ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் கார்த்திகையில் கார்த்திகையில் திருவவதரித்தவர்-
கவிதா ஜித கல்லோலி கன்யாகா காந்த வக்ஷஸே
கருணாதி குண் டாட் யாய கமலா நிதயே நம-
பாற் கடல் கொதிக்கின்றது என்று அத்தை விட்டு திருமார்பில் அமர்ந்து
அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாஸம் செய்பவள்
தம்முடைய கவிதையினால் அலை மகளை மார்பில் கொண்டுள்ள எம்பெருமானானை வென்றவர் என்றபடி
அவனைத் தனது கவிதைகளால் வசப்படுத்தியவர்
கருணாதி குணடாட்யாய –கருணை முதலிய குணங்கள் நிறைந்தவர்
கமலா நிதயே நம-இவர் திரு நாமம் ஸ்ரீ நிதி -அவருக்கு பிரணாமங்கள் என்றவாறு
வைராக்ய -விஜித -ஸ்வாந்தை ப்ரபத்தி விஜி தேஸ்வரை
அநு க்ரோஸ ஏக விஜிதை இத் உபாதேஸி தேசிகை –வைராக்யம் மூலம் மனதை வெற்றி கொண்ட ஆச்சார்யர்கள்
ஆனு மானித அதிகரணத்தில் யமன் நசிகேதஸத்துக்கும் உபதேசம்
தஸ்ய ச வசீகரணம் தச் ஸரணாகதி ரேவ -சரணாகதி மூலம் அவனையும் நம் வசப்படுத்தலாம் என்கிறார்
ப்ரபத்தி விஜி தேஸ்வரை-இப்படி பிரபத்தி செய்து வெற்றி கொண்டவர்கள் நம் ஆச்சார்யர்கள்
அநு க்ரோஸ ஏக விஜிதை-
புகழ் புண்ணியம் பொருளுக்கும் வசப்படாத ஆச்சார்யர்கள் இரக்கத்தின் வசப்பட்டு உபதேசிக்கிறார்கள்
———-
வந்தே வேங்கட சேஷார்யம் வத்ஸ வம்ஸைக மௌக்திகம்
வாத் யஸ்ய ஸ்ரீ வரதார்சார்ய தனயம் வத்ஸல –ஸூவ ஆச்சார்யர்- திருத் தகப்பனார் -ஸ்துதி
ஸ்ரீ வத்ஸ குலம் -வம்சம் குலத்தையும் மூங்கிலையும் குறிக்கும் மூங்கில் இருந்து முத்து பிறக்குமா போல் ஸ்வாமிகள் –
ஸ்ரீ மத் வேங்கட சேஷார்ய ஸ்வாமிகள் -1855-இவர் திருத்தகப்பனார் ஸ்ரீ மத் வரதார்ய ஸ்வாமிகள்
நான்முகனும் தனது திருத் தகப்பனாரான ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவரை ஸ்துதிக்கும் காட்சி
லஷ்மீ துரங்கானன பாஹவஸ்தே ஸத்வார ஏவம் ந கதம் நு பாதா
இத்யானத ஸ்ரீ சதுரானநோக்தீச் ஸ்ருண்வன் ஹயாஸ்யஸ் சமிதமாதநோதி –2-
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே தேவரீருக்கு நான்கு திருக்கைகள் போல் நான்கு திருக்கால்கள் இல்லையே
எதனால் -நான்முகன் வினவ
மந்தஹாஸம் செய்கிறான் -என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்
மழலைக்கேள்வி -குதிரைக்கு நான்கு கால்கள் இருப்பதால் -கேட்க்கிறான்
தாஸனான அடியேனுக்கு நான்கு முகங்கள் -ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவடியைத் தொழ நான்கு வேண்டாமோ என்று எண்ணிக் கேட்க்கிறான் என்றுமாம்
சதுரானனன் நான்முகன் என்றும் சாதுர்யமாகப் பேசும் முகம் உடையவன் என்றும் பொருள் உண்டே
தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே –26-
அறு கால சிறு வண்டே –
த்விபாத்தாய் இருத்தல்
சதுஷ்பாத்தாய் இருத்தல் -செய்கை அன்றிக்கே –
கமன சாதனமான கால்கள் ஆறு உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -என்று பூர்வர்கள் நிர்வாஹம்
வண்டுக்கு கமன சாதனம் சிறகு ஆகையாலே –
மேலே -தொழுதேன் -என்கையாலும் –
என் தலையில் வைக்கைக்கு ஆறு காலாக உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -என்று பட்டர் அருளிச் செய்வர் –
தொழுதேன் உன்னை –என்கிறாள் -தொழுவது என்றால்
தொழுகின்றவர்கள் -தொழப்படுகிறவர்கள் திருவடிகளைத் தம் தலை மேல் வைத்துக் கொள்வது தானே –
திருவடிகள் பல இருப்பின் தலை நிறையத் திருவடிகளை இருத்திக் கொள்ளலாமே –
அத்தைக் கருதியே பரகால நாயகி ஆறு கால்கள் இருப்பத்தைச் சொல்லி வண்டுகளை விளிக்கிறாள்
சேர்ப்பாரைச் பஷிகளாக்கி -நாயனார்
தேசிகாஸ் தத்ர தூத -தேசிகன்
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-அர்ச்சையில் தூது இது (தூது நான்கு உண்டே )
என்ற திருவாய் மொழிப் பாசுரத்தின் ஈற்றடி இங்குக் குறிக் கொள்ளத் தக்கது.
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே –திருவிருத்தம் –54-பாசுரத்தையும் இங்குக் குறிக் கொள்ளத் தக்கது.
