ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி ஸூ சரித சஷகம்

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||
-இவர் தனியன்:

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-திருநக்ஷத்ரம் -ஆனி அவிட்டம் -அவதார ஸ்தலம் -ஸ்ரீ திரு மழிசை -ஆச்சார்யர் –திருத்தகப்பனார் -ஸ்ரீ நரசிம்ஹாச்சார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

மூலர்ஷே ஸ்ரீ நகர்யாம் உதயம் அதிகாதோ ஜைத்ர ஜிஹ்வே ஸதாஸாத்
தஸ்மாத் தாபாதி பூர்வம் ருசிர வர இதி ப்ராப்த நாமா குணைஸ்வா
திஷ்டந் கிராம் கடாரே கதிசந ஸரதோ மாதூலா வாஸ பூதே
ஸ அங்க உபாங்காக மஜ்ஜோ த்ரமிட நிகம வித் பிராப தாரா நுதாரான்
–1-

மணவாள மா முனிகள் ஆழ்வார் திரு நகரியில் திகழக்கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணருக்குத் திருகுமாரராக ஐப்பசித் திரு மூலத்தில் திரு அவதரித்தார்
தம்முடைய திருத்தகப்பனாரிடம் இருந்து திருவிலச்சினை ப்ரஸாதிக்கப் பெற்று வடிவழகினாலே அழகிய மணவாளன் என்று திருநாமம் இடப்பெற்றார்
பின்பு ஒரு சில ஆண்டுகள் சிக்கில் கடாரத்தில் தம் அம்மான் திருமாளிகையில் இருந்து கொண்டு அங்க உபாங்கங்களோடு வேதத்தையும் ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் கற்று குணவதியான பத்னியையும் அடைந்தார்

பூய ஸ்ரீ ரெங்க நாதே நிஜ நிலயகதே ஸ்ரீ நகர்யாம் கடாராத்
ஸ்ரீ சைல ஆர்யம் ஆஸ்ரித தத் கலி யதிபதவ் விம்சதிம் ஸம் ஸதி ஸ்ம
தத் தத் தாம் தத்ஸபர்யாமநுதி நம கரோத் த்ராவிட ஆம்நாய பாஷ்யம்
ஷட் த்ரிம்ஷத் ஸஹஸ்ரைஸ் ஸூ கணிதமதிபிர் வாக் விதேயம் ததவ் ஸா
-2-

நம்பெருமாள் மீண்டும் கோயிலேற எழுந்து அருளின பிறகு அழகிய மணவாளரும் சிக்கில் கடாரத்தில் இருந்து ஆழ்வார் திருநகரிக்குச் சென்று திருவாய் மொழிப்பிள்ளை என்று ப்ரஸித்தரான திருமலை ஆழ்வாரை ஆச்ரயித்தார்
அங்கு அந்தத் திருவாய் மொழிப்பிள்ளையால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த உடையவரைக் குறித்து யதிராஜ விம்சதியை அருளிச் செய்தார்
திருவாய் மொழிப்பிள்ளையால் அளிக்கப்பட யதிராஜ கைங்கர்யத்தைத் தினம் தோறும் செய்து வந்தார்
திருவாய் மொழிக்கு வியாக்யானமான ஈடு முப்பத்தாயிரத்தை கூர்மையான புத்தியுள்ள ஸ ப்ரஹ்ம சாரிகளுடன் கேட்டு வாஸோ விதேயமாக்கிக் கொண்டார்

ஸ்ரீ சைலேஸாய க்ருத்வா ஸஸ பதம் அகில த்ராமிட ஆம்னாய பாஷ்ய
வ்யாக்யா தீஷாம் ததோ அஸ்மின் ஸ்ரிதவதி பரமம் தாம தத் கிம் க்ரியாட்யா
தத் ஸூக்த்யா ரங்கநாத ப்ரணமருதுகீ பட்ட நாதேந கோதாம்
நத்வோத் யாநாத்ரி நாதம் ததநு வரவரோ ரங்கராஜம் ததர்ஸ
–3-

அந்த அழகிய மணவாள நாயனார் திருமலை ஆழ்வாரின் அந்திம தசையில் -ஆழ்வார்களுடைய தர்ம வேதங்களை தத் வ்யாக்யானங்களோடு கூடக் கால ஷேபம் செய்து கொண்டு இருப்பேன் என்று சபதம் செய்து
பின்பு அவர் திரு நாடி அலங்கரித்த போது அவருக்குச் செய்ய வேண்டிய சரம கைங்கர்யங்களை செய்தார்
அவரது வாக்குப்படி பெரிய பெருமாளைத் திருவடி தொழ வேண்டும் என்று ஆவலுடன் திரு நகரியில் இருந்து புறப்பட்டு வழியில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாரையும் ஆண்டாளையும் மங்களா ஸாஸனம் செய்து திருமாலிருஞ்சோலை அக்கறையும் மங்களா ஸாஸனம் செய்து திருவரங்கத்தை அடைந்து பெரியபெருமாளைக் கண்டு களித்தார்

தேநாஸ்மின் நித்ய வாஸம் ப்ரதி நியமித ஹ்ருல் லோக குர்வாதி சர்யாம்
தத் ஸூக்திம் தத் க்ருஹாம்ச ஸ்வமநஸி கலயன் ரங்க கைங்கர்ய மாப்தா
கத்வா உசவ் வேங்கடாத்ரிம் ததநு கரிகிரிம் பூத புர்யாம் யதீந்த்ரம்
நத்வா கத்வா உத காஞ்சீம் வரத குரு வரதாத்ரி ஜாத் பாஷ்யமாப
-4-

அந்த பெரிய பெருமாளுடைய தரிசனத்தால் ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாஸம் பண்ண வேண்டும் என்று கட்டுண்ட மனத்தை யுடையவரானார்
பிள்ளை லோகாச்சார்யர் முதலான ஆச்சார்யர்களின் சரித்ரங்களைக் கேட்டு அவர்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை மனதில் அனுசந்தித்து -அவர்களுடைய திரு மாளிகைகளை ஸேவித்து திரு அரங்கநாதனின் கைங்கர்யத்தைப் பெற்றார் -பின்பு திவ்ய தேசங்களை மங்களா ஸாஸனம் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி -திரு வேங்கட மலைக்கும் -அத்திகிரிக்கும் சென்று பின்னர் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பெருமானாரைத் திருவடி தொழுது பிறகு திரு வெஃகாவை அடைந்து கிடாம்பி திருமலை நாயனார் என்கிற ஆத்ரேய வரதாச்சார்யர் ஸந்நிதியில் ஸ்ரீ பாஷ்யத்தை அதிகரித்தார் –

ஸ்ரீ ரெங்கம் ப்ராப்ய தஸ்மிந் நித்ய வசதி க்ருத் மங்களா ந்யஸ்ய வாஞ்சந்
ஆசவ் சார்த்தஸ் ஸூதே நோஜ் ஜஹத தத் க்ருஹிணீம் துர்ய மாபாஸ்ரமம் ஸா
அத்ர ஸ்ரீ சைல நாதாஹ்வய பரி மலிதம் மண்டபம் காரயித்வா
லோகாச்சார்யாதி ஸூக்திம் வ்யவ்ருணுத நிபுணம் ரம்ய ஜாமாத்ரு யோகீ
–5-

மீண்டும் திருவரங்கத்தை அடைந்து அங்கே நியதமாக வசிப்பதற்கு ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொண்டு எம்பெருமானுக்குத் தடை இன்றி மங்களா ஸாஸனம் செய்ய விரும்பியவராய் எழுந்து அருளி இருந்தார்
அதற்கு இடையூறான ஆஸவ் சத்தைச் சிலர் தெரிவிக்க அதனால் போரக் கிலேசித்து பத்னியையம் குமாரரையும் த்யஜித்து ஸந்யாஸ ஆஸ்ரமத்தை ஸ்வீ கரித்தார் –
பெரிய பெருமாளிடம் இருந்து அழகிய மணவாள ஜீயர் என்று திரு நாமத்தைப் பெற்று அங்கு ஸ்வாச்சார்யரான திருமலை ஆழ்வாரின் திரு நாமத்தால் ஒரு வியாக்யான மண்டபத்தை ஏற்படுத்தி அவ்விடத்தே இருந்து கொண்டு பிள்ளை லோகாச்சார்யார் முதலிய பூர்வர்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை நன்றாக விவரித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

தத்ராச்சாம் ரங்க ராஜம் ததுதித நியமாத் ப்ராப்ய பூயோபி ரார்யை
வாதூலாத்யைஸ்ரி தாங்க்ரி கமபி து குத்ருஸாம் தாஸ ரத்யார்ய வர்யாத்
ஜித்வா தஸ்மிந் வதூலே ஸஹ வரத குரு ஸ்வ ஆச்சார்ய ரங்காதி ராஜம்
தத்வா வாதூல வம்சோ ஸமதிககருணாம் ஸர்வ லோகே விவவ்வரே
–6-

பின்பு பெரிய ஜீயர் பெரிய பெருமாளுடைய நியமனத்தாலே ஸ்ரீ ரெங்கராஜரைத் தமக்கு திருவாராதனமாகப் பெற்றார் –
பின்னர் கோயில் அண்ணன் முதலான அநேக கந்தாடை அய்யங்கார்களும் மா முனிகளின் திருவடிகளை ஆஸ்ரயித்தனர்
பின்பு ஒரு சமயம் ஒரு ஏக தண்டி ஸந்யாஸி பெரிய ஜீயரைத் தன்னுடன் வாதத்துக்கு அழைக்க அவனை வேடலப்பையின் சிஷ்யரான தாசரதி யட்சன் மூலமாக ஜயித்தார்
பின்பு கோயில் அண்ணனும் தாசாரதி ஆச்சானை மடத்துக்கு அழைத்துக் கொண்டு வர ஜீயரும் ப்ரீதியுடன் தன்னுடைய திரு வாராதனத்தில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ ரெங்கராஜரை அவருக்கு ப்ரஸாதித்து வாதூல வம்சத்தில் தனக்குள்ள அதிகமான கருணையை அனைத்து உலகிற்கும் வெளிப்படுத்தினார் –

வாத்ஸ்யே தேவாதி ராஜே வரத குரு வரைஸ் சாகமாகத்ய த்ருஷ்ட்வா
ஸ்மேரஸ் வாந்தோ அபி பாக்ய வ்யதிகர விரஹாத் ஷேமம ப்ராப்ய யாதே
ஸ்வாச்சார்ய ஸ்ரீ ஜாநகீ ஸப்ர பல நியமநே நாபி முக்யாது பேதே
ஸ்பீதை ஸ்வைர் த்ருஷ்டி பாதைர் கநதர கருணா சார வர்ஷம் வவர்ஷ
–7-

ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் உதித்த தேவராஜன் என்கிற எறும்பி அப்பா -திருவரங்கத்துக்கு வந்து ஆப்த பந்துவான கந்தாடை அண்ணனோடே கூட ஜீயர் மடத்துக்கு எழுந்து அருளி -மணவாள மா முனிகளை ஸேவித்து திருவாய் மொழியில் ஓர் இடத்திற்கு ஜீயர் சாதித்து அருளிய அர்த்த விசேஷங்களைக் கேட்டுப் போர ப்ரீதரானார்
ஆனாலும் விதி கூடாமையாலே ஜீயர் மடத்தில் அமுது செய்யாமலும் -ஜீயருடைய திருவடிகளில் ஆஸ்ரயிக்காமலும் தமது ஊருக்கு மீண்டும் எழுந்து அருளினார்
அவரது திருவாராதன எம்பெருமானான சக்ரவர்த்தித் திருமகன் அவரது கனவிலே -நீர் சேஷ அவதாரமான ஜீயர் திருவடிகளிலே அபசாரப்பட்டு வந்தீர்
ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம் பண்ணிக்கொண்டு வந்தால் ஒழிய உம்முடைய கையாலே திரு வாராதனம் கொள்ள மாட்டோம் நீர் கடுகப் போவீர் என்று எறும்பி அப்பாவை நியமித்து அருள
அவரும் உடனே புறப்பட்டுக் கோயிலுக்கு எழுந்து அருளி அத்யாதாரத்துடனே ஜீயரை தண்டனிட ஜீயரும் தமது மலர்ந்த திருக் கண்களாலே குளிரக்கடாக்ஷித்து அப்பாவிடம் மிகவும் கருணை மழையைப் பொழிந்தார் –

பத்வேமாம் ஸப்த கோத்ரீம் பிரதிவத பயக்ருத் வர்ய கோவிந்த வர்யவ்
வாத்ஸ்யம் ஸ்ரீ தேவ ராஜம் யமிநமபி மஹாவாந சைலாதி வாஸம்
ஆர்யா நந் யாம்ஸ் ச க்ருத்வா வஸூதிகி பவராந் பஞ்ச ரத்நீம் ச க்ருத்வா
பவ்த்ரவ் ஸ்வவ் ரம்ய ஜாமாதரமதிக குணம் பட்ட நாதம் ரரக்
ஷ -8-

எழுபத்து நான்கு சிம்ஹாசனாதி பதிகளிலே பரிகணிதரான முதலியாண்டான் முடும்பை நம்பி முடும்பை அம்மாள் ஆஸூரிப்பெருமாள் கிடாம்பிப்பெருமாள் குமாண்டூர் இளையவல்லி யாச்சான் -வங்கி புரத்து நம்பி ஆகிய ஏழு கோத்ரத்தாரும் தங்களுக்குள்ளே சம்பந்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று நியமனம் செய்து ஸப்த கோத்ர வ்யவஸ்தையை ஏற்படுத்தினார் பெரிய ஜீயர்
பிரதிவாதி பயங்கரம் அண்ணன் பூர்வ ஆஸ்ரமத்தில் கோவிந்த தாஸர் என்கிற திரு நாமமுடையவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் எறும்பி அப்பா வான மா மலை ஜீயர் கோயில் கந்தாடை அண்ணன் திருவேங்கட ராமானுஜ ஜீயர் அப்பிள்ளார் அப்பிள்ளை ஆகிய எண்மரையும் அஷ்ட திக் கஜங்களாக நியமித்து பஞ்ச ரத்னங்களையும் நியமித்தார்
நற்குணங்கள் நிறைந்த தமது பவ்த்ரர்களான அழகிய மணவாள நாயனாரையும் -ஜீயர் நாயனாரையும் -பெரியாழ்வார் ஐயனையும் நன்கு ரக்ஷித்தார்

தேவம் பூயோ தித்ருஷுஸ் ஸட மத நமஸவ் ஸ்ரீ நகர்யாம் கதஸ்தம்
நத்வா ஸ்துத்வா ப்ரஹ்ருஷ்டோ விபு நவ நிலயீம் வர்த்த யித்வா அர்ய சேதா
ஜிஞ்ஞாஸூர் யாதவாத் ரோதி சரணி ஜனந் யார்ய தர்சீ நிவ்ருத்த
ப்ராப்தார்த்தஸ் துஷ்ட சேதாஸ் சத நிஜ நிலயே வஹ்னிதாநத்வ க்ருஹ் ணாத்
-9-

மீண்டும் சடகோபரான நம்மாழ்வாரை ஸேவிக்க விரும்பி ஆழ்வார் திருநகரிக்குச் சென்று அவரை ஸ்துதித்து ஏத்தி திருவடி தொழுது இன்புற்றவராய் நவதிருப்பதி எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்தார்
திரு நாராயணத்து ஆய் என்ற ஜனன்யார்ச்சர்யர் இடம் இருந்து ஆச்சார்ய ஹ்ருதயத்தின் பொருளை அறிய வேண்டும் எண்டு விரும்பி திரு நாராயண புரத்துக்குப் புறப்பட்டார்
வழியில் சிறிய தொலைவிலேயே அவரைக் கண்டு அவருடன் திருநகரிக்கு மீண்டு எழுந்து அருளி ஆச்சார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு அறிந்தார்
பின்பு கூரை வேய்ந்த தம் மடத்துக்கு தீ வைத்தவர்களை அந்த தேசத்து அரசன் தண்டிக்க முற்பட்ட போது அதனைத்தடுத்து அவர்களைக் காத்து அருளினார்

க்ருத்வா அசவ் ஸ்ரீ நகர்யாம் சட மதந முதே மண்டபம் கால மேகம்
வீதி ஸ்ஸீமாஸ் ச க்ருத்வா ருசிர வர மஹா மண்டபம் கல்பயித்வா
விப்ரம் ஸ்ரீ ஹர ஸ்வகுட்யாம் நிஜசரந ஜூஷம் தத்ர கைங்கர்ய கார்யே
நிஷ் ப்ராப்யாஸாத்யா ஹ்ருஷ்டா புநரபி குருகா மாக மத் ரங்க தாம
-10-

பெரிய ஜீயர் நம்மாழ்வார் திரு உள்ளம் உகக்கும் படி திரு நகரியில் காளமேக திரு மண்டபத்தையும் திரு வீதிகளையும் எல்லைகளையும் ஏற்படுத்தி அழகிய மணவாளன் திரு மண்டபத்தையும் உண்டாக்கினார்
தம் திருவடிகளை ஆஸ்ரயித்த திருவேங்கடமுனையான் என்ற ப்ராஹ்மணனைத் திருக்குறுங்கடி கைங்கர்யத்திலே நியமித்து மீண்டும் திரு நகரி ஏற எழுந்தருளி ஆழ்வாருக்கு அனைத்து அழகும் கண்டருளப்பண்ணி மகிழ்ந்து பின்பு திருவரங்கத்துக்கு எழுந்து அருளினார் –

தத்ர ஸ்ரீ தால வ்ருத்த வ்யஜந பரிகரேண உத்தமம் சேவமாநம்
ஸ்வப்நே ஸ்ரீ ரெங்க பர்த்ரா ஸ்வயம் அநுகதி தஸ்வாஹி ராஜாவதார
மத்யாஹ்நே காஞ்ச வ்ருத்தாம் ப்ரதி ரஹஸி பரம் ஸ்வாஹி ராஜத்வ வேத்ரீம்
ஸ்வம் பாவம் நிஹ்நுவாத பணி பதீ சயனம் ப்ரத்யஹம் சேவதே ஸ்ம
–11-

ஒரு நாள் திருவாலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த உத்தம நம்பி பெரிய ஜீயருடைய பாலின் வண்ணமான திருமேனி நிறத்தை வேறு விதமாக நினைத்து -நெடும் போது இருக்க வேண்டாம் என்று கூடி அபசாரப்பட ஜீயரும் மடத்துக்கு எழுந்து அருளினார் –
உத்தம நம்பியும் தூங்கிப் பல கணிக்கதவிலே சாய்ந்திருக்க -பெரிய பெருமாள் அவர் கனவிலே தோன்றி -திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி -இவர் காணும் மா முனிகளாக அவதரித்துள்ளார் -என்று கூறினார்
உத்தம நம்பியும் கண் விழித்து அப்போதே மடத்துக்கு வந்து ஜீயர் திருவடிகளில் விழுந்து அபராத ஷாமணம் பண்ணிக்கொண்டார் –
பின்பு ஒரு நாள் மத்யாஹ்னம் சடகோபகொற்றி என்கிற மூதாட்டி திருமலை ஆழ்வார் என்கிற வ்யாக்யான மண்டபத்திலே யகாந்தமாக எழுந்து அருளி இருந்த ஜீயரைக் கதவுப்புரையிலே ஆதி சேஷனாகக் கண்டதை ஒருவருக்கும் வெளியிடாமல் மறைக்கும் படி நியமித்தார் ஜீயர் –
ப்ரதிதினமும் அரவின் அணை மிசை மேய மாயனாரான பெரிய பெருமாளை மங்களா ஸாஸனம் செய்து கொண்டு எழுந்து அருளி இருந்தார்

ஏவம் பூதம் முனீந்த்ரம் தரணி ஜலதி ஜாநாயகோ ரங்க நாத
ஸ்வஸ்மை பாஷ்யம் ஸ்ருதிநம் லகு தர ரமுநேர் வக்தும் ஆஜ்ஞா பயத்தம்
ஸோ அயம் ஸம்வத்ஸரேண த்ரமிட மய ஸூதாம் ரங்க நாதாய வர்ஷத்
ஸ்ரீ சைலேத் யாதி பத்ய ப்ரவசன முக தஸ்தேந ஸம் பூஜிதோ அபூத்
–12-

இப்படி இருக்கிற பெரிய ஜீயரை ஒரு நாள் ஸ்ரீ பூ நாயகரான நம்பெருமாள் மகிழ் மாலை மார்பினரான நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமான திருவாய் மொழியின் வியாக்கியானங்களைச் சொல்லும்படி நியமித்தார்
அவரும் ஒரு ஸம்வத்ஸர காலம் தொண்டர்க்கு அமுதான திருவாய் மொழியின் ஈடு முதலான வ்யாக்யானங்களை நம்பெருமாள் திரு முன்பே அருளிச் செய்தார்
சாற்று முறை அன்று நம்பெருமாள் அரங்கநாயகம் என்கிற ஐந்து வயதான அர்ச்சக குமாரனாக வந்து ஸ்ரீ சைல தயா பாத்ரம் எண்டு தொடங்கும் தனியனை அருளிச் செய்து ஆசார்யரான ஜீயரை உரிய முறையில் ஸம்மானித்தார்-

லோகாசார்ய யுக்த தத்வத்ரிதயமநு யுக ஸ்லோக வாக் பூஷ டீகா
மாலா ஸம் ஷேப கீதாஹ்ருதய விவரணே ஞான சாரதி டீகே
அந்தாதிம் ரத்ன மாலாம் ஸடரிபு பணி திவ்யா க்ரியாமாந கோலம்
சக்ரே கௌசித் விவைராவ கலயத நிஹீநாத்ம ப்ருச் சாபதே ஸாத்
–13-

பெரிய ஜீயரும் பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த தத்வத்ரயம் ரஹஸ்ய த்ரய அர்த்த ப்ரதி பாதகமான முமுஷுப்படி -ஸ்ரீ வசன பூஷணம் -இவைகளுக்கு வியாக்கியானங்களை கீதைக்கு சங்ஷிப்தமான தொரு விவரணத்தையும் ஞான சாரம் மற்றும் ப்ரமேய ஸாரத்திற்கு வியாக்கியானங்களையும்
திருவாய் மொழி நூற்றந்தாதி உபதேச ரத்னமாலை ஈடு முப்பத்தாறாயிரப்படிக்கு ப்ரமாணத்திரட்டு ஆகியவற்றையும் அருளிச் செய்தார்-நீங்களும் ஸ்ரீ வசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம் மேலிட்டுச் சண்டை இடுவதற்கு என்று தெருவில் சண்டையிடும் நாய்களைக் கேட்க்கும் வ்யாஜத்தால் விவாதம் பண்ணிக்கொண்டு இருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருவரைத் தம்முள் விரோத பாவம் அற்றவர்களாகச் செய்தார் ஜீயர்

தத்த்வா க்ஷேத்ரம் மடீயம் ப்ருதக புஜி மிஷாத் ரங்க பர்த்ரே நிசீதே
வ்ருத்தாம் காஞ்சித் விவாஸ்ய ஸ்த விரத ருருஹந்யாயதோ அலர்க்க ஹேதோ
பத்தீம் வ்ருத்தாம் ச ஹித்வா புநரபி க்ருபயா வைஷ்ணவா கோவி முக்தாம்
அங்கீ குர்வன் நஸாஹ்யாக தவரத ஹரிம் ஸ்வீச காராதி க்ருச்ச்ராத்
–14-

ஒரு சமயம் மடத்திற்குச் சொந்தமான விளை நிலத்துக் கூலி யாட்கள் மடத்திற்குச் சொந்தமான இடத்தில் உண்டு சென்றதை அறிந்து உடனே அந்நிலத்தை பெருமாளுக்கு ஸமர்ப்பித்தார்
ஒரு நாள் வயதான மூதாட்டி ஒருத்தி இரவு மடத்திலே சயனிக்க முற்பட கிழட்டணி லாகிலும் மரமேற வல்லது ஓன்று அன்றோ –
உகவாதார் அபவாதம் சொல்ல இது போதுமே என்று கூறி அவ்வம்மையாரை வெளியேற்றினார்
தளிகைக்காக கறியமுது திருத்தித் தரும் அம்மையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரிவோடு ஸமர்ப்பித்த தூதுளங்கீரையை உதாஸீனத் படுத்தியதை அறிந்து அவ்வம்மையாரை கைங்கர்யத்தில் இருந்து விலக்கி பின்னர் பாகவத அவமானம் பண்ணின பாபத்துக்கு மன்னிப்புக் கேட்கச் செய்து கிருபையுடன் ஏற்றுக் கொண்டார்
ஜீயரை ஆஸ்ரயிக்கத் தனியே வந்த வரம் தரும் பெருமாள் பிள்ளையை -வரத ஹரியை -ஸ்ரீ வைஷ்ணவர்களை முன்னிடாதே தனித்து வருவதே என்று வெறுத்து ஆறு மாஸம் புறத்திண்ணையிலே இருக்கச் செய்து பின்பு அங்கீ கரித்து அருளினார் –

சத்த்வஸ்தோதி ஸ்வரூபம் வ்ரதிவர மஹிதம் ப்ராப்ய சத்தேச கர்த்தா
பட்டார்யாய ஸ்வ சிஷ்யான் விநய பரிதயந் தோஷத் ருஷ்டிம் விதூய
பூர்வ அநுஷ்டாந நிஷ்டா புநரபி வ்ருஷபாத்ரிஸ முக்யான் தித்ருஷு
சாகம் ஸ்ரீ வாதி பீக்ருத் குருமுக விநதை ராஸ்தயா அசவ் ப்ரதஸ்தே
–15-

ஸத்வ குணத்தில் நிலை நிற்பவராய் வான மா மலர் முதலான யதிகளால் ஆஸ்ரயிக்கப்பட்டவரான மா முனிகள் நல் வார்த்தை கேட்டு அனுப்பிய வடநாட்டு அரசன் ஒருவனுக்கு பாகவத சேஷத்வமே பரமார்த்தம் என்று எழுத அனுப்பினார்
அக்காலத்தில் கோயில் பட்டர் ஒருவர் ஜீயரிடம் உம்முடைய ஸிஷ்யர்கள் நம்மை வணங்காமல் அவமானப்படுத்துகிறார்கள் என்று கூற
ஜீயரும் விசாரித்த அளவிலே ஸிஷ்யர்கள் அவருடைய தோஷங்களை சொல்லி எங்களுக்கு அவரை அனுவர்த்திக்க விருப்பமே இல்லை -என்ன
அவரைப் பெருமாளாக நினைத்துப்பணிவுடன் சேவித்துப் போங்கள் எண்டு தோஷம் உள்ள இடத்திலும் குண பிரதிபத்திநாடக்கும்படி செய்தார்
பூவர்களின் அனுஷ்டானத்தில் நிலை நிற்பவரான பெரிய ஜீயர் மீண்டும் திருவேங்கடம் முதலான திவ்ய தேசத்து எம்பெருமான்களை ஸேவிக்க ஆசைப்பட்டு பிரதிவாதி பயங்கரம் அண்ணன் முதலான பணிவுள்ள முதலிகளுடன் புறப்பட்டார் –

நாதம் ஸ்தம்பேரமாத் ரேஸ் ததநுஸக ருதா மீஸ்வராம் ஸாவ தம்சம்
ஸ்துத்வா தத்வா அத தஸ்மிந் கதி பயதி வசான் தேவராஜாதி யுக்த
நத்வா க்ருத ரஹ்ரதேஸம் ததனு ச கடிகாத் ரீஸ்வரம் தேவராஜ
க்ராமம் ஸ்ரீ ரெங்கயித்வா விமல மத ஸரஸ் ஸஹ் யஜாம் ஸ ஹ்ய கார்ஷீத் –
-16-

அத்திகிரி நாதனான பேர் அருளாளனை ஸேவித்து வைகாசித்திரு நாளில் பக்ஷி ராஜனான பெரிய திருவடி நாயனார் மீது ஆபரணம் போல் திகழும் அவனைப் பணிந்து ஏந்தி அங்கேயே சில நாட்கள் எழுந்து அருளி இருந்தார்
பின்பு ஒரு நாள் ஸேவிக்க வந்த எறும்பி அப்பாவோடு புறப்பட்டு திருப்புடக்குழி எம் போர் ஏற்றையும் கடிகைத் தடம் குன்றில் அக்காரக்கனியையும் மங்களா ஸாஸனம் செய்து அருளி எறும்பியை அடைந்து அவ்வூருக்கு வட திருவேங்கடம் என்று திரு நாமம் இட்டு அங்குள்ள குளத்திற்கு திருக்காவேரி என்று பெயர் இட்டு அருளினார்

த்ருஷ்ட்வா ஸ்ரீ வேங்கடாத்ரிம் ததநு ஸ நிகடே தஸ்ய கோவிந்த ராஜம்
யோகீந்த்ர ஸ்தாபிதம் ஸ்ரீ சடமதந முகான் சம்யமீந்த் ராம்ஸ் ச நத்வா
ஆருஹ் யாத்ரிம் ததீஸம் யதிபதி ஸஹிதம் ஸ்ரீ நிதிம் சங்க சக்ரோ
தஞ்சத் பாஹும் ஸடாரி ப்ரமுக ஸூவ சநைஸ் துஷ்டுவே ஹ்ருஷ்ட சேதா
–17-

பின்னர் திரு வேங்கட மலையை அடைந்து அதன் அடிவாரத்தில் எம்பெருமானாராலே எழுந்து அருளப் பண்ணப் பட்ட கோவிந்த ராஜனையும்
நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களும் சேவித்து திருமலை ஏறி அருளி யதிராஜரான எம்பெருமானரோடு திருவாழி திருச்சங்குகளை திருக்கைகளில் ஏந்திய அலர் மேல் மங்கை உறை மார்பனை அருள் மாறன் சேரலர் கோன் நற்கலியன் முதலான ஆழ்வார்கள் திருவேங்கடமுடையான் விஷயமாக அருளிச் செய்த பாசுரங்களை அனுசந்தித்துத் திருவடி தொழுது மனம் மகிழ்ந்தார் –

தத்ர ஸ்ரீ கார்ய க்லுப்த்யை யாதிபதி யமிநம் கல்பயித்வா நிதேசே
தஸ்மாத் ப்ரஸ்தாய கத்வா ரகுவர நிலயம் கிம் க்ருஹம் நிஸ்து லேஸம்
ஸ்ரீ மந்தம் பக்தி ஸாரம் தசரத தநயம் பூர்ணவர்யம் ச நத்வா
ஸூதம் பார்த்தஸ்ய நீரஷிததர திலகம் ஸம்ய மீந்த்ரம் ச பேஜே
—-18-

அங்கே -திருமலையில் -ஸ்ரீ காரியத்திற்காக இளம் கேள்வி எம்பெருமானார் ஜீயரை நியமித்து அங்கு புறப்பட்டு திரு வெவ்வுளூர் வீர ராகவனையும் -திரு நின்றவூர் நித்திலத் தொத்தையும் திரு மழிசையில் பக்தி ஸாரரான திருமழிசைப் பிரானையும் பிச்சை வாரணப் பெருமாள் கோயிலில் தாசாரதியான முதலியாண்டானையும் -பூவிருந்த வல்லியில் காஞ்சீ பூர்னரான திருக்கச்சி நம்பியையும் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதியையும் திரு நீர்மலை எம்பெருமானையும் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பெருமானாரையும் மங்களா ஸாஸனம் செய்து அருளினார் –

பூயோ நத்வா கரீசம் ததநுஸ மதுராம் தத் த்வயோத்பத்தி பூதம்
கத்வா ஸ்துத்வா அபி ராமம் பணி திலக புரே தேவ நாதம் ச நத்வா
வந்தி த்வா ஸத் கவீந்த்ரம் கலி மதந முநீம் திவ்ய தேசான் ப்ரணம்ய
ஸ்ரீ ரெங்கம் ப்ராப்ய யோகீ சிரவிரஹருஜம் ஸ்பீத மோதோ முமோச
–19-

மீண்டும் பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி பேர் அருளாளனை ஸேவித்து அங்கிருந்து த்வயம் விளைந்த திருப்பதியான மதுராந்தகத்திற்குச் சென்று சக்ரவர்த்தித்த திருமகனை ஸ்துதித்து பின்னர் திரு வஹீந்திர புரத்துக்கு எழுந்து அருளி தெய்வ நாயகனை மங்களா ஸாஸனம் செய்து அருளி நாலு கவிப்பெருமாளும் திருக்கலி கன்றியுமான திருமங்கை ஆழ்வாரை திரு நகரியிலே ஸேவித்து திருக்கண்ண புரம் ராஜ மன்னார் குடி திருக்குடந்தை முதலான திருப்பதிகளையும் வணங்கி திருவரங்கத்தை அடைந்து பெரிய பெருமாளை நெடுநாள் பிரிந்ததால் உண்டான வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தார்

நத்வா ஸ்ரீ ரெங்க நாதம் விவித மணி முகைர் வஸ்துபிஸ் தோஷயித்வா
நித்யம் தத்ரைவ திஷ்டன் ஸ்வ தின சரித க்ருத தேவராஜார்ய ஜூஷ்டா
ஸார்வஞ்ஞாத் வ்ருத்த கேஸம் வரத ஹரி மசவ் பாவநார்த்தம் நிதேஷ்டா
த்ருஷ்டாத் த்ருஷ்டைர் வதூலம் வரத குரு வரம் சத்ததம் சம்பு போஷ
–20-

பெரிய பெருமாளை ஸேவித்து தாம் கொண்டு வந்த பலவகைப்பட்ட திரு ஆபரணங்கள் -திரு வெண் கொற்றக்குடை கள் -திரு வெண் சாமரங்கள் -திரு ஆலவட்டங்கள் -முதலான பொருள்களாலே உகப்பித்து நித்தியமாக அங்கேயே திருவரங்கத்திலேயே -எழுந்து அருளி இருக்கையாலே தம் வ விஷயமான தின சர்யை என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்த எறும்பி அப்பாவால் வந்து அடையப்பட்டார்
ஜீயர் எல்லாம் அறிந்தவராகையாலே கைங்கர்யத்திற்காக வந்த வரம் தரும் பெருமாள் பிள்ளை தீஷையோடு இருப்பதைப் பார்த்து ஸூத்த்யர்த்தமாக இன்றைக்கு திருமுடி விளக்குவித்துக் கொள்ளும் என்று நியமித்தார்
அன்றைய தினமே வரம் தரும் பெருமாள் பிள்ளைக்குக் குமாரர் பிறந்து பத்து நாளும் கடந்தது என்ற செய்தி வர அனைவரும் ஜீயரின் எல்லாம் உணர்ந்த தன்மையைக் கண்டு வியந்தனர்
கந்தாடை அண்ணன் திரு மாளிகையில் உபாதான திரவ்யத்தைக் கொண்டு நடந்து வந்த அழகிய சிங்கர் திரு வாராதனத்திற்கு த்ரவ்யம் குறைந்து வருகிறபடியைக் கண்டு
தமக்கு வந்த திரு முன் காணிக்கை த்ரவ்யத்தை தினம் தோறும் அண்ணன் திரு மாளிகைக்கு அனுப்பும் படி நியமித்து
இவ்வண்ணம் த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் அண்ணனை அந வரதம் ஆதரித்துப் போந்தார்

அர்ச்சா ரூபாம் ஸ்வ மூர்த்திம் சரண ஸரஜி ஜத்ராயிணீம் உத்தரீயம்
ஸ்வ தர்சம் ஸ்வேத ம்ருத்ஸ்நாம் ஸ்வமத விதரன் ப்ராஹிணோத் தேவ ராஜம்
வாநாத்ரவ் யோகி வர்யம் விபு பரி சரணே ஸ்தாபயித்வா ஸ்வ ஸிஷ்யம்
கோவிந்தார்யம் ச கோதா ப்ரஸதந முகதோ பட்ட நாதம் ஸமாக்யத்
-21-

பிறகு ஜீயர் தம்முடைய அர்ச்சா விக்ரஹத்தையும் திருவடித் தாமரைகளைப் பாதுகாக்கும் திருவடி நிலைகளையும் -திருப்பரி யட்டத்தையும் -திருக்கண்ணாடியையும் -திருமண் காப்பு சேஷத்தையும் தந்து எறும்பி அப்பாவை அவருடைய ஊருக்கு அனுப்பி அருளினார்
அழகிய வரதரான ராமானுஜ ஜீயரை வான மா மலையில் தெய்வ நாயகப்பெருமாள் ஸ்ரீ காரியத்துக்காக நியமித்தார்
திருவாடிப் பூரத்தில் ஆண்டாளுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ஆதரத்தோடு கொணர்ந்து சமர்ப்பித்த கோவிந்த தாஸர் அப்பருக்கு பட்டர் பிரான் தாஸர் என்று திரு நாமம் சாத்தி அருளினார்

த்ரஷ்டும் பூயஸ் சடாரிம் ஸபதி ஜிக மிஷத் மாதுரம் பாண ராஜம்
தாபாத் யை பாவயித்வா ததுசிதஸிபி காதாரணாத் யர்ச்யமாநா
தத் தத்த க்ராம வர்யம் ருசிர வர இதி க்யாப யித்வா முனீந்திர
ஸேதோர் மார்கேண கச்சந்த குருத மனஸா தீந்த்ரிணீ வ்ருஷ மோக்ஷம்
–22–

மீண்டும் நம்மாழ்வாரை ஸேவிக்க விரும்பி விரைந்து புறப்பட்ட ஜீயர் மதுரை அரசனான மஹா பலி வாணராயனுக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து அருளி அவனாலே பல்லக்குச் சுமத்தலாகிற கைங்கர்யத்தினால் கௌரவிக்கப் பட்டார் –அவன் கொடுத்த முத்தரசனத்தல்
என்ற க்ராமத்தை அழகிய மணவாள நல்லூர் என்று பெயர் இட்டார் –
திருவணை வழியாகச் செல்லும் போது தமக்கும் முதலிகளுக்கும் நிழல் கொடுத்த பெரிய புளிய மரம் மோக்ஷம் அடைய வேண்டும் என்று மனத்தால் நினைத்தார் -அவ்வளவிலே அம்மரம் பட்டுப்போய் பரமபதத்தை ப்ராபித்தது

த்ருஷ்ட்வா ஸ்ரீ மச் சடாரிம் புநரபி ருதுகீ பூர்வ வத் ரங்க தாம்நி
ஸ்ரீ ஸம் நத்வா வநாத்ரவ் யதிவரயமிநம் ப்ராஹிணோத் கிங்க்ரி யார்த்தே
ஸ்ரீ மத் ராமானுஜ அங்க்ர் யோரம்ருத குரு வரை ரர்ப்பித்தாம் ஸூக்தி மாலாம்
வ்யாஸஷாணோ மஹார்கைர சரஸ க்ருத முகை ரங்க நாதம் புபோக்ஷ
–23-

நம்மாழ்வாரை மங்களா ஸாஸனம் செய்து விட்டு மீளவும் குதூ ஹலத்தோடு கோயிலுக்கு எழுந்து அருளிப் பெரிய பெருமாளைப் பணிந்து நின்றார் –
திருமாலிருஞ்சோலையில் ஸ்ரீ கார்ய நிர்வாஹகராய் இருந்து கைங்கர்யம் பண்ண யதிராஜ ஜீயரை அனுப்பி வைத்தார்
எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளில் திருவரங்கத்து அமுதனாரால் சமர்ப்பிக்கப்பட்ட சொல் மாலையான இராமானுஜ நூற்றந்தாதி க்கு வ்யாக்யானம் அருளிச் செய்தார்
நறு நெய் பச்சை கற்பூரம் முதலிய சிறந்த பதார்த்தங்களாலே நம்பெருமாளை உபசரித்து உகப்பித்தார்

ஸ்ரீ மான் காந்தோ பயந்தா ஸடரிபு பணி திவ்யாக்ரியாயா ஸஹஸ்ரை
ஷட்பிஸ் த்ரிம்ஷத் ஸஹஸ்ர்யா உபசயக்ருதி தி ஸ்ரீஸ பட்டார்ய கீத
ஆக்யாதாம் க்ருஷ்ண பாதைர் கலி கலுக்ஷபலாத் கர்சிதாம் பூர்வ டீகாம்
திருஷ்ட்வா பட்டேச ஸூக்தேர் லலிதர ஸமயீம் வ்யாக்ரியாம் ஸாது சக்ரே
–24-

கைங்கர்யச் செல்வம் நிறைந்தவரான மணவாள மா முனிகள் திருவாய் மொழி வியாக்யானமான ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்று திருமாலை தந்த பெருமாள் என்கிற பட்டராலே கொண்டாடப்பட்டார்
கிருஷ்ண ஸூரியான பெரியவாச்சான் பிள்ளையால் அருளிச் செய்யப்பட பெரியாழ்வார் திரு மொழி வியாக்யானத்தின் முன் -பெரும் -பகுதி கலியின் கொடுமையினால் காணாமல் போக அப்பகுதிக்கு ரஸ மயமான ஒரு வியாக்யானத்தை நன்றாக அருளிச் செய்தார் ஜீயர்

பாலம் வாதூல நாதம் ஸ்வ க்ருத விவரண ஸ்லாகிநம் வர்தயித்வா
பாணார்யே தத் சஹாயே புவந குரு தனம் ரங்க நாதம் ததவ் ஸா
ஆம்நாய நாம் விமர்ஸீ குருவர ஹ்ருதயம் ஸ்தாவிரே வ்யாசி கீர்ஷத்
யுஷ்மத் வம்ஸ் யார்த்த மேதத்த்விதி வரத குரும் ப்ராஹ தேதாநு புக்தா
–25-

தம்முடைய வியாக்யானத்தைக் கொண்டாடின அதி பாலரான கந்தாடை நாயனை ஆசீர்வதித்து பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யானம் எழுதும் போது உடன் இருந்து உதவிய திருப்பாண் ஆழ்வார் தாதர் நாயனாருக்கு பிள்ளை லோகாச்சார்யரின் திருவாராதனப் பெருமாளான ஸ்ரீ ரெங்கராஜரைக் கொடுத்து அருளினார்
ஜீயர் முதுமையில் திருக்கழுத்து நோவ ஆசார்ய ஹ்ருதய வியாக்யானம் எழுதுகையில் எதற்க்காக இப்படி ஸ்ரமப்பட வேண்டும் என்று கேட்ட கோயில் கந்தாடை அண்ணனுக்கு உம்முடைய வம்சனத்திற்காகவே என்று பதில் உரைத்தார்

ஹ்ருதயம் வாதூல வர்யம் வரத குரு வரம் வாதிபீ க்ருத் குரும் ச
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ சடாரிம் ஸ்ருதி விவரணயோர் கல்பயித்வா அபி ஷிக்தவ்
தேவஸ் யாதேஸ மேவம் ஜகதி சபலயந் ஸ்வாவ தாரேண பூயா
ப்ராப்தும் ஸ்வம் தாம திவ்யம் ருசிர வரமுனிஸ் சேதநாயாம் சகாங்ஷே
–26-

ஜீயர் தம் மனதுக்கு இனியவர்களான கந்தாடை அண்ணனையும் பிரதிவாதி பயங்கரம் அண்ணனையும் முறையே பகவத் விஷய ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாசனங்களில் அபிஷேகம் செய்து அருளினார்
இவ்வண்ணம் எம்பெருமானுடைய நியமனத்தை தம்முடைய அவதாரத்தாலே நிறைவேற்றி மணவாள மா முனிகள் மீண்டும் தம்முடைய திவ்யமான ஸ்தானத்தை அடைய மனஸ்ஸால் நினைத்தார் –

ஆர்த்திம் ஸ்வோக்த்யா விவ்ரண்வத் ருசிர வர முனி ஸ்யந்த நஸ்தம் ரமேஸம்
ஸ்ரீ ரெங்கேஸம் தித்ருஷு ஸ்வ மட துரி சமாகத்ய திஷ்டந்த மேவ
த்ருஷ்ட்வா தூதாகி லாத்திர் கதிபயதி வசான் லோக பாக்யேந ஜீவன்
பூயோ ராமானுஜ அங்கரி த்வய சமுபகமே துர் நிவாரத்வரோ அபூத்
–27-

எம்பெருமானை உடனே அடைய வேண்டும் என்று தம்முடைய திரு உள்ளத் துடிப்பை -ஆர்த்தி பிரபந்தம் மூலம் வெளிப்படுத்திய ஜீயர் திருத்தேரிலே புறப்பட்டு திருமகள் கொழுநனாகிய நம்பெருமாள் மடத்து வாசலிலே நின்று ஸேவை ஸாதிக்கக் கண்ட துக்கம் எல்லாம் தீர்ந்தவராய் உலகத்தார் செய்த பாக்யத்தால் ஒரு சில நாட்கள் எழுந்து அருளி இருந்து மீண்டும் எம்பெருமானாரின் திருவடி இணையை அடைவதில் மிகுந்த த்வரையை யுடையவரானார் –

தஸ்மின் காலே ஷிதீஸம் கமபி யதுகிரே ஸூந்தரம் பட்ட நாத
த்வாரா ரஷத் ஸ்வ பவ்த்ரே நிஜதநு க்ருதயே பாஜநம் ஸ்வம் திதேச
ஸ்தித்வா ராமானுஜ அங்க்ரிய ஆஸ்ரித இஹ சரதாம் சப்ததிம் த்ரயப்த பூர்வாம்
ஸோ அயம் ராமானுஜ அங்க்ரித்வய மதருதிரோத் காரி கும்பே ப்ரபேதே
–28-

அக்காலத்தில் வந்தடைந்த அண்ணராய சக்ரவர்த்திக்கும் மேல் நாட்டுத் தோழப்பருக்கும் வர தமையரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கும் பரவஸ்து பட்டர் பிரான் ஜீயரைக் கொண்டு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்வித்து அருளினார் –
பின்பு தம்முடைய பூர்வாஸ்ரம திருப்பேரானார் இடத்தில் தமது அர்ச்சா விக்ரஹத்தை எழுந்த அருளப் பண்ணுவதற்காகத் தம்முடைய திருக்கைச் செம்பைக் கொடுத்து அருளினார்
எம்பெருமானார் திருவடிகளில் ஊன்றியவராய் 73 திரு ன் நக்ஷத்ரங்கள் இந்நிலவுலகில் எழுந்து அருளி இருந்த ஜீயர் ருதிரோத்காரி ஸம்வத்சரத்தில் எம்பெருமானார் திருவடிகளை அடைந்தார்

ஸாஹஸ்ராணாம் சதுஷ்காத நுகலி சரதே ஸர்வாக் சதுர்ப்யாஸ தேப்யா
சப்தத் யூர்த்வம் த்விதீயே சதுலசித கருத் யுக்த சாதாராணாப்தே
மூலே க்லுப்தா வதாரோ க ந இவ ஸஜலா ஸர்வ ஸந்தாப ஹாரீ
ஸ்ரீ மான் காந்தோ பயந்தா முனி ரிஹ ஜய தாதா விரிஞ்ச ப்ரபஞ்சம்
–29-

கலியுகம் பிறந்த 4472-ஸாதாரண வருஷத்தில் துலா -ஐப்பசி -மாதத்தில் வளர்பிறையில் திருமூல நன்னாளில் திருவவதரித்து நீருண்ட காள மேகம் போலே அனைவருடைய தானங்களையும் போக்கிக்கொண்டு எழுந்து அருளி இருந்த கைங்கர்யச் செல்வரான பெரிய ஜீயர் உலகம் உள்ளவரையில் இங்கே வெற்றியோடு விளங்கட்டும்

வரத யாக்ருத்யாத ரங்க ப்ரபு மணி வஸசா மிஞ்ச வ்ருத்தாகி ராஸ
ஸ்வா வாஸே வஹ்னி ஜூஷ்டே பணி பதி வபுஷா நாலதோ நிர்கமேன
ஸ்ரீ மான் சேஷ அவதாரோ வரவர முனி ரித்யேவ ஸர்வோ அபி லோக
யம் மேநே தம் குணாட் யம் ருசிர வர முனிம் ப்ரோஸச்ய தன்யோ மதாத்மா
–30-

பாலின் வண்ணம் போன்ற திருமேனி நிறத்தாலும் உத்தம நம்பிக்கு கனவிலே தோன்றிய பெரிய பெருமாள் -இவர் காணும் மா முனிகளாக அவதரித்துள்ளார் -என்று திருவானந்தாழ்வானைத் தொட்டுக் காட்டி அருளிச் செய்கையாலும் -திருமலை ஆழ்வார் கால ஷேப கூடத்திலே சடகோபக் கொற்றி என்ற மூதாட்டி பெரிய ஜீயரை ஆதிசேஷன் உருவில் கொண்டதாலும்
ஆழ்வார் திருநகரியிலே ஜீயர் எழுந்து அருளி இருந்த மடத்துக்கு சிலர் நெருப்பு வைத்த போது பாம்புருக்கொண்டு கோமுகச்சாரிக்கை வழியே வெளியில் வந்தபடியால் கைங்கர்யச் செல்வம் நிறைந்த ஆதி சேஷனின் அவதார பூதரே மணவாள மா முனிகள் என்று எல்லா உலகத்தாராலும் கருதப்படும் குணக்கடலான பெரிய ஜீயரைப் பற்றி பேசி அடியேன் தன்யன் ஆனேன்

இத்தம் பூ சார வாசான் ந்ருஹரி குரு வராடீ தாசரத் யார்ய வம்ஸ்யாத்
ஜாதஸ் தத் த்ருஷ்டி பூதோ வரத குரு க்ருபா லப்த போத ப்ரபுத்த
ஸத்ஸே வீராக வார்யோ ருசிர வர முனே ஸர்வ லோகேடி தாங்க்ரே
வ்யாஜஹ்ரே திவ்ய சர்யா ரஸ சஷகம் இதம் யா படேத் ஸோ அதி தன்ய
–31-

இவ்வண்ணம் மஹீ சார க்ஷேத்ரமான திருமழிசையில் வஸிக்கும் முதலியாண்டான் திரு வம்ஸ்யரான நரசிம்ஹாச்சார்யருக்கு புத்ரனாகப் பிறந்து அவரால் கடாக்ஷிக்கப் பட்டவரும் வரதாச்சார்யருடைய அருளாலே பெற்ற அறிவினால் விளங்குபெறும் நல்லோர்களைப் பணிபவருமான வீர ராகவார்யர் அனைத்து உலகினராலும் வணங்கப்படும் திருவடிகளை யுடையவரான மணவாள மா முனிகளின் திவ்ய சரித்ர அமுதத்தை இவ்வாறு அருளிச் செய்தார் -இந்நூலைப் படிப்பவர் அதி தன்யராவர்-

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading