேண தத்துவமும்; புத்தி பரிச்சேத முகேண ஹிதமும் (பக்தி, பிரபத்தி முதலான உபாயமும் ) ;
நித்ய விபூதி, ஈஸ்வர பரிச்சேத முகேண புருஷார்த்தமும்
(நித்ய விபூதியைப் பிராபிக்கை பிராப்தி என்றும் ஈஸ்வர கைங்கர்யம் பிராப்தி பலம் என்றும்) விளக்கப்பட்டன.

தத்வம் ஏகம் என்று சூரிகளும் ; அதுவே
ஆத்மா (ஜீவ, பரர்கள்) அநாத்மாவாய் (பிரகிருதி) இரண்டு என்று ரிஷிகளும்
போக்யம், போக்தா பிரேரிதா என்று மூன்றாய் ஸ்ருதியிலும் ;
ஹேயம் (சரீரம்), தஸ்ய நிவர்த்தகம் (கழிய வழி ) உபாதேயம் (கொள்ளத்தக்கது )
தஸ்ய உபாயம் ( அதை அடைய வழி) என நான்காய் இதர ஆசாரியர்களும் ;
பிராப்பியம், பிராப்தா, உபாயம், பலம், விரோதி என் அர்த்த பஞ்சகமாய் அஸ்மத் ஆசாரியர்களும்
அத்தோடு ஜீவா-பர சம்பந்தம் சேர்த்து தத்துவங்கள் ஆறு என்று சொல்பவரும் உண்டு.

எப்படிச் சொன்னாலும், சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் ஏக மேவ என்பதே வேதாந்தத்தின் முடிவு..
அதையே வேத வியாசரும் தன்னுடைய பிரஹ்ம சூத்திரத்தில் பிரஹ்ம ஜகத் காரணத்வத்தை முதல் இரண்டு அத்தியாயத்திலும்,
அத்தை அடைய உபாயம் பக்தியே என்று 3வது அத்யாயத்திலும், பிரஹ்ம சாயுஜ்யமாகிற முக்தியை 4வது அத்தியாயத்திலும்
காட்டியதான அந்த பிரஹ்மம் ஸ்ரீமந் நாராயணனே தத்வம் என்பது விசிஷ்டாத்வைதிகளின் தர்சனமாகும் .

அற நூல் அளித்த அறிவின் வழி யாத்த
மறை நூல் ”யதிபதி போதநல் — நிறை கொள்
விளக்கம்” திருவளர் சீனிவாச மா குருநாம்
ஆள வகுத்த தொழுகு

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரானும் –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியும்–

October 10, 2021

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –1–

இப் பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படி-
1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்
2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி
3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி
4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்
5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த
6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த
7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்
8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்
9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்
10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்
11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்
12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்
13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்
14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்
15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்
16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

—————-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் .

ஸ்ரீயப்பதியாகிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனிடத்தில் நாம் கொள்ளும் அடிமைத்திறம்
முதல் பருவத்தின் நிலை, பிரதமபர்வ நிலை என்றும், ஆசாரியர் திறத்தில் கொண்ட
கடைப்பருவத்தின் நிலை சரமபர்வை நிஷ்டை என்று கூறப்படும்.

இரத்தினத்தின் சிறப்பை உணர உணர, அதனைக் கொடுத்த வள்ளலிடம் மதிப்பு உயர்வது போல,
எம்பெருமானுடைய பெருமையை உணர, உணர,
அவனுக்கு நம்மை ஆளாக்கின ஆசாரியன் திறந்து மதிப்பு ஏறி, அவனுக்கு ஆட்படுதல் இயல்பு.

நிர்ஹேதுமுகமாக, எம்பெருமான், மாதவனால் மயர்வற மதினலம் அருளப்பட்ட ஆழ்வார்கள் அருளிச்செய்த
திவ்யப்பிரபந்தங்கள் எம்பெருமானுடைய புகழைக் கொண்டவைகளாக இருப்பினும்
அவற்றின் சாரமான திரண்ட பொருள் “சரமபர்வ நிஷ்டை என்பதேயாகும்.
அதாவது ஆச்சாரியர் திறத்தில் கொண்ட அடிமைத்திறமேயாகும் .
“ மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சினுள் நிறுத்தினான்”- —
தேவுமற்றறியன் என்று மதுர கவிகள் அருளிச் செய்ததும்,
நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை (பெரிய திருமொழி 8.10.3) என்று
திருமங்கையாழ்வார் அருளிச்செய்ததும் இவ்விடம் நோக்கத்தக்கது.

ஆசார்ய அபிமான நிஷ்டன் பகவானை அறவே விட்டவனாக மாட்டான்.
ஆசார்யானது வழிபாட்டிலேயே, எம்பெருமானும் வழிபட்டவன் ஆகின்றான்.
இதை அறுதியிட்டே எம்பெருமானாகிய இராமானுஜரை வழிபட்டனர் முன்னோர்கள் .
இராமானுஜ நூற்றாந்தாதியின் “இருப்பிடம் வைகுந்தம் “ எனும் 106 வைத்து பாசுரம்
இதை மிக அழகாக உணர்த்துகிறது .
இத்தகைய அரிய இராமானுஜ நூற்றந்தாதி,
‘ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்’ என்ற கருத்தினை அழகாக உணர்த்துகிறது.

ஆக, எம்பெருமானாரை பற்றுவதே பிரபத்தி.
“ ராமானுஜ “ எனும் சதுரா க்ஷரியே திருமந்திரம்.
அவரது திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம், என்று
நடாதூரம்மாள் அருளிச் செய்தது, இவ்விடம் நோக்கத் தக்கது.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருப்பதே நமக்கு கிட்டிய பெரும் பேறு.

மெய்யான தவம் சரணாகதி. அத்தையுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர்கள் அனைவருடைய பாபங்களை பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து வரம் பெற்றுள்ளமையால்,
அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது. அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பத்தை முன்னிட்டு
பிரபன்னர்களாகி வினையினின்றும் விடுபடுகின்றோம் .
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப்படுகிறார்.
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி . அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.

எவனொருவன் புத்தி கெட்டவனாய் , காமத்தினால் பீடிக்கப்பட்டவனாய் இருப்பினும்,
“ ராமனுஜாய நமஹ என்னும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லி புகுந்தால்,
பகவானைக் சார்ந்தவர்களான யோகியர், எந்த மோஷத்தைப் பெறுவதற்காக ஒதுகின்றனரோ ,
அந்த மோக்ஷத்தை அடைகிறான்.–

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூமன்னு மாது ;; பெரிய பிராட்டி.
பொருந்திய மார்பன் ;; பெரிய பெருமாள்
புகழ் மலிந்த பா ;; திருவாய்மொழி
பாமன்னு மாறன் ; வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன், நம்மாழ்வார்.
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் .’ பகவத் ராமானுஜர்.
மேற்படி ஐந்தும் பஞ்சாம்ருதம் போன்று திருவரங்கத்து அமுதனாரால்
இராமானுஜ நூற்றந்தாதியில் முதல் பாசுரமாக விளக்கப்பட்டுள்ளது .

எம்பெருமானுக்கே உரியவன் நான் என்பது தத்வ ஞானம். எனக்கெற்புடைய வழி,
சித்தோபாயமான எம்பெருமானே என்னும் உணர்வு , ஹித ஞானம்.
அத்தகைய வழியால் பெறப்படும் பேறு, அனுபவித்தற்குரிய கல்யான குணங்களையுடைய எம்பெருமானே என்று அறிந்து
உணர்வு அடையும் ஞானம் ‘புருஷார்த்தம் ஆகும்.
இவ்வாறு தத்வ, ஹித, புருஷார்த்த ஞானம் முதிர்ந்த நிலையில், இம்மூன்றும் ஆழ்வாரே என்று உணர்ந்தவர் எம்பெருமானார்.
அவர் திருவடிகளே அடையவேண்டியதே நமக்கு ப்ராப்யம் ஆகும்.

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

பெரிய பெருமாளாம், ஸ்ரீ ரங்கநாதனுடைய பாதாரவிந்தங்களிலே சரணாகதி பண்ணுவதற்கு இட்டுப்பிறந்த மனுஷ்ய பிறவியைப் பற்றியும்,
அவன் திருவடிகளில் நெஞ்சு கொள்ளாத மனிதரை விட்டு நீங்கி, குறையலூர் பிரானாகிய திருமங்கையாழ்வாரிடம், அடிபணிந்த இராமானுஜரின்
சீல குணத்தையே தம் நெஞ்சு ஆட்கொண்டதைக் கூறுகிறார்.
அத்தகைய செயலுக்கு தம் நெஞ்சுக்கு அடிபணிந்ததாக சொல்கிறார் இரண்டாம் பாசுரத்தில்.

பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –

எம்பெருமானைப் பற்றுதல் ஞானத்தின் முதிர்ந்த நிலை.
அவ்வளவல்லாது எம்பெருமானார் அடியார்களவும் பற்றுதல் ஞானத்தின் முதிர்ச்சிக்கு எல்லை நிலமாகும்.
அப்படியான உயர்ந்த நிலையில் தம்மை வைத்துள்ளார் எம்பெருமானார் என்று அமுதனார் வியக்கிறார் நான்காம் பாசுரத்தில்.

எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே -5 –

அறிவிலா மாந்தர் உலகில் காணும் செல்வத்தை யன்றி மற்றொன்றைச் செல்வமாக கொள்ளார்.
ஒருக்கால் மனக் குற்றம் சிறிது மாறி சாஸ்திரத்தின் பொருளாகிய ஸர்வேஸ்வரனைச் செல்வமாக ஏற்றுக் கொண்டாலும்,
சாஸ்திரத்தின் உட்பொருளாகிய ‘ஆசார்யனை செல்வமாக இசையவே மாட்டார்கள்.
காரணம் அவர்கள் பகவத் ப்ரசாதத்தால் மனக் குற்றம் நீங்கப்பெறாமையே.
புலமை மற்றும் போதாது. பகவானுடைய அனுக்ரஹமும் வேண்டும், சாஸ்திரத்தின் உட்பொருள் அறிவதற்கு.
அதை உணர்ந்த அமுதனார் , எனக்குற்ற செல்வம் ராமானுஜர் என்கிறார்.

இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும்கீர்த்து மொழிந்திடவே – 6 –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –

முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே. ஆதலின் அவரே வேதத்தின் உட்பொருள்.
அவரைப்பற்றி இருத்தலே வேத மார்கம்.
மற்றவர்களையும் அங்ஙனம் பற்றி நிற்கச் செய்வதே, வேதமார்க்கத்தை பிரதிஷ்டாபனம் செய்தல்.
ஆகவே, “ஸ்ரீமத் பிரதிஷ்டாபனச்சார்யார் : என்னும் விருது எம்பெருமானாரையே சாரும்.
அத்தகைய பெருங்குணம் வாய்ந்த இராமானுஜர், தம்மை இப்புவியில் ஒரு பொருளாக ஆக்கியதையும்,
அவரையே தனக்குற்ற செல்வமாகக் கொண்டதையும் தெரிவிக்கிறார்.

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-

பரபக்தியாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடும் போது மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு.
பரஞானமானது அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் சாஷாத்காரம், நேரடியான தோற்றம்.
பரம பக்தியாவது ஷண காலமும் பிரிவை சஹிக்கமாட்டாது, அனுபவித்தே ஆகவேண்டிய முதிர்ந்த பேரன்பு.
இதுவே ஞானமேன்னும் நிறை விளக்கு என்கிறார் 9ம் பாசுரத்தில்.

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-

திருக்கோவலூரில் பெரிய பிராட்டியுடன் கூட ஆயனார் எனும் எம்பெருமானைக் காட்டிக்கொடுத்த மூன்றாம் ஆழ்வார் பேயாழ்வார்.
அன்னவரது திருவடிகளை புகழும் இயல்பினரான எம்பெருமானாரிடத்தில் பக்தியுடையவர்களுடைய திருவடிகளைத்
தலைக்கு அணியாகக் கொள்ளும்படியான செல்வத்தை உடையவர்கள் யாரோ,
அவர்கள்தான் என்றைக்கும் நித்ய ஸ்ரீமான்கள் என்கிறார் அமுதனார், தனது பத்தாம் பாட்டில்..

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11-

சிறப்பு வாய்ந்த நான்கு வகைப்பட்ட வேதங்கள் பரம்பொருளாகிய ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி(ஐஸ்வர்யம்)
இவைகளை உள்ளபடியே விளங்க வைக்கின்றன. இதுவே வேதத்திற்கு உண்டான சீர்மை.
இதுவே சீரிய நான்மறை என்கிறார் அமுதனார்.
ஸ்வரூபம் என்பது பகவானுடைய திவ்யாத்ம தத்துவம்.
ரூபமாவது உடம்பானது.
குணமானது ஆத்ம தத்வத்தைப் பற்றி நிற்கும் ஞானம், சக்தி, கிருபை முதலிய பண்புகளும் ,
சுடருடம்பைப் பற்றி நிற்கும் அழகு, மென்மை , இளமை முதலியவைகளாகும்.
விபூதியாவது, நித்யவிபூதி என்றழைக்கப்படும் பரமபதமும், லீலாவிபூதி என்றழைக்கப்படும் இவ்வுலங்களும் இறைவனது சொத்தாகும்.
வேதத்தின் இவ்வரிய பொருளை திருப்பாணாழ்வார் “அமலனாதிபிரான் “ என்றும் பாசுரத்தில்,
அமலன், விமலன், நின்மலன்,நீதிவானவன் என்று பல சொற்களால் அருளிச் செய்ததைப் போற்றுகிறார் 11ம் பாசுரத்தில்..

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-

ஆழ்வார் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற கீர்த்தியை யுடைய திருமழிசை ஆழ்வாரின் திருக் கமலப் பதங்களையே
பற்றியிருக்கும் எம்பெருமானரின் தாள் பற்றி இருப்பவரின் திருப்பதங்களையே பற்றி இருப்பவர்களை ‘திரு முனிவர்’ என்கிறார்.
அத்தகைய ஞானம் கொண்டவற்கே தாம் அன்பு செய்வதாக அமுதனார் கூறுகிறார்.
அதாவது, எம்பெருமானாரின் அடியவர்க்கு அடியவர்களுக்கே அவர் அன்பு செய்ய விரும்புகிறார். (12)

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் ரங்கத்
தய்யன் கழல்க்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-

காவேரியே விரஜையாறு. ஸ்ரீ ரங்க விமானமே ஸ்ரீ வைகுண்டம். ஸ்ரீ ரங்கநாதனே பரவாசுதேவன்.
ஆக, கண்ணனெதிரே தோன்றும் பரமபதமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதனுக்கு
திருத்துழாய் மாலையும், செந்தமிழ் பாக்களால் ஆன சொல் மாலையும் சமர்ப்பித்து வந்த தொண்டரடிப்பொடியாழ்வார்
திருவடிகளையே ஆச்ரயித்த ராமானுஜர் திருவடிகளே தமக்கு சரண் ஆகும் என்கிறார். (13)

கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசனைச் சொர்விலனே -14 –

ஒரு மாலையில் இடமறிந்து ரத்னங்களைப் பதிப்பது போல ,
குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில் சொற்கள் தக்கவாறு பதிக்கப்பட்டுள்ளன.
அத்தை மனத்தில் கொண்ட எம்பெருமானார் திருவடிகளை பற்றியவரது பாதங்களை தாம் பற்றுவதால்,
கானகத்திலும், மலையிலும், கடல்களிலும் தவம் செய்ய முற்பட வேண்டிய கட்டாயம் தமக்கு இல்லை என்கிறார் அமுதனார். (14 )

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

எம்பெருமானின் அழகை மட்டும் கண்டு, அவனது ரஷிக்கும் ஆற்றலை காணாமையால் உண்டான அச்சத்தில்
விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார் சாதித்தது ‘பல்லாண்டு பல்லாண்டு என்று ‘. இது அஸ்தான பய சங்கை எனப்படும்.
அதாவது, பயமே ஏற்பட வேண்டாத இடத்தில், அன்பு மிகுதியால், என் பெருமானுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயப்படுதல்.
பரம பதத்தில் சாமவேத கோஷ்டி சப்தத்தைக் கண்டு , ஆதிசேஷன் எம்பெருமானுக்கு ஆபத்து வந்ததோ என அஞ்சி சீறுவதுபோல.
அப்படிப்பட்ட பெரியாழ்வாரின் பதம் பணிந்த ராமானுஜரின் பாதம் பணியாத அற்ப மனிதரை சேர மாட்டேன் என்கிறார். (15)

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

ப்ரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்ற பிரமானங்களில் சப்தப் பிரமானத்தில் அடங்கியது மறை எனப்படும் வேதம்.
அத்தகைய தாழ்வொன்றுமில்லாத வேதம் பிற்காலத்தில் தாழ்வு படுத்தப்பட்டது.
பாஹ்யர்களும் , குத்ருஷ்டிகளும் கலி புருஷனுடைய கையாட்கள்.
வேதம் நித்யமன்று என்று கூறி வேதத்தை ஒப்புகிக்கொள்ளாத புற மதத்தவர்கள் . இவர்கள் பாஹ்யர்கள் எனப்படுவர்.
அவ்வாறன்றி, வேதத்தைப் ப்ரமாணமாக ஒப்புக்கொண்டு உட்புகுந்தாலும், அதன் உண்மைப் பொருளை உணராது ,
தமக்குத் தோன்றிய வகையில் விளக்கமளிக்கும் மனிதர் குத்ருஷ்டிகள் எனப்படுவர்.
இவ்விரு திறத்தாரால் மாசு படுத்தப்பட்ட வேதத்தை ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்’ என்பதற்கிணங்க,
மறையைத் தாழ்வு நிலையினின்று ‘ஸ்ரீ பாஷ்யம் ‘ மூலமாக மிக உயர்ந்த நிலைக்கு அளித்தருளியவர் இராமானுஜர் .
ஆண்டாளின் அன்புக்கு பாத்திரமானவர். அவள் கிருபையால் வாழ்கின்ற வள்ளல் ‘திருப்பாவை ஜீயர் என அழைக்கப்படும் இராமானுஜர் .(16)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

வேதமனைத்தும் தன் ஒருவனையே துதிக்கும் நோக்கமுடையவைகளாய் இருத்தல் பற்றி வந்த செருக்கால்,
ஒப்பற்ற மதம் பிடித்த யானையைப் போல் தோற்றமளிக்கிறான் ,
திருக்கண்ணமங்கை என்கிற திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் பத்தராவிப் பெருமாள்.
அவன் திருமங்கையாழ்வாரின் தமிழ்ப் புலமைக்கு அடியவனாகி, ஆவணி ரோஹிணியில் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தான் .
திருமங்கையாழ்வாரும் கார்த்திகை கார்த்திகையில் நம்பிள்ளையாக அவதரித்து திராவிட வேதத்தின் பொருளை
ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து அருளிச்செய்ததாக கூறுவர் பூர்வர்.
அத்தகைய குறையல்பிரானடிக்கீழ் அன்புடைய இராமானுஜரிடம் அடிபணிந்தவர்கள் துயரங்கள் முந்தினும் வருந்தார்.
இன்பங்கள் மொய்த்திடினினும் சந்தோஷப்பட மாட்டார்கள். அவைகள் கர்ம பலன்களாக தாமே வந்து போகின்றது என்று அமைதியாக இருப்பர்,(17)

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

கீதை அருளிச் செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே , திருவாய்மொழி அருளிச் செய்வதற்காகவே அவதரித்தவர் நம்மாழ்வார் .
‘நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய், ஆக, யானே பெரியவன் என்று
நம்மாழ்வார் தன்னைப் பெரியன் என்று கூறுகிறார், பெரிய திருவந்தாதி 75ம் பாசுரத்தில்.
அத்தகைய நம்மாழ்வாரையும் தன் உள்ளத்தே ஆசார்யனாய் கொண்ட மதுர கவிகளை ‘பெரியவர்” என்று கூறுகிறார் அமுதனார்.
எம்பெருமானை தம் உள்ளத்திலே வைத்துக்கொண்டு கொள்ளுதல் எல்லா ஆழ்வார்களுக்குமுண்டான முதல் நிலையாகும்.
ஆனால் ஆசார்யனையே முதலும் இறுதியுமாக வைத்துக்கொள்ளல் மதுரகவியாருக்கே உள்ள சீர்மையாக அமைந்தபடியால்
அவரே ‘பெரியவர்’ ஆகிறார். (18)

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

எப்படி உன் சரீரம் உன் விருப்பத்திற்கேற்ப பயன்பட்டு , தனக்கொரு பயன் கருதாது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ ,
அதுபோல உன் ஆத்மாவை தனக்கு சரீரமாகக் கொண்டுள்ள எம்பெருமானுக்கு,
நீயும் அவன் விருப்பப்படி பயன்பட்டு, உனக்கொரு பயன் கருதாது , அந்த எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை ஊட்டுதல் வேண்டும்
என்கிற ‘அனன்யார்ஹசேஷத்வ’ ஞானத்தை திருவாய்மொழி உணர்த்துகிறது.
நம்மாழ்வாருக்கு ‘திருமாலிருஞ்சோலை என்கிற 98 வது திருவாய்மொழி முடிய பர பக்தியும்,
99 வது திருவாய்மொழியான ‘சூழ் விசும்பும் பணிமுகில் ‘ பரஞானமும்
100 வது திருவாய்மொழியான ‘முனியே நான்முகனே’ பரம பக்தியும் எம்பெருமான் அருளால் விளங்கியதாக பெரியோர் கூறியுள்ளனர் .
அத்தகைய அரிய திருவாய்மொழி எனும் இந்த திவ்ய அமுதத்தை உலகத்திருக்கு தெரியப்படுத்திய
இராமானுஜரே எமக்கு ஆராவமுது என்கிறார் அமுதனார். (19)

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20

நாதமுனிகளுக்கு ‘கண்ணினுந் சிறுத்தாம்பு ‘காட்டியவர் , மதுரகவிகள் வம்சத்திலுதித்த பராங்குச நம்பி என்பவர்.
அத்தைக் கொண்டு ‘ஆராவமுது ‘ ஆகிய நாலாயிர திவ்ய பிரபந்தகளையும் நமக்கு காட்டியவர் ஸ்ரீமத் நாதமுனிகள்.
அதுகொண்டே அருள் கொண்ட நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகுகியவர் இராமானுஜர்.
அதுபற்றியே அவரை சீலங்கொண்ட நாதமுனிகள் என்கிறார் அமுதனார். (20)

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

தான் செய்வதாக நினையாமல்,’ பகவான் என்னைக் கொண்டு தன் பணியை தன் உகப்புக்காகச் செய்து கொள்கிறான்’
என்கிற நினைப்போடு, அதாவது, அஹங்காரக் கலப்பில்லாமல் செய்து கொள்வது ‘சாத்வீகத் தியாகம்’ என்று கூறுவர்.
அத்தகைய மேன்மையான குணம் கொண்டு வாழ்ந்து காட்டியவர் யமுனைத் துறைவன் எனும் ஆளவந்தார் –
அவரை இறைவனென்று போற்றுகிறார்.
அவரைப் பற்றி பற்றிய பின்பு, நான் நீசர்கள் வாசல் நின்று
அவர்களை ‘நிதியை பொழியும் முகிலென்று’ கூறமாட்டேன் என்கிறார். (21)

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போற்றி பணிந்தவர் ராமானுஜர்.
என்றும் அவரை போற்றி பணிந்தவர் தாள்களிலே தாம் அடிபணிவதாக அருளிச்செய்த அமுதனார் 22ம் பாசுரத்தில்.
பாணாசுரனை அழித்த கண்ணனைக் கூறுகிறார்.
அந்த மாய கண்ணனை போற்றும் ரமானுஜனை தனது வைப்பு நிதி என்கிறார்.
“நேர் சரிந்தான், கொடிக் கொழி கொண்டான்” என்றபடி பாணாசுரனை அழித்த கண்ணபிரானின் ‘பரத்வம்’ சொல்லப்படுகிறது.

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

எம்பெருமானார் திருவடிகளில் அந்நயப் ரயோஜனர்களாய் பக்தி பண்ணுபவர்கள்
கூரத்தாழ்வான் , முதலியாண்டான், எம்பார், பிள்ளையுறங்காவில்லிதாசர் , திருக்குருகைப்பிள்ளான் பிரான் போன்றவர்கள்.
அவர்கள், எம்பெருமானாரை ஆபத்து காலத்தில் உதவும் பொருட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள மாநிதியைப் போல வைத்துள்ளனர் .
நல்லன்பர்கள் அங்ஙனம் மனத்தகத்தே வைத்த இராமானுஜன் என்னும் நிதியை
மகா பாபியான நான் வஞ்சித்து வைத்துக் கொள்வது இராமானுஜனுக்கு இழுக்கு உண்டாகாதோ என அமுதனார் அஞ்சுகிறார் . (23)

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

தேன் கூட்டிலே ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதுபோலே, ஒரு ஜீவனின் ஆத்ம தத்வத்தை புண்ய பாபங்கள் எனும்
இரு தீய வினைகள் மொய்த்துக் கொண்டுள்ளன.
அனுபவித்ததாலோ, ப்ராயசித்தத்தினாலோ தொலைந்து ஒழியாதபடியுள்ள இந்த அருவினைகள்,
உடல்தோறும் மூத்து,துன்புற்று களைத்துப் போகின்றன .
நீசச் சமயங்ளை அழித்தொழித்து, மறைகளைக் காக்க அவதரித்த எம்பெருமானாரின் திருவடி சம்பந்தம் தமக்கு கிடைக்கப் பெற்று,
தாம் தீய வினைகளினின்று உயர்ந்தமையைக் கூறுகிறார். (24)

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

தாமே வந்து தன்னை ஆட்கொண்டதால், எம்பெருமானாரது சௌலப்பியமும்,
தமது தாழ்மையையும் கருதாது ஆட்கொண்டமையால் அவரது சௌசீல்யமும்,
நிர்ஹேதுகமாய் கொண்டதால் ஸ்வாமித்யமும்,
கருணை இராமானுஜ என்றதால் கருபையும் , வாத்சல்யமும் எம்பெருமானாரிடம் தோன்றுகிறது.
இக்குணங்கள் தம் அல்லலைத் தீர்த்து , தித்திக்க வைக்கின்றன என்கிறார்.
அவைகளே தமக்கு தாரகமும் , போஷகமும், போக்யமும் ஆகின என்கிறார். (25)

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

பிறப்பாலும், அறிவாலும், நடத்தையாலும் தனக்கு கீழ் பட்டவர்களாக பாகவதர்களை நினைப்பதும் அபசாரமாகும்.
அதுபோல, அவர்களுடைய பெருமைகளை நினையாதிருப்பதும் அபசாரமாகும்.
அதாவது அவர்கள் ஆசார்யனுக்கு சமானவர்கள் என்றும்,
தன்னிலும் , ஈஸ்வரனிலும் அதிகர் என்றும் நினையாதிருப்பதும் அபச்சாரமாக தலைக்கட்டும்
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறே, எம்பெருமானாரைப் பற்றுவதற்கு முன் ஒருவரிடமுள்ள குறை, அறிவினாலோ, பிறப்பினாலோ, நடத்தையினாலோ
உண்டாயிருப்பினும் அதுவே அவரது நலமாகக் கொள்ளப்படும். இவை ஒரு தடையாக இருக்க மாட்டாது.(26)

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

மாசு படிந்த தமது கீழ்மையை நோக்காது, எம்பெருமானாருடைய மேன்மையான குணத்தினால், மஹா பாபியான,
அருவருக்கத் தக்க குணங்களை யுடைய தன் மனஸ்ஸிலேயும் புகுந்தார்.
இது அவரது உயர்ந்த குணத்துக்கு இழுக்கு உண்டாகாதோ என அஞ்சுகிறார் 27ம் பாட்டில்.

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

கம்சன் பால் சீற்றம் கொண்ட கண்ணனையும், நப்பின்னை பால் காதல் கொண்ட கண்ணனையும் நண்ணாதவர்கள் வஞ்சகர்களே.
கண்ணனுக்கு பரதந்திரனான நாம் , நம்மை ஸ்வதந்திரனாக நினைப்பது ஆத்ம அபஹாரம்.
அத்தகையவர்களுக்கு கிட்டமுடியாதவர் இராமானுஜர்.
பிரதம பருவம் என்கிற எம்பெருமானின் அடித் திறத்தையும் அறியாத நான் எதிர்பாராது,
சரம பர்வத்தின் எல்லை நிலமான ஆசார்யரைத் துதிக்கப் பெற்றேன்.
அத்தகைய ஆசார்யரின் குணங்களையொழிய என் வாக்கானது மற்றவரை மறந்தும் துதிக்க மாட்டாது.
இது எனக்கு நேர்ந்த ஆச்சர்யமான வாழ்வு என்கிறார். (28)

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப் பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

திருவாய்மொழியை ஈன்று எடுத்த தாய் சடகோபன். அதனை வளர்த்து , அந்த வளர்ச்சியைக் கண்டு உய்த்தவர் இராமானுஜர்.
கண்ணனைப் பெற்றெடுத்த தேவகியை விட அவனை வளர்த்த யசோதையே இன்பம் அனைத்தும் பெற்றாள்.
அவ்வாறு திருவாய்மொழி என்னும் திராவிட வேதத்தை மறைகளைக் கொண்டு, தெளிவு படுத்திய இராமனுஜரை உள்ளபடி அறிந்திருப்பவர்கள் ,
கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் எழுநூறு சந்நியாசிகள், எழுபத்து நான்கு சிம்மாசனதிபதிகள்,
எண்ணற்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகியோர்.
அவர்களின் திறளான கூட்டங்களை கண்ணால் கண்டு களிக்க வேண்டும் என்கிறார். (29)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

அனாதியான இவ்வுலகத்தில் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு சேஷியாக விளங்குபவன் எம்பெருமானே என்று
அருளிச் செய்த வள்ளல் எம்பெருமானார். அவர் என்னை இன்று அடிமைத்திறமாக கொண்டார்.
இனிமேல் எனக்கு இன்பத்தைத்தரும் பெரு வீடான பரமபதம் கிடைத்தால் என்ன ?
அல்லது துயரத்தைத் தரும் ஸம்ஸாரம் என்னும் நரகம் வாய்த்தால் தான் என்ன என்கிறார். (30)

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

ஆண்டுகள் நாள் திங்களாய், பலவகைப் பிறப்பிலும், இறப்பிலும் இருந்த பிறவிகள் எண்ணிக்கை யில்லை.
இப்படிப்பட்ட நாம், இப்பிறப்பிலே எம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலே அவரை அடைய பெற்றோம்.
அழகிய திருத்தோள்களை உடைய ஸ்வாமியாய், அழகிய திரு அத்தியூரில் எழுந்தருளியுள்ள,
பேரருளாளன், தேவாதி ராஜனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவருமான எம்பெருமானாரை சேர்ந்து
இப்போது நிலைக்கப் பெற்றோம், என்று களிப்புறுகிறார். (31)

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

கலி தோஷத்தினால் துன்புற்ற இந்த ஞாலத்தியுள்ளோரை தன்னுடைய வள்ளல் தனத்தினால் அவதரித்து,
கை தூக்கி விட்டு காப்பற்றியவரும் சரணாகதி என்கிற அரிய தபஸ்ஸை அனுஷ்டிப்பவருமான எம்பெருமானாரையே சேர்பவர்களுக்கு,
தங்கள் தன்மைக் குண்டான மதிப்பும் , பொறுமையும், சாமர்த்தியமும், கீர்த்தியும், நல்ல விலக்ஷணமான அறிவும்,
பக்திச் செல்வமும் தாமாகவே வந்து அடையும். (32)

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

மனம் – சக்கரம், புத்தி – கதை, ஞானம் – நந்தகம், ஸாத்வீக அஹங்காரம்-வில், தாமஸ அஹங்காரம் – சங்கு.
ஆக இவைகள் எம்பெருமானுக்கு ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளன.
பிராட்டியினுடைய சன்னதியில் இந்த திவ்யாயுதங்கள் அழிப்பவனாகவில்லை. காப்பவைகளாகவே உள்ளன.
இவள் இல்லாதபோது ஆயுதங்கள் இராவணனை அழித்தன.
அவள் உள்ளபோது ப்ரம்மாஸ்திரமும் கூட காகத்தை அழிக்கவில்லை. காகம் காக்கப் பெற்றது.
நித்ய ஸூரிகளான இந்த பஞ்சாயுதங்கள், ராமானுஜர் ஆதிசேஷனுடைய ஸாஷாத் அவதாரம் ஆகையினாலே,
அவரது ஆவேச அவதாரமாக வந்து அவதரித்தன இப்பூவுலகில் என்கிறார் 33ம் பாட்டில்.

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

உலகத்திலுள்ளோரை நிலை குலையச் செய்யும் நீசக் கலியை அழித்தத்தினால் எம்பெருமானார் புகழ் ப்ரகாசிக்க வில்லை.
எப்போது அவர் புகழ் பிரகாசித்தது எனில், தாம் எண்ணற்ற பாவங்களை செய்து, அவை சித்திர குப்தனால் புஸ்தங்களாக எழுதப்பட்டு,
அவைகளை ராமானுஜர் , தம்மீது, காரணமில்லாக் கருணை கொண்டு அழித்தபின்னரே, ஏற்பட்டது என்கிறார். (34)

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

தீராத வினைகள் ஏற்பட மூன்று வழியுண்டு.
முதலாவதாக, எம்பெருமான், ஸ்ரீமன் நாராயணனைத் தவிர மற்ற தெய்வங்களைக் கொள்ளுதல்.
‘ஆதிப்பிரான் நிற்க மற்றதெய்வம் நாடுதிறே ‘ என்றபடி.
இரண்டாவது, சேவிக்கத் தகாத மனிதர்களை வேண்டி பொருள் பெற அவர்களை போற்றுதல்.
மூன்றாவது, அழியக்கூடிய சப்தாதி விஷயங்களில் ஈடுபடுதல்.
இவைகள் அருவினை எனப்படும்.
இராமானுஜனை அடைந்த என்னை இந்த அருவினைகள் என்ன செய்யும் என்று கேட்கிறார்.(35)

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அர்ஜுனனை வ்யாஜ்யமாகக் கொண்டு பகவான் கிருஷ்ணன் பெருங்கடலிடையே ரத்தினங்கள் மறைந்து கிடப்பது போல,
வேதமாகிற சமுத்திரத்தில் மறைந்து கிடந்த விலக்ஷணமான வேதார்த்தங்களை ஆராய்ந்து கண்டு அளித்தார், ஸ்ரீமத் பகவத் கீதை மூலமாக.
இப்படி அளித்த பின்னும் உலகத்தவர் தமது அறியாமையினால் இடரின் கண் வீழ்ந்தனர் .
இவர்கள் படும் துன்பத்தை சஹியாதே, எம்பெருமானார் ‘கீதா பாஷ்யம்’ என்ற நூலின் மூலமாக
அரும் பொருளை இலகுவாக அறியும்படி அருளிச் செய்தார் (36).

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் எபெருமானாருடைய நெஞ்சில் ஆழமாக புகுந்து தேங்கிக் கொண்டது.
‘ அஹம் சர்வம் கரிஷ்யாமி ‘என்று சகலவித கைங்கர்யங்களையும் பண்ணி இளைய பெருமாள் இளையாழ்வாராக அவதரித்தவரன்றோ?,
இராமானுஜர். அத்தகைய எம்பெருமானாரின் பாதாரவிந்தகளில் மனம் பொருந்தி, அன்பு கணிந்திருக்கும் மஹானுபவர்கள்
தம்மை எம்பெருமானார்க்கு ஆட்படுத்தினார்கள் என்கிறார் அமுதனார்.
ஆக, தானும் பற்றவில்லை. அவரும் சுவீகரிக்கவில்லை. உடையவருடைய சம்பந்த, சம்பந்திகளே, கொண்டு சேர்த்தார்கள்.
அப்படி இன்று நிலைப்பித்த என்னை, இத்தனை காலம் புற விஷயங்களிலே தள்ளி வைத்தது எக்காரணம் பற்றி என்று
ஆதங்கத்துடன் வினவுகிறார் பின் வரும் இரண்டு பாசுரங்களிலே.(37/38)

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

‘தாயே தந்தையே என்றும் தாரமே கிளைமக்களே’ என்றும் இவற்றையே பெரும் பேறாக எண்ணி,
இதற்கு மேல் மேம்பட்டது வேறு ஒன்று உண்டு என்னும் தெளிவற்ற ஞானமின்றி திரிந்த நமக்கு,
அஞ்ஞானமாகிய இருளை நீக்கியவர் இராமானுஜர்.
அதுமட்டும் இன்றி தம்முடைய கணக்கற்ற கல்யாண குணங்களையே சிந்திக்கத் தக்கதான ஞானத்தையும் அருளினார்.
இவை இராமானுஜர் செய்த ஷேமங்களே என்கிறார்.(39)

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

அறம் , பொருள்,வீடு, காமம், என்கிற நான்கு புருஷார்த்தங்களில்
‘ கண்ணனுக்கே ஆனது காமம்’ என்பது ராமானுஜ முனியின் சித்தாந்தம்.
காமமே முக்கிய புருஷார்த்தம் என்பது அவர் தெளிவு.
அக் காமம் தனக்கு இன்பமாயிருக்கும் என்றோ, கண்ணனுக்கு இன்பமாயிருக்கும் என்றோ, எண்ணலாகாது.
கண்ணனுக்கே இன்பமாயிருக்க வேண்டும்.
அவன் இன்புறுவதைக் காண்பதைத் தவிர, தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதிச் செலுத்தும் காமமே பரம புருஷார்த்தம்.
எம்பெருமானாரும் பக்தி ரூபமான இந்த பகவத் காமத்தின் விஷேஷத்தை ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்துள்ளார் .(40)

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

‘அஜாயமானோ பஹுதோ விஜாயதே’ என்கிறபடி, பிறப்பே இல்லாத எம்பெருமான்,
தேவனாக உபேந்தரனாகவும், மனிதனாக இராமனாகவும், க்ருஷ்ணனாகவும், விலங்கினமாக மீனாகவும், ஆமையாகவும், வராஹமுமாகப் பிறந்தான்.
மக்களைக் காப்பதற்கு பிராட்டியாருடன் ‘மாதவனாக’ பிறந்தும் உலகத்தார் அவனை புரிந்து கொள்ளவில்லை.
அவனையும் தம்மைப் போல ஒரு மனிதன் என்று உலகத்தவர் நினைக்கின்றனர் என்று பகவான் ஸ்ரீ மத் பகவத் கீதையில் கூறியுள்ளார்.
ஆனால் பகவத் ராமானுஜர் அவதரித்த பிறகு, ஸ்ரீ பாஷ்யம் போன்ற க்ரந்தங்களாலே தத்துவ, ஹித, புருஷார்த்தங்கள் விளங்கி,
‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயன் ‘ நாராயணனே பரம்பொருள் என்பதை
உலகத்தார் உள்ளங்கை நெல்லிக்கனி என அறிந்து ஞானம் பெற்றனர். (41)

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –

சேற்றிலே விழுந்தவர்களைக் காக்க முற்படுபவர்கள் சாமர்த்தியம் உடையவர்களாய்,
அச் சேற்றிலே பாய்ந்து அதிலே தத்தளிப்பவர்களை எடுப்பது போல
எம்பெருமானார் , நங்கையர்களின் ஸ்தனமாகிய காமச் சேற்றில் விழுந்தவர்களை தாமே வந்து எடுத்து அருளினார்.
“ போலி அழகில் மயங்கி சேற்றில் விழுந்தாயே, அழகுத் தெய்வமாகிய மாமலராள் காதலுறும் நாயகனுடைய
மெய்யழகிலன்றோ ஈடுபட வேண்டும்” என்று பிள்ளை உறங்கா வில்லி தாசரை எம்பெருமானார் திருத்தி அருளின ரன்றோ?.
அங்ஙனமே அனைத்து உலகத்தவரையும் நாராயணனுக்கு சேஷ பூதராக்கினார். (42)

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

நாராயண நாமம் சொல்லச் சொல்ல அமுதமாக இருக்கிறது.
நம்மாழ்வார் நாமம் ஒருகால் சொன்னாலே, நாவிலே அமுதம் ஊறிக்கொண்டே இருக்கிறது என்றார் மதுரகவி ஆழ்வார்.
ஆனால் இராமானுச நாமமோ, சொல்லத் தொடங்கியவுடனே அமுதனார்க்கு நாவில் அமுதம் பாய்கிறதாம்.
அனாதி காலமாக சப்தாதி விஷங்களிலேயே போந்த உங்களுக்கு ஒரு ஹிதம் சொல்கிறேன்.
ராமானுஜ நாமம் என்கிற திருநாமத்தை சொல்லுங்கோள் .
கைங்கர்யம் சம்பத்தும் , ஸ்வரூப ஞானமும் தன்னடைவிலேயே வந்து சேரும் என்கிறார் 43ம் பாட்டில்.

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

இந்தப் பரந்த உலகில் புருஷார்த்தத்தை தேடி அலைபவர்க்கு இராமானுஜரின் திருநாமமே பரம புருஷார்த்தம் ஆகும் .
இதனை மனதில் கொள்ளாமல், இராமானுச திருநாமத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு
சொல்லாதவர்களின் தன்மையை நினைந்து வருந்துகிறார் 44ம் பாட்டில்.

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

“ ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே” என்று கூரத்தாழ்வானும் எம்பெருமானாரது திருவடிகளையே உபாயமாகப் பற்றினார்.
அவரைப் பற்றி பின்பற்றி , அமுதனாரும், தனக்கு ப்ராப்யம், பிராபகம் இரண்டுமே எம்பெருமானார் திருவடிகளே என்கிறார் 45ம் பாசுரத்தில்.
சரம பர்வத்துக்குண்டான வாசி அறியாதவரக்கே பிரதம பருவம் ப்ராப்யமாகிறது.
அதாவது ஆச்சார்ய அபிமானம் உள்ளவருக்கு, எம்பெருமான் மீது அபிமானமும் இரண்டாம் பக்ஷம் என்கிறபடி.

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –

பௌத்தம், சார்வாஹம், நையாயிகம், ஜைனம், சாங்கியம், யோகம், ஆகிய ஆறு புற சமயத்தினரும் அழியும்படி செய்ய
அவதரித்த இராமானுஜர், நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருவாய்மொழியை கண்டறிந்தவர்.
‘நீசனேன், நிறைவொன்றுமிலேன்” எனும்படி நீசத்தனத்தில் நிகரற்றவனாக உள்ள நானும்,
அருள் புரிவதில் நிகரற்றவறான தேவரீரும் நிலைத்து ஏன் இணைய மாட்டோம், என்கிறார் அமுதனார்.
அவ்வாறு பகவத் விஷயத்துக்கு கூட இடமின்றி, எம்பெருமானார் அமுதனாரது சிந்தையினுள்ளே நிறைந்திருந்தார் என்றபடி. (46)

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

கண்ணாலே காணும்படி தன் ஈஸ்வரத்தன்மை வெளிப்பட, தானே வந்து ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுகிற ஸ்ரீரங்கநாதன் என்பார்
எம்பெருமானார். “ராமோ விக்ரஹவான் தர்ம:” என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்” என்றும்,
அதர்ம வழியிலே போகும் இவ்வுலகத்தாற்கு தர்மோபதேசம் செய்த ராமானுஜரை “ அறம் செப்பும் அண்ணல்” என்கிறார் அமுதனார்.
அத்தகைய பெருமை மிகு எம்பெருமானார் என் சிந்தையில் புகுந்ததினால், எனக்கு நிகர் யாருமில்லை என்று
‘ஸாத்வீக அஹங்காரம்’ தோற்ற கூறுகிறார். (47)

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

“வானவர்க்கு ஈசன் என்றால் தேசமோ திருவேங்கடத்தானுக்கு” என்பது போல்
குற்றமற்றவரை ஏற்பத்தில் அருளுடையொருக்கு சிறப்பில்லை.
குற்றம் நிறைந்தவரை ஏற்றுக்கொள்வதில் தான் அருளுடையோருக்கு சீர்மை.
நான் நீசத்தனத்தில் நிகரற்றவன்.தேவரீர் அருள் புரிவதில் நிகரற்றவர்.
நமது நிகரற்றத் தன்மையில் நம் இருவருக்கும் ஒற்றுமை இருக்கும் போது,
நாம் ஒருவரை விட்டு ஒருவர் அகல தேவையில்லை என்று நைச்சியானந்தம் தோற்றக் கூறுகிறார்.(48)

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –

தென்னரங்கத்தில் வயல்கள் நீரால் விளைவன அல்ல.
அவை தம்மிடத்துத் தோன்றிய தாமரை மலரிலிருந்து பெருகும் தேன் பாய விளைவனவாம்.
அத்தகைய ஸ்ரீரங்கத்தில், ‘அரசருக்கு தம்முடி போல இவருக்கு
தென்னரங்கனின் திருமுடிகள் நினைத்தபோது சூடலாம்படி சொந்தமாயின போலும்.
அவர் அவதரித்ததினால் வைதீக மார்க்கம் செழிப்புற்றது.
புல் விளைய களை அழியுமாப் போல, இவர் அவதரிக்கவும் அறு சமயங்கள் அழிந்தது என்கிறார் 49ம் பாட்டில்.

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

பார்த்தசாரதியின் திருவருளால் அவதரித்த எம்பெருமானார் தமது அடியார்களுக்கு அம்ருதமாகவே உள்ளாராம்.
அத்தகைய இராமானுஜர் தமக்காகவே அவதாரம் செய்தார் என்கிறார் 51ம் பாட்டில்.

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-

அதுமட்டுமன்றி, அதிமானுஷமான செயல்கள் புரிந்து, என்னை ஸ்ரீ ரங்கநாதனின் தாள் பணியச் செய்தார்.
இது இராமானுஜர் செய்யும் அற்புதமே என்கிறார். (52)

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

பிரதான பிரதி தந்திரம் என்பது, பிற மதத்தவரால் ஏற்கப்படாது, நம் மதத்தவரால் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
முக்கிய வேதப் பொருள் எனப்படும். அது சித்,அசித் ஈஸ்வரன் என்கிற தத்வத்ரயமும், சரீர,சரீரி பாவமும் ஆகும்.
இது நற்பொருள் என்றும் அத்தைத் தெரிவித்து உலகத்தவரை தெளிவுபடுத்திய
எம்பெருமானாரை ‘என்னை ஆளவந்த கற்பகம்’ என்கிறார்.(53)

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன. நாரணைக்காட்டிய வேதம் களிப்புற்றது.
‘ நாராயண பர ப்ரம்ஹ தத்வம் நாராயண; பர;, அந்தர் பஹீச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித; என்னும்படி.
இப்படியான பேரெழுச்சி எழுந்ததன் காரணம் பூலோகத்தில் திரண்ட சீல குணமுடையவரான
எம்பெருமனாருடைய ஸ்வபாவத்தைப் பார்த்து, என்கிறார் அமுதனார் 54ம் பாசுரத்தில்.
சிங்கத்தைக் கனவில் கண்டாலும் சாமான்யமான மிருகங்கள் தானே நசித்தொழியும்.
அவற்றைக் கொல்வதற்கு சிங்கம் ஒரு முயற்சியும் செய்ய வேண்டா.
அதுபோல நீசச் சமயங்கள் இராமானுஜரின் இயல்பு கண்டவாறே மாண்டன.

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

‘என் அமுத்தினைக் கண்ட கண்கள்,மற்றொன்றைக் காணாவே’ என்று பாண் பெருமாள் அருளிச்செய்தபடி ,
கண்டவர் சிந்தையை கவருபவன் , கடிபொழில் தென்னரங்கன்.
‘சர்வ கந்த, சர்வ ரஸ’ எனும்படி வேதங்களாலே போற்றப்படும் அரங்கன் இருக்கும் இடம் தொண்டுக்குப் பாங்கான இடம்.
அத்தகைய அரங்கனை வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து,
வேதம் களிப்புறும்படிச் செய்தவர் இராமானுஜர்.
நீர், நிலம், காடு மலை என்று வேறுபாடின்றி மேகமானது மழையைப் பொழிவது போல,
எந்த பயனையும் கருதாது உபகரித்தமையால், இராமானுஜரை ‘கொண்டல்’ என்கிறார்.
அநந்யப் ப்ரயோஜனராய், இவ்வாறு எம்பெருமானரை ஆச்ரயித்தவர்கள் குலமே நம்மை ஆளும் குலம் என்கிறார் 55ம் பாட்டில்.

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

56ம் பாட்டில் எம்பெருமானின் ஆவேச அவதாரமாகிய பரசுராம அவதாரம் கூறப்படுகிறது.
அவரைப் பற்றி போற்றிய இராமானுஜரை புனிதன் என்கிறார்.
அந்தப் புனிதனை அடைந்த பின் என் வாக்கானது வேறெதையும் பேசாது. நெஞ்சும் நினைவில் கொள்ளாது என்கிறார்.

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-

அரங்கன் மலரடிக்கு ஆளுகையே பேறு .
திருவரங்கத்தில் அரங்கன் திருவடிவாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்.
மற்ற புருஷார்த்தங்கள், புருஷார்த்தங்களாக மதிக்கத் தக்கனவல்ல என்று அரங்கனுக்கு ஆளுற்றவர் கருதுகின்றனர்.
இவர்கள் பரமபதநாதனுக்கு ஆளுகையும் பெரிய பேறாக மதிக்கிலர்.

திருவரங்கத்தில் ஈடுபட்டவர்கள், பரமபதத்தையும் விரும்ப மாட்டார்கள் என்பதனை பெரியவாச்சான் பிள்ளை
‘’ ஸ்ரீ ரங்கத்தில் உள்ளவர்கள் ‘பரமபதம் வரில் என் செய்வதென்’ என்று நடுங்குபவர்கள் போலே காணும் ,
அவ்வூரில் வர்த்திக்கின்றவர்கள் ‘ என்று ரசமாக அருளிச் செய்துள்ளார்.

பராசர பட்டர், ஒரு திருமஞ்சனத்தின் போது எம்பெருமான்,
’ பட்டரே, சீக்கிரம் பரமபதம் போக வேண்டுமே என்று அஞ்சினாயோ’ என்று வினவ,
அதற்கு பட்டர், பரமபதம் போக நான் அஞ்சவில்லை. உம்முடைய குளிர்ந்த முகமும், திருநாமத் தழும்பையும்
இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் ‘ என்றாராம்.

அதே போல, ஆளவந்தார் மகன் சொட்டை நம்பியும் ‘ ஸ்ரீ வைகுண்டத்தில் சென்றால், நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம்போல்,
ஸ்ரீ வைகுண்ட நாதனின் முகம் குளிர்ந்ததில்லையாகில், முறித்துக் கொண்டு இங்கு வந்துவிடுவேன்’ அன்று அருளிச் செய்துள்ளார்

அவ்வாறு ஸ்ரீ ரங்கநாதனான மாதவனின் திருவடிகளை உபாயமாகவும், உபேயமாகவும் கொள்ளுமவர், உத்தம அதிகாரி எனப்படுவர்.
தவங்களுள் சிறந்தது சரணாகதி. சரணாகதியைக் கைக் கொண்டும், தம்முடைய உபதேசத்தாலும், நூல்களாலும்
உலகினரை சரணாகதி நெறி ஒழுகச் செய்தும், சரணாகதியை நிலை நிறுத்தின எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பிறகு,
தமது பேதமை விலகியதாக அமுதனார் கூறுகிறார்.(57)

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-

‘’அஹம் ப்ரம்மாஸ்மி, தத்வமஸி “ போன்ற சில வேத வாக்கியங்களை மட்டும் எடுத்துக் கொண்டு
அனைத்தும் பிரம்மம் என்றும் கடைசியில் அனைத்தும் ப்ரம்மத்தில் ஐக்கியமாகி விடுகின்றன என்றும்
சில குத்ருஷ்டிகளின் மாயா வாதத்தை இராமானுஜர் முறியடிக்கா விடில்,
நாராயணனே பரம்பொருள் என்று இவ்வுலகத்தார் அறியாமலே போயிருப்பர் என்கிறார் 58,59ம் பாட்டில்.

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

அர்த்த பஞ்சகத்தை உணர்ந்த மெய்ஞ்ஞானியர் கூடுமிடமெல்லாம் புக்கு நிற்கிறார் எம்பெருமானார்.
அதாவது திருவாய்மொழி பாடும் இடங்களில் எல்லாம் பரம ரசிகருமான எம்பெருமானார் தானும் இருக்கிறார்.
மேலும் திருமங்கையாழ்வ்வரைப் போல , பிராட்டியார் நித்ய வாசம் பண்ணக்கூடிய அழகிய மார்பை யுடைய
எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகள் தோறும் மண்டி அனுபவிக்கப் புகுபவர் எம்பெருமானார்.
அவர் எங்கள் குலக் கொழுந்து என்கிறார் 60ம் பாட்டில்.

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –

‘ஸ மஹாத்மா ஸு துர்லப’ என்று க்ருஷ்ண பகவான் தான் அவதரித்த விபவாதாரத்துக்குப் பின்பு
நம்மாழ்வார் அவதரிக்கையாலே, அவருடைய காட்சி தமக்கு கிடைக்காமல் போனதே
என்று நினைத்துச் சொன்னான்’ என்று பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்.
திருக்கண்ணமங்கை எம்பெருமான் கண்ணனும், பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தார் என்று சொல்வர் பெரியோர்.
நம்மாழ்வாரின் க்ருபைக்குப் பாத்திரமான நாதமுனிகளையும் , ஆளவந்தாரையும் அரு முனிகள் என்கிறார்.
அத்தகையோர் தொழுதேத்தும் இராமானுஜனை அடைந்து இவ்வுலகும் அதிசயம் கண்டது . (61)

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

பெருந்தேவர்கள் என்று கூறப்படும், நித்ய ஸூரிகளுக்கு இணையான, ஸ்ரீ வைஷ்ணவர்கள் கழல் பிடித்த பின்,
தமது இரு வினைகளும் கழிந்தன என்றும்
அவ்வாறு கழிந்த பின் தான் புரிய வேண்டிய செயல்கள் ஏதுமில்லாது ‘க்ருத்க்ருதயனானேன் ‘ என்கிறார்.
அதாவது பேற்றினைப் பெறுவதற்கு செய்ய வேண்டியவைகளைச் செய்து முடித்தவன் ஆனேன் என்கிறார்.
“ ஆதலின் நீ உண்மையாக என்னைப் பற்றிய அறிவிலும், காண்டலிலும் அடைதலிலும் ஐயமற்றவனாய்,
சுகமாய் இரு என்று சரணாகதி கத்யத்தில் எம்பெருமானின் திருவாக்காக இந்த க்ருத க்ருத்யதமே பேசி முடிக்கப்படுகிறது.
சரம ஸ்லோகத்தில் சரண் ஏற்ற எம்பெருமான் ‘மாசுச:(கவலைப்படாதே என்பதற்கும் இதுவே பொருளாம். (62)

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –

பெண் யானையை, அது எதிர்வழி கொடாத நிலையிலும், பேராத பேரன்பால் அதனையே பின் தொடர்ந்து திரியும்
ஆண் யானையை போல் அடியேன் தேவரீருடைய பிரகாசிக்கும் தன்மை வாய்ந்த குணங்களைக் கொண்ட
திருவடியை பின்பற்றித் திரியும் ஸ்வபாவத்தைத் தந்தருளவேண்டும்.
‘ பகுத்தறிவு அற்றவர்கள் சப்தாதி விஷயங்களில் எத்தகைய பற்று நீங்காது உள்ளனரோ,
அத்தகைய ப்ரீதி உன்னைத் தொடர்ந்து நினைத்த வண்ணம் இருக்க வேண்டும் என்று
பிரகலாதாழ்வான் அச்சுதனிடம் வேண்டியது போல், எம்பெருமானாரிடம் வேண்டுகிறார். (63)

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

அன்பு கொண்ட யானையைப் போலல்லாமல்,மதம் கொண்ட வேழமென் இராமனுசமுனி வேழம்,
பசுந்தமிழாகிற திருவாய்மொழி அனுபவத்திலுண்டான ஆனந்தம் மதநீராகிப் பாய்ந்து, வேதமேன்னும் ‘கதை’யை எடுத்துக்கொண்டு
பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும் வாழ்வறச்செய்தார் என்று அமுதனார் 64ம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார் .
தெற்கே திருமாலிருஞ்சோலையில் ஒரு யானையாகவும்,
வடக்கே திருவேங்கடமுடையான் என்று ஒரு யானையும்,
கிழக்கே திருக்கண்ணபுரத்து எம்பெருமானாக ஒரு யானையும்,
மேற்கே ஒரு மதம் பிடித்த யானை சாய்ந்தாற்போலே திருவரங்கத்தில் ஒரு யானையும் ஆகிய
நான்கு யானைகளுக்கு ஒத்தாற்போல் ஐந்தாவது வேழமாக எம்பெருமானார் விளங்குகிறார் என்றபடி. (64)

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-

எம்பெருமானார் அருளிய ஞானத்தாலே, பூமண்டலமானது பாக்யம் பெற்றது, எவ்வாறு எனில்,
களையெடுத்தபின் பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருமாப்போலே, இவர் அவதரித்தபின் புறச்சமய வாதியர்கள் அழிந்தனர் .
வைதீகர்கள் பூமியெங்கும் தலைநிமிர்ந்து திரிந்தனர். தத்வ சாஸ்திரங்களில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்து
பொய்ஞானம் அகன்று மெய்ஞானமே விளங்கியது.
குற்றங்களும் தோஷங்களும் தன்னுள் பொதிந்துள்ளவர்கள், அக்குற்றம் நீங்கியவர்கள் ஆயினர். (65)

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

ஞானம் கனிந்து பக்தியாகி அந்த பக்தி ப்ரபத்தியான பின்னரே மாதவன் மோக்ஷம் கொடுக்கிறான்.
எம்பெருமானாரோ, தன் கிருபையை தானே வலிய சென்று அளிக்கிறார்.
பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் இருவராக அளிக்கும் மோஷப் பிரவாகத்தை,
எம்பெருமானார் தாம் ஒருவராகவே அளித்து உத்தாரக ஆசாரியர் ஆகிறார். (66)

சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

இந்த தேகமும் அவயவங்களும் அவனுடைய சரணார விந்தங்களைப் பற்றுவதற்காகவே அவனால் கொடுக்கப்பட்டது.
இப்படி சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு சாதனாமாகக் கொடுத்த கரணங்களைக் கொண்டு,
நதியைக் கடக்கக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அத்தைக் கடவாதே வெள்ளதோடு போவாரைப் போல் ,
இந்த கரணங்கள் உங்கள் உபயோகத்துக்காக வைக்கப்பட்டவைகளல்ல என்று உபதேசித்தவர் எம்பெருமானார்.
அத்தகைய ரஷையை அவர் செய்யா விடில் இந்த ஆத்மாவை காப்பது யார் என்கிறார்.
‘ ராமானுஜ என்கிற சாமர்த்தியம் படைத்த நான்கு அக்ஷரங்கள் இல்லாமற்போனால்,
என் போன்ற ஜந்துக்கள் எந்த நிலையை அடைவோம் என்று கூரத்தாழ்வான் சொன்னார்ப் போலே
சொல்லுகிறார் அமுதனார் 67ம் பாசுரத்தில்.

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

அரசன் சிம்மாசனத்திலிருந்து செப்புகிறாப்போலே, கண்ணன் தேர்த் தட்டிலிருந்து சொன்ன கீதையின் செம்மைப் பொருளை
இந்த உலகத்தார் அறிய மாட்டாது இடர் பட்டனர்.
எம்பெருமானார் கீதையின் சீரிய பொருளை தெள்ளத் தெளிவாக, தாம் இயற்றிய கீதா பாஷ்யத்தில் அருளிச் செய்தார்.
இந்த சீர்மையை உணர்ந்து எம்பெருமானாரை பணிந்தனர் நல்லவர்கள். அவர்களிடம் எனது ஆவியும் பணிந்தது.
ஆக எனக்கு ஒப்பாவார் யார் என்று சாத்வீக அஹங்காரத்தால் வந்த களிப்பில் கூறுகிறார். (68).

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

அரங்கன் தந்தவை இந்த ஊன உடலும் சம்சாரத்தில் விழுந்து உழலுவதற்கு உறுப்பான கரணங்கள்.
ஆனால் எம்பெருமானார் தந்தவைகளோ அந்த அரங்கனின் திவ்ய சரணங்களாகும் என்று 69ம் பாசுரத்தில் கூறுகிறார்.

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

அரங்கன் தராததையும் தந்த பின்னரும், அனாதிகாலமாக தொடரும் வல்வினையால் வந்த வாசனா லாபம்,
அத்தாலே சப்தாதி விஷயங்களில் தலை தூக்கி வளரும் ருசிகள் ஆகியவையே அமுதனாரது இயல்பாகி விட்டனவாம்.
அவ்வாறிருந்தும் தம்மை ஆட்கொண்ட எம்பெருமானாரது கருணை, பெருங்கருணையாகும்.
இதை ஆராய்ந்து பார்த்தால், இராமானுஜரை ஆஸ்ரயிப்பவர்கள், குறைவாக நினைக்க மாட்டார்களோ என ஆதங்கப்படுகிறார். (70)

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

விஷய ப்ரவணனாகிய தாம் எங்கே, சரம சேஷியாகிய தேவரீர் எங்கே?
சபலத் தன்மை வாய்ந்த என் நெஞ்சு தேவரீர் திருவடிக்கீழ் பொருந்தியதென்றால் , அது தேவரீரின் கடாஷத்தாலன்றோ?
திருக்கோஷ்டியூரில் கேட்போரின் தன்மையை ஆராயாது, உபதேசத்தின் சீர்மையை பாராது, தம் பெருந்தன்மைக்கேற்ப,
ஆசையுடையோர்க்கெல்லாம், தாம் அரும்பாடுபட்டு பெற்ற சரம ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்தமையினால் ‘ எம்பெருத்தகை’ என்கிறார் அமுதனார். (71)

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

அந்த ஓவ்தார்ய குணத்தால் தீய சமயங்கள் அழிந்தன. தூய வேத நெறிகள் நிலைநிறுத்தப்பட்டன.
தம்மையும் அந்த தூய குணங்களையுடைய பெரியோரிடம் சேர்த்து வைத்தார் என்கிறார் தமது 72ம் பாசுரத்தில்.

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

அவரே தமக்கும் உலகத்தோர்க்கும் ரஷகர் ஆகிறார். ருசி, விசுவாசம் இல்லாதவரையும் வலுவில்
ருசி, விசுவாசஸங்களை விளைவித்து, சரம உபாயத்துக்கு ஆளாக்கினார் எம்பெருமானார். (73)

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

நித்யமாயிருத்தல்,அபௌர்ஷமேயம், ப்ரத்யஷ ப்ரமானம், எல்லா சேதனர்களுக்கும் நல்லதும், தீயதும், உணர்த்தல்,
எம்பெருமானுடைய ஆக்ஜைக்கு உட்பட்டிருத்தல் ஆகிய மிக்க சீர்மையை உடையது வேத சாஸ்திரங்கள்.
அதை மீறுபவர்களை தனது கூராயுதத்தால் அழிப்பது எம்பெருமான்.
ஆனால் எம்பெருமானாரோ, அவ்வப்போத, தமது சிந்தையில் தோன்றும் சிறந்த யுக்திகளைக்கொண்டே,
அவர்களை சிதைக்கிறார் என்க.(74)

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

ஆச்சார்ய அபிமானமே உத்தாராகம்’ என்றிருப்பவர்களை மிகவும் உகக்கிறான் சர்வேஸ்வரன்.
உகப்பின் மிகுதியால், அவர்கள் திறத்து தானே மேல் விழுந்து தன் கைச் சக்கரத்து அழகும், வடிவழுகம் காட்டி,
‘உன்னை விடேன்’ என்றாலும் முக்கோலேந்திய எம்பெருமானாரின் கைத்தல அழகு , என்னை ஈடுபடச்செய்கிறது.
சஸ்திரமேந்திய, எம்பெருமானைவிட, சாஸ்திரமேந்திய உடையவரின் கைத்தலமே என்னை ஈரக்கிறதென்கிறார் 75ம் பாட்டில்

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

கீர்த்தி மிக்க திருவேங்கடப் பொற்குன்றமும், நித்ய ஸூரிகள் சேர்ந்த இடமான ஸ்ரீ வைகுந்தமும்,
சயன திருக்கோலமுடைய திருப்பாற்கடலும் எம்பெருமானார்க்கு ப்ரீதி உள்ள இடங்களாகும்.
அவ்வாறே, அமுதனார்க்கு மிகவும் ப்ரீதி உள்ள இடம்,
எம்பருமானாரின் அழகுமிகுந்த, இணையத் திருவடிகளே என்கிறார் 76ம் பாசுரத்தில்.
‘திருபொலிந்த சேவடி என் சென்னிமேல் பொறித்தாய் ‘ என்றபடி.
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் நின்ற, வீற்றிருந்த , சயனத் திருக்கோலங்களை கூறுகிறார்.
அவை உடையவருக்கு எவ்வளவு இன்பம் அளிக்குமோ, அவ்வளவு உடையவரது திருத்தாமரையடிகள்
அமுதனார்க்கு இன்பம் பயக்கின்றனவாம்.

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வினைகளுக்கு வேர் போன்றதான என் வாசனைகளை அறவே போகும்படி விரட்டிய பின்னும்,
உதவுவதற்கு ஏதேனும் உண்டோ என வினவுகிறார் 77ம் பாட்டில்.

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

இப்படி எம்பெருமானார் தன்னை திருமகள் கேள்வனுக்கே ஆக்கிய பின், வேறொரு மெய்ப் பொருள்
இந்த நெஞ்சில் பொறுத்தப் படாது என்கிறார் 78ம் பாட்டில்.

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிறே ‘ என்றார் நம்மாழ்வார்.
பொய்மையைச் சுரக்கும் புற சமயத்தை அழித்தொழித்து, மெய்ம்மையே சுரக்கும் வேதத்தை ஒளி பெறச்செய்த
ராமானுஜர் இருக்க, நம்மை உஜ்ஜீவிக்க நல்லதொரு தெய்வம் எங்கே என்று தேடுகிறார்களே
இவ்வுலகத்தவர் என்கிறார் 79ம் பாட்டில்.

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

ராமானுஜ’ என்னும் இந்த திறமை வாய்ந்த நான்கு அக்ஷரங்கள் இல்லை யெனில், என்னைப் போன்ற ஜந்துக்கள்
எந்த நிலைமையை அடைந்திருக்கும் என்று கூரத்தாழ்வான்,
இந்த திருநாமத்தின் சீர்மையை நினைத்து அதன்பால் மஹா விஸ்வாசம் கொண்டு பேசுகிறார்.
அத்தகைய கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்ற அடியவர்களையே
தமக்கு உரிய தெய்வமாகக் கொண்டு ‘ஒழிவில் காலமெல்லாம் வழுவிழா அடிமை” செய்வேன் என்கிறார் 80ம் பாசுரத்தில்.

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

பாகவத சேஷத்வத்தின் சுவை அறியாதிருந்த எனக்கு, அந்த பாகவதற்கே உரியது
இந்த ஆத்மா என்னும் உணர்வை உண்டு பண்ணினார் , எம்பெருமானார்.
அவ்வித பாகவத சேஷத்வத்திலே ஊறி நின்றவர்க்கே அரங்கதெம்பெருமான் தன் திருவடிகளை
விட்டுப் பிரியாத நிலையை விளைவிக்கிறான்.
அவ்வித பாக்கியத்தை தமக்கு தந்தளித்த எம்பெருமானாரின் மஹத்வம் ஒப்புயர்வற்றது என்கிறார் 81ம் பாசுரத்தில்.

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

நல்லதை பற்றிய அறிவு தமிடம் இல்லாததால் அல்லதைப் பற்றிய அறிவே என்னிடம் இருந்தது.
அப் பேர்ப் பட்ட என் நெஞ்சிலும் சாஸ்திரத்தின் மிகச் சீரிய உட்பொருள் பதியுமாறு, சாரமாக உபதேசித்து
என்னை ஒப்பற்ற கேள்வி ஞானமுடையவனாக செய்தருளினார் எம்பெருமானார்.
உலகெங்கும் பரவிய கீர்த்தியை உடையவரும், மேகம் போன்ற வள்ளல் தன்மை உடையவருமான
என்ன தார்மீகரோ எம்பெருமானார் என்று வியக்கிறார் 82ம் பாட்டில்.

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

பகவானிடம் சரணாகதி பண்ணி நல் வீடாகிய பரம பதத்தை நாடும் பிரபன்னர்கள் நாட்டில் பலர் உள்ளனர்.
அடியேனோ, சரம பருவத்தின் எல்லை நிலமாகிய ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிக்கொண்டு,
அத்திருவடிகளே , பரமபத்தைவிட விலக்ஷணமான மோக்ஷமாக அடியேனுக்கு அமைந்துள்ளது
என்று தமக்கு பேரின்பம் விளைவிக்கும் எமாபெருமானார் திருவடிகளே மோஷப் ப்ரதாயகம்
என்று கூறுகிறார் அமுதானார் 83ம் பாட்டில்.

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

கண்டேன் கமலமலர்ப் பாதம்: காண்டலுமே வின்டேயொழிந்தன வினையாயின வெல்லாம் : என்றார் நம்மாழ்வார்.
அவ்வாறே அமுதனாரும் இராமானுசனைக் கண்டு கொண்டேன்.
கண்ட மாத்திரத்திலே அவரோடே நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய அழகிய திருவடிகளில் அடிமைப்பட்டு விட்டேன்.
எனது அனாதியான கொடிய பாபங்கள் நீங்கப் பெற்றேன். இப்படி தாஸ்யத்திலேயே அன்வயிக்கவே,
எனது அருவினைகள் அனைத்தும் தொலைந்தன .
இன்னும் நான் பெற்ற நன்மைகள் சொல்ல முடிவில்லாதது என்கிறார். . (84)

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

“ எந்த ப்ராம்மனன் நான்கு வேதங்களையும் நெஞ்சில் தாங்கிக்கொண்டு இருப்பினும் , வாசுதேவனை அறியவில்லையோ ,
அவன் வேதச் சுவையின் பளுவினால் ஆச்ரயிக்கப்பட்ட கழுதை ஆவான். ‘குங்கமப்பூ சுமந்த கழுதை போலாவான்.
வேதத்திலும், வேதாந்தத்திலும் இந்த சரீரம் – ஆத்மா என்னும் சம்பந்தம் காட்டப்பட்டிருப்பதால்
உடல் உயிருக்கே சேஷப்பட்டிருப்பது போல் நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே அடிமைப்பட்டவர்கள் ஆவோம்.
இறைவன் அந்தர்யாமியாக இருந்து எல்லோரையும் நியமிக்கின்றான். அதனால் அவன் எல்லார்க்கும் ஆத்மா.
நாம் அனைவரும் அவனுக்கு அடிமைபட்டவர்கள் என்னும் அனன்யார்ஹசேஷத்வ ஞானம் அறியப் பெறாமையால்
பிறர்க்கே தொண்டுபட காரணமாயிற்று இந்தப் பேதமையை நீக்கியவர் இராமானுஜர் (85)

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

‘ஊருக்கே உழைத்து ஏழையானேன்’ என்று திருமங்கையாழ்வார் கூறியது போல்,
ஒன்றுக்கும் பற்றாத, அதாவது எதனுக்கும் திறமையற்ற அற்ப மனிதர்களை அண்டி அவர்களையே உறவென்று கருதி,
அலைந்து கஷ்டப்பட்டு, அவர்களைக் காணவேண்டும் என்று ஓடி இனிமேல் நிலைகுலைந்து போகமாட்டேன்.
தத்துவ, ஹித புருஷார்த்தங்களைத் தெள்ளத் தெளிவாக அறிந்து , மிக்க ப்ரேமையால் ,
தங்கள் கல்விக்கு ப்ரயோஜனம் இதுவே என்று எம்பெருமானாரை ஆச்ரயிக்கும் கூரத்தாழ்வான் போன்றவரே
என்னை ஆளும் பெரியவர் என்று அமுதனார் கூறுகிறார்.(86)

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

கடலில் செல்ல இயலாவிடிலும், தன் சுத்திக்காக கரை யோரத்தில் மூழ்கி எழுவாரைப் போல,
அறிவாற்றல் கொண்டு பேசமுடியாவிடினும் தங்கள் தகுதிக்கு முயன்றவரை,
எம்பெருமானாரை போற்றுபவர்கள் உள்ளனர்.
எம்பெருமானார் என்னும் ஆச்சார்யனாகிற துறையில், சத்வ குணம் தலை யெடுத்து, ஞான ஸ்நானம் செய்தவர்கள்
தூயவர்களாயிருப்பவர்கள் ஆதலாலே, அவரை கலி நலியாது.
அவ்வாறு அடையாதவர்களையே கலிதோஷம் நல்கும் என்கிறார் 87ம் பாசுரத்தில்.

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

மிகவும் கொடியவர்களான குத்ருஷ்டிகள் எனும் புலிகள் மிகுந்து சாதுக்களான உலகியனரை நலிந்து திரிய,
அப்புலிகளைத் தொலைக்க வல்ல உயர் மிக்க ஸிம்ஹமாய் வந்து
புவனத்தைக் காக்க முற்படுகின்றார் எம்பெருமானார் என்கிறார் 88ம் பாட்டில்.

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

பெரிய பெருமாளைச் சரணடைந்து எம்பெருமானார், தம்மோடு ஏதேனும் ஒருவகையில் சம்பந்தம் உடையோர் அனைவருக்கும்
வீடு தரவேண்டி ப்ரார்த்தித்து , அத்தைப் பெற்றவராகையாலே , அவரை நினைப்போர்க்கெல்லாம் பிறவியை நீக்கும் உபகாரத்தை ,
அதாவது மோக்ஷத்தை தரவல்லவராவார்.
ஆனால் அத்தகைய எம்பெருமானரை மனம், வாக்கு, செயல் ஆகிய முக்கரணங்களில்
ஒன்றிலாவது ஈடுபடாமல் இருக்கின்றனர் மாந்தர்.
இவர்கள் ‘உய்ய ஒரே வழி,, உடையவர் திருவடி’ என்று அறியாமல், பிறப்பினால் நேரும் துன்பங்களில் அழுந்தி
துன்புறுவர்களாக உள்ளனர் என்கிறார் 90ம் பாசுரத்தில்.

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —

எல்லா ஆத்மாக்களுக்கும் தலைவன் பெரிய பெருமாளே என்கிறார் 91ம் பாட்டில்.
வேதம் கூறிய உண்மைப் பொருளைக் கூறாது அவப் பொருளைக் கோரும் ஆகம வாதிகளைச் சாடுகிறார்.
நாராயணனே முதற்பெருங்கடவுள். பிரமன் ருத்ரன் முதலியோர் படைப்புக்கு உட்பட்டவர்களே.
அப்பெருங்கடவுளான, எம்பெருமானே உலகினுக்கு உபாதான காரணமாகவும்,
தானே சங்கல்பித்து மாறுதலினால் நிமித்த காரணமும் அவனே என்பது வேதத்தின் உண்மைப் பொருள்.
அவ்வாறில்லாமல் பரம் பொருளைக் கீழ்ப் படுத்தியும், கீழ்ப் பொருளை பரம் பொருளாக்கியும், கூறுவது அவப் பொருளாகும்.
இந்த உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்திய எம்பெருமானார் புண்ணியனே என்கிறார்.

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

அர்ச்சா மூர்த்தியின் வழிபாட்டைப் பேசும் பஞ்சராத்ரம் பகவான் திருவடிகளையே உபாயமாய் பற்றும்படி புகழ்கின்றது.
அரங்கனாம் பெரிய பெருமாளும், நீட்டிய திருக்கரத்தாலே தன் திருவடிகளையே உபாயமாய் பற்றும்டி
காட்டிய வண்ணமாய் பள்ளிக் கொண்டிருப்பதாலே, வைகுந்தத்தில் எழுந்தருளியுள்ள
பரவாசுதேவனான நாராயணன், அரங்கனே என்பது எம்பெருமானாரின் சொல்லாகும்.
‘ நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்கிறபடி நல்லதோர் விரதத்தை அனுஷ்டித்திலேன் .
கேள்வியறிவு ஞானத்தையும் பெற்றிலேன். அவ்வாறிருக்க, இராமானுஜர் தாமாகவே வந்து
அடியேனுடைய கண்ணிலுள்ளும், நெஞ்சினிலும் நிறைந்த நிர்ஹேதுக கிருபையின் காரணத்தைச்
சொல்ல வேண்டும் என்கிறார். 92ம் பாட்டில்.

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

மெய்யான தவம் சரணாகதி . அத்தை யுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர் அனைவருடைய பாபங்களையும் பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து
வரம் பெற்றுள்ளமையால் அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது.
அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பந்தத்தை முன்னிட்டு பிரபன்னர்களாகி வினையினுன்றும் விடுபடுகிறோம்.
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப் படுகிறார் .
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி. அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.
அவரே தமது பெருவினையை கிழங்கோடு தொலையும்படி செய்தார் என்கிறார் அமுதனார் தமது 93ம் பாட்டில்.

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

அநேக கல்யாண குணங்களையுடைய எம்பெருமானார் தம்மை வந்து அடைந்தவர்களுக்கு சரணாகதி நிஷ்டையை கொடுத்தருளினார்.
அவர்கட்கு பிறப்பினால் ஏற்படும் சம்சாரத்தை உண்டாக்கும் கொடிய கர்மங்களை தூள் தூளாகும்படி செய்தார்.
அதற்கும் மேலே ‘பரந்தாமம்’ என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீவைகுந்த லோகத்தை கொடுத்தருளுவார்.
ஆயினும் நான் அந்த எம்பெருமானாருடைய குணங்களைத் தவிர வேறொன்றையும்
மனம் மகிழ்வுற்று விரும்பி அநுபவிக்க மாட்டேன் என்கிறார் அமுதனார்.
“ எம்பெருமானாரைப் பற்றுகையே பிரபத்தி. ‘ராமானுஜ என்கிற சதுர்ஷாரியே திருமந்திரம்.
அவர் திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் .
இதுவே முடிவு கட்டின என் சித்தாந்தம்’ என்று அருளிச்செய்தாரென்றோ நடாதூரம்மாள் .
இதுவே அமுதனாரது நிலை. (94)

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

அனாதி காலமாக பலப் பல பிறப்புகள் பிறந்து சம்சாரத்திலே உழல்கின்றனர் இந்த ஆத்மாக்கள்.
அவர்களை உய்விக்கும் நோக்கத்துடன், அவர்கள் மேல் கொண்ட வாத்சல்யத்தினால் எம்பெருமான்
அந்தர்யாமியாய் நின்று உற்றனவே செய்து உய்விக்கின்றான்.
நெருங்குவதற்கும் அருவருக்கத்தக்க குற்றங்கள் மலிந்த உயிருக்குள் புகுந்து ,
இவ்வளவு பரிவு வாய்தவனாக எம்பெருமான் இருக்கின்றான்.
இருப்பினும், எம்பெருமானாரோவெனின், பலவகைப்பட்ட உயிர்களுக்கெல்லாம் நேரடியாகவே வீடு அள்ளிப்பதற்காகவே ,
விண்ணகத்தினின்றும் இம்மண்ணகத்திற்கு நேரே வந்து அவதரித்தார் என்கிறார் 95ம் பாட்டில்.

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –

நான்கு வேதங்களையும் வளரும்படி செய்தருளினார்,
சேதனர்கள் உய்வதற்கு . அனுபவித்தோ, பரிகாரம் பண்ணியோ, தீராத, தொடர்ந்து வரும், கர்மவினையினால்,
எம்பெருமானார் வழி காட்டிய ப்ரபத்தி மார்க்கத்தில் தமக்கு மஹா விசுவாசம் ஏற்படவில்லை என்கிறார் 96ம் பாட்டில்.

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

அப்பேர்ப்பட்ட எனக்கு சம்சாரத்தில் தரித்து, தனியாக திரியவிடாமல் எம்பெருமானாரைச் சார்ந்த அடியவர்கள் துணையாக உள்ளார்கள்.
குழியைக்கடக்கும் கூரத்தாழ்வான் போன்றோர், தேவுமற்றறியேன் என்று சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லவர்கள் என்கிறார்.
தம்மைத்தாமே பற்றியிருக்கும் கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்றோருடைய குணநலன்களை உலகரியச் செய்வதர்க்கு,
அவர்களை பற்றி நிற்குமாறு அடியார்களின் அடியார்களை ஆட்கொள்ளச் செய்தார் எம்பெருமானார்.
இவ்வாறு எம்பெருமானார், தம்மை, ஆழ்வானை பற்றியிருக்கச் செய்ததையும் ,
ஆழ்வானும் தமக்கு ஆசாரியன் ஆகிய சம்பவத்தையும், குறிப்பால் உணர்த்துகிறார், 97ம் பாட்டில்.

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

“ எவனொருவன் புத்தி கெட்டவனாயும் , காமத்தால் பிடிக்கப்பட்ட பட்டவனாயும் இருந்தபோதிலும்,
“ராமானுஜாய நமஹ; எனும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லிப் புகுந்தால்,
பகவானைச் சார்ந்தவர்களான யோகியர்கள் ப்ருக்ருதி மண்டலத்துக்கு அப்பாலுள்ள., எந்த மோஷத்தைப் பெறுவதற்கு ஒதுகின்றனரோ,
அந்த மோஷத்தையே அடைகிறான்” என்று ராமானுஜாஷ்டக சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது.
எம்பெருமான் சர்வ ஸ்வந்திரனாததால் , நாம் சரணம் செய்தும், நம்முடைய அளப்பரிய வினைப் பயன்களால்,
நரகம் அளிப்பானோ என்று அஞ்ச வேண்டாம்.
காரணம், எம்பெருமானாரைப் பற்றியவர்கள் பேற்றுக்காக வருந்தவேண்டாம் என்கிறார் 98ம் பாசுரத்தில்.

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –

விசாலமான இப்பூமியில், சிறந்த கற்பக வ்ருஷம் போல உதாரரான ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்த பின்பு
புற மதத்தவர்களான, வேதத்தை ஒத்துக்கொள்ளாத பாஹ்யர்களும், வேதங்களை பிரமானமாகக் கொண்டும்,
அதை தங்கள் மனம் போனபடி வகுத்தெடுத்துக் கொண்ட குத்ருஷ்டிகளும், அறவே மாண்டனர்.
ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யம் இவ்வித பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும்
அடியோடு அழியச் செய்ததால் எம்பெருரமானாரை “பொன் கற்பகம்” என்கிறார். (99)

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –

எனது மனதாகிற பொன் வண்டு தேவரீரின் திருவடிப் பூவினையே விரும்புகிறது.
அத் திருவடிகளிலுள்ள மென்மை , குளிர்ச்சி, மணம் , அழகு போன்ற கல்யாண குணங்களில் ஈடுபட்டு
அங்கேயே நித்யவாஸம் பண்ண வேண்டுமென்று தேவரீரிடம் வந்தது.
மற்றபடி வேறொன்றைக் காண்பித்து என்னை மயங்கப் பண்ணாதேயும் என்று இறைஞ்சுகிறார் 100ம் பாட்டில்.
இங்கு ‘வேறொன்று’ என்று எம்பெருமானின் திருவடியைக் கூறுகிறார்.
இது சரமபர்வ நிஷ்டையான , ஆச்சார்ய நிஷ்டையைக் குறிக்கிறது.

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –

எம்பெருமானாருக்கு இயல்பாக அமைந்த குணங்கள் இரண்டு.
தன்னை அண்டியவர்களின் பாபத்தைப் போக்குவதும், தன்னையே அனுபவிக்கும் போகியத்தவமுமாகும்.
இதுவரையில் தமது பாபங்களாகிய கர்ம வினைகளை எம்பெருமானார் நீக்கியத்தையே பேசி வந்த நான்,
அவரையே அனுபவிக்கக்கூடிய போக்யத்தை அதிகம் பேசாததால்,
மற்றவர்கள் அதை எனது பிசகு என்று கருதுவார்கள் என்று அஞ்சுகிறார் 101ம் பாட்டில்.

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

“நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்” “பாவமே செய்து பாவியானேன்” என்கிறபடி,
அனாதி காலமாக என்னை தொடர்ந்து வந்த வல்வினைகள் , எம்பெருமானாரை பற்றியபின் அழிந்துவிட்டது.
“ உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை “ என்கிறபடி,
தமது மெய் , நா, மனம் ஆகிய மூன்றும் எம்பெருமானாரிடத்திலேயே தங்கிவிட்டது என்கிறார்.
எல்லோரையும் மயக்கும் இந்த வள்ளல் தனமும், ஹௌதார்ய குணமும் என்னையும் என் கரணங்களையும் ஈடுபடும்படி செய்தது,
எக்காரணத்தினாலோ? என்று வினவுகிறார் 102ம் பாசுரத்தில்.

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

சிங்கப்பெருமானது சீற்றம் அடியார்க்கு தினந்தோறும் சிந்திப்பதற்கு உரியது. அதுவே உய்யும் வழி.
தன் திறந்து அபராதங்களைப் பொறுக்கும் எம்பெருமான், தனது அடியார் திறத்து செய்யப்பட்ட அபராதங்களைப் பொறுக்காதவனாய்,
அவுணனின் ஆகம் (மார்பு) பிளந்தமை ஆகிய இந்த கீர்த்திகள் எம்பெருமானார் திருவுள்ளத்திலே ஓங்கி வளர்ந்த பயிர்களாக விளைகிறதாம்.
ஆத்திரம் தீர, நகத்தால் முடித்ததோடு நில்லாமல், பிணத்தைப் பார்த்தும் , நாமடித்துக் கோபத்தைக் காட்டுவதே
நரசிங்கனது சீற்றத்தின் எல்லை..
பெரியவாச்சான் பிள்ளை, முதல் திருவந்தாதி 65ம் பாசுர வ்யாக்யானத்தில்
‘’ சரணா கதற்கு தஞ்சமான தனமாவது ஆஸ்ரிதார்த்தமாக இரண்யனைப் பற்றப் பண்ணும் சீற்றம்” என்கிறார்.
நரம் கலந்த சிங்கமான ந்ருஸிம்ஹனே வல்வினை போக்கி தெள்ளறிவுடன் வாழ்விப்பார் என்பது ஞானம்.
அத்தகைய ஞானத்தை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தருகிறார் எம்பெருமானார் என்கிறார், அமுதனார். (103)

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எம்பெருமானாருடைய திருமேனியழகை அனுதினமும் அனுபவிப்பதான க்ருபையை அருளிச் செய்தால்,
கொடிய நரகமாகிய ஸம்ஸாரத்திலும் தரித்திருப்பேன்.
அவ்வனுபவம் கிடைக்கப்பெறாவிடில், பரமபத்திலும் தயாரித்திருக்க மாட்டேன் என்கிறார் 104ம் பாட்டில்.
உள்ளங்கை நெல்லிக்கனியென அந்தக் கண்ணனையே காட்டித் தரிலும் தமக்கு மிகவும் பிரியமானது,
எம்பெருமானாரது திருவடிவழகும், திருமேனியில் விளங்கும் குணங்களுமேயாகும் என்கிறார்.
கருத்த மேகமானது தன்னிடமுள்ள முழுமையான நீரனைத்தையும் பொழிந்த பிறகு, வெளுத்துப் போகும் .
அவ்வாறு செழுமை வாய்ந்த மேகம் போல் இராமானுஜர் உள்ளதால் அவரை “செழுங்கொண்டல் “ என்கிறார்.

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

“ஸதா பச்யந்தி சூரய; என்றபடி நித்யஸூரிகளிடையே ஸ்ரீ வைகுந்தத்தில் இன்பத்தை அளித்துக் கொண்டிருக்கும் எம்பெருமான்,
ஸம்ஸாரிகளை கைவிடாத வாத்சல்ய குணத்தாலே அங்கிருந்து வந்து இறங்கிய இடம் திருவேங்கட மாமலை.
இரண்டு குழந்தைகளுக்கிடையே கிடந்து பாலூட்டும் தாய் போலே, தரையிலும் இறங்காமல் விண்ணகத்திலும் தங்காமல்
வேங்கட மலை உச்சியில் உள்ளான்.
அவன் மேலும் உகப்படைந்து தன்னைச் சரணடையாதார் திறத்திலும் தானே வலுவாக சென்ற இடம்,திருமாலிருஞ்சோலை .
இவ்விடங்களைக் கோவில் கொண்டது போல், எபெருமானார் இதயத்தையும் கோயிலாகக் கொண்டான், எம்பெருமான்.
அந்த எம்பெருமானார் இப்போது எழுந்தருளியுள்ள இடம் தன்னுடைய இதயத்தினுள் என்கிறார் 106ம் பாட்டில்.

ஆசார்ய சம்பத்தினுடைய மகிமை, அமுதனார் கால் பாவமாட்டேன் என்று ஒதுக்கிய ஸ்ரீ வைகுந்தமும்,
ஆச்சார்யனோடும், அவனுகந்த ஈஸ்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகின்றன.
இதனால் ஆசார்யனைப் பற்றுகை பகவானைப் பற்றுகையினின்றும் வேறுபட்டதன்று:.
பேற்றினை எளிதில் தர வல்லது என்பது தெளிவாகின்றது.
“ ஈஸ்வனைப் பற்றுகை கையைப் பிடித்து காரியம் கொள்ளுமா போலே, ஆச்சார்யனைப் பற்றுகை
காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமாப்போலே” என்று ஸ்ரீ வசன பூஷனம் 47ம் சூர்ணிகையில்
பிள்ளைலோகாச்சார்யார் அருளிச் செய்துள்ளார்.

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-

அடுத்த பாசுரத்தில், (107) அடியேன் செய்யும் விண்ணப்பம் ஒன்றுண்டு என்று கூறி,
வியாதிகளுக்கு இருப்பிடமான சரீரம் தோறும் பிறப்பதும், இறப்பதுமாய் எண்ணரிய துன்பங்களால் தாக்கப்பட்டு,
நாசமடையும் நிலை ஏற்பட்டாலும் தேவரீருடைய அடியவர்களுக்கே அன்புடையவனாக ,ஆட்கொண்டு,
அடியேனை அவ்வடியார்கள் திறத்திலே அடிமையாக அமையும்படி அருள் புரிய வேண்டும் என்று அமுதனார் விண்ணப்பிக்கிறார்.

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

நீர் உளது எனில் உளது மீன். மார்பு உளது எனின் உள்ளாள் , பெரிய பிராட்டி.
நாரத்தைப் (நீர்) பற்றியுள்ளன கயல் மீன்கள். நாராயணனைப் பற்றியுள்ளாள் பங்கயப்பாவை.
தென்னரங்கனுடைய திருமார்பிலே நித்யவாசம் பண்ணுகிறவளாய், சிறந்த தாமரைப்பூவிலே பிறந்த பாவையான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை , புருஷாகாரமாகப் போற்றுவோம் என்கிறார் அமுதனார் தமது 108ம் பாசுரத்தில்.

சரமபர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆச்சார்ய சரணாவிந்தம் என்பதையும்,
இவ்விடமும் பரமபதத்திலும் கூட அவரது திருவடிகள் சரணம் என்றும்
அது பிரிவின்றி நிரந்தரமாக உள்ளதாக பற்றுபவர்கள் ,
ஆச்சார்ய நிஷ்ட்டைக்கு அதிகாரிகள் என்பதையும் அமுதனார் இங்கு காட்டியுள்ளார்.

“இராமானுஜ சரணாரவிந்தம் நம் தலைமிசை மின்ன, மங்கள வாழ்க்கை பெற்று, நிரந்தரமாக வீற்றிருப்பதற்கு ,
மலர் சூடி , மங்கள வடிவினளான மலர்மகளைப் போற்றுவோம்” என்று
“ பூ மன்னு மாது “ என்று தொடங்கி “
“ கடைசியில் “பங்கய மாமலர்ப் பாவை “ என்று சொல்லி,
“சர்வம் சம்பத்யதே” என்று இராமானுஜருக்கு சரணாகதி அளித்த ஸ்ரீ ரங்கா நாச்சியரைப் போற்றிப் பொலிவு செய்து,
இந்த நூற்றாந்தாதியை தலைக் கட்டி யருளுகிறார் , திருவரங்கத்தமுதனார்.

—————

1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

அபிபவியா நின்று உள்ள கலி தோஷத்தாலே துக்கப்பட்ட பூமியை -இத்தலையிலே அர்த்தித் வாதி நிரபேஷமாக
தம்முடைய ஒவ்தார்யத்தாலே -வந்து -நிமக்நோத்தாரணம் பண்ணி -ரஷித்தவராய் -பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆகையாலே –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-தைத்ய நாரரா -என்கிறபடியே
சர்வ தபச்சுக்களிலும் மேலாய்க் கொண்டு -துர்லபமாய் இருக்கிற சரணாகதி ரூப தபஸ்ஸை உடையராய்-
எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த-ஸ்ரீ எம்பெருமானாரை-சேரும் அவர்களுக்கு
ஸ்வரூப அனுரூபமான மதிப்பும்-
வியசன சுகங்களில் அனவ சாதா நுத்தர்ஷ-ஹேதுவான ஷமா குணமும் –
ஜிதேந்த்ரியத்வ ரூபமான பராபிபவன சாமர்த்த்யமும்-
குணவத்தாப்ரதையும்-
தத்வ ஹித புருஷார்த்தங்களை விஷயமாக வுடைத்தாய் ஆகையாலும்-கட்டளைப் பட்டு இருந்துள்ள ஜ்ஞானமும்-
தத் கார்யமான பக்தி ரூப சம்பத்தும்-
ரதிர் மதி –ஸ்ரீ குணரத்னகோசம் -17 – இத்யாதி -ஸ்லோகத்தின் படியே
ஸ்ரீ பிராட்டி கடாஷ லஷ்யமானவர்களுக்கு-அவை தானே மேல் விழும் என்றால் போலே-
இங்கும் அபேஷியாது இருக்க தானே வந்து சேரும் –
பொருந்துதல்-சேருதல்-அதாவது ஸ்வரூப அனுரூபத்வம்
தேசு-மதிப்பு–

ஸ்ரீ உடையவர் நித்ய விபூதியும் -இஹ பர லோக இன்பம் அருளுவார் –
அல் வழக்குகள் போக்கி அடியார்க்கு ஆட்படுத்த வல்லவர் அன்றோ –

—————

2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி

————

3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி

———–

4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்

——————

5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த

————–

6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த

—————

7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்

——————

8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்

—————

9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்

—————-

10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்

—————–

11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்

——————

12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்

—————-

13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்

————-

14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்

————–

15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்

—————

16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

———–

அமலன்- தனக்கு அடிமை -பொருந்திய தேசம்
விமலன் -அடியார்க்கு தன்னை
நிமலன் -நிர்ஹேதுகம் -காரேய்
நின்மலன் -தனக்கு இன்புறவே அடியார்க்கு
இதுக்கும் மேல்
மண் மிசை –நாரணர்க்கு ஆளாயினரே
புண்யம் போத -வகுள பூஷண பாஸ்கரர் போல்
பிராட்டி -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
காரேய் கருணை -அங்கு உடன் இருந்த ராக்ஷஸிகள் -இவரோ நம் வரை ஏறிப்பாயும்
க்ரந்தஸ்தம் மூலம் -ஆச்சார்ய பரம்பரை மூலம்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்–

October 8, 2021

ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/
அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/
வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்—
ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்;
ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து
அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும் அறிந்ததே.
ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்யங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால்
பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன

1.ராமானுஜருக்கு அவருடைய தாய் மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்
‘இளையாழ்வார்’ என்று பெயரிட்டார்.

மாமுனிகளுக்கு அவருடைய தாய் வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள்
‘அழகிய மணவாளன்’என்று பெயரிட்டார்.

2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கை நெறிக்கும்,கைங்கர்யங்களுக்கும் இல்லறம் தடையாக இருப்பதை
உணர்ந்து துறவறம் மேற்கொண்டார். காஞ்சி தேவப்பெருமாளிடம் காஷாயம் பெற்று’எதிராஜர்’ ஆனார்.

அழகிய மணவாளர் லெளகீக வாழ்க்கையின் தீட்டு முதலான தோஷங்கள் தம் கைங்கர்யங்களுக்கு இடையூறாக இருப்பதால்
துறவறம் மேற் கொண்டார்.தம் ஆசார்யர் திருவாய் மொழிப்பிள்ளையின் சந்நியாசி சீடர் ,
சடகோப யதியிடம், ஆழ்வார் திருநகரியில் துறவு பூண்டார்.’சடகோப முனி’ ஆனார்.

3.ராமானுஜர் அவரது மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் ஆசைப்படி,ஆசார்யர் திருவரங்கப் பெருமாள் அரையரால்
ஸ்ரீரங்கம் அழைத்து வரப்பட்டு,ஸ்ரீ வைஷ்ணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் ஆணைப்படி ஸ்ரீரங்கம் சென்று
ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

4.ஸ்ரீரங்கம் வந்த ராமானுஜரை தம்முடைய தகுதிப் பெயரான “உடையவர்”
(அனைத்து லீலாவிபூதிகளையும்,நித்ய விபூதியையும் உடையவர்)என்னும் பெயரால் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் அழைத்தார்.

ஸ்ரீரங்கம் வந்த மாமுனிகளை-சடகோபமுனியை,தம் பெயரான”அழகியமணவாளன்”என்னும் திருநாமத்தால்அழைத்தார்,
ஸ்ரீரங்கநாதர்.(மாமுனிகளின் இயற்பெயரே அழகிய மணவாளன்;ஆனாலும்,துறவு பூண்ட பின்’சடகோபமுனி’எனனும் பெயர் பெற்றார்.
ஆனால் நம்பெருமாள் அழகியமணவாளன் என்னும் பெயரிட்டே அழைத்தார்.
அந்தப் பெயராலேயே மணவாள மாமுனிகள் என்னும் பேறு பெற்றார்.

5.உடையவருக்கு, சேரன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு கோவில் மணியகாரரை நியமித்தார் நம்பெருமாள்.
அந்த சேரன் மடத்தில் தான் உடையவர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலம் முழுதும் வாசம் செய்தார்.
(வடக்கு உத்திர வீதியில் இருக்கும் இன்றைய ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம்).

மாமுனிகளுக்கு,பல்லவராயன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு நியமித்தார் நம்பெருமாள்.
மாமுனிகள் தம் அந்திமக்காலம் வரை அந்தத் திருமாளிகையில் தான் இருந்தார்.
(தெற்கு உத்திர வீதியில் இருக்கும் மணவாள மாமுனிகள் சந்நிதி).

6.ராமானுஜரிடம் சங்கும், ஆழியும் பெற்று அவரைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார் திருவேங்கடவர்
(திருக்குறுங்குடி நம்பியும் உபதேசம் பெற்றும், திருமண்காப்பு சேஷம் தரித்தும் ராமானுஜரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்).
திருவேங்கடவர் திருமலை கோவில் வளாகத்தில் தம் ஆசார்யர் ராமானுஜருக்கு மட்டுமே, சந்நிதி தந்து ஏற்றம் அளித்துள்ளார்.
திருவேங்கடவர் அனந்தாழ்வானுக்கு அருளிய தனியனில்
“ஸ்ரீமத் ராமானுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்”என்று அனந்தாழ்வானை ராமானுஜரின் பொன்னடி என்று போற்றுகிறார்.

ஸ்ரீரங்கநாதர்-நம்பெருமாள், மணவாளமாமுனிகளிடம்,திருவாய்மொழி ஈடு காலட்சேபம் கேட்டு,தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்.
ஆசார்யருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதிகுணார்ணவம், யதீந்த்ரப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதர முநிம்” என்னும் பிரசித்தி பெற்ற தனியனைச் சமர்ப்பித்தார்.
இங்கும் ‘யதீந்தரப்ரவணர்’ என்று ராமானுஜர் மீது மாமுனிகள் வைத்திருக்கும் பக்தியைக் கொண்டாடுகிறார்.
ஆசார்யர் மாமுனிகளுக்கு, தம்முடைய சொத்தான சேஷ பீடத்தையே,தந்து ஏற்றம் அளித்தார் நம்பெருமாள்.

7.ராமானுஜர்,திருவேங்கடவர் சந்நிதியில்”வேதார்த்த ஸங்க்ரஹம்” என்னும் உபநிஷத்துகளின் சாரத்தை இயற்றி அருளினார்.
மாமுனிகள், திருவேங்கடவருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடச் செய்தார்.
தம் சீடர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமிகளிடம் நியமிக்க அவர் இயற்றிய திருப்பள்ளி யெழுச்சிப் பாசுரங்களே,
“கெளசல்யா ஸுப்ரஜாராமா, பூர்வா ஸந்த்யா”என்று தொடங்கும் வேங்கடேச சுப்ரபாதம் ஆகும்.

8.ராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும் விரிவுரைகளாக”ஸ்ரீபாஷ்யம்”
முதலான கிரந்தங்களை இயற்றினார்.

மாமுனிகள்( பிள்ளை லோகாசார்யரின்) ரஹஸ்ய கிரந்தங்களுக்கு விரிவுரைகள் இயற்றினார்.

9.ராமானு தம் மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் விருப்பத்துக்கிணங்க, திருவாய்மொழிக்கு விரிவான உரை எழுதச் செய்தார்
(திருக்குருகைப் பிள்ளானின் ஆறாயிரப்படி வ்யாக்யானம்).

மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப்பிள்ளையின் நியமனத்துக்கு ஏற்ப திருவாய்மொழி ஈடு
காலட்சேபம் செய்வதையே (நம்பெருமாளுக்கும் கூட) முக்கியமான கைங்கர்யமாகச் செய்து வந்தார்.

10.பெரிய கோவில் ஜீயர், என்று,பெரிய கோவில் பொறுப்பு அதிகாரியாக இருந்த திருவரங்கத்து அமுதனார்
ராமானுஜரைச் சரணடைந்து அவர் சீடரானார். பெரிய கோவில் சாவியை ராமானுஜரிடம் ஒப்படைத்தார்.
உடையவரைப் போற்றும் பிரபந்ந காயத்ரி என்று போற்றப்படும்”இராமாநுச நூற்றந்தாதி” அருளித் தந்தார்.

பெரிய கோவிலில் முக்கிய கைங்கர்யங்களைச் செய்து வந்த,கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி,
மாமுனிகளைச் சரணடைந்து, ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்
மாமுனிகள் மீது”மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாடினார்.

11.ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பரப்ப 74 சீடர்களை நியமித்து அவர்களைச் ‘சிம்மாசனாதிபதிகள்’ ஆக்கினார்.

மணவாள மாமுனிகள் 8 பிரதான சீடர்களை நியமித்து அவர்களை ‘அஷ்டதிக் கஜங்கள்’ ஆக்கினார்.

12.ராமானுஜரும்,மாமுனிகளும் தங்களை,ஆதிசேஷ அவதாரங்கள் என்று சில வைபவங்கள் மூலம் உணர்த்தினர்.

13.ராமானுஜர் பெரும்பாலும் ‘திருப்பாவை’யை அனுஸந்தானம் செய்து கொண்டேஇருப்பார்.
மாமுனிகள்’த்வயமந்த்ரம்’அனுஸந்தானம் செய்து கொண்டே இருப்பார்.

14.ராமானுஜர்,திருமாலிருஞ்சோலை அழகருக்கு,நூறு தடா அக்காரவடிசலும்,வெண்ணெயும் சமர்ப்பித்து விட்டு
ஸ்ரீவில்லிபுத்தார் சென்ற போது,ஆண்டாள் தம் நிலையிலிருந்து சற்றே முன்னே வந்து “நம்அண்ணாவோ”என்று விழித்தார்.
ஆண்டாளுக்கு அண்ணனான உடையவர் ‘கோவில்அண்ணா/கோதாக்ரஜர்’என்று போற்றப்பட்டார்.

மார்கழி மாத நீராட்டு உற்சவத்துக்கு,ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற மாமுனிகள், ஏழுநாள் நீராட்டு உற்சவம் முடிந்து தான் சென்று சேர முடிந்தது.
நீராட்டு உற்சவம் சேவிக்க முடிய வில்லையே,என்று ஏங்கிய மாமுனிகளுக்காக, எட்டாம் நாளன்றும்-
தைமுதல் நாள்-நீராட்டு சேவை சாதித்தார் கோதை நாச்சியார். அந்த வைபவம் இன்றும் தை முதல் நாள் நடைபெறுகிறது.

15.ராமானுஜர் தம் அந்திம திசை வரை, தம் சீடர்களுக்கு நல் வார்த்தைகளை உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்.

மாமுனிகளும் காலட்சேபம்/கிரந்தங்களை இயற்றுதல் ஆகியவற்றை இறுதி வரை செய்து கொண்டேயிருந்தார்.

16.ராமானுஜர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ,அவருடைய திருமேனிகள் இரண்டை நிர்மாணித்த பொழுது,
அவற்றுக்குத் தாமே உகந்து மங்களாசாசனம் செய்து அருளினார்.
அவற்றில் ஒன்று ஸ்ரீபெரும்புதூரில் நாம் சேவிக்கும் “தான் உகந்த திருமேனி”.
மற்றொன்று திருநாராயணபுரத்தில்(மேல்கோட்டை) எழுந்தருளியுள்ள “தமர் உகந்த திருமேனி”

மாமுனிகளும், தாம் வாழ்ந்த காலத்திலேயே தம் திருமேனிகள் இரண்டுக்கு மங்களாசாசனம் செய்து அருளினார்.
தம் சீடர்களில் ஒருவரான அப்பாச்சியார் அண்ணாவின் வேண்டுதலுக்கு இணங்க,
மாமுனிகள் தாம் உபயோகித்த ராமானுஜம் என்னும் சொம்பை உருக்கி இரண்டு திருமேனிகள் செய்யப் பணித்தார்.
அவற்றில் ஒன்று சிங்கப் பெருமாள் கோவில் (பூந்தமல்லி) முதலியாண்டான் திருமாளிகையில் எழுந்தருளப் பண்ணப்பட்டுள்ளது.
இன்னொரு திருமேனியை நாங்குநேரி வானமாமலை மடத்தில் சேவிக்கலாம்.
(முதல் அஷ்டதிக்கஜமும்,வானமாமலை மடத்தின் முதல் ஜீயருமான பொன்னடிக்கால் ஜீயருக்குத் தந்தருளியது).

17.ராமாநுஜர் அவதாரம் செய்து, வேதத்துக்குத் தவறான அர்த்தம் கற்பித்த வந்த
புறச் சமயவாதிகளையும்,குதிர்ஷ்டிகளையும் வாதில் வென்றும்,கிரந்தங்களை இயற்றியும்
ஸ்ரீமந்நாராயணின் விசிஷ்டாத்வைத நெறியை நன்றாக நிலை நாட்டினார்.
74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து அவர்கள் வம்சத்தார் மூலம் என்றென்றும்
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் செழித்து வளர வழிவகை செய்தார்.

12/13 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லீம் படையெடுப்புகளால்,
இந்து மத சம்பிரதாயங்களும், கோவில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.வைணவ சம்பிரதாயத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டது.
அந்தக் கால கட்டத்தில் தான், 1370 ஆம் ஆண்டு மாமுனிகள் அவதரித்தார்.
அவர் செய்த ரஹஸ்யக் கிரந்த வியாக்யானங்களும், திருவாய்மொழி காலட்சேபங் களும்
பல வித்வான்களையும் சாஸ்த்ர விற்பன்னர்களையும் அவருக்குச் சீடர்களாக்கின.
அவர்கள் மூலம் வைணவம் பெரிதும் வளர்ந்தது.திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செழித்தது.
மாமுனிகளால் உடையவர் காலத்தில் இருந்த மேன்மையை மீண்டும் அடைந்தது வைணவம்!!

18.ராமானுஜர் மனத்திலும், மாமுனிகள் மனத்திலும் இருந்து அருளும் பெருமான்:
அமுதனார், இராமாநுச நூற்றந்தாதியில்
“இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம்,மாலிருஞ்சோலை என்னும்,
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மோடும் வந்து,
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்றவன் வந்து இருப்பிடம்”என்று
பரவாசுதேவரானாலும்,திருவேங்கடவரானாலும்,அழகரானாலும் அவரவர் தம் இருப்பிடங் களுடனே வந்து,
ராமானுஜர் மனதில் இருந்து அருள்வார்கள் என்று பாடுகிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணா,ஸ்ரீவேங்கடேச மங்களாசாசனத்தில்,
“ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே!
ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீனிவாஸாய மங்களம்!!”
–(மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக் கணம் புரந்து,களித்தருளும் வேங்கடவா மங்களங்கள்) என்று பாடுகிறார்.

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமரும் ஸ்ரீ ராமானுஜரும் —

October 7, 2021

1–திரு அவதார ஒற்றுமை

சித்திரை ராமன், ராமானுஜர் இருவருமே
சூரியன் உச்சநிலையில் பிரகாசிக்கும்
சித்திரை மாதத்திலே அவதரித்தவர்கள்.
சைத்ர மாஸே ஸிதே பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம்.
(அதாவது சித்திரைநவமியில் புனர்பூசத்தில் அவதரித்தார்.)

ராமானுஜ அவதாரம் மேஷார்த்ரா ஸம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம் என்று
மேஷ மாதமான சித்திரையில் நிகழ்ந்ததாக சுலோகம் குறிக்கிறது.
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்,
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்தருளும் “சித்திரையில்
செய்ய திருவாதிரை” – என்று மாமுனிகள் இயற்றிய உபதேச இரத்தின மாலை,
இராமானுஜர் அவதாரத்தை இன்னும் சிறப்பாக கூறும்.

இருவருமே கடக லக்னத்தில் இத் தரணி வாழ அவதரித்தவர்கள்.

———–

ஸ்ரீ மான்கள்

நட்சத்திரம் ராமன் அவதரித்தது புனர்பூசம்
ஆயினும் பொதுவான பெருமாள் நட்சத்திரம் திருவோணம்.
ராமரின் மூல சொரூபமான பெருமாளின் நட்சத்திரம் திருவோணம்.
வைணவத்தில் திரு என்கிற அடைமொழியோடு இருக்கக்கூடிய இரட்டை நட்சத்திரங்களில்
ஒன்றில் எம்பெருமான் அவதரித்தான். அது திருவோணம்.
இரண்டாவது திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் எம்பெருமானார். அதாவது ராமானுஜன்.

—————-

3-புத்திர காமேஷ்டி யாகம்-

ராமனுடைய அவதாரத்திற்காக, (அதாவது ராமனைப் பிள்ளையாகப் பெறுவதற்காக)
தசரதன், வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில், புத்திர காமேஷ்டி யாகம் செய்தார்.
அதனால் சாட்சாத் மகாவிஷ்ணுவே தசரதனுடைய பிள்ளையாக இம்மண்ணுலகில் அவதாரம் செய்தார்.

அதைப் போலவே,
ராமானுஜர் பெற்றோர்களான கேசவ சோமையாஜி காந்திமதி அம்மையாருக்கு,
பலகாலம் பிள்ளை இல்லாமல் இருந்து, அந்த புத்திரசோகம் தீர, திருக்கச்சி நம்பிகளின் ஆலோசனையின் பேரில்,
திருவல்லிக்கேணியில் புத்திரகாமேஷ்டி யாகம் இயற்றி, அதன் வழியாக ராமானுஜர்
இப்பூவுலகில் அவதரித்தார்.

————–

4-வைகுண்டம் பெற…

இந்த உலகம் வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டும். எல்லோரும் வைகுண்டத்தை அடையும் பேற்றினைத் தர வேண்டும்
என்பதற்காகவே, மேலே இருந்து கீழே இறங்கி (அவதாரம்) வந்தான்,
ராமன்.
புற்பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்குள் உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

அதைப் போலவே இந்த உலகத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொரு ஆன்மாவும் கடைத்தேற வேண்டும் என்பதற்காகவே
ராமானுஜனுடைய அவதாரம்.
அதனால் அவரை அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவர் என்று கொண்டாடுகின்றோம்

—————

5-அழகு –

ராமா என்கிற பெயருக்குப் பிரமிக்கச் செய்பவன். பார்ப்பவர் விரும்பும் அழகு உடையவன்.
ஆடவர்கள் பெண்மையை விரும்பும் தன்மை உடையவன் என்று பொருள். இதைக் கம்பன்.

தோள்கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்- என்று வர்ணிக்கிறார்.
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் –
கண்டவர் தம் மனம் வழங்கும் அழகன் –

ராமானுஜர் வடிவழகும் அப்படிப்பட்டதே என்பதை கீழே இருக்கக் கூடிய
எம்பார் அருளிய பாசுரம் காட்டுகின்றது.
பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணநற் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக் கெதிர் இல்லை எனக்கெதிரே

——————-

6-வேதங்களையும்,
தர்மங்களையும்
காப்பாற்றுவதற்காக–திரு அவதாரங்கள்

வேதம் தான் ராமாயணமாக அவதரித்தது.
வேத நாயகன் தான் ராமனாக அவதரித்தான்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவ மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழிரண்டு ஆண்டில் வா – என்ற ஆணைக்கேற்ப,
காடு ஆளச் சென்றது, அங்கே இருக்கக்கூடிய துறவிகளைக் காப்பாற்றுவதற்காக என்பதை,
ராமாயணம் நமக்கு நன்றாகத் தெரிவிக்கிறது.

‘‘செருமுகத்துக் காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று கேட்கிறார் விஸ்வாமித்திரர்.
விசுவாமித்திரர் அழைக்க அவருடன் ராமன் சென்றதுகூட விசுவாமித்திரர் செய்கின்ற யாகத்தைக் காப்பாற்றுவதற்காக.

ஆரண்ய காண்டம் சர்க்கம் 17ல் ரிஷிகள் ராமனிடம் முறையிடுகிறார்கள்.
“ராமா! நாங்கள் அக்னி ஹோத்திரங்களையும், பருவ காலங்களில் இஷ்டிகளையும் செய்யும்போது,
ராட்சர்கள் ஓடிவந்து கெடுக்கிறார்கள். ராமா நீ யக்ஞ மூர்த்தி.
யாகங்களைக் கெடுக்கிறவர்கள் உனக்கே அபராதம் செய்தவர்கள் அல்லவா!
எனவே, நீயே அபயப் பிரதானம் தந்து வேத தர்மத்தைக் காக்க வேண்டும்.”

இப்போது ராமன் அவர்களிடம் சொல்கின்றான்.

‘‘ரிஷிகளே! நான் உங்களுக்கு சத்தியம் செய்கின்றேன். என் செல்வம், என் மனைவி, ஏன்… என் அன்புக்குரிய தம்பி,
எல்லோரையும் இழந்தாலும், நான் உங்களுக்கு தந்த வாக்குறுதிப்படி நடப்பேன்.
இதற்காகவே ராட்சஸர்களை பகைத்துக் கொண்டு சீதையைப் பிரிந்தார்.
யாகத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக, யாக மந்திரங்களாகிய வேதங்களைக் காப்பாற்றுகிறார்.
எனவே, ராமாவதாரத்தில் முக்கிய நோக்கமே சாதுக்களையும் வேதங்களையும் காப்பாற்றுவது.

ராமானுஜனுடைய அவதார நோக்கத்தையும் இதிலே பொருத்திப் பார்த்தால்,
அவரும் வேதங்களையும், வேதங்களின் தர்மங்களையும் காப்பாற்றுவதற்காகவே அவதரித்தார்.
வேதத்தின் உபநிடத வாக்கிய சூத்திரங்களான பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் செய்ததன் மூலம், அவர் வேத சம்ரட்சணம் செய்தார்.
தமிழ் வேதமான திருவாய்மொழியை நாடெங்கும் பரப்பி, அதன் மூலமாகவும், உபய வேதங்களையும் அவர் காத்தார் என்பது
ராமானுஜருக்கு கூடுதல் ஏற்றம்.
வேதத்தையும், வேத தர்மத்தையும் காப்பதற்காக, 74 சிம்மாசனாதிபதிகளையும் அவர் நியமித்தார்.

வேத தர்மத்தை ரட்சிப் பதற்காக சுவாமி ராமானுஜரும் மனைவியை பிரியும் சூழல் ஏற்பட்டது.
சீதையை பிரிந்து வேத தர்மத்தை காப்பாற்றுவேன் என்றான் ராமன்.
தன் மனைவியை பிரிந்து வேத தர்மத்தை இரட்சித்தார் ராமானுஜன்.
அதனால் தான் வேதம் தழைத்தது என்று திருவரங்கத்து அமுதனார் பாடுகிறார்.

பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்-
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை-
கொண்ட நல் வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே-
மண்டி வந்தேன்றது* வாதியர்காள்! உங்கள் வாழ்வற்றதே.

———-

7-வெற்றி -வில்லாலும் சொல்லாலும்

ராமனைப் பொறுத்த வரையிலே
வெற்றியைத் தவிர வேறு அறியாதவர். அவர் பெற்ற வெற்றி வில் அம்புகளால் பெற்ற வெற்றி.
அதைப் போலவே ராமானுஜர் பற்பல வாதப் பிரதிவாதங்களை நடத்தினார்.
அதன் மூலமாக யாதவப் பிரகாசர் தொடங்கி, யஞ்ஜமூர்த்தி வரையில் வென்று, தம்முடைய சமய மரபுக்கு கொண்டு வந்தார்.
அவர் எந்த சாஸ்திர தர்க்க வாதங்களிலும் தோற்றது கிடையாது.

ராமனின் வில் அம்பும், ராமானுஜரின் சொல் அம்பும் தோற்றதேயில்லை.
ராமன் தனி ஆளாக பன்னீராயிரம் போர்வீரர்களை கர தூஷண வதத்திலே வென்றார்.
ராமானுஜர் மேல்கோட்டையில் தம்முடன் எதிர்த்து வாதிட்ட பன்னீராயிரம் சமணர்களை தனி ஒருவராக தர்க்க வாதத்தில் வென்றார்.

ராமரின் வில் அம்பும் ராமானுஜரின் சொல் அம்பும் அமோகம் –

———-

8-ஆசார்யர்களாக இருந்து பெருமை பெற்றனர்  

வசிஷ்டர் விசுவாமித்திரர் போன்றவர்கள் ராமனுக்கு ஆசார்யர்களாக இருந்து,
ராமனால் பெருமை பெற்றனர்.

ராமானுஜரின் வாழ்வில் பெரிய நம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள் உள்ளிட்ட ஆசாரியர்கள்
ராமானுஜரால் பெருமை பெற்றனர்.

———–

9-எல்லோரையும் அரவணைத்து…

குகன் தொடங்கி சுக்ரீவன், வீடணன் வரை எல்லோரையும் அரவணைத்து தம்முடைய உறவுகளாக
தம்பிகளாக ஏற்றுக் கொண்டான் ராமன்.
ராமானுஜரும் தாம் வாதில் வென்றவருக்கு மடாதிபதி பட்டம் சூட்டி தன்னுடைய பெயரையே கொடுத்து எம்பெருமானார் ஆக்கினார்.
அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்கிற பெயரையே சூட்டினார்.
அதைப்போலவே தன்னுடைய சகோதரி பையனான கோவிந்தனை திருத்திப் பணி கொண்டு
அவருக்கும் எம்பார் என்கிற பெயரை வழங்கினார்.

ராமன் வேடுவர் குல குகன் போன்றவர்களையும் தமது உசாத் துணையாகக் கொண்டு கைங்கரியம் பெற்றது போல,
ராமானுஜரும் வடுக நம்பி, பிள்ளை உறங்காவில்லிதாசர் போன்ற வேடர் குலத்தைச் சேர்ந்தவர்களையும்
தம்முடைய துணைவராக வைத்துக் கொண்டு, நட்பு பாராட்டி, அவர்கள் பெருமையை உலகறியச் செய்தார்.

—————

10-சரணாகதி சாஸ்திரம்

சரணாகதி சாஸ்திரத்தைக் காட்டிக் கொடுத்தார் ராமன்.
அபயம் என்று அடைந்துவிட்டால் அவர்களை காப்பாற்றாமல் ஓய மாட்டேன்.
அதுவே என்னுடைய வாழ்நாளில் நோக்கம் என்பதையே வீடண சரணாகதி படலத்தில்,
தனது கடற்கரை வார்த்தையாக, (சரம ஸ்லோகமாக ) ராமபிரான் சாதித்தார்.

(ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-யுத்த -18-33-)

(இதன் பொருள்: ஒரு தரமே என்னை பிரபத்தி பண்ணினவன் பொருட்டும், இனி நான் உனக்கு அடியேனாய் ஆகிறேன்
என்று யாசிக்கிறவன் பொருட்டும், எல்லா பிராணிகள் இடத்தும் நான் அபயம் அளிக்கிறேன். இது எனக்கு விட முடியாத சங்கல்பம்)

வீடணன் வந்து சேர்ந்தபோது ராமன், அவனைச் சேர்த்துக்கொள்வது குறித்து அபிப்பிராயம் கேட்கிறார்.
பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அனேகமாக அனுமனைத் தவிர,
யாருமே வீடணனைச் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.
அனுமன் கூட அவன் நல்லவன் என்பதால் சேர்த்துக் கொள்ளலாம் என்று தன்னுடைய கருத்தை வெளியிட்டார்.
அப்போது நிறைவாக ராமன் வெளியிட்ட கருத்து.

“அவன் கெட்டவனாகவே இருந்தாலும் கூட, என்னுடைய திருவடியில் சரணடைந்து விட்டால்,
அவனைக் காப்பாற்றுவதே என்னுடைய வாழ்வின் நோக்கம் என்று சொல்லிச் சேர்த்துக் கொண்டார்.

சரணாகதியின் உச்ச நிலை இது. அதனால்தான் போர்க்களத்திலே கூட, தன்னோடு எதிர் அம்பு கோத்த ராவணனே எதிர் நின்ற போதும்,
அவன் ஆயுதங்களை இழந்து தவித்தபோதும், இன்றுபோய் நாளை வா என்று சொன்னார்.
கச்சாநுஜாநாமி ரணார்திதஸ்த்வம் ப்ரவிஸ்ய ராத்ரிசரராஜ லங்காம் ஆஸ்வாஸ்ய நிர்யாஹி ரதீசதன்வீ
ததாபலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்த என்பது வான்மீகி சுலோகம்.

“இன்று உன்னிடம் ஆயுதம் இல்லை.ரதம் இல்லை. தவிர சோர்வாக இருக்கிறாய்.இன்று திரும்பிப் போ.
நாளை வா. என் போர் வீரம் காண்பாய்.” இதையே கம்பன் பாடுவது இன்னும் அற்புதம்.

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா’ என நல்கினன்- நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

இப்படி எதிரிக்கும் அபய பிரதானம் தந்தவன் ராமன்.

ராமானுஜரும் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில், பிராட்டியும் பெருமாளும் சேர்த்தியாக இருக்கக்கூடிய நேரத்தில்,
“இந்த உலக மக்களெல்லாம் உன்னிடத்திலே சரண் அடைவார்களோ, சரணடைய மாட்டார்களோ தெரியாது;
ஆனால், அவர்களுக்காக, இன்று உங்கள் இருவர் திருவடிகளிலே நான் சரணம் அடைகிறேன்” என்று சொல்லி
அதற்காகவே கத்யத்ரயம் என்கின்ற மூன்று நூல்களை இயற்றினார். அந்த மூன்று நூல்களின் ஒன்றுதான் சரணாகதி கத்யம்.

————

11-சரணாகத ரக்ஷணம்.

பெண்ணுக்கு சாப விமோசனம் தன் திருவடி பலத்தால் அகலிகைக்கு சாப விமோசனம் தந்தான் ராமன்.
காஞ்சி மன்னனின் மகளுக்கு ப்ரம்ம ராட்ஷஸ் பிடித்து அவள் புத்தி ஸ்வாதீனமில்லாமல் இருந்தபோது ராமானுஜர்
தம் திருவடியை அவள் சிரசின் மீது வைத்து குணமாக்கி சாப விமோசனம் தந்தார்.

ராமன் ஜடாயு என்கிற பறவைக்கு தன் சங்கல்பத்தினால் மோட்சம் அளித்தார்.
ராமானுஜரும் ஒரு தயிர் விற்கும் பெண்மணிக்கு ஓலை கொடுத்து மோட்சம் கொடுத்தார்.

—————

12-திருவரங்கனிடத்திலே ஈடுபாடு

வைணவத்தில் கோயில் என்று சொன்னால் அது திருவரங்கத்தைக் குறிக்கும்.
திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் என்பர்.
அப்படிச் சொல்வதற்குக் காரணம், பெருமாளாகிய ராமபிரான் தன்னுடைய குல தெய்வமாக வழிபட்ட பெருமாள் அரங்கநாதர்.
அரங்கனுக்குக் கைங்கரியம் செய்து கொண்டு பூஜித்தவர் ராமபிரான்.

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்க மெனத் திகழுங் கோயில் தானே!

அதே அரங்கனுக்குக் கைங்கரியம் செய்து கொண்டு திருவரங்க செல்வம் முற்றும் திருத்தி வைத்து
திருவரங்க கோயிலின் ஏற்றத்தை திக்கெல்லாம் பரப்பியவர் ராமானுஜர்.
ராமனுக்கும் ராமானுஜருக்கும் அரங்கனிடத்திலே அதிக ஈடுபாடு என்பது அவர்கள் இருவருக்குமான ஒற்றுமை.

—————-

13-திருநாமச் சிறப்பு

“ராம” என்னும் நாமம் சொல்லும் பொழுது, பகவானுடைய நாமத்தை மட்டும் தான் உச்சரிக்கிறோம்.
ஆனால் “ராமானுஜ” என்கிற நாமத்தை உச்சரிக்கின்ற போது,
பரம ஆச்சார்யனின் திருநாமத்தையும் சேர்த்து உச்சரிக்கிறோம் என்பது சிறப்பு அல்லவா.
இப்படித் தொட்ட தொட்ட இடமெல்லாம் ராமருக்கும் ராமானுஜருக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு வியக்கலாம்.

—————–

14-பஞ்ச சம்ஸ்காரம் ராமர் சந்நிதியில் மதுராந்தகம்

ஆசார்யர்களோடும் தொடர்பு பெற்று விளங்குகிறது இந்தத் தலம்.
ஆதியில் வகுளாரண்யம் என்று பெயர் பெற்ற மகிழ மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாகத் திகழ்ந்தது.
கிளியாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது மதுராந்தகச் சோழரின் நினைவாக இப்பெயர் பெற்றதாகக் கூறுவர்.
மதுரமான (இனிமையான) பல புண்யதீர்த்தங்களையுடைய இடம் என்றும் பொருள் கொள்ளலாம்.
கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர்
சோழ மன்னனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக அளிக்கப்பட்டது.
ப்ரஹ்ம வைர்த்தம், பார்க்கவம் போன்ற புராணங்களில் இந்தத் தல மஹாத்மியம் கூறப்பட்டுள்ளது.

விபண்டக மஹர்ஷி கிளியாற்றின் கரையில் தவம் புரிந்தபோது ராமபிரான் வனவாசம் முடித்துத் திரும்பி
அயோத்தி செல்லும் போது புஷ்பக விமானம் இத்தலத்தைக் கடக்க முடியாமல் நின்றது.
ஸீதாபிராட்டியின் கையைப் பற்றி விமானத்திலிருந்து இறங்கி முனிவருக்கு ராமபிரான் காட்சி அளித்த இடமே இத்திருத்தலம்.
5 நிலை கோபுரங்களுடன் கூடிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இந்தத் தலம்.
சுகர் என்ற மஹர்ஷியும் தவம் செய்த இடம் இதே மதுராந்தகம் தான்.

கோவிலில் நின்றதிருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில்
ஸீதை, லக்ஷ்மணருடன் காட்சி தருகிறார்.
உற்சவ மூர்த்தியான கோதண்ட ராமர் சற்றுப் பெரிய வடிவினராக ஸீதை லக்ஷ்மணருடன் ஸேவை ஸாதிக்கிறார்.
மூலவர் விபாண்டக மஹர்ஷிக்கு ஸேவை தந்த கோலத்தில் பாணிக்கிரகண பாணியில் ஸீதையின் கையைப் பற்றிக் கொண்டுள்ளார்.
விபாண்டக மஹர்ஷியும் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

சற்றே சிறய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள்.
அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார்.
இவரையே ராமபிரானாக விபாண்டக மஹர்ஷி ஆராதித்துத் தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம்.
கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார்.
இவர் தனி ஸந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார்.
எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே.
ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் மட்டும் கோதண்ட ராமருக்கு. உற்சவ மூர்த்தி கண்ணன இவர் ஸந்நிதியில் உள்ளார்.

மற்றும் பிற ஸந்நிதிகளில் ஆண்டாள், விஷ்வக்ஸேனர், ராமானுஜர், பெரியநம்பிகள்,
நிகமாந்த மஹாதேசிகன், மணவாள மாமுனிகள் உளளனர்.
ஆஞ்சனேயர் ராமபிரான் கோவிலுக்கு எதிரில் தனி ஸந்நிதி கொண்டு விளங்குகிறார்.
லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், உற்சவரான ப்ரஹ்லாதவரதர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உள்ளார்.
சக்கரத்தாழ்வாரும், ந்ருஸிம்ஹரும் சேர்ந்து ஒரு ஸந்நிதியில் உள்ளனர்.
சக்கரத்தாழ்வாரின் உற்சவ மூர்த்தியும் அங்கேயே உள்ளது.

இந்தக் கோவில் புஷ்கரிணியை ராமச்சந்திர புஷ்கரிணி என்றழைக்கின்றனர்.
சரித்திரப்புகழ் பெற்ற ஏரியைக் காணக்கோவில் அருகில் உள்ள பாதை வழியே படிகள் உள்ளன.
ஏரிக்கும் இந்தப் படிகள் உள்ள நடைபாதைக்கும் நடுவில் வண்டிகள் செல்லும் பாதை உள்ளது.
இங்கு அஹோபில மடத்தினரால் நடத்தப்படும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியும், ஓரியண்டல் பள்ளியும் உள்ளன.

ஒரு காலம். 1825ஆம்ஆண்டு ஏரி மழையில் நிறைந்து ததும்புகிறது. தண்ணீரின் வேகத்திற்கு கரைகள் ஈடுகொடுக்கவில்லை.
எத்தனை முறை அடைத்தாலும் கரைஒருபக்கம் உடைந்துகொண்டே இருக்கிறது.
அப்போது கிழக்கிந்திய அதிகாரி லயனல் பிளேஸ் பொறுப்பில் இருக்கிறார்.
கரை உடைபடுவதை தடுக்க வழி தேடி அவர் தவித்தபோது, ஒருவர் சொல்கிறார்.
இங்குள்ள கோதண்டராமர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பாழ்பட்டு இருக்கும் ஜனகவல்லி தாயார் சன்னதியை சரிசெய்து
கொடுப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள் என்கிறார்.
அவரை எள்ளி நகையாடி அனுப்பிவிட்டாலும் லயனல் பிளேசுக்கு உள்ளூர ஒரு நப்பாசை. வேண்டிக்கொள்கிறார்.

வேண்டிக்கொண்ட நாளில் இடி, மின்னல், மழை..மனம் பதைக்கிறது. ஏரி உடைந்தால் மதுராந்தகம் மட்டுமின்றி
சுற்றுவட்டார கிராமங்களும் மூழ்கிவிடும். எத்தனை உயிர் போகுமோ? நினைக்கவே பதறியது. குதிரையில் ஏறி கிளம்புகிறார்.
மழை கொஞ்சம் கூட விடுவதாக இல்லை. பதற்றத்தோடு கரையை நெருங்குகிறார்.
தூரத்தில் கரையோரம் இரண்டு பேர் நின்றிருக்கிறார்கள்.
நல்ல உயரம்.. கருநிற வைரமாய் ஜொலிக்கும் ஒருவரின் கைகளில் வில் ஏந்தி நிற்கிறார்,
பக்கத்தில் அவருக்கு ஈடு கொடுத்து மற்றொருவரும் வில்லேந்தி நிற்கிறார். இருவரும் கரையோரம் நடக்கிறார்கள்.
லயனல் பிளேசுக்கு பதற்றம் உண்டாகிறது. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றிருக்கும் கரை மேல் நிற்கிறார்களே.
அருகில் போக நினைக்கிறார். போக முடியவில்லை. ஒரு ஒளிப்பிழம்பாக அவர்கள் இருவரும் கரையில் நடந்தபடியே இருக்கிறார்கள்.
விடிகிறது. அத்தனை மழைக்கும் கரை உடையவில்லை. லயனல் பிளேஸ் ஆச்சரியத்தில் உறைகிறார்.
வந்தது இதோ இந்த ஏரி காத்த ராமரும் லட்சுமணரும் தான் என்று உணர்ந்து மெய் சிலிர்த்து போகிறார்.
பிறகு வேண்டியபடி அவர் ஜனகவல்லித் தாயார் சன்னதியை சீரமைத்து தருகிறார். அதற்கான ஆதாரங்கள் கோவிலில் இன்றும் இருக்கின்றன.

ஆனி மாத ப்ரஹ்மோத்சவமும், பங்குனி மாதத் திருக்கல்யாண உத்சவமும், மார்கழி மாத அத்யயன உத்சவமும் இங்கு புகழ் பெற்றவை

வைணவ சித்தாந்தத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ
தீக்ஷை யாகிய பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் தான்.
மகிழ மரமே இந்தத் தல வ்ருக்ஷம்.
இங்கே ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமியில் சுவாமி ராமானுஜருக்கு
ஸ்ரீ பெரிய நம்பியால் த்வய மந்திரம் உபதேசிக்கப்பட்டு பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப்பட்டது.
அதனால் மதுராந்தகத்தை ”த்வயம் விளைந்த திருப்பதி” என ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்வார்கள்.

ராமானுஜருக்கு,பெரிய நம்பிகள் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்த தாமிரத்தால் ஆன,
சங்கு, சக்கரம்,பெரிய நம்பிகளின் திருவாராதனைப் பெருமாளான ஶ்ரீ நவநீத கிருஷ்ணர்,
தாமிரத்தால் ஆன திருவாராதனை வட்டில்கள் ஆகியவை இன்றும் உள்ளன.
அவற்றுக்கும் பூஜை நடைபெற்று வருகிறது. 1937 ல் தான் இவை கண்டு பிடிக்கப்பட்டன.
சேத் மகன்லால் பங்கூர் என்பவர் 1937 ல் கோவில் திருப்பணி செய்தார்.
அப்பொழுது கோவில் திருச்சுற்றில் ஒரு குகை இருந்ததைப் பார்த்தார்கள்.
அதைத் தோண்டிப் பார்த்த போது 20 அடிக்குக் கீழே ஒரு சிறிய மண்டபமும்,
அதனுள் மேற்குறிப்பிட்ட திருச்சின்னங்களும் இருந்தன.

பரதாழ்வானுக்கு அடி சூடும் அரசு அளித்தது போலவே
பெரிய நம்பியும் தம்மை ஆளவந்தார் திருவடி ஸ்தானமாகவே கொண்டு பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணி அருளி
குரு பரம்பரை பூர்வகமாக ரஹஸ்ய த்ரயங்களையும் உபதேசித்து அருளுகிறார்

ஸ்ரீ ராமாநுஜரே , இதையெல்லாம் நான் உமக்கு செய்வித்தேன்.
எப்படி ஸ்ரீ ராமன் தனது பாதுகைகளை, பரதாழ்வானிடம் அளித்து, இனி நீ நாடாளவேண்டும் என்று கூறி காடு ஏகினாரோ,
அவ்வாறு ஸ்வாமி ஆளவந்தார் தனது பாதுகைகளை (நிர்வாக பொறுப்பை) உம்மிடம் அளித்து
இனி நீவிர் தரிசன நிர்வாகம் செலுத்தவேண்டும் என கூறிவிட்டு ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டார்.
அடியேன் சுவாமி ஆளவந்தாரின் கட்டளையை நிறைவேற்றினேன்.
இனி தாங்கள் பொறுப்பேற்று அவர் விருப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் ” என்கிறார் பெரிய நம்பி.

லட்சுமிநாதன் ஒரு பெரிய கருணை நிறைந்த கார்மேகம்,
அதிலிருந்து ஞானம் என்கிற ஜலம் பெருகி அதை நம்மாழ்வார் எடுத்து நாதமுனி என்ற மலை சிகரத்தில் பொழியச் செய்து,
அந்த ஜலதாரை அகண்டமாக பெருகி இரு நீர் வீழ்ச்சிகளாகியது.
அந்த ரெண்டு நீர்வீழ்ச்சிகள் தான் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி ஆகியோர்.
நீர்வீழ்ச்சிகளின் ஜலம் பிரவாகமாக ஓடி ஒரு ஆறாகியது. அந்த ஆறு தான் ஆளவந்தார்.
அந்த ஆறு அப்புறம் ஐந்து ‘பெரிய” கால்வாய்களாக பிரிந்து ஓடும் என்று ‘ நம்பி’ னார்கள்.
அவையே ஸ்ரீ பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்க பெருமாள் அரையர்,
திருமாலை ஆண்டான் ஆகியோர்.
அதோடு மட்டும் இல்லை. ஆற்றின் நீர் ஒரு பெரிய ஏரியாக உருமாறியது. அதுவே ஸ்ரீ ராமானுஜர்.
அந்த பெரிய ஏரிக்கு 74 கணவாய்கள், கண்மாய்கள், அவர்கள் தான் சிம்ஹாசனாதிபதிகள்.
ஸ்ரீ வைணவம் பெருகி இவர்கள் மூலம் எங்கும் பரவியது.

————-

15-இராமாயண காலஷேபம் பிதாமஹருக்கும் பிதா மஹாரான திருமலை நம்பி இடம்

பிரமாணம் ப்ரமேய பிரமாதா
இருப்பிடம் வைகுண்டம் வேங்கடம் -ப்ரமேயம் பிரமாதா எம்பெருமான் மனதுக்குள் வந்தார்
பிரமாணம் -படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் தானே இவர் திரு உள்ளம்
பிரமாதாவான ஆச்சார்யர் திருவடிகளை பற்றவே -ஒன்றைப் பற்றவே -பிரமாணமும் ப்ரமேயமும் கை புகுமே
உன்னுடைய கருணையை விட வேறே உபாயம் இல்லை -மா முனிகளும் அருளிச் செய்கிறார் அன்றோ –

————

16-அனைத்திலும் விஞ்சி –

கருணையால் மிக்கு
அழகால் மிக்கு
சத்ருக்கனன் படி
ராமானுஜ திவ்ய ஆஜ்ஜா -திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே

ராமர் கோஷ்ட்டி ராமானுஜர் கோஷ்ட்டி வாசி அறிந்து விஸ்வஸித்து இரும் பிள்ளை உறங்கா வல்லி தாசர்
மிதுனத்தில் சரணாகதி -கத்ய த்ரயம்

ஸ்ரீ ரெங்க நாயகியாரே ஸ்ரீ சீதா பிராட்டி
திருத்திப் பணி கொள்ளும் பொழுது
தமது அந்தரங்க கிங்கர்களையே கொண்டு
பரிகரங்களை மாற்ற வேண்டாம் -ஸ்ரீ சீதா குணம்

லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
திருவடியை மறுதலித்து ராக்ஷஸிகளை ரக்ஷித்து அருளி –
பரிகரங்கள் தவறே இழைத்தாலும் மாற்ற வேண்டாம்
நம்பெருமாள் தானே ராமனாகவே சொல்லிக் கொண்டார்
ராமோ த்விர் ந பாஷயே
ஏலாப்பொய்கள் பேசும் கண்ணன் அல்ல -என்றாரே –

ராமானுஜன் -ராமன் செய்தவற்றை விஞ்சி செய்தலால் இவரே அண்ணன் ஸ்தானம்

——————————————-

நான்காவது ராமரும், நான்காவது லக்ஷ்மணரும்-

மாசி மகம் மகத்தான, மாசில்லாத, மணக்கால் நம்பி ஸ்வாமி திருநட்சித்திரம்.

ஸ்வாமியின் தனியன்:

“அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||”

“பட்டத்து இளவரசாகிய யாமுனாசார் யரைத் தூதுவளை தந்து,மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.”

இவருக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் உள்ள ஒற்றுமை ஆய்ந்து பார்ப்போம்.

ஶ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள அன்பில் என்னும் ஊரின் கிராமப் பகுதியான மணக்கால் என்னுமிடத்தில் அவதரித்தார்
‘ராம மிஸ்ரர்.’ நாம் நாளும் ஸ்தோத்திரம் செய்யும் குருபரம்பரை ஸ்லோகத்தில் உள்ள ராம மிஸ்ரர் இவரே.
இவரை நம் சம்பிரதாயத்தில் நான்காவது ராமராக பரசு ராமர்,சீதா ராமர்,பல ராமருக்குப் பின் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீதேசிகன் ஸ்வாமி “யதிராஜ சப்ததி”–7 ஆவது ஸ்லோகத்தில்,
“அனுஜ்ஜித ஷமாயோகம்,
(பரசுராமர் பொறாமையால்,
ராமபிரானிடமே சண்டையிட்டார்.கோபத்தால் சத்திரிய குலத்தையே அழித்தார்.
ஆனால் மணக்கால் நம்பிகளிடம் இந்தக் குணங்கள் துளியும் இல்லை)

அபுண்ய ஜனபாடகம்,
(ராமர் புண்ய ஜனங்கள் என்று அழைக்கப் பட்ட ராட்சசர்களை அழித்தார்.
நம்பி யாரையும் அழிக்கவில்லை.புண்ய ஜனங்களுக்கு உபதேசித்தார்/உதவினார்)

அஷ்புருஷ்த மத ராகம்,
(பலராமர் லெளகீகச் செயல்களில் அதிக ஈடுபாடு/ருசி வைத்தார்;
நம்பி எதன் மேலும் பற்று/அக்கறை இல்லாமல் பகவத்/பாகவத/ஆசார்ய கைங்கர்யமே பிரதானமாக இருந்தார்)

தும் ராமம் துரியம் உபாஸ்மகே”
(குறை/குற்றம் ஒன்றில்லாத நான்காவது ராமரான ராம மிஸ்ரரை உபாசிப்போம்)
என்று மணக்கால் நம்பியைக் கொண்டாடுகிறார்.

அந்த வகையில் ஆதிசேஷனின் அவதாரங்களான இளைய பெருமாள்
(லட்சுமணர்),பல ராமர், லட்சுமணரின் அம்சமான ஆழ்வார் திருநகரி உறங்காப் புளிய மரம் ஆகியோருக்குப் பின்
நான்காவது லட்சுமணர் நம் லட்சுமண முனி ராமானுஜர் ஆவார்.

2.மண்ணில் மார்புற, விழுந்த மஹநீயர்கள்

மணக்கால் நம்பியின் ஆசார்யர் ஶ்ரீ உய்யக்கொண்டாரின் தேவியர், இளமையிலேயே பரம பதம் அடைந்து விட்டதால்,
அவருடைய குடும்ப காரியங்களையும்,இரு திருக் குமாரத்திகளையும் கவனித்துக் கொண்டார் உத்தம சீடர் நம்பி.
ஒரு நாள் காலையில்,பெண்குழந்தைகள் இருவரையும் ஆற்றில் நீராடவைத்துக் கூட்டி வரும்போது வழியில் ஓரிடத்தில்
சேறும்,சகதியுமாக இருந்தது.அவர்கள் அந்த இடத்தைத் தாண்ட முடிய வில்லை.நம்பிகள் அந்த சேற்றின் மீது குப்புறப் படுத்தார்.
அவர் முதுகின் மீது ஏறிச் சென்று குழந்தைகள அந்த இடத்தைக் கடந்தனர் !
அதனாலேயே அவர் மணல்(க்) கால் நம்பி ஆனார் என்றும்,
அவர் இருந்த கிராமமும் மணக்கால் என்றழைக்கப்பட்டது என்றும் ஒரு கூற்று உண்டு.!!

ஒரு சமயம்,ஶ்ரீரங்கத்தில் ராமாநுஜருக்கு உணவில் விஷம் கலந்து விட்டனர்.(உஞ்சவிருத்தியின் போது).
அந்த சூழ்நிலையில் அவர் பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது.
இதைச் செவியுற்ற ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பி,அருந்தவச் சீடரைப் பார்க்க விரைந்து வந்தார்.
தம் ஆசார்யர் வருகிறார் என்றறிந்து,(திருமேனி மிகத் தளர்ந்த நிலையிலும்)
அவரை எதிர்கொண்டு அழைக்க ராமானுஜர் திருக்காவேரிக்குச் சென்றார்.
ஆசார்யரைக் கண்டவுடன், அந்த மத்யான வெயிலில்,காவிரியின் சுடுமணலில் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்.
யாராவது தண்டம் சமர்ப்பித்தால்,ஆசி கூறி உடனே எழச்சொல்லி விடுவார்கள் பெரியவர்கள்.
ஆனால் ஆசார்யர் ஒன்றும் சொல்லாமல் சுற்று முற்றும் பார்த்தார்.
சிறிதுநேரம்,உடையவர் சுடு மணலில் கிடந்தார்.அங்கு சுற்றி நின்றிருந்தவர்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தனர்.

அப்போது கிடாம்பி ஆச்சான் என்பவர் ஓடி வந்து நம்பியைப் பார்த்து
”இது,என்ன ஆசார்ய, சிஷ்ய நிஷ்டை”என்று கூறிவிட்டு,ராமானுஜரை அள்ளி எடுத்துக் கொண்டார்.
உடனே நம்பிகள் ”உம் போன்ற ஒருவர் வர மாட்டாரா, என்று தான்காத்திருந்தேன்,”
என்று அவரைத் தழுவிக் கொண்டு,
“இனிமேல் நீரே உடையவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்.அவருக்குத் தளிகை செய்வது, திருமேனியைக்
கவனிப்பது போன்றவற்றைக் குறைவின்றி நடத்தி வாரும்”என்று நியமித்தார்.

3.)தூது விடுத்து,வைணவம் வளர்த்த, தூய் மனத்துப் பெரியோர் !!

நம் சம்பிரதாயத்தில் தூதுக்கு ஒரு தனி வலிமை உண்டு.
ஶ்ரீராமாயணத்தில் ஆஞ்சநேயர் தூது,
மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரின் தூது என்று.
அந்த வகையில் இந்த நான்காவது ராமர்,சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னராக விளங்கிய ஆளவந்தாருக்கு
“தூதுவளைக் கீரையையே” தூது அனுப்பினார்.
மன்னரை ஒரு சாமான்யர் எளிதில் சந்திக்க முடியாததால், அவருக்குப் பிடித்தமான தூதுவளைக் கீரையை
அரண்மனைக்குத் தினமும் கொடுத்து வந்தார் ராம மிஸ்ரர்.
திடீரென்று ஒருநாள் நிறுத்தி விட்டார்.
இதனால் ஆளவந்தாருக்கு ஆர்வத்தைத் தூண்டி,இவரை அழைத்து வரச்செய்து சந்திக்கும், சூழ்நிலையை உண்டாக்கி விட்டார்.
அந்த முதல் சந்திப்பையும், அதனால் ஏற்பட்ட மற்ற சந்திப்புகளை யும், பயன்படுத்தி அரசருக்கு,
ஶ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி எடுத்துரைத்து, ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்து,பெரிய பெருமாள் முன்னர் நிறுத்தி விட்டார்.
அன்று வந்தவர் அங்கேயே இருந்து விட்டார்.அரசர் ஆளவந்தார், “பரமாசார்யர்” ஆளவந்தாராகி விட்டார்.

ராமானுஜர் தம் உத்தமசீடர் முக்குறும்பு அறுத்த கூரத்தாழ்வானை பெரிய கோயில் நம்பியிடம்,
தூது அனுப்பிஅவரிடம் இருந்த கோயில் பொறுப்பையும்,சாவியையும் வாங்கினார்.
சாவி மட்டுமா கிடைத்தது? அரசர் ஆளவந்தார் ஆசார்யராக மலர்ந்ததைப் போல்,
பெரிய கோயில் நம்பி,”திருவரங்கத்து அமுதனார்” ஆக மலர்ந்தார்..
நாம் நாளும் சேவித்து இன்புறுவதற்கு “இராமானுச நூற்றந்தாதி” என்னும் பிரபன்ன காயத்ரியைப் பாடிக் கொடுத்தார்.

4.பகவத் கீதைக்கு பாஷ்யம் சொன்ன, ஞானாசார்யர்கள்:

தூதுவளை கொடுத்து அரண்மனைக்குள் சென்ற மணக்கால் நம்பி
ஆளவந்தாருக்கு பகவத் கீதையின் 18 அத்யாயங்களையும் ஒவ்வொரு முறையும் வரிசையாக விளக்கி உரைத்து
அவரைத் திருத்திப்பணி கொண்டார்.

நம் போன்றோரைத் திருத்திப் பணி கொள்ள நவரத்தினங்களை வழங்கிய எம்பெருமானார் அருமையான
“கீதா பாஷ்யம்” அருளிச் செய்தார்.

5.பெண் குழந்தைகளைப் பேணிக் காத்த பேராளர்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண் குழந்தைகளை மணக்கால் நம்பி எப்படிப் போற்றினார் என்று (குறிப்பு 2)பார்த்தோம்.

உடையவரின் ஆசார்யர் பெரியநம்பி ஸ்வாமியின் திருக் குமாரத்தி,
அத்துழாய்க்குப் புகுந்த வீட்டார் பல பிரச்னை களை ஏற்படுத்தினர்.
அந்தக் காலத்து வழக்கப்படி,பெண் வீட்டுச் சீர் வரிசையுடன் “சீதனவெள்ளாட்டி” என்று ஒருவரை,
வேலக்காரர்(காரி) ஆகவும் அனுப்ப வேண்டும்.பெரிய நம்பிகளுக்கு அவ்வாறு அனுப்பும் அளவு வசதி யில்லை.
ஆனால் புகுந்தவீட்டார் அத்துழாயிடம் அடிக்கடி சொல்லிக் காட்டினர்.எனவே அவர் தம் தந்தை யாரிடம் முறையிட்டார்.
அவர் ‘என்னிடம் சொல்லி என்ன பயன்?உன் அண்ணன் ராமானுஜரிடம்சொல்’என்றார்.
ராமனுஜர் உடனே அதற்கு ஏற்பாடு செய்தார். அதுவும் எத்துனையோ பேர் இருக்க,தமக்கு மிக வேண்டியவரும்,
துறவியாகி அனைத்து ஆசைகளயும் விட்டாலும் முதலியாண்டானை விட முடியாது என்று சொல்லும்
அளவுக்கு,உயர்ந்த ஆசார்யர் முதலியாண்டானை அனுப்பி வைத்தார்.

மேலும் உடையவர் காலத்தில் பல பெண்களுக்கு–கூரத்து ஆண்டாள்,
பொன்னாச்சியார்,அம்மங்கி அம்மாள்,
திரிபுரா தேவியார்,கொங்கில் பிராட்டியார்-சம்பிரதாய விஷ்யங்களில் முக்கியத்துவம் கொடுத்தார்.

மணக்கால் நம்பிகள் வாழி பாசுரம்:

“நேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே !
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே !
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே !
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே !
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே !
நீணிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே !
மாசி மகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே !
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியவே!!!”

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மணக்கால் நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–

June 11, 2021

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் –32-ஸ்ரீ பாஷ்யத்தில் வெவ்வேறே அதிகரணங்களில் உண்டு —

(1) ஸத் வித்யை –சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸ்வேதகேதுவுக்கு தகப்பனார் உத் கலர் – உபதேசம் –
ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஆறும் உபாசனம் இதில் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மம்
1-ஸத்யத்வம் -பத்த ஜீவாத்மாவின் வ்யாவ்ருத்தம் -ஸ்வரூபத்திலும் ஸ்வபாவத்திலும்
2-ஞானத்தவம் –முக்தாத்மாவில் வ்யாவ்ருத்தம்
3-அனந்தத்வம் –தேச கால வஸ்து அபரிச்சேத்யன் –சர்வ வ்யாபி -சர்வ அந்தர்யாத்மா -நித்யரில் வ்யாவருத்தன்
4-ஆனந்தத்வம் –உயர்வற அற உயர் நலம் உடையவன் அவன்
5-அமலத்வம்
6- ஸ்ரீ யபதித்தவம்

ப்ரஹ்மத்தின் அசாதாரண கல்யாண குணங்கள் இதில் உபாஸனம்
1- ஜகத் உபாதானத்வம் –உபாதான காரணம்
2- ஜகத் நிமித்தத்வம் –நிமித்த காரணம்
3-ஸர்வ ஞாநத்வம்
4- ஸர்வ சக்தி யோகம்
5–ஸத்ய ஸங்கல்பம்
6-ஸர்வ அந்தர்யாமித்வம்
7- சர்வ தாரத்வம்
8- சர்வ நியந்த்ருத்வம்

சாந்தோக்யம் அத்யாயம் -6- இந்த ப்ரஹ்ம வித்யை பலம் ப்ராரப்த கர்ம அவசானத்திலே மோக்ஷ பிராப்தி என்கிறது –

——–

2)ஆனந்த மய வித்யா –
ஆனந்த வல்லி -தைத்ரியம்
கீழே சொன்ன ஆறு அசாதாரண ஸ்வரூப நிரூபக தர்ம விசிஷ்ட ப்ரஹ்ம உபாசனம்

அசாதாரண கல்யாண குணங்கள் –
1-பஞ்ச பூதங்கள் ஸ்ரஷ்டா
2-அன்ன மய -பிராண மய -மநோ மய -விஞ்ஞான மய -அனைத்துக்கும் அந்தர்யாமி
3- ஸங்கல்ப ஏக லவ தேசத்திலே ஸ்ரஷ்டா
4- ஸமஸ்த சேதன அசேதன சரீரீ
5-நிருபாதிக ரக்ஷகன் -அந்தமில் பேர் இன்பம் அளிப்பவன்
6- பீஷாத் –இத்யாதி –தேவர்கள் பயந்து விதித்த கார்யங்களை காலப்படி சரியாகச் செய்கிறார்கள் –
7- இந்த ப்ரஹ்ம வித்யைக்கு மோக்ஷ பிராப்தி

———–

3-அந்தர் ஆதித்ய வித்யை -சாந்தோக்யம் -முதல் அத்யாயம் -1-6-6-
இது உத்கீத வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை –

——-

4-அக்ஷய வித்யை
சாந்தோக்யம் முதல் அத்யாயம் -1-9-
இதுவும் உத்கீத வித்யையின் அங்கம்
ஆகாச அதிகரணம்
இதுக்கும் மோக்ஷ பலன் இல்லை –

——–

5-பிராண வித்யை
சாந்தோக்யம் -1-11-5-
இதுவும் உத்கீதா வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை
பிராண அதிகரணம்

———-

6-காயத்ரி ஜ்யோதிர் வித்யை –
சாந்தோக்யம் -3-12-
மோக்ஷ பலன்
ஜ்யோதிர் அதிகரணம்

————

7-ப்ரதர்தன வித்யை
கௌஷீதகி உபநிஷத் -3 அத்யாயம்
முதலில் ஸ்வர்க்க லோக பிராப்தி -பின்பு மோக்ஷ பலன்
இந்த்ர பிராண அதிகாரணம்

———–

8-சாண்டில்ய வித்யை
சாந்தகோக்யம் –3-14-
அக்னி ரஹஸ்யம்
ப்ரஹதாரண்யம் –7-6-1-
மோக்ஷ பலன்
ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணம்

———-

9-நச்சிகேத வித்யை
யமதேவன் நச்சிகேதுக்கு உபதேசம்
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
அத்ர அதிகரணம்

—————-

10-உபகோஸல வித்யை
சத்யகாமவமுனிவர் உபகோஸலருக்கு உபதேசம்
சாந்தோக்யம் -4-அத்யாயம் -10-15 காண்டங்கள்
மோக்ஷ பலன்
அந்தர அதிகரணம்

———-

11-அந்தர்யாமி வித்யா
ப்ருஹதாரண்யம் -5 அத்யாயம் -7 ப்ராஹ்மணம்
ஸூபால உபநிஷத்
மோக்ஷ பலன்
அந்தர்யாமி அதிகரணம்

————

12-அக்ஷர பர வித்யா
முண்டகம்
மோக்ஷ பலன்
அத்ரஸ்யத்வாதி அதிகரணம்

————-

13-வைச்வானர வித்யை
அஸ்வபதி ராஜா -ஆறு முனிவர்களுக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-11-24
மோக்ஷ பலன்
வைச்வானர அதிகரணம்

———–

14-பூமா வித்யை
ஸநத்குமாரர் நாரதருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –7 அத்யாயம்
மோக்ஷ பலன்
பூமா அதிகரணம்

———–

15-கார்கி அக்ஷர வித்யை
ப்ரஹதாரண்யம் –5-8-8-
மோக்ஷ பலன்

————

16-ஹ்ரி மாத்ர ப்ரணவ வித்யை
ப்ரஸ்ன உபநிஷத் –5-5-
மோக்ஷ பலன்
ஈஷதி கர்ம அதிகரணம்

———–

17-தஹர வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
தஹர அதிகரணம்

———-

18-அங்குஷ்ட ப்ரமித வித்யா
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
ப்ரமித அதிகரணம்

—————-

19-ஜ்யோதிஷாம் ஜ்யோதிர் வித்யா
ப்ரஹதாரண்யம் –6-4-16-
மோக்ஷ பலம்
மத்வ அதிகரணம்

————

20-மது வித்யை
சாந்தோக்யம் –3-1-
மோக்ஷ பலன்
மத்வ அதிகரணம்

———–

21-ஸம் வர்க்க வித்யா
ரைக்குவர் ஞானஸ்ருதிக்கு உபதேசம்
சாந்தோக்யம் –4-3-
மோக்ஷ பலன்
அப ஸூத்ர அதிகரணம்

————

22-ஆகாச வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
அர்த்தாந்தர வியபதேச அதிகரணம்

—————

23-பாலகி வித்யை
கௌஷிதகி உபநிஷத்
ப்ரஹதாரண்யம்
மோக்ஷ பலன்
ஜகத்வ சித்வ அதிகரணம்

————–

24-மைத்ரேயி வித்யை
ப்ருஹதாரண்யம் –4-4-
மோக்ஷ பலன்
வாக்ய அந்வய அதிகரணம்

——————

25-பஞ்ச அக்னி வித்யை
ப்ரவாஹன அரசர் அருணி முனிவருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-3-
மோக்ஷ பலன்
தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம்

————–

26-புருஷ வித்யை
தைத்ரியம்
மோக்ஷ பலன்
புருஷ வித் அதிகரணம்

————-

27-அஷிஸ்த ஸத்ய ப்ரஹ்ம வித்யை
ப்ரஹதாரண்யம் –5-7-
மோக்ஷ பலன்

———————

28-ஈசாவாஸ்ய வித்யை
ஈசாவாஸ்ய உபநிஷத்
மோக்ஷ பலன்

———–

29-உஷஸ்திகஹோல வித்யை
யஜ்யவல்க்யர் உஷஸ்தருக்கும் கஹோலருக்கும் உபதேசம்
ப்ரஹதாரண்யம் –5-4/5-5-
மோக்ஷ பலம்
அந்தரத்வ அதிகரணம்

—————-

30-பர்யங்க வித்யை
கௌஷீதகி முதல் அத்யாயம்
மோக்ஷ பலன்

—————

31வ்யாஹ்ருதி வித்யை
ப்ருஹதாரண்யம் –7-5-1-
மோக்ஷ பலன்

—————–

32-ந்யாஸ வித்யை
தைத்ரியம்
ஸ்வேதாஸ்வரம்
மோக்ஷ பலன்

——–

1. மதுவித்யை

தேனாக ஸுர்யனையை த்யானம் செய்வது. ஸுர்ய மண்டலத்தை, தேவதைகள் உட்கொள்ளும் தேனாகவும்,
மேலுலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும்,
வண்டுகள் மலர்களிலிருந்து தேனை எடுத்து சேர்க்குமாப் போலே”வேத மந்த்ரங்கள்” என்றும்,
வஸு – ருத்ர – ஆதித்ய – மருத் ஸாத்ய கணங்கள் 4 திக்குகளிலும், மேல் புறத்திலும் நிற்பதாகவும்
தேனாக ஸுர்யனைப் பாவித்தும் அவனுக்கு அந்தர்யாமியாக பகவானை உபாஸனம் செய்தல்.

——–

2. காயத்ரீ ப்ரஹ்ம வித்யை

காயத்ரீ சந்தஸ்ஸுக்கு மூன்று பாதங்கள், 24 அக்ஷரங்கள்.
ப்ரஹ்மத்திற்கு 4 பாதங்கள் (பூதம், ப்ருத்வி, சரீரம், ஹ்ருதயம்) .
வாக்கானது ஸர்வ பூதங்களையும் குறிக்கிறது.
இரு குணங்கள் . ப்ருத்வியை பாதமாக உடைய இதற்கு ஸர்வ பூதங்களும் ஆதாரம் . அவைகளால் மீள முடியாது.
சரீரமாயும் ஹ்ருதயமாகவும் இப்படி ப்ருஹ்மத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்படி உபாஸிக்கச் சொல்கிறது.
இதற்கு அங்கமாக ஹ்ருதயத்தில் நான்கு பக்கங்களிலும் ,மேலுமாக ஐந்து குழிகள் இருப்பதாகவும்,
அங்கு ப்ராணன்கள் சஞ்சரிப்பதாகவும், ஐந்து குழிகளிலும் ஐந்து துவாரபாலகர்கள் மற்றும் ஆதித்யன், சந்த்ரன்,
அக்னி, பர்ஜன்யன், ஆகாசம் இவைகளின் தேவதைகள்
இருப்பதாகவும் உபாஸனம் செய்யுமாறு சொல்கிறது.
இது ”காயத்ரீ ப்ருஹ்ம வித்யை” எனப்படும்.

———-

3. கௌக்ஷய ஜ்யோதிர் வித்யை

ப்ரம்மமே வைச்வாநரன். இவன் அக்னிக்கு அந்தர்யாமி–
இங்ஙனம் உபாசிக்கும் முறை தான் இந்த வித்யை.
காதுகளை கைகளால் மூடிய போது காதுக்குள் ஒரு சப்தம் கேட்கிறதல்லவா?
அது, இந்த ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது.

——–

4. சாண்டில்ய வித்யை

ப்ரும்மமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்து காம
க்ரோதங்கள் இன்றி சாந்தத்துடன் ப்ரும்மத்தை உபாஸிப்பது.

———

5. கோஸ விஜ்ஞானம் (வித்யை)

தன் புத்ரன் தீர்க்க ஆயுளோடு இருக்க செய்யப்படும் உபாஸனம்.
வாயுவை திக்குகளின் குமாரனாக நினைத்து மந்த்ரங்களைச் சொல்லி உபாஸிக்க வேண்டும்.

———-

6. புருஷ வித்யை

தன்னை ஒரு யக்ஞமாக கருதி தன் ஆயுட் காலத்தை (116 வருமூம்) மூன்றாக பிரித்து
வஸு , ருத்ர, ஆதித்யர்களாக நினைத்து, பசி, தாகங்களைத் தீக்ஷையாகவும்,
உட்கொள்வதை உபஸத்தாகவும் சிரிப்பு இவைகளை ஸ்தோத்ரங்களாகவும்,
சாஸ்த்ர சம்பந்தமாகச் செய்யப்படுவதை ஸம்பாவனையாகவும்,
மரணத்தை அவப்ருதமாகவும் பாவித்து, சாஸ்திர விதிப்படி உபாஸித்தால்,
நோயை விலக்கி நீடித்து வாழ்வான் என்கிறது.
”ஐதரேய மஹிதாஸர்” என்பவர் இப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர், இந்த வித்யையை, ஸ்வேத கேதுவுக்கு உபாசித்ததாகவும் சொல்வர்.
அந்திம காலத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரங்களை ஜபித்தால், மோக்ஷம் அடைவான் என்றும் கூறுகிறது.
(தைத்திரீய முடிவில் சொல்லப்படும் புருஷ வித்யை இதுவல்ல).

—————————

7 – ரைக்வ வித்யை

இது ஸம்வர்க்க வித்யை என்றும் சொல்லப்படும்.
”ஜாநச்ருதி” என்பவர் மிகவும் தர்மிஷ்டர். வீடுகள், சத்திரங்கள் கட்டி எல்லா இடங்களிலும் அன்னதானம் முதலிய எல்லா
தானங்களையும் ச்ரத்தையோடு செய்பவர். ஒரு நாள் இரவில் அவர் தன்னுடைய மாளிகையின் மேல் மாடியில்
படுத்திருக்கும்போது, அவருக்கு மேலே ஆகாயத்தில் அன்னங்கள் பறந்தன. அதில் முன்னே போகும் அன்னத்தை,
பின்னே செல்லும் அன்னம், ”உனக்கு கண்ணில்லையா ?
தர்மிஷ்டனான ”ஜாநச்ருதி” படுத்திருக்க, அவன் மேலாகப் பறந்து போகிறாயே?” என்று கேட்டது.
முன்னே செல்லும் அன்னம்,”வண்டியுடன் எப்போதும் வசிக்கும் ரைக்ரவராஇவர்?” என்று கேட்டது.
”அது யார்? வண்டியோடு இருக்கும் ரைக்வர்” என்று, பின்னால் செல்லும் அன்னம் கேட்டது.
சூதாட்டங்களில் ”க்ருதம்” என்கிற ஆட்டம் தெரிந்தவர் எல்லா ஆட்டங்களும் தெரிந்ததற்குச் சமம்.
”ரைக்வர்” எல்லாம் அறிந்தவர்.
அந்த பெருமை இந்த ஜாநச்ருதிக்கு ஏது?” என்று முன்னே செல்லும் அன்னம் சொல்லிற்று.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜாநச்ருதி , காலையில் எழுந்து ”ரைக்வர் எங்கிருக்கிறார்?” என்று அறிய எல்லா
பக்கங்களிலும் ஏவலர்களை அனுப்பினார். பல பேர் காணவில்லை என்று திரும்பி வர, ஒருவன் மட்டும் ”ஓரிடத்தில்
வண்டியின் அடியில் சிரங்குகளைச் சொறிந்து கொண்டுஅமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஜாநச்ருதி, பசுக்கள், குதிரைகள் இவற்றை ஏராளமாகக் கொண்டுபோய் ரைக்வரிடம் கொடுத்து அடிபணிந்து
தேவதாக்ஞானம் உபதேசிக்க ப்ரார்த்தித்தார். ரைக்வர் மறுத்தார்.
மறுபடியும் ஏராளமான செல்வங்களையும் மற்றும் தன் புத்ரியையும் கொடுத்து உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார்.
இப்போது மனம் கனிந்து, ரைக்வர் உபதேசித்ததுதான் ரைக்வவித்யை.

————-

8 – ஸம்வர்க வித்யை

(ஸத்ய காம ஜாபாலர் என்கிற மஹரிஷி ஸ்வேதகேதுவுக்கு உபதேசித்தது)
காபேயன், அபிப்ரதாரி , என்கிற இருவர் சாப்பிட உட்கார்ந்த சமயத்தில் ஒரு ப்ரஹ்மச்சாரி பிக்ஷை கேட்டார்.
இருவரும் பிக்ஷை போடவில்லை. ப்ரஹ்மச்சாரி , ”உலகத்தை தாங்குபவன் நான்கு
நான்கு மஹாத்மாக்களை விழுங்கியுள்ளான். பற்பல உருவாக வசிப்பவன் அவன். இவனை மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இந்த அன்னம் யாருக்கு உள்ளதோ அவனுக்கு அளிக்கப்படவில்லை” என்றான்.

காபேயன், ”ப்ரஹ்மச்சாரியே ! எல்லாவற்றையும் ச்ருஷ்டிப்பவன் ஸர்வக்ஞன். இவன் ஒருவராலும்
சாப்பிடப்படாததைச் சாப்பிடுகிறான். இப்படி நாங்கள் உபாஸிக்கிறோம்” என்று சொல்லி, பிக்ஷை அளித்தான்.
அக்னி, ஸ@ர்யன், சந்த்ரன் இவற்றிற்கு லயஸ்தானம் வாயு.
உடம்பில் கண், காது, வாக்கு, மனஸ் இவைகளுக்கு லயஸ்தானம் ப்ராணன்.
இவற்றைத் தெரிந்து உபாஸிப்பவன் , ப்ரஹ்மத்தை அனுபவிப்பான். (இது பலன்) என்று இதில் சொல்லப்படுகிறது.

———

9 – ஷோடச கல ப்ரஹ்ம வித்யை

ஸத்ய காமன் என்கிற மஹரிஷியின் வரலாறு சொல்லப்படுகிறது. ஸத்ய காமன் ஆசார்யரை வரிக்கப்
போவதற்கு முன்பு தன் தாயாரிடம் கோத்ரத்தின் பெயரைக் கேட்டான். ”கோத்ரம் எதுவென்று தெரியாது” என்று சொன்ன
தாயார், ஆசார்யனிடத்தில் ”என் தாயார் ஜாபாலை. நான் ஸத்ய காமன் என்று சொல்!” என்றாள்.
ஸத்ய காமன் கௌதம-ஹாரித்ருபாதர் என்கிற ரிஷியிடம் சென்று இதைச் சொல்ல, குருவும் இவனை அங்கீகரித்து
இளைத்த 400 பசுக்களை வளர்த்துவரச் சொன்னார். அவற்றை வெகு சிரமப்பட்டு பல வருஷங்கள் வளர்த்து ஆயிரம்
பசுக்களாக்கினான். அவற்றில் ஒரு காளை ஸத்ய காமனுக்கு ”ப்ரகாசவா” என்கிற பாதத்தை உபதேசித்து, அதற்கு நான்கு
அவயவங்கள் என்று கூறி, ”அக்னி உனக்கு இன்னொரு பாதத்தைச் சொல்லும்” என்று சொல்லிற்று.

மறுநாள் ”ஸமிதாதானம்” செய்யும் சமயத்தில், அக்னி ”அனந்தவான்” என்கிற பாதத்தையும், அதன் நான்கு
பாகங்களையும் உபதேசித்தது. ”ஹம்ஸம் உனக்கு மூன்றாவது பாதத்தைச் சொல்லும்” என்றது.
மறுநாள் மாலை அன்னத்திடம் ஜ்யோதிஷ்மான் என்கிற பாதத்தையும்,
அதன் நான்கு பாகங்களையும் அறிந்தான். அன்னம், ”மற்றொரு பாதத்தை நீர்ப்பறவை சொல்லும்” என்றது.
அதற்கடுத்த மறுநாள் மாலை நீர்ப்பறவையிடம் ”ஆயதனவான்” என்கிற பாதத்தையும், அதன் பாகங்களையும் அறிந்தான்.
இப்படியாகக் கற்று நன்கு அறிந்த ஆசார்யனைப் போன்ற தேஜஸ் முகத்தில் தெரிய ஆயிரம் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு
ஆசார்யரி டம் சென்றான்.

ஆசார்யர் இவனைப் பார்த்து ”ப்ரஹ்மத்தை அறிந்தவனாக உன் முகம் சொல்கிறது. யார் உனக்கு சொன்னது?” என்று கேட்க,
ஸத்ய காமன் எல்லாவற்றையும் சொல்லி , ”இருந்தாலும் ஆசார்ய முகமாக உபதேசம் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்திக்க மனம்
சந்தோஷம் அடைந்து ஆசார்யனும் உபதேசம் செய்தார்.
(இரண்டு உபதேசமும்-அதாவது எல்லாம் ஒன்றாக இருந்தன).

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

———-

10 – மேலே சொல்லப்பட்டது உபகோஸல வித்யை, என்றும் சொல்வர்

———

11 – நடுவில் அக்னி உபதேசித்தது இதைச் சார்ந்த அக்னி வித்யை
(ஆக, ஷோடச கலை ப்ரஹ்மவித்யை, உபகோஸல வித்யை, அக்னி வித்யை மூன்றும் சொல்லப்பட்டது)

———–

12 – ப்ராண வித்யை

ப்ராணன் மூத்தது. அதாவது கர்ப்ப வாஸத்தில் ப்ராணன் ஏற்பட்ட பிறகுதான் மீதி இந்த்ரியங்கள் உண்டாகின்றன.
ஆதலால் ப்ராணன் ”ஜ்யேஷ்டன்”.

ப்ராணனுக்கும் மீதி இந்த்ரியங்களுக்கும் ஒரு கலகம் ஏற்பட்டது. ”யார் உயர்ந்தவர்?” என்பதே அது.
ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதியிடம் சென்று, இந்த வ்யவஹாரத்தைத் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டன.
அவர் உங்களுக்குள் யார் சரீரத்திலிருந்து வெளிப்பட்டால்
சரீரம் குலைந்து போகுமோ அவரே ச்ரேஷ்டர், உயர்ந்தவர் என்றார்.

வாக்கு ஒரு வருஷ காலம் சரீரத்தை விட்டு வெளிப்பட்டு இருந்தது. ஊமை போல சரீரம் வாழ்ந்தது. இதைப்போலவே
கண்கள், காதுகள் மற்ற இந்த்ரியங்களும் வெளிப்பட்டு சரீரத்தைச் சோதித்தது.
சரீரத்தில் அந்தந்த அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டதே
தவிர, சரீரம் ஜீவித்திருந்தது. ப்ராணன், சரீரத்தை விட்டு வெளியே கிளம்பின தருணத்தில்
எல்லா அவயவங்களும் செயலிழக்கத் தொடங்கின. அவை ப்ராணனை வெளியே போக வேண்டாம் என்று வேண்டி,
ப்ராணனே ச்ரேஷ்டன் அதாவது உயர்ந்தவன் என்றன.
ப்ராணன்,தனக்கு அன்னம், ஆடை எல்லாம் அளிக்க வேண்டும் என்று கேட்டது. அன்னம் ப்ராணனுக்கு என்றும், முன்னும் பின்னும்
அருந்தும் ஆசமன தீர்த்தம் ப்ராணனுக்கு உடை என்றும் சொல்லி அவை யாவும் ப்ராணனை உபாசித்தன.

————-

13. பஞ்சாக்னி வித்யை

அருண மஹரிஷியின் குமாரர் ஆருணீ. அவரின் குமாரர் ச்வேதகேது. அவர் ஒரு சமயம் பாஞ்சால தேசத்தில் நடந்த
ஸதஸ்ஸுக்கு (விவாதங்கள் நடக்கும் சபை) சென்றார்.
ப்ரவாஹணன் என்ற பாஞ்சால தேசத்து அரசன் நடத்திய சபைக்கு அவர் சென்றார்.
அந்த அரசன் ச்வேதகேதுவை சில கேள்விகள் கேட்டார்.

அரசன்:ரிஷி புத்ரரே! உமக்கு தகப்பனார் உபதேசங்களைச் செய்திருக்கிறாரா ?

ச்வேதகேது: ஆம்

அரசன்: ப்ரஜைகள் மரணம் அடைந்த பிறகு போகும் இடம் எது?
(அதாவது யாக தான பூர்த்தாதி புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள் எந்த லோகத்திற்கு போகிறார்கள்)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: திரும்பி வரும் வழி எது? (யாகாதிகளை அனுஷ்டித்தவர் திரும்பி வரும் வழி எது ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: தேவயான மார்க்கம், பித்ருயாண மார்க்கம் இவற்றின் வேறுபாடு தெரியுமா? (வேத்தபதோ தேவயானஸ்ய
பித்ருயானஸ்யச வ்யாவர்த்தனா ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: மேலுலகம் சென்றவர்கள் யார் தெரியுமா? (இந்த லோகத்திலிருந்து செல்பவர்களில் ஸ்வர்க்க லோகத்தை
அடையாதவர்கள் யார் ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: ஐந்தாவது ஆஹூதியில் மனிதன் பிறக்கிறான் என்பது
தெரியுமா? (வேத்த யதா பஞ்ம்யாமாஹூ தாவாப புருஷவசஸோ பவந்தீதி ?)

ச்வேதகேது: ஒன்றும் தெரியாது

இங்ஙனம் கேள்விகள் கேட்ட பாஞ்சால தேசத்து அரசன் ”ரிஷிபுத்ரரே, இவை ஒன்றையும் அறியாது, நீர் பெற்றுக் கொண்ட
உபதேசம் தான் என்ன ? எப்படி உபதேசம் பெற்றதாகக் கூறமுடியும் ?” என்று கேட்க,
ச்வேதகேது மானபங்கப்பட்டு
தகப்பனாரிடம் ஓடி வந்து (ஆருணி) விஷயத்தைச் சொல்ல, அவர்
தனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று வருத்தப்பட்டு, அரசனிடமே கேட்கலாம் என்று புறப்பட்டார்.
ச்வேத கேதுவையும் அழைத்தார். பிள்ளை வரவில்லை.
தான் மட்டும், ப்ரவாஹணன் என்கிற அந்த பாஞ்சால தேசத்து அரசனிடம் சென்றார்.
தன்னுடைய பிள்ளையிடம் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு பதில் தெரியாது என்றும் அதைத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும்
சொன்னார். அரசன் ஆருணி என்கிற உத்தாலகருக்கு உபதேசித்ததே ”பஞ்சாக்னி வித்யை”.

ச்ரத்தையோடு புண்ய கர்மாக்களைச் செய்தவன் மரணம் அடைந்ததும், உடலில் இருந்து கிளம்பிய அவனும் (ஜீவாத்மா),
ப்ராணேயந்த்ரியங்களும், பூத ஸூக்ஷ்ம ஸரீரம் எடுத்து, முதல் அக்னியான ”ஸ்வர்க்கத்தில்” ஹோமம் செய்யப்படுகிறது.
வெகு போக்யமான ஸரீரம் எடுத்து (போக ஸரீரம்) போகங்களை அனுபவித்த பிறகு இந்த பூத சுக்ஷ்ம ஸரீரம் ”மேகம்” என்கிற
அக்னியில் சேர்க்கப்படுகிறது.
பிறகு மழை மூலமாக, பூமி என்கிற நிலத்தில் விழுந்து, தான்யங்களில் புகுந்து, ஆகாரமாக புருஷனின் (நாலாவது அக்னி)
உடலில் சேர்ந்து, பிறகு ஸ்த்ரி எனப்படும் ஐந்தாவது அக்னியில் சேர்ந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் இருந்து உலகில் பிறக்கிறது.
இதுவே பஞ்சாக்னி வித்யை.

ஆயுள் பர்யந்தம் வரை இருந்து, மறுபடியும் மரணம் அடைந்து, முன்பு சொன்னதைப் போல ஐந்து அக்னிகளில்
இருந்து மறுபடியும் பிறந்து இப்படி எண்ணற்ற சங்கிலித் தொடராக,ஜீவன் பிறவிகள் எடுக்கிறது. இப்படி இருப்பதை
உணர்ந்து ஆத்மாவை வேறாகப் பாவித்து, உபாஸிப்பவரும் ச்ரத்தையுடன் ப்ரஹ்மத்தையே உபாஸிப்பவரும், மரணம்
அடைந்ததும் ”தேவயான மார்க்கம்” என்று சொல்லப்படும்அர்ச்சிராதி மார்க்கத்தாலே ப்ரஹ்மத்தை அடைகின்றனர்.
(அர்ச்சிராதி மார்க்கம் – இதில் விரிவாகவே சொல்லப்படுகிறது)
யக்ஞம் செய்தவர்கள், குளம் முதலியன வெட்டியவர்கள்,
ஆலயம் கட்டியவர்கள், தான தர்மம் செய்தவர்கள், பித்ருயான மார்க்கமான புகை, இரவு, க்ருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம், பித்ரு
லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் மூலமாக ஸ்வர்க்கம் சென்று போகத்தை அனுபவித்து பிறகு ஆகாசம், வாயு, புகை, மேகம்,
மழை, ஓஷதிகள் என்று திரும்பி வந்து புருஷனிடம் போய் சேர்வதில் முன் கர்ம வினைகளுக்கு தக்கபடி தாமதம் முதலியன
ஏற்பட்டு கர்ப்பம் மூலமாக ஸ்த்ரீயை அடைந்து – மறுபடியும் ஜனனம், மறுபடியும் மரணம். இப்படி பலப்பல ஜன்மங்கள்.
கொசு, புழு, பூச்சி போன்ற ஜந்துக்கள் பிறப்பதும், மரிப்பதுமாய் இருக்கும். இவற்றிற்கு மேலுலகம் என்பது இல்லை.
ஸ்வர்க்க லோகம் தான் அக்னி. ஸுர்யன்-ஸமித். ஸுர்ய கிரணங்கள்-புகை. அஹஸ் – அர்ச்சிஸ். சந்த்ரன்-அங்காரம்
அதாவது தணல். நக்ஷத்திரங்கள் – நெருப்பு பொறிகள்.

———–

14. வைச்வாநர வித்யை

ப்ராசீனசாலர் , சத்யஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் – ஆகிய ஐந்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ”நம் ஆத்மா யாது ?
ப்ரஹ்மம் யாது ?” என்று விசாரம் செய்து, தெளிவு ஏற்படாமல்,
அருண மஹரிஷியின் புதல்வரான உத்தாலக மஹரிஷியை அணுகினர். அவரும் இதை நான் அறியேன் அல்லேன்! இதனை
அறிந்தவர் கேகய தேசத்து அரசன் அச்வபதி என்பவர். அவரை
அணுகுவோம் என்று ஆறு மஹரிஷிகளும் அச்வபதியை அடைந்தனர்.

அச்வபதி மன்னர் இந்த மஹரிஷிகளைக் கொண்டுருத் விக்குகளாக வரித்து யாகம் செய்து தக்ஷிணையைக்
கொடுக்கிறேன் என்றார். இவர்கள் வைச்வாநர வித்யையை தானமாக (தக்ஷிணை) வேண்டினர்.(அக்காலத்தில் ஞானத்தைப்
பெறுவதற்கு மிகவும் ஆவலும், அதற்கான வழிகளில் இழிவதும் மஹரிஷிகளிடையே இருந்தது )
அரசன் இவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வைச்வாநர உபாஸனம் இதுவரை எப்படி செய்கிறார்கள் என்று கேட்டான்.
ப்ராசீனசாலர் த்யுலோகத்தையும், சத்யயஜ்ஞர் ஆதித்யனையும், இந்த்ரத்யும்னர் வாயுவையும் ஜனர் ஆகாசத்தையும், புடிலர்
ஜலத்தையும், உத்தாலகர் ப்ருத்வியையும் உபாசிப்பதாகச் சொன்னார்கள்.
அரசன், இவை யாவும் வைச்வாநர ஆத்மாவின் அவயவங்கள். இவை இம்மை பலனை மட்டுமே அளிக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து ”விச்வரூப வைச்வாநர” உபாஸனம் செய்ய வேண்டும் என்று உபதேசித்தான். இதன் பலன்
”பரப்ரம்ம உபாஸனை” என்றும் சொன்னான்.
இவற்றைத் தன் உடலில் அங்கங்களாக வைத்து ப்ராணாக்னியை வைச்வாநர அக்னியாக பாவித்து, அன்னத்தை
ஐந்து ப்ராணாஹூதிகளாக முறைப்படி செய்வது. பஞ்சப்ராணங்களை இப்படி உபாஸித்தால், அவற்றின் வழியே இந்த்ரியங்கள்,
அவற்றை நியமிக்கும் தேவர்கள், அவர்கள் சார்ந்த உலகங்கள், யாவும் திருப்தி அடையும். இப்படி உபாஸிப்பவனின்
பாபம் தீயில் இட்ட பஞ்சு போல எரிந்து போகும் என்று, அரசன் சொன்னான்.

————————

15. ஸத் வித்யை
அருண மஹரிஷியின் பேரன் ச்வேதகேது. உத்தாலகரின் குமாரன். பன்னிரெண்டு வயதான ச்வேதகேது தகப்பனாரின்
கட்டளைப்படி குருகுல வாஸம் செய்து வேதத்தை எல்லாம் அத்யயனம் செய்து 24 வயதில் திரும்பி வந்தான்.
உத்தாலகர் பிள்ளையைக் கேட்டார். ச்வேதகேது
எல்லாவற்றையும் குருகுலவாஸத்தில் அறிந்து கொண்டாயா? எதைக் கேட்டு, சிந்தனை செய்து, த்யானித்தால், உலகத்தில்
எல்லாவற்றையும் கேட்டு ,சிந்தித்துத் த்யானிக்கப் பெற்றதாக ஆகுமோ அப்படி ஸர்வத்தையும் நியமிக்கும்படியானதை
ஆசார்யன் உபதேசித்தாரா ? நீ கேட்டு தெரிந்து கொண்டாயா ?

ச்வேதகேதுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசார்யன் இதைச் சொல்லவில்லையே, தந்தையிடமே ப்ரார்த்திப்போம்
என்று தந்தையிடம் இதற்கு அவரையே உபதேசமாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
உத்தாலகர் சொன்னார்.
ஸத் என்கிற வஸ்து, தான் பலவாறாக ஆகக்கடவேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ”தேஷஸ்”ஸை
ச்ருஷ்டித்தது. ”தேஷஸ்” ஸங்கல்பம் செய்துகொண்டு ஜலத்தை ச்ருஷ்டித்தது. ஜலம் , இவ்வாறு
ப்ருத்வியை ச்ருஷ்டித்தது. இவைகள் பூமியில் பிராணிகள் என்ற பூதங்களாயின.

அந்த பிராணிகள் அண்டஜம், ஜீவஜம், உத்பிஜ்ஞம் என்று மூன்று வகை.
அண்டஜம் – முட்டையிலிருந்து உண்டாவது.
ஜீவஜம் – பிராணிகளிடமிருந்து பிறப்பது (மனிதர்களையும் சேர்த்து)
உத்பிஜ்ஞம் – பூமியைப் பிளந்து வளர்வது (மரம், செடி,கொடிகள்).
(உத்பிஜ்ஞத்தில் வியர்வையிலிருந்து உண்டாவதும் சேரும்).

ஸத் என்பது ஜீவாத்மாவோடு ப்ரவேசித்து, பலவகை நாம ரூபங்களை உண்டாக்க சங்கல்பித்துக் கொண்டு, அதற்காக
தேஜஸ், ஜலம், ப்ருத்வி என்கிற மூன்று மகா பூதங்களையும் த்ருவித்க்கரணம் செய்தது.
அதாவது ஜலத்தில் மற்ற இரண்டும்(தேஜஸ், ப்ருத்வி) கலந்திருக்கும்.
தேஜஸ்ஸில் ஜலம், ப்ருத்வி கலந்திருக்கும். ப்ருத்வியில் தேஜஸ், ஜலம் கலந்திருக்கும்
(இவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்லும்போது பஞ்சீகரணம் என்று பெயர்).

இப்படி கலந்திருப்பதிலிருந்து உடலை ச்ருஷ்டித்து,
ஜீவாத்மாவுடன் தானும் அதன் உள்ளே புகுந்து, ஒவ்வொரு வஸ்துவாகவும், ”ஸத்” என்கிற பரப்ரம்மம் இருக்கிறது .
ஒவ்வொன்றிலும் அசேதனம், சேதனன், ஈச்வரன் சேர்ந்து இருக்கிறது என்பதை அறிவாயாக.

தேஷஸ்ஸுக்கு நிறம் சிவப்பு. ஜலத்திற்கு நிறம் வெண்மை.
ப்ருத்விக்கு நிறம் கருப்பு. நெருப்பு எரியும்போது இந்த மூன்று நிறங்களையும் காணலாம்.
இப்படி மூன்று மஹா பூதங்களிலிருந்து உண்டான அன்னம், உடலை வளர்த்து, மூன்று பரிணாமங்களைப் பெறுகின்றது.
அஸாரபாகம் – மலமாக ஆகிறது.
ஸாரபாகம் -உடலில் மாம்ஸம்.
மிகவும் ஸாரமானது மனஸைப் போஷிக்கிறது.

அருந்தும் ஜலமும், நீர், இரத்தம், மனஸைப் போஷிக்கும் பாகம் என்று மூன்றாக மாறுகிறது.
தேஜோமயமான ஆகாரமும்,எலும்பு, அதற்கு வேண்டிய ஸ்னேஹம் (பசை), வாக்கை வளர்க்கும் பாகம் என
மூன்றாக மாறுகிறது.
ஆக மனஸ்-அன்னமயம்,
ப்ராணன்- ஜலமயம்,
வாக்கு – தேஜோமயம்.
”15 நாட்கள் ஆகாரம் இல்லாமல் வெறும் ஜலத்தைப் பானம் பண்ணி வந்தால்கூட, ப்ராணன் அழியாது. அப்படி இருந்து
மறுபடியும் என்னிடம் வா” என்றார் தகப்பனார்.

ச்வேதகேது, அப்படியே 15 நாட்கள் பட்டினி கிடந்து அப்போது தீர்த்தத்தை மாத்திரம் அருந்தி தகப்பனாரிடம் வந்தான்.
தகப்பனார் வேதங்களைச் சொல்லச் சொன்னார். ச்வேதகேதுவால் எதுவும் சொல்லமுடியவில்லை.
அப்போது ”நீ சாப்பிடாத போது16 அம்சங்களில் 15 அம்சங்கள் போய் விட்டன. இப்போது சாப்பிட்டு விட்டு வா” என்றார்.
ச்வேதகேது சாப்பிட்ட பிறகு சொல்வதற்கு பலம் வந்தது.அன்னத்தால் புஷ்டி ஏற்படுகிறது என்று விளக்கினார்.

இதைப் போல எல்லா உலகுக்கும் காரணமான வஸ்து எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கும்
சக்தியோடு இருக்கிறது என்று சொன்னார்.
பலவகை புஷ்பங்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அந்த தேன் துளிகள், ”நான் இந்த புஷ்பத்தைச்
சேர்ந்தவன்” என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியுமா ?
அப்படியே ”ஸத்” எனப்படும் பராமாத்மாவிடம் ஒன்றின ஜீவாத்மாக்கள், தங்களைத் தாங்களே தெரிந்து கொள்ள இயலாது.
பல நதிகளிலிருந்து தண்ணீர் ஸமுத்திரத்தில் சேர்ந்த பிறகு அவை இன்னின்ன நதியின் ஜலம் என்று பிரித்து சொல்ல
முடியுமா ? முடியாது.

ஒருவன் மரணம் அடையும் தருவாயில் அவனைச் சேர்ந்தவர்கள் அருகில் அமர்ந்து சில கேள்விகள் கேட்கும்போது
அவற்றை அவன் உணர்வதில்லை. ஏனெனில் அவனது வாக்கு மனஸ்ஸிலும், மனஸ் ப்ராணனிலும், ப்ராணன் தேஜஸ் எனப்படும்
பூத ஸக்ஷ்ம சரீரத்திலும் அதன் காரண வஸ்துவான பரமாத்மாவிடமும் லயித்து விடுவதால், உணர்வதில்லை.
உலகெங்கும் பரமாத்மா இருக்கிறான் என்றும், அவன் அழிவற்றவன், தோஷமற்றவன், எல்லா உயிர்களுக்கும் அவன்
ஆத்மா, உனக்குள்ளும் அவன் இருக்கிறான் என்று ச்வேதகேதுவுக்கு உத்தாலகர் உபதேசித்தார்.

இந்த ஸத்வித்யையில் 16 கண்டங்கள்
இவற்றில் சொல்லப்பட்டவை.
(1) ”ஸத்” என்பது எல்லா உலகத்துக்கும் காரணம்.
(2) ”ஸத்” முதலில் ”ஸமஷ்டி ச்ருஷ்டி” செய்கிறது.
(3) பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து ”வியஷ்டி” ச்ருஷ்டி செய்கிறது.
(4) த்ருவித்கரணம் என்கிற பூதங்களின் சேர்க்கைசெய்யப்படுகிறது.
(5) தேஜஸ், ஜலம், ப்ருத்வி இவற்றால் உடல் வளர்க்கப்படுகிறது.
(6) அன்னத்தின் நுண்ணிய பாகம் வாக், ப்ராணன், மனஸ்ஸை வளர்க்கிறது.
(7) இது இல்லையேல் மனஸ் க்ஷீணமாகி விடுகிறது.
(8)”ஸத்” – சேதனங்களில் லயஸ்தானம்.
(9) இப்படி லயிக்கும் ஜீவன்கள் கணக்கில்லாதவை
(10) கடலில் இருந்து ஜலம் ஆவியாகி, மழையாகி, நதியாவது போல சேதனர்கள் (ஜீவன்கள்) ஸத்திலிருந்து புறப்படுவர்.
(11) இந்த சேதனர்களுக்கு அழிவில்லை.
(12) ”ஸத்” என்பது மிக மிக ஸக்ஷ்மமானது
(13) ”ஸத்” – எங்கும் கரந்து ,பரந்து உள்ளது.
(14) ஆசார்யன் மூலமாக இதை அறிய வேண்டும்
(15) இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு எல்லா அநிஷ்டமும் போகும்
(16) அதனால் மீண்டும் ஸம்ஸார பந்தம் இல்லை.
உத்தாலகரின் உபதேசம் உலகில் உள்ளோர் மனங்களில் நன்கு பதியும்படி இருப்பதாகச் சொல்வர்.

——————————–

16. பூம வித்யை
நாரதர், ஸனத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார். அவரது மனம் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி
யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால்?
ஸனத்குமாரர்,நாரதரைப் பார்த்து உமக்கு தெரிந்ததையெல்லாம் முதலில் சொல்லுங்கள் என்றார்.
நாரதர் நான் எல்லா ஸப்தங்களையும்அறிந்திருக்கிறேன் என்றார்.
இதை உபாஸித்து (ப்ரம்மமாக)ஸப்தங்கள் கேட்குமிடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து ஆனந்தம் அடையலாம் என்று ஸனத்குமாரர் சொல்ல,
நாரதர் இதற்கு மேலும் உண்டா என்று கேட்டார். ஸம்பாஷணை தொடர்ந்தது.

ஸப்தம், வாக்கு, மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம், விஜ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஆகாயம்,
நினைவு, ஆசை என்று பதினான்கையும் ப்ரம்மமாக உபாஸிக்கலாம் என்று ஸம்பாஷணை தொடர்ந்தது.

இதற்கும் மேலானது எது என்கிற கேள்வி வந்தபோது,
”ப்ராணனை” மேலானதாக உபாஸிக்கலாம் என்றும், ப்ராணன் என்பது ஜீவாத்மா என்றும்
இந்தப் ப்ராணனை உயர்ந்த புருஷார்த்தமாக உபாஸிக்கலாம் என்றும் சொன்னார்.

ஸனத்குமாரர் மேலும் சொன்னார்.
இதை விட ”ப்ரம்மத்தை” உபாஸனை செய்வது மேலானதாகும். அதற்கு உபாஸனம், மனனம், இதில் ச்ரத்தை,
இதில் அசைக்க முடியாத பற்றுதல், அதற்கு தகுந்த செய்கைகளில் ஊக்கம், இப்படி இருந்து அந்த ப்ரம்மத்தை
உபாஸிப்பது ”பூமா” எனப்படும். இதற்கு மேம்பட்டது இல்லை.
இது எல்லாவற்றிற்கும் ஆத்மா-பரமாத்மா.
இப்படி உபாஸனம் செய்பவன், கர்மங்களிலிருந்து விடுபடுகிறான் இதற்கு மனஸ் சுத்தம் வேண்டும்.
மனஸ் சுத்தமாவதற்கு சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படி ஸனத் குமாரர் பதில் சொன்னார்.
இவரை ”ஸ்கந்தர்” என்றும் சொல்வதுண்டு.

——

17. தஹர வித்யை

இந்த ஸரீரத்திற்கு ”ப்ரஹ்ம புரம்” என்று பெயர். இதன் உள்ளே இருக்கிற புண்டரீகம் (தாமரைப்பூ) போன்ற சிறிய ஹ்ருதயத்திலே
ஆகாசம் இருக்கிறது. வெளியில் உள்ள ஆகாசத்தைப் போலவேதான், இதுவும். உடல் அழியும்போது, புண்டரீகம்
அழியும் போது இவ்வாகாசம் அழிவதில்லை. இப்படி உள்ள ஆகாசத்தின் உள்ளே கல்யாண குணங்களான எட்டு –
இதை உபாஸிக்க வேண்டும். இதனால் உபாஸிப்பவன் –
1) அபஹதபாப்மா (வினை இல்லாதவன்)
2) விஜர: (மூப்பில்லாதவன்)
3) விம்ருத்யு (மரணத்திற்கு இடமாகாதவன்)
4) விசோக: (துக்கமற்றவன்)
5) விஜிகத்ஸ: (பசியற்றவன்)
6) அபிபாஸ: (தாகமற்றவன்)
7) ஸத்யகாம: (நிலையான போக்யங்களை உடையவன்)
8) ஸத்யஸங்கல்ப: (தடையில்லாத ஸங்கல்ப சக்தியுள்ளவன்)
— ஆக எட்டு குணங்களை அடைகிறான்.

வேதத்தில் சொல்லப்பட்ட சில கர்மாக்களைச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றாலும், அதை அனுபவித்ததும்
யாவும் அழிந்து விடும்.
ஆனால் ஆத்மாவையும் அதன் குணங்களையும் உபாஸிப்பவனுக்கு எல்லா பலன்களும் உண்டு.
இந்த பரமாத்மாவின் கல்யாண குணங்களை நாம் அறியாமல் இருப்பது நமது பாபத்தாலே. பூமிக்குள்ளே புதையல்
இருந்தும், பூமியின் மேலே நடப்பவனுக்கு அது தெரிவதில்லை.
அதைப் போல பரமாத்மாவை அறியாமல் இருக்கிறோம். இவன் ஹ்ருதயத்திலே இருக்கிறான். உபாஸகனாகிய ஜீவாத்மா
உடலிலிருந்து பிரிந்த பிறகு பரஜ்ஞோதியை அடைகிறான் என்பது இந்த பரமாத்மாதான்.
இவன் —இந்தப் பரமாத்மா—-சேதனம், அசேதனம்எல்லாவற்றையும் ஆள்கிறவன். எல்லா உலகங்களையும் எல்லா
பூதங்களையும், எல்லா வஸ்துக்களையும் ஒன்றோடொன்று கலந்து அழியாதபடி ஆங்காங்கு நிறுத்தி அதன் அதன்
தன்மையோடு காக்கின்றான்.
இவனிடத்தில் எந்த தோஷமும் இல்லை. இவனை அடைவதால் ”தாப த்ரயம்” நீங்கும்.

இவனைப் பெற, ப்ரம்மச்சர்யம் வேண்டும்.
ப்ரம்மச்சர்யத்தாலே ப்ரம்ம லோகத்தில் ”அரம்”என்றும் ”புண்யம்”என்றும் சொல்லப்படும் இரண்டு ஸமுத்திரங்களையும்
”ஐரம்மதீயம்” என்கிற தடாகத்தையும், ”ஸோமஸவனம்” என்னும் அரச மரத்தையும் தாண்டி ”அபராஜிதை” என்கிற ப்ரம்மத்தின்
(பரமாத்மா) ராஜதானிக்குச் சென்று, பரமாத்மா எழுந்தருளியுள்ளஅழகிய ஸ்தானத்தை அடைந்து ப்ரும்மானுபவம் பெறுகிறான்.
(பரமபதம் அடைகிறான்).

ஹ்ருதயத்தில் உள்ள எல்லா நாடிகளுக்கும் ஸூர்ய க்ரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஹ்ருதயத்தில் உள்ள 101
நாடிகளில் ஒரு நாடி தலைப் பக்கம் உள்ள நாடியின் வழியே ஸூர்ய மண்டலம் போய் மனோவேகமாய் பரமபதம்
(வைகுண்டம்) சேர்ந்தால் மேலே சொன்ன பலன்கள் உண்டு.
இதுவே ”தஹர வித்யை” எனப்படுகிறது.

————–

18. ப்ரஜாபதி வித்யை

மேலே சொன்ன ”பர” வித்யைக்கு இந்த ப்ரஜாபதி வித்யை அங்கம் (முண்டகோபநிஷத்தைப் பார்க்க).
ப்ரஜாபதி தன் பிள்ளைகளான தேவர்களும், அசுரர்களும் க்ஷேமமாக இருப்பதற்காக ஆத்மாவை எட்டு குணங்களோடு
அறிந்தவனுக்கு ஸர்வ லோகமும், ஸர்வ சுகமும் உண்டு என்பதாக சொன்னதே இந்த வித்யை.

தேவர்களில் ப்ரதானன் இந்திரனும், அசுரர்களில் ப்ரதானன் விரோசனனும், 32 வருஷ காலம் ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து
ப்ரஜாபதியை அணுக அவர், ”ஆத்மா கண்ணில் தெரிகிறதா ?” என்று கேட்டார்.
கண்ணில் இருக்கும் நிழலை-அதன் பிரதிபிம்பம் தான் ஆத்மா என்று நினைத்தனர். விரோசனன் இதனையே
அசுரர்களுக்கு உபதேசித்தான். அதனால் அவர்கள் தேஹாத்மவாதிகள் ஆனார்கள்.

இந்த்ரனுக்கு திருப்தி இல்லை.
அவன் ப்ரஜாபதியை மறுபடியும் கேட்க, அவர் படிப்படியாக ஸ்வப்ன அவஸ்தையில் உள்ள ஆத்ம ஸ்வரூபம், உறக்கத்தில்
உள்ள ஆத்மஸ்வரூபம், இவற்றைச் சொல்ல இப்பொழுதும் இந்த்ரன் திருப்தி அடையவில்லை.

101 வருஷங்கள் ப்ரம்மச்சர்யம் இருந்து ”தஹர வித்யையில்” பகவானுக்கு உள்ள எட்டு குணங்களும் இவனுக்கும் உண்டு.
இவன் ,உடலில் இருந்து புறப்பட்டு பரமாத்மாவை அடைந்து சுகப்படுகிறான் என்று உபதேசித்தார். இந்த்ரனும் திருப்தி அடைந்து
தேவர்களுக்கு இதை உபதேஸித்தான். ஆத்மஸ்வரூபத்தை இந்த வித்யையினாலே ஜ்ஞான யோக பலத்தாலே அடைந்து
பக்தியோகத்தில் இழிந்து மோக்ஷம் அடைவதே பலன்.

”பகவானை கரிய திருமேனி உடையவனாகவும், சேதனஅசேதனங்களுக்கு அந்தர்யாமியாகவும் இருவகைகளாக
உபாஸிக்கிறேன். குதிரை, மயிரை சிலிர்த்து உதறுவது போலே பாபங்களை உதறித்தள்ளி ராகுவினின்று விடுபட்ட
சந்த்ரன்போலே சரீரத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேருகிறேன்.”
ஸத்வ குணத்தை அழித்து சுக்லதாதுவை உட்கொள்ளும் ஜன்மம் இல்லை.

இந்த ஸாந்தோக்ய உபநிஷத்தில் சொன்ன வித்யை யாவும்
ப்ரஹ்மா ப்ரஜாபதிக்கும், ப்ரஜாபதி மனுவுக்கும், மனு ப்ரஜைகளுக்கும் உபதேசித்தது.
ஆசார்யனை அணுகி உபதேசம் பெற்று இந்த்ரியங்களை ஆத்மாவிடம் செலுத்தி (இந்த்ரியங்களை அடக்கி)
வைதீக கர்மாக்களைச் செய்து, ஜீவஹிம்சை செய்யாமல் மேற்சொன்ன வித்யைகளில் ஒன்றை உபாஸிப்பவர் ஆயுட்காலம்
முடிந்ததும் ப்ரஹ்மத்தை (பரமாத்மா) அடைகிறான்.

ப்ரம்மத்தை அறிவது உபநிஷத்துக்களைக் கொண்டு. அந்த ப்ரம்மத்தை நான் உபாஸிப்பேன். ப்ரம்மம் என்னை ஆதரிக்கட்டும்.
ஆத்ம விஷயங்களில் ஈடுபட்ட எனக்கு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம் ஸித்திக்க வேண்டும்.
அவை என்னை ரக்ஷிக்க வேண்டும்.

——————-

19. புருஷாத்ம வித்யை

இது ப்ரஹதாரண்யத்தில் உள்ளது
முதன் முதலில் ஆத்மா ஒரே புருஷ ரூபமாக இருந்தது. இதற்கு (பரமாத்மா) புருஷன் என்றே பெயர்.
தனிமையில் சுகம்பெறாமல், இரண்டாவதாக ஒன்றை விரும்பி ஸ்த்ரீயும், புருஷனும் சேர்ந்ததோர் உருவமாகி,
பிறகு ஸ்த்ரீ வேறு, புருஷன் வேறு என்று பிரித்துக் கொண்டது.

இருவரும் புணரும் போது, தான் பிறப்பித்த ஸ்த்ரீயோடு தானே புணர்வது சரியல்ல என்று கருதி,பரமாத்மா ஸங்கல்பித்தவுடன் ,
ஸ்த்ரீயானவள் பசுவாக மாறினாள்.
இங்ஙனம், ஒவ்வொன்றிலும்,ஸ்த்ரீ புருஷ பேதம், எல்லா ஜீவராசிகளிலும்
ச்ருஷ்டி செய்து,தன் உள்ளங்கையிலிருந்து பரமாத்மா அக்னியைப் படைத்தார் .

தேவர்கள் ச்ருஷ்டி, ஸனக, ஸனந்தாதி முதலியவர்களின் ச்ருஷ்டி செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் பரமாத்மா உட்புகுந்தார் .

அந்த ஆத்மாவை உபாஸிக்க வேண்டும்.அடையப்பட வேண்டியது அதுவே. இதற்கு ”ஆத்மோபாஸனம்” என்று பெயர்.

இவனுக்கு தேவர்களும் இடைஞ்சல் செய்ய மாட்டார்கள்.
ஆனால், தேவர்களையோ மற்ற தேவதைகளையோ உபாஸிப்பவன், அவர்களுக்கு தாஸனாய், மாடு போல் உழைக்க
வேண்டியவனாகிறான். மனிதர்களுக்கு ஆத்மஜ்ஞானம் ஏற்படுவதை தேவர்களும், இதர தேவதைகளும் விரும்புவதில்லை.
தனக்கு உழைக்கும் மாடு தன்னை விட்டு போய் விடுகிறது அல்லவா !
ஒருவன் பூர்ணனாவதற்கு, மனைவி, புதல்வன், பணம், நல்ல செய்கை என்கிற நான்கும் பொருந்தியிருக்க வேண்டும்.

வாக்கு-மனைவி,
ப்ராணன் – புதல்வன்,
கண்ணும், காதும்-பணம்.
உடலே -நல்ல செயல்களைச் செய்ய உதவுகிறது.
இவ்வளவாக ஜீவன் பூரணணாக இருந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்

அனைவருக்கும் தந்தையான பரமாத்மா ஏழு அன்னங்களை உண்டாக்கினான். அவற்றில் ஒன்றை எல்லாருக்கும் பொதுவாக
ஆக்கினான். (இது நாம் தினந்தோறும் உண்பது. தேவர்கள், விருந்தினர் இவர்களுக்கு அளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
ஏனெனில் இது யாவருக்கும் பொது அல்லவா!)

தேவர்களுக்கு இரண்டை அளித்தான் (வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும்
அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்ஸபூர்ண மாஸங்கள் என்கிற கர்மாக்கள்)
ஒன்றை பசுவுக்கு அளித்தான். (இது பாலைக் கொடுக்கிறது).
மூன்றை தனக்காக வைத்துக் கொண்டான் (மனம், வாக்கு, ப்ராணன்)

எல்லா இந்த்ரியங்களுக்கும் மனஸே முக்கியம்.
மனஸ் வேறு ஏதாவதில் லயித்திருந்தால் கண்ணில் பட்டது காணப்படாது. காதில் கேட்டது கேட்கப்படாது.
விருப்பம், ஸங்கல்பம், ஐயம்,நம்புதல், அவநம்பிக்கை, தைர்யம், அதைர்யம், வெட்கம், அறிவு,
பயம் — இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனஸே. இப்படியே வாக்கு என்கிற இந்த்ரியமும் முக்கியமானது.
மூன்றாவது ப்ராணன்.
இது ப்ராண-அபான- வ்யான-உதான-ஸமானங்களாக இருக்கின்றன. மூன்று அன்னங்களாலே ஆத்மா தன்னுடைய
நிலையைப் பெறுகிறது.

இவற்றில் ப்ராணனுக்கு தேவதை சந்த்ரன். அவனுக்கு 16 கலைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக 15 கலைகள்
அழியும். அவையே மறுபடியும் வளரும். 16வது கலை அழிவற்றது. அமாவாஸ்யை அன்று சந்த்ரன் இந்த கலை (16வது
கலை)மூலம் எல்லா பிராணிகளுக்குள்ளும் புகுந்திருப்பான்
.
சந்த்ரனைப் போலவே புருஷனுக்கும் 16 கலைகள். தானே ஒரு கலை. அது அழிவற்றது. அழியும் கலைகள் 15. இது அவருடைய
சொத்து. சொத்துகள் அழிவதும், வளர்வதும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட புருஷன், புத்திரனைப் பெற்று மனுஷ்ய லோகத்தையும், காம்ய கர்மங்களைச் செய்து பித்ரு லோகத்தையும்,
பக்தியோகம் செய்து தேவ லோகத்தையும் (பரமபதம் என்று இங்கு பொருள் கொள்க) பெற வேண்டும்.

வாயு தேவதை எப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது.
அக்னி எரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காய்ந்து கொண்டே இருக்கிறது. நிலவும் அப்படியே.
இவைகளுக்கெல்லாம் அஸ்தமனம் என்பது உண்டு
ஸுர்ய,சந்த்ரர்கள் வானத்தில் சஞ்சரிப்பதற்கு வாயுவின் சகாயம் வேண்டும். வாயுவே உயர்ந்தது. ப்ராணனும் ஒரு வாயுவே.

இந்த்ரியங்களில் ப்ராணன் உயர்ந்தது. ப்ராணனுக்கு மேற்பட்ட ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கூட ப்ராணன் என்றே
அழைக்கப்படுவது உண்டு.
ப்ராணன் அம்ருதம்; ஆத்மா அம்ருதம்.
இப்படி ஜகத்காரணனான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.

—————-

20 – பாலாகி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே).
அஜாத சத்ரு என்கிற அரசனிடம், பாலாகி என்பவன் தன்னுடைய ப்ரஹ்ம ஜ்ஞான அறிவை வெளிப்படுத்த ஆவல்
கொண்டு அரசனிடம் சென்று தன்னுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தினான்.
ஸுர்ய மண்டலம், சந்த்ர மண்டலம்,மின்னல், ஆகாயம் இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி அங்கேயுள்ள ஆத்மாவை (ஜீவாத்மா)
ப்ரம்மமாகச் சொன்னான்.
அஜாதசத்ரு இதை ஒப்புக் கொள்ளாமல், இவற்றை மறுத்து, வாதிட்டான். பாலாகி அஜாதசத்ருவைப் பணிந்து, ப்ரம்மத்தைப்
பற்றி சொல்லுமாறு கேட்டான்.
அஜாதசத்ரு பாலாகியை அழைத்துக் கொண்டு, தூங்குபவன் அருகில் சென்று, அவனை எழுப்பினான்.
அவன் எழுந்திருக்காமல் இருக்கவே, கையால் அசைத்து எழுப்பினான். அவன் எழுந்தவுடன், அரசன்
பாலாகியைப் பார்த்து ”இப்போது விழித்தவன், உறங்கும்போது எங்கு இருந்தான் என்பது உனக்கு தெரியுமா? எங்கேயிருந்து
வந்தான் என்பது தெரியுமா ?” என்று கேட்டான். பாலாகிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

அரசன், இப்போது, அவனுக்கு உபதேசித்தான்.
தூங்க ஆரம்பிக்கும்போது, இந்த்ரியங்கள் வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெற ஆரம்பிக்கின்றன. ஜீவன், ஸ்வப்னம்
காண இருக்கும் நாடிகளில் சென்று ஸ்வப்னங்களைக் கண்டு, பிறகு ஹ்ருதயத்திற்குச் சென்று, அங்கிருந்து ஆகாசம் சென்று
பரமாத்மாவிடம் உறங்குகிறது. இப்படி தூங்கி எழுந்திருக்கும்போது பரமாத்மாவிடமிருந்து வெளிப்படும்போது
இந்த்ரியங்களுடன் சேர்ந்து எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப் பெறுகிறது.
(கௌஷீதகி உபநிஷத்தில் இது விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது).

ஜீவாத்மா அதாவது ப்ராணன் – பசுங்கன்று. இதற்கு கர்ப்பஸ்தானம் ஹ்ருதயம். இது வெளிப்பட்டு விளங்கும் ஸ்தானம்
உடல். அன்னம் என்கிற கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உணர்ந்தவருக்கு ஏழு சத்ருக்களால் அழிவில்லை.
(இரண்டு கண், இரண்டு காது, இரண்டு நாசித்வாரம், வாய் ஆக ஏழு).
தலையில் நிலைத்துள்ளது ப்ராணன்.

ப்ரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள்.
மண், நீர், நெருப்பு இதில் தங்கியிருப்பது ஒரு ரூபம்.–இது மூர்த்தரூபம்.
வாயுவும்,ஆகாயமும் மற்றொரு ரூபம் – இது அமூர்த்தரூபம்.
இது சத்யத்திற்கெல்லாம் சத்யம். (சத்யம்-ஜீவாத்மா. அவற்றுக்கெல்லாம் சத்யம் -ப்ரம்மம்-பரமாத்மா).

————

21. மைத்ரேயி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே)
யாஜ்ஞவல்க்யர் மஹரிஷி . அவருக்கு இரண்டு மனைவிகள்.

மூத்த மனைவி மைத்ரேயி. இளைய மனைவி காத்யாயனி.
இது யாஜ்ஞவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடந்த ஸம்வாதம்.

மைத்ரேயி – பூமி அளவு பணம் கிடைத்தாலும், அதனால் மோக்ஷம் பெற முடியுமா ?

யாஜ்ஞவல்க்யர் – முடியாது. சொத்து இருந்தால் இந்த உலக வாழ்க்கைக்கு உபயோகப்படும். மோக்ஷம் பெற இயலாது.

மைத்ரேயி – சொத்தை பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். மோக்ஷத்திற்கு உபயோகப்படாதது எனக்கு எதற்கு?
மோக்ஷ உபாயத்தை உபதேசியுங்கள்.

யாஷ்ஞவல்க்யர் – மிக்க சந்தோஷம். நான் சொல்வதை கவனமாகக் கேள்.
ஒருவருக்கொருவர் பிரியமாவது என்பது நாம் நினைப்பதால் அல்ல.
பரமாத்மா அப்படி நினைத்தால்தான் அது நடக்கும். எப்போதும் ப்ரியமாக இருக்கும் பரமாத்மாவை உபதேசம்
மூலமாக கேட்டு, அறிந்து, த்யானித்து ,அனுபவிக்க வேண்டும். இதை அடைய இந்த்ரியங்களை அடக்க வேண்டும்.
இந்த பரமாத்மா, விஜ்ஞானாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபனாய் பஞ்ச பூதங்களோடு கலந்து வருகிறது.

மைத்ரேயி – இதை விளக்க வேணும்

யாஜ்ஞவல்க்யர் – எல்லாம் ஆத்மாவே என்று அறியாதவன்-
அறிகிறவன்,
அறியும் கருவி,
அறியப்படுபவது இவற்றை வெவ்வேறாக பார்ப்பான்.
எங்கும் வ்யாபித்துள்ள ஆத்மாவாகவே எல்லாவற்றையும் காண்பவனுக்கு இப்படி வேறுபாடு தோன்றாது.
எதைக் கண்டாலும் ஆத்மாவைக் காண்பதாகவே தோன்றும்.

—————

22 – பர்யங்க வித்யை (இது கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது)

சித்ரன் என்கிற அரசன், அருணரின் புதல்வரை யாகம் செய்விக்க வேண்டினான். அவர் தன் புத்ரனான ச்வேதகேதுவை
அனுப்பினார். அரசன், ச்வேதகேதுவைப் பார்த்து, ”என்னையோ மற்றவரையோ (மற்ற அரசர்களையோ) யாகம் செய்வித்து
அதனால் அடையப்படும் லோகத்தைப் பற்றிய ரகஸ்யம் உள்ளதா? அது உங்களுக்கு தெரியுமா? அதன் மார்க்கம் என்ன?”
என்று கேட்டார்.
ச்வேத கேதுவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தகப்பனாரிடம் திரும்பி விட்டான். தகப்பனாரிடம் நடந்ததைச் சொன்னான். தகப்பனாருக்கும் தெரியவில்லை. அவர் அரசனிடம்
சென்று இதை தெரிவிக்க வேண்டினார்.

அரசன் சொன்னதாவது – இவ்வுலகில் மரணம் அடைபவர் சந்த்ர லோகம் செல்கின்றனர். சந்த்ரன் மேலுலகத்திற்கு வாசல்
போன்றவன். சந்த்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்பவரை மேலே செல்லுமாறு அனுமதிக்கிறான். பதில்
தெரியாதவனை மழை மூலமாகத் திருப்பி, உலகத்திற்கே அனுப்புகிறான். அப்படி திரும்பியவன் இவ்வுலகில் மறு பிறவி
எடுக்கிறான்.

சந்த்ரன் ”நீ யார்?” என்று கேட்க,
பஞ்சாக்னி வித்யையில் சொல்லியபடி ஐந்து நிலைகளைப் பெற்று, பிறவியை அடைந்தவன். இனி என்னை அவ்வாறு பிறக்குமாறு
விடவேண்டாம், பகவான் சத்யம் என்று தவத்தாலே உணர்ந்தேன் என்று பதில் சொல்பவனை சந்த்ரன் விட்டு விடுகிறான்.
அப்படிச் சொல்பவனை மேலே (அர்ச்சிராதி மார்க்கத்தில்) போக அனுமதிக்கிறான். அப்படி அனுமதிக்கப்பட்டவன் அக்னி லோகம்,
வாயு லோகம், வருண லோகம், ஆதித்ய லோகம், இந்த்ர லோகம், ப்ரம்ம லோகம் என்று இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறான்.

ப்ரம்ம லோகத்தில் அரம் என்கிற மடு உள்ளது.
முஹூர்த்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அயலாரை தடியால் அடித்து விரட்டுவார்கள். இதற்கு மேலே ”விரஜை ”
என்கிற ஆறு. திவ்யம் என்கிற வ்ருக்ஷம். ”ஸாலஜயம்” என்று சொல்லப்படும் ”அபராஜிதம்” என்கிற ராஜதானி.
இதற்கு இந்த்ரன்,ப்ரஜாபதி என்று இரண்டு த்வாரபாலகர்கள்.
”ப்ரபுவிமிதம்”,”விஷப்ரமிதம்” என்று சொல்லப்படும் விசாலமான மண்டபம்.
”விசக்ஷணை” என்கிற பீடம். அமிதௌஜஸ் எனப்படும் அளவற்ற ப்ரகாசம் உடைய கட்டில். எல்லாவற்றையும் தங்கள் ஸௌந்தர்யத்தால்
கொள்ளை கொள்ளும் தேவியர்கள். எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள்.
இத்தகைய ப்ரம்ம லோகத்திற்கு இவன் வருகிறான்.

பகவான் ”விரஜை ” ஆற்றின் அருகே வந்து கட்டளையிட்டதும்,
கையில் மாலையுடன் 100 திவ்ய அப்ஸரஸ்கள், மையை வைத்துக் கொண்டு 100 திவ்ய அப்ஸரஸ்கள், கந்தப் பொடி, பட்டு வஸ்த்ரம்,
ஆபரணங்கள் இவைகளை ஏந்திக் கொண்டு நூறு, நூறு அப்ஸரஸ்கள்-ஆக 500 அப்ஸரஸ்கள் இவனுக்கு அலங்காரம் செய்கின்றனர்.

அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்த ஜீவன் (முக்தன்) ”அரம்” என்கிற மடுவை நினைத்த மாத்திரத்தில் தாண்டி,
முஹுர்த்தர்கள் விலகி வழிவிட ”விரஜை ” ஆற்றையும் நினைத்த மாத்திரத்தில் கடந்து,
”திவ்யம்” என்கிற மரத்தை அணுகி, ப்ரம்மத்தின் நறுமணம் இவனுடைய சரீரத்திற்கு ஏற்பட
”ஸாலஜ்யம்” என்கிற இடத்திற்கு வந்து
”அபராஜிதம்” என்கிற அரண்மனையில் புகுந்து ”ப்ரம்ம தேஜஸ்” ஜொலிக்க,
இந்த்ரன்,ப்ரஜாபதி என்கிற இரு த்வாரபாலகர்கள் வழிவிட, ”விஷப்ரமிதம்” என்கிற மண்டபத்தை அடைந்து,
”ப்ரம்மயசஸ்” வந்து சேர,விசக்ஷணை என்கிற பீடத்தை நெருங்கி, ”அமிதௌஜஸ்” என்கிற கட்டிலை அடைய,

பகவான் இவனை ”நீ யார் ? ” என்று கேட்க,

முக்தன் ”ஸ்வர்க்கத்திலிருந்து ஆகாசம், வாயு, மேகம் முதலிய
வழிகளில் கீழே இறங்கி எண்ணற்ற பிறப்புகள் எடுத்த ஜீவாத்மா.
நீர் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா அதாவது பரமாத்மா. அடியேனுக்கும் ஆத்மா.
நான் மனஸ், வாக்கு, உடல் மற்றும்இந்த்ரியங்களின் உதவியுடன் ஆண், பெண், அலி என்று பற்பல ஜென்மம்,உருவங்கள் எடுத்தேன்.
உடல், இந்த்ரியம், மனஸ்,ப்ராணன், அறிவு இவற்றையெல்லாம் விட நான் மேலானவன் என்று தெரிந்து கொண்டேன்.
தேவரீரை ஆத்மாவாக உடையவன். தேவரீருக்கே சேஷபூதன்” என்று பதில் சொல்கிறான்.

பர்யங்க வித்யையான இதில் சொல்லப்பட்டபடி பகவானை உபாஸிப்பவர் பகவானின் திருவடிகளை அடைவர்.

—————

23. ப்ரதர்தந வித்யை
(இதுவும் கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது).

திவோதாஸன் என்பவரின் குமாரன் ப்ரதர்தனன். மிகவும் பராக்ரமசாலி. சண்டைகளில் இந்த்ரனுக்கு உதவி செய்தவன். ஒரு
சமயம் இந்த்ரன் இடமான ஸ்வர்க்க லோகம் சென்றான். இந்த்ரன் இவனிடம் ”வரன் அளிக்கிறேன் கேள்” என்றான். ப்ரதர்தனன்
”மனிதனுக்கு எது ஹிதமோ, அதையே வரமாக எனக்கு அளிப்பாயாக” என்றான்.

இந்த்ரன் சொன்னதாவது:
என்னை உபாஸனை செய். என்னை உபாஸித்தால் மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்ப்பஹத்தி போன்றவற்றால்
வரும் பாபம் கிடையாது. பாபம் செய்ததற்காக முகம் கருக்காது.
நான் ப்ராணன். என்னை ஆயுள் என்றும், அம்ருதம் என்றும் உபாஸனம் செய். இதனால் முழு ஆயுளைப் பெற்று ஸ்வர்க்க
லோகத்திலும் அழியாமல் இருப்பாய்.

ப்ராண வாயு எல்லா இந்த்ரியங்களிலும் வ்யாபித்து இந்த்ரியங்களை வேலை செய்யச் செய்கிறது. ப்ராணனே
ப்ரஜ்ஞை. ப்ரஜ்ஞையே ப்ராணன். இரண்டும் சேர்ந்தே இருக்கும்.சேர்ந்தே உடலிலிருந்து புறப்பட்டு விடும்.
ப்ரஜ்ஞை என்பது ஜீவன். இவற்றுக்கு ஆத்மா பகவான். ஆனந்த ஸ்வரூபன்;
பிறப்பு இறப்பு அற்றவன்; நல்வினை, தீவினைகளுக்கு அப்பாற்பட்டவன் ; உலகங்களைக் காப்பவன் ; நியமிக்கிறவன் ;
இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனை செய். இதுவே ”ப்ரதர்தன வித்யை” ஆகும்.

—————-

24. சாண்டில்ய வித்யை
(அக்னி ரஹஸ்யத்தில் இருக்கிறது)

ஸத்யத்தை ப்ரம்மமாக உபாஸிப்பாயாக. ஸத்யம் என்கிற ப்ரம்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா. எங்கும் பரந்தவன்.
அணுவுக்கும் அணுவானவன். எல்லாவற்றிலும் பெரியவன்.
எனக்கும் ஆத்மா என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று ச்வேதகேதுவுக்கு சாண்டில்யர் கூறினார்.

————

25. புருஷ வித்யை மற்றும்
26. ந்யாஸ வித்யை
ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓம் இதி ஆத்மாநம் யுஜ்ஜீத….. என்று ஆரம்பிப்பது
”ந்யாஸ வித்யை”. தஸ்யை – வம் விதுஷ ———-…..என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது
”புருஷ வித்யை” (புருஷ வித்யை—தைத்திரீய நாராயண உபநிஷத் )
ஆத்மாவாகிற ஹவிஸ்ஸை பரமாத்மாவிடம் சேர்ப்பித்தலாகிற யாகம் என்று சொல்லலாம்
(யஜ்ஞரூபமாகச் செய்யப்படுகிற ந்யாஸ வித்யை)
இதற்கு ஆத்மா – யஜமானன்.
ஸ்ரத்தா – ஆஸ்திக புத்தி.
பத்னீ – தர்மபத்னீ.
ஸரீரம் – ஸமித்து.
மார்பானது, யாகம் பண்ணுமிடம், அதாவது அக்னிகுண்டம்.
உடம்பில் உள்ள ரோமங்கள் – பரிஸ்தரணம்.
தலைமயிர் -தர்ப்பக்கட்டு.
ஹ்ருதயம் – யூபஸ்தம்பம்.
ஆசையானது நெய் .
கோபமானது – வெள்ளாடு.
ஆலோசிக்கிற அறிவு – நெருப்பு.
எல்லா வஸ்துக்களுக்கும் அநுகூலமாக இருக்கிற அறிவு – தக்ஷிணை.
வாக்கு – ஹோதா.
ப்ராணன் – ஸாமகானம் பண்ணுகிற ருத்விக்.
கண் – அத்வர்யு என்கிற ருத்விக்.
மனம் – ப்ரஹ்ம என்கிற ருத்விக்.
காது -அக்நீத்ரன் என்கிற ருத்விக்.
எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறோமா அது யாக தீக்ஷை .
எதைச் சாப்பிடுகிறானோ, குடிக்கிறானோ – அது ஸோமபானம்.
விளையாடுகிறான் என்று சொல்லப்படுவது ”உபஸத்” என்கிற யாகம்.
நடப்பது, எழுந்திருப்பது, உட்காருவது – அது”ப்ரவர்க்யம்” என்கிற யாகம்.
முகம் – ஆஹவநீயம் என்கிற அக்னி.
இவரது அறிவு – ஹோமப் பொருள். காலையிலும், மாலையிலும்
சாப்பிடுவது – அது ஸமித்.
மாலை, காலை, மதியம் என்பவை மூன்று ஸவனங்கள் (தாநி, ஸவநாநி போன்றவை)
பகல் இரவுகள் -தர்ச பூர்ணமாஸ இஷ்டிகள்.
பக்ஷங்கள், மாதங்கள் – சாதுர்மாஸ்ய யாகம்.
ருதுக்கள் -பசு பந்தம்.
வருஷங்கள், அவற்றின்உட்பிரிவுகள் – அஹர்கணம்.
இந்த யாகமானது எல்லாச் சொத்தையும் தக்ஷிணையாகக் கொண்டது.
மரணம் – அவப்ருத ஸ்நானம்

(சாந்தோக்யத்தில் 3 -16-1 சொல்லப்பட்ட புருஷ வித்யை வேறு)
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டது, ஆயுப்ராப்தியை பலமாக உடைய
ஸ்வதந்த்ர வித்யை என்று ஸ்வாமி தேசிகன் அதிகரண ஸhராவளியில் அருளியுள்ளார்.

அர்ச்சிராதி மார்க்கம் — இந்த மார்க்கம், உபகோசல வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர்யங்க வித்யைகளில் விவரமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரஹ்ம உபாஸகர்கள் எல்லோரும் அர்ச்சிராதி கதியைச் சிந்தனை செய்ய வேண்டும் என்கிற
எண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்தில் சொல்லப்படும்) மிகக் கடினமான ப்ரஹ்ம வித்யைகள் – 32. இவை
உபாஸனா மார்க்கங்கள். அவையாவன :———–
1. அக்னி வித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை

இந்த 32 வித்யைகளுக்கும் ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன். எல்லா வித்யைகளுக்குமே ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வேதங்களை, மது, கைடபர்களிடமிருந்து மீட்டுத் திரும்பவும்
ப்ருஹ்மாவுக்கு உபதேசித்ததால்தான், வேதம் எல்லா உலகங்களிலும் பரவி இருக்கிறது.
நீங்கள், உங்கள் இரண்டுகாதுகளையும் இரண்டு கைகளால்
இலேசாக மூடிக்கொண்டவுடன், கேட்கும் சப்தம் வேதம் சம்பந்தப்பட்டது.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம் 32 அக்ஷரங்களாக உள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய முக்ய மந்த்ரம் 32அக்ஷரங்களிலுள்ள அநுஷ்டுப் ச்லோகம்.
இவை, 32 ப்ரஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர் சொல்வர்.
ஆக 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெருமையையும், அருமையையும் சொல்லில் விவரிக்க இயலாது.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — நான்காம் அத்யாயம்–

June 10, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

———

4-1-ஆவ்ருத்தி பாதம் –11- அதிகரணங்கள்

இடைவிடாமல் த்யானம் -சாதனமாக இருந்தாலும் இங்கு பல அத்தியாயத்தில் —
திவ்ய மங்கள விக்ரஹம் கல்யாண குணங்கள் ஸ்வரூபம் விபூதி -இவற்றை
தியானிப்பது மனஸ் ஸூக்கு போக்யமாக இருப்பதால் –

4-1-1-ஆவ்ருத்தி அதிகரணம்
பூர்வபக்ஷம் -ஐஹிக பலன்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் -உமியில் இருந்து நெல்லை எடுப்பது போல்
அம்முஷ்மிக அத்ருஷ்ட பலன்களுக்கு ஒரு தடவை போதும் –
ஸூத்ரகாரர்
ஆவ்ருத்தி அஸக்ருத் உபதேசாத் -என்று அத்தை நிரசிக்கிறார் –

தைத்ரியம் -ப்ரஹ்ம வித் ப்ரஹ்மத்தை ஸ்ரீ வைகுண்டத்தில் அடைகிறான் -த்யானம் உபாசனம் வேதனம் –
அஸக்ருத் ஆவ்ருத்தி -மீண்டும் மீண்டும் -இடைவிடாமல் தைலதாராவத் –

4-1-2-ஆத்மாத்ம உபாசன அதிகரணம் –
ப்ரஹ்மம் தனியாக ஜீவனில் வேறுபட்டதாகஉபாசனமா -ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக எண்ணி உபாசனமா -என்று விசாரம் –
பூர்வ பக்ஷம் -தனித்து வேறுபட்டதாக –
ஸூத்ரகாரர்
ஆத் மேதி து உப கச்சந்தி க்ரஹயந்தி ச
ப்ரஹதாரண்யம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம்

——–

4-1-3-ப்ரதீக அதிகரணம்
இதுவும் அடுத்ததும் ப்ராசங்கிகம்
ப்ரதீக உபாசனம் -3-3- பார்த்தோம் -மனசை ப்ரஹ்மத்துக்கு பிரதியாக நினைத்து உபாசனம் -த்ருஷ்ட்டி விதி –
இது ஐஹிக பலன்களுக்கு உபாசனம் -மோக்ஷத்துக்கு அல்ல –
இதே போல் முக்ய பிராண உபாசனமும் ப்ரதீக உபாசனமே –
ப்ரஹ்மத்தை ஆத்மாவாக எண்ணி உபாசனமும் ப்ரதீக உபாசனம் தான் என்று பூர்வ பக்ஷம் –
இத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
ந ப்ரதீகே ந ஹி ச –
ஸூத்ரகாரர் -ஒன்றை ப்ரஹ்மமாக நினைத்து உபாசித்து சிறந்ததே -என்றும் சொல்கிறார் –

—–

4-1-4-ஆதித்ய தீமிதி அதி கரணம்
சாந்தோக்யம் –உத்கீத உபாசனம் –
ஆதித்ய உபாசனமும் உத்கீத உபாசனம் போல் செய்வதே உசிதம் பூர்வ பக்ஷம்
ஸூத்ரகாரர்
ஆதித்ய தீமத ய ச அங்க உபபத்தே —
ஆதித்ய உபாசனமே சிறந்தது -உத்கீதா உபாசனம் இதுக்கு அங்கம்

——-

4-1-5-அஸீன அதிகரணம்
உபாசனம் ஆசனத்தில் இருந்தா நின்றா நடந்தா தூங்கும் பொழுதா -விசாரம்
ஸூத்ரகாரர்
அஸீன ஸம்பவத் -ஆசனத்தில் இருந்தே செய்ய வேண்டும் –
ஆழ்ந்த தியானத்துக்கு அசையாமல் இருக்க வேண்டும் –
ஸ்ரீ கீதா- ஸ்வேதேஸ்வர உபநிஷத் பிரமாணங்கள் –

——

4-1-6-ஆ பிரயாண அதிகரணம்
ஆ ப்ரயாணாத் தத்ர அபி த்ரிஷ்டம்
ஸ்ரீ வைகுண்ட பிராப்தி கிட்டும் வரை -என்றவாறு
பக்தி யோகம் -பல பிறவிகளில் பின்பே பலம் கிட்டும் –

——

4-1-7—ததிகம அதிகரணம்
தர்சன சாமான ஆகாரம் –
பூர்வாக உத்தராக கர்ம விநாச விசாரம்

——-

4-1-8—இதர அதிகரணம்
கீழே பாப விநாச விசாரம்
இங்கு புண்ய விநாச விசாரம்

———

4-1-9-அநாரப்த கார்ய அதிகரணம்
சஞ்சிதம் -அநாரப்தம்
ப்ராரப்தம் -முழுவதும் கழிந்தால் தானே மோக்ஷம் -சாந்தோக்யம் -ஆறாம் அத்யாயம் –
ததிகமன அதிகரணம் போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றது சஞ்சிதம்
ப்ராரப்தம் அனுபவித்தே கழிக்க வேண்டும் பக்தி யோக நிஷ்டனுக்கு –


4-1-10-அக்னி ஹோத்ராதி அதிகரணம்

அக்னி ஹோத்ராதி து தத் கர்யாய ஏவ தத் தர்சநாத்
நித்ய நைமித்திகாதி கர்மங்களை விடாமல் பக்தி யோக நிஷ்டனும் செய்ய வேண்டும் –
புண்யங்கள் அனுகூலருக்கும் பாபங்கள் பிரதிகூலருக்கும் சென்று சேரும் -கர்மங்கள் கழிந்த பின்பே மோக்ஷ பிராப்தி –

——–

4-1-11-இதர ஷபனாதி கரணம்

போகேந து இதர ஷபயித்வ அத சம்பத்யதே -என்று ப்ராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பிராப்தி
ஜென்மங்கள் பல பல எடுக்க வேண்டி இருக்கும் –

——-

4-2-உதக்ரந்தி பாதம் –11 அதிகரணங்கள் –
ஜீவன் முக்த வாத நிரஸனம்
சாந்தோக்யம் 6 அத்யாயம் ஸத் வித்யை

4-2-1- வாக் அதிகரணம் –
வாக் இந்திரியம் மனசிலும் மனஸ் முக்ய ப்ராணனிலும் -முக்ய பிராணன் ஜீவனிலும் –
ஜீவன் ப்ரஹ்மத்திலும் சேர்ந்து -சம்பத்தி
இங்கு பூர்வ பக்ஷம் -வாக்குக்கு மனஸ்ஸூ காரணம் இல்லையே எவ்வாறு –
எனவே இங்கு வாக் இந்திரியத்தை சொல்ல வில்லை -வாக்கையே சொல்லும் என்பர்
இதை நிரஸித்து ஸூத்ரகாரர்
வாக் மனசி தர்சநாத் சப்தாச் ச -என்று வாக் இந்த்ரியத்தையே சொல்லுகிறது –
அனைத்து இந்திரியங்களுக்கும் உப லக்ஷணம்

————–

4-2-2-மநோ அதிகரணம்
தன் மான பிராண உத்தர
உத்தர என்றது உபநிஷத் வாக் மனசி ஸம்பத்யதி என்றதன் பின் மன பிராண என்பதால்- –
இந்த அதிகரணத்தில் மேலும் ஒரு சங்கை நிவர்த்திக்கப் படுகிறது –
உபநிஷத் —அன்ன மயம் ஹி சவும்ய மன–அன்னம் அஸ்ரு ஜந்த — ஆபோ மய பிராண –என்பதால்
மனதுக்கு அன்னமும் அன்னத்துக்கு நீரும் -ப்ராணனுக்கும் நீரும் காரணம் என்பதால் -மனசு தண்ணீரில் சேரும் என்பர் பூர்வ பக்ஷம்
இவை காரணம் அல்ல -நல்ல செயல்பாட்டுக்கு உதவும் என்பதையே உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன –

—–

4-2-3-அத்யக்ஷ அதிகரணம்
சாந்தோக்யத்தில்
பிராண தேஜஸி தேஜஸ் பரஸ்யாம் தேவதயம் -என்பதில் ஜீவ -ஸப்தம் இல்லாததால்
பூர்வ பக்ஷம் முக்கிய பிராணன் இந்திரியம் மனஸ் நேராக தேஜஸ் பஞ்ச பூதங்கள் உடன் சேர்ந்தன என்பர் –
இத்தை நிரசித்து ஸூத்ர காரர்
சோதியஷே தத் உப கம திப்ய
யமுனை கடலில் கலக்கிறது–கங்கையில் கலந்து பின் கலக்கிறது – என்பது போல்
ஆதி சப்தத்தால் முக்கிய பிராணன் ஜீவனுடன் சேர்ந்து
இதே போலே மேலும் உபநிஷத் வாக்கியங்கள் உண்டே

—-

4-2-4-பூதோதி கரணம்
இதில் தேஜஸ் மட்டுமா அனைத்து பூதங்களுமா என்கிற சங்கை தீர்க்கிறார்
பூர்வ பக்ஷம் பிராணா தேஜஸ் சாந்தோக்யம் என்பதால் தேஜஸ் மட்டுமே
ஸூத்ரகாரர்
பூதேஷு தஸ் ஸ்ருதே —
எல்லா பூதங்களுடனே -ப்ரஹதாரண்யம் சொல்லுமே
பூர்வ பக்ஷம் மீண்டும் ஜீவன் ஒவ்வொரு பூதமாக என்று கொள்ளலாமே –
அனைத்தும் சேர்ந்து என்று கொள்ள வேண்டாமே என்ன
நைகஸ்மின் தர்ஷ யதோஹி –தனியாக பூதம் செயல்படாதே –
பஞ்சீ கரணம் த்ரவீ கரணம் ஏற்பட்டால் தானே செயல்பாடு –

———-

4-2-5-அஸ்ருத்யுப க்ரம அதிகரணம்
ஜீவமுக்தி வாதம் நிராசனம் இதில் –
கீழ் சொன்ன க்ரமம் அவித்யை உள்ள ஜீவாத்மாவுக்கே -அவித்யை இல்லா ஜீவாத்மா ஞானம் வந்தது முக்தி என்பர் பூர்வ பக்ஷம்
இத்தை ஸூத்ர காரர் நிரசிக்கிறார்
ஸமானச் ச அஸ்ருத்யுப க்ரமாத் அமிர்தத்வம் ச அநு போஷ்ய
அர்ச்சிராதி மார்க்கம் வழியே தான்
கட உபநிஷத்
யதே ஸர்வே ப்ரமுச்யந்தே காம யஸ்ய ஹ்ருதி ஸ்ரீதஸ் அத மர்த்ய அமிர்தோ பவதி அத்ர ப்ரஹ்ம ஸம்ஷ்னுதே
அநு போஷ்ய-என்று சரீரம் எரிப்பதுக்கு முன்பே அம்ருதத்வம் அடைகிறான் –
மேலும் ஸூஷ்ம சரீரம் கொண்டு விரஜையில் நீராடி வாஸனா ருசிகளைப் போக்கி ப்ரஹ்ம பிராப்தி –

——–

4-2-6-பர சம்பத்தித்த அதிகரணம்
இது நான்காவதுக்கு அடுத்து இருக்க வேண்டும்
ஜீவமுக்தி நிரஸிக்க த்வரித்து கீழ் அதிகரணம்
இதில் ஜீவாத்மா அந்தராத்மாவாய் உள்ள ப்ரஹ்மத்துடன் சம்பந்தம் அடைவதைச் சொல்கிறது –
பூர்வ பக்ஷம் -உபநிஷத்
தேஜஸ் பரஸ்யம் தேவதயம் -என்று பூத சூஷ்மம் இந்திரியம் மனஸ் முக்ய பிராணன் இவற்றை மட்டுமே சொல்லிற்று –
இத்தை நிரசித்து ஸூத்ர காரர்
தானி பர தத ஹி அஹ –என்று
இவை அனைத்தும் பரமாத்மா இடம் ஒன்றி –
இது ஸ்வர்க்கம் நரகம் போகும் ஜீவாத்மாவுக்கும் ஒய்வு எடுத்துக் கொள்ள உண்டே –

———–

4-2-7-அவி பாகதி கரணம்
இதில் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்யம் பூர்வ பக்ஷம்
அவி பாகோ வஸனாத் –சம்பத்யதே –என்று இரண்டும் அப்ருதக் சித்தம் தானே ஒழிய ஒன்றே அல்ல –

——-

4-2-8- ததோகோ அதிகரணம் –
ப்ரஹ்ம வித் ப்ரஹ்ம நாடி வழியாகவும் மற்றவர்கள் வேறே நாடி வழியாகவும்
கீழ் வரை அனைவருக்கும் பொது
உபநிஷத் -ஷதம் சைக ஹ்ருதயஸ்ய நாட்யா –தசம் மூர்த்தானாம் அபி நிஸ்ருதைக
தய ஊர்த்வ மயன் அம்ருதத்வ மேதி விஸ்வ ஞாந்ய உத் க்ரமண பவந்தி -என்று
மூர்த்நா நாடி வழியே தற்செயலாகச் செல்கிறான் என்கிறது
ஸூத்ர காரர்
ததோகோ அக்ர ஜ்வலனம் தத் ப்ரகாசிதா த்வாரா வித்யா சமர்த்யத் தத் சேஷ கதி அநு ஸ்ம்ருதி –
யோ கச்ச ஹார்த்ந அநு க்ருஹீத — இதுவே அதிக நீளமான ஸூத்ரம்
அவனது அனுக்ரஹத்தாலே 101 நாடி மூலம் செல்கிறான் -என்கிறது –

———–

4-2-9-ரஸ்மி அதிகரணம்
சாந்தோக்யம் -அத யத்ர ஏ தஸ்மாத் சரீரத் உத் க்ரமாதி அத எதைரேவ ரஸ்மி அபி ஊர்த்வம் அ க்ரமதே —
பூர்வபக்ஷம் இரவில் ரஸ்மி இல்லையே –
ஸூத்ர காரர்
ரஸ்மி அநு சாரி –ஸூர்ய கிரணங்கள் மூலமே செல்கிறான் –
மேகங்கள் கிரணங்களை மறைத்தாலும் இரவிலும் நாம் காணாமல் இருந்தாலும் எப்பொழுதும் கிரணங்கள் உண்டே –

———-

4-2-10-நிஷாதி கரணம்
பகல் சுக்ல பக்ஷம் உத்தராயணம் இல்லாமல் இரவு கிருஷ்ண பக்ஷம் தஷிணாயணம் -என்றால்
மோக்ஷ பிராப்தி இல்லை பூர்வ பக்ஷம்
அத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
நிஷி நேதி சேதன சம்பந்தஸ்ய ஏவத் தேஹ பவித் வத் தர்சய யதி ச –
சாந்தோக்யம்
தஸ்ய தாவத் ஏவ சிரம் யாவத்ந வி முக்ஷ்யே அத சம்பத்ஸ்யே –என்று
பிராரப்த கர்ம அவசானத்தில் மோக்ஷ பிராப்தி என்கிறதே -அதனால் தர்சயதி ச என்கிறார் –

————

4-2-11-தஷிணாய அதிகரணம்
தைத்ரியம்
அத்ய தக்ஷிண ப்ரமியதே பித்ருநாம் ஏவ மஹிமானாம் கத்வ சந்த்ர மாச சாயுஜ்யம் கச்சதி –
பித்ரு லோகம் வழியாக சந்த்ர போவதாக உள்ளது
பீஷ்மர் இதற்காகவே உத்தராயணத்துக்கு காத்து இருந்தார் – -பூர்வ பக்ஷம்
இத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
அத ச அயனே அபி தஷிணே —
சந்த்ர லோகத்தில் ஒய்வு எடுத்து கொண்டு
தஸ்மாத் ப்ரஹ்மனோ மஹிமானாம் ஆப்நோதி -என்கிறது அதே தைத்ரியம் –
யோகின பிரதி ஸ்மர்யதே ஸ்மர்தேச்ச ஏதே -என்று ஒரு ஸூத்ரத்தால்
மேலும் தூமாதி மார்க்கம் வழியாக செல்பவனே திரும்புகிறான்
அர்ச்சிராதி மார்க்கம் வழியாக சென்றவன் திரும்ப மாட்டான் என்கிறது –

——

4-3-கதி பாதம் –இதில் ஐந்து அதிகரணங்கள் –

அர்ச்சிஸ் ஜ்வல்நா –அஹா திவச –ஜ்யோத்ஸ்ன பக்ஷம் -உத்தராராயண –ஷட் அங்கீத மாஸே —
ஸம் வத்ஸர –வாயு பாவன –ஸூர்ய ஆதித்ய தாபன –சந்த்ரமாஸ –
வித்யுத் அமானவ புருஷன் -வருண -இந்திர-பிரஜாபதி
நால்வரும் விரஜா நதி வரை கூட்டிச் செல்வர் என்பவர்

—-

4-3-1-அர்ச்சிராதி அதி கரணம்
சாந்தோக்யம்–4-14- / 8-4-உபகோஸல வித்யையிலும் –
கௌஷிகி ப்ருஹதாரண்யம்
இந்த மூன்றிலும் சில -வேறுபாடுகள்-
ஏதாவது ஒரு வழியை முக்தாத்மா எடுத்துக் கொள்ளலாம் பூர்வ பக்ஷம்
இத்தை நிரசித்து –ஸூத்ரகாரர்
அர்ச்சிரதின தத் பிரதிதே -ஒரே ஒரு மார்க்கமே
குண உப ஸம்ஹார பாதம் படியே சமன்வயப்படுத்தி கொள்ள வேண்டும் –

——

4-3-2-வாயு அதிகரணம்
இந்த சாந்தோக்யம் சம்வத்சரத்துக்கு பின் ஸூர்யன்
ப்ரஹதாரண்யம் -வாயு லோகம் -இதுவே தேவ லோகம் -சம்வத்சரத்துக்கும் ஸூர்யனுக்கும் நடுவில் –
பூர்வ பக்ஷம் இந்த வேறுபாட்டால் -ஏதாவது ஒன்றை முக்தாத்மா கொள்ளலாம் என்றும்
வாயு லோகமும் தேவ லோகமும் ஓன்று அல்ல என்றும் சொல்வர் –
ஸூத்ரகாரர் இதுக்கு
வாயும் அப்தத் அவி ஷேஷவிஷே ஸப்யம் -என்று
வாயு லோகம் சம்வத்சரத்துக்கு மேலும் ஸூர்யனுக்கு கீழும் கொள்ள வேண்டும் என்றும்
தேவ லோகமும் வாயு லோகமும் ஒன்றே என்றும்
பத க்ரமம் வேறே அர்த்த க்ரமம் வேறே என்றும் அர்த்த க்ரமம் படியே கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் –

———–

4-3-3-வருண அதிகரணம்
கௌஷிதகி உபநிஷத் -அக்னி லோகம் -வாயு லோகம் -வருண லோகம் -ஸூர்ய லோகம் –
இந்திர லோகம் -பிரஜாபதி லோகம் -ஸ்ரீ வைகுண்டம்
கீழே தேவ லோகம் -வாய் லோகம் சம்வத்சரத்துக்கும் ஸூர்ய லோகத்துக்கு நடுவில் என்றது
ஸூத்ரகாரர்
ததிஹ ஆதி வருண சம்பந்தாத் –
வருண லோகம்-ததிஹ– வித்யுத் -மின்னல் புருஷனுக்கு மேலே கொண்டு
இந்திர ப்ரஜாபதியும் வருண லோகத்துக்கு மேலே கொள்ள வேண்டும் என்கிறார் –
.
——–

4-3-4-ஆதி வாஹிக அதிகரணம்
பூர்வ பக்ஷம் -12 இடங்களும் போகம் அனுபவிக்கும் இடங்கள் என்பர்
ஸூத்ரகாரர் —ஆதி வாஹிக தல் லிங்காத்
வித்யுத் புருஷன் பற்றி உபநிஷத் -ச ஏநன் ப்ரஹ்ம கமயதி -என்கிறது
இங்கு சொன்னது மற்ற 11 புருஷர்களும் கூட்டிச் செல்பவர்கள் என்பதற்கு உப லக்ஷணம்

————

4-3-5-கார்ய அதிகரணம்
முக்தாத்மா மட்டுமே ஸ்ரீ வைகுண்டம் செல்கிறார்
கூட்டிச் செல்லும் இவர்கள் அல்ல என்கிறது –
பாதராயணர் தமது சிஷ்யர்களான பதரி -ஜைமினி இருவரையும் அவர்கள் கருத்துக்களை சொல்லக் சொல்கிறார் –
கார்யம் பதரி அஸ்ய கதி உப பத்தே
கார்யம் என்று ஹிரண்யகர்பன் -நான்முகனை சொல்கிறது -காரணம் ப்ரஹ்மம் கார்யம் நான் முகன் என்றவாறு

பர ப்ரஹ்மம் விபு எங்கும் இருப்பவன் -எவ்வாறு இவர்கள் அழைத்து செல்ல முடியும்
புருஷ அமானவ ஏத்ய ப்ரஹ்மா லோகன் கமயதி -என்றும் உபநிஷத்
லோகன் -லோகங்கள் -பல அண்டங்கள் -பல பிரம்ம லோகங்கள் –
மேலும் உபநிஷத் —பிரஜாபதி சபம் வேஷ்ம ப்ரபத்யே -பிரஜாபதி லோகம் அடைகிறான் –
ஆதிவாஹிகர் இங்கு தான் கூட்டிச் செல்கிறார்கள் -ஸ்ரீ வைகுண்டம் அல்ல என்கிறார் பதரி –
ஐந்து ஸூத்ரங்களால் மேல் சொன்னபடி பதரி
பின்பு ஜைமினி மூன்று ஸூத்ரங்களால் –
பரம் ஜைமினி முக்யத் வத் –பர ப்ரஹ்மம் இடம் கூட்டிச் செல்கிறார்கள்
சாந்தோக்யம் 8 அத்யாயம் -பரஞ்சோதி இடம்
மேலும் இரண்டு ஸூத்ரங்களால்
தர்சனச் ச –என்றும்
ந ச கார்யே ப்ரத்யபி சந்தி -என்றும்

அடுத்து பாதராயணர் பத்ரி கூற்றைத் தள்ளி ஜைமினி கூற்றை கொஞ்சம் கொண்டு
அப்ரதி கலம்பனம் நயதீதி பாதராயண உபயத ச தோஷாத் தத் க்ரது ஷ -என்கிறார்

ப்ரஹ்ம த்ருஷ்ட்டி உபாசகர்கள் இரண்டு வகை
பிரதிக ஆலம்பனர்
அப்ரதிக ஆலம்பனர்
சாந்தோக்யம் 7 அத்யாயம் -சனத்குமாரர் -நாரதருக்கு உபதேசம்
நாமம் -வாக்கு -மனஸ் -சங்கல்பம் -சித்தம் -த்யானம் -விஞ்ஞானம் -பலம் -அன்னம்-நீர் -தேஜஸ் –
ஆகாசம் -ஸ்ம்ருதி -ஆசை -பிராணன் -இப்படி 15 -ப்ரஹ்மாத்மக வஸ்து உபாசனம் ஐஹிக பலன்களுக்கு
அப்ரதிக ஆலம்பனர் -மோக்ஷ பலனுக்காகாவே
“Svatma Sariraka Paramatma upasaka:
ஸ்வாத்ம சரீரிக பரமாத்மா உபாசகர்கள் –
உபநிஷத் -ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மத் சரீரத் உத்தய பரஞ்சோதி உப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே
ப்ரஹமாத்ம க ஸ்வாத்ம உபாஸகர்-அதாவது – பஞ்சாக்னி வித்யா நிஷ்டர்கள்
உபநிஷத் –
தத் யா இத்தம் விது ஏ சேமே அரண்யே ஸ்ரத்தா தப இத்யுபசதே தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி
இவர்களும் அர்ச்சிராதி வழியாக ஸ்ரீ வைகுண்டமே செல்கிறார்கள்
தத் க்ரதுஷ –உபாசித்த படியே ப்ரஹ்மத்தை காண்கிறார்கள் –

——-

அதிகரண சாராவளி–496-ஸ்லோகம்
பீஷ்மர் -அஷ்ட வசுக்களில் ஒருவர் -ஆகவே மீண்டும் வசு பதவிக்கு சென்று
மது வித்யை அனுஷ்ட்டித்து பின்பே மோக்ஷம் அடைந்தார் என்கிறார்
498-502-ஸ்லோகங்கள் மது வித்யை பற்றியவை
சிசு பாலன் அர்ச்சிராதி மார்க்கம் மூலம் செல்ல வில்லை
ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு -ராவணன் கும்பகர்ணன் -சிசுபாலன் –தந்தவக்த்ரன்
ராமர் அயோத்யா பிரஜைகளை சாந்தாநிக -கார்ய ஸ்ரீ வைகுண்டம் –
இந்த்ரர்களும் சதுர்முக ப்ரம்மாக்களும் ப்ரஹ்ம வித்யை அனுஷ்ட்டித்து அர்ச்சிராதி மார்க்கம்
இவர்கள் லோகம் தொடங்கியே செல்கிறார்கள்

——

4-4-பல பாதம் –ஆறு அதிகரணங்கள் இதில் –

கௌஷிதகி உபநிஷத் -சாந்தி பர்வம் -பாஞ்சராத்ர சம்ஹிதை -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
அஷ்டாதச ரஹஸ்யங்களில் ஒன்றான அர்ச்சிராதி கதி பிரபந்தம் –
இவை ஸ்ரீ வைகுண்டம் பற்றி விளக்கும் –

ஆதார சக்தி க்ரமம் -ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் காட்டி அருளியது

1-ஆதார சக்தி
2-மூல பிரகிருதி
3-அகில ஜகத் ஆதார கூர்ம ரூபி -நாராயணன் –
4-ஸ்ரீ அநந்தன் -சேஷன்
5- பூ லோகம்
6- ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்
7- ஸ்ரீ வைகுண்ட திவ்ய பதம்
8- ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகர்
9- ஸ்ரீ வைகுண்ட திவ்ய விமானம் –
10-ஆனந்தமய மண்டபம்
11-மண்டபத்தில் ஆதி சேஷன்
12- தர்ம பீட பதம் -திவ்ய சிம்ஹாசனத்தில் தென் கிழக்கில்
13-ஞான பீட பதம் -தென் மேற்கில்– நிரு ருதி
14-வைராக்ய பீட பதம் வட மேற்க்கில் -வாயவ்ய –
15-ஐஸ்வர்ய பீட பதம் -வட கிழக்கு -ஈசான்யம்
16–அதர்ம -கிழக்கு பகுதி மெத்தைக்கு பெயர்
17-அஜன –தெற்கு பகுதி மெத்தைக்கு பெயர்
18-அவைராக்யா -மேற்கு பகுதி மெத்தைக்கு பெயர்
19-அ நைஸ்வர்யா -வடக்கு பகுதி மெத்தைக்கு பெயர்
20-அநந்தா -ஸர்வ அவஸ்த்தை கைங்கர்ய பரன்
21)ஸ்ரீ பத்மம் அதுக்கு மேல்
பரம பத சோபனத்தில் ஸ்ரீ பத்மத்துக்கு மேல் ஆதி சேஷன் என்று மாறி உள்ளது –
22-விமல சரம ஹஸ்தம் -கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
23-உத் கர்ஷிணை சரம ஹஸ்தம் -தென் மேற்கு பக்க சாமரம் வீசுபவர்
24-ஞான சரம ஹஸ்தம் -தெற்கு பக்க சாமரம் வீசுபவர்
25-கிரியா சரம ஹஸ்தம் -தென் கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
26-யோக சரம ஹஸ்தம் -மேற்கு பக்க சாமரம் வீசுபவர்
27-பிரஹ்வ சரம ஹஸ்தம் -வடகிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
28-ஸத்ய சரம ஹஸ்தம் -வடக்கு பக்க சாமரம் வீசுபவர்
29-ஈஸந சரம ஹஸ்தம் -வட கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
30- அனுக்ரஹ சரம ஹஸ்தம் -கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
31-ஜகத் ப்ரக்ருதி யோக பீடம் -ப்ரஹ்மாண்டங்களுக்கும் திருப்பாற் கடலுக்கும் காரணம்
32-திவ்ய யோக பீடம் -மெத்தை
33-ஸஹஸ்ர பணா மண்டித ஆதி சேஷன்
34-பாத பீட ஆதி சேஷன்
35-அநந்த கருட விஷ்வக் சேனாதிகள் –நித்ய ஸூரிகள் பத்மாஸனத்தில் எழுந்து அருளி
36- அஸ்மத் ஆச்சார்யர்கள் எழுந்து அருளி
37-ஸ்ரீ மன் நாராயணன்
38-ஸ்ரீ மஹா லஷ்மி வலப்புறம்
39-ஸ்ரீ பூமா தேவி இடப்புறம்
40-ஸ்ரீ நீளா தேவி இடப்புறம்
41–க்ருத மகுடாதி பதி
42-க்ருத மாலா அபீடகாத்ம –
43-தக்ஷிண குண்டல மகரம் -வலது திருக்காதில்
44- வாமன குண்டல மகரம் -இடது காதில்
45-வைஜயந்தி வனமாலா
46-திருத்துளசி மாலா
47-ஸ்ரீ வத்ஸம்
48-ஸ்ரீ கௌஸ்துபம்
49- காஞ்சி குண உஜ்வல பீதாம்பரம்
50-ஸ்ரீ ஸூ தர்சன ஹேதி ராஜன்
51- ஸ்ரீ நந்தக ஷட்கதிபதி
52- ஸ்ரீ ஹஸ்தபத்மம்
53-ஸ்ரீ பாஞ்ச ஜன்ய சங்காதிபதி
54-ஸ்ரீ கௌமோதகி கட்க அதிபதி
55-சார்ங்க்ய ச அதிபதி
56- ஸ்ரீ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹினி
57-ஆதி சேஷன் பின் புறமும்
58-ஸ்ரீ பகவத் பரிஜனங்கள்
59- ஸ்ரீ பகவத் பாதுகா
60-ஸ்ரீ பகவத் பரிச் சேதங்கள் –வெண் கொற்றக் குடை போல்வன
61- வைநதேயன் முன் புறம்
62- விஷ்வக்சேனர் திருக்கை பிரம்புடன் வாடா கிழக்கில் தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
63- கஜானனன்
64-ஜயத் சேனன்
65-ஹரி வக்த
66-கால ப்ரக்ருதி சம்ஞான

67-சண்ட ப்ரசண்ட -கிழக்கு வாசல் காப்போர்
68-பத்ர ஸூ பத்ர –தெற்கு பகுதி வாசல் காப்போர்
69-ஜய விஜய -மேற்கு பகுதி வாசல் காப்போர்
70-தத்ர விதத்ர -வடக்கு பகுதி வாசல் காப்போர்
அனைவரும் சங்கு சக்கரம் கதை ஏந்தி நான்கு திருக்கரங்களுடன்

71-குமுத கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –கிழக்கே
72-குமுதாஷா கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தென் கிழக்கே
73-புண்டரீகாஷா கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தெற்கே
74-வாமன கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தென் மேற்கே
75-சங்கு கர்ண கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –மேற்கே
76-சர்ப நேத்ர கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –வட மேற்கே
77-சுமுக கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –வடக்கே
78-ஸுப்ரதிஷ்டய–கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத — வட கிழக்கே

—–

4-4-1—ஸம்பத்ய ஆவிர்பாவ அதி கரணம்
சாந்தோக்யம் -ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண ஸாம்யம் –
தர்மபூத ஞான விகாசம்
பூர்வ பக்ஷம் இவை புதிதாக உண்டாவது –
ஸூத்ரகாரர் முதல் ஸூத்ரத்தில்
ஸம்பத்ய ஆவிர்பாவ ஸ்வேந ஸப்தாத் -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் தான் -புதிதாக வந்தவை அல்ல –
உபநிஷத் சொல்வதும்
ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மத் சரீரத் ஸமுத்தய பரஞ்சோதி உப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே –
இரண்டாம் ஸூத்ரத்தில் –முக்த ப்ரதி ஞானத் –என்றும்
மூன்றாம் ஸூத்ரத்தில் –ஆத்ம ப்ரகாரணாத் –என்றும் –
அஷ்ட குண ஸாம்யம்
மாணிக்கம் சேற்றில் விழுந்தால் கழுவிய பின்பு அதன் முன்புள்ள தேஜஸ் மீண்டும் பெறுவது போலவும்
கிணறு தோண்ட இருக்கும் நீர் கிடைப்பது போலவுமே இங்கும் –

—-

4-4-2—அவி பாகேந த்ருஷ்டவத் அதிகரணம்
ப்ரஹ்மத்தை பரஞ்சோதியாக அனுபவம் –
தைத்ரியம் -முண்டகம் -ஸ்ரீ கீதை –
பூர்வ பக்ஷம் -ப்ருதக் சித்தம்
ஸூத்ரகாரர் -அப்ருதக் சித்தமே –ஸூத்ரம் –அவி பாகேந த்ருஷ்டவத்–
சரீரீ சரீரம் பாவம் — விட்டுப் பிரிக்க முடியாத சம்பந்தம் உண்டே –
தத்வமஸி -என்றும்
அயம் ஆத்மா ப்ரஹ்மம் –என்றும்
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -என்றும் இத்தையே சொல்கிறது
அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே —
மேலும்
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மன அந்தர யம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மாநம் அந்தர யமயதி சதே ஆத்ம அந்தர்யாமி அம்ருத -என்றும்
அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -என்றும் –
வாக்ய அந்வய அதிகரணத்திலும் -அவஸ்திதே இதி கஷ க்ருத்ஸன –உண்டே

————-

4-4-3-ப்ரஹ்ம அதிகரணம்
முதல் அதிகரணத்துடன் நேரடித் தொடர்பு இதற்கு
அஷ்டகுண சாம்யமும் தர்ம பூத ஞான விகாசமும் –
ஜைமினி ஓவ்டோல்மி–இருவரும் தங்கள் கருத்துக்களை சொல்லி பின்பு பாதராயணர் ஸித்தாந்தம்
ப்ரஹமேந கைமினி உபந்யாசதிப்ய –என்றும்
சித்தி தன் மாத்ரேண ததக்த்மத்வத் இதி ஓவ்டோல்மி–என்றும்
ப்ரஹதாரண்யமும்
ச எத சைந்தவ கண அனந்தர அபாஹ்ய க்ருத்ஸனஹ் ரஸ ஞான ஏவ விஞ்ஞான கண ஏவ -என்கிறது
சித்தாந்த ஸூத்ரமாக மூன்றாவது
ஏவம் அபி உபந்யாசத் பூர்வ பாவத் அவிரோதம் பாதராயண
இரண்டும் ஒன்றே -விரோதம் இல்லையே –

————

4-4-4-ஸங்கல்ப அதிகரணம்
சாந்தோக்யம் சொல்லும்
ச உத்தம புருஷ சதத்ர பரேயேதி ஜக்க்ஷத் க்ரீடன் ரமமாண ஸ்த்ரீ பிர்வ யேனைர்வ நோபஞ்சனம் ஸ்மரன் இதம் சரீரம்
கைங்கர்யம் செய்து உகக்கிறான் -சம்சாரத்தை நினைத்தே பார்ப்பது இல்லை
மீண்டும்
ச யதி பித்ரி லோக காமோ பவதி ஸங்கல்பத் ஏவ பிதர ஸமுத் திஷ்டந்தி தேன பித்ரு லோகேந ஸம் பன்னோ பவதி
ச யதி மாத்ரு லோக காமோ பவதி ஸங்கல்பத் ஏவ மாதர ஸமுத் திஷ்டந்தி–என்றும்
முக்தாத்மா நினைத்தால் முன்னோர்களை காணலாம் -என்றும் -ராமன் கிருஷ்ணன் போலே
தாய் தந்தையை தேர்ந்து எடுத்து மீண்டும் இச்சையால் பிறக்கலாம் அவன் அவதாரம் போலவே -என்றும் சொல்கிறதே –
பூர்வ பக்ஷம் -யத்னம் பண்ணியே நடக்கும்
ஸூத்ரகாரர்
ஸங்கல்பத் ஏவ தத் ஸ்ருதே –யத்னம் வேண்டாம்
மீண்டும்
அத ஏவ ச அநந்யதிபதி
விதி நிஷேதம் இல்லாமல் ஸத்ய ஸங்கல்பம் கொண்டவன் –
ஸ்வராட் -ஆகிறான் —

————

4-4-5- அபாவ அதிகரணம்
கைங்கர்யம் செய்ய தேகம் கொள்வானா இல்லையா விசாரம்
பதரி -தேகம் கர்மம் அடியாக போகம் துக்கம் அனுபவத்துக்கு தானே ஆகவே வேண்டாம்
அபாவம் பதரி அஹாஹி ஏவம்
ஜைமினி உபநிஷத் படி
ச ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா பவதி ஸப்ததா பவதி –
பாவம் ஜைமினி விகல்ப அமனாத்
பின்பு ஸூத்ரகாரர்
த்வாதஸ யாஹ வத் உபய விதம் பாதராயணா அத –இரண்டும் கொள்ளலாம் –
த்வாதஸ யாஹம் -ஸத்ரயாகம் -ஒருவரும் செய்யலாம் பலரும் செய்யலாம் –
பலர் செய்தால் லோக க்ஷேமம் -அப்பொழுது சத்ர யாகம் பெயர்
ஒருவர் செய்தால் -அஹீனம் இதற்கே பெயர் ஆகும்
கல்யாண குண அனுபவத்துக்கு சரீரம் தேவை இல்லை
கைங்கர்யங்களுக்கு சரீரம் வேண்டும் –
அடுத்த ஸூத்ரம்
தன்வ பாவே ஸந்த்யாவத் உபபத்தே –என்று
ஸ்வப்னத்தில் ஸ்ருஷ்ட்டி போல் உருவம் கொள்ளலாம்
அடுத்த ஸூத்ரம்
பாவே ஜாக்ரத்வத்–ஸ்வப்னத்தில் இருந்து எழுந்து அனுபவம் போல் இவனும் கைங்கர்யம்
தாய் தந்தையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்
அடுத்த ஸூத்ரம்
ப்ரதீப வத் அவேஷ ததேஹி தர்ஷயதி –என்று அணுவான ஜீவாத்மா எவ்வாறு பல சரீரம் கொண்டு கைங்கர்யம்
என்பதற்கு விளக்குக்கு ப்ரதீபை போல் என்கிறது –
அடுத்து
ஸ்வப்யய சம்பத்யோ யத்ர பக்ஷம் ஆவிஷ் கிருதம் ஹி –என்று
தூங்கி எழுந்த ஜீவனைப் பற்றியே உபநிஷத் வாக்கியம் -முக்தாத்மாவைப் பற்றியது அல்ல –

——-

4-4-6-ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம்
ஜகத் காரணத்வம்
மோக்ஷ பிரதத்வம்
ஸர்வ தாரத்வம்
ஸர்வ நியந்த்ருத்வம்
ஸர்வ ஸரீரத்வம்
ஸர்வ ஸப்த வாஸ்யத்வம்
ஸர்வ வேத வேத்யத்வம்
ஸர்வ லோக சரண்யத்வம்
ஸர்வ முமுஷு உபாஸ்யத்வம்
ஸர்வ பல பிரதத்ரித்வம்
ஸர்வ வியாபத்வம்
ஞான ஆனந்த ஸ்வரூபத்வம்
ஸ்ரீ யபதித்தவம்
ஸ்ரீ பூமி நீளா நாயகத்வம்
ஆதிசேஷ பர்யங்கத்வம்
கருட வாஹனத்வம்
புண்டரீகக்ஷத்வத்ம்
இவை அனைத்தும் அவனுக்கே அசாதாரண்யம் –

பூர்வ பக்ஷம்
முண்டகம் –நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபபத்தி –ஸத்ய ஸங்கல்பத்வம் இருப்பதால்
இவை அனைத்தும் இவனுக்கும் உண்டு
இத்தை நிரஸித்து ஸூத்ரகாரர்
ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹதத் வாச்ச —

யதோவ இமானி பூதாநி ஜாயந்தே யேந ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்தி அபி ஸம் விஷந்தி
தத் விஞ்ஞான சக்வ ப்ரஹ்ம –என்றும்

சதேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் ததைக ஈஷதே
பஹுஸ்யாம் ப்ரஜா ஏயேதி தத் தேஜோ அஸ்ருஜத் –என்றும்

ப்ரஹ்மம் ஏவ இதம் அக்ர ஆஸீத் என்றும்

ஆத்ம வா இதம் அக்ரீ ஆஸீத் -என்றும்

ஏகோ ஹவை நாராயண ஆஸீத் –என்றும் –

ய ஆத்மநி திஷ்டன் –என்றும்

அஸந்நிஹிதத் வாச்ச –என்றும் -உண்டே –

பூர்வ பக்ஷம்
ச ஸ்வராட் பவதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காம சாரே பவதி–
இமான் லோகானி காம ரூப்யானி ஸஞ்சரன்

அடுத்த ஸூத்ரம்
ப்ரத்யக்ஷ உபதேசாத் ந இதி சேத் ந அதி காரிக மண்டலஸ்த யுக்தே

மூன்றாவது ஸூத்ரம் –விகார வர்த்திச் ச ததாஹி ஸ்திதிம் அஹ
உபநிஷத் வாக்கியங்கள் –
யத ஹி ஏவ ஏஷ ஏதஸ்மிந் அத்ருஷ்யே அநந்தம்யே அ நிருக்தே-
அ நிலயநே அபயம் ப்ரதிஷ்டம் விந்ததே — என்றும்

ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வ ஆனந்தி பவதி– என்றும்

தஸ்மின் லோகா ஸ்ரித ஸர்வே -என்றும்
முக்தாத்மாவுக்கு ஜகத் வியாபார வர்ஜம் சொல்லிற்றே

நான்காம் ஸூத்ரம்
தர்ஷயதஷ ஏவம் ப்ரத்யக்ஷ அநு மானே –என்று
பரமாத்மாவுக்கு இவை அசாதாரணம் என்கிறார் –
ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களும் உண்டே

ஸ்ருதி வாக்யங்கள் –
பீஷாஸ் மத் வாத பவதே பிஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத்
அக்னி ச இந்த்ர ச மிருத்யு தவதி பஞ்சம –என்றும்

ஏதஸ் யவ அஷரஸ்ய பிரஷசநே கார்கி ஸூர்ய சந்த்ர மச வித்ரு தவ் திஷ்டத-என்றும்

ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதி ஏஷ பூத பல ஏஷ சேது விதர்சன ஏஷாம் லோகநாம் அசம் பேதய –என்றும்

ஸ்ம்ருதி வாக்யங்கள்

மயா தஷேந ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் —
விஷ்டப்யஹம் இதம் க்ரித்ஸ்னம் ஏகம் ஷேந ஸ்திதோ ஜகத் –ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள்

ஐந்தாவது ஸூத்ரம்
போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
உபநிஷத்தும்
ச அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண விபஸ்ச்சித –

நிகமனத்தில் ஆறாவது ஸூத்ரம்
அநா வ்ருத்தி சப்தாத் –அநா வ்ருத்தி சப்தாத் –

நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணைக தான –ஜகத் ஜன்மாதி காரணம் –ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ஆஸ்ரித வாத்சல்ய ஏக ஜலதி –பரம காருணிகா —
நிரஸ்த சம அப்யதிக சம்பவன –பர ப்ரஹ்ம பிதான -பரம புருஷ அஸ்தீதி ஸப்தாத் -அவகம்யதே

ஏவம் அஹ அஹ அனுஷ்ட்டியா மான வர்ணாஸ்ரம தர்மனு க்ரிஹித தத் உபாசன ரூப தத் ஸமாராதன ப்ரீத

உபாசநேந அநாதி கால ப்ரவ்ருத்த அநந்த துஷ் க்ருத கர்ம ஸஞ்சய ரூப அவித்யாம் விநிவ்ருத்ய ஸ்வ யதாத்ம்ய
அனுபவ ரூப அநவதிக அதிசய அநந்தம் ப்ராப்யய புநர் அநாவர்த்த யதி இதி ஸப்தாத் அவகம்யதே

சப் தச ஸகலவ் ஏவம் வர்த்தயன் யாவத யுஷம் ப்ரஹ்ம லோகம் அபி ஸம் பத்யதே
ந ச புனர் ஆவர்த்ததே ந ச புனர் ஆவர்த்ததே தே இத்யதிக –

பகவத ஸ்வயம் ஏவ யுக்தம் -மாம் உபேத்ய புனர் ஜென்ம துக்காலயம் அஷஷ்வதம் ந ஆபுன வந்தி மஹாத்மன ஸம் சித்திம் பரமம் கத
ஆ ப்ரஹ்ம புவநாத் லோகா புனரா வர்தினா அர்ஜுனா மாம் உபேத்யே து கௌந்தேய புனர் ஜென்ம ந வித்யதே இதி –

ந ச வுச்சின்ன கர்ம பந்தஸ்ய அ சங்குசித ஞானஸ்ய பர ப்ரஹ்மணே பாவ ஸ்வ பாவைகஸ்ய தத் ஏக ப்ரியஸ்ய
அனாவதிகாதி ச வ அநந்தம் ப்ரஹ்மணவ் பவத அந்நிய அபேக்ஷ தத் அர்த்த அசம்பவாத் புனர் ஆவ்ரிதி சங்க

ந ச பரம புருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞானிநாம் லப்த்வ கதாசித் ஆவர்த்த யிஷ்யதி

ப்ரியோகி ஞானினா அத்யர்த்தம் அஹம் மம ச ச ப்ரிய உதார ஸர்வ இவைத் ஞானி து ஆத்மைவ மே மதம்
ஆஸ்தித ஸஹி யுக்தாத்மா மாம் ஏவ அநுத்தமம் கதிம் பஹுனாம் ஜன்மானாம் அந்தே ஞானவான்
மாம் பிரபத் யதே வாஸூ தேவ சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர் லப -இதி –

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் –
ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — மூன்றாம் அத்யாயம்–

June 9, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

3-1-வைராக்ய பாதம்
சாந்தோக்யம் -5 அத்யாயம் -அருணி தன குமாரர் ஸ்வேதகேதுவை ஜிபிலை குமாரர் ப்ரவஹன அரசர் இடம்
உபதேசத்துக்கு அனுப்ப -அரசன் இவர் இடம் ஐந்து கேள்விகள்
ஜீவன் செல்லும் இடம் -மீண்டும் பிறக்கும் மார்க்கம் -தேவ யானம் பித்ரு யானம் -பஞ்ச அக்னி வித்யைகள் – பற்றி –
த்யு பர்ஜன்ய பிருத்வி புருஷ யோஷித் —

ஆறு அதிகரணங்கள் இதில்

3-1-1- தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம் –ஏழு ஸூத்ரங்கள் –
ஜீவாத்மா பூத ஸூஷ்மங்களுடன் செல்கிறானா –
இல்லை -பூர்வ பக்ஷம் –
ஸித்தாந்தம் -முதல் ஸூத்ரம் -தத் அந்தர பிரதி பத்தன் ரம்ஹதி ஸம் பரிஷ் வக்த ப்ரஸ்ன நிரூ பணப்யம் —
பூத ஸூஷ்மங்கள் உடனே தான் செல்கிறான்
முக்ய பிராணன் -11-இந்திரிய ஸூஷ்மங்கள் உடனே ஜீவன் உடலை விட்டு செல்லும் பொழுது செல்கிறது

3-1-2—க்ரதத்ய அதிகரணம்
ஸ்வர்க்க லோகத்தில் இருந்து திரும்பும் ஜீவன் கொஞ்சம் மீதி புண்ய பாபங்கள் மீதத்துடன் வருகிறானா -விசாரம்
பூர்வ பக்ஷம் -கர்மங்கள் இல்லாமல் வருகிறான் –
இதை மறுத்து ஸூத்ர காரர்
க்ரிதத்யயே அநு சயவன் ரிஷ்டஸ்ம்ரிதிப்யம் யதேதம் அநேவம்ச —
தூமாதி மார்கம் -பித்ரு யான மார்க்கம் -இதுவே -ஸ்வர்க்கம் போகும் வழி –தூமா -புகை -இரவு -கிருஷ்ண பக்ஷம் –
தஷிணாயணம் -பித்ரு லோகம் -ஆகாசம் -சந்திரன் -ஸ்வர்க்கம்
திரும்பும் பொழுது -சந்திரன் -ஆகாசம் வாயு -தூமா அபரம்-நீர் உண்ட மேகம் -மேகம்
போகும் பொழுது பித்ரு லோகம் வழி திரும்பும் பொழுது வாயு லோகம் -என்ற வாசி
வர்ணாஸ்ரம நித்ய நைமித்திக கர்மாக்களை விடாமல் பண்ண வேண்டும் –

———

3-1-3-அநிஷ்ட திகர்யதி கரணம் -இந்த அதிகரணத்தில் பத்து ஸூத்ரங்கள் -ஐந்து பூர்வ பக்ஷம் -ஐந்து சித்தாந்தம் –
இஷ்ட அதிகாரிகள் நித்ய நைமித்திக காம்ய கர்மங்களை பண்ணி தூமாதி மார்க்கம் வழியாக ஸ்வர்க்காதிகளுக்கு செல்கிறார்கள்
அநிஷ்ட அதிகாரிகள் -க்ருத்ய அகர்ண அக்ருத்ய கரண -பகவத் அபசாரங்கள் பாகவத அபசாரங்கள் அஸஹ்ய அபசாரங்கள் செய்பவர்கள் –
மோக்ஷ அதிகாரிகள் -காம்ய கர்மங்களில் ஆசை இல்லாமல் பக்தி பிரபத்தி மூலம் முக்தி அடைபவர்கள்
இந்த அதிகரணத்தில் அநிஷ்ட அதிகாரிகள் நரகம் செல்வதற்கு முன் சந்த்ர லோகம் செலிரார்களா என்று விசாரம்
கௌஷிகி உபநிஷத் -அனைவரும் இது வழியே போகிறார்கள் என்கிறது –

முதல் ஸூத்ரம் -பூர்வ பக்ஷம் –
அநிஷ்ட அதிகாரி ணாம் அபி ச ஸ்ருதம்
கௌசிக உபநிஷத் சொல்வதால் –
ஸூத்ர காரர் -இத்தை விளக்கி நரக அனுபவத்துக்கு பின்பே சந்த்ர லோகம் வழியாக திரும்புகிறான் என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்
அடுத்த ஸூத்ரத்தில் இந்த லோகத்தில் இருந்து செல்லும் ஜீவாத்மா யம வசத்திலே இருப்பதாக ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வதைக் காட்டுகிறார் –
“Vidyakarmanorithi thu Prakrathathvath”.
வித்ய கர்ம நோரிதி து ப்ரக்ரதத்வத் —
இந்த ஸூத்ரத்தில் வித்யா -மோக்ஷ அதிகாரி -கர்ம -இஷ்ட அதிகாரி –
நரக அனுபவத்துக்கு பின்பு மாரு பிறவிக்கு பஞ்ச அக்னி மூலம் இல்லாமல் புழு பூச்சிகளாகவே பிறக்கிறார்கள் –
அதிகம் புண்யம் செய்த சில ஜீவர்களும் பஞ்ச ஆஹுதி மூலம் வராமல் -திரௌபதி போல் அக்னி குண்டத்தில் இருந்து பிறப்பார்கள் –
ஜீவஜம் -அண்டஜம் -பஞ்ச ஆஹுதி மூலம்
ஸ்வேதஜம் உத்பிஜம் -பஞ்ச ஆஹுதி இல்லாமல்

———

3-1-4—தத் ஸ்வாபவ்ய பத்தி அதிகரணம்
ஜீவர்கள் திரும்பும் பொழுது ஆகாசம் வாயு தூமா கார் மேகம் வழியாக வரும் பொழுது அங்கு போகம் அனுபவிப்பார்களா -விசாரம்
இல்லை என்பதே ஸித்தாந்தம் –
தத் ஸ்வாபவ்ய பத்தி உப பத்தே -என்பது ஸூத்ரம்

——-

3-1-5-நதி சிர் அதிகரணம்
பஞ்ச ஆஹுதி -ஜீவாத்மா -ஆகாசம் வாயு தூமா கார் மேகம் -இங்கு எல்லாம் விரைவாக வந்தாலும் –
பல காலம் அன்ன தானியங்களில் இருந்தே பிறக்கிறான் என்கிறது

——–

3-1-6-அந்ய அதிஷ்டித அதிகரணம்
தானிய சரீரமாக கொள்வது அங்கு இருந்து அனுபவிக்க இல்லை என்கிறது –
முதல் ஸூத்ரம் -அந்ய அதிஷ்டித பூர்வ வத் அபிலபத்
தானியத்தில் வேறே ஒரு ஜீவன் கர்ம அனுகுணமாக உள்ளான் –

அஸூத்த மிச்சே ந ஸப்தத் -யாகங்களில் ஆஹுதி கொடுப்பது பாப செயல் இல்லை -அது ஸ்வர்க்கம் செல்லும் –

————

3-2-உபய லிங்க பாதம்
அகில ஹேய ப்ரத்ய நீக –அஸங்க்யேய கல்யாண குண மஹோததி —
ஜாக்ருத தசா தோஷங்கள் கீழே வைராக்ய பாதத்தில்
இதில் மற்ற மூன்றும் -ஸ்வப்ன -ஆழ்ந்த தூக்கம் -மூர்ச்சா அவஸ்தா தோஷங்கள்

3-2-1-ஸந்த்ய அதிகரணம்
ஸந்த்யா -ஸ்வப்ன ஸ்தானம்
ப்ரஹதாரண்யம் -யஜ்ஜ்வல்க்யர்
கட உபநிஷத்
ஸ்வப்னத்தில் உள்ளவற்றை ஸ்ருஷ்டிப்பது ஜீவனா ப்ரஹ்மமா விசாரம்
முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம் -ஜீவனே
சந்த்யே ஸ்ருஷ்டிர் அஹாஹி
நிர்மதரம் ச ஏக புத்ர தயா ஷ
அடுத்த நான்கும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்
ப்ரஹ்மமே பாப புண்யங்கள் அடிப்படையில் ஸ்ருஷ்டிக்கிறார் –
மாயா மாத்ரம் து கர்த்ஸ்ந்யேந அநபிவியக்த ஸ்வரூபத்வத் –
மாயங்கள் ஸ்ருஷ்டிக்க வல்ல ப்ரஹ்மமே ஸத்ய ஸங்கல்பன் –

தேஹ யோகத்வ சோபி —
ஆத்மாவின் ஸத்ய சங்கள்பாதி குணங்களுக்கு சுருக்கம் தேஹ சம்பந்தத்தால் தானே -என்கிறது –

———

3-2-2-தத் அபாவ அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
ஆழ்ந்த உறக்கம் நிலை விசாரம்
சாந்தோக்யம் -6 அத்யாயம் -8 அத்யாயம்
ப்ருஹதாரண்யம் -4 அத்யாயம்
நாடியில் -பூரிததில் -பரமாத்மா இடம் ஒன்றியதாக இங்கு சொல்லும்
இவை விகல்பமா சமுச்சயமா என்று விசாரம்
பூர்வ பக்ஷம் விகல்பமே என்பர்
மூன்று இடங்களிலும் இருக்க முடியாதே என்பர் –
இத்தை நிரஸித்து முதல் ஸூத்ரம் -தத் அபாவ நாடீஷூ தத் ஸ்ருதே அத்நநி ச –
படுக்கையில் கட்டிலில் வீட்டில் போல் இவை மூன்றும் –
இரண்டாம் ஸூத்ரம் -ஆழ்ந்த உறக்கத்துக்குப் பின்பு பரமாத்மா ஜீவனை எழுப்புகிறார் என்கிறது –

——

3-2-3-கர்ம அநு ஸ்ம்ருதி அதி கரணம்
அதே ஜீவன் எழுந்து இருக்கிறாரா வேறயா
பூர்வ பக்ஷம் –வேறே என்பர் -பரமாத்மா இடம் சேர்ந்த பின்பு திரும்ப மாட்டாரே என்பதால்
இதை நிரஸித்து ஸூத்ர காரர்
ச ஏவ கர்ம அநு ஸ்ம்ருதி சபல விதிப்யா
கர்மங்கள் இன்னும் இருப்பதால் அதே ஜீவன் திரும்புகிறார்
தத்வ ஞானாத் ப்ராக் தேநைவ போக்தவ்யம் -என்கிறார் பாஷ்யகாரர்

——–

3-2-4–முக்தி அதிகரணம்
மூர்ச்சா அவஸ்தா விசாரம்

முக்தே அர்த்த ஸம் பதி பரி ஷேஷாத் –

————

3-2-5-உபய லிங்க அதிகரணம் –இதில் -15 ஸூத்ரங்கள்
பூர்வ பக்ஷம் -அந்தர்யாமியாக இருப்பதாலேயே ப்ரஹ்மமும் -சாக்கடைக்குள் விழுந்த மணி போல் -தோஷம் அடையும் –
இத்தை நிரசித்து முதல் ஸூத்ரம்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி –
எப்பொழுதும் அபஹத பாப்மா -உபய லிங்கம் எங்கு இருந்தாலும் மாறாமல் இருப்பான் –
சாந்தோக்யம் 8 அத்யாயம் –
அபஹத பாப்மா -விஜர -வி ம்ருத்யு -விசோக -விஜி கட்ச -அபி பாச
ஸத்ய காம -சத்யா சங்கல்ப
முண்டக ஸ்வேதேஸ்வர -ஸமான வ்ருஷ -இத்யாதி –
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
நேதி நேதி
ப்ரக்ருத ஏத வத் வம் ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதிச பூய
வேதைக சமைதி கம்யன்

—-

3-2-6-அஹி குண்டல அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
இரண்டு பூர்வ பக்ஷம் -இரண்டு ஸித்தாந்தம் –
முதல் பூர்வ பக்ஷ ஸூத்ரம்
உபய வியபதேஷாத் அஹி குண்டலவத் –
இத்தை நிரசித்து
பூர்வ வத்வா -அம்ச அதிகரணம் -2 அத்யாயம் -3 பாதம் பார்த்தோம் –

ப்ரதி ஷேதச் ச –அம்ச அம்சி பாவம் போல் –

——–
3-2-7-பராதி கரணம் –ஏழு ஸூத்ரங்கள் -ஓன்று பூர்வ பக்ஷம் -ஆறு சித்தாந்தம்

பர மாத சேது உன்மான ஸம்பந்த பேத வ்யபதேசப்ய
சேது என்றால் இவன் மூலம் வேறே ஒன்றை அடைவது பூர்வ பக்ஷம்
சமன்யத்து –ஸினோதி -சேதன அசேதன -சேர்த்து
அபரிச்சேத்யன் நமக்காக நம்முள் அணுவுக்குள் அணு போல்
உபபத்தேச –

ஸ்வேதேஸ்வரம் தத யத் உத்தர தரம் -உள்ளே உயர்ந்த வஸ்து
தத அந்நிய ப்ரதிஷ்டாத்

அநேந ஸர்வ கதத்வம் அயம ஸப்ததிப்ய

——-

3-2-8-பல அதிகரணம் -நான்கு ஸூத்ரங்கள்
மூன்றாவது மட்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரம் -ஜைமினி தான் பூர்வ பக்ஷி இங்கு
முதல் ஸூத்ரம் –பலம் அத உப பத்தே -பலம் தருபவர் ப்ரஹ்மமே
ஜைமினி அபூர்வம் -பலம் கொடுக்கும் என்பர்
இறுதி ஸூத்ரம் –பூர்வந்து பாதராயண ஹேது வ்யபதேசாத்
அவனே பல ப்ரதன்
சாதனா ஸப்தகம்
விவேகம் -விமோகம் -அப்யாசம் – க்ரியா –கல்யாணம் -அவவசாதம் -அநுத்தர்ஷம் –

————-

3-3-குண உப ஸம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –

3-3-1-.–ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
வைச்வானர வித்யை -பல உபநிஷத்துக்களில் சொன்னது ஒன்றையே தானா -விசாரம்
வெவ்வேறே பூர்வ பக்ஷம்
ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் சோநாதி அவிசேஷாத் –
ஒன்றே ஆகும் தஹர அதிகரணம் -சாந்தோக்யம் தைத்ரியம் ப்ரஹதாரண்யம் -ஒன்றையே சொல்கின்றன

——–

3-3-2-.–அந்யத்வ அதிகரணம்
உத்கீத வித்யை சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம்
இரண்டும் வேறே வேறே தான்
சாந்தோக்யத்தில் முக்ய பிராணனையும் ப்ரஹதாரண்யத்தில் முழு கானத்தையும் சொல்வதால் –

———–

3-3-3- ஸர்வ அபேத அதிகரணம்
பிராண வித்யை -சாந்தோக்யம் -ப்ரஹதாரண்யம் -கௌஷதகி
மூன்றும் ஒன்றே -கௌஷதகியில் சொன்ன குணங்கள்கையும் சேர்ந்தே கொள்ள வேண்டும் –
இந்த்ரியங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொன்றாக விலகி –
பிராணன் உயர்ந்தது -இன்றியமையாதது -என்று அறிந்து கொண்ட வ்ருத்தாந்தம்
ஜ்யேஷ்டத்வம் -ஸ்ரேஷ்டத்வம் -வஸிஷ்டத்வம் -பிரதிஷ்டத்வம் -சம்பத்வம்–ஆயதனத்வம் –
அனைத்தும் உண்டு என்று அறிந்து கொண்டன –

————

3-3-4-ஆனந்த அதிகரணம்
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் -ஸத்யத்வம் ஞானத்வம் அநந்தத்வம் ஆனந்தத்வம் அமலத்வம் ஸ்ரீ யபதித்வம்–

———-

3-3-5–கார்யக்யநாதி கரணம்
முக்கிய ப்ராணனுக்கு துணியாக நீர் -ஆசமனம் செய்து பிராண வித்யை தொடங்கி முடிக்க வேண்டும் –

——

3-3-6-சமனாதி கரணம்
சாண்டில்ய வித்யை அக்னி ரஹஸ்யம் -ப்ருஹதாரண்யம் -இரண்டிலும் ஒன்றே -என்கிறது

——–

3-3-7-சம்பந்த அதிகரணம்
ஆதித்ய மண்டல மத்திய வர்த்தி உபாசனமும் கண்ணுக்குள் இருக்கும் ப்ரஹ்மம் உபாசனமும் -ஒன்றே –
பூர்வ பக்ஷம் ஸூத்ரம் -சம்பந்தத் ஏவம் அந்யத்ரபி –
ஸித்தாந்தம் ஸூத்ரம் நவ விசேஷாத் –வேறே வேறே தான் -ரூபம் வேறாக இருப்பதால் –

————–

3-3-8-சம்ப்ருதி அதிகரணம்
அனைத்தையும் தரிப்பவன்-விபு எங்கும் பரந்துள்ளான் ப்ரஹ்மம் –
இவற்றை எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் அனுசந்திக்க வேண்டும் -பூர்வ பக்ஷம்

சம்ப்ருதித்யு வ்யாப்திச்ச அத
அல்ப ஸ்தான வித்யைகளில் த்யு வியாப்த குணம் அனுசந்திக்க வேண்டாம் –

————-

3-3-9-புருஷ வித்ய அதிகரணம்
தைத்ரியம் —நியாஸ வித்யைக்கு அங்கமாகவும் சாந்தோக்யம் -நீண்ட ஆயுஸ்ஸூக்காகவும்
ஒன்றே பூர்வ பக்ஷம்
ஸித்தாந்த ஸூத்ரம்
புருஷ வித்யயம் அபி ச இதரேஷாம் அநாம்நாத் –
பலத்தில் வேறுபாடு -எனவே ஓன்று அல்ல –

—————-

3-3-10- வேத அத்யாய அதிகரணம்
ஷாந்தி பாடம் -அங்கமா -இல்லையா விசாரம் –
வேதாதி அர்த்த பேதாத் –அங்கம் அல்ல ஸித்தாந்தம்

———-

3-3-11- ஹாநி அதிகரணம்
முக்தனுக்கு -இறுதியில் -பாப புண்யங்கள் தீர்க்கும் வழி
ஹாநி என்றும் உபாயானம் -என்றும் சில இடங்களில் உண்டு
இவை விகல்பமா சமுச்சயமா விசாரம்
சமுச்சயமே ஸித்தாந்தம்
ஹாநவ் து உபாயான ஸப்த சேஷத்வத் குஷச் சந்த ஸ்துதி உபகனவத் தத் யுக்தம் -ஸூத்ரம்

——
3-3-12-சம்பிரய அதிகரணம்
கர்மங்களைமுக்த ஜீவன் உடலில் பிரிந்த உடனே போக்குகிறானா விரஜையில் நீராடிய பின்பா -விசாரம்

ஸம்பரயே தர்தவ்ய பாவாத் ததாஹி அன்யே –பிரிந்த உடனே தான் -மீதம் உள்ள கர்ம பலன் அனுபவிக்காததால் –

———-

3-3-13- அ நியம அதிகரணம்
அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தி யோக நிஷ்டருக்கும் பிரபன்னருக்கும் பொதுவானதா இல்லையா
உபகோஸல வித்யையிலும் பஞ்சாக்னி வித்யையிலும் மட்டுமே அர்ச்சிராதி மார்க்கம் சொல்லப்பட்டுள்ளதால் இந்த சங்கை –
ஸித்தாந்தம் –
அ நியம ஸர்வேஷாம் அ விரோத ஸப்த அநு மானப்யம் –அனைவருக்கும் இதே மார்க்கம் –

——–

3-3-14-அக்ஷர அத்ய அதிகரணம்
அமலத்வ குண அனுசந்தேயம் யஜ்ஜ்வல்க்யர் கார்க்கி ஸம்வாதம்
திவ்யாத்ம ஸ்வரூபம் -அஸ்தூலம் –அ அணு –அஹ்ரஸ்வம் -அதீர்க்கம் –அலோஹிதம் –அஸ்நேஹம் –அச்சாயம் –அதமஸ் –
அவாயு -அனகாசம் –அசங்கம் -அரசம் –அகந்தம் -அ ஸஷு சம் -அ ஸ்ரோத்ரம் –அவாக் -அமநஸ் -அதேஜஸம் -அபிராணன் –
அமுக்தம் -அனந்தரம் – அ பாஹ்யம் –தத் ந கிஞ்சன அஸ்னாதி -ந தத் அஸ்னாத கச்சன —

ஸூத்ரம் –அக்ஷரதியம் து அவரோத சமன்ய தத் பாவ அபாவ்யம் ஓவ்ப ஸதவத் தத் யுக்தி–

———-

3-3-15-அந்தரத்வ அதிகரணம்
ப்ருஹதாரண்யம் -உஷஸ்த யஜ்ஜ்வல்க்யர் சம்வாதம்
கோகோல யஜ்ஜ்வல்க்யர் சம்வாதம் –
இரண்டும் வேறே வேறே ப்ரஹ்ம வித்யையா என்று விசாரம்
இரண்டும் ஒன்றே ஸித்தாந்தம்

———

3-3-16-காமாதி கரணம்
தஹர வித்யை -சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் வேறே வேறா விசாரம்
சாந்தோக்யத்தில் ப்ரஹ்மத்தை ஆகாச ஸப்த மாக அஷ்ட கல்யாணகுணங்கள் கொண்டவராகவும்
ப்ரஹதாரண்யம் ப்ரஹ்மத்தை ஆகாசத்தில் கண் வளர்ந்து வஸிப்பதாகவும் உள்ளது
இரண்டும் ஒன்றே ஸித்தாந்தம்
வஸித்வமும் அஷ்ட குணங்கள் உடன் சேர்ந்தே கொள்ள வேண்டும் –

———

3-3-17-தந் நிர்த்தன அதிகரணம் —
உத்கீத வித்யா விசாரம் -பிரணவ உபாசன அங்கம் -இது கட்டாயமா இல்லையா –
பூர்வ மீமாம்ஸையில்
கோ தாநேந பசு காம பிரணயேத் –என்று கோ தானத்துக்கு ப்ரோடாசம் -கட்டாயம் இல்லை என்றும்
பரணமயீ ஜூஹூ -கட்டாயம் என்றும் இரண்டும் இருப்பதால் சங்கை
கட்டாயம் இல்லை என்பதே ஸித்தாந்தம் —

—————

3-3-18-பிரதான அதிகரணம்
அபஹத பாப்மதாதி குணங்களை மட்டும் உபாஸிக்க வேண்டுமா -இவற்றுடன் சேர்ந்த ப்ரஹ்மத்தையா -விசாரம்
சேர்ந்த ப்ரஹ்மத்தையே -ஸித்தாந்தம் —

———-

3-3-19-லிங்க புயஸ்தவத் அதிகரணம்
நாராயண அநுவாகம் -தைத்ரியம் –தஹர வித்யைக்கு அங்கமா
சித்தாந்த ஸூத்ரம்
லிங்க புயஸ்த்வத் தத் ஹி பத்லியஸ் ததாபி —
லிங்கம் -அடையாளம்
இந்த அனு வாகத்தில் அக்ஷரம் ஷாம்பு இந்திரன் பிரம்மன் இவர்களுக்கு அந்தராத்மாவாக சொல்லும்
ப்ரஹ்ம வித்யையில் நாராயணனை நேராகவே தியானிக்க வேண்டும் –

———

3-3-20-பூர்வ விகல்ப அதிகரணம்
இது ப்ராசங்கிகம் -அக்னி ரஹஸ்ய விசாரம்

—-

3-3-21-சரீர பாவ அதிகரணம்
அநு மானிக அதிகரண ஸூத்ரம் —த்ரய நாம் ஏவ ச உபந்யாச ப்ரஸ்ன ச –என்று
உபாஸ்ய –உபாஸக –உபாஸனம் மூன்றையும் சொல்லி
உபாஸகர் -அறிந்து -செய்து அனுபவிப்பவனாக உபாஸிக்க வேண்டுமா –
அஷ்ட குண ஸாம்யம் அடைந்தவனாக எண்ணி உபாஸிக்க வேண்டுமா என்ற விசாரம் –

ஸூத்ரம் –வியதிரேக தத் பாவ பவித்வத் ந து உபலப்திவத் –
என்று அஷ்ட குண ஸாம்யம் அடைந்தவனாக எண்ணி உபாஸிக்க வேண்டும் என்கிறது –

——————-

3-3-22-அங்க வபத்த அதி கரணம்
உத்கீத வித்யை பற்றியது இதுவும்

—-

3-3-23- புமஜ்ய யஸ்த்வ அதிகரணம் —
வைச்வானர வித்யா விசாரம் -வ்யஸ்த உபாசனமா ஸமஸ்த உபாசனமா –
ஸமஸ்த உபாசனமே பண்ண வேண்டும் ஸித்தாந்தம்

———

3-3-24-ஸப்தத் பேதாதி கரணம் –
ப்ரஹ்ம வித்யைகள் 32- அனைத்தும் ஒன்றா வேறே வேறயா
வேறு வேறு தான் என்பதே ஸித்தாந்தம்

3-3-25-விகல்பாதி கரணம்
அனைத்தையும் பண்ண வேண்டுமா -விசாரம்

விகல்ப அ விஸிஷ்ட பலத் வத் —
ஒன்றையே பண்ணினாள் போதும் -பலத்தில் ஸாம்யம் என்பதால் –

—-

3-3-26–யத் ஆஸ்ரய பாவ அதிகரணம்

இது கீழே -3-3-17-தந் நிர்தன நியம அதிகாரணம் போல்
உத்கீத வித்யை கட்டாயம் என்று மீண்டும் பூர்வ பக்ஷம்
அத்தை நிரசிக்கவே இந்த அதிகரணம்

———–

பஞ்ச அக்னி வித்யையில் மட்டும் -ப்ரஹ்மாத்மக ஸ்வ ஆத்ம உபாசனம்
மற்றவை ப்ரஹ்ம உபாசனம் -ஸ்வ ஆத்ம சரீரக பரமாத்மா உபாசனம்

———-

3-4- அங்க பாதம் –15-அதிகரணங்கள் இதில் –

3-4-1-புருஷார்த்த அதிகரணம் –இதில் 20 ஸூத்ரங்கள்
இந்த அதிகரணம் தான் மிக அதிகமான ஸூத்ரங்கள் கொண்டது –
கர்மத்தால் ப்ரஹ்ம வித்யை ஞானத்தாலா -புருஷார்த்தம் என்று விசாரம் –
முதல் ஸூத்ரம் –புருஷார்த்த அத சப்தாதி பாதராயண
பக்தி யோகத்தாலோ பிரபத்தியாலோ புருஷார்த்தம் ஸித்தம் என்கிறது –

ஜைமினி அடுத்த ஆறு ஸூத்ரங்களால் ப்ரஹ்ம வித்யை கர்மத்துக்கு அங்கம் தான் –
கர்மமே பிரதானம் என்கிறார்
1-அஸ்வபதி ஜனகர் போல்வார் கர்ம நிஷ்டர் ப்ரஹ்ம ஞானிகளாக இருந்தாலும் –
2-உத்கீத வித்யையில் கர்மத்துக்கு அங்கமாக ப்ரஹ்ம வித்யை –
3- சாந்தோக்யத்தில் ப்ரஹ்ம வித்யை அனுஷ்டிப்பவர் கர்ம அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்றும் உள்ளது
4-ஈசாவாஸ்ய உபநிஷத்தில் 100 வருஷம் இருந்து கர்ம அனுஷ்டானம் பண்ண வேண்டும் என்றும் உள்ளது
பாதராயணர் -இவற்றுக்கு பதில் –
ப்ரஹ்மம் நியாந்தா -ஸாஸ்த்ரம் மூலம் கர்ம அனுஷ்டான ஸாஸனம் தந்துள்ளார்
கர்மம் த்ரிவித த்யாகங்களுடன் செய்ய வேண்டும் -ப்ரஹ்ம வித்யை மோக்ஷ பலத்துக்காகவே –
ஸந்யாஸி போல்வார் கர்மங்களுக்கு -யாகாதிகளுக்கு அதிகாரி இல்லாமல் ப்ரஹ்ம வித்யையாலே பலம் பெறுகிறார்கள் –
எனவே ப்ரஹ்ம வித்யை கர்மத்துக்கு அங்கம் இல்லை –

——

3-4-2-ஸ்துதி மாத்ர அதிகரணம் –இதில் இரண்டு ஸூத்ரங்கள்
இதுவும் அடுத்ததும் ப்ராசங்கிகம் –

3-4-3-பரிப்ல வர்த்த அதிகரணம்
பரிப்ல வம் -என்று புகழ்வதை சொன்னபடி
பிரவர்தன வித்யையில் இந்திரனை புகழ்வது -ஸ்வேதகேது ஸத்வித்யையில் புகழ்வது –
அஸ்வமேத யாகத்தில் அரசரை புகழ்வது போல்வன
ப்ரஹ்ம வித்யைகளின் ஏற்றம் சொல்லவே –

—-

3-4-4-அக்னி இந்தந அதிகரணம்
இது முதல் அதிகரணத்துடன் நேரடித் தொடர்பு கொண்டது –
அக்னி கார்யம் செய்ய அதிகாரம் இல்லாத சந்யாசிகள் எவ்வாறு ப்ரஹ்ம உபாசனத்துக்கு
அதிகாரி ஆவார்கள் என்பதைக் காட்டவே இந்த அதிகரணம்
நித்ய நைமித்திக கர்மாக்களை விடாமல் த்ரிதண்டி ஸ்ரீ வைஷ்ணவ சந்யாசிகள்

——

3-4-5- ஸர்வ அபேக்ஷ அதிகரணம்
கிரஹஸ்தர்களுக்கு அக்னி கார்யம் கட்டாயமா -விசாரம்
பக்தி யோகத்துக்கு அங்கமாக கர்ம யோகமும் வேண்டுமே –
உபாஸன மார்க்கமே வழி -தத்வமஸி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷ ஹேது ஆகாதே —

——-

3-4-6- சம தமாதி அதி கரணம்
புலன் அடக்கம் மன அடக்கம்
இவை பக்தி யோகத்துக்கு வேண்டிய அங்கங்கள் என்றவாறு –

——–

3-4-7-சர்வ அன்ன அநுமதி அதிகரணம்
சாந்தோக்யம் -சத்வ அன்னம் -த்ருவனு ஸ்ம்ருதி –பக்தி யோகம் –
ஜாதி ஆஸ்ரய நிமித்த தோஷங்கள் இல்லாத அன்னம் –ஆகார நியமம் —
உஷஸ்தி பிராணன் தரிக்க உண்டு பின்பு நீர் கூட குடிக்க தவிர்த்த வ்ருத்தாந்தம் –

————-

3-4-8-விஹிதத் வாதி அதிகரணம்
நித்ய அநித்ய ஸம்யோக விரோதம்
ஸந்த்யாவந்தனாதிகள் முமுஷுகளுக்கு மட்டுமா அனைவருக்குமா -விசாரம்
ஸித்தாந்தம் -அனைவருக்குமே
விஹிதவச் ச ஆஸ்ரம கர்ம அபி -ஸூத்ரம்
இவை விநியோக ப்ருதக்தவம் கோடியிலே சேராது

3-4-9-விதுர அதிகரணம்
விதுர -மனைவி இழந்தவர் யாகாதிகளுக்கு அதிகாரிகள் இல்லை -நித்ய நைமித்தி கர்மங்களை செய்தே ஆக வேண்டும் –
இவர்கள் பக்தி யோகத்துக்கு அதிகாரிகளோ சங்கைக்கு ஆம் என்கிறார் ஸூத்ரகாரர்
அந்தர ச அபி து தத் த்ருஷ்தே :
அக்னி கார்யம் செய்ய அதிகாரம் இல்லை என்றாலும் காயத்ரி மந்த்ரம் அஷ்டாஷர மந்த்ர ஜபாதிகள் இவர்கள் மனசை ஸூத்தி பண்ணும்
அநாஸ்ரமியாக நீண்ட நாள் இருக்க வேண்டாம் என்றும் ஸூத்ரகாரர் காட்டி அருளுகிறார் –

——–

3-4-10-தத் பூதாதி கரணம்
ஆஸ்ரம ப்ரஷ்டர் -நழுவி இருப்பார் -ப்ரஹ்ம உபாசனத்துக்கு அதிகாரிகளோ என்ற விசாரம் –
பூர்வ பக்ஷம் இவர்கள் தானாதிகள் கொடுத்து பிராயச்சித்தம் செய்து ப்ரஹ்ம உபாசனம் செய்யலாம்
ஸூத்ரகாரர் -இவர்கள் அதமர்கள் -பிராயச்சித்தம் ஸாஸ்த்ரம் விதிக்க வில்லை என்கிறார் –
இவர்கள் பிரபன்னர் ஆகி ஆச்சார்யர் மூலம் ப்ரஹ்ம பிராப்தி பெறலாம்

———

3-4-11-ஸ்வாமி அதிகரணம்
ப்ராசங்கிகம் இது -உத்கீத உபாசன அதிகாரம் பற்றிய விசாரம் –
யஜமானா ஹோதா அத்வர்யு உத்காதா பிரஸ்தோதா ப்ரதிஹர்த்தா -ப்ரம்மா போன்ற ருத்விக்குகள்
உத்கீத உபாசனம் எஜமானர் செய்ய வேண்டுமா ருத்விக்குகள் செய்ய வேண்டுமா –
பாதராயணர் சிஷ்யர் ஆத்ரேயர் யஜமானாரே செய்ய வேண்டும் –
ஸ்வாமி யே ந பல ஸ்ருதே இதி ஆத்ரேய
ஒவ்டோல்மி -ருத்விக் யஜமானருக்காக பண்ணலாம் –
ஸூத்ரகாரர் இத்தை சம்மதித்து அருளுகிறார் –

——-

3-4-12-ஸஹ காரி அந்தர விதி அதிகரணம்
ப்ருஹதாரண்யம் –
பண்டிதர் மௌனமாக திவ்ய மங்கள விக்ரஹ த்யானத்துடனே ப்ரஹ்ம உபாஸனம்
மனன சீலத்தவம் ப்ரஹ்ம உபாசனத்துக்கு அங்கம் ஸஹ காரி என்றவாறு –

———-

3-4-13-அநவிஷ்கார அதிகரணம்
ப்ரஹதாரண்யம் -5 அத்யாயம்
ப்ரஹ்மவித் கர்வம் இல்லாமல் குழந்தை போல் இருக்க வேண்டும்
பூர்வ பக்ஷம் விளையாடி எல்லாம் உண்ணலாம்
தன்னை வித்வானாக காட்டிக் கொள்ளக் கூடாதே என்பதே தாத்பர்யம் –

——–

3-4-14-ஐஹிக அதிகரணம்
உபாசனம் முடிந்த பின்பே ஐஹிக பலனைப் பெறுவானா -இந்த ஜென்மத்திலேயா -மறு பிறவியிலா -விசாரம்
பூர்வ பக்ஷம் உபாசானம் முடிந்த உடனே
சித்தாந்தம் -வேறே பாப கர்ம தடங்கல் இல்லாமல் இருந்தால் தான் நடக்கும்
உத்கீத வித்யாதிகள் மூலம் பிரதிபந்தங்கள் கழிந்த பின்பே ஐஹிக பலன் கிட்டும் –

———-

3-4-15- முக்த பல அதிகரணம்
ப்ரஹ்ம வித் அபசாராதிகள் இருந்தால் முக்தி பலம் உடனே கிட்டாதே –
பாகவத அபசாரம் முக்தி பலனைக் கொடுக்காமலே போக வைக்கும்
தத் அவஸ்தா த்ருதே -தத் அவஸ்தா த்ருதே -மீண்டும் சொல்லி
அத்யாயம் நிகமனம் என்பதைக் காட்டி அருளுகிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — -இரண்டாம் அத்யாயம்–

June 7, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

இரண்டாம் அத்யாயம் முதல் பாதம் –பத்து அதிகரணங்கள்

2-1-1-ஸ்ம்ருதி அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
கபில மத நிரஸனம்

அநவகாச தோஷம் -வேதத்துக்கு புறம்பாக சொல்லும் ஸ்ம்ருதி வாக்கியங்கள் கொள்ளத் தக்கவை அல்லவே –
ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரசங்காத் இதி சேத் நான்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரசங்காத்
வேறே ஸ்ம்ருதி -மனு ஸ்ம்ருதி-பராசர ஸ்ம்ருதி -வாக்யங்களுக்கும் இவை விருத்தம்
மனு ஸ்ம்ருதி – ஆபோ நர இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவ
தா யதஸ்ய அயனம் பூர்வம் தேன நாராயண ஸ்ம்ருதி -என்று சொல்லும்

2-1-2-யோக ப்ரத்யுக்த அதிகரணம் –ஒரே ஸூத்ரம் -எர்த்தேன யோக ப்ரத்யுக்த –
ஹிரண்யகர்ப வாத நிரஸனம்
சதுர்முகனும் கர்ம வஸ்யன்-முக்குணங்களுக்குள் அகப்பட்டவன்
த்ரிவித காரணமும் அவனே

2-1-3-விலஷணத்வாதிகரணம் –முதல் இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள் -அடுத்த ஏழும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்
கார்ய பொருள்களில் -காரண குணங்கள் இல்லையே
சாணியில் புழுக்கள் உள்ளனவே
முதல் ஸூத்ரம்
ந விலக்ஷணத்வத் அஸ்ய தத்வம் ச ஸப்த –
முக்குண வசமான ஜகத் ப்ரஹ்மம் போல் இல்லையே -ஆகவே உபாதான காரணம் ப்ரஹ்மம் அல்ல –
இதற்கு சித்தாந்த பதில்
த்ருஷ்ய தேது —
காரண கார்ய பாவம் -சாணியில் புழுக்கள் சிலந்தி போல்வன பார்க்கிறோமே
பால்ய யவ்வன அவஸ்தை மாற்றங்கள் குழந்தை உயிர் உடன் இருக்கும் பொழுது தானே நடக்கும் –
சரீர மாற்றமாக இருந்தாலும் ஜீவன் இருந்தால் தானே நடக்கும்
ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருக்கவே மாற்றங்கள்
ஸங்கல்பித்து நடத்துகிறான்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -தனது சங்கல்ப ஏக தேசத்தால் ஸ்தூல சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமாக மாறுகிறது
மாற்றம் சரீரத்துக்கே தானே ஒழிய ப்ரஹ்மதுக்கு இல்லையே

2-1-4-ஸிஷ்ட அபரிக்ரஹாதிகரணம் -ஒரே ஸூத்ரம் –
வைசேஷிக நியாய புத்த ஜைன பரம அணு காரண வாதிகள் நிரஸனம்

2-1-5-போக்த்ராபதி அதிகரணம்
விலக்ஷணத்வ அதிகரணத்துடன் நேராக தொடர்பு
ஸமஸ்த சேதன அசேதனங்கள் அவன் சரீரமே
பூர்வ பக்ஷிகள் ஆத்மா கர்ம பலனால் ஸூக துக்கங்கள் அனுபவிப்பது போல் ப்ரஹ்மத்துக்கும் உண்டே
எனவே பிரக்ருதியே காரணம் என்பது மிக பொருந்தும் என்பார் –
போக்த்ரபத்தே அவி பாக சேத் ஸ்யாத் லோகவத் –ஸூத்ரம்
சரீரம் இருப்பதால் ஸூக துக்கங்கள் என்பது இல்லை -கர்மங்கள் அடியாகவே –
சிறைக்குள் கைதியும் காவலாளியும் இருப்பது போல் -அந்தர்யாமியாக இருக்கும் ப்ரஹ்மம் ஸூக துக்கம் அனுபவிக்க வேண்டாமே –

2-1-6-ஆரம்பண அதிகரணம்
கார்ய காரணங்களுக்கும் வேறுபாடு
பெயரில் வேறுபாடு -மண் -குடம்
ரூபத்தில் வேறுபாடு
பயனில் வேறுபாடு
குயவனின் வேலைப்பாட்டு நேரம்
இரண்டும் ஒன்றே என்றால் அவன் செயலால் பயனே இல்லாமல் போகுமே –
ஜகத் ப்ரஹ்மம் வேறுபாடு பார்க்க ப்ரஹ்மம் காரணம் ஆக மாட்டாதே பூர்வ பக்ஷம் –
இதுக்கு பதில் ஸூத்ரம்
தத் அந்நயத்வம் ஆரம்பண ஸப்தாபிப்ய
உத் கலர் ஸ்வேதகேது சம்வாதம் –மண் -தங்கம் -இரும்பு இவை காரணமாக பொருள்கள்
ப்ரஹ்மம் சத்தாகவே ஒன்றாகவே வேறு ஒன்றும் இல்லாமலே இருந்தது -சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -ஏகம் ஏவ -அத்விதீயம் –
பஹுஸ்யாம் பிரஜாயேய-சங்கல்பித்து
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர சரீரமாக படைத்து -அநு பிரவேசித்து –
அநந்ய -பிரிக்க முடியாமல் -சரீரமும் ஜீவனும் போல் –
சில உபநிஷத் அஸத் -அவ்யக்ருத -என்று சொல்லும் பொழுது ஸூஷ்ம விசிஷ்டா ப்ரஹ்மத்தை சொன்னபடி –

2-1-7- இதர வியபதேஸ அதிகரணம்
தத் த்வம் அஸி–அத்வைதி வாத நிரஸனம்
முதல் ஸூத்ரம் பூர்வ பஷ ஸூத்ரம்
இதர வியபதேஸத் ஹித அகரணாதி தோஷ ப்ரஸக்தி
இதுக்கு பதில் சித்தாந்த ஸூத்ரம்
அதிகம்து பேத நிர் தேஸாத்
ப்ரஹ்மம் அதி விலக்ஷணம் -ஜீவ ரூபம் எடுத்து மாயைக்குள் சிக்க வேண்டாமே –

2-1-8- உப ஸம்ஹார அதிகரணம்
நிரீஸ்வர வாதி மீண்டும் -ஒன்றுமே இல்லாத போது -சஹகாரி இல்லாமல் ப்ரஹ்மம் எப்படி ஸ்ருஷ்டிக்க முடியும் –
இதற்கு பதில் ஸூத்ரம்
உப ஸம்ஹார தர்ஷணாத் நைதி சேத் ந ஷீராவதி —
பால் தயிராக ஸஹகாரி ஒன்றும் இல்லையே –
விசுவாமித்திரர் திரிசங்கு சுவர்க்கம் ஸஹகாரி ஒன்றும் இல்லாமல் ஸ்ருஷ்டித்தாரே

2-1-9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணம்
மண் குடமானால் மண் இல்லையே
ப்ரஹ்மமும் ஜகத்துக்கும் சேர்ந்து எவ்வாறு இருக்க முடியும்
க்ருத்ஸன ப்ரஸக்தி நிரவயவத்ய ஸப்த கோபாவ -பூர்வ பக்ஷ ஸூத்ரம்
இதற்கு பதில் ஸித்தாந்த ஸூத்ரம்
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத் வாத்
அவயவம் இல்லாதவன் தான் ப்ரஹ்மம் -ஆனால் சர்வ சக்தன் -ஸங்கல்ப ஏக லவ தேசத்தாலே செய்ய வல்லவன்
லோக த்ருஷ்டாந்தங்கள் இவனுக்கு ஒவ்வாது –

2-1-10-ப்ரயோஜனத்வ அதி கரணம்
அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்து வைத்தும் ஸ்ருஷ்டிக்க ஹேது பிரயோஜனம் என்ன பூர்வ பாஷா இறுதி வாதம்
தனக்கு பிரயோஜனம் இல்லை -ஜகத்தில் துன்பப்பட பிறந்து அவர்களுக்கும் பிரயோஜனம் இல்லை -என்பர்
ந ப்ரயோஜனத்வத்–பூர்வ பக்ஷ ஸூத்ரம்
இதுக்குப் பதில் ஸித்தாந்த ஸூத்ரம்
லோக வத்து லீலா கைவல்யம் –
ஆனால் பக்ஷ பாத குற்றமும் கருணை இல்லாக் குற்றமும் வருமே என்னில்
கர்மம் அடிப்படியில் ஸ்ருஷ்டிப்பதால் இவ்வித குற்றங்கள் வராதே
லயம் அடைந்த பின் ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது – ஜீவர்களோ கர்மங்களோ இல்லையே என்னில்
ஜீவர்கள் நித்யம் -கர்மங்களும் அநாதி -ஆதி இல்லாதவை –

————

2-2-தர்க்க பாதம்
நிரீஸ்வர சாங்க்யர் -வைசேஷிகர் -நியாயம் -நான்கு வித புத்தர் -ஜைனர் -பாசுபத மதங்கள் நிரஸனம்
இதில் எட்டு அதிகரணங்கள்

2-2-1-ரசன அநு பபத்தி அதிகரணம் –ஒன்பது ஸூத்ரங்கள் –
நிரீஸ்வர சாங்க்ய மத நிரஸனம்-
ஈஸ்வர கிருஷ்ணர் சாங்க்ய காரிகை எழுதி உள்ளார்

முதல் ஸூத்ரம் –ரசன அநுப பத்தேச்ச நநு மானம் ப்ரவ்ருத்தேச்ச —
அவன் அந்தர்யாமியாக இல்லாமல் பிரகிருதி தானே காரணம் ஆக மாட்டாதே –

இதுக்கு பூர்வ பக்ஷம் -பால் தானாகவே தயிர் ஆவதை பார்க்கிறோம்
தென்னை மரத்துக்கு நீர் பாய்ச்ச இளநீர் கிடக்கிறதே
மா மரத்துக்கு நீர் பாய்ச்ச மாம்பழம் கிடக்கிறதே
இவற்றுக்கும் அந்தராத்மாவாக ப்ரஹ்மம் இருப்பதால் தான் இவ்வாறு நடக்கின்றன என்பதே பதில்

மூன்றாவது ஸூத்ரத்தில் ப்ரஹ்மம் அந்தர்யாத்மாவாக இருப்பதால் தான்
ஸ்ருஷ்டி பிரளயம் அந்த அந்த காலங்களில் சரியாக நடக்கின்றன –

பூர்வ பக்ஷி -பசு புல்லை உண்டு தானே பால் தருகிறதே
இதுக்கு பதில் எருது புல்லை உண்டு பால் தரவில்லையே –
இதனாலும் ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்து நியமிக்கிறார்

2-2-2-மஹத் தீர்க்க வத்வ அதிகரணம் –ஏழு ஸூத்ரங்கள் –
கணாதர் -பரம அணு வாதி -நிரஸனம்
முதல் ஸூத்ரம் -பரஞ்சோதிஸ் வித்யை -சாந்தோக்யம் -3-16-
மஹத் தீர்க்க வத்வ ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யம்
த்வி அணுவே ஹ்ரஸ்வம் –நிர் அவயவமாய் இருக்கும் –த்ரி அணு பரிமண்டல -அவயவங்கள் உடன் கூடி இருக்கும் –
இதுவே பரிணாமம் என்பர்
நூல் துணையாகும் பொழுது உண்டை பாவு -அநவஸ்தா தோஷம் வருமே –

வைசேஷிகர் அணுக்கள் பரிமாணம் அதிருஷ்ட கர்மம் அடியாக என்பர் –
கர்மங்களும் அத்ருஷ்டமும் நித்யம் என்பதால் எப்பொழுதும் ஸ்ருஷ்டியே நடந்து கொண்டு இருக்க வேண்டும் -என்கிற தோஷம் வருமே –

மூன்றாம் ஸூத்ரம் -வைசேஷிகர் -ஸமவாய சம்பந்தம் -காரணமாக பரிணாமங்கள்
இது குணம் குணி -அப்ருதக் ஸித்த சம்பந்தம் போல் அல்ல –
இதிலும் ஒரு சமவாயத்துக்கு காரணம் வேறே ஒரு சமவாயம் என்று சொல்லும் தோஷம் வரும் –

இதுக்குப் பதிலாக சமவாயம் சம்பந்தம் நித்யம் என்பர் –
அப்படியானால் குடத்துக்கும் பூமிக்கும் உள்ள சமவாய சம்பந்தம் நித்தியமாக இருக்க வேண்டும் –
பரிணாமம் நடக்காதே –

அடுத்து ஐந்தாம் ஸூத்ரம் -பானைக்கு நிறம் அணுவில் இருந்தே வரும் என்பர் –
அணு நித்யம் மாறாது என்று முன் சொன்னதுக்கு விருத்தமாக சொல்வர் –

கணாதர் நிறம் அணுவில் இல்லை என்று கொள்வர்
காரணத்தில் இல்லாத நிறம் கார்யமான குடத்தில் எவ்வாறு என்பதுக்கு அவர்கள் இடம் பதில் இல்லை

2-2-3-ஸமுதய அதிகரணம்
2-2-4-உப லப்தி அதிகரணம் –இதில் மூன்று ஸூத்ரங்கள் –
2-2-5-ஸர்வதா அநு பபத்தி அதிகரணம்
மூன்றும் நான்கு வித புத்த மத நிரஸனம்

இவர்களும் பரம அணு காரண வாதிகளே –
அனைத்தும் க்ஷணிகம் என்றால் அவை எவ்வாறு சேர்ந்து பரிமாணம் அடையும்
ஆகாசம் என்ற தத்துவமே இல்லை என்பர் இவர்கள் –
இல்லாத ஒன்றால் இருக்கும் ஜகத் எவ்வாறு உண்டாகும் –
நிரன்வய விநாசம் -அனைத்துமே க்ஷணிகம் என்றால் ஒன்றையுமே செய்ய வேண்டாமே –

நான்காம் அதிகரணம் -முதல் ஸூத்ரம் -ந பாவ உபலப்தே
ஸஹோ பாலம்ப -பொருள் இருப்பதும் இருப்பதை உணர்வதும் ஒரே சமயத்தில் –
இரண்டும் ஓன்று அல்லவே -நான் அறிகிறேன் வேறே பொருள் உள்ளது வேறு –

———

2-2-6-ஏகஸ்மின் அஸம்பவதி கரணம் -நான்கு ஸூத்ரங்கள்
ஜைன மத நிரஸனம் இதில் -இவர்களும் பரம அணு காரண வாதிகள் –
ஸப்த பங்க வாதிகள் –
ஸூத்ரகாரர் -நை கஸ்மின் அசம்பவத் –இருளும் ஸூர்யனும் சேர்ந்து இருக்க முடியாதே –
ஜீவாத்மாவின் அளவும் சரீரத்து அளவு மாறும் என்பர் இவர்கள் -இதுவும் ஒவ்வாதே

—–

2-2-7-பசுபதி அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
நிமித்த காரணம் சிவன் என்றும் உபாதான காரணம் பிரகிருதி என்பர்
பத்யு அஸமஞ்ச ஸ்யாத் -என்கிற ஸூத்ரத்தால் இது நிரஸனம் -வேதங்களுக்கு புறம்பாய் இருப்பதால் தள்ளத் தக்கது –
ஸாஸ்த்ர த்ருஷ்யது உபதேச வாமதேவ தத் –இந்திரா பிராண அதிகரண ஸூத்ரம் முன்பே பார்த்தோம் –
வேதம் வேறே தேவதா உபாசனம் சொல்லும் பொழுது அவற்றுக்குள் அந்தர்யாத்மாவாக இருக்கும் ப்ரஹ்மத்தையே சொல்லும் –

த்வாபர யுக ஸூத்ர காரர் எவ்வாறு கலியுக புத்த ஜைன மத நிரஸனம் செய்ய முடியும் கேள்விக்கு
சதுர்யுக நியாயம் என்பதாலும்
சித்தாந்தங்களும் அநாதி என்பதாலும் சமாதானம் –

——–

2-2-8-உத்பதி அஸம்பவ அதிகாரணம் —
பாஞ்சராத்ர ஸாஸ்த்ர நிரசன வாதிகள் நிரஸனம்
நாராயணனனே -அநந்தன் -கருடர் -விஷ்வக்சேனர் -ப்ரம்மா இந்திரன் -ஐவருக்கும் ஐந்து இரவில் உபதேசம்
அபி கமனம் -உபதானம் இஜ்யா ஸூவத்யாயம் யோகம் ஐந்தையும் செல்வதாலும் பாஞ்சராத்ரம்
108 ஸம்ஹிதைகள் -நான்கு பகுதிகள்
ஆகம ஸித்தாந்தம் -மந்த்ர ஸித்தாந்தம் –தந்த்ர ஸித்தாந்தம் -தந்த்ராந்த்ர ஸித்தாந்தம்

சங்கர்ஷண நாம ஜீவோ ஜாயதே -போன்ற வாக்கியம் வேதத்துக்கு புறம்பாக ஜீவர் பிறக்கிறார் என்பதால்
சிலர் இத்தை பிரமாணம் அல்ல என்பர்

முதல் இரண்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள்
அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்

முதல் ஸூத்ரம்
உத்பத்தி அசம்பாவத்
இதுக்கு பதில் ஸூத்ரம்
விஞ்ஞானாதி பவே வாதத ப்ரதிஷேத
சங்கர்ஷணன் -வ்யூஹ -ஜீவர் பிரதிநிதி -ஸம்ஹார கர்த்தா
ப்ரத்யும்னன் -இந்திரியங்கள் பிரதிநிதி -ஸ்ருஷ்டி லர்த்தா
அநிருத்தன்–ஸ்திதி -ரக்ஷணம்

——–

2-3-வ்யுத் பாதம் –இதில் ஏழு அதிகரணங்கள் –

1-வேதங்களில் சில இடங்களில் ஆகாசம் நித்யம் ஸ்ருஷ்ட்டிக்கப் படாதது என்றும் சொல்லும்
2- சில இடங்களில் ஜீவர்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுகிறார்கள் என்றும் சொல்லும்
3-ஜீவர்களின் ஞானம் -அளவு பற்றியும் விசாரம்
4-ஜீவர்களை கர்த்தா என்றும் கர்த்தா அல்ல என்றும் சொல்லும்
5- ஜீவர்கள் கர்த்தா என்றால் ஸ்வதந்த்ரர்களா பரதந்த்ரர்களா
6- ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம் ஸ்பஷ்டமாக வேதங்களில் சில இடங்களிலும் அஸ்பஷ்டமாக சில இடங்களிலும் உண்டே
7-இந்திரியங்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுகின்றன என்றும் இல்லை என்றும் சுருதியில் உண்டே
8-முக்ய பிராணன் ஸ்ருஷ்டிக்க பட்டது என்றும் இல்லை என்றும் சொல்லும்
9-இந்திரியங்களின் அளவு பற்றியும் வேறுபட்ட சுருதிகள் உண்டே
10-நாம ரூப வியாகரணம் நான்முகன் செய்வதாகவும் நாராயணன் சேருவதாகவும் சுருதிகள் உண்டு

இவற்றை வ்யுத் பாதமும் அடுத்த இந்திரிய பாதமும் -விளக்கும்

—–

2-3-1- வ்யுத் அதிகரணம்
வ்யுத் -ஆகாசம் -இது நித்யமா ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டதா
அந்தரிக்ஷம் ஆகாசம் நித்யமே என்பர் பூர்வ பக்ஷி
சாந்தோக்யத்தில் ஸத் வித்யையில் சத்தான ப்ரஹ்மம் சங்கல்பித்து அக்னி நீர் பிருத்வி இவற்றை
ஸ்ருஷ்டித்தது பற்றி சொல்லி ஆகாசம் பற்றி சொல்லவில்லை
இவற்றை நிரஸித்து ஸூத்ரகாரர் ஆகாசமும் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டதே
தைத்ரியம் முண்டக உபநிஷத் ஆகாசம் -வாயு -முக்கிய பிராணன் ஸ்ருஷ்டிக்கப்பட்டதை ஸ்பஷ்டமாகவே காட்டும்
ஸத் வித்யையில் ப்ரஹ்மம் ஒன்றே இருந்து அனைத்தையும் ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்தது என்ற போதே இவையும் அவற்றுள் அடங்கும் –

——-

2-3-2- தேஜோ அதிகரணம் –எட்டு ஸூத்ரங்கள் -நான்கு பூர்வ பக்ஷம் -நான்கு சித்தாந்தம் –
ஸ்ருஷ்ட்டி க்ரமம் -தன்மாத்ரை இவற்றைச் சொல்லி –இவற்றுக்கும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் இருப்பதை
நேரடியாக ஸ்பஷ்டமாக சொல்லாததால் பூர்வ பக்ஷம்
பால் தானாகவே தயிர் ஆவது போல் இவையும் என்பர் –
அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருந்து சங்கல்ப ஏக தேசத்தாலே செய்விக்கிறான் என்று காட்டி அருளுகிறார் –
அபர்யவசான வ்ருத்தி –அனைத்து சொல்லும் ப்ரஹ்மம் வரை செல்லுமே –

———

2-3-3-ஆத்ம அதிகரணம்
தைத்ரியம் யஜுர் வேத சம்ஹிதையில் -ஆத்மாவும் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதாக சொல்லப்பட்டுள்ளது
ஆகவே நித்யம் அல்ல பூர்வ பக்ஷம் –
தத்வமஸி –அத்வைதிகளும் மாயை -ப்ரஹ்மம் ஒன்றே ஸத் -போன்ற தப்பான அர்த்தங்கள் –
இத்தை நிரசிக்க சித்தாந்த ஸூத்ரம்
ந ஆத்ம ஸ்ருதே நித்யவச் ஸதப்யா –ஆத்மா நித்யமே -ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டது அல்ல –
கட உபநிஷத் ஆத்மா நித்யம் என்றும் பல என்றும் ஸ்பஷ்டமாகக் காட்டும்
அப்படி என்றால் ஏக விஞ்ஞான ஸர்வ விஞ்ஞானம் எவ்வாறு பொருந்தும் –
ஸ்வரூப அந்யதா பாவம் -அசேதன அவஸ்தா பேதங்கள் -மண் -குடம் -மடக்கு போல் –
ஸ்வபாவ அந்யதா பாவம் -தர்ம பூத ஞான சுருக்கம் விரிவு –
கர்மம் அடியாகவே இந்த சுருக்கமும் விரிவும்

——-

2-3-4-ஞானாதி கரணம் –இதில் 14-ஸூத்ரங்கள்
இது முதல் நான்கு அதிகரணங்கள் ஜீவர்கள் பற்றியும் -அளவு -தர்ம பூத ஞானம் –
ப்ரஹ்மத்துடன் சம்பந்தம் போன்ற விஷய விசாரம் –

இந்த அதிகரணத்தில் -ஜீவன் ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -தர்மி ஞானம் –
வேறே ஒன்றின் உதவி இல்லாமல் தன்னையே காட்டும் –
முதல் ஸூத்ரம் ஞாதா ஏவ –
ஞான மயமாகவும் ஞான குணகனாகவும் ஜீவன் –
தர்மி ஞானமும் தர்ம பூத ஞானமும் உண்டே –
அடுத்த ஸூத்ரங்களின் மூலம்
1- ஆத்மா அணு
2-ஆத்மாவுக்கு இறப்பும் பிறப்பும் தேக நாசமும் தேக சம்பந்தமும்
3-சந்தனம் உடலில் ஓர் இடத்தில் பூசினாலும் எங்கும் பரவுவது போலவும் விளக்கின் பிரபை எங்கும் பரவி இருப்பது போலவும்
தர்ம பூத ஞானத்தால் உடலில் எங்கு வலித்தாலும் ஆத்மா உணருகிறது –

————-

2-3-5-கர்த்ரு அதிகரணம்
இதில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் உண்டு என்பதைக் காட்டும் –
கட உபநிஷத் கீதா வாக்கியம் -கொல்லப்படவும் இல்லை கொல்லவும் இல்லை —
முக்குணங்களே செய்விக்கின்றன போன்றவை நித்யத்வத்தைக் காட்டவே ஒழிய
கர்த்ருத்வம் இல்லை என்பதைக் காட்டவில்லை –

இதில் முதல் ஸூத்ரம்
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வ –என்று
ஜீவாத்மாவுக்கு கர்த்ருத்வம் போக்த்ருத்வம் இரண்டுமே உண்டு –
சுவர்க்கம் அடைய ஜ்யோதிஷ்டோம ஹோமம் செய்ய வேண்டும்
மோக்ஷம் பெற பக்தி -சரணாகதி செய்ய வேண்டும்
மேலே ஆறு ஸூத்ரங்களால் கர்த்ருத்வம் உண்டு என்பதைக் காட்டும்
தைத்ர்யம் விஞ்ஞானம் யாகம் செய்கிறது என்பதை புத்தி என்ற அர்த்தம் கொள்ளாமல்
ஆத்மாவையே சொல்லுவதாகக் கொள்ள வேண்டும் -விஞ்ஞானத்தால் -மூன்றாம் வேற்றுமை உருபு –

—————-

2-3-6-பராயத் அதிகரணம்
ப்ரஹ்மமே செய்விக்கிறான் -நியாந்தா -என்கிறது –
விதி நிஷேத இரண்டும் ஸாஸ்திரங்களில் உண்டே –
முதல் ஸூத்ரம் –பராத்து தத் ஸ்ருதே
கர்மம் அடியாக உசித சரீர சம்பந்தம் –
உடலும் இந்திரியங்களும் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு சொத்து என்றால் இருவர் சம்பந்தமும் வேண்டுமே செயல்பாட்டுக்கு –
விதி நிஷேத வாக்கியங்களும் ப்ரஹ்மமே நியாந்தா என்பதற்கும் விருத்தம் இல்லையே –

——-

2-3-7-அம்ச அதிகரணம் –11-ஸூத்ரங்கள் இதில் –
ப்ருதக் சித்தம் -ஜீவ ப்ரஹ்ம சம்பத்தம் விளக்கும் –
இரண்டும் வெவ்வேறா ஓன்று மித்யையா ப்ரஹ்மமே ஜீவனா போன்ற சங்கைகளை நீக்கி –
ப்ரஹ்மம் சர்வஞ்ஞன் சர்வசக்தன் என்றும் ஜீவன் அஞ்ஞன் அசக்தன் என்பதால் வேறு வேறே
இதில் முதல் ஸூத்ரம்
அம்ஸோநந விபதேசாத் அந்யத ச அபி தசகித வதித்வம் அதீயதே ஏக —
ஜீவன் அம்சமே -ப்ரஹ்மம் அம்சி -அம்ச அம்சி பாவம் –சரீர சரீரீ பாவம் –
ஜீவர்களுக்குள் வேறுபாடு -கர்மத்தால் சமையல் உள்ளில் அக்னியும் இடுகாட்டில் அக்னியும் ஒன்றாக
இருந்தாலும் இருக்கும் இடத்தால் வேறுபாடு போல் சரீரம் வாசியால் ஜீவர்களுக்குள் வாசி –
அத்வைத பாஸ்கர த்வைத மத நிரசனங்கள் இதில் –

————

2-4-இந்த்ரிய பாதம்

2-4-1-பிராண உத்பத்தி அதிகரணம்
முதல் ஸூத்ரம் –தத பிராணா
இங்கு பிராண -என்று இந்திரியங்களைச் சொன்னவாறு –
பிராண சப்தத்தால் ப்ரஹ்மத்தையே சொல்லும் -ஸத் மட்டுமே இருந்தது –

2-4-2- ஸப்த கதி அதிகரணம்

தைத்ரியம் ஜீவன் வேறே சரீரத்துக்கு ஏழு இந்திரியங்களை கூட்டிச் செல்கிறான் என்பதால்
இந்திரியங்கள் 7 தான் 11 அல்ல பூர்வபக்ஷம்
இவை மனஸ் புத்தி கண் காத்து மூக்கு நாக்கு தோல்
இந்த பூர்வ பக்ஷமே முதல் ஸூத்ரம்
ஸப்த கதே விசேஷிதத் வச்ச
இதுக்கு பதில் ஸித்தாந்த ஸூத்ரம் அடுத்து
ஹஸ்த தயஸ்து ஸ்திதே அதோ நைவம்
கர்ம ஞான உள் இந்திரியங்கள் -11- புத்தி இந்திரியம் அல்ல -மனதின் வேறே அவஸ்தை தான் –

—–

2-4-3-பிராண அணுத்வ அதிகரணம்
இதில் இந்திரியங்களின் அளவு சொல்கிறது –
ப்ரஹதாரண்யம் இந்திரியங்கள் அனைத்தும் சமம் விபு
அணு தான் –
ஆனால் தோல் அணுவா என்ன
முக்கிய பிராணன் பொழுது 11 இந்திரியங்களும் கூட செல்லும் -செல்வதை அறியாமல் இருப்பதால் அணுவே –

இந்த அதிகரணத்திலே முக்ய பிராணனும் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதே என்பதை
ஸ்ரஷ்டஷ் ச
முக்ய பிராணனும் ஸ்ரஷ்ட பிராணன் என்றும் சொல்லப்படும் –

———-

2-4-4-வாயு க்ரிய அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
இந்த முக்ய பிராணன் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவே தானா -அல்லது அதன் ஸஞ்சாரமா —
இல்லை வேறே விசேஷ வாயுவா –
முதல் இரண்டும் அல்ல -மூன்றாவதே என்று முதல் ஸூத்ரத்தில் –நவயு க்ரியே ப்ருதக் உபதேசாத் —
முண்டகம் சொல்லும் -நாராயணன் இடம் இருந்து முக்ய பிராணன் மனஸ் பத்து இந்திரியங்கள் பஞ்ச பூதங்கள் –
என்று தனியாக அருளிச் செய்வதால் -கண் போல் இதுவும் ஜீவாத்மாவுக்கு உப கரணம்
சாந்தோக்யம் கதை -யார் பெரியவர் என்று -அனைத்தும் ஒவ்வொன்றாக விலகி முக்ய பிராணனே
உயர்ந்தது இன்றியமையாதது என்று உணர்ந்தனவே –
இதுவே ஐந்தாக -பிராண அபான சமான உதான விதான -என்று பிரிந்து கார்யம் செய்கிறது –

—————

2-4-5-ஸ்ரேஷ்ட அணுத்வாதி கரணம்
இந்த முக்ய பிராணன் -அணு அளவு என்கிறது –
சில உபநிஷத் வாக்கியம் இது விபு -அநந்தம் -அனைத்தும் இதுக்குள் என்றும்
இது அனைத்துக்குள்ளும் என்பன -போல் சொல்லுகிறதே என்னில்
அணுச் ச
சரீர வியோகத்தில் பிரிந்து போவதால் விபுவாக இருக்க முடியாதே –

———

2-4-6-ஜ்யோதிராதி அதிகரணம்

அபி மாநி வியபதேஸஸ் து விசேஷ அணு கதிப்யம் -2-1-பாத ஸூத்ரம் –என்று அனைத்துக்கும் அவனே நியாந்தா
அபிமானி தேவதா விசேஷம் -அதிஷ்டான தேவதா விசேஷம் –
வாக்குக்கு அக்னி என்றும் -கண்ணுக்கு ஸூர்யன் என்றும் -முக்ய ப்ராணனுக்கு வாயு தேவதா –
அனைத்து இந்திரியங்களுக்கும் ஜீவாத்மா -இவற்றை அனைத்தும் நியமிப்பவன் ப்ரஹ்மமே என்று
ஜ்யோதிராதி அதிஷ்டானம் து ததமானாத் பிராணவத ஸப்தாத் -அவன் சங்கல்பம் அடியாகவே என்கிறார் –
இங்கு பிராணவத என்று ஜீவனையும்
ததமானாத் என்று ப்ரஹ்மத்தின் சங்கல்பத்தையும் சொல்கிறது –
சப்தாத் -என்றது உபநிஷத் சொல்வதால் என்றபடி –
அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம் மூன்றாம் அத்தியாயத்தில் –யஜ்ஜ்வல்க்யர் உத்கலருக்கு உபதேசம்
யஸ்ய ஆத்மா சரீரம் இத்யாதி –21- தடவை -ப்ரஹ்மமே நியாந்தா என்கிறது –

——–

2-4-7-இந்திரியாதி கரணம்
முக்ய பிராணன் இந்த்ரியமா வேறா –
த இந்திரியாணி தத் வியபதேசத் அந்யத்ர ஸ்ரேஷ்டா –என்கிறது –
இரண்டாவது ஸூத்ரம் –பேத ஸ்ருதே வை லக்ஷண்யச் ச —
எனவே வேறே தான் –

——-

2-4-8-ஸம்க்ண மூர்த்தி க்லிப்தி அதிகரணம்
ஸம்க்ண –என்று பெயர் –மூர்த்தி என்று ரூபம் –
நாம ரூபங்கள் வஸ்து வ்யாவ்ருத்தியைக் காட்டும் –
இதில் முதல் ஸூத்ரம்
ஸம்க்ண மூர்த்தி க்லிப்திஸ் து த்ரிவித் குர்வத உபதேசாத் –
த்ரிவிக் கரணம் பஞ்சீ கரணத்துக்கு உப லக்ஷணம்
நாம ரூப வியாகரணம் செய்பவன் ப்ரஹ்மமே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—