பராங்குச பரகால நாயகிகளின் கூற்றுக்களை திரு உள்ளத்திலே வைத்தே மந்த ஹாஸம் செய்து அருளுகிறான் பரிமுக எம்பெருமான் –
அஸ்வமேத வேள்வி செய்யும் மன்னன் தன்னுடைய தேரில் பூட்டப்பட்ட வேண்டிய குதிரைகளை மந்திரப்படுத்தி
பயன்படுத்திட வேண்டும் என்று உபதேசிக்கும் வேதத்தில் குதிரைக் கால்களைக் கூட கைகளாக
வருணித்து இருப்பதை ப்ரம்மா நினைவில் கொண்டு இருந்தால் கைகள் கால்கள் இவற்றின் எண்ணிக்கையைப்
பற்றிய கேள்வியே எழாதே என்ற திரு உள்ளத்தாலும் மந்த ஹாஸம் செய்கிறான் என்னவுமாம்
அந்த மந்த்ரம்
தீவ்ரான் கோஷான் க்ருண்வதே வ்ருஷ பாண யோளுஸ்வா ரதேபிஸ் ஸஹ வாஜயந்த
அவக்ரா மந்த ப்ரபதை ரமித்தான் ஷிணந்தி சத்ரூகும் ரன பவ்ய யந்த
வ்ருஷ பாண யோளுஸ்வா–பொழியும் கைகளை யுடைய குதிரைகள் என்று வேதம் வருணிக்கிறது
குதிரை என்றவுடனே ஹயக்ரீவர் நினைவுக்கு வர வேதம்
அவன் ஞான முத்திரை மூலம் சாஸ்த்ரங்களைப் பொழிவதைப் பேச வேண்டும் என்று
வ்ருஷ பாண யோளுஸ்வா–வர்ணித்திருக்கிறானோ என்ற திரு உள்ளத்தாலும் மந்த ஹாஸம்
மந்த ஹாஸம் செய்து தனது இன்னருளும் தன்மையை வெளிக்காட்டி அருளுகிறார்
ஆனத ஸ்ரீ சதுரனன -என்று ப்ரம்மா நான்கு புறமும் சுற்றிச் சுற்றி வந்தான் என்பதால் அவனுடைய ஆச்சார்ய பக்தியைக் காட்டுகிறான் –
மேல் ஸ்லோகங்களிலே பாதாதி கேசமாக வர்ணனை-
———-
ஸூதாம் சு பிம்பாத் தவ வாஸ பூதாத்
ஸூதாம் சு கண்டா தசதா விலக்னா
நாகாத்மனா த்வச் சரணாக்ர தேசே
ஸூதா மயீம் ந பணிதம் திசந்தி –3-திருவடி நகங்களா -திங்களின் துண்டங்களா
ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி
ஸ்ரேநீஷு பாதாங்குலி நாமிகாஸூ
ந்யக்க்ருத்ய சந்த்ர ச்ரியமாத் மகாந்த்யா
நகா வலீ சும்பதி ஸூந்தரஸ்ய –ஸூந்தர பாஹு ஸ்தவம் –67-
திரு நகங்களை வர்ணிக்கிறார் –திரு விரல்களின் வர்ணமும் அர்த்தாத் சித்திக்கும் –
அழகர் திரு மேனியில் அழகு என்னும் அமுதக்கடல் ஓன்று உண்டாயிற்று -கடல் இருந்தால் அலைகள் இருக்க வேணுமே –
அந்த அலைகள் தானோ என்னலாம் படி திரு விரல்கள் -அத் திரு விரல்களில் திரு நகங்கள்
சந்திரனுடைய ஒளியையும் திரஸ்கரித்து மிக அழகியவாக விளங்குகின்றன -என்கிறார்
ஸூந்தரஸ்ய –அழகருடைய
பாதாங்குலி நாமிகாஸூ ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி ஸ்ரேநீஷு –திருவடி விரல்கள் ஆகிற
ஸுவ்ந்தர்ய அமுத சாகர தரங்க பரம்பரைகளிலே
நகா வலீ மாத்ம காந்த்யா-சந்த்ர ச்ரியம்
ந்யக்க்ருத்ய சும்பதி–திரு நகங்களின் வரிசையானது தன் ஒளியினால் சந்திரன் ஒளியையும் கீழ்ப் படுத்தி விளங்கா நின்றது –
யோ ஜாத க்ரஸிமா மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்புநா
சோயம் யத் சரணாஸ்ரயீ சசதரோ நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் ததா
யாதஸ் தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –68-
திரு நகங்கள் -சந்த்ர சத்ருசமான அளவே அன்று -தேவதாந்த்ர ஸமாச்ரயணத்தால் வந்த குறை தீர
நக வ்யாஜத்தாலே அழகர் திருவடிகளை ஆஸ்ரயித்து குறைகள் தீர்ந்து பரி பூர்ணன் ஆனான் என்கிறார்
யோ சசதரோ-சம்புநா -சிரஸா -சம்பாவிதச் -சந் -ஜாத க்ரஸிமா ஜாத க்ரஸிமா மலீ ச -அபூத் –யாவன் ஒரு சந்திரன்
சிவன் சிரஸ்ஸாலே தரிக்கப்பட்டவனாகி ஷயிஷ்ணுவும் களங்கியும் ஆனானோ
சோயம் -நக வ்யாஜத -யத் சரணாஸ்ரயீ சந் பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் யாத–எப்போதும்
பூர்ணனாய் இருக்கை -நிஷ் களங்கனாய் இருக்கை -ஒளி மிக்கு இருக்கை -பல வடிவு பெற்று இருக்கை –
ஆகிய இத்தன்மையை அடைந்தானோ
தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –அந்த திருமாலிருஞ்சோலைமலை அழகரை வணங்குகிறோம்
ததா நூநம் –இப்படி அருளிச் செய்தது உத்ப்ரேஷ அலங்கார ரீதியில் என்பதைக் காட்டுகிறது -நூநம் -என்பது
பஹுத்வம் அடைந்தான் என்றது பத்து திரு நகங்களும் பத்து சந்திரன் போலே விளங்கி
எப்போதும் புஷ்கலமாய் அ களங்கமாய் ஜாஜ்வல்யமானமாய் இருப்பதும் சொல்லிற்று ஆயிற்று –
மல மறு மதி சேர் மாலிருஞ்சோலை –ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு விளக்கமே இந்த ஸ்லோகம்
சந்திரன் எம்பெருமான் திருவடியை அடைந்து உந்து பத்தாக வளர்ந்திட்டுள்ளான்
அந்தப் பத்துச் சந்த்ரன்களே எம்பெருமான் திருவடி திரு நகங்கள் என்று
தற் குறிப்பேற்று அணியில் உத்பரேஷை அருளுகிறார் ஆழ்வான்
நம்பிள்ளை யீட்டில்
மலமறு -சந்த்ர பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து நிற்கையாலே அவன் போம் போது சிகரங்களிலே தேய்ப்புண்டு
சாணையிலே இட்டால் போலே களங்கமற நிற்கும் என்னுதல்
அன்றிக்கே
திருமலை ஆழ்வார் தாம் ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தை
பிள்ளான்-பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலை –
மதி -சந்திரன் -அறிவு -குபேரன் -யானை -போன்ற பல பொருள்கள் –
இதே கருத்தையே ப்ரதி பிம்ப லஹரீ -ஆயிரம் திருவாய் மொழியையும் சமஸ்க்ருதத்தில் அருளிய பிரபந்தத்தில்
மாலின்யான் யபஹாய ஸூத்த மதிதம் ஸ்வாராம பூமி தரம் -என்று இதற்கு அருளிச் செய்துள்ளார்
சம்போர் அம் போருஹ முக சகா சந் ஸஹாங்கச் ச சாங்க
குர்வன் சேவாம் வரத விகலோ வ்ருத்த ஹீநஸ் ஸூ வக்ரஸ்
த்வத் பாதாப்ஜே ப்ரியமக நகச் சத்ம நாச்ரித்ய நித்யம்
சத் வ்ருத்தோ அபூத் ச ச தச குண புஷ்கலோ நிஷ் கலங்க –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –61-
அம் போருஹ முக–தாமரை போன்ற திரு முகத்தை உடையவனாய்
ப்ரியமக–யஜ்ஜ பிரியனான
ஹே வரத
ஏற்கனவே
ஸஹாங்க–பாபம் உடையவனாக –/-2-களங்கத்தை உடையவனான
ச சசாங்க –அந்தச் சந்த்ரனானவன்
சம்போர் –ருத்ரனுக்கு
சகா –தோழனாய் இருந்து கொண்டு
சேவாம் குர்வன் –சிரோ பூஷணமாய்ச் சேவையைச் செய்தவனாயும்
விகலோ –வித்யா விஹீனனாய் -/-2-மூளியாய்
வ்ருத்த ஹீநஸ் –சதாசார ஹீனனாய் -/-2-உருண்டை வடிவம் இழந்தவனாய்
ஸூ வக்ரஸ்–குடிலை ஹ்ருதயனாய் -/-2-மிகவும் கோணலான ஆகாரம் உடையவனாய்
சந் -ஆகா நின்று கொண்டு
நகச் சத்மந –நகங்கள் என்கிற வ்யாஜத்தாலே
த்வத் பாதாப்ஜே நித்யம் ஆஸ்ரித –உன் திருவடித் தாமரைகளை தினமும் ஆஸ்ரயித்து
நிஷ் கலங்க -களங்கம் அற்றவனாய்
புஷ்கலோ -நித்யம் பூர்ணனாய்
சத் வ்ருத்தோ -சதாச்சார்யம் உடையவனாய் –உருண்டை வடிவம் உடையவனாய்
தச குண –பதின் மடங்கு பெருகினவனாய்
அபூத் –ஆனான்
பத்து திரு விரல்களிலும் பத்து சந்திரனானான்-நகத்வ அவஸ்தையில் பூர்ணனானான்
யோ ஜாத க்ரஸிரமர மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்பு நா சோயம் யச் சரணாஸ்ரயீ சச தரஸ் நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜ்வல தயா சார்தம் பஹத்வம் ததா யதாஸ்தம் தருஷண்ட சைல நிலையம்
வந்தாமஹீ ஸூந்தரம் -என்றும் அங்கும் உண்டே –
ஸ்ரீ லஷ்மீ ஹயவதனப் பெருமாள் முழு நிலாவின் மண்டலத்தில் வீற்று இருந்து அருள் பாலிப்பதாக மந்த்ர சாஸ்திரங்கள் காட்டுகின்றன –
ஸ்ரீ ஹயக்ரீவ கவசத்தில்
கல சாம்புதி ஸங்காஸம் கமலாயத லோசனம்
கலா நிதிக் க்ருதா வாஸம் கர்ணி காந்தர வாஸிநம் -என்று
கலா நிதிக் க்ருதா வாஸம்-சந்த்ர மண்டலத்தில் வஸிப்பவன்
தவ வாஸ பூதாத் ஸூதாம்-ஸூதாம் சு பிம்பாத் -என்று இவர் வாசஸ் ஸ்தலமாக -இருப்பிடமாக அமுதைப் பொழியும் நிலவு ஆகிறது
ஸூதாம் சு கண்டா தசதா விலக்னா நாகாத்மனா த்வச் சரணாக்ர தேசே–பத்து விரல்களும் அமுதைப் பொழியும் நிலவுகள் ஆனதே
ஸூதா மயீம் ந பணிதம் திசந்தி-அடியோங்களுக்கு அமுதமே வடிவு எடுத்த சொற்களைத் தொடுக்கும் ஆற்றலை அள்ளித் தருகின்றன –
அவனது உகந்து அருளினை திவ்ய தேசங்களில் ஈடுபட்டு
அவன் அடி பணிந்து
அங்கேயே மண்டி அபி நவ தச அவதாரமாய் அமுதைப் பொழியும் அருளிச் செயல்களை
அருளிச் செய்த ஆழ்வார்கள் பதின்மரையும் நினைப்பூட்டும் திரு நகங்கள்
அவர்களை அடிபணிந்து இருந்த ஆச்சார்யர்கள் அடி பணிந்து இருக்கும் அடியோங்களுக்கும்
அமுதிலும் இனிய சொல் வளம் வருவதில் என்ன வியப்பு –
————
சந்த்ர மண்டலத்துக்கு சந்திரன் என்ற பெயரே அடிப்படை உண்மையினை உணர்த்தும்
கலசாம்புதி ஹங்காசம் கமலாயதா லோசனம்
கலா நிதி க்ருதா வாஸம் கர்ணி காந்தர வாஸினம் –ஸ்ரீ ஹயக்ரீவ கவச ஸ்லோகம்
பாற்கடல் போல் வெளுத்த வண்ணமும் -ஆழமும் -கவர்ச்சியும் -உடையவனும்
தாமரை இதழ் போன்று நீண்ட அகன்ற திருக்கண்கள் உடைய கலாநிதியில் –
அதாவது சந்திரனில் -சந்த்ர மண்டத்தில் -எழுந்து அருளி இருப்பவனுமான ஹயக்ரீவன்
என்று த்யானம் செய்யும் முறை சொல்லப்படுகிறது
கலாநிதி சந்திரனையும் அறிஞர்களையும் காட்டும்
ஹயக்ரீவப்பெருமாளைத் தன்னுள் இடையறாது இருத்தி வழி படுபவன் கலாநிதி ஆகிறான்
பிபர்த்தி யஸ் த்வாம் மனுஜோ நிஜாந்த கலாநிதிஸ் ஸ்யாத் ஸ இஹேதி ஸத்யம்
வஹந்தி ஜாந்தஸ் ஸததம் ஸ ஏஷ கலா நிதிஸ் தத்ர நிதர்சனம் ந –4
இவனை த்யானம் செய்து நுட்பங்களைக் காண வல்ல கலா நிதி ஆவார்கள் –
ஹயா லாபே கலா தானம் –
வித்யை அருளி ஞான பிரதானம் செய்வது குதிரையால் வரும் லாபம் -என்றும்
குதிரையையே நம்மிடம் பெற்றுக் கொடுக்கும் -என்றும் உண்டே
கவிதை வெள்ளத்துக்கு வேகம் தரும் கணைக்கால்
நயநாபி ராமம் -என்று அனுபவிக்கிறார் –
அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே
விலங்க்ய ஜங்கே க்வ நு ரம்ஹதோ த்ருஸவ்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய மே –-ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –61-
அழகருடைய திருக் கணைக் கால்கள் அனுபவிக்கிறார் இதில் –
அழகருடைய திருவடிகளானவை கீழ் முகமாக வைக்கப்பட்ட தாமரை மலர்கள் போன்று இருப்பனவாகவும்
திருக் கணைக் கால்கள் அத்தாமரைகளின் நாள தண்டங்களோ என்னலாம் படி இருப்பனவாகவும் அருளிச் செய்கிறார்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய —அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே -ஜங்கே-விலங்க்ய —
அதோ முகமாக வைக்கப்பட்ட திருவடித் தாமரைகளினுடைய வ்ருத்தாகரமாய் ஆயுதமாய் இருக்கின்ற
அழகிய நாள தண்டங்களை ஒத்த திருக் கணைக் கால்களைத் தவிர்த்து
மே -த்ருஸவ் -க்வ நு ரம்ஹதோ —
என்னுடைய கண்களானவை வேறு எங்குச் செல்லும் -எங்கும் செல்லாது –
இத்திருக் கணைக் கால்களையும் அனுபவித்து நிற்கும் அத்தனை என்றதாயிற்று –
திருவடித் தாமரைகளை அதோ முகமாக வைக்க வேண்டிய காரணம் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் –
ப்ரேம்நா க்ராதும் கரி கிரி சிரோதோ முகீ பாவ பாஜோ அங்க்ரி த்வந்த் வாஹ்வய கமலயோர் தண்ட
காண்டாய மாநே -என்று அருளிச் செய்த படியே
திருமலையின் போக்ய அதிசய ப்ரயுக்தமான ப்ரீதி விசேஷத்தாலே அதனை உச்சி மோந்து மகிழ வேணும் என்று
நினைத்துத் திருவடித் தாமரைகள் கீழ் முகம் ஆக்கப் பட்டன -என்க –
ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே
தத் கேளி நளின மாம்சல நால த்வய லலிதம் ஆசரத –ஸ்ரீ ரெங்கராஜ பூர்வ சதகம் -122-
ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே-திரு மகளும் நில மகளும் திருவடி வருடும் போது உண்டான
ஹர்ஷத்தால் மயிர்க் கூச்சு எறியப் பெற்றுள்ள
ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே–ஸ்ரீ பெரிய பெருமாளது திருக் கணைக் கால்கள்
தத் கேளி நளின மாம்சல-அப்பிராட்டிமாருடைய லீலார்த்தமான இரண்டு தாமரைப் பூக்களினுடைய பெருத்த
நால த்வய லலிதம் ஆசரத –இரண்டு காம்புகளின் விலாசத்தை அடைகின்றன –
ஸ்ரீ பிராட்டிமாரின் திருக் கைகளில் அகப்பட்ட திருவடிகள் அவர்களுடைய லீலா அரவிந்தங்கள்
திருக் கணைக் கால்கள் அவற்றின் நாளங்கள் -அங்கு முள் இருக்க வேண்டுமே –
இதுவே மயிர்க் கூச்சு எறிதலால்-கண்ட கிதமாயிற்று என்றபடி –
ஜங்கா த்வதீய நயநாபிராமா
ஜங்கால தாமேவ தாதி வாஸாம்
ப்ரவாஹ பூம்னீதி விபாதி ஸித்தே
ப்ரவாத ஏவம் மஹதாம் ந மித்யா –4-
அவன் திருக் கணைக் காலைத் த்யானம் செய்யவே -த்யானம் செய்பவரின் சொல் வெள்ளம் ஜங்காலம் ஆகிவிடும்
இந்த வெள்ளம் கங்கா ப்ரவாஹத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுமே என்கிறார்
————
அடுத்து திருத் தொடை பிராட்டிக்கு இருப்பிடமானது பற்றி வந்த பொருத்தம் கவிநயத்துடன் அருளிச் செய்கிறார்
யானையின் துதிக்கையோ வாழை மரமோ ஒப்பாகாதே –
துதிக்கை போல் கரடுமுரடு அல்ல -வாழை போல் குளிர்ந்து இருக்காது
ரம்பா அப்சரஸுக்கும் வாழைக்கும் பெயர் -வடதிசை என்றும் பெயர்
ஆகவே இவன் இடது துடையில் வீற்று இருக்கச் செய்கிறான்
ஏதோ சமயத்தில் தலையணையாய் கொள்ளுவது போல் இல்லாமல் எப்போதும் பிராட்டியைக் கொண்டுள்ளான் அன்றோ
ரம்பாதி வாஹ்ய ரமணீய தனு ப்ரகாரா
ராமா ரமாஸி ரமணீ மணி ரத்ரஸ் த்வம்
ரம்பாபி ராம ஸூ கோரு கதா பரவேஸ்த்வம்
இத் யங்க காம் விதனுஷே னு ரமாம் ஹயாஸ்ய –5-
எனது திருத்தொடைகள் சம்சார வாழ்வில் உள்ள தாபத்ரயங்களை நீக்கும் வாழை -ரம்பா வாக இருக்கின்றன
அவற்றில் ரம்பாவில் உள்ள -இடது பக்கம் உள்ள -ரம்பாவின் திருத்தொடையில் ரம்பாதிகளான
பெண்மணிகள் தலையால் தாங்கிட வேண்டிய அழகு மிகுந்த பெண்மணியான திருவே
நீ அமர்வது சாலப் பொருத்தமாக இருக்கும் என்று கூறி அங்கே அமரச் செய்து அருளி உள்ளனையே பரிமுகப்பெருமானே –
என்று விண்ணப்பம் செய்கிறார் –
————–
இடது மடியில் மனைவி அமரும் ஸ்தானம் -மக்கள் சிஷ்யை வலது மடியில் அமரும் ஸ்தானம்
இட வெந்தை வலவெந்தை இரண்டுமே உண்டே
அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச த்வயி மாதவா
சிஷ்யை ஸ்தானத்தில் தான் த்வய உபதேசம் பெற்று அத்தை விஷ்வக் சேனருக்குப் பிராட்டி உபதேசம்
உபதேசம் பெற்ற பின்பு இடது மடியில் அமர்ந்து அவனை ஆலிங்கனம் செய்து நமக்கு புருஷகார பூதையாகிறாள்
ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமாவளியில்
அங்கேனு தூஹ்ய வாக் தேவீம் ஆச்சார்யகம் உபாஸ்ரித
வாக் தேவியினை மடியிலே அமர்த்தி அவளுக்கு ஆச்சார்யனாகச் செயல்படுபவன்
அவளுக்கு கல்வி கற்ப்பிப்பவன்
நமோ வாஸே என்றும் நமோ வாசஸ் பதயே என்றும் ப்ரஹ்ம எஜ்ஜத்தின் நிறைவில்
லஷ்மீ தேவியையும் ஹயக்ரீவனையும் வணங்கும் மந்த்ரங்கள் மும்முறை அனுசந்திக்கின்றோம்
ஆனால் இங்கு இவள் வலது மடியில் அமர்ந்து தானே உபதேசம் பெறுவது பொருத்தமாய் இருக்கும்
இடது மடியில் இருப்பதற்கு ஹேது காட்டுகிறார்
வலது திருக்கரத்தில் ஞான முத்திரையை ஸதா பார்த்துக் கொண்டு இருக்க இதுவே சரியாய் இருக்கும்
இந்தக் கருத்தை தன்னுள்ளே அடக்கி உள்ள 11 ஸ்லோகம்
அங்கம் விஹாய தவ தக்ஷிணமாய கஸ்மாத்
வாமம் ரமா ஹய முகேதி விம் ருஸ்ய சேத
பாணிம் தவாதி மதுரம் சுப போத முத்ரம்
ஸம் வீஷீதும் விசதமித்யத நிச்சினோதி–11-
இடது துடையில் அமர்ந்து இருந்தால் தானே இதம் தரும் இனிய உபதேச முத்திரை யுடன் கூடிய வலது திருக்கையை நன்கு காண இயலும்
————————-
சந்த்ரமா மனஸோ ஜாத –ஹ்ருதயத்தில் இருந்து தோன்றிய சந்திரன் —
பிள்ளை தகப்பன் ஹ்ருதயத்தில் இருந்து தோன்றியதாக வேதம் சொல்லும்
அங்காத் அங்காத் சம்பவஸி ஹ்ருதயாத் அதி ஹயஸே
ஆத்மா வை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரதச்சதம்
ஓ மைந்தனே நீ என்னுடைய அங்கத்தின் நின்றும் உண்டாவனாக உள்ளாய் –
ஆகையால் பிள்ளை என்ற பெயரை யுடைய நான் ஆகவே இருக்கிறாய் -நூறு ஆண்டுகள் வாழ்வாயாக –
அங்காத் அங்காத் சம்பவஸி ஹ்ருதயாத் அதி ஹயஸே
வேதோவை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரதச்சதம் -என்றும் வேறே ஒரு மந்த்ரம் ரிக் வேதத்தில் உள்ளதே –
வேதம் -தர்மம் செல்வம் என்ற பொருள் -உண்டே
ஆகவே பிள்ளையே இதயக்கனி –
வாசஸ்பதே ஹ்ருத்விதே நாமன் விதேம தே நாம
விதேஸ் த்வமஸ் மாகம் நாம வாசஸ்பதிஸ் ஸோமமபாத்
மா தைவ்யஸ் தந்துச் சேதி மா மனுஷ்ய நமோ திவே நம ப்ருதிவ்யை ஸ்வாஹா
ஹயாஸ்யன் என்பதுவும் ஸ்ரீ ஹயக்ரீவரின் திரு நாமம் -அது மருவி அயாஸ்யர் ஸ்துதி யானது இதுவும்
வாசஸ்பதே –தேவீ எனப்படும் லஷ்மீ தேவியான கேள்வனான ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவப் பெருமானே
ஹ்ருத்விதே –ஹ்ருதயத்தை ஏற்பாடு செய்பவனே –
அதாவது ஹ்ருதயத்தில் நல்ல எண்ணங்களை உருவாக்கி எண்களைத் தூண்டுபவனே
நாமன் –உலகில் உள்ள நாமங்கள் அனைத்துக்கும் உரியவன்
விதேம தே நாம -உனக்கு நமஸ்காரங்கள்
விதேஸ் த்வமஸ் மாகம் நாம -நீ எங்களுடைய புகழை பரவச செய்திடுவாயாக
வாசஸ்பதிஸ் ஸோமமபாத் –இப்படி விண்ணப்பம் செய்து வேள்வியில் ஸமர்ப்பித்த சோமரசம் போன்ற பொருள்களை
ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவன் ஏற்றுக் கொண்டு அருளினான்
அதனால்
மா தைவ்யஸ் தந்துச் சேதி –எங்கள் இல்லங்களில் நடக்கும் வேள்விகளானால் தேவ சந்ததிகளின் இழை அறுபடாதது ஆகுக
மா மனுஷ்ய தந்துச் சேதி–வேள்வியில் பனி ஆற்றும் ரித்துக்களான மனித சந்ததியின் இழை அறுபடாதது ஆகுக
நமோ திவே –இந்த ஏற்பாட்டினால் வளம் சிதையாது திகழும் வான் உலகுக்கு வணக்கம்
நம ப்ருதிவ்யை -அவ்வாறே நீங்காத செல்வம் நிறைந்த நில உலகுக்கு வணக்கம்
ஸ்வாஹா –இவ்வாறு சொல்லி வேள்வியில் அர்ப்பணம் செய்ய வேண்டும்
நான்முகனும் பெருமாளை ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்துதிக்கும் பொழுதும்
அஹம் தே ஹ்ருதயம் ராம ஜிஹ்வா தேவீ ஸரஸ்வதீ –
நான் உனது மார்பு -ஸரஸ்வதி தேவி உனக்கு நாக்கு
புத்ர பரமான ஹ்ருதய ஸப்தத்தாலே ப்ரஹ்மாவினுடைய கார்யத்வத்தையும் காட்டி அருளுகிறார்
எம்பெருமானார்-அவர் இதயமே சம்பத்குமார் -செல்வப்பிள்ளை –
யதிராஜரும் -யதி பரிப்ருட -ஹ்ருதயமும் -என்பதையே தேசிகன் மேல்கோட்டை மங்களா ஸாஸன ஸ்லோகத்தில்
நவ நவ பஹு போகாம நாத நாராயண த்வம்
விரசாய துரி தவ்கை ஸ்தாமனாக்ரா கந்தாம்
ஸஹஜ ஸூலப தாஸ்யைஸ் ஸத் ப்ரப்யர்த்த னீயாம்
யதி பரிப்ருட ஹ்ருத் யாம் யாதவாத்ரேஸ் ஸம் ருத்திம்
பெற்றோரைத் தாங்கும் பிள்ளையாக இருப்பதால் சந்தனுக்கு ஏற்றம் -கலாநிதி ஆகிறான்
சந்த்ர க்லாயாம் ஹ்ருத் யாத்த வாபூத்
லஷ்மீ துரங்கானா தத் க்ருதஞ்ஞ
அந்தர் விதத்தே ஸததம் பவந்தம்
கலாநிதி ஸ்தேந ஜகத் ப்ரஸித்த –15 ஸ்லோகம்
நான்காவது ஸ்லோகத்திலும் கலாநிதி -சந்திரனுக்கு உள்ள பெயர் அடிப்படையில் சிலேடை நயம் பார்த்து அனுபவித்தோம்
அங்கு பறிமுகனான தேவனை எண்ணி உள்ளத்தே இருத்துவதால் கலாநிதி யானை அருளிச் செய்யப்பட்டது
இங்கு ஈன்ற தந்தையை பக்தியுடன் உள்ளத்தே வைத்து கலாநிதி ஆவது அருளிச் செய்யப்படுகிறது
யஸ்ய தேவா பரா பக்தி யதா தேவே தாத்தா குரவ்
தஸ்யைத ஹ்ய கதிதா பார்த்தா ப்ரகாஸந்தே
மஹாத்மன ப்ரகாஸந்தே மஹாத்மன-ஸ்வேதாஸ்வர உபநிஷத் =வெள்ளைக்குதிரை உப நிஷாத் ரஸிக்கலாம்
உததம் ஆதேசம் அப்ராஷ்ய யேன அஸ்ரு தகும் ஸ்ருதம் பவதி –
எந்த ஆசேதனனைக் -ஜட்டயை இடுபவனைக் -கேட்டால் கேட்க்காதவைகள் கூடக் கேட்டவை ஆகுமோ –
அந்த ஆசேதனைக் கேட்டாயோ என்று சொல்லாமல் தம் -அந்த -என்ற பொருளில் ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸித்தியைச் சொல்லுமே உபநிஷத்
அதே போல் தத் ஹயாஸ்யம் மஹ என்பதில் –தத் -ப்ரஸித்தமான ஹயமுகனான ஒளி
தத் -737– ஸஹஸ்ர நாமத்துக்கு பட்டர்
தேஷாம் –தத் தத் -ஸர்வேப்ஸித -புபுத் ஸூநாம் -ஸ்வ ஞான பக்திம் தனோதி இதி தத் -என்பது பாஷ்யம் –
பக்தர்களுடைய ஞானம் பக்தியாக மலர்ந்து அது மேலும் கிளர்ந்து வளரும்படி செய்பவன் –
தத் மந்த்ரம் காயத்ரியிலும் சொல்லுகிறோம் -நாம் பண்ணும் கிஞ்சத்தையும் நிறைவாகக் கொள்ளுமவன்
பட்டர் இத்தையும் மேற்கோளாகக் காட்டி அருளுகிறார் –
737-தத் –தூண்டி அதிகப் படுத்துபவன் –ஞான சக்திகளை விஸ்தரிக்க பண்ணுபவன்
ஓம் -தத் -சத் -ப்ரஹ்ம லஷணம்-தத் சவிதுர் வரேண்யம் –
தத் ஸவிதுர் வரேண்யம்-காயத்ரி மந்த்ரம் -அனைத்துக்கும் காரணமான அவனுடைய ப்ரகாஸம்
ஓம் தத் சத் இதி நிர்தேச–ஓம் தத் சத் ஆகிய மூன்றும் ப்ரஹ்மத்தைக் குறிக்கும்
எந்த எம்பெருமான் நமது எண்ணங்களை எல்லாம் நன்றாகத் தூண்டிவிட்டு நல் வழிப் படுத்துவானோ
அந்த அனைத்து உலகையும் ஈன்ற அலகிலா விளையாட்டுடை எம்பெருமானுடையதானதும்
நேசத்துக்கு உரியதும்
அதனிடம் நேசத்தை வளர்த்தி அருள வல்லதுமான திருமேனியின் சுடரை த்யானம் செய்திடுவோம்
என்பதே காயத்ரி மந்த்ர விளக்கம்
ஸம்வித் –நாநாத்வ –நிஷேதக அனுமான பங்க வாதம் –
நிர்விசேஷ அத்வைதிகள் -ஸம்வித் -என்று குலவப்படும் அறிவு எண்ணம் ஓன்று தான் உண்மையில் உள்ளது –
அதுவே -ஆத்மா -ஸத் -ப்ரஹ்மம் -பல பெயர்களால் குறிப்பிடப்படும் அறிவு ஞானம் ஒரே நிலையில் உள்ளது
காயத்ரி மந்திரமோ தீ -அறிவுகள் என்று பான்மையாகக் காட்டி இவர்கள் வாதம் நிரஸனம்
ப்ரதி -புருஷ மனேகா ப்ரத்ய வஸ்தம் விசித்ரா
சுப கதிஷு தியோ யஸ் சோதயத் யஞ்ஜஸா ந
அகில சித் அசித் அந்தர்யாமி தத் விஷ்ணு ஸம்ஞம்
ஸ விதுரஹம் உபாஸே தஸ்ய தேவஸ்ய பர்க்க –மாலினீ யாப்பில் அமைந்த ஸ்லோகம் -சத தூஷணீ -23 வாதம்
இந்த ஸ்லோகம் தத் -விஷ்ணு எனப்படும் எம்பெருமான்
தத் -ஹயக்ரீவனுடைய பேர் ஒளியை த்யானம் செய்வதே பொருந்தும்
சஷுர் கோசர தாம் கதம் மம ஸதா தத் ஸ்யாத யாஸ்யம் மஹ
முத்ராம் போத கரீம் கரேண கரயோ சக்ரம் ஸஹஸ்ராககம் பம் சங்கம்
தம் தவலம் ஸஹஸ்ர சசிபம் புஸ்தம் ச ஹஸ்த பரம்
வித்யானாம் நிலயம் ததத் பரதரம் வாக் தேவதா வந்திதம் –16 ஸ்லோகம்
முத்ராம் போத கரீம் கரேண ததத் –வலது கீழ் திருக் கை -அறிவு தரும் போத முத்ரை
ஸஹஸ்ராககம் சக்ரம் தவலம் ஸஹஸ்ர சசிபம் தம் சங்கம் கரயோ ததத்
ஆயிரம் இரவிகளின் ஒளியை விஞ்சும் திருவாழி வலது மேல் திருக்கையில்
ஆயிரம் சந்த்ரன்களை விஞ்சிய பால் அனைய குளிர்ந்த ஒளி தரும் பாஞ்ச ஜன்யம் இடது மேல் திருக்கையில்
தம் சங்கம் -இங்கும் பிரஸித்த அர்த்தத்தில் தம் -தம் ஆதேசம் போல் –
த்ருவனுக்கு ஞானம் அருளியது –
கீதா ஸாஸ்த்ரம் அருளும் முன் பூர்வ அவலோகநாம் பண்ணும் ஆச்சார்யன் போல் ஊதிப் பார்த்துக் கொள்ளும் படி நின்றது
கோதா தேவி அதராமுதம் பற்றி வினவுவது –
ப்ரணவ வடிவமானது -ப்ரணவம் போல் ஒலிப்பது -ஸத்வ குணம் வளர்க்கும் வெண்மை நிறம்
ருக்மிணி பிராட்டிக்கு ஆண்டாள் நாச்சியாரும் பகவான் வரவை முன் கூட்டி அறிவிப்பது
முழங்கி தீய சக்திகளைத் தகர்ப்பது
பொய்கை ஆழ்வாராக அவதரித்து அருளிச் செயல்களுக்கு வித்திட்டது –போன்ற பல ப்ரஸித்திகள் உண்டே –
புஸ்தம் ச ஹஸ்த பரம் வித்யானாம் நிலயம் ததத்
ஐயம் திரிபு அற ஞானம் தக்க வைக்க –
தேவீ ஸரோஜ ஆஸன தர்ம பத்நீ
பரதரம் வாக் தேவதா வந்திதம்
கொண்டைக்கடலைச் சுண்டலும் பச்சைப் பசும் பாலும் சமர்ப்பித்து மஹா நவமி கொண்டாடுகிறோம்
இத்தகைய வெண்மையான ஒளியை அடைக்கலம் புகுகிறார்
ஸ்வேதம் கிஞ்சன வாஜிராஜ வதனம் வாக் தேவதா வந்திதம்
வா மாங்க ஸ்தித வாரிராசி தனயம் வேதாந்த வித்யா நிதிம்
சாந்த்ரம் பிம்பம் உபாஸ்ரிதம் ஸ்ரிதவசம் சக்ரம் ச சங்கம் ததா
முத்ராம் போத கரிஞ்ச புஸ்தக மணிம் பிப்ரத் மஹஸ் ஸம்ஸ்ரயே
இனி அவன் எப்பொழுதும் தனது பார்வைக்கு இலக்காக்கிக் கொண்டு அருள வேண்டும் என்று பிரார்திக்கிறார்
———-
ஸ்வாமின் கிம் ஸ பவான் விதாய வனிதாம் வாராஸி கன்யா மிமாம்
வா மாங்கே பகவன் தரம்ச ஸூபகம் வாமே கரே கோமலே
தாப்யாம் வாச மஹோ ரசவ்க பரிதாம் வ்யாக்யான முத்ராம் வஹன்
ப்ரீத்யா தாம் விவ்ருணோதி தத்ர ச புமான் உச்சைரதஸ் ஸ்த்ரீஸ் ஸ்திதா–18-
பிராட்டியும் தனது ஸ்வ தந்திரம் காட்டி வைதிகம் பிள்ளைகளைக் கூட்டி சென்று கிருஷ்ணனை
அங்கே வரவழைத்து தர்சித்த வ்ருத்தாந்தம்
இவர் திருக்கையில் சங்கம் புள்ளிங்கத்தால் ஆண் பால் சொல்
கீழ்த் திருக்கையில் வ்யாக்யா முத்திரையைச் சொல்லும் அவள் பெண் பாலில் உள்ளது
பிராட்டியும் இவன் திருமடியில் சங்கத்தின் கீழ் இருந்து ஸேவை சாதிக்கிறாள்
—————
இந்தத் திருமேனியை த்யானம் செய்பவர்களுக்கு வித்யைகள் 18 யிலும் தேர்ச்சியை வழங்கும் வள்ளலாக இருப்பதை அனுபவிக்கிறார்
நான்கு அடிகளும் வித்யா என்ற பாதத்தால் ஆரம்பம்
பதினான்கு கலைகள் –புராண நியாய மீ மாம்ஸா தர்ம ஸாஸ்த்ர அங்க மிஸ்ரதா –
வேதாஸ் ஸ்தானானி வித்யானாம் தர்மஸ்ய ச சதுர்தச -என்றும்
அங்கானி வேதாஸ் ஸத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர
தர்ம ஸாஸ்த்ரம் புராணாஞ்ச வித்யாஸ் ஸ்த் வேதாச் சதுர்தச –என்றும்
அமுஷ்ய வித்யா ரசனாக்ர நர்த்தகீ
த்ரீயவ நீ தாங்க குணேன விஸ்தரம்
அகாஹத அஷ்ட தஸாம் ஜிகீஷ்யா
நவ த்வயத் வீப் ப்ருதக் ஜய ஸ்ரீ யாம் -என்று நலன் 18 வித்யைகளில் வெற்றி கண்டான்
வேத மடந்தைக்கு அங்கங்கள் ஆறு
அவள் திருவாய் இலக்கணம்
திருக்கண்கள் ஜ்யோதிஷம்
வேள்வி செய்யும் முறைகளை விளக்கும் கல்ப ஸூத்ரங்களே அவள் திருக்கைகள்
அவள் திரு மூக்கு ஸ்வர அமைப்பை விளக்கும் சிக்ஷை
அவள் திருவடிகளே மந்திரங்களின் பா வகைகளை உணர்த்திடும் யாப்பு இலக்கணம்
வேத மங்கை இப்படி அங்கங்கள் உப அங்கங்கள் கொண்டு பாவங்களை விவரிக்கும் நடன மங்கை நிலை போல் உள்ளது –
இந்த 18 ஆகப் பரந்து ஸரஸ்வதீ அவன் நாவில் நடனமாடுகிறாளாம்
இந்த 18-ஆறு மூன்று என்று அதிகார ஸங்க்ரஹத்தில்
அமையா இவை என்னும் ஆசையினால் ஆறு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே
வித்யாம் விக்ரஹ ஸம் யுதாமிவ ராமம் வாமாங்கா பாக ஸ்திதம்
வித்யா ரூப மிமஞ்ச சங்க மதுலம் வாமைகபாணிஸ்திதம்
வித்யா தாரணி மேவ புஸ்தக மணிம் வா மான்ய பாணிஸ்திதம்
வித்யா தான வதான்ய வாஜி வதன த்வம் ராஜஸே லாலயன் –19-
ஆகவே 18 ஸ்லோகங்களுப்பின் வித்யா ப்ரதானன் என்பதை அருளிச் செய்கிறார்
வித்யையே வடிவு எடுத்தது போல் வித்யா லஷ்மீயை இடது திருத் தொடையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டு இருக்கிறான்
வித்யையின் வேறு ஒரு வடிவமான வெள்ளைச் சங்கினை வலது மேல் கரத்தில் வைத்துக் கொண்டு உள்ளான்
வித்யையை தன்னிடத்தில் கொண்டுள்ள சுவடியை இடது கீழ்த் திருக்கரத்தில் தாங்கி உள்ளான்
புல்லிங்கத்தில் –வித்யா தாரிணம் என்றும் புஸ்தக மணிம் என்று வடிவம் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆத்ம ஞானம் அளித்து கிரந்த சதுஷ்ட்யங்கள் ஆண் ஸிம்ஹமாக மாற்ற வல்லவை அன்றோ
இவை எல்லாம் இடது பக்கம் -அதாவது வாமங்களாக உள்ளன
ஏஷ உ ஏவ வாமனீ –சாந்தோக்யம் -உபகோசலை வித்யை
வாமனீ –ஏஷ ஹி ஸர்வாணி வாமானி நியதி –வாமங்களை அடியார்கள் இடம் சேர்ப்பிப்பவன் –
இங்கு வாமம் -ஸூபமான -ஸ்வ ஆஸ்ரித தேஷு சோபன தீ ப்ராபகத்வம் –அதாவது
ஸூபமான அறிவை அடியார்களுக்கு அருளுபவர்
இப்படி இவர்களை எல்லாம் லாலானம் செய்து கொண்டு விளங்குகிறாய் என்கிறார் நான்காம் பாதத்தால்
இப்படி லாலானம் செய்வதே அடியார்களுக்கு செல்வத்தையும் வித்யைகளையும் அருளவே என்கிறார் –
————-
கல்விக் கடவுளான அவன் கடலுடன் கொண்டுள்ள உறவைக் காட்டி மங்களா சாசனம் செய்கிறார் 20 பாசுரத்தில் –
வாரா சேஸ் தனயாம் வஹன்னதி தரா மானந்த பூர்ணாந்தர
வாரா சேஸ் தனயே ஸதா வசந்நபி ததோ சந்த்தோர் வாரிதி
வாக் தேவீ த்ருத பாத பங்கஜ யுகோ வாஸா மயம் நாயக
வாஸாம் காஞ்சன தோரணமபி வஹன் வாஜ்யானனோ வர்த்ததே –20-
வாரா சேஸ் தனயாம் வஹன்னதி தரா மானந்த பூர்ணாந்தர –கடலின் திருமகள்
பாற்கடலில் தோன்றிய ஸ்ரீ லஷ்மீ தேவியைத் தனது மடியில் வைத்துத் தாங்குவதால்
திரு உள்ளத்தில் ஆனந்தம் நிறைந்து இருக்கிறான்
வாரா சேஸ் தனயே ஸதா வசந்நபி ததோ சந்த்தோர் வாரிதி -கடலின் மகனான சந்த்ரனுள்
பாற்கடலில் தோன்றிய சந்த்ரனின் மண்டத்தில் குடி இருக்கிறான்
அங்கும் ஆனந்தக் கடலாகவே இருக்கிறான்
மைத்துனன் வீட்டில் குடி இருந்த மாப்பிள்ளையானாலும் நல்ல ஆனந்தக் கடலாகவே இருக்கிறானாம் –
ந ஸ்தான தோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ரஹி -உபய லிங்க பாதம் -3-2-10-325-
எங்கு இருப்பினும் அவனுக்கு குறை வராதே-உபய லிங்க விஸிஷ்டன்
வாக் தேவீ த்ருத பாத பங்கஜ யுகோ வாஸா மயம் நாயக -வாக்தேவியான கலைமகள்
அவனது திருப்பாதங்களை சுமக்கிறாள் -வாக்குக்கு எல்லாம் அவனே நாயகன்
வாஸாம் காஞ்சன தோரணமபி வஹன் வாஜ்யானனோ வர்த்ததே –வாக்குகளின் சொற்கள் தடைபடாத
தனியோர் வெள்ளமே அவனிடம் குடி இருக்கிறது -இத்தகையவனாக ஹயக்ரீவப் பெருமாள் இலங்கிடுகிறார்
அடி தோறும் முகப்பில் வா என்னும் எழுத்து –
வா எழுத்து ஏழு இடங்களிலும் –வ என்பதையும் சேர்த்து 16 முறை பயில்கின்றது
வாராசி -கடலைக் குறிக்கும் சொல் ஸ்லோகத்தின் முதல் பகுதியில் இரண்டு இடங்களில் வருகிறது
குதிரையை –சைந்தவம் -ஸிந்து ஜம் -என்றும் வடமொழியில் உண்டு
கடலில் இருந்து தோன்றியதால் ஸிந்துஜா அவளுக்கு போல் இவனுக்கும் ஸிந்து ஜம்
ஆகவே வாஜ்யானனோ வர்த்ததே என்பதற்குப் பதில் வாராசி ஜாஸ் யோஸ்தி ந என்று ஒலித்து இருந்தால் மும்முறை வாராசி வந்து இருக்குமே
நாராயணீயத்தில் –த்வம் ஸிந்து ஜாவாப்ய இதீவ மத்வா ஸம் ப்ராப்த வான் ஸிந்துஜ வாஜி ரூப -என்று
குதிரை வடிவத்தினை ஸிந்துஜ ரூப என்று மட்டும் அருளிச் செய்யாமல் ஸிந்துஜ வாஜி ரூப என்று அருளிச் செய்கிறார்
சைந்தவம் என்ற சொல்லை விளக்கும் பாணினி பகவான்
ஸிந்து தக்ஷ சிலாதிப்யோ அணஞவ்-என்ற ஸூத்ரம் அறிந்த நாராயண பட்டாத்ரி-ஸிந்து முதலிய 11 பதங்களால்
குறிப்பிடப்படும் நகரங்களில் பரம்பரையாக பல தலைமுறைகளால வசிப்பவர்கள் என்றபடி
ஸிந்து நாட்டில் வசிக்கும் குதிரைகள் பரம்பரையில் வந்த குதிரை சைந்தவம் -அதுவே ஸிந்துஜம்
ஒரு குறிப்பிட்ட தேசத்தைக் குறிக்கும் சொல் கடலைக் குறிக்கும் சொல் அல்ல
இந்த சிலேடையைப் பயன்படுத்தி ஸிந்த ஜாவப்யன் என்ற தொடர் ஸிந்துஜா வான லஷ்மியால் அடையப்படுபவன் என்றும்
ஸிந்துஜாவான குதிரையால் அடையப்படுபவன் என்ற பொருளையும் ஏற்ப்பதைக் கொண்டு நயமாக ஸ்லோகத்தை அமைத்து அருளி உள்ளார்
யோ வா அஸ்வஸ்ய மேத் யஸ்ய -என்று தொடங்கும் தைத்ரிய சம்ஹிதையில் நிறைவு அனுவாகத்தில்
சமும்ரோ வா அஸ் வஸ்ய யோனிஸ் ஸமுத்ரோ பந்து -என்பதற்கு
விளக்க பாஷ்யம் -சமுத்திரம் -கடல் பிரசித்த அர்த்தம் காட்டாமல் பரமாத்மாவையே சொல்லும்
அஸ்வஸ்ய ஸமுத்ர ஏவ யோநி காரணம்
ஸம் யக் உத் த்ரவதி உத்பத்யதே ஜகத் அஸ்மா திதி ஸமுத்ர பரமாத்மா –உலகுக்கு காரணம் -குதிரைக்கும் அவனே காரணம் -அவனே அன்றோ
அஸ்வமேத வேதக் குதிரையை விராட் ஸ்வரூபமாக த்யானம் செய்யும் முறையை விளக்கும் அனுவாகம்
யோ வா அஸ்வஸ்ய மேத் யஸ்ய சிரோ வேத சீர்ஷன் வான் மேத்யோ பவதி -தலையை சிற்றம் சிறு காளைக்கு உரிய
உஷஸ் என்கிற தேவதை என்று கற்பனை செய்து கொள்ள வேண்டும்
ஸூர்ய சஷுஸ் -கண்ணை ஸூர்யன் என்றும்
வாத ப்ராண -மூச்சை வாயு என்றும்
சந்த்ர மாஸ் ஸ்ரோத்ரம் -காதைச் சந்திரன்
திச பாதா –நான்கு கால்கள் திக்குகள்
அவாந்தர திச பர்ஸ்வ -விலா எலும்புகள் உப திசைகள்
அஹோ ராத்ரே நிமேஷ -கண் அமைப்பதும் திறப்பதும் பகல் இரவு காலங்களுக்கு உரிய தேவதைகள்
அர்த்த மாஸா பர்வாணி -குதிரையின் உடலில் உள்ள மூட்டுக்கள் வளர் பிறை தேய் பிறைக்கு உரிய தேவதைகள்
மாஸாஸ் சந்தானானி -வேதக் குதிரையின் உடலில் உள்ள இணைப்புக்கள் மாதங்களுக்கு உரிய தேவதைகள்
ரிதவோ அங்காநி –மற்ற அங்கங்கள் ருத்துக்களுக்கு உரிய தேவதைகள்
ஸம்வத்ஸர ஆத்மா -மையப்பகுதி வருஷத்துக்கு உரிய தேவதை
சஸ்மய கேஸா -பிடரி மயிர்கள் கதிரவனின் கதிர்கள்
நக்ஷத்ராணி ரூபம் -உடலில் உள்ள மிளிரும் பகுதிகள் 27 நக்ஷத்ரங்களுக்கு உரிய தேவதைகள்
தாரகா அஸ்தாநி -மற்ற உறுப்புக்கள் -விலா எலும்பு நீங்கமாக- த்ருவன் சுக்ரன் போன்ற நஸ்த்ரங்களுக்கு உரிய தேவதைகள்
நபோ மாகும் ஸாநி -உடலில் உள்ள மாம்சம் ஆகாசத்துக்கு உரிய தேவதை
ஓஷத்யோ லோமாநி -உடலில் உள்ள சிறு ரோமங்கள் பயிர்களுக்கு உரிய தேவதை
வனஸ்பதயோ வாலா–வாலில் உள்ள நீண்ட ரோமங்கள் வனஸ்பதிக்கு உரிய தேவதைகள்
அக்னிர் முகம் -முகத்தை அக்னி
வைஸ்வானரோ வ்யாத்தம் -திறந்த வாயை வைஸ்வானர அக்னி
ஸமுத்ர உதரம் -வயிற்றினை சமுத்ரத்துக்கு உரிய தேவதை
அந்தரிக்ஷம் பாயு ஆசனவாய் அந்தரிக்ஷத்துக்கு உரிய தேவதை
த்யாப்ருதிவீ ஆண்டவ் -விரைகளை வானம் பூமி இவற்றுக்கு உரிய தேவதைகள்
க்ராவா சேப -ஆண் உறுப்பை வேள்வில் ஸோம ரசம் பிழிய உதவிடும் அம்மிக்கல்லுக்கு உரிய தேவதை
ஸோமோ ரேதஸ் -ஆண்மை த்ரவ்யம் ஸோம ரஸத்துக்கு உரிய தேவதை
யஜ்ஞம் ஜப்யதே தத் வித்யோ ததே –உடல் அசைவுகளை மின்னலுக்கு உரிய தேவதை
யத் விதூனதே தத் ஸ்தனயதி –கனைப்பு ஒலியுடன் கூடிய உடல் அசைவினை இடி முழக்கத்துக்கு உரிய தேவதை
யன் மேஹதி தத் வர்ஷதி -சிறு நீர்ப் பொழிவை மழைக்கு உரிய தேவதை
வாக் ஏவ அஸ்ய வாக் -கனைப்பு ஒலியே வேத ஒலிக்கு உரிய தேவதை
அனந்தைஸ் த்ரையந்தை ரனு விஹித ஹேஷா ஹலம் ஹலம் -கனைப்புஒலியின் பின் அணியே உபநிஷத்துக்கள் வாக்கியங்கள்
ஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்
ஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்
அனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம்
ஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—-ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்–2-
ஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —
சமாஹார சாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலா ஹலபவம் ஹரத்
வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹலஹல –ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் -3-
இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –
வேதம் மேலே -குதிரைகளில்
ஹய
அர்வா
வாஜீ
அஸ்வா –போன்ற உட்ப்பிரிவுகள் உண்டு
ஹய பிரிவைச் சேர்ந்த குதிரைகள் தேவர்களுக்கு வாஹனம்
அர்வா பிரிவு அஸூரர்களுக்கு –
வாஜி பிரிவு கந்தர்வர்களுக்கு –
அஸ்வ பிரிவு மனிதர்களுக்கு
ஹயோ தேவானவ ஹதர்வாசூரன் வாஜீ கந்தர்வா அஸ்வோ மனுஷ்யான் –என்பது மூலம்
இப்படி விராட் வடிவம் பெற்ற வேள்விக் குதிரைக்குக் காரணம் -சமுத்திரம் -பரமாத்மாவே தான் இருக்க முடியும் –
இத்தையே வேதம் –சமுத்ரோ வா அவஸ்ய யோநி என்றும்
முடிவில் அவனே பாதுகாக்கும் உறவினன் என்று ஸமுத்ரோ பந்து என்கிறது
இவ்வாறு உபாசித்தால் அஸ்வமேத வேள்வி செய்த பலனே கிட்டும்
இந்த விராட் த்யானம் உபாசனங்களின் சக்ரவர்த்தி -இவைகள் மூலம் பூர்ண ஞானம் உண்டாகும் -பிறவிப் பயனைப் பெறலாம்
க்ராதுராட் ஸ்வேமேதோ அயம் விராட் த்யானம் முபாஸ்திராட்
தாப்யாம் உத்பத்யதே ஞானம் க்ருதக்ருத்யோ பவத்யத -முத்தாய்ப்பு ஸ்லோகம்
இத்தையே கிருஷ்ண யஜுர் வேத சாற்றுமுறை ஸ்ருதியாக ஒத்துகிறோம்
இதன் பின்னணி அறிந்து -வேள்வியில் ஆவிர்பவித்த வரதனுடைய புறப்பட்டு சாற்றுமுறை கேட்டு ஆனந்திப்போம்
————
யோஷா பூஷித மஞ்சுளாங்க மதுரா
பாஷா நாதஸ மூடி தாங்க்ரி யுகல
பாஷா வேஷ ஸமஸ்த வேத நிவஹ
தோஷான் ஷிபன் வாதினாம்
சோஷாயாக ஜவா சயஸ்ய நிதராம்
தோஷாய ச ஸ்யாத் ஸந—சார்தூல விக்ரடீதம் -அடி தோறும் 12 எழுத்துக்களுடன் இறுதி -21-வது -ஸ்லோகம்-எதுகையை ப்ராஸம் என்பர்
யோஷா பூஷித மஞ்சுளாங்க மதுரா —
பிராட்டியால் அலங்கரிக்கப்பட்ட இனிய தொடை
இனியவனாக ஸேவை சாதிக்கிறான்
பாஷா நாதஸ மூடி தாங்க்ரி யுகல
சரஸ்வதி தேவியும் அவள் நாயகனும் பக்தியுடன் வணங்கும் திருவடிகள் –
பாஷா வேஷ ஸமஸ்த வேத நிவஹ
கனைப்பில் அனைத்து வேதங்களையும் –
கனைப்பு என்கிற வேஷம் பூண்டு வந்த அனைத்து வேதங்களின் குழுக்களையும் யுடையவன் –
தோஷான் ஷிபன் வாதினாம்
குத்ருஷ்டிகளின் வாதங்களை தொலைவில் தூக்கி எறிபவன்
சோஷாயாக ஜவா சயஸ்ய நிதராம்
நல்ல ஞானம் அளித்து தீ வினை சாகரத்தை வற்றி விடுவான்
சந்த்ரனைக் கண்டால் கடல் பொங்கும்
சந்த்ர மண்டலத்தில் உள்ள ஹயக்ரீவப் பெருமானைக் கண்டால் தீவினை சாகரம் வற்றியே விடும் –
தோஷாய ச ஸ்யாத் ஸந
இவ்வாறு தீ வினைகள் அகற்றி நமக்கு இன்னருள் செய்பவனாக இலங்க வேண்டும் –
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ ஸமேத ஸ்ரீ ஹயக்ரீவர் பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply