Archive for the ‘ஸ்ரீ ராமனின் அருள் அமுதம்’ Category

ஸ்ரீ இராமாயண சுருக்கம் / ஸ்ரீ திருவடியே மஹாத்மா –நம்மை அளித்து காக்கும் ஸ்ரீ ஆச்சார்யன் —

August 10, 2021

இந்தச் சுருக்கமான ஸ்ரீ ராமாயண வடிவத்தை (61 வரிகள்) மந்திரம் போல் படித்தால்
முழுமையான ஸ்ரீ ராமாயண காவியத்தைப் படித்த பலன் உண்டாகும் –
‘தபோவனம்’ திருத்தலத்தில் இந்தச் சுருக்கமான ஸ்ரீ ராமாயண வடிவம் மந்திரமாகத் தினமும் பாராயணம் செய்யப்படுகிறது.
இந்தச் சுருக்கமான ஸ்ரீ ராமாயண காவியத்தைத் தினமும் படித்தால் ஸ்ரீஇராமபிரானின் அருளும்
ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகளின் அருளும் ஒருங்கே கிடைக்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

1. க்ரெளஞ்ச பட்சி மோட்சம்

2. வால்மீகி பிரவேசம்

3. நாரதர் விஜயம்

4. ஸ்ரீசீதா காவ்யம்

5.ஸ்ரீராம கதா ஆரம்பம்

6. லவகுச கீர்த்தனம்

7. தசரத புத்ர சோகம்

8. குலகுரு வசிஷ்டர் அனுக்கிரஹம்

9. அஸ்வமேத யாகம்

10. ஸ்ரீராம லெஷ்மண சத்ருக்ண ஜனனம்

11.விஸ்வாமித்ர விஜயம்

12.அகல்யா சாபவிமோசனம்

13.வேள்வி காத்தல்

14. தாடகை மரணம்

15. மிதுலாபுரி விஜயம்

16. சீதா சுயம்வரம்

17. சிவதனுசு காவ்யம்

18. ஸ்ரீராமவீரம்

19. ஸ்ரீசீதாராம கல்யாணம்

20. பரசுராம விஜயம்

21. விஷ்ணு தனுசு ப்ரயோகம்

22. அயோத்தி விஜயம்

23. ஸ்ரீராமபட்டாபிஷேகம் ஆரம்பம்

24. கைகேயி வரம்

25. சீதா ராம வனவாசம்

26. குகன் பரிச்சியம்

27. சூர்ப்பனகை வதம்

28. மாரீசன் மரணம்

29. சித்ர கூட விஜயம்

30. இராவண விஜயம்

31.சீதா தேவியைத் தேடும் படலம்

32. ஜடாயு மோட்சம்

33. கந்தமா பர்வத விஜயம்

34. மாருதி விஜயம்

35. சுக்ரீவனுக்கு அபயம்

36. மராமரம் துளைத்தல்

37. வாலி மரணம்

38. சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம்

39. சேது பயணம்

40. தர்பசயனம்

41. சமுத்ர ராஜன் சரணாகதி

42. சேதுபாலம்

43. மாருதி இலங்கை பயணம்

44. விபீஷணன் சந்திப்பு

45. சீதா தரிசனம்

46. கணையாழி காவ்யம்

47. லங்கா தகனம்

48. விபீஷண பட்டாபிஷேகம்

49. சேதுபால பயணம்

50. இந்திரஜித் லெஷ்மண யுத்தம்

51. இந்திரஜித் மரணம்

52. ஸ்ரீராம ராவண யுத்தம்

53. சீதா அக்னி பிரவேசம்

54. புஷ்பக விமானம்

55. பரத்வாஜ ஆஸ்ரம விஜயம்

56. பரத மாருதி ஆலிங்கனம்

57. சீதாராம அயோத்தி விஜயம்

58. குலகுரு வசிஷ்டர் ஸப்தரிஷிகள்

59. பல முனிவர்கள் ஆசியுடன்

60. குலமாதர்கள் ஆசியுடன்

61. சீதாராம பட்டாபிஷேகம்

—————

ஸ்ரீ திருவடியே மஹாத்மா -நம்மை அளித்து காக்கும் ஸ்ரீ ஆச்சார்யன் —

ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்
மஹாத்மா அனுமான்

அஞ்சிலே ஓன்று பெற்று பஞ்ச சம்ஸ்காரம் -திருமந்திரத்தில் பிறந்து
அஞ்சிலே ஒன்றைத் தாவி அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
அஞ்சிலே ஓன்று ஆறாக -ஸித்த உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்
ஆர் உயிருக்குக்கா
அஞ்சிலே -பஞ்ச பிரகாரம் விண்ணின் மேல் இருப்பாய் –அர்ச்சாவதார -ஒன்றை -பக்தி ஏற்படுத்து
அயலார் ஊரான சம்சாரம்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் -பரம புருஷார்த்தம் -மற்ற நான்கையும் விட்டு
நம்மை அளித்து காக்கும் ஆச்சார்யன்
ஐம் பூதங்கள்
பஞ்ச சம்ஸ்காரம்
தீயில் பொலியும் வெண் சுடர் ஆழி
வானம் -திருமண
மந்த்ரம் -காற்று
தாஸ்ய -நிலத்தில் விழுந்து சேவித்து
திருவாராதனம் -தீர்த்தம்
இப்படி ஐந்துமே வருமே இதற்குள்

———–

ஸ்ரீ ராமர் போற்றிய மஹாத்மா!

கார்யே கர்மணி நிர்திஷ்டே யோ பஹூன் யபி ஸாதயேத் I
பூர்வகார்யாவிரோதேன ஸ கார்யம் கர்து மர்ஹதி II

கார்யே – செய்து முடிக்க வேண்டிய
கர்மணி – ஒரு காரியத்தில்
நிர்திஷ்டே ஏவப்பட்டபோது
ய: – எவனொருவன்
பூர்வகார்யாவிரோதேன – முதல் காரியத்திற்கு ஒரு கேடுமின்றி
பஹூனி அபி – அனேகங்களையும்
ஸாதயேத் – சாதிக்கின்றானோ
ஸ – அவன்
கார்யம் – காரியத்தை
கர்தும் – செய்து முடிக்க
அர்ஹதி – திறமை உடையவனாகிறான்

——

அனுமனை ராமர் போற்றிக் கூறும் இடம் ஸ்ரீ ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
முதல் ஸர்க்கத்தில் 7,8,9 ஆகிய மூன்று ஸ்லோகங்களில் ஸ்ரீ ராமர் கூறுவதைப் பார்ப்போம்:

யோ ஹி ப்ருத்யோ நியுக்த: ஸன்பர்த்ரா கர்மணி துஷ்கரே I
குர்யாத் த்தனுராகேன தமாஹு: புருஷோத்தமம் II
(ப்ருத்ய: – வேலைக்காரன்; பர்த்ரா – தலைவன்/ எஜமானன்)

எந்த ஒரு வேலைக்காரன் தலைவனால் கஷ்டமான ஒரு காரியத்தில் ஏவப்பட்டு அதைக் குறையின்றி செய்வதோடு
அநுகூலமான வேறு பல காரியங்களையும் செய்து முடிக்கிறானோ அவனை
உத்தம வேலைக்காரனாகச் சொல்வர்.

—-

நியுக்தோ ய: பரம் கார்யம் ந குர்யான்ந்ருபதே: ப்ரியம் I
ப்ருக்தோ யுக்த: சமர்த்தஸ்ச தமாஹுர்மத்யமம் நரம் II

(யுக்த – அனுபவசாலி; சமர்த்த- சாமர்த்தியசாலி;ப்ரியம் –நன்மை விளைவிக்கத் தக்கது)

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால் ஒரு காரியத்தில் ஏவப்பட்டு
தலைவனுக்கு மேலான மேலும் பல காரியங்களைச் செய்யவில்லையோ அவனை
நடுத்தரமான வேலைக்காரன் என்று சொல்வார்கள்.

நியுக்தோ ந்ருபதே: கார்யம் ந குர்யாத்ய: ஸமாஹித:
ப்ருத்யோ யுக்த: சமர்தஸ்ச தமாஹு: புருஷாதமம்

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால் ஒரு காரியத்தில் ஏவப்பட்டு
தலைவனுக்குக் குறைந்தபட்ச காரியத்தைக் கூடச் சரியாகச் செய்யவில்லையோ அவனை
அதம வேலைக்காரனாகச் சொல்வார்கள்

இப்படி வேலை செய்பவர்களை மூன்று விதமாகப் பிரித்துச் சுட்டிக் காட்டும் ராமர்
அனுமனால் ‘பரி ரக்ஷிதா:’ (பேருதவிசெய்யப்பெற்றோம்) என்று மனம் குளிரக் கூறுகிறார்.

இந்த பேருதவியைச் செய்த ஸ்ரீ அனுமானை மஹாத்மன: (மஹாத்மா) என்று அவர் புகழ்கிறார்.
ஸ்ரீ ராமராலேயே மஹாத்மா என்று புகழப்பட்டார் என்றால் ஸ்ரீ அனுமனின் பெருமையைக் கூறவும் வேண்டுமோ!

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு –ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்– தமிழாக்கம் : எஸ். ராமன்–

August 8, 2021

தப​:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் |
நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||

வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார்.
அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள்.
எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று
தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது.
மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து
மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை.
ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்கு முறையை
வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம்.
சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும்,
தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது.
அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது.
தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது.
தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார்.
ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி,
நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி
அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது;
அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே
அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார்.
இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன.
அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும்,
மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ
அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய
ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும்.
அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும்.
மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும்.
வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும் போது தான்
அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.

காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான்.
இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது.
அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது.
கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும்.
“தத்தம் குல வேதத்தை அத்யயனம் செய்தல், பிரணவம்- சாவித்திரி முதலான பவித்ரமான மந்திரங்களை சபித்தல் ,
கீதை முதலான வீடுபேறு பற்றிய நூல்களை சரியான ஆசார்யனின் உதவியோடு படித்தல்” என்று பாரம்பர்ய விரிவுரையாளர்கள் விளக்குவர்.
ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

———

கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் |
த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத​: || 1.1.2 ||

சாரித்ரேண ச கோ யுக்த​: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித​: |
வித்³வான் க​: க​: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன​: || 1.1.3 ||

ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக​: |
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||

மா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ த்வமக³மஸ்²ஸா²ஸ்²வதீஸ்ஸமா​: |
யத்க்ரௌஞ்சமிது²னாதே³கமவதீ⁴​: காமமோஹிதம் || 1.2.15 ||

நிஷாத³ – O! Fowler, ஏ! வேடனே!
த்வம் – you, நீ
யத் for which reason, எதற்காக
க்ரௌஞ்சமிது²னாத் – from the pair of krauncha birds, ஜோடி கிரௌஞ்சப் பறவைகளில்
காமமோஹிதம் – when they were infatuated by love, காதல் களியாட்டத்தின்போது
ஏகம் = one, ஒன்றை
அவதீ⁴: – have killed, கொன்றாய்
(தத் for that reason), அதனால்
ஸா²ஸ்²வதீ: permanently, எப்போதும்
ஸமா: for long years, பல காலமாக
ப்ரதிஷ்டா²ம்ʼ glorious, பெருமையுடன்
மா க³ம: you will never get, உனக்குக் கிட்டாது.

“ஏ! வேடனே! காதலுடன் களித்திருந்த ஒரு ஜோடி கிரௌஞ்சப் பறவைகளைப் பிரித்து,
ஒன்றைக் கொன்றப் பாதகச் செயலால் நீ வெகுநாட்கள் வாழமுடியாது போவாய்!”–என்று சபித்தார்.

——–

கீர்த்திமந்த: ப்ரணிஹிதா: யதா²வசனகாரிண: |
தேஜ: க்ஷமாயஸ²:ப்ராப்தா ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: || 1.7.6||

கீர்த்திமந்த: renowned, கீர்த்தியுடன்
ப்ரணிஹிதா: fixing their attention on their thoughts, எண்ணங்களில் கவனம் செலுத்துவோராக
யதா²வசனகாரிண: doing in accordance with word, சொல்வதைச் செய்வோராக
தேஜ:க்ஷமாயஸ²:ப்ராப்தா: possessing splendour forgiveness and fame, அழகும், புகழும், மன்னிக்கும் ஆற்றலும் கூடியோராக
ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: speaking with a smile, இன்முகத்துடன் பேசுவோராக.

க்ரோதா⁴த்காமார்த²ஹேதோர்வா ந ப்³ரூயுரன்ருʼதம்ʼ வச: … || 1.7.7||

க்ரோதா⁴த் either in anger, கோவத்தினாலோ
காமார்த²ஹேதோர்வா or for the reason of pecuniary gains or for desire, பேராசையினாலோ, பணம் சம்பாதிக்கும் நோக்கிலோ
அன்ருʼதம் untruth or unjust, நேர்மைக்கும், நீதிக்கும் புறம்பாகவோ
வச: word, வார்த்தைகளை
ந ப்³ரூயு: do not utter, சொல்லாதவர்கள்.

குஸ²லா வ்யவஹாரேஷு ஸௌஹ்ருʼதே³ஷு பரீக்ஷிதா: |
ப்ராப்தகாலம்ʼ து தே த³ண்ட³ம்ʼ தா⁴ரயேயுஸ்ஸுதேஷ்வபி || 1.7.8||

தே those ministers, அந்த அமைச்சர்கள்
வ்யவஹாரேஷு in their dealings, தங்கள் பொறுப்புகளில்
குஸ²லா: competent, தலை சிறந்தோர்
ஸௌஹ்ருʼதே³ஷு in friendship, நட்பு வட்டாரத்தில்
பரீக்ஷிதா: tested, சரி பார்த்து
ஸுதேஷ்வபி even in the matter of sons, தங்கள் மகன்கள் விஷயத்திலும்
ப்ராப்தகாலம் appropriately, தக்கதொரு
த³ண்ட³ம் punishment, தண்டனை
தா⁴ரயேயு: used to impose, வழங்க வேண்டி.

தத:ப்ரீதோ த்³விஜஸ்²ரேஷ்ட²ஸ்தான் ஸர்வானித³மப்³ரவீத் |
அவஜ்ஞயா ந தா³தவ்யம்ʼ கஸ்யசில்லீலயா(அ)பி வா|| 1.13.30||
அவஜ்ஞயா க்ருʼதம்ʼ ஹன்யாத்³தா³தாரம்ʼ நாத்ர ஸம்ʼஸ²ய:|

தத: then, அப்போது
ப்ரீத: pleased, திருப்திப்பட்டு
த்³விஜஸ்²ரேஷ்ட²​: best among brahmins, அந்தண சீலரான (வசிஷ்டர்)
தான் ஸர்வான் addressing all of them, அவர்களைப் பார்த்து
இத³ம் these words, இந்த வார்த்தைகளை
அப்³ரவீத் said, சொன்னார்
கஸ்ய சித் to any one, எவருக்கும்
அவஜ்ஞயா with insult, அவமரியாதையுடன்
லீலயாபி வா or casually, ஏனோ தானோ என்று
ந தா³தவ்யம் should not be gifted, அளிக்கப்படக் கூடாது
அவஜ்ஞயா with contempt, வெறுப்புடன்
க்ருʼதம் done, செய்தல்
தா³தாரம் donor, கொடுப்பவனுக்கு
ஹன்யாத் destroys, அழிவு தரும்
அத்ர in this aspect, இது பற்றி
ஸம்ʼஸ²ய: ந no doubt, ஐயம் வேண்டாம்.

தானம் அளிக்கும்போது தானம் பெறுபவரை அவமதிக்கும்படியோ, அல்லது அதை ஒரு தமாஷாகவோ செய்யக்கூடாது.
அப்படி வேண்டா வெறுப்பாகச் செய்யும் எவனுக்கும் தானத்தினால் வரும் நன்மை கிடைக்காது;
மாறாக அவனுக்கு நிச்சயமாக அது அழிவு தரும்.

——–

கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா சந்த்⁴யா ப்ரவர்த்ததே |
உத்திஷ்ட² நரஸா²ர்தூல கர்த்தவ்யம் தை³வமாஹ்நிகம் ||

(ஆம், இது அனைவரும் அறிந்த வெங்கடேச சுப்ரபாதத்தில் வரும் தொடக்க வரிகள்தான்.
ஆனால், எத்தனை பேருக்கு இது வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்லோகம் என்று தெரிந்திருக்குமோ?)

கௌஸல்யா ஸுப்ரஜா: O! Beloved son of Kausalya, (a son by whom Kausalya became a blessed mother),
கௌசல்யாவின்செல்ல மகனான (ஒரு மகனால் ஆசீர்வதிக்கப்பட்ட கௌசல்யாவின்)
ராம O!Rama, ராமனே!
பூர்வா ஸந்த்⁴யா the day-break, வைகறைப் பொழுது
ப்ரவர்ததே is commencing, புலர்ந்து விட்டது
நரஸா²ர்தூ³ல O!Best among men, புருஷோத்தமனே
உத்திஷ்ட² awake (fromsleep), உறக்கத்திலிருந்து எழு
தை³வம் oblations to gods, தெய்வத்திற்குச் செய்யவேண்டிய
ஆஹ்னிகம் religious rite to be performed every day at a fixed hour, நித்ய கர்மானுஷ்டானங்கள்
கர்தவ்யம் are required to be done, செய்யப்படவேண்டி காத்திருக்கின்றன.

கௌசல்யையின் செல்ல மகனே! வைகறைப் பொழுது புலர்ந்து விட்டது. புருஷர்களில் உத்தமனே! விழித்துக் கொள்.
இன்று நீ ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

———

மனித முயற்சிக்கு அப்பால் உள்ளவைகளுக்கு திரிசங்கு ஆசைப்பட்டான்.
அதனால் இறைவனின் நியதிக்கு எதிராக அவன் செயல்பட்டான்.
அப்படி அவன் செய்ததன் வீணான வேலையை நொந்து அப்போது அவன் சொன்னது:

தை³வமேவ பரம்ʼ மன்யே பௌருஷம்ʼ து நிரர்த²கம்|| 1.58.22||
தை³வேனாக்ரம்யதே ஸர்வம்ʼ தை³வம்ʼ ஹி பரமா க³தி:|

தை³வமேவ destiny alone, தெய்வ நியதி ஒன்றே
பரம் is all-powerful, முடிவான ஒன்று
மன்யே I am thinking, எனக்குத் தெரிந்தவரை
பௌருஷம் து the effort of a man, மனித முயற்சி
நிரர்த²கம் is in vain, வீணானது
ஸர்வம் everything, எல்லாமே
தை³வேன by destiny,
ஆக்ரம்யதே is occupied,
தை³வம் destiny, விதி
பரமா supreme, முடிவானது
க³தி: ஹி way indeed, சரியான வழி

இறைவனது ஆளுமையின் முன் மனிதனின் முயற்சி வெல்லமுடியாது.
ஆதலால் இறைவனின் வழியைப் பின்பற்றிச் செல்வதே அறிவார்ந்த செயல். அது ஒன்றே சரியான வழி.

இறைவனின் நியதிப்படி செல்லாது அதனை எதிர்த்துத் தன் வழியே செல்ல முயன்ற திரிசங்கு தனக்கு மேலும்
துன்பங்களை வரவழைத்துக் கொண்டான். நம்மால் எதைச் செய்ய முடியுமோ
அதைச் செவ்வனே செய்வது ஒன்றே அறிவுடையவன் செயலாகும்.

———–

இயம்ʼ ஸீதா மம ஸுதா ஸஹத⁴ர்மசரீ தவ|
ப்ரதீச்ச² சைனாம்ʼ ப⁴த்³ரம்ʼ தே பாணிம்ʼ க்³ருʼஹ்ணீஷ்வ பாணினா|| 1.73.27||

மம my, எனது
ஸுதா daughter, மகள்
தவ your, உனது
ஸஹத⁴ர்மசரீ with you observing righteous deeds, உன்னுடன் தர்மகாரியங்களைச் செய்ய
ஸீதா Sita, சீதை
இயம் this girl, இந்தப் பெண்
ஏனாம் her, அவளை
ப்ரதீச்ச² ச accept, ஏற்றுக்கொள்
தே ப⁴த்³ரம் prosperity to you, உனக்கு மங்களம் உண்டாக
பாணிம் her hand, அவளது கைகளை
பாணினா with your hand, உனது கைகளால்
க்³ருʼஹ்ணீஷ்வ hold, பற்றிக்கொள்.

எனது மகளான இந்த சீதை உனது தர்மகாரியங்கள் மேலும் நன்கு தொடர உறுதுணையாய் இருப்பாள்.
மங்களமே உங்களுக்கு உண்டாகட்டும். அவள் கையைப் பிடித்து ஏற்றுக்கொள்.

பதிவ்ரதா மஹாபா⁴கா³ சா²யேவானுக³தா ஸதா³|
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத்³ராஜா மந்த்ரபூதம்ʼ ஜலம்ʼ ததா³|| 1.73.28||

மஹாபா⁴கா³ highly fortunate, பாக்கியசாலியான
பதிவ்ரதா devoted, faithful and loyal wife, பக்தி, நேர்மை, நன்றியுடன் கூடிய மனைவி
ஸதா³ always, எப்பொழுதும்
சா²யா இவ like shadow, நிழலைப்போல
அனுக³தா follows, தொடர்வது
இதி thus, இப்படியாக
உக்த்வா having spoken, சொல்லிவிட்டு
ராஜா king, அரசன்
ததா³ then, அப்போது
மந்த்ரபூதம் sanctified with mantra, மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட
ஜலம் water, நீரால்
ப்ராக்ஷிபத் released, வார்த்தார்.

பக்தியுடனும், நன்றியுடனும், நேர்மையுடனும் உன்னுடன் வாழப்போகும் இந்தப் பாக்கியசாலியான சீதா
உன்னை எப்போதும் நிழல்போலத் தொடரட்டும், என்றிவ்வாறு மந்திரங்களுடன் சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அல்லவா?
வால்மீகியின் இலக்கணப்படி ஒரு நல்ல மனைவி என்பவள்
கணவனுக்கு இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு,
எப்போதும் உறுதுணையாக இருந்து தோள் கொடுக்கும் ஒரு நல்ல தோழியாவாள்.

———

நாஹமர்த²பரோ தே³வி! லோகமாவஸ்துமுத்ஸஹே |
வித்³தி⁴மாம்ருʼஷிபி⁴ஸ்துல்யம்ʼ கேவலம்ʼ த⁴ர்மமாஸ்தி²தம்|| 2.19.20||

தே³வி O devi, தேவி
அஹம் I, நான்
அர்த²பர​: interested in wealth, செல்வத்தில் விருப்பம் கொண்டவனாக
ந not, இல்லை
லோகம் this world, இந்த உலகில்
ஆவஸ்தும் to follow, பின்பற்றி
உத்ஸஹே am striving, முயற்சி செய்கிறேன்
கேவலம் only, மட்டும்
த⁴ர்மம் righteousness, தர்மம்
ஆஸ்தி²தம் devoted to, முதன்மையாக
மாம் me, என்னை
ருʼஷிபி⁴​: with ascetics, தபஸ்விகளோடு
துல்யம் similar, ஒன்றாக
வித்³தி⁴ you may know, தெரிந்து கொள்.

தேவி, செல்வத்திற்காக இந்த உலகில் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்குக் கிடையாது.
தர்ம சிந்தனை ஒன்றே குறிக்கோளாக வாழும் தவச் சீலர்களுக்கு ஒப்பானவன் நான், இதைத் தெரிந்து கொள்.

——–

அஹம்ʼ தாவன்மஹாராஜே பித்ருʼத்வம்ʼ நோபலக்ஷ்யே|
ப்⁴ராதா ப⁴ர்தா ச ப³ந்து⁴ஸ்²ச பிதா ச மம ராக⁴வ​:|| 2.58.31||

அஹம் I,
மஹாராஜே in that great king, அந்தப் பேரரசரான
பித்ருʼத்வம் fatherhood, தந்தைப் பதவி
நோபலக்ஷ்யே I do not see, நான் கருதவில்லை
மம to me, எனக்கு
ராக⁴வ​: Rama alone, ராமன் ஒருவனே
ப்⁴ராதா ச brother, சகோதரன்
ப⁴ர்தாச also protector, காப்பாளனும்
ப³ந்து⁴ஸ்²ச friend, தோழன்
பிதா father, தந்தை.

அந்தப் பேரரசரான தசரதரை என் தந்தையாக நான் கருதவில்லை.
ராமன் ஒருவனே எனது சகோதரன், காப்பாளன், தோழன், மற்றும் தந்தை.

—————

தம்ʼ ப்ரேக்ஷ்ய ப⁴ரத​: க்ருத்³த⁴ம்ʼ ஸ²த்ருக்⁴னமித³மப்³ரவீத்|
அவத்⁴யா ஸ்ஸர்வபூ⁴தானாம்ʼ ப்ரமதா³​: க்ஷம்யதாமிதி|| 2.78.21||

ப⁴ரத​: Bharata, பரதன்
க்ருத்³த⁴ம் enraged one, கோபத்தில் இருந்தவன்
தம் ஸ²த்ருக்⁴னம் addressing that Satrugna, சத்ருக்னனைப் பார்த்து
இத³ம் these words, இந்த வார்த்தைகளை
அப்³ரவீத் said, சொன்னான்
ப்ரமதா³​: women, பெண்மணிகள்
ஸர்வபூ⁴தானாம் in all beings, எந்த சீவராசியிலும்
அவத்⁴யா​: should not be killed, கொல்லப்படக் கூடாது க்
ஷம்யதாம் may be pardoned, மன்னித்து விடலாம்.

கோபத்தில் இருந்த சத்ருக்னனைப் பார்த்து பரதன்
“எந்தப் பெண்மணியையும் கொல்லக் கூடாது, அவளை மன்னித்துவிடு” என்றான்.

—————-

ஏழையானாலும், செல்வந்தன் ஆனாலும் எப்போதும் கணவனுடனேயே இருப்பேன் என்று திருமணம் புரிந்து
கொள்ளும்போது செய்த சத்தியத்திற்கு ஏற்ப, நாடானாலும் காடானாலும் இராமருடன் தங்கி வாழும் சீதையின்
முடிவை வரவேற்று அனசுயா பெருமையாகப் பேசினாள்.

அவருத்³த⁴ம்ʼ வனே ராமம்ʼ தி³ஷ்ட்யா த்வமனுக³ச்ச²ஸி|| 2.117.21||
நக³ரஸ்தோ² வனஸ்தோ² வா பாபோ வா யதி³ வா ஸு²ப⁴:| …. 2.177.22||

த்வம் = you, நீ
தி³ஷ்ட்யா = with the grace of heaven, தேவர்களின் கருணையால்
வனே = in the forest, காட்டுக்குள்
அவருத்³த³ம் =constrained, குறுகிய
ராமம் = Rama,
அனுக³ச்ச²ஸி = you are also following, நீயும் வந்துள்ளாய்,
நக³ரஸ்த²: = in the city, நகரத்திலோ
வனஸ்தோ² வா = or in the forest, காட்டிலோ
பாபோ வா = or sinful, பாவமோ,
யதி³ வா = or அல்லது ,
ஸு²ப⁴: = virtuous, புண்ணியமோ.

(வருவது) நாடோ, காடோ, பாவமோ அல்லது புண்ணியமோ, ( உனது என்பதையெல்லாம் ) விட்டுவிட்டு
தேவர்களின் கருணையால் நீ இராமருடன் காட்டுக்குள் வந்துள்ளாய்.

————–

அவர் கைகேயிப் பற்றித் தாறுமாறாகப் பேசாதே என்று லக்ஷ்மணனைக் கோபித்துக் கொண்டார்.

ஸ தே(அ)ம்பா³ மத்⁴யமா தாத க³ர்ஹிதவ்யா கத²ஞ்சன|
தாமேவேக்ஷ்வாகுனாத²ஸ்ய ப⁴ரதஸ்ய கதா²ம்ʼ குரு|| 3.16.37||

தாத = dear, அன்பார்ந்த
மத்⁴யமா = middle, நடு
(அ)ம்பா³ = mother, தாயார்
கத²ஞ்சன = somehow, கண்டபடி
தே = to you, உனக்கு
ந க³ர்ஹிதவ்யா = not to be criticized, குறைகூறக் கூடாது
இக்ஷ்வாகுனாத²ஸ்ய = of the lord of Ikshvaku, இஷ்வாகு குல அரசனனைப் பற்றி
ப⁴ரதஸ்ய = Bharata’s, பரதனைப்
தாம் கதா²மேவே = about him, அவனைப் பற்றி
குரு = you may, பேசலாம்.

அன்பார்ந்த லக்ஷ்மணா! நம் சிறிய தாயார் கைகேயியைப் பற்றிக் கண்டபடி குறைகூறி எப்போதுமே பேசாதே.
இஷ்வாகு குல அரசனான பரதனைப் பற்றி நீ பேசலாம்.
ஒருவரைப் பற்றிப் புகழும்போது மற்றவரை மட்டம் தட்டிப் பேசுவது ஒரு அருவருக்கத்தக்க செயல்.
இங்கு இராமர் சொல்வதும், “யாரைப் பற்றியும் எப்போதும் இகழ்ந்து பேசக் கூடாது” என்பதாகும்.

—–

உத்தரம்ʼ நோத்ஸஹே வக்தும்ʼ தை³வதம்ʼ ப⁴வதீ மம|| 3.45.28||

வாக்யமப்ரதிரூபம்ʼ து ந சித்ரம்ʼ ஸ்த்ரீஷு மைதி²லி|

ஸ்வபா⁴வஸ்த்வேஷ நாரீணாமேவம்ʼ லோகேஷு த்³ருʼஸ்²யதே|| 3.45.29||

மைதி²லி = Mythili, மைதிலி!
உத்தரம் = reply, பதில்
வக்தும் = tell, சொல்
நோத்ஸஹே = not intending, உத்தேசம் இல்லை
ப⁴வதீ = yourself, தாங்கள்
மம = for me, எனக்கு
தை³வதம் = deity, தெய்வம்
அப்ரதிரூபம் = unworthy, வேண்டத் தகாத
வாக்யம் = word, வார்த்தைகள்
ஸ்த்ரீஷு = among women, பெண்களிடம்
சித்ரம் = wonder, ஆச்சரியமாக
ந = not, இல்லை
ஏஷ: = such, அது
நாரீணாம் = womens’, பெண்களின்
ஸ்வபா⁴வஸ்த் = nature, இயற்கை
லோகேஷு = in the world, இந்த உலகில்
ஏவம் = likewise, அதே போல
த்³ருʼஸ்²யதே is seen, பார்க்கப்படுகிறது

மைதிலி! உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. என்னைப் பொறுத்தவரை
தாங்கள் பூசிக்கவேண்டிய தெய்வத்தின் அம்சம். நீங்கள் பேசிய வேண்டத் தகாத வார்த்தைகள் போன்றதைப்
பெண்களிடம் எதிர்பார்ப்பது இயற்கையே என்பதால், அதை நான் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இல்லை.

——-

ததோ(அ)க்³னிம்ʼ தீ³ப்யமானம்ʼ தௌ சக்ரதுஸ்²ச ப்ரத³க்ஷிணம்|| 4.5.15||

ஸுக்³ரீவோ ராக⁴வஸ்²சைவ வயஸ்யத்வமுபாக³தௌ|

தத: = then, அப்போதே
தௌ = both of them, அவர்கள் இருவரும்
தீ³ப்யமானம் = blazing, எரியும்
அக்³னிம் = fire, அக்னி
ப்ரத³க்ஷிணம் சக்த: = went round in great reverence, சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள்
ஸுக்³ரீவ: = Sugriva, சுக்ரீவன்
ராக⁴வஸ்²சைவ = and Raghava also, இராமரும்
வயஸ்யத்வம் = friendship, நட்பை
உபாக³தௌ = both established, உறுதி செய்துகொண்டார்கள்.

உடனே அவர்கள் இருவரும் அக்னி வளர்த்து, அதனை சகல மரியாதைகளுடன் சுற்றிவந்தார்கள்.
இப்படியாக இராமரும், சுக்ரீவனும் தங்கள் நட்பை பண்டைய வழக்கப்படி உறுதி செய்துகொண்டார்கள்.

———–

சிறப்பு கொண்ட மழைக் காலத்து வனப்புகளை வால்மீகியும் எதுவும் சொல்லாது விட்டு விடுவாரா?

வானில் விரியும் நிறங்களும், பறவைகள் எழுப்பும் இசைக் கூவலும், வண்டுகளின் ரீங்காரமும்,
மிருகங்களின் களியாட்டமும் வானிலிருந்து விழும் மழை நீரைப் பார்த்ததும் நடக்கும் ஒத்திகை பார்க்காத
இயற்கை நாடகங்கள். கிஷ்கிந்தா காண்டத்தில் வால்மீகியின் வர்ணனையைப் பற்றித் தெரிந்துகொள்ள,
அதன் 28-வது அத்தியாயத்தில் உள்ள 66 செய்யுட்களில் மாதிரிக்கு ஒன்று என்று கீழே 36-வது செய்யுளைப் பார்ப்போம்.

ஷட்பாத³தந்த்ரீமது⁴ராபி⁴தா⁴னம்ʼ ப்லவங்க³மோதீ³ரிதகண்ட²தாலம்|
ஆவிஷ்க்ருʼதம்ʼ மேக⁴ம்ருʼத³ங்க³னாதை³ர்வனேஷு ஸங்கீ³தமிவ ப்ரவ்ருʼத்தம்|| 4.28.36||

வனேஷு – in the forest, காட்டினில்
ஷட்பாத³தந்த்ரீமது⁴ராபி⁴தா⁴னம் – the sweet humming sounds of bees like the music of string instruments,
ரீங்கரிக்கும் வண்டுகளின் இனிய ஓசை தந்திக் கருவிகளின் இசை போல

ப்லவங்க³மோதீ³ரிதகண்ட²தாலம் – the noises of frogs sounding like the beating of trumpets to keep
the rhythm with the beating of drums of thunder clouds,
இடிஇடிக்கும் மேள ஓசைக்கு ஒத்தாக துந்துபியின் பிளிறல் போல் தவளைகளின் கத்தலும்

மேக⁴ம்ருʼத³ங்க³னாதை³: – sounds of clouds like the sounding like the beating of drums,
மேகங்கள் ஊடே வரும் இடியின் ஓசை மேளம் கொட்டுதல் போலவும்

ஆவிஷ்க்ருʼதம் – manifested, காணப்பட்டன

ஸங்கீ³தம் – musical event, இன்னிசைக் கச்சேரி

ப்ரவ்ருʼத்தம் இவ – as if commenced, தொடங்கியது போல

(இந்த வால்மீகியின் ஸ்லோகத்திற்கு மூல ஆசிரியர் எழுதியிருக்கும் ஆங்கிலக் கவிதையையும் தந்து,
அதனால் எனக்குள் ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியையும் அதன் கீழே தமிழில் வரைந்திருக்கிறேன். கவிஞர்கள் மன்னிப்பாராக.)

The buzzing bees hummed and sang
Like the tunes, one plays on strings
Frogs in ponds and paddy fields
Croaked and chorused rhythmic beats
Clouds from distant mountains tops
Drum like boomed their thunderous noise
That was the concert monsoon gave
To Rama and his brother in Prasravana cave

ர்ர்ர்ரர்… என்று சுற்றிச் சுழலும் வண்டுகள் ரீங்கரிக்கும் ஓசைதான் யாழினின்று வரும் நாதமோ?
கிர்..கிர்..கிர்… என்று வயலிலும் குளக்கரையிலும் கத்தும் தவளைகள் அதற்குத் தரும் தாளமோ?
மலை உச்சியைத் தவழும் மேகங்களின் உரசலால் ஒளிரும் இடிதான் காது பிளக்கும் மேளமோ?
இவைதான் பிரஸ்ரவண மலைக் குகைவாசிக்கு இயற்கை தரும் இன்னிசை ஜாலமோ?

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ‘அ’-ராமாயணம் /ஸ்ரீ லவ-குசலர் பாடிய இராமாயணம்–

August 8, 2021

ஸ்ரீ ‘அ’-ராமாயணம்

அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி
அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.

அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?
அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை
அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான்!

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்த ராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ!
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை ஆரண்யத்துக்கு அனுப்பினாள்!

அங்கேயும் அபாயம், அரக்கர்களின் அரசன்,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்.
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு,
அளவேயில்லை. அயோத்தி அண்ணல், அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர். அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடி பணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்.

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அனேகமாக அணைந்தன. அன்னையின் அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அரக்கர்களை அலறடித்து, அவர்களின்
அரண்களை, அகந்தைகளை அடியோடு அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான அதிசாகசம்!

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி, அதிசயமான அணையை
அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்.

அண்ணல், அனந்தராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக
அமைந்ததும் அனுமனின் அருளாலே!

———-

ஸ்ரீ லவ-குசலர் பாடிய இராமாயணம்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்

சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்

தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்

தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்

கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்.

விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

———–

எளிய இராமாயணம்

தசரத மஹாராஜா செய்த யாகத்தின் பலனாய் அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து,
ரகு குலத்திற்கு பெருமை அளித்து,
வில்வித்தை வாள் வித்தையில் தேர்ந்து,
விஶ்வாமித்ர முனிவரின் யாகத்தை காத்து ,
அகலிகைக்கு சாபவிமோசனமளித்து, ஜனக நகர் சென்று,
சிவ தனுசை வளைத்தொடித்து, நங்கை சீதையை கை பற்றி,
சிற்றன்னை கைகேயின் ஆணையால் மரவுரி மான்தோல் தரித்து,
மனையாள் சீதை சகோதரன் லக்ஷ்மணுடன் கானகம் சென்று,
குஹனின் அன்பான உதவியால் கங்கையை கடந்து,
சித்திரகூடம்தனில் தங்கி, பரதனுக்கு பாதுகையை அளித்து,
ராஜ்யத்தை ஆளச்செய்து, அகஸ்தியரை தரிசித்து,
பஞ்சவடி சென்று, அங்கு வந்த அரக்கி சூர்பணகையின் மூக்கை அறுக்கவைத்து,
மாய மானான மாரீசனை கொன்று, சீதையை பிறிந்து மனம் தளர்ந்து,
ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து,
ஸபரியை ஆசிர்வதித்து, அனுமனைக் கண்டு,
சுக்ரீவனுடன் நட்பு கொண்டு, வாலியை வதைத்து,
அனுமனுக்கு அனுக்ரஹ பலமளித்து,
விளையாட்டாக கடலை தாண்ட செய்து,
அஸோக வனம்தனில் அமர்ந்துருந்த சீதையிடம் கனையாழியை கொடுக்கவைத்து,
ராவணனை கண்டு லங்கைக்கு தீயிட்டு வந்த அனுமனிடமிருந்து,
சீதை கொடுத்தனுப்பிய சூடாமணியை பெற்றுகொண்டு,
அலைகடலில் அணைகட்டி பரிவாரங்க ளுடன் லங்கை சென்று,
ராவணனை வென்று வதைத்து, விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு,
அன்பு சீதைக்கு அக்னிதேவனின் ஆசியை பெற்று கொடுத்து,
ஆருயிர் சீதை ஆசை லக்ஷ்மண் தாசன் அனுமனுடன் நந்திக்ராமம் சென்று,
அங்கு காத்திருந்த பரதனை அணைத்துகொண்டு,
யாவரும் அயோத்தி திரும்பி, அங்கு கூடியிருந்த ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கிவிட்டு,
அன்பு தாயார்களின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கி,
அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து,
மணிமகுடம் ஏற்றுகொண்ட மஹானுபாவன் ஶ்ரீராமபிரான்

—————–

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
ஸ்ரீராம நாம வரானன ஓம் நம இதி (ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் பலச்சுருதி-27)

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -/ ஸ்ரீ ஒட்டக் கூத்தர்–ஸ்ரீ உத்தர காண்டம்-

February 7, 2021

கம்பர் ஆறுகாண்டத்தைப் படைத்தார். அதன் பின் நிகழும் நிகழ்வுகளை ஒட்டக் கூத்தர் பதினேழு படலங்களில் நிறைவு செய்துள்ளார்.
இவ்விரண்டும் இணைந்த நிலையில், இராமனின் மாண்புகள் நிறைவுறுகின்றன.
ஒரு காப்பியத்தோடு இன்னொரு காப்பியம் ஒன்றி இணைந்த நிலையில் தண்டியாரின் காப்பிய இலக்கணம் நிறைவுறுகிறது.
ஆதலால் இவ்விரு நூல்களை இரட்டை இராமாயணக் காப்பியங்கள் எனலாம்.

ஸ்ரீ சீதை மீண்டும் வனவாசம் சென்றது மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு வரலாறாகும்.
முதலில் ஒட்டக்கூத்தரின் சொற்களில் காண்போம்:

வாளணி விசயன் பத்திரன் தந்தவக்கிரன்
காளியன் முதலோர் சொற் பரிகாசக் கதைகள் கேட்டினிது கொண்டாடி (பாடல் 724 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஆங்கவரிவ்வாறு உரைத்திடக் கேட்ட அரசர் கோன் அவர்களை நோக்கி
நாங்கள் இந்நகரில் நாட்டினில் பிறக்கும் நன்மையுந் தீமையுங் கேட்டுத்
தீங்கவை அகற்றிச் சிறந்தன செய்ததும் செய்யும் இவ்விரண்டும் நீர் கேட்ட
நீங்கள் ஒன்றுக்கும் கூசலீர் என்ன நின் பல கேட்டி என்றுரைப்பார் (பாடல் 729 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

மன்னவன் ராமன் மானபங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்
கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள்
நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெரு நிலத்தோர் (பாடல் 728 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஓதநீர் வேலையுலகு உளோர் இல்லது உளது எனில் உள்ளது ஆம் உள்ளது
யாதொரு பொருளை இல்லையென்று உரைக்கில் இல்லையாம் ஈது உலகியற்கை
ஆதலால் அவளை அருந்தவத்தோர்கள் ஆசிரமத்து அயல் விடுத்தும்
ஈது நான் துணிந்த காரியம் இனி வேறு எண்ணுவதொரு பொருளில்லை (பாடல் 732 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறிய
நாட்டு நடப்பு பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்த ராமன்
”நீங்கள் நல்லதும் கெட்டதுமானவற்றைப் பார்த்துச் சொல்லுவதில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளி மீதியைச் சொன்னீர்கள்.
நடப்பு எதுவோ அதைக் கூசாமற் கூறுவீராக” என்றான்.

பிறகு அவர்கள் “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார்.
வானவர்களுக்குத் தீங்கிழைத்த ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை
மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே” என மக்கள் பேசுகின்றனர் என்றார்கள்.

கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே உண்மை.
அவர்கள் இது இல்லை என்று கூறினால் இருக்காது என்று பொருள். இதுவே உலக இயற்கை.
எனவே அவளைத் தவம் புரியும் முனிவர்களது ஆசிரமத்துக்கு அருகே விடுவோம்.
இதுவே என் தீர்க்கமான முடிவு. இதில் மாற்றமில்லை.

இதைத் தொடர்ந்து லட்சுமணன் வால்மீகி ஆசிரமம் அருகே சீதையை விடும் போது கூறுகிறான்.

நன்னெறி நகரும் நாடும் கடந்து போய் அடவி நன்னித்
தன்னுயிர் தன்னை விட்டுத் தடம் புகழ் கொண்ட ஐயன்
இன்னுயிர்த் தோழனாய் வெழில் கொள் வான்மீகி வைகும்
பங்கை சாலையின் பாற் பாவையை விடுதி என்றான்

என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி
இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல
கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை
தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள் (பாடல் 752, 753 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

நன்னெறியில் வாழும் நாட்டின் மன்னரான தசரதன் நகர் நாடும் தாண்டிப் புகழ் பெற்றவர்.
அவது உயிர்த் தோழரான வால்மீகியின் ஆசிரமத்திற்கு அருகே அவளை விடுக என்றான்.

அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று உன்னைக் கொண்டு வந்தேன் என்று
லட்சுமணன் கூறியது பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் வீழ்ந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச
வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி (பாடல் 3, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது.
என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது.

அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா
அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம் (பாடல் 14, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

(ராமன் தன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்வது) மனிதருள் உயர்ந்த என் உறவுகளே !
மக்களின் நிந்தனைக்கு அஞ்சி என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார்.
சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

கங்கா வாஸ்து பரே பாரே வால்மீகேஸ்து மவாத்மனஹ
ஆஷ்ரமோ திவ்யாஸ்ன்ஷஸ்தம்ஸாதிரமார்ஷிதஹ
தத்ரைதாம் விஜனே தேஷே விஸ்ருஜ்ய ரகுநந்தன
சீக்ரமாகச்ச சௌமித்ரே குருஷ்ய வசனம் மம
தஸ்மாத் த்வாம் க்ச்ச சௌமித்ரே நாத்ர கார்யோ விசாரணா
அப்ரீதர்ஹி பரா மஹ்யம் த்வயைதத் ப்ரதிவாரிதே–(பாடல் 17,18,19,20 ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

பொருள்: கங்கையின் அந்தக் கரையில் மகாத்மா வால்மீகி முனிவரின் திவ்ய ஆசிரமம் உள்ளது.
நீ சீதையை அந்த ஆசிரமத்தின் அருகில் விட்டு விடு. சீதை விஷயத்தில் நீ வேறு எந்த விஷயத்தையும் என்னிடம் கூறாதே

எனவே லட்சுமணா ! நீ இப்போது போ. இவ்விஷயத்தில் எதையும் யோசிக்காதே.
நீ எனது இந்த முடிவில் தடை ஏற்படுத்தினால் எனக்கு மிகவும் கஷ்டம்.

ஸாத்வம் த்யத்வா நிருபதினா நிர்தோஷா மம சன்னிதௌ
பௌராபவாத்பீதேன க்ராஹாம் தேவி ந தேஅன்யதா
அஷ்ரமாந்தேஹு ச் மயா த்ய்க்த்வ்யா த்வம் பவிஷ்யஸி
ராக்ஞஹ ஷாஸ்ன்மாதாய ததைவ சில தௌர்வாதம் (பாடல் 13,14 ஸர்க்கம் 47 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து
மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம் என்றும்
நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு விடுவேன்.

லக்ஷ்மணஸ்ய வசஹ ஸ்ருத்வா தாருணம் ஜனகாத்மஜா
பரம் விவிதமாகம்ய வைதேஹி நிப பாத ஹ (பாடல் 1, ஸர்க்கம் 48 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

லட்சுமணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள்.
மூர்ச்சையுற்று தரையில் விழுந்தாள்.
மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி என்பதே ராமனின் தீர்க்கமான முடிவாயிருந்தது.
இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை
மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே மன்னன் எதிர்பார்க்கிறான். இது ராமனின் தரப்பு.

பிறகு வால்மீகி என்னும் முனிவரின் பராமரிப்பில் மகன்களை வளர்த்து அம்மகன்கள் அசுவமேத யாகத்தின் போது
வந்த குதிரையைப் கைப்பற்றி சித்தப்பாக்களுடன் சண்டையிட இறுதியில்
அப்பாவை நோக்கி அம்பு எய்யும் முன் சீதை வந்து தடுக்கிறாள்.
மறுபடி அயோத்தி வந்த அவளைத் தன் தூய்மையை நிரூபிக்கும் படி ராமன் ஆணையிட பூமித்தாயின் மடியில் ஐக்கியமாகிறாள்.

ஒட்டக்கூத்தரின் பாடல்களில் :

வால்மீகி முனிவரை நோக்கி ராமன் கூறுவான்:
முனிவ நீ அறுளிய மொழியை வானவர்
அனைவரும் யானும் முன்னறிவம் ஆயினும்
கனைகடல் உலகு உளோர் காணல் வேண்டும் என்று
இனையன இராகவன் எடுத்து இயம்பினான் (பாடல் 1257 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

‘முனிவரே ! தாங்கள் கூறுவதை நானும் வானோரும் ஏற்கனவே நன்கு அறிவோம்.
ஆயினும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகிலுள்ள மக்கள் சீதையின் கற்பின் சிறப்பை அறிய வேண்டும்.

விசைப் பாசத்தை அறுத்த முனி வேள்வி காத்து மிதிலை புகுந்து
எனக்கா ஈசன் வில்லிறுத்து அன்று எனக்கைப் பிடித்த எழிலாரும்
புனக்காயம் பூ நிறத்தானையன்று ம்ற்றொரு பூ மனலான்
மனத்தால் வாக்கால் நினையேனேல் வழிதா எனக்கு மண்மகளே–(பாடல் 1264 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

பாசம் நீக்கிய பற்றற்ற விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்துப் பிறகு வில்லை ஒடித்து என்னைக் கைப் பிடித்த
ராமனை அன்றி வேறு ஒரு மன்னனை நான் மனதாலோ வாக்காலோ நினையாதும் சொல்லாதும்
இருந்தது உண்மை என்றால் மண்மகளே எனக்குப் பிளந்து வழி விடு.

சேணுலாவிய தலமடந்தை சீதை தன்
பூணுலாவிய புலம் பொருந்தப் புல்லுறுஇ
வாள் நிலாவிய கதிர் வழங்கல் செல்கலாக்
கீணிலைப் படலமும் கிழியப் போயினாள்

நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சீதையின் தோள்களைப் பற்றி தேவ லோகத்திலிருந்து வந்தவளான
பூமாதேவி சூரியனின் ஒளிகூட நுழைய முடியாத பூமியைப் பிளந்து உள்ளே சென்று மறைந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
ஷீவஹ ப்ரபாதே து ஷபர்த் மைதிலி ஜனகாத்மஜா
கரோது பரிஷன் மத்யே ஷோதனர்த்தே மமைவ ச (பாடல் 6 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நாளை காலை மிதிலை மன்னரின் மகள் நிறைந்த சபையில் வந்து எனது களங்கத்தைப் போக்கும் சபதம் செய்வாராக.

யனன தத் சத்யமுக்தம் மே வேம்தி ராமாத் பரம் ந ச
ததா மே மாதவி தேவி விவ்ரம் தாதுர்மஹதி (பாடல் 16 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தஸ்மின்ஸ்து தரணி தேவி பாஹூப்யாம் க்ருஹ்ய மைதிலீம்
ஸ்வாகதேனாபி நந்த்யைநாமாசனே கோபவேஷயத் (பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

சிம்மாசனத்துடன் பூமாதேவி அழகிய வடிவுடன் வந்தாள். அவள் மிதிலாகுமாரி சீதையைத் தனது இரு கரங்களால்
எடுத்து மடியில் வைத்து வரவேற்கும் விதமாக அவளை வணங்கி சிம்மாசனத்தின் மீது அமர்த்தினாள்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஒட்டக் கூத்தர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராம கீதை –

January 21, 2021

கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது.
கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை
எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் இருக்கின்றன –

1. உத்தர கீதை
2. வாமதேவ கீதை
3. ரிஷப கீதை
4. ஷடாஜ கீதை
5. சம்பக கீதை
6. மங்கி கீதை
7. போத்திய கீதை
8. ஆரித கீதை
9. விருத்திர கீதை
10. பராசர கீதை
11. ஹம்ஸ கீதை
12. கபில கீதை
13.பிக்ஷு கீதை
14. தேவி கீதை
15. சிவகீதை
16. ரிபு கீதை
17. ராம கீதை
18. சூர்ய கீதை
19. வஷ்ட கீதை
20.அஷ்டாவக்ர கீதை
21. அவதூத கீதை
22. உத்தவ கீதை
23. பாண்டவ கீதை
24. வியாச கீதை
25. பிரம கீதை
26. உத்திர கீதை
27.சுருதி கீதை
28. குரு கீதை

————

ஸ்ரீ ராமர் ஸ்ரீ பரதனுக்கு ஞானோபதேசம் செய்கிறார்.
‘உலக வாழ்க்கை நிலையற்றது. வயது ஏற ஏற மரணம் நெருங்கி வருகிறது.
செல்வம், மனைவி மக்கள், உறவெல்லாம் சில காலமே.
நாம் மற்றவர்கள் திருப்திக்காக காரியங்களை செய்ய முடியாது.
பகவானுடைய அனாதியான கட்டளையான தர்மத்தை தான் அனுஷ்டிக்க வேண்டும்.
சத்தியத்தை கடை பிடிக்க வேண்டும்.
நம் ஆத்மாவுக்கு க்ஷேமத்தை தரும் கார்யங்களையே செய்யவேண்டும்’ என்று உபதேசிக்கிறார்.

ஷ்ரீ மஹாதேவ உவாச
ததோ ஜகந் மங்கல மங்கலாத்மநா
விதாய ராமாயண கீர்தி முத்தமாம்
சசார பூர்வா சரிதஂரகூத்தமோ
ராஜர்ஷி வர்யைரபி ஸேவிதஂ யதா||1||

ஸௌமித்ரிணா பரிஷ்ட உதார புத்திநா
ராமஃ கதாஃ ப்ராஹ புராதநீஃ ஷுபாஃ.
ராஜ்ஞஃ ப்ரமத்தஸ்ய நரிகஸ்ய ஷாபதோ
த்விஜஸ்ய திர்யக் த்வமதாஹ ராகவஃ||2||

கதாசிதே காந்த உபஸ்திதஂ ப்ரபுஂ
ராமஂ ரமா லாலித பாதபஂகஜம்.
ஸௌமித்ரி ராஸாதித ஷுத்தபாவநஃ
ப்ரணம்ய பக்த்யா விநயாந் விதோ ப்ரவீத்||3||

த்வஂ ஷுத்த போதோஸி ஹி ஸர்வ தேஹிநா-
மாத்மாஸ்ய தீஷோஸி நிராகரிதிஃ ஸ்வயம்.
ப்ரதீயஸே ஜ்ஞாந தரிஷாஂ மஹா மதே
பாதாப்ஜ பரிஂகாஹிதஸஂ கஸஂகிநாம்||4||

அஹஂ ப்ரபந்நோஸ்மி பதாம் புஜஂ ப்ரபோ
பவாபவர்கஂ தவ யோகி பாவிதம்.
யதாஞ்ஜ ஸாஜ்ஞா நமபார வாரிதிஂ
ஸுகஂ தரிஷ்யாமி ததாநுஷாதி மாம்||5||

ஷ்ருத்வாத ஸௌமித்ரி வசோகிலஂ ததா
ப்ராஹ ப்ரபந்நா திர்ஹரஃ ப்ரஸந்நதீஃ.
விஜ்ஞாந மஜ்ஞாந தமஃ ப்ரஷாந்தயே
ஷ்ருதி ப்ரபந்நஂ க்ஷிதி பால பூஷணஃ||6||

ஆதௌ ஸ்வ வர்ணாஷ்ரம வர்ணிதாஃ க்ரியாஃ
கரித்வா ஸமாஸாதித ஷுத்த மாநஸஃ.
ஸமாப்ய தத் பூர்வமுபாத்த ஸாதநஃ
ஸமாஷ்ரயேத் ஸத் குரு மாத்ம லப்தயே||7||

க்ரியா ஷரீரோத்பவ ஹேது ராதரிதா
ப்ரியாப்ரியௌ தௌ பவதஃ ஸுரா கிணஃ.
தர்மேதரௌ தத்ர புநஃ ஷரீரகஂ
புநஃ க்ரியா சக்ரவ தீர்யதே பவஃ||8||

அஜ்ஞாநமே வாஸ்ய ஹி மூல காரணஂ
தத்தா நமே வாத்ர விதௌ விதீயதே.
வித்யைவ தந்நாஷ விதௌ படீயஸீ
ந கர்ம தஜ்ஜஂ ஸ விரோத மீரிதம்||9||

நாஜ்ஞாநஹா நிர்ந ச ராகஸஂ க்ஷயோ
பவேத்ததஃ கர்ம ஸதோஷ முத்பவேத்.
ததஃ புநஃ ஸஂஸரிதிரப்ய வாரிதா
தஸ்மாத் புதோ ஜ்ஞாந விசாரவாந் பவேத்||10||

நநு க்ரியா வேத முகேந சோதிதா
ததைவ வித்யா புருஷார்த ஸாதநம்.
கர்தவ்யதா ப்ராண பரிதஃ ப்ரசோதிதா
வித்யா ஸஹாயத்வ முபைதி ஸா புநஃ||11||

கர்மாகரிதௌ தோஷமபி ஷ்ருதிர் ஜகௌ
தஸ்மாத்ஸதா கார்யமிதஂ முமுக்ஷுணா.
நநு ஸ்வதந்த்ரா த்ருவ கார்ய காரிணீ
வித்யா ந கிஞ்சிந் மநஸாப்ய பேக்ஷதே||12||

ந ஸத்ய கார்யோபி ஹி யத்வதத் வரஃ
ப்ரகாங்க்ஷதே ந்யாநபி காரகாதிகாந்.
ததைவ வித்யா விதிதஃ ப்ரகாஷிதைர்
விஷிஷ்யதே கர்மபிரேவ முக்தயே||13||

கேசித்வதந்தீதி விதர்கவாதிந-
ஸ்ததப்ய ஸதரிஷ்ட விரோத காரணாத்.
தேஹாபிமாநாத பிவர்ததே க்ரியா
வித்யா கதாஹங்க ரிதிதஃ ப்ரஸித்த்யதி||14||

விஷுத்த விஜ்ஞாந விரோச நாஞ்சிதா
வித்யாத்ம வரித்திஷ் சரமேதி பண்யதே.
உதேதி கர்மாகில காரகாதிபிர்
நிஹந்தி வித்யாகில காரகாதிகம்||15||

தஸ்மாத் த்யஜேத் கார்யமஷேஷதஃ ஸுதீர்
வித்யா விரோதாந்ந ஸமுச்சயோ பவேத்.
ஆத்மாநு ஸந்தாந பராயணஃ ஸதா
நிவரித்த ஸர்வேந்த்ரிய வரித்தி கோசரஃ||16||

யாவச் சரீராதிஷு மாய யாத்மதீ-
ஸ்தாவத் விதேயோ விதிவாத கர்மணாம்.
நேதீதி வாக்யைரகிலஂ நிஷித்ய த-
ஜ்ஜ்ஞாத்வா பராத்மாநமத த்யஜேத்ிக்ரயாஃ||17||

யதா பராத்மாத்ம விபேதபேதகஂ
விஜ்ஞாந மாத்மந்யவபாதி பாஸ்வரம்.
ததைவ மாயா ப்ரவிலீய தேஞ்ஜஸா
ஸகாரகா காரண மாத்மஸஂ ஸரிதேஃ||18||

ஷ்ருதி ப்ரமாணாபி விநாஷிதா ச ஸா
கதஂ பவிஷ்யத்யபி கார்ய காரிணீ.
விஜ்ஞாந மாத்ராதம லாத்விதீயத-
ஸ்தஸ்மாத வித்யா ந புநர் பவிஷ்யதி||19||

யதி ஸ்ம நஷ்டா ந புநஃ ப்ரஸூயதே
கர்தாஹமஸ்யேதி மதிஃ கதஂ பவேத்.
தஸ்மாத் ஸ்வதந்த்ரா ந கிமப்ய பேக்ஷதே
வித்யா விமோக்ஷாய விபாதி கேவலா||20||

ஸா தைத்திரீய ஷ்ருதிராஹ ஸாதரஂ
ந்யாஸஂ ப்ரஷஸ் தாகில கர்மணாஂ ஸ்புடம்.
ஏதாவதித்யாஹ ச வாஜிநாஂ ஷ்ருதிர் ஜ்ஞாநஂ
விமோக்ஷாய ந கர்ம ஸாதநம்||21||

வித்யா ஸமத்வேந து தர்ஷிதஸ் த்வயா
க்ரதுர்ந தரிஷ்டாந்த உதாஹரிதஃ ஸமஃ.
பலைஃ பரிதக்த்வாத் பஹுகாரகைஃ க்ரதுஃ
ஸஂஸாத்யதே ஜ்ஞாந மதோ விபர்யயம்||22||

ஸ ப்ரத்யவாயோ ஹ்யஹ மித்யநாத்
மதீரஜ்ஞ ப்ரஸித்தா ந து தத்த்வதர்ஷிநஃ.
தஸ்மாத் புதைஸ் த்யாஜ்யம விக்ரி யாத்மபிர்
விதாநதஃ கர்ம விதி ப்ரகாஷிதம்||23||

ஷ்ரத்தாந்விதஸ் தத்த்வ மஸீதி வாக்யதோ
குரோஃ ப்ரஸாதாதபி ஷுத்த மாநஸஃ.
விஜ்ஞாய சைகாத்ம்ய மதாத்ம ஜீவயோஃ
ஸுகீ பவேந் மேருரிவாப்ர கம்பநஃ||24||

ஆதௌ பதார்தா கதிர்ஹி காரணஂ
வாக்யார்த விஜ்ஞாந விதௌ விதாநதஃ.
தத்த்வம் பதார்தௌ பரமாத்ம ஜீவகா-
வஸீதி சைகாத்ம்ய மதாநயோர் பவேத்||25||

ப்ரத்யக் பரோக்ஷாதி விரோத மாத்மநோர்
விஹாய ஸங்கரிஹ்ய தயோஷ்சி தாத்மதாம்.
ஸஂஷோதிதாஂ லக்ஷணயா ச லக்ஷிதாஂ
ஜ்ஞாத்வா ஸ்வ மாத்மாநம தாத்வயோ பவேத்||26||

ஏகாத்மக த்வாஜ் ஜஹதீ ந ஸம்பவேத்
ததாஜஹல் லக்ஷணதா விரோததஃ.
ஸோயம் பதார்தாவிவ பாக லக்ஷணா
யுஜ்யேத தத்த்வம் பதயோர தோஷதஃ||27||

ரஸாதி பஞ்சீகரித பூத ஸம்பவஂ
போகாலயஂ துஃக ஸுகாதி கர்மணாம்.
ஷரீர மாத்யந்தவதாதி கர்மஜஂ
மாயாமயஂ ஸ்தூல முபாதி மாத்மநஃ||28||

ஸூக்ஷ்மஂ மநோ புத்தித ஷேத்ரியைர்யுதஂ
ப்ராணைர பஞ்சீ கரிதபூத ஸம்பவம்.
போக்துஃ ஸுகாதே ரநுஸாதநஂ பவேச்
சரீர மந்யத் விதுராத்மநோ புதாஃ||29||

அநாத்ய நிர்வாச்யம பீஹ காரணஂ
மாயா ப்ரதாநஂ து பரஂ ஷரீரகம்.
உபாதி பேதாத்து யதஃ பரிதக் ஸ்திதஂ
ஸ்வாத்மாந மாத்மந் யவதாரயேத் க்ரமாத்||30||

கோஷேஷ்வயஂ தேஷு து தத்த தாகரிதிர்
விபாதி ஸங்காத்ஸ்படி கோபலா யதா.
அஸஂகரூபோய மஜோ யதோத்வயோ
விஜ்ஞாய தேஸ்மிந் பரிதோ விசாரிதே||31||

புத்தேஸ் த்ரிதா வரித்திர பீஹ தரிஷ்யதே
ஸ்வப்நாதி பேதேந குண த்ரயாத் மநஃ.
அந்யோந்ய தோஸ்மிந் வ்யபிசாரதோ மரிஷா
நித்யே பரே ப்ரஹ்மணி கேவலே ஷிவே||32||

தேஹேந்த்ரிய ப்ராண மநஷ் சிதாத்மநாஂ
ஸங்காத ஜஸ்த்ரஂ பரிவர்ததே தியஃ.
வரித்திஸ் தமோ மூல தயாஜ்ஞ லக்ஷணா
யாவத் பவேத் தாவதஸௌ பவோத் பவஃ||33||

நேதி ப்ரமாணேந நிராகரி தாகிலோ
ஹரிதா ஸமாஸ்வாதிதசித்க நாமரிதஃ.
த்யஜேதஷேஷஂ ஜகதாத்த ஸத்ரஸஂ
பீத்வா யதாம்பஃ ப்ரஜஹாதி தத்பலம்||34||

கதாசிதாத்மா ந மரிதோ ந ஜாயதே
ந க்ஷீயதே நாபி விவர்ததே நவஃ.
நிரஸ்த ஸர்வாதிஷயஃ ஸுகாத்மகஃ
ஸ்வயம் ப்ரபஃ ஸர்வ கதோய மத்வயஃ||35||

ஏவஂவிதே ஜ்ஞாந மயே ஸுகாத்மகே
கதஂ பவோ துஃகமயஃ ப்ரதீயதே.
அஜ்ஞாந தோத்யாஸவஷாத் ப்ரகாஷதே
ஜ்ஞாநே விலீயேத விரோததஃ க்ஷணாத்||36||

யதந்ய தந்யத்ர விபாவ்யதே ப்ரமா-
தத்யா ஸமித்யாஹுரமுஂ விபஷ்சிதஃ.
அஸர்ப பூதேஹி விபாவநஂ யதா
ரஜ்ஜ்வாதிகே தத்வத பீஷ்வரே ஜகத்||37||

விகல்பமாயா ரஹிதே சிதாத்மகே-
ஹங்கார ஏஷ ப்ரதமஃ ப்ரகல்பிதஃ.
அத்யாஸ ஏவாத்மநி ஸர்வ காரணே
நிராமயே ப்ரஹ்மணி கேவலே பரே||38||

இச்சாதி ராகாதி ஸுகாதி தர்மிகாஃ
ஸதா தியஃ ஸஂஸரிதி ஹேதவஃ பரே.
யஸ்மாத் ப்ரஸுப்தௌ ததபாவதஃ பரஃ
ஸுக ஸ்வரூபேண விபாவ்யதே ஹி நஃ||39||

அநாத்ய வித்யோத்பவ புத்தி பிம்பிதோ
ஜீவஃ ப்ரகாஷோயமி தீர்யதே சிதஃ.
ஆத்மாதியஃ ஸாக்ஷி தயா பரிதக் ஸ்திதோ
புத்த்யா பரிச்சிந்ந பரஃ ஸ ஏவ ஹி||40||

சித் பிம்பஸாக்ஷ்யாத் மதியாஂ ப்ரஸங்கத-
ஸ்த்வேகத்ர வாஸாதந லாக்தலோ ஹவத்.
அந்யோந்ய மத்யாஸவஷாத் ப்ரதீயதே
ஜடாஜடத்வஂ ச சிதாத்ம சேதஸோஃ||41||

குரோஃ ஸகாஷாதபி வேத வாக்யதஃ
ஸஞ்ஜாத வித்யாநுபவோ நிரீக்ஷ்ய தம்.
ஸ்வாத்மாந மாத்மஸ்த முபாதி வர்ஜிதஂ
த்யஜே தஷேஷஂ ஜடமாத்ம கோசரம்||42||

ப்ரகாஷ ரூபோஹம ஜோஹ மத்வயோ-
ஸகரித் விபாதோஹ மதீவ நிர்மலஃ.
விஷுத்த விஜ்ஞாந கநோ நிராமயஃ
ஸம்பூர்ண ஆநந்த மயோஹம க்ரியஃ||43||

ஸதைவ முக்தோஹம சிந்த்ய ஷக்திமா-
நதீந்த்ரிய ஜ்ஞாநம விக்ரியாத்மகஃ.
அநந்த பாரோஹ மஹர்நிஷஂ புதைர்
விபா விதோஹஂ ஹரிதி வேத வாதிபிஃ||44||

ஏவஂ ஸதாத்மாநம கண்டி தாத்மநா
விசாரமாணஸ்ய விஷுத்த பாவநா.
ஹந்யாத வித்யாம சிரேண காரகை
ரஸாயநஂ யத்வது பாஸிதஂ ருஜஃ||45||

விவிக்த ஆஸீந உபார தேந்த்ரியோ
விநிர்ஜிதாத்மா விமலாந் தராஷயஃ.
விபாவயேதேக மநந்ய ஸாதநோ
விஜ்ஞாநதரிக் கேவல ஆத்மஸஂ ஸ்திதஃ||46||

விஷ்வஂ யதேதத் பரமாத்ம தர்ஷநஂ
விலாபயே தாத்மநி ஸர்வ காரணே.
பூர்ணஷ் சிதாநந்த மயோவதிஷ்டதே
ந வேத பாஹ்யஂ ந ச கிஞ்சிதாந்தரம்||47||

பூர்வஂ ஸமாதேரகிலஂ விசிந்தயே-
தோங்கார மாத்ரஂ ஸசாரசரஂ ஜகத்.
ததேவ வாச்யஂ ப்ரணவோ ஹி வாசகோ
விபாவ்யதே ஜ்ஞாந வஷாந்ந போததஃ||48||

அகாரஸஂஜ்ஞஃ புருஷோ ஹி விஷ்வகோ
ஹ்யுகாரகஸ் தைஜஸ ஈர்யதே க்ரமாத்.
ப்ராஜ்ஞோ மகாரஃ பரிபட்ய தேகிலைஃ
ஸமாதி பூர்வஂ ந து தத்த்வதோ பவேத்||49||

விஷ்வஂ த்வகாரஂ புருஷஂ விலாபயே-
துகார மத்யே பஹுதா வ்யவஸ்திதம்.
ததோ மகாரே ப்ரவிலாப்ய தைஜஸஂ
த்விதீய வர்ணஂ ப்ரணவஸ்ய சாந்திமே||50||

மகாரமப் யாத்மநி சித்கநே பரே
விலாபயேத் ப்ராஜ்ஞ மபீஹ காரணம்.
ஸோஹஂ பரஂ ப்ரஹ்ம ஸதா விமுக்திம-
த்விஜ்ஞாந தரிங் முக்த உபாதிதோ மலஃ||51||

ஏவஂ ஸதா ஜாத பராத்ம பாவநஃ
ஸ்வாநந்த துஷ்டஃ பரிவிஸ்மரி தாகிலஃ.
ஆஸ்தே ஸ நித்யாத்ம ஸுக ப்ரகாஷகஃ
ஸாக்ஷாத் விமுக்தோசல வாரி ஸிந்துவத்||52||

ஏவஂ ஸதாப்யஸ்த ஸமாதி யோகிநோ
நிவரித்த ஸர்வேந்த்ரிய கோசரஸ்ய ஹி.
விநிர்ஜிதா ஷேஷரிபோரஹஂ ஸதா
தரிஷ்யோ பவேயஂ ஜித ஷட் குணாத்மநஃ||53||

த்யாத்வைவ மாத்மாந மஹர்நிஷஂ முநி-
ஸ்திஷ்டேத் ஸதா முக்த ஸமஸ்த பந்தநஃ.
ப்ராரப்தமஷ் நந்நபிமாந வர்ஜிதோ
மய்யேவ ஸாக்ஷாத் ப்ரவி லீயதே ததஃ||54||

ஆதௌ ச மத்யே ச ததைவ சாந்ததோ
பவஂ விதித்வா பய ஷோக காரணம்.
ஹித்வா ஸமஸ்தஂ விதிவாத சோதிதஂ
பஜேத் ஸ்வமாத்மாநமதா கிலாத்மநாம்||55||

ஆத்மந்ய பேதேந விபாவயந்ிநதஂ
பவத்ய பேதேந மயாத்மநா ததா.
யதா ஜலஂ வாரி நிதௌ யதா பயஃ
க்ஷீரே வியத் வ்யோம்ந்யநிலே யதாநிலஃ||56||

இத்தஂ யதீக்ஷேத ஹி லோகஸஂ ஸ்திதோ
ஜகந் மரிஷைவேதி விபாவ யந்முநிஃ.
நிராகரிதத்வாச் ச்ருதி யுக்தி மாநதோ
யதேந்து பேதோ திஷி திக் ப்ரமாதயஃ||57||

யாவந்ந பஷ்யே தகிலஂ மதாத்மகஂ
தாவந் மதாராதந தத்பரோ பவேத்.
ஷ்ரத்தாலுரத் யூர்ஜித பக்தி லக்ஷணோ
யஸ் தஸ்ய தரிஷ் யோஹ மஹர்நிஷஂ ஹரிதி||58||

ரஹஸ்ய மேதச் ச்ருதிஸார ஸங்க்ரஹஂ
மயா விநிஷ்சித்ய தவோதிதஂ ப்ரிய.
யஸ் த்வேததா லோசயதீஹ புத்திமாந்
ஸ முச்யதே பாதக ராஷிபிஃ க்ஷணாத்||59||

ப்ராதர்யதீதஂ பரி தரிஷ்யதே ஜகந்
மாயைவ ஸர்வஂ பரி ஹரித்ய சேதஸா.
மத்பாவநா பாவித ஷுத்த மாநஸஃ
ஸுகீ பவாநந்த மயோ நிராமயஃ||60||

யஃ ஸேவதே மாமகுணஂ குணாத்பரஂ
ஹரிதா கதா வா யதி வா குணாத்மகம்.
ஸோஹஂ ஸ்வபாதாஞ்சித ரேணுபிஃ ஸ்பரிஷந்
புநாதி லோக த்ரிதயஂ யதா ரவிஃ||61||

விஜ்ஞாந மேததகிலஂ ஷ்ருதி ஸாரமேகஂ
வேதாந்த வேத்யசரணேந மயைவ கீதம்.
யஃ ஷ்ரத்தயா பரிபடேத் குரு பக்தி யுக்தோ
மத் ரூபமேதி யதி மத் வசநேஷு பக்திஃ||62||

||இதி ஷ்ரீமதத்யாத்ம ராமாயணே உமா மஹேஷ்வரஸஂவாதே உத்தர காண்டே பஞ்சமஃ ஸர்கஃ||

———————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம் /ஸ்ரீ ராம பஞ்சரத்நம் /ஸ்ரீ ராம மங்களம்–

January 21, 2021

ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம் –

ரசன:புத கௌஷிக ரிஷி
ஓம் அஸ்ய ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஷிக ரிஷிஃ
ஸ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அநுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஸ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஸ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே விநியோகஃ

த்யானம்
த்யாயேதா ஜானு பாஹும் த்றுத ஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோ வஸானம் நவ கமல தளஸ்பர்தி நேத்ரம் ப்ரஸன்நம்
வாமாம் காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
நாநாலம்கார தீப்தம் தததமுரு ஜடா மம்டலம் ராம சம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுநாதஸ்ய ஶத கோடி ப்ரவிஸ்தரம்
ஏகைக மக்ஷரம் பும்ஸாம் மஹா பாதக நஶனம்

த்யாத்வா நீலோத் பல ஶ்யாமம் ராமம் ராஜீவ லோசநம்
ஜாநகீ லக்ஷ்மணோபேதம் ஜடா முகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர் பாண பாணிம் னக்தம் சராம் தகம்
ஸ்வ லீலயா ஜகத்ராது மாவிர்பூத மஜம் விபும்

ராம ரக்ஷாம் படேத் ப்ராஜ்ஞஃ பாபக்நீம் ஸர்வ காமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத் மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரி வத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யா நிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶ கார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ந்ய ஜித்
மத்யம் பாது கரத் வம்ஸீ னாபிம் ஜாம்பவ தாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்–ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக் ஷகுல வினா ஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம் தகஃ
பாதௌ விபீஷண ஸ்ரீதஃபாது ராமோ ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோ பேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்–சத்ம சாரிணஃ
ந த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராம நாமபிஃ

ராமேதி ராம பத்ரேதி ராம சம்த்ரேதி வாஸ்மரன்
நரோ நலிப்யதே பாபைர் புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ் ஜைத்ரைக மம்த்ரேண ராமநாம்நாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத் தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராம கவசம் ஸ்மரேத்
அவ்யாஹ தாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்நே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புத கௌஶிகஃ

ஆராமஃ கல்ப வ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரி லோகாநாம் ராமஃ ஸ்ரீமான் ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூப ஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹா பலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜிநாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்ம சாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராம லக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வ ஸத்வாநாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல நிஹம்தாரௌ த்ராயேதாம் நோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக நிஷம்க ஸம்கிநௌ
ரக்ஷணாய மம ராம லக்ஷணா வக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸந்நத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோ ரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜாநகீ வல்லபஃ ஸ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேந்நித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமே தாதிகம் புண்யம் ஸம்ப்ராப்நோதி நஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதா வாஸஸம்
ஸ்துவம்தி நாபிர்–திவ்யைர்–நதே ஸம்ஸாரிணோ நராஹ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ர ப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்ய ஸம்தம் தஶரத தனயம் ஶ்யாமலம் ஶாம்த மூர்திம்
வம்தேலோகாபி ராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய நாதாய ஸீதாயாஃ பதயே நமஹ

ஸ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஸ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஸ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஸ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஸ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஸ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஸ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா நமாமி
ஸ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதா ராமோ மத்–பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்–ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
நான்யம் ஜானே நைவ ந ஜாநே

தக்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜநகாத்மஜா
புரதோமாருதிர்–யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரண ரம்க தீரம்
ராஜீவ நேத்ரம் ரகுவம்ஶ நாதம்
காருண்ய ரூபம் கருணாகரம் தம்
ஸ்ரீராம சம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோபூயோ நமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யம தூதாநாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜ மணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா நிஶா சரசமூ ராமாய தஸ்மை நமஹ
ராமான் நாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஸ்ரீபுதகௌஷிக முனி விரசிதம் ஸ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

————-

ராமனிடம் ஐந்து விதமான வீர குணங்கள் உள்ளன. இவைகளைப் பின்பற்ற ஒருவனுக்கு மஹா வீரம் தேவை.
ஏனெனில் கஷ்ட திசையில் மாட்டிக் கொண்ட நல்லவர்களும் கூட, எளிதில் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு.
ஆனால் ராம பிரானோ எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்த போதிலும் தர்மத்தின் வழியையே கடைப் பிடித்தான்.
அதனால் அவனிடம் ஐந்து நற்குணங்கள் இருப்பதாகப் புலவர் பெருமக்கள் போற்றுவர்–

தியாக வீரம்
கைகேயியின் வசப்பட்ட தசரதன் சொல்லிய சொல்லுக்காக, அந்த சத்ய பராக்ரமன் ராமன்,
தனக்குக் கிடைக்கவேண்டிய பெரும் அரச பதவியைத் தியாகம் செய்தான். இதைவிடப் பெரிய தியாகம் உளதோ!
அப்பா, அம்மாவை எதிர்த்து போர்கொடி தூக்குவோம் என்று சூளுரைத்த லெட்சுமணனை
அமைதிப்படுத்தி அவனையும் தன் வழிப்படுத்தினான்.
தயா வீரம்
வேடர் குலத் தலைவனான குகனையும், குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும், அரக்கர் குல விபீஷணனையும்
தனது சஹோதரர்களாக ஏற்றான். சாதி, குல வேற்றுமைகளை மிதித்து நசுக்கிய முதல் மாவீரன் அவன்.
எல்லோரிடமும் தயை என்னும் இரக்கம் காட்டினான். சபரிக்கு மோட்சம் கொடுத்தான்.
மாபெரும் தவறு இழைத்த அஹல்யைக்கு சாப விமோசனம் அளித்தான்.
வித்யா வீரம்
அவனுடைய விவேகம், வித்யா வீரம் எனப்படும். போர்க்களத்தில் ஆயுதங்களை இழந்த இராவணனைக் கொல்லாது
“இன்று போய் நாளை வா” — என்று இயம்பினான். சீதையை ஒப்படைத்தால் உயிர்ப்பிச்சை போடுவதாகக் கூறினான்.
ஒரு வண்ணான் சொன்ன சொல்லை மதித்து, தனது மனைவியின் தூய்மையை, கற்பினை நிலநாட்ட அவளை
பூக்குழி இறங்க உத்தரவிட்டான். ஜனநாயகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய முதல் தலைவன் அவன்.
இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.
பராக்ரமவீரம்
21 தலை முறை க்ஷத்ரிய மன்னர்களை அழித்த பரசுராமனையும் வெற்றி கொண்டு தனது பராக்ரமத்தை நிலநாட்டினான் ராமன்.
ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைத்ததோடு, ஏழு கோடி அவுணர்களையும் அழித்தொழித்தான்.
ராவண சம்ஹாரம், அவனது வீர பராக்ரமத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
தர்ம வீரன்
“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று புதுநெறி புதுக்கிய நாயகன் அவன்.
எல்லா அரசர்களும் பல மனைவியரை மணக்க, சீதையைத் தவிர வேறு ஒரு பெண்ணை சிந்தையாலும் தொடாதவன் அவன்.
சத்திய நெறி தவறாதவன்

அவன் ஸ்ருதபாஷி= உண்மை விளம்பி
அவன் மிதபாஷி = குறைவாகப் பேசுபவன்
அவன் ஹித பாஷி = இனிமையான சொற்களையே நவில்வான்
பூர்வபாஷி = சிறிதும் தலைக் கனம் இல்லாமல் தானே வலியச் சென்று நலம் விசாரிப்பவன்.

பஞ்சவீரா:சமாக்யாதா ராம ஏவ து பஞ்சதா
ரகுவீர இதி க்யாத: சர்வ வீரோப லக்ஷண:

ஓம் தா3ச’ரத2யே வித்3மஹே ஸீதாவல்லபா4ய தீ4மஹீ | தன்னோ ராம: ப்ரசோத3யாத் ||

ஓம் தசரதனின் அருமை மைந்தனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் சீதையின் கணவனை நாம் தியாநிப்போம்.
அந்த ராமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.

ஓம் பரமஹம்ஸாய வித்3மஹே மஹாதத்வாய தீ4மஹி | தன்னோ ஹம்ஸ: ப்ரசோத3யாத்||

உன்னதமான அன்னப் பறவையை நாம் அறிவோமாகுக!
அதற்காக மெய்ப்பொருளின் மீது நாம் தியானிப்போம்.
அன்னப் பறவையே நம்மை அதனிடம் கொண்டு செலுத்தட்டும்.
(அன்னப் பறவை என்பது இங்கு குருவைக் குறிக்கும்-ஸத்திலிருந்து அஸத்தைப் பிரிக்க வல்லவர் அவரே!
ஹம்ஸ என்பது பரமஹம்ஸரையும் குறிக்கும்.)

——————

ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய ஸ்ரீ ராம பஞ்சரத்நம்

கஞ்ஜாத பத்ராயத லோசநாய கர்ணாவதம் ஸோஜ்வல குண்டலாய
காருண்ய பாத்ராய ஸுவம்சஜாய நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய

வித்யுந் நிபாம் போத ஸுவிக்ரஹாய வித்யாதரைஸ் ஸம்ஸ்துத ஸத் குணாய
வீராவதாராய விரோதி ஹந்த்ரே நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய

ஸம்ஸக்த திவ்யாயுத கார்முகாய ஸமுத்ர கர்வா பஹராயுதாய
ஸுக்ரீவ மித்ராய ஸுராரி ஹந்த்ரே நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய3

பீதாம்பரா லங்க்ருத மத்யகாய பிதா மஹேந்த்ராமர வந்திதாய
பித்ரே ஸ்வ பக்தஸ்ய ஜநஸ்ய மாத்ரே நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய

நமோ நமஸ்தே அகில பூஜிதாய நமோ நமஶ் சந்த்ர நிபாநநாய
நமோ நமஸ்தே ரகுவம்ஶ ஜாய நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய 5

இமாநி பஞ்ச ரத்நாநி த்ரிஸந்த்யம் ய: படேந் நர:
ஸர்வ பாப விநிர் முக்தஸ் ஸ யாதி பரமாம் கதிம்

————–

ஸ்ரீ ராம மங்களம்
மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஶ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஶ்லோகாய மங்களம்

விஶ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஶ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம் 12

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஒப்பாய்வு – பால காண்டம்-முனைவர் ஸ்ரீ அ.அ. மணவாளன், பேராசிரியர்–

January 10, 2021

ஒப்பாய்வு பெறும் பால காண்டப் பகுதிகள்

கீழ்வரும் பொருட்கூறுகளின் அடிப்படையில் பால காண்டங்களைப் பற்றிய இவ் ஒப்பியலாய்வு நிகழ்த்தப் பெறுகிறது.

காண்ட அமைப்பு, காப்பிய நோக்கம், காப்பியத் தொடக்கம், நாட்டு
நகர வருணனைகள், இராமனின் பிறப்பு, தாடகை வதம், அகலிகை
சாப நீக்கம், சீதையின் பிறப்பும் திருமணமும், பரசுராமர் எதிர்ப்பு.

காண்ட அமைப்பு

பால காண்டம் 77 சருக்கங்கள், 2355 சுலோகங்கள். முதல் நான்கு
சருக்கங்கள் (220 சுலோகங்கள்) பதிகம் போல அமைந்தது. வான்மீகி
நாரதரைக் கண்டு இராமர் வரலாறு அறிதல், பிரம்ம தேவர்
வான்மீகியின் இராமாயண முயற்சியை ஆசீர்வதித்தல், வான்மீகி
நிட்டையில் அமர்ந்து இராமாயண வரலாறு முழுவதையும்
ஞானக்கண்ணால் கண்டு உணர்ந்து காவியத்தை இயற்றி முடித்தல், குச
லவர்கள் இருவரும் அக்காவியத்தை இனிமையாகப் பாடுவது கேட்டு
இராமபிரான் அவர்களைத் தம் அவைக்கு அழைத்து
அக்காவியத்தைப் பாடுமாறு வேண்ட அவ்விருவரும் பாடத்
தொடங்குதல் ஆகிய செய்திகளைத் தருகின்றன. ஏறக் குறையப்
பாயிரம் போன்ற பணியினை இச் சருக்கங்கள் செய்கின்றன. ஐந்தாம்
சருக்கம் தொடங்கி எழுபத்தேழாம் சருக்கம் முடிய 76 சருக்கங்களா
யமைத்து 2135 சுலோகங்களை உடையதாக வான்மீகியின்
பாலகாண்டம் விளங்குகிறது.
கம்பராமாயணம், சென்னைக் கம்பன் கழகப் பதிப்பின்படி,
பாலகாண்டம் பாயிரம் தவிர்த்து 23 படலங்களையும் 1312
விருத்தங்களையும் உடையதாக விளங்குகிறது. வை. மு. கோ.,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆழ்வார் திருநகரி, கலாட்சேத்ரா
போன்ற பதிப்புகள் படல எண்ணிக்கையிலும், பாடல்
எண்ணிக்கையிலும், படலப் பெயர்களிலும் வேறுபடுவதைக் காணலாம்.

தெலுகு இராமாயணங்களான ரங்க நாத ராமாயணம், பாஸ்கர
ராமாயணம், மொல்ல ராமாயணம் மூன்றிலும் காண்ட உட்பிரிவுகள்
இல்லை. குமார வான்மீகியின் தொரவெ இராமாயணம்
காண்டந்தோறும் சந்தி என்னும் உட்பிரிவை உடையதாக
விளங்குகிறது. மலையாள இராமாயணங்களில் காண்டப் பிரிவுகள்
உண்டு.

துளசி இராமாயணத்தின் பாலகாண்டம் 361 ஈரடிப் பாக்களையும்
(தோகா) ஒவ்வொரு ஈரடிப் பாவிற்குப் பின்னர் நான்கு நான்கு
நாலடிப் பாக்களையும் (சௌபாயி) உடையதாக விளங்குகிறது. சிற்சில
இடங்களில் ஒரே எண்ணின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட ஈரடிப்
பாக்களும் (29. அ. ஆ. இ), நான்கிற்கும் மேற்பட்ட நாலடிப்
பாக்களும் (327), சில இடங்களில் நாலடிப் பாவிற்கும் ஈரடிப்
பாவிற்கும் இடையில் இயைபுத்தொடை அமைந்த நாலடிச் சந்தப்
பாடல்களும் 326), விரவிக் காணப்படுகின்றன. காண்டப் பிரிவு தவிர,
படலம், சருக்கம் போன்ற உட்பிரிவுகள் உடையதாகத் துளசியின்
காப்பியம் அமையவில்லை.

பல்வேறு இராமாயண நூல்களை நோக்குமிடத்து வான்மீகத்தைப்
பின்பற்றிய இராமாயணங்கள் எல்லாம் காண்டப் பிரிவுகளில் வான்மீகி
இராமாயணத்தை ஒத்து அமைகின்றன என்றும், காண்டத்தின்
உட்பிரிவுகளைப் பொறுத்தவரையில் தத்தம் இலக்கிய மரபிற்கேற்பப்
படலம், சருக்கம், சந்தி போன்ற உட்பிரிவுகளைக் கொண்டு
அமைகின்றன என்றும், சில உட்பிரிவுகளே இல்லாமல் பாடல்
எண்களை மட்டும் கொண்டு அமைந்துள்ளன என்றும் அறிகிறோம்.

துளசி இராமாயணத்தின் அமைப்பைப் பொறுத்த வரையில், 361
ஈரடிப் பாடல்களையும் அவற்றிற்குரிய நாலடிப் பாடல்களையும்
உடையதாகக் காணுகிறோம். பாலகாண்டத்தின் முதல் 43 ஈரடிப்
பாடல்களை வாழ்த்து, அவையடக்கம் ஆகியவற்றைக் கொண்ட
பாயிரப் பகுதியாக விளங்குகிறது. சிவன், சக்தி இருவரின் விவாதம்,
தக்கன் வேள்வி அழிவு, சிவன் – சக்தி திருமணம், மன்மதன் அழிவு,
இராமனின் அவதாரத்திற்குரிய காரணங்கள்,
நாரதன் வரவு – மனு, சதரூபன் ஆகியோர் தவமும் வரமும்,
பிரதாப பானுவின் வரலாறு, இராவணனின் பிறப்பும், தவமும், வரமும்,
கொடுமையும், பூமி தேவியின் முறையீடு, திருமால் அவதாரம் எடுக்க
இசைதல் எனப் பல செய்திகள் 44 முதல் 187 வரையிலான
ஈரடிப்பாக்களில் பேசப்படுகின்றன. 188 முதல் 361 வரையிலான
எஞ்சியுள்ள (காண்டத்தில்பாதிக்கும் குறைவான) 174 ஈரடியில்
இராமனின் பிறப்பு முதலான பாலகாண்டச் செய்திகள்
பேசப்படுகின்றன. இடைக்காலன் புராணங்களின் செல்வாக்கையும்,
பிற்கால வழிபாட்டு, பிரச்சார பக்தி இயக்கத்தின் தாக்கத்தையும் துளசி
ராமாயணம் தெற்றென விளக்குகிறது,

பால காண்டத்தைப் பொறுத்த வரையில், வான்மீகி கம்பன், துளசி,
பாஸ்கரர், நரஹரி ஆகிய கவிஞர்கள் தம் காண்டப் பொருளை
எவ்வாறு அமைத்து உள்ளனர் என்பதை அடுத்த பக்கத்தில் உள்ள
அட்டவணை விளக்குகிறது.

காப்பிய நோக்கம்

குறிக்கோள் மனிதன் ஒருவனைப் படைத்துக் காட்டுவதை வான்மீகி
இராமாயணம் நோக்காக உடையது.

பாகவத புராணம், நரசிம்ம புராணம், அத்யாத்ம ராமாயணம்,
அற்புத ராமாயணம், வசிஷ்ட ராமாயணம் ஆகியன இராமனைத்
திருமாலின் அவதாரமாகக் கருதி அவன் தீயவர்களை அடக்கி
நல்லவர்களைக் காப்பதற்காக மேற்கொண்ட அவதாரச் செயல்களை
விளக்கி, ஆன்மீக உணர்வுகளை ஊட்டுவதை நோக்கமாகக்
கொண்டுள்ளன. மானுடக் காப்பியம் என்னும் நிலையில் இருந்து
விலகிப் புராணப் பாங்கு உடையனவாக இவை இயற்றப் பெற்றுள்ளன.

தசரத ஜாதகம், தசரத கதனம் என்னும் பௌத்த நூல்களும்,
விமலசூரியின் பௌம சரிதம், இரவிசேனரின் பத்மபுராணம்,
குணபத்ரனின் உத்தரபுராணம், கன்னட பம்ப ராமாயணம் ஆகிய
சமண நூல்களும் தத்தம் சமயப் பேருண்மைகளைக்
கடைப்பிடித்தொழுகும் குறிக்கோள் பாத்திரமாக இராமனைப்
படைத்துக் காட்டுகின்றன. பாடு பொருளில் வான்மீகியின் மூலக்
கதையிலிருந்தும், பாகவத புராணம் முதலான வடமொழி இராமாயணக்
கதைகளிலிருந்தும் இவை பெரிதும் வேறுபடுகின்றன. காப்பிய
மாந்தர்களின் பெயர்களை மட்டும் மாற்றாமல், காப்பிய நோக்கம்,
கதை நிகழ்ச்சிகள், காப்பிய மாந்தர்களின் தோற்றம், காப்பிய

வால்மீகி -77 -சர்க்கம் -2355 ஸ்லோகங்கள் –
கம்பர் -21 படலங்கள் -1312-பாடல்கள்

தெலுகு மொழியின் முதல் இராமாயணக் காப்பியமாகிய ரங்கநாத
இராமாயணம் நீண்ட வாழ்த்துப் பகுதியைக் கொண்டுள்ளது. சரஸ்வதி,
கணபதி முதலான பல கடவுளர்களையும் வான்மீகி முனிவரையும் தம்
காப்பிய வெற்றிக்காக வணங்கும் பாங்கு காணப்பெறுகிறது.
இதனையடுத்துத் தோன்றிய பாஸ்கர இராமாயணமும் மொல்ல
இராமாயணமும் இவ்வாறே பன்முக வாழ்த்தை உடையனவாக இயற்றப்
பெற்றுள்ளன. கன்னட முதல் இராமாயணக் காப்பியமாகிய
பம்பராமயணததில் அருகக் கடவுள் வணக்கம் காப்பிய நிறைவுக்கு
ஆசிவேண்டும் பான்மையில் அமைந்துள்ளது. இதனையடுத்துத்
தோன்றிய குமாரவான்மீகியின் தொரவெ இராமாயணத்தின் முதற்
சந்தி (படலம்) முழுவதும் பன்முகக் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது.
பெருவழக்காக வழங்கும் மலையாள இராமாயனங்களில் இராம
பணிக்கரின் கன்னச இராமாயனமும், எழுத்தச்சனின் அத்யாத்ம ராமா

யணமும் குறிப்பிடத்தக்கவை. இவை இரண்டுமே பிரம்மா, கணபதி,
சரஸ்வதி, சிவன் முதலான கடவுளர்களையும், வான்மீகி முதலான
முனிவர்களையும், பிராமணர், குருமார், ஆசிரியர் போன்ற
சான்றோர்களையும் வணங்கித் துதிக்கும் நீண்ட வாழ்த்துப்
பகுதிகளைக் கொண்டுள்ளன. துளசிதாசர் தம் வாழ்த்துப் பகுதியில்
வாணி, விநாயகர், பவானி, சங்கரன், தம் ஆசிரியர், வான்மீகி,
அனுமன், சீதை, இராமன் ஆகியோர்க்கு வணக்கம் செலுத்துகிறார்.
தாம் இராமாயணத்தை இயற்றிய காரணத்தைக் கூறிய பிறகு மீண்டும்
கணேசர், விஷ்ணு, சிவன், தம் ஆசிரியர், அந்தணர், துறவியர்,
சான்றோர் ஆகியோரை வணங்குகிறார். சான்றோர்க்கு மட்டுமன்றித்
தீயோர்க்கும் வாழ்த்தில் இடம் தந்தவர் காப்பிய உலகில் துளசிதாசர்
ஒருவர்தான் போலும். பிறர் துன்பம் கண்டு மகிழ்ந்தும், பிறர்
ஆக்கம் கண்டு பொறாது பொருமி வருந்தியும் பிறர்க்கு கேடு
சூழ்வதில் இன்பம் காணும் தீயோரைத் தம் இரு கையெடுத்து
வணங்குவதாகக் கூறுகிறார். எனவேதான், கடவுளர், அரக்கர்,
பாம்புகள், பறவைகள், கந்தர்வர், கின்னரர், பேய்க்கணம் எனப்
பல்வேறுபட்டவர்களையும் துளசிதாசர் வாழ்த்துகிறார்.

மேற்கண்ட காப்பியங்களின் வாழ்த்துப் பகுதிகளைத் தொகுத்து
நோக்குமிடத்துக் கீழ்க்காணும் செய்திகள் புலனாகின்றன.

ஆதிகாவிய கவிஞராகிய வான்மீகி இராமனின் சரிதத்தைக்
கூறப்புகுந்தாரே தவிர, கடவுள் வாழ்த்தாக எந்தக் இறைவனையும்
வணங்கவில்லை. தலைமுறைகள் பலவாக மாறி வந்தபோது வான்மீகி
இராமாயணத்தை ஓதியவர்கள் தத்தம் மரபுக்கேற்பப் பல
தெய்வங்களை வணங்கும் வாழ்த்துச் சுலோகங்களை எழுதி
வைத்துள்ளமையைப் பிற்கால ஏடுகள் காட்டுகின்றன. எனினும், அவை
நூலுள் இடம் பெறாமல் முற்சேர்க்கையாகக் காணப்படுகின்றன.
வடபுல, தென்புலமாகிய இருவழக்கு (Northern Recension and
Southern Recensuion) ஏடுகளிலும் இத்தன்மை கணப்படுகிறது.

கம்பன் காப்பியத்தில் முதற் பாடலில் பரம்பொருள் வணக்கம்
சொல்லப்படுகிறது. பிற காண்ட முகப்புகளில் காணப்பெறும்
பாடல்களுள் மூன்று பரம்பொருளையும், இரண்டு இராமனையும்
வாழ்த்துவனவாக உள்ளன. அதனாலும், ஏற்புடைக் கடவுளாதலாலும்
கம்பனின் கடவுள் வாழ்த்தைத் திருமால் வாழ்த்தாகக் கொள்வோரும்
உளர். பாடலைப் பொறுத்தவரை பொதுவில் பரம்பொருளின்
தன்மையைப் பகர்வதாக மட்டுமே தோன்றுகிறது. சேக்கிழாரின்
பாயிரத்தில் வரும் வாழ்த்தை நோக்கினால்இவ்வேறுபாடு இனிது புலனாகும். பக்தி இயக்கத்தின் பண்பாட்டு
விளைச்சலாக இடைக்கால இலக்கியங்கள் தமிழில் பெருகிய காலத்தே
தலைமுறை மாற மாறக் கம்பனைக் கற்றவர்களும்
பெயர்த்தெழுதியவர்களும் தத்தம் அநுபவம், ஆர்வம், சார்பு
போன்றவற்றின் விளைவாக நம்மாழ்வார், கலைமகள், அயன், அரன்,
விநாயகர் போன்ற பிற கடவுளர் பற்றியும், இராமன், சீதை, அனுமன்
போன்ற இராமாயணப் பாத்திரங்கள் பற்றியும் வாழ்த்துப் பாடல்களைக்
கம்பன் கவியெனவே தோன்றுமாறு யாத்து நூலின் பாயிரப் பகுதியிலே
சேர்த்திருக்கலாம் எனவும் தோன்றுகிறது. இவற்றைக் கம்பன் கழகப்
பதிப்பு மிகைப்பாடல்களாகக் காட்டுகிறது.

தெலுகு இராமாயணங்கள் கி. பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்த்
தோன்றியவை. ஒப்பாய்வுக்கு மேற்கொள்ளப்பெற்ற மூன்று இராமாயண
நூல்களும் கோதாவரி, கிருஷ்ணாவின் சமவெளிப் பகுதகளில்
இயற்றப்பெற்றவை. தமிழ்ச் சோழ அரச குடும்பத்தோடு பல
நூற்றாண்டுகளாகப் பல வழிகளில் தொடர்புடையவை இப்பகுதிகள்
என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. பக்தி இலக்கிய மரபு
இப்பகுதிகளின் வழியாக வடபுல இலக்கியங்கட்கு எட்டியது. எனவே,
சைவ, வைணவ, புராண மரபுகளுக்கு உட்பட்ட பல்வேறு
கடவுளர்களின் வாழ்த்தைத் தெலுகு இராமாயணக் கவிஞர்களே
இயற்றியுள்ளனர். ஆதலின் நூலின் பகுதியாகவ இவை
அமைந்துள்ளன எனக் கொள்ள நேர்கிறது.

விமலசூரியின் பௌம சரிதமாகிய ஜைன ராமாயணத்தைப்
பின்பற்றி எழுந்த கன்னட பம்ப ராமாயணம் அருகக் கடவுள்
வாழ்த்தை மட்டும் பெற்றுள்ளது. பிற கடவுளர் வாழ்த்து காணப்
பெறவில்லை. இதற்கு மிகவும் பிற்பட்டுத் தோன்றியது தொரவெ
இராமாயணம். பக்தி இலக்கியப் பண்பாடு மேல்தட்டு மக்களோடு
அமையாமல் சாதாரண, கல்வியறிவு முழுமைபெறும் வாய்ப்பற்ற
பொதுமக்களிடையே சமயச் சொற்பொழிவுகள் கூட்டு வழிபாடு
(பஜனை) என்னும் வடிவில் பரவியிருந்த காலத்தே இது தோன்றியது.
எனவே, இதன் வாழ்த்துப் பகுதியில் மும்மூர்த்திகள், தேவகணங்கள்,
விநாயகர், சரஸ்வதி முதலாய தெய்வங்கள், வான்மீகி முதலான
முந்தைய கவிஞர்கள், சான்றோர்கள், சமயத் தலைவர்கள் எனப்பல
வேறுபட்ட தலைமைகளைத் தொழும் பன்முக வாழ்த்தினைத்
தொரவெ இராமாயணத்தில் காண்கிறோம்.

மலையாள இராமாயணங்களும் இதே காலகட்டத்திற்கு
உரியவையாதலின் மேற்காட்டியவாறே பன்முக வாழ்த்தினைக்
கொண்டுள்ளன.

—————————-

தசரத ஜாதகம், தசரத கதனம் என்னும் பௌத்த
இராமாயணங்களும், விமல சூரியின் பௌம சரிதம், சங்கதாசரின்
வாசுதேவ ஹிண்டி, இரவிசேனரின் பத்ம புராணம் ஆகிய ஜைன
ராமாயணங்களும் வான்மீகியைப் பின்பற்றி எழுதப்பெற்றன அல்ல.
கதையின் அடிச்சட்டகம் வான்மீகியின் காப்பியத்தோடு
ஒத்திருப்பினும், அவதாரக் கோட்பாட்டை இவை ஏற்காமல், இராமனை
ஒரு குறிக்கோள் மனிதனாகத் தத்தம் மதக்கோட்பாட்டிற்கேற்ப
படைத்துக் காட்டுகின்றன. கதைகள், பாத்திரப் பெயர்கள், பாத்திரப்
பிறப்புகள், போர்முடிபுகள் எனப் பல கூறுகளில் இவை
வான்மீகத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட பாடுபொருளை
உடையனவாய் விளங்குகின்றன.

———-

மொல்ல ராமாயண ஆசிரியராகிய அம்மையார்,
‘இராமர் எனக்குக் கூறியவாறே நான் இந்த இராமாயணத்தைப் பாடியுள்ளேன். எனவே, இம்மை மறுமைப்
பயன்களை அடையும் சாதனமாகிய இப்புண்ணிய சரிதத்தில்
காணப்படும் குறைகளைக் கவிஞர் பெருமக்கள் எண்ணிப்
பார்க்கலாகாது’ என்று கூறும் பகுதி அவையடக்கமாக அமைகிறது.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.-

ஸ்ரீ கம்ப ராமாயணத்தில் முக்கிய பாடல்களின் தொகுப்பு–

January 10, 2021

ஸ்ரீ கடவுள் வாழ்த்து –

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. -1)

(உளஆக்கல் – படைத்தல்; பெறுத்தல் – காப்பாற்றுதல்; அலகு இலா – அளவில்லாத)
எல்லா உலகங்களையம் தானே தனது சங்கல்பத்தால் படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும்,
அழிப்பதையும், என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர்.
அவரே தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.

—-

காவியம் பிறந்த களம்-

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே. (2)-

(பேர் – புகழ்மிக்க; தொடை – செய்யுள்; தோம் அறு – குற்றமற்ற; மாக்கதை – மகத்தான கதை)
நல்வழியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றமாக நிகழ்ந்தது புகழ்மிக்க இராமாவதாரம்.
அந்த மகத்தான கதையைக் கூறும் செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற சிறந்த இந்தக் காவியம்,
வள்ளல் சடையனின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது
(காவியம் முழுவதும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது பெயரை எங்கும் கூறவில்லை.
தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பெயரை மட்டுமே தொடக்கத்திலும் வெகுசில இடங்களிலும் கூறுகிறார்).

———-

கோசல நாட்டு வளம்-

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசல் உற்றான் என்ன, யான் மொழியல் உற்றேன். (3)-

(வாங்க அரும் – எடுக்க முடியாத; பாதம் – அடிகள்; வகுத்த – இயற்றிய; தீம் கவி – அமுதமயமான கவி;
நறவம் – மது; மாந்தி – பருகி; மூங்கையான் – ஊமை; மொழியல் – பேசுதல்)
ஒரு சொல்லைக் கூட எடுத்து விட முடியாதபடி, நான்கு அடிகள் கொண்ட (இருபத்து நான்காயிரம்) சுலோகங்களால்
இராமாயணத்தை இயற்றினான் வான்மீகி முனிவன். தேவர்களும் தம் செவிகளே வாயாகப் பருகும்படி
இனிமையான அமுதமயமான கவிதைகளைச் செய்தான். தனது ஆதி காவியத்தில் அந்த முனிவன்
புகழ்ந்துரைத்த (கோசல) நாட்டை, அன்பு என்னும் மதுவைப் பருகி,
ஊமையே பேசத் தொடங்கி விட்டான் என்றது போல நான் பேசலானேன்.

———-

திருமால் தேவர்களுக்கு வரம் தருதல்-

‘மசரதம் அனையவர் வரமும் வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறு செய்ய, யாம்
கசரத துரகம் ஆள் கடல் கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி. (4)-

(மசரதம் – கானல் நீர்; நிசரத – குறிதவறாத; நீறு செய்ய – சாம்பலாக்க;
கச ரத துரகம் – யானை தேர் குதிரை; மதலை – மகன்; தாரணி – உலகம்).
“கானல் நீரைப் போன்ற அரக்கர்களுடைய வரங்களின் பலத்தையும் வாழ்வையும், குறிதவறாத அம்புகளால்
சாம்பலாக்கி அழிப்பதற்காக, யானை தேர் குதிரை காலாள் என்னும் கடல் போன்ற நான்கு சேனைகளையுடைய
வேந்தன் தசரதனுக்கு மகனாக, நானே உலகத்தில் வந்து அவதரிக்கிறேன்”.

———–

கோசலை இராமனைப் பெறுதல்-

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை. (5)-

(ஒருபகல் – ஒரு காலத்தில்; உதரத்துள் – வயிற்றில்; அருமறை – வேதம்;
உணர்வு அரும் – தெரிந்து கொள்ள இயலாத; அஞ்சனம் – மை;
திருஉற – மங்கலம் நிறைந்திட, பயந்தனள் – பெற்றாள்)
ஒரு காலத்திலே, பிரளயத்தின்போது, எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கியவன்,
அரிய வேதங்களாலும் தெரிந்து கொள்ள இயலாதவன் அந்தப் பரம்பொருள். மை போன்றும்,
கருமேகம் போன்றும் அழகுடைய சோதி வடிவாய்த் திகழ்பவன். அவனை, உலகம் எங்கும் மங்கலம் நிறைந்திட,
தெய்வத்திறம் கொண்ட கோசலை தன் வயிற்றில் பெற்றெடுத்தாள்.

———

இராம லக்குமணர் வேள்வி காத்தல்-

எண்ணுதற்கு ஆக்க அரிது; இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர். (6)-

நினைத்துப் பார்ப்பதற்கும் செய்வதற்கும் மிக அரிய செயல் இது! விசுவாமித்திர முனிவர் தேவர்களின்
பொருட்டுச் செய்த வேள்வியை, நல்லாட்சி செய்து காக்கும் மன்னனான தசரதனுடைய மைந்தர்களான
இராம இலக்குவர்கள், கண்விழியைக் காக்கும் இமைபோல, ஆறு நாட்கள் வரை காப்பாற்றினர்.

———–

விசுவாமித்திரன் இராமனைப் புகழ்தல்

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில், மழைவண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு கண்டேன். (7)-

(உய்வண்ணம் – உய்யும் வழி; மழை – மேகம்; அண்ணல் – இராமன்)
“இவ்வாறு அகலிகையின் வரலாறு முற்காலத்தில் நிகழ்ந்தது. இனிமேல் (நீ அவதரித்த பின்பு)
இந்த உலகத்து உயிர்களெல்லாம், கடைத்தேறும் வழியே அல்லாமல், அதற்கு மாறாக,
துன்பத்தின் வழியை அடைதல் கூடுமோ? மேகம் போன்ற கரிய திருமேனியுடைய இராமனே!
அங்கு வனத்தில் மை போன்று கரிய நிறம் கொண்ட தாடகை என்னும் அரக்கியோடு செய்த போரில்,
உன் கைவண்ணம் (வில்லினது ஆற்றல்) பார்த்தேன். இங்கு, கால்வண்ணம்
(அகலிகைக்கு சாபவிமோசனம் அருளிய திருவடியின் பெருமையை) பார்க்கிறேன்”.

—————

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்ளுதல்-

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். (8)

(நலத்தினாள் – அழகுடையவள்; இனையள் – இவ்வாறு; நின்றுழி – நின்றபொழுது)
மனத்தால் எண்ணுவதற்கும் அரிய அழகுடைய சீதை, இவ்வாறு (கன்னிமாடத்தில்) நின்றபொழுது,
ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் கவர்ந்து பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று உண்ணவும்,
இருவரது சிந்தையும் நிலையழிந்து போய், ஒன்றுடன் ஒன்று கூடின.
இராமன் சீதையைப் பார்த்தான். அவளும் இராமனைப் பார்த்தாள்.

—————

இராமன் கையில் சிவ தனுசு என்னும் பெரிய வில் உடைதல்-

தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார். (9)-

(தாளில் – பாதத்தில்; மடுத்ததும் – மிதித்ததையும்; நுதி – முனை; நோக்கார் – பார்க்கவில்லை;
கடுப்பினில் – வேகத்தால்; அறிந்திலர் – அறியவில்லை; இற்றது – முறிந்தது)
சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர்.
இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில்
நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை.
மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை.
இராமன் தன் கையால் வில்லை எடுத்ததைக் கண்டார்கள்.
அடுத்த கணம் அந்த வில் முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்!

————-

இராமன் சீதை மணக்கோலம்-

மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். (10)

(மன்றல் – நல்வாசம்; தவிசு – ஆசனம்; வென்றி – வெற்றி; ஆர்வத்து – அன்புகொண்ட; எய்தி – நெருக்கமாக)
நறுமணப் பொருள்களின் நல்வாசத்தோடு வந்து, திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி, பெருமைக் குணங்களை
உடைய வெற்றிவீரனான இராமனும், அவன்மீது பேரன்பு கொண்டவளாய், அவனுக்கு இனிய துணையாக ஆகவுள்ள
அன்னம் போன்ற சீதையும் நெருக்கமாக வீற்றிருந்தார்கள். ஒன்றோடு ஒன்று இணைந்த போகத்தையும்
(பேரின்ப வாழ்வு) யோகத்தையும் (யோக நெறி) போல இருந்தார்கள்.

————-

அயோத்தியா காண்டம்
இராமன் முடிசூடுவான் என்று கேட்ட மக்களின் மகிழ்ச்சி-

‘பாவமும் அருந் துயரும் வேர் பறியும்’ என்பார்;
‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்பார்;
‘தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும்’ என்பார்;
‘ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?’ என்பார். (11)

(பூவலயம் – பூமி; தெறும் – அழிப்பான்; யாவது கொல் – எப்படிப் பட்டதோ)
இவன் ஆட்சி செய்தால் தீவினைகளும் பெரிய துன்பங்களும் வேரோடு அழியும் என்பார் சிலர்.
இனிமேல் இந்தப் பூமி சிலருக்கு மட்டுமே தனியுரிமை அல்ல, எல்லார்க்கும் பொதுவானதாகும் என்பார் சிலர்
(இராமன் ஆளும்போது தாங்களே ஆளுவதாகக் கருதினர்). தேவர்களுக்குப் பகையான அரக்கர் கூட்டங்களை
வள்ளல் இராமன் அழிப்பான் என்பார் சிலர். இவனுக்குப் பணிபுரியும் அரசர்கள் அந்த பாக்கியத்தைப் பெற
எப்பேர்ப்பட்ட தவம் செய்தார்களோ என்பார் சிலர்.

——————–

கைகேயி ‘மன்னன் ஆணை இது’ என்று கூறுதல்-

‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்,
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்’ என்றாள். (12)-

(ஆழி – கடல்; தாழ் இருஞ்சடைகள் – தொங்குகின்ற பெரிய சடைகள்; பூழி – புழுதி;
வெங்கானம் – கொடிய கானகம்; நண்ணி – சென்று)
கடல் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் பரதனே முடிசூடி ஆட்சி செய்வான். நீ நாட்டை விட்டுப் போய்,
சடாமுடி தாங்கி, செய்வதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து,
புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வரவேண்டும்
என்று அரசன் கூறினான் – இவ்வாறு கைகேயி சொன்னாள்.

————–

கைகேயி சொற்கேட்ட இராமன் நிலை-

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு பின்பு; அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது, அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா! (13)

(எம்மனோரால் – எம்மைப் போன்றவர்களால்; செவ்வி – அழகு)
இப்பொழுது எம்மைப் போன்றவர்களால் சொல்லுவதற்கு எளிதோ? யாரும் சொல்லித் தீராத நற்குணங்களையுடைய
இராமனுடைய திருமுகத்தின் அழகைப் பார்த்தால், அது கைகேயி சொன்னதைக் கேட்பதற்கு முன்பும்,
கேட்ட பின்பும் ஒன்று போலவே, செந்தாமரை போலவே இருந்தது.
ஆனால், அந்தச் சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்த சமயத்தில், மலர்ந்த செந்தாமரையை வென்று விட்டது!

——————-

சீற்றம் கொண்ட இலக்குவனுக்கு இராமன் உரைத்தது-

‘நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். (14)

(நறும்புனல் – நல்ல நீர்; அற்றே – அது போல; பதி – தலைவன், தந்தை; பயந்து – பெற்று;
புரந்தாள் – வளர்த்தாள்; மைந்த – மகனே; வெகுண்டது – கோபித்தது)
மகனே! என்றும் நீரோடும் நதியில் ஒரு சில காலங்களில் நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது,
அந்த நதியின் குற்றம் அன்று. அது போல, (என்னை வனவாசம் போகச் சொன்னது) நம் தந்தையின் குற்றம் அன்று.
(அப்படி வரம் வாங்கியது) நம்மைப் பெற்றுக் காப்பாற்றி வளர்த்த கைகேயியின் அறிவின் குற்றம் அன்று.
அவள் மகன் பரதனது குற்றமும் அன்று. இது விதியால் (நமது ஊழ்வினையால்) விளைந்த குற்றம்.
இந்தச் செயலுக்கு இவர்களை எல்லாம் காரணமாக்கி நீ கோபித்தது ஏன்?’ என்றான் (அன்பு மிகுதியால், தம்பியை மகனே என்றது).

————-

சீதை நானும் உடன் வருவேன் எனல்-

‘பரிவு இகந்த மனத்து ஒரு பற்றிலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்றாள். (15)

(இகந்த – இல்லாத; ஒருவுகின்றனை – விட்டுச்செல்கிறாய்; ஊழி – பிரளயம்; அருக்கன் – சூரியன்;
யாண்டையது – எங்குள்ளது; ஈண்டு – இங்கு)
பரிவில்லாத மனத்துடன், ஒரு சிறு பற்று கூட இல்லாமல், என்னை விட்டுவிட்டுச் செல்வேன் என்கிறாய்.
பிரளய காலத்துச் சூரியன் போல எரியும் இடம் எங்குள்ளது?
(காட்டிலே வெப்பம் இப்படி இருக்கும் என்று இராமன் முன்பு கூறியதைச் சுட்டுகிறாள்).
உன் பிரிவைக் காட்டிலும் அந்தப் பெரிய காடு சுடுமோ? என்றாள்.

—————

இராமன் காடு செல்வது கேட்ட மாந்தர் நிலை-

கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல?
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால். (16)

(கிள்ளை – கிளி; பூவை – நாகணவாய்; பூசை – பூனை; மாற்றத்தால் – சொல்லால்)
இராமன் வனவாசம் செல்வான் என்று சொல்லிய சொல்லால், கிளியும், நாகணவாய்ப் பறவையும் (மைனா) அழுதன.
மாளிகையின் மாடங்களுக்கு உள்ளே இருந்த வீட்டுப் பூனைகள் அழுதன. வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத
சிறு குழந்தைகள் கூட அழுதன. பெரியோர்கள் அழுததைப் பற்றி என்னவென்று சொல்வது?

——————-

இராமன், சீதை, இலக்குவன் மூவரும் வனத்துக்குள் போதல்-

தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மை அறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்ய தன் வில்லுமே சேமம் ஆகக் கொண்டு,
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே. (17)

(தையல் – பெண், சீதை; தகவு – மேன்மை; மை – குற்றம்; உணர்வு – ஞானம்; செய்ய – நிமிர்ந்த;
சேமம் – பாதுகாப்பு; அல்லின் நாப்பண் – நள்ளிரவில்)
சீதையின் கற்பும், தனது மேன்மைப் பண்பும், தம்பியாகிய இலக்குவனும், குற்றமற்ற கருணையும்,
ஞானமும், சத்தியமும், நிமிர்ந்த தனது வில்லும் ஆகிய இவற்றையே பாதுகாவலாகக் கொண்டு
நள்ளிரவில் அந்தக் காட்டு வழியிலே ஐயன் இராமன் சென்றான்.

—————–

குகனின் ஓடத்தில் ஏறி கங்கையைக் கடத்தல்-

‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன் நெடு நாவாய், முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். (18)

(கடிது – வேகமாக; முடுகினன் – செலுத்தினான்; நாவாய் – ஓடம்; முரி திரை – அலையடிக்கின்ற; நீர்வாய் – நீரோட்டத்தில்)
‘வேகமாக விடு’ என்று இராமன் கூற, அவனிடத்து உடம்பும் உயிரும் போன்ற நட்பை உடைய குகன்,
அலையடிக்கின்ற நீண்ட நீரோட்டத்தில் பெரிய ஓடத்தை விரைந்து செலுத்தினான். அந்த ஓடம் இளம் அன்னப்பறவை
நீரில் நீந்துவது போலச் சென்றது. கரையிலே நின்றவர்கள் பெரும் துன்பமடைந்தார்கள்.
மறையவர்கள் நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.

———————-

இராமன் வனம் சென்றது அறிந்த தசரதன் உடனே உயிர்விடுதல்-

நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ? ‘என்று உரைத்தலும், தேர் வலானும்,
‘வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ‘என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான். (19)

(தேர்ப்பாகன் – தேரோட்டி; நம்பி – இராமன்; சேயனோ – தொலைவில் உள்ளானோ; அணியனோ – அருகில் உள்ளானோ;
தேர் வலான் – சாரதி; வேய் – மூங்கில்; கானம் – கானகம்; மிதிலைப் பொன்- மைதிலி, சீதை; போழ்தத்தே – பொழுதிலே)
தசரதன் மீண்டும் தன் தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து, “இராமன் தொலைவில் உள்ளானா அண்மையில் உள்ளானா?”
என்று கேட்டான். “இராமன் இலக்குவனும் மைதிலியும் உடன்வர மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்கு போய்விட்டான்”
என்று அவன் கூறிய அப்பொழுதே தசரதன் உயிர் நீத்தான்.

————–

பரதன் படையுடன் வருவதைத் தொலைவில் கண்டு குகன் உரைத்த வீர உரைகள்-

அஞ்சன வண்ணன், என் ஆருயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசெய்திய மன்னரும் வந்தாரே !
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், நாய்க்குகன் என்று எனை ஓதாரோ? (20)

(அஞ்சனம் – மை; செஞ்சரம் – சிவந்த அம்பு; உஞ்சு – உய்ந்து, தப்பித்து)
மை போலும் கரிய திருமேனி அழகன், என் ஆருயிர் நாயகன் இராமன் அரசு ஆளாதபடி, சூழ்ச்சியால் அந்த
அரசாட்சியைக் கைப்பற்றி அடைந்த மன்னர் பரதர் இதோ வருகிறார்! தீ உமிழும் எனது சிவந்த அம்புகள்
இவர்கள் மேல் செல்லாமல் போய்விடுமோ? இவர்கள் (என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து
(இராமன் இருக்கும் இடத்துக்குப்) போய்விட்டால் ‘நாய்க்குகன்’ என்று உலகத்தவர்கள்
என்னைப் பற்றி சொல்லாமல் இருப்பார்களா?

———————-

பரதனின் தவக் கோலம் கண்டு குகன் மனம் உருகுதல்-

வற்கலையின் உடையானை, மாசடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான். (21)

(வற்கலை – மரவுரி; மெய்யானை – உடல் கொண்டவனை; மதி – சந்திரன்)
(அருகில் வர வர), மரவுரி ஆடையை உடுத்தி, புழுதி படிந்த உடம்புடன், நல்ல கலைகளில்லாத சந்திரன்
போல ஒளியிழந்த முகத்துடன், கல்லையும் கனியச் செய்யுமளவு துயரத்துடன் கூடிய பரதனை குகன் பார்த்தான்.
கையிலிருந்த வில் தானே சோர்ந்து கீழே விழ, துன்பத்தால் கலக்கமுற்று ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

——————–

பரதன் இராமன் திருவடிகளை முடிமேல் சூடிச் செல்லுதல்-

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் –
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். (22)

(அடித்தலம் – பாதுகை; முடித்தலம் – திருமுடி, கிரீடம்; படித்தலத்து – மண்ணில்; பொடித்தலம் – புழுதி;
பொலம்கொள் – பொன்மயமான)
இராமனின் இரண்டு பாதுகைகளையும், அழுத கண்களோடு, எனக்குத் திருமுடிகள் இவையே என்று பரதன்
முறையாகத் தலைமேல் சூடிக்கொண்டான். பின்னர், புழுதி படிந்து விளங்குகிற பொன்மயமான
திருமேனியுடைய பரதன், மண்ணில் விழுந்து வணங்கி, மீண்டும் (அயோத்திக்குச்) சென்றான்.

——————

சாப விமோசனம் பெற்ற விராதன் என்ற அரக்கன் இராமனைத் துதித்தல்-

ஆரணிய காண்டம்

தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய!
நீ அறிதி எப்பொருளும்; அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என்கொலோ? வாராதே வர வல்லாய். (23)

(அடியார்க்கு) வருதற்கு அரியவர் போலிருந்து மிக எளியவர்போல் வரும் வல்லமை உடையவனே!
தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை. அதுபோல் தாயும் தன் கன்றை அறிந்து கொள்ளும்.
ஐயா! எல்லா உலகங்களுக்கும் தாய் ஆனதால் எல்லாப் பொருள்களையும் நீ அறிகிறாய்.
ஆனால் அப்பொருள்கள் உன் தன்மையை அறிவதில்லை. இது என்ன மாயமோ?

————–

தண்டகாரண்யத்து முனிவர்கள் அரக்கரால் ஏற்படும் அல்லலைச் சொல்லுதல்-

‘உருளுடை நேமியால் உலகை ஓம்பிய
பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா
இருளுடை வைகலெம்; இரவி தோன்றினாய்;
அருளுடை வீர! நின் அபயம் யாம்’ என்றார். (24)

(உருளுடை – சுற்றிச் செல்லும்; நேமி – சக்கரம்; வைகல் – நாட்கள்)
எங்கும் சுற்றிச் செல்லும் ஆணைச் சக்கரத்தால் உலகம் முழுவதையும் காத்த தசரதனின் புதல்வனே,
நீக்கமுடியாத துன்பமாம் இருள் கொண்ட நாட்களை உடையவர்களாயிருக்கிறோம்.
கதிரவன் போல நீ வந்து எழுந்தருளினாய். அருளுடைய வீரனே, உனக்கு நாங்கள் அடைக்கலம் என்று (அம்முனிவர்கள்) கூறினர்.

————————–

இராமன் முனிவர்களுக்கு அபயம் அளித்துக் கூறுதல்-

‘ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும்,
யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும்,
சாவப் பெற்றவரே, தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். (25)

(ஆ – பசு; தகை வான் – பெருமை மிக்க விண்ணுலகம்)
“பசுக்களைக் காப்பதற்கானாலும், தவம் உடைய அந்தணர்களைக் காப்பதற்கானாலும், ஏழைகளைக் காப்பதற்கானாலும்,
எவர்களைக் காப்பதற்கானாலும், உதவி செய்து, அதனால் இறக்கப் பெற்றவர்களே விண்ணுலகில் வாழும்
தேவர்களும் தொழுது வணங்கக் கூடிய தேவர்களாவர்”.

—————

அகத்திய முனிவரை சந்தித்து ஆசி பெறுதல்-

நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்;
அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால்,
‘நன்று வரவு’ என்று, பல நல் உரை பகர்ந்தான்-
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். (26)

(நெடியோன் – திருமாலாகிய இராமன்; தழீஇ – தழுவிக் கொண்டு; பகர்ந்தான் – கூறினான்; இயம்பி – கூறி; இசை – புகழ்)
அங்ஙனம் நின்ற அகத்தியரை, அங்கே வந்த இராமன் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
அப்பொழுது, எக்காலத்தும் உள்ளதாகிய இனிய தமிழின் இலக்கணங்களைக் கூறிப் புகழ் பெற்ற அகத்திய முனிவரும்,
இன்பக் கண்ணீர் விட்டவராய் அன்பினால் தழுவிக் கொண்டு, ‘நல்வரவு’ என்று பல நல்லுரைகளை இனிதாகச் சொன்னார்.

—————–

மூக்கை இழந்த சூர்ப்பணகை கரனிடம் புலம்புதல்-

‘கண்டு நோக்கரும் காரிகையாள் தனைக்
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் விழுந்தேனை, வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு‘ எனச் சொல்லினாள். (27)

(காரிகையாள் – பெண்; கோக்கு – அரசனுக்கு; விண்டு – பாய்ந்து)

எங்கும் காண இயலாத அழகுடைய அப்பெண்ணை (சீதையை), இலங்கையில் வாழும் அரக்கர்க்கு
அரசனான இராவணனுக்காக எடுத்துக் கொண்டு போவேன் என்று சொல்லி, அவள் மேல் பாயக் கிளம்பிய என்னை,
அந்த இராமலக்குவர்கள் சினந்து, என் மூக்கை அறுத்தார்கள் என்று கூறினாள்.

—————

மாரீசன் இராவணனுக்கு புத்திமதி கூறுதல்-

நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார், நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர் தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா! (28)

(நாரம் – அன்பு; வாரம் – வரி; தாரம் – மனைவி; ஈரும் – அழிக்கும்; கண்டகர் – கொடியவர்)
“தம் மீது அன்பு பூண்டவர்களின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்கள், நீதி நெறிக்குப் பொருந்தாத
வரிப் பொருளைக் குடிமக்களை வருத்திப் பெற்றவர்கள், பிறர் ஒருவருக்கு உரிமையாய் அவர் இல்லத்திலே வாழும்
மனைவியை வசப்படுத்திக் கொண்டவர்கள் எனப்படும் இவர்களை தருமமே சின்னா பின்னமாக்கி அழித்து விடும்
என்று நீ அறிவாய். ஐயா, கொடியவர்கள் எவர் தப்பிப் பிழைத்துள்ளார்?’

——————–

இராமனும் சீதையும் மாயமானைப் பார்த்தல்-

நோக்கிய மானை நோக்கி, நுதி உடை மதியின் ஒன்றும்
தூக்கிலன், ‘நன்று இது ‘என்றான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்;
சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது, தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ! அன்னது பழுது போமோ? (29)-

(நுதி – கூர்மை; தூக்கிலன் – சீர்தூக்கிப் பார்க்கவில்லை; சேக்கையின் அரவு – பாம்புப் படுக்கை)
எதிரில் விழித்து நின்ற மாயமானைக் கண்டபின், இராமன் கூரிய அறிவின் துணை கொண்டு எதனையும்
சீர்தூக்கிப் பார்க்கவில்லை. “மான் மிக அழகியது” என்று தானும் கூறினான். அதன் பொருளைச் சொல்லவும் ஆகுமோ?
அரவணைத் துயிலில் இருந்து நீங்கி மண்ணுலகில் வந்து பிறந்தது தேவர்கள் ஆற்றிய புண்ணியம் அல்லவா?
அப் புண்ணியம் வீணாகிப் போகுமோ?

————-

இராமன் அம்பினால் மாய மாரீசன் கதறி வீழ்ந்து மடிதல்-

நெட்டு இலைச் சரம் வஞ்சனை நெஞ்சு உறப்
பட்டது; அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன். (30)-

நெடிய இலை வடிவம் கொண்ட இராமனின் அம்பு வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது.
அந்தக் கணமே, பிளவுபட்ட வாயினால் எட்டுத் திசைகளிலும் அதற்கு அப்பாலும் (சீதா லட்சுமணா என்று) கூவி
மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான்.

————

சீதையைத் தேடிவரும் இராமலக்குவரிடம் வீழ்ந்து கிடக்கும் ஜடாயு கூறுதல்-

“வடுக்கண், வார் கூந்தலாளை, இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை, எதிர்ந்து, எனது ஆற்றல் கொண்டு
தடுத்தனென், ஆவது எல்லாம்; தவத்து, அரன் தந்த வாளால்
படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இது இன்று பட்டது ‘‘ என்றான். (31)-

(வார் – நீண்ட; ஏகுவானை – செல்பவனை; அரன் – சிவபெருமான்; படுத்தனன் – வெட்டி வீழ்த்தினான்)
“மாவடுப் பிளந்தது போன்ற அழகிய கண்களையும், நீண்ட கூந்தலையும் உடைய சீதையை இராவணன் நிலத்தோடு
எடுத்துக் கொண்டு செல்லும் போது, அவனை எதிர்த்து, எனது ஆற்றலின் துணை கொண்டு,
ஆன மட்டும் தடுக்க முனைந்து போர் செய்தேன். இறுதியில் அவன் தவ வலிமை கருதிச் சிவபெருமான்
அவனுக்கு அளித்திருந்த வாளினால் என்னை வெட்டி வீழ்த்தினான். இங்கே விழுந்து விட்டேன்.
இன்று இவ்வாறு நிகழ்ந்தது” என்று (சடாயு) கூறினான்.

—————

இராமன் நீர்க்கடன் செய்ய, ஜடாயு மோட்சம் அடைதல்-

மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல், கீழ்,
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம்;
பூட்டிய கைகளால், அப் புள்ளினுக்கு அரசைக் கொள்க என்று,
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே! (32)–

(மீட்டு – இனிமேல்; விரிஞ்சனே – பிரம்மனே; பூட்டிய – இணைத்த; புள்ளினுக்கு அரசு – பறவைகளின் அரசனாகிய ஜடாயு;
ஊட்டிய – உண்ணக் கொடுத்த; ஐயன் – திருமால்)
இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று
எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின.
அந்தப் பறவைகளுக்கு அரசனாகிய ஜடாயுவைக் கருதி ‘ஏற்றுக் கொள்க’ என்று கூறி, தன் கைகளை இணைத்து
இராமன் சமர்ப்பித்த அந்த நல்ல நீர், அனைத்து உயிர்களுக்கும் இறைவனாகிய திருமால் (தானே) உட்கொண்ட நீரைப் போன்றதாயிற்று.

——————

இராமனால் வதைபெற்று சாப விமோசனம் அடைந்த கபந்தன் துதி செய்தல்-

ஈன்றவனோ எப்பொருளும்? எல்லைதீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப்பயனோ?
மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய்! (33)-

(சான்றவனோ – சாட்சியோ; கவடு – கிளை, பிரிவு)
எல்லாப் பொருள்களையும் படைத்தவன் நீதானோ? முடிவில்லாத நல்ல அறத்துக்குச் சாட்சியாக இருப்பவன் நீதானோ?
தேவர்கள் மேற்கொண்ட தவத்தின் ஒப்பற்ற பயனாக இருப்பவன் நீதானோ? (பிரமன், திருமால், சிவன் என்ற)
மூன்று பிரிவாகக் கிளைத்து எழுந்த மூலப் பரம்பொருள் நீதானோ? நான் இருக்குமிடத்துக்கே நின் எளிமையால்
வந்து காட்சியளித்து, போக்குதற்கு அரிய வினையுடைய என் சாபத்தின் துன்பத்தைத் தீர்த்து விட்டாய்.

————

கிட்கிந்தா காண்டம்-
அனுமன் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளல்-

‘மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன். (34)-

(மஞ்சு – மேகம், நளிர் இரும் – குளிர்மிக்க; தேம்பா – வாடாத; கஞ்சம் – தாமரை; செய்ய – சிவந்த)
“நீலமேகம் போலத் திரண்டு அமைந்த அழகிய மேனியனே! காணும் பெண்கள் யாவர்க்கும் நஞ்சு என்று
சொல்லத் தக்கதாகி, குளிர்மிக்க பனியிலும் வாடாத தாமரை மலர்கள் போன்று சிவந்த கண்களை உடையவனே!
நான் வாயுதேவனுக்கு அஞ்சனா தேவியின் வயிற்றில் பிறந்தேன். என் பெயர் அனுமன்”.

————-

இராமனைக் கண்டு சுக்கிரீவன் வியத்தல்-

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ;
ஆறுகொள் சடிலத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது ‘என்றே. (35)

(ஆறு – கங்கை; சடிலத்தான் – சடைமுடியன்; அயன் – பிரமன்)
“தேவர்களுக்கு எல்லாம் கடவுளாகிய தேவதேவனே, (திருமாலே) தம் உருவம் மாறி, இந்தப் பிறவியை எடுத்து,
மானிடர் ஆகி வந்திருக்கிறார். அதனால், கங்கையைச் சடையில் கொண்ட சிவபிரானும், பிரமனும் என்று
இவர்கள் முதலாக வெவ்வேறாக உள்ள தேவர் கூட்டத்தையெல்லாம் மனித குலம் வென்றுவிட்டது அல்லவா?” என்று தெளிந்தான்.

—————–

சுக்கீரவன் வாலியால் தனக்கு நேர்ந்த துன்பம் கூறி சரண் புகுதல்-

‘முரண் உடைத் தடக்கை ஓச்சி, முன்னவன், பின் வந்தேனை,
இருள் நிலைப் புறத்தின் காறும், உலகு எங்கும் தொடர, இக் குன்று
அரண் உடைத்தாக உய்ந்தேன்; ஆர் உயிர் துறக்கலாற்றேன்,
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம் ‘என்றான். (36)-

(முரண் உடை – வலிமையுடைய; தடக்கை – பெரிய கை; ஓச்சி – ஓங்கி; காறும் – வரையிலும்;
அரண் – பாதுகாப்பு; உய்ந்தேன் – பிழைத்தேன்)
வலிமையுடைய பெரிய கையை ஓங்கிக் கொண்டு, என் அண்ணன் வாலி, அவனது உடன்பிறந்த தம்பியாகிய
என்னை இருட்டுக்கு இருப்பிடமாகிய இவ்வுலகத்திற்கு அப்புறம் வரையிலும், உலகெங்கும் பின்தொடர்ந்து துரத்த,
இம்மலையையே பாதுகாப்பாகக் கொண்டு உயிர் பிழைத்தேன். உயிரை விடுவதற்கும் முடியாதவனாகிய நான்,
உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குரிய தருமம் என்றான்.

——————

இராமன் சுக்கிரீவனிடம் நட்புப் பூண்டு அபயம் அளித்தல்-

‘மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன் உயிர்த் துணைவன் ‘என்றான். (37)

(செற்றவர் – வருத்தியவர்; கிளை – உறவு, சுற்றம்)
சுக்கிரீவனே! மேலும் இனிச் சொல்ல என்ன இருக்கிறது? விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உன்னை வருத்தியவர்
என்னை வருத்தியவராவர். தீயவராகவே இருந்தாலும் உன்னோடு நட்புக் கொண்டவர்கள் எனக்கும் நண்பராவர்.
உன் உறவினர் எனது உறவினராவர். என் அன்புள்ள சுற்றத்தினர் உனக்கும் சுற்றத்தினராவர்.
நீ எனது இனிய உயிர் போன்ற நண்பன்’ என்றான்.

—————–

வாலி தன் மீது பட்ட அம்பில் இராம நாமத்தைப் பார்த்தல்-

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான். (38)

(மும்மை சால் – மூன்றாகப் பொருந்திய; தமர்க்கு – தம்மவர்களுக்கு; நல்கும் – அளிக்கும்;
பதத்தை – சொல்லை; இம்மை – இப்பிறவி; செம்மை – சிறப்பு)
மூன்று என்னும் தொகை பொருந்திய உலகங்கள் யாவற்றிற்கும் (வானம், பூமி, பாதாளம்) ஆதாரமாக உள்ள மந்திரத்தை,
தன்னை வழிபடும் அடியார்களுக்கு முழுவதுமாகத் தன்னையே அளிக்கும் ஒப்பற்ற சிறப்பு மிக்க சொல்லை,
இந்தப் பிறவியிலேயே எழுவகைப் பிறப்புக்களாகிய நோய் வராமல் தடுக்கும் மருந்தை,
இராமன் என்ற சிறப்புப் பொருந்திய திருநாமத்தை தன் கண்களினால் (அந்த அம்பில்) தெளிவாகப் பார்த்தான்.

——————-

வாலி இராமன் மீது குற்றம் சாட்டுதல்-

‘வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று; பண்பு ஒழிந்து
ஈரம் அன்று இது; என் செய்தவாறு நீ? (39)-

இராமா! (நீ செய்த இச்செயல்) வீரம் அன்று. விதிமுறைக்கு ஒத்ததும் அன்று. உண்மையைச் சார்ந்ததும் அன்று.
உனக்கு உரிய இப்பூமிக்கு என் உடல், சுமையும் அன்று. உனக்கு நான் பகைவனும் அல்லன். (அங்ஙனமிருக்க),
நீ உன் பெருமைக் குணம் நீங்கப் பெற்று இரக்கம் இல்லாமல் இச்செயலைச் செய்தது எதற்காக?

——————

இராமன் வாலிக்கு விடையிறுத்து அறநெறியின் தன்மை கூறுதல்-

‘இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்;
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி ‘என்றான் மனு நீதியான். (40)-

(இனையது – இத்தன்மையது; வினையினால் – செயல்களால்; அனைய – அப்படிப்பட்ட)
“(நான் இதுவரை கூறியபடி) உண்மை இத்தன்மையது ஆதலால், எந்தக் குலத்தில் பிறந்தவராயினும்,
அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும்.
(வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும்,
பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.

—————

பிழையுணர்ந்த வாலி இராமாவதார தத்துவத்தை சுக்கிரீவனுக்கு உணர்த்துதல்-

‘மறைகளும், முனிவர் யாரும், மலர் மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணிபொருள், தனி வில் தாங்கி,
அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய்! (41)

(துறைகளின் – சாத்திரங்களின்; அறைகழல் – ஒலிக்கின்ற கழல் [கழல் என்பது ஆடவர் காலில் அணிவது];
இறை – சிறிதும்; சங்கை – சந்தேகம்)

வேதங்களும், எல்லா முனிவர்களும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், மற்ற சாத்திரங்களின் முடிபுகளும்
தேர்ந்து சொல்லுகின்ற பரம்பொருள், (பகைவரைத்) தண்டிக்கும் வில்லை ஏந்திக் கொண்டு, ஒலிக்கின்ற கழலணிந்த இராமனாக,
உலகில் அறநெறியை நிலை நிறுத்துவதற்காக அவதரித்துள்ளது. ஆலோசனையில் சிறந்தவனே!
இந்த உண்மையை ஒரு சிறிதும் சந்தேகம் இல்லாமல் மனத்தில் கொள்வாய்.

————-

அங்கதனை இராமன் ஏற்றுக் கொள்ள வாலி பரமபதம் அடைதல்-

தன் அடி தாழ்தலோடும் தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி, ‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். (42)

(தாழ்தலோடும் – வணங்கியதும்)
(அங்கதன்) தன் திருவடிகளில் விழுந்து வணங்கிய அளவில் தாமரைக் கண்ணனாகிய இராமன்
(அவனை அடைக்கலமாகக் கொண்டதற்கு அறிகுறியாக) தனது அழகிய உடைவாளை நீட்டி,
‘நீ இதனை ஏற்றுக் கொள்வாய்’ எனப் பணித்தான்; ஏழுலகங்களும் இராமனைத் துதித்தன.
வாலி தனது பூத உடலை விட்டு, இறந்து, வானுலகிற்கும் அப்பாற்பட்டதான உயர்ந்த மோட்சத்தை அடைந்தான்.

—————

சுந்தர காண்டம்-கடவுள் வாழ்த்து-

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் – கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே, மறைகளுக்கு இறுதி யாவார்! (43)

(அலங்கல் – மாலை; அரவு – பாம்பு; விகாரப்பாட்டின் – வேறுபாடுகளின்; வீக்கம் – தோற்றம்; பொருதார் – போர் செய்தார்)
பூ மாலையில் (காணும்போது மதிமயக்கத்தால் உண்டாகும்) பொய்ப் பாம்பின் தோற்றம் மறைவது போல,
ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறு வேறு விதமாக அமைந்த பிரபஞ்சத்தின் பன்மைத் தோற்றம்
எவரைத் தரிசித்தால் மறைந்து போகுமோ, அவரன்றோ கையில் வில்லேந்தி இலங்கையில் போர் செய்தார் ! – என்று
வேதத்தின் எல்லை நிலமாக இருக்கின்ற ஞானிகள் கூறுவர் (உயர்ந்த ஞான நிலையில், வேறுவேறாகத் தோன்றும்
பிரபஞ்சத்தின் மாயைத் தோற்றம் மறைந்து பிரம்மம் ஒன்றே சத்தியம் என்னும் உணர்வு ஏற்படும்.
இந்த வேதாந்த தத்துவக் கருத்தையே இப்பாடலில் கம்பர் அழகுறக் கூறுகிறார்).

———–

அசோகவனத்தில் சீதையின் நிலை-

வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா
நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். (44)

(மருங்குல் – இடை; வாள் அரக்கியர் – கொடிய அரக்கியர்கள்; மருங்கு – பக்கத்திலே; உணங்கிய – வாடிய)
பருத்த இடையை உடைய கொடிய அரக்கியர்கள் துன்புறுத்த, சீதை அசோக வனத்தில் இருந்தாள்.
கற்பாறைக்குப் பக்கத்திலே தோன்றி வளர்ந்து, எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி கூட வருவதை அறியாத
உயர்ந்த மூலிகையைப் போல, உடலும் உள்ளமும் அற்றுப்போக வாடிய பிராட்டி, மெல்லிய இடையைப் போல,
மற்றைய அங்கங்களும் இளைத்து விடும்படி துயருற்று இருந்தாள்.

————

தன்னை ஏற்குமாறு மன்றாடிய இராவணனிடம் சீதை துரும்பை முன்வைத்துக் கடிந்து பேசுதல்-

மல்லொடு திரள்தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
‘கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்மேல் கண்டது உண்டோ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல, வெய்ய
சொல்; இது தெரியக் கேட்டி! துரும்பு! ‘எனக் கனன்று சொன்னாள். (45)

(மல் அடு – மல்லர்களை அழிக்கும்; இல் – நற்குடிப் பிறப்பு; ஏய்வன – ஏற்றவை; வெய்ய – கொடுமையான; கேட்டி – கேள்)
மல்லர்களை அழிக்கும் திரண்ட தோள்களையுடைய வஞ்சகனான இராவணனின் உள்ளம் வேறுபாடு
அடையும்படி சீதை சினந்து பேசினாள் – “ஏ துரும்பே! கல்போன்று உறுதிகொண்ட மகளிர் மனம்,
கற்பைவிடச் சிறந்ததாக வேறு ஒன்றை மதித்தது உண்டா? (உன்னுடைய பசப்பு வார்த்தைகள்)
நற்குடிப் பெண்களுக்கு (நினைப்பதற்கும்) ஏற்க முடியாத கொடுஞ்சொற்கள் ஆகும். உள்ளம் உணர இவ்வார்த்தைகளைக் கேள்”.

————–

இராமன் தூதனாக வந்து ஆறுதல் தந்த அனுமனை சீதை வாழ்த்துதல்-

‘மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு ‘என்றாள். (46)

(மும்மை – மூன்று; அத்தனே – தெய்வமே; நல்கினை – கொடுத்தாய்; இசையோடு – புகழோடு)
மூன்று உலகங்களையும் படைத்த முன்னோன் ஆகிய பிரம்மதேவனுக்கும் தந்தையாகிய இராமபிரானின் தூதுவனாய் வந்து,
நிறைவு பெற்ற பண்பினாலே எனக்கு உயிரை வழங்கினாய். (சிறையிலிருக்கும்) என்னால் உனக்குச் செய்வதற்கு
எளிமையான உதவியும் உள்ளதா? அம்மையும் அப்பனும் தெய்வமும் போன்றவனே! அருளுக்கு வாழ்வைத் தருபவனே!
நீ இப் பிறப்பிலேயே மறுமை வாழ்வையும் புகழுடன் வழங்கினாய் என்று பிராட்டி கூறினாள்.

————–

கடலைக் கடந்து வந்தது எப்படி என்று வியப்புடன் கேட்ட சீதைக்கு அனுமன் கூறிய பணிவு மொழி

அண்ணல் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான்: ‘அருந்ததியே!
வண்ணக் கடலின் இடைக் கிடந்த மணலின் பலரால், வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத்தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவக்கடவ பணிசெய்வேன் (47)-

(வண்ணக் கடல் – அழகிய கடல்; பண்ணைக்கு ஒருவன் – வேலைக்காரர் கூட்டத்தில் ஒருவன்)
பெரியோனாகிய அனுமன், சீதைப் பிராட்டியின் திருவடிகளிலே வணங்கிக் கூறினான் –
“அருந்ததி போன்ற பெருமையுடைய அன்னையே! அளவிட முடியாத வானரப்படைத் தலைவர்கள் இராமபிரானின் அடியார்கள்.
அவர்கள் இந்த அழகிய கடலிலே கிடக்கின்ற மணலினும் பலராவர். அவர்களுடைய கூட்டத்துக்கு ஒரு வேலைக்காரன்
என்ற அளவில் நான் இங்கு வந்தேன். ஏவும் பணியையும் கூவும் பணியையும் செய்யும் ஒரு சாதாரணத் தொண்டன் நான்”.

—————–

சீதை அனுமனிடம் கூறியது-

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன். (48)-

(அல்லல் – துன்பம்; மாக்கள் – விலங்குகள்; ஆற்றற்கு – ஆற்றலுக்கு; மாசு – களங்கம்; வீசினேன் – விலக்கினேன்)
(இந்த நகரமே எலும்பு மலையாகப் போகும்) துன்பம் விலங்கு போன்ற அரக்கர்கள் வாழும் இலங்கையுடன் நின்று விடுமா?
(அறத்தின்) வரம்பைக் கடந்து போகும் எல்லா உலகங்களையும், என்னுடைய சொல்லினாலேயே சுட்டெரித்து விடுவேன்.
அவ்வாறு செய்வது தூயவனாகிய இராமனின் வில்லினுடைய வலிமைக்கு களங்கம் உண்டாக்கும் என்று
கருதியே அப்படிச் செய்யாமல் இருக்கிறேன்.

————-

சீதை இராமனுக்குத் தெரிவிக்குமாறு அனுமனிடம் கூறியது-

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
‘இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் ‘என்ற செவ் வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்! (49)

(வைகல்வாய் – உடன் உறையும் காலத்தில்; வார்த்தை – செய்தி; சாற்றுவாய் – சொல்லுவாய்)
(மிதிலைக்கு) வந்து என்னைக் கைப்பிடித்து மணம் செய்து உடன் உறைகின்ற காலத்தில், இந்தப் பிறவியில்
இரண்டாவது பெண்ணை மனத்தாலும் தீ்ண்ட மாட்டேன் என்ற செம்மையான வரத்தை உறுதிமொழியாகத்
தந்த செய்தியை இராமன் திருச்செவியில் சொல்வாயாக.

————–

சீதையைப் பிரிந்து இராமன் படும் துயரத்தை அனுமன் கூறுதல்-

மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? (50)

(தத்துறும் – தத்தளிக்கும்; தள்ளுறும் – வீழ்த்தும்; எண்ணும் ஈட்டவோ – அளவிடும் தன்மை உள்ளனவோ)
மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர்.
அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய
வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?

————–

சீதை அடையாளமாகத் தனது சூடாமணியைத் தருதல்-

‘சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை! நல்லோய்!
கோடி! ‘என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள். (51)

(சூடையின் மணி – சூடாமணி, நெற்றிச்சுட்டி; தொல்நாள் – நீண்ட நாட்களாக; நல்கினை – வழங்கினாய்;
நல்லோய் – சிறந்தவனே; கோடி – எடுத்துக் கொள்)
“சிறந்தவனே! கடல் தாண்டி நாடி வந்து, (போவதற்கிருந்த) என் இன்னுயிரை வழங்கினாய்.
என் கண்மணி போன்ற இந்தச் சூடாமணி, நீண்ட நாட்களாக என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப் பெற்றது.
எனது அன்பின் பேரடையாளமாக இதை இராமனுக்கு எடுத்துச் செல்வாய்” என்று கூறி உண்மையான
புகழைக் கொண்ட சீதை சூடாமணியை அனுமனிடம் வழங்கினாள்.

———–

அனுமன் வாலில் தீமூட்ட, இலங்கை முழுவதும் தீப்பற்றி எறிதல்-

நீல் நிற நிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க,
பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன், அன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்,
காலமே என்ன, மன்னோ கனலியும் கடிதின் உண்டான். (52)

(நீல்நிற – கருநிற; நிருதர் – அரக்கர்; யாண்டும் – எங்கும்; பால்வரு பசியன் – மிகுந்த பசியுடையவன்;
ஆலம் – நஞ்சு; கனலி – அக்கினி; கடிதின் – வேகமாக)
கருநிறத்து அரக்கர்கள் நெய் சொரிந்து செய்யும் யாகங்களை எங்கும் செய்ய விடாமல் நீக்கி விட்டதனால்,
அக்கினி தேவன் மிக்க பசி உடையவனாக இருந்தான். அன்று, மாருதியின் வாலை அன்புடன் தனக்கு
ஆதாரமாகப் பற்றிக் கொண்டு, நஞ்சை உண்ட சிவபெருமானின் ஏவலால், ஊழி (பிரளயம்) முடிவில்
உலகம் முழுவதையும் எரிக்கின்ற காலத்தைப் போல, இலங்கை நகரை விரைவாக உண்டு எரித்து அழித்தான்.

—————

திரும்பி வந்த அனுமன் இராமனிடம் கண்டேன் சீதையை என்று கூறுதல்-

‘கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான்; (53)

(அணி – ஆபரணம்; தெண் திரை – தெளிந்த, சுருண்ட; அண்டர் – தேவர்கள்; துறத்தி – நீக்கிவிடு;
பண்டு உள- முன்புள்ள; பன்னுவான் – கூறுவான்)
“கண்டேன்! கற்பிற்கு ஒரு ஆபரணம் போன்ற சீதையை, தெளிந்த சுருண்ட அலைகளுடன் கூடிய
கடல் சூழ்ந்த இலங்கை என்ற தென்திசை நகரத்தில்,
என் கண்களாலேயே கண்டேன். தேவர்களின் நாயகனே! இனிமேல், உனது சந்தேகத்தையும்,
இதுவரை பட்ட துன்பங்களையும் நீக்கிவிடு” என்று அனுமன் மேலும் விரித்துக் கூறலானான்.

——————

இராமனின் கணையாழி கண்டு சீதை உயிர்பெற்று வந்ததை அனுமன் கூறுதல்

‘அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,
செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;
இறுதியின் உயிர்தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது – எந்தாய் ! (54)

(திருக்கம் – மாறுபாடு; இன்மை – இல்லாமை; முறிவு அற – குழப்பமின்றி)
“எம் தலைவனே! பிராட்டி அறியும்படி அடியேன் தெளிவாகச் சொன்ன
அடையாளங்களை எல்லாம் பொருத்தமாகப் பார்த்து, அடியேன் மனத்தில் குழப்பம் ஏதும் இல்லை என்பதை
நன்றாக யோசித்து, அழகிய (உனது) மோதிரத்தை நான் காட்ட, பார்த்தாள். அந்த மோதிரம், முடிவுக் காலத்திலும்
உயிர் போகாதபடி நிலை நிறுத்திக் காக்கின்ற சஞ்சீவினி என்ற மருந்தைப் போன்று அவளுக்கு
ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தது” என்று அனுமன் கூறினான்.

———–

யுத்த காண்டம்-

சரணடைந்த வீடணனை ஏற்றுக் கொள்வதே அறம் என இராமன் கூறுதல்

இடைந்தவர்க்கு, “அபயம் யாம் “ என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்? (55)

(இடைந்தவர்க்கு – ஓடி வந்தவர்க்கு; இரந்தவர்க்கு – கெஞ்சியவர்க்கு; எறீநீர் வேலை – அலைபாயும் கடல்;
ஆலம் – நஞ்சு; கண்டிலீரோ – கண்டதில்லையா; ஈயான் – தரமாட்டான்)

அலைபாயும் பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சுக்கு அஞ்சி ஓடி வந்தவர்களும், நாங்கள் உனக்கு
அடைக்கலம் என்று கெஞ்சியவர்களும் ஆன தேவாசுரர்களுக்காக, அந்த நஞ்சைத் தான் உண்டு,
அவர்களைக் காத்த சிவபிரானை நீங்கள் கண்டதில்லையா? தோல்வியால் சிதைந்து உடைந்தவர்களுக்கு
உதவவில்லை என்றால், தன்னிடம் உள்ள பொருளைக் கேட்டு வந்தவர்களுக்குத் தரவில்லை என்றால்,
அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணை காட்டி அருள் செய்யவில்லை என்றால்,
அறத்தால் என்ன பயன்? ஆண்மையால் என்ன பயன்?

————

வீடணனோடு சேர்த்து தனக்கு ஏழு சகோதரர்கள் என இராமன் கூறுதல்-

‘குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.’ (56)

(ஆனேம் – ஆனோம்; எம்முழை – எம்மிடத்தில்; அகன் அமர் காதல் – நெஞ்சம் நிறைந்த அன்பு; நுந்தை – உனது தந்தை)
குகனுடன் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் சகோதரர்கள் ஆனோம். இது முன்பு நிகழ்ந்தது. அதன் பின்னர்,
மேருமலையைச் சுற்றிவரும் சூரியனது மகனான சுக்கிரீவனுடன் சகோதரர் ஆறுபேர் ஆனோம்.
உள்ளத்திலே நிறைந்த அன்பு கொண்டு எங்களிடம் வந்த விபீஷணா, உன்னுடன் சேர்த்து சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம்.
எவரும் புகுதற்கரிய கானக வாழ்க்கையை எனக்குத் தந்து, உனது தந்தை தசரதன் புதல்வர்களால் நிறைவு பெற்றுவிட்டான்!

————-

வானரர்கள் கடலில் சேது (அணை) கட்டுதல்-

மலை சுமந்து வருவன வானரம்,
நிலையில் நின்றன, செல்ல நிலம் பெறா –
அலை நெடுங் கடல் அன்றியும், ஆண்டுத் தம்
தலையின்மேலும் ஒர் சேது தருவ போன்ம். (57)

(நிலம் பெறா – இடமில்லாததால்; தருவ – அமைத்தது; போன்ம் – போல)
அணை கட்டுவதற்காக மலைகளைச் சுமந்து கொண்டு வரும் வானரங்கள், (வானரக் கூட்டத்தின் மிகுதியினால்)
செல்லுதற்கு அங்கு இடம் இல்லாமையால் மலைகளைச் சுமந்து கொண்டு அசையாமல் நின்ற தோற்றம்,
அலைகள் வீசும் பெரிய கடலில் மட்டுமல்லாது, தங்கள் தலைகளின் மீதும் ஒரு சேது அமைத்தது போலக் காணப் பட்டது.

—————

போருக்கு முன் இராமனின் தூதனாகச் சென்ற அங்கதன் இராவணனிடம் கூறுதல்-

‘பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப் பூமேல்
சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் ‘என்றான். (58)

“(என் தலைவனாகிய இராமபிரான்) ஐம்பூதங்களுக்கும் தலைவன். (அந்த ஐம்பூதங்களுக்குள், நீ வாழ்கிற)
கடல் சூழ்ந்த இம் மண்ணுலகிற்கும் தலைவன். அழகிய தாமரை மலர்மேல் வாழும் சீதையின் நாயகன்.
வேறே உள்ள தெய்வங்களுக்கும் அவன் நாயகன். நீ ஓதும் அந்த வேதங்களுக்கும் அவனே தலைவன்.
இனிமேல் நீ பட உள்ள விதியின் விளைவுகட்கும் அவனே தான் தலைவன்.
இத்தகையவன் உனக்கு அனுப்பியுள்ள தூதன் நான். அவன் உன்னிடம் உரைக்கச் சொன்னதைக்
கூறிவிட்டுப் போக இங்கே வந்தேன்” என்றான்.

—————

முதற்போரில் அனைத்தையும் இழந்து நின்ற இராவணனை இராமன் விடுவித்தல்-

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா ‘என நல்கினன் – நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (59)

(மாருதம் – பெருங்காற்று; பூளை – பூளைப்பூ; கமுகு – பாக்கு மரம்)
அரக்கரை ஆள்கின்ற ஐயா, உனக்குத் துணையாக அமைந்த படைகள் அனைத்தும் பெருங்காற்றால் தாக்கப்பட்ட
பூளைப் பூக்களைப் போல சிதைந்து போனதைக் கண்டாய். இன்று போய்ப் போருக்கு நாளை வா என்று
(இராவணனுக்கு) அருள் புரிந்து விடுத்தான் – (யார் என்னில்) மிகவும் இளைய கமுக மரத்தின்மீது
வாளை மீன்கள் தாவிப் பாயும் (நிலம், நீர்வளம் மிக்க) கோசல நாட்டுக்கு உரிய வள்ளலாகிய இராமபிரான்.

—————-

கும்பகர்ணன் சாகும் தறுவாயில் இராமனை வேண்டுதல்-

நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன். (60)

“நீதிமுறைப்படி வந்த சிறந்த தரும நெறி அல்லாது, சாதிப் பிறப்பினால் உண்டான சிறு நெறியை
அறியாதவன் என் தம்பி விபீஷணன். அதனால் தான் உன்னை அடைக்கலமாக அடைந்தான்.
முழு முதலே! உலகில் அரசர் வடிவு கொண்டு வந்தவனே! வேதங்களால் புகழப் படுகின்றவனே!
மீண்டும் அவனை உனக்கு அடைக்கலப் பொருளாகக் கொண்டு நீ காக்க வேண்டும் என்று நான் வேண்டுகின்றேன்”.

————–

கருடனின் வருகையால் நாக பாசத்திலிருந்து இராம லக்குமணர் விடுபட்டவுடன், கருடன் இராமனைத் துதித்தல்-

சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
கொல் என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று நிற்றி; பகல் ஆதி – ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? (61)-

(உரைத்தி – சொல்லப் படுகிறாய்; ஆதி – ஆகிறாய்; துறந்து – கடந்து; சரம் – அம்பு; சங்கம் – சங்கு;
அங்கை – அழகிய கை; நிற்றி – நிற்கிறாய். அல் – இருள், இரவு; அதிரேக மாயை – மிகுந்த மாயை)

(நாதவடிவான) சொற்களாகவும், அவற்றின் பொருளாகவும் நீயே இருக்கின்றாய். தூய்மையான வேதங்களையும்
கடந்து விளங்குகிறாய். (அறத்தை நிலை நிறுத்துதற்காக) வில்லையும் அம்பையும் எடுத்திருக்கிறாய்.
அழகிய கைகளில் ஒளி பொருந்திய சங்கை (பாஞ்சசன்னியம்) ஏந்தியவனும் நீயே. (தீயவர்க்குப் பகைவனாய் இருந்து)
கொல்லுக என்று சொல்லுகிறாய். (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக் கிடக்கிறாய்.
(இவ்வாறு) கொடிய முரண்கள் கொண்ட பரம்பொருளே! உனது மாயச் செயல்களை எவ்வகையிலும்
என்னால் அறிய முடியவில்லை. இரவாகவும், பகலாகவும் நீயே தோன்றுகின்றாய்.
மிகுந்த இந்த மாயச் செயலை யார் தான் அறிவார்கள்?

———–

வானில் மருத்து மலையை எடுத்துச் செல்லும் அனுமனை சிவனும் பார்வதியும் வாழ்த்துதல்-

‘என், இவன் எழுந்த தன்மை? ‘ என்று, உலகு ஈன்றாள் கேட்ப
‘மன்னவன் இராமன் தூதன் மருந்தின் மேல் வந்தான்; வஞ்சர்
தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நல் நுதல்! நாமும் வெம்போர் காணுதும், நாளை ‘என்றான். (62)

“இவன் வான்வழி எழுந்து செல்வதற்கு யாது காரணம்?” என்று உலகத்தை ஈன்ற உமையவள் கேட்க,
“மன்னவன் இராமனின் தூதனாகிய அனுமன் இவன். மருந்தைக் கொண்டு போக வந்திருக்கின்றான்.
தென் இலங்கையின் வஞ்சக அரக்கரால் உளதாகிய தீமை இனித் தீர்வது திண்ணம். அழகிய நெற்றியுடையவளே!
நாளை நாமும் (தேவர்களுடன் சேர்ந்து வானிலிருந்து) கொடிய போரைக் காண்போம்” என்று (சிவபிரான்) கூறினான்.

——————

இறுதிப் போரில் இராமன் அம்பினால் இராவணன் வீழ்ந்து மடிதல்-

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள்,
‘எக்கோடி யாராலும் வெலப்படாய் ‘ எனக்கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று, இராகவன்தன் புனித வாளி. (63)-

(எக்கோடி – எந்த வரிசையிலும்; திக்கோடும் – திசைகளோடும்; புயவலி – தோள் ஆற்றல்;
புக்கு – புகுந்து; புறம் – வெளியே; வாளி – அம்பு)
(இராவணனுடைய) மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும்,
பிரமன் முற்காலத்தில் ‘(முப்பத்து முக்கோடி தேவர்களில்) எந்த வரிசையைச் சேர்ந்தோர் ஆனாலும்
அவர்களால் நீ வெல்லப்பட மாட்டாய்’ என்று தந்த வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள்
எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, (இராவணனுடைய) மார்பில் நுழைந்து,
உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய
புனிதம் நிறைந்த அம்பு (பிரம்மாத்திரம்)!

———–

சிறையிலிருந்து மீண்டு வரும் சீதையை இராமன் காணுதல்-

கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். (64)

(காப்பினை – வாழ்விடத்தை; பொற்பு – அழகு; போலியை – போன்றவளை; அற்பின் – அன்பினால்)
கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாகவும், பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாகவும்,
அழகிற்கு அழகாகவும் விளங்குகின்றவளை, (தனது மற்றும் தன் நாயகனது) புகழை இவ்வுலகில் வாழும்படி
நிலை நிறுத்திய தேவியை, தனி நாயகனாகிய தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும்
தருமம் போன்ற சீதையை, அந்தத் தலைவனாகிய இராமனும், அன்பினால் நன்றாகப் பார்த்தான்.

———-

தீக்குளித்து வந்த சீதையை வானில் தோன்றி தேவர்களும் தசரதனும் வாழ்த்துதல்

“பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்கு” என்பது மனக்கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ‘கற்பினுக்கு அரசி‘ என்று, “உலகில்
பின்னைக் காட்டுவது அரியது“ என்று எண்ணி இப்பெரியோன். (65)

பொன்னை நெருப்பில் போடுவது பொன்னைச் சொக்கத் தங்கம் என உலகிற்குக் காண்பிப்பதற்காகத் தான்
என்று மனத்தில் நினைத்தலே தகுதி. (அதுபோல) குணங்களால் உயர்ந்த இந்த இராமன்,
உலகத்தில் (இச்சமயம் தவறினால்) பிறகு தெளிவித்தல் இயலாது என்று கருதியே
உன்னை ‘கற்பிற் சிறந்தவள்’ என்று (இந் நிகழ்ச்சியால்) தெளிவித்தான்.

—————

அயோத்தியில் இராமன் திருமுடி சூடிய காட்சி (பட்டாபிஷேகம்)

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச,
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி. (66)

அரியணையை அனுமன் காத்து நிற்க, அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்க,
பரதன் வெண் கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிற்க, இலக்குவன் சத்துருக்கன் இருவரும் கவரி வீச,
மணம் கமழும் கூந்தலை உடைய சீதை பெருமிதமாய் விளங்க, சடையனின் கால் வழியின் முன்னோராக
உள்ளோர் எடுத்துக் கொடுக்கப் பெற்றுக் கொண்டு, வசிட்ட முனிவனே மகுடத்தை சூட்டினான்.
(தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலை, நன்றி மறவாமல்,
ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை பத்து இடங்களில் கம்பர் குறிப்பிடுகின்றார். அதில் முக்கியமானது இது).

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்

January 9, 2021

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்

1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)

ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.

2.ஸ்ரீ புராணங்கள் : (முதன்மையானவை)

1. விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2. பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3. வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4. பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்குதான் சீதை
திருமகளின்அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5. கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6. அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7. நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8. பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9. கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால
இடைச்செருகல்கள்
10. ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11. பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)

1. தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2. நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3. தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4. பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)

இவையெல்லாம் தத்தம் சமயக் கருத்துக்களை விளக்க இராம காதையைப் பயன்படுத்துகின்றன.

மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில முழு
ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப்படுகின்றன.

1. யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.

இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள் வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு
வரையில் தோன்றியுள்ளன.-
ஸ்ரீ காளிதாசரின் ஸ்ரீ இரகுவம்சம் முதலான பல இலக்கியங்கள் ஸ்ரீ இராமசரிதையைப்
பாடுபொருளாகப் பேசுவதையும் காண்கிறோம்.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:

1. காளிதாசர் : இரகுவம்சம் (கி. பி. 4)
2. பிரவர்சேனர் : இராவணவகோ (அ) சேதுபந்தா
(கி. பி. 550-600)
3. பட்டி : இராவணவதா (கி. பி. 500-650)
4. குமாரதாசர் : ஜானகி ஹரணா (கி. பி. 8)
5. அபிநந்தர் : இராமசரிதை (கி. பி. 9)
6. க்ஷேமேந்திரர் : (a)இராமயண மஞ்சரி (கி. பி. 11).
: (b)தசாவதார சரிதை
7. சாகல்ய மல்லர் : உதார ராகவர் (கி. பி. 12)
8. சகர கவி : ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9. அத்வைத கவி : இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10. மோகனஸ்வாமி : இராம ரகசியம் (அ) இராம சரிதை (கி. பி. 1608)

ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன.
பாசர், பவபூதி, ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.

பௌத்த இராமாயணங்கள்

1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்

1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம்
(பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்
கம்பன் : கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு
1. கோன புத்தா ரெட்டி : ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2. பாஸ்கரன் மற்றும் மூவர் : பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3. ஆதுகூரி மொல்ல : மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்
1. அபிநவ பம்பா என்னும் -நாக சந்திரர் : பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. குமார வான்மீகி என்னும- நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்
1. கன்னச இராம பணிக்கர் : கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. துஞ்சத்த எழுத்தச்சன் : அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி
1. கோஸ்வாமி துளசிதாஸ் : துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2. கேசவ தாஸ் : இராம சந்திரிகா (கி. பி. 16)

அசாமி
மாதவ் கந்தவி : அசாமி ராமாயணம் (கி. பி. 14)

வங்காளம்
கிருத்திவாசன் : வங்காள ராமாயணம் (கி. பி. 15)

ஒரியா
பலராமதாஸ் : ஒரியா ராமயணம் (கி. பி. 16)

மராத்தி
ஏக நாதர் : பாவார்த ராமாயணம் (கி. பி. 16)

நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு
மக்களிலக்கியப் பாடல்கள்.

——————–

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப் போக்கில் மேலும்
பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

அத்யாத்ம ராமாயணம்
வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
லகு யோக வசிஸ்டா
ஆனந்த ராமாயணம்
அகஸ்திய ராமாயணம்
அத்புத ராமாயணம்

ஸ்ரீ மகாபாரதத்தில் வன பர்வத்தில் ‘ராமோக்யான பர்வ’ எனும் பெயரிலும்
ஸ்ரீ பாகவத புராணத்தில் ‘9 வது ஸ்கந்தத்திலும்’ ராம கதை இடம்பெறுகிறது.
இவை தவிர ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும், அக்னி புராணத்திலும் கூட
ஸ்ரீ ராமகதையைப் பற்றி சுருக்கமாக விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ துளசிதாசரின் ராமசரிதமானஸ். இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.
மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார்
அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது
v கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது.
வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட
கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.
ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர்
இயற்றிய ஸ்ரீ ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது.

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும்
கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான
v ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.
கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம்
(ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட
ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன.
தவிரவும்–கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான
அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ஸ்ரீ ராம கதையாக
கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஸ்ரீ கம்பர் இயற்றிய ‘ஸ்ரீ கம்பராமாயணம்’.
கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு
மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய
பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.
கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால்
கொங்கணியில் இயற்றப்பட்ட ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள்
போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி,
ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட
கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த
பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

கம்போடியாவில் ரீம்கர்
தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிர லாக் பிர லாம்
பர்மாவில் யம ஸாட்டாவ்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
சீனா, திபெத் யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

———-

கெமர் மொழியில் உள்ள ரீம்கெர்,
தாய் மொழியில் உள்ள ராமகியென்,
லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம்,
மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

——–

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும்.
அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது.
இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள
சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர்.

——–

ஸ்ரீ இராமகீர்த்தி அல்லது தாய்லாந்து இராமாயணம் (இராமாக்கியென், Ramakien,) என்பது
தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டது.
இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நடந்த ஆயுத்தியாவின் அழிவில்
சிதைந்து போன பின்னர், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமாவின் இதனை எழுதினார்.
இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்தில் கொன் என வழங்கப்படும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப்பட்டது எனவும் கூறுவர்.
இரண்டாம் இராமாவின் ஆட்சியில், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.

இக்காப்பியத்தின் மூலம் ஸ்ரீ வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை,
ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை
தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பொருளடக்கம்
பாத்திர அமைப்பு தொகு
இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும்
இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கம்ப ராமாயணம்-முன்னுரை ஸ்ரீ பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்–

January 9, 2021

ஸ்ரீ பால காண்டம் கடவுள் வாழ்த்துக்கள்–

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.–1-

——–

பாலகாண்டம் பாயிரம் என்ற பொதுத்தன்மையுடைய பகுதி போக,
ஆற்றுப்படலத்தில் தொடங்கிப் பரசுராமப்படலம் ஈறாக 23 படலங்களாக வகுக்கப்பெற்றுள்ளது.

ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியற் படலம் என்பன ஒரு தொகுதி.

இதனை அடுத்துத் திரு அவதாரப் படலம், கையடைப் படலம், தாடகை வதைப் படலம்,
வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம் என்பன ஒரு தொகுதி.

இறுதியாக எதிர்கொள் படலம், கோலங்காண் படலம், கடிமணப் படலம், பரசுராமப் படலம் என்பன ஒரு தொகுதி.

இப்படி மூன்று தொகுதிகளாகப் பிரித்த பின்னர் எஞ்சுவன நான்காவதாக உள்ள தொகுதியாகும்.
அது சந்திர சயிலப் படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய் படலம், நீர் விளையாட்டுப் படலம்,
உண்டாட்டுப் படலம் ஆகியன.

———

சோழ சாம்ராஜ்யம் நானூறு ஆண்டுகள் வாழ்ந்து ஒருவாறு மடிகின்ற காலத்தில் தோன்றியவர்
(12ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதி) சேக்கிழார் ஆவார்.

ஆக, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தில் கம்பனும், அதன் வீழ்ச்சியில் சேக்கிழாரும்
இரண்டு பெருங்காப்பியங்களை ஆக்கித் தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கடவுள் இங்கு வந்து பிறந்தான் என்று கூறாமல், கடவுளே இங்குப் பிறக்க விரும்பினான் என்று கூறும்
வகையில் நாட்டு, நகரச் சிறப்பை ஒப்பற்றதாக ஆக்கிக் காட்டுகிறான்.

பிறந்தான், வளர்ந்தான், வசிட்டனிடத்திலே கல்வி கற்றான். அப்படிக் கல்வி கற்கும்போதே அவன்
மேட்டுக்குடி மகனாக – அரச மகனாக வாழவில்லை என்பதையும் பொதுமக்களோடு நெருங்கிய
தொடர்பு உள்ளவனாக வாழ்ந்தான் என்பதையும் ஒரு பாடலில் வைத்துக் காட்டுகிறான்.
தெருவில் வருகின்றவர்களையெல்லாம் சந்தித்து
‘எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர் தரு கருணையின் முக மலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிது நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர் கொல்’ எனவே (கம்பன், 311) உசாவுவான்.
இப் பாடலில் பொதுமக்களோடு எப்படி இரண்டறக் கலந்து பழகுகிறான் என்பதைக் கவிச்சக்ரவர்த்தி
வைத்துக் காட்டுவது ஏனைய இலக்கியங்களில் காணாத புதுமையாகும்.

———-

பால காண்டம் 77 சருக்கங்கள், 2355 சுலோகங்கள்-

வான்மீகி நாரதரைப் பார்த்துக் கேட்கும் அறியா வினா சிந்திக்கத்தக்கது.
இந்த உலகத்தில் இப்போது இருப்பவர்களில் நற்பண்புகளை உடையவனாக இருப்பவன் எவன்?
வீரியமுடையவனாகவும்,அறங்களை அறிந்தவானாகவும், நன்றியுள்ளவனாகவும், எப்போதும் உண்மையே பேசுபவனாகவும்,
விரதத்தில் உறுதியுடையவனாகவும் இருப்பவன் எவன்? (1. 1-2)
நல்லொழுக்கமும், எல்லா உயிர்களிடத்தும் அன்புள்ளமும்,பல்கலை அறிவும், பல்வகையாற்றலும் எப்போதும் அன்பொழுகும்
இன்முகமும் உரையவன் எவன்? (1. 1-3)
தைரியமுடையவனும், கோபத்தைத் தன்வசப்படுத்தினவனும் ஒளியுமிழும், உடலையுடையவனும்,அழுக்காறு அற்றவனும், போரில்
உருத்தெழுந்தபோது தேவர்களாலும் அஞ்சத் தக்கவனும் எவன்? (1.1-4)
இதனை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில்,இத்தகைய ஒருவனை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை
என்னுள்ளே அடங்காது மிகுந்து எழுகிறது. இத்தகைய மானுடனை அறியும் தகுதி தங்களுக்கே உண்டென அறிவேன். (1. 1-5)

வான்மீகியின் ஆசையின் ஆழத்தை உணர்ந்த நாரதர் பெரிதும் மகிழ்ந்து,“முனிவரே உம்மாலே கூறப்பட்ட நற்குணங்கள்
ஒருவரிடத்தேயே கிடைப்பதற்கரியன. ஆலோசிக்குமிடத்து, இக்குவாகு மரபில் தோன்றி ஸ்ரீராமர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் தான்
இவ் எல்லாப் பண்புகளையும் ஒருங்கே உடையவர்” என்று கூறி இராம காதையைச் சுருங்க உரைக்கிறார்.
வான்மீகி தாம் கற்பித்துக் கொண்ட நற்பண்புகளும், நல்லொழுக்கங்களும் உடைய மானுடனாக
இராமன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் இருப்பது அறிந்து, அவன் வாழ்க்கைக் கூறுகளை நாரதர் கூறக்கேட்டு
அவற்றை அடிப்படையாகக் கொண்டு தம் காப்பியத்தை இயற்றினார்.
மானுட வாழ்க்கையில் வான்மீகி காண விரும்பிய குறிக்கோட் பண்புகள்,
அவற்றைத் தாங்கிய ஒருவனை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் வான்மீகியின் ஆழமான ஆசை
இந்த இருவகை அம்சங்களும் கம்பன் காப்பியத்தில் இடையறாது இழையோடக் காண்கிறோம்.

கம்ப ராமாயணத்தில் அவையடக்கமாக ஆறு பாடல்கள் அமைந்துள்ளன.

———–

நான்கு பிள்ளைகளைப் பெற்றான் தசரதன் என்றாலும் இராமனைத் தவிர, ஏனைய மூன்று பிள்ளைகளை அவன்
நினைவில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை. பால காண்டத்திலேயே இந்தக் குறிப்பை வைத்துக் காட்டுகிறான் கம்பன்.
பிள்ளைகளைக் கேட்க வந்த விஸ்வாமித்திரன்.

“நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” (324)
என்றுதான் கூறினானே தவிர, ‘இராமன்’ என்று பெயரிட்டுச் சொல்லவில்லை.
‘கரிய செம்மல்’என்றால் பரதனும் கரிய செம்மல்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.அப்படியிருக்க ‘கரிய செம்மல்’என்று
விஸ்வாமித்திரன் கூறியவுடன், இராமனைத் தான் தசரதன் நினைத்தானே தவிர, பரதனைப் பற்றி நினைத்ததாகவே தெரியவில்லை.

“மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்” (1514) என்று அயோத்தியா காண்டத்தில் கம்பன் இதனை நினைவூட்டுவான்.
“போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்”(1898) என்று கம்பன் முடிப்பான்.
இராமன் கானம் போய்விட்டான் என்று சொன்னவுடனேயே தசரதனுடைய ஆவி பிரிந்துவிட்டது என்று பேசுகிறான்.
வசிட்டனை நோக்கி,
“சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் மன்னனே ஆவான் வரும்
அப் பரதன் தனையும் மகன் என்று உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு” (1654)
என்று தசரதன் கூறிவிட்ட காரணத்தால் இறுதியாக நீர்க்கடன் செய்வதற்குக்கூட, பரதனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
தசரதனுக்கு நீர்க்கடன் செய்ய பரதனுக்கு வாய்ப்பில்லை என்றுகூறுவதைக் காட்டிலும்,
பரதன் கையினால் நீர்க்கடன் பெறுகின்ற வாய்ப்பை தசரதன் இழந்துவிட்டான் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமாகும்.

பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னை பண்டு
ஆக்கிய பொலங் கழல் அரசன், ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்” (1465)

‘ஏன் பரதனைப் பாட்டன் வீட்டிற்கு அனுப்பினான் தசரதன் என்பது எனக்கு இப்போது புரிந்துவிட்டது.
இராமனுடைய பட்டாபிஷேகம் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் பரதன் இங்கிருந்தால் அது பிரச்சனைக்கு இடமாகும்
என்று கருதித்தான் கேகய நாட்டிற்கு அனுப்பினான் என்று சூழ்ச்சிக்காரியாகிய கூனி பேசுகிறாள்.

“அரசரில் பிறந்து,பின் அரசரில் வளர்ந்து அரசரில் புகுந்து, பேர் அரசி” (1467)யாக இருக்கின்ற கைகேயியின்
மனத்தைக் கேவலம் ஒரு பணிப் பெண் மாற்றிவிட்டாள் என்றுசொல்வதை, கம்பனும்கூட ஏற்றுக்கொள்வதாகத்
தெரியவில்லை. ‘மந்தரை துணைக் காரணமாக இருந்தாள்
“அரக்கர் பாவமும்,அல்லவர் இயற்றிய அறமும் துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்.”(1484)என்பதாக

ஆக கைகேயியின் மனம் திரிந்தது என்றால் அது கேவலம் கூனியினுடைய சூழ்ச்சியால் அன்று. அரக்கருடைய பாவமும்,
அல்லவர்களுடைய தவமும் சேர்ந்து கைகேயியின் மனத்தை மாற்றின என்று சொல்லுகின்ற முறையில்
கைகேயினுடைய பாத்திரப் படைப்பை மிக உயர்த்தி விடுகின்றான் கம்பநாடன்.

இராமன் எப்படி ஸ்திரிப்ரக்ஞனாக அமைக்கப் படுகின்றானோ அதுபோல் ஒரு ஸ்திதப்ரக்ஞ மனோ நிலையுடையவளாகக்
கைகேயியும் படைக்கப் பட்டிருக்கின்றாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நன்மை எது, தீமை எது என்பதை நன்கு அறிந்துகொண்டாள் கைகேயி.
இந்த மாபெரும் தியாகத்தில் தன்னைச் சூடமாக ஆக்கி எரித்துக் கொண்டு கணவனைக் காப்பாற்றுகின்றாள்
என்று நினைக்கத் தோன்றுகிறது.
“அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது. என்னைக்கொன்று
நீங்கலது. இப்பொழுது அகன்றது உன் குலப்பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்தமா மணி இன்று வாங்க” (10068) என்று சொல்லி, ‘நீ வரத்தைக் கேள்’ என்று சொல்லுகின்றான்.
அப்போது இராமன் கேட்கின்றவரம் வியப்பை உண்டாக்குவதாக அமைகின்றது.
‘ஐயா,”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக” (10079) என்று கேட்கின்றான்.
தெய்வத்தைப் போல, தன்னுடைய நலத்தைக் கருதாமல், பிறருக்காகவே மாபெரும் காரியத்தைச் செய்தவள்
கைகேயி என்பதை இராகவன் உணர்ந்த காரணத்தால் தான் “என் தெய்வம்”-என்று பேசுகின்றான்.

மூல நூலில் அமைந்துள்ள முறையை விட்டுவிட்டுப் புதிய முறையில் கன்யாசுல்கத்தை ஓரளவு மறைத்து, அதே
நேரத்தில் கைகேயியை ஒரு மாபெரும் தியாகியாக, ஸ்த்தப்ரக்ஞையாக, கடமையை நிறைவேற்றுவதற்காகப்
பழி பாவங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு பாத்திரமாக அமைத்து விடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன்.

கன்யா சுல்க நிகழ்ச்சியைத் தசரதன், கைகேயி என்ற இருவர் மட்டும் அறிந்ததோடு அல்லாமல் இராகவனும் அறிந்திருந்தான்
என்பதைச் சந்தர்ப்பம் வரும் போது அவன் கூற்றாகவே வைத்துப் பேச வைக்கின்றான்
கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். மூல நூலாகிய வால்மீகத்தில் இந்நிகழ்ச்சி இராமனும் பரதனும் காட்டில் சந்திக்கின்ற காலத்தில்
பரதனிடம் இராமனே கூறுவதாக அமைந்துள்ளது.
பரதன் கூட அதை ஓரளவு அறிந்திருந்தான் என்பதையும் அந்தப் பாடலின் மூலமே தெரிவிக்கின்றான்.

வரன் நில் உந்தை சொல் மரபினால் உடைத் தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் அரசு நின்னதே ஆள்க (கம்பன் 2485) என அந்தப் பாடலில் சொல்கிறான்
இராகவன். ‘நீ பிறந்து விட்டதனாலே இந்த ராஜ்யம் உன்னுடையது ஆகிறது’ என்று இராகவன் பேசுகிறான் என்றால் என்ன பொருள்.?
கன்யா சுல்கக் கதையை வேறு முகமாக, வேறு விதமாக இங்கே புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி.
அதை நன்கு அறிந்திருந்தவனாகிய இராகவன் பேசுகின்றான்.
“பரதா, நீ பிறவாமல் இருந்திருந்தால் இந்த ராஜ்யம் எனக்கு உரியதாக இருந்திருக்கலாம்.ஆனால், கைகேயியின் வயிற்றில்
நீ பிறந்துவிட்ட காரணத்தால் இந்தப் பூமி உனக்குச் சொந்தமாகஆகிவிட்டது. அதனை நீயே ஆள்வாயக’
என்று இராகவன் கூறியதாக மிக அற்புதமான முறையில் அந்தக் கதையை மறுபடியும் நினைவூட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி

இராகவன் சொன்னதை ஏற்றுக்கொள்கிறான் பரதன். அது தான் ஆச்சரியம்.
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றிலும் நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் என்னது ஆகில் யான்
இன்று தந்தனென் மன்ன! போந்து நீ மகுடம் சூடு (2486). இராகவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு,
“நான் அரசன்தான். இப்போது நான் ஆணையிடுகின்றேன். நீ போய் ராஜ்யத்தை ஆள்வாயாக” என்று பரதன் கூறும்போது
இராமன், பரதன் ஆகிய இருவருமே இந்தக் கன்யா சுல்கக் கதையை ஏற்றுக்கொண்டு அதற்கு வழி செய்கின்றார்கள்
என்பதை அறிய முடிகின்றது.

எனவே,கைகேயி கூறிய கடுஞ்சொற்கள் எல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதற்குக் கடுஞ்சொல்லாக அமைந்தனவே தவிர,
உண்மையில் அவை மாபெரும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட ‘தூமொழிகள்’ என்பதை
“தூ மொழி மடமான்” (1484) என்ற சொல்லின் மூலம் பெற வைத்துவிடுகின்றான்.

————

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன்னருள் சுரந்து,
‘மாழை மான் மடநோக்கி உன் தோழி; உம்பி எம்பி’ என்று ஒழிந்திலை உகந்து,
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி, என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட,
ஆழி வண்ண! நின் அடியினை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே! (நாலாயிரம் 1418)
என்ற ஆழ்வாரின் பாசுரத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, பிராட்டியை குகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான் இராகவன் என்ற
ஒரு நிகழ்ச்சியை உண்டாக்கி, படகிலே சென்ற போது சீதையைக் காட்டி
‘இவர் உன் கொழுந்தி’, எனவும், இலக்குவனைக் காட்டி ‘இவன் உன்தம்பி,’ எனவும் இராமன் அறிமுகம் செய்து
வைப்பதாக ஒரு நிகழ்ச்சியைக் கம்பன் படைக்கிறான்.
“இளவல் உன் இளையான் இந் நன்னுதலவள் நின் கேள்” (1994) என்பதாக பிராட்டியை அறிமுகம் செய்து
இந்த நிகழ்ச்சியைப் பின்னர் கேள்விப்பட்டவனாகிய பரதனும் கூட,
“இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,இளையவற்கும், எனக்கும் மூத்தான்” (2367) என்று
குகனைக் கோசலைக்கு அறிமுகம்

தன்னுடைய எல்லையில் நின்று தான் உண்ணுகின்றதை இறைவனுக்குப் படைப்பது போல
அவன் கையிலே கொண்டு வருகின்றான்.
“தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம்?” (1966) என்று பேசுகின்றான் குகன்.
‘நான் கொண்டு வந்திருக்கிறேன். உன்னுடைய விருப்பம் எதுவோ அதன் படி செய்வாயாக’ என்று
அந்த உரிமையை இராகவனுக்கே கொடுக்கிறான்.ஏனையோர் அதனைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள்.
இராகவனைப் பொறுத்த மட்டில் அதைமுழு அன்பின் வடிவாக வந்ததாக ஏற்றுக் கொள்கிறான்.
சர்க்கரையால் செய்யப்பட்ட மிளகாய் எப்படி உறைக்காமல் இனிக்குமோ அதுபோல
“நீ கொண்டு வந்த இந்தத் தேனும் மீனும் அன்பு என்ற ஒன்றினாலே முற்றிலும் சமைக்கப்பட்டுவிட்டது.” ஆகவே,
“பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்” (1967)
யாக குண்டத்தில் சொரியப்படுகின்ற அவிஸ் மிக உயர்ந்ததாகும் என்று இராகவன் பேசும் போது
குகனுடைய அன்பை பரிபூரணமாக அறிந்து ஏற்றுக் கொண்டவனாகிறான்.

தன்னைக் காண வருகின்ற பரதனைத் தூரத்தில் இருந்து பார்த்த போது, பரதன் அணிந்திருக்கிறதவக் கோலத்தையும்,
அவன் முகத்தில் தேங்கியிருக்கின்ற துக்கத்தையும் பார்த்த போதே

“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல். நின்றான் தம்பியையும் ஒக்கின்றான்” (2332)
“எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” (2332) என்று பேசுகின்றான்.
“ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!”(2337)

———-

ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன்,அருந்த தவத்தால் அணுகுதலால்,
இப்பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இருவினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.” (2576) என்ற பாடலால் விராதன் விளக்குகிறான்.

எவ்வித நெறிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இழிபிறவி எய்தினும் இறைவனின் இணையடிகளை மறவாத மனம் ஒன்று
மாத்திரம் இருப்பின் அவர்கட்கும் வீடுபேறு உண்டு என்பது இந்நாட்டின் பழைய கொள்கை ஆகும்.
தமிழர் கண்ட பக்தி மார்க்கத்திற்கு எடுத்துக்காட்டுகளாகக் குகனையும், விராதனையும் கவிஞன் எடுத்துக் கூறுகிறான்-

இந்திரன் வேண்டுகிற அதே நேரத்தில் சரபங்கனுடைய ஆசிரமத்தின் வெளியே இராம இலக்குவர்கள் நிற்கின்றனர்.
அதனைத் தன் ஞானத்தால் உணர்ந்து சரபங்கன் “எனக்கு வரவேண்டிய வீடுபேற்றை அளிப்பவன் வெளியே நிற்கின்றான்.
நீ தர வேண்டிய பதங்கள் எனக்குத் தேவையில்லை” என்று பேசுகிறான். அதே நேரத்தில், வீடுபேற்றின்
இலக்கணத்தைக் கீழ்வரும் பாடலில் அற்புதமாக எடுத்து விளக்குகிறான்.

“சில காலை இலா, நிலையோ திரியா,
குறுகா, நெடுகா, குணம் வேறுபடா,
உறு கால கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா, நெறி எய்துவென்; – வான் உடையாய்;” (2606)
சரபங்கன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த இந்திரன் இராமனை இன்னான் என்று அறிந்துகொண்டு 2610 முதல் 2617 வரை உள்ள எட்டுப்
பாடல்களில் பரம்பொருளின் தன்மையைப் பேசுகிறான். ஆயிரம் யாகங்கள் செய்து இந்திரப் பெரும் பதத்தில் இருக்கும் அவனும்
விராதனைப் போலவே முரண்பாட்டில் முழுமுதலைக் காண்கிறான். அவ்வெட்டுப் பாடல்களுள் ஈடு இணையற்று விளங்குவது.

“மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை; வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;
மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; முதல் இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;
தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால், சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,
காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே; கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ?” (2614) என்ற பாடலாகும்.

இவ்விரு படலங்களிலும் நம்மை வியக்க வைக்கும் செய்தியும் உண்டு. அரக்க வடிவிலிருந்து திருவடி சம்பந்தம் பெற்ற விராதன் வீடுபேற்றை
அடைகிறான். முழு ஞானியாகிய சரபங்கனோ வீடு பேற்றின் இலக்கணத்தை மிக அற்புதமாக 2606 ஆம் பாடலில் கூறி இந்திர பதத்தையும் பிரம
லோகத்தையும் உதறி விட்டு இராமனைத் தரிசித்து வீடுபேற்றை அடைகிறான்.
இவர்கள் இருவரை மட்டுமல்லாமல் இந்திரனும் இராமனைத் தரிசிக்கிறான். இவர்களைப் போலவே அவனும் இறை இலக்கணத்தைப் பேசுகிறான்
என்றாலும், தான் பெற்ற இந்திரப் பதத்தை உதறிவிட்டு வீடு பேற்றை அடைய அவன் விரும்பவில்லை.

கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் இந்த இரண்டு படலங்களில் உபநிடதங்களைச் சாறாக பிழிந்து இந்நாட்டுக் கடவுட் கொள்கையையும்
அதனுடன் குழைத்து ஏறத்தாழ 24 பாடல்களில் தந்துவிடுகிறான்.
அம்மட்டோடு இல்லாமல் குற்றமே குணமா வாழ்ந்த விராதன், மாபெரும் ஞானியின் வாழ்க்கை வாழ்ந்த சரபங்கன் ஆகிய இருவரும்
வீடுபேற்றைப் பெரிதென மதித்துப் பெறுதலையும், தேவர்கோன் ஆகிய இந்திரன் இவர்களோடு ஒப்பிடுகையில்
சிறியவனாக ஆகிவிடுதலையும் குறிப்பால் உணர்த்துகிறான்.

“…. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும்அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்- உருள் இணர்க் கடம்பின் ஒளி தாரோயே! (பரிபாடல் 5 77-80)

அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னைத் துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக- தொன்முதிர் மரபின் நின் புகழினும் பலவே! (பரிபாடல் 14 29-32)

செரு வேல் தானைச் செல்வ! நின் அடி உறை,உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்குப்,
பிரியாது இருக்க-எம் சுற்றமொடு உடனே! (பரிபாடல் 18 54-56)

பரிபாடலில் காணப்படும் இவ்வரிகளில் இத்தமிழரின் பக்தி வழியில் பொன், பொருள், போகம், இந்திரப் பெரும்பதம்
ஆகிய எவற்றுக்கும் இடமில்லை என்பது நன்கு வெளிப்படும். இக் கொள்கைகள் நாளாவட்டத்தில் வளர்ந்து,

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரகம் யான் வேண்டேன்” (நாலா. 678)

“கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் (நாலா. 681)

“வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்” (நாலா. 683)

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும் மைத்து ஆய’ (5884)

——–

கிட்கிந்தைப் படலம் பம்பை வாவிப் படலத்தில் தொடங்கி மயேந்திரப் படலம் முடியப் பதினாறு படலங்களைக் கொண்டுள்ளது

அவ் இடத்து, இராமன், நீ அழைத்து, வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்துபோர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது’ என்றான்;
தெவ் அடக்கும் வென்றியானும், ‘நன்று இது’ என்று சிந்தியா. (3944)

இப்பாடலில், இரண்டு, மூன்றாம் அடிகளில் வரும் ‘வேறுநின்று ஏ விடத் துணிந்தது என் கருத்து இது’ என்ற பகுதி
வாலி வதையின் அடித்தளத்தை நன்கு விளக்கப் பயன்படும்.
சுக்கிரீவனைப் பார்த்து, ‘வாலியை வலியச் சென்று போருக்கு அழைப்பாயாக’ என்று கூறுகின்ற அதே நேரத்தில், தான்
எவ்வாறு போர் செய்து வாலியைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் (Strategy) இராமன் வகுத்துக் கொண்டான்.
‘மறைந்து நின்று தான் அம்பு எய்யப் போகிறேன் (ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு) நான் கண்ட முடிபாகும் இது’ வென்று பேசுகிறான்.
‘வேறு, நின்று’ என்ற சொற்கள் மறைவாக நின்று என்பதையும்
‘ஏ (அம்பை) விடத் துணிந்தது’ (எய்ய முடிவு செய்து விட்டேன்) என்ற சொற்கள் நீண்ட சிந்தனைக்குப் பிறகு
இராகவன் கொண்ட முடிவு என்பதையும் காட்டும்.
இவ்வழியைத் தவிர வேறு வழியில் வாலியைக் கொல்ல இயலாது. வாலி இறந்தால் ஒழிய இராவண வதம் தடையின்றி
நடைபெற இயலாது. எனவே, இம்முடிவுக்கு இராகவன் வருகிறான்.

வாலியோ இராமனுடைய வரலாற்றை மிக நன்றாக அறிந்திருந்தான். இராகவனுடைய பண்புநலன்களைத்
துல்லியமாக எடை போட்டு அறிந்திருந்தான் என்பதை (3965 முதல் 3969 வரை) ஐந்து பாடல்களில் விரிவாகக் கூறுகிறான்.
அம்பைநிறுத்தி ஓரளவு வெளியே இழுத்து அதில் பொறிக்கப்பட்ட
‘செம்மைசேர்நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்’. ‘கண்களில் கண்டான்’
கண்ணுற்றான் வாலி, நீலக் கார்முகில் கமலம் பூத்து
மண் உற்று, வரிவில் ஏந்தி, வருவதே போலும் (4016)
ஸ்பரிஸ தீட்சை,நயன தீட்சை, திருவடி தீட்சை என்று பலவகை உபதேசம்
ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய் (4063) என்று கூறுகிறான்.
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! –(4063)
மறைகளும் முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், துணி வில் தூக்கி,
அறைகழல் இராமன் ஆகி, அறநெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய். (4073)
ஒவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்,
பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான். (4068)
தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும், செய்கை (4020-4)

இராமகாதை முழுவதிலும் இலக்குவன், பரதன், கவந்தன், சவரி, வாலி, அனுமன், வீடணன், சரபங்கன் ஆகிய அனைவரும்
இராமனை யாரென்று அறிந்திருந்ததாகக் கவிஞன் பாடுகிறான்.

அனுமன். இவன் ‘கல்லாத கலையும் வேதக் கடலுமே இல்லை’ (3768) என்றும்
‘உலகுக்கெல்லாம் ஆணி’ (3769) என்றும்,
‘நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக் கொண்டது’ (3783) என்றும்
இராமனால் வருணிக்கப்படும் பாத்திரம் ஆவான்.
கோட்படாப்பதம் என்று இராமபிரானால் வருணிக்கப்படுதலின் இப்பாத்திரம் யான், எனது என்று செருக்கறுத்த பாத்திரமேயாவான்.

சிந்தனைக்கு உரிய பொருள் ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3756) –
தருமத்தின் வடிவான இவர்கள் அருமருந்தனைய ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3757)-
சினத்தை வென்றவர்கள் – கருணையில் கடல் அணையர் – இதமான பண்பு உடையவர்கள் இவர் –
இந்திரன் அஞ்சும் வலிமையுடையவர் மன்மதனையும் வெல்லும் அழகுடையவர் (3758) –
புலி முதலிய கொடிய விலங்குகளும் மயில் முதலிய பறவைகளும் இவர்கள்மாட்டு அன்பு செய்து உருகுகின்றன -(3760 – 61)
நெருப்பைக் கக்கும் கற்கள் இவர்கள் பாதம் பட்டவுடன் மலர்கள் போன்று மென்மை அடைகின்றன. (3762) என்றெல்லாம் கணிக்கிறான்.
துன்பினைத் துடைத்து, மாயத் தொல்வினை தன்னை நீக்கி,
தென்புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்-(3763)

‘சங்குசக்கரக் குறி உள, தடக்கையில் , தாளில்;
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை;
செங் கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே; இங்குஉதித்தனன், (3859)

தொண்டன் பரம்பொருளையும் பரம்பொருள் தொண்டனையும் இனங்கண்டுகொள்கிற மாபெரும் நிகழ்ச்சி,

சுந்தர காண்டம்,கடல் தாவு படலத்தில் தொடங்கித் திருவடி தொழுத படலத்தில் முடிகின்றது
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ (10) – பிறவியாகிய ஆழியைக் கடப்பவர் இறைவன் அடி சேர்வர்-
பிறவிக் கடலைத் தாண்டினால் கிடைப்பது திருவடி என்ற கருத்து இங்கே புதைந்துள்ளமை அறி்யப்பெற வேண்டும்.
மயேந்திர மலையில் அனுமன் முதலியோர் ஒன்று கூடிய பொழுது இராம நாமத்தின் மகிமையைச் சம்பாதி கூறினான்.
‘எல்லீரும்அவ் இராம நாமமே சொல்லீர்;சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா நல் ஈரப் பயன் நண்ணும்’ (4695) என்று சம்பாதி கூறவும்.

‘அரவணைத்துயிலின் நீங்கிய தேவனே அவன்; இவள் கமலச் செல்வியே’ (5134)
பிராட்டியிடம் அவன் கண்டிராத ஓர் அழகைத் தொண்டனாகிய அனுமன் காணுகிறான்.
‘தவம் செய்த தவமாம் தையலின் அழகை இராகவன் “காண நோற்றிலன் கமலக் கண்களால்” (5141) என்று அனுமனே பேசுகிறான்.

அனுமன் பிராட்டியின் உயிரைக் காத்தான். இப் பேருபகாரத்தை நினைந்து அவனுக்கு நன்றி பாராட்டும் முறையில் அந்தத் தாய்,
“உயிர் தந்தாய் உத்தம” (5297) என்றும்
“அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே” (5298) என்றும்
“பாழிய பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே” (5299) என்றும் நன்றி பாராட்டிவிட்டு,
தாய் மகனை ஆசீர்வதிக்கும் முறையில்,
“உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி” (5299) என்று ஆசி வழங்கினாள்.

“அடியேன் தோள்மிசை கடிது ஏறு”(5354)

“அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன் (5362) என்று வீறு தோன்றப் பேசுகிறாள்.

“திருமாலோ,இந்திரனோ, சிவபெருமானோ, நான்முகனோ, ஆதிசேடனோ, இவர்களுள் யார் நீ (5874)
எமனோ, முருகனோ, திக் பாலகரோ யார் நீ (5975)
வேள்வியில் வந்த பூதமோ, நான்முகன் அனுப்பிய தெய்வமோ (5876) யார் நீ?” என்ற வினாக்களை இராவணன்
தொடுப்பதிலிருந்து இராவணண் எந்த அளவுக்கு மாறியுள்ளான் என்பதை அறிய முடிகிறது.
புன்தொழில் குரங்கு என்று எண்ணி நகையாடினவனைக் கிங்கிரர் முதல் அக்ககுமாரன்வரை அழிந்தோர் பட்டியல்
மனமாற்றம் கொள்ளச் செய்தது உண்மை தான்.

இத்தனைவினாக்களுக்கும் விடை கூற வல்ல அனுமன் தான் யார் என்பதை (5878 – 5885) எட்டுப் பாடல்களில் விடை கூறுகிறான்
கடவுள் என்ற தமிழ்ச் சொல்லேகூடத் தம்முள் முரண்பாட்டைக் கொண்டதாகும்.
“கட” என்ற பகுதி வாக்கு. மனோலயம் கடந்தது என்பதைக் குறிக்கும்.
“உள்” என்ற விகுதி இவை அனைத்தின் உள்ளேயும் ஊடுருவி நிற்கும் என்பதைக் குறிக்கும்.
எட்டுப் பாடல்களில் சொல்லிய பாடல்கள் உபநிடத வாக்கியங்கள்போல் மிகச் சுருக்கமாக அமைந்துள்ளன.
இதை விரிவாகப் பாடவே இரணியன் வதைப் படலத்தைத் தானே புதிதாகச் சேர்த்துக் கொண்டான்-
இங்கு அனுமன், இராவணன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல்.
அங்கு இரணியன், பிரகலாதன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல்.

இப் பாடல்கள் இரண்டு வகையில் மெய்ப் பொருளை உணர்த்துகின்றன.
உபநிடதம் நேதி என்று சொல்வது போல,
‘இவனில்லை, இவனில்லை’ என்று எதிர்மறை முகத்தாலும், ‘இவன் தான்’ என்று உடன்பாட்டு முகத்தாலும்
நிறுவ முயல்கிறான் கம்பன். மூலப்பொருளின் இயல்பை எதிர்மறை முகத்தால் கூறப் போகும் அனுமன் கீழ்வருமாறு கூறுகிறான்:

தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்; திக்கின்
காவலர் அல்லன்; ஈசன் கைலை அம் கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்;— (5881)
அனுமன், “சொல்லிய அனைவரும் அல்லன் அப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்” (5878) என்று குறிப்பிடுகிறான்.
உடன்பாட்டு முகமாக அமைந்திருத்தல் காண்டற்குரியன.

அனையவன் யார் ? என,அறிதியாதியேல்,
முனைவரும், அமரரும்,மூவர் தேவரும்,
எனையவர் எனையவர் யாவர், யாவையும்,
நினைவு அரும் இரு வினை முடிக்க, நின்றுளோன் (5879)

காரணம் கேட்டி ஆயின், கடை இலா மறையின் கண்ணும்
ஆரணம் காட்ட மாட்டா,அறிவினுக்கு அறிவும், அன்னோன்;
போர் அணங்கு இடங்கர்கவ்வ, பொது நின்று “முதலே” என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான் (5883)
‘இறப்ப உயர்ந்ததாகிய இப் பொருள் சாதாரண விலங்காகிய யானை ஒன்று தன் காலை முதலை
கவ்விக் கொண்ட பொழுது ‘ஆதிமூலமே’ என்று அழைக்கவும் ஓடோடி வந்தது’என்று கூறி முடிக்கிறான்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கணக்கும் நீத்த காரணன் – கை வில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் (5883)

அறம் தலை நிறுத்தி,வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து,உலகம் பூணச் செந் நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உக நூறி,தக்கோர் இடர் துடைத்து, ஏக, ஈண்டுப்
பிறந்தனன் தன் பொன்- பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் (5885)

அஞ்சலை அரக்க ! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே
‘அஞ்சனமேனியான் தன் அடுகணை ஒன்றால் மாழ்கி, துஞ்சினன்(5888)

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல் தன்
மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான் (6028)

இராமன் திருவடிகளைத் தொழ வில்லை என்று பாடலின் இரண்டாவது அடி குறிக்கிறது. இராமன் எதிரே நின்றும்
அவன் திருவடிகளை ஒருவன் தொழ வில்லை என்றால் அது தவறன்றோ என்று நினைக்கத் தோன்றும்.
அந்த நினைப்புத் தேவை யில்லை
புருஷகார பூதை’ என்று போற்றிச்சொல்லப்படும் தாயின் திருவடிகளை அனுமன் வணங்கினான்.எனவே,
இராமன் திருவடிகளை வணங்காததால் பிழை ஒன்றும் இல்லை என்ற விளக்கத்தைத் தருகிறான் கவிஞன்.

மூல நூலாகிய வான்மீகத்தில் சீதையை இராவணன் எடுத்துச் சென்ற முறை வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது.
அது தமிழ் மரபுக்கு ஒத்து வராது என்பதால் பர்ணசாலையோடு எடுத்துச் சென்றான் என்று கம்பன் மாற்றி விட்டான்
இராகவன், அனுமன் வாய் திறந்து பேசாமல் இருக்கும்பொழுது (1) வண்டு உறை ஓதியும் (சீதை) நன்றாக உள்ளாள்.
(2) இவன் அவளை உறுதியாகப்பார்த்துவிட்டான். (3) அவள் கற்பும் நன்று என்றமூன்று செய்திகளைக்
குறிப்பில் குறிப்பு உணரும் இராகவன் புரிந்து கொண்டான்.

அமைதி அடைந்து அசைபோடு்ம் மனநிலையிலுள்ள இராமனுக்கு 6031 முதல் 6051 வரை உள்ள இருபது பாடல்களில் அங்கு நிகழ்ந்தவற்றை
விரிவாகக் கூறுகிறான்

“சோலை அங்கு அதனி்ல் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் (6037),
“மண்ணொடும் கொண்டு போனான் – வான் உயர் கற்பினாள் தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்” (6036),
தீண்டிலன் என்னும் செய்கை…. வாய்மையால் உணர்தி மன்னோ” (6039).
அனுமன் பிராட்டியின் கூற்றாக வைத்து இராமன் சற்றும் தாமதியாமல் போருக்கு எழ வேண்டுமென்ற கருத்தைப்
புரிந்து கொள்ளுமாறு அவன் கூறும் இருபது பாடல்களில் 20-ஆவது பாடலில் கூறுகின்றான், அனுமன்.
“தி்ங்கள் ஒன்றுஇருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்த பின்னை,
மங்குவென் உயிரோடு”என்று, உன் மலரடி சென்னி வைத்தாள்–(6051)

சிறையிருந்தாள் ஏற்றம் கூறியது சுந்தர காண்டம் என்பர். அந்த ஏற்றத்தைப் பிறர் அறியச் செய்தவன் யார்?
அனுமன் இல்லையானால், சிறை இருந்தாள் ஏற்றத்தைப் பரம் பொருளைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாது.
எனவே, அனுமன் பெருமையைக் கூற வந்த கவிஞன்,
செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் –(4966) என்று கூறுவது வெற்றுரை யன்று.
சுந்தர காண்டத்தை முடித்த பிறகு கம்பன் பாடலைச் சற்று மாற்றிச் செவிக்குத் தேன் எனச் சீதையின் புகழைத் திருத்தும்
கவிக்கு நாயகன் என்று சொல்லலாம் போல் இருக்கிறது. சிறை யிருந்தாள் ஏற்றத்தைக் கூறுவதா?
அவ் ஏற்றத்தை நாம் அறியுமாறு செய்த அனுமனைப் புகழ்வதா? தெரியவில்லை. ஆனால் ஒன்று கூறலாம் போல் தோன்றுகிறது.
பரம் பொருளின் துணையாகிய பிராட்டி சிறையிருந்ததிலோ, இராவணன் கொட்டத்தை அடக்கித் தன்னைப்
பன்முறை வீழ்ந்து வணங்குமாறு செய்ததோ வியப்பிற்குரிய தன்று.காரணம்,
அவள் பரம்பொருளின் ஒரு கூறு. தன் பெருமை தான் அறியாப் பரம் பொருளின், பிராட்டியின் பெருமையை எடுத்துக் கூற
ஒரு தொண்டன் வேண்டும்.கல்வி, கேள்வி, ஞானம், எடுத்துச் சொல்லும் ஆற்றல் (சொல்வன்மை) – இவற்றை முற்றிலுமாகப் பெற்ற
ஒருவனே, இராகவன், பிராட்டி இருவர் புகழினையும் திருத்த முடியும்.
திருத்துதல் என்ற சொல்லுக்குப் பக்குவமாகத் தயாரித்து வைப்பது என்பது பொருளாகும்.
“சமையலுக்குக் காய்கறிகளைத் திருத்தியாய் விட்டதா?” என்று இன்றும் வழங்கும் சொற்றொடர் இப்பொருளை விளக்கும்-

கவிஞன் தரும் அடைமொழி வைரம் பதித்த பொன் போல் அப்பாத்திரத்தை விளக்கப் பயன்படுகிறது.
கல்லாத கலையும்வேதக் கடலுமே இல்லை (3768)
வன் திறல்மாருதி (3928)
வன் துணை வயிரத் திண் தோள் மாருதி (4328)
கூற்றும் உட்கவாழ்வா(ன்) (4806)
அரி உருவான ஆண்தகை (5871)
நூற் பெருங்கடல் நுனித்துணர் கேள்வியான் (5040)
செறி பெருங்கேள்வியான் (6447)
நேர் இலாஅறிவன் (6447)
நவை படா ஞானமே,கோட் படாப் பதமே (குரக்கு உரு) (3783)
தருமத்தின் தனிமை தீர்ப்பான் (3181)
அறத்துக்கு ஆங்கொரு துணை யென நின்ற அனுமன் (5803)
செவ்வழி உள்ளத்தான் (3764)
கோது இல்சிந்தை அனுமன் (4294)
அழுங்கா மனத்து அண்ணல் (4791)
நீதி வல்லோன்(4478)
பழி இல்லான்(4923)
மெய்ம்மை தொடர்ந்தோன் (5422)
தொண்டு’என்ற ஒரு சொல்லின் முழு வடிவு ஆக அனுமன் படைக்கப்படுகிறான். தொண்டனிடத்து அகப்பட்டுக்கொள்ளும்
பரம் பொருள் கூட அவனை விட்டு நீங்காதவனாகிறான்.
உலக இலக்கியங்களில் தொண்டு என்ற ஒரு பண்புக்கு இத்தகைய ஒரு மா பெரும் வடிவம் கொடுத்த
கவிஞர்கள் கம்பன் தவிர யாரும் இலர் என்பது கண் கூடு.

——–

கம்பனுடைய இராமகாதைப் பாடல்கள் மிகைப் பாடல்களை நீக்கிப் பார்த்தால்
மொத்தம் உள்ளது, சென்னைக் கம்பன் கழகம் பதிப்பின்படி 10368 ஆகும்.
இதில் முதல் ஐந்து காண்டங்களின் பாடல் தொகை 6058 ஆகும்.
யுத்த காண்டம் மட்டும் 4310 ஆகும் என்றாலும், ஆரண்ய காண்டத்தில் வரும் கரன்வதை 192 பாடல்களும்,
சுந்தர காண்டத்தில் வரும் கிங்கரர்வதை முதல் பாசப் படலம் முடிய உள்ள பாடல்கள் 316 ஆகும்.
இவற்றையும் யுத்த காண்ட எண்ணிக்கையோடு சேர்த்தால், போர் பற்றிக் கூறும் பாடல்கள் மொத்தம்
4310+192+316=4818 பாடல்கள் ஆகும்.

யுத்த காண்டத்தில் கடல் காண் படலம் முதல், விடை கொடுத்த படலம் ஈறாக,39 படலங்கள் உள்ளன.
முடி சூட்டு படலம், விடை கொடுத்த படலம் போக எஞ்சிய 37ம்
போரும், போர்த் தொடர்புடைய செய்திகளும் கொண்டவை ஆகும்-

அங்கதனைத் தூது அனுப்ப வேண்டும் என்று இராமன் சொன்னபொழுது வலுவான காரணங்கள் பலவற்றைக் காட்டி,
அச்செயல் கூடாது என இலக்குவன் மறுக்கிறான். சிறந்தது போரே என்றான் இலக்குவன்;
சேவகன் முறுவல் செய்து விடை கூறுகிறான்:
“அயர்திதிலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் ஆய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத்துறை; அறனும் அஃதே’ என்று இவை சமையச் சொன்னான்” -(6981)-

வடக்கு வாயிலின் வழியே நின்ற இலக்குவன் நாணொலி செய்தான்.
‘ஒரு மனிதன் இப்படி நாண் ஒலி செய்ய முடியுமா?’ என்று வியக்கிறான் இராவணன்.
வீரன் தம்பி கூற்றின் வெம்புருவம் அன்னசிலை நெடுங்குரலும் கேளா,
ஏற்றினன் மகுடம், இவன் ‘என்னே இவன் ! ஒரு மனிசன்’ என்னா–(7159)
இலக்குவன் நாணொலி கேட்டுத் தன் மகுடத்தையே ஒரு முறை தூக்கி வைத்துக் கொண்டான் போலும்.
இது இலக்குவனுக்குச் செய்த வீர வணக்கம் போலும்.
இந்திரசித்தனைக் கொல்வது மிக முக்கியமானது என்றாலும், அதற்காக நான்முகன் படையை ஏவி உலகுக்கு
ஊறு விளைவிக்க இலக்குவன் விரும்பவில்லை என்பதை இந்திர சித்தனே ஒப்புக் கொள்கிறான்.
இதுவே அறப்போர் எனப்படும். இத்துணை நுணுக்கங்களுடன் போரைப் பற்றி 9ம் நூற்றாண்டிலேயே பாடிய
கவிஞன் தீர்க்கதரிசி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

திவ்வியப் பிரபந்தம், உபநிடதங்கள் என்பவற்றில் துளையமாடியவன் கம்பன்,
பிரபந்தங்கள் வளர்த்த பக்தி நெறிக்கு இடம் தராமல், இறைவன், உயிர்கள்,உலகம் என்ற மூன்றையும் வேறுபடுத்திக்
காணாமல், பிரம்மம் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் மித்தை என்று கூறும் அத்வைதம் தமிழர்களை ஓரளவு
கவரலாயிற்று. அந்த உபநிடதங்களை வைத்துக்கொண்டே, பக்தி இயக்கத்திற்கு வழிகாண முற்பட்டான் கம்பநாடன்.
‘இது சரியா?’ என்ற வினா எழலாம். முக்கியமான பத்து உபநிடதங்களை வைத்துக் கொண்டு தான் பிரம்மம் ஒன்றே
உண்மை என்று பேசுகிறார் சங்கரர்.
அதே உபநிடதங்களை வைத்துக் கொண்டு தான் முப் பொருள் பற்றிப் பேசுகிறார் இராமானுஜர்.
எனவே, ஒன்றுக்கொன்று மாறுபட்ட கொள்கைகளை நிறுவ அதே உபநிடதங்களைப் பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.
இந்த நுணுக்கத்தைத்தான் கம்பன் பயன்படுத்துகிறான்.

தான் சொல்லும் இக் கருத்துக்கள், உபநிடதங்களில் காணப்படுபவையே என்பதை,
“அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப் புறத்து உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ (இர.வதை 62)
என்ற அடிகள் மூலம் கவிஞனே பேசுகிறான்.

இரணியன் வதைப் படலத்தில் உள்ள 74,75,76, ஆம் பாடல்கள் சாந்தோக்கியம், முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சாரமாக –
ஏறத்தாழ அதே உவமைகளை எடுத்துப் பேசுவனவாக அமைந்துள்ளன.
“காலமும் கருவியும்” என்று தொடங்கும் பாடல் “ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்” என்று முடிகிறது
இந்த அடி சாந்தோக்கிய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தின் பன்னிரண்டாவது கண்டத்தில் உள்ள 1,2,3 பாடல்களின் பிழிவாகும்.

முண்டக உபநிடதத்தின் மூன்றாவது முண்டகத்தின்,இரண்டாவது கண்டத்தில் உள்ள எட்டாவது பாடலில் வரும்
கடல், ஆறு நீர் என்பவற்றை எடுத்துக்கொண்டு ஒரு சிறிது மாற்றிக் கம்பன், இப்படலத்தின் 77 வது பாடலில்
“வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான்” என்று பாடுகிறான்.
76வது பாடலில் உள்ள “தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்” என்ற கருத்து முண்டக உபநிடதத்திலும்,
கீதையிலும் சில மாறுபாடுகளுடன் பேசப்படுகிறது.

நாராயணன், எங்கும் யாவற்றிலும் நிறைந்து உள்ள விராட் ஸ்வரூபத்தின் ஒரு பகுதியே ஆகும்.
அதுவே முழுப்பொருள் என்று நினைத்து விடாதே. அவன் இல்லை என்று பேசும் நீயும்,உன்னை அவ்வாறு
பேசச் செய்யும் உன்னுள் இருப்பவனும் அந்த நாராயணனின் ஒரு பகுதியே ஆகும் என்று சொல்லவந்த பிரகலாதன்,
‘நீ சொன்ன சொல்லிலும் உளன்’ என்று கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.
இல்லை என்ற சொல்லிலும், இன்மைப் பொருள் தரும் சொல்லிலும் அவனே உள்ளான் என்ற கருத்து ஆழ்ந்து
சிந்திக்கத் தக்கது. “உளன் எனில் உளன் அவன்” (திவ்வியப்பிரபந்தம் – 2683) என்று தொடங்கும்
நம்மாழ்வார் பாடலின் 2வது அடி ‘இலன் எனின் இலன் அவன்’ எனும் இதே கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

இரணியனுக்கு ஈடு சொல்ல முடியாத ஆணவம் தலை தூக்கி நின்றது என்பதைக் கம்பன் எடுத்துக் காட்டுகிறான்.
இத்தகைய ஓர் ஆணவம் அவனிடை வளர்வதற்கு அவனுடைய கல்வியும் ஒரு காரணமாகும்.
வேதங்களை நன்கு கற்றதனால் இந்த ஆணவம் தலைக்கேறியது. அதன் பயனாக, ‘அனைத்தும் அவன்’
என்ற நினைவு போக, ‘அனைத்தும் நான்’ என்ற அகங்காரம் வலுவடைந்தது.
அவன் கற்ற அதே வேதங்களைக் கற்ற பிரகலாதனுக்கு,’அனைத்தும் அவனே’ என்ற உறுதிப்பாடு வலுப் பெற்றது.
அறிவின் அடித்தளத்தில் பக்தி இருந்தால் ‘அனைத்தும் அவன்’ என்ற எண்ணம் தோன்றுகிறது. பிரகலாதன் நிலை இதுவாகும்.
எனவே, அத்வைதமும், உபநிடதங்களும் பக்தி இயக்கத்தை அழுத்திவிட்டு மேலே வர முயன்ற 9ம் நூற்றாண்டில்,
தமிழர்கள் கண்ட பக்தி இயக்கத்திற்குத் தலைமை இடம் தருவதற்காகவே இரணியன் வதைப் படலத்தைக் கவிஞன்
பொருத்தினான் என்பதனை அறியலாம்.
வான்மீகம் உட்பட எந்த இராமாயணத்திலும் காணப்படாத இப் பகுதியைக் கவிஞன் புகுத்துவதற்கு இதுவே
காரணமாக இருந்தது போலும்.
இவ்வாறு கொள்ளாமல்,தேரழுந்தூரில் உள்ள திருமால் கோவிலில் காணப் பெறும் ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமியே
கம்பன் இதனைப் பாடக் காரணமாயிற்று என்று கூறுவோரும் உளர்.
திவ்வியப் பிரபந்தத்தில் முக் குளித்த கம்பனுக்கு, ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமியே அவதாரம், பிரகலாதன் கதை என்பவை மிக
நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

கரு நிறத்தோர் பால் வெளித்து வைகுதல் அரிது’ என, அவர்
உருமேவி, ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.(4970)
என்று பாடுவதால், வீடணனைப் பொறுத்தவரை, இலங்கையில் வாழ்ந்தாலும், இராவணன் தம்பியாக இருந்தாலும் அவன் வாழ்க்கை
முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது என்பதைக் குறிக்கிறான்.
வெண்ணிறமுடைய தருமம் தன் உண்மையான வடிவுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதால் கரு நிறம் பூண்டு வாழ்ந்தது என்று பேசுவதன்
மூலம் வீடணனுடைய உண்மைச் சொரூபத்தைக் கவிஞன் நமக்குக் காட்டுகிறான்.
நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும்
தந்தன கண்டிலேன், தரும தானமும்
வந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து
அந்தணர் மனை எனப் பொலிந்ததாம் அரோ (6461)
அந்தணர் இல்லம் எனப் பொலிகின்ற ஒரு வீட்டில், ஒளிந்து வாழ்கின்ற தருமமாக வீடணன் இருக்கின்றான் என்பதனை அறிய முடிகின்றது.

இலங்கை வாழ்க்கையோடு ஒட்டாத வாழ்க்கை வாழ்கின்ற வீடணன் காட்டில் உறைகின்ற தவசிகளைப் போல வாழ்ந்து வருகிறான்.
இங்ஙனம் வாழ்கின்ற ஒருவன் கொழு கொம்பு கிடைக்காமல் காற்றில் அலைப்புண்டு தள்ளாடும் கொடி போன்றவன் ஆவான்.
அக் கொடிக்குப் பக்கத்தில் ஒரு கொழு கொம்பு கிடைக்கும் பொழுது ‘அது எத்தகைய மரம், அதைப் பற்றிப் படருவது
நலமோ’ என்று கொடி சிந்திப்பதில்லை.
அதே போல ஒளிந்து வாழ்கின்ற இந்தத் தருமம் சந்தர்ப்பம் வந்தபொழுது இருந்த இடத்தை விட்டுப் பெயர்ந்து விடுகிறது.
அதுவும் அவனாகப் பெயர வில்லை.
“விழிஎதிர் நிற்றியேல் விளிதி” (6372) என்று இராவணன் கூறிய பிறகே வீடணன் இலங்கை விட்டுப் புறப்பட்டான்.
புறப்பட்டு வானிடை நின்று, மறுபடியும் அண்ணனுக்கு ஓர் இறுதி எச்சரிக்கை செய்துவிட்டு,
‘என் பிழை பொறுத்தி’ (6376) என்று கூறிவிட்டுப் பெயர்கிறான்.

தீயனே ஆயினும் இராவணன் பால் அன்பு கொண்ட வீடணன் அந்த இராவணன்’
இந்திரப் பெரும்பதம் இழக்கின்றான்’ (6143) என்றும்,
‘புத்திரர்,குருக்கள், பொருஇல் கேண்மையர், மித்திரர்,
அடைந்துளோர், மெலியர், வன்மையோர் இத்தனை பேரையும் (6375) அழிக்கத் துணிந்தான் என்றும்
நினைந்து எல்லையற்ற வருத்தம் அடைகிறான்

விளைவினை அறியும் மேன்மை வீடணன், என்றும் வீயா
அளவு அறு பெருமைச்செல்வம் அளித்தனை ஆயின், ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர,
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி’ என்றான்–(6506)–
திருவடி தீட்சை செய்யப் பெற்ற வீடணன் புதுப் பிறவி எடுத்து விட்டான்

கும்பகர்ணன் தொடக்கத்திலேயே “நான்முகன் மரபில் வந்தவனாகிய நீ
தீயினை விரும்பி மடியில் கட்டிக்கொண்டாய். இதன் விளைவு என்னவாகும் என்று சிந்திக்கவில்லை (6118)
மற்றொருவன் வீட்டில் வாழும் தவக் கோலம் கொண்ட பெண் மணியைக் கண்டு,ஒரு சிறிதும் இரக்கம் காட்டாமல்
நீதி நூல்கள் கூறுபவற்றை மறந்து சிறையில் அடைத்தாயோ, எந்த வினாடி இச் செயலைச் செய்தாயோ, அந்த வினாடியே
அரக்கர் புகழ் மாயத் தொடங்கி விட்டது.

மனிதர்,விலங்கு பெண் எவரேனும் ஒருவர் கூட அவனைக் கொல்ல முடியும் என்பதை விளக்கமாக எடுத்துக் காட்டி,
இப்பொழுது அந்த மூன்றுமே ஒன்றாகச் சேர்ந்துள்ளது என்பதையும் கூறுகிறான்.
மனிதரின் பிரதிநிதியாக இராமனும், விலங்கின் பிரதிநிதியாக அனுமனும், பெண்ணின் பிரதிநிதியாகச் சீதையும்
இப்பொழுது ஒன்றாகச் சேர்ந்து அவனை எதிர்ப்பதால் இறுதி நிச்சயம் என்று எடுத்துக் காட்டுகிறான்.
உயிரச்சம் கொண்டவனுக்கு மேலும் அச்சத்தை விளைவிக்கவே இம் முறையைக் கையாளுகின்றான் வீடணன்

சாரமற்ற தன் வாழ்க்கைக்கு மரணமே சிறந்த பரிசு, அதுவும் இராமன் போன்ற ஒருவன் கையால்
இறப்பது புகழுடைய செயலே என்கிறான் கும்பன்.
போர்க்களத்தில் வீடணனைச் சந்தித்த கும்பன், “புலையுறு மரணமெய்தல் எனக்கு அது புகழதேயால்” எனக் கூறிவிடுகிறான்.
அண்ணன் பொருட்டாகத் தன் அழிவை இரு கரம் நீட்டி வரவேற்கத் துணிந்து விட்டான்

இந்திரசித்தன், இலக்குவன் ஆற்றலை மனம் திறந்து பாராட்டுகிறான்.
அந்நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்;அன்றேல்,
பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக; பிறந்து வாழும்
மன்னர் நம்பதியின் வந்து, வரிசிலை பிடித்த கல்வி
இந்நரன்தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்?’ என்றான்.–8121-

போர்க்களத்தில் உண்மையில் இராமன் யார் என்பதை இராவணன் அறிய முடிகிறது.
“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்: திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகன்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?’ என்றான். –9837-

“யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; நின்றே வென்றி முடிப்பென்; புகழ் பெற்றேன்;
நேரே செல்லும் கொல்லும் எனில் தான் நிமிர்வென்றி,
வேரே நிற்கும்; மீள்கிலேன்’ என்னா, விடலுற்றான்.-9838–ஆணவத்தின் சொரூபமாகக் காட்சி அளிக்கின்றான்.

———-

திருமுடிசூட்டு படலத்தில் முடிசூட்டலைக் கூறும் கவிஞன் பாடியுள்ள அரியணை அனுமன் தாங்க என்ற பாடல்
அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்பாடலின் தனிச் சிறப்பு என்னவென்றால்,
முடிசூட்டப்பட்டவன் பெயரைக் குறிக்காமலேயே ‘வசிட்டனே புனைந்தான், மௌலி’ என்று முடிக்கிறான் கவிஞன்.
முடிசூட்டப்பட்டவனைச் சுற்றி நிற்பவர்கள் வரிசையாகக் கூறப் பெறுகிறார்கள்.
அரியணை அனுமன் தாங்கினான்; பரதன் வெண்குடை கவித்தான்; இருவரும் (இலக்குவ, சத்ருக்கனர்) கவரி
வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான்; இவர்களுக்கு இப்பணி வழங்கப்பட்டதன் நுணுக்கத்தைக் காண்டல் வேண்டும்.
அகங்கார, மமகாரங்கள் அறவே செற்று இராம பக்தி சாம்ராஜ்ஜியத்தில் மூழ்கித் தங்களையே இழந்தவர்கள் அனுமன், பரதன் என்ற
இருவருமாவர். அதிலும் பக்தியோடு தொண்டும் கலந்த முழுவடிவம் அனுமன். அவன் அரியணைத் தாங்கினான் என்றால்
இராமன் ஆட்சி என்பது தொண்டு என்ற அடித்தளத்தின் மேல் அமைந்துள்ளது என்று அறிய முடியும்.
தன்னலமற்ற பக்தியில் திளைத்தாலும் ஆயிரம் இராமர்கட்குச் சமமானவன் என்று மற்று ஓர் அன்பே வடிவான குகனால்
சான்றிதழ் தரப்பெற்றவன் பரதன் என்றாலும் தலைவன் பணி தலை நின்றவனாய் பதினான்கு ஆண்டுகள் ஆட்சி புரிவது
தன் கடமை என்று அறிந்தவுடன் விருப்பு, வெறுப்பற்ற சமநிலையில் நின்று ஆட்சி புரிந்தவன்
ஆதலால், அன்போடு கூடிய கடமை உணர்ச்சிக்கு பரதன் எடுத்துக்காட்டாவான். எனவே அவன் குடை கவிக்கிறான்
என்றால், இராமராஜ்ஜியம் தொண்டு என்ற அஸ்திவாரத்தில் மேலும் விருப்பு வெறுப்பற்ற கடமை என்ற குடையின் கீழும்
அமைந்திருத்தலைக் கவிஞன் உருவகமாகப் பேசுகிறான்.
இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக அன்போடு கலந்த தொண்டின் வடிவமாகிய இலக்குவன் ஒருபுறம் கவரி வீசுகிறான்.
அன்பின் வடிவான சத்ருக்கனன் மற்றொரு பக்கம் கவரி வீசுகிறான்.
எனவே இராமன் என்ற அறத்தின் மூர்த்தி மேலும்,கீழும்,பக்கங்களிலும் அன்பு, கடமை,தொண்டு என்பவற்றால்
சூழப்பட்டுள்ள ஓர் உருவகத்தை இந்த ஒரு பாடலில் கவிஞன் தந்து விடுகிறான்

———

இராகவன் அனுமனை நோக்கி,
“மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை:பைம்பூண்
போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக!’என்றான்.(10351)
இப்பாடலில் உள்ள புதுமையையும், நுணுக்கத்தையும் சிந்திக்க வேண்டும்.
தழுவினவர் ஆளுமை மிக்கவர் என்றும் தழுவப்பட்டவர் ஒருபடி குறைந்தவர் என்றும் கருதுவது இயல்பு.
இராமன் அனுமனைத் தழுவி யிருந்தால் மிகச் சிறப்புடைய செயல் மரபுக்கு ஒத்ததாகும்.
ஆனால், “அனுமனே! நீ என்னைப் பொருந்துறப்புல்லுக!” என்று பேசுகிறான் கோசல நாடுடை வள்ளல்.
தொண்டின் பரிணாமமாக விளங்கும் அனுமனைப் பார்த்து, நீ என்னைப் புல்லுக என்று இராகவன் கூறும்பொழுது,
தன்னைவிடத் தன் நாமத்தையே ஜெபிக்கும் அகங்கார, மமகாரங்களற்ற தொண்டனாகிய அனுமனை ஒருபடி உயர்த்தி விடுகிறான்.
இராகவன் பரம்பொருள் ஆதலின், தொண்டனை, பக்தனை என்னைப் புல்லுக என்று சொல்லும் பொழுது
ஒரு தொண்டனின் பிடியில் பரம்பொருள் அகப்பட்டுக் கொள்ளுகிறான். குறியீட்டு முறையில் சொல்வதானால்,
பக்தனின் இருதயத்துக்குள்,பரம்பொருள் புகுந்துவிட்டான் என்பதையே இது குறிக்கிறது.

—————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